Archive for the ‘ஸ்தவம்’ Category

ஸ்ரீ பெருமாளின் கல்யாண குணங்கள் -ஸ்ரீ கூரத்தாழ்வான்–ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்–ஸ்ரீ ஹரே ராம சீதா ராம ஜய ஜய ராம– —

February 24, 2023

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி த்வந்தம் ஆஸ்ரித்வ பூர்வே
மூர்த்ரா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு
சோயம் ராமானுஜ முனிர் அபி ஸ்வீய முக்திம் காரஸ்தம்
யத் சம்பந்தாத் அனுமத கதம் வர்ணயதே கூர நாத

————

ஸ்வஸ்தி ஹஸ்தி கிரி மஸ்த சேகர சந்த நோது மயி சந்ததம் ஹரி
நிஸ் சமாப்யதிக மப்ய தத்த யம் தேவம் ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–1-

ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–ஒவ்பநிஷத்துக்களின் வாக்கானது
யம் தேவம் -யாவன் ஒரு எம்பெருமானை
நிஸ் சம அப்யதிகம் அப்ய தத்த -ஓத்தாரும் மிக்காணும் இல்லாதவனாக ஓதிற்றோ
ஹஸ்தி கிரி மஸ்த சேகர-ஸ்ரீ ஹஸ்திகிரி சிகரத்தின் ஆபரணமாய் உள்ள
ஸ ஹரி -அந்த ப்ரணதார்த்தி ஹர ஸ்ரீ வரதன்
மயி-அடியேன் மீது
சந்ததம்-எப்போதும்
ஸ்வஸ்தி சந்த நோது -நன்மையை நிரம்பச் செய்ய வேணும்

உபய விபூதியிலும் அடியேனுக்கு நன்மை அருளிச் செய்ய வேணும் –
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களையும்
உடனாய் மன்னி வழு இல்லாமல் செய்யப் பெற வேணும் என்று தாத்பர்யம் –

திந் நாகைர் அர்ச்சிதஸ் தஸ்மிந் புரா விஷ்ணுஸ் சநாதந –
ததோ ஹஸ்தி கிரிர் நாம க்யாதி ராஸீத் மஹாகிரே –ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யம்
திக் கஜங்கள் ஆராதித்த படியால் ஸ்ரீ ஹஸ்தி கிரி திரு நாமம் –

சேகர -சிரஸ்ஸுக்கு அலங்காரம்-அலங்கார மாத்ரத்தை சொல்லா நிற்கும் –
மஸ்த சப்தம் தனியாக சிரஸ்ஸை சொல்வதால் –
சந்த நோது-சம்யக் விஸ்தாரயது -என்றபடி
நிஸ் சமாப்யதிகம் -ந தத் சமச் சாப்யதி கச்ச த்ருச்யதே -உபநிஷத்
ஓத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றான்
ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயா
ககநம் ககநாகாரம் சரஸ் சாகர உபம –

——————-

ஸ்ரீ நிதிம் நிதிம் அபாரம் அர்த்திநாம் அர்த்திதார்த்த பரிதான தீஷிதம்
சர்வ பூத ஸூஹ்ருதம் தயா நிதிம் தேவ ராஜம் அதி ராஜம் ஆஸ்ரயே–2-

ஸ்ரீ நிதிம் -ஸ்ரீ யபதியாய்
அபாரம் நிதிம் -அளவற்ற நிதியாய் இருப்பவனாய்
அர்த்திதார்த்த பரிதான தீஷிதம் –வேண்டியவற்றை கொடுத்து அருளுவதையே விரதமாகக் கொண்டவனாய்
அர்த்திநாம்
சர்வ பூத ஸூஹ்ருதம் -ஸமஸ்த பிராணிகளுக்கும் அன்பனாய்
தயா நிதிம் அதி ராஜம் -கருணா நிதியாய் அனைவருக்கும் மேம்பட்ட தலைவனாய் இரா நின்ற
தேவ ராஜம் ஆஸ்ரயே–அயர்வரும் அமரர்கள் அதிபதியான பேர் அருளாளனை -தேவ பிராணனை திருவடி பணிகின்றேன்

————–

ஆதி ராஜ்யம் அதிகம் புவநா நாம் ஈஸ தே பிசு நயந் கில மௌலி
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே ஹஸ்தி பூஷண பவத்யுத யாத்ரி –25-

ஹஸ்தி பூஷண -ஸ்ரீ ஹஸ்தி கிரிக்கு அலங்காரமாயுள்ள
ஹே ஈஸ–ஸ்ரீ தேவாதி ராஜனே
புவநா நாம்-உலகங்கட்க்கு எல்லாம்
ஆதி ராஜ்யம் -நீ அதி ராஜனாய் இருக்கும் தன்மையை
அதிகம் -மிகவும்
பிசு நயந்-கோட் சொல்லா நின்ற
தே மௌலி -உன்னுடைய திரு அபிஷேகமானது
சூளிகா மணி சஹஸ்ர மரீஸே –தன் சிகரத்தில் உள்ள ரத்னமாகிற ஸூர்யனுக்கு
யுத யாத்ரி –உதய பர்வதமாக
பவதி கில –ஆகா நின்றது அன்றோ

திரு அபிஷேகத்தில் கண் வைத்தவர் பாசுரம் ஈஸ –ஈஸத்வம் தோற்ற இறே திரு முடி தரிப்பது –
கண்டவாற்றால் தனதே யுலகு என நின்றான் –
அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் தானே திரு அபிஷேகம் சூடி சேவை சாதிப்பான்
சூளிகா மணி-உபய விபூதி சாம்ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை பர்வதமாக உல்லேகிக்கிறார்
பொற் சுடர்க் குன்று அன்ன பூம் தண் முடியர் அன்றோ
நுனியில் அழுத்தின ரத்னம் -ஸூர்யன் போலே இரா நிற்க -அதற்கு உதய பர்வதமாயிற்று இத்திரு அபிஷேகம்
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் அன்றோ –
உதய பருப்பதத்தின் மேலே விரியும் கதிரே போலே விளங்கும் –

—————-

அக்ருத ஸூக்ருதகஸ் ஸூ துஷ் க்ருத்தரஸ் சுப குண லவலேச தேச அதிகஸ்
அஸூப குண பரஸ் சஹஸ்ர ஆவ்ருத்தஸ் வரதம் உருதயம் கதிம் த்வாம் வ்ருணே -83-

அக்ருத ஸூக்ருதகஸ் –அல்ப ஸூஹ்ரு தத்தையும் அனுஷ்டிக்காதவனாய்
அஞ்ஞாத ஸூஹ்ருதங்களை எம்பெருமான் ஆரோபித்து மடி மாங்காய் இடுவதற்கு ஏற்ற க்ருத்ய லேசமும் செய்திலேன்
ஸூ துஷ் க்ருத்தரஸ் –பாபிஷ்டர்களில் அக்ர கண்யனாய்
சுப குண லவலேச தேச அதிகஸ் –நல்ல குணத்தின் லவ லேசத்துக்கும் அதி தூரஸ்தனாய்
அஸூப குண பரஸ் சஹஸ்ர ஆவ்ருத்தஸ்– காம க்ரோதம் முதலிய பல்லாயிரம் தீய குணங்கள் சூழப்பட்டவனான அடியேன்
ஒரோ மயிர்க்குழிக்கும் ஓராயிரம் துர் குணங்கள் காணக் கிடைக்கும் என்கிறார் போலும்
உருதயம் வரதம்–பேர் அருளாளனாய் வரம் தரும் பெருமாளாக
த்வாம் கதிம் வ்ருணே —உன்னை சரணமாக அடைகிறேன் –

கீழே தம்முடைய தோஷ பூயஸ்த்தையை பரக்க வெளியிட்டு –பரியாப்தி பெறாமல் –
சரண வரண சம காலத்தில் தோஷ பிராசர்ய அனுசந்தானம் அவசியம் என்னும் இடத்தை
வெளி இடுகைக்காகவும்
ஸ்வ தோஷ பூயிஷ்டத்வ அனுசந்தான சகிதமாக பிரபத்தி பண்ணுகிறார்
ஸக்ருத் ஏவ ஹி சாஸ்த்ரார்த்த –என்னும் அளவில் இருப்பவர் அன்றே –
பிரபத்தி தேஹ யாத்ரா சேஷமாக அன்றோ நம்மவர்கள் கொண்டு இருப்பர்கள்

இப்படிப்பட்ட அடியேன் -பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம்பெருமானாய்
மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய் கச்சியிலே வரம் தரும் மா மணி வண்ணனாய் எழுந்து அருளி இரா நின்ற
தேவரீரை அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டப் பிராப்தியைப் பண்ணித் தர வல்ல
உபாயமாகப் போற்றுகிறேன் என்கிறார் ஆயிற்று

—–

அயே தயாளோ வரத ஷமாநிதே விசேஷதோ விஸ்வ ஜநீந விஸ்வத
ஹிதஜ்ஜ சர்வஜ்ஞ சமக்ர சக்திக ப்ரஸஹ்ய மாம் ப்ராபய தாஸ்யமேவ தே –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -93-

தயாளோ -ஷமாநிதே-பேர் அருளாளனே பொறுமைக்கு நிதியே
சரீரத்துக்கு வரும் துக்கம் சரீரிக்கு -பர துக்க துக்கி அன்றோ தயாளு

விசேஷதோ விஸ்வ ஜநீந –மிகவும் சகல ஜனங்களுக்கும் ஹிதனே
இவற்றின் புறத்தாள்-விஸ்வத்தில் பஹிர் பூதனோ அடியேன் -ஸ்வ ஜனஸ்ய ச ரக்ஷிதா என்றது கழிந்தால்
ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய என்கிற ஊர் பொதுவும கழிய வேணுமோ
அநா லோசித விசேஷ அசேஷ லோக சரண்யன் அன்றோ நீர்

விஸ்வத–எல்லா வற்றையும் தந்து அருள்பவனே
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் அன்றோ

ஹிதஜ்ஜ -அடியோங்களுக்கு ஹிதமானவற்றை அறியுமவனே
உண்ணிலாய ஐவரால் குமை தீற்றி என்னை யுன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலியப்
பார்த்து இருக்கையோ அடியேனுக்கு தேவரீர் அறிந்து வைத்த ஹிதம்

சர்வஜ்ஞ –எல்லாவற்றையும் அறிபவனே
உட் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து விளங்குகின்ற என் ஆர்த்தியை அறியீரோ
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிவீர் ஆயினும் பாசுரம் கேட்டவாறே
திரு உள்ளம் உகக்கும் என்று அன்றோ அடியேன் பிதற்றுவது

சமக்ர சக்திக –பரி பூர்ண சக்தி உடையவனே
இரும்பை பொன்னாக்க வல்லீரே -பொருள் இல்லாத என்னைப் பொருள் ஆக்கி -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்

அயே வரத –வரம் தரும் பெருமாள் என்ற திரு நாமம் உடையவனே
அடியேனுக்கு இத்தனையும் செய்ய திரு உள்ளம் இல்லையாகில் தேவருடைய வரதத்வம் என்னாவது –

மாம்பழ உண்ணி போலவோ திரு நாமம் வஹிப்பது
மாம் தே தாஸ்யமேவ –அடியேனுக்கு உன் அடிமைத் திறத்தையே
ப்ரஸஹ்ய ப்ராபய–எப்படியாவது பிராப்தம் ஆக்கி அருள்

நிரீஷிதம் வ்ருணே –92-என்று கீழே சாஷாத்கார மாத்ரம் அபீஷ்டம் என்றார்
கண்டேன் கமல மலர்ப் பாதம் என்றால் அடுத்த படியாக
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக -என்பார் –
ஆகவே இவரும் கைங்கர்ய பிரார்த்தனை இதில்
ஷூத்ர பலாந்தரங்களிலே ருசியைத் தவிர்த்து தேவரீர் திறத்தில் கைங்கர்ய சாம்ராஜ்யத்தையே
பெறுவித்து அருள வேணும் என்கிறார் ஆயிற்று –

——————-

12 குணங்கள் ஒவ்வொருவருக்கும் காட்டி

1-தயா -தயா சதகம் -கல்கண்டு போல் திருமலை -ஞானாதிகள் அப்ரயோஜனம் தயை இல்லாமல் –
பிரதானம் இதுவே -ராமானுஜரை விந்தியா மலையில் இருந்து மிதுனமாக அழைத்துச் சென்றார்களே

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

விந்தியக் காடு, இருள் சூழ, திகைத்திருந்து, ‘ஆவாரார் துணை?’ என்று கலங்கி நின்றபோது,
தேவாதி ராஜன் –காஞ்சி வரதராஜப் பெருமாளும் பெருந்தேவித் தாயாரும், வேடுவனும் வேடுவச்சியுமாக வந்து காத்து,
மறுநாள் விடியலில் காஞ்சிக்கருகில் கொண்டு வந்து சேர்த்தனர்.
தாயார், “நீர் வேண்டும்” என்று கூற, அருகில் உள்ள (சாலைக்) கிணற்றிலிருந்து நீர் கொண்டு வந்து தர, உடன் அவர்கள் மறைந்தனர்.
உடையவர் தம்மைக் காத்தவர் யார் என்ற உண்மை உணர்ந்து, தினமும்
அக் கிணற்றிலிருந்து நீர் எடுத்து வந்து திருமஞ்சனத்திற்கு கைங்கர்யம் செய்து வரலானார்.
கருமாமுகிலுருவா, கனலுருவா புனலுருவா
பெருமாள் வரையுருவா, பிறவுருவா, நினதுருவா
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அருமா கடலமுதே உனதடியே சரணாமே.
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-
இவன் அருளால் பெற்ற ஸாம்யா பத்தி ஸ்வாமிக்கும் உண்டே

யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில்
உள்ள வ்யாமோஹத்தால்
அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –
இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-
அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்

———-
2-ஷாந்தி ஸகல மனுஷ நயன விஷயதாங்கனாக -பொறுமை யுடன் நமக்காக
காஞ்சி பிரம்மாவால் தொழப்பட்டவர்
ஹஸ்திகிரி
ஹஸ்த திரு நக்ஷத்ரம்
சரஸ்வதி -வேகவதி -பல திவ்ய
திருவெஃகா வேகா சேது
ஒரு ஆஸ்ரிதனான ப்ரம்மனுக்காக
ஹஸ்திகிரி மத்த சேகரன்
அத்திகிரியான்-த்யாகேசன்

————-

3-ஓவ்தார்ய –
ஆர்த்திதார்த்த பரிபால தீக்ஷிதன்
வரம் ததாதி
வரதம் அளிப்பவர்களுக்குள் ஈஸ்வரன்
வரத ஹஸ்தம் இல்லாமல் அபய ஹஸ்தம்
வரதராஜனாகவே பிரசித்தமாக இருக்க ஹஸ்தமும் காட்ட வேண்டுமோ

கொள்ளும் பயனில்லை குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை இழக்கும் புலவீர்காள் !
கொள்ள குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என்
வள்ளல் மணி வண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ –3-9-5-
திருமங்கை ஆழ்வாருக்கு காட்டிக்கொடுத்த உதார வள்ளல்-மண்ணை அளந்து பொன்னாகி -இஹ லோக ஐஸ்வர்யம்
தன்னையே கொடுக்கும் கற்பகம்
ராமாநுஜரையே அரங்கனுக்கு கொடுத்த உதார குணம்
சேராது உளவோ பெரும் செல்வருக்கு—அரையர் ஸ்துதிக்க -ஸ்த்வயன் -ஸ்தவ ப்ரியன் – ஸ்துதி பிரியன்
ஞானம் வழங்கிய உதாரம் -யஜ்ஞ மூர்த்தி -அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
பிள்ளை லோகாச்சார்யாராக -இவரே
ஏடு படுத்தச் சொல்லி
——–
4-பிரதிம ஸ்வ பாவம் -மென்மையான -திருமேனியும் -திரு உள்ளவும் மார்த்தவம்
ஞானிகள் பிரிவை அஸஹம்
வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -திரு மூழி க்களத்தில்
ஆலவட்டம் -கைங்கர்யம் -ஆறு வார்த்தை
——-
5-சமதா -பக்தனை எனது அளவாவது
வேறுபாடு மட்டும் அல்ல
தன்னையும் அவர்களுக்கு கீழ்
அஷ்ட வித பக்தி மிலேச்சசன் இடம் இருந்தாலும்
அருளாளப்பெருமாள் எம்பெருமானார் பெயரிலே சாம்யம்
———–
6-ஸுஹார்த்தம்
கிருபை இதன் அடிப்படையால்
ஸூஹ்ருதம் ஸர்வ பூதா நாம்
முனியே -மனன சீலன் –
உறங்குவான் போல் யோகு செய்து
நாலூரானுக்கும் முக்தி
——–
7-த்ருதி
ஊற்றம் உடையார்
ஆஸ்ரித ரக்ஷணம்
ராமானுஜர் அவதாரம் தொடங்கி உபகார பரம்பரைகள்
நம்மாழ்வார் திரு உள்ளத்திலும் பட அருளி
——
8-பிரசாதம்
பேர் அருளாளன் அருளாத நீர் அருளி வீதி வழியாக ஒரு நாள்
———-
9-ப்ரேம
சேர்த்தி புறப்பாடு பிரசித்தம்
கஜேந்திர ரஷணம் -அகில காரணமத்புத காரணம்
நடாதூர் அம்மாள்
அம்மாள் ஆச்சார்யன் எங்கள் ஆழ்வான்
————
10ஆஜ்ஞா
ஆறு வார்த்தைகள் பிரசித்தம்
ராமானுஜரை ஆக்கி அருளி
ஆளவந்தார் ஆ முதல்வன் கடாக்ஷிக்க சரண் அடையும் பொழுதும் அருளி
விந்திய மலையில் இருந்து காத்து அருளி
ஸந்யாஸ ஆஸ்ரமும் அநந்த ஸரஸ்ஸில் செய்து அருளி
அரங்கனுக்கு அரையர் மூலம் கொடுத்து அருளி
ஸ்ரீவசன பூஷணம் ஏடு படுத்த
ஈட்டை வெளியிட்டு அருளி
————
11-ஆஸ்ரித சுலப
தொட்டாச்சார்யார் ஸேவை பிரசித்தம்
——–
12 கல்யாண
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்
ஸுந்தர்யம் லாவண்யம் மிக்கு
ஆதி ராஜ்யம்
திவ்ய மங்கள விக்ரஹம்
நாபி சுழி
வலித்ரயம் உதர பந்தம் பட்டம் கட்டி -தாமோதரன்
ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-
(கற்பக வருஷம் வாஹனம் சேவிக்கும் பொழுது நினைக்க வேண்டியது
என்னை ஆக்கி -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -மூன்று ஏற்றம் கற்பக வ்ருக்ஷத்தை விட
முதலில் என்னையும் ஆக்கி -அர்த்திகளை உருவாக்கி -விரோதி நிரஸனமும் செய்து அருளி
தன்னையே தந்து –
பாரிஜாத மரம் வ்ருத்தாந்தம் அறிவோமே
மறப்பேன் என்று நேரில் புகுந்து -பேரேன் என்று நெஞ்சு நிறையப் புகுந்து
எனக்கே -அனைவருக்கும் தனக்கு மட்டுமே என்று சொல்லிக் கொள்ளும்படி பூர்ண அனுபவம் )
————-
காஷ்மீர் பக்தி மண்டபம் சாரதா பீடம் -வித்வான்கள் மலிந்த இடம்
காஷ்மீர அரச வம்சத்தின் வரலாற்றைக் கூறும் ‘ராஜ தரங்கணி’ என்ற வடமொழி நூல்

—————————————————————————————

ஸ்ரீ ரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்,
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம் |
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்,
ஸ்ரீ சம் நமாமி சிரஸா யதுசைல தீபம் ||

இந்த நான்கு திவ்ய தேசங்களிலும் நடை வடை குடை முடி என்று விசேஷங்கள் உண்டு.
கோவிலில் நடை மிகவும் அழகு.
திருமலையில் வடையின் ப்ரபாவம் எல்லாருக்கும் தெரியும்.
பெருமாள் கோவிலில் குடை விசேஷம். -கொடையும் விசேஷம் பேர் அருளாளன் அன்றோ
திருநாராயண புரத்தில் வைர முடி விசேஷம்.

கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை, பெருமாள்கோயில், திருநாராயணபுரம் என்ற
இந்த நான்கு திவ்யதேசங்ககளுக்குப் பிராதான்யம் கொடுத்திருக்கின்றனர்.

———————-

ஸ்ரீ ஹரே ராம சீதா ராம ஜய ஜய ராம

ஹரே அகில ஹேய ப்ரத்ய நீகன்
ராம -கல்யாண ஏக குண நிதி -ஏக ஸ்தானம்
சீதா ராம -மிதுனமே ப்ராப்யம்
ஜய ஜய ராம -பேற்றுக்கு உகப்பானும் அவனே
ஆஸ்ரித நிரஸனம் -ஸுலப்யம் -ஸுசீல்யம் -போக்யம் பசும் கூட்டம்

ஸத்ய வாக்யனாகி -சத்யம் நேர்மை உறுதி மூன்றும் சேர்ந்தவன் -நம்மையும் அப்படி ஆக்கி அருளுவான் அன்றோ

ஹரே ராம-நன்மை செய்யும் ஸுஹார்த்தம் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி — தாரகம் –வாழ் முதல்
ஜய ராம்-போஷகம் -வளர் முதல்
சீதா ராம -ஸீயாராம் -அயோத்தியில் கோஷம் –பிராகிருத வீட்டுப்பேச்சு -போக்யம்-ஸ்ரீ யபதித்தவம் – -மகிழ் முதல்

ராதே கிருஷ்ணா ராதே ராதே பிருந்தாவனம் இதே போல்-

உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் மிதுனமே

திருவுக்கும் திருவாகிய செல்வன்

ஸுர்ய -வீர்ய -பராக்ரமம்
வெளியில் இருந்து தான் கலங்காமல் ஸுர்ய
புகுந்தும் கலங்காமல் பராக்ரமம் சின்னா பின்னம்
தனக்கு விகாரம் இல்லாமல் மற்றவை விகாரம் செய்வது வீரம்
ஜய ஜய மஹா வீரா

ஜய ஜய மஹா வீர
மஹா தீர தவ்ரேய
தேவாஸூர சமர சமய சமுதித
நிகில நிர்ஜர நிர்த்தாரித நிரவதிக மஹாத்ம்ய
தச வதன தமித தைவத பரிஷதப் யர்த்தித தாசரதி பாவ
தி நகர குல கமல திவாகர
திவிஷ ததிபதி ரண ஸஹ சரண சதுர தசரத சரமருண விமோசன
கோசல ஸூதா குமார பாவ கஞ்சுகித காரணாகார –7-

விகாரம் தனக்கு கொஞ்சமும் இல்லாமல் மற்றவர்க்கு -வீரம் சூரம் பராக்ரமம் -கலங்காமல் –
உள்ளே புகுந்து சின்னாபின்னம் ஆக்கி– தான் கிஞ்சித்தும் மாறாமல் -மூன்றும் உண்டே
மஹா வீரன் – பூஜிக்க தக்கவன் மஹான்-
ரகு -இஷுவாகு குலம் -சூர்ய குலம் மனுவின் பிள்ளை இஷுவாகு -ரகு குலம் என்பதால் ராகவன் –
குணம் ஒவ் ஒன்றுமே விகாரம் அடைவிக்குமே -வில் கொண்டு மட்டும் இல்லை -அது சாதாரணம்
அழகில் ஆழ்ந்து –நேர்மையில் ஆழ்ந்து –ஆர்ஜவத்தில் ஆழ்ந்து போவோமே
திருவடி கொண்டாடும் துறை -வீரம் -பக்திஸ்ஸ நியதா வீர–பாவோ நான்யத்ர கச்சதி —
வீரத்தை தவிர வேறு ஒன்றிலும் செல்லாதே –
கோன் வஸ்மி-குணவான் -கஸ்ய வீர -16-கல்யாண குணங்களில் -ஸுசீல்யத்துக்கு அடுத்து –
நேர்மையுடன் கூடிய வீரன் பெருமாள் -ஆயுதம் எடுக்காத வெறும் கை வீரன் கீதாச்சார்யன் –

ஸத்ய வாதி பிரிய வாதி த்ருட வாதி -மே விரதம் -அசைக்க முடியாத திடம்-சரணாகத வாத்சல்யம் -அபய பிரதான சாரம்

ஸத்ய வாதி -ஹரே ராம
பிரிய வாதி -சீதா ராம
த்ருட வாதி-ஜய ஜய ராம

ஸத்ய பாஷா ராகவா பிரிய பாஷா ராகவா மிருது பாஷா ராகவா பூர்வ பாஷா ராகவா மஞ்சு பாஷா ராகவா –
சொல்லின் செல்வன் இவனே கொண்டாடும்படி திருவடி

விதித சஹி தர்மஜ்ஞ சரணாகத வத்சல
தேன மைத்ரீபவது தே யதி ஜீவிதம் இச்சசி -சுந்தர -21-20-

மித்ர பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன
தோஷோய த்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேதத் அகர்ஹிதம் -யுத்தம் -18-3-

விபீஷணோ வா ஸுக்ரீவ யதி வா ராவணஸ்வயம்*

—————-

நாமீயை விட நாமத்துக்கே ப்ராபாவம் ஜாஸ்தி

காலையில் துயிலெழும் போது :-
“ஹரிர் ஹரி ஹரிர் ஹரி”என்று ஏழு தடவை சொல்ல வேண்டும்.

வெளியே புறப்பட்டுப் போகும் போது :-
“கேசவா”என்று சொல்ல வேண்டும். “கேசவா” என்று சொன்னால் இடர்கள் எல்லாம் கெடும்.

உணவு உட்கொள்ளும் போது :-
“கோவிந்தா”என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்.

இரவு படுக்கச் செல்லும் போது :-
“மாதவா”என்று கூற வேண்டும்.

கஜேந்திர மோக்ஷம் செய்து அருளினை அவதாரம்
துஸ் ஸ்வப்னம் போக்கும்
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் -361-656-ஹரி நாமம்

நாராயணா மணி வண்ணா -ஆர் இடரை நீக்காய்
கபிஸ்தலம்
சென்று நின்று ஆழி தொட்டானை
புண்யோ துஸ் ஸ்வப்ன நாசநா
அஜிதன் -அம்ருத மதனன் –கூர்மம் தங்கி -மோஹினி -அவதாரங்களும் உண்டே

பச்சை வர்ணத்தையும் ஹரி குறிக்கும்
பச்சை வண்ணன் பவள வண்ணன்
கரும் பச்சை
நீல மேக ஸ்யாமளன் -கறுத்தே -முகில் வண்ணன் -பச்சையும் மரகத பச்சை ஆழ்ந்து
ஸம்ஸ்திதா பூஜித -கோவர்த்தன மலையில் இன்றும் எழுந்து அருளி இருக்கிறவன் ஹரி திரு நாமம் -பட்டர்
கோவர்த்தன தாரியும் ஹரி -குன்று எடுத்து குளிர் மழை காத்தவன் –

ஓம் பிரணவத்தையே தாங்கும் ஹரி திரு நாமம்-திரு மணத் தூண்கள் ஹரி-த்வய அக்ஷரங்களே –

ரமயதீ ராம –கண்டவர் தம் மனம் வழங்கும் -திருஷ்ட்டி ஸித்த அபஹாரிணாம்
ஒரு நாள் முகத்தில் விளித்தாரை படுத்தும் பாடு அறிவோமே

ரூபம் குணம் இரண்டுமே வசீகரிக்கும்
நடத்தை -இன்றும் பாஷ்யகாரர் உத்சவம் நடை அழகை ராமர் பிரகாரத்தில் நடை பெறுமே
ரம்யதி-மகிழ்ச்சி கொடுப்பதில் ஸ்ரேஷ்டம் –
ராம நாமமே ஜென்ம ரஷக மந்த்ரம்

ரம்யதே அஸ்மின் –தோள் கண்டார் தோளே கண்டார் –
பூமா -ஒவ்வொன்றும் –
வேறே எங்கும் போகவோ கேட்கவோ அனுபவிக்கவோ போக முடியாதே
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே
அபி ராமம் -நீலோத் புஷ்பம் -ஸரத்கால முழு நிலா -பிருந்தாவனத்தில் பெரிய ஸமூஹம்
குணாபி ராமன் ராமஞ்ச –

ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் சர்வ சம்பதாம் -ஹரே ராம் அர்த்தம்

ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபி ராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்
ஆர்த்தானாம் ஆர்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதி நாசனம்
த்விஷதாம் கால தண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்
ஸன்னத்த: கவசீ கட்கீ சாப பாண தரோ யுவா
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ்மண:
நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத சராய:
கண்டிதாகில தைத்யாய ராமாயா ஆபந் நிவாரிணே
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:
அக்ரத: ப்ருஷ்டத ச்’சைவ பார்ச்வதஸ்ச மஹாபலௌ
ஆகர்ண பூர்ண தன்வானௌ ரக்ஷேதாம் ராம லக்ஷ்மணொ…
அச்யுதாநந்த கோவிந்த.நாமோச்சாரண பேஷஜாத்
நஸ்யந்தி ஸகலரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்
ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் உத்ருத்ய புஜமுச்யதே
வேதாச்சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந்தைவம் கேசவாத்பரம் //
 
சரீரே ஜர்ஜரி பூதே வ்யாதிக்ரஸ்தே களேபரே
ஒளஷதம் ஜாஹ்நவி தோயம் வைத்யோ .நாரயணோ ஹரி:
ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி விசார்ய ச புந: புந:
இதமேகம் ஸுநிஷ்பநம் த்யேயோ .நாரயணோ ஹரி :
 
காயே.ந வாசா ம.நஸா இந்த்திரியைர் வா
புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாரயணாயேதி ஸமர்ப்பயாமி //
 
யதக்ஷர பதப்ரஷ்டம் மாத்ராஹீநந்து யத்பவேத்
தத்ஸர்வம் க்ஷ்ம்யதாம் தேவ.நாரயண .நமோஸ்துதே
விஸர்க்க பிந்து மாத்ராணி பதபாதாக்ஷராணி ச
ந்யூநாநி ச அதிரிக்தாநி க்ஷமஸ்வ புருஷோத்தம://
ராம நாமமே தாரக ம்ந்த்ரம். கஷ்டங்களை விலக்குபவர். பீடைகளை ஒழிப்பவர். பயங்களை போக்குபவர். ஸர்வ மங்களங்களையும் தருபவர். ஒரு நாள் ஒரு தரம் சொன்னால் போதும்.

ஹரே ராம
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -ஹரி சொன்னாலே ராம புண்யம் கிட்டும்
ராம ஹரே
கிட்டி அனுபவிக்க போக -ஸம்ஸார உழன்று இருக்க -யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே-அணைவிக்கும் முடித்தே
தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-

கஷ்டங்களை நீக்கி ஆனந்தம் தருவதே ஹரே ராம்

வேத ஸ்வரூபமே ஸ்ரீ ராமாயணம்-“வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே! வேத: ப்ராசேதஸாதாஸீத ஸாக்ஷாத் ராமாயணாத்மனா!!”

வேதங்கள் சொல்லுகின்ற பரமபுருஷன் ஸ்ரீராமனே ஆவான் என்பது ஆன்றோர் வாக்கு. அந்தப் பரம புருஷனே தசரத புத்திரன் ஆன ஸ்ரீராமனாக ஆவிர்ப்பவித்தான், அவதாரம் செய்தான். வேதத்தின் சரீரமே ஸ்ரீராமன். அந்த சரீரம் ஸ்ரீராமனாய் அவதாரம் செய்தபின்னர் வேதங்கள் அனைத்தும், வால்மீகிக்கு வசப்பட்டு அவர் திருவாக்கால் ராமாயணமாக மாறிவிட்டன என்பது பெரியோர் வாக்கு.

ராம நாமம் ஒரு வேதமே! ராம நாமம் ஒரு வேதமே ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை மீட்டிடுவோம் இசை எனும் மாலை சூட்டிடுவோம்
அருள் மிகு ராம நாமம் ஒரு வேதமே ராக தாளமொடு கீதமே
அவன் தான் நாரணன் அவதாரம் அருள்சேர் ஜானகி அவன்தாரம்
கௌசிக மாமுனி யாகம் காத்தான் கௌதமர் நாயகி சாபம் தீர்த்தான் (ராம நாமம் ஒரு வேதமே)

யாவத் ஸ்தாஸ்யந்தி கிரய: ஸரிதஸ்ச மஹீதலே
தாவத் ராமாயண கதா லோகேஷு ப்ரசரிஷ்யதி–(வால்மீகி ராமாயணம் 1.2.36)

இப்புவியில் மலைகள் மண்ணில் நிற்கும் வரை, நதிகள் ஓடும்வரை, ராம காதை உலகில் நிற்கும்.

காலங்களைக் கடந்த பெருமை
லோகங்களைக் கடந்த -கோடி கோடி அண்டங்களிலும் பெருமை பெற்ற ஸ்ரீ ராமாயணம்
கால தேச பரிச்சேதய ரஹிதம்
இரண்டு அரண் ஸ்ரீ ராமாயணமும் திருவாய் மொழி

1. நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள்

கிருஷ்ணாவதாரத்தில் நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள். ராமாவதாரத்தில் ஒருவர் தவம் செய்து நான்கு பிள்ளைகளைப் பெற்றார் என்று சுவாரஸ்யமாகச்  சொல்லுவார்கள். யசோதை, நந்தகோபன், தேவகி, வசுதேவர் ஆகிய நால்வர் தவம்செய்து கண்ணன் அவதரித்தான். ஆனால் தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார் .ஆனால் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.

2. நான்கு வகை தர்மங்கள்

தர்மத்தை காப்பதற்காக பகவானே தசரதனுக்குப் பிள்ளைகளாக அவதரித்தான்.
தர்மம் நான்கு வகைப்படும்.

1.சாமானிய தர்மம், 2.சேஷ தர்மம் ,3.விசேஷ தர்மம், 4.விசேஷதர  தர்மம் . இதில் தாய் தந்தையிடமும் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற தர்மம் “சாமான்ய தர்மம்”. இதை ராமன் அனுஷ்டித்துக் காட்டினான்.
இரண்டாவதாக, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்கின்ற தொண்டுள்ளம் கொண்டவனாக, பதினான்கு ஆண்டுகள் தூங்காமல் (துஞ்சமில் நயனத்தான்) பகவானுக்குக் குற்றேவல் புரிந்தான் இலக்குவன். இது “சேஷ தர்மம்”.எப்பொழுதும் பகவானையே நினைத்துக் கொண்டு, பகவான் சொல்லியதை செய்தான் பரதன். இது  “விசேஷ தர்மம்”.
இறைவனுக்குத்  தொண்டு செய்வதை விட இறை அடியார்களுக்குத்  தொண்டு செய்வதே முதன்மையானது என்று  பாகவத சேஷத்வத்தைக்  காட்டினான் சத்ருக்கனன்.இது “விஷேதர” தர்மம்.

‘‘கூடும் அன்பினில் கும்பிட அன்றி வீடும் வேண்டா”என்று இருக்கும் நிலை அது. ‘‘உற்றதும் உன் அடியார்க்கு அடிமை” என்று இதை திருமங்கை ஆழ்வார் வலியுறுத்துவார்.

3. இராமாயணம் கதையா? தத்துவமா?

அறத்தின்  நாயகனான ராமன் குணங்கள்தான் ராமாயணம் முழுக்க இருக்கிறது .அந்தப் பரம்பொருளை உணர்வதுதான் ராமாயணம் தெரிந்து கொள்வதன் நோக்கம். எனவே ராமாயணத்தை ஒரு கதையாகப்  படிக்காமல்,  தத்துவத்தைப் படிப்பதன் மூலம்தான் முழுமையான பலன் பெற முடியும்.  அத னால் தான் நம்மாழ்வார், “கற்பார் ராமாயணத்தை அல்லால் மற்றும் கற்பரோ” என்று சொல்லாமல்,  “கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ” என்று பாடினார்.

4. 18 முறை நடந்து கேட்டார் ராமானுஜர்

ராமாயணம் வெறும் கதையாக இருந்தால், பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய ராமானுஜர் போன்ற மகான்கள் அதை எளிமையாக தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் ராமாயணம் என்பது வேத சாஸ்திரத்தின்  சாரமான தொகுப்பு என்பதால்தான், திருமலைக்கு பதினெட்டு முறை நடந்து, ஒரு வருட காலம், ராமாயண சாரத்தை, தன்னுடைய தாய் மாமனும் ,தன்னுடைய  ஐந்து ஆச்சாரியர்களில் ஒருவரும் ஆகிய பெரிய திருமலை நம்பிகளிடம்   பாடம் கேட்டார்.

5. காயத்ரி மந்திரமும்,  ஸ்ரீ ராமாயணமும்.

சகல வேதங்களின் சாரமான  காயத்ரி மந்திரத்திற்கும், ஸ்ரீ ராமாயணத் திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. காயத்ரி மந்திரத்திற்கு 24 அட்சரங்கள். ராமாயணத்திற்கு 24,000 ஸ்லோகங்கள். ஒவ்வொரு  அட்சரத்துக்கு 1000 ஸ்லோகங்கள்  என்ற வகையில்   24 ஆயிரம் ஸ்லோகங்களை வால்மீகி செய்தார். இதைப்போலவே, நம்மாழ்வாரின் திருவாய்மொழியும், ராமாயண சாரத்தைச் சொல்வதால்,அதற்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை ராமாயணத்திற்கு நிகராக 24000 படி உரை எழுதினார்.

6. ராமாயணமும் மகாபாரதமும்

ராமாயணம் மகாபாரதம் இரண்டும் ஒரே கருத்தைத்தான் சொல்லுகின்றன. உலக சகோதரத்துவத்தின் ஒற்றுமையைச்  சொல்வது ராமாயணம். ஒரு வருக்கு ஒருவர் ஒற்றுமையின்றி பகைத்துக்  கொண்டால்  என்ன மாதிரியான அழிவுகள் ஏற்படும் என்பதைச் சொல்வது மகாபாரதம். ராமாயணம் நேர்மறையாகச்  சொல்கிறது. அதே கருத்தை எதிர்மறையாகச்  சொல்லுகின்றது மகாபாரதம். அதனால் தான் “இதிகாசங்களில்  சிரேஷ்டமானது  ராமாயணம்” என்று பிள்ளை லோகாச்சாரியார் தம்முடைய ஸ்ரீ வசன பூஷணம் என்கின்ற நூலிலே சொல்லி வைத்தார்.

7. சீதையின் பெருமையா?ராமனின் பெருமையா?

ராமாயணம் என்பது ராமரின் பெருமையைக்  கூறுவதாகச் சொன் னாலும், அது சீதையின் பெருமையை  பிரதானமாகச் சொல்ல ஏற்பட்ட காவியம் என்று  மகரிஷிகள் கருதுகின்றார்கள். “ஸீதாயாம் சரிதம் மகத்” (சீதையின் பெருங்கதை,) என்றுதான்  ரிஷிகள் சொல்லுகின்றார்கள்.ஆழ்வாரும்  தேவ மாதர்கள் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக சீதை பத்து மாதம் சிறையில் இருந்தாள். அந்த சிறையில் இருந் தவளின்  பெருமையைச்  சொல்றதுதான் ராமாயணம் என்று பாசுரம் பாடுகின்றார்.

தளிர்நிறத்தால் குறையில்லாத் “தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள்” காரணமாக் கிளர்அரக்கன் நகர்எரித்த
களிமலர்த் துழாய்அலங்கல் கமழ்முடியன் கடல் ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறையிலமே-என்பது திருவாய்மொழி.

தெய்வப் பெண்கள் கால்களில் விலங்கை வெட்டி விடுகைக்காகத் தன்னைப் பேணாதே, அங்கே புக்குத் தன் காலிலே விலங்கைக் கோத்துக் கொண்டவள்,’ என்று நாட்டிலே பிரசித்தையானவள் என்னுதல் என்பது உரையாசிரியர்கள்  கருத்து.

8. முத்தி நகரங்களில் தலை அயோத்தி

ஸ்ரீராமர், முத்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான அயோத்தியில் அவதரித்தார்.எனவே அயோத்தியையும் ஸ்ரீராமரையும் நினைத்தாலே புண்ணியம்  வரும்.முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் முதல் க்ஷேத்திரம் இது.
முக்கியமான க்ஷேத்திரமும் கூட.‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரி த்வாரவ திஸ்சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற வாக்கியத்தின் படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும். இந்த ஏழும் நாராயணனுக்கு அவயங்கள் ஆகும். அயோத்தி சிரசு, காசி மூக்கு, மதுரா கழுத்து, மாயா மார்பு, துவாரகா கொப்பூழ், காஞ்சி இடுப்பு, அவந்திகா பாதம்.

9. அயோத்தி ஏன் புனிதத்தலம்?

பகவான் நித்ய வாசம் செய்யும்  வைகுண்டத்தின் ஒரு பகுதியே அயோத்தி.யுத்தங்களால்  வெல்லப்படாத பூமி. மனு, இந்த ஊரை சரையூ நதியின் தென் கரையில் நிறுவினார் என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்துகொள்ள முடிகிறது.அயோத்தியின் வாசலில் அனுமனும், அதற்கு தெற்கில் சுக்ரீவனும், அவனுக்கு அருகில் அங்கதனும், தெற்கு வாசலில் நளனும் நீலனும், மேற்கில் வக்த்ரனும், வடக்கில் விபீஷணனும் வாழ்ந்துகொண்டு இந்த நகரத்தை காப்பாற்றி வருகிறார்கள் என்பது ஐதீகம்.

ஸ்ரீராமபிரான்  வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களின்  அடிச்சுவடுகளை இன்றும் நாம் அயோத்தியில் தரிசிக்க முடியும். அதனால் அயோத்தியை புனிதத் தலமாக இந்திய மக்கள் கருதுகிறார்கள். அயோத்தியில் தரிசிக்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. அயோத்தியா ரயில்வே நிலையத் தினுள், சுவர்களில் ஸ்ரீ ராம்சரித் மானஸ் என்ற துளசிதாஸ் ராமாயணத்திலிருக்கும் வரிகள் எழுதப்பட்டுள்ளன.

10. சரயு நதி

குழந்தைக்கு அமுதம் தரும் தாயின் மார்பகம் போல,
உயிர்களுக்கு அமுதம் தரும் வற்றாத நதி  சரயு.
இரவி தன்குலத் தெண்ணிபல வேந்தர்தம்
புரவு நல்லொழுக் கின்படி பூண்டது
சரயு வென்பது தாய் முலையன்ன திவ்
வரவு நீர்நிலத்தோங்கு முயிர்க்கெல்லாம்.–(பால-ஆற்றுப்படலம் -24) என்று

நதியின் பெருமையை கம்பன் வர்ணிப்பான். சரயு நதி அயோத்தியில் அற்புதமாக ஓடிக் கொண்டிருக்கிறது.சரயு நதியின் மூலம் ஆப்கானிஸ்தானிலிருந்து வருகிறது. அதன் பெயர் ஹரிருத் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சரயு நதியுடன் இரண்டு நதிகள் கலக்கின்றன.கர்னால் மற்றும் மகாகாளி என்பவை அவை.-இராமரின் அவதாரதினமான இராம நவமி அன்று ஏராளமான பக்தர்கள் அயோத்தியின் சரயு நதியில் இறங்கி நீராடுகிறார்கள். ராம்காட் என்னு மிடத்தில் எண்ணற்ற பக்தர்கள் வந்து நீராடி சங்கல்பம் செய்வதை இன்றும் காணலாம்.இராமர் இந்த உலக வாழ்வை முடித்துத்  கொள்ளத் தீர்மானித்த போது, இந்த நதியில்தான் இறங்கினார் என நம்பப்படுகிறது. இந்த இடம் குப்த காட் என்று அழைக்கப்படுகிறது.

11. தங்கச் சிலைகள்

சீதா தேவி தினமும் துளசி பூஜை செய்த துளசி மாடம், ராமன் பட்டாபிஷேகம் செய்த இடம், அஸ்வமேத யாகம் நடத்தப் பட்ட இடம், சீதையைப் பிரிந்த பிறகு ராமர் ஜடாமுடி தரித்த இடம் இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களை பற்பல படையெடுப்புகளுக்கு பிறகு இன்றும் காண்பது ஆச்சர்யமாக உள்ளது.

கனக பவன் என்னும் மண்டபத்தில் இராமாயணக் காட்சிகள் யாவும் வெகு நேர்த்தியாகவும். பேரழகு பொருந்திய ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இதன் முகப்பில் தங்கம் பதித்திருப்பதால் இதற்கு கனக பவன் என்னும் பெயருண்டாயிற்று. மூன்று தங்க சிலைகள், வெள்ளி மண்டபத்தில் இருப்பது இங்கு சிறப்பு. இது ராமர் சீதைக்கு, கைகேயி உகந்து அளித்த அரண்மனை என்றும் சொல்லப்படுகிறது.

12. பிரணவம் நடந்தது

ராமபிரான் லட்சுமணன் சீதை மூவரும் காட்டிற்குச் செல்லுகின்றார்கள். இதை விவரிக்க கூடிய பெரியவர்கள், அவர்கள் மூவரும்  பிரணவம் போல நடந்து சென்றார்கள் என்று உவமை கூறி விவரிக்கிறார்கள். வேதத்தின் சாரம் தான் பிரணவம். அதாவது ஓம்காரம்.ஓங்காரத்தில் மூன்று எழுத்துக்கள் இருக்கின்றன. ‘‘அ” எழுத்து இறைவனையும் அதாவது ராமரையும், உ  என்கின்ற எழுத்து பிராட்டியையும், ‘‘ம” என்ற எழுத்து ஜீவாத்மாவாகிய லட்சுமணனையும் குறிக்கும்.

இந்த மூன்று எழுத்தும் தனித்தனியாக பிரிக்க முடிந்தாலும்  எப்பொழுதும் பிரியாமலே இருக்கும். அப்படி மூவரும் ஒருவரைத்  தொடர்ந்து ஒரு வராக காட்டில் நடந்து சென்றார்கள் என்பதை, பிரணவம் சென்றது என்று சுவாரசியமாகக்  குறிப்பிடுகின்றார்கள். பிரணவத்தை ஒரே அட்சரமாக நினைப்பது போல நாம் சீதா ராம லஷ்மணர்களை இணைத்து தியானம் செய்ய வேண்டும்.

13. ஸ்ரீ ராமனும், ஸ்ரீ ராமானுஜரும்

ஸ்ரீ ராமபிரானுக்கும் ஸ்ரீ ராமானுஜருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன “சைத்ர மாஸே  ஸிதே  பக்ஷே நவம் யாஞ்ச புனர்வஸு”  என்பது இராமர் அவதாரத்தைக் குறிக்கும் சுலோகம். அதாவது சித்திரை நவமியில் புனர் பூசத்தில் அவதரித்தார்   என்பதை இந்த ஸ்லோகம் சொல்லுகின்றது. “மேஷார் த்ராஸ ம்பவம் விஷ்ணோர் தர்ஸன ஸ்தாபனநோத் சுகம்” என்று மேஷ மாதமான சித்திரையில் ராமானுஜர் அவதாரம் நிகழ்ந்ததாக ஸ்லோகம் குறிக்கிறது.

1.இருவரும் உலகை ரமிக்கச் செய்தவர்கள்.
2.இருவர் பெயரி லும் “ராம” என்ற நாமம் உண்டு.
3.இருவருக்கும் பல ஆச்சாரியர்கள்.
4.இருவருமே சரணாகதி சாஸ்திரத்தின் மகிமையை சொல்வதற்காக அவதரித்தவர்கள்.
5.இருவருமே திருவரங்கநாதரிடத்தில் பெரும் அன்பு  கொண்டவர்கள்.

14. ஏன் ராம அவதாரம்?

ராமபிரான் தமது உலகமான வைகுண்டத்துக்குச் செல்லுகின்றபோது எல்லோரையும் அழைத்துச் சென்றார் என்று நம்மாழ்வார் பாடுகிறார். வைகுண்டம் என்பது மேலேறுவது.மேல் நிலைக்குச் செல்வது.இதை வள்ளுவரும் “வானோர்க்கும் உயர்ந்த உலகம்” என்று சொல் லுவார்.எல்லோரையும் உயரே ஏற்ற ,கீழே இறங்க வேண்டும்.கீழே இறங்குதல்தான் “அவதாரம்.” ராமபிரான் அவதரிக்கக் காரணம், மற்றவர்களை மேல்நிலைக்கு அழைத்துச்செல்வதுதான்.

மோட்சம் என்பது மறுஉலகம் என்று சொல்வதைப் போலவே விடுதலை பெறுதல் என்ற பொருளும் உண்டு.எதிலிருந்து விடுதலை பெறுதல் என்றால், துன் பங்களிருந்து விடுதலை பெறுதல்.அதனால் தானே  இராமன் கட்டிற்குச் செல்லும்போது அயோத்தி மக்கள்  அழுதார்கள்.

கிள்ளையொடு பூவை யழுத; கிளர்மாடத்
துள்ளுறையும் பூசை யழுத உருவறியாப்
பிள்ளை யழுத; பெரியோரை யென்சொல்ல
வள்ளல் வனம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால்- (நகர் நீங்கு. 100)
என்று இந்தக் காட்சியின் மாட்சியை திரைப்படம் போல வர்ணிப்பான் கம்பன்.

15. ஏழு மராமரம்
இராமாயணத்தில் நம் கவனத்தை கவர்ந்தது மராமரம்.
“மரா” “மரா” என்ற உபதேசம் “ராம ராம” எனும் மந்திரம் ஆகி வான் மீகியைப்  பதப்படுத்தியது.  இராமாயணத்தை எழுத வைத்தது.
நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே- என்பார் கம்பர்.

அது சரி மராமரம் என்பது என்ன? இங்கே மராம் என்பது யா மரம் (ஆச்சா/சாலம்). மரா என்ற தமிழ்ச் சொல், ராம என்ற தெய்வப்பெயரை வால்மீகிக்குத் தந்துள்ளது.
ஏழுமா மரம் உருவிக் கீழுலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடுபுக்கு உருவிப்பின் உடனடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது அவ் இராகவன் பகழி
ஏழு கண்டபின் உருவுமால் ஒழிவது அன்று இன்னும்.

இராமனால் செலுத்தப்பட்ட அம்பு, தனக்கு இலக்காகக் கொடுக்கப்பட்ட ஏழு மராமரங்களையும் துளைத்து, ஏழு உலகங்களையும் துளைத்து, ஏழு என்ற எண்ணிக்கையில் இருந்த எல்லாப் பொருட்களையும் துளைத்தது, இனி துளைப்பதற்கு ஏழாக எதுவும் இல்லை என்ற நிலையில் இராமனிடம் திரும்பி வந்தது.

16. ஏழும் இராமனும் ராமபிரான் வாழ்வில் ஏழு என்கிற எண் மிகப் பொருந்தி வருவதைக் காணலாம்.

1. ஏழாவது அவதாரம் ராம அவதாரம்.
2.ஏழு மரா மரங்களைத் துளைத்தான்.
3.இராமன் எழுபது வெள்ளம் வாநர சேனைகளோடு இலங்கை மீது படை யெடுத்தான்.
4.ஏழு உலகங்களிலும் அவன் பெருமை பேசப்படுகிறது.
5.ஏழு  பிராகாரங்கள் உள்ள ஸ்ரீரங்கநாதரை அவன் குலதெய்வமாக அடைந்திருந்தான்.
6.ஆறு தம்பிகளோடு சேர்ந்து ஏழு பேராக இருந்தான். (நின்னோடும் எழுவரானோம்).
7.ஏழு காண்டங்களில் ராமகதை சொல்லப்பட்டிருக்கிறது. ஏழாவது காண்டம் உத்தர காண்டம்.
8.அனுமன் வீணையை வைத்து கொண்டு ஏழு ஸ்வரங்களால்  இராமா யணம்   பாடிக்கொண்டிருக்கிறார்.

17. தோல்வியே இல்லை

1.அவன் ஜெயராமன்.
2.ஸ்ரீ ராமாயணத்தில் தோல்வி என்பதே கிடையாது.
3.ராமன் அம்பு பழுதுபட்டு திரும்பியது இல்லை.
4.“ஒக பாணமு” என்று தியாகய்யர் ராம பாணத்தின் பெருமையைப் பாடுவார்.
5.‘‘தோலா வீரன்”  என்று வேதாந்த தேசிகர் ராமனின் வீரத்தைப் பாடுவார்.
6.எல்லா இடங்களிலும் வெற்றிதான். ஆகையினால்தான் ஸ்ரீராமஜெயம் எழுதுபவர்களுக்கும், ஸ்ரீ ராமஜெயம் சொல்பவர்களுக்கும் தோல்வி என்பது வருவது இல்லை.

18. ஏன் ராமன் பெயர் இல்லை ? ஒரு அருமையான பாட்டு.

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி பற்ற
விரை செறி கமலத் தாள்சேர் வெண்ணெய்யூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மெளலி!
இந்த பாட்டிலே ராமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி விளக்கப்படுகிறது. ராமருக்கு பட்டாபிஷேகம் செய்தார்கள்.சரி.

இதில் ராமர் பெயர் இல்லையே? என்ன காரணம்?

இதற்கு சுவையான விளக்கம் சொன்னார்கள் பெரியவர்கள்.பட்டாபிஷேகம் என்கின்ற அந்த  கிரீடம் ராமர் தலையில் வைக்கப்பட்டது  ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், வெகுஜனங்களின் அபிப்ராயம், மகிழ்ச்சி ஆகிய கிரீடத்தை, அதாவது மக்களின் அபிமானத்தை ராமபிரான் சூட்டிக் கொண்டான்.
ஒவ்வொருவர் இதயத்திலும் ஆட்சி செய்தான்,ராமர் சூடிய கிரீடம் தங்கள் தலைமேல் வைத்ததாகவே மக்கள் கருதினார்கள், எல்லா மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக ராமன் இருந்ததால், ராமன் பெயர் இதில் கம்பன் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்பது பெரியவர்கள் நிர்வாகம்.

19. வேதங்கள் ஏன் ராமனைத் தொடர்ந்தன?

வேதம்தான் ராமன். வேதம் காட்டும் மறைபொருள் தான் ராமாயணம்.
வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசராத்மஜே I
வேத: ப்ரசேதசாதாஸீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா II
இந்த ஸ்லோகத்தின் பொருள் இதுதான்.

“வேதங்களினால் அறியப்படும் இறைவன் தசரதனின் புதல்வனாகப் பிறந்தான்; வேதம் ப்ரசேதஸ் (வால்மீகி) முனிவரிடமிருந்து) ராமாயண மாகப் பிறந்தது” என்பது இதன் பொருள்.
அதாவது இராமாயணத்தில் தூல வடிவம் ராமன் என்கிற அவதாரம். தன் அவதார  காலம் நிறைவு பெற்றவுடன் ராமன் சரயு நதியில் இறங்கி உடனடியாக வைகுண்டத்திற்குச் செல்லத்  தொடங்க, வேதங்களும் அவனைத் தொடர்ந்து சென்றன. அதைத்தொடர்ந்து முனிவர்களும் மக்களும் ராமன் பின்னால் சென்றார்கள்.இதன் மூலம் பிரமாணமும் பிரமேயமும் (வேதமும் ,வேதப் பொருளும் ஒன்று என்பதை காட்டுகிறார்.

20. குலசேகர ஆழ்வார் வர்ணிக்கும் காட்சி இது

ஆழ்வார்களில் குலசேகர ஆழ்வார் இராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.அவர் ராமாயணம் பாடவும், அந்த காட்சிகளை அனுபவிக்கவும் விரும்புகிறார்.பகவான், “நீ திருச்சித்ர கூடம் வா, அங்கு இதை அநுபவிக் கலாம்” என, ஆழ்வார் தில்லை திருச்சித்ரகூடத்தில்  (வடக்கேயும் ஒரு சித்ரகூடமுண்டு) இக்காட்சிகளை கண்டு, ராமாயணத்தை பூரணமாக ஒரு பதிகத்தில் அருளிச் செய்கிறார். அதில் 10 வது பாசுரம் இது. தன்னுடன் சரா சரங்களை வைகுண்டம் ஏற்றினான் என்று பாடுகிறார்.

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை
வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி

சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி
நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே.
இப்பொழுதும் இந்த காட்சியை, நாம் தில்லை திருச்சித்ரகூடத்தில் (சிதம்பரம்) காண முடியும்.

21. ஏன் சித்திரையில் ஸ்ரீராமநவமி?

ஸ்ரீராமநவமி யானது சித்திரை மாதத்தில் வருகின்றது. இராமபிரான் அவதாரம் செய்தது மட்டுமல்ல பட்டாபிஷேகம் செய்த மாதம் சித்திரை மாதம். சித்திரை மாதத்திற்கு அதிதேவதை விஷ்ணு. விஷ்ணு என்றால் கரந்து எங்கும் பரந்து உளன் என்பதுபோல் எல்லா இடத்திலும் வியாபித்து உள்ளவன் என்று பொருள். நிறைந்த ஒளியை உடையவன் என்று பொருள். தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். எனவே, ராமபிரான், விஷ்ணு மாதத்தில், மேஷத்தில், நவகிரக தலைவன் சூரியன் அதி உச்சத்தில் இருந்த போது அவதரித்தான்.

22. வசந்த ருதுவும் ராம நவமியும்பகவான் கீதையில்,
ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்
மாஸாநாம் மார்கஸீர்ஷோஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||

சாமங்களில் (வேதப் பகுதியில்) நான் ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமமாகவும் ,  சந்தஸ்களில் நான் காயத்ரியாகவும் ,மாதங்களில் நான் மார்கழியாகவும் , பருவங்களில் நான் இளவேனில் எனப்படும் வசந்த காலமாகவும் இருக்கிறேன் என்கிறான். வசந்த ருது வருஷத்தில் முதல் ருது. அதில் முதல் மாதம் சித்திரை மாதம் என்பதால் இதற்குத்  தனிச்  சிறப்பு உண்டு.

23. ஏன் மறுபடி மறுபடி சீதையைப் பிரிந்தான் இராமபிரான் ?

இராமாயணத்தில் பலகாலம் சீதையை ராமன் பிரிந்து இருப்பதாகப் பார்க்கின்றோம். முதலில் காட்டில் சீதையைப் பிரிகின்றான். ராவணன் சீதையை அசோகவனத்தில் சென்று மறைத்து வைக்கிறான். அதற்குப் பிறகு சீதையை மீட்ட பிறகு மறுபடியும் பிரிவு ஏற்படுகிறது.
இதற்கு என்ன காரணம் என்றால், ஒருமுறை பிருகு மகரிஷியின் பத்தினியை மகாவிஷ்ணு தன்னுடைய சக்கரத்தால் தலையை துண்டித்து விட்டதாகவும், அதனால் பிருகு மகரிஷி, நீ உன் மனைவியை பிரிந்து துன்பப்படுவாய் என்று சாபம் விட்டதாகவும், முனிவரின் சாபத்தை மகாவிஷ்ணு ஏற்றுக்கொண்டு, உம்முடைய சாபத்தின் பலனை நாம் ராமா வதாரத்தில் நிறைவேற்றுவோம் என்று உறுதி கொடுத்ததாகவும் பெரியவர்கள் சொல்லுகின்றார்கள்.

முனிவரின் வாக்கு பொய்யாகி விடக்கூடாது என்பதற்காக சாட்சாத் பகவானே இந்தத் துன்பத்தை ஏற்றுக் கொண்டான். இந்த சாபத்தின் மூலம் தேவர்களின் துன்பங்களைத் தீர்த்து வைத்தான். இங்கே (முனிவரின் சாபம் (தேவர்களுக்கு) வரமாகியது.

24. ஸ்ரீராம நவமியில் ராம நாமம் சொல்லுங்கள்

சித்திரை மாதத்தில் ஸ்ரீராமநவமி உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது . ஸ்ரீராமநவமி வேறு. ஸ்ரீ ராமாயணம் வேறு அல்ல. ஸ்ரீ ராமாயணத்தில் ஒரு சில சுலோகங்களையாவது நாம் அன்றைய தினம் பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீராம ஜெயத்தை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். ராமநாமத்தை கோடிமுறை எழுதுவதற்கு “ராம கோடி” என்று பெயர்.
தினமும் நீராடியவுடன் பக்தியுடன் ராமநாமத்தை எழுத வேண்டும். தினமும் ஆயிரம் முறை இதை எழுதினால், 30 ஆண்டுகளில் இந்த எண்ணம் பூர்த்தியாகிவிடும். இப்படி எழுதிய நோட்டுக்களை பூஜை அறையில் வைத்து பூஜிக்க வேண்டும். இப்படி ராமநாமம்  எழுதி  பூஜித்தால் அந்த குடும்பத்தின் இருபத்தி ஒரு தலை முறை புண்ணிய பலத்தோடு வாழும்.

25. மூன்று முறை சொன்னால் சகஸ்ர முறை சொன்ன பலனா?
அற்புத சக்தி பொருந்திய இந்த மந்திரத்தின் மேன்மையை பரமேஸ்வரனே பார்வதி தேவிக்குச்  சொல்வதாக விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வருகிறது. “ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே” என்ற இந்த ஸ்லோகத்தை தினமும் குறைந்தது, 11 முறை சொல்லுங்கள், வீட்டில் சுபிட்சம் தேடி வரும். ராம ராம ராம என மூன்று முறை சொன்னால், எப்படி ஆயிரம் நாமத்துக்கு சமமாகும் என, சந்தேகம் வரும். அதற்கு கணித அடிப்படையில் பதில் உள்ளது.

எழுத்துக்களுக்கு இணையாக எண்கள் உள்ளன. “ர” என்ற எழுத்துக்கு எண் 2ம், “ம” என்ற எழுத்துக்கு எண் 5ம் ஆகும். மேலே ஸ்லோகத்தில் “ராம” என்ற நாமம் மூன்று முறை வருகின்றது. அதாவது 2X5 2×5 2×5. என்றால் 2X5 =10×2=20×5=100×2=200×5=1000 ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே. இதுதான் ராம நாமத்தின் அற்புதம். அதனால்தான், ராம ராம ராம என்று சொன்னால், விஷ்ணு சகஸ்ரநாம பலன் கிடைக்கும். இதை வேறு விதமாகச் சொல்லலாம்.

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்” (கம்பராமாயணம்:  சிறப்புப் பாயிரம் 14)

26. யார் இவ்வுலகில் பாக்கியவான்?

ராமனின்  குணங்கள் பற்றி அழகான தமிழ் பாடல் ஒன்று உண்டு. இராமா யணத்தின் சாரமே இந்தப் பாடலில் கொடுக்கப்பட்டிருக்கும். யார் இவ்வுலகில் பாக்கியவான் என்ற கேள்விக்கு விடையாக இப்பாடல் உள்ளது.

1. ராம நாமத்தை சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்.
2. காம க்ரோதத்தை கட்டுப்படுத்தியே பூமியில் வாழ்பவன் பாக்கியவான்.
3. பொய் உரைக்காமல் மெய் சிதைக்காமல் வையத்தில் வாழ்பவன் பாக்கி யவான்.
4. கள்ளம் கபடுகள் உள்ளத்தில் இல்லாமல் வெள்ளை மனத்தவன் பாக்கியவான்.
5. நண்பர்களுடைய நலத்தின் கோரும் பண்புடையவனே பாக்கியவான்.
6.துன்பம் வந்தாலும் துக்கமில்லாமல் இன்பமாக்குபவன் பாக்கியவான்.
7. யாதொரு ஸ்திரீயையும் மாதா என்று எண்ணிடும் நேர்மையானவனே பாக்கியவான்.
27. ராமநவமி எப்படிக் கொண்டாட வேண்டும்?
ராமநவமி எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதை காஞ்சிப் பெரியவர் இப்படி கூறுகிறார். இது ஒரு பத்ததி(முறை)
1. இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீ ராமநவமியன்று முழுவதும் பட்டினி (சித்த உபாவாஸ) விரதம் இருக்க வேண்டும்.

2. ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் ஏதாவது சிறிது கோயில் சந்நதியிலோ, அல்லது பஜனை மடத்தின் முன்போ கூடி ஸ்ரீராம நாம மந்திரத்தை ஐந்து நிமிஷம் ஜபம் செய்து, பிறகு, “ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்” என்னும் பதின்மூன்று அட்சரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைப் பின்பற்றிச் சொல்லிக்கொண்டு, ஊரைச் சுற்றி வந்து, முதலில் ஆரம்பித்த இடத்தை அடைந்து, அங்கு பத்து நிமிடம் பஜனை செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.

3. மறுநாள் காலை அதே இடத்தில் கூடி, ஸ்ரீ ராமாவதாரத்தில் (கம்ப ராமாய ணத்தில்) ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை வர்ணிப்பதாக பாக்களைப் பாராயணம் செய்து, அல்லது ஸம்ஸ்கிருதம் படித்தவர்கள் எவரேனும் இருந்தால், அவரைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்ரீராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் பண்ணும்படி செய்து, பத்து நிமிடம் பஜனை செய்து, ஏழை மக்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும்.

28. இதிகாசம் என்பதன் பொருள் இதுதான்இராமாயணம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் பரவி இருக்கக்கூடிய ஒரு உன்னதமான இதிகாசம். இதி என்றால் “இவ்வாறு, இப்படி, இப்படியிப்படி, இப்படியாக, இவ்வாறாக” என்றெல்லாம் இடம் சார்ந்து பொருள்படும். (ஹ) என்பது வலியுறுத்தும் ஓர் அசைச்சொல். தமிழில் இப்படித்தான், இவ்வாறாகத்தான் என்பதில் வரும் ‘தான்’ என்னும் சொல் போல.கடைசி பகுதியாகிய  (ஆஸ) என்பதன் பொருள் “இருந்தது”.

அஸ் என்றால் “இரு” (நிகழ்காலம்), இதன் இறந்தகால வடிவம் ஆஸ. இதிகாசம் என்றால் “இப்படி நடந்தது” என்று பொருள்.அந்த ஆசிரியரே அதிலே ஒரு கதாபாத்திரமாக வருவார். அப்படிப்பட்ட இதி காசங்கள் இரண்டு. ஒன்று. இராமாயணம். இன்னொன்று மகா பாரதம்.வேதத்தில் அர்த்தத்தை தெளிவாக கதை போல் விளக்குவது இந்த இதி காசங்கள். மகாபாரதத்தில் வேத வியாசர் கதைக்குள் வருவார். இராமாயணத்தில் வால்மீகி  முனிவரே வருகிறார். அவர் தான் சீதையை தன் ஆசிர மத்தில் வளர்க்கிறார்.

29. இராமாயணம் முதலில் அரங்கேறியது எப்போது?

இராமாயணதிற்கு இன்னொரு விசேஷமும் உண்டு. இது இராமர் காலத்திலேயே அரங்கேறியது. அதுவும் அவர் ராஜ மண்டபத்திலேயே அரங்கேறியது. அதை இராமன் மக்களோடு மக்களாக அனுபவித்தான். இதை குலசேகர ஆழ்வார் அற்புதமாகப் பாடுகிறார்.

அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்

செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன்னமுதம் மதியோம்
ஒன்றே மிதிலைச் செல்வி (சீதை) உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் (லவ குசர்கள்) செம்பவளத் திரள்வாய்த் திறந்து இனிமையாகப் பாட இராமன் தன் சரிதை(கதையை) கேட்டான் என்பது பொருள். அடுத்த வரியில் இந்த கதையைக் கேட்கும்போது அமுதம் கூட சுவையாய்த் தெரியாது. இதன் மூலம் இராமாயணம் கேட்க இனிமையானது என்பதும் தெரிகிறது. அதனால் தானே யுகம் யுகமாக இந்தக் கதையை மக்கள் ஆர்வமுடன் கேட்கிறார்கள்.

30.வேதத்தின் சூட்சுமம் சொல்வதுதான் இராமாயணம்

வேதத்தில் உள்ள சாரமான செய்திகளை நேரடியாக வேதம் படித்துத் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால், வேதம் என்ன தான் சொல்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் படிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இராமாயணத்தைப்  படிக்க வேண்டும் என்பதால்,
கற்பார் ராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஓன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே

என்று நம்மாழ்வார் பாடினார். வேதத்துக்கு உரை செய்தவருமான ஸ்ரீ பாஷ்யம் எழுதியவருமான ஸ்ரீ ராமானுஜர்  இராமாயணத்தில் மிகுந்த ஆற்றலும் ஆர்வமும் கொண்டு இருந்தார். இராமாயணத்தில் சொல்லப்பட்ட சூட்சும தத்துவங்களைக்  கொண்டுதான்  ஸ்ரீ பாஷ்யத்தை அவர் எழுதினார் என்பார்கள். அதனால்தான் அமுதனார்,” படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி  வெள்ளம்  குடிகொண்ட கோயில் எம் ராமானுஜன்” என்று பாடியிருக்கிறார். அதாவது எப்போதும் இராமாயணம் இராமானுஜர் நெஞ்சத்தில் இருக்குமாம். அதுதான் அவரை வழி நடத்தியதாம்.

இப்படி நம்மையும் வழி நடத்தி நல்வழி காட்ட இந்த ராம நவமியில் ஸ்ரீ ராமாயணத்தை பாராயணம் செய்வோம். ஸ்ரீ ராமனின் குணங்களைக் கொண்டாடுவோம்.ஸ்ரீ ராம நாமம் ஜெபம் செய்வோம்.உலகம் சர்வ சகோதர ஒற்றுமையுடன் வாழ பிரார்த்தனை செய்வோம். செயலிலும் முனைவோம். அது தான் நிஜமான ஸ்ரீ ராமநவமி.

—————-

பாவயாமி ரகுராமம் பவ்ய சுகுணாராமம் |

ரகு குலத்து ராமனை த்யானிக்கிறேன், அவன் தெய்வீக நற்குணங்களின் உருவானவன்(தோட்டம்).

பாவுக விதரணபரா பாங்கலீலா லசிதம் ||

ஒளிரும் தன் கடைக் கண்களாலேயே மகிழ்ச்சியும், வளமும் எல்லாருக்கும் தருவதில் மேலானவன்

தினகரான்வயதிலகம், திவ்யகாதி சுதசவனா
வன, ரசித சுபாஹுமுக வத, மஹல்யா பாவனம்,
அனக மீச சாப பங்க, ஜனகசுதா ப்ரானேசம்,
கன குபித ப்ருகுராம கர்வஹர, மிதசாகேதம்

சூர்ய குலத்திலகம், காதியின் மகன் யக்ஞம் காக்க
சுபாஹுவின் தலைமையிலான அரக்கர்களை அழித்தவன், அஹல்யைக்கு விமோசனம் அளித்தவன்,
தெய்வீகமான ஈஶனின் வில்லை முறித்து ஜனக புத்ரியின் உயிர் நாதனானவன்,
பெருங்கோபத்தோடு வந்த ப்ருகுராமனின் செறுக்கை அடக்கி, அயோத்தி திரும்பியவன்

விஹிதாபிஷேகம் அத விபின கதம் ஆர்யவாசா
சஹித சீதா சௌமித்ரீம், ஶாந்ததம ஶீலம்,
குஹநிலையகதம், சித்ரகூடாகத, பரத தத்த
மஹித ரத்னமய பாதுகம், மதனசுந்தராங்கம்

பட்டாபிஷேகம் தடைபட்ட பின் தந்தை சொற்படி வனம் சென்று, ஸீதை, ஸௌமித்ரியுடன் வசித்தவன். அமைதியே உருவானவன்.
குஹன் இருக்குமிடம் சென்றவன், சித்ரகூட பர்வதத்தில் வந்து, பரதனுக்கு தன் மஹிமை பொருந்திய ரத்ன பாதுகைகளை தந்தவன், மன்மதனின் அழகிய அங்கங்கள் உடையவன்.

விதத தண்டகாரண்ய கத விராத தலனம்,
சுசரித கடஜ தத் தானுபம் இதவைஷ்ணவாஸ்த்ரம்,
பதக வர ஜடாயு நுதம், பஞ்சவடீ விஹிதவாசம்,
அதிகோர சூர்ப்பணகா வசனாகத கராதி ஹரம்

அடர்ந்து விரிந்த தண்டகாரண்யத்தில் செல்லும் போது விராதனை அழித்தவன்,
சிறந்த குடமுனி(அகஸ்த்யர்) தந்த ஒப்பற்ற வைஷ்ணவாஸ்த்ரத்தைக் கொண்டவன்,
பக்ஷி ராஜனான ஜடாயுவால் பூஜிக்கப்பட்டு, பஞ்சவடீயில் வாசம் கொண்டவன்,
அதி கோர சூர்ப்பணகையின் சொல் கேட்டு வந்த கரன் முதலானோரைக் கொன்றவன்.

கனக மிருக ரூபதர கல மாரீச ஹர, மிஹ
ஸுஜன விமத தஶாஸ்ய ஹ்ருத ஜனகஜா ன்வேஷணம்,
அனகம், பம்பாதீர சங்கதா ஞ்சனேய, நபோமணி
தனுஜ ஸக்யகரம், வாலீ தனு தலன, மீஶம்

பொன்மானின் ரூபம் தரித்த வஞ்சக மாரீசனை வதைத்தவன்,
இங்கு உத்தமர்களை மதிக்காத (உற்றவர் சொல்கேளாத) தசமுகன் திருடிய ஜனகன் மகளை தேடி அலைந்தவன்,
பரிசுத்தமானவன், பம்பா நதிக்கரையில் ஆஞ்சநேயருடன் சேர்ந்தவன், விண்ணில் ஒளிரும் சூர்யபுத்ரனுடன் ஸ்னேஹம் கொண்டவன்,
வாலீயின் உடலை சாய்த்தவன், உயர்ந்தவன்

வானரோத்தம ஸஹித வாயுஸூனு கரா ர்ப்பித
பானுஶத பாஸ்வர பவ்ய ரத்னாங்குலீயம்,
தேன புன ரானீதா ன்யூன சூடாமணி தர்சனம்,
ஸ்ரீநிதி முததி தீரே ஶ்ரித விபீஷணா மிலிதம்

ஸுக்ரீவனுடன் இருந்தபோது, வாயு புத்ரன் கரங்களில், நூறு ஸூர்ய ஒளி பொருந்திய, தெய்வீகமான தன் ரத்ன மோதிரத்தைத் தந்தவன்,
பின்னர் அவனால் கொண்டுவரப்பட்ட குறையற்ற சூடாமணியைப் பெற்றவன்,
பொக்கிஷங்கள் உறையும் கடற்கரையில் அண்டின விபீஷணனை நண்பனாக்கிக் கொண்டவன்

கலித வரசேது பந்தம், கல நிஸ்ஸீம பிஶிதாஶன
தலனம், உரூ தஶகண்ட விதாரணம், அதி தீரம்,
ஜ்வலன பூத ஜனக ஸுதா ஸஹிதம் யாத சாகேதம்
விலஸித பட்டாபிஷேகம், விஸ்வபாலம், பத்மநாபம்

சிறந்த கடல் பாலத்தைக் கட்டினவன், வஞ்சகர்களான எல்லையற்ற நரமாமிசம் உண்ணும் அரக்கர்களை அழித்தவன்,
பத்து கழுத்துக்களுடன் உருக்கொண்டவனை அழித்தவன்,  எதற்கும் அஞ்சாதவன்,
நெருப்பால் தூய்மையாக்கப்பட்ட ஜனகபுத்ரியுடன் சேர்ந்தவன், அயோத்தி திரும்பியவன்,
ஒளிரும் பட்டாபிஷேகம் கொண்டவன், உலகைக் காப்பவன், பத்மநாபன்.

——————

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே (ஜகம்)
இகபர சுகமெலாம் அடைந்திடலாமே
இந்தக் கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இணையே இல்லாத காவியமாகும் (ஜகம்)
அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை
கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்
கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வர்

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே
காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே

தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே
வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்
ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தை தனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வ வீரத்தைக் கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான் (ஜகம்) 
மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகர தோரணத்தால் அலங்கரித்தாரே
மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்காண்டுகள்
வாழவும் மன்னனிடம் வரமதைக் கேட்டாள் 
அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூர்ச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தை உனை வனம் போகச் சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார் என்றாள்
சஞ்சலமில்லாமல் அஞ்சன வண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்
விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான் 
இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுரி தரித்து ராமன் செல்வது கண்டு
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
உடனென போவதென தடுத்தனர் சென்று 
ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே
அண்ணலும் கானகத்தை நாடிச் சென்றானே (ஜகம்) 
கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான் 
ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை
மானபங்கம் செய்து விரட்டி விட்டான் 
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்
ராமன் தேடிச் சென்றான் 
வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்
அன்னையை அசோகவனத்தில் கண்டான் 
ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான்
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்
கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து ஐயன் வானர சேனையுடன் சென்றான்
விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான் 
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே 
ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
சீதாபதிம் ரகு குலான்வய ரத்னதீபம்
ஆஜானுபாகும் அரவிந்த தளாயதாக்ஷம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி
————————————————————————————————————————–

அயர்வறும் அமரர்கள் அதிபதியான எம்பெருமானின் திவ்ய தேசங்கள் நூற்றெட்டு என்று நம் முன்னோர் கூறுவது வழக்கம்.
இவையெல்லாம் மயர்வறு மதிநலம் அருளப் பெற்ற திவ்ய ஸூரிகள் எனப்படும் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பண்ணப் பெற்றவை.
இந்த எல்லாத் திவ்யதேசங்களிலும் எம்பெருமான் அர்ச்சாரூபியாய் ஸகல ஜனங்களுக்கும் ஸர்வ அபேக்ஷிதங்களையும் கொடுத்துக் கொண்டும்,
‘அர்ச்ய: ஸர்வ-ஸஹிஷ்ணு:’ என்ற ரீதியில் நம்முடைய எல்லா அபராதங்களையும் பொறுத்துக்கொண்டும் ஸேவை ஸாதிக்கிறான்.
இவை அனைத்துக்குமே ஒவ்வோர் அம்சத்தை முன்னிட்டு உத்கர்ஷம் உண்டு.

இப்படி இந்த நான்கு திவ்வ தேசங்களுக்கும் பெருமை உண்டு.
அதிலும் பெருமாள் கோவிலுக்கு மற்றும் பல விசேஷ பெருமைகள் உள்ளன.
இது காஞ்சி என்று பெயர் பெற்று விளங்குகிறது.
க என்று சொல்லப்படும் பிரம்மாவினால் பூஜிக்கப் பெற்ற பகவான் வசிக்கும் திவ்ய தேசமானபடியால் இதற்கு இந்த பெயர் வந்தது.
இதன் மகிமையை ஹம்ஸ ஸந்தேசத்தில் ஸ்ரீஸ்வாமி தேசிகன் பரக்ககக் கூறியிருக்கிறார்.

தாமாஸீதந் ப்ரணம நகரீம் பக்திநம்ரேண மூர்த்நா
ஜாதாமாதெள க்ருத யுக முகே தாதுரிச்சாவசேந |
யத்வீதீநாம் கரிகிரி பதேர் வாஹவேகாவதூதாந்
தந்யாந் ரேணூந் த்ரிதச பதயோ தாரயந்த்யுத்தமாங்கை: || என்று.

தேவப்பெருமாளின் உத்ஸவம் விமரிசையாக நடக்கிறது.
அப்பொழுது எம்பெருமான் கருடன், ஆனை, பரி முதலிய வாகனங்களில் எழுந்தருளுகிறார்.
வாகன ஆரூடனான எப்பெருமானை ஸ்ரீபாதம்தாங்கிகள் மிகவும் அழகாக எழுந்தருளப் பண்ணுகிறார்கள்.
ஒவ்வொரு வாகனத்திலும் தேவாதிராஜன் எழுந்தருளும்போது அதிக அதிகமான சோபையுடன்
கண்டவர் தம் மனம் கவரும்படி ஸேவைஸாதித்து அநுக்ரகிக்கிறான்.
அந்த திவ்யதேசத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகள் மிகக் கடும் விசையுடன் எழுந்தருளப் பண்ணுவது வழக்கம்.
அவர்களுடன் ஸேவார்த்திகள் கூட உடன் செல்வது முடியாது.
அந்தச் சமயத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகளின் திருவடிகளிலிருந்து பாததூள் வெளிக் கிளம்பி ஆகாயம் வரையில் பரவுமாம்.
வாகனாதிரூடனான தேவப்பெருமாளை ஸேவிப்பதற்காக ஸ்வர்க்க லோகத்திலிருந்து ஆகாயத்தில் வந்துள்ள
தேவர்கள் அந்தத் தூளைத் தங்கள் சிரத்தினாலே தாங்கிக் கொள்வார்கள்.
அப்படிப் பட்ட மகிமையைப் பெற்றது இந்தத் திவ்யதேசம்.

மேலும், இந்தத் திவ்யதேசத்தின் மகிமை வாசாமகோசரம் என்று எண்ணி ஸ்ரீஸ்வாமி தேசிகன்,
வந்தே ஹஸ்தி கிரீசஸ்ய வீதீ சோதக கிங்கராந்” என்று அருளிச்செய்தார்.
தேவப் பெருமாளின் வீதியைச் சுத்தம் செய்கிற வேலைக்காரர்களை வணங்குகிறேன் என்றால் இதன் மகிமையை அளக்க முடியாது.

‘தேவப் பெருமாளின் வீதியாவது வேதாந்தம்.
அந்த வேதாந்தத்தின் அர்த்தத்தை அபார்த்த நிரஸந பூர்வகமாக வெளிப்படுத்தினவர்கள்
நம் ஆசார்யர்கள். அவர்களை வணங்குகிறேன்” என்பது அதன் உட்கருத்து.

இந்தத் திவ்யதேசத்து எம்பெருமானான பேரருளாளனாலே அல்லவா நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் விளங்கிற்று?
ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த வள்ளல் ராமாநுஜர் முதலில் யாதவப்பிரகாசனிடம் ஸாமானிய சாஸ்திரங்களையும் சில வேதாந்தபாகங்களையும் கற்று,
அவர் மூலமாகத் தமக்கு அவத்யம் வருவதை அறிந்து, கங்கா யாத்திரையிலிருந்து மீண்டு திரும்பி வந்து
திகைத்து நின்றபோது, தேவப் பொருமாள் வேடனாகவும் பிராட்டி வேட்டுவச்சியாகவும் வேடம் பூண்டு இவரைக் காத்தார்கள்.
மேலும், திருக்கச்சி நம்பி மூலமாக இந்த எம்பெருமான் ஆறு வார்த்தைகளை ராமாநுஜருக்குத் தெரிவித்தான்.
இதன் மூலமாக நம் ராமாநுஜர் ஸ்ரீபாஷ்யகாரரானார்.

வேதாந்த வீதியை முள், கல் முதலிய தோஷங்கள் இல்லாமல் சீர்ப்படுத்திச் சோதித்துக் கொடுத்து,
இதரர் சொல்லும் அபார்த்தங்களையும் கண்டித்து, ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தார்.
ஆக, காஞ்சீபுரம் இல்லாவிட்டால் அந்த எம்பெருமான் எங்கே! அந்த எம்பெருமான் இல்லாவிட்டால் ஸ்ரீபாஷ்யகாரரை உணர்த்துபவர் யார்?
நம் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தமே விளங்குவது எப்படி?
ஆக ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்த ஸ்தாபனமே இந்த திவ்யதேசத்தின் பிரபாவத்தினால் ஏற்பட்டது என்பதை மறக்க முடியாது. மறைக்கவும் முடியாது.

மேலும் கருட உத்ஸவம் இந்த ஊரில்தான் விசேஷம்.
‘அத்தியூரான் புள்ளையூர்வான்’ என்று கருட உத்ஸவத்தை முன்னிட்டு ஆழ்வார்கள்
இந்த திவ்ய தேசத்தை மிகச் சிறப்பாக கூறியுள்ளார்கள் என்பதும் சர்வ விதிதம்.
இப்படி பல படியால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு மகிமை ஏற்பட்டுள்ளது.
அத்தி யூரான் பபுள்ளை யூர்வான் அணிமணியின்
துத்தீ சேர் நாகத்தின் மேல் துயில்வான். முத்தீ
மறையாவான், மா கடல் நஞ்சுண்டான். தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான், என்பது பூதத்தாழ்வார் பாசுரம்.
இப்படி மங்களாசாஸனாத் ஹிமயமலை முதல் கடல் வரையில் தேசவரை கருடோத்ஸவ விசேஷம்
தேவப்பெருமாளுக்கே.
இவர் இரவில் நாகத்தின் மேல் சயனித்துக் கொள்கிறார்.
காலையானதும் எழுந்து விடுகிறார்.
பணிபதிசயனீயாத உத்தித: த்வம் ப்ரபாதே என்பது தேசிக ஸ்ரீஸூக்தி.

இதற்கு மற்றொரு வகையிலும் பிரபாவம் உண்டே

இருபத்துநான்கு என்ற எண்ணிக்கை இவ்வூரில் பல விஷயங்களில் உள்ளது.
குடை இருபத்துநான்கு சாண் கொண்டது.
வாணவெடிகள் இருபத்துநான்கு வகைகள்.
த்வஜஸ்தம்பத்தில் இருபத்துநான்கு அடுக்கடுக்காக போடப்படும் கவசங்கள் உள்ளன.
அனந்த ஸரஸ்ஸில் இருபத்து நான்கு படிகள்.
கோவின் பிராகாரச் சுவர் இருபத்துநான்கு அடுக்குகள் கொண்டது.
கோவிலின் கீழிலிருந்து திருமலைக்குச் சென்று எம்பெருமானை ஸேவிப்பதற்கு படிகள் உள்ளன.
இவையும் இருபத்துநான்கே.
இப்படி இருபத்துநான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷம் இவ்வூரில்தான் உள்ளது.

ஸ்ரீமத் ராமாயணம் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.
இதற்கு காரணம் இருபத்து நான்கு எழுத்துக்கள் கொண்ட காயத்ரியின் அர்த்தத்தை விவரிப்பதற்காக
அந்த மகா காவியம் அவதரித்தபடியால் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டதாக வால்மீகி பகவான் அருளிச்செய்தார்.
அவ்வாறே அந்த மகா காவியத்தின் பிரதான அர்த்தமான பகவானை அறிந்துகொள்வதற்கு
இருபத்துநான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷங்கள் இந்த ஆலயத்தில் ஏற்பட்டிருக்கின்றன.
‘காயத்ரியில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம்,
ஸ்ரீராமாயணத்தில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம்
தேவப் பெருமாளே’ என்பதை அறிவிக்கவே இந்த ஆலயத்தில் இந்த விசேஷம் என்று எல்லாரும் சொல்லுவர்.

இப்படிச் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும்.

அப்பைய தீக்ஷிதர் என்ற மகான் இந்த விசேஷத்தின் பெருமையை ரஸகனமாக அருளிச் செய்திருக்கிறார்.
இவர் அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்;-ஆயினும் ஸ்ரீஸ்வாமி தேசிகனிடத்தில் மிக்க பக்தி பெற்றவர்.
ஸ்ரீதேசிகனின் பெருமையை நன்கறிந்து, அவர் இயற்றிய யாதவாப்யுதயம் என்ற மகா காவியத்திற்கு வியாக்கியானம் செய்தவர்.
‘ஸ்ரீமத்வேங்கட நாதஸ்ய காவ்யேஷு லலிதேஷ்வபி | பாவா: ஸந்தி பதேபதே’ என்று ஸ்வாமியின் காவியத்தைப் பலவாறு போற்றியவர்.
திருமலைக்குப் போகும்போது அமைந்துள்ள இருபத்துநான்கு படிகள் விஷயமாக
இந்த அப்பைய தீக்ஷிதர் இயற்றிய சுலோகத்தை இங்கே குறிப்போம் –

ஸம்ஸாரவாரி நிதிஸந்தரணைக போத –
ஸோ பாநமார்க சதுருத்தர விம்சதிர் யா |
தாமேவ தத்வ விதிதம் விபுதோதிலங்க்ய
பச்யந் பவந்த முபயாதி கரீச நூநம் ||

வேதாந்த சாஸ்திரத்தில் இருபத்துநான்கு தத்துவங்கள் கூறப்பட்டிருக்கின்றன.
ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம், ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருத்வி, கர்மேந்திரியம் ஐந்து,
ஜ்ஞாநேந்திரியம் ஐந்து, பஞ்ச தந்மாத்ரைகள், மனம் ஆக இவையெல்லாம் அசேதனத்தின் பிரிவுகள்,
சேதனன் என்பவன் ஜீவன்,
இவை எல்லாவற்றிற்னும் மேற்பட்டவன் பரமசேதனன் பரமாத்மா.
தன்னையும் அசேதனமான இருபத்துநான்கு தத்துவங்களையும் நன்கு அறிந்தவன்தான் சுலபமாகப் பரமாத்மாவை உணரவும் அடையவும் முடியும்.
அசேதனமான இந்தப் பொருள்களை அறிந்து கொள்வது, ‘அவை தோஷத்தோடு கூடியவை’ என்று அறிந்து விடுவதற்காக.
இப்படி அறிந்தவன் தான் ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைவான்.
இந்த அசேதனம் இருபத்து நான்கு வகையாக இருக்கிறபடியால் இவை இருபத்துநான்கு படிகளாகின்றன.
‘ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவதற்கு, சேதனனான இவன் தான் இருபத்து நான்கு படிகளை ஏறி
ஸ்ரீ வைகுண்ட லோகம் போல் உள்ள அத்திகிரியில் இருக்கும் தேவாதிராஜனான பேரருளாளனை ஸேவிப்பது
மோக்ஷத்தை அடைவது போல் ஆகிறது’ என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.
இப்படி வேதாந்தத்தில் சொல்லக் கூடிய விசேஷ அர்த்தத்தைக் காட்டுவதற்காகவே கீழிருந்து மேலுள்ள
பகவானை ஸேவிப்பதற்கு இருபத்துநான்கு படிகள் கட்டப்பட்டு அமைந்திருக்கின்றன போலும்.
இப்படிப பற்பல விசேஷங்களினால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு ஸர்வ திவ்யதேங்களைக் காட்டிலும்
வாசா மகோசரமான வைபவம் ஏற்பட்டுள்ளது.

நான்முகனே உத்தமமான இந்த திவ்ய தேசத்தில் அச்வமேத யாகம் செய்தான்.
அதில் இந்திரன் முதலான மந்திரங்களைச் சொல்லி யாகம் நடந்தது.
இந்திராதிகளைச் சொல்லியும் ஹவிர்பாகத்தைப் பெற வரவில்லை. ஏன் என்றால்
இந்திரனைக் குறித்தா இவர் யாகம் செய்தது. பகவானைக் குறித்து அல்லவா.
ஆனால் இந்த ஹவிர்பாக ரஸத்தை அவர்கள் நாக்கால் பருக வில்லை. பின் கண்ணால் பருகினார்கள்.

எம்பெருமான் பிரஹ்மாவினுடைய தவத்துக்கு வசப்பட்டு நேராக ஸேவை ஸாதித்தான்.
எல்லோரும் கண்டு ஆநந்தித்தனர் என்றார் ஸ்வாமி தேசிகன்.
இந்த வேள்வியை தடுக்க பிரமன் பத்நியான ஸர்ஸ்வதி வேகவதி நதியாக வந்தாள்.
அது ஸமயம் பகவான் யதோக்தகாரியாக அவளை வர வொட்டாமல் தடுத்தான்.
யாகம் நடந்தது பலமும் கிட்டியது. ஒரே பகவான் தன்னை இரண்டுப் பிரிவாகச் செய்து ஸேவை ஸாதித்தான்.
ஒன்று யதோக்தகாரி.
இரண்டாவது தேவப் பெருமான்.

ஆக இவரே உபாயம். ப்ராப்யம் என்பதை தெரியப் படுத்தினார்.
ஸ்வாமி தேசிகன் இதை
ஏகம் வேககதீ மத்யே ஹஸ்தி சைலே சத்குச்யதே.
உபாயப் பல பாவேன ஸ்வயம் வ்யக்தம் பரம்மஹ: என்றார்.

அப்பய தீக்ஷிதரின் வரதராஜ ஸ்தோத்திரத்தில் இன்னும் ஒரு ஸ்லோகத்தை பார்ப்போம்.
இவர் யாதவாப்யுதயம் என்னும் காப்பியத்துக்கு உரை எழுதினார் என்பது மாத்திரமில்லை.
வ்யாஸஸூத்ரத்துக்கும்
ராமாநுஜர் எழுதிய பாஷ்யத்தை அநுஸரித்து நயமயூகமாலிகா என்னும் நூல் எழுதியுள்ளார்.

அவரது மற்றொரு ஸ்லோகம் .
தேவாதிராஜனே நான் உன்னிடம் இரண்டு குற்றம் செய்துள்ளேன்.
அதைப் பொருத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

அதற்கு தேவப் பெருமாள் பலகுற்றங்கள் உள்ளனவே
ஆக இரண்டே என்று எப்படி என்ன இது விசேஷ குற்றம் என்கிறார்.

முன் பிறவியில் நான் உன்னை வணங்காதது ஒன்று. அதெப்படி தெரியும் என்றார்.
இப்பொழுது அழுக்குடல் வந்ததைக் கொண்டே இதை அறியலாம் என்றார்.

மற்றொன்று இப்பொழுது உன்னை வணங்கியதால் அடுத்த பிறவி இல்லை.
ஆக அப்பொழுது வணங்க ப்ரஸக்தி இல்லையே.

ஆக இந்த இரண்டையும் பொருத்துக் கொள் என்று ரஸகனமான பத்யம் பாடினார்.
அந்த ஸ்லோகம் இதோ –

வபூ: ப்ராதுர் வாவாத் அநுமிதம் இதம் ஜன்மநீ புரா முராரே ந க்வாபி க்வசிதபி பவந்தம் ப்ரணதவான் |
நமன் முக்த: ஸ்ப்ரதி அதநு: அக்ரேபி அநதிமான் கரீச க்ஷந்தவ்யம் ததிதம் அபராத த்வயமபி ||

—————————

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குருவே நாம :
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரும் தேவித் தாயார் ஸமேத பேர் அருளாளன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் – ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்–

November 24, 2022

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அத்வைத கொள்கையை இந்த  பாரத தேசமெங்கும்  நிலை நிறுத்தினார். பற்பல இடங்களில் பரவி கிடந்த நமது சனாதன தர்மத்தை அவர் ஆறு மதங்களாக தொகுத்து வழிமுறைப்படுத்தினார். இந்த சனாதன தர்மத்திற்கு மேலும் வலுவூட்டும் வகையில் பல துதிகளையும் இயற்றினார். அவற்றுள், பலராலும் தினந்தோறும் பாராயணம் செய்யப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற துதி “ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம்” ஆகும்.

முதலில் இந்த துதியின் பெயர் காரணத்தை அறிவோம். வடமொழியில் ‘கரம்’ என்றால் ‘கை’ என்று பொருள் (இன்று நடைமுறைத் தமிழிலும் இச்சொல் கை என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது). ‘அவலம்ப’ என்றால் ‘ஆதாரம்’ அல்லது ‘தாங்குதல்’ என்று பொருள். ‘கராவலம்பம்’ என்றால் ‘நம்மைக் கை கொடுத்துத் தாங்குதல்’ அல்லது ‘நமக்குக் கை கொடுத்து உதவுதல்’ என்று பொருள் கொள்ளலாம்.

இந்த துதியில் ஆதிசங்கரர், இந்த சம்சாரத்தில் விளையும் துன்பங்களை எடுத்துக் கூறி, பகவான் ‘ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மரை’ இந்த சம்சாரத் தளையிலிருந்து காப்பாற்ற தனக்குக் கை கொடுத்து உதவும்படி வேண்டுகிறார். இதன்  மூலம், ஆதி சங்கரர் நமக்கெல்லாம் பிரதிநிதியாக பகவானிடம் வேண்டிக் கொள்கிறார்.

துதி பிறந்த வரலாறு:
இந்த துதி பிறந்ததற்கு காரணமாக ஆதிசங்கரரின் வாழ்விலிருந்து இரு வேறு நிகழ்ச்சிகள் பெரியோர்களால் வழங்கப்படுகின்றன. இவை இரண்டையும் சுருக்கமாகப் பார்ப்போம்.

1. மண்டன மிஸ்ரருடன் வாதிட்டது, பின்னர் கூடு விட்டுக் கூடு பாய்ந்தது:
அத்வைத கொள்கையை நிலை நிறுத்தும் பொருட்டு, ஆதிசங்கரர் பலருடன் (மற்ற கொள்கைகளை பின்பற்றுவோருடன்) வாதம் புரிந்து அவர்களை வென்றார். அவற்றுள் தலையானவர் பிற்காலத்தில் ‘சுரேஷ்வராச்சார்யார்’ என்று பெயர் பெற்று விளங்கிய மண்டன மிஸ்ரர் ஆவார். இவர் பூர்வ மீமாம்சை என்ற கொள்கையைச் சார்ந்திருந்தார்.

ஆதிசங்கரர் இவருடன் அத்வைதமே சிறந்த கொள்கை என்று வாதிட வந்தார். இந்த வாதத்தின் பொழுது, மண்டன மிஸ்ரரின் மனைவியான உபயபாரதி நடுவராக இருந்தார்.

நன்கு கற்றுத் தேர்ந்திருந்ததோடு அல்லாமல், ஆதிசங்கரர் மற்றும் தமது கணவர் வாதிடும் பொழுது அதற்கு நடுவராக இருந்தும், பின்னர் ஆதிசங்கரருடனேயே வாதிடும் அளவிற்கு நமது சனாதன தர்மத்தின் பெண்கள் அன்று விளங்கினர். ஏதோ, நமது மதத்தில் பெண்களுக்கு உரிமைகள் இல்லை,அவர்களை அடுப்படியில் வைத்து அடிமைப் படுத்த வேண்டும் என்று மனு ஸ்மிருதி கூறுவதாகப் பிதற்றுபவர்கள் இதை இருமுறை படிக்கட்டும். 

வாதத்தில் மண்டன மிஸ்ரர் தோல்வி  அடைந்தார். அன்றைய பழக்கத்தின் படி அவர் ஆதிசங்கரரைத் தமது குருவாக ஏற்று துறவறம் பூண வேண்டும். தனது கணவன் துறவறம் ஏற்பதை தாங்க வொண்ணாத உபயபாரதி, ‘கணவனும் மனைவியும் இணை பிரியாதவர்கள். ஒருவரை மட்டும் வாதத்தில் வெல்வது ஏற்க முடியாது. எனவே, தன்னையும் வாதத்தில் வெல்ல வேண்டும்’ என்று ஆதி சங்கரரிடம் கூறினாள்.

இதை ஏற்ற சங்கரர், உபயபாரதியுடன் வாதம் புரிந்தார். ஆதிசங்கரரை மறை ஞானத்தில் வெல்ல முடியாது என்று உணர்ந்த உபயபாரதி அவரிடம் கணவன்-மனைவி சேர்ந்து வாழும் இல் வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளைக் கேட்க, துறவியான அவரால் அதற்கு பதில் உரைக்க இயலவில்லை (அனைத்தையும் அறிந்த அவருக்கு இதற்கான பதில் தெரிந்திருப்பினும், தமது துறவறத்திற்கு களங்கம் வரும் என்பதால் நேரடியாக பதில் உரைப்பதைத் தவிர்த்தார் என்றே நாம் பொருள் கொள்ள வேண்டும்).

இதற்கு பதில் கூறுவதற்கு தமக்கு ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ஆதிசங்கரர், தான் இல் வாழ்க்கையை மேற்கொண்ட ஒரு மனிதனின் உடலுக்குள் புகுந்து இதை அறிவதே சிறந்ததாகும் என்று தீர்மானித்தார். அவ்வாறே, வேட்டைக்கு வந்து அங்கு உயிர் நீத்த ஒரு அரசனின் உடலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்து உட்புகுந்தார். தமது சீடர்களிடம், தனது உடலைப் பாதுகாக்குமாறு கூறிவிட்டு அரசனின் அரண்மனைக்குச் சென்றார்.

அந்த அரசனோ ஒரு கொடுங்கோலன்;  அவனது ஆட்சியில் மழையின்றி, வளமின்றி அவன் நாடு தவித்தது (திருக்குறள் 559: முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்). ஆதிசங்கரர் அந்த நாட்டில் கால் வைத்ததுமே, மழைப் பொழியத் துவங்கியது, வளம் பெருகியது. இந்த மாற்றங்களையும், தம்முடன் பழகுவதில் உள்ள மாற்றங்களையும் உணர்ந்த அந்நாட்டின் அரசி ஐயம் கொண்டாள்.

தமது அமைச்சருடன் ஆலோசித்த அவள், வந்திருப்பது தன் கணவன் அல்ல, வேறு ஏதோவொரு சிறந்த ஆன்மா; இவர் தமது  நாட்டை விட்டு நீங்கினால் மீண்டும் பஞ்சமும்,  துன்பமும் ஏற்படுமென்று அஞ்சினாள். எனவே, மந்திரியும், அரசியும் ஆதி சங்கரரை அரசனின் உடலிலேயே இருக்க வைப்பதற்கு திட்டம் தீட்டினர். அனைத்துப் படை வீரர்களையும் அழைத்து, நாட்டில் ஏதோவொரு துறவியின் உடல் இருந்தால், அதை உடனே எரித்துவிடுமாறு  கூறினர்.

அதன்படி, வீரர்களும் ஆதிச ங்கரரின் உடலுக்குத் தீ வைத்தனர். இதையறிந்த ஆதிசங்கரர் உடனே அரசனின் உடலை விடுத்து தன்னுடலுக்குள் புகுந்தார். ஆனால், அதற்குள் தீயானது அவரது கைகளை எரித்து விட்டது. தமக்கு ‘கரங்கள்’ (கைகள்) கொடுத்தருள, ஆதிசங்கரர் பகவான் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரிடம் வேண்டிய துதியே இந்த ‘கராவலம்ப ஸ்தோத்திரம்’ என்பது முதல் வரலாறு.

இந்த துதியின் முடிவில் கைகள் கிடைக்கப் பெற்ற ஆதிசங்கரர் உபயபாரதியிடம் வாதம் செய்ய  சென்றார். இனி தன்னால் அவரை வாதத்தில் வெல்ல முடியாது என்று உணர்ந்த உபயபாரதி வாதம் புரியாமலேயே தன் கணவர் துறவறம் பூண அனுமதி அளித்தார். அந்த உபய பாரதியே, சிருங்கேரி சாரதா பீடத்தில் இருக்கும் ஸ்ரீ சாரதாம்பிகை என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

2. காபாலிகன் நரபலி கொடுக்க முனைந்தது:
ஒருமுறை, ஆதிசங்கரர் அஹோபிலத்தை அடுத்த (சில இடங்களில் ஸ்ரீசைலத்தை அடுத்த) காட்டில் தவம் புரிந்து வந்தார். அவரது உயரிய லட்சணங்களைக் கண்ட ஒரு காபாலிகன் அவரைக் காளிக்கு நர பலி கொடுக்க முடிவு செய்தான் (வீரத்தில் சிறந்த அரசர்களையோ அல்லது துறவில் சிறந்தவர்களையோ நர பலி கொடுத்தால் சிறந்த பலன்கள் கிடைக்குமென்பது அவர்களது நம்பிக்கை).

அவரை தன்னால் கொண்டு செல்ல இயலாது என்று உணர்ந்த அவன், அந்த வேண்டுதலை அவரிடமே கூறினான். தன்னால் பிறருக்கு நன்மை விளையுமென்பதால் ஆதிசங்கரர் அதற்கு சம்மதித்தார்.

தனது பக்தன் துன்பப்படுவதை பொறுக்காத நரசிம்மர் ஆதி சங்கரரின் சீடர்களில் ஒருவரான பத்ம பாதருக்குள் (இவரை சனந்தனர் என்றும் அழைப்பார்கள்) ஆவேசித்து, அந்த காபாலிகனைக் கொன்று சங்கரரைக் காத்தார்.

அவ்வாறு தன்னைக் காத்த நரசிம்மரை போற்றி ஆதிசங்கரர் இயற்றியதே இந்த கராவலம்ப ஸ்தோத்திரம் என்பது  இரண்டாவது வரலாறு.

வரலாறு எவ்வாறு இருப்பினும், பகவானின் குணங்களைப் போற்றியும், இந்த சம்சாரத் தளையிலிருந்து விடுதலை வேண்டியும் ஆதிசங்கரர் இயற்றிய இந்த அரிய துதி

————–
ஸ்ரீமத் பயோநிதி நிகேதன சக்ர பாணே 
போகீந்த்ர போக மணி ரஞ்சித புண்ய மூர்த்தே |
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத 
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || (1)
ஸ்ரீமத் – செல்வம் நிறைந்த, பயோநிதி – பாற்கடலில், நிகேதன –இருக்கின்ற, சக்ரபாணே – (சுதர்சனம் என்னும்) சக்கரத்தை கையில் ஏந்தியவரே, போகீந்த்ர – அரவங்களின் அரசன், போக மணி – (அரவங்களின் தலையில் இருக்கும்) நாக மணி, ரஞ்சித – ஒளியினால் ஒளியூட்டப்பட்ட, புண்ய மூர்த்தே – நற்கருமமே வடிவானவரே, யோகீச – யோகங்களுக்குத் (யோகிகளுக்கு) தலைவரே, சாஸ்வத – என்றென்றும் நிலைநின்று இருப்பவரே, பவாப்தி – பிறப்பு, இறப்பு என்னும் இந்த பிறவிப் பெருங் கடலை, போத – கடக்க உதவும் தோணி போன்றவரே, லக்ஷ்மி நரசிம்ம – திருமாமகள் துணைவரே நரசிம்மரே, மம – எனக்கு, தேஹி –அருளுங்கள், கராவலம்பம் – கைக் கொடுத்து.
செல்வங்கள் சேர் பாற்கடலில் இருப்பவரே, கையில் சுதர்சனம் என்னும் சக்கரப் படையை தாங்கி யுள்ளவரே, அரவங்களின் அரசனான ஆதிசேடன் தலையிலிருக்கும் நாக மணி உமிழும் ஒளியினால் ஒளியூட்டப்படுபவரே, நற்கருமமே  வடிவானவரே, யோகங்களுக்கும், யோகிகளுக்கும் தலைவரே, என்றென்றும் நிலை நின்று பிறப்பு, இறப்பு என்னும் இந்த பிறவிப் பெருங்கடலை கடக்க உதவும் தோணி போன்றவரே, திருமாமகள் தன்னோடு பிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக் கொடுத்து அருளுங்கள்!!!
இங்குள்ள (இந்த சம்சாரத்தில் உள்ள) செல்வங்கள் நிலையற்றவை; அங்குள்ள செல்வங்களுடன் ஒப்பிடுகையில் இவை வெறும் தூசுக்கு நிகரானவை. எனவே, செல்வம் சேர் பாற்கடலில் இருப்பவரே என்று அழைக்கிறார்.
பகவான் சக்கரம் (சுதர்சனம்), சங்கு (பாஞ்சசன்யம்), கதை (கௌமோதகம்), வாள் (நந்தகம்) மற்றும் வில் (சார்ங்கம்) ஆகிய ஐந்து ஆயுதங்களை ஏந்தியிருக்கிறார். அவர் நமது எதிரிகளை விரைந்து வந்து ஒட்டிவிடுவார் என்பதால் சக்கரம் ஏந்தியவரே என்று அழைக்கிறார் (இங்கு சக்கரம் மற்ற நான்கு ஆயுதங்களுக்கும் பிரதிநிதியாகும். சக்கரம் என்று சொல்லும் பொழுது ஐந்து ஆயுதங்களையும் சேர்த்துக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்).
நாம் அறியாமை என்னும் இருளால் சூழப்பட்டிருக்கிறோம். அவரோ, அரவின் மணியில் ஒளி வீசுகிறார். நமது அறியாமை இருளை அகற்றும் ஒளியாகவும் உள்ளார்.
நாம் நல்ல, மற்றும் தீய கருமங்களினால் தீண்டப்பட்டிருக்கிறோம். இவற்றின் வாயிலாகத் தான் நமக்கு இந்த பிறவியே ஏற்படுகிறது. அவரோ, நற்கருமமே வடிவானவர். நமது கர்ம பலன்களை அடியோடு அறுத்து நம்மைக் காப்பார்.
கர்ம, ஞான, பக்தி மற்றும் சரணாகதி ஆகிய வழிமுறைகளைக்  (யோகங்களைக்) கடைப்பிடிப்பதன் மூலம் நாம் அவரை அடைய முடியும். ஏனெனில், அவர் அனைத்து யோகங்களுக்கும், அதை முறையாகக் கடைப்பிடிக்கும் யோகிகளுக்கும் (அவர்களை) ஆணை யிட்டு வழி நடத்தும் தலைவராக உள்ளார்.
இத்தகைய நற்குணங்கள் நிறைந்த நரசிம்மப் பெருமான், என்றோ ஒரு குறிப்பிட்ட காலத்தில் தானே அவதரித்தார். அவர் எவ்வாறு இன்று நம்மைக் காப்பார்? என்ற ஐயம் எழுந்து விடாமல் இருக்க, ‘என்றென்றும் நிலை நின்று இருப்பவர்’ என்று குறிப்பிடுகிறார்.
தொடக்கமே காண முடியாத அனாதி காலமாய் சேர்த்து வைத்திருக்கும் கர்மங்களின் படி நாம் மீண்டும் மீண்டும் இந்த பிறவிப்பெருங்கடலில் பிறக்கிறோம் (இறக்கிறோம்). இந்த தொடர்ச்சியிலிருந்து பகவான் ஒரு தோணியாய் வந்து நம்மைக் கரையேற்றுகிறார்.
அத்தகைய பெருமானை நாம் நேரடியாக சென்று வேண்டுவதை விட, கருணையே வடிவான திருமகளை முன்னிட்டு வேண்டினால், வேண்டுவது கிடைப்பது திண்ணம். பெருமான் கருணையற்றவர் அல்லர். எனினும், கணக்கற்ற பிறவிகள் தோறும் நாம் அவர் கூறியதை கேட்காமல் கர்ம வினைகளால் உந்தப்பட்டு பல பாவங்களை சேர்த்திருக்கிறோம். எவ்வாறு தவறிழைத்த ஒரு குழந்தை தன் தாயை முன்னிட்டுக் கொண்டு தந்தையிடம் மன்னிப்பு கேட்குமோ, அவ்வாறே நாமும் திருமகளை முன்னிட்டுக் கொண்டு இறைவனை அடிபணிவதே சிறந்தது. எனவே, நரசிம்மரை மட்டும் வேண்டாது, திருமகளையும் சேர்த்து ‘லக்ஷ்மி நரசிம்மரின்‘ அடி பணிகிறார்  ஆதி சங்கரர்.
இந்த முதல் துதியிலேயே, ஆதிசங்கரர்  தான் வேண்டுவது தனது உடலில் உள்ள கையை அல்ல; மாறாக, இந்த பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுதலையையே என்பதை தெளிவாகக் கூறுகிறார்.
இந்த துதி முழுவதும், நம் கர்ம வினை காரணமாக பிறக்கும் இந்த சம்சாரத்தை கொடிய மிருகங்கள் நிறைந்த காடாகவும், கொடிய நச்சு மரமாகவும், நஞ்சினை உமிழும் அரவாகவும், நெருப்பாகவும், நீர்ச் சுழல்கள் நிறைந்த கடலாகவும் உருவகப்படுத்தி  இதில் உள்ள துன்பங்களை நமக்கு சுட்டிக் காட்டுகிறார்.
————–

ஸ்ரீ ஜிதந்தே ஸ்தோத்ரம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 27, 2022

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூனவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா

———–

அவதாரிகை –
ஜிதந்தே -யாவது -ருக் வேத கிலம் .
தத்வ ப்ரதிபாதந பரமான ஸ்ரீ புருஷ ஸூக்தம் சர்வ ஸ்ருதிகளிலும்
ஓதிப் போருமா போலே -இதுவும் –
ஸ்ரீ சாஸ்திரங்களிலும்
இதிஹாச புராணங்களிலும்
மஹா மந்த்ரம் என்று -திரு மந்த்ரத்தோபாதி -பரம ரஹஸ்யமாக சொல்லிப் போருமது ஓன்று –

வேத அஷர ராசியைப் பௌருஷேயமான இதிஹாச புராணங்களிலே
எழுதிப் படுத்துப் போருவான் என் என்னில்
கிலமாகிறது அப்ரஹதம் ஸ்தானம் –
ஸூத்ர காரர்கள் கில (கிலம் -பகுதி என்றபடி ) சஹிதமாக தாங்கள் அத்யயனம் பண்ணிப் போந்தவர்கள் ஆகையாலே
ஸ்மார்த்த விதானங்களிலே மந்த்ரமாக விநியோகித்துப் போரா நின்றார்கள் இறே-
இப்படி இதிஹாச புராணங்களிலே ஸ்ரீ சாஸ்த்ரத்திலே
ஜிதந்தே இதி மந்த்ரேண-என்று -மந்த்ரமாக விநியோகித்துப் போருமது ஓன்று –

ஸ்வேதத் தீப வாசிகள் ஷீராப்தி நாதனுடைய சௌந்த்ர்யாதிகளிலே
தோற்று -ஈடுபட்டுச் சொல்லும் ஸ்தோத்ரம் –

இதுக்கு ஸ்தோத்ரத்வமும் ஸ்தவ ப்ரியனுக்கு ப்ரிய தமத்வமாகை –

ப்ரஹ்மாதிகளுக்கு துஷ் ப்ராபமான ஸ்தலத்திலே தோன்றின இது
இதிஹாச புராணங்களிலே எழுதிப் படிக்கும்படி ஸூலபமான படி என் என்னில்
இம் மந்த்ரத்துக்கு ப்ரதிபாத்யமான ஷீராப்தி நாதனைத் திருவடித் தொழ ஆதரித்து
ஸ்ரீ நாரத பகவான் ஸ்வேத த்வீபத்திலே சென்ற வளவிலே
ஏக தத்வித த்ரிதர்கள் தபஸ் பண்ணிக் கொண்டு இருக்க
இவைகளுக்கும் கிட்ட ஒண்ணாத விஷயத்தை நம்மால் காண முடியாது -என்று மீண்டு
அவர்களைக் குறித்து -எனக்குச் செய்ய அடுப்பது என் -என்று கேட்க

இத் திரு மாளிக்கைக்கு உள்ளே ஸ்வேத த்வீப வாசிகள்
ஷீராப்தி நாதனைக் கண்டு பண்ணும் ஸ்தோத்ரம்
நெடு நாளே நாங்கள் தபஸ் பண்ணுகிறோம் ஆகையால் ஜ்ஞாதவ்யம் ஆயிற்று –
எங்கள் பக்கல் இத்தை லபித்தது அனுசந்தி -என்ன
அவனும் அவர்கள் பக்கலிலே ஜிதந்தே ஸ்தோத்ரத்தை லபித்துப் போரா நிற்க-

சயந்தம் -என்கிற பர்வதத்திலே பகவத் உபாசனம் பண்ணுகிற ப்ரஹ்மாவை வந்து அனுவர்த்தித்து
பிறந்த வ்ருத்தாந்தத்தை அவனுக்கு விஜ்ஞாபிக்க
எனக்கு அந்த ஸ்தோத்ரத்தைச் சொல் – என்று
ஸ்ரீ நாரத பகவான் பக்கலிலே க்ரஹித்தான் குடும்பி –

அவன் பக்கலிலே புக்கதாகையாலே
இதிஹாச புராணங்களிலே எழுதப் பட்டு
பகவத் பரராய் இருப்பார் எல்லார்க்கும் லபிக்கும்படி ஸூலபம் ஆயிற்று –
இது ஜிதந்தேயினுடைய-திரு அவதாரம் –

இது தன்னுடைய உள்வாயை அனுசந்தித்தால்
ப்ரபத்திக்கு வ்யாக்யானமாய் இருக்கிறது –
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டையும் சொல்லுகிறது –
ப்ரபத்திக்கு அதிகாரிகள் அஜ்ஞரும் சர்வஜ்ஞரும் பக்தி பரவசரும் -என்று த்ரிவிதர் –
என்று பட்டர் அருளிச் செய்தார் இறே-

அவித்யாதோ தேவே பரிப்ருட தயா வா விதிதயா ஸ்வ பக்தோ பூம்நா
வா ஜகதி கதி மன்யா மவிதஷாம் கதிர் கம்யஸ்சாசௌ ஹரிரித
ஜிதந்தாஹ் வயமநோ ரஹச்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவான் சௌநக முநி-பட்டர்

அஜ்ஞன் ஆகிறான் – பகவல் லாபத்துக்குத் தன் பக்கலிலே ஜ்ஞான சக்த்யாதிகள் இல்லாதவன் –
சர்வஜ்ஞன் ஆகிறான் – தேச கால வஸ்துக்களாலே பரிச்சேதிக்க ஒண்ணாத வைபவத்தை யுடையவன்
ஈஸ்வரன் என்று இருக்கையாலே அநந்ய சாத்யன் -என்று இருக்குமவன் –
பக்தி பரவசன் ஆகிறான் -ஜ்ஞான சக்த்யாதிகள் உண்டாய் இருக்கச் செய்தேயும் அடைவுபட அனுஷ்டிக்க மாட்டாதவன் –
இவர்கள் மூவரும் பகவத் விஷயம் ஒழிய வேறு உபாயம் உண்டு என்று அறியாதவர்கள் –
இவர்களுக்கு ப்ராபகனுமாய் ப்ராப்யனுமாய் இருக்கும் சர்வேஸ்வரன் -என்று
ஜிதந்தே -என்று பேரை உடைத்தான மந்திர ரஹஸ்யத்தை
சர்வஜ்ஞனான சௌநக பகவான் வியாக்யானம் பண்ணப் பெறுவதே -என்கிறார்-பட்டர்

ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் –என்றும் -ஸ்ரீ விஷ்ணு தத்வம்
ஆத்மா தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச சதா ஸ்மர-என்றும் -ஸ்ரீ விஷ்ணு தத்வம் –
சொல்லுகிறபடியே -த்வயத்துக்கு அதிகாரி யானவன் ஈஸ்வரனுக்கே அனந்யார்ஹ சேஷ பூதன் ஆவான் இறே-

இப்படிப் பட்ட சேஷத்வத்தை உடைய இவ்வாத்மாக்கள்–அநாதியான பிரகிருதி சம்பந்தத்தாலே-அறியாதே –
ஈஸ்வரனுடைய ஸ்வாமித்வ ஸ்வா தந்த்ர்யங்களை-தங்கள் தலையிலே ஏறிட்டுக் கொண்டு ஆத்ம அபஹாரிகளாய் வர்த்திப்பார்கள் –

ஆத்ம அபஹாரம் ஆவது -அஹங்கார மமகாரங்கள் –
த்வ யஷரஸ்து பவேன் ம்ருத்யு த்ரய அக்ஷரம் ப்ரஹ்மண பதம் -என்றும்
மமேதி த்வ யஷரோ ம்ருத்யு-ந மம -சாஸ்வதம் -என்றும் -சொல்லுகிறபடியே
யானே என்னை அறிய கிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -என்று இறே அபியுக்தர் வார்த்தையும்

பாபங்களில் தலையான பாபமும் இவ்வாதம அபஹாரமே-
யோ அந்யதா சாந்த மாத்மாநம் -இத்யாதிகளில் ஸ்புடம் –
பாபத்துக்கு பிராயச் சித்தம் -இவ்வாத்மா பகவச் சேஷம் என்றால் விவாதம் பண்ணாது இருக்கை –
தேன சேத விவாதஸ்தே-என்றும்-(மனுபகவான் கங்கை ஸ்நானம் -பற்றிய வ்ருத்தாந்தம்-நம்பி தீர்த்தம் செய்தாலே லாபம்- )
உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்ம்மினே – திருவாய் -1-2-1-என்றும்
ஷேத்ரஜ்ஞஸ்ய ஈஸ்வர ஜ்ஞாநாத் வி ஸூத்தி பரமா மதா-என்றும் சொல்லக் கடவது இறே –

ஈஸ்வரன்- இப்படி அஹங்கார மமகார க்ரஸ்தராய் -சப்தாதி விஷய பிரவணராய்-அதிலே
பரமேஸ்வர சம்ஜ்ஞோ அஜ்ஞ -கிமந்யோ மய்ய வஸ்திதே
ததா அபி மர்த்து காமஸ்த்வம் ப்ரப்ரவீஷி புன புன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-23-என்றும்
த்விதா பஜ்யேயமப்யேவம் ந நமேயம் து கஸ்ய சித் -யுத்த -36-11-என்று இருக்கும்
ஹிரண்ய ராவணாதிகளைப் போலே தன்னோடு எதிரம்பு கோத்து நிற்கிற ஆத்மாக்களைப் பார்த்தருளி
இவை சாஸ்திர மார்க்கத்தாலே திருத்த ஒருப்பட்டது அல்ல
இவர்கள் உடைய விஷய ப்ராவண்யமே பற்றாசாக நம்முடைய
அழகுகளையும் சீலாதி குணங்களையும் காட்டித் திருத்துவோம் -என்று
வழி இட்டு -பிரதமத்தில் ருசி ஜனகனாய்
ருசி பிறந்தார்க்கு உபாயமுமாய்
அதிலே நிஷ்டர் ஆனவருக்கு ப்ராப்யனுமாய் இருக்கும் படியைச் சொல்லுகிறது –
இப்பிரபந்தம் –

ப்ராப்ய ப்ராபகங்களை முதல் ஸ்லோகத்தாலே சங்க்ரஹமாகச் சொல்லி
மேலில் ஸ்லோகங்களாலே விஸ்தரிக்கிறது -என்று பட்டர் நிர்வாஹம் –

முதல் இரண்டு ஸ்லோகங்களாலே-பிராப்ய பிராபகங்களைச் சொல்லி –
மேலில் ஸ்லோகங்களாலே அதுக்கு அடியான சரண்யதையைச் சொல்லுகிறதாகவுமாம்-

சரண்யதையை முதலில் சொல்லி உபாய உபேயங்களை சொல்ல பிராப்தமாய் இருக்க
பின்னே சரண்யதையைச் சொல்லுவான் என் -என்னில்
முனியே நான் முகனிலே -10-10-திருவாணை இட்டு -பின்பு அது பெறா வாணை யல்லாமை
சாதித்தால் போலே இது -என்று திரு நறையூர் அரையர் நிர்வாஹம் –

———————————————

ஸ்தோத்ரம் -1- அவதாரிகை –

முதல் ஸ்லோகத்தாலே –
ப்ராப்ய நிஷ்கர்ஷ பர்யந்தமாக
இவன் பிரார்த்திக்கும் படியாக
ஈஸ்வரன் தன் அழகாலே தோற்ப்பித்துக் கொண்ட படியைச் சொல்கிறது-

ஜிதந்தே புண்டரீ காஷா ! நமஸ்தே விஸ்வ பாவந !
நமஸ்தே அஸ்து ஹ்ருஷீ கேஸ ! மஹா புருஷ ! பூர்வஜ !

ஜிதந்தே –
யாதானும் பற்றி நீங்கும் விரதம் -திருவிருத்தம் -95- என்கிறபடியே
விஷயாந்தரங்களை பற்றி
எம்பெருமான் முகத்தில் விழியேன் -என்று இவன் விரதம் கொண்டு இருக்க –
ஈஸ்வரன் -தான் ஒட்டு வந்து -திருவாய் -1-7-7-என்கிறபடியே
விஷயாந்தரங்களில் துவக்கு அறுத்து
ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கி
அவசியம் உம்மைக் கொண்டு அல்லது விடேன் -என்று விரதம் கொண்டு
யாத்ருச்சிகமாக இவன் விஷயாந்தரங்களில் நெகிழ நின்ற அளவிலே
இருந்தான் கண்டு கொண்டு -திருவாய் -8-7-2-என்கிறபடியே
தன் அழகைக் காட்டி ஜெயித்து
இவன் தோற்றமை கண்டு ப்ரீதனாய்
தோற்றார் ஆர் -என்று கேட்டருள
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7-என்கிறபடியே
ஜெயஸ்தவ-என்கிறான் –
த்ருதீ யார்த்தே ஷஷ்டியாய் உன்னாலே ஜெயம் -என்னுதல் –
பாவே நிஷ்டையாய் உன்னுடைய ஜெயம் -என்னுதல்
பந்தம் அடியான சங்கல்பம் அவனது
அதின் சன்னிதியாலே கர்மம் அடியாக வந்த இவன் சங்கல்பம் ஜீவிக்கவோ –
சர்வ சக்தி சங்கல்பத்தை விஷய சபலனுடைய சங்கல்பம் அழிக்கவோ
நாம் என் கொண்டு உம்மை வெல்ல –

புண்டரீ காஷா ! –
அழகிய கண்கள் ஆகிற ப்ரஹ்மாஸ்த்ரத்தை உடைய உனக்கு வெல்ல ஒண்ணாதது உண்டோ
சேதனர் சேதனங்களை அகப்படுத்துவது கண் வழியாலே யாகையாலே
திருக் கண்களாலே ஜெயித்தாய் -என்கை-
ஸ்வ தந்த்ரனை முறையைக் காட்டி மீட்கலாம்
விஷய ப்ரவணனை மீட்க அழகு அல்லது பரிகரம் உண்டோ –

நமஸ்தே
ஆரதை ஆர் வென்றார் -என்னில்
ஆராய்ந்த வாறே உன்னதை நான் அபஹரிக்க
என்னை ஜெயித்து
நீயே உன்னதைக் கைக் கொண்டாயாய் இருந்தது –
அஹம் அபி ந மம பகவத ஏவாஹம் அஸ்மி -ஸ்ரீ விஷ்ணு ஷடக்ஷரி-என்னக் கடவது இறே –

நமஸ்தே
நமஸ் சப்தம் சரண பர்யாயம் ஆகையால் -ப்ரபதன் -என்னவுமாம்-
எங்கனே என்னில் கண் அழகிலே ஈடுபட்டு மிடுக்கு அறுகையாலே
அசக்தாதிகாரமான உபாயத்தைப் பற்றுகிறான்
பிராப்யத்தில் ருசி பிறந்தால் அத்தை லபிக்கும் சாதனம் இறே அனந்தரம் தேட்டம் -அத்தைச் சொல்லுகிறது –

நமஸ்தே
விஷயாந்தரங்களில் துவக்கை அறுத்த உபகாரத்துக்கு ப்ரத்யுபகாரமாக
என் ஆத்மாவைத் தந்தேன் -என்று ஆத்ம சமர்ப்பணத்தை சொல்லுகிறது -என்றுமாம் –
எனதாவி தந்து ஒழிந்தேன் -திருவாய் -2-3-4-என்னுமா போலே
இது வகைப் பொருள் –

நமஸ்தே அஸ்து –
அப்படி எனக்காகை தவிர்ந்து
உனக்கே யாம்படி பண்ணி அருள வேணும் –
மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -திருவாய் -10-10-6–என்னுமா போலே –
ருசியைப் பிறப்பித்து
தன் பேறாக உபகரியா நிற்க
மேல் விழுந்து அர்த்திப்பான் -என் -என்னில்
ருசியை விளைப்பித்து
ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கினவாறே ஸ்வரூப அநு குணமான அடிமையைப் பிரார்த்திக்கிறான் –

கூனி கூன் நிமிர்ந்து யோக்யதை பெற்றவாறே
வஸ்த்ரே பிரக்ருஹ்ய கோவிந்த மம கேஹம் வ்ரஜேதி வை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-11-என்று
மடி பிடித்தால் போலே இங்கும்
ஆத்மாவினுடைய கோணாகையாலே- கோண் -கூன் -வளைவு –
கண் அழகாலே நிமிர்த்துக் கொண்டான் -என்கை –
அஹங்கார மமகாரம் ஆகிற கோண் போய் பாரதந்த்ர்யம் பிரகாசித்தால் இறே
கைங்கர்ய ரசத்துக்கு யோக்யம் ஆவது –
ஸ்ரீ மாலாகாரரை அழகாலே ருசியைப் பிறப்பித்து
புன புன பரணம் யாஹ மாலாகாரோ அதி விஸ்மித-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-23-என்று
திருவடிகளிலே விழும்படி பண்ணி அடிமை கொண்டான் இறே-

விஸ்வ பாவந ! –
மேல் அபேஷிதம் செய்கைக்கு ப்ராப்தி சொல்லுகிறது –
விஸ்வம் பாவயதீதி விஸ்வ பாவந-
உரு மாய்ந்து கிடந்த இந்த ஜகத்தை உண்டாக்கினவன் அல்லையோ –
இல்லாததை உண்டாக்கினவனுக்கு
உள்ளத்துக்கு ஒரு குணம் விளைப்பிக்கைக்குப் பணி உண்டோ –
முமுஷூ ஸிஸ்ருஷ்யா வன்றோ பகவத் ஸ்ருஷ்டி –

ஹ்ருஷீ கேஸ ! –
ஸ்ருஷ்டி காலத்தில் விலக்கும் பரிகரம் இல்லை –
இப்போது உன் இந்த்ரியங்களைத் திருத்த ஒண்ணாமையாலே
விலக்கும் பரிகரம் உண்டே -என்னில்
அவையும் நீ இட்ட வழக்கு அன்றோ
ஹ்ருஷீகா ணீந்த்ரியாண் யா ஹூஸ் தேஷாமீஸோ யதோ பவான் -ஹ்ருஷீ கேச இதி க்யாத -என்றும்
இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான்-திருவாய் -2-7-10-என்றும் சொல்லக் கடவது இறே –
இந்த்ரியங்களுக்கு என்னோடு உண்டான சம்பந்தம் கர்மோபாதிகம் –
யஸ் சஷூஷி திஷ்டன் –வாசி திஷ்டன் -என்கிறபடியே- நிருபாதிக சம்பந்தம் உன் பாடே யன்றோ –

மஹா புருஷ !-
சக்தி உண்டானாலும் வல்லது எல்லாம் செய்வார் உண்டோ -என்னில்
புருஷ
புரு பஹூ ஸநோதீதி -புருஷ -என்னும்படியே
மறித்து உன்பாடு வர வேண்டாதபடி அபேஷிதங்களை மிகவும் கொடுக்க வல்ல பரமோதாரன் அல்லையோ –
அன்றிக்கே
உன்னையும் உன் உடைமையையும் -பக்தாநாம்-(மேலே ஐந்தாம் ஸ்லோகத்தில் இத்தை விவரிப்பார்) -என்கிறபடியே
அர்த்தியாய்க் கொடுக்கை –
ஸ சர்வாநர்த்தி நோ த்ருஷ்ட்வா ஸமேத்ய பிரதி நந்த்ய ஸ -அயோத்யா -16-27-என்னக் கடவது இறே-

பூர்வஜ !
கீழ்ச் சொன்ன ஔதார்யம் தன்னை அனுஷ்டானத்தாலே விவரிக்கிறது –
ஸ்ருஷ்டியோடே-அவதாரத்தோடே வாசி அற இழவு பேறு தொடக்கமான எல்லாத்துக்கும் முற்பாடன் அல்லையோ –
பஹூஸ்யாம் -என்று பிரயோஜனமும் அபிமானமும் தன்னதானவோ பாதி
ஸ ஏகாகீ ந ரமேத-என்னும் இழவும் தன்னதாகச் சொல்லிற்று இறே –
அவதாரத்திலும் -ஸ்ருஷ்டமான ஜகத்திலே நம்மை அபிமுகிகளாகக் கடவார் -என்னும் நோயாசையாலே
சம்பவாம் யாத்ம மாயயா – -என்று ஸ்வ இச்சையாலேயாய் இருப்பது –
ஸ ஹி தேவை ரர்த்தி தோஜ்ஜஞே -என்று தேவர்கள் உடைய அர்த்தித்வம் இல்லையோ -என்னில்
அது வியாஜ்யம் -சாது பரித்ராணமே பிரயோஜனம் –
பரித்ராணாம் சாது நாம் -என்று தொடங்கி
தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்றான் இறே
அர்ஜுனன் உடைய யுத்த பரோத்ஸாஹந வ்யாஜமாக
ஸ்வ விஷய பக்தி யோகத்தை அவதரிப்பித்தாப் போலே –
உபாய உபேயதவே ததிஹ தவ தத்தவம் -என்று
உபேய பாதததோபாதி உபாய பாவமும் நித்யம் இறே –
ஒருத்தன் ஸ்வீகரித்த போதாக உபாயமாகிறான் அன்று இறே –
போக வேளையிலும் பஞ்ச லஷம் குடியில் பெண்களில் காட்டில் தன்னுடைய முற்பாடு தோற்றுகைக்காக இறே
திருக் குழலை வாய் வைத்து அருளிற்று –
இந்த போகம் தான் அவிச்சின்னமாக வேணும் என்று அபி நிவேசம் பிறந்தவனுக்கு
அப்போது அவிச்சின்ன போக ஸ்தானம் எங்கேயோ தேட வேண்டாத படி
வைகுண்ட பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத் பதி ஆஸ்தே -என்கிறபடியே
நித்ய விபூதியிலே இவனுடைய வரலாறு பார்த்து இருக்கிறான் இறே –

———————————————

ஸ்தோத்ரம் -2- அவதாரிகை –

கீழ் ஸ்லோகத்திலே உபேயத்தை நிர்ணயித்து- தத் சித்த்யர்த்தமாக உபாயத்தை அத்யவசிக்கிறான்-
உபேயத்திலும் தலையான உபேயத்தை லபித்தால் போலே
உபாயத்திலும் தலையான உபாயத்தை லபிக்கப் பெற்ற படி –

புத்திர பசு அந்நாதிகளையே ப்ராப்யம் என்று இருப்பாரும் –
தேவர்களைப் பற்றி ஸ்வர்க்கத்தை லபிக்கையே புருஷார்த்தம் என்று இருப்பாரும்
ஈஸ்வரனைப் பற்றி வைத்து இந்திர பதம் முதலான பதங்களையே புருஷார்த்தம் என்று
அவன் பக்கலிலே லபிக்க இருப்பாருமாய் இருக்கிற சம்சாரத்திலே
சர்வாதிகனாய் உபய விபூதி நாதனாய் இருக்கிற சர்வேஸ்வரன் திருவடிகளிலே
நித்ய கைங்கர்யத்தையே புருஷார்த்தம் என்று இருக்கையாகிற இது ஒருத்தருக்கும் கிட்டவது ஓன்று அன்று இறே –

மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷூ -என்றும்
ஸ மகாத்மா ஸூ துர்லப -என்றும்- அவன் தனக்கும் துர்லபமாய் இறே இருப்பது –

அது போலே -உபாயங்களிலும் வந்தால்
கர்ம யோகாத் யுபாயங்களைப் பற்றுவாரும்
கிம் ஜ்பன் முச்யதே ஜந்துர் ஜன்ம சம்சார பந்த நாத் -என்கிறபடியே திரு நாமங்களைப் பற்றுவாரும்
தேஸோ அயம் சர்வ காம துக் -என்கிறபடியே தேச விசேஷங்களைப் பற்றுவாருமாக -இப்படி
சேதன பேதத்தோபாதி உபாய பேதமும் அசங்க்யாதமாகச் செல்லுகிற -சொல்லுகிற – சம்சாரத்திலே –
ஸூசகமாய் நிர்பயமாய் இருக்கிற சித்த உபாய பரிக்ரஹம் கிடைப்பது ஓன்று அன்று இறே –
அப்படிப் பட்ட உபாய பரிக்ரஹத்தைச் சொல்லுகிறது –

த்வயத்துக்கு வியாக்யானம் பண்ணுகிறதாகில் அதில் க்ரமம் ஒழிய முற்பட
ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுவான் என் என்னில் –
இப்பிராப்யம் தான் இத்தலையில் ருசியால் வந்தது அன்றிக்கே
ருசியே தொடங்கி அத்தலையால் வந்தது ஆகையாலே
முற்பட நிஷ்கர்ஷித்து அனந்தரம் உபாய ஸ்வீகாரத்தைப் பண்ணுகிறான் –

தேவாநாம் தாநவாநாம் ச சாமான்யம் அதி தைவதம்
சர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ–2-

தேவாநாம் தாநவாநாம் ச சாமான்யம் அதி தைவதம் –
என்று இவ் உபாய ஸ்வீகாரத்துக்கு அதிகாரி நியதி இல்லை -என்கிறது
தேவர்கள் ஆகிறார் -ஈஸ்வரனுக்கு அனுகூல கோடியில் உள்ளார் –
தாநவர் -ஆகிறார் ப்ராதி கூல்யத்தில் வ்யவஸிதராய் இருக்குமவர்கள் –
விஷ்ணு பக்தி பரோ தேவோ விபரீதஸ்ததா அஸூர -என்னக் கடவது இறே –
த்வௌ பூதசர்க்கௌ லோகே அஸ்மின் தைவ ஆஸூர ஏவ ச-என்று –
இரண்டுக்கு உள்ளே அந்தர் பூதை இறே ஸ்ருஷ்டி –

சாமான்யம் அதி தைவதம் -சரணத் வந்த்வம்-
சர்வ சாதாரணமான திருவடிகளை –
இத்தால் சம்பந்த சாமான்யத்தைச் சொல்லுகிறது அன்று –
ஆஸ்ரயணீயத்வே சமமாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது
இப்படி விசேஷிககிறது எத்தாலே -என்னில் –
விமுகரான காலத்தில் ஆஸ்ரித விரோதிகள் என்று இட்டு அழியச் செய்யுமவன் ஆகையாலே
அவுணர்க்கு என்றும் சலம் புரிந்து அங்கு அருள் இல்லாத தன்மையாளன் -திரு நெடும் தாண்டகம் -6-என்னக் கடவது இறே –
நிஹீன ஜன்ம குண வ்ருத்தரோடு -இவற்றால் உத்க்ருஷ்டரோடு -வாசி அற எல்லார்க்கும்
ஆதித்யோதயம் போலே எனக்கு என்று பற்றலாம் படியான திருவடிகள் -என்கை –

ராவணன் எச்சிலைத் தின்று வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-
சர்வ லோக சரண்யாய -என்று வழக்குப் பேசி பற்றலாம் படி இறே இருப்பது –
சம அஹம் சர்வ பூதேஷு – என்று இறே சரண்யன் வார்த்தை
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்று
ஆச்ரயண யோக்யமான மனுஷ்ய சாமான்யத்திலே கிருபை மிக்கு இறே இருப்பது –

பர துக்க அஸஹிஷ்ணுத்வம் இறே கிருபை யாவது –
ஆச்ரயண வேளையில் -யதி வா ராவணன் ஸ்வயம் -என்றான் இறே-
எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -என்றும்
பொது நின்ற பொன்னம் கழல் -என்றும் இறே அபியுக்தர் வார்த்தை –

ஸ்ர்வதா –
ப்ராதி கூல்யம் பண்ணுகிற வேளையே யானாலும்
ரஷக அபேஷையே வேண்டுவதாக விஷயீ கரிக்கும் திருவடிகள் –
பாபா நாம் வா –கார்யம் கருண மார்யேண -என்னக் கடவது இறே –
ஈடும் எடுப்புமில் ஈசன் -திருவாய் -1-6-3-என்று ஆழ்வாரும் அருளிச் செய்ததுக்கும் அடி இது விறே –
அநலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய-என்றத்துக்கும் முதல் இதுவே இறே-

சரணம் வ்ரஜாமி –
உபாயமாக அடைகின்றேன்-
கீழ்ச் சொன்ன சர்வாதிகாரத்வம் சித்த உபாயத்தைக் குறித்து -என்கை –
சாதனாந்தரங்கள் அதிக்ருதாதிகாரங்களாய் இறே இருப்பது –
வ்ரஜ–கதௌ -என்கிற கத்யர்த்தம் புத்த்யர்த்தமாய்- அத்யவசிக்கிறேன் -என்றபடி –

இத்தால் சரண்யன் சந்நிதி வேண்டா -ப்ராப்தியே அமையும் -என்கை-
ஆசார்ய ருசி பரிக்ருஹீதமான வாக்யத்தில்-த்வயத்தில்- க்ரியா பதத்தில்-ப்ரபத்யே -வர்த்தமான நிர்த்தேசத்துக்கும் அடி –
வ்ரஜாமி -என்கிற வர்த்தமான நிர்த்தேசமே –
அதை கௌணமாக உபதேசித்துப் போருகிறதும் அவனுடைய சக்ருதேவ பிரபன்னாய -என்கிற வாக்யத்தைப் பற்ற
ஆக சக்ருத் விதாநம்- ஈஸ்வர விஷயீகாரத்தைப் பற்ற –
ப்ராப்ய ருசியாலே ப்ராப்தி அளவும் செல்ல அனுவர்த்திக்க கடவது ராகத்தாலே –

வ்ரஜாமி –
வ்ரீஹி ஸ்வீகாரம்-தேவதா முத்திஸ்ய த்ரவ்ய த்யாக ரூபமான யாகமும் அன்றிக்கே
தத் அங்கமான ப்ரயாஜாதிகளும் அன்றிக்கே இருக்கிறாப் போலே-
உபாய ஸ்வீகாரமும் உபாயம் அன்று
அதுக்கு அங்கமும் அன்றிக்கே -அதிகாரி விசேஷணமாய்க் கிடக்கிறது –

தவ –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் -என்றும்
கபோதா வானர ஸ்ரேஷ்ட கிம் புநர் மத் விதோ ஜன -என்றும்
தன்னை அழிய மாறி சரணாகத பரித்ராணம் பண்ணின கபோதாபாக்யனமும்
அருளிச் செய்த தேவர் உடைய -சரண த்வந்தவம் வ்ரஜாமி -என்று அந்வயம்-

முதல் ஸ்லோகம் ப்ராப்ய சங்க்ரஹமான போது
இந்த ஸ்லோகம் -நமஸ்தே -என்கிற பதத்துக்கு விவரணம் ஆகிறது –
விவரண அபேஷை என் என்னில் –
மத்யாஜி மாம் நமஸ் குரு-என்று நமஸ் சப்தம் சாதனாந்தரத்துக்கும் சாதாரணம் ஆகையால்
சரண சப்த பர்யாயம் நமஸ் சப்தத்தின் உடைய விவரணம் ஆகிறது –
கச்சத்வமேநம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா – என்று விதித்த
சரணாகதி யினுடைய அனுஷ்டான வேளையிலே
த்ரௌ பத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ரூர் ஜனார்த்தநம் -என்று நமஸ்சைப் பண்ணினார்கள் –
ஆகையால் ஸ்தான பிரமாணத்தாலே -சரண சப்த பர்யாயம் -நமஸ் சப்தம்-

————————————————————————

ஸ்தோத்ரம் -3 -அவதாரிகை –

கீழ் இரண்டு ஸ்லோகத்தாலே -பிராப்ய ப்ராபகங்களைச் சொல்லிற்றாய்-
அந்த உபாய ஸ்வீகாரத்துக்கு அடியான சரண்யதையைச் சொல்லுகிறது மேலில் ஸ்லோகங்கள் –
அதில் –
இந்த ஸ்லோகத்தில் -அநந்தரம் -சரண்யதைக்கு உறுப்பாக அவனுடைய
ஜகத் காரணத்வ பிரயுக்தமான சர்வஞ்ஞத்வாதி மஹா குணங்களைச் சொல்லுகிறது –
காரணந்து த்யேய -என்கிறபடியே
உபாஸ்யம் ஜகத் காரண வஸ்துவானவோ பாதி
சரண்யமும் ஜகத் காரண வஸ்துவே இறே -எங்கனே என்னில்
யோ ப்ரஹ்மாணம் விதாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ்ஸ ப்ரஹிணோதி தஸ்மை -என்று
ஜகத் காரண வஸ்துவைச் சொல்லி
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்று மோஷ சித்திக்காக
அவன் திருவடிகளில் பண்ணும் ப்ரபத்தியை ஸோபாநமாக (படிக்கட்டாக) விதித்தது இறே –

ஏகஸ் த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா ஸம்ஹாரகஸ் ததா
அத்யஷஸ் ச அநுமந்தா ச குணமாயா ஸமாவ்ருத—3–

ஏகஸ் த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா –
லோகஸ்ய ஸ்ரஷ்டா — த்வம் -ஏக -அஸி –
லோக -சப்தத்தாலே-லோக்யத இதி லோக -என்கிற வ்யுத்பத்தியாலே-(பார்க்கப்படுவதால் லோகம் என்றபடி )
ப்ரத்யஷ சித்தமாயும் ஸ்ருதி சித்தமாயும் உள்ள சகல பதார்த்தங்களுக்கும் ஸ்ரஷ்டா -என்கை –

த்வம் -என்கிற ஏக வசனத்தாலே-ஸ்ரஷ்ட்ராந்தர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –
ஆகாசாத் வாயு -வாயோ ரக்னி-அக்நேராப – அத்ப்ய ப்ருதிவீ -என்று அசேதனங்களுக்கும்
ப்ரஹ்மா அஸ்ருஜத் -இத்யாதிகளிலே சேதனர்க்கும் ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே கர்த்ருத்வம் சொல்லா நிற்க
ஈஸ்வரனே சர்வ ஸ்ரஷ்டா என்றபடி என் -என்னில்
சேதன அசேதன சரீரி யானவன் சர்வ ஸ்ரஷ்டா வாகையால் சர்வ ஸ்ரஷ்டா ஈஸ்வரனே –
ஸ்வாத் சரீராத் சிஸ்ருஷூர் விவிதா பிரஜா -என்று மனு
ஸ ஏவ ஸ்ருஜ்யஸ்ஸ ச ஸர்க்க கர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ச பால்யதே ச
ப்ரஹ்மாத் யவஸ்தாபிர் அசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்டோ
வரதோ வரேண்ய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-70–இதி பராசர
தத பித்யா நா தேவ து தல் லிங்காத் ஸ -இதி ப்ரஹ்ம ஸூத்ரம் -2-3-14-

ஏக -பதத்தாலே சஹாயாந்தர நிரபேஷதையைச் சொல்லுகிறது –
ஏகாகீ ந ரமேத-என்ற இழவு தன்னதான படி சொல்லுகிறது –
பஹூஸ்யாம் பிரஜாயேய -என்று இவனுடைய பிரயோஜனமும் அபிமானமும் தன்னது -என்கிறது
ஏகமே அத்விதீயம் -என்று சஹகாரி நைரபேஷ்யம் சொல்லுகிறது –
இந்த சஹாயாந்தர நைரபேஷ்யம் தன்னை –
தனிமா புகழே எஞ்ஞான்றும்-திருவாய் -8-10-7-என்கிற பாட்டிலே ஆழ்வார் அருளிச் செய்தார் இறே –

இத்தால் –
அர்த்தித்வ நிரபேஷமாக இவற்றை உண்டாக்கினவன்
அர்த்தித்வமும் உண்டானால் ரஷிக்கச் சொல்ல வேண்டா விறே -என்கை –

சரம ஸ்லோகத்தில் ஏக பதம் உபாய நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது
இந்த ஏக பதம் உத்பாதகத்வத்தில் நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது –

ஸம்ஹாரகஸ் ததா –
ஸ்ருஷ்டியோபாதியும்-ஹித காமனாய் சம்ஹரிக்கிறாய் நீ ஒருவனுமே அன்றோ –
புருஷார்த்த உபயோகியாக சரீரத்தைக் கொடுக்க
இத்தைக் கொண்டு பர ஹிம்ஸாதிகளிலே இழிந்து அதி ப்ரவ்ருத்தனாய்த் தன்னை
நசிப்பித்துக் கொள்ளுமளவிலே-அந்த சரீரத்தையும் அழியச் செய்கை ஹிதமே இறே –
இத்தாலும் சரண்யதையைச் சொல்லுகிறது -இவன் தன்னை இவன் கையில் காட்டிக் கொடாமையாலே –

அத்யஷஸ்ச –
காலத்தை எதிர் பார்த்து இருப்பவனாகவும் –
ஸ்ருஷ்டி பிரயோஜனமான மோஷ ருசி இவர்களுக்கு உண்டாக வற்றே -என்று
அவசர ப்ரதீஷனாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –
ஆள் பார்த்து உழி தருவாய் கண்டு கொள் -என்னக் கடவது இறே –
புருஷார்த்த சாதனமான ஸ்வ சரீரம் கொண்டு புருஷார்த்தத்தில் இழிகை அன்றிக்கே –
ஸ்ருஷ்டி சம்ஹாரத்துக்கே விஷயம் ஆவதே இவை -என்று இவற்றின் உடைய அனர்த்தத்தை
அனுசந்தித்து இருக்கிறபடியைச் சொல்லுகிறது -என்றுமாம் –
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்னக் கடவது இறே
இப்படி இருக்கிறவன் புருஷார்த்தத்தை அபேஷித்தால் ரஷிக்கச் சொல்ல வேண்டா விறே –

அநுமந்தா ச –
விஷயாந்தரங்களில் ப்ராவண்யத்தால் தத் சாதனமான பந்த கர்மங்களிலே ப்ரவர்த்தியா நின்றாலும்
அங்கண்ணனாய்க் கொண்டு நிஷேதிக்க மாட்டாதே நிற்கும் –
எத்தாலே -என்னில் –
சூத்திர பிரயோஜனத்துகாகிலும் நம் பக்கலிலே வரப் பெற்றோம்
சர்வ சக்தியான நாம் உளோம் இறே
இடம் வந்த விடத்திலே ரஷிக்கிறோம் -என்னும் நினைவாலே
இப்படி வத்சலனானவன் -இத்தலை இசைந்தால் –
ஹித காமன் -என்னும் இடம் சொல்ல வேணுமோ -என்று கருத்து –

குண மாயா ஸமாவ்ருத –
முக் குணங்கள் உடன் கூடிய பிரகிருதியால் மறைக்கப் பட்டவனாகவும் இருக்கிறாய்
இப்படி இவர்கள் பஹிர் முகராகைக்கு அடி என் -என்னில் –
குணமயியான மாயையால் மறைக்கப் படுகையாலே –
பகவத் ஸ்வரூப திரோதா நகரீம் -என்கிறபடியே
இச் சேதனனை மாயை மறைக்கையாலே அவனையும் மறைத்ததாம் இறே
தன் உடைமையான இவன் –
குண வஸ்யனாய் –
பொய்ந்நின்ற ஞானத்திலே -திரு விருத்தம் -1- கலங்கினால்
இக் குண சம்பந்தம் இன்றிக்கே சர்வஜ்ஞ்ஞானவனே சரண்யனாக வேணும் -என்று கருத்து –
ஸத்த்வாதயோ ந ஸந்தீஸே யத்ர ச ப்ராக்ருதா குணா -என்னக் கடவது இறே –

முதல் ஸ்லோகம் சர்வ ஸங்க்ரஹமான போது
இஸ் ஸ்லோகம் -விஸ்வ பாவந -என்கிற பதத்தின் உடைய விவரணம் ஆகிறது –
ஜனி ஸ்திதி லயங்களுக்கு ஆஸ்ரயமாகையும்
சஹகாரி நைரபேஷ்யமும்-இறே பகவல் லஷணம் –
அது இஸ் ஸ்லோகத்தில் சொல்லுகிறது –

——————————————————————–

ஸ்தோத்ரம் -4-அவதாரிகை –

கீழ்ச் சொன்ன பகவத் காரணத்வம்-
காரணந்து த்யேய – என்றும்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -என்றும்
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
உபாசனத்துக்கும் சாதாரணம் ஆகையாலும்
பிரபத்தி உபாசனத்துக்கு அங்கமாவது ஒழிய -ஸ்வ தந்திர உபாயம் என்கைக்கு அனுஷ்டானம் உண்டோ -என்ன-

ஸ்ருஷ்டியில் கர்மீ பவித்தவர்களிலே
தம்தாமுடைய மனஸ்ஸூக்கு நிர்வாஹகராய் இருப்பார் சிலர்
உன்னையே உபாயமாகப் பற்றி சம்சாரத்தைக் கடவா நிற்பார்கள் -என்கிறது
இத்தால் –
ப்ரபத்திக்கு பிரமாண சித்தியே யன்று உள்ளது-ஸிஷ்டாசாரமும் உண்டு -என்கிறது –

ஸம்சார ஸாகரம் கோரம் அநந்த க்லேஸ பாஜநம்
த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண —4

நிஸ்தரந்தி -தாண்டுகிறார்கள்-மநீஷிண-மனசை வென்றவர்கள் என்றபடி –
இத்தால் சிஷ்டாசாரம் சொன்னபடி –

ஸம்சார ஸாகரம் –
ஸம்சாரம் ஆகிறது -அவித்யா கர்ம வாசனா ருசி பிரகிருதி சம்பந்தங்களும்
ஷட் பாவ விகாரங்களும்
புத்ர மித்ர களத்ராதிகளும்-தத் கார்யம் ஆகையாலே –
ஸம்சார சப்த வாச்யங்கள் ஆகிற இத்தனை –
ஜன்ம சம்சார பந்தநாத் –முச்யதே -என்று ஜன்மாதிகளைக் கார்ய வர்க்கங்களாகவும்
அவித்யாதிகளைக் காரண வர்க்கமாகவும் சொல்லிற்று இறே –

பரிச்சேதிக்க ஒண்ணாமை யாலும்
தன் பக்கல் இழிந்தாரைக் கொண்டு இழியுமதாகையாலும்
புகலாம் இத்தனை போக்கி
புக்கால் தம் தாமால் கரையேற ஒண்ணாமையாலும்
இத்தை -சாகரமாக நிரூபிக்கிறது –

கோரம் –
கொடிதாய் இருக்கை -அதாவது
சர்வர்க்கும் துக்கம் என்று மீளலாம் நரகாதிகளைப் போல் அன்றிக்கே
ஆத்மாவுக்கு விநாச ஹேதுவாய் இருக்கச் செய்தேயும்
இன்னமுது எனத் தோன்றி -திருவாய் -7-1-8-என்று முகப்பிலே
ஆகர்ஷகமாய் இருக்கும் தன்மையை உடைத்தாய் இருக்கை –
அஹங்கார சித்திக்கும்
விஷயாந்தர போகத்துக்கும்
சம்சாரிகள் உபாய அனுஷ்டானம் பண்ணுகிறார்கள் -இறே-

அநந்த க்லேஸ பாஜநம் –
தாப த்ரய துக்கத்தால் தொகை அற்ற க்லேசத்துக்கு எல்லாம்
உத்பத்தி ஸ்தானமாய் இருக்கை
நலமந்த மில்லதோர் நாடு -திருவாய் -2-8-4- என்று ஒரு தேச விசேஷத்தில் ஸூகத்திற்கு
முடிவு இல்லாதாப் போலே இதில் துக்கத்துக்கு முடிவு இல்லை -என்கை –

த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய –
தார தம்யத்தை உடைத்தான சம்சாரத்தின் உடைய
கொடுமை சொல்லிற்று கீழ் –
இத்தைக் கடப்பிக்கும் உபாயத்தின் உடைய சௌலப்யத்தைச் சொல்லுகிறது –
த்வாம் –
ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில் ஜகத் காரணத்வ பிரயுக்தமான மஹா குணங்களை உடைய உன்னை –
அவதாரணத்தாலே-
ஜகத் ஸ்ருஷ்டியில் சஹாயாந்தர நைரபேஷ்யம் போலே
உபாய பாவத்திலும் சஹகாரி சாபேஷன் அல்லன் என்கிறது –
த்வமேவ உபாய பூதோ மே பவ -என்கிற இதினுடைய
உப ப்ரும்ஹணமான சாஸ்திரத்திலும் இந்த நைரபேஷ்யம் உக்தம் இறே –
மாமேவ யே ப்ரபத்யந்தே -என்று இறே சரண்யன் வார்த்தையும் –
ஆசார்ய சேவையும் இவ் வவதாரணத்துக்குத் தாத்பர்யம் அறிகை-

சரணம் -என்று
உபாசனத்தை வ்யாவர்த்திக்கிறது-
வ்ரஜாமி சரணம் தவ -என்கிற இடத்தில்
வ்ரஜாமி -யினுடைய ஸ்தானத்தில் -ப்ராப்ய -என்கிறது –
பகவல் லாபத்தோபாதி-உபாய பாவமும் ஸூலபம் என்று தோற்றுகைக்காக –
ஆறு-ஆர் – எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -திருவாய் -5-7-10-என்று
இவ் உபாய பிரசித்தியை பகவத் பிரசாத காரயமாக ஆழ்வார் அருளிச் செய்தார் இறே

நிஸ்தரந்தி –
உன்னாலே இத்தைக் கடப்பார்கள் –

மநீஷிண –
மனோ ஜேதார–மநீஷிண –
விஷயாந்தர பிரவணமான மனஸ்சையும்
சாதனாந்தர பிரவணமான மனஸ்சையும்
ஜெயித்து இருக்குமவர்கள் –
சம்சார ஆர்ணவ மக்நாநாம் –விஷ்ணு போதம் விநானயத்-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -1-59–என்று
சாஸ்திராந்தரத்திலே இத்தை உப ப்ரும்ஹித்தது இறே –

முதல் ஸ்லோகம் சங்க்ரஹமான பஷத்தில் –
நமஸ்தே -என்கிற பதத்தைப் பற்றி உதிக்கிறது இஸ் ஸ்லோகம் –
அதனுடைய அனுஷ்டான பிரகாரம் சொல்லுகிறது –
அதனுடைய ப்ராவண்யத்துக்காகப் பல பர்யந்தமான சிஷ்டாசாரம் சொல்லுகிறது இஸ் ஸ்லோகம் –

————————————————————————–

ஸ்லோகம் -5-அவதாரிகை –

த்வமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி -என்று
உன்னையே உபாயமாகப் பற்றி சம்சாரத்தை கடக்குமவர்களுக்கு
உன்னையும் உன் உடைமையையும் அனுகூலமாக்கி வைப்புதி -என்கிறது -இத்தால் –

ஆஸ்ரிதர் தங்களையும் தங்கள் உடைமையையும் ஈஸ்வரனுக்கு ஆக்கி வைக்கிறது -ஸ்வரூபத்தாலே –
அவன் தன்னையும் தன் உடைமையையும் அவர்களுக்கு ஆக்கி வைக்கிறது -வாத்சல்ய சௌசீல்யாதி களாலே –

ஆகையாலே
இத்தால் -வாத்சல்ய சௌசீல்யாதிகளைச் சொல்லுகிறது –
இத்தாலும் சரண்யதையைச் சொல்லுகிறது –
கீழ் -ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில் சொன்ன
ஸ்வாமித்வ சௌலப்யங்களோபாதி
வாத்சல்ய சௌசீல்யங்களும் சரண்ய லஷணம் ஆகையாலே-

ந தே ரூபம் ந சாகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததா அபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே–5-

ந தே ரூபம் –
ரூபம் -எனபது திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
ஆகார -என்று திவ்ய விக்ரஹத்தை மேலே சொல்லுகையாலே-
இஸ் ஸ்லோகத்தால்
ஸ்வரூபாதிகள் இவனுக்கு இல்லை என்கிறது -எங்கனே -என்னில்
தே -என்று
நிர்த்தேசித்து வைத்து -ஸ்வரூபாதிகளை நிஷேதிக்கையாலே
நிஷேதிக்கிறது எவ் வாகாரத்தாலே -என்னில்
ஸ்வரூபாதிகளாலே தேவர் கொள்ளுவது ஒரு கார்யம் இல்லை என்று ஸ்வார்த்தத்தை நிஷேதிக்கிறது –

தே ரூபம் ந தே –
உன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் உனக்காய் இராது
ஆஸ்ரித ரஷணத்துக்கு அனுகூலமாய் இருக்கில்
ஸ்வ தந்த்ரமாய் இருக்கிற அது பர தந்த்ரமாய் இருக்கும் –
மயி ப்ருத்யே ஸ்திதே தேவா நா ஜ்ஞாபயத கிம் ந்ருபை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12-என்றும்
கிங்க ரௌ சமுபஸ்தி தௌ -பால -31-4-என்றும் சொல்லக் கடவது இறே-

சர்வ நியந்தா வானவன் ஒரு சம்சாரிக்கு புத்திரன் ஆனான் இறே –
இது இறே ஆஸ்ரித அர்த்தமான ஸ்வரூப அந்யதா பாவம் –
இந்த ஸ்வரூப சப்தத்தாலே ஸ்வரூப ஆஸ்ரயமான ஜ்ஞான சக்த்யாதிகளையும் உப லஷிக்கிறது-
எத்தாலே என்னில் –
இஸ் ஸ்லோகத்தை விவரிக்கிற கூரத் ஆழ்வான் –
ப்ரவர குணா கணாஸ் ச ஜ்ஞான சக்த்யாத யஸ்தே -ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -63-என்றான் இறே –
எஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -என்று
ஸ்ருதி சித்தமான சர்வஜ்ஞதையை உடையவன் –
ஆஸ்ரித அர்த்தமாக -அவிஜ்ஞாதா -என்று
அஜ்ஞனுமாய்
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்து அசத்ய சங்கல்பன் ஆனான் இறே –
அநந்ய அதீநத்வம் தவ கில ஜகுர் வைதிககிர பராதீநம் த்வாம் து ப்ரணத பரதந்த்ரம் மநு மஹே –
உபாலம்போ அயம் போ ஸ்ரயதி பத சார்வஜ்ஞயமபி தே யதோ தோஷம் பக்தேஷ்விஹ வரத
நைவாகலயஸி -ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -20-என்று
ஆழ்வானும் ஆஸ்ரித விஷயத்தில் பார தந்த்ர்யத்தையும்
தத் கத தோஷத்தில் அஜ்ஞதையையும்-சொன்னான் இறே

ந சாகாரோ –
திவ்ய விக்ரஹமும் ஆஸ்ரித ரஷணத்துக்கு அனுகூலமான பிரகாரத்தை உடைத்தாய் இருக்கும் –
பரம பதத்தில் ஸூரிகளுக்கு போக யோக்யமாய் இருக்கும் –
வ்யூஹங்களில் வந்தால் ஸ்வேத த்வீப வாசிகளுக்கு போக யோக்யமாய் இருக்கும் —
ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயமாய் இருக்கும் –
விபவங்களில் வந்தால் அதீந்த்ரியமான விக்ரஹத்தை சாது பரித்ராணார்த்தமாக
இந்திரிய கோசரமாக்கி அனுபவிக்கப் பார்த்தால் அனுபவிக்கலாய் இருக்கும் –
இந்த ஆகார -சப்தத்தாலே ஆகார ஆஸ்ர்யமான திவ்ய ஆபரணங்களையும் உப லஷிக்கிறது –
பூஷணான் யாயுதாநி -என்றான் இறே ஆழ்வானும் –
வஸ்தராண்ய ஆபரணாநி ச தம் விநா கைகயீ புத்ரம் பரதம் தர்ம சாரிணம் -என்றவையும்
ஆஸ்ரித அர்த்தமாய் இறே இருப்பது –

ந ஆயுதாநி –
இவை ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு ஆயுதமாயும்
வினை அற்று அனுபவிப்பார்க்கு ஆபரணமாயும் இருக்கும் –
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் –பெரிய திருவந்தாதி -87–என்றும்
கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய் -திருவாய் -6-9-1- என்றும்
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும் -திருவாய் -4-2-9-என்றும் சொல்லக் கடவது இறே –
பரிஜன பரிபர்ஹா பூஷணான் யாயுதாநி -என்கிறபடியே
பரிஜன பரிச்சதங்களுக்கு உப லஷணமாய்
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்றும்
அடியார்கள் குழாங்களை–உடன் கூடுவது என்று கொலோ -திருவாய் -2-3-10-என்றும்
ஆஸ்ரிதர்க்கு ப்ராப்யமாய் இறே பரிஜனம் இருப்பது –
பரிச் சதங்களும் ஸூரி கோடியிலே அந்தர் பூதமாய் இருக்கச் செய்தேயும்
நித்ய ஸூரிகளுக்கு கைங்கர்ய உபகரணமாய் இறே இருப்பது –

ந ச ஆஸ்பதம்-
பரம பதம் முதலான போக ஸ்தானங்களும்
தனக்கு போக ஸ்தானம் அன்றிக்கே
ஆஸ்ரிதர்க்காக நின்ற நிலைகளிலே காட்டி
அனுபவிக்கச் சமைந்தவையாய் இருக்கும் –

ததா அபி புருஷாகாரோ –
இப்படி இருக்கச் செய்தேயும் -புருஷ பிரகாரனாய் இருக்கிற இருப்பு
எப்போதும் குலையாதே இருக்கும் –
புருஷ ஏவேதம் சர்வம் –
ஸ்ஹஸ்ரஸீர்ஷா புருஷ -என்னும்
வேதாந்தங்களிலே சர்வாதிகனாக ஓதிப் போருகிறவன் –
இப்படி ஆஸ்ரித அதீநன் ஆனான் என்கிற- மஹா குணம் தோற்றுகைக்காக –

பக்தாநாம் த்வம் –
பக்தர்களுக்காய் இருப்பது –
அவர்கள் உனக்காய் இருக்கும் இருப்பு ஸ்வரூபத்தாலே –
நீ அவர்க்காய் இருக்கும் இருப்பு உன்னுடைய தாதர்த்யம் ஆஸ்ரித சங்கல்பத்தாலேயாய் இருக்கும் –
இத்தை -சகல மேதத் சம்ஸ்ரிதாரத்தம் சகர்த்த -என்றான் இறே ஆழ்வானும்
பரிஜன பரி பரஹா பூஷணான் யாயுதானி ப்ரவர குணா கணாஸ் ஸ ஜ்ஞான சக்த்யாத யஸ்தே
பரமபத மதாண்டான் யாத்மதே ஹஸ்ததாத்மா வரத சகலமேதத் சம் ஸ்ரீ தார்த்தம் சகர்த்த –

ப்ரகாஸஸே –
ஸ்வ தந்த்ரனுக்குத் தத் விருத்தமான பார தந்த்ர்யம் அனுபபன்னம் அன்றோ -என்னில்
இதிஹாச புராணங்களிலே –
யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக்நஞ்சாபி மா நத-
பவேன் மம ஸூ கம் கிஞ்சித் பஸ்ம ஸாத் குருதாம் ஸி கீ -என்றும்
நிச்ருஷ்டாத்மா ஸூஹ்ருத் ஸூஸ -என்றும்
இத்யாதிகளிலே ஆஸ்ரித பரதந்த்ரனாய் பிரகாசியா நின்றாய் -என்னுதல்
ஆஸ்ரிப்பாருக்கு எளியனாக உஜ்ஜ்வலியா நின்றாய் -என்னுதல் –
( அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ இந்தளூரீரே -பக்தானாம் த்வம் ப்ரகாஸஸே )

முதல் ஸ்லோகம் சங்க க்ரஹமான பஷத்தில்
ஹ்ருஷீ கேச -என்கிற பதத்தின் விவரணமாய் இருக்கிறது இஸ் ஸ்லோகம் –
அப்ராப்தமான விஷயாந்தரங்களில் நின்றும் மீட்டுத் தன்னையே விஷயம் ஆக்குகையாலே –
அப்ராப்தங்களில் நின்றும் மீட்டு ப்ராப்தங்களிலே அன்விப்பிக்கை
நிர்வாஹக க்ருத்யம் இறே –

———————————————————————–

ஸ்தோத்ரம் -6-அவதாரிகை –

ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில்
ஜகத் காரணத்வ பிரயுக்தமான ஸ்வாமித்வ சௌலப்யங்கள் உண்டானாலும்
கீழ் ஸ்லோகத்தில் தன்னையும் தன் உடைமையையும் ஆஸ்ரித அர்த்தம் ஆக்கின
வாத்சல்ய சௌசீல்யங்கள் உண்டானாலும்
ஜ்ஞான சக்த்யாதிகள் சொல்லுகிறது இஸ் ஸ்லோகம் –
முன்பு உக்தமான குணங்கள் ஆஸ்ரிதர்க்கு அவனை விஷயீகரிகைக்கு
உறுப்பாம் இத்தனை ஒழிய அபிமத சித்திக்கு ஜ்ஞான சக்திகள் வேணும் இறே –

நைவ கிஞ்சித் பரோஷம் தே ப்ரத்யஷோ அஸி ந கஸ்யசித்
நைவ கிஞ்சித ஸித்தந்தே ந ஸ ஸித்தோ அஸி கஸ்யசித்—6-

நைவ கிஞ்சித் பரோஷம் தே –
தே பரோஷம் ந கிஞ்சி தேவ –
உனக்கு அப்ரத்யஷமாய் இருப்பது ஒன்றும் இல்லை –
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வ வித் -என்கிறபடியே
சர்வஜ்ஞன் என்றும்-

ப்ரத்யஷோ அஸி ந க
ஸ்வாபாவிகீ ஜ்ஞான பல க்ரியா ஸ -என்று
ஸ்வ தஸ் சர்வஞ்ஞத்வம் சத்தா பிரயுக்தம் -என்றும்
யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத-
(நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள் -இது இப்பொழுது கிடைக்கவில்லை ) -என்று
யுகபத் சாஷாத் காரமும் பிரமாண சித்தம் இறே –

அப்படிப் பட்ட தேவர்க்கு என்னுடைய ஸ்வரூப யாதாம்யத்தையும்
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்ய ஸ்வரூபத்தையும்
தத் விரோதி பிரகிருதி சம்பந்தம் என்னும் இடத்தையும்
பிரகிருதி சம்பந்தத்தாலே நான் புகாத நரகம் இல்லை -நான் நுழையாத கர்ப்பம் இல்லை -என்றும்
வாயாலே விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ –
இன்னமும் நான் அறிந்த அளவன்றோ விண்ணப்பம் செய்யலாவது –
ப்ரவாஹ ரூபேண அநாதியாய் போந்த என்னுடைய அக்ருத்ய கரணாதி பூர்வ வ்ருத்தம்
பழகிப் போந்த தேவரை ஒழிய மற்று அறிவார் உண்டோ –
அறிந்து விண்ணப்பம் செய்யலான விஜ்ஞாபன பிரகாரம் தான் வேறு அறிவார் உண்டோ –
இவற்றில் எனக்கு ஒரு ஜ்ஞானம் இல்லாதாப் போலே
தேவர்க்கும் அஜ்ஞாதமாய் இருப்பது ஒன்றும் இல்லை –

கஸ்யசித் ந ப்ரத்யஷோ அஸி –
ந சந்த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பச்யாதி கஸ்ஸ நை நம் -தைத்ரியம் நாராயண வல்லி-என்று
ஒருவருக்கும் சஷூர் விஷயன் அல்லை –
அன்வய வ்யதிரேகத்தால் தேவருடைய அதீந்ரியத்வத்தை
த்ருடீ கரிக்கிறது இறே ஸ்ருதி தான் –
இப்படிப் பட்ட தேவரை பிரத்யஷிக்கும் போது
ஆனைக்கு உதவினால் போலே ஆவிர்ப்பவித்துக் காட்டக் காணுதல்
அவதரித்துக் காட்டக் காணுதல் இறே –
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வாரும்
வாசத் தடம் போலே வருவானே ஒரு நாள் காண வாராயே -திருவாய் -8-5-1-என்று
காண ஆசைப் பட்டார் இத்தனை இறே
தாம் காண யத்னம் பண்ணிற்று இலர் –
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா -என்று இறே ஆளவந்தார் வார்த்தையும் –

நைவ கிஞ்சித ஸித்தந்தே –
தே அஸித்தம் ந கிஞ்சி தேவ –
பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -என்கிறபடியே
சர்வ சக்தியான தேவர்க்கு ஆஸ்ரித ரஷணத்தில் அகடிதம் என்று கை வாங்க வேண்டுவது ஓன்று உண்டோ
சங்கல்பம் அடியாக சர்வமும் சித்தம் அன்றோ –
சஞ்சீவயன் நபிமருதம் ஸூத முத்தராயாஸ் சாந்தீபி நேஸ் சிரம்ருதம் ஸூதம் ஆநயம்ச்ச
தாம்நோ நிஜாத் த்விஜ ஸூதான் புநர் ஆநயன் வா ஸ்வா மேவ தாம் தனு மஹோ கதமா நய ஸ்தவம் -என்று
இப்படி அகடிதங்களை கடிப்பிக்கும் தேவரே
நித்ய சம்சாரியான என்னை நித்ய ஸூரிகள் பரிமாற்றத்திலே அன்வயிப்பிக்கத் தட்டில்லை என்று கருத்து –

ந ஸ ஸித்தோ அஸி கஸ்யசித்-
கஸ்யசித்-ந ஸ ஸித்தோ அஸி-
ஒருவருக்கும் ஸ்வ சாமர்த்யத்தாலே ப்ராபிக்க அரியையாகா நின்றாய் –
க்ருதக்ருத்யன் ஆனாலும் ப்ராப்திக்கு -நயாமி பரமாம் கதிம் -என்கிறபடியே
அவன் கை பார்த்து இருக்க வேணும் -என்கை –

ஆக
பேற்றுக்கு உறுப்பான ஜ்ஞான சக்த்யாதிகள் உள்ளது உனக்கே –
உன்னை ஒழிந்தார் அடங்கலும் அஜ்ஞ்ஞரும் அசக்தரும் –
கண்ணும் காலும் உடையாய் நீ
உன்னை ஒழிந்தார் அடங்கலும் குருடும் முடமும் –
சேதனனுடைய ஜ்ஞான சக்திகளுக்கு விநியோகம்
பிரதமத்தில் -உபாய ஸ்வீகாரத்தில் ஜ்ஞானமும்
அத்யவஸாயத்திலே சக்தியுமாகக் கடவது –
இந்த ஜ்ஞான சக்திகள் இரண்டும் போகத்திலே யாகக் கடவது –

இத்தால் -சொல்லிற்று ஆய்த்து –
இத்தலை இசைவே அடியாகக் கொண்டு
ஸ்வ சம்பந்தத்தாலே ரஷியா விடில்-தேவர்க்குப் பழி என்றது ஆயிற்று –
ரஷண தர்மத்தில் ஈஸ்வரன் உடைய ஜ்ஞான சக்த்யாதிகளே தாரகம் –
ஆத்மாவுக்கு ஈஸ்வர பிராப்தி அன்று -ஈஸ்வரனுக்கு ஆத்மா பிராப்தி காண் நினைவு -என்று ஜீயர் அருளிச் செய்வர் –
அஹம் அன்னம் -என்கிற இதுவே அர்த்தம்
அந்நாத-என்று இத்தலையில் போக்த்ருத்வம்ஸ்வ லாபத்தால்
ஈஸ்வரனுக்கு பேறான ஹர்ஷம் தனக்குப் புருஷார்த்தம் ஆகை-

சங்க்ரஹ பஷத்தில் இஸ் ஸ்லோகம்
ஜிதந்தே -என்கிற பதத்தின் உடைய விவரணமாகக் கடவது –

————————————————————————–

ஸ்தோத்ரம் -7 -அவதாரிகை –

கீழ் ஸ்லோகத்தில் சொன்ன ஜ்ஞான சக்த்யாதிகளை அனுசந்தித்து -அந்த சக்தி காரிதமான
பகவத் அனுபவத்துக்கு வர்த்தகமான பரம பதத்தே என்னைப் போக விட வேணும் -என்கிறது –
முக்த ப்ராப்யமான பூமியைத் தருவான் இறே சரண்யவான் -என்று பட்டர் நிர்வாஹம்
நித்ய அனுபாவ்யமான தேவர் திருவடிகளை லபிக்க வேணும் -என்கிறது -என்னவுமாம்-இது பூர்வர்கள் நிர்வாஹம்-

கார்யாணாம் காரணம் பூர்வம் வசஸாம் வாச்ய முத்தமம்
யோகாநாம் பரமாம் ஸித்திம் பரமம் தே பதம் விது–7-

கார்யாணாம் காரணம் பூர்வம் –
அந்யோந்ய கார்ய காரண பாவங்களை வ்யாவர்த்திக்கிறது-
ப்ரதாந பும்ஸோ ராஜயோ காரணம் கார்ய பூதயோ -என்கிறபடியே
பிரதான புருஷர்களும் ஈஸ்வரனைக் குறித்துக் கார்யங்களாகக் கடவது இறே –
யத ப்ரஸூதா ஜகாத ப்ரஸூதீ தோ யேன ஜீவான் வ்யஸ ஸர்ஜ பூம்யாம் -என்றது இறே
அந்த பிரகிருதி புருஷர்களைக் காரணமாக உடைத்தாய் இறே
மஹதாதி கார்யங்கள் இருப்பது –
அவற்றைக் காரணமாக உடைத்தாய் இறே அண்டம் இருப்பது –
அண்டாந்தர் வர்த்தியான பிரம்மாவைக் காரணமாக உடைத்தாய் இறே தேவாதி சதுர்வித சேதனரும்-
தத் போகய போக உபகரண போக ஸ்தானங்களும் இருப்பது –

(ப்ரக்ருதி ச -என்றும் -ப்ரதிஜ்ஜை த்ருஷ்டாந்தம் இரண்டுக்கும் விரோதம் வாராமைக்காக-அநுபரோதாத் –
ப்ரஹ்ம ஸூ த்ரங்கள் — ஸ்வேத கேது உத்தாலகர் சம்வாதம்-உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று காட்டி –
வேர் முதலா வித்தாய் -த்ரிவித காரணங்களும் ப்ரஹ்மமே -அபின்ன நிமித்த உபாதானம் ப்ரஹ்மம் –
அறிந்தால் எல்லாம் அறிந்தது ஆகுமே-காரணமே கார்யம்-கார்யாணாம் காரணம் பூர்வம்-காரணந்து த்யேயா )

ஆக –
பஹூ முகமான காரணங்கள் எல்லாம் பிரதம காரணமாய் இறே சர்வேஸ்வரன் இருப்பது
கார்யாணாம் காரணம் பூர்வம் -என்று
தேச பரமான போது அவனுக்கு பிரகிருதி நித்ய விசேஷணம் ஆகையாலே
அத்தை ஜகத் காரணம் என்றால் போலே
பரம பதம் அவனுக்கு விசேஷணம் ஆகையாலே பூர்வ ஷண வர்த்தியாய் பூர்வ காரணம் என்னலாம் –
இத்தால் பரம பதத்தின் உடைய நித்தியத்தை -சொல்லுகிறது
தத ஷரே பரமே வ்யோமன் -என்றும்
கலங்கா பெரு நகரம் -மூன் திருவந்தாதி -51-என்றும் சொல்லக் கடவது இறே-
(கலக்குவாரும் கலங்குவாரும் இங்கே தானே -அங்கு இல்லையே)

வசஸாம் வாச்ய முத்தமம் –
லௌகிகமாயும் வைதிகமாயும் உள்ள சர்வ சப்தங்களுக்கும்
பிரதான வாச்யன் ஈஸ்வரன் -என்கிறது –
(சொற்களுக்கு மிகச் சிறந்த பொருள் -கடிகாரம் -ப்ரஹ்மம் என்பதே உத்தம பொருள் என்றவாறு
எல்லாப் பொருள்களும் தத்வ தைரியம் முக்கோல் -என்று அறிய வேண்டுமே )
அநேன ஜீவே நாத்ம நா அநு ப்ர விஸ்ய நாம ரூபா வ்யாகரவாணி-என்றும்
தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ரா விஸத் -என்று தொடங்கி
சத்யம் சாந்ருதம் ச சத்யம பவத் -என்றும் -சொல்லக் கடவது இறே
சராசர வ்யபாஸ்ர யஸ்து ஸ்யாத் தத் வ்யபதேஸோபாக்தஸ் தத் பாவ பாவித்வாத் –ப்ரஹ்ம சூத்ரம் -2-3-17-என்கிற
ஸூத்ரமும் ப்ரதானதயா வாச்யன் ஈஸ்வரன் என்றது இறே –

இத்தால் ஸ்ருஷ்டமான பதார்த்தங்களில் ஆராத்யரான
தேவதைகளோடு
ஆராதகரான மனுஷ்யரோடு
ஆராதன உபகரணங்களான திர்யக் ஸ்தாவரங்களோடு வாசி அற
சர்வ அந்தராத்மாவாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –
வசஸாம் வாச்ய முத்தமம் –
என்கிறது தேச பரமான போது ப்ராதான்யத்தை லஷிக்கிறது-
பரமே வ்யோமன் -என்றும்
தனி யுலகு -பெரியாழ்வார் திரு -5-4-9- என்றும் சொல்லக் கடவது இறே –

யோகாநாம் பரமாம் ஸித்திம் –
என்று ப்ராப்யாந்தர்க்கதமான சம்சார விமோசனத்தை வ்யாவர்த்திக்கிறது
த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண-ஸ்தோத்ரம் -4-என்றது இறே –
இத்தால் நிரவதிக போக்யமான திருவடிகளைச் சொல்லுகிறது
நலமந்தம் இல்லாதோர் நாடு -திருவாய் -2-8-4-என்று
தேசமும் நிரதிசய போக்யமாய் இறே இருப்பது

பரமம் தே பதம் –
தே பரமம் பதம் –
சர்வ காரணனுமாய்-சர்வ சப்த வாச்யனுமாய் -சர்வ உபாய சாத்யனுமாய் இருந்துள்ள
உன்னுடைய சர்வாதிகமாய் நிரதிசய போக்யமான திருவடிகளை -என்னுதல்
உன்னுடைய நிரதிசய போக்யமான ஸ்தானத்தை -என்னுதல் –

விது –
ஜ்ஞானாதிகராய் இருக்குமவர்கள் அறியா நிற்பார்கள் –
நித்தியமாய் பிரதானாய் அதிகமாய் நிரதிசய போக்யமாய்
இருப்பதொரு நாடு உண்டு என்றும்
அந்த தேசத்தே
ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத் பதி -ஆஸ்தே -என்கிறபடியே
இருப்பதொரு விக்ரஹம் உண்டு என்றும் அறிவார்
சகல வேதாந்த தாத்பர்யம் கைப்பட்ட சர்வஜ்ஞ்ஞர் இறே –

அபேஷிக்கிறவன் தன சிறுமையைப் பார்த்தும்
அவனுடைய நிருபாதிக ஸ்வாதந்த்ர்யத்தைப் பார்த்தும் -அர்த்தியாதே
இங்குத்தை வைலஷண்யத்தைக் கொண்டாடுகிறான்
கருத்து அறிந்து அங்கே போக விடுகைக்காக –
ஒருத்தன் கையிலே எலுமிச்சம் பழம் இருந்தால் அதன் நன்மையாலே ஒருத்தன் அதைக் கொண்டாடினால்
உதாரன் ஆனவன் எதிர் தலையில் நினைவு அறிந்து கொடுக்குமா போலே –

சங்க்ரஹ பஷத்திலே -மகா புருஷ -என்கிற பதத்தின் உடைய வ்யாக்யானமாய் இருக்கிறது –

——————————

ஸ்தோத்ரம் -8-அவதாரிகை –

கீழ் ஸ்லோகத்திலே
பரம பதத்தில் போக்யதையை அனுசந்தித்தான்-(வேத புருஷன் என்றவாறு -இது ரிக் வேதப்பகுதி தானே) –
அந்த போக்ய அனுசந்தானத்தாலே சம்சாரத்திலே பொருந்தாத படியான பயம் பிறந்தது
அந்த பய நிவ்ருத்தியைப் பண்ணி அருள வேணும் என்று அபேஷிக்கிறது இஸ் ஸ்லோகம் –
சம்சார பய நிவர்த்தகன் இறே சரண்யன் ஆனவன் –
சம்சாரத்தை உள்ளபடி அறிந்தவனுக்கும் சம்சாரம் பய ஸ்தானமாய் இருக்கும் –
ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தவனுக்கும் அது பய ஸ்தானமாய் இருக்கும்
அவ்வோபாதி ப்ராப்ய பூமியில் போக்யதையை அனுசந்தித்தாலும் பய ஸ்தானமாய் இருக்கும் இறே-

அஹம் பீதோ அஸ்மி தேவேஸ ஸம்ஸாரே அஸ்மின் பயாவஹே
பாஹி மாம் புண்டரீகாஷ ! ந ஜாநே ஸரணம் பரம் —8-

பயாவஹே அஸ்மின் ஸம்ஸாரே அஹம்-
சம்சாரம் ஆகிறது ஏது –
அது பயாவஹமாய் இருக்கிறபடி -எங்கனே என்னில்
1-அவித்யா -2-கர்ம-3- வாசனா -4- ருசி -5- பிரகிருதி சம்பந்தங்கள்– சம்சாரம் ஆகிறது
அவித்யை ஆகிறது அஜ்ஞானம்-(அர்த்த பஞ்சக ஞானம் இல்லாமை )
அதாகிறது -புக்க சரீரத்தில் அஹம் புத்தியும்
சரீர அனுபந்தியான பதார்த்தில் மமதா புத்தியும்
அநாத்மந்யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதியா மதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-11-
என்றான் இறே ஸ்ரீ பராசர பகவான் .
யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -திருவாய் -2-9-9-என்றும்
பிறர்க்கு உபதேசிக்கிற இடத்திலும் -நீர் நுமது -திருவாய் -1-2-3- என்றும்
அருளிச் செய்தார் இறே ஆழ்வாரும் –
அஹங்காரம் சேஷத்வத்தை அழிக்கையாலே பயாவஹம் –
மமதை பகவத் விஷயத்தில் போக்யதையை அழிக்கையாலே பயாவஹம் –

புண்ய பாப ரூபமாய்த்து கர்மம் இருப்பது
பாபம் நரகாத் யனுபவத்துக்கு ஹேது வாகையாலே பயாவஹம்
புண்யம் பயாவஹம் ஆனபடி என் -என்னில்
புண்ய பலமாவது ஸ்வர்க்காத் அனுபவங்கள் இறே
அவை ஸ்வரூபத்தை நசிக்கக் கடவ அஹங்கார மமகாரத்தை வர்த்திப்பிக்கையாலே பயாவஹம் –
அனர்த்த ஹேதுவான சப்தாதிகளிலே மூட்டுகையாலே பயாவஹம்

பிரகிருதி -தேக சம்பந்தம் ஆதி ரூபத்தாலும் வியாதி ரூபத்தாலும் பரபரிபவ ரூபத்தாலும்
சீதோஷ்ணாதிகளாலும் பயாவஹங்கள்-

இப்படிகளால் ருசி வாசனைகளும் பயாவஹங்கள் -எங்கனே என்னில்
ஆதி பரதன் சமாதி தசையிலே மானின் பக்கலிலே ருசி பிறந்து மானாய்ப் பிறந்தான் இறே –
அது தனக்கு அடி விஷயாந்தர ப்ராவண்யம் அன்று-
ரஷகத்வ வாசனையாலே இறே -(ஈஸ்வரனை விட்டு
தானே மானுக்கு ரக்ஷகன் என்ற எண்ணம் )
ஆகையாலே வாசனா ருசிகளும் பயாவஹங்கள் –
திருஷ்டி விஷம் போலே ருசி தானே பயாவஹமாய் இருக்கிறபடி
அதாகிறது -சம்சாரிகளுக்கு விட்டில் போலே அஹங்காரத்தை ஆதரித்து மேல் விழுந்து வர்த்திக்கையாலே
காண்கை தானே பயாவஹமாய் இருக்கும் இறே –
பூ மௌ நிபாத்யமாநோ அத்ரேரந்தராஸ்தே ஸ்வ பன்னிவ -என்று
மலையினின்றும் விழுகிறவன் நடுவே உறங்குமா போலே இறே
சம்சாரிகள் வருகிற அனர்த்தத்தைப் பற்றி புத்தி பண்ணாதே ஸூகிக்கிறபடி –
நலமந்த மில்லதோர் நாடு –திருவாய் -2-8-4-என்று ஒரு விபூதியாக முற்றடங்கி
ஸூகமாய் இருக்குமா போலே இறே இங்கும் கூட்டடங்க பயாவஹமாய் இருக்கும்படி –

அஹம் பீதோ அஸ்மி
சம்சாரத்தை அநந்த க்லேச பாஜனமாக அனுசந்திக்கிற நான் பயப்படா நின்றேன் –
அஸ்மி-வர்த்தமான நிர்த்தேசத்தாலே பய நிவ்ருத்திக்கு ஓர் அவகாசம் காண்கிறிலேன் –
சம்சாரத்தில் பய நிவ்ருத்திக்கு அவகாசமுண்டோ -என்னில்
ஈஸ்வரன் பக்கலிலே ந்யஸ்த பரனாய் இருக்குமவன் நிர்ப்பயனாய் இருக்கும் இறே –
அதுவும் எனக்கு அபாய ஸ்தானம் ஆகிறது இல்லை –
பிராப்யத்தில் அதி ப்ராவண்யத்தாலே த்வரை பிறந்தவனுக்கு அத்யாவசாயத்தாலே தரிக்க ஒண்ணாது இறே –
களை கண் மற்றிலேன் -திருவாய் -5-8-8- என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -திருவாய் -5-10-11-என்றும்
அத்யவசிதரான ஆழ்வார்
அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை –திருவாய் -10-9-11-என்று
அத்தேச விசேஷத்தில் போக்யதையை சாஷாத் கரித்து -அநந்தரம் –
முனியே நான் முகனே -திருவாய் -10-10-1-என்று கூப்பிட்டார் இறே-

தேவேஸ
அயர்வறும் அமரர்கள் -திருவாய் -1-1-1- என்கிறபடியே நீயும் அவர்களுமாய்
அங்கே களித்துத் திரியா நிற்க –
அவர்களோபாதி போகத்துக்கும் யோக்யனாய் இருக்கிற நான் இங்கே க்லேசப் படுகை தேவர்க்குப் போருமோ
பிராட்டியும் பய ஸ்தானமான இலங்கையில் இருந்த இடத்தில்
ஹா ராம ஹா லஷ்மணா- சுந்தர -28-8-என்றாள் இறே
இமையோர் தலைவா -திரு விருத்தம் -1- என்றும்
விண்ணுளார் பெருமானேயோ -திருவாய் -7-1-5- என்றும்
அருளிச் செய்தார் இறே ஆழ்வார் –

பாஹி மாம் –
மாம் பாஹி –
யோகா நாம் பரமாம் சித்திம் -என்கிறபடியே
அத்தேசத்தில் போக்யதையை அனுசந்தித்து மேல் விழுந்த தன்னை –
ஏஹி பஸ்ய சரீராணி – ஆரண்ய-6-16-என்னுமா போலே வடிவைக் காட்டி –

பாஹி
சரீர சம்பந்தத்தை அறுத்து
அர்ச்சிராதி மார்க்கத்தாலே நிர்ப்பயமான தேசத்திலே கொண்டு போக வேணும் –

புண்டரீகாஷ ! –
உன்னுடைய ஆகர்ஷகமான திருக் கண்களால் என்னைக் குளிர நோக்கி அருள வேணும் –
நான் என்னுடைய பய நிவ்ருத்திக்கு யத்னம் பண்ணும் அன்றோ நேர்த்தி உள்ளது –
தேவர் செய்து அருளும் இடத்தில் அநாயாசம் அன்றோ –
கீழ்ச் சொன்ன ஆஸ்ரயணீயமான வாத்சல்யாதிகளும்
பல சித்திக்கு உடலான ஜ்ஞான சக்த்யாதிகளும் வேணுமோ என்னை ரஷிக்கைக்கு –
முதல் -ஜிதந்தே புண்டரீ காஷ -என்று எனக்கு புறம்பு உள்ள அந்ய பரதையை தவிர்த்தால் போலே
பயத்தையும் போக்கி ரஷித்து அருள வேணும் –

(யதா கப்யாஸம் ஏவ புண்டரீகம்–ததைவ அக்ஷிணீ–இரண்டு திருக்கண்கள் –
ஆறு நிர்வாகங்கள் –மூன்று பொருந்தாது -மூன்று பொருந்தும்
1-உபாசன ஸ்தானம் -தண்ணீரை குடிப்பதால்-கப்யாஸம் -கம் பிபேதி – சூர்யனைக் குறிக்கும் –
புண்டரீகம்-ஹ்ருத் புண்டரீகம் -ஆதித்ய மண்டலம் போலே -உபாஸிக்க
சாஸ்திரம் தக்ஷிண அஸீ உபாசனம்–ஆக இரண்டும் என்பது பொருந்தாது -அத்யாகாரம் செய்து பொருள் வேறே
இரண்டு த்ருஷ்டாங்கள்-சொல்லி -ஓன்று அப்ரதானம் ஆகும் –
2-கப் குரங்கு -ஆஸம் ஆசனவாய் -போலே -இருக்கும் -சிவந்த தாமரை போலே -இரண்டு உபமானம்-தோஷம் —
3 -ஆஸம் மலர்ந்த -கப் ஈஸத் விகசித்த -துளி மலர்ந்த தாமரை ஒத்த -சிறுது மலர்ந்த -சிறுச் சிறிதே –
இரண்டுக்கும் ஒக்குமே -சாத்மிக்க என்றவாறு -கப்யாஸம் ஈஷத் ஒரு துளி அர்த்தம் நிகண்டுவில் இல்லையே -இந்த குற்றம்
4–கம்பீராம்ப ஸமுத்பூத– ஸ்ம்ருஷ்ட நாள –ரவிகர விகசித –புண்டரீக தள –
அமல ஆயத ஈஷண -அமல ஆயத ஈஷண – குற்றம் அற்ற-நீண்டு -தாமரையில் வியாவருத்தி
கம் -நீர் ஆஸம் ஆஸ்தானம் இருப்பிடம்-நீரில் உள்ள தாமரை
கபி நீரைக் குடிப்பதால் நாளம்-ஆஸம் நிலைத்து உள்ள தாமரை -ஸ்ம்ருஷ்ட -கெட்டியான தடிமனான
கம் பிபதீ சூரியனால் மலர்த்தப்பட்ட புண்டரீகம் –
அதீர்க்கம்-அப்ரேம துகம்-க்ஷண உஜ்ஜ்வலம் -ந சோர அந்தக்கரணம் பஸ்யதாம் -கூரத் தாழ்வான்-தாமரை ஒவ்வாதே
அரவம் சுமப்பது அஞ்சன மலை பூத்தது அரவிந்த வனமே -அரவிந்த மலர் தோறும் அதிசயம் உளதே –
அழுகையும் அஞ்சு நோக்கும் அந்நோக்கும் எல்லை இன்பத்து இறுதி கண்டாள்-)

ந ஜாநே ஸரணம் பரம் –
பரம் சரணம் ந ஜாநே –
உன்னை ஒழிய வேறு ஒரு உபாயம் அறிகிறிலேன்-
நிதித்யாஸி தவ்ய -என்று ஸ்ருதிகள் சொன்னாலும்
மன்மநா பவ மத் பக்த -என்று ரஷகரான தேவரீர் அருளிச் செய்தாலும்
நான் வேறு ஒரு உபாயம் அறிகிறிலேன் –
அதுக்கு ஹேது என் -என்னில்
சேதனனோடு அவனுக்கு உபகரணமான கரணங்களோடு வாசி அற தேவர் ஆதீனம் ஆகையாலே –
நமஸ்தே அஸ்து -என்றும்
ஹ்ருஷீ கேஸ -என்றும்
அனுசந்தித்தவன் இறே
மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞானமபோஹநம் ச -ஸ்ரீ கீதை -15-15–என்று இறே தேவர் வார்த்தையும் –

ஸங்க்ரஹ பஷத்தில்
இஸ் ஸ்லோகம் -புண்டரீ காஷ -என்கிற பதத்தின் உடைய விவரணம்-

———————————————————-

ஸ்தோத்ரம் -9- அவதாரிகை –

ந ஜாநே சரணம் பரம் -என்னலாமோ –
ஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவான உபாயங்களை சாஸ்திர முகத்தாலே உண்டாக்கி வைத்து
அதுக்கு மேல்
அல்ப வ்யாபாரத்தினாலே சகல துரிதங்களும் நசிக்கும் படியாகப் புண்ய காலம்
புண்ய ஷேத்ரம் முதலானவற்றை உண்டாக்கி வைத்திலோமோ –
வேறு உபாயாந்தரங்களும் உண்டாக அறிகிறிலேன் என்னலாமோ -என்னில்
அவற்றின் உடைய சத்பாவத்தை இல்லை என்கிறேன் அல்லேன் –
அவற்றிலே இழிந்த நான் நித்ய சம்சாரி யாகையாலே
முன்பு நின்ற நிலையும் கெடும் என்று சொன்னேன் -என்கிறான் –
இத்தால்
உபாயாந்தர பரித்யாக பூர்வகமாய் இருக்கும்
சித்த உபாய பரிக்ரஹம் என்னுமத்தைச் சொல்லுகிறது –
இப்படி நிரபேஷ உபாய பூதன் இறே சரண்யன் ஆவான் –

காலேஷ்வபி ச சர்வேஷூ திஷூ சர்வாஸூ சாச்யுத
சரீரே ச கதௌ சாபி வர்த்ததே மே மஹத் பயம்—-9

காலேஷ்வபி ச –
புண்யமான அயன விஷ்வாதிகளிலும் (விஷு புண்ய காலம்)-
அவற்றை விசேஷிக்கிற அர்த்த உதயாதி காலங்களிலும் –
அதாகிறது -இவ் விலஷண காலங்களிலே சேது தர்சன சங்கமங்களிலே பண்ணும்
தீர்த்த தாநாதிகளைச் சொல்லக் கடவது இறே –
கோக் நே சைவ ஸூராபே ச சோரே பக்ன வ்ரதே ததா
நிஷ்க்ருதிர் விஹிதா ஸத்பி க்ருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி -என்கிறபடியே
பிராயச்சித்தம் இல்லை என்கிற க்ருதக்னன்-க்ருதஜ்ஜை இல்லாதவன் – உடைய பாபம் உட்படப் போம் என்றது –

சர்வேஷ் வபி –
அஸ்வத்தம் சிந்து ராஜம் ச சதா சேவேத ந ஸ்ப்ருஸேத
மந்தவாரே ஸ்ப்ருஸேத பூர்வம் பரம் பரவணி ஸ் ப்ருஸேத -என்று
(மந்தவாரம் -சனிக்கிழமை மட்டும் அரச மரம் தொடலாம் -பருவ காலத்தில் தான் கடலைத் தொடலாம் )
அபர்வணி கடல் தீண்டல் ஆகாது என்னும் நியமம் இன்றிக்கே
சர்வ காலமும் சேவிக்கலாய் இருக்கும் கங்காதி தீர்த்தங்களை சமுச்சயிக்கிறது

திஷூ-
சகல பாவனங்களாகச் செய்து வைத்த இவை ஒழிய
தேசோ அயம் சர்வ காம துக் -என்கிறபடியே
பிரதமத்திலே பாவனமாய்
பின்பு பகவத் பிராப்திக்கு சாதனமுமாய்
பின்பு போக்யமுமாயும் இருக்கும் புண்ய தேசம் முதலான தேசங்களை சமுச்சயிக்கிறது –
மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ ஸூபா -என்னக் கடவது இறே

சர்வாஸூ ச –
இத்தால் -அவதரித்து அருளின தேசங்களை ஒழிய பகவத் சந்நிதி மாறாத
சாளக்ராம மண்டலம் முதலான தேசங்களை சமுச்சயிக்கிறது –

சரீரே ச-
கீழ்ச் சொன்ன தேசங்களில் பண்ணும் உபாய அனுஷ்டானத்துக்காக
சரீர மாத்யம் கலு தர்ம சாதனம் -என்றும்
விசித்ரா தேக சம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும் -என்றும்
சொல்லப்படுகிற இந்த சரீரம் எனக்கு வ்யர்த்தம் ஆகா நின்றதாகை-

கதௌ ச-
ஸ்வ தரமே நிதநம் ஸ்ரேய -பரதர்மோ பயாவஹ -என்கிறபடியே
சாதன அனுஷ்டான மத்யே மரணம் உண்டானாலும்
சரீராந்தரத்திலே தலைக் கட்டும் படியான
சரீராந்தர கதியும் எனக்கு வ்யர்த்தம்-

கதௌ-
சரீராந்தர க தௌ –
அபி சப்தத்தாலே அனுஷ்டேயமான கர்ம ஜ்ஞான பக்தி யாதிகளை சொல்லிற்று -என்னுதல்
முன்பு போன சரீரங்களை சமுச்சயிக்கிறது -என்னுதல்
முன்பு பரிக்ரஹித்துப் பொகட்ட சரீரங்கள் வ்யர்த்தமானவோபாதி
வர்த்தமான சரீரமும் வ்யர்த்தம் என்று கருத்து-

மே மஹத் பயம் –
இவை வ்யர்த்தமான அளவே அல்ல –
தேச கால சரீரங்களிலும் இவற்றைப் பற்றி நின்று அனுஷ்டிக்கும் கர்ம யோக யுபாயங்களிலும்
பயம் வர்த்தியா நின்றது –

பயம் வர்த்திப்பான் என் -என்னில் –
முன்பு தேவர் திருவடிகளை உபாயமாகப் பற்றி வர்த்திக்கையாலே
தேவர் உடைய இரக்கமும் கெடும் என்று இவை பயாவஹம் ஆகா நின்றன –

அனுகூலமானவை பய ஸ்தானம் ஆவான் என் -என்னில்
ஸ்வீகரித்த உபாயம் வேறு ஒன்றை சஹியாமை யாலே –
முதலிலே த்வாமேவ சரணம் ப்ராப்ய –ஸ்லோகம்-4- என்றவன் இறே
த்மேவ -என்று இறே சாஸ்திர விதானமும்
மாமேகம் -என்று இறே சரண்யன் உடைய வாக்யமும்

மஹத் பயம் வர்த்ததே –
பயாவஹே -ஸ்லோகம் -8- என்கிற சம்சார பயத்து அளவன்று இந்த பயம் –
விஷயாந்தர ப்ராவணயத்தால் வந்த பயத்து அளவன்று இறே
சாதனாந்தர அனுஷ்டானத்தால் வந்த பயம் -என்கை –
விஷயாந்தர ப்ராவணயத்தால் வந்த பயத்துக்கு ஈஸ்வரன் கிருபையைப் பற்றலாம்
அத்தையும் நழுவும்படி பண்ணுகிறது இறே சாதநாந்தர பரிக்ரஹம் –

அச்யுத –
இப்படி சர்வ உபாய ஸூந்யராய் இருப்பாரையும் நழுவ விடாத
ஸ்வ பாவத்திலே இறே தேவர்க்கு அச்யுத -என்கிற திரு நாமம் உண்டாயிற்று –
யஸ்மாத் ப்ராப்தா நச்யவந்தே ஸோ அச்யுத -என்று இறே திரு நாமத்துக்கு நிர்வாஹம் –
த்வாரகா நிலயா அச்யுதா -என்று தேவரை விஸ்வசித்துக் கையை விட்டவளை
அத் தசையில் விடாதவர் இறே தேவர் –
த்வத் பிரசாதான் மயாச்யுத -என்று சொல்லக் கடவது இறே –

சர்வ சங்க்ரஹ பஷத்தில் -நமஸ்தே -என்கிற பதத்துக்கு
சேஷமாகக் கடவது
அந்த ப்ரபதனமும் உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாகை யாலே-

——————————————————————————

ஸ்தோத்ரம் -10-அவதாரிகை –

உபாய உபேயங்கள் இரண்டும் நாமே யானாலும்
அநாதி காலம் இப்படி விஷய ப்ரவணனாய் நம் பக்கலிலே விமுகனாய்ப் போந்த சம்சாரிக்கு
விஷய வைமுக்ய பூர்வகமாக நம் பக்கலிலே ஆபிமுக்யம் பிறக்கைக்கு அடியான
பிரதம ஸூஹ்ருதம் இவன் தலையிலே ஆக வேண்டாவோ –

இஸ் ஸூஹ்ருதத்தால் ஆபிமுக்யம் பிறந்தால் பின்பு அன்றோ யதார்த்த ஜ்ஞானம் பிறப்பது –
அந்த ஜ்ஞானத்தாலே அன்றோ த்யாஜ்ய உபாதேய விபாகம் பிறப்பது –
த்யாஜ்ய நிவ்ருத்தி பூர்வகமான ப்ராப்ய சித்திக்கு உபாயம் அபேஷிதம் ஆவது பின்பு அன்றோ –
அத்தாலே அன்றோ ப்ராப்ய சித்தி
இது எல்லாத்துக்கும் அடியான பிரதம ஸூஹ்ருதம் இவன் கையாலே ஆக வேண்டாவோ -என்னில்

அந்த ஸூஹ்ருதமும் தேவர் திருவடிகளே -எனக்கு வேறு இல்லை -என்கிறது –
ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே என்று கீழ் உக்தமான அர்த்தத்தை நிகமிக்கிறது என்னவுமாம் –
த்வ சரணத் வந்தவம் வ்ரஜாமி -என்றும்
யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்றும்
ப்ராப்ய ப்ராபகங்கள் கீழே உக்தம் இறே-

த்வத் பாத கமலாத் அந்யந்த மே ஜன்மாந்த ரேஷ்வபி
நிமித்தம் குஸலஸ்யா நாஸ்தி யேந கச்சாமி ஸத் கதிம்–10-

த்வத் பாத கமலாத் அந்யந்த -குஸலஸ்யா நிமித்தம் -மே நாஸ்தி –
தேவர் திருவடிகள் பிராப்யமுமாய்
ப்ராபகமுமானவோ பாதி
பிரதம ஸூஹ்ருதம் எனக்கு தேவர் திருவடிகளை ஒழிய வேறு இல்லை –

த்வத் அந்யத் குஸலஸ்யா நிமித்தம் -மே நாஸ்தி –என்னவுமாய் இருக்க
பாத கமலம் -என்கிற பதத் த்வயங்கள்
ப்ராப்ய ப்ராபகங்களை ஸ்மரிப்பிக்கின்றன –
கமல பதம் போக்யதையை ஸ்மரிக்கிறவோபாதி
பாத பதம் உபாயத்தை ஸ்மரிப்பிகிறது –
சரண த்வந்த்வம் சரணம் வ்ரஜாமி -என்று திருவடிகளை இறே உபாயமாகச் சொல்லிற்று –

குஸலஸ்யா நிமித்தம் –
மங்கள ரூபமான உபாய சித்திக்கு ஹேதுவான
பிரதம ஸூஹ்ருதம்
சேதனனுக்கு மங்கள ரூபமாய் இறே இவ் உபாயம் ரசித்து இருப்பது –
பஹூ நாம் ஜன்ம நா மந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே -என்கிறபடியே
உபாய சித்தி ஹேதுவாய்
அநேக ஜன்ம ஸூஹ்ருத சாத்தியமாய் இருக்கிற பகவத் ஜ்ஞானம் ஆகிற
பிரதம ஸூஹ்ருதம் த்வத் பாத கமலா தந்யன் நாஸ்தி -என்னக் கடவதோ –

மே நாஸ்தி –
அந்த ஜ்ஞானி யானாலும் எனக்குத் திருவடி ஒழிய வேறு இல்லை –
அது என் -என்னில் –
ஸூஹ்ருத கார்யம் ஆவது சப்தாதி விஷய ப்ராவணயத்தின் நின்றும் மீட்டு
இவ்வாத்மாவுக்கு பகவத் ஆபிமுக்யத்தை பிறப்பிக்கை இறே அது
ஜிதந்தே புண்டரீ காஷ -என்கிறபடியே
இவ்வர்த்தம் தேவர் அழகாலே பிறந்த பின்பு
அந்த ஸூஹ்ருதம் எனக்கு தேவர் திருவடிகளே-

ஜன்மாந்த ரேஷ்வபி –
அழகைக் காட்டி மீட்டதுவும்
ஜன்மாந்தரங்களில் ஒரு ஸூஹ்ருத விசேஷம் உண்டாய்
அதன் பலமானாலோ என்னில்
விஷய பிரவணனை மீட்கைக்கு ஒரு ஸூஹ்ருத அபேஷை இல்லாமையாலே அதுவும் வேண்டுவது இல்லை –
என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -திருவாய் -1-7-5-என்று ஆழ்வார்
அருளிச் செய்ததுக்கும் அடி இது இறே –

யேந குஸலேந ஸத் கதிம் கச்சாமி
ஸத்கதி-என்கிறது விலஷணமான ப்ராப்யம் -அதாவது
யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்கிற பரம பதம் –
யேந குஸலேந ஸத் கதிம் கச்சாமி
தஸ்ய குஸலஸ்ய நிமித்தம் ஜன்மாந்தரேஷ் வபி
த்வத் பாத கமல தந்யத் மே நாஸ்தி -என்று
அந்வயம் –

நிகமன பேதத்திலே
யேந உபாயேந ஸத் கதிம் கச்சாமி
தஸ்ய தத் கதி ரூபஸ்ய ஹேது பூதம் உபாயம்
ஜன்மாந்த்ரேஸ்வபி த்வத் பாத கமல தந்யத் மே நாஸ்தி
என்றபடி –

சங்க்ரஹ பஷத்தில் –
பூர்வஜ -என்கிற பதத்தின் உடைய
விவரணமாய் இருக்கிறது –

———————

ஸ்தோத்ரம் -11-அவதாரிகை –

ப்ராப்ய ப்ராபகங்களும்
அதுக்கு அடியான ஸூஹ்ருதமும்
நாமே ஆகிலும் -உபாய பூதனான நான் மேலே
செய்ய வேண்டுவது என் -என்னில்
பிறந்த விஜ்ஞானமும் -ஜ்ஞானம் அடியாகப் பிறந்த அத்யவஸாயமும் நசியாது ஒழியப் பெறில்
யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்கிற ப்ராப்ய பூமியிலே போகவும் வேண்டா
பயவஹாமான சம்சார நிவ்ருத்தியும் வேண்டா –
எனக்கு என்றும் ஒக்க இதுவே அமையும் -என்கிறது-

விஜ்ஞானம் யதிதம் ப்ராப்தம் யதிதம் ஸ்தாந மார்ஜிதம்
ஜன்மாந்தரே அபி மே தேவ மாபூத் தஸ்ய பரிஷய —11-

விஜ்ஞானம்-
விலஷணமான ஜ்ஞானம்
சர்வாதிகமான ப்ராப்ய விஷயமாகவும்
சர்வாதிகமான பிராபக விஷயமாகவும் -பிறந்த ஜ்ஞானம் –
ப்ராப்யங்களில் பகவத் ப்ராப்திக்கு அவ்வருகாய் இருப்பதொரு ப்ராப்யம் இல்லாதாப் போலே –
சாதனங்களிலும் சித்த உபாயத்துக்கு அவ்வருகாய் இருப்பது ஓன்று இல்லை இறே-

யதிதம் விஜ்ஞானம்-
பரமான சித்தமுமாய்
ஹ்ருதய கமலத்திலே சந்நிஹிதமுமாய் இருக்கிற ஜ்ஞானம் –
வேதாந்தங்களிலே ப்ராப்யமும் ப்ராபகமும் ஈஸ்வரனே என்று பிரசித்தம் இறே
ஆநந்த மய -என்றும்
ரஸோ வை ச -என்றும்
சர்வ கந்தஸ் சர்வ ரஸ-என்றும் ப்ராப்யமாக பிரசித்தம் இறே

யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்று தொடங்கி
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
தஸ்மான் நயாஸ மேஷாம் தபஸா மதிரிக்த மா ஹூ -என்றும்
ஏஷ ஹேவாநந்த யாதி -என்றும் -உபாயமாகவும் பிரசித்தம் இறே -ப்ராப்தம் –

பிரயோஜநாந்தர பரர்க்கும்
சாதநாந்தர நிஷ்டருக்கும்
உட்பட உன்னாலே ப்ராபிக்கப் பட்டது –

யதிதம் ஸ்தாந மார்ஜிதம் –
ஸ்தானம் -என்று -ஸ்திதி –
அதாகிறது -இந்த ஜ்ஞான விஷயமான அத்யாவஸாயம் –

யதிதம் –
என்று ப்ரேதேசாந்தரத்தில் பிரசித்தியையும்
ஸ்வ ஹ்ருதய சந்நிதியையும் சொல்லுகிறது –
வ்யவஸாயா த்ருதே ப்ரஹ்மன் நாஸாதாயதி தத் பரம் -சாந்தி பர்வம் –என்னக் கடவது இறே –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கே -திருவாய் -5-10-11- என்றார் இறே ஆழ்வாரும்

ஆர்ஜிதம் –
பகவத் பிரசாத சித்தம் ஆகையாலே
ஜ்ஞானத்தை ப்ராப்தம் என்கிறது –
அதிகாரி விசேஷணமாய் -ஈஸ்வரனை அர்த்தித்தே நாம்
புருஷார்த்தமாகப் பெற வேண்டுவது ஓன்று ஆகையாலே
அத்யாவஸாயத்தை ஆர்ஜிக்கப் பட்டது- என்கிறது

ஜன்மாந்தரே –
இஜ் ஜன்மம் நசித்தாலும்
இந்த ஜ்ஞான அத்யாவஸாயங்கள் நசியாது ஒழிய வேணும் -என்கிறது
இத்தைப் புருஷார்த்தமாக அபேஷிப்பாரைக் கண்டறியோமே -என்ன –

மே –
எனக்கு இதுவே புருஷார்த்தம்
தாம் தாம் அர்தித்தது அன்றோ புருஷார்த்தம் ஆவது –

தேவ –
அர்த்திப்பார் உண்டானாலும்
நாம் புருஷார்த்தமாக கொடுத்துப் போருவது ஓன்று அன்றே -என்ன

தேவ –
சம்சாரிகளைப் போலே என்னைக் கொண்டு அறியாது ஒழிய வேணும்
லீலா ரஸம் அனுபவிக்கைக்கு விஷய பூதர் – சம்சாரிகள் அன்றோ

தஸ்ய –
ஜ்ஞான அத்யவஸாயங்களுக்கு உண்டான
ஐக கண்ட்யத்தாலே ஏக வசனத்திலே
சொல்லுகிறது –

பரிஷய -மாபூத் –
ஞானத்துக்கு பரி ஷயம் ஆகிறது -விஸ்ம்ருதி
அத்யாவஸாயத்துக்குப் பரி ஷயம் ஆகிறது விநாசம்
ஜ்ஞான விஸ்ரம்பம்ங்களுக்கு விஸ்ம்ருதி விநாசம் இன்றிக்கே ஒழிய வேணும் -என்கிறது –

கீழ் பரம பதத்தே கொடு போக வேணும் என்று அபேஷித்தும்
பயாவஹமான சம்சாரத்தை தவிர்த்துத் தர வேணும் என்று அபேஷித்தும் வைத்து
ஜ்ஞான அத்யாவஸாயங்களே அமையும் என்றேன் -என்றது
இவற்றின் உடைய ரஸயதையாலே-

உபகார ஸம்ருதியாலே ஆசார்யன் பக்கல் பிறந்த
போக்ய அதிசயத்தாலே
தேவு மற்று அறியேன் -என்னப் பண்ணிற்று இறே –

சம்சாரிகளை தர்சித்தால் ஜ்ஞான அத்யாவஸாயங்கள்
முக்த ப்ராப்ய ஸ்தலம் போலே இறே இருப்பது –
மேலால் பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு –பெரிய திருவந்தாதி -58
என்னும் ஆழ்வார் உடைய வார்த்தைக்கும் அடி இது இறே –

சங்க்ரஹ பஷத்தில்
இஸ் ஸ்லோகம்
நமஸ்தே -என்கிற பதத்தை
ஸமரித்துக் கிடக்கிறது

————————————————————————-

ஸ்தோத்ரம் -12-அவதாரிகை –

துக்க ரூபமான சம்சார நிவ்ருத்தியும்
ஸூக ரூபமான தேச பிராப்தியும் வேண்டா
அதிகாரி விசேஷணமான ஜ்ஞான விஸ்ரம்ப சித்தியாலே- புருஷார்த்தம் தலைக் கட்டிற்றாமோ-
இன்னம்
ஜன்மாந்த்ரே அபி -என்று பகவத் ப்ராப்தியான ஜென்மத்தை அனுமதி பண்ணுகையும் விருத்தம் அன்றோ -என்னில்
கீழ் அபேஷித்தவை ஒன்றும் வேண்டா-
சம்சாரியுமாய் -அது தன்னிலும் துர்க்கதியுமாய்ச் செல்லா நிற்கிலும்
தேவர் திருவடிகளில் உபாய உபேயங்கள் முதலான சகல பாபங்களும் கிடையாதே
மநோ ரதம் மாத்ரமே யானாலும்
ஸ்வ வஸர் போலே என்றும் ஒக்க க்ருத க்ருத்யனாகா நின்றேன் -என்கிறது –

துர்க்கதாவபி ஜாதாயாம் த்வத் கதோ மே மநோ ரத
யதி நாஸம் ந விந்தேத  தாவ்தா அஸ்மி க்ருதீ ஸதா–12

துர்க்க தாவபி ஜாதாயாம் –
துர்க்கதி -யாவது
மனஸ்சை ஒழிய இதர கரணங்கள் உதவாத தசை –
அதாகிறது –
அஸக்தியாலே -ஐயார் கண்டம் அடைக்கிலும்-திருவாய் -2-9-3-என்கிற உத் க்ரமண தசையிலும்
ஸ்வாபத்தாலே பாஹ்ய கரணங்கள் அடங்க உப ஸம்ஹ்ருதமான ஸவப்ன தசையிலும் –
இத் தசையிலேயாய்ச் செல்லா நின்றாலும் –

த்வத் கத –
ஸ்வரூப ரூப குண விபூதிகள் எல்லாம்
தனித் தனியே யாகப் பரமமான தேவர் திருவடிகளிலே அடையப் பட்ட மநோ ரதம் மாத்ரம் -என்கை-

மே மநோ ரத –
இழிந்த துறையிலே சபலனுமாய்
அவ்வருகு போக ஷமன் அன்றிக்கே இருக்கிற என்னுடைய மநோ ரதம்

மநோ ரதம் ஆவது -அபேஷிதமான புருஷார்த்தம் சித்தியாது ஒழிந்தாலும்
அதில் நசையாலே அவற்றை எண்ணா நிற்கை –

சித்தி இன்றிக்கே இருக்க
மநோ ரதம் மாத்ரமே புருஷார்தமாகக் கூடுமோ -என்னில்
ஊர்வசி யோடே அனுபவித்து
புண்ய ஷயத்தாலே விஸ்லேஷித்துப் போந்தவனுக்கு
வேறு சில விஷயங்களை அனுபவ யோக்கியம் ஆக்கினாலும்
அவற்றில் நெஞ்சு செல்லாதே அவள் தன்னையே நினைத்து இருக்கை
புருஷார்த்தம் ஆமா போலே இதுவும் கூடும் .

அவிலஷண விஷயத்தில் போகங்களைக் காட்டில் விலஷண விஷயத்தில் மநோ ரதம் மாத்ரமே ரசிக்கும் இறே-
பகவத் விஷயத்தில் மநோ ரதம் ஆவது –
பிதா த்வம் மாதா த்வம் -என்கிறபடியே -சர்வ வித பந்துவும் அவனேயாக வேணும் என்றும்
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் -அவனே யாக வேணும் என்றும்
அவனைப் பெறுகைக்கு உபாயம் அவனேயாக வேணும் என்றும்- இவையே இறே-

யதி நாஸம் ந விந்தேத –
இம் மநோ ரதம் விஷயாந்தர ஸம்சர்க்கத்தாலே விச்சேதத்தை அடையாதாகில் –
யதி -என்கிறது விஷயாந்தரங்கள் சாம்ராஜ்யம் பண்ணுகிற சம்சாரத்திலே
பகவன் மநோ ரதத்துக்கு விச்சேதம் இன்றிக்கே ஒழிகை யாகிற இது கிடைப்பது ஓன்று அன்று இறே –

1-ஒரு தேச லாபத்தாலே வந்த சுக சித்தியோ பாதியும்
2-சாம்சாரிகமான துக்க நிவ்ருத்தியோபாதியும்
3-ஜ்ஞான சித்தியோபாதியும்
4-இம் மநோ ரத சித்தியும்
பகவத் பிரசாத ஆயத்தம் -என்று கருத்து –

தாவ்தா அஸ்மி க்ருதீ ஸதா –
இம் மநோ ரத மாத்ரத்தாலே க்ருத க்ருத்யனாகா நின்றேன் –
என்றும் ஒக்க க்ருத க்ருத்யனாகா நின்றேன் –
ஸ்வஸ்த சரீரனான போதோடு -ருக்ண சரீரனான போதோடு -வாசி அற
ஆஸீநா வா ஸயாநா வா திஷ்டந்தோ வா யத்ர குத்ர வா –நமோ நாராயணாய மந்த்ராயா -என்கிற ந்யாயத்தாலே
ஸ்திதி சயன அத்யவஸ்தா விசேஷங்களோடு -ஜன்மாந்தரங்களோடு வாசி அற- ப்ராப்ய சித்தியில் போலே
இம் மநோ ரத சித்தி மாத்ரத்தாலே க்ருத க்ருத்யனாகா நின்றேன் -என்கை –

கீழ் ஸ்லோகத்தில் ப்ராப்ய சித்தியில் ஸாரஸ்யம் போலே ஜ்ஞான மாத்ரமே ரசிக்கும் என்கிறது
இதில் அந்த சித்தியும் வேண்டா
தத் சித்தி அர்த்தமான மநோ ரதம் மாத்ரமே அமையும் -என்று
அந்த ஸாரஸயத்தின் உடைய எல்லையைச் சொல்லுகிறது –
ஸமர்த்த விஷய ஸாரஸ்யம் இறே ஸம்ருதிக்கு ஸாரஸ்யம்
ஆகையாலே ஸமர்த்தவ்ய பகவத் விஷய சாரஸ்யத்தின் உடைய அவதி இல்லாமையைச் சொல்லிற்று -ஆய்த்து

நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக் கண்கள் அசும் பொழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே –5-4-8- என்று
பெரியாழ்வார் அருளிச் செய்ததற்கு முதல் இதுவே இறே –

நாஹம் து சக்யோபஜதோ அபி ஜந்தூன் பஜாம்யமீஷாம நுவ்ருத்தி வ்ருத்தயே
யதா அத நோ லப்ததநே விநஷ்டே தச் சிந்த யான்யன் நிப்ருதோ ந வேத
ஏவம் மதர்த்தோஜ்ஜி தலோகவேத ஸ்வாநாம் ஹி வோ மய் யநுவருத்தயே அபலா –
மயா பரோஷம் பஜதா திரு ஹிதம் மா ஸூ யிதும் மார்ஹத தத் ப்ரியம் ப்ரியா
ந பாரயே அஹம் நிரவத்ய சம்யுஜாம் ஸூ சாது கர்த்தும் விபுதா யுஷா அபிவ
யா மா பஜன் துர்ஜர கேஹ்ஸ் ருங்கலாம் சம்வ்ருச்ச்ய தத்வ பிரதியாது ஸா அது நா –
என்று இறே சேஷி வார்த்தையும் -(ராஸக்ரீடை -ஸூகம் மட்டுப்பட மறைந்து- நினைக்க வைத்தது போலே )

——————————————————————————

ஸ்தோத்ரம் -13-அவதாரிகை –

இஸ் ஸ்லோகத்தால் –
நான் உனக்கேயாய் இருக்கும் பாரதந்த்ர்ய ஸூகமே எனக்கு பிராப்யம் -என்கிறது –

கீழ் –
பரம பதத்தை ப்ராப்யம் என்றும்
சம்சார பயத்தைப் போக்கித் தர வேண்டும் என்றும்
இவை ஒன்றும் வேண்டா ஜ்ஞானமே அமையும் -என்றும்
அது தானும் வேண்டா -மநோ ரதம் மாத்ரமே அமையும் -என்றும்
ப்ராப்ய விரோதியான ஜென்மத்தை அனுமதி பண்ணியும் –
இப்படி
வ்யாஹத பாஷணம் பண்ணிற்று -என்-
ஒன்றே புருஷார்த்தமாக நிர்ணயித்து அபேஷிக்க வேண்டாவோ -என்னில் –
அவை வ்யாஹத பாஷணம் அல்ல
அடிமைக்கு ஏகாந்த தேசமான பரம பதத்தை ஆசைப் பட்டேன் –
அடிமைக்கு விரோதி என்று சம்சாரத்தை வேண்டாம் என்கிறது –
உன்னுடைய போக்யதாதிஸயத்தாலே த்வத் விஷய ஜ்ஞானமே அமையும் -என்றேன்
ஜென்மத்தை இசைந்ததும் ஜ்ஞானத்தின் யடைய சாரஸயாதிசயத்தாலே –
இவை எல்லாம் ப்ராஸங்கிகம் –

முதலிலே நமஸ்தே அஸ்து-என்று சொன்ன பாரதந்த்ர்ய ஸூகமே எனக்குக் காம விஷயம்
என்று புருஷார்த்தத்தை நிர்ணயித்துத் தலைக் கட்டுகிறது-

ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்திதம்
காமயே வைஷ்ணவத் வந்து சர்வ ஜன்ம ஸூ கேவலம்–13

ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்திதம் –
தே பாதயோ-ஸ்திதம்-மம சித்தம் -ந காம கலுஷம்
நிருபாதிக சேஷியாய்-நிரதிசய போக்யனாய் -இருந்துள்ள
உன்னுடைய திருவடிகளிலே
ஸ்திதமான என்னுடைய சித்தம்
வேறு ஒன்றை ஸ்வயம் புருஷார்த்தமாக நினைத்து கலங்குகிறது அன்று –
ஜிதம் தே புண்டரீ காஷ -என்கிறபடியே
நான் இருந்த இடத்தே வந்து முகம் காட்டி
ருசியைப் பிறப்பித்து
புகுர நிறுத்தின படியாலே
நிருபாதிக சேஷித்வமும்
நிரதிசய போக்யத்வமும்
எனக்கு அநு  பூதம் இறே –

காமயே –
சங்கத்தளவு அன்று -என்கை
தவ பரிஜன பாவம் காமயே -ஸ்தோத்ர ரத்நம் -47–என்று அருளிச் செய்ததுக்கும் முதல் இறே இது –
கேவல பதத்தாலே இத்தலைக்கு ரசித்து இருக்கும் படி அன்றிக்கே –
ஸ்ரக் சந்த நாதிகளைப் போலே -அத்தலைக்கே போக்யமாய் இருக்கும் -என்கை –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -திருவாய் -2-9-4-என்னக் கடவது இறே –
பார தந்த்ர்யமே ஸ்வரூபமாய் இருக்குமவனுக்கு
அநு கூல வ்ருத்தியில் வந்தால் ஸ்வபாவ நியதி இல்லை –

தத் யதா தருண வத்ஸா வத்ஸம் வத்ஸோ வா மாதரம் -என்று
ரஷ்ய ரஷகத்வ நியதி கண்டிலோம் இறே

ப்ராதா பர்த்தா ஸ பந்துஸ்ஸ பிதா ஸ மம ராகவ -என்று இளைய பெருமாளும்
ஒரு முறையிலே வ்யவஸ்திதராய் நின்றிலர் இறே –
தேரிலே ஏறின போது சத்ர சாமர தாரிகளாய் நின்றால் போலே
காட்டிலே போகிற போதும் கநித்தரபிட கதரரானார் இறே-(கோடாலி இத்யாதி)

தலை நீர்ப் பாட்டிலே பரிமாறுகிற பிராட்டியும்
தேவத்வே தேவதே ஹேயம் மனுஷ்யத்வே ஸ மாநுஷீ -என்று
அபிமதனுக்கு அநு ரூபமான ரூபமே தனக்கும் ரூபமாகப் பரிக்ரஹித்தாள் இறே

யதா யதா ஹி கௌசல்யா -என்கிறபடியே
கௌசல்யாரும் ஒரு முறையிலே நின்றிலள் இறே -சக்ரவர்த்தியைக் குறித்து –

ஸ்திதம் – ஸம் ஸ்திதம் -நிலை நின்ற –
யஸ்ய அஸ்மி -என்கிறபடியே வந்தேறி அன்றிக்கே
குணைர் தாஸ்யம் உபாகத –என்கிறபடியே
அழகுக்கு தோற்று இழிந்த என்னுடைய நெஞ்சு ஆகையாலே
விஷயாந்தரம் கண்டு போக்குவது ஓன்று அன்று -என்கை –

மம சித்தம் –
என் மனனே -திருவாய் -1-1-1–என்னுமா போலே
நெஞ்சினுடைய பவ்யதையைக் கண்டு உகக்கிறான் –

காமயே சர்வ ஜன்ம ஸூ கேவலம் -வைஷ்ணவத்வம் து-
து -சப்தத்தாலே-அவதாரணத்தைச் சொல்லுகிறது –
வைஷ்ணத்வம் -ஆவது –
பகவத் பார தந்த்ர்ய ஸூகமாதல்
தத் அநுகூல வ்ருத்தியாதல் –

ஏதமாநந்த மய மாத்மாந முபஸங்கராமதி -என்றும்
அநு சஞ்சரன் -என்றும்
யேன யேன ததா கச்சதி தேன தேன சஹ கச்சதி
சாயா வா ஸதத்வ மநுகச்சேத் -என்றும்
வேதாந்தங்கள் பார தந்த்ர்யத்தையே புருஷார்த்தமாகச் சொல்லிற்றின விறே

குருஷ்வ மாம் அநு சரம் -என்னக் கடவது இறே –

சர்வ ஜன்மஸூ-
நித்யனான ஆத்மாவுக்கு ஜன்மம் ஆவது
சரீர சம்யோகம் இறே

சேஷத்வ ரசம் அவிச்சின்னமாய்ச் செல்லுமாகில்
ஜன்ம பரம்பரைகளை அனுமதி பண்ணினாலும் விரோதம் இல்லை -என்கை –

சம்சாரே அஸ்மின் பயாவஹே மாம் பாஹி –ஸ்தோத்ரம் -8- என்கிற இதுவும்
தாஸ்ய ரசத்துக்கு விரோதி -என்று இறே –

இத்தால்
ஜன்ம சம்பந்தம் அறுகை ஸ்வயம் புருஷார்த்தம் அன்று -என்கை –

அதவா –
சர்வ ஜன்மஸூ–
அஜாயமாநோ பஹுதா விஜாயதே -என்றும் –
பஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி -என்றும்
ஜகத் ரஷண அர்த்தமாக அவதரிக்கும் அவதாரங்கள் தோறும் தொடர்ந்து
அடிமை செய்ய வேணும் -என்றான் என்றுமாம் –

————————————————————–

ஸ்தோத்ரம் -14-அவதாரிகை –

இதில் ஓடின பாவ வ்ருத்தி இன்றிக்கே ஒழிந்தவன்
இப் பாசுரத்தை நாள் தோறும் படித்து
அடியேனாக வேணும் -என்று
ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணுவான் –

இத்யேவம் அநாயா ஸ்துத்யா ஸ்துத்வா தேவம் திநே திநே
கிங்கரோ அஸ்மீதி ச ஆத்மாநம் தேவாயைவம் நிவேத யேத்–14

இத்யேவம் –
இதி -என்றும்
ஏவம் -என்றும்
அர்த்தத்தின் உடையவும்
சப்தத்தின் உடையவும்
ஸ்வரூபம் சொல்லுகிறது –

இத்தால் அல்லாத ஜிதந்தைகளில் காட்டில்
இதுக்கு உண்டான ஏற்றம் சொல்லுகிறது –

அநயா ஸ்துத்யா –
ஜிதந்த இதி மந்த்ரேண -என்று ப்ரதேசாந்த்ரத்திலே மந்த்ரமாகச் சொல்லிற்று –
இங்கு ஸ்தோத்ரமாகச் சொல்லிற்று -இதுக்கு அடி என் -என்னில்

மந்தாரம் த்ராயத இதி மந்திர -என்கிறபடியே
அநு சந்தாதாவை உத்தரிப்பிக்கும் என்றிட்டு மந்த்ரம் -என்கிறது

ஸ்தவ்யனாய் ஸ்தவ பிரியனான ஈஸ்வரன்
திருச் செவி சாற்றினால் முகம் அலருமதாகையாலே ஸ்தோத்ரம் -என்கிறது –

தேவம்-
சாஷாத் தேவ புராணோ அசௌ-என்று
நிருபாதிக தேவனாகச் சொல்லக் கடவது இறே-

திநே திநே –
அர்த்த ஜ்ஞானம் உடையவனுக்கு
இந்த சப்த உச்சாரணம் காதா சித்கமாகவுமாம்
இந்த பாசுரத்தைப் பற்றுமவனுக்கு
நாள் தோறும் உச்சரிக்க வேணும் –

கிங்கரோ அஸ்மீதி ச ஆத்மாநம் தேவாயைவம் நிவேதயேத் –
நான் கிங்கரானாக வேணும் என்று
சர்வேஸ்வரன் திருவடிகளிலே
ஆத்ம சமர்ப்பணம் -பண்ணுவான் –

இவ்வித அனுஷ்டானத்துக்கு பிரயோஜனம் என் -என்னில்
விலஷணராய் இருப்பார் சொன்ன பாசுரத்தை
தேகாத்ம அபிமானிகள் சொன்னாலும்
அவர்களை நினைத்து
அவர்களைப் போலே
ஈஸ்வரன் விஷயீகரிக்கும் -என்று கருத்து –

எது போலே -என்னில்
ஓர் ஈற்று நல்ல கன்றிட்டு கறந்த பசு
பின்பு அசல் கன்றிட்டாலும் மறைத்துத்
தோல் கன்றை மடுவிக்க
பின்புத்தைக் கன்றையே நினைத்துப் பால் சுரக்குமா போலே –

——————————————————————

ஸ்ரீ ஜிதந்தே ஸ்தோத்ரம் –

ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸுசாச்யுத |

கிம் கரோஸ்மி ஹ்ருஷீகேஶ பூயோ பூயோஸ்மி கிங்கர || 15

பதவுரை —
அச்சுதா – ஆஶ்ரிதர்களை ஒருகாலும் நழுவ விடாது நோக்குமவனே,
ஹ்ருஷீகேஶ – இந்த்ரியங்களுக்கு நியாமகனான ஸர்வேஶ்வரனே,
ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸு– சிஷு வாதி மரணாந்தமான எல்லா அவஸ்த்தைகளிலும்,
கிங்கரா: அஸ்மி — தேவரீருக்கு தொண்டு பற்றிரா நிற்றீர்,
பூயோ பூயோஹா = கிங்கரோஸ்மி = ( கைங்கர்யத்திலுள்ள ஆதரத்திஶயத்தைக் குறித்தபடி )

————-

யச் ச அபராதம் க்ருதவான் அஜ்ஞாநாத் புருஷோத்தம |

மத் பக்த தி தேவேஶ தத் ஸர்வம் க்ஷந்து மர்ஹஸி || 16

பதவுரை —
புருஷோத்தமா தேவ தேவேஶா = புருஷோத்தமனான எம்பெருமானே,
அஹம் — அடியேன்,
அஜ்ஞாநாத் — அறிவில்லாமையினாலே,
அபராதம் க்ருதவாநிதி — பிழை செய்தேனென்பது யாதொன்றுண்டோ,
தத் ஸர்வம் — அத்தை எல்லாம்,
மத் பக்தா இதி — ‘இவன் நம்மடியானன்றோ’ என்று திருவுள்ளம் பற்றி,
க்ஷந்து மர்ஹஸி — க்ஷமிக்கக் கடவீர் .

————–

அஹங்கா ரார்த்த காமேஷு ப்ரீதிரத்யைவ நஶ்யது |

த்வாம் ப்ரந்நஸ்ய மே தே வர்ததாம ஶ்ரீமதி த்வயி || 17

பதவுரை —
ஹே தேவா = ஸ்வாமிந்,
த்வாம் — தேவரீரை,
ப்ரபந்நஸ்ய – ஆஶ்ரயித்தவனான,
மே — அடியேனுக்கு,
அஹங்காரார்த்த காமேஷு — கர்வமென்ன அர்த்தமென்ன காமமென்ன இவற்றிலுள்ள,
ப்ரீதிஹி – நஶையானது,
அத்யைவ –- இப்போதே,
நஶ்யது – ஓழியக் கடவது,
ஸ்ரீமதி -– ஸ்ரீய:பதியான,
த்வயி –- தேவரீரிடத்தில்,
ப்ரீதிஹி -– அன்பாவது,
வர்ததாம் – வளர்ந்தோங்குக .

———-

க்வாஹ மத்யந்த துர்புத்தி ஹி க்வ சாத்ம ஹிதவீ_ணம் |

யத்திதம் மம தேவேஶ ததாஜ்ஞாபய மாதவ || 18

பதவுரை –-
தேவேஶ = தேவாதிராஜனே,
அதந்த துர்புத்திஹி –- மிகவும் பொல்லா ஜ்ஞாந புத்தியை யுடைய,
அஹம் க்வா -– அடியேன் எங்கே,
ஆத்ம ஹித வீ_ணம் க்வா — தனக்கு நன்மை தேடிக் கொள்ளுகை என்பது எங்கே,
மாதவா -– ஸ்ரீய:பதியே,
மம -– அடியேனுக்கு,
யத் ஹிதம் -– யாதொன்று நன்மையா இருக்குமோ,
தத் ஆஜ்ஞபாய – அதனை தேவரீர் தாமே ஜ்ஞாபநம் செய்தருள வேணும் .
( மிகவும் துர் புத்தியனான அடியேன் ஸ்வ புத்தியாலே ஒரு நன்மை தேடிக் கொள்ள வல்லேனல்லேன்
ஆதலால் ஸர்வஜ்ஞநரான தேவரீரே கருத்தறிந்து கார்யம் செய்தருளவேணு மென்கிறது ) .

————-

ஸோஹம் தே தேவ தேவேஶ நார்சநாதௌ ஸ்துதௌ ந ச |

ஸாமர்த்யவான் க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ஹி ப்ரஸீத மே || 19

பதவுரை –-
தேவ தேவேஶ — ஸர்வோத்க்ருஷ்டனான எம்பெருமானே,
ஸோஹம் -– அடியேன்,
தே அர்சநாதௌ ஸ்துதௌ–- தேவரீருடைய திருவாராதநதி காரத்திலும்-ஸ்தோத்ரங்களிலும்
ந ஸாமர்த்யவான் — ஶக்தி யுடையேனல்லேன்,
( அதஹ = ஆகையினாலே )
க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ஹி -– க்ருபா குணமொன்றையே மனோ தர்மமாக வுடைய தேவரீர்,
மே –- அடியேன் திறத்தில்,
ப்ரஸீதா – ( அந்த நிர்ஹேதுக க்ருபை யடியாகவே ) இரங்கி அருள வேணும் .

——————

உபசார பதேஶேந க்ருதாந் அஹரஹர் மயா |

அபசாராந் இமான் ஸர்வாந்  ஷமஸ்வ புருஷோத்தம || 20.

பதவுரை –
புருஷோத்தமா –- வாரீர் புருஷோத்தமரே,
அஹரஹ -– நாள் தோறும்,
மயா –- அடியேனால்,
உபசாராபதேஶேந -– உபசரிக்கிற வ்யாஜத் தாலே,
க்ருதாந் –- பண்ணப்பட்ட,
இமாந் ஸர்வாநபசாரான் -– இந்த பகவதபசார பாகவதபசார அஸஹ்யாபசாரங்களெல்லாவற்றையும்,
ஷமஸ்வ — ஷமித்தருள வேணும் .

————————

ப்ரதம ஜிதந்தே ஸம்பூர்ணம்.

——-

த்விதீய ஜிதந்தே வ்யாக்யானம்

ஜிதந்தே புண்டரீகாக்ஷ பூர்ண ஷாட் குண்ய விக்ரஹ |

பராநந்த பர ப்ரஹ்மன் நமஸ்தே பரமாத்மநே || 1

பூர்ண ஷாட் குண்ய விக்ரஹ = ஜ்ஞாந ஶக்தி பலைஶ்வர்ய தேஜஸ்ஸுக் கள் என்கிற ஆறு குணங்களும் அமைந்த திரு மேனியை யுடையவரே ,
புண்டரீகாக்ஷ = செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடையவரே ,

பராநந்த = இதுக்கவ்வருகில்லை யென்னும்படி மேம்பாடுடைய ஆனந்தமுடையவரே ,
இங்ஙனே பஹுவ்ரீஹி ஸமாஸமன்றிக்கே ,
பரஶ் சாஸௌ ஆனந்தஶ்ச யென்று கர்ம தாரயமாய்
உத்தமமாந் ஆனந் தமே யென்றதாகவுமாம் ;
“ ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்யஜநாத் “ என்னக் கடவதிறே |
தத் குண ஸாரஸ்வத்வாத் தத் வ்யபதேஶம் பண்ணுகிறபடி
இங்ஙனமன்றிக்கே , பராநாநந்த யதீதி பராநந்தக யென்றாய் ,
“ யேஷ ஹ்யேவாநந்தயாதி “ என்கிறபடியே பிறரையும் தன்னோடொக்க ஆனந்திப்பிக்குமவரே யென்னவுமாம் |

பரப்ரம்ஹந் = ப்ரம்ஹ லக்ஷண மாகிறது ஜகஜ் ஜந்மாதி காரணத்வ மென்றிறே “ஜந்மாத்யஸ்யயத:“ இத்யாதி ஸூத்ரங்களாலே நிஷ்கரிக்கப்பட்டது ;
மூவுலகும் படைத்து அளித்து அழித்து -அனைத்துக்கும் ஹேது அவனே யென்கை
தே ஜிதம் = இப்படிப்பட்ட உனக்கு பல்லாண்டு;
பரமாத்மநே தே நம: = உலகனைத்துக்கெல்லாம் ஓருயிரான தேவரீரை தெண்டன் ஸமர்ப்பிக்கிறேன்

‘ஜிதம்‘ என்று வாய் படைத்த ப்ரயோஜநம் பெறுமாறு சொல்லி
‘ நம: ‘ என்று உடம்பு படைத்த ப்ரயோஜநம் பெறும்படி சொல்லுகிறது

—————

நமஸ்தே பீத வஸந நம: கடக தாரிணே |

நமோ நீலாலகா பத்த வேணீ ஸுந்தர விக்ரஹ || 2

பீத வஸந = பீதக வாடைப் பிரானே ,
கடக தாரிணே தே நம: = தோள் வளை பூண்டிரா நின்றுள்ள தேவரீருக்கு நமஸ்காரம் ;
நீலாலகா பத்த வேணீ ஸுந்தர விக்ரஹ = மை வண்ண நறுங் குஞ்சிக் குழல்களாலே ஸமைந்த வேணீ பந்தத்தாலே அழகு பெற்ற திருமேனி யுடையவனே ,
தே நம: = ஆதராதிஶயாதாம்ரேதிதம் .

————–

ஸ்புரத் வலய கேயூர நூபுராங்கத பூஷணை: |

ஷோபநைர் பூஷிதாகார கல்யாண குண வாரிதே || 3

கருணா பூர்ண ஹ்ருதய ஶங்க சக்ர கதா தர: |

அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோக்ய || 4

ஷோபநை: = அழகிய வாய் ,
ஸ்புரத் வலய கேயூர நூபுராங்கத பூஷணை: = விளங்கா நின்றுள்ள வளைகள் பாதகம் புஜ பந்தம் முதலிய திவ்யாபரண ங்களாலே ,
( அங்கதமென்றும் கேயூரமென்றும் தோள்வளைக்கு பேரா யினும் இங்கு ஸஹபார பலத்தாலே அர்த்த பேதம் கொள்ள வேணும் ,
ஓன்று தோள் வளையையும் ஒன்று புஜ வளையையும் சொல்லிற்றாகிறது ) ,
பூஷிதகார = இவ்வோ பூஷணங்களாலே அலங்க்ருதமான் திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையாய் ,
கல்யாண குண வாரிதே = வாத்ஸல் யாதி மங்கள குணங்களுக்குக் கடல் போன்றவனே ,
கருணா பூர்ண ஹ்ருதய = ஆஶ்ரிதர் திறத்திலே இரக்கம் மிக்கிரா நின்றுள்ள திருவுள்ள முடையவனே ,
ஶங்க சக்ர கதா தர = ஆஶ்ரிதர் நோவு படக் கண்டால் உடனே பரிஹரித்தருள்வதற்காக திவ்யாயுதங்களை என்றுமொக்கக் கையிலே ஏந்தி யுள்ளவனே ,
அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோக்ய = அம்ருதமும் ஆனந்தமும் நிறைந்த திருக் கண்களாலே குளிர கடாஷித்தருள வேணும் .

பகவத் விஷய மென்றால் செவி புதைக்கும்படியான இவ் விருள் தருமா ஜ்ஞாலத்திலே இங்ஙனே ஓரடியவரை லபிக்கப் பெற்றோமே ! என்று
திருக் கண்களாலே அம்ருதமும் ஆனந்தமும் புற வெள்ளமிடக் காண விரும்புகிறபடி .

——————-

க்ருஷம் க்ருதக்நம் துஷ் கர்ம காரிணம் பாப பாஜநம் |

அபராத ஸஹஸ்ராணாம் ஆகரம் கருணாகர || 5

க்ருபயா மாம் கேவலயா க்ருஹாண மதுராதிப |

விஷயார்ணவ மக்நம் மாம் உத்தர்தும் த்வம் இஹ அர்ஹஸி || 6

கருணாகரா = அருளுக்கு ஆகரமானவனே ,
மதுராதிப = “ நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராபுரீம் “ என்று
இங்குள்ளாரை வாரிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு போவதற்கு திரு மதுரையிலே வந்து திரு வவதரித்தவனே ,
க்ருஷம் = பலவகைப்பட்ட சிந்தைகளாலே உடல் மெலிந்து ,
க்ருதக்நம் = நீ எத்தனை நன்மை செய்தருளினாலும் அவற்றை ஒரு பொருளாக்கவும் மதிக்க மாட்டாவதனை ,
துஷ்கர காரிநம் = தீய செயல்களென்று ஶாஸ்த்ரங்களிலே எவை சில கர்மங் கள் க்ரஹிக்கப்பட்டிருக்கும் ,
அவற்றின் ஸ்வரூபம் என்னடி யாகவா யிற்று நிறம் பெறுவது ,
அவற்றை செய்துபோருகையே தொழிலாக உடையானே ,

பாப பாஜநம் = இப்போது செய்து போருகிற வளவேயோ ,
எந்நின்ற யோநியுமாய் கூடு பூரித்துக் கிடக்கும் பாபங்களுக்கும் களஞ் சியமாயிறே அடியேனிருப்பது .
அபராத ஸஹஸ்ராணா மாகரம் = தேவர் “ குணாநாமாகரோ மஹாந் “ என்று நாடெங்கும் புகழ் பெற்றால் போலே ,
அடியேனும் அபராத ஸஹஸ்ராணாமாகர: “ என்று விருது பிடித்துத் திரிகிறபடி பாரீர் ,
மாம் = இப்படி தேவரீருடைய நிக்ரஹ ஹேதுக்களில் அல்பமும் குறைவில்லாத அடியேனை ,
கேவலயா க்ருபயா க்ருஹாண = நிர்ஹேதுகமான க்ருபையாலே ‘ இவன் நம்மடியான் ‘ என்று திருவுள்ளம் பற்றி யருள வேணும் .
( கேவலயா ) மடி மாங்கா யிடும்படிக் கீடாக இத்தலையில் சிறிதேனும் தொங்கிற்றுண்டோ என்று தேடப் புக்கலும் கிடைப்பதொன்றில்லை காண் ,
உன்னுடைய க்ருபை யொன்றுமே ஜீவிக்க வேண்டும் கிடாய் ,
விஷயார்ணவ மக்நம் மாம் = ஶப்தாதி விஷயங்களாகிற கடலினுள்ளே அழுந்திக் கிடக்கிற அடியேனை
த்வமுத்தர்து மர்ஹஸி = தேவரீர் தாமே கரையேற்றக் கடவீர் .

——————

பிதா மாதா ஸுஹ்ருத் பந்து: ப்ராதா புத்ரஸ் த்வமேவ ஹி |

வித்யா தனஞ்ச காம்யஞ்ச நாந்யத் கிஞ்சித் த்வயா விநா || 7

பிதா = உத்பாதகனாய் ஹித காமனாயிருக்கிற பிதாவும் ,
மாதா = கர்ப தாரணம் பண்ணி ப்ரஶவ க்லேஶத்தை அநுபவித்து
அஷுசி ப்ரஸவங்க ளுக்கும் இறாயாதே ரஷித்து
உள்ளதனையும் ப்ரியமே நடத்திப் போரும் தாயும் ,
ஸுஹ்ருத் = எப்போதும் நன்மையே சிந்திக்கும் ஸகாவும் ,
பந்து: = ஓர் ஆபத்து வந்தவாறே கண்ணை துடைக்க வரும் பாந்தவ ஜ்ஞாநமும் ,
ப்ராதா = நன்மை தீமைகளுக்குத் துணை நிற்கு மவனான உடன் பிறந்தானும் ,
புத்ர: = நிரய நிஷ்டாரகனான பிள்ளையு மாகிற யெல்லாம் ,

த்வமே ஹி = “ சேலேய் கண்ணியரும் பெறும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே யினியாவாரே” என்கிறபடியே
யெல்லாஉறவு முறையும் எனக்கு நீயே காண் ,
வித்யா = இங்கு ஜீவநத்தையும் அங்கு உஜ்ஜீவநத்தையும் ,
தனம் ச = ஆபத் துக்கு உதவும் பொருளும் ,
காம்யம் ச = மற்றுமுள்ள க்ருஹ ஷேத்ர பஶ்வந் நாதி காம்ய வர்கமும் ,
த்வயா விநா அந்யத் கிஞ்சித் ந = எல்லாம் நீயே யன்றி வேறொன்றில்லை காண் அடியேனுக்கு –

——————-

யத்ர குத்ர குலே வாஸோ யேஷு கேஷு பவோஸ்து மே |

தவ தாஸ்ய ஏக போகே ஸ்யாத் ஸதா ஸர்வத்ர மே ரதி: || 8

மே = உன்னையே தஞ்சமாக பற்றின வெனக்கு ,
யத்ர குத்ர குலே வாஸா அஸ்து = பாதாள ப்ருத்வீ நரக ஸ்வர்காதிகளுள் எவ்விதத்தி லாகவுமாம் வாஸம் ,
யேஷு கேஷு பவஹ அஸ்து = ‘ யோநிஷு ’ என்றித்தனை அத்யாஹார்யம் =
ஸுர நர திர்யக் யோநிகளில் பேர் சொல்லவும் பொராததொரு யோநிகமாவும் பிறப்பிடம் ;
இதிலே ஒரு நிர்பந்தமில்லை காண் .
பின்னை அதுள்ளது யெவ் விஷயத்திலே யென் னில் ;
( தவேத்யாதி ) தேவரீருடைய ‘அடிமை என்னு ம் அக்கோயிந்மை’ என்கிற தாஸ்ய ஸாம்ராஜ்ய மென்பது யாதொன்றுண்டு ,
அது தன்னிலே யெனக்கு யெப்போதும் யெவ்விதத்தும் அபி ருசி வேண்டு மத்தனை காண் தேட்டம் |
‘ திவி வா புவி வா மமாஸ்து வாஸ: ‘ யென்பதை ஸ்மரிப்பது |

—————–

மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா கதஞ்சந |

த்வாம் விநா நாந்ய முத்திஶ்ய கரிஷ்யே கிஞ்சிதப் யஹம் || 9

மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா = நினைவுக்கு உறுப்பான நெஞ்சி னாலாவது ,
செய்கைக்குறுப்பான கரங்களினாலாவது , சொல்லுக்குறுப்பான வாக்கினாலாவது,
உத்துங்கன் விஷயத்திலே அதமன் செய்யக் கடவ செயலுக்கு உறுப்பான ஶிரஸினாலாவது ,

“ கர்மணா “ என்று இந்த்ரிய ஜந்ம வ்யாபாரத்தை சொல்லக் கடவதாகிலும்
இவ் விடத்திலே லக்ஷணயா கர்ம ஸாதநமான காரணந்தன்னை சொல்லிற்றாகிறது .
“ அர்தாத் ப்ரகரணா லிங்க தோசித்யா தர்த நிஶ்சய: “ யிறே .
ஆக , மநோ வாக் காய ஶிரஸ்ஸுக்களிலொன்றுலாவது ,

கதஞ் ச ந = எவ்வகையிலும் ,
த்வாம் விநா அந்ய முத்திஶ்ய = தேவரீரை யொழிய மற்றொருவரை யுத்தேசித்து ,
அஹம் கிஞ்சிதபி ந கரிஷ்யே = அடியேன் ஒன்றும் செய்யக் கடவனல்லேன் ,

தேவரீரை யொழிய மற்றொருவனையும் நெஞ்சாலும் நினையேன் ,
வாய் கொண்டும் பேசேன் , கையாலும் தொடேன் , தலையாலும் வணங்கேனென்கை .

கதஞ்ச ந = எப்படிப்பட்ட ஆபத்து நேர்ந்த போதிலு மென்றபடி .

—————

பாஹி பாஹி ஜகந் நாத க்ருபயா பக்த வத்ஸல |

அநாதோஹம தந்யோஹம க்ருதார்த: கதஞ்சந ||. 10

ஜகந்நாத = உலகங்கட்கு அரசே ,
பக்த வத்ஸல = ஆஶ்ரிதர்களின் குற்றங்களையே பச்சையாகக் கொள்ளுமவனே ,
க்ருபயா பாஹி பாஹி =கேவல க்ருபையினாலே ரஷித்தருள வேணும் ரஷித்தருள வேணும்.
ரக்ஷண த்வராதிஶய த்யோதநாய த்விருக்திஹி ,
அஹம் அநாத: = அடியேன் தேவரீரை யன்றி வேறொரு புகலற்றிரா நின்றேன் .
அதந்ய: = அகிஞ்சநன் ,
கதாஞ்சந அக்ருதார்த: = செய்ய வேண்டிய செயல்களில் ஏதாகிலுமொன்றையாவது சிறிது குறையவாகிலும் அநுஷ்டிக்கப் பெற் றிலேன்
ஆன பின்பு ,
க்ருபயா பாஹி = இத்தலையிலொன்றையும் ப்ரதீஷியாத க்ருபையைக் கொண்டு கார்யம் செய்யப் பாராய் .

—————-

ந்ருஶம்ஸ: பாப க்ருத் க்ரூரோ வஞ்சகோ நிஷ்டுரஸ் ஸதா |

பவார்ணவ நிமக்நம் மாம் அநந்ய கருணோததே || 11

கருணா பூர்ண த்ருஷ்டிப்யாம் தீநம் மாம் அவலோக்ய |

த்வத் அக்ரே பதிதம் த்யக்தும் தாவகம் ந அர்ஹஸி ப்ரபோ || 12

ந்ருஶம்ஸ: = காதுகன் ஆட்டு வாணியன் காண் அடியேன் ,
பாப க்ருத் = ஹிம்ஸை ஒன்று தானோ செய்து போனது ? “-நானே நாநாவித நரகம் புகு பாவம் செய்தேன் “ .
க்ரூர: = இத்தனை பாவம் செய்தும் நெஞ்சில் தான் சிறிது ஈரமுண்டோ ?
வஞ்சக: = பெரிய திரு விழிகளாலே நால்வர் நின்ற விடத்தே கையும் கர்தரியுமாய்த் திரியுமவன் காண் .
ஸதா நிஷ்டுர: = மாத்ரு காதுகனுக்கும் கை நொந்தால் ‘அம்மே’ யென்ன ப்ராப்தியுண்டு ,-அதுவுமில்லை காண் எனக்கு .
பவார்ணவ நிர்மக்நம் = பிறவிக் கடலுள் துலங்கா நிற்கிற ,
அநந்யம் = வேறு புகலற்றிருக்கிற ,
தீநம் = போர க்லேஶப் பட்டு இருக்கிற ,
மாம் = அடியேனை ,
கருணோததே = கருணைக் கடலே ,
கருணா பூர்ண த்ருஷ்டிப்யாம் அவலோக்ய = திருவருள் விஞ்சின திருக் கண்களாலே நோக்கி யருள வேணும் .
ப்ரபோ = எம்பெருமானே ,
த்வதக்ரே = தேவரீர் திருமுன்பே ,
பதிதம் = வேரற்ற மரம் போலே வீழ்ந்தவனாய் ,
தா அவகம் = ‘அஹம் மம’ என்றிருந்த நிலை குலைந்து உன்னுடையவனென்று பேர் சுமந்திரா நின்ற ,
மாம் = அடியேனை ,
த்யக்தும் ந அர்ஹஸி = கைவிடவில்லை யல்லை காண் .
( த்வதக்ரே பதிதம் ) * எத்திசையு முழன்றோடி யிளைத்து வீழ்ந்த காகா ஸுரனிலும் கெட்டேனோ ?
( த்யக்தும் நார்ஹஸி ப்ரபோ ) நிரங்குஸ ஸ்வாதந்த்ரனான வுனக்குச் செய்யக் கூடாததொன்றில்லை யேலும்
என்னை கை விடுகை உன்னுடைய செங்கோண்மைக்குச் சதிர் அன்று கிடாய்.

—————

மயா க்ருதாநி பாபாநி த்ரிவிதாநி புந: புந: |

த்வத் பாத பங்கஜம் ப்ராப்தும் நாந்யத் த்வத் கருணாம் விநா || 13

த்ரிவித பாபாநி = வாசிக காயிக மாநஸிக பேதத்தாலே மூன்று வகைப் பட்ட பாபங்களும் ,
புந: புந: மயா க்ருதாநி = ‘யத் ப்ரம்ஹ நியதாநு பவேப்யநாஶ்யம் த்த் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்து ரிஹ க்ஷணார்தே’ என்றபடியே
ஒன்றும் குறைவில்லாதபடி அடுத்தடுத்து அடியேனால் செய்து தலைக் கட்டப் பட்டன ,
த்வத் பாத பங்கஜம் ப்ராப்தும் = தேவரீருடைய திருவடித் தாமரை அடைய அணுகுவதற்கு ,
த்வத் கருணாம் விநா அந்யத் நா = நின்னருளன்றிப் புகலொன்றுமில்லை –

————————————

ஸாதநாநி ப்ரஸித்தாநி யாகாதீநி அப்ஜ லோசன |.

த்வத் ஆஜ்ஞயா ப்ர யுக்தாநி த்வாம் உத்திஷ்ய க்ருதாநி வை || 14

அப்ஜ லோசந = தாமரைக் கண்ணனே ,
த்வதாஜ்ஞயா ப்ர யுக்தாநி = “ ஶ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா “ என்கிறபடியே
தேவரீருடைய திவ்யாஜ்ஞையான ஶ்ருதி ஸ்ம்ருத்யாதிகளாலே சோதிதமான ,
யாகாதீநி ப்ரஸித்தாநி ஸாதநாநி = யாகம் முதலான ப்ரஸித்தங்களான ஸாதநங்களத்தனையும் ,
த்வாமுத்திஷ்ய க்ருதாநி = தேவரீரை யுத்தே ஸித்து செய்து முடிக்கப் பட்டன .

கீழ் ஶ்லோகத்திலே , ‘ த்ரிவிதமான பாபங்களையும் அடியேன் செய்து தலைக் கட்டினேன் ,
இனி தேவரீர் அருள் கொண்டு கார்யம் செய்யுமத்தனை ‘ என்று சொல்லி வைத்து ,

இதில் ‘தேவரீருடைய ஆஜ்ஞா சோதிதங்களான யாகாதி ஸாதநங்களைச் செய்து தலைக் கட்டினே’ னென்றால்
இரண்டும் தன்னில் சேருமோ வென்னில் ,

கீழ் ஶ்லோகத்துக்கு பொருந்துமாறு பொருள் கொள்ள வேண்டுகையாலே –
அடியேன் செய்து தலைக் கட்டிய யாகாதி ஸாதநா நுஷ்டானம் இந்த த்ரிவித பாபங்களே யாமத்தனை காண் யென்று
ஏக வாக்யார்த்தமாகக் கொள்ளக்கடவது .
யாகமாவது – பகவதாராதநம் ; “ யஜ — தேவ பூஜாயம் “ இறே
( க்ருதாநி வை ) “ நன்றாக நானிலத்தை வாழ்வித்தேன் “ என்றாப்போலே ஷோபோக்தி இருக்கிறபடி .

————-

பக்த்யைக லப்ய: புருஷோத்தமோஸௌ

ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேது: |

அகிஞ்சநோ அநந்ய கதிஶ் ஶரண்ய

க்ருஹாண மாம் க்லேஶிநம் அம்புஜாக்ஷ || 15

ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேது: = “ யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே “ இத்யாதிப்படியே
உலகங்களைப் படைத்தளித்துத் துடைக்க வல்ல ,
அஸௌ புருஷோத்தம: = புருஷோத்தமனாகிய இந்த தேவரீர்,
பக்த்யைக லப்ய: = “ பத்தராமவர்க்கலாது முத்தி முற்றலாகுமே “ என்கிறபடியே
பக்தி ஒன்றினாலேயே பெறத் தக்கர் ,
அகிஞ்சந: = இத் தலையில் பேற்றுக்குறுப்பான கைம்முதலொன்றுமில்லை .
அநந்ய கதி: = உபாயாந்தர ஶூந்யத்தை மாத்ரமல்ல , ரக்ஷகாந்தர ஶூந்யனாயு மிரா நின்றேன் ,
ஶரண்ய = ஸர்வ லோகங்களுக்கும் அநிஷ்ட நிவ்ருத்தி யையும் இஷ்ட ப்ராப்த்தியையும் பண்ணிக் கொடுக்குமவனே ,
அம்புஜா- = ஸ்வாமித்வ ஸூசகமான செந் தாமரை போன்ற திருக் கண்களை யுடைய வனே ,
க்லேஶிநம்= அவித்யாஸ் மித ராக த்வேஷா பிநிவேஸங்களாகிற க்லேஶங்களாலே பீடிதனான ,
மாம் = அடியேனை ,
க்ருஹாண = பற்றப் படுபவனாக அங்கீகரித்தருள வேணும் .

———————

தர்மார்த்த காம மோக்ஷ ஏஷு நேச்சா மம கதாசந |

த்வத் பாத பங்கஜாஸ்வாத ஜீவிதம் தீயதாம் மம || 16

தர்மார்த்த காம மோக்ஷ ஏஷு = இஷ்ட பூர்த்தாதிகளாலுண்டாகும் புண்யத்திலும் ,
புருஷார்த்த ஸாதநமான வைஶ்வர்யத்திலும் ,
ஸ்வ ப்ரயோ ஜநமான ஐஹிக போகத்திலும் ,
ஸ்வாநுபவரூப கைவல்யத்திலும்
ஸ்வ ப்ரீதிக்குறுப்பான மோக்ஷத்திலும் ,
மம = தேவரீருக்கு அத்யந்த பரதந்த்ரரான யெனக்கு எது வேண்டுவதென்னில் ,
த்வத் பாத பங்கஜாஸ்வாத ஜீவிதம் = தேவரீருடைய திருவடித் தாமரைகளை யநுபவிக்கையாகிற ஜீவநமானது ,
மம = அடியேனுக்கு ,
தீயதாம் = க்ருபையினால் , ப்ரஸாதித் தருள வேண்டும் .

—————–

காமயே தாவகத்வேந பரிசர்ய அநு வர்த்தநம் |

நித்யம் கிங்கர பாவேந பரி க்ருஹ்ணீஷ்வ மாம் விபோ || 17

தாவகத்வேந = தேவரீருக்கு பரதந்த்ரனாய் ,
பரிசர்யாநுவர்த்தநம் = கைங்கர்யம் செய்வதில் நிரதனா யிருக்கையாய் ,
காமயே = ஆசைப் படா நின்றேன்,
ஹே விபோ = ஸர்வ ஸ்வாமியே ,
மாம் = அடியேனை,
நித்யம் = மேலுள்ள காலமெல்லாம் ,
கிங்கர பாவேந = உரிய வடியனாக ,
பரி க்ருஹ்ணீஷ்வ = அங்கீகரித் தருள வேணும் .

——————-

லோகம் வைகுண்ட நாமாநம் திவ்யம் ஷாட் குண்ய ஸம்யுதம் |

அவைஷ்ணவாநாம் ப்ராப்யம் குண த்ரய விவர்ஜிதம் || 18

நித்ய ஸித்தைஸ் ஸமா கீர்ணம் த்வந்மயை: பாஞ்ச காலிகை: |

ஸபா ப்ராஸாத ஸம் யுக்தம் வநைஶ் சோபவநைர்யுதம் || 19

வாபீ கூப தடாகைஶ்ச வ்ருக்ஷ ஷண்டைஸ் ஸுமண்டிதம் |

அப்ராக்ருதம் ஸுரைர் வந்த்யம் அயுதார்க ஸம ப்ரபம் |

ப்ரக்ருஷ்ட ஸத்த்வ ஸம்பந்நம் ஸதா த்ரக்ஷ்யாமி சஷூஷா || 20

திவ்யம் = ஸ்வயம் ப்ரகாஶமாய் ,
ஷாட் குண்ய ஸம்யுதம் = ஜ்ஞாநாதி ஷாட் குண்ய விஶிஷ்டனான ஸர்வேஶ்வரனோடு கூடியதாய் ,
அல்லது, பகவத் ஸ்வரூபாதி திரோதயகமாந லீலா விபூதி போலன்றிக்கே ஸர்வேஶ்வரனுடைய ஷாட் குண்ய ப்ரகாஶகமாய் ,
அவைஷ்ணவாநாம் ப்ராப்யம் = விஷ்ணு பக்தி யில்லாதவர்களை அடைவதற்கு அஶக்யமாய் ,
குண த்ரய விவர்ஜிதம் = ஸத்வ ரஜோ தமோ ரூப குண த்ரய ஶூந்யமாய் ,
த்வந்மயை: = ஸர்வேஶ்வரனான உன்னோடு பரம ஸாம்யா பந்நர்களாய் ,
பாஞ்சகாலிகை: = அகால கால்யமாந விதத்திலே அபிகமநோ பாதானே ஜ்யாஸ்வாதாய யோகங்களாகிற ஐந்து காலங்களால் விபஜித்து பகவதாராதநம் செய்யுமவர்களான ,
நித்ய ஸித்தை: = நித்ய முக்தர் களாலே ,
ஸமாகீர்ணம் = சூழப்பட்டதாய் ,
ஸபா ப்ரஸாத ஸம்யுக்தம் = கொலு மண்டபம் உப்பரிகை முதலியவைகளோடு கூடியதாய் ,
வநை: = திவ்யகாந்தாரம் முதலிய தூரஸ்த வனங்களோடும்
உபவநைஶ்ச = ஸமீபஸ்தமான உத்யான வனங்களோடும் ,
யுதம் = கூடியிருப் பதே,
வாபீ கூப தடாகைஶ்ச = நடை வாவிகள், சிறு கிணறுகள், பெரிய குளங்கள் ஆகிய இவைகளாலும் ,
வ்ருக்ஷஷண்டை: = பலவகையான வ்ருக்ஷங்களாலும் ,
ஸுமண்டிதம் = அலங்கரிப்பதிருப்பதாய் ,
அப்ரா க்ருதம் = ப்ரக்ருதியின் விகாரங்களாக உண்டான தன்றிக்கே பஞ்சோப நிஷ்ணமாய் ,
ஸுரைர் வந்த்யம் = அயர்வறும் அமரர்களாலே ஸேவிக்கப் படுமதாய் ,
அயுதார்க ஸம்ப்ரபம் = அநேகமாயிரம் ஸூர்யர்களோ டொத்த காந்தியை யுடையதாயும் ,
ப்ரக்ருஷ்ட ஸத்த்வ ஸம்பந்நம் = ஶுத்த ஸத்வ மயமான ,
வைகுண்ட நாமாநம் லோகம் = ஸ்ரீவைகுந்த மென்கிற பரம பதத்தை ,
கதா = எப்போது ,
சஷூஷா = கண்களால் ,
த்ரக்ஷ்யாமி = கண்டு களிப்பேன்

—————–

க்ரீடந்தம் ரமயா ஸார்தம் லீலா பூமிஷு கேஶவம் |

மேகஶ்யாமம் விஶாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 21

லீலாபூமிஷு = விஹாரார்த்தமான ஸ்தலங்களில் ,
ரமயா ஸார்தம் = போக வர்தகையான பெரிய பிராட்டியாருடன் ,
க்ரீடந்தம் = விஹரியா நிற்பானாய் ,
மேகஶ்யாமம் = குளிர்ந்த மேகம் போலே ஶ்யாமளமான விக்ரஹத்தை யுடையனாய் ,
விஶாலாக்ஷம் = விஶாலமான திருக்கண்களை யுடையனாய் ,
கேஶவம் = ஆபத் காலத்தில் ப்ரஹ்ம ருத்ராதிகளை தன் மேனியில் இடம் கொடுத்து ரஷிக்கும் ஸர்வாதிகனான எம் பெரு மானை ,
சஷுஷா கதா த்ரக்ஷ்யாமி = கண்ணாரக் கண்டு ஸேவித்து ஆனந்திப்பது எப்போதோ .

————

உந்நஸம் சாரு வதநம் பிம்போஷ்டம் ஶோபிதாநநம் |

விஶால வக்ஷஸம் ஸ்ரீஶம் கம்பு க்ரீவம் ஜகத் குரும் || 22

ஆஜாநுபாஹு பரிகமுந்நதாம்ஸம் மது த்விஷம் |

விஶால நிம்ந நாபிம் தமாபீநஜகநம் ஹரிம் |

கரபோரும் ஸ்ரிய: காந்தம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 23

உந்நஸம் = உயர்ந்து அழகியதான நாசிகையை யுடையவனாய் ,
சாரு வதநம் = அழகிய திருவாயை யுடையவனாய்,
பிம்போஷ்டம் =கோவைப் பழத்தோடொத்த திருவதரத்தை யுடையவனாய் ,
ஶோபிதாநநம் = ஸமுதாய ஶோபா யுக்தமான திருமுக மண்டலத்தை யுடையவனாய் ,
விஶால நிம்ந நாபிம் = விசாலமாய் ஆழ்ந்திருப்பதான திரு வுந்தியை யுடையனாய்,
ஆபீநஜகநம் = பருத்த நிதம்ப ப்ரதேசத்தை யுடையனாய்,
விஶால வக்ஷஸம் ஸ்ரீஶம் = பெரிய பிராட்டியாருக்குக் கோயிற் கட்டட ணமான திரு மார்பை யுடையவனாய் ,
கம்பு க்ரீவம் = ஶங்கம் போன்ற திரு மிடற்றை யுடையனாய் ,
ஜகத் குரும் = ஸர்வ லோகத்துக்கும் ஶாஸ்த்ர ப்ரதாநாதிகளால் அஜ்ஞாந்ததைப் போக்குமவனாய் ,
ஆஜாநு பாஹுபரிகம் = முழங்காலளவும் நீண்ட பரிகம் போல் வர்த்துலமான திருக் கைகளை யுடையனாய் ,
உந்நதாம்ஸம் = உயரவே துத்த திருத் தோள்களை யுடையனாய் ,
மது த்விஷம் = ஆஶ்ரித விரோதியான மது வென்கிற அஶுரனை நிரஸித்த ,
கர போரும் = கையில் மணிக்கட்டு முதல் கடைசி விரல் நடுவிலுள்ள ஸ்தலம் போல்
அடி பருத்து நுனி சிறுத்து ம்ருதுவாயிருக்கும் திருத் துடைகளை யுடையனாய் ,
ஸ்ரிய: காந்தம் = பெரிய பிராட்டியாருக்கு வல்லபனாய் ,
ஹரிம் = ஆஶ்ரித ஆபத் நிவாரகனான ஸர்வேஶ்வரனை ,
கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா –கண்களால் சேவித்து ஆனந்திப்பது எப்போதோ

———————–

ஶங்க சக்ர கதா பத்மை ரங்கிதம் பாத பங்கஜம் |

ஶரச் சந்த்ர ஶதா க்ராந்த நகராஜி விராஜிதம் || 24

ஸுரா ஸுரைர் வந்த்யமாநம் ருஷிபிர் வந்திதம் ஸதா |

கதா வா தேவ மூர்தாநம் மாமகம் மண்ட யிஷ்யதி || 25

ஶங்க சக்ர கதா பத்மை ரங்கிதம் = ஶங்க ரேகை சக்ர ரேகை கதா ரேகை பத்ம ரேகை இவைகளால் அலங்க்ருதமாய் ,
ஶரச் சந்த்ர ஶதா க்ராந்த நகராஜ விராஜிதம் = அநேக ஶரத்களால் சந்த்ரர்களின் காந்தியை அதிக்ரமித்த
காந்தி பொருந்திய நக பங்க்திகளால் விளங்கா நிற்பதாய் ,
ஸுரா ஸுரைர் வந்த்யமாநம் = தேவாஶுர விபாகமற யெல்லோருக்கும் ஆஶ்ரயணீயமாய் ,
ருஷிபி: ஸதா வந்திதம் = மனன ஶீலரான ருஷிகளாலே யெப்போதும் ஸேவிக்கப் படுவதான ,
பாத பங்கஜம் = திருவடித் தாமரைகளை ,
ஹே தேவ = வாரீர் ஸர்வ ஸ்வாமியே ,
மாமகம் மூர்தாநம் = யென்னுடைய ஶிரஸ்ஸை ,
கதா வா = யெப்போது தான் ,
மண்டயிஷ்யதி = அலங்கரிப்பிக்கப் போகிறீர் |

—————-

கதா கம்பீரயா வாசா ஸ்ரியா யுக்தோ ஜகத்பதி: |

சாமர வ்யக்ர ஹஸ்தம் மாமேவம் குரு இதி வக்ஷ்யதி || 26

ஸ்ரியா யுக்த: = கைங்கர்ய வர்த்தகையான பெரிய பிராட்டியாரோடு கூடிய ,
ஜகத்பதி: = ஸர்வேஶ்வரன் ,
கம்பீரயா வாசா = மேன்மை தோற்றும்படி கம்பீரமான வார்த்தையினால் ,
சாமர வ்யக்ர ஹஸ்தம் மாம் = திரு வெண் சாமரம் பரிமாறுவதில் ஆசை பொருந்திய கைகளை யுடைய யென்னை ,
யேவம் குரு இதி = அப்படியே வெண் சாமரம் பரிமாறக் கடவாயென்று ,
கதா = யெப்போது ,
வக்ஷ்யதி = நியமிக்கப் போகிறான்

———————-

கதாஹம் ராஜ ராஜேந கண நாதேந சோதித: |

சரேயம் பகவத் பாத பரிசர்ய அநு வ்ருத்திஷு ||. 28

ராஜ ராஜேந = ராஜாதி ராஜனாய்,
கண நாதேந = பாரிஷட கண நாயகனான ஸர்வேஶ்வரனாலே ,
அஹம் = நான்,
பகவத் பாத பரிசர்ய அநு வ்ருத்திஷு = யெம்பெருமானுடைய திருவடிகளில் கைங்கர்யங்களை அநுந் யூதமாகச் செய்வதில் ,
சோதித: = நியமிக்கப் பட்டவனாய் ,
கதா = யெப்போது,
சரேயம் = கைங்கர்யங்களைச் செய்யக் கடவேன்

————–

ஶாந்தாய ச விஶுத்தாய தேஜஸே பரமாத்மநே |

நமோ பகவதே விஷ்ணோ வாஸுதேவ அமிதத்யுதே || 29

ஹே விஷ்ணோ = ஸர்வ வ்யாபகனே,
அமிதத்யுதே = நிரவதிக ஶோபா யுக்தனே ,
வாஸுதேவ = வாஸுதேவ ஶப்த வாச்யனான ஸர்வேஶ்வ ரனே ,
ஶாந்தாய = அஶநாயாபி பாப ஜந்ம ம்ருத்யு ஶோக மோஹங்களாகிற ஊர்மி ஷட்க ரஹிதனாய் ,

விஶுத்தாய = க்லேஶ கர்மாதி தோஷ ரஹிதனாய் ,
தேஜஸே = ஸர்வ லோக ப்ரகாஶகனாய்,
பகவதே = ஜ்ஞாந ஶக்த்யாதி ஷாட் குண்ய பரிபூர்ணனாய் ,
பரமாத்மநே = ஸகலாத்மாக்க ளுக்கும் அந்தராத்மதயா நின்று நியமிக்குமவனான உனக்கு ,
நம: = நிர் மமனாய் நமஸ்ஸைப் பண்ணுகிறேன்

———–

நமஸ் ஸர்வ குணாதீத ஷட் குணாயாதி வேதஸே |

ஸத்ய ஜ்ஞாந அநந்த குண ப்ரஹ்மணே பரமாத்மநே || 30

ஸர்வ குணாதீத = ஹேயங்களான ப்ராக்ருத குணங்களைக் கடந்திருக்கும் ஸர்வேஶ்வரனே ,
ஷட் குணாயாதி = எல்லா குணங்களுக்கும் ஊற்று வாயான ஜ்ஞாநாதி ஷட் குணங்களை யுடையவனாய் ,
அதி வேதஸே = ஸகல ஜகத் ஶ்ருஷ்டாவாய்,
ஸத்ய ஜ்ஞாந அநந்த குண ப்ரஹ்மணே = ஸத்யத்வ ஜ்ஞாநத்வ அநந்தத்வ ரூப குணங்களை யுடைய பரம் ப்ரம்ஹ ஶப்த வாச்யனாய் ,
பரமாத்மநே நம: = உலகங்கட்கெல்லாம் ஓருயிரான உன்னை ஶரணமடைகிறேன்

—————-

சது:பஞ்ச நவ வ்யூஹ தஶ த்வாதஶ மூர்தயே |

நமோ அநந்தாய விஶ்வாய விஶ்வாதீதாய சக்ரிநே || 31

சது: பஞ்ச நவ வ்யூஹ தஶ த்வாதஶ மூர்தயே = ஸ்ருஷ்ட்யாதிகளுக்காக ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்த வாஸுதேவாதி ரூபேண நிற்கும் நிலைகளென்ன ,
ஸத்யாச்யுதாதி பஞ்ச வ்யூஹங்களென்ன ,-பர வ்யூஹ விபவ அர்ச்சை அந்தர்யாமி -ஆகிய பஞ்ச பிரகாரங்கள் என்ன
நவ வ்யூஹங்களென்ன ,
ராம க்ருஷ்ணாத்யவதாரங்களென்ன ,
கேஶவாதி த்வாதஶ மூர்த்திகளென்ன ,
ஏவம் விதமான திவ்ய மங்கள விக்ரஹங்களை யுடை யனாய் ,
அநந்தாய = தேஶ கால வஸ்து பரிச்சேத ரஹிதனாய் ,
விஶ்வாய = ஸ்வரூப ரூப குண விபவாதிகளால் பூர்ணனாய் ,
விஶ்வாதீதாய = சேதநாசேதந விலக்ஷணனாய்,
சக்ரிநே = ஸ்வாஶ்ரித விரோதி பரிஹார்தமாக எப்போதும் கை கழலா நேமியுடைய வுனக்கு ,
நம: = நமஸ்ஸை பண்ணுகிறேன்

——————-

நமஸ்தே பஞ்ச காலஜ்ஞ பஞ்ச கால பராயண |

பஞ்ச காலைக மநஸாம் த்வமேவ கதிரவ்யய: || 32

பஞ்சகாலைஜ்ஞ = அபி கமநாதி காலங்களை யறிந்தவனே
பஞ்சகால பராயண = பஞ்ச காலங்களிலும் ஆராதிப்பவர்களுக்கு பரம ப்ராப்யனானவனே ,
தே நம: = உன்னை ஶரணமடைகிறேன் ,
பஞ்ச காலைக மநஸாம் = பஞ்சகாலாரதநம் செய்வதில் அபிநிவேஶம் உள்ளவர்களுக்கு,
த்வமேவ = தேவரீரே ,
அவ்ய்ய: = நிரபாயமான ,
கதி: = உபாயமாக வாகிறீர்

—————-

பரே வ்யோம்நி ஸ்திதம் தேவம் நிரவத்யம் நிரஞ்சநம் |

அப்ரமேயம் அஜம் விஷ்ணும் அப்ஜ நாபம் ஸுரேஶ்வரம் |.

வாக் அதீதம் பரம் ஶாந்தம் ஶரணம் த்வாம் கதோஸ்ம்யஹம் || 33

பரே வ்யோம்நி ஸ்திதம் தேவம் = பரமாகாஶ ஶப்த வாச்யமான பரம பதத்தில் தன் மேன்மை தோன்ற வீற்றிருக்குமவனாய் ,
நிரவத்யம் = ஆஶ்ரித அவத்ய ரஹிதனாய் ,
நிரஞ்ஜநம் = ப்ரக்ருதி ப்ராக்ருதரோடு ஸம்பந்தித்திருக்கச் செய்தேயும் அவைகளின் தோஷங்கள் தட்டாதவனாய் ,
அப்ரமேயம் = அபரிச்சேத்யனாய் ,
அஜம் = உத்பத்தி ரஹிதனாய் ,
விஷ்ணும் = ஸர்வ வ்யாபகனாய் ,
அப்ஜநாபம் = ஸகல ஜகதுத்பத்தி ஹேதுவான நாபீ கமலத்தை யுடையனாய் ,
ஸுரேஶ்வரம் = நித்ய ஸூரி நிர்வாஹகனாய் ,
வாகதீதம் = வாயால் புகழுகைக்கு அஶக்யமானவனாய் ,
பரம் = ஸர்வாதிகனாய் ,
ஶாந்தம் = ஜந்ம ஜரா மரணாதி தோஷ ரஹிதனான ,
த்வாம் = தேவரீரை ,
அஹம் = அகிஞ்நயாதி பரிதனான நான் ,
ஶரணம் கதோஸ்மி = ஶரணமடைகிறேன்

————

வர்யம் த்வந்த்வ அதிரிக்தம் த்வாம் கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸம் |

விஸ்வ ரூபம் விஸாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சக்ஷுஷா || 34

வர்யம் = ஸர்வ ஶ்ரேஷ்டனாய் ,
த்வந்த்வ அதிரிக்தம் = ப்ராக்ருத ஸுக து:கங்களை கடந்திருக்குமவனாய் , அல்லது சேதநாசேதந விலக்ஷணனாய் ,
கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸம் = கௌஸ்துபத்தால் விளங்கா நிற்கிற திரு மார்பை யுடையவனாய் ,
விஸ்வ ரூபம் = ஜகச் சரீரகனாய் ,
விஸாலாக்ஷம் = விஶாலங்களான திருக் கண்களை யுடையனான ,
த்வாம் = உன்னை ,
சக்ஷுஷா கதா த்ரக்ஷ்யாமி = கண்களால் எப்போது கண்டு களிக்கப் போகிறேன்

————-

மோக்ஷம் ஸாலோக்ய ஸாரூப்யம் ப்ரார்த்தயேந கதாசந |

இச்சாம் யஹம் மஹா பாஹோ ஸாயுஜ்யம் தவ ஸுவ்ரத || 35

ஸாலோக்ய ஸாரூப்யம் மோக்ஷம் = பரம பத ப்ராப்தியாகிற மோக்ஷத்தையும் ,
அபஹத பாப்மத்வாதி குண அஷ்டக ப்ராதுர் பாவாதி ரூப மோக்ஷத்தையும் ,
கதாசந = ஒரு காலும் ,
ந ப்ரார்த்தயே = விரும்ப மாட்டேன்,
மஹா பாஹோ = ஸமஸ்த லோகங்களும் ஒதுங்கும்படியான திருத் தோள்களை யுடையவனே ,
ஸுவ்ரத = ஆஶ்ரித லக்ஷணமே வ்ரதமாக வுடைய ஸர்வேஶ்வரனே ,
தவ = தேவரீருடைய ,
ஸாயுஜ்யம் = கைங்கர்யமாகிற மோக்ஷத்தையே
இச்சாமி = விரும்புகின்றேன்
ஸாயுஜ்யமென்று கூட்டரவாய் கூடினானல்லது கைங்கர்யம் ஸித்தியாதாகையால் ,
கைங்கர்யத்தால் பிறக்கும் போக்யதையில் ஸாம்யத்தைச் சொல்லுகிறதாகவுமாம்

————–

ஸகல ஆவரண அதீத  கிங்கரோஸ்மி தவ அநக |

புந: புந: கிங்கரோஸ்மி தவாஹம் புருஷோத்தம || 36

ஸகல ஆவரண அதீத  = தஶோத்தரமான ஸப்தாவரணத்துக்கும் அவ் வருகானவனே ( பரமபதத்தில் எழுந்தருளி யிருக்குமவனே ),
அநக = ஆஶ்ரிதர் தோஷங்களைக் காண்கை யாகிற குற்றமொன்றும் இல்லாதவனே ,
தவ கிங்கரோஸ்மி = தேவரீருக்கு யாவதாத்மபாவி கைங்கர்யம் செய்யப் பெறுவேனாக வேணும் .
ஹே புருஷோத்தமா = ஆஶ்ரிதரிடம் பச்சையை அபேஷியாமல் நிரவதிக ஐஶ்வர்ய ப்ரதாநனான ஸர்வேஶ்வரனே ,
தவ புந: புந: கிங்கரோஸ்மி = தேவரீருக்கு நித்ய கிங்கரராக வேணும் ,
கைங்கர்யத்தில் ஆதராதிஶயத்தலே அடுத்தடுத்துச் சொல்லுகிறபடி –

—————

ஆஸநாதி அநுயாகாந்தம் அர்சநம் யந் மயா க்ருதம் |

போக ஹீநம் க்ரியா  ஹீநம் மந்த்ர ஹீநம் அபக்திகம் |

தத் ஸர்வம் க்ஷம யதாம் தேவ தீநம் மம ஆத்ம ஸாத்குரு || 37

ஆஸநாதி அநுயாகாந்தம் = மந்த்ராஸநம் முதலாக போஜ்யாஸன பர்யங்காஸநம் முடிவாக நடுவிலுண்டான ,
அர்சநம் யத: = ( தேவரீர் விஷயமாக ) யாதொரு ஆராதநமானது ,
மயா க்ருதம் = என்னால் செய்யப் பட்டதோ ,
தத் ஸர்வம் = அவை யெல்லாம் ,
போக ஹீநம் = உபசாரங்களால் குறைந்திருந்தாலும் ,
க்ரியா ஹீநம் = செய்ய வேண்டும் வ்யாபாரங்களால் குறைந்திருந்தாலும் ,
மந்த்ர ஹீநம் = மந்த்ரங்களால் குறைவு நேர்ந்திருந்தாலும் ,
அபக்திகம் = பக்தி இல்லாமல் செய்திருந்தாலும் ,
க்ஷம யதாம் = பொறுத்தருள வேணும் ,
தேவ = ஸர்வாதிகனே ,
தீநம் மாம் = ஏழையான என்னை ,
ஆத்ம ஸாத்குரு = ( கேவல க்ருபையாலே ) தேவரீருக்கு கிங்கரனாக்கி யருள வேணும்

—————-

இதி ஸ்தோத்ரேண தேவேஶம் ஸ்துத்வா மது நிகாதிநம் |

யாக அவஸாந ஸமயே தேவ தேவஸ்ய சக்ரிண: |

நித்யம் கிங்கர பாவேந ஸ்வாத்மாநம் விநி வேதயேத் || 37

சக்ரிண: = ஆஶ்ரித விரோதி நிவர்தகமான திருவாழியை யுடைய ,
தேவ தேவஸ்ய = ஸர்வேஶ்வரனுடைய ,
யாக அவஸாந ஸமயே = திரு வாராதந பூர்த்தி காலத்தில் ,
இதி ஸ்தோத்ரேண = ஏவம் ரூபமான ஸ்தோத்ரத்தாலே ,
மது நிகாதிநம் = மதுவென்கிற அஶுரனை நிரஸித்த ஸர்வேஶ்வரனை ,
ஸ்துத்வா = ஸ்தோத்ரம் பண்ணி ,
ஸ்வாத்மாநம் = தன்னை ,
நித்யம் கிங்கர பாவேந = நித்ய கிங்கரனாக ,
விநிவேதயேத் = ஸமர்ப்பிக்கக் கடவன்

———-

த்விதீய ஜிதந்தே ஸம்பூர்ணம் |

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாரத பகவான் – ஸ்ரீ ஸநாகாதி பகவான் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -கன்னி பூரட்டாதி திரு அவதாரம் —

September 24, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை  அண்ணன் ஸ்வாமிகள் தனியன்

ஸ்ரீரம்ய வரமௌநீந்த்ர ஸ்ரீபாதாப்ஜமதுவ்ரதம்
வ்ருஷபே மைத்ரபே ஜாதம் வரதார்ய மஹம் பஜே

ஸகல வேதாந்த ஸார அர்த்த பூர்ணாஸயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம்
ருசிரஜாமாத்ரு யோகிந்த்ர பாதாஸ்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸம்ஸ்ரயே

வாழி திருநாமம்

தேன் அமரு மலர் முளரித் திருத் தாள்கள் வாழியே

திருச் சேலை இடை வாழி திருநாபி வாழியே
தானமரு மலர்க் கண்கள் தனியுதரம் மார்பம்
தங்கு தொங்கும் உபவீதம் தடந்தோள்கள் வாழியே
மான பரன் மணவாள மாமுனி சீர் பேசும்
மலர்ப் பவள வாய் வாழி மணி முறுவல் வாழியே
ஆனனமுந்திருநாமம் அணி நுதலும் வாழியே
அருள் வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

பேராத நம்பிறப்பைப் போக்க வல்லோன் வாழியே
பெரிய பெருமாள் அருளால் பெருமை பெற்றோன் வாழியே
ஏராரு நன்மதியின் ஏற்றமுள்ளோன் வாழியே
எதிராசன் தரிசனத்தை எடுத்துரைப்போன் வாழியே
பாரார நன் புகழைப் படைக்க வல்லோன் வாழியே
பகர் வசன பூடணத்தின் படியுடையோன் வாழியே
ஆராமஞ்சூழ்கோயில் அவதரித்தோன் வாழியே
அவனி தொழுங் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன்

சகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ர உத்பவா நாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பதாஸ்ரயம்
வரத நாராயண மத் குரும் ஸம்ஸ்ரயே

1389-புரட்டாசி பூரட்டாதி -திரு அவதாரம்
திருத் தகப்பனார் ஸ்ரீ தேவராஜ தோழப்பர்
இவருக்கு 7 சகோதரர்கள்
இயல் பெயர் ஸ்ரீ வரத நாராயண குரு
இவருடைய பால்யத்திலே திருத் தகப்பனார் ஸ்ரீ பரமபதம் ஆச்சார்யர் திருவடி அடைய
ஸ்ரீ கோயில் மரியாதை கிடைக்காமல் போனது
ஸ்ரீ ராமானுஜர் ஸ்வப்னத்தில் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்கத் தெரிவித்து அருளினார்
1371-ஸ்ரீ நம் பெருமாள் ஸ்ரீ கோயிலுக்குத் திரும்பினாலும் 1415 வரை ஸ்ரீ கோயில் மரியாதைகள்
இவர் வம்சத்துக்கு கிடைக்க வில்லை
ஸ்ரீ மா முனிகளே பின்பு ஏற்பாடு செய்து அருளினார்
ஸ்ரீ அழகிய ஸிம்ஹர் திரு ஆராதனப் பெருமாளையும் தந்து அருளினார்
கீழ் உத்தர வீதி 16 கால் மண்டபத்தையும் இவருக்கு மடமாகக் கொடுத்து அருளினார்

ஸ்ரீ மா முனிகளின் நியமனப்படி இவருடைய சிற்றண்ணர் குமாரர் அப்பாச்சியார் அண்ணா –
தமையனார் போர் ஏற்று நாயனாரையும் ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயர் இடம் ஆஸ்ரயிக்கச் செய்தார்
ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா – ஸ்ரீ காஞ்சி புர கோயில் நிர்வாகம் செய்து வந்தார்

இவரே ஸ்ரீ உத்தம நம்பியையும்
ஸ்ரீ அப்பிள்ளார்
ஸ்ரீ அப்பிள்ளை
ஸ்ரீ எறும்பி அப்பா -ஆகியோரையும் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்கச் செய்தார்

இவர் ஸ்ரீ மா முனிகள் விஷயமான கண்ணி நுண் சிறுத்தாம்பு
ஸ்ரீ வர வர முனி அஷ்டகம்
ஸ்ரீ ராமாநுஜார்யா திவ்யாஜ்ஞா –நூல்களையும்
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை தனியனையும் அருளிச் செய்துள்ளார்
இவருக்கு ஸ்ரீ பகவத் சம்பந்தாச்சார்யார் -என்னும் விருது ஸ்ரீ மா முனிகள் தந்து அருளினார்
ஸ்ரீ நம் பெருமாள் இவருக்கு ஜீயர் அண்ணன் -என்று அருளப்பாடிட்டார் –
ஸ்ரீ காஞ்சி பேர் அருளாளர் இவருக்கு ஸ்வாமி அண்ணன் -என்று அருளப்பாடிட்டார்
ஸ்ரீ மா முனிகள் சரம தசையில் இவர் கையாலேயே தளிகை சமைக்கச் செய்து விரும்பி அமுது செய்து மகிழ்ந்தாராம்

இவர் வம்சத்தின் பெருமையால் ஸ்ரீ மா முனிகள் இவர் வம்சத்தாரை கீழ் உள்ள 7 கோத்ர த்துக்குள்ளேயே
சம்பந்தம் செய்து கொள்ள அறிவுறுத்தி அருளினாராம்
1-ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -வாதூல கோத்ரம்
2-ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம் -ஸ்ரீ வத்ச கோத்ரம்
3-ஸ்ரீ முடும்பை அம்மாள் வம்சம் -கௌண்டின்ய கோத்ரம்
4-ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள் வம்சம் -ஹரிதா கோத்ரம்
5-ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் வம்சம் -ஆத்ரேய கோத்ரம்
6-ஸ்ரீ குமாண்டூர் இளைய வல்லி வம்சம் -கௌசிக கோத்ரம்
7-ஸ்ரீ வங்கி புரத்து நம்பி வம்சம் -பரத்வாஜ கோத்ரம்

ஸ்ரீ கோயில் அண்ணனின் அஷ்ட திக் கஜங்கள்

1-ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் –இவர் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருத் தம்பியார்
2-ஸ்ரீ திருக் கோபுரத்து நாயனார் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -ஸ்ரீ அழகிய சிங்கர் திருத்தம்பியார்
3-ஸ்ரீ கந்தாடை நாயன் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருக் குமாரர் –1408-மார்கழி உத்திரட்டாதி
4-ஸ்ரீ சுத்த சத்வம் அண்ணன் -இவர் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் -இவரது திரு மருமகன்
5-ஸ்ரீ திருவாழி ஆழ்வார் பிள்ளை -இவரும் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் –
6-ஸ்ரீ ஜீயர் நாயனார் -ஸ்ரீ கோமடத்தாழ்வான் வம்சம் -ஸ்ரீ மா முனிகள் திருப்பேரானார்
7-ஸ்ரீ ஆண்ட பெருமாள் நாயனார் -ஸ்ரீ குமாண்டூர் ஆச்சான் பிள்ளை திருப்பேரானார்
8-ஸ்ரீ ஐயன் அப்பா –

ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் வம்ச ஸ்ரீ குன்னத்து ஐயன் இவர் இடத்திலும்
இவர் குமாரர் பேரர்கள் இடத்திலும் அன்பு பூண்டு பல கைங்கர்யங்களைச் செய்தாராம்

இவர் விபவ வருஷம் -1448- சித்திரை மாதம் கிருஷ்ண பக்ஷ த்ருதீயை அன்று
ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகளை அடைந்தார் –

தேன் அமரு மலர் முளரித் திருத் தாள்கள் வாழியே
திருச் சேலை இடை வாழி திரு நாபி வாழியே
தானமரு மலர்க்கண்கள் தனி யுதரம் மார்பம்
தங்கு தொங்கும் உப வீதம் தடந்தோள்கள் வாழியே
மானபரன் மணவாள மா முனி சீர் பேசும்
மலர்ப் பவளம் வாய் வாழி மணி முறுவல் வாழியே
ஆனனமுந் திரு நாம மணி நுதலும் வாழியே
அருள் வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

————–

இவர் மாமுனிகளின் பெருமையைக் கூறும் கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னும் 13 பாசுரங்கள் கொண்ட நூலையும் இயற்றினார்.
மேலும் வரவரமுநி அஷ்டகம், ராமானுஜார்ய திவ்யாஞ்ஞா என்னும் நூல்களையும் செய்தருளினார்.

மணவாளமாமுனிகளின் உபதேசரத்ன மாலைக்கு கீழ்க்காணும் தனியனை அருளிச் செய்தார்.
முன்னந் திருவாய்மொழிப்பிள்ளை தாம் உபதேசித்த நேர்
தன்னின் படியைத் தணவாத சொல் மணவாளமுனி
தன்னன்புடன் செய் உபதேசரத்தின மாலைதன்னை
தன்நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே

இவர் உத்தம நம்பி, எரும்பியப்பா, அப்பிள்ளை, அப்பிள்ளார் ஆகியோரையும் மாமுனிகளிடம் ஆஸ்ரயிக்கச் செய்தவர்.

இவர்
கந்தாடையப்பன்,
திருகோபுரத்து நாயனார்,
சுத்தசத்வம் அண்ணன்,
திருவாழி ஆழ்வார் பிள்ளை,
கந்தாடை நாயன்,
ஜீயர் நாயனார்,
ஆண்ட பெருமாள் நாயனார்,
ஐயன் அப்பா
ஆகிய ஸ்வாமிகளை தம்முடைய அஷ்டதிக்கஜங்களாக நியமித்தார்.

அண்ணன் என அழைக்கப்பட காரணம்:

அண்ணன் ஸ்வாமி ஒரு நாள் கூட தவற விடாமல், அரங்கரின் விஸ்வரூப தர்சனத்துக்கும்-புறப்பாட்டுக்கும் வந்து விடுவார்.
ஸ்ரீரங்கத்திலுள்ள சிலர் இவரிடம், ஒரு நாள் அரங்கரைச் சேவிக்க முடியா விட்டால் என்னாகும் என்றனர்.
இவர் அப்படித் தவறினால், தம் கண்களை இழந்து விடுவேன் என்றார்.
இவரைச் சோதிக்க விரும்பிய அவர்கள் இவருக்குத் தெரியாமல் கோவில் அர்ச்சகர்களிடம் கூறி, ஒரு நாள்
அதிகாலையில் மிகச் சீக்கிரமாகவே விஸ்வரூபம் நடத்திவிட முடிவு செய்தனர்.
அப்படிச் செய்ய முயன்றபோது, அவர்களால் கோவில் கர்ப்பக் கிரகக் கதவுகளைத் திறக்க முடியாமல் ஏதோ அடைத்திருந்தது போலிருந்தது.
அவர்கள் திறக்க முயன்று கொண்டிருந்த போது, வரதநாராயண குருவின் திருமாளிகையில் அவரது தம்பி அவரை,
“அண்ணா,எழுந்திருங்கள், விஸ்வரூபத்துக்கு நேரமாகிவிட்டது” என்று எழுப்பினார்.
அண்ணன் உடனே எழுந்திருந்து அவசரமாக நீராடிவிட்டு, திருமண்காப்பு இட்டுக்கொண்டு பெரிய கோவிலுக்கு விரைந்தார்.
தம்பியும் அவருடன் சென்றார். கோவில் த்வஜஸ்தம்பத்துக்கு அருகில், இருவரும் தண்டனிட்டு நமஸ்ஹாரம் செய்தனர்.
அதன்பின் தம்பியைக் காணவில்லை.

கோவில் கதவுக்குப் பக்கத்தில் சென்றவுடன், அனைவரும் வியக்கும்படி கோவில் கதவுகள் தாமாகவே திறந்து கொண்டன.
அங்கிருந்தோர் அனைவரும் வரத நாராயணரின் பக்தி நிஷ்டையைக் கண்டு போற்றி வணங்கினர்.
திருவரங்கர் அர்ச்சக முகேன ஆவேசித்து,தாமே அவர் திருமாளிகைக்குச் சென்று ‘அண்ணா’என்று எழுப்பியதைச் சொல்லி,
இனி மேல் வரதநாராயணரும், அவர் சந்ததிகளும் ‘அண்ணன்’ என்று அழைக்கப்படுவர் என்று அருளினார்.
அன்றிலிருந்து அவர் ‘கோவில் கந்தாடை (முதலியாண்டான் திருக்குமாரரின் பட்டப் பெயர்) அண்ணன்’ என்றழைக்கப்பட்டார்.
அவரின் சந்ததியினருக்கும் இந்தக் ‘கோவில் அண்ணன்’ என்னும் பெயர் வழங்கலாயிற்று.

நம்பெருமாள் இவருக்கு ஜீயர் அண்ணன் என்று அருளப்படிட்டார். காஞ்சிப் பேரருளாளர் இவருக்கு ஸ்வாமி அண்ணன் என்று அருளப்பாடிட்டார்.

அண்ணன் ஸ்வாமிகளும் அவர் சகோதரர்களும் ஸ்ரீரங்கத்தில் கோவில் மரியாதைகளுடன் புகழ் பெற்ற ஆசார்யர்களாக விளங்கி வருகையில், மணவாள மாமுனிகள் ஆழ்வார் திருநகரி யிலிருந்து ஸ்ரீரங்கம் எழுந்தருளினார். அரங்கனின் அநுக்ரஹமும், அவருடைய தேஜஸும் ஸ்வாமி மாமுனிகளுக்கு பல சீடர்களைப் பெற்றுத் தந்தது.

ஒரு நாள் அண்ணன் ஸ்வாமி அவர் திருமாளிகை திண்ணையில் ஓய்வெடுத்து இருக்கையில், மாமுனிகள் மடத்திலிருந்துஒரு ஸ்ரீவைஷ்ணவர் வந்து கொண்டிருப்பதைப் பார்த்த அண்ணன் அவரை அழைத்து, நீர் யார்? எங்கிருந்து வருகிறீர்?என்று கேட்டார். அவர் தம் பெயர் சிங்கரையர் என்றும்,அருகில் உள்ள வள்ளுவ ராஜேந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் பெரியஜீயரிடம் (மாமுனிகள்) சீடராக விரும்பி வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். அதற்கு அண்ணன் ஸ்வாமி, ஸ்ரீரங்கத்தில் பல ஆசார்யர்கள் இருக்கும் போது,ஏன் மாமுனிகளிடமே சீடராக வேண்டும் என்றார். சிங்கரையர் அது பெருமாளின் திருவுள்ளம் என்றும்,பரம ரஹஸ்யம் என்றும் மேற்கொண்டுஎதுவும் சொல்ல முடியாதென்றும் கூறிவிட்டார்.

இதைக் கேட்டு ஆச்சர்யப்பட்ட அண்ணன், அவரை உள்ளே அழைத்து பிரசாதம்,தாம்பூலம் அளித்து அன்றிரவு அவர் திருமாளிகையிலேயே தங்கும்படி சொன்னார். அன்றிரவு மேலும் அவரிடம் விவரம் கேட்க, அவரும் அந்த அரிய வைபவத்தைச் சொன்னார். அவர் தாம் மாமுனிகள் மடத்துக்கும், மற்ற திருமாளிகைகளுக்கும் காய்கறிகள் முதலானவற்றைக் கொடுத்து வருவதாகவும், மாமுனிகள் அவற்றை மடத்தில் சேர்க்கும் முன்,அவரிடம்”இவை எங்கே விழைகின்றன?யார் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள்?யார் அறுவடை செய்கிறார்கள்” என்று பலவாறு கேட்டுத் திருப்தி யடைந்த பின்பே கொடுக்கச் சொன்னார் என்றார். அவை ஸ்ரீவைஷ்ணவர்களின் தோட்டத்தில் விளைந்ததாகவும்,அதன் தொடர்பான வேலைகளைச் செய்பவர்களும் ஸ்ரீவைஷ்ணவர்களே;சிலர் மாமுனிகளின் சீடர்களும் ஆவார்கள் என்று மாமுனிகளிடம் சிங்கரையர் சொன்னாராம்.

மாமுனிகள் அவரிடம் பெரிய பெருமாளைச் சேவித்து ஊர் திரும்புமாறு,அருளியதால் கோவிலுக்குச் சென்ற அவருக்கு அர்ச்சகர் தீர்த்தம், சடாரி, பிரசாதம் சாதித்து, அபய ஹஸ்தமும் அளித்தார். மாமுனிகளின் ஆசார்ய சம்பந்தமும் விரைவில் கிட்டும் என்று ஆசீர்வதித்தார். சிங்கரையர் மீண்டும் மாமுனிகள் மடத்துக்குச் சென்று அவரிடம் நன்றி கூறி விடைபெற்றுச் சென்றாராம்.

செல்லும் வழியில் மடத்திலிருந்து கொடுத்தனுப்பிய பிரசாதத்தை உட்கொண்டதாகவும், ஆசார்ய பிரசாத மகிமையால் அவரது ஆத்மா சுத்தியடைந்தது என்றார். அன்றிரவு, கனவில் அவர் பெரியபெருமாள் சந்நிதியில் சேவித்துக் கொண்டிருப்பது போலவும், அப்போது பெருமாள், அவர் சயனித்திருக்கும் ஆதிசேஷனைக் காட்டி “அழகிய மணவாள ஜீயர் (மாமுனிகள்) ஆதிசேஷனுக்குச் சமம்; நீர் அவர் சிஷ்யனாகக் கடவது” என்று அருளினார் என்று சொல்லி முடித்தார். இதைக் கேட்டுப் பெரிதும் வியந்தார் அண்ணன் ஸ்வாமி. இந்த வைபவம் அண்ணன் மாமுனிகளிடம் ஆஸ்ரயிப்பதற்கான முதல் தூண்டுகோலாக இருந்தது.

சிங்கரையர் வைபவத்தைக் கேட்டு அதையே எண்ணிக் கொண்டு உறங்கிவிட்டார் அண்ணன்.அன்றிரவு அவரும் ஒரு கனவு கண்டார்!அந்தக் கனவில் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மாடியிலிருந்து இறங்கி வந்து இவரைச் சவுக்கால் அடித்தார்!பிறகு இவரையும் கூட்டிக் கொண்டு மாடிக்குச் சென்றார்; அங்கு ஒரு சந்யாசி மிகவும் கோபமாக அமர்ந்திருந்தார். அவரும் அண்ணனைச் சவுக்கால்அடித்தார்;அழைத்துச் சென்ற ஸ்ரீவைஷ்ணவர் சந்யாசியிடம்”இவன் சிறுபிள்ளை; தான் செய்வதறியாது செய்து விட்டான்” என்றார்.

சந்யாசியும் சாந்தமடைந்து அண்ணனை அழைத்துத் தம் மடிமீது அமரவைத்து “நீயும், உத்தமநம்பியும் தவறு இழைத்து விட்டீர்கள்” என்றார். “மாமுனிகளின் பெருமை அறியாது தவறிழைத்து விட்டேன் அடியேனை மன்னியுங்கள்” என்று வேண்டினார் அண்ணன்.அந்த சந்யாசி”நாம்ஸ்ரீபாஷ்யகாரர் ராமாநுஜர், இந்த ஸ்ரீவைஷ்ணவர் முதலியாண்டான், நாமே ஆதிசேஷன்; இங்கு மணவாள மாமுனிகளாக அவதரித்திருக்கிறோம்.நீரும் உம்சொந்தங்களும், அவரிடம் சிஷ்யர்களாக அடைந்து உய்யப் பாருங்கள்” என்றார்.

கனவு கலைந்து திடுக்கிட்டு விழித்த அண்ணன் ஸ்வாமியின் கண்களிலும், மனத்திலும் ஆனந்தம் பொங்கியது! ஜகதாசார்யரையும், தம் குலபதி முதலியாண்டானையும் சேவித்த ஆனந்தம்!! உடையவரே தம்மைத் திருத்திப் பணிகொண்டு, மாமுனிகளை ஆசார்யராக காட்டிக் கொடுத்த பேறு பெற்ற ஆனந்தம்!!!

மாமுனிகள் கோவில் அண்ணனை தம் அஷ்ட திக்கஜங்களுள் ஒருவராக நியமித்தார். இடைக்காலத்தில் பெரிய கோவிலில் கந்தாடையார்களுக்கு நின்று போன சில மரியாதைகளை மீண்டும் பெற்றுத் தந்தார் மாமுனிகள். அண்ணனுக்கு பகவத் விஷயத்தில்

(திருவாய்மொழி) இருந்த ஞானத்தினால் அவருக்கு “பகவத் சம்பந்த ஆசார்யர்” என்னும் பட்டம் சாற்றினார். கந்தாடை அப்பன், சுத்த சத்வம் அண்ணன் மற்றும் பல ஆசார்யர்களை அண்ணனிடம் ஆஸ்ரயித்து பகவத் விஷ்ய காலட்சேபம் கேட்குமாறு செய்தார். இவ்வாறு பலகாலம் பெரிய பெருமாளுக்கு கைங்கரியங்கள் புரிந்தார்.

மாமுனிகள் இறுதிக்காலத்தில் இவர் திருக்கரங்களினால் செய்த தளிகையை விரும்பி உகந்து அமுதுண்டு மகிழ்ந்தார்.

இவர் விபவ வருடம் கி.பி. 1448 சித்திரை மாதம் கிருஷ்ண பட்ச திருதியை அன்று ஆசார்யன் திருவடி அடைந்தார்.

பேராத நம் பிறப்பை பேர்க்க வல்லோன் வாழியே
பெரிய பெருமாளால் அருள் பெற்றோன் வாழியே
ஏராரு நன் மதியின் ஏற்றமுள்ளோன் வாழியே
எதிராசன் தரிசனத்தை எடுத்துரைப்போன் வாழியே
பாரார நன் புகழை படைக்க வல்லோன் வாழியே
பகர் வசன பூடணத்தின் படி யுடையோன் வாழியே
ஆராமாஞ்சூழ் கோயில் அவதரித்தோன் வாழியே
அவனி தொழும் கந்தாடை யண்ணன் என்றும் வாழியே!!!🙏🙏🙏

புண்ணிய நற் புரட்டாசி பூரட்டாதி
மண்ணில் உதித்த மறையோனே – எண்ணாதியாம்
கன்னி மதிள்சூழ் கோயில் கந்தாடை அண்ணனே
இன்னும் ஒரு நூற்றாண்டிரும்.

ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி தொட்டையாசார்யர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம் –சித்திரை அனுஷம் –

ஸ்வாமி ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 ஸிம்ஹாசனாதிபதிகளுள் 72 ஆம் ஸிம்ஹாசனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ கோயில் கந்தாடை குமாண்டூர் இளையவில்லியாச்சான் ஸ்வாமி திருவம்சத்தில் அவதரித்து திருமாளிகையின் ஸமாஸ்ரயண குருபரம்பரையின் 23 ஆம் ஸ்வாமியாக எழுந்தருளியிருந்த ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி தொட்டையாசார்யர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம்

தனியன்:
ஸ்ரீ கௌசிகாந்வய ஸுதார்ணவ பூர்ண சந்த்ரம்
ஸ்ரீ லக்ஷ்மணார்ய குருவர்ய ஸுதம் வரேண்யம்|
தஸ்மாதவாப்த நிகமாந்த ரஹஸ்ய போதம்
ஸ்ரீமந் மஹா குருமஹம் ஸரணம் ப்ரபத்யே||

வாழி திருநாமம்:
வாழியிராமாநுசாரியன் வண்கமலத் தாளடைந்த வாழி
தொட்டையாரியன் தாள் வாழியவே
வாழியரோ தென்குருகூர் மாறன் திருவாய்மொழிப் பொருளை
இங்கு உலகோற்கு ஈந்தருளும் சீர்

சித்திரையில் அனுஷநாள் சனித்த வள்ளல் வாழியே
சீராரும் இளையவில்லி திருக்குலத்தோன் வாழியே
பக்தியுடன் பூதூரான் பதம் பணிவோன் வாழியே
பதின்மர் கலைப் பொருளனைத்தும் பகருமவன் வாழியே
நித்தியமும் அரங்கர் பதம் நெஞ்சில் வைப்போன் வாழியே
நீள் வசன பூடனத்தின் நெறியுடையோன் வாழியே
எத்திசையும் அடியவர்கட்கு இதமுரைப்போன் வாழியே
இளையவில்லி தொட்டையாரியன் இணை அடிகள் வாழியே

பொன்னரங்கம் வாழ பூதூரான் தாள் வாழ
தன்னிகரில் ஆரியர் நற்றாள் வாழ – மன்னுலகில்
தொன் நெறி சேர் இளைய வில்லி தொட்டையாரியனே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்.

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கோயில் கந்தாடையப்பன் ஸ்வாமிகள் -கன்னி மகம் திரு அவதாரம் —

September 23, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடையப்பன் ஸ்வாமிகள் -தனியன்

வரதகுரு சரணம் சரணம் வரவர முநிவர்ய கந க்ருபா பாத்ரம் |
ப்ரவகுண ரத்ண ஜலதிம் ப்ரணமாமி ஸ்ரீநிவாஸ குருவர்யம் ||
தேசிகம் ஸ்ரீநிவாஸாக்யம் தேவராஜ குரோஸ் ஸுதம் |
பூஷிதம் ஸத் குணைர் வந்தே ஜீவிதம் மம ஸர்வதா||

திருநக்ஷத்திரம்: புரட்டாசி (கன்னி) மகம்

தீர்த்தம்: கார்த்திகை சுக்ல பஞ்சமி

அவதார திருத்தலம்: ஸ்ரீ ரங்கம்

ஆசாரியன்: மணவாளமாமுநிகள்

பிரபந்தம் : வரவரமுநி வைபவ விஜயம்

————–

நம் வர்த்தமான ஸ்வாமி -ஸ்ரீ ப்ரணதார்த்தி ஹராச்சார்யர் ஸ்வாமிகள் தனியன்

வாதூல அந்வய வார்தீந்தும் ராமானுஜ குரோ ஸூதம்
தத் ப்ராப்த உபய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

————–

எறும்பியப்பா மணவாளமாமுநிகளின் அன்றாட வழக்கங்களைக் கொண்டாடும்
தனது பூர்வ தினசர்யையில் கீழ்க்கண்டவாறு மிகவும் அழகாக சாதிக்கிறார் ,

பார்ச்வத: பாணி பத்மாப்யாம் பரி க்ருஹ்ய பவத் ப்ரியௌ
விந்யஸ் யந்தம் சநைர் அங்க்ரீ ம்ருதுலௌ மேதிநீதலே (பூர்வ தினசர்யை 4 )

இந்த சுலோகத்தில் எறும்பியப்பா மணவாளமாமுநிகளை பார்த்து இவ்வாறாகக் கூறுகிறார் ,
“தேவரீரின் அபிமான சிஷ்யர்களை (கோயில் அண்ணன் மற்றும் கோயில் அப்பன் )
இருபுறங்களிலும் தேவரீரின் திருக்கரங்களான தாமரைகளாலே பிடித்து,
தேவரீரின் திருவடித் தாமரைகளை மேதினியில் மெல்ல மெல்ல ஊன்றி எழுந்தருளுகிறீர் “.

தினசர்யைக்கான தனது வியாக்யானத்தில், திருமழிசை அண்ணாவப்பங்கார்,
“இந்த சுலோகத்தில் இரண்டு அபிமான சிஷ்யர்கள் என்று எறும்பியப்பா  -கோயில் அண்ணன் மற்றும் கோயில் அப்பன் -என்று காட்டி அருள்கிறார்

கோயில் அண்ணனின் பெருமைகள் எல்லாம் அறிந்த பலர் , அவரிடத்திலே தஞ்சம் அடைய விரும்பினர்.
“காவேரி தாண்டா அண்ணனாய் ” ,கோயில் அண்ணன் எழுந்தருளி இருந்ததால் ,
அவர் தனது திருத் தம்பியாரான கோயில் அப்பனை , பல இடங்களுக்கு சென்று அனைவரையும் திருத்தி பணி கொள்ள நியமித்தார்.
இதனை சிரமேற்கொண்டு கோயில் அப்பன் தானும் திருவரங்கத்திலிருந்து பல இடங்களுக்கு சென்று பலரை பணி கொண்டார்.

————-

திரு முடி வர்க்கம்

1-எம்பெருமானார் -திரு நக்ஷத்ரம் – சித்திரை திருவாதிரை
2-முதலியாண்டான் -திரு நக்ஷத்ரம் – சித்திரை -புனர்வசு –
3-கந்தாடையாண்டான் -திரு நக்ஷத்ரம் -மாசி புனர்வசு –
4-துன்னு புகழ் கந்தாடைத் தோழப்பர்–திரு நக்ஷத்ரம் -ஆடி பூரட்டாதி
5-ஈயான் ராமானுஜாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -புரட்டாசி -திருவோணம்
6-திருக் கோபுரத்து நாயனார் -திரு நக்ஷத்ரம் -மாசி -கேட்டை
7-தெய்வங்கள் பெருமாள் -திரு நக்ஷத்ரம் -ஆவணி -திருவோணம்
8-தேவராஜ தோழப்பர் -திரு நக்ஷத்ரம் –சித்திரை- ஹஸ்தம்
9-பெரிய கோயில் கந்தாடை அண்ணன்-திரு நக்ஷத்ரம் -புரட்டாசி -பூரட்டாதி

10-பெரிய கோயில் கந்தாடை அப்பன் -திரு நக்ஷத்ரம் -புரட்டாசி மகம்
தீர்த்தம் -கார்த்திகை சுக்ல பஞ்சமி

11-அப்பு வய்ங்கார் -திரு நக்ஷத்ரம் -வைகாசி -திருவோணம்
தீர்த்தம் -மார்கழி கிருஷ்ணாஷ்டமி
12-அப்பூவின் அண்ணன் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -சித்திரை – மூலம்
தீர்த்தம் –மாசி -கிருஷ்ண பக்ஷ த்ருதீயை
13-அப்பூவின் அண்ணன் வேங்கடாச்சார்யார்-திரு நக்ஷத்ரம் -சித்திரை -விசாகம் –
14-சாரீரிக தர்ப்பணம் அண்ணன் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆனி -ஸ்வாதி –
15-பிரணதார்த்தி ஹராச்சார்யர் –
16-வேங்கடாச்சார்யார் –
17-அப்பூர்ண அப்பங்கார் வேங்கடாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -ஆனி -அனுஷம்
18-அப்பூர்ண அப்பங்கார் வரதாச்சார்யர் –
19-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஸ்வாதி –
20-வரதாச்சார்யர்

22-வேங்கடாச்சார்யார்
23-வரதாச்சார்யர்
24-பிரணதார்த்தி ஹராச்சார்யர்
25-பெரிய அப்பன் வேங்கடாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -சித்திரை -கார்த்திகை –
26-பெரிய அப் பூர்ண அப்பயங்கார் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆடி -விசாகம்
27-வேங்கடாச்சார்யார் –
28-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -பங்குனி மகம்
29-பெரிய ஸ்வாமி வேங்கடாச்சார்யார் -ஆனி ரோஹிணி
30-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆவணி -உத்திரட்டாதி
தீர்த்தம் -மார்கழி சுக்ல பக்ஷ பிரதமை

31-வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -மாசி -மூலம்
தீர்த்தம் -புரட்டாசி -சிக்கலை பக்ஷ தசமி

32-அப்பன் ராமானுஜாசார்யார்–திரு நக்ஷத்ரம்-மார்கழி மூலம்

ஐப்பசி சுக்ல பக்ஷ சதுர்தசி – கோவில் கந்தாடை வதுல தேசிக அப்பன் ராமானுஜாச்சார் ஸ்வாமி தீர்த்தம்

அவதார ஸ்லோகம்
ஸ்ரீ மத் கைரவணீ சரோ வரதடே ஸ்ரீ பார்த்த ஸூத உஜ்ஜ்வல
ஸ்ரீ லஷ்ம்யாம் யுவவத்சரே சுப தனுர் மூலே வதீர்ணம் புவி
ஸ்ரீ வாதூல ரமா நிவாஸ ஸூகுரோ ராமாநுஜாக்யம் குணை
ப்ராஜிஷ்ணும் வரதார்ய சத் தனய தாம் பிராப்தம் பஜே சத் குரும்

ஸ்வாமி தனியன் –
வாதூல அந்வய வார்தீந்தும் ராமானுஜ குரோ ஸூதம்
தத் ப்ராப்த உபாய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

ஸ்ரீ மத் வாதூல வரதார்ய குரோஸ் தனூஜம்
ஸ்ரீ வாஸ ஸூரி பத பங்கஜ ராஜ ஹம்ஸம்
ஸ்ரீ மந் நதார்த்தி ஹாரா தேசிக பவுத்ர ரத்னம்
ராமானுஜம் குரு வரம் சரணம் ப்ரபத்யே

ஸ்வாமி வாழித் திரு நாமம்
சீர் புகழும் பாஷியத்தின் சிறப்புரைப்போன் வாழியே
செய்ய பகவத் கீதை திறன் உரைப்பான் வாழியே
பேர் திகழும் ஈடு நலம் பேசிடுவோன் வாழியே
பெற்ற அணி பூதூருள் பிறங்கிடுவோன் வாழியே
பார் புகழும் எட்டு எழுத்தின் பண்பு உரைத்தோன் வாழியே
பண்பு மிகு மூலச் சீர் பரவ வந்தோன் வாழியே
ஆர்வமுடன் சீடர்க்கே அருள் புரிவோன் வாழியே
அன்பு மிகு ராமானுஜர் அடியிணைகள் வாழியே

ஸ்வாமி நாள் பாட்டு –

பூ மகளின் நாதன் அருள் பொங்கி மிக வளர்ந்திடும் நாள்
பூதூர் எதிராசா முனி போத மொழி பொலிந்திடு நாள்
நேம மிகு சிட்டர் இனம் நேர்த்தியாய்த் திகழ்ந்திடு நாள்
நீள் நிலத்துள் வேத நெறி நீடூழி தழைத்திடு நாள்
பா மனம் சூழ் மாறன் எழில் பாடல் இங்கு முழங்கிடு நாள்
பார் புகழும் வயிணவத்தின் பண்பு நிதம் கொழித்திடு நாள்
சேம மிகு ராமானுஜர் தேசிகர் இவண் உதித்த
செய்ய தனுர் மதி மூலம் சேர்ந்த திரு நன்னாளே —

—————

ஸ்ரீ ஸ்வாமி திருக்குமாரர்கள் மூவர்

33-ஜ்யேஷ்ட திருக்குமாரர் -ஸ்ரீ பிரணதார்த்தி ஹராச்சார்யர் –திரு நக்ஷத்ரம் -மார்கழி -விசாகம் –

ஸ்ரீ ப்ரணார்த்தி ஹரா சாரியார் –நம் வர்த்தமான ஸ்வாமி திரு நக்ஷத்ரம் -மார்கழி விசாகம்

தனியன்
வாதூலான்வய வார் தீந்தும் ராமானுஜ குரோஸ் ஸூதம்
தத் ப்ராப்த உபய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

மார்கழி விசாகத்தில் வந்து உதித்தான் வாழியே
மா வளரும் பூதூரான் வண் கழல் பணிந்தோன் வாழியே
பேர் திகழும் பேர் அருளாளன் பதம் பணிவோன் வாழியே
மறையோர் தொழும் தக்கானை மனனம் செய்வோன் வாழியே
ஆராமம் சூழ் அரங்க நகர் அப்பன் போற்றுமவன் வாழியே
ஈங்கு வாதூல குலத்து வந்து உதித்தோன் வாழியே
ஆர்வமுடன் அருளிச் செயலை ஆதரிப்போன் வாழியே
ஆர்த்த புகழ் ப்ரணதார்த்தி ஹரர் அடியிணைகள் வாழியே

வண் புதுவை நகர்க்கோதை சீர் அருளைச் சேர்ந்து இருப்பான் வாழியே
பூவார் மணம் கமழும் புல்லாணி தொழுது எழுவோன் வாழியே
கண்ணனூர் கண்ணபுரம் தொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
தனுர் விசாகத்தில் வந்து உதித்த வள்ளல் வாழியே
தெண்டிரை சூழ் திருவல்லிக்கேணியில் அவதரித்தோன் வாழியே
தான் உகந்த எதிராசன் கழல் தொழுவோன் வாழியே
அண்ணல் அருளாளன் அடி அடைந்தோன் வாழியே
அப்பன் ப்ரணதார்த்தி ஹரர் திருவடிகள் அவனியில் வாழியே

————-

ஸ்ரீ வாதூல குலத் தோன்றல் ஸ்ரீ முதலியாண்டானுக்கு
ஆறு திருக் குமாரத்திகள் -ஒரு திருக் குமாரர்

ஆறு திருக் குமாரத்திகளை -74- ஸிம்ஹாசனபதிகளான
முடும்பை நம்பி
முடும்பை அம்மாள்
ஆஸூரிப் பெருமாள்
கிடாம்பிப் பெருமாள்
கொமாண்டூர் இளைய வல்லி யச்சான்
வங்கி புரத்து நம்பி
வம்சத்தில் வந்த திருக் குமாரர்களுக்கு திருமணம் முடித்தார்

மாசி புனர்வஸு திருநக்ஷத்ரத்தில் கந்தாடை ஆண்டான் -திருக் குமாரர் அவதாரம்

கந்த வாடை -சொல்லே -கந்தாடை -என்று மருவிற்று –
அணுக்கச் சேவகம் செய்ததால் கந்த வாடை-நறுமணம் வீசும் பொன்னாடை – போல் கமழ்ந்தவர்

அவர் திருக் குமாரருக்கு பச்சை வாரணப் பெருமாள் பெயரைச் சூட்ட
அரங்கன் கந்தாடை தோழப்பர் -என்று மறுபெயர் சார்த்தி அருளினான் –

கந்தாடை தோழப்பருக்கு நான்கு திருக்குமாரர்கள்
பெரிய வரதாச்சார்யர்
சிறிய வரதாச்சார்யர்
ஈயன் ராமானுஜாச்சார்யர்
அம்மாள் -என்கிற தேவராஜ குரு –தோன்ற

அரங்கன் –
பெரிய வரதாச்சார்யருக்கு –பெரிய ஆயி –என்றும்
சிறிய வரதாச்சார்யருக்கு –சிறிய ஆயி -என்றும்
திரு நாமம் இட்டுப் பணி கொண்டு அருளினார் –தாய் போல் பரிந்து பணி செய்ததால் ஆயி –

ஈயன் ராமானுஜாச்சார்யருக்கு –
திருக் கோபுரத்து நாயனார் -நரசிம்மாச்சார்யார் -என்ற திருக்குமாரரும்
அவர்க்குப் பின் தேவப்பெருமாளும் தோன்றினார்கள்

திருக் கோபுரத்து நாயனாருக்கு –
பெரிய அண்ணன்
சிற்றண்ணன்
தெய்வங்கள் பெருமாள் தோழப்பர் –என்ற மூவர் அவதரித்தனர்

மூன்றாவது திருக் குமாரர் -தெய்வங்கள் பெருமாள் தோழப்பர்-ஆவணி திருவோணத்தில் அவதரித்தவர்
இவருக்கு
போரேற்று நாயன்
அழைத்து வாழ்வித்த பெருமாள் அண்ணர்
தேவராஜ தோழப்பர் -அவதரிக்க

மூன்றாவது திருக் குமாரரான தேவராஜ தோழப்பரை வாதூல தேசிக பதம் அளித்து ஸ்ரீ கார்யம் நிர்வஹிக்கச் செய்து அருளினார்

தேவராஜ தோழப்பருக்கு
போரேற்று நாயன்
நாராயண அப்பை
அழைத்து வாழ்வித்த பெருமாள்
வரத நாராயண குரு –புரட்டாசி பூரட்டாதி –
ஸ்ரீ நிவாஸாச்சார்யர்
திருக்கோபுரத்து நாயனார் என்னும் அழகிய சிங்கர்
தோழப்பர்
ஈயான் –என்பதாக எண்மர் திரு அவதரித்தனர்

எண்மரில் வரத நாராயண குருவே -வாதூல தேசிகர் பட்டம் பெற்றார்

கூர நாராயண ஜீயரும் கூர குலத்துப் பட்டரும் முதலியாண்டானின் முன் வரிசையைத் தள்ளி
தங்களை முற்படுத்திக் கொண்டதால் -திருவோலக்கம் -கோஷ்டிக்கு -எழுந்து அருள முடியாமல் தனித்து
பெரிய பெருமாளை சேவித்து வர
நம் பெருமாள் இவரை அண்ணனாக அபிமானித்து அருளினான்
மணவாள மா முனிகளால் மீண்டும் வாதூல தேசிகர் பொறுப்பு ஏற்றார்

தோழப்பரின் ஐந்தாவது திருக்குமாரரே நம் அப்பன் ஸ்வாமிகள்
இவர் திரு அவதாரம் -புரட்டாசி மகம்

திரு நக்ஷத்ர தனியன்
ஆங்கிரஸே வர்ஷர் க்கே கன்யா ராசிங்கதே த்ரயோதஸ்யாம்
ஜாதம் மகாக்ய தாரே ப்ரணமாமி ஸ்ரீ நிவாஸ குரு வர்யம்

ஸ்ரீ நிவாஸ -கைங்கர்ய ஸ்ரீ யின் இருப்பிடம் என்றவாறு
தனது திருத் தமையனாரையே ஆச்சார்யராகப் பற்றி இருந்தார்

மா முனிகளின் இடம் கொண்ட ஞான பக்தி வைராக்யங்களாலே
வரவர முனி கன கிருபா பாத்ரம் -என்று போற்றப் பட்டவர் –
இவர் மா முனிகளுக்கு உஸாத் துணையாக இருந்த பக்தி பாங்கினை –
வரவர முனி வைபவ சம்பூ –நூலில் காணலாம்

வரத குரு சரணவ் சரணம் வரவர முனி வர்ய கன க்ருபா பாத்ரம்
ப்ரவர குண ரத்ன ஜலதிம் ப்ரணமாமி ஸ்ரீ நிவாஸ குரு வர்யம்

வரத குரு சரணவ் சரணம் -என்று சரம பர்வ நிஷ்டையில் இருந்தவர்

கோயில் அன்னான் -காவேரி கடவா கந்தாடை அண்ணன் -என்று ஸ்ரீ ரெங்கத்தை விட்டு வெளியேறாமல்
கைங்கர்யம் ஒன்றிலே ஊன்றி இருந்தார்

ஆகையால் கந்தாடை வம்சத்து சிஷ்யர்களை உஜ்ஜீவிக்க பல இடங்களுக்குச் செல்லும் பொறுப்பை நம் அப்பன் ஸ்வாமிகள் மேற்கொண்டார்

நாயக்க மன்னர் காலத்தில் சேர்க்கையை அடுத்த திருமேனியில் காஞ்சியின் நினைவாக
தேவராஜன் -பேர் அருளாளன் -திரு நாமம் விளங்க
பெரும் தேவித் தாயார் சமேதராய் ஸ்ரீ கல்யாண வரத ராஜப்பெருமாளை இத்தலத்தில் எழுந்து அருளிச் செய்தான் –
இது முதல் இத்தலம் வரத நாராயண புரம் -என்று வழங்கலாயிற்று –
பின்னர் நம் ஸ்வாமி அப்பன் வழித்தோன்றலான அப்பூர்ண ஐயங்கார் ஸ்வாமியிடம்
செப்பேடுடன் வழங்கப் பெற்று வழிபாட்டுக்கு உரிய நில புலன்களும் மானியமும் வழங்கப் பட்டன –

அப்பூர்ண ஐய்யங்காருக்கு இரண்டு திருக் குமாரர்கள்
மூத்தவர் -வரதாச்சார்யர்
இளையவர் –ப்ரணதார்த்தி ஹரர்
ஸ்ரீ அப்பன் ஸ்வாமியின் ஆறாவது தலைமுறை இது –
இத்தலை முறையில்
திருமணி ஸ்வாமி திருமாளிகை என்றும்
அப்பன் வேங்கடாச்சார்யார் திருமாளிகை என்றும் இரண்டாக்கப் பிரிந்தது

இந்த புகழ் பெற்ற அப்பன் வேங்கடாச்சார்யார் காலத்தில் ஸ்ரீ எறும்பி அப்பா திருவாராதனப் பெருமாளான சக்கரவர்த்தி திருமகன்
எழுந்து அருளி அருளினார்
ஸ்ரீ சோளிங்க புரம் 2 வது தீர்த்த மரியாதையும் இத் திருமாளிகைக்கு ஏற்படுத்தப் பட்டு இன்றும் தொடர்கிறது –

அப்பன் வேங்கடாச்சார்யர் திருக் குமாரர் ப்ரணதார்த்தி ஹராச்சார்யர் காலத்தில்
ஸ்ரீ காஞ்சிபுரம்
ஸ்ரீ பெரும்பூதூர்
ஸ்ரீ வில்லிபுத்தூர் –முதலான இடங்களில் திருமாளிகைகள் ஏற்படுத்தப் பட்டன –

ப்ரணதார்த்தி ஹராச்சார்யரின் திருக்குமாரர் வரதாச்சார்யர்
அவருக்கு வழித் தோன்றல் இன்மையால் திருமணி ஸ்வாமி கிளையில் உத்தம சீலர் கோயில் கந்தாடை வாதூல தேசிக அப்பன் ஸ்வாமியின்
மூன்றாவது திருக் குமாரர் ஸ்ரீ ராமானுஜாச்சார்யரை ஸ்வீ காரம் பெற்று திருமாளிகை பொலிவடைந்தது-

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் வாழித் திரு நாமம்

எந்தை மணவாள மா முனி இணை அடியோன் வாழியே
எழில் கந்தாடை அப்பனுக்கு ஹிதம் உரைத்தான் வாழியே
அந்தமில் சீர் திருவரங்கத்து அமர்ந்த செல்வன் வாழியே
ஆர்ந்த புகழ் சடகோபன் அருள் பெறுவோன் வாழியே
கந்தாடைக் குலம் விளங்கும் கருணை வள்ளல் வாழியே
கன்னியில் பூரட்டாதி கனிந்து உதித்தோன் வாழியே
பந்தம் அறும் எதிராசன் பதம் பணிவோன் வாழியே
பாராள் கந்தாடை அண்ணன் பதம் இரண்டும் வாழியே

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் வாழித் திரு நாமம்

எந்தை மணவாள மா முனி இணை அடியோன் வாழியே
எழில் கந்தாடை அப்பனுக்கு ஹிதம் உரைத்தான் வாழியே
அந்தமில் சீர் திருவரங்கத்து அமர்ந்த செல்வன் வாழியே
ஆர்ந்த புகழ் சடகோபன் அருள் பெறுவோன் வாழியே
கந்தாடைக் குலம் விளங்கும் கருணை வள்ளல் வாழியே
கன்னியில் பூரட்டாதி கனிந்து உதித்தோன் வாழியே
பந்தம் அறும் எதிராசன் பதம் பணிவோன் வாழியே
பாராள் கந்தாடை அண்ணன் பதம் இரண்டும் வாழியே

———

நாள் பாட்டு

சீர் மலி நான்மறை அந்தணர் சிந்தை சிறந்து மகிழ்ந்திடு நாள்
தென் அரங்கம் முதல் நல் பதி கண் மிகு தேசு பொலிந்திடு நாள்
பார் தனிலே வர மா முனி தன்னருள் பாத்திரமாகிய நாள்
பாடியமும் திரு மந்த்ரமும் தினம் பாயொளி மேவுறு நாள்
தார் மலி மார்பர் அழைத்து வாழ்வித்தவர் சதிர் மிக ஓங்கிய நாள்
தக்க புகழ் வாதூலர் குலத்தவர் சந்ததம் வாழ்வுறு நாள்
கார் மலி வண் கைக் கருணையில் அப்பன் காசினியில் தோன்றிய நாள்
கன்னி தனில் திரு மா மகம் என்னும் கவினுறு தனி நாளே

———

வெண்பா

மந்திரங்கள் வாழ மணவாள முனி வாழ யுயர்
எந்தை எதிராசன் எழில் வாழ சந்தமுடன்
மன்னு புகழ்க் கந்தாடை மன்னன் எனும் அப்பனே
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ நாலாயிரம் முன்னடி பின்னடி சேவா க்ரமம் –ஸ்ரீ முதலாயிரம் —

September 21, 2022

ஸ்ரீ திருப்பல்லாண்டு

பல்லாண்டு பல்லாண்டு–அடியோமோடும் நின்னோடும்
வாழாட் பட்டு நின்றீர் –ஏழாட் காலும் பழிப்பிலோம்
ஏடு நிலத்தில் இடுவதன் –நாடு நகரமும் நன்கு அறிய
அண்டக் குலத்துக்கு –தொண்டக் குலத்தில் உள்ளீர்
எந்தை தந்தை தந்தை –திருவோணத் திரு விழவில் அந்தி
தீயில் பொலிகின்ற –மாயப் பொரு படை வாணன்
நெய்யிடை நல்லதோர் –மெய்யிட நல்லதோர்
உடுத்துக் களைந்த –விடுத்த திசைக் கருமம்
எந்நாள் எம்பெருமான் –செந் நாள் தோற்றி
அல் வழக்கு ஒன்றுமில்–நல் வகையால் நமோ
பல்லாண்டு என்று –பல்லாண்டு என்று நவின்று

————–

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி

வண்ண மாடங்கள் சூழ் –எண்ணெய் சுண்ணம்
ஓடுவார் விழுவார் –பாடுவார்களும்
பேணிச் சீருடை –ஆண் ஒப்பார்
உறியை முற்றத்து –செறி மென் கூந்தல்
கொண்ட தாளுறி –விண்ட முல்லை
கையும் காலும் –ஐய நா வழித்தாளுக்கு
வாயுள் வையகம் -பாய சீருடை
பத்து நாளும் கடந்த –மத்த மா மலை
கிடக்கில் தொட்டில் –ஒடுக்கிப் புல்கில்
செந்நலார் வயல் சூழ் -மின்னு நூல்

சீதக் கடலுள் –பேதைக் குழவி
முத்தும் மணியும் –எங்கும் பத்து விரலும்
பணைத் தோள் இள வாய்ச்சி –இணைக் காலில் வெள்ளி
உழந்தாள் நறு நெய் — பழந்தாம்பால் ஓச்ச
பிறங்கிய பேய்ச்சி –மறம் கொள் இரணியன்
மத்தக் களிறு –அத்தத்தின் பத்தா நாள்
இருங்கைம் மத களிறு –நெருங்கு பவளமும்
வந்த மதலை –நந்தன் மதலைக்கு
அதிரும் கடல் நிற வண் –பதறப் படாமே
பெரு மா வுரலில் –குரு மா மணிப் பூண்
நாள்களோர் நாலைந்து –வாள் கொள் வாள் எயிறு
மைத்தடம் கண்ணி –நெய்த்தலை நேமியும்
வண்டமர் பூங்குழல் –அண்டமும் நாடும்
என் தொண்டை வாய் –ஆய்ச்சியர் தம் தொண்டை
நோக்கி யசோதை –வாக்கும் நயனமும்
விண் கொள் அமரர்கள் –திண் கொள் அசுரரை
பருவம் நிரம்பாமே –உருவு கரிய
மண்ணும் மலையும் –வண்ணம் எழில் கொள்
முற்றிலும் தூதையும் -பற்றிப் பறித்து
அழகிய பைம் பொன்னி –மழ கன்றினங்கள்
சுருப்பார் குழலி –விருப்பாள் உரைத்த

மாணிக்கம் கட்டி –பேணி யுனக்கு
உடையார் கன மணி –விடையேறு காபாலி
எந்தம் பிரானார் –இந்திரன் தானும்
சங்கின் வலம் புரியும் –அங்கண் விசும்பில்
எழிலார் திரு மார்பிற்கு –வழுவில் கொடையான்
ஒதக் கடலில்–மா தக்கவென்று
கானார் நறுந்துழாய் –தேனார் மலர் மேல்
கச்சொடு பொற் சரிகை –அச்சுதனுக்கு என்று
மெய்திமிருநானம் –வெய்யக் கலைப்பாகி
வஞ்சனையால் வந்த –செஞ்சொல் மறையவர்

தன் முகத்துச் சுட்டி –என் மகன் கோவிந்தன்
என் சிறுக் குட்டன் –அஞ்சன வண்ணனோடு
சுற்றும் ஒளி வட்டம் –வித்தகன் வேங்கட வாணன்
சக்கரக்கையன் –தக்கது அறுதியேல்
அழகிய வாயில் –குழகன் சிரீ தரன்
தண்டோடு சக்கரம் –உண்ட முலைப்பால் அறாக் கண்டாய்
பாலகன் என்று –மேல் எழுப் பாய்ந்து
சிறியன் என்று என் இள –சிறுமை பிழை கொள்ளில்
தாழியில் வெண்ணெய் –ஆழி கொண்டு யுன்னை எறியும்
மைத்தடம் கண்ணி –ஒளி புத்தூர் வித்தகன் –

யுய்ய யுலகு படைத்த –செய்யவள் நின்னகலம்
கோளரியின் யுருவம் –காள நன் மேகமவை
நம்முடை நாயகனே –விம்ம வளர்ந்தவனே
வானவர் தாம் மகிழ –தேனுகனும் முரனும் திண்
மத்தளவும் தயிரும் –முத்தின் இள முறுவல்
காயா மலர் நிறவா –ஆயமறிந்து பொருவான்
துப்புடையார்கள் தம் –தப்பின பிள்ளைகளை
உன்னையும் ஓக்கலையில் –மன்னு குறுங்குடியாய்
பாலொடு நெய் தயிர் –நீல நிறத்து அழகார்
செங்கமலக் கழலில் –மங்கல ஐம்படையும்
அன்னமும் மீன் யுருவும் –அன்ன நடை மடவாள்

மாணிக்கக் கிண் கிணி —பேணிப் பவள வாய்
பொன்னரை நாணொடு –என்னரை மேல் நின்று இழிந்து
பன் மணி முத்தின் –நின் மணி வாய் முத்து இலங்க
தூ நிலா முற்றத்தே –நீ நிலா நின் புகழா நின்ற
புட்டியில் சேறும் –சட்டித் தயிரும்
தாரித்து நூற்றுவர் –பாரித்த மன்னர் பட
பரந்திட்டு நின்ற –கரந்திட்டு நின்ற
குரக்கினத்தாலே –அரக்கர் அவிய
அளந்திட்ட தூணை –உளம் தொட்டு இரணியன்
அடைந்திட்ட அமரர்கள் –வடம் சுற்றி
ஆட் கொள்ளத் தோன்றிய –வேட்கையால் சொன்ன

தொடர் சங்கிலிகை –உடன் கூடிக் கிண் கிணி
செக்கரிடை நுனி –அக்கு வடமுடுத்து ஆமைத்
மின்னுக் கொடியுமோர் –மின்னில் பொலிந்ததோர்
கன்னற் குடம் திறந்தால் –தன்னைப் பெற்றெற் குத்தன்
முன்னலோர் வெள்ளி –பன்னி யுலகம் பரவி யோவா
ஒரு காலில் சங்கு ஒரு –பெருகா நின்ற வின்ப
படர் பங்கய மலர் –கடுஞ்சேக் கழுத்தின்
பக்கங் கரும் சிறுப் –மக்கள் உலகினில் பெய்து அறியா
வெண் புழுதி மேற் பெய்து –ஒண் போதலர் கமல
திரை நீர்ச் சந்திர –பெரு நீர்த் திரை எழு
ஆயர் குலத்தினில் –வேயர் புகழ் விட்டு சித்தன்

பொன்னியில் கிண் கிணி –மின்னியல் மேகம்
செங்கமலப் பூவில் –சங்கு வில் வாள் தண்டு
பஞ்சவர் தூதனாய் –அஞ்சப் பணத்தின் மேல்
நாறிய சாந்தம் –ஊறிய கூனினை
கழல் மன்னர் சூழ –சுழலைப் பெரிதுடை
பேரொக்கப் பண்ணி –காரொக்கு மேனி
மிக்க பெரும் புகழ் –சுக்கிரன் கண்ணை
என்னிது மாயம் –மன்னு நமுசியை
கண்ட கடலும் –இண்டைச் சடை முடி
துன்னிய பேர் இருள் –பின்னிவ் வுலகினில்
நச்சுவார் முன்னிற்கும் –மச்சணி மாடம்

வட்டு நடுவே –சொட்டு சொட்டென்ன
கிண் கிணி கட்டி –தன் கணத்தாலே
கத்தக் கதித்து –கொத்துத் தலைவன்
நாந்தகம் ஏந்திய –வேந்தர்களுட்க
வெண் கலப் பத்திரம் –பண் பல பாடி
சத்திரம் ஏந்தி –கத்திரியர் காண
பொத்த உரலை –மெத்தத் திரு வயிறு
மூத்தவை காண –வாய்த்த மறையோர்
கற்பகக் காவு –நிற்பன செய்து
ஆய்ச்சி யன்றாழிப் பிரான் –ஈத்த தமிழிவை

மெச்சூது சங்கம் –பத்தூர் பெறாதன்று
மலை புரை தோள் மன் –பார்த்தன் சிலை வளைய
காயு நீர் புக்கு –வேயின் குழலூதி
இருட்டில் பிறந்து போய் –புரட்டி யன்னாள் எங்கள்
சேப்பூண்ட –சோப்பூண்டு துள்ளி
செப்பிள மென் முலை –துப்பமும் பாலும்
தத்துக் கொண்டாள் –கொத்தார் கருங்குழல்
கொங்கை வன் கூனி –எங்கும் பரதற்கு அருளி
பதக முதலை வாய் –உதவப் புள்ளூர்ந்து
வல்லாள் இலங்கை –சொல்லார்ந்த வப்பூச்சி

அரவணையாய் ஆயர் ஏறே –வரவும் காணேன்
வைத்த நெய்யும் –எத்தனையும் செய்ய
தந்தம் மக்கள் –உந்தையாருன் திறத்து
கஞ்சன் தன்னால் –அஞ்சினேன் காண்
தீய புந்திக் கஞ்சன் –தாயர் வாய்ச் சொல்
மின்னனைய நுண் –என்ன நோன்பு நோற்றாள்
பெண்டிர் வாழ்வர் –வண்டுலாம் பூங்குழலினார்
இரு மலைப் போல் –ஒரு முலையை வாய்
அங்கமலப் போதகத்தில் –அங்கம் எல்லாம் புழுதி
ஓட வோடக் கிண் கிணி –ஆடியாடி யசைந்து யசைந்து
வாரணிந்த கொங்கை –பாரணிந்த தொல் புகழான்

போய்ப் பாடுடைய –பேய்ப் பால் முலை யுண்ட
வண்ணப் பவள மருங்கு –எண்ணற்கு அரிய பிரானே
வையம் எல்லாம் பெறும் –உய்ய இவ்வாயர் குலத்துக்கு
வண நன்றுடைய –இணை நன்று அழகிய
சோத்தம் பிரான் என்று –பேர்த்தும் பெரியன
விண்ணெல்லாம் கேட்க –புண்ணேதும் இல்லை
முலை ஏதும் வேண்டேன் –சிலை ஓன்று இறுத்தாய்
என் குற்றமே என்று — வன் புற்று அரவின் பகை
மெய்யென்று சொல்லுவார் –செய்தன சொல்லி
காரிகையார்க்கும் உனக்கும் –சேரியில் பிள்ளைகள்
கண்ணைக் குளிர –உண்ணக் கனிகள் தருவன்
வா வென்று சொல்லி -நாவற் பழம் கொண்டு
வார் காது தாழப் பெருக்கி –பாரார் தொல் புகழான்

வெண்ணெய் அளைந்த –எண்ணெய் புளிப் பழம்
கன்றுகளோடுச் செவியில் — நின்ற மராமரம் சாய்
பேச்சி முலை யுண்ண –காய்ச்சின நீரொடு
கஞ்சன் புணர்ப்பினில் –மஞ்சளும் செங்கழு நீரின்
அப்பம் கலந்த சிற்றுண்டி –செப்பிள மென் முலையார்கள்
எண்ணெய்க் குடத்தை –உண்ணக் கனிகள்
கறந்த நற் பாலும் –சிறந்த நற்றாய்
கன்றினை வாலோலை –நின் திறத்தேன் அல்லேன்
பூணித் தொழுவினில் –நாண் எத்தனையும்
கார் மலி மேனி நிறைத்து –பார் மலி தொல் புதுவை

பின்னை மணாளனை –என்னையும் எங்கள்
பேயின் முலையுண்ட –காயா மலர் வண்ணன்
திண்ணக் கலத்தில் –அண்ணல் அமரர்
பள்ளத்தில் மேயும் –புள்ளிது வென்று
கற்றினம் மேய்த்து –உற்றன பேசி
கிழக்கில் குடி மன்னர் –விழிக்கும் அளவிலே
பிண்டத் திரளையும் –அண்டத்து அமரர் பெருமான்
உந்தி எழுந்த –கொந்தக் குழலை
மன்னன் தன் தேவிமார் –பொன்னின் முடியினை
கண்டார் பழியாமே –விண் தோய் மதிள்

வேலிக் கோல் வெட்டி –பீலித் தழையை
கொங்கும் குடந்தையும் –சங்கம் பிடிக்கும்
கறுத்திட்டு எதிர் நின்ற –நெறித்த குழல்கள்
ஒன்றே உரைப்பான் -சென்று அங்குப் பாரதம்
சீர் ஓன்று தூதாய் –பார் ஒன்றிப் பாரதம்
ஆலத்திலையான் –பாலப் பிராயத்தே
பொன் திகழ் சித்திரக் கூடம் –அக் கற்றைக் குழலன்
மின்னிடை சீதை பொருட்டா –தன்னிகர் ஓன்று இல்லா
தென்னிலங்கை மன்னன் — என்னிலங்கு நாமத்தளவும்
அக்காக்காய் நம்பிக்கு –ஓக்க யுரைத்த

ஆ நிரை மேய்க்க நீ போதி –பானையில் பாலைப் பருகி
கருவுடை மேகங்கள் –திருவுடையாள் மணவாளா
மச்சொடு மாளிகை ஏறி — நிச்சலும் தீமைகள் செய்வாய்
தெருவின் கண் நின்று –புருவம் கரும் குழல் நெற்றி
புள்ளினை வாய் பிளந்த –அள்ளி நீ வெண்ணெய்
எருதுகளோடு பொருதி –தெருவின் கண் தீமைகள்
குடங்கள் எடுத்து ஏற –இடந்திட்டு இரணியன்
சீமாலி கனவனோடு –ஆமாறு அறியும் பிரானே
அண்டத்து அமரர்கள் சூழ –உண்டிட்டு உலகினை ஏழும்
செண்பக மல்லிகையோடு –மண்பகர் கொண்டானை –

இந்த்திரனோடு பிரமன் –சந்திரன் மாளிகை சேரும்
கன்றுகள் இல்லம் புகுந்து –மன்றினில் அந்திப்போது
செப்போது மென் முலையாள் –முப்போதும் வானவர் ஏத்தும்
கண்ணில் மணல் கொடு –கண்ணனே வெள்ளறை நின்
பல்லாயிரவர் இவ்வூரில் –நல்லோர்கள் வெள்ளறை நின்
கஞ்சன் கறுக்கொண்டு –மஞ்சு தவழ் மணி மாடம்
கள்ளச் சகடும் மருதும் –உள்ளவாறு ஒன்றும் அறியேன்
இன்பம்தனை யுயர்த்தாய் –செம் பொன் மதிள் வெள்
இருக்கொடு நீர் சங்கில் –திருக்காப்பு நான் யுன்னை
போதமர் செல்வக் –வேதப்பயன் கொள்ள வல்ல-

வெண்ணெய் விழுங்கி –புண்ணிற் புளிப் பெய்தால்
வருக வருக வருக இங்கே –அரியன் இவன் எனக்கு இன்று
திருவுடை பிள்ளை தான் –அருகிருந்தார் தம்மை
கொண்டல் வண்ணா இங்கே –உண்டு வந்தேன் அம்மன் என்று
பாலைக் கறந்து அடுப்பேற –சாளக்கிராம முடைய நம்பி
போதர் கண்டாய் இங்கே –கோதுகலமுடைக் குட்டன்
செந்நெல் அரிசி சிறு பருப்பு –இன்னம் உகப்பன் நான் என்று
கேசவனே இங்கே போதராயே –தூசனம் சொல்லும் தொழு
கன்னலில் லட்டு வத்தோடு –பின்னும் அகம் புக்குறியை
சொல்லில் அரிசிப்படுதி –கொல்லை யில் நின்றும்
வண்டு களித்து இரைக்கும் –கொண்டிவை பாடி

ஆற்றில் இருந்து –காற்றில் கடியனாய்
குண்டலம் தாழ –வண்டமர் பூங்குழலார்
தடம்படு தாமரை —படம்படு பைந்தலை
தேனுகானாவி செகுத்து –வானவர் கோன் விட
ஆய்ச்சியர் சேரி –வேய்த் தடம் தோளினார்
தள்ளித் தளர் நடை –கள்ளத்தினால் வந்த
மா வலி வேள்வியில் –ஓரடியிட்டு
தாழை தண்ணாம்பல் –வேழம் துயர் கெட
வானத்து எழுந்த –ஏனத்து வுருவாய்
அங்கமலக் கண்ணன் தன்னை –அங்கவர் சொல்லை

தன்னேராயிரம் பிள்ளை –மின்னேர் நுண்ணிடை வஞ்ச
பொன்னே போல் மஞ்சனம் –மின் போல் நுண் இடையாள்
கும்மாயத்தொடு வெண் -இம் மாயம் வல்ல பெண் பிள்ளை நம்பி
மையார் கண் மடவாய் –பொய்யா யுன்னைப் புறம் பல
முப்போதும் கடைந்து –மெய்ப்பால் உண்டு அழு பிள்ளை
கரும்பார் நீள் வயல் –சுரும்பார் மென் குழல் கன்னி
மருட்டார் மென் குழல் –பொருட்டாயமிலேன்
வாளாவாகிலும் காண –கேளார் ஆயர் குலத்தவர்
தாய்மார் மோர் விற்க –கார்வார்க்கென்று முகப்
தொத்தார் பூம் குழல் கன்னி –ஒத்தற்கு ஒத்தன பேசு
காரார் மேனி நிறத்து–பாரார் தொல் புகழான்

அஞ்சன வண்ணனை –கஞ்சனைக் காய்த்த
பற்று மஞ்சள் பூசி –கற்றுத் தூளி யுடை
நன் மணி மேகலை –கண் மணி நின்றதிர்
வண்ணக் கருங்குழல் –கண்ணுக்கு இனியானை
அவ்வவ்விடம் புக்கு –எவ்வும் சிலையுடை
மிடறு மெழுத்தோடே –கடிறு பலதிரி
வள்ளி நுடங்கிடை –கள்ளி யுணங்கு
பன்னிரு திங்கள் –பொன்னடி நோவ
குடையும் செருப்பும் –கடிய வெங்கானிடை
என்றும் எனக்கு இனியானை –பொன் திகழ் மாடம்

சீலைக் குதம்பை யொரு –காலிப் பின்னே வருகின்ற
கன்னி நன் மா மதிள் –உன்னை இளம் கன்று மேய்க்க
காடுகளூடு போய் –பேடை மயில் சாயல் பின்
கடியார் பொழில் அணி –கடிய வெங்கானிடை
பற்றார் நடுங்க முன் –சிற்றாடையும் சிறு பத்திரமும்
அஞ்சுடராழி யுன் –என் செய்ய என்னை
பன்றியும் ஆமையும் –சென்று பிடித்துச் சிறுக்கை
கேட்டு அறியாதன –ஊட்ட முதலிலேன்
திண்ணார் வெண் சங்கு –கண்ணாலம் செய்ய
புற்று அரவு அல்குல் யசோதை –செற்றம் இல்லாதவர் வாழ் தரு

தழைகளும் தொங்கலும் –மழை கொலோ வருகின்ற
வல்லி நுண் இதழ் அன்ன –முல்லை நன்னறு மலர்
சுரிகையும் தெறி வில்லும் –வருகையில் வாடிய பிள்ளை
குன்று எடுத்து ஆ நிரை காத்த –என்றும் இவனை ஒப்பாரை
சுற்றி நின்று ஆயர் தழைக –அன்றிப்பின் மற்று ஒருவருக்கு
சிந்துரம் இலங்கத் தன் திரு –அந்தம் ஓன்று இல்லாத வாயப்
சாலப் பன்னிரைப் பின்னே –கோலச் செந்தாமரைக் கண்
சிந்துரப் பொடிக் கொண்டு –இந்திரன் போல் வரும் மாய
வலம் காதில் மேல் தோன்றி –அலங்காரத்தால் வரும் மாய
விண்ணின் மீது அமரர்கள் –வண்டமர் பொழில் புதுவை

அட்டுக் குவி சோற்றுப்–வட்டத் தடம் கண் மடமான்
வழு வொன்றும் இல்லாச் –இழவு தரியாதோர் ஈற்றுப் பிடி
அம்மைத் தடம் கண் –தம்மைச் சரண் என்ற
கடுவாய்ச் சின வெங்கண் –கடல் வாய்ச் சென்று
வானத்தில் உள்ளீர் –கானக் களியானை தன்
செப்பாடுடைய –எப்பாடும் பரந்து இழி
படங்கள் பலவுமுடை திரு –அடங்கச் சென்று இலங்கையை
சல மா முகில் பல் கணப்–இலை வேய் குரம்பைத் தவ
வன் பேய் முலை யுண்ட –முன்பே வழி காட்ட முசுக்
கொடியேறு செந்தாமரை –முடியேறிய மா முகில் பல
அரவிற் பள்ளி கொண்டு –திருவிற் பொலி மறை வாணர்

நா வலம் பெரிய தீவினில் –கோவலர் சிறுமியர் இளம்
இட வணரை இடத் –மட மயில்களோடு மான்
வான் இளவரசு வைகுந்த –வான் இளம்படியர் வந்து வந்து
தேனுகன் பிளம்பன் காளி–மேனகையோடு திலோத்தமை
முன் நரசிங்கமதாகி –நன்நரம்புடைய தும்புரு
செம் பெரும் தடம் கண் –அம்பரம் திரியும் காந்தப்ப
புவியுள் நான் கண்டதோர் –அவி யுணா மறந்து விண்ணவர் எல்
சிறு விரல்கள் தடவிப் –பறவையின் கணங்கள்
திரண்டு எழு தழை மழை –மருண்டு மான் கணங்கள்
கரும் கண் தோகை மயில் –மரங்கள் நின்று மது தாரை
குழல் இருண்டு சுருண்டு ஏறி –குழல் முழவம் விளம்பம்

ஐய புழுதி யுடம்பு அளைந்து –கையினில் சிறு தூதையோடு
வாயிற் பல்லும் எழுந்தில –தீ யிணக் கிணங்காடி வந்து
பொங்கு வெண் மணல் –கொங்கை யின்னம் குவிந்து
ஏழை பேதையோர் — ஆழியான் என்னுமாழ
நாடு மூரும் அறியவே போய் –கேடு வேண்டுகின்றார்
பட்டங் கட்டிப் பொன் –பொட்டப் போய்ப் புற
பேசவும் தரியாத –கேசவா என்னும் கேடிலீ
காறை பூணும் கண் –தேறித் தேறி நின்றாயிரம்
கைத்தலத்துள்ள மாட –செய்த்தளை எழு நாற்றுப்
பெருப் பெருத்த கண் –மருத்துவப் பதம் நீங்
ஞால முற்று முண்டா –கோலமார் பொழில் சூழ்

நல்லதோர் தாமரை –இல்லம் வெறியோடிற்றாலோ
ஒன்றும் அறிவு ஒன்றில்லாத –நன்றும் கிறி செய்து போனான்
குமரி மணம் செய்து –அமரர் பதியுடைத்தேவி
ஒரு மகள் தன்னை யுடையேன் –பெரு மகளாய்க் குடி வாழ்ந்து
தன் மாமன் நந்த கோபாலன் –கொம்மை முலையும் இடையும்
வேடர் மறக்குலம் போலே –நாடும் நகரமும் அறி
அண்டத்து அமரர் பெருமான் –கொண்டு குடி வாழ்க்கை –
குடியில் பிறந்தவர் செய் –இடை இருபாலும் வணங்க
வெண்ணிறத் தோய் தயிர் –ஒண்ணிறத் தாமரை
மாயவன் பின் வழி சென்று –தாயவள் சொல்லிய சொல்லை

என்னதான் தேவிக்கு –வன்னாதப் புள்ளால்
என் வில் வலி கண்டு –முன் வல் வில் வலித்து
உருப்பிணி நங்கையை –செருக்குற்றான்
மாற்றுத்தாய் சென்று –கூற்றுத்தாய் சொல்ல
பஞ்சவர் தூதனாய் –அஞ்சப் பணத்தின் மேல்
முடி ஒன்றி –படியில் குணத்து
காளியன் பொய்கை–மீள வவனுக்கு
தார்க்கிளம் தம்பிக்கு –சூர்பணகாவை
மாயச் சகடம் உதைத்து –வேயின் குழலூதி
கார் கடலை –நேராவவன் தம்பிக்கு
நந்தன் மதலையை –செந்தமிழ் தென் புதுவை

நெறிந்த கரும் குழல் மடவாய் –அரசு களை கட்ட
அல்லி யம் பூ மலர்க் கோதாய் –எல்லியம் போது இனிது இருத்தல்
கலக்கிய மா மனத்தனளாய் –குலக்குமாரா காடுறைய
வாரணிந்த முலை மடவாய் –கூறணிந்த வேல் வலவன்
மானமரு மென்னொக்கி –தேனமரும் பொழில் சாரல்
சித்திர கூடத்து இருப்ப –வித்தகனே இராமா ஓ
மின்னொத்த நுண் இடையா –நின்னன்பின் வழி நின்று
மைத்தகு மா மலர்க் குழலாள் –அத்தகு சீர் அயோத்தியர்
திக்கு நிறை புகழாளன் –ஒக்குமால் அடையாளம்
வாராரும் முலை மடவாள் –பாராரும் புகழ்ப் புதுவை

கதிராயிரம் இரவி –அதிரும் கழல் பொரு தோள்
நந்தகம் சங்கு தண்டு –காந்தள் முகிழ் விரல் சீதைக்
கொலையானை கொம்பு –தலையால் குரக்கினம் தாங்கி
தோயம் பரந்த நடுவு –ஆயர் மட மகள் பின்னைக்காகி
நீரேறு செஞ்சடை –வாரேறு கொங்கை யுருப்
பொல்லா வடிவுடைப் –பல்லாயிரம் பெரும் தேவிமார்
வெள்ளை விளி சங்கு –வெள்ளைப் பிறவிக் குரக்கு
நாழிகை கூறிட்டுக் காத்து –ஆழி கொண்டு அன்று இரவி
மண்ணும் மலையும் மறி –எண்ணற்க்கு அரியதோர்
கரிய முகில் புரை மேனி மா –திருவிற் பொலி மறைவா

அலம்பா வெருட்டா –சிலம்பார்க்க வந்து
வல்லாளன் தோளும் –எல்லா இடத்திலும் எங்கும்
தக்கார் மிக்கார்களை –எக்காலமும் சென்று
ஆனாயர் கூடி –வானாட்டில் நின்றும்
ஒரு வாரணம் –கரு வாரணம்
ஏவிற்றுச் செய்வான் –ஆவத்தனம் என்று
மன்னர் மறுக –கொன்னவில் கூர் வேல் கோன்
குறுகாத மன்னரை –அறு கால் வரி வண்டுகள்
சிந்தப் படைத்து –இந்திர கோபங்கள்
எட்டுத் திசையும் –பட்டிப் பிடிகள்
மருதப் பொழில் அணி –விரதம் கொண்டு ஏத்தும்

உருப்பிணி நங்கை தனை –பொருப்பிடைக் கொன்றை
கஞ்சனும் காளியனும் –நஞ்சுமிழ் நாக மெழுந்தணவி
மன்னு நரகன் தன்னை –புண்ணை செருந்தியோடு
மா வலி தன்னுடைய –கோவலர் கோவிந்தனை
பல பல நாழம் சொல்லி –குல மலை கோல மலை
பாண்டவர் தம்முடைய –பாண்டகு வண்டினங்கள்
கனம் குழையாள் பொருட்டு –கனம் கொழி தெள்ளருவி
எரி சிதறும் சரத்தால் –அரையன் அமரும் மலை
கோட்டு மண் கொண்டிட –ஈட்டிய பல் பொருள்கள்
ஆயிரம் தோள் பரப்பி –ஆயிரம் ஆறுகளும்
மாலிருஞ்சோலை என்றும் –மேல் இரும் கற்பகத்தை

நாவ கார்யம் சொல்லிலாத –மூவர் கார்யமும் திருத்தும்
குற்றம் இன்றிக் குணம் பெரு –துற்றி ஏழுலு குண்ட
வண்ண நன் மணியும் –எண்ணக் கண்ட விரல்களால்
உரக மெல்லணையான் கையில் –நரக நாசனை நாவில் கொண்டு
ஆமையின் முதுகத்திடை –நேமி சேர் தடம் கையினானை
பூதம் ஐந்தொடு வேள்வி –நாதனை நரசிங்கனை
குருந்தம் ஒன்றா சித்த –கரும் தடம் முகில் வண்ணனை
நளிர்ந்த சீலன் நயா சீலன் –குளிர்ந்து உரைகின்ற கோவிந்தன்
கொம்பினார் பொழில் வாய் –நம்பனை நரசிங்கனை
காசின் வாய்க் கரம் விற்க –கேசவா புருடோத்தமா
சீத நீர் புடை சூழ் –கோதில் பட்டர் பிரான்

ஆசை வாய்ச் சென்ற –கேசவா புருடோத்தமா வென்
சீயினாற் செறிந்தேறிய –வாயினால் நமோ நாரணா
சோர்வினால் பொருள் –மார்வம் என்பதோர் கோயில்
மேல் எழுந்ததோர் வாயு –மூலமாகிய ஒற்றை எழுத்
மடி வழி வந்து நீர்ப் புலன்– துடை வழி யும்மை நாய்கள்
அங்கம் விட்டவை –வங்கம் விட்டுலவும்
தென்னவன் தமர் –இன்னவன் இனையான் என்று
கூடிக் கூடி யுற்றார்கள் –தீ யொரு பக்கம் சோர்வதன்
செத்துப் போவதோர் –சித்தம் நன்கு ஒருங்கி

காசுங் கறை யுடை –கேசவன் பேரிட்டு
அங்கொரு கூறை –செங்கண் நெடுமால்
உச்சியில் எண்ணெயும் –பிச்சை புக்காகிலும்
மானிட சாதியில் –வானுடை மாதவா
மலமுடை யூத்தையில் –குலமுடைக் கோவிந்தா
நாடு நகரமும் அறிய –சாடிறப் பாய்ந்த தலைவா
மண்ணிற் பிறந்து மண் –கண்ணுக்கு இனிய
நம்பி பிம்பி என்று –செம் பெருந் தாமரைக் கண்ணன்
ஊத்தைக் குழியில் –கோத்துக் குழைத்து
சீரணி மால் –ஓரணி ஒண் தமிழ்

தங்கையை மூக்கும் –கங்கை கங்கை என்ற
சலம் பொதி யுடம்பில் –நலம் திகழ் சடையான்
அதிர் முகமுடைய –சது முகன் கையில்
இமையவர் இறுமாந்து –இமவந்தம் தொடங்கி
உழுவதோர் படையும் –எழுமையும் கூடி
தலைப்பெய்து குமுறி –அலைப்புடைத் திரை வாய்
விற் பிடித்து இறுத்து –அற்புதமுடைய
திரை பொரு கடல் சூழ் –நிரை நிரையாக
வடதிசை மதுரை அரசாள –தடவரை அதிரத் தரணி
மூன்று எழுத்ததனை –மூன்றடி நிமிர்த்து
பொங்கொலி கங்கை –தங்கியவன்பால

மாதவத்தோன் புத்திரன் –தோதவத்தித் தூய் மறையோர்
பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த –மறைப் பெரும் தீ வளர்த்த
மருமகன் தன் சந்ததியை –திரு முகமாய்ச் செங்கமலம்
கூன் தொழுத்தை சிதகு –கான் தொடுத்த நெறி போகி
பெரு வரங்களவை பற்றி –குரவரும் பக்கோங்கு அலர
கீழ் உலகில் அசுரர்களை –தாழை மடலூடு ரிஞ்சி
கொழுப்புடைய செழும் –தழுப்பரிய சந்தனங்கள்
வல் எயிற்றுக் கேழலுமாய் –எல்லியம் போது இருஞ்சிறை
குன்றாடு கொழு முகில் போல் –குன்றூடு பொழில் நுழைந்து
பரு வரங்களவை பற்றி –திருவரங்கத் தமிழ் மாலை

மரவடியைத் தம்பிக்கு –திருவடி தன் திரு வுருவம்
தன்னடியார் திறத்தகத்து –மன்னுடைய விபீடணற்கா
கருளுடைய பொழில் மருது –இருளகற்றும் எறி கதிரோன்
பதினாறாம் ஆயிரவர் –புது நாண் மலர்க் கமலம்
ஆமையாய்க் கங்கையாய் –சேமமுடை நாரதனார்
மைத்துனன்மார் காதலி –பத்தர்களும் பகவர்களும்
குறள் பிரம்மசாரியாய் — எறிப்புடைய மணி வரை மேல்
உரம் பற்றி இரணியனை –உரம் பெற்ற மலர்க்கமலம்
தேவுடைய மீனமாய் –சேவலொடு பெடை யன்னம்
செரு வாளும் புள்ளாளன் –இரவாளன் பகலாளன்
கைந் நாகத்து இடர் கடிந்த –மெய்ந்நாவான் மெய்யடியான்

துப்புடையாரை யடைவது –எய்ப்பு என்னை வந்து நலியும்
சாமிடத்து என்னைக் குறி –போமிடத்து உன் திறத்து எத்தனை
எல்லையில் வாசல் –சொல்லலாம் போதே
ஒற்றை விடையனும் –அற்றது வாழ் நாள் இவற்கு என்று
பை யரவின் அணைப்பால் –வைய மனிசரைப் பொய்யென்று
தண்ணனவில்லை நமன் –எண்ணலாம் போதே யுன்
செஞ்சொல் மறை –வஞ்ச உருவின் நமன் தமர்கள்
நான் ஏதும் யுன் மாயம் –வானேய் வானவர் தங்கள் ஈசன்
குன்று எடுத்து ஆ நிரை –நன்றும் கொடிய நமன் தமர்கள்
மாயவனை மது ஸூதனனை –வேயர் புகழ் வில்லி புத்தூர் மன்

வாக்குத் தூய்மை –மூர்க்குப் பேசுகின்றான் இவன் என
சழக்கு நாக்கொடு –விழிக்கும் கண்ணிலேன்
நன்மை தீமைகள் ஓன்று –உன்னுமாறு உன்னை ஓன்று
நெடுமையால் உலகேழும் -அடிமை என்னும் அக்கோயின்
தோட்டமில்லவள் –நாட்டு மானிடத்தோடு
கண்ணா நான்முகனை –எண்ணா நாளும் இருக்க எசுச்
வெள்ளை வெள்ளத்தின் –உள்ளம் சோர உகந்து எதிர்
வண்ண மால் வரையே –எண்ணுவார் இடரை
நம்பனே நவின்று ஏத்த –கம்ப மா கரி கோள் விடுத்தானே
காமர் தாதை கருதலர்–சேம நன்கு அமரும் புதுவையர் –

நெய் குடத்தைப் பற்றி –மெய்க் கொண்டு வந்து புகுந்து
சித்தர கூத்தன் எழுத்தால் –முத்துத் திரை கடல் சேர்ப்பன்
வயிற்றில் தொழுவை –எயிற்றை மண் கொண்ட
மங்கிய வல் வினை நோய் –சிங்கப் பிரான் அவன் எம்மான்
மாணிக் குறள் வுருவாய் –மாணிக்கப் பண்டாரம் கண்டீர்
உற்ற வுறு பிணி நோய்காள்–அற்றம் யுரைக்கின்றேன்
கொங்கைச் சிறு வரை –வங்கக் கடல் வண்ணன் அம்மான்
ஏதங்களாயின எல்லாம் –போதில் கமல வன் நெஞ்சம்
உறகல் உற கல் உற கல் –இறவு படாமல் இருந்த
அரவத்து அமளியினோடும் -பரவத் திரை பல மோத

துக்கச் சுழலையை –மக்கள் அறுவரை கல்லிடை
வளைத்து வைத்தேன் இனி –அளித்து எங்கும் நாடும் நகரமும்
உனக்குப் பணி செய்திரு –புனைத்தினைக் கிள்ளிப் புது
காதம் பலவும் திரிந்து உழன்று –தூது செய்தார் குரு பாண்டவர்
காலும் எழா கண்ண நீரும் –மால் உகளா நிற்கும் என் மனமே
எருத்துக் கொடி யுடையான் –மருத்துவனாய் நின்ற மா மணி
அக்கரை என்னும் அநர்த்தக் –சக்கரமும் தடக்கைகளும்
எத்தனை காலமும் எத்தனை யூழியும் –மைத்துனன் மார்களை வாழ்
அன்று வயிற்றில் கிடந்திரு –சென்று அங்கு வாணனை
சென்றுலங்குடைந்தாடு –பொன் திகழ் மாடம்

சென்னியோங்கு –என்னையும் என்னுடைமையையும்
பறவை ஏறு பரம் புருடா –இரவு செய்யும் பாவக்காடு
எம்மனா என் குல தெய்வமே –நம்மன் போல வீழ்த்த முக்கும்
கடல் கடைந்து அமுதம் கொண்ட –கொடுமை செய்யும் குற்றமும்
பொன்னைக் கொண்டு உரை –உன்னைக் கொண்டு என்னுள்
உன்னுடைய விக்ரமம் –மன்னடங்க மழு வலங்கை
பருப்பதத்துக் கயல் –மருப்பொசித்தாய் மல்
அநந்தன் பாலும் கருடன் பாலும் –நினைந்து என்னுள்ளே நின்று
பனிக்கடலை பள்ளி கோளை –தனிக்கடலே தனிச்சுடரே
தடவரை வாய் மிளிர்ந்து –வடதடமும் வைகுந்தமும்
வேயர் தங்கள் குலத்து உதித்த –ஆயர் ஏற்றை அமரர் கோவை

—————

ஸ்ரீ திருப்பாவை

மார்கழித் திங்கள் –ஏரார்ந்த கண்ணி
வையத்து வாழ்வீர்காள் –மையிட்டு எழுதோம்
ஓங்கி உலகளந்த –பூங்குவளைப் போதில்
ஆழி மழைக் கண்ணா –ஆழி போல் மின்னி
மாயனை மன்னு –தூயோமாய் வந்து நாம்

புள்ளும் சிலம்பின் காண் –வெள்ளத்து அரவில்
கீசு கீசு என்று எங்கும் –மத்தினால் ஓசை படுத்த
கீழ் வானம் வெள்ளென்று –கோதுகலமுடைய பாவாய்
தூ மணி மாடத்து –உன் மகள் தான் ஊமையோ
நோற்றுச் சுவர்க்கம் –பண்டு ஒரு நாள் கூற்றத்தின்

கற்றுக் கறவை –சுற்றத்து தோழிமார்
கனைத்து இளம் கற்று எருமை –சினத்தினால் தென்னிலங்கை
புள்ளின் வாய் கீண்டானை –புள்ளும் சிலம்பின் காண்
உங்கள் புழக்கடை –எங்களை முன்னம்
எல்லே இளங்கிளியே –ஒல்லை நீ போதாய்

நாயகனாய் நின்ற –அறை பறை மாயன் மணி
அம்பரமே தண்ணீரே –அம்பரமூடறுத்து
உந்து மத களிற்றின் –மாதவிப் பந்தல் மேல்
குத்து விளக்கு எரிய –மைத்தடம் கண்ணினாய்
முப்பத்து மூவர் –செப்பென்ன மென் முலை

ஏற்ற கலங்கள் –உலகினில் தோற்றமாய் நின்ற
அங்கண் மா ஞாலத்து அரசர் –செங்கண் சிறுச் சிறிதே
மாரி மலை முழைஞ்சில் –போதருமா போலே
அன்று இவ்வுலகம் –குன்று குடையா எடுத்தாய்
ஒருத்தி மகனாய் –நெருப்பென்ன நின்ற

மாலே மணி வண்ணா –போல்வன சங்கங்கள்
கூடாரை வெல்லும் சீர் –பாடகமே என்றனைய
கறவைகள் பின் சென்று –உன் தன்னோடு உறவேல் நமக்கு
சிற்றம் சிறு காலே –இற்றைப் பறை கொள்வான்
வங்கக் கடல் கடைந்த –சங்கத் தமிழ் மாலை

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் –

—————-

ஸ்ரீ நாச்சியார் திருமொழி

தையொரு திங்களும் –உய்யவும் ஆம் கொலோ
வெள்ளை நுண் மணல் கொண்டு –கள்ளவிழ் பூங்கணை தொடு
மத்த நன்னறு மலர் –கொத்த மலர் பூங்கணை தொடு
சுவரில் புராண நின் –அவரைப் பிராயம் தொடங்கி
வானிடை வாழுமவர் –ஊனிடை யாழி சங்குத் தமர்
உருவுடையார் இளையார்கள் –கருவுடை முகில் வண்ணன்
காயுடை நெல்லொடு –தேச முன்னளந்தவன்
மாசுடை யுடம்பொடு –பேசுவது ஓன்று உண்டு இங்கு
தொழு முப்போது முன் –அழுதழுது அலமந்தம்மா வழங்க
கருப்பு வில் மலர்க் கணை –பொருப்பன்ன மாடம்

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற –காமன் போதரு காலம் என்று
இன்று முற்றும் முதுகு நோவ –அன்று பாலகனாகி
குண்டு நீருறை கோளரீ –வண்டல் நுண் மணல் தெள்ளி
பெய்யு மா முகில் போல் –நொய்யர் பிள்ளைகள் என்பத
வெள்ளை நுண் மணல் –உள்ளமோடி உருகல் அல்லால்
முற்றிலாத பிள்ளைகளோம் –கடலை யடைத்து அரக்கர் குலம்
பேத நன்கு அறிவார்களோடு –ஓத மா கடல் வண்ணா
வட்ட வாய்ச் சிறு தூதை –தொட்டு உதைத்து நலியேல் கண்
முற்றத்தூடு புகுந்து –முற்ற மண்ணிடம் தாவி
சீதை வாய் அமுதமுண்டாய் –வேத வாயத் தொழிலார்கள்

கோழி அழைப்பதன் முன் –ஏழைமை ஆற்றவும் பட்
இது என் புகுந்தது இங்கு –விதி இன்மையால் அது மாட்
எல்லே ஈது என்ன இளமை –வில்லால் இலங்கை அழித்தாய்
பரக்க விழித்து எங்கும் –இரக்க மேலொன்று மிலாதாய்
காலைக் கது விடுகின்ற –கோலச் சிற்றாடை பலவும்
தடத் தவிழ்த் தாமரை –குடத்தை எடுத்து ஏற விட்டு
நீரிலே நின்று அயர்க்கின்றோம் –ஆர்வம் யுனக்கே யுடையோம்
மாமிமார் மக்களே யல்லோம் –சேமமேல் அன்று இது சால
கஞ்சன் வலை வைத்த அன்று –அஞ்ச யுரைப்பாள் யசோதை
கன்னியரோடு எங்கள் நம்பி –இன்னிசையால் சொன்ன –

தெள்ளியார் பலர் –பள்ளி கொள்ளுமிடத்து
காட்டில் வேங்கடம் –ஓட்டரா வந்து
பூ மகன் புகழ் வானவர் -மிகு சீர் வசுதேவர் தம்
ஆய்ச்சிமார்களும் –வாய்த்த காளியன் மேல்
மாட மாளிகை சூழ் –ஓடை மா மத யானை
அற்றவன் –திகழும் மதுரைப்பதி
அன்று இன்னாதன செய் –வென்றி வேல் விறல்
ஆவல் அன்புடையார் தம் –கன்று மேய்த்து விளையாடும்
கொண்ட கோலம் –அண்டமும் நிலனும்
பழகு நான்மறையின் –எம் அழகனார்
ஊடல் கூடல் –கூடலைக் குழல் கோதை

மன்னு பெரும் புகழ் –புன்னை குருக்கத்தி நாழல்
வெள்ளை விளி சங்கு –கள்ளவிழ் சண்பகப் பூ மலர்
மாதலி தேர் முன்பு கோல் –போதலர் காவில் புது மணம்
என்புருகி யின வேல் –அன்புடையாரைப் பிரிவுறு
மென்னடை யன்னம் –இன்னடிசிலோடு பாலமுது
எத்திசையும் அமரர் பணி –கொத்தலர் காவில் மணித்தடம்
பொங்கிய பாற் கடல் –உனக்கென்ன மறைந்து உறைவு
சார்ங்கம் வளைய வலிக்–தேங்கனி மாம் பொழில் செந்
பைங்கிளி வண்ணன் சீர் –சங்கொடு சக்கரத்தான் தான்
அன்று உலகம் அளந்தானை யுக –என்றும் இக்காவில் இருந்து இருந்து
விண்ணுற நீண்டு தாவிய –பண்ணுறு நான் மறையோர்

வாரணமாயிரம் –பூரண பொற் குடம் வைத்து
நாளை வதுவை –கோளரி மாதவன்
இந்திரன் உள்ளிட்ட–மந்திரக்கோடி யுடுத்தி
நாற்றிசைத் தீர்த்தம் –பூப்புணை கண்ணி
கதிர் ஒளி தீபம் –மதுரையார் மன்னன்
மத்தளம் கொட்ட –மைத்துனன் நம்பி
வாய் நல்லார் –காய் சின மா களிறு அன்னான்
இம்மைக்கும் –செம்மை யுடைய
வரி சிலை வாண் முகத்து –அரி முகன் அச்யுதன்
குங்குமம் அப்பி –அங்கு அவனோடும்
ஆயனுக்காக –தூய தமிழ் மாலை

கருப்பூரம் நாறுமோ –மருப்பு ஒசித்த மாதவன் தன்
கடலில் பிறந்து –குடியேறித் தீய வசுரர்
தடவரையின் மீதே –நீயும் வடமதுரையார் மன்னன்
சந்திர மண்டலம் போல் –மந்த்ரம் கொள்வாயே போலு
உன்னோடு உடனே –மன்னாகி நின்ற
போய்த் தீர்த்த மாடாதே –சேய்த் தீர்த்தமாய் நின்ற
செங்கமல நாண் மலர் மேல் –அங்கைத்தலம் ஏறி
உண்பது சொல்லில் –பெண் படையார் யுன்மேல்
பதினாறாம் ஆயிரவர் –பொதுவாக யுண்பதனை
பாஞ்ச சன்னியத்தை –ஏய்ந்த புகழ்ப் பட்டர் பிரான்

விண்ணீல மேலாப்பு –கண்ணீர்கள் முலைக் குவட்டில்
மா முத்த நீர் சொரியும் –காமத்தீயுள் புகுந்து
ஒளி வண்ணம் வளை சிந்தை –குளிர் அருவி வேங்கடம்
மின்னாகத்து எழுகின்ற –என்னாகத்து இளம் கொங்கை
வான் கொண்டு கிளர்ந்த –ஊன் கொண்ட வள்ளுகிரால்
சலம் கொண்டு கிளர்ந்த –உலங்கொண்ட விளங்கனி போல்
சங்க மா கடல் கடைந்தான் –கொங்கை மேல் குங்குமத்தின்
கார் காலத்து எழுகின்ற –நீர் காலத்து எருக்கில்
மத யானை போல் எழுந்த –கதி என்றும் தானாவான்
நாகத்தின் அணையானை –போகத்தில் வழுவாத

சிந்துரச் செம் பொடிப் போல் –மந்தரம் நாட்டி இன்று
போர்க்களிறு பொரும் –கார்க்கொள் படாக்கள் நின்று
கரு விளை ஒண் மலர்காள் –திரு விளையாடு திண் தோள்
பைம் பொழில் வாழ் –ஐம் பெரும் பாதகர்கள்
துங்க மலர்ப் பொழில் சூழ் –மலர் மேல் தங்கிய வண்டி
நாறு நறும் பொழில் –நூறு தடா நிறைந்த
இன்று வந்து இத்தனையும் –தென்றல் மணம் கமழும்
காலை எழுந்து இருந்து –சோலை மலைப் பெருமான்
கோங்கு அலரும் பொழில் –பூங்கொள் திரு முகத்து
சந்தொடு கார் அகிலும் –சுரும்பார் குழல் கோதை

கார்க்கோடல் பூக்காள் –ஆர்க்கோவினி நாம்
மேற் தோன்றிப் பூக்காள் –மேல் தோன்றும் ஆழியின்
கோவை மணாட்டி –பாவியேன் தோன்றி
முல்லைப் பிராட்டி –கொல்லை யரக்கியை மூக்கரி
பாடும் குயில்காள் –ஆடும் கருளக் கொடி யுடையான்
கண மா மயில்காள் –பண மாடு அரவணை
நடமாடித் தோகை –குடமாடு கூத்தன்
மழையே மழையே –அழகப் பிரானார் தம்மை
கடலே கடலே –என்னையும் யுடலுள் புகுந்து
நல்ல வென் தோழி –வில்லி புதுவை

தாமுகக்கும் தம் கையில் –தீ முகத்து நாகணை மேல்
எழிலுடைய அம்மனைமீர் –கொப்பூழில் எழில் கமலம்
பொங்கோதம் சூழ்ந்த –செங்கோலுடைய
மச்சணி மாடம் –பிச்சைக் குறளாகி
பொல்லாக் குறளுருவாய் –நல்லார்கள் வாழும்
கைப்பொருள்கள் முன்னம் –எப்பொருட்க்கும் நின்றார்க்கும்
உண்ணாது உறங்காது –திண்ணார் மதிள் சூழ்
பாசி தூர்த்துக் கிடந்த –தேசுடைய தேவர்
கண்ணாலம் கோடித்து –அண்ணாந்து இருக்கவே
செம்மை யுடைய –தம்மை யுகப்பாரை

மற்று இருந்தீர்கட்க்கு அறியலாகா –பெற்று இருந்தாளை ஒழிய
நாண் இனியோர் கருமம் –மாணி யுருவாய் யுலகளந்த
தந்தையும் தாயும் உற்றாரும் -கொந்தளமாக்கிப் பரக்க
அங்கைத் தலத்திடை –கொங்கைத் தலமிவை
ஆர்க்கும் என் நோய் இது –நீர்க்கரை நின்ற கடம்பை
காரத் தண் முகிலும் கரு –வேர்த்துப் பசித்து வயிறு அசைய
வண்ணம் திரிவும் மனம் — தண்ணந்துழாய் என்னும்
கற்றினம் மேய்க்கலும் –கற்றன பேசி வச உணாதே
கூட்டில் இருந்து கிளி எப்போதும் –நாட்டில் அலைப்பழி எய்தி
மன்னு மதுரை தொடக்க –பொன்னியல் மாடம் பொலிந்து

கண்ணன் என்னும் கரும் –பெண்ணின் வருத்தம் அறியாத
பாலால் இலையில் துயில் கொள் –கோலால் நிரை மேய்த்தாய்
கஞ்சைக் காய்ந்த கரு –அஞ்சேல் என்றான் அவன் ஒருவன்
ஆரே யுலகத்து ஆற்றுவார் –ஆராவமுதம் அனையான் தன்
அழிலும் தொழிலும் உரு –தழையின் பொழில் வாய்
நடை ஒன்றில்லா யுல –புடையும் பெயரகில்லேன் நான்
வெற்றிக் கருளக் கொடி –குற்றம் அற்ற முலை தன்னை
யுள்ளே யுருகி நைவேனை –கொள்ளும் பயன் ஒன்றில்லாத
கொம்மை முலைகள் இடர் தீர –செம்மையுடைய திரு மார்பில்
அல்லல் விளைத்த பெருமான் –வில்லைத் தொலைத்த புருவத்தாள்

பட்டி மேய்ந்தோர் கார் ஏறு –இட்டமான பசுக்களை
அனுங்க வென்னைப் பிரிவு –கணங்களோடு மின் மேகம்
மாலாய்ப் பிறந்த நம்பியை -மேலால் பரந்த வெயில்
கார் தண் கமலக்கண் –போர்த்த முத்தின் குப்பாயம்
மாதவன் என் மணியினை –பிதக வாடை யுடை தாழ
தருமம் அறியாக் குறும்பனை –உருவு கரியதாய் முகம் செய்தாய்
பொருத்தமுடைய நம்பியை –அருத்தித் தாரா கணங்கள்
வெளிய சங்கு ஓன்று யுடையானை –களி வண்டு எங்கும் கலந்து
நாட்டைப்படை என்று –காட்டை நாடித் தேனுகனும்
பாரும் தாள் களிற்றினுக்கு –மருந்தால் என்று தம் மனத்தே

பாரும் தாளுடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பாரே –

————–

ஸ்ரீ பெருமாள் திருமொழி

இருள் இரியச் சுடர் மணிகள் –திருவரங்கத்துப் பெரு நகருள்
வாயோர் ஈரைஞ்சூறு –காயாம்பூ மலர்ப் பிறங்கல்
எம்மாண்பின் அயன் நான்கு –அம்மான் தன் மலர்க் கமலக்
மாவினை வாய் பிளந்து –அவ்வடமொழியைப் பற்றற்றா
இணையில்லா வின்னிசை யாழ் –மணி மாட மாளிகைகள்
அளிர் மலர் மேல் அயன் அரன் –களி மலர் சேர் பொழில் அரங்கத்து
மறம் திகழு மனம் ஒழித்து –அறம் திகழு மனத்தவர் தம்
கோலார்ந்த நெடும் சார்ங்கம் –சேலார்ந்த நெடும் கழனி
தூராத மனக்காதல் தொண்டர் –நாளும் சீரார்ந்த முழவோசை
வன் பெரு வானகம் உய்ய –அன்பொடு தென் திசை நோக்கி
திடர் விளங்கு கரைப் பொன்னி –குடை விளங்கு திறல் தானை

தேட்டரும் திறல் தேனினை –ஆட்ட மேவி யலர்ந்து யழைத்து
தோடுலா மலர் மங்கை –ஆடிப்பாடி அரங்காவோ
ஏறு அடர்த்ததும் ஏனமாய் –வண் பொன்னிப் பேராறு போல்
தோய்த்த தண் தயிர் –நா தழும்பு எழ நாரணா என்
பொய் சிலைக்குரல் ஏற்றெரு –மெய் சிலைக் கரு மேகம் ஓன்று
ஆதி யந்தம் அநந்தம் அற்புதம் –தீதில் நன்னெறி காட்டி
கார் இனம் புரை மேனி –சேரு நெஞ்சினராகி
மாலை யுற்ற கடல் –மாலை யுற்று எழுந்து ஆடிப்பாடி
மொய்த்துக் கண் பனி சோர –என் அத்தன் அச்சன் அரங்கனுக்கு
அல்லி மா மலர் மங்கை –கொல்லி காவலன் கூடல் நாயகன் —

மெய்யில் வாழ்க்கையை –ஐயனே அரங்கா
நூலின் நேர் இடையார் –ஆலியா அழையா
மாரனார் வரி வெஞ்சிலை –ஆர மார்வன்
உண்டியே யுடையே –அண்ட வாணன்
தீதில் நன்னெறி நிற்க –ஆதி அயன் அரங்கன்
எம் பரத்தர் –தம்பிரான் அமரர்க்கு
எத்திறத்திலும் –அத்தனே அரங்கா
பேயரே எனக்கு –ஆயனே அரங்கா
அங்கை யாழி –கொங்கர் கோன்

ஊனேறு செல்வத்து –கூனேறு சங்கம் இடத்தான்
ஆகாத செல்வத்து –தேனார் பூஞ்சோலை
பின்னிட்ட சடையானும் –மின் வட்டச் சுடராழி
ஒண் பவள வேலை –பண்பகரும் வண்டினங்கள்
கம்ப மதயானை –எம்பெருமான் ஈசன்
மின்னனைய நுண்ணிடை –தென்னவென வண்டினங்கள்
வானாளும் மா மதி போல் –தேனார் பூஞ்சோலை
பிறையேறு சடையானும் –வெறியார் தண் சோலை
செடியாய வல் வினைகள் –அடியாரும் வானவரும்
உம்பர் உலகாண்டு –செம்பவள வாயான்
மன்னிய தண் சாரல் –கொன்னவிலும் கூர் வேல்

தரு துயரம் தடாயேல் –அரி சினத்தால் ஈன்ற தாய்
கண்டார் இகழ்வனவே –விண் தோய் மதிள் புடை சூழ்
மீன் நோக்கும் நீள் வயல் சூழ் –தான் நோக்கா தெத்துயரம்
வாளால் அறுத்துச் சுடினும் –மீளாத் துயர் தரினும்
வெங்கட்டிண் களிறு அடர்த்தா –எங்கும் போய்க் கரை காணாது
செந்தழலே வெந்தழலை –வெந்துயர் வீட்டா விடினும்
எத்தனையும் வான் மறந்த –மெய்த்துயர் வீட்டா விடினும்
தொக்கிலங்கி யாறெல்லாம் –மிக்கிலங்கு முகில் நிறத்தாய்
நின்னையே தான் வேண்டி –மின்னையே சேர் திகிரி
வித்துவக் கோட்டம்மா –கொற்றேவல் தானை

ஏர் மலர்ப் பூங்குழல் –கூர் மழை போல் பனிக் கூதல்
கெண்டை ஒண் கண் –வண்டமர் பூங்குழல்
கரு மலர் கூந்தல் ஒருத்தி –புரி குழல் மங்கை ஒருத்தி
தாய் முலைப்பாலில் அமுது இருக்க –ஆய்மிகு காதலோடு யான் இருக்க
மின்னொத்த நுண் இடை –கண்ணுற்ற அவளை நீ கண்ணால் இட்டு
மற்பொரு தோளுடை –அற்றை இரவும் ஓர் பிற்றை
பை அரவின் அணைப்பள்ளி –செய்ய வுடையும் திரு முகமும்
என்னை வருக எனக்குறி –பொன்னிற வாடையைக்
மங்கல நன் வனமாலை –கொங்கு நன் குழலார்களோடு
அல்லி மலர்த் திரு மங்கை –கொல்லி நகர்க்கிறை கூடல்

ஆலை நீள் கரும்பு அன்னவன் –ஏலவார் குழல் என் மகன்
வடிக் கொள் அஞ்சனம் எழுது –அடக்கியாரச் செஞ்சிறு விரல்
முந்தை நன்முறை யன்பு –உந்தை யாவன் என்று உரைப்ப
களி நிலா எழில் மதி புரை –இளமை இன்பத்தை இன்று என்
மருவு நின் திரு நெற்றியில் –விரலைச் செஞ்சிறு வாயிடை
தண்ணம் தாமரைக்கண் –வண்ணச் செஞ்சிறுகை
குழகனே என் தன் கோமள –மழலை மென்னகை யிடையிடை
முழுதும் வெண்ணெய் அளைந்து –அழுகையும் அஞ்சி நோக்கும்
குன்றினால் குடை கவித்ததும் –வென்றி சேர் பிள்ளை நல்
வஞ்சமேவிய நெஞ்சுடை –கஞ்சன் நாள் கவர் கரு முகில்
மல்லை மா நகருக்கு இறைவன் –கொல்லி காவலன் மாலடி

மன்னு புகழ்க் கௌசலை தன் –கன்னி நன் மா மதிள் புடை சூழ்
புண்டரீக மலரதன் மேல் –கண்டவர் தம் மனம் வழங்கும்
கொங்கு மலி கருங்குழலாள் –கங்கையிலும் தீர்த்த மலி
தாமரை மேல் அயனவனை –வண்டினங்கள் காமரங்கள் இசை
பாராளும் படர் செல்வம் –சீராளும் வரை மார்பா
சுற்றம் எல்லாம் பின் தொடர –கற்றவர்கள் தாம் வாழும்
ஆலினைப் பாலகனாய் –காலின் மணி கரை யலைக்கும்
மலை யதனால் யணை கட்டி –கலை வலவர் தாம் வாழும்
தளை யவிழ நறுங்குஞ்சி –களை கழு நீர் மருங்கு அலரும்
தேவரையும் அசுரரையும் –காவிரி நன்னதி பாயும்
கன்னி நன் மா மதிள் புடை –கொன்னவிலும் வேல் வலவன்

வன் தாளின் இணை வணங்கி –எம்மி ராமாவோ
வெவ் வாயேன் வெவ்வுரை –நெய் வாய வேல் நெடும் கண்
கொல்லணை வேல் வரி நெடும் –மெல்லணை மேல் மென் துயின்று
வா போகு வா இன்னம் வந்து –மா பொகு நெடும் கானம்
பொருந்தார் கை வேல் –இன்று பெரும் பாவியேன்
அம்மா வென்று உகந்து அழைக்கும் –கைம்மாவின் நடை யன்ன
பூ மருவு நறுங்குஞ்சி –ஏமரு தோள் என் புதல்வன்
பொன் பெற்றார் எழில் –நின் பற்றா நின் மகன் மேல்
முன்னொரு நாள் மழு வாளி –என்னையும் என் மெய்யுரையும்
தேனகுமா மலர்க்கூந்தல் –இன்று கானகமே மிக விரும்ப
ஏரார்ந்த கரு நெடுமால் –கூரார்ந்த வேல் வலவன்

அங்கண் நெடு மதிள் புடை சூழ் –செங்கண் நெடு கரு முகிலை
வந்து எதிர்ந்த தாடகை தன் –செந்தளிர் வாய் மலர் நகை சேர்
செவ்வரி நற் கரு நெடும் கண் –தெவ்வரஞ்சு நெடும் புரசை
தொத்தலர் பூஞ்சுரி குழல் –சித்திர கூடத்து இருந்தான் தன்னை
வலி வணக்கு வரை நெடும் –சிலை வணக்கி மான் மரிய
தனமருவு வைதேவி –சினம் அடங்க மாருதியால்
குரை கடலை அடல் அம்பால் –திரு மகளோடு இனிது அமர்ந்த
அம் பொன் நெடு மணி மாடம் –செம்பவளத் திரள் வாய்
செறி தவச் சம்புகன் –திறல் விளங்கும் இலக்குவனை
அன்று சராசரங்களை –சென்று இனிது வீற்று இருந்த
தில்லை நகர்த் திருச் சித்திர –கொல்லி யலும் படைத்தானை –

நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே

—————-

ஸ்ரீ திருச்சந்த விருத்தம்

பூநிலாய ஐந்துமாய் –மீ நிலாயது ஒன்றுமாகி
ஆறும் ஆறும் ஆறுமாய் –வேறு வேறு ஞானமாகி
ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி –ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி
மூன்று முப்பத்தாறினோடு –தோன்று சோதி மூன்றுமாய்
நின்றி யங்கும் ஒன்றலா –என்றும் யார்க்கும் எண்ணிறந்த

நாகம் ஏந்தும் மேரு வெற்பை –மாக மேந்து மங்குல் தீயோர்
ஓன்று இரண்டு மூர்த்தியாய் –ஓன்று இரண்டு தீயுமாகி
ஆதியான வானவர்க்கும் –ஆதியான வான வாணர்
தாதுலாவு கொன்றை மாலை –வேத வாணர் கீத வேள்வி
தன்னுளே திரைத்து எழும் –நின்னுளே பிறந்து இறந்து

சொல்லினால் தொடர்ச்சி நீ –சொல்லினால் படைக்க
உலகு தன்னை நீ படைத்தி –உலகு நின்னொடு ஒன்றி நிற்க
இன்னை என்று சொல்ல –பின்னையாய கோலமோடு
தூய்மை யோகமாயினாய் –நின் நாமதேயம் இன்னது என்ன
அங்கம் ஆறும் வேதம் நான்கும் –செங்கண் நாகணைக் கிடந்த

தலைக் கணத் துகள் குழம்பி –கலைக் கணங்கள் சொற் பொருள்
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி –நாக மூர்த்தி சயனமாய்
விடத்த வாய் ஓர் ஆயிரம் –தொடுத்து மேல் விதானமாய
புள்ளதாகி வேத நான்கும் –புள்ளை யூர்தி யாதலால்
கூசம் ஒன்றும் இன்றி –பாசம் நின்ற நீரில் வாழும்

அரங்கனே தரங்க நீர் –நெருங்க நீர் கடைந்த போது
பண்டும் இன்றும் மேலுமாய் –வண்டு கிண்டு தண் துழாய்
வான் நிறத்தோர் சீயமாய் –நானிறத்த வேத நாவர்
கங்கை நீர் பயந்த பாத –சிங்கமாய தேவ தேவ
வரத்தினில் சிரத்தை மிக்க –இரத்தி நீ இது என்ன பொய்

ஆணினோடு பெண்ணுமாகி –பூணி பேணு மாயனாகி
விண் கடந்த சோதியாய் –எண் கடந்த யோகினோடு
படைத்த பார் இடந்து அளந்து –மிடைத்த மாலி மாலி மான்
பரத்திலும் பரத்தை யாகி –நரத்திலும் பிறத்தி நாத
வானகமும் மண்ணகமும் –தேனகம் செய் தண்ணரும்

கால நேமி காலனே –வேலை வேவ வில் வளைத்த
குரக்கினப் படை கொடு –இரக்க மண் கொடுத்தவற்கு
மின்னிறத்து எயிற்று அரக்கன் –நன்னிறத்தொரின் சொல் ஏழை
ஆதி யாதி யாதி நீ –வேதமாகி வேள்வியாகி
அம்புலாவி மீனுமாகி –கொம்பராவு நுண் மருங்குல்

ஆடகத்த பூண் முலை –வீட வைத்த வெய்ய கொங்கை
காய்த்த நீள் விளங்கனி –ஆய்ச்சி பாலை யுண்டு மண்ணை
கடம் கலந்த வன் கரி –குடம் கலந்த கூத்தனாய
வெற்பு எடுத்த வேலை நீர் –வெற்பு எடுத்த விஞ்சி சூழ்
ஆனை காத்தோர் ஆனை கொன்று –ஆனை காத்து மெய்யரிக் கண்

ஆயனாகி ஆயர் மங்கை –மாய மாய மாயை கொல்
வேறிசைந்த செக்கர் மேனி –ஊறு செங்குருதியால்
வெஞ்சினத்த வேழம் –வஞ்சனத்து வந்த பேய்ச்சி
பாலின் நீர்மை செம்பொன் –நீல நீர்மை என்றிவை
மண்ணுளாய் கொல் –கண்ணுளாய் கொல் சேயை

தோடு பெற்ற தண் துழாய் –நாடு பெற்ற நன்மை
காரொடு ஒத்த மேனி –ஓர் இடத்தை அல்லை
குன்றில் நின்று வானிருந்து –நன்று சென்ற நாளவற்றுள்
கொண்டை கொண்ட –நண்டை யுண்டு நாரை பேர
வெண் திரைக் கரும் கடல் –எண்திசைக் கணங்களும்

சரங்களைத் துரந்து –பரந்து பொன் நிரந்து நுந்தி
பொற்றை யுற்ற முற்றல் –சிற்றெயிற்று முற்றல் மூங்கில்
மோடி யோடி லச்சையாய–வாணன் ஆயிரம் கரம் கழித்த
இலைத் தலைச் சாரம் துரந்து –குலைத்தலைத்து இறுத்து எறிந்த
மன்னு மா மலர்க்கிழத்தி –உன்ன பாத மென்ன சிந்தை

இலங்கை மன்னனைத் தொலை –விலங்கு நூலர் வேத நாவர்
சங்கு தங்கு முன்கை நங்கை –கொங்கு தங்கு வார் குழல்
மரம் கெட நடந்து அடர்த்து –துரங்கம் வாய் பிளந்து
சாலி வேலி தண் வயல் –காலநேமி வக்கரன்
செழும் கொழும் பெரும் –எழுந்திருந்து தேன் பொருந்து

நடந்த கால்கள் நொந்தவோ –கடந்த கால் பரந்த
கரண்ட மாடு பொய்கை–திரண்ட தோள் இரணியன்
நன்று இருந்து யோக நீதி –குன்று இருந்த மாட நீடு
நின்றது எந்தை ஊரகத்து –அன்று நான் பிறந்திலேன்
நிற்பதும் ஓர் வெற்பகத்து –அற்புதன் அனந்த சயனன்

இன்று சாதல் நின்று சாதல் –அன்று பார் அளந்த
சண்ட மண்டலத்தினூடு –புண்டரீக பாத புண்ய கீர்த்தி
முத்திறத்து வாணியத்து –எத்திறத்தும் உய்வதோர்
காணிலும் உருப்பொலார் –ஆணமென்று அடைந்து வாழும்
குந்தமோடு சூலம் வேல்கள் –வந்த வாணன் ஈர் ஐஞ்சூறு

வண்டுலாவு கோதை மாதர் –முண்டன் நீறன் மக்கள் வெப்பு
போதின் மங்கை பூதலக் –மாது தங்கு கூறன்
மரம் பொதச் சாரம் துரந்து –வரம் குறிப்பில் வைத்தவர்க்கு
அறிந்து அறிந்து வாமனன்–மறிந்தெழுந்த தெண் திரையுள்
ஒன்றி நின்று நற்றவம் –சென்று சென்று தேவ தேவர்

புன் புல வழி யடைத்து –என்பில் எள்கி நெஞ்சு உருகி
எட்டும் எட்டும் எட்டுமாய் -எட்டினாய பேதமோடு
சோர்விலாத காதலால் –ஆர்வமோடு இறைஞ்சி நின்று
பத்தினோடு பத்துமாய் –பத்தினாய தோற்றமோடு
வாசியாகி நேசமின்றி –வீசி மேல் நிமிர்ந்த தோளின்

கடைந்த பாற் கடல் கிடந்த –மிடைந்த ஏழ் மரங்களும்
எத்திறத்தும் ஒத்து நின்று –நின்பத்துறுத்த சிந்தையோடு
மட்டுலாவு தண் துழாய் –எட்டினோடு இரண்டு எனும்
பின் பிறக்க வைத்தனன் –தன் திறத்தோர் அன்பிலார்
நச்சு அரவணைக் கிடந்த –மெய்த்தன் வல்லை யாதலால்

சாடு சாடு பாதனே –கோடு நீடு கைய
நெற்றி பெற்ற கண்ணன் –கற்ற பெற்றியால் வணங்கு
வெள்ளை வேலை வெற்பு நாட்டு –உள்ள நோய்கள் தீர் மருந்து
பார் மிகுத்த பார முன் –மா ரதர்க்கு வான் கொடுத்து
குலங்களாய ஈர் இரண்டில் –புலன்கள் ஐந்தும் வென்றிலேன்

பண்ணுலாவு மென் மோழி –கண் ணலாலோர் கண்ணிலேன்
விடைக் குலங்கள் ஏழு அடர்த்து –படைத்து அடைத்து அதில் கிடந்து
சுரும்பரங்கு தண் துழாய் –கரும்பு இருந்த கட்டியே
ஊனில் மேய வாவி நீ –வானினோடு மண்ணும் நீ
அடக்க அரும் புலன்கள் ஐந்து அட -விடக்கருதி மெய் செயாது

வரம்பிலாத மாய மாய –வரம்பிலாத பல் பிறப்பு
வெய்ய வாழி சங்கு தண்டு –ஐயிலாத வாக்கை நோய்
மறந்துறந்து வஞ்சமாற்றி –பிறந்து இறந்து பேர் இடர்
காட்டி நான் செய் வல் வினை –கேட்டதன்றி என்னதாவி
பிறப்பினோடு பேர் இடர் –பெறர்க்கு அரிய நின்ன பாதம்

இரந்து உரைப்பது உண்டு வாழி –பரந்த சிந்தை ஓன்று இன்றி
விள் விலாத காதலால் –பள்ளியாய பன்றியாய
திருக்கலந்து சேரு மார்பா –கருக் கலந்த காள மேகம்
கடும் கவந்தன் வக்கரன் –கிடந்து இருந்து நின்று இயங்கு
மண்ணை யுண்டு யுமிழ்ந்து –பண்ணை வென்ற வின் சொல்

கறுத்து எதிர்ந்த கால நேமி –தொறுக்கலந்த ஊனமக்து
காய் சினத்த காசி மன்ன– நாசமுற்று வீழ
கேடில் சீர் வரத்தனாய –வீடதான போகம் எய்தி
சுருக்குவாரை இன்றியே –செருக்குவார்கள் தீக் குணங்க
தூயனாயும் அன்றியும் –நீயு நின் குறிப்பினில்

வைது நின்னை வல்லவா –எய்தலாகும் என்பர்
வாள்களாகி நாள்கள் –ஆளதாகும் நன்மை என்று
சலம் கலந்த செஞ்சடை –அலங்கல் மார்வில் வாச நீர்
ஈனமாய வெட்டு நீக்கி –ஞானமாகி ஞாயிறாகி
அத்தனாகி அன்னையாகி –முத்தனார் முகுந்தனார்

மாறு செய்த வாளரக்கன் –வேறு செய்து தம்முள் என்னை
அச்ச நோயொடு அல்லல் –அச்சுதன் அநந்த கீர்த்தி
சொல்லினும் தொழில் வல்லி நாண் மலர்க்கிழத்தி
பொன்னி சூழ் அரங்க மேய –உன்ன பாத என்ன நின்ற
இயக்கறா பல் பிறப்பில் –மயக்கினான் தன் மன்னு சோதி

இயக்கெலா மறுத்து அறாத வீடு இன்பம் பெற்றதே

———–

ஸ்ரீ திருமாலை

காவலில் புலனை வைத்து –மூவுலகு உண்டு உமிழ்ந்த
பச்சை மா மலை போல் மேனி –இச்சுவை தவிர யான் போய்
வேத நூல் பிராயம் நூறு –பேதை பாலகன் அதாகும்
மொய்த்த வல் வினையுள் நின் –இத்தனை அடியரானார்க்கு
பெண்டிரால் சுகங்கள் உய்ப்ப –தண் துழாய் மாலை மார்பன்

மறம் சுவர் மதிள் எடுத்து –அறம் சுவராகி நின்ற
புலை யறமாகி நின்ற –தலை யறுப்புண்டும் சாகேன்
வெறுப்போடு சமணர் –குறிப்பு எனக்கு அடையுமாகில்
மற்றுமோர் தைவம் உண்டு –அற்றமேல் ஓன்று அறியீர்
நாட்டினான் தெய்வம் எங்கும் –கேட்டிரே நம்பி மீர்காள்

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் –மருவிய பெரிய கோயில்
நமனும் முற்கலனும் பேச –அவன்தூர் அரங்கம் என்னாது
எறியு நீர் வெறி கொள் வே –அறிவிலா மனிசர் எல்லாம்
வண்டினம் முரலும் சோலை –அண்டர் கோன் அமரும் சோலை
மெய்யர்க்கே மெய்யனாகும் –உய்யப்போம் உணர்வினார்கள்

சூதனாகி கள்வனாகி –போதரே என்று சொல்லி
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் –சுரும்பமர் சோலை சூழ்ந்த
இனி திரைத் திவலை மோத –கனி இருந்தனைய செவ்வாய்
குடதிசை முடியை வைத்து –கடல் நிறக்கடவுள் எந்தை
பாயும் நீர் அரங்கம் தன்னுள் –தூய தாமரைக் கண்களும்

பணியினால் மனமதொன்றி –அணியினர் செம்பொனாய
பேசிற்றே பேசல் அல்லால் –மாசற்றார் மனத்துளானை
கங்கையில் புனிதமாய-எங்கள் மால் இறைவன் ஈசன்
வெள்ள நீர் பரந்து பாயும் –உள்ளமே வலியை போலும்
குளித்து மூன்று அனலை ஓம்பும் –களிப்பது என் கொண்டு நம்பி

போது எல்லாம் போது கொண்டு –காதலால் நெஞ்சு மன்பு
குரங்குகள் மலையை நூக்க –மரங்கள் போல் வலிய நெஞ்சம்
உம்பரால் அறியலாகா –நம்பர மாயதுண்டே
ஊரிலேன் காணி யில்லை –காரொளி வண்ணனே
மனத்திலோர் தூய்மை –புனத் துழாய் மலையானே

தவதுள்ளார் தம்மில் அல்லேன் –துவர்த்த செவ்வாயினார்க்கே
ஆர்த்து வண்டு அலம்பும் –மார்க்கம் ஓன்று அறிய மாட்டா
மெய்யெல்லாம் போக விட்டு –ஐயனே அரங்கனே
உள்ளத்தே உறையும் மாலை –உள்ளுவார் உள்ளிற்று எல்லாம்
தாவி அன்று உலகம் எல்லாம் –ஆவியே யமுதே

மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் –உழைக்கின்றேர்க்கு என்னை நோ
தெளிவிலாக் கலங்கல் நீர் –எளியதோர் அருளுமன்றே
மேம் பொருள் போக விட்டு –காம்பறத் தலை சிரைத்து
அடிமையை குடிமையில்லா –முடியினில் துளபம் வைத்தாய்
திரு மறு மார்ப நின்னை –வெருவுறக் கொன்று சுட்டிட்டு

வானுளார் அறியலாகா –ஊனமாயினகள் செய்யும்
பழுதிலா ஒழுகலாற்று –தொழுமினீர் கொடுமின்
அமர வோர் அங்கம் ஆறும் –நுமர்களைப் பழிப்பராகில்
பெண்ணுலாம் சடையினானும் –விண்ணுளார் வியப்ப வந்து
வள வெழும் தவள மாடம் –துளவத் தொண்டாய தொல்

இளைய புன் கவிதையிலும் எம்பிராற்கு இனியவாறே —

————

ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி

கதிரவன் குண திசை –எதிர் திசை நிறைந்தனர்
கொழும் கொடி முல்லை –விழுங்கிய முதலையின்
சுடரொளி பரந்தன –மடலிடைக் கீறி
மேட்டிள மேதிகள் –வாட்டிய வரி சிலை
புலம்பின புட்களும் –அலங்கலந் தொடையல் கொண்டு

இரவியர் மணி நெடும் — புரவியோடு ஆடலும் பாடலும்
அந்தரத்து அமரர்கள் –சுந்தரர் நெருக்க
வம்பவிழ் வானவர் –தும்புரு நாரதர்
ஏதமிழ் தண்ணுமை –மாதவர் வானவர்
கடி மலர்க் கமலங்கள் –தொடை ஒத்த துளவமும்

ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே

————-

ஸ்ரீ அமலனாதி பிரான்

அமலனாதி பிரான் –நிமலன் நின்மலன் நீதி வானவர்
உவந்த உள்ளத்தனாய் –கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்
மந்தி பாய் –அந்தி போல் நிறத்தாடையும்
சதிர மா மதிள் சூழ் –மதுர மா வண்டு பாட
பாரமாய பழ வினை –கோர மா தவம் செய்தனன்

துண்ட வெண் பிறையன் –அண்ட ரண்ட பகிரண்டத்து
கையினார் சுரி சங்கு அனல் ஆழி –அணி அரங்கனார்
பரியனாகி வந்த –கரியவாகிப் புடை பரந்து
ஆல மா மரத்தின் இலை மேல் –கோல மா மணி ஆரமும்
கொண்டல் வண்ணனை –அண்டர் கோன் அணி அரங்கனை

என்னமுதனைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே

————

ஸ்ரீ கண்ணி நுண் சிறுத்தாம்பு

கண்ணி நுண் சிறுத்தாம்பு –நண்ணித் தென் குருகூர்
நாவினால் நவிற்றி –தேவு மற்று அறியேன்
திரி தந்தாகிலும் –பெரிய வண் குருகூர்
நன்மையால் மிக்க –அன்னையாய் அத்தனாய்
நம்பினேன் –செம் பொன் மாடம்

இன்று தொட்டும் –குன்ற மாடம்
கண்டு கொண்டு என்னை –எண்டிசையும்
அருள் கொண்டாடும் –அருள் கொண்டு
மிக்க வேதியர் –தக்க சீர்
பயன் அன்றாகிலும் குயில் நின்றார் பொழில் சூழ்

அன்பன் தன்னை –அன்பனாய்

கண்ணி நுண் சிறுத்–நண்ணித் தென் குருகூர்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ கருட ஸ்தோத்ரம்-ஸ்ரீ கருட மந்த்ரம்–ஸ்ரீ கருட மாலா மந்த்ரம்-ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த –ஸ்ரீ கருட கவசம்–ஸ்ரீ கருட அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்-ஸ்ரீ கருட அஷ்டோத்தர சத நாமாவளி–ஸ்ரீ கருட கவச ஸ்தோத்ரம்

August 30, 2022

பாத்ர பதமா ஸகத விஷ்ணு விமலர்ஷே வேங்கட மஹீத்ரபதி தீர்த்த தின பூதே

ப்ராதுர பவஜ் ஜகதி தைத்யரிபு கண்டா ஹந்த கவி தார்க்கிக ம்ருகேந்த்ர குரு மூர்த்யா —

ஸ்ரீ ஸப்ததி ரத்ன மாலிகா ஸ்தோத்ரம் -ஸ்வாமி ஸ்ரீ கண்ட அவதாரம் என்பதைக் காட்டும்

——–

வித்ராஸி நீ விபூத வைரி வரூதி நீ நாம்
பத்மாஸநேந பரிசார விதவ் ப்ரயுக்தா
உத் ப்ரேஷ்யதே புத ஜநைர் உப பத்தி பூம் நா
கண்டா ஹரேர் ஸமஜநிஷ்ட யாதாத்ம நேதி –ஸ்ரீ சங்கல்ப ஸூர்யோத ஸ்லோகம்

பிரமதேவன் பெருமாளை ஆராதிக்க எந்த மணியை உபயோகித்தாரோ
எந்த மணியின் நாதம் அசுரர்களை பயந்து ஓடச் செய்ததோ =-
அந்த மணியின் அவதாரமே இந்த நாடக ஆசிரியரான ஸ்ரீ ஸ்வாமினி தேசிகன்
என்று ஞானாதிகர்கள் தகுந்த ஹேதுக்களாலே நிர்வஹிக்கிறார்கள்

———————

ததஸ் ச த்வாதசே மாஸே சைத்ரே நாவமிகே திதவ்
நக்ஷத்ரே அதிதி தைவத்யே ஸ்வோச்ச ஸம்ஸ்தேஷு பஞ்ச ஸூ
க்ரஹே ஷு கர்க்கடே லக்நே வாக் பதா விந்துநா ஸஹ
ப்ரோத்யமாநே ஜகந்நாதம் ஸர்வ லோக நமஸ்க்ருதம்
கௌசல்யா ஜனயத் ராமம் ஸர்வ லக்ஷண ஸம் யுதம்–ஸ்ரீ வால்மீகி ராமாயணம்

———-

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ கருட ஸ்தோத்ரம்

கருடாய நமஸ் துப்யம் நமஸ் தே பஷிணாம் பதே
ந போகமாதி ராஜாய ஸூ பர்ணாய நமோ நம
விநதா தந்த ரூபாய கஸ்ய பஸ்ய ஸூதாய ச
அஹீ நாம் வைரிணே துப்யம் விஷ்ணு பத்ராய தே நம
ரக்த ரூபாய தே பஷின் ஸ்வேத மஸ்தக பூஜித
அம்ருதா ஹரணே ஹ்ருஷ்ட தஸ்மை தேவாய தே நம

இதி கருட ஸ்தோத்ர ஸம் பூர்ணம் –

—————

ஸ்ரீ கருட மந்த்ரம்

கருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்திர சத்ரவே
வாஹனாய மஹாவிஷ்ணோ தார்க்ஷயாய அமித தேஜயே
ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா

————-

ஸ்ரீ கருட மாலா மந்த்ரம்

ஓம் நமோ பகவதே, கருடாய;
காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி
கால நல லோல ஜிக்வாய பாதய
பாதய மோஹய மோஹய
வித்ராவய வித்ராவய ப்ரம
ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந தஹ

—————-

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ கருட கவசம்

அஸ்ய ஸ்ரீ கருட கவச ஸ்தோத்ர மந்த்ரஸ்ய
நாரத ருஷி
வைநதேயோ தேவதா
அனுஷ்டுப் சந்தஸ்
மமகாரா பந்த
மோசந த்வாரா வைநதேய ப்ரீத்யர்த்தே ஜபே விநியோகே

ஸிரோ மே கருட -பாத்து லலாடம் -விநதா ஸூதா
நேத்ர து ஸ்ர்பஹா பாது கர்ணவ் பாத்து ஸூ ரார்ச்சித–1-

நாசிகாம் பாது சர்பாரிர் வதனம் விஷ்ணு வாஹந
ஸூர ஸூத அநுஜ கண்டம் புஜவ் பாத்து மஹா பலவ்–2-

ஹஸ்தவ் ககேஸ்வர பாது கராக்ரே த்வ ருணாக்ருதி
நகான் நகாயுத பாது கஷவ் புக்தி பலப்ரத–3-

ஸ்தனவ் மே பாது விஹக ஹ்ருதயம் பாது ஸர்வத
நாபிம் பாது மஹா தேஜா கடிம் பாது ஸூதா ஹர –4-

ஊரூ பாது மஹா வீரோ ஜாநு நீ சண்ட விக்ரம
ஜங்கே துண்டாயுத பாது குல்பவ் விஷ்ணு ரத ஸூதா –5-

ஸூ பர்ணா பாது மே பாதவ் தார்ஷ்ய பாதங்குலீ ததா
ரோம கூபாணி மே வீர த்வசம் பாது பயாபஹ –6-

இத்யேவம் திவ்ய கவசம் பாபக்நம் ஸர்வ காமதம
யா படேத் ப்ராத ருத்தாய விஷ சேஷம் ப்ரணச்யதி –7-

த்ரி சந்த்யம் ய படேன் நித்யம் பந்த நாத் முச்யதே நர
த்வாத ஸாஹம் படேத் யஸ்து முச்யதே ஸத்ரு பந்த நாத் –8-

ஏக வாரம் படேத் யஸ்து முச்யதே ஸர்வ கில்பிஷை
வஜ்ர பஞ்ஜர நாமேதம் கவசம்ன் பந்த மோச நம் –9-

ய படேத் பக்திமான் நித்யம் முச்யதே ஸர்வ பந்த நாத் —

இதி ஸ்ரீ கவச ஆர்ணவ நாரத ப்ரோக்தம் கருட கவசம் ஸம் பூர்ணம்

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து

——————-

ஸ்ரீ கருட அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்

ஸ்ருணு தேவி பரம் குஹ்யம் கருடஸ்ய மஹாத்மந
நாம் நாம் அஷ்டாம் சதம் புண்யம் பவித்ரம் பாப நாஸநம்

அஸ்ய ஸ்ரீ கருட நாம அஷ்டோத்தர சத திவ்ய மஹா மந்தரஸ்ய
ப்ரம்மா ருஷி
அனுஷ்டுப் சந்தஸ்
ஸ்ரீ மஹா கருடோ தேவதா
பிரணவேதி பீஜம்
அவித்யா சக்தி வேதா பிராணா ஸ்ம்ருதி கீலகம் தத்வ ஞானம் ரூபம்
ஸ்ருஷ்டி ஸ்தித்யந்தம் வி நோத ஸர்வ ஆம்நாய
சதுஸ் ஷஷ்டி கலாதாநம் க்ரியா மம ஸர்வ அபீஷ்ட ஸித்த்யர்த்தே
கருட ப்ரீத்யர்த்தே ஜபே விநியோக அத த்யானம்-

அம்ருத கலச யுக்தம் காந்தி ஸம் பூர்ண காத்ரம்
ஸகல விபுத வந்த்யம் வேத ஸாஸ்த்ரை ரசிந்த்யம்

விவித விமல பஷைர் தூயமா நாண்ட கோளம்
ஸகல விஷ விநாஸம் சிந்தயேத் பக்ஷி ராஜம்

வைநதேய ககபதி காஸ்யபேயோ மஹா பல
தப்த காஞ்ஜன வர்ணாப ஸூ பர்ணோ ஹரி வாஹந

சந்தோ மயோ மஹா தேஜா மஹா உத்ஸாஹ க்ருபா நிதி
ப்ரஹ்மண்யோ விஷ்ணு பக்தஸ் ச குந்தேந்து தவளா நந

சக்ர பாணி தர ஸ்ரீ மான் நாகாரிர் நாக பூஷண
விஞ்ஞாநதோ விசேஷஞ்ஜோ வித்யா நிதி ரநாமய

பூதிதோ புவந த்ராதா பயஹா பக்த வத்ஸல
சத்யச் சந்தோ மஹா பக்ஷஸ் ஸூராஸூரா பூஜித

கஜபுக் கச்ச பாசீ ச தைத்ய ஹந்தா அருணா நுஜ
அம்ருதாம் சோ அம்ருத வபுஸ் ராநந்த நிதிர் அவ்யய

நிகமாத்மா நிராதாரோ நிஸ் த்ரை குண்யோ நிரஞ்ஜன
நிர் விகல்ப பரஞ்சோதி பராத்பர தர ப்ரிய

ஸூபாங்கஸ் ஸூபதஸ் ஸூர ஸூஷ்ம ரூபீ ப்ருஹத் தமஸ்
விஷாசீ விஜிதாத்மா ச விஜயோ ஜய வர்த்தந

ஜாட்யஹா ஜகத் ஈஸஸ் ச ஜநார்த்தன மஹா த்வஜ
ஜன ஸந்தாப ஸம்ச் சேத்தா ஜரா மரண வர்ஜித

கல்யாணத கலாதீந கலா தர ஸமப்ரப
சோமபா ஸூர ஸங்கேசோ யஞ்ஞாங்கோ யஞ்ஞ வாஹந

மஹா ஜவோ அதிகாயஸ் ச மன்மத ப்ரிய பாந்தவ
சங்க ப்ருச் சக்ர தாரீ ச பாலோ பஹு பராக்ரம

ஸூதா கும்ப தர ஸ்ரீ மான் துரா தர்ஷோ அமராரிஹா
வஜ்ராங்கோ வரதோ வந்த்யோ வாயு வேகோ வரப்ரதா

விநதா நந்தக ஸ்ரீ மான் விஜி தாராதி சங்குல
பத தவ்ரிஷட்ட ஸர்வேச பாபஹா பாச மோசந

அக்னிஜிஜ் ஜய நிர்க்கோஷ ஜெகதாஹ்லாத காரகா
வக்ர நாஸஸ் ஸூ வக்த்ரஸ் ச மாரக்நோ மத பஞ்ஜந

காலஞ்ஞ கமலேஷ் டச்ச கலி தோஷ நிவாரண
வித் யுந்நிபோ விசாலாங்கோ விநதா தாஸ்ய மோசந

ஸோம பாத்மா த்ரி வ்ருந் மூர்த்தா பூமி காயத்ரி லோசநா
சாம காந ரத ஸ்ரக்வீ ஸ்வச் சந்த கதிரக்ரணீ

இதீதம் பரமம் குஹ்யம் கருடஸ்ய மஹாத்மந
நாம்நா மஷ்ட சதம் புண்யம் பவித்ரம் பாவநம் ஸூபம்

அஷ்டாப தாத்ரி ப்ரதிமாங்க காந்திம்
அஷ்டோ ரகாதீஸ்வர பூஜி தாங்கம்

அஷ்டாயுத பிரோஜ்ஜ்வல தஷ்ட பாஹும்
அபீஷ்ட ஸித்த்யை கருடம் ப்ரபத்யே

இதி கருட அஷ்டோத்தர சத நாமாநி ஸம் பூர்ணாநி

————

ஸ்ரீ கருட அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் வைநதேயாய நம
ஓம் ககபதயே நம
ஓம் காஸ்யபேயாய நம
ஓம் மஹா பலாய நம
ஓம் தப்த காஞ்ஜன வர்ணாபாய நம
ஓம் ஸூபர்ணாய நம
ஓம் ஹரி வாஹநாய நம
ஓம் சந்தோ மயாய நம
ஓம் மஹா தேஜஸே நம
ஓம் மஹா உத்ஸாஹாய நம

ஓம் க்ருபா நிதயே நம
ஓம் ப்ரஹ்மண்யாய நம
ஓம் விஷ்ணு பக்தாய நம
ஓம் குந்தேந்து தவளா நநயாய நம
ஓம் சக்ர பாணி தராய நம
ஓம் ஸ்ரீ மதே நம
ஓம் நாகாரயே நம
ஓம் நாக பூஷணாயா நம
ஓம் விஞ்ஞாநதாய நம
ஓம் விசேஷஞ்ஞாய நம

ஓம் வித்யா நிதயே நம
ஓம் அநாமயாய நம
ஓம் பூதிதாய நம
ஓம் புவந த்ராத்ரே நம
ஓம் பயக்நே நம
ஓம் பக்த வத்ஸலாய நம
ஓம் சத்யச் சந்தஸே நம
ஓம் மஹா பஷாய நம
ஓம் ஸூராஸூரா பூஜிதாய நம
ஓம் கஜபுஜே நம

ஓம் கச்ச பாசிநே நம
ஓம் தைத்ய ஹந்த்ரே நம
ஓம் அருணா நுஜாய நம
ஓம் அம்ருதாம்சுவே நம
ஓம் அம்ருத வபுஷே நம
ஓம் ஆநந்த நிதயே நம
ஓம் அவ்யயாய நம
ஓம் நிகமாத்மநே நம
ஓம் நிராதாராய நம
ஓம் நிஸ் த்ரை குண்யாய நம

ஓம் நிரஞ்ஜநாய நம
ஓம் நிர் விகல்பாய நம
ஓம் பரஸ்மை ஜோதிஷே நம
ஓம் பராத்பர தர ப்ரியாய நம
ஓம் ஸூபாங்காய நம
ஓம் ஸூபதாய நம
ஓம் ஸூராய நம
ஓம் ஸூஷ்ம ரூபீணே நம
ஓம் ப்ருஹத் தமாய நம
ஓம் விஷாசிநே நம

ஓம் விஜிதாத்மநே நம
ஓம் விஜயாய நம
ஓம் ஜய வர்த்தநாய நம
ஓம் ஜாட்யஹ்நே நம
ஓம் ஜகத் ஈஸாய நம
ஓம் ஜநார்த்தன மஹா த்வஜாய நம
ஓம் ஜன ஸந்தாப ஸம்ச் சேத்ரே நம
ஓம் ஜரா மரண வர்ஜிதாய நம
ஓம் கல்யாணதாய நம
ஓம் கலாதீதாய நம

ஓம் கலா தர ஸமப்ரபாய நம
ஓம் சோமபே நம
ஓம் ஸூர ஸங்கேசாய நம
ஓம் யஞ்ஞாங்காய நம
ஓம் யஞ்ஞ வாஹநாயா நம
ஓம் மஹா ஜவாய நம
ஓம் அதிகாயாய நம
ஓம் மன்மத ப்ரிய பாந்தவாய நம
ஓம் சங்க ப்ருதே நம
ஓம் சக்ர தாரிணே நம

ஓம் பாலாய நம
ஓம் பஹு பராக்ரமாய நம
ஓம் ஸூதா கும்ப தராய நம
ஓம் ஸ்ரீ மதே நம
ஓம் துரா தர்ஷாய நம
ஓம் அமராரிக்நே நம
ஓம் வஜ்ராங்காய நம
ஓம் வரதாய நம
ஓம் வந்த்யாய நம
ஓம் வாயு வேகாய நம

ஓம் வர ப்ரதாய நம
ஓம் விநதா நந்தகாய நம
ஓம் ஸ்ரீ மதே நம
ஓம் விஜி தாராதி சங்குலாய நம
ஓம் பத தவ்ரிஷட்டாய நம
ஓம் ஸர்வேசாய நம
ஓம் பாபக்நே நம
ஓம் பாச மோசநாய நம
ஓம் அக்னிஜிதே நம
ஓம் ஜய நிர்க்கோஷாய நம

ஓம் ஜெகதாஹ்லாத காரகாய நம
ஓம் வக்ர நாஸாய நம
ஓம் ஸூ வக்த்ராய நம
ஓம் மாரக்சாய நம
ஓம் மத பஞ்ஜநாய நம
ஓம் காலஞ்ஞாய நம
ஓம் கமலேஷ்டாய நம
ஓம் கலி தோஷ நிவாரணாய நம
ஓம் வித் யுந்நிபாய நம
ஓம் விசாலாங்காய நம
ஓம் விநதா தாஸ்ய மோசநாய நம
ஓம் ஸோம பாத்மநே நம
ஓம் த்ரி வ்ருந் மூர்த்நே நம
ஓம் பூமி காயத்ரி லோசநாய நம
ஓம் சாம காந ரதாய நம
ஓம் ஸ்ரக்விநே நம
ஓம் ஸ்வச் சந்த கதயே நம
ஓம் அக்ரண்யே நம

ஸ்ரீ கருட அஷ்டோத்தர சதா நாமாவளி ஸமாப்தம்
நாம்நா மஷ்ட சதம் புண்யம் பவித்ரம் பாவநம் ஸூபம்

அஷ்டாப தாத்ரி ப்ரதிமாங்க காந்திம்
அஷ்டோ ரகாதீஸ்வர பூஜி தாங்கம்

அஷ்டாயுத பிரோஜ்ஜ்வல தஷ்ட பாஹும்
அபீஷ்ட ஸித்த்யை கருடம் ப்ரபத்யே

இதி கருட அஷ்டோத்தர சத நாமாநி ஸம் பூர்ணாநி

————————

ஸ்ரீ கருட கவச ஸ்தோத்ரம்-

அஸ்ய ஸ்ரீ கருட கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ப்ரஹ்மா ருஷி
அனுஷ்டுப் சந்தஸ்
ஸ்ரீ மஹா விஷ்ணுர் கருடா தேவதா
ஓம் பீஜம் -வித்யா சக்தி -ஸ்வாஹா
கீலகம் -கருட ப்ரஸாத ஸித்த்யர்த்தே
ஜபே விநியோக

த்யானம்

ஆகுஞ்ச்ய ஸ்வயம பரம் ப்ரவிசார்ய பாதம் திர்யங்முகம் சலமசர்க்க விவ்ருத்த சங்கம்

அந்யோன்ய கட்டி தகரம் கலசப்தமோச முட்டீய மாந மநிசம் ஸ்மர துக்க சாந்த்யை–1-

மூர்த்தா நம் கருட பாத்து லலாடம் விநதா ஸூதா
நயநே காச்யப பாது ப்ருவவ் புஜக நாஸந–2-

கர்ணவ் பாது ஸூ பர்ணோ மே கபாலம் புஜ காதிப
நாஸி காம் பாது மே தார்ஷ்ய கருத்மான் வதனம் மம –3-

ரஸ நாம் பாது வேதாத்மா தச நாத் தைத்ய ஸூதந
ஓஷ்டவ் விஷ்ணு ரத பாது புஜவ் மே போகி பூஷண -4-

–பாது கரவ் கச்சப பஷண
–ரக்நிஜ பாது நகான் நக முகாயுத –5-

—ஹ்ருதயம் கேசவ த்வஜ
மத்யம் பாது விஷ ஹர –6-

குஹ்யம் குஹ்யார்த்த வேதீ ச பாது மே பச்சிமம் விபு
ஊரு ஸாஷ்ட புஜ பாது ஜாநுநீ சங்க சக்ர ப்ருத் –7-

வக்ர நாஸஸ் ததா ஜங்கே சரணவ் ஸூர பூஜித
ஸர்வாங்க மம்ருதாங்கோ மே பாது பக்த ஜன ப்ரிய –8-

புரத பாது மே வீர பச்சாத் பாது மஹா பல
தக்ஷிணம் பாது பார்ஸ்வம் மே மஹா காய விபீஷண –9-

பார்ஸ்வே முத்தர மவ்யக்ர பாதூர்த்வம் பாப நாஸந
அதஸ்தா தம்ருதா ஹர்த்தா பாது ஸர்வத்ர ஸர்வதா –10-

அஷ்டாபிர் போகிவர்யைர் த்ருத வர மணிபிர் பூஷிதம் சாத கும்பச்
சாயாபிர் தேஹ பாபிர் திவஸ சத கரம் த்ராகி வாதீப யந்தம்

சங்கம் சக்ரம் கரைஸ் ஸ்வைர் ததத மநு பமம் புஸ்தகம் ஞான முத்ராம்
வந்தே வேதாந்த தத்வம் ஸகல விஷ ஹரம் ஸர்வதா வைநதேயம் –11-

பல ஸ்ருதி

இதீதம் பரமம் குஹ்யம் ஸர்வ அபீஷ்ட ப்ரதாயகம்
காருடன் கவசம் கௌரி ஸமஸ்த விஷ நாஸநம் –12

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய திருவடி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிச் செய்த ஸ்ரீ நித்ய கிரந்தம் —

July 15, 2022

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிச் செய்த நவ கிரந்தகளுக்குள் இறுதியானது – ஸ்ரீ நித்ய கிரந்தம் -என்பது
ஸ்ரீ பகவத் ஆராதன ப்ரயோகம் வஷ்யே -பகவானை ஆராதிக்கும் முறையைக் கூறுகிறேன் -என்று தொடங்கி இருப்பதால்
இது பகவத் ஆராதன கிரமத்தைத் தெரிவிப்பதற்காகவே அருளிச் செய்யப் பெற்று இருந்தாலும்
அதற்குப் பூர்வ அங்கமாக உடலைச் சுத்தி செய்து கொள்வது முதலியனவும் இந்நூலில் முதலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளன

திருவாராதனம் செய்யும் முன்பு அவனை சரண் அடைய வேண்டும் என்பதால்
தமேவ சரணம் உப கச்சேத் அகில இத்யாதிநா -என்று இந்நூலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளது
அகில ஹேய ப்ரத்ய நீக -என்பது முதலான சூர்ணிகைகளால் எம்பெருமானைச் சரண் அடைய வேண்டும் என்பதால்
அகில ஹேய ப்ரத்ய நீக என்பது தொடங்கி
த்வத் பாதார விந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே -என்பது வரையும்
அதற்கு மேல் உள்ள ஸ்லோகங்களையும் இங்கு அனுசந்திக்க வேண்டும் என்பர் பெரியோர்

தண்டம் சமர்ப்பித்து பற்றி ப்ரணம்ய – வணங்கி -என்று ஒருமையிலே அருளிச் செய்தமையால்
ஒரு முறை தண்டம் சமர்ப்பிப்பதே எம்பெருமானாருடைய ஸித்தாந்தம் என்பது தெளிவு
அதே போல் மணி சேவிப்பதையும் அருளிச் செய்யாமையால் இல்லங்களில் திரு வாராதனம் செய்யும் பொழுது மணி சேவிப்பது இல்லை என்ற அனுஷ்டானமும் காட்டப்படுகிறது –

இறுதியில்
ஸ்ருதி ஸூகைஸ் ஸ்தோத்ரைஸ் அபிஷ்டூய-செவிக்கு இனிய சொற்களால் ஸ்துதித்து -என்று அருளிச் செய்யப்பட்டுள்ளதால்
செவிக்கு இனிய செஞ்சொல் -திருவாய் -10-6-11-திவ்ய பிரபந்த பாசுரங்களை சேவிக்க வேணும் என்பதையும் காட்டி அருளுகிறார் –

————————-

ஸ்ரீ நித்ய கிரந்த சாரம் –

நித்யம் –பரமை காந்திகளுக்கு –
பகவத் ஆராதனை பிரகாரம் வஷ்யே-யாகம் –யஜ தேவ பூஜாயாம் -திருவாராதனம் –
பகவத் ப்ரீத்யர்த்தம் கைங்கர்ய ரூபம் -ஏகாந்தி -பரமை காந்தி – மானஸ காகித க்ருதவ்யங்கள் –
பஞ்ச கால பராயணம் –ஆறு நாழிகையாக பிரித்து –
பிராத காலம் – சங்கம காலம் -மத்தியான -அபரான காலம் -சாயங்காலம் –
அபி கமனம் –நோக்கி போவது – உபாதானம் -சேகரிப்பது -இஜ்ஜா யாகம் திருவாராதனம் -ஸ்வாத்யாயம் – யோக காலம் –
யானை -ராஜா -இளவரசன் -பிறந்த குழைந்தை -போன்ற பரிவுடன் -ப்ரீதி காரித கைங்கர்யம் -ரதி -ஆசை உடன் -பரமை காந்தி -பகவான் ஒருவனுக்கு சேஷ பூதன்
கல்யாணை
திரு உதரம் -ஆப்ய வகாரிகம் –அன்னம் பழங்கள் சமர்ப்பித்து – சம் ஸ்பர்சிக்கம் –சந்தனம் புஷபம்-
ஒவ்பசாரிகம் தூபம் தீபம் – அகில பரி ஜனங்களுக்கும் -ஸமஸ்த மங்கள பரிவாரங்கள் –
திரு மந்த்ரம் -சுத்தி –திக் பந்தனம் -திக்குகளுக்கு –
தீர்த்த பீடம் -உடம்பில் மண் பூசி -அநு லேபனம் -உதக அஞ்சலி -கங்கா ஜலம் இடது திருவடி கட்டை விரலில் வந்த தீர்த்தம் என்ற நினைவால் -சப்த -தடவை –
திருவடியில் தலை வைத்து -எதுவரை இயலுமோ அது வரை திரு மந்த்ரம் -சுக்ல வஸ்திரம் -பன்னிரு திருமண் -பெருமாள் தாயார் நினைத்து –
அஷ்டோஷார சதம் மூல மந்த்ரம் -ஸ்ரீ வைகுண்டம் பரிஷத் -தேவர்கள் ரிஷிகள் -யாக பூமிக்கு கச்சதி –
குரு பரம்பரை பூர்வகம் –த்வயம் -பிராபகம் பிராப்யம் அவனே -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -ஸ்வரூபம் ரூபம் விபூதி குணம் ஐஸ்வர்யம் -அனுசந்தானம் –
ப்ரத்யக்ஷ ரூப அனுசந்தானம் -சர்வேஸ்வரஸ்வரம் -ஸ்வாமித்வம் –தாஸ்ய சித்திக்காக -அத்யந்த ப்ரீதி -ப்ரீதி காரித பரி பூர்ண கைங்கர்யம்
தன்னால் கொடுக்கப்பட்ட சரீரம் தானே விநியோகம் கொள்கிறான் –

சரீர சுத்தி பூத சுத்தி -மூல மந்த்ரம் வைத்து -ஸூ ஆத்மாநாம் -ஓம் இத் ஆத்மாநாம் உன்ஜீத -ஆத்மாவை பகவான் கட்டை விரலில் சமர்ப்பித்து –
ஆராதனை காலத்தில் பகவத் பிரசாதத்தால் -உயர்ந்த சரீரம் வழங்குவான் -அம்ருத மயம் -சர்வ கைங்கர்யம் பண்ணும் யோக்யதை –மானஸ வியாபாரம் –
ஸூரபி முத்திரை காட்டி –பரிகல்பயாமி -அர்க்யம் பாத்யம் ஆசமனீய ஸ்நாநீய வட்டில்கள் –ஸர்வார்த்த தோயம் -நடுவில் -பிரதி க்ரஹ பாத்திரம் படிகம் –
திரு ஒத்து வாடை சமர்ப்பித்து –
ஓம் ஆதார சக்தி நம கூர்ம ரூபி நம -பீடம் – ஸ்ரீ வைகுண்டாய திவ்ய மண்டபம் நம ஸ்ரீ பூமா நீளா -பத்னீ ஜனங்கள் ஆவாஹனம் –
க்ரீடாதி திவ்ய பூஷணங்கள் எல்லாம் நித்ய ஸூரிகள் –நினைவுடன் வணங்கி –
திவ்ய ஆயுதங்கள் -பஞ்சாயுதங்கள் -ஸ்பர்சம் கொண்டதால் பூரித்து உள்ள – -திரு அனந்த ஆழ்வான்-பெரிய திருவடி
ஸ்ரீ விஷ்வக் சேனர்–ஸூத்ரவதி சமேத -(ஏக பீடம் திரு மால் இரும் சோலை சேவை உண்டே -இருவருக்கும் )
கஜா முகன் தொடங்கி விஷ்வக் சேனர் பரிஜனம் -வாசல் காப்பார்களை வணங்கி –
குமுதாய -கோயில் காப்பார்கள் -ஸூ முகன் -ஸூ பிரதிஷ்டன் -போல்வார் -திவ்ய அவதார தேசங்கள் -நம் அர்ச்சை தானே அனைத்தாகவும்-
ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன நியாமகன் –

மந்த்ராஸனம் -ஸ்நாநாசனம் -அலங்காராசனம் -போஜ்யாசனம் -புநர் மந்த்ராஸனம் -பர்யங்காசனம்
மூன்று வியாபக மந்த்ரங்கள் -அனுசந்தானம் -யதா சக்தி -சர்வ போக பூரணீம் -மாத்ரா பிரசாதம் -அதி ப்ரிய தரம் –

————–

ஸ்ரீ நித்ய கிரந்தத்தில் உள்ள விஷயங்கள்
1- பகவானே நம்மைக் கொண்டு திருவாராதனம் செய்வித்துத் கொள்கிறான் என்று அனுசந்தித்தல்
2-நீர் நிலைக்குச் சென்று தேஹ சுத்தி செய்து கொள்ளுதல்
3-தீர்த்தமாடுதல்
4-வேஷ்ட்டி உத்தரீயம் அணிந்து திருமண் காப்பு இட்டுக் கொள்ளுதல்
5-ஆதார சக்தி தர்ப்பணம் முதலியவை செய்தல்
6-குரு பரம்பரையை அனுசந்தித்து பிறகு அகில ஹேய ப்ரத்ய நீக என்பது முதலிய
சரணாகதி கத்ய சூர்ணிகைகளையும் அனுசந்தித்து எம்பெருமானைச் சரண் அடைதல்
7-எம்பெருமானுடைய வலது திருவடிகளில் புகுவதாக நினைத்தால்
8-ஆவாஹனங்கள் செய்து வட்டில் முதலியவற்றை வைத்தல்
9-எம்பெருமானுடைய பரிஜன பரிவாரங்களை வணங்குதல்
10- எம்பெருமானுக்கு தண்டம் சமர்ப்பித்துத் திரு வாராதனத்தைத் தொடங்குதல்
11-அர்க்கியம் பாத்யம் ஆசமநீயம் சமர்ப்பித்தல்
12-ஸ்நாநாசனம் -திருமஞ்சனம் -சமர்ப்பித்தல்
13-அலங்கார ஆசனம் சமர்ப்பித்தல்
14-மந்த்ராஸனம் -உபசாரங்கள் -சமர்ப்பித்தல்
15-போஜியாசானம் -அமுது =சமர்ப்பித்தல்
16-மீண்டும் மந்த்ராஸனம் சமர்ப்பித்தல்
17-செவிக்கினிய செஞ்சொற்களால் ஸ்துதித்தல்
18-தண்டம் ஸமர்ப்பித்து திருவாராதனத்தை நிறைவு செய்தல் –

————-

அத பரமைகாந்திநோ பகவத் ஆராதன பிரயோகம் வஷ்யே

இனி பரமைகாந்திகளுடைய பகவானை ஆராதிக்கும் முறையைக் கூறுகிறேன்

பகவத் கைங்கர்ய ரதிர் பரமைகாந்தீ பூத்வா -பகவாநேவ ஸ்வ சேஷ பூதேந மயா
ஸ்வகீயைஸ் ச கல்யாண தமை ஒவ்ப சாரிக ஸாம் ஸ்பர்சிக அப்யவ  ஹாரிகை போகை
அகில பரிஜன பரிச்சாக அந்விதம்
ஸ்வாத்மாநம் ப்ரீதிம் காரயிதும் உபக்ரமத இதி அநு சந்தாய
தீர்த்தம் கத்வா ஸூசவ் தேசே பாதவ் ப்ரஷாள்ய ஆஸம்ய தீரம் ஸம் சோத்ய
ஸூசவ் தேசே மூல மந்த்ரேண ம்ருதம் ஆதாய த்விதா க்ருத்வா சோதி ததீரே நிதாய
ஏகேந அதிக பாகேந தேஹ மல பிரஷாளநம் க்ருத்வா நீமஜ்ஜ்ய ஆஸம்ய பிராணாயாம த்ரயம் ஆஸீநோ பகவந்தம் த்யானம் க்ருத்வா
அந்யம் ம்ருத் பாகம் ஆதாய வாம பாணி தலே த்ரிதா க்ருத்வா ப்ருதக் ப்ருதக் ஸம் ப்ரோஷ்ய
அபி மந்த்ர்ய ஏகேந திக் பந்தனம் அஸ்த்ர மந்த்ரேண குர்யாத்
அன்யேன தீர் தஸ்ய பீடம் இதரேண காத்ராநு லேபநம்

பகவானுக்கு கைங்கர்யம் செய்வதில் விருப்பமுடைய பரமைகாந்தியாக ஆகி
பகவானே தன்னுடைய அடியவனான என்னால்
தன்னுடையவைகளான மங்களமான உபசாரங்களான குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனத்துக்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய போகங்களால் அனைத்து அடியவர்களுடன் பரிவாரங்களுடன் கூடிய
தன்னை ப்ரீதி செய்து கொள்வதற்குத் தொடங்குகிறான் என்று அனுசந்தித்து
தீர்த்தத்துக்கு -நதி வல்லது குளத்துக்குச் சென்று -சுத்தமான இடத்திலே கால்களைக் கழுவிக் கொண்டு
ஆசமனம் செய்து கரையை நன்கு சுத்தம் செய்து
சுத்தமான இடத்தில் இருந்து திருமந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு
மண்ணை எடுத்து அதனை இரு பங்கு ஆக்கி சுத்தமான இடத்தில் வைத்து
மண்ணில் ஒரு அதிக பாகத்தால் உடலை சுத்தம் செய்து கொண்டு தீர்த்தத்தில் முழுகி
ஆசமனம் செய்து அமர்ந்து பகவானை த்யானித்துக் கொண்டு மூன்று முறை பிராணாயாமம் செய்து
மற்ற ஒரு மண்ணின் பாகத்தை எடுத்து -இடது கையில் மூன்று பாகமாக்கி தனித்தனியே நன்றாக ப்ரோக்ஷித்து மந்த்ரித்து
மண்ணின் ஒரு பாக்கத்தால் -ஸஹஸ்ரோல்காய ஸ்வாஹா –வீர்யாய அஸ்த்ராய பட் -என்ற அஸ்த்ர மந்திரத்தால் திக் பந்தனம் செயய வேண்டும்
மற்ற ஒரு மண்ணின் பாகம் தீர்த்தத்துக்குப் பீடமாகும்
மற்ற ஒரு மண்ணின் பாகத்தால் உடலைத் தேய்த்துக் கொள்ள வேண்டும் –

தத பாணீ ப்ரஷால்ய உதக அஞ்சலி மாதாய தீர்தஸ்ய அர்க்க்யம் உத் ஷிப்ய
பகவத் பாத அங்குஷ்ட விநிஸ்ருத கங்கா ஜலம் ஸங்கல்பித பீடே ஆவாஹ்ய அர்க்யம் தத்வா மூல மந்த்ரேண அபி மந்த்ர்ய
உதக அஞ்சலி மாதாய ஸப்த க்ருத்வா அபி மந்த்ர்ய ஸ்வ மூர்த்நி சிஞ்சேத் ஏவம் த்ரி பஞ்ச க்ருதவ ஸப்த க்ருத்வோ வா

பிறகு இரு கைகளையும் கழுவிக் கொண்டு கைகளில் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு பகவானுடைய திருவடிகளின் கட்டை விரலில் இருந்து பெருகுகிற
கங்கா ஜலத்தை சங்கல்ப்பித்து வைத்து இருக்கிற பீடத்தில் ஆவாஹனம் செய்து அர்க்யம் கொடுத்து மூல மந்திரத்தினால் அபி மந்திரித்து தலையிலே நனைத்துக் கொள்ள வேண்டும் –
இவ்வாறு மூன்று முறை ஐந்து முறை அல்லது ஏழு முறை செய்ய வேண்டும்

தஷிணேந பாணிநா ஜல மாத்தையா அபி மந்த்ர்ய பீத்வா ஆஸம்ய ஸ்வாதமாநம் ஸம் ப்ரோஷ்ய -பரி ஷிஸ்ய -தீர்தே நிமக்னோ
பகவத் பாதாரவிந்த வின்யஸ்த சிரஸ்க யாவச் சக்தி மூல மந்த்ரம் ஜபித்வா
உத்தீர்ய ஸூக்லஸ்த்ரதரோ த்ருத உத்தரீ யஸ்ஸ ஆஸம்ய
ஊர்த்வ புண்ட்ரான் தத் தன் மந்த்ரேண தாரயித்வா பகவந்தம் அநு ஸ்ம்ருத்ய
தத் தன் மந்த்ரேண பகவத் பர்யந்த அபி தாயிநா மூல மந்த்ரேண ச ஜலம் பீதவா ஆஸம்ய ப்ரோஷ்ய பரி ஷிஸ்ய
உதக அஞ்சலிம் பகவத் பாதயோ நிஷிப்ய ப்ராணாநா யம்ய பக்கவாதம் த்யாத்வா
அஷ்டோத்தர சதம் மூல மந்த்ரம் ஆவர்த்ய பரி க்ரம்ய நமஸ் க்ருத்ய ஆதார ஸக்த்யாதி ப்ருதி வ்யந்தம் தர்ப யித்வா
ஸ்ரீ வைகுண்டாதி பாரிஷ தாந்தம் தர்ப யித்வா தேவான் ருஷீன் பித்ரூன் பகவத் ஆத்மகான் த்யாத்வா ஸந்தர்ப
வஸ்திரம் ஸூசைவ தேசே ஸம் பீட்ய ஆஸம்ய ஆவாஹிததீர்தம் மூல மந்த்ரேண ஆத்மநி ஸமாஹ்ருத்ய யாக பூமிம் கச்சேத்

வலது கையால் தண்ணீரை எடுத்துக் கொண்டு அபி மந்திரித்து பருகி ஆசமனம் செய்து தன்னை ப்ரோக்ஷித்துக் கொண்டு
தீர்த்தத்தில் முழுகி பகவானுடைய திருவடித் தாமரைகளைத் தலையிலே கொண்டவனாக நினைத்துக் கொண்டு
சக்தி யுள்ளவரை மூல மந்த்ரத்தை ஜபித்து தீர்த்தத்தில் இருந்து எழுந்து
வெண்மையான ஆடையை அணிந்தவனாய் உத்தரீயத்தையும் அணிந்தவனாய் ஆசமனம் செய்து
திரு மண் காப்பினை அந்தவந்த மந்த்ரங்களைச் சொல்லி தரித்துக் கொண்டு பகவானை நினைத்துக் கொண்டு
பகவான் வரை அந்தவந்த மந்த்ரங்களைச் சொல்லி -திருமந்த்ரத்தையும் சொல்லி தீர்த்தத்தைப் பருகி ஆசமனம் செய்து ப்ரோக்ஷித்துக் கொண்டு
பரி சேஷணம் செய்து கையிலே தீர்த்தத்தை எடுத்து பகவானுடைய திருவடிகளில் சமர்ப்பித்து பிராணாயாமம் செய்து
பகவானை நினைத்துக் கொண்டு நூற்று எட்டு முறை மூல மந்த்ரத்தை ஜபித்து தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்கி
ஆதார சக்தி முதல் பிருத்வி வரை தர்ப்பித்து ஸ்ரீ வைகுண்டம் முதலாக எம்பெருமானுடைய பரிவாரங்கள் வரை தர்ப்பித்து
பகவானை ஆத்மாவாகக் கொண்டவர்களாக தேவர்கள் முனிவர்கள் பித்ருக்கள் ஆகியோரை த்யானித்துத் தர்ப்பித்து
முன் களைந்த ஆடையை சுத்தமான இடத்தில் பிழிந்து சாய்த்து ஆசமனம் செய்து முன்பு ஆவாஹனம் செய்த தீர்த்தத்தை மூல மந்திரத்தால் தன்னிடம் ஆவாஹனம் செய்து
யாக பூமியான திருவாராதனம் செய்ய வேண்டிய இடத்துக்குச் செல்ல வேண்டும் –

ஸூ ப்ரஷாலித பாணி பாத ஸ்வா சாந்த ஸூசவ் தேசே அதி மநோ ஹரே நிஸ் சப்தே புவம் சங்க்ருஹ்ய தாம்
சோஷணாதிபி விசோத்ய குரு பரம்பரயா பரம கூறும் பகவந்தம் உபாகம்ய தமேவ ப்ராப்யத்வேந ப்ராபகத்வேந அநிஷ்ட நிவாரகத்வேந இஷ்ட ப்ராபகத்வேந ச யதா வஸ்தித
ஸ்வரூப ரூப குண விபூதி லீலோ பகரண விஸ்தாரம் அநு சந்தாய தமேவ சரணம் உபா கச்சேத் அகில ஹேய –இத்யாதி நா

நன்றாக அலம்பிய கை கால்களுடன் சுத்தமான மனத்துடன் சுத்தமான மனத்துக்கு இனிய சப்தம் இல்லாத இடத்தை அடைந்து
அந்த இடத்தை உணர்த்துதல் முதலியவைகளால் சுத்தம் செய்து
குரு பரம்பரை வழியாகப் பரம குருவான பகவானை அடைந்து ஸ்துதித்து –
அந்த பகவானையே அடையப்படுபவனாகவும் -அடைவிப்பவனாகவும் -விரும்பாதவற்றைத் தவிர்ப்பவனாகவும் –
விரும்பியவற்றைத் தருபவனாகவும் -அவனுடைய உள்ளபடியான ஸ்வரூபம் திருமேனி கல்யாண குணங்கள்
உபய விபூதிச் செல்வங்கள் முதலிய விளையாட்டு உபகரணங்களை விரிவாக அனுசந்தித்து
சரணாகதி கத்யத்தில் உள்ள அகில ஹேய -முதலிய சூர்ணிகைகளையும் அனுசந்தித்து
அந்த பகவானையே சரணம் அடைய வேண்டும் –

ஏவம் சரணம் உபாகம்ய தத் ப்ரஸாதோப ப்ரும்ஹித மநோ வ்ருத்தி தமேவ பகவந்தம் ஸர்வேஸ்வரேஸ்வரம் ஆத்மந
ஸ்வாமித்வேந அநு சந்தாய அத்யர்த ப்ரியா வாரித
விசததம ப்ரத்யக்ஷ ரூப அநு த்யாயேந த்யாயன் ஆஸீத
தத தத் அனுபவ ஜெனித அதிமாத்ர ப்ரீதி காரித பரிபூர்ண கைங்கர்ய ரூப பூஜாம் ஆரபேத

இப்படி சரண் அடைந்து அவனுடைய அருளால் பெறப்பட்ட மனத்தின் செயல்பாட்டை உடையவனாய் ஸர்வேஸ்வர ஈஸ்வரனான அந்த பகவானையே
தனக்கு ஸ்வாமியாக அநு சந்தித்து மிகவும் பிரியமாய்த் தடை இன்றித் தொடர்வதும் நேரில் காண்பது போல மிகத் தெளிவாக உள்ளதுமான
தியானத்தினால் தியானித்துக் கொண்டு இருக்க வேண்டும் –
பிறகு அந்த அனுபவத்தினால் பிறந்த மிக்க ப்ரீதியினால் செய்விக்கப் பட்ட பரிபூர்ண கைங்கர்ய ரூபமான திரு வாராதனத்தைத் தொடங்க வேண்டும் –

பகவான் ஏவ ஸ்வ நியாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வ சேஷதைக ரசேந அநே நாத்மநா
ஸ்வ கீயைஸ் ச தேஹ இந்த்ரிய அந்தக்கரணை
ஸ்வ கீய கல்யாண தம த்ரவ்ய மயான் ஒவ்ப சாரிக ஸாம்ஸ்பர்ஸிக அப்யவ ஹாரிகாதி ஸமஸ்த போகான் அதி ப்ரபூதான் அதி சமக்ரான் அதி ப்ரிய தமான் அத்யந்த பக்தி க்ருதான்
அகில பரிஜன பரிச்சதான் விதாய
ஸ்வஸ்மை ஸ்வ ப்ரீதயே ஸ்வயமேவ ப்ரதிபாத யிதும் உபக்ரமத இதி அநு சந்தாய
ஸ்வ தேஹ பஞ்ச உபநிஷந் மந்த்ரான் ஸம்ஹார க்ரமேண ந்யஸ்ய ப்ராணாயாமேந ஏகேந தஷிணேந பாணிநா
நாபி தேசே மூல மந்த்ரம் நியஸ்ய மந்த்ரோத்பூத சண்ட வாய்வாப் யாயித நாபீ தேசஸ்தா வாயுநா ஸரீரம் அந்தர் பஹிஸ்ஸ ஸர்வ தாத்தாவை மயம்
தத்துவ க்ரமேண விசோஷ்ய புநரபி ப்ராணாயாமேந ஏகேந ஹ்ருத் தேசே மூல மந்த்ரம் ந்யஸ்ய மந்த்ரோத்பூத
சக்ராக் நிஜ் வாலோப ப்ரும்ஹித
ஜாடராக்னிநா தக்த தத் தத் சமஷ்டி ப்ரலீந ஸர்வ தத்வ ஸர்வ கில்பிஷ ஸர்வ அஞ்ஞான தத் வாஸநோ பூத்வா
பகவத் தக்ஷிண பாத அங்குஷ்டே மூல மந்த்ரேண ஸ்வாத்மாநம் ப்ரவேசயேத்

பகவானே தன்னால் நியமிக்கப் படுகிற ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடையதும்
தனக்கு அடிமைப்பட்டு இருத்தலையே ரஸமாக உடைய இந்த ஆத்மாவினால்
தன்னுடைய தேஹ இந்திரிய மனஸ் முதலிய கரணங்களினால்
தன்னுடைய மங்களமான பொருள்களான உபசாரங்களான குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனதற்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய மிகவும் உயர்ந்தவைகளாய் -மிகவும் நிறைந்தவைகளாய்-மிக ப்ரீதியானைவைகளாய்
மிக்க பக்தியினால் ஆனவைகளாய் உள்ள அனைத்து போகங்களால்
அனைத்து அடியவர் பரிவாரங்களுடன் கூடிய தன்னை ப்ரீத்தி செய்து கொள்வதற்காகத் தானே தொடங்குகிறான் என்று அனுசந்தித்து
தன்னுடைய உடலில் பஞ்ச உபநிஷத் மந்த்ரங்களை ஸம்ஹார க்ரமத்தில் ந்யாஸம் செய்து கொண்டு
ஒரு பிராணாயாமத்தால் வலது கையினால் தொப்புளில் தொட்டு மூல மந்த்ரத்தை நியாஸம் செய்து
மந்திரத்தினால் யுண்டான சண்ட வாயுவாகிய தொப்புளின் காற்றினால் ஸர்வ தத்வ மயமான உடலை உட்ப்புறமும் வெளிப்புறமும் தத்வ க்ரமத்தினால் உலர்த்தி
மறுபடியும் ஒரு பிராணாயாமத்தினால் உதய பிரதேசத்தில் மூல மந்த்ரத்தை ந்யாஸம் செய்து மந்திரத்தினால் யுண்டான சக்ர அக்னி ஜ்வாலையினால் பெறப்பட்ட ஜாடராக்னியினால்
அனைத்துத் தத்துவங்களும் அனைத்துப் பாபங்களும் அனைத்து அஞ்ஞானங்களும் அதன் வாசனைகளும் எரிக்கப் பட்டவனாகி
பகவானுடைய வலது திருவடிகளின் கட்டை விரலில் மூல மந்திரத்தினால் தன்னை நுழைக்க வேண்டும்
தான் நுழைவதாக நினைத்துக் கொள்ள வேண்டும் –

அபரேண ப்ராணாயாமேந பகவத் ப்ரஸாதேந பகவத் கிங்கரத்வ யோக்யதாம் ஆ பாத்ய தஸ்மாத் ஆதாய
தத் வாம பாத அங்குஷ்ட அத ஸ்தாத் மூல மந்த்ரேண ஆத்மாநம் வின்யஸ்ய
தேவ வாம பாத அங்குஷ்ட நாகா ஸீதாம் ஸூ மண்டல நிர்கலத் திவ்ய அம்ருத ரஸை ஆத்மாநம் அபி ஷிஸ்ய
பகவத் ப்ரஸாதேந தத் அம்ருத மயம் ஸர்வ கைங்கர்ய மநோ ஹரம் ஸர்வ கைங்கர்ய யோக்யம் ஸரீரம் லப்தவா
தஸ்மிந் ஸரீரே பஞ்ச உபநிஷத் மாத்ரான் ஸ்ருஷ்ட்டி க்ரமேண விந்யஸ்யேத்
ஓம் ஷாம் நம பராய பரமேஷ்ட் யாத்மநே நம -இதி மூர்த்நீ ஸ்ப்ருசேத்
ஓம் யாம் நம பராய புருஷோத்தமநே நம –இதி நாஸாக்ரே
ஓம் ராம் நம பராய விஸ்வாத்மநே -இதி ஹ்ருதயே
ஓம் வாம் நம பராய நிவ்ருத் யாத்மநே நம -இதி குஹ்யே
ஓம் லாம் நம பராய ஸர்வாத்மநே நம -இதி பாதயோ
ஏவம் ந்யாஸம் குர்வன் தத் தத் சக்தி மாயம் உத்பூத தேஹம் த்யாயேத்

மற்ற ஒரு பிராணாயாமம் செய்து பகவானுடைய அருளினால் பகவானுக்குக் கைங்கர்யம் செய்யும் தகுதியை அடைந்து -அதனால் பெற்ற
பகவானுடைய வலது திருவடி கட்டை விரலின் அடியில் மூல மந்திரத்தால் தன்னை ந்யாஸம் செய்து
பகவானுடைய வலது திருவடிக் கட்டை விரல் நகத்தின் நின்றும் பெருகும் குளிர்ந்த அம்ருத மயமான தாரைகளால் தன்னை நனைத்து
பகவானுடைய அருளினால் அம்ருத மயமாய் எல்லாக் கைங்கர்யங்களையும் செய்வதற்கு மநோ ஹரமாய்
எல்லாக் கைங்கர்யங்களையும் செய்வதற்கு தகுதியான உடலைப் பெற்று
அந்த உடலில் பஞ்ச உபநிஷத் மந்த்ரங்களை ஸ்ருஷ்ட்டி க்ரமத்தில் ந்யாஸம் செய்ய வேண்டும்
ஓம் ஷாம் நம பராய பரமேஷ்ட் யாத்மநே நம -என்று தலையைத் தொட வேண்டும்
ஓம் யாம் நம பராய புருஷோத்தமநே நம –என்று மூக்கின் நுனியைத் தொட வேண்டும்
ஓம் ராம் நம பராய விஸ்வாத்மநே -என்று இதயத்தைத் தொட வேண்டும்
ஓம் வாம் நம பராய நிவ்ருத் யாத்மநே நம -என்று வயிற்றைத் தொட வேண்டும்
ஓம் லாம் நம பராய ஸர்வாத்மநே நம -என்று கால்களைத் தொட வேண்டும்
இப்படி ந்யாஸம் செய்து அந்தவந்த சக்தி மயத்தினால் உண்டான உடலை உடையவனாகத் தன்னை நினைக்க வேண்டும் –

புநரபி ப்ராணாயாமேந ஏகேந பகவத் வாம பாத அங்குஷ்ட விநிஸ்ருத அம்ருத தாரயா ஆத்மாநம் அபி ஷிச்ய
க்ருத லாஞ்சன த்ருத ஊர்த்வ புண்ட்ர பகவத் யாகம் ஆரபேத

மறுபடியும் ஒரு ப்ராணாயாமத்தினால் பகவானுடைய வலது திருவடிக் கட்டை விரலில் இருந்து பெருகும் அம்ருத தாரைகளினால் தன்னை நனைத்து
சக்ர அங்கனத்தையும் பன்னிரு திருமண் காப்புகளையும் தரித்துக் கொண்டு பகவானுக்குத் திருவாராதனத்தைத் தொடங்க வேண்டும் –

பகவான் ஏவ ஸர்வம் காரயதீதி பூர்வ வத் த்யாத்வா ஹ்ருத்யாகம் க்ருத்வா ஸம் பாரான் ஸம் ப்ருத்ய
ஆத்மந வாம பார்ஸ்வே ஜல கும்பே தோயம் உத் பூர்ய கந்த புஷ்பயுதம் க்ருத்வா
ஸப்த க்ருத்வா அபி மந்த்ர்ய வி சோஷ்ய தக்த்வா திவ்ய அம்ருத தோயம் உத் பாத்ய
அஸ்திர மந்த்ரேண ரஷாம் க்ருத்வா ஸூரபி முத்ராம் ப்ரதர்ஸ்யஅன்யானி பூஜா த்ரவ்யாணி ஆத்மந
தக்ஷிண பார்ஸ்வே நிதாய
ஆத்மந புரத ஸ்வாஸ் தீர்ணே பீடே க்ரமேண ஆக்நே யாதி கோணேஷு அர்க்ய பாத்ய ஆசமனீய ஸ்நாநீய பாத்ராணி நிதாய
அஸ்த்ர மந்த்ரேண ப்ரஷால்ய சோஷாணாதி நா பாத்ராணி வி சோத்ய ஸம்ஸ்க்ருத தோயேந தாநி பூரயித்வா
அர்க்ய பாத்ரே கந்த புஷ்ப குஸாக்ர அக்ஷதா தீநி நிஷிபேத்
தூர்வாம் விஷ்ணு பர்ணீம் ஸ்யாமாகம் பத்மகம் பாத்ய பாத்ரே
ஏலா லவங்க தக்கோல லாமஜ்ஜக ஜாதீ புஷ்பாணி ஆசம நீயே
த்வே ஹரித்ரே முரா சைலேய தக்கோல ஜடாமாசிமலயஜ கந்த சம்பக புஷ்பாணி
ஸித்தார்த்தி காதீ நிஸ்நா நீயே

பகவானே தன்னைக் கொண்டு எல்லாம் செய்வித்துத் கொள்கிறான் என்று முன்பு போலவே நினைத்து
இதய யாகம் செய்து திருவாராதனப் பொருள்களை சேகரித்துக் கொண்டு
தன்னுடைய இடது புறத்தில் தீர்த்தக் குடத்தில் தீர்த்தத்தை நிறைத்து -கந்த புஷ்பத்தைச் -குங்குமப்பூவைச் -சேர்த்து
ஏழு முறை திரு மந்திரத்தினால் அபி மந்திரித்து உலர்த்தி எரித்து -சுத்தம் செய்வதாகப் பாவித்து
அஸ்த்ர மந்த்ரத்தினாலே காப்பீட்டு ஸூரபி முத்ரையைக் காட்டி மற்ற திருவாராதனப் பொருள்களை தனக்கு வலது புறத்தில் வைத்து
தனக்கு முன்னால் உள்ள ஒரு பீடத்தில் -தட்டில் -முறையே தென் கிழக்கு மூலை முதலிய இடங்களில்
அர்க்ய பாத்ய ஆசமனீய ஸ்நாநீய வட்டில்களை வைத்து அஸ்த்ர மந்திரத்தால் அலம்பி உலர்த்துதல் முதலியவற்றால் பாத்ரங்களை சுத்தம் செய்து
நல்ல தீர்த்தத்தால் அவ் வட்டில்களை நிறைத்து அர்க்ய பாத்ரத்தில் கந்த புஷ்பம் தர்ப்பை நுனி அக்ஷதை முதலியவற்றைச் சேர்க்க வேண்டும்
தூர்வா விஷ்ணு பர்வணீ ஸ்யாமகம் பத்மகம் ஆகியவற்றைப் பாத்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
ஏலம் லவங்கம் தக்கோலம் லாமஜ்கம் ஜாதீ புஷ்பம ஆகியவற்றை ஆசமனீய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
இருவித மஞ்சள் முரை சைலேயம் தக்கோலம் ஜடாமாஸி மலை நாட்டு சந்தனம் சம்பக புஷ்பம ஸித்தார்த்தகம் ஆகியவற்றை ஸ்நாநீய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –

அந்யஸ்மின் பாத்ரே ஸர்வார்த்த தோயம் சங்கல்ப்ய ததோ அர்க்ய பாத்ரம் பாணிநா ஸ்ப்ருஷ்ட்வா மூல மந்த்ரேண அபி மந்த்ர்ய
ஓம் நமோ பகவதே அர்க்யம் பரிகல்பயாமி இதி அர்க்யம் பரிகல்பயேத்
ஏவம் பாத்யம் பரிகல்பயாமி இதி பாத்யம் ஆசமனம் பரிகல்பயாமி இதி ஆசாமி நீயம் ஸ்நா நீயம் பரிகல்பயாமி இதி ஸ்நா நீயம்
ஸூத்தோ தகம் பரிகல்பயாமி இதி ஸூ த்தோதகம் தத அர்க்ய ஜலாத் ஜாலம் அன்யேன பாத்ரேண ஆதாய யாக பூமிம்
ஸர்வாணி யாக த்ரவ்யாணி ஆத்மாநம் ச ப்ரத்யேகம் ப்ரோஷ்ய ஆஸனம் பரிகல்பயேத்

மற்ற ஒரு பாத்திரத்தில் ஸர்வார்த்த தோயம் -சுத்தோதகம் -தூய நீர் -ஸங்கல்பித்து பிறகு அர்க்ய பாத்ரத்தைக் கைகளால் தொட்டு மூல மந்திரத்தால் அபி மந்தரித்து
ஓம் நமோ பகவதே அர்க்யம் பரி கல்பயாமி இதி -அர்க்யத்தை ந்யாஸம் செய்ய வேண்டும் –
இப்படியே பாத்யம் பரி கல்பயாமி -என்று பாத்யம்
ஆசம நீயம் பரி கல்பயாமி என்று ஆசம நீயம்
ஸ்நா நீயம் பரி கல்பயாமி என்று ஸ்நா நீயம்
சுத்தோதகம் பரி கல்பயாமி என்று சுத்தோதகம்
பிறகு அர்க்ய ஜலத்தில் இருந்து தீர்த்தத்தை மற்ற ஒரு பாத்ரத்தினால் எடுத்து யாக பூமியை -பெருமாள் எழுந்து அருளிய இத்தையும் –
எல்லாத் திருவாராதனப் பொருள்களையும் தன்னையும் தனித் தனியாக ப்ரோக்ஷித்து ஆசனத்தை ஏற்படுத்த வேண்டும் –

ஓம் ஆதார சக்த்யை நம
ஓம் மூல ப்ரக்ருத்யை நம
ஓம் அகில ஜகதாதார கூர்ம ரூபிணே நாராயணாய நம
ஓம் பகவதே அநந்தாய நாக ராஜாய நம
போம் பூம் பூம்யை நம
இதி யதா ஸ்தாநம் உபர்யுபரி த்யாத்வா ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய லோகாய நம இதி ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய ஐந பதாய நம இதி திவ்ய ஜந பதம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய நகராய நம -இதி திவ்ய நகரம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய விமானாய நம -இதி திவ்ய விமானம் ப்ரணம்ய
ஓம் ஆனந்த விமானாய திவ்ய மண்டப ரத்நாய நம -இதி மண்டப ரத்னம் ப்ரணம்ய
தஸ்மிந் அநந்தாய -நாக ராஜாய -நம இதி ஆஸ்தரணம் ப்ரணம்ய தஸ்மிந் உபரி
ஓம் தர்மாய நம -இதி ஆக் நேய்யாம் பாதம் வின்யஸ்ய
ஓம் ஞானாய நம -இதி நைர் ருதியாம்
ஓம் வைராக்யாய நம -இதி வாயவ்யாம்
ஓம் ஐஸ்வர்யாய நம -இதி ஐசான்யாம்
ஓம் அதர்மாய நம இதி ப்ராஸ்யாம் பீட காத்ரம் வின்யஸ்ய
ஓம் அஞ்ஞானாய நம இதி தஷிணாஸ் யாம்
ஓம் அவைராக்யாய நம இதி ப்ரதீஸ்யாம்
ஓம் அனைஸ்வர்யாய நம இதி உத்தரஸ் யாம் ஏபி பரிச்சின்ன தனும் பீட பூதம் ஸதாத்மகம நந்தம் வின்யஸ்யபஸ்சாத் ஸர்வ கார்யயோன் முகம் விபும் அநந்தம் ஓம் அநந்தாய நம இதி வின்யஸ்ய

ஓம் ஆதார சக்த்யை நம
ஓம் மூல ப்ரக்ருத்யை நம
ஓம் அகில ஜகதாதார கூர்ம ரூபிணே நாராயணாய நம
ஓம் பகவதே அநந்தாய நாக ராஜாய நம
பூம் பூம் பூம்யை நம
என்று ஒன்றின் மேல் ஒன்றாக அந்த அந்த ஸ்தானத்தைத் த்யானம் செய்து வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய லோகாய நம -என்று ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய ஐந பதாய நம -என்று திவ்ய ஜந பதத்தை -தேசத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய நகராய நம -என்று திவ்ய நகரத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய விமானாய நம -என்று திவ்ய விமானத்தை வணங்கி
ஓம் ஆனந்த விமானாய திவ்ய மண்டப ரத்நாய நம -என்று மண்டப ரத்னத்தை வணங்கி
அதில்
அநந்தாய -நாக ராஜாய -நம என்று பள்ளிக்கட்டிலை வணங்கி
அதற்கு மேலே (தஸ்மிந் உபரி )
ஓம் தர்மாய நம -என்று தென் கிழக்கில் பாத பீடத்தையும் – (ஆக் நேய்யாம் பாதம் வின்யஸ்ய )
ஓம் ஞானாய நம -என்று தென் மேற்கில் ( நைர் ருதியாம் )
ஓம் வைராக்யாய நம -என்று -வட மேற்கில் ( வாயவ்யாம் )
ஓம் ஐஸ்வர்யாய நம -என்று வட கிழக்கில் ( ஐசான்யாம் )

ஓம் அதர்மாய நம -என்று கிழக்கில் பாத பீடத்தை ந்யாஸம் செய்து (ப்ராஸ்யாம் பீட காத்ரம் வின்யஸ்ய)
ஓம் அஞ்ஞானாய நம -என்று தெற்கில் ( தஷிணாஸ் யாம் )
ஓம் அவைராக்யாய நம -என்று மேற்கில் ( ப்ரதீஸ்யாம் )
ஓம் அனைஸ்வர்யாய நம -என்று வடக்கில் ( உத்தரஸ் யாம்)
இவற்றை உடலாகக் கொண்ட பீடமாக இருக்கின்ற திரு அனந்தாழ்வானை ந்யாஸம் செய்து (ஏபி பரிச்சின்ன தனும் பீட பூதம் ஸதாத்மகம நந்தம் வின்யஸ்ய )
பிறகு எல்லாக் காரியங்களுக்கும் உன்முகமாய் எங்கும் உள்ள அனந்தாழ்வானை (பஸ்சாத் ஸர்வ கார்யயோன் முகம் விபும் அநந்தம் )
ஓம் அநந்தாய நம -என்று ந்யாஸம் செய்து ( வின்யஸ்ய)

தஸ்மிந் உபரி ஓம் பத்மாய நம -இதி பத்மம் வி ந்யஸ்ய
தத் பூர்வ பத்ரே ஓம் விமலாயை சாமர ஹஸ்தாயை நம இதி விமலாம் சாமர ஹஸ்தாம் வி ந்யஸ்ய
தத் ஆரப்ய
ப்ரா தஷிண்யேந ஐஸா நந்தம் பத்ரேஷு
ஓம் உத் கர்ஷிண்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஞானாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் க்ரியாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் போகாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ப்ரஹ் வ்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஸத்யாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஈஸா நாயை சாமர ஹஸ்தாயை நம
இதி அஷ்ட சக்தீஸ் சாமர ஹஸ்த வி ந்யஸ்ய
ஓம் அனுக்ரஹாயை சாமர ஹஸ்தாய நம–இதி கர்ணிகா பூர்வ பாகே அனுக்ரஹாம் சாமர ஹஸ்தாய வி ந்யஸ்ய

அதற்கும் மேல் (தஸ்மிந் உபரி )ஓம் பத்மாய நம -இதி ஆஸன பத்மத்தை ந்யாஸம் செய்து (பத்மம் வி ந்யஸ்ய )
முன் இதழில் (தத் பூர்வ பத்ரே ) ஓம் விமலாயை சாமர ஹஸ்தாயை நம -என்று சாமரத்தைக் கையில் கொண்டுள்ள
கன்னிகையான விமலையை ந்யாஸம் செய்து (இதி விமலாம் சாமர ஹஸ்தாம் வி ந்யஸ்ய )
அது முதல் கொண்டு (தத் ஆரப்ய)
ப்ரதக்ஷிணமாக வட கிழக்கு வரை உள்ள இதழ்களில் (ப்ரா தஷிண்யேந ஐஸா நந்தம் பத்ரேஷு )
ஓம் உத் கர்ஷிண்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஞானாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் க்ரியாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் போகாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ப்ரஹ் வ்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஸத்யாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஈஸா நாயை சாமர ஹஸ்தாயை நம
என்று அஷ்ட சக்திகளான சாமர கன்னிகைகளை ந்யாஸம் செய்து (இதி அஷ்ட சக்தீஸ் சாமர ஹஸ்த வி ந்யஸ்ய )
ஓம் அனுக்ரஹாயை சாமர ஹஸ்தாய நம–என்று கர்ணிகையின் முன் பாகத்தில் அனுக்ரஹா என்ற சாமர கன்னிகையை ந்யாஸம் செய்து (இதி கர்ணிகா பூர்வ பாகே அனுக்ரஹாம் சாமர ஹஸ்தாய வி ந்யஸ்ய )

ஓம் ஜகத் ப்ரக்ருதயே யோக பீடாய நம -இதி யோக பீடம் விந்யஸ்ய
ஓம் திவ்யாய யோக பர்யங்காயா -திவ்ய யோக பீட பர் யங்காய நம இதி திவ்ய யோக பீட பர் யங்கம் வி ந்யஸ்ய
தஸ்மிந் அநந்தம் நாக ராஜம் ஸஹஸ்ர பாணி ஸோபிதம் ஓம் அநந்தாய நாக ராஜாய நம இதி வி ந்யஸ்ய
ஓம் அநந்தாய நம இதி புரத பாத பீடம் வி ந்யஸ்ய
ஸர்வாண் யாதார ஸக்த்யாதீ நி பீடாந்தாநி தத்த்வாநி ப்ரத்யேகம்
கந்த புஷ்ப தூப தீபைபரப் யர்ச்ய ஸர்வ பரி வாராணாம் தத் தத் ஸ்தாநே ஷு பத்மாஸ நாநி ஸங்கல்ப்ய
அனந்த கருட விஷ்வக் ஸே நா நாம் ஸ பீடகம் பத்மம் வி ந்யஸ்ய
ஸர்வத புஷ்பாஷ தாதீ நி வி கீர்ய யோக பீடஸ்ய பஸ்சி மோத்தர திக்பாகே
ஓம் அஸ்மத் குருப்யோ நம இதி குரூன்
கந்த புஷ்ப தூப தீபை ஸம் பூஜ்ய ப்ரணம்ய அநு ஜ்ஞாப்ய பகவத் யாகம் ஆராபதே

ஓம் ஜகத் ப்ரக்ருதயே யோக பீடாய நம -என்று யோக பீடத்தை ந்யாஸம் செய்து (இதி யோக பீடம் விந்யஸ்ய )
ஓம் திவ்யாய யோக பர்யங்காயா -திவ்ய யோக பீட பர் யங்காய நம -என்று திவ்ய யோகப் பீடப்
பள்ளிக்கட்டிலை ந்யாஸம் செய்து (இதி திவ்ய யோக பீட பர் யங்கம் வி ந்யஸ்ய )
அதில் நாக ராஜனாய் ஆயிரம் படங்களால் பிரகாசிக்கின்ற ஆதி சேஷனை (தஸ்மிந் அநந்தம் நாக ராஜம் ஸஹஸ்ர பாணி ஸோபிதம் )
ஓம் அநந்தாய நாக ராஜாய நம -என்று ந்யாஸம் செய்து (இதி வி ந்யஸ்ய )
ஓம் அநந்தாய நம-என்று முன்னால் பாத பீடத்தை ந்யாஸம் செய்து ( இதி புரத பாத பீடம் வி ந்யஸ்ய )
ஆதார சக்தி தொடங்கி பீடம் வரை எல்லாத் தத்துவங்களையும் தனித்தனியாக
சந்தனம் புஷ்ப்பம் தூபம் தீபம் இவற்றால் அர்ச்சித்து (ஸர்வாண் யாதார ஸக்த்யாதீ நி பீடாந்தாநி தத்த்வாநி ப்ரத்யேகம் கந்த புஷ்ப தூப தீபைபரப் யர்ச்ய )
எல்லாப் பரிவாரங்களும் அவரவர் ஸ்தானங்களில் பத்மாஸனங்களை அமைத்து (ஸர்வ பரி வாராணாம் தத் தத் ஸ்தாநே ஷு பத்மாஸ நாநி ஸங்கல்ப்ய )
அனந்த கருட விஷ்வக் சேனர்களை பத்மத்தோடே கூடிய பீடத்தில் அமைத்து (அனந்த கருட விஷ்வக் ஸே நா நாம் ஸ பீடகம் பத்மம் வி ந்யஸ்ய )
எல்லாருக்கும் புஷ்பம் அக்ஷதை முதலியவற்றை ஸமர்ப்பித்து (ஸர்வத புஷ்பாஷ தாதீ நி வி கீர்ய )
யோக பீடத்தின் வடமேற்கு பாகத்தில் (யோக பீடஸ்ய பஸ்சி மோத்தர திக்பாகே )
ஓம் அஸ்மத் குருப்யோ நம-என்று ஆச்சார்யர்களை ( இதி குரூன் )
சந்தனம் புஷ்ப்பம் தூபம் தீபம் ஆகியவற்றால் (கந்த புஷ்ப தூப தீபை )
நன்றாகக் பூஜித்து வணங்கி (ஸம் பூஜ்ய ப்ரணம்ய )
அவர்கள் அனுமதி கொண்டு எம்பெருமானின் திருவாராதனத்தை ஆரம்பிக்க வேண்டும் (அநு ஜ்ஞாப்ய பகவத் யாகம் ஆராபதே )

கல்பிதே நாக போகே ஸமா ஸீநம் பகவந்தம் நாராயணம்
புண்டரீக தலா மலாய தாக்ஷம்
கிரீட மகுட கேயூர ஹார கடகாதி ஸர்வ பூஷணை பூஷிதம்
ஆகுஞ்சித தக்ஷிண பாதம் பிரசாரித வாம பாதம் ஜாநு விந்யஸ்ய பிரசாரித தக்ஷிண புஜம் நாக போக விந் யஸ்ய வாம புஜம்
ஊர்த்வ புஜத்வயேந சங்க சக்ர தரம் ஸர்வேஷாம் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ப்ரலய ஹேது பூத மஜ்ஜ நாபம்
கௌஸ்துபேந விராஜா மாநம் ஸகா சதம் உதக்ர ப்ரபுத்த ஸ்புரத் அபூர்வ அசிந்த்ய பரம சத்த்வ பஞ்ச சக்தி மய விக்ரஹம்
பஞ்ச உபநிஷதைர் த்யாத்வா ஆராத நாபி முகோ பவ இதி மூல மந்த்ரேண ப்ரார்த்ய மூல மந்த்ரேண தண்டவத் ப்ரணம்ய
உத்தாய ஸ்வா கதம் நிவேத்ய யாவதாராத ந ஸமாப்தி ஸாந்நித்ய யாஸ நம் குர்யாத்-

அமைக்கப்பட்ட அரவணையில் வீற்று இருப்பவனும் -தாமரை இதழ் போன்ற அகன்ற கண்களை உடையவனும்
கிரீடம் மகுடம் கேயூரம் ஹாரம் கடகம் முதலிய ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டவனும்
மடக்கிய வலது திருவடியை உடையவனும் -நீட்டித் தொங்க விட்ட இடது திருவடியை யுடையவனும்
முழங்காலில் நீட்டி வைத்த வலது திருக்கரத்தை யுடையவனும்
அரவணையில் வைத்த இடது திருக்கரத்தை யுடையவனும்
மேல் இரண்டு திருக்கரங்களால் சங்கு சக்கரங்களைத் தரித்தவனும்
அனைவரையும் படைத்தால் காத்தல் அழித்தல் ஆகியவற்றுக்குக் காரணமான திரு நாபியை யுடையவனும்
கௌஸ்துப மணியினால் பிரகாசிப்பவனும்
பிரகாசிக்கின்ற மிக உயர்ந்த நல்ல மலர்ச்சியுடன் விளங்குகிற அபூர்வமான நினைக்கவும் முடியாத பரம ஸத்வமாய்
பஞ்ச சக்தி மயமான திரு மேனியை யுடையவனுமான பகவான் நாராயணனை பஞ்ச உபநிஷத்துக்களால் தியானித்து
திரு வாராதனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று திரு மந்திரத்தினால் பிரார்த்தித்துக் கொண்டு
திரு மந்த்ரத்தைக் கூறி தடி போல் விழுந்து வணங்கி எழுந்து வரவேற்புக் கூறி திருவாராதனம் முடியும் வரை எழுந்து அருளி இருக்கும் படி யாசிக்க வேண்டும்

அந்யத்ர ஸ்வாபி மத தேசே பூஜா சேத் ஏவமாவாஹநம்
மந்த்ர யோக சமாஹ்வாநம் கர புஷ்போப தர்சனம்
பிம்போ பவேஸநம் சைவ யோக விக்ரஹ சிந்தனம்
பிரணாமஸ் ச ஸமுத்தா நம் ஸ்வா கதம் புஷ்ப்ப மேவ ச
சாந்நித்ய யாசநம் சேதி தத்ராஹ்வா நஸ்ய சத் க்ரியா

வேறு விருப்பமான இடத்தில் பூஜை என்றால் இப்படி ஆவாஹனம் செய்ய வேண்டும்
மந்த்ரத்தைக் கூறுதல் -எம்பெருமானை அழைத்தல் -கையில் புஷபத்தைக் காட்டுதல் –
பிம்பத்தில் எழுந்து அருள்ச செய்தல் -எம்பெருமானுடைய திரு மேனியைத் தியானித்தல் -வணங்குதல் –
எழுதல் -வரவேற்புக் கூறுதல் – புஷ்பம் சமர்ப்பித்தல் -சாந்நித்யம் செய்ய வேண்டும் -எழுந்து அருளி இருக்க வேண்டும் -என்று வேண்டுதல்
ஆகிய இவை ஆவாஹனம் செய்வதற்கு உரிய சத் க்ரியைகளாகும்

ததோ பகவந்தம் ப்ரணம்ய தஷிணத -ஓம் ஸ்ரீம் ஸ்ரியை நம -இதி ஸ்ரியம் ஆவாஹ்ய ப்ரணம்ய
வாமத ஓம் பூம் பூம்யை நம இதி புவம் ஆவாஹ்ய தத்ரைவ ஓம் நீம் நீலாயை நம இதி நீலாம் ஆவாஹ்ய
ஓம் கிரீடாய மகுடாதி பதயே நம இதி உபரி பாகவத பஸ்சிம பார்ஸ்வே சதுர் பாஹும் சதுர் வக்த்ரம் க்ருதாஞ்சலி புடம் மூர்த்னி பகவத் கிரீடம் தார யந்தம் க்ரீடாக் யதி வ்ய புருஷம் பிரணம்ய

பிறகு பகவானை வணங்கி வலது பக்கத்தில் ஓம் ஸ்ரீம் ஸ்ரீ யை நம -என்று பெரிய பிராட்டியாரை ஆவாஹனம் செய்து வணங்கி
இடது பக்கத்தில் ஓம் பூம் பூம்யை நம -என்று பூமிப் பிராட்டியை ஆவாஹநம் செய்து
அங்கேயே ஓம் நீம் நீளாயை நம -என்று நீளா தேவியை ஆவாஹனம் செய்து
ஓம் கிரீடாய மகுடாதி பதயே நம -என்று மேலே பகவானுடைய வலப்புறத்தில் நான்கு தோள்களை யுடையவனாய் நான்கு முகங்களை யுடையவனாய்
கூப்பிய கையனாய் திரு முடியில் பகவானுடைய கிரீடத்தை தரிப்பவனான கிரீடம் என்கிற திவ்ய புருஷனை வணங்கி

ஏவ மேவ
ஓம் கிரீட மால்யாயா பீட காத்மநே நம -இத்யா பீடகம் தத்ரைவ புரஸ்தாத் ப்ரணம்ய
ஓம் தக்ஷிண குண்டலாய மகராத்மநே நம இதி தக்ஷிண குண்டலம் தக்ஷிணத ப்ரணம்ய
ஓம் வாம குண்டலாய மகராத்மநே நம இதி வாம குண்டலம் வாமத ப்ரணம்ய
ஓம் வைஜயந்த்யை வனமால்யை நம இதி வனமாலாம் புரத பிராணமய
ஓம் ஸ்ரீ துல்யை இதி துல ஸீம் -தேவீம் -புரத ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வாத்ஸாய ஸ்ரீ நிவாஸாய நம இதி ஸ்ரீ வத்ஸம் புரத ப்ரணம்ய
ஓம் ஹாராய ஸர்வ ஆபராணாதி பதயே நம இதி ஹாரம் புரத ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ கௌஸ்துபாய ஸர்வ ரத்நாதி பதயே நம இதி
கௌஸ்துபம் புரத ப்ரணம்ய
ஓம் காஞ்சீ குண உஜ்ஜவலாய பீதாம்பராய நம இதி பீதாம்பரம் புரத ப்ரணம்ய

இப்படியே

ஓம் கிரீட மால்யாயா பீட காத்மநே நம – என்று ஆபீடகத்தை
அங்கேயே முன்னால் வணங்கி
ஓம் தக்ஷிண குண்டலாய மகராத்மநே நம என்று வலது
திருக்காதில் உள்ள குண்டலத்தை வலப்புறத்தில் வணங்கி
ஓம் வாம குண்டலாய மகராத்மநே நம -என்று இடது திருக்காதில் உள்ள குண்டலத்தகை இடப்புறத்தில் வணங்கி
ஓம் வைஜயந்த்யை வனமால்யை நம என்று வனமாலையை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ துல்யை இதி துல ஸீம் -தேவீம் –என்று திருத்துழாய் தேவியை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ வாத்ஸாய ஸ்ரீ நிவாஸாய நம என்று ஸ்ரீ வத்ஸாத்தை முன்னால் வணங்கி
ஓம் ஹாராய ஸர்வ ஆபராணாதி பதயே நம -என்று காரத்தை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ கௌஸ்துபாய ஸர்வ ரத்நாதி பதயே நம -என்று கௌஸ்துபத்தை முன்னால் வணங்கி
ஓம் காஞ்சீ குண உஜ்ஜவலாய பீதாம்பராய நம -என்று பீதாம்பரத்தை முன்புறம் வணங்கி

ஓம் ஸர்வேப்யோ பகவத் பூஷண ணேப்யோ நம இதி ஸர்வ பூஷணாநி ஸர்வத ப்ரணம்ய
ஓம் ஸூ தர்சனாய ஹேதி ராஜாய நம இதி ஸூ தர்சனம் ரக்த வர்ணம் ரக்த நேத்ரம் த்வி -சதுர் -புஜம் க்ருதாஞ்சலி புடம்
பகவந்த மாலோக யந்தம் தத் தர்சன அநந்த ப்ரும்ஹித முகம் மூர்த்நி பகவச் சக்ரம் தார யந்தம்
தஷிணத பிராணமய ஓம் நந்தகாய கட் காதி பதயே நம இதி நந்த காத்மா நம் சிரஸி பகவத் கட்கம் தார யந்தம்
தத்ரைவ ப்ரணம்ய ஓம் பத்மாய நம இதி பத்மம் -பத்மம் சிரஸி தார யந்தம் -ப்ரணம்ய
ஓம் பாஞ்ச ஜந்யாய சங்காதி பதயே நம இதி சங்காத்மாநம் ஸித வர்ணம் -ரக்த நேத்ரம் -த்வி புஜம் க்ருதாஞ்சலி புடம்
சிரஸி பகவச் சங்கம் தார யந்தம் வாமத ப்ரணம்ய
ஓம் கௌமோதக்யை கதாதி பதயே நம இதி கதாத்மாநம் தத்ரைவ ப்ரணம்ய

ஓம் ஸர்வேப்யோ பகவத் பூஷண ணேப்யோ நம -என்று எல்லா ஆபரணங்களையும் சுற்றிலும் வணங்கி –
ஓம் ஸூ தர்சனாய ஹேதி ராஜாய நம -என்று சிவந்த நிறம் உள்ளவரும் சிவந்த கண்களை யுடையவரும்
இரு -நான்கு -திருக்கைகளை உடையவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும் – பகவானை நோக்கிக் கொண்டு இருப்பவரும் –
பகவானை சேவித்தால் உண்டான மகிழ்ச்சியுடன் கூடிய முகத்தை யுடையவரும் தலையில் பகவானுடைய சக்கரத்தைத் தாங்கி இருப்பவருமான ஸூதர்சனரை வலப்புறத்தில் வணங்கி
ஓம் நந்தகாய கட் காதி பதயே நம -என்று நந்தகன் என்னும் பெயரை யுடையவரும் தலையிலே பகவானுடைய வாளைத் தாங்கி இருப்பவருமானவரை அங்கேயே வணங்கி
ஓம் பத்மாய நம என்று தாமரையை -தாமரையைத் தலையில் தாங்கியவரை-வணங்கி –
ஓம் பாஞ்ச ஜந்யாய சங்காதி பதயே நம -என்று சங்கமாய்-வெண்மை நிறம் யுடையவரும் -சிவந்த கண்களை யுடையவரும் –
இரு கைகளை யுடையவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும்
தலையில் பகவானுடைய சங்கத்தைத் தாங்கி இருப்பவரை இடது புறத்தில் வணங்கி –
ஓம் கௌமோதக்யை கதாதி பதயே நம -என்று கதா யுதமாக இருப்பவரை அங்கேயே வணங்கி –

தத்ரைவ -ஓம் ஸார்ங்காய சாபாதி பதயே நம இதி சார்ங்காத்மாநம் ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் திவ்யாயுதேப்யோ நம இதி ஸர்வா யுதாநி பரித ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாதாரவிந்த ஸம் வாஹி நீப்யோ நம இதி திவ்ய பாதாரவிந்த ஸம் வாஹி நீஸ் சமந்தத ப்ரணம்ய
ஓம் அநந்தாய நாக ராஜாய நம இதி ப்ருஷ்டத அநந்தம் -பகவந்தம் -நாக ராஜம் சதுர் புஜம்
ஹலமுஸல தரம் க்ருதாஞ்சலி புடம் பணாமணி ஸஹஸ்ர மண்டித உத்தம அங்கம் பகவந்த மாலோகயந்தம்
பகவத் ஸ்பர்ச நாநந்த ப்ரும்ஹித ஸர்வ காத்ரம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிஜனே ப்யோ நம இதி அநுக்த அநந்த பரிஜனாந் சமந்தத ப்ரணம்ய
ஓம் பகவத் பாதுகாப்யாம் நம இதி பகவத் பாதுகே புரத ப்ரணம்ய

அங்கேயே -ஓம் ஸார்ங்காய சாபாதி பதயே நம–என்று சார்ங்கத்தை-வில்லை – வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் திவ்யாயுதேப்யோ நம -என்று எல்லா ஆயுதங்களையும் சுற்றலும் வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாதாரவிந்த ஸம் வாஹி நீப்யோ நம -என்று பகவானுடைய திருவடிகளை வருடுபவர்கள் அனைவரையும் வணங்கி
ஓம் அநந்தாய நாக ராஜாய நம -என்று அநந்தன் என்ற பெயரை யுடையவரும் -பகவான் நாக ராஜரும்-
நான்கு கைகளை யுடையவனும் -கலப்பை உலக்கை ஆகியவற்றைத் தாங்கி இருப்பவனும்
அஞ்சலி செய்து இருப்பவனும் -ஆயிரம் படங்களைக் ன்கொண்ட தலைகளை யுடையவனும் –
பகவானை சேவித்துக் கொண்டு இருப்பவனும் -பகவானைத் தொட்டுக் கொண்டு இருப்பதால் உண்டான மகிழ்ச்சி யோடு கொடிய உடலை உடையவனுமான ஆதி சேஷனை தியானித்து பின்புறம் வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிஜனே ப்யோ நம -என்று இங்கு கூறப்படாத எல்லாப் பரிவாரங்களும் சுற்றிலும் வணங்கி
ஓம் பகவத் பாதுகாப்யாம் நம -என்று பகவானுடைய இரு பாதுகைகளை முன்னால் வணங்கி

ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிச்ச தேப்யோ நம இதி ஸர்வ பரிச்ச தான் சமந்தத ப்ரணம்ய
ஓம் வைநதேயாய நம இதி அக்ரதோ -பகவதோ பகவந்தம் -வைநதேயம் ஆஸீநம் த்வி புஜம் க்ருதாஞ்சலி புடம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் நமோ பகவதே விஷ்வக் சேநாய இதி பகவத ப்ராக் உத்தர பார்ஸ்வே தஷிணாபி முகம் பகவந்தம் விஷ்வக் சேனம் ஆஸீநம்
சதுர் புஜம் சங்க சக்ர தரம் க்ருதாஞ்சலி புடம் நீல மேக நிபம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் கம் கஜாநநாய நம -ஓம் ஜம் ஜயத் சேநாய நம -ஓம் ஹம் ஹரி வக்த்ராய நம –
ஓம் கம் கால ப்ரக்ருதி ஸம் ஜ் ஞாய நம -ஓம் ஸர்வேப்யோ பகவத் விஷ்வக் சேந பரி ஜநேப்யோ நம -இதி விஷ்வக் சேந பரி ஜநான் பிராணமய
ஓம் சண்டாய த்வார பாலைய்யா நம -ஓம் ப்ரசண்டாய த்வார பாலாய நம இதி பூர்வ த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் பத்ராய த்வார பாலாய நம -ஓம் ஸூ பத்ராய த்வார பாலாய நம-இதி தக்ஷிண த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் ஜயாய த்வார பாலாய நம – ஓம் விஜயாய த்வார பாலாய நம -இதி பஸ்சிம த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் தாத்ரே த்வார பாலாய நம –ஓம் விதாத்ரே த்வார பாலாய நம -இதி உத்தர த்வார பார்ஸ்வயோ பிரணமேத்
ஏதே த்வார பாலாஸ் ஸர்வே சங்க சக்ர கதா தரா ஆஜ்ஞா முத்ர யுதா த்யதவ்யா-

ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிச்ச தேப்யோ நம –என்று எம்பெருமானுடைய எல்லா அடியவர்களையும் சுற்றிலும் வணங்கி
ஓம் வைநதேயாய நம -என்று பகவானுக்கு முன்னால் வீற்று இருக்கின்றவனும் -இரு கைகளை யுடையவனும் –
அஞ்சலி செய்து இருப்பவனுமான பகவான் கருடனை த்யானம் செய்து வணங்கி
ஓம் நமோ பகவதே விஷ்வக் சேநாய -என்று எம்பெருமானுக்கு முன்னால் வடக்குப் பக்கத்தில் தெற்கு நோக்கி வீற்று இருப்பவரும் –
நான்கு திருக்கரங்களை உடையவரும் -சங்க சக்கரங்களை தரித்து இருப்பவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும் –
நீலமேகம் போன்ற நிறத்தை உடையவருமான பகவான் விஷ்வக் சேனரை தியானித்து வணங்கி –
ஓம் கம் கஜாநநாய நம -ஓம் ஜம் ஜயத் சேநாய நம -ஓம் ஹம் ஹரி வக்த்ராய நம –
ஓம் கம் கால ப்ரக்ருதி ஸம் ஜ் ஞாய நம -ஓம் ஸர்வேப்யோ பகவத் விஷ்வக் சேந பரி ஜநேப்யோ நம -என்று
விஷ்வக் சேனருடைய அடியவர்களை வணங்கி
ஓம் சண்டாய த்வார பாலைய்யா நம -ஓம் ப்ரசண்டாய த்வார பாலாய நம -என்று கிழக்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் பத்ராய த்வார பாலாய நம -ஓம் ஸூ பத்ராய த்வார பாலாய நம- என்று தெற்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் ஜயாய த்வார பாலாய நம – ஓம் விஜயாய த்வார பாலாய நம -என்று மேற்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் தாத்ரே த்வார பாலாய நம –ஓம் விதாத்ரே த்வார பாலாய நம -என்று வடக்கு வாசல் பக்கத்திலே வணங்க வேண்டும்
இந்த த்வார பாலகர்கள் யாவரையும் சங்க சக்கரம் தரித்தவர்களாயும் ஆணை இடுகின்ற முத்திரை யுடையவர்களாகவும் தியானிக்க வேண்டும் –

ஓம் ஸர்வேப்யோ பகவத் த்வார பாலயோ நம இதி ஸர்வ த்வாரேஷு ஸர்வ த்வார பாலான் ப்ரணம்ய
ஓம் குமுதாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி பூர்வஸ்யாம் திஸி
பார்ஷ தேஸ்வரம் குமுதம் ப்ரணம்ய
ஓம் குமுதாஷாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி ஆக்நேய்யாம் குமுதாஷம் ப்ரணம்ய
ஓம் புண்டரீகாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி தக்ஷிண ஸ்யாம் புண்டரீகம் ப்ரணம்ய
ஓம் வாமநாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி நைர் ருத்யாம் வாமனம் ப்ரணம்ய
ஓம் சங்கு கர்ணாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி பஸ்ஸிமஸ்யாம் சங்கு கர்ணம் ப்ரணம்ய
ஓம் ஸர்ப நேத்ராய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி வாயவ்யாம் ஸர்ப நேத்ரம் ப்ரணம்ய
ஓம் ஸூ முகாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி உதீச்யாம் ஸூ முகம் ப்ரணம்ய
ஓம் ஸூ ப்ரதிஷ்டாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி ஐஸாந்யாம் ஸூ ப்ரதிஷ்டம் ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாரிஷாதேப்யோ நம இதி ஸர்வ ஸ்மாத் பஹி பிரணமேத்

ஓம் ஸர்வேப்யோ பகவத் த்வார பாலயோ நம -என்று எல்லா வாசல்களிலும் உள்ள த்வார பாளர்கள் அனைவரையும் வணங்கி
ஓம் குமுதாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம-என்று கிழக்கு திசையில் பார்ஷ தேஸ்வரனான குமுதனை வணங்கி
ஓம் குமுதாஷாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று தென் கிழக்கில் குமுதாஷனை வணங்கி
ஓம் புண்டரீகாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம-என்று தெற்கில் புண்டரீகனை வணங்கி
ஓம் வாமநாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று தென் மேற்கில் வாமனனை வணங்கி
ஓம் சங்கு கர்ணாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம என்று மேற்கில் சங்கு கர்ணனை வணங்கி
ஓம் ஸர்ப நேத்ராய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வட மேற்கில் ஸர்ப நேத்ரனனை வணங்கி
ஓம் ஸூ முகாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வடக்கில் ஸூ முகனை வணங்கி
ஓம் ஸூ ப்ரதிஷ்டாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வட கிழக்கில் ஸூ ப்ரதிஷ்டனை வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாரிஷாதேப்யோ நம -என்று எல்லாரையும் வெளிப்புறத்தில் வணங்க வேண்டும் –

அந்யத்ர ஆவாஹ்ய பூஜாயாம் ஆவஹ நஸ்தா நாநி பரம வ்யோம -ஷீரார்ணவ -ஆதித்ய மண்டல ஹ்ருதயாநி -மதுரா த்வாரகா -கோகுல -அயோத்யாதீநி
திவ்ய அவதார ஸ்தாநாநி ச அன்யாநி ப்வராணிகாநி ஸ்ரீ ரெங்காதீ நி ச யதா ருசி

மற்றோர் இடத்தில் ஆவாஹநம் செய்து திருவாராதனம் செய்வதற்கு உரிய இடங்களாக பரமபதம் திருப்பாற் கடல் -ஸூர்ய மண்டலம் முதலிய இடங்களையும்
வடமதுரை துவாரகை கோகுலம் அயோத்யை முதலிய திவ்ய அவதார ஸ்தலங்களையும்
ஸ்ரீ ரெங்கம் முதலிய திவ்ய தேசங்களையும் அவரவர் விருப்பப்படி ஆவாஹநம் செய்து கொள்ள வேண்டும் –

பாத்ரேண பூர்வ ஸ்தாபித அர்க்ய பாத்ராத் அர்க்ய ஜலம் ஆதாய பாணிப்யாம் முக சமம் உத்த்ருத்ய
பகவன் இதம் பிரதி க்ருஹ்ணீஷ்வ இதி சிந்தயன் பகவான் முகே தர்ச யித்வா பகவத் தக்ஷிண ஹஸ்தே கிஞ்சித் ப்ரதாயார்க்க்யம் ப்ரதிக்ருஹ பாத்ரே ப்ரஷிபேத் ஹஸ்தவ் ப்ரஷால்ய
பாதயோ புஷ்பாணி சமர்ப்ய பாத்ய பாத்ராத் பாத்ய ஜலம் ஆதாய பாதயோ கிஞ்சித் தத்வா மனஸா பாதவ் ப்ரஷாலயன் பாத்யம் பிரிதிக்ருஹ பாத்ரே நிஷிபேத்

முன்பு ஏற்படுத்தப்பட்ட அர்க்ய பாத்திரத்தில் இருந்து அர்க்ய ஜலத்தை எடுத்துக் கைகளாலன் முகத்துக்கு சமமாக உயர வைத்துக் கொண்டு
பகவானே இதனை ஏற்றுக் கொண்டு அருள வேணும் -என்று நினைத்து -பிரார்த்தித்து -பகவானுடைய திரு முகத்தின் முன் காட்டி
பகவானுடைய வலது திருக்கரத்தில் சிறிது அர்க்யம் சமர்ப்பித்து ப்ரதிக்ருஹ -படிக -பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –
கைகளை அலம்பி எம்பெருமானுடைய திருவடிகளில் புஷ்பங்களை சமர்ப்பித்து பாத்ய பாத்திரத்தில் இருந்து பாத்ய ஜலத்தை எடுத்து
திருவடிகளில் சிறிது சேர்த்து மனத்தினால் திருவடிகளை விளக்குவதாக நினைத்து பி பாத்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –

ஹஸ்தவ் ப்ரஷால்ய
வஸ்த்ரேண பாதவ் ஸம் ம்ருஜ்ய கந்த புஷ்பாணி தத்வா
ஆசம நீய பாத்ராத் ஆசம நீய மாதாய பகவத் தஷிண ஹஸ்தே கிஞ்சித் ப்ரதாய பகவத் வதேந ஆசம நீயம் சமர்ப்பிதம் இதி மனசா பாவயன் சேஷ மாசம நீயம் ப்ரதிக்ரஹ பாத்ரே நிஷி பேத்
ததோ கந்த புஷ்ப தூப தீப ஆசமன முக வாஸ தாம் பூலாதி நிவேதநம் க்ருத்வா ப்ரணம்ய
ஆத்மா நம் ஆத்மீயம் ச ஸர்வம் பகவன் நித்ய கிங்கரத்வாய ஸ்வீ குர்வ இதி பகவதே நிவேதயேத்
தத ஸ்நாநார்தம் ஆஸனம் ஆ நீய
கந்தாதி ப்ரப்யர்ச்ய பகவந்தம் ப்ரணம்ய அனுஜ் ஞாய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே மால்ய பூஷண வஸ்த்ராண் யப நீய விஷ்வக் ஸேனாய தத்வா ஸ்நாந சாடி காம் ப்ரதாய பாத்யாசமா நீய பாத பீட ப்ரதான தந்த காஷ்ட ஜிஹ்வா நிர்லேஹந

கைகளை அலம்பி
வஸ்திரத்தினால் திருவடிகளை ஒத்துத் துடைத்து -பூக்களை சமர்ப்பித்து ஆசம நீய பாத்திரத்தில் இருந்து ஆசம நீயம் எடுத்து
பகவானுடைய வலது திருக்கரத்தில் சிறிது ஸமர்ப்பித்து பகவானுடைய திரு வாயில் ஆசம நீயம் சமர்ப்பிக்கப் பட்டது என்று மனத்தினால் பாவித்து
மிகுந்த ஆசம நீய தீர்த்தத்தை ப்ரதிக்ருஹ பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
பிறகு புஷ்பம் தூபம் தீபம் தாம்பூலம் முதலிய வற்றை நிவேதனம் செய்து -தண்டன் சமர்ப்பித்து –
தன்னுடைய ஆத்மாவையும் ஆத்மாவைச் சேர்ந்த எல்லாவற்றையும் பகவானே நித்ய கைங்கர்யம் செய்வதற்க்காக
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பகவான் இடம் சமர்ப்பிக்க வேண்டும்
பிறகு திருமஞ்சனத்துக்காக ஆஸனத்தை ஏற்படுத்தி கந்தம் முதலியவற்றால் அர்ச்சித்து பகவானை தண்டன் சமர்ப்பித்து அனுமதி கொண்டு
பாதுகையை சமர்ப்பித்து பகவான் சாத்திக் கொண்டு இருக்கிற மாலை ஆபரணங்கள் வஸ்திரம் ஆகியவற்றைக் கழற்றி விஷ்வக் சேனர் இடம் கொடுத்து விட்டு
திருமஞ்சன வஸ்திரம் சாத்தி பாத்யம் ஆசம நீயம் பாத பீடம் சமர்ப்பித்து
திரு முத்து பல் விளக்குதல் திரு நாக்கு வழித்தல்

கண்டூஷ முக ப்ரஷாலந ஆசமன ஆ தர்ச ப்ரதர்சன ஹஸ்த ப்ரஷாலந -முக வாஸ தாம்பூல
தைலாப் யங்க–உத்வர்தாமலக தோய -கங்கதப் லோத தேஹ ஸோதந ஸாடிகா ப்ரதான
ஹரித்ரா லேபந ப்ரஷாலந வஸ்த்ர உத்தரீய யஜ்ஜோ பவீத ப்ரதான பாத்ய ஆசமன பவித்ர ப்ரதான
கந்த புஷ்ப தூப தீப ஆசமன – ந்ருத்த -கீத -வாத்யாதி ஸர்வ மங்கள ஸம் யுக்த
அபிஷேக நீராஞ்சன ஆசமன-தேஹ சோதந -ப்லோத வஸ்த்ர உத்தரீய யஜ்ஜோபவீத -ஆசமன -கூர்ச பிரசாரண
ஸஹஸ்ர தாராபிஷேக நீராஞ்சன ஆசமன -தேஹ சோதந ப்லோத வஸ்திர உத்தரீய -யஜ்ஜோ பவீத ஆசமநாநி தத்யாத் –

