Archive for the ‘ஸ்ரீ ஈடு’ Category

ஸ்ரீ திருவாய் மொழி – -பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுது -ஸ்ரீ உ வே ஸ்ரீவத்ஸாங்க தாஸன் ஸ்வாமிகள் —

February 25, 2022

ஸ்ரீ திருவாய் மொழி -வானின் மீது ஏற்றி அருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக்கூத்தனையே –

குளப்படியில் தேங்கினால் குருவி குடித்துப் போம்
வீர நாராயண புரத்து ஏரியில் தேங்கினால் நாடு விளையும்
பெரிய பெருமாள் ஆகிற பெரும் கடலிலே –
ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து பருகிய தத் கல்யாண குண அம்ருதம்
எம்பெருமானார் ஆகிய பொய்கையிலே தேங்கி
ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகள் வழியே புறப்பட்டு ஸம்ஸாரி சேதனராகிற பயிரை நோக்கிப் பாய்ந்து ரக்ஷிக்கிறது

———-

திருவருள் மால் சேனை முதலி சடகோபன் நாதமுனி
சீர் உய்யக்கொண்டார் மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார்
குரு மாலாதரர் குருகைப் பிரார்க்கு அன்பாம் எதிராசர்
கோவிந்தர் கூரேசர் பட்டர் வேதாந்த முனி
இரு கண்ணர்க்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடு அளித்தற்கு
ஏய்ந்த மாதவர் பற்ப நாபர் இவர் அருளாளர் திருவடி
ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும்
திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே –மா முனிகள் அருளிச் செய்த பகவத் விஷய தனியன் –

நம்பிள்ளை -ஈயுண்ணி மாதவர் -அவரது திருக்குமாரர் பத்மநாபர் –
அருளாளப்பெருமாள் திருவடி ஊன்றிய நாலூர்ப்பிள்ளை
அவர் திருகுமாரர் தேவராஜர் என்னும் நாலூராச்சான் பிள்ளை
அவரது சிஷ்யர் திருவாய் மொழிப்பிள்ளை மூலம் மா முனிகள் இடம் வந்த சேர்ந்ததே –

———-

அர்த்த பஞ்சகமே திருவாய் மொழிக்கு வாக்யார்த்தம் என்று ஸ்ரீ வங்கி புரத்து நம்பி பணிப்பாராம்
உயர்வற -திண்ணன் வீடு – அணைவது – ஒன்றும் தேவு -பர ஸ்வரூபம்
பயிலும் சுடர் ஒளி -ஏறாளும் இறையோன் -கண்கள் சிவந்து -கரு மாணிக்க மலை -ஜீவ ஸ்வரூபம்
நோற்ற நோன்பிலேன் -ஆராவமுது – மாநேய் நோக்கு -பிறந்தவாறும் -உபாய ஸ்வரூபம்
எம்மா வீடு -ஒழிவில் காலம் -நெடுமாற்கு அடிமை -வேய் மரு தோளிணை -புருஷார்த்த ஸ்வரூபம்
வீடுமின் முற்றவும் -சொன்னால் விரோதம் -ஒரு நாயகம் -கொண்ட பெண்டீர் -விரோதி ஸ்வரூபம்

————

கலவியில் அந்யாபதேசம் -கரு மாணிக்க மலை -வேய் மரு தோளிணை
பிரிவில் அந்யாபதேசம் -அஞ்சிறைய மடநாராய் போல்வன

தீர்க்க சரணாகதி இதுவே
முதல் மூன்று பத்துக்கள் உத்தரார்த்தம்
மேல் மூன்று பூர்வார்த்தம்
மேல் மூன்றில் உபாயத்துக்கு வேண்டிய குணங்களையும் -சம்சாரத்தில் தமக்கு நசை அற்றபடியையும்
அவனுக்கும் நமக்குமுள்ள நிருபாதிக சம்பந்தத்தையும் அருளிச் செய்கிறார்
கடைப் பத்தாலே தாம் பிரார்த்தித்த படியே பேறு பெற்றமையை அருளிச் செய்கிறார்

———

எம்மா வீடே -தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே -தேவரீருக்கே யாம்படியாக –
அத்யந்த பாரதந்தர்யத்துக்கு அனுகுணமான கைங்கர்யமே
சர்வ பிரபந்த பிரதானம்
கடிகைத் தடம் குன்றின் மேல் விளங்கும் அக்காரக்கனியின் ப்ராதான்யம் ஸித்தம் -என்பர் ஆத்தான் ஜீயர் அரும்பதத்தில் –

வேதாந்த விசாரம் ப்ரஹ்ம ஸூத்ரங்கள்
ரஹஸ்ய த்ரய விசாரம் திருவாய் மொழி

பரத்வம் போலே வேதம்
அவதாரங்கள் போலே இதிஹாஸ புராணங்கள்
அர்ச்சாவதாரம் போலே திருவாய் மொழி –
தான் தோன்றி வேதம் போல் அன்றி இவர் பக்கலிலே பிறந்து ஸர்வாதிகாரம் ஆனது
வண் புகழ் நாரணன் என்று உபக்ரமித்து வாழ் புகழ் நாரணன் என்று உப ஸம்ஹாரம் –

எம்பெருமானார் உகந்த திருவாய் மொழி -இன்னுயிர்ச் சேவல் -9-5-
ஆளவந்தார் உகந்த திருவாய் மொழி -அறுக்கும் வினை -9-8-
ஆழ்வார் பலம் பெற்றது -ஆழி எழ -7-4-
ஆழ்வார் பலம் இழந்தது -கற்பார் இராமன் -7-5–

அவனது ஆர்த்தி தீர பிரார்த்தனை -ஆராவமுதே -5-8-
தனது ஆர்த்தி தீர பிரார்த்தனை -பண்டை நாளாலே -9-2-

மடல் -மாசறு சோதி -5-3-
ஊடல் -மின்னிடை -6-2-

காலைப்பூசல் -மல்லிகை கமழ் -9-9-
மாலைப்பூசல் -வேய் மரு தோளிணை -10-3-

பாகவதர்கள் சேஷிகள் -பயிலும் சுடர் ஒளி -3-7-
பாகவதர்கள் போக்யர் -நெடுமாற்கு அடிமை -8-10-

பன்னிரு நாமப்பாட்டு -கேசவன் தமர் -2-7-

திருவாழி ஆழ்வானை அடிக்கடி வாய் வெருவிய சதகம் -வைகல் பூங்கழி-6-1-
திருவடிகளை அடிக்கடி வாய் வெருவிய சதகம் -உலகம் உண்ட -6-1-
திருத்துழாயை அடிக்கடி வாய் வெருவிய சதகம் -பாலனாய் -4-2-
வடமதுரையை அடிக்கடி வாய் வெருவிய சதகம் -கொண்ட பெண்டிர் -9-1-
ஸ்ரீ பூமி நீளை களை அடிக்கடி வாய் வெருவிய சதகம் -அறுக்கும் வினை -9-8-

நான்கு பாதங்களிலும் ஏற்கும் -3-9-11-
நான்கு பாதங்களிலும் திருவடி -4-9-11-

நான்கு பாதங்களிலும் தீர்த்த -7-10-11-
நான்கு பாதங்களிலும் நேர் பட்ட -8-9-11-
நான்கு பாதங்களிலும் சூழ்ந்த -10-10-10-
நான்கு பாதங்களிலும் அவா -10-10-11-

——————-

முதல் தூது அஞ்சிறைய மட நாராய் -1-4- வ்யூஹத்தில் -அபராத ஸஹத்வம் பற்றாசாக
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் அடலாழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி -1-4-10-
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கே -1-4-7-
தேவரீர் பொறை வயிறு நிறைய எங்களால் குற்றம் செய்யப் போமோ
என் பிழை அநாதி காலம் ஆர்ஜிதமானாலும் தேவரீர் க்ஷமைக்கு எவ்வளவு போரும்

இரண்டாம் தூது விபவத்தில் -ஆர்த்த ரக்ஷணம் பற்றாசாகத் தூது -வைகல் பூங்கழி-6-1-
மாறில் போர் அரக்கன் மதில் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின் -6-1-10-
புணர்த்த பூம் தண் துழாய் முடி நம்பெருமானைக் கண்டு புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே -6-1-5-
ஆர்த்த ரக்ஷணத்துக்கு திரு அபிஷேகத்தில் வளையம் -தனி மாலை இட்டு இருப்பானே

மூன்றாம் தூது பரத்வத்திலே-ஸாரஸ்யம்-அடியார்கள் உடன் ஏக ரஸ்யம் – பற்றாசாகத் தூது -பொன்னுலகு ஆளீரோ -6-8-
வானவர் கோனைக் கண்டு -6-8-4-
விண்ணவர் கோனைக் கண்டு -6-8-9-
முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே -6-8-1-
ஏஹி பஸ்ய சரீராணி என்னுமா போலே வடிவைக் காட்டுகிறாள்
நமக்குப் பணி குறையை அறிவிக்கையை -மேல் உள்ளது எல்லாம் அவன் பணியே

இப்பதிகத்திலே எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே -6-8-5-என்று அந்தர்யாமியைச் சொல்லும்
இவளைச் சித்த அபஹாரம் பண்ணித் தனிமைப் படுத்திய இது உமக்குத் தக்கதோ என்று கேட்பதே

நான்காம் தூது -அர்ச்சையிலே -சவுந்தர்யம் பற்றாசாக -எங்கானல் -9–7-
தக்கிலமே கேளீர்கள் –செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனிவாய் அக்கமலத்து இலை போலும் திருமேனி அடிகளுக்கே -9-7-3-
தமரோடு அங்கு உறைவார்க்கு -9-7-2-
அவர் அழகை நினைப்பூட்டவே திரு மூழிகே களத்தார் வாராது இருப்பாரோ

நான்கு தூது பதிகங்களில் பிராட்டி சம்பந்தம் உண்டே

—-

முதல் பத்தில் பரத்வம் -பரபரன் -1-1-8-
இரண்டாம் பத்தில் -காரணத்வம் -எப்பொருட்க்கும் ஆதி -2-1-1-
மூன்றாம் பத்தில் -வியாபகத்வம் -முழுதியன்றாய் -3-1-8-
நான்காம் பத்தில் -நியந்த்ருத்வம் -மறுகலில் ஈசன் -4-1-10-
ஐந்தாம் பத்தில் -காருணிகத்வம்-அருள் செய் -5-1-9-
ஆறாம் பத்தில் -சரண்யத்வம் -வன் சரண் -6-3-7-
ஏழாம் பத்தில் -சக்தித்வம் -பெரு மாயனே -7-1-1-
எட்டாம் பத்தில் ஸத்ய காமத்வம் -தேவி மாராவார் -8-1-1-
ஒன்பதாம் பத்து -ஆபத் சகத்வம் -முற்றவும் யுண்ட பிரான் -9-1-1-
பத்தாம் பத்தில் -ஆர்த்தி ஹரத்வம் -காளமேகம் -10-1-1-

இந்தப் பத்து அர்த்தங்களும் கங்குலும் பகலும் -7-2 திருவாய் மொழியிலே காணலாம்

———–

அயர்வரும் அமரர்கள் அதிபதி எவன் அவன் இவருக்கு மயர்வற மதிநலம் அருளினன்
மறவாமைக்காக என்னுள் மன்னினான்
நெஞ்சமே நல்லை நல்லை -மலராள் மணவாளனைத் துஞ்சும் போதும் தொடர் -என்றபடி
திருக் கல்யாண குணங்களை தம்முடைய திரு உள்ளத்தோடே அனுபவித்தார்
தனி இருந்து அனுபவிக்க மாட்டாமையாலே சம்சாரிகளைத் திருத்த வீடுமின் முற்றவும் தொடங்கி
த்யாஜ்யமான ஸம்ஸார தோஷத்தையும்
உபாதேயமான பகவத் குணங்களையும்
அவனைப் பஜிக்க வேண்டிய பிரகாரத்தையும்
வண் புகழ் நாரணன் -என்று பற்றுக்கோடான திரு மந்த்ரத்தையும் உபதேசித்து
எளிவரும் இயல்பினன் என்று அவனது ஸுலப்யத்தையும்
அபராத ஸஹத்வத்தையும்
ஸுசீல்யத்தையும்
புரிவதுவும் புகை பூவே என்று ஆராதனைக்கு எளியவனானமையும்
தூய அமுதைப் பருகிப் பருகி ஆஸ்ரயணம் போக்யம் என்பதையும்
நீர் புரை வண்ணன் என்று ஆர்ஜவ குணத்தையும்
என்னுடைச் சூழல் உளானே –உச்சியில் உளானே -என்று சாத்மிக்க ஸாத்மிக்க போக ப்ரதத்வத்தையும்
எண்ணிலும் வரும் என்று பரமபக்தனுக்கு முகம் காட்டுவது போல் முகம் காட்டும் சாம்யத்தையும் காட்டி அருளி
அவனைத் தொழுதால் வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே என்றும்
பக்தி பண்ணத் தொடங்கும் போதே
அங்கொடு உடனே வினை மாளும் -என்று பஜன விரோதிகள் அனைத்தும் தொலையும் என்று அறிவித்து
ஆனபின்பு -அம்பகவன் வணக்குடைத் தவ நெறி வழி நின்று
நும் இரு பசை அறுத்து
தேவதாந்த்ர பஜனம் தவிர்ந்து
அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு
நன்று என நலம் செய்து
அநந்ய ப்ரயோஜனராய் பக்தியைப் பண்ணுங்கோள் என்று
ஸம்ஸாரிகளுக்கு அகவிருளைப் போக்கி ஞான பக்தியை உபதேசித்து பகவத் பஜனத்திலே மூட்டுகிறார் முதல் பத்திலே –

————

வேர் முதல் முத்தாய் -ஸர்வ காரண பூதன் ஆழ்வாருக்கு அறியாதன அறிவித்து அருள
அந்த ஞான பலமான மோக்ஷத்தை -அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று
ஆசைப்பட்டுப் பெறாமையாலே
வாடி வாடும் இவ்வாணுதலே -என்றபடி அவசன்னராக
அது தீரும் படி சிக்கெனைப் புகுந்தான் -என்றபடி வந்து ஸம்ஸ்லேஷித்துப் ப்ரீதன் ஆனான் –
அந்த ப்ரீதி ஆழ்வார் உடம் மட்டும் இன்றி இவர் ஸம்பந்த சம்பந்திகள் அளவும் வெள்ளம் இட்டு
அந்தப் ப்ரீதியாலே இவன் ஆழ்வாருக்கு மோக்ஷத்தைப் கொடுக்கப் புக
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்று எம்மா வீட்டில் ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினார்
அதன் பிறகு கீழ்ச் சொன்ன பரத்வத்தை விளக்க
ஸ்ரீ யபதித்தவ
சேஷ ஸாயித்வ
புண்டரீகாக்ஷத்வ
மோக்ஷ ப்ரதத்வாதி
லக்ஷணங்களை வெளியிட்டு
கள்வா என்ற வசனத்தையும்
தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் சேர்ந்த பூந்தாமம் சிவன் முடி மேல் -என்றபடி காட்சியையும் தர்சிப்பித்து
ஆஸ்ரியர்க்கு ருசி பிறக்கைக்க
த்யாஜ்யமான ஸம்ஸாரிக துக்கம் என்ன
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர் -என்றபடி ப்ராப்யமான மோக்ஷத்தின் ஆனந்தம் என்ன –
ஸம்ஸாரிக நிவ்ருத்தி பூர்வகமாக மோக்ஷ ப்ராப்திக்கு உறுப்பான ஸாதனத்தினுடைய ரஸம் என்ன
இவற்றை முன்னிட்டு ஸ குண ப்ரஹ்ம உபாஸனத்தை விதித்து
சூது என்று களவும் சூதும் செய்யாதே -என்று அதற்கு அங்கமான நிஷித்த அனுஷ்டான தியாகமும்
மாலிருஞ்சோலை சார்வதும் சதிரே -என்றபடி ஷேத்ர வாஸம் முதலானவையும் செய்ய வேணும் என்று
அருளிச் செய்கிறார் இரண்டாம் பத்தில் –

————

ஏழ்ச்சிக் கேடின்றி எங்கனும் நிறைந்த எந்தாய் -என்றும்
யாவையும் எவரும் தானாய் -என்றபடி
கார்ய வர்க்கங்களான சேதன அசேதனங்களையும் வியாபித்து
வியாப்ய கத தோஷம் தட்டாமல்
கீழே ஆழ்வார் நிஷ்கர்ஷித்த மோக்ஷத்துக்குப் பலனாக
தன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹ அனுபவத்தை
முடிச் சோதியாய் -திருவாய் மொழியிலே இவர் தாம் பெற்றவராக செய்து அருளிய அளவிலே
இவரும் -நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடுயிரே -என்றபடி தரித்து
அதனால் உண்டான உகப்பின் மிகுதியாலே
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா யடிமை செய்ய வேண்டும் நாம் -என்றபடி ஆவல் கிளர்ந்து
அதுக்குத் தகுதியாக -புகழு நல் ஒருவனிலே -காட்டிக் கொடுத்த விபூதி விஸ்தாரத்தைப் பேசி அத்தாலே
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பரந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் என் சொல்லீர் -என்றபடி
கரை புரண்ட ப்ரேமம் யுடையராய்
அந்தப்பிரமம் எம்பெருமான் அளவிலே அடங்காமல்
தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே -என்றபடி
பாகவத சேஷத்து அளவும் சென்று
அந்த பாகவதருக்கு நிரூபகம் பகவானுடைய வை லக்ஷண்யம் ஆகையால்
அத்தை முடியானே பதிகத்திலே
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே
வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நாயகனே
கைகளால் ஆரத் தொழுது உன்னை
கண்களால் காண வரும் கொல்
என்றபடி ஒவ்வொரு கரணமும் மற்றவற்றின் செயலை விரும்பும் படி பெரு விடாய் படைத்தவராய்
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -என்று
தம்முடைய வை லக்ஷண்யத்தை வெளியிட்டு அருளி –
எம்பெருமானை அனுபவிக்க
யான் இறையேனும் இடர் இலேனே -தளர்விலேனே -என்று இடையூறு இன்றிக்கே
அபரிமித ஆனந்தத்தை யுடையவராய்
ஸம்ஸாரிகள் அவன் பரத்வத்தைக் கண்டு அஞ்சி பின் வாங்காமல் மேல் விழுந்து ஆஸ்ரயிக்கும் படி
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே -என்று
அர்ச்சாவதார ஸுலப்யத்தை உபதேசித்து
அர்ச்சிராதி கதியாலே திரு நாட்டை பெறுமிக்குவனான எம்பெருமான்
தன்னை ஒரு சொல் சொல்லுவார் யாரோ என்று காலத்தை என்று எதிர் நோக்கினவனாய் நிற்க
அவனை விட்டுப் புறம்பே
ஒரு சொல்லுக்கும் பாத்தம் போராதே சிறு மானிடரைக் கவி பாடுவதால் என்ன பயன்
அத்தாலே ஸ்வரூபம் பெற்றிலீர் கோள் -அபிமதம் பெற்றிலீர் கோள்
ஸர்வ அபேக்ஷிதங்களையும் தருமவன் -தன்னுடன் சாம்யாபத்தியைத் தருமவன் -அவனைக்
கவி பாடி வாய் படைத்த பிரயோஜனம் பெறுவீர் என்று
பகவத் விஷயத்திலே வாக்கு சபலமாம் படி அடிமை செய்வது உரியது என்று உபதேசித்து
அவர்களையும் தம்மைப் போலவே கைங்கர்ய பரராம் படி செய்து அருள்கிறார்
மூன்றாம் பத்திலே

———-

கீழே முழுதுமாய் முழுதியன்றாய் -என்று எம்பெருமானுடைய வியாபகத்வம் -ஆகாஸ வியாப்தி போல் அன்றிக்கே
வீற்று இருந்து ஏழு உலகம் தனிக்கோல் செல்ல -என்றபடி நியமித்து போவதாலே -இப்படி ஸர்வ நியாந்தாவாய் இருக்கிறவன்
ஆழ்வார் தனது விஷயத்திலே கைங்கர்யங்களிலே பாரித்தது போலே
பாலனாய் ஏழு உலகு உண்டு -என்றபடி வேறே தேச வேறே கால அபதானங்களையும் அந்த அந்த தேச காலங்களில் போலவே அனுபவிக்கப் பாரித்து
அப்படியே இவருக்கு சமகாலமாக்கி அனுபவிப்பித்து இவர் இழவைத் தீர்த்து இவருடைய த்ரி கரண வியாபாரங்களையும் போக்யமாகக் கொள்ள
ஆழ்வார் அந்த ப்ரணயித்வ குணத்திலே தோற்று விரஹ அவஸ்தையிலே
பேய்ச்சி முலை சுவைத்தார்க்கு என் பெண் கொடி ஏறிய பித்தே -என்று
போலியான பொருள்களையும் ஸம்பந்த பொருள்களையும் அவனாகவே கருதும்படி பித்தேறி
ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்ட சதிர் கண்டு -என்றபடி
திரு நாட்டின் அனுபவத்தையும் ஆசைப்பட்டுக் கூப்பிட
அவ்விருப்பையே ப்ரத்யக்ஷமாகக் காட்டி அனுபவிப்பிக்க
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே -என்றபடி அனுபவித்து
இப்படி முக்த உலகத்தை மாநஸமாகப் பெற்று
உன்னித்து மற்ற ஒரு தெய்வம் தொழாள்-என்றபடி தேவதாந்தர விரக்தியை யுடையராய்
ஐங்கருவி கண்ட இன்பம் ஒழிந்தேன் என்றும்
சற்று இன்பம் ஒழிந்தேன் -என்றும்
ஐஸ்வர்ய கைவல்ய அல்ப அஸ்த்ரத்வாதி தோஷங்களையும்
ஆடு கள் இறைச்சி போன்ற நிஷித்த பதார்த்தங்களாலே ஷூத்ர தெய்வ பஜன தாழ்வினையும்
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே -என்பவற்றை வெளியிட்டு அருளி
ஸர்வேஸ்வரனே ரக்ஷகன் என்றும் இவர்கள் ரஷ்ய வர்க்கங்கள் என்றும்
கண்டும் தெளிய கில்லீர்
பிரகிருதி சம்பந்தம் நீக்க -நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே உறுவது என்று
அவனை ஆஸ்ரயித்துத் தப்பப் பாருங்கோள்
அவன் திருவடிகளிலே கைங்கர்யமே சீரிய புருஷார்த்தம் என்று
உபதேசித்து பகவத் ஸமாஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நான்காம் பத்திலே

———–

பரத்வம் -காரணத்வம் -வியாபகத்வம் -நியந்த்ருத்வம் -குணங்களால் ஏற்றம் உடைய ஸர்வேஸ்வரன்
ஆ ஆ என்று அருள் செய்து
தானே இன்னருள் செய்து -என்றபடி கிருபா ப்ரவாஹம் உடையவன்
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யான் ஆர்
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்
என்றபடி அவன் எங்கே
நித்ய சம்சாரிகளுக்கும் இவ்வருகில் உள்ள அடியேன் எங்கே
நைச்யம் பாவித்து அகல நினைத்தாரையும் தனது பக்கலிலே சேர்த்துக் கொள்ளும் படியான
கிருபா வெள்ளம் உடையவன்
ஆழ்வாருக்கு கீழ் பிறந்த வைராக்யம் பலனாக
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த-என்னும் படி
பக்தியும் பாகவத சமாகத்தையும் யுடைய ஆழ்வார்
தம்மையும் தம்மால் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களையும் காண வந்த
நித்ய ஸூரிகளையும் ஸ்வேத தீப வாசிகளான சித்தர்களையும் கண்டு
பொலிக பொலிக பொலிக என்று மங்களா ஸாஸனம் பண்ணி
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் என்றபடி தேடிப்பிடித்து
நிறுத்தினான் தெய்வங்களான அத்தெய்வ நாயகன் தானே -என்றபடி
தேவர்களும் அவனை ஆஸ்ரயித்தே தம் தாம் பதவி பெற்றார்கள்
நீங்களும் ஆஸ்ரயிக்கப் பெற்றால்
கலியும் கெடும் கண்டு கொண்மின்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே என்றபடி
பாகவத உத்தமர் களை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்
என்று உபதேசித்துத் திருத்தி
கண்ணுக்கு இனியன கண்டீர் தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்றபடி
பாகவத ஸமூஹம் காண இனிதாம்படியான ஞானம் உடையோருக்கு
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் -என்றபடி
ப்ராப்ய த்வரைக்கு அடியான பக்தியை உபதேசிக்கிறார் ஐந்தாம் பத்தில் –

———-

கீழ் பத்தில் பேசின பரம கிருபையினாலே
வானவர் வானவர் கோனொடும்
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
போது அறிந்து வானரங்கள் என்கிறபடி
நித்ய ஸூரிகள் -ஸம்ஸாரிகள் -ப்ரயோஜன பரர் -அநந்ய ப்ரயோஜனர் -திர்யக்குகள் வாசி இன்றி
ஸர்வ சமாஸ்ரயணீயனாய்
மெய்யமர் காதல் சொல்லி -பக்தி பாரவசஸ்யத்தாலே அநந்ய கைதியான ஆழ்வாருக்கு
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -என்று காட்டிக்கொடுக்கப் பெற்றவர்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் என்று நாடொறும் ஏக சிந்தையனாய்
விச்சேதம் இல்லாத வியவசாயத்தை வைகல் பூங்கழிவாயில் தூது அனுப்பி அறிவித்தார்
அவன் சிறிது விளம்பிக்கவே ப்ரணய ரோஷம் தலை எடுத்து
அழித்தாய் உன் திருவடியால் என்று அவன் பரிகரித்தவாறே அவனுடைய சாமர்த்தியத்தை அனுசந்தித்தார்
பிறந்த வாற்றிலே பண்ணின பிரபத்தி பலித்து நண்ணி நான் வணங்கப் பெற்றேன் -என்று
குரவை ஆய்ச்சியரில் பலித்த வாறே பிரபத்தி பண்ணுவதாகக் கோலினார்
பிதரம் மாதரம் தாரான் படியே
சிறு மான் இவள் நம்மைக் கை வலிந்து என்றபடி தாமாகவே கை விட்டும்
இழந்தது சங்கே என்றபடி தாமாகவே போகக் கண்டும்
இன்று எனக்கு உதவா நின்ற -என்று உபேக்ஷித்து அகன்று போயும்
நெய்யமர் இன்னடிசில் நீச்சல் பாலோடு மேவீரோ என்று ததீயாருக்குப் போக்யமாக ஸமர்ப்பித்தும்
பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ என்று
த்யாஜ்ய அம்சங்களை ஸவாசனமாக விட்டார்
விட்டதை எல்லாம் பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் யாவையும் திருமால் நாமங்களே என்கிறபடி
தமக்குப் பற்றுகிற விஷயமாகவே நினைத்து
சாலப்பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ
கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்று ஆர்த்தியுடன்
குறளாய் அகல் ஞாலம் கொண்ட -சர்வ ஸூ லபமான திருவடிகளை திருமலையில் கண்டு
த்வயத்தில் பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா என்று சரணம் புகுந்தார்
பத்துடை அடியவர் தொடங்கி அஞ்சாம் பத்து அளவும் உபதேசித்த ஸாத்ய உபாய பக்தி யோகத்தில் அசக்தருக்கு
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே என்று
தம்முடைய பிரபத்தி -ஸித்த உபாய -நிஷ்டையை பிரகாசிப்பித்தார் ஆறாம் பத்திலே –

——–

மாயா வாமனனே -விசித்ர சக்தி யுக்தனான ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளை
அந்தோ அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே -என்றபடி பிரபத்தி பண்ணின தம்மை
விஷயங்களில் மூட்டித் தன் பக்கலிலே சேராதபடி ஸம்ஸாரத்திலேயே வைக்கக் கண்டு
உண்ணிலாவிய ஐவரால் குமை தீற்றி என்னை யுன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலிவான்
இன்னம் எண்ணுகின்றாய் -என்று வருந்திக் கூப்பிட்டு
தம் தசை தாமே பேசமாட்டாமல் இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் என்றபடி தளர்ந்து
தோழிமீர்காள் அன்னை யர்காள் என்னைத் தேற்ற வேண்டாம் -என்று நெஞ்சு பறியுண்டவராக இருக்க
ஆழி எழ -யில் தனது விஜயங்களைக் காட்டித் தரிப்பிக்க
அந்தத் தயாரிப்பும் கற்பார் இராமனிலே
இப்படி நிருபாதிக கிருபாவாளனாய் -ஸர்வ ஸூ லபனாய் இருந்தும் ஸம்ஸாரிகள் இழந்து போகிறார்களே என்று
பழைய ஆர்த்தியே தலையெடுத்து
பற்ப நாபாவோ பற்ப பாதா ஓ தாமரைக் கண்ணா ஓ தனியேன் தனி ஆளாவோ என்று
அவனது அவயவங்கள் மானஸ அனுபவமாய் நலிய
உபாய பூதனான உனக்கோ ஞான சக்திகளிலே குறை இல்லை
எனக்கோ ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வ ஆர்த்திகளிலே குறை இல்லை
இப்படி இருக்க ஸம்ஸாரத்திலே இன்னம் வைத்து இருக்க ஹேது என் என்று மடி பிடித்துக் கேட்க
நமக்கும் நம்முடையாருக்கும் இன்பமாகத் திருவாய் மொழி பாடுவிக்க வைத்தோம் காண் என்ன
வியாசாதிகள் முதல் ஆழ்வார்கள் போல்வார் இருக்க தம்மைக் கொண்டு பாடுவித்த இந்த உதவிக்கு கைம்மாறு காணாமல்
என் சொல்லி நிற்பேனோ –
திருவாறன் விளையிலே மிதுனத்திலே பெரிய ஓலக்கத்திலே திருவாய் மொழி கேட்பித்து
அடிமை செய்வது தவிர வேறே கைம்மாறு இல்லை என்று
திட அத்யாவஸ்யத்தை உடையவராய் இருக்க
எம்பெருமான் பரமபதம் தரப் பாரிப்பவராக இவரது அத்யாவசாயத்தை சோதிக்க
திருவாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின் -சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லா
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஓன்று இலம்
உள்ளித் தொழுமின் தொண்டீர் -என்று
திருவாறன் விளையே ப்ராப்யம்
அங்கு எழுந்து அருளி நிற்கிறவன் உபாயம் என்று
தாம் அறுதியிட்ட உபாய உபேயங்களை தமது உகப்பாலே வெளியிட்டு அருளுகிறார் ஏழாம் பத்திலே –

————

கீழ்ப் பத்திலே பேசின ஸர்வ சக்தி யோகத்தாலே
நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்து -என்றபடி
நித்யமாகக் கல்பிக்கப்பட்ட போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை யுடையவன் ஆகையாலே
ஸத்ய காமனான ஸர்வேஸ்வரன் ஆழ்வாரைத் தரிப்பிக்க நினைத்தான் –எதற்காக என்னில்
ஆழ்வார் கீழே கிடைத்த வாசிக அடிமையும் மறந்து
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி
பகவத் குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதிசங்கை பண்ணி
அவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவு ஒன்றும் சங்கிப்பேன் வினையேன் –
அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் என்பதிலே அதி சங்கை
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை அது விது வுது என்ற அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் என்று
ஸகல பதார்த்தங்களையும் பிரகாரமாக உடையவன் என்பதிலும் அதி சங்கை
ஸம்ஸாரங்களை அனுசந்தித்து
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் -என்று ஸம்ஸார தோஷங்களை அனுசந்தித்து அஞ்சினார்
இந்தக் கலக்கமும்
அதி சங்கையையும்
அச்சத்தையும் –
தீர்க்கும்படி தரிப்பிக்க நினைத்த எம்பெருமான்
தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத் தந்த -என்று முன்பு செய்து போந்த
உபகாரத்தை நினைப்பூட்டினான்
ஆழ்வார் அத்தாலே க்ருதஞ்ஞராய்
பேர் உதவிக் கைம்மாறா தோள்களை ஆரத்தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் -என்றபடி
ஆத்ம சமர்ப்பணம் பண்ணினார்
அத்தாலே எம்பெருமானும் பெறாப் பேறு பெற்றவராய் இவருக்கு உண்டான ஆத்ம குணங்களால்
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க்கண்கள் ஆயிரத்தாய் -என்றபடி மிகவும் மகிழ்ந்தவனாய்
ஒருக்கடுத்து உள்ளே யுறையும் பிரான் கண்டீர் -என்று ஆழ்வார் திரு உள்ளத்திலே இருந்து அனுபவிப்பித்து
மூன்று தத்துக்குப் பிழைத்த இவர்
வள வேழ் உலகு -பொரு மா நீள் படை -அந்தாமத்து அன்பு -மூன்றிலும் நைச்ய அனுசந்தானம் -தத்து -கண்டம்
இனி ஆழ்வார் அகலாமைக்காக
ஞான ஆனந்த மயம்
அநந்யார்ஹம்
ததீய சேஷத்வம் அளவும் செல்லும் பாரதந்தர்ய ஸ்வரூபம்
போன்ற ஆத்ம லக்ஷண்யத்தைப் பிரகாசிப்பித்தான்
அதனால் யாதாத்ம்ய ஸ்வரூபம் அறிந்த ஆழ்வார்
ப்ராப்யம்-திவ்ய தேசம் ஒன்றும் பிராபகம்-ஸர்வேஸ்வரன் ஒன்றாய் -இரு கரையராக இல்லாமல்
ப்ராப்யமாகச் சொன்ன திவ்ய தேசமே ப்ராபகமும் என்று
நண்ணு திருக்கடித்தான நகரே -இடர் கெட உள்ளத்துக் கொள்மின் என்று காட்டி
அவர்களை பிராப்ய விஷயம் ஒன்றிலேயே ஊன்றச் செய்து அருளுகிறார் எட்டாம் பத்தில் –

——-

அவாப்த ஸமஸ்த காமனாகையாலே ஒன்றையுமே அபேக்ஷிக்காலால்
அகல் ஞாலம் படைத்து இடந்தான் அவனே அஃது உண்டு உமிழ்ந்தால்
ஆலிலை மேலால் அமர்ந்தான்
இவ்வாறு ஸர்வவித ரக்ஷகனான ஸர்வேஸ்வரன்
கீழே ஆழ்வாருக்கு பிரகாசிப்பித்த ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்ய ஞான பலமான
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யத்தை அனுபவிக்கையில் உண்டான த்வரை
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
கனிவாய் சிவப்ப நீ காண வாராய்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை கொடு வினையேனும் பிடிக்க
நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே
பிராட்டிக்கு பத்து மாதங்கள்
பரதாழ்வானுக்கு பதினான்கு வருஷங்கள்
கோபிமாருக்கு ஒரு மாலைப்பொழுது வரை
உள்ள வியஸனங்கள் அனைத்தும் ஆழ்வாருக்கு ஒரு நொடிப்பொழுதில் உண்டான த்வரைக்கு ஈடாக எம்பெருமான்
நாளை வதுவை மணம் என்று நாளிட்டு -என்று நாச்சியாருக்கு நாள் இட்டால் போலே
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்று சரீர அவசானத்திலே பேறு தப்பாது என்று அறுதியிட்டுக் கொடுக்க
ஹ்ருஷ்டராய் -இன்னும் தமது உபதேசத்தால் திருந்தாதவரை பரம காருண்யத்தாலே
கொண்ட பெண்டீர் மக்கள் உற்றார் -ஆபாச பந்துக்களை விட்டு அவனையே ஸர்வவித பரம பந்து
ரக்ஷகன் -உபாயம் -ப்ராப்யன் -போக்யன் -என்று நிரூபித்து உபதேசித்து
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் என்று ஸித்த உபாயத்தை உபதேசித்தும்
இந்த மஹா விச்வாஸம் பிறக்கைக்கு ஈடாக
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
தேனை வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் என்று
அங்க ஸஹிதமான பக்தியை உபதேசித்தும்
அதுக்கு சக்தர் அல்லார்க்கு
சரணமாகும் தனது தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
என்று ஸூ கரமாய் ஸர்வாதிகாரமாய் உள்ள பிரபத்தியை வெளியிட்டும்
அதிகார அனுகுணமாக ஸர்வ உபாயங்களையும் வெளியிட்டு அருளுகிறார் ஒன்பதாம் பத்தில் –

————

ஆபத் ஸகனானவன் ஆஸ்ரிதருடைய ஆபத் ரக்ஷண அர்த்தமாக திவ்ய மங்கள விக்ரஹத்தோடே தோன்றி
துன்பத்தைப் போக்கும் இயல்பினன் –
கீழே நாள் இட்டுக் கொடுத்ததின் பலமாக அர்ச்சிராதி கதியாலே பரமபதத்துக்கு ஏறப் போகையாலே
திரு மோகூர்-ஆத்தன் -பதினெட்டு நாடான் -வழித்துணையாகப் பற்றி
மீள்கின்றது இல்லை பிறவித்துயர் கடிந்தோம் -என்று இனி பேற்றிலே தடையில்லை என்று நிச்சயித்து
எல்லா அர்த்த விசேஷங்களை வெளியிட வேண்டும்படியான தசை வந்தவாறே
பிரதம பாத்திரமான தமது திரு உள்ளத்துக்கு
பணி நெஞ்சே நாளும் பரம பரம் பரனை
வாழி மனமே கைவிடேல் -என்றும்
நெஞ்சு போன்ற ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடும் கூத்தே
எண்ணுமின் எந்தை நாமம்
பேசுமின் கூசமின்றி
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண அனந்த புர நகர் புகுதும் இன்றே
என்று கர்தவ்ய
ஸ்மர்தவ்ய
வக்தவ்ய
த்ரஷ்டவ்ய
வஸ்தவ்யாதிகளை -வெளியிட்டு
முதல் பத்தில் பிணக்கற அறு வகை என்கிற பாசுரத்தில் உபக்ரமித்த பக்தி யோகத்தை
சார்வே தவ நெறியோடே உப ஸம்ஹரித்து
ஸம்ஸாரிகளுக்கு
தாள்வாய் மலரிட்டு நாள் வாய் நாடீரே
சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே -என்கிறபடியே ஸூ கரமாக ஆஸ்ரயணீயத்தை உபதேசித்து

அனுபவ கைங்கர்யங்களிலே தமக்குத் தோள் தீண்டியரானவர்களை
செஞ்சொல் கவிகாள் என்று விளித்து
உயர் காத்திடகு ஆட் செய்மின் -என்று
அவனுடைய சீல குண ஆழங்காலிலே அகப்படாமல் இருக்க உபதேசித்தும்

தம் திருமேனியிலுக்கே அதி வ்யாமோஹம் பண்ணும் அவனுக்கும்
பொங்கைம் புலனும் பொறி ஐந்தும் கரும இந்திரியம் ஐம் பூதம் இங்கு இவ்வுயிர் ஏய் ப்ரக்ருதி மானாங்கார மனங்களான
உம் மா மாயை மங்க ஒட்டு -மங்க இசை -என்று சரீர தோஷங்களை உணர்த்தி
பின்னை தமக்குப் பரதந்த்ரனாய் தம்மைப் பரமபதம் கொண்டு போகும் ஆதரத்துடன் உள்ள அவனை நோக்கி
இன்று என்னைப் பொருளாக்கி -பாசுரத்தால்
அவனை மடி பிடித்து புறம்பே போக விட்டதுக்கு ஹேது என்ன என்று கேட்க

அவன் இந்திரிய வஸ்த்யதை போன்ற காரணங்களை சொல்ல
அனைத்தும் தமது அதீனமே என்று அறிந்தவன் ஆகையால் இவருக்கு போக்கடி சொல்லுகை அரிது என்று உணர்ந்து
அர்ச்சிராதி கதி என்ன
ஆதி வாஹிக ஸத்காரம் என்ன
திவ்ய தேச பிராப்தி என்ன
அங்குள்ளார் உடைய பஹு மானம் என்ன
ஆனந்தமய ஆஸ்தானத்திலே இருப்பு என்ன
பகவச் சரணாரவிந்த பிராப்தி என்ன
இவ்வளவும் காட்டிக் கொடுக்கக் கண்டு

அது மானஸ அனுபவ மாத்ரமாய் -பாஹ்ய கரண யோக்யம் இல்லாமையாலே
திருவாணை நின்னாணை கண்டாய் -என்று தடுக்க
உம்முடைய ஸ்வரூபத்தோடே விருத்தம் அன்றோ காணும் என்ன
அதுக்கு ஆழ்வார்
நேசம் செய்து உன்னோடே என்னை உயிர் வேறு அன்றி ஒன்றாகவே கூசம் செய்யாது கொண்டாய் என்று தொடங்கி
முதல் தனி வித்தேயோ -பாசுரம் அளவாக எம்பெருமானான் வாய் திறவ ஒண்ணாத படி பல கோடிகளைச் சொல்லி
தாம் இட்ட ஆணை பெறா ஆணை அன்று என்று நிரூபித்தார்

இவ்வளவும் பேசுகைக்குக் காரணம்
அதனில் பெரிய என் அவா -என்னும்படி தத்வத்த்ரயத்தையும் விளாக்குலை கொள்ளும் படி ஆழ்வாரது பரமபக்தியே
அதுவும் மிக அல்பம் என்னலாம் படி அன்றோ அவனது அபி நிவேசம்

இப்படி கரைபுரண்ட அபி நிவேசத்தோடே வந்து தம்முடைய சகல தாபங்களையும் போக்கி அருளினபடியை
யாவரும் அறியும்படி வெளியிட்டு அருளுகிறார் பத்தாம் பத்தில் –

————

எம்பெருமானோ மதுர வாறு
அவனைப் பற்றிய ஞானமும் அமுத வாறு
அதைப் பெட்ரா ஆழ்வார் அந்தணர் தம் அமுது
அமுதிலும் ஆற்ற இனியனான ஆராவமுதனின்
தேனே மலரும் திருப்பாதத்தைத் தலையிலே அணியும் ஆசைப்பட்ட ஆசையோ
ஆர் உயிர் உருகி யுக்க நேரிய காதல் அன்பிலீன் தேறல் அமுத வெள்ளம்
அங்கனம் ஆசைப்பட்டு அனுபவித்த அனுபவம் உள்ளடங்காமல் சொல்லாய் வெளி வந்த அருளிச் செயலும்
அமுது ஒழுகுகின்ற தமிழான தொண்டர்க்கு அமுது -பக்த அம்ருதம்
அத்தைக் கொண்டு அவனது சீர் அமுதக்கடலில் அமிழ்ந்து இருப்பதே
அம்ருத சாகர அந்தர் நிமஞ்சனம்

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே ஸ்ரீவத்ஸாங்க தாஸன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–பத்தாவது பத்து விவரணம்- –

February 16, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-——-

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1-

தாள தாமரையில்
நிருபாதிகமாக பரம பதத்துக்கு ஏறக் கொண்டு போய் விடக்கடவ பரம ஆப்தன்
காளமேகன் என்று நிச்சயித்துக் காளமேகத்தை வழித்துணையாகப் பற்றுகிறார்

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது-எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அர்ச்சிராதி கதிக்கு
உசாத்துணை யாவார் யுண்டோ என்று பார்த்த இடத்து
ஸ்வர்க்காதி லோகங்களுக்குப் போவார் ஒழிய இதுக்கான துணை அற்று இருந்தது

உயர்நலமுடையவனாய் இருக்கிறவன் யாவன் ஒருவன் மரணமான மஹா பயத்துக்கு
விரோதி நிரசன சீலனான காளமேகம் அல்லது துணையில்லை என்று
அவனை வழித்துணையாகப் பற்றுகிறார்

தாள தாமரை
மலையைச் சுமக்குமா போலே பூவின் பெருமை பொறுக்க வல்ல தாளை யுடைத்தான தாமரை
சேற்றின் நன்மையாலே உயர்ந்த தாளையுடைய தாமரை என்கை
இப்படி ஸம்ஸாரமாகிற வன் சேற்று அள்ளலிலே ஹ்ருத் புண்டரீகம் மலருகை அவன் பிரஸாதத்தாலே

தடமணி
தயரதன் பெற்ற மரகத மணித் தடாகத்திலே உபய விபூதிக்கும் ஏக ஸூர்யனானவன்
கருணையாகிற கிரணம் பட்டு அலறுவது ஹ்ருதய கமலம் இறே
தடத்துக்கு அவயவங்கள் ஆகிற பூக்களாலே அலங்கரித்தால் போல் இருக்குமாய்த்து தடம்

உரம் பெற்ற மலர்க்கமலம் உலகளந்த செவ்வடி போல் உயர்ந்து காட்டின ப்ரகாசத்தாலே மயர்வு அற
ஹ்ருதயக் கமலமானது வன் சேற்று அள்ளலில் நின்றும் மயர்வற மதிநலம் அருளுகையாலே
மனன் அகம் மலம் அற மலர் மிசை எழு தரும்
யதா ஸூர்யஸ் ததா ஞானம் -என்றும்
மதியாகிற ஞானத்தாலே திரு உலகளந்த திருவடிகள் போலே அதுக்குப் போலியாக உயர்ந்து காட்ட
வரம்புற்ற கதிர்ச் செந்நெல்
தடமணி வயலிலே கதிர்ச் செந்நெலானது வரம்புற்றுத் தாள் சாய்த்து தலை வணங்கும்

திரு வுலகு அளக்கிற போது -லங்கைஸ் ஸூராணாம் என்கிறபடியே தேவர்கள் திரண்டு
காலை நீட்டித் தலையை வணங்கக் கை கூப்பித் தெண்டன் இட்டால் போலே
இரா நின்றதாய்த்து செந்நெல்கள் ஆனவை விழுந்து தலை சாய்ந்து கிடக்கிற போது

இப்படிப்பட்ட தடங்களையும் வயலையும் யுடைத்தான திரு மோகூர் –
ஊரில் போக்யதை அடைய வயலில் காணும் அத்தனை

நாளும் மேவி
நாள் தோறும் அத்யாதரத்தைப் பண்ணி
அவ் ஊரில் விடிந்த விடிவுகள் எல்லாம் இவனுக்கு ஸூப்ரபாதா ச மே நிசா -என்னும்படி யாய்த்து இருப்பது
அவ்வூரில் வாஸம் ஒழிய வேறே ப்ரயோஜனத்தைக் கணிசியாதே இது தானே ப்ரயோஜனமாய் நின்று

அசூரர் இத்யாதி
ஆஸூர சங்கத்தைத் துணித்து அடக்கி விரோதியைப் போக்கி கொடு போக வல்லன் என்று தோன்றும் படி –

தோள் இத்யாதி
இவர் இப்போது அறிந்த படி என் என்னில்
விடு காதானாலும் தோடிட்டு வளர்ந்த காது என்று தெரியும் இறே
அப்படியே உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் -ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் -ஞான குணகனாய் –
ஞான ப்ரதனாய் -நித்ய முக்த அநுபாவ்யனாய் -சதுர் புஜனாய் -சங்கு சக்ர கதா தரனாய்
கேசவ கிலேச நாசன என்கிறபடியே மை வண்ண நறும் குஞ்சியை யுடையவனாய் -புண்டரீகாக்ஷனாய் –
சிவந்த கனிந்த வாயை யுடையனாய் -திவ்ய ஸுந்தர்ய உபேதனாய் -மேக ஸ்யாமளமான நிறத்தை யுடையவனாய்
இருக்குமவன் துயர் அறு சுடர் ஆதி தொழுது எழும்படி நாளும் மேவிற்று என்கிறார் –

சுரி குழல் கமலக் கண் கனி வாய்
நெடு நாள் சம்சாரத்தில் பட்ட ஸகல தானங்களும் ஆறும்படி இருக்குமாய்த்து
பின்னே போகிறவனுக்கு முன்னே போகிறவன் ஒருக்கால் திருக்குழலைக் குலைத்து -நொழுந்த -நுழுந்த –
கேசவ கிலேச நாசகனாய் இறே இருப்பது –

கமலம் இத்யாதி
ஷூத்ர விஷயங்களினுடைய பொய்யான நோக்கிலும் பொய்யான முறுவலிலும் அகப்பட்ட நெஞ்சாரல் தீரும்படி
மெய்யான நோக்கும் மெய்யான முறுவலும் இருக்கும்படி சொல்லுகிறது –

காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-
ராஜாக்கள் போம்போது முன்னே மகம் நீர் விடுமா போலே முன்னே காளமேகம் ஸுந்தர்ய ஸுகந்த்ய
கல்யாண அம்ருத வ்ருஷ்டி வர்ஷித்துக் கொண்டு போக
பின்னே குளிர்ந்த வாசத்தை அனுபவித்துக் கொண்டு போகலாய் இருக்குமாய்த்து

அவன் அடி நிழல் தடம் ஒழிய -யன்றி மற்று ஓன்று இலம் கதியே-
காள மேகத்தை ஒழிய வேறே வழித்துணை மனமே யுடையோம் அல்லோம் என்கிறார் –

————

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-

கெடும் இடரிலே
ப்ராப்ய பூமியான பரமபதத்திலே போனால் செய்யும் அடிமையைத்
திருவனந்த புர வ்யாஜத்தாலே மநோ ரதித்தார் –

———–——–

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-

உயர்வற -என்கிற பாட்டை விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஒருவருக்கு ஒருவர்
சேஷ வ்ருத்தி பண்ணி அப்ராப்த விஷயத்தை ஆஸ்ரயித்து அத பதித்துப் போக
அங்கன் அன்றிக்கே
ப்ராப்த விஷயமான உயர்நலம் யுடையவன் எவன் அவன் திருவனந்த புரத்திலே ஸந்நிஹிதனானான்
அங்கே ஆஸ்ரயிக்குமவர்கள் நித்ய ஸூரிகளாவார்கள் -அங்கே நீங்களும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

உயர்நலம் யுடையவன் யாவன் ஒருவன் அவன் பராத்பரன் இங்கே சன்னிஹிதனாகப்
புண்ணியம் செய்து
ஸ்நேஹம் ஆகிற புண்யத்தைப் பண்ணி
புண்ணியம்
வர்ணாஸ்ரம தர்மங்களை இதி கர்த்தவ்யதையாக உடைத்தாய் இருக்கும் இறே

ஆக ஸத் கர்ம பலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தை நினைக்கிறது -மயர்வற மதிநலம் அருளப் பெற்ற படி
மத் பக்தோ மன் மநா பவ -என்னக் கடவது இறே

மயர்வற
அவித்யாதிகளைப் போக்கி மதிநலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தை அருளினவன் எவன் அவனுக்கு
நல்ல புனலொடு மலர்கள் தூவி
நல்ல புனலோடே கூடின மலர்களை ப்ரேம பரவசராய்க் கொண்டு பரிமாறி
இத்தால் அர்ச்சனாதிகளைச் சொல்கிறது
மத் யாஜீ மாம் நமஸ்குரு -என்னக் கடவது இறே

எண்ணுமின் எந்தை நாமம்
தியானித்து -ஸததம் கீர்த்த யந்த -என்னா நின்றது இறே
எந்தை நாமம்
இடறினவன் அம்மே என்னுமா போலே திரு நாமம் சொல்லும் போது அதிகாரி சம்பத்து தேட வேண்டா என்ன

ஜீயர் பட்டரைத் திரு நாமம் சொல்லும் போது ப்ரயதனாய்க் கொண்டு சொல்ல வேணுமோ என்ன
கங்கையிலே முழுகப் போனவனுக்கு வேறொரு உவர்க்குழியிலே முழுகிப் போக வேணுமோ
மேலுண்டான நன்மையைத் தருமது அதிகாரி சம்பத்தியைத் தர மாட்டாதோ என்று அருளிச் செய்தார்

தகிரு நாமம் சொல்லுகைக்கு ருசியே யாய்த்து வேண்டுவது -ருசித்தவர்களே அதிகாரிகள்

இப்பிறப்பு அறுக்கும்
கண்டது இறே இத்தினுடைய இழை ஈடு
கவிழ்ந்து பார்க்க இதினிடைய அக்வாயைக் கண்டால் தன்னடையே விரக்தி பிறக்கும் இறே

இப்படி ப்ரத்யஷிக்கச் செய்தேயும் கார்யகரம் ஆகாது இருக்கிறது இறே வாசனையின் கனம்
மம மாயா துரத்யயா -என்னும்
மாயான் தரந்தி தே -என்னும் சொல்கிறபடியே
பாக்யவான்களுக்கே இதனுடைய தோஷ தர்சனத்தைப் பண்ணிக் கழற்றிக் கொள்ளுகைக்கும்
பாக்ய ஹீனருக்கு இதிலே போக்யதா புத்தி பண்ணி அநர்த்தப் படலாம் படி
கர்ம அனுகுணமாக இத்தை இடை எடுத்துக் காணும் ஈஸ்வரன் பண்ணிற்று –

அந்த ஈஸ்வரன் மயர்வற மதிநலம் அருளுகையாலே அதின் அல்ப அஸ்திரத்வாதிகள்
இதுக்கு நிலை நின்ற ஸ்வ பாவம்

இப்பிறப்பு அறுக்கும்
இப்படி ஹேயதயா ஞாதவ்யமான இத்தேஹ ஸம்பந்தத்தை அறுக்கும்

என் செய்தால் என்னில்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் நித்ய விபூதியிலும் போந்து
செறி பொழில் அனந்த புரத்திலே நித்ய வாஸம் பண்ணி அருளுகிற அண்ணல்
செறிந்த சோலையை யுடைத்தான திருவனந்த புரத்திலே வந்து கண் வளர்ந்து அருளுகிற
ஸ்வாமியுடைய கமல பாதம் அணுகித் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

கமல பாதம் என்றது
போக்யமான திருவடிகளைக் கிட்டுமவர்களுக்குத் துயர் அறுக்கும் -பிறவி அறுக்கும் என்றபடி –
சுடர் அடியானது அப்பால் அமரருக்கும் அமரர் ஆனவர்களுக்கும் இப்பிறப்பு அறுக்கும் என்ன வேண்டாதே
தேஹத்தைப் பரிகரித்து அடிமை செய்கிறவர்களுக்கும்
திருவனந்த புரத்திலே நித்யர் முக்தர் முதலானோரும் அடிமை செய்யக் கண் வளர்ந்து அருளுகிறவன்
துயர் அறு சுடர் அடிகளை அணுகுவார் –

ஆஸ்ரயித்தவர்கள்
அமரர் ஆவார்–
அமருக்கும் அமரர் ஆவார்

திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
அவனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற நாம்
தேஹாத்ம அபிமானிகளாகிற நீங்களும் அறியும்படி உங்கள் அநர்த்தத்தைத் பார்த்துச் சொன்னோம்

அண்ணலார் கமலபாதம் அணுகுமவர் அமரர் ஆவார்

——–——–

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-

வேய் மரு தோளிணையிலே
மநோ ரதித்த போதே ப்ராப்ய தேசத்திலே புகப் பெறாமையாலே இன்னமும் இச் சரீரத்திலே
வைக்கில் செய்வது என் என்று அதி சங்கை பண்ண
ஸர்வேஸ்வரன் தெளிவிக்க அதி சங்கை தீர்ந்தார் –

——–————–

பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப்
பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது
என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை யணியாய்-10-3-5-

உயர்வற என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அர்த்த காம உபேதராய்
அத பதித்தார்கள்
அதிலே தமக்கு பகவத் கடாக்ஷத்தாலே பகவத் அனுபவம் மிகுந்தது –

பணி மொழி
ப்ரமாணங்களோ ஆஸ்ரித பரதந்த்ரர் என்னா நின்றது
இதுக்கு விஸ்லேஷம் வரில் செய்வது என் என்று தன் விஸ்லேஷ பீருத்வத்தை
அவன் தனக்கே அருளிச் செய்கிறார் –

உயர்நலம் யுடையவன் எவன் அவன் ஸுலப்யாதி குண பூர்ணனானவன் ஸந்நிஹிதனாய் இருக்க
இப்படிப்படுகிறது என் என்ன

நீ பசு மேய்க்கக் கடவையான பின்பு நீயும் போனாயே
நீ போனால் நலியக்கடவ ஸந்த்யாதி பதார்த்தங்களாலே நலிவு படுகிற என்னை
ஆஸ்வசிப்பித்து அருள வேணும் என்கிறாள் –

உயர்வற உயர்நலம் யுடையவனான நீ –
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
நீ பிரிவை நினைத்து பிரியேன் என்று சொல்லுகிற உன் வார்த்தை போலே
உன்னைப் பிரியாமைக்காகச் சொல்லும் வார்த்தை அல்ல
உன்னது கள்வப் பணி மொழி யாகையாலே பொய்
இது அனுபவத்துக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுகிறதாகையாலே மெய் என்ன

நான் போனேனோ -என்ன

பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பகல் எல்லாம் பசு மேய்க்கப் போனாய்
கண்ணா
என்று சம்போதித்து வைத்து -அவன் தனக்கே நீ போனாய் என்கிறாள் இறே
மேய்க்கிய -மேய்க்கப் போனாய்

நீர் இது அறிந்த படி என் என்ன
நீ மயர்வற மதி நலம் அருளினாயே -அத்தாலே அவித்யாதிகள் நசித்தது
ஸ ஹேதுகம் அல்லாமையாலே அந்த அருள் பக்தி புரஸ் சரமான ஸம்சயத்தைத்
தீர்க்க வேண்டாவோ

என்னைப்
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப்
நீ போனால் பாதகமாகக் கடவ மல்லிகை கமழ் தென்றல் தொடக்கமானவை மறுவலிடுகையாலே
நீ போனது அநுசிதம் என்கிறாள்

கட்டவிழ்கிற மல்லிகையினுடைய மணத்தை வாடையானது தூவா நின்றது
ராவணன் ஸந்யாஸி வேஷத்தைக் கொண்டு வந்து தோற்றினால் போலே வாடையானது
குளிர்க் காற்றாய் வந்து நலியா நின்றது –

பத்ம கேஸர ஸம் ஸ்ருஷ்ட
மத்தகஜமானது முன்னே தலைப்பறை கொட்ட வருமா போலே வாடையை முன் நடக்கவிட்டுக்
கொண்டாயித்து மாலை வருவது
இவளை மதிப்பதால் கூட்டுப்படையாய் வாரா நின்றதாய்த்து

வந்தின்றாலோ
வந்தது கிடாய் -உடம்பிலே பட்டு ஒழிந்தது கிடாய்
பகதத்தன் விட்ட அஸ்த்ரத்துக்கு அர்ஜுனனைப் பின்னே இட்டு உன் மார்பிலே ஏற்றால் போலே
நடுவே புகுந்து வந்து கட்டிக்கொள் என்கிறார் –

பெரிய கிளர்த்தியுடைய மலையானது வரும் என்று அஞ்சுகிறதில்லை -வந்தது

ஆனால் செய்ய அடுப்பது என் என்ன

நீ அயர்வறும் அமரர்கள் அதிபதி -அயர்வற்று அனுபவிப்பார்க்கு அபர்யாப்த்த அம்ருதனான
நீ தான் யாவன் ஒருவன் ஸ்ருதி ப்ரஸித்தனான
யுன்
மணி மிகு மார்பினில்
ஸ்ரீ கௌஸ்துபம் மணி நிறம் பெறும்படியான மார்பு என்னுதல்
திரு மார்பு அடங்க ஸ்ரீ கௌஸ்துபத்திலே புகரேயாம் படி இருக்கும் என்னுதல்
கலவியில் கழற்ற வேண்டாதபடி இரே ஸ்ரீ கௌஸ்துபம் இருப்பது
நிரதிசய ஸூக ஸ்பர்சன் என்னக் கடவது இறே

இவளுடைய ஸ்த்ரீத்வத்துக்கு ஸ்தனம் போலே யாய்த்து அவனுடைய மார்பில் கௌஸ்துபம் –
புருஷோத்தமத்வ லக்ஷணம் இறே
அம்மார்பில் முல்லை மாலையால் என்னுடைய அழகிய முலையை பரிமளிதமாக்கி –
ஸ்ரீ கௌஸ்துபத்தோடே தோளில் மாலையோடே வாசி இன்றிக்கே போக உபகரணமாய்த்து

தோளில் முல்லை மாலையின் பரிமளத்தை என் முலைக்கு ஆக்க வேணும் என்கையாலே
அக்ராம்யமாகக் கலவியைச் சொன்ன படி
குளித்துப் பூச்சூட இருப்பாரைப் போலே யாய்த்து இம்முலைகள்
இவை பிரம்மச்சாரி முலையாகாமே அம்மாலையிலே பரிமளத்தாலே இவற்றை வாசிதமாக்காய் –

அம்மலையில் பரிமளம் இங்கு உற்று ஓங்குவதாகப் பண்ண வேணும்
அம்மாலையின் பரிமளம் முலையிலே யாம்போது கலவியை ஒழிக்கக் கூடாது இறே
கிம் ஸூகம் வனமாலா ஸம் மஹ்ய -என்றால் போலே

உன் வாய் அமுதம் தந்து
சம்ஸ்லேஷ ரஸம் உன்மஸ்தகமாக மிக்க வாறே தாரண அர்த்தமாகச் சில பேச்சு உண்டு இறே
பேசுவது -அப்பேச்சாதல்
அன்றிக்கே வாக் அம்ருதத்தைச் சொல்லவுமாம்
பேச்சு என்று நிர்வகித்துப் போருவது

அணி மிகு தாமரைக் கையை யந்தோ
உன் போக்கை நினைந்து நா நீர் வருகிறது இல்லை
அதுக்குப் பரிஹாரமாகவும் -நான் துயர் அறு சுடர் அடி தொழுது எழும் படியும்
என் நெஞ்சுக்கு இனிமை பிறக்கும் படிக்கும்
ஹேய ப்ரத்ய நீகமாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளையே தொழுது வர்த்தி என்று
உன் பயஹஸ்தமான

அணி மிகு தாமரைக் கையை யாய்
திவ்ய பூஷண அலங்க்ருதமாய் நிரதிசய போக்யமாய் இருந்துள்ள திருக்கைகளை
என் தலையிலே வைக்க வல்லையே
நா நீர் வருகைக்கும் இவர்களுடைய முந்தி கைப்பழம் இருக்கிற படி –

அணி மிகு தாமரைக் கை
ஆபரணம் மிகையாம்படி
சர்வ பூஷண பூஷார்ஹா என்கிறபடியே தனக்குத் தானே ஆபரணமாக கை
பசு மேய்க்கப் போன நீ வரும் அளவும் எனக்குத் தாரகமாக யுன் கையில் ஆபரணத்தைத் தர வேணும்
என்றவர்களுக்காய்த்து வாங்கி இட்டு வைக்கும் இறே
பசு மேய்க்கப் போகைக்குத் தான் ஒப்பித்த படியைச் சொன்னாள் ஆகவுமாம்
அத்தைச் செய்து அவன் போகப் புக்கவாறே சிதிலை யாகிறாள் இறே

தாமரைக் கையை யந்தோ-அடிச்சியோம் தலை மிசை யணியாய்-
குளிர்ந்த தண்ணீர் விடாய்த்தாருக்கு வாராய் என்று சொல்ல வேண்டுவதே யுனக்கு

அடிச்சியோம்
உன் துயர் அறு சுடர் அடி தொழுகையே நிரூபகமான அடியோம்
உன் அழகுக்குத் தோற்ற தோல்வி சொல்லுகிறாள்

தலை மிசை நீ அணியாய்
ஆபரணத்துக்கு ஆபரணம் போலே யாய்த்து இவள் தலைக்கும்
பாத பங்கயமே தலைக்கு அணியாய் என்பது

தாமரைக் கையை அந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்
என்பதாய்க் காலைக் கையைப் பிடித்துக் கார்யம் கொள்ளப் பார்க்கிறார் –
மதீய மூர்த்நாம் அலங்க்ரிஷ்யதி -என்று இறே இவர்கள் இருப்பது

இந் நிர்பந்தங்கள் எல்லாம் ஆர் அறிவார் -வேனுமாகில் எடுத்து வைத்துக் கொள்ளாய் என்ன
காலன் கொண்டு மோதிரம் இடுவாரைப் போலே என் பேற்றுக்கு நான் யத்னம் பண்ணுமவளோ
நீயே மேல் விழுந்ததாகக் கொள்ளுமவள் அன்றோ
நான் என்றும் அத்தலையால் பெறும் இருக்குமவள் இறே இவள் தான் –

அணியாய்
ஆற்றாமை மிக்கது என்னா அல் வழக்குச் செய்யோம் என்ன
நீ அஞ்சல் என்ற கையாலே நிர்ப்பயனாக்கிச் சுடர் அடி தொழுது எழப் பண்ணி அருள வேணும் என்கிறார் –

———-——–

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-

பத்துடை அடியவரில் சொன்ன பக்தி ஸ்வ ஸாத்யத்தோடே பொருந்தின படியை அருளிச் செய்கிறார்
உயர்வற -என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக -சாதனாந்தரங்களாலே
ப்ருஹ்மாதிகள் ப்ரயோஜனாந்தரங்களாலே உயர்வு தாழ்வுமாய் அற்றார்கள் –

அவர்களிலும் தாழ்வான இவர் -ப்ராப்ய பிராபகங்கள் -உயர்வற உயர்நலமுடைய
ஸர்வ ஸ்மாத் பரனே என்று இருக்கிற இவர்
உயர் நலமுடையவனைப் பற்றிப் பிரிய நினைவு இன்றிக்கே இருக்கப் பிரிந்தானாக அதி சங்கை பண்ணி
உம்மை ஒரு நாளும் பிரியோம் காணும் என்றவன் ஆஸ்வசிப்பிக்க -அத்தாலே தரித்து ப்ரீதரானார் –

உபய விபூதி யுக்தனாய் இருந்து வைத்து ஆஸ்ரித ஸூலபனானவன் திருவடிகள் பக்தி யோக லப்யன் என்கிறார் –
உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன்
சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
உயர்நலம் –ஞான ஆனந்த ஸ்வரூபனாய் -ஞான குணகனாய் -ஸ்ருதி ப்ரஸித்தனானவன் –
சார்வே தவநெறி என்றும்
பத்துடை அடியவருக்கு எளியவன் என்றும்
எளிவரும் இயல்வினன் என்றும் சொன்னவன் திருவடிகளே சார்வு என்கிறார்
சார்வு -ப்ராப்யம்
அங்கு அவன் சார்வு என்கிறார்
இங்கே சார்வே என்று அவதாரணத்துடன் அருளிச் செய்கிறார்

தவ நெறிக்கு -பக்தி மார்க்கத்துக்கு -தபோ மார்க்கம் -என்றபடி –
வணக்குடைத் தவ நெறி என்றாரே அங்கே -அத்தைச் சொல்கிறார்
நமஸ் யந்தச்ச மாம் -என்று நமஸ்ஸைக் கரண சரீரமாக யுடைத்தாய் இருக்கும் இறே பக்தி

தவ நெறி என்னும் காட்டில் பக்தியைச் சொல்லித்தாமோ என்னில்
யஸ்ய ஞான மயந்தப -என்றும் ஞான விசேஷமான பக்தியைத் தபஸ் என்றும் சொல்கிறது –

அன்றிக்கே
இவன் ஒரு ப்ரணாமத்தைப் பண்ணினால் -இவன் நம்மை நோக்காக குவாலாக வருந்தினான்
என்று இது தன்னைப் பெரிய காயக் கிலேசமாக
நினைத்து இருக்கும் அவன் கருத்தால் சொல்லிற்று ஆகவுமாம்

தாமோதரன் தாள்கள்
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -என்றதைச் சொல்லுகிறார் இங்கு
யசோதாதிகள் கையிலே கட்டுண்டு தழும்பு சுமந்ததுவே திரு நாமமாய் இருக்குமவன் இறே

யசோதாதிகள் கட்டுண்பான் ஒருவனான பின்பு அவனை யுகப்பார் அவன் காலைக் கட்டிக் கொள்ளும் அத்தனை

அப்படிப்பட்டவன் ஸூ லபனாகிறான் எவன் அவன் என்னில் மயர்வற மதி நலம் அருளினவன் எவன் அவன்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
தன்னுடைய மேக ஸ்யாமமான குளிர்ந்த வடிவையும் கடாக்ஷ அம்ருத வ்ருஷ்டியை வர்ஷிக்கிற
விகஸிதமான திருக்கண்களையும் பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே விசதமாகக் காட்டின படி
விலக்ஷண விக்ரஹ யுக்தனாய் உபய விபூதி நாதன் என்கிறார்

கார்மேக வண்ணன்
இந்த பக்தி விளையும் படி கிருஷி பண்ணியும் வர்ஷித்து ருசிக்கு உத்பாதகனாய் இன்பத்தை வளர்த்து
அது பக்குவமானால் பர ஞானத்துக்கு ப்ராப்யமுமான வடிவை யுடையவன்

காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி இறே
கார் காலத்து மேகம் என்னுதல்
கறுத்த மேகம் என்னுதல்
புயல் கறுத்த நிறத்தனன் என்றத்தைச் சொல்லுகிறார்

கமல நயனத்தன்
அவ்வடிவுக்குப் பரபாகமாய் அகவாயில் வாத்சல்ய ப்ரகாசகமான குணங்களுக்கு ப்ரகாசகம் இறே திருக்கண்கள்
அனுக்ரஹம் அடையத் தோற்றுவது கண் வழியே இறே
வாத்சல்ய ப்ரகாசகமான வடிவு அழகு அன்றிக்கே மேன்மை கண்டு மேல் விழ வேண்டுமவனாய்த்து

அயர்வறும் அமரர்கள் அதிபதி -தத் வியதிரிக்தங்களிலே வாசனையும் இல்லாத நித்ய முக்தர்களை சந்த
அனுவ்ருத்தி கொள்ளுகிறவன் எவன் அவன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
விக்ரஹ வை லக்ஷண்யமே அன்றிக்கே ஸ்வரூப வை லக்ஷண்யத்தைச் சொல்லுகிறது
யாவையும் யாவரும் தானாம் அமைவுடை நாரணன் என்றத்தைச் சொல்லுகிறது என்று நிகமிக்கிறார் –

பிருதிவ்யாதி பஞ்ச பூதங்களையும் சொன்ன இத்தாலே
அவற்றின் கார்யமான தேவாதி விசேஷங்களையும் நினைக்கிறது
இத்தால் லீலா விபூதியைச் சொல்கிறது

நேமியான்
கையும் திருவாழியுமாய் நித்ய விபூதியில் இருக்கும் இருப்பை அயர்வறும் அமரர்கள்
அபர்யாப்த்த அம்ருத தாசிகளுக்குப் போக்யமான வனுக்கு அடையாளமும் -அதுவே நிரூபகமும் –

இப்படி உபய விபூதி யுக்தனுடைய துயர் அறு சுடர் அடி தொழுது
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–
இவ்வருகில் ஆக்கனான தேவாதிகள் அன்றிக்கே அவ்வருகில் பெருமக்கள் ஏத்தும்படியான
பெருமையை யுடையவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

எனக்கு கரணமான நெஞ்சே -வானவர்கள் பேர் பிதற்றும் பெருமையனைத் தொழுது எழு
இங்கும் ருசியுடையாரும் பிதற்றும் அத்தனை

கார் மேக வண்ணனாய் கமல நயனத்தனாய் -நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியனாய்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையை யுடையனாய் இருந்து வைத்துத்
தாமோதரனானவன் திருவடிகள் தவநெறிக்குச் சார்வே
இது நிச்சிதம் –

—————–

கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-

கண்ணன் கழலிணையில்
வீடுமின் முற்றத்திலே
வண் புகழ் நாரணன் திண் கழல் சேர் என்று தொடங்கின படியை
அருளிச் செய்து தலைக்கட்டி
பக்தியினுடைய பிரகாரம் இருக்கும் படியை அருளிச் செய்து
பர உபதேசத்தைத் தலைக்கட்டு அருளுகிறார் –

—————–———

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-10-5-7-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி பிரம்மா ஆனந்தத்து அளவும் மோக்ஷ சாதனங்களாக
கர்ம ஞானாதிகளை அனுஷ்ட்டிப்பாரும் பக்தி பிரபக்திகளை அனுஷ்ட்டிப்பாருமாகையாலே
கால விளம்பமாய் அதில் எவ்வளவு குறையிலும் பழிப்பது இல்லை

தமக்கு பக்தி ஆர்ஜித்த பக்தியும் அன்றிக்கே -அர்த்தித்துப் பெற்ற பக்தியும் அன்றிக்கே
அருளின பக்தி யாகையாலே
உயர் நலமுடையவன் எவன் அவன் -ஆனந்தாதி குணங்களாலே பரிபூர்ணனான ஸர்வேஸ்வரன்
நாளேல் அறியேன் எனக்குள்ளன நாள் என்ற இவருக்கு மரணமானால் என்று இறே
நாளிட்டுக் கொடுத்தது

அத்தனை க்ரமம் பொறுக்க மாட்டாதே ஈஸ்வரன் தன்னைக் கொண்டு போகையிலே
த்வரிக்கிற படியைக் கண்டு
மரணமானால் என்ற அளவும் பொறுக்கிறிலன் –
நெடுநாளாய்த் தோற்றி ஈஸ்வரன் செய்கிறபடி தமக்குத் தவிராததாய் இருந்தது
இனி இவர்கள் இந்த பிரபத்தி மார்க்கத்தை இழக்க ஒண்ணாது -இத்தை உபதேசிப்போம் என்று
தமக்கு ஒன்றும் பிறருக்கும் ஒன்றும் ஆகாதே த்வயத்தை உபதேசிக்கிறார் –

உயர்வற உயர்நலமுடையவன் எவன் அவன்
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
உயர்நலமுடையவன் எவன் அவன் -மாதவன் -ஸ்ரீ யபதியானவனை ப்ரீதி பிரேரிதரராய் ஆஸ்ரயிக்கவும்
இனிமையோடு திரு நாமம் சொல்லவும் மாட்டாதார்
அந்தப்புர பரிகரமான வார்த்தையைச் சொல்லவே பூர்ண உபாசனத்தில் பலம் ஸித்திக்கும் என்கிறார்

ஞான ஆனந்த ஸ்வரூபனாய் -ஞான குணகனாய் இருந்துள்ள ஸ்ரீ யபதியானவனை
மாதவன் என்று த்வயமாக்கி
நாராயண சப்தத்தோடு இத்தைச் சேர்த்துச் சொல்லப் பாருங்கோள்

நாரணம் என்றாரே கீழே
தமக்கு ஈஸ்வரன் மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன் மாதவன் -ஸ்ரீ யபதியான நாராயணன்
தமக்கு பக்தி ரூபா பன்ன ஞானத்தை அருளி சரணாகதி வழியிலே நிறுத்தினான்

ஓத வல்லீரேல்
உங்களுக்கு ருசி இல்லையாகிலும் பர பிரேரிதரராய்க் கொண்டு ஓதி நிரந்தரமாகச் சொல்ல வல்லீராகில்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் யாவன் ஒருவன் அவன் அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தர் பரிசர்யை பண்ண
ஒண் டொடியாள் திரு மகளும் நீயும் நிலா நிற்பக் கண்ட சதிர்
மாதவன் என்று என்றே ஓதுகையே மா சதிர்

தீது ஒன்றும் அடையா
உத்தர ஆகத்துக்கு நெஞ்சு செல்லாது
துயர் அறு சுடர் அடி தொழுகையாலே பூர்வாகம் அற்றது

ஏதம் சாராது
என்கையாலே உத்தர ஆகத்துக்கு அஸ்லேஷமே யாம்
ஏதம் சாராவே
பூர்வ ஆகத்தை விஸ்மரிக்கும்
உத்தர ஆகத்துக்கு நெஞ்சு செல்லாது
தொழுது எழு என் மனனே

கீழ்ச் சொன்ன திருமந்திரமும்
இப்பாட்டில் சொன்ன ஸ்ரீமத் பதமும்
தனித்தனியே பக்தி பிரதிபத்திகளுக்கு வாசகம் ஆகையாலே
பேற்றுக்கு அபர்யாப்த்த அர்த்தமாய் நிரதிசய போக்யமான பின்பு
இரண்டையும் சேர்த்துச் சொன்னவர்களுக்குப் பேறு சொல்ல வேண்டா இறே என்று
தன் திரு உள்ளம் போல்வாருக்கு உபதேசித்து அனுபவிக்கிறார் –

——–———–

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

அருள் பெறுவாரிலே
தம்மை விக்ரஹத்தோடே திருநாட்டிலே கொண்டு போகைக்காக அவன் வந்து த்வரித்து
அவஸர ப்ரதீஷனாய் இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்
உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற என்று மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
தேவதாந்த்ர சாத்தனாந்தர ப்ரயோஜனாந்தரங்களிலே போயிற்று
இவர்களிலும் தண்ணியரான இவர் பெற்ற பேறு சொல்கிறது –

உயர்வற உயர்நலம் யுடையவன் யாவன் ஒருவன் இவருக்குப் பொய் நின்ற ஞானம் தொடங்கி
இவ்வளவும் வர -ஈஸ்வரனை ஆழ்வார் பின் தொடர்ந்தபடி சொல்லிற்று
இது தொடங்கி ஆழ்வாரை ஸர்வேஸ்வரன் பின் தொடருகிற படி சொல்கிறது

உயர் நலம் யுடையவனுடைய அருள் பெறுவார் அடியார்
ஈஸ்வரன் நம்மை விஷயீ கரிக்கையிலே ஒருப்படா நின்றான்
அது தானும் தாம் விதித்தபடி செய்வதாக இரா நின்றான்

உயர்நலம் யுடையவன் -அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு
ஹேது தான் இருக்கிற படி
ஸர்வேஸ்வரன் பண்ணும் ப்ரஸாத அதிசயத்துக்கு விஷய பூதராய் இருப்பார் சிலர் உண்டு –
அவர்கள் நமக்கு ஸ்வாமிகள்
அவர்கள் பக்கல் அவன் பண்ணின அருள் நம்மளவும் வர வெள்ளம் கோத்தது காண் என்கிறார் –

எல்லாரும் அடியார் அன்றோ என்னில்
தான ஹந் த்விஷத -என்று பிரஜை தீம்பிலே கை வைத்தால் மாற்றைக் கொண்டு
வாய் வாய் என்பாரைப் போலே அவன் தானே சீற வேண்டும்படி இருப்பார் சிலர் உண்டு –

அவர்களைப் போல் அன்றியே -ததாமி -என்று அவனுடைய அருளுக்கு விஷய பூதராய் இருப்பார் சிலர் உண்டு –
அவர்கள் பண்ணும் அருளை -அவர்கள் பக்கல் பண்ணும் அருளை நம் பக்கலிலே மயர்வற மதிநலம் அருளினன்
அவித்யாதிகள் சவாசனமாகப் போயிற்று தன் நிர்ஹேதுக கிருபையாலே

அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான்
ராஜாவுக்குப் புறம்பே நாடு முறையில் செல்லா நிற்கத் தன்னையும் தன் ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் இறே
மஹிஷி விஷயத்தில்
அப்படியே அவன் தன்னை முற்றூட்டாகக் கொடுத்து அனுபவிப்பித்தான் –
பாரதந்த்ர ஏக பரராய் இருப்பார் சிலர் உண்டு -அவர்கள் பக்கல் பண்ணும் அருளை என் பக்கலிலே பண்ணினான்

அவர்கள் யார் என்னில்
மந்த்ர ரத்னத்தில் மத்யமபத நிஷ்டர்கள்
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
இருவருக்கும் நிரூபகமாய் இருக்கிற படி
இவர் அருள் பெறுவார் அடியார் தம் அடியார்
அவன் ஆழியான்
இருவருக்கும் நிரூபகம் ததீயரே

காணும்
நீக்கமிலா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள் -என்றும்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க-என்றும் சொன்ன வார்த்தையை நினைத்து இருந்தான் –

ஸர்வேஸ்வரன் நம் பக்கலில் முழு நோக்காக ப்ரஸாதத்தைப் பண்ணினான்
திருவாழியை ஒரு கண்ணாலும் இவரை ஒரு கண்ணாலும் பார்ப்பதாகா நின்றான்
விடலில் இத்யாதி
கையில் திருவாழியை விடில் அன்றோ உம்மை விடுவது என்னா நின்றான்

ஆழியான் என்றே நிரூபகம்
அஸ்மாபிஸ் துல்யோ பவது -என்று அவர்கள் பக்கல் பண்ணும் அருளை என் ஒருவன்
பக்கலிலேயும் பண்ணா நின்றான்
அவர்கள் அருள் பெறுவார் அடியார் ஆய்த்து
இவனும் அருள் தருவானாய் அமைகின்றன ஆய்த்து

அமைமின்றான்
பாதி சம்வாதம் குறைவற்றது
அருளின காரியமும் குறைவரத் தருவதாகப் பாரித்து நின்றான்

அவன் பிரசாத அதிசயத்தைப் பண்ணுவதாக பாரியா நின்றானாகில் -அவன் தான் ஸர்வேஸ்வரன் ஆகில்
பின்னைக் கண் அழிவு என் என்னில்

அது நமது விதி வகையே
அயர்வறும் அமரர்கள் அதிபதி -அயர் -அசர்வு -அது இல்லாமல்
பூர்வே ஸாத்யர்களால் ஆராதிதனானவன் யாவன் ஒருவன் அவன் நித்ய சம்சாரியாய்ப் போந்த என்னைத்
தன் நித்ய விபூதியிலே கொண்டு போய் அனுபவிக்க வேணும் என்று பாரித்துக் கொடு வந்து புகுந்து
ஆஸ்ரித பரதந்த்ரன் ஆகையாலே நாம் விதித்த படியே செய்வானாகப் பாரா நின்றான்
அது செய்யும் இடத்து நான் சொன்னபடி செய்வானாக வேண்டி இரா நின்றான்
அது நம்முடைய பாக்ய அனுகுணமாக இறே என்று பூர்வர்கள் நிர்வாஹம்

எம்பெருமானார் கேட்டருளி இத்திருவாய் மொழியிலே மேலோடுகிற ரஸத்தோடே சேராதே
நாம் விதித்தபடியே செய்வானாக இருந்தான் என்கிறார் என்று அருளிச் செய்தார்

அஹம் ஸர்வம் கரிஷ்யாமி என்று பாரித்துப் போந்தவர் தாமே க்ரியதாம் இதி மாம் வத எனப்
பார்த்து இருந்தால் போலே இவர் சொன்னபடி செய்வானாய் இரா நின்றான்

நமது சொல்வகை என்னாதே விதிவகை என்பான் என் என்னில்
விதி அதிக்ரமத்தில் ப்ரத்யவாயத்துக்கு அஞ்சுவாரைப் போலே அஞ்சா நின்றான்
தான் நினைத்தபடி செய்கைக்குத் தன் பக்கலில் குறைவற்றாலும் இத்தலையில்
இச்சை ஒழியக் கொடு போகாதே யவன் -புருஷோத்தமன் அபும்ஸ்த்வம் வரும்படி செய்யான் –
நமது விதி வகையே
தத அநு ஜா நந்தம் உதார வீக்ஷணை -என்று கடாஷிக்குமவன் கிடீர்
இவன் விதிக்க வேண்டி இருக்கிறான்
அருளுகிறார் ஸர்வேஸ்வரன் ஆகில் அது தான் நாம் விதித்த படி செய்வானாய் இருந்தானாகில்
இனி கண் அழிவு என் என்ன

இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
இனி நீயும் இசையுமத்தனையே வேண்டுவது இதுவே கண்ணழிவும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி அவர்களும் தானுமாய் இவனை அணையில் வைத்து
ஆதரிக்கைக்காக வந்து நம் அனுமதி பார்த்து இருந்தான்

மருள் ஒழி நீ மட நெஞ்சே
நான் அவன் வழியே போவதாகப் பார்த்தேன் -நீயும் அவன் வழியே போவதாகப் பாராய்
உமக்குத் தான் அவன் வழியே போக வேண்டுகிறது என் என்ன
இருள் தரும் மா ஞாலமாய் இருந்தது -ஸம்ஸாரம் ஆகிறது இருக்க இருக்க அஞ்ஞானத்தைத் தருவது ஒன்றாய் இருந்தது
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆள்வானையும் எதிரிடப் பண்ணிற்றே

மருள் ஒழி
வான் உயர் இன்பம் எய்தில் என் -மற்றை நரகம் எதில் என் என்று இருந்ததோர் பிரமம் உண்டே முன்பு –
இப்போது அத்தைத் தவிர்ந்தேன்

அது தான் தவிர வேண்டுவான் என் என்னில்
ஸ்ரீ வைஷ்ணவ ஸஹ வாஸத்துக்கு உடலாய் இருக்கையாலும்
உகந்து அருளின நிலங்களில் உண்டான ஆதார அதிசயத்தாலும் இறே
இங்கே இருக்கில் என் -அங்கு போய் இருக்கில் என் அவன் எல்லைக்குள்ளே கிடக்கும் அத்தனை இறே
வேண்டுவது இருந்தோம்
அதுவே யாகப்பெறாதே மற்றைப்படிக்கு உடலாய் இருந்தது –

ப்ரக்ருதி வஸ்யனாக்கி சப்தாதி விஷயங்களிலே கொண்டு மூட்டும் ஸம்ஸார ஸ்வ பாவத்தை
அனுசந்தித்த பின்பு விடுவதாகத் துணிந்தேன்

யான் வேண்டேன்
என் புத்தியால் விட்டேன்- அவன் இருத்தில் செய்யலாவது இல்லையே

ஆனால் செய்ய வேண்டுவது என் என்ன
மருள் ஒழி நீ
உனக்கு ஒரு நினைவுண்டு -அத்தைத் தவிர்ப்பார்

தீவினை யுள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால் –திருவாறன் விளை யதனை மேவி
வலம் செய்து கை தொழக் கூடும் கொல் என்னும் என் சிந்தனையே என்று
விரோதி கழிந்து போம் வழி எல்லாம் போய்
இது பரமபதத்துக்குப் போம் வழி -இது திருவாறன் விளைக்குப் போம் வழி என்றால்
ப்ராப்ய வஸ்து தான் இங்கேயே வந்து கிட்டிற்றாகில் இங்கேயே அடிமை செய்ய அமையாது
என்று பிரமித்து ஓன்று உண்டு -அத்தைத் தவிர்ப்பார்
மருள் என்று இனி பிரமத்துக்குப் பெயர்

மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–
அயர்வறும் அமரர்கள் அதிபதி யாவன் ஒருவன் -அவன் வாட்டாற்றான்
ஆஸ்ரிதரை அருளப்பாடிட்டு நிற்கிறவன் அடி வணங்கித் தொழுது எழு என் மனனே என்கிறார்

வணங்கு என் தன் மட நெஞ்சே
ஸாது நெஞ்சே -எனக்கு பவ்யமான நெஞ்சே –
உத்தேச்ய வசித்து ஸந்நிஹிதமாய்த்து என்று இத்தனை பார்க்கிற அத்தனை போக்கி
நம்மையும் பார்க்க வேண்டாவோ

வாட்டாற்றான் அடி வணங்கே
நமக்கு ஹித காமனாய் வந்திருக்கிறவன் வழியே போய் அவனை
அனுபவிக்கப் பார்க்க வேண்டாவோ

உகந்து அருளின நிலங்களில் வந்து நிற்கிறது நம்மை
அங்கே கொண்டு போகைக்காகவே இருக்கும்
நீயும் அவன் நினைவிலேயே போகப் பாராய்

சுடர் அடி தொழுது வணங்கே
அடி வணங்குகை யாவது ஈர் அரசு தவிருகையே இறே –

———–———

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–9-7-1-

செஞ்சொல் கவியில்
தம்மைத் திரு மேனியுடன் கொண்டு போக வேணும் என்று த்வரிக்க
மங்க ஒட்டு -என்று அவனை சரணம் புக்கு ப்ரக்ருதி சம்பந்தத்தை
அறுத்துக் கொண்ட படியை அருளிச் செய்கிறார் –

————–——–

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-

உயர்வற என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரம்ம ஆனந்தத்து அளவும் கர்ம அனுகுணமான சரீரங்களாலே
ஸ்வர்க்க நரகங்களுக்கு ஹேதுவாய் இருக்க
அதிலே ஒருவரான இவரை இத்திருமேனியோடே கொடு போகைக்கு ஆசைப்படுகிறான் ஈஸ்வரன் –

ப்ரம்மாதிகள் தொடங்கி தத் தத் காதைகள்-ஸ்லோகங்கள் – ஆனவை என்ன -நாலு வேதம் என்ன –
ஆறு ஸாஸ்த்ரம் -சிஷா வ்யாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் -போல்வன என்ன –
அஷ்டாதச புராணம் என்ன -சதுஷ் ஷஷ்ட்டி கலைகள் என்ன –
மற்றும் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் திவ்ய ஸூ க்திகள் என்ன – இவைகள் எல்லாம் பகவானை ஸ்துதிக்கக் கேட்டு
உகந்து இருந்தால் போலே அன்று இறே நம்மாழ்வார் திருவாய் மொழி பிரபந்தத்தாலே
த்வய விவரணமான சரணாகதியை அருளிச் செய்த காதையைக் கேட்ட ஸர்வேஸ்வரன்

உயர்வற உயர்நலம் யுடையவனாய் ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனானவனை இந்த திவ்ய கானத்தைக்
கேட்டு மட்டுக்கட்டி அனுபவிக்க மாட்டாதே அத்தாலே வந்த ஆனந்தத்துக்குப் போக்கு விட்டுத்
தென்னா தெனா வென்று ஆளத்தி வையா நின்றான்

இந்தத் திருவாய் மொழி தான் -பக்த்தாம்ருதம் விஸ்வ ஜன அனு மோதனம் சர்வார்த்ததம் ஸ்ரீ சடகோப வாங் மயம்
ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமாகமம் நமாம் யஹம் த்ராவிட வேத சாகரம் என்கிறபடியே

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப-விறே இதனுடைய வைபவம் தான் இருப்பது –

உயர் நலமுடையவன் தான் இருப்பது -தம்மோடே கலந்து தம் வாயால் திருவாய் மொழி கேட்ட
ப்ரீதி உள் அடங்காமல் ஆனந்தித்து ஆளத்தி வையா நின்றான் -என்கிறார் –

நன்கு என்னுடலம் கைவிடான் என்னும் அளவன்றிக்கே
என்னுக்தி மாத்ரத்திலே களியா நின்றான் என்கிறார் –

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப வாய்த்துத் திருவாய் மொழி தான் அவதரித்தது

ஸ்துத்யனுடைய அவதாரம் போலே யாய்த்து ஸ்துதியினுடைய அவதாரமும்
பரித்ராணாய ஸாதூநாம் -இத்யாதி போலே
அகில ஜகத் பத்ம போதாய அச்யுதா பாநு நா -என்னுமா போலே

நண்ணா -இத்யாதி
பிரதிகூல நிரசனத்துக்கு வேறொரு கருவி எடுக்க வேண்டாதே –
அனுகூல ரக்ஷணத்துக்கும் வேறொன்றும் வேண்டாதே
அநந்ய ப்ரயோஜனராய் இருப்பார்க்கு ஸ்வயம் ப்ரயோஜனமுமாய் இருக்குமாய்த்து

நண்ணா வசுரர் நலிவெய்த
அவ்யபதேசனுக்கு அநந்தரத்தில் அவன்
தன்னப்பன் செய்தவற்றைக் கேட்டு -இவன் என் செய்தானான் -என்று கர்ஹித்தான்
ஒரு மதிலை வாங்கும் காட்டில் அத்தர்சனம் குலைந்ததோ
திருவாய் மொழி என்றும் ஸ்ரீ ராமாயணம் என்றும் வலியான மஹா பிரபந்தங்கள்
இரண்டு உண்டாய் இருக்க -என்றான் ஆய்த்து

இப்படி உகவாதார் நெஞ்சு உளுக்கும் படியான ப்ரபந்தமாய்த்து
விபரீதஸ் ததா ஸூர –என்னக் கடவது இறே
பொருந்தாமை யுடைய அஸூர வர்க்கமானது மண் உண்ணும் படியாக சம்பந்தம் இல்லை
என்ன ஒண்ணாதே
பொருந்தோம் என்கை இறே உள்ளது –

நல்ல அமரர் பொலிவு எய்த
விஷ்ணு பக்தி பரோ தைவ -என்னக் கடவது இறே
அனுகூலமாய் இருக்குமவர்கள் உண்ணாதே தடிக்க -இவர்களுக்கு நன்மையாவது பகவத் பக்தராய் இருக்கை
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் என்னக் கடவது இறே

இது யுமக்குப் பிறந்தபடி என் என்ன –
ஸ்துத்யன் ஆனவன் தன்னை ஸ்துதிக்கும் படி மயர்வற மதிநலம் அருளினான் –

வேதங்களைப் போலே -அப்ராப்ய மனஸா ஸஹ -என்று மீளுகை அன்றிக்கே
நின் கண் வேட்கை எழுவிப்பேனே -என்று நீ அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
ஒண் சுடர்க் கொழுந்தாய் -பரம பக்தியாய்க் கொழுந்து விட்டு வளரா நின்றது
அது பொங்கி வழிந்த சொல் பண்ணார் பாடல் இன்கவி யாயிற்று

எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
புறம்பு ஓருவர் எண்ணாதன சிலவற்றை எண்ணுவார் உண்டாயிற்று
ஸர்வேஸ்வரன் ரக்ஷகன் -அவனை ஒழிந்த அடங்கலும் அரஷகம் என்று இருக்கை அன்றிக்கே
உபய விபூதி யுக்தனுக்கும் இன்னும் சில விபூதி வேணும் என்றும்
ஸர்வ குண ஸம்பன்னனுக்கும் இன்னம் சில குணங்கள் வேணும் என்றும்
இப்புடைகளிலே எண்ணுவார் யுண்டாய்த்து

நன் முனிவர்
அவனுடைய ஸம்ருத்தியையே மனனம் பண்ணும் ஸ்வ பாவராய் இருக்கை
ஈஸ்வரன் அடியாகத் தங்கள் ஸம்ருத்தியை எண்ணுமவர்கள் முனிவர்
அத்தலைக்கே ஸம்ருத்தியை எண்ணுமவர்கள் நன் முனிவர்

அவர்கள் இன்பம் தலை சிறப்ப
திருவாய் மொழி அவதரித்த பின்பு அவனுக்குக் குண விபூதி போராது என்று இருந்த
இழவு தீர்ந்து அத்தாலே நிரதிசய ஆனந்த யுக்தரானார்கள் –

அன்றிக்கே
திருவாய் மொழியை ஒழிய வேறொரு ஸம்பத்தும் வேண்டா வென்று இதுவே
மனனம் பண்ணி ஹ்ருஷ்டராம் படியாகவுமாம்

அன்றிக்கே
நல்ல அமரர் -என்றும் நன் முனிவர் என்றும் அயர்வறும் அமரர்கள் ஆகவுமாம்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் -என்னக் கடவது இறே

அயர்வு அறுகை யாவது
அபர்யாப்த்த அம்ருதத்தில் ரஸம் அல்பமாய் பக்தாம்ருதமான திருவாய் மொழியைப்
பானம் பண்ணுகிறவர்கள் அல்லர்

இன்பம் தலை சிறப்பப் பண்ணார் பாடல் இன் கவிகள்
பண்ணோடே சேர்ந்த பாடல் -புஷ்ப்பமானது பரிமளத்தோடே அலருமா போலே
திரு அஷ்டாக்ஷரமானது தளிரும் முறியும் மணமும் மதுவும் யுண்டாமாப் போலே
இதுவும் பண் மிகுந்து இருக்குமாய்த்து

இன் கவிகள்
இசையும் பண்ணும் ஒழிய தோல் களைந்த சுளை போலே கவி தானே இனிதாய் இருக்குமாய்த்து

யானாய்த் தன்னைத் தான் பாடி
என் பேரை இட்டுத் தன்னைத் தான் பாடி
பிதாவானவன் புத்திரனுக்கு பசுவை நீர் வார்த்துக் கொடுத்து அவன் பக்கலிலே
தான் நீர் ஏற்றுப் பசுவை பெறுமா போலேயும்
ஸூதனை வார்த்தை கற்பித்து அவன் சொல்லக் கேட்டு அவன் இனியனாம் போலேயும்

தானே பாடினான் ஆகில் ஸ்ரீ கீதையோடே ஒத்துப் போமே
பண்டே பரமன் பணித்த பணி வகையே கண்டேன் என்று இவர் அங்கீ காரத்தாலே
அந்த கீதை தானும் வீறு பெற்றது இறே

தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
தென்னா என்னும் -செருக்கால் தென்னா தென்னா என்று ஆளத்தி வைக்குமாய்த்து
திருவாய் மொழியாகிய தேனைக் குடித்துத் தெய்வ வந்து ஆளத்தி வைக்கிற படி

சம்சாரி சேதனனுக்கு பகவல் லாபம் உண்டானால்
ஏதத் சாம காயன் நாஸ்தே -என்று ஸாம கானம் பண்ணுமா போலே
அவாக்ய அநாதர என்னும் படி வாய் திறவாமல் இருக்கும் பர ப்ரஹ்மம் –
தைர்ய பங்கம் பிறந்து பாடா நிற்குமாய்த்து

என்னம்மான்
ஸூத வசனம் இனிதாம் போது பிராப்தி யுண்டாக வேணும் இறே
அதுக்கடியான ப்ராப்தியைச் சொல்லுகிறதாய்த்து

திருமாலிருஞ்சோலை யானே
இவரைப் பாடுவித்த முக்கோட்டை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் கண்ணபுரத்துறை அம்மானே –
இவரைப் பாடுவித்த முக்கோட்டை இறே இது

தாம் பாடின கவிகள் இனிதானமையை அனுசந்தித்தார் –
இவை தாம் அடியாகப் பிறந்தது என்று சொல்லலாய் இருந்தார் இல்லை –
இதுக்கடி என் என்று பார்த்தார் -அவன் இவர் நெஞ்சிலே புகுந்து பாடுவித்தான் ஆய்த்து

கணபுரத்துறை யம்மான் திருமாலிருஞ்சோலையான் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
இதுக்குப் பிரத்யுபகாரம் இல்லையே வணங்கிப் பிழை என்கிறார் –

—–———–

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-

திருமாலிருஞ்சோலையிலே
இப்படி ஆதரிக்கிற தேவர் அநாதி காலம் என்னை யுபேஷிக்க வேண்டுவான் என்
இன்று என்னை விஷயீ கரிக்க வேண்டுவான் என் என்று கேட்க
அவன் நிருத்தரனாய்ப் பேசாதே இருக்க
நிர்ஹேதுகமாகாதே என்று நிருத்தரானார் –

——————

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

உயர்வற என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி பிரம்மா ஆனந்தத்து அளவும்
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர ஜங்கமாத் மகமான சரீரங்களிலே
ஓரொன்றிலே அளவிறந்த ஜென்மங்களில் பிறந்த வஸ்துவாய் அன்றோ போயிற்று
நீயும் அனுமதி தானத்தைப் பண்ணி யுபேஷித்து விஸ்மரித்து இருந்த நீ
இன்று என்னை விஷயீ கரிக்கைக்கும் முன்பு என்னை யுபேஷிக்கைக்கும் காரணம் என்
என்று கேட்க வேண்டி இருந்தேன் என்கிறார்

உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் ஸர்வேஸ்வரனான நீ
என்னைப் பரமபதத்தில் கொண்டு போவதாக விரைகிறபடி கண்டனுக்கு
இன்று என் அளவு அல்லாதபடி த்வரிக்கிற நீர் இதுக்கு முன்பு நெடு நாள் விட்டு ஆறி இருக்கக் கூடாது

இதுக்கடி ஏது என்ன
நத்வாமி ஹஸ்தாம் ஜாநீதே -என்று நடுவே சிலர் சொல்ல வேண்டும்படி யாய்த்து –
எழுந்து அருளி இருந்த இடம் அறியாமையாலே யாறி இருந்தார் அத்தனை போக்கி
அறிந்தால் ஒரு க்ஷணம் ஆறி இருப்பாரோ

இது தான் என் வார்த்தை கொண்டு அறிய வேணுமோ
கமல லோஷண -உன்னுடைய கண் அழகு அன்றோ பிரமாணம்
ராம -அவரை அறியாது ஒழிய வேணுமோ
ந ஜீவேயம் க்ஷணம் அபி விநா தம் அஸி தேஷிணம் என்று க்ஷணம் அபி என்று இறே அவர் இருப்பது
ராம கமல லோஷண -அன்றிக்கே யார் எதிராகக் கண்ணிலே சிவப்பும் சீற்றமும் எல்லாம் என்னுதல்

உயர்வற உயர்நலம் யுடையவனான நீ –
இன்று என்னைப் பொருளாக்கி
அஸத் கல்பனான என்னை ஒரு வஸ்துவாம் படிப் பண்ணி
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -என்றார் இறே

தன்னை
சத்துக்களுக்கு ஸ்ப்ருஹ ணீயனான தன்னை

என்னுள் வைத்தான்
தன்னைப் பிறருக்கு அவகாசம் இல்லாதபடி பண்ணி –
பொருள் இல்லாத என்னைப் பொருளாக்கினான் என்றார் இறே
நித்ய ஸூரி ஸேவ்யனான தன்னை முற்றூட்டாக என்னுள்ளே கொடு வந்து வைத்தான்

இது நீர் அறிந்தபடி என் என்ன -மயர்வற மதிநலம் அருள -அத்தாலே அறிந்தேன் –
என்னுடைய அவித்யாதி கர்மங்கள் வாஸனா ருசி பிரகிருதி சம்பந்தத்தால் வரும் புண்ய பாப கர்மங்கள்
ஸவாசனமாகப் போய் உன்னிடத்தில் பக்தி ரூபா பன்ன ஞானமானது அதி பிரகாசமாக உன்னைக் காட்டக் கண்டேன்

அத்யந்தம் ஸூலபனாய் ஞான சாஷாத்காரமானது ப்ரத்யக்ஷம் போலே தோற்றுகையாலே மடி பிடித்துக் கேட்கிறார்

அன்று -என்கிறது
விசேஷ கடாக்ஷம் பெறுவதற்கு முன்புள்ள நாள் எல்லாவற்றையும் சொல்கிறார் –
இன்று -என்கிறது
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவதற்குப் பின்பு யுண்டான காலத்தை –

என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
பரதந்த்ரனான என்னைப் புறம் போகப் பண்ணிற்று என் செய்க்கைக்காக –
பாஹ்யனாகப் பண்ணுகை யாகிறது உபேக்ஷிக்கை
இழந்த நாள் இழந்ததும் அவனாலே என்கிறார் –
பரதந்த்ர வஸ்து செல்ல வற்றதோ வர வற்றதோ

நீயோ அயர்வறும் அமரர்கள் அதிபதி -சற்றும் அசாரம் அமலம் அனுபவிப்பார் த்ரிபாத் விபூதியாய்
அவ்வளவு அன்றிக்கே
லீலா விபூதிக்கு நிர்வாஹகரான தேவர் த்ருதீய விபூதியான குன்று எனத் திகழ் மாடங்கள் சூழ்
திருப்பேரனாக எழுந்து அருளிற்றும் எனக்காகவே அன்றோ –

மலைகளைச் சேர வைத்தால் போலே விளங்கா நின்றுள்ள மாடங்கள் சூழ்ந்த திருப்பேரரான
அயர்வறும் அமரர்கள் அதிபதியானவன்
அத்யந்தம் ஸூ லபனாய்க் கொண்டு திருப்பேரிலே எழுந்து அருளினது

இப்படி மதிப்பனான உனது துயர் அறு சுடர் அடி தொழுது
உணர்த்தலுற்றேன்
உன் திரு உள்ளக் கருத்தைக் கேட்கலுற்றேன்
என் மனஸ் ஸூ தெளியும்படி
ஓன்று எனக்கு அருள் செய்ய
முன்பு கைவிட்டதற்கு ஹேது சொல்லவுமாம்
இன்று என்னை விஷயீ கரிக்கைக்கு ஹேது சொல்லவுமாம்

உணர்த்தலுற்றேன்
இதுக்கு ஒரு மறு மாற்றம் அருளிச் செய்ய வேணும் என்று திரு உள்ளத்திலே படும்படி
விண்ணப்பம் செய்ய வேண்டி இரா நின்றேன் -என்ன

இது நாம் சொல்ல வேணுமோ -நீரே அறியீரோ என்றான்

அடியேன் அறியேன் சர்வஞ்ஞரான தேவரீரே அருளிச் செய்ய வேணும் என்கிறார்

ஆனால் நாம் உம்முடைய நெஞ்சுள் புகுந்த இடத்தில் சம்மதித்து இருந்தீர் -அத்தாலே காணும் என்றான்

அது தான் உண்டோ -யான் ஒட்டி என்னுள் இருத்துவம் என்றிலேன் -என்கிறார்

அது இல்லை யாகிலும் புகுந்த பின்பு என்னை ஆதரித்தீரே என்றான்

மருவித் தொழும் மனமே தந்தாய் -என்று அதுவும் தேவரீரே மயர்வற மதி நலம் அருளிச் செய்தது
அத்தனை அன்றோ என்றார்

ஓம் காணும் அது இல்லை யாகிலும் நம்மோடே ஓக்க விஷயாந்தரங்களிலும் விரும்பாது இருந்தீரே என்றான்

என்னைத் தீ மனம் கெடுத்தாய் என்று அதுவும் தேவரே அன்றோ என்றார்

இவை ஒன்றுமே இல்லையே யாகிலும் நாம் கொடுத்த மதி நலத்தை வளர்த்துக் கொடு போந்தீரே என்றான்

காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -என்று அதுவும் தேவரே அன்றோ என்றார்

இப்படி இவர் முடியத் தொடர்ந்தவாறே பெரும் கடல் மண்டினாரைப் போலே போக்கற்றான்

இதற்கு ஈஸ்வரன் சொன்ன உத்தரம் ஏது என்று பட்டரை ஜீயர் கேட்க
காலாலே தரையைக் கீறிக் கவிழ்ந்து நிற்கும் அத்தனை போக்கி வேறே உத்தரம் உண்டோ
என்று அருளிச் செய்தார்

அதாவது
முன்பு ருசி இல்லாமையாலே என்ன மாட்டான்
இப்போது சாதன அனுஷ்டானம் பண்ணுகையாலே என்ன மாட்டான்

ஆனால் பின்னை ஈஸ்வரனுக்கு வைஷம்யாதிகள் வரிலோ
ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வரிலோ -என்ன
வாராது
அத்வேஷமும்
இச்சையும்
பிறக்கைக்குத் தான் கிருஷி பண்ணி அது பக்குவமாம் அளவும் பார்த்து இருந்தவனாகையாலே –

அவன் கேட்டதுக்கு ஒரு மறு மாற்றம் சொல்லக் காணாமையாலே அறிந்தோம் இதற்கு
இங்கனே யாக வேணும் என்று பார்த்தார்
தன்னுடைய ஸ்பர்சம் பிரதிகூலமாகை தவிர்ந்து விலக்காத சமயம் பார்த்து இருந்தானாதல் –
தன்னை ஒழிந்தவற்றில் சாதன புத்தி தவிரும் அளவும் பார்த்து இருந்தான் ஆதலாக அடுக்கும் என்று பார்த்தார் –

ஆனால் இது தன்னை அவனுக்கு உத்தரமாக அருளிச் செய்யாது ஒழிவான் என் என்னில்
சைதன்ய ப்ரயுக்தமாய் வருகிற அத்வேஷத்தை ஸாதனம் என்ன மாட்டானே
சைதன்ய ப்ரயுக்தமான ருசி தானும் ஸ்வரூப அதிரேகி அன்றோ –

உபாய பாவம் தன் தலையிலே யாயிற்றே
நெடுநாள் இவர் தலையிலே பழியிட்டு இழந்த நாம் எத்தைச் சொல்லுவது என்று பேசாதே இருந்தான்
ஹ்ரீரேஷா ஹி மமாதுலா என்று ஆரண்ய காண்டத்தில் ரிஷிகள் முன்பு பெருமாள் வெட்கித் தலை
குனிந்தால் போலே பிற்பாட்டுக்கு லஜ்ஜித்து நிற்குமவன் இறே
இவர் தாமே எடுத்து வைத்து வார்த்தை சொல்லும்படி யாயிற்று இவன் நிலை

உம்முடைய ப்ராப்யம் பெற்றீராகில் உமக்கு இந்த வழி ஆராய வேணுமோ
அதுவே அமையாது என்ன

அதுவே அமையும் என்கிறார்
தேங்காய்க்கு இளநீர் புக்க வழி ஆராய்ந்து அன்று இறே விடாய்த்தவன் இளநீர் குடிப்பது என்ன
உகந்து துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்கிறார் –

———-———

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே –10-9-1-

இதில்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே போம்படியையும்
அங்கு உண்டான ஸத் காரங்களையும்
அவ்வழியாலே போய்ப்புக்கு அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு
அடியார் குழாங்களுடனே இருக்கும் இருப்பை அருளிச் செய்கிறார் –

——–——–

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

உயர்வற என்கிற பாட்டை இப் பாட்டு விவரிக்கிறது -அது எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரம்ம ஆனந்தத்து அளவும் சாதனாந்தரங்களை அனுஷ்ட்டித்து
ப்ரயோஜனாந்தரங்களிலே சுவர்க்கம் நரகாதிகளுக்குப் போகிற
யாம்ய கதிகளாலே புக்கு அனுபவித்து புக்கு மீண்டும் மீண்டும் இப்படித் திரியா நிற்க

அவர்களிலும் கடை கெட்ட கூவிலும் கை கழிந்த என்னைத் தன் நிர்ஹேதுக கிருபையாலே
அபுனரா வ்ருத்தி லக்ஷண மோக்ஷத்தைத் தந்து
அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்ப் புகுகையும் அங்குள்ளார் ஸத்கரிக்கப் போய்
அங்கு அடியாரோடே இருந்தமையும்
உயர்நலம் யுடையவன் எவன் அவன் காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவிக்கிறார்

நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தவர்கள் நித்ய ஸூரிகளுடைய திரளிலே சேர்ந்து
அவர்களுக்குப் பிரியகரராய் இருப்பார்கள் என்கிறார்

உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் -மயர்வற மதிநலம் அருளினான் எவன் அவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் -வந்தவர் எதிர் கொள்ள
ஞானானந்த ஸ்வரூபனான ஸர்வேஸ்வரன் பிராட்டிமாரொடும் நித்ய முக்தரோடும் கூட வந்து எதிர் கொள்ள

ப்ராக்ருதனானவன் அப்ராக்ருதனாய் வருகிற படியே என்று அத்யாச்சர்யத்துடன் வந்து
எதிர் கொண்டு அழைத்துச் சென்று

மா மணி மண்டபத்து –
ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே

அந்தமில் பேரின்பத்து அடியாரோடு
யாவதாத்மபாவியாய் நிரதிசய ஆனந்த யுக்த்ராய்க் கொண்டு இருப்பார்கள்

அநந்த கிலேச பாஜனமான சம்சாரத்திலே ஸூகம் என்று பிரமிக்கும் அத்தனை -துக்கமே யுள்ளது –
பாண்டு ஒருவன் மேல் அம்பை விட -சம்சாரத்தில் ஆயிரம் கூற்றில் ஒரு க்ஷணம் ஆயிற்று ஸூகம் யுள்ளது –
அத்தைப் புசிக்க ஒட்டிற்று இல்லையே என்றான் இறே

அடியாரோடு இருந்தமை –கொந்தலர் இத்யாதி
நித்ய வசந்தமான சோலையை யுடைத்தான திரு நகரியை யுடைய ஆழ்வார் அருளிச் செய்த
போக்கிலே ஒருப்பட்டவாறே திரு நகரி தொடங்கி நித்ய விபூதி அளவும் சோலை செய்தது

சந்தங்கள் ஆயிரத்தும்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என்று சரணாகதியானது
ஆயிரம் சாகைகளாய் கொண்டு ரஷிக்க

சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார்
சந்தஸ்ஸூக்களை யுடைத்தான ஆயிரம் என்னுதல்
சந்தோ ரூபமான ஆயிரம் என்னுதல்

இவை வல்லார் முனிவரே
இத்தை அப்யஸிக்க வல்லார் அத்தேசத்திலே பகவத் குண ஏக தாரகராய் அனுபவித்துக் கொண்டு
அதிலே வித்தராய் அதுக்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருக்குமவர்கள் போலே ஆவார்கள் –

——————

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

கீழில் பிறந்தது ஞான அனுசந்தான மாத்ரமாய்ப் பின்பும் இவ்வுடம்புடனே கூடி இருக்கையாலே
பிரிவாற்றாமை யோடே கூப்பிட்டுத்
திருவாணை இட்டுத் தடுத்துப்
பர பக்தி தலை எடுத்துச்
சரணம் புக்கு
தம்முடைய பிரகிருதி சம்பந்தத்தம் அற்று
எம்பெருமானைப் பெற்று க்ருதார்த்தராய் அருளிச் செய்கிறார் –

———–——–

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

உயர்வற என்கிற பாதத்தை இதுவும் விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரம்ம ஆனந்தத்து அளவும் காம்ய பலங்களைப்
புஜித்து ஸம்ஸரிப்பார்கள்-
இவர் அங்கன் அன்றிக்கே நிர்ஹேதுகமாக அருளப்பெற்றவர் ஆகையால் ஞான ஆனந்தங்களாலே
உயர்நலமுடைய எம்பெருமானுக்கு இவ்வபேஷிதம் செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி
பெரிய பிராட்டியார் ஆணை இட்டுத் தடுத்துப் பெரிய ஆர்த்தியோடே கூப்பிட
இவர் பிரார்த்தித்த படியாகவே பரிபூர்ணனாகக் கொண்டு வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு
அபரிச்சேத்யமான ப்ரக்ருதி ரஹத்வத்திலும் ஆத்ம தத்துவத்திலும் உன்னுடைய ஸங்கல்ப ஞான ரூபத்திலும்
பெரிதான என்னுடைய விடாய் எல்லாம் தீர வந்து என்னோடே கலந்தாய் –
என்னுடைய மநோ ரதமும் ஒருபடி முடியப் பெற்றேன்

இனி இல்லை என்னும்படி என்னை விடாய்ப்பித்து அதுக்கு அவ்வருகான விடாயை யுடையையாய்க் கொண்டு
என்னோடே கலந்து உன்னுடைய விடாயும் ஒருபடி கெட்டதே என்கிறார்

உயர்வற உயர் நலம் சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ-சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
இப்போது ப்ரக்ருதி புருஷர்களைச் சொல்லுகிறது -தம்முடைய அபி நிவேசம் பெரியவற்றிலும் பெரிது என்கைக்காக –

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற வத்தாலே மேல் மேல் என பரபக்தி பரஞான பரமபக்திகளாய்ப் பெருகி வருகிறபடி
அவற்றுக்கு ஈஸ்வரனை ஒழிய ப்ருதக் ஸ்திதி இல்லாமையால் அவ்வளவும் சொல்லுகிறது

ஸ்வ கார்யமான மஹதாதிகளைப் பத்து திக்கிலும் புக்கு எங்கும் ஓக்க வியாபித்து நித்யமாய் அபரிச்சேத் யமாய்
சேதனருக்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நீளமான பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மா வானவனே

அருளினது பக்தி ரூபா பன்ன ஞானம் ஆகையால்
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
அத்தையும் வியாபித்து அதில் காட்டில் பெரியதாய் -அதுக்கு நியாந்தாவாகையாலே மேலாய்
விகாராதிகள் இல்லாமையாலே அபரிமாணமாய் நிரவதிக தேஜோ ரூபமான ஆத்மவஸ்துவுக்கு ஆத்மா ஆனவனே

அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் –
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-
அவை இரண்டையும் வியாபித்து -அவற்றுக்கு நிர்வாஹகமாய் -ஸங்கல்ப ரூபமாய் -விசத தமமாய்
விசததமம் ஆகையாவது யுகபத் ஏவ சாஷாத்கார ரூபமாய் இருக்கை
இப்படி ஸூக ரூபமான ஞானத்தை யுடையவனே -என்று ஸங்கல்ப ஞான ரூபத்தைச் சொல்லுதல்

சுடர் ஞான இன்பம் என்று
ஸூக ரூபனாய் பிரகாச ரூபனுமாய் ஆனவனே என்று எம்பெருமானைச் சொன்னதாகவுமாம்

இப்படித் தத்வ த்வயத்துக்கும் அவ்வருகான உன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனஸ்ஸினுடைய அவாவானது
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–
தத்வ த்ரயத்தையும் விளாக்குலைக் கொண்டு அவை குளப்படியாம் படியான
என்னுடைய அபிநிவேசத்தையே –
அதிலும் பெரிய உன்னுடைய அபிநிவேசத்தைக் காட்டி வந்து ஸம்ஸ் லேஷித்தாயே
என்னுடைய கூப்பீடும் ஒருபடி ஓயும்படி பண்ணிற்றே

அங்கே -பரதம் ஆரோப்யே முதித பரிஷஸ்வஜே என்று நீ மீண்டும் புகுந்து ஸ்ரீ பரதாழ்வானை
மடியில் வைத்து உச்சியை மோந்து உகந்து அணைத்தால் போலே யாயிற்று
இவருடைய விடாய் கெடும்படி கலந்து –

——-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

உயர்வற என்கிற பாட்டை இதுவும் விவரித்து நிகமிக்கிறது –
அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாணை கதான -ஞான ஆனந்த ஸ்வரூபனாய் –
உயர்வற உயர்நலம் யுடையவனாய் -அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்
ஸுந்தர்யாதி விசிஷ்டமான நித்ய திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனாய் –
அபரிமித திவ்ய பூஷண பூஷிதனாய் -ஸர்வ அவயவ உபேதனாய்
சர்வ ஆயுத தரனாய் -லஷ்மீ பூமி நீளா நாயகனாய் –
அஸ்தானே பய சங்கிகளான அநந்த கருட விஷ்வக் சேனாதிகளாலே அனவரத பரிசர்யமாண சரண நளினனாய்
ஸ்ரீ வைகுண்ட ஸர்வேஸ்வரனாய் நித்ய முக்த அநுபாவ்யனாய் இருக்கிறவன்
ஸ்வ விபூதி பூதரான ப்ரஹ்மாதிகளுக்கு அந்தராத்மாவாய் -தன்னைக்காண வேணும் என்று விடாய்த்து
ஆஸ்ரயித்தார் களுடைய விடாய் தீர ஸம்ஸ்லேஷிக்கும் ஸ்வ பாவனான எம்பெருமானைக் காண வேணும்
என்று விடாய்த்துக் கூப்பிட்டு -அவனைப் பெற்று நிர்த்துக்கராய் நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகரான
ஆழ்வாருடைய பக்தி பலாத்கார பூர்வகமாகப் பிறந்த ஆயிரம் திருவாய் மொழியும்

அவற்றிலே வைத்துக் கொண்டு கீழ்ச் சொன்னவை போல் அன்றிக்கே
பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படியான பரமபக்தியாலே பிறந்த
அந்தாதியான இத்திருவாய் மொழி வல்லார் ஸம்ஸாரத்திலே பிறந்து வைத்தே
அயர்வறும் அமரர்களோடே ஒப்பர் என்கிறார்

உயர்வற என்கிறது அவாவற என்கிறது
உயர் நலம் யுடையவன் எவன் அவன் அவாவறச் சூழ் அரி
ஞான ஆனந்தாதி கல்யாண குண விசிஷ்டனாய்
தத் வியதிரிக்தங்களுக்கு ஸ்வாமியாய்
ஸர்வ அபேக்ஷித ப்ரதனான ஸர்வேஸ்வரனைத் தம்முடைய அபிநிவேசம் கெட வந்து கலந்த படியால்
வேறொரு விசேஷணம் இடாதே அது தன்னையே சொல்லுகிறார்

உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் -அவா வறச் சூழ் அரி என்று திரு நாமம் ஆயிற்று

உயர்வற என்றது -அயனை அரணை
ஸ்வ விபூதி பூதரான ப்ரஹ்மாதிகளுக்கு அந்தர் யாத்மாவாய் மறைந்து நின்றவன்
யாவன் ஒருவன் யவன் அவன்

இப்படி விபூதிமானான உயர் நலம் யுடையவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவனை அவாவறச் சூழ்
அரி என்றது தானே ரூபகமாய்த்து

இப்படிச் செய்கைக்கு ஹேது என் என்னில்
மயர்வற மதி நலம் அருளினன்
திரிமூர்த்தி சாம்யக் கூழ்ப்பை அறப்பண்ணி தன் நிர்ஹேதுக கிருபையாலே பக்தி ரூபா பன்ன
ஞானம் மிகுந்த அவாவாய் தத்வ த்ரயத்துக்கும் அவ்வருகு யாயிற்று

அவா வறச் சூழ்கை யாவது
தன்னைக்காண வேணும் என்று விடாய்த்த ஆஸ்ரிதருடைய விடாய் தீர ஸம்ஸ் லேஷிக்கை

அயனை அரனை
என்கிற இஸ் ஸாமா நாதி கரண்யத்தாலே ப்ரஹ்மாதிகள் பக்கல் ஈஸ்வரத்வ சங்கையை அறுக்கிறார்
அவர்களுடைய சத்தா ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஈஸ்வர அதீனமாகையாலே அவர்களுக்கு
பாரதந்தர்யமே ஸ்வரூபம் –
நிர்வாஹகத்வம் கர்மாதீனமாய் வந்தது அத்தனை

இஸ் ஸாமா நாதி கரண்யத்தில் ஞானம் இன்றியே எளியராய் இருப்பார்க்கு நிர்வஹிப்பதும் சில புடைகள் உண்டு
அயனை அரனை யவாவற்று யரியை யலற்றி யவா வற்று வீடு பெற்ற என்னுதல்

அயனை அரனை அவா வறச் சூழ் அரியை அலற்றி அவா வற்று வீடு பெற்ற என்னுதல்

அரியை அலற்றி யவா வற்று வீடு பெற்ற என்னுதல்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
அலற்றுதல் ஆகிற அயர்வற -அவா வற -அமரர்களான நித்ய ஸூரிகளாகிற அடியார்கள் குழாங்களாகிற
நித்ய ஸூரிகள் திரளிலே வைத்து
சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டு -என்கிற படியே

வீடு பெற்ற
கூப்பிட்டு அவனைப் பெற்று நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகராகையாலே நிர்த் துக்கரான ஆழ்வார் அருளிச் செய்த
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
பக்தி பலாத்காரத்தாலே பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலும்
இவருடைய ஸ்ரீ மைத்ரேய பகவான் அவா -உபாத் யாயராக நடத்த நடந்த ஆயிரம்

ஆழ்வாருக்குப் பின்பு நூறு ஆயிரம் கவிகள் போர யுண்டாயித்து
அவர்கள் கவிகளோடு கடலோசையோடு வாசி அற்றது
அவற்றை விட்டு இவற்றைப் பற்றித் துவளுகைக்கு அடி இவருடைய அபி நிவேசம் வழிந்து புறப்பட்ட சொல்லாகை இறே

முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து
உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழும்படி மயர்வற மதி நலம் அருளின பக்தி ப்ரேம அதிசயத்தாலே
பிறந்த ஆயிரம் திருவாய் மொழியிலே இப்பத்தும்

முடிந்த அவாவில் இப்பத்து அறிந்தார்
இவர் அவாவால் தரிக்க ஒண்ணாமையாலே பொங்கி வழிந்தது
அனுபவம் பொங்கி வழிந்த சொல்லாய்த்து இப்பிரபந்தம்

இவ்வவாவுக்கு உதவிற்றிலன் ஆகில் ஈஸ்வரனும் சேதனன் இன்றிக்கே ஒழியும்

சூழ் விசும்பு அணி முகிலுக்குக் கீழே பரபக்தி யாலே சென்றது
சூழ் விசும்பு அணி முகில் பர ஞானத்தாலே
இத்திருவாய் மொழி பரம பக்தியாலே
பகவத் ப்ரஸாதம் பாதியும் தங்கள் பாதியுமாகச் சொல்லும் அவர்களுக்கு சரீர அவசானத்திலே
இப் பரபக்த்யாதிகள் யுண்டாம் –

இவர் அடியிலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே எழுந்து அருளி இருக்கச் செய்தே யுண்டாய்த்தன
கர்ம ஞான அநு க்ருஹீதையான பக்தியினுடைய ஸ்தானத்திலே
சர்வேஸ்வரனை அருளின அருள் அடியாகப் பிறந்த பரபக்த்யாதிகள் இறே இவரது

அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே
இத்தை அறிந்தவர்கள் ஸம்ஸாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூரிகளோடே ஒப்பர்

பிறந்தே உயர்ந்தார்
ஸர்வேஸ்வரனுடைய அவதாரத்தோ பாதி இவர்கள் பிறப்பும்

—-

அஸ்மத் குருப்யோ நம
ஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சந்திரகிரி ஐயன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மன் நாராயண ஐயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்கோஷ்டியூர் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப்பிள்ளை திருவடிகளே சரணம்

ஆங்கீரஸ வருஷம் மார்கழி மாதம் 26 தேதி
உயர்வற உயர்நலம் யுடையவன் என்கிற முதல் பாட்டின் விவரண சதகம் என்று
திரு நாமமான வாசக மாலையை
அபர் யாப்தன் திருவடிகளிலே ஸந்தர்ப்பமான மாலையைச் செய்து
அடிமை செய்து அருளினான் திருக்கோனேரி தாஸ்யை
என்று இவர் தாமே அருளிச் செய்து நிகமிக்கிறார் –

——-———–————————

பத்தாவது பத்து விவரணம் முற்றிற்று

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணமஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ​மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–ஒன்பதாவது பத்து விவரணம்- –

February 14, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-

கொண்ட பெண்டீரிலே
ஸோ பாதிக பந்துக்களை விட்டுத் தன்னைப் பற்றினாரையும் ததீய சேஷத்வத்தில் நிறுத்துமவன்
நிருபாதிக பந்துவான ஸர்வேஸ்வரனைப் பற்றுங்கோள் என்று அருளிச் செய்கிறார் –

—————

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறார் -எங்கனே என்னில் –
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக பார்யா புத்ராதிகளோடே வாழ்வும்
சாதன அனுஷ்டானங்கள் பண்ணி ஸ்வர்க்காதி போக்யங்கள் புஜிப்பாருக்கும்
ஸர்வேஸ்வரனையே ஆஸ்ரயித்துப் பெற வேண்டும்
பெற்றாலும் அல்ப அஸ்திரம் யாகையாலே நிலையற்று இருக்கும் –

உயர்நலம் யுடையவன் எவன் அவன் -ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் –
ஞான சக்த்யாதி கல்யாண குண கண பூஷிதனான ஸர்வேஸ்வரன் தான்
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
தானே உபாயம் என்னும் அர்த்தத்தை ப்ரதிஷ்டிப்பைக்காக அவதரித்த கிருஷ்ணன் திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்
கிருஷ்ணனை ஒழிய வேறு சரணமாவார் இல்லை -என்னும் இவ்வர்த்தம் நிலை நிற்கைக்காக
இவ்வர்த்தத்தை ஸ்தாபிக்கைக்காகவும் அதுக்கு உறுப்பாக

மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
பூ பாரத்தைப் போக்குகைக்காகவும் -திரு அவதாரம் பண்ணினான்

ஆனபின்பு நீங்களும்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
நும் உடைமை என்று நினைந்து இருந்தன யுண்டாகில்
கடுக அவன் திருவடிகளில் சேஷத்வேந த்ருடமாக சமர்ப்பியுங்கோள் –

உண்டேல் -என்றது ஸ்வ பக்ஷத்தில் இல்லை
அவர்களுடைய அந்யதா பிரதிபத்தியாலே வந்தன யுண்டாகில் -என்கை

நீர் இல்லை என்று சொல்லுகிறவை என் கொண்டு என்ன
ஸ்ருதி ப்ரதிபாத்யனான கிருஷ்ணன் மயர்வற மதிநலம் அருளினன்
அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே ப்ரத்யக்ஷ ஸமா நாகாரமாய் நின்று –
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று அருளிச் செய்து
தன்னைத் தொட்டுக் காட்டக் கண்டு சொல்கிறேன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் -அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரான நித்ய ஸூரி ஸேவ்யனானவன்
நித்ய ஸம்ஸாரிகளும் உஜ்ஜீவிப்பைக்காக ஸாத்ய உபாயங்களை சவாசநமாக விட்டு
ஸித்த உபாய பூதனான என்னை ஒருவனுமையே பற்றி நிர்ப்பரனாய் இரு என்றால் அதுவே இறே செய்வது –

எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி
இது தான் அவனுடையதோ நம்முடையதோ -என்று விசாரிக்க வேண்டா
உங்களோடு உங்கள் உடைமையோடு வாசியற அவனுக்கு சேஷம்

மற்று இல்லையே–
அவன் அன்றி மற்று இல்லையே
உங்களுடைய பாரத்தில் கர்த்தவ்ய அம்சம் அடைய உங்கள் தலையிலே கிடக்கிறது இல்லை –
எல்லாம் அவன் பக்கலிலே கிடக்கிறது என்னுதல்

மற்றில்லை
பல ஸித்திக்கு உடலான ஸாதனம் -அவனுடைய துயர் அறு சுடர் அடி தொழுது எழுகை தவிர வேறு இல்லை
உங்களுடைய ஆத்மாத்மீயங்களிலே மமதா புத்தி தவிருகையே அவனுக்குத் துயர் தீர்ந்தானாய் விளங்குவது
சமிதை பாதி சாவித்ரி பாதி யாக நீங்களும் ஒரு தலை கூட்டுப்பட வேண்டியது இல்லை
அசேதனக் கிரியைகளோ பர ப்ரஹ்மத்துக்குக் கூட்டுப்படுவது என்று அறிந்து
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்று
தம் நெஞ்சுக்கும் நெஞ்சு போல்வாருக்கும் உபதேசித்தார் யாய்த்து –

——–——-

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

பண்டை நாளில்
திருப்புளிங்குடியிலே சென்று புக்கு அவனைக் கண்டு எல்லா பந்து க்ருத்யமும்
பண்ண வேணும் என்று அவனை இரந்தார்

————————

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் உயர்வற
தேவர்கள் காலிலே குனிந்து அந்நிய சேஷ பூதராய் உயர்வு அற்றார்கள்

அவர்களில் நானும் ஒருவனாய் இருக்க எனக்கு உயர்நலம் யுடையவன் எவன் அவன்
பரம ஆனந்த ஸ்வரூபனாய் வேதாந்த வேத்யனாய் ஸ்ரீ யபதியானவன் நிரதிசய போக்யமான
திருவடிகளிலே நானும் வந்து அடைந்து அடிமை செய்யும் படி
என்னை அங்கே அழைத்தல் நீ இங்கே வருதல் செய்ய வேணும் என்று
அர்த்திக்கும் படி யானேன் என்கிறார் –

உயர் நலம் யுடையவன் -கொடு வினைப் படைக்கு அளவனான -உனக்கு சேஷமாய் வைத்து
பிரதிகூலித்தவர்கள் பக்கல் நீரிலே நெருப்பு எழுந்தால் போலே சீறி ஆயுதம் எடுக்க வல்லையாய்
அவன் மாட்டாதது சிலரை அழியச் செய்கை யாய்த்து
யதிவா ராவண ஸ்வயம் என்னுமவன் இறே

கடலை அணை செய்து ஊரைச் சூழப் போந்து பின்னை அங்கதப் பெருமாளைப் போகவிட்டு
கையிலே வந்து அகப்பட்டவனை போக விட்டு
கச்ச அநு ஜாநாமி -என்று தப்ப விட்டது இன்னும் ஒருக்கால் அநு கூலிக்குமோ என்று
நாம் முடிந்தே போம் அத்தனை -என்றதிலே முதிர நின்ற பின்பும் –
கண்ணும் கண்ணீருமாய் இறே நின்று கொன்றது
இவர்கள் பண்ணும் ப்ராதிகூல்யத்தாலே அழியச் செய்யும் அத்தனை போக்கித்
தானாக அழியச் செய்ய மாட்டானாய்த்து

அமரர் இத்யாதி
அசூரர்களாலே தேவர்களுக்கு உண்டான துக்கம் தீரும்படி அசூரர்களுக்குத் துக்கத்தை விளைக்கும்
கருவினை நஞ்சே -என்னுடை அமுதே

கர்ம விஷம் கலந்த உமக்கு ரஸித்தபடி என் என்ன ஹேது சொல்கிறார்
மயர்வற மதிநலம் அருளினன்-இதர விஷயங்களில் எப்பேர்ப்பட்ட ருசியில் மயர்வு அற்று
அபர்யாப்த்த அம்ருதமான போக்யத்தையே ரசிக்கும்படி பக்தி ரூபா பன்ன ஞானத்தைப் பிறப்பித்து
இப்படி நிர்ஹேதுகமாக அருளுகையாலே அறிந்தேன்

கடு வினை நஞ்சே
அப்போது சடக்கென முடிக்க வற்றாய் ப்ரத்ய ஒவ்ஷதம் இல்லாத நஞ்சானவனே
அந்நஞ்சு தானே இவருக்கு அம்ருதமாய் இருக்கிறபடி
தேவர்களுடைய உப்புச்சாறு அன்று
அயர்வறும் அமரர்களுக்கும் அபர்யாப்த்த அம்ருதமானவனே இவருக்கும்
அதிசய அம்ருதமாய் இருக்கிற படி

இப்படி அவர்களுக்கு ரசிகனானவனே
கலி வயல் திருப்புளிங்குடியிலே –சந்நிஹிதனாய்த்து
இவ் வம்ருதத்துக்குக் கடல் கடைதல் ஸ்வர்க்கத்துக்குப் போதல் செய்ய வேண்டா
திருப்புளிங்குடியிலே சந்நிஹிதனாய்த்து இவ்வம்ருதம்

கலி வயல் -சம்ருத்தமான வயல் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் அத்தை விஸ்மரிக்கும் படி பரமபதத்தில் சம்ருத்தமான தேசம்

எம்மிடர் கடிவானுடைய துயர் அறு சுடர் அடி
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றும் நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
ஒப்பு இன்றிக்கே இருக்கும் பகவத் தத்துவமும் ஒப்பன்று
அஸி தேக்ஷிணா -என்று ஏற்றமாகவே இருக்கும்
மற்றை நிலமகள் -ஏவம் பூதை -என்னும் அத்தனை

அவர்கள் பிடிக்கும் மெல்லடியை
அவர்களும் திருவடியைப் பிடிக்கப் புக்கால் பூத்தொடுவாரைப் போலே கன்றுகிறதோ என்று
கூசித் தொட வேண்டும் படி யாய்த்து ஸுகுமார்யம் இருப்பது

அப்படிப்பட்ட திருவடிகளைக் கொடுவினையேனும் பிடிக்க
கண்கள் சிவந்து -க்குப்பின் இவருக்கு நிகர்ஷ அனுசந்தானம் இல்லை இறே
அவர்களும் ஸந்நிஹிதராய் -பிராப்தியும் யுண்டாய் இருக்க நான் இழப்பதே என்று
பாவியேன் என்பாரைப் போலே கொடு வினையேன் -என்கிறார்

நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே
நிரதிசய போக்யனாய் ஸந்நிஹிதனான உன் துயர் அறு சுடர் அடி தொழுது திருவடி வருடி இருக்கும்படி
கூவுதல் வருதல் செய்து என் சத்தையை நோக்குகை
ஒரு நாள் அங்கே அழைத்தல் இங்கே வருதல் செய்து அருள வேணும் –

முற்பட வருதல் என்றலர் ஆயிற்று ஸமுதாயத்தைக் கலைக்க ஒண்ணாதே -என்று
என் மனஸும் நானுமாக அபேக்ஷை யுண்டாய் இருக்க
அவனும் அபேக்ஷை யுண்டார் பக்கல் விட்டு இருக்க மாட்டாதவன் ஆகையால்
அவர்களையும் கூட்டிக்கொண்டு வருவாய் என்னும் அத்தைப் பற்றச் சொல்கிறார் –

————–

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-

ஓர் ஆயிரத்தில்
உம்முடைய அபேக்ஷிதங்கள் எல்லாம் செய்கிறோம்
நான் நாராயணன் -ஸர்வ ஸக்தி யுக்தன் -என்று தன்னோடு உண்டான சம்பந்தத்தைக் காட்டக் கண்டு
அவனுடைய சீல வத்யையிலே ஆழங்கால் படுகிறார் –

——-———–

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
ப்ரஹ்ம ஆனந்தம் தொடங்கி மனுஷ்ய ஆனந்தத்து அளவாக முன்னை வினை பின்னை பிராப்தம்
என்கிற ஆத்ம க்ஷய ரோகத்துக்கு
எருத்துக் கொடியுடையோனும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் மருந்து அறியாது
இருக்குமவர்கள் ஆகையாலே உயர்வற்று இருப்பார்கள் -உயர்வற என்றது

உயர்நலமுடையவன் எவன் அவன் -மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் –
ஞான ஆனந்தாதிகளாலேயும் ஞான சக்திகளாலேயும் சீலாதி குணங்களாலேயும்
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்றும்

பெரும் தேவர் -நித்ய ஸூரிகள் அனுபவிக்கிற அபர்யாப்த்த அம்ருதம் சாத்மிக்கைக்காக
மருந்தும் பொருளும் அமுதமும் தானே யானவன்
விஷ பூரணமான ஸம்ஸார ஸகாரத்துக்கு மாற்று மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
பஜஸ்வமாம் என்றும்
மாமேகம் சரணம் வ்ரஜ என்றும் விதித்த பேஷஜங்கள் காட்டின ஸர்வேஸ்வரன்
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
நம்மையும் அவர்கள் நடுவே வைக்குமவனான மருத்துவன் ஆனவனை விடாதே கிடாய் என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்

மருந்தே -உன்னுடைய அனுபவத்தாலே கண்களுக்கு வரும் ஆனந்தத்துக்கு வர்த்தகனானவனே

இப்படிச் சொல்கிறது தான் எத்தாலே என் என்ன –நீ மயர்வற மதிநலம் அருளுகையாலே
உன்னைப் பெறுகைக்கும் ஸம்ஸாரமாகிற மஹா ரோஹம் அறுகைக்குமாக
நீ அருளினை பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே அறிந்தேன்

பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் -பரன் என்றது
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரான நித்ய ஸூரிகள் திரள் திரளாகக் கூடி
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே யாய்த்து அனுபவிக்க இழிவது

பிதற்றும் ஜ்வர ஸந்நிபதிதரைப் போலே அக்ரமமாக கூப்பிடா நிற்பர்கள் -அதாவது
அவர்களுக்குத் தன்னை அனுபவிக்கக் கொடுத்த உபகாரகன் –

கருந்தேவன் -காள மேக நிபாஸ்யாம மாய் திவ்யமான வடிவை யுடையவன் -எவன் அவன்
கருந்தேவன் எம்மான்
அவ்வடிவைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன்
நித்ய முக்தருக்குப் படி விடும் வடிவைக்கிடீர் எனக்கு உபகரித்தது
அதற்கும் மேலே ஒரு பதம் அருளினான் -துயர் அறு சுடர் அடி தொழுது எழும்படி
மருந்து -அமுதமும் தானேயாம்படி என்னையும் என் நெஞ்சையும் விஷயீ கரித்தவன்

கண்ணன் விண்ணுலகம் தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–
முன்பு பெற்றதற்கு மேலே பரமமான பதம் தந்து அருளினான் -தொழுது எழும்படி பண்ணினான்

தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–
அடியேன் அடைந்தேன் முதல் முதல் முன்னமே

கண்ணன் -தன் நிலை குலையாமல் நின்று உபகரிக்கை அன்றிக்கே அவதரித்து
மாமேகம் சரணம் வ்ரஜ என்று அபகரித்து அருளினவன் –

அவன் தன்னுடைச் சோதியான விண்ணுலகமான பரம பாதத்தையும்
வானவர் நாட்டையும் கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்று உககைக்கும்
அனுபவிக்கைக்குமாக பரவசமான வ்யாமோஹத்தாலே சோரேல் கண்டாய் மனமே

துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -அவனை உடம்பு வெளுக்கப் பண்ணாதே
அவனுக்கு பூசும் சாந்தில் படியே அவன் உகப்பே செய்து இரு என்கிறார் –

———-——-

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-

மையார் கருங்கண்ணியில்
இப்படி சீலவானன் ஆனவன் தானே வந்து முகம் காட்டாமையாலே பெரிய பிராட்டியாரும் தானுமாய்
இருக்கிற இருப்பை அனுசந்தித்துப் பெரு மிடறு செய்து கூப்பிட
ஸ்ரீ ப்ரஹ்லாதனுக்கு வந்து உதவினால் போலே நடுவே வந்து தன்னைக் காட்டி
அருளைக் கண்டு க்ருதார்த்தரானார் –

——–

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஸ்ரீ யபதியாய்
ஆனந்தாதி கல்யாண குண பூஷிதனானவனைப்
பெண்ணுளான் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணறா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
உயர்நலம் யுடையவன் யாவன் ஒருவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவனை நான் அழைத்துக் கூப்பிட்ட
விடாய் எல்லாம் கெடக் காணப் பெற்றேன்

என் கண்ணிணை யார
காணக் கருதும் கண்ணே -என்ற கண்களின் விடாய் கெடக் கண்ணிணை யாரக் கண்டு கொண்டது –
கலியர் வயிறார யுண்டே என்னுமா போலே கண்ணின் பசி தீர்ந்த படி

நீர் கண்ட படி என் என்ன -அவன் மயர்வற மதிநலம் அருளினவன் -அந்த ஞான ப்ரேமாத்மகமான
என் கண்கள் இரண்டும் களித்து
இந்த ஸ்வரூப ஞானம் அடியாக மயர்வற பண்டை வினையாயின பற்றோடே அறுத்து மறுகின நெஞ்சு களித்து
பண்டை வினை -ப்ராரப்தமான கர்மங்களை ஸவாசனமாகப் போக்கி இவ்வுகப்பிற்கு இடைச்சுவரான
அஹங்காராதி ஸமஸ்த விரோதிகளையும் ஸவாசனமாகப் போக்கினவன்

பரமபதத்திலே அயர்வறும் அமரர்கள் அதிபதி யான பிராப்ய பூதனுக்கு –
அண்டத்து அமரர் பெருமான் அடியனாகப் பெற்றேன்
ப்ராப்ய பூதனானவன் துயர் அறு சுடர் அடி தொழுது அடியனாயத் தொண்டருக்கு
அமுது உண்ணச் சொல்மாலைகள் சொன்னேன்
என்னளவின்றிக்கே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகனாகப் பெற்றேன்

பெற்ற பேற்றின் கனம்-நானும் என் பரிகரமும் ஜீவித்து விருந்தும் இட்டேன் என்பாரைப் போலே
சொல்மாலைகள் சொன்னேன்
ஸப்த ஸந்தர்ப ரூபமான வாசிக கைங்கர்யம் பண்ணப் பெற்றேன்
ததீய சேஷத்வ பர்யந்தமான பேற்றைப் பெற்றேன்

பெற்ற பேற்றின் கனம் இருந்தபடியாலே தாமதியாக வந்தது ஓன்று அல்ல
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே
ஸர்வேஸ்வரனாலே விஷயீ க்ருதனானேன் -தொழுது எழு என் மனனே என்கிறார் –

———–———

இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ–9-5-1-

இன்னுயிர்ச் சேவலிலே
கீழ் பிறந்தது ஞான ஸாஷாத் காரமாய் பாஹ்ய ஸம்ஸ்லேஷ அபேக்ஷை பிறந்து
அது கிடையாமையாலே அவசன்னராய்
ஸ்மாரக பதார்த்தங்களாலே நலிவு படுகிறபடியை அருளிச் செய்தார் –

———–———

அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5-

உயர்வற என்கிற பாட்டை விவரிக்கிறது எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் இதர விஷய ப்ராவண்யங்களாலே
உயர்வு அற்றார்கள்
இப்படி அவர்கள் வ்யாமோஹித்துப் படுகிற அலமாப்பைக் கண்டு தமக்கு அவற்றில் ப்ராவண்யம் அற்றாலும்
பகவத் பிராப்தி பிறவாமையாலே இன்னம் மறுவலிடில் செய்வது என் என்று
உங்கள் வ்யாமோஹத்தைக் காட்டி நலியாதே கிடி கோள் என்று அவற்றை நிஷேதிக்கிறாள்

உயர்நலம் யுடையவன் எவன் அவன் -நித்ய ஆனந்த ஸ்வரூபனானவன் –
என் ஆத்மாத்மீயங்களை அபஹரித்தான் ஆனபின்பு நீங்கள் நலிகிறது என்

இன்னுயிர்ச் சேவலின் தன்னினமாய் இருந்து நலிகிற வற்றைக் குறித்து
அவன் தான் என்னை முடிகைக்கு நல் விரகு பார்த்தான்
அந்தரம் நின்று உழல்கின்ற பூவைகாள் இனி யுங்களுக்கு இங்கு விஷயம் இல்லை கிடி கோள் என்ன

என்ன தான் என்ன
எனக்கு மயர்வற மதிநலம் அருளப்பெற்றதாய் இருக்க நலியப்போமோ
பக்தி ரூபா பன்ன ஞானத்தை உங்களால் குலைக்கப் போமோ
அந்தரம் நின்று உழல்கின்ற உங்களுக்கு இங்கு நலிய விஷயம் இல்லை யாய் இருக்க
நடுவே நின்று என்னை கிலேசப்படுத்து கிறிகோள் அத்தனை

யானுடைப் பூவை காள்
சர்வ சாதாரணமாய் இருப்பார் செய்வதைச் சிலருக்கு ஸ்வம்மாய் இருப்பார் செய்யக் கடவதோ
நான் எனக்கு என்ன அமையுமாகாதே பாதிக்கைக்கு –அவனும் என்னுடையவனாகை இறே நலிந்தது

பக்தி ரூபா பன்ன ஞானம் அருளினவனை அன்றி
நும் திறத்து ஏதுமிடையில்லை குழறேன் மினோ
உங்கள் இடையாட்டத்தில் என்னை நலிகைக்கு ஓர் அவகாசம் இல்லை என்னவுமாம்
உங்கள் பாரிப்புக்கு என் பக்கலிலே ஓர் அவகாசமும் இல்லை –

குழறேன் மினோ
அநஷர ரஸமான பேச்சைக் காட்டி முடியாதே கொள்ளுங்கோள்
அயர்வறும் அமரர்கள் அதிபதியானவன் யாவன் ஒருவன் அவன் தான் அதிகரித்த கார்யத்திலே
நெகிழ நின்றானாகில் அன்றோ நீங்கள் இப்படி முதிர நிற்க வேண்டுவது –
அதுக்கு உங்களுக்கு அவகாசம் வைக்கிறானோ

இந்திர ஞாலங்கள் காட்டி
கண்டாருக்கு விட ஒண்ணாத தன் வடிவைக் காட்டியும் -சீலத்தையும் சேஷ்டிதத்தையும் காட்டி
இவை நிலம் அல்லாமையாலே பொய் என்கிறாள்
இந்த்ர ஞாலம் என்றும் பொய் என்றும் பர்யாயம்

ஏழு உலகும் கொண்ட
பிறருடைய வஸ்துவை அபஹரிக்கப் புக்கால் அவர்களுக்கு ஓன்று சேஷியாதபடி அபஹரிக்குமவன் –

சேஷ்டித ப்ரணயித்வத்தால் வந்த பிரஸித்தியை எனக்கு காட்டினவன் எவன் அவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் எவன் அவன் -என் திரு மார்பன்
பிராட்டியோடும் நித்ய ஸூரிகளோடும் பழகிற்று பிரணயியாய் அன்று -இந்த்ர ஞாலத்தைக் காட்டிற்று –
கண்டாரை அகப்படுத்த சில பொய்களைக் காட்டி பூமியைக் கொண்டால் போலே
என் திரு மார்பன் துயர் அறு சுடர் அடி தொழுத அன்று தொடங்கி கலந்து பரிமாறுகிறான் என்று
தோற்றும்படி சில பொய்களைச் செய்து விஸ்லேஷிக்கை -என்னை முடிக்கைக்கு உபாயம் இது என்று
என் மனமும் என் ஆவியும் உண்ண நன்கு எண்ணினான் -நம்மை முடிக்கைக்கு நல் விரகு பார்த்தான்

உங்களுக்கு இங்கு அவகாசம் இல்லை யானுடைப் பூவை காள் -என் மனனே –
ஸர்வ சக்தி உத்யோகித்த கார்யத்தில் குறை கிடைப்பதாய் அதிலே நீங்கள் ஸஹ கரிக்கிறிகோளோ
நம்மை முடிக்கப் பார்த்த பார்வை அழகிதாகப் பார்த்தான் ஏன் நெஞ்சே தொழுது எழு என்று நொந்து
தன்னிலே நொந்து சொல்லுகிறாள் என்றுமாம் –

———-————

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-

உருகுமாலில்
ஸ்மாரக பதார்த்தங்கள் ஸ்மர்யமாண விஷயங்களிலே முட்டிக் கடக்க நிற்க
எம்பெருமானுடன் பண்டு ஸம்ஸ்லேஷித்த படியை அனுசந்தித்து
அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானம் பண்ணி யருளினார்

————–

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி பிரம்மா ஆனந்தம் அளவாக இதர போகங்களைப் புஜித்து
ஸ்வரூப ஹானிகளாய்த்து –
அதிலே நானும் ஒருவனாய் இருக்கச் செய்தே உயர்நலம் யுடையவன் எவன்
அவன் விஷயத்திலே என்னுயிர் பட்டால் போலே ஆர் உயிர் பட்டது -என்ன

நீரேயோ இப்படிப் பட்டீர் -குண அனுபவமே யாத்ரையான நித்ய ஸூரிகளும் படும்பாடு இது அன்றோ -என்ன
அவர்கள் தான் நான் பட்டது பட்டார்களோ என்கிறார் –

உயர்வற உயர்நலம் யுடையவன் பக்கலிலே நான் பட்டது போலே ஆர் உயிர் பட்டது –
நித்ய ஸூரிகளிலே தான் பட்டார் உண்டோ –
பகவத் குணங்களுக்கு அபூமியாய் இருக்கிற ஸம்ஸாரத்திலே நான் பட்ட பாட்டை
நித்ய விபூதியில் அயர்வறும் அமரர்கள் அதிபதியானவனை அயர்வின்றி
அனுபவியா நின்றுள்ளவர்கள் தான் என் பட்டார்கள் என்ன

நீர் இப்படி விண்ணுள்ளாரிலும் சீரியராய்ப் படுகைக்கு ஹேது என் என்ன

மயர்வற மதிநலம் அருளுகையாலே அருளின பக்தி ரூபா பன்ன ஞானம் படுத்தின பாடு
அங்கு யார் உயிர் பட்டது இங்கு எனது உயிர் பட்டது -என்கிறார் என்று
எம்பெருமானார் அருளிச் செய்ய கேழ்க்கும் படி

எல்லாரும் குண அனுபவம் பண்ணுகிறதாகில் இவருக்கு இவ்வாசி கூடினபடி என் என்று கேழ்க்க
நாவோடையான ஸ்த்ரீக்கு பர்த்தாவினுடைய கர ஸ்பர்சம் பட்டவாறே வேர்ப்பது விடுவதாமா போலே
இவர் பகவத் அனுபவத்தில் புதியர் யாகையாலே வருகிறது காணும் என்று அருளிச் செய்தார்

உயிரை அழித்த ஹேதுக்களைச் சொல்லுகிறது மேல்
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயதோர்
பெரிய இதழை யுடைய தாமரை போல் இருந்துள்ள கண்ணையும் சிவந்த வாயையும் உடையவனாய்
திருக்காட்கரையை யுடையவனாய்

கார் எழில் மேகத்து என் காட்கரைக் கோயில் கொள்
கறுத்த எழிலை யுடைய மேகம் போலே வடிவை யுடையவனாய்
திருக்காட்கரையைக் கோயிலாக யுடையவனாய்

சீர் எழில் நால் தடம் தோள்
வீர ஸ்ரீ யையும் எழிலையும் யுடைத்தாய் கல்பக தரு பணைத்தால் போலே –
நாலாய் சுற்று யுடைத்தான தோள்களை யுடைய

தெய்வ வாரிக்கு
தெய்வங்கள் படும் கடலுக்கு
வாரி -கடல்
தெய்வங்களுக்கு உத்பாதகன் ஆனவனுக்கு

என் மனனே -துயர் அறு சுடர் அடி தொழுது எழு
எனக்கு பவ்யமான நெஞ்சே -ஹேய ப்ரதிபடமான திருவடிகளைத் தொழுது எழு -வர்த்தி

தெய்வ வாரி
துர் அபிமான தெய்வங்களுக்கு உத்பாதகன் ஆனவன்
அபிமான சூன்யமான என்னை அழித்தான்
வடிவு அழகையும் அவ்வூரில் இருப்பையும் காட்டி யாய்த்து இவரை அழித்தது –

—————–

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-

எங்கானலில்
இவ்வநுஸந்தானமும் கலங்கி அவனுடைய அழகை அனுசந்தித்துப் பிரிவால்
வந்த ஆற்றாமையோடே -அவ்வழகு பற்றாசாகத் தூது விட்டார்

————–

எனக்கு ஓன்று பணியீர்காள்-இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும்-வண்டினங்காள் தும்பிகாள்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும்
புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே-9-7-8-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் இதர விஷயத்தின்
ரூப லாவண்யங்களைப் பற்றி பகவத் பிராவண்யம் அற்றார்கள் –

தமக்கும் இதர ப்ராவண்யம் விஞ்சி இருக்க உயர்நலமுடையவன் எவன்
ஸுந்தர்ய சீலாதிகளாலே பரிபூர்ணன் ஆனவனுக்கு

எனக்கு ஓன்று பணியீர்காள்-
என்று சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து அங்குத்தைக்குப் பயப்பட வேண்டாதபடி
ஸ்வ ரஷிதமான தேசத்திலே இருக்கப் பெற்றோம் இறே
இனி என் ஆர்த்தியை அறிவியுங்கோள் என்கிறாள்

உயர்நலம் யுடையவன் யாவன் ஒருவன் -ஸ்வரூப ரூபாதிகளால் ஸ்ருதிக்கு அடங்காதவன் ஸந்நிதியில்
எனக்கு ஓன்று பணியீர்கள்
நீங்கள் ஒரு வார்த்தை சொல்லா விடில் முடியும் தசை அன்றோ என் தசை இருக்கிற படி

இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
பரந்த சோலையிடம் எங்கும் புக்கு இரை தேடி

மனக்கு இன்பம் பட மேவும்-
மனஸ்ஸிலே இனிமை பிறக்கும்படி அன்றோ நீங்கள் கலக்கும் படி –
உங்களை போலே மதுபான மத்தமாய் ரசிக்கும் படியோ நான் மயர்வற மதிநலம் அருளப் பெற்றது –
பக்தி ரூபா பன்ன ஞானத்தால் அபர்யாப்த்த அம்ருத பானம் பண்ணி தேஹாத்ம அபிமானம் அற்று
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானத்தாலே அம்ருத ஸ்வரூபனானவனை அடைந்து
அனவரத பரிசர்யை பண்ணத் தேடுகிறது
விரஹத்தாலே வரும் கிலேசம் பலியாதபடியாகக் கலவா நின்றீர் கோள்
பிரிவிலும் வற்றாத ஆனந்தம் உண்டாம்படி கலவா நின்றதாய்த்து

நான் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் அவனை வேத சாகையிலே பூத்த பூவிலே மது பானம் பண்ணும்
ஸ்ரீ யபதியாகிற தெய்வ வண்டோடே சேர்ந்த நான் விஸ்லேஷித்துத் துவளலாமோ –

கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -அபர்யாப்த்த அம்ருதமாய் அவர்களுக்கு ஓலக்கம் கொடுக்கக் கடவ அவன்
என்னைப் பிரிந்து தரிக்க மாட்டாமே -அவர்களைப் பிரிந்து திண்ணியதான மதிள் சுற்றுச் சூழ்ந்து இருந்து
திருமூழிக் களத்திலே நித்ய வாஸம் பண்ணுகிற அவருக்கு
அத்தலையில் ஸுந்தர்யத்தை அனுசந்தித்தால் ரக்ஷை தேட்டமாய் இறே இருப்பது –
ஆகையால் மங்களா ஸாஸனம் ஆகிற மதிலை இறே இவள் இடுவது

புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே-
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று
அவனோடே கிட்டிக் கலக்கப் பெறாமையாலே வருவது ஓர் ஆற்றாமையாலே மோஹம் உண்டு
அவனுக்கு எங்கே என்ன தீங்கு வருகிறதோ என்னும் ஓர் ஆற்றாமை உண்டு
அதிலே ஓன்று தீரப் பெற்றது முந்துற முன்னம்

புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே-
தன்னிலத்திலே காயாவின் நிறம் போலே யாய்த்து நிறம் இருப்பது –
அவ்வடிவு அழகுக்கு மேலே ஹேய ப்ரதிபடமாய் அவ்வழகுக்கும் ஸ்வாமித்வ ஸூ சகமான
ஒப்பனை அழகையும் யுடையவன்
அதுக்கும் மேலே ஹேய ப்ரதிபடமாய் நிரவதிக தேஜோ ரூபமான துயர் அறு சுடர் அடிகளிலே தொழுது
பரிசர்யை பண்ணும்படி நிர்ஹேதுகமாக அருளினவன் தனக்கு உரை

வடிவு அழகு அது -ஒப்பனை அழகு அது -துயர் அறு சுடர் அடி அது –
இவற்றை எல்லாம் தாமே தம்மை அனுபவித்து இருக்கையோ -கேவலரைப் போலே
பக்தாநாம் என்றது பொய்யோ -என்று ஒரு வார்த்தையைச் சொல்லுங்கோள் -என்கிறாள் –

——-———

அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

அறுக்கும் வினையில்
விட்ட தூதர் அத்தலைப்பட்டு அது அறிவித்து வரப் பற்றாமையாலே அலமந்து துடித்து அவன் இருந்த
திரு நாவாயிலே செல்ல வேணும் என்று த்வரிக்கிற படியை அருளிச் செய்கிறார்

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற -அறுக்கும் வினை
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் புண்ய பாப ரூப கர்மங்களாலே
உயர்வும் தாழ்வுமாய் இருப்பார்கள்
அங்கன் அன்றிக்கே உயர்நலம் யுடையவன் எவன் அவன் -அவன் அனுக்ரஹத்தாலே வந்ததாகையாலே
பெற்று அன்று தரியாத படி ப்ராப்ய த்வரை விஞ்சின படியாலே அலமருகுகிறார்

அறுக்கும் வினையாயின
வினை என்று பேர் பெற்றவை எல்லாம் போக்கும்
ருசி விரோதி உபாய விரோதி ப்ராப்யத்தைப் பிராபிக்கும் இடத்தில் வரும் விரோதிகள்
வர்த்தமான தேஹத்து அளவில் பர்யவசிக்கை அன்றிக்கே பிராரப்த சேஷமாய் நின்ற
அவ்வருகேயும் போம்படி விளம்பிக்கக் கடவ அவை நின்ற நின்ற நிலைகள் தோறும்
உண்டாய் இருக்கும் இறே விரோதிகள்

புதுப்புடவை அழுக்குக் கழற்றும் போது க்ரமத்தாலே போக்க வேண்டுவது தான் போக்கும் அன்று இறே
பகவத் ப்ரஸாதத்தால் போமன்று ஒருக்காலே போமிறே
மேரு மந்த்ர மாத் ரோபி
ஸர்வே பாப்மாந ப்ரதூயந்தே
ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கிறபடியே யாகக் கடவது இறே

ப்ரம்மஹத்யைக்கு பிராயச்சித்தம் பண்ணினால் கோ ஹத்யைக்கு பிராயச்சித்தம் பண்ண வேண்டி வரும் இறே
அங்கன் வேண்டா இறே பகவத் அனுக்ரஹம் தன்னில் -மயர்வற மதிநலம் அருளின
அருள் கொண்டு கார்யம் கொள்ளும் இடத்தில் –

ஆருக்குத் தான் இப்படிச் செய்வது என்னில்
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் யுடைய இவருக்கு
மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவனை
ஆகத்து அவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
பூர்வாகாதிகளைப் போக்கி -பக்தி ரூபா பன்ன ஞானத்தைத் தன் நிர்ஹேதுக கிருபையால் அருளினவனை
தன் ஹ்ருதயத்திலே அவனை நிறுத்த வேணும் என்னும் அத்யவசாயத்திலே ஒருமைப்பட்ட
மநோ ரதத்தை யுடையாருக்கு

அயர்வறும் அமரர்கள் அதிபதி யாவன் ஒருவன் அவனை -அயராமல் அநிமிஷராய்க் கொண்டு
அடிமை செய்ய வீற்று இருக்குமவன் அத்தை விட்டு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாயிலே நித்ய வாஸம் பண்ணுகிறவனை

குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –
கொடிய வினையேற்கு
வினையைப் போக்காதே வர்த்திப்பிக்கையிலும் விட ஒண்ணாதாய்த்து தேசம் இருப்பது
பரிமளத்தை யுடைத்தாய்
ஸ்ரமஹரமாய்
நித்ய வசந்தமான சோலைகளாலே சூழப்பட்ட திரு நாவாய்

நாவாய் யுறைகின்ற நாரணன் நம்பி துயர் அறு சுடர் அடி தொழுது எழு
திரு நாவாய் குறுக்கும் வகை யுண்டு கொலோ
குறுகப் பண்ணும் விரகு ஏதோ என்னுதல்

குறுக்கும் என்று அந்த தேச பாஷை
எம்பெருமானார் திருவடி தொழ எழுந்து அருளா நிற்க –
எதிரே வருவாரை -திரு நாவாய் எத்தனை தூரம் உண்டு என்று கேழ்க்க
குறுக்கும் என்றார்களாய்
அத்தைக்கேட்டு ஆழ்வார் பாஷையால் அருளிச் செய்வதே என்று போர வித்தராய் அருளினார்

கொடியேற்கே
திரு நாவாயில் நாரணன் நம்பி துயர் அறு சுடர் அடி தொழுது எழு
என் மனமும் நானும் பொந்தின் போதே திருநாவாயிலே புகப் பெறுவோமோ
ஹேய ப்ரத்யநீகமாய் பரஞ்சோதியான திருவடிகளைக் கொடியேற்கு குறுக்கும் வகை யுண்டாகுமோ

ஆசா லேசமும் யுடையாருக்கும் ப்ராபிக்கலாம் தேசமாய் இருக்க
ஆசையும் கண்ணழிவு அற்றுப் புகப் பெறாதே நோவு படுக்கைக்கு அடியான பாபத்தைப் பண்ணின எனக்கு
ஆகத்தவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையனாய்-ஹேய ப்ரத்ய நீகமாய் நிரவதிக தேஜோ ரூபமான
திருவடிகளைத் தொழுது எழுகைக்கு என் மனனே
கொடியேற்குக் குறுக்கும் வகை யுண்டு கொலோ என்கிறார் ஆயிற்று –

—————–

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ
செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-

மல்லிகை கமழ் தென்றலில்
நாளேல் அறியேன் என்று நித்ய கைங்கர்யம் பண்ணுகைக்கு அடைத்த நாள்
எப்போதோ என்று கேழ்க்க
அவன் அருளிச் செய்ய பற்றாமையாலே அருளிச் செய்கிறார் –

———-———-

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-

உயர்வற என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
இதர விஷய ப்ரவணராய் இருக்கையாலே
தத் தத் போகங்கள் அல்ப அஸ்த்ரங்களாய் ரஸ்யத்தையும் தனித்தனியே பலவாகையாலே
ரஸ்யதை அல்பமாய் அஸ்திரமாய்த்து

அங்கன் அன்றியே அவர்கள் ஒருவனான இவர் -உயர்நலம் உடையவன் யாவன் ஒருவன் அவன்
ஸர்வ ரஸ ஸர்வ கந்த என்று அவன் ஸ்ருதி ப்ரஸித்தனாய் அவனைத்தான்
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தையிலும் ஸர்வ வித போக்யமும் அவனே என்று
அநந்யார்ஹ சேஷ தயா அனுபவிக்கிற பிராட்டிமார் தசையாய் அவர்கள் பாசுரத்தாலே
அருளிச் செய்து அனுபவிக்கிறார் –

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ -என்று கீழ்ப் பிறந்த பாதகம் லௌகிகம் ஆகையால் அல்பமாய்த்து
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
இடைப்பெண்கள் நடுவே இவன் குழலூதுகிற போது நடுவே தன் ஆற்றாமையினாலே சில தன்
யுக்திகள் சேஷ்டிதங் களாலே வ்யாமோஹங்களைச் சொல்லா நின்று கொண்டு ஊதுகிற படும் பாட்டை
நினைத்து ஒன்றும் தரிக்க மாட்டேன் என்கிறார்

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அவன் மயர்வற அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தால் -அவன் ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் எல்லாம்
கரதல அமலகமாகக் காட்டக் கண்டு அனுபவிக்கையாலே தரித்து நின்று அனுபவிக்கப் போகிறதில்லை

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
கீழில் அவை மிகை என்னும்படியே குழலோசையே பாதகம் ஆகிறபடி
தேவ திர்யக் மனுஷ்ய சங்கம ஸ்தாவரங்களுக்கு தத் தத் வசீகருத்தமான பாஷைகளாலே வசீகருத்தமாம் படி
ஊதும் வகைகள் அல்லவே இறே கோபிகளுக்கு ஊதுவது

இடையிடை அது மொழிந்து
பிரிந்தேன் ஆற்றோம் என்றால் போலே சொல்லுகிற நீச பாஷணங்கள் இடையிடையே சொல்லி யாய்த்துப் பாடுவது
தாழ்ந்த செயலும் பேச்சும் தன் வாயால் சொல்ல மாட்டாமையாலே அது என்கிறாள்

எம்பார் இவ்விடத்தே வந்தவாறே
மோர் உள்ளதனையும் சோறேயோ -தேசிகரும் கூடப் பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டாதே அது என்னா நிற்க
மத்யஸ்தருமான நாம் இதுக்கு என்ன பாசுரம் இட்டுச் சொல்வது என்று அருளிச் செய்தாராம்

அன்றிக்கே
அது மொழிந்து -அது தவிர்ந்து
நடுவே நடுவே பாடுகிற பாட்டை விட்டு என்றுமாம்

தன் செய் கோலம் தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தனக்குத் தானே ஆபரணமாய்
தன் கருத்தை அவர்களுக்கு அறிவிக்க வல்ல திருக்கண்கள்
அயர்வறு அமரர்கள் அதிபதி யானவனை -ஜிதந்தே புண்டரிகாஷ என்று அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரான
நித்ய ஸூரிகள் திருக்கண்களுக்குத் தோற்று
துயர் அறு சுடர் அடி தொழுது தரித்து நின்று அனுபவிக்க மாட்டாமல்
ஹேய ப்ரத்ய நீகமாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளில் விழுந்து கிடைக்குமா போலே

தன் செய் கோலம் தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி
பெண்கள் நெஞ்சில் மறத்தாலே கிட்டக் காட்டுவோம் அல்லோம் என்று இருக்கிறவர்களுடைய
கல்லான மனசைக் கலக்கிக் காளை சென்று பிடியா நிற்கும் கண்கள் என்கை
நம்பி மூத்த பிரான் செய்யுமத்தை அடையச் செய்யா நின்றதாய்த்து

குழலூதுகையிலே மூண்டு மீண்டு வார்த்தை சொல்ல ஒண்ணாமையாலே
வாக் வியாபாரத்தை ஏறிட்டுக் கொள்ளுமாய்த்து
பேச்சால் பிறக்கும் ஸ்பஷ்டதை நோக்கால் பிறக்கை

மயர்வற மதிநலம் அருளினான் -அத்தாலே நான் தன்னை உள்ளபடி அறிய வல்லனாம்படி
கடாக்ஷித்து அருளினால் போலே
தன் கடாக்ஷத்தாலே என்னையும் உள்ளபடியே தான் அறிந்தான்

தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
அழகிய பேச்சோடு கூடின இசை கொண்டு ஓன்று நோக்கி
அழகிய இசைகளாலே கண்ணாக நோக்கி ஈடுபடுத்துமா போலே ஈடுபடுத்துகிற இசையோடு கூடச் செய்தேயும்
இயலும் தெரிந்து இருக்கைக்கு அடி மயர்வற்ற ஞான பக்தியை அருளி இப்படிப்படுத்தினான் –

வாக் வ்யவஹாரமும் நேத்ர விருத்தியும் மாறாடின படியே
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
கேழ்க்கிறவர்களிலும் தன் செவி அணித்தாகையாலே நாம் ஈடுபடுகிற படி கண்டால் அபலைகளான
பெண்கள் என் படு கிறார்களோ என்று மிகவும் நோவு பட்டான்

அயர்வறும் அமரர்கள் துயர் அறு சுடர் அடி தொழுது அவர்கள் பாடு -படு கிற பாட்டைப்
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
பெண்களுடைய நெஞ்சு ஊடலை அற மறந்து வந்து பொருந்தும் படி பாடுகிற பாட்டை

யாதும் ஒன்றும் அறிகிலம்
என் மனனே அது பாதகமாம் படி எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை

அம்ம அம்மமாலையும் வந்தது
மிகவும் பயவாஹமாம் படி ராத்திரியும் வந்தது
உயர்வற -மயர்வற -அயர்வற -என்கிறவை அறுகை அன்றிக்கே
எல்லாம் ஓக்க உண்டாகத் துயர்கள் தொடரவாய்த்து மோஹாந்த காரம் வந்தபடி

என் மனனே
இனி இருந்து கிலேஸிக்க வேண்டாத படி இது முடித்தே விடும் போலே இருந்தது

மாயன் வாரான்–
தன்னைப் பிரிந்தார் லஜ்ஜிக்கும் படி தான் இழவாளனாய் வந்து காலைப் பிடிக்கும் படிக்கும்
ஆச்சர்ய பூதன் வருகிறிலன் என்கிறார் –

———-———

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-

மாலை நண்ணியில்
சரீர அவசா நத்திலே உம்மை அடிமை கொள்ளக் கடவோம் என்று ஸுரிப்பெருமாள்
அருளிச் செய்ய க்ருதார்த்தராய்
எல்லாரும் திருக்கண்ண புரத்திலே ஸர்வேஸ்வரனாய் ஸர்வ ரக்ஷகனான எம்பெருமானை
ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் என்று ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

——————

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

உயர்வற என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி பிரம்மா ஆனந்தத்து அளவும் மோக்ஷத்தில் இச்சை
யுடையவர்களுக்கு கர்ம ஞானாதிகளாலே பாப நாசம் பிறந்த பின்பு கர்ம அவசானத்திலே மோக்ஷமாய் இருக்கும் –
சாதனாந்தர பரராகையாலே விளம்பிக்கும்

ஸாத்ய உபாய நிஷ்டருக்கும் ஸித்த உபாய நிஷ்டருக்கும் நெடு வாசி யுண்டு
ஸித்த உபாய நிஷ்டருக்கு சரீர அவசானத்திலே மோக்ஷமாகையாலே தத் க்ஷணமாய் இருக்கும் –
தாம் உயர் நலம் யுடையவனைப் பற்றுகையாலே சரீர அவசானத்தே பெற்றார்
உயர்நலமுடையவன் நிர்ஹேதுக கிருபையினாலே அகிஞ்சனனான அநந்ய கதியான தாம் பெற்ற பேற்றை அருளிச் செய்கிறார் –

பக்தி யோகம் கர்மா யோக ஸஹ க்ருத மாகையாலே இவருக்கு த்ரை வர்ணிக அதிகாரமாகையாலும்
தாம் அதுக்கு ஷமர் அல்லாமையாலே
தன் திருவடிகளையே உபாயமாகப் பற்றினார் திறத்து அவன் செய்து அருளும்படியை அருளிச் செய்கிறார்

உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன்

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
ஞான ஆனந்தாதி கல்யாண குண பூர்ணன் ஆனவன் ஜென்ம வ்ருத்த ஜனங்களால் குறைய நின்றார்களே
யாகிலும் தன் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு ரக்ஷகனாம்

கீழ் மூன்று பட்டாலும் சொன்ன பக்தி யோகம் அதிக்ருதாதிகாரம்
இதில் சொன்ன பிரபத்தி ஸர்வாதிகாரம் என்கிறது
ஸமோஹம் ஸர்வ பூதேஷூ என்னக் கடவது இறே
பகவத் விஷயம் இறே ஸ்பர்ச வேதியாய் இருக்கும் இறே

கைசிகத்தில் பகவத் சம்பந்தம் உடையான் ஒரு சண்டாளனோட்டை ஸம்பாஷணம் ப்ராமணனுடைய
ஆசார வை கல்யத்துக்குப் பரிகரமாய்த்து
அவ்விடத்தில் எல்லாரும் சொல்லுகிற அர்த்தம் இதுவேயாய்த்து –

மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
இவன் பக்கலிலே பர ந்யாஸம் பண்ணினவன்று தொடங்கி இவனை ஒழியத் தனக்கு
செல்லாமை யுண்டாய் இருக்கச் செய்தேயும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் த்ரிபாத் விபூதியும் லீலா விபூதியும் யுண்டாய் இருக்கச் செய்தேயும்
இவனுடைய ருசியை அனுவர்த்தித்து சரீர விஸ்லேஷத்து அளவும் அவஸர ப்ரதீஷனாய் நின்று பின்னை
இது உண்டானால் பரமபதத்தைக் கொடுக்கும் உபகாரகன் –

எவன் அவன் -துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்றவன் –
தன் திருவடிகளை பற்றின வன்றே தான் இருக்கிற இடத்திலே அவனைக் கொண்டு போய்ச்
சேர வைத்துக் கொள்ள வேண்டி இருக்கச் செய்தே
நடுவு இவன் இருக்கும் நாலு நாளும் இவனுக்கு ஒட்டு பகல் ஆயிரம் ஊழியாய் இருக்கையாலே
மரணமானால் என்கிறது –
தனக்கு சக்தி இல்லை
இவனுக்கு கர்த்தவ்யம் இல்லை
இவன் ருசியைக் கடாக்ஷித்து நிட்கிற அத்தனை

இப்பாட்டில் மரணமானால் -என்றதைக் கொண்டு இறே கீழ்ச் சொன்ன நிரூபணம் எல்லாம்

அரண் அமைந்த மதில் சூழ்
அயர்வறும் அமரர்களான நித்ய முக்தர் பரிய இருக்கிறவன் இங்கே வந்து நின்றான்
அவனுக்கு என் வருகிறதோ என்று அஞ்ச வேண்டாதபடி இருக்கை

தரணியாளன்
பூமிக்கு நிர்வாஹகன்
ஹேய ப்ரத்ய நீகராய் அப்ராப்ய அம்ருத தாஸிகளான நித்ய ஸூரி நிர்வாஹகனானவன்
நித்ய ஸம்ஸாரிகளுக்கு ரக்ஷகன் என்கை

இப்படி உபய விபூதி நிர்வாஹகன் யாவன் ஒருவன் அவன் துயர் அறு சுடர் அடி
சரணாகதன் துயர் அற
அவன் தன் துயர் அற்றபடி
சுடர் அடியும்
அடியானைப் பெற்ற பின்பே பரமமான சுடர் அடி யாய்த்து –

தொழுது எழு என் மனனே
அவன் தனது அன்பர்க்கு அன்பாகுமே
தனக்கு ஸ்நேஹி களானவர்கள் பக்கலிலே அதி ப்ரவணமானவன்

தனது அன்பருக்கு அன்புடையவன் என்று பிரிக்க ஒண்ணாத படி அன்பு தான் ஒரு வடிவு கொண்டால் போலே
இருக்கிறவன் துயர் அறு சுடர் அடி

தொழுது எழு என் மனனே
தொழுது வர்த்தி என்கிறார் –

——————-

ஒன்பதாவது பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணமஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–எட்டாவது பத்து விவரணம்- –

February 12, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-

தேவி மாரில்
பாரித்த படியே -திருவாறன் விளையிலே போய்ப் புகப் பெறாமையாலே -மிகவும் அவசன்னராய்
ஆஸ்ரித பரதந்த்ரன் என்றும் ஸர்வ நிர்வாஹகன் என்றும் சொல்லுகிற இது பொய்யோ என்று அதி சங்கை பண்ண
அவனும் தன் படிகளைக் காட்டக் கண்டு அதி சங்கை தீர்ந்தார் –

——-

ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது – அது எங்கனே என்னில்
கீழில் பாட்டுக்களில் காணுமாறு அருளாய் என்றீர்-அப்படியே காணக் கடவீர் -அதில் ஒரு குறையில்லை
ஸாஸ்த்ர பலம் ப்ரயோக்தரீ -என்று பேறு உமதானால்
சாதனமும் உம்முடைய தலையிலே ஆக வேண்டாவோ என்ன
நான் எத்னம் பண்ணி வந்து காண என்ற ஒரு பொருள் இல்லை காண் என்கிறா

உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அவரவர்கள்
சாதன அனுஷ்டானம் பண்ணி ப்ரயோஜனாந்தரத்தைக் கொண்டு போகையாலே உயர்வு அற்றார்கள்

உயர் நலமுடைய உன்னை -அரிய உயிரான உன்னைப் பெற்றார் உண்டோ –
பரமமான ஞான ஆனந்த ஸ்வரூபனுக்கு ஓக்க ஒரு பொருள் இல்லை -அதுக்குத் தக்க சாதனம் உண்டோ –
நான் ஒரு யத்னம் பண்ணி காண என்ற ஒரு பொருள் இல்லை காண் என்கிறார் –

எவன் அவன் -ஸ்ருதி ப்ரஸித்தனானவன் –ஆர் உயிரேயோ
உயிர் நீயாய் இருக்க -சரீரமான நான் என்ன என்ன சாதன அனுஷ்டானம் பண்ணுவேன்
உன்னை வந்து கிட்டும் வகை என்
சரீர ரக்ஷணம் சரீரியது அன்றோ -சரீரம் தான் தன்னை ரஷித்துக் கொள்ளவோ –
ஸம்பந்தமேயோ -அனுஷ்டானம் இல்லையோ –

அனுஷ்டானம் ஏது என்ன
மயர்வற மதிநலம் அருளித்து இல்லையோ -என் அவித்யா கர்மா வாஸனா ருசிகளைப் போக்கி
உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை விசதமாகக் காணும்படி
பக்தி ரூபா பன்ன ஞானத்தை உன் நிர்ஹேதுக கிருபையாலே அருளித்து இல்லையோ –

அந்த கிருபை தான் என் அளவேயோ
அகலிடம் முழுதும் படைத்து -பஹுஸ் யாம் என்று பூமிப்பரப்படைய ஸ்ருஷ்டித்து
இடந்து -பிரளயத்தில் நோவு படாதே மஹா வராஹமாய் எடுத்துக் கொண்டு ஏறி
உண்டு -திரிய பிரளயம் வர வயிற்றிலே வைத்து நோக்கியும்
உமிழ்ந்து -உள்ளே கிடந்தது தளராதபடி வெளிநாடு காண உமிழ்ந்து
கடந்து -மஹா பலியாலே அபஹ்ருதமான தசையில் எல்லை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு
இப்படி வந்த துர்த்தசைகளிலே அபேஷா நிரபேஷமாக உணர்ந்து நோக்கின நீயே
இது கிட்டும் விரகு பார்க்க வேண்டாவோ

இப்படி ஸர்வ வித ரக்ஷகனானவன் எவன் அவன் -அவன் யார் என்ன –
பேர் உயிரான அயர்வறும் அமரர்கள் அதிபதி – அயர்வில்லாத பூர்வே ஸாத்யர்கள் ஆனவர்களுக்கு நிர்வாஹகனான –
பேர் உயிரேயோ -என்று பெரியோன் -என்றபடி –

வேதைக சமதி கம்யனான பெருமையை யுடைய நீ பெரிய நீர் படைத்து –
ஸர்வ விஷயமாகப் பண்ணும் வியாபாரத்தோடே பிராட்டிக்காகப் பண்ணும் வியாபாரத்தோடே
வாசி அற்று இருக்கும் படி சொல்கிறது

பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து
ஏகார்ணவத்தை ஸ்ருஷ்டித்து ஸ்ருஷ்ட்டி அர்த்தமாக அதிலே கண் வளர்ந்து
அது கடைந்து -கடல் என்கிற ஸமாதியாலே அருளிச் செய்கிறார்
அத்தைக் கடைந்து மற்றக் கடலை அடைத்தும் அது உடைத்தும்
பிராட்டியை லபிக்கைக்காக அவற்றைக் கடைந்து அவளோட்டை ஸம்ஸ்லேஷத்துக்காக
அத்தை அடைத்து அவ்வருகு உண்டான ராக்ஷசர் வந்து ஆஸ்ரிதரை நலியாதபடி அது உடைத்து

இப்படியான செயலைச் செய்தவன் யாவன் ஒருவன் அவன் சீர் ஆர் உயிரானவன் –
நித்ய ஆஸ்ரிதையான பிராட்டியோடு நித்ய முக்தரோடு அல்லாதாரோடு வாசி யற விஷயீ கரிக்கும் சீர்மை யுடையவனே

மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ வென்று ஐஸ்வர்யத்தாலும் கௌரவ்யனாகை இறே
மநுஷ்யர்களில் காட்டில் தேவர்கள் அதிசயித்து இருக்குமா போலே யாய்த்து
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகானாய் இருக்கும் படி –

இப்படி இருக்குமவன் யாவன் ஒருவன் அவன் ஓர் உயிரேயோ உலகங்கட்க்கு எல்லாம் –
கேவல சரீரமோ ஆத்மாவோ ஹித சிந்தை பண்ணுவார் யார்

இப்படி இருக்கிற உன்னை நான் எங்கு வந்து உறுகோ -உன் துயர் அறு சுடர் அடி தொழுகைக்கு
சாதன அனுஷ்டானம் பண்ணுகிறேனோ
அப்போது எனக்குத் துயர் உண்டாமது ஒழிய துயர் அறாது கிடாய்

ஹேய ப்ரதிபடமான திருவடிகளே உபாயமாகவும் அது தானே உபேயமாகவும் காண் தத்வம் இருப்பது
இப்படி இருபத்தொரு தத்வாந்தரம் உண்டாகில் சொல்லிக் காணாய்

இப்படி உபய விபூதிக்கும் ஓர் உயிராய் இருக்கிற உன்னை சரீர பூதனான என் ஆத்மாவும் ஆத்மீயமும்
உனக்குச் சரீரமான பின் என்ன சாதனாந்தரத்தைப் பண்ணி வந்து கிட்டுவேன்
ஆத்மா சரீரத்துக்கு ஹித சிந்தை பண்ணுவது ஒழிய சரீரம் ஸ்வ ரக்ஷணம் பண்ண என்பது ஓன்று உண்டோ

ஆதார ஆதேய -நியந்தரு நியாம்ய -பாவங்களால் சரீர லக்ஷணம் இதுக்கும் உண்டான பின்பு –
அல்ப சைதன்யமும் உன்னாலேயாய்
சேஷபூதன் சேஷியிடத்தில் தொழுது எழும் அத்தனை ஒழிய
ஸ்வ யத்ன ஸாத்யம் யுண்டோ எனக்கும் நெஞ்சுக்கும் என்கிறார் –

——

நங்கள் வரி வளை யாயங்களோ நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-

நங்கள் வரி வளையில்
பின்னையும் தம் அபேக்ஷிதம் கிடையாமையாலே -இதுக்கு அடி தாம் அறியாததாய் –
எம்பெருமான் அறிந்ததாய்
ஸம்ஸாரத்திலே ஏதேனும் நசை யுண்டாக வேணும் என்று பார்த்தான் அத்தனை என்று
தமக்கு ஆத்மாத்மீயங்களிலே நசையற்ற படியை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –

——–

தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால் என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான் ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்க்கண் வளர்கின்ற மாலே-8-2-6-

உயர்வற என்கிற பாட்டைத் தொல்லை யஞ்சோதி என்கிற பாட்டு விவரிக்கிறது -எங்கனே -என்னில் –
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்தளவும் ஆத்மாத்மீயங்களிலே
நசை யுண்டானவர்களாகையாலே உயர்வற்று இருப்பார்கள் –

நாமும் அவர்களிலே ஒருவனான பின்பு நமக்கும் அவை உண்டு என்று இராமல்
ஆத்மாத்மீயங்களிலே நசை அற்று உயர்நலம் யுடையவன் எவன் அவன் –
தொல்லை யஞ்சோதி நினைக்கும் கால் என் சொல் அளவன்று
அவன் அருளே எனக்கு ஆத்மாத்மீயங்களிலே நசையறப் பண்ணி
அருளே -ஆத்மாத்மீயம் என்று அறியும்படி மயர்வற மதிநலம் அருளின படி –

உயர் நலமுடையவன் -என்று சொல்லுகிறவன் எளியன் அல்லன் -ஸ்ருதி ப்ரஸித்தனாகையாலே
தொல்லை யஞ்சோதியாலே துர் லபன்
அவன் ஸூ லபனாகிலும் துர் லபனாகிலும் தன்னை ஒழியச் செல்லாத படி நம்மைக் கடாக்ஷித்துத்
தன் திருவடிகளில் புகுர நிறுத்தியவன் வாசலிலே கூப்பிடாதே சம்பந்தம் இல்லாதார் வாசலிலேயே கூப்பிடுவது -என்கிறார்

ஆக உயர்நலம் யுடையவன் எவன் அவன் -தொல்லை யஞ்சோதி நினைக்கும் கால்
ஆனந்தாதி கல்யாண குண பூர்ணனாய் ஆதியஞ்சோதி யானவனை
நினைக்கில் -ஆராயப் புக்கால்
இதர விஸஜாதீயமான விக்ரஹம் -அபர்யாப்த்த அம்ருதமான அவன் மயர்வான ஆத்மாத்மீயங்களிலே
நசையறப் பண்ணி
பக்தி ரூபா பன்ன ஞானத்தைத் தன் நிர்ஹேதுக கிருபையாலே வளர்த்துக் கொண்டு
போருகிறவனைச் சொல்லப் புகில் என் சொல்லி நிற்பன்

என் சொல் அளவன்று
அபர்யாப்த்த அம்ருதத்தின் வை லக்ஷண்யம் என் பேச்சுக்கு அளவாமோ
நான் ஒரு அபலை இருந்து சொல்லும் அளவோ அவன் பெருமை

இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன்-இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் அவன்
வேதங்களும் -அப்ராப்யா -மனஸா ஸஹ -என்று மீண்ட விஷயத்தை —
அயராதே -இமையாதே–கண்ணாலே பார்த்து அனுபவிக்க மாட்டாதார்க்கும் -அபர்யாப்த்த அம்ருத தாஸியாக்கி
அனுபவிக்க அனுபவிக்க எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
எத்தனையேனும் அதிசயித ஞானரேனாலும் அளவிறந்த ஸம்சயத்தைப் பண்ணா நிற்கும்

யந் நாயம் பகவான் பிரம்மா ஜாநாதி புருஷோத்தமம்
ந க்ராஹ்யா கேநசித் க்வசித் -என்று நித்ய ஸூரிகள்
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி நிற்க தானீட்டிய வெண்ணெய் தொடு யுண்ணப் போரும் படியாகவும் –

அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
இப்படி ஸமஸ்த கல்யாண குணங்களை யுடையவன்
என்னோடே இட்டீடு கொண்டு அல்லது தரியாதானாய் -நம்முடைய நிறத்தைக் கொண்டான்
தன்னுடைய வை லஷண்யத்தைப் பாராதே யன்றோ இட்டீடு கொண்டது

தன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று நம் சங்கா நிவ்ருத்தம் ஆக்கித்
தான் தேஜோ ராஸியாய் விளங்கா நிற்கிற
திருவடிகளைத் தொழுது எழு என்று -பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா என்றும்
‘நானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் என்றும்
ஆத்மாத்மீயங்களிலே நசையற்ற பின்பும்

அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
நம் நிறத்தைக் கொண்டால் தன்னோடு ஸ்பர்சம் உள்ளது ஒன்றைத் தந்து நம்மை உஜ்ஜீவிப்பிக்கலாம் இறே
அதுவும் செய்கிறிலன்
அது செய்தானாகில் பூவுக்கு இட்டோம் போலே என்று இருக்கலாம்
ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்
நாம் துயர் அறு சுடர் அடி தொழுதால் அத் திறம் நிற்க நம் மாமைக் கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
தாதும் அல்லியும் மலரும் குளிர்ந்து அழகிய திருத்துழாயும் தாரான்

வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்க்கண் வளர்கின்ற மால் அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
ஆர்க்கு இடுவதோ இனிப் பூசல் சொல்லீர்
நம்மை நலிந்தவன் வாசலிலே கூப்பிடாதே யார் வாசலிலே கூப்பிடுவோம் சொல்லி கோள்

பரத்வாதிகளில் அல்ல -பூங்கொடி படர்ந்த சோலையும் -விளைவதான வயல்களும் சூழ்ந்த
திருக்குடந்தையிலே கண் வளர்ந்து அருளுகிற ஸர்வேஸ்வரன்
மா மலர்க்கண் -ஜிதந்தே -என்று உபய விபூதியையும் தோற்பித்த கண்
ப்ராப்தனானவன் மலர்ந்த தாமரைப்பூ போலே இருக்கிற கண் என் அளவிலே அலரக் காண்கிறிலேன் -என்கை

கூக்குரல் கேழ்க்கைக்கு ஸந்நிஹிதனாய் இருக்க ஆர்த்த நாதம் கேளாமை அன்றே
கேட்டும் கேளாதது போலே இருந்தால் ஆர்க்கு இடுகோ -இனிப் பூசல் சொல்லீர்

தொல்லை யஞ்சோதி யுடையவன் துயர் அறு சுடர் அடி தொழுது ஆர்க்கு இடுகோ -இனிப் பூசல் சொல்லீர் – என்று
தோழியையும் கூட்டிப் பூசலிட்டு ஆர் வாசலில் கூப்பிடுவது என்கிறாள் –

———–

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

அங்கும் இங்கும் -இதிலே
எம்பெருமானுடைய தனிமையை அனுசந்தித்து அங்குத்தைக்குப் பரிவர் இல்லை என்று அஞ்ச
எம்பெருமான் நமக்குப் பலர் பரிவார் உண்டு என்று காட்டிக் கொடுக்கக் கண்டு பயம் தீர்ந்தார்

உயர்வற என்கிற பாட்டை விவரிக்கிறார் இதில் -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் உன் ஸுகுமார்யம் பார்த்துப் பரிவார் இல்லை –
தாம் பரியும் பரிவு போராது என்றும் -ஸம்ஸாரிகளையும் மற்றும் எல்லாரையும் பார்த்தார்
ஸம்ஸாரிகள் சப்தாதிகளிலே மண்டி அந்நிய பரர்
பிரம்ம ஈஸா நாதிகள் தங்களுக்காக நீள் நகர் நீள் எரி வைத்து அருளாய் என்பர்கள்
அவனை அம்புக்கு இலக்கு ஆக்குவார்கள் ஆகையால் பரிவற்று இருப்பார்கள்

அங்கும் இங்கும் வானவர் தானவர் -உபரிதன லோகங்களிலும் பூமியிலும்
எங்கும் -அநுக்தமான பாதாளாதிகளிலும்
வானவர் -அனுகூலர்
தானவர் -பிரதிகூலர்
யாவரும் -இரண்டு வகையான மனுஷ்யாதிகள்
இனையை என்று யுன்னை -உயர்நலம் யுடையவனான உன்னை –

ஆனந்தாதி குணம் என்ன ஸுகுமார்யாதி குணம் என்ன இவை அறிந்து பரியமாட்டாமல் உயர்வற்றவர்கள்

உயர்நலம் யுடையவன் எவன் அவன் யாவன் ஒருவன் அவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவன் –
ஸர்வ சேஷி என்று அறிந்து பரியும்படியான யுன்னை உன் ஸுகுமார்யாதிகளைப் பார்த்தால்
கருமுகை மாலையைப் போல் இருக்கிற யுன்னை
உன் படிகள் ஒன்றும் அறியாதே அவர்கள் இருக்க -எனக்கு மயர்வற மதி நலம் அருளி
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே உன் ஸுகுமார்யம் ஒழிய வேறு ஒன்றில் போகிற மயர்வை அறுத்து
உன் ஸுகுமார்யமே என் மனசிலூன்றிப் பரிகைக்கு ஒருவனாய் ஆனேன்

எவன் அவன் -இந்த ஸுகுமார்யத்தை யுடையவன் யாவன் ஒருவன் -அறிய கிலாது –
பரிய அறியாமைக்கு அனுகூலரான தேவர்களோடு பிரதிகூலரான அஸூரர்களோடு
இரண்டும் கூட மநுஷ்யர்களோடே வாசியில்லை
உன்னைக் கண்டவர்கள் எல்லாரும் பரிய வேண்டும் என்று இருக்கிறார் யாய்த்து இவர்

ஆழ்வீர் -வாரீர் நமக்குத் பரிகைக்கு த்ரிபாத் விபூதியாக உண்டே என்ன

அயர்வறும் அமரர்கள் -என்னா உன் ஸுகுமார்யம் அளவிடப்போமோ –
கண்ணாஞ்சுழலை இட்டு மங்களா ஸாஸனம் பண்ண அறியார்கள்
சந்த அனுவிருத்தியாய் இருப்பார்கள் நித்யரும் முக்தரும்
முமுஷுக்கள் மோக்ஷத்தில் இச்சை யுடையராய் இருப்பார்கள்
பத்தர் ஸம்ஸார யாத்திரையே பேறாக இருப்பார்கள்
ஆகையால் எனக்கு கூட்டு யாவார் யார் என்கிறார் –

அலற்றி
யஸ் ஸர்வஞ்ஞ ஸர்வ வித் -என்றும்
பராஸ்ய சக்திர் விவிதை ஸ்ரூயதே ஸ்வ பாவிகீ ஞான பல க்ரியாச -என்றும்
போன்ற வசனத்தைப் படியா நிற்பார்கள் –
தங்கள் ரக்ஷணத்துக்கு அடியான வசனங்களை படித்து கதறா நிற்பார்கள்
உன்னை ரஷ்யம் என்று இரார்கள்

அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -மங்களா சாசனம் ஒழிய வேறு ஒன்றில் அயராத நித்ய ஸூரிகளுக்கு
ஸுகுமார்யம் ஒழிய வேறு ஒரு போக்யதை அறியாமல் அனுபவிப்பக்கப்படுகிற உனக்கு –
போக்ய பூதைகளான பிராட்டிமார் தங்களுக்கும் புருஷகார பூதராகக் கொள்ளுமவர்கள் –
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு என்று
அச்சேர்த்திக்கு மங்களா ஸாஸனம் பண்ணுவார் இல்லை –

சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று இரார்கள்
சங்கு சக்கரக்கை என்று கையும் திருவாழியுமான அழகை அனுபவிப்பார் இல்லை –
நம் விரோதியைத் துண்டிப்பதற்குக் கையிலே திவ்ய ஆயுதங்கள் யுடைத்து என்பார்கள்
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு என்னார்கள்

சரணம் என்பர்
அபிமத ஸாதனம் என்பார்கள்
ஹேய ப்ரதிபடமாய் தேஜோமயமான திருவடிகளே ப்ராப்யம் என்று இரார்கள்
ஸூ குமாரமான விக்ரஹம் என்று அறியார்கள் -தம் தாம் அபிமதங்களைப் பெற்றுப் போவார்கள் –

அங்கன் அன்றிக்கே -என் மனனே –
அச்சேர்த்திக்கும் அழகுக்கும் ஸுகுமார்யத்துக்கும் மங்களா ஸாசனம் பண்ணி
வர்த்திக்கப் பாராய் என்கிறார் –

——————–

பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
ப்ரயோஜனாந்தர பரராய்க் கொண்டு போனார்கள் ஆகையால்
பிரயோஜனம் ஷயித்தால் தங்கள் க்ஷயிப்பார்கள் ஆகையால் உயர்வற்றார்கள் –
உயர்நலம் உடையவன் எவன் அவன் ஸ்ருதி ப்ரஸித்தனாய் பராத்பரனைப் பரிய அறியார்கள்

நீர் இங்கனே கிடந்தது படுகிறது என் -அவன் ஸர்வ ரக்ஷகன் அன்றோ என்ன –

மயர்வற மதிநலம் அருளி பக்தி ரூபா பன்ன ஞானத்தை தன் நிர்ஹேதுக கிருபையினால்
காட்டி அருளுகையாலே அவன் ஸுகுமார்யாதி குணங்களுக்குப் பரிவர் யாய்த்து

பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அயர்வறும் அமரர்கள் பணியா அமரர் -வேறே சிலரைப் பணியும் அயர்வு இல்லாத அமரர்
முன்பு அஸேவ்ய ஸேவை பண்ணி ஒரு நாள் வரையிலே அனுகூலித்த முக்தர் பரிய-
இப்படிக் கொத்தவர்கள் பரிய இருக்கக் கடவன் அவன்
ஸம்ஸாரத்தில் திவ்யமாய் இருக்கும் வடிவோடே வந்து உலாவா நின்றால் நான் இப்படிப்படாதே செய்வது என்

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் -அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
பணிவும் பண்பும் தாமேயாம்
பணியா அமரர் பணிவுக்கும் பண்புக்கும் -செக்ஷத்வாதி குணங்களுக்கும் -தாமே விஷயமாய் இருக்குமவர்

அணியாராழியும் சங்கமுமேந்துமவர்
ஸர்வ ஆபரணமும் தானேயாகப் போரும் படியான திவ்விய ஆயுதங்களைத் தரித்து
நித்ய முக்தருக்குக் காட்ஷி கொடுத்தால்
அவர்களும் அஸ்தானே பய சங்கிகளாய்க் கொண்டு -இவ்வடிவுக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று
மங்களா ஸாஸனம் பண்ணும்படி யாயிற்று இருப்பது
அவர்களுக்கு நான் பட்டது பட வேணுமோ

அவர் காண்மின்
ஸுகுமார் யாதிகளை யுடையவன் கிடீர் பய ஸ்தானத்தில் வர்த்திக்கிறார் –

தனக்கு ஒரு பிரயோஜனத்துக்குத் தான் வருகிறானோ
தணியா வெந்நோய் உலகில் தவிர-வருவார்
ஒரு நாளும் முடியாத தாப த்ரயாதிகள் தீரத் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

திரு நீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–
நீல மணி போலே ஸ்ரம ஹரமாய் ஸூ குமாரமான வடிவோடே ஸம்ஸாரத்திலே வந்து உலாவுகிறார்

இங்கு வர வேண்டினால் அவ்வடிவோடே வர வேணுமோ –
என் மனம் சூழ
அந்த ஸுகுமார்யம் அறிந்த என் மனம் சூழ வருவான்
சுழன்று வரும்படி வருகிறவர் துயர் அறு சுடர் அடி தொழுது எழு

ஹேய பிரதிபடமான திருவடிகளைத் தொழுது எழ மாட்டாமல் மனஸ் ஸூ சுழலா நின்றது –
ஹேய ப்ரதிபடம் என் அளவில் காணோம்
எனக்குக் கரணம் ஆகையாலே என்னையும் கூட்டிக் கொண்டு சுழலாமல் தரித்து நின்று
தொழுது வர்த்தி என்று அருளிச் செய்கிறார் –

———-———

வார்கடா வருவி யானை மா மலையின் மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1-

வார் கடா வருவியில்
பின்னையும் ஸர்வேஸ்வரன் சம்சாரிகளுடைய அபேக்ஷையே ஆலம்பனமாக வந்து அவதரித்து உலாவா நிற்கும்
நித்யரும் முக்தரும் இங்கு இல்லை
அல்லாதார் புறம்பே அந்நிய பரராக என் புகுகிறதோ என்று அஞ்சினார்

அவனும் தான் பெரு மிடுக்கனாய் இருக்கிறபடியும்
தனக்குப் பரிவார் சாப அனுக்ரஹ ஸமர்த்தராய் தன்னோடு ஒத்த ப்ராஹ்மணர் மூவாயிரம் பேர்
திருச் செங்குன்றூரிலே பரிய நின்று அருளின படியைக்
காட்டிக் கொடுக்கப் பயம் தீர்ந்து அவனுடைய ஸுகுமார்யாதிகளை அனுபவித்துப் ப்ரீதரானார் –

—————–

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே-8-5-1-

மாயக்கூத்தனில்
திருச் செங்குன்றூரிலே நின்று அருளினவனை இப்போதே போய்ப் புக்கு
அனுபவிக்கப் பெறாத இழவாலே
காண வேணும் என்று திருக் கடித்தானத்திலே புறவீடு செய்து இருந்த படியை
அருளிச் செய்கிறார் –

——-——–

கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே-8-5-6-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் பகவத் வியதிரிக்தங்களிலே அழகு காண்பாருக்கு
அல்ப அஸ்த்ரத்வாதி தோஷங்களாய் விரூபங்களாலே உயர்த்தி அற்றது –
இவர் கருவிலே திருவுடையாராகையாலே உயர்நலம் உடையவன் எவன் அவன்
கொண்டல் வண்ணன்
ஸுந்தர்யாதி குண கண விபூஷிதனான ஸர்வேஸ்வரன் யாவன் ஒருவன் அவன்
கொண்டல் வண்ணன் –
காணவே விடாய் அறும்படியான வடிவை யுடையவனே

குடக்கூத்தா -மநோ ஹாரியான சேஷடிதத்தை யுடையவனே
வினையேன் -இப்படி அலற்றும் படிக்கு
மயர்வற மதிநலம் அருளும்படிக்கு நிர்ஹேதுக கிருபையை யுடையவனே
நீ அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்துக்குப் பிரயோஜனம்
என் கண்ணா -என்று அலற்றுகையோ

தத் வியதிரிக்தங்களிலே மனஸ் ஸூ பொருந்தாமையைப் பண்ணிய உன்னை ஒழியச் செல்லாதபடி
மதிநலம் அருளி
திவ்யம் ததாமி தே சஷுஸ் -என்கிறபடி எனக்கு த்ருஷ்டி பூதனான கிருஷ்ணனே
இப்படி சஷுஷி திஷ்டன் ஆனவன் யாவன் ஒருவன் என் கண்ணன் ஆனவன் –

வினையேன்
கண்ணை இழந்து இருக்கும்படியான பாபத்தைப் பண்ணினேன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யாவன் ஒருவனை நித்ய ஸூரிகள் அநிமிஷாராய்க் கொண்டு
ஸதா அனுபவம் பண்ணும் சர்வாதிகன்
கோபாலனாய் வந்து அவதரித்து இருக்க நான்

அண்ட வாணா வென்று என்னை
விஷயீ கரிக்கைக்காக அண்டாதிபதி யானவன்
கல்யாண குண யோகம் ஆஸ்ரித அர்த்தமாய் இருக்குமா போலே விபூதி யோகமும்
தனக்காகவே என்று இருக்கிறார்

என் அண்ட வாணன் -என்கையாலே
உபய விபூதி நிர்வாஹகமும் தமக்காகவே என்று இருக்கிறார்
இங்கே மயர்வற மதிநலம் அருளி அங்கே தம்மைக் கொண்டு போய் வைத்துத்
தன்னை அனுபவிக்கைக்காக உபய விபூதியும் கண்டது என்று இருக்கிறார்

என்னை ஆள –
ஒரு ப்ரயோஜநாந்த்ரத்துக்காக அழைக்கிறேனோ
என்னை நித்ய கைங்கர்யம் கொண்டு அருள வேணும் என்று அன்றோ அழைக்கிறது

கூப்பிட்டு அழைத்தக்கால்
க்ரம பிராப்தி ஸஹிக்க வல்லேனாயத் தாழ்க்கிறாயோ
என் ஆர்த்தி நாதம் கேட்டால் கிரமத்தில் வருகிறோம் என்று ஆறி இருக்கலாய் இருந்ததோ

அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீ
விண் தன்மேல் தான்
பரமபதத்தில் இருக்கிற இப்போதே வந்து தோற்றவுமாம்

மண் மேல்தான்
அவதரித்தாள் காட்டவுமாம்

விரி நீர்க் கடல் தான்
ஷீராப்தியில் கண் வளர்ந்து அருளுகிறபடியே தோற்றவுமாம்

மற்றுத் தான்
தூணிலே வந்து தோற்றினால் போலே யாதல் தோற்றவுமாம்
ஆணைக்கு வந்து உதவினால் போலே யாதல் வந்து தோற்ற நிற்க வேணும்

உன் தொண்டனேன் உன் கழல் காண
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று ஆசைப்பட்ட படியே
உன் திருவடிகளில் கைங்கர்யத்திலே சபலனான அடியேன் உன் கழல் காண

துயர் அறு சுடர் அடி
என் ஆசை தீர பரஞ்சோதியான திருவடிகள்
எனக்கு உஜ்ஜீவனமான யூன் கழல் காண

ஒரு நாள் வந்து தோன்றாயே-
ஒரு நாள் வந்து தோன்றி அருள வேணும் என்கிறார் –

———–——-

எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-

எல்லியும் காலையிலே
இவர் இப்படிக்கு கூப்பிடும்படி தான் பிற்பாடாரானோமே -என்று லஜ்ஜித்து வந்து தான்
இவருக்குப் பேச்சுக்கு நிலம் நிலம் இன்றிக்கே தான் சாலப் பெரு விடானாய்
நேர் கொடு நேர் செல்லில் ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே முடிவர் என்று இவரை
அகஞ்சுரிப்படுத்திப் பின்னைக் கிட்டுவோம் என்று பார்த்துத் தான் நிற்கிற நிலையைக்
காட்டிக் கொடுக்கக் கண்டு
திருக் கடித்தானத்தோடே கூட என் நெஞ்சில் புகுந்தான் என்று ப்ரீதர் ஆகிறார்

———-———

கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5-

உயர்வற என்கிற பாட்டை இப்பாடல் விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அவர்களைக் காம்ய பலங்களிலே
பரவசராக்கித் -தன் ஆனந்தாதி குணங்கள் எல்லாம் கிடக்க
ஆஸ்ரிதனான என் பக்கல் ப்ரேம அதிசயத்தாலே உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன்
திருக்கடித்தானத்தோடே கூட அசாதாரணமான கோயிலாகக் கொண்டான்

உயர்நலமுடையவன் என் மனம் கோயில் கொண்டான்
பரத்வாதிகள் முதலான திவ்யதேசங்கள் கோயில்கள் எல்லாம் கிடக்க ஹேயமான என் ஹ்ருதயத்தை
திவ்யமான கோயிலாகக் கொண்டான் என்ன
அதுகளை விட்டோ என்னோ -விட்டிலன்

செருப்பு வைத்துத் திருவடி தொழுவாரைப்போலே யாக ஒண்ணாது என்று அவைகளுக்கு எல்லாம்
பிரதானமான திருக்கடித்தானத்தோடே கூட வந்து என் நெஞ்சில் புகுந்து அருளி
எனக்கு மயர்வற மதிநலம் அருளி அஞ்ஞான அந்தகாரம் நீங்க மதி நலமான
சந்த்ர ஸூர்யர்கள் உதித்தால் போலே பரஞ்ஞான பர பக்திகளைப் பிறப்பித்து
அதிலே பரஞ்சோதியான நீ என் நெஞ்சை நாடும் நகரமுமாக்கி
விஷ்ணு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் -என்கிறபடியே கோயில் கொண்டான்

அதனொடும் என் நெஞ்சகம் கோயில் கொண்டான்
அயர்வறும் அமரர்களான அநந்த வைநதேயாதிகள்-கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ
வீற்று இருக்குமவன் -என் நெஞ்சம் கோயில் கொண்டான் –

திருவடி திருவனந்த ஆழ்வான் முதலானோர் தொழுது பரிசர்யை பண்ண எழுந்து இருக்கக் கடவ தத்வம்
தனக்குத் தகுதியான ஸ்ரீ வைகுண்டத்தைக் கோயிலாகக் கொண்டவன்
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக்கோல் செலுத்துகிற ஸர்வேஸ்வரன் கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
குடக்கூத்தாடியவன் வைகுந்தநாதன் திருக்கடித்தானத்தைக் கோயிலாகக் கொண்டான்

என் நெஞ்சகம் கோயில் கோயில் கொண்டவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
திவ்ய தேசம் எல்லாம் ஹேயமாய் என் நெஞ்சே போக்யமாம் படி கோயில் கொண்டான் –

என்னுடைய அவித்யாதிகள் அற்று அவனுக்கு வாசஸ்தானமான நெஞ்சே தொழுது எழு
அரவத்து அமளியின் படியே திருக்கடித்தானத்தின் நிலை என்னைப் பெறுகைக்கு யாகையாலே
ஸாத்யம் கைப்பட்டால் ஸாதனத்தில் இழிவார் இல்லையாய் இருக்க
என்னைப் பெற்றது அத்தேசத்திலே என்று அத்தோடு வந்து புகுந்தான் அதன் இடத்திலே
உபகார ஸ்ம்ருதியாலே -என்கிறார் –

——————

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-

இருத்தும் வியந்தில்
இவருடைய மநோ ரதத்தை எம்பெருமான் தான் கைக்கொண்டு இவருடனே ஸம்ஸலேஷித்துப்
பெறாப் பேறு பெற்றானாய் இருக்கிற படியைக் கண்டு ப்ரீதரானார் –

———–——–

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஈஸ்வரனுக்கு
போக்ய பூதர் ஆகாமல் ப்ரயோஜனாந்தர பரராய்த்தது
உயர்நலம் உடையவன் எவன் அவன் யாவன் ஒருவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவன் –
அவாப்த ஸமஸ்த காமனான ஸர்வேஸ்வரன் தம் பக்கல் இப்படி வ்யாமோஹம் பண்ணக் கூடுமோ –
என்று அதிசங்கை பண்ணி
இவ்வனுபவம் இருந்தபடி என் என்று அதி சங்கை பண்ணுகிறார் –

அருள் தான் இனி யான் அறியேன்
என்னுடைய இந்திரிய வஸ்தையைத் தவிர்த்த இது தன்னையும் இப்போது ஒன்றாக நினைத்து இரேன்

எத்தைப் பற்ற என்ன
உயர்நலம் யுடையவன் -ஆனந்தாதி கல்யாண குண பூர்ணன் ஆனவன்
அவன் என்னுள் இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
அவன் என்னுடைய ஹ்ருதயத்திலே அஞ்ஞான அந்தகாரம் எல்லாம் போம்படி
பெறாப் பேறு பெற்றானாய் இருக்கிற படி இரா நின்றான்

மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன் -மயர்வாகிற இருள் தீர்த்து
மதிநலமாகிற சந்த்ர ஸூர்யர்களைப் போலே இருக்கிற ஞான பக்திகளைத் தன் நிர்ஹேதுக கிருபையால் செய்தான்
என் உள் இருள் தான் அற வீற்று இருந்தான் இது வல்லால் இனி எனக்கு வேறே ஓன்று தோற்றமோ

இது அல்லால் பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
இதுக்குத் திருமலை ஆண்டான் பணிக்கும் படி
நாட்டார் ஐஸ்வர்யங்களிலே தலையாகச் சொல்லுவது த்ரை லோக்ய ஐஸ்வர்யத்தை இறே
அதுவும் எனக்கு ஓர் சரக்கு அல்ல என்கிறார் என்ன

அழகு இது என்று எம்பெருமானார் அருளிச் செய்யும்படி
என் ஹ்ருதயத்தில் புகுந்து எழுந்து அருளி இருக்கிற இருப்பு ஒழிய அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்
சந்த அனுவர்த்தி பண்ண அவர்களுக்கு அபர்யாப்த்த அம்ருதமான போகத்தைக் கொடுத்து
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக்கோல் செலுத்தி இருக்கும் இருப்பையும் தனக்கு ஐஸ்வர்யமாக
நினைத்து இருக்குமோ என்று பார்த்தால் -அதுவும் ஒரு சரக்காக நினைத்து இருக்கிறிலன் என்று
இதுவே ப்ரகரணத்துக்குச் சேருமது –

மருள் தானீதோ
ஒரு ஸம்ஸாரி சேதனனைப் பெற்று ஈஸ்வரன் இப்படி இருந்தான் என்றால் அது கூடுமது ஓன்று அன்று
இது என் அறிவுக்கேட்டாலே சொல்லுகிறேனோ

மாய மயக்கு மயக்கே–
அன்றிக்கே அவன் தன்னுடைய ஆச்சர்யமான பிரம சாதனங்களை இட்டு ப்ரமிப்பித்தானோ
நெடுநாள் பிரக்ருதியை இட்டு அறிவு கெடுத்தான்
இப்போது தன் வ்யாமோஹத்தாலே பிரமிப்பித்தான்

ஏதாகில் என் மனனே நீ ஸ்வரூப விருத்திக்காக துயர் அறு சுடர் அடி தொழுது எழு-
அஞ்சலி அன்றோ உனக்கு அடுப்பது
ப்ரம்மம் ஆகிற ஹேயம் போம்
தொழுது எழு என் மனனே என்று கிருபை யாகவுமாம்

——–——–

கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே–8-8-1-

கண்கள் சிவந்தில்
இஸ் ஸம்ஸ்லேஷம் நிலை நிற்கைக்காக ஆத்ம ஸ்வரூப வை லக்ஷண்யத்தை
ஈஸ்வரன் காட்டிக் கொடுக்கக் கண்டு அத்தை அனுசந்தித்துத்
தனக்குத் தகுதியான பிரகாரம் இருந்தபடி என் என்று இனியராகிறார்

————-

தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-

உயர்வற -என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ஜங்கமாத்மகமான
சரீர பூதரான அவர்கள் சரீராத்ம பாவம் அறியாமல் தேஹாத்ம அபிமானிகளாய் உயர்வு அற்றார்கள்

உயர்நலம் யுடையவன் எவன் அவன் -ஆனந்தாதி கல்யாண குணங்களை யுடையனானவன்
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய் -என்கிறபடியே
சரீர சரீரியாய்க் கொண்டு யாவன் ஒருவன் இருக்கிறான் -அவன் மயர்வற மதிநலம் அருளினன்

மயர்வாகிற
தெருளும் மருளும் மாய்த்துத்
ப்ரம்மாவின் ராஜஸம் அடியாக வந்த ஷூத்ர த்ருஷ்டி ஞானமானதும் –
ருத்ரனுடைய தாமஸ ஞானமான ஆகமாதி பாஹ்ய ஞானமான அஞ்ஞானமும் மாய்த்து

ஸ்வ அனுபவ விரோதியான பிராகிருத விஷய அஞ்ஞானங்களை வாசனையோடு போக்கி
மயர்வற மதிநலம் அருளி -தன் நிர்ஹேதுக கிருபையாலே பக்தி ரூபா பன்ன ஞானத்தைத் தந்து
என் ஆத்மாவை தனக்கு சேஷதயா சரீரமாய் இருக்கிறபடியைக் காட்டி அருளினான் –
அவன் யாவனொருவன் -அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
ப்ருதக் ஸ்திதியாகிற அயர்வு அன்றிக்கே -ப்ரகார -ப்ரகாரியாய் -நியந்தாவாய் -நியாம்யனாய் –ஸ்வாமி யானவன் –

சுடர் அடி
தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
ஆஸ்ரிதரை வேறொரு காலின் கீழே குனிய விடாததாய் ஸ்ப்ருஹ ணீயமான வீரக்கழலை யுடைத்தான
திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ளும்

வீரக்கழல் –
பிராட்டி முன்னாக ஆஸ்ரிதரைத் தன் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாத வீரக்கழல்

அருளி இருத்தும் அம்மானாம்
கேவல கிருபையாலே இருத்தும் -அயர்வறும் அமரர்கள் அதிபதி யான அம்மனானவன் –

அயனாம் சிவனாம் திருமாலால்
ராஜசர் ஆஸ்ரயிக்கும் ப்ரம்மாவாய் -தாமஸர் ஆஸ்ரயிக்கும் ருத்ரனாய் –
இப்படி பிரகார பிரகாரி தயா ஸர்வ ஆத்மாக்களுக்கு நிர்வாஹகனாய்
இப்படி ஸர்வேஸ்வரனான ஸ்ரீ யபதியாலே மயர்வற மதிநலம் அருளப்பட்ட

திருமாலால் அருளப் பட்ட சடகோபன்
அருளுக்கு விஷயமான ஆழ்வார் -அருளுக்கு வாய்த்தலை -காரணம் –பிராட்டி என்கை –

ஓராயிரத்துள் இப்பத்தால் அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–
ஸர்வ நிர்வாஹகனானவன் -துயர் அறு சுடர் அடியாய் -ஸ்ப்ருஹணீயமாய் -வடிவு அழகேயாய் –
குணங்களேயாய் -பூர்ணனான ஸர்வேஸ்வரன் தானே தன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளும்

இத்திருவாய் மொழி அப்யசித்தார்க்குத் தாம் தொழுது எழு என் மனனே என்றது –
தம் பிரபந்தம் அப்யஸித்தார்க்குத் தாம் தொழுததே அமையும்
இது கற்றாருக்கும் அதுவே பேறு என்கிறார் –

—————-

கருமாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-

கரு மாணிக்க மலையிலே
இவ்வாத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்வத்தை அனுசந்திக்கிறார்

—————–

திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் கண்ண பிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே–8-9-6-

உயர்வற என்கிற பாட்டை -இப்பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
அநந்யார்ஹை யான நாயகியுடைய பருவம் அறிந்து மாதா பிதாக்கள் இவள் நினைவு அறியாமல்
ராஜ லோகத்தார் ஸ்வயம் வரத்துக்கு வருவது என்று மண முரசு அறைவிக்க
அத்தைக் கேட்ட தோழியானவள் இவள் திருப்புலியூர் நாயனாருக்கே அநந்யார்ஹை யானாள் –
இனி நீங்கள் இது செய்கிறது தர்ம ஹானி என்று மணம் விலக்குகிறது -ஆய்த்து –

ஆனால் இவளுடைய ஆபி ஜாத்யாதிகள் அவனுக்கு உண்டாக வேண்டாவோ என்ன

நீங்கள் சொன்னவை எல்லாம் உண்டு -என்று அவயவ சோபை -ஆபரண சோபை -ஸுர்யாதிகள்
ப்ரணயித்வம்-ஐஸ்வர்யாதிகளால் குறைவின்றிக்கே இருக்கிற படி

ஐஸ்வர்யம் போருமோ -உதாரராக வேண்டாவோ -என்ன

அவனுடைய ஒவ்தார்ய குணத்திலே அகப்பட்டு ஸம்ஸ்லேஷித்தமைக்கு அடையாளம்
வியக்தமாக உண்டு என்கிறாள்

உயர்வற என்கிற பாட்டில் மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
அந்நிய சேஷத்வத்தாலே மிஞ்சின உயர்வு அற்றார்கள்

அவர்களில் இவரும் ஒருவராய் இருக்க -இவர் பகவத் அநந்யார்ஹ சேஷபூதராய் –
உயர்நலமுடையவன் -எவன் -அவனுக்கே அற்றுத் தீர்ந்து

திருவருள் மூழ்கி வைகலும்
வைகலும் திருவருள் மூழ்கி -அநேகம் காலம் அவன் பிரஸாதத்திலே அவகாஹித்து நான் கண்ட இத்தை அறியும் அத்தனை இறே

எதிர் சூழல் புக்கு இவளுக்கு மயர்வற மதிநலம் அருளி இப்படிப் பரிமாறித் திரிகிறது எத்தனை காலம் உண்டு என்று அறிந்தோமோ

செழு நீர் கண்ண பிரான்
ஞான ஆனந்தாதி முதலான ஸுந்தர்ய ஸுலப்யங்களைக் காட்டிக் காணும் இவளை இப்படி அகப்படுத்திற்று

இப்படி அகப்படுத்தினவன் எவன் அவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவன் –
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள
அவனுடைய மயர்வற மதிநலம் அருளினவற்றால் -பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே பரமபக்தி முதலானவை பூர்ண கடாக்ஷத்தாலே இவ்வாச்சர்யம் ஒன்றிலும் வந்து சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த யுள
அவன் விஷயீ காரம் பெற்றமைக்கு அடையாளம் திருந்த வியக்தமாக உள

நீ இது என் கொண்டு அறிந்தாய் என்ன -அயர்வறும் அமரர்கள் அதிபதி தன்னைப்பிரியில் மூச்சு அடங்கும்படி யானவர்களுக்கு அப்ராப்ய அம்ருதமாய்க் கொண்டு அனுபவிப்பிக்குமவன் திருவருளால்

குணாகுண நிரூபணம் பண்ணாதே விஷயீ கரிக்கை யாகிற ஸ்வ பாவத்தை யுபகரிக்கைக்கத் -திருவருள் அருளுகைக்காக
அவன் சென்று சேர் தண் திருப் புலியூர்
கலங்கா பெரு நகரம் கலவி இருக்கை யாய் இருக்க யன்றோ -அவன் இங்கு வந்து சந்நிஹிதனாய்த்து –

இவளும் அந்நீர்மைக்குத் தோற்று அநன்யார்ஹையாய் – அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்று தன்
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் தோற்ற த்ரிவித காரணங்களாலும் தனக்கு அந்நிய சேஷத்வமாகிற ஹேயத்தைப் போக்கின பின்பு துயர் அற்று தானும் அநந்யார்ஹ சேஷியாய் விளங்கினவன் சேர்ந்தமைக்கு அடையாளம் இவள் வாய் சிவந்து கனிந்த படி பாரி கோளே –

திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே–
திருவருள் கமுகு என்று சில உண்டு -அது நீராலே வளருகை அன்றியே
பெரிய பிராட்டியாரும் ஸர்வேஸ்வரனுமாகக் கடாக்ஷிக்க அத்தாலே வளருவன சில

அதனுடைய அழகிய பழம் போலே இரா நின்றது -மிருதுபாவையான இவளுடைய அதரம்
இவ்வாயிலே அறியலாய் அன்றோ இருக்கிறது என்றார் ஆயிற்று –

——-——————————————

நெடுமாற்கு அடிமை செய்வன் போல் அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ வியன் மூ வுலகு பெறினுமே-8-10-1-

நெடுமாற்கு அடிமையிலே
ஸர்வேஸ்வரனுடைய வடிவு அழகிலும் குணங்களிலும் ஈடுபட்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
திருவடிகளிலே சேஷத்வமே நிரதிசய புருஷார்த்தம் என்று அருளிச் செய்தார்
ப்ரணவத்திலே மத்யம பதத்தாலும் நமஸ்ஸாலும் சொன்ன அர்த்தத்தைச் சொன்னது கீழ்
அநந்யார்ஹ சேஷத்வத்துக்கு எல்லை ததீய சேஷத்வ பர்யந்தமாகை இறே
எம் தம்மை விற்கவும் பெறுவார்கள் -என்று இறே இருப்பது –

——–———–

தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல்படையன்
குமரன் கோல வைங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9-

உயர்வற என்கிற பாட்டை -இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக தேவதாந்த்ர பரருக்குச்
சேஷமாய் உயர்வு அற்றார்கள்
அதில் இவரும் ஒருவராய் இருக்கத் தமக்குப் பிறப்பித்தது –
உயர்நலம் உடையவன் எவன் அவன் -ஞான ஆனந்த ஏக ஸ்வ ஸ்வரூபனான ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே
ஆஸ்ரயித்த ஸ்ரீ வைஷ்ணவர்களுடன் ஸஹ வாஸம் தான் வேணுமோ
அவர்களுடைய சேஷத்வத்திலே முடிந்த நிலமாக அமையும் என்கிறாள்

உயர் நலம் யுடையனாவது –
தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிரை இறே நலமுடையன் என்றது –
சதிர் மூர்த்தி
ஸுர்ய வீர்ய பராக்கிரமமான விக்ரஹத்தையே சதிர் மூர்த்தி என்கிறது
விரோதி நிரசனத்தால் வந்த ஸ்வாமித்வம் சொன்னபடி –

தமர்கள் கூட்ட வல்வினையை
தமர்களுடைய கூட்டமான வலிய வினையை -திரண்ட வலிய பாபங்களை
நசிப்பிக்கும் -நாசம் செய்யும் -என்னவுமாம்
தமர்களுடைய கூட்டமான வினை நசிக்கும் என்னவுமாம்

அன்றிக்கே
தமர்கள் வினையைக் கூட்டக் கூட்ட அவற்றை நசிப்பிக்கும் என்னவுமாம்
இவனுக்கு கூட்டுகையே ஸ்வ பாவம் ஆனால் போலே அவனுக்கும் கழிக்கையே யாத்ரையாய் இருக்கிற படி

சதிர் மூர்த்தி
விரோதி போக்குகைக்கு ஏகாந்தமான பல வடிவுகளையும் கொள்ளா நிற்கும்
இவர்கள் கைங்கர்யத்துக்குப் பல வடிவு கொள்ளுமா போலே யாயிற்று
அவனும் ரக்ஷணார்த்தமாக பல வடிவு கொள்ளும் படி –

இப்படி யுமைக்கு அறிகைக்கு ஹேது என் என்ன -மயர்வற மதிநலம் அருளினன்
அவன் தந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே விசதமாக வந்து கண்டு கொண்டேன்
அவனது ஆஸ்ரித பக்ஷ பாதத்தை

அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல்படையன்
குமரன்
விரோதி நிரசனத்துக்கு உறுப்பாக யுத்த உன்முகமான திருவாழி தொடக்கமான
திவ்ய ஆயுதத்தை யுடையவன்

இப்படி சங்கு சக்ர கதா தரனானவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி யாய் –
அஸ்தானே பய சங்கிகளாய் அத்ருப்த அம்ருத போகரானவர்களை
சந்த அனு விருத்தி கொள்ளுகிற குமரன் -யுவாவாய் இருக்கும்

கோல வைங்கணை வேள் தாதை
பஞ்ச பாணனான காமனுக்கு உத்பாதகன் ஆனவன்
அழகுக்கு அவனுக்கு மேல் இல்லாதவன் என்று இருக்கும் காமனுக்கும் அழகுக்கு
உத்பத்தி ஸ்தானமாய் இருக்கை

கோதில் அடியார் தம் தமர்கள் தமர்கள் தமர்களாம்
அப்பருவத்துக்கும் அழகுக்கும் தோற்றுத் -துயர் அறு சுடர் அடி தொழுது –
அதுக்குத் தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய அடிமையில் முடிந்த நிலமாக வேணும் என்கிறார் –

சதிரே வாய்க்க
இந்த நிரதிசய புருஷார்த்தம் என்றும் ஓக்க வாய்க்க வேணும்

தமியேற்கே–
என் மனனே பூத காலத்திலும் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானைத் தேடிப்பிடிக்க வேண்டுகையாலே
வர்த்தமான காலத்திலும் தமக்கு உபமானம் இன்றிக்கே இருக்கை

கீழே நங்கட்கு என்றார் –
கேசவன் தமருக்குப் பின்பு தனியர் இல்லாமையாலே

இங்கு தமியேற்கு என்கிறார் –
சம்சாரிகளில் தமக்கு உபமானவர் இல்லாமையாலும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் தமக்கு ஸ்வாமியாகையாலும் தமியேன் என்கிறார் –

——–———-——–——–————————————

எட்டாவது பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணமஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–ஏழாவது பத்து விவரணம்- –

February 11, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1-

உண்ணிலாவியில்
இப்படி சரணம் புக்க இடத்திலும் இவர் கார்யம் செய்யாமையாலே மிகவும் அவசன்னராய்
விஷயங்களும் இந்திரியங்களும் நடையாடுகிற ஸம்ஸாரத்திலே என்னை வைத்த போதே
கைவிடப் பார்த்தானாக வேணும் -என்று நிச்சயித்து
அவன் குணங்களை சொல்லி என்னைக் கை விடாது ஒழிய வேணும் என்று கூப்பிட்டார் –

———

இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா!இமையோர் தம் குலமுதலே!–7-1-8-

உயர்வற என்கிற பாட்டை -இன்னமுது எனத் தோன்றி -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -இன்னமுது எனத் தோன்றி -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
சப்தாதி விஷயங்களே போக்யமாகப் புத்தி பண்ணி
ஸ்ரோத்ராதிகளை விஷயங்களிலே மூட்ட புஜிக்கும்படி இருக்கிற இது தான்
தம் தாம் ஸூஹ்ருத்தத்தாலேயாய் உச்சாரயம் அற்றது

உயர்நலம் யுடையவனான நீ-நித்ய ஆனந்த யுக்தனாய் இருக்க –
எவன் அவன் -நைவேன் என்னை -இந்திரிய வஸ்யனான என்னை

இன்னமுது எனத் தோன்றிய
சப்தாதிகளே பரம போக்யமாம்படி ஸ்ம்ருதிக்கு விஷயமாய் அற்றது

அது தான் விபாகத்தில் பலிக்குமது முகப்பிலே யாகப் பெற்றேனாகில் கை விடலாம் கிடீர்
அக்ரே யத் அம்ருதம் இவ இறே
பரிணாமத்தில் விஷம் இறே
விபாகத்திலே பலிக்குமது முகப்பிலேயாகப் பெற்றேனாகில் கை விடலாம்

உபக்ரமத்தில் தோற்றிற்று ஆகில் மேல் விழாது ஒழியல் யாய்த்தே
பழியும் தர்ம ஹானியுமாய் மேல் நரகமானாலும் விடப் போகாது இருக்கை
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களுக்கு இங்கனே ஒரு தண்மை உண்டு

ஓர் ஐவர்
தனித்தனியே பிரபலமாய் அத்விதீயமான சப்தாதி விஷயங்கள் ஐந்தும்

யாவரையும் மயக்க
ஷூத்ரரான மனுஷ்யரோடு -அளவுடைய ப்ரஹ்மாதிகளோடு வாசியற
அறிவு கெடுக்கும்படிக்கு ஈடாக வாய்த்து அவை தான் இருப்பது

இவற்றின் அடைவு உமக்குத் தெரிந்தபடி என் என்ன -நீ மயர்வற மதி நலம் அருளுகையாலே
மயக்க நீ வைத்த
நீ அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தால் அவை விஷமாகத் தோற்றிற்று

எவன் -யாவன் ஒருவன் -அவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவன்
மயர்வற -மயங்கப் பெறா நிற்கிற
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து
அநாதியான ஸம்ஸாரத்தை எல்லாம் ஊசி வேரோடே போம் படி ஸ வாஸனமாகப் போக்கி

என்னை
ஸம்ஸார பய பீதனான என்னை
செய்த அம்சமே திருப்தனாய் இருக்குமே அவன்
ஞான லாபம் பண்ணிக் கொடுத்தோமே என்று இறே அவன் இருக்கிறது –
அது போதாது இறே
ஸம்ஸாரத்தை ஸ வாசனமாகப் போக்க வேண்டி இருக்கும் இறே இவருக்கு

நீ அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் -உன் சின்னமும் திரு மூர்த்தியும் –
அயர்வறும் அமரர்கள் பிரகிருதி பரவசர் அல்லாதவர்கள்
பரமபதனைப் பரிசர்யை பண்ணி
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரைத் தடம் கண் என்றும் சொல்லுகிற படியே
திவ்ய ஆயுதங்களையும் திவ்ய அவயவங்களையும் அவற்றுக்கு ஸத்ருசமான திருமேனியையும்

சிந்தித்து ஏத்திக் கை தொழவே அருள் எனக்கு
இவற்றை நெஞ்சாலே நினைத்தும் உள் அடங்காமல் வாய் விட்டு ஸ்தோத்ரம் பண்ணி
பின்னை திருவடிகளிலே விழும்படிக்கு ஈடாக அருள வேணும் –
வாயாலே ஓன்று சொல்லா நிற்க -நெஞ்சு வேறே ஒன்றை நினைத்தால் உனக்கு சேஷம் என்று
வேறே ஓர் இடத்திலே தொழில் செய்தல் அன்றிக்கே
மநோ வாக் காயங்கள் மூன்றும் உன் துயர் அறு சுடர் அடி தொழுது எழும் படி
ஹேய பிரதிபடமாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளிலே ப்ரவணமாம் படி பண்ணி யருள வேணும்

என்னம்மா
எனக்குத் தாய் போலே பரிவனனானவனே

என் கண்ணா
அந்தப் பரிவை அர்த்த க்ரியா கார்யம் ஆக்கினவனே

இமையோர் தம் குல முதலே
ஒரு நாடாக உன்னைக் கொடுத்து அனுபவிக்கும் படி இருக்கிறவன் அல்லையோ –
அநேகர் ஆசைப்பாடு ஒருவனுக்கு உண்டானால் கொடுக்கலாகாதோ

என் மனனே -என் அம்மா -என் கண்ணா -இமையோர் தம் குல முதலே
த்ரிவித கரணமும் உன் வச வர்த்தி அன்றோ
இத்தை அவன் மேல் வைத்திரு

என் அம்மா இத்யாதி
இம்மூன்றையும் உன் மேலே வைத்து அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

——–—————

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

கங்குலும் பகலிலே
இவர் தசையை அனுசந்தித்த ஈஸ்வரன் -தான் நினைத்த கார்யம் தலைக்கட்டும் அளவும்
இவரைத் தரிப்பிக்கும் வழி ஏதோ என்று சிந்தியா நிற்க
அது பற்றாமை மோஹங்கதையாக -இவள் தசையைக் கண்ட திருத்தாயார் -இவளைப்
பெரிய பெருமாள் திருவடிகளிலே பொகட்டு -இவள் இடையாட்டம் பற்றி நீர் செய்ய நினைத்து இருக்கிறது என்
என்று கேழ்க்கிற பாசுரத்தாலே ஸ்வ தசையை அருளிச் செய்கிறார் –

உயர்வற என்கிற பாட்டைக் -கங்குலும் பகலும் -என்கிற பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
ஸ்ரீ பர ப்ரஹ்ம ஆனந்தம் தொடங்கி மனுஷ்ய ஆனந்தங்களும் அஸ்திரமாய் அல்பமாய் அற்றது
அங்கன் அன்றிக்கே ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரன் ஆழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருளுகையாலே
பரபக்தி பர்யந்தமாகப் பிறந்தது

தர்சனம் பரபக்தி ஸ்யாத் பர ஞானந்து சங்கமம் -புனர் விஸ்லேஷ பீருத்வம் பரமா பக்தி ருச்யதே -என்கிறபடியே
பரபக்தியாலே தர்சனம் உண்டாய் -பர ஞானத்தாலே சங்கத்தை ஆசைப்பட்டு பாஹ்ய ஸம்ஸ்லேஷ அபேக்ஷை பிறந்து
அணைக்காகக் கையை நீட்ட ஞான சாஷாத்காரம் ஆகையாலே கைக்கு எட்டாமல் மோஹங்கதராக
பரிவரான பாகவதர்கள் பெரிய பெருமாள் ஸந்நிதியில் கொணர்ந்து விட்டு
இவர் தசையை அறிவிக்கிற பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

உயர்வற -கங்குலும் பகலும் -என்றபடி
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக –
திவா ராத்ர விபாகமாய் இருக்கையாலே -கங்குலும் பகலும் -என்கிறது –
அற என்றது -திவா ராத்ர விபாகம் அற கண் துயில் அறியாள் -என்கிறபடி

இத்தால் -லீலா விபூதியில் உள்ளார் ஊணும் உறக்கமுமாகக் களிக்க இவளுக்கு இது இல்லை என்றபடி –
உயர்வற என்று லீலா விபூதியைச் சொல்லிற்று
உயர் நலமுடையவன் என்று நித்ய விபூதி யோகம் சொல்லுகிறது
கங்குலும் பகலும் என்கிறது –
கங்குல் லீலா விபூதி -பகல் -நித்ய விபூதி

கண் துயில் அறியாள் -என்கையாலே
இவருக்கு உபய விபூதியும் ஒரு பகலாய் இருக்கிற படி –
காண்பதற்கு முன்பு உறக்கம் இல்லை
கண்டால் ஸதா பஸ்யந்தி யாகையாலே உறக்கம் இல்லை என்றபடி

எவன் அவன் என்று திவ்ய ஆத்ம ஸ்வரூபம் எப்போதும் பிரகாசிக்கிற படி
அதுக்கு மேலே மதிநலம் அருளுகையாலே பாஹ்ய ஸம்ஸ்லேஷம் கிடையாமல்
ஹர்ஷ சோகங்கள் இரண்டாலும் கண்கள் நீர் பெருகத் தொடங்கிற்று
இந்த மதி நலம் அருளினவனைக் காண ஆசைப்பட்டு -இந்த ஆர்த்தியே செப்பேடாக வரும் என்று பார்த்து
கண்ண நீர் மறையாமைக்காக கைகளால் இறையா நிற்கும்
ஊற்று மாறாமையாலே இறைக்கையே யாத்ரையாய் ஆய்த்து –

எவன் இந்த அதிகாரி -அவன் பிரதம பரிஸ் பந்தமே தொடங்கிக் காண வேணும் என்று ஆசைப்பட்டு –
கண்ண நீர் கைகளால் இறைத்து சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்
சங்கு சக்கரங்கள் யுடையவன் எவன் அவன் என் ஆர்த்தி தீர்க்க வந்ததோ என்று
உபகார ஸ்ம்ருதியாலே கை கூப்பும்

மயர்வற்ற மதி நலத்தால் வந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே வந்த வெளிச் சிறப்பாலே கை கூப்பும்
மனஸ்ஸுக்குத் திருவாழி யாழ்வான் அதிஷ்டான தேவதை யாகையாலே
ஆழ்வான் ப்ரகாஸமும் ஞானப் ப்ரகாசமுமாய் அதி ப்ரகாசமாய்த்து
பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா என்று அஞ்சலி பண்ணிப் பார்த்துக் கொண்டு இரா நின்றாள் –

எவன் மயர்வு அற்றவன் -அவன் அருளின அந்த
தாமரைக் கண் என்றே தளரும்
ஆழ்வார்கள் அளவும் அலை எறிகிற கண்
ஆழ்வார்களை விடிலும் உம்மை விடேன் என்று நோக்கினான் –

தாமரைக் கண்களால் நோக்காய் -என்றபடியே அருளினன்

கண் என்றே தளரும்
அங்கனே வந்து தோன்றக் காணாமையாலே தளருமாய்த்து

அயர்வறும் அமரர்கள் அதிபதியான
உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -என்னும்
அயர்வு -தரியாமை –
விஸ்லேஷியாமல் அனுபவிக்கிற நித்யரோபாதியும் போராதோ இவள் தரியாமை
எவன் -உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -என்றவன் அவன் அதிபதியாய்
உபய விபூதி நிர்வாஹகனாய் இருக்க நான் இழந்து இருப்பதே என்கிறாள்

சுடர் அடி தொழுது எழ நினைத்து இது லபிக்குமோ லபியாதோ என்று அங்கலாய்ப்பாலே
இரு நிலம் கை துழாவி இருக்கும்
விபூதி த்வயமும் இவர் கைக்கு உள்ளே அடங்கி ஆராயும்படி ஆய்த்து

தரியாமையாலே தரை துழாவா நின்றாள் –
ஒரு பீங்கான் உள்பட்ட சந்தனம் பட்டது பூமியும் படா நின்றது –
துயர் அற்றும் இரு நிலம் கை தொழா நிற்கும்

செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே
துயர் அறு -ஆர்த்தியாகிற துயர் தீர்க்க வன்றோ திருவரங்கத்தே வந்து சாய்ந்து அருளிற்று
திருவரங்கத்தாய் யுன் சுடர் அடி -அத்யந்தம் ஸூ லபனான உன்னுடைய
ஹேய ப்ரத்ய நீகமான திருவடிகளைத் தொழுது எழு என் மனனே
எனக்கு பவ்யமான நெஞ்சே தொழுது எழு என்னா நின்றாள்

ஏக தேச வாசிகளாய் ஸாரூப்யம் பெற்று அவன் நீர்மையே தாரகமாய்
ஜலான் மத்ஸ்யா விவோத்ருதவ்-என்று இருக்கிறவர்களைப் போல் அன்றோ இவளும்
செங்கயல் -முஹூர்த்தம் அபி ஜீவாவா -என்னும் அளவல்லவே
ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்று இருக்கிற இவள் திறத்து என் செய்கின்றாயே

ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்து கோயிலிலே ஸாலா ப்ரவேஸம் (யாக சாலையில் போவது) பண்ணி
உன் சீலாதி குண விசிஷ்டரான சிரௌதிகளோடே சரணாகத ரக்ஷணம் பண்ண இருக்கிற உமக்கு
ஆர்த்தருமாய் சரணாகதருமான இவள் திறத்து என் செய்கின்றாய்

பரத்வமும் வ்யூஹமும் தேச விப்ரக்ருஷ்டம்
அவதாரங்கள் கால விப்ரக்ருஷ்டம்
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தையிலும் பண்ணி அனுபவிக்கலாவது
கோயிலிலே அணித்தாய் வந்து இருக்கிற உன்னை விட்டு எங்கனே தரிப்பது

ஊணாலும் உறக்கத்தாலும் -சூது சதுரங்கத்தாலும் பொழுது போக்குமவளோ இவள்
உன்னடிமையாலேயே தரிக்கப் பார்க்கும் இவள் திறத்து என் செய்கின்றாய்
தொழுது எழும்படி பார்க்கிறாயா
கைவிடப் பார்க்கிறாயா என்கிறாள்

ஆர்த்தையான இவள் திறத்து என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறாள்
நித்ய விபூதியை விட்டு ரக்ஷணத்திலே த்வரிதனாய் வந்து இருக்கிற உன் ஸ்வரூபம் எது -விளம்பம் எது –
விளம்பம் பொறாதாரொடு விளையாட்டு உண்டோ

என் செய்கின்றாயே
தொழுகை ஸ்வரூபம் என்று இருக்கிறாயோ
குற்றம் என்று கை விடுகிறாயோ -என்கிறாள் –

———————–

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

வெள்ளைச் சுரி சங்கில்
இப்படி மோஹித்துக் கிடந்தவர் திரு நாம ப்ரசங்கத்தாலே மோஹம் தெளிந்து
தென் திருப்பேரையிலே எழுந்து அருளி இருக்கிற
மகர நெடும் குழைக்காதர் பக்கலிலே அபஹ்ருத சித்தரானபடியை அருளிச் செய்கிறார்

உயர்வற -என்கிற பாட்டை -வெள்ளைச் சுரி சங்கு -பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் தம் தாம் ப்ராப்ய பிராப்பகங்களுக்குத்
தகுதியான ப்ரமாணங்களைத் தம் தாம் நெஞ்சங்களிலே கொண்டு நடத்தா நிற்பார்கள்
அது தான் அல்ப அஸ்த்ரங்களாய் இருக்கையாலே உயர்வு அற்று இருக்கும்

உயர்நலம் உடையவன் எவன் அவன் வேத ப்ரதிபாத்யனாகையாலே அந்த வேதமானது
ஆனந்தாதி குணங்களை அளவிடுவோம் என்று பேசப்புக்கு
அப்ராப்ய மனஸா ஸஹ -என்று அளவிட மாட்டாமல் மீண்டது இறே

அப்படிப்பட்ட பரமமான ப்ரஹ்மம் எனக்கு மயர்வற மதிநலம் அருளிக் காட்டக் கண்டேன்
கண்டபடி என் என்னில்
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!
நான் பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே கண்டால் போலே யார் காண வல்லார் என்ன
நீர் தான் கண்டபடி சொல்லீர் என்ன

வெள்ளைச் சுரிசங்கு
ஸூ த்த ஸத்வ மயமாய் -ப்ரணவ ஆகாரமாய் -திருமந்திர பூரிதமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
மந்த்ரார்த்தை நடத்துகிற அருளார் திருச்சக்கரமும்
திருக்கையிலே பூ ஏந்தினால் போலே ஏந்திக் கொண்டு

தாமரைக்கண்ணன்
ஜிதந்தே புண்டரிகாஷன் -என்னும் அயர்வறும் அமரர்கள் அதிபதியானவன் –
அவர்களைக் கண் அழகாலே தோற்ப்பிக்குமா போலே என்னைத் தோற்ப்பித்து

என் நெஞ்சினூடே புள்ளைக் காடாகின்ற -அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே த்ரிபாத் விபூதியில் அடங்காமல்
வானவர் நாடு என்னுமா போலே நெஞ்சை நாடு என்னும்படி
மஹா நகரமாக்கி

புள்ளைக் காடாகின்ற
வேதமயமான பெரிய திருவடியை மேல் கொண்டு வேதாந்த வேத்யனானவன் தன்னையே என் நெஞ்சு
பிராமண புரஸ்சரமாக பின்செல்லும் படி கடாக்ஷித்து
புள்ளைக்காடாகின்ற வாற்றை -நெஞ்ச மா நகரிலே உலாவி அருளா நின்றான் –

ஆற்றைக் காணீர்
கண்கள் காதுகள் முதலான கரணங்கள் உஜ்ஜீவிக்கும்படி காண மாட்டீகோளோ என்ன

நீ கண்டபடி சொல்லிக் காண் -நீ தானே அனுபவியாதே என்ன –

என் சொல்லிச் சொல்லுகேன்
ஹம்ஸ சக்ரவாகங்கள் போலே ஆழ்வார்களும்
காடு படர அலர்ந்த தாமரை போலே இருக்கிற திவ்ய அவயவங்களும்
தடாகத்தில் நீரும் இலையும் போலே இருக்கிற திருமேனியும்
அத்தை மனத்துக்கு இனிய இருக்கிறதொரு மஹா மேரு தரித்தால் போலே இருக்கிற
பெரிய திருவடி யோடே கூட நித்ய முக்தர்கள் மங்களா ஸாஸனம் பண்ண இவர் திரு உள்ளத்திலே உலாவுகிற படி
இப்படி இறே அனுகூலரோடே பரிமாறும் படி

அன்னைமீர்காள்!
செந்தாமரைக் கண்ணன் துயர் அறு சுடர் அடி தொழுது எழுமினோ
அஞ்ஞான அந்தகாரம் நீங்க வேதாந்த வேத்யனைச் சுடர் அடி தொழுங்கோள் என்ன

எங்கே போய்த் தொழுவது என்ன

வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும் பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானும் என் மனனும்
நீங்களும் என்னை நிஷேதியாதே கூடச் செல்லுங்கோள்

வெள்ளைச் சுகம்
பிரிவிலும் அரையாறு படாதபடி அவன் கலவியில் தேற்றிக் கொண்ட ஸூக அதிசயம் இருக்கும் படி

அவன் வீற்று இருந்த
நான் இட்ட கால் இட்ட கையாய் இருக்கிறது
அவ்விடம் வேத ஒலியும் விழா ஒலியாய் இருக்கிறது –
அவன் நெஞ்சு உகந்து தன் புணர்ப்பு சொல்லக் கேளா நின்றான்

விழா ஒலியும்
இவளைத் தோற்பித்த வெற்றி மாலை கேட்டு நெய் ஆடலா நின்றான்
நித்ய உத்சவம் நடக்கும்படி காணும் அவன் இருக்கிறது
நான் இருக்கும் இடம் இறே வெறும் வீச்சாகக் கடக்கிறது

பிள்ளைக் குழா விளையாட்டு ஒலியும் அறா
பருவம் நிரம்பாத பாலர்கள் எல்லாம் பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்கிறது
பாலா அபி க்ரீடா மாநா க்ருஹ த்வாரேஷு ஸர்வஸ –இத்யாதிப்படியேயாய் இருக்கிற
திருப்பேரையிலே சேர்வன் -நானும் நெஞ்சும்

அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழுவோம்-நீங்களும் போருங்கோள் என்கிறாள் –

——————

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1-

ஆழி எழ -வில்
ஸர்வேஸ்வரன் இவருக்கு உண்டான ஆற்றாமை தீர்க்கைக்காகத் தன்னுடைய விஜய பரம்பரையை
பத்தும் புத்தாக்க காட்டிக் கொடுக்கக் கண்டு
அவனுடைய விஜய பரம்பரையை அனுஷ்ட்டித்து ஹ்ருஷ்டராகிறார் –

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அந்நிய சேஷத்வ
ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாலே உயர்வு அற்று இருந்தார்கள்
அவற்றை மாற்றாத திரு உள்ளம் பற்றி வாமன அவதாரம் பண்ணி அவற்றை அறும் படி பண்ணினான்
எங்கனே என்னில்
உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் வாமனனாய் மாவலி பக்கலிலே சென்று மூவடி மண் இன்றே தா என்ன
உதக பூர்வகமாகக் கொடுக்க வாங்கின போது மூவடி மண் கொண்டு அளக்க த்ரிவிக்ரமனாய் கிளற
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்று நமுசி பிரப்ருதிகள் வளர ஒட்டாமல் தகைந்து கொள்ள

அப்பொழுது -ஆழி எழ
தேவா ஸ்வ ஸ்தானம் ஆயந்தி நிஹதா தைத்ய தானவா ந பயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பகவதா ஜகத்
என்கிறபடியே தனக்காக்கிக் கொண்ட செயல் இறே
ராவணாதிகளைப் போலே தலை அறதே குண லாபம் உண்டாகையாலே நின்ற நிலையில் தோற்ப்பித்துக் கொண்ட படி
நாயகனுக்கு அடியார் இறே வென்று கொடுப்பார்

நலமுடையவன் எவன் அவன் -ஆனந்தாதி குண பூர்த்தியாலே ஸ்ருதி ப்ரஸித்தன் ஆனவன்
என்னுடைய ஜகதாகாரதையைப் பாருங்கோள் என்று
மயர்வற மதிநலம் அருளித் தான் திரு உலகு அளக்கப் புக்கவாறே –

ஆழி எழச் சங்கும் எழ
ஸ்வாமியுடைய உத்யோகம் அறிந்து ஆயுதங்கள் முற்பட்ட படி
காட்டுக்கு முற்பட்ட இளைய பெருமாளைப் போலே யாய்த்து முற்பட்ட படி
த்ரும சீரைர் அலங்க்ருத -என்று முற்கோலினால் போலே யாய்த்து
தோற்றத்திலே அரசு போராயிற்று -ஹேதி ராஜன் இறே

ஆழி எழ
ஆயிரம் காதம் பறப்பதின் குட்டி ஐந்நூற்றுக் காதம் சிறகடிக் கொள்ளுமா போலே
உத்யோகத்திலே ஈஸ்வரனைப் பார்க்க விஞ்சின படி

சங்கும் வில்லும் எழ
மற்றை ஆழ்வார்களும் மற்றைக் கையிலே ஏறினார்கள்
இரை பெறாத இடத்தே இருந்து -சீறு பாறு -என்னக் கடவ வர்கள்
இரை யுள்ள இடத்திலே ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடார்கள் இறே

இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்பரிக்கா நின்று அடங்காரை ஒடுங்கு வித்த ஆழி
அரவணை மேல் தோன்றல் திசை அளப்ப பூவாரடி நிமிர்த்த போது
இவர்கள் இப்படி பொருத படி காண்கைக்கு
அவன் மயர்வற மதிநலம் அருளுகையாலே கண்டு

திசை வாழி எழ
ஜகதாகாரத்தைக் கண்டு இவ்வஸ்துவுக்கு என்ன தீங்கு வருகிறதோ என்றும்
திவ்ய ஆயுதங்களுக்கு என்ன தீங்கு வருகிறதோ என்றும்
பல்லாண்டு ஒலி எழா நிற்கும்

திசை வாழி எழ
திக்குகள் தோறும் அனுகூலருடைய வாழி வாழி என்ற மங்களா ஸாஸன த்வனி கிளர
ஏத்த ஏழு உலகும் கொண்ட கோலக் கூத்தன் இறே

தண்டும் வாளும் எழ
தூசித் தலையிலே -ஸ்ரீ கதை ஆழ்வானும் -ஸ்ரீ நந்தக ஆழ்வானும்
நாம் இருக்கத் திருவாழி ஆழ்வான் முதலானாரோ பொருவதுவும் வெற்றி கொள்வதுவும் – என்று
போர் புரப் பாய்த்துப் பொருகிற படி

நமுசி வந்து -என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னிய வண்ணமே கொண்டு அளவாய் -என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றி எறிந்தவன்

அன்று
பிறந்த அன்றே செய்த வியாபாரம் இறே

அண்டம் மோழை எழ
இந்திரனுக்காக த்ரை லோக்யம் அத்தனையும் அளக்க வேண்டிய வியாஜத்தாலே
அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி பண்ணிற்று
அவ்வளவில் நில்லாதே
அண்ட அவகாசம் உள்ள இடம் எங்கும் சென்று அளந்து -அண்ட கடாஹத்திலே திருவடிகள் சென்று
ஒண் மிதியும் புனலுருவி ஒருகால் நிற்ப -என்று
கீழில் அண்ட கடாஹத்தை யுருவிற்று ஒரு திருவடிகள்
அது பிளந்து ஆவரண ஜலம் மேலே எழ -ஆவரண ஜலத்துக்கு நடுவே
ஒரு கழக் கோடி மிதக்குமா போலே மிதக்கும் இறே அண்டம்

முடி பாதம் எழ
திரு அபிஷேகத்து அளவும் திருவடிகள் கிளர
அப்பன் ஊழி எழ
அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியானவன் ஜகதாகாரனாய் நின்ற நிலையை உபகரித்தவன்
அப்பன் -ஸ்வாமி யானவன்

ஜகதாகாரதையைக் கண்டு -இதுக்கு என் வருகிறதோ என்று அஞ்சின அச்சம் தீர்ந்து
முக்தரும் மங்களா ஸாஸனம் பண்ணித் துயர் அறு சுடர் அடி தொழுதார்கள்
துயர் அறுகை உபய விபூதிக்கும் ஈஸ்வரனுக்கு ஒக்கும் இறே

அப்பன் ஊழி எழ
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாய்ச் சென்ற காலம் போய்
பகவச் சேஷத்வ பாரதந்த்ய பரா காஷ்டையாலே நல்லடிக் காலம் ஆய்த்து

அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே
மஹா உபகாரகனான ஸர்வேஸ்வரன் உலகு அளந்த பிரகாரத்திலே பொன்னடி
அந்நிய சேஷத்வமாகிற ஹேயப் ப்ரத்ய நீகமாய் அத்யுஜ்ஜ்வலமான திருவடிகளை
என் மனனே தொழுது ஏழு -என்கிறார் –

————-

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-

கற்பார் இராமனில்
இவ் விஜயத்துக்கு அடியாக அவன் விபவ குணங்களை அனுசந்தித்து ஹ்ருஷ்டராய்
படுக்கைக்கு கீழே நிதி கிடக்கப் புறங்கால் வீங்குவாரைப் போலே
இக்குணங்களும் நடையாடா நிற்க ஸம்ஸாரிகள் இழப்பதே என்று அவர்கள் இழவுக்கு வெறுத்தார்

உயர்வற என்கிற பாட்டை விவரிக்கிறது -எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் வேத சாஸ்த்ராதிகளாலே ப்ரதிபாதிக்கிறது
உபாய உபேயங்கள் பலவாய் இருக்கும்
அது தான் ஒன்றுக்கு ஓன்று உயர்வாயும் தாழ்வாயும் இருக்கையாலே ஏற்றம் அற்று இருக்கும் –

உயர்நலம் உடையவன் எவன் அவன் என்று சக்கரவர்த்தி திருமகனை இறே சொல்கிறது
கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
உயர்நலமான ஆனந்தாதி கல்யாண குணங்களை யுடைய இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ

நீர் எத்தாலே அறிந்து சொல்லுகிறீர் என்ன
ஸ்ருதி ப்ரஸித்தன் யாவன் ஒருவன் -அவன் மயர்வற மதிநலம் அருளின
அந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
பரத்வமே பிடித்து அவதாராதிகளை ஆராய்ந்து பார்த்த இடத்து இந் நேர் காணாமையாலே
பதர் கூட்டிக் கழிக்கவும் பற்றாது –

இவ்விஷயத்தைக் கழிந்த கற்கும் கல்வி எல்லாம்
தத் ஞானம் அஞ்ஞானம் அத் அன்யத் யுக்தம் -என்றும்
வித்ய அந்நிய சில்ப நைபுணம் -என்றார்கள் இறே
பகவத் லாபத்துக்கு உடலான ஞானமே ஞானம் ஆகிறது -அல்லாதது அஞ்ஞானம் ஆய்த்து

ஆகையால் கற்பார் -ஒருவன் ஒன்றைக் கற்பது அப்போதைக்கு இனிது என்றாதல் –
பின்பு நன்மையை விளைக்கும் என்றாதல் -என்றாய்த்து கற்பது
அவை இரண்டும் இவ்விஷயத்தில் ஒழிய இல்லை என்கை

இவருக்கு அதிசயம் ஏது என்ன
புற்பா முதலாப் புல்
பா என்று படர்த்தியாய் படருகிற புல் என்னுதல்
தூர்வாதி ஸ்தாவராந்தமாக என்றபடி

எறும்பாதி ஒன்று இன்றியே
ஜங்கமங்களிலே கடையான எறும்பு தொடக்கமாக
பிரம்மாவை எண்ணினால் அநந்தரம் நிற்கக் கடவது இறே பிபீலிகை

புற்பா முதலாக -என்று
இவற்றுக்கு ஒரு ப்ரதான்யம் சொல்லுகிறார் அல்லர்
ராம விஷயீ காரத்துக்கு முற்பட்டார் இவைகள் என்கிறார்
வெள்ளமானது தாழ்ந்த இடத்தே ஓடுமாப் போலே

ஸ்தாவரங்களிலே தண்ணியது புல்லு
ஜங்கமங்களிலே தண்ணியது எறும்பு
இவை இரண்டையும் ஓக்க எடுக்கையாலே -ஞான பலம் மோக்ஷம் -என்கிறவத்தைத் தவிர்க்கிறது
சைதன்யம் உண்டாகையும் இல்லையாகையும் அப்ரயோஜம் -நலமுடைய பெருமாள் கிருபைக்கு என்கிறது
இவற்றினுடைய கர்ம தாரதம்யங்கள் அப்ரயோஜம் என்கிறது

நிருபாதிக சேஷி பக்கல் அப்ரதிஷேதமே பேற்றுக்கு வேண்டுவது
அபி வ்ருஷா பரிம் லாநா
உபதப் தோத காநாத்ய -இத்யாதிப்படியே
ராம விரஹத்தாலே கொதித்தனவே

ஓன்று இன்றியே
தன் நிர்ஹேதுக கிருபையாலே

ஓன்று இன்றியே
பேற்றுக்கு ஈடாக இருபத்தொரு சாதனம் இன்றிக்கே இருக்கச் செய்தே -என்றபடி
தன் சிறுமையும் பேற்றின் பெருமையும் பார்த்தால் தன் பக்கல் ஒரு சாதனம் இன்றிக்கே இருக்கும் இறே
இனி அங்கீகார ஹேது அயோத்யா வாஸமே இறே

அயர்வறும் அமரர்கள் -அயராதே ஸர்வவித கைங்கர்யங்களும் பண்ண வீற்று இருந்து ஆளும் அவன்
அயோத்யா வாஸம் பண்ணுகையாலே
நற்பால் அயோத்தியில்-நல்ல இடத்தை யுடைத்தான திரு அயோத்தியிலே
இத்தால் நல மிகுதியே ராம பக்தியை விளைவிக்கை
தேசோயம் ஸர்வ காம துக் -என்னக் கடவது இறே

அயோத்தியில் வாழும்
வர்த்திக்கும் என்னாதே வாழும் என்றது -அத்தேச வாஸமே வாழ்வு -என்கைக்காகவே

வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்
நல்லோர்கள் வாழும் நளிர் அரங்கம்
ப்ராப்ய தேசத்திலே வர்த்தகம் தானே ப்ராப்யம் -ப்ராபகன் அவன் ஆகையால்
நமக்கு கர்ம சம்பந்தத்தால் குறைந்து தோற்றுகிறது -தர்மி ஐக்யத்தாலே எங்கும் ஒத்து இருக்கும் இறே

ஆகையால் சுடர் அடி தொழுது எழும்படி
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–
நல்ல ஸ்வ பாவத்தை யுடைத்தாம் படி செலுத்தினான்
அதாவது
இவற்றினுடைய கர்ம தாரதம் யத்தாலே வரில் இறே அவ்வோர் அவ்வோர் அளவுகளுக்கு ஈடாக இருப்பது
அவனாலே வந்தது ஆகையால் எல்லாருக்கும் ஓக்க நன்மை விளைந்தது

மயாத்வம் சமனுஞ்ஞாதோ கச்ச லோகான் அநுத்தமான் என்று இங்கு உண்டான பற்று அற்று
ஒரு தேச விசேஷத்திலே சென்று அனுபவிக்கும் அனுபவத்தைக்
கொடுக்க வல்லவன் இங்கு தன்னை ஒழிய செல்லாமை விளைக்கை பணி யுடைத்து அன்று இறே

நற்பாலுக்கு உய்த்தனன்
நலமுடையவன் -நலம் அருளின நற்பாலுக்கு உய்த்தனன் –
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூப ஸ்வராட் பவதி என்கிற இடத்தில் உற்றபடி –

ராஜா ஒருவனுக்கு ஒரு நாடு கொடுத்தால் அவனுடையவர் ஸ்வ தீனமாய் அவன் ஆணையும் ஆஜ்ஜையுமாக
அவனுடைய ஸ்வா தந்தர்யத்தையே நடக்கும்படி பண்ணிக் கொடுக்குமா போலே
சம்சாரி சேதனனுக்குத் தலையான சதுர்முகனுக்கு கையடைப்பான நாட்டுக்குள்ளே அவன் ஸ்வா தந்தர்யத்தையும் தவிர்த்து
இவற்றினுடைய கர்ம பாரதந்தர்யத்தையும் தன் குணத்தால் பதம் செய்து
தன்னைப் பெற்ற போது ஜீவிக்கும்படியாய் பெறாத போது உறாவும்படியான தன்மையை உண்டாக்கினான்

ஆனபின்பு அவன் சுடர் அடி தொழுது எழு என் மனனே
வெறும் சிலவற்றைக் கற்பரோ

—————-

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10-சேர்த்து-சேர்த்தி -பாட பேதம் –

உயர்வற -பாட்டை -இதுவும் விவரிக்கிறது -எங்கனே என்னில்
வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்த்தஞ் ஜகத்பதி ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்மா
பக்தைர் பாகவத ஸஹ -என்கிறபடியே
ஸ்ரீ யபதியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் -ஸ்ரீ வைகுண்ட நிகேதனான ஸர்வேஸ்வரன்
திரு உள்ளத்தில் நினைந்த படி

ஜகத் ஸ்ருஷ்டி ஸம்ஹாராதிகளுக்கு ப்ரஹ்மாதிகளை அமைத்தோம்
வேத ஸாஸ்த்ர ப்ரவர்த்தனங்களுக்கு மன்வாதிகளையும் வியாச பராசர பாராசார்ய
போதா யநாதிகளையும் அமைத்தோம்

மோக்ஷ சாஸ்த்ரங்களுக்கும் வேதாந்தங்களுக்கும் தாத்பர்யங்களை அறிந்து அதில் சாரமான
மந்த்ர த்ரயத்தாலே சரணாகதி வழியை நடத்துகைக்காக
ஆழ்வார்களை அவதரிப்பித்து -அவர்களுக்கு மயர்வற மதிநலம் அருளி
அவர்கள் முகேந ஜகத்தைத் திருத்திக் கைக்கொண்ட படி சொல்கிறது

இதில் ஆழ்வார்களைக் கரண பூதராக யுடைய நம்மாழ்வார் திருவாய் மொழி முகத்தால்
சரணாகதியை அருளிச் செய்தார்
திருமாலால் அருளப்பட்ட சடகோபன் மயர்வற்று ஜகத்தைத் திருத்தப் பார்த்த இடத்து தம்மை முந்துறப் பார்த்தார்
தம்மைப் பார்க்கவே தம் திரு உள்ளம் -ஒண் டொடியாள் கேள்வன் ஒருவனையே நோக்கும்
உணர்வு உண்டாய்த் தமக்கு முந்துற்ற நெஞ்சாய் இருந்தது –

அத்தைக்குறித்து மேல் மேல் என உபதேசித்து ஈஸ்வரன் தமக்கு மயர்வற மதிநலம் அருளினால் போலே
தம் திரு உள்ளத்துக்குத் தாமே கரணி யாகையாலே கரணமான நெஞ்சைக் கொண்டாடுகிறார் –

எங்கனே என்னில் -உயர்வற -வார்த்தை அறிபவர் –
பஞ்சம வேதமான மஹா பாரதத்தில் உபநிஷத் பாகமான ஸ்ரீ கீதையில் 18 அத்தியாயத்திலும்
தத்வ விவேக முதலான ஸர்வ தர்மங்களும் -பாரதத்திலும் வ்யாஸாதிகள் சொன்ன ஸகல தர்மங்களும்
ஸ்ரீ கீதாச்சார்யன் அருளிச் செய்த சரம ஸ்லோகத்தில் -மாம் -என்று தன்னைத் தொட்டுக் காட்டின
மாம் ஏகம் என்கிற ஸ நாதன தர்மமானதும்
எல்லாவற்றையும் கூட வார்த்தை என்கிறது

ப்ரயோஜனவத்தானது இறே -மாம் ஏகம் -என்று பலவத்தானது இது இறே –
இத்தை இறே உயர்வற உயர்நலம் -என்கிற பாட்டு விவரிக்கிறது

உயர்வு -ஸர்வ தர்மான் -வார்த்தை அறிபவர் -என்றது
சாதனாந்தரங்களையும் வார்த்தை என்றது –
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ப்ரபாகாந்தரங்களிலே ஒருவருக்கு ஒருவர்
உயர்வும் தாழ்வும் ஆகையால் உயர்த்தி அற்று இருப்பார் ஆகையால் உயர்வற என்கிறது

ஸர்வ தர்மான் என்று மோக்ஷ பல சாதனங்கள் எல்லாம் கூடாது தர்மம் என்றபடி
வார்த்தை என்றது தர்ம சப்தங்களை
பரித்யஜ்ய -உயர்வற வார்த்தை அறிபவர் -தர்மவத்தான வார்த்தை அறிபவர் –
த்யாஜ்ய உபா தேயமான வார்த்தை அறிபவர் என்கிறது

பாரத கீதைகளில் தர்ம சப்தமான வார்த்தைகள் பந்த மோக்ஷங்களுக்குப் பொதுவாய் இருக்கையாலே த்யாஜ்யம்
மாம் ஏகம் என்றது மோக்ஷத்துக்கே ஹேதுவாகையாலே உபா தேயம் என்கிறது
வார்த்தை அறிபவர் -இப்படி அறிபவர்

மாம் என்றது உயர்நலம் உடையவன் என்றபடி
மாயவன் என்றதும் மாம் ஏகம் என்றபடி மாயா வயுநம் ஞானம்
மாம் என்று சர்வஞ்ஞத்வ சர்வசக்தித்வ ஸுலப்யங்கள்
உயர்நலம் உடையவன் என்றது ஆனந்தாதி குணங்கள்
ஆக இவைகளால் ஸர்வ குண ஸம் பூர்ணன் என்றபடி

ஏகம் சரண் -யவன் அவன் –மாயவற்கு ஆள் -ஏகம் சரண் என்று
ஸஹ காரி நிரபேஷமான ஸ நாதந தர்மத்தைக் காட்டுகிறது –
எவன் அவன் -ஸ நாதன தர்மமான ஷாட் குண்ய விக்ரஹம் –
ஸ்வரூப ப்ரகாசகமான திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டுகிறது
இப்படிப்பட்ட ஸுலப்யாதி குண விசிஷ்டனை மாயவன் என்கிறது

வ்ரஜ -மயர்வற -ஆளன்றி –
வ்ரஜ -ஸ்வீகரி -மயர்வற -ஸ்வீ கார வஸ்துவை விஸ்மரியாதே -ஆளன்றி -கூழுக்கு ஆள்படாதே
தேவதாந்தரம் சாதனாந்தரம் ப்ரயோஜனாந்தரங்கள் -ஆகிய கூழுகளுக்கு ஆள் படாதே

அஹம் த்வா -மயர்வற மதிநலம் அருளினன் -மாயவற்கு ஆளன்றி ஆவரோ –
அஹந்த்வா -ஸர்வஞ்ஞனாய் –ஸர்வ சக்தனான -நான்
அஞ்ஞனாய் அசக்தனான யுன்னை -மயர்வற மதி நலம் அருளி -சாதனாந்தர புத்தியைத் தவிர்த்து –
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே ஸநாதன தர்மத்தை அடைவித்து
மாயவற்கு ஆளன்றி ஆவரோ -என்கிறபடியே நித்ய கிங்கர ஸ்வ பாவனாக்கினான்

நானே -ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்று அருளினவன் -எவன் அவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்குமவன் –

போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கின படி
ஸர்வ பாபேப்யோ -என்றது
மோக்ஷயிஷ்யாமி -அயராமல் அடிமை செய்கிற நித்ய முக்தரிலும் அதிசயிதமான
போக்ய வஸ்துவாக உம்மைக் கொண்ட படி
உமக்கு ஜரா மரணாதிகள் ஆகிற பாபங்கள் ஸவாசனமாகப் போச்சுது
ஆத்மாபிராப்தியாகிற மஹா துக்கம் போச்சுது
மாஸூச -பயப்படாதே
ஸர்வ நியாந்தாவான நான் யுன்னை அனுக்ரஹித்தால் பாபங்கள் நிற்க வற்றோ

யிஷ்யாமி -ணிச்சாலே
நீயும் வேண்டா நானும் வேண்டா -உன்னுடைய ராஜ குல மஹாத்ம்யத்தாலே
அவை தன்னடையே விட்டுப் போம்
மாஸூச –சங்கையை விட்டு இரு

துயர் அறு சுடர் அடி தொழுத யுனக்கு சங்கை பயன்கள் யுண்டோ –
தன் தாளின் கீழ் சேர்த்தவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்று இரு
ஹேய ப்ரத்ய நீகமான திருவடிகளிலே சேர்த்து -உன்னைப் பெற்ற என் துக்கமும் தீர்ந்து
உனக்கு ரக்ஷையே செய்கிற இத்தை எண்ணி மனஸ்ஸூ நிர்மலமாய்
பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா என்கிறபடியே
நிர்ப்பரோ நிர்ப்பரோஸ்மி என்று இரு என் மனனே -என்கிறார் –

————————–

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-

பாமரு மூவுலகில்
அவன் குணங்களையும் அழகையும் பெருமையையும் அனுசந்தித்து இப்போதே காண வேணும்
என்று பெரு மிடறு செய்து கூப்பிட்டார் –
உயர்வற என்கிற பாட்டை -பாமரு மூவுலகு -விவரிக்கிறது –எங்கனே என்னில்
உயர்வற -ப்ரஹ்ம ஆனந்தம் தொடங்கி மனுஷ்ய ஆனந்தத்து அளவும் தனித்தனியே
கார்யம் காரணங்களாய் இருப்பார்கள் ஆகையால் உயர்வறும்

உயர்வற உயர் நலமுடையவன் -பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபன்
ஆனந்தாதி கல்யாண குணங்களை யுடையவனாகையாலே இக்குணங்களுக்கு அடியான காரண குணனானவன் என்கிறது –
பாமரு மூவுலகம்
பா என்று பதார்த்த வாசகமாய் பா மருவி இருந்துள்ள -பதார்த்தங்களினுடைய நெருக்கத்தை யுடைத்தான
மூ விலகும் படைத்த பற்ப நாபன் -உயர்வற உயர்நலம் யுடையவன் –

ஆக ஜகத் காரண பூதனாய் ஆனந்தாதி கல்யாண குண உபேதனான ஸர்வேஸ்வரன்
எவன் அவன் ஸ்ருதி ப்ரஸித்தமான ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்கள் யுடையவன் –

மூ வுலகும் படைத்த பற்பநாபன்
கீழும் மேலும் நடுவுமான லோகங்களை மூவுலகு என்கிறது
இவற்றை யுண்டாக்கின ஜகத் காரணமான கமலத்தை நாபியிலே யுடையவனே
யுனக்கு என் காரணத்வம் தெரிந்தபடி என் என்ன
நீ மயர்வற மதிநலம் அருளுகையாலே அறிந்தேன்
பக்தி ரூபா பன்ன ஞானமான வெளிச் செறிப்பாலே அறிந்தேன்

மதிநலம் அருளின நீ பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதனான நீ தாய் போலே இத்தை யுண்டாக்கி அதுக்கு முலை கொடுத்து வளர்க்குமா போலே
உன் தேனே மலரும் திருப்பாதத்தை அவர்கள் சிரஸ்ஸிலே வைத்தது –
மஹாபலி பக்கலிலே இரந்து பெற்றுத் திரு வுலகு அளக்கிற வ்யாஜத்தாலே ஜகதாகாரதையை எனக்கு காட்டித் தந்தவனே

தேவ திர்யக் மனுஷ்ய ஜங்கம ஸ்தாவரங்களுக்கு எல்லாம்
ஓர் தனி வித்தாய் -முதலில் சிதையாமையும் மூவர் தனி முதலான நீ
மாவலி வ்யாஜத்தாலே ஜகதாகாரதயைக் காட்டி
மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ

படிக்கு அளவாக நிமிர்த்த பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்ற
ஆசையுடைய நான் இருக்க இச்சையும் இல்லாதார் தலையிலே திருவடிகளை வைப்பதே என்ன

அது செய்தமை யுண்டு -உமக்கு அபேக்ஷிதம் ஏது என்ன

மதிநலம் அருளின தாமரைக் கண்ணாவோ
புண்டரீகாக்ஷனான நீ -அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து திரு உலகு அளந்த வியாஜத்தாலே
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களை மாற்றி யுன் கால் கீழ் இட்டுக் கொண்டிலையோ

அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரானவர்களுக்கு எதிர் விழி கொடுக்கும் கண்ணை யுடையவனே
நான் -தாமரைக் கண்ணாவோ தனியேன் தனி ஆளாவோ -என்று
முறையிட வேணுமோ
ஜகத் உத்பத்தியும் வளர்க்கையும் ஜீவனம் இடுகையும் உன் பக்கலிலேயாய் இருக்க
லோக மரியாதையும் வேண்டாவோ

எனக்கும் -அவலோகன தானேன பூயோ மாம் பாலய -என்னுமா போலே –
திருக்கண்களால் குளிர நோக்காய் என்று திருக்கண்களின் அழகை அனுசந்தித்தார் –

அக்கண் அழகையே ஜீவனமாய் இருக்கும் நித்ய ஸூரிகளின் திரளிலே இருக்கக் கண்டிலர்
அத்தாலே தனியேன் என்கிறார்

தனியேன் தனியாளாவோ
ஸ்த்ரீகளினுடைய நோக்கே தாரகமாய் இருக்குமவர்களுடைய திரளுக்கும் கூட்டு இன்றிக்கே
உபய விபூதியிலும் கூடாதே என்னை மூன்றாம் விபூதியாக்கி அருளுகிறவனே –

அன்றிக்கே -உன் கிருபையையே தாரகமாய் இருக்கிற என்னை –
உன் கிருபைக்கு வேறு விஷயம் என்னை ஒழிய உண்டோ
என்னை ஆளுகிற உன் கிருபையையே அன்றோ

இப்படி ஆளுகிறவன் யாவன் ஒருவன் அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
என் தனிமை யாகிற ஹேயத்தைத் தீர்த்து பரஞ்சோதி சுடர் அடியைத் தொழுது விழுந்து இருக்கிற என்னை

தாமரைக் கையாவோ
திருவடிகளிலே அநந்ய கதியாய் -அகிஞ்சனனாய் விழுந்து இருக்கிற என்னை
உன் தாமரைக் கண்ணாலே நோக்கி தாமரைக் கையாலே எடுத்து அணைக்க வேண்டாவோ –

அக்ரூரனை அணைத்திலையோ -அவ்வளவு போரேனோ
ஸோப்யேநம் –இத்யாதி -திருக்கையில் அடையாளம் அத்தனையும் இலைச்சினப் படியே அவன் உடம்பில்
காணலாம்படி அவனை ஸ்பர்சித்து அவன் அந்த ஸ்பர்சத்தாலே ஸ்தப்தனாய் நிற்க
கையைப் பிடித்து ஏறிட்டுப் பின்னை அணைக்கையாலே இருவருக்கும் ஒன்றாய்க் கண்டது அத்தனை

கரேண மிருதுநா தேவ பாபாந் நிர்மோசயன் ஹரி என்கிறபடியே
உன்னை என்று கொல் சேர்வதுவே
பூர்ணே சதுர் தசே வர்ஷே பஞ்சம்யாம்-என்று நாள் இட்டுக் கொடுக்கலாவது தம்பி யார்க்கோ
அசாதாரண அடியாரானால் இன்ன நாள் பெறக் கடவது என்று நாள் இட்டுக் கொடுக்கலாகாதோ

சேஷ பூதனாகில் சேஷி கொடுத்த நாள் பெறக் கடவன் என்று ஆறி இருக்க மாட்டு கிறிலேன்
தனியேன் உன்னை என்று கொல் சேர்வது என்பான் என்
நாராயணனை ஒழிந்து இருப்பது ஒரு நாளும் இல்லையே
இனிச் சேருகையாவது அடியார்கள் குழாங்களை யுடன் கூடுகை இறே

உன்னை என்னா நிற்கச் சேரும்படி என் என்ன
ஒண் டொடியாள் திரு மக்களும் நீயுமே நிலா நிற்பக் கண்டு வைக்கையாலே
உன்னைத் சேர்ந்து என் மனனும் நானும் தொழுது எழ வேணும் என்கிறார் –

———–———-

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-

ஏழையர் ஆவியில்
இவ்வழகு மறக்க ஒண்ணாத படி மனஸ்ஸிலே உரு வெளிப்பாடாய் நலிய நோவு பட்டபடியை
அருளிச் செய்கிறார்
இது உயர்வற என்கிற பாட்டை விவரிக்கிறது -எங்கனே என்னில்

உயர்வற உயர் நலமுடையவன் ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் தம் தாம் அபிமத சாதனங்கள் பெறுகைக்கு
பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாள் பகவான் கடாக்ஷிப்பது கண்ணைச் செம்பளித்து யாய்த்து கடாக்ஷிப்பது

ஆகையாலே சாதன பலங்கள் அல்ப அஸ்திரமாய் இருக்கையாலே கடாக்ஷமும் அல்பமாய்த்து
ஆகையால் உயர்வு அற்று இருக்கும்
தமக்கு ஆகிஞ்சன்யமும் கண்டு தம்மிடத்தில் தயை மிக்கு இரண்டு திருக்கண் மலர்களும் விகஸிதமாய்
தயா விஷயம் கிடைக்கையாலே கிருபா ப்ரவாஹம் பெருகப் புக்கது
நீஞ்சியும் அனுபவிக்க மாட்டாமை படுகிற பாட்டை அன்பருக்கு பரிவருக்கும் சொல்லித் தரிக்கப் பார்க்கிறார்

நலமுடையவன் ஏழையர் ஆவி உண்ணும்
லீலா விபூதியில் உள்ளாரைக் கர்ம பலங்களைக் கொண்டு நலிகிறது
அதில் ஒன்றும் இல்லாத ஏழையாய் -பகவத் சேஷமாய் -பரதந்த்ர ஏக பரையாய் இருக்கையாலே நலியா நின்றது

இதர விஷய ப்ராவண்யரை நலியலாகாதோ –
தன்னிடத்தில் ப்ரேமத்தால் அபலையான என்னாவியை யுண்ணா நின்றது
ம்ருத்யு போலே பிராணனை வாங்கா நின்றது

பிரிந்து ஆற்றாமையை விளைத்தவனுக்கு அன்றியே -இது ஆகாது -என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்கிற
தாய்மார் தோழிமாருக்கும் இன்றிக்கே அபலைகளையே முடிப்பன இரண்டு கூற்றமோ

தன் கண் அழகு தான் அறிந்திலனே -கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியானோ -கண்டானாகில் வாரானோ –
ராம சரம் போலே ஒப்பனை அழியாதே முடிக்கிற படி

அறியேன்
அறியேன் என்பான் என் -அறிந்தது அன்றோ சொல்கிறாய் என்ன
உயர் நலம் என்று ஆனந்தாதிகளும் சவுந்தர்யாதிகளும் யுடைய புண்டரீகாக்ஷன் நிர்ஹேதுகமாக
மயர்வற மதிநலம் அருளினன்

எவன் அவன் -ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
மயர்வற -மாதரார் கயற்கண் என்னும் வலையை அறுத்து
காரத் தண் கமலக் கண் என்றும் நெடும் கயிறு பிடித்து என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடுகிற ஈசன்
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் -பரதந்த்ரையை அழியச் செய்கைக்குச் சொல்ல வேணுமோ

ஆழி யம் கண் -அம்ருதக்கடல் என் மேல் பொங்கி அலை எறிகிற படி
பிரான் -மதிநலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தை -அந்த அம்ருத சாகரத்தை அலை மேல் யலையாய்
வந்து என் நெஞ்சிலே தேக்குகிற மஹா உபகாரகன்
அம்ருதமானது ஜீவிக்கப் பண்ணுமோ முடிக்குமோ

எவன் அறியேன் -இதுக்கு முன்பு பிரிந்து அறியாமையாலே திருக்கண்கள் பாதகம் என்று வ்யுத்பத்தி இல்லை –
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் என்று இரே கேட்டு இருப்பது
இது தான் எனக்கு கூற்றம் ஆக வேணுமோ
லோகத்துக்குத் தாரகமான கண் பாதகமாவதே

ஆனால் தப்பினால் என்ன
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் எவன் அவன்
த்ரிபாத் விபூதியாக சூழ்ந்து இருந்து -ஜிதந்தே புண்டரீகாஷ என்று தோற்பிக்கும் கண்

அயர்வறும் அமரர்கள் -அக்கண் அழகுக்குத் தோற்று கடாக்ஷ அம்ருத பானத்தாலே நித்யரானவர்கள்
அவசமாய் நம இத்யேவ வாதிந -என்னும்படி தோற்பித்தவன்

சூழவும் இத்யாதி
மூல பலத்தின் அன்று பார்த்த பார்த்த இடம் எல்லாம் பெருமாளே யானால் போலே ராமசரத்துக்கு ராக்ஷசர்
தப்பினாலாயத்து இக்கண் அழகுக்கு அபலைகளாய் இருப்பார்க்குத் தப்பலாவது

ஸர்ப்ப யாகம் போலே அபலைகள் அடைய இக்கண் அழகுக்கு துவக்குண்டு திருவடிகளிலே விழும்படியாய் இருந்தது
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்னும்படியாய் இருக்கை

தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர்
ப்ரத்யக்ஷத்திலும் அத்தலையால் வரவு ஆனால் போலே உரு வெளிப்பாட்டிலும்
அத்தலையாலே வந்து தோன்றவாய்த்து தான் அறிகிறது –

துயர் அறு சுடர் அடி வந்து தோன்றும் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!
உங்களுக்கு அது தோற்றுகிறது இல்லையோ
சிலருக்குச் சொல்லி சிலருக்கு மறைக்கும் படி யன்று இவளுக்குப் பிறந்த தசா விசேஷம்

என் செய்கேன் துயராட்டியேனே.–
இத்தைத் தப்பப் பார்ப்பதோ
அனுபவிக்கப் பார்ப்பதோ
எத்தைச் செய்வேன் துயராட்டியேன்

ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேத குதச்சன -என்று இருக்க வேண்டி இருக்க -அங்கன் அன்றிக்கே
அவசியம் அநுபோக்தவ்யம் -என்கிறபடியே
பழைய விஸ்லேஷமே ஸித்திக்கும் படியாயிற்று என்கிறாள் –

——–——–

மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-

மாயா வாமனனிலே
இப்படி உருவெளிப்பாட்டால் நோவு பட்ட இடத்தில் முடியாதபடியாகப் பண்ணின வைசித்ரியைக் கண்டு
அவனுடைய விசித்திர ஜகதாகாரதையை அருளிச் செய்கிறார் –

————

பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற -பாசங்கள் நீக்கி –
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் நாநா விதமான கர்ம பாசங்களாலே
பந்தகங்களான அவர்களுடைய உயர்வும் தாழ்வுமாய் வருகிறவர்கள் புஜித்து அறும்
பாசங்கள் நீக்கி
பல செய்வினை வன் கயிற்றால் சூழ்த்துக் கொண்ட அவித்யாதிகளை நீக்கி

உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் -உன் நலமான ஆனந்தாதி குணங்களாலே
அளவிட ஒண்ணாத உன் நலம் பாராதே
ஹேயமான என்னை யுனக்கே அறக்கொண்டிட்டு மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன்

எத்தைக்காட்டி என்னில் -அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் ஒருவன் அவன் –
வாச மலர்த் தண் துழாய் முடியைக் காட்டி வசீகரித்தான்

பாசங்கள் நீக்கி -மயர்வற மதிநலம் அருளி என்னை யுனக்கே அறக்கொண்டிட்ட மாயவன்
ஆதி ராஜஸ்ய ஸூசகமான மாலையையும் முடியையும் காட்டி யாய்த்து புறம்பு உண்டான பற்று அறுத்தது

துயர் அறு -தூக்கமே வடிவான -காயமும் ஜீவனுமாய் ஜென்ம ஜரா மரணாதிகள் ஆகிற துயர் அறுத்து

கழிவாய்ப் பிறப்பாய் -போவது வருவதாகிற ஜென்மத்தை சவாசனமாகப் போக்கி –

பின்னும் நீ உன் சுடர் அடி தொழது எழப் பண்ணி பின்னும் மாயங்கள் செய்து
ஹேயமான என் மனஸ்ஸை மயர்வற மதி நலம் அருளி சுடர் அடி தொழுது எழப் பண்ணி
இச் சரீரத்தில் தானே

மாயங்கள் செய்து வைத்தி இவை என்ன மயக்குகளே
நீ அங்கீ கரித்தாயோ என்று இருந்தேன்
இங்கே வைக்கையாலே கைவிடப் பார்த்தாயா என்று இரா நின்றேன்
என் பிரமம் தீர ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்

உயர் நலம் யுடையனான நீ -மதி நலம் அருளி -பாசங்கள் நீக்கி -என்னை யுனக்கே அறக்கொண்டிட்டு
அயர்வறும் அமரர்கள் முன்பாக ததீய சேஷத்வ பர்யந்தமாக்கி அவர்களை முன்னிட்டுச்
சுடர் அடி தொழுது எழப் பண்ணி சரீரத்தில் இட்டு வைத்தாலாமோ

சுடர் அடி தொழுதார்களை துயர் இருக்கிறதோ -துயரில் மூட்டுவதோ –
மாயவன் அருளாய்
இந்த ஆச்சர்யத்தை ஆச்சர்ய யுக்தனான நீயே அருளிச் செய்ய வேணும் என்கிறார் –

—————

என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-

என்றைக்கும் என்னை -யில்
உன்னால் அல்லது செல்லாத என்னை இஸ் ஸம்ஸாரத்திலே வைத்த போதே
இதுக்குப் பிரயோஜனம் என் என்று கேழ்க்க
எனக்கும் என்னுடையாருக்கும் அனுபவிக்கும் படிக்கு ஈடாக உம்மை வைத்துக் கொண்டு
திருவாய் மொழி பாடுவிக்க வைத்தோம் என்று சொல்ல
தனக்கு சில கவி பாடுவிக்க வேண்டினால் அதுக்கு ஈடான ஞான சக்த்யாதிகளை யுடையரான
முதல் ஆழ்வார்களைக் கொண்டு பாடுவியாதே
என்னைக் கொண்டு பாடுவிப்பதாகச் சொன்ன வார்த்தையின் நீர்மை இருந்தபடியே என்று
தம் பக்கல் அவன் பண்ணி அருளும் உபகாரத்துக்குப் பிரதி உபகாரம் காணாமல் தடுமாறினார்
ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரன் ஆர்த்த ரக்ஷணம் பண்ணி ரஷித்த படி இது

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற -என்றைக்கும் என்னை –
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்தளவும் என்றைக்கும் என்று
அநந்தமான காலம் தோறும் ஸர்வேஸ்வரன்
ஆள் பார்த்து உழி தருவான் -என்கிறபடியே ஆள் தேடிக் கிடையாமல் சிந்திக்கிற படி –
ப்ரஹ்மாதிகள் ஸ்ருஷ்ட்யாதி கார்யங்களிலே அமைந்தார்கள்
வ்யாஸாதிகள் புராணாதிகளிலே அமைந்தார்கள்
பத்தர் கர்ம அனுகுணமாக ஸ்வர்க்க நரகாதிகளுக்கு அமைந்தார்கள்
முமுஸுக்களில் சிலர் கைவல்ய மோக்ஷத்துக்கு அமைத்தார்கள் –
சிலர் பகவத் அனுபவத்துக்கு அமைந்தார்கள்
நித்யரும் முக்தரும் பகவத் ஆனந்தாவஹராய் ஸாம கானத்திலே அமைத்தார்கள்

இனித் திருவாய் மொழி முதலான செஞ்சொற் கவி பாடுவிக்கைக்கு ஆழ்வாரைத் தேடி எதிர் சூழல் புக்கு
எனத்தோர் பிறப்பும் எனக்கே அருள் செய்ய விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரு விக்ரமனையே –என்கிறபடியே
தேடிப் பார்த்த இடத்தில் -அசன்னேவ-என்று அஸத் கல்பனான என்னை -சந்தமேனம் ததோ விது -என்னும்படி
மயர்வற மதிநலம் அருளிக் கவி பாடுவித்துக் கொண்டான் என்கிறார்

உயர்வற என்றைக்கும் என்னை
உயர்வற கீழ்ச் சொன்னவர்கள் பதங்களிலே புகாதபடி ப்ருதக்காக்கி
உயர்நலம் யுடையவன் -என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு -எவன் அதிகாரி யானவன் -அவன் உய்யக் கொண்டவன் –
ஆ முதல்வன் இவன் என்று தேற்றி நான் உய்யும் படியும் தான் உளனாம்படி யுமாகத் தேற்றி
நான் உய்யும்படியும் தான் உளனாம்படியுமாகத் தேற்றித் திரு உள்ளம் பற்றி

மயர்வற போகிய அன்றைக்கன்று -காலம் தோறும் காலம் தோறும் மயர்வற -அஞ்ஞான அசக்திகள் அற
மதிநலம் அருளினன் எவன் அவன் என்னைத் தன்னாக்கி தன்னைப் போலே ஞான சக்திகள் யுண்டாம்படி பண்ணி

எவன் -மயர்வற்றவன் -அவன் மயர்வு அறுத்தவன்
என்னால் -தனக்குத் தக்கக் கவி பாடச் சக்தனான என்னால்
தன்னை -என்னை ஸ்வரூப ஞானத்திலே நிறுத்தி
தன்னை -அயர்வறும் அமரர்கள் அதிபதியான தன்னை -எவன் கவி பாடினவன் -அவன் -இன் தமிழ் பாடிய ஈசன் –
அயராமல் ஸாம கானம் பண்ணுமவர்கள் அபர்யாப்த்த அம்ருத தாஸிகள் போல் அன்றிக்கே அதிலும் இனிதான
பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம் ஸர்வார்த்தம் ஸ்ரீ சடகோபன் வாங்மயம்
ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமா கமம் நமாம் யஹம் திராவிட வேத சாஹர-மான புகழ்
வண் தீம் கவி பாடின ஸ்வாமியை

எவன் -பாட்டு கற்கிறவர் -அவன் -ஆதியாய் நின்ற என் சோதியைத் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

என் சொல்லி நிற்பனோ
ப்ரஹ்மாதிகள் முதலானோர் கவிகள் அல்ல
தான் பாடின கீதை அல்ல
என்னைக் கொண்டு பாடுவித்த கவி உபய விபூதியிலும் அடங்காததாய் இருந்தது
என் சொல்லி நிற்பன்
இதுக்கு ஒரு உபகார ஸ்ம்ருதியும் காண்கிறிலேன் -என்கிறார் –

—-

வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7-

உயர்வற என்கிற பாட்டை இதுவும் விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் -வைகுண்ட நாதன் என்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ப்ரஹ்மாதிகள் முதலானோரைக் கொண்டு
வேதம் முதலானவற்றைப் பாடுவித்துக் கொண்ட இடத்தில்
இப்படி வாய்க்காதே ஐஹிக ஆமுஷ்மி காதிகளிலே மண்டி விழுந்தார்கள் ஆகையால் உயர்வற என்றது

உயர்நலம் உடையவன் எவன் அவன் -ஆனந்தாதி கல்யாண குண பரிபூர்ணன ஸர்வேஸ்வரன்
பரம உதாரமான இனிய கவியை என்னைக் கொண்டு பாடுவித்துக் கொண்ட
மஹா உபகாரத்துக்கு இவனைக் கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் ஆர்வேனோ என்கிறார்

உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் வைகுண்ட நாதன் எனக்குப் பரிகரித்தவன்
என்னோடு இணைய நின்றான் ஒருவனாய்த் தான் ஆறி இருக்கிறேனோ
அப்ராப்ய மனஸா ஸஹ -என்று வேதங்களாலும் அளவிட ஒண்ணாத பராத்பரனானவன் –
வைகுண்ட நாதன்
குந்தம் என்று தள்ளுகையாய் -வைகுந்தா என்று தள்ளா வான பதத்துக்கு நாதன் என்றபடி –
ஆக இத்தால் ஆனந்த ஸ்வரூபன் என்றபடி

இப்படி உபய விபூதி நாதனானவன் -வைகுண்ட நாதன் என் -என்று என்னைத் தனக்கு நாதனாக எண்ணினான்
ஒரு ஸம்ஸாரி சேதனனை மேல் விழுந்து உகவா நின்றால் நான் எங்கனே ஆறி இருப்பேன்

இப்படி அவன் உகக்கக் கூடுமோ என்னில்
லோக நாத புரா பூத்வா ஸூ க்ரீவம் நாதம் இச்சதி -என்ற அதுக்கும் அவ்வருகாய் இருந்தது இதுவும்
அவரை நாதனாக உடையாராகைக்கு யோக்யதை ஸம்பாதிக்கிற படியாய்த்து முன்பு லோக நாதரானது –
பெறுவார் பெறாது ஒழிவார் -இச்சியா நின்றார் -கிடையாதா அதில் தான் இறே இச்சை தான் செல்வது
சரா மோவா நரேந்திரஸ்ய ப்ரஸாதம் அபி காங்ஷதே -என்றால் போலே யாய்த்து
அவன் என்னை வேண்டி வந்து நின்றபடி –

வைகுண்ட நாதன் என் –
என்னை ஸ்வ தந்திரனாக்கித் தான் ஆஸ்ரித பரதந்த்ரனாய் இரா நின்றான் -இதுக்கு ஹேது
என் ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் கண்டு இவனே வைகுண்ட நாதன் என் –
நமக்கும் நம்முடையாருக்கும் நாதன் என்று திரு உள்ளம் பற்றி இரா நின்றான்
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் -என்று சமர்ப்பியா நின்றான்
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நுன்னிலை இடம் -என்று கொண்டாட நின்றான்
என்னை அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசா க்கித் தான் அவர் இளவரசு வைகுந்தக் குட்டனாய் இருந்தான்

மஹா ராஜர் தாம் நாதனான வாசி தோற்ற முதலைகளும் தாமுமாகப் பிராட்டியைத் தேடிக்கொண்டு –
ராவண வதம் பண்ணி மீண்டு எழுந்து அருளித் திரு அயோத்யையிலே திரு அபிஷேகம் பண்ணின
பின்பு இறே க்ருத்யக்ருத்ரானார் இறே

அப்படியே இவரும் அறிய ஒண்ணாத படி ஸம்ஸார காந்தராந்தத்திலே துர்க த்ரயமான மிஸ்ர ஸத்வம் ஆகிற
லங்கையில் புக்கு அஹங்காராதிகள் ஆகிற ராஷஸிகளால் நோவு பட
ஆச்சார்யனாகிற திருவடி திருமந்திரம் ஆகிற திருவாழி மோதிரம் கொடுத்துத் தெளிவிக்கத் தெளிந்து
தச இந்த்ரியாநநம் கோரம் எம்ங்கிற ராவணனாகிற இந்திரிய ஜயத்தைப் பண்ணி சரீரமாகிய லங்கையில் நின்றும்
ப்ரஹ்ம ரந்தரம் என்கிற தலைவாசல் திறந்து கொண்டு புறப்பட்டு அயோத்தியை அபராஜிதை என்று சொல்லப்படும்
ஏர்கொள் வைகுந்தம் ஆகிற காற்றிலே ப்ரைவசிப்பித்து வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று
வீடு கொடுக்கும் படி அருளினான் ஆகையால் வைகுண்ட நாதன் என் -என்று இதுவும் ஒரு த்ருஷ்டாந்தம்

இப்படி நாதனாகப் பற்றினவன் -வல்வினை மாய்ந்தற –
வினை பின்பு செய்தது என் என்ன -வினை போக்யமாம் படி தான் மயர்வற மதிநலம் அருளினவன்
எவன் அவன் -வல்வினை மாய்ந்தற -வல்வினை -ஸர்வ சக்தனானாலும் போக்க ஒண்ணாத வழிய பாபங்கள்
மாய்ந்தற -போன இடம் தெரியாமல் போக –
எவன் அவன் பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே தன் வசமாக என்னை ஆக்கிக் கொண்டு
செய்குந்தன்
என் விரோதியைப் போக்கின சுத்தி யோகத்தை யுடையவன் யாவன் ஒருவன் அவன் அயர்வறும்
அமரர்கள் அதிபதி

எவன் அவன் -ஹேய ப்ரதிபடரான நித்யருக்கு நாதனானவன் என்னை நாதனாக்கி
நின் அடியாருக்கு என் செய்வன் என்றே இருத்தி -நின் அடியாருக்குத் தீர்த்த அசுரருக்குத் தீமைகள் செய்குந்தா -என்னக் கடவது இறே
ஆஸ்ரிதருடைய பாபங்களை அநாஸ்ரிதர் பக்கல் விடும்படியான சுத்தியை யுடையவன் என்கை
குந்தன் என்று திருநாமம் ஆகவுமாம் -முகுந்த குந்தர குந்த -என்றது

அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்னைத் தன்னாக்கி
வல்வினையே ஸ்வரூபமான என்னை -தன் சுத்தியை எனக்கு உண்டாக்கி ஞான சக்த்யாதிகளால்
தன்னோடே ஒக்கப் பண்ணி-என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசனை

அஞ்ஞான அசக்திகள் இல்லாத நித்ய ஸூரி ஸேவ்யனானவன் வேதங்களும்
அப்ராப்ய மனஸா ஸஹ -என்று மீண்ட விஷயத்தை
என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசனை -என்று வைகுந்தனானப் புகழ வண் தீம் கவி
நான் புகழ்ந்ததால் தான் ஸ்ரீ வைகுண்ட நாதனாய் ஸர்வ ஸ்வாமியாய் பரஞ்சோதி யாகா நின்றான்

பிதா புத்திரனுக்கு நீர் வார்த்துப் பசுவைக் கொடுத்துத் திரும்பவும் வாங்குமா போலே இதுவும் நித்ய விபூதி இறே
இவர் புகழ்ந்தவாறே நித்ய விபூதி யாயத்ததாக நினைத்து இருந்தான்

உயர்வற உயர்நலம் தொடங்கி இவ்வளவும் வர வரப் புகர் ஏறி வாரா நின்றது இறே
எங்கனே என்னில்
ஆத்ம வஸ்துவும் நித்யமாய் இருக்கச் செய்தே -அசன்னேவ-என்றும்
சந்தமேனம்-என்றும் சொல்லுகிறவோ பாதியாய்த்து இதுவும்
இவன் உளனாகத் தானும் உளனான படி

செய் குந்தம் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று இவரைக் கொண்டு கவி பாடின பின்பு தான் துயர் அற்ற படி
இவர் துயர் அறத் துயர் அற்ற படி -சரீரத்துக்கு வந்த துயர் சரிரீ தானே அனுபவிப்பான்
வ்யஸநேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித போலே இறே படுவது
தத் வியதிரிக்த ப்ரேமம் இறே நோயாவது -அது தீருகை இறே நோய் தீருகை அப்போது இறே இவனும் துயர் அற்றது

செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ
அவன் பண்ணின உபகாரம் கனத்து இரா நின்றது
உபகார ஸ்ம்ருதிற்கு காலம் போருகிறது இல்லை
நான் என் செய்வேன் என்கிறார்

சரீர விஸ்லேஷத்தில் வாய் புகும் நீராகையாலே அனுசந்திக்க அவசரம் இல்லை
இங்கு இருந்த நாள் காலம் போருகிறது இல்லை
பண்ணின உபகாரமோ கனத்து இரா நின்றது
என் மனனே தொழுது எழு என்கிறார்

கரண பிரதானம் தொடங்கி இன்கவி சொல்ல வல்லேனாம் படி பண்ணின உபகாரத்துக்கு ப்ரத் யுபகாரம் உண்டோ
உன் ஸ்வரூப அனுரூபமான அஞ்சலியைப் பண்ணு என்கிறார் –

———-——–

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-

இன்பம் பயக்க -லில்
இப்படி மஹா உபகாரகனான ஸர்வேஸ்வரனை திருவாறன் விளையிலே
பெரிய பிராட்டியாரும் தானுமாக எழுந்து அருளி இருக்கிற சேர்த்தியிலே கண்டு
அநுகூல வ்ருத்திகளைப் பண்ண என்று மநோ ரதித்தார்

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
எம்பெருமான் ஆழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருளித் திருவாய் மொழி ஓதுவித்து
அந்த அத்புதமான கானத்தை சர்வரும் கூடின ஸ்தலத்திலே இருந்து கேழ்க்கத் திரு உள்ளமாய்த்
தானும் பிராட்டியாருமாக இருந்து நித்யரும் முக்தரும் புத்தரும் முமுஷுக்களும் கூடத்
திருவாறன் விளையிலே எழுந்து அருளி இருந்து ஆழ்வாரை அருளப்பாடிட்டு
பாடச் சொல்லிக் கேட்டு ஆனந்திக்கிறபடி சொல்கிறது

உயர்வற உயர் நலம் இன்பம் பயக்க
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அம்ருத சாஹரத்தில் திவலை போலே
இவர்கள் ஆனந்தம் தோன்றாது ஆய்த்து
ஸூர்ய ப்ரகாஸத்தில் மின்மினி போலே ப்ரகாஸம் அறும் படி பர ப்ரஹ்ம ஆனந்தம் நிரவதிக தேஜோ ரூபமாய் இருக்கும்
ஆகையால் அவர்களும் அவர்களை சொல்லும் கானமும் உயர்வு அற்று இருக்கும்

உயர் நலம் என்றும் -இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் என்றும் –
உயர் நலம் -உகார வாஸ்யையான பிராட்டியுடைய ஆனந்தமும் நலமுடையவன் என்று எம்பெருமானுடைய
ஆனந்தமுமாக இவருடைய ஆனந்தமும் ஸ்ருதி ப்ரஸித்தம் இறே

இப்படி ஆனந்தாதி குண பூர்த்தியை யுடையவன் யாவன் ஒருவன்
அவன் இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழ் உலகை இன்பம் பயக்க இனிதுடன்
வீற்று இருந்த ஆள்கின்ற எங்கள் பிரான்

ஆழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருளித் திருவாய் மொழி ஓதுவித்து இருவரும் கூட இருந்து
இவரைப் பாடச் சொல்லிக் கேட்டு ஆனந்திக்கிற ஆனந்தம் திராவிட வேத சக்கரத்தின் திவலை
என்னும்படி கான அம்ருத சாகரம் கொந்தளிக்கிற படி –

எவன் மூ வுலகு இன்பம் பயக்கப் பாடுகிறவர்
அவன் கானம் கேட்க்கிறவர்
எவன் அவன் -வக்தாவான ஆழ்வாரும் ஸ்ரோதாவான ஸ்ரீ யபதியும் மயர்வற மதிநலம் பெற்று
ஏழு உலகும் இன்பம் பயக்க -திருவாய் மொழி கேட்டார்கள் -எல்லாம் இன்பம் பயக்க இருந்தார்கள் –

இனிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
பக்தாம்ருதம் விஸ்வ ஜன அனு மோதனமான இன்பக்கவி பாடுவித்தோன்
இந்திரையோடு மதிநலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே பகவத் கிருபா அம்ருத வ்ருஷ்டி மஹா பிரளயம்
உடைந்து பெருகுமா போலே ஸஹஸ்ர முகமாய் கங்காதி தரங்கங்கள் போலே
சரணாகதியும் ஆன்ற தமிழ் மறை ஆயிரமுமாய் ப்ரவஹியா நின்றது -அது பொங்கிப் பாட்டாய்த் தலைக்கட்டிற்று

இப்படி அருளினவன் யாவன் ஒருவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி -நிர்ஹேதுகமாக அருளின பாட்டுக் கேட்டு
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில் சூழ் திருவாறன் விளையிலே
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -என்னும் படி இனிதான படி –
திருவாறன் விளையும் தளிரும் முறியுமாகக் கொந்தளித்தது –
அபி வ்ருஷா பரிம் லாநா -இத்யாதிப்படியே யாய்த்து

எவன் -அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினவர்
அவன் -என்னால் தன்னைப் பாடிய ஈசன்
என்னோடே கூடத் தென்னா தெனா வென்று -ஆளத்தி வைக்கிறவன் யாவன் ஒருவன் -அவன் எங்கள் பிரான் –
திருவாறன் விளையிலே ஆழ்வார் திருவாய் மொழி பாடக் கேழ்க்கலாம் தேசம் என்று
அன்புற்று அமரர் வலம் செய்து –
அந்நித்ய விபூதியை மறந்து இங்கே அன்புற்று அமர்ந்து உறைகின்றான்
நித்யர் முக்தர்கள் சாமகானம் பண்ணத் தான் அவாக்ய அநாதர-என்று இருக்கிற ஸ்வாமி யானவன்
கேட்டு ஆரார் -என்கிறபடியே இனிது ஆராமையாய் -தானும் கூட ப்ரீதி பிரேரிதனாய்க் கொண்டு பாடத் தொடங்கினான்
அந்தாமத்து அன்பு செய்து -இத்யாதிப்படியே யுகந்து இரா நின்றான்

நீயும் அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
அன்புற்று அமர்ந்து வலம் செய்து கை தொழும் நாள்களும் ஆகும் கொலோ
திருவடிகளுக்குத் துயர் அறுகையாவது -நித்ய விபூதியில் நித்யர் முக்தர் பாடுகிற சாமகானம்
நித்ய விபூதி அளவிலே யாகையாலே ப்ரீதி பிறந்தது இல்லை –
ஆழ்வார் இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழ் வுலகை இன்பம் பயக்கப் பாடின
திருவாய் மொழி கேட்டு ஆரார் வானவர்கள் -என்று உபய விபூதியும் தளிரும் முறியுமாகக் கொந்தளித்த படியும்
இந்த லீலா விபூதியில் உள்ளாரில் கடையரான தம்மைக் கொண்டு திருவாய் மொழி பாடுவித்து
அது பாடக் கேட்ட படியால் துயர் அற்று இன்பம் பயக்கப் பார்த்து இருந்தான் –

அப்போது ஆழ்வார் ஞான முத்திரையும் கையும் கான உச்சாரணமான திருப்பவளப் பூரிப்பும்
அர்த்த ஸ்ம்ருதியாலே பிறந்த முக விகாஸமும் ஆனந்த அஸ்ரூ பனிக்கிற திரு நயனங்களும்
கான ஆனந்த மக்நரான புளகித காத்ரமும் கண்டு உபய விபூதியும் ஈஸ்வரனும் பிராட்டியும் ஆனந்தாவஹர் ஆனார்கள்

அன்புற்று அமர்ந்து உறைகின்ற -நூராண்டு -பதினோராயிரம் ஆண்டு என்கிற அவதி அன்றிக்கே
நித்ய விபூதியும் அநித்யம் என்னும்படி அமைந்து உறைகின்ற
திருவாறன் விளை தீர்த்தனுக்கு உற்ற பின் துயர் அறு சுடர் அடி தொழுது
வலம் செய்து வர்த்திக்கப் பாராய் என்கிறார் –

———-——–——–————————————

ஏழாவது பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணமஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–ஆறாவது பத்து விவரணம்- –

February 9, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1-

வைகல் பூங்கழிவாயில்
இப்படிச் சரண் புக்க இடத்திலும் வந்து முகம் காட்டாமையாலே
திரு வண் வண்டூரில் ஸம்ருத்தியிலே அகப்பட்டு நம்மை மறந்தான் அத்தனை –
ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்து இருக்குமவன்
ஆகையால் நம் ஆர்த்தியை அறிவிக்க வரும்
ஆன பின்பு அங்கே என் தசையை அறிவியுங்கோள் என்று தூது விட்டார் –

———-

காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கரு நாராய்!
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே.–6-1-2-

உயர்வற என்கிற பாட்டை -காதல் மென் பெடையோடு -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
தம்பதிகளுக்குள் காதல்கள் ஏற்றமும் குறைச்சலுமாய்த்து இருப்பது
உயர்நாகம் யுடையவன் அவன் இடத்தில் காமம் அளவிறந்து இருக்கும் இறே

அப்படியே
காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கரு நாராய்!
ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்தவனுக்கு என் ஆர்த்தியை அறிவிக்க வரும்
அருவி என்று ஒரு நாரையை இரக்கிறாள்

காதல் மென் பெடையோடு
முன்பு போக விட்டவர்கள் கொண்டு வருகிறார்கள் என்று ஆறி இருக்கலாம் விஷயம் அன்றே
அங்கனே யாம் அன்று முன்பு பண்ணின ப்ரபத்தியே அமையும்

உடன் மேயும்
ஊர்த்வம் மாஸான் ந ஜீவிஷ்யே -என்றிலன்
ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்பாரும் உண்டாகாதே
ஸர்வஞ்ஞரோடு கலவாது ஒழி யும் படியான பாக்யத்தைப் பண்ணுவதே நீங்கள்

பின்பு கூடுகை தவிராதாகில் பிரிந்தால் என் செய்ய வேணும் என்று இருப்பார்கள் இறே அவர்கள்
அத்தனை காரியப்பாடு இல்லை இறே இவற்றுக்கு

மென்பெடையோடு
கலக்கவும் பொறாத மார்த்வத்தை யுடைத்தாய் இருக்கை

உடன் மேயும் கரும் நாராய்
பிரிவில் தரியாதாய்க் கூடாது திரியும் அத்தனை
உயர்நலம் யுடையவன் எவன் அவன் –
இதம் மேத்யம் இதம் ஸ்வாது-இது சுத்தம் இது இனிமை – என்கிறபடியே காணும் இவை திரிகிறது

பேடையின் நினைவு அறிந்து புஜிப்பிக்கும் சேவலும் உண்டாகாதே
தன் ஆர்த்த த்வனி செவிப்பட்டால் அவற்றுக்கு மிடற்றுக்குக் கீழே இழியாது என்று இருக்கிறாள்

கரு நாராய்
பிரியாதாருக்கு உடம்பு வேளாதே -மிகவும் நிறவாதோ
தன் உடம்பு விவர்ணமான படியைக் காட்டுகிறாள் –

அவன் பிரிவுக்கு ஹேது ஏது என்ன -மயர்வற மதி நலம் அருளி -தத் வியதிரிக்தங்களிலே நெஞ்சு செல்லாதே
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே காதலை விளைவித்தவன் அகன்றான் –
நான் விஸ்லேஷ அசஹை யானேன் -என்ன

இப்படி யுன்னை விட்டு எங்கே போனான் என்ன
அவன் போய் இருந்த இடம் சொல்லுகிறாள்
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன்
வேத கோஷமும் -வைதிக கிரியா கோஷமும் கண்டு -தன் நாயகன் கால் தாழ்ந்து வாராது இருக்கிறது
உங்களுக்கு அறிவிக்கையை இறே வேண்டுவது

தான யஜ்ஞவிவாஹ ஸ்தலங்களிலே இறே -அது ஸா ங்கம் ஆகைக்கு எழுந்து அருளி இருப்பது
ஸமா ஜே ஜூ மஹத் ஸூச -தீர்க்க சத்ராதிகளிலே இருப்பவர் –

ந த்ரஷ்யாம புனர் ஜாது -அவரை அவ்வோர் இடங்களிலே காணலாம்
தார்மிகம் ராம மந்த்ரா -இத்யாதிப்படியே கண்டு கொள்வது

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அ வன் –திரு வண் வண்டூர் நாதன் –
ஸ்ரீ வைகுண்ட நாதனின் காட்டில் ஏற்றம் சொல்கிறது
இவ்விடம் எளியாரை வலியார் அடிக்க அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்க் கோயிலில் சாந்து பூசி இருக்கும்
அது ஓர் ஏற்றமோ அன்று இறே

ஞாலம் எல்லாம் உண்ட –
அந்த ஆபத் சகன் இறே
தளர்ந்தார் தாவளமான நம்பெருமானைக் கண்டு
துயர் அறு சுடர் அடி தொழுது எழுந்து
பாதங்கள் மேல் அணி பூந்தொழ
என்றும் பாதம் கை தொழுது பணிவீர்

ஹேய ப்ரதிபடமான சுடர் அடிகள் -ஆஸ்ரிதரைக் கண்டால் நிரவதிக தேஜோ மயமான
திருவடிகளைக் கைகளால் ஆரத் தொழுது எழு என் மனனே

தொழுதார்க்கு நிற்க ஒண்ணாது –தெண்டன் இடு –
உண்ணா நிற்க மிடற்றைப் பிடிப்பாரைப் போலே ஆகாமே திருவடிகளில் தெண்டம் ஸமர்ப்பியாய்

பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே
கடகரை உபகரித்துச் சொல்ல வேணும் இறே

அடியேன்
உங்களைக் கொண்டு அழைப்பித்துக் கொள்ள இருக்கிற அவனுக்கு அன்று
அவனால் வந்த இழவு பரிகரிக்கிற உங்களுக்கு அடியேன்
நித்யம் -யதீய சரணவ் சரணம் மதீயம் –என்கிறபடியே

அடியேன் திறமே
என் திறம் சொல்லில் ஒரு மஹா பாரதத்துக்கு உண்டு
திரு உள்ளமான படி செய்யுங்கோள் என்கிறாள் –

—————–

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-

மின்னிடை மடவாரில்
இவள் விட்ட ஆள் சென்று -அத்தலைப்பட்டு அறிவித்து -அவனும் வாரா நிற்க –
அவ்வளவு பற்றாதே துடித்து அலமர்க்க
அவன் வரவை நிச்சயித்து -கீழ்ப்பட்ட கிலேசத்தாலே -இனி அவன் வந்தாலும் அவனோடே ஸம்ஸ்லேஷிப்போம் அல்லோம் –
விஸ்லேஷித்து முடியும் அத்தனை -என்று முகம் மாறி வைத்து இருக்க
அவனும் தன் அழகையும் செல்லாமையும் காட்டி ஊடலைத் துறந்து அவர்களுடனே ஸம்ஸ்லேஷித்த படியை
அருளிச் செய்தார் –

——-

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-

உயர்வற என்கிற பாட்டை -உகவையால் நெஞ்சம் உள்ளுருகி -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற உகவையால் -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
சாதன பலங்களாலே உயர்த்தி அற்று இருப்பர்கள்

உயர்நலம் உடையவன் இடத்தில் உகவை அளவிறந்த இருக்கும் –
அவர்கள் உகவை அல்பமாகையாலே துக்கமேயாய் இருக்கும்
உன்னிடத்தில் உகவை -அப்ராப்ய மனஸா ஸஹ -என்று அளவிட ஒண்ணாத ஸூகமேயாய் இருக்கும்
ஆகையாலே உகவையாலே நெஞ்சு உள்ளுருகுகிறது –

வாராய் உன் ப்ரவ்ருத்தி வியர்த்தம் காண்
பிரித்து நெஞ்சை புண் படுத்துகையால் வந்த உருகுதல் ஒழிய நீ பண்ண இறே பார்த்தது
அது செய்யப் போகாது என்ன

அது ஏது என்ன -உன் தாமரைத் தடம் கண் விழிகள் -மயர்வற மதி நலம் அருளி –
கருண அம்ருத வ்ருஷ்டிகளாலே பிறந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே உகவையால்
நெஞ்சம் உள்ளுருகப் பண்ணி உன் அகவலைப்படுத்தாய்

தாமரை போல் பரிமளம் செவ்வி குளிர்த்திகளை யுடைத்தாய் போக்தாக்களால் உண்டு அறுக்க ஒண்ணாத
போக்யதா பிரகார்ஷத்தை யுடைய திருக்கண்கள் நோக்காகிற வலையுளே அகப்படுத்தி –
கண்ணியிலே அகப்பட்டாலே ஜ்வர ஸந்நி பதிதரைப் போலே பிதற்றும் அத்தனை இறே

இனி அகப்பட்ட பின் செய்வது என் என்ன
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து
தகவு செய்திலை -என்ன

தகாதது என் என்ன

அரதி கந்த ரஹிதராய் நித்ய ஆனந்த மக்நரான ஸூரி ஸேவ்யரான உன்னுடைய
துயர் அறு சுடர் அடியாய் இருக்கிற திருவடிகளாலே அழித்தாய்
துக்க கந்த ரஹிதமாய் போக்யமே தேஜஸ்ஸான திருவடிகளாலே அழித்தாய் என்ன

எத்தை அழித்தோம் என்ன
எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–
ஸங்கல்பத்தால் அழிக்கலாவது உன் சிற்றில் இறே
இவருடைய சிற்றில் ஸ்பர்சித்து அழிக்க வேண்டுமே

ஜகத் உபஸம்ஹாரம் பண்ணுவது ஸங்கல்பத்தாலே இறே
சேஷபூதனுக்குத் திருவடிகள் உத்தேச்யமானோ பாதி
பிரணயிகளுக்கும் திருவடிகள் உத்தேச்யமாயே இறே இருப்பது –

வெறும் சிற்றிலே என்று காணும் நீ அழித்தது -எங்கள் அகவாயையும் அழித்தாய் காண் –
காலாலே எங்கள் சிற்றிலை அழித்துக் கண்ணாலே எங்கள் அபி சந்தியைக் குலைத்தாய்

உன் ஸ்ருஷ்டியைப் போலே நெருப்பும் நீருமாய் அன்று காண் எங்கள் சிற்றில்
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக்கையால் ஸ்ரமப்பட்டோம்
உபாதேய தமம் எங்கள் சிற்றில் -உன்னுடைய ஸ்ருஷ்ட்டி அனுபாதேயம்

யாமடு சிறு சோறும் கண்டு நீ அடுகிற சிறு சோறு நிர்மால்யத்தோபாதி புறம்புள்ளாருக்கு ஆகாது –
நீயே புஜிக்கும் அத்தனை
யாமடு சிறு சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடி இருந்து உண்ணும் சோறு

கண்டு,நின் முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–
கண் படைத்த பிரயோஜனம் இவற்றைப் பார்த்து ப்ரீதி பிரேரிதனாய் -ப்ரஸன்ன ஆதித்ய வர்சசம் -என்கிற
முக ஒளி திகழும் முறுவல் மந்தஸ்மிதம் பண்ணி நின்றிலையே

அழித்தாய் என்று இன்னாப்பு இன்று உகந்து அணைந்து கொண்டு சொல்கிறாள் –

——–

நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திரு விண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

நல் குரவில்
ப்ரணய ரோஷத்தால் கிட்டோம் என்று இருந்த தம்மைப் பொருந்தப் பண்ணின
வைசித்ரித்யத்தாலே
விருத்த விபூதி யுக்தனான படியை அநுஸந்தித்தார் –

——–

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7-

உயர்வற என்கிற பாட்டை -பரஞ்சுடர் உடம்பு -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்நலம் யுடையவன் எவன் அவன் -உயர்வற
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
உயர்வற அழுக்குப் பதித்த உடம்பாய்
உயர்நலமாவது பரஞ்சுடர் உடம்பாய்
ஆக உயர்வற உயர் நலம் யுடையவன் என்றபடி

பரஞ்சுடர் உடம்பாவது
சுத்த ஸத்வமான அசாதாரண திவ்ய விக்ரஹத்தை யுடையவனாய்
தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்-என்றபடி

அழுக்குப் பதித்த உடம்பாய்
குணத்ரய வஸ்யமான ஜகத் சரீரனாய் நின்றபடி

நீர் இது அறிந்தபடி என் என்ன
மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன் -அவித்யாதிகளை அறுத்து பக்தி ரூபா பன்ன ஞானத்தை
நிர்ஹேதுகமாக அருளியவன் தானே தன்னைக் காட்டக் கண்டேன்

எவன் அவன் அழுக்குப் படிந்த உடம்பிலே கரந்தும் -பரஞ்சுடர் உடம்பிலே தோன்றியும்
நின்றும்
இவற்றுக்கு அந்தர்யாத்மாவாய் புக்கு நின்றும்
இப்படி நிற்கச் செய்தே
யம் ஆத்ம ந வேத -என்று இவற்றுக்குத் தோற்றாதபடி நின்று இவற்றின் சத்தியை நோக்கியும் –

எவன் அவன் -காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து இருப்பாருக்குக் காணலாம் படி
ராம கிருஷ்ண அவதாரங்களைப் பண்ணியும் நூறாண்டு பதினோராயிரம் ஆண்டு நின்றும்

அவ்விடங்களில் கை தவங்கள் செய்தும்
க்ருத்ரிமத்தைப் பண்ணியும் -அதாவது
அவதரித்து நிற்கச் செய்தேயும் தன் படிகள் சிசுபாலாதிகளுக்குத் தோற்றாதபடி பண்ணியும்
ஆஸ்ரிதற்குத் தோற்றியும் -இப்படி இருக்குமவன் –

எவன் அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -ராஜஸ தாமஸ ரஹிதரான நித்ய ஸூரிகளுக்கு
நிர்வாஹகனானவனை

விண்ணோர் சிரங்களால் வணங்கும்
ப்ரஹ்மாதிகள் தலை படைத்த பிரயோஜனம் பெற்றோமே என்று வணங்கும் படியும்

ஸுசீல்யாதிகளும் ஸுலப்யாதி குணங்களும் கண்டு அனுபவிக்க -அயர்வறும் பாமரர்களும் வணங்கும் படியும்
திரு விண்ணகரிலே வந்து நிற்கிற உபகாரகன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

பிரான்
உபயாந்தரங்களிலே புகல் அறுத்து -உபேயாந்தரங்களை விஸ்மரித்துத்
தானே உபாய உபேயமான ரக்ஷணங்களைப் ப்ரகாசியா நின்ற சுடர் அடி

வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–
தொழுது எழு என் மனனே
அநேகம் காலம் அஸேவ்யனாய்ப் போந்த நீ ஸேவ்யன் பக்கலிலே ஸேவியாய்

வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–
எத்தனையேனும் தண்ணியரும் வந்து கிட்டலாம் படி ஸ்ரேஷ்டமான திருவடிகள் அல்லது

யாவருக்கும் –
எத்தனையேனும் தண்ணியருக்கும்
ப்ரஹ்மாதிகள் ஸநகாதிகள் முமுஷுக்கள் முக்தர் நித்யர் முதலானோர்க்கும்
அதிலும் பக்தருக்கு முற்பாடானாய் வந்து புகுகைக்கு வலிய புகல் இல்லை
அவனை ஒழிந்த சரண்யர் அடங்கலும் இவனைக் கொண்டு ஸம்ஸாரத்திலே முழுக்குகிற பேர்

இவனைக் கொண்டு கரை ஏற்ற வல்ல வலிய புகல் -எவன் அவன் -திருவடிகள் அல்லது இல்லை
அடியே பிடித்து ஜீவிக்கில் ஜீவிக்கும் அத்தனை அல்லது யாகையாலே
சுடர் அடி தொழுது எழு என் மனனே என்கிறார் –

————-

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

குரவை ஆய்ச்சியரில்
கிட்டி அனுபவிக்கப் பெற்றிலோம் என்கிற இழவு தீரக் கிருஷ்ண குண சேஷ்டிதங்களைக்
கிட்டித் தரித்து அனுபவிக்கப் பெற்றேன் என்று உகக்கிறார் –

——–

மண் மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற் றிட்டுப் போய்
விண் மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-

உயர்வற என்கிற பாட்டை -மண் மிசைப் பெரும் பாரம் நீங்க -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -மனுஷ்ய ஆனந்தத்தில் -அஹங்கார மமகாரங்களாலும் -காம க்ரோதங்களாலும் மிகுந்த
பாரம் பொறாமல் பூமிப்பிராட்டி ஸர்வேஸ்வரனுக்கு விண்ணப்பம் செய்ய –
பூ பார நிவாரண அர்த்தமாக அவதரித்து மண் மிசைப் பெரும் பாரம் நீங்க
விஸ்வம் பரை-என்றும்
ஷமை-என்றும்
புரை -என்றும் பேரை யுடைத்தாய்
பரிக்கக் கடவளான பூமியாலும் பொறுக்க ஒண்ணாதபடி இறே துர்வர்க்கம் திரண்ட படி –

த்ரிபாத் விபூதியில் -யத்ர பூர்வே ஸாத்யா –என்கிற பூர்வ ஸாத்ய ஆராதனர் உண்டாய்
இருக்கச் செய்தேயும் பாரம் இல்லை இறே -அஹங்கார ஸ்பர்சம் யுடையார் இல்லாமையால்
தங்கள் பரத்தை அவன் பக்கலிலே வைத்து இருக்கும் அவர்களே இறே அவர்கள்
இப்படி உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் அவன்
ஆனந்தாதி கல்யாண குணங்களுக்கு அடியான அபராத ஸஹனானவன்

ஓர் பாரதமாய்ப் பெரும் போர் பண்ணி அத்விதீயமான மஹா பாரதமாகிற மஹா யுத்தத்திலே
அர்ஜுனன் பந்து வதம் ஆகாது என்று வில்லை விழ விட்டு சோகிக்க
அவன் சோகம் ஆகிற மயர்வு அற மதிநலம் அருளினன்
அதாவது -பகவத் கீதை -18 அத்தியாயத்தில் -தர்ம அதர்மங்களை அருளிச் செய்து –
சோக நிவ்ருத்தியைப் பண்ணி யுத்தத்தில் மூட்டி

மாயங்கள் செய்து –
பகலை இரவாக்குவது -ஆயுதம் எடேன் என்று -ஆயுதம் எடுப்பது –
எதிரியுடைய மர்மத்தைக் காட்டிக் கொடுப்பது -அவற்றைச் செய்து மயர்வற மதிநலம் அருளினன்

மாயங்கள் ஆவன -மாயா வயுநம் ஞானம் -பிறப்பித்த பின்பு –

சேனையைப் பாழ்பட நூற் றிட்டுப் போய்
சேனையை வெறும் தரையாம்படி மந்திரித்து முடித்திட்டுப் போய்

விண் மிசைத் தன தாமமே புக
அயர்வறும் அமரர்கள் எதிர் கொள்ள அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தது –
பிரதிகூலரை நிரஸித்ததற்கு மேலே அவர்கள் இருந்த இடத்திலே இராதே
பரமபதத்தே போய்ப் புகப்பெற்ற படியே என்று உகக்கிறார்

மேவிய சோதி தன் தாள் நண்ணி நான் வணங்கப் பெற்றேன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
கிருஷ்ணனுடைய துயர் அறு சுடர் அடி -ஆஸ்ரிதர் கார்யம் தலைக்கட்டுகையாலே
துயர் அற்று வீர ஸ்ரீ யாலே தேஜோ ரூபமாய் விளங்கா நின்ற திருவடிகள் –

அதுக்கு மேலே நித்யர் முக்தர் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே -என்று
இருந்த இடத்திலே நண்ணி நான் வணங்கப் பெற்றேன்

எனக்கார் பிறர் நாயகரே-
க்ருத்வா பர அவதரணம் ப்ருதிவ்யாம் ப்ருது லோசன -மோஹயித்வா ஜகத் ஸர்வம் -என்கிறபடியே
பிரதிகூலரை அடங்கலும் உளவுகோலாலே விழ விட்டு
அனுகூலரை அடங்கலும் கண்ணாலே விழவிட்டுப் போனான்

கத ஸ்வ ஸ்தானம் உத்தமம்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே
எனக்கு யார் தான் நிகர் என்கிறார் –

—————-

துவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-

துவளில் மா மணியில்
பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வர தமக்கு
பகவத் விஷயத்தில் உண்டான அதி ப்ராவண்யத்தைச் சொல்லுகிறதாகையாலே
தம் படியை அருளிச் செய்கிறார் –

பின்னை கொல்?நில மா மகள் கொல்? திருமகள் கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–6-5-10-

உயர்வற என்கிற பாட்டை -பின்னை கொல் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வு மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
பகவத் வ்யதிரிக்த காமங்களில் ப்ரேம பரவசராய் இந்த லீலா விபூதியில் உயர்வும் தாழ்வுமாய் அற்றுப் போக
இவளுக்கு உயர்நலம் உடையவன் எவன் அவன் அவனால் அல்லது செல்லாத ப்ராவண்ய அதிசயத்தைக் கண்டு
பிராட்டிமாரில் ஒருத்தியே என்று தோழி சங்கித்ததாகச் சொல்லுகிறது ஆகையால் தன் முகம் –
தம் படியை அருளிச் செய்கிறார்

உயர்நலம் உடையவன் எவன் அவன் -பின்னை கொல் இத்யாதி
உகார வாஸ்யை யான பிராட்டி -அவளுக்கு நிழல் போல்வரான மற்றப் பிராட்டிமாரும் –
இம்மூவரும் கூடி வந்து ஒருத்தியாக அவதரித்தார்களோ
ஞான ஆனந்த ஸ்வரூபனான ஸர்வேஸ்வரனுடைய போக மஹிஷியான நப்பின்னைப் பிராட்டி பிறந்திட்டாளோ
அன்றிக்கே எல்லாருக்கும் இவ்வேற்றத்தைக் கொடுக்கும் பிராட்டி தான் பிறந்திட்டாளோ
ஸர்வேஸ்வரனுடைய ஸம்பத் ஆனவளோ -அது விளையும் பூமியோ அதின் பல ரூபம் ஆனவளே பிறந்தாளோ
அப்படி அன்று இவள் படி -பிராட்டி மூவருக்கும் இவள் படி இல்லாமையாலே
அவர் அவர்களுக்கு உள்ள ஏற்றம் எல்லாம் இங்கே காணலாகையாலே அவர்கள் ஒப்பு அன்று
லோகம் எல்லாம் வாழுகைக்கு இவள் ஒருத்தியும் பிறந்திட்டாளோ என்றுமாம் –

விஷ்ணு நா சத்ருஸோ வீர்யே -என்றால் போலே –
உபமானம் அசேஷணாம் ஸாதூனாம் யஸ் ஸதா பவத் -என்கிறபடியே
இவரை எல்லாருக்கும் ஒப்பாகச் சொல்லலாம் இவருக்கு ஒப்பாவார் ஒருவரும் இல்லை காணும்
இதுக்கடி என் என்ன
மயர்வற மதிநலம் அருளினன் -என்ன மாயம் கொலோ
மாயா வவுனம் ஞானம்
மயர்வற -பகவத் விபூதியில் அவித்யாதிகளைப் போக்கி
மதி நலம் -பக்தி ரூபா பன்ன ஞானத்தைப் பிறப்பித்து அருளினால் கூடாதது இல்லை யாகாதே

என்ன மாயம் கொலோ
இது என்ன ஆச்சர்யம் தான்
எவன் அவன் -இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
தன் பிச்சைக் கால் கடைக் கொண்டு அவன் பிச்சைச் சொல்லிக் கூப்பிடா நின்றாள்
மால் என்று பெரியோன் -அதாவது அயர்வறும் அமரர்கள் அமரர்கள்
தெளிவுற்று வீவின்றி நிற்கும் அமரர்கள் அதிபதி யானவன்
நெடுமால் -பராத்பரன் -துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்ன

அவனை நம்மால் கிட்ட விரகுண்டோ என்ன
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்-
பராத்பரனானவன் நம்மைப் பெறுகைக்கு எளிதாகத் திருத் தொலை வில்லி மங்கலத்திலே
எழுந்து அருளி நிற்பதாகிய கிருஷி பண்ணினபடி

இப்படி அவன் முற்பாடானாய் வந்த உபகாரகத்துத் தோற்று
சென்னியால் வணங்கீத் துயர் அறு சுடர் அடி தொழுது எழு
ஹேய ப்ரத்ய நீகமான திருவடிகளைத் தொழுது

அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–
திரு நாமம் கேழ்க்க செவி தாழ்க்க இதுவே இவளுக்கு மநோ ரதம்

இவள் அவ்வூர் என்கிறது
பெண் பிள்ளை சொன்னால் போலே இராமையாலே அவ்வூர் என்கிறாள்
ஸர்வ காரணங்களாலும் தொலை வில்லி மங்கலத்தை அனுபவிக்கிறாள்

—————–

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1-

மாலுக்கு -பதிகத்தில்
வையத்திலேயே பாஹ்ய ஸம்ஸ்லேஷ அபேக்ஷை பிறந்து அது பெறாமையாலே அவசன்னராய்
ஏறாளும் இறையோனில் -உடமாயிவர் வேண்டா என்கிறவை எல்லாம்
தன்னடையே போகிறபடியை அருளிச் செய்கிறார் –

உயர்வற என்கிற பாட்டை -மாலுக்கு வையம் -என்கிற பாட்டை விவரிக்கிறது
உயர்வற மனுஷ்யம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி பண்ணுகிறது
உயர் நலமுடையவன் -மாலுக்கு வையம் அளந்த மணாளன்
ஆனந்தாதி குண விசிஷ்டனாய் -ஸ்ருதி ப்ரதிபாத்யனான ஸர்வேஸ்வரனுக்கு

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
மால் என்று பெரியோன் என்றபடி
ஜெகதாகாரனானவன் ஜகத்துக்கு அந்நிய சேஷத்வத்தை ஒரு திருவடியாலே போக்கி –
ஸ்வ ஸ்வா தந்தர்யத்தை ஒரு திருவடிகளாலே போக்கினை படியைச் சொல்லுகிறது

வையம் அளந்த மணாளற்கு
பதிம் விஸ்வஸ்ய -என்றும்
கௌசல்யா லோக பர்த்தாரம் என்றும் சொல்லுவாருக்கு –

யுகாவாதாரை விடமாட்டாதவன் வ்யாமோஹம் -அழித்தாய் உன் திருவடியால் -உகந்த இவளை விடுமோ
இவளைத் தன் கால் கீழே இட்டுக் கொண்ட அச்செயலுக்குத் தோற்றுத் தன்னை எழுதிக் கொடுத்தாள்
இவள் ஒருத்தியுமே இறே
இவளுக்குப் ப்ரேமம் விளைந்தபடி என் என்னில்

மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன் -நீலக் கரு நிற மேக நியாயற்கு –
மயர்வற -தத் வ்யதிரிக்தங்களில் ஆசை அறுத்துத் தன் விஷயமான பக்தி ரூபா பன்ன ஞானத்தை அருளுகையாலே
அத்யந்தம் ப்ரேம பாரவஸ்யத்தாலே நெய்த்துக் கருத்த நிறத்தை யுடைய மேக ஸ்வ பாவற்கு

ப்ரயோஜன நிரபேஷமாகக் கொடுக்கையும்
கொடாத போது உடம்பு வெளுக்கையும்
வ்யாமோஹம் இன்றிக்கே ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவும் ஓவ்தார்யமும் இருக்கிற
இவ்வழகுக்குப் பிச்சேறின படி

அதன் மேலே -அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
கோலச் செந்தாமரைக் கண்ணன்
ஜிதந்தே புண்டரீகாக்ஷ -என்று
அஞ்ஞான கந்த ரஹிதரான நித்யரைக் தன் கண் அழகாலே தோற்பித்தால் போலே
தன் மேன்மையையும் கண் அழகையும் காட்டி யாயிற்று இவளை வசீகரித்தது

கோலச் செந் தாமரைக் கண்ணற்கு
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
என்று
என் ஏலக் குழலி இழந்தது சங்கே.–
தர்ச நீயமாய் வாத்சல்யத்தாலே விகாசாதிகளையும் உடைத்தான திருக்கண்களையும் யுடையவனுக்கு
தாமரைத் தடம் கண் விழிகளில் அகவலைப் படுத்தினவனுக்கு

என் ஏலக் குழலி
ஏலம் பரிமளிதமான திருவடிகளை சிரஸா வஹிக்கையாலும் -ஸர்வ கந்த -ஸர்வ ரஸ -என்கிறபடியே
என் கொங்கு ஏலக் குழலி -என்று நிரூபகமாய்த்து –

மது ஸ்யந்தியா நின்றுள்ள பூவை யுடைத்தாய் -நறு நாற்றத்தையும் யுடைத்தாய் இருக்கிற -இவள்
மயிர் முடி ஒன்றுக்கும் தோற்றுக் குமிழி நீர் உண்ணுமவன் கிடீர்
ஒன்றுக்கு ஒன்பது அபதானம் கிட்டி இவளை மயக்கிக் கலலாத வளையை அபஹரித்தான்

இழந்தது சங்கே.–
தனக்கு அடிமையாய்த் தொழுத கை வளையைக் கொள்வது தக்கதோ என்கிறாள் –

————

உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1-

உண்ணும் சோற்றில்
கீழில் திருவாய் மொழியிலே மோஹங்கதையான இவள் தசையைக் கண்ட திருத்தாயார்
இவள் வளையாதிகள் இழந்தபடியைச் சொல்லிக் கூப்பிட்டுத் தானும் மோஹிக்க
அவ்வளவில் பெண் பிள்ளை உணர்ந்து இங்குத்தைத் தரிப்பற்று அவன் எழுந்து அருளி இருந்த தேசமான
திருக்கோளூர் ஏறப் போனாள் என்று திருத்தாயார் சொல்லுகிற பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

உயர்வற என்கிற பாட்டை உண்ணும் சோறு என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
அன்ன பானாதி முதலானவை தாரக போஷக போக்யங்களாய் இருக்கையாலே அல்ப அஸ்த்ரமாய் அற்றது –

உயர் நலம் யுடையவனே இவளுக்கு
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் இறே
தத் வ்யதிரிக்தங்கள் அறியாள்

கொள்ள மாளா இன்ப வெள்ளத்துக்கு மேல் யுண்டாய் இவள் அவ்வருகு
ஒரு தாரகாதிகள் உண்டாய்த் தேடப் போனாளோ

உயர் நலம் யுடையவன் எவன் அவனே
கண்ணன் எம் பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்க
உயர் நலமான ஆனந்தாதி குண பரிபூர்ணனாய் ஸ்ருதி ப்ரஸித்தனானவன் யாவன் ஒருவன்
அவனே எம்பெருமான் ஆகிறான்
என்று இந்த ஸ்ம்ருதியே யாத்ரையாய் -அத்தாலே -ஆனந்த அஸ்ருவாய் -மல்க இருக்கிற இதுக்கு ஹேது –
அவன் மயர்வற மதி நலம் அருளினவன் –

எவன் தன்னுடைய ஞான பக்தி களே தாரகாதிகளாகப் போய்
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
லௌகிகரைப் போலே அன்ன பானாதிகளாலே தரித்து அங்கே புக்கு அவனாலே தரிக்கப் போனாளோ
அஹம் அன்னம் அஹம் அந்நாத -என்று இருப்பவருக்கும் அவ்வருகு போக வேணுமோ –

எல்லாம் கண்ணன் என்று இருக்கும் அவளுக்கு வேறு ஓன்று வேணுமோ
கணை நாணின் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன்னெஞ்சே ஓவாத ஊணாக யுண்
என்றும் இறே இருப்பது

கண்கள் நீர்கள் மல்கும் கண்ணும் அவள் முக விகாஸமும் அன்றோ எனக்குத் தாரகம்
என் ஜீவனத்தையும் கொண்டு போனாளே
அழுநீர் துளும்ப அலமர்கின்றனவோ வாழியரோ என்று மங்களா ஸாஸனம் பண்ணுகை இறே ப்ராப்தம்

மண்ணினுள்
விண்ணில் உள்ள-அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் தன்னுடைய அம்ருத ஆனந்தத்தை
அசராமல் புஜிக்கிற நித்ய முக்தருக்கு ஸ்வாமி யானவன்
மண்ணுனுள் புகுமூர் திருக்கோளூரே

அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் -இவள் இடையாட்டமாக அவன் நினைத்து இருப்பது –
விண்ணுளாரில் சீரியளான இவளை லபிக்கைக்காக வந்து இருக்கிறவன்
மண்ணினுள் புகுமூர்த் திருக்கோளூரே

அவன் -சீர் வளமிக்கவனூர் வினவி – லௌகிகர் எல்லாரும் யாவதாயுஷம் தாரகாதிகள்
ஸம்பாதிக்குமா போலே இவளும் அவன் சீரே யாவதாத்மபாவியாக தாரகாதிகளாகவும்
நிரவதிக ஸம்பத்து வைத்த மா நிதியாகவும் அவன் ப்ரஸாதமே பேறாகவும் போனாள்

சோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா -என்று
அவனோடு அவன் குணங்களோடு வாசி யற ப்ராப்யம் ஆகிறவோபாதி அவன் விரும்பின தேசமும்
ப்ராப்ய அந்தர் கதம் இறே

அவன் சீர் யாவதாத்மபாவி தாரகாதிகளானால் போலே துயர் அறு சுடர் அடி தொழுது எழுகையும்
போஷகாதிகளும் பூஷணாதிகளும் ஆய்த்து

வளம் மிக்கவனூர்
பரமபதம் கலவிருக்கையோ பாதி உகந்த விஷயத்தைப் பெறும் இடம் இறே ஊராகிறது

அயர்வறும் அமரர்கள் இருந்த இடத்திலே சென்று அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழுகைக்கு என் மனனே
திண்ணம் என் இளமான் புகுமூர் திருக்கோளூரே –என்கிறாள் —

———–

பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-

பொன்னுலகு ஆளீரோ -வில்
திருக்கோளூர் ஏறப் போனவள் முடியப் போய்த் தலைக்கட்ட மாட்டாதே
நகர உபவனத்திலே விழுந்து கிடந்தது ஆர்த்தராய் ஏக ரஸம் பற்றாசாகத் தூது விடுகிறார்

—-

பாசற வெய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக் குருகே! அருள் செய்தொரு நாள்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறு நோக்கிலள் பேர்த்து மற்றே.–6-8-8-

உயர்வற என்கிற பாட்டை -பாசற -என்கிற பாட்டு விவரிக்கிறது-எங்கனே என்னில்

உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஸம்ஸரித்துக் கர்ம பாசங்களாலே பத்தராய்
பசலும் குட்டிகளுமாகக் வாழா நிற்கச் செய்தே கர்மம் மாண்டு வாழ்வற்று நிற்கும்

உயர் நலம் உடையவன் என்று நித்ய ஆனந்த ஸ்வரூப னோடே நித்யர் முக்தர் களித்து ஆனந்தித்து இருக்க
அடியேன் ஒருவரோடும் கூட்டு அற்று இருப்பேனோ

பாசற எய்தி
என்னுடம்பில் பசுமை போய் வை வர்ணயம் மிகவும் பரந்தது
இன்னும் சில காலம் கழித்தால் அறிவிக்கிறோம் என்னும் அளவாய் இருந்ததோ என் தசை

இன்னே
என்னைக் கண்ட உங்களுக்குச் சொல்ல வேண்டா இறே
விஷயம் சாவதியாகில் இறே இது அளவுபட்டு இருப்பது –
இதுக்கு ஒரு பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது இறே -உடம்பைக் காட்டும் அத்தனை –

வினையேன் எனை யூழி நைவேன்
விஸ்லேஷமும் ஸம்ஸ்லேஷத்தோ பாதி யாகப் பெற்றிலேன்
அது காதா சித்கமாய் இது நித்தியமாய் இருக்கிற படி –

இதுக்கு ஹேது என் என்ன
நித்ய ஆனந்த ஸ்வரூபனாவான் யாவன் ஒருவன் -அவன் மயர்வற மதி நலம் அருளினன்
தன் நிர்ஹேதுக கிருபையாலே பக்தி ரூபா பன்ன ஞானத்தை இறே அருளினது –

அன்று முதல் எத்தனை யூழி நைவேன் -ஸைதில்யத்தோடே எத்தனை கல்பம் சென்றது

ஆசறு தூவி வெள்ளைக் குருகே
பழிப்பற்ற சிறகை யுடைத்தாய் பர துக்க அஸஹிஷ்ணு தைக்கு உறுப்பாய்
மநோ நைர்மல்யத்தை யுடைத்தாய் இருக்கிற படி

மதி நலம் அருளினவன் எவன் ஒருவனான கிருஷ்ணன் பிரிகைக்குப்
புறம்பு போல் உள்ளும் கரியான் ஆனால் போலே நீங்களும் கூட்டுகைக்கு உள்ளும் புறமும் நிர்மலமாய் இறுக்கியபடி

அவன் மதிநலம் அருளினது பிரிந்து துடிக்கைக்கு ஹேதுவானால் போலே யாகாதே
ஆசறு சோதி வெள்ளைக் குருகே அருள் செய்து ஒரு நாள்
ஒரு போது கிருபை பண்ணி அருளினிகோளே

ஆர்த்தியால் அலைகிற சமயத்திலே அஞ்சாதே என்று அருளப் பெற்றேன் என்ன

உமக்கு என் செய்ய வேணும் என்ன

அயர்வறும் அமரர்கள் அதிபதி -விஸ்லேஷ கந்த ரஹிதரான நித்ய ஸூரிகளுக்குப் போக்ய பூதனாய்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோன்
பழிப்பற்று நெய்த்து இருந்துள்ள மயிர் முடியை
அநந்த வைனதேயாதிகள் பேண இருக்கிறவனைக் கண்டு
துயர் அறு சுடர் ஆதி தொழுது எழுந்து இருந்து ஒரு விண்ணப்பம் செய்ய வேணும் என்ன

விண்ணப்பம் ஏது என்ன

ஏசறும்
ஒரு நீர்ச் சாவியிலே க்ருப அம்ருத வ்ருஷ்டியை வர்ஷியாதே கடலிலே வர்ஷிக்கிறாப் போலே
நித்ய விபூதியாரோ பெறுவது
லீலா விபூதியார் நிர்க்குணன் என்னாமே ப்ரஸாதத்தைப் பண்ண வேணும் என்றும்

நும்மை யல்லால் மறு நோக்கு இலள்
உம்மை ஒழிய வேறு குளிர்ந்த விழி இல்லை
விழிக்கும் கண்ணிலே நின் கண் மற்று அல்லால் வ்ருத்த கீர்த்தனத்துக்கு உம்மை ஒழிய
வேறு ஒருவரை யுடையள் அல்லள்

குண கீர்த்தனத்தால் தரிக்குமவள் அல்லள் -என் மனம் போலே இருக்கிற நீங்கள்
இவ்வளவும் அருளிச் செய்யுங்கோள் என்று குருகை இரக்கிறாள் –

————————-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-

நீராய் நிலனில்
தம் தசையைக் கண்டு தம் பரிசரத்தில் கால் எழுந்து போவார் இல்லை -என்று அறுதியிட்டு
ஈஸ்வரனுக்கு முகம் காட்டி அல்லது நித்ய விபூதியில் இருப்பு அரிதாம் படி
ஆர்த்தியாலே நிரம்பித்தது ஒரு கடல் கை எடுத்துக் கூப்பிடுமா போலே
பெரு மிடறு செய்து கூப்பிட்டார் –

———–

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பல நாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே!
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-

உயர்வற என்கிற பாட்டை -ஞாலத்தூடே என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
ஆர்த்த ப்ரபன்னன் -நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹமான அகாரத்தாலே அர்த்த பஞ்சகத்தை விவரிக்கிறது

உயர்வற-ஞாலத்தூடே
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யத்தைப் போக்குகைக்காக
த்ரிவிக்ரம அபதானத்தாலே எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்து நடந்தால் போலே
என் முன்னேயும் நடக்க வேணும் என்ன

அது உமக்கு காட்டுவது ஒரு தேச விசேஷத்திலே கொண்டு போய்க் காட்டுவோம் என்ன
அது தன்னை இங்கேயோ காட்டித்து இல்லையோ என்கிறார் –

அது ஒரு நாள் காதாசித்கமாகச் செய்தோம் என்ன

உயர் நலம் உடையவனான நீ யுகம் தோறும் ராம கிருஷ்ணாதிகள் அவதாரங்களைப் பண்ணி ரஷிக்கை
உனக்கு ஸ்வ பாவமாய் இருக்க -நான் நோவு படக் கடவனோ என்கிறார் –

ஞாலத்தூடே நடந்து
ஸதா தர்சனம் பண்ணுவார் முன்னே நடக்கக் கடவ நடையைக் காதாசித்கமாக வந்தாலும்
பாராதார் முன்னே கிடீர் நடந்தது
அந்தகன் முன் நடக்குமா போலே
அக்ரத ப்ரயயவ் ராம -என்று நடந்தும்

நின்றும்
அவஷ்டப்ய ச திஷ்டந்தம் தததர்ச தனு ரூர்ஜ்ஜிதம் ராமம் ரா
மானுஜஞ்ச சைவ பர்த்துச் சைவானுஜம் சுபா -என்று
தாரை உகந்து சொன்னபடியே ஆகர்ஷமாய் நின்றபடி

கிடந்தும்
பாஹும் புஜங்க போகாபம் உபதாயாரி ஸூதன -என்று
கடலை அனுவர்த்திக் கிடக்கிற கிடை தானே இலங்கை குடி வாங்க வேண்டும் படி இருக்கை

இருந்தும்
உபவிஷ்டம் ஸ்வ லங்க்ருதம்
உடஜே ராமமாஸீ நம் -என்று சொல்லுகிறபடியே இருக்கை

நீர் அறிந்தபடி என் என்ன
நீர் மயர்வற மதிநலம் அருளுகையாலே அறிந்து கண்டேன்

சாலப் பல நாள்
உன்னுடைய ரக்ஷணம் அநாதி அன்றோ
யுகம் தோறும் -ஸம்பவாமி யுகே யுகே -என்னுமா போலே

உயிர்கள்
அயர்வறும் அமரர்களான திருவடி திருவனந்த ஆழ்வான் பிராட்டி -இவர்களுக்காக அன்று கிடீர்
ஸர்வாத்ம ஸம் ரக்ஷணம் பண்ணுவது அன்றோ யுன்னது
அமரர்கள் அதிபதி என்று ஸ்ருதி ப்ரசித்தனானவன் யாவன் ஒருவன் அவன் காப்பானே
இவர்களுக்கு அழித்துக் கொள்ளுகை பணியானால் போலே இறே அவனுக்கு நோக்குகை பணியானபடி

அகாரத்தில் அவ ரக்ஷணே -என்கிற தாதுவாலே ஸர்வ வித ரக்ஷகத்வம் சொல்லிற்று
நான் கை வாங்கினேன்
இனிக் காவல் சோர்வு படாதபடி வேணுமாகில் நோக்கிக் கொள்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் யாவன் ஒருவன்
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரானவர்கள் பரிசர்யை பண்ண இருக்கிற கோலத் திரு மா மகளோடு
உன்னைக் கூடி இருக்குமவர்கள் உன் துயர் அறு சுடர் அடி தொழ
அடியேனும் அப்படித் தொழுது எழாதே

தாயும் தம்மப்பனும் சேர இருக்கக் கிட்டப் பெறாதே ஸ்தநந்த்ய ப்ரஜை
நாக்கு ஒட்டிக் கிடந்தது கிடைக்குமா போலே இருக்கிறது காணும்
இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்ய இறே இவருக்குப் ப்ராப்யம்

சாலப் பல நாள் இன்னம் தளர்வேனோ
முன்பு அநாதி காலம் இழந்தால் இன்னும் இழக்க வேணுமோ

இன்னம்
மயர்வற மதிநலம் அருளின உனக்கு அடியேனான பின்பும் தளர்வேனோ

துயர் அறு சுடர் அடி தொழுது எழ என்ற அடியேனும்
என் மனனும் சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ

இப்பாட்டில் அகார அர்த்தத்தை ஸ க்ரமமாக வ்யாக்யானம் பண்ணுகிறார் –
அவ ரக்ஷணே -இறே தாது
ரக்ஷிக்கும் இடத்தில் ஸர்வ பிரகாரமாக ரக்ஷிக்க வேணும்
அது தானும் ஸர்வ காலமும் ரக்ஷிக்க வேணும்
அப்படி ரக்ஷிக்கும் இடத்தில் ஸர்வ ரக்ஷகனாக வேணும்

இப்படி வரை அறாதே ரக்ஷிக்கும் இடத்தில்
ந கச்சன் ந அபராத்யதி -என்னும் அவளும்
என் அடியார் அது செய்யார் -என்னும் அவனும் கூடவாயிற்று
ஆகையால் இறே அகாரம் மிதுனத்துக்கு வாசகம் ஆகிறது –

உயர்வற ஞாலத்தூடே -இத்யாதியாலே
ஸர்வ பிரகார ரக்ஷகத்வம் சொல்லிற்று
உயர் நலமுடையவன் மயர்வற –சாலப் பல நாள் இத்யாதியாலே ஸர்வ கால ரக்ஷகத்வம் சொல்லிற்று
அயர்வறும் அமரர்கள் அதிபதி -கோலத் திரு மா மகளோடு உன்னை -என்கையாலே
ஸ்ரீ யபதியே ப்ராப்யம் என்கிறது
அகார விவரணமான திரு மந்த்ரார்த்தம் சொல்கிறது

உயர் நலமுடையவன் -கோலத்திருமா மகளோடு உன்னை -என்று ப்ரஹ்ம ஸ்வரூபம் சொல்லுகிறது
அடியேன் -என் மனனே -என்கையாலே ப்ரத்யகாத்ம ஸ்வரூபம் சொல்கிறது
அருளினன் -உயிர்கள் காப்பான் -என்கையாலே உபாய ஸ்வரூபம் சொல்கிறது
சுடர் அடி தொழ –உன்னைக்கூட -என்கையாலே பலம் சொல்லிற்று
மயர்வற –உன்னைக் கூடாதே தளர்வேனோ என்கையாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று

ஆர்த்த ப்ரபந்ந அதிகாரி ஸ்வரூபம் சொல்லுகிறது
அகாரத்தை விவரிக்கிறது உயர்வற உயர் நலம் உடையவன் -என்கிற பாட்டு

உயர்வற உயர் நலத்தை விவரிக்கிறது ஞாலத்தூடே என்கிற பாட்டு
எங்கனே என்னில்
அகாரத்திலே நாராயண பதம் விவரணம் ஆகையாலே ஸர்வவித பந்துவாய் ரக்ஷிக்கும் என்கிறது
இந்த ஸர்வவித ரக்ஷகத்வத்தால் அவன் உயர்த்தி சொல்கிறது

உயர்வு என்றது மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
மனிதர்க்குத் தேவர் போல் தேவர்க்கும் தேவர் என்கிறது
ஒருவரைப் பார்க்க ஒருவர் உச்சாரயம் என்கிறது -அந்த அர்த்தனத்தை உட்க்கொண்டு
ஞாலத்தூடே நடந்த என்கிறது

நடந்த -ஓங்கி உலகு அளந்தபடி
உயர்வற என்றது அந்நிய சேஷத்வம் ஸ்வ ஸ்வா தந்தர்யம் தவிர்த்த படி
ஆகையாலே ஸர்வ சேஷியானவனே ரக்ஷகன் என்றபடி

உயர் நலம் -ஆனந்தம் -அகாரத்திலே ஸர்வ வித ரக்ஷகத்வம் அவ ரக்ஷணே -என்கிற தாதுவாலே –
ரக்ஷகத்வமே ஸ்வரூபம் என்கிறது -அதாவது
த்ரிவிக்ரம அபதானத்தாலே ஜெகதாகாரதையை நடத்திக்காட்டி ஞாலத்தில் உள்ளார் எல்லாம்
அன்ய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் ஆகிற அஞ்ஞான அந்தகாரங்கள் -கட்க்கண்ணும் உட் கண்ணும் குருடாய்
அத்தை வெளிச் சிறப்பிக்கைக்காக உடையவன் ஆகையால் நடந்து நின்றும் –
நடந்த போது அவர்கள் எதிர் அம்பு கோர்த்தும்
நின்று சத்ரு நிரசனம் பண்ணி நின்ற போதும் ஸஜாதீய புத்தி பண்ணி அகன்றும்

எவன் அஞ்ஞரான சேதனர்களை அறிவில்லாமையைக் கண்டு கிடந்தும்
பாற் கடல் பள்ளி கொண்டு அருளும் இடத்து
நீள் நகர் நீள் எரி வைத்து அருளாய் என்று கூக்குரல் கேட்டு புறப்பட்டு அம்புக்கு இரையாக்கியும்
அவன் -அனந்த சாயியானவன் எழுந்து வந்து இருந்தும் நூறாண்டு பதினோராயிரம் ஆண்டு இருந்தும்
ஸர்வவித ரக்ஷணம் பண்ணிய இடத்து
வையத்து நின்னை வல்லவர் பழித்து இன் நடவாலே குருடு நீங்கிற்று இல்லை யாகையாலே
அகாரத்தாலே ஸர்வ அவஸ்தையிலும் ரக்ஷிக்கும் என்கிறது

ஆக அகார விவரணமான நாராயண பதத்தில் சொன்ன ஸர்வவித ரக்ஷகத்வத்தை
உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் -இப்படி லீலா விபூதியை நடத்துகிற ஸ்வாமியானவன்
எனக்கு மயர்வற மதிநலம் அருளினன் என்பதையே சாலப்பல நாள் என்கிறது
அகாரத்தில் ஸர்வ கால ரக்ஷகத்வத்தைச் சொல்லுகிறது

சோம்பாது பல்லுருவை எல்லாம் படர்வித்த என்கிறபடியே அகாரத்தில் பிரதம சதுர்த்தியாலே
சேஷத்வ ஞானம் பிறந்தவன் மதிநலம் ஆகிற பக்தி ரூபா பன்ன ஞானம் –
அகாரத்தில் கல்யாண குணங்களைச் சொல்லுகையாலே சர்வ குணங்களுக்கும் கிருபை காரணமாய் அற்றது

அகாரம் ஸர்வ சப்தத்துக்கும் காரணம் ஆகையால் தயமானவாய் ஸ்ருஷ்டிக்கையாலே
ஸ்ருஷ்டிக்கும் தயையே ப்ரேரகம் -கிருபையே காரணமாயிற்று

எவன் அவன் யுகங்கள் தோறும் காப்பானே -என்று கிருபா பாத்திரமான ஜீவ கோடிகளை சொல்கிறது –
காப்பான் என்று எதிர் சூழல் புக்கு இத்யாதிப்படியே காத்து ரக்ஷிக்கும் என்கிறது

ஆக அகாரத்தில் சதுர்த்தியாலும் -மயர்வற மதிநலம் அருளுகையாலும் -உயிர்கள் காப்பான் என்கையாலும்
சேதனருக்கு உட் கண்ணும் குருடும் தீர்ந்து தன்னைக்கண்டு அனுபவிக்கும் படி ஞான சஷுஸ்ஸை யும் கொடுத்து அருளி
ப்ரபாகாந்தரங்களிலே போகாத படி காத்து அருளிய படி
அகாரத்தில் சொன்ன ரஷய வர்க்கத்தை எவன் என்கிறது -அநந்ய கதியான அதிகாரி அகார வாஸ்யன் –
ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்தான் அவன் யாவன் ஒருவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி –
கடலில் அம்ருத தாஸிகள் அன்று
அமுதினில் வரும் பெண் அமுதுக்கு ஆராவமுதம் ஆனவனை அருந்தும் அமரர்கள்

கோலத் திரு மா மகளோடு உன்னை
ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷிதரான கோலம் -அகாரத்திலே லஷ்மீ ஸம்பந்தம் சொல்லுகையாலே
அகாரோ விஷ்ணு வாசக அர்த்தே லஷ்மீ வாசக -என்கையாலே உன்னைக் கூட என்கிறது

இனி வரும் ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்து -அத்தனையும் சரணாகதியிலே தீஷிப்பித்து
அத்தை பிராப்தி பர்யந்தமாக நடத்தி விரஜையிலே அவப்ருதம் ஆட்டி செய்த வேள்வியனைத்
திருவடிக்கீழ் குற்றேவல் செய்து இருக்கும் படி அருளினவன் யாவன் ஒருவன் அகார வாஸ்யனான
அயர்வறும் அமரர்கள் அதிபதி
அகாரத்தில் சொன்ன ஸர்வவித பல பிரதத்வம் சொல்கிறது -ஆர்த்தி ஹரத்வம் சொல்கிறது
நித்யர் முக்தர் பத்தர் முமுஷுக்கள் -அனைவருக்கும் ஸர்வவித பல பிரதானம் பண்ணி ஆர்த்தியைத் தீர்க்குமவன்
யாவன் ஒருவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
சுடர் அடி -ஆர்த்தி ஹரமாய் மநோ ஹரமாய் தேஜோ மயமான திருவடிகளை யுடைய உன்னைக் கூடாதே

கோலத்திருமா மகளோடு உன்னைக்கூடாதே
இச்சேர்த்தியிலே சேரப்பெறாதே -அகார விவரணமான ஸ்ரீ மன் நாராயணனைக் கூடாதே
துயர் அறு சுடர் அடி தொழாதே -துயர் துக்கம் பிரயாசம் -பிரயாசப்படாதே துயர் அறு
ஸூகரமான திருவடிகளை லபிக்கப் பெறாதே

சாலப்பல நாள்
கீழ் கழிந்த காலம் எல்லாம் போராமல் என் மனனே வாள்களாகி நாள்கள் செல்லக் கழிந்த காலம் போராதோ
அகார விவரணமான சரம சதுர்த்தியிலே சொன்ன சேஷ விருத்தியின் படியே தொழுது எழவன்றோ பிராப்தம்
அஞ்சலி பரமா முத்ரா என்று ஆர்த்த அதிகாரி லக்ஷணம் சொல்லா நிற்க
அது லபியாமல் அடியேன் இன்னம் தளர்வேனோ

அநாதி காலம் அஸேவ்ய சேவை பண்ணித் திரிந்தது போராதோ -இன்னம் தளர வேணுமோ
கர்த்ருத்வ போக்த்ருத்வ புத்தி பிறந்து அகன்று போகாமே துயர் அறு சுடர் அடி தொழுது
என் மனனே -என்று அருளிச் செய்து அருளினார் ஆயிற்று

உயர்வற என்றும் -ஞாலத்தூடே நடந்து உகந்து உயிர்கள் காப்பான் என்றும் -விரோதி ஸ்வரூபமும்
மது நலம் என்றும் உயிர்கள் காப்பான் என்றும் உபாய ஸ்வரூபமும்
அமரர்கள் அதிபதி -கோலத் திருமாமகளோடே உன்னை -என்று பர ஸ்வரூபமும்
தொழுது எழு என் மனனே -அடியேன் என்று ஸ்வ ஸ்வரூபமும்
உன்னைக் கூடாதே -தொழுது எழு -என்று ப்ராப்ய ஸ்வரூபமாக
அர்த்த பஞ்சகமும் சொல்லிற்று ஆய்த்து —

—————————–

உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1-

உலகமுண்ட பெரு வாயனில்
இப்படிக் கூப்பிட்ட இடத்திலும் முகம் காட்டாமையாலே அநந்ய கதிகராய்க் கொண்டு
பெரிய பிராட்டியார் புருஷகாரமாகத்
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார் –

————-

அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-

உயர்வற என்கிற பாட்டை -அகலகில்லேன் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -அகலகில்லேன் -கீழே தம்முடைய அபேக்ஷிதம் சடக்கென ஸித்திக்கைக்காக
பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்

ஆக ஒன்பது பட்டாலும் சரண்யன் ஸ்வரூபத்தைச் சொன்னார்
இதில் தம்முடைய ஸ்வரூபத்தைச் சொல்லி சரணம் புகுகிறார்

கீழே அடியேன் என்றும் அருவினையேன் என்றும் தன்னுடைய ஆகிஞ்சன்யத்தையும் சேஷத்வத்தையும்
அவனுடைய சரண்யத்வத்தையும் அதுக்கு உறுப்பாகச் சொல்லிக் கொடு போந்தார்
இங்கே அது சென்னையே பேற்றுக்கு உடலாகச் சொல்லி சரணம் புகுகிறார்

இப்பாட்டில் பதங்களை த்வயத்தில் பதங்களோடு ஓக்க யோஜித்துக் கொண்டு தலைக்கட்டக் கடவது

அதில் அர்த்த ப்ராப்தமான அஹம் அர்த்தத்தை இங்கு அடியேன் என்கிறது
இது பாட்டுப் பிரவேசம்

ஸ்ரீ உயர்வற அகலகில்லேன் -ஸ்ரீ மன் -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
ஒன்றுக்கு ஓன்று உயர்வும் தாழ்வுமாய் இருக்குமா போலே
உயர்வு என்று -உகார வாஸ்யையான பிராட்டிக்கு உயர்வும் தாழ்வுமாவது
அது அறுகை யாவது -உயர்வான மிதிலை குண்டின புரம் ஷீராப்தி அம்ருதம் தாமரைப்பூ இவைகள்
அதிசயமான பிறந்தகமாக இருக்க -அதில் ஸ்மரணையும் அற்று அவற்றை அகன்று விட்டு –
உயர் நலம் அகலகில்லேன் என்று இறையும் –

ஸ்ரீ -ஸ்ரீயதே -ஸ்ரேயதே -இதுக்கு அர்த்தம்
ஸ்ரீ யதே -தத் வ்யதிரிக்தங்களுக்கு ஸ்வாமிநி ஆகையாலே வந்த ஏற்றம் –
ஸ்ரயதே -என்கையாலே -சேஷியான ஸர்வேஸ்வரனுக்கு ஆஸ்ரிதையாய் சேஷமாய்
பரதந்த்ர ஏக பரையாகையாலே உயர்த்தி அற்ற படி –

உயர்நலம் என்கிறதும் அகலகில்லேன் என்கிறதும் ஸ்ரயதே என்கிறதும் –
பிறந்த அகங்களை விட்டுத் திரு மார்பை அகலகில்லேன் என்கிறாள் –

அகலகில்லேன் என்கிறவள் தான் யார் என்னில் –
நலமுடையவன் -ஸ்ரீ மன் -அலர்மேல் மங்கை உறை மார்பன் -என்று சொல்லப்பட்ட நலம்
அதாவது பூவில் மிருதுவும் மதுவும் மணமும் கிண் கிணி வாய்ச் செய்த பருவமும் செவ்வியும் கூட்டி
ஒரு பெண்ணாக வகுத்தால் போலே இருக்கிறவன் அகலகில்லேன் என்கிறாள்

ஸ்ரீ மன் நாராயணன் -நலமுடையவன் -மங்கை உறை மார்பன் -நித்ய அநபாயினி யான பிராட்டி
எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே என்கிற போக்யதையைப் பற்றச் சொல்கிறாள்

ஸர்வ கந்தஸ் -ஸர்வ ரஸ -என்கிற போக்யதையைப் பற்ற அகலகில்லேன் அகலகில்லேன் -என்கிறாள்

தாமரைகளுக்குள்ளே ஸுகந்தியாதிகளின் அளவு இறே –
அவனது ஸர்வ காந்தத்துக்கும் ஸர்வ ரஸத்துக்கும் நேர் நிற்க வற்றோ –
ஆகையாலே -இறையும் அகலகில்லேன் -என்கிறாள் –

எவன் அவன் என்று திவ்யாத்ம ஸ்வரூபம் சொல்கிறது –
வ்யாபகமும் ஸ்ரீ யபதியாயே வியாபிப்பது

ஆகையாலே உயர்நலம் உடையவன் யாவன் ஒருவன் அவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவன் –
எனக்கு மயர்வற மதிநலம் அருளி -சரணவ் சரணம் ப்ரபத்யே -என்று பற்றும்படி

நிகரில் புகழாய் -என்கிற வாக்யங்களாலே
புருஷகார சாபேஷனான அதிகாரியைச் சொல்கிறது –
புருஷகார சாபேஷமும் அதிகாரி சாபேஷமும் ஆனவன் என்று சரண்யனைச் சொல்கிறது –

புருஷகாரமுமாய் ப்ரபாயையுமாய் இருக்கும் என்று பிராட்டியைச் சொல்கிறது –
சரணவ்-திருவடிகளை
சரணம் -உபாயமாக
ப்ரபத்யே -பற்றுகிறேன்
என்றது அதிகாரி ஸ்வரூபம்

மயர்வற மதிநலம் அருளினன் என்றது -பக்தி ரூபா பன்ன ஞானமுடைய அதிகாரி

நிகரில் புகழாய் யுலகம் மூன்று யுடையாய் என்னை ஆள்வானே – என்ற அதிகாரி –

நிகரில் புகழாய் -என்றது ஸாத்ய உபாயங்கள் -ஸித்த உபாய பூதனானவனுக்கு ஸஹாயமாக வேண்டா என்கிறது –

நிகரில் -தத் ஏக உபாயமானவனே -என்றபடி
இந்த புகழை யுடையவன் யாவன் ஒருவன் அவன் மயர்வற மதிநலம் அருளினான்

உபாயாந்தரங்களை ஸ வாசனமாக விடுவித்து -அவனே உபாய உபேயம் -என்கிற ஞான ப்ரேமங்களை நிர்ஹேதுகமாக அருளினவற்றை இறே
நிகரில் புகழாய் -என்றது -அதாவது
சரணவ் சரணம் என்கிற தத் ஏக உபாயத்வம்

நிகரில் புகழாவது -நித்ய விபூதியில் நித்ய முக்தருக்கும் அதிபதியாய் இருக்குமதும்
ஸ்வேத தீப வாசிகள் ஸேவிக்க இருக்குமதும்
அயோத்யா வாசிகளுக்கு அபி ராமனாய் வசிஷ்டாதிகள் நடுவே இருக்குமதும்
த்வாரகையிலே யாதவர்கள் ஸேவிக்க இருக்குமதும்
நிகரில் புகழ் அல்ல

அந்தர்யாமித்வமும் கண் கொண்டு காண ஒண்ணாது -பிரமாண ப்ரஸித்தி அத்தனை
அவை ஒன்றுக்கு ஓன்று அதிசயமாகையாலே நிகராக இருக்கும்

இவர் நிகரில் புகழாய் என்றது
காகமும் வானரமும் வேடுமானவர்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலை

அதிலும் அவஸ்துவான எனக்கும் நிர்ஹேதுகமான அருளினை அருளுக்கு ஸத்ருசம் உண்டோ என்கிறார்
காகமும் வானரமும் நித்ய ஸூரி கோடியிலே யாம்படி யன்றோ என் நிலை
அவற்றுக்கு முகம் கொடுத்தது புகழ்
எனக்கு அருளினது நிகரில் புகழ்

கிருபா குணத்துக்கு வாத்சல்யாதிகள் நேர் ஆக மாட்டாது
எங்கனே என்னில்
கிருபை தானே ஸர்வ குணங்களுக்கும் காரணமுமாய் ப்ரேரமுமாகையாலே அருளினன் என்கிறதையே நிகரில் புகழாய் என்கிறது

ஆக
கிருபா பிரேரிகை பிராட்டி
கிருபா ப்ரேர்யன் எம்பெருமான்
கிருபா பாத்ரம் அடியேன்
ஆகையால் பகவானுக்கு வாத்சல் யாதிகள் புகழ் அல்ல
கிருபையே அடியவருக்குப் புகல் ஆகையாலே
நிகரில் புகழாய் என்றது காருண்யா ரூபயா என்றதையே –

ப்ரபத்யே -எவன் அவன் -உலகம் மூன்று யுடையாய் -என்னை ஆள்வானே –
இப்படி இருக்கிறவன் யாவன் ஒருவன் அவன் கிருபையாலே
வாத்சல் யாதி குண ப்ரவாஹம் ப்ரவஹிகையாலே மூன்று உலகமும் நிறைந்தது
என் அளவும் பூரித்தது

லோக்யத இதி லோகே -என்றதில் தாமும் ஒருவனாய் இருக்க
என்னை ஆள்வானே -என்றது
த்ரிவித சேதனரையும் அதிகார அனுகுணமாக நியமித்து
இவரை கிருபா அனுகுணமாக நியமித்தது
அத்யந்தம் பாரதந்தர்ய பரா காஷ்டையான -பூசும் சாணத்தில் படியே
தனக்குப் போக்யமாகக் கொண்டு அருளுகிறபடி

பத்தர் -லீலைக்கும்
முக்தர் கிருபைக்கும்
நித்யர் கைங்கர்யத்துக்கும் ஆனால் போலே
இவர் போக்யதைக்கே வடிவானவர்
ஆகையால் தன் உகப்பில் வருவார் இவர் ஒருவரே ஆகையாலே
என்னை ஆள்வானே -என்று அவனுக்கு நிரூபகம் ஆய்த்து –

உத்தர வாக்கியம் -ஸ்ரீ மதே நாராயணாய நம –அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் –
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே

ஸ்ரீ மதே -பெரிய பிராட்டியாரோடே கூட இருந்தவனுக்கு – அயர்வற -அசர்வு அற்ற அமரர்கள் –
அம்ருத ஆனந்த மக்நரானவர்கள் பரிசர்யை பண்ண வீற்று இருக்கும்
ஒண் டொடியாள் திருமகளும் நீயும் நிலா நிற்ப

நிகரில் அமரர்
ப்ரஹ்மாதிகள் அமரத்துவம் கர்மம் அடியாக வாகையாலே நிகர் உண்டு
இவருக்கு பகவத் அனுபவத்தால் வந்த அமரத்துவம் ஆகையால் நிகர் அற்று இருக்கும் –

முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானை
கடலில் அம்ருத தாசிகள் அன்று
நிகரில் அமரராவார் -அமுத்தினால் வரும் பெண்ணமுத்துக்கும் ஆராவமுத தாஸிகளான அமரர்

முனி முக்தர்
கணங்கள் பத்தர்
உயர்வற மயர்வற அயர்வற துயரற -என்று நித்யர் முக்தர் பத்தர் ஈஸ்வரன் இவர்கள் அடைப்பிலே துயர் தீர்ந்தது
உபய விபூதி நாதனான தனக்குத் திரு வேங்கட முடையானான பின்பு எல்லார் கடன்களும் வெந்தாய்த்து

ஆகையால் ருணம் ப்ரவர்த்தம் இவ என்றவன் ஆகையால் திருவேங்கடத்தானே என்று நிரூபகமாய்த்து

திரு வென்றது சீரிய நிதியாயும் அஹம் அந்நமாயும் விரும்பும் திருவேங்கடத்தானை
உலக்கங்களுக்கு எல்லாம் ஓர் உயிர் ஆனவனே

ஸ்ரீ மதே நாராயணாயா -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானை

நம -துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தானே

நம தொழுது எழு -உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் உடைய சேஷ பூதன் துயர் அறு சுடர் அடி யான் அது அடைய
அசரண்ய சரண்யனான உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
ப்ராப்யமும் அவன் ஆகையாலே மனனே தொழுது வர்த்தி என்கிறார்

————————————

ஆறாவது பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணமஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–ஐந்தாம் பத்து விவரணம்-

February 7, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-

கையார் சக்கரத்தில்
ஸம்ஸாரிகளிலே அந்நிய தமனான என்னை அவர்களையும் திருத்த வல்லேனாம்படி
நிர்ஹேதுகமாக விஷயீ கரிப்பதே என்று அவர் தம் பக்கலிலே பண்ணின உபகாரத்தை
அனுசந்தித்து இனியர் ஆகிறார் –

உயர்வற என்கிற பாட்டை -கையார் சக்கரம் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் தேவதாந்தரங்களைப் புகழா நிற்க –
அவை அற்று
உயர்நலம் உடையவனைக்
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்று
உயர்நலம் யுடையவனுடைய ஞான ஆனந்தங்களோ பாதி
அவன் சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏற்றினவன் அல்லேன்

உயர்நலம் உடையவன் யாவன் ஒருவன் -அவன் மயர்வற மதி நலம் அருளினன்

பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
அஹ்ருதயமான சொன்ன வசனத்தை ஸஹ்ருதயமாகச் சொன்னோமாகக் கொண்டு
மயர்வு -அஹ்ருதயம்
புத்தி பூர்வகமாகச் சொன்னேன் அல்லேன்

மதி நலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தை -அத்தாலே பிறந்த வ்யாமோஹம்
இதர விஷய விரக்தியைப் பிறப்பித்தது
பகவத் விஷயத்தில் ப்ரேமம் விளையும்படி -நிர்ஹேதுகமாக -விளையும் படி அருளினான் -எவன் அவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -எவன் அவன் -அவனாலே பெற்று ஒழிந்தேன்

அஞ்ஞான கந்த ரஹிதரான நித்ய ஸூரி ஸேவ்யன் முன்னே
அஞ்ஞான கார்யமான -பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
கைம்மை -மெய் கலவாத சுத்தப் பொய்
இத்தால் -பிறரைப் பகட்டுகிற பொய் அன்று -ஸர்வஞ்ஞனையும் பகட்டுகிற பொய் இறே சொல்லிற்று –

மயர்வற மதிநலம் அருளின கிருபை பெருகி -அஹ்ருதயமான யுக்தியை ஸஹ்ருதயமாக்கி
என் பக்கலிலே கிருபையை வர்ஷித்தான்
மயர்வற மதி நலம் பெறுகையாலே சப்தாதிகளைப் புறம் என்று பூர்வ விருத்தத்தைப் பார்த்துச் சொன்ன படி –

பரிபூர்ண விஷயத்துக்குத் தக்கதாகத் தமக்குப் போராமையாலே பொய் என்கிறார்
பரமபதத்துக்குப் போனாலும் இப்பேற்றை அசை இட்டு இருக்கும் அத்தனை

இனி இதில் காட்டில் ஏற்றம் செய்வது இல்லை என்ன
இதுக்கு ஹேது வில்லை என்னா நின்றீர்
பேறோ தான் கனத்து இரா நின்றது -இதுக்கு அடி என் என்ன

விதி வாய்க்கின்று
பகவத் கிருபை கரை புரளப் பெருகி துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ணா நின்றால்
நம்மால் செய்யலாவது உண்டோ –

துயர் அறு சுடர் அடி -பொய் சேர் -என்கிற துக்க கந்த ரஹிதமாய் -மெய்யான பரஞ்சோதி யானவன் –
தன் திருவடி தொழுது எழும்படி பரமமான கிருபை பெருகப் புக்கால் -அத்தைத் தகைவார் உண்டோ –

விதி வாய்க்கின்று காப்பார் யார்
வாய்க்கின்ற கிருபை மஹா ப்ரவாஹமாகப் பெருக்கு எடுத்த படி
விதி என்கிறார் பகவத் கிருபையை -விதியைத் தப்ப ஒண்ணாமையாலே –
வாய்க்கின்ற கிருபை பெருகி அடியேனை இழுக்கக் காப்பார் யார் –
என் மனனே -ஸ்வ தந்த்ரன் கிருபை காப்பார் யார்

ஏன் காக்க ஒண்ணாதோ என்ன
காப்பார் யார் என்றீரே -எதிர் சூழல் புகுத்தி திரிந்த இடத்தினும் தப்பின நீர் தான் காக்க மாட்டீரோ
நாம் தாம் ஸ்வ தந்திரம் அல்லோமோ -நம் கிருபையைத் தகைய சக்தி இல்லையோ
நம் மார்பில் இருக்கிறவன் இதைக் குறைக்கில் என்ன

ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–
கிருபா ஜநகை யாகையாலும்
கிருபா பரதந்த்ரனான உன்னாலும்
கிருபா பரவசனான என்னாலும் –காக்க முடியாது

இந்த கிருபா ப்ரவாஹத்தை -பல போக்தாவான என்னாலும் -பல ப்ரதனான உன்னாலும் –
பல வர்த்திகையான அவளாலும் தகைய ஒண்ணாது
தகைத்து தான் பார்க்கலாகாதோ என்கிறார்

மித்ர பாவேந என்கிற உனக்கு அஞ்ஞானம் -இவன் தோஷத்திலே விஸ்ம்ருதியும்
ஸர்வ சக்திக்கு இவனை விடும் இடத்தில் அசக்தியும் யுடைய கண்ணபிரானைத்
தொழுது எழு என் மனனே —

ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–என்று
ஹர்ஷத்தாலே உபகார சீலனைப் பார்த்து விண்ணப்பம் செய்து
தன் திரு உள்ளத்தைக் குறித்து உபகார ஸ்ம்ருதியாலே தொழுது எழு என்று உபதேசிக்கிறார் –

———-

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-

பொலிக பொலிக வில்
ஒன்றும் தேவு -கேட்டுத் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களா ஸாஸனம் பண்ணியும்
திருந்தாரைத் திருத்தியும் சொல்கிறார்

ஒன்றும் தேவிலே தான் திருத்திய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யைக் காண்கைக்காக
நித்ய ஸூரிகள் இங்கே வர
அவர்களையும் வ்யூஹ விபவ ஸ்தானீயரையும் கண்டு மங்களா ஸாஸனம் பண்ணுகிறார்

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3-

உயர்வற என்கிற பாட்டை -திரியும் கலியுகம் என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்தளவும் தேவதாந்தரத்தாலே வந்த உயர்த்தி அற்று
கலி தோஷத்தாலே தேவதாந்தரம் பண்ணித் திரிகிற உயர்த்தி அற்று

உயர்நலம் யுடையவன் எவன் அவன் -மயர்வற மதிநலம் அருளி ஆழ்வாரைக் கொண்டு
ஜகத்தைத் திருத்த
திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களைக் காண
தேவர்கள் தாமும் புகுந்து பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்

உயர்நலம் யுடைய ஞான ஆனந்த ஸ்வரூபனாய் ஞான குணகனாய் வேதைக சமைதி கம்யனாலே
மயர்வற மதிநலம் அருள வந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே பர உபதேசம் பண்ண –

அத்தாலே திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஆழ்வாருமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யைக் காண
வந்து புகுந்து அவர்களோடே கலந்து ஆதி கிருதயுகம் போலே பர ப்ரஹ்ம ஆனந்தம் பெருகும்படியாக
யாவன் ஒருவன் அருளினான் அவன் பொருட்டு அவர்களுக்கு
பொலிக பொலிக என்று மங்களா ஸாஸனம் பண்ணி உகக்கிறார்

அயர்வறும் அமரர்கள் அதிபதி அவனோடும் கூடி
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப்
அஸ்ப்ருஷ்ட கந்தரான நித்யரான வைகுந்தன் பூதங்களும்
தடம் கடல் பள்ளிப் பெருமாள் தன்னுடைப் பூதங்களும்
மாதவன் பூதங்களும்
கடல் வண்ணன் பூதங்களான நேமிப்பிரான் தமர் போந்தார்

இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
ஸர்வ துக்க கந்த ரஹிதமாய் தேஜோ ரூபமான பகவானுடைய திருவடிகளான
சடகோபனை சிரஸா வஹித்து
அந்த சடகோபன் திரு நாமமே உனக்கு தாஸ்ய நாமமாக வஹித்து இருக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சுடர் அடி தொழுது எழு

அந்தப் ப்ரீதிக்குப் போக்கு விட்டுப் பாடி ப்ரேம பாரவஸ்யம் இருந்த இடத்தே இருக்க
ஒட்டாமல் ஆடி எங்கும் இடம் கொண்டனவே

என் மனமே தொழுது எழு வர்த்தி
இஸ் ஸம்ருத்திக்கு மங்களா ஸாஸனம் பண்ணி சூழ்ந்து இருந்து ஏத்தப் பார் –

—————–

மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-

மாசறு சோதியில்
நண்ணாதார் முறுவலிப்ப -லிலே -ஸம்ஸாரிகள் படுகிற கிலேசத்தை அனுசந்தித்து
அதுக்குப் பரிகாரமாக பகவத் பாகவத ஞானத்தை உபதேசித்துத் திருத்தி
அதுக்கு உபகார ஸ்ம்ருதி பண்ணி
அநந்தரம் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களா ஸாஸனம் பண்ணி
இப்படி ஸம்ஸாரிகள் பேறு தலைக்கட்டின வாறே
ஏறாளும் இறையோனில் இழவு தலையெடுத்து
வழி அல்லா வழியில் மடலூர்ந்தாகிலும் கிட்டும் அத்தனை என்று கலங்கின படியைப் பேசினார்

கீழே பாகவத ஸம்ருத்திக்கு மங்களா ஸாஸனம் பண்ணினார்
மலியும் சுடர் ஒளி மூர்த்தியை -என்று வடிவு அழகையும் குணங்களையும் யுடையவனை
பாஹ்ய சம்ஸ்லேஷ அபேக்ஷை பிறந்து கையை நீட்டாக கைக்கு எட்டாமையாலே கலங்கி
மடல் எடுக்கையில் உபமிக்கிறார் –

இந்த உத்யோகத்தைக் கண்டா தோழியானவள் வந்து
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கக் கடவ உனக்கு சத்ருசம் அன்று
ஆஸ்ரித ரக்ஷணத்திலே தீஷிதனாய் இருக்கிற உன் நாயகனுக்கும் சத்ருசம் அன்று
நம் குடிக்கும் சேராது
மாசாய் விளையும் காண் -என்று
மடல் எடுக்கையை நிஷேதிக்கறதாய் இருக்கிறது

இத்தைத் தோழி சொல்ல அவளைப்பார்த்து நாயகி சொல்கிறாள்

உயர்வற என்கிற பாட்டை மாசறு சோதி விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் சாதனாந்தரங்களால் வந்த
தேவாதி சரீரங்கள் புண்ய ஷயம் ஆனவுடனே உயர்வு அறும்

உயர்நலம் உடையவன் எவன் அவன் மாசறு சோதியாய் ஞான ஆனந்த ஸ்வரூபனாய் வேதாந்த வேத்யனாய் சவுந்தர்யாதி குண சேஷ்டிதங்கள் எல்லாம் மாசு அற்றதாக இருக்கும் –

ஹேய பிரதிபடமானவன் –
என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
சிவந்த வாயோடே கூட அசலமானதொரு நீலகிரி போன்ற வடிவை யுடையவன் –

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -மாசறு சீலனான ஆதி மூர்த்தியானவன் –
மயர்வற மதி நலம் அருளுகையாலே வந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தால் பிறந்த ஆசையாலே
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே பாசற வெய்தி
என்னே வினையேன் எனை யூழி நைவேன்

அவன் நான் மடல் எடுக்க உத்யோகிக்க உத்யோகிக்க ஆக்கம் முற்றி
அவனுடைய வை லக்ஷண்யம் ப்ரகாசிக்கிறபடியாலே
எனக்கு அது தானே ஹேதுவாக அறிவு கலங்கி வருகிறபடியும் பாராய்

அவ்வளவு ஹேய ப்ரத்ய நீகன் காண் –
நான் மடல் எடாது இருக்கை அவ்வடிவுக்கு ஹேயம் காண்
அவ்வடிவை உக்காந்தார்க்குக் கொடான் என்னும் பழியையத் துடைக்கக் காண்
நான் பார்க்கிறது –

பக்தானாம் என்கிற வடிவைத் தனக்கு என்று இருக்கை மாசு இறே -என்ன
ஊரார் பழி சொல்லி ஏசுகை எல்லாருக்கும் குடிப்பழி யன்றோ என்று
மடல் எடாமல் தோழி நிஷேதிக்க

நான் அயர்வறும் அமரர்கள் அதிபதியான அந்த மாசறு சோதியிலே மாலாய் ஆசைப்பட்டு
துயர் அறு சுடர் அடி தொழுது எழுந்து
ஆதி மூர்த்தியை நாடியே என் மனமும் நானும்
பாசற வெய்தி அறிவிழந்தோம்

ஏசறும் ஊரவர் கவ்வை தோழி என் செய்யுமே
ஊரவர் கவ்வை எரு விட்டு -இத்யாதிப்படியே
எனக்கு அது தான் அன்றோ மடல் எடுக்கைக்கு ஹேது என்கிறாள் –

—————-

ஊரெல்லாம் துஞ்சி உல கெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறி ஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல் வினையேன் ஆவி காப்பார் இனியே.–5-4-1-

ஊரெல்லாம் துஞ்சி யில் —
பாரித்த படியே மடலூர ஒண்ணாத படி அஸ்தமித்தவாறே உசாத்துணையும் இன்றிக்கே
ராத்ரியில் விசனம் அனுபவித்தார் –

—-

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–

உயர்வற என்கிற பாட்டை -வெஞ்சுடரில் தானடுமால்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக –
திவா ராத்ரி விபாகம் அற ஊணும் உறக்கமுமாய் இருக்க
எனக்கு ஒருத்திக்குமே விடியாத இருளாயிற்றே

அது தானும் ஊழியாய்
வீங்கிருளின் நுண் துளியாய்
விரஹ அக்னியால் தஹிக்கிறது
அதனாலே இருளும் குளிர்ந்த பனியும் தஹியா நின்றது

லௌகிகர்க்கு திவா ராத்ரி விபாகமாய் காலம் கழிந்து உயர்வு அற்றது
எனக்கு உயர் நலம் யுடையவனைப் பற்றி இருக்கையாலே
இருளும் மோஹ அந்தகாரம் நெடுகா நின்றது –

உயர் நலமுடையவன் எவன் அவன் -அவன் ஞான ஆனந்த ஏக ஸ்வரூபன் ஆனவன் –
எனக்கு மயர்வற மதிநலம் அருளினவற்றால் வந்த பரபக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
யதா ஸூர்யஸ் ததா ஞானம் ஸந்த்ரோதய சமம் -என்று சொல்லுகிறபடியே

அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
தன்னுடைய தோற்றரவிலே துக்க நிவ்ருத்தி உண்டாம்படியான
அழகிய சுடரை யுடைய ஆதித்யனும் வருகிறிலன்

பிரளயத்தை நீஞ்சுவாரைப் போலே ராத்ரியையும் இருளையும் நீஞ்சிக்
கரை காணாமல் படுகிற படி

ஆதித்ய உதயத்துக்கு அருணோதயம் போலே அயர்வரும் அமரர்கள் அதிபதி
மோஹ அந்தகார ரஹிதமான நித்ய ஸூரிகளுக்கும் நித்ய ஸூர்யனாய்
ஹேய ப்ரதிபடனானவன் எவன் அவன் ஸூர்ய மண்டல வர்த்தியான
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அஷிணீ -என்கிறபடியே
ஆதித்ய மண்டலத்தில் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ யப்பதியும் வருகிறிலன்

சிவந்த புகரை யுடைய தாமரை போன்ற கண்களை யுடைய ஸ்ரீ மானும் வருகிறிலன்

ஆதித்யன் வருகிறிலன் –ஆதித்யன் வந்தாலும் இருள் வர சம்பாவனை உண்டு இறே –
அஸ்தமிதியாத ஆதித்யனும் வருகிறிலன்
ஸூர்ய பிரகாசம் ப்ராதேசிகமாய் இருக்கும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நித்ய ஸூரி சேவிதமான ஸூர்யன்
உபய விபூதிக்கும் ப்ரகாசத்தைப் பண்ணுகிற ஆதித்யன் இறே
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்னக் கடவது இறே

ஸ்ரீ மானான நாராயணன் சுடர் அடி -துயர் அறு சுடர் அடி தொழுது எழாமல் இருந்த என் மனனே –
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–
ஆந்தரமான மநோ துக்க அந்தகாரத்தைப் போக்குவார் யார்
பாஹ்ய அந்தகாரம் போக்கும் ஆதித்யனும் வருகிறிலன்

ஆந்தரமான துக்க அந்தகாரம் வைரம் பற்றின இருள் இறே
அத்தைப் போக்கும் போது நிலவனுமாய் அந்தரங்கமானவனே வேணும்
ஞானமாகி ஞாயிறாகி -என்னக் கடவது இறே

நின்று உருகுகின்றேனே –
விலக்ஷண விஷயம் உருக்க உருகுகிறது
தர்மி லோபம் பிறக்கவும் ஒட்டாது இறே
இன்னமும் ஒருக்கால் காணலாமோ என்கிற ஆசையாலே இழவு ஜீவிக்க ஒட்டாது என்கிறார் –

——–

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.–5-5-1-

எங்கனேயோ வில் –
இங்கன் அதி மாத்ர ப்ராவண்யம் ஆகாது என்று நிஷேதிக்கிற தாய்மாரைக் குறித்து
உங்கள் ஹித வசனம் கேட்க ஒண்ணாத படி பண்ணா நின்றது -நம்பியுடைய வடிவு அழகு என்று
பண்டு அனுபவித்த நம்பியுடைய அழகு மறக்க ஒண்ணாத படி நெஞ்சிலே கிடைக்கையாலும்
இப்போது அனுபவிக்கப் பெறாமையாலும் -ப்ரீதி அப்ரீதி சமமாகச் செல்கிறது

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக் கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10-

உயர்வற என்கிற பாட்டை கழிய மிக்கதோர் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்தளவாக
காதல் அளவு பட்டு இருக்கும் இறே
அங்கன் அன்றிக்கே
உயர் நலம் யுடையவன் இடத்தில் காமம் பகவத் ஆனந்தாதிகளிலும்
கழிய மிக்கதோர் காதல் -இதர விஸஜாதீயமான காதல்

அன்றிக்கே
நாள் கழிய கழியப் பெருகி வருகிற காதல்

சோ கச்ச கில காலேந கச்ச தாஹ்யப கச்சதி மம சா பஸ்யத காந்தாம் அஹன்யஹநி வர்த்ததே

நாட்டார் அபிமத விஷயத்தைப் பிரிந்த நாள் ஒரு படியும் பின்பு ஒரு படியாய் மறந்து போகா நிற்பர்கள்
அங்கன் இன்றிக்கே -நாள் செல்ல செல்ல சோகம் பெருகி வாரா நின்றது –
அன்னை காணக் கொடாள்
இவள் ஒரு விஷயத்திலே காதல் பண்ணக் கண்டேனாக வல்லேனோ என்று
இருக்கிறவளும் காண ஒட்டு கிறிலள்

ஆனால் இப்போது இங்கன் படுகிறது என் என்னில்
தர்மி லோபம் வரும்படி பிரவணையாக ஒட்டார்களே
ஆச்சர்யம் உண்டாய் மேல் நடக்க வேணும் என்று இருப்பார்களே –
காண்கை யாவது அனுசந்திக்கை
நெஞ்சு என்னும் உள் கண் -என்னக் கடவது இறே
நெஞ்சையும் கூட வாய் கட்டா நின்றாள் என்ன

உனக்கு இக்காதல் விளைந்தபடி என் என்ன
மயர்வற மதி நலம் அருளினன்
உங்கள் இடத்தில் ஆசையான மயர்வை அறுத்து
ஆனந்தாதி குண விசிஷ்டனைப் பற்றின காதல் மிக்கது

உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் -மதிநலம் அருளினவன் எவன் அவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை
மதிநலமான பக்தி ரூபா பன்ன ஞானம் அருளப் பெற்ற நான் கண்ட பின்

வழுவில் கீர்த்தி -குறைவற்ற கீர்த்தி
அக்கீர்த்திக்கும் அவனுக்கும் பிரிய ஸ்திதி இல்லாதால் போலே
அவனை ஒழிய ஸ்திதி இல்லாத நான் கண்ட பின்

அயர்வறும் அமரர்கள் அதிபதியை
குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தராய் அபர்யாப்த்த அம்ருத தாஸிகளான
குழுமித் தேவர்கள் கூட்டம் கூட்டமாய் திரள் திரள அவர்கள்
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே கை கோர்த்துக் கொண்டு சவுந்தர்ய அம்ருத சாகரத்தில் இழிவார்கள்

அவயவ சோபை -ஆயுத சோபை -ஆபரண சோபை -ஸ்வரூப ரூப குண விபூதிகள் ஆகிற சுழிகளிலே
அமிழ்ந்து நீந்தி நீந்தி சேஷ வ்ருத்திகளைப் பண்ண இருக்கிறவன்
திருக்குறுங்குடியிலே ஸகல குண ஸம்பூர்ணனாய் வந்து நின்ற நம்பியை அபூரணனான நான் கண்டபின் –

துயர் அறு சுடர் அடி தொழுது எழுகை
தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர் உரு
ஹேய பிரதிபடமாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளிலே கைகள் ஆரத் தொழுது எழு என் மனனே என்று
என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–
நித்ய ஸூரிகள் நடுவே தோன்றுமா போலே என் நெஞ்சுக்குள்ளே பிரகாசியா நின்றது

ஆர்க்கும் அறிவு அரிதே
எனக்கு மறக்க ஒண்ணாதாப் போலே ஆயிற்று –
ஸ்வ யத்னத்தாலே அறிவாருக்கு அறிய ஒண்ணாது இருக்கிற படி என்கிறார்

————–

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத் தீசன் வந்து ஏறக் கொலோ?
கடல் ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல் ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1-

கடல் ஞாலத்தில்
அப்ரீதி அம்சமே தலையெடுத்து ஆற்றாமையால் அணுகரித்துத் தயாரிக்கிறார் –

——–

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-

உயர்வற என்கிற பாட்டை கூந்தல் மலர் மங்கைக்கும் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தத்து அளவும் ஸ்வர்க்காதி லோகங்கள் -உத்க்ருஷ்டமான ரத்நாதிகள் –
ரஸவத் பதார்த்தங்கள் -வேத சாஸ்த்ராதிகள் -பிரம ருத்ராதிகளான தேவர்கள்
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹாராதிகள் எல்லாம் நானே செய்தேனே என்று தன்னை
ஜகத் காரணனான ஸர்வேஸ்வரனாக அநு கரித்து இருக்கக் கண்ட
திருத்தாயாய் வினவ வந்தாருக்குச் சொல்கிறாள்

உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன்
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்-குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
கூந்தல் மலர் மங்கைக்கும் –சர்வேஸ்வரனுடைய ஐஸ்வர்யத்துக்கு ஹேது பூதையாய் இருக்கும் -பெரிய பிராட்டியார்
மண் மடந்தைக்கும்-அதுக்கு விளை பூமியாய் இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டியார்
குல ஆயர் கொழுந்துக்கும் -அதனுடைய பல ரூபையாய் இருக்கும் நப்பின்னை பிராட்டியார்
கேள்வன் தன்னை–ஆக உகார வாஸ்யைகளான இவர்களை யுடையன் என்கிறது –
இவர்களுக்குப் பதியாய் உள்ளவனை

இத்தால் ஓர் அவதாரம் மாத்ரம் அன்றிக்கே
உபய விபூதி நாதனான பூர்ண விஷயத்திலே அநு கரிக்கிறாள் என்று தோற்றி இருக்கும் படி –

இதற்கு ஹேது
உயர்வற உயர்நலம் யுடையவன் யாவன் ஒருவன் அவன் மயர்வற மதிநலம் அருளினவன் ஆகையால்
வாய்ந்த வழுதி வளநாடன்
மயர்வற -அவித்யாதிகள் வாஸனையோடே அற்று
மதிநலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே அனுகரித்துத் தரிக்கப் பார்த்துக் கிட்டின படி
அதாவது
பாவநா ப்ரகர் ஷத்தாலே ஸாஷாத் கரிக்கை

மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்த
அமரர்கள் அதிபதி துயர் அறு சுடர் அடி தொழுது
நித்ய ஸூரி நிர்வாஹகனானவன் வரையாதே ஸர்வ ஸமாஸ்ரயணீயமான திருவடிகளை ஆஸ்ரயித்து
இருக்கும் அடியாரைப் பூசிக்க நோற்றார்களே

இந்த லோகத்திலே எல்லாரும் கொண்டாடும்படி ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை யுடையராய்
ஸ்ரீ மத் புத்ரர்களை ஆராதிக்கப் பெறுவார்கள்

ஆழ்வார் பகவத் பாகவதர்களை ஆராதித்த படி இவர் அனுகாரத்தாலே ஸ்ரீ யபதிக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும்
பிரியமாகத் தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்மாலைகள் சொன்னபடி
இது கற்றவர்களுக்கும் பகவத் பாகவதருக்கு பிரியமான வ்ருத்தி பண்ணி இருக்கப் பெற்றவர்கள்

இப்பத்தைக் கற்றவர்கள்
சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று இருக்கப் பெறுவார்கள் –
இப்படி அனுகரித்து அனுபவிக்கிறார்

கர க்ருதம் அபராதம் ஷந்தும் அர்ஹந்தி சந்த –

————

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-

நோற்ற நோன்பிலே
இப்படி அனுகரித்த அளவிலும் வந்து முகம் காட்டாமையாலே
தானே உபாய அனுஷ்டானம் பண்ணி வருகிறாள் என்று இருந்தவனாக வேணும் என்று நினைத்து
தம்முடைய உபாய சூன்யதையேச் சொல்லி
வான மா மலை திருவடிகளில் வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புக்கார் –

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மா மலையே! அடியேன் தொழ வந்தருளே.–5-7-6-

உயர்வற என்கிற பாட்டை -ஏனமாய் நிலம் கீண்ட-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
ஸாஸ்த்ர பலம் ப்ரயோத்த்ரி -என்று தம் தாம் உபாய அனுஷ்டானத்தாலே பலம் பெறா நிற்க
உமக்கு இப்படி உபாயம் உண்டோ என்ன

உன்னுடைய உயர் நலத்துக்குத் தக்க உபாயம் உண்டோ -என்கிறார்
உயர் நலம் யுடையவன் யாவன் ஒருவன் அவனே எனக்கு உபாய உபேயங்கள் இரண்டும் என்கிறார்
நோற்ற நோன்பிலேன் -என்று உபாய சூன்யத்தை அருளிச் செய்து
இங்கே கைங்கர்யத்தை அபேக்ஷிக்கிறார் –

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
ஆபன்னரானார் -அறிவிக்கையும் மிகையாம் படி அன்றோ உன் படி இருப்பது
ரக்ஷணம் ஒரு தலையானால் உன்னைப் பேணாதவன் அன்றோ –

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா!
மஹா வராஹமாய் -பிரளயம் கொண்ட பூமியை எடுத்தாய்
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
ஸம்ஸார பிரளயம் கொண்ட என்னை எடுத்து
மயர்வற மதிநலம் அருளி
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே உன் படியை அறிவித்து

பிரளயம் கதையான பூமிக்கு உதவியது
தமக்கு உபகரித்ததாய் இருக்கிற படி

என் அப்பனே கண்ணா
என்னுடைய ரக்ஷணத்துக்கு ஏதேனும் முகம் பண்ண வேணுமோ
என்னுடைய ரக்ஷணத்துக்கு ஒரு கோலம் கொள்ள வேணுமோ
கண்ணன் கோள் இழை வாள் குணம் இறே இவருக்கு ரக்ஷகம்

என்றும் என்னை ஆளுடை வான நாயகனே
மயர்வற மதிநலம் அருளினவன் யவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
தனக்கு ஈடானரோடு இருக்கும் போது இவர் இடையாட்டமாய்த்து ஆராய்ந்து போருவது

இவர் சத்தத்தையே தொடங்கி கைக்கொண்டு நோக்கிக் கொண்டாய்த்து போருவது

மணி மாணிக்கச் சுடரே
இவர் உளரான பின்பு ஓர் ஏற்றம் பண்ணிக் கொடுக்கை அன்றிக்கே
அடியே பிடித்து நோக்கிக் கொண்டு போந்து
மயர்வற மதி நலம் அருளி
இச்சை பிறந்தவாறே -அவ்வளவிலே -அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
நித்ய ஸூரிகளுக்கு விடும் படியையும் இவருக்கு விட்டான்

மணி மாணிக்கச் சுடரே
ரத்ன ஸ்ரேஷ்டம் என்னுதல்
மணியினுடையவும் மாணிக்கத்தினுடையவும் தேஜஸ்ஸை யுடைத்தாய் இருக்கை என்றுமாம் –

அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ
தேனை யுடைத்தான -மாம் பொழிலை யுடைத்தாய் -ஸ்ரம ஹரமான ஸ்ரீ வர மங்கலத்தில் உள்ளார்

அடிமை செய்ய வீற்று இருக்கிற
ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்தைச் செய்ய எழுந்து அருளி இருக்கிற வான மா மலையே
உன் துயர் அறு சுடர் அடி தொழுது எழ -வான மா மலை யத்ருப்த அம்ருத ரூபரான நித்ய ஸூரிகளை
அடிமை கொண்டு இருக்கிற வேண்டப்பட்டு போலே காணும் இங்குள்ளார் அடிமை செய்ய இருக்கிற இருப்பும்

வான மா மலையே உன் துயர் அறு சுடர் அடி அடியேன் தொழுது எழும்படி வந்து அருளே

விஸ்லேஷ கந்த ரஹிதமாய் -ஸம்ச்லேஷ வர்த்தகமாய் நிரவதிக தேஜஸ்ஸை யுடைய திருவடிகளிலே
சேஷபூதனான நான் அடிமை செய்து வாழும்படிக்கு ஈடாக என் முன்னே நாலடி நடந்து வர வேணும்

அடிமை செய்கையாவது
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி -என்னுமா போலே
அந்நடை அழகு கண்டு மங்களா ஸாஸனம் பண்ணுகை

வந்து அருளே
என் கண் வட்டத்திலே உலாவி நின்று அடிமை கொள்ள வேணும் என்கிறார் –

———-

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-

ஆராவமுதில்
அங்கு சரணம் புக்க இடத்திலும் தம் அபேக்ஷிதம் பெறாமையாலே திருக்குடந்தை அளவும் வந்து –
ஆராவமுத ஆழ்வார் திருவடிகளிலே விழுந்து கூப்பிட்ட இடத்திலும்
இவரைக் குளிரக் கடாக்ஷித்தல் வினவுதல் செய்யக் காணாமையாலே
இன்னும் எத்தனை திருவாசல் தட்டித் திரியக் கடவேன் என்று அவாப்தியோடே தலைக்கட்டினார்

உயர்வற என்கிற பாட்டை ஆராவமுது விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்நலமுடையவன் எவன் அவன்
ஸ்ரீ யபதியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் -ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனான ஸர்வேஸ்வரன்
செத்தனர் இடத்திலே ஒரு கிருபை ஜனித்துத் திரு உள்ளம் பற்றுகிறபடி

நாம் அம்ருத ஸ்வரூபனாய் இருக்க -சேதனரும் அம்ருத ஸப்த வாஸ்யராய் இருக்க –
அம்ருதந்திவி -என்று நித்ய விபூதியும் அம்ருதம் என்ற பேராய் இருக்க
நாம் அம்ருத ப்ரதானாராய் இருக்கிற இருப்பை நித்ய முக்தர்கள் அனுபவித்து அம்ருத மக்நராய் இருக்க

லீலா விபூதியார் இழக்க ஒண்ணாது என்று -அவர்களைத் திருத்திக் கரை மரம் சேர்த்து
அவர்களும் அவர்யாப்த அம்ருதத்தைப் புஜிக்கத் தக்கதாக ஒருவரை உண்டாக்குவோம் என்று பார்த்து
ஆழ்வார் இடத்திலே திரு உள்ளம் பற்றி அவருக்கு மயர்வற மதிநலம் அருளி
ஆழ்வாரும் மயர்வற மதி நலம் அருளப் பெற்று அபர்யாப்த்த அம்ருதத்தை அனுபவித்து –
அனுபவ கர்ப்ப உபதேசம் பண்ணுகிறார்

உயர்வற உயர் நலம் என்பது –ஆராவமுதே -என்றபடி
உயர்வு -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தம் அளவாக
ஒருவர் ஆனந்தம் ஒருவருக்கு இன்றிக்கே இருக்கும் –
அதுவும் அல்பம் ஆய்த்து -ஆகையாலே பர ப்ரஹ்ம ஆனந்தத்தை ஆராவமுது என்கிறது –

எவன் அவன் ஆராவமுதே -என்கிறவன் -உன் அழகாலே என்னை உருக்குகிற உன்னைக் கண் வளரக் கண்டேன்
குளிர நோக்குதல் -அணைத்து அருளுதல் -செய்யக் காண்கிறிலேன் -என்கிறார்

ஆராவமுதே
அனுபவியா நின்றாலும் க்ரம பிராப்தி பற்றாத விஷயத்தைப் பிரிந்தார் எங்கனே ஆறி இருக்கும் படி
முற்பட தர்சனமாய்
அநந்தரத்திலே அணுகிப்
பின்னை ஸ்பர்சமாய் –இப்படி இறே அனுபவ பிரகாரங்கள் –
அத்தனை க்ரமம் பார்த்து இருக்க ஒண்ணாத படியாய் இருக்கை

நலமுடையவன் என்று -ஆனந்த குண நிரூபகம் -ஆராவமுதே என்று நிரூபகம்
உயர் நலம் என்றும் அபர்யாப்த்த அம்ருதம் என்றபடி

எவன் அவன் -ஆராவமுது
கடலில் உப்புச்சாறு குடிப்பார்க்குத் தேவ யோனியிலே பிறக்க வேணும் -ப்ரஹ்ம சர்யம் அனுஷ்ட்டிக்க வேணும் –
இத்தனையும் பட்டால் ஸக்ருத் ஸேவையாய் இருக்கும்

இது அங்கன் அன்றிக்கே ஸர்வாதிகாரமாய் -ஸதா ஸேவ்யமுமாய் –
ப்ரஹ்மசர்யாதி வைகல்யம் உண்டானவையும் தானே பரிக்ரஹிக்கக் கடவதாய் இருக்கும்

அடியேன் எவன் அவன் -சுருதி பிரசித்தமான திவ்யாத்ம ஸ்வரூபனாய்
அபார்யாப்த்த ஆனந்த ஸ்வரூபவனானவனுக்கு -அடியேன் -சேஷபூதன் –
சேஷத்வ அம்ருத வாஸ்யனான அடியேன் –

ஆராவமுதே -என்று சம்போதிக்கையாலே அம்ருத ஆனந்த ஸ்வரூபனான சேஷி யானவன்
இவனை மேல் மேல் என பர்யாப்தி பிறவாத படி திருஷ்ணையை விளைவிக்கிற படி –
அபர்யாப்த்த அம்ருதம் என்றால் பரியாப்தி பிறவாது இறே தனக்கும் தன் தன்மை அறிவரியான் இறே

ஆராவமுதே -இத்திருவாய் மொழியிலே இவருக்கு உண்டான ஆற்றாமைக்கு எல்லாம் பீஜம் இப்பதமாய்த்து

அடியேன் -மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஸ்வரூபத்தால் சொல்லுகிறார் அல்லர்
போக்யதைக்குத் தோற்றுப் புல் கவ்விக் சொல்கிறார்
பரவாநஸ்மி -என்கிறவர்
குணைர் தாஸ்யம் உபாகத -என்றாப் போலே

உடலும் நின்பால் அன்பாய
சேஷத்வம் ஆத்மாவுக்கு ஸ்வரூபமானால் தேகம் அதற்கு விரோதியாய் நிற்கும் நிலை குலைந்து
அஹம் என்று இருக்கக் கடவ இவர் தாம் அடியேன் என்றது விஷயத்தினுடைய போக்யதா அதிசயம் இறே

அப்படியே சரீரமும் விஷயாதீனமாக அழிந்த படி
உடலும் -என்கிற அபி சப்தத்தாலே அடியேன் சேதனன் ஆகையாலும்
மயர்வற மதிநலம் அருளுகையாலும் அருளின பக்தியாலும் –
பக்தி ரூபா பன்ன ஞானமானது -பெருகுமால் வேட்க்கையாலும் -உருக அடுக்கும்
உடலும் -அசேதனமான சரீரமும் உருகின படி

அப்படி அருளினவன் யவன் ஆராவமுதான நின்பால் அன்பாயே
அன்பு தான் வடிவு கொண்டால் போலே யாய்த்து
சேஷத்வ ஆகாரனான ஆத்மாவைத் தன் வழியே இழுக்கை தவிர்ந்து அதன் வழியே தான் ஒழுகா நின்றது

ஆக
ஞான மயமான ஆத்மாவாதல்
அதற்குத் தோள் தீண்டியான ஞான பிரசர த்வாரமான மனஸ்ஸாதல் அன்றிக்கே
அவற்றுக்கு அவ்வருகான த்வங்மாம்ஸமேதோஸ்தி மயமான சரீரமும் அழியும்படி யாய்த்து –

நின் பால் அன்பாயே
சேதன அசேதன விபாகம் அற உருக்க வல்ல உன் பக்கலிலே அன்புக்கு ஆஸ்ரயமாகிறது தவிர்ந்து
அன்பு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இரா நின்றது வஸ்து வை லக்ஷண்யத்தாலே ஆராமை மிக்க படி
சந்த்ரகாந்தம் உருகிற்று என்றால் அங்கு சைதன்யம் இல்லை இறே

அப்படியே மதி நலம் அருளின நின்பால் அன்பாய
அன்பு தான் நீராய் அலைந்து ஸமுத்ர தரங்கம் போலே அலை எறியா நிற்கச் செய்தே
ஆரா உடல் அன்பாய் -அன்பு நீராய் -நீர் தான் பொங்கி அலை எறியா நின்றது -மதி நலம் பெருகுகிறபடி

ஸ்ரவண மனனாதிகளாலே வருகிறது அன்றே -விஷயம் அழிக்க அழிகிறது அத்தனை
அனுபவ பரிவாக ரூபமான தசா விசேஷங்கள் மேல் மேல் எனக் கிளர்ந்து வாரா நின்றது –
அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தினுடைய பரிவாஹம் இருக்கிற படி

ஆரா -கரைய -நீர் தன் பக்கலிலே அகப்பட்டதைக் கரைத்து தான் கரையாது இருக்கு மாய்த்து
இது அங்கன் அன்றிக்கே நீர் தானாயத்துக் கரைகிறது -அன்பு நீரானால் நீர் தான் கரையத் தட்டில்லை இறே

இத்தலை அளவு இது ஆனால் அத்தலை செய்கிறது என் என்னில்
உருக்குகின்ற
கீழ் உருக்கின கிரமம் சொல்லிற்று
மேல் உருக்குகிறது சொல்லுக்கு அடங்காது இறே
ஆகையால் உருக்குகின்ற -என்றது

அழிக்கைக்கு அடி இட்டது அத்தனை யாய்த்து
அழிப்பாளானவன் ஆபரணாதிகள் என்று பாராதே உருக்கி அழிக்குமா போலே காணும் அவன் தனக்கு
தேசமான அணிகலனும் என் கை கூப்பிச் செய்கை -என்கிறது இறே

ஆழ்வாருக்கு உள்ள உடலை உருக்கி அழிக்கும் அத்தனையோ என்னில்
நெடுமாலே
இவரது மால்
அவனது நெடுமால்
எதிர்த்தலையில் அழிவு கண்ட பின்பு இறே இத்தலையில் அழிவு

அவனுடைய வ்யாமோஹம் பார்க்கும் போது இவரது ஒன்றும் போராத படியாய் இருக்கும்
இவருக்கு ஸாத் மிக்க ஸாத் மிக்கப் பிறந்த அவஸ்தா விசேஷம்

அவன் அயர்வற அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து
ஆறும் இல்லாதவன் ஒருவனைப் பெற்றால் போலே ஆழ்வார் அவனுக்கு ஆராவமுதமான படி

ஆழ்வாருக்கு நாக்குக்கு மாதரம் ரசித்தது
மதிநலம் பெற்ற இவர் அவனுக்கு ஸர்வ வித போக்யமுமான படி
நெடு மாலுக்குப்
பூசும் சாந்து
புனையும் கண்ணி
வாசகம் செய் மாலை
வான் பட்டாடை
தேசமான அணிகலன்
உருவும் ஆர் உயிரும் உடனே உண்டான்
தான் என்னை முற்றப் பருகினான்
என்கிற அஹம் அன்னம் முதலிய போக்யங்கள் எல்லாம் ஆகையாலே அனுபவங்களை
வாசா சொல்லி முடியாதாகையாலே
நெடுமால் -என்னும் அத்தனை இறே

அநந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என் மனம் தன்னிலே வந்து வைகி வாழச் செய்த எம்பிரான் என்கிறார்
மால் -என்று பெரியோன் என்றபடி

இப்படி இருக்கிறவன் யாவன் ஒருவன்
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்கிறார்
மால் என்று உபய விபூதி நாதத்வம் சொல்கிறது
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நிர்வாஹகனானவன் மனிசர்க்குத் தேவர் போலே தேவருக்கும் தேவனாய் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
அயர்வு -திருப்தி
திருப்தி பிறவாமல் அபர்யாப்தி அம்ருதத்தைப் பானம் பண்ணி அதிசயிதரான நித்யர் முக்தருக்கு அதிபதியானவன்
ஆழ்வாரை அனுபவித்து ஆராமையாலே அத்யந்தம் வ்யாமோஹமாய் கிடக்கிற வ்யாமோஹம் தெளியும் படி

சீரார் செந்நெல் கவரி வீசும்
மிக்க கனத்தை யுடைத்தான செந்நெல் கதிர்களானவை விடாய்த்துக் கண் வளர்ந்து அருளுகிற
அழகைக் கண்டு பரிசர்யை பண்ணுவாரைப் போலே அமையா நிற்கும்

செந்நெலுக்கு சீர்மை யாவது
ஆராவமுதாழ்வாருக்கு அமுது படியாகிற சீர்மை ஆகவுமாம்
அப்போது அஹம் அன்னம் என்கிற சீர்மை

கவரி வீசும்
நித்யரும் முக்தரும் பரிசர்யை பண்ணுமா போலே செந்நெலானது சிசிர உபசாரம் பண்ணுகிற படி
அகால பலிநோ வ்ருஷா என்னுமா போலே
அறுத்து நட வேண்டாம் போலே காணும்

கருத்து அறிந்து அடிமை செய்வாரைப் போலே -சேஷ வஸ்துவின் வியாபாரம் அடைய
சேஷி தனக்கு அடிமையாய் நினைத்து இருக்கிற படி –

அமரர்கள் செழு நீரான நாங்கள் பரிசர்யை பண்ண அதிபதியாய்த் திருக்குடந்தையிலே
கண் வளர்ந்து அருளுகிற ஸுகுமார்யத்துக்குப் போரும் படி ஜல ஸம்ருத்தியை யுடைத்தான
திருக்குடந்தையிலே

ஏரார் கோலம் -அழகு சமைந்த ஒப்பனை நிறம் பெறும்படி கண் வளர்ந்து அருளினாய்

நித்ய விபூதியில் இருப்பு -அந்தப்புரத்தில் இருப்பு போலே -திரு மந்திரத்தில் படி
திருக்குடந்தையில் வாசஸ்தானம் த்வயத்தில் படி

திருமந்திரத்தில் உபாய உபேயங்கள் பிரகாசிப்பது இங்கே இறே
திருவடி பார்ஸ்வத்திலே ஒரு பிராட்டி புருஷகார பூதையாய்க் கொண்டு
சரணவ் சரணம் என்று திருவடிகளையே உபாயமாகப் பற்றுவிக்கிறாள்
திருமுடி பார்ஸ்வத்திலே ஒரு பிராட்டி இருந்து -இச் சேர்த்தியிலே அடிமை செய் –
என்று அடிமை கொள்கிறாள்

முக்த ப்ராப்ய போகமாம் திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே திரு மார்பிலே நாச்சியாரோடே கூட
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேனே
பிரம ருத்ராதிகள் சூழ்ந்து சேவிக்கக் கண் வளருகிறவன் எவன் இப்படி ஸாஷாத் கரித்தவன்
அவன் எம்மான்
இப்படி ப்ராப்யமும் ப்ராபகமும் தானே யானவன்

ஏரார் கோலம்
அபர்யாப்த்த அம்ருதமான கோலம்
ஆஸ்ரிதன் எழுந்து இருந்து பேசு என்ன -எழுந்து இருக்க –
அந்த உத்யோகத்துக்கு வாழி செய்த உத்யோகத்தில் அமைந்த கோலம் –

மாம் ஏகம் -என்றும்
சரணம் வ்ரஜ என்றும்
அருளிச் செய்த வாக்யத்தைத் தலைக்கட்டி
ஸத்ய ப்ரதிஜ்ஜன் ஆகைக்காக
அந்தத் திருத்தேரோடே வந்து சாய்ந்து அருளின கோலமாகையாலே
மந்த்ர த்ரயமும் ப்ரகாசிக்கிற கோலம் –

ஸ மயா போதித ஸ்ரீ மான்
கிடந்த கிடைக்கு ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கை
கிடந்தாய் கண்டேன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ண வேண்டும்

கண்டேன் அம்மானே
கிடை அழகைக் கண்டேன் -நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன் –
எழுந்து இருத்தல் இருத்தல் உலாவுதல் என் செய்தாய் என்னுதல்
அணைத்தல் செய்யப் பெறுகிறிலேன்

எம்மானே
இதுவும் நமது என்று இராது ஒழியப் பெற்றேன் ஆகில் ஆறி இருக்கலாயிற்றே
ஆழ்வார் ஆற்றாமை யாகிற ஆழ் கடலிலே மூழ்கி -முக்கவர் முத்துக்கடலிலே மூழ்கி
முத்து வருமா போலே
வ்யாமோஹத்தின் ஸாகரத்திலே
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் -என்கிறார்

என் மனனே -என்று பெருக்காற்றில் இழிவர் துணைத்தேட்டமாம் போலே நெஞ்சையும்
கூட்டிக் கொண்டு இழிகிறார்

எம்மானே என்று ஸம்போதித்து உன் வடிவோடே ஓக்க ப்ராப்தியை இட்டு
என்னை நலிய வேணுமோ என்கிறார்

எம்மானே சுடர் அடி தொழுது எழு என் மனனே
ஆழ்வாரை லபிக்கையாலே வந்த ப்ரீதியாலே துயர் அறு சுடர் அடி யாயிற்று

என் மனனே
அபர்யாப்த்த அம்ருத பானத்தாலே களித்து ஆனந்தியாதே சேஷ வ்ருத்தியான
அஞ்சலியைப் பண்ணி வர்த்தி
என் வ்யாமோஹமும் உன் வ்யாமோஹமும் அவன் வ்யாமோஹத்தில் குளப்படி யாயிற்று
அத்தைக்கண்டு இறுமாதே தொழுது வர்த்தி என்கிறார்

அபசாரான் இமான் ஸர்வான் க்ஷமஸ்வ புருஷோத்தம –

———

மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-

மானேய் நோக்கில்
திருவல்ல வாழி லே -தம் அபேக்ஷிதம் கிடைக்கும் என்று புறப்பட்டுப் போய்
அங்குத்தை போக்யதையிலே நலிவு பட்டு
முடியவும் போகவும் மாட்டாதே புறச்சோலையிலே விழுந்து கிடந்தது கூப்பிட்டார் –

——

தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10-

உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவனுடைய
தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?

உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அவரவர் அபீஷ்டங்களை
தயமானமனா -என்கிறபடியே
பகவத் கிருபையாலே லபிக்கச் செய்தேயும் காம்ய பலங்கள் ஆகையால்
உயர்வும் தாழ்வுமாய் அறுகை யாலே த்யாஜ்யங்கள்

உயர் நலமுடையவன் நம்மிடத்தில் பண்ணின தொல் அருள் –
என்றுளன் ஈசன் உயிரும் அன்றே யுண்டு கரண ப்ரதானம் பண்ணின ஸ்வ பாவிகமான அருளாலே
கழல் வளை பூரிப்ப யாம்

நல் வினையால்
அதாவது -அவனைக் காணப் பெற்று அப் ப்ரீதியாலே சொல்லக் கூட வற்றோ –
அன்றிக்கே
ஸ்வா பாவிக கிருபையாகிற ஸூஹ்ருதத்தாலே அவனைக் கண்டு திரு நாமங்களை
சொல்ல வற்றோ என்னுதல்

நா நீர் அற்று இருக்கையாலே ஆராவமுது ஊறும் இறே
அவன் மயர்வற மதிநலம் அருளின தொல் அருளாலே
நா வரண்ட பாபம் போய் -நா நீர் உண்டாய் திரு நாமங்களை சொல்லலாமோ என்று
அம்மங்கி அம்மாள் வாக்யார்த்தமாக அருளிச் செய்வர்

இப்படி அருள் அகல இராதே -அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் –
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்
தன்னுடைய கண்ணழிவு அற்ற கிருபையை ஸம்ஸாரத்தில் உள்ளாரும் நித்ய விபூதியில் உள்ளாரும்
தொழ நின்ற மஹா நகரம்
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரான நித்ய ஸூரிகளும் நித்ய ஸம்ஸாரிகளும் கூடத் தொழும்படி
ஸர்வ ஸ்மாத் பரனான ஸர்வேஸ்வரன் வந்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்

நல்லருள் ஆயிரவர்
எம்பெருமானிலும் பிரஜை ரக்ஷணத்தில் அனுக்ரஹ சீலராய் இருக்கிறவர்கள்

நலனேந்தும் திருவல்லவாழ்
அவனுடைய உயர் நலமான கல்யாண குணங்களை உயரா நின்ற நலம் என்று கொண்டாடி
வர்த்திக்கும் ஊர் என்னுதல் ஆகையாலே

நல்லருள் நம் பெருமான் நாராயணன்
துயர் அறு சுடர் அடி தொழுது

நாமங்களே.–
திரு நாம உச்சாரணம் பண்ணித் தொழுது ஸ்துதித்து என் மனனே எழு

நல்லருளை யுடையவனாய் -நமக்கு ஸ்வாமியானவன் -நாராயணன் –
நல்லருள் ஆகிறது வாத்சல்யாதிகள்

நாராயண சப்தார்த்தம் அருளிச் செய்து பின்னை சப்தத்தை அருளிச் செய்கிறார்
நாராயணன் –
ஹேய ப்ரதிபடமான திருவடிகளை -துயர் அறு சுடர் அடி யாகையாலே அவித்யாதிகள் அற்றது
தேஜோ மயமான திருவடிகளைத் தொழுது எழு என் மனனே
திரு நாம உச்சாரணத்தைப் பண்ணி வர்த்தி

நாராயண ஸப்தம் தர்மி நிர்தேசம்
இஸ் ஸ்வபாவங்களாலே நிரூபித வஸ்துவுக்கு உண்டான குணங்களுக்கு வாசகம்
அல்லாத திரு நாமங்களாகை

என் மனஸ்ஸூக்கு ஒத்த தோழிமீர் திரு நாம உச்சாரணம்
பண்ண வல்லோமோ என்கிறார் –

————–

பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1-

பிறந்தவாற்றில்
நாமங்களை சொல்லித் தரிக்க பார்த்த இடத்தில்
அது ஸைதில்யத்தை விளைக்க
தரித்து நின்று திருநாம உச்சாரணம் பண்ண வல்லேனாம் படி அருள வேணும்
என்று சரணம் புக்கார் –

—-

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-

உயர்வற என்கிற பாட்டை -நாகணை மிசை நம்பிரான் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
நாகணை மிசை நம்பிரான் -உயர்வற உயர் நலம் என்கிறவன் யாவன் ஒருவன்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
உபாய உபேயங்களில் தாரதம்யம் உண்டாகையாலே உயர்வு அற்று இருக்கும் –
உயர் நலம் யுடையவன் எவன் அவன் அவனே தனக்கு உபாயம் உபேயம் என்கிறார் –

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்றும்
திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடைய சர்வேஸ்வரனுடைய ஆனந்தாதி கல்யாண குண
பரிபூர்ணனான அநந்த ஸாயித்த்வம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே
அவனே சரண்யன் என்கிறது

நமக்கும்
திருவனந்த ஆழ்வானுடையபுருஷகாரம் சொல்கிறது

இவனுடைய உபாய பாவத்தில் புருஷகாரமாக வல்லார் அவள் பரிகரத்தில் உள்ளார் ஆகை இறே
படுக்கை கிடப்பது அந்தப்புரத்தில் இறே

நம்பிரான் -மயர்வற மதி நலம் அருளுகையாலே நம் பிரான் -நமக்கு உபகாரகன் –
ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன்

மதி நலம் அருளினவன் எவன் அவன்
சரணே சரண் நமக்கு என்று
அவதாரணத்தாலே உபாய நைர பேஷ்யம் சொல்லுகிறது –

சாம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும்
அப்படியே அடிக்கழிவு சொல்லுவார் ஒருவர் அல்லரோ இவர்
இது ஒழிய வேறே ஒன்றில் கால் தொழாது ஒழிகை மஹா விச்வாஸம் ஆகிறது
இத்தால் ஏக -பதார்த்தம் சொல்லிற்று

பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
நாள் தொறும் ஏக சிந்தையனாய்
மதி நலத்தால் வந்த த்ருட அத்யவசாயம் -புறம்பு உண்டான சிந்தனை போய்
இவ் விஷயத்தில் ஏக ஆகார மநோ ரதம் யுடையராய்

அர்த்தஅர்ஜனம் பண்ணப் போவார் ஒரு சிராயை விஸ்வஸித்து நாலாண்டு பத்தாண்டு
கடலிலே இழியா நின்றார்கள் இறே
இப் பேற்றின் சீர்மையைப் பார்த்தால் இவ்வளவாகிலும் வேண்டாவோ
இவ் விஷயத்தில் சம்சார ஸ்வ பாவத்தால் வ்யஸன பரம்பரைகள் வந்தாலும்
வியவசாயம் குலையாமே போருமது இறே ஸ்வரூபம் ஆவது

எவன் -குருகூர் சடகோபன் மாறன்
அது எல்லாத்துக்கும் அடியான பிறப்பு இருக்கிற படி

அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -உபாயாந்தரம் அறியாத நித்ய ஸூரிகளுக்குத்
தானே ஸர்வவித போக்யமானவன் விஷயமாக

நூற்ற அந்தாதி
தாம் உளராகைக்காகச் சொன்ன அந்தாதி

ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார் மாக வைகுந்தத்து .
மஹா ஆகாசம் என்று பேரை யுடைய ஸ்ரீ வைகுண்டத்திலே

வைகலும் மகிழ்வு எய்துவரே
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்த ரஹிதரான நித்ய ஸூரி ஸேவ்யனானவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

வைகலும் மகிழ்வு எய்துவரே
ஹேய ப்ரதிபடமான -நிர வதிக தேஜோ ரூபமாய் -ப்ராப்ய ப்ராபகமான திருவடிகளைக்
கால தத்வம் உள்ளதனையும் நித்ய அனுபவம் பண்ணி யாவதாத்மபாவி வாழலாம் என் மனமே தொழுது எழு

அனுசந்தானத்துக்கு விச்சேதம் வராத படி பண்ணி அருள வேண்டும் என்று
பிரார்த்திக்க வேண்டும்படியான சம்சாரத்தை விட்டு
பகவத் அனுபவத்துக்கு விச்சேதம் ஒரு நாளும் இல்லாத பரம பதத்திலே புக்கு அனுபவிக்கப் பெறுவர்

மா என்று மஹத்தை
கம் என்று ஆகாசம்
ஆக மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே –

———–

ஐந்தாம் பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–நான்காம் பத்து விவரணம்-

February 5, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-

ஒரு நாயகத்தின்
பின்னும் தன் செல்லாமையாலே -அல்ப அஸ்திரத்வாதி தோஷ துஷ்டமான
ஐஸ்வர்ய கைவல்யங்களைப் பற்றி நிற்கிற ஸம்ஸாரிகளைப் பார்த்து –
அவற்றை விட்டு
ஸ்ரீ யபதியைப் பற்றுகையே நிரவதிக ஸூக ரூப புருஷார்த்தம்
என்று உபதேசிக்கிறார் –

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-

உயர்வற என்கிற பாட்டை குறுக மிக -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தம் அளவும் ஐஸ்வர்ய கைவல்யங்களைச் சொல்கிறது –

உயர்வற -குறுக மிக
ஐஸ்வர்யாதிகள் நிலை நில்லாது என்ன
லீலா விபூதியில் ஐஸ்வர்யம் நிலையில்லை யாகிறது
அவை போல் அன்றிக்கே ஆத்ம லாபம் நிலை நின்ற புருஷார்த்தம் அன்றோ என்னில்
கீழ்ச் சொன்னவற்றைக் குறித்து ஒரு நன்மை யுண்டே யாகிலும்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்துக்கு ஏற்றம் உண்டாம் போலே
பகவத் ஆனந்தத்தைப் பற்ற ஆத்ம அனுபவம் தண்ணிது –ஆனபின்பு அவனைப் பற்றப் பாருங்கோள்

உயர் நலம் யுடையவன் எவன் அவன்
கல்யாண குணங்களால் பூர்ணனான -ஸ்ருதி ப்ரஸித்தனானவன் -அவனைப்பற்றி
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி-

முதலிலே ப்ரத்ய அஹ்ருத இந்த்ரயினுக்கே இறே -ஆத்ம ப்ராப்தியில் அதிகாரம் உள்ளது

பாஹ்ய விஷயங்களிலே தூரப் போய் க்ரஹிக்கும் மனஸ்ஸை ப்ரத்யக் விஷயமாக்கி
அதாவது
கண்ணை இட்டுக் கண்ணைப் பார்ப்பது போலே இருப்பது ஓன்று இறே
ஆகையால் குறுக -என்றது –

இந்த இந்திரிய நிக்ரஹம் ஸர்வேஸ்வரன் மயர்வற மதிநலம் அருளுகையாலே வந்தது –
பாஹ்யங்களிலே போன மயர்வை அறுத்துத் தர
ஸ்வ ஸ்வரூப விஷயத்திலே யாம்படி மதிநலம் அருளினவன் யாவன் ஒருவன் அவன் பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
மிக யுணர்வத்தோடு நோக்கி
சிரகாலம் பாஹ்ய விஷயத்திலே பண்ணிப்போந்த வாஸனை யடைய ஆத்மாவிலே யாம்படி பண்ணி விசதமாக அனுசந்தித்து
எல்லாம் விட்டு
ஸ்ரீயப்பதி தோளும் தோள் மாலையுமாய் -கருட வாஹனனுமாய் வந்து நிற்க
அந்த போக்யதையைப் பாராதே சுத்தி யோகத்தையே பார்த்தது –

அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
அயர்வற்ற நித்ய ஸூரி ஸேவ்யனாய் ஸ்ரீ யபதியான அவனுடைய துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பாராதே
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும்
அணுவான ஆத்ம அனுபவத்தை மோக்ஷம் என்று சொல்லுகிற ஆத்ம ஞானிக்கும்

அப்பயன் இல்லையேல்,
பகவத் அனுபவம் ஆகிற மோக்ஷ ஸூகம் இல்லை என்கிறார் இவர்
அவ்வருகு உண்டான போக்யம் கண்டவர் ஆகையாலே அத்தை ஸங்கோசம் என்கிறார்

பகவத் உபாஸனத்துக்காகச் சுடர் அடி தொழுது ஆத்ம பிராப்தி பெற வேண்டுவ
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
அவித்யாதிகளானவை வாஸனையாலே வருமாகில் பின்னும் வீடு இல்லை

மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே
ஸர்வ வாஸனையாலே பற்றாமல் ஸூத்தி யோகத்தையே பார்த்துப் பற்றி விடாமல் இருக்கில் அது ஸித்திக்கும்
விடில் அது ஸித்தியாது

வீடு அஃதே
ஸர்வ பாப விமோசகனானவனைப் பற்றி விடா விடில் -கீழ்ச் சொன்ன இந்திரிய ஜயம் முதலாக
பகவத் உபாஸநத்தைப் பண்ணி கர்ம ஷயம் பிறப்பித்து ஆத்மாவை லபிக்கப் பார்க்கும் அவனுக்கு
அந்திம ஸ்ம்ருதி பண்ணி சரீரத்தை விடப் பார்ப்பானாகில் -அந்த மோக்ஷம் இல்லை –

அஃதே
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ-என்றும்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என்னும் நான் சொல்கிற அதுவே புருஷார்த்தம் –

ஆகையாலே -தொழுது எழு என் மனனே -என்று
தன் திரு உள்ளத்துக்கு உபதேசித்துத் தன் திரு உள்ளம் போல்வாருக்கும் உபதேசித்து
உபதேஸ கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் –

———–

பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1-

பாலன் ஆய், ஏழ் உலகில்
மூன்று களையும் பறித்துச் ஸங்காயம் வாரின பயிர் -ஸதசாகமாகப் பணைத்த விளையுமாய் போலே
அபிநிவேசம் ஸதசாகமாய் விளைந்து
தேச கால விப்ரக்ருஷ்டமான பதார்த்தங்களையும் தத் தத் தேச கால விசிஷ்டமாகப் பெற்று
அனுபவிக்க வேணும் என்று விடாய்த்தார் –

பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3-

உயர்வற என்கிற பாட்டை -பாவியல் வேத -என்கிற பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற ப்ரஹ்ம ஆனந்தம் தொடங்கி -மனுஷ்ய ஆனந்தம் அளவாக
காலோசிதமான பதார்த்தங்களை தத் தத் தேச காலங்களிலே அனுபவிப்பார் அனுபவிக்கப் பெறாதே
வந்த இழவாலே ஸூகம் அற்றார்கள் –தத் வ்யதிரிக்தங்கள் ஆகையாலே

இவர் அங்கன் அன்றிக்கே பகவத் ப்ரேமத்தாலே பூத காலத்தில் உள்ளதும் பவிஷ்யத் காலத்தில் உள்ளதும் –
வர்த்தமான காலத்தில் போலே
உயர்நலம் உடையவன் எவன் அவன் –திருவடிகளிலே அத்திருத் துழாய் பெற ஆசைப்படுகிறார் –

உயர் நலம் யுடையவனைப்
பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
ஒரு ஊருக்காக உதவினதுவே அன்றிக்கே ஒரு நாட்டுக்காக உதவினவன் பக்கல்
உள்ளது பெறத் தட்டு என் என்னா நின்றாள் என்கிறாள்

பாவியல் வேதம்
பாவாலே இயற்றப்பட்ட வேதம் –சந்தஸ்ஸுக்களால் சொல்லப்பட்ட வேதம்
அனுஷ்டுப் த்ரிஷ்டுப் ப்ருஹதீ சந்தஸ் -என்றும் சொல்லப்பட்டவைகளை யுடைத்தான வேதம்
சொல்லிற்று என் என்னில்

உயர்வற உயர்நலம் உடையவன் என்றும் அவன் ஆனந்தாதி குணங்களை சொல்லப் புக்கு எவன் அவன் என்று
அப்ராப்ய மனஸா ஸஹ -என்று அளவிட முடியாமல் மீண்ட இத்தை
பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
அதன் நன்றான மாலைகளைக் கொண்டு -ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு

ஸர்வே வேதா யத்பதம் ஆமநந்தி வேதைஸ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய -என்கிறபடியே
அல்லாத இடங்களுக்குப் பிரதிபாத்யன் அவனே யாகிலும்
ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களுக்கு வாசகமானவற்றைக் கொண்டு

மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆகையால் –
அவர் அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே வேதாந்த வேத்யனை சாஷாத்கரித்து
அயர்வறும் அமரர்கள் அதிபதி
அஞ்ஞான கந்த ரஹிதரான நித்ய ஸூரி சேவ்யனானவனை

தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
தேவர்களும்
ஸ்லாக்யமான ஸநகாதிகளும் -என்றுமாம்

சேவடி மேல் அணி
துயர் அறு சுடர் அடி -ஆஸ்ரிதருடைய கிட்டப் பெறாத இலவு தீர்த்த சுடர் அடியான

சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே
சேவடி -சுடர் அடி
சங்கைஸ் ஸூராணாம் -என்கிறபடி ஸ்தோத்ரம் பண்ணி ஆஸ்ரயிக்கத் திரு உலகு அளந்து நின்ற
சேவடி மா முதல் அடிப் போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி -என்கிறபடி
தலையிலே பூப் போலே வந்து இருக்கிற போது -மேலே பார்த்தவாறே
அனுபாவ்யமாய் இருந்த சிவப்பை யுடைத்தாய் இருக்கை
அடியிலே ராகம் இறே இப்படி ஆக்கிற்று இவளை –

அன்றியே
செவ்விய அடி -செவ்வையான அடி -ஆஸ்ரிதருக்கு செவ்வையாயே இருக்கும்
அநாஸ்ரிதருக்கு குடிலமாய் இருக்கும்

செவ்வடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே கூவுமால்
ஸ்ப்ருஹணீயமான திருத்துழாய் என்றே கூவும்

சொல்லி மாலேறும் கோள்வினை யாட்டியேன் கோதையே.
முடித்து அல்லது விடாதே பாபத்தைப் பண்ணின நான்
என்னுடைய கோதை
தன் மாலையையும் மயிர் முடியையும் கண்டார் படுமத்தைத் தான் படுவதே –

——————-

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குல நல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1-

கோவை வாயாளில்
இவர் ஆசைப்பட்ட படியே எல்லாம் பெற்றாராம் படி
தன் ப்ரணயித்வ குணங்களைக் காட்டிக் கொடுக்கக் கண்டு ஹ்ருஷ்டரானார் —

——-

உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–4-3-9-

உயர்வற என்கிற பாட்டை -உரைக்க வல்லேன் அல்லேன் – என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஒருவருக்கு ஒருவர் புகழ் உண்டாய் இருக்கும்
அதுவும் அல்ப அஸ்திரமாய் உயர்வற்றதாய் இருக்கும்
இந்த உயர்வற உயர்நலம் உடையவன் எவன் ஒருவன் அவன் ஆனந்தாதி குணங்களுக்கு
அவதி இல்லாமையால் உரைக்க வல்லேன் அல்லேன் –

வேதங்களும் அப்ராப்ய மனஸா ஸஹ -என்று மீண்ட விஷயத்தை
உன் ஆனந்தாதி குணங்கள் எல்லாம் கூடினாலும்
உன் ப்ரணயித்வ ப்ரகர்ஷம் என்னுடைய பேச்சுக்கு நிலம் அல்ல என்கிறார்

இந்த ப்ரணயித்வ குணங்களை யுடையவன் யாவன் ஒருவன் –
அவனை உரைக்க வல்லேன் அல்லேன் –
உனக்கு என்னுடைய மநோ வாக் காயங்கள் முதலானவற்றை
அங்க ராகங்கள் முதலான போக வஸ்துவாகக் கொண்ட போக்ய பூதனான நீ
உன்னுடைய ப்ரணயித்வ குணத்தை அனுசந்தித்து அனுபவித்துக்
குமிழி நீர் உண்டு போம் அத்தனை போக்கி பேசித் தலைக்கட்ட மாட்டு கிறிலேன்

எல்லாம் பேச ஒண்ணாதாகில் பேசலாம் அம்சம் பேசினாலோ என்னில்
நீ மயர்வற மதிநலம் அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தால் வந்த பலம் கொண்டு பேசப்புக்கால்
உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்?
உன்னுடைய முடிவில்லாத பிரணயித்வத்தால் வந்த கீர்த்தி சாகரத்தினுடைய
கரையில் தான் என்னால் சொல்லப் போமோ

இப்படிக் கரை அருகிலும் செல்ல அறிய விஷயத்தை நீர் பேசுவதாக உத்யோகிப்பான் என் என்ன

நீ அருளினை பக்தி ரூபா பன்ன ஞானத்தினாலே
காதல் மையல் ஏறினேன்;
என் ப்ரேமத்தாலே மிக்க கலக்கத்தை உடையேன் ஆனேன்
பிச்சு ஏறினாரை
நீ இப்படிச் செய்வான் என் என்னக் கடவதோ -என்ன

இவ்விஷயத்தில் நீர் பிரமிப்பான என்
பிரமிப்பாருக்கு ஓர் ஆலம்பனம் வேண்டாவோ என்ன

அயர்வறும் அமரர்களான நித்ய ஸூரிகள் பித்தேறி ஏத்தக் கண்டேன் –
அத்தாலே செய்தேன் என்கிறார்

அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்த நித்யரோடு -நித்ய ஸம்ஸாரியான இவரோடு -அவன் தன்னோடு
வாசி அற்று இறே ப்ரணயித்வ குணம் -இவ்விஷயத்தில் ப்ரணயித்வ பிரபாவம் இருப்பது
ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியாய் தான் அறியப் புக்காலும்
தனக்கும் தன் தன்மை அறிவு அரியனாய் இறே இருப்பது
தன்னை அறியப்புக்க வேதங்கள் படும் அத்தனை தானும் படுவது

புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
நீ ஸர்வ சமாதி பரனாய் இருப்பில் புரை இல்லாதாப் போலே
என்னோட்டை கலவியால் வந்த வடிவில் பிறந்த புகரிலும் புரை அன்றிக்கே இருக்கிறவனே

அன்றிக்கே
நிரவதிகமான ப்ரணயித்வ குண ஸத்பாவத்தில் கண் அழிவு இல்லாதாப் போலே
என்னோட்டைக் கலவியிலும் பொய் அன்றிக்கே
அத்தாலே வந்த புகர் வடிவிலே தோன்ற இருக்கிறவனே என்னுதல்

இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.
பரமபக்தி யுக்தரானவர்கள் துயர் அறு சுடர் அடி தொழுது
எழுந்து
கடல் கிளர்ந்தால் போலே இரைத்துக் கொண்டு ஏத்தக் காண்கையாலே
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் எவன் அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
என்று யானும் ஏத்தினேன் அல்லது நான் சக்தனாய் ஏத்தினேனோ
ஹேய ப்ரதிபடமான திருவடிகளும் -பிராட்டியும் -நீயும் விடிலும்
திருவடிகளை விடாத திண் கழலைப் பேசித் தலைக்கட்டப் போமோ என்கிறார் –

——————–

மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!–4-4-1-

மண்ணை இருந்து துழாவி யில்
கீழ்ப் பிறந்த ப்ரணயித்வ குண அனுபவம் சாத்மிக்கைக்காக எம்பெருமான் பேர நிற்க அவனோடே
ஸத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்தி பதார்த்தங்களையும்
அவனாகவே பிரமித்து நோவு பட்டார்

உயர்வற என்கிற பாட்டை -மண்ணை இருந்து துழாவி-விவரிக்கிறது -எங்கனே என்னில்
ஆழ்வார் தம்முடைய உபாய அத்யாவசாய ஞானத்தில் நின்று தம்முடைய திரு உள்ளத்தைப் பார்க்கும் போது
அது மயர்வற மதிநலம் அருளப் பெற்று –
அத்தாலே பகவான் இடத்திலே த்வரை விஞ்சிச் செல்கிற ப்ரேம தசையைப் பார்த்து
இது அத்புத கார்யங்களாய் இருந்தது இது ஏது என்று கேழ்க்கிற அவர்களுக்கு
அதுக்கு உத்தரமாக மானஸ த்வரை செல்லுமத்தை -வினவி வந்தவர்களுக்கு
உபாய அத்யவசாய தசையில் நின்று ஆழ்வார் அருளிச் செய்கிறார் –

உயர்வற -மண்ணையிருந்து துழாவி –
மண்ணுக்கு உயர்வாவது
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ஜங்கமாதிகளாலே நிறைந்து பஞ்சா சத்கோடி விஸ்தீர்ணமான
பூமியாகையாலே உயர்வு என்கிறது

இருந்து துழாவி
பகவத் வ்யதிரிக்தங்களைக் காரணமாகவும் காரியமாகவும் சொல்லா நின்றார்கள்
இத்தை அறிவோம் என்று ஆராய்ந்து பார்க்க அவை அஸ்திரமாக இருக்கையாலே உயர்வற என்கிறார் –

அவை எல்லாம் இவர் கைக்குள்ளே அடங்கி ஸர்வ கதத்வத்தை கரதல அமலமாகக் கண்டார்
துழாவிப் பார்த்தார்-
அதுக்கு அப்பாலும் உயர் நலம் போகையாலே வந்த பரம ஆனந்தத்தைப் பார்த்து
உயர்நலம் உடையவன் எவன் அவன் வாமனன் என்கிறார்

கீழ்ச் சொன்ன ஜகத்து அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாய் இருந்தது தவிரும்படி
வாமனனாய் மஹா பலி பக்கலிலே அர்த்தியாய்ச் சென்று தன்னதாக்கின
வாமனன் மண் இது என்னும்

நலமுடையவன் யாவன் ஒருவன் அவன் வாமனன் மண் இது என்னும் –
த்ரி விக்ரம ரூபத்தாலே ஜகதாகாரனாய் நின்றபடி
வாமனன் மண் இது என்னும்

அடியிலே பிறந்தவனுடைய கந்தவதீ பிருத்வீ இறே
பத்ப்யாம் பூமி யாகையாலே ஸர்வ கந்தமும் தோற்றின படி –

யவன் இது என்னும்
மஞ்சா க்ரோசந்தி போலே பூமியில் உள்ளாரைச் சொல்கிறது –

அவன் -இப்படிப்பட்ட பூமியை யுடையவன் –காரண பூதனான தன் ஜகதா காரதையைக் காட்டி
ஒரு திருவடிகள் அந்நிய சேஷத்வ நிவ்ருத்தியைப் பண்ண
மற்றத் திருவடிகள் ஸ்வ ஸ்வா தந்தர்யத்தைத் தவிர்த்து ஸர்வ சேஷியாய் நின்ற நிலையைக் காட்டினான் ஆயிற்று –

இவருக்கு இந்த ப்ரேமத்துக்கு அடி என் என்ன –
மயர்வற மதி நலம் அருளின வத்தாலே வந்த ஞானத்தாலே அறிந்த படி

கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘
அவர தேவதா பிரதிபத்தியை நீக்கி -பராத்பரனைக் காணும் படி
திவ்யம் ததாமி தே சஷுஸ் -என்றும்
தக்க ஞானக் கண்கள் என்றும் –
சொல்லுகிற ஞானச் சஷுஸ்ஸூ க்களைக் கொடுத்தபடி
அருளின பக்தியாலே ஆனந்தாவஹமாய் ஆனந்த அஸ்ரு குடி கொண்ட படி –

எவன் -இப்படி அருளப் பட்ட சடகோபன் -ஸ ஹேதுகமாகில் தாழ்வு படும்
நிர்ஹேதுகமாகையாலே நிரவதிகமாய்ப் பொங்கி வருகிறபடியாலே
அருளப்பட்ட சடகோபன் என்கிறது –

அவன்
கடல் வண்ணன்’
ஜகதாகாரனைப் போலே ஸகல வஸ்துவையும் தன்னுள்ளே கொண்டு நோக்குகிற படி

என்னும்;
இது என்ன ஆச்சர்யம்
ஜகதா காரதையை கரதல அமலகமாகக் கண்டும்
அதற்கும் மேலே அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
விண் உண்டு -பரமபதம் -அதற்குப் போலியான ஆகாசத்தைக் காட்டி

அவன் மேவும் வைகுந்தம் என்னா நின்றாள்
அயர்வறும் அமரர்கள் சந்த அணுவிருத்தி பண்ண -அவர்கள் நடுவே
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக்கோல் செலுத்துமவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
அவன் மேவு வைகுந்தமான விண்ணைத் தொழுது துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே –

எனதுள் ஞானம் ஆகிற
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!
பெரு மையல் -பகவத் ஆனந்தத்தில் புக்கு அழிந்த மையல் –
இத்தை விளைவிக்கிற வேதாந்த வேத்யனுக்கு என் செய்கேன்
இது ஸ்வ யத்ன ஸாத்யம் அல்லவே

பெய் வளையீரே
நீங்கள் ஸ்வரூபம் குலையாது இருக்க
இவள் தொழுது எழு என்னவும் தெரியாதே பித்தேறி பிரமிப்பதே
இது என்ன ஆச்சர்யம் என்கிறாள் —

————-

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

வீற்றிருந்து ஏழுலகில்
கீழ் இவருக்குப் போலி கண்டு பிரமித்த விடாய் எல்லாம் தீர்க்கும்படி
நித்ய விபூதி யுடையனாய் இருக்கிற தன் படிகள் ஒன்றும் குறையாதபடி கொடு வந்து
காட்டிக் கொடுத்துக் கண்டீரே நாம் இருக்கிற படி
இந்த ஐஸ்வர்யம் எல்லாம் ஒன்றாய்த் தலைக்கட்டித்து
நீர் உம்முடைய வாக்காலே ஒரு சொல்லு சொன்னால் காணும் என்று இவர் கைத்தாளத்தைக் கொடுக்க
அவ்விருப்புக்கு மங்களா ஸாசானம் பண்ணி அருளினார் –

ஸ்ரீ யபதியாய் அவாப்த ஸமஸ்த காமனாய் உபய விபூதி யுக்தனான ஸர்வேஸ்வரன்
கீழே போலி கண்டு பிரமித்த இழவு எல்லாம் போம்படி
நித்ய விபூதியையும் லீலா விபூதியையும் உடையவனான படியைக் காட்டிக் கொடுத்துக்
கண்டீரே – நாம் இருக்கும் இருப்பு -இந்த ஐஸ்வர்யம் எல்லாம் ஒன்றாய்த் தலைக்கட்டித்தாம் –
நீர் உம்முடைய வாக்காலே ஒரு சொல்லு சொன்னால் காணும் என்று
இவர் கையில் தாளத்தைக் கொடுக்க அவ்விருப்புக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகிறார் –

உயர்வற என்கிற பாட்டை -வீற்றிருந்து -என்கிற பாட்டு -விவரிக்கிறது –
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் உயர்வும் தாழ்வுமாய்
வருகையாலே உயர்வற என்கிறது
லீலா விபூதியை வீற்றிருந்து ஏழுலகும் -என்றபடி

உயர் நலம் என்றது -நித்ய விபூதியை யுடையவன் என்று -உபய விபூதி யுக்தன் என்றபடி –
எவன் அவன் -ஸ்ருதி ப்ரஸித்தனானவன்
தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் தனக்கு சேஷமாய்த் தான் சேஷியாகையாலே
வந்த வ்யாவ்ருத்தி தோற்ற நியாந்தாவான சீர் தோற்ற வீற்று இருக்கை

இங்கன் அன்றாகில் பரஸ்பர வ்யாவ்ருத்தி எல்லாருக்கும் உண்டு இறே
ஸகல ஆத்மாக்களுக்கும் ஞான ஏக ஆகார தயா ஸாம்யம் யுண்டாய் இருக்கச் செய்தேயும்
விபுத்வ சேஷித்வ நியந்த்ருத்வங்கள் ஆகிற இவை அவ்வாஸ்ரயம் ஒன்றிலுமே கிடக்கும் அத்தனை இறே

இப்படி ஸர்வ கதனாய் வியாபித்து நிற்குமது நியமன அர்த்தமாகவே இறே
இப்படி நீர் அறிந்தபடி எத்தாலே என்ன
தன் நலமுடைய ஆனந்தத்தால் மயர்வற மதிநலம் அருளினான் -அத்தாலே அறிந்தேன்

எவன் அவன் -ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் –
ஆற்றல் -என் மயர்வு -அக மமதையால் வந்த மயர்வு அற
ஆற்றல் பொறுமை -லோகத்தாரோடே என் ஆஜ்ஜா அதி லங்கனமான அபராதத்தைப் பொறுத்து
அற -ஆற்றல் மிக்கு ஆளும்
தஹ -பச -என்னாமல் பொறுத்து –

ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான்
யாவன் ஒருவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து ஆளும்
சுற்றுப் பயணம் வந்து ஜகன் நிர்வஹனம் பண்ணுகை அன்றிக்கே
நித்ய விபூதியில் இருந்த இருப்பிலே லோகங்கள் அடைய தன் செங்கோல் செல்லும்படி ஆளும்

மதி நலம் அருளினன் என்று
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ஜங்கமாதிகளுக்கு அனுரூபமான
பக்தி ரூபா பன்ன ஞானத்தைத் தன் நிர்ஹேதுக கிருபையாலே அருளினான் –

அம்மான்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்வாமி -அவன்
இந்திரியாணி ஹயானி என்கிற தேஜிக் குதிரை போலே ஓடுகிற மனஸ்ஸை யுடையவனை
அவன் -வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணன்
இருடீகேசன் ஆகையாலே நியமித்தான்
இந்த க்ருதஜ்ஜை தோற்றப் போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது
அயர்வின்றிக்கே அபர்யாப்த்த அம்ருத ஆனந்த மக்நரானராய் ஆனந்திக்க
அத்தாலே அவன் ஆனந்திக்க -அது கண்டு இவர்கள் ஆனந்திக்க –
இப்படி அநந்யோன்யம் ஆனந்திக்கிற படியைக் கண்டு இவர் ஆனந்திக்கிற
இவர் ஆனந்தம் உபய விபூதியிலும் மிக்கது –

இப்படி -ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே-
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
துயர் -துக்கம் -அதாவது -ப்ரயாஸம் –
பிரயாசமான சாதனாந்தரங்களால் வந்த துயர் அன்றிக்கே நிர்ஹேதுகமாக அளவிறந்த சுடர் அடி தொழு

ஹேய ப்ரத்ய நீகமாய் நிரவதிக தேஜோ ரூபமான சுடர் அடிகளைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது சொல் மாலைகள் ஏற்ற நோற்றேர்க்கு இனி என்ன குறை எழுமையுமே –
திருக்குழலிலே ஏறும்படியாக -க்ருண்ணாதி சிரஸா ஸ்வயம் –என்கிறபடியே
நோற்றேற்கு இவர் இப்போது நோற்றது
மண்ணை இருந்து துழாவியிலே –ஆர்த்தியை ஜநிப்பித்த -கிருபையை இனி என்ன குறை எழுமையுமே –
நித்ய விபூதியில் அனுபவத்தை இங்கே லபித்தால் எனக்கு குறை உண்டோ
விண்ணுளாரிலும் சீரியரே
எனக்கு ஆர் நிகர் அகல் வானத்தே -என்று
பகவத் அனுபவத்தாலே நித்ய ஆனந்த மக்நனான எனக்கு ஒரு குறை உண்டோ என்கிறார் –

—————

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-

தீர்ப்பாரை யாம் இனியில்
கீழ்ப் பிறந்தது மானஸ அனுசந்தான மாத்ரமாய் -பாஹ்ய சம்ஸ்லேஷ யோக்யம் இல்லாமையாலே –
மோஹித்து அந்யாபதேசமாய்ப் பேசினார்

தீர்ப்பாரை யாம் இனியில்
மோஹித்தவருக்குப் பரிஹாரமாக தேவதாந்த்ர்யாமி பரமாக ஆஸ்வசிப்பிக்கலாமோ
என்று பரிவர் பார்க்க-அவர்களைக் குறித்து
அன்பர் விலக்கின பாசுரத்தை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –

——–

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10-

உயர்வற என்கிற பாட்டை -உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள்,-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அவர் உயர்வற உன்னித்து
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் உற்று உற்றுப் பார்க்க
ஒன்றுக்கு ஓன்று தொழுவாரும் தொழுவித்துக் கொள்வாருமாய் அற்றது –

உயர்வற உயர் நலம் உடையவன் யவன் அவன் -வண் துவராபதி மன்னன் -அவனை அன்றி
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
உயர்நலமான பர ப்ரஹ்ம ஆனந்தத்தை யுடையவன் எவன் அவன் -அவன்
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னன்
ஸ்ருதி ப்ரஸித்தனாய் ஸூ லபனானவனை ஒழிய மற்ற ஒரு தேவதையைத் தொழும் அவளோ இவள்

எனக்கு அவன் அடியிலே மயர்வற மதிநலம் அருளிற்றிலன் ஆகில் அன்றோ தேவதாந்த்ர பஜநம் பண்ணுவது
பக்தி ரூபா பன்ன ஞானம் பெற்றவர் இதர தேவதையும் உண்டு என்று அறிவரோ

நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மயர்வற மதிநலம் பெற்று இருக்கிற எனக்குத் தோற்றினார் தோற்றின படி சொல்லி
அணங்கு ஆடுகைக்குப் பிரயோஜனம் என்ன –

எவன் இந்த மதிநலம் பெற்றாராய் இருக்கிறவர் அவன் நிர்ஹேதுகமாக அருளினன்
அவன் யாவன் ஒருவன் -அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி –
மன்னப்படு மறை வாணன்
அஞ்ஞான அந்தகார ரஹிதரான நித்ய முக்தராலே ஸேவ்யராய்
அபவ் ருஷேயமான வேத ப்ரதிபாத்யனானவன் எவன் அவன் வண் துவராபதி மன்னன்

துயர் அறு சுடர் அடி தொழுது ஏத்துமின்!ஏத்துதலும்,தொழுது ஆடுமே.
தொழுது எழு என்று அன்பார் பரிவரைக் குறித்து வெறி விலக்கின பாசுரத்தைத்
தோழி தாயாரை வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

—————-

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-

சீலம் இல்லாச் சிறிய–னில்
வண் துவாராபதி மன்னன் என்கிற திரு நாம ப்ரசங்கத்தாலே மோஹம் தெளிந்து
அது தான் பேற்றுக்கு உடல் அல்லாமையாலே கூப்பிடுகிறார் –

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-

உயர்வற என்கிற பாட்டை –அறிந்து அறிந்து-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக பராத்பரன் ஆர் என்று பார்த்து
உயர்நலம் உடையவனே பராத்பரன் என்று
அறிந்து அறிந்து, தேறித் தேறித் தெளிந்து

பரத்வம்
பஜநீயத்வம்
ஸுலப்யம்
அபராத ஸஹத்வம்
தொடக்கமாக அறிந்து அறிந்து, தேறித் தேறி

ஓரொரு குணங்களை அனுபவிக்க மாட்டாமை -மோஹமும் தெளிவுமாய் என்னுதல்

யவன்- யான் அவன் -எனது ஆவியுள்ளே-எனது ஆவியாவியும் நீ என்று சொல்லப் பட்டவன்

எவன் அவன் மயர்வற மதிநலம் அருளினவன்
நிறைந்த ஞான மூர்த்தி யானவன் –
அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி ஞானப் பிரகாசத்தைப் பண்ணித் தந்தவன் –

எவன் -நின்மலமாக வைத்தவன் -நின்மலமானவன் -அவன் நிர்ஹேதுகமாக அருளினவன் –
நிர்மலமாக வைத்து -அயர்வறுகை -நிர்மலமாகை –

அயர்வில்லாத அமரர்கள் அதிபதி
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்த்தவன் எவன் அவன்
ஒழிந்தேன் என்னும்படி ஜனன மரணாதிகளை ஒழித்தவன்
நறுந் துழாயின் கண்ணி அம்மான்
துயர் அறு சுடர் அடி தொழுது -ஹேய ப்ரத்ய நீகமாய் நிரவதிக தேஜோ மயமான திருவடிகளைத் தொழுது –

நறுந் துழாயின் கண்ணி
பரிமள ப்ரசுரமான திருத்துழாய் மாலையாலே அலங்க்ருதமான ஸ்வாமியைக் கண்டு கொண்டு
ஞான சாஷாத்காரமாகக் கண்டு கொண்டு
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்கிறார் –

—————

ஏறு ஆளும் இறையோனும், திசை முகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குல மா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே.–4-8-1-

ஏறு ஆளும் இறையோனில்
இப்படிக் கூப்பிட்ட இடத்தில் வந்து முகம் காட்டாமையாலே
அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாத் மீயங்களில் நசையற்றபடியைச் சொன்னார்

——

மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–4-8-2-

உயர்வற என்கிற பாட்டை மணி மாமை குறையில்லா-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக தம் தாம் கரணங்களும் தாங்களுமாக
இதர விஷயத்தில் சப்தாதி போக்யங்களைப் புஜிக்க
இவர் அங்கன் அன்றிக்கே பகவானுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாத்மீயங்களை விடுகிறார்

உயர்வற உயர் நல –மணி மாமை குறையில்லா மலர் மாதர்-
உயர் நலம் என்று
உகார வாஸ்யையான பிராட்டிக்கு உயர்வு அறுகை யாவது
ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் -என்கிற உயர்த்தி அற -என்றது –

விஷ்ணு பத்னியாகையாலே அவனுக்கு சேஷ பூதையாய் தாழ்ந்து இருக்கும்
ஆகையால் உயர்வற உயர் நலம் என்றது –
ஆகையாலே பிராட்டிக்கும் சேஷித்வமும் சேஷத்வமும் ஸ்வ பாவமாகையாலே சொல்லிற்று –

ஆக தத் வ்யதிரிக்தங்களுக்கு ஸ்வாமிநியாய் அவனுக்கு ஸ்வம்மாய் இருக்கையாலே
ஸ்ரீயதே ஸ்ரயதே என்றது –

உயர்நலம் யுடையவன் எவன் அவன் –
மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
பூவில் காட்டில் ரமணீயதையும் -நிறமும் -குளிர்ச்சியும் -மேன்மையும் -மணமும் -மதுவும் -ஸுகுமார்யமுமாக
எல்லாவற்றையும் கட்டி ஒரு பெண்ணாக வகுத்தால் போலே இருக்கிற உயர்நலத்தை யுடையவன்
உறை மார்பன் -அவள் அகலகில்லேன் -என்று நித்ய வாஸம் பண்ணுகிற மார்பை யுடையவன்

எவன் அவன் -ஸ்ரீ யபதியானவன் -எனக்கு மயர்வற மதிநலம் அருளினன் -எவன் அவன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
மயர்வற
சாதனாந்தர -ப்ரயோஜனாந்தரமாகிற மயர்வு அன்றிக்கே
மதிநலம் என்றது பக்தி ரூபா பன்ன ஞானத்தால் தானே உபாயம் உபேயம் என்னும்படி மதி நலத்தை அருளின
அணி மானத் தடைவரைத் தோள்
அணி -அலங்காரம்
மானம் -அளவில்லாமை
அலங்காரத்தாலும் அழகாலும் அளவில்லை என்றபடி –

அடல் ஆழித் தடக்கையன்
அடலாழி -அவித்யாதிகளான கர்மங்களையும்
பாஹ்ய விரோதிகளையும் நிரஸித்து
அலம் புரிந்த நெடும் தடக்கையாகையாலே போரும் போரும் எனக்கொடுத்த ஞான பக்தி முதலா மோக்ஷம்
அதன் பலமான கைங்கர்ய சாம்ராஜ்யத்தையும் தருகிற அடலாழித் தடக்கையன்
இப்படி நிர்ஹேதுகமாக அருளினவன் யாவன் ஒருவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
அயராதே -சோம்பாதே
நித்ய அம்ருத தாஸிகளானவருக்கு ஸ்வாமி யானவன் –

பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
பணி என்றது கைங்கர்யம்
மானம் -அளவு
அதில் ஓர் அளவும் குறையாதே அஹம் ஸர்வம் கரிஷ்யாமி என்கிறபடியே
அடியேனைப் பணி கொண்ட
கிரியதாம் இதி மாம் வத -என்று இளைய பெருமாளை அடிமை கொண்டால் போலே
இருவரும் கூட இருந்து காணும் அடிமை கொண்டது –

இப்படி அடிமை கொண்டவன் எவன் அவன் -மணி மாயன் -துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
மணி மாயன்
நீல ரத்னம் போன்ற வடிவு அழகைக் காட்டி
துக்க கந்த ரஹிதமான நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளைத் தொழப் பண்ணி
ஸ்வ யத்னத்தால் வரும் ப்ரயாஸம் அன்றிக்கே பரஞ்சோதியான பாத பங்கயங்களைத் தொழுது எழு
என் மனனே -எனக்கு பவ்யமான நெஞ்சே

அன்றிக்கே
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–
ரமணீயமான விக்ரஹத்தையும்
ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களையும் யுடையவன்
விரும்பாத பவ்யமான நெஞ்சாலே எனக்கு என்ன பிரயோஜனம் உண்டு

பிராட்டியும் பெருமாளுமான சேர்த்தியிலே தொழுது எழும்படி அருளினானாகில்
என் மனனே -என் மட நெஞ்சமே -என்று உன்னாலே என்ன பிரயோஜனம் உண்டு
அவனுக்கு வேண்டாத என் நெஞ்சமும் எனக்கு வேண்டா என்கிறார் –

——————-

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1-

நண்ணாதார் முறுவலிப்ப, -லில்
இப்படி உடம்பு வேண்டா உயிர் வேண்டா என்ற இடத்திலும் போதாமையால் முடிகைக்கும்
உன் தரவு வேண்டி இருந்தது -முடித்துத் தர வேண்டும் என்று இவர் அபேக்ஷிக்க
ஸம்ஸாரிகளில் தமக்கு உண்டான வ்யாவ்ருத்தியையும்
நித்ய விபூதியில் பெரிய பிராட்டியாரும் தானுமாக இருக்கிற இருப்பையும் காட்டிக் கொடுக்கக் கண்டு
தரித்த படியை அருளிச் செய்கிறார் –

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-

உயர்வற -என்கிற பாட்டை -கூட்டுதி நின் குரை கழல்கள்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்தளவும் -அவர்கள் தாரதம்யம் பாராதே
நீ யுகந்தாரைத் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளுதீ
பிரமாதிகளே ஆகிலும் நீ நினையாதார் உன்னை வந்து கிட்டப்படாதே பண்ணி அலைப்பு தீ
ஆகையால் உயர்வு அற்றார்கள்

உயர்நலம் உடையவன் எவன் அவன் -ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் -வேதைக ஸமதி கம்யனான நீ

ஆட்டுதீ -மயர்வு
ஆட்டுகை -உன் லீலைக்கு விஷயம் ஆக்குகை
மதி நலம் பெற்ற அடியேனும் அது அறிவேன்
சேஷசாயியான உன் படியை சேஷ பூதனான நான் நாராயணன் -என்கிற வத்தை அறிவேன் –

நீர் அறிந்தபடி என் என்ன
நீ தந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே –அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீ –
ஷீராப்தியிலே சேஷசாயியாகக் கண் வளர்ந்து அருளும் படியை அடியேன் அஃது அறிவேன்

என் வேட்கை எலாம் விடுத்து
என்னையும் ஏக மனசரான இவருடைய சம்சார அனுசந்தானத்தாலே வந்த விசனம் எல்லாம் தீர்க்கும்படி
திரு நாட்டில் இருந்த இருப்பைக் காட்டி அருளக் கண்டு
அனுபவிக்கப் பெற்று ஒழிந்தவையாம் அத்தனை அன்றோ வேண்டுவது ஆசைப்படுகைக்கு

உன் விபூதியில் நான் எனக்கு என்னாதது உண்டோ
நீ மயர்வற மதி நலம் அருளுவதற்கு முன்பு யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்திலையோ

அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் சுடர் அடியான உன் திருவடியே சுமந்து உழலக்
துயர் அறு -பாஹ்ய விஷய ப்ராவண்யம் அற
சுடர் அடி -பரமமான சுடர் அடி தொழுது எழு

உன் திருவடியே சுமந்து உழலக்
இதர விஷயங்களிலே நசை அற்று -நிரந்தரம் உன் பக்கலிலேயாய் –
உன் திருவடிகளையே சிரஸா வஹித்து அதுவே யாத்ரையாய்ச செல்லும்படிக்காகக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே

துயர் அறு சுடர் அடி –கூட்டரிய துயர் அற்று -திருவடியைக் கூட்டினை நான் கண்டேனே
என் மனமே நீயும் தொழுது எழு

யாவர் சிலருக்கும் தம் தம்மால் சேர்த்துக் கொள்ள அரிய திருவடிகளை நான் சேரும் படி பண்ணினான்
இது தான் கேட்டார் வாய் கேட்டுச் சொல்லுகிறேன் அல்லேன்
சுடர் அடி தொழுது வர்த்தி என்கிறார் –

———–

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-

ஒன்றும் தேவில்
எம்பெருமான் தன்னாலும் திருத்த ஒண்ணாது என்று கை விட்ட ஸம்ஸாரத்தை
பகவத் பரத்வ ஞானத்தை உபதேசித்துத் திருத்தின படியை அருளிச் செய்தார்

கீழ் நண்ணாதார் முறுவலிப்பலிலே சம்சாரிகள் படுகிற கிலேசம் பொறுக்க மாட்டாமையாலே
அவர்களைத் திருத்துவதாக நினைத்து
நீங்கள் தேவதாந்த்ர பஜனத்தாலே ஸம்ஸரிக்கிறி கோளே இத்தனை –
பராத்பரனான ஸர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து ஸம்ஸார பந்தத்தை அறுக்கப் பாருங்கோள் -என்று
பர உபதேச ப்ரவ்ருத்தர் ஆகிறார் –

—-

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-

உயர்வற என்கிற பாட்டை -நாடி நீர் வணங்கும் தெய்வமும் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தம் அளவாக உயர்வாக தேவதாந்தர்யத்தை ஆஸ்ரயிப்பாரும் நீங்கள் ஆஸ்ரயணீயருமாய் இறே இருப்பது
ஆகையால் உயர்வும் தாழ்வுமாய் இறே லீலா விபூதி இருப்பது இருப்பது –

உயர்நலம் யுடையவன் எவன் ஒருவன் -அவன்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
ஆஸ்ரயிக்கிற உங்களோடு
ஆஸ்ரயணீயரான அவர்களோடு வாசி யற
மற்றும் யாதும் இல்லா அன்று, நான்முகன் தன்னொடு
தேவர் முதலானவை உண்டாக்கினான்
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
யாவன் ஒருவன் அவன் மதிநலம் அருளினன்

எவன் அவன் தேவதாந்த்ர போஜனம் ஆகிற மயர்வை அறுத்து அவர்கள் பக்கலிலே
பரத்வ சங்கையையும் அறுத்தான்
அவனே பராத்பரன் -என்கிற மதி நலத்தை அருளினான்

எவன் அவன் -வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான்-அவன்
நீங்கள் ஸேவை புரிகிற தேவதைகள் ஐஸ்வர்யத்துக்கு அடியான கர்மம் நசிக்க நசிக்கும்

வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
நித்தியமான கல்யாண குண பூர்ணனான -காரணமான -புருஷோத்தமனான -உபகாரகன் –
காரணந்து த்யேய
த்யேயா நாராயணஸ் ஸதா
என்று அனுபவிக்கிற நித்யருக்கு ஸேவ்யனானவன் நம் எல்லாருக்கும்
மோக்ஷ பிரதானம் பண்ணுகைக்காக த்வரிதனாய் வந்து திருக்குருகூரிலே
அவன் மேவி உறை கோயில்,
இங்கே யாய்த்து திரு உள்ளம் பொருந்திற்று

நித்ய விபூதி இங்கேயாய் -மஹா நகரமும் -மாட மாளிகைகளுமாய் அற்றது
தஸ்மின் யதந்தஸ் தத் உபாஸி தவ்யம் -என்கிறபடியே
அவனோபாதி அவன் குண விபூதிகளும் உபாஸ்யம் என்னும் இடம் சொல்கிறது

புகழ் -எல்லாரையும் ரக்ஷித்து மோக்ஷம் கொடுக்க வந்த புகழ்

ஸுலப்யமான -வீடில் சீர்ப் புகழ்-யுடையவன் -ஆஸ்ரயணீயன் நித்ய வாஸம் பண்ணுகிற
திருக் குருகூர தனைப் பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே

துயர் அறு சுடர் அடி தொழுது எழுந்து ஆடிப்பாடிப் பல்லுலகீர்! பரவிச் சென்மின்கள்
துயர் இளைப்பு -அறு -அன்றிக்கே -சுடர் அடி -மோக்ஷ ஆனந்த ப்ரதமான தேஜஸ்ஸை யுடைய
திருவடிகளைத் தொழுது எழு என் மனனே என்றும்
லௌகீகர்க்குமாகப் பர உபதேசம் பண்ணுகிறார் –

———–

நான்காம் பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–மூன்றாம் பத்து விவரணம்-

February 4, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-

முடிச் சோதியிலே
அத்தேகத்தோடே சம்பந்தித்து நின்று அழகரோடே போக்யதையை அனுபவித்தார்

கீழே
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல் மருளில் வண் குருகூர் வண் சடகோபன் -என்று
அவன் கல்யாண குண விஷயமாக அஞ்ஞானம் இல்லை என்கிறார் –
அந்த குணாதிக்ய விஷயத்திலே அஞ்ஞானம் அனுவர்த்திக்கிற படி சொல்லுகிறார் இதில் –

—-

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8-

உயர்வற என்கிற பாட்டை -மாசூணாச் சுடருடம்பா-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்
மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஹேய சரீரங்களாலே
எடுத்த தேவாதிகளாகப் பிரித்தால்
அது மிஸ்ர சத்வம் ஆகையால் மாசாயே இருக்கும்

இது அங்கன் அன்றிக்கே
ஸ்வரூப ரூப குணங்களாலும்
ஹேய ப்ரத்யநீக ஸூத்த ஸத்வமாய் -நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையையாய்
யுவா குமாரா
அரும்பினை அலரை –என்கிறபடியே
ஏக காலத்திலேயே இரண்டு அவஸ்தையையும் சொல்லலாய் இருக்குமவன் யாவன் ஒருவன்
அவன் மயர்வற மதிநலம் அருளினான்

மாசூணா ஞானமாய்
ஸாஸ்த்ர ஜன்ய ஞானங்களுக்கும் -ஸ்வ யத்ன சா பேஷமான மாசு உண்டு
அந்த மயர்வற பக்தி ரூபா பன்ன ஞானத்தை நிர்ஹேதுகமாக அருளுகையாலே
மாசூணா ஞானமாயிற்று –

ஸ ஹேதுகமாக அருளுமாகில் ஞானத்துக்கு மாசு இறே
ஆகையால் உபயருடைய ஞானத்துக்கும் மாசு அற்றது
ஸம்ஸாரிகளைப் போலே ஸ்வரூப அந்யதா பாவம் இல்லை

அவன் திருமேனிக்கும்
ஞானத்துக்கும்
மாசு இல்லாமையைச் சொல்லிற்று

முழுதுமாய் முழுதியன்றாய்
அனுக்தமான குணங்களை யுடையனாய்
வரம்பு இன்றி முழுதியன்றாய்

இப்படி எல்லாவற்றையும் நிர்வஹிக்கிறவன் எவன் அவன்
அமரர்கள் அதிபதி
ப்ரஹ்மாதிகளைப் போலே ஸ்வா தந்தர்யம் இல்லாத நித்ய ஸூ ரிகள் ஸேவ்யனானவனை

மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
கேவலம் ப்ரஹ்ம பாவனை யாகிற கோலத்தமரர் கோனை உண்டாக்கினாலும்
அவனும் மாசூணாமல் ஏத்தினால் அவத்யமாம் அத்தனை அல்லது
உன்னுடைய உயர் நலத்தைக் கரை காண வல்லனோ –

உன் துயர் அறு சுடர் அடி
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–
ஹேய ப்ரதிபடமாய் பரஞ்சோதியான யுன் பாதம் விகஸிதமான தேஜஸ்ஸூ மழுங்காதோ
அப்ராப்யா மனஸா ஸஹ -என்று வேதமே மீண்ட விஷயத்தை
இவன் ஏத்தின அளவாய் மட்டுப்பட்டதாம் இறே

ஆகையால் அவன் நிரவதிகமான பரஞ்சோதியை நம்மாலே ஏத்தலாய் இருந்ததோ
என்று கை வாங்காதே
என் மனமே
வல்லதோர் வண்ணம் சொன்னால்
அதுவே உனக்காம் வண்ணம் என்று தொழுது
த்ரிவித கரணங்களாலும் வந்த சம்சயம் அற்று வர்த்தித்து வாழ்வாய் என்கிறார் –

——–

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-

முன்னீர் ஞாலத்தில்
அழகருடைய போக்யதையை அனுபவிக்கப் புக்க இடத்திலே பரிச்சேதித்து அனுபவிக்க ஒண்ணாமையாலே
கலங்கி
விஷய துர்பலத்தாலே வந்தது என்று அறியாதே
தம் கரண சங்கோசத்தினால் வந்தது என்று அனுசந்தித்து
அதுக்கு அடியான
ஸம்ஸார ஸம்பந்தத்தை அறுத்துத் தந்து அருள வேணும் என்று கூப்பிட்டார் –

——

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-

உயர்வற என்கிற பாட்டை -கிற்பன் கில்லேன்-என்கிற பாட்டை விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற -கிற்பன் கில்லேன்-
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ப்ராப்ய ப்ராபகங்கள் எல்லாம்
அநித்யம் என்று விட்டு இதர விஷயங்களில் ஸாதனம் மஹா ஆயாஸம் –
பலமும் அல்ப அஸ்த்ரங்களாய் இருக்கும் –

இது பகவத் விஷயத்தில் வந்தால் -இச்சைக்கு மேற்பட்டது ஓர் ஆயாஸம் அன்றிக்கே
பேற்றில் வந்தால் உயர் நலம் உடையவன் யாவன் ஒருவன்
அவனதாய் புனரா வ்ருத்தி இல்லாத விலக்ஷண மோக்ஷமாய் இருக்கும்

அதுக்கு ஈடாக ஒன்றைச் செய்ய வல்லீரோ என்ன
அது செய்கிறோம் என்று இலம்

அல்ப அஸ்திரமான இதர விஷயத்தைத் தவிர வல்லீரோ என்ன
அதுவும் தவிர்க்கிறேன் என்று இலம்

கிற்பன் கில்லேன்-என்கிறவன் எவன்
முன நாளால் அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தவன்

இப்படி விஹிதத்தைச் செய்யாமையும்
அவிஹிதத்தைச் செய்கையும் என்று தொடங்கி
என்றவன் கேழ்க்க

முன நாளால்
கால தத்வம் உள்ளதனையும் இதுவே அன்றோ எனக்கு யாத்திரை

புறம்பே நம்மை ஒழியவும் துவக்க வற்றதாகவும் உண்டோ என்ன
அல்ப சாரங்கள் அவை
உன் பக்கல் வராதபடி தகைய வேண்டுவது உண்டு
அவற்றின் பக்கல் உள்ளது முள்ளிப் பூ ரஸம் போலே அற்பமாய்
பல பல விஷயங்கள் தோறும் கால் தாழ்ந்து ஸர்வ சக்தியான தேவரை அகன்று ஒழிந்தேன்

இப்படி நீர் கை கழிந்ததாகில் நம்மைச் செய்யச் சொல்வது என் என்ன
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீ மயர்வற மதி நலம் அருளினபின்பு
தத் வியதிரிக்த போகங்கள் எல்லாம் அல்ப அஸ்த்ரங்களாய்த் தோற்றிற்று

அபர்யாப்த்த அம்ருதாசிகளான -நித்ய ஸூ ரிகள் ஸேவ்யனான நீ
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா
உயிர் செய்கையாவது
சேதனருக்கு கரண களேபரங்களைக் கொடுத்து
ஸ்திதி கமன சயனாதிகளுக்கு யோக்யமாம் படி பதார்த்தங்களை யுண்டாக்குகை

இத்தைச் செய்தான் யாவன் ஒருவன்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழும்படி
நின் நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே
உபய விபூதி நாதனான உன்னுடைய
ஹேய பிரதிபடமாய்
அனவதிக தேஜோ ரூபமாய்
அத்யந்தம் ஸ்ப்ருஹணீயமான
திருவடிகளை நானும் என் மனமும் இசைந்து வந்து பற்றித் தொழுது வர்த்திப்பது என்று கொலோ
இதுக்கு ஒரு குணாதிக்யம் உண்டாக்கி உன்னைக் கிட்டுக்கைக்கு அவதி நாள் இட்டுத் தர வேணும் என்கிறார் –

————

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-

ஒழிவு இல் காலத்தில்
நீர் கரண சங்கோசத்தை அனுசந்தித்து ஈடுபட வேண்டா
இது விஷய ஸ்வ பாவம் காணும்
நித்ய ஸூரிகளும் நம்மை அனுபவிக்கப் புக்கால் இப்படியே காணும் படுவது –

ஆனபின்பு இவ்வுடம்போடே உம்மை அடிமை கொள்ளுகைக்கு திருமலையில் வந்து நின்றோமே
என்று அங்கே நிற்கிற நிலையைக் காட்டிக் கொடுக்கக் கண்டு
அங்கே அடிமை செய்யப் பாரித்தார்

உயர்வற என்கிற பாட்டை -ஒழிவு இல் காலம் -என்கிற பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில் –

திருமந்திரத்தில் சரம சதுர்த்தியில் சொன்ன புருஷார்த்தத்தை
திருவாய் மொழியிலே முதல் பாட்டாலே விவரிக்கிறார்
அந்த அர்த்தத்தை ஒழிவில் காலம் என்கிற பாட்டாலே விவரிக்கிறார்
எங்கனே என்னில்

உயர்வற -ஒழி வில்
உயர்வானது மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
கலா காஷ்டாதி ரூபமாக அநேக கல்ப அவசானமான பூத பவிஷ்யத் வர்த்தமான
காலங்கள் எல்லாம் என்றபடி

உயர்வற ஒழிவில் காலம்
ஒருவரைப் பார்க்க ஒருவர் உயர்வதும் தாழ்வதுமாகையாலே காலமும் அதுக்கு அனுரூபமாய்
கலா காஷ்டாதிகளுமாய் உயர்வது மாறுவதுமாய்

காலமும் அற -இல் -என்கிறது
இல்லாமையைச் சொல்கிறது

உயர் நலம் -ஒழிவில் காலம்
அகால கால்யமான -நலம் அந்தம் இல்லதோர் நாடாய் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியினுடைய பரம ஆனந்தத்தைச் சொல்கிறது

உடையவன்
உபய விபூதியை யுடையனாய் யாவன் ஒருவன் அவன்
உடனாய்
உபய விபூதி நாதனை உடனாய் மன்னி
யவன் அவன்
திவ்யாத்ம ஸ்வரூப ப்ரகாசகமான
கல்யாண குண விசிஷ்டமான
திவ்ய மங்கள விக்ரஹத்தோடே கூடி இருக்கிற
ஸ்வாமியோடே கூட
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ -என்கிற
பிராட்டியைப் போலே உடனாய் மன்னி

காலம் எல்லாம் -என்று
சர்வ காலமும் என்றது

மன்னி -என்றது
ஸர்வ அவஸ்தையிலும் என்றபடி

விண் மீது இருப்பாய் -இத்யாதிப்படியே
பரத்வாதிகள் ஐந்திலும் தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் –

அவன் ப்ராப்ய அதிகாரி
அவன் ப்ராப்யமான திரு வேங்கடமுடையான் –

மற்றும் இப்படி நீர் அறிந்தபடி என் என்னில்
மயர்வற வழு விலா அடிமை
ப்ராப்யத்தில் மதி மயங்காமல் -ஒன்றும் நழுவாமல்
அற -இல்லா
ப்ராப்யாந்தரத்தில் ருசி இல்லாமல் அறுத்து மதி நலம் அருளினான் –

அடிமை செய்கைக்கு உறுப்பாக -ஞான சக்தி ப்ரேமங்களாய்க் கொண்டு
ஸர்வ வித கைங்கர்யங்களும் செய்யும் படிக்கு அருளினான்

அடிமை செய்யும் வேண்டும் நாமே
யவன் -கிருபா பாத்ர பூதனான நாம்
அவன் அருளினவன்

ஆர்ஜித்து வந்தது அன்று
அர்த்தித்து வந்தது அன்று
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமுமே பற்றாசாக அருளின பக்தியை யுடையவன் –

அவன் கிருபா ப்ரவாஹமுடையவனான அயர்வறும் அமரர்கள் அதிபதி
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து எழில் கொள் சோதி

அயர் -அசர்வு
அசராமல் ப்ராப்ய அனுபவம் பண்ணுமவர்கள்
தெழி குரல் அருவி
நாரங்களாய் நித்ய ஸூரிகள் அடிமை செய்கிறபடி
அருவிகள் ப்ரீதி பிரேரிதராய்க் கொண்டு வாசா கைங்கர்யமான ஸாம கானமான
செஞ்சொல் கவி பாட வாருங்கோள் என்று அழைப்பாரைப் போலே
தெழி குரல் அருவி சோரா நின்றது

தெள்ளருவி கொழிக்கும் திரு வேங்கட மா மலை இறே
அதிபதி -எழில் கொள் சோதி
காலோசிதமாக அடிமை கொள்ளுமவன் எவன் அவன்
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -என்று பாரித்தவனை
க்ரியதாம் இதி மாம் வத -என்று ஏவிக் கொள்ளுமவன்

திருவேங்கடத்து எழில் கொள் சோதி -துயர் அறு சுடர் அடி
இப்படிப்பட்ட அதிகாரிக்குத் துயராவது
ருண த்ரயமும் -தேவ ரிஷி பித்ரு கடன்கள் –
அபசார த்ரயமும் -பகவத் பாகவத் அஸஹ்ய அபசாரங்கள்
வேங்கடங்கள் என்கையாலே
மெய்ம்மேல் வினை முற்றவும் வேம்

வேங்கடத்து எழில் கொள் சோதி சுடர் அடி தொழுது எழு
வானார் சோதி
நீராழிச் சோதி
தம் தாமமே மேவிய சோதி
ஞானச் சுடர் விளக்கு -என்கிற ஜோதிகளில் வ்யாவ்ருத்தி

வானார் சோதி -பகல் விளக்குப் பட்டு இருக்கும்
நீராழிச் சோதி -நீர் பட்ட விளக்காய் இருக்கும்
நீராழிச் சோதி தம் தாமமே மேவிய சோதி -அணையும் விளக்காய் இருக்கும்
ஞானச் சுடர் விளக்கு -குடத்தில் இட்ட விளக்காய் இருக்கும்
வேங்கடத்து எழில் கொள் சோதி -குன்றில் இட்ட விளக்காய் இருக்கும்

எந்தை தந்தை தந்தைக்கே
இப்படிப்பட்ட ஸ்வாமி யானவன்
சுடர் அடி தொழுது எழு என் மனனே
எந்தை தந்தை தந்தைக்கே
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் என்று மனஸ்ஸை ஸம்போதிக்கிறார்

நான் கரணியும்
நீ காரணமும்
ஆனால்போலே
நமக்கு அவன்
ஸ்வாமியுமாய் -ஸர்வ வித பந்துவுமானவன்
அவனுக்கு வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் என்று
ப்ராப்யத்தைத் அர்த்தித்துப் பெறுகிறார் –

———-

புகழும் நல் ஒருவன் என்கோ! பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ! நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ! கண்ணனைக் கூவு மாறே.—————–3-4-1—

புகழும் நல் ஒருவனில்
இவர் பாரிப்புக்கு ஈடாகத்
தன்னையும்
தன் விபூதியையும்
தன் ஸர்வாத்ம பாவத்தையும் காட்டிக் கொடுக்கக்
கண்டு ஹ்ருஷ்டராய் பாரித்த படியே வாசகமாக அடிமை செய்து தலைக்கட்டினார்

யாவையும் எவரும் தானாய் அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில், அவனையும் கூட லாமே.–3-4-10-

உயர்வற -என்கிற பாட்டை -யாவையும் எவரும் தானாய்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற யாவையும் எவரும் -என்று
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
பூதங்கள் பவ் கிதங்கள் -ஸ்லாக்யமான ரத்நாதிகள் -ரஸவத் பதார்த்தங்கள் -கானாதிகள்
பகவத் ஸ்வரூப குணங்களாய் உள்ள யாவை -யவரும் -தானாய் நிற்கையாலே
ஒன்றுக்கு ஓன்று உயர்வும் தாழ்வுமாய் இருக்கையாலே

உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்
சேதன அசேதனங்களில் வியாபித்து நீ நின்றால்
தத் கத தோஷைர் அஸம்ஸ்ப்ருஷ்டனாய் இருக்கும்
சேதன அசேதனங்கள் அடங்க தானே என்ற சொல்லுக்குள்ளேயாய்
பிரகாரப் பிரகாரியாய் இருக்கும் அத்தனை –

சேதனருடைய ஸூ கித்வ துக்கித்வங்கள்
அசேதனங்களுடைய பரிணாமாதிகள் தட்டாது இருக்கிற படி

அவர் அவர் சமயந் தோறும் தோய்வு இலன்;
சேதன அசேதனங்களை தானே என்னும் சொல்லுக்குள் அடங்கும்படி அவற்றோடு கலந்து நீ நிற்கச் செய்தேயும்
அவற்றினுடைய தோஷங்கள் தன் பக்கலில் தட்டாத படி நிற்கும் –

சேதனனுக்கு அசித் கதமான பரிணாமாதிகள் இல்லையே யாகிலும் அந்த அசித் சம்சாரக்கத்தாலே
ஸூக துக்கங்கள் உண்டாகா நின்றது இறே
அப்படியே இவனுக்கும் தட்டாது என்னத் தட்டாது -ப்ரவேஸ அனுகுணத்தாலே

இப்படி என் கொண்டு அறிந்தீர் என்ன
விபூதிமானாய் இருக்கிறவன் யாவன் ஒருவன் மயர்வற மதிநலம் அருளுகையாலே அறிந்தேன்
பகவத் நிர்ஹேதுக கிருபையால் பிரகாசித்தது

தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்;
இந்த்ரியங்களாலும் அறியப் போகாதவன்

யாவன் ஒருவன் -அவன் அமரர்கள் அதிபதி
சற்றும் விஸ்ம்ருதி அற்று அனுபவிக்கிற நித்ய முக்தருக்கும்
உணர்வின் மூர்த்தி;
ஞான ஆனந்தங்களாலே ப்ரகாசமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
திவ்யாத்ம ஸ்வரூபத்தையும் யுடையவன்

யவன் அவன் -ஆவி சேர் உயிரின் உள்ளான் -யாதுமோர் பற்று இல்லாதான்
ஆவி யுண்டு
பிராண ஆஸ்ரயமான சரீரம் -அத்தோடு சேர்ந்த உயிர் உண்டு -ஆத்மா
அதுக்கு அசித் ஸம்பந்தத்தாலே பால்யாதிகள் உண்டாகிறது போல்
பரமாத்மாவுக்கு தத்கத தோஷங்கள் தட்டாவோ என்னில்
ஆதும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில்,
அவன் பக்கல் பக்தி உண்டாகில்
அவனையும் கூட லாமே.–என் மனனே -தொழுது எழு
என்று நெஞ்சுக்கும் நெஞ்சு போல்வாருக்கும் உபதேசித்து
உபதேச கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் –

———-

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர், தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கையில்
அவனுடைய சவுந்தர்யாதிகளில் ஈடுபட்டு இருக்குமவர்களைக் கொண்டாடியும்
அது இல்லாதாரை நிந்தித்து
முகமை தலை மத்திடை இட்டுச் சொல்லுகிறார் –

கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.–3-5-10-

உயர்வற என்கிற பாட்டை கருமமும் கரும பலனும்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற -கருமமும் கரும பலனும் ஆகிறது
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
கர்ம ஞானங்களாலும் -தத் சாதன பலன்களாலும் உயர்வும் தாழ்வும் ஆயிற்று –

அதில் விஞ்சின கைவல்யமாகிற படு குழியிலே விழாமல் ரக்ஷிக்கிறவன் யவன் அவன்
கருமமும் கரும பலனும் ஆகிய காரண மாணவன் எவன் ஒருவன்
அவன் மயர்வற மதி நலம் அருளினான்

மயர்வாவது
அவித்யாதிகளால் வரும் காம்ய பலன்களைப் போக்கித் தன்னையே ப்ராப்ய பிராபகங்களாக அறியும் படி
பக்தி ரூபா பன்ன ஞானத்தைத் தன் நிர்ஹேதுக கிருபையாலே அருளினவன் யாவன் ஒருவன்
அவன் கருமமும் கரும பலனாக காரணனும்
அனுஷ்டாதாகவும் நியாமகனும் பல ப்ரதனும் அவன்

ஆகையாலே
திரு மணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை
இப்படி உபாசகருக்கு பல ப்ரதானவன்
ஸ்ரீ யபதியாய்
காந்தி மிக்கு இருந்துள்ள நீல ரத்னம் போன்ற திரு மேனியையும்
அகவாயில் வாத்சல்யம் தோன்றும் திருக்கண்கள்
கருணை அம்ருதம் பொழிகிற செங்கண் மாலினை

தேவர்களுக்கு உபகாரகனான -அயர்வறும் அமரர்கள் அதிபதியை –
அநிமிஷரான நித்யருக்கு அதிபதி யானவனை

ஒருமை மனத்தினுள் வைத்து
நித்ய ஸூரிகளைப் போலே என்னையும் மனனும் இவனும் ஸதா அனுபவம் பண்ணும்படி
அனுபவிப்பித்து எனக்கும் உபகாரகன் ஆனவனை

