Archive for the ‘வார்த்தா மாலை’ Category

வாழ்வும் வாக்கும் -ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள்

November 3, 2021

1-பெருக்காறு போலே விபவங்கள் -அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரங்கள்
வாய் வழியாக வழங்கி வந்த உரைகள் பெருக்காறு போலே
ஏடு படுத்தி உள்ள உரைகள் மடுக்கள் போலே

————–

2-ஐதிஹ்யம் -இதி ஹ இதி ஹ -இப்படியாம் இப்படியாம் -என்று சொல்லி வரும் நிகழ்ச்சிகள்

ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போலே வளர்த்தேன் செம்கண் மால் தான் கொண்டு போனான்
பெரு மகளாய் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற யசோதை
மருமகளை கண்டு உகந்து மணாட்டுப் புறம் செய்யும் கொலோ -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–3-8-4-

இவ்விடத்தில்
ஆழ்வான் திரு நாட்டுக்கு எழுந்து அருளும் போது – உடையவர் -விச்லேஷம் பொறுக்க மாட்டாமல் –
ஒரு மகள் தன்னை உடையேன் -என்றும் –
உலகம் நிறைந்த புகழால் திரு மகள் போலே வளர்த்தேன் -என்றும் –
செம்கண் மால் தான் கொண்டு போனான் -என்று அருளிச் செய்தார் -என்று ஆச்சாம் பிள்ளை அருளிச் செய்வர்

உபமாநம சேஷானாம் சாதூனாம் யச் சதா பவத்-என்கிறபடியே
சாதுக்களுக்கு எல்லாம் உபமான பூமியாக சொல்லலாம் படி இருக்கையாலே –
உலகம் நிறைந்த புகழ் உள்ளது ஆழ்வானுக்கே இறே

————–

3-நிர்வாகம் – இப்படி நிர்வ கிப்பார் –
ஆள வந்தார் -எம்பெருமானார் -கூரத்தாழ்வான் -பட்டர் நிர்வாகங்கள் போல்வன உண்டே

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே–9-5-10-

தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே –
ஈஸ்வர விபூதி சம்ருத்தமாக -நிறை வுற்று இருக்க வேண்டும் -என்கிறாள் –
இதற்கு
தாம் தாம் முடிய நினைப்பார் -நாடு வாழ்க -என்பாரைப் போலே சொல்லுகிறாள் -என்று
ஆளவந்தார் அருளிச் செய்வர்
நான் பட்ட பாடு நாடு படாது ஒழிய வேண்டும் -என்று எம்பெருமானார் அருளிச் செய்வர்
நான் முடிய என் ஆர்த்தி -துக்கம் கண்டு நோவு படாதே உலகம் அடங்க
பிழைக்கும் அன்றோ -என்று பட்டர் அருளிச் செய்வர்-

————–

4- வார்த்தைகளுக்கு பொருள் உரைத்து அருளிச் செய்யும் பொழுது அவித்துக்களுக்குத் தக்கப்படியே அருளிச் செய்வார்கள்
கல் மாரியாகையாலே கல்லை எடுத்துக் காத்தான் -நீர் மாரியாய் இருந்தால் நீரையே எடுத்து ரக்ஷிக்கும் காணும் என்பர் ஸ்ரீ பட்டர்

சில இடங்களில் பொருத்தமான கதைகளையும் கோத்து அருளிச் செய்து விளக்குவார்கள்
அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கெழில் அது என்று அடங்குக உள்ளே -1-2-7-
பிதா புத்ர சம்பந்தம் -உறவை அறிந்ததும் பராத்பரனோடு கூச்சம் இல்லாமல் கலக்கலாமே

5-ஸம்வாதங்கள் -சங்கைகளைக் குறித்து வார்த்தைகள் பரிமாற்றம்

மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில்
தக்கது அன்று என்று தானம் விளக்கிய
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய
சக்கரக் கையனே அச்சோ அச்சோ சங்கம் இடத்தானே அச்சோ அச்சோ -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -1-8-7-

ஸத்பாத்ரத்துக்கு அபீஷ்ட தானம் -குற்றமும் சிறை வாசமும் வந்ததே
இது மாயா ரூபம் என்றவர் கண் அழிவு பெற்றான் -இது நியாயமோ
இவ்விடத்தில் பிள்ளை அருளிச் செய்வதாக ஆச்சான் பிள்ளை –
ஆச்சார்யர் வாக்கியம் மீறியதால் அவனுக்கு தண்டனை
இவனுக்கு தானம் விளக்கிய தோஷம்

————

6- உதாஹரணங்கள் காட்டி விளக்குதல்
அனைத்து இல்லாரும் அறிந்து –திருப்பாவை -12-
இந்த கோபிகை -ஒருவர் தப்பாமல் எல்லாரும் எம்பருமானைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புமவள்
எம்பெருமானார் திருவவதரித்து ஆசை உடையோர்க்கு எல்லாம் என்று பேசி வரம்பு அறுத்தால் போல் –என்று காட்டுவார்கள்

————-

7-ஆச்சார்யர்களுடைய ஸ்தோத்திரங்களை மேற் கோள் காட்டி விளக்குதல்

கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —–அமலனாதி பிரான் 8–

க்ருபயா பரயா கரிஷ்ய மானே சகலாங்கம் கில சர்வ தோஷி நேத்ரே
ப்ரதமம் ச்ரவஸீ சமாஸ்த்ருணாதே இதி தைர்க்யேண விதந்தி ரங்க நேது –

பெரிய பெருமாளுடைய திருக் கண்கள் ஆனவை திருச் செவி யளவும் செல்ல நீண்டு
இருக்கிறபடிக்கு ஒரு நினைவு உண்டு என்கிறார் பட்டர் –
அதாவது –
பெரிய பெருமாள் உடைய திருக் கண்கள் ஆனவை
மீனுக்குத் தண்ணீர் வார்ப்பாரைப் போலே நித்ய ஸூரிகளுக்கு
முகம் கொடுத்து கொண்டு இருக்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கும் கண்கள் இரண்டாய்
ராம க்ருஷ்ணாத்யவதாரம் பண்ணி குஹாதிகள் விதுராதிகள் தொடக்கமானார் சிலர்க்கு அல்ப காலம்
முகம் கொடுத்து விஷயீ கரித்து வந்தாப் போலே வெறும் கையோடே போனவர்களுக்கும் கண் இரண்டாய்-
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது எழுந்திரேன் என்று கோயிலிலே அர்ச்சா ரூபியாய்
அவ்வவர் நிகர்ஷங்களைப் பாராதே முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிற பெரிய பெருமாளுக்கும்
கண் இரண்டாய் இருக்கவோ –
இவருடைய க்ருபையை பார்த்தால் உடம்பு எல்லாம் கண்ணாக வேண்டாவோ என்று பார்த்து –
எல்லா மண்டலங்களும் தங்களுக்கே ஆக வேணும் என்று
இருக்கிற ராஜாக்கள் முற்படத் தங்களுக்கு ப்ரத்யாசன்னரான வன்னியரை அழியச் செய்யுமா போலே
பெரிய பெருமாளுடைய அவயவாந்தரங்கள் அடைய நாமேயாக வேணும் என்று பார்ச்வ
ஸ்தங்களாய் இருக்கிறன திருச் செவிகள் ஆகையாலே அவற்றை வென்று அவ்வருகே போவதாக முற்பட
அவற்றுடனே அலை எறிகிறாப் போலே யாய்த்து திருக் கண்கள் செவிகள்
அளவும் நீண்டு இருக்கிறபடி –

—————

8–ஸ்ரீ வார்த்தா மாலை -ஸ்ரீபின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த திவ்ய கிரந்தம்
ஸ்ரீ பகவத் விஷயம் -ஸ்ரீ அரங்க நாத முதலியார்
ஸ்ரீ ஐதிக நிர்வாக ரத்ன மாலை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த ப்ரபந்ந க்ருத்யம் /ஸ்ரீ சின்னி அம்மாள் ரஹஸ்யம் /ஸ்ரீ எம்பார் அருளிச் செய்த ஸ்ரீ திருக்குருகூர் ரத்னம் /ஸ்ரீ சரம ரஹஸ்ய த்ரயம்/ஸ்ரீ திரு நகரிப்பிள்ளை ரஹஸ்யம் /ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த ஆத்ம விவாஹம் —

March 21, 2021

ஸ்ரீ முதலியாண்டான்
முமுஷுவாய் -ப்ரபன்னனாய் இருக்கும் அவனுக்கு இருக்கும் நாளைக்கு
கால ஷேபம் பண்ணும் பிரகாரம் இருக்கும்படி எங்கனே என்று
ஸ்ரீ உடையவர் திருவடிகளிலே விண்ணப்பம் செய்ய
குரு பரம்பரா பூர்வகமாக த்வயத்தை அனுசந்தானம் பண்ணுவான்

உபய விபூதி நாதனாய் ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரனும் நாச்சிமாரும் நித்ய ஸூரிகளும் கூட
எழுந்து அருளி இருக்கும் பீட கட்டணமாய் இருக்கும் த்வயம் –
பெரிய பெருமாள் திருவடிகளைப் பார்த்தவாறே -பொது நின்ற பொன்னம் கழல் -என்கிறபடியே
சர்வாத்மாக்களுக்கும் சாதாரணமாய் இருக்கும் –
பெரிய பெருமாளை அபய ஹஸ்தராய் பார்த்தவாறே அநந்ய சரண்யராய் இருக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கே அசாதாரணமாய் இருக்கும் –
பெரிய பெருமாள் திரு முக மண்டலத்தைப் பார்த்தவாறே நித்ய ஸூரிகளுக்கும் சாதாரணமாய் இருக்கும் –

ப்ராப்ய பரமான திரு மந்த்ரத்தைப் பெரிய பெருமாள் திருவடிகளிலே அநு சந்தானம் பண்ணுவான் –
ப்ராபகமான சரம ஸ்லோகத்தைப்பெரிய பெருமாள் அபய ஹஸ்தத்திலே அநு சந்தானம் பண்ணுவான் –
இரண்டும் கூடி போக ரூபமான த்வயத்தைப் பெரிய பெருமாள் திரு முக மண்டலத்திலே அநு சந்தானம் பண்ணுவான் –
மத்ஸ்யத்தின் வடிவு எல்லாம் ஜல மயமாய் இருக்குமா போலே இவள் அவன் ஸ்வரூபாதிகளுக்கு
நிரூபக பூதை யாகையாலே அவையாவும் எல்லாம் ஸ்ரீ மயமாய் இருக்கும் –

ஸ்ரீஞ்ஸேவாயாம் என்கிற தாது அர்த்த ப்ரகாசமாய் -புருஷகார ஸ்வரூபமான ஸ்ரீ என்கிற திரு நாமத்தைப்
பெரிய பெருமாள் திரு நன் மார்பில் ப்ராப்ய பரமான திரு மந்த்ரத்தைப் பெரிய பெருமாள் திருவடிகளிலே அநு சந்தானம் பண்ணுவான் –
ப்ராபகமான சரம ஸ்லோகத்தைப் பெரிய பெருமாள் அபய ஹஸ்தத்திலே அநு சந்தானம் பண்ணுவான் –
இரண்டும் கூடி போக ரூபமான த்வயத்தைப் பெரிய பெருமாள் திரு முக மண்டலத்திலே அநு சந்தானம் பண்ணுவான் –
மந் -என்று இப்புருஷகாரம் நித்யம் என்று அநு சந்தானம் பண்ணுவான் –
நாராயண என்று ஆஸ்ரயண சவ்கர்ய ஆபாதகங்களான வாத்சல்யாதி குணங்களையும் ஆஸ்ரய கார்ய ஆபாதகங்களான
ஞான சக்த்யாதி குணங்களையும் உடையவன் என்று அநு சந்தானம் பண்ணுவான்
சரணவ் என்று பெரிய பெருமாள் திருவடிகளை அநு சந்தானம் பண்ணுவான்
சரணம் என்று சரண்யரான பெரிய பெருமாள் அபய ஹஸ்தத்திலே அநு சந்தானம் பண்ணுவான்
ப்ரபத்யே என்று ப்ராப்தாவான தன்னுடைய ஸ்வரூப அநு ரூப ஸ்வீ காரம் என்று அநு சந்தானம் பண்ணுவான்
ஸ்ரீ மதே நாராயணாய என்கிற பதங்களை ஸ்வாமிநியையாய் அவனுக்கு வல்லபையாய் -ப்ராப்யையாய் –
கைங்கர்ய வர்த்தகையாய் -பகவன் முகோலாஸ ஜநகையாய் -தத் ப்ரீதி அனுபவ ஏக யாத்ரையாய் இருக்கிற
பெரிய பிராட்டியாரோடே சேஷத்வ கார்யமான கைங்கர்ய பிரதிசம்பந்தியாய் இருக்கும்

அவனுடைய தாரகத்வ வியாபகத்வ நியந்த்ருத்வ ஸ்வரூபம் என்ன
ஸ்வரூப குணங்களான ஞான பலாதிகள் என்ன
அதில் நின்றும் எழுந்த வாத்சல்யாதிகள் என்ன
திவ்ய ஆத்ம தத் தத் ஸ்வரூப குண ப்ரகாசகமான பஞ்ச உபநிஷண் மய விக்ரஹங்கள் என்ன
விக்ரஹ குணங்களான ஸுந்தர்ய ஸுகுமார்யாதிகள் என்ன
ஆஸ்ரித விரோதி விஷயமான ஸுர்யாதிகள் என்ன
திவ்ய மங்கள விக்ரஹ ப்ரகாசகமான திவ்ய ஆபரணங்கள் என்ன
தத் அனுபவ விரோதி நிவர்த்தகமான திவ்ய ஆயுதங்கள் என்ன
அவற்றுக்கு அநு ரூபமான ஸ்ரீ வைகுண்டத்தில் -திவ்ய நகரியிலே -திவ்ய மண்டபத்திலே –
மற்றை திவ்ய மஹிஷிகளோடு திவ்ய பரிச்சத்தங்களாலே சேவிக்க
ஸ்வாமித்வ ப்ரகாசகமாக எழுந்து அருளி இருக்கிற இருப்பில் அநு சந்தானம் பண்ணுவான்

ஆய என்று
அவன் சரண்யன் ஆகையாலும் -சேஷி யாகையாலும் -இவன் அடி சூடும் அரசாகையாலும் -சேஷம் யாகையாலும்
ஸர்வவித சேஷ விருத்திகளையும் பண்ணப் பெறுவேனாக வேணும் என்று அநு சந்தானம் பண்ணுவான்

நம
த்வய அக்ஷரஸ்து பவேன் மிருத்யு -என்றும்
மமேதி த்வய அஷரோ ம்ருத்யு -என்றும்
யானே என் தனதே என்று இருந்தேன் -என்றும் சொல்லப்படுகிற ம என்ற ஷஷ்ட் யந்தமான பதத்தை
த்ரயக்ஷரம் ப்ரஹ்மண பதம் -என்றும்
நமமேதிச ஸாஸ்வதம் -என்றும்
யானே நீ என்னுடைமையும் நீயே -என்றும் -சொல்லுகிற நகாரார்த்த பலத்தாலே ஷஷ்ட் யந்தமான பதத்தை நிஷேதித்து
தனக்கே யாக -என்கிறபடி அத்தலையில் நினைவே நினைவால் படி
கீழ்ச் சொன்ன சகல சேஷ விருத்திகளையும் கொண்டு அருள வேணும் என்று
பெரிய பெருமாள் திரு முகத்தைப் பார்த்து அநு சந்தானம் பண்ணுவான் என்று அருளிச் செய்தார் –

————

ஸ்ரீ அம்மங்கி அம்மாளுக்கு ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த வார்த்தை –
ஸ்ரீ அம்மங்கி அம்மாள் ஸ்ரீ உடையவருக்குத் தீர்க்க பிரணாமமாக தண்டம் ஸமர்ப்பித்து –
அடியேன் திருக்கண்ண புரம் சேவித்து விடை கொள்ளுகிறேன் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ உடையவர் அஞ்சு வார்த்தைகள் அருளிச் செய்தார் –

அவை எவை என்னில் –
அக்னி ஜ்வாலையை அணுகாதே
அசுசியை மிதியாதே
அற நஞ்சு தின்னாதே
அபலர்களைக் கூடாதே
ஆர்த்தரோடே கூடி அணுகி வர்த்தித்து வாரும் -என்று அருளிச் செய்தார் –

அக்னி ஜ்வாலை-யாவது -சைவ மாயா வாதிகள் -அவர்களைக் கண்டால்
அக்னியையும் சர்ப்பத்தையும் கண்டால் போலே கண்டு விலகி வாரும் என்று அருளிச் செய்தார்

அசுசி யாவது -சரீர தத் பரரான ஸம்ஸாரிகள் -அவர்களைக் கண்டால்
காஷ்ட லோஷ்டாதிகளைக் கண்டால் போலே கண்டு விலகி வாரும் என்று அருளிச் செய்தார்

அற நஞ்சு ஆவது –
ரூப நாமங்களை உடையராய் அந்யோன்ய பரராய் ப்ரயோஜனாந்தர பரராய் மயக்கப் பட்டவர்கள்
அவர்களைக் கண்டால்
கற்பூரத்தையும் எலுமிச்சம் பழத்தையும் கண்டால் போலே கண்டு விலகி வாரும் என்று அருளிச் செய்தார்

அபலர்கள் ஆவது –
அருளிச் செயலில் வாசனை பண்ணி ஸ்வரூப சிஷை இல்லாதவர்கள் -அவர்களைக் கண்டால்
காம ரசம் அறியாத கன்னிகைகளைக் கண்டால் போலே கண்டு விலகி வாரும் என்று அருளிச் செய்தார்

ஆர்த்தர் ஆகிறார் -பூர்ண அதிகாரிகள் -அவர்களைக் கண்டால்
தென்றல் நிலாவைக் கண்டால் போலவும்
சந்தன குஸூம தாம்பூலாதிகளைக் கண்டால் போலவும்
பசியன் சோற்றைக் கண்டால் போலவும் கண்டு சேர்ந்து அணுகி வர்த்தித்து வாரும் -என்று அருளிச் செய்தார் –

————————

ஸ்ரீ சின்னி அம்மாள் ரஹஸ்யம்

ஸ்ரீ சேற்றுத் தாமரை கயத்தில் ஸ்ரீ ஜீயர் நீராடா நிற்க
ஸ்ரீ சின்னி அம்மாள் வந்து தண்டம் சமர்ப்பிக்க
பெண்ணே உங்கள் தேசம் எது நித்ய வாசம் எது

நாடு எது என்ன -திருவழுதி வள நாடு என்ன
வூர் எது என்ன -திருக் குருகூர் என்ன
வீடு எது என்ன -பண்டுடையான் வீடு என்ன
குலம் எது என்ன -அச்சுத குலம் என்ன
வேதம் எது என்ன -திராவிட வேதம் என்ன
கோத்ரம் எது என்ன -பராங்குச கோத்ரம் என்ன
ஸூத்ரம் எது என்ன -ராமானுஜ ஸூத்ரம் என்ன –
காரிகை எது என்ன -பர கால காரிகை என்ன –
குடி எது என்ன அஞ்சும் குடி என்ன
பந்துக்கள் ஆர் என்ன -ஆத்ம பந்துக்கள் என்ன
உறவார் ஆர் என்ன -ஓட்ட உணர்ந்தவர் என்ன
உற்றார் ஆர் என்ன -உற்றதும் உன் அடியார் என்ன
தகப்பனார் ஆர் என்ன -தைவ நாயகன் என்ன

தாயார் ஆர் என்ன -ஸ்ரீ வர மங்கை என்ன
புக்கிடம் எவ்விடம் என்ன -வான மா மலை என்ன
பார்த்தா யார் என்ன -வர மங்கை மா முனிவன் என்ன
மாமனார் யார் என்ன -காந்தோ பயந்த்ரர் என்ன
உத்யோகம் எது என்ன பாகவத கைங்கர்யம் என்ன
அத்தால் பிரயோஜனம் எது என்ன -அதுவே பிரயோஜனம் என்ன
அதிகாரம் எது என்ன -சர்வாதிகாரம் என்ன
நிஷ்டை எது என்ன பஞ்சம உபாய நிஷ்டை என்ன
உபாயம் எது என்ன -சரம உபாயம் என்ன
அபிமானம் எது என்ன -பாகவத அபிமானம் என்ன
பிரார்த்தனை எது என்ன -கைங்கர்ய பிரார்த்தனை என்றாள்

அந்த அம்மையாருடைய அத்யாவசாயத்துக்கு வான மா மலை ஜீயர் திரு உள்ளம் உகந்து
பரமபதம் ப்ரசாதித்து அருளினார் –

————–

ஸ்ரீ எம்பார் அருளிச் செய்த ஸ்ரீ திருக்குருகூர் ரத்னம்

திரு நாம தாரி- மந்த்ர சம்பந்தி-முத்ர தாரி என்கிறவன் ப்ரக்ருதி ருசியை ஒழிய ஸ்வரூப ருசியை அறியான் –
ஆகையால் ரூப நாமங்கள் ஆகிறது போராது –
ஸச் சிஷ்ய ஸதாசார்ய ஸம்பந்தமும் -ஜீவாத்மா பரமாத்மா சம்பந்தமும் சேர திரு மந்த்ரத்திலே தன்னை உள்ளபடி அறிய வேண்டும் –
சரம ஸ்லோகத்தாலே எம்பெருமானே உபாயம் என்று தெளிய வேண்டும் –
த்வயத்தாலே உபாய உபேய நிஷ்டனாய் -த்வய அனுசந்தான பரனாய் -நிர்ப் பரனாய் -நிர் விகாரனாய் –
ஸ்ரீ மன் நாராயணன் திருவடிகளில் பண்ணும் நித்ய கைங்கர்யம் அறிய வேண்டும்

இப்படி இன்றிக்கே அசித்தாலே பாவித்து நான் அறிகிறேன் என்கிறவன் அறியான் –
அவனுடைய ஸஹ வாசமும் அந்நிய சேஷத்வ சமம்
ஆகையால் ஸ்வரூப நாசமாம்

அங்கன் அன்றிக்கே -ஸ்வரூபவானாய் -புருஷகார பூதனான ஆச்சர்யன் அறிவிக்க –
தத்வ த்ரய சிஷை உடையவன் ஆகில் அவனோட்டை ஸஹ வாஸமே ஸ்வரூப உஜ்ஜீவனமாம் –

இப்படி இன்றிக்கே உபாயாந்தர பரனாய் ஆகையால் இறே கூழாள் ஆகிறது –

தானும் பிறரும் தஞ்சம் அன்று இருக்கும் அகிஞ்சனன் அன்றோ -நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா என்கிற படியே
அநந்தாவை வேதா -வேதங்களுக்கு அதிகாரியாய் -தேகம் இட்ட வழக்கன்றிக்கே -தேசிகர் இட்ட வழக்கன்றிக்கே
தேஹ அனுபந்திகளான பதார்த்தங்கள் இட்ட வழக்கன்றிக்கே
ஸ்வரூபம் இட்ட வழக்கான போது அன்றோ அவன் திரு உள்ளம் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவன் ஆவது –

பூர்வ தசை பரித்யாஜ்யம் -உத்தர தசை பரிக்ராஹ்யம் என்கிறபடியே
ஆத்ம சாஷாத்கார ஞானம் உடையவனாய் -இப்படிப் பிடித்தார் பிடித்தாரைப் பற்றித் திருவடிகளில் பண்ணும்
அனவரத நித்ய கல்யாண போக சர்வரஸ ஸர்வ கந்தனானவனை ஸதா பஸ்யந்தி பண்ணுகை அன்றோ ஸ்வரூப லாபம் –
இப்படி ஞானமும் விரக்தியும் சாந்தியும் உடையனாய் இருக்கும் ஒரு ப்ரபன்னன் அபிமானத்திலே ஒதுங்கி வர்த்திக்கை –
அப்போது அன்றோ தன் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான ப்ரீதியும் ஸ்வயம் ப்ரகாஸமும்
திரு மண்ணும் ஸ்ரீ சூர்ணமும் தீர்த்தப் ப்ரஸாதமும் உடையனாய் வாழல் ஆவது –

அப்போது அன்றோ சரீரம் அர்த்தம் பிராணாஞ்ச ஸத் குருப்யோ நிவேதயேத் என்று பிரமாணம் சொல்லுகையை அறிகை –
இத்தை அறிகை யன்றோ தன் உஜ்ஜீவனம் அறிகை
இது தர்சன அர்த்தம் உள்ளபடி அறிகை
இது ஸ்வரூப சோதனை -அதிகாரிக்கு அறிய வேண்டுவது –
அவ் வதிகாரி தீர்த்த பிரசாதமும் ஸ்வரூப உஜ்ஜீவனம்
அவன் தீர்த்த ப்ரஸாதம் உடையவன் ஆகையால் வருகிற ஞானம் எல்லாம் அடைவிலே வந்து நிறைந்தது –
வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்கிறவன் அன்றோ அதிகாரி –
இப்படி இன்றிக்கே சகல வேத ஸாஸ்த்ரங்களாலும் சகல ப்ரமாணங்களாலும் சொல்லுகிறது என்று சப்தத்தால் அறிய ஒண்ணாது
சதாசார்ய கடாக்ஷத்தாலே அனுபவ சித்தி தன்னைக் கொடுத்து ரஷித்த போது இவை இத்தனையும் பிரமாணம் –

தர்சன வார்த்தை சொன்னான் என்றும் -தர்சன ப்ரபாவங்கள் போம் என்றும் ரூப நாமங்களைக் கொண்டு
தன் ப்ரேமத்தாலே செய்யுமாகில் அவன் தீர்த்த ப்ரஸாதம் ஆத்ம நாசனமாகும் –
பெருக்கு ஆற்றில் இழிவான் ஒருவன் துறை அறியாதே இழிந்தான் ஆகில் தன் கார்யம் அடியும் –
அதிகாரியோடே இழிந்தால் அன்றோ அக்கரைப்படல் ஆவது -அக்கரை யாவது -விரஜைக் கரை
அப்போது அன்றோ நித்யனாய் -நித்ய அனுபவம் பண்ணி -நித்யர் உடன் ஒரு கோவையாய்க் கலக்கல் ஆவது –
இது பெரிய பிராட்டியாருக்குப் பெரிய பெருமாள் அருளிச் செய்த த்வய அர்த்த அனுசந்தானம் –
ஆச்சார்ய பரம்பரா ப்ராப்தமாக வந்தது என்று அஸ்மத் ஆச்சார்யர் யுக்தம் –

இது ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம்

——–

ஸ்ரீ சரம ரஹஸ்ய த்ரயம்

முமுஷுவான சேதனனுக்கு மோக்ஷத்திலே இச்சை உண்டாம் போது ரஹஸ்ய த்ரயம் அறிய வேணும் –
ரஹஸ்ய த்ரயம் ஆவது -திரு மந்த்ரமும் த்வயமும் சரம ஸ்லோகமும்
இவற்றுக்குப் ப்ரகரணம் என்றும் பிரயோஜனம் என்றும் இரண்டாய் இருக்கும் –
இதில் ப்ரகரணம் அறிகை யாவது ரஹஸ்ய த்ரயத்தில் உண்டான அர்த்த விசேஷங்களை பதங்கள் தோறும் ச க்ரமமாக அறிகை –
பிரயோஜனம் அறிகை யாவது -தாத்பர்யம் அறிகை

திரு மந்த்ரத்துக்கு நாராயண பதமும்
த்வயத்துக்கு சரண பதமும்
சரம ஸ்லோகத்துக்கு ஏக பதமும் தாத்பர்யமாய் இருக்கும் –
இந்த பத த்ரயங்களிலும் உண்டான பரமார்த்தம் யதார்த்தமாக அறிய வேணும்

திருமந்திரத்தில் நார பதத்தில் சேதன அசேதனங்களுடைய எல்லாம் சொல்லிற்றே யாகிலும்
நார பதத்துக்கு அவன் விக்ரஹத்திலே ஊற்றமாய் இருக்கும்
விக்ரஹம் தான் இரண்டு விதமாய் இருக்கும் -அதாவது சேதனம் என்றும் அசேதனம் என்றும்
சேதனம் என்கிறது நம்மாழ்வாரை
அசேதனம் என்கிறது பரத்வாதிகளிலே அவன் பரிக்ரஹித்த திவ்ய மங்கள தேஹங்களை
அதுக்கும் இதுக்கும் நெடு வாசி உண்டு –
இது நினைவிலே எழுந்து இருந்து விநியோகப்படும்
அதுக்கு இவன் தான் அறிந்து யத்னிக்க வேண்டும்
அங்கு போக வேளையாய் ஆனந்தம் சரீரம் -அறிவார் உயிரானாய் –
நார பதத்தாலே ஸர்வேஸ்வரனுக்குத் திரு மேனியாக அனுசந்தித்து
அயன பதத்தாலே ஆழ்வாரை ஸர்வேஸ்வரனுக்கு உயிராக அனுசந்திக்கை –
அங்கனம் அன்றியே
என்னது உன்னதாவி என்றும் –
ஞாநீத் வாத்மைவ மே மதம் என்றும் -இவரை அவனுக்கு உயிராக அனுசந்திக்கை
அங்கனமும் அன்றிக்கே
ஸர்வேஸ்வரேஸ்வரன் நினைவாலே ஸம்பந்தம் அறிகை யாவது –
சரீராத்மா சம்பந்தம் போலே ஆழ்வாருக்கும் நமக்கும் உண்டான ஸம்பந்தம் என்று அறிகை

த்வயத்துக்குத் தாத்பர்யம் சரணவ் -பதத்தாலே
ஆழ்வாரை ஸர்வேஸ்வரேஸ்வரனுக்குத் திருவடிகளாகவே அனுசந்தித்து
திருவடிகளை உபாயமாகப் பற்றும் போது ஆழ்வாரையே உபாயமாக அனுசந்தித்துப் பற்ற வேணும் –

சரம ஸ்லோகத்தாலே மாம் என்று தன்னைத் தொட்டுக் காட்டி –
ஏகம் – என்று
திருக் கையும் ஞான முத்திரையாக ஆச்சார்ய பதத்தை ஏறிட்டுக் கொண்டு இருக்கிற
என்னை ஒருவனையுமே உபாயமாகப் பற்று என்று விதிக்கையாலே
ஆழ்வார் ஒருவரையும் உபாயமாகப் பற்ற வேணும் –
ஆழ்வாரைப் பற்றும் போது அவர் திருவடிகளைக் பற்ற வேண்டுகையாலே
எம்பெருமானார் திருவடிகளோட்டை சம்பந்தமே இவ்வாத்மாவுக்கு உஜ்ஜீவனம் –

இதற்குப் பிரமாணம் -கண்ணி நுண் சிறுத் தாம்பும் -ராமானுச நூற்று அந்தாதியும் –
இவ்வர்த்தம் அறியாதவனுக்கு யாவதாத்ம பாவியாக சம்சாரம் அநு வர்த்திக்கும்
இவ்வர்த்த நிஷ்டரான அதிகாரிகளுக்கு ஆழ்வார் ப்ரபத்தியும் உடையவர் ப்ரபத்தியும் நித்ய அநு சந்தேயமாகக் கடவது
இவ்வர்த்தம் ப்ரசாதித்த ஆச்சார்யன் திருவடிகளே உபாயமாகக் கடவன் –

——————

ஸ்ரீ திரு நகரிப்பிள்ளை ரஹஸ்யம்

ஸ்ரீ பிள்ளை செண்டு அலங்கார தாஸர் -ஸ்ரீ திரு நகரிப் பிள்ளை ஸ்ரீ பாதத்திலே நெடு நாள் அபேக்ஷித்து
ஒரு பத்த சேதனன் முமுஷுவாய் முக்தனாம் போது
ஸ்வரூப ஆவேச வியாப்தியை ஸதாவாக உள்ளவர்களுடைய அபிமானமும் –
பகவத் பாகவத ஆச்சார்ய அபிமான நிஷ்டர் விஷயங்களில் மானஸ கைங்கர்ய அனுசந்தானமும்
கூட வேணும் என்று பல நாளும் அருளிச் செய்யா நின்றது –
அடியேனுக்கு அவை கூடும்படி எங்கனேயோ அறிகின்றிலேன் -என்று விண்ணப்பம் செய்ய

ஆகில் இவ்வர்த்தத்தை ஒருவருக்கும் சொல்லாதே கொள்ளும் என்று தம்முடைய
ஸ்ரீ பாதத்தளித்த தொட்டு ஆணை இடுவித்துக் கொண்டு அங்கீ கரித்து
பூர்வாச்சார்யர்கள் தங்களுக்குத் தஞ்சமாக அனுசந்தித்தும்
தங்களைப் பற்றினவர்களுக்குக் குஹ்ய தமமாக உபதேசித்தும் போரும் அர்த்த விசேஷங்கள் உண்டு

அவை எவை என்னில் –
வஸ்து நிர்தேசமும்
உபாய நிர்தேசமும்
உபேய நிர்தேசமும்

இவை இவை தன்னை நிர்தேசிக்கும் போது பிரமாணம் கொண்டே நிர்தேசிக்க வேண்டுகையாலே
இவ்வர்த்த விசேஷங்களுக்கு நிர்ணாயக பிரமாணம் தன்னை பிரதமத்திலே நிர்ணயித்துக் கொள்ள வேணும் இறே -அதாவது –
அபவ்ருஷேயமாய் –நித்ய -நிர்தோஷமாய் -அகில பிராமண உத்க்ருஷ்டமான வேதத்துக்கு ஸங்க்ரஹமான திரு மந்த்ரத்திலும்
அதனுடைய விவரணமான ரஹஸ்ய த்வயத்திலும் உண்டான அர்த்த விசேஷங்களை ப்ரதிபாதியா நின்ற உள்ள
ஆழ்வார்கள் அருளிச் செய்த திராவிட வேதத்துக்கு கருத்து அறிவிக்கும் ஆச்சார்யர்கள்
தங்களுக்குத் தஞ்சமாக நினைத்து இருக்குமதாய் ரஹஸ்ய த்ரயத்திலும் அர்த்தமாக மறைத்து உபதேசிக்கக் கடவ
அர்த்த விசேஷங்களை சாப்தமாக ப்ரதிபாதிக்கையாலே
இவ்வர்த்த விசேஷங்களுக்கு நிர்ணாயகமான பிரமாணம் -கண்ணி நுண் சிறுத்தாம்பாய் -இருக்கும் –

இனி வஸ்து நிர்த் தேசமாவது
இந்த பிராமண ப்ரதிபாத்யரான நம்மாழ்வாருடைய ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்து இவரே நமக்குத் தாரகர்
என்று ஸ்ரீ மதுர கவிகள் போல் அறுதி இடுகை

அது செய்யும் இடத்தில் இதுக்குப் பிரமாணம் மூல மந்த்ரம் ஆகையாலும்
வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -என்று தாமே அருளிச் செய்கையாலும்
திரு மந்த்ரம் கொண்டே அறுதி இட வேணும் –

அது நாராயணாய என்று சொல்லா நிற்க இறே -அவ்வர்த்த அனுசந்தானம் பண்ணுகிற இவரும் தேவு மற்று அறியேன் என்றதும்
திரு மங்கை ஆழ்வாரும் -நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை -என்றதும்
இவர்கள் இப்படி சொல்லுகைக்கு அடி ஸர்வேஸ்வரனுடைய நாராயணத்வ பூர்த்தி உள்ளபடி அறிந்து பற்றின ஊற்றம் இறே

அல்லது நாராயணாய என்று மந்த்ர சரீரத்திலே வியக்தமாய்ச் சொல்லா நிற்க –
தேவு மற்று அறியேன் -என்பது
அடியார்க்கு அடிமை என்பதாக ஒண்ணாது இறே

இத்தனையும் அறிய வேண்டுவது உஜ்ஜீவன அம்சத்துக்கு நாராயணத்வ பூர்த்தி யாவது தான் ஏது என்னில் –
நாராயண பதம் -நார பதத்தாலே பகவத் வ்யதிரிக்த ஸமஸ்த பதார்த்தங்களையும்
அயன பதத்தாலே தத் ஆஸ்ரயமான பகவத் ஸ்வரூபத்தையும் ப்ரதிபாதியா நின்று கொண்டு
யோக ரூடி நியாயத்தாலும் சாதாரணமாயும் அசாதாரணமாயும் இருக்கும் –

இதிலே வஸ்து நிர்த்தேசம் பண்ணும் போது சாதாரணத்துக்கும் அசாதாரணத்துக்கும் வாஸி அறிய வேண்டும் –
சாதாரணமானது –
விதி சிவாதிகளான அதிகாரி ஜீவர்களை அதிஷ்டித்துக் கொண்டு அஹங்கார யுக்த ஜீவர்களுக்கு
அந்தராத்மாவாய் நின்று கொண்டு அவர்களைச் சொல்லும் வாசகத்தாலே தன்னைச் சொல்லலாம் படி நிற்கும் நிலை –
அதாகிறது -நான்முகனே முக்கண் அப்பா -என்று சம்போதிக்கலாம் படியாய் இருக்கை –

இனி அசாதாரணம் ஆவது –
அப்ராக்ருதமாய் ஸுத்த ஸத்வமாய் இச்சா க்ருஹீத மான திவ்ய விக்ரஹத்தோடே கூடி இருக்கும் இருப்பு –
இவ்விரண்டிலும் நாராயணத்வ பூர்த்தி இல்லை –

இனி சாதாரண பரமான விதி ஸிவாதி வியக்திகள் போலே அஹங்கார யுக்தமாய் இருத்தல் –
அசாதாரண திவ்ய விக்ரஹம் போலே நினைவு அறியாது இருத்தல் செய்கை அன்றிக்கே
தனக்கே யாக -என்கிற அத்யந்த பாரதந்தர்யத்தாலே –
உந்தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் -என்றும்
நினைவு அறிந்து பரிமாற்ற வல்ல வியக்தி பாரதந்தர்யத்தாலும் அசாதாரண திவ்ய விக்ரஹத்திலும்
அவன் உகந்த அந்தரங்க சரீரம் ஆழ்வாராய் இருக்கும் –

ஈஸ்வர ஸ்வரூபம் தான் பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சாவதார ஆச்சார்யத்வம் என்று ஆறு பிரகாரத்தோடே கூடி இருக்கும் –
அதில் பரத்வாதிகள் ஐந்திலும் தத்வ த்ரயத்தினுடைய வைச்சித்யம் இல்லாமையால் நாராயணத்வ பூர்த்தி இல்லை –
இனி ஆச்சார்யத்வம் என்கிற மதுரகவி ஆழங்கால் பட்ட இதிலே யாய்த்து நாராயணத்வம் பூர்ணம் ஆவது
கேவலம் ப்ராக்ருதமான திவ்ய விக்ரஹத்தோடே இங்கேயே கூடி இருக்கையாலே
தத்வ த்ரயங்கள் மூன்றும் ஒன்றோடு ஓன்று கூடி இருக்கிற இது அன்றோ பூர்ணம் –
அங்கனம் அன்றிக்கே ஆழ்வாரையும் அவரது திரு மேனியையும் இரண்டையும் தனக்கு விக்ரஹமாய்க் கொண்டு
அவருடைய அஹந்தை தன்னுடைய அஹந்தையில் அந்தர்பூதமாய் இருக்கிற இருப்பு இறே
தானும் தானாய் ஒழிந்தானே தானே யான் என்பானா தானே யாகி நிறைந்தானே என்றபடி தத்வத்ரய விசிஷ்டமாய் அன்றோ
சகல ஜகத்தும் இருப்பது என்னில் அங்கனம் சொல்ல ஒண்ணாது –
வியவஸ்திதமாய் இருக்கையாலே பிராட்டிமார் எல்லாம் ஒத்து இருக்கச் செய்தே பெரிய பிராட்டியார் அவன் ஸ்வரூபாதிகளுக்கு
நிரூபக பூதையாய் -பிரதான மஹிஷியாய் திருவின் நிழல் போல் யாம்படி
அல்லாதவர்கள் தனக்கு சாயா பரதந்த்ரராம் படி வியாவ்ருத்தியாய் இருக்கிறாப் போலே இதுவும் இவ்விஷயத்துக்கே வியவஸ்திதம்
மற்றை ஆழ்வார்கள் இவருக்கு விஷய பூதர் –

இது முடியானேயிலே -ஸூ ஸ்பஷ்டம்
இவ்வாழ்வாருக்கும் இத்தனை பிரகாரம் உண்டு -நாச்சிமாரோடு ஸர்வதா சாத்ருஸ்யம் உண்டு –
பின்னை கொல் -இத்யாதிப்படியே ஆழ்வாருக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள பிரகார சம்பந்த ஐக்யத்தை
யதா தர்சனம் பண்ணினால் யாய்த்து -தேவு மற்று அறியேன் -என்று இருப்பது –

ஆக இப்படி ஆழ்வாருக்கும் ஈஸ்வரனுக்கு உள்ள சம்பந்தத்தை யதா தர்சனம் பண்ணி -தேவு மற்று அறியேன் -என்று
இருக்கும் அதிகாரிக்கும் எம்பெருமானது கிருபை பள்ள மடை யாவது –
ஆழ்வாரைப் பற்ற அவர் திருவடிகளைப் பின்பற்ற வேண்டுமே -மேவினேன் அவன் பொன்னடி – என்று
மதுரகவிகள் ஆழ்வாரை விட்டு எம்பெருமானாரை ஊன்றுகைக்கு அடி –
தத் தர்மி ஐக்யத்தாலே ஏக விஷயம் ஆகையாலும் -ப்ரயோஜன அம்சத்தில் நிற்க வேண்டுகையாலும் –
பாவின் இன்னிசை பாடித் திரிவேன்
கரிய கோலத் திரு உருக் காண்பன்
எண்டிசையும் அறிய இயம்புகேன் -என்று பாரித்த படியே
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரு அரங்கத்து அம்மானுக்கே காவல் செய்து –
ஆழ்வார் கிருபையையே ஸூ ப்ரஸித்தம் ஆக்குவதாக அவதரித்த படி இறே
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல் கலையோர் தாம் மன்ன வந்த ராமாநுசன் இறே

பகவத் கிருபையையும் ஆழ்வார் கிருபையையும் சீர் தூக்கிப் பார்த்தால் –
பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே–என்று ஆழ்வார் கிருபை விஞ்சின் இருக்குமா போலே –
ஆழ்வார் கிருபையையும் இவருடைய கிருபையையும் தனித்தனியே விகல்ப்பித்தால்
உன் அருள் அன்றி –புகல் ஓன்று இல்லை -என்னும்படியான கிருபா வைபவத்தாலும்-
சேதனருடைய துர்கதியைக் கண்டு -சர்வ அவஸ்தைகளிலும் கை விட மாட்டாதே -தம்மை அழிய மாறியும்
உபதேசித்து அருளும் வாமனன் சீலன் ராமாநுசன் உபய விபூதியும் இவர் இட்ட வழக்காக பெரிய பெருமாள்
ப்ரசாதித்து அருள உடையவர் என்று நிரூபகம் ஆகையாலும்
ஆழ்வார் திருவடிகளில் சம்பந்தம் உணர்ந்தவர்களுக்கு அல்லாரும்
எம்பெருமானாரே தங்களுக்குத் தஞ்சகமாக நினைத்து இருப்பார்கள் –

இது தான் ஈஸ்வர சம்பந்தம் போலே பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கை அன்றிக்கே
மோக்ஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் –
ஆகை இறே -ஞானப்பிரானை அல்லால் இல்லை என்றும்
திருக்குருகூர் அதனை யுளம் கொள் ஞானத்து வைமின் -என்றும் தாமே அருளிச் செய்தது –
ஆச்சார்ய பதம் என்று ஓன்று உண்டு -அது உள்ளது எம்பெருமானாருக்கே –
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று ஆய்த்து வடுக நம்பி உபதேசித்து அருளுவது –
எம்பெருமானாருக்கே என்றது ஆழ்வார் திருவடிகளில் உள்ள ஐக்யத்தாலே –
அவர் தமக்கு அடி ஏது என்னில் கீழ்ச சொன்ன நாராயணத்வ பூர்த்தியாலே –
இவ்வாறு உள்ள சரம பர்வ நிஷ்டனுக்கு உபாயம் ஆச்சார்யர் பண்ணிய ப்ரபத்தியே யாகுமே –

இவனுக்குத் தனியே சரண வரணம் பண்ணத் தேவையில்லை -பண்ணினான் ஆகில் சம்பந்தம் குலையும் –
கரணம் தானே தனக்கு ரக்ஷண சிந்தை பண்ணாதே –
அநாதி காலம் ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு
ஆச்சார்ய அபிமானம் ஒழிய கதி இல்லையே –
ஸ்வ அபிமானமாவது -கரணவத் பரதந்த்ரனாய் -ஒருவன் அபிமானத்திலே அந்தர்பூதனாய் இருக்கக் கடவ இவன் –
தன்னை ப்ருதக் ஸ்திதி பண்ணி தனக்கு என்று ஒரு புருஷார்த்தம் உண்டாகவும் நினைத்து
தத் பிராப்தி யுபாயம் ஈஸ்வரனே என்று இருக்கை

ஆச்சார்ய அபிமானம் ஒழிய கதி இல்லை என்று இருக்கை யாவது –
தன் பேற்றுக்குத் தான் ஒரு பிரபத்தி பண்ணுகை அன்றிக்கே அவன் பண்ணின ப்ரபத்தியே
தனக்கு உபாயமாகக் கொண்டு தன்னை அவனுக்குக் கரணமாகவே அநு சந்திக்கை –

தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டுமே
கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரே வெல்லும் மற்றவரைச் சாத்தியிருப்பார் தவம் –
நாத முனிம் விலோக ப்ரஸீதம் –

புருஷார்த்த நிர்த்தேசமாவது
ஆச்சார்ய முகோலாஸ ஹேதுவான கைங்கர்யமே புருஷார்த்தம்
திரி தந்தாகிலும்
ஆழ்வார் எம்பெருமானார் பாக்கள் உத்தாரகத்வ பிரதிபத்தி பண்ணி -இவ்வர்த்தம் உபதேசித்து அருளிய
ஆச்சார்யர் எம்பெருமானாருக்கே கரணவத் பரதந்த்ரர் ஆகையால் அந்த ஐக்யத்தாலும்
ஒரு காலத்துக்கு ஒரு சேதனன் முகேன நின்று சேதனனுக்கு அஞ்ஞாத ஞாபனம் பண்ணி அங்கீகரித்து அருளுவான் என்கிற உபதேசத்தாலும்
அவ்வோ வியக்தி விசேஷங்கள் தான் ஞான அனுஷ்டான பரி பூர்த்தியாலே இதர விஸஜாதீயமாகத் தோற்றுகையாளலும்
எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தத்தை யுணர்த்தின அளவிலே கேவல யுபகார பிரதிபத்தியே அன்றிக்கே
யுத்தாரகர் என்று அனுசந்திக்கக் குறையில்லை –

ப்ரபந்ந காயத்ரி ஜபித்து
திருவாய் மொழி வேதம் அத்யயனம் பண்ணி
உபதேச ரத்னமாலை ரஹஸ்யங்கள் அப்யஸிக்க வேணும் –

1-ஈஸ்வரன் அளவில் உத்தாரகத்வ பிரதிபத்தியும்
2-ஆச்சார்யர் அளவிலிலே உபகாரத்வ பிரதிபத்தியும்
3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவிலே உத்தேச்ய பிரதிபத்தியும்
4-உபாயத்து அளவிலே அத்யாவசிய பிரதிபத்தியும்
5-உபேயத்து அளவில் த்வரா பிரதிபத்தியும்
6-சரீர அளவிலே விரோதி பிரதிபத்தியும்
7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவாகிற பிரதிபத்தியும்
8-சம்சாரிகள் அளவில் த்ருணவத் பிரதிபத்தியும்
9-ஐஸ்வர்யத்து அளவில் அக்னிவத் பிரதிபத்தியும்
10-விஷயாந்தரங்கள் பக்கல் இடி வத் பிரதிபத்தியும்
ஆக இப்பத்து பிரதிபத்தியும் இவ்வதிகாரிக்கு அவஸ்யம் ஞாதவ்யமாகக் கடவது –

1-ஈஸ்வரன் அளவில் உத்தாரகத்வ பிரதிபத்தி யாவது
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன்
என்னுடைய வாழ் நாள்
ஆவியை அரங்க மாலை
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு -என்கை

2-ஆச்சார்யர் அளவிலிலே உபகாரத்வ பிரதிபத்தி யாவது –
என்னைத் தீ மனம் கெடுத்தாய்
மருவித் தொழும்  மனமே தந்தாய்
தேவு மற்று அறியேன் -என்று இருக்கை

3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவிலே உத்தேச்ய பிரதிபத்தி யாவது
சீதரனையே தொழுவார்
பயிலும் திரு உடையார்
எம் தொழு குலம் தாங்களே -என்று இருக்கை –

4-உபாயத்து அளவிலே அத்யாவசிய பிரதிபத்தி யாவது
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -இத்யாதிப்படியே இருக்கை –

5-உபேயத்து அளவில் த்வரா பிரதிபத்தி யாவது
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே
வானுலகம் தெளிந்தே என்று எய்வது
களிப்பும் கவர்வும் அற்று–அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –
ஒழி வில் காலம் எல்லாம் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்று இருக்கை –

6-சரீர அளவிலே விரோதி பிரதிபத்தி யாவது
பாம்போடு ஒரு கூறையில் பயின்றால் போல்
பொல்லா ஆக்கை
ஆக்கை விடும் பொழுது எண்ணே
மங்க ஒட்டு -என்று இருக்கை

7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவாகிற பிரதிபத்தி யாவது –
தாயே தந்தையே -இத்யாதி
கொண்ட பெண்டிர் இத்யாதி
என்று இவை பேணேன் என்று இருக்கை

8-சம்சாரிகள் அளவில் த்ருணவத் பிரதிபத்தி யாவது
மிண்டர் இவர் என்று இருக்கை

9-ஐஸ்வர்யத்து அளவில் அக்னிவத் பிரதிபத்தி யாவது
ஆண்டவரே மாண்டு ஒழிந்தார்
செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் -என்று இருக்கை –

10-விஷயாந்தரங்கள் பக்கல் இடி வத் பிரதிபத்தி யாவது புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி
மென் முலையார் தடம் தோள் புணர் இன்பத்து வெள்ளத்து ஆழ்ந்தேன்
ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்
கூறை சோறு இவை தா வென்று குமைத்துப் போகார் -என்று இருக்கை –

1-ஈஸ்வரன் அளவில் உத்தாரகத்வ பிரதிபத்தியை – உயர்வற உயர் நலம் தொடக்கமான இவற்றாலும்
2-ஆச்சார்யர் அளவிலிலே உபகாரத்வ பிரதிபத்தியை தூது நாலிலும்
3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவிலே உத்தேச்ய பிரதிபத்தியை பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -யாலும்
4-உபாயத்து அளவிலே அத்யாவசிய பிரதிபத்தியை நோற்ற நாலிலும்
5-உபேயத்து அளவில் த்வரா பிரதிபத்தியை முடியானே -பா மறு மூ வுலகு மாயக்கூத்தன் தொடங்கி முனியே நான்முகன் முக்கண் அப்பா இவற்றாலும்
6-சரீர அளவிலே விரோதி பிரதிபத்தியை முந்நீர் ஞாலம் தொடக்கமான வற்றாலும்
7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவாகிற பிரதிபத்தியை கொண்ட பெண்டிரிலே அபாந்தவாதிகளாகச் சுற்றிச் சாற்றி யதாலும்
8-சம்சாரிகள் அளவில் த்ருணவத் பிரதிபத்தியை நண்ணாதார் முறுவலிப்ப -இத்யாதியாலும்
9-ஐஸ்வர்யத்து அளவில் அக்னிவத் பிரதிபத்தியை ஒரு நாயகத்தாலும்
10-விஷயாந்தரங்கள் பக்கல் இடி வத் பிரதிபத்தியை உண்ணிலா விலும்
பிரதம ஆச்சார்யரான நம்மாழ்வார் அருளிச் செய்து அருளினார்
ஆக இப்பத்தும் ஓர் அதிகாரிக்கு அவசியம் ஞாதவ்யம் என்றதாயிற்று –

———–

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த ஆத்ம விவாஹம்

ஸ்ரீ யபதியாகிற காள மேகம்
க்ருபா ப்ரவாஹம் பொழிய
நிலத்திலே முளை போலே ஜீவாத்மா முளைத்து
ஆச்சார்யர் சங்கமம் கிட்டி
ஞானம் முளைத்துப் பெருகி
ருசி வளர்த்துக் கொண்டு போந்து
விவேகம் ஆகிற பக்குவம் பிறந்து
பரம சேஷிகள் ஆகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைச் சேர்த்து
எம்பெருமான் ஆகிற வரன் கையிலே
ஸ்வரூப ஞானம் என்னும் தாரை வார்த்துக் கொடுத்து

அவனும் சேஷத்வம் ஆகிற மந்த்ர வாஸஸ்ஸை யுடுத்தி
சேஷ விருத்தியாகிற மங்கள ஸூத்ரத்தையும் கட்டி
ரூப நாமங்கள் ஆகிற ஆபரணங்களையும் சூட்டி
கையைப் பிடித்துக் கொண்டு போந்து
அத்யவசாயம் என்கிற ஆஸனத்திலே இருத்தி
வியாபக ஞானம் என்கிற அக்னியை வளர்த்து
இதர உபாய தியாகம் என்கிற சமித்துக்களை இட்டு
ஸித்த உபாய ஸ்வீ காரம் என்கிற பிரதான ஆஹுதியைப் பண்ணி
ஸாஸ்த்ரங்கள் ஆகிற பொறியைச் சிதறி

சம்பந்த ஞானம் என்கிற பூர்ண ஆஹுதியாலே பிராப்தி பிரதிபந்தகங்களை நிவர்த்தமாக்கி
நிர்ப் பரத்வ அனுசந்தானம் பண்ணுகிற சதாச்சார்யர்கள் ஆகிற பந்துக்கள் முன் நிற்க
மாதா பிதாக்கள் இருவரும் சேர இருந்து
ஆழ்வார்கள் ஈரச் சொற்களால் வாத்சல்ய யுக்தனானவன் அணைத்துக் கொண்டு
ப்ரீதி வெள்ளம் ஆகிற படுக்கையில் கொண்டு போய்
விஷய வைலக்ஷண்யங்கள் ஆகிய போக போக்யங்களோடே சகல வித கைங்கர்யங்கள் ஆகிய அனுபவத்தில் மூட்டி
ஆனந்தம் ஆகிற பெருக்காற்றோடு ஆழங்கால் பட்டு

நம என்பது
போற்றி என்பது
ஜிதந்தே என்பது
பல்லாண்டு என்பது ஆகா நிற்கும் –
ஆத்ம விவாஹம் சம்பூர்ணம் –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ உடையவருக்கு ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்த ஸ்ரீ அஷ்டாதச பதினெட்டு ரஹஸ்யங்கள்/ ஸ்ரீ ப்ரமேய சாரம் /—-

March 19, 2021

1-முமுஷுவுக்கு சம்சார பீஜம் நசிக்க வேணும்
அது நசித்தால் ஒழிய அகங்கார மமகார நிபிருத்தி ஆக மாட்டாதே -அஹங்காரம் -கர்வம் -மமகாரம் -மாத்சர்யம் –
2- அஹங்கார மமகாரம் நிவ்ருத்தியானால் ஒழிய தேஹாத்ம அபிமானம் போகாது
3- தேஹாத்ம அபிமானம் போனால் ஒழிய ஆத்ம ஞானம் பிறவாது
4-ஆத்ம ஞானம் பிறந்தால் ஒழிய ஐஸ்வர்ய போகாதிகளில் உபேக்ஷை பிறவாது –
5-ஐஸ்வர்ய போகாதிகளில் உபேக்ஷை பிறந்தால் ஒழிய பகவத் ப்ரேமம் பிறவாது
6-பகவத் ப்ரேமம் பிறந்தால் ஒழிய விஷயாந்தர ருசி விடாது
7-விஷயாந்தர ருசி விட்டால் ஒழிய பாரதந்தர்யம் பிறவாது
8-பாரதந்தர்யம் பிறந்தால் ஒழிய அர்த்த காம ராக த்வேஷாதிகள் ஒழியாது
9-ராக த்வேஷாதிகள் ஒழிந்தால் ஒழிய ஸ்ரீ வைஷணத்வம் உண்டாகாது
10-ஸ்ரீ வைஷ்ணவத்வம் கை கூடினால் ஒழிய ஸாத்விக பரிக்ரகம் ஏற்படாது
11-சாத்விக பரிக்ரஹம் பிறந்தால் ஒழிய பாகவத பரிக்ரஹம் பிறக்க மாட்டாது
12-பாகவத பரிக்ரஹம் பிறந்தால் ஒழிய பகவத் பரிக்ரஹம் பிறக்க மாட்டாது
13-பகவத் பரிக்ரஹம் பிறந்தால் ஒழிய அநந்ய ப்ரயோஜனன் ஆக மாட்டான்
14- அநந்ய ப்ரயோஜனன் ஆகாதே அநந்யார்ஹ சேஷ பூதன் ஆகான்
15-அநந்யார்ஹ சேஷ பூதன் ஆகாதே அநந்ய சரண்யன் ஆக மாட்டான்
16-அநந்ய சரண்யன் ஆகாதே அதிகாரி புருஷன் ஆக மாட்டான்
17-அநந்ய சரண்யன் ஆணவனுக்கே திரு மந்த்ரம் கை கூடும்
18-இப்படி 18 படிகள் தாண்டிய பின்பே எம்பெருமானாருக்கு திருக்கோட்டியூர் நம்பி அருளிச் செய்தார்

———

ஸ்ரீ உடையவருக்கு ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்த ப்ரமேய சாரம்

முமுஷுவாய் ப்ரபன்னனுக்கு அஞ்சு குடி த்யாஜ்யம் -மூன்று குடி -உபாதேயம் -பதிவிரதைக்கு போல்
அவளுக்கு த்யாஜ்யர் -கன்னிகைகள் -வேஸியைகள் -வேஸ்யாதிபதிகள் –
ஒருவனுக்கு கை கொடுத்து வைத்து இழந்து போனவள் -உள்ளே இருந்து மசக்குகிறவள்
உபாதேயம் -மாதா பிதாக்கள் -தன் பார்த்தாவுக்கு அவர்ஜனீய பந்துக்கள் -தன்னைப் போன்ற பதி வ்ரதைகள்
இவனுக்கு த்யாஜ்யர்கள் சம்சாரிகள் தேவதாந்த்ரங்கள் -தேவதாந்த்ர பரதந்த்ரர்கள் –
தர்சனத்தில் புகுந்து நின்று தர்சன பராங்முகராய்ப் போருமவர்கள் –
ரூப நாமங்களை உடையராய் உள்ளே புகுந்து அநந்ய ப்ரயோஜனரோடு மசக்குப் பாராட்டித் திரிகிறவர்கள்
இவர்களுக்கு உபா தேயர் -ஆச்சார்யர்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அநந்ய ப்ரஹ்மசாரிகள் –

————-

ப்ரபன்னனுக்கு பரிஹார்யமாம் ஆறு
ஆஸ்ரயண விரோதி -ஸ்ரவண விரோதி -அனுபவ விரோதி -ஸ்வரூப விரோதி -பரத்வ விரோதி -ப்ராப்தி விரோதி

ஆஸ்ரயண விரோதி -யாவது அஹங்கார மமகாரங்கள் -பலாபி சந்தி -புருஷார்த்தத்தை இகழ்தல் -பேற்றில் சம்சயம்
ஸ்ரவண விரோதி -யாவது -தேவதாந்த்ர கதா விஷயங்களில் அவஸமாகவும் செவி தாழ்க்கை
அனுபவ விரோதி -யாவது -போக த்ரவ்யம் கொண்டு புக்கு ஸ்நாந த்ரவ்யம் கொண்டு புறப்படுகிற விஷய அனுபவ இச்சை –
ஸ்வரூப விரோதி யாவது -தன்னைப் பரதந்த்ரனாக இசையாதே ஸ்வ தந்த்ரனாக இசைகை
பரத்வ விரோதி யாவது -ஷேத்ரஞ்ஞாரான ப்ரஹ்ம ருத்ராதிகளை ஈஸ்வரனாக ப்ரமிக்கை –
ப்ராப்தி விரோதி -யாவது -கேவலரோட்டை சேர்த்தி என்றும்

பகவத் பிராப்தி பிரதிபந்தகம் சரீரம் –
ஆத்ம ஆத்மீய அநு வர்த்தன பிரதிபந்தகம் புத்ர மித்ராதிகள் –
பாகவத அனுவர்த்தன பிரதிபந்தகம் -இதர ஸஹ வாஸம்
பகவச் சேஷத்வ பிரதிபந்தகம் -அஹங்காரம்
உபாயத்வ அத்யவசாய பிரதிபந்தகம் -மமகாரம்
உபேய ருசி பிரதிபந்தகம் -விஷய ப்ராவண்யம்

வியாக்ர ஸிம்ஹங்களோ பாதி உபாய வேஷம்
யூத பதியான மத்த கஜம் போலே உபேய வேஷம்
ஸ்வரூபம் வாய் திறக்க ஒட்டாது
விரோதி வாய் திறவ ஒட்டாது
த்வரை நல் தரிக்க ஒட்டாது

ஸ்வரூபம் தனி பொறாது -தேஹம் திரள் பொறாது
வ்ருத்தி சோற்றோடு போம் -சோறு உடம்போடு போம் -உடம்பு மண்ணோடு போம் –
ஆத்மா கர்மத்தோடே போம் –
ஈஸ்வரன் கண்ண நீரோடு போம்

சேதனன் ஒன்றை நினைக்கும் போது ஈஸ்வரன் திரு உள்ளத்திலே ஆறு பிரகாரமாக
நினைவு கூடினால் ஆய்த்து நினைக்கலாவது -எவை என்னில்
கர்த்ருத்வம்
காரயித்ருத்வம்
உதாஸீ நத்வம்
அநு மந்த்ருத்வம்
ஸஹ காரித்வம்
பல பிரதத்வம் –

கர்த்ருத்வம் ஆவது -தான் முதல் நினைக்கை
காரயித்ருத்வம் ஆவது -அந் நினைவு இவனை நினைப்பிக்கை
உதாஸீ நத்வம் -நினைப்பிக்கும் இடத்தில் இவன் கர்மம் அடியாக நினைக்கை
அநு மந்த்ருத்வம் -இவன் நினைக்கும் இடத்தில் விலக்க வல்லனாய் இருக்கச் செய்தே விலக்காது ஒழிகை
ஸஹ காரித்வம் -சேதனன் ஈஸ்வரனை ஒழிய ஒரு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஷமன் இன்றிக்கே இருக்கை
பல பிரதத்வம் -இவை இத்தனையும் இவன் பண்ணின கர்மத்தின் பலமாம் படி பத்தும் பத்துமாக அறுத்துத் தீர்க்கை –

ஸ்வரூபத்துக்கு
ஸம்சரண யோக்யதை பரதந்த்ர சேதனத்வம்
ஸஹ காரி காரணம் அநாதி அஞ்ஞாதி லங்கநமாகிற அபராதம்
பிரதான காரணம் ஈசுவரனுடைய நிரங்குச ஸ்வா தந்தர்யம்

ஸ்வரூபத்துக்கு
பரம ப்ராப்யமான கைங்கர்ய யோக்யதை சேஷத்வே சதி சேதனத்வம் –
ஸஹ காரி காரணம் அநுகூல வ்ருத்திகள் ஆகிய பக்தி ப்ரபத்திகள் –
பிரதான காரணம் ஈஸ்வரனுடைய ஸஹஜ காருண்யம் என்றும் –

ஞானம் ஞானத்தை விநியோகம் கொள்ளும் படி என் என்னில் –
இவன் கரண த்வாரா விநியோகப்படும் –
அவன் விக்ரஹ த்வாரா விநியோகம் கொள்ளும் –

ஞானம் ஞானத்துக்கு சேஷமான படி என் என்னில்
யாது ஒன்றின் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் யாது ஒன்றிலே கிடக்கிறது அது சேஷியாகத் தட்டில்லை –
இப்படி இருக்கிற ஞானத்தை அவித்யை மூடினபடி என் என்னில் -கல் கலங்காதே நீர் கலங்கும் அத்தனை இறே –
அப்ராப்தத்திலே கலங்குதல் -ப்ராப்தத்திலே கலங்குதல் -ஞானம் த்ரவ்யம் ஆகையால் எப்போதும் ஓக்க கலங்கி அல்லாது இராது இறே
ஸ் தூலத்திலே ஸூஷ்மம் இருந்தபடி என் என்னில் -ஞான இந்த்ரியங்களிலே வியாபித்து நிற்கும் –
சரீரம் யதவாப்நோதி யச்சாப் யுத்காரமதீஸ்வர –க்ருஹீத்வை தாநி ஸம்பாதி வாயுர் கந்தா நிவாஸயாத் -என்கிறபடி
வாயு கந்தத்தைக் கடிதாக் கொண்டு போமா போலே இந்திரியங்களையும் ஸூ ஷ்ம சரீரத்தோடு க்ரஹித்துக் கொண்டு போரா நிற்கும் –

ஸ்தூலம் விட்ட போதே ஸூஷ்மம் விடாது ஒழிவான் என் என்னில் பிராகிருத தேசத்தில் அப்ராக்ருத தேகம் இல்லாமையாலே
இது யாதொரு தேசத்திலே விட்டது அது அப்ராக்ருத தேசமாம் அத்தனை –
இது கமன ஸாதனம் ஆகையாலும் போகிற வழியில் உள்ள தேவ ஜாதிகள் இவனை ஸத்கரித்து தம் தாம் ஸ்வரூபம் பெற வேண்டுகையாலும்
ஸூஷ்மம் விட்டால் பன்னிரண்டு கோடி ஆதித்யர்கள் அழலைக் கழற்றி ஒளியைத் தோற்றினால் போலே இருக்கிற
இவன் தேஜஸ்ஸூ புற வெள்ளப் பட்டால்
தேச தேசங்களில் உள்ளார் எதிரே நின்று கிஞ்சித் கரித்து ஸ்வரூபம் பெற ஒண்ணாமையாலும் இறே இது அவ்வருகும் கிடக்கிறது –

அதவா
ராஜ மஹிஷி அந்தப்புரத்துக்குப் போகும் போது தட்டுப் பாயிட்டு மூடியே போகை ஸ்வரூபம் இறே
அப்படியே தேவ ஜாதிகளும்
இடர் கெட எம்மைப் போந்து அளியாய் என்றும்
நீண் நகர் நீண் நெறிவைத் தருளாய் என்றும் -சொல்லித் தலைக் கட்டினால் எதிர் அம்பு கோர்க்கும்
மனஸ்ஸை உடையவர்கள் ஆகையாலே அப்படிப்பட்ட ஹேயர்கள் கண் படாமல் போய்
வைகுந்தத் திரு வாசலிலே இழிந்து தட்டுப்பாய் வாங்கும் அத்தனை –
அதாவது -ஸ்ரீ வைகுந்த நாதனை உகப்பிக்கக் கடவ அப்சரஸ்ஸூக்கள் -சதம் மாலா ஹஸ்தா சதம் அஞ்சனம் ஹஸ்தா
சதம் ஸூர்ணம் ஹஸ்தா சதம் வாஸோ ஹஸ்தா சதம் ஆபரணம் ஹஸ்தா -என்று
இவனையும் உகப்பிக்க வந்தால் அவர்கள் முகத்திலே இறே இவன் விழிப்பது

ஸ்வரூபம் இருக்கும் படி ஞானம் இருக்கும் – அவன் உகப்பிலே கிடைக்கையாலே -அதாவது
அவனுடைய ஞான ஆனந்தத்திலே இவன் சத்தை கிடக்க -அவனைத் தண்ணீர் தண்ணீர் என்னைப் பண்ணுகிறது என்று
ஸ்ரீ உடையவருக்கு ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்த ப்ரமேய சாரம்

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம் -8–

December 10, 2015

மாரி மலை  –பூ பூவை அண்ணா -எம்பெருமானார்
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனது அடிப் போதில் ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி –
தாடீ பஞ்சகத்தில் -ஜை நேப கண்டீரவ –வலி மிக்க சீயம் –
-சம்சார துரத்தின மழை ஒழித்து -திவ்ய கடாஷா அமிருத மழை -உண்டாக்கக் கடவர் ஸ்ரீ ராமானுஜர்-
தர்ம ஸூ ஷ்மம் மலை முழிஞ்சு
வேரி மயிர் பொங்க–கம நீய சிகா நிவேசம் -சிகாய சேகரிணம் பதிம் யதீ நாம் -கன நற் சிகை முடியும் -சிகா பந்தம் பொங்கி இருக்கிறபடி
சீரிய சிங்காசனம் -பேத அபேத கடக ஸ்ருதி
உங்கள் புழக்கடை -நங்காய் நாணாதாய் நாவுடையாய்
பூர்ணர் -சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லையில்லா அற நெறி யாவும் தெரிந்தவன்
நாவுடையாய் -சரணாகதி கத்யம் அருளி –சகல விதைகளும் கமழும் படி
தங்கள் திருக்கோயில் -தங்கள் இல் திரு இல் கோ இல்
திருமந்தரம் தங்கள் இல் த்வயம் திரு இல் -சரம ச்லோஹம் கோ இல்
சங்கு இடுவான் -ரஹச்ய த்ரயார்த்தங்கள்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசி –ஆசை உடையோர்க்கு எல்லாம் –பேசி வரம்பு அறுத்தார்
சங்கோடு சக்கரம் -அப்பனுக்கு சங்காழி அளித்து அருளும் பெருமாள் – வாழியே
பங்கயக் கண்ணானை –கப்யாசம் புண்டரீகாஷம் –

இருக்கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசன் –பெரிய திருமொழி –6-6-8-அஷ்ட புயகரத்தான் -கோ செங்கணான் சோழன் -திரு நறையூர் கட்டின ஐதிகம் –

இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே ஆர் கொல் இச் சொல்லில் வல்லான்
வில்லார் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ —

தங்கள் அன்பாரத் தமது சொல்வலத்தால் தலைத் தலைச் சிறந்து பூசிப்ப –பெறுதற்கு அறிய பெரும் பாக்கியம் அன்றோ கோஷ்டிகளில் அன்வயிப்பது
வெண் சங்கு ஏந்திய கண்ணா நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம்
ஏதத் சாம காயன் நாஸ்தே -அங்கெ ஆழ்வார் அருளிச் செயல்கள் இங்கே –தெள்ளியீர் அனுபவம் இங்கே
-சீர் மலி பாடல் பத்தும் வல்லார் நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே –
கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறும் அன்பர் ஈட்டங்கள் தோறும் இருக்க ஆசை மிக வளர வேண்டும்
உனக்காகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ

சௌமித்ரி ரேவதீ சௌ ஸ்ரீ ராமானுஜ வரோ பயன்த்ருமுநீ
இத்யவதாரான் சதுர க்ருதவான் பணீந்திர ஏவம் பரம் —
இளைய பெருமாள் -நம்பி மூத்த பிரான் -இராமானுஜர் -மா முனிகள் -சதுர்த்தி -திருவனந்த ஆழ்வான்- சதுரன் என்றவாறு
லஷ்மீ பதேர் நியோகாத் த்வாதச ஜாதாஹி திவ்ய ஸூரிவரா
அச்ச த்ரியோதசீயம் மூர்த்திர் வரயோகி ரூபிணீ ரேஜே –13வது திருக்கோலம் –
ஜேஜேது நாதமுநிதாஸ் சதிர்தசீமத்ர ஜகதி குருபீடீம்
யோலங்க்ருத்ய விலஷண கீர்த்திர் விரராஜ ச வரவர யோகி –14 குரு ஸ்தானம் நாதமுனிகள் தொடங்கி

அத்விதீயம் –ந த்விதீயம் -அத்விதீயம் -வ்யுத்பத்தி தத் புருஷ சமாசம் -ந வித்யதே த்விதீயம் யஸ்ய -யஸ்மின் -பஹூவ்ரீஹி சமாசம்
ந –தத்சாத்ருச்யம் அபாவச் -ச ததன்யத்வம் ததல்பதா அப்ராசச்த்யம் விரோதச் ச நஞ்சர்த்தாஷ் ஷட் பிரகீர்திதா
-வியாகரண சாஸ்திரம் -உவமை , இல்லாமை -வேற்றுமை -சிறுமை -சிறப்பின்னை ,பகைமை –
இங்கே வேறானது ஒப்பானது மாறானது -கொண்டால் ப்ரஹ்மம் தவிர வேறு ஓன்று இல்லை அர்த்தம் தேறுமோ
அபாவம் இல்லாமை அர்த்தம் கொண்டால் -இரண்டாவது பொருள் இல்லாமை என்றால் விசேஷண பதம் ஆகாதே
பஹூவ்ரீஹிசமாசத்தைக் கொண்டால் -ப்ரஹ்ம அத்விதீயம் -ப்ரஹ்மத்துடன் சம்பந்தம் உள்ள இரண்டாவது வஸ்து இல்லை என்றதாகும்
ந தத் சமச் சாப்யதிகச்ச த்ருச்யதே –ஒப்பார் மிக்கார் இல்லை என்றதாகும்
பாதோச்ய விஸ்வா பூதானி த்ரிபாதாச்யம்ருதம் தவி –சர்வ பூதங்களையும் ஈஸ்வரனுடைய விபூதியில் ஏக தேசமாகச் சொல்லுகிறது –

யஸ்மாத் ஷரம் அதீதோஹம்–அதோஸ்மி லோகே வேதேச பிரதித புருஷோத்தம –ஸ்ரீ கீதை -15-18–
லோகே வேதேசே -லோகத்திலும் சாஸ்திரத்திலும் -சாதாராண அர்த்தம்
எம்பெருமானார் -வேதார்த்தா வலோக நாத் லோக இதி ச்ம்ருதிரி ஹோச்யதே -சிறுத்து ச்ம்ருதௌ ச இதி அர்த்த –
லோகம் -கரேண வ்யுத்பத்தியினால் சாஸ்திரம்
எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றே –உலகு சாஸ்திரம் -சாஸ்திர மரியாதை அழிந்து விடும் -தத்தத் கர்ம அனுரூபம் பலவிதரணத-தேசிகன்
ஸ்தோத்ர ரத்னம் -23 -ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே –ஆயிர மடங்கு என்னால் பண்ணப் படாததது யாதொரு நிந்தித்த தர்மம் உண்டு
அதி பாதக மகா பாதகாதாதிகள் அது சாஸ்திரத்திலும் இல்லை –அனுஷ்டாதாக்கள் பக்கல் இல்லாத நிஷித்தங்களும் சாஸ்த்ரத்தில் காணலாம் இ றே-
இங்கும் லோக சப்தம் சாஸ்திரம் என்றே கொண்டார்கள் –

அகில புவன ஜன்ம ச்தேம பங்கா தி லீலே –விநித விவித பூத வ்ராத ரஷைக தீஷே –
ஜகத் உத்பவஸ் திதி ப்ராணாச சம்சார விமோசன -ஸ்தோத்ர ரத்னம் -20-
பத்துடை யடிவர்க்கு எளியவன் –வீடாம் தெளிவரு நிலைமைய தொழிவிலன்–
அணைவது அரவணை மேல் -2-8- திருவாய் மொழியில் மோஷ பரதத்வம் தனியாக அருளிச் செய்தார்-

பிரமன் -மரீசி -கஸ்யபர் -விவஸ்வான் -மனுப்ரஜாபதி -இஷ்வாகு -குஷி -விருஷி -பாணர் -அனரண்யர் -ப்ருது -திரிசங்கு
-துந்துமாரன் -மாந்தாதா -ஸூ சந்து -துருவசந்தி ப்ரசேனசித்-பரதர் -அசிதர் -சகரன் -அசமஞ்சன் -திலீபன் -பகீரதர் -ககுத்ச்தர்
-ரகு -பிரவ்ருத்தன் -சங்கணன் -ஸூ தர்சனர் -அக்னி வர்ணர் -சீக்ரகர் -மரு -பிரசுஸ்ருகன் -அம்பரீஷன் -நஹூஷன் -யயாதி
-நாபாகர் -தசரதர் -சக்கரவர்த்தி திருமகன் -லவ குசர்கள் –

நிமி சக்ரவர்த்தி மூல புருஷர் –மிதி -மிதிலா -ஜனகர் -உதாவ ஸூ -நந்தி வர்த்தனர் -ஸூ கேது -தேவராதர் -ப்ருஹத் ரதர் -மஹா வீரர்
-ஸூ த்ருதி-த்ருஷ்ட கேது -ஹர்யச்வர் -மரு -பிரதிந்தகர் -தேவமீடர் -விபுதர் -மஹீத்ரகர் -கீர்த்திராதர் -மஹா ரோமர் -ஸ்வர்ண ரோமர்
-ஹரஸ்வ ரோமர் -ஜனகரும் குசத்வஜனும் திருக் குமாரர்கள் –
சாங்காச்யா நகர அரசன் ஸூ தன்வா போர் புரிய வர அவனை வென்று தம்பிக்கு அந்த அரசை கொடுத்தார் ஜனகர்
சீதா பிராட்டி -பெருமாள் /ஊர்மிளை தேவி ஸ்ரீ இளைய பெருமாளுக்கும் –குசத்வஜரின் பெண் -மாண்டவி தேவி -ஸ்ரீ பரத ஆழ்வானுக்கும்
ஸ்ருத கீர்த்தி தேவியை ஸ்ரீ சத்ருகன ஆழ்வானுக்கும் -பங்குனி உத்தரம் திருக் கல்யாணம்
இயம் சீதா மம ஸூ தா சஹ தர்ம சரீதவ ப்ரதீச்சை நாம் பத்ரம் தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணி நா —

குரும் பிரகாசயேத் தீமான் மந்த்ரம் யத் நேன கோபயேத் அப்ரகாச பிரகாசாப்யாம் ஷீயதே சம்பாதயுஷீ
திருக் கோஷ்டியூரில் -தண் தாமரை உடன் பிறந்த தண் தேன் நுகரா மண்டூகம் போலே மக்கள் இருக்க
உடையவரோ -வண்டே கானத்திடைப் பிறந்தும் வந்தே கமலமது உண்ணும் –
போற்றி உகப்பதும் புந்தியில் கொள்ளுவதும் சாற்றி வளர்ப்பதும் செய்து கொண்டு போந்தார்
யஸ்ய பதாம் போருஹ – பத அம்போருஹ-பதாம் போருஹ பஞ்ச ஆசார்யர்கள் -ஸ்ரீ -பராங்குச தாசாய நம-மற்ற பதங்கள் மற்ற ஆச்சார்யர்களைக் காட்டும்
வரவர முனியடி வணங்கும் ஆரியர் திருவடி இணைகள் என் சிரம் மேல் சேர்க்கவே

சமிதோதய சங்கராதி கர்வ ஸ்வ பலாத் உத்த்ருத யாதவ பிரகாச -அவிரோபிதவான் ச்ருதேர பார்த்தான் நநு ராமா வரஜஸ் ச ஏஷ பூய
-கண்ணபிரானுக்கும் எம்பெருமானாருக்கும் மூன்று வகைகளில் சாம்யம்

தேவபாடையினில் கதை செய்தவர் மூவரானவர் தம்முளும் முந்திய நாவினார் உரையின் படி நான் தமிழ் பாவினால் இது பாடிய பண்பரோ -கம்பர்

செப்புகின்ற பரத்வம் யானே என்னச் செப்புதி வேறு
ஒப்பிலாதாய் தரிசனமும் பேதம் என்றே யுரைத்திடுக
தப்பிலாத யுபாயமதும் பிரபத்தி என்றே சாற்றிடுக
அப்பபுகல்கவிவை யன்றி நினைவும் வேண்டா அந்திமத்தில்
இந்தச் சரீர அவதானம் தன்னில் இசையும் மோக்கமது
அந்தமில்லாக் குணத்தினன் உனக்கு ஆசாரியனும் பெரிய நம்பி
சிந்தையுள்ளே இவை எல்லாம் தெளிந்து நோக்கி இளையாழ்வான்
முந்த நினைத்தான் இவை இவையே மொழிந்து வருக போ என்றான்
அஹமேவ பரம் தத்வம் தர்சனம் பேத ஏவ ச
மோஷோபாய பிரபத்திஸ் சாத் அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம்
தேஹாவசா நே முக்திஸ் ஸ்யாத் பூர்ணாசார்யா சமாஸ்ரயா
வார்த்தா ஷட்கமிதம் லேபேகாஞ்சீ பூர்ண முகாத் குரு –உய்யுமாறு எண்ணி உகந்தேலோ ரெம்பாவாய் —

சடரி புரேக ஏவ கமலாபதி திவ்ய கவி
மதுரகவிர் யதா ச சடஜின் முனி முக்ய கவி
யதி குல புங்க வஸ்ய புவி ரங்க ஸூ தாக விராட்
வரவரயோகி நோ வரதராஜ கவிச் ச ததா –
ஸ்ரீ யபதியை நம்மாழ்வார் கவி பாடி அருளியது போலேயும் -அந்த நம் ஆழ்வாரை மதுரகவி ஆழ்வார் கவி பாடியது போலேயும் –
எம்பெருமானாரை திருவரங்கத்து அமுதனார் கவி பாடி அருளியது போலேயும்
மணவாள மா முநிகளைக் கவி பாடியவர்களுள் எறும்பி அப்பா சிறப்புப் பெற்றவர்

ஸ்ரீ ரெங்கம் ருதக விராஹ ரங்கி ப்ருத்ய தச்சிஷ்யோ யதிபதி வைபவ நு பந்தம்
அந்தாதி த்ரமிட கிரா மஹா ப்ரபந்தம் காதா நாம் அம்ருதமுசாம் யுதம் சதேக–கருட வாகன பண்டிதர் பணித்த திவ்ய ஸூ ரி சரிதம் -18-51-

அருளிச் செயல்களில் கண்ணன் பற்றிய ஆறு வார்த்தைகள்
1-வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் -திருவாய் மொழி –5-10-2-
2- நெய்யுண் வார்த்தையுள் உன்னைக் கோல் கொள்ள -திருவாய் – 5-10-3-
3-ஆய்ச்சியாகிய வன்னையால் யன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழு கூத்தப்பன் –6-2-11-
4-தேசம் அறிய வோர் சாரதியாய் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை -7-5-9-
5-செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பெரு வார்த்தை -நாச் திருமொழி -11-10-
6- கஞ்சன் கறுக் கொண்டு நின் மேல் கரு நிறச் செம்மயிர்ப் பேயை வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு -பெரியாழ்வார் -2-8-6-

பரத அக்ரூர மாருதிகளை பரிஷ்வங்கித்த-
நயாசலன் மெய்ந்நாவன் நாத யாமுநர் போல்வார் -ஒரு க்ரமம்
நளிர்ந்த சீலன் நயாசலன் அபிமான துங்கனை நாடொறும் தெளிந்த செல்வனை சேவகம் கொண்ட செங்கண் மால் திருக் கோட்டியூர்
-முதலில் செல்வ நம்பியை சொல்லி -அவர்க்கு சேஷ பூதரான –மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் என்னும் பெரியாழ்வாரைச் சொல்லி –
அவருக்கு சேஷ பூதரான நாத முனிகளையும் சொல்லி பின்னர் அவருக்கு சேஷபூதனரான யமுனைத் துறைவரை சொல்லிய க்ரமம்
இங்கே பரதனை விட அக்ரூரர் -அவரை விட மாருதி –உடன் பிறந்தவரை ஆலிங்கனம் செய்ததைச் சொல்லி
-அங்கே பரதம் ஆரோப்யம் உதித பரிஷச்வஜே -வெறும் பரிஷ்வங்கம்- சொல்லி
-பின்பு அக்ரூரரைச் சொல்லி –சம்ச்ப்ருச்ய ஆக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸூ காடம் பரிஷச்வஜே -ஆயிரம் மடங்கு சப்தத்தாலே உணரும் படி சொல்லி மேலே
வாதமா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி – ஏஷ சர்வஸ்வ பூதஸ் து பரிஷ்வங்கோ ஹ நூமத –பெருமாள் தாமே சொல்லிக் கொள்ளும் படி
-து சப்தம் திரு மேனியைக் கொடுத்த இது சர்வஸ் து பூதஸ்-அம்ருதாசிக்கு புல்லிட ஒண்ணாதே இ றே -சீரிய பரிஷ்வங்கம் -உத்தர உத்தர உத்கர்ஷம் சொல்லிற்று இத்தால்

கீழை யகத்து தீம்பு -கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி கீழை யகத்து தயிர் கடையக் கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று
கள்ள விழியை விழித்துப் புக்கு வண்டமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ வாண் முகம் வேர்ப்பச் செவ்வாய்த் துடிப்ப தண்டயிர் நீ
கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய்யறிவன் நானே –பெருமாள் திருமொழி -6-2-
நானும் உரைத்திலன் நந்தன் பணிந்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன் தானுமோர் கன்னியும் கீழையகத்து
தயிர் கடைகின்றான் போலும் -பெரிய திருமொழி -10-7-1—-கீழையகம் -கர்ம யோகத்துக்கு இட்ட சங்கேதம் —
பாலைக் கறந்து அடுப்பேற வைத்து பல்வளையாள் என் மகள் இருப்ப மேலை யகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது
அங்கே பேசி நின்றேன் -பெரியாழ்வார் -2-9-5-
காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன் மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால்
மற்று வந்தாரும் இல்லை மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் -பெரிய திருமொழி -10-7-2-
ஜ்ஞானாக் நிதக்த கர்மாணம் -ஸ்ரீ கீதை -4-19–ஜ்ஞானாக்நிஸ் சர்வ கர்மாணி பச்ம சாத்குருதே -ஸ்ரீ கீதை 4-37-
மேலையகம் ஞான யோகம் சம்ப்ரதாய சங்கேதம்
வடக்கிலகம் புக்கிருந்து மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த அன்பா யுன்னை
தெரிந்து கொண்டேன் -பெரியாழ்வார் -3-1-2–வேற்று உருவம் செய்து வைத்த வகையை
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக் கமலச் செவ்வாய் வெளுப்ப என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன்
என் செய்கேனோ -பெரிய திருமொழி -10-7-6-
தேஹம் விகாரம் அடைவது பக்தி யோக கார்யம் –வடக்கிலகம் -பக்தி யோகம் சம்ப்ரதாய சங்கேதம்
தென்னகத்து அகம்
சித்திர குத்தன் எழுத்தால் தென் புலக்கோன் பொறி யொற்றி வைத்த இலச்சினை மாற்றி தூதுவரோடி ஒளித்தார் -பெரியாழ்வார் -5-2-2–
தெற்கு பிரஸ்தாபம் பிரபத்தி யோக நிஷ்டர் பெருமை -பரிஹர மது சூதன பிரபன்னான் –

தீமை செய்யும் சிரீதரா –இரக்கமேல் ஒன்றும் இலாதாய் –மானமிலாப் பன்றியாம் தேசுடைய குறும்பு செய்வானோர் மகன் –
-பெண்ணின் வருத்தம் அறியாத பெருமாள் –அல்லல் விளைத்த பெருமான் –ஏலாப் பொய்கள் உரைப்பான் -தருமம் அறியாக் குறும்பன்
இவற்றைக் கேட்டதும் –செய்ய தாமரைக் கண்ணனாக ஆகிறான் -ஆயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்

புரா ஸூ த்ரைர் வியாச ஸ்ருதி சத சிரோர்த்தம் க்ரதிதவான் -விவவ்ரே தத் ஸ்ராவ்யம் வகுலதர தாமேத்ய ச புன –
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்தி ப்ரசௌ-பு நர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ச ப்ரஹ்ம முகுர –
ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த ஸ்லோஹம்
வியாசர் ப்ரஹ்ம ஸூ தரம் அருளி வேதாந்தார்த்தம் விளக்கினார் -அவரே நம்மாழ்வாராக திருவவதரித்து செவிக்கு இனிய செஞ்சொல் சாதித்து அருளினார்
இந்த உபய வேதாந்தாங்களையும் ஏக சாஸ்த்ரமாக்கி அருள அவரே ஸ்ரீ ராமானுஜராக திருவவதரித்து அருளினார் –

பால் குடிக்கும் களவுக்கு மாறு கொண்டே யொரு கோபி பற்றி அடிக்கும் பொழுதில் பதினாலு உலகும் அடி பட்டவே-
சூட்டும் கோவை யாழி என்கிற சாஷாத் க்ருத ஸ்வ பர வ்ருத்தாந்தர்க்கு -ஆசார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூ க்திகள் –
சௌலப்யத்தை கண்ட உக்தியாகவும் பரத்வத்தை வ்யங்க்யமாகவும் அருளிச் செய்கிறார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
எந்த நிலையிலும் சேதன அசேதன விசிஷ்டன் என்கிற விசிஷ்டாத்வதைத கொள்கையாலும் இங்கனம் அருளிச் செய்கிறார் –

வன்பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண்ணுய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய -துன்பமிகு துயர் அகல அயர்வு ஓன்று இல்லா சுகம் வளர
அகம் மகிழும் தொண்டர் வாழ அன்போடு தென்திசை நோக்கிப் பள்ளி கொள்ளும் அணி யரங்கன் திரு முற்றத் தடியார் தங்கள் இன்பமிகு
பெரும் குழுவு கண்டு யானும் இசைந்து உடனே என்று கொலோ இருக்கும் நாளே –
புவோ பூத்யைபூ பூஜாம் பூ ஸூ ராணாம் திவோ குப்தியை ஸ்ரேயசே தேவதா நாம் –ச்ரியை ராஜ்ஞாம் சோளவம்சோத் பவா நாம்
ஸ்ரீ மத் ரங்கம் சஹ்ய ஜாமா ஜகாம -புராண ஸ்லோஹம்

சதுர்முகனார் வேள்விதனைச் சதிர்கெடுக்கச் செறிந்தோடும் கதியுடைய வேகவதிக்கு அணையாக வந்துதித்தாய் -என்றும்
அணியாக வேகவதி அலையோடு கொண்டோடி ஆலிக்க அணையாக் கிடந்த களைப்போ  தானோ -என்றும் திரு வெக்கணை யதோத்தகாரி பெருமாள்

நௌமி நாத முனிம் நாம ஜீமுதம் பக்த்யவக்ரஹே -வைராக்ய பகவத் தத்வ ஜ்ஞான பக்த்யபி வர்ஷூகம் -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்
நமோ சிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே-நாதாய முனயே அகாத பகவத் பக்தி சிந்தவே –ஸ்தோத்ர ரத்னம்
இதம் அகிலதம கர்சனம் ந தர்சனம் நாதோ பஜ்ஞம் ப்ரவ்ருத்தம் -தேசிகன் –

நமாம்யஹம் திராவிட சாகரம் –என்ற படி திருவாய்மொழி ஒரு கடல் –ஜியாத் பராங்குச பயோதி –
நம்மாழ்வாரும் ஒரு கடல் -எம்பெருமானோ பெரும் புறக் கடல் -ஈடு -அப்ரமேய மஹோததி
பிரமாண ப்ரமாத்ரு பிரமேய வர்க்கம் எல்லாம் கடலாக உள்ளவையே –
சதுர்முக சமாக்க்யாபி சடகோப முநௌ ஸ்திதா ஸ்வ வாசா மாத்ரு துஹித்ரு சகீளாசா ச வர்ண நாத் —நம் ஆழ்வாருக்கும் நான்கு தசைகள் உண்டே –

ஸ்வாமித்வ ஆத்மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாத்யா ஸ்வாமிநோ குணா ஸ்வேப்யோ தாசத்வ தேஹத்வ சேஷத்வ ஸ்த்ரீத்வ தாயின –
தாசத்வ தேஹத்வ சேஷத்வங்கள் போலே ஸ்த்ரீத்வமும் ஸ்வாபாவிகம் –

நெறி வாசல் தானேயாய் நின்றான் -உபாய உபேயத்வ ததிஹ தவ தத்வம் ந து குனௌ-பட்டர் -உபாய உபய பாவங்கள் குணங்கள் அல்ல ஸ்வரூபம்
-அசாதாராண லஷணம் -சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் என்கண் மால் என்ற நாள் எந்நாளும் நாளாகும் –

ஹே கோபாலகா -பசு பிராயர்களான நம்மையும் -கோ வாக் -ஸ்ருதி ப்ரஹ்ம சூத்ரம்-யத் கோ சஹச்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம் – இவற்றையும் ரஷித்த ஸ்வாமி
ஹே க்ருபா ஜலந்தி -க்ருபா மாத்ர பிரசன்னாசார்யர் -பகவதோஸ்ய தயைக சிந்தோ
ஹே சிந்து கன்யாபதே -ஸ்ரீ யபதே -கைங்கர்ய ஸ்ரீ மிக்க ஸ்வாமி
ஹே கம்சாந்தக -கலியும் கெடும் –
ஹே கஜேந்திர கருணா பாரீண-ராமானுச முனி வேழம் -பெருகு மத வேழம் பாசுரம்
வாத்சல்யம் இரண்டு தடவை கத்யத்தில் அருளியது போலே இங்கும் கிருபா ஜலந்தி கருணா பாரீண
ஹே மாதவ –மது -சித்தரை மாசம் -மதுச் ச மாதவச் ச வாஸந்தி காவ்ருதூ -மதௌ ஜாத-மாதவ -சித்திரத் திங்களில் திருவவதரித்தவர்
ஹே ஜகத் த்ரய குரோ -தஸ்மின் ராமாநுஜார்ய குருரிதி ச பதம் பாதி நான்யத்ர
ஹே புண்டரீகாஷா -கம்பீராம்பஸ் -சமுத்பூத – ஸூ ம்ருஷ்ட நாள-ரவிகர விகசித -புண்டரீக தளா மலாயதே ஷண-
ஹே கோபி ஜன நாத -ஆழ்வான் ஆண்டான் அனந்தாழ்வான் ஆச்சான் போல்வர் கோபி ஜன ஸ்தாநீயர்கள்
ஹே ராமானுஜ –ராமஸ்ய அனுஜ-இளைய பெருமாளைப் போலே கைங்கர்ய சாம்ராஜ்ய துரந்தரர்-
ராம அனுஜ யஸ்ய -பர பாஷா பிரதிஷேபத்தில் பரசுராமனையும் பிற்பட்டவர் ஆக்குபவர்
ராமா அனுஜா யஸ்ய -பெரும் பூதூர் மா முனிக்கு பின்னானாள் வாழியே –

வல்லார்கள் வாழ்த்தும் குருகேசர் தம்மை மனத்து வைத்துச்
சொல்லார வாழ்த்தும் மணவாள நாயனார் தொண்டர் குழாம்
எல்லாம் தழைக்க எதிராச விம்சதி ஈன்று அளித்தோன்
புல்லார விந்தத் திருத் தாள் இரண்டையும் போற்று நெஞ்சே —

மா முனிகள் திருக் குமாரர் -இராமானுசப் பிள்ளை
இதுவோ பெரும்பூதூர் இங்கே பிறந்தோ எதிராசர் எம்மிடரைத் தீர்த்தார்
இதுவோ தான் தேங்கும் பொருநல் திரு நகரிக்கு ஒப்பான ஓங்கு புகழுடைய ஊர்
எந்தை எதிராசர் எம்மை எடுத்து அளிக்க வந்த பெரும் பூதூரில் வந்தோமோ
சிந்தை மருளோ தெருளோ மகிழ் மாலை மார்வன் அருளோ இப் பேற்றுக்கு அடி

திரு வெக்காவில் வியாக்யான முத்ரையோடே சேவை ஒரு சம்வத்சரம் ஸ்ரீ பாஷ்யம் சாதித்து அருளியதால்
போதச் சிவந்து பரிமளம் வீசிப் புதுக் கணித்த சீதக் கமலத்தை நீர் ஏற ஒட்டி சிறந்த அடியேன் ஏதத்தை மாற்று
மணவாள யோகி இனிமை தரும் பாதக் கமலங்கள் கண்டேன் எனக்குப் பயம் இல்லையே
பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ பூ கமழும் தாதார் மகிழ் மார்பன் தான் இவனோ தூதூர வந்த நெடுமாலோ
மணவாள மா முனிவன் எந்தை இவர் மூவரிலும் யார்
மாறன் மடலும் வெறி விலக்கும் மா முனி தன் தேறல் கமலைத் திருத் துதியும் ஊழி வரும்
கோபால விம்சதியும் வண்டுவரைக் கோனான கோபாலனுக்கான கூற்று
தீர்ப்பாரை யாமினியில் மாசறு சோதிப் பத்தில் சேர்ப்பன் தென் துவரைச் சீமானை -ஒர்ப்பன் எனச்
சொன்ன மணவாள மா முனியே தொல்லுலகில் இன்னம் ஒரு நூற்றாண்டு இரும் –

கர்த்தா சாஸ்த்ரார் த்வத் த்வாத் -என்கிறபடியே ஜீவனுக்கு கர்த்ருத்வம் ப்ராமாணிகமே யாகிலும் இது பராதீனமுமாய்
அல்ப விஷயமுமாய் பிரதிஹதி யோயமுமாய் இருக்கும் –ஆகையால் இவன் தான் உபாய அனுஷ்டானம் பண்ணிற்றும்
வரத தவ கலு பிரசாதாத்ருதே சரணமித வசோபி மே நோதியாத் -என்று சொல்லுகிறபடியே அவன் கடாஷம் அடியாக வருகையாலே
அவனாலே ப்ரேரிதனாய்-அவன் சஹகரியாத போது நீட்ட முடக்க மாட்டாதே அவன் கொடுத்த கரண களேபரங்களைக் கொண்டு
அவன் காட்டின உபாயத்தை அவன் துணை செய்ய அனுஷ்டித்து அவனால் கொடுக்கப் படுகிற பலத்துக்கு சாதகம் போலே அண்ணாந்து இருக்கிற இவனை
ஸ்வாதீன சர்வ விஷய அப்ரதிஹத கர்த்ருத்வம் உடையவன் உடைய துல்யமாக இரண்டாம் சித்த உபாயமாக எண்ணுகை விவேகியான முமுஷுவுக்கு உசிதம் அன்று
என் உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே என்றும் -இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே என்றும்
சொல்லுகிறபடியே உபாய பூதனான அவன் செய்விக்கச் செய்கிற வ்யாஜ மாதரத்தை அவனோடு ஒக்க உபாயமாக எண்ணுகை உசிதம் அன்று என்று
ஏக சப்தத்துக்கு தாத்பர்யம் என்றார் -தேசிகன் ரஹச்யத்ரய சாரம் -அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞாநினம் லப்த்வாத் -ஸ்ரீ பாஷ்ய திவ்ய ஸூக்திகள்-

கம்பீராம்பஸ் சமுத்பூத –
நீரார் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன் -சிறிய திருமடல் அழறலர் தாமரைக் கண்ணன் -திரு விருத்தம் -58-
தண் பெரு நீர்த் தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெரும் கண்ணன் -திருவாய்மொழி -பாசுரங்களைக் கொண்டே
ஸூ ம்ருஷ்ட நாள புண்டரீக –
எம்பிரான் தடம் கண்கள் –மென்கால் கமலத் தடம் போல் பொலிந்தன-மெல்லிய கால் -மெல்லிய நாளத்திலே இருக்கின்ற
ரவிகர விகசித புண்டரீக
அஞ்சுடர வெய்யோன் ——செஞ்சுடர் தாமரைக் கண் செல்வன் -திருவாய் -5-4-9-
செந்தண் கமலக் கண் –சிவந்த வாயோர் கரு நாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே -திருவாய்மொழி
செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோற்கு அல்லால் அலராவால் -பெருமாள் திருமொழி
புண்டரீக தளா மலாய தேஷணே
தள –அமல –ஆய்த -மூன்றையும் ஸ்வாமி சேர்த்து வைத்து அருளிச் செய்தது
தாமரைத் தடம் கண்ணன் –கமலத் தடம் கண்ணன் -கமலத் தடம் பெரும் கண்ணன் —என்பதால் தள -பத பிரயோகம்
நீலத் தடவரை போல் புண்டரீக நெடும் தடங்கள் போலே –எம்பிரான் கண்ணின் கோலங்களே –திருவிருத்தம்
கமலக் கண்கள் அமலங்களாக விழிக்கும்-சேர்த்து புண்டரீக தள அமல –ஈஷண
கரியாவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப் பெரியவாய கண்கள் –இதில் இருந்து ஆய —புண்டரீக ஆய தேஷண

அகில புவன ஜன்ம ச்தேம பங்காதி லீலே –விநத விவித பூத வ்ராக ரஷைக தீஷே
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே -6-10-11-
விநத -வணங்கின –விவித -பல வகைப் பட்ட –பூத வ்ராத -பிராணி சமூகங்களை –
தத் ஏவ காரணாத் -அஸ்து தே தயைவ சர்வம் சம்பத்ச்யதே — சம்பந்தி சம்பந்தி நிச்தரணம் அபி சர்வ சப்தா பிப்ரேதம்
ரஷா ஏக தீஷா-ரஷிப்பதையே முக்கியமான விரதமாகக் கொண்டவன்
எம்பெருமானார் சம்பந்தம் ஒன்றாலே நிர்ப்பரோ நிர்பயோஸ்மி
காக்கும் இயல்வினன் கண்ண பிரான் -வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -திருவடிகளை சேர்ந்தாரை காத்து அருளுவான் -ஸ்ரீ சடகோபனுக்கும் சேரும்
சுருதி சிரசி விதீப்தே -கங்குலும் பகலும் கண் துயிர் அறியாத ஆழ்வாருக்கும் சேருமே
சுருதி -திருவாய்மொழி -தீபத பதிகம் தோறும் குருகூர்ச் சடகோபன் விளங்குவதால் சுருதி சிரசி விதீப்தே
சுருதி சிரச் கண்ணி நுண் சிறுத் தாம்பு என்றுமாம் அதிலே விளங்கும் ஆழ்வார்
ப்ரஹ்மணி -யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவர் –
ஸ்ரீ நிவாசே -கைங்கர்ய ஸ்ரீ நிறைந்த ஆழ்வார்
பக்தி ரூபா சேமுஷீ பவது -பக்தி ரூபாபன்ன ஞானம் அருளப் பெற்ற
மம சர்வம் வா ஸூ தேவ -வா ஸூ தேவாஸ் சர்வமிதி ச மகாத்மா துர்லப இதி -ஆழ்வாரை ஸ்மரித்தே ஸ்ரீ பாஷ்யம் தலைக் கட்டி அருளுகிறார்

யத்பதாம் போருஹ-ஆறு எழுத்துக்களுக்கு வர்ண க்ரமம்
14- யகார -அகார -தகார பகார -அகார தகார -ஆகார மகார பகார ஓகார ரேப உகார ஹகார அகார – நம்மாழ்வார் /ஆளவந்தார் /பஞ்ச ஆசார்யர்கள்
யஸ்ய பதாம் போருஹ-யத்பதாம் போருஹ -ஆளவந்தார் திருமேனியில் உள்ள நம்மாழ்வார் –திருப் பாதாரவிந்தங்கள் சென்னிக்கு அணியாக பரிஹரித்த –
பத -சிஷ்யர்கள் அம்போருஹ-தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே -போலே -மண் விண் முழுதும் அளந்த ஓண் தாமரை
பதாம்போருஹ-ஸ்ரீ மத பராங்குச தாசர் பெரிய நம்பியை முதலிலே சொல்லிற்று –

ஆண் பிள்ளைகள் பர்த்தாக்களாய் சந்நிஹிதராய் இருக்க தூரச்தனான கிருஷ்ணன் பேரை சொல்லுவான் என்
எம்பார் -முன்பே வசிட்டன் -மஹத் யாபதி சம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவான் ஹரி –
பட்டர் -நாயகி கையைப் பிடித்து நாயகி செல்லும் கால் இடறினால் அம்மே-என்னக் கடவது காண்-என்று அருளிச் செய்தார்
த்ரௌபதி நூல் தங்கின படியும் மற்றையார் நூல் இழந்த படியும் -இவள் நூலுக்கு வாசி என் என்னில் –கோவிந்தா என்ற நாக்கு வேரூன்றின கழுத்துக்கு
ஓர் குண -நூல் -ஸூ த்ரம் -ஹானி இன்றிக்கே பிரதிஜ்ஞையாலே குழல் விரித்து இருக்கிற இவளை குழல் முடிப்பித்தவாறே அவர்கள் குழல் விரித்தார்கள்
நூல் வாசி இவளுக்கு உண்டாய்த்து கால் வாசி இருந்த படியாலே என்றபடி –அவன் காலைப் பற்றிய வாறே இவள் நூல் கழுத்திலே தங்கியது என்றபடி
இந்த்ரன் சிறுவன் தேர் முன்பு ரஷித்தான் கண்ணன் -பர்த்தாக்களும் பிதாவும் ரஷகர்கள் அல்ல என்கிறார்
சர்வ ரஷகன் அகார வாச்யன் -திருவல்லிக் கேணியிலே கண்டேன் என்கிறார்
ஆக இவள் நூலுக்கு வாசி கால் வாசியே -அவன் காலைப் பற்றி
நூல் -சாஸ்திரம் அதற்கு வாசி அவன் கால் வாசியே சரணாகதியே -திருவல்லிக் கேணியான் பிரமேய பூதன் -ஆழ்வார் பிரமாத -அருளிச் செயல் பிரமாணம்
இம் மூன்றுக்கும் பல்லாண்டு பாடுவதே ஸ்ரீ வைஷ்ணவ க்ருத்யம்

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம் -7–

December 9, 2015

பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாது –திண் கழலாக இருக்கும் –எம்பெருமான் கை விட்டாலும் விடாது
தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே
திருவாய் மொழி -9-7-9–தாம் அகல வேண்டில் தம்மை வைத்து அன்றோ போவது –இவ்வடிவைப் பிரிந்தார் பிழையார் என்று அறிய மாட்டாரோ
-தம்மைக் கண்ணாடி புறத்திலே கண்டு அறியாரோ -தம்மைப் பிறந்த தசைக்கு உதவுகைக்காக அன்றோ திரு மேனி உள்ளது –
திரு மேனியையும் கொண்டு அகலுகை தகாது என்று சொல்லுங்கோள் என்று சில புள்ளினங்களை இரக்கிறாள்
அலங்கார சாஸ்திரம் -தாத்பர்யத்தில் நோக்கு -என் நெஞ்சினாரும் ஒழிந்தார் போலே –
பொன்றச் சகடம் உதைத்தான் -கங்கை பிரவாஹம் வர உதவினான் -உத்தரை தன சிறுவனையும் உய்யக் கொண்டான்
தூது செல்லத் துணிந்தான் -என்று இது காறும் ஸ்ரீ பாதுகா தேவி பெருமாளைப் பிரியாமல் இருந்தாள்-
-ஸ்ரீ பரத ஆழ்வானை நிர் தாஷிண்யமாக வெறுத்து பிரிந்ததால் திருவடி உறவை வெட்டிப் போனாளாம் -தேசிகன்
மோஷ ப்ரதத்வம் அவனதே இருந்தாலும் கெடலில் ஆயிரத்துள் இவை பத்தும் கெடலில் வீடு செய்யும் -என்று திருவாய் மொழிக்கு
ஏறிட்டு சொல்வதும் உண்டே -இதே போலே தான் திரௌபதிக்கு வஸ்த்ரம் வளரச் செய்தது திரு நாம சங்கீர்த்தனமே -எம்பெருமான் அன்று என்று சொல்வதும்

சங்கு சக்ர கதா பாணே -த்வாரக நிலய அச்யுத கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் –
ரஷிக்கை யாவது விரோதியைப் போக்குகையும் அபேஷிதங்களைக் கொடுக்கையும் -இவளுக்கு வஸ்த்ர வர்த்தகமும் -சத்ரு சம்ஹாரமும் அபேஷிதம்-
இதில் வஸ்த்ர வர்த்தகம் முதலில் நடந்தது சத்ரு சம்ஹாரம் –துர் வர்க்கங்கள் திரள வேண்டும் -இவன் பாண்டிய தூதன் பார்த்த சாரதி பெயர் பெற வேண்டுமே
அர்ஜுனன் தோஷங்களை எல்லாம் ஷமித்தது இவள் பக்கலில் பஷபாதமே தான் காரணம்
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை
அப்பன் -சரணா கதையான திரௌபதிக்கு செய்த உபகாரம் தமக்குச் செய்ததாக நினைத்து அப்பன் -என்கிறார் ஆஸ்ரிதரிலே ஒருவருக்குச் செய்ததும்
தமக்குச் செய்ததாக நினைத்து இராத வன்று பகவத் சம்பந்தம் இல்லையாகக் கடவது இ றே
சங்கு சக்ர கதா பாணிம் –
பின்பு இவளுக்காக இ றே -கலங்கச் சங்கம் வாய் வைத்ததும் -ஆழி கொண்டு அன்று இரவி மறைத்ததும்
-கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லா சேனையும் இரு நிலத்து அவித்ததும்

பிறந்தவாறும் -ஆறு மாசம் மோஹிப்பர் -மேலே பிறப்பிலி என்னவும் சொல்வர் –
மீனாய் ஆமையுமாய் –கற்கியாம் -என்று அருளிச் செய்த உடனே இன்னம் கார் வண்ணனே -என்பர்
வர்ஷூக வளாஹகம் போலே இருக்கிறான் இத்தனை -வர்ஷித்தானாய் இருக்கிறான் அல்லன் -வண்ணன் -ஸ்வ பாவம்

கடலைக் கையாலே இறைக்கத் தொடங்கினான் -கழியின் பெருமையை கடலுக்கு சொல்லத் தொடங்கினான் –
வற் கலையின் உடையானை மாசடைந்த மெய்யானை நல் கலையின் மதியென்ன நகை இழந்த முகத்தானை கற்கன்னியக் கனிகின்ற
துயரானை கண்ணுற்றான் விற்கையின்றிடை வீழ விம்முற்று நின்று ஒழிந்தான் —ஆயிரம் ராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா
வால்மீகி -லஷ்மணன் மஹாத்மா -பரதன் அப்ரமேயன் –
தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் –வைதேஹி –ஐயர் வயிற்றில் பிறந்திலேன் ஆகில் நமக்கு இந்த பேறு இல்லை இ றே –
இக்குடியில் பிறந்திலேன் ஆகில் பெருமாள் என்னைக் கைப் பிடியாரே -இந்நிலத்தில் பிறந்திலேன் ஆகில் எனக்கு
இவ்வில்லோட்டை சௌ ப்ராத்ரம் கிடையாதே -தனுர் பங்க மாத்ரத்திலே என்னையும் தம்முடைய வம்சத்தையும் பெருமாளுக்கு அடிமையாக
எழுதிக் கொடுத்த ஐயர் இற்றை நாளை ஆகாரம் கண்டால் என்படுகிறாரோ -பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம் -என்கிறபடியே
சர்வலோகா கர்ஷகமான இந்நிலையை ஐயரை ஒழிய நான் காண்பதே என்று பித்ரு ஸ்ம்ருதி பண்ணுகிறாள் –

மனு ஸ்ம்ருதி -8-92-யமோ வைவஸ்வதோ ராஜா யஸ் தவைஷ
ஹ்ருதி ஸ்தித தேனஸேத் அவிவாதஸ் தே மாம் கங்காம் மா குரூன் கம –
சம்பந்தம் உணர்ந்தால் ஷேத்ரம் தீர்த்த வாசம் குருக்களை தேடி போக வேண்டாம்
த்வத் தாஸ்யம் அஸ்ய -சேஷ பூதன் -உன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாதே-மத் பக்த ஜன வாத்சல்யம் -அடியார் அடியார் –அடியோங்களே –

சடரிபு முனி ஸூ க்தி ஸ்ரீ மதாம் நாயவாசாம் அக்ருதகவநா நாஞ்ச அதி கல்யாண கோஷை -தென் மொழி வேத ஒலியும் வட மொழி வேத ஒலியும்
திருக் குடந்தை திரு மா மணி மண்டபத்திலே தான் அனுபவிக்க உரியதோ என்னில் -அன்று -இங்கு ஆராவமுதனை அனுபவித்து அங்கு திரு நாடு ஏறச் சென்றும் -ஆராவமுதம் அங்கு எய்தி -என்கிறபடி ஆராவமுதனின் அனுபவம் வாய்க்கும் போதும் இரு மொழி வேதங்களின் அனுபவமே-
ஆராவமுதமங்கு எய்தி -திரு நறையூர் இங்கே திருவாய்ப்பாடி இங்கேயாய் இருக்க ஆராவமுதம் அங்கே யாவது என்-என்கை-

மங்கை பாகன் சடையில் வைத்த கங்கை யார் பதத்து நீர்
வணசமேவு முனிவனுக்கு மைந்தனானது இல்லையோ
செங்கையால் இரந்தவன்கபாலம் ஆர் அகற்றினார்
செய்ய தாளின் மலர் அரன் சிரத்திலானது இல்லையோ
வெங்கண் வேழம் மூலம் என்ன வந்தது உங்கள் தேவனோ
வீறு வாணன் அமரில் அன்று விறல் அழித்தது இல்லையோ
அங்கண் ஞாலம் உண்ட போது வெள்ளி வெற்பு அகன்றதோ
ஆதலால் அரங்கன் அன்றி வேறு தெய்வம் இல்லையே –பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் –

காசும் பிறப்பும் —கல கலப்ப கை பேர்த்து – -ஆபரணத் த்வனி சொல்ல வில்லை-
கீசு கீசு என்ற ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவமும் – தயிர் அரவம் —
உத்காயதீ நாம் அரவிந்த லோசனம் வ்ரஜாங்க நாநாம் திவமஸ் ப்ருசத் த்வனி தத் நச்ச நிர்மந்தன சப்த
மிச்ரிதோ நிரச்யதே யேன திசாம் அமங்களம்-ஸ்ரீ மத் பாகவதம் -ஆபரண த்வனிகளையும் சொல்லும்
வ்யாக்யானத்திலும் கண்ணன் திருக்கண் அழகில் ஈடுபட்டு பாடுவதாக சொல்வ
காசமும் பிறப்பும் கல கலப்ப கேட்டிலையா -வாச நறும் குழல் ஆய்ச்சியர் அரவம் கேட்டிலையோ –
தயிர் அரவம் இல்லாமல் தயிர் அரவவும் -என்று திருத்தி சிலர் சொல்வர் பேச்சரவம் சொல்லாமல் பேச்சரவும் -என்று உம்மைத் தொகை வைத்து சொல்லுவர்
யோக விபாகாத் இஷ்ட சித்தி
பையுடை நாகப் பகைக் கொடி யானுக்கு பல்லாண்டு கூறுவனே -பையுடை நாகத்தானுக்கு பல்லாண்டு -என்றும் சொல்லலாமோ
காவலில் புலனை வைத்து -இந்த்ரியங்களை காவல் இல்லாத படி வைத்து

தஞ்சமாகிய தந்தை –
1- தந்தை -ஸ பித்ரா ஸ பரித்யக்த -ஆபத் காலங்களில் கை விடும் தந்தை
2-ஆகிய தந்தை -சம்வார பந்த ஸ்திதி மோஷ ஹேது
3- தஞ்சமாகிய தந்தை -ஆசார்யன்
ஸ்ரீ மன் நாராயணன் நம் போன்ற சேதனர்களை பரம கிருபையினாலே ரஷித்து அருளும் பொருட்டுத் திருப் பாற் கடலின் நின்றும்
வாஸூ தேவருடைய புதல்வராய் வட மதுரையிலே அவதரித்து அருளினான் -ஏழு வேற்றுமைகள்

காதல் அன்பு வேட்கை அவா -அவஸ்தா பேதம்
காதல் -கண்டதும் வந்த ஆசை -சங்கம்
சங்காத் சந்ஜாயதே காம -அனுபவித்து அல்லது நிற்க ஒண்ணாத ஆசை -அன்பு -வேட்கை அனுராகம்

முனிவரை இடுக்கியும் முந்நீர் வண்ணனாகவும் வெளியிட்ட சாஸ்திர தாத்பர்யங்கள் –சகல சாஸ்திர தாத்பர்யம் ரகஸ்ய த்ரயம்
நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே

ஸூக்ரீவம் சரணம் கத -என்றத்தை நடத்தப் பார்த்தார் மஹா ராஜர்
ராகவம் சரணம் கத என்றத்தை நடத்தப் பார்த்தார் பெருமாள் –பட்டர் -இத்தை அடி ஒற்றியே
ஆதலான் அபயம் என்ற பொழுதத்தே அபயதானம் ஈதலே கடப்பாடு எனபது இயம்பினீர் என்பால் வைத்த
காதலால் இனி வேறு என்னக்  கடவது என் கதிரோன் மைந்தா கோதிலாதவனை நீயே என் வில் கொணர்தி என்றான் -கம்பர்

துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் -பெரிய திருமொழி -3-8-8- துளைகள் நிரந்த புல்லாங்குழல் –
குழல் சொல்லால் கூறப்படும் குழலை உடைய ஆய்ச்சியர் என்றபடி –

பத்மே தவன் நயனே ஸ்மராமி சததம் பாவோ பவத் குந்தலே
நீலே முஹ்யதி கிம் கரோமி மஹிதை க்ரீ தோஸ்மி தே விப்ரமை
இதயத் ஸ்வப் நவசோ நிசம்ய ஸ்ரூஷோ நிர்பர்த்சிதோ ராதயா
கிருஷ்ணஸ் தத் பரமேவ தத் வ்யபதிசன் க்ரீடாவிட பாது வ —

பத்மா நீலா மஹீ--ஸ்ரீ தேவி பூமா தேவி நீளா தேவி -சம்போதனமாக ராதையையே அருளிச் செய்த படி
பத்மே தவன் நயனே ஸ்மராமி -உன் கண்களை தாமரைகளாகவே எண்ணுகிறேன்
சததம் பாவோ பவத் குந்தலே நீலே முஹ்யதி -கரு நிறத்தான உனது கூந்தலிலேயே என் சிந்தனை
கிம் கரோமி மஹிதை க்ரீ தோஸ்மி தே விப்ரமை-உனது விலாசங்களால் நான் விலைக்கு வாங்கப் பட்டேன் -என்றபடி

உடைமையை உடையவன் சென்று கைக் கொள்ளுமா போலே ஸ்வாமியான அவன் தானே வந்து அங்கீ கரிக்கக் கண்டு இருக்கக் கடவ
பரதந்த்ரனான இச் சேதனனானவன்-தான் பலியாய் தன சவீ காரத்தால் ஸ்வ தந்த்ரனான அவனைப் பெற நினைக்குமாகில் அவன் நினைவு
கூடாதாகில் இப்படி விலஷணையாய் இருக்கிற பிரபத்தியும் தத் லாப சாதனம் ஆகாது என்றபடி –ஸ்வாமியே ஸ்வ தந்த்ரனான அவன்
ஸ்வ மமாய் பரதந்த்ரனனாய் இருக்கிற இவனை ஸ்வ இச்சையால் பெற நினைக்கும் அளவில் பாதகமும் ப்ரதிபந்தகம் ஆகமாட்டாது என்கை-
இவை இரண்டாலும் ஸ்வ கத ச்வீகார அனுபாயத்வமும் பரகத சவீ கார உபாயத்வமும் காட்டப் பட்டது
தத் வியோகம சஹமாக அஹமேவ தம் வ்ருணே –தானே வரிப்பதையும்
மத ப்ராப்த்ய அனுகுண உபாசன விபாகம் அஹமேவ ததாமீத்யர்த்த -ஸ்வ கத ச்வீகார பற்றாசை நன்றாக கழித்து
ஸ்ரீ கீதா பாஷ்ய ஸ்ரீ ஸூக்திகளையே மா முனிகள் தமிழில் அருளிச் செய்தவை –

அநந்த குண சாகரம் -அபரிமித குண உதார குண சாகரம் ப்ரஹ்ம வேதாந்த வேத்ய மித்யுக்தம் -எம்பெருமான் குணங்களுக்கு கடலாகவும்
–குணங்களை கடலாகவும் மிகும் திருமால் சீர்க்கடலை யுள் பொதிந்த சிந்தையேன் -பெரிய திருவந்தாதி -69-
பூண்ட நீள் சீர்க்கடலை யுட்கொண்டு –ஆகாத பகவத் பக்தி சிந்தவே –பக்திம் வா சிந்துன் வேத ரூபயித்வா பஹூ வ்ரீஹி –
அகாதகமான பகவத் பக்தி சாகரத்தை உடையவர் -காதல் கடல் புரைய விளைவித்த -5-3-4–பக்தியைக் கடலாக அருளிச் செய்தார் இறே

இலவசம்-இலைவசம் -வெற்றிலையில் வைத்து இனாமாகக் கொடுப்பது -கையடைக்காயும் -அடைக்காய் திருத்தி வைத்து நான் வைத்தேன் –
மறுதாரை -மடிசார் –

எம் பார் -எம்முடைய பார் –யாம் தங்கும் இடம் -மத விசரமஸ்தலீ -ராமானுஜ பதச்சாயை –என்பதால் -பட்டர் தனியன் சாத்தி அருளி உள்ளார்

முதல் நாள் காலை திருப்பல்லாண்டு தொடக்கம் கேட்டு அருள்வதாக வாகன ஆரோஹணம் தவிர்த்து -தேவ பெருமாள்-
சேவை சாதிக்கும் க்ரமம்
மாலை –என் தொண்டை வாய் சிங்கம் வா –சிம்ஹ வாஹனம்
இரண்டாம் நாள் காலை -ஹம்ச -வாஹனம் -ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன்-மறை யாங்கு என உரைத்த மாலை -பின்னுலகினில் பேர் இருள் நீங்க அன்னமதானானே
அன்று மாலை -சூர்ய பிரபை -அரவணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாய்–இன்னும் உச்சி கொண்டதாலோ –சூர்ய உதய பிரஸ்தாபம் உண்டே
மூன்றாம் நாள் காலை -மூன்றாம் திருவந்தாதி –பொலிந்த கருடன் மேல் கொண்ட கரியான் கழலே —கருட வாகன சேவை
அன்று இரவு -பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்தில் -அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடி –சீராரும் திறல் அனுமன்
தெரிந்து உரைத்த அடையாளம் –சிறிய திருவடி வாகன சேவை –
நான்காம் நாள் காலை -நான்முகன் திருவந்தாதி -ஆங்காரவாரமது கேட்டு அழல் உமிழும் பூங்காரரவணையான்-என்றும் -விரித்து உரைத்த வென் நாகத்துன்னை –வைகுந்தச் செல்வனார் சேவடி மேல் —சேஷ வாகன பரமபத நாதன் திருக்கோலம்
அன்று இரவு -பெரியாழ்வார் நான்காம் பத்து -நளிர் மா மதியைச் செஞ்சுடர் நாவளைக்கும் -சந்த்ரனுடைய பிரஸ்தாபம் சந்திர பிரபை வாகன சேவை
ஐந்தாம் நாள் காலை -திருவிருத்தம் -சேவை –நாச்சியார் தன்மையில் அருளிச் செய்தலால் –நாச்சியார் திருக் கோலம் அன்று இரவில்
-திரு விருத்தம் –நாச்சியார் திரு விருத்தம் என்றபடி -அன்று இரவில் யாளி வாகன சேவை -யாளி பற்றிய பாசுரங்கள்
-நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும் –செங்கண் ஆளி இட்டு இறைஞ்சும் —
இரவில் -கண்டம் என்னும் கடி நகர் பாசுரங்கள் திருமால் இரும் சோலை சென்னி யோங்கு திருவேங்கடமுடையான் பாசுரங்கள் சேவை –
இதனால் யாளி வாகன சேவை -அன்று இரவு
ஆறாம் நாள் காலை -திருச் சந்த விருத்தம் -ஆயனாய மாயனே -ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் –
ஆனை காத்து ஓர் ஆனை கொன்று -ஆதியாகி ஆயனாய –
என்பதால் கோபால கிருஷ்ணன் திருக்கோலம்
அன்று இரவு யானை வாஹனம் -நாச்சார் திருமொழி -மங்கல வீதி வலம் செய்து –அங்கு ஆனை மேல் -குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
சூர்ணாபிஷேகம் -அன்று காலை வைதிகச் சடங்கு
ஏழாம் நாள் திருத் தேர் -திரு வெழு கூற்று இருக்கை -திருத் தேர் நிலைக்கு வந்த பின்பு சன்னதிக்கு எழுந்து அருளும் பொழுது திருமடல்
-நாச்சியார் திருமொழி சேஷம் சேவை -கற்பூரம் நாறுமோ -சேவித்து முடிப்பார்கள்
அதில் செங்கண் மால் தன்னுடைய வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் –-அன்று இரவு திருப் பாய்ந்தாடித் திரு மஞ்சனம் -அன்று இரவு
பெரிய திருமொழி தொடக்கம் ஆடல் மா வலவன் கலிகன்றிக்காக அன்று குதிரை வாஹனம் –ஒன்பதாம் நாள் காலை மட்டையடி உத்சவம்
மறுநாள் திருவாய்மொழி கேட்டருள பன்னிரண்டு திருவாராதனங்கள் -இரவு ராமானுச நூற்றந்தாதி
தினப்படியே திவ்ய பிரபந்தம் சேவை சாதித்து அருளுவான் தேவப் பெருமாள்

பங்க திக் தஸ்து ஜடிலோ பரதஸ் த்வாம் ப்ரதீஷதே –சேறு பூசப் பெற்ற பரதன் -சடை புனைந்து ஸ்நானம் செய்யாததால் –
-மண் தரையிலே சயநிப்பவன் -கங்குலும் பகலும் கண் துயில் அறியாமல் கண்ண நீர் கைகளால் இறைப்பதால் தான்
கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர்

தேவராய்த் தேவர்க்கும் தெரியாத ஒளி உருவாய் மூவராய் மூவர்க்குள் முதல்வனாய் நின்றோய் நீ
போற்றுவார் போற்றுவது உன் புகழ்ப் பொருளே யாதலினால் வேற்று வாசகம் அடியேன் விளம்புமாறு அறியேனால்
பணித்தடங்கா திமையவர்க்கும் பல பல நல முனிவர்க்கும் பணித்தடங்கா புகழ் அடியேன் பணித்தடம் கற்பாலதோ
யாம் கடவும் என்று இருக்கும் எவ்வுலகில் கடவுளர்க்கும் ஆம் கடவுள் நீ என்றால் அஃது உனக்கு வியப்பாமோ
கருதரிய யுயிர்க்கு உயிராய் கரந்து எங்கும் பரந்து உறையும் ஒரு தனி நாயகம் என்றால் உன் பெருமைக்கு அளவாகுமோ
அனைத்துலகும் அனைத்து உயிரும் அமைத்து அளித்து துடைப்பது நீ நினைத்த விளையாட்டு என்றால் நின் பெருமைக்கு அளவாகுமோ —

அயோதியை மதுரை மாயை கச்சி காஞ்சி உஜ்ஜயினி த்வாராகை –

ஆனது செம்மை யற நெறி பொய்ம்மை யறு சமயம் போனது பொன்றி யிறந்த்து வெங்கலி –பூம் கமலத் தேனதி பாய் வயல்
தென்னரங்கன் கழல் சென்னி வைத்து தானதில் மன்னும் இராமானுசன் இத்தலத்துதித்தே
வயலில் -ஜீவனுக்கு நெல் -ஜீவனத்துக்கு -வேதாந்தம் உஜ்ஜீவனத்துக்கு -எம்பெருமானார் நியமித்த சிம்ஹாசனாதிபதிகள் வயல் ஸ்தானம்
கோயிலைச் சுற்றி வாழ்பவர்கள் -தாமரைப் பூக்கள் மலிந்து இருப்பது போலே
-தஹரம் விபாப்மம் பரவேச்ம பூதம் யத் புண்டரீகம் புரமத்த்யஸமஸ்தம்-என்றும் போதில் கமல வன்னெஞ்சம் -என்றும்
பக்தா நாம் யத் வபுஷி தஹரம் பண்டிதம் புண்டரீகம் -என்றும்
சொல்லப்படும் ஹிருதய புண்டரீகம் மலர்ந்து திவ்யார்த்தங்கள் என்னும் தேன் அமுத வெள்ளம் பெருகா நிற்கும்
நம் போன்ற சிஷ்யர்கள் -கமலத்தேன் வெள்ளத்தை வண்டுகள் பருகிக் களிக்கும்-போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு –
-திவ்யார்த்த அமிருத பிரவாஹத்தை ஆச்வாதனம் பண்ணி ஆனந்திக்க குறை இல்லை –

ஸ்ரிய ஸ்ரியம் பக்த ஜநகை ஜீவிதம் – சமர்த்தம் -ஸ்தோத்ர ரத்னம் -45-அளவுடையரான நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும் தன்னை
நித்ய சம்சாரிகள் அனுபவிக்கும் இடத்தில் ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை -என்கிறபடியே சாத்மிக்க சாத்மிக்க அனுபவிப்பிக்கும்
சாமர்த்தியத்தை உடைய உன்னை -இவையும் அவையும் -1-9- திருவாய் மொழியில் காட்டி அருளிய குண விசேஷம்
விபு மனு புபஜே சாத்ம்ய போக ப்ரதா நாத் –
ஜான வைராக்ய ராசி -ஜான ராசி வைராக்ய ராசி -சமூஹங்கள்
பக்த ஜநகை ஜீவிதம் -ஆதமைக மே மதம் போலே இவனுக்கு ஜீவிதம் பக்தர்கள் பக்தர்களுக்கு ஜீவிதம் அவன் என்றுமாம்
தேசிகன் பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் படியே அருளிச் செய்கிறார்

வசீ வதந்யோ குணவான் –12 திருக் கல்யாண குணங்களையும் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த படியே தேசிகனும் அருளிச் செய்கிறார்
அவ போதிதவான் இமாம் யதா -54– இமாம் -இந்த -அர்த்தம் சாதாரணமாம் – சேஷத்வத்திலே இனிமையாலே கொண்டாடுகிறார் –

இதி பகவத் ராமானுஜ விரசிதே சாரீரக மீமாம்ச பாஷ்யே சதுர்த்தஸ் யாத்யா யாஸ்ய சதுர்த்த பாத சமாப்தச் சாத்யாய சாஸ்த்ரஞ்ச பரி சமாப்தம் –ஸ்ரீ பாஷ்யம் –
ஸ்வாமி தம் பேரை சொல்லிக் கொள்ள மாட்டாரே -கூரத் ஆழ்வான்- ஏறி அருளப் பண்ணினது அன்றோ –
இதி சர்வம் சமஞ்சசம் -மட்டும் அனுசந்திக்காமல் கூரத் ஆழ்வான் பணித்தவை என்று முழுவதையுமே அனுசந்திக்க வேண்டும்

மண்ணோர் விண்ணோர் வைப்பில் -ஆசார்ய ஹிருதயம் -சிலர் வெற்பில் -என்ற பாட பேதம் கொள்வர் –தண்ணார் வேங்கட
விண்ணோர் வெற்பனே -என்ற பாசுரத்தை மனசில் கொண்டு –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு
இரண்டு பாசுரங்களையும் மா முனிகள் காட்டி அருளியதால் வைப்பு பாடமே சேரும்
உபய விபூதிக்கும் நிதியான திருமலையிலே -என்று மூலத்தின் மீது அர்த்தமும் விளங்க அருளிச் செய்துள்ளார்
வைப்பு உயிரான வாசகம்
ஆழ்வார் 28 திவ்ய தேசம் மங்களா சாசனங்கள் –முதல் நான்கு கோயில் திருமலை திருக் குருகூர் திருக் குறுங்குடி பர வ்யூஹ விபவ அந்தர்யாமி
குணங்கள் காட்டுவதாகவும் மற்ற 24 திவ்ய தேசங்களும் சாதாரண குணங்கள் விளக்குவதாகவும் மூல காரர் திரு உள்ளம்
கோயில் -வ்யூஹ குணம் -/ திருமலை -அந்தர்யாமி குணம் / திருக் குருகூர் -பர வாஸூ தேவம் -/-திருக் குறுங்குடி விபவ குணம் –

கோயில் –இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற திருவாளன் திருப்பதி -திருக்கண்கள் வளர்கின்ற -என்பதால் வ்யூஹ ஸ்தாநீத்வம்-
வ்யூஹ குணமான சௌஹார்த்தம்திருக் குருகூர் -பரத்வ ஸ்தாநீயம்-ஆதிப்பிரானவன் மேவி யுறை கோயில் –பரே சப்தம் பொலியும்
திருக் குறுங்குடி -விபவ ஸ்தாநீயம் -வைஷ்ணவ வாமனத்தில் விபவ குணமான லாவண்யம் பூர்ணம் –
திருமலைஅந்தர்யாமி ஸ்தாநீயம் -நிதி -வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு –தோஷ பூயிஷ்டமான இடங்களில் எல்லாம் உள்ளிருந்து
கிடப்பது தோஷ போக்யத்வ கார்யம் –நிகரில் புகழாய வாத்சல்யம் ஜ்வலிக்கும் -இதனாலே வைப்பு என்ற சொல் உயிரானது-

ச்ரம மனம் சூழும் சுகுமார்யா பிரகாசம் ஆய்ச் சேரியிலே –173-பாடம் அச்சேரியிலே தப்பாக
ஆழ்வாருடைய திருத் தாயாரான உடைய நங்கையார்க்கு பிறந்தகம் ஆகையாலே ஆய்ச்சேரியான திரு வண் பரிசாரத்திலே -மா முனிகள்
துலை வில்லி மங்கலம்-அவ் ஊரிலே த்விகுணம்-அவ் ஊர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே –
அங்குதான் அவ் ஊர்-அச்சேரி – பொருந்தும் இங்கு ஆய்ச்சேரி சரியான பாடம்

156- சூர்ணிகை –தம் பிழையும்நம் பிழையும் என்று தப்பாக பாடம் -ஆழ்வார் தூது விடும் பொழுது தம் பிழையை சொல்லிக் கொள்வதால் –
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு –

ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை –-இன்னார் என்று அறியேன் அன்னே–இவரார் கொல் –
அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே நிச்சயிக்க ஒண்ணாத படி இ றே விஷய ஸ்வ பாவம் –
முகம் பார்த்து நீர் யார் கொல் கேட்க முடியாமல் –அட்ட புயகரத்தேன் -அஷ்ட புஜ ஷேத்ரத்துக்கு அதிபதி -ஷேத்ரத்தில் கிடப்பான் ஒருவன் –

அஸ்து தே தயைவ சர்வம் சம்பத்ஸ் யதே –அஸ்து தே -முதல் வாக்யமே போதுமே –மேலே தயைவ சம்பத்ஸ் யதே -என்றும் சர்வம் சம்பத்ஸ் யதே –
பேறு உமக்கு மாத்ரம் அன்று -உம்மோடு அவ்யஹித சம்பந்தம் பெற்ற சாஷாத் சிஷ்யர்களுக்கு மாத்ரம் அன்று -சம்பந்தி சம்பந்திகள் என்னும் படியான பரம்பரா சம்பந்திகளுக்குமாகக் கடவது -சம்பந்தி சம்பந்தி நிஸ்தரணம் அபி —
இதையே மா முனிகள் -காலத்ரயேபி —ஷேமஸ் ச ஏவ ஹி யதீந்திர பவச்சிரிதா நாம் –
அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் —பிடித்தார் பிடித்தார் பிடித்து இருந்து பெரிய வானுள் நிலாவுவரே
தேசிகன் -பாதுகா சஹஸ்ரத்தில் -திராவிட உபநிஷத் அந்நிவேச சூன்யான் அபி லஷ்மீ ரமணாய ரோசயிஷ்யன் –
தருவமாவிச திஸ்ம பாதுகாத்மா சடகோபஸ் ஸ்வ யமேவ மா நநீய
அனைவருக்கும் திருவாய்மொழியில் அந்வயம் ஆவதற்கே சடாரி யாகி கைக்கொண்டு அருளுகிறான் -என்கிறார்
விதீர்ணம் வரம் ச்ருத்வா -அரங்கன் லஷ்மண முனிக்கு கொடுத்த அனுக்ரஹம்
பத்யுஸ் சம்யமி நாம் ப்ரணம்ய சரனௌ தத் பாத கோடீரயோ
சம்பந்தேன சமித்யமா நவிபாவன் தன்யான் ததான்யான் குரூன்
கோடீரம் திருமுடி சம்பந்தம் -தத் பாத கோடீரேயோ –திருவடி திருமுடி சம்பந்தத்தால் -ச்ருத்வா -கர்ண பரம்பரையாக வந்த விஷயம்
துடுப்பு இருக்க கை வேக வேணுமோ -கிடாம்பி யாச்சான் -முன்னோர்களே ஸ்ரீ ராமானுஜர்க்கு அரங்கன் கொடுத்த வரம் இப்படிப் பட்டது
என்பதை சொல்லிய பின்பு நாம் ஆராய வேண்டுமோ
சம்பந்த சம்பந்திகள் அளவும் பாடும் படி இருகரையும் அழிக்கும் படி கிருபா பிரவாகம் கொண்டவன் –
ஒரு மலையில் நின்றும் ஒரு மலைக்குத் தாவும் சிம்ஹ சரீரத்தில் ஜந்துக்களைப் போலே பாஷ்யகாரர் சம்சாராதி லங்கனம் பண்ண
அவரோடு உண்டான குடல் துவக்காலே நாம் உத்தீர்னர் ஆவுதோம் -முதலியாண்டான் –
லஷ்மீ பதேர் யதி பதேச்ச தயை கதாம் தோர் யோ சௌ புரா சமஜநிஷ்ட ஜகத்திதார்த்தம் ப்ராச்யம் பிரகாசயது ந பரமம் ரஹச்யம் சம்வாத ஏஷ சரணாகதி மந்த்ரசார –

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ்வுயிர்க்கும் –சிற்ற வேண்டாம் சிந்திப்பே அமையும்
-வேறு வக்தவ்யம் இல்லாதபடி சம்ஷேபண ஆத்மா உஜ்ஜீவன உபாயத்தை எல்லார்க்கும் சொன்னோம் –
இதுக்கு அதிகாரி நியமமும் கால நியமமும் தேச நியமமும் இல்லை இவ் உபாயம் தானும் துஷ்கரம் என்று குறைவு பாடவும் வேண்டா -ஸ்ம்ருதி மாத்ரமே அமையும் –
அபராதங்களை செய்து கொண்டே போந்தவன் ஒரு நாளிலே கை சலித்து கை ஒழிந்து நின்றான் ஆகில் அந்த விராமம் தானே பற்றாசாக ஷமித்து அருளுகிறபடி
-வ்யாஜ மாத்திர சாபேஷனுக்கு இவ்வளவு போதும் அன்றோ —ஏவம் சதா சகல ஜன்ம ஸூ சாபராதம் ஷாம்யஸ்யஹோ திதபிசந்தி விராமமாத்ராத் —
மானஸ அனுஷ்டானமே வேண்டுவது -உபாய ச்வீகாரம் சொல்லுகிறது

விநத விவித பூத வ்ராத ரஷைக தீஷே —
வி நத ரஷா பதாப்யாம் த்ருதீய சதுர்த்தாத்யா யார்த்தௌ சம்ஷிப்தௌ -ஏவம் ஜகத் காரணத்வ மோஷ பிரதத்வே கதிதே
-ஏதே ஹி ராஜ்ஞஸ் சத்ரசாமரவத் ப்ரஹ்மண அசாதாரண சிஹ்னம் -சுருதி பிரகாசர் ஸ்ரீ ஸூ க்திகள்
சத்திர சாமராதிகள் போலே லஷணமாகச் சொன்ன ஜகத் காரணத்வ மோஷ ப்ரதத்வ சர்வ ஆதாரத்வ சர்வ நியந்த்ருத்வ சர்வ சேஷித்வ
சர்வ சரீரத்வ சர்வ சப்த வாச்யத்வ சர்வ வேத வேத்யத்ய சர்வ லோக சரண்யத்வ சர்வ முமுஷூ பாச்யத்வ சர்வ பல ப்ரதத்வ சர்வ வ்யாப்த
ஜ்ஞானந்த ஸ்வரூபத்வ லஷ்மீ சஹாயத்வாதிகள் -பிரதி நியதங்கள் –

கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல் தூங்கு பொன் மாலைகளோடு உடனாய்நின்று தூங்குகின்றேன்
தாமஸ புருஷர்கள் புகும் தேசம் அன்று –சாத்விகர் இது கொண்டு கார்யம் கொள்ளார்கள் -பெரியாழ்வார் வயிற்றில் பிறந்து
பகவத் அர்ஹமான வஸ்து இங்கனே இழந்து இருந்து க்லேசப்படுவதே –

மென் மலர் மேல் களியா வண்டு கள் உண்ணக் காமர் தென்றல் அலர் தூற்ற நளிர் வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் -பெரியாழ்வார் திருமொழி -6-7-4-
அலர் தூற்றுதல் -புஷ்பம் தூற்றுதல் பலி தூற்றுதல் –வண்டு கள் உண்ண தென்றல் அலர் தூற்ற முல்லை முறுவலிக்க -என்றபடி –

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி -ஆசார்யன் திரு நாமத்தைப் பாடி -ஆசார்யனே ஓங்கி உலகளந்த உத்தமன்
எம்பெருமானிலும் மேம்பட்டு -உலகங்களை எல்லாம் ச்வாதீனப் படுத்திக் கொண்ட சிறந்தவர்
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து —அவஜா நந்தி மாம் மூடா –மாமேகம் சரணம் வ்ரஜ என்னாமல்
-திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ –உபதேஷ்யந்தி –தத்வ தர்சன –
உலகளந்த -இரப்பாளன்-மனுஷ்ய சஜாதீயர் ஆசார்யர் -ரஹச்ய த்ரயம் தத்வத்ரயம் சாதக த்ரயம் தத்வ ஹித புருஷார்த்தம் -மூன்றை பற்றியே –
இரந்து -தனது ஸ்ரீ பாத தீர்த்தத்தால் உஜ்ஜீவிப்பார் ஆசார்யர்
ததஸ் ஸ்வ சரணாம் போஜ ஸ்பர்ச சௌ ரபை பாவநை ரர்த்திதஸ் தீர்த்தைர் பாவ யந்தம் பஜாமி தம் -ஸ்ரீ வர வர முனி தினசர்யை
உத்தமன் -அதம குரு-ஜைன புத்த –மத்யம -கர்ம காண்டம் உபதேசிக்கும் குரு -அனுவ்ருத்தி பிரசன்னாசார்யர் போலே அன்றிக்கே
பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் -இத்யாதி நிர்ஹேதுகமாக தனது பேறாக-ஞானம் அனுஷ்டானம் நிறைந்த ஆசார்யர்
நம்பாவை -கையில் கனியன்ன கண்ணனைக் காட்டித்
தரினும் உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் –மதுரகவி நிஷ்டை
நீராடினால் -காலை நல் ஞானத்துறை படிந்து யாடி
தீங்கின்றி நாடெல்லாம் -தேஹாத்மா பிரமிப்பு -ஸ்வ ஸ்வா தந்திர நினைவு -அன்யா சேஷத்வம் கொண்டு –ஆபாச பந்துத்வ பிரியம் –
யத் அஷ்டாஷரம் சம்சித்தோ மஹாபாகோ மஹீயதே ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்ப்பிஷா தஸ் கரா
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன வெல்லாம் நின்று இவ் உலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார் –
திங்கள் மும்மாரி பெய்து –வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை-நீதி நன்னெறி மன்னவர்க்கோர் மழை -மாதர் மங்கையர் கற்பினுக்கு ஓர் மழை –
ஆசார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளே மழை -செவியிலே திருமந்த்ரார்த்தம் –கிரந்த காலஷேபம் சாதிக்கை -சிந்தனை செய்விக்கை –
திங்கள் மும்மாரி -சந்தரன் போன்று குளிர்ந்த அர்த்தங்களை தருகை -முளைத்து எழுந்த திங்கள் தானாய்-நவோ நவோ பவதி ஜாயமான
-ஆராவமுதமான அர்த்த விசேஷங்கள்
ஓங்கு பெரும் செந்நெலூடு கயலுகள –-செந்நெல் தேக விசிஷ்டன் -அஹம் அன்னம் -ஞானாதி குணங்களினால் ஓங்கிய செந்நெல் –
வரம்புற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்து தலை வணங்கும் தண் அரங்கமே –தாசோஹம்-என்று இருப்பார்கள் இ றே
கயல் உகழுகை -மத்ஸ்யம் – தேஹத்திலும் ஆத்மாவிலும் கண் விக்கி வர்ணாஸ்ரமம் தர்மங்கள் மாறாமல் சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் வளர்க்கை
பூங்குவளைப் போதில் பொரு வண்டு கண் படுப்ப –
குவளையம் கண்ணி -ஸ்ரீ மகா லஷ்மி கடாஷம் -பங்கயத்தாள் திருவருளும் கொண்டு –
அழகிய வண்டு -சண்டை போடும் வண்டு -உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்து ஊறிய தேன் –பிணங்கி அமரர் பிதற்றும் குணம் –
கண் பிடுப்ப -நிர் விசாரமாய் கிடக்க –
தேங்காதே புக்கிருந்து -நாசம் வதசரவஸீ நே ப்ரப்ரூயாத் –தத் வித்தி ப்ராணி பாதேன பரி ப்ரச் நேன சேவயா –
சீர்த்த முலை பற்றி வாங்க -சிஷ்ய உஜ்ஜீவனத்துக்கு -பகவத் ஆஜ்ஞ்ஞா பரிபாலனார்த்தமாக -சிஷ்யர்களை வருந்தி வேண்டி கொள்ளுதல் –
துர்க்கதியைக் கண்டு சாஹிக்காமல் உபதேசிப்பது -தரிக்க முடியாமல் உபதேசிப்பது -ஆக இந்த நான்கு ஹேதுக்களால்-
பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் -கீதாசார்யன் -அர்ஜுனன் /நாரதர் வால்மீகி /பராசரர் -மைத்ரேயர்
-கடல் வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக் கதுவாய்ப் பட நீர் முகந்து ஏறி எங்கும் குடவாய்பட நின்று மழை பொழியும்-
ஆசார்ய தயாபாத்ரர்கள் குடம் -தம்மோடு ஒக்க அருள் செய்யும் ஆசார்யர்கள் -கைம்மாறு கருதாமல் அர்த்த பஞ்சகங்கள் பொழிந்த
நீங்காத செல்வம் -கைங்கர்ய செல்வம் நித்ய விபூதியில் நித்ய ஸூ ரிகள் உடன் ஒரு கோவையாக -என்றபடி

ஸ்ருத்வா அசுகுணான்-குணான்– புவன சுந்தர -அழகன் -கொடியன் -சுந்தர –வன சுந்தர –புவன சுந்தரா -ருக்மிணி 7 ச்லோஹங்கள்–த்வை அச்யுதா –
ருச்யசிங்கர் -பெருமையால் கொம்பு முளைத்து இருக்கோ -வசனம் -சந்தமாமா -தாய் உடன் பிறந்த சந்தரன் மாமா தானே

மாற்றாதே பால் சொரியும் -பாலே போரில் சீரில் பழுத்து ஒழிந்தேன் –
மாற்றாதே -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசுவதே –
தாமே முன்பு பேசியைதை மாற்றிப்ம் பேசாமல் -நிலைகுலையாமல் சொல்லி -பிறர் தாம் சொன்னதை மாற்ற வேண்டாத படி குற்றம் இல்லாமல் என்றுமாம் -ஆசார்யாராய் மாற்ற வேண்டாத படி தாமே எல்லா அர்த்தங்களையும் தாமே அருளிச் செய்த என்றபடி
ஏமாற்றாமல் வஞ்சிக்காமல் என்றுமாம் -சததம் கீரத்தயந்தோ மாம் -இடைவிடாமல் -என்றுமாம் ஆக ஆறு பொருள்கள்

பாஞ்ச சன்யம் ஒலி -துளசி கந்தம் -கண்ணனே ரதம் செலுத்தி -வந்த பிராமணனே பெரிய திருவடி
கிரந்த சதுஷ்டயம் -ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ கீதா பாஷ்யம் பகவத் விஷயம் ரஹச்யம் –

உபய விபூதி நாதன் இருக்க விரிதளையானை விரும்பி நின்றேனே
புதுக் கணிப்புடைய புண்டரீகன் இருக்க பொறி பறக்கும் கண்ணனைப் பூசித்தேனே
கடல் மண்ணுண்ட கண்டன் இருக்க கறை கொண்ட கண்டனைக் காமித்தேனே
கல்லெடுத்துக் கன்மாரி காத்த கற்பகம் இருக்க கையார் கபாலியைக் காதலித்தேனே
திருவிருந்த மார்பன் சிரீதரன் இருக்க திருவில்லாத் தேவனைத் தொழுது நின்றேனே
பீதகவாடைப் பிரான் இருக்க இருக்க புலி யுரியானைப் பின் தொடர்ந்தேனே
சதிரான கங்கை யடியான் இருக்கச் சுடுகாடு காவலனைச் சுற்றி வளம் வந்தேனே
பெரும் துழாய் வனம் இருக்க பெரும் கையால் பேய்ச் சுரைக்கு வார்த்தேனே –கோவிந்த பட்டர் புலம்பல்

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம் -6–

December 6, 2015

திருவாய்மொழி -5-3-5-கடியன் -கொடியன் நெடியமால் உலகம் கொண்ட அடியன் அறிவரு மேனி மாயத்தன்
சாது சனத்தை கலியும் கஞ்சனை சாதிப்பதற்கு ஆதியம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு வைத்த –மண்ணின் பாரம் நீக்குவதற்கே வடமதுரைப் பிறந்தான் –
கானாயன் கடி மனையில் தயிருண்டு நெய் பருக நந்தன் பெற்ற ஆனாயன் -இவ்வாயர் குலத்தை வீடுய்த்த தோன்றிய கரு மாணிக்கச் சுடரை
கஞ்சன் வலைவைத்த அன்று கார் இருள் எல்லில் பிழைத்து நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற இக்கன்னியரோமை
-இவை எல்லாம் திருவவதார பிரயோஜனங்கள் –
சூட்டு நன்மாலைகள் –இத்யாதி -முந்நீர் வாழ்ந்தார் சூட்டும் கோவை யாழி என்கிற சாஷாத் க்ருத ஸ்வ பர வ்ருத்தாந்தற்கு

மூவாயிரப்படி குரு பரம்பரை –
பொய்கை யாழ்வார் -த்வாபர யுகம் -862901-B.C-கி மு –4202– சித்தார்த்தி வருஷம் -ஐப்பசி மாசம் -சுக்ல அஷ்டமி -செவ்வாய் கிழமை -திருவோணம்
பூதத் தாழ்வார் -சுக்ல நவமி புதன் கிழமை -அவிட்டம்
பேயாழ்வார் -சுக்ல தசமி வியாழக் கிழமை சதயம்
திரு மழிசை பிரான் -ஈதே வருஷம் தை கிருஷ்ண பிரதமை ஞாயிற்றுக் கிழமை மகம் –
மதுர கவிகள் -863879-கி மு 3224-ஈஸ்வர வருஷம் சித்திரை மாசம் சுக்ல சதுர்த்தி வெள்ளிக் கிழமை சித்திரை நஷத்ரம்
நம்மாழ்வார் -கலி யுகம் -43 நாள் -கி மு 3102-பிரமாதி வருஷம் -வைகாசி பௌர்ணமி-வெள்ளிக் கிழமை விசாகம்
குலசேகர ஆழ்வார் -கலி 28 கி மு -3075–பராபவ வருஷம் மாசி மாசம் சுக்ல த்வாதசி வெள்ளிக் கிழமை புனர்பூசம்
பெரியாழ்வார் கி மு 47 கி மு 3056-குரோதன வருஷம் ஆனி  மாசம் சுக்ல ஏகாதசி ஞாயிற்றுக் கிழமை -சுவாதி
ஆண்டாள் கலி 98 -கி மு 3005-நள வருஷம் ஆடி மாசம் சுக்ல சதுர்த்தி செவ்வாய் கிழமை பூரம்
தொண்டர் அடி பொடி ஆழ்வார் -கலி 289-கி மு 2814 பிரபவ வருஷம் மார்கழி மாசம் கிருஷ்ண சதுர்த்தசி செவ்வாய் கிழமை கேட்டை
திருப் பாண் ஆழ்வார் கலி 343-கி மு 2760-துர்மதி வருஷம் கார்த்திகை கிருஷ்ண துவிதியை புதன் கிழமை ரோஹிணி
திருமங்கை யாழ்வார் -கலி -398-கி மு 2714-நள வருஷம் கார்த்திகை மாசம் பௌர்ணமி வியாழக் கிழமை கிருத்திகை நஷத்ரம்
கோயில் ஒழுகு -கலி 50 க்குமேலே சோழ வல்லி நாச்சியார் திருமணம் -மூன்றாம் ஆவரணம் தென் மேற்கில் சேனை வென்றான் திரு மண்டபம்
கலி-105 மேலே ஸ்ரீ வில்லி புத்தூரில் அழகிய மணவாளன் திருக் கல்யாணம்
திருமங்கை யாழ்வார் கலியப்தம் -445 மேல் திருவரங்கத்தில் இருந்து திருப்பணிகள் செய்தவையும் சொல்லும்

வேத நூல் இரும் தமிழ் நூல் நூல் ஆஜ்ஞை ஆணை வசையில் ஏதமில் சுருதி செவிக்கு இனிய ஓதுகின்றது உண்மை பொய்யில் பாடல்
பண்டை நிற்கும் முந்தை யழி வில்லா என்னும் லஷணங்கள் ஒக்கும் –
வேத நூல் பிராயம் நூறு -வடமொழி வேத சாஸ்திரம் –இரும் தமிழ் நூல் புலவன் நூல் திராவிட சாஸ்திரம்
ஆஜ்ஞை -ஸ்ருதிஸ் ச்ம்ர்திர் மமை வாஜ்ஞா
ஆணை –குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆணை யாயிரம்
வசையில் -நான்மறை -சடகோபன் உரைத்த ஏதமில் ஆயிரம்
சுடர் மிகு சுருதி செவிக்கு இனிதாக சொல்வது போலே வளம் குருகூர்ச் சடகோபன் பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும் கேட்டு
ஆரார வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே
உண்மை -வேத நூல் ஓதுகின்றது உண்மை
பொய்யில் பாடல் -குருகூர்ச் சடகோபன் பொய்யில் பாடல் ஆயிரம்
பண்டை நான் மறை -நிற்கும் நான்முறை
வண் குருகூர் சடகோபன் முந்தை யாயிரம் -சடகோபன் வாய்ந்து உரைத்த அழிவில்லா வாயிரம்
சொல்லப்பட்ட வென்ற இதில் கர்த்ருத்வம் ஸ்ம்ருதி அத்தை ஸ்வயம்பூ படைத்தான் என்றது போலே –படைத்தான் கவி என்ற போதே இதுவும் யதா பூர்வ கல்பனமாமே –
அநாதி நிதனா ஹ்யேஷா வாகுத்ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா -ஒன்றி ஒன்றி யுலகம் படைத்தான் கவியாயினேற்கு

சதம் சப்த ச -107 திவ்ய தேசங்கள் -பரமபதம் தனியாக –வட நாட்டில் பகவத் ஸ்வரூபங்கள் விபவத்தில் உலாவின திவ்ய தேசம் என்று காட்ட தனியாக ஏழு –
சாளக்ராமம் நைமிசாரண்யம் ஸ்வரூபங்கள் ஸ்தலங்கள்
அயோதியை வடமதுரை த்வாரகை திருவாய்ப்பாடி ஸ்ரீ பிருந்தாவனம் ( திருப்பாற்கடல் ) பகவான் உலாவின ஸ்தலங்கள்
இவை ஔஷதய யா ஜாதா – பிணியைத் தீர்க்கும் மருந்து
தேவேப்யே -மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழும்
த்ரியுகம் புரா-க்ருத யுக ஸ்தலங்கள் என்றபடி
பப்ரூணாம் -சகல ஜகதாதார பூதர்களான பகவான்கள் உடையவை
மந்தாமி -சந்தோஷிக்கிறேன் –இந்த ருக்கு நாலாவது காண்டம் இரண்டாம் பிரச்னம்

அத்தாணிச் சேவகம் -ஆஸ்தான -சொல் -எம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடங்கள் எல்லாம் சென்று
அந்தரங்க சேவை -அண்டத்தமரர்கள் சூழ அத்தாணி யுள்ளிங்கு இருந்தாய்

அக்நௌ திஷ்டதி விப்ராணாம் ஹ்ருதி திஷ்டதி யோகி நாம் ப்ரதிமா ஸூ அப்ரபுத்தா நாம் சர்வத்ர சமதர்சி நாம் –
பகவான் அந்தணர்களுக்கு அக்னியில் உள்ளான் –குளித்து மூன்று அனலை ஓம்பும்
யோகிகளுக்கு ஹிருதயத்தில் –மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி –
அறிவிலிகளுக்கு பிரதிமையில் உள்ளான் -உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் அன்பில் மலை என்று மண்டினார்க்கு அல்லால்
சம தர்சிகளுக்கு சர்வத்ர உள்ளான் ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் போல்வாருக்கு

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் அஸ் நாமி பிரயதாத்மான -மநோ ரதபத தூரவர்த்தி ப்ரியம் ப்ராபயேவ அஸ் நாமி -ஸ்ரீ கீதா பாஷ்யம்
-இதி முஷ்டிம் சக்ருஜ் ஜகத்வா த்விதீயம் முஷ்டிமாதேத -இன்னும் ஒரு முஷ்டி அவளாக பெருகிற்றாம்-

மண்டலம் எல்லாம் விளங்கவே மாண் உருவாய் மாவலியை வஞ்சித்து நெஞ்சுருக்கி மண்ணளந்த பெருமாள்
தெண்டிரைக் கடல் கடைந்து தெள்ளமுதில் வரும் திருவை மார்பில் வைத்தரும் தேவு எங்கள் பெருமாள்
வண்டணியும் மகிழ் மாறன் ஒண் தமிழின் இசை கொண்டு வரி யரவிலே துயிலும் மணவாளப் பெருமாள்
கொண்டல் தவழ் சோலை சூழ் கோயில் வாழும் நம்பெருமாள் தெய்வ சிகாமணி
பொய்கையார் பரவும் பெருமாள் பூதத்தார் போற்றும் பெருமாள்
பேயாழ்வார் பாடும் பெருமாள் பக்தி சாரர் ஏத்தும் பெருமாள்
பராங்குசன் பணியும் பெருமாள் போதமிகு குலசேகரன் ஏத்தும் பெருமாள்
பட்டர்பிரான் பரவும் பெருமாள் பட்டன் கோதை ஏத்தும் பெருமாள்
பத்தரடிப் பொடி பாடும் பெருமாள் பணனார் பரவி ஏத்தும் பெருமாள்
பரகாலன் பொங்கிப் போற்றும் பெருமாள் பதின்மர் பாடும் பெருமாள்

ஓன்று மறந்து அறியேன் –அன்று கருவரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருவரங்கமேயான் திசை –6-
ஜாயமானம் ஹி புருஷம் யம் பச்யேத் மதுசூதன சாத்விகஸ் ச து விஜ்ஞேயஸ் ச வை மோஷார்த்த சிந்தக –
வனசமலர்க் கருவதனில் வந்த மைந்தான் வாழியே
மனத்துள்ளான் —நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான் –28- எத்தை நினைப்பது -திருவரங்கனுக்கும் திருவரங்கத்துக்கும் விசேஷணம்-
கங்கையில் புனிதமான காவேரியையா -ஆராமம் சூழ்ந்த அரங்கத்தையா -வண்டினம் முரலும் சோலை –குயிலினம் கூவும் சோலைகளை நினைப்பதா
சப்த பிரகார திவ்ய வீதி கோபுர மண்டபாதிகளை நினைப்பதா –
தேனார் திருவரங்கம் -60–உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேன்-அசௌ வா ஆதித்யோ தேவமது –
எனக்கு தேனே பாலே கண்ணாலே யமுதே -எம்பெருமானே தேன் –
அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பா துணியேன் இனி நான் நின்னருள் அல்லது எனக்கு -நிகமித்தார் -பதியே பரவித் தொழும் தொண்டர்
தமக்கு கதியே -என்று அருளிய திரு மங்கை ஆழ்வார்

தம் பிழையும் சிறந்த செல்வமும் -தூது நாலுக்கும் விஷயம்
முதல் தூது -பிழை –ஷமை -வ்யூஹம் -என் பிழையே நினைந்து அருளி –-என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு –கடலாழி நீர் தோற்றி
என் குற்றத்தை பார்த்து தமிக்க நினைத்தீர் ஆகில் –சுவாமிகளான தம் பொறை வயிறு நிறைய எங்களால் குற்றம் செய்யப் போமோ என்னுங்கோள் -என்கிறாள்
கிம் கோப மூலம் மனுஜேந்திர புத்ர -தாரை போலே -அருளாத திருமாலார்க்கு -ந கச்சின் ந அபராதியத் கூட இருக்க-
இரண்டாம் தூது -சிறந்த செல்வம் -ரஷா தீஷை விபவம் -மாறில் போர் அரக்கன்
புணர்த்த பூம் தண் துழாய் முடி நம்பெருமானைக் கண்டு -கை கொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு கைகள் கூப்பிச் சொல்லீர்
-கறங்கு சக்கரக் கை கனிவாய்ப் பெருமானைக் கண்டு இரங்கி நீர் தொழுது பணியீர் -திருவாழி ஆழ்வானும் ஜகத் ரஷண தீஷிதன்
சிறந்த செல்வம் மல்கு திரு வண்டூறையும்-ஐஸ்வர்யம் சிறப்பைக் கண்டு கால் தாழ்ந்து –
வேத வேள்வி ஒலி முழங்கும் திரு வண் வண்டூர்-விடலில் வேத ஒலி முழங்கும் திரு வண் வண்டூர் -ரஷண தீஷை மறந்து இருப்பார்
மூன்றாம் தூது -படைத்த பரப்பு -சாரஸ்யம் -பரத்வம் -முன்னுலகங்கள் எல்லாம் படைத்த -தன் மன்னு நீள் கழல் மேல் –வானவர் கோனைக் கண்டு
நான்காம் தூதில் -தமரோட்டை வாசம் -சௌந்தர்யம் -அர்ச்சை -தமரோடு அங்கு உறைவார்க்கு -செக்கமலத் தலர் போலும் -திரு மூழிக் களத்தார்க்கு
கலக்கமும் சங்கையும் அச்சமும் தீர -தேவிமார் அவரில் ஆழ்வார் கலங்கினார் சங்கித்தார் அஞ்சினார்
ஆஸ்ரித பாரதந்த்ரம் குணத்திலும் சர்வ பிரகாரித்வ ஸ்வரூபத்திலும் அதி சங்கை பண்ணி –

வையம் குருடன்றோ மா மறை நூல் பொய்யன்றோ
அய்யனுரைத்த தமிழ் யார் அறிவர் வையத்துக்கு
ஊன்று கோல் எந்தை எதிராசர் உத்தரித்த
மூன்று கோல் காண்பதற்கு முன் –

காளி தாசன் மேக சந்தேச-தூ மஜ்யோதிஸ் சலில மருதாம் சந்நிபாத க்வ மேகஸ்
சந்தேசார்த்தா க்வ படு கரணை ப்ராணிபி ப்ராபணீயா
இத் யௌத் ஸூ க்யாத் அபரிகணயன் குஹ்யகஸ் தம் யயாசே
காமார்த்தா ஹி பிரகிருதி க்ருபணாச் சேதனா சேத நே ஷூ —
விவேகம் அற்று மேகம் தூது விடுகிறான் என்கிறான்

மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் -நவ நிதி சொரிந்த ராமானுஜ முனி -முத்து போன்ற ஆசார்யர்களை ஸ்தாபித்தவர்
சித்த சாத்விகர்கள் முத்தாக சொல்லப் படுவார்கள்
அளியத்த மேகங்காள் -தாய்க்கும் மானுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்குமே இவை உள்ளது
மின்னாகத்து எழுகின்ற மேகங்காள் -மின் போன்ற யஜ்ஞ சூத்ரம் விளங்கும் =-இலங்கிய மின்னூல் முன்னூல் வாழியே –
காஷாயம் காட்சி தருவதையும் மின் எழுகின்ற -என்னலாம்
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த -வான் -அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே
கூரத் ஆழ்வான் சம்பந்தத்தால் பரமபதம் கரச்தம் என்றவரே –
சலம் கொண்டு –யாதவ பிரகாசர் கபடம் தீர்த்து ஜலம் -தீர்த்த கைங்கர்யம் சாலக் கிணறு
சங்கமா கடல் கடைந்தான்-மறைப்பால் -மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பராங்குச பாத பக்தம்
மதயானை போல் எழுத -முனி வேழம்

க ஸ்ரீ ஸ்ரிய–திருவுக்கும் திருவாகிய செல்வா -ஸ்ரிய ஸ்ரியம்-
நிராஸ கஸ்யாபி ந தாவதுத் ச ஹே-தரு துயரம் -பாசுரார்த்தம்
ஸ்வ வைஸ்வ – குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதைஸ் சதாதவை வோசிதயா தவச்ரியா-உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா -பாசுரார்த்தம்
நிவாச சய்யா ஆசன -சென்றால் குடையாம் –
திகசுகிம வி நீதம் -வள வேழு லகம் பதிகார்த்தம்
வபுராதிஷூ மம நாத -எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது எனபது உண்டே –எனது யாவியார் யாம் யார் தந்த நீ கொண்டாக்கினாயே
சக்ருத்த்வத்தாகாரா -ஒரு நாள் காண வாராயே -நம்மை ஒரு நாள் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே -எம்மா வீட்டுத் திறம் -இதில் மஹாத்மபி என்றது ஆழ்வாரையே
ந தேஹான் ந பிரானான் -ஏறாளும் இறையோனும் பதிகார்த்தம்

பக்தி பிரபாவ பவதத்புத பரவபந்த சந்துஷித ப்ரணய சார ரசௌக பூர்ண
வேதார்த்த ரத்ன நிதிரச்யுத திவ்யதாம ஜீயாத் பராங்குச பயோதி ர சீமா பூமா
பக்தி பிரபாவ -காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி என்றும் கொண்ட வென் காதல் உரைக்கில் தோழி மண்டினி ஞாலமும் ஏழ் கடலும்
நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும் சூழ்ந்து அதனில் பெரிய என் அவா –
பவத் அத்புத பாவ பந்த -பக்தி ஸ்ருங்காரமாக பரிணமித்து தலைமகள் தாய் தோழி போன்ற ஆச்சர்ய பாவ பந்தங்கள் உண்டே
சந்துஷித ப்ரணய சார ரசௌக பூர்ண -பிரணய ரசத்தை விளைக்கச் செய்ததே இந்த பாவ பந்தங்கள் –சிருங்காரம் வீரம் காருண்யம் அத்புதம் பயா நகம் சாந்தி பக்தி
வீடுமின் முற்றவும் -சார்வே தவ நெறிக்கு -கண்ணன் கழலினை –பக்தி ரச திருவாய் மொழிகள்
மின்னிடை மடவார்கள் –நங்கள் வரிவளை -வேய் மரு தோளிணை –ஸ்ருங்கார ரசம்
மாயா வாமனனே -புகழு நல ஒரூவன் -நல் குரவும் செல்வமும் –அத்புத ரசம்
உண்ணிலாய ஐவரால் –பயா நக ரசம்
ஊர் எல்லாம் துஞ்சி வாயும் திரை உகளும் -ஆடியாடி அகம் கரைந்து –கருணா ரசம்
குரவை ஆய்ச்சியரோடு -வீற்று இருந்து ஏழ் உலகம் –வீர ரசம்-
வேதார்த்த ரத்ன நிதி –ஓதம் போல் கிளர் வேதம் -சுருதி சாகரம் -சார தமம் –
த்ரை குண்ய விஷயா வேதா -அச்யுத திவ்ய தாம -ஆழ்வாரும் கடல் போலே எம்பெருமானுக்கு இடம் -உள்புகுந்து நீங்கான்
அசீம பூமா -ப்ருஹத் வஞ்ச ஸ்வரூபேண குணைச்ச –ஆகாரத்தாலும் குணத்தாலும் சீமா -அருள் கொண்டு
ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே

ரிஷிம் ஜுஷூ மஹே க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமிவோதிதம்
சஹச்ர சாகாம் யோத்ராஷீத் த்ராமிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம்
வரவர முனியடி வணங்கும் வேதியர் திருவடி இணைகள் என் சிரம் மேல் சேர்க்கவே

ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி
சம்பாத்திய ஆவிர்பாதிகரணம் -4-4-1- சம்பாத்திய ஆவிர்ப்பாவ ஸ்வேந சப்தாத் –
சம்பாத்திய -பரஞ்சோதியை அணுகி
ஆவிர்பாவ –முதி தசையில் அபஹதபாப்மாதிகள்
ஏற்கனவே இருந்த ஸ்வரூபம் அடைந்து -ஸ்வேந ரூபேண
சம்சாரத்தில் திரோஹிதம் கர்மம் அடியாக
ஞான விகாசம் -சர்வம் ஹ பசய பச்யதி

ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது -பகவத் குணா அனுசந்தானம் அபய ஹேது -பய அபயங்கள் இரண்டும் மாறாடில் அஜ்ஞதையே சித்திக்கும்
ஆனால் –நலிவான் இன்னும் எண்ணு கின்என்கிற பாசுரங்களுக்கு அடி என் என்னில் -பந்த அனுசந்தானம் –
பிரஜை தெருவிலே இடறி தாய் முதுகிலே குத்துமா போலே நிருபாதிக பந்துவாய் சக்தனாய் இருக்கிறவன் விலக்காது ஒழிந்தால் அப்படிச் சொல்லலாம் இறே-
பிரஜையைக் கிணற்றில் கரையில் நின்றும் வாங்காது ஒழிந்தால் தாயே தள்ளினாள் என்னக் கடவது இ றே
இப்பாட்டுக்களில் முன்னடிகள் எல்லாம் புலியின் வாயிலே அகப்பட்ட பிரஜை தாய் முகத்தில் விழித்துக் கொண்டு புலியின் வாயிலே கிடந்தது
நோவு படுமா போலே இருக்கிறது எண்ணிலா பெரு மாயன் -எண்ணிறந்த ஆச்சர்ய குணங்களை உடையவனே -எண்ணிறந்த செயல்களை செய்ய
வல்லதான பிரகிருதி யைப் பரிகாரமாக உடையவன் அன்றோ -பேறும் இழவும் அவனாலே என்று சம்பந்தம் உணர்ந்தவர்கள் பாசுரம்

அஸ்தி ப்ரஹ்மேதி சேத வேத -அன்று னான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன் –அசித் சம்பந்தம் -அசந்நேவ பவதி
-இவை கிட்டமும் வெட்டு வேளானும் போலே -சத்தா ஹானியை உண்டாக்கும் -விலஷண ஜ்ஞான குணகமாய் ஸ்வயம் பிரகாசகமான வஸ்து என்று
இதின் சீர்மை பாராதே ஜ்ஞானம் லேசம் அறத்த தின்று சத்தா ஹானியைப் பண்ணும்
அணைய ஊரப் புனைய -பெரு மக்கள் உள்ளவர் –அசந்நேவ –சந்தமேதம் தத-என்பதாக வேண்டாத படி என்றும் ஒக்க உளராய் உள்ள நித்ய சூரிகள்
தன்னை ரஷிக்கை -தன்னைத் தானே முடிப்பான் -அசந்நேவ -சர்வேஸ்வரன் இவனை உஜ்ஜீவிப்பைக்கு அவசர தீஷனாய்ப் போருகையாலே
இவனுடைய வினாசத்துக்கு அவன் ஹேது வன்று
தன ஸ்வரூபம் ஸ்வ தந்த்ரம் என்கிற நினைவால் அசந்நேவ என்றபடி ஸ்வரூபம் இல்லையே விடும் –
ஆகையால் சேஷத்வம் இல்லாத பொழுது ஸ்வரூபம் இல்லை என்னத் தட்டில்லை இ றே

நும்மைத் தொழுதோம் –
தேவதாந்த்ரங்கள் அந்தர்யாமித்வம் தொழுதோம் அல்லோம் -அசாதாரண விக்ரஹ விசிஷ்டன் அன்றோ
விஷயாந்தரங்களை விட்டு உம்மை யன்றோ தொழுதோம்
உம்மைப் பிரிந்து ஆற்றி இருக்க வழி இல்லையே
நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம் -கைங்கர்யம் செய்யப் பிறந்த குடியில் அன்றோ நாம் உள்ளோம் -நியமிக்க வேண்டாமா -என்றவாறு
இம்மைக்கு இன்பம் பெற்றோம் –ந போதாத் அபரம் ஸூ கம் -என்றபடி சேஷி சேஷ பூதன் ஞானம் பெற்ற நான்-முறை அறியப்  பெற்றவன் அன்றோ துடிக்கிறேன் என்றவாறு –
எதிர்மறை விபரீத லஷணை யாகவுமாம்
அடிமையாலே ஸ்வரூப லாபமாம் படி இருக்கிற எங்களுக்கு விடாய்த்த இடத்தே அழகியதாய் தண்ணீர் வார்த்தீர் என்று நொந்து சொல்லுகிறபடி
எந்தாய் இந்தளூரீரே-பரமபதத்தை விட்டு படு கொலை அடிக்கவா இங்கே எழுந்து அருளினீர்
எம்மைக் கடிதாக் கருமம் அருளி -சேஷத்வ ஜ்ஞானத்தை பிறப்பித்து அருளின தேவரீரே சேஷத்வத்துக்கு தகுதியான குற்றேவலிலே நியமித்து அருள வேணும்
பிரானே உன்னைக் காணவே அருமையாக இருக்க கைங்கர்ய பிரார்த்தனையும் செய்யும் அடியேன் பேதைமை தான் என்னே
ஆவா வென்று இரங்கி நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே
இரக்கமே கார்யகரம் என்றவாறு
தொழுதோம் என்று வளைப்பிட ஒண்ணாது காணும் -அபிமதம் பெருகைக்கு இரக்கமே வேணும்
ஈற்றடியில் -நம்மை என்றது தேவரீரை
காட்டி நடந்தால்புறப்பாடு சேவையில் அபிமதம் விளங்கும்

அஜச்ர சஹச்ர கீதீ ஸே கோத்த திவ்ய நிஜ சௌரபம்-திருப் புன்னை -தீர்த்தங்கள் ஆயிரம் – சஹச்ர கீதீ-எனபது திருவாய் மொழி –

தொழுதுயர் கையினன் துவண்ட மேனியன் அழுதழி கண்ணினன் அவலமீதென –
எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை முழுதுணர் சிந்தையான் முடிய நோக்கினான்
அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான் முடித்தலம் இவையென முறையில் சூடினான்
படித்தலம் இறைஞ்சினன் பரதன் போயினான் பொடித்தலம் இலங்குறு பொலம் கொண் மேனியான் –

என்னடியார் நன்று செய்தார் என்பர் போலும் —போலும் என்பதை நன்றே –என்பர் இரண்டிலும் அன்வயம் கொண்டு-
அணியார் வீதி யழுந்தூர் எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
என் அடியார் அது செய்யார் -முதல் வார்த்தை -செய்தாரேல் நன்று செய்தார் -இரண்டாம் வார்த்தை
பகவத் அடியார்கள் பாவம் செய்யக் கூசுவார் -முதல் வார்த்தை -ப்ராமாதிகமாக செய்தாலும் வாத்சல்யத்தால் நன்றாக கொள்வான் என்றபடி

கருணா காகுத்ஸ்த -குண பரிவாஹாத்மானம் ஜன்மானம்-பரதுக்க அசஹிஷ்ணுதா தயா -அடியார்க்கு ஆஆ என்று இரங்கி –
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய்
குற்றம் செய்பவர்கள் பக்கல் பொறையும் கிருபையும் சிரிப்பும் உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும் -ஐந்து விஷயங்கள்
அபராதத்தை சஹித்துபிரதிகிரியை பண்ண நினையாமலும் நெஞ்சு கன்றாமலும் இருக்க வேணும் –
நாம் பொறுத்து இருந்தோமே யாகிலும் எம்பெருமான் உசித தண்டம் பண்ண வன்றோ புகுகிறான் இதுக்கு என் செய்வோம் என்று
பர துக்க அசஹிஷ்ணுத்வம் -என்பதே கிருபை
சிரிப்பு -அதருஷ்ட விரோதமாக இவர்களால் செய்யலாவது ஓன்று இல்லை இ றே -பாருஷ்யாதி முகத்தாலே க்யாதி லாபாதி திருஷ்ட விரோதங்கள் இறே
இவர்களால் செய்யலாவது -அப்படி சிலவற்றைச் செய்தால் தங்களோபாதி நாமும் இவற்றிலே சபலராய் இவற்றினுடைய ஹானியைப் பற்ற
நெஞ்சாரல்  பட்டுத் தளர்வுதோம் என்று இருந்தார்கள் அன்றோ -இவர்களின் அறிவிலித் தனம் இருந்தபடி என் என்று பண்ணும் ஹாஸ்யம்
உண்டியே உடையே உகந்தொடும் இம் மண்டலத்தோடும் கூடுவது இல்லை யான் -என்ற உறுதி திடமாக இவர்கள் தூஷணங்கள் ஹேதுவானத்தை
இந்த ஜடங்கள் அறிய வில்லையே என்ற ஹாஸ்யம் உண்டே
உகப்பு -தன்னைக் கண்டால் சத்ருவை போலே -சத்ருக்கள் மேலே பரிபவத்தை பண்ணினால் உகப்பு வரும் -தூஷிப்பவர்கள் தமது பிரதி கூலங்களான
சரீரம் போக்கினால் உகப்பு உண்டாகுமே
உபகார ஸ்ம்ருதி -அமர்யாத சூத்திர சலமதி -சொல்ல வேண்டி இருக்க நமது கார்யம் இவர்கள் செய்தார்களே என்கிற உபகார ஸ்ம்ருதி வேண்டுமே

துவளில் மா மணி –பதிகத்தில் உரை கொள் இன் மொழியாள் –எவ்வளவு வியாக்யானங்களும் கொள்ளும் படியான திருவாய் மொழி என்றபடி
விட்டிலங்கு செஞ்சோதி-அவயவ சௌந்தர்யத்தாலே என்னை தனதாக்கிக் கொண்டார் -காரண கோடியில்
பட்டர் -ஆழ்வாரையும் ஆழ்வார் பரிகாரத்தையும் விஷய கரித்த பின்பு பிறந்த ஔஜ்வல்யம் சொல்கிறார் -காரிய கோடியில் –

கிருஷ்ணன் -திருப் பாண் ஆழ்வார்
நஷத்ர ஐக்யம் முநீந்த்ரஸ்துதவி பவதயா நத்யு பாந்த ப்ரியத்வாத்
ரங்கா வாசோத் ஸூ கத்வாத் அமல விமல வாக்தா நதோ வாஹ்ய பாவாத்
கீதோ தஞ்சத் ப்ரதத்வாத் வடதள சயன ப்ராஜ்ய கவ்யோ பபோக
ப்ராவண்யாத் பான ஸூ ரிர் விலசதி வா ஸூ தேவாத் மஜே நோப மேய –
ரோஹிணி –அத்தத்தின் பத்தா நாள் -நீ பிறந்த திரு வோணம்-திருவோணத் திருவிழவில் அந்தியம் போதில் அரி யுருவாகி -ரோஹிணியே திருவவதார நஷத்ரம் –

முனி ஸ்துதி விஷயததா -இந்திர ஸ்துதி விஷயததா –
இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார்
வழு ஒன்றும் இல்லா செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப் பட்ட மழை வந்து ஏழு நாள் பெய்து -கோவிந்த பட்டாபிஷேகம்
லோக சாரங்க முனிவர் -முநீந்த்ரர் வந்து ஸ்துதி செய்த சாம்யம்
காளீந் தீர சீசாய -யமுனை கரையிலே வாசம் செய்வதில் ஆசை கொண்டவன் –விரஜா தீரம் சரயு தீரம் -காவேரி தீரத்தில் ஆழ்வார் குடில் உண்டே
ரங்க வாச உத்சாகத்வாத் -ரங்கம் கூத்தாடும் இடம் –கூத்தாட வல்ல எம் கோவே –அண்டர் கோன் அரங்கன் –மற்று ஒன்றினைக் காணாவே
அமல விமல வாக்தா நத-அத்யந்த நிர்மலன் -அமோக வாக்குகளை அருளினவர் அமலன் விலஅமலன் நிமலன் நிர்மலன் -அருளினவர்
வாஹ்ய பாவாத் -வஹிக்கப் படுபவர்கள் பறவை ஏறும் பரம் புருடன் –உரியில் உள்ள வெண்ணெய் கொள்ள பிள்ளைகளால் வஹிப்பப் பட்டவன் –
முனி ஏறித் தனி புகுந்து -பாட்டினால் கண்டு வாழும் பாணர்
கீதோ தஞ்சத் ப்ரதத்வாத் -கீதா சாஸ்திரம் -நம் பாடுவான் போலே இசையால் பாடி அருளி
வடதள சயன ப்ராஜ்ய கவ்யோப போக ப்ராவண்யாத் -பாலகன் என்று பரிபவம் செய்யேல் -வெண்ணெய் உண்ண அபி நிவேசம் கொண்டவன்
ஆல மா -கொண்டால் வண்ணன் -பாசுரங்கள் அருளி –இப்படி எட்டு சாம்யங்கள்

கலௌ வேங்கட நாயக -உறுகின்ற கன்மங்கள் மேலன வோர்ப்பிலராய் இவளைப் பெறுகின்ற தாயார் மெய்ந்நொந்து பெறார் கொல்
துழாய் குழல் வாய் துறுகின்றிலர் தொல் வேங்கட மாட்டவும் சூழ்கின்றிலர் இறுகின்ற தாளிவளாகம் மெல்லாவி யெரி கொள்ளவே
திருத் துழாய் கொணர்ந்து சூட்டினால் நோய் தீருமே –
வேங்கடம் ஆட்டவும் -நீராட்டவும் பொய்கையாக நினைத்து -வேண்டிக் கொண்டு மஞ்சள் துணியில் முடிந்தாவது வைக்கலாமே -என்றவாறு

பொருவரு வேலை தாவும் புந்தியான் புவனம் தாய
பெருவடி யுயர்ந்த மாயோன் மேக்குறப் பெயர்ந்த தாள் போல்
உருவறி வடிவின் உம்பர் ஓங்கின அவன் உவமையாலும்
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான் –கம்பர் ஸ்ரீ வைஷ்ண திருவடி உபயோகித்தால் பட்டர் காலத்தவர் என்பர்
கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறும் அன்பர் ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றோம் -என்று சடகோபர் அந்தாதியில் அருளி இருப்பதால்
ஆகையால் பட்டர் காலம் கி பி 12 நூற்றாண்டில் கம்பர் காலம் என்று நிர்ணயிப்பார்

சதுர முகனார் வேள்வி தனிச் சதிர் கெடுக்கச் செறிந்து ஓடும் கதியுடைய வேகவதிக்கு அணியாக வந்து உதித்தோய்-
ஸ்ரீ யதோத்தகாரி ஸ்தோத்ரம் -ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்தது –
ஏவம் வேகவதீ மத்யே ஹஸ்தி சைலெ ச த்ருச்யதே உபாய பல பாவேந ஸ்வயம் வ்யக்தம் பரம் மஹ–1-
ஈஷ்டே காமயிதும் பாரம் ஏஷ சேதுர பங்குர யத்ர சாரஸ்வதம் ஸ்ரோதோ விஸ்ராம்யதி வீஸ்ருங்கலம் -2-
அம்ருதாஸ் யைஷ சேது -பாரம் கமயிதம் ஈஷ்டே -சம்சாரம் உத்தரிப்பிக்க வல்லது
ஜயது ஜகதேக ஸேதுர் வேகவதீ மத்திய லஷிதோ தேவ
பிரசமயதி யா பிரஜா நாம் பிரதிதான் சம்சார ஜலதி கல்லோலான் –3-
சதுராநந சப்த தந்து கோப்தா சரிதம் வேகவதீ மசௌ நிருத்தன்
பரிபுஷ்யதி மங்களா நி பும்ஸாம் புகவான் பக்தி மதாம் யதோத்தகாரீ-5-
விபாது மே சேதசி விஷ்ணு சேது வேகாபகா வேகவிகாத ஹேது
அம்போஜ யோ நேர் யது பஞ்ஞ மாஸீத் அபங்க ரஷர ஹயமேத தீஷா–6-
ஸ்ரீ மான் பிதாமஹ வதூ பரிசர்ய மாண சேதே புஜங்க சயனே ச மகா புஜங்க
பிரத்யாதி சந்தி பவ சஞ்சரணம் பிரஜா நாம் பக்த அநு கந்த்ரிஹ யஸ்ய கதா கதா நி –6-
ப்ரசமித ஹயமேவ தவ்யாபதம் பத்ம யோ ந ஸ்ரீத ஜன பரதந்த்ரம் சேஷ போகே சயானம்
சரணமுபக தாஸ் ஸ்ம சாந்த நிச்சேஷ தோஷம் சதமகமணி சேதும் சாஸ்வதம் வேகவத்யா –7-
சரணமுபகதா நாம் சோயமாதே சகாரீ சமயதி பரிதாபம் சம்முகஸ் சர்வ ஜந்தோ
சத்தகுண பரிணாம சன்னிதௌ யஸ்ய நித்யம் வர விதரணபூமா வாரணாத் ரீஸ்வரஸ்ய-8
காஞ்சி பாக்கியம் கமல நிலையா சேத சோ பீஷ்ட சித்தி கல்யாணா நாம் நிதிர விகல கோபி காருண்ய ராசி
புண்யா நாம் ந பரிண திரசௌ பூஷயன் போகி சப்யாம் வேகா சேதுர ஜயதி விபுலோ வீச்வர ஷைகஹேது–9-
வேகா ஸே தோரிதம் ஸ்தோத்ரம் வேங்கடேஸேந நிர்மிதம்
யே படந்தி ஜ நாஸ் தேஷாம் யதோக்தம் குருதே ஹரி –10-

பொய்யிலாத மணவாள மா முனி —பொய்யிலாத பொன் முடிகள் எய்த வெந்தை –பொய்ம்மொழி ஓன்று இலாத மெய்ம்மையாளன் -திருமங்கை யாழ்வார்
பொய்யா நாவின் மறையாளர் வாழும் இடம் புள்ளம் பூதம் குடி -பொய்யில் பாடல் திருவாய்மொழி –
—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம் -5–

December 3, 2015

ஸ்ரீ மனு ஸ்ம்ருதி –யாமோ வைவஸ்வதோ ராஜா யஸ் தவைஷ ஹ்ருதி ஸ்தித -தேன சேத அவிவாதஸ் தி மாம் கங்காம் மா குரூன் கம –
அவன் சம்பந்தம் உணர்த்து -அஹம் மே நினைவு இல்லாமல் த்வம் மே-என்றால் கங்கா தீர்த்தம் குரு ஷேத்ரம் போக வேண்டாமே
தவம் மே அஹம் மே குத்ஸ் தத் ததபி குத இதம் வேத மூல பிரமாணாத்-ஏதச் சாநிதி சித்தாத அனுபவ விபவாத் சோபி சாக்ரோச ஏவ
க்வாக்ரோச கஸ்ய கீதா திஷூ மம விதித கொத்ர சாஷி ஸூதீ ஸ்யாத்-ஹந்த த்வத் பஷபாதீ ச இதி நருகலஹே ம்ருக்ய மத்யச்தவத் தவம் –
த்வம் மே தாச த்வம் மே பிரபு -என்றபடி -வேத மூல பிரமாணாத் -பதிம் விஸ்வஸ் யாத்மேச்வரம் -ஷரம் பிரதானம் அம்ருதாஷரம்
ஹர ஷராத்மா வீசதே தேவ ஏக -பிரமாணங்கள் உண்டே
கீதா மூலம் சேதனன் ஸ்வாதந்த்ரம் ஆஷேபத்தோடே கூடியது என்று சொல்லியது உலக பிரசித்தம் அன்றோ
-சாஷி ஸூ தீச் ஸ்யாத் உண்டே என்கிறார் –
த்வத் பஷபாதீ -ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம் சொல்லி உள்ளேயே -பிரமாணம் பண்ணிக் கொடுக்கிறான்
–சொத்து தன்னது என்ற திண்ணமான நம்பிக்கை கொடுக்க –

என்னை நான் மண் உண்டேனாக அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்று இலையே –கண்ணபிரான் தானே சோதி வாய் திறந்து அருளி அடித்ததும் அன்புற்றதனால் –அனைவர்க்கும் காட்டினதும் அன்புற்றதனால் -யசோதை செய்தது எல்லாம் ப்ரேமம் அடியாகவே என்றவாறு
கையைப் பிடித்து கறை உரலோடு என்னை காணவே கட்டிற்று இலையே -காண -என்னுடைய சௌலப்யத்தை அனைவரும் காண வேண்டும் என்றபடி

மதியில் நீசரவர் சென்று அடையாதவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே —மதி இல்லாத நீசரவர்கள் சென்று அடையக் கூடாதவனுக்கு
மதியில் நீசரவர் சென்றடை யாதவனுக்கு இடம் -நீசர்கள் சென்று அடையும்படியான யாதவனுக்கு இடம் -யது குலோத்பவனுக்கு —
ஆயவனே யாதவனே என்றவனை யார் முகப்பும் -இரண்டாம் திரு -50-

சந்திர காந்தானனம் ராமம் அதீவ ப்ரிய தர்சனம் ரூப ஔதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்
–ந ததர்ப்ப சமாயாந்தம் பச்யமா நோ நராதிப —
ரூபம் என்ன ஔதார்யம் என்ன -சாதாராண அர்த்தம் -நம் பூர்வர்கள் -ரூபம் என்கிறது வடிவு அழகை-ஔதார்யம் –
அத்தை எல்லாரும் அனுபவிக்கும் படி சர்வ ஸ்வதானம் பண்ணி கொண்டு திருவவதரிக்கை
அதுக்கும் மேலே -ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் -ஓவியத்து எழுத ஒண்ணாத உருவத்தை –
-தருனௌ ரூப சம்பன்னௌ ஸூ குமாரௌ மகா பலௌ புண்டரீக விலாசாஷௌ-
உன்னைக் கண்டார் என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்-
ஞாலத்து புத்ரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்று யாரும் இல்லை

இந்நீணிலத்தே எனையாள வந்த இராமானுசனை இரும் கவிகள் புனையார் –ஸ்ரீ சைல தயா பாத்ரம் -தனியன் பெற்ற மகாத்மயம்
முதல் சைலம் ரிஷ்யமுக பர்வதம் –அதற்கு ஈசர் மதங்க முனிவர் அவர் தயைக்கு பாத்ரம் ஸூ க்ரீவன் -ஸூ க்ரீவன் நாதம் இச்சதி
ஸூ க்ரீவம் சரணம் கத என்று பெருமாள் பற்றினாலும் நான்கு மாதம் -கோபிக்கவும் நேர்ந்ததே
அக்குறை தீர திருமலை ஆழ்வார் இன்னருளுக்கு இலக்கான மா முனிகள்
தீபக்த்யாதி குணார்ணவம் –சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்து மர்ஹதி –சாப மாநய சௌமித்ரரே — சாகரம் சோஷயிஷ்யாமி-
அந்தக் குறை தீர லவனார்ணவத்தை விட்டு தீ பக்த்யாதி குணார்ணவம் –ஞான பக்தி வைராக்யங்களுக்கு கடலான மா முனிகள் -என்றபடி
யதீந்திர பிரவணம் -அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து அருளும் பெருமான் -தன்னை உற்றாட் செய்வதில் காட்டிலும் தன்னை உற்றாட் செய்யும்
தன்மையினோர் மன்னு தாமரைத் தாள் தன்னை உற்று ஆட செய்வாரே சிறந்தவர் -அந்த யதீந்திர பிரவணரை இறைஞ்சுவோம்
வந்தே ரம்யஜா மாதரம் முனிம் -ராமன் விஸ்வாமித்ரர் -கிருஷ்ணன் சாந்தீபன் -பற்றிய குறை தீர சமஸ்த கல்யாண குணக் கடலாய்
விரகத அக்ரேசரான ரம்யா ஜாமாத்ரு முனியை வணங்கி வாழ்த்துகிறேன் -என்ற தெய்வ வாக்கு

ஜகத் ஸ்ருஷ்டியாதிகளுக்கு பிரயோஜனம் கேவல லீலை
லோகவத்து லீலா கைவல்யம் –ஜகத் சர்க்கே லீலைவ கேவ்லா பிரயோஜனம் –பரஸ்ய ப்ரஹ்மணோ லீலைவ பிரயோஜனம்
லீலையாவது தாதாத் விகாசம் ஒழிய காலாந்தரத்தில் வருவதொரு பலத்தைக் கணிசியாமல் பண்ணும் வியாபாரமே யாகிலும் இதுக்குப் பிரயோஜனம்
என்று சிருஷ்டி ரூப வியாபாரத்துக்கு பிரயோஜனமாக ததாத் விகரச மாதரத்தை சொல்லிற்றாகக் கடவது
அகில புவன ஜன்ம ச்தேம பங்காதி லீலே –என்றும் -ஜகத் உத்பத்தி ஸ்திதி சம்ஹார அந்த பிரவேச நியமனாதி லீலம்
இதுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை இது கேவல லீலையே –விசதவாக் சிகாமணி ஸ்ரீ ஸூ க்திகள்-

சேஷ ஸ்ரீ மான் நிகம மகுடீயுக்மரஷா ப்ரவ்ருத்த -ஸ்ரீ மத் ரம்ய வரஜா  முனி நாம் சௌம்ய ஜாமாத்ரு தாஞ்ச
விந்தத் த்ருப்யத்விமத படலீபாட நோத்தாம ஸூ க்தி-பூயாத் பவ்ய பிரதித மஹிமா ஸ்ரேயசே பூயசே ந

தளர்வுற்று நீங்க நினை மாறனை மால் நீடிலகு சீலத்தால் பாங்குடனே சேர்த்தான் பரிந்து
தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட எந்தாய் -பெரு நிலம் கடந்த நல்லடிப் போது என்றீரே
-திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் என்று கலக்கம் தீர்ந்தார்
உண்டாய் உலகு ஏழும் முன்னமே -மண்ணும் கரைந்து வெளிவிட உண்டேன் –நெய்யூண் மருந்தோ
ஆஸ்ரித ஸ்பர்சம் த்ரவ்யத்தால் அல்லாது தரியேன்
நீர் உம்மைக் கொண்டு அகல்வீர் ஆகில் திருவாய்ப்பாடியில் வெண்ணெய் யூண் விலக்கினார் புக்க லோகம் புகுவீர்

பயிலும் சுடர் ஒளி-ஸ்வ ஸ்வரூப பிரதிபாதன பரம்
என்றும் -நெடுமாற்கு அடிமை புருஷார்த்த ஸ்வரூப பிரதிபாதனம் –
பகவத் சேஷத்வத்திலும்தத் காஷ்டையான பாகவத சேஷத்வமே உத்தேச்யம் என்று பிரதிபாதித்த பயிலும் சுடர் ஒளியும்
–பாகவத கைகர்ய பர்யந்தமாக வேணும் என்று மநோ ரதித்த நெடுமாற்கு அடிமையும் -மா முனிகள்

ஸ்ரீ தேவப் பெருமாள் மணவாள மா முநி திருமஞ்சனக் கட்டியம்
காஷாய சோபி கம நீய சிகோ நிவேசம் -தண்டத்ரய உஜ்ஜ்வலகரம் விமல உபவீதம்
-உத்யத்தி நேச நிப முல்லச தூர்த்வ புண்டரீம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே —
போதச் சிவந்து பரிமளம் வீசிப் புதுக் கணித்த சீதக் கமலத்தை நீர் ஏற ஓட்டிச் சிறந்தடியேன்
ஏதத்தை மாற்றும் மணவாளி யோகி இனிமை தரும் பாதக் கமலங்கள் வாழியரோ பாதக் கமலங்கள் வாழியரோ
ஸ்ரீ பூப்யாம் ரங்க நாத சடஜித் உபநிஷத் வ்யாக்ரியாம் ஸ்ரோது காமே
சேஷஸ் சந்தோஷ யிஷ்வான் வரவர முநி தாம் ப்ராப்ய யோ வர்த்ததேக்ரே
காஷாய ஸ்ரீ துலஸ்யம்புஜ மணி ஸூ சிகா யஜ்ஞ ஸூ த்ர த்ரிதண்டை
பாந்தம் சுப்ரேர்த்வ புண்டரம் ஸ்மர ஹ்ருதய சதா கோச முதராங்க ஹஸ்தம் –
அரங்க நகரீடு தனை யளித்து அருளும் பெருமாள் -அழகான குருகூரில் அவதரித்த பெருமாள் -அரவரசப் பெரும் சோதி யநந்தன் என்னும் பெருமாள்
அருள் அரங்கர் ஸ்ரீ சைலம் ஏத்த வந்த பெருமாள் -இரவு பகல் எதிராசர் அடி மகிழும் பெருமாள் -இந்நிலத்தில் பிறவிதன்னை இகழ்ந்து உரைக்கும் பெருமாள்
திரமாக திக் கஜங்கள் இட்டருளும் பெருமாள் தேவபிரான் அடி இணையில் அன்பு பூண்ட பெருமாள் நம் மணவாள முனிப் பெருமாள்
தேவரீருடைய திருவடித் தாமரைகளின் போக்யாதிசயத்துக்கு ஒரு போலியாக -கம்பீராம்பஸ் சமுத்பூத ஸூ ம் ருஷ்ட நாள ரவிகர
விகசிதமான தோர் செந்தாமரைப் பூவை அதனுடைய கர்வ சர்வஸ்வ நிர்வாண பூர்வகமாக திருவடிகளின் கீழ் அமுக்கி
அதன் தலை மேல் வெற்றியுடன் வீற்று இருக்கும் இருப்பின் அழகும்
பங்கஜ ரஜசும் பாதாருந்ததுமாம் படி சேடீ ஜன லோசன சர்ச்சாசஹ சௌகுமார்ய சாலி நிகளான பிராட்டிமாரும் பிடிக்கக் கூசும்படி
புஷ்ப ஹாச ஸூ குமாரரான பெரிய பெருமாளுக்கும் மெத்தென்ற பஞ்ச சயனமாய் அத்யந்த ஸூ குமாரரான தேவரீருக்கு
ஆசனமாய்க் கொண்டு தொண்டு பூண்ட புண்டரீகத்துக்கு ஸ்வ தாஸ்ய அர்ஹ சாரஸ்யாதிகளை யூட்டுகைக்காக தத் தாச்யாந்தரத்திலே
சொருகியிட்டு வைத்தால் போலே மறைத்திட்ட இடத் திருவடிகளும்
–அன்புடனே அண்ணலுக்கு அடிமை பூண்ட வேர்வை ஆறவோ-அழல் சரத்தால் இந்திரசித்தை அளித்த வேர்வை ஆறவோ
அடைவுடனே திருப்பதிகள் நடந்த வேர்வை ஆறவோ அரவரசர் அடியிணையில் அன்பு பூண்ட வேர்வை யாறவோ
-அருளாலே அடியார்க்கு ஈடு அளித்த வேர்வை யாறவோ அடிக் கொதிப்பால் இந்நிலத்தில் ஆர்த்தி யுரைத்த வேர்வை யாறவோ
அருளாளர் கச்சிதனில் அடியோங்களை அளித்த வேர்வை யாறவோ அனவரதம் வ்யாக்கியைகள் அளித்த களைப்பு ஆறவோ
-தேவரீர் திருமஞ்சனம் ஆடி அருளுவதே

தேவப்பெருமாள் சந்நிதி நம்மாழ்வார் திரு மஞ்சன கட்டியம்
மறைப்பால் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து துறைப் பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பணை பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த நிறைப்பான் கழல் அன்றி சன்ம விடாய்க்கு நிழல் இல்லையே
நல்லார் நவில்கின்ற நன் குருகை மா நரிலே நலமாக நாம் உய்ய வந்துதுத்த பெருமாள்
நன்னார் அரண் நீங்க மற்ற ஆறும் உற்ற துணை யன்றே நமக்கு என்று உரைத்த பெருமாள்
கல்லாத வாதிகளும் அல்லாத மாயிகளும் நில்லாது நீக்கி யருள் நல்ல பெருமாள்
கலை வலவர் பலர் வாழும் கச்சியில் கரிகிரி கீழ் கோயில் கொண்டு அடியாரை யருளும் பெருமாள்
எல்லாரும் உய்ய என நல்லான நான் மறையைச் சொல்லால் தொகுத்து அருள வல்ல பெருமாள்
ஏரார்ந்த மதுர கவி தாரார்ந்த மணி முடி மேல் சீரார்ந்த அடியிணையை அருளும் பெருமாள்
நல்லான நாத முனிக்கு எல்லாப் பொருள்களையும் சொல்லார வாழ்த்தவே சொன்ன பெருமாள்
நாதனுக்கு நாலாயிரம் உரைத்த குரு வென்று நால் திசையும் நலமாக போற்ற நின்ற பெருமாள்
கருவிருத்தக் குழி நீத்து காமக் கடும் குழி வீழ்ந்து ஒரு விருத்தம் புகாமல் திரு விருத்தம் உரைத்த பிரான்
காசினியோர் தாம் வாழ கலி யுகத்தே வந்து உதித்த ஆச்ரியப்பா அதனால் அருமறை நூல் விரித்த பிரான்
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சுடனே நயப்புடைய யந்தாதி நா வீன்ற நா வலவா
அவாவறச் சூழ் அரியாடி மேல் அவாவில் அந்தாதி களால் அவாவில் ஆயிரம் உரை செய்து அவா வற்று வீடு பெற்றாய்
அல்லலன்ன குழலும் அகன்ற முகமும் வில்லன்ன புருவமும் விசால நயனமும்-எள்ளுப்பூ நாசியும் இணை வள்ளக் காதும் சொல் பிரணவ மொழியும்
சிவந்த அதரமும் வெள்ளன்ன வேஷ்டியும் விளங்கு திரு முத்ரையும் நேரான புண்ட்ரமும் நிறைந்த மணி வடமும்
கதித்த துடையும் கணை முழம் தாளும் -பல்லவப் பழத்தை பழித்த விரலடியுமாய்
தேவரீர் திரு மஞ்சனம் கொண்டு அருள வீற்று இருக்கும் இவ்வழகு ஏதேனும் ஜகன் மோகனமோ -ஸ்ரீ வைஷ்ணவ சரவஸ்மோ
-வேள்வியின் பயனோ வேதாந்த விழுப் பொருளோ நாங்கள் ஈதொன்றும் அறியா இவ்வழகுடன்
அத்ரி ஜமதக்னி பங்க்திரத வ ஸூ நந்த ஸூ நுவானவனுடைய யுக வர்ண க்ரம அவதாரமோ
வ்யாசாதி வதாவேசமோ முதுவர் கரை கண்டோர் சீரியரில் ஒருவரோ
முன்னம் நோற்ற வனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ என்று சங்கிக்கைக்கு உறுப்பான சிறப்புடன்
ஊழி தோறும் ஊழி தோறும் வாழ்ந்திடுக வாழ்ந்திடுக முநி சார்வ பௌமனெ

கஸ் தவம் பால பலா நுஜ-பயலே நீ யார் –பலா நுஜ அஹம் வளை வண்ண நன் மா மேனி தன்னம்பி நம்பியும் இங்கு
இங்கு வளர்ந்தது அவனிவை செய்தறியான் -பெரியாழ்வார் -10-7-4-
கிமஹி தே-மண் மந்திரா சங்கயா
யுக்தம் தத் நவ நீத்த பாண்ட விவரே ஹஸ்தம் கிமர்த்தம் நயதா
மாதா கஞ்சன வத்சகம் ம்ருகயிதம்
மா கா விஷாதம் பிரபோ
இத்யேவம் வனவல்ல வீ நிகதித கிருஷ்ணஸ் ச புஷ்ணுது ந
ஏலாப் பொய்கள் உரைப்பானே

நம்மாழ்வார் -இளைய பெருமாள் சாம்யம் –பால்யாத் ப்ரவ்ருத்தி ஸூ ஸ் நிக்தராய் இருப்பவர் –அறியாக் காலத்து அடிமைக் கண்
அன்புபெற்றவர் -பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசா நு ஷூ ரம்ச்யதே அஹம் சர்வம் கரிஷ்யாமி -ஒழிவில் காலம் எல்லாம்
உடனே மன்னி வழு விலா அடிமை செய்ய பாரித்தார் -ப்ராதா பர்த்தா ச பந்துஸ் ஸ் பிதா ச மம ராகவ -சேலேய் கண்ணியரும்
பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே என்று இருந்தவர்
நம்மாழ்வார் பரத ஆழ்வான் சாம்யம் -ஹன்யா மஹிமாம் பாபாம் கைகேயீம் துஷ்ட சாரிணீம் -உபேஷித்தால் போலே
-அன்னை என் சொல்லில் என் –உங்களோடு எங்களிடை இல்லையே -ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய போலே யானே நீ
என்னுடைமையும் நீயே என்று இருந்தார் கொள் என்ற கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு என்று திக்கரித்தார்
சித்ர கூடம் சென்றது போலே வேங்கட வாணனை வேண்டிச் சென்றார் -காமுற்ற கையறவோடு -மனோ ரதம் நிரம்பாமல் இருந்தார்
திருவடியே சுமந்து உழல கூட்டரிய திருவடிக்கண் கூட்டினை நான் கண்டேனே போலே அவரும் அடி சூடும் அரசு பெற்றார்
பங்க திக்தஸ் து ஜடிலோ பரத -போலே -கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் –
குடிக்கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமை குற்றேவல் செய்து பொன்னடிக் கடவாதே வழி வருகின்ற அடியாராய் தன்னை அனுசந்தித்தார்கள் இருவரும்
ஸ்ரீ சத்ருகன ஆழ்வான்-கச்சதா மாதுல குலம் -ப்ரதேன–நாஹம் ஸ்வபிமி ஜாகர்மி தமேவார்யம் விசிந்தயன்
-பரத ஆழ்வானுக்கு உகப்பு என்பதால் -இவரும் பாகவத சேஷத்வ நிஷ்டராய் இருந்தும் புலன் கொள் வடிவு என் மனதததாய் – என்னும்படி இருந்தார்
தசரத சக்ரவர்த்தி -ந ததர்ப்ப சமாயந்தம் பஸ்யம நோ நராதிப -போலே எப்பொழுதும் நாள் திங்கள் –ஆராவமுதமே என்று திருப்தி பெறாமல் அனுபவித்தார்
யசோதைப் பிராட்டி -யமளார்ஜுனோர் மத்யே ஜகாம கமலேஷண-போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே
-அதீத காலிகங்களும் சம காலங்களைப் போலே அவள் பாவனையிலே பேசினார்
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் -நாக்நிர் தஹதி நைவாயம் சஸ்த்ரைச் சின்னோ மகோரகை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-69-போலே
அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் –அவன் எங்கும் உளன் பிரதிஜ்ஞ்ஞை போலே
பரந்த தண் பரவையுள் நீர் தோறும் பரந்துளன் –எண் பாலும் சோரான் பரந்துளன் எங்குமே என்கிறார்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் -த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச –பரித்யக்த மயா லங்கா -போலே இவரும் பாதம் அடைவதன் பாசத்தாலே
மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு – -தயரதன் மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே என்று இருந்தார்
திருவடி ச்நேஹோ மே பரமோ ராஜன் –பாவோ நான்யத்ர கச்சதி –பேர் சொல்லவும் அசஹ்யமாய் போலே -இவரும் மற்று ஒன்றின்
திறத்து அல்லாத் தன்மை தேவபிரான் அறியும் -சுனை நாண் இல் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை ஓவாத ஊணாக உண்பவராய் –
கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று இருந்தார்
அர்ஜுனன் -பஸ்யாமி தேவான் தவ தேவ தேக-விஸ்வரூபம் கண்டு வெறுப்புற்று கிரீடி நம் கதினம் சக்ர ஹஸ்த மிச்சாமி த்வாம்
–இவரும் -நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடு வானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் –அத்ருப்தராய் –
கூராழி வெண் சங்கு ஏந்தி வாராய் -அசாதாராண விக்ரஹ அனுபவ குதூகலத்தை காட்டி அருளினார்

இமாம் கன்யாம் தர்ம பிரஜார்த்தம் வ்ருணீமஹே -நாம் கன்கியை வரிக்கிறோம் -பெருமாள் சக தர்ம சரீதவ –
விதிதஸ் ச ஹாய் தர்மஜ்ஞஸ் சரணாகத வத்சலா —சர்வ அவஸ்த சக்ருத் பிரபன்ன ஜனதா சம்ரஷணைகவ்ரதீ தர்மோ விக்ரஹவான் \
சஹ தர்ம சரிம் சௌ ரேஸ் சம்மந்த்ரித ஜகத்திதாம் அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞ்ஞாத நிக்ரஹாம் –லஷ்ம்யா சஹ
ஹ்ருஷீகேசா தேவயா காருண்யா ரூபா ரஷக – -ராகவத்வேபவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மிநீ அன்யேஷூ சவவதாரேஷூ
விஷ்ணோர் ஏஷ அநபாயிநீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷி விஷ்ணோர் தேக அனுரூபம் வை கரோத்யேஷாத் மனஸ் தநூம்
அழகியார் இவ்வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர் -தக்கார் பலர் தேவிமார் சால வுடையீர் –

ஸ்ரீ கீதை முதல் அத்யாயம் முடிவு ஸ்லோஹம் -எவம் உக்த்வா அர்ஜுனஸ் சங்க்யே ரதோபஸ்த உபாவிசத் விஸ்ருஜ்ய ச சரம் சாபம் சோக சம்விக் நமா நச-
18-73-நஷ்டோ மோஹா ச்ம்ருதிர் லப்த்வா த்வத் பிரசாதான் மயாச்யுத ஸ்தி தோஸ்மி கத சந்தேக கரிஷ்யே வசனம் தவ -இதுவே கீதை

அலங்கார ததியாரதனை –இல்லை தளிகை -அலம் போதும் என்னும் வரை சாதிப்பது -விதியை கற்க –பணிந்து -என்பதை கடிய மா சுணம் கற்று அறிந்தவர் என அடங்கி -கற்றவர் போலே என்னாமல் -வித்யைக்கு அழகு விநயம் என்று அறிந்தவர்கள் – என்றவாறு –வித்யை வினயத்தை தரும் -விநயம் சத்பாத்ரத்வத்தை தரும் -சத்பாத்ரம் ஆனவாறே சத்காரங்கள் பெறலாகும் -அதனால் தர்ம ருசி உண்டாகும் –அதனால் பேரின்ப வெள்ளம் பெருகும்

தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய் நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன்
நைமி சாரணியத்துள் எந்தாய் -1-6-9- போலே –அல்லி மாதர் புளக நின்ற ஆயிரம் தோழன் இடம் –சிங்க வேள் குன்றமே –1-7-10
-மிதுனத்தை மங்களா சாசனம் பண்ணி அனுபவிக்கிறார்
வேள்-யாவராலும் விரும்பப் படும் -என்றும் வேழ் -ஏழு குன்றங்கள் உடைய ஸ்தலம் என்றுமாம்

1-ஸ்ரீ யதே -கர்மணி வ்யுத்பத்தி -ஈஸ்வரனை தவிர அனைவராலும் சேவிக்கப் படுபவள் -ஈச்வரீம் சர்வ பூதானாம் –
மற்ற ஐந்தும் கர்த்தரி வ்யுத்பத்திகள் –2-ஸ்ரேயதே-தனது ஸ்வரூபம் நிறம் பெறவும் கர்ம அநு பத்த பலதான ரதச்ய பர்த்து
-சேதனர் அபராத பாஹூள்யத்தைக் கண்டு தான் இல்லாமல் இருந்தால் அனர்த்தம் விளையும் என்றும்
3-ஸ்ர்ணோதி -அடியார் விண்ணப்பங்களை செவி சாத்துக்கிறாள் -புருஷகார பிரபத்தி -ஸ்ரயோ ந ஹ்யரவிந்த லோசன மன காந்தா பிரசாதாத்ர்த்தே
-4- ஸ்ராயவதி -உசித சமய்ம் பார்த்து -ரமயா விநிவேத்யமாநே -இங்கு மணவாள மா முனிகள் ஸ்ரீ ஸூ கதிகள்
-இச் சேதனனுடைய அபராதங்களை கணக்கிட்டு நீர் இப்படி தள்ளிக் கதவடைத்தால் இவனுக்கு வேறு ஒரு புகல் உண்டோ
-உமக்கும் இவனுக்கும் உண்டான சம்பந்த விசேஷத்தைப் பார்த்தால் -உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது என்கிற படியே
குடநீர் வழித்தாலும் போகாதது ஓன்று அன்றோ -ஸ்வம்மான இவனை லபிக்கை ஸ்வாமி யான உம்முடைய பேறாய் யன்றோ இருப்பது
-எதிர் சூழல் புக்கு திரிகிற உமக்கு நான்  சொல்ல வேணுமோ -ரஷண சாபேஷனாய் வந்த இவனை ரஷியாத போது உம்முடைய
சர்வ ரஷகத்வம் விகலமாகாதோ-அநாதி காலம் நம்முடைய ஆஜ்ஞ்ஞாதி லங்கணம் பண்ணி நம்முடைய சீற்றத்துக்கு இலக்காகப் போன
இவனை அபராத உசித தண்டம் பண்ணாதே அத்தைப் பொறுத்து அங்கீ கரித்தால் சாஸ்திர மரியாதை குலையாதோ என்று அன்றோ
திரு உள்ளத்தில் ஓடுகிறது -இவனை ரஷியாதே அபராத அநு குணமாக நியமித்தால் உம்முடைய கிருபாதி குணங்கள் ஜீவிக்கும்படி என்-
அவை ஜீவித்ததாவது இவனை ரஷித்தால் அன்றோ -நியமியாத போது சாஸ்திரம் ஜீவியாது -ரஷியாத போது கிருபாதிகள் ஜீவியாது
என் செய்வோம் என்று தளர வேண்டா சாஸ்த்ரத்தை விமுகர் விஷயமாக்கி கிருபாதிகளை அபிமுகர் விஷயம் ஆக்கினால்
இரண்டுமே ஜீவிக்குமே ஆன பின்பு இவனை ரஷித்து அருளுவீர் என்று உபதேசிப்பாள் ஆயிற்று
ஸ்ராவயதீதி ஸ்ரீ -ஸ்ராவயித்ருத்வம் உபதேச கர்த்ருத்வம் -சேதனனை நோக்கி உபதேசத்தால் திருத்துகிறாள் என்றுமாம்
தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை

நந்தகோபன் குமரன் –காக்கும் இயல்வினன் கண்ணனுக்கும் ஒரு ரஷகன் -மகன் ஒருவருக்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம் –
-உயிர் அளிப்பான் என்நின்ற இனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து -அவதார கந்தம் என்பதால் வித்து —ஷீர சாகர தரங்க சீகரா சாரதா ரகித சாரு மூர்த்தயே
போகி போக சய நீய சாயிநே மாதவாய மதுவித் விஷே நம-இந்த ஸ்லோகத்தை இரவில் சயனிக்கும் பொழுது அனுசந்திப்பர்-
காலையில் எழுந்து இருக்கும் பொழுது -பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என் மனக் கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக் கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினாயே -என்ற பாசுரத்தை அனுசந்திப்பர்
இத்தையே -வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை – முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து -என்று அருளிச் செய்கிறாள் –

ஏஷ சர்வச்ய பூதஸ் து பரிஷ்வங்கோ ஹனூமத மயா காலமிமம் பிராப்ய தத்தஸ் தஸ்ய மஹாத்மன -யுத்த -1-14-திருவடிக்கு கிடைத்த ஆலிங்கனம்
தம் சமுத்தாப்ய காகுத்ச்தஸ் சிரச் யாஷி பதம் கதம் அங்கே பரதமா ரோப்ய முதித பரிஷச்வஜே -யுத்த -130-38- பரத ஆழ்வானுக்கு கிடைத்த ஆலிங்கனம்
சோப்யே நம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருதசிஹ் நேந பாணி நா சம்ச்புருச்ய ஆக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸூ காடம் பரிஷச்வஜே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-18-2-
க்ரூரருக்கு கிடைத்த ஆலிங்கனம் –பரத அக்ருர மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்பிலே -ஆசார்ய ஹிருதயம்

தொண்டை வாய்க் கேகேயன் தோகை கோயின் மேல் மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள்-பண்டை நாள் இராகவன் பாணி வில்
உமிழ் உண்டை உண்டதனைத் தன உள்ளத்து உள்ளுவாள் -கம்பர் -அயோத்யா காண்டம் மந்தரை சூழ்ச்சிப் படலம்
கூனே சிதைய யுண்டை வின்னிறத்தில் தெறித்தாய் கோவிந்தா – சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யேல் மற்றின் நெறியிகந்து யானோர் தீமை இழைத்தால்
உணர்ச்சி நீண்டு -குறியதா மேனியாய கூனியால் குலவுத் தோளாய் வெறியன வெய்தி நோய்தின் வெந்துயர்க் கடலில் வீழ்ந்தேன் -கிஷ்கிந்தா -அரசியல் படலம்
ஸூக்ரீவனுக்கு முடி சூட்டி ஹித உபதேசம் செய்த பெருமாள் வார்த்தை –வால்மீகி ஸ்ரீ ராமாயணம் இதிஹாச புராணங்களில் இல்லாத
அருளிச் செயல்களில் உள்ளதையே கொண்டு கம்பர் அருளிச் செய்கிறார்

ஆழ்வார்கள் கண்ட பஞ்சாமிர்தம் –
சீரார் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக் குடந்தையில் ஆராவமுதே -ஆராவமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
-கொண்டல் வண்ணன் கோவலனாய் வென்னி உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தான் அண்டர் கோன் அணி யரங்கன் என்னமுது –
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே திருவேங்கடத்து எம்பெருமானே
-எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக் கோனே
மன்னு குரும்குடியாய் வெள்ளறையாய் மதிள் சூழ் சோலை மலைக்கு அரசே -கண்ணபுரத்து அமுதே –

மோஷம் -கதாஹமை காந்திக நித்ய கிங்கர பிரகர்ஷயிஷ்யாமி -ஒழிவிலா காலம் எல்லாம் உடனே மன்னி வழு விலா அடிமை செய்வதே
-வருத்தமும் தீர்ந்து மகிழ்வதே –போர்த்த பிறப்போடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்துப் பெரும் துன்பம் வேரற நீக்கி —
தன் தாளின் கீழ் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணி -என்று அருளிச் செய்தார்கள் இ றே-

செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள் -உபய வேதாந்திகள் -மா முனிகள் அருளிச் செய்த திவ்ய கிரந்தங்களினால் மகிழ்ந்தமை
-விசதவாக் சிகாமத்வம் வீறு பெற அருளிச் செய்த வ்யாக்யானங்கள் -இவரது தேஜசால் தேஜஸ் பெற்றவை
மந்த மதிப்புவி மானிடர் தங்களை வானில் உயர்த்திடு நாள் -நித்ய சூ ரிகளில் காட்டிலும் -என்றவாறு யத் அவதரண மூலம் முக்தி மூலம் பிரஜானாம்
மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடும் நாள் –எம்பெருமானார் திரு உள்ளப்படி பிரமாண பிரமேய பிரமாதாக்கள் விஷயத்திலே
பிரதிஷ்டமாக்கி அருளினார் இதனால் எம்பெருமானார் வாழ்வு இன்றே முளைத்திட்டது –
கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபர் கலைகள் விளங்கிடு நாள் நாதனுக்கு நாலாயிரமும் உரைத்தான் வாழியே-சுடரிபு முனி சிருஷ்ட ஆம் நாயா சாம்ராஜ்ய மூலம்
காரமர் மேனி அரங்கர் நகர்க்கு இறை கண்கள் களித்திடு நாள் –ஆசார்ய பூர்த்தி என்று சிஷ்ய வ்ருத்தியை வஹித்து இவர்
திருமேனியைக் கண்ணாரக் கண்டு களித்தான் கொண்டல் வண்ணன் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அரங்கன்

சமிதோதய சங்கராதி கர்வ ஸ்வ பலாத் உத்த்ருத யாதவ பிரகாச அவிரோபிதவான் ஸ்ருதேரபார்த்தான் ந நு ராமா வரஜஸ் எஷ பூத –யதிராஜ சப்தத்தி
சிறைக்கூட அவதாரம் சம்சார மண்டல அவதாரம் -ஜ்ஞான சுடர் வெள்ள விளக்கு -சங்கு சக்ர கதாதரர் -வடமதுரை ஆய்ப்பாடி த்வாரகை –
ஸ்ரீ பெரும்பூதூர் ஸ்ரீ காஞ்சி -ஸ்ரீ ரெங்கம் திருநாராயணபுரம் -திருமந்தரம் த்வயம்
ஜானுமாத்ரோ தகோ யயௌ-யமுனை முலம் தாள் வற்றிக் காட்டியது போலே இவரால் பிறவிக் கடல் வற்றுமே
திருவடி சம்பதத்தால் சகட பங்கம் -சகடம் வழி அர்ச்சிராதி கதி அருளி -த்வந்த்வைர் விமுக்தாஸ் ஸூ க துக்க சம்ஜ்ஞை
ஏழு உலகம் கண்டால் வாயுளே -சுருதி ஸ்ம்ருதி இதிகாசங்கள் புராணங்கள் பாஞ்சராத்ரங்கள் ஆகமங்கள் அருளிச் செயல்கள் ஆசார்ய திவ்ய ஸூ க்திகள்-
இப்படி பல ஒற்றுமைகள் பலராமானுஜனுக்கும் ராமானுஜருக்கும் –

ஸ்ரீ தேசிகன் -திருவவதாரம் -திருத் தண்கா -திருத் தகப்பனார் சோமயாஜிகள் -திருத்தாயார் -தோதாத்ரி யம்மை
ஆசார்யர் மாதுலர் கிடாம்பி அ-ஸ்ரீ வேங்கட நாதன் -திருக்கண்டம்-திரு மணி அம்சம் –1268-சாலி வாகன வர்ஷம் -விபவ சம்வத்சரம்
நடதூரம்மாள் ஆம் முதல்வன் கடாஷித்து அருளினார் –

அஞ்சலீம் ப்ராங்முக க்ருத்வா பிரதிசிச்யே மஹோ நதே-கருணை யம் கடல் கிடந்தனன் கருங்கடல் நோக்கி
-ஒரு கடல் ஒரு கடலோடு ஸ்பர்சித்தித்து கிடந்தால் போலே இருக்கை –

பண்டு பண்டு –சம்ச்லேஷிப்பதற்கு முன்புத்தை பூர்த்தி எனக்கு உண்டாகப் பார்த்தி கோளாகில்-கலக்கப் புக்க வன்று தொடங்கி
மெலிவுக்கே இறே கிருஷி பண்ணிற்று -அவன் வாய் புலற்றும் நிறம் அறப் பண்டு போலேயாம் -கலக்கை யாகிறது பிரிவுக்கு அங்குரம் இ றே
கலந்து பிரிந்து லாப அலாபங்கள் அறியாதே பூர்ணையாய் இருந்த நிறம் போலேயாம் –

ஆதலான் அபயம் என்ற பொழுதத்தே அபயதானம் ஈதலே கடப்பாடு எனபது இயம்பினீர் என்பால் வைத்த காதலான்
இனி வேறு எண்ணக் கடவது என் கதிரோன் மைந்த கோதிலாதானை நீயே என் வயிற் கொணர்தி என்றான் -கம்பர்
அஞ்சன வண்ணன் என்னாருயிர் நாயகன் ஆளாமே வஞ்சனையாலர செய்திய மைந்தரும் வந்தாரே செஞ்சரம் என்பன தீ யுமிழ்கின்றன
செல்லாவோ உஞ்சிவர் போய்விடின் நாய்க்குகன் என்று எனை ஓதாரோ -ஆழ நெடும் திரை யாறு கடந்து இவர் போவாரோ
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில்லாளோ தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ
ஏழைமை வேடன் நிறத்திலன் என்றனை ஏசாரோ –பகவத் விஷயத்தில் காதல் கொண்டார் அதி சங்கை பண்ணுவதை குகன் பரத ஆழ்வான் பக்கலிலும் கண்டோமே
தோஷோயத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேதத் அகர்ஹிதம் -பெருமாள்

திருக் கோவலூர் -தப்பாக திருக் கோவிலூர்/திரு இந்தளூர் -தப்பாக திரு விழந்தூர்-திருவை இழந்த ஊர்
திருத் தண் கால் -தப்பாக -திருத் தங்கல் – விளக்கொளி பெருமாள் திருத் தண்கா –

பகவான் ஞான விதி பணி வகை என்று இவர் அங்கீ காரத்தாலே கீதைக்கு உத்கர்ஷம் -அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்து அவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி –ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கு-

போக்தும் தவ ப்ரிய தமம் பவதீவ கோதே -ஸ்ரீ கோதா ஸ்துதி -ஆண்டாள் மற்ற ஆழ்வார்களுக்கும் வழி காட்டி –தாய் மகள் தோழி அநு காரங்கள் இவளைப் பின் பற்றி ஆழ்வார்கள் அருளிச் செயல்
மின்னனைய நுண்ணிடையார் இன்னிசைக்கும் விரி குழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய்

அஞ்சிலே ஓன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஓன்று ஆறாறாக ஆரியர்க்காக அஞ்சிலே ஓன்று பெற்ற அணங்கைக் கண்டு
அயலார் ஊரில் அஞ்சிலே ஓன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான் –கம்பர்
கடலை தாவி–பூமி மாதா வைக் கண்டு தீயை வைத்து வாயு பெற்ற பிள்ளை –
உள்ளுறை பொருள் –பஞ்ச சம்ஸ்காரம் முதல் அஞ்சு -வித்யை- தாயாகப் பெற்ற -அன்று நான் பிறந்திலேன் -இவ்வாதம வஸ்துவை ஜனிப்பித்து
இரண்டாவது அஞ்சு அர்த்த பஞ்சகம் -அறிய வேண்டிய அர்த்தங்கள் எல்லாம் இதுக்குள்ளே உண்டே -விரோதி ஸ்வரூபத்தை தாண்டி
ஸ்வரூப உபாய பிராப்ய விரோதிகளையும் -தாண்டி
-மூன்றாவது அஞ்சு உபாய பஞ்சகம் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –
நான்காவது அஞ்சு பரத்வாதி பஞ்சகம் –அர்ச்சாவதாரம் -கண்டு காணச் செய்து -அணங்கு தெய்வம்
ஐந்தாவது அஞ்சு லோக பஞ்சகம் -மண் உலகம் நரக லோகம் ஸ்வர்க்க லோகம் கைவல்ய லோகம் பரமபதம்
ஆக பஞ்ச சம்ஸ்காரம் பெற்று -பிரதி பந்தகங்களைக் கடந்து சரம உபாயத்தைக் கடைப் பிடித்து அர்ச்சாவதாரத்தைக் காட்டிக் கொடுத்து
சம்சார உத்தீரணராக்கும் சதாசார்யனுடைய படிகளை வெளியிட்டார் யாயிற்று

ஆறா மத யானை அடர்த்தவன் தன்னை சேறார் வயல் தென் குருகூர்ச் சடகோபன் -வயல் வளத்துக்கும் குவலயா பீடத்துக்கும் சேர்த்தி
-சேறு மிக்கு இருப்பதால் வயல் வளம் தமிழர்கள்
பிரதி பஷம் போனவாறே சம்ருத்தமான திரு நகரி -குவலயா பீடமோ திரு நகரியில் உழுவது நடுவது ஒட்டாதாக கிடந்தது
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக் கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல் -கம்ச விஜயத்துக்கு திரு நகரியிலே கொடி கட்டி யாயிற்று
கொடி யணி நெடு மதிள் கோபுரம் ஆழ்வார் போல்வார் எழுந்து அருள கொடி கட்டியதாக வியாக்யானம்
மீன் நோக்கு நீள் வயல் சூழ் வித்துவக் கோடு-கடலில் மத்ச்யங்கள் கடல் வற்றினால் நமக்கு புகலிடம் என்று நினைத்து இருக்கும் தேசம்

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே -1-9-8-ஆவி என்று ஆத்மா -ஆக்கை என்று சரீரம்
-அர்த்தத்தையும் சப்தத்தையும் சொல்லுகிறது -ஆக சப்தார்த்த சம்பந்த நியமம் அவன் இட்ட வழக்கு என்கிறது
அவன் தூரச்தன் ஆனாலும் இது கிட்டி நின்று உதவும் -வாச்ய பிரபாவம் போலே அன்று வாசக பிரபாவம்வாச்யன் திரு நாமத்தை விட்டு பிரிந்திலன்
-பிரபாவன் ஆகச்தனாய் இருந்தாலும் பிரபை நம்முடைய கிருஹாங்கணத்திலே இருந்து வெளிச்சம் தரும் -புஷ்பம் பரோஷமாய்
இருந்தாலும் பரிமளம் பிரத்யஷமாய் இருந்து கழலும் -பிரபத்தவ்யன் கண் காணாமல் நின்றாலும் பிரபத்தி கரச்தமாய் இருந்து கார்யம் செய்யும்
-த்யேயன் சிந்தைக்கு கோசரம் அல்லாமல் இருந்தாலும் த்யானம் கைப்பட நின்று கார்யம் செய்யும் -ஸ்துத்யன்வாசமா பூமியாக இருந்தாலும் ஸ்துதி நாவினுள்
நின்று மலர்ந்து கார்யம் செய்யும் -நமஸ்கார்யன் கை விட்டாலும் நமஸ்காரம் கை விடாதே -பிஷக் வாராதே இருந்தாலும் பேஷஷம் வந்து கார்யம் செய்யும்

தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவு என்று உரையீரே -ஒரு குருகைக் குறித்து நிரதிசய போக்யரான தாம் போம் போது தம்மை வைத்துப் போக
வேண்டாவோ என்று விண்ணப்பம் செய்யுங்கோள்-தமக்கு அகல வேண்டில் இவ்வடிவைப் பிரிந்தார் பிழையார் என்று தம்மை வைத்து அன்றோ போவது
தம்மைக் கண்ணாடிப் புறத்திலே கண்டு அறிவரே -தம்மைப் பிரிந்த தசைக்கு உதவுகைக்கு அன்றோ தம் கைக் கொண்டது-

முந்துற்ற நெஞ்சே நயப்புடைய நாவீன் தொடை கிளவியுட் பொதிவோம் – நெஞ்சை நோக்கி நீயும் வேண்டா என்கிறார்
-உத்பத்திக்கு நீயும் வேண்டா நானும் வேண்டா -நெஞ்சிலே ஊன்றி அனுபவிப்பைக்கு நீ உண்டாக அமையும்
-நெஞ்சு இன்றிக்கே கவி பாடப் போமோ என்னில் நெஞ்சினுடைய ஸ்தானத்திலே சர்வேஸ்வரன் நின்று கவி பாடுவிக்கும் என்று கருத்து

சங்கு சக்ர கதா பாணே -என்கையாலே –ஜ்ஞான சக்த்யாதி யோகத்தைச் சொல்லித்வாகரகா நிலய அச்யுத புண்டரீகாஷ-என்கையாலே
வாத்சல்ய சௌசீல்ய சௌலப்யாதி குணங்களைச் சொல்லி -ரஷமாம் -என்கையாலே அகிஞ்சன அதிகாரி என்னும் இடம் சொல்லி
ரணாகதாம் என்கையாலே உபாய அத்யாவசாயம் சொல்லித் தலைக் கட்டுகிறது -இத்தால் லஜ்ஜா புரஸ் சரமாக
இதர உபாய த்யாகம் சொல்லி சித்த உபாயம் ச்வீகாரம் பண்ணுகைஅதிகாரி கிருத்தியம் என்றதாயிற்று-
சாஹம் –இவ்வருகு உள்ளவை ஒன்றும் தஞ்சம் அல்ல -நீயே ரஷகன் என்று இருக்கிற நான்
கேசக்ரஹம் ப்ராப்தா -சத்ருக்கள் வந்து என் தலை மயிரைப் பிடிக்கை யாகிற இப்பரி பாவத்தை அனுபவிக்கிறேன்
த்வயி ஜீவத்யபி பிரபோ -உன் சத்திக்கும் என் பரிபவத்துக்கும் சேர்த்தி இல்லை
பிரபோ -என்னைப் போல் கையும் வளையுமாய் இருந்து நான் இப்படி படுகிறேனோ -உன்னுடைய புருஷோத்தமத்வத்துக்கும்
சரணாகதையான நான் நோவு படுகிற இதுக்கும் என்ன சேர்த்தி உண்டு –ரஷமாம் சரணாம் கத –என்றவள் இ றே
சங்க -எப்பொழுதும் கை கழலா நேமியானாய் இருக்கிறது நின் கைக்கு ஆபரணமாய் இருக்கவோ -என் மேல் வினை கடிகைக்கு அன்றோ
த்வாரகா நிலய -சங்க சக்ர கதா திவ்யாயுதங்களும் நானும் பரம பதத்திலே என்று சொல்லலாமோ -அவதரித்து அண்ணியையான நீ மீளவும் பரம பதத்துக்கு போனாயோ
அச்யுத -நீ இங்கே சந்நிஹிதனாய் வைத்து ஆஸ்ரிதரை எங்கே நழுவ விட்டாய்
கோவிந்த -பசுக்களை ரஷியேன் -வசிஷ்டாதிகளையே காண் ரஷிப்பேன் என்று சொல்ல வல்லையே -குறைய நின்றாருடைய ரஷணத்துக்கு
அபிஷேகம் பண்ணி இருக்கிறவன் அல்லையோ
புண்டரீகாஷ -குளிர்ந்து சேர்த்து ஏலமிட்ட தண்ணீரை விடாயர்க்கு வார்க்காதே நிரபேஷர்க்கு வார்க்குமா போலே அக் கடாஷம் கொண்டு
நித்ய சூரிகளை நோக்க இருக்கிறாயோ -ஆனால் இப் பரிகரங்களைக் கொண்டு செய்யச் சொல்லுகிறது என் என்ன
மாம் ரஷ -நீ ஒருவனுமே ரஷகன் -என்னுடைய ரஷணத்தில் தீஷித்து இருக்கிறவர்களும் என்னோபாதி குழைச் சரக்கு என்று இருக்கிற என்னை ரஷி
சரணாகதாம் -நம்மை ரஷகன் என்று இருந்தாயோ -அவன் உரிகிற துகிலை நீயும் ஒரு கை பற்றா நின்றாயே என்ன -ஆகில் அதனை விட்டேன் என்கிறாள்
மாம் -அல்லாதாரை வ்யாவர்த்திக்கிறது -சரணாகதாம் என்கையால் தன்னை வ்யாவர்த்திக்கிறது
இவற்றால் திரௌபதிக்கு உபாயாந்தர சம்பந்தம் இல்லை -அவள் பிரபத்தி பலித்ததும் அறிந்தோம்

இத்தை வேதங்களும் ரிஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் விரும்பினார்கள் -இத்தை -திருமந்தரம்
நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர –திவ்யோ தேவ ஏகோ நாராயண -வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித —
சங்கீர்த்த்ய நாராயண சப்த மாதரம் -நாராயணேதி சப்தோஸ்தி- வண் புகழ் நாரணன் -செல்வ நாரணன் –வாழ் புகழ் நாரணன் –

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -என்கிறபடியே ச விக்ரஹனாய் கொண்டு ஸ்ருஷ்ட்யாதிகளை பண்ணும் -முகில் வண்ணன் என்கிற இது
ஔதார்ய குண பரமாக வ்யாக்யாதாக்கள் பலரும் வியாக்யானம் பண்ணினார்களே யாகிலும் விக்ரஹ பரமாக இவர் அருளிச் செய்கையாலே
இங்கனம் ஒரு யோஜனை உண்டு என்று கொள்ள வேண்டும் -ஒன்றுக்கு பல யோஜனைகளும் உண்டாய் அன்றோ இருப்பது-மா முனிகள்
பத்ம நாபாதி விபவங்கள் -36 என்கிறது -விஷ்வக்சேன சம்ஹிதையில்
அஹிர்புத்ன்ய சம்ஹிதையில் 39 -கபில தத்தத்ராய பரசுராமர் -அவதாரங்களை சேர்த்து -மா முனிகள் காட்டி அருளுகிறார் –

ஒரு நாலு முகத்தவனோடு உலகீன்றாய் என்பர் -அது உன் திரு நாபி மலர்ந்தது அல்லால் திரு உள்ளத்தால் உணராயேல் —
மேரு கிரி அவுணன் உடல் மிடல் கெடுத்தாய் என்பர் அது உன் கூர் உகிரே அறிந்தது அல்லால் கோவே நீ அறியாயால் –
இரண்டும் அவலீலையாக செய்தவை என்றவாறு

பெருவாயா -த்ரௌபதி சரணம் என்கிற உக்தி இத்தனையும் திரு உள்ளத்தே கிடந்தது சதச்சில் அவன் பரிபவித்த பரிபவத்தையும் பரிஹரித்து
துர்யோ நாதிகளையும் நிரசித்து தர்ம புத்திரன் தலையிலே முடியையும் வைத்து இவள் குழலையும் முடிப்பித்து பின்னும் குறைவாளனாய்
பரம பதத்துக்கு எழுந்து அருளிகிற போதும் திரு உள்ளத்திலே புண்ணோடு இ றே எழுந்து அருளிற்று

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம் -4–

December 1, 2015

ஸ்ரீ விஷ்ணு புராணம்6 அம்சங்கள்முதல் அம்சத்தில் 22 அத்யாயங்கள் –இரண்டாவதில் 16 அத்யாயங்கள்
மூன்றாவதில் 18 அத்யாயங்கள் –நாலாவதில் -24 அத்யாயங்கள் –ஐந்தாவதில் 38 அத்யாயங்கள் –ஆறாவதில் 8 அத்யாயங்கள்
-ஆக மொத்தம் 126 அத்யாயங்கள்
கடைசி அத்யாயத்தில் மைத்ரேயர் -பகவன் கதிதம் சர்வம் யத் ப்ருஷ்டோசி மயா மு நே –நாந்யத் ப்ருஷ்டவ்யம ஸ்தி மே விச்சின்னாஸ்
சர்வ சந்தேஹா –என்று கேட்டு அதற்கு விரிவாக பராசரர் சொல்லலி தலைக் கட்டி அருளுகிறார்
இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத புராணங்கள் –யன்ம யஞ்ச ஜகத் சர்வம் -என்று பொதுவிலே பிரச்னம் பண்ண –
விஷ்ணோஸ் சகாசாத் உத்பூதம் என்று கோள் விழுக்காட்டாலே உத்தரமாகை யன்றிக்கே எருமையை யானையாகக் கவி பாடித் தர வேணும்
என்பாரைப் போலே லிங்கம் என்ற ஒரு வ்யக்தியை நிர்தேசித்து இதுக்கு உத்கர்ஷம் சொல்லித் தர வேணும் என்று கேட்கிறவனும்
தமோபிபூதனாய்க் கேட்க சொல்லுகிறவனும் தமோபிபூதனாய்ச் சொல்ல இப்படி பிரவ்ருத்தமான லைங்க புராணாதிகளான
குத்ருஷ்டி ச்ம்ருதிகளும் -ஸ்ரீ விஷ்ணு புராணத்தின் உபக்ரமத்தின் அழகைச் சொன்னபடி
சர்வத்ராசௌ சமஸ்தஞ்ச வசத்யரேதி வை யத ததஸ் ச வா ஸூ தேவேதி வித்வத்பி பரிபட்ட்யதே –1-1-12-
தான் சர்வத்ர வசிப்பவனாய்-தன்னிடத்தில் சர்வமும் வசிக்கப் பெற்றவனாய்
ததஸ் சமுத்ஷிப்ய தராம் ஸ்வ தம்ஷ்ட்ரயா மஹா வராஹஸ் ஸ்புட பத்ம லோசன ரசாதலாத் உத்பலபத்ர சந்நிப சமுத்திதோ
நீல இவாசலோ மஹான் – 1-4-26–இதை ஒட்டியே நீலவரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப கோல வராகம்
ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் -என்கிறார் ஆழ்வார்
உத்திஷ்டதஸ் தஸ்ய ஜலார்த்த குஷே மஹா வராஹச்ய மஹீம் விக்ருஹ்ய விதூன்வதோ வேதமயம் சரீரம் லோமாந்தரஸ்தா
முனயஸ் ஸ்துவந்தி –1-4-29–ரோம கூபங்களில் மக ரிஷிகள் ஒடுங்கி இருந்து கைங்கர்யம் செய்ய -ஆதியம் காலத்து அகலிடம்
கீண்டவர் பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே ஓதும் மால் எய்தினாள் -ஆழ்வார்
ஜ்யோதீம்ஷி விஷ்ணோர் புவனானி விஷ்ணுர் வனானி விஷ்ணுர் கிரயோ திசச்ச– –நத்யஸ் சமுத்ராச்ச ச ஏவ சர்வம் யதஸ்தி
யன் நாஸ்தி ச விப்ரவர்ய -2-12-38–சரீராத்மா பாவத்தால் சகலமும் அவனே என்றபடி
எங்கள் ஆழ்வான் வியாக்யானம் -அம்புன விஷ்ணோ காயத்வேன தத் பரிணாம பூதம் பிரஹ்மாண்டம் அபி தஸ்ய காய
-தஸ்ய ச விஷ்ணு ராத்மேதி சகல ஸ்ருதிகத –தாதாத்ம்ய உபதேச உப ப்ருஹ்மண ரூபச்ய -ஜ்யோதீம் ஷீத் யாதி நா வஷ்ய
மாணச்ய சாமா நாதி கரண்யச்ய சரீராத்ம பாவ ஏவ நிபந்தனம் இத்யாஹா –என்று
யதச்தி -என்பதனால் உள்ள பதார்த்தங்கள் எல்லாம் சரீர பூதம் -யன் நாஸ்தி ச -இல்லாத வஸ்துக்களும் சரீர பூதம் என்கிறது எப்படி என்றால்
அஸ்தி -சப்தத்தால் சேதனப் பொருள்களையும் நாஸ்தி சப்தத்தால் அசேதனப் பொருள்களையும் சொல்லுகிறது –
இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு -அவன் உரு உள்ளதும் அல்ல இல்லதும் அல்ல சர்வ விலஷணன் என்றபடி
நா சதோ வித்யதே பாவோ நா பாவோ வித்யதே சத உபயோரபி த்ருஷ்டோந்த -ஸ்ரீ கீதை -2-16-இங்கே
அந்த -நிர்ணயம் என்றபடி அசேதனனுக்கு அசத்வமும் சேதனனுக்கு சத்வமும் தேறிற்று –
மூன்றாவது அம்சம் சப்த ரிஷிகளின் விவரணம் -வசிஷ்டர் காச்யபர் அத்ரி ஜமதக்னி கௌதமர் விஸ்வாமித்ரர் பரத்வாஜர் -சப்த ரிஷிகள்
ஐந்தாவது அம்சம் பூர்ண கிருஷ்ணாவதாரம் குரவை துவரைகளில் வடிவு கொண்ட சபாலன் அன்றோ –
அங்கநா மங்கநா மாந்தரே மாதவோ மாதவம் மாதவஞ்சாந்தரே ணாங்கநா -என்கிறபடியே திருக் குரவையிலே பெண்களோடு
அநேக விக்ரஹம் பர்ரிக்ரகாம் பண்ணி அனுபவித்தால் போலேயும்
ஏகஸ்மின் நேவ கோவிந்த காலே தாஸாம் மஹா முநே ஜக்ராஹ விதிவத் பாணீன் ப்ருதக் கேஹேஷூ தர்மத உவாச விப்ர
சரவாசாம் விஸ்வரூப தரோ ஹரி -31 அத்யாய ச்லோஹம் -என்கிறபடியே ஸ்ரீ மத த்வாரகையிலே
தேவிமார் உடன் பதினாறாயிரம் விக்ரஹம் கொண்டு அனுபவித்தால் போலேயும் –
ப்ருந்தாவனம் பகவதோ க்ருஷ்ணேந அக்லிஷ்ட கர்மணா சுபேந மனசா த்யாதம் கவாம் வ்ருத்திம் அபீப்சதா –5-6-24
பிருந்தா -துளசீ-நெரிஞ்சி–நெரிஞ்சிக் காட்டை பசும் புல் காடாக மாற்றி அருளி -அக்லிஷ்ட கர்மணா-சரமம் இல்லாமல் கார்யம் செய்து
அருளும் கிருஷ்ணன் -சங்கல்பத்தாலே செய்து அருளும் சக்தன் அன்றோ
உத்பன்ன நவ சஷ்பாட்யம் என்னும் படி கடாஷித்தால் போலே தத்தவங்களை விசதமாக அறிய வல்லராம் படி ஆழ்வாரைக் கடாஷித்தான் -ஈடு
கோவ்ருத்திக்கு நெரிஞ்சியைப் புல்லாக்கினவன் ஜகத் ஹிதார்த்தமாக எனக்கே நல்ல அருள்கள் என்னும் படி சர்வ சௌஹார்த்த
பிரசாதத்தை ஒரு மடை செய்து இவரைத் தன்னாக்க லோகமாக தம்மைப் போலே வாக்கும் படி யானார் -ஆசார்ய ஹிருதயம்
கோப வ்ருத்தாஸ் ததஸ் சர்வே நந்தகோப புரோகமா மந்திர யாமா ஸூ ருத்விக் நா மஹோத்பாதாதி பிரவ –என்று தொடங்கி
கோகுல வாசம் ஆபத்து என்று ஸ்ரீ பிருந்தாவனம் சென்றார்களாம் பஞ்ச லஷம் பெண்களும்
கதாசித் சகடச் யாதஸ் சயா நோ மது ஸூ தன சிஷேப சரணாயூர்த்த்வம் ச்தன்யார்த்தீ ப்ரருரோத ஹ -இத்தைக் கொண்டே
முலை வரவு தாழ்த்ததனால் சீறி நிமிர்த்த திருவடிகளாலே சகடத்தை சாடினான் ஆயிற்று என்பர்-

சதுர்முக சமாக்க்யாபி சடகோப முநௌ ஸ்திதா ஸ்வ வாசா மாத்ரு துஹித்ரு சஹீவாசா ச வர்ண நாத் –
ஆழ்வாருக்கும் நான்கு முகங்கள் உண்டே -பின்னை கொல் நில மா மக்கள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள்-
-காவியம் கண்ணி என்னில் கடி மா மலர்ப்பாவை ஒப்பாள் —தாய் அத்யவசாய நிஷ்டை மகள் த்வரா நிஷ்டை
என் பெண் மகளை எள்கி தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன் –தாய் தோழி மேல் பழி
குமுறும் ஓசை விழ ஒலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு அமுத மென் மொழியாளை நீர் உமக்கு
ஆசை இன்றி அகற்றினீர் –தோழி தாய் மேல் பழி
இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாட போதுமின் என்ன போந்தோமை –தலைவி தோழி மேல் பழி
அன்னைமீர்காள் நீர் என்னை முனிவது எங்கனே –மகள் தாய் மேல் பழி
முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையும் முநிதீர் –தோழி தாய் கூட்டு சேர்ந்து தலைவி மீது பழி
அந்தரங்க ஆராய்ச்சில் தலைவிக்கு சொல்லும் நன்மையே –மஹத்தான-கௌரவ பிரதிபத்தி உண்டே இருவருக்கும்
உண்ணும் சோறு –எல்லாம் கண்ணன் என்றே இருப்பால் என் மகள் – –மூவருக்கும் உண்டான அந்தரங்க உகப்பு -தோற்றும்
திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் -நம்பியை நான் கண்டது முதலாக என்னாமல் -அலர் தூற்றிற்று முதலாக கொண்ட என் காதல் -7-3-8-
போலே இல்லாமல் நம்பாடுவான் வாக்கின் அனுவாதம் முத்தா லங்கார ரீதியிலே நன்கு தேறுகிறது என்னக் குறை இல்லை –
காதல் கடல் புரிய விளைவித்த காரமர் மேனி -சௌந்தர்யம் -சௌகுமார்ய சிந்தனா பரிவாஹமாக –
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் -ஒரு பணிவிடைக் காரனை வைத்துக் கொள்ள வில்லையே -உபய விபூதியும்
அவன் ஆளாய் இருக்க –திவ்ய்யாயுதங்களை அவன் ஏந்துவது மலைகளை எடுத்தால் போலே தோன்றுகிறதே ஆழ்வாருக்கு
நண்ணாதார் நலிவு எய்த நல்லவஅமரர் பொலிவு எய்த திருவாய் மொழி திருவவதரித்தது என்று தாமே அருளிச் செய்கிறார்
உகவாதார் நெஞ்சு உளுக்கும் படியான பிரபந்தம்

போகத்தில் வழுவாத விஷ்ணு சித்தன் -போகம் -பகவத் அனுபவம் -மாலுக்கு வையகம் -6-6- திருவாய்மொழி நிகமன -இப்பத்தும் வல்லவர்
கட்டு எழில் வானவர் போகம் உண்பாரே – பெரியாழ்வார் போகத்துக்கும் நித்ய ஸூ ரிகள் போகத்துக்கும் பர்வத பரம அணு வோட்டை வாசி உண்டே
-இவரது ஸ்ரீ கிருஷ்ணாவதார சேஷ்டித போகம் அன்றோ-
யசோதை பாவத்திலே -மிடுக்கு இல்லாமையால் நான் மெலிந்தேன் –பெரு நீர்த் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம்
தரு நீர் சிறுச் சண்ணம் துள்ளம் சோர தளர் நடை நடவானோ
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவேரித் தென்னரங்கன் –பண்டவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்
-அரையர் அரங்கன் செய்ததாக பேசும் பொழுது பாடுவார் கண்ணில் காவேரிப் புனலும் கங்கைப் புனலும் பெருகாது இருக்குமோ

வாத்சல்யம் தோஷ போக்யத்வம் –வாத்சல்யம் நாம தோஷேஷூ குணத்தவ புத்தி -சம்பந்த விசேஷான் விதேஷூ ப்ரீதி சிநேக யஸ்ய
விபாகா அஸ்தான பயசங்கித்வம் தோஷா நவபாச தோஷேபி குணத்வ புத்திரித்யாதய -குற்றங்கள் புலப்படாதவை மட்டும் இல்லாமல்
அவற்றையே நாற்றமாக கொள்ளும் படியான ப்ரீதி-எற்றே தன் கன்றின் உடம்பின் வழு வன்றோ காதலிப்பது அன்று அதனை ஈன்று உகந்த ஆ
—இப்படிப் பட்ட பிரேம விசேஷமே வாத்சல்யம் –தோஷத்தை குணமாகக் கொள்வது ஞான பூர்த்திக்கு கொத்தையா -அவிஜ்ஞ்ஞாதா
இந்த தோஷ போக்யத்வத்தையே மங்க ஒட்டு உன் மாயை என்கிறார் ஆழ்வார்
தயா -பர துக்க துக்கித்வ ரூபம் -பர துக்க நிராகரண இச்சை -குண பரீவா ஹாத்மானாம் ஜன்மானாம் -திருக்குணங்களை காட்டி அருளவே திருவவதாரம்

சத்யமேதா –சஹச்ர நாமம் –சத்யமான மேதையை உடையவன் -வல்லவ வ ஸூ தேவாதி சா ஜாத்ய அபிமானி நீ மேதா சத்யா அஸ்ய ந நடன மாதரம்
சமஸ்த கல்யாண குணாத்மகனாய் சர்வ நியந்தாவாய் இருக்கிற சர்வேஸ்வரன் நாள் இடைப் பெண்கள் இருந்த இடத்தே புக்கு அல்லது நிற்க மாட்டாதே செல்லாமை விளைய அவர்கள் இங்கே புகுராதே கொள் என்ன விலங்கு இட்டாப் போலே பேரவும் திரியவும் மாட்டாதே தடுமாறி நின்றான் என்கிற
சௌசீல்யம் தங்களையும் இவர்களையும் ஒழிய ஆர் அறிந்து கொண்டாட வ்யாசாதிகள் எழுதி விட்டு வைத்துப் போனார்களோ
-பட்டர் மின்னிடை மடவார் கழகமேறேல் நம்பி என்ற இடத்துக்கு
ஸ்வ நியந்தாவானவன் சிலருக்கு நியமிக்கலாம் படி எளியன் ஆனான் என்றால் இது மெய் என்று கைக் கொள்ளுவாரை கிடையாது இ றே-
சாஸ்திரங்கள் எல்லாம் ஈசேசிதவ்ய விபாகம் பண்ணி ஒருங்க விடா நிற்க அத்தலை இத்தளையாகச் செல்லுகிறதே இது -நம்பிள்ளை
விகர்த்தா –விகர்த்தா ச்வார்த்த ஹர்ஷ சோகாத்ய பாவேபி பரார்த்த தத் ப்ரசக்தி அதோஷ அந்யதா பர துக்க துக்கித்
வாதயோ குணா கதம் அஸ்ய சயு -பட்டர் ஸ்ரீ ஸூ க்தி -மநோ விகாரம் அடைகிறவர்

ஜ்ஞான வைராக்ய ராசயே—ஞான வைராக்யங்களுக்கு ராசி என்றும் ஜ்ஞான சமூஹங்கள் வைராக்ய சமூஹங்கள் என்றுமாம்
-பகவத் ச்வரூபாதி ஜ்ஞான விஷயங்கள் பல உண்டே -த்யாஜ்ய விஷயங்களும் பல உண்டே
அகாத பகவத் பக்தி சிந்தவே -பக்திக்கு கடல் என்று சொல்லாமல் காதல் கடை புரைய விளைவித்த -பக்தியை கடலாக ரூபித்து
அகாதமான பகவத் பக்தி கடலை உடையவர்
லோகே -சம்சாரி ஜானே –சாஸ்த்ரத்தில் -என்றுமாம் -பக்த ஜனக ஜீவிதம் -பக்த ஜனங்களுக்கு தரகாதிகள் இவன் என்றும்
அவர்களை தாரகமாக கொண்டவன் இவன் என்றும்
சமர்த்தம் -அளவுடையரான நித்ய சூ ரிகள் அனுபவிக்கும் தன்னை நித்ய சம்சாரிகள் அனுபவிக்கும் இடத்தில் ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை -என்கிறபடியே சாத்மிக்க சாத்மிக்க அனுபவிப்பிக்கும் ஆற்றல் உடையவன் என்றவாறு -ஆஸ்ரிதா நாம் சாத்ம்யயோக பிரதான

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும் பெரிய கோலத் தடம் கண்ணன் -4-5-6-
இதற்கு பிள்ளான் -நீல மேக நிபதிவ்ய ரூபோசித திவ்யாங்காரத்தாலே அநுலிப்தனாய் -அதி விசாலமாய் அதி ரமணீயமாய்
இருப்பதொரு தாமரைத் தடாகம் போலே இருப்பதொரு திருக் கண்களை உடையவனை -என்றவாறு
வெளிய நீறு –திவ்யாலங்காரம்-கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்-எம்பெருமானுக்கு விசேஷணம்
பெரியவாச்சான் பிள்ளை -வெளிய நீறு -அஞ்சன சூர்ணம்
கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்-பெரிய கோலத் தடம் கண்ணுக்கு ஏக தேச விசேஷணம்
சஷூஷீ தத்தாரணம் தத்ர விஹிதமிதி அஞ்சனபரத்வமாகாரா ஆசார்ய -தேசிகன்

ஓடும் புள்ளேறி -1-8-/பொரு மா நீள் படை -1-10-/அணைவது அரவணை மேல் -2-8- இவற்றுக்கு ஆறாயிரப்படி அவதாரிகை வேறு விதம்
-பெரியவாச்சான் பிள்ளை முதலானோர் அவதாரிகை வேறே விதம் -தேசிகன் இருபத்து நாலாயிரப் படி ஒன்றியே
திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியும் சாரமும் அருளிச் செய்துள்ளார்
தாள தாமரைக்கு -பிள்ளான் -திருக்கண்ணபுரத்து எம்பெருமானை அனுபவித்து இப்போது திருமோகூர் எம்பெருமானை அனுபவிக்கிறார்
-என்பதுவே —மற்ற வியாக்யானங்களில் பரமபத யாத்ரைக்கு நாள் குறிப்பிட்டதால் நிச்சயித்து வழி துணையாக பற்றுகிறார்
மார்க்கபந்து சைத்யம் மோஹனத்தே மடுவிடும் -தேசிகன் ரத்னாவளியில் ஸ்ராந்திஹாரத்வ முக்க்யை ராகாரைஸ் சத் கதிஸ் ஸ்யாத் -என்றும்
சாரத்தில் சதபத வ்யாம் சஹாயாம் ஸ்ரீ சம் ப்ராஹ – -இத்தால் தேசிகன் இவற்றையே நிதியாகக் கொண்டு கையாண்டார் -எனபது ஸ்பஷ்டம்

ஸ்ரீ கீதையில் அர்ச்சா பிராஸ்தாபம் இல்லையே என்பதற்கு நம்பிள்ளை –நாலாமோத்தில்-யே எதா மாம் பிரபத்யந்தே தான் ததைவ பஜாம்யஹம் -என்றதில் அர்ச்சாவதார நிலையம் அந்தர்கதம் -உமர் உகந்து உகந்த உருவம் நின்னுருவமாக்கி -8-1-4–அர்ச்சாவதார பரமான வியாக்யானம் கீதா பாஷ்யத்திலும் இல்லை -இது நம்பிள்ளை நிர்வாகமே
தேசிகன் -தாத்பர்ய சந்த்ரிகையிலே -யே யதா மாம் உபக்ரமத்திலேயே -அதர கிருஷ்ணாவதார வருத்தாந்தேன சஹ அர்ச்சாவதார வ்ருத்தாந்தோபி-என்று
காட்டி அருளுகிறார்
தம்மை உகப்பாரை தாம் உகப்பார் என்ற நாச்சியார் திருமொழி பாசுரத்தைக் கொண்டு ரசமாக நம்பிள்ளை –ப்ரியோ ஹிஜ்ஞானி நோத்யர்த்தம் அஹம் ச மம ப்ரியா –என்கிற ஸ்ரீ கீதா ச்லோஹத்தில் சகாரத்தைக் கொண்டு ஜ்ஞானி என் பக்கல் செய்யும் ப்ரீதியை உபாதியாக்கி அவன் பக்கலிலே நான் ப்ரீத்தி பண்ணினது பெரிதோ -என்று அருளினார்
தாத்பர்ய சந்த்ரிகையில் -ச மம ப்ரிய இத்யர்த்த நிரதிசய ப்ரீதிம் குர்வதோபி மகோ தாரச்ய ஈச்வரச்யாபி தத் ப்ரீதி உபாதிக ப்ரீதி கரணாத்
அத்ருப்திஸ் சூசிதேதி கேசிதாசார்யா -கேசிதாகூ -என்னாமல்- கேசிதாசார்யா என்றது பிரபத்தி கௌரவம் தோற்ற அருளிச் செய்கிறார்

ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம் -ஸ்ரீ கிருஷ்ணன் உடைய சித்தாந்தம் -பெருமாள் இளைய பெருமாளை நோக்கி -த்வதீயம் மேந்த்ராத்மானாம்
த்வாம் –ஸ்தோத்ர ரத்னம் -மகாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய ஷணேபி தே யத்விர ஹோதி துஸ் சஹ -என்று இத்தையே காட்டி அருளுகிறார்

கப்யாச -கம்பீராம்ப –விகசித –புண்டரீக தள–அமல ஆய்த
கம்பீராம் பஸ் சமுத்பூத –ஸூ ம்ருஷ்ட நாள–ரவிகர விகசித
நீரார் கமலம் போல் செங்கண் மால் –சிறிய திருமடல் -அ ழர் அலர் தாமரைக் கண்ணன் -திரு விருத்தம் -இத்தைக் கொண்டே கம்பீராம்பஸ் சமுத்பூத
எம்பிரான் தடம் கண்கள் –மென்கால் கமலத் தடம் போல் பொழிந்தன –திரு விருத்தம் -ஸூ ம்ருஷ்ட நாள –
செந்தண் கமலக் கண் நாயிறு –அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே -திருவாய்மொழி -ரவிகர விகசித

நாத முனிகள் -பராசரர் -நம்மாழ்வார் -ஸ்தோத்ர ரத்னம் -அவயவி அவயவம் கூட சேர்ந்து இருக்க வேண்டும் என்பதால் -மாதா பிதா
–ஆத்யச்த குலபதே –லஷ்மி நாதனையே குறிக்கும் வகுளாபிராமனான திருவடி நிலை நம்மாழ்வார் என்றபடி
-ந இடையிலே உள்ளதால் நம்மாழ்வாரையே குலபதியாக கொண்டார்-

காசையாடை –திசைமுகனார் தங்கள் அப்பன் சாமியப்பன்-சாம வேத கீதன் சந்தோகன் என்று சாமான்யம் ஆக்காமல்
-வேத கீத சாமி நாதன் என்ற சாமம் தோன்ற அருளிச் செய்கிறார்
இவையும் ஓர் பத்தும் வல்லார் ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பார் நீராயே –சிறந்த பிராப்ய பலன் அன்றோ நீராய் உருகுவது
சீர்பாடி களிமின் களிப்போமே-என்பதே மருவி பல பல திரிபுகள் –

மயர்வற மதி நலம் -நலம் -பக்தி – -வீடு செய்து மற்று எவையும் புகழ் நாரணன் தாள் நாடு நலத்தால் அடைய –பக்தியினால் அடைய -என்று
உபக்ரமித்து –சார்வே தவ நெறியில் -சார்வாகவே அடியில் தான் உரைத்த பக்தி தான் -என்று உப சம்ஹரித்து -அருளினார்
ஜன்மாந்தர சஹச்ர நல தவங்களாலே —வேதன உபாசன சேவாத்ய நாதிகள் — சாத்ய சாதன பக்தியாக சாஸ்திர சித்தம் –
சேதன சாத்யமாய்-பகவத் பிரசாதன உபாயதயா-தத் பிராப்தி சாதனமான பக்தியாக -சாத்யமான சாதன பக்தி என்றே பொருள்
சாத்ய பக்தியாகவும் சாதன பக்தியாகவும் என்கிற பொருள் சிறிதும் ஏலாது –சாத்ய பக்தியா சாதன பக்தியா விகல்பமே ஏலாது என்று முடிந்தது
ஸ்வ யதன சாத்யையாய் உபாய பூதையான பக்தி -முதல்
சித்த உபாயத்தை சுவீகரித்து -பிரார்த்தித்து -சரீரவியோக சமனந்தரம் பெரும் பக்தி இரண்டாவது
உபாய பக்தி பிராரப்த வ்யதிரிக்தாக நாசி நீ சாத்ய பக்திஸ் து சா ஹந்த்ரீ ப்ராரப்தஸ்யாபி பூயஸீ–ரகச்த்ய சாரம் –
இங்கு சாத்ய பக்தி -பிரபத்தி -என்ற பொருள் -சம்சாரிகளுக்கும் சர்வேஸ்வரனுக்கும் ஆழ்வார் உபதேசம் செய்து அருளுவது
இவர்களுக்கு சாதனத்திலும் சாத்யத்திலும் உண்டான கலக்கம் தீர்க்கைக்காகவே –
வீடுமின் முற்றவும் பக்தி ரூப சாதன உபதேச பரம் – சாத்ய பக்தியும் சாதன பக்தியும் பர்யாயமே
ச்வீகாரமும் தானும் அவனாலே வந்தது அன்றோ -ச்வீகாரத்துக்கு உபாய கர்த்தவ்யம் ஒழிய உபாயத்வம் இல்லை என்றதாயிற்று
உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் —சித்த உபாயே தரமான சாத்ய உபாயம் -ஸ்வ பாரதந்த்ர்யஜ்ஞான ரஹிதராய் -ஸ்வ யதன பரராய்
இருப்பார்க்கு மோஷ சாதனதயா சாஸ்திர விஹிதமாகையாலே ஸ்வஸ்மின் உபாயத்வ பிரதிபத்தி சஹமாய் இருக்கும்
பிரபத்தி உபாயத்துக்கு இக் குற்றங்கள் ஒன்றும் இல்லையே -மோஷ உபாய பிரபத்திஸ் ஸ்யாத் -திருக் கச்சி நம்பி ஆறு வார்த்தைகளில் ஒன்றே
ஆழ்வாருக்கு எம்பெருமான் அருளால் பெற்ற பக்தி அன்றோ –கர்ம ஜ்ஞான ஸ்தானங்களிலே பகவத் பிரசாதமாய் -அதனாலே விளைந்த பக்தி
தமக்கு எம்பெருமான் மயர்வற மதி நலம் அருளினது போலே ஆழ்வார் தாமும் சம்சாரிகளுக்கு மயர்வற மதிநலம் அருளி
பக்தியை உபதேசிப்பதாக கொள்ள வேண்டும் –

மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா -வைத்யோ நாராயணோ ஹரி -நிர்வாணம் பேஷஜம் பிஷக் –மருந்தும் பொருளும் அமுதமும் தானே
-மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று பெரும் தேவர் குழாங்ககள் பிதற்றுவார்களே –ஆர் மருந்து இனி ஆகுவர் -7-1-5-
சுடர் ஆழி சங்கு ஏந்தி இருக்கும் மருந்தையே -நம்மாழ்வார் –மருத்துவன் என்னாமல் மருந்து என்கிறார்
எருத்துக் கொடி உடையானும் பிரமனும் இந்த்ரனும் மற்று ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவார் இல்லை –
திருமால் இரும் சோலை உறையும் தெய்வமே மருந்து அறியும் தெய்வம் என்கிறார்
போர்த்த பிறப்போடு நோயோடு மூப்பொடு இறப்பிவை பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கி நின் தாளிணைக் கீழ் சேர்த்து
அவன் செய்யும் சேமத்தை எண்ணுவார் இல்லையே

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால் யீரரியாய் நேர் வலியோனான இரணியனைஓர் அரியாய் நீ
இடந்த தூன்-பொய்கையார் தனது தாள் வணங்க வில்லை என்றது காரணம் இல்லை பிரகலாதனுக்காதத் தான் என்று சொல்லாமல் காட்டி அருளுகிறார்
ஜ்ஞாநீ து ஆத்மைவமே மதம் -ஈஸ்வரன் அவதரித்து செய்த ஆனைத் தோழிகள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையால் அன்றோ

புழு குறித்தது எழுத்து ஆமா போலே -குணஷதலி பிக்ரமாத் உப நிபாதின பாதி ந –குண ஷர நியாயம் -யாத்ருச்சிகமாக நல்லதாய் முடியும்
நம் செயலை உபாயம் என்ன ஒண்ணாதே –பிரபத்தியும் உபாயம் அன்று -நியாச இதி ப்ரஹ்ம நியாச இத்யாஹூர் ம நீ ஷீ ணோ ப்ரஹ்மானாம்
-உபநிஷத் படி பர ப்ரஹ்மத்தையே பிரபத்தி உபாயம் என்றதாயிற்று -ஆஸ்ரித சம்ரஷணம் ஸ்வ லாபம் மத்வா ப்ரவர்த்ததே
-க்ருதக்ருத்யர்த்தமும் விஜ்வரத்வமும் ப்ரமோதாசலித்வமும் பெருமாளுக்கே அல்லது ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு இல்லையே
-பரம புருஷம் ஜ்ஞாநினம் லப்த்வா -பேற்றுக்கு த்வரிப்பது –அதுவும் அவனது இன்னருளே -நிதானம் தத்ராபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுண
தச்யாஹம் ஸூ லப -ஸ்ரீ கீதா பாஷ்யம் –தஸ்ய நித்ய யுக்தச்ய-நித்ய யோகம் காங்ஷமாணச்ய யோகின அஹம் ஸூ லப —
அஹமேவ பிராப்ய -ந மத்பாவம் ஐஸ்வர் யாதிக ஸூ ப்ராபச் ச தத் வியோஹம் அசஹமான -அஹமேவ தம் வருணே
மத ப்ராப்த் யனுகுண உபாசன விபாகம் தத் விரோதி நிரசனம் அத்யர்த்த மத ப்ரிய த்வாதி கஞ்ச அஹமேவ ததாமீதி அர்த்த
-யமேவைஷ வ்ருணுதே தென் லப்யா இதி ஹி ஸ்ருயதே -வஷ்யதே ச தேஷாம் சத்த யுக்தாநாம் –இதி -பரகத ச்வீகாரம்
பிரஜாபதிம் த்வாவேத பிரஜாபதிஸ் த்வம்வேத யம் பிரஜாபதிர் வேத ச புண்யோ பவதி –

நயாச திலகம் -ஆர்த்தேஷ்வா சுபலா தத் அந்ய விஷயேபி உச்சின்ன தேஹாந்த்ரா
வஹ்ன்யாதேர நபேஷணாத்தா நுப்ருதாம் சத்யாதிவத் வியாபி நி
ஸ்ரீ ரெங்கேஸ்வர யாவதாம நியத த்வத் பாரதந்த்ர்யோசிதா
த்வவ்யேவ தவது பாயதி அபிஹிதச்வோ பாயபாவா அஸ்து மே –பத்து வ்யாவர்த்திகள் பக்திக்கும் பிரபத்திக்கும்
1-ஆர்த்தேஷ்வா சுபலா -பக்தி விளம்பித்து பலன் அளிக்கும் –பிரபத்தி விரைவில் பலன் அளிக்கும் ஆர்த்த பிரபன்னர் திறத்தில்
தத் அந்ய விஷயேபி உச்சின்ன தேஹாந்த்ரா
2-தேஹாந்தர சம்பந்தம் அறுத்து தருவதில் பக்தி நியதம் அல்லவே –பிரபத்தி நியமேன தேஹாந்தர சம்பந்தத்தை அறுத்து தரும்
3-வஹ்ன்யாதேர நபேஷணாத்தா நுப்ருதாம் சத்யாதிவத் வியாபி நி
பக்தி அதிக்ருதாயதிகாரம் –இது சர்வர்க்கும்
4-ஸ்ரீ ரெங்கேஸ்வர யாவதாம நியத த்வத் பாரதந்த்ர்யோசிதா-த்வவ்யேவ தவது பாயதி அபிஹிதச்வோ பாயபாவா அஸ்து மே –
பக்தி ஸ்வரூப விருத்தம் இது ஸ்வரூப அனுரூபம்

திருப்பாவையில் உறங்குமவர்கள் -மத்சித்தா பரர்கள் வெளியில் இருந்து திருப் பள்ளி உணர்த்துபவர்கள் மத்கதப்ராணா பரர்கள்
-எல்லே இளம் கிளியே -போதயந்த பரஸ்பரம் பரமான பாசுரம்
பிள்ளாய் -ஜ்ஞான விபாக கார்யமான அஜ்ஞ்ஞானத்தால் வருமவை எல்லாம் அடிக் கழஞ்சு பெரும் -இந்த அஜ்ஞ்ஞானம் காரணமாக
பெரியாழ்வார் பிள்ளாய் என்று அழைக்கப் படுகிறார்
தஸ்மாத் ப்ரஹ்மணா பாண்டித்தியம் நிர்வித்ய பால்யேன திஷ்டாசேத்-பிருஹுதாரண்யம் –5-5-1-பரிபூர்ண ஜ்ஞானம் பெற்று
பால்யத்துடன் இருக்க வேணும் அநா விஷ் குர்வன் அந்வயாத்–ப்ரஹ்ம சூத்ரம் -3-4-49- ப்ரஹ்ம விதியை அதிகரிதவன் செருக்கு
கொள்ளாமல் இருக்க வேண்டும் -இதனாலும் பிள்ளாய் -என்றதாயிற்று
புள்ளும் சிலம்பின காண் -இவருக்கும் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாருக்க்ம் சேருமே அதனாலே இந்த அடையாளம் மீண்டும் வரும்
புள்ளரையன் -வைனதேயாம்ச சம்பூதம் விஷ்ணு சித்த மஹம் பஜே -த்யான ஸ்லோஹம் -செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்திருத் தேர் க்ருத்மான் வடிவம்-க்ருத்யம்சமான பெரியாழ்வார்
-புள்ளரையன் உடைய அம்ச பூதர் -கோயில் வெள்ளை விளி சங்கு –கோ இல் பாண்டிய ராஜன் சபா மண்டபம்
-பாண்டியன் கொண்டாட பட்டர் பிரான் வந்தான் என்று ஈண்டிய சங்கம் எடுத்தூத –
வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திருச் சக்கரம் எனது கையன் -4-1-7- என்றாரே –இவரே பாட்டுக்கு விஷய பூதர்
-என்று வெள்ளை விளி சங்கு சொல் தொடர் ஸூ சிப்பிக்கும்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் முதலில் -பிறங்கிய பேய்சசி முலை சுவைத்து உண்டிட்டு -1-2-5-
நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய்—1-2-11- என்று கள்ளச் சகடம்
கலக்கழிய காலோச்சியதையும் அனுபவிக்கிறார் –வெள்ளத்தரவில் துயில் அமர்த்த வித்தினை உள்ளத்துக் கொண்டு
-பனிக் கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என் மனக் கடலில் வாழ வல்ல -என்றும்
-அரவத் தமளியினோடும் அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து பரவைத்திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற
பிரானை பரவுகின்றான் விட்டுசித்தன் -என்று சொல்லிக் கொள்கிறார் –முனிவர்களும் யோகிகளும் -பாசுரங்கள் பாடிய முகத்தால்
குணானுபவ நிஷ்டர் -வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழி அறுத்த தனத்தைக் கொண்டு ஸ்ரீ வில்லிபுத்தூரில் பிரகார கோபுர
மண்டபங்கள் நிர்மாணித்து -கைங்கர்ய நிஷ்டர் –மெள்ள எழுந்து -பெருமாள் நினைப்பூட்ட -எழுந்து அரி என்ற பேர் அரவம்
-ஓம் ஹரி சொல்லியே வேதங்கள் ஆரம்பம்

பேய்ப்பெண்ணே –பெருமாள் திருமொழி மூன்றாம் பதிகம் –மையல் கொண்டு ஒழிந்தேன் -நரகாந்தகன் பித்தனே -உன்மத்தன் காண்மினே
-மணவாளன் தன பித்தனே -எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே –பித்தனாய் ஒழிந்தேன் பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே
-தனிப் பெரும் பித்தனாம் குலசேகரன் – ஒன்பதில் கால் சொன்ன பெயர்
நாயகப் பெண் பிள்ளாய் –கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குலசேகரன் —ஆசார்ய கோஷ்டியில் நடுநாயகம் –
பெண்ணே பெண் பிள்ளாய் –ஏர் மலர் பூம் குழல் -ஆலை நீள் கரும்பு –மன்னு புகழ் –கோபிகள் தேவகி கௌசல்யை பாவனை உண்டே
தேசமுடையாய் -தேஜஸ் மிக்கு –ஷத்ரிய தர்மம் –கொல்லி நகர்க்கு இறை -கூடல் கோமான் குலசேகரன்
தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளி வரும் ஜனிகள் போலே –பண்டை நாளில் பிறவி உண்ணாட்டு தேசு இ றே -ஆழி யம் கை பேர்
ஆயற்கு ஆளாம் பிறப்பு –உண்ணாட்டு தேசன்றே –கைங்கர்ய அனுரூபமான ஏதேனும் ஆவேனே -என்கிறார்
ஆனைச்சாத்தம் எங்கும் கலந்து கீசு கீசு என்று பேசின பேச்சரவம் –கிருஷ்ணா கிருஷ்ணா -எங்கும் திரு நாம சங்கீர்த்தனம்மலையாளப் பேச்சு
காசும் பிறப்பும் கல கலப்ப –ஆபரணம் –ஆரம் கெட பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே வாரம் கொடு குடம் பாம்பில் கை இட்டவன்
–ஆபரண பிரஸ்தாபம் -கை இட்டது உண்டே -குறை சொல்லிய மந்த்ரிகள் கைகளை பேர்த்ததாகவும் கூளலாம்
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவக் கதை -தயிர் கடைய ஒல்லை நானும் கடைவன் -6-2-
நாரணன் மூர்த்தி கேசவனைப் பாட -நிகமத்தில் -வள்ளல் நலம் திகழ் நாரணன் அடிக் கீழ் நண்ணுவரே -மாவினை வாய் பிளந்து உகந்த மாலை –
நீ கேட்டே கிடத்தியோ -ஸ்ரீ இராமாயண சரிதை கேட்ட சரித்ரம்

கோதுகலமுடைய பாவாய் -அழகும் பாத்விரதையும் உள்ளதால் பாவாய் -ஜ்ஞான பக்தி வைராக்யங்கள் அழகு -உன்னால் அல்லால் யாவராலும்
ஒன்றும் குறை வேண்டேன் -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -கோதுகலமுடைய பாவாய் நம் ஆழ்வாருக்கே பொருந்தும் -க்ருஷ்ணா த்ருஷ்ணாதத்வம் இவோதிதம் -கிருஷ்ணே த்ருஷ்ணா -க்ருஷ்ணச்ய த்ருஷ்ணா -குதுகலமே வடிவாக –எம்பிரானும் என் மேலானே
-ப்ரியோ ஹி ஜ்ஞானி நோத்யர்த்தம் அஹம் ச மம ப்ரிய –எம் பாவை போய் இனித் தண் பழனத் திருக் கோளூர்க்கே —சூழ் வினையாட்டினேன் பாவையே
எழுந்திராய் -இவர் வீற்று இருப்பதால் –கீழ் வானம் வெள்ளென்று –தஸ்மை நமோ வகுள பூஷண பாச்கராயா-ஆதித்ய ராமதிவாகர அச்யுத பானுக்களுக்கு போகாத உள்ளிருள் நீங்கி சோஷியாத பிறவிக்கடல் வற்றி விகசியாத போதில் கமலம் மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே
கீழ் வானம் -மேல் வானம்மேல் என்ற்றது உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம்
வானம் மேகம் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் -அடியார்க்கு இன்ப மாரியே-
எருமை -ரஜஸ் தமஸ் குண பிரசுரர்கள் -சிறு வீடு -கைவல்யம் -சிறுக நினைவதோர் பாசம் உண்டாம் –தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
-இவர் திருவவதரிப்பதற்கு முன்பே கைவல்ய ஐஸ்வர் யார்திகளாகவே இருந்தார்கள்
மிக்குள்ள பிள்ளை-மேம்பட்ட -இவர்களை சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இ றே
போவான் போகின்றாரை போவதே பரம புருஷார்த்தம் போவான் வழிக் கொண்ட மேகங்களே -கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ
-கூவிக் கொள்ளை வந்தந்தோ –வீற்று இருந்த –ஏற்ற நோற்றேர்க்கு -வண் தமிழ் நோற்க நோற்றேன் –வெம்மா பிளந்தான் தன்னை –
வான நாயகனே அடியேன் தொழ  வந்தருளே -இமையோர் தலைவா -அமரர்கள் அதிபதி
ஆவா வென்று -ஆவா வென இரங்கார் அந்தே வலிதே கொல் மாவாய் பிளந்த மனம் -அடியேற்கு ஆவா வென்னாயே –
ஆராய்ந்து –ஆர் என்னை ஆராய்வார் -உம்முடைய குறையும் தீரும் அருள் -மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் அன்றோ

மாமன் மகளே -கமலாமி வான்யாம் கோதாம் -ஸ்ரீ மகா லஷ்மி -யானால் -பார்க்கவீ லோக ஜனனீ ஷீர சாகர சம்பவ –
-ஆண்டாள் ப்ருகு குலத்தில் தோன்றியவள் -திரு மழிசைப் பிரானும் ப்ருகு குலம் -ரிஷி குலத்தில் பிறந்து பிரம்பன் குடியானவர்
ஆண்டாள் ப்ராஹ்மண குலத்தில் ஆவிர் பவித்து ஆயர் குலத்தை ஆஸ்தானம் பண்ணினாள்
தூ மணி மாடத்து -உட் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே
சுற்றும் விளக்கு எரிய -ஜ்ஞான விளக்கு -சாக்கியம் கற்றோம் -யான் அறிந்தவாறு ஆர் அறிவார் -என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை
தூபம் கமழ -பரிமளம் -மறந்தும் புறம் தொழாதவர் –வலத்திருவடி பெருவிரல் கண்ணைத் திறந்து நெற்றிக்கண் திறந்த
-பெரும் தீயைக் கிளப்பி விட்டு புகை சூழப் பண்ணி
துயில் அணை மேல் கண் வளரும் -நாகணைக் குடந்தை –கிடக்குமாதி நெடுமால் –
துயில் அணை மேல் கண் வளரும் மாமானுடைய மகளே -மஹா மகன் -யதோத்தகாரி ஆராவமுத ஆழ்வார்
மாமீர் -இவருக்கு ஞான போதம் அருளிய –பேயாழ்வார் -மாமீர் என்கிறது
கிருஷ்ணா நாம் வ்ரீஹீனாம் நக நிர்ப்பின்னம் -ஊமையோ -செவிடோ அக்ரபூஜை -சிசுபாலா பிரப்ருதிகள் வசையைக் கேளாமல்
அனந்தல் -பரமைகாந்தி -புற விஷயங்களில் நெஞ்சு செலுத்தாமல் -தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும்
பூசித்தும் போக்கினேன் போது என்றும் தொழில் எனக்கு தொல்லை மால் தன்னாமம் -ஏத்த பொழுது எனக்கு மற்று அதுவே போதும் –
மந்திரப் பட்டாளோ -இவர் ஒருவருக்கு தான் பேயாழ்வார் இடத்தில் மந்திரப் பட்டது பிரசித்தம்
மா மாயன் -மாயம் என்ன மாயமே -மாயமாய மாக்கினாய் உன் மாய முற்றும் மாயமே -மாதவன் -மாதவனை ஏத்தாதார் ஈனவரே
வைகுந்தன் -வைகுந்தச் செல்வனார் சேவடி மேல் பாட்டு

நோற்றுபேயாழ்வார் -திருக்கண்டேன் -மற்ற இருவரும் விளக்கு ஏற்ற -இவரே வாசல் திறவாதார் –நாற்றத் துழாய் முடி
-இரண்டாம் பாசுரம்–பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் -அடுத்து -மலராள் தனத்துள்ளான் தண் துழாய் மார்பன் –
-நிகமத்தில் தண் துழாய் தார் வாழ் வரை மார்பன் –நாராயணன் -திருத் துழாய் -கண்ணன் சேர்த்து பாசுரம் உண்டே
நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே வா மருவி மண்ணுலகம் உண்டு
உமிழ்ந்த வண்டறையும் தண் துழாய் கண்ணனையே காண்க நம் கண்
-கும்பகர்ணன் தோற்றது –அகஸ்த்ய கும்ப சம்பவ -கும்பத்தை ஜன்ம பூமியாக -தஷிண திக்குக்கு தலைவர் அவர் -இவர் தமிழ் தலைவன்
இவரது திருவந்தாதியிலும் –நடுவில் -அவனே இலங்கா புரம் எரித்தான் எய்து –என்றும் -எய்ததுவும் தென் இலங்கை கோன் வீழ –
அரும் கலமே -எம்பெருமான் மிதுனம் பெற்ற அருள் -சத்பாத்ரமே -திருக் கண்டேன் –இத்யாதி
தேற்றமாய் வந்து திற -பேய்த் தனமாக வராமல் என்றபடி –

யோநிஜ்த்வம் என்னும் குற்றம் இல்லாத -கோவலன் -திருக் கோவலூர் ஸூ சகம் -மூவரில் பொற் கொடி பூதத்தாழ்வார்
கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஓடும் மனம்
கணம் -வடசொல்லில் சிறிய -வெண்பாவில் பாடி அருளி –முதல் திருவந்தாதி கறவைக் கணம் –
இரண்டாம் திருவந்தாதி சேர்ந்து கறவைக் கணங்கள் -மூன்றாம் திருவந்தாதி சேர்த்து கற்றுக் கறவை கணங்கள் பல
செற்ற திறல் அழியச் சென்று செருச் செய்யும் –
தீர்த்த கரராமின் திரிந்து -என்றார் புற்றரவல்குல்-இடை அழகு –ஞானம் பக்தி வைராக்கியம் -இடையில் பக்தி
அன்பே தகளியா -தொடங்கி–யாமுடைய அன்பு -நிகமித்து
புன மயில் பொழில் இடத்தே வாழும் மயில் இவரும் திருக் கடல் மல்லை -கடி பொழில் சூழ் கடல் மல்லை
சுற்றத்து தோழிமார் –சுற்றம் பொய்கை பேய் ஆழ்வார் தோழிமார் மற்றைய ஆழ்வார்கள்
முகில் வண்ணன் பேர் பாட -உலகு ஏழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் பூம் பாடகத்து உள்ளிருந்தானை ஏத்தும் என் நெஞ்சு
புன மயில் முகில் வண்ணனைத் தானே பாடும்

நங்காய் -வனச மலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே   -தாமரைப் பூவில் தோன்றிய பொய்கை யாழ்வார்
நனைத்து இல்லம் சேறாக்கும் -பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி  அழுத -கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் -இவர் இல்லம் பொய்கையும் சேறானது தானே
கனைத்து -முதலிலே அருளிய ஆழ்வார் -அங்கியான நம்மாழ்வாருக்கு அங்கமான இவர் கனைத்த படி
இளம் கற்று எருமை -எருமை மகிஷி –தேவ தேவ திவ்ய மகிஷி -இவரும் தாமரை மலரில் திருவவதரித்து
இளம் கன்றுடைய -இவர் மாத்ரு ஸ்தானம் மற்ற ஆழ்வார்கள் வத்சம்
கன்றுக்கு இரங்கி -வையத்து அடியவர்கள் வாழ அருளிச் செயல் நினைத்து முலை வழியே நின்று பால் சோர -பகவத் குணங்களை நினைத்தவாறே ஹர்ஷம் உள்  அடங்காமல் அருளிச் செயல்கள் வெளி வந்த படி
பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி -பொய்கை என்பதால்
திருக் கோவலூர் வாசல் கடை பற்றியதும் ஸூ சகம்
சினத்தினால் –ஸ்ரீ ராம சரிதை -வாளரக்கன் நீண் முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு -நாமே அறிகிற்போம் நன்னெஞ்சே -மனத்துக்கு இனியானை
இனித் தான் எழுந்திராய் -பழுதே பல பகலும் போயின என்று இழந்த நாளைக்கு கூப்பிடுகிறவனுக்கு உறங்க விரகு இல்லையே
அனைத்து இல்லாதாரும் அறிந்து -அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்
நல செல்வன் தன்னுடைய கை -நம் ஆழ்வார் உடைய மதுர கவி ஆழ்வார் -நல செல்வன் எம்பெருமானார் தங்கை ஆண்டாள் என்றுமாம்

போது அரிக் கண்ணினாய் -புஷ்பங்களை ஹரிப்பதில் திருஷ்டி கொண்டவர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் துளபத் தொண்டாய
தொல் சீர் தொண்டர் அடிப் பொடி -தொடையொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்
பாவாய் -பதி வரதா சிரோ மணி –அரங்கனுக்கே -சோழியன் கெடுத்தான் காணும்
புள்ளின் வாய் கீண்டானை கண்ணன் ராமன் கீர்த்திமை பாடி -கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை -மா முனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய வடுதிறல் அயோத்தி எம்மஅரசே அரங்கத்தம்மா –சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் –
-கற்றினம் மேய்த்த எந்தை கழல் இணை பணிமின் நீரே
பிள்ளைகள் எல்லாம் –பாவைக் களம் புக்கார் -இரவியர் –மணி நெடும் தேரோடு இவரோ –அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று சுடர் ஒளி பரந்தன
பள்ளிக் கிடத்தியோ -அரங்கத்தம்மா பள்ளி எழுது அருளாயே
நன்னாளால் மார்கழி கேட்டை திருவவதாரம்
கள்ளம் தவிர்ந்து -சூதனாய் கள்வனாய் –கள்ளமே காதல் செய்து -கள்ளத்தேன் உன் தொண்டாய்-பொன் வட்டில் களவு விருத்தாந்தம்
பூம் பொழில் வாசம் -புள்ளும் சிலம்பின குள்ளக் குளிர –குளித்து மூன்று அனலை -ஓம்பும் -இத்யாதி –

நங்காய் குண பூரணை -பாரதந்த்ர்யம் மிக்க திருப் பாண் ஆழ்வார் -லோக சாரங்க முனிவர் தோள்களிலே ஏறிக் கொண்டாரே
நாணாதாய் நாண் அஹங்காரம் செருக்கு இல்லாமல் -அடியார்க்கு என்னை ஆட்படுத்திய விமலன்
நாவுடையாய் -நாவினில் நின்று மலரும் ஞானக் கலைகள்
பாண் பெருமாள் பாடிய தோர் பாடல் பத்தும் பழ மறையின் பொருள் என்று பரவுமின்கள்
புழக்கடை தோட்டத்திலே வாழ்ந்தவர்
கோயில் திரு மஞ்சனக் காவேரி அருகே வாழ்ந்தவர் வாவி -நீர் நிலை
ஒரு வாய் மலர மற்று ஒரு வாய் மூடின படி ஐயோ அபசாரம் பட்டோமே லோக சாரங்கர்
சன்யாசி பிரஸ்தாபம் இவர் சரிதையில்
சங்கிடுவான் சங்கம் பலர் அறியும்படி
எங்களை –எழுப்புவான் –எழச் செய்கை தூக்கிக் கொள்கை
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார் –கரியவாகிப் –அப்பெரியவாய கண்கள் சங்கோடு சக்கரம் ஏந்திய –பங்கயக் கண்ணானைப் பாட

எல்லே -சம்பாஷனை உண்டே திருமங்கை ஆழ்வார் இரு தோழிகள் பாடும் பாசுரங்கள் நிறைந்தவை
இளம் கிளியே –கிளி போல் மிழற்றி நடந்து –மென் கிளி போல் மிழற்றும் என் பேதையே
வல்லை –ஆசுகவி சித்ர கவி மதுர கவி விஸ்தார கவி
உன் கட்டுரைகள் -வாசி வல்லீர் -வாழ்ந்தே போம் நீரே
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நாண் உற்றத் உன் அடியார்க்கு அடிமை
மடலூராது ஒழியேன் நாண் -உனக்கு என்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ -கடைக்குட்டி ஆழ்வார்
வல்லானை கொன்றானை -கவள யானை கொம்பொசித்த கண்ணன்
அரட்ட முக்கி அடையார் சீயம் கொற்ற வேல் பரகாலன் மாற்றாரை மாற்று அழிக்க
மாயன் -மாயனைப் பாடிய மாயன் அன்றோ மாயர்கள் நால்வர் நீர் மேல் நடப்பான் நிழலில் ஒதுங்குவான் தோழா வழக்கன் தாள் உஊதுவான்
புத்த விக்ரஹம் கூட வைதிகமாக்கிய மாயம் உண்டே

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம் -3-

November 29, 2015

வேய் மரு தோளிணை பதிகத்தில் – அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் ஆழியம் கண்ணா உன் கோலப் பாதம் -10-3-6-
கடல் போன்ற ஸ்ரமஹரமான திருக்கண்களை -உடையவனே -என்பதே எல்லா வ்யாக்யானங்களிலும்
சக்ராஜாயுத த்வாத் -திராவிட தாத்பர்ய ரத்னாவளி -என்கிறார்

ஹரிர் ஹரதி பாபானி துஷ்ட சித்ரைரபி ஸ்ம்ருத-அநிச்சயாபி சம்ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக –
வாராணஸ்யாம் குரு ஷேத்ரே நைமிசாரண்ய ஏவ ச தத்தம் ஸ்யாத் தேன யே நோக்தம் ஹரிரித்ய யஷர த்வயம்

ஆதியிலே அரவரசை அழைத்த அரங்கர் அவனியிலே இருநூறாண்டு இரு நீ என்னப்
பாதியிலே உடையவராய் வந்து தோன்றிப் பரமபதம் நாடியவர் போவேன் என்ன
நீதியாய் முன் போலே நிற்க நாடி நிலுவைதனை நிறைவேற்றி வாரும் என்னச்
சாதாரணம் எனும் மா வருடம் தனில் தனித்துலா மூல நாள் வந்தார் தாமே

கண்ணன் என்னும் கரும் தெய்வம் –
தத்வ முக்தா கலாப மங்கள ஸ்லோஹம்
லஷ்மீ நேத்ரோத் பல ஸ்ரீ சத்த பரிசயாத் ஏஷ சம்வர்த்தமான
நாபீ நாலீ கரிங்கநமதுகரபட லீ தத்த ஹஸ்தா வலம்ப
அஸ்மாகம் சம்பதோகான் அவிரலது லசீ தாம சஞ்ஜாத பூமா
காளிந்தீ காந்தி ஹாரீ கலையது வபுஷ காலிமா கைடபாரே

கமல மா மாதின் குவளை ஒண் மலரேய் கண்களில் காட்சியால் கிளர்ந்து
கமலமாம் கொப்பூழ் மிசை சுழன்று ஒளிரு மளிகளின் சவிதான் கை தரவே
கமலை சேர் மார்பில் கமழு நல் துளவ மாலையின் கதிரும் சேர்ந்து இலக்கக்
கமல நல் யமுனைக் காந்தியால் மிகுத்த கண்ணனார் கருமை நம் காப்பே

கைடபாரே வபுஷ காலிமா அஸ்மாகம் சம்பதோகான் கலையது –
கண்ணபிரானின் கருமை நிறம் நமக்கு செல்வ மிகுதியை விளைத்திட பிரார்த்தனை –
-கண்ணனை விட கண்ணனார் கருமையே நம் காப்பே என்கிறது -அந்த கருமைக்கு நான்கு விசேஷணங்கள்

லஷ்மீ நேத்ரோத் பல-ஸ்ரீ சத்த பரிசயாத்-சம்வர்த்தமான
பிராட்டி குவளையம் கண்ணியும்-மையார் கரும் கண்ணியும் ஆவாள் -அவள் அனவரதம் உற்று நோக்குகையாலே -என்றவாறு
கமல மா மாதின் குவளை ஒண் மலரேய் கண்களில் காட்சியால் கிளர்ந்து என்றவாறு
நாபீ நாலீ கரிங்கந மதுகரபட லீ தத்த ஹஸ்தா வலம்ப
திரு நாபீ கமலத்தில் மது பானார்த்தமாக சுழலமிடா நின்றுள்ள வண்டுகள் கூட்டம் கொடுத்த கருமை என்றவாறு
கமலமாம் கொப்பூழ் மிசை சுழன்று ஒளிரு மளிகளின் சவிதான் கை தரவே -என்றவாறு
அவிரலது லசீ தாம சஞ்ஜாத பூமா –
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் மாலையன் ஆகையாலே -என்றுமாம்
கமலை சேர் மார்பில் கமழு நல் துளவ மாலையின் கதிரும் சேர்ந்து இலக்கக் -என்றுமாம்
காளிந்தீ காந்தி ஹாரீ
தூய பெருநீர் யமுனைத் துறைவன் -கமல நல் யமுனைக் காந்தியால் -என்றுமாம் -மிகுத்த கண்ணனார் கருமை நம் காப்பே

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு
பாதகங்கள் தீர்க்கும் பரமன் —அந்த பரமன் அடி காட்டும் வேதங்கள் –அந்த வேதங்கள் அனைத்துக்கும் வித்து கோதை தமிழ் –என்றவாறு
அபௌருஷேயமாய் இருக்கும் வேதங்களுக்கு வித்தா –
-ரூசோ யஜூம்ஷி சாமானி ததைவ தர்வாணா திச
சர்வம் அஷ்டாஷராந்தஸ் ஸ்தம் யச்ச அந்வய தபி வாங்மயம் -என்கிற பிரமாணத்தின் படியே
ஒரு விருஷத்தின் சாகை உபசாகைகள் எல்லாம் விதைக்குள் இருப்பது போலே
அறிய வேண்டிய அர்த்தம் எல்லாம் இதுக்கு உள்ளே உண்டு என்றபடி -அதாவது தத்வம் ஹிதம் புருஷார்த்தங்கள்
எல்லாம் எளிதிலே காட்டி அருளுகிறாள் என்றவாறு
தத்வம் –பரமாத்மா தத்வம் ஜீவாத்மா தத்வம்
ஜகத் காரணன் -சர்வாத்ம ரஷகன் -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சா ரூபன் இத்யாதி
ஏகோ ஹ வை நாராயணா ஆஸீத் –யதோ வா இமானி பூதானி ஜாயந்தே –அஜாயமானோ பஹூதா விஜாயதே –
-ச ச ஸ்ரேயான் பவதி ஜாயமான -பிதா புத்ரேண பித்ருமான் யோ நியோ நௌ-இத்யாதி வேத உபநிஷத் கட்டளையிலே
நந்தகோபன் குமரன் யசோதை இளம் சிங்கம் -நாராயணனே நமக்கே பறை தருவான் —நாற்றத் துழாய் முடி நாராயணன்
-நாரயனனனே -பாற் கடல் பையைத் துயின்ற பரமன் அடி பாடி -ஓங்கி உலகளந்த உத்தமன் –
-ஆழி மழைக் கண்ணா -ச ஆத்மா அங்காநி அந்யா தேவதா – என்று அந்தர்யாமித்வம்
புள்ளரையன் கோயில் -கோயில் காப்பானே -உன் கோயில் நின்று இங்கனே போந்தருளி -அர்ச்சாவதாரம் –இத்யாதிகளால் அருளிச் செய்கிறாள்
சேஷத்வம் -அன்யார்ஹ சேஷத்வம் -அச்சித்வத் பாரதந்த்ர்யம் -ஆகிய ஜீவாத்மா ஸ்வரூபத்தை -உன் தன்னோடு உற்றோமேயாவோம்
-மாற்றார் உனக்கு வலி தொலைந்து -அபிமான பங்கமாய் வந்து -இத்யாதிகளால் அருளிச் செய்கிறாள்
ஹிதம் -உபாயம் -தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க –உன்னை அருத்தித்து வந்தோம் -உன் பொற்றாமரை அடியே போற்றும் –
புருஷார்த்தத்தை உனக்கே நாம் ஆட்செய்வோம் –இதுவே ஜீவ நாடி என்பதை பாரார்த்த்யம் ஸ்வம் ஸ்ருதிசத சிரஸி சித்தம்
அத்யாபயந்தீ -என்பதை பட்டர் கை விளக்கு ஏற்றி காட்டி அருளினார்
உன் தன்னோடு உறவேல் –பல உறவுகள் உண்டே என்று காட்டி அருளும் வாக் சாமர்த்தியம்
-பிதாச ரஷகச் சேஷீ பார்த்தா ஜ்ஞேயோ ரமாபதி ஸ்வாம் யாதாரோ மமாத்மாச போக்தாச ஆதயம நூதித –
ஆத்ய ம நூ -மூல மந்த்ரம் -அதில் பிரதிபாதிக்கப் பட்ட ரமாபதி -இந்த நவவித சம்பந்தங்களையுமே உறவேல் என்று அருளிச் செய்கிறாள்

மிலேச்சனும் பக்தனானால் –தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய சமயக் சகுண சபோஜனமும் –
உபகாராய ஸூ க்ரீவோ ராஜ்ய காங்ஷி விபீஷணா நிஷ்காரணாய ஹனுமான் தத்துல்யம் சஹ போஜனம் -என்று திரு உள்ளம் பற்றி கோதில் வாய்மையினானோடு உடனே உண்பன் என்ற பெருமாளோடு பண்ணின சஹ போஜனம் -ஒரு காலத்திலே உண்பாரைப் போலே உன்னுடனே
ஒரு நிகராக சுக துக்கங்களை அனுபவிக்கக் கடவேன் யான் என்று ஒற்றுமை நயம் தோற்ற கூறி ஹனுமானைத் தழுவிக் கொண்ட சிறந்த விஷயம் –
கோவிந்த சுவாமி விருத்தாந்தம் -இங்கு ஒழிந்து போகம் எய்தி பின்னும் நம்மிடைகே போதுவாய் என்ற பொன்னருள் –ஈஸ்வரன் நினைத்தால் விஷய பிரவணரையும் இவ்வசனை அறுத்துக் கொண்டு போகும் சர்வ சக்தன் என்னும் இடமும் -எத்தனைஎனும் பகவத் பிரவணரையும் தேக சம்பந்தத்தின்
வழியே கொண்டு போய் வி நாசத்தைப் பலிப்புக்கும் என்னும் இடமும் வெளியிட்டது –

ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன் -உவநியம் உப நயனம் சிதைந்து –த்விஜம் –
-முற்பட த்வயத்தை கேட்டு இதிஹாச புராணங்களையும் அதிகரித்து பரபஷ பிரதி ஷேபத்துக்கு உடலாக நியாய மீமாம்சைகளையும்
அதிகரித்து -போது போக்கும் அருளிச் செயலிலேயாம் நம்பிள்ளையை போலே அதிகரிப்பிக்க வல்லான் ஒருவன் -என்றவாறு

மார்கழித் திங்கள் -நாராயணன் -பரமபத நாதன் -தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர –ஜாதோசி தேவதேவேச சங்க சக்ர கதாதர –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -ஏஷ நாராயண ஸ்ரீ மன் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகாதோ மதுராம் புரிம் –
அரவத் தமளியினோடும்- அழகிய பாற் கடலோடும் –ஓங்கி உலகளந்த உத்தமன் -திருக் கோவலூர் அனுபவம்
ஆழி –பழியம் தோளுடைப் பத்ம நாபன் -திரு வநந்த புரம்
மாயனை -வடமதுரை அனுபவம் -மதுரா நாம நகரீ புண்யா பாபா ஹரி சுபா யஸ்யாம் சாதோ ஜகந்நாத –
புள்ளும் சிலம்பின -திரு வண் வண்டூர் அனுபவம் –வைகல் பூங்கழிவாய்-விடிவை சங்கொலிக்கும் திரு வண் வண்டூர்
அடிகள் கை தொழுது -அகாரம் -உணர்தல் உடல் உணர்ந்து -உகாரம் -மின் கொள் சேர் புரி நூல் -மகாரம் போலே இங்கும் அரி–உங்கள் -முனிவர்கள்
கீசு கீசு -தயிர் ஒலி -உத்காயதீ நாம் அரவிந்த லோசனம் வ்ரஜாங்க நா நாம் திவம் அஸ்ப்ருசத் த்வனி நிர்மந்தன சப்தம் இஸ்ரிதோ நிரஸ்யதே
யேன திசாம் அமங்கலம் -ஆய்சிகளின் பாட்டு ஒலி-மதத்தின் ஒலி -சகாரத்தால் ஆபரண த்வனி -இத்தால் திருவாய்ப்பாடி அனுபவம்
கீழ் வானத்தில் தேவாதி தேவன் -திருவத்தியூர் அனுபவம் -நம்மாழ்வார் திருப்பள்ளி -உணர்த்தப் படுகிறார் -இமையோர் தலைவன் -அமரர்கள் அதிபதி
தூ மணிதிருக்கடிகை –மிக்கானை மறையாய் விரிந்த விளக்கு -தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய
நோற்றுச் சுவர்க்கம் -திருக் காட்கரை -அனுபவம் -யமவைஷவ்ருணுதே தேன லப்ய -பரக்கத ச்வீகாரம் -செய்த வேள்வியர் வையத் தேவர் -தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் காட்கரை அப்பன் –தெரு வெல்லாம் காவி கமழ் காட்கரை -இங்கும் நாற்றத் துழாய் முடி நறு மணம் கமழா நிற்கும்
கற்றுக் கறவைதிரு மோகூர் –முகில் வண்ணன் பேர்பாட -தாள தாமரையில் -காள மேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே -நாசௌ புருஷ காரேண ந சாப்யன்யேன ஹேது நா கேவலம் ச்வேச்ச்சையை வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன -ஸ்ரீ கிருஷ்ண மேகம் மதுரையிலே மின்னி ஆய்ப்பாடியிலே பொழியுமே
கனைத்து இளம கன்றுசித்ரகூட அனுபவம் -சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்றான் -சினம் அடங்க மாருதியால் சுடுவித்தான்
-மனத்துக்கு இனியான் -திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்
புள்ளின் வாய் கீண்டான் -திருக்குடந்தை -பள்ளிக் கிடத்தியோ ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் -நாகத்தணைக் குடந்தை –
-திருமழிசைபிரான் முற்பட அருளிச் செய்தார் இ றே
உங்கள் புழக்கடை -வாவியுள் செங்கழுநீர் -நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய்காட்ட அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் –
நாவுடையாய் -செந்தமிழும் வடகளையும் திகழ்ந்த நாவர் -சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய்
எல்லே இளம் கிளியேதிரு வல்லிக் கேணி அனுபவம் –வல்லானை கொன்றானை –விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழ -நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப –
நாயகனாய் -திருக் குறுங்குடி அனுபவம் -துயில் எழப் பாடுவான் –வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே -நம்பாடுவான் –விரதத்துக்கு
பங்கம் செய்ய வேண்டாம் என்று சொல்லி பல சபச்தன்களை செய்து நேச நிலைக்கதவம் நீங்கி இருக்கும் நிலையை சேவித்து திரும்புகிறான் –
அம்பரமே தண்ணீரே -காழிச் சீராம விண்ணகரம் -அம்பரமூடறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமான் -ஒரு குறளாய் இரு நிலம்
மூவடி மண் வேண்டி உலகனைத்தும் ஈரடியால் ஓடிக்கினவன்
உந்து -திரு நறையூர் அனுபவம் -மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல் பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் —-ஒரு இன்னிள வஞ்சிக் கொடி ஓன்று நின்றது தான் அன்னமாய் மானாய் அணி மயிலாய்
ஆங்கிடையே–அன்ன திருவுருவம் நின்றது –பந்தார் விரலி –பந்தார் விரலாள் – பெரிய திருமொழி -6-6-8-
குத்து விளக்கு -திருவிடவெந்தை -கொங்கை மேல் வைத்துக் கிடந்த -நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூ ப்தம் -திவளும்
வெண் மதி போல் திருமுகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த வவலும் நின்னாகத்து இருப்பது அறிந்தும் –
முப்பத்து மூவர் -திருப்பாடகம் -அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் -அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சி இடாதே இட
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் -பாண்டவர்கள் கப்பம் கம்பம் நடுக்கத்தை தீர்த்தவாறு –
ஏற்ற கலங்கள் -திருக் கண்ண மங்கை திரு நாராயண புரம்–பெரியாய் -பெரும் புறக் கடல் –விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர்
பலன் சொல்லி பெரியாராய் ஆக்கி அருளுபவன் -பற்றார் நடுங்க முன் பாஞ்ச சந்நியத்தை வாய் வைத்த போர் ஏறே
-ச கோஷா தாரத்த ராஷ்ட்ரானாம் ஹ்ருதயா நிவ்யதாரயத்-வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ணா
ஆற்றப் படைத்தான் மகனே -யதிராஜ சம்பத் குமாரனே –பல்கலையோர் -பெரும் பசுக்கள் -தோற்றமாய் நின்ற சுடர்
-புற்றில் மறைந்து பின்பு தோற்றமாய் நின்ற இதிகாசம் பிரசித்தம் இ றே
அம் கண் மா ஞாலம் -திரு மால் இரும் சோலை –அபிமான பங்கமாய் வந்து அடி பணிந்தமை -கொன்னவில் கூர் வேல் கோன் நெடுமாறன்
தென் கூடல் கோன் தென்னன் கொண்டாடும் தென் திரு மால் இரும் சோலையே -இதமிமே ஸ்ருணுமோ மலயத்வஜம் நருபமிஹ-ஆழ்வான்
மாரி மலை முழஞ்சில் -திருவரங்கம் -உன் கோயில் நின்று இங்கனே -கோயில் -திருவரங்கம் -ஞாலத்தூடே நடந்தும் நின்றும்
நடை அழகை நம் பெருமாள் பக்கல் காணலாம்
அன்று இவ்வுலகம் -கோவர்த்தன் அனுபவம் -குன்று குடையாய் எடுத்தான் குணம் போற்றி –செந்தாமரைக் கை விரல்கள்
கோலமும் அழிந்தில –திருவுகிர் நொந்துமில
ஒருத்தி -திருக்கண்ணபுரம் -தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் -தாய் எடுத்த சிறு கோலுக்கு
உளைந்து ஓடித் தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தன்
மாலே -ஸ்ரீ வில்லி புத்தூர் -ஆலினிலையாய் -பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள் ஆளிநிலை வளர்ந்த சிறுக்கன் இவன்
கூடாரை திருவேங்கடம் —விரோதி நிரசனமும் கூடி இருந்து குளிர்ந்த படியும் -அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து -ஒழிவில் காலம் எல்லாம்
உடனே மன்னி இருக்க பாரித்தது வேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே –குளிர் அருவி வேங்கடம் –
கறவைகள் -ஸ்ரீ பிருந்தாவனம் -கானம் சேர்ந்து உண்போம் –கானம் என்றும் வேணு காண கோஷ்டியில் என்றுமாம்
சிற்றம் சிறு காலை த்வாராபதி –உனக்கே நாம் ஆட்செய்வோம் பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னுமத்தில்
நாயகராய் வீற்று இருந்த மணவாளர் -பல்லாயிரம் தேவிமாரோடு பௌவம் ஏறி துவரை எல்லாரும் சூழ –
வங்க கடல் -ஸ்ரீ வில்லிபுத்தூர் -அணி புதுவை -மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லி புத்தூர் -ஆண்டாளுடைய குழலிலே -தூவி யம் புள்ளுடைத் தெய்வ வண்டு நுழைந்து அபி நிவேசம் கொண்டது பிரசித்தம் –
மென்னடைய அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் -வேண்டிய வேதங்களோதி -அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் –

மார்கழி -பாரோர் புகழ -என்றது மகிழ என்றபடி -க்யாதி லாப பூஜா அபேஷை இல்லாதவர்கள் –காரணே கார்ய உபசார
-புகழ்ச்சிக்கு காரணமான மகிழ்ச்சியே இங்கே விவஷிதம்
வையம் -செய்யாதன செய்யோம் -சாஸ்த்ரங்களில் விதித்தவையாக இருந்தாலும் மேலையார் செய்யாதன செய்யோம் -ஆசாரியர்கள்
அனைவரும் முன் ஆசரித்த ஆசாரம் தன்னை அறியாதார் பேசுகின்ற வார்த்தைகளைக் கேட்டு மருளாதே பூர்வர்கள் சீர்த்த நிலை தன்னை நெஞ்சே சேர் -வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க -மனோ பூர்வ வாக் உத்தர -யன் மன சாத்யா எதி தாதி வாசா வத்தி –மனஸ் சஹகாரம் இல்லாமல் பித்தனாக பகவத் விஷயம் பேசினாலும் எம்பெருமானுக்கு உகப்பே என்றபடி
கீசு கீசு -கிருஷ்ண கிருஷ்ண -அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி சிறுகாலைப் பாகும்-பொழில் வாய் இருந்து
வாழ் குயில்கள் அரி அரி என்றவை அழைப்ப
பந்தார் விரலி –போகய போக உபகரண போக ஸ்தானங்கள் கை அடைப்பாக கொண்ட -உபய விபூதி நாயகர் -நிரவாஹகர் – உடையவர்
முப்பத்து மூவர் -நப்பின்னை நங்காய் திருவே –குழல் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும் -ஸ்ரீ தேவி பூ தேவி களுடன் ஒக்க பரிகணிதை-
ஏற்ற கலங்கள்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே விபவம்-பெரியாய் -பரத்வம் -ஊற்றம் உடையாய் வ்யூஹம்
உலகினில் தோற்றமாய் -அந்தர்யாமித்வம் –நின்ற சுடரே -அர்ச்சாவதாரம்
மேலையார் செய்வனகள் வேண்டுவன -ச யத் பிரமாணம் குருதே-

நல்குரவும் செல்வமும் –சம்பத் தாரித்ர்ய பாவாத் —-அகதி தகட நம் ப்ராஹ க்ருஷ்ணம் சடாரி -தேசிகன்
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் -இதற்கு அகடிதகட நா சக்தி வேண்டியது இல்லையே
சர்வ நியந்த்ருத்வம் அனுபவிக்கப் படுகிறது -ஆறாயிரப் படியில் பிள்ளான்

லஷ்மி நாதாக்க்ய சிந்தௌ சடரி புஜதல ப்ராப்ய காருண்ய நீரம்
நாதத்வாரா வப்ய ஷிஞ்சத் ததனு ரகுவராம் போஜ சஷூர் ஜராப்யாம்
கதவா தாம் யாமு நாக்க்யாம் சரிதமத யதீந்த்ராக்ய பத்மா கரேந்த்ரம்
சம்பூர்யா பிராணி சச்யே பரவஹதி சத்தம் தேசிகேந்திர ப்ரமௌகை–

பரீவா தேஷு யே மூகா பதிராச் ச ச பரோக்தி ஷூ
பர ரந்த்ரேஷூ ஜாத்யந்தா தைர் ஜிதம் புவனத்ரயம் –
பிறரை தூற்றுவதில் ஊமைகளாயும் -பிறர் செய்யும் தூற்றைக் கேளாமையால் செவிடர்களாயும் -பிறர் குறைகளைக் காண்பதில்
பிறவிக் குருடர்கள் போலேயும் இருந்து மூவுலகையும் வெல்வார்கள் –

ஆராவமுதன் -என்பதைக் காட்டிலும் ஆராவமுது -அதி மநோஹர வ்யாபதேசம் -என் அமுதினைக் கண்ட கண்கள் போலே
-மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா -என்பதை விட மருந்தும் பொருளும் அமுதமும் தானே -எனபது அன்றோ மிக மிக ரசிப்பது
–பெரும் புறக் கடல் -ப்ருஹத் பஹிஸ் சிந்து –வான மா மலைத் தடாகம் -சேற்றுத் தாமரை -சோலை -தேனமாம் பொழில்
திரு மோகூர் ஏரி -தாள தாமரை –திருக் குறுங்குடி பொய்கை -கரண்ட மாடு பொய்கை
பிரமாணம் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் -நல்ல வமுதம் பரகாலன் பனுவல்களே -பக்தாம்ருதம் –திராவிட வேத சாகரம்
பிரமாதாக்கள் -வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே
பிரமேயம்அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுது –அடியேன் மேவி அமர்கின்ற அமுதே திரு வேங்கடத்து எம்பெருமானே
–சோலை மலைக்கு அரசே கண்ண புரத்து அமுதே -திரு மேய்த்து இன்னமுத வெள்ளத்தை –அமுதே திருமால் இரும் சோலைக் கோனே
-ஆரா வின்னமுதை தென் அழுந்தையில் மன்னி நின்ற -அமுதினைக் கண்ண மங்கையுள் -என்றாலும்
ஆராவமுது திருக்குடந்தை எம்பெருமானுக்கே உபபத நிரபேஷமாய் இருக்கும்
பேர் அருளாளன் -தேவப் பெருமாளுக்கும் திருக் குறுங்குடிப் பெருமாளுக்கும் -திரு நாங்கூர் செம் பொன் செய் கோயில் பெருமாளுக்கும்
பத்தராவி -திரு நின்றவூர் பெருமாளுக்கும் திருக் கண்ண மங்கை பெருமாளுக்கும்
சூழ் விசும்பிலும் –குடந்தையன் கோவலன் குடி யார்க்கு –தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் -பவிஷ்யத் ஜ்ஞானம் கொண்டே
நம்மாழ்வார் அருளிச் செயல் -திருமங்கை ஆழ்வாரும் -ஆரம்பத்தில் சூழ் புனல் குடந்தையே தொழுது -என்றும் -சொல்லுகேன் வம்மின்
சூழ் புனல் குடந்தையே தொழுமின் -என்றும்- தண் குடந்தை கிடந்த மாலை அடி நாயேன் நினைந்திட்டேனே என்று நிகமிக்கிறார்
-அடுத்த பாசுரத்தில் அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் -நாத யாமுன போல்வாரை அன்னம் என்னும் –
ஸ்ரீ நாத முனி களோடு கூட -அமரர் ஏத்த -திருக் குருகூரில் உள்ள நிலத்தேவர்கள் துதிக்க
-அருமறையை வெளிப்படுத்த அம்மான்–நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
ஆராவமுதம் அங்கு எய்தி அதில் நின்றும் வாராது ஒழிவது ஓன்று உண்டே -சிறிய திருமடல் -இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே
ரசோவை ச ரசம் ஹ்யேவாயம் லப்த்வா ஆ நந்தி பவதீ -தைத்ரியம் -ஏதத் அம்ருதம் ஏதத் அபயம் ஏதத் ப்ரஹ்ம -சாந்தோக்யம் -8-3-4-
ஆராவமுதே -பதிகம் தொடக்கத்திலே எம்பெருமான் திரு நாமம் இதில் ஒன்றிலே தான் யாருக்கு ஆராவமுதம் -பக்தர்களுக்கு –

-ஆறாயிரப்படி -உன்னோடு பிறரோடு வாசி அற எல்லாருக்கும் ஒக்க சர்வ காலமும் அனுபவித்தாலும் ஆராத போக்யம் -பிள்ளான் –
தானே அனுபவித்து குமிழ் நீர் உண்பானாம்ஆள் இட்டு அந்தி தொழாமல் பெருமாள் தானே
-ஸ்வயமத விபோ ஸ் வேன ஸ்ரீ ரெங்க தாம்னி மைதலீ ரமண வபுஷா ஸ்வார் ஹாண்யாராத நாநி அஸி லம்பித
அக்ரே தார்ஷ்யேண பச்சாத் அஹிபதி சயநேந ஆத்மநா பார்ச்ச்வ யோச்ச ஸ்ரீ பூமிப்யோ மத்ருப்த்யா நயன சுலகனைஸ் சேவ்யமா நாம் ருதௌகம்

அடியேன் உடலம் நின்பால் அன்பாயே–ஸ்வரூப சித்தமான அடியேன் -உடலமும் ஆத்ம தர்மம் கொண்டபடி
-ஆத்மதர்மம் சேஷத்வம் உடலினால் பிரகாசம் அடைவது போலே ஆத்மதர்மமான அன்பும் உடலிலே விளக்கமுற
-வடிவிலே தொடை கொள்ளலாம் படி இருக்குமாயிற்று ஆழ்வாருடைய அன்பு
பேசாது இருந்து பின்னைத் தேறித் தெளிந்து ஒருவாறு பேசுகிறபடி -நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற –
நெடுமாலே -கருமை பெருமை மையல் –கரியவன் பெரியவன் பித்தன் -அவன் கருமையே நமக்கு செல்வம் தந்திடும்
பெருமை ப்ரஹ்ம -சர்வத்ர ப்ருஹத்த்வ குண யோகேன ஹி ப்ரஹ்ம சப்த ப்ருஹத்வஞ்ச ஸ்வரூபேண
குணைச்ச யத்ர அநவதிக அதிசயம் சோஸ்ய முக்யோர்த்த

சீரார் செந்நெல் கவரி வீசும் –
உரம் பெற்ற மலர்க் கமலம் உலகளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட வரம்பற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்து தலை வணக்கும்
தன்னரங்கமே -அஹம் அன்னம் -என்னுமவர்கள் சீரார் செந்நெல் –-பெருமாளுக்கு அமுதுபடியாகும் சீர்மை உண்டே
செழு நீர்த் திருக் குடந்தை -ஆழ்வார் நீராய் அலைய தேசம் எல்லாம் வெள்ளமிட்டு-பெருமானோ நீர் புரை வண்ணன்
-ஆழ்வார் நீராய் அலைந்து கரைபவர் -ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே –பாசுரம் ஒதுபவர்களோ -ஊற்றின் கண்
நுண் மணல் போல் உருகா நிற்பார் நீராயே-இத்தனையும் சேர்ந்தால் செழு நீர்த் திருக் குடந்தை யாக கேட்க வேணுமோ/இப்படி செந்நெலுக்கு சீர்மை திருக் குடந்தைக்கும் -திருவரங்கத்துக்கும் மட்டுமே -என்பர்  /

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் –
கௌசல்யா -கிடை அழகில் ஈடுபட்ட முனிவர் உத்திஷ்ட நரசார்தூல -என்றவாறே எழுந்து இருந்ததில் வியப்பில்லை -திரு மழிசைப் பிரான்
எழுந்து இருந்து பேசு –என்றதும் அர்ச்சாவதார சமாதியையும் குலைத்து பேசி அருளினாயே வாழி-கேசனே
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய் -அசைவு -திசைவில் வீசும் செழு மா மணிகளாக சொல்லப் பட்ட திரு மழிசைப் பிரானுக்காக
அசைந்து கொடுத்தது -அதிலே உலகம் பரவக் கிடந்தாய் -அந்த நீர்மைக்கு உலகு எல்லாம் ஈடுபடும் படி கிடந்தாயே
கண்டேன் அம்மானே -ச மயா போதித ஸ்ரீ மான் ஸூ க ஸூ பதா என்னும்படி உணர்த்தி விட்டுத் துடித்த பிராட்டி போலே
அன்றியே கண்ணாரக் கண்டு களிக்கின்றேன் -என்கிறார்

ப்ராப்யச்ச ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச் ச ப்ரத்யகாத்மன ப்ராப்த்யுபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா பிராப்தி விரோதி ச வதந்தி
சகலா வேதாஸ் சேதிஹாசபுராணா கா முனயஸ் ச மஹாத்மநோ வேத வேதார்த்த தர்சின –
முனயஸ் ச மஹாத்மநோ -என்றது ஆழ்வார்களையே -மிக்க இறை நிலையும் இத்யாதி
எம்மாவுருவும் வேண்டு மாற்றாலாவாய் எழில் ஏறே -இச்சா க்ருஹீத அபிமதோரு தேக -ச உஸ்ரேயன் பவதி ஜாயமான
அடியேன் -அடியேன் அரு -அரூபி என்றபடி ஆத்மா உள்ள அளவும் திருவடிகளை பிரியாதே இருக்க பிரார்த்திக்கிறார்
-கன்னார் மதில் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரி -என்கிறார் – நானாகிய ஆத்மா என்றபடி -என்னுடைய ஆத்மா இல்லை
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் -சரணாகதி என்னும் சார்வுடன் மற்று ஒன்றை அரணாகக் கொள்ளாதார் அன்பு வாழி
என்னான் செய்கேன் -எந்த உபாயாந்தரத்தாலும் செய்வேன் அல்லேன் -நீ தந்து அருளின ஞானத்தால் ஸ்வரூபம் உணர்ந்து -பகத் ரூபாபன்ன ஞானம் அன்றோ -காலாழும் நெஞ்சு அழியும் –கழல்கள் அவையே -என்கிறார் -திருவடிக் கீழ் குற்றேவல் -உற்றேன் உகந்து பணி செய்து
என்னை யாண்டாய் –உனக்கு ஆட்பட்டும் -பிரியா அடிமை என்னைக் கொண்டே குடந்தை திருமாலே
உழலை என்பிற் பேய்ச்சி முலை யூடஅவளை உயிர் உண்டான் –மாயை யாகிற விரோதி நிரசன சீலன் –
ஸ்வ ரஷண ஸ்வ அந்வய விரோதியையும் களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்
தான் ஆஸ்ரியிக்கை என்ற நினைவும் விரோதி என்பதால் –தந் நிவ்ருத்தியையும் இசைவித்து என்னை உன் தாளிணை கீழ் இருத்தும் அம்மானே என்கிறார்

தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே -கலக்கமான பொருள்கள் வேதம் சொல்லும் எனபது இல்லை
-உபய வேதங்களும் ஏகாரத்த பிரதிபாதகங்கள் தானே
மறை நிலங்கள் -வேதங்கள் மட்டும் அல்ல பஞ்சமோ வேதம் இதிகாசங்களும் உப ப்ருஹ்மணங்களும்
நாராயணன் முழு யேழ் உலகுக்கும் நாதன் வேதமயன் -மறந்தும் புறம் தொழா மாந்தர் -நாராயணனின் பரத்வமும் இதரர்கள்
அபரத்வமும் அருளிச் செயல்களாலே தெளியப் பெற்றோம் -மாயத் தோற்றம் என்பாரை பிறந்தவாறும் –
-மாயை -சங்கல்ப ரூபா ஜ்ஞானமே -எல்லையில் ஜ்ஞானத்தன் ஜ்ஞானம் அக்தே கொண்டு எல்லாக் கருமங்களும் செய்
–எல்லையில் மாயனைக் கண்ணனை -உயர் நலம் உடையவன் -சீர்த் தொடை யாயிரம் -சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல்-
-குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே —உடன் மிசை உயர் எனக் கரந்து எங்கும் பரந்து உளன் -சரீரத்மா நிபந்தனம் -சுருதி -மிகு சுருதி
-சுடர் மிகு சுருதி -சுருதி பேத சுருதி -மிகு சுருதி அபேத சுருதி -சுடர் மிகு சுருதி -கடக சுருதி

யத் கோ சஹச்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம்
நாராயணோ வசதி யத்ர ச சங்க சக்ர
யன் மண்டலம் ஸ்ருதிகதம் பிரணமந்தி விப்ராஸ்
தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய
சூர்யன் -த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயணஸ் சரசிஜாச நசன்னிவிஷ்ட கேயூரவான்-
மகர குண்டலவான் கிரீடி ஹாரீ ஹிரண்யவயபுர் திருத்த சங்க சக்ர –
இந்த வகுள பூஷண பாஸ்கரரும்-கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே வெண் பல் இலகு சுடர் இலகு விலகு
மகர குண்டலத்தன் கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே –
யன் மண்டலம் -வேத பிரதி பாத்தியமான சூர்யா மண்டலம் -திரு வவதார ஸ்தலம் சுருதி வேதம் காது இரண்டுக்கும்
இன்றும் காதில் திருக் குருகூர் ஆழ்வார் என்றதும் கை கூப்பி வணங்குகின்றோம்
பவிஷ்யந்தி –தாம்ரபர்ணீ நதி தீர -என்று ஆழ்வார் ஜீயர் அவதாரங்கள் ஸூ சகம்
யுக க்ரமம் –கருத யுகத்தில் பிராமணராய் -தத்தாத்ரேயர் -பரசுராமன் -த்ரேதா யுகத்தில் சக்கரவர்த்தி திருமகன்
-த்வாபர யுகத்தில் வ ஸூ தேவ நந்தகோபன் குமாரனாகவும் -கலி யுகத்தில் -ஆழ்வார்
ரிஷிம் ஜுஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ மிவோதிதம்

ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்க்கு ஆரமுதம் ஆனான் தன்னை -பெரிய திருமொழி -2-10-4-
அடியவர் –-பேயாழ்வார் -திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் –இன்றே கழல் கண்டேன் -என்று ஆதியிலும்
பைம் பொன் முடியான் அடி இணைக்கே பூரித்து என் நெஞ்சே புரி -என்றும்
-முயன்று தொழு நெஞ்சே –தண் அலங்கல் மாலையான் தாள் -என்றும்
கரியான் கழலே தெருள் தன மேல் கண்டாய் தெளி -என்றும்
வாழும் வகை யறிந்தேன் –எங்கள் பெருமான் அடி சேரப் பெற்று -என்று மத்யத்திலும்
குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நம்கட்குச் சார்வு -என்று நிகமித்து
அடியைச் சிக்கென பிடித்து பேயாழ்வார் அடியவர் ஆகிறார்
அன்பு கூரும் அடியவர் –பூதத்தாழ்வார்
அன்பே தகளியாய் -என்று தொடங்கி -விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே –என்தன் அளவன்றால் யானுடைய அன்பு -என்று
நிகமித்து தனது அன்பை வாய் விட்டு உரைத்தார்
அரும்பிக் கண்ணீர் சோறும் அடியவர் -பொய்கையாழ்வார்
பழுதே பல பகலும்  போயின என்று அஞ்சி அழுதேன் -என்றபடி அரும்பிக் கண்ணீர் சோர்ந்தவர்
காசார பூர்வகவி முக்கய விமர்த்த ஜன்மா புண்யா
தடேஷூ ஸூபகஸ்ய ரஸோ பஹூஸ் தே–தேகளீச ஸ்துதி-

ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனால் போலே தந் நிவ்ருதிக்கு பிரதானாரானார்
திருமழிசை பிரான் –பரத்வத்தை ஸ்தாபித்து அருளி -ஆழ் பொருளை அறிவிக்க முற்படுகிறேன் -என்கிறார்
தொடங்கும் பொழுதே அறிவித்தேன் ஆழ் பொருளை என்கிறார் சத்ய சங்கல்பன் மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே

சதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -சத் சப்தத்தால் மூலப் பொருளையும்
வாஜசநேயகத்தில் -ப்ரஹ்ம வா இதம் ஏகமேவ அக்ர ஆஸீத் –ப்ரஹ்ம சப்தத்தால் மூலப் பொருளையும்
ஐதரேயத்தில் -ஆத்மா வா அயமேக ஏவாக்ரா ஆஸீத் –என்று ஆத்மா சப்தத்தால் அறிவுடைய மூலப் பொருள் என்கிறது
ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சான -மஹா உபநிஷத் வாக்யத்தால் அந்த சத் -ப்ரஹ்ம –ஆத்மா -போன்ற
சாமான்ய சப்தத்தால் சொல்லிய மூலப் பொருள் நாராயண -என்கிறார்

நீராட கிருஷ்ண சம்ச்லேஷம் -நான் அடிமை செய்ய விடாய் நான் ஆனேன் எம்பெருமான் -தான் அடிமை கொள்ள விடாய் தான் ஆனான் ஆனதன் பின்
வெள்ளக் குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம் உள்ளக் குடத் தேனை ஒத்து -பிள்ளை பெருமாள் ஐயங்கார் நூற்று எட்டு திருப்பதி யந்தாதி –

பகல் பத்து -முதல் நாள் -திருப் பல்லாண்டு -பெரியாழ்வார் திருமொழி -1-9 -அபிநயம் வியாக்யானம் முதல் இரண்டு திருப்பல்லாண்டு பாடல்கள்
இரண்டாம் நாள் -பெரியாழ்வார் திருமொழி -2-10-முதல் -5-3 -வரை -ஆற்றிலிருந்து –தன்னேராயிரம் இரண்டு பாடல்களுக்கும் அபிநயம் வியாக்யானம் -/மூன்றாம் நாள் பெரியாழ்வார் திருமொழி -5-4/திருப்பாவை நாச்சியார் திருமொழி 12 வரை -சென்னியோங்கு மார்கழி திங்கள் -இரண்டு பாட்டுக்கும்
அபிநயம் வியாக்யானம் -திருப் பொலிந்த சேவடி என் -சென்னியின் மேல் பொறித்தாய் -அரையர் தம் திருக் கையால் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் கோஷ்டியாருக்கும் சாதிப்பார்
நான்காம் நாள் -நாச்சியார் திரு மொழி 13/14-பெருமாள் திருமொழி /திருச் சந்த விருத்தம் -சேவை -கண்ணன் என்னும் கரும் தெய்வம்
/இருளிரிய -இரண்டு பாட்டுக்கும் அபிநயம் வியாக்யானம் –
கஞ்சைக் காய்ந்த கருவில்லி -அழகிய மணவாளப் பெருமாள் கம்ச வதம் செய்து அருளின படி எவ்வண்ணமே என்ன -மூன்று தடவை கேள்வி கேட்டு
-பின்பு பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் -சேவை ஆனபின்பு இரண்டாம் பகல் பத்து சேவையில் தம்பிரான் படி
கம்ச வத விஷயமான வியாக்யானம் சேவித்து அழகிய மணவாளன் கம்ச வதம் செய்து அருளினது இங்கனே என்று சொல்லி
கிருஷ்ணாவதாரம் முதல் கம்ச வதம் வரை நடித்துக் காட்டி கடைக் கண் என்னும் சிறைக் கோலால் தொடங்கி -சேஷ பாசுரங்கள் சேவை யாகும்
ஐந்தாம் நாள் -திருமாலை அமலனாதிபிரான் -திருமாலை முதல் பாட்டுக்கு அபிநயம் -வியாக்யானம் –ஆறாம் பாட்டு மூன்றாம் அடி –
அரங்கனார்க்கு ஆட்செய்யாதே –என்ற இடத்தில் -திரு அத்யயன உத்சவ சேவை புறப்பாடு திருவாராதனம் வேத விண்ணப்பம் அருளிப்பாடு
அபிநயத்துக் காட்டி பின்பு சேஷ பாசுரங்கள் அமலனாதிபிரான்
ஆறாம் நாள் -கண்ணி/பெரிய திருமொழி -3-5- வரை கண்ணி நுண் சிறுத் தாம்பு வாடினேன் வாடி இரண்டுக்கும் அபிநயம் வியாக்யானம்
ஏழாம் நாள் -பெரிய திருமொழி -3-6-முதல் 5-6- தூவிரிய மலருழக்கி-அபிநயமமும் வியாக்யானமும் ஒ மண் அளந்த தாளாளா–
மூன்று முறை சேவித்து அழகிய மணவாளப் பெருமாள் திரு உலகு அளந்து அருளின படி எங்கனே என்ன -அத திரு மொழியில் மேல்
பாசுரங்களை சேவியாமல் மேலே சொல்லி பிற்பகலில்  இரண்டாம் சேவையில் வாமன அவதார விஷயமாக தம்பிரான் படி வியாக்யானம்
சேவித்து அவ்வவதார வ்ருத்தாந்தங்களை நடித்துக் காட்டி தண் குடந்தை நகராளா வரை எடுத்த தோளாளா ஆரம்பித்து அத்திருமொளியை முடிப்பார்கள்
எட்டாம் நாள் -பெரிய திருமொழி -5-7- முதல் 8-10–பண்டை நான்மறையும் பாசுர அபிநயம் வியாக்யானம் -அரங்க மா நகர் அமர்ந்தானே –
அவதார வைபவங்கள் -அரங்கம் என்று சேர்ந்து வரும் சந்தைகள் 70 மேல் சேவிக்கப்படும் -மாயிரும் குன்றம் ஓன்று மத்தாக ஆயிரம் தோளால்
அலைகடல் கடைந்தான்-அழகிய மணவாளப் பெருமாள் அம்ருத மதனம் செய்து அருளினபடி எவ்வண்ணமே என்ன -மூவிசை சொல்லி
அத்திரு மொழியில் மேல் பாசுரங்களை சேவியாமல் மேலே சொல்லி பின்பு இரண்டாம் சேவையில் அம்ருத மதன விஷயமாக
தம்பிரான் படி வியாக்யானம் சேவித்து சேஷமான பாடல்களை சொல்லி அத திருமொழியை முடிப்பார்கள்
ஒன்பதாம் திருநாளில் -பெரிய திருமொழி -8-2-முதல் 10-1- தெள்ளியீர் பாசுர அபிநயம் சேவை -திரு நெடும் தாண்டகம் முதல் பாசுர அபிநயம் வியாக்யானம் -இரண்டாம் சேவையில் முத்துக் குறி -திரு நெடும் தாண்டகம் -11 பாட்டு கட்டுவிச்சி சொல்லும் கூடல் குறியை முத்துக் குறியாக அபிநயித்துக் காட்டுவார்கள்
முத்துக் குறிக்காக அரையர் பெருமாள் இடம் தீர்த்தம் சடாரி -ஆழ்வார் ஆசார்யர்களுக்கும் கோஷ்டிக்கும் சாதிப்பார்
திருப் பொலிந்த -சடாரி மட்டும் –இன்றும் நாளையும் தீர்த்தமும் சடாரியும் உண்டு
பத்தாம் திருநாள் -பெரிய திருமொழி -10-2 தொடங்கி திரு நெடும் தாண்டகம் முடிய சேவை -இரக்கமின்றி அபிநய வியாக்யானங்கள்
பிற்பகல் ராவண வதத்துக்கு அருளிப்பாடு -கொண்டாட்டம் -இன்றும் அரையர் தீர்த்தம் ஸ்ரீ சடாரி சாதிப்பார் -இன்று நாச்சியார் திருக் கோலம்

வைகுண்ட ஏகாதசி -ரத்னாங்கி சேவை -உயர்வற உயர்நலம் தொடங்கி ஆழ்வாரை திரு முன்பே அழைத்து அந்த ஹர்ஷத்துக்கு போக்குவீடாக
பக்தி உலா படி ஏத்தம் திருவந்திக்காப்பு -திவ்ய ஆஸ்தான மண்டபத்தில் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் திரளை இருந்தான் கண்டு கொண்டே
-மூன்றாம் ஸ்ரீ யபதி முதல் பாட்டுக்கும் ஈடு வாசிப்பார் -முதல் பத்து முடிய சேவை பெரிய பெருமாள் முத்தங்கி சேவை
ஏழாம் திருநாள் ஆழ்வாருக்கு நாச்சியார் திருக் கோலம் ஆல்வாரைக் கண்டு மோஹித்து கொட்டகை உத்சவம்
-ஆஸ்தானம் எழுந்து அருளும் முன்பு கைத்தல சேவை இவள் திறத்து என் செய்கின்றாயே கேட்பது நெஞ்சை உருக்கப் பண்ணும்
கோயில் திரு வாசலிலே முறை கேட்ட கேள்வியாக்கி -ஆசார்ய ஹிருதயம் இரவில் கங்குலும் பகலும் அபிநயம் வியாக்யானம்
அந்திப் போதில் அவுணன் உடல் இடந்தானே -ஹிரண்ய வதம்  வியாக்யானம் அபிநயம் பின்பு அரையர் தீர்த்தம் ஸ்ரீ சடகோபன் சாதிப்பார்
பின்பே ஏழாம் பத்தை சேவித்து முடிப்பது
எட்டாம் நாள் -குதிரை நம்பிரான் மேல் வீற்று இருக்கும் -மல் வெளியில் நிலை வேடுபறி -வாடினேன் வாடி தொடங்கி
திரு மங்கை ஆழ்வார் உடன் திரு மா மணி மண்டபம் சேர்த்தல் இரவில் நெடுமாற்கு அடிமை அபிநய வியாக்யானம்
பத்தாம் நாள் -சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி ஆழ்வாருக்கு -திருவடி தொழ சித்தமாக தாள தாமரை வியாக்யானம்
திருவடி தொழ எழுந்து அருளும் போது சூழ் விசும்பும் திருவடி தொழும் போது முனியே நான்முகனும் அரையர் சேவை
முனியே நான்முகன் ஒவ் ஒருபாட்டையும் இரு முறை சேவிப்பது -அது முடியும் வரை வேர் அற்ற மரம் போலே
ஆழ்வார் திருவடி வாரத்தில் திருத் துழாயால் மூடப் பெற்று இருப்பார்
அடுத்த நாள் இயற்பா ஆஸ்தானத்திலே-அன்று தொடங்கி ஸ்ரீ ரெங்க நாச்சியார் சன்னதியிலே ஐந்து நாள் பகல் பத்தும்
ஐந்து நாள் இராப் பத்தும் -அதில் தொடக்கம் அரையர் சேவிப்பது அத்யாபகர்கள்

—————————————–

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம் -2-

November 28, 2015

அணி திருவரங்கத்துக்கு அடை மொழிகள் -வண்டினம் முரலும் சோலை -மயிலினம் ஆலும் சோலை –
கொண்டல் மீது அணவும் சோலை -குயிலினம் கூவும் சோலை —வண்டு -மயில் -கொண்டல் -குயில் –
வண்டு -லஷ்மி கல்பல தோத் துங்க ஸ்தன ஸ்தபக சஞ்சல ஸ்ரீ ரெங்க ராஜ ப்ருங்கோ மே ரமதாம் மாந சாம்புஜே –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -1-10–
-ஸ்தபக சஞ்சல அம்புஜே ரமதாம் –தாமரை மலரில் உள் புகுந்து படிந்து ரம்யா நிற்குமே வண்டு
-நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பன் அன்றோ –
மயில் -பிரலய சமய ஸூ ப்தம் ஸ்வம் சரீரைக தேசம் –ச்வெச்சயா விச்த்ருணாந கசிதமிவ கலாபம் சித்ரமாதத்ய தூந்வன்
அநு சிகினி சிகீவ க்ரீடசி ஸ்ரீ சமஷம் –ஸ்ரீ ரெங்க கலாபம் –ஆண் மயில் தோகை விரித்து விளையாடுவது போலே -சிருஷ்டி –
கொண்டல் –சிஞ்சேத் இமஞ்ச ஜனம் -மேட்டு பள்ள நிலம் பார்க்காமல் -இந்திரயா —-ஸ்ரீ ரங்க தாமனி தயா –ராசா நிர்ப்பரத்வாத் –சீதள காள மேக -1-82
குயில் -வனப்ரியா பரப்ருத அமர கோசம் -அர்ராமம் சூழ்ந்த அரங்கம் -அண்டர் கோன் அமரும் சோலை -அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி

மார்க்க சீர்ஷம் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –
கதிர்மதியம் போல் முகத்தான் -ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்கள் சூர்யன் போலே பரமத நிரசனம் -ஆசார்ய ஹிருதயம் ஸ்ரீ வசன பூஷணம் பகவத் விஷயம் திருமந்த்ரார்த்தம் -அருளிச் செய்யும் பொழுது சௌம்ய முகராய் ஆஹ்லாத சீத நேத்ராம்பு வராய் இருப்பார்
நாராயணன் நமக்கே பறை தருவான் -சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநூம் மகனான் உத்தரதே லோகன் -அனுசந்தேயம்
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -உனது பாலே போல் சீரில் பழித்து ஒழிந்தேன் –பரமன் -ஆசார்யன் -அடி பாடுகை –மாறன் அடி
பணிந்து உய்ந்தவன் அடி பணிந்த முதலியாண்டான் –குரு பரம்பரை சொல்வது
ஓங்கி உலகளந்த உத்தமன் –ரஹச்ய த்ரயம் -ஷட்த்ரயம் -ஸ்ரீ கீதை -தத்வத்ரயம் -பௌத்த ஜைனமத குரு அதம குரு
-அநு வருத்தி நிர்பந்தம் செய்து உபதேசிப்பார் -மத்யம குரு
பயல் நன்றாகிலும் பாங்கலராகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்பவன் உத்தம குரு
தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய -கலயாமி கலித்வம்சம் கவும் லோக திவாகரம் -ஸ்ரீ மான் ஆவிர்பூத் பூமௌ ராமானுஜ திவாகர –
மச்சித்தா மத்கத போதயந்த பரஸ்பரம் -கலந்து பேசின பேச்சரவம்
ப்ரியோஹி ஜ்ஞானி நோத்யர்த்தமஹம் சச மம பிரியா -கோதுகலமுடைய பாவாய் -மொய்ம்மாலாய் ஒழிந்தேன் எம்பிரான் என் மேலானே
-வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
யத்ர அஷ்டாஷர சம்சித்தோ மஹா பாஹோ மஹீயதே ந தத்ர சஞ்சரிஷ்யந்தி வியாதி துர்பிஷதஸ்கரா –கொன்று உயிர் உண்ணும்
விசாதி பகை பசி தீயன வெல்லாம் நின்று இவ்வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்
அம்பரம் தண்ணீர் சோறு -பரமபதம் -விரஜை -அஹம் அன்னம் அஹம் அந்நாதா -மந்த்ரோ மாதா குரு பிதா -ஞாலத்துப் புத்ரனைப் பெற்றோர் நங்கைமீர் நானே மற்று யாரும் இல்லை யசோதை =திருமந்தரம் –
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த திருமந்த்ரார்த்தம் சர்வ வ்யாபகத்வம் -மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் என்ற அநந்தரம் ஒண் மிதியில் புனலுருவி ஒரு கால் –
செம் பொற் கழல் அடி செல்வா பல தேவா -நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
உம்பியும் நீயும் -பாகவத சேஷத்வமும் பகவத் சேஷத்வமும் ஒன்றை விட்டு ஒன்றை பிரிந்து இராதே
மத களிறு ஐந்தினையும் சேரி திரியாமல் -உந்து மத களிற்றின் -ஓடாத தோள் வலியன் -ஜ்ஞானக் கை தா –
ஏழு ரிஷபங்கள் -காம குரோத லோப மோஹ மதம் மாத்சர்ய அஸூயை -கந்தம் கமழும் குழலி -செண்பக மல்லிகை இத்யாதி
அஹிம்சா பிரதமம் புஷ்பம் புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ சர்வ பூத தயா புஷ்பம் ஷமா புஷ்பம் விசேஷித-த்யானம் புஷ்பம் தப புஷ்பம்
ஜ்ஞானம் புஷ்பம் ததைவ ச சத்யம் அஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ ப்ரீதிசரம் பவேத்
பஞ்ச சயனம் -அர்த்த பஞ்சகம் –கோட்டுக்கால் கட்டில் -சதுர்விதமான தேஹ வர்ண ஆஸ்ரம அதிகாரி பல மோஷசாதன கதி
யுக தர்ம யுஊஹ ரூபா க்ரியாதிகள் –கோப்புடைய சீரிய சிங்காசனம் -அத்வைத -அபேத -ஸ்ருதி /பேத த்வைத  ஸ்ருதி-/கடக ஸ்ருதி –
நின் கையில் வேல் போற்றி -ஆழி -கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று –சாரித்ரோத்தார தண்டம் வஜ்ரா தண்டம் த்ரி தண்டம்
-விஷ்வக் சேனா யதிபதிரபூத் வேதர சாரஸ் த்ரிதண்ட
ஒருத்தி -திருமந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து ஓர் இரவில் ஒளித்து -சத்யவ்ரத ஷேத்ரம் கூட்டி வந்த தேவபிரான் –

நெறி வாசல் தானேயாய் நின்றானை –தேவோ நாமோ சகஸ்ரவான் -திரு நாமம் சாதிக்கிறார் பொய்கையார் -பிராபக பிராப்ய
ஐக்யமும் போக்யத்வமும் தனக்கே -உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் ந து குனௌ-பட்டர் -அசாதாரண லஷணம்

சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்பபோற்றித் தொழு நல்ல அந்தணர் வாழ் இப்பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே

வரவர முனி சதகம் -துக்தோ தன வத்தவளமதுரம் சுத்த சத்வைக ரூபம் ரூபம் யஸ்ய ஸ்புட யதிதராம் யம் பணீந்த்ராவதாரம் –

ஹாரோபி –நார்ப்பிதா கண்டே ஸ்பர்சே சம்ரோத பீருணா ஆவயோரந்திர சாதா பர்வதாஸ் ஹரிதோ தருமா -ஸ்ரீ இராமாயண ஸ்லோஹம்-
இங்கே பீருணா சீதயா மயா என்று லிங்க த்வயத்திலும் அந்வயம் –

மத சித்தா மத்கதபிராணா போதயந்த பரஸ்பரம் கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமநதி ச –
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது
வக்தாரஸ் தத் வசநேன அநந்ய பிரயோஜநேந துஷ்யந்தி ச்ரோதரச்ச தத் சரவணநேந அநவதிக அதிசய பிரியேண ராமந்தே -ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள்
தெரித்து -தெரிவிக்கை -பிரவசனம் பண்ணுகை-பின்பு பிறர் சொல்ல கேட்டும் -என்பதால் துஷ்யந்தி ரமந்தி இரண்டு பத பிரயோகங்கள்

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் -நூற்றெட்டு திருப்பதி அந்தாதி காப்புச் செய்யுள்கள் –
பொய்கை பூதன பேயார் பொன் மழிசைக் கோன் மாறன்
செய்ய மதுரகவி சேரர் பிரான் -வையகம் எண்
பட்டர்பிரான் கோதை தொண்டர் பாதப் பொடி பாணன்
காட்டவிழ் தார் வாட் கலியன் காப்பு

பிறவாத பேறு பெறுதற்கு எஜ்ஞ்ஞான்றும்
மறவாது இறைஞ்சேன் மனனே -துறவாளன்
வண் குருகூர் வாவி வழுதி வள நாடுடைய
தண் குருகூர் நம்பி திருத் தாள்

முன்னே பிறந்து இறந்து மூதுலகில் பட்டதெல்லாம்
என்னே மறந்தனையோ என்னெஞ்சமே-சொன்னேன்
இனி எதிரா சன்மங்கள் இன்று முதல் பூதூர்
முனி எதிராசன் பேர் மொழி

முக்காலம் எல்லா முகில் வண்ணன் வைகுந்தத்து
எக்காலம் செல்வான் இருக்கின்றேன் -தக்கார் எண்
கூரத் தாழ்வான் அடியைக் கூடுதற்கு நாயடியேன்
போரத் தாழ்வான சடம் போட்டு

நான் கூட்டில் வந்தவன்றே நான் அறியா தன்மை எல்லாம்
தான் கூட்டி வைத்த நலத்தான் கண்டீர் -ஆங்கூட்டச்
சிட்டருக்கு வாய்த்த திருவரங்கன் இன்னருளால்
பட்டருக்கு ஆட்பட்ட பயன்

ஈரிருபதாம், சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர் பதின்மூன்றாம் மலை நாடு ஓர் இரண்டாம் சீர் நடுநாடு
ஆறோடு ஈரெட்டு தொண்டை அவ்வடநாடு ஆறிரண்டு
கூறு திரு நாடு ஒன்றாகக் கொள்

தேவப் பெருமாள் மங்களா சாசனம் —என் நெஞ்சமேயான் –உலகம் ஏத்தும் ஆழியான் அத்தி ஊரான் –
அத்தி யூரான் புள்ளை யூரான் –இரண்டு பாசுரங்கள் பூதத் தாழ்வார் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -மணியை வானவர் கண்ணனை -நம்மாழ்வார்
வரம் தரும் மா மணி வண்ணன் இடம் மணி மாடங்கள் சூழ்ந்த அழகாய கச்சி –திருமங்கை ஆழ்வார்

ஆறும் ஆறும் ஆறுமாய்-திருச்சந்த விருத்தம் -2- திருவாய்மொழி -6-6-6-கற்பகக் காவான நற்பல தோளற்கு பொற் சுடர்க் குன்றன்ன
பூம் தண் முடியற்கு நற் பல தாமரை நாள் மலர்க் கையற்கு எண் விற் புருவக் கொடி தோற்றது மெய்யே-
இதற்கு ஈடு -தோற்றது மெய்யே -ஊர்த்வம் மாசாத் ண் ஜீவஷ்ய -என்னப் பண்ணும் வடிவைக் காட்டி
-ந ஜீவேயம் ஷணம் அபி -என்னப் பண்ணும் வடிவைக் கிடீர் கொண்டது
வி நா தாம் அஸி தேஷிணாம்–மையார் கண்ணிகமல மலர்மேல் செய்யாள் -கண்டனன் கற்பனுக்கு அணியைக் கண்களால்
தெண்டிரை யலை கடல் இலங்கைத் தென்னகர் –சீதா பிராட்டி கண்களால் கண்டேன் என்கிறார் திருவடி

நால்வர் கூடி நான்கு பிள்ளைகளை பெற்றனர் -பெருமாள்
நால்வர் கூடி ஒரு  பிள்ளையைப் பெற்றனர் -கண்ணன்
அறுவர் கூடி ஆயிரமாயிரம் பிள்ளைகளைப்பெற்றனர் –
ஞான பலம் இத்யாதியால் தயை ஷாந்தி ஔதார்யாதிகள் திருக் கல்யாண குணங்கள் –
தேவும் தன்னையும் பாடி யாடத் திருத்தி -2-7-4–தேவு -ஐஸ்வர்யம் தன்னை -ஆஸ்ரித பாரதந்த்ரம்

ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி -பெரியாழ்வார்
ஆசாயா யே தாசாஸ் தே தாஸா ஹந்த சர்வ லோகஸ்ய
ஆஸா தாஸீ யேஷாம் தேஷாம் தாஸா யதே ஜகத் சர்வம் -ஸூ பாஷித ஸ்லோஹம்
ஆசைக்கு வசப்பட்டவர்கள் உலகு அனைத்துக்கும் வசப்படும் ஆசை யாருக்கு வசப் பட்டதோ அவர்களுக்கு உலகம் வசப்படும் என்றவாறு –

ஓவி நல்லார் எழுதிய தாமரை யன்ன கண்ணும் –அட்ட புயகரத்தேன் என்றாரே -திரு மங்கை ஆழ்வார்
கோவில் தருமம் உங்கள் குலத்து உதித்தோர் கட்கு எல்லாம் -ஓவியத்து எழுத ஒண்ணா வுருவத்தாய் -கம்பர்
சித்ரே நிவேச்ய பரிகல்பித சத்வயோகா -காளிதாசர்
எழுதாப் பெரிய பெருமாளை எழுத வரிய பெருமான் என்று எண்ணாதே எழுதி இருந்தேனே -பிள்ளை பெருமாள் ஐயங்கார்

1-1-5- ஈஷத்யதிகரணம் –
தந் நிஷ்டஸய மோஷோபதேசாத்
கதி சாமான்யாத் –
இரண்டு ஸூ த்ரங்கள்
தச் -சப்தத்தினால் -சச் சப்த வாச்யனான -சத்தை உபாசிப்பவனுக்கு -சத் வித்யா பிரகரணம் ஆசார்யவான் புருஷோ வேத தஸ்ய
தாவதேவ சிரம் யாவந்த விமோஷ்யே அத சம்பத்ஸயே -நாராயணனே சச் சப்த வாச்யன்-
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -தச் சப்த வாச்யம் சொல்லும் தேவதா விசேஷத்தையே இங்கே தந் சப்தம் சொல்லுகிறது
வா ஸூ தேவ மநாராத்ய கோ மோஷம் சமவாப்ஸ்யதி–போன்ற பிரமாணங்களால்
மோஷ ஹேதுத்வ லிங்கத்தால் சச் வப்த வாச்யன் நாராயணனே என்றதாகும்
சர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமானி க்ருத்வா அபிவதன் யதாஸ்தே-என்பதனால் நாம ரூப வ்யாகர்த்தா வாகவே இருக்கும் தன்மை சொல்லப் பட்டது
இனி கதி சாமான்யாத் -கதி யாவது ப்ரவ்ருத்தி -அர்த்த போதகத்வம் -சாமான்யமாக இருப்பதாவது ஆவசியம் ஆகையாலே
-காரண வாக்யங்கள் எல்லாம் ஒரு மிடறாக இருக்க வேண்டுகையாலே
அத புருஷோ ஹ வை நாராயணோ காமயத் -பரஜாஸ் ஸ்ருஜ்யேதி -என்றும்
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசாநோ நேமே த்யாவாப்ருதீவி -என்றும் திருவவதாரங்கள் எல்லாம் குணா பரிவாஹ ரூபங்களே
பேத ஸ்ருதிகள் -ஷரம் பிரதானம் அம்ருதாஷரம் ஹர ஷராத்மா நாவீசதே தேவ ஏக -போல்வன
நேஹ நா நாஸ்தி கிஞ்சன —சர்வம் கல்விதம் ப்ரஹ்ம –
தத்வமஸி-போல்வன அபேத ஸ்ருதிகள்
யஸயாத்மா சரீரம் யஸ்ய ப்ருத்வீ சரீரம் ய ஆத்மனி திஷ்டம் -போல்வன கடக ஸ்ருதிகள்

யத்வை கிஞ்ச மநுரவதத் தத் பேஷஜம் -மநு சொன்னது எல்லாம் மருந்து –
வேதேஷூ பௌருஷம் ஸூ க்தம் புராணே ஷூ வைஷ்ணவம் பாரதே பகவத் கீதா தர்ம சாஸ்த்ரேஷூ மா நவம்
– ஸம்ருத்யதிகரண ஸ்ரீ பாஷ்யத்திலும் இதுவே காட்டி அருளுகிறார்

பூவில் வாழ் மகளாய் தௌவையாய் புகழாய் பழியாய் -திருவாய்மொழி –6-3-6—தௌவையாய் மூதேவி யாய் -வ்ருத்த விபூதி சமுச்சயம் -பிரணயரோஷத்தால் ஊடி இருந்த தன்னையும் கூட்டிக் கொண்ட சாமர்த்தியத்தால்

நாவகாரியம் சொல்லிலாதவர் -நாவுக்கு அக்காரியம் -திருக் கோட்டியூர் நம்பி போல்வார் -அர்த்த கௌரவத்தால்
அடுத்த பாசுரம் குற்றம் இன்றி குணம் பெருக்கிக் குருக்களுக்கு அனுகூலராய் செற்றம் ஒன்றிலாதவர்-எம்பெருமானாரை ஸூசகப் படுத்தும்

இரந்து உரைப்பது உண்டு வாழி ஏம நீர் நிறத்தம்மா வரம் தரும் திருக் குறிப்பில் வைத்ததாகில் மன்னு சீர்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே –101-
இரட்டித்து சொல்லும் பாசுரம் -வரத தவ கலு பிரசாதா தருதே சரணமிதி வாசோபி மே நோதியாத் -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்-

யாதவாப்யுதம் -நான்காவது அத்யாயம் -ஆறாவது ஸ்லோஹம்
நந்தச் ஸ தீவ்ரேண பயேன சத்யஸ் சமேத்ய பஸ்யன் அநகம் குமாரம்
தேநைவ தஸ்ய த்ரி ஜகன் நியந்து ப்ராயுங்க்த ரஷாம் பரமார்த்த வேதி —
அப்பைய தீஷிதர் -பரமார்த்த வேதி –எம்பெருமானே சர்வ ரஷகன் என்ற உண்மையை உணர்ந்தவர்
உண்மையில் -தத்தே பவது மங்களம்-குசல பிரச்னம் -பல்லாண்டு போற்றி என்று அடியவர் சொல்வதையே தனக்கு ரஷையாக கொண்டவன் அன்றோ
காப்பாரும் இல்லை கடல் வண்ணா உன்னை தனியே போய்- எங்கும் திரிதி -காக்கும் இயல்வினன் கண்ணன் என்று அறிந்தும் -சொல்பவர்கள் அன்றோ
அவ்விடத்திலே -11 ஸ்லோஹம் -விச்வாதி விச்வாதிக சக்தி ரேகா நாமானி ரூபாணி ஸ நிர்மி மாண-நாமைகதேச க்ரஹணேபி
மாதர் பபூவ க்ருஷ்ணோ பஹூமான பத்ரம் –குழந்தை மழலைப் பேச்சு பஹூமானம் தானே தாய்க்கு
34-ஸ்லோஹம் -ஆநீத மக்ரே நிஜ பந்த நார்த்தம் தாமாகிலம் சம்ஹித மபய பூர்ணம் -விலோக்ய நிர்விண்ணதி யோ
ஜனன்யாஸ் சங்கோச சக்த்யா ஸ பபூவ பத்ய-சுருக்குவாரை இன்றியே சுருக்கி -கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்
– சங்கோச சக்த்யா ஸ பபூவ பத்ய–என்னும் அழகு -வேதத்தில் சம்ஹிதை -பதம் க்ரமம்-மூன்று உண்டு -நெடுக தண்டாகாரமாக
போகும் சம்ஹிதை -துண்டு துண்டாக ஓதுவது பதம் -பதங்களை பிணைத்து ஓதுவது க்ரமம் -யசோதை நீளமாக வைத்த கயிறு சம்ஹிதை
போலே துண்டு துண்டு ஆக்கினது பத அவஸ்தை சேர்த்து பிணைத்தது க்ரம அவஸ்தை -தாமாகிலம் சம்ஹிதமாபி -என்று அருளிச் செய்த அழகு
விவித முநி கணோப ஜீவ்ய தீர்த்தா விகமித சர்ப்பகணா பரேண பும்ச
அபஜத யமுநா விசுத்தி மக்ர்யாம் சமித பஹிர் மத சம்ப்லவா த்ரயீவ –4-126
கண்ணபிரான் ஸ்வாமி ராமானுஜர் -ஒப்புமை -யமுனை -வேதம் -காளியன் -குதர்க்க வாதிகள் -ஐந்து துர்வாதங்கள்
-ஈஸ்வரன் இல்லை -அனுமான சித்தன் -குணங்கள் விபூதிகள் இல்லை -ஒருவன் இல்லை பல ஈஸ்வரன் -சர்வ ஸூ ந்யவாதம் போல்வன
-வாய்த்த காளியன் மேல் நடமாடிய கூத்தனார் -நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே –
இத்தை புரியாமல் -வேத மூர்த்தியான ஸூ ர்யனின் பெண்ணான யமுனை என்கிறார் அப்பைய தீஷிதர் –
ஆச்வாச்ய வாகம்ருத வ்ருஷ்டி பிராதி தேயாத்
தைதேய பார நமிதாம் தரணீஞ்ச தேவீம்
ஆவிர்ப்பு பூ ஷூரநகோ வ ஸூ தேவ பத்ன்யாம்
பத்மாபதி ப்ரணிததே சமயம் தாயா —முதல் அத்யாயம் முடிவு ஸ்லோஹம்
ஆவிர்புபூ ஷூ சொன்னதுமே அ நக -தோஷம் இல்லாதவன் -பரிகார அலங்காரம் -கர்ம வச்யன் போலே தோற்றம் அற்றவன் என்றபடி
த்ரச்யன் முகுந்தே நவநீத சௌர்யாத் நிரப்புக் ந்காத்ரோ நிப்ருதம் சயான
நிஜா நி நிச்சப்த சாம் யயாசே பத்த்வாஞ்ஜலிம் பாவ விபூஷாணா நி -4-28
கை கூப்பி யாசித்தான் -அஞ்சி உடலை ஒடுக்கிக் கொண்டு அசையாமல் ஓர் இடத்தில் கைகளைக் குவித்துக் கொண்டு
கவிழ்ந்து படுத்தவனாவான் என்று நேராக எழுதுகிறார் -சிறிய திருமடல் அனுபவம் இல்லாமல்

சங்க தமிழ் மாலை முப்பதும் -சங்கம் சங்கமாகக் குழாங்கள் கூடி அனுபவிக்கும் பிரபந்தம் என்றபடி
-குழாங்களாய் அடியீருடன் கூடி நின்று ஆடுமினோ -திருவாய் -2-3-11-
செங்கண் திரு முகத்துச் செல்வத் திருமாலின் திருவருள் பெருக்காலே தானே இந்த அனுபவம்

ஜீவக் ஸூ தாத பாதேஷூ நூதநே தார சங்க்ரஹே மத்ருபிச் சிந்த்யமாநாநாம் தேஹிநோ திவசா கதா -உத்தர ஸ்ரீ இராமாயண ஸ்லோஹம்
அப்பா பிழைத்து இருந்த காலம் -மிதிலையில் பிராட்டி கைப் பிடித்த காலம் மீண்டு வந்து அயோத்தியில் தாய்மார்களுடன் மகிழ்வாக
இருந்த காலம் அப்பப்பா -அந்த நல்ல நாட்கள் மீண்டு வாராவோ —
ஸ்மரசி ஸூதநு தஸ்மின் பர்வதே லஷ்மணேந பிரதி விஹித சபர்யா ஸூப்தயோஸ் தான்ய ஹானி ஸ்மரசி சரச நீராம்
தத்ர கோதாவரீம் வா ஸ்மரசி ச ததுபாந்தேஷூ ஆவயோ வரத்த நா நி –
கர்ப்பிணி பிராட்டி உடன் பெருமாள் பேசும் பேச்சுக்கள் -சித்ர கூடத்தில் இருப்பை நினைவு கூறி அருளுகிறார்

போத மணவாள மா முனிவன் ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள் -சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்பப்
போற்றித் தொழு நல்ல அந்தணர் வாழ இப் பூதலத்தே மாற்றற்ற செம் பொன் மணவாள மா முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புழி யல்லவோ தமிழ் ஆராணமே
கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் தோல் சீரை நல் நெஞ்சே ஓவாத ஊணாக உண்-பெரிய திருவந்தாதி

தம் பெரிய போதமுடன் –ஆச்சார்யா கடாஷ அதீனமான ஞானம் இல்லாமல் –இலக்கணப் பிழைகள் காண முடியாத படி
என்பதால் ஏதமில் பன்னீராயிரம் என்று சாதித்து அருளுகிறார் மா முனிகள்
வள வேழ் உலகு -ஈற்றடியில் எந்தாய் என்பான் நினைந்து நைந்தே என்பதை இவர் மட்டுமே –இனைந்து நைந்தே -என்கிறார்

எறும்புக்கு அருளிச் செயல்கள் -புற்பா முதலா புல் எரும்பாதி ஓன்று இன்றியே —நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போலே
—இருபாடி எரி கொள்ளியின் உல் எறும்பு போலே
இரும்புக்கு -இரும்பு போல் வலிய நெஞ்சம் –இரும்பு அனன்று உண்ட நீர் —
நாய்க்கு –நாய் கூலை வாலால்–மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமினீரே –கவ்வு நாயும் களுக்கும்
நரிக்கு -ஆளியைக் காண்பரியாய் அரி காண் நரியாய் –நரிப்படைக்கு ஒரு பாகுடம் போலே –வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே

தண்டேனுகரா மண்டூகம் தண் தாமரையுடன் பிறந்தே
வண்டே கானத்திடைப் பிறந்தும் வந்தே கமலமது உண்ணும்
அண்டே பழகி இருந்தாலும் அறியார் பொல்லார் நல்லோரைக்
கண்டே களிப்பர் உறவாடிக் கற்றோர் நல்லோர் பெற்றக்கால் –வினோத ரச மஞ்சரி

பெரியாழ்வார் திருமொழி தாய் பாசுர பதிகங்கள் இரண்டு -ஐய புழுதி உடம்பு அலைந்த –நல்லதோர் தாமரைப் பொய்கை
நம் ஆழ்வார் ஆடி ஆடி -2-4- தொடக்கி -கங்குலும் பகலும் -7-2- உடன் தாய் பாசுரம் தலைக் கட்டி அருளுகிறார் -7 பதிகங்கள்
திருமங்கை ஆழ்வார் -2-7- திவளும் வெண் மதி போல் -தொடங்கி-9 பத்தில் மூவரில் முன் முதல்வன் திருமால் இரும் சோலை பதிகதுடன் தலைக் கட்டுகிறார்
தலைவி பாசுரம் -2 பத்து அட்ட புயகரம் பதிகம் தொடங்கி 11 பத்து மன்னிலங்கு பாரத பதிகத்துடன் தலைக் கட்டுகிறார்
திருமங்கை ஆழ்வார் -தாய் பேச்சு பதிகங்கள் -8 தலை மகள் பதிகங்கள் -15-
தோழி பதிகம் இல்லை என்றாலும் தோழி உடன் பேசுவது போலே அவ்வன்னதவர் நிலைமை கண்டும் தோழி –
-கோழி கூவு என்னுமால் தோழி நான் ஏன் செய்கேன் -போன்றவை உண்டு

நாயகனாய் நின்ற நந்த கோபன் -உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால் நொந்திட மோதவும் கில்லேன்
-சர்வேஸ்வரனுக்கும் சர்வ ஸ்வாமி என்கிறார்கள்
இரு கரையும் அழிக்கும் நிர்ஹேதுக கிருபா பிரவாஹம் திருவாய்ப் பாடியிலே கண்டோம் இ றே-
அந்னவான் பவதிக்கு வஸூ தேவர் இலக்கு -அந்நாதோ பகவதிக்கு நந்தகோபர்
அன்னம் ப்ரஹ்மேதி வ்யஜா நாத் -அன்னமாகிய பர பிரமத்தை தவம் செய்து ஸுய யத்னத்தால் பெற்றாரே ஒழிய
புஜிக்க பெற வில்லையே -எல்லாம் நந்த கோபன் பெற்றானே
நாசௌ புருஷ காரேண ந சாபி அன்யேன ஹேது நா கேவலம் ஸ்வேச்சையா வஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன -ஸ்ரீ கீதை
கோசல கோகுல சராசரம் செய்யும் குணம் ஓன்று இன்றியே அற்புதம் எண்ணக் கண்டோம் –

ஷீரம் சர்க்கர ஏவ யாபிரப்ருதக்பூதா ப்ரபூதைர் குணை
ஆகௌமாரகம ஸ்வதந்த சக்தே கிருஷ்ணச்ய தார கேளைய -பாலும் சக்கரையும் போலே ஸ்ரீ கிருஷ்ணனும் ஸ்ரீ பலராமனும்
யத் விஸ்லேஷ லவோபி காலியபுவ கோலாஹலாயா பவத் –
தமையன் ஒரு நாள் பேர நிற்க தம்பி பாம்பின் வாயில் புகும்படி ஆயிற்றே
வளை வண்ண நன் மா மேனி தன்னம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவன் இவை செய்து அறியான் –
அண்ணற்கு அண்ணானோர் மகனைப் பெற்ற யசோதை நங்காய் -அண்ணல் கண்ணான் -சர்வ ஸ்வாமி என்று சொல்லும்
திருக்கண்கள் உடையவன் -அண்ணற்கு அன்னான் இவன் தீம்பிலே தகண் ஏறி அவன் தீம்பே அறியாதவன் என்றவாறு
பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவேர்கோர் கீழ்க் கன்றாய்

ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் -அஹிம்சா சமதா -ஸ்ரீ கீதை -10-5-
சமதா ஆத்மநி ஸூ ஹ்ருத் ஸூ விபஷே ஸூ ச சம மதித்வம் -ஸ்ரீ கீதா பாஷ்ய ஸ்ரீ ஸூ கதிகள்
சம்மதி ராதம ஸூ ஹ்ருத் விபஷ பஷே –இதி பகவத் பராசர வசனம் இஹ தத்தத் பதை ஸ்மாரிதம் -ஸ்ரீ தேசிகன்
தாத்பர்ய சந்த்ரிகை ஸ்ரீ ஸூ க்திகள் -நசலதி நிஜவர்ண தர்மதோ ய -சம்மதி ராதம ஸூ ஹ்ருத் விபஷ பஷே நஹரதி
நச ஹந்தி கிஞ்சி துச்சை சிதமநசம் தமவேஹி விஷ்ணு பக்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் 3-7-20-
தன்னைப் போலே நண்பர் பகைவர் இடம் இருக்கும் தன்மை என்றவாறு
குற்றம் செய்தவர்கள் பக்கல் பொறையும் கிருபையும் சிரிப்பும் உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும்

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண் பால் எனவும் இரங்காது அறையோ என நின்றதிரும் கருங்கடல் ஈங்கு இவள் தன
நிறையி வினியுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால் முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனேதிரு விருத்தம் -62-
கங்குலும் பகலும் -7-2- திருவாய்மொழிக்கு சங்க்ரஹணம்-முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை யாயிரத்து
இப்பத்தும் வல்லார் முகில் வண்ணம் வானத்து இமையவர் சூழ பேர் இன்ப வெள்ளத்தே இருப்பார்

தேஷாம் சத்த யுக்தாநாம் பஜனாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தியோகம் தம் யேன மாம் உபயாந்தி தி –
ப்ரீதி பூர்வகம் பஜதாம் -சங்கரர் பாஷ்யம் -நம் ஸ்வாமி ப்ரீதி பூர்வகம் ததாமி –பகவத் குணாதிசய பிரகாசனமே பரம பிரயோஜனம் தேசிகன்
நமஸ்காரம் ஒரு தடவை பிரதஷினம் பல தடவை -என்பதற்கு பல பிரமாணங்கள் உண்டே
அவன் கடாஷம் நிர்ஹேதுகம் -என் நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ்வதுவே-என் உணர்வினில் உள்ளே இருத்தினேன்
அதுவும் அவனது இன்னருளே -வெறிதே அருள் செய்வர் –அஜ்ஞ்ஞாத யாத்ருச்சிக ஆநு ஷங்கிக ப்ரா சாங்கிக சாமான்ய புத்தி மூல
ஸூகருத விசேஷங்களை வியாஜமாகக் கொண்டு விசேஷ கடாஷம் பண்ணி -தேசிகன் -மருவித் தொழும் மனமே தந்து –தீ மனம் கெடுத்து

இயம் கேவல லஷ்மீ சோபாயத்வ பிரத்யயாத்மிகா -ஸ்வ ஹேதுத்வத்யம் ருந்தே கிம் புநஸ் சஹ காரிணாம்–நியாய சித்தான்ஜனம்
பிரபத்திக்கே உபாயத்வம் இல்லாத பொது அதன் சஹாகாரிக்களுக்கு இல்ல என்று சொல்ல வேண்டுமோ என்றபடி
இசைவித்து உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே -சவீ காரம் தானும் அவனாலே வந்தது சிருஷ்டி அவதார முகத்தாலே பண்ணி அருளிய கிருஷி பலம்
நிதானம் தத்ராபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுண —தேசிகன் -வரத தவ கலு பிரசாதாத்ருதே சரணமித வசோபி மேநோதியாத் -கூரத் ஆழ்வான்
ஸ்வாமீ ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரத்யேன நிம்ப்ரம் ஸ்வ தத்த ஸ்வ தியா ஸ்வாரத்தம் ஸ்வ ஸ்மின் ந்யஸ்யதி மாம் ஸ்வயம்
-ஒன்பதின்கால் ஸ்வ சப்த பிரயோகம் ஈஸ்வரனுக்குத் தானே சேதன லாபம் புருஷார்த்தம் -ஆஸ்ரித சம்ரஷணம் ஸ்வ லாபம் மத்வா ப்ரவர்த்ததே –
-ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே -கதாஹைமை காந்திக நித்ய கிங்கரர் ப்ரஹர்ஷயிஷ்யாமி -ஆளவந்தார்
-தன்னுடைய அனுவ்ருத்தியால் ஈஸ்வரனுக்கு பிறக்கும் ஹர்ஷமே இ றே சேதனனுக்கு பிராப்யம்
அனாவ்ருத்தி ஸ்ரீ பாஷ்யத்தில் எம்பெருமானார் -அவதாரிகையில் யதி பரம புருஷாயத்தம்
முக்தைச்வர்யம் தர்ஹி தஸ்ய ஸ்வ தந்த்ரத்வேன தத் சங்கல்பாத் முக்தஸ்ய புநாவ்ருத்தி சம்பவா சங்கேத் யத் ராஹ -என்று அருளி
ந ச பரம புருஷஸ் சத்ய சங்கல்ப அத்யர்த்தபிரியம் ஜ்ஞாநினம் லப்த்வா கதாசிதா வர்தயிஷ்யதி -என்று சாதிக்கிறார்
ஜீவாத்மா வாகிற சொத்தோ சைதன்யம் ஆகிற கல்மஷத்தோடும் கூடி இருக்கையாலே சிறிது தலையாட்டவும்
வாலாட்டவும் பெறுகிறது -தன்னை நன்றாக உணரும் போதுதலை மடிந்து நிற்கிறது

ஸ்வ கத -ச்வீகாரம் –மார்க்கடகிசோர நியாயம் –நித்ய யுக்தஸ்ய யோகிநா —தஸ்யாஹம் ஸூ லபம் –பரகத ச்வீகாரம் -மார்ஜாரகி சோர நியாயம் –
தஸ்ய நித்ய யுக் தஸ்ய நித்ய யோகம் காங்ஷாமாணஸய யோகின -அஹம் ஸூ லப -அஹமேவ பிராப்ய -ந மத்பாவ ஐஸ்வர்யாதிக ஸூ பிராபச்ச -தத்வியோ கமசஹமாந அஹமேவ தவம் வருணே மத பிராப்த்ய அநு குணோபாசன விபாக -தத் விரோதி நிரசனம் அத்யர்த்தமத் ப்ரியத்வாதிகம் ச அஹமேவ ததாமீத்யர்த்த -யமேவேஷ வ்ருணுதே தேன லப்ய -இதி ஹி ஸ்ருயதே -வஹ்யதே ச தேஷாம் சத்த ய்க்தானாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தியோகம் தம் யேனமாம் உபயாந்திதே தேஷாமேவா நுகம்பார்த்த மஹா மஜ்ஞ்ஞா நஜம் தம நாசயாம் யாத்ம பாவஸ்தோ ஜ்ஞான தீபேன பாச்வதா இது -ஸ்வாமி ஸ்ரீ கீதா பாஷ்யம் ஸூக்திகள்
அவன் இவனைப் பெற நினைக்கும் போது பாதகமும் வில க்கு அன்று —உடைமையை உடையவன் சென்று கைக் கொள்ளுமா போலே ஸ்வாமி யான அவன் தானே வந்து அங்கீ கரிக்கக் கண்டிருக்க பரதந்த்ரனான இச் சேதனன் ஆனவன் தான் பலியாய் தன ச்வீகாரத்தாலே ஸ்வ தந்த்ரனான அவனைப் பெற நினைக்கும் அளவில் அவன் நினைவு கூடாதாகில் இப்படி விலஷணையாய் இருக்கிற பிரபத்தியும் தத் லாப சாதனம் ஆகாது என்றபடி –ஸ்வாமி யாய் ஸ்வ தந்த்ரனான அவன் ஸ்வமமாய் பர தந்த்ரனாய் இருக்கிற இருக்கிற இவனை ஸ்வ இச்சையால் பெற நினைக்கும் அளவில் பாதகமும் பிரதிபந்தகம் ஆக மாட்டாது என்கை-இவை இரண்டாலும் ஸ்வ கத ச்வீகார அனுபாயத்வமும் பரகத ச்வீகார உபாயத்வமும் காட்டப் பட்டது -மா முனிகள் ஸ்ரீ சூக்திகள்

சர்வ அபராதங்களுக்கும் பிராயச் சித்தமான பிரபத்தி தானும் அபராத கோடியிலேயாய் ஷாபணம் பண்ண வேண்டும்படி நில்லா நின்றது இ றே
நெடுநாள் அந்ய பரையாய்ப் போந்த பார்யை லஜ்ஜா பயங்கள் இன்றிக்கே பர்த்ரு சகாசத்திலே வந்து நின்று என்னை அங்கீ கரிக்க வேணும் என்று
அபேஷிக்குமா போலே இருப்பது ஓன்று இ றே இவன் பண்ணும் பிரபத்தி
கைங்கர்ய பிரபத்தியும் பண்ண வேணும் -சார்வ பௌவனை நீசப் பெண் ஆசைப் படுமா போலே ஐயோ என்ன ஆசைப் பட்டோம்
இது தகுமோ -என்று நெஞ்சாறல் பாடவும் வேணும்
புகழ்வெல்லாம் பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி -ஒப்பாகச் சொல்வது இழிவு என்பர் கடல் வண்ணா
கொண்டல் வண்ணா காயா வண்ணா என்னவும் அருளிச் செய்வர்
ஆவியுள் கலந்த ஹர்ஷம் உந்த அறிவு இழந்து கைம்மாறாக ஆத்மாவை மீளா அடிமையாகக் கொடுத்து பின்னையும்
தனது ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து -அனுதபிக்கவும் வேணும்
த்வய உச்சாரண அநுச்சாரணத்தாலே பிரபத்தி அனுஷ்டானம் பிறந்த பின்பு -பழுத்த ஆத்ம சமர்ப்பணமாகத் தலைக் கட்டும்
நெறி காட்டி நீக்குதியோ -பர தந்த்ரமான வஸ்துவை ஸ்வ தந்த்ர க்ருத்யமான உபாய அனுஷ்டானத்திலே மூட்டித் தனக்கு அசலாக்குகை
மதிராபிந்து மிஸ்ரமான சாத கும்பமய கும்பகத்த தீர்த்த சலிலம் போலே அஹங்கார மிஸ்ரமான உபாயான்தரம் -என்று பிள்ளான் பணிப்பாராம் –
தானே கர்த்தா தானே போக்தா என்னும் அஹங்காரம் -ஸ்வ யதன நிவ்ருத்தி பார தந்த்ர்ய பலம்
நயாச திலகத்தில் தேசிகன் இத்தை அருளிச் செய்கிறார் –ஆர்த்தேஷூ ஆசுபலா தத் அந்ய விஷயேப் யுச்சின்ன தேஹாந்திர
வஹ்ன்யாதே அந பேஷணாத் தநுப்ருதாம் சத்யாதிவத் வியாபி நீ ஸ்ரீ ரஜ்கேச்வர யாவதாத்ம நியத த்வத் பாரதந்த்ர்யோ சிதா
த்வவ்யேவ த்வத் பாராதீர பிஹித ஸ்வ உபாய பாவஸ்து மே –என்று அருளிச் செய்கிறார்

பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே –சர்வ சக்தி யுக்தன் -விசித்திர சக்தி உக்தன் -விலஷண சக்தி உக்தன் -அத்புத சக்தி உக்தன்
-ஆச்சர்ய சக்தி உக்தன் -அகடிதகட நா சக்தி உக்தன்
ஸ்ருதேச்து சப்த மூலத்வாத் —அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் — வ்யாப்ய நாராயண ஸ்தீத –அணோரணீயான்
சகல வஸ்து விலஷணஸ்ய சாஸ்த்ரைக சமதிகமஸ்ய அசிந்த்ய அப்ரமேய அத்புத சக்தி யுக்தஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண

ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும் -சமம் -அந்த கரண நியமனம் -தமம் பாஹ்ய கரண நியமனம் –
ஸ்ரீ கீதை 10-4/16-1.2- ஸ்வாமி மாற்றிச் சொல்லும் இடங்களும் உண்டு
சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான் பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஒன்றே அமையாதோ
தாரணியில் வாழ்வாருக்கு வான் ஏறப் போகும் வாழ்வு

யதீந்த்ரர் அபிமாநித்தது திரு நாராயணபுரம் -யதீந்திர பிரவணர் அபிமாநித்தது -இராஜ மன்னார் கோயில்
வண துவாராபதி மன்னன் –மணி வண்ணன் –வாசு தேவன் –மணியில் அணி நிற மாயன் -நான்கு அர்ச்சா ரூபங்கள் -அசாதாராண திரு நாமங்கள் -நம்மாழ்வார் சாத்தியவை -தீர்ப்பாரை யாமினி மாசறு சோதி -இரண்டு திருவாய் மொழி களும் நித்ய அனுசந்தானம் இங்கே —
மாறன் மடலும் வெறி விலக்கும் மா முனி தன் தேறல் கமலைத் திருத் துதியும்
ஊழி வரும் கோபால விம்சதியும்  வண் துவரைக் கோனான கோபாலனுக்கு ஆன கூற்று
தீர்ப்பாரை யாமினியில் மாசறு சோதிப் பதிகத்தில் சேர்ப்பன் தென் துவரைச் சீமானை ஒர்ப்பன் என்னச்
சொன்ன மணவாள மா முனியே தொல்லுலகில் இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்
நாம் யார் பெரிய திரு மண்டபமார் நம்பெருமாள் தாமாக எம்மைத் தனித்து அழைத்து நீ  மாறன்
செந்தமிழ் வேதத்தின் செம்பொருளை நாடோறும் வந்து உரையாய் என்று ஏவுவதே வாய்ந்து –

வணங்கும் துறைகள் பல பல வாக்கி –புற மதங்களை நிரசிக்கலாமோ -அமிர்தம் விஷம் இரண்டையும் அவன் தான் ஆக்கினான்
-ஆனந்த ரூபமாகை யாவது -ஜ்ஞானம் பிரகாசிக்கும் பொழுது அநு கூலமாய் இருக்கை-விஷ சஸ்த்ராதிகளைக் காட்டும் பொழுது
பிரதிகூலமாய் இருக்கைக்கு அடி தேஹாத்மா பிரமாதிகள் -ஈச்வராத்மகம் ஆகையாலே எல்லா பதார்த்தங்களுக்கும்
ஆனுகூல்யமே ஸ்வ பாவம் பிராதிகூல்யம் வந்தேறி

பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர் –
தவன் மௌலி கந்த ஸூ பகாம் உபஹ்ருத்ய மாலாம் லேபே மஹத்தர பத அநு குணம் பிரசாதம் –ஸ்ரீ கோதா ஸ்துதி
மஹத்தர பத -பெரியாழ்வார் திருவடி என்றபடி
யாம் ஔ திமித ஆயுஷ்மான் அன்வேஷசி மஹா வனே -என்றாரே பெரிய வுடையாரான ஜடாயு மகா ராஜரும்

ப்ரத்யாதி சந்தி பவ சஞ்சரணம் ப்ரஜாநாம் பக்த அநு கந்துரிஹா யஸ்ய கதாகதா நி -வேகா சேது ஸ்தோத்ரம் –
-பக்தனை பின் சென்ற யதோத்தகாரி சஞ்சாரம் அனுசந்திக்க நமது சம்சார சஞ்சாரம் தொலையுமே –
யஸ்ய பிரசாத கலயா பதிர -ஸ்ருணேதே பங்கு -பிரதாவதி ஜவேன ச வக்தி மூக-அந்த ப்ரபச்யதி ஸூ தம் லபதே ச வந்த்யா
தம் தேவமேவ வரதம் சரணம் கதோஸ்மி -ஆளவந்தார் சரணாகதி பண்ணி -ஆ முதல்வன் -தர்சன ஸ்தாபகர் ஆக்கி அருள
–தென் அத்தியூர் கழல் இணைக் கீழ் அன்பு பூண்டவர் அன்றோ
ஆவாரார் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் நாவாய் போலே -துளங்கி நின்று வழி திகைத்து அலமந்து நிற்கும்
தசையிலே காத்து அருளின மிதுனம் அன்றோ -யஜ்ஞ மூர்த்தி விருத்தாந்தத்தாலும் உண்டே

கைங்கர்யமே பரம புருஷார்த்தம் -நம்மாழ்வார் -முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன்
அகல்வதுவோ விதியினமே -என்று அருளி -ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும் நாம் –
என்று பிரார்த்தித்து உற்றேன் உகந்து பணி செய்து உனது பாதம் பெற்றேன் என்று நிகமிக்கிறார்
பெரியாழ்வார் -நியதமும் அத்தாணிச் சேவகமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல -என்று அருளி
உனக்கு பணி செய்து இருக்கும் தவமுடையேன்
ஆண்டாள் -குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது –உனக்கே நாம் ஆட்செய்வோம் –கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு
எனக்கு அருள் கண்டாய் –என்றும் பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட கொள்ளுமாகில் நீ  கூடிடு கூடலே -என்று அருளிச் செய்கிறார்
ஆளவந்தார் -கதா அஹம் ஐ காந்திக நித்ய கிங்கர பிரகர்ஷயிஷ்யாமி என்று அருளிச் செய்தார்
எம்பெருமானார் கத்யத்தில் நித்ய கிங்கரோ பவா நி என்று பிரார்த்தித்து நித்ய கிங்கரோ பவ என்று அரங்கனால் அருளப் பெற்றார்

வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு -ஆயர் குலத்தில் தோன்றும் அணி- மணி  -விளக்கு -ஆயர் பாடிக்கு ஒரு அணி விளக்கு-இவை விபவத்தில்
வேடார் திருவேங்கடம் மேய விளக்கே -முனியே திரு மூழிக் களத்து விளக்கே –இத்யாதிகள் அர்ச்சிராதி விளக்கு
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் –வேதாந்த விழுப் பொருளின் மேல் விளக்கு -பொதுவான விளக்கு –
முந்நீர் வாழ்ந்த சூட்டும் கோவை ஆழ என்கிற சாஷாத் க்ருத ஸ்வ பர வ்ருத்தாந்தர்க்கு –
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பான் அவன் கண்களாலே -ஸ்வ பர பிரகாசத்வங்கள் அவனாலே தான் என்றதாயிற்று
அந்த விளக்கை காண -ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் -உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி வைத்து அவனை நாடி
மானம் ப்ரதீபவமிவ காருணிகோ ததாதி பட்டர் -மானம் -பிரமாணம் –ஆதௌ வேதா பிரமாணம் -வேதமே முதல் விளக்கு
-அதில் இருந்து ஞான விளக்கு ஏற்றி நந்தா விளக்கைக் காண வேண்டும் –

பெரிய திருமொழி -4-2-வண் புருடோத்தம பதிகம் நிகமான பாசுரத்தில் -உலகில் எண்ணிலாத பேரின்பம் உற்று இமையவரோடும் கூடுவரே
-இச்சுவை தவிர யான் போய் யான் பெரும் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் -பரமபதத்தையும் த் ருணீ கரித்து
இருப்பவர்களுக்கு எண்ணில்லாத -எண்ணவும் முடியாத என்றும் அசங்க்யேதமான என்றும் இங்கேயே கிட்டும் இன்பம் என்றுமாம்

———————————————————————————

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ  பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-