வாய் கொப்பளித்தல் திரு முகம் விளக்குதல் -ஆசமனம் – கண்ணாடி காண்பித்தல் -கைகளை அலம்புதல் -தாம்பூலம்
எண்ணெய் காப்பு – நல்ல நெல்லிக்காய் சேர்த்த தீர்த்தம் –திருமேனியைத் துடைக்கும் உலர்ந்த வஸ்திரம் -மான்கள் காப்பு தெளித்தல் -வஸ்திரம் உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் சமர்ப்பித்தல் –
பாத்யம் ஆசமநம் பவித்ரம் சமர்ப்பித்தல் -கந்தம் புஷ்பம தூபம் -தீபம் ஆசமனம் -நாட்டியம் இசை வாத்தியங்கள் முதலிய மண்கலன்களோடு கூடிய
திருமஞ்சன ஆலத்தி ஆசமனம் ஆகியவை சமர்ப்பித்து மறுபடியும் திரு மேனி துடைக்கும் உலர்ந்த வஸ்திர உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் ஆசமனம் கூர்ச்சம் சமர்ப்பித்தல்
சஹஸ்ர தாரை திருமஞ்சனம் ஆலத்தி ஆசமனம் திருமேனி துடைக்கும் உலர்ந்த வஸ்திர உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் ஆசமனம் ஆகியவை சமர்ப்பிப்பது –

தத அலங்காராஸனம் அப்யர்ச்ச ப்ரணம்ய அநுஜ ஞாய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பூர்வவத்
ஸ்நாநீய வர்ஜம் அர்க்க்ய பாத்ய ஆசமநீய ஸூத்தோத்தகாநி மந்த்ரேண கல்பயித்வா பகவதே
கந்தபுஷ்ப பாத ஸம் மர்தந-வஸ்திர -உத்தரீய -பூஷண -உபவீத -பார்க்க பாதுகா ஆசமநீயாநி தத்வா
ஸர்வ பரிவாராணாம் ஸ்நாந வஸ்த்ராதி பூஷணாந்தம் தத்வா கந்தாதீன் தேவ அநந்தரம் ஸர்வ பரிவாராணாம் ப்ரத்யேகம் ப்ரதாய தூப தீப ஆசமநீயாநி தத்யாத்
அதவா ஸர்வ பரிவாராணாம் கந்தாதீநேவ தத்யாத்

பிறகு அலங்காரச்சாநத்தைப் பூஜித்து -வணங்கி -எம்பெருமானுடைய அனுமதி கொண்டு -பாதுகையை சமர்ப்பித்து
அங்கு எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானுக்கு முன்பு போலவே ஸ்நா நீயத்தைத் தவிர்த்து
அர்க்க்ய பாத்ய ஆசமநீய ஸூத்த தீர்த்தங்களை மந்திரத்தினால் ஏற்படுத்தி எம்பெருமானுக்கு கந்த புஷ்பம
திருவடிகளை வருடுதல் -வஸ்திரம் உத்தரீயம் -ஆபரணங்கள் -யஜ்ஜோ பவீதம் அரக்ய பாத்ய ஆசமநீயங்கள் சமர்ப்பித்து
காந்தம் முதலியவற்றை எம்பெருமானுக்குப் பிறகு எல்லாப் பரிவாரங்களும் தனித்தனியே ஸமர்ப்பித்து தூப தீப ஆசமநீயங்களை சமர்ப்பிக்க வேண்டும்
அல்லது எல்லாப் பரிவாரங்களும் காந்தம் முதலியவற்றை மட்டுமே ஸமர்ப்பிக்க வேண்டும் –

கந்த புஷ்ப ப்ரதான -அலங்கார -அஞ்சன -ஊர்த்வ புண்ட்ர -ஆதர்ச -தூப தீப -ஆசமன -த்வஜ -சத்ர -சாமர -வாஹந –
சங்க சிஹ்ன -காஹல -பேர்யாதி -சகல ந்ருத்த கீதா வாத்யாதிபி
அப்யர்ச்ச மூல மந்த்ரேண புஷ்பம ப்ரதாய

கந்த புஷ்பங்களை ஸமர்ப்பித்து அலங்காரம் அஞ்சனம் திருமண் காப்பு கண்ணாடி தூபம் தீபம் ஆசமனம் கொடி குடை சாமரம் வாஹனம்
சங்கம் திருச்சின்னம் காளம் பேரிகை முதலியவற்றுடன் நாட்டியம் இசை அனைத்து வாத்யங்கள் இவற்றுடன் அர்ச்சித்து மூல-திரு -மந்த்ரத்தினால் புஷ்பம் சமர்ப்பித்து
ஒவ்வொரு அஷரத்துக்கும் புஷ்பம் சமர்ப்பித்து –

த்வாதஸ அக்ஷரேண -விஷ்ணு ஷட் அக்ஷரேண-விஷ்ணு காயத்ர்யா -பஞ்ச உபநிஷதை -புருஷ ஸூக்தர்க்பி
அந்யைஸ் ச பகவன் மந்த்ரை சக்தஸ் சேத் -புஷ்பம் ப்ரதாய தேவ்யாதி திவ்ய பரிஷாதாந்தம் தத் தத் மந்த்ரேண புஷ்பம் தத்வா ப்ரணம்ய
ப்ரதி திஸம் ப்ரதக்ஷிண ப்ரணாம பூர்வகம் பகவதே புஷ்பாஞ்சலிம் தத்வா புரத ப்ரணம்ய
ஸ்ருதி ஸூகை ஸ்தோத்ரை ஸ்துத்வா ஆத்மாநம் நித்ய கிங்கர தயா நிவேத்ய ததைவ த்யாத்வா யதா ஸக்தி மூல மந்த்ரம் ஜபித்வா
ஸர்வ போக ப்ரபூர்ணம் மாத்ரம் தத்வா முகா வாஸ தாம்பூலே ப்ரதாய அர்க்யம் தத்வா போஜ்யாசனம் அப்யர்ச்ச ப்ரணம்ய
அநுஜ் ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பாத்ய ஆசமநீய அர்ஹாணி தத்வா

ஓம் நமோ பகவதே வாஸூ தேவாய -என்ற 12 எழுத்து மந்திரத்தாலும்
ஓம் விஷ்ணவே நம -என்ற ஆறு எழுத்து மந்திரத்தாலும்
ஓம் நாராயணாய வித்மஹே வாஸூ தேவாய தீ மஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் -என்கிற விஷ்ணு காயத்ரியாலும்
பஞ்ச உபநிஷத்துக்களாலும்
புருஷ ஸூக்த ருக்குகளினாலும்
பிற பகவன் மந்த்ரங்களாலும்
சக்தியுள்ளவரை புஷ்ப்பங்களை சமர்ப்பித்து
பிராட்டி முதலிய அடியவர்கள் அனைவருக்கும் அவரவருக்கு உரிய மந்திரங்களுடன் புஷ்பம் ஸமர்ப்பித்து வணங்கி
எல்லா திசைகளிலும் ப்ரதக்ஷிணம் பிரணாமம் இவற்றுடன் எம்பெருமானுக்கு புஷ்பாஞ்சாலி ஸமர்ப்பித்து முன்னால் வணங்கி
செவிக்கு இனிய ஸ்தோத்ரங்களால் -திருப்பாவை முதலிய அருளிச் செயல்களால் -ஸ்துதித்து
தன்னை நித்ய கைங்கர்ய பரனாக ஸமர்ப்பித்து -அப்படியே தியானித்து -சக்தி யுள்ளவரை மூல திரு மந்த்ரத்தை ஜபித்து
எல்லா போகங்களையும் பூர்த்தி செய்யும் மாத்திரையை ஸமர்ப்பித்து வாயுக்கு வாஸனை அளிக்கும் தாம்பூலம் சமர்ப்பித்து
அர்க்கியம் சமர்ப்பித்து போஜ்யசாநத்தைப் பூஜித்து வணங்கி
பகவான் அனுமதி கொண்டு -பாதுகை ஸமர்ப்பித்து அங்கே எழுந்து அருளி இருக்கும் பகவானுக்கு பாத்ய ஆசமனீயங்களை ஸமர்ப்பித்து –

குடம் மாஷிகம் ஸர்பி ததி ஷீரம் சேதி பாத்ரை நிஷிப்ய
ஸோஷணாதி பிர் விஸோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய மது பர்கம் அவநத ஸிரா ஹர்ஷோத்புல்ல நயநோ ஹ்ருஷ்ட மநா பூத்வா ப்ரதாய ஆசமநீயம் தத்யாத்
யத் கிஞ்சித் த்ரவ்யம் பகவதே தீயதே தத் ஸர்வம் சோஷணாதி பிர் விஸோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய தத்யாத்

வெல்லம் தேன் நெய் தயிர் பால் ஆகியவற்றைத் தனித்தனிப் பாதிரிரத்தில் சேர்த்து சோஷணம் முதலியவற்றால் சுத்தப்படுத்தி
அர்க்ய ஜலத்தால் ப்ரோக்ஷித்து மதுபர்க்கத்தை குனிந்த தலையுடன் கண்களில் மகிழ்ச்சி பொங்க
உகப்பான மனத்துடன் கூடியவனாகி ஸமர்ப்பித்து ஆசமநீயம் ஸமர்ப்பிக்க வேண்டும்
எந்தப் பொருள்கள் எல்லாம் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கப் படுகிறதோ அவை அனைத்தையும் சோஷணம் முதலியவற்றால் சுத்தப்படுத்தி அர்க்ய ஜலத்தால் ப்ரோக்ஷித்து சமர்ப்பிக்க வேண்டும் –

ததஸ் ச காம் ஸ்வர்ண ரத்நாதி கம் ச யதா ஸக்தி தத்யாத்
ததஸ் ஸூ ஸம்ஸ்க்ருதாந்நம் ஆஜ்யாட் யம் ததி ஷீர மதூ நிச பல மூல வ்யஞ்ஜநாநி
மோத காஸ் ச அந்யாநி ச லோகே ப்ரிய தமாநி ஆத்ம நஸ் ச இஷ்டா நி ஸாஸ்த்ரா விருத்தா நி ஸம் ப்ருத்ய சோஷணாதி பிர் விசோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய அஸ்த்ர மந்த்ரேண ரஷாம் க்ருத்வா ஸூரபி முத்ராம் ப்ரதர்ஸ்ய
அர்ஹண பூர்வகம் ஹவிர் நிவேதயேத் அதி ப்ரபூதம் அதி சமக்ரம் அதி ப்ரிய தமம் அத்யந்த பக்தி க்ருதம் இதம் ஸ்வீ குர்வ இதி ப்ரணாம பூர்வகம்
அத்யந்த ஸாத் வச வி நயா வநதோ பூத்வா நிவேத யேத்-

பிறகு பசு தங்கம் ரத்னம் முதலியவற்றையும் தன்னால் முடிந்தவரை ஸமர்ப்பிக்க வேண்டும் –
பிறகு நன்றாக சமைக்கப் பட்ட அன்னத்தில் நெய் மிகுதியாகச் சேர்த்து தயிர் பால் தேன் முதலியவற்றையும்
பழங்கள் கிழங்குகள் வியஞ்சனங்களையும்
பிற பணியாரங்களையும் உலகில் மிகவும் விரும்பப்படுகிற பொருள்களாய் -தனக்கும் மிகவும் விருப்பமானவைகளாய்
ஸாஸ்த்ர விருத்தம் இல்லாதாவைகள் ஆனவற்றையும் சேர்த்து
அஸ்த்ர மந்திரத்தினால் காப்பிட்டு ஸூரபி முத்ரையைக் காட்டி அர்ப்பணிக்கும் பாவத்துடன் அமுது செய்விக்க வேண்டும் –
மிகவும் அதிகமானையும் -மிகவும் நிறைந்துள்ளவையும் -மிகவும் ப்ரீதியுடன் கூடியவையுமான இவற்றை
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வணக்கத்துடன் மிகவும் பணிவாக தலை சாய்த்து அமுது செய்விக்க வேண்டும் –

ததஸ் ச அநு பாந தர்பணோ ப்ரதாய ஹஸ்த ப்ரஷாலந ஆசமந ஹஸ்த ஸம் மார்ஜந -சந்தந -முகா வாஸ தாம்பூலாதீநி தத்வா ப்ரணம்ய
புந மந்த்ராஸனம் கூர்சேந மார்ஜயித்வா அப்யர்ச்ச அநுஜ்ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே மால்யாதிகம் அபோஹ்ய விஷ்வக் சேநாய தத்வா
பாத்யா சம நீய -கந்த -புஷ்ப தூப தீப ஆசமன அபூப பலாதீநி தத்வா
ஆசமன முகா வாஸ தாம்பூல ந்ருத்த கீத வாத்யாதி ப்ரப்யர்ச்ச ப்ரதக்ஷிணத் வயம் க்ருத்வா தண்டவத் ப்ரணம்ய

பிறகு தீர்த்தத்தை அன்புடன் ஸமர்ப்பித்து -திருக்கைகளை விளக்குதல் -ஆசமனம் -திருக்கைகளைத் துடைத்தல் -சந்தனம் தாம்பூலம்
முதலியவற்றை சமர்ப்பித்து வணங்கி மீண்டும் மந்த்ராசனத்தை தர்ப்பையினால் துடைத்து அர்ச்சித்து அனுமதி கொண்டு
பாதுகையை சமர்ப்பித்து எழுந்து அருளியுள்ள எம்பெருமானுடைய மாலை முதலியவற்றைக் களைந்து விஷ்வக் சேனரிடம் சமர்ப்பித்து பாத்யம் ஆசமநீயம் புஷ்பாம் தூபம் தீபம் ஆசமனம் அப்பம் பழங்கள் முதலியவற்றை ஸமர்ப்பித்து
ஆசமனம் தாம்பூலம் நாட்டியம் இசை வாத்தியங்கள் இவற்றால் அர்ச்சித்து இரண்டு ப்ரதக்ஷிணங்கள் செய்து தடியைப் போலே விழுந்து வணங்கி –

பர்யங்காசனம் அப்யர்ச்ய அனுஜ் ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பாத்யாசமநே தத்வா
மால்யா பூஷண வஸ்த்ராணி அப நீய விஷ்வக் ஸேனாய தத்வா
ஸூக சயன உசிதம் ஸூக ஸ்பர்சம் ச வாஸ ச தது சிதானி பூஷணாநி உபவீதம் ச ப்ரதாய ஆசம நீயம் தத்வா
கந்த புஷ்ப தூப தீப ஆசமன முகா வாஸ தாம்பூலாதி ப்ரப்யர்ச்ச
ஸ்ருதி ஸூகை ஸ்தோத்ரை அபிஷ் டூய பகவா நேவ ஸ்வ ந்யாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வ சேஷ தைக ரஸேந
அநேந ஆத்மநா ஸ்வ கீயைஸ் ச தேஹ இந்த்ரிய அந்தக்கரணை ஸ்வ கீய கல்யாண தம த்ரவ்ய மயான்
ஒவ்ப சாரிக ஸாம் ஸ்பர்ஸிக அப்யவ ஹாரிகாதி சமஸத் போகான் அதி ப்ரபூதான் அதி சமக்ரான் அதி ப்ரிய தமான் அத்யந்த பக்தி க்ருதான்
அகில பரிஜன பரிச்சதாந் விதாய ஸ்வஸ்மை ஸ்வ ப்ரீதயே ஸ்வயமேவ ப்ரதிபாதிதவாந் இதி அநு சந்தாய
பகவந்தம் அனுஜ் ஞாப்ய பகவன் நிவேதித ஹவிஸ் சேஷாத் விஷ்வக் ஸேனாய கிஞ்சித் துத் த்ருத்ய நிதாய
அந்யத் ஸர்வம் ஸ்வா சார்ய ப்ரமுகே ப்யோ வைஷ்ணவேப்யோ தத்வா
பகவத் யாகாவா சிஷ்டை ஜலாதி பிர் த்ரவ்யை விஷ்வேக் சேனம் அப்யர்ச்ச பூர்வோத்ததம் ஹவிஸ் ச தத்வா
ததர்சனம் பரி ஸமாப்ய பகவந்தம்
அஷ்டாங்கேந ப்ரணாமேந ப்ரணம்ய சரணம் உப கச்சேத்

பர்யங்க ஆசனத்தை அர்ச்சித்து அனுமதி கொண்டு -பாதுகையை ஸமர்ப்பித்து அங்கே எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானுக்கு
பாத்யம் ஆசமனம் ஸமர்ப்பித்து -மாலை ஆபரணங்கள் -மேல் வஸ்திரங்கள் -ஆகியவற்றைக் களைந்து விஷ்வக் சேனரிடம் சமர்ப்பித்து
ஸூ கமாக சயனிப்பதற்கு ஏற்ற மென்மையான வஸ்த்ரத்தையும் அதற்கு ஏற்ற ஆபரணங்கள் யஜ்ஜோ பவீதத்தையும் ஸமர்ப்பித்து
ஆசமனம் ஸமர்ப்பித்து புஷ்பம் தீபம் தூபம் ஆசமனம் தாம்பூலம் முதலியவற்றால் அர்ச்சித்து
செவிக்கு இனிய ஸ்தோத்ரங்களால் -அருளிச் செயல்களால் -திருப்பாவை முதலியவற்றின் சாற்றுப் பாசுரங்களை -சேவித்து ஸ்துதித்து
பகவானே தன்னால் நியமிக்கப் படுகிற ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்திகளை யுடையதும் தனக்கு அடிமைப்பட்டு இருத்தலையே ரஸமாக யுடைய இந்த ஆத்மாவினால்
தன்னுடைய தேஹ இந்த்ரிய மனஸ் முதலிய கரணங்களால் தன்னுடைய மங்களமான பொருள்களான -உபசாரங்களான -குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனத்துக்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய மிகவும் உயர்ந்தவைகளாய் மிகவும் நிறைந்தவைகளாய் -மிக ப்ரீதி யானைவைகளாய்
மிக்க பக்தியினால் ஆனவைகளாய் உள்ள அனைத்து போகங்களால்
அனைத்து அடியவர் பரிவாரங்களுடன் கூடிய தன்னைத் தானே ப்ரீதி செய்து கொள்வதற்காகத் தானே திருவாராதனம் செய்து கொண்டான் என்று அனுசந்தித்து
பகவான் அனுமதி கொண்டு பகவானுக்கு அமுது செய்வித்து ப்ரசாதத்தில் விஷ்வக் சேனருக்குச் சிறிது எடுத்து வைத்து –
மற்ற எல்லாவற்றையும் தன ஆச்சார்யர் முதலிய ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சமர்ப்பித்து
பகவானுக்குத் திருவாராதனம் செய்து மிகுந்த தீர்த்தம் முதலிய பொருள்களால் விஷ்வக் சேனரைப் பூஜித்து
முன்பு எடுத்து வைத்து இருந்த பிரசாதத்தையும் ஸமர்ப்பித்து அந்தப் பூஜையை முடித்து -பகவானை
எட்டு அங்கங்களுடன் கூடிய ப்ரணாமத்தால் வணங்கிச் சரண் அடைய வேண்டும் –

மநோ புத்தி அபி மாநேந ஸஹ ந்யஸ்ய தரா தலே
கூர்ம வத் சதுரஸ் பாதான் சிரஸ் தத்ரைவ பஞ்சமம்
ப்ரதக்ஷிண ஸமே தேந த்வேவம் ரூபேண ஸர்வதா
அஷ்டாங்கேந நமஸ் க்ருத்ய ஹ்யு விஸ்ய அக்ரத ப்ரபோ

இத் யுக்த அஷ்டாங்க ப்ரணாம ஸரணாகதி ப்ரகாரஸ் ச பூர்வ யுக்த ததஸ்
அர்க்ய ஜலம் ப்ரதாய பகவந்தம் அனுஜ ஞாப்ய பூஜாம் ஸமா பயேத்

இதி ஸ்ரீ பகவத் ராமாநுஜ விரசிதோ நித்ய க்ரந்த ஸமாப்தம்

மனம் புத்தி அபிமானம் -அஹங்காரம் -இவை மூன்றையும் அடக்கி
தரையில் ஆமை போலே நான்கு கால்கள் -கைகள் இரண்டு -கால்கள் இரண்டு -தலை ஆகிய ஐந்தையும் தரையில் படும்படி ப்ரதக்ஷிணத்தோடு கூடியதாய்
இப்படி எப்போதும் அஷ்டாங்கத்துடன் எம்பெருமான் திரு முன்பே நமஸ்கரித்து அமர்ந்து என்று அஷ்டாங்க பிராணாமம் கூறப்பட்டுள்ளது

சரணாகதி செய்யும் முறை முன்பே கூறப்பட்டது

பிறகு அர்க்ய தீர்த்தத்தை ஸமர்ப்பித்து பகவானுடைய அனுமதி கொண்டு திருவாராதனத்தை முடிப்பது

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிய நித்ய கிரந்தம் நிறைவடைந்தது –

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவையின் ஏற்றம் –ஸ்ரீ மாங்கள்ய வ்ருத்தி ஸ்தவ ஸ்தோத்ரம் -ஸ்ரீ தால்ப்யர் ஸ்ரீ புலஸ்ய மஹ ரிஷி ஸம்வாதம்–ஸ்ரீ விஷ்ணு தர்மம்–

July 5, 2022

தேறா ஒருவன் தெங்கின நீர் செவ்வே நிறைந்த தீங்காயைச் செங்கை வருந்த அசைத்து அசைத்து
மாறாம் இது நீர் இலை என்று மருண்டு மாந்த முயலாது வெறிதே யிகத்து விட்டு ஆங்கு வைய முழுதும் நிறைந்த எவர்க்கும்
பேறா அருளுக்கு உருவான பெருமான் ஊனப் பேய் விழிக்குப் பிறங்கா வகையால் இலை என்று பேணாது இருந்த பெரும் பிழையால்
நீறாய் நிலத்து விளிவேனை நெடுமாற்கே நீ அடிமை என்று நினைவித்து எடுத்து ஆண்டது ஞான நிதி போல் கோதை நெறித் தமிழே

விவாகம் அற்றவனான ஒருவன்-மூடன் – விடாய் மிகு இருக்க
தார்மிகன் ஒருவன் இளநீர் நிறைந்த தேங்காயைத் தர
அவனோ இளநீர் பருகினவன் இல்லை -அதனுள் நீர் இருப்பதையும் அறியான் –
கை நோவ அசைத்து அசைத்துப் பார்த்தானாம்
அதனுள் இளநீர் நிறைந்து இருப்பதால் தளும்ப வில்லை -ஆகவே அதனுள் ஒன்றும் இல்லையென்று வீசி எரிந்து விட்டானாம் –

தேறா ஒருவன் தெங்கின நீர் செவ்வே நிறைந்த தீங்காயைச் செங்கை வருந்த அசைத்து அசைத்து
மாறாம இது நீர் இலை என்று மருண்டு மாந்த முயலாது வெறிதே யிகத்து விட்டு

இந்த உவமைக்கு உப மேயம் மேலே சொல்லுகிறது
எம்பெருமான் உலகம் எங்கும் வியாபித்து -நிறைந்துள்ளன
இளநீரின் படியைக் காட்டிலும் விசேஷம் உண்டே
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வியாப்ய நாராயண ஸ்தித
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என நில விசும்பு ஒழிவறக்
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் –

பாக்கியசாலிகள் அனுபவிக்கஞான ஹீனர்களோ நிரீஸ்வர வாதம் செய்து படு குழியில் வீழ்ந்து அவதிப்படுகிறார்கள்

ஆங்கு வையமுழுதும்நிறைந்த எவர்க்கும்
பேறா அருளுக்கு உருவான பெருமான் ஊனப் பேய் விழிக்குப் பிறங்கா வகையால் இலை என்று பேணாது இருந்த பெரும் பிழையால்
நீறாய் நிலத்து விளிவேனை

நெடுமாற்கே நீ அடிமை என்று நினைவித்து எடுத்து ஆண்டது ஞான நிதி போல் கோதை நெறித் தமிழே
இவர்களுக்கும் ஆண்டாளுடைய திருப்பாவையை தஞ்சமாகிறது
சர்வேஸ்வரன் உளன்
நீ அவனுக்கு அடிமை
நாராயணனே நமக்கே பறை தருவான்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
உன் தன்னோடு உறவேல் இங்கே ஒழிக்க ஒழியாது
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
சீறி அருளாதே -இறைவா நீ தாராய் பறை –
போன்றவற்றை அருளிச் செய்து
நம்மை எடுத்து ஆண்ட ஞான நிதி அன்றோ

யமோ வைவஸவதோ ராஜா யஸ தவைஷ ஹ்ருதி சதிதஸ் தேந சேத விவாதஸ தே மாகங்காம மா குரூந கம -மநு ஸ்ம்ருதி -8-92-

சர்வ நியாமகன் -தண்டதரன் -ஸூர்ய வம்ச -ஆதித்ய மண்டலா வாசி -அனைவருக்கும் இனியவன் -உனது உள்ளத்தில் உள்ளவனாய் இருந்தும் நெடுநாளவனுடன் விவாதம் அனுவர்த்தித்து -த்வம் மே -அஹம் மே -தொடருகிறதே-இது தொலைந்தால் கங்கா முதலிய புண்ய நதி தீர்த்தங்கள் ஆட வேண்டா =புண்ய க்ஷேத்ரம் சேவிக்கப் போக வேண்டா-விவாதம் நீங்கும் அளவே வேண்டுவது –

ஸாவதகா வீராதீன ஸூதே சாகர மேகலா மருத சஞ்சீவநீ யதா மருதய மாண தசாம கதா -அசாரங்கள் மலிந்து சாரங்கள் மெலிந்து இருப்பதே இவ்வுலக இயற்க்கை

உன் தன்னோடு உறவு நமக்கு இங்கு ஒழியாது

திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்

தோண்டத் தோண்ட சுரக்கும் உபநிஷத் அர்த்தங்கள் பொதிந்து அன்றோ உள்ளன
பாதங்கள் தீர்க்கும் -பரமன் அடி காட்டும் -வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்

 

————-

ஸ்ரீ மாங்கள்ய வ்ருத்தி ஸ்தவ ஸ்தோத்ரம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம்

ஸ்ரீ தால்ப்யர் ஸ்ரீ புலஸ்ய மஹ ரிஷி ஸம்வாதம்

ஸ்ரீ தால்ப்ய உவாஸ
கார்ய ஆரம்பேஷு ஸர்வேஷு ஸூஸ் ஸ்வப்னேஷு ச சத்தம
அமங்கல்யேஷு ஜூஷ்டேஷு யஜ் ஜப்தவ்யம் ததுஸ்யதாம்

யே நாரம்பாஸ் ச ஸித்த்யந்தி துஸ் ஸ்வப்னஸ் ஸோப சாம்யதி
அமங்கல நாம் த்ருஷ்டா நாம் பரிகாதஸ் ச ஜாயதே–1-2-

பூஜ நீயரான ஸ்ரீ புலஸ்ய மஹ ரிஷியே
ஏதாவது நற் கார்யங்கள் தொடங்கும் போதும்
தீய கனாக்கள் கண்ட போதும்
அமங்கல வஸ்துக்களைப் பார்க்க நேர்ந்த போதும்
எதை ஜபித்தால் தொடங்கின கார்யங்கள் எல்லாம் ஸித்தி பெறுமோ
தீய கனாக்கள் கெட்ட பலன்களைத் தராமல் தொலையுமோ
கண்ட அமலங்கள் கெடுதல் விளைக்காமல் நிற்குமோ
அத்தைச் சொல்ல வேணும் என்று கேட்க

———-

புலஸ்யர் சொல்கிறார் –

புலஸ்த்ய உவாஸ
ஜ நர்த்தனம் பூத பதிம் ஜகத் குரும் ஸ்மரன் மனுஷ்யஸ் ஸததம் மஹா முநே
துஷ்டான் அசேஷாண் யப ஹந்தி ஸாதயத் யசேஷ கார்யாணி ச யான்யபீப்ஸதி –3-

வாரீர் மஹ ரிஷியே
ஸகல பிராணிகளுக்கும் சேஷியாய்
ஸகல ஜகத்துக்களுக்கும் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்குமவராய்
ஜனார்த்தன என்ற பேர் பெற்ற பெருமாளை
இடைவிடாது சிந்தனை செய்யும் மனிதன் எந்த வித கெடுதல்களை தவிர்த்துக் கொள்வான்
சாதித்துக் கொள்ளும் ஸகல காரியங்களையும் நிறைவேற்றிக் கொள்வான்

ஸ்ருணுஷ்வ ச அந்யத் கததோ மாம் அகிலம் வாதாமி யத் நே த்விஜ வர்ய மங்களம்
ஸர்வார்த்த சித்திம் ப்ரததாதி யத் ஸதா நிஹந்த்ய சேஷாணி ச பாதகாநி –4-

இன்னும் யான் உரைக்கக் கேளீர் மஹா முனிவரே
ஸர்வார்த்த சித்தியைத் தரவல்லதும்
ஸகல பாதகங்களையும் தொலைக்க வல்லதுமான
மங்கள ஸ்தவம் யாது ஓன்று உண்டோ அத்தைச் சொல்கிறேன்

————-

ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம் ஜகத் த்ரயே யோ ஜகதஸ் ச ஹேது
ஜகத் ச பாத் யத்தி ச யஸ் ச ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி –5-

ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம்
கிருஷ்ணே திஷ்டதி ஸர்வ மேதத் அகிலம் -என்ற படி ஸர்வ சராசன்களும் யாவன் ஒருவன் இடம் பிரதிஷடை பெற்று இருக்கின்றனவோ

ஜகத் த்ரயே யோ
நல்ல கோட்ப்பாட்டுலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக்கண்ணன் -என்கிறபடியே
யாவன் ஒருவன் மூன்றின் உள்ளும் ப்ரதிஷ்டிதனாய் இரா நிற்கிறானோ

தத் புருஷ ஸமாஸமும் பஹு வரீஹீ ஸமாஸமும் உண்டே

யஸ் ஜகதஸ் ச ஹேது
ஸகல ஜகத் காரண பூதனும் யாவன் ஒருவனோ
தான் ஓர் உருவே தனி வித்தாய்
வேர் முதல் வித்தாய்
உபாதான நிமித்த ஸஹ காரியாய்
சேதன அசேதன விஸிஷ்ட வேஷத்தால் உபாதான காரணமாய்
ஞான சக்த்யாதி விஸிஷ்ட வேஷத்தால் ஸஹ காரியாய்
ஸங்கல்ப விஸிஷ்ட வேஷத்தால் நிமித்த காரியாய்
ஹேது -என்கிற பதமே த்ரிவித காரணமாய் இருப்பதைக்க காட்டும்

ஜகத் ச பாத் யத்தி ச யஸ் ச
காரண பூதன் ஒருவனாய் ரக்ஷண பூதன் வேறே ஒருவனாய் ஸம்ஹார கர்த்தா மற்று வேறு ஒருவனாய் இருக்கை அன்றிக்கே
ஸ்திதி ஸம்ஹார கரனும் அவனே
ஸம்ஹரதி என்னாதே அத்தி என்றது ஸ்ருதி ஸூத்ர சாயையாலே

ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி —
ஆக ஸகல ஜகத்துக்கும் ஆதார பூதனாயும் ஆதேய பூதனாயும்
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹார காரகனாயும் இரா நின்ற
ஸர்வேஸ்வரன் எனக்கு மங்கள்ய வ்ருத்தி பிரதானன் ஆக வேணும் என்றதாயிற்று

ஸர்வதா -மூன்றாம் பாதத்திலும் நான்காம் பாதத்திலும் அந்வயம்

————-

வ்யோம அம்பு வாய் வக்னி மஹீ ஸ்வரூபைர் விஸ்தார வான் யோ அணுதரோணு பாவாத்
அஸ்தூல ஸூஷ்மஸ் சததம் பரேஸ்வரோ மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரி –6-

நீராய் நிலனாய் தீயாய்க் காலாய் நெடு வானாய் -என்கிறபடி விரிந்தும்
அணோர் அணீ யான் -என்கிறபடி சுருங்கியும்
ஸ்தூல வஸ்துவாயும் ஸ்தூல இதர வஸ்துவாயும்
ஸூஷ்ம வஸ்துவாயும் ஸூஷ்ம இதர வஸ்துவாயும் இருக்கும் பரம புருஷன் எனக்கு மங்கள்ய விருத்தியைத் தர வேணும் –

சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் பெருக்குவாராய் இன்றியே பெருக்கம் எய்த பெற்றியோய் -திரு மழிசைப்பிரான்

பாவ ஸப்தம் பதார்த்த வாசகம்-

————

யஸ்மாத் பரஸ்மாத் புருஷாத் அநந்தாத் அநாதி மத்யா ததிகம் ந கிஞ்சித்
ஸ ஹேது ஹேதுஸ் பரமேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரி –7-

அநந்தாத்-அந்நதத்வமாவது பரிச்சேத ரஹிதத்வம் -த்ரிவித பரிச்சேத ராஹித்யத்தைச் சொல்கிறது -தேச வஸ்து கால பரிச்சேதம்
எப்பொருளும் தானாய் -இருக்கையாலே வஸ்து பரிச்சேத ரஹிதன்

அநாதி மத்யாத் -ஆதியும் அந்தமும் இல்லாதபோது மத்யமும் இல்லை என்பது அர்த்தாத் ஸித்தம்

ஸ ஹேது -கார்ய பதார்த்தங்களை சொல்லும்

————-

ஹிரண்ய கர்ப்ப அச்யுத ருத்ர ரூபீ ஸ்ருஜத்ய சேஷம் பரிபாதி ஹந்தி ச
குணாக் ரணீர் யோ பகவான் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரே –8-

நான்முகனை ஆவேசித்து ஸ்ருஷ்ட்டியையும்
ஸ்வேந ரூபேண ஸ்திதியையும் பூர்வார்த்தம் சொல்கிறது
இரண்டாம் பாதத்தில் உள்ள மூன்று கிரியா பதங்களையும் முதல் பாதத்தில் உள்ள மூன்று வியக்திகளோடே அடைவே யோஜிக்க வேணும்
ஹிரண்ய கர்ப்ப ரூபீ சந் அசேஷம் ஹந்தி ச -என்று யோஜனை

குணா க்ரணீ -இங்கு குண ஸப்தம் குணவான்களை சொல்லுகிறது -குணவான்களுக்குள்ளே தலைவன் என்றவாறு
ஸமஸ்த கல்யாண குண அம்ருதமாய் இருப்பவனே எனக்கு மங்கள்ய வ்ருத்தி பிரதன் –

——————-

பரஸ் ஸூராணாம் பரமோஸ் ஸூராணாம் பரோ யதிநாம் பரமோ முனீ நாம்
பரஸ் தமஸ் தஸ்ய ச யஸ் ச ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரே –9-

—————–

இந்த ஸ்தோத்ரம் ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ளது—-50 ச்லோகங்கள்

இந்த ஸ்தோத்ரம் ஸ்ரீ தால்ப்யர் என்கிற மஹரிஷி கேட்க,

ஸ்ரீ புலஸ்த்ய மஹரிஷி சொல்வதாக, விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ளது.

இது, ஸ்ரீமந் நாராயணின் பரத்வத்தையும், அவனே ஜகத் காரணன் என்பதையும்,

அனைத்துப் பாபங்களையும் ,த்வம்சம் செய்யும் திவ்ய மங்கள தேவதை அவன் என்றும்

இவ்வுலகத்தில் மட்டுமல்லாமல், கலங்காப் பெருநகரான வைகுண்டத்திலும்

ஸகல ஸௌபாக்கியங்களையும் அளிப்பவன் என்றும், உபதேசிக்கிறது—-

பகவானின்

ஸ்ரீ வராஹாவதாரம்,

ஸ்ரீ ந்ருஸிம்ஹாவதாரம்

ஸ்ரீ வாமனாவதாரம்

ஸ்ரீ மத்ஸ்யாவதாரம்

ஸ்ரீ பரசுராமாவதாரம்

ஸ்ரீ ராமாவதாரம்

ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம்

இவற்றை

ஓரிரு ச்லோகங்களில் சொல்லி, அப்படிப்பட்ட ”ஹரி ”

மங்களங்களை அருள்வாராக என்று வேண்டப்படுகிறது—

பல ச்ருதி –கடைசி 7 ச்லோகங்கள்

இந்த ஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் என்கிற ஸ்தோத்ரம் ,

ஆண் ,பெண் , குழந்தைகள் என்கிற வித்தியாசமின்றி , தினமும் பாராயணம் செய்து,

அன்றாட வாழ்க்கையில் அல்லல் தவிர்த்து

,அனைத்து ஸௌபாக்கியங்களையும் பெற்றிட , அருமையான ஸ்தோத்ரம்

ஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம்
—————————————–

ஸ்ரீ தால்ப்ய :——-

1 மற்றும் 2. கார்யாரம்பேஷு ஸர்வேஷு து : ஸ்வப்னேஷு ச ஸத்தம |

அமங்கள்யேஷு த்ருஷ்டேஷு யஜ்ஜ்ப்தவ்யம் ததுச்யதாம் ||

யே நாரம்பாச்ச ஸித்த்யந்தி து :ஸ்வப்நச்சோப சாந்தயே |

அமங்களாநாம் த்ருஷ்டாநாம் பரிஹாரச்ச ஜாயதே || –

தால்ப்யர் சொல்கிறார் ———

ப்ரஹ்மத்தை உணர்ந்தவருள் மிகப் பெரியவரே —-
கார்யங்களைத் தொடங்கும்போதும், துஸ்வப்னம் மற்றும் அமங்களம் நேரும்போது
எதை ஜபிக்க வேண்டும் ? தொடங்கும் கார்யங்கள், எதனால் இனிமையாக
நிறைவேறுகின்றன ? கெட்ட கனவுகள் எதனால் பலனற்றுப் போகின்றன ?
யாம் காணுகின்ற அசுபங்களுக்குப் பரிஹாரம் எதனால் உண்டாகிறது ?

ஸ்ரீ புலஸ்த்ய :——

3. ஜநார்தநம் பூதபதிம் ஜகத்குரும் ஸ்மரந் மநுஷ்யஸ் ஸததம் மஹாமுநே |

துஷ்டாந்யசேஷாண்ய பஹந்தி ஸாதயதி அசேஷ கார்யாணி ச யாந்யபீப்ஸதி ||—-2

ஸ்ரீ புலஸ்த்யர் பதில் :—

மஹாமுனிவரே ——பிறவிச் சங்கிலியை அறுக்க வல்லவரும், எல்லா உலகங்களிமுள்ள
எல்லாப் பொருள்களுக்கும் சொந்தக்காரரும் ,மிக உயர்ந்தவரும் ஆன எம்பெருமானை
த்யானித்துக்கொண்டிருக்கும் மனுஷ்யன் , தீயவற்றை யெல்லாம் போக்கி, தான் விரும்பிச் செய்யும்
எல்லாச் செயல்களும் நற்பயன் அளிக்கும்படி , எம்பெருமானால் ,அருளப்படுகிறான்

4. ச்ருணுஷ்வ சாந்யத் கததோ மமாகிலம் வதாமியத்தே த்விஜவர்ய மங்களம் |

ஸர்வார்த்த ஸித்திம் ப்ரததாதி யத் ஸதா நிஹந்த்யசேஷாணி ச பாதகாநி ||

ஹே –ப்ராஹ்மண ச்ரேஷ்டரே —-எது உமக்கு சுபமளிக்க வல்லதோ , எது
வேண்டிய பலன்களை யாவும் கொடுக்க வல்லதோ, எது தீவினைகள் எல்லாவற்றையும்
அழிக்க வல்லதோ, அத்தகைய ஸ்தோத்ரத்தை உமக்குச் சொல்கிறேன் —
அதை முழுவதுமாகக் கேட்பீராக

5. ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம் ஜகத்த்ரயே யோ ஜகதச்ச ஹேது ; |
ஜகத் ச பாத்யத்தி ச யஸ்ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

மூன்று உலகங்களிலும் , எவர் ஜங்கம ,ஸ்தாவர ரூபங்களுக்குக் காரணமோ ,
எவரிடத்தில், இவை கீழே விழாது நிலைத்துத் தாங்கப்படுகிறதோ,
எவர் இவற்றையெல்லாம் ரக்ஷிக்கிறாரோ, ப்ரளய சமயத்தில் , எவர் இவற்றையெல்லாம்
உணவைப்போலத் தனக்குள் ஒடுங்கும்படி செய்கிறாரோ அனைத்துப் பாபங்களையும்
போக்கும் அந்த ஹரி , மங்களங்கள் பொங்கிப் பெருக ,எனக்கு அருள்வாராக

6.வ்யோமாம்பு வாய்வக்நி மஹீஸ்வரூபை : விஸ்தாரவாந் யோணுதரோணு பாவாத் |
அஸ்தூல ஸூக்ஷ்மஸ் ஸததம் பரேச்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

நீர், நிலம், காற்று, நெருப்பு , ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களால் , தம்மைப்
பெருக்கிக்கொண்டவரும் , சிறிய பொருட்களிலெல்லாம் மிகச் சிறிய நுட்பமானவரும் ,
சிறிய, பெரிய என்று உள்ள அளவில்லாப் பொருட்களில் இருந்து வேறுபட்டு , தனித்
தன்மை உள்ளவருமான ஹரி எல்லாக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக
அருள்வாராக

7. யஸ்மாத் பரஸ்மாத் புருஷா தநந்தாத் அநாதிமத்யா ததிகம் ந கிஞ்சித் |
ஸ ஹேது ஹேது : பரமேச்வரேச்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||
||

காலம்,இடம், குணம், இவற்றாலெல்லாம் அளவிட முடியாதவரும், பிறப்பு இல்லாதவரும் ,
முடிவு இல்லாதவரும், தம்மிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லாதவரும் படைத்தல் தொழில்
செய்பவரையும் படைப்பவரும், தேவர்களுக்கு எல்லாம் தேவரான ஹரி
எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

8. ஹிரண்ய கர்ப்பாச்யுத ருத்ர ரூபி ஸ்ருஜத்யசேஷம் பரிபாதி ஹந்தி |
குணாக்ரணீர் யோ பகவான் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாக இருந்து, உலகங்களைப் படைத்தும்,
தானே அச்யுதனாக இருந்து அவற்றையெல்லாம் காத்தும், ருத்ரனுக்கு ஆத்மாவாக
இருந்து, எல்லாவற்றையும் அழித்தும், முதல் குணசாலியாகவும் , அளப்பரிய ஞானம்,
படைக்கும் பொருளாக ஆகும் ஆற்றல், எல்ல உலகங்களையும் தளர்ச்சி இல்லாமல்
தாங்கும் வலிமை ,எல்லோரையும் தன இஷ்டப்படி இயக்கும் மிடுக்கு, பிற பொருள்கள் எல்லாவற்றையும்,
ஸூர்ய ஒளியில் விளக்கு பிரகாசிப்பது போல, பேரொளி உடையவரும்
குற்றம் என்பதே இல்லாதவருமான ஹரி எனக்கு எப்போதும் சுபங்கள் பெருக அருள்வாராக

9. பரஸ் ஸுராணாம் பரமோஸுராணாம் பரோ யதீநாம் பரமோ முநீநாம் |
பரஸ் ஸமஸ்தஸ்ய ச யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

தேவர்கள், அஸுரர்கள் , துறவிகள், முனிவர்கள் இப்படி எல்லாருக்குமே மிகமிக
உயர்ந்தவரான ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

10. த்யாதோ முநீநா மபகல்மஷைர் யோ ததாதி முக்திம் பரமேச்வரேச்வர : |
மனோபிராம :புருஷஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

எல்லாக் காலங்களிலும் தன்னையே நினைத்து குற்றமில்லா உள்ளத்தால்
சதா சிந்தனை செய்து இருப்பவர்களுக்கு மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அளிப்பவரும்,
உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் வனப்புள்ளவரும் எல்லாப் பலன்களையும்
தர வல்லவருமான ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

 

பரம காருணிகரான ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை அருளிச்செய்த ஸ்ரீ சரமோபாய நிர்ணயம்

January 17, 2022

ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளையின் தனியன்௧ள்

ஸ்ருத்யர்த்த ஸார ஜநகம் ஸ்ம்ருதி பால மித்ரம்
பத்மோல்லஸத் ப௧வதங்௧ரி புராண பந்தும் |
ஜ்ஞாநாதி ராஜம் அபய ப்ரத ராஐ புத்ரம்
அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி ||

(வேதப்பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய்
ஸ்ம்ருதி௧ளாகிற தாமரைகளுக்கு இளஞ்சூரியனாய்,
ஶ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் பழைய உறவினராய்,
ஞானங்களுக்கு பேரரசராய்,
அபய ப்ரதராஜரின் பிள்ளையாய்,
பரம காருணிகரான என் ஆசார்யரை வணங்குகிறேன்.)

அபயப்ரத பாத தேஶிகோத்பவம்
குருமீடே நிஜமாதரேண சாஹம் |
ய இஹாகில லோக ஜீவநாதர:
சரமோபாய விநிர்ணயம் சகார ||

யாவரொருவருடைய அருளாலே அடியேன் சரமோபாய நிர்ணயத்தைச் சொல்லப் போகிறேனோ,
என் ஆசார்யராய், அபய ப்ரதபாதர் என்னும் திருநாமமுடைய அப்பெரியவாச்சான் பிள்ளையை ஆஶ்ரயிக்கிறேன்.

அபயப்ரத பாதாக்யமஸ்மத் தேஶிகமாஶ்ரயே |
யத் ப்ரஸாதஹம் வக்ஷ்யே சரமோபாயநிர்ணயம் ||

(அபயப்ரத பாதர் என்னும் பெரியவாச்சான் பிள்ளையாகிற ஆசார்யரின் பிள்ளையாய்,
எல்லா உலகினரையும் உய்விக்க விரும்பி ‘சரமோபாய நிர்ணயம்’ என்னும் நூலை
இயற்றியவரான என் ஆசார்யரை அன்புடன் துதிக்கிறேன்)

அஸ்மஜ் ஜநக் காருணய ஸுதாஸந்துஷி தாத்மவான் |
கரோமி சரமோபாய நிர்ணயம் மத்பிதா யதா ||

அடியேனுடைய தந்தையாருடைய கருணை அமுதத்தினால் உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்மாவையுடைய அடியேன்
எந்தையார் அருளிய முறையிலே சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

அஸ்மதுத்தாரகம் வந்தே யதிராஜம் ஜகத்குரும் |
யத்க்ருபாப்ரேரித: குர்மி சரமோபாய நிர்ணயம் ||

உலகனைத்துக்கும் ஆசார்யராய், நமக்கு உத்தாரகரான எதிராசரை வணங்குகிறேன்,
அவருடைய கருணையினால் தூண்டப்பட்டுச் சரமோபாய நிர்ணயத்தைச் செய்கிறேன்.

பூர்வாபர குரூகதைஶச ஸ்வப்ந வ்ருத்தைர் யதீஶபாக் |
க்ரியதேத்ய மயா ஸம்யக் சரமோபாய நிர்ணயம் ||

எம்பெருமானாருக்கு முன்னும் பின்னுமிருந்த ஆசார்யர்களின் ஶ்ரீஸூக்திகளைக் கொண்டும்,
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களாலும், சரமோபாயத்வம் உடையவரிடத்திலேயே பொருந்தும் என்று
அடியேனால் நன்கு நிரூபிக்கப்படுகிறது.

பெரியவாச்சான் பிள்ளை யருளியதாக ஶ்ரீவைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப்பட்ட ஶ்லோகம்

விஷ்ணு: ஶேஷீ ததீய: ஶுப குண நிலயோ விக்ரஹ: ஶ்ரீஶடாரி:
ஶ்ரீமாந் ராமாநுஜார்ய: பத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம்|
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர, தஸ்மாத்
ஶிஷ்டம் ஶ்ரீமத் குரூணாம் குலமித மகிலம் தஸ்ய நாதஸ்ய ஶேஷ:||

[விஷ்ணுவானவர் அனைவர்க்கும் ஶேஷி யாயிருப்பவர்:
நற்குணங்களுக்கு இருப்பிடமான நம்மாழ்வார் அவருடைய திருமேனி யாவார்.
கைங்கர்யச் செல்வம் நிறைந்த எம்பெருமானார் அந்த நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரையிணையாய் விளங்குகிறார்.
அந்த எம்பெருமானாரிடத்திலேயே ஆசார்ய ஶப்தம் நிறை பொருளுடையதாய் விளங்குகிறது.
வேறெவரிடமும் அப்படி விளக்கவில்லை. ஆகையால், மற்ற ஸதாசார்ய பரம்பரை முழுவதும்
அந்த எம்பெருமானார்க்கு ஶேஷமாயிருப்பது.] (குருகுணாவளி)

உடையவருக்கு முன்புள்ள முதலிகளுடையவும், பின்புள்ள முதலிகளுடையவும் திவ்ய ஸூக்திகளாலும்
அத்யத்புதமான ஸவப்ன வ்ருத்தாந்தங்களாலும், சரமோபாயமானது உடையவரிடத்திலே பூர்ணமாக
நிர்ணயிக்கப்படுகையாலே இதுக்குச் சரமோபாய நிர்ணயமென்று திருநாமம் ஆயிற்று.

முதலிகள் தந்தாம் ஆசார்யர்கள் பக்கலிலே ஸாக்ஷாத் ஆசார்யத்வத்தை அறுதியிட்டு
அவ்வர்களுடைய அபிமானமே உத்தாரகமென்று சரமோபாயத்தை அறுதியிட்டிருந்தார்களேயாகிலும்,
தந்தாம் ஆசார்யர்கள் உடையவரையே உத்தாரகத்வேந அறுதியிட்டுத் தங்களைப் பற்றினார்க்கும்
உடையவரையே தஞ்சமாக உபதேசிக்கையாலே,
ஸர்வர்க்கும் உத்தாரகத்வேந சரமோபாயத்தை அறுதியிடலாவது உடையவர் பக்கலிலேயிறே.

குருரிதி ச பதம் பாதி என்கிறபடியே ஆசார்யத்வம் ஒளி விஞ்சிச் செல்லுகிறது
உடையவர் பக்கலிலே வ்யவஸ்திதமிறே.
வடுகநம்பி வார்த்தையை நினைப்பது.

உடையவர்க்கு முன்புள்ள முதலிகள் பாவ்யர்த்த ஜ்ஞாநமுடையவர்களாகையாலே,
பரம காருணிகரான இவரிடத்திலே உத்தாரகத்வம் நிலை நிற்குமென்று அறுதியிட்டுத்
தங்களுக்குப் பேற்றில் குறையின்றிக்கே இருக்கவும்
“கலியும் கெடும்” என்கிற ஆழ்வாருடைய திவ்ய ஸுக்தியை உட்கொண்டு இவரோடு
அவிநாபாவ ஸம்பந்தத்தைப் பரமோத்தாரகமென்று நினைத்து இருந்தார்கள்.

ஸம்பந்தம் தான் த்விவிதமாயிறேயிருப்பது;
ஆரோஹண ஸம்பந்தம் என்றும்,
அவரோஹண ஸம்பந்தம் என்றும்.

அதில் ஆரோஹண ஸம்பந்தம் ஆசார்யத்வேந படிப்படியாக ஏறி நிற்கும்.
அவரோஹண ஸம்பந்தம் ஶிஷ்யத்வேந படிப்படியாக இறங்கி வரும்.

இவை இரண்டுக்கும் விளை நிலம் உடையவரிறே.
இதில் ஒன்று நிரவதிகமாய் ஒன்று ஸாவதிகமாய் இருக்கும்.

அஸாவஸாவித்யாபகவத்த: என்கிறபடியே
எம்பெருமானளவும் சென்று கொழுந்திலையாயிருக்குமிறே.
மற்றயைது கொழுந்துவிட்டுப் படராநிற்கும். இந்த ஸம்பந்த த்வயந்தான் இடையிட்டு வந்ததொன்றிறே.
குருபரம்பரையிலே இடையிடபட்டாரிறே உடையவர்.

ஒரு முக்தாஹாரத்தில் நடுவே ஒளியுடைய மாணிக்கத்தை அழுத்தி வைத்தால் இருதலையும் நிறம்பெற்று வருமிறே.
அப்படியே உடையவரும் இருதலை நாயகமாகக் கொண்டு உபய ஸம்பந்திகளுக்கும் ப்ரகாசகரானார்.
இரண்டு திறத்தார்க்கும் கார்யம் கொள்ளும் போது மத்யஸ்தரைக் கொண்டு கொள்ளவேணுமிறே.
நடுச்சொன்னவரிறே மத்யஸ்தராவார். நாம் பற்றினாலும் முன் பின்னுற்ற ப்ரகாரம் கார்யம் தலைக்கட்டுமிறே
பத த்ரயத்துக்கும் மத்யம பதம் போலே ஆயிற்று.

இவர் இங்கிருக்கும் படி அதாவது – மகாரமான நார பதவாச்யர்க்கு இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹாரங்களைப்
பண்ணிக் கொடுக்கவற்றான எம்பெருமானுடைய உபாயபாவத்தை காட்டுகிறது மத்யம் பதம்.
அப்படியே உடையவரும் – குருபரம்பரைக்கிடையிலிருந்து ஸம்பந்த த்வயத்துக்கும் கார்யோபயோகியான
தம்முடைய ஆசார்யத்வேந உத்தாரகத்வத்தை விஶேஷேண வெளியிட்டுக் கொண்டு
விஶ்வஸநீயராயிறேயிருக்கிறது இத்தையிட்டாயிற்று.
அர்வாஞ்ச: என்று அருளிச் செய்தது

இப்படி உத்தாரகமான ஆசார்யத்வந்தான் இரண்டு படிப்பட்டிருக்கும் –
ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யத்வம் என்றும்,
க்ருபா மாத்ர ப்ரஸ்நநாசார்யத்வம் என்றும்.

இதில் பின்பு சொன்னது க்வாசித்கமாக இருக்கும்.
அக்ரோக்தமானது பஹுவ்யக்திதமாயிருக்கும்.

இவனுக்கு பேறு தப்பாதென்று துணிந்து இருக்கலாவது க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்ய ஸம்பந்த்த்தாலே யாயிற்று.
எலியெலும்பனாயிருக்கிற இவனுக்கு ஆசார்யன் திருவுள்ளத்துக்கேற்க அநுவர்த்திக்க முடியாதிறே

இவ்வர்த்தத்தில் ஆழ்வானுக்கும் ஆண்டானுக்கும் ப்ரஸங்கமாக ஆழ்வான் அறுதியிட்ட வார்த்தையை நினைப்பது.
“மத்தகத்துத் தன்தாளருளாலே வைத்த அவா” என்ற அவர் அருளிச் செய்கையாலே,
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யன் முக்யனென்று அறுதியிட்டார் என்று
நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச்செய்வர்.

ப்ரதம பர்வத்தில் பரகத ஸ்வீகாரம் போலே
சரம பர்வத்திலும் பரகத ஸ்வீகாரமே இவனுடைய பேற்றுக்கு முக்யமான உபாயமென்று அருளிச் செய்வர்.

யஸ்ஸாபராதாந் ஸ்வபத ப்ரபந்நாந் ஸவகீய காருண்ய குணேந பாதி |
ஸ ஏவ முக்யோ குருரப்ரமேயஸ்தைவ ஸத்பி: பரிகீர்த்யதே ஹி || என்று
ஸோமாசியாண்டான் ஆசார்ய வைபவத்தை அருளிச்செய்கிற ‘குரு குணாவளி’ என்கிற ப்ரபந்தத்திலே
க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யனே முக்யமாக அருளிச்செய்தாரிறே.

இப்படி முக்கியமான க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யத்வம் க்வாசித்கமான விடத்திலும் உத்தாரகத்வ விஶிஷ்டமாயிருக்கும்.
அதுவும் ம்ருக்யமாயிருக்கும்.
உத்தாரகத்வ விஶிஷ்டமான க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யத்வம் பூரணமாக கடவது உடையவர் பக்கலிலேயிறே.

ஸ்வாநுவ்ருத்தியினாலே நம்பியை ப்ரஸன்னராம்படி பண்ணி வருத்தத்தினாலே பெற்ற சீரிய அர்த்தத்தை
தாம் மேல் விழுந்து க்ருபையினாலே எல்லார்க்கும் வெளியிட்டருளினாரிறே.

ராஜ மஹேந்தரப் பெருமாள் அரையருக்கு அரங்கமாளிகை என்று குமாரருண்டாய்,
அவர் பித்ருவசனாத் யுல்லங்கநம் பண்ணி அவிநீதராய்த் திரிகிற நாளிலே உடையவர் அறிந்தருளி,
ஶ்ரீ பாதத்திலுள்ளவர்களை அழைத்தருளி வலியப் பிடித்துக் கொண்டு வரச் சொல்லி அருளிச் செய்ய,
அவர்களும் அபிமத ஸ்தலத்தில் நின்றும் பிடித்துக்கொண்டு வந்து திருமுன்பே விட,

உடையவரும், “ பிள்ளாய்! நம்மோடு ஒட்டற்று நீ திரிந்தாலும் நாமுன்னை விட்டுக்கொடுப்பதில்லை காண் “ என்று
பேரருளாளர் ஸந்நதியிலே அழைத்துக் கொண்டு எழுந்தருளித் திருக் காப்பை அடைத்து திரிய ஒரு வட்டம்
பகவத் ஸம்பந்தம் பண்ணியருளி, ரஹஸ்யார்த்தத்தையும் ப்ரஸாதித்து அருளி,
தம்முடைய திருவடிகளிரண்டையும் அவர் தலையிலே வைத்து அருளி,
“ நீ பற்றிப் போந்த காலுக்கும் நம்முடைய காலுக்கும் வாசி கண்டாயே?
அது நரகாவஹம், இது மோஷாவஹம். இத்தையே தஞ்சமாக நினைத்திரும்” என்று
பூர்ணமாக கடாக்ஷித்துத் திருவடிகளைக் காட்டி அருளினார்.

அன்று தொடங்கி அப்படியே ப்ரதிபத்தி பண்ணிப் போந்தவராய் இந்த ரஹஸ்யத்தைப்
பிள்ளை அடியேனுக்கு அருளிச் செய்து, உடையவர் திருவடிகளையே தஞ்சமாக காட்டி அருளினார்.

அன்று தொடங்கி அப்படியே ப்ரதிபத்தி பண்ணிப் போருவன் உடையவருடைய உத்தாரகத்வ விஶிஷ்டமான
க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யத்வத்துக்கு இவ்விரண்டு வ்ருத்தாந்தமும் ப்ரமாணமாக அத்யவஸிக்கப் போரும்

அறிவுடையார்க்கு இன்னமும் இவ்வர்த்தத்தை ஸ்திரீகரிக்கைக்காக
உடையவர்க்கு முன்புள்ள முதலிகளுடைய திவ்ய ஸூக்திகளும்
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களும் பரக்க ப்ரதிபாதிக்கப்படுகிறது மேல்.

நாதமுனிகளுக்கு ஆழ்வார் திருத் திரை வளைத்துத் திருவாய்மொழி ப்ரஸாதித்து அருளுகிற அளவிலே
“பொலிக பொலிக” வந்தவாறே பூத பவிஷ்யத்வர்த்தமான கால த்ரய பர்யவஸாயி ஜ்ஞாநமுடையராகையாலே
உடையவருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்தருளி “கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று
“இந்த ப்ரபந்ந குலத்திலே ஒரு மஹானுபாவர் திரு அவதரிக்க போகிறார். அவராலே நாடு அடங்க வாழப் போகிறது”
என்று நாதமுனிக்கு அருளிச் செய்ய,

அவரும் “பயன் அன்றாகிலும்” என்கிற பாட்டை இயலும் இசையுமாக ஏறிட்டு ஆழ்வாரைப் பாடி உகப்பித்து,
”தேவரீர் ஸர்வஜ்ஞராகையாலே அறியப் போகாது ஒன்றுமில்லை
அவ்யக்தியினுடைய ஸம்ஸ்தானத்தை தேவரீர் பாவித்துக் காட்டி யருள வேணும்” என்று ப்ரார்த்திக்க

அற்றை ராத்திரியிலே நாதமுனிகளுக்கு ஸ்வப்ன முகேந ஆழ்வார் எழுந்தருளி
த்வாதஶோர்த்வ புண்டரங்களும் காஷாய திருப் பரியட்டமும், த்ரிதண்ட ஹஸ்தமும், ஆஜானுபாஹுவும்
நிரவதிக தேஜோ ரூபமான திருமேனியும்,
“மகரம்சேர் குழையிருபாடிலங்கியாட” தீர்க்கராய் எழுந்தருளி, க்ருபா ப்ரவாஹ ஸூசகமான முகமும்,
முறுவலும் சிவந்த திருக் கண் மலருமாக ஸேவை ப்ரஸாதித்தருளி
‘அவ்யக்த்தி யிருக்கும்படி இது காணீரே’ என்றருளிச் செய்து,
‘இவ்யக்தி அடியாக ப்ரபந்ந குல பூதரெல்லாரும் பேறு பெறப் போகிறார்கள்’ என்று அருளிச் செய்தார்.

நாதமுனிகளும் உடனே உணர்ந்தருளி ஆழ்வார் திருவடிகளிலே தண்டம் சமர்ப்பித்து
‘தேவரீருடைய ஸம்ஸ்தானத்திலும் தேவரீர் பாவித்தருளின ஸம்ஸ்தானம் அடியேனுக்கு மிகவும் ஆகர்ஷகமாயிருந்ததீ!” என்ன,
“இதென்ன மாயம்! லோகமெல்லாம் இவ்யக்த்தியாலே காணும் மேல்விழப் போகிறது!” என்று அருளிச் செய்தார்.

நாதமுனிகளும் திரியவும் ஆழ்வாரை உகப்பித்து இந்த பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை நித்யமாக அனுபவித்துக்
கொண்டிருக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்ய,
ஆழ்வாரும் உடையவருடைய ஸர்வோத்தாரகத்வத்தை வெளியிடக்கடவோமென்று
மற்றை நாள் ராத்திரி ஸ்வ விக்ரஹத்துக் கடவ சில்ப வம்ஶரிடத்திலே ஸ்வப்ன முகேன எழுந்தருளி
பவிஷ்யதாசார்ய ஸம்ஸ்தானத்தை வகுத்துக் காட்டி யருளி
“நாளை நம் புளிக்கீழே வந்து இப்படியே ஸர்வாவயவ பூர்ணமாக சமையுங்கோள்” என்று அருளிச் செய்ய,
மற்றை நாள் விடிந்தவாறே, திருப்புளியின் கீழேவந்து ஶரீரஶோதன பூர்வகமாக
ஆஹார நித்ரை யின்றிக்கே அவ்விக்கிரஹத்தை நிர்மித்துக் கொடுக்க,
அவ்விக்ரஹத்திலே ஒரு ஶக்தி விசேஷத்தை அதிஷ்டிப்பித்தருளி, நாதமுனிகளை அழைத்தருளி,
“உம்முடைய அபேக்ஷிதத்தை இதோ தலைக் கட்டினோம் கண்டீரே” என்று அவ் விக்ரஹத்தை ப்ராஸாதித்து அருளி –

“ராமஸ்ய தக்ஷிணோ பாஹூ: “ இலக்குவன் ராமனுடைய வலது கை போன்றவன். (ரா-அ-34-13)
என்கிறபடியே நம்முடைய அவயவமாக நினைத்திரும்.
இவ்யக்த்திக்கு அடி நாமாகையாலே நமக்கு அடியுமாய் நம் கார்யத்துக்கு கடவதுமாயிருக்கும்.
இனிமேல் நம் தர்ஶனத்துக்கு வர்த்தகமாக அடியிட்டு வைத்தோம்.
உம்முடைய குலத்திலே ஒருவர் இவ் வயக்தியை ஸாக்ஷாத்கரிக்க போகிறார்.
அது தான் பெருமாள் திரு அபிஷேகத்துக்கு பாரித்த மாதத்திலே பதினெட்டாமோத்திலே ப்ரதமோபாயம் பிறந்தாப்போலே
நம் பிறவி நாளைக்கேறப்பார்த்தால் பதினெட்டாமவதியிலே சரமோபாயம் பிறக்கப் போகிறது,
இவ்வயக்தியை நம்மை கண்டு கொண்டிருந்தாப் போலே கண்டு கொண்டிரும் என்றருளிச் செய்து விடைக் கொடுத்தருள,
அப்போதே நாதமுனிகளும் ஆழ்வார் ஸேவை ஸாதித்தருளினதுக்குத் தோற்று.

யஸ் ஸ்வாபகாலே கருணாஸ்ஸந் பவிஷ்யதாசார்ய பர ஸ்வரூபம் |
ஸந்தர்ஶயாமாஸ மஹாநுபாவம் தம் காரி ஸூநும் ஶரணம் ப்ரபத்யே ||
எந்த நம்மாழ்வார் கருணை மிக்கவராய், அடியேன் தூங்கும் போது பவிஷ்யதாசார்யரின் சிறந்த விக்ரஹத்தை
எனக்கு காட்டியருளினாரோ, காரியாரின் பிள்ளையான அவரை ஶரணமடைகிறேன். (நாதமுனிகளருளியது)
என்கிற ஶ்லோகம் அருளிச் செய்தாரென்று
நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச் செய்வர்.
இவ்வர்த்தம் ஓராண் வழியாய்ப் பரம குஹ்யமாய் வந்ததென்றும் அருளிச் செய்வர்.

இப்படி நாதமுனிகள் நாலாயிரமும் ஆழ்வார் பக்கலிலே கேட்டருளி, மீளவும் வீரநாராயணபுரத்தேற எழுந்தருளினவளவிலே,
ஆழ்வார் தம்மை விஷயீகரித்த ப்ரகாரங்களை மன்னனார் திரு முன்பே அருளிச் செய்து,
ஸந்நிதியிலே எல்லா வரிசைகளையும் பெற்றுத் தம்முடைய திருமாளிகையிலே எழுந்தருளித் தம்முடைய
மருமக்களான கீழையகத்தாழ்வானையும் மேலையகத்தாழ்வானையும் அழைத்தருளி,
ஆழ்வார் தம்மை விஶேஷ கடாக்ஷம் பண்ணி க்ருபை பண்ணி அருளின ப்ரகாரத்தையும்,
ஸ்வப்னமுகேன ஸேவை சாதித்த கட்டளையையும் அருளிச் செய்ய, அவர்களும் விஸ்மயப்பட்டு,
இப்படிப்பட்ட மஹானுபாவனுடைய ஸம்பந்தம்
ஆரோஹண க்ரமத்தாலே யாகிலும் உண்டாகக் பெற்றதே என்று தேறியிருக்கலாமென்றார்கள்;

பின்பு தம்முடைய ஶ்ரீபாதத்தில் ஆஶ்ரயித்து ஶிஷ்யகுண பூர்த்தியுடையவரான திருக்கண்ணமங்கை ஆண்டானுக்குத்
த்வயோபதேஶ பூர்வகமாகத் திருவாய்மொழி ப்ராஸாதித்தருளுகிற போது
‘பொலிக பொலிக’ வந்தவாறே ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்திகளையும்
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்ய
“அவ்யக்த்தியை ஸ்வப்னமுகேன ஸாக்ஷாத்கரித்த தேவரீரோடே ஸம்பந்தமுள்ள
அடியேனுக்கு ஒரு குறைகளுமில்லை” என்று அருளிச்செய்தார்.

பின்பு உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், தம்முடைய குமாரரான ஈஶ்வர முனிகள் இவர்களை அழைத்துருளி
ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்திகளையும் அருளிச் செய்து,
குருகைக் காவலப்பனை யோக க்ரமத்தை அப்யஸிக்கச் சொல்லி,
உய்யக் கொண்டாரை தர்ஶனத்தை ப்ரவர்ப்பித்துக் கொண்டு வரச் சொல்லி,
ஈஶ்வர முனிகளை “ உமக்கொரு குமாரர் உண்டாகக் போகிறார். அவருக்கு யமுனைத் துறைவர் என்று திருநாமம் சாத்தும்”
என்று அருளிச் செய்து

ஆஸந்ந சரமதஶையானவாறே உய்யக்கொண்டாரை அழைத்தருளி, “ஒருவருக்கும் வெளியிடாதே கிடீர்” என்று
சூழரவு கொண்டு, ஆழ்வார் தமக்கு ப்ராஸிதித்தருளின பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை ப்ரஸாதித்தருளி,
வரவும் அருளிச் செய்து, ‘இத்தை ஈஶ்வர முனிகள் குமார ருக்கு நாம் விரும்பின விஷயமென்று சொல்லித்
தஞ்சமாக காட்டிக் கொடும்’ என்று அருளிச் செய்து, அவ்விக்ரஹத்தைத் திருவுள்ளத்திலே த்யானம் பண்ணிக் கொண்டு,
ஆழ்வார் திருவடிகளே சரணம் என்று அந்தமில் பேரின்பத்தடியரோடு ஒரு கோவையாக எழுந்தருளினார்.

பின்பு உய்யக்கொண்டார், நாதமுனிகள் ஶ்ரீபாதத்து முதலிகளும் தாமுமாக தர்ஶநார்த்தங்களை ப்ரவர்த்திப்பித்துக் கொண்டு
ஸுகமே எழுந்தருளியிருக்கிற நாளிலே, உய்யக்கொண்டார் ஶ்ரீபாதத்து முதலிகள் மணக்கால்நம்பி,
திருவல்லிக்கேணிப் பாண் பெருமாளரையர் ஸ்வாசார்யரிடத்திலே திருவாய்மொழி கேட்கிறவளவிலே
“பொலிக பொலிக” என்கிற திருவாய்மொழி ஆனவாறே. “கலியும் கெடும்” என்கிற இடத்துக்கு அர்த்தம்
அருளிச்செய்கிற வளவில், நாதமுனிகள் தமக்கு அருளிச் செய்த ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்ய,
மிகவும் விஸ்மயப்பட்டு “நாதமுனிகள் பெற்ற பேறு ஆர் தான் பெறப் போகிறார்கள்?
பவிஷ்யதாசார்ய வ்யக்த்தியை ஸ்வப்னமுகேந ஸாக்ஷாத்கரித்த இடத்திலே அத்யாகர்ஷகமாயிருந்தது என்று
அருளிச் செய்யும் போது, ப்ரத்யக்ஷமாய் ஸாக்ஷாத்கரிக்கும் படியினால்
லோகமாக மேல் விழுந்து ஆஶ்ரயிக்குமாகாதே” என்று அருளிச் செய்தார்.
அவ்வளவிலே உய்யக்கொண்டார் “அந்த மஹானுபாவனுடைய ஸம்பந்தம் ஸித்தித்தாலே ஒழியத் தவிராதிறே” என்று அருளிச் செய்தார்.

உய்யக் கொண்டார் சரமதஶையிலே ப்ரதம சிஷ்யரான மணக்கால் நம்பியை அழைத்து அருளிப்
பன்னிரண்டு ஸம்வத்ஸரம் பழுக்க ஸ்வாநுவாத்தநம் பண்ணிப் போந்தவராகையாலே,
நாதமுனிகள் தமக்கருளிச் செய்த ரஹஸ்யார்த்தங்களையும் வெளியிட்டருளி, ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்ய,
மணக்கால் நம்பியும், இந்த தர்ஶன ப்ரவர்த்தகராரென்று கேட்க,
நம்முடைய பக்கலிலே பகவத் ஸம்பந்தம் பண்ணிக் கொண்ட நீரே நடத்தக் கடவீர்.
பின்பு சொட்டைக் குலத்திலே நாதமுனிகளுக்குத் திருப்பேரனாரான யமுனைத் துறைவர் ப்ரவர்த்தகராவார்.
அவருக்கு பின்பு கரையத் தேவையில்லை என்று அருளிச் செய்தார்.

அதாவது – நாதமுனிகள் அருளிச் செய்தபடியே ப்ரபன்ன குலமாகப் பேறு பெறும்படி ஒரு மஹானுபாவர் திருவவதரிக்கப் போகிறார்.
அவராலே தர்ஶனம் விளங்கப் போகிறது – என்று அருளிச் செய்தார் என்றபடி.

பின்பு உய்யக்கொண்டாரும் மணக்கால் நம்பியை அழைத்தருளி, அவ்விக்ரஹத்தை ப்ராஸிதித்தருளி ,
“ நம் காலத்திலே யமுனைத் துறைவர் திருவவதரிக்கப் பெற்றதில்லையே.
நீர் இவ் விக்ரஹத்தை, ‘உங்கள் திருப்பாட்டனார் விரும்பின விஷயம்’ என்று தஞ்சமாக காட்டிக் கொடுத்து,
நாம் சொன்ன ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் ரஹஸ்யார்த்தர்தங்களையும் வெளியிடும்’ என்றருளிச் செய்தார்.

பின்பு மணக்கால் நம்பியும் ஆளவந்தாரைப் பச்சை யிட்டுக் கொண்டு கோயிலேற எழுந்தருளி
ஸ்வாசார்யரான உய்யக்கொண்டார் அநுமதிபடியே நாதமுனிகள் அருளிச் செய்ததாக ஸ்வாசார்யர் அருளிச் செய்த
அர்த்த விஶேஷங்களையும் விஶேஷித்து ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்து ‘
நெடுங்காலம் தேவரீர் இந்த தர்ஶனத்தை ப்ரவர்த்திப்பித்துக் கொண்டு ஶ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தியோடே எழுந்தருளியிரும்’ என்றருளிச் செய்தார்.

அப்படியே ஆளவந்தார் தர்ஶன ப்ரவர்த்தகராய் எழுந்தருளியிருக்கிற நாளிலே மணக்கால் நம்பி
சரமதஶையானவாறே, நாதமுனிகள் ஸ்வப்னத்திலே எழுந்தருளி நம்பியைப் பார்த்து,
”நம்முடைய யமுனைத் துறைவர்க்கு நாட்டையளித்து உய்யச் செய்து நடத்துமவனை நாம் தேடச் சொன்னோம் என்று சொல்லும்.
நாம் விரும்பின விக்கிரஹத்தைத் தஞ்சமாக அவர் கையிலே காட்டிக் கொடும்” என்றருளிச் செய்ய,
இப்படி அருளிச் செய்கிறது ஏதென்ன, ‘நமக்கு ஸ்வப்ன த்ருஷ்டமான வ்யக்தி
நம் பேரனுக்கு ப்ரத்யக்ஷ ஸித்தம