Archive for the ‘பெரிய திரு அந்தாதி –’ Category

ஸ்ரீ பெரிய திருவந்தாதி -பாசுர அவதாரிகை வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள் அமுதம் —

May 29, 2023

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

நெஞ்சுக்கு ஒரு நல் வார்த்தை சொன்னால் போலே
அது இவரையும் கூடாதே முற்பட
என்னையும் கூட்டிக் கொண்டு போக வேணும் காண் -என்கிறார் –

ஆழ்வார் தம்முடைய திருவுள்ளத்தை நோக்கிப் பேசுகிறார்.
தமது நெஞ்சானது தம்மை விட்டுத் தனித்துப் போய் விட்டதாம் பகவத் விஷயாநுபவத்திற்கு;
அப்படி முற்பட்டுப் போன நெஞ்சைக் கூறி ‘என்னையுங் கூடக் கூட்டிக்கொள்’ என்கிறார்.

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப் புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-

————-

நாவீன் துடை கிளவி யுள் பொதிவோம் -என்று
வாஸ்யத்தை விளாக்கொலை கொள்ளக் கடவோம் என்ற இவர்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று
வேதங்கள் நின்ற நிலைக்கும் அவ் வருகே யானார்
மஹ்யம் நமோஸ்து கவயே -என்கிறார்

கவி சொல்லுகையாவது
விஷயத்துக்கு உள்ளதும் சொல்லி
விஷயத்துக்கு இல்லாததும் இட்டுச் சொல்லுகை இறே
உள்ளது ஒன்றும் சொல்லப் போகாத விஷயத்திலே கவி பாடப் புக்க நமக்கு நமஸ் காரம் என்னுமா போலே
முற்பட இவர் புகழ இழிவது என்
இப்பொழுது பழி என்று மீளுகிறது என் என்னில்
இரண்டும் வஸ்து வை லக்ஷண்யத்தாலே
நல்லது கண்டால் எனக்கு என்னக் கடவது
வை லக்ஷண்யத்தை அநுஸந்தியா -அவனுக்கு அதிசயத்தைப் பண்ண என்று இழிந்த தாம்
தம் சொல்லாலே நிறம் கெடும்படிப் பண்ணுகிறோம் என்று மீளுகிறார் –

நற்பூவைப் பூவின்ற வண்ணன் புகழை நயப்படைய நாவீன் தொகை கிளவியுள் பொதிவோம்”
என்று கீழ்ப்பாட்டில்,
எம்பெருமானைத் துதித்துக் கவி பாடுவதாகத் தொடங்கின ஆழ்வார்
“இப்போது நாம் எடுத்துக் கொண்ட காரியம் என்ன?” என்று சிறிது ஆராய்ந்து பார்த்தார்;

எம்பெருமானைப் புகழ்வது என்கிற காரியத்தையா நாம் எடுத்துக்கொண்டோம்;
ஹா ஹா!’ இப்படியும் நமக்கொரு மதிக்கேடு இருக்குமோ?
எம்பெருமானைப் புகழ்வது நம்முடைய காரியமாமோ?
வேதங்களே புகழத் தொடங்கி முடியாதென்று மீண்ட விஷயத்தை ‘நாமோ புகழக் கடவோம்!
ஒருவனைப் புகழ்வதென்றால், அவனிடத்துள்ள குணங்களை யனைத்தையும் ஒன்றுவிடாமற் சொல்லித் தீர்த்து,
மேலேயும் சில குணங்களை அதிகப்படியாக இட்டுச் செல்லுவதன்றோ புகழ்வதாவது;
எம்பெருமானிடத்து அது செய்ய ஆரால் ஆகும்?
சிற்றறிவாளரான நாம் என்ன சொல்ல வல்லோம்!;

கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து,
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே” (திருவாய்மொழி 3-1-7) என்னுமா போலே
அறிவிற் சிறந்த அரன் முதலானோர் புகழ்ந்தாலுங்கூட
அது பகவத் குணங்களுக்கு இகழ்ச்சியாய் தலைக் கட்டா நிற்க,
எமது ஊத்தை வாய் கொண்டு பேசுவது என்னாகும்!
“பகவானுடைய குணங்கள் இந்த அற்பன் பேசும்படியான அளவிலேயோ இருக்கின்றன?”
என்று பலரும் இழிவாக நினைக்க வன்றோ காரணமாகும் நாம் புகழ்வது- என்றெண்ணி
அந்த எண்ணத்தை வெளியிடா நின்று கொண்டு எம்பெருமானை நோக்கிச் சொல்லுகிறார் இதில்.

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் -இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீ வினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை —2-

——————–

இவை பிராந்தியால் அன்றிக்கே புகழ இழிந்து ஞானத்தாலே இறே
ஆனால் அடியிலே நமக்கு நிலம் அன்று -என்று மீள வேண்டாவோ என்ன
அசித் வ்யாவ்ருத்தியாலும்
அர்த்த அனுசந்தானம் பண்ண ஷமன் ஆக்கி வைக்கையாலும்
நன்று தீது என்று அறிவன்
அசித் சம்சர்க்கத்தாலும் பாரதந்தர்யத்தாலும் சாபலத்தாலும்
அனுஷ்டான ஷமன் அன்று

(அனுஷ்டான ஷமன் அன்று ஸ்துதியாமல் இருப்பத்தைச் செய்ய இயலாதவன் ஆனேன்
ஸ்வ தந்த்ரன் நீ பரதந்த்ரன் நான் அன்றோ
தேக யாத்திரை கர்மாதீனம் -ஆத்ம யாத்திரை கிருபாதீனம்
நல்லதோ கெட்டதோ எல்லாமே நீ செய்விக்கச் செய்கிறேன் என்கிறார் )

சீறல் நீ” என்று திருவுள்ளத்தில் இரக்கமுண்டாம்படி பிரார்த்திக்க ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்-,
“ஆழ்வீர்! என்னுடைய சீற்றம் கிடக்கட்டும்; நீர் என்ன தீர்மானம் செய்து கொண்டீர்? ‘புகழ்வது தகுதி தான்’ என்று கொண்டீரா?
அல்லது புகழத் தகாது என்றே கொண்டீரா? அதை நிஷ்கர்க்ஷித்துச் சொன்னீராகில்; பிறகு பார்ப்போம்” என்றான்;

அதற்கு உத்தரமாயிருக்கிறது இப்பாட்டு. இதில் சொல்லுகிறது யாதெனில்;
எம்பெருமானே! இது யுத்தம், இது அயுக்தம் என்கிற விஷயம் அடியேனுக்குத் தெரியாமை யில்லை;
அற்ப ஞானிகள் உன்னைப் புகழ்வது அயுக்தம். புகழாதிருப்பது யுக்தம்- என்பதை அடியேன் நன்று அறிவேன். அதில் ஸம்சயமில்லை;

ஆனால், அறிந்தபடியே அநுஷ்டிக்க என்னாலாகாது. நான் அறிந்திருக்கிறபடியே அநுஷ்டிக்க வேணுமானால்,
உன்னைப் புகழ்வதை விட்டுப் புகழாமையைப் பற்ற வேணுமிறே இந்த வீடு பற்றுக்கள் என்னால் செய்யப் போகாது.
(உன்னைப் புகழாதிருக்க என்னால் முடியாது என்றபடி.)

இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் -இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்க ஒண்ணாது இறையவனே
என்னால் செயற்பாலது என் —3-

—————-

நான் அணையில் (அணைந்து உன்னைப் பாடினால் )அங்குத்தைக்கு அவத் யாவஹம் –
அகலில் அங்குத்தைக்கு நிறம் உண்டாம் என்று
நீர் சொன்னதுக்கு ஸ்தானம் அறிந்திலர்
(ஸ்தானம் -நிலையாய் தியாக ஸ்வீ காரத்தினுடைய மர்மம் அறிந்திலீர் என்றபடி )
பிரயோஜகத்தில் அழகு இது –
(ப்ரயோஜகம் -மேல் எழுப் பார்த்தால் -அகலுகை நல்லது போல் தோற்றும் அத்தனை )
நீர் சொன்னபடியே மாறி நிற்க வேணும்
நீர் அகன்றீ ராகில்-
அதி க்ருத்தாதிகாரம் அவ்விஷயம் என்று நம்மை நம்புவார் இல்லை –
நீர் பற்றினீராகில்-
இவர் பற்றின விஷயம் எல்லார்க்கும் பற்றலாம் என்று நம்மைப் பற்றுகையாலே நமக்கு நிறமுண்டாம் -என்று
அருளிச் செய்ய ஹ்ருஷ்டராகிறார் –

முதற் பாட்டில், ஆழ்வார் எம்பெருமானைப் புகழத் தொடங்கி,
இரண்டாம் பாட்டில், அவனை நாமோ புகழ்வதென்று பின் வாங்கி,
மூன்றாம் பாட்டில்- புகழாதிருக்க முடியாமையைச் சொல்லி முடித்தார்.

அவனைப் புகழ்வது நமக்குத் தகாதென்று நாம் அயோக்யதையால் பின் வாங்க நினைத்தாலுங்கூட
ஏதேனுமொருபடியாலே
அவனது புகழ்களைப் பற்றி நம் வாயால் சில பாசுரங்கள் பேசியே தீர வேண்டியதாகிறதே!
ஹா ஹா! நம்முடைய பாக்கியமே பாக்கியம்;நம்மை விட பாக்கியசாலிகள் வேறு யாமுளர்?
எம்பெருமானுடைய சில திருக் குணங்கள் நம் வாயிலும் புகுந்து புறப்படும்படியான நல்ல காலம் வாய்த்ததே! என்று மகிழ்கிறார் இதில்.

என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் –என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று -4-

————

அயோக்யன் என்று அகன்று
அசந்நேவ ஸ பவதி -என்று முடியப் புக்க என்னை
சத்தை யுண்டாக்கினாய் -என்கிறார் –

(இல்லை என்று அறிந்தவன் இல்லை யாகிறான்
உளன் என்று அறிந்தவன் உளன் ஆகிறான்
விலகி இருந்தால் ஸ்வரூப நாசம் ஆகி இருக்கும்
சத்தையைக் கொடுத்து நிறுத்தி வைத்தாய் )

எம்பெருமானை நினைப்பதற்கும் துதிப்பதற்கும் நான் யோக்யதை யற்றவன் என்று
பின் வாங்கப் பார்த்த அடியேனை அந்த எண்ணம் நீங்கி ப்ரவர்த்திக்கும்படி செய்தருளிற்றே;
இப்படி மஹோபகாரம் செய்கிற மஹாநுபாவர் தேவரீர் தவிர வேறு யாருளரெனக்கு?
தாயும் தகப்பனும் ஆசாரியனுமாகிற உபகாரர்களை யாவரும் அடியேனுக்கு தேவரீரே யாயிற்று! என்று
எம்பெருமானை நோக்கி உருக்கமாகப் பேசுகிறார்.

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையர் ஆவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-5–

————

நம் பக்கலிலே ருசியைப் பிறப்பித்து
அயோக்யன் என்று அகன்ற தம்மைச் சேர விட்டோமாகில்
மேலுள்ள கார்யம் தாமே ப்ரவர்த்திக்கிறார் என்று
ஈஸ்வரன் இருந்தானாகக் கொண்டு
வெறுத்துச் சொல்கிறார்

(கீதா ஸங்க்ரஹ பாசுரம் இது
எங்கள் கையிலிலேயே எங்களைக் காட்டிக் கொடுத்தால் அதோ கதி
தன்னால் வரும் நன்மை விலைப் பால் போல் தீமையோபாதி விலக்காய் இருக்கும்
அவனால் வரும் நன்மையே முலைப் பால் ஆகும்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் –களை கண் மற்று இலேன் )

‘நம்மை விட்டுப் பின் வாங்கப் பார்த்த இவ் வாழ்வாரை நாம் உபாயமாகப் பொருந்த விட்டுக் கொண்டோம்;
இனி இவர் நம்மை நினைப்பதும் துதிப்பதும் செய்து கொண்டிருக்கப் போகிறார்; அப்படியே யிருக்கட்டும்;
அல்லும் பகலும் அழுது கதறிக் கொண்டிருக்கட்டும்;
நம்மைக் கிட்டி அநுபவிக்க விரும்பினாராகில் கருமம் ஞானம் முதலிய
ஸாதநங்களை அனுட்டித்து மெதுவாக வந்து சேரட்டும்’ என்ற எம்பெருமான் திருவுள்ளம் பற்றி யிருப்பதாகத் தெரிந்துகொண்ட
ஆழ்வார் அப் பெருமானையே நோக்கிக் கேள்வி கேட்கிறார்; –

பெருமானே! உனக்கு ஸ்வாதந்திரியம் என்கிற ஒரு குணமும்-, நிர்ஹேதுக க்ருபை என்கிற ஒரு குணமும் உண்டு;
எந்த குணத்தைச் செலுத்தி நீ காரியம் செய்ய நினைத்தாலும் செய்யக் கூடும்.
சிலரிடத்தில் ஸ்வாதந்திரியத்தைச் செலுத்திக் கைவிடப் பார்ப்பாய்;
சிலரிடத்தில் நிர்ஹேதுக கருணையைச் செலுத்தி வலு கட்டாயமாகக் கைக்கொள்ளப் பார்ப்பாய்.
இப்படி எத்தனையோ செய்துமிருக்கிறாய்.

இப்போது அடியேன் விஷயத்தில் செய்யத் திரு வுள்ளம் பற்றியிருப்பது எது?
ஸ்வாதந்திரியத்தைக் காட்டிக் கைவிடப் பார்க்கிறாயோ?
அல்லது, திருவருளைக் காட்டி அழகிய திருமேனியை ஸேவை ஸாதிப்பித்து விஷயீகரிக்கப் பார்க்கிறயோ?
எப்படி நீ செய்தாலும் அப்படிக்கு என்னைப் போன்ற ஸம்ஸாரிகள் உடன்படி வேண்டியவர்களே யன்றி உன்னை நியமிக்க வல்லார் ஆருமில்லை;
ஆனாலும் ‘இன்னது செய்ய நினைத்திருக்கிறேன்’ என்பதைச் சோதி வாய் திறந்து சொல்லி விட்டால் நெஞ்சுக்கு ஆறுதலாயிருக்கும்- என்கிறார்.

நெறி காட்டி நீக்குதியோ நின்பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என்படோம் யாம் —6-

———-

அயோக்யன் என்று அகன்ற தம்மைச் சேர விட்டான் என்று நின்றது கீழ்
சேர விட்டாலும் பர்வத பரம அணுக்களுடைய சேர்த்தி போலே இறே –
(இதுக்கு பெற்ற தாய் (5)என்ற பாட்டோடே சங்கதி
மானஸ அனுபவ மாத்ரமாயே இருந்தது -பரம அணு போல்
நானோ உன்னை அணைத்து பாஹ்ய சம்ஸ்லேஷம் -பர்வதம் போல் இது -அங்கு தானே கிட்டும் )

கருமா முறிமேனி காட்டுதியோ?” என்றாரே கீழ்ப் பாட்டில்.
ஆழ்வீர்! இதோ என்னுடைய கரு மா முறிமேனியைப் பாரும்’ என்று எம்பெருமான் சொல்லப் போகிறானென்றும்
திருமேனி ஸேவை கிடைக்கப்போகிறதென்றும் ஆவல் கொண்டிருந்தார்;
நெஞ்சுக்கு மாத்திரம் ஸேவை ஸாதித்தபடியே யொழிய, கட் கண்ணால் காணும்படியாகவும்
கைகளாலே அணைத்துக் களிக்கும்படியாகவும் ஸேவை ஸாதிக்கப் பெறவில்லை.
அப்படிப் பெறாததனாலே தமக்குண்டான கஷ்டத்தைக் கூறுகின்றாரிதில்.

யாமே அரு வினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -பூ மேய
செம் மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த
அம்மா நின் பாதத் தருகு –7-

———

நீர் கைக்கு எட்டாதே இருக்கச் செய்தே கை புகுந்தால் போலே இரா நின்றன –
இதுக்கு அடி சொல்லீர் என்கிறார்

எம்பெருமான் நெஞ்சுக்கு மாத்திரம் விஷயமானானே யன்றி,
கண்களால் காணவாவது கைகளாவணைக்கலாவது
விஷயமாகவில்லை என்றார் கீழ்ப் பாட்டில்.
அப்படி கண்ணால் காணப் பெறாதிருக்கச் செய்தேயும்,
கண்ணால் கண்ட விஷயங்களிற்போல அன்பு அதிகரித்து வருகின்றதே, இதற்கு என்ன காரணம்?
சொல்லாய் என்று அப்பெருமானையே கேட்கிறார்.

அருகும் சுவடும் தெரி யுணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் -பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு –8-

———-

பல் பன்னிரண்டும் காட்டினாலும் பிரயோஜனம் இல்லை என்கிறது –
(என்று என்று -என்கிற மீமிசையால் பல் பன்னிரண்டு -என்கிறது )

எம்பெருமானுடைய திருமேனியை ஸேவிக்கப் பெறவேணுமென்று ஆசை கொண்ட தம்முடைய மநோரதப்படியே
அவன் ஸேவை தந்தருளாமையால் அவனிடத்தில் வீணாக அன்பு வஹிப்பதில் என்ன பயன்? என்று நினைத்த ஆழ்வார்
‘இனி நாம் எம்பெருமானை நோக்கிப் பஞ்சைப் பாட்டுகள் பாடுவது அநாவச்யகம்; “எனக்கு நீயே கதி, எனக்கு நீயே கதி” என்று
பலகாலும் சொல்லுவதில் என்ன ப்ரயோஜனம்? எவ்வளவு கதறினாலும் அந்தப் பெரியவர் நம்மை லக்ஷியம் பண்ணுகிறதில்லை;
ஆகையால், இனி நாம் அப்பெருமானை நோக்கி “நுமக்கு அடியோம்” என்று சொல்வதை நிறுத்தி விட வேண்டியது- எனக் கருதி
அக் கருத்தை இப்பாட்டில் முன்னடிகளில் வெளியிடுகிறார்.

அதற்கு மேல், இந்த உறுதியுடனே நாம் இருந்து விட முடியுமா’ என்று ஆலோசித்துப் பார்த்தார்;
க்ஷண காலமும் இப்படி யிருந்திட முடியாதென்று துணிந்து, நெஞ்சை நோக்கி
‘நெஞ்சே! அப்பெருமாள் நம்மை அநுக்ரஹித்தாலும் அநுக்ரஹிக்கட்டும், நிக்ரஹித்தாலும் நிக்ரஹிக்கட்டும்:
திருவுள்ளமானபடி செய்திடட்டும். நீ மாத்திரம் சிந்தனையை அவர் விஷயத்திலேயே செலுத்திக்கிட’ என்கிறார் பின்னடிகளில்.

நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென் மாலார்
தமக்கு அவர் தாம் சார்வரியரானால் -எமக்கினி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே
யாதானும் சிந்தித்து இரு –9-

———-

இதுக்கு மூன்று படி அருளிச் செய்வர் (நம்பிள்ளை காலக்ஷேபத்தில் )
விலக்ஷண அதிகாரம் காண்
மதிப்பர்க்கே கிடைக்கும் அத்தனை அல்லது எளியர்க்குக் கிடையாது காண்
தன்னையே பிரயோஜனம் என்று இருப்பார்க்குக் கிடையாது காண்
உபாயாந்தர பரிக்ரஹணம் பண்ணினார்க்கும் அத்தனை காண்
தன்னையே உபாயமாகப் பற்றினார்க்குக் கிடையாது காண் என்றுமாம்

(இரண்டு அயோக்ய அனுசந்தானம் –
மூன்றாவது வெறுப்பு )

எம்பெருமானைச் சிந்திப்பதற்கும் துதிப்பதற்கும் அர்ஹரல்லாத நாம் நிறக் கேடாக அவனைச் சிந்தித்தல் செய்து
‘அவன் நமக்குத் திருமேனியை ஸேவை ஸாதிப்பிக்க வில்லையே!’ என்று கை யொழிந்து கிடப்பதே நல்லதன்றோ என்று
திருவுள்ளம் பற்றின ஆழ்வார், பழைய அயோக்யதா அநு ஸந்தாநமே பண்ணுகிறார் இதில்.

இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோ
டொரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திரு மாற்கு
யாமார் வணக்கமார் ஏ பாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்–10-

—————-

அயோக்யன் என்று அகன்ற நம்மை வென்று சேர விட்டுக் கொள்ள
என்னை வென்று சேர விட்ட உனக்கு
ராவணனை வென்றதுவும் ஒரு பணியோ -என்கிறார் –

அநந்ய ப்ரயோஜநரான நம்மை உபேக்ஷிக்கின்ற எம்பெருமானுடைய சிந்தனை இனி நமக்கு ஏதுக்காக?
அவனைக் குறித்துப் பாசுரஞ் சொல்வது தான் இனி நமக்கு எதுக்கு? இனி நாம் வாயை மூடிக் கொண்டு கிடப்போம்- என்றிருக்கப் பார்த்தார் ஆழ்வார்;
எம்பெருமான் அவரை அப்படியே இருக்க வொட்டவில்லை; பாசுரம் பேசவே தூண்டி விட்டான்; இதென்ன அற்புதம்!
நாம் வாயை மூடிக் கிடப்போமென்று பார்த்தாலும் பர வசமாகவே வாய் பேசத் தொடங்குகின்றதே!
நமது முயற்சி இல்லாதிருக்கச் செய்தேயும் வாய் பேச எழும்புகிறதென்றால் இது யாருடைய செயலாக இருக்க வேணுமென்று ஆராய்ந்தார்;

”***- தோ விநா த்ருணாக்ரமபி ***- (அவ் வெம்பெருமானை யொழியத் துரும்பும் எழுந்தாடாது”) என்றிருப்பதனாலே,
அவ்வெம்பெருமானே இனி செய்விக்கிறானாக வேண்டும்;
அவன்றான் மறைந்து உறைந்திருந்து நம் வாயைக் கிளப்புகிறான் போலும் என்று நிச்சயித்து
‘இனி நாம் இவன் விஷயமாக வாய் திறப்பதில்லை’ யென்று உறுதியாக நாம் கொண்டிருந்த எண்ணத்தைப் போக்கி
வாயைக் கிளப்புகின்ற இவனுடைய ஸாமர்த்தியத்தை நாம் என்ன சொல்வோம்! என வியப்புற்று,
பண்டு இராவணமென்பானோரரக்கன் ‘நான் யார்க்கும் தலை சாய்ப்பதில்லை; நிமிர்ந்த தலையைக் குனியவே மாட்டேன்’ என்று
கொண்டு இறுமாப்புடனிருந்த நிலைமையைத் தொலைத்து அவனைப் பங்கப்படுத்தினான் இப் பெருமான் என்று
எல்லாரும் மிக்க புகழ்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே. அந்தோ! இஃதொரு புகழ்ச்சியோ இவனுக்கு?
இராவணனது உறுதியைக் காட்டிலும் வலிதான எனது உறுதியைச் சிதைத்து என்னை வாய் திறக்கப் பண்ணா நின்ற
இப்பெருமானுக்கு அது ஒரு அருந்தொழிலோ? என்று ஈடுபட்டு எம்பெருமானையே நோக்கி இதனைப் பேசுகிறார்.

நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை
வாழா வகை வலிதல் நின் வலியே -ஆழாத
பாரு நீ வானு நீ காலு நீ தீயு நீ
நீரும் நீயாய் நின்ற நீ—11-

————

கிட்டினவாறே போன நாளைக்குக் கரைகிறார்

(கீழ் எல்லாம் நெஞ்சைக் கொண்டாடி
இதில் அத்தையே நிந்திக்கிறார்
இரண்டுக்கும் அவனது வை லக்ஷண்யமே ஹேது
பேற்றுக்கும் இழவுக்கும் நெஞ்சே காரணம் அன்றோ
வாசனை -மனப் பதிவுகள் தானே காரணம்
விருத்த விபூதிகளைச் சேர்த்தால் போல் அடியேனையும் சேர்த்துக் கொண்டாரே
பெற்ற பேற்றுக்கு மகிழாமல் இழந்த பழுதாய் போன பண்டை நாளுக்கும்
அயோக்கியன் என்று அகன்ற கிலேசமும் )

கீழ் பத்தாம் பாட்டில் “திருமாற்கு யாமார் வணக்கமார் ஏ பாவம் நன் நெஞ்சே!,
நாமா மிகவுடையோம் நாழ்” என்று சொல்லி எம்பெருமானிடத்தில் நின்றும் பின் வாங்கப் பார்த்ததை நினைத்துக் கொண்டு.
அப்படியும் நமக்கொரு எண்ணம் தோற்றிற்றே! என்ன கஷ்ட காலம்!;
ஏகஸ்மிந்நப்யதி க்ராந்தே முஹூர்த்தே த்யாந வர்ஜிதே- தஸ்யுபிர் முஷிதேநேவ யுக்த மாக்ரந்திலும் க்ருணாம்”
(எம்பெருமானுடைய சிந்தனை யில்லாமல் ஒரு க்ஷண காலம் கழிந்து போனாலும், ஸர்வஸ்வத்தையும் கள்வர் கவர்ந்தால்
எப்படி முட்டிக்கொண்டழுவர்களோ அப்படி ‘பழுதே பல பகலும் போயின’ என்றும்
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாயொழிந்தன கழிந்த வந்நாள்கள்’ என்றுங் கதறியழவேண்டும்) என்று சொல்லிக் கிடக்கிறதே;
‘எம்பெருமானைச் சிந்தியாமலே யிருந்து விடுவோம்’ என்கிற ஒரு கெட்ட எண்ணம் நமக்கு உண்டாயிற்றே!
அந்த எண்ணமே நமக்கு நிலைத்திருக்குமாகில் துக்க ஸாகரத்திலே யன்றோ நாம் மூழ்கிக் கிடக்க வேண்டியதாகும்;
எம்பெருமான் றானே அருள் செய்து அந்த எண்ணத்தை ஒழிக்கவே இப்போது தேறினோம்;
அவன் அருள் செய்யா விடில் ஆழ்துயரில் அழுந்தியே போயிருப்போமே” என்றிப்படியெல்லாம் பலவாறாக வருத்தமுற்று,
‘இந்த கெட்ட எண்ணம் நமக்கு உண்டானதற்கு எது காரணம்?’ என்று பார்த்தார்;

மந ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:” என்று எல்லாவற்றுக்கும் நெஞ்சு தான் காரணமென்று சாஸ்த்ரம் சொல்லுகையாலே
நமக்கு இப்படிப்பட்ட கெட்ட எண்ணம் தோன்றினது நெஞ்சில் குற்றமேயாம் என்று நிச்சயித்து.
அந்த நெஞ்சோடே வாது செய்யத் தொடங்கினார்-

நீயன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய் என்று
அதாவது-
திருமாற்கு யாமார் வணக்கமா! ஏபாவம்!” என்று சொல்லி அகன்று துன்பக் கடலில் நான் விழுந்தேனாம்படி
என்னைக் கொலை செய்யப் பார்த்து பாவி நீயன்றோ நெஞ்சே! என்றார்.

யத் மனஸா த்யாயதி தத் வாசா வததி-என்றும் –
மன பூர்வோ வாக்குத்தர-என்றும்
நீ இல்லாமல் வாய் சொல்லுமா-

நீராக நன்னெஞ்சே சொன்னீரே -என்ன
முந்துற்ற நெஞ்சே -என்றும் சொன்னீரே-
இயற்றுவாய் எம்மோடு நீ கூடி
 என்று நியமித்து-
இப்பொழுது வாய் பேசினால் தடுக்காமல் இருந்தது என்ன என்று கேட்பது என்ன-

பகவத் அனுபவ குணத்துக்கு உசாத் துணையாம்படி-
இப்படி வாத பிரதிவாதங்கள் நியமித்தேனே ஒழிய-வீண் பேச்சுக்கள் ஒழியட்டும் என்கிறார்

நெஞ்சு விநேதயமாக நின்று  ஸ்வாமி என்ன நியமனம் என்ன-
உபதேசம் தரினும் நீ என்றும் காழ்த்துக் கைக் கொள்ளாய் என்ன-ஷமிக்க வேணும்
அடியேன் கர்த்தவ்யம் ஸ்பஷ்டமாக அருளிச் செய்ய வேணும் என்ன

கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு –
அயோக்யா நுசந்தானம் பண்ணாமல்-
எம்பெருமான் நம்மைத் தேடித் திரிவானாக-நாம் விமுகராய் பின் வாங்கலாமா-
அவன் திருவடிகளை வாழ்த்துவதே பிராப்யம் -காண் -என்கிறார்

நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
போ என்று சொல்லி என் போ நெஞ்சே -நீ என்றும்
காழ்ந்து உபதேசம் தரினும் கைக் கொள்ளாய் கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12-

—————-

அகல ஒட்டாயாகில்
கிட்டி அனுபவிக்கும் படி பண்ணு என்கிறார் –
(உன் மேனி சாயை காட்டு -என்கிறார் -)

கீழ்ப் பாட்டில் “கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு” என்று
திருவுள்ளத்திற்கு உபதேசித்தபடியே எம்பெருமானை வாழ்த்தத் தொடங்கினார்;
வாழ்த்துவதென்றால் விஷயத்தைக் கண்ணாலே நன்று கண்டு வாழ்த்த வேணுமே;
அப்படிக்கு அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹ ஸேவை கிடைக்கவில்லை ஆழ்வார்க்கு;
அது கிடைக்காமல் என்ன வென்று வாழ்த்துகிறதென்று தடுமாறு, எம்பெருமானை நோக்கி
‘இறைவனே! உன் வடிவழகை அடியேனுடைய கண்களுக்குக் காட்டி யருள வேணும்’ என்று பிரார்த்திக்கின்றார் இதில்.

வழக்கொடு மாறு கொள் அன்று அடியார் வேண்ட
இழக்கவும் காண்டும் இறைவ -இழப்புண்டே
எம்மாட் கொண்டாகிலும் யான் வேண்ட என் கண்கள்
தம்மாற் காட்டுன் மேனிச்சாய்–13-

————

காட்ட வேணும் என்றார் கீழ்
ஆரை என் கண்களாலே காண்கிறது என்று அகன்றும்
திரியட்டும் தம்முடைய அயோக்யதையைச் சொல்லுகிறார்
பூதனை கிட்டினவோ பாதி யிறே நான் கிட்டுகை -என்கிறார் –

(திவ்யம் ததாமி தே சஷுஸ்ஸூ பஸ்யதே -அவன் தந்த கண்ணைக் கொண்டு அன்றோ
அர்ஜுனன் விஸ்வரூபம் தரிசித்தான்
இந்திரியங்கள் பாம்பு -ஜீவன் அறிவுடையவன் இவற்றில் கை நீட்டுவது போலும்
பூதனையும் தன்னை முடிக்கவே கண்ணன் பெருமை அறியாமல் முயன்றது போல்
அவளோ கண்ணன் இடம் ஈடுபட்டு அழிய
நாமோ விஷயாந்தரங்களில் ஈடுபட்டு ஸ்வரூப நாசம் அடைகிறோம் )

கீழ்ப் பாட்டில் “காட்டு உன் மேனிச் சாய்” என்று வடிவழகைக் காட்டுமாறு பிரார்த்தித்தார்;
அப்படியே இவர்க்கு வடிவழகைச் சிறிது காட்டுவோமென்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றினான்;
அஃதறிந்த ஆழ்வார் ‘அயோக்யனாகிய நான் பரம் பொருளை அநுபவிக்கப் பார்ப்பது தகுமோ?’ என்று பழையபடியே நைச்சியம் சிந்தித்து
‘நெஞ்சே!’ பகவத் விஷயத்தை நீ அநுபவிக்கப் பார்ப்பது அதனைக் கெடுக்கிறபடி யன்றோ;
பண்டு பூதனை யென்பவள் அவ்வெம்பெருமானைக் கிட்டி அவனைக் கெடுக்கப் பார்த்ததை ஒக்குமன்றோ உனது நினைவும்;
அந்தப் பூதனையொடு உனக்கும் உறவுறை உண்டு போலும்’ என்கிறார்.
ஐந்தாம் பாட்டிலும் பூதனை விருத்தாந்தம் உண்டே–

சாயல் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
தேம் பூண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்
பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி–14-

———–

(நெஞ்சே )
உன்னுடைய பூர்வ வ்ருத்தத்தை நினைத்தால் அகல வேணும்
அவனுடைய பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்தால் கிட்டலாம் என்கிறது –
(நம்மை நினைக்க ஆபத்து -அவனை நினைக்க சம்பத்து அன்றோ )

கீழ்ப் பாட்டுக்கு எதிர்த் தடையாயிருக்கும் இப்பாட்டு; ‘
ஹேயரான நாம் பகவானை அநுபவிக்கப் பார்ப்பது பொல்லாங்கு’ என்றார் கீழ்ப்பாட்டில்;
இப்பாட்டிலோ வென்னில்;
எம்பெருமானுடைய குணங்களைப் பேசுவதனால் நமது பாவங்களெல்லாம் தொலையுமாகையால் அது செய்யலாம்;
அவனுடைய பெருமைக்கு யாதொரு குறையும் விளைய மாட்டாது என்கிறார்.

பார்த்தோர் எதிரிதா நெஞ்சே படு துயரம்
பேர்த்து ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை –ஆர்த்தோதம்
தம் மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய
செம் மேனிக் கண் வளர்வார் சீர்–15-

——-

அவஸர ப்ரதீஷனாய் இருக்கிற அளவேயோ
இத்தைப் பெறுகைக்கு அர்த்தியாய் அன்றோ நிற்கிறது என்கிறார் –
(நீல நிறத்தோடு நெடும் தகை வந்து அங்கு ஓர் ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான் -கம்பர்
அதிதி கஸ்யபர் –இந்திரனுக்காகவே பெற்றார்கள் -விஜய முஹூர்த்தம் திருவோண நக்ஷத்ரம்
இந்திரனுக்காக -ராஜ்யம் மீட்டுக் கொடுக்கவே பயோ விரதம் பண்ணி பெற்றாள் )

சீர் ஓதப் பீடழிவாம் பேச்சில்லை” என்றாரே கீழ்ப் பாட்டில்;
அப்படியே அவனுடைய திருக் குணங்களை ஓதத் தொடங்குகிறார்;
ஸ்ரீவாமநாவதார குணத்திலீடுபட்டு அருளிச் செய்யும் பாசுரம் இது.

சீர் ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை என்றார் கீழில்-இப்பொழுது சீர் பாடத் தொடங்குகிறார் –
ஸ்ரீ வாமனாவதாரத்தில் குணத்தில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
யாசகனாக வர வேண்டுமோ-வாமனன் -குள்ள வடிவு கொண்டு வர வேண்டுமோ-
குள்ளன் என்றே திருநாமம் கொள்ள வேண்டுமோ-ஸ்ரீ ராமன் ஸ்ரீ கிருஷ்ணன் போலே
சீராகப் பிறந்து சிறப்பாக வளர்ந்தவன் அன்றோ நீ

சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா -மார்பாரப்
புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –16-

———–

அவன் கிட்டப் புக்கால் இவர்கள் பண்ணும் வை முக்யம்
அவன் நெஞ்சில் படாது என்கிறது

(அநந்ய ப்ரயோஜனர் -அவன் முகம் காட்டாவிடிலும் வாய் திறவார்
நித்ய முக்தர்கள் எத்தனை பேர் கிட்டினார்கள் என்று கேட்க வாய் திறவாமல்
அவன் அழகையே பார்த்து சதா பஸ்யந்தி பார்த்து இருப்பர்
அடியார்களை வேண்டும் என்று அவதரித்து கிடைக்கா விட்டாலும் உகந்தே இருப்பார்
இப்படி மூன்று நிர்வாகங்கள் )

தாம் அபேஷித்த படியே அடியார்களாக அனைவரும் ஆகி விட்டால்
லீலா விபூதி ஆள் அற்று போகுமே-இத்தை நோக்குவோம் என்று உகந்து-

சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தாம் வாய் திறவாதார் -சூழ்ந்து எங்கும்
வாள் வரைகள் போலரக்கன் வன் தலைகள் தாமிடிய
தாள் வரை வில்லேந்தினார் தாம்–17-

————-

உகந்தும் உகவாதும் ஸம்ஸாரிகள் பண்ணும் பரிபவத்தைக் கண்டு
தன் ரக்ஷணத்திலே நெகிழ நில்லான் என்கிறது

(அன்போடு கட்டினாலும் வெறுப்புடன்-த்வேஷத்தால் கட்டினாலும்
என்னையே தானே கட்டினார்கள் என்று உகக்குமவன்
சிசுபாலன் என்னையே தானே வைதான் என்று உகந்தால் போல்
உடையவன் உடைமையை விட மாட்டானே )

ஸம்ஸாரிகள் அலக்ஷியம் பண்ணினாலும் எம்பெருமான் திருவுள்ளம் வெறுக்க மாட்டான் என்றது கீழ்ப் பாட்டில்;
அவ்வளவேயன்று;
ஸம்ஸாரிகள் எம்பெருமானுக்கு பலவகையான துன்பங்களை உண்டு பண்ணினாலும்
அப்போதும் அவன் தன் காரியத்தைத் தான் விடுவதில்லை யென்கிற மஹா குணத்தைப் பேசுகிறாரிதில்.

தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளக
பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் -சோம்பாது இப்
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
தொல்லுருவை யார் அறிவார் சொல்லு–18–

————–

கீழ் பருவம் நிறம்புவதற்கு முன்பு செய்தபடி சொல்லிற்று
வளர்ந்த பின்பு செய்த படி சொல்லுகிறது
(60 நக்ஷத்ரம் மேல் தான் கீதோபதேசம் )

பஞ்ச பாண்டவர்கள் விஷயத்தில் கண்ணபிரான் பக்ஷபாதியாயிருந்து செய்தருளின் செயல்களை
ஆலோசித்துப் பார்த்தால், அவன் அடியவர்களுக்கு எளியவன் என்பது நன்கு வெளியாகும்.
அந்த பஞ்சபாண்டவர்களைப் போல நாமும் அப்பெருமான் மீது அன்பு வைத்து அவனை ஸேவிக்க வேணுமென்று மெய்யே ஆசைப்பட்டால்
மெய்யர்க்கே மெய்யனாகும்” அவன் ஸேவை ஸாதித்தே தீருவன்; அவனை ஸேவிப்பதற்கு இதுவே உபாயம்.
இப்படிப்பட்ட உபாயத்தைத் தெரிந்து கொள்ளாமல் நெஞ்சே நீ ஏன் வீணாகக் கவலைப் படுகிறாய்?
இப்போதாவது நான் சொல்வதைக் குறிக்கொள்; என்கிறார்.

சொல்லில் குறை யில்லை சூதறியா நெஞ்சமே
எல்லிப் பகல் என்னாது எப்போதும் –தொல்லைக் கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
காத்தானைக் காண்டு நீ காண் –19-

———–

நான் -காண் -என்று சொன்னால் தன்னை அறிந்து நாண வேண்டாவோ என்கிறார்
சர்வ விஷயமாக அவன் தீண்டுகையாலே இதுவும் லஜ்ஜியாமல் தீண்டிற்று என்றபடி

(வள வேழ் உலகு படி விலக வேண்டாமோ நெஞ்சுக்கு லஜ்ஜை இல்லையே -என்றும்
அவனே மேல் விழுந்து நம்மைப் பற்றி திருவடிகளை நம் தலையில் வைக்க வந்த போது
நீயோ சென்று தீண்டுவது என்று ஸ்வகத ஸ்வீகாரம் உண்டோ என்றுமாம்
தன்னை -என்று
தாழ்ந்து இருக்கும் தன்னை என்றும்
பர கத ஸ்வீ காரம் பண்ணும் அவனை என்றுமாம் )

ஸ்வத ஸ்வீகாரமென்றும் பரகத ஸ்வீகாரமென்றும் சாஸ்த்ரங்களில் இரண்டு வகையான பற்றுதல்கள் சொல்லப் படும்.
எம்பெருமானை நாம் சென்று பற்றுகிற பற்று ஸ்வத ஸ்வீகார மெனப்படும்.
அவன் தானே வந்து தம்மை ஸ்வீகரித்தருள்வது பரகத ஸ்வீகாரமெனப்படும்
இவ்விரண்டுள், எம்பெருமான் தானே நம்மை வந்து ஸ்வீகரிக்கையாகிய பரதக ஸ்வீகாரமே சிறந்த தென்பது ஸந்ஸம்ப்ரநாய ஸித்தாந்தம்.
அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம்; அவத்யகரம்; அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகம்” என்றார். பிள்ளை யுலகாசிரியரும்,

கீழ்ப் பாட்டில் ‘அவனை நாம் காண நினைத்தோமாகில் காணலாம்’ என்றருளிச் செய்த ஆழ்வார்;
‘அப்பெருமானை நாமாகக் காண நினைப்பது தகுதியன்றே, அவன் தானே வந்து நம்மை ஸ்வீகரிக்கும்படி
பார்த்திருக்கை யன்றோ ஸ்வரூப ப்ராப்தம்’ என்று தெளிந்து அந்தத் தெளிவை இப் பாட்டால் வெளியிடுகிறார்.

காணப் புகில் அறிவு கைக் கொண்ட நன்னெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில் -மாணி
யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
திருவாகம் தீண்டிற்றுச் சென்று–20-

—————

ஓர் இடத்தில் போகாதபடி நிஸ் சேஷமாக க்ரஹிக்கப் பார்த்தால்
அவகாசம் பெற்று அன்றோ க்ரஹிப்பது -என்கிறது
(இடுக்குண்ட என்றதைப் பற்ற அவதாரிகை அருளிச் செய்கிறார்
என் நெஞ்சிலே அகப்படுகையாலே புறம்பே போகத் திருவடிகளுக்கு அவகாசம் இல்லாமையால்
சம்சாரிகள் ஓர் இடத்தில் போகாதபடி நிஸ் சேஷமாக திருவடிகளை உள்ளே க்ரஹிக்கிறோம்
என்றாலும் இனிப் போகாது என்றபடி -)

(பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
இதுவும் பெரிய திருவந்தாதி பெயர் வரும்படி அருளிச் செய்த பாசுரம்
ஓங்கி உலகம் அளந்த திரிவிக்ரமன் திருவடியை நெஞ்சிலே அடக்கிக் கொண்டேனே என்கிறார் )

எம்பெருமானுடைய-உலகளந்த திருவடி-தானாகவே ஆழ்வார் திரு உள்ளத்திலே
வந்து சேர்ந்தன -என்று அருளிச் செய்கிறார்-
எதற்காக என்றால்-அங்கு வெந்நரகில் சென்று சேராமல் காப்பதற்காக –

ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப-ஒருகாலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து-
எண் மதியும் கடந்து அண்டமீது போகி-இரு விசும்பினூடு போய் எழுந்து
மேலைத் தண் மதியும் கதிரவனும் தவிர வோடித் தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை –
சிறியேனுடைச் சிந்தைக்குள்-எல்லா உலகும் அளந்த திருவடிகள் அடங்க போதுமான இடம் அன்றாகிலும்-
நெருக்குப் பட்டாலும் ஆழ்வார் திரு உள்ளத்துக்குள் இருந்திட வேண்டும் என்கிற சங்கல்பம் கொண்டு-வந்து நிற்கிறான் –
என்னுடைய உஜ்ஜீவன அர்த்தமாகவே இவ்வளவும் செய்து அருளினான் –

யஸ் த்வயா சஹ ச ச்வர்க்கோ நிர்யோ யஸ் த்வயா வினா-கூடி இருக்கை ஸ்வர்க்கம்
அவனை விட்டு பிரிந்து இருந்தால் நரகம் –
திருவடிகளை என்  நெஞ்சினுள் அமைத்தான்-என்னவுமாம்

சென்று அங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட -அன்று அங்குப்
பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய
காருருவன் தான் நிமிர்த்த கால்–21-

———-

நம்முடைய பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள் கால் பொதும் படி-
(வெடிக்கும் படி -முள்ளுத் தைக்கையுமாம் )
தடுமாறிக் கூப்பிட்டுத் திரியும் அத்தனை இறே இன நாள் என்கிறார்

(மாலார் தானே குடி புகுந்தார் -பர கத ஸ்வீ காரம்
நாம் அடைய முற்பட்டால் வலிய வினைகளை போக்கியே அடைய வேண்டும்
அவர் நம்மை அடைய வந்ததுமே இவை தன்னடையே போகுமே )

எம்பெருமானுடைய திருவடிகள் தமது திருவுள்ளத்தில் வந்து சேர்ந்தனவாகக் கீழ்ப்பாட்டில் அருளிச் செய்தார்.
அவயவியான வ்யக்தியை விட்டு அவயவமான திருவடிகள் தனியே வந்து சேரமாட்டாவாகையால், எம்பெருமானே தமது திருவுள்ளத்தில்
வந்து சேர்ந்தமையைக் கூறினபடி யாய்த்து.
அதை இப்பாட்டில் “மாலார் குடி புகுந்தார் என் மனத்தே” என்று வ்யத்தமாக அருளிச் செய்து,
இன்று வரையில் என்னுடைய நெஞ்சினுள் துக்கங்களும் பாவங்களும் நித்ய வாஸம் பண்ணிக் கொண்டு செங்கோல் செலுத்திக் கிடந்தன;
இப்போது ,இவற்றுக்கு இங்கு இடம் கிடையாமையாலே ‘எங்கே போய்க் குடியிருக்கலா’மென்று
அவை அலைந்து திரிந்து வருந்துகின்றன என்று அருளிச் செய்கிறார்.

காலே பொதத் திரிந்து கத்துவராம் இன நாள்
மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -மேலால்
தருக்கும் இடம் பாட்டினொடும் வல் வினையார் தாம் வீற்று
இருக்குமிடம் காணாது இளைத்து –22-

—————

இதில் வியதிரேகத்தில் அருளிச் செய்து
அடுத்த பாட்டில் அவன் ரக்ஷிக்காமல் விடமாட்டான் என்று
அந்வய முகத்தால் அருளிச் செய்து த்ருடீ கரிக்கிறார் )

(பற்றினாலும் பற்றா விட்டாலும் அவன் ரக்ஷகன்
அவர் ரஷிக்கா விட்டாலும் நீ பற்றுதலை விடாய்
அவனைப் பற்றினால் இளைக்க மாட்டோம்
உலக விஷயங்களைப் பற்றினால் இளைப்போமே
அவனைப் பற்றாமல் இருந்தால் இளைப்போமே
உலக விஷயத்தால் பற்றாமல் இருந்தால் இளைக்க மாட்டோம்
மாதா நாராயணா பிதா நாராயணா -ஸ்வாபாவிக பந்து அந்தோ
தானே தாயும் தந்தையும் ஆவான் –
சேலேய் கண்ணியரும் –மேலாத் தாய் தந்தையரும் –மற்றும் யாவரும் அவரே
ரக்ஷிக்கா விட்டாலும் தந்தை தந்தை தானே
இத் தந்தையோ ரக்ஷிக்காமல் போக மாட்டான் )

எம்பெருமான் சில ஸமயங்களில் தனது பொருளைப் பிரகாசப்படுத்துவான்;
சில ஸமயங்களில் உதாஸீநனைப்போலே உபேக்ஷையாயிருந்திடுவன்.
அவன் எப்படி யிருந்தாலும் நம்முடைய அத்யவஸாயம் மாத்திரம் மாறக் கூடாது;
அவன் நம்மை ரக்ஷிக்கும் போதோடு ரக்ஷியாத போதோடு வாசியற அவனையே நாம் ஸகல வித பந்துவுமாகக் கருதி
விஸ்வஸித்திருக்க வேணும்- என்கிற சாஸ்த்ரார்த்தத்தைத் திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிற முகத்தாலே
அஸ்மதாதிகளுக்குத் தெரிவிக்கிறார் இதில்.

இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன்
இளைக்க நமன் தமர்கள் பற்றி -இளைப்பெய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்
தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான் –23-

—————

அந்வய
வ்யதிரேகங்கள்
இரண்டாலும் அவனே ரக்ஷகன் என்கிறது
இளைக்கில் என்றது வ்யதிரேகம்
மீண்டு அமைக்க -என்று அந்வயம்

தாய் தந்தை யெவ்வுயிர்க்குத் தான்” என்றார் கீழ்ப்பாட்டில்.
அப்படி சொல்லிவிடலாமோ? மற்றும் பல தேவதைகளும் ரக்ஷகராயிருக்கலாமேயென்று நெஞ்சு நினைக்க,
அதைக் கண்டித்து, எம்பெருமானை ரக்ஷகன் என்பதை நன்கு நிலை நாட்டிப் பேசுகிறாரிதில்.

தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஓன்று இல்லாதான்
தானே பிறர்கட்கும் தற்தோற்றல் -தானே
இளைக்கில் பார் கீழ் மேலாம் மீண்டு அமைப்பான் ஆனால்
அளக்கிற்பார் பாரின் மேலார்–24-

————

பூமியில் உள்ளாரை எல்லாம் நம்மாலே திருத்தப் போமோ
நாம் முன்னம் பகவத் விஷயத்திலே அவகாஹிக்கப் பெற்றோம் இறே -என்று ஹ்ருஷ்டராகிறார்
வழி பறிக்கும் இடத்தே தப்பிப் போனவன் கிழிச் சீரையை அவிழ்த்துப் பார்த்து
இது தப்பப் பெற்றோமே -என்று உகப்பாரைப் போலே –

கீழ்ப்பாட்டில் விரித்துரைத்தபடி எம்பெருமானே ஸர்வ ரக்ஷகனாயிருக்கவும்
இதனைப் பலர் தெரிந்து கொள்ளாமல் புறந்தொழுகின்றபடியைக் கண்ட ஆழ்வார்,
இவ் வுண்மைப் பொருளைப் பலர்க்கும் உபதேசித்துத் திருத்துவோம் என்று முயன்றார்;
கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே” (திருமாலை 11) என்றபடி ஜாயமாந கடாக்ஷமில்லாதார் பலருளராகையால்
அவர்கள் திருந்தி வரக் கண்டிலர்;
சொன்னால் விரோதமிது ஆகிலுஞ் சொல்லுவன் கேண்மினோ” (திருவாய்மொழி 3-9-1) என்று நாம் கெஞ்சிக் கெஞ்சி
உபதேசித்த விடத்திலும் பாழும் ஸம்ஸாரிகள் திருந்தாவிடில் நாம் என் செய்வோம்? யானைக்குக் கோமணங்கட்ட யாரால் முடியும்?
அளவில்லாமல் பரந்து கிடக்கிற இவ்வுலகத்திலுள்ளா ரெல்லாரையும் திருத்துவதென்றால் இது நம்மாலாகக்கூடிய காரியமோ?
நம்மாலானது நாம் நன்மை சொல்லலாம்; ஆனவளவு சொல்லிப் பார்த்தோம்;
பாக்கியமுள்ளவர்கள் திருந்துவார்கள்; கர்ப துர்ப்பாக்யசாலிகள் இழப்பர்கள்;
யார் எப்படி வேணுமானாலும் செய்யட்டும் என்று முன்னடிகளில்,
ஸம்ஸாரிகள் மேல் வெறுப்புத் தோற்ற அருளிச் செய்கிறார்.

இந்த இருள் தருமாஞாலத்திலே இவர்களைப் போல் தான் கெட்டுப் போகாமல்
எம்பெருமானை யடி பணிந்து வாழப் பெற்றேனென்று தம்முடைய நிலைமைக்குத் தாம் உகக்கிறார் பின்னடிகளில்
வழிப் போக்கர்களின் கைப் பொருள்களை யெல்லாம் கொள்ளை கொள்ளுங்கள்வர் நிறைந்த காட்டிலே மற்றெல்லாரும் பறி கொடுத்து நிற்க,
ஒன்றும் பறி கொடாமல் தப்பிப்போன வொருவன் “தெய்வாவாதீனமாய் நாம் தப்பப் பெற்றோமே!” என்று உகப்பது போல,
ஆழ்வாரும், எல்லாரையும் மதி கெடுக்கின்ற இவ்விருள் தருமாஞாலத்திலே
முந்துற முன்னம் நாம் தப்பிப் பிழைக்கப் பெற்றோமே’ என்று உகக்கிறாராய்ந்து.

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத் தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் —25-

———

மாற்றினேன் என்று கர்த்ருத்வம் தோற்றச் சொன்னார்
அந்த கர்த்ருத்வமாவது
அவன் மேல் விழ –
என்னுடைய விலக்காமையே -என்கிறார் –

(கர்த்தா சாஸ்திரார்த்வாத் -ஸாஸ்த்ரம் கர்த்தாவுக்கு தானே உபதேசிக்க வேண்டும் –
நீ கர்த்தா இல்லை கீதையில் உபதேசம்
இதில் கர்த்தா என்றாலே தடுக்காமல் இருந்ததே என்கிறார்
பரத்வ சவுந்தர்ய ஸுலப்யம் மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் -காருணிகர் பகவான்
எளிமை சுருக்கம் தெளிவு மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் பெரியவாச்சான் பிள்ளை பரம காருணீகர் )

கீழ்ப் பாட்டில் “யான் வன் துன்பத்தை மாற்றினேன்” என்று துன்பங்களைத் தாம் போக்கிக் கொண்டதாக அருளிச் செய்தார்;
ஆராய்ந்து பார்த்தவாறே, “யான் வன் துன்பத்தை மாற்றினேன்” என்று சொன்னது அவ்வளவு பொருத்தமான தல்ல வென்றும்
தமக்குக் கர்த்ருத்வம் தோன்றாமல் எம்பெருமானுடைய திருவருளுக்கே கர்த்ருத்வம் தோன்றும்படி
ஸ்வரூபாநுரூபமாகப் பாசுரத்தைச் சிறிது மாறுபடுத்திச் சொல்ல வேணுமென்றும் திருவுள்ளமுண்டாகி,
கீழ்ப்பாட்டின் பின்னடிகளிற் கூறிய அர்த்தத்தையே ப்ரக்ரியா பேதத்தாலும் சப்த பேதத்தாலும் அருளிச் செய்கிறார்.

யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26-

————

இசைந்து ஒழிந்தோம் -என்கிற இத்தாலே –
தம் தலையிலே குறை யற்றது
அருள் என்னும் தண்டால் -என்கையாலே
பெறுவதும் அவன் பிரஸாதத்தாலே என்னும் இடம் சொல்லிற்று
இனி அவர்க்கு அநுபவத்திலே இறே அந்வயம்
ஆகையாலே அநுபவிக்கிறார்

(முன்பு இருந்த குறை -இசையாமல் இருந்தது
நெஞ்சு இசைந்து ஒழிந்த பின்பு
அருள் என்னும் தண்டாலே பிரதிபந்தகங்கள் போன பின்பு
நானும் வேண்டாம் நீயும் வேண்டா -தன்னடையே போகும் அன்றோ
ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி பின்பு அனுபவம் தன்னடையே வரும் அன்றோ )

கீழ்ப்பாட்டில் “யானுமென் னெஞ்சு மிசைந்தொழிந்தோம்” என்று ஆழ்வார் பேசின பாசுரத்தைத்
திருச் செவி சாத்தின எம்பெருமான் “இவ் விபூதியிலே இப்படிப்பட்ட வார்த்தை சொல்லுவாருமுண்டாவதே!;
த்வம் மே என்றால் அஹம் மே என்கிற இந் நிலத்திலே “யானுமென்னஞ்சுமிசைந்தொழிந்தோம்” என்று
அழகாக ஒரு பாசுரம் செவிப்படுவது அற்புதமே!” என்று கொண்டு பரமாநந்தப்பட்டான்!
அதனை ஞானக் கண்ணாலே கண்டறிந்த ஆழ்வார், எம்பெருமானே! இப்போது உனது திருவுள்ளத்தில் ஓடுகிற ஆநந்தம் பண்டு
உலகளந்த காலத்து உண்டான ஆநந்தத்தோடு ஒக்குமோ? அன்றி அவ் வானந்தத்தினும் மேற்பட்டதோ? என வினவுகின்றார் போலும்.

அடியால் படி கடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27-

————

திரு உலகு அளந்து அருளின வடிவை அநுஸந்திக்கையாலே அவனைக் காண ஆசைப் பட்டு
அது கிடையாமையாலே வெறுத்தவர்
அவன் பக்கல் குறை யுண்டோ
நம்முடைய குறை இறே என்று திருப்தராகிறார்

(திருப்தி சொல்லுகையாலே வெறுப்பு அர்த்தாத் வந்தது
நெஞ்சு என்னும் உள் கண்ணாலே உணர்ந்தால் இன்றும் காணலாம்
அது இல்லாமையாலே காணப் போகாது
ஆகையாலே அவன் பக்கல் குறை யுண்டோ
நம்மது அன்றோ குறை என்று திருப்தராகிறார் -என்றபடி )

(பர பக்தி பர ஞானம் பர பக்தி -ஞானம் தர்சனம் பிராப்தி -அறிவு காண்கை அடைகை
உள் கண்ணால் -தர்சன ஸாமானாத்கார சாஷாத் காரம்
பரம பக்தி வந்தால் மோக்ஷம்
சூழ் விசும்பு பர ஞானம்
முனியே நான் முகனே-பரம பக்தி
இன்னும் வர வில்லை
அடுத்த பாசுரத்தில் பர பக்தி வந்தமையை அருளிச் செய்கிறார் )

கீழ்ப்பாட்டில் உலகளந்த வரலாற்றைச் சிறிது ப்ரஸ்தாவம் செய்யவே.
ஓங்கி யுலகளந்த உத்தமனுடைய அந்த விலக்ஷணமான திருவுருவத்தை ஸேவிக்கப் பெறவேணு மென்று ஆழ்வார்க்கு ஆசை கிளர்ந்தது.
கிளர்ந்தாலும் பரம பக்தி தலையெடுத்தாலன்றி அவன் ஸேவை ஸாதிக்க மாட்டானாகையால், அந்தப் பரமபக்தி தலையெடுக்கும்போது
விகஸிக்கக் கூடியதான நெஞ்சென்னு முட்கண்ணுக்கு விஷயமாகக் கடவதான பரம்பொருள் நமது புறக்கண்ணாகிய
மாம்ஸ சக்ஷுஸ்ஸுக்கு இப்போது எப்படி விஷயமாகுமென்று தம்மில் தாமே ஸமாதானப்படுகிறார் போலும்.

பரம பக்தி தலை எடுத்தால் அன்றி-கீழே பிரஸ்துதமான அந்த விலஷணமான -திருமேனியை-சேவிக்க பெறாதே-
தம்மில் தாமே சமாதானப் படுத்திக் கொள்கிறார்
ந மாம்ஸ சஷூர் அபி வீஷதே தம் -என்றும்
ந சஷூஷா பஸ்யதி கச்ச நைனம் -என்றும் சொல்லுகிறபடியே-புறக் கண்ணால் காண்கைக்கு என்ன ப்ரசக்தி –

கமலக் கண்ணன் என் கண்ணில் உள்ளான்-என் கண்ணனை நான் கண்டேனே –
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்றும் –
மானஸ சாஷாத்காரமே அருளிச் செய்கிறார்-

கமலக் கண் என்று தொடங்கி கண்ணுள் நின்று இறுதி கண்டேன் என்ற பத்தும்
உட் கண்ணாலேயே
 -ஆச்சார்ய ஹிருதயம்-
அகக் கண் விகசிக்கப் பெற்றவர்கள் புறக் கண்ணாலும் காணப் பெறுவார் என்பர் சிலர்-
அங்கன் அன்றி-அவன் பரிஹ்ரஹித்து கொள்ளும்
திவ்ய மங்கள விக்ரஹம் மாத்ரம்  பரம பக்தர்களுக்கு புலப்படுமே அன்றி-
திவ்யாத்ம ஸ்வரூபம் புறக் கண்ணுக்கு புலப்படாது என்பர் பெரியோர்-அகக் கண் கொண்டு திவ்யாத்மா ஸ்வரூபத்தை
சாஷாத் கரிக்கப் பெற்றோம் ஆகில்-புறக்கண் கொண்டு திவ்ய மங்கள விக்ரஹம் சேவிக்கப் பெறுவோம் என்பதே கருத்து –

அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் -என்றேனும்
கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால் காணும் உணர்ந்து –28-

———-

எல்லார்க்கும் இவ் வவஸ்தை பிறக்கை அரிது
எனக்கு இவ் வவஸ்தை பிறந்தது என்கிறார் –
எனக்கு எளியன் என்கையாலே எனக்கு இவ் வவஸ்தை என்கிறது –
எளியர் ஸ்நேஹிகள் –
(இதில் பரபக்தி-அவஸ்தை -தசை – வந்தமையை ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் )

இன்றே நாம் காணதிருப்பதுவும்” என்று கீழ்ப்பாட்டில் ஆழ்வார் பேசின பேச்சு
எம்பெருமானது திருச் செவியில் விழுந்தவாறே “ஆழ்வாருடைய திரு வாயினாலே இப்படி சொல்லும்படி நாம் அருமைப் பட்டிருக்கலாமோ?
‘நான் காணாதிருப்பதுவும்’ என்கிற வார்த்தை சொல்ல வேண்டியவர்கள் *
உண்டியே உடையே உகந்தோடும் ஸம்ஸாரிகளே யொழிய,
*உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையுமெல்லாங் கண்ணன் என்றிருக்கிற ஆழ்வார் இவ் வார்த்தை சொல்லும்படி ஆகலாமோ?
ஆழ்வார்க்கு நாம் எளிமைப்பட்டு நம்மை அவர்க்குக் காட்டிக் கொடுக்க வேண்டாவோ” என்று திருவுள்ளங் கொண்ட எம்பெருமான்
தன்னுடைய ஸௌலப்ய குணத்தை ஆழ்வார் நெஞ்சிலே பிரகாசப்படுத்த, அதனை அநுபவித்துப் பேசுகிறாரிதில்.

உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே
இணரும் துழாய் அலங்கல் எந்தை -உணரத்
தனக்கு எளியர் எவ் வளவர் அவ் வளவர் ஆனால்
எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு –29-

————-

அவன் அருமையும் பெருமையும் கிடக்க கிடீர்
நம்மை நலிந்து போந்த பகவத் பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்களுக்கு
நம்முடைய பக்கல் இருப்பிடம் இல்லை என்கிறார் –

கீழ்ப்பாட்டில் “எனக்கெளிய னெம்பெருமானிங்கு” என்று எம்பெருமானுடைய ஸௌல்ப்ய குணத்தை அநுஸநதித்தார்;
அந்த குணாநுபவம் வர வர அதிகரித்துத் திருவுள்ளத்தில் தாங்க முடியாதபடி விஞ்சிற்று; விஞ்சவே,
அந்த ஆநந்தத்தினால் பாவங்களைக் குறித்துப் பேசுகின்றார். ஓ பாவங்களே! பகவத் குணாநுபவத்திற்கே என் நெஞ்சில் இடம் போரவில்லை;
அதற்கே இன்னும் இடம் கடன் வாங்க வேண்டியிருக்கிறது; அப்படியிருக்கும் போது உங்களுக்கு இங்கே இடம் ஏது?;
ஒரு மூலையில் சுருங்கிக் கொண்டு கிடக்கிறோமென்று நீங்கள் சொல்லக் கூடும்;
அப்படி வருத்தப்பட்டுக் கொண்டு இங்கு இருக்க வேண்டா; விசாலமாகக் கிடப்பதற்குரிய வேறிடந் தேடி ஓடிப்போங்கள் என்கிறார்.

இங்கு இல்லை பண்டு போல் வீற்று இருத்தல் என்னுடைய
செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் -அங்கே
மடி யடக்கி நிற்பதனில் வல் வினையார் தாம் ஈண்டு
அடி எடுப்பதன்றோ அழகு–30-

———-

ஸர்வேஸ்வரனைக் கொண்டே விரோதியையும் போக்கி
அங்குத்தைக்குக் கைங்கர்யம் பண்ணும்படியும் ஆனோம் என்கிறார் –

(சென்றால் குடையாம் இத்யாதி –நிழலும் அடி தாறுமானாலே கைங்கர்யம் தானே )

கீழ்ப்பாடடில்
வல்வினையார் தாமீண்டடி யெடுப்பதன்றோ அழகு” என்று பாவங்களை யெல்லாம் துரத்தித் தள்ளுபடியானார்.
“நெடுநாளாகப் பாவங்களின் கீழே அமுக்குண்டிருந்த உமக்கு இன்று இப்படிப்பட்ட சக்தி எங்ஙனே உண்டாயிற்று?’ என்று யாராவது கேட்கக் கூடுமே;
அவர்களுக்கு ஸமாதாநமாம்படி இப் பாட்டு அருளிச் செய்கிறார்.

வல்வினைகளைத் துரத்தித் தள்ளுவதற்கு அழகான ஒரு உபாயமறிந்தோம்;
அஃது என்னென்னில்;
எம்பெருமானுக்குத் திருவடி நிழல் போலவும் திருவடி ரேகை போலவும் விட்டு நீங்காது அத்தாணிச் சேவகமானோம்.
ஆகவே, காரியம் கை கூடிற்று என்கிறார்.
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரிம் -என்றபடி-
திருப்பாற் கடலிலே இருந்து எழுந்து அருளி-
ஸ்ரீ கிருஷ்ணனாய் திருவவதரித்து-குடக்கூத்தாடி-அந்த விடாய் தீர மீண்டும் அங்கே போய் சயனித்து அருளி-
இளைப்பாறுகின்ற பெருமானுக்கு நிழலும் அடிதாறும் ஆனோம்

அழகும் அறிவோமாய் வல் வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடி தாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடங்கடலை மேயார் தமக்கு–31-(வல் வினையும் தீர்ப்பான் -பாட பேதம் )

———-

தாம் அடிமை செய்ய நிச்சயிக்க
நெஞ்சு ப்ரக்ருதி சம்பந்தத்தை உணர்ந்து பிற்காலியா நின்றது என்கிறார் –

(முந்துற்ற நெஞ்சே ஆரம்பம்
இங்கு விலகுவதால் குத்தலாக
நெஞ்சு மனம் போன படி -நெஞ்சுக்கும் மனமா
ஆழ்வார் நெஞ்சு இப்பேர் பட்டவனுக்கு நெருங்கவோ
ஆகவே பகவத் கைங்கர்யத்தில் இழிய மாட்டேன்
ஆழ்வாருக்கு இது தானே தீ வினை
அவனோ தாமோதனார் -மேல் விழுந்து -உயர்ந்த அபிப்ராயத்தால் -ஆர் -சப்த பிரயோகம்
நெஞ்சினார் -விலகுவதால் வெறுப்பில் ஆர் இங்கு )

கீழ்ப்பாட்டில் “நிழலுமடிதாறுமானோம்” என்று தாம் எம்பெருமானோடு ஐக்கியப் பட்டமையைப் பேசினாரே;
உடனே இவருடைய நெஞ்சானது பழையபடியே நைச்சியம் பாவித்துப் பின் வாங்கத் தொடங்கிற்று. அந்த நிலைமையைக் கண்டு ஆழ்வார்;
‘அந்தோ! என் செய்வேன் நெஞ்ச அநுகூலித்து வரும் போது எம்பெருமான் அருமைப் படுகிறான்,
எம்பெருமான் எளியனாம் போது நெஞ்சு பின் வாங்குகிறது; இந்த இழவுக்கு என்ன செய்வேன்?’ என்று அலமருகின்றார்.
பாயை விரித்து விட்டுக் கணவனை அழைத்து வரப்போனாளாம் ஒரு நாயகி; கணவனை அழைத்து வருவதற்குள்ளே பாய் சுருட்டிக் கொள்ளுமாம்;
மறுபடியும் பாயை விரிக்கப் பார்ப்பாளாம்; அந்த க்ஷணந்தன்னிலே நாயகன் ஓடிப் போவானாம்.
பாயை விரிப்பதற்கும் கணவனை யழைத்து வருவதற்குமே அவளுடைய போது சரிப்போகுமாம்.
அப்படியே ஆழ்வார்க்கு நெஞ்சை இணக்கிக் கொள்வதற்கும் எம்பெருமானை இழுத்துப் பிடிக்க நினைப்பதற்குமே போது சரிப் போகிறது போலும்.
இவர்க்கு இப்படியே அடிக்கடி சிரமம் உண்டாவது பற்றி அந்த வருத்தம் தோன்ற
யான் செய்வதில்விட்த்திங்கியாது” என்று தீந ஸ்வரப் பாசுரம் பேசுகிறபடி காண்மின்.

தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கென்று
தாம் செய்யும் தீ வினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
யாம் செய்வது இவ் விடத்து இங்கி யாது–32-

———

அறிவுடைத்தாகில் அவனைப் பற்ற வேண்டாவோ என்கிறது –

நைச்சியம் கொண்டாடி அகலுகிற நெஞ்சுக்கு நன்மை சொல்லுகிறது போலேயிருக்கிறது இப்பாட்டு.
நெஞ்சு என்றும் ஆத்மா என்றும் பர்யாயம் போலோ கொள்ளுங்கள்.
ஜ்ஞாநாநந்த மனஸ்த்வாத்மா” என்று ஞானமும் ஆந்தமும் ஆத்மாவுக்கு ஸ்வரூபமாகச் சொல்லப்பட்டுள்ளது.
அதைப் பிடித்துக்கொண்டு அருளிச் செய்கிற பாசுரம் இது.
இந்த நெஞ்சு அசேதநப் பொருளல்ல; சேதநப் பொருள்; அதாவது அறிவையும் ஆநந்தத்தையும் உடைய பொருள்.
இது அறிவில்லாத வஸ்துவாயிருந்தால் இதைப்பற்றிக் கவலையில்லை.
எப்போது அறிவுடையதாயிற்றோ அப்போதே எம் பெருமானைப் பற்றினதாகவே ஆய்விட்டது.
ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்கு முணர்வு” (முதல் திருவந்தாதி 67) என்கையாலே ஞானமாகில்
பகவத் விஷயத்தைப் பற்றித்தானேயிருக்கும். ஆகையாலே இந்த நெஞ்சு பகவத் விஷயத்தைக் கண்டு பின்வாங்குவது எப்படி சேரும்?
அது கிடக்கட்டும் ஞானம் போலே ஆநந்தமும் ஒரு தன்மையாக இருக்கிறது இதற்கு.
ஆநந்தமுண்டாகில் பகவத் விஷயத்தைப் பற்றாமல் எப்படி ஆநந்தம் ஸித்திக்கும்? ஸித்திக்க மாட்டாது.
ஆகவே, ஞானம் ஆநந்தம் என்கிற இரண்டு தன்மைகள் இதற்கு உள்ளபோதே இது பகவத் விஷயத்தைப் பற்றினதாகவே ஆகா நிற்க.
அந்தோ ‘அந்த பகவானை அணுக மாட்டேனென்று ஓடுகிறதே! இஃது என்ன பேதைமை! என்கிறார்.

ஆழ்வார் ஸ்வ அனுபவ ரூபத்தால் சாஸ்திர அர்த்தங்களை வெளியிட்டு அருளுகிறார்-

யாதானும் நேர்ந்து யாதானும் ஓன்று அறியில் தன் உகக்கில் என் கொலோ
யாதானும் நேர்ந்து அணுகா வாறு தான் -யாதானும்
தேறுமா செய்யா வசுரர்களை நேமியால்
பாறு பாறாக்கினான் பால்–33-

—————

ஏதேனும் நேர்ந்தாகிலும் அவனையே பற்ற வேணும் என்றார்
ஆகில் அவனைக் கிட்ட ஒண்ணாது என்கிறார் –

(முதலில் விஷயாந்தர ப்ராவண்யம் அடியாக விலகி
அடுத்து நைச்யம் பாவித்து விலகி
அடுத்து உள்ளம் சிதிலமாகி -தளர்ந்து -அனுபவிக்க முடியாமல் தளும்புகிறார்
நீலாழிச் சோதியாய் -நின் சார்ந்து நின்று -ஸுந்தர்யம்
ஆதியாய் நின் சார்ந்து நின்று -பிராப்தி
தொல் வினை எம் பால் கடியும் நீதியாய் நின் சார்ந்து நின்று -விரோதி நிரஸனம்
கால் கர்ம இந்திரியம் ஐந்தும்
கண் ஞான இந்திரியம் ஐந்தும்
நெஞ்சு -மனஸ் )

நைச்சியங்கொண்டாடி அகலப் பார்ப்பது தகாது, எப்படியாவது அவனை அணுகப் பார்ப்பதே நன்று என்று
கீழ்ப் பாட்டில் அருளிச் செய்த ஆழ்வார் தாம் அணுகி அநுபவிக்க இழிந்தார்;
திருப்பாற் கடலிலே திருமால் பள்ளி கொள்ளுந் திறத்தை அநுபவிக்கத் தொடங்கும்போதே தாம் விகாரப்படும்படியைப் பேசுகிறார் இதில்.

பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -நீலாழிச்
சோதியாய் ஆதியாய் தொல் வினை எம் பால் கடியும்
நீதியாய் நின் சார்ந்து நின்று —34-

—————

இவன் செவி தாழ்த்தால் அவன் படும்படி சொல்லுகிறது–

(கேட்டேயும் -இசைந்து வந்த ஒன்றுக்கே அவன் செய்யும் அதி ப்ரவ்ருத்திகளை
இங்கு அருளிச் செய்கிறார் )

கீழ்ப்பாட்டில் “பாலாழி நீ கிடக்கும் பண்பையாம் கேட்டேயும்” என்று எம்பெருமான் விஷயமான
சரிதைகளைக் கேட்டேயும்” என்று எம்பெருமான் விஷயமான சரிதைகளைக் கேட்பதில்
தமக்கு முயற்சி உண்டானமையைக் கூறினாரே; அவ்வளவிலே எம்பெருமான்
“இவ்வாழ்வாருடைய காதலை மேன்மேலும் வளரச் செய்ய வேணும்” என்று திருவுள்ளம் பற்றி
இவருடைய நெஞ்சிலே படுகாடு கிடக்கத் தொடங்கி விட்டான்; அதைப் பேசுகிறாரிதில்

நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும்
ஒன்றுமோ வாற்றான் என் நெஞ்சு அகலான் -அன்று அம் கை
வன் புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான்
அன்புடையன் அன்றே அவன்–35-

————-

அவன் இப்படி இருக்க (35 பாசுர சுருக்கம் )
அவன் பக்கலிலே ஸம்சயத்தைப் ப்ரவேசிப்பித்துக்
கை வாங்குகை கார்யம் அன்று என்கிறது

சில சமயங்களில் எம்பெருமான் ஸுலபன் என்று தோற்றும்; சில ஸமயங்களில் அவன் துர்லபன் என்று தோற்றும்;
மற்றுஞ் சில ஸமயங்களில் ‘அவன் ஸுலபனுமல்வன், துர்லபனுமல்லன்; நடுத்தரமாயுள்ளவன்’ என்று தோற்றும்.
பின்னையும் சில ஸமயங்களில் ‘அப்பப்ப! அவன் மிக உயர்ந்தவன், மேலோர்க்கும் மேலானவன், அவனைப் பெறுதல் கூடுமோ’ என்று தோற்றம்.
ஆக இப்படியெல்லாம் பலபடியாகத் தோற்றும் தோற்றங்களைத் தொலைத்திட்டு அப்பெருமானுக்கு ஸௌலப்யமொன்றே
அஸாதரணமான வடிவு என்று தெளிந்த ஞானத்தைப் பெற்று அக்கண்ணபிரானுக்கே ஆட்பட்டுவிட்டால்
அவன் நமக்கு ஸகலவித பந்துவமாய் நின்று எல்லா நன்மைகளையும் செய்தருள்வான் என்கிறார்.

இவனாம் -என்ற இடத்தில் சந்தேக நிவ்ருதியை சொல்லி சொல்லி அருளுகிறார் -அவன் சுலபனே -திட விசுவாசம்-

அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
அவனாம் அவன் என்று இராதே -அவனாம்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலுமாம் —36-

———–

இப்படி இருக்கை புறம்பு உள்ளார்க்கு அரிது
நமக்கு உண்டாயிற்றே -என்கிறார்

(தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனாய் –அநந்யார்ஹ சேஷ பூதராக அற்றுத் தீர்ந்து இருப்பது துர்லபம்
பகவத் அனுக்ரஹத்தாலே பெறப் பெற்றோமே என்று ஹ்ருஷ்டராகிறார்
பூ மேய மதுகரம் -தேன் -மேய்ந்து கொண்டு இருக்கும் துளசி மாலை -அணிந்த
அவரை வாழ்த்துவதே கரம் -கடைமை-கரம் -உறுதியாக த்ருடமாக என்றவாறு –
வாழ்த்தாம் அது-பல்லாண்டு பாடுகை –
நெஞ்சு அசேதனம் -ஞானம் இல்லா விட்டாலும் சேதன சமாதியால் சொல்கிறார் –முந்துற்ற நெஞ்சு அன்றோ )

கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய ஸௌலப்யத்தைப் பேசினார்; அது நம் நெஞ்சுக்கு மிகவும் ரஸித்தது.
அந்த ஸௌலப்யத்தையே நெஞ்சு அநுஸந்தித்து ஆநந்தப்பட்டுக் கொண்டிருந்தது. ஆழ்வார் அந்த நெஞ்சை நோக்கி
“இப்படிப்பட்ட ஸௌலப்யம் எம்பெருமானுக்குள்ளதென்று நீ நன்கு அறிந்து கொண்டாயன்றோ;
இந்த அறிவு எல்லார்க்கும் எளிதாக உண்டாமதன்று; ஏதோ எம்பெருமானது இன்னருளாலே நமக்கு உண்டாகப் பெற்றோம்;
ஆகையாலே இனி ஒருகாலும் நைச்சியம் பாவித்துப் பின்வாங்கப் பாராதே
அப்பெருமானுடைய போக்யதையிலும் சீலத்திலும் ஈடுபட்டு அவனை வாழ்த்துவதே தகும் என்கிற
அத்யவஸாயத்தைத் திண்ணியதாகக் கொள்” என்று உபதேசிக்கிறார்.

ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
நாமே யது வுடையோம் நன்னெஞ்சே –பூ மேய
மது கரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம்
அது கரமே அன்பால் அமை —37-

————

தாம் வாழ்த்தச் சொல்ல
நெஞ்சு இறாய்க்க
அத்தை தப்பச் செய்தோம்-என்கிறார்

(பேசாமல் இருந்தால் பிழை -தப்பு
பிழை கர்மங்கள் பேசவே போகுமே
ஏசியாவது பேசுங்கோள் -இடைச்சிகள் போல் -அன்பால் ஏசினார்கள் அன்றோ
சிசுபாலனைப் போல் ஏசக்கூடாதே )

அவனுடைய குணங்களை வாழ்த்துவதே ப்ராப்தம் என்று நெஞ்சுக்கு உபதேசித்தார் கீழ்ப் பாட்டில்.
அவனுடைய ஸௌலப்பத்தை வாழ்த்துவதென்றால் அபசாரத்தில் போய் முடியுமே;
‘வெண்ணெய் திருடினான், இடைச்சி கையில் அகப்பட்டுக் கொண்டான். தாம்பினால் கட்டுண்டான், உரலோடு பிணிப்புண்டான்.
அடி யுண்டு அழுது ஏங்கினான்” என்று இப்படிப்பட்ட கதைகளைச் சொல்லி வாழ்த்துவது தானே ஸௌலப்ய குணத்தை வாழ்த்துகையாவது;
இவை பேசினால் சிசுபாலாதிகளோடு ஒப்போமன்றோ; இது நமக்குத் தகுமோ? என்று நெஞ்சு இறாய்க்க அதனை ஸமாதாகப்படுத்துகிறார் இதில்.

பரத்வம் அனுசந்திக்க -அந்த பெரியவன் எங்கே
நான் நீசன் -நைச்யம் பண்ணி விலகப் பார்க்க
சௌலப்யம் அனுசந்திக்க அபசாரம் ஆகுமே என்று இறாய்க்க
எம்பெருமான் பற்றிய பேச்சு ஏதாகிலும்
ஏத்துதலோ ஏசுதலோ ஏதாயினும் ஆயிடுக
எம்பெருமான் விஷயம் எனபது ஒன்றே போதும் பேசாய் என்கிறார்

அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே
இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத் திறங்கள்
ஏசியே யாயினும் ஈன் துழாய் மாயனையே
பேசியே போக்காய் பிழை –38-

———-

பேச என்று புக்கவாறே
போக்யமாய் நெஞ்சுக்குப் பொருந்தினவாறே
நாம் பார்த்த இடம் தப்பச் செய்தோமோ -நெஞ்சே -என்கிறார் –
தப்பச் செய்ய வில்லையே
நன்றாகவே செய்தோம் என்கிறார் –

(நெஞ்சு வியாஜ்யமாக
நாம் விலக்கப் பார்க்க கழுத்தைப் பிடித்து அவன் இடம் சேர்த்த ஆழ்வார்
சேர்ந்த பின்பு உள்ள போக்யத்தையில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
இங்கே இருந்து குணம் பாடுவதே புருஷார்த்தம்
வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ வைகுந்தம் என்று கொடுப்பது பிரானே )

ஈன் துழாய் மாயனையே ஏசியே யாயினும் பேசியே போக்காய் பிழை” என்று
பகவத் கீர்த்தனமே பண்ணும்படி கீழ்ப்பாட்டில் நெஞ்சுக்கு உபதேசித்தார்.
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்குமழுக்ருடம்பும், இந்நின்ற நீர்மை யினியாமுறாமை” (திருவிருத்தம் -1) என்று
முதலடியிலே விண்ணப்பம் செய்தபடி இந்நிலம் அடித் கொதித்துப் பரமபரத்திலே விரைந்து சென்று
அங்கே நித்ய கைங்கரியம் பண்ண வேண்டியது ப்ராப்தமாயிருக்க அது செய்யத் தேடாமல் இங்கே இருந்து கொண்டு
அவனது திருக் குணங்களைப் பேசிக்கொண்டிருப்பது எதுக்கு? என்று திருவுள்ளத்தில் பட்டதாக, அதனை அநுவாதம் செய்கிறார் இப்பாட்டில் –

பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை -அழைத்து ஒரு கால்
போய் யுபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே
வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு –39—

———

எம்பெருமானுடைய திவ்ய சரிதங்களைச் சொல்லிப் புகழ்வதில் ஆழ்வார் தமக்குண்டான ருசியின்
மிகுதியை வெளியிடுகிறாரிப்பாட்டில். நெஞ்சே! இப்படிப்பட்டதொரு வாய்ப்பு நமக்கு வேறொன்றில்லை;
இவ்வுலகத்திலுள்ளாரெல்லாரும் தங்கள் தங்கள் வாய் வந்தபடி கண்ட விஷயங்களையும் பாடிக்கொண்டு திரிபவர்களாயிருக்க,
நாம் மாத்திரம் அப்படியிராமே பகவானுடைய புகழ்களைப் பேசும்படியானவிது இவ்விருள் தருமாஞாலத்தில் ஸம்பவிக்கக் கூடியதோ? அல்ல;
ஆயினும் “விதிவாய்க்கின்று வாய்க்குங் கண்டீர் ” என்னுமா போலே தெய்வ யோகத்தாலே நமக்கு இப் பெரும் பாக்கியம் வாய்த்தது.
ஆனால் பகவத் குணங்களின் தூய்மையையும் நமது நாவின் எச்சில் தன்மையையும் நோக்கும் போது
வாக்குத் தூய்மையிலாயினாலே மாதவா வுன்னை வாய்க்கொள்ளமாட்டேன்” (பெரியாழ்வார் திருமொழி 5-1-1) என்றாற்போலே
இறாய்த்து நிற்கத் தோன்றுவதுண்டு; அப்படி நைச்சியம் பாவித்து பகவத் குணங்களைப் பேசாதிருப்பதானது சாஸ்த்ரங்களில்
ப்ரஸித்தமான நரகங்களிற் காட்டில் மிகக் கொடிய நரகமேயாம் என்று கருதவேண்டும்.
அப்படிப்பட்ட நரகத்தில் என்னை நீ தள்ளப் பாராமல் அவனுடைய சரிதைகளில் ஏதேனுமொன்றைச் சொல்லிக் கொண்டே யிருக்கப்பார்;
கஞ்சனாலேவப் பட்டுக் கண்ணபிரானைக் கொல்லக் கருதி முலையில் விஷந்தடவிக் கொண்டு பேய் வேஷத்தை மறைத்துத்
தாய் வேஷத்தோடு வந்து முலை கொடுத்த பூதனையைப் பாலுண்கிற பாவனையிலே முடித்த சரிதையைச் சொல்லிப் புகழப்பார்;
அவளுயிரை முடித்தாற்போலே நமது நைச்சியத்தையும் முடிக்க வல்லவன் அப்பெருமான் என்று கொண்டு
அவ்வரலாற்றைச் சொல்லி ஏத்தப் பார் என்று தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறபடி.

வாய்ப்போ இது ஒப்ப மற்றில்லை வா நெஞ்சே
போய்ப் போய் வெந்நரகில் பூவியேல்-தீப்பால
பேய்த்தாய் உயிர் கலாய் பாலுண்டு அவள் உயிரை
மாய்த்தானை வாழ்த்தே வலி –40-

—————

பூதநா ப்ரசங்கத்தாலே
மல்லரை நிரஸித்த படி சொல்லுகிறது –

(பூதனா சம்ஹாரம் தொடங்கி மல்லரை மாட்டியது பர்யந்தம் உண்டே
பூமி பலகாலம் -சாக்ஷியாக நிற்கும்
சத்தை பெற்றது -அவன் அன்று அழித்ததால்
பரம ஸூகுமாரமான திருக் கையால் செய்தானே -இனிமையில் ஆழங்கால் பட்டு மாய்ந்து போகாமல் உள்ளார்கள் –
என்று மூன்று நிர்வாகங்கள்)

பூதனையை முடித்த விஷயத்தைக் கீழ்ப் பாட்டில் பேசவே, அத்தோடு ஒரு கோவையான
மல்ல வத சரித்திரமும் நினைவுக்குவர, அதனை இப்பாட்டில் பேசுகிறார்.
முரட்டு மல்லர்களோடு நீ போர் செய்ய நேர்ந்த காலத்து
உனது ஸூகுமாரமான திருக் கைகளாலே அந்த மல்லர்களை நீ புடைக்கும் போது இவ்வுலகில் கண் இருந்த படுபாவி ஜனங்களெல்லாம்
“ஐயோ! நமது சரண்யனுக்கு என்ன தீங்க விளைந்திடுமோ!” என்று சிறிதும் வயிற்றெரிச்சல் படாதே கல்லாகக் கிடந்தவனே!
அந்தோ! என்று இன்று தாம் வயிற்றெரிச்சல் படுகிறார்.

வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர்
வலிய முடி யிடிய வாங்கி -வலிய நின்
பொன்னாழிக் கையால் புடைதிடுதி கீளாதே
பல் நாளும் நிற்குமிப்பார்–41-

———

ஸர்வேஸ்வரனே ஆஸ்ரயமாக வேண்டாவோ -என்கிறது –

(கீழே பூமி நிலை பெற்றது கண்ணனால்
அது மாத்ரமோ
இவன் ஒருவனே புகல் -சர்வ வித பிரகாரங்களில் ரக்ஷகன் இவனே
முன் படைத்தான் –பஹுஸ்யாம் ப்ரஜாயேய -மஹா பிரளயம் -அவாந்தர பிரளயம் இல்லை )

கீழ்ப் பாட்டில் இப் பார் என்ற இவ் வுலகத்தின் ப்ரஸ்தாவம் வரவே உலகிலுள்ள பிராணிகளின் தன்மைகளில்
ஆழ்வார்க்கு ஆராய்ச்சி சென்றது. ஸ்ரீமந்நராயணனையே ஸர்வ ஸ்வாமியென்ற கொண்டு பற்றாமல்
கண்ட தெய்வங்களின் காலிலே விழுந்து அலைந்து திரியும் ராஜஸ தாமஸப் பிராணிகள் விஞ்சி யிருக்கக் கண்டார்.
திருவுள்ளத்திலே பரிதாபம் தோன்றி, ஸ்ரீமந்நாராயணனுக்கு அடிமைப்பட்டிருக்கை தவிர
வேறொன்றும் தகுதியல்ல என்பதைக் காரணத்துடன் வெளியிடுகிறார்.

வேதங்களும் வைதிகர்களும் பல பல செயல்களை செய்து அருளினவன்-
ஸ்ரீ மன் நாராயணனே என்று சொல்ல-சர்வ பிரகாரங்களாலும் அவனே ரஷகனாய் இருக்க-
மற்று ஒருவருக்கு சேஷப்பட்டு இருக்க வழி இல்லையே –

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன் படைத்தான் என்பரால் -பாரிடம்
ஆவானும் தானானால் ஆரிடமே மற்று ஒருவர்க்கு
ஆவான் புகவாலவை–42-

————–

பிரபல பிரதிபந்தகங்களைப் போக்குமவனைப் பற்றாதார்க்கு வரும்
மநோ துக்கங்களைப் போக்க ஒண்ணாது

ஸ்ரீமந்நாராயணனே பரதேவதை என்று கீழ்ப்பாட்டிற் சொன்னதையே மற்றொரு முகத்தாலும்
ஸ்தாபித்துக் கொண்டு அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செய்பவர்கட்கன்றி
மற்றையோர்க்குத் துன்பங்கள் நீங்க வழியில்லை யென்கிறார்.
ஸாமாந்யரான உலகர்கள் எந்தத் தெய்வங்களைப் பரதேவதை யென்று கொள்ளுகின்றார்களோ
அந்தத் தெய்வங்களும் தங்கள் தங்களுக்கு ஆபத்து நேருங் காலங்களில் ஸ்ரீமந்நாராயணனையே அடி பணிந்து
உய்ந்து போகின்றன என்பதை முன்னடிகளில் அருளிச்செய்கிறார்.

அவயம் என நினைந்து வந்த சுரர் பாலே
நவையை நளிர்விப்பான் தன்னை -கவையில்
மனத்து உயர வைத்திருந்து வாழ்த்தார்க்கு உண்டோ
மனத் துயரை மாய்க்கும் வகை–43-

———–

இதுக்கு பட்டர் ஒருபடியும்
பிள்ளை திரு நறையூர் அரையரும் ஒரு படியும்
அருளிச் செய்வர்

(பண்டைய கர்மங்களின் பலனே வாழ்த்தாது இருக்கிறோம் என்றும்
பாடாததே-வாழ்த்தாதே இருப்பதே பாபம் என்றும்
வாழ்த்தாது இருப்பார் இது வன்றே மேலைத் தாம் செய்யும் வினை -முற்கால கர்ம பலன் என்றும்
வாழ்த்தாது இருந்தால் மேல் உள்ள காலங்களில் கர்மங்களை சேர்ப்போம் என்றும்
இதனாலே பாபம் –பட்டர்
பாபத்தாலே இது -அரையர்
என்றும் இரண்டு நிர்வாகங்கள் )

இப்பாட்டுக்குப் பிள்ளைதிருநறையூரரையர் ஒரு படியாகவும்
பட்டர் ஒருபடியாகவும் நிர்வஹிப்பராம்.
அரையர் நிர்வஹித்தபடி எங்ஙனமே யென்னில்; –
வகை சேர்ந்த நல்நெஞ்சும் = எம்பெருமானுடைய ஏதோ வொரு குணத்திலும் ஏதோவொரு சரித்திரத்திலும் பொருந்தி நின்ற நல்ல மனமும்,
அந்த ஒரு குண சேஷ்டிதத்தையே பேசிப் புகழ்ந்து கொண்டிருக்கிற நாவோடு கூடின வாக்கம் அப்பெருமானுடைய
எல்லாக் குணங்களிலும் எல்லாச் சரித்திரங்களிலும் பொருந்தி மேல் விழுந்து அநுபவிக்கமாட்டா திருந்தனவேயாகிலும்,
எப்படியாவது கஷ்டப்பட்டு ஸகல குணங்களிலும் ஸகல சரித்திரங்களிலும் நெஞ்சு பொருந்தும்படி செய்து கொண்டு
ஸர்வேஸ்வரனை அநுபவித்து மங்களாசாஸநம் பண்ண வேண்டியிருக்க,
அங்ஙனே பண்ணாதிருக்கிறார்கள் ஸம்ஸாரிகள் ;
இஃது ஏன்? என்றால், முற்காலத்தில் அவர்கள் செய்த பாவமே இதற்குக் காரணம் – என்பதாக அரையர் நிர்வாஹம்.

பட்டர் நிர்வாஹமெங்ஙனே யென்னில்; –
ஆத்மாவினுடைய ஞானம் வெளியில் ப்ரஸரிப்பதற்கு வழியாக அமைந்திருக்கின்ற நெஞ்சும், எம்பெருமானைப் பேசுகைக்கு
யோக்யமான நாவோடு கூடினவாயும் ரஜோ குணமும் தமோ குணமும் மிக்க ஸ்வயமாகவே பகவத் விஷயத்திற் படிந்த வில்லையே யாகிலும்,
‘நம்மை ஈஸ்வரன் படைத்தது ஏதுக்கு? நமக்குக் கை கால் முதலிய கரண களேபரங்களைக் கொடுத்தது ஏதுக்கு?’ என்று
ஆராய்ச்சி செய்து பகவத் விஷயத்திலே பல்லாண்டு பாட இழிய வேண்டியது ப்ராப்தமாயிருந்தும் பாழும் ஸம்ஸாரிகள்
பகவத் விஷயத்தில் அடியோடு இழியாதிருக்கிறார்களே, இது வரையில் மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து ஸம்ஸாரிகளா யொழிந்தது போராதா?
இனி மேலாவது நல்ல வழி போகத் தேடலாகாதா?
மேலுள்ள காலமும் நித்ய ஸம்ஸாரிகளா யிருப்பதற்கே யன்றோ இப்படி பாபிகளாய்த் திரிகிறார்கள்! – என்பதாம்.

வகை சேர்ந்த நல் நெஞ்சம் நாவுடைய வாயும்
மிக வாய்ந்து வீழா வெனிலும்-மிக வாய்ந்து
மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பார் இது வன்றே
மேலைத் தாம் செய்த வினை–44-

————

நீர் இதில் செய்தது என் என்னில்
பிரிந்தால் வரும் அநர்த்தத்தை நினைத்து அவன் திருவடிகளை ஏத்தினேன்-என்கிறார்

(ஆழ்வாருக்கு -வினை என்றாலே பகவத் விஸ்லேஷம் தானே
தினை ஆம் சிறிது அளவும்-அதி அல்ப காலமும் )

மாறி மாறி பல பிறவிகள் எடுத்து இருந்தாலும்-
இனி மேல் பிறவாமைக்கு வழி தேடிக் கொண்டேன்
 என்கிறார் –

வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி
தினையாம் சிறிது அளவும் செல்ல -நினையாது
வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும்
நாயகத்தான் பொன்னடிகள் நான் –45-(வெம்மையையே -பாட பேதம் )

————-

கீழே தேஹ யாத்ரை செல்லும்படி சொல்லிற்று
இதில் ப்ராப்ய பிராப்பகங்கள் அவனே என்று நினைத்து இரு என்கிறார் –

(கீழே பொன் அடிகள் -உபாயமாகவும் ப்ராப்யமாகவும் இருக்குமே-ஸூஷ்மமாகக் கோடி காட்டினார்
இத்தை வியக்தமாக இதில்
வெந் நரகில்–கொடிய ஸம்ஸாரத்திலே- சேராமல் காப்பதற்கு நீ கதியாம்-உபாயமாகவும்
செங் கண் மால் -நீங்காத-மா கதி-பரம ப்ராப்யம்
மீளுதலாம் ஏதமிலா விண்ணுலகில் ஏகம் எண்ணும் மாறன் -தாள தாமரை பாதிக நூற்று அந்தாதி பாசுரம் )
இரண்டும் கதி
மா கதி சிறப்பு -ப்ராப்யமாகவே கொள்ள வேண்டுமே

(நாலாயிர சுருக்கமே இதுவே தானே
அவனாலே அவனை அடையுங்கோள் -இதுவே ஆழ்வார்கள் உபதேசம் நமக்கு
ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே)

உபாய உபேயங்கள் இரண்டும்-எம்பெருமான் ஒருவனே என்னும் உறுதியை
அருளிச் செய்கிறார் –

நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள் நாளும்
தேங்கோத நீருருவம் செங் கண் மால் -நீங்காத
மா கதியாம் வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதியாம் நெஞ்சே நினை –46-

—–

நீர் நம்மை ப்ராப்யமாகும் ப்ராபகமாகவும்
நம்மை ஏத்துகையே தேஹ யாத்ரையாகவுமாக இரா நின்றீர்
இதுக்கு விபரீதமாய் இருப்பான் என் சம்சாரம்-என்ன
உன் கடாக்ஷம் இல்லாதபடி இருக்கை குற்றமோ என்கிறார் –

(நாம் கேட்பதாகவும் பெருமாளே வெறுப்பில் கேட்பதாகவும் கொண்டு
உனது கடாக்ஷம் என் அளவிலே இன்று பலித்ததே
இன்றாக நாளையாக -என்றாவது பலிக்குமே )

கீழ்ப்பாட்டில் எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்ற உறுதியை வெளியிட்ட
ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
“ஆழ்வீர்! இப்படிப்பட்ட உறுதி உமக்கு மாத்திரமே யன்றோவுள்ளது; மற்றையோர்க்கு இல்லையே.
எல்லாரும் என்னை உபாயமாக மாத்திரம் பற்றுகிறார்களே யன்றி உபேயமாகவும் பற்றுகிறார்களில்லையே.
‘ஸம்பத்தைக் கொடு. ஸந்தனத்தைக் கொடு’ என்று சில க்ஷுத்ர புருஷார்த்தங்களை வேண்டிப் பெற்றுக் கொண்டு
ஒழிந்து போகிறார்களே யல்லது ‘நீயே எமக்கு வேணும்’ என்று என்னையே புருஷார்த்தமாக விரும்புவாரைக் கிடைக்க வில்லையே!;
உமக்காவது இதை வுறுதி நிலைத்து நிற்குமா?” என்று கேட்க;
அதற்கு உத்தரமாக அருளிச் செய்கிற பாசுரம் போலும் இது.

நினைத்து இறைஞ்சி மானிடவர் ஓன்று இரப்பர் என்றே
நினைத்திடவும் வேண்டா நீ நேரே -நினைத்து இறைஞ்ச
எவ்வளவர் எவ்விடத்தோர் மாலே அது தானும்
எவ்வளவும் உண்டோ எமக்கு –47-

———-

எமக்கு பிரபல பிரதிபந்தகம் போக்குமவனை உபாயமாக நெஞ்சிலே கொண்டு
அவனால் பெறுவதும் பரம பதம் என்று நினைத்து இருந்தோம்
இது அன்றோ இருக்கும் படி என்கிறார் –

இப்பாட்டிலும் தமது உறுதியை பேசுகிறார் –
பரமபதம் பாரித்து இருந்தோம் என்றும்-வேண்டாம் என்று இருந்தோம்
பாவோ நான் யத்ர கச்சதி –
அச்சுவை பெறினும் வேண்டேன்

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் போலேவும்-

எமக்கி யாம் விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை
அமைத்து இருந்தோம் அஃது அன்றே யாம் ஆறு அமைப் பொலிந்த
மென் தோளி காரணமா வெம்கோடு ஏறு ஏழுடனே
கொன்றானையே மனத்துக் கொண்டு –48-

———

அவனே ப்ராபகன் –என்று அறுதி இட்டாருக்கு
சரீர அவசானத்து அளவும் இருக்கும் படி சொல்லுகிறது

(இருக்கும் நாளில் உகந்து அருளினை நிலங்களில் குண அனுபவமே போது போக்காகக் கொள்ள வேண்டும்
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
இதில் அனுபவம் சொல்கிறது
யுக்த க்ருத்யம் ரஹஸ்ய த்ரய சாரத்தில் தேசிகர் )

இங்கே இருந்து குணாநுபவம் செய்து கொண்டு இருந்தாலும்
திவ்ய மங்கள விக்ரஹம் சேவிக்க ஆசை உண்டாகுமே
அத்தால் அலமாப்பு அடைகிற படியை அருளிச் செய்கிறார் –

கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத் தான் -கண்ட நாள்
காருருவம் காண்டோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார்
பேருருவம் என்று எம்மைப் பிரிந்து –49-

————–

உபமானங்களைக் கண்டு உபமேயம் என்று இருக்கும்படியான எம்மை
இவர் நோக்காது ஒழிவதே -என்று வெறுக்கிறார்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும்-திருவாய் -2-7-6- -என்னும்படியை எண்ணுகிறிலர்

அவன் கொடுத்த சரீரம் கொண்டு ருசி பிறந்த பின்பு
இவனைத் -இறைத்-தாழ்த்ததும் குற்றமாய்த் தோன்றா நின்றது
தான் பரிக்ரஹித்த சரீரம் தோறும் அவஸர ப்ரதீஷனாயத்
தம் பக்கல் முகம் பெறாதே திரிந்தது தோற்றுகிறது இல்லை
இத் தலையில் அபேக்ஷை பிறந்தால் அவனுக்கு வாராதே இருக்கை முறை அன்று போலே காணும்
பிரஜை எல்லாத் தீம்பும் செய்ததே யாகிலும் பசித்த போது சோறு இட்டிலள் யாகில்
தாய்க்குக் குற்றமாகக் கடவது இறே

(நச்சுப் பொய்கை ஆகாமல்- நாடு திருத்த- பிரபந்தம் தலைக்கட்ட- ஆழ்வாரை வைத்தான் அன்றோ
வீடு திருத்தவும் கால விளம்பம் வேண்டுமே -ஆஸ்ரிதர் இடம் எளியவன் என்பதையே பார்த்தேன்
கேசியை நிரசித்த வண்மையைப் பார்க்க வில்லையே )

எம்பெருமானுடைய திருவுருவத்திற்குப் போலியான பொருள்களைக் கண்ட போதெல்லாம் தாம்
பாவநா ப்ரகர்ஷத்தாலே அவற்றினருகே போய் அநுபவிக்கப் பாரிக்கிற படியைப் பேசினார் கீழ்ப்பாட்டில்.

அருகே சென்றவாறே அவை உபமான பதார்த்தங்களாகவே
(அதாவது- மேகமாகவும் கடலாகவும் இருளாகவும் பூவைப் பூவாகவும்)
இருக்குமே யன்றி உபமேயமான எம்பெருமானாக இருக்க மாட்டாவே;

“ஐயோ! நாம் எம்பெருமானையே ஸாக்ஷாத்தாக ஸேவிக்கப் பெற்றோமென்று களித்திருந்தோமே;
இப்படி அந்யதா ஜ்ஞாநமாகவா முடிந்து விட்டது!” என்று வருத்தமுண்டாகி,

‘எம்பெருமான் நம்மை இப்படியே வருத்தப் படுத்தி வருகிறானே யொழிய ஒரு காலும் அவன் திருவுள்ளத்தில்
இரக்கம் பிறப்பதில்லையே!; என்ன கல் நெஞ்சோ!’ என்று வெறுக்கிறார்.

பிரிந்து ஓன்று நோக்காது தம்முடைய பின்னே
திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை புரிந்து ஒரு கால்
ஆவா வென இரங்கார் அந்தோ வலிதே கொல்
மா வாய் பிளந்தார் மனம்–50-

—————–

(கீழே வலிய மனம் கொண்டவன் என்று வெறுத்து அருளிச் செய்தார் அன்றோ
அநேக காலம் ஆபி முக்யம் காட்டி விலகி நின்ற நாம் அவன் முயற்சியால் அத்வேஷம் லேசம் பிறந்து
பசித்த குழந்தைக்கு சோறு இடும் தாய் போல்
ருசி வந்த உடனே அனுக்ரஹித்து மேலே மேலே வளர்த்து உபகரிப்பவன் அன்றோ
ஸ்ரீ வித்துவக்கோடு அம்மானையே பார்த்து இருக்க அருளிச் செய்த ஸ்ரீ குலசேகரப் பெருமாள் போல் இந்த பாசுரம் )

சேஷ பூதன் சேஷி செய்த படி கண்டு இருக்கும் அத்தனை அல்லது
வெறுத்துத் தப்பச் செய்தோம்–என்கிறார்-

கீழ்ப்பாட்டில் “மாவாய் பிளந்தார் மனம்- அந்தோ! வலிதே கொல்” என்று
எம்பெருமானைக் கல் நெஞ்சனாகச் சங்கித்தார்; உடனே தம் ஸ்வரூபத்தை ஆராய்ந்து பார்த்தார்;
சேஷியான எம்பெருமான் விஷயத்திலே சேஷ பூதர். இப்படிச் சொல்லத் தகாதென்று விவேகமுற்று,
எம் பெருமான் திருவுள்ளமானபடியே செய்யக் கடவன்; அவனை நாம் நிர்ப்பந்திப்பதென்பது தகுதியன்று;
நம்முடைய இந்திரியங்களையெல்லாம் அவன் பக்கலில் ஊன்ற வைத்து அவனது திருவடித் தாமரைகளை ஸேவித்துக்
கொண்டிருப்பதேயன்றோ நமக்கு ஸ்வரூபம்” என்று அருளிச் செய்கிறார் இப் பாட்டில்.

மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை
சினமாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து -புனமேய
தண் துழாயான் அடியைத் தான் காணும் அஃது அன்றே
வண் துழாம் சீரார்கு மாண்பு –51-

———

(ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மாண்பு எது என்று பொதுவாக கீழே சொல்லி
இதில் தமக்கு திரிவிக்ரமன் கண்ணன் ஒருவரையே சேர்ந்து
பெற்ற அனுபவத்தை வெளியிட்டு அருளுகிறார்
உலகமாகத் தொட்ட அவதாரத்தையும் ஊராகத் தொட்ட அவதாரத்தையும் தாழ நின்ற ஸ்பர்சித்தவன் அன்றோ
எண்ணக் கண்ட விரல்களால் உண்ணக் கண்ட தனது ஊத்தை வாய்க்கு கவளம் போடுகிறார்களே -பெரியாழ்வார்
வாய் அவனைத் தவிர வாழ்த்தாது போல் இங்கும் )

பொதுவிலே சொன்னேன்
அது தான் எனக்கு உண்டாயிற்று -என்கிறார் –

மாண் பாவித்து அந் நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான் நம்
கண் அவா மற்று ஓன்று காணுறா சீர் பரவாது
உண்ண வாய் தானும் உறுமோ ஓன்று –52–

———–

(செங்கண் மாலே -கலங்கிய உனக்கு தெளிந்த அடியேன் சொல்ல வேண்டுமே –
இப்படிப்பட்ட உன்னை நினைந்து பரம ஆனந்தம் கொண்ட நாம் வேறே ஒன்றைப் பார்ப்பேனோ -நினைப்பேனோ )

என்னுடைய இந்திரியங்களும் உன்னை அனுபவிக்கும் படி யாயிற்று -என்ன
அவ்வளவேயோ –
இன்னும் சில யுண்டு காணும் உமக்குச் செய்யக் கடவது என்ன
எனக்குச் செய்யாதது உண்டோ -என்கிறார் –

கீழ்ப்பாட்டில், ஆழ்வார் தம்முடைய இந்திரியங்கள் எம்பெருமான் விஷயத்திலே
ஆழ்ந்தபடியைப் பேசி ‘இனிமேல் தமக்கு ஒரு குறையுமில்லை; தாம் க்ருத க்ருத்யாக ஆய்விட்டார்’ என்று தோற்றுமாறு
இருந்ததைக் கண்ட எம்பெருமான், ‘அந்தோ! ஆழ்வார் இவ்விருள் தருமா ஞாலத்தில் இருந்து கொண்டே இப்படி களிக்கிறாரே;
இவ்வநுபவம் இவர்க்கு நித்தியமாய்ச் சொல்லுமோ? ஸ்ரீவைகுண்டம் பெற்றாலன்றோ அநுபவ பூர்த்தியுள்ளது’ என்று
திருவுள்ளம் பற்றி அந்த ஸ்ரீவைகுண்டத்தையும் ஆழ்வார்க்குத் தந்தருள்பவன் போல விளங்கினான்;

அதனைக் கண்ட ஆழ்வார் “இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகாமளுமச்சுவை பெறினும் வேண்டேன்” என்றாற்போல
இந்த குணாநுபவத்திற்காட்டிலும் ஸ்ரீவைகுண்டமென்பது போக்யமோ? பிரானே!’ என்கிறார்.

ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-

————

உம்முடைய பிரதிபந்தகம் செய்தது என் -என்ன
நானும் அறிகிறிலேன் -என்கிறார் –

கீழ்ப்பாட்டில் ‘வைகுந்தம் இனிதன்றே’ என்றுரைத்த ஆழ்வாரை நோக்கிச் சிலர்,
‘இவ்வீபூதியில் எவ்வளவுதான் குணாநுபவம் பண்ணினாலும் பிரதிபந்தகங்கள் கூடவே யிருக்கிற நிலமாதலால்
இவ்வநுபவம் நிலைநிற்கக் கூடியதன்றே; பிரதிபந்தகங்களுக்கு அஞ்சி யிருக்க வேண்டியதுதானே’ என்று சொல்ல;
பகவத் விஷயத்தில் நான் இழிந்தவறே பிரதிபந்தகங்கள் போன விடம் தெரியவில்லை என்கிறார்.

வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54-

————

(பிரதிபந்தகங்கள் போன பின்பு பலம் அனுபவிப்பதே கர்தவ்யம்
அவனே வந்து காட்டக் கண்டு விலக்காமல் அனுபவிக்கலாம் )

எம்பெருமானைத் தம் முயற்சியாலே பெற நினைப்பார்க்கு அவன் ஒரு நாளும் கிட்ட முடியாதவனேயாகிலும்,
அவன்றானே தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே என்னெஞ்சினுள்ளே வந்து புகுந்ததனனாதலால்
எனக்கு அவன் எப்போதும் ஸேவிக்க எளியவனாகவே யிராநின்றானென்கிறார்.

மருங்கோத மோதும் மணி நாகணையார்
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே
எமக்கு அவரைக் காணலாம் எப் பொழுதும் உள்ளால்
மனக் கவலை தீர்ப்பார் வரவு –55-

————

(உபாயம் அனுஷ்டிப்பவன் அவன் தானே நம்மை பெற்று
மகிழ்ந்து நம்மையும் மகிழ்விக்க
அனுபவமே நமது கர்தவ்யம்
தானும் அறியாதே ஸாஸ்திரமும் சம்மதியாதே
தானே அறிந்த ஸூஹ்ருத விசேஷம் வியாஜ்யமாக அருளுபவர் அன்றோ )

எல்லாருக்கும் அருகும் செல்ல அரியவன்
உமக்கு எளியனான படி என் -என்ன
நானும் அறியேன் -என்கிறார் –

எல்லார்க்கும் அருமைப் படுமவன் உமக்கு எளியனானது எப்படி? என்று சிலர் கேட்க;
அவனுடைய நிர்வேஹதுக க்ருபைக்கு அடி அறிய முடியாதாகையாலே, எந்த வழியாலே இந்த பாக்கியம் வந்ததென்று
என்னாலும் நிரூபிக்க முடியாது.
காரணம் எதுவானாலென்ன? வாழ்ச்சி நன்றாயிருக்கின்றதத்தனை என்கிறார்.

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–56—

———–

இவ் விருள் தரு மா ஞாலத்தில் உள்ளவரைக்கும் ப்ரதிபந்தகங்கள் மேலிட்டுக் கொண்டேயிருக்குமே!
என்று ஆழ்வாருடைய நெஞ்சு தளும்ப.
அதனை ஆழ்வார் ஸமாதானப்படுத்துகிறார் இதில்

அவ் வெம்பெருமானுடைய சக்தி எப்படிப்படட்து தெரியுமோ வுனக்கு?
ஆச்ரிதனான ஒரு ப்ரஹ்லாதனுக்குப் பக்ஷபாதியாயிருந்து
அவனுடைய ப்ரபல ப்ரதிபந்தகமாயிருந்த இரணியனைக் களைந்தொழித்தவனன்றோ அவன்;

அப்படிப்பட்டவன் நம்முடைய ப்ராப்தி ப்ரதிபந்தங்களைத் தொலைத்தருளானோ?
தொலைத்தே யருள்வன்;
நீ ஏன் வீணாகக் கவலைப்படுகிறாய் நெஞ்சே!; கவலையை விட்டொழிந்து தைரியமாய் இரு- என்றாராயிற்று.

பிரதி பந்தகங்கள் நிறைந்த இடமே என்று நெஞ்சு தளும்ப சமாதானம் படுத்துகிறார் இதில்–

கோளரியின் உருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூர் உகிரால் குடைவாய் -பெரியாழ்வார்–

வளை யுகிர் ஒளி மொய்ம்பில் மறவோனது ஆகம் மதியாது சென்று ஒரு உகிரால்
பிள எழ விட்ட குட்டமது வையம் மூடு பெரு நீரில் மும்மை பெரிதே -திரு மங்கை ஆழ்வார்

வழித் தங்கு வல் வினையை மாற்றானோ நெஞ்சே
தழீ இக் கொண்டு பேராவுணன் தன்னை சுழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றி புலால் வெள்ளம் தானுகள
வாழ்வடங்க மார்விடந்த மால் –57-

———

இனி உன்னுடைய அனுபவத்துக்கு அவிச்சேதமே வேண்டுவது -என்கிறார்
(திவி வா புவி வா மமஸ்து வாஸோ நரகே வா நரகாந்தக பிரகாமம்
அவதீரிதா சாரதார விந்தவ் சரணவ் தே மரணே அபி சிந்தயாமி –முகுந்த மாலை ஸ்லோகமும் இதே போல் உண்டே
இங்கேயே பரமபதத்தில் உள்ளார் போல் மறப்பின்னை ஆகிற பெரும் செல்வம் வேண்டும் என்கிறார் சமத்காரமாக )

கீழ்ப் பாட்டில் “அவு ணன்றன்னை மார்விடந்தமால் – வழித்தங்க வல்வினையை மாற்றானோ நெஞ்சே!”
என்று தமது நெஞ்சை நோக்கி ஆழ்வார் சொன்னதை எம்பெருமான் கேட்டருளி
‘ஆழ்வீர்! நான் * வழித்தங்கு வல்வினையை மாற்றுவது மாத்திரமோ செய்வேன், உம்மைப் பரமபதத்திலே கொண்டு சேர்ப்பதும் செய்வேன் காணும்’ என்றருளிச் செய்ய;

அது கேட்ட ஆழ்வார் ‘பிரானே! அடியேன் பரமபதத்தை விரும்புகின்றேனல்லேன்;
இதுவரை * மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்தது போலவே இன்னமும் பலபிறவிகள் பிறக்கப்பெறினும் வருத்தமில்லை;
அடியேனை இனிப் பிறவாதபடி பண்ணித் திருநாட்டிலே வைத்து
அத்தாணிச் சேவகத்திற்கு ஆளாக்கிக் கொள்ள வேணுமென்று வேண்டுகின்றேனல்லேன்;
நீ என்னை மறவாதிருக்க வேணும், உன்னை நான் மறவாதிருக்கவேணுமென்னு மித்தனையே அடியேன் விரும்புவது.

நீ என்னை மறாவதிருக்கையாவது – உன்னுடைய திவ்யாத்ம குணங்களையும் திவ்ய மங்கள் விக்ரஹ குணங்களையும்
இப்போது நானநுபவிக்குமாறு எங்ஙனே அருள் செய்திருக்கிறாயோ இப்படியே மேலுள்ள காலமும் அருளி செய்கையேயாம்;

உன்னை நான் மறவாதிருக்கையாவது- இப்போது உன்னை அநுபவிப்பது போலவே எந்நாளும்மநுபவிக்கையாம்.

ஆக இவ்வளவே அடியேன் பிரார்த்திக்கும் ஸம்பத்து – என்கிறார்.

மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-

————

(நித்யம் மறவாமை -என்று பிரார்த்தித்த மாத்திரத்தாலே –தத் அபிஷந்தி விராத மாத்ராத்
பரமபத பிராப்தியும் -அதுக்கடியான கர்ம நிவ்ருத்திகளும் உண்டே
அத்தை இங்கே அருளிச் செய்கிறார்
அனுகூல்ய சங்கல்பம் மாத்திரத்தாலே பேறு அன்றோ
நமனும் உதகலனும் பேச கேட்கவே நரகமே ஸ்வர்க்கமாகுமே )

இவ்விருள் தருமா ஞாலத்திலே எப்படிப்பட்ட ஞானியர்களும் ப்ரக்ருதி ஸ்வபாவங்களை உதறித் தள்ளிவிட்டு
எம்பெருமானுடைய திருக்குணங்களை அநுபவித்துக் கொண்டே யிருந்தாலும்,இடையிடையே இந்நிலத்தின் காரியம் நிகழ்ந்தே தீருமிறே.
இல்லாவிடில் இருள் தருமாஞாலமென்று இவ்விபூதியின் பெயர் பொய்யாகுமே; இருள் இடையிடையே கலந்து பரிமாறுமிறே.

கீழே சில பாட்டுக்களாலே ஆச்சரியமாக பகவத்குணாநுபவஞ் செய்து வந்த ஆழ்வார்க்கு
இந்த ஸம்ஸார நிலத்திற்குரிய துன்பங்களின் ஸம்பந்தம் தோன்றத் தொடங்கிற்று;
தொடங்கவே, திருவுள்ளம் நொந்து பேசுகிறார்-;

திருப்பாற்கடலிலே அலைகள் துடைகுத்தத் திருக்கண் வளாந்தருளாநின்ற திருமாலின் திருநாமங்களை நாம்
அநுஸந்திக்க வேணுமென்று சிந்தித்த மாத்திரத்திலே யிருக்க
இன்னமும் இவ்விடத்திலேயே சுற்றுக் காலிட்டுக்கொண்டு திரிகின்றனவே,
முன்போல இன்னமும் நம்மிடத்திலேயே தங்கியிருக்கலா மென்று நினைத்திருக்கின்றனவோ? என்கிறார்.

கீழ் ஐம்பத்து நான்காம்பாட்டில் “வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ கானோவொருங்கிற்று” என்று
வல்வினைகள் போனவிடம் தெரியவில்லை யென்றருளிச்செய்த ஆழ்வார் திருவாக்கிலே மீண்டும்
வல்வினையார் காடானுமாதானும் கைக்கொள்ளார்” என்கிற இப் பாசுரமும் வெளி வரும்படியாயிருக்கிறகிறே
இவ்விருள் தருமாஞாலத்தின் கொடுமை!.

இருள் தரும் மா ஞாலத்திலே இருள் இடை இடையே கலந்து-பரிமாறும் இறே-
பகவத் குணங்களை அனுபவித்த ஆழ்வார்-
சம்சார தண்மை தோன்றத் தொடங்க திரு உள்ளம் நொந்து பேசுகிறார்

மாடே வரப் பெறுவாராம் என்றே வல் வினையார்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார் -ஊடே போய்
பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து –59-

————-

(ஈஸ்வரனை ஒளிந்தவர் ரக்ஷகர் அல்ல என்று ப்ரபன்ன பரித்ராணத்தில் சொன்னோம்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்
கண்ணில்லை மற்ற ஓர் கண்ணே )

வல்வினைகள் தம்மை அடர்க்க நினைக்கிறபடியைப் பேசினார் கீழ்ப்பாட்டில்;
அவை அடர்ந்தாலும் தம்முடைய அத்யவஸாயம் ஒரே உறுதியாயிருக்கும் படியைப் பேசுகிறாரிதில்.

நெஞ்சே! திருத்துழாய் மாலையை அணிந்தள்ள திருமாலின் போக்யதையில் நீ பழகினவனன்றோ?
உனக்கு நான் புதிதாக உபதேசிக்க வேண்டுவதன்றே? அந்த போக்யதையில் நீ யீடுபட்டு வேறு எந்த வஸ்துவிலும் கண் செலுத்தாமல்
அவ்வெம்பெருமானொருவனையே பின்பற்றி நிற்க வேண்டியது உன் கடமை; இந்த ஸ்வரூபம் கெடாதபடி நின்றாலும் நில்லு;
நிற்காமல் லிஷயாந்தாங்களைப்பற்றி முடிந்து போவதானாம் போ; உன்னை நான் நிர்ப்பந்திக்க மாட்டேன்;
ஆனால், நம்மை நரகத்துக்குப் போகாதபடி தடுத்துக் காத்தருளவல்ல கடவுள் அவனைத் தவிர வேறொருவன்
எங்குமில்லை யென்பதை மாத்திரம் உனக்கு உறுதியாய்ச் சொல்லுவேன்;
இதனை விஸ்வஸித்து நீ அப்பெருமானையே அநுவர்த்தித்து உஜ்ஜீவிப்பாயாகில் உகக்கிறேன்;
இல்லையாகில் தான் தோன்றியான நெஞ்சு போகிறபடி போய்த் தொலையட்டும் என்று வெறுத்திருக்கிறேன் –என்றராயிற்று.

பேர்ந்து ஓன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன் துழாய் மாயனையே என்னெஞ்சே-பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லை காண் மற்றோர் இறை–60–

———–

லோக யாத்ரையை-ஆகாசத்தைப் பார்க்கையே லோக யாத்ரை – அனுசந்திக்கப் புக்காலும்
அவனை முன்னாக அல்லது காண மாட்டாமை சொல்லுகிறது

சிறியாச்சான் –
சப்தாதி விஷயங்களில் நின்றும் நாம் மீள மாட்டாதால் போலே
ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் நின்றும் மீள மாட்டார்கள் –என்று
நம் பிள்ளைக்குப் பணித்தான்

ப்ரஹ்மாதிகளுக்குப் பரம பதத்தில் இருக்கும் இருப்பு அனுபவிக்க நிலம் அன்று
உகந்து அருளின இடங்களிலே அனுபவிக்கும் அத்தனை

(நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள் -காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்
எங்கு இருந்தாலும் உத்பலா விமானம் பார்ப்பாள் பரகால நாயகி
நாமோ அங்கே இருந்தாலும் உத்பலா விமானம் தெரியாது )

ஆழ்வார் இவ்விருள் தருமாஞாலத்தின் தன்மைகளைச் சிந்திக்கிற போது ஒன்றுந்தோன்றாமல்
ஆகாசத்தை நோக்கிக் கிடப்பண்டு;
நலத்தால் மிக்கார் குடத்தைக் கிடந்தாய்! உன்னைக் காப்பான் நானலாப்பாய் ஆகாயத்தை நோக்கியழுவன் தோழுவனே” என்ற
திருவாய்மொழியில் அருளிச்செய்தபடியே ஆகாசத்தை நோக்க நேருவதுமுண்டு;
ஏதோவொரு காரணத்தினால் ஆகாசத்தை நோக்கினார் ஆழ்வார்; ஆகாசமடங்கலும் நக்ஷத்ர மயமாகக் காணப்பட்டது;
உலகத்தில் எந்த வஸ்துவைக் கண்டாலும் பகவத் ஸம்பந்தத்தை முன்னிட்டே அந்த வஸ்துக்கள் ஆழ்வாருடைய திருவுள்ளத்திற்கு
விஷயமாகுமே யன்றி ஸாமாந்யமான லௌகிக வஸ்துவாக விஷயமாகா தாகையாலே இந்த நக்ஷத்ரங்களிலும் பகவத் ஸம்பந்தத்தை
முன்னிட்ட உத்ப்ரேக்ஷை திருவுள்ளத்திற்படவே அந்த அத்ப்ரேக்ஷையை இந்தப் பாசுரத்தினால் வெளியிடுகிறார்.

நஷத்ரங்கள் விஷ்ணு பதம் என்னும் ஆகாசத்தில் நிரம்பி-உலகு அளந்த திருவடிகளிலே தாது நிறைந்த புஷ்பங்களை-தூவினது போலே-ஆழ்வார் திரு உலகு அளந்த விருந்தாந்ததிலே ஊறி இருந்த படி –

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந் நாள்
மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்–61-

———–

(த்ரிவிக்ரம அனுபவம் பின்னாட்டுகிறது இதிலும் )

கீழ்ப்பாட்டில் “இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்தவந்தந்நாள்” என்று
உலகளந்த வரலாற்றைச் சிறிது பிரஸங்கிக்கவே, பின்னையும் அதனை ஒருவாறு வருணித்ததுப் பாசுரங்பேச விருப்பமுண்டாகி
ரூபகாலங்கார (உருவகவணி) ரீதியிலே அருளிச்செய்கிறார்.
ஆகாசம் குடையாக அருளிச் செய்ய பொருத்தமான வற்றை அருளிச் செய்கிறார் –

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான் குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-

————

(அவதாரம் முடித்து ஷீராப்தி அடைந்தது போல்
மேகம் திரும்ப வந்தது போல் என்றால் லிங்க குறை வரும்
படி -சொல் அத்யாஹாரம் தருவிக்க வேண்டிய குறையும் உண்டே
ராமனின் தன்மைக்கு மேகத்தின் தன்மை உவமானம் தன்மை படி
பரன் -வாய்மைத்து அஃறிணை கூடாதே வாய்மையன் வசனம் மாறாடிக்கொள்ள வேண்டுமே
மேகம் அவன் மீண்டால் போல் என்று நம்பிள்ளை நிர்வாகம் )

முன்னோர்கள் இப்பாட்டை இரண்டு மூன்றுவகையாக அந்வயிக்கப் பார்த்தார்கள்;
தசரத சக்ரவர்த்திக்குத் திருமகனாகத் திருவவதரித்துக் தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்தடிந்து
அவதார காரியங்களைச் செவ்வனே தலைக்கட்டிக் கொண்டு மறுபடியும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்தானென்கிற
விஷயத்திற்கு ஓர் உபமானம் கூறுகின்றார் இப்பாட்டில்.
இதில் பின்னடிகளை உபமேய வாக்கியமாகவும் முன்னடிகளை உபமாக வாக்கியமாகவும் வைத்து வியாக்கியானித்தல் ஒருவகை; –
(அதாவது=) “அன்று திருச்செய்யநேமியான் தீயரக்கிமூக்கம் பரச்செவியுமீர்ந்தபரன்” என்றவளவும் உபமேய வாக்கியம்;
பின்தூரக்குங் காற்றிழந்த ‘சூழ்கொண்டல் பேர்ந்தும் போய் வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்து”என்றவளவும் உபமான வாக்கியம்.
இதன் கருத்து யாதெனில்;- ஆழியங்கையனான பெருமான் சூர்ப்பணகாபங்கம் முதலான காரியங்களைச் செய்து முடித்து
மீண்டும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்ததானது எப்படியிருக்கின்றதென்றால்;
கடலில் மேகமானது காற்றுத் தள்ளத் தள்ள மேலே நடந்து கொண்டே சென்று, அந்தக் காற்று எங்கே ஓய்ந்து விடுகிறதோ
அங்கிருந்து (மேகம்) மேலே செல்ல முடியாமல் அந்தக் கடலிலேயே வந்து விழுந்திடுமே; அது போலே யிரா நின்றது என்றபடி.
இக்கருத்து செவ்வனே கிடைக்கும்படியான சொல் தொடைகள் மூலத்தில் உளவோ என்று ஆராய வேண்டும்.
பாட்டின் முடிவிலுள்ள பான் என்பதை உபமேயமாகக் கொண்டால் இரண்டாமடியிலுள்ள வாய்மைத்து என்ற குறிப்புவினைமுற்றை
வாய்மையன்’ என மாற்றிக்கொள்ள வேண்டும். ‘வாய்மைத்து’ என்றிருப்பது பரன் என்ற உயர்திணைக்குச் சேராதிறே.
ஆகையாலே இப்படி யோஜித்து வியாக்கியானிப்பதில் குறையுண்டென்று மற்றொருவகையான யோஜித்து வியாக்கியானிக்கப் பார்த்தார்கள்;
(அதாவது-) பாட்டின் முடிவிலுள்ள பரன் என்ற பதத்தோடு ‘டி’ என்கிற ஒரு பதத்தை வருவித்துக் கூட்டிக்கொண்டு
பரன்படியானது- வாய்மைத்து’ என்று அந்வயித்தால் திணை மாறாட்டம் செய்ய அவசியமில்லையே என்று பார்த்தார்கள்.
ஆனாலும் இந்த யோஜநையில் – மூலத்திலில்லாத “படி” என்கிறவொரு சொல்லை வருவித்துக் கூட்டிக்கொள்ளுதலாகிற
அத்யாஹாரமென்பதம் ஒரு குறைதானே என்று குறையுற்றிருந்தனர்;
இவ்விரண்டு குறைகட்கும் இடமில்லாதபடி நஞ்ஜீயர் ஸந்நிதியிலே நம்பிள்ளை விண்ணப்பம் செய்த போஜநை தான் இங்க நாம் பதவுரையில் காட்டினது.

கீழ்ச்சொன்ன இரண்டு யோஜனைகளில் எம்பெருமானை உபமேயமாகவும் காளமேகத்தை அபமாநமாகவும் நிறுத்தி உரைக்க வேண்டியதாயிற்று.
இப்போது அங்ஙனம் வேண்டா. மூலத்தில் ஸ்வரஸமாக ஏற்படுகிறபடியே, “பின்துரக்கும் காற்றிழந்த சூல் கொண்டல்” என்பதே உபமேயம்.
இப்போது பாசுரத்தின் கருத்தை நெஞ்சிலே விளக்கக் கொள்ளுங்கள்:-

கொண்டல் உபமேயம்-பிரகிருதி மண்டலத்தில் இருப்பதால் இங்கே கண் வைத்தாலும் பகவத் விஷய சம்பந்தம் இட்டே பார்க்கிறார்-
அவதார தூண்டுதல் -வேண்டித் தேவர்கள் இரக்க வந்து பிறந்ததும்-துஷ்ட நிக்ரஹம் இஷ்ட பரிபாலனம் தர்ம சம்ஸ்தாபனம்-
பிரார்த்தனை ஈடேறா நிற்க-தள்ளிக் கொண்டு வந்த காற்றை இழந்த காளமேகம் போலே-சூல் கொண்ட மேகம் -பூர்ண கர்ப்பமுடைய மேகம்-
இப்படி மேகத்தை உபமேயமாக நிறுத்தியே வியாக்யானம் செய்து அருளினார்

பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய்
வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று
திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும்
பருச் செவியும் ஈர்ந்த பரன்–63-

——————

(உயர் திண் அணை ஓன்று -நான்கும் பரத்வ ஸ்வரூபம் –
பரத்வே பரத்வம் -தொடங்கி அர்ச்சா பரத்வம் ஈறாக எல்லா திசையிலும் –
மோக்ஷ பிரதத்வம் இருப்பதாலும் பரத்வம்
இதில் விபவ பரத்வம்
இங்கேயே பரத்வ ஸுலப்யாதிகள் அனுபவிக்கலாய் இருக்க பரமபதமும் வேண்டுமோ என்றபடி
மரா மரம் ஏழும் எய்த முதல்வாவோ மரம் இரண்டின் போன முதல்வாவோ -அங்கும் ராமகிருஷ்ண அவதார பரத்வம்
ஜடாயு மோக்ஷம் போன்ற சில இடங்களில் ராமனின் பரத்வம்
வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுள்ளே
அப்பூச்சி காட்டி -பரத்வம் வியக்தம் கிருஷ்ண அவதாரத்தில் )

கீழ்ப்பாட்டில் ஸ்ரீராமாவதார விஷயம் ப்ரஸ்துதமாகவே, எம்பெருமான் நம்மைத் திருத்திப்பணி
கொள்ளவேண்டி ராமக்ருஷ்ணாதிரூபத்தாலே மநுஷ்ய ஸஜாதீயனாய்ப் பிறந்து “உங்களைப் போலே நானும் ஒரு மநுஷ்யனே”
என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், மராமரமேழெய்தது, புள்ளி ஸ்வாய் கீண்டது முதலிய அருமையான
திவ்ய சேஷ்டிதங்களையும் இடையிடையே காட்டிக் கொண்டிருந்தானாதலால் அவற்றை நோக்கி
‘இவன் நம்மைப்போன்ற ஸமாந்ய மநுஷ்யனல்லன்; இவன் பராத்பரனான பரமபுருஷனேயாவன்’ என்று கொண்டு
அவன் பக்கல் பக்திபண்ண வேண்டியிருந்தும், அவஜாநந்தி மாம் மூடா: மாநுஷ்யம் தநுமாச்ரிதம்”
(நான் மநுஷ்யயோநியிற் பிறந்தேனென்று என்னை மூடர்கள் அவமதிக்கின்றார்கள்) என்று கீதையில் அப்பெருமான் தானே
சொல்லி வருந்தும்படியாக அநியாயமாய் அவமதித்துப் பாவிகளாய்க் கெட்டுப் போனார்களே ஸம்ஸாரிகள்;
அப்படி அவமதியாமல் அவனே பரமபுருஷனென்று பாவித்திருப்பர்களாகில் அவர்களைத் தேவர்களெல்லாரும்
கையெடுத்துக் கும்பிட்டிருப்பர்களன்றோ?- என்று அநுதபிக்கிறார்.

பரனாம் அவனாதல் பாவிப்பராகில்
உரனால் ஒரு மூன்று போதும் மரம் ஏழு அன்று
எய்தானைப் புள்ளின் வாய் கீண்டானையே அமரர்
கை தான் தொழாவே கலந்து–64-

—————-

(துவாதச திருநாமங்கள் வரிசையிலே இப் பாசுரம் –கேசவன் நாராயணன் மாதவன்
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு-பல்லாண்டு பாட -ஆள் செய்ய -கைங்கர்யம் செய்ய தூண்டுகிறார் )

இது முதல் மூன்று பாசுரங்களில் ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு நன்மை உபதேசித்தருளுகிறார்.
நெஞ்சே; நம்முடன் கூடவேயிருந்து நம்மைத் துன்பப்படுத்துகின்றனவாய், அநுபவித்தே ஒழிக்க வேண்டுமமையான
பாவங்களை முகஞ்சிதறப்புடைத்து, பின் பொருகாலும் நம்மருகே நாடவொட்டாமல் துரத்த வேண்டுமானால்
எம்பெருமான் விஷயத்திலே நல்ல பாசுரங்களை இடைவிடாது பேசிக்கொண்டேயிரு என்கிறார் இப்பாட்டில்.

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–65-

————-

(விரோதியைப் போக்குபவன் அன்றோ அவன் –
விரோதிகள் இருக்கவே பாடாமல் கைங்கர்யம் செய்யாமல் இழந்தோம்
அதுக்கும் மேல் இனியவர் போக்யன்
அதுக்கும் மேலே வகுத்த ஸ்வாமி -ப்ராப்யன்
ஆக இங்கும் நாம் கைங்கர்யம் செய்தே ஆக வேண்டும் என்பதுக்கு மூன்று காரணங்கள் )

(ராமன் -திருவாழி -சேருமோ என்னில் -பரத்வம் காட்டாதவன்
தேவேந்திரன் ஐராவதம் இருக்க ரிஷிகள் இடம் போகாதவன்
ஆத்மாநாம் மானுஷம் மணியே தசாரதாத்மஜம் என்பவன் அன்றோ என்னில்
அது இயற்க்கை
எந்த ஆயுதமும் ஸூதர்சன அம்சம் தானே )

நெஞ்சே! நீ ஸாமாந்யமாக மற்றையோருடைய நெஞ்சாக இராமல் என்னுடைய நெஞ்சாக அமைந்தபடியாலும்,
நான் ஒரு வழிபோனால் நீ ஒருவழி போகையன்றியே சாலவும் எனக்கு நீ உடன்பட்டிருக்கையாலும்
உனக்கு ஒருவிசேஷார்த்தம் சொல்லுகிறேன் கேள்;
உலகத்திலே உணர வேண்டும் பொருள்கள் பலவுள்ளனவென்று பலர் நினைத்திருப்பர்களாயினும்,
நினைத்திருப்பதாவது உணரவேண்டும் பொருள் ஒன்றே; அஃதாவது பகவத்விஷயம்.
ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்கு முணர்வு” என்று பொய்கையாழ்வாரும் அருளிச் செய்தாராகையால்
பகவத்விஷயமொன்றே நமக்கு உணரத்தக்கது; அதனையே நீ உணர்; இதனை நான் மற்றையோர்க்குச் சொன்னால் ஏசுவார்கள்;
ஆகையாலே ஒருவருக்கும் இதை நான் சொல்வதில்லை, உனக்கே சொன்னேன்- என்கிறார்.

சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை -ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது–66-

———-

(அங்கு அது நன்று என்று அறிந்து -வானவர் நாடு தானே அது –
அமரர் நித்ய ஸூரிகள் நாடு தருவது மிகவும் எளிதே – –
உமக்குப் பெரு வீடு தந்தோம் என்பான் மகிழ்ந்து –
அத்தை விட்டு
கீழே இரண்டு பாசுரங்களில் சொல்மாலை சூட்ட பல ஹேதுக்களை அருளிச் செய்து
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவர் ஆகையால் அவர் துறையிலே இழிகிறார்
மங்களா சாசனத்தில் ஆழ்கிறார்
நின் புகழில் வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ வைகுந்தம் என்று கொடுக்கும் வான் )

உபய விபூதியையும் எளிதில் தந்தருளவல்ல எம்பெருமான் திருவடிகளையே வாழ்த்து நெஞ்சமே! என்கிறார்.
தேவதாங்தரங்கள் தம் தம் அடியவர்களுக்குச் சில அபேக்ஷிதங்களைத் தாக்கடவனவாகிலும் பரமபதத்தைத் தருவது
எந்த தேவதைக்கும் முடியாத காரியம்; எம் பெருமானுக்கோ அது பரம ஸுலபமானது;
ஆகையாலே, நெஞ்சமே! நீ பரமபதந் தவிர மற்றதெல்லாம் தீது என்று விட்டிட்டு,விலக்ஷணமான அப்பரமபதமொன்றையே விரும்புவாயாகிலும்,
அது எம்பெருமானுடைய திருவருளால் எளிதில் கிடைக்கக்கூடியதே; அதனைத் தருவதில் அவனுக்கு அருமையேயில்லை அவனுக்கு
இது ஒரு சரக்கேயன்று காண்;
அங்ஙனல்லாமல் பாவோ நாந்யத்ரா கச்சதி” என்று திருவடிசொன்னாற்போலலே அந்தப் பரமபதத்தையும் உபேக்ஷித்துவிட்டு
இந்த மண்ணுலகத்திலேயே நிலைபெற்று நின்று அநுபவிக்க வேணுமென்று விரும்பினாயாகிலும்
இதுவும் அவனால் எளிதில் தரக்கூடியதே; ஆகையால் ஐஹிகமோ ஆமுஷ்மிகமோ எந்த புருஷார்த்தமும்
எம்பெருமானால் நாம் எளிதில் பெக்கூடியதே; ஆன பின்பு இப்படி ஸர்வேசக்தனான
எம்பெருமானுடைய திருவடிகளையே வாழ்த்தப்பாராய்- என்றாராயிற்று.
(பரமபதாநுபவத்திலும் இஹலோக போகத்திலும் விருப்பம் வைத்திடாமல்
கண்ணன் கழிலிணை வாழ்த்துவதொன்றிலேயே நோக்காக இருக்கக்கடவை என்பது உள்ளுறை.)

அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-

————

கீழ் அவனுடைய திருவடிகளை வாழ்த்துகை ஒழிய
போக மோக்ஷங்களை வேண்டா என்னும்படி தம்முடைய ஐக்யம் சொல்லுகிறது

(ஐக்யம் -உள்ளத்தில் கலந்தான் என்றபடி
அனைவர் உள்ளமும் இப்படி இருந்தாலும் உணர வேண்டுமே
அவனும் உபய விபூதியும் வேண்டாம்
உமது திரு உள்ளமே வேண்டும் என்கிறான்
பிரதான பாசுரம் இதுவே
பெரியவராக இது அன்றோ ஹேது
அவன் தம்மிடம் வந்து மன்னி பொருந்தி -தீர்த்தம் ப்ரசாதியாமல் -இருக்கையாலே
அவனுக்கும் நமக்கும் உண்டான ஐக்யம்
இப் பாட்டில் சொல்லுகிறது என்றபடி )

கீழ் மூன்று பாசுரங்களிலும் ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு ஹிதம் உபதேசித்தார்.
அந்த உபதேசத்திற்கு நெஞ்சு உடன்பட்டிருந்த தன் பலன் உடனே கைபுகுந்தபடியை
இது முதல் மூன்று பாசுரங்களாலே பேசுகிறார்.
எம்பெருமான் திவ்ய மங்கள விக்ரஹத்தோடே தமது நெஞ்சிலே புகுந்து ஸ்திரப்திஷ்டையாக இருக்கும்படியைப் பேசுகிறாரிதில்.

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–68-

———–

இவன் பண்ணின ஐக்யாந்தத்தாலே
சரீர ஆரம்பத்துக்கு அடியான பாபமும் போயிற்று என்கிறார்

(யதோ வாசோ நிவர்த்தந்தே -அவனது சீர்க்கடலையுமே அடக்கினேன்
அவனே புகுந்து அனுபவிப்பிக்கிறானே )

இப்படி என்னுள்ளே மிகவும் அபிநிவேசத்தைப் பண்ணிக் கலந்து வாழ்கின்ற
திருமாலின் திருக் குணங்களை அநுஸந்திக்கப் பெறுகையாகிற ஏற்றமுடைய என்னை ஒருவராலும்
திரஸ்கரிக்க முடியாதென்று மகிழ்ச்சியின் கனத்தாலே மார்பு தட்டிப் பேசுகிறார் போலேயிருக்கிறது இப்பாசுரம்.
எம்பெருமான் ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருப்பதால்-உண்டான ஹர்ஷத்தால் மார்பு தட்டி பேசி அருளுகிறார் இதில்–

அகம் சிவந்த கண்ணினராய் வல்வினை யாராவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திரு மால்
சீர்க் கடலை யுள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து –69-

———-

(ரக்ஷித்தாலும் விட்டாலும் உன்னை விடேன் -என்று அநந்யார்ஹத்வம் அருளிச் செய்கிறார் இதில்
வித்துவக்கோடு அம்மான் பதிகம் போல்
எதிரிகளை அதற்கும் -தரிசன மாத்திரத்தாலே அழியச் செய்யும் திரு அபிஷேகம் –
கண்ட மாத்திரத்திலே இவனே தேவ தேவன் -மூன்று முடிக்கு உரிய பேர் அரசு –
அழகால் ஈர்க்கும் –
ராஜாதி ராஜன் ஸர்வேஷாம் என்பதைக் காட்டும் –
ஸ்வாதந்த்ர அபிமானிகளை அழிக்கும் )

வல்வினைகள் இனிமேல் என்னை அடர்க்கதில்லா என்றார் கீழ்ப்பாட்டில்.
இனி அந்த வல்வினைகள் என்னை என்ன செய்தாலும் எனக்கு வருவதொரு கெடுதியில்லையென்கிறாரிதில்.
எம்பெருமானே ஸகலவித பந்துவுமாவன் என்று உறுதியான அத்யவஸாயம் கொண்டேனான பின்பு
இனி எனக்கு என்ன ஸம்பத்து நேர்ந்தாலும் ஸந்தோஷமுமில்லை, என்ன ஆபத்து நேர்ந்தாலும் ஸங்கடமுமில்லை யென்கிறார்.
இப்படிப்பட்ட அத்யவஸாயங்கொண்ட ப்ரஹ்லாதனுக்கு இரணியனும் அவனுடைய ஏவலாளர்களும் எத்தனையோ வகையான
தீங்குகளை யிழைத்தார்களெனினும் அவன் திறத்து ஒன்றும் பயன்படவில்லையே;
பாம்புகளை விட்டுக் கடிக்க வைத்தார்கள் தீயை வளர்த்தி அதிலே தள்ளினார்கள்; மலைகளில் நின்றும் தலைகீழாக உருட்டினார்கள்;
சிங்கம் புலி யானை முதலிய கொடிய விலங்குகளைக் கொண்டு அச்சமுறுத்தினார்கள்; இன்னமும் எத்தனையோ செய்தார்கள்.
ப்ரஹ்லாதாழ்வான் ஒன்றையேனும் லக்ஷியம் பண்ணினானென்பதுண்டோ? பலபல பட்டுப் பீதாம்பரங்களையும் அணிகலன்களையும்
தந்து மகிழ்வித்து ஸ்வாதீநப்படுத்திக் கொள்ளவும் பார்த்தார்கள்; அவற்றையுந்தான் லக்ஷியம் பண்ணினானோ?
பகவத் குணங்களில் ஈடுபட்டவர்களுக்கு அதற்குப் புறம்பான லாப நஷ்டங்களொன்றும் கணிசிக்கப்பட மாட்டாவாகையாலே ஆழ்வாரும்
யாதாகில் யாதேயினி” என்று மிடுக்குத் தோற்றமொழிகின்றார்.

சர்வவித பந்துவாக அவனை ப்ரஹ்லாதன் கொண்டது போலே அடியேனும் கொண்டேனே
இனி என் குறை எனக்கு -இல்லை எனக்கு நிகர் -என்கிறார்–

அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதே யினி–70-

————

(மாதா பிதா -என்றாலே காரணத்வம் பலிக்குமே
அடியேனுக்கு மட்டும் அன்றி ஸமஸ்த பிரபஞ்சத்துக்கும் த்ரிவித காரணமும் இவனே அன்றோ
பரத்வம் முதல் பத்து -இதுக்கு வேண்டிய மூன்றும்
காரணத்வம் இரண்டாம் பத்து –வியாபகத்வம் மூன்றாம் -நியந்த்ருத்வம் நாலாம் பத்து
நின்ற காரணம் பிரளயத்தில் இவன் ஒருவனே
தனி காரணம் ஒப்பில்லாத த்ரிவித காரணம்
அகில ஜகத் ஸ்வாமி -அஸ்மின் ஸ்வாமி
ஸ்ரீ ரெங்க நாத -மம நாத
என்று பரத்வமும் நீர்மையும் போல் இப்பாசுரம் )

ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அகப்பட உடம்பு கொடுத்தான் என்கிற நீர்மையைச் சொல்லிற்று ஆகவுமாம்
அவர்களுக்கு சத்தா ஹேதுவானான் என்கிற ஐஸ்வர்யத்தைச் சொல்லுகிறது என்றுமாம் –

எம்பெருமானையே எல்லவுறவுமாகப் பற்றினேனென்றார் கீழ்ப்பாட்டில்.
இங்ஙனே பேசின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! என்னையே மாதா பிதுவாகக் கொண்டதாகக் சொன்னீரே,
என்னுடைய படிகளெல்லாம் உமக்கு நன்றாய்த் தெரியுமோ? அறிவீராகில் சிறிது சொல்லிக்காணும்’ என்ற;
பிரமனும் சிவனுங்கூட உன்னைப் பற்றி ஸ்தைப் பெற்றார்களென்னாநிற்க உன் பெருமை என்னாலே பேச முடியுமோவென்கிறார்.

ஆழ்வீர் எல்லா உறவாகவும் பற்றினீரே-என்னை பற்றி சொல்லிக் காணும் என்ன
என்னால் உனது பெருமைக்கு ஈடாக சொல்ல முடியுமோ-என்கிறார்-

இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
தனி நின்ற சார்விலா மூர்த்தி -பனி நீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின்னுந்தி முதல்–71-

———-

(சாம்யாவாதி மூவரும் சமம் என்பர்
ஏகத்துவ வாதி -ஐக்ய வாதி -உப லக்ஷணம் முறையில் இத்தையும் சொன்னதாக கொள்ள வேண்டும்
மூவருமே ப்ரஹ்மம் இல்லை நாலாவது உத்தீர்ண வாதி
பரா அஸ்ய சக்தி விவிதையா ஸ்ரூயதே –இவனது சக்தி அளவிடமுடியாதே -என்பதை
பராசக்தி வேறே ப்ரஹ்மம் என்று எல்லாம் சொல்வார்கள் உண்டே
மூவரையும் நிரஸித்து
தனது சித்தாந்தம் ஸ்தாபிக்கிறார்
உந்தித் தாமரையே இத்தைக் காட்டுமே
காரணம் வேறே கார்யம் வேறே )

(பாருருவி நீர் எரி கால் விசும்புமாகி பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற விமையவர் தம் திரு வுரு வேறு எண்ணும் போது
ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ யொன்று மா கடலுருவம் ஒத்து நின்ற
மூ வுருவம் கண்ட போது ஒன்றாம் சோதிமுகிலுருவம் எம் அடிகள் உருவம் தானே-–ஸ்ரீ திரு நெடும் தாண்டகம்–2-)

கீழில் பாட்டிலே
எல்லாருக்கும் ஆஸ்ரயணீயன் -என்று சொல்லிற்று
இதிலே
வேறு ஸமாஸ்ரயணீயராய் இருப்பாராம் சிலரும் உண்டாய் இருக்க
இவனே ஆஸ்ரயணீயன் என்று சொல்லும் படி எங்கனே என்ன
அல்லாதாருடைய மதங்களை உபஸ்த்தாபித்து தூஷித்து ஸ்வ ஸித்தாந்தத்தை அருளிச் செய்கிறார்

கீழ்ப்பாட்டில் பிரமனுடையவும் சிவனுடையவும் பேச்சு வந்தமையாலே பரத்வ விஷயமாகப்
பிறர் சொல்லுகிற வாதங்கள் நினைவுக்கு வந்து, அவற்றைத் தள்ளி ஸித்தாந்தம் அருளிச் செய்கிறாரிதில்.

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –72-

———–

இவனே ஆஸ்ரயணீயன் என்று அறுதியிட்டால்
பின்னை அனுபவமே இறே உள்ளது

கீழ்ப்பாடில் “நிகரிலகு காருருவா” என்று விலக்ஷணமான திவ்ய மங்கள விக்ரஹத்தை அநுஸந்திக்கவே,
போலி கண்டு மேல்விழும்படியான அளவிறந்த அன்பு அத்திருமேனியிலே தமக்கு விளைந்தபடியை அருளிச்செய்கிறாரிதில்.
முதலடியின் முடிவிலுள்ள ‘பூக்கின்ற’ என்ற விசேக்ஷணம் (அடைமொழி) பூவை காயா நீலம் எல்லாவற்றிலும் அந்வயிக்கம்.
அப்போது மலர்கின்ற பூவைப்பூ, காயாம்பூ, நீலேற்பலம், கழுநீர்ப்பூ என்னுமிவற்றை நான் எப்போதெப்போது காண்கிறேனோ
அவ்வப்போதிலெல்லாம் எம்பெருமானுருவைக் கண்டதாகவே நினைத்து ஆவியும் உடலும் பூரிக்கப் பெறுகின்றேன் என்றாயிற்று.

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண் தோறும் -பாவியேன்
மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று –73-

———-

சரீர பரிக்ரஹம் பண்ணி
ருசி பிறந்த பின்பு
அபேக்ஷித்தது
காலம் எல்லாம் இரந்தாராய்த் தோற்றுகிற படி
(ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ அன்றோ )

கீழப்பாட்டிற் சொன்னபடி போலிகண்டு மேல்விழும்படியான காதலர் கிளர்ந்திருக்கச் செய்தேயும்
அப்பெருமானைக் கண்ணாலே கண்டு அநுபவிக்கப்பெறாமையாலே வருந்தி,
‘பேரருளாளனான அப்பெருமான் தன் திருமேனியை நமக்குக் காட்டுகின்றானில்லையே!’ என்று தளர்ச்சி தோற்றப் பேசுகிறார்.
ஒழிவில் காலம் எல்லாம் அழுது கதறினாலும் -இயற்கையில் அருள் நிறைந்தவர்
ஆ நிரை காத்து அருளிய பிரான் அன்றோ-இது என்ன கொடுமை –

என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -குன்று
குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி –-74-

————

(நம் பெரியவர் என்று பிராட்டியும் அவனும் அபிமானிக்கும் படி அன்றோ
நமது ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
என்னை நினைத்து தவிக்க வைத்தேனே என்று அவன் சமாதானம் செய்ய
சமாதானம் அடைந்து ஹ்ருஷ்டராய் நான் பெரியன் என்று லோக ப்ரஸித்தம்
நீ பெரியை என்பதனை யார் அறிவார் –
என்னுள்ளம் புகுந்து அன்றோ நீ சத்தை பெறுகிறாய்
என்று தாமே சொல்லிக் கொள்ளும் படி பண்ணி அருளுகிறார் )

உமக்கு என்றும் உதவிலோமாக நீர் சொல்லுவான் என்
உருக் காட்டிற்று இல்லையே என்று வெறுக்கும் படி உம்மைப் பண்ணினோமே -என்ன
அத்தை அனுசந்தித்து
என்னோடே ஒப்பார் உண்டோ என்கிறார்-

கீழ்ப்பாட்டில் “ஒன்றுமிரங்காருருக்காட்டார்” என்று வெறுத்துரைத்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
“நீர் ஏனிப்படிவருந்துகின்றீர்; உமக்கு நாம் அருளாதிருக்கிறோமோ? உருக்காட்டாதிருக்கிறோமோ?
கல்லும் கனைகடலும் வைகுந்தவானாடும் புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்-வெல்ல,
நெடியான் நிறங்கரியானுள் புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்?’ (68) என்று உம்வாயாலே பேசினதும் மறந்தொழிந்ததோ?
உகந்தருளினவிடங்களெல்லாவற்றையும் விட்டிட்டு உம்முடைய நெஞ்சிலேயன்றோ நாம் நித்யஸந்நிதிபண்ணியிருக்கிறது” என்றருளிச்செய்ய,
ஆழ்வார் அது கேட்டுத் தேறி ஆநந்தத்துக்குப் போக்குவீடாக அப்பெருமானோடே போராடுகிறாரிதில்.

ப்ரஹ்மம் நீ -உபய விபூதி நாதன் -எனக்குள்ளே ஒரு மூலையில் அடங்கப் பெற்றதால் நானே ப்ரஹ்மம்-
இதனை நீயே ஆராய்ந்து பார் -என்கிறார்

புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு–75-

———–

ஸ்ரவண ஞான அனந்தர பாவியான மனனத்தைச் சொல்லுகிறது –

கீழ்ப்பாட்டிற் கூறியவடி எம்பெருமானை நெஞ்சால் அநுபவிக்கிற வளவிலேயே
நெஞ்சு பூரித்துத் தடிக்கிறபடியைப் பார்த்தால், மெய்யே பரமபதத்திற்சென்ற பரிபூர்ண ப்ரஹ்மாநுபவம் பண்ணப் பெறில்
உலகம் முழுவதையும் வியாபிக்கவல்லேனாம்படி குறைவின்றித் தடித்துவிடுவேன்போலுமென்கிறார்.

உருவற்ற நெஞ்சு தடிக்குமோ-ஸ்தூலிப்பது-ஒரு திருப் புளிய மரத்தின் பொந்தின் அடியில் இருந்து-
நெஞ்சாலே நினைக்கும் மாத்ரத்திலே-இப்படி பூரித்தோம் ஆகில்
என்னுடைய கரும பாசங்கள் தொலையும்படி-உன்னாலே கடாஷிக்கப் பெற்று
நலமந்தம் இல்லாதோர் நாட்டில் நித்யானுபவம் பண்ணப் பெற்றால்-பின்னை தடிப்பதற்கு இடம் போதாது போலும்-

ஸ்வரூபத்தால் நீ வியாபித்து இருப்பது போலே
நானும்-அப்படியே ஸ்வபாவத்தாலே வியாபித்து இருப்பேன் போலும் என்கிறார்-
உலகம் எல்லாம் பூரிக்க வல்லனாம் படி உடல் தடிக்கும் அளவு பேர் ஆனந்தம் அடைவேன் என்கிறார் இதில்

உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப் படலம்
விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால் உள்ள
உலகளவும் யானும் உளனாவன் என் கொலோ
உலகளந்த மூர்த்தி உரை –76-

————-

அறியாதே நன்று என்று பிரமித்து
வேறே சிலர் உற்றார் என்று இருக்கும் அத்தனை இறே
விமர்த்த ஸஹரான-(பாதக ஸஹர் )- பந்துக்கள் வேறே உண்டோ என்கிறது –

எம்பெருமான் திருநாமம் செவியில் விழுந்தமாத்திரத்திலே நெஞ்ச குளிரும்படியாக
இப்படி அவன்பண்ணின பேருதவியைச் சிந்தித்து “பிரானே! நீ தவிர வேறுயாரும் எனக்க உறவினரல்லர்;
ஸகலவித பந்துவும் எனக்கு நீயே காண்” என்கிறார்.

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பெல்லாம்
நின்னன்றி மற்றிலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர்
சொல் நன்றி யாகும் துணை–77-

———-

(முதல் ஆழ்வார்கள் அயோனிஜர் -மூன்று திருவந்தாதிகள்
நான்முகன் திருவந்தாதி
பெரிய திருவந்தாதி
இந்த ஐந்தும் அர்த்த பஞ்சகம் -பரத்வாதி பஞ்சகம் சொல்ல வந்தவை என்றும் கொள்ளலாமே )

கீழ் உற்றார் இல்லை என்றது
உற்றார் உண்டாகிலும்
ஸம்ஸாரம் இனிதாகிலும்
உன் அனுபவத்தை ஒழியப் புறம்பு உண்டோ -என்கிறார் –

ஸாமாந்யமாக உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பலனை விரும்புவர்;
நல்ல துணையோடு கூடியிருத்தல் நன்று என்று சிலர் நினைப்பர்; ‘நாம் சிரஞ்ஜீவியாக வாழக் கடவோம்’ என்று சிலர் காமுறுவர்; ‘
பிள்ளைகளும் பேரன்களுமாகப் பரந்த ஸந்ததிகளுடனே வாழப் பெறுவோம்’ என்று சிலர் விரும்புவர்;
நற்குலப் பிறவியே நச்சுத் தகுந்தது’ என்று சிலர் நச்சுர்; ‘பந்துக்களோடு கூடி வாழ்தல் சிறப்பு’ என்று சிலர் கருதுவர்;
ஆகவிப்படி அவரவர்கள் விரும்பும் புருஷார்த்தங்கள் இந்த ஸம்ஸார நிலத்திலே அநர்த்தமாகப் பர்யவஸிக்குமே யன்றி இன்பமாகத் தலைக் கட்டாது;
ஒருகால் இவையெல்லாம் இன்ப மயமாகவே யிருந்தாலும் நெஞ்சே! நீ இந்த அற்ப பலன்களில் கால் தாழாது
பகவத் குணாநுபவமாகிய நல்ல காலக்ஷேபத்தையே மேற்கொள்ளக்கடவை என்று தம் திருவுள்ளத்திற்கு ஹிதமருளிச் செய்கிறார்.

துணை நாள் பெருங்கிளையும் தொல் குலமும் சுற்றத்
திணை நாளும் இன்புடைத்தா மேலும் -கணை நாணில்
ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக வுண்–78-

———-

எவ்வகையான இழிகுலத்திற் பிறந்தவர்களானாலும் எவ்வகையான கெட்ட நடத்தைகளை
யுடையவர்களானாலும் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருந்தலாகிற ஒரு குணம் உள்ளதாகில் அப்படிப்பட்டவர்களுடைய
பிறப்பு நித்ய ஸூரிகளின் திருமேனி போலே மிக்க தேஜஸ்ஸையுடையதேயாம்;
எப்படிப்பட்ட பாவங்களை அவர்கள் செய்திருந்தாலும் அவற்றுக்கு அஞ்சவேண்டியதில்லை;
சுவர்க்க லோகத்திலுள்ள தேவர்களின் பிறவியிற்காட்டிலும் அவர்களுடைய பிறவி எவ்வளவோ சீர்மை பொருந்தியதாதலால்
தேவபோனிப்பிறவியையும் இழிவாக நினைக்கவுரியது- என்று,
பகவானுக்குத் தொண்டரயிருப்பாருடைய ஜன்மமே சிறந்த ஜன்மமென்கிறார் இப்பாட்டில்.

ப்ராஹ்மணஜாதியே சிறந்ததென்று பலர் ப்ரமித்திருப்பதுண்டாகையாலே அந்த ப்ரமத்தைப் போக்கித்
தொண்டர் குலமே சிறந்த குலமென்கிறது இப்பாட்டு. பிராமண ஜாதியிற் பிறந்து வைத்தும் எம்பெருமானுக்கு அடிமைப்படாவில்
அக்குலம் சண்டாள குலததிலும் நடை கெட்டதாம்;
சண்டாள குலத்திற் பிறந்து வைத்தும் வலந்தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணற்கு ஆளென்று உள்கலந்தார்களாகில்
அவர்களே விண்ணுளாரிலுஞ் சீரியராவர்; ஆகவே ஜாதி அப்ரேயோஜகம்; பகவத் சேஷத்வமே ப்ரயோஜநம் என்றதாயிற்று.
இவ்வர்த்தம் ஸ்ரீவசந பூஷண்த்திலும் ஆசார்ய ஹ்ருதயத்திலும் நன்கு விசதமாகும்.
தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளிவரும் ஜநிகள் போலே ப்ரஹ்மஜந்மமும் இழுக்கென்பார்க்குப் பண்டை நாளில் பிறவி
உண்ணாட்டுத்தேசிறே” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்தி இவ்விடத்தில் அது ஸந்திக்கவுரியது.

எம்பெருமானை கண் எடுத்தும் பாராத பாவிகள் உள்ள இந்த லீலா விபூதி புற நாடு
பகவத் கைங்கர்ய பரர்கள் நெருங்கி உள்ள பரமபதம் உள் நாடு-இழி பிறவியும் சேஷத்வம் இருந்தால் தேஜோ கரம்–
அணைய ஊர புனைய-அடியும் பொடியும் பட -பர்வத பவனங்களிலே-ஏதேனுமாக ஜனிக்கப் பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை
பெரு மக்களும் பெரியோரும் பரிக்ரஹித்து பிரார்த்திப்பார்கள் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி

உண்ணாட்டுத் தேசன்றே ஊழ் வினையை யஞ்சுமே
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-மண்ணாட்டில்
ஆராகி என் இழிலிற்று ஆனாலும் ஆழி யங்கைப்
பேராயற்கு ஆளாம் பிறப்பு –79-

———–

(கீழே ஐஸ்வர்யாதிகள் வேண்டாம்
இதில் கைவல்யமும் ஜரா மரண மோக்ஷம் (ஸ்ரீ கீதை -7 )கிடைத்தாலும் பொருட்டாக எண்ண மாட்டேன்
அவனை மறந்து ஒரு க்ஷணமும் தரியேன் என்கிறார் )

ஸம்ஸார நிலத்தில் உண்டாகக்கூடிய எவ்வகைத் துன்பங்களும் தொலைந்து கைவல்ய மென்கிற
ஆத்மாநுபவ மஹாநந்தம் கிடைப்பதானாலும் எம்பெருமானுடைய அநுபவமில்லாமல் அவனை மறந்தொழிந்து
அநுபவிக்கும் அநுபவமெல்லாம் துக்கமயமேயாகும்- என்கிறாரிப்பாட்டில்.
கைங்கர்யம் இல்லாத குறையால் –

பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் -மறப்பெல்லாம்
ஏதமே என்றல்லால் எண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்–80-

———-

(குண அனுபவ யோக்யதை பகல் -யோக்யதை இரவு
குண அனுபவம் ஒழியாமல் இருக்கும் படி பண்ணி அருளினான்
அஹோராத்ர புஷ் கரணி -பகல் இரா இல்லாதது உண்டே )

எம்பெருமானுடைய அநுக்ரஹம் தம் மேல் அல்லும்பகலும் அமர்ந்திருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.
எம்பெருமான் என்னுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை நன்கு ஆராய்ந்திருப்பனாகில்
என்னை ஒருபொருளாக நோக்குவதற்கே ப்ரஸந்தியில்லை; அவனுடைய திருவருளுக்கு இலக்காகமாட்டாத நீசன் அடியேன்;
அவ்வளவேயோ? குணாநுபவம் பண்ணுவதற்குத்தக்க ஸஹயமுமில்லாதவனாயிருக்கின்றேன்;
இப்படிப்பட்ட என்படிகளை எம்பெருமான் ஆராய்ந்திருப்பானாகில் என்னைக் கடாக்ஷிக்கவே மாட்டான்;
இப்படிகளை ஆராயாமல், பகலென்று மிரவென்றும் பாராமல் எக்காலும் என்னை வலிகட்டாயப்படுத்தியிழுத்துத்
தன் அநுபவத்தை எனக்குத் தந்தருளி என்னை அநுக்ரஹஞ் செய்கின்றான்- என்கிறார்.

எம்பெருமான் அனுக்ரஹம் அல்லும் பகலும் தம் மேல் விழுந்த படியை-அனுசந்தித்து ஹிருஷ்டர் ஆகிறார் –
உபேஷிக்காமல் நிர்ஹேதுக கிருபையால் செய்து அருளுவதை தெரிவிக்கிறார்–

பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை
இகல் செய்து இரு பொழுது மாள்வர்-தகவாத்
தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
செழும் பரவை மேயார் தெரிந்து–81-

———

வடிவைக் கரந்து வர்த்திக்கிற அம் மாய மானை
அன்று தொடர்ந்த
அருகாழியைக் கையிலே யுடைய ஸர்வேஸ்வரனை
இளைய பெருமாளும் உதவாத தசையில் ஏத்தப் பெறுவது
அறிவு கெட்டுக் கிடந்த நான் பழுதே போக்கினேன்

ஆழ்வார் இப்போது பகவத் குணாநுபவம் பண்ணப் பெற்றதுபோல கீழ்நாள்களிலும் பண்ணப்பெறவில்லையே!
என்று அனுதாபம் அதிகரிக்கப்பெற்று, “பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சியழுதேன்” என்று
பொய்கையாழ்வார் கதறினது போலத் தாமும் கதறுகின்றார்.

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82-

————

நம்முடைய தோஷங்களை போக்குவதற்கு மங்களா சாஸனமே ஒரு வழி என்கிறார்

கீழ்க்கழிந்த காலம் போலே இனிமேல் வரும் காலமும் பாழே போகாதபடி இப்போதுள்ள
பகவத்குணநுபவம் தம்முடைய நெஞ்சுக்கு நிலைத்திருக்கும்படி ஹிதோபதேசம் பண்ணுகிறார்.
யோக்யதை இல்லாத நாம்-நெஞ்சால் நினைப்பதும்-வாயால் துதிப்பதும்-தலையால் வணங்குவதும்-அவத்யம் என்று
அயோக்யானுசந்தானம் பண்ணி பின் வாங்கும் வழக்கம் உண்டே திரு உள்ளத்துக்கு-
அதனால் ஹித உபதேசம் பண்ணி அருளுகிறார்-

அயர்ப்பாய் அயயர்ப்பாய் நெஞ்சமே சொன்னேன்
உயப்போம் நெறி யிதுவே கண்டாய் -செயற்பால
வல்லவே செய்கிறுதி நெஞ்சமே யஞ்சினேன்
மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து –83-

——–

(மனஸ்ஸூ ஒத்துழைத்தால் தானே கைகளைக் கூப்புவோம் –
தலையைத் தாழ்த்துவோம் -திருவடிகளில் பூ புனைவோம் -வாயால் ஏத்துவோம்
ஆகவே இவற்றை அதுக்கே உபகரணமாகக் கொண்டு அருளிச் செய்கிறார்
ஆழ்வாருக்கு சத்தையே இவைகள்
நமக்கும் இப்படியே இருக்க வேண்டும் என்று நெஞ்சை வியாஜ்யமாகக் கொண்டு உபதேசிக்கிறார் )

இனி எப்போதும் அயோக்யபாதையை நினைந்து பின் வாங்கலாகாதென்று
நெஞ்சுக்கு உபதேசித்தார் கீழ்ப்பாட்டில்
அப்படி பின்வாங்கி உயிர்தரித்திருக்க முடியுமாகில் அப்படியே பின்வாங்கிக்கிட என்கிறாரிப்பாட்டில்.
இத்தால்- மனமொழிமெய்களென்னும் மூன்று காணங்களும் பகவத் விஷயத்தில் ஊன்றிக் காரியம் செய்யப்பெறாவிடில்
தாம் தரித்திருக்க முடியாமையைப் பேசினாராகிறார்.
வாய் கை தலை பெற்ற பயனை அனுபவித்து-
எங்கே காண்கிறேன் நம் துழாய் அம்மான் தன்னை யான் என்று அலற்றி-சத்தை பெற்று உயிர் தரிக்கை-

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–84-

————

பகவத் விஷயத்திலே எடுப்பும் சாய்ப்புமாய் இன்னாதாகா
இன்னாதாகா நிற்கச் செய்தே
லோக யாத்திரையை அனுசந்தித்து -மேகத்திலே கண் வைக்கை –
அங்கும் அதுவேயாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –

(ஓடிக் கொண்டே தபஸ்ஸூ பண்ணிட்றே
நின்றாலே நமக்கு த்யானம் வரவில்லையே
என்ன மாயம்
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்டி அங்கும் எடுப்பும் சாய்ப்புமாகவே உள்ளதே
இவன் ஒருவனே இன்னம் கார் வண்ணன் –
வெளுக்காமல் இருக்கவே தபஸ்ஸூ பண்ணுகிறதோ)

இடைவிடாது பகவத்குணாநுபவம் செய்பவர்கட்கும் உலகத்துப் பொருள்களிலும் கண் செல்லுமே;
சென்றாலும், பகவத்ஸம்பந்தத்தை முன்னிட்டு அப்பொருள்கள் அறியப்படுமேயன்றி லௌகிகப் பொருள்களாக
மாத்திரம் அவை அறியப்படமாட்டாவே, அப்படியே மேகங்களிலே கண்செலுத்தின ஆழ்வார்
அவற்றின் உருவத்தை எம்பெருமானுடைய திருநிறமாகவே திருவுள்ளம்பற்றி,
ஆஆ! இந்த மேகங்கள் ஆசாசமடங்கலும் திரிந்து எந்த க்ஷேத்ரத்திலே சென்று என்ன தபஸ்ஸைச் செய்து
இங்ஙனே திருமாலின் திருமேனி நிறத்தைக் கொள்ளை கொண்டனவோ! என்று வியந்து பேசுகிறார்.

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருந்துத்தவ மா மருள் பெற்றதே -ஸ்ரீ திரு விருத்தம்–32—வைகல் பூம் கழிவாய் -6-1-

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பிரான் உரு ஒத்தன நீலங்களே -ஸ்ரீ திரு விருத்தம்-38–சொன்னால் விரோதம் இது -3-9-

இப்பாட்டை ஒருபுடை ஒத்தனவாக இங்கு அநுஸந்திக்கத் தக்கன.

தங்கா முயற்றிய வாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத் தவம் செய்திட்டன கொல் -பொங்கோதத்
தண்ணம் பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய
கண்ணன் பால் நல் திறம் கொள் கார்–85-

———–

கார் கலந்த மேனியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ ராமாயணம்
கை கலந்த வாழியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ பாகவதம்
பார் கலந்த வல் வயிற்றான் சீர் கலந்த சொல் –இதிஹாசங்கள் புராணங்கள்
பாம்பணையான் -சீர் கலந்த சொல் -அருளிச் செயல்கள்
சீர் கலந்த சொல்–திருநாமங்கள்

உலகத்தில் எல்லாரும் பகவத் குணாநுபவம் பண்ணியே போது போக்க வேணுமென்கிறார்.
பகவத் குணங்களை அநுஸந்தித்தால் பாவங்களெல்லாம் தொலையுமென்று ஸாமாந்யமாகப் பலரும் சொல்லுவதுண்டு;
அப்படி பாவங்களைத் தொலைத்துக் கொள்வதற்காக பகவத் குணாநுபவம் செய்யாவிடில் செய்ய வேண்டா;
பகவத் குணாநுணுந்தாந முகத்தினால் பாவங்களைத் தொலைத்துக்கொள்ளா தொழியில் ஒழிக;
ஒவ்வொருவனும் போதை போக்கியாக வேண்டுமே; வேறு எந்தக் காரியஞ் செய்தால் போதுபோரும்.
பகவத் குணாநுபவத்தாலன்றி வேறொன்றாலும் போது போக்க முடியாதாகையாலே காலக்ஷே பார்த்தமாகவாது
ஒவ்வொருவனும் பகவத் குணாநுபவம் பண்ணியேயாக வேணுமென்கிறார்.

கால ஷேப அர்த்தமாக-பகவத் குணாநுபவம் பண்ணியே ஆக வேண்டும்
என்கிறார் –

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-

————-

லோகத்தாரைக் கொண்டு கார்யம் இல்லை இறே
நீ
முன்னம் எப்போதும் இத்தையே சொல் -என்று
நெஞ்சுக்கு உபதேசிக்கிறார் –

(பயனன் றாகிலும் பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-

ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லையோ என்னில் –
க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யான்ன தத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே-
பஞ்சாசத் கோடி விச்தீர்ணையான பூமியும் சத்ருசமம் அல்ல என்று இறே சாஸ்திரம் –
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது அங்கும் இங்கும் -என்கிறபடி முமுஷு திசையிலும் முக்தி திசையிலும்
இனி எத்தைச் செய்வோம் என்கிற தலை சீய்ப்போடே காலம் போக்கும் அத்தனை –
உபகாரம் அதுக்கு பிரத்யுபகாரம் தேடுகையிலே மூட்டும் -உபகார கௌரவம் -பிரத்யுபகாரம் இல்லாதபடி பண்ணும் –
அதுக்கு சத்ருச பிரத்யுபகாரமாக வேணும் –
அது உண்டாகில் இறே இவன் பண்ணலாவது-இனி எத்தைச் செய்வோம் என்கிற தலை சீய்ப்போடே காலம் போக்கும் அத்தனை –
இவன் திருத்தித் தருகையாலே ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு ஆத்ம சமப்பர்ணம் பண்ணலாம் –
இவன் தானே திருத்தினவற்றை இவனுக்குச் கொடுக்கை சத்ருசம் அன்றே –
ஸ்ரீ ஆச்சார்யர் திருத்தி ஸ்ரீ பகவான் இடம் கொடுக்கையாலே ஆத்மா ஆச்சார்யர் சொத்து ஆகி விட்டதே –
அதனாலே அத்தை ஸ்ரீ பகவானுக்கு சமர்ப்பிக்கலாம் -ஸ்ரீ ஆச்சார்யருக்கு முடியாதே என்றபடி )

முதற்பாட்டிலே தம்முடைய நெஞ்சை விளித்து அருளிச் செய்தது போலவே
முடிவு பாட்டையும் நெஞ்சை நோக்கியுரைத்து முடிக்கிறார்.
பகவத் குணாநுபவத்தால்தான் உலகத்தார் யாவரும் போதுபோக்க வேணுமென்று கீழ்ப்பாட்டில் சொன்னேன்;
அவர்கள் தங்கள் போதை எப்படி போக்கினாலும் போக்கிக் கொள்ளட்டும்; சூதாடியோ, சதுரங்கம் பொருதோ, களவாடியோ,
கண்ணுறங்கியோ எவ்விதமாகவேனும் போரதைப் போக்கிக் கொள்ளட்டும்; அவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை? நெஞ்சமே!
உனக்கு நான் சொல்லுவதைச் சிக்கனம் கேளாய்; இன்றைக்கோ நாளைக்கோ; இன்னும் பத்தெட்டு வருஷங்கள் கழித்தோ
மற்றுமெப்போது நான் உனக்கு உரைப்பதானாலும் இந்த ஒருசொல்லையே சொல்லுவேன்; அந்தச் சொல் யாதெனில்-
நம்மேல்வினைகடிவான் எப்போதும் கைகழலாநேமியான் மொய்கழலே ஏத்த முயல்” என்பதே.
அடியாருடைய விரோதிகளைத் தொலைப்பதற்காகவே “உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுடரொழியும் சங்கும்,
மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால்” என்றபடி திவ்யாயுதங்களை எப்போதும் தரித்திரா நிற்கும் பெருமானுடைய
பரமபோக்கியமான திருவடிகளை ஏந்துவதற்கு உத்ஸாஹப்பட்டுக் கொண்டிருப்பதே
உனக்கு எப்போதும் காரியமாகக் கடவதென்று நெஞ்சுக்குரைத்துத் தலைகட்டினாராயிற்று.

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-

கீழ்ப் பிரபந்தமாகிய திருவாசிரியத்திற் போலவே இப்பிரபந்தத்திலும்
தம் திருநாமிட்டுக் கவிபாடுதல், பிரபந்தாத்யயநத்திற்குப் பலன் சொல்லுதல் முதலியவற்றை விட்டருளினர்; நிர்ப்பந்தமில்லாமையாலே.

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீஅதர்வண வேதம்

May 27, 2023

ஸ்ரீ பெரிய திருவந்தாதி-ஸ்ரீ அதர்வண வேத சாரமாகும் –

(ஸ்ரீ அதர்வண வேதம் –5977-மந்த்ரங்கள் கொண்டது
உச்சிஷ்டே நாம ரூபம் ஸோஷிட்டே லோக அஹித –சர்வ சேஷி -அனைத்துக்கும் ஆதாரம்
ஸ்ருஷ்டித்தவைகளுக்கு நாமம் ரூபம் அருளி உள் புகுந்து தரிக்கிறான்
கஸ்மை தேவயா ஹவிஷா விதேம–601-மந்த்ரம் -என்று கேட்டு
அவனே உபய விபூதி நாதன் -தேஜோ மயன் –
ஆனந்த மயன் -பரம புருஷார்த்தமும் அவனே

ஸர்வான் காமான் பூரேத்யாபவன் பிரபவான் பவான் ஆஹுதி ப்ரோ விதார்ததஸ்திதி பாணோ பபதஸ்யதி -566-
அபீஷ்டங்கள் அனைத்தும் அருளுபவன் -சர்வருக்கும் சமாஸ்ரயணீயன் -சர்வாத்மா -பரஞ்சோதி -சர்வசக்தன் -சனாதனன் –

தோஷோ காய ப்ருஹத் காய த்யுமத்தேஹி அதர்வண ஸ்துதி தேவம் ஸவிதாரம் 1291-
இரவும் பகலும் அவன் கீர்த்தி உயர்ந்த குரலில் பாடி அவனது பரஞ்சோதி ரூபத்தையும் சர்வ காரணத்தையுமே சிந்தித்து இருப்போம்

ஸோ அக்னி சே உ ஸூர்ய ச உ ஏவ மஹாயமே –ரஸ்மி பிர் நாப ஆப்ருதம் மஹேந்திர யேத்யாவ்ருத சர்வ அந்தர்யாமித்வம் -3695-
அவனே அக்னி -ஸூர்யன் -சர்வ நியாமகன் -சர்வ ஸ்வாமி -அனைத்து உள்ளும் புகுந்து நிர்வகிக்கிறான் –

தம் இதம் நிகதம் ஸஹ ச ஏஷ ஏக ஏகாவ்ருத்யேக ஏவ ய ஏதம் தேவம் ஏகாவ்ருதம் வேத – (3710)
பரமாத்மா -புருஷோத்தமன் -சர்வ சக்தன் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்-
தானே தன்னை ஆழ்வாராதிகளுக்குக் காட்டிக் கொடுக்கிறான் –அவர்கள் திரு உள்ளத்தில் ஆதித்ய மண்டல வர்த்தி போல்
பரஞ்சோதி ரூபத்துடன் அவர்களுக்கு காட்சி கொடுத்து அருளுகிறான் – 5035
அவனே பரமாத்மா பரஞ்சோதி என்று காட்டி அருளி மயர்வற மதி நலம் அருளுகிறான் –5185

பூரித இந்த்ர வீர்யம் -5048-நீயே உபய விபூதி நாதன் -அடியோமை பரம புருஷார்த்தம் அருளி உன் தாள் இணைக் கீழ் இருத்தி அருள்வாய்

ய ஏக இத்தவ் யஸ் சர்ஷ நீநா மீந்த்ரம் — 5208–சகல அபீஷ்ட வரதன் -ஸத்ய ஸங்கல்பன் -சர்வ சக்தன் -சர்வஞ்ஞன்-
இது கொண்டு தேவாதி தேவன் பேர் அருளாளன் ஸத்ய ஸங்கல்பன் -ஸநாதனன் –
ஸத்யம் ஞானம் – அநந்தம் -ப்ரஹ்மம் -ஜகதாரகன் -ஜகத் காரண பூதன் –
ஸமஸ்த த்ரிவித காரணன் -இத்யாதிகளை சொல்லும் மந்த்ரம் –
அவனை ஆஸ்ரயிப்போம் )

————-

அதர்வண வேதம் பிரம்மவேதம் எனப்படும்.
இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது.
இது உச்சாடனம் மாந்த்ரீகம் போன்றவற்றால் தீய சக்திகளையும் எதிரிகளையும் வென்று
உலகத்தில் வெற்றி பெறும் வழிகளைக் கூறுவது எனலாம்.
சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும். இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.

அதர்வண வேதத்தின்   கடைசி காண்டங்கள் – அதாவது பத்தொன்பதாவது, இருபதாவது காண்டங்கள் — ரிக் வேத செய்யுட்களை மீண்டும் கூறுகின்றன.

பத்தொன்பதாவது காண்டம், பாடல் 53, 54 ( சூக்தங்கள் 569 , 570 ; தலைப்பு-காலன் )

தமிழில் காலன் என்றால் யமன்; காலம் என்றால் நேரம்.

இரண்டும் நம்மை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாள் நமக்குக் கழிந்தால், யமனுடைய வீட்டுக்குப் போக தயார் ஆகிறோம் என்று பொருள்.

அதர்வண வேதத்தில்  ஸூரியனுடன் சவாரி செய்யும் முனிவர்கள் பற்றிய குறிப்பு வருகிறது . வியாக்கியனக்காரர்கள் அங்கு வாலகில்யர் என்னும் குள்ள முனிவர்கள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் புறநானூற்று வரி அப்படியே உள்ளது.

சுடரொடு திரிதரும் முனிவரும்” என்பது சிலப்பதிகார வரி. “சுடரொடு கொட்கும் அவிர்சடை   முனிவரும்” என்பது புறநானூற்று வரி . (பாடல் 43) இதை எழுதியவர் பெயர் நரசிம்மன். அதாவது தாமப்பல் கண்ணன்

ஓம்  வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி

தன்னோ நரசிம்ஹ ப்ரசோதயாத் — என்பது நரசிம்ம காயத்ரி  மந்திரம்

இதில் தீக்ஷ்ண தம்ஷ்ட்ர  என்பதன் தமிழ் ஆக்கமே “தாமப்பல் “. கண்ணன் என்பது அவர் பெயர் அல்லது குடும்பப் பெயர் என்றும் கொள்ளலாம் .

முதல் துதி ஸூரியனைப் போற்றுகிறது. இதில் ஸூரிய ஒளியில் காணப்படும் 7 வண்ணங்கள் 7 குதிரைகளாக வருணிக்கப்படுகின்றன. இதை நாம் வானவில் ஏற்படுகையில் காண்கிறோம். சூரிய ஒளியை  PRISM  பிரிஸம் என்னும் முப்பட்டைக் கண்ணாடி வழியே பாய்ச்சினாலும் தெரியும் .

முதல் துதியின் முதல் மந்திரத்தில் அறிஞர்களான கவிகள் அவனில் ஏறுகிறார்கள் எல்லா புவனங்களும் அவனுடைய சக்கரங்கள் “– என்ற வரிகள் வருகின்றன. ஏனைய ஒன்பது மந்திரங்களில் இன்னும் பல அறிவியல் தகவல்கள் உள்ளன..

அல்ட்ரா வயலெட் கிரணங்களைத் தடுத்து நிறுத்தும் ஓசோன் வளி மண்டலம (OZONE LAYER, Ultra Violet Rays)  போன்றவர்களாக இருக்கலாம் . இப்பொழுது அவர்கள் “காலத்தில் பயணம் செய்யும் முனிவர்கள்” என்ற பொருளும் தொனிப்பதை TIME TRAVELLERS உணர்கிறேன் .

கால யந்திரம் – டைம் மிஷின் TIME MACHINE NOVEL BY H G WELLS  — என்ற கதையை சுமார்  நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எழுதினார். அது முதற்கொண்டு மனிதன், பழைய காலத்துக்குப் பயணம் செய்ய முடியுமா? வருங்காலத்துக்குப் பயணம் செய்து எதிர்காலத்தைப் பார்க்க முடியுமா ?என்றெல்லாம் விவாதித்து வருகிறான். இதில் இந்துக்களுக்குத் தெளிவான கருத்து உள்ளது.

கடந்த காலத்தில் நடந்தவற்றைப் பார்க்க முடியும் ; குறிப்பாக நம் உடலுக்குள் நம் PREVIOUS BIRTH STORIES முன் பிறவிக் கதைகள் ஒரு பிலிம் சுருள் FILM ROLL போல சுருட்டி வைக்கப்பட்டுள்ள்ளது என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். நம் புராணக் கதைகளும் இதையே புகலும் . சிலப்பதிகாரத்தில் கூட சாமி வந்து ஆடும் பெண்மணி, கண்ணகி, கோவலன் ஆகியோரின் முற்பிறப்பு வரலாறுகளைக் கூறுவதைக் காண்கிறோம்.

சுந்தரரும் அப்பரும் “காலத்தில் பயணம்” TIME TRAVEL  செய்து இறந்த பையனையும் பெண்ணையும் மீட்டு  வந்ததையும் எழுதியுள்ளேன். அவர்கள் இப்போது என்ன வயதுடன் இருப்பார்களோ அப்படி வளர்ந்த நிலையில் திரும்பி வந்தார்கள் என்று சேக்கிழார் பாடுகிறார்; 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடியது. ஆக இந்துக்கள் சொல்லுவது காலம் என்பது வட்டவடிவமானது CYCLICAL. அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை. ஆனால் ஐன்ஸ்டைன் EINSTEIN போன்ற விஞ்ஞானிகள் காலம் என்பது நேர்கோட்டில் பயணம் செய்கிறது என்கிறார்கள். நாம் சொல்லுவதே சரி என்பதை அவர்கள் விரைவில் ஒப்புக் கொள்ளுவர். மேலும் தேவர்கள் ஒளி வடிவில் (DEVA= LIGHT) இருப்பதால் ஒளியின் வேகத்தில் செல்வதோடு மனோ வேகத்திலும் (Speed of Thought) செல்ல முடியும் என்பது இந்துக்களின் கண்டு பிடிப்பு.

ஒளியின் வேகத்தில் ஒருவர் பயணம் செய்தால் அவர்களுக்கு என்றும் 16 வயது; அதாவது நித்திய மார்க்கண்டேயன் என்று ஐன்ஸ்டைன் சொல்கிறார். ஆனால் அந்த வேகத்தில் பயணம் செய்ய முடியாது என்பதும் அதை மிஞ்சவே முடியாதென்பதும் அவர் தம் துணிபு. ஆனால் நாம்,  அதை மிஞ்ச முடியும் எதிர்காலத்தைச் சென்று பார்ப்பதோடு அதில் தலையிடவும் முடியும் என்கிறோம்.

பகவத் கீதையின்   விஸ்வரூப தரிசனக் காட்சியைப் படித்தவர்களுக்கு இது தெள்ளிதின் விளங்கும். அர்ஜுனன், தனது எதிரிகளைக் கொல்லுவதற்கு முன்னமே, அவர்கள் கொல்லப்பட்டு கிருஷ்ணனின் வாயில் புகுவதைக் கிருஷ்ணன் காட்டுகிறார். ஆக எதிர்காலத்தில் நடக்கப்போவதைக் காணலாம்.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள்,  அரியலூரில் காவிரி வெள்ளத்தில் முழு ரயிலும் அடித்துச் செல்லப்போவதை அறிந்து,  எம் எஸ் சுப்புலட்சுமி அந்த ரயிலில் போகவேண்டாம் என்று தடுத்ததை   உலகமே அறியும் . மைக்கேல் ஜாக்சன் தற்கொலை, பிரேமதாச  குண்டு வெடியிப்பில் உடல் சிதறி அழிதல் — இவற்றை முன்னரே அறிந்த சத்ய சாய்பாபா — அவர்களை பார்க்க மறுத்ததையும் பத்திரிக்கைகளில் நாம் படிக்கிறோம்.

இந்திரா காந்தியின் துர் மரணத்தை அறிந்த காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், அவரைப்      பார்க்க மறுத்தார். ஆனால் சுவாமிகளின்  பரம சீடரான இந்திய ராஷ்ட்ரபதி ஆர். வெங்கடராமன் வேண்டியதன் பொருட்டு சந்தித்தார். அப்போதும் அவர் போக்கு சரியில்லை என்றே சுவாமிகள் எச்சரித்தார் ; காஞ்சி மடத்துக்கு கொடுமை இழைத்த ஜெயலலிதாவின்  பயங்கர, பரிதாபச் சாவினை முன்னரே அறிந்த சங்கராச்சார்யார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்  , ஜெயலலிதாவுக்கு எதிரான ஆபிசார யக்ஞத்தை (தீயில் மிளகாய் போட்டு மந்திரம் சொல்லி எதிரியை ஒழிக்கும் வேள்வி) தடுத்து நிறுத்தினார்.

அவர்களுக்கு எதிர்காலத்தில் நடக்கப்போவது தெரியும். ஆனால் பெரும்பாலும் அதைத் தடுத்து நிறுத்த மாட்டார்கள் . ஏசுவுக்கு தான் அகால மரணம் அடையப்போவது தெரிந்து 13-ஆவது ஆள் காட்டிக் கொடுப்பான் என்கிறார். ஆயினும் “ஏ தேவனே, ஏ தேவனே என்னை ஏன் கைவிட்டீர் (ஏலி, ஏலி லாமா சபக்தானி ) என்று சாதாரண மனிதன் போல சிலுவையில் கதறினார்.

நாரத மகரிஷி பற்றிய குறிப்புகள் தமிழில் முதல் தடவையாக சிலப்பதிகாரத்திலும், சம்ஸ்க்ருதத்தில் அதர்வண வேதத்திலும் வருகிறது. த்ரி லோக சஞ்சாரியான அவர் மனோ வேகத்தில் பல உலகங்களுக்குச் சென்று வந்ததை இந்துக்கள் எல்லோரும் அறிவர் .

எல்லா வேதங்களும் கி.மு.3102 ஐ ஒட்டி வியாசரால் நான்காகப் பகுக்கப்பட்டவையே; அதாவது இற்றைக்கு 5100 ஆண்டுகளுக்கும் முன்னரே 4 வேதங்களும் இருந்தன.
சங்க காலம் முதல் தமிழர்கள் சொல்லுவது நான்மறை; அதாவது 4 வேதங்கள். ஆனால் மனு முதலானோர் சில இடங்களில் த்ரயீ வேத = மூன்று வேதம் என்பதால் வெள்ளையர்களுக்கு சிறு குழப்பம்; அவர்களுக்கு தமிழும் தெரியாது. ஆகையால் அதர்வண வேதத்தை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பர்; உண்மையில் அதர்வண வேதம் என்பது அன்றாடம் பயன்படும் மருத்துவம், தாயத்து, பேய் ஓட்டல், விஷங்களை இற க்கல், தாய் மொழி, தாய் நாடு, “பூமி என்னும் அன்னை”, எதிரிகளை ஒழிப்பது எப்படி என்பது பற்றிப் பேசுவதால் அதைச் சமயச் சடங்குகள் பற்றிப் பேசும் மூன்று வேதங்களுடன் சேர்க்காமல் பேசினர்.
வேத விற்பன்னர்களின் ஆயுதம் அதர்வண வேதம் என்று அகத்தியர் சொல்லுவார். கோபத பிராமணமோ எனில் நான்கு வேத புரோகிதர்களும் யாக யக்ஞங்களில் கலந்து கொள்வதைக் குறிப்பிடுகிறது. ஆகையால் வெளிநாட்டினர் சொல்வதை நம்ப வேண்டியதில்லை.
அதர்வண வேதத்தில் 6000 மந்திரங்கள் 760 துதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்படும் சில அபூர்வ தாவரங்கள் அரிதானவை. அவைகளைத்தான் தாயத்துகளாக அணிந்து வந்தனர்.
அதர்வண வேதத்தை 20 காண்டங்களாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு காண்டத்திலும் எது சம்பந்தமான மந்திரங்கள் உள்ளன என்ற இந்தப் பட்டியலைப் பார்த்தாலேயே நம் முன்னோர்களின் சிறந்த நாகரீகமும் உயர்ந்த சிந்தனையும் உடையவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும்.
1-ம் காண்டம்:-
முதல் காண்டத்தின் முதல் மந்திரமே வாசஸ்பதி என்னும் வாக் (பேச்சு) தேவனையும் வசோஸ்பதி என்னும் செல்வ தேவனையும் வணங்கும் மந்திரம் ஆகும்.
கல்விக்கான மந்திரங்கள்
வெற்றிக்கான மந்திரங்கள்
எதிரிகளை அழிப்பதற்கான மந்திரங்கள்
நோயை அகற்றுவதற்கான மந்திரங்கள்
தண்ணீர் தேவதை பற்றிய மந்திரங்கள்
வரங்களைப் பெறும் மந்திரங்கள்
தர்மம் தொடர்பான மந்திரங்கள்
இதில் உள்ளன. ஒவ்வொன்றிலும் 4 மந்திரங்களைக் கொண்ட
35 துதிகள் முதல் காண்டத்தில் காணப்படுகின்றன.
—-
2-ம் காண்டம்:-
இதில் ஒவ்வொன்றிலும் 5 மந்திரங்களைக் கொண்ட 36 துதிகள் காணப்படுகின்றன.
நோயைக் குணப்படுத்தும் மந்திரங்கள்
ஜங்கிடா மணி என்னும் தாயத்து மந்திரங்கள்
அக்னி, இந்திரன், பரப் பிரம்மம் பற்றிய துதிகள்
இந்தக் காண்டத்தில் இருக்கின்றன.
ஜங்கிடா மணி என்னும் தாயத்துக்கான தாவரம், மரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது!
————
3-ம் காண்டம்:-
ரிக் வேதத்தில் இடம்பெற்ற வசிஷ்ட மஹரிஷியின் முக்கிய மந்திரம், கொஞ்சம் மாறுதல்களுடன் இதில் உள்ளது. இது செல்வத்தை வேண்டும் மந்திரமாகும்.
எதிரிகளத் தோற்கடிப்பதற்காக்ன மந்திரம்
தேச ஒற்றுமைக்கான மந்திரம்
பட்டாபிஷேக மந்திரம்
பர்ண மணி என்னும் அபூர்வ தாயத்து மந்திரம் — இந்தக் காண்டத்தில் இருக்கின்றன.
பர்ண மணி என்னும் தாயத்துக்கான தாவரம், மரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது!
இதில் ஒவ்வொன்றிலும் 6 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன.
——-
4-ம் காண்டம்:-
இதில் ஒவ்வொன்றிலும் 7 மந்திரங்களைக் கொண்ட 40 துதிகள் காணப்படுகின்றன.
ரிக் வேதத்தில் உள்ள யார்? என்னும் மந்திரம் இதில் இடம்பெறுகிறது. யார் என்றால் சம்ஸ்கிருதத்தில் க:– இது பிரம்மாவுக்கும் பெயர்! அதாவது ஓரெழுத்துச் சொல். இதை வைத்து யாரை வணங்குவது என்று மந்திரம் முழுதும் திரும்பத் திரும்ப வரும்.
இதில் அதிசய ஒற்றுமை என்ன வென்றால் தமிழ் “க” பிராமி லிபியிலிருந்து வந்தது. அந்த “க” பிராமியில் சிலுவை வடிவில் இருக்கும். அது எகிப்தில் கடவுளைக் குறிக்கும் சித்திர எழுத்து. ஆனால் வெறும் சிலுவையாக இல்லாமல் இரு புறமும் கைகளை உயரத் தூக்கிய மனிதன் போல மேல் நோக்கிய கோடுகளுடன் இருக்கும்.
விஷத்தை அகற்றும் மந்திரம்
எதிரிகளை நாடு கடத்தும் மந்திரம்
பலத்தை அதிகரிக்கும் மந்திரம்
தூக்கமின்மையை அகற்றும் மந்திரம்
சங்கு கிழிஞ்சல்களைக் கொண்டு தாயத்து செய்யும் மந்திரம்
மரங்கள், மழையை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள்
மூலிகைகள் பசுக்களை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள்
பாவங்களைப் போக்கும் மந்திரங்கள்
புழுக்களை அகற்றும் மந்திரங்கள்
சக்தியை அதிகரிக்கும் மந்திரங்கள்
————-
5-ம் காண்டம்:-
இதில் ஒவ்வொன்றிலும் 12 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன.
குஸ்ட, சிலாச்சி, லக்ஷா மணி என்னும் தாயத்து மந்திரங்கள்
இவை என்ன தாவரம் என்பது பற்றி தகவல் கிடைக்கவில்லை.
வெற்றிக்கான மந்திரங்கள்
பிரம்மன் பற்றிய மந்திரங்கள்
எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்
பிராமணர்கள், பசுக்களைப் போற்றும் மந்திரங்கள்
எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்
ஆன்மீக பலத்தை உயர்த்தும் மந்திரங்கள்
ஆயுளை அதிகரிக்கும் மந்திரங்கள்
டாமாரங்களை அடித்து எதிரிகளை பயமுறுத்தும் மந்திரங்கள்
ஒரு அபூர்வ பசுவை வைத்திருப்பது பற்றி அதர்வணுக்கும் வருணனுக்கும் இடையே நடக்கும் சுவையான சம்பாஷணை,
பிராமணனின் மனைவி கடத்தல் பற்றிய செய்தி
பிராமணர்களை ஒடுக்கும் கொடுமை
ஆகியனவும் உள்ளன.
போர் முரசுக்குச் சொல்வது போன்ற இரண்டு மந்திரங்கள்.
————
6-ம் காண்டம்:-
இதில் ஒவ்வொன்றிலும் 3 மந்திரங்களைக் கொண்ட 142 துதிகள் காணப்படுகின்றன.
அமைதிக்கான மந்திரங்கள்
வளையல்கள் பற்றிய மந்திரங்கள்
‘ரேவதி’ தாயத்து பற்றிய மந்திரங்கள்
சவிதா, இந்திரன் போற்றும் மந்திரங்கள்
எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்
பாம்பு விஷத்தை இறக்கும் மந்திரங்கள்
————-
7-ம் காண்டம்:-
இதில் 118 துதிகள் காணப்படுகின்றன.
நீண்ட ஆயுளைத் தரும் மந்திரங்கள்
தாய் நாடு பற்றிய மந்திரங்கள்
தாய் மொழி பற்றிய மந்திரங்கள்
ஜனநாயக சட்டசபை பற்றிய மந்திரங்கள்
ஆத்மா பற்றிய மந்திரங்கள்
சரஸ்வதி மந்திரங்கள்
கணவன்– மனைவி நல்லுறவு பற்றிய மந்திரங்கள்
————-
8-ம் காண்டம்:-
இதில் ஒவ்வொன்றிலும் 26 மந்திரங்களைக் கொண்ட 10 துதிகள் காணப்படுகின்றன.
பேயை ஓட்டும் மந்திரங்கள்
ராக்ஷசர்களை விரட்டும் மந்திரங்கள்
விராஜ்- விராட் என்னும் தேவதை பற்றிய மந்திரங்கள்
இறந்துகொண்டிருக்கும் மனிதனை எழுப்பும் குளிகை பற்றிய மந்திரங்கள்
———–
9-ம் காண்டம்:-
ஒன்பதாம் காண்டத்தில் பத்து துதிகள் இடம்பெறுகின்றன.
இதில் விருந்தினரைப் போற்றும் நீண்ட மந்திரம் உளது.
அஸ்வினி தேவர்களின் இனிமையான உதவி பற்றிய மந்திரமும் உளது.
ரிக் வேதத்தில் முதல் மண்டலத்திலுள்ள தீர்கதமஸ் என்ற முனிவரின் மிகவும் புகழ்பெற்ற மந்திரம் இங்கே இடம்பெறுகிறது இதில்தான் “கடவுள் ஒருவரே; அறிஞர்கள் அவரை வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர்” என்ற புகழ் பெற்ற வாசகம் வருகிறது.
இது தவிர கிருஹப் ப்ரவேச மந்திரம்
நோய்களைத் தடுக்கும் மந்திரம்
பசுக்கள், காளைகளைப் பற்றிய மந்திரங்கள்
ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.
——–
10-ம் காண்டம்:-
இதில் ஒவ்வொன்றிலும் 25 மந்திரங்களைக் கொண்ட 10 துதிகள் காணப்படுகின்றன.
கேன (யாரால், எதனால்) என்ற கேள்வி மந்திரமும்
பிரபஞ்சத்தைத் தாங்கும் ஸ்கம்ப (தூண்) என்ற மந்திரமும்
பரப் பிரம்மம், பசுக்களைப் போற்றும்
விஷத்தை அகற்றும் ராக்ஷசர்களை விரட்டும் மந்திரங்கள் ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன
——–
11-ம் காண்டம்:-
பதினோராம் காண்டத்தில் 10 துதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சராசரியாக 31 மந்திரங்கள் இருக்கும்.
மூன்றாவது துதி உரைநடையில் இருக்கிறது. பாலில் சோறு பொங்கும் விஷயம் இது. எட்டாவது துதி, பல கடவுளரின் தோற்றம் பற்றியும் மனிதனின் படைப்பு பற்றியும் பாடுகிறது.
எதிரிகளை அழிப்பதற்கான மந்திர உச்சாடனங்கள், கடைசி இரண்டு துதிகளில் இடம்பெறும்.
ருத்ரனைப் பற்றிய நீண்ட துதி இருக்கிறது.
பிரம்மசர்யத்தின் சிறப்பு
உணவு தானியம் பற்றிய பிரார்த்தனை
பிரம்மனைப் பற்றிய மந்திரங்கள்
இந்தக் காண்டத்தின் சிறப்பு
———
12-ம் காண்டம்:-
தாய்நாடு பற்றிய அருமையான நீண்ட கவிதை
காச நோயைத் தடுக்கும் மந்திரம்- இந்தக் காண்டத்தின் சிறப்பு
பன்னிரெண்டாம் காண்டத்தில் 5 துதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சராசரியாக 60 மந்திரங்கள் இருக்கும்
இரண்டாவது துதி அந்திம யாத்திரை பற்றியது. இதன் பாதிப் பகுதி ரிக்வேதத்தில் (10-18) இருந்து எடுக்கப்பட்டது. ஒரு பிராமணனிடமிருந்து பசுவைத் திருடினால் என்ன பாவம் வரும் என்பதை 4, 5 துதிகளில் காணலாம்.
———–
13-ம் காண்டம்:-
பதிமூன்றாம் காண்டத்தில் 4 துதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சராசரியாக 47 மந்திரங்கள் இருக்கும்
சிவப்பு (ரோஹித) வர்ணத்தைப் போற்றும் துதிகள் இதில் அடங்கும். சிவப்பு வர்ணம் என்பது சூரியனையும் அக்னியையும் குறிக்கும்.
அந்திமக் கிரியை பற்றிய மந்திரங்களைக் கொண்ட காண்டம்
——–
14-ம் காண்டம்:-
இரண்டே துதிகள்; ஆனால் மொத்தம் 139 மந்திரங்கள். கல்யாணம், சாந்தி முகூர்த்தம் தொடர்பான விஷயங்கள் உள; ரிக் வேத துதி 10-85 சில மாறுதல்களுடன் காணப்படும்.
———
15-ம் காண்டம்:-
இதில் 18 துதிகள் உள. உரைநடையில் உளது. புரியவில்லை என்று வெள்ளைக்காரர்கள் எழுதியுள்ளனர். இதில் விராத்தியர்கள் எனப்படும் நாடோடிப் பிராமணர்கள் பற்றி உளது. அவர்கள் யாக யக்ஞாதிகளைச் செய்யாதவர்கள்; சித்தர்கள் போல!
பரமாத்மனைப் போற்றும் மந்திரங்களும் உண்டு
———–
16-ம் காண்டம்:-
இதில் 9 துதிகள் உள. பெரும்பாலும் உரைநடை. தாயத்துகள், குளிகைகள் பற்றிய அதிசய விஷயங்கள் நிறைய உள்ளன.
———–
17-ம் காண்டம்:-
ஒரே துதி! ஆனால் 30 மந்திரங்கள். இந்திரனைக் குறித்த துதியில் விஷ்ணு, சூரியன் ஆகியோருடன் அவரை ஒப்பிடுவர். மனிதர்கள், மிருகங்கள் ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் நலன் வேண்டும் துதி!
வெற்றிக்கான பிராத்தனை மந்திரங்கள்.
———-
18-ம் காண்டம்:-
நாலே துதிகள்; ஒவ்வொன்றிலும் சராசரி மந்திரங்கள் 70; அந்திமக் கிரியைகள், திதி முதலியன இதில் அடக்கம். பல துதிகள் ரிக் வேத துதிகள்- சில மாறுதல்களுடன்.
முதல் துதி யமா-யமி உரையாடல்.
———-
19-ம் காண்டம்:-
72 துதிகள்; ஒவ்வொன்றிலும் சராசரி மந்திரங்கள் 8. பல இடைச் செருகல் இருப்பதாக வெள்ளையர் கணிப்பர். தாயத்துகள், குளிகைகள் பற்றிய பகுதிகளும் உள. ரிக்வேத புருஷ சூக்தம் 10-90 கொஞ்சம் மாறுதல்களுடன் காணப்படும்.
நதிகள், தண்ணீர், பரமாத்மன் பற்றிய மந்திரங்கள்
28 நட்சத்திரங்கள் பற்றிய மந்திரங்கள்
அமைதி, சமாதான மந்திரங்கள்
இதன் சிறப்பு அம்சங்கள்
————-
20-ம் காண்டம்:-
இருபதாம் காண்டம்தான் கடைசி காண்டம்; இதில் 143 துதிகள் உண்டு. பெரும்பாலும் இந்திரனைப் பற்றிய ரிக் வேத துதிகள்; குண்டபா பிரிவு (127-136) மிகவும் வியப்பான மந்திரம்- வயிற்றைச் சுற்றியுள்ள 20 உறுப்புகள், நாளங்கள், சுரப்பிகள் பற்றீயன. பல பாடல்கள் விடுகதை போன்றவை. அசுரர்களை விடுகதை போட்டே தோற்கடித்தனர் கடவுளர்.
இது போன்ற சிந்தனைகள் இந்த வேதம்— அறிவாளிகளின் வேதம்— என்பதைக் காட்டும். முதல் துதி வாக் (பேச்சு) பற்றி துவங்கியது. இப்படிப்பட்ட அறிவு தொடர்பான செய்திகளை சுமேரிய, எகிப்திய துதிகளில் காணமுடியாது. விருந்தினரைப் போற்றும் உயரிய பண்புகள், சத்தியத்தைப் போற்றும் கொள்கைகள் இவைகள் வெளிநாட்டுச் துதிகளில் இல்லை. இவை எல்லாம் பாரத சிந்தனையின் முன்னேற்றமடைந்த நிலையைக் காட்டும்.
அதர்வண வேத பாடல்களும் யாக தேவதைகளை போற்றுகின்றன.  உதவிகளை கேட்கின்றன அதே நேரம் தெய்வங்கள் தரும் உதவி என்பது மனித உடல்களின் அவஸ்தைகளை தவிர்ப்பதாக இருக்க வேண்டுமே தவிர கஷ்டங்களை ஏற்படுத்துவதாக இருக்க கூடாது என்று தெளிவாக வலியுறுத்துகிறது.  ஆத்மாவானது செயல்பட வேண்டுமென்றால் சரீரம் என்பது அவசியம் தேவை ஆத்மாவை தாங்கி நிற்கும் உடல் உயிர் இல்லாவிட்டால் இயங்காது உடலின் இயக்கம் நின்று விட்டால் அதாவது உடலும் உயிரும் தனித்தனி ஆகிவிட்டால் ஆத்மாவால் எதையும் செய்ய முடியாமல் போய்விடும் எனவே உடம்பு என்பது அவசியமான பொருள் என ரிஷிகள் கருதினர்.  எனவே அவர்கள் உடம்பை நோய்களிடமிருந்தும் மற்ற அபாயங்களிலிருந்தும் பாதுகாத்து பத்திரப்படுத்த வேண்டும் என்கின்ற கருத்துகளை முதன்மையாக வைத்து பாடல்களை இயற்றினர். அத்தகைய பாடல்களின் தொகுப்பு தான் அதர்வண வேதமாகும். இந்த வேதத்தில் 5987 பாடல்கள் உள்ளன.  இந்த பாடல்களில் நோய்களிலிருந்து மனிதனை பாதுகாக்கும் படி வேண்டுகின்ற பாடல்களே மிகுதியாக உள்ளது.

அதர்வண வேதம் சொல்லும் காரணம்

சத்தியம், தவம், தீட்சை , வேள்வி ருதம் ஆகியன இருப்பதால்– அதாவது இந்த குணத்தை மதிக்கும் பண்புடையார்  இருப்பதால் உலகம் இன்றும் அழியாமல், கீழே விழாமல் இயங்குகிறது

கடலுள் மாய்ந்த இளம்பெரும் வழுதி என்ற பாண்டிய மன்னன் இந்திரர் அமிழ்தம் என்ற ரிக் வேத சொற்களை  அப்படியே பயன்படுத்தியதைக் கவனிக்க வேண்டும். அவனோ க்ஷத்ரியன் ; பிராமணன் அல்ல. ஆயினும் ரிக் வேத சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளான் .

அதர்வண வேத முதல் மந்திரத்தில் உள்ள ‘சத்யம் இந்தியாவின் தேசீய சின்னத்தில் இருக்கிறது. ருதம் என்ற சொல்லும் இருக்கிறது. இவை இரண்டும் முக்கியமானவை; ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.

கிறிஸ்தவப் பெண்கள் ரூத் RUTH என்று பெயர் வைத்துக்கொள்வார்கள்; ஆண்களில் பலர் இன்றும் சத்யமூர்த்தி என்றெல்லாம் பெயர் வைத்துக் கொள்வதைக் காண்கிறோம் ருதம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து  ரிதம் RHYTHM , ட்ரூத் TRUTH என்ற இரண்டு சொற்கள் இன்றும் ஆங்கிலத்தில் உள்ளன. அதாவது தாள லயம்- ஒழுங்கு விதி = RHYTHM

உலகமே வாய்மையாலும், ஒரு விதி முறையாலும்தான் இயங்குகிறது. மோட்டார் வேய் MOTOR WAY யில் 130 மைல் வேகத்தில் செல்கிறோம்.; நான் திடீர் என்று நிறுத்தினால் என் பின்னால் வரும் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 20, 30 பேர் உயிர் இழப்பார்கள். எதிர் திசையில் வருபவன், குடித்துவிட்டு , எனது பாதையில் காரை ஓட்டினால் என் காரில் உள்ளவர்களும் அதற்குப் பின்னால் வருவோரும் உயிர்தப்ப மாட்டார்கள். சாலையைக் கடக்கும் போதும் நாம் கணக்குப்போட்டு கடக்கிறோம் . ஆனால் கார் ஓட்டுபவன் ருதம் RHYTHM  என்பதைப் பின்பற்றாவிட்டால் நம் கதி- சகதி – ஆகிவிடும்

இந்த உண்மையும் ருதமும் (SATHYA AND RUTHAM) வேதத்தில் ஆயிரக்கணக்கான இடங்களில் வருகின்றன. உலகில் வேறு எந்த இடத்திலும் இதைக் காண முடியாது. 5 வயதுப் பையன் , குரு குலப் பள்ளியில் நுழைந்தவுடன் வாத்தியார் சொல்லிதத்தரும் முதல் பாடம் “சத்யம் வத = உண்மையே பேசு ;  அடுத்தது தர்மம் சர” = தருமம் செய்

முதல் மந்திரத்தில் வரும் ‘தபோ’ என்பது தமிழில் ‘தவம்’ ஆகும்

இந்த தவத்தை அப்படியே ஸம்ஸ்க்ருதச் சொல்லாகவே 2000 ஆண்டுகளாக தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர்!!

அதர்வண வேதம் முழுவதும் மூலிகை மர்மங்களும் அதிசயங்களும் விரவிக் கிடக்கின்றன . அவைகளைக் கண்டுபிடித்து உலகிற்கு அளிப்பது இந்துக்களின் கடமை.

அதர்வண வேதம்- நாலாவது காண்டம்- துதி 17 (சூக்தம் 119)- தலைப்பு கேடும் குறையும்

பாடலின் பொருள் : இந்த துதியானது மந்திர குணமுள்ள ஒரு மூலிகையை நோக்கி இசைக்கப்படுகிறது . நோய்கள் தாக்காமல் இருக்கவும் நோயாளிகளைக் குணப்படுத்தவும் உதவும் மூலிகை இது. பெயர் அபாமார்கன் – சுக்கிரன்- வனஸ்பதி ; இதை நாயுருவி என்று  அழைப்பதாக விக்கிப்பீடியா தகவல் கூறுகிறது

xxxx

இந்த துதியில் எட்டு மந்திரங்கள் உள்ளன

முதல் மந்திரம்

மருந்துகளின் மஹாராணியே ! வெற்றி கொடுப்பவளே ! உன்னை நான் பிடிக்கிறேன் ; ஓஷதியே ! ஒவ்வொருவருக்கும் (உதவ) ஆயிரம் சக்தி உடையவளாக செய்துவிட்டேன் .

மந்திரம் -2

நிச்சய வெற்றிதரும், சாபம் அழிக்கும்,மஹத்தான , மீண்டும் திரும்பும் உன்னை வேண்டுகிறேன்; அது எங்களைக் காக்கட்டும்; இதுவே பிரார்த்தனை

3

எங்களுக்குச் சாபம் இட்டவள் அல்லது தீய , கொலைகார எண்ணத்தை மனதில் கொண்டவள் அல்லது என் குழந்தைக்கு  தீங்கிழைப்பவள், அவள் கருத்தரித்துள்ள அவள் குழந்தையையே விழுங்கட்டும்

4.

சுடாத பானையில் அல்லது நீலம்- சிவப்பாகும் வரை சுட்ட பானையில் , சமைக்காத மாமிசத்தில்  அவர்கள் என்ன சூனியம் வைத்திருந்தாலும் அதைக்கொண்டே அவளை அழித்துவிட்டு

5

கெட்ட கனவு, அரக்கர், இராக்கதர், பிசினாறி , தீய பெயருள்ளவள், தீய நாற்றம் உடையவள் — ஆகிய அனைவரையும் விரட்டுகிறோம்

6

அபா மார்க்கனே , உன்னைக்கொண்டு —-   பசிப்பிணி மரணம், தாகத்தால் /வறட்சியால் ஏற்படும் மரணம், , குழந்தைகள் இழப்பு, கால்நடைகள் இழப்பு ஆகியவற்றை துடைத்தது அழிக்கிறோம்

7.

இந்த மந்திரத்தில் ,மேற்கூறிய விஷயத்துடன்,  உடல் உறுப்புகளின் செயல் குறைவு ஆகியவற்றையும் சேர்த்துள்ளனர்.

ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பில் உடல் உறுப்பு இழப்பு என்பதற்குப் பதிலாக சூதாட்டத் தோல்வி என்று தவறாக மொழிபெயர்த்துள்ளனர்

8

வளரும் மூலிகைகளின் மன்னன் அபா மார்கன் ; அதை வைத்து இந்த நோயாளிக்கு ஏற்பட்ட அனைத்து வியாதிகளையும் நீக்குகிறோம்.

இது எட்டு மந்திரங்களின் சாராம்சம்

அதர்வண வேதத்தில் ஏராளமான மாயா ஜால , இந்திர ஜால விஷயங்கள் உள்ளன. ஒரு மந்திரம் மனிதனை எவருக்கும் தெரியாமல் இருக்க வைக்கும் வித்தை பற்றிப் பேசுகிறது இன்னொரு மந்திரமோ இந்த மூலிகை கையில் இருந்தால் வருங்கலத்தை உறைக்க முடியும் என்கிறது. ஆனால் என்ன ஏமாற்றம். மூ லிகையின் பெயரைச் சொல்லாமல் அது, இது என்று மட்டுமே ரிஷி பாடுகிறார். இருந்தபோதிலும் இதில் பல சுவையான விஷயங்கள் தெரிய வருகின்றன.

இந்த மூலிகைப் பாடல் அதர்வண வேதத்தின் நாலாவது காண்டத்தில் 20ஆவது பாடலாக (சூக்தம் 122) அமைந்துள்ளது. தலைப்பு ஓஷதி

முதல் மந்திரமே விடுகதை போல அமைந்துள்ளது.

அவன் இங்கு பார்க்கிறான்; அவன் பின்னால்  பார்க்கிறான்;அவன் தூரம்  பார்க்கிறான்;அவன்  பார்க்கிறான்;வானத்தை பூமியை வானத்துக்கு அப்பாலும் பார்க்கிறான் ஓ, தேவியே அவன் பார்க்கிறான்”.

அதர்வண எட்டாம் காண்டம் சூக்தம் 440 ல் உள்ள அதிசய விஷ்யங்களைக் காண்போம்

இந்த சூக்தத்தின் தலைப்பே ஒளஷதங்கள் !
இந்த துதியில் 28 மந்திரங்கள் உள்ளன.
28 மந்திர துதியில் ,23ஆவது மந்திரம்

“வராஹம் (பன்றி) செடியை அறியும் ; கீரி சிகிச்சைச் செடியை அறியும் ; கந்தர்வர்களும், சர்ப்பங்களும் அறியும் மூலிகைகளை நான், இப்புருஷனின் துணைக்காக அழைக்கிறேன்”

24 ஆவது மந்திரம் “கருடன் அறியும் ஆங்கிரஸ ஒளஷதிகளையும் , சுபர்ணன் அறியும் தேவ சிகிச்சைகளையும் பறவைகள், ஹம்ஸங்கள் (அன்னம்), வன விலங்குகள் அறியும் அனைத்தையும் இப்புருஷனின் துணைக்காக அழைக்கிறேன்” .
25 ஆவது மந்திரம் ,
“ஆடு மாடுகள் புசிக்கும் மூலிகைகளை துணைக்கு அழைக்கிறேன்” —
என்று சொல்வதிலிருