ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்
அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத
————
ஸ்வஸ்தி ஹஸ்தி கிரி மஸ்த சேகர சந்த நோது மயி சந்ததம் ஹரி
நிஸ் சமாப்யதிக மப்ய தத்த யம் தேவம் ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–1-
ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–ஒவ்பநிஷத்துக்களின் வாக்கானது
யம் தேவம் -யாவன் ஒரு எம்பெருமானை
நிஸ் சம அப்யதிகம் அப்ய தத்த -ஓத்தாரும் மிக்காணும் இல்லாதவனாக ஓதிற்றோ
ஹஸ்தி கிரி மஸ்த சேகர-ஸ்ரீ ஹஸ்திகிரி சிகரத்தின் ஆபரணமாய் உள்ள
ஸ ஹரி -அந்த ப்ரணதார்த்தி ஹர ஸ்ரீ வரதன்
மயி-அடியேன் மீது
சந்ததம்-எப்போதும்
ஸ்வஸ்தி சந்த நோது -நன்மையை நிரம்பச் செய்ய வேணும்
உபய விபூதியிலும் அடியேனுக்கு நன்மை அருளிச் செய்ய வேணும் –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களையும்
உடனாய் மன்னி வழு இல்லாமல் செய்யப் பெற வேணும் என்று தாத்பர்யம் –
திந் நாகைர் அர்ச்சிதஸ் தஸ்மிந் புரா விஷ்ணுஸ் சநாதந –
ததோ ஹஸ்தி கிரிர் நாம க்யாதி ராஸீத் மஹாகிரே –ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யம்
திக் கஜங்கள் ஆராதித்த படியால் ஸ்ரீ ஹஸ்தி கிரி திரு நாமம் –
சேகர -சிரஸ்ஸுக்கு அலங்காரம்-அலங்கார மாத்ரத்தை சொல்லா நிற்கும் –
மஸ்த சப்தம் தனியாக சிரஸ்ஸை சொல்வதால் –
சந்த நோது-சம்யக் விஸ்தாரயது -என்றபடி
நிஸ் சமாப்யதிகம் -ந தத் சமச் சாப்யதி கச்ச த்ருச்யதே -உபநிஷத்
ஓத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றான்
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயா
ககநம் ககநாகாரம் சரஸ் சாகர உபம –
——————-
ஸ்ரீ நிதிம் நிதிம் அபாரம் அர்த்திநாம் அர்த்திதார்த்த பரிதான தீஷிதம்
சர்வ பூத ஸூஹ்ருதம் தயா நிதிம் தேவ ராஜம் அதி ராஜம் ஆஸ்ரயே–2-
ஸ்ரீ நிதிம் -ஸ்ரீ யபதியாய்
அபாரம் நிதிம் -அளவற்ற நிதியாய் இருப்பவனாய்
அர்த்திதார்த்த பரிதான தீஷிதம் –வேண்டியவற்றை கொடுத்து அருளுவதையே விரதமாகக் கொண்டவனாய்
அர்த்திநாம்
சர்வ பூத ஸூஹ்ருதம் -ஸமஸ்த பிராணிகளுக்கும் அன்பனாய்
தயா நிதிம் அதி ராஜம் -கருணா நிதியாய் அனைவருக்கும் மேம்பட்ட தலைவனாய் இரா நின்ற
தேவ ராஜம் ஆஸ்ரயே–அயர்வரும் அமரர்கள் அதிபதியான பேர் அருளாளனை -தேவ பிராணனை திருவடி பணிகின்றேன்
————–
ஆதி ராஜ்யம் அதிகம் புவநா நாம் ஈஸ தே பிசு நயந் கில மௌலி
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே ஹஸ்தி பூஷண பவத்யுத யாத்ரி –25-
ஹஸ்தி பூஷண -ஸ்ரீ ஹஸ்தி கிரிக்கு அலங்காரமாயுள்ள
ஹே ஈஸ–ஸ்ரீ தேவாதி ராஜனே
புவநா நாம்-உலகங்கட்க்கு எல்லாம்
ஆதி ராஜ்யம் -நீ அதி ராஜனாய் இருக்கும் தன்மையை
அதிகம் -மிகவும்
பிசு நயந்-கோட் சொல்லா நின்ற
தே மௌலி -உன்னுடைய திரு அபிஷேகமானது
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே –தன் சிகரத்தில் உள்ள ரத்னமாகிற ஸூர்யனுக்கு
யுத யாத்ரி –உதய பர்வதமாக
பவதி கில –ஆகா நின்றது அன்றோ
திரு அபிஷேகத்தில் கண் வைத்தவர் பாசுரம் ஈஸ –ஈஸத்வம் தோற்ற இறே திரு முடி தரிப்பது –
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் –
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் தானே திரு அபிஷேகம் சூடி சேவை சாதிப்பான்
சூளிகா மணி-உபய விபூதி சாம்ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை பர்வதமாக உல்லேகிக்கிறார்
பொற் சுடர்க் குன்று அன்ன பூம் தண் முடியர் அன்றோ
நுனியில் அழுத்தின ரத்னம் -ஸூர்யன் போலே இரா நிற்க -அதற்கு உதய பர்வதமாயிற்று இத்திரு அபிஷேகம்
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் அன்றோ –
உதய பருப்பதத்தின் மேலே விரியும் கதிரே போலே விளங்கும் –
—————-
அக்ருத ஸூக்ருதகஸ் ஸூ துஷ் க்ருத்தரஸ் சுப குண லவலேச தேச அதிகஸ்
அஸூப குண பரஸ் சஹஸ்ர ஆவ்ருத்தஸ் வரதம் உருதயம் கதிம் த்வாம் வ்ருணே -83-
அக்ருத ஸூக்ருதகஸ் –அல்ப ஸூஹ்ரு தத்தையும் அனுஷ்டிக்காதவனாய்
அஞ்ஞாத ஸூஹ்ருதங்களை எம்பெருமான் ஆரோபித்து மடி மாங்காய் இடுவதற்கு ஏற்ற க்ருத்ய லேசமும் செய்திலேன்
ஸூ துஷ் க்ருத்தரஸ் –பாபிஷ்டர்களில் அக்ர கண்யனாய்
சுப குண லவலேச தேச அதிகஸ் –நல்ல குணத்தின் லவ லேசத்துக்கும் அதி தூரஸ்தனாய்
அஸூப குண பரஸ் சஹஸ்ர ஆவ்ருத்தஸ்– காம க்ரோதம் முதலிய பல்லாயிரம் தீய குணங்கள் சூழப்பட்டவனான அடியேன்
ஒரோ மயிர்க்குழிக்கும் ஓராயிரம் துர் குணங்கள் காணக் கிடைக்கும் என்கிறார் போலும்
உருதயம் வரதம்–பேர் அருளாளனாய் வரம் தரும் பெருமாளாக
த்வாம் கதிம் வ்ருணே —உன்னை சரணமாக அடைகிறேன் –
கீழே தம்முடைய தோஷ பூயஸ்த்தையை பரக்க வெளியிட்டு –பரியாப்தி பெறாமல் –
சரண வரண சம காலத்தில் தோஷ பிராசர்ய அனுசந்தானம் அவசியம் என்னும் இடத்தை
வெளி இடுகைக்காகவும்
ஸ்வ தோஷ பூயிஷ்டத்வ அனுசந்தான சகிதமாக பிரபத்தி பண்ணுகிறார்
ஸக்ருத் ஏவ ஹி சாஸ்த்ரார்த்த –என்னும் அளவில் இருப்பவர் அன்றே –
பிரபத்தி தேஹ யாத்ரா சேஷமாக அன்றோ நம்மவர்கள் கொண்டு இருப்பர்கள்
இப்படிப்பட்ட அடியேன் -பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம்பெருமானாய்
மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய் கச்சியிலே வரம் தரும் மா மணி வண்ணனாய் எழுந்து அருளி இரா நின்ற
தேவரீரை அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டப் பிராப்தியைப் பண்ணித் தர வல்ல
உபாயமாகப் போற்றுகிறேன் என்கிறார் ஆயிற்று
—–
அயே தயாளோ வரத ஷமாநிதே விசேஷதோ விஸ்வ ஜநீந விஸ்வத
ஹிதஜ்ஜ சர்வஜ்ஞ சமக்ர சக்திக ப்ரஸஹ்ய மாம் ப்ராபய தாஸ்யமேவ தே –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -93-
தயாளோ -ஷமாநிதே-பேர் அருளாளனே பொறுமைக்கு நிதியே
சரீரத்துக்கு வரும் துக்கம் சரீரிக்கு -பர துக்க துக்கி அன்றோ தயாளு
விசேஷதோ விஸ்வ ஜநீந –மிகவும் சகல ஜனங்களுக்கும் ஹிதனே
இவற்றின் புறத்தாள்-விஸ்வத்தில் பஹிர் பூதனோ அடியேன் -ஸ்வ ஜனஸ்ய ச ரக்ஷிதா என்றது கழிந்தால்
ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய என்கிற ஊர் பொதுவும கழிய வேணுமோ
அநா லோசித விசேஷ அசேஷ லோக சரண்யன் அன்றோ நீர்
விஸ்வத–எல்லா வற்றையும் தந்து அருள்பவனே
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் அன்றோ
ஹிதஜ்ஜ -அடியோங்களுக்கு ஹிதமானவற்றை அறியுமவனே
உண்ணிலாய ஐவரால் குமை தீற்றி என்னை யுன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலியப்
பார்த்து இருக்கையோ அடியேனுக்கு தேவரீர் அறிந்து வைத்த ஹிதம்
சர்வஜ்ஞ –எல்லாவற்றையும் அறிபவனே
உட் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து விளங்குகின்ற என் ஆர்த்தியை அறியீரோ
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிவீர் ஆயினும் பாசுரம் கேட்டவாறே
திரு உள்ளம் உகக்கும் என்று அன்றோ அடியேன் பிதற்றுவது
சமக்ர சக்திக –பரி பூர்ண சக்தி உடையவனே
இரும்பை பொன்னாக்க வல்லீரே -பொருள் இல்லாத என்னைப் பொருள் ஆக்கி -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
அயே வரத –வரம் தரும் பெருமாள் என்ற திரு நாமம் உடையவனே
அடியேனுக்கு இத்தனையும் செய்ய திரு உள்ளம் இல்லையாகில் தேவருடைய வரதத்வம் என்னாவது –
மாம்பழ உண்ணி போலவோ திரு நாமம் வஹிப்பது
மாம் தே தாஸ்யமேவ –அடியேனுக்கு உன் அடிமைத் திறத்தையே
ப்ரஸஹ்ய ப்ராபய–எப்படியாவது பிராப்தம் ஆக்கி அருள்
நிரீஷிதம் வ்ருணே –92-என்று கீழே சாஷாத்கார மாத்ரம் அபீஷ்டம் என்றார்
கண்டேன் கமல மலர்ப் பாதம் என்றால் அடுத்த படியாக
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக -என்பார் –
ஆகவே இவரும் கைங்கர்ய பிரார்த்தனை இதில்
ஷூத்ர பலாந்தரங்களிலே ருசியைத் தவிர்த்து தேவரீர் திறத்தில் கைங்கர்ய சாம்ராஜ்யத்தையே
பெறுவித்து அருள வேணும் என்கிறார் ஆயிற்று –
——————-
12 குணங்கள் ஒவ்வொருவருக்கும் காட்டி
1-தயா -தயா சதகம் -கல்கண்டு போல் திருமலை -ஞானாதிகள் அப்ரயோஜனம் தயை இல்லாமல் –
பிரதானம் இதுவே -ராமானுஜரை விந்தியா மலையில் இருந்து மிதுனமாக அழைத்துச் சென்றார்களே
ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–
தேவாதி ராஜன் –காஞ்சி வரதராஜப் பெருமாளும் பெருந்தேவித் தாயாரும், வேடுவனும் வேடுவச்சியுமாக வந்து காத்து,
மறுநாள் விடியலில் காஞ்சிக்கருகில் கொண்டு வந்து சேர்த்தனர்.