ஒருமை மனத்தினுள் வைத்து துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப் பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.–
ஹேயபிரதிபடமான சுடர் அடியைத் தொழுது
ஒரு பிரயோஜனத்துக்காக இன்றிக்கே
நெஞ்சிலே ஒருமிக்க வைத்து
அத்தாலே சிதிலமாய்
இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமையாலே ஆடிப்
பெருமையையும் லஜ்ஜையையும் விட்டு அடைவு கெட ஏத்துங்கோள்
அதுவே உங்களுக்குத் புருஷார்த்தம் என்று நெஞ்சுக்கும் நெஞ்சு போல்வாருக்கும்
உபதேசித்து அனுபவிக்கிறார் –

———

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப் பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-

செய்ய தாமரைக்கண்ணனில்
பகவத் குண ஞானம் இல்லாமையாலே ஈஸ்வரனுடைய விஷயீ காரத்துக்கு உறுப்பாகி
அர்ச்சாவதார பர்யந்தமான ஸுலப்ய காஷ்டையை ஸம்சாரிகளுக்கு உபதேஸிக்கிறார் –

——

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9-

உயர்வற என்கிற பாட்டை -தஞ்சமாகிய -என்கிற பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் தேவதாந்த்ர பஜனத்தால் உயர்வு அற்றார்கள்

உயர்வற உயர் நலம் உடையவன்
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய்
அங்கன் அன்றிக்கே
உயர்வற உயர் நலம் உடையவன் என்று
விண் மீது இத்யாதிப்படியே பரத்வமே பிடித்து அவதாரத்து குணத்து அளவும் உபதேசித்தார்
அத்தாலே உயர்வு அற்றார்கள்

பரத்வம் வாஸா மகோசரமாய் எட்டா நிலமாய் இருந்தது
அவதாரத்துக்குப் பிற்பாடாரானோம்
நாங்கள் எங்கே யாரை ஆஸ்ரயிப்போம் என்ன

நீங்கள் உகந்தபடியே உகந்தவற்றைத் திருமேனியாகக் கொண்டு இருக்க
நீங்களும் அவற்றை திவ்ய ஸம்ஸ்தாபனாக விரும்பி ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

உயர்வற உயர் நலமுடையவன் -தஞ்சமாகிய தந்தை தாய் இத்யாதி
லோகத்திலே ஒருவரை ஒருவர் தாய் தகப்பனாகக் கொண்டு
உயர்வும் தாழ்வுமாய் இருக்குமா போலே அன்று இறே
உயர்வற உயர் நலமுடையவன் தஞ்சமாகிய தந்தை தாயோடு தானும் ஆனான் –

அவர்கள் இவனுக்கு ஓர் இடர்கள் வந்தால் விட்டுப் போவார்கள்
இவர்களோடு உண்டான பந்தம் தான் கர்மம் அடியாக வந்ததாகையாலே கர்மம் க்ஷயிக்க க்ஷயிக்கும்

இங்கன் அன்றிக்கே பூதாநாம் யோவ்யய பிதா -சத்தா யோகீ -ஸகல பதார்த்தங்களும் பிதாவாய் இருக்கும்

யவன் அவன் தானு மாய்
மாதா பிதாக்கள் பொகட்டுப் போனாலும் நாம் ஜீவிக்க வேணும் என்று இறே
தனக்கு நன்மை பார்ப்பது

அவை அல்லனுமாய்
கீழ்ச் சொன்னவர்கள் அல்லனுமாய்
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ பந்துச்ச குருஸ் த்வமேவ -என்கிறபடியே
ஸர்வ வித பந்து மாத்ரம் அன்றிக்கே
ஞான ப்ரதனனான ஆச்சார்யனாய் மயர்வற மதி நலம் அருளினான் –

சரீரமேவ மாதா பிதரவ் ஜநயத-என்கிறவர்கள் அல்லர்

ஸஹி வித்யாதஸ் தஞ்ஜநயதி– ஸ்ரேஷ்டம் ஜன்ம –என்கிறபடியே
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே ஸர்வ பந்துவும் தானே -என்கிற மதிநலம் அருளினான் –

எவன் அவன் -அடர்வரும் அமரர்கள் அதிபதி -எஞ்சல் இல் அமரர் குல முதல்-
இப்படி இருக்கிறவன் யார் என்னில்
நித்ய ஸூரிகளுக்கு உஜ்ஜீவன ஹேது வானவன்
எஞ்சல் -சுருக்கம் -அயர்வும் அப்படியே
இரண்டாலும் பகவத் அனுபவத்தில் ஸங்கோசம் இல்லாத அமரர் குலம் உண்டு -நித்ய ஸூரிகள் திரள்

அதற்கு நிர்வாஹகன் யாவன் ஒருவன் அவன் -மூவர் தம் உள்ளும் ஆதியை
த்யேய வஸ்துவை -காரணந்து த்யேய -இறே

அன்றியே
ப்ரஹ்ம ருத் ராதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனை

அன்றியே
மூவர் தம் உள்ளும் ஆதியை-என்று
அநந்த கருட விஷ்வக் சேனர்கள் -முதலானவர்களுக்கு
த்யேயா நாராயணஸ் ஸதா -என்று அவர்கள் தியானத்துக்கு ஆதியான காரணனை

ஆக
ஸர்வ காரணன் என்றபடி

அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
கீழ்ச் சொன்னவை எல்லாம் அச்சத்துக்கு உடல் இறே

ஜகத் காரண பூதனாய்
நித்ய முக்த அனுபாவ்யனாய்
ப்ரம்ம ருத்ராதிகளுக்கு நியாந்தாவானவன்
விபூதி த்வயத்தில் உள்ளார் எல்லாருக்கும் ஓக்க ஸர்வ பந்துவானவனை
நம்மாலே கிட்டப் போமோ -என்று இங்கனே
அஞ்சி நீர் உலகத்தில் உள்ளீர்கள்
லௌகிகரான நீங்கள்
அஞ்சி அவன் இவன் என்று கூழேன்மின்;

அவன் ஆகிறான்
தேச கால வஸ்துக்களால் அபரிச்சின்னனாய்
உயர்வற உயர்நலம் உடையவனாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் –

தேவதாந்த்ர பிரதிபத்தி யாகிற மயர்வற மதி நலம் அருளி
பரத்வாதிகளிலே அருமையை நினைத்து அஞ்சின அச்சம் தீர நாம் உகந்ததொரு
த்ரவ்யத்தைத் திருமேனியாகக் கொண்டு
இவன் என்று
ஸுலப்யம் தோற்ற நம் புத்தி அதீனமாய் இருப்பான் ஒருவன் ஆனபின்பு
அவன் அபரிச்சின்னன்
இவன் பரிச்சின்னன் -என்றும்
இங்கனே சம்சயியாதே மாந்தராகாதே கொள்ளுங்கோள்

நீள்கடல் வண்ணனே.
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
பராத்பரனே -அர்ச்சாவதார ஸூ லபனாய் இருக்க சம்சயித்துப் பயப்பட வேண்டா

சுடர் அடி -பரஞ்சோதி நீ பரமாய் -என்று குண பூர்த்தி உள்ளது –
அர்ச்சாவதாரத்திலே ஆகையாலே
அவன் இவன் என்று கூழேன்மின்;
அர்ச்சாவதாரத்தினுடைய திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள் –

பரத்வாதிகளைப் போலே கிட்ட அரிதே என்கிற ஹேயமும் இல்லை
அர்ச்சாவதார ஸர்வ ஸூலபமுமாய் -ஸர்வ ஸமாஸ்ரயணீயுமாய் -இருக்கிற
திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள்

இவ்விடத்தை நித்ய விபூதியிலும் அதிசயமாகக் கொண்டு இருக்கிறவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று தன் நெஞ்சுக்கும் நெஞ்சு போல்வாருக்கும்
உபதேசித்து உபதேச கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் –

———-

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-

பயிலும் சுடர் ஒளியில்
இப்படி உபதேசிக்கச் செய்தேயும் நெஞ்சு நெகிழ்ச்சி அன்றிக்கே இருந்த
ஸம்ஸாரிகளைக் கண்டு நோவு பட
நீர் ஏன் இவற்றில் நோவு படுகிறீர் -திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பாரீர் -என்று
காட்டிக் கொடுக்கக் கண்டு ப்ரீதராய்
அவர்கள் எனக்கு நாதர்
அவர்களுடைய சேஷத்வத்தினுடைய எல்லை நிலமாக வேணும் என்கிறார் –

சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7-

உயர்வற என்கிற பாட்டை -சன்ம சன்மாந்தரம் காத்து-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஜன்ம ஜன்மாந்தரமாவது –
பஞ்சாக்கினி வித்யையில் -சொல்லுகிறபடி ஜீவனானவன் மேகத்திலே புக்கு
வர்ஷ ரூபத்தாலே பூ கதமாய் வ்ரீஹியிலே புக்கு அன்ன ரூபத்தாலே புருஷன் பக்கலிலே புக்கு
பின்பு பஞ்சமியான ஆஹுதியிலே புக்க பின்பு இறே கர்ப்பமாவது –

இப்படி வருகிற ஜென்ம பரம்பரைகள் ஆகிற உயர்வற்று வேர் அறுத்து
வர்த்தமான ஜன்மத்திலே யாக்கி
காத்து
பின்பு ஒரு தேகத்திலே புகாதபடி பண்ணி
உயர்நலம் உடையவன் எவன் அவன்
அடியார்களைக் கொண்டு போய்
ஆனந்தாதி கல்யாண குண பூர்ண னானவன் தன்னிடத்திலே ஸர்வ பர
ந்யாஸம் பண்ணி இருக்கிற அடியார்களை

நலமுடையவன் யாவன் ஒருவன் -அவன் மயர்வற மதி நலம் அருளி
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே பாரதந்தர்ய ஸ்வரூபரான அடியார்களை

மதிநலம் அருளினவன் யவன் அவன் வேதைக சமதி கம்யனாகையாலே நிர்ஹேதுகமான
அனுக்ரஹத்தாலே கொண்டு போய்
மரண சமயத்து அளவும் பார்த்திருந்து பக்தியும் அந்திம ஸ்ம்ருதியும் தேவையாக்காதே
அஹம் ஸ்மாரமி என்று தான் நினைத்து இருந்தபடியே
ப்ரம்மந்த்ரம் வழி தெரியாதே இருக்கிற இவனுக்கு சதாதிகையான நாடியாலே
ஹார்த்த அநுக்ரூஹித -என்கிறபடியே தான் கூடக்கொண்டு புறப்பட்டு
இவனுக்கு இளைப்புத்தீர பரம ப்ரவேசத்தைப் பண்ணுவித்து
மேல் வழி போகைக்கும் தரிப்பு உண்டாகும் படி பண்ணி

உயிர் கொண்டு உடல் ஒழிய -இத்யாதிப்படியே
கர்ம சம்பந்தம் அறச் செய்தேயும் வித்யா மஹாத்ம்யத்தாலே விரஜை அளவும்
ஸூஷ்ம சரீரம் நிற்கும்படி பண்ணி

அர்ச்சிராதி கணங்களோடே ஓக்க ஆள் இட்டு இராதே -நயாமி -என்கிறபடியே
மாதவன் தன் துணையா நடந்தான் -என்கிறபடியே
வழியில் உள்ளார் சிரஸா வஹித்துக் கொண்டு பரமபதத்திலே கொண்டு போய்
அயர்வறும் அமரர்கள் உடன் கூட்டின அதிபதி யானவன்
தன்மை பெறுத்தி
ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யதே -என்கிறபடியே
ஸ்வ ஸ்வரூப ப்ராப்தியைப் பண்ணிக் கொடுக்க –

அயர்வற்ற நித்யரைப் போலே யன்றிக்கே பின்னையும் அதிசயிதமான பாத உபதானமாகத்
தன் தாளிணைக் கீழ் கொண்டு
துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ணி
இவன் துயரான சரீர சம்பந்தம் அற்ற அளவிலே துயர் அற்ற அடியாயிற்று –

இது தான் இவனுக்கு உபகரித்தானாக அன்றிக்கே
தன் பேறாக -நினைத்து இருக்கும் மஹா உபகாரகனை
ஸா யுஜ்யம் ப்ரதி பன்னாய -என்கிறபடியே
தன்மை பெறுத்திய அப்பனை
இப்படிச் செய்த உபகாரகனைத் தொன்மை பிதற்ற வல்லார்
ஸ்வா பாவிகமான ஒவ்தார்ய குணத்திலே ஈடுபட்டு அக்ரமமாகப் புகழுமவர்களை

பிதற்றுமவர் கண்டீர் –பயிலும் திருவுடையார்–நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.
பகவத் சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வ சம்பந்தத்தை யுண்டாக்கி —
நமக்கு அவன் திருவடிகளிலே கைங்கர்யத்தை யாவதாத்ம பாவி நடத்தக்கடவ விஸ்வசனீயன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
ததீய சேஷத்வ பிரதிபத்தி உடையதாய்க் கொண்டு வர்த்தி என்கிறார் –

——————–

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர்
அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில்
நெடியானேஎ! என்று கிடக்கும் என் நெஞ்சமே.–3-8-1-

முடியானே யில்
தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ கண்கள் -என்று
இவர் ஆசைப்பட்ட படியே கிடையாமையாலும்
ஸ்மாரக ஸந்நிதியாலும் ஆற்றாமை மீதூர்ந்து
தாமும் தம்முடைய கரண க்ராமங்களும் பெரு விடாய்ப்பட்டு அவற்றின் உடனே கூப்பிடுகிறார் –

வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம்
நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள் விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன்
ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.–3-8-3—

உயர்வற என்கிற பாட்டை -வாசகமே ஏத்த -என்கிற பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
முடியானேயில்
தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் -என்று விடாய்த்த இவருக்கு
நிழலும் அடிதாறுமான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் காட்டிக் கொடுக்கக் கொண்டு அனுபவித்து
அவர்கள் எனக்கு நாதர் என்று திருவடிகளிலே -விழுந்தார்

பாகவத விஷயம் பகவத் விஷயத்திலே மூட்டிற்று
அத்தாலே அபி நிவேசம் தலையெடுத்துக் கரை புரண்டு
என்று கொல் கண்கள் காண்பது என்னும் அளவு அன்றிக்கே
மற்ற இந்திரியங்களும் விடாய்த்து
ஒன்றின் விருத்தியை ஓன்று ஆசைப்பட்டு
எல்லா இந்திரியங்களின் விருத்தியைத் தாம் ஆசைப்பட்டுத் தன் கரணங்களும் தாமுமாகக் கூப்பிடுகிறார் –

உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
அவரவர் கரணங்கள் அந்நியமாய்ப் போகையாலே உயர்வு அற்றார்கள்

உயர்வற உயர் நலம் உடையவன் -வாசகமே ஏற்ற அருள் செய்யும்
ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனானவன் யாவன் ஒருவன் -மயர்வற மதி நலம் அருளினவத்தால்
வாசகமே ஏத்த அருள் செய்தார் –
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
மன பூர்வோ வாக் உத்தர -என்கிறபடியே
மனஸ்ஸூ அனுபவிக்க -அந்த அனுபவத்தை வாக்கு ஸ்துதித்து அனுபவிக்கையும்
மனத்தைப் போலே ஸ்மரிக்கவும் வாய் வந்தால் போலே ஸ்துதிக்கவும்
தத் தத் விரோதியான ஆலிங்கனம் பண்ணும் படியும் ஆசைப்பட்டு
இவ்வாசகமே ஏத்திப் போவதோ — நானும் ஒருக்கால் ஸ்மரித்து ஏத்தல் ஆகாதோ -என்னா நின்றது
விபந் யவ -என்று
நித்ய ஸூரிகள் ஏத்த இருக்கிற வுனக்கு நானும் ஒருக்கால் ஏத்தினால் ஆகாதோ –

அயர்வறும் அமரர்கள் -நம இத்யேவ வாதிந -நமஸ் ஸப்தம் ப்ரயுஞ்ஐதே -என்பாராய்
ஆக -அயர்வற்ற
வானவர் தம் நாயகனே –
ஸ்வாமியான நீ என்னையும் வாசகமே ஏத்தப் பண்ணினால் ஆகாதோ என்று
கை -தன் விருத்தியையும் செய்ய ஆசைப்பட்டு வாக்கு விருத்தியையும் ஆசைப்படா நின்றது

நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட
ஆன் ஆயர் தாயவனே!என்று தடவும் என் கைகளே
வேயகம் -மூங்கில் அகம்
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு இருட்டு அரை ஆகையாலே
பசு வெண்ணெய் களவு காணப்புக்கு தடவிக்கொண்டு வரா நிற்கச் செய்தே
கையிலே உரி தாக்கினவாறே ஸ்மிதம் பண்ணினான்
அதுவே கை விளக்காக அரை இருட்டும் தன் உடம்பு இருளும் குழல் இருளும் நீங்கிற்று –

அப்போது ஆழ்வார் தம் அபேக்ஷிதம் பெறுகைக்காக அவன் பின்னோடே நுழைந்து சென்று
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் துயர் அறு சுடர் அடி தொழுது
வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நாயகனே -என்று தடவும் என் கைகள்
என்று தடவிப் பிடித்துக் கொண்டு அர்த்திக்கிறார்

எம் மநோ வாக் காயங்கள் உனக்கு ஏதேனும் பச்சை இட்டது உண்டோ -இல்லையே
மநோ விருத்தியான நினைவும்
வாக்கின் விருத்தியான ஸ்துதியும்
கையின் விருத்தியான ஆலிங்கனமும்
உண்டாக வேணும் என்று தடவா நின்றது

ஆனாயர் தாயவனே
ஆனாயருக்குத் தாய் போலே பரிவனான வனே என்று தடவும் என் கைகளே

அயர்வறும் அமரர்கள் அதிபதியை
அப்ராப்ய மனஸா சஹ -என்று வேதத்தாலே எட்டாதவனை
படலை படைத்து உள்ளே புக்குக் கொண்டியிலே பிடிக்கக் காணும் தேடுகிறது

நவநீத சவுர்ய விருத்தாந்தத்தை அனுசந்தித்தவாறே அத்தாலே வந்த ப்ரேமத்தாலே
இரண்டு கைகளுக்கு கண் தோற்றுகிறது இல்லை இறே
கைகள் ஆரத் தொழுது என்றதை மறந்தார்
ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே-என்று ஈடுபடுகிறார் –

—————————

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1-

சொன்னால் விரோதத்திலே
ஊனில் வாழ் உயிரிலே அனுபவித்ததற்குத் துணைத் தேட்டமான வோபாதி
இழவுக்கும் துணை யார் யுண்டோ என்று பார்த்த இடத்தே
அவர்கள் புறம்பே அந்நிய பரராய் இருக்க
அவர்களை அதிலே நின்று மீட்கலாமோ என்று பார்த்து உபதேசித்த இடத்து
அவர்கள் அதில் நின்றும் மீளாமையாலே அவர்களை போல் அன்றிக்கே
நான் அநந்யார்ஹ கரணன் ஆகப்பெற்றேன் என்று உகந்தார் –

——

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-

உயர்வற என்கிற பாட்டை -வாய் கொண்டு மானிடம் பாட வந்த -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
உயர்வும் தாழ்வுமாய் இருக்கிறவர்களை
வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;

விசித்ரா தேக சம்பத்தி ஈஸ்வராய நிவேதிதம் என்று இருக்கிற
கரணங்களைக் கொண்டு பாட வல்லேனோ
அதில் ப்ரதானமான மநோ வாக் காயங்களைக் கொண்டு ஷூத்ரரைக்
கவி பாடுகைக்குப் பிறந்தவன் அல்லேன் –

ஸ்ருஷ்டத்வம் வனவாஸாய -என்றால் போலெ இறே என் வாயும் பிறந்தபடி –
நான் பிறரைக் கவி பாடினால் என்னை அவன் ஸ்ருஷ்டித்ததற்கு பிரயோஜனம்
அவன் பெற்றானாம் படி எங்கனே
உயர் நலம் உடையவன் யாவன் ஒருவன் அவன் பராத்பரன் –
அவனைப் பாட வந்த கவி என்கிறார் –

மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன்
ஆய் கொண்ட சீர் வள்ளல்
நீர் அவனைக்கவி பாடக் கடவோம் என்று இருந்தாலும்
வேதங்களும் யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீளுகிற விஷயத்தைக்
கவி பாடப் போமோ உம்மால் என்ன

மயர்வற மதிநலம் அருளினன்
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
எவன் அவன்
பக்தானாம் என்கிறபடியே தன்னை எனக்காக்கி வைத்தால் எனக்கு கவி பாடக் குறை யுண்டோ
மயர்வாகிற மதி மயக்கத்தை அறுத்து மதி நலம் அருளினன்
பக்தி ரூபா பன்ன ஞானத்தைத் தன் நிர்ஹேதுகமான கிருபையால் அருளின
ஆய் கொண்ட சீர் வள்ளல்
ஹேய ப்ரதிபடமான கல்யாண குணங்களை யுடையவன் யாவன் ஒருவன்

அவன் வள்ளல் தனமாவது ஒவ் கார்யம் -யவன் -ஆழி
அத்யந்தம் சேஷ பூதனானவன் -அவன் பிரான் – சேஷியான உபகாரகன் –

எனக்கே யுளன்
என் பக்கலிலே விசேஷ கடாக்ஷம் பண்ணினவன்
கையும் திருவாழியுமான சேர்த்தி அழகைக் காட்டிக் கவிக்கு விஷயமாக்கிப் பாடுவித்துக் கொண்டபடி

யவன் அவன் -சாய் கொண்ட இம்மையும் சாதித்து –
இம்மையிலேயே மோக்ஷ ஸூகத்தையும் தந்து
சாய் -சாயல் -அதாவது பரமானந்தமான உயர் நலம்
அந்த பரமானந்த ஸூகத்தை இம்மையிலேயே சாதித்து

அதிலும் இது அத்யந்த ஸூகமாம் படி அருளி
தானே உபாய உபேயமாம் படி
யாவதாத்ம பாவியாய் தன்னையே அனுபவிக்கும் படி பண்ணி

அயர்வரும் அமரர்கள் அதிபதி யாவன் ஒருவன் -அவன்
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று
அயர்வில்லாமல் ஆராவமுத தர்ஸிகள் தனக்கும் அபர்யாப்த்த அம்ருதம் ஆனவன்
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று கொடுக்கும் படி
வான் இளவரசு வைகுந்தக்குட்டன் வாஸூ தேவன் ஆகையாலே

அதிலே தம்மோடு இருப்பாம் அத்தனை
அத்தேசம் நித்ய ஸூரிகளதாய் இருக்கும்
பவத் விஷய வாஸிந என்றதும் அவன் தன் பக்கலிலேயதாய் இருக்கிறது
யவன் முமுஷுவானவன் -அவன் -வீடு தருமவன்

வீடும் தரும் -என்று அபி ஸப்தத்தாலே
இம்மையில் சாய் கொண்ட ஸாம்ய போகமும்
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடும் தரும் –

க்ருதன் தச குணம் மயா -என்று பெருமாள் மீண்டு எழுந்து அருளின போது
ஸ்ரீ பரதாழ்வான் பண்டாரத்தை வளர்த்து பதின்மடங்காக காட்டி ஒப்பினால் போலே இவனும்
பூர்வே ஸாத்யாளோடு இவர் தம்மோடும் வாசி இல்லை காணும் இவனுக்கு

அன்று ஈன்ற கன்றின் மேல் தாய் இரங்குமா போலே
த்வயி கிஞ்சித் ஸமா பன்னே கிம் கார்யம் சீதயா மம என்றபடியே
நீயும் அத்தைக் கண்டு கொண்டு
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
துயர் அறு சுடர் அடி -ஹேய ப்ரத்ய நீகம் -என்றபடி
இவனைப் பரிசுத்தனாக்கித் தான் சுத்தமான படி

வீடும் தரும் நின்று நின்று
இப்படிக் கொடுத்து இருக்கச் செய்தேயும்
ஒன்றுமே கொடுத்திலேனாகக் கடன் பட்டவன் போலே இரா நின்றான்

அன்றிக்கே
நின்று நின்றே தரும்
அதாவது
முதல் தன்னிலே ஐஹிகத்திலே அனுபவிப்பித்துப்
பின்பு ஒரு தேச விசேஷத்திலே ஏறக் கொண்டு போய் வைத்துப்
பின் கைங்கர்ய ஸூகத்தைக் கொடுக்கும் –
ஆக
சாத் மிக்க சாத் மிக்கத் தரும் –தொழுது எழு என் மனனே

ஆக
அந்நிய ஸ்தோத்ரத்தையும்
அஸேவ்ய சேவையையும் விட்டு
ப்ராப்த விஷயத்தைத் தொழுது ஆடிப்பாடி வர்த்தி என்று
தன் திரு உள்ளத்தோடு லௌகிகரோடு வாசி யற உபதேசித்து
உபதேச கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் ஆயிற்று –

———-

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.–3-10-1-

சன்மம் பல பல வில்
இதர ஸ்தோத்ரத்துக்கு அநர்ஹ கரணனான மாத்ரமேயோ
பகவத் ஸ்தோத்ரத்துக்கு அர்ஹ கரணனாகவும் பெற்றேன் என்று உகக்கிறார் –

இடர் இன்றியே ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே.–3-10-5-

உயர்வற –இடர் இன்றியே
விபூதியில் ஈஸ்வரன் ஆஸ்ரிதருடைய அபீஷ்ட பிரதானத்தின் ஒரு வகையை அருளிச் செய்கிறார்
அவை எவை என்னில்
வைதிக புத்ர ஆ நயனத்தை அனுசந்தித்து இவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் உண்டோ –
இல்லை என்கிறார் –

உயர்வற என்கிற பாட்டை -இடர் இன்றியே -என்கிற பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தம் அளவாக
உயர்வு -வருத்தம் –
எல்லாருக்கும் வருத்தம் உண்டாய் உயர வேணும் –
அற
உயர்வு இன்றியே -ப்ரயாஸம் இன்றியே
இடர் இன்றியே -இடர் -துக்கம்
ப்ரயாஸம் இன்றியே உயர் நலம் உடையவன் -உயரா நிற்கிற நலம் யுடையவன் –

கிருஷ்ணனானவான் -ஒரு நாள் ஒரு பொழுதில் -ஏகாஹம் -என்கிற க்ரதுவில் தீஷித்து இருக்கும் போது
ப்ராதஸ் ஸ்வனம் தலைக்கட்டி மாத்யந்தின ஸ்வனத்துக்கு
தக்ஷிண சமயத்தில் ஒரு வைதிகர் வந்து ஸ்துதித்து –
நாலாம் புத்ரன் இது -முன்பு மூன்று புத்ரனை இழந்தேன் –
நாலாம் புத்ரனை யாகிலும் ரக்ஷித்துத் தர வேணும் என்ன

மேலே ஓலைச் சுவடி முறிந்து போனதால் எழுத்துக்கள் தெரியவில்லையாம்

எவன் அவன்
எல்லா உலகும் கழியப் படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற
எல்லா உலகும் கழிய
மனுஷ்ய லோகம் தொடங்கி ப்ரஹ்ம லோகம் கடந்த அப்பாலே தேரை நடத்தி
எனக்கு மயர்வற மதிநலம் அருளினவன்

அவர்களுக்கும் மயர்வற மதி நலம் அருளின கிருஷ்ணனும் -படர்ப் புகழ் பார்த்தனும் வைதிகனும்
உடன் ஏறினவர்களுக்கு
மயர்வற
அவர்கள் துக்கம் தீர

திண் தேர் கடவி
மதி நலமான -ஞான பக்தியை -அருளிச் செய்து கொண்டு –
யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூஹ்ருத் சைவ ஜனார்த்தன
என்று கீதா உபநிஷத் வாக்கியங்களையும்
மாம் ஏகம் -என்கிற வாக்கியங்களையும்
உசாவிக்கொண்டு
திண் தேர் கடவி–
எவன் அவன் வைதிகனுக்குப் பிரியம் தரும் அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –

எவன் அவன் -கிருஷ்ணனாய் அவதரித்து –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
புகும் போது படர்ப் புகழ் பார்த்தனுக்கு அபகீர்த்தி வாராமல்
தமஸ் அளவிலே அவர்களை நிறுத்தி ஸகல ஸாஸ்த்ர வித்தமனான வைதிகன்
புத்ரார்த்தியாய் வந்தவனுக்கு புத்ர லாபம் உண்டாம்படிக்கும்
கலக்க ஏழ் கடல் ஏழ்-இத்யாதிப்படியே சமபூமியிலே நடக்குமா போல் நடத்தி
காரணமான மூல ப்ரக்ருதியில் செல்லாமல் அவ்வளவும் அவர் காரியமாக தேரோடே அவர்களை நிறுத்தி
தேருக்கும் இவர்களுக்கும் திண்மையைக் கொடுத்து நிறுத்தி –

சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
நிரவதிக தேஜோ ரூபமாய் நின்ற -நித்தியமாய் –
தேஜோ ரூபமாய் நின்ற தன்னுடைச் ஜோதி -தனக்கு அசாதாரணமான ஜோதி

அத்யர்க்க அநல தீப்தன் தத் தானம் விஷ்ணோர் மஹாத் மன -என்று
ஆயிரம் கோடி ஸூர்ய அக்னிகளுடைய தேஜஸ்ஸை ஓட வைத்த தொரு தேஜஸ்ஸாக
வகுத்தால் போலே இருக்கையாலே இவர்களுக்கு கண் கொண்டு காண ஒண்ணாது
ஆகையாலே தமஸ்ஸிலே நிறுத்தி -தன்னுடைச் சோதி ஆகையாலே தானே போய்ப் புக்கான்
வைதிகம் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி
தொழுது எழு என் மனனே

உடலோடும் கொணர்ந்து கொடுத்தபடி யாவது
நாச்சியார் கிருஷ்ண அவதாரம் சேவிக்க வேண்டி பிறக்கப் பிறக்கக் கொண்டு போனார்கள்
அந்தப்படியே கொணர்ந்து கொடுத்தவன்

துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
துயர் அறுகை யாவது
வைதிகன் துக்கம் தீரத் தன் திருவடிகள் துயரம் தீர்ந்து சுடர் ஒளியாயிற்று

வைதிகனுக்குப் புத்ர சோகம்
அர்ஜுனனுக்கு அபவாதம்
நீக்க சாமர்த்தியம் எல்லாம் தானாயிற்று
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே
இப்படிப்போன பிள்ளைகளை மீட்டுக் கொடுத்த கிருஷ்ணன் திருவடிகளை பற்றின
எனக்கு துயரம் உண்டோ என்று இனியராகிறார் –

———–

மூன்றாம் பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–இரண்டாம் பத்து விவரணம்-

February 3, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-

வாயும் திரையுகளில் –
விலக்ஷணம் ஆகையாலே கலங்கி ஒரு பிராட்டி தசையைப் ப்ராப்தராய் –
கண்ணால் கண்ட பதார்த்தங்கள் எல்லாம் பகவத் அலாபத்தாலே நோவு படுகின்றனவாகக் கொண்டு
அவற்றுக்குமாக நோவு படுகிற பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கீழில் திருவாய் மொழியிலே
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை -என்று
ஸுலப்யமும் -மேன்மையும்-வடிவு அழகும் -ஆகிற ஆகார த்ரயமும்
மேல் விழுகைக்கு உடலாகயாலே இவ்விஷயத்தை இப்போதே அனுபவிக்க வேணும் என்று
பாஹ்ய ஸம்ஸ்லேஷ அபேக்ஷை பண்ண —

அனுபவம் பெறாமையாலே பிறந்த அவஸா அதிசயத்தாலே ஒரு பிராட்டி தசையைப் ப்ராப்தராய் –
ஆற்றாமை கை கொடுக்கத் தன் லீல உத்யானத்திலே சென்று இருந்து
அங்கே வர்த்திக்கிற பதார்த்தங்களைக் கண்டு
அவை எல்லாம் தன்னைப் போலவே நோவு படுகின்றனவாகக் கொண்டு
தான் அவற்றுக்குமாக நோவு பட

அப்போது ஸர்வ ஸக்தனானவன்
இவர் அவஸாதம் எல்லாம் தீர வந்து ஸம்ஸ்லேஷித்த எம்பெருமானைக் குறித்து
இனி ஒரு நாளும் என்னைக் கை விடாது ஒழிய வேணும் என்கிறார் –

———-

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-

உயர்வற -என்கிற பாட்டை -வேவாரா வேட்கை நோய்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற -வேவாரா -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி -ப்ரஹ்மானந்தது அளவும் -லீலா விபூதியாய் -அதில் வர்த்திக்கிற பத்தரைச் சொல்கிறது –
அவர்கள் அர்த்த காமங்களிலே ஈடுபடா நிற்கையாலே ஸம்ஸார மக்நர் ஆனார்கள்

உயர் நலம் என்று
நித்ய விபூதியையாய் -அதில் வர்த்திக்கிற நித்யரைச் சொல்கிறது –
அவர்கள் ஸம்ஸ்லேஷ ஏக போகராகையாலே நித்ய ஆனந்த மக்நர் ஆனார்கள் –

இவர்
அங்கன் அன்றிக்கே –
வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த-
தாம் இரண்டு கோடியிலும் கூட்டு அற்று
பகவத் காமமானது அதாஹ்யமான ஆத்மாவைக் குருத்து வற்றாம்படி வேவா நின்றது –
லௌகிக அக்னிக்கு தஹிக்கக் கூடாத ஆத்மாவை ப்ரேமம் ஆகிற அக்னி தஹிப்பது ஆவியை இறே

இது எங்கனே அறிந்தீர் என்ன
மயர்வற மதி நலம் அருளுகையாலே அறிந்தேன் என்ன

அறிந்த படி என் என்ன –

மயர்வற மதி நலம் அருளின யுன்னிடத்தில் பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே

முன்பு சொன்ன ஸம்ஸாரிகள் உண்டு உடுத்து திவா ராத்ர விபாகம் பாராமல் திரிய
நித்யரும் முக்தரும் பகவத் அனுபவமே யாத்ரியாய் இருக்க
உபய விபூதியில் உள்ளார் படி அன்றிக்கே
வேவாரா வேட்க்கை நோயாலே
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தேன்

மெல்லாவியை –அல்பப்ப்ராணனை –வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
கூடோக்நிர் இவ பாதபம் -உள்ளேயே குமுறுகிற நெருப்பு மரத்தை எரிக்குமா போலே
உள்ளே பிடித்துப் புறம்பே வேவா நின்றது –

ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
அகப்பட்டாருக்கு மீள ஒண்ணாத உன் பக்கலிலே விழ விட்டுக் கொண்டாய் –
இப்படி யாக்கின நீ ஒருவரும் இல்லாதான் ஒருவனோ –

உயர் நலம் உடையவனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியானவன்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா
சற்றும் அயர்வில்லாமல் ஆனந்த அம்ருத பானம் பண்ணும் நித்ய முக்தர் அனுபாவ்யமான நீ
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து கேசியை ஸம்ஹரித்து
யாமளார்ஜுனங்கள் நடுவே தவழ்ந்து போய்
மகா பலி அபஹரித்துக் கொண்ட பூமியை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு –

இப்படி உபகாரங்களைப் பண்ணினவான உன்னுடைய
துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ணின
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே
இத்தனைக்கும் காரணனான நீ
சுடர் அடி தொழுது எழப் பண்ணின நீ
சோர விடாதே கொள்

கீழ் ஒன்பது பாட்டிலும்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே என்று சம துக்கிகளைக் கட்டிக் கொண்டு அழக் கண்ட திருமால்
சகிக்க மாட்டாமல் வந்து அரதி யாற்றி சாந்தவதானம் பண்ணி

மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே
சோம்பாது இப்பல்லுருவை எல்லாம் படர்வித்த எந்தாய்
புத்வா காலமதீதஞ்ச முமோஹ பரமா துர -பகவானைக் கண்டு அவனுக்கு அடிமை செய்யாமையாலே
ஏராளமான காலம் கடந்து விட்டது -அது தெரிந்தவாறே வருத்தம் தாங்காமல் மூர்ச்சை அடைந்தார் -என்க –
சீதா பிராட்டி பிரிவால் பெருமாள் மோஹித்தத்தை சொல்லும் ஸ்லோகம்
இதே போல் முன்புள்ள காலம் இழந்தாலும் மேல் உள்ள காலம் கை விடாதே கொள்
சுடர் அடி தொழுது எழு என் மனனே -நீயும் மூவா முதல்வனைச் சோரேல் -கிடாய் என்கிறார் –

——–

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-

திண்ணன் வீட்டில்
பிரிந்தாரைக் கண்ணாஞ்சுழலை இடப்பண்ணுமோ பாதி
கூடினாலும் மறக்கும் படி பண்ணும் என்கிறார்

உயர்வற உயர்நலம் என்கிற பாட்டைத் திண்ணன் வீடு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற -கீழில் திருவாய் மொழியிலே இவருக்குப் பிறந்த ஆற்றாமை பேச்சுக்கு நிலம் அன்று இறே

கடல் வெதும்பினால் விளாவ நீர் இல்லை -என்னுமா போலே ஆற்றாமையோடே முடியப் புக்கவாறே
அநந்தரம்
அவன் வந்து முகம் காட்டினவாறே ஆற்றாமை புக்க இடம் கண்டிலர் –

இதுக்கு அடி என் என்று ஆராயப் பார்த்தவாறே
இதர விஷயங்களினுடைய லாப அலாபத்து அளவல்லாத விஷய வை லக்ஷண்யமாய் இருந்தது –

இதுக்கு அடி என் என்று பார்த்தார்
ஸமஸ்த கல்யாண குணாத் மகனாகையாய் இருந்தது –

இது தனக்கு அடி என் என்று பார்த்தவாறே -ஸர்வேஸ்வரன் ஆகையாலே இருந்தது –

உயர்வற உயர் நலம் உடையவன் என்றால் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இறே தோன்றுவது
இப்படி அறியும்படி மயர்வற மதி நலம் அருளினன் என்றது –

ஆக இங்கனே ப்ராசங்கிகமாக ப்ரஸ்துதமான ஸர்வேஸ்வரத்வத்தை அனுசந்தித்து அத்தை அருளிச் செய்கிறார் –

கீழே மூவா முதல்வா -என்று
காரணத்வம் ப்ரஸ்துதமானவாறே
அந்தக் காரணத்தை உபபாதிக்கிறார் என்று பிள்ளான் பணிப்பர் –

உயர்வற உயர் நலம் யுடையவன் யவன் அவன் என்று சொல்லிற்று இல்லையோ
ஸர்வேஸ்வரத்வம் என்னில் ஒரு கால் சொன்னோம் என்று கை வாங்கி இருக்க வல்லவர் அல்லர் இறே

ஒரு கால் சொல்லிற்று என்று கை வாங்கலாம் விஷயம் அன்று இது
இனித்தான் பகவத் விஷயத்தில் புனருக்தி தோஷாயவாகாது
ஒரு குணத்தையே எல்லாக் காலத்திலும் அனுபவிக்க வல்லார் இவர்

மயர்வற மதிநலம் அருளுகையாலே ஒரு குணம் தன்னையே இதுக்கு முன் அனுபவித்தது என்று தோற்றாத படி
க்ஷணம் தோறும் புதுமை பிறப்பித்து அபர்யாப்த்த அம்ருதம் -ஆராவமுதம் -ஆனவன் -இவனே இறே
பயிலா நிற்கச் செய்தே இறே -பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் என்பது –

ஆகையாலே -உயர் நலம் உடையவனே காரணம் என்று -ஸ்ருதிப் பிரசித்தன் –
ப்ரமாதிகளைக் காரணம் என்கிறவர்களைக் குறித்து வெந்நரகில் விழாதே கிடி கோள்
பெற்ற தாய் இருக்க மணை வெந்நீராடாதே கிடி கோள்

உயர் நலம் யுடையவன் எவன் அவன் -திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
ஆனந்தாதி கல்யாண குணங்களிலே வைத்துக் கொண்டு ஒவ் தார்ய குணம் சொல்கிறார்

திண்ணன் வீடு
திருத்தமான வீடு -என்று ஆவிர்ப்பவாதிகளான கர்ம நிபந்தனமாக வரும் அழிவு இல்லை என்கை
இத்தால்
திண்ணம் என்று நித்ய விபூதி தொடக்கமான எல்லா விபூதியையும் யுடையவன் அவன் யவன் அவன்
மோக்ஷப் ப்ரப்ருத்-அசேஷ -புருஷார்த்த பிரதனனாவான் ஆகையாலே மயர்வற மதிநலம் அருளினன்

பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே அறியலாம் என்று பார்த்தாலும்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
அப்ராப்ய மனஸா ஸஹ -என்று
எண்ணுக்கும் எல்லை கடந்து இருக்கும் என்கை

ஓரோர் குணங்கள் வகையற எண்ணிறந்து இருக்கும் –
ஆக
அஸங்கயேயமான கல்யாண குணங்களை யுடைய எம்பெருமான் தன் குண விபூதிகளைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன்
யாவன் ஒருவன் அவன் அமரர்கள் அதிபதி

மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே
அயர்வறும் அமரர்கள் -சற்றும் அயர்வு அல்லாமல் கைங்கர்யமே தாரகமான நித்ய முகத்திற்கு
அனுபாவ்யமானவன் யாவன் ஒருவன் அவன்
மண்ணும்
லீலா விபூதியில் பூமி அந்தரிக்ஷ முதலான லோகங்கள் எல்லாம் ஒருக்காலே அமுது செய்த
என் கிருஷ்ணனை அல்லது இல்லை –

எல்லா வகைகளாலும் நிர்வாஹகன் அவன் ஒழிய வேறு நிர்வாஹகர் யாரும் இல்லாத தான் யாவன் ஒருவன்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று தன் திரு உள்ளத்தைக் குறித்தும்
தம் நெஞ்சு போல்வாருக்கும் –
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -ஆகையால்
ஹேய ப்ரத்ய நீகமான -வீடு முதலான ஸகல பல தோஹி விஷ்ணு -என்று
ஸர்வ பல ப்ரதமான தேஜஸ்ஸை யுடைய திருவடிகளைத் தொழுது
தாப த்ரயங்களும் மாறும் படி
பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா என்கிறபடியே
தொழுது வர்த்தியுங்கோள் என்று
உபதேஸ கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் –

———

ஊனில் வாழ் உயிரே! நல்லை, போ! உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே–2-3-1–

ஊனில் வாழ் உயிரிலே
ஆர்த்தி தீர வந்து ஸம்ஸ்லேஷித்த ஸம்ஸ்லேஷம் உள்ளளவு பட்டிராமையாலே
இப்பேற்றுக்கு உஸாத் துணை யாவார் யார் என்று பார்த்த இடத்தில்
ஸம்ஸாரிகளில் இல்லாமையாலே
அவன் தன்னோடே ஓக்க ப்ராப்யமருமாய்
அவனை நித்ய அனுபவம் பண்ணா நிற்பாருமாய்
பகவத் அனுபவத்துக்குத் தேசிகருமாய் இருக்கிற
நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப்புக்கு
போதயந்த பரஸ்பரம் பண்ணி அனுபவிக்கப் பெறுவது எப்போதோ என்று
அநா வாப்தியோடே தலைக்கட்டினார்

வாயும் திரை யுகளில் -ஸம்ஸ்லேஷித்த ஸம்ஸ்லேஷத்தைச் சொல்லுகிற இத்திருவாய் மொழி
நடுவு ப்ராசங்கிகமாக பரஸ்துததாம் அத்தனை

ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளானவற்றை
நீயும் நான் பட்டது பட்டாயோ என்று அவற்றைக் கட்டிக் கொண்டு அழுதார் அங்கு

இங்கு பகவத் ஸம்ஸ்லேஷத்தால் வந்த ப்ரீதிக்கு அறிவு நை சர்க்கிகமான-இயற்கையாகவே உள்ள –
நித்ய ஸூரிகளை உஸாத் துணையாகத் தேடுகிறார்

———-

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என் கடற்படா அமுதே!
தனியேன் வாழ் முதலே!! பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! நுன பாதம் சேர்ந்தேனே–2-3-5-

உயர்வற பாட்டை -இனியார் ஞானங்களால்-பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -இனியார் ஞானங்களால்-
ப்ரஹ்மானந்தம் தொடங்கி மனுஷ்யானந்தம் அளவும்
யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்!
எத்தனையேனும் அதிசயித ஞானர் ஆனவர்களுடைய-ஞான விசேஷங்களாலும்
ஸ்வ யத்னத்தால் எடுப்பாருக்கும் அன்று
பேர்க்கப் போகாதே இருக்கிற என்னாயன் எவன் ஒருவன் அவன் மதி நலம் அருளினன்

கனிவார் வீட்டின்பம்
அஞ்ஞான கந்த ரஹிதமான பக்தி ரூபா பன்ன ஞானருடைய ஹ்ருதயங்களிலே வஸியா நிற்கிற

கடற்படா அமுதே!
அபர்யாப்த்த அம்ருதம் ஆனவனே
அன்றியே
அவர்கள் இருப்பிடங்களில் வந்து அவர்களுக்குப் போக்யமானவனே

இப்படி போக்யமானவன் யாவன் ஒருவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
தனியேன் வாழ் முதலே
அசர்வு இல்லாத நித்யருக்கு போக்யனானவன்
அமரர்க்கு இன்பத்தை விளைக்குமவன்
அல்லாதாருக்கு அறிய ஒண்ணாதவன்
இவ்விரண்டு கோடியிலும் எண்ண ஒண்ணாது இருக்கிற எனக்கு அயத்ன ஸித்தமான போக்யனானவனே

தனியேன் வாழ் முதலே!
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீ -தனியேன் வாழ் முதலாய் -மயர்வை அறுத்து –
மதி நலத்தை அருளின பின்பு
உபய விபூதியிலும் கூட்டு அற்றுத் தனியேனாய் நான் இருக்கக் கைமுதல் ஆனவனே

எனக்குப் பிரதான ஸூஹ்ருதம் ஆனவனே
ஏகாஷி ஏக கர்ணிகள் நடுவே இருப்பதற்கு அஸஹ்யமான படி இருக்கிற
எனக்கு வாழ் முதலானவனே

இப்படி ச நாதன தர்ம – அயர்வரும் அமரர்கள் அதிபதி
உபாய உபேயமும் தானே யாய் –
பகவத் அனந்தைக பரருக்கும் நித்ய முக்தருக்கும் போக்யனான

பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனியார் கோட்டில் வைத்தாய்
நீ தான் தனிமையில் வந்து உதவிற்று இல்லையோ
வராஹ ரூபியாய் பிரளயங்கதமான புவனங்கள் ஏழையும் எடுத்து –

நுனியார் கோட்டில் வைத்தாய்
கூர்மை மிக்க கோட்டு இடையிலே வைத்து ரக்ஷித்தாய்
இத்தால் ரஷ்ய வர்க்கத்தின் அளவு அல்லாத ரக்ஷகனுடைய பாரிப்பு சொல்லுகிறது –

இப்படி தனிமையிலே உதவி ரக்ஷிக்குமவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு
ஹேய பிரதிபடமாய் தேஜோ ரூபமான திருவடிகளான யுன் பாதம் சேர்ந்தேனே -என் மனனே

இமையோர் தலைவா இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்னும்படி
நீ அறிவு தந்த போதே உன் திருப்பாதம் சேர்ந்தேனே யன்றோ
அடியார்கள் குழாங்களுடன் இனி சுடர் அடி தொழுது உஜ்ஜீவிக்கும்
அத்தனை அன்றோ என்று உகக்கிறார்

———–

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-

ஆடியாடியில் ததீய ஸம்ஸ்லேஷத்தை ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த இழவாலே
பெற்ற ஸம்ஸ்லேஷமும் இழந்து அடியே பிடித்துக் கூப்பிட்டார்

கீழில் திருவாய் மொழியிலே
பருகிக் களித்தேனே என்று ஹ்ருஷ்டராய் -அது தன்னை
பாகவதர்களோடே உசாவித் தரிக்க வேணும் என்று பார்த்து
அதற்கு இவ்விபூதியில் ஆள் இல்லாமையாலே நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு
போதயந்த பரஸ்பரம் பண்ணி -அனுபவிக்கக் கோலி நினைத்த போதே அத்திரளிலே புகப் பெறாமையாலே
மிகவும் அவசன்னராய் தம்முடைய தசையை ஸ்வ கீயரான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
எம்பெருமானுக்கு அறிவிக்கிற படியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11-

உயர்வற என்கிற பாட்டை -வாட்டமில் புகழ் -என்கிற பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில் –
உயர்வற -வாட்டமில் -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவாக
ஸ்வ ஸ்வாமி சம்பந்தத்து அளவாக வருகிற உயர்த்தி அற்ற வாட்டமில் புகழ் வாமனன் –

உயர்நலம் உடையவனுக்கு வாட்டமாவது
இந்த விபூதி அந்நிய சேஷத்வ -ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாலே விஞ்சி
ஈஸ்வரோஹம் என்று இருக்கையாலே ஈஸ்வரத்தினுடைய வாட்டமாம்

சேஷித்வமும் ஸ்வா தந்தர்யமும் வாட்டம் உண்டாய் வருகையாலே -அது வாராமைக்காக
தன்னுடைமை பெறுகைக்கு தான் இரப்பாளானாய் மகா பலி பக்கலிலே மண்ணை இரந்தவாறே
அது பெற்ற பின்பு வாட்டமில் புகழ் வாமனன் என்கிறது அல்ல

என் ஆர்த்தியில் ஓதுத்திலன் ஆகில் அவன் புகழுக்கு வாட்டம் வரும் என்று
இவ்வளவிலே வந்து முகம் காட்டுகையாலே வாட்டமில் புகழ் வாமனன் என்கிறார்

ஒன்றிலே ஓன்று கண் நழுவாமல் வந்து இரந்து அளந்து கொண்டவன் என்கிறார் –
நீர் இது அறிந்தபடி என் என்ன
அவன் மதிநலம் அருளப் பெற்றவத்தால் வந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே அறிந்தேன்

இசை கூட்டி வண் சடகோபன் சொல்
இசை கூட்டி –
ஸாம ரஸ உத் கானமானது -சடகோப வாங் மயம் என்று -ஸஹஸ்ர ஸாக உபநிஷத் -ஸமா கமமான
ஈர் ஐந்தினுடைய
இசை கூட்டி வண் சடகோபன் சொல் -என்று
லோகங்கள் எல்லாம் பிரசித்தமாம் படி மதி நலம் அருளினவன் யாவன் ஒருவன்
அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
அஞ்ஞான அந்தகார ரஹிதரான நித்யரானவர்கள்
ஏதத் ஸாம காயானாஸ்தே -என்று சாமத்தின் இசை கூட்டி ஸஹஸ்ர சாகையை
அமை பாட்டோராயிரத்து இப்பத்து –
அமைந்த படி

மானஸ அனுபவ மாத்திரம் அன்றிக்கே
வாசகமாகி
நாட்டை வாழ்வித்த ஒவ்தார்யம் இது

அமை பாட்டோராயிரத்து இப்பத்தும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் அடி சூட்ட ஸாம கணத்தில் இசை சற்று நாவறுதல் அற
ரஸ அனுபவத்தில் வந்த நித்ய முக்தருக்கு உத் கீதார்த்த ரச ஞானம் உடையவனான அவன்
துயர் அறு சுடர் அடி தொழுது

அமை பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே
ஹேய ப்ரத்ய நீகமாய் -ஸர்வ ஸமாஸ்ரயணீயமுமான திருவடிகளிலே
சாமசாகர்த்த மான ரசங்களாலே அமையப்பட்ட ஆயிரம் பாட்டுக்களிலும் வைத்துக் கொண்டு
இப்பத்துப் பாட்டையும் அதிகரிக்க வல்லார்க்கு
இச்செவ்வி மாலையைக் கொண்டு அவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம்
பண்ணப் பெறுவர் -என் மனனே

அடி சூட்டலாகுமே அந்தாமமே
வாசக மாலையை அடி சூட்டலாகுமே அந்தாமமே
பித்ரு தனம் புத்திரனுக்கு அனுபாவ்யமாம் போலே அனுபாவ்யமாம்
ஆழ்வார் கிலேசம் வேண்டா -அவர் பேறே இறே கற்றாருக்கும் பேறு
அடியார்கள் குழாங்களை உடன் கூடி அங்கு
அடியவரோடு இருந்து அனுபவிக்கப் பெறுவர் என்கிறார் –

———–

அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனி வாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம் பொன் திருவுடம்பே –2-5-1-

ஆடியாடியிலே ததீய ஸம்ஸ்லேஷத்தை ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த இழவாலே
பெற்ற ஸம்ஸ்லேஷமும் இழந்து அடியே பிடித்துக் கூப்பிடுகிறார் –

கீழ் ஆடியாடியிலே ஆழ்வாருக்குப் பிறந்த வியசனம் எல்லாம் மாறும் படியாக
அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் —
ஆர்த்த ரக்ஷணத்துக்காக பகவான் த்வரை யுடன் எழுந்து அருளும் பொழுது சேனை முதலியார்
தாங்கும் நிமித்தமாக காண்பிக்கப்பட்ட கையைக் கவனிக்காமல் -பெரிய த்வரையுடன் –
ஆயுத ஆபரணங்களை அக்ரமமாக -அரை குலைய தலை குலையத் தரித்துக் கொண்டு வந்து
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்து உதவினால் போலே

இவரும் வலம் கொள் புள்ளுயர்த்தாய் -என்று கூப்பிடட ஆர்த்த நாதம் செவிப்பட்டு
அழகியதாக ஜகன் நிர்வஹிணம் பண்ணினோம் என்று பிற்பாட்டுக்கு லஜ்ஜித்து
தன்னுடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களுக்கு ஒப்பவைகளான ஆயுத ஆபரணங்கள் சேர்ந்த சேர்த்தியோடே
வந்து ஸம்ஸ்லேஷிக்கக் கண்டு ஹ்ருஷ்டராய் பெற்ற பேற்றை உகந்து அனுபவிக்கிறார் –

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லி மலர் விரையொத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –-2-5-9-

உயர்வற என்கிற பாட்டை -சொல்லீர் என் அம்மானை-என்கிற இப்பாட்டு விவரிக்கிறது –
எங்கனே என்னில்

மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவும் அவரவர்கள் பிரயாசத்தாலே ஆர்ஜிக்கிற
போக்யதா அனுபவங்களை எல்லாம் அல்பமாய் அஸ்திரமாய் அற்றது
ஆகையால் உயர்வற என்கிறது

இத்தை நீங்கள் அறிந்து கொண்டு
உயர் நலம் யுடையவன் என்னோடே வந்து -அந்தாமத்து அன்பு செய்து –
தனக்கு போக்ய போக உபகரண போக ஸ்தானங்கள் எல்லாம் என் அவயவங்களிலே யாம்படி கொண்டு அருளி
உயர்வற உயர் நலம் உடையவனாய் விளங்குகிற படியை

சொல்லீர் என் அம்மானை-
ஷூத்ர விஷயங்களை அனுபவித்து -அதுக்குப் பாசுரம் இட்டுக் கவி சொல்லி
இருக்கிற நீங்கள் சொல்ல வல்லீர்களோ

எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை–என் அம்மானை–
தன் குண சேஷ்டிதங்களாலே எனக்கு மயர்வற மதி நலம் அருளி
அந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே என்னை சேஷத்வ முறையிலே நிறுத்தினவன் –

மயர்வற
அஞ்ஞான கந்த ரஹிதமான ஞான பக்திகளாலே ஆத்ம பரமாத்ம விவேக ஞானத்தை யுண்டாக்குகையாலே
என்னாவி யாவி தனை
என் ஆத்மாவுக்கு அந்தராத்மா வானவனை –

மதி நலம் அருளினன் என்று
கிருபா குண விசிஷ்டமான குணங்கள் கல்யாண குணைக தானமாகையாலேயும்
சவுந்தர்யாதி குண விசிஷ்டமான திவ்ய மங்கள விக்ரஹமும் புதுக்கணித்து தேஜோ மயமாயிற்று

யவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
அயர்வில்லாத நித்ய முக்தருக்குப் போக்ய பூதனானவன் யாவன் ஒருவன்
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
என்னோடே கலந்த பின் புகர் பெற்றானாய் இருக்கிற படி

நல்ல வமுதம்
அப்ராக்ருத போக்யங்களில் தலையான அம்ருதம் -அபர்யாப்த அம்ருதம் -ஆரா வமுதம்

பெறர்க்கு அரிய வீடுமாய்
ஒருவராலும் ஸ்வ யத்னத்தாலே பிராபிக்க ஒண்ணாத மோக்ஷ புருஷார்த்தமும் ஆனவன் யாவன் ஒருவன்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
இதர விஷயங்களில் போக ருசி அற்று –

நிரவதிக தேஜோ ரூபமான
அல்லிமலர் விரையொத்த
திருவடிகளை யுடையவன்

ஆண் அல்லன்
இதர புருஷ ஸஜாதீயன் அல்லன்

பெண் அல்லனே
அதுவும் அப்படியே யாகையாலே
உபய விஷய ஸஜாதீயன் அல்லன் என்றபடி

அவன் திருவடிகளைத் தொழுது உஜ்ஜீவி என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

———-

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-

அந்தாமத்து அன்பில் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொல் என்ற இவர் ஆசைப்பட்ட படியே வந்து கலந்தான் என்கிறார்
ஆடியாடியில்
ஆர்த்தி தீர வந்து ஸம்ஸ்லேஷித்த படி சொல்லித்து அந்தாமத்து அன்பு
அந்த ஸம்ஸ்லேஷத்தால் பிறந்த ப்ரீதி அவனது என்னும் இடம் சொல்லுகிறது
வைகுந்தா மணி வண்ணனில் –

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-

உயர்வற -என்கிற பாட்டைச் -சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படா-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற
மனுஷ்யானந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தத்து அளவும் அல்பமான
காம்ய ரசங்களைப் புசித்து உயர்வு ஏற்றார்கள்

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
ஸர்வ ரஸ -என்கிறவன்
ஸர்வ ரசிகத்வமும் ஆழ்வாரோடே அனுபவிக்கைக்கு -இவ்விடத்தில் ஸர்வ ரக்ஷகத்வமும் செய்து இருந்தால்
இவரோடு ஐக ரஸ்யம் ஸித்தியாதே என்று அவற்றை எல்லாம் ஸ்வ ரஷிதமாக வைத்து
பின்னை அனுபவிப்போம் என்று பார்த்து
சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கி
ஆழ்வார் திரு உள்ளத்திலே
சிக்கெனைப் புகுந்தான் –

ஜகத் ரக்ஷணத்துக்கு வேண்டுமாவை எல்லாம் தன்னுள்ளே யாக்கி அநந்ய பரனாய் அனுபவித்துப் போக மாட்டாதே இருந்தான்

இவர் திரு உள்ளத்திலே இருந்து செய்தது என் என்னில்
இப்படிவரும் ஜகத்துக்கு ஸர்வ ரக்ஷகத்வங்களும் இவர் இடத்திலே யாக வேணும் என்று
இவருக்கு மயர்வற மதி நலம் அருளினன்

பின் மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய்
மயர்வற இவருக்கு அந்யதா ஞான விபரீத ஞானங்கள் ஆகிற இருளைப் போக்குகைக்கு பக்தி ரூபா பன்ன மாகிற
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்கை
நந்தா விளக்காகப் பிரகாசிப்பித்து -அத்தாலே தானும் விகஸித ஸகஜ ஸர்வஞ்ஞனாய்
விஜ்வரனுமாயிற்று
விக்ரஹமும் புகர் பெற்றது இப்போது ஆயிற்று –

ஆழ்வாரை அனுபவித்து -இப்படி விளங்கினவன் -யாவன் ஒருவன் -அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
அஞ்ஞானம் அசக்திகள் இல்லாத அமரர்கள் -அநந்த வைனதே யாதி ப்ரப்ருதிகள் –
த்ரிபாத் விபூதியும் அடங்காதவர்கள் பரிசர்யை பண்ண இருக்கும் ஸ்வாமி யானவன் –

துளக்கற்ற அமுதமாய்
அபர்யாய அம்ருதமாய்
ஆடியாடியில் பட்ட கிலேசம் தீர்ந்தான் தானாய் இரா நின்றான் –

இனி இவர் வள வேழுலகு தலையெடுத்து இவர் நம்மை விடில் செய்வது என்
என்று உள் நடுக்கம் தீர்ந்தது இப்போது ஆயிற்று –

துளக்கற்ற அமுதமாய்
அவன் இவரை அபர்யாப்த அம்ருதமாய் -பிரமுமோதஹ -என்கிறபடியே
அவன் தம்மை விரும்பி போக்யமாக நினைத்து இருக்கிற இருப்பு தமக்கு போக்யமாய் இருக்கிற படி –

இப்படி போக்ய பூதனானவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
துயர் -துளக்கம்
அற -அற்ற
அமுதமான சுடர் அடிகளைத் தொழுது உத்ஸாஹி –

அவன் நம்மைப் பார்த்தவருக்கு
எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே
எங்கும் பக்க நோக்கு அறியான்
அயர்வறும் அமரர்கள் -அநிமிஷராய் அபர்யாப்த அம்ருதம் அல்லது அனுபவியாதர்களையும் நோக்கு அறியான் –

ஆழ்வார் பக்கல் ப்ராவண்யத்தைத் தவிர்க்கலாமோ பார்ப்போம் என்று
நாச்சிமார் திரு முலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும்
அவர்கள் பக்கல் கண் வைக்க மாட்டிற்று இலன்

என் பைந்தாமரைக் கண்ணன்
என் பக்கல் ப்ரீதியாலே விகசிதமான திருக்கண்களை யுடையவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்கிறார் –

———-

அவதாரிகை

வைகுந்தா மணி வண்ணனில்
தன்னை இவர் பிரியில் செய்வது என் என்று அதி சங்கை பண்ண
பிடித்தேன் கொள் சிக்கெனவே -என்றும்
மாஸூச -என்றும்
சங்கையைத் தீர்த்து அவனை உளன் ஆக்கினார்

இவர் ஆடியாடியில் பட்ட கிலேசம் தீர
கேசவன் தமரில் –
இவ்வாழ்வார் உடன் கலைக்கையால் வந்த ப்ரீதி தான் இவர் ஒருவர் அளவிலும் இன்றிக்கே
இவரோடு ஸம்பந்த சம்பந்திகள் அளவும் வெள்ளம் இட்டுப் பெருகிறபடியை அருளிச் செய்கிறார் –

வந்து கலந்தபடி சொல்லி
அந்தாமத்து அன்பிலே
அக்கலவியால் பிறந்த ப்ரீதி அவனது என்னும் இடம் சொல்லுகிறது -வைகுந்தா மணி வண்ணனிலே
அந்தப் ப்ரீதி தான் இவர் ஒருவர் அளவிலும் அன்றிக்கே இவர் ஸம்பந்த சம்பந்திகள் அளவிலும்
வெள்ளம் இட்டுப் பெருகுகிற படி சொல்லுகிறது -கேசவன் தமரிலே -என்று கண்டு கொள்வது –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

உயர்வற என்கிற பாட்டைக் -கேசவன் தமர் -என்கிற பாட்டு -விவரிக்கிறது –
எங்கனே என்னில்
உயர்வற
மனுஷ்யானந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தத்து அளவும் ஆழ்வார் உபதேசத்தால்
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யத்தாலே வந்த உயர்த்தி அற்று
சம்பந்த ஞானம் பிறந்து
கேசவன் தமர் ஆனார்கள் –

ஈஸ்வரனும் உயர்வற உயர் நலம் உடையவன் ஆனான்
தத கேசவ நாமா வான் என்கிறபடியே ஸர்வ நிர்வாஹகனான நிலையிலே தோற்று இருக்குமவர்கள் -என்னுதல்

ஸர்வேஸ்வரன் உடையார் என்றாயிற்று ஆழ்வார் இவர்களை விரும்புவது

எமர் என்று -ஆழ்வார் சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புவது

இத்தாலே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் அபிமானமே வேண்டுவது அவன் விஷயீ கரிக்கைக்கு என்றபடி –

கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும் -கேசவன் தமர் -ஆனார்கள்
இப்படி அவர் திருத்துகைக்கு அடி என் என்னில்
கேசவ கிலேச நாசநன் -என்கிறவன் யாவன் ஒருவன் -அவன் மயர்வற மதி நலம் அருளுகையாலே
முன்னை வினை
பின்னை வினை
ப்ராரப்தங்கள்
தாப த்ரயங்களும் எல்லாம் நசித்தது
பக்தி ரூபா பன்ன ஞானம் பிறந்து பர உபதேசம் பண்ணித் நிறுத்தின படி

குலம் தாரயதே தாத ஸப்த ஸப்த ச ஸப்த ச -என்கிறபடியே
இப்படிச் சொன்னவன் யாவன் ஒருவன் அவன் பிரஸாதத்தாலே லோகமானது திருந்தப் பெற்றது

மா சதிர்
பகவத் கிருபை -மகத்தான சதிர்
கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்றுக் கேசவன் தமர் ஆனார்கள் –

மா சதிர்
இந்த சதிர் தம்மளவு அன்றிக்கே
தம்மோடு ஸம்பந்த சம்பந்திகள் அளவும் வெள்ளம் இட்டுப் பெருகிற படி
மயர்வற மதி நலம் அருளுகையாலே -மா சதிர் இது பெற்று

தன் தலையாலே வந்ததாகில் இறே -ஸா வதி யாவது

இது பெற்று -ஞான பக்திகளைப் பெற்று

எவன் அவன் மேல் மேல் என இவர்களை சிரஸா வஹிக்கிற படி
நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்து வாய்க்கிற படி

எழு படி கால் என்ற அளவில்லை
தொட்டாரைத் தொட்டு இருபத்தொரு படி கால்
இன்னும் நம் அளவும் வருகிற படி

இப்படி உம் மக்களுக்கு அருளினவன் ஆர் என்ன
அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
ததீய சேஷத்வத்தில் அளவில்லாத வைகுந்தத்து அமரரும் முனிவரும்
மங்களா ஸாஸனம் பண்ண இருக்குமவன்

ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்
இப்படி விஷயீ கரித்ததற்கு ஹேது
ஸ்வாமி யாகையாலே -வடிவு அழகாலும் கண் அழகாலும் – என்னை அநந்யார்ஹன் ஆக்கினவன் –

அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
விண்ணோர் நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே
மா சதிர் பெற்றுத்
துயர் அடி தொழுது எழு என் மனனே

நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
நித்ய ஸூரி ஸேவ்யனானவன் -நமக்கு ஸ்வாமியான உபகாரகன் ஆனவன் –
ஸர்வ சமாஸ்ரயணீயன் ஆனவன் திருவடிகளைத் தொழுது
நித்ய அஞ்சலி புடா ஹ்ருஷ்டா -என்கிறபடியே
கேசவன் தமரோடே வர்த்தி என்கிறார் –

———-

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

அணைவது அரவணையில்
அவனுடைய முக்த மோக்ஷ ப்ரதத்வத்தை அருளிச் செய்கிறார்

அணைவது அரவணையில்
நம்மோடே ஸம்பந்தமே ஹேதுவாக அவன் விஷயீ கரிப்பதான பின்பு
சம்சாரிகளுக்கு நம்மோடே ஒரு சம்பந்தம் உண்டாக்கி
அவன் கிருபைக்கு விஷயம் ஆக்குவோம் என்று பார்த்து
அவர்களுக்கு மோக்ஷ பிரதத்வத்தை அருளிச் செய்கிறார் –

உயர்வற என்கிற பாட்டை
அணைவது அரவணை-விவரிக்கிறது -அது எங்கனே என்னில் –
உயர்வற
மனஷ்யாநந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவாக
ஐஹிக ஆமுஷ்மிக போகமே உத்தேச்யம் என்று புஜிக்கிறவர்கள் ஆகையாலே உயர்வு அற்றார்கள்

உயர் நலம் என்று பர ப்ரஹ்மானந்தம் உடையவன் எவன் அவன் மோக்ஷ பிரதன் ஆனவன்

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது
முக்த ப்ராப்ய போகம் தான் இருக்கிற படி
பர்யங்க வித்யையில் சொல்லுகிறபடியே ஸர்வேஸ்வரனும் பிராட்டிமாரும் கூடி இருந்து
திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே எழுந்து அருளி இருக்க இச் சேதனன் முக்தனாய்ச் சென்று கிட்டினால்
ஈஸ்வரன் கோசி என்றால்
அஹம் ப்ரஹ்மாஸ்மி– நான் ராஜ புத்ரன் -ப்ரஹ்ம பிரகார பூதன் -என்னக் கடவன்

ஆகில் இங்கனே போராய் என்று அவன் அங்கீ காரம் பெற்று
மாதா பிதாக்கள் இருந்த படுக்கையிலே பிரஜை சென்று ஏறுமா போலே
பாதே நான்ய ஆரோஹதி -என்று ஏறக் கடவன் என்கிறது –

அணைவது
தாபத்ரயங்கள் எல்லாம் ஆறும்படி அணைவது
புணர்வது-என்கிறது மூவருக்கும் ஒக்கும் படி பரிமாறினது

ஆக
சர்வேஸ்வரனும் பிராட்டியுமாக திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே ஏறி இருக்க
இவனும் அனுமதியால் ஏற
அணைத்து மடியில் வைத்து உகந்து
கிரியதாம் இதி மாம் வத -என்று ஏவிக்கொள்ள அடிமை செய்கை முக்த ப்ராப்ய போகம் ஆகிறது

இவருக்கு இப் ப்ராப்யத்துக்கு சாதகம் ஏது என்ன
மயர்வற மதி நலம் அருளினன்
இவருடைய துர்க்கதி கண்டு -தன் நிர்ஹேதுக கிருபையாலே
பக்தி ரூபா பன்ன ஞானத்தைக் கொடுத்தது இதற்கு ஹேது

இப்படிப்பட்டவன் எவன் அவன்
இருவரவர் முதலும் தானே
ப்ரமாதிகளுக்கு காரணமாய் இருக்க
ஸ ப்ரம்மா ஸ சிவஸ் ஸேந்த்ர -என்கிற பிரஸித்தியாலே சொல்லுகிறார்
இவ்விபூதி கார்ய காரண ரூபத்தாலே சம்பந்தம் சொல்லிற்று
அவ்விபூதி போக பூமியாய் நித்தியமாய் இருக்கும் என்று சொல்லிற்று
இப்படி உபய விபூதிக்கும் நாயகனானவன் யாவன் ஒருவன் அவன் அமரர்கள் அதிபதி

ப்ரம்ம ருத்ராதிகளைப் போலே ஸம்ஸார பந்தகம் அல்லாமையாலே
அம்ருத ஸப்த வாசிகளாய் -அம்ருதம் திவி -வாசிகளாய் -அபர்யாப்த அம்ருத போகிகளாய்
இருக்கிற நித்ய ஸூ ரிகளாலே ஸேவ்யமானவன் மோக்ஷ பிரதன்

ப்ரம்ம ருத்ராதிகளுக்குக் காரணபூதனாய் நிர்வஹிக்கிறான் யாவன் ஒருவன் அவன்
எப