தாயார், “நீர் வேண்டும்” என்று கூற, அருகில் உள்ள (சாலைக்) கிணற்றிலிருந்து நீர் கொண்டு வந்து தர, உடன் அவர்கள் மறைந்தனர்.
உடையவர் தம்மைக் காத்தவர் யார் என்ற உண்மை உணர்ந்து, தினமும்
அக் கிணற்றிலிருந்து நீர் எடுத்து வந்து திருமஞ்சனத்திற்கு கைங்கர்யம் செய்து வரலானார்.
பெருமாள் வரையுருவா, பிறவுருவா, நினதுருவா
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அருமா கடலமுதே உனதடியே சரணாமே.
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-
இவன் அருளால் பெற்ற ஸாம்யா பத்தி ஸ்வாமிக்கும் உண்டே
யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில்
உள்ள வ்யாமோஹத்தால்
அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –
இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-
அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்
ஹஸ்திகிரி
ஹஸ்த திரு நக்ஷத்ரம்
திருவெஃகா வேகா சேது
ஒரு ஆஸ்ரிதனான ப்ரம்மனுக்காக
அத்திகிரியான்-த்யாகேசன்
————-
3-ஓவ்தார்ய –
ஆர்த்திதார்த்த பரிபால தீக்ஷிதன்
வரம் ததாதி
வரதம் அளிப்பவர்களுக்குள் ஈஸ்வரன்
வரத ஹஸ்தம் இல்லாமல் அபய ஹஸ்தம்
வரதராஜனாகவே பிரசித்தமாக இருக்க ஹஸ்தமும் காட்ட வேண்டுமோ
சேராது உளவோ பெரும் செல்வருக்கு—அரையர் ஸ்துதிக்க -ஸ்த்வயன் -ஸ்தவ ப்ரியன் – ஸ்துதி பிரியன்
ஏடு படுத்தச் சொல்லி
ஞானிகள் பிரிவை அஸஹம்
வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -திரு மூழி க்களத்தில்
——-
5-சமதா -பக்தனை எனது அளவாவது
வேறுபாடு மட்டும் அல்ல
தன்னையும் அவர்களுக்கு கீழ்
அஷ்ட வித பக்தி மிலேச்சசன் இடம் இருந்தாலும்
அருளாளப்பெருமாள் எம்பெருமானார் பெயரிலே சாம்யம்
கிருபை இதன் அடிப்படையால்
ஸூஹ்ருதம் ஸர்வ பூதா நாம்
முனியே -மனன சீலன் –
உறங்குவான் போல் யோகு செய்து
நாலூரானுக்கும் முக்தி
ஊற்றம் உடையார்
ஆஸ்ரித ரக்ஷணம்
ராமானுஜர் அவதாரம் தொடங்கி உபகார பரம்பரைகள்
நம்மாழ்வார் திரு உள்ளத்திலும் பட அருளி
பேர் அருளாளன் அருளாத நீர் அருளி வீதி வழியாக ஒரு நாள்
9-ப்ரேம
சேர்த்தி புறப்பாடு பிரசித்தம்
கஜேந்திர ரஷணம் -அகில காரணமத்புத காரணம்
நடாதூர் அம்மாள்
அம்மாள் ஆச்சார்யன் எங்கள் ஆழ்வான்
10ஆஜ்ஞா
ஆறு வார்த்தைகள் பிரசித்தம்
ஆளவந்தார் ஆ முதல்வன் கடாக்ஷிக்க சரண் அடையும் பொழுதும் அருளி
விந்திய மலையில் இருந்து காத்து அருளி
ஸந்யாஸ ஆஸ்ரமும் அநந்த ஸரஸ்ஸில் செய்து அருளி
அரங்கனுக்கு அரையர் மூலம் கொடுத்து அருளி
ஸ்ரீவசன பூஷணம் ஏடு படுத்த
ஈட்டை வெளியிட்டு அருளி
12 கல்யாண
ஆதி ராஜ்யம்
திவ்ய மங்கள விக்ரஹம்
வலித்ரயம் உதர பந்தம் பட்டம் கட்டி -தாமோதரன்
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-
என்னை ஆக்கி -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -மூன்று ஏற்றம் கற்பக வ்ருக்ஷத்தை விட
முதலில் என்னையும் ஆக்கி -அர்த்திகளை உருவாக்கி -விரோதி நிரஸனமும் செய்து அருளி
தன்னையே தந்து –
பாரிஜாத மரம் வ்ருத்தாந்தம் அறிவோமே
மறப்பேன் என்று நேரில் புகுந்து -பேரேன் என்று நெஞ்சு நிறையப் புகுந்து
எனக்கே -அனைவருக்கும் தனக்கு மட்டுமே என்று சொல்லிக் கொள்ளும்படி பூர்ண அனுபவம் )
காஷ்மீர அரச வம்சத்தின் வரலாற்றைக் கூறும் ‘ராஜ தரங்கணி’ என்ற வடமொழி நூல்
—————————————————————————————
ஸ்ரீ ரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்,
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம் |
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்,
ஸ்ரீ சம் நமாமி சிரஸா யதுசைல தீபம் ||
இந்த நான்கு திவ்ய தேசங்களிலும் நடை வடை குடை முடி என்று விசேஷங்கள் உண்டு.
கோவிலில் நடை மிகவும் அழகு.
திருமலையில் வடையின் ப்ரபாவம் எல்லாருக்கும் தெரியும்.
பெருமாள் கோவிலில் குடை விசேஷம். -கொடையும் விசேஷம் பேர் அருளாளன் அன்றோ
திருநாராயண புரத்தில் வைர முடி விசேஷம்.
கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை, பெருமாள்கோயில், திருநாராயணபுரம் என்ற
இந்த நான்கு திவ்யதேசங்ககளுக்குப் பிராதான்யம் கொடுத்திருக்கின்றனர்.
———————-
ஸ்ரீ ஹரே ராம சீதா ராம ஜய ஜய ராம
ஹரே அகில ஹேய ப்ரத்ய நீகன்
ராம -கல்யாண ஏக குண நிதி -ஏக ஸ்தானம்
சீதா ராம -மிதுனமே ப்ராப்யம்
ஜய ஜய ராம -பேற்றுக்கு உகப்பானும் அவனே
ஆஸ்ரித நிரஸனம் -ஸுலப்யம் -ஸுசீல்யம் -போக்யம் பசும் கூட்டம்
ஸத்ய வாக்யனாகி -சத்யம் நேர்மை உறுதி மூன்றும் சேர்ந்தவன் -நம்மையும் அப்படி ஆக்கி அருளுவான் அன்றோ
ஹரே ராம-நன்மை செய்யும் ஸுஹார்த்தம் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி — தாரகம் –வாழ் முதல்
ஜய ராம்-போஷகம் -வளர் முதல்
சீதா ராம -ஸீயாராம் -அயோத்தியில் கோஷம் –பிராகிருத வீட்டுப்பேச்சு -போக்யம்-ஸ்ரீ யபதித்தவம் – -மகிழ் முதல்
ராதே கிருஷ்ணா ராதே ராதே பிருந்தாவனம் இதே போல்-
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் மிதுனமே
திருவுக்கும் திருவாகிய செல்வன்
ஸுர்ய -வீர்ய -பராக்ரமம்
வெளியில் இருந்து தான் கலங்காமல் ஸுர்ய
புகுந்தும் கலங்காமல் பராக்ரமம் சின்னா பின்னம்
தனக்கு விகாரம் இல்லாமல் மற்றவை விகாரம் செய்வது வீரம்
ஜய ஜய மஹா வீரா
ஜய ஜய மஹா வீர
மஹா தீர தவ்ரேய
தேவாஸூர சமர சமய சமுதித
நிகில நிர்ஜர நிர்த்தாரித நிரவதிக மஹாத்ம்ய
தச வதன தமித தைவத பரிஷதப் யர்த்தித தாசரதி பாவ
தி நகர குல கமல திவாகர
திவிஷ ததிபதி ரண ஸஹ சரண சதுர தசரத சரமருண விமோசன
கோசல ஸூதா குமார பாவ கஞ்சுகித காரணாகார –7-
விகாரம் தனக்கு கொஞ்சமும் இல்லாமல் மற்றவர்க்கு -வீரம் சூரம் பராக்ரமம் -கலங்காமல் –
உள்ளே புகுந்து சின்னாபின்னம் ஆக்கி– தான் கிஞ்சித்தும் மாறாமல் -மூன்றும் உண்டே
மஹா வீரன் – பூஜிக்க தக்கவன் மஹான்-
ரகு -இஷுவாகு குலம் -சூர்ய குலம் மனுவின் பிள்ளை இஷுவாகு -ரகு குலம் என்பதால் ராகவன் –
குணம் ஒவ் ஒன்றுமே விகாரம் அடைவிக்குமே -வில் கொண்டு மட்டும் இல்லை -அது சாதாரணம்
அழகில் ஆழ்ந்து –நேர்மையில் ஆழ்ந்து –ஆர்ஜவத்தில் ஆழ்ந்து போவோமே
திருவடி கொண்டாடும் துறை -வீரம் -பக்திஸ்ஸ நியதா வீர–பாவோ நான்யத்ர கச்சதி —
வீரத்தை தவிர வேறு ஒன்றிலும் செல்லாதே –
கோன் வஸ்மி-குணவான் -கஸ்ய வீர -16-கல்யாண குணங்களில் -ஸுசீல்யத்துக்கு அடுத்து –
நேர்மையுடன் கூடிய வீரன் பெருமாள் -ஆயுதம் எடுக்காத வெறும் கை வீரன் கீதாச்சார்யன் –
ஸத்ய வாதி பிரிய வாதி த்ருட வாதி -மே விரதம் -அசைக்க முடியாத திடம்-சரணாகத வாத்சல்யம் -அபய பிரதான சாரம்
ஸத்ய வாதி -ஹரே ராம
பிரிய வாதி -சீதா ராம
த்ருட வாதி-ஜய ஜய ராம
ஸத்ய பாஷா ராகவா பிரிய பாஷா ராகவா மிருது பாஷா ராகவா பூர்வ பாஷா ராகவா மஞ்சு பாஷா ராகவா –
சொல்லின் செல்வன் இவனே கொண்டாடும்படி திருவடி
விதித சஹி தர்மஜ்ஞ சரணாகத வத்சல
தேன மைத்ரீபவது தே யதி ஜீவிதம் இச்சசி -சுந்தர -21-20-
மித்ர பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன
தோஷோய த்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேதத் அகர்ஹிதம் -யுத்தம் -18-3-
விபீஷணோ வா ஸுக்ரீவ யதி வா ராவணஸ்வயம்*
—————-
நாமீயை விட நாமத்துக்கே ப்ராபாவம் ஜாஸ்தி
காலையில் துயிலெழும் போது :-
“ஹரிர் ஹரி ஹரிர் ஹரி”என்று ஏழு தடவை சொல்ல வேண்டும்.
வெளியே புறப்பட்டுப் போகும் போது :-
“கேசவா”என்று சொல்ல வேண்டும். “கேசவா” என்று சொன்னால் இடர்கள் எல்லாம் கெடும்.
உணவு உட்கொள்ளும் போது :-
“கோவிந்தா”என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்.
இரவு படுக்கச் செல்லும் போது :-
“மாதவா”என்று கூற வேண்டும்.
கஜேந்திர மோக்ஷம் செய்து அருளினை அவதாரம்
துஸ் ஸ்வப்னம் போக்கும்
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் -361-656-ஹரி நாமம்
நாராயணா மணி வண்ணா -ஆர் இடரை நீக்காய்
கபிஸ்தலம்
சென்று நின்று ஆழி தொட்டானை
புண்யோ துஸ் ஸ்வப்ன நாசநா
அஜிதன் -அம்ருத மதனன் –கூர்மம் தங்கி -மோஹினி -அவதாரங்களும் உண்டே
பச்சை வர்ணத்தையும் ஹரி குறிக்கும்
பச்சை வண்ணன் பவள வண்ணன்
கரும் பச்சை
நீல மேக ஸ்யாமளன் -கறுத்தே -முகில் வண்ணன் -பச்சையும் மரகத பச்சை ஆழ்ந்து
ஸம்ஸ்திதா பூஜித -கோவர்த்தன மலையில் இன்றும் எழுந்து அருளி இருக்கிறவன் ஹரி திரு நாமம் -பட்டர்
கோவர்த்தன தாரியும் ஹரி -குன்று எடுத்து குளிர் மழை காத்தவன் –
ஓம் பிரணவத்தையே தாங்கும் ஹரி திரு நாமம்-திரு மணத் தூண்கள் ஹரி-த்வய அக்ஷரங்களே –
ரமயதீ ராம –கண்டவர் தம் மனம் வழங்கும் -திருஷ்ட்டி ஸித்த அபஹாரிணாம்
ஒரு நாள் முகத்தில் விளித்தாரை படுத்தும் பாடு அறிவோமே
ரூபம் குணம் இரண்டுமே வசீகரிக்கும்
நடத்தை -இன்றும் பாஷ்யகாரர் உத்சவம் நடை அழகை ராமர் பிரகாரத்தில் நடை பெறுமே
ரம்யதி-மகிழ்ச்சி கொடுப்பதில் ஸ்ரேஷ்டம் –
ராம நாமமே ஜென்ம ரஷக மந்த்ரம்
ரம்யதே அஸ்மின் –தோள் கண்டார் தோளே கண்டார் –
பூமா -ஒவ்வொன்றும் –
வேறே எங்கும் போகவோ கேட்கவோ அனுபவிக்கவோ போக முடியாதே
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே
அபி ராமம் -நீலோத் புஷ்பம் -ஸரத்கால முழு நிலா -பிருந்தாவனத்தில் பெரிய ஸமூஹம்
குணாபி ராமன் ராமஞ்ச –
ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் சர்வ சம்பதாம் -ஹரே ராம் அர்த்தம்
ஹரே ராம
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -ஹரி சொன்னாலே ராம புண்யம் கிட்டும்
ராம ஹரே
கிட்டி அனுபவிக்க போக -ஸம்ஸார உழன்று இருக்க -யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே-அணைவிக்கும் முடித்தே
தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-
கஷ்டங்களை நீக்கி ஆனந்தம் தருவதே ஹரே ராம்
வேத ஸ்வரூபமே ஸ்ரீ ராமாயணம்-“வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே! வேத: ப்ராசேதஸாதாஸீத ஸாக்ஷாத் ராமாயணாத்மனா!!”
வேதங்கள் சொல்லுகின்ற பரமபுருஷன் ஸ்ரீராமனே ஆவான் என்பது ஆன்றோர் வாக்கு. அந்தப் பரம புருஷனே தசரத புத்திரன் ஆன ஸ்ரீராமனாக ஆவிர்ப்பவித்தான், அவதாரம் செய்தான். வேதத்தின் சரீரமே ஸ்ரீராமன். அந்த சரீரம் ஸ்ரீராமனாய் அவதாரம் செய்தபின்னர் வேதங்கள் அனைத்தும், வால்மீகிக்கு வசப்பட்டு அவர் திருவாக்கால் ராமாயணமாக மாறிவிட்டன என்பது பெரியோர் வாக்கு.
ராம நாமம் ஒரு வேதமே! ராம நாமம் ஒரு வேதமே ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம் இசை எனும் மாலை சூட்டிடுவோம்
அருள் மிகு ராம நாமம் ஒரு வேதமே ராக தாளமொடு கீதமே
அவன் தான் நாரணன் அவதாரம் அருள்சேர் ஜானகி அவன்தாரம்
கௌசிக மாமுனி யாகம் காத்தான் கௌதமர் நாயகி சாபம் தீர்த்தான் (ராம நாமம் ஒரு வேதமே)
யாவத் ஸ்தாஸ்யந்தி கிரய: ஸரிதஸ்ச மஹீதலே
தாவத் ராமாயண கதா லோகேஷு ப்ரசரிஷ்யதி–(வால்மீகி ராமாயணம் 1.2.36)
இப்புவியில் மலைகள் மண்ணில் நிற்கும் வரை, நதிகள் ஓடும்வரை, ராம காதை உலகில் நிற்கும்.
காலங்களைக் கடந்த பெருமை
லோகங்களைக் கடந்த -கோடி கோடி அண்டங்களிலும் பெருமை பெற்ற ஸ்ரீ ராமாயணம்
கால தேச பரிச்சேதய ரஹிதம்
இரண்டு அரண் ஸ்ரீ ராமாயணமும் திருவாய் மொழி
1. நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள்
கிருஷ்ணாவதாரத்தில் நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள். ராமாவதாரத்தில் ஒருவர் தவம் செய்து நான்கு பிள்ளைகளைப் பெற்றார் என்று சுவாரஸ்யமாகச் சொல்லுவார்கள். யசோதை, நந்தகோபன், தேவகி, வசுதேவர் ஆகிய நால்வர் தவம்செய்து கண்ணன் அவதரித்தான். ஆனால் தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார் .ஆனால் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.
2. நான்கு வகை தர்மங்கள்
தர்மத்தை காப்பதற்காக பகவானே தசரதனுக்குப் பிள்ளைகளாக அவதரித்தான்.
தர்மம் நான்கு வகைப்படும்.
‘‘கூடும் அன்பினில் கும்பிட அன்றி வீடும் வேண்டா”என்று இருக்கும் நிலை அது. ‘‘உற்றதும் உன் அடியார்க்கு அடிமை” என்று இதை திருமங்கை ஆழ்வார் வலியுறுத்துவார்.
3. இராமாயணம் கதையா? தத்துவமா?
அறத்தின் நாயகனான ராமன் குணங்கள்தான் ராமாயணம் முழுக்க இருக்கிறது .அந்தப் பரம்பொருளை உணர்வதுதான் ராமாயணம் தெரிந்து கொள்வதன் நோக்கம். எனவே ராமாயணத்தை ஒரு கதையாகப் படிக்காமல், தத்துவத்தைப் படிப்பதன் மூலம்தான் முழுமையான பலன் பெற முடியும். அத னால் தான் நம்மாழ்வார், “கற்பார் ராமாயணத்தை அல்லால் மற்றும் கற்பரோ” என்று சொல்லாமல், “கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ” என்று பாடினார்.
4. 18 முறை நடந்து கேட்டார் ராமானுஜர்
ராமாயணம் வெறும் கதையாக இருந்தால், பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய ராமானுஜர் போன்ற மகான்கள் அதை எளிமையாக தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் ராமாயணம் என்பது வேத சாஸ்திரத்தின் சாரமான தொகுப்பு என்பதால்தான், திருமலைக்கு பதினெட்டு முறை நடந்து, ஒரு வருட காலம், ராமாயண சாரத்தை, தன்னுடைய தாய் மாமனும் ,தன்னுடைய ஐந்து ஆச்சாரியர்களில் ஒருவரும் ஆகிய பெரிய திருமலை நம்பிகளிடம் பாடம் கேட்டார்.
5. காயத்ரி மந்திரமும், ஸ்ரீ ராமாயணமும்.
சகல வேதங்களின் சாரமான காயத்ரி மந்திரத்திற்கும், ஸ்ரீ ராமாயணத் திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. காயத்ரி மந்திரத்திற்கு 24 அட்சரங்கள். ராமாயணத்திற்கு 24,000 ஸ்லோகங்கள். ஒவ்வொரு அட்சரத்துக்கு 1000 ஸ்லோகங்கள் என்ற வகையில் 24 ஆயிரம் ஸ்லோகங்களை வால்மீகி செய்தார். இதைப்போலவே, நம்மாழ்வாரின் திருவாய்மொழியும், ராமாயண சாரத்தைச் சொல்வதால்,அதற்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை ராமாயணத்திற்கு நிகராக 24000 படி உரை எழுதினார்.
6. ராமாயணமும் மகாபாரதமும்
ராமாயணம் மகாபாரதம் இரண்டும் ஒரே கருத்தைத்தான் சொல்லுகின்றன. உலக சகோதரத்துவத்தின் ஒற்றுமையைச் சொல்வது ராமாயணம். ஒரு வருக்கு ஒருவர் ஒற்றுமையின்றி பகைத்துக் கொண்டால் என்ன மாதிரியான அழிவுகள் ஏற்படும் என்பதைச் சொல்வது மகாபாரதம். ராமாயணம் நேர்மறையாகச் சொல்கிறது. அதே கருத்தை எதிர்மறையாகச் சொல்லுகின்றது மகாபாரதம். அதனால் தான் “இதிகாசங்களில் சிரேஷ்டமானது ராமாயணம்” என்று பிள்ளை லோகாச்சாரியார் தம்முடைய ஸ்ரீ வசன பூஷணம் என்கின்ற நூலிலே சொல்லி வைத்தார்.
7. சீதையின் பெருமையா?ராமனின் பெருமையா?
ராமாயணம் என்பது ராமரின் பெருமையைக் கூறுவதாகச் சொன் னாலும், அது சீதையின் பெருமையை பிரதானமாகச் சொல்ல ஏற்பட்ட காவியம் என்று மகரிஷிகள் கருதுகின்றார்கள். “ஸீதாயாம் சரிதம் மகத்” (சீதையின் பெருங்கதை,) என்றுதான் ரிஷிகள் சொல்லுகின்றார்கள்.ஆழ்வாரும் தேவ மாதர்கள் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக சீதை பத்து மாதம் சிறையில் இருந்தாள். அந்த சிறையில் இருந் தவளின் பெருமையைச் சொல்றதுதான் ராமாயணம் என்று பாசுரம் பாடுகின்றார்.
தளிர்நிறத்தால் குறையில்லாத் “தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள்” காரணமாக் கிளர்அரக்கன் நகர்எரித்த
களிமலர்த் துழாய்அலங்கல் கமழ்முடியன் கடல் ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறையிலமே-என்பது திருவாய்மொழி.
தெய்வப் பெண்கள் கால்களில் விலங்கை வெட்டி விடுகைக்காகத் தன்னைப் பேணாதே, அங்கே புக்குத் தன் காலிலே விலங்கைக் கோத்துக் கொண்டவள்,’ என்று நாட்டிலே பிரசித்தையானவள் என்னுதல் என்பது உரையாசிரியர்கள் கருத்து.
8. முத்தி நகரங்களில் தலை அயோத்தி
9. அயோத்தி ஏன் புனிதத்தலம்?
பகவான் நித்ய வாசம் செய்யும் வைகுண்டத்தின் ஒரு பகுதியே அயோத்தி.யுத்தங்களால் வெல்லப்படாத பூமி. மனு, இந்த ஊரை சரையூ நதியின் தென் கரையில் நிறுவினார் என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்துகொள்ள முடிகிறது.அயோத்தியின் வாசலில் அனுமனும், அதற்கு தெற்கில் சுக்ரீவனும், அவனுக்கு அருகில் அங்கதனும், தெற்கு வாசலில் நளனும் நீலனும், மேற்கில் வக்த்ரனும், வடக்கில் விபீஷணனும் வாழ்ந்துகொண்டு இந்த நகரத்தை காப்பாற்றி வருகிறார்கள் என்பது ஐதீகம்.
ஸ்ரீராமபிரான் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களின் அடிச்சுவடுகளை இன்றும் நாம் அயோத்தியில் தரிசிக்க முடியும். அதனால் அயோத்தியை புனிதத் தலமாக இந்திய மக்கள் கருதுகிறார்கள். அயோத்தியில் தரிசிக்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. அயோத்தியா ரயில்வே நிலையத் தினுள், சுவர்களில் ஸ்ரீ ராம்சரித் மானஸ் என்ற துளசிதாஸ் ராமாயணத்திலிருக்கும் வரிகள் எழுதப்பட்டுள்ளன.
10. சரயு நதி
குழந்தைக்கு அமுதம் தரும் தாயின் மார்பகம் போல,
உயிர்களுக்கு அமுதம் தரும் வற்றாத நதி சரயு.
இரவி தன்குலத் தெண்ணிபல வேந்தர்தம்
புரவு நல்லொழுக் கின்படி பூண்டது
சரயு வென்பது தாய் முலையன்ன திவ்
வரவு நீர்நிலத்தோங்கு முயிர்க்கெல்லாம்.–(பால-ஆற்றுப்படலம் -24) என்று
11. தங்கச் சிலைகள்
சீதா தேவி தினமும் துளசி பூஜை செய்த துளசி மாடம், ராமன் பட்டாபிஷேகம் செய்த இடம், அஸ்வமேத யாகம் நடத்தப் பட்ட இடம், சீதையைப் பிரிந்த பிறகு ராமர் ஜடாமுடி தரித்த இடம் இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களை பற்பல படையெடுப்புகளுக்கு பிறகு இன்றும் காண்பது ஆச்சர்யமாக உள்ளது.
கனக பவன் என்னும் மண்டபத்தில் இராமாயணக் காட்சிகள் யாவும் வெகு நேர்த்தியாகவும். பேரழகு பொருந்திய ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இதன் முகப்பில் தங்கம் பதித்திருப்பதால் இதற்கு கனக பவன் என்னும் பெயருண்டாயிற்று. மூன்று தங்க சிலைகள், வெள்ளி மண்டபத்தில் இருப்பது இங்கு சிறப்பு. இது ராமர் சீதைக்கு, கைகேயி உகந்து அளித்த அரண்மனை என்றும் சொல்லப்படுகிறது.
12. பிரணவம் நடந்தது
ராமபிரான் லட்சுமணன் சீதை மூவரும் காட்டிற்குச் செல்லுகின்றார்கள். இதை விவரிக்க கூடிய பெரியவர்கள், அவர்கள் மூவரும் பிரணவம் போல நடந்து சென்றார்கள் என்று உவமை கூறி விவரிக்கிறார்கள். வேதத்தின் சாரம் தான் பிரணவம். அதாவது ஓம்காரம்.ஓங்காரத்தில் மூன்று எழுத்துக்கள் இருக்கின்றன. ‘‘அ” எழுத்து இறைவனையும் அதாவது ராமரையும், உ என்கின்ற எழுத்து பிராட்டியையும், ‘‘ம” என்ற எழுத்து ஜீவாத்மாவாகிய லட்சுமணனையும் குறிக்கும்.
இந்த மூன்று எழுத்தும் தனித்தனியாக பிரிக்க முடிந்தாலும் எப்பொழுதும் பிரியாமலே இருக்கும். அப்படி மூவரும் ஒருவரைத் தொடர்ந்து ஒரு வராக காட்டில் நடந்து சென்றார்கள் என்பதை, பிரணவம் சென்றது என்று சுவாரசியமாகக் குறிப்பிடுகின்றார்கள். பிரணவத்தை ஒரே அட்சரமாக நினைப்பது போல நாம் சீதா ராம லஷ்மணர்களை இணைத்து தியானம் செய்ய வேண்டும்.
ஸ்ரீ ராமபிரானுக்கும் ஸ்ரீ ராமானுஜருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன “சைத்ர மாஸே ஸிதே பக்ஷே நவம் யாஞ்ச புனர்வஸு” என்பது இராமர் அவதாரத்தைக் குறிக்கும் சுலோகம். அதாவது சித்திரை நவமியில் புனர் பூசத்தில் அவதரித்தார் என்பதை இந்த ஸ்லோகம் சொல்லுகின்றது. “மேஷார் த்ராஸ ம்பவம் விஷ்ணோர் தர்ஸன ஸ்தாபனநோத் சுகம்” என்று மேஷ மாதமான சித்திரையில் ராமானுஜர் அவதாரம் நிகழ்ந்ததாக ஸ்லோகம் குறிக்கிறது.
1.இருவரும் உலகை ரமிக்கச் செய்தவர்கள்.
2.இருவர் பெயரி லும் “ராம” என்ற நாமம் உண்டு.
3.இருவருக்கும் பல ஆச்சாரியர்கள்.
4.இருவருமே சரணாகதி சாஸ்திரத்தின் மகிமையை சொல்வதற்காக அவதரித்தவர்கள்.
5.இருவருமே திருவரங்கநாதரிடத்தில் பெரும் அன்பு கொண்டவர்கள்.
14. ஏன் ராம அவதாரம்?
ராமபிரான் தமது உலகமான வைகுண்டத்துக்குச் செல்லுகின்றபோது எல்லோரையும் அழைத்துச் சென்றார் என்று நம்மாழ்வார் பாடுகிறார். வைகுண்டம் என்பது மேலேறுவது.மேல் நிலைக்குச் செல்வது.இதை வள்ளுவரும் “வானோர்க்கும் உயர்ந்த உலகம்” என்று சொல் லுவார்.எல்லோரையும் உயரே ஏற்ற ,கீழே இறங்க வேண்டும்.கீழே இறங்குதல்தான் “அவதாரம்.” ராமபிரான் அவதரிக்கக் காரணம், மற்றவர்களை மேல்நிலைக்கு அழைத்துச்செல்வதுதான்.
மோட்சம் என்பது மறுஉலகம் என்று சொல்வதைப் போலவே விடுதலை பெறுதல் என்ற பொருளும் உண்டு.எதிலிருந்து விடுதலை பெறுதல் என்றால், துன் பங்களிருந்து விடுதலை பெறுதல்.அதனால் தானே இராமன் கட்டிற்குச் செல்லும்போது அயோத்தி மக்கள் அழுதார்கள்.
கிள்ளையொடு பூவை யழுத; கிளர்மாடத்
துள்ளுறையும் பூசை யழுத உருவறியாப்
பிள்ளை யழுத; பெரியோரை யென்சொல்ல
வள்ளல் வனம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால்- (நகர் நீங்கு. 100)
என்று இந்தக் காட்சியின் மாட்சியை திரைப்படம் போல வர்ணிப்பான் கம்பன்.
15. ஏழு மராமரம்
இராமாயணத்தில் நம் கவனத்தை கவர்ந்தது மராமரம்.
“மரா” “மரா” என்ற உபதேசம் “ராம ராம” எனும் மந்திரம் ஆகி வான் மீகியைப் பதப்படுத்தியது. இராமாயணத்தை எழுத வைத்தது.
நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே- என்பார் கம்பர்.
அது சரி மராமரம் என்பது என்ன? இங்கே மராம் என்பது யா மரம் (ஆச்சா/சாலம்). மரா என்ற தமிழ்ச் சொல், ராம என்ற தெய்வப்பெயரை வால்மீகிக்குத் தந்துள்ளது.
ஏழுமா மரம் உருவிக் கீழுலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடுபுக்கு உருவிப்பின் உடனடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது அவ் இராகவன் பகழி
ஏழு கண்டபின் உருவுமால் ஒழிவது அன்று இன்னும்.
இராமனால் செலுத்தப்பட்ட அம்பு, தனக்கு இலக்காகக் கொடுக்கப்பட்ட ஏழு மராமரங்களையும் துளைத்து, ஏழு உலகங்களையும் துளைத்து, ஏழு என்ற எண்ணிக்கையில் இருந்த எல்லாப் பொருட்களையும் துளைத்தது, இனி துளைப்பதற்கு ஏழாக எதுவும் இல்லை என்ற நிலையில் இராமனிடம் திரும்பி வந்தது.
16. ஏழும் இராமனும் ராமபிரான் வாழ்வில் ஏழு என்கிற எண் மிகப் பொருந்தி வருவதைக் காணலாம்.
1. ஏழாவது அவதாரம் ராம அவதாரம்.
2.ஏழு மரா மரங்களைத் துளைத்தான்.
3.இராமன் எழுபது வெள்ளம் வாநர சேனைகளோடு இலங்கை மீது படை யெடுத்தான்.
4.ஏழு உலகங்களிலும் அவன் பெருமை பேசப்படுகிறது.
5.ஏழு பிராகாரங்கள் உள்ள ஸ்ரீரங்கநாதரை அவன் குலதெய்வமாக அடைந்திருந்தான்.
6.ஆறு தம்பிகளோடு சேர்ந்து ஏழு பேராக இருந்தான். (நின்னோடும் எழுவரானோம்).
7.ஏழு காண்டங்களில் ராமகதை சொல்லப்பட்டிருக்கிறது. ஏழாவது காண்டம் உத்தர காண்டம்.
8.அனுமன் வீணையை வைத்து கொண்டு ஏழு ஸ்வரங்களால் இராமா யணம் பாடிக்கொண்டிருக்கிறார்.
17. தோல்வியே இல்லை
1.அவன் ஜெயராமன்.
2.ஸ்ரீ ராமாயணத்தில் தோல்வி என்பதே கிடையாது.
3.ராமன் அம்பு பழுதுபட்டு திரும்பியது இல்லை.
4.“ஒக பாணமு” என்று தியாகய்யர் ராம பாணத்தின் பெருமையைப் பாடுவார்.
5.‘‘தோலா வீரன்” என்று வேதாந்த தேசிகர் ராமனின் வீரத்தைப் பாடுவார்.
6.எல்லா இடங்களிலும் வெற்றிதான். ஆகையினால்தான் ஸ்ரீராமஜெயம் எழுதுபவர்களுக்கும், ஸ்ரீ ராமஜெயம் சொல்பவர்களுக்கும் தோல்வி என்பது வருவது இல்லை.
18. ஏன் ராமன் பெயர் இல்லை ? ஒரு அருமையான பாட்டு.
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி பற்ற
விரை செறி கமலத் தாள்சேர் வெண்ணெய்யூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மெளலி!
இந்த பாட்டிலே ராமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி விளக்கப்படுகிறது. ராமருக்கு பட்டாபிஷேகம் செய்தார்கள்.சரி.
இதில் ராமர் பெயர் இல்லையே? என்ன காரணம்?
19. வேதங்கள் ஏன் ராமனைத் தொடர்ந்தன?
வேதம்தான் ராமன். வேதம் காட்டும் மறைபொருள் தான் ராமாயணம்.
வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசராத்மஜே I
வேத: ப்ரசேதசாதாஸீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா II
இந்த ஸ்லோகத்தின் பொருள் இதுதான்.
“வேதங்களினால் அறியப்படும் இறைவன் தசரதனின் புதல்வனாகப் பிறந்தான்; வேதம் ப்ரசேதஸ் (வால்மீகி) முனிவரிடமிருந்து) ராமாயண மாகப் பிறந்தது” என்பது இதன் பொருள்.
அதாவது இராமாயணத்தில் தூல வடிவம் ராமன் என்கிற அவதாரம். தன் அவதார காலம் நிறைவு பெற்றவுடன் ராமன் சரயு நதியில் இறங்கி உடனடியாக வைகுண்டத்திற்குச் செல்லத் தொடங்க, வேதங்களும் அவனைத் தொடர்ந்து சென்றன. அதைத்தொடர்ந்து முனிவர்களும் மக்களும் ராமன் பின்னால் சென்றார்கள்.இதன் மூலம் பிரமாணமும் பிரமேயமும் (வேதமும் ,வேதப் பொருளும் ஒன்று என்பதை காட்டுகிறார்.
20. குலசேகர ஆழ்வார் வர்ணிக்கும் காட்சி இது
ஆழ்வார்களில் குலசேகர ஆழ்வார் இராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.அவர் ராமாயணம் பாடவும், அந்த காட்சிகளை அனுபவிக்கவும் விரும்புகிறார்.பகவான், “நீ திருச்சித்ர கூடம் வா, அங்கு இதை அநுபவிக் கலாம்” என, ஆழ்வார் தில்லை திருச்சித்ரகூடத்தில் (வடக்கேயும் ஒரு சித்ரகூடமுண்டு) இக்காட்சிகளை கண்டு, ராமாயணத்தை பூரணமாக ஒரு பதிகத்தில் அருளிச் செய்கிறார். அதில் 10 வது பாசுரம் இது. தன்னுடன் சரா சரங்களை வைகுண்டம் ஏற்றினான் என்று பாடுகிறார்.
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை
வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி
நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே.
இப்பொழுதும் இந்த காட்சியை, நாம் தில்லை திருச்சித்ரகூடத்தில் (சிதம்பரம்) காண முடியும்.
21. ஏன் சித்திரையில் ஸ்ரீராமநவமி?
ஸ்ரீராமநவமி யானது சித்திரை மாதத்தில் வருகின்றது. இராமபிரான் அவதாரம் செய்தது மட்டுமல்ல பட்டாபிஷேகம் செய்த மாதம் சித்திரை மாதம். சித்திரை மாதத்திற்கு அதிதேவதை விஷ்ணு. விஷ்ணு என்றால் கரந்து எங்கும் பரந்து உளன் என்பதுபோல் எல்லா இடத்திலும் வியாபித்து உள்ளவன் என்று பொருள். நிறைந்த ஒளியை உடையவன் என்று பொருள். தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். எனவே, ராமபிரான், விஷ்ணு மாதத்தில், மேஷத்தில், நவகிரக தலைவன் சூரியன் அதி உச்சத்தில் இருந்த போது அவதரித்தான்.
22. வசந்த ருதுவும் ராம நவமியும்பகவான் கீதையில்,
ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்
மாஸாநாம் மார்கஸீர்ஷோஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||
23. ஏன் மறுபடி மறுபடி சீதையைப் பிரிந்தான் இராமபிரான் ?
முனிவரின் வாக்கு பொய்யாகி விடக்கூடாது என்பதற்காக சாட்சாத் பகவானே இந்தத் துன்பத்தை ஏற்றுக் கொண்டான். இந்த சாபத்தின் மூலம் தேவர்களின் துன்பங்களைத் தீர்த்து வைத்தான். இங்கே (முனிவரின் சாபம் (தேவர்களுக்கு) வரமாகியது.
24. ஸ்ரீராம நவமியில் ராம நாமம் சொல்லுங்கள்
25. மூன்று முறை சொன்னால் சகஸ்ர முறை சொன்ன பலனா?
அற்புத சக்தி பொருந்திய இந்த மந்திரத்தின் மேன்மையை பரமேஸ்வரனே பார்வதி தேவிக்குச் சொல்வதாக விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வருகிறது. “ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே” என்ற இந்த ஸ்லோகத்தை தினமும் குறைந்தது, 11 முறை சொல்லுங்கள், வீட்டில் சுபிட்சம் தேடி வரும். ராம ராம ராம என மூன்று முறை சொன்னால், எப்படி ஆயிரம் நாமத்துக்கு சமமாகும் என, சந்தேகம் வரும். அதற்கு கணித அடிப்படையில் பதில் உள்ளது.
“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்” (கம்பராமாயணம்: சிறப்புப் பாயிரம் 14)
26. யார் இவ்வுலகில் பாக்கியவான்?
ராமனின் குணங்கள் பற்றி அழகான தமிழ் பாடல் ஒன்று உண்டு. இராமா யணத்தின் சாரமே இந்தப் பாடலில் கொடுக்கப்பட்டிருக்கும். யார் இவ்வுலகில் பாக்கியவான் என்ற கேள்விக்கு விடையாக இப்பாடல் உள்ளது.
1. ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்.
2. காம க்ரோதத்தை கட்டுப்படுத்தியே பூமியில் வாழ்பவன் பாக்கியவான்.
3. பொய் உரைக்காமல் மெய் சிதைக்காமல் வையத்தில் வாழ்பவன் பாக்கி யவான்.
4. கள்ளம் கபடுகள் உள்ளத்தில் இல்லாமல் வெள்ளை மனத்தவன் பாக்கியவான்.
5. நண்பர்களுடைய நலத்தின் கோரும் பண்புடையவனே பாக்கியவான்.
6.துன்பம் வந்தாலும் துக்கமில்லாமல் இன்பமாக்குபவன் பாக்கியவான்.
7. யாதொரு ஸ்திரீயையும் மாதா என்று எண்ணிடும் நேர்மையானவனே பாக்கியவான்.
27. ராமநவமி எப்படிக் கொண்டாட வேண்டும்?
ராமநவமி எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதை காஞ்சிப் பெரியவர் இப்படி கூறுகிறார். இது ஒரு பத்ததி(முறை)
1. இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீ ராமநவமியன்று முழுவதும் பட்டினி (சித்த உபாவாஸ) விரதம் இருக்க வேண்டும்.
2. ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் ஏதாவது சிறிது கோயில் சந்நதியிலோ, அல்லது பஜனை மடத்தின் முன்போ கூடி ஸ்ரீராம நாம மந்திரத்தை ஐந்து நிமிஷம் ஜபம் செய்து, பிறகு, “ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்” என்னும் பதின்மூன்று அட்சரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைப் பின்பற்றிச் சொல்லிக்கொண்டு, ஊரைச் சுற்றி வந்து, முதலில் ஆரம்பித்த இடத்தை அடைந்து, அங்கு பத்து நிமிடம் பஜனை செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.
3. மறுநாள் காலை அதே இடத்தில் கூடி, ஸ்ரீ ராமாவதாரத்தில் (கம்ப ராமாய ணத்தில்) ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை வர்ணிப்பதாக பாக்களைப் பாராயணம் செய்து, அல்லது ஸம்ஸ்கிருதம் படித்தவர்கள் எவரேனும் இருந்தால், அவரைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்ரீராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் பண்ணும்படி செய்து, பத்து நிமிடம் பஜனை செய்து, ஏழை மக்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும்.
28. இதிகாசம் என்பதன் பொருள் இதுதான்இராமாயணம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் பரவி இருக்கக்கூடிய ஒரு உன்னதமான இதிகாசம். இதி என்றால் “இவ்வாறு, இப்படி, இப்படியிப்படி, இப்படியாக, இவ்வாறாக” என்றெல்லாம் இடம் சார்ந்து பொருள்படும். (ஹ) என்பது வலியுறுத்தும் ஓர் அசைச்சொல். தமிழில் இப்படித்தான், இவ்வாறாகத்தான் என்பதில் வரும் ‘தான்’ என்னும் சொல் போல.கடைசி பகுதியாகிய (ஆஸ) என்பதன் பொருள் “இருந்தது”.
அஸ் என்றால் “இரு” (நிகழ்காலம்), இதன் இறந்தகால வடிவம் ஆஸ. இதிகாசம் என்றால் “இப்படி நடந்தது” என்று பொருள்.அந்த ஆசிரியரே அதிலே ஒரு கதாபாத்திரமாக வருவார். அப்படிப்பட்ட இதி காசங்கள் இரண்டு. ஒன்று. இராமாயணம். இன்னொன்று மகா பாரதம்.வேதத்தில் அர்த்தத்தை தெளிவாக கதை போல் விளக்குவது இந்த இதி காசங்கள். மகாபாரதத்தில் வேத வியாசர் கதைக்குள் வருவார். இராமாயணத்தில் வால்மீகி முனிவரே வருகிறார். அவர் தான் சீதையை தன் ஆசிர மத்தில் வளர்க்கிறார்.
29. இராமாயணம் முதலில் அரங்கேறியது எப்போது?
இராமாயணதிற்கு இன்னொரு விசேஷமும் உண்டு. இது இராமர் காலத்திலேயே அரங்கேறியது. அதுவும் அவர் ராஜ மண்டபத்திலேயே அரங்கேறியது. அதை இராமன் மக்களோடு மக்களாக அனுபவித்தான். இதை குலசேகர ஆழ்வார் அற்புதமாகப் பாடுகிறார்.
அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன்னமுதம் மதியோம்
ஒன்றே மிதிலைச் செல்வி (சீதை) உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் (லவ குசர்கள்) செம்பவளத் திரள்வாய்த் திறந்து இனிமையாகப் பாட இராமன் தன் சரிதை(கதையை) கேட்டான் என்பது பொருள். அடுத்த வரியில் இந்த கதையைக் கேட்கும்போது அமுதம் கூட சுவையாய்த் தெரியாது. இதன் மூலம் இராமாயணம் கேட்க இனிமையானது என்பதும் தெரிகிறது. அதனால் தானே யுகம் யுகமாக இந்தக் கதையை மக்கள் ஆர்வமுடன் கேட்கிறார்கள்.
30.வேதத்தின் சூட்சுமம் சொல்வதுதான் இராமாயணம்
வேதத்தில் உள்ள சாரமான செய்திகளை நேரடியாக வேதம் படித்துத் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால், வேதம் என்ன தான் சொல்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் படிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்பதால்,
கற்பார் ராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஓன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே
என்று நம்மாழ்வார் பாடினார். வேதத்துக்கு உரை செய்தவருமான ஸ்ரீ பாஷ்யம் எழுதியவருமான ஸ்ரீ ராமானுஜர் இராமாயணத்தில் மிகுந்த ஆற்றலும் ஆர்வமும் கொண்டு இருந்தார். இராமாயணத்தில் சொல்லப்பட்ட சூட்சும தத்துவங்களைக் கொண்டுதான் ஸ்ரீ பாஷ்யத்தை அவர் எழுதினார் என்பார்கள். அதனால்தான் அமுதனார்,” படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடிகொண்ட கோயில் எம் ராமானுஜன்” என்று பாடியிருக்கிறார். அதாவது எப்போதும் இராமாயணம் இராமானுஜர் நெஞ்சத்தில் இருக்குமாம். அதுதான் அவரை வழி நடத்தியதாம்.
இப்படி நம்மையும் வழி நடத்தி நல்வழி காட்ட இந்த ராம நவமியில் ஸ்ரீ ராமாயணத்தை பாராயணம் செய்வோம். ஸ்ரீ ராமனின் குணங்களைக் கொண்டாடுவோம்.ஸ்ரீ ராம நாமம் ஜெபம் செய்வோம்.உலகம் சர்வ சகோதர ஒற்றுமையுடன் வாழ பிரார்த்தனை செய்வோம். செயலிலும் முனைவோம். அது தான் நிஜமான ஸ்ரீ ராமநவமி.
—————-
பாவயாமி ரகுராமம் பவ்ய சுகுணாராமம் |
ரகு குலத்து ராமனை த்யானிக்கிறேன், அவன் தெய்வீக நற்குணங்களின் உருவானவன்(தோட்டம்).
பாவுக விதரணபரா பாங்கலீலா லசிதம் ||
ஒளிரும் தன் கடைக் கண்களாலேயே மகிழ்ச்சியும், வளமும் எல்லாருக்கும் தருவதில் மேலானவன்
தினகரான்வயதிலகம், திவ்யகாதி சுதசவனா
வன, ரசித சுபாஹுமுக வத, மஹல்யா பாவனம்,
அனக மீச சாப பங்க, ஜனகசுதா ப்ரானேசம்,
கன குபித ப்ருகுராம கர்வஹர, மிதசாகேதம்
சூர்ய குலத்திலகம், காதியின் மகன் யக்ஞம் காக்க
சுபாஹுவின் தலைமையிலான அரக்கர்களை அழித்தவன், அஹல்யைக்கு விமோசனம் அளித்தவன்,
தெய்வீகமான ஈஶனின் வில்லை முறித்து ஜனக புத்ரியின் உயிர் நாதனானவன்,
பெருங்கோபத்தோடு வந்த ப்ருகுராமனின் செறுக்கை அடக்கி, அயோத்தி திரும்பியவன்
விஹிதாபிஷேகம் அத விபின கதம் ஆர்யவாசா
சஹித சீதா சௌமித்ரீம், ஶாந்ததம ஶீலம்,
குஹநிலையகதம், சித்ரகூடாகத, பரத தத்த
மஹித ரத்னமய பாதுகம், மதனசுந்தராங்கம்
பட்டாபிஷேகம் தடைபட்ட பின் தந்தை சொற்படி வனம் சென்று, ஸீதை, ஸௌமித்ரியுடன் வசித்தவன். அமைதியே உருவானவன்.
குஹன் இருக்குமிடம் சென்றவன், சித்ரகூட பர்வதத்தில் வந்து, பரதனுக்கு தன் மஹிமை பொருந்திய ரத்ன பாதுகைகளை தந்தவன், மன்மதனின் அழகிய அங்கங்கள் உடையவன்.
விதத தண்டகாரண்ய கத விராத தலனம்,
சுசரித கடஜ தத் தானுபம் இதவைஷ்ணவாஸ்த்ரம்,
பதக வர ஜடாயு நுதம், பஞ்சவடீ விஹிதவாசம்,
அதிகோர சூர்ப்பணகா வசனாகத கராதி ஹரம்
அடர்ந்து விரிந்த தண்டகாரண்யத்தில் செல்லும் போது விராதனை அழித்தவன்,
சிறந்த குடமுனி(அகஸ்த்யர்) தந்த ஒப்பற்ற வைஷ்ணவாஸ்த்ரத்தைக் கொண்டவன்,
பக்ஷி ராஜனான ஜடாயுவால் பூஜிக்கப்பட்டு, பஞ்சவடீயில் வாசம் கொண்டவன்,
அதி கோர சூர்ப்பணகையின் சொல் கேட்டு வந்த கரன் முதலானோரைக் கொன்றவன்.
கனக மிருக ரூபதர கல மாரீச ஹர, மிஹ
ஸுஜன விமத தஶாஸ்ய ஹ்ருத ஜனகஜா ன்வேஷணம்,
அனகம், பம்பாதீர சங்கதா ஞ்சனேய, நபோமணி
தனுஜ ஸக்யகரம், வாலீ தனு தலன, மீஶம்
பொன்மானின் ரூபம் தரித்த வஞ்சக மாரீசனை வதைத்தவன்,
இங்கு உத்தமர்களை மதிக்காத (உற்றவர் சொல்கேளாத) தசமுகன் திருடிய ஜனகன் மகளை தேடி அலைந்தவன்,
பரிசுத்தமானவன், பம்பா நதிக்கரையில் ஆஞ்சநேயருடன் சேர்ந்தவன், விண்ணில் ஒளிரும் சூர்யபுத்ரனுடன் ஸ்னேஹம் கொண்டவன்,
வாலீயின் உடலை சாய்த்தவன், உயர்ந்தவன்
வானரோத்தம ஸஹித வாயுஸூனு கரா ர்ப்பித
பானுஶத பாஸ்வர பவ்ய ரத்னாங்குலீயம்,
தேன புன ரானீதா ன்யூன சூடாமணி தர்சனம்,
ஸ்ரீநிதி முததி தீரே ஶ்ரித விபீஷணா மிலிதம்
ஸுக்ரீவனுடன் இருந்தபோது, வாயு புத்ரன் கரங்களில், நூறு ஸூர்ய ஒளி பொருந்திய, தெய்வீகமான தன் ரத்ன மோதிரத்தைத் தந்தவன்,
பின்னர் அவனால் கொண்டுவரப்பட்ட குறையற்ற சூடாமணியைப் பெற்றவன்,
பொக்கிஷங்கள் உறையும் கடற்கரையில் அண்டின விபீஷணனை நண்பனாக்கிக் கொண்டவன்
கலித வரசேது பந்தம், கல நிஸ்ஸீம பிஶிதாஶன
தலனம், உரூ தஶகண்ட விதாரணம், அதி தீரம்,
ஜ்வலன பூத ஜனக ஸுதா ஸஹிதம் யாத சாகேதம்
விலஸித பட்டாபிஷேகம், விஸ்வபாலம், பத்மநாபம்
சிறந்த கடல் பாலத்தைக் கட்டினவன், வஞ்சகர்களான எல்லையற்ற நரமாமிசம் உண்ணும் அரக்கர்களை அழித்தவன்,
பத்து கழுத்துக்களுடன் உருக்கொண்டவனை அழித்தவன், எதற்கும் அஞ்சாதவன்,
நெருப்பால் தூய்மையாக்கப்பட்ட ஜனகபுத்ரியுடன் சேர்ந்தவன், அயோத்தி திரும்பியவன்,
ஒளிரும் பட்டாபிஷேகம் கொண்டவன், உலகைக் காப்பவன், பத்மநாபன்.
——————
நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே
காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே
அயர்வறும் அமரர்கள் அதிபதியான எம்பெருமானின் திவ்ய தேசங்கள் நூற்றெட்டு என்று நம் முன்னோர் கூறுவது வழக்கம்.
இவையெல்லாம் மயர்வறு மதிநலம் அருளப் பெற்ற திவ்ய ஸூரிகள் எனப்படும் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பண்ணப் பெற்றவை.
இந்த எல்லாத் திவ்யதேசங்களிலும் எம்பெருமான் அர்ச்சாரூபியாய் ஸகல ஜனங்களுக்கும் ஸர்வ அபேக்ஷிதங்களையும் கொடுத்துக் கொண்டும்,
‘அர்ச்ய: ஸர்வ-ஸஹிஷ்ணு:’ என்ற ரீதியில் நம்முடைய எல்லா அபராதங்களையும் பொறுத்துக்கொண்டும் ஸேவை ஸாதிக்கிறான்.
இவை அனைத்துக்குமே ஒவ்வோர் அம்சத்தை முன்னிட்டு உத்கர்ஷம் உண்டு.
இப்படி இந்த நான்கு திவ்வ தேசங்களுக்கும் பெருமை உண்டு.
அதிலும் பெருமாள் கோவிலுக்கு மற்றும் பல விசேஷ பெருமைகள் உள்ளன.
இது காஞ்சி என்று பெயர் பெற்று விளங்குகிறது.
க என்று சொல்லப்படும் பிரம்மாவினால் பூஜிக்கப் பெற்ற பகவான் வசிக்கும் திவ்ய தேசமானபடியால் இதற்கு இந்த பெயர் வந்தது.
இதன் மகிமையை ஹம்ஸ ஸந்தேசத்தில் ஸ்ரீஸ்வாமி தேசிகன் பரக்ககக் கூறியிருக்கிறார்.
தாமாஸீதந் ப்ரணம நகரீம் பக்திநம்ரேண மூர்த்நா
ஜாதாமாதெள க்ருத யுக முகே தாதுரிச்சாவசேந |
யத்வீதீநாம் கரிகிரி பதேர் வாஹவேகாவதூதாந்
தந்யாந் ரேணூந் த்ரிதச பதயோ தாரயந்த்யுத்தமாங்கை: || என்று.
தேவப்பெருமாளின் உத்ஸவம் விமரிசையாக நடக்கிறது.
அப்பொழுது எம்பெருமான் கருடன், ஆனை, பரி முதலிய வாகனங்களில் எழுந்தருளுகிறார்.
வாகன ஆரூடனான எப்பெருமானை ஸ்ரீபாதம்தாங்கிகள் மிகவும் அழகாக எழுந்தருளப் பண்ணுகிறார்கள்.
ஒவ்வொரு வாகனத்திலும் தேவாதிராஜன் எழுந்தருளும்போது அதிக அதிகமான சோபையுடன்
கண்டவர் தம் மனம் கவரும்படி ஸேவைஸாதித்து அநுக்ரகிக்கிறான்.
அந்த திவ்யதேசத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகள் மிகக் கடும் விசையுடன் எழுந்தருளப் பண்ணுவது வழக்கம்.
அவர்களுடன் ஸேவார்த்திகள் கூட உடன் செல்வது முடியாது.
அந்தச் சமயத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகளின் திருவடிகளிலிருந்து பாததூள் வெளிக் கிளம்பி ஆகாயம் வரையில் பரவுமாம்.
வாகனாதிரூடனான தேவப்பெருமாளை ஸேவிப்பதற்காக ஸ்வர்க்க லோகத்திலிருந்து ஆகாயத்தில் வந்துள்ள
தேவர்கள் அந்தத் தூளைத் தங்கள் சிரத்தினாலே தாங்கிக் கொள்வார்கள்.
அப்படிப் பட்ட மகிமையைப் பெற்றது இந்தத் திவ்யதேசம்.
மேலும், இந்தத் திவ்யதேசத்தின் மகிமை வாசாமகோசரம் என்று எண்ணி ஸ்ரீஸ்வாமி தேசிகன்,
“வந்தே ஹஸ்தி கிரீசஸ்ய வீதீ சோதக கிங்கராந்” என்று அருளிச்செய்தார்.
தேவப் பெருமாளின் வீதியைச் சுத்தம் செய்கிற வேலைக்காரர்களை வணங்குகிறேன் என்றால் இதன் மகிமையை அளக்க முடியாது.
‘தேவப் பெருமாளின் வீதியாவது வேதாந்தம்.
அந்த வேதாந்தத்தின் அர்த்தத்தை அபார்த்த நிரஸந பூர்வகமாக வெளிப்படுத்தினவர்கள்
நம் ஆசார்யர்கள். அவர்களை வணங்குகிறேன்” என்பது அதன் உட்கருத்து.
இந்தத் திவ்யதேசத்து எம்பெருமானான பேரருளாளனாலே அல்லவா நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் விளங்கிற்று?
ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த வள்ளல் ராமாநுஜர் முதலில் யாதவப்பிரகாசனிடம் ஸாமானிய சாஸ்திரங்களையும் சில வேதாந்தபாகங்களையும் கற்று,
அவர் மூலமாகத் தமக்கு அவத்யம் வருவதை அறிந்து, கங்கா யாத்திரையிலிருந்து மீண்டு திரும்பி வந்து
திகைத்து நின்றபோது, தேவப் பொருமாள் வேடனாகவும் பிராட்டி வேட்டுவச்சியாகவும் வேடம் பூண்டு இவரைக் காத்தார்கள்.
மேலும், திருக்கச்சி நம்பி மூலமாக இந்த எம்பெருமான் ஆறு வார்த்தைகளை ராமாநுஜருக்குத் தெரிவித்தான்.
இதன் மூலமாக நம் ராமாநுஜர் ஸ்ரீபாஷ்யகாரரானார்.
வேதாந்த வீதியை முள், கல் முதலிய தோஷங்கள் இல்லாமல் சீர்ப்படுத்திச் சோதித்துக் கொடுத்து,
இதரர் சொல்லும் அபார்த்தங்களையும் கண்டித்து, ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தார்.
ஆக, காஞ்சீபுரம் இல்லாவிட்டால் அந்த எம்பெருமான் எங்கே! அந்த எம்பெருமான் இல்லாவிட்டால் ஸ்ரீபாஷ்யகாரரை உணர்த்துபவர் யார்?
நம் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தமே விளங்குவது எப்படி?
ஆக ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்த ஸ்தாபனமே இந்த திவ்யதேசத்தின் பிரபாவத்தினால் ஏற்பட்டது என்பதை மறக்க முடியாது. மறைக்கவும் முடியாது.
மேலும் கருட உத்ஸவம் இந்த ஊரில்தான் விசேஷம்.
‘அத்தியூரான் புள்ளையூர்வான்’ என்று கருட உத்ஸவத்தை முன்னிட்டு ஆழ்வார்கள்
இந்த திவ்ய தேசத்தை மிகச் சிறப்பாக கூறியுள்ளார்கள் என்பதும் சர்வ விதிதம்.
இப்படி பல படியால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு மகிமை ஏற்பட்டுள்ளது.
அத்தி யூரான் பபுள்ளை யூர்வான் அணிமணியின்
துத்தீ சேர் நாகத்தின் மேல் துயில்வான். முத்தீ
மறையாவான், மா கடல் நஞ்சுண்டான். தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான், என்பது பூதத்தாழ்வார் பாசுரம்.
இப்படி மங்களாசாஸனாத் ஹிமயமலை முதல் கடல் வரையில் தேசவரை கருடோத்ஸவ விசேஷம்
தேவப்பெருமாளுக்கே.
இவர் இரவில் நாகத்தின் மேல் சயனித்துக் கொள்கிறார்.
காலையானதும் எழுந்து விடுகிறார்.
பணிபதிசயனீயாத உத்தித: த்வம் ப்ரபாதே என்பது தேசிக ஸ்ரீஸூக்தி.
இதற்கு மற்றொரு வகையிலும் பிரபாவம் உண்டே
இருபத்துநான்கு என்ற எண்ணிக்கை இவ்வூரில் பல விஷயங்களில் உள்ளது.
குடை இருபத்துநான்கு சாண் கொண்டது.
வாணவெடிகள் இருபத்துநான்கு வகைகள்.
த்வஜஸ்தம்பத்தில் இருபத்துநான்கு அடுக்கடுக்காக போடப்படும் கவசங்கள் உள்ளன.
அனந்த ஸரஸ்ஸில் இருபத்து நான்கு படிகள்.
கோவின் பிராகாரச் சுவர் இருபத்துநான்கு அடுக்குகள் கொண்டது.
கோவிலின் கீழிலிருந்து திருமலைக்குச் சென்று எம்பெருமானை ஸேவிப்பதற்கு படிகள் உள்ளன.
இவையும் இருபத்துநான்கே.
இப்படி இருபத்துநான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷம் இவ்வூரில்தான் உள்ளது.
ஸ்ரீமத் ராமாயணம் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.
இதற்கு காரணம் இருபத்து நான்கு எழுத்துக்கள் கொண்ட காயத்ரியின் அர்த்தத்தை விவரிப்பதற்காக
அந்த மகா காவியம் அவதரித்தபடியால் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டதாக வால்மீகி பகவான் அருளிச்செய்தார்.
அவ்வாறே அந்த மகா காவியத்தின் பிரதான அர்த்தமான பகவானை அறிந்துகொள்வதற்கு
இருபத்துநான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷங்கள் இந்த ஆலயத்தில் ஏற்பட்டிருக்கின்றன.
‘காயத்ரியில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம்,
ஸ்ரீராமாயணத்தில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம்
தேவப் பெருமாளே’ என்பதை அறிவிக்கவே இந்த ஆலயத்தில் இந்த விசேஷம் என்று எல்லாரும் சொல்லுவர்.
இப்படிச் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும்.
அப்பைய தீக்ஷிதர் என்ற மகான் இந்த விசேஷத்தின் பெருமையை ரஸகனமாக அருளிச் செய்திருக்கிறார்.
இவர் அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்;-ஆயினும் ஸ்ரீஸ்வாமி தேசிகனிடத்தில் மிக்க பக்தி பெற்றவர்.
ஸ்ரீதேசிகனின் பெருமையை நன்கறிந்து, அவர் இயற்றிய யாதவாப்யுதயம் என்ற மகா காவியத்திற்கு வியாக்கியானம் செய்தவர்.
‘ஸ்ரீமத்வேங்கட நாதஸ்ய காவ்யேஷு லலிதேஷ்வபி | பாவா: ஸந்தி பதேபதே’ என்று ஸ்வாமியின் காவியத்தைப் பலவாறு போற்றியவர்.
திருமலைக்குப் போகும்போது அமைந்துள்ள இருபத்துநான்கு படிகள் விஷயமாக
இந்த அப்பைய தீக்ஷிதர் இயற்றிய சுலோகத்தை இங்கே குறிப்போம் –
ஸம்ஸாரவாரி நிதிஸந்தரணைக போத –
ஸோ பாநமார்க சதுருத்தர விம்சதிர் யா |
தாமேவ தத்வ விதிதம் விபுதோதிலங்க்ய
பச்யந் பவந்த முபயாதி கரீச நூநம் ||
வேதாந்த சாஸ்திரத்தில் இருபத்துநான்கு தத்துவங்கள் கூறப்பட்டிருக்கின்றன.
ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம், ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருத்வி, கர்மேந்திரியம் ஐந்து,
ஜ்ஞாநேந்திரியம் ஐந்து, பஞ்ச தந்மாத்ரைகள், மனம் ஆக இவையெல்லாம் அசேதனத்தின் பிரிவுகள்,
சேதனன் என்பவன் ஜீவன்,
இவை எல்லாவற்றிற்னும் மேற்பட்டவன் பரமசேதனன் பரமாத்மா.
தன்னையும் அசேதனமான இருபத்துநான்கு தத்துவங்களையும் நன்கு அறிந்தவன்தான் சுலபமாகப் பரமாத்மாவை உணரவும் அடையவும் முடியும்.
அசேதனமான இந்தப் பொருள்களை அறிந்து கொள்வது, ‘அவை தோஷத்தோடு கூடியவை’ என்று அறிந்து விடுவதற்காக.
இப்படி அறிந்தவன் தான் ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைவான்.
இந்த அசேதனம் இருபத்து நான்கு வகையாக இருக்கிறபடியால் இவை இருபத்துநான்கு படிகளாகின்றன.
‘ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவதற்கு, சேதனனான இவன் தான் இருபத்து நான்கு படிகளை ஏறி
ஸ்ரீ வைகுண்ட லோகம் போல் உள்ள அத்திகிரியில் இருக்கும் தேவாதிராஜனான பேரருளாளனை ஸேவிப்பது
மோக்ஷத்தை அடைவது போல் ஆகிறது’ என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.
இப்படி வேதாந்தத்தில் சொல்லக் கூடிய விசேஷ அர்த்தத்தைக் காட்டுவதற்காகவே கீழிருந்து மேலுள்ள
பகவானை ஸேவிப்பதற்கு இருபத்துநான்கு படிகள் கட்டப்பட்டு அமைந்திருக்கின்றன போலும்.
இப்படிப பற்பல விசேஷங்களினால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு ஸர்வ திவ்யதேங்களைக் காட்டிலும்
வாசா மகோசரமான வைபவம் ஏற்பட்டுள்ளது.
நான்முகனே உத்தமமான இந்த திவ்ய தேசத்தில் அச்வமேத யாகம் செய்தான்.
அதில் இந்திரன் முதலான மந்திரங்களைச் சொல்லி யாகம் நடந்தது.
இந்திராதிகளைச் சொல்லியும் ஹவிர்பாகத்தைப் பெற வரவில்லை. ஏன் என்றால்
இந்திரனைக் குறித்தா இவர் யாகம் செய்தது. பகவானைக் குறித்து அல்லவா.
ஆனால் இந்த ஹவிர்பாக ரஸத்தை அவர்கள் நாக்கால் பருக வில்லை. பின் கண்ணால் பருகினார்கள்.
எம்பெருமான் பிரஹ்மாவினுடைய தவத்துக்கு வசப்பட்டு நேராக ஸேவை ஸாதித்தான்.
எல்லோரும் கண்டு ஆநந்தித்தனர் என்றார் ஸ்வாமி தேசிகன்.
இந்த வேள்வியை தடுக்க பிரமன் பத்நியான ஸர்ஸ்வதி வேகவதி நதியாக வந்தாள்.
அது ஸமயம் பகவான் யதோக்தகாரியாக அவளை வர வொட்டாமல் தடுத்தான்.
யாகம் நடந்தது பலமும் கிட்டியது. ஒரே பகவான் தன்னை இரண்டுப் பிரிவாகச் செய்து ஸேவை ஸாதித்தான்.
ஒன்று யதோக்தகாரி.
இரண்டாவது தேவப் பெருமான்.
ஆக இவரே உபாயம். ப்ராப்யம் என்பதை தெரியப் படுத்தினார்.
ஸ்வாமி தேசிகன் இதை
ஏகம் வேககதீ மத்யே ஹஸ்தி சைலே சத்குச்யதே.
உபாயப் பல பாவேன ஸ்வயம் வ்யக்தம் பரம்மஹ: என்றார்.
அப்பய தீக்ஷிதரின் வரதராஜ ஸ்தோத்திரத்தில் இன்னும் ஒரு ஸ்லோகத்தை பார்ப்போம்.
இவர் யாதவாப்யுதயம் என்னும் காப்பியத்துக்கு உரை எழுதினார் என்பது மாத்திரமில்லை.
வ்யாஸஸூத்ரத்துக்கும்
ராமாநுஜர் எழுதிய பாஷ்யத்தை அநுஸரித்து நயமயூகமாலிகா என்னும் நூல் எழுதியுள்ளார்.
அவரது மற்றொரு ஸ்லோகம் .
தேவாதிராஜனே நான் உன்னிடம் இரண்டு குற்றம் செய்துள்ளேன்.
அதைப் பொருத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
அதற்கு தேவப் பெருமாள் பலகுற்றங்கள் உள்ளனவே
ஆக இரண்டே என்று எப்படி என்ன இது விசேஷ குற்றம் என்கிறார்.
முன் பிறவியில் நான் உன்னை வணங்காதது ஒன்று. அதெப்படி தெரியும் என்றார்.
இப்பொழுது அழுக்குடல் வந்ததைக் கொண்டே இதை அறியலாம் என்றார்.
மற்றொன்று இப்பொழுது உன்னை வணங்கியதால் அடுத்த பிறவி இல்லை.
ஆக அப்பொழுது வணங்க ப்ரஸக்தி இல்லையே.
ஆக இந்த இரண்டையும் பொருத்துக் கொள் என்று ரஸகனமான பத்யம் பாடினார்.
அந்த ஸ்லோகம் இதோ –
வபூ: ப்ராதுர் வாவாத் அநுமிதம் இதம் ஜன்மநீ புரா முராரே ந க்வாபி க்வசிதபி பவந்தம் ப்ரணதவான் |
நமன் முக்த: ஸ்ப்ரதி அதநு: அக்ரேபி அநதிமான் கரீச க்ஷந்தவ்யம் ததிதம் அபராத த்வயமபி ||
—————————
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரும் தேவித் தாயார் ஸமேத பேர் அருளாளன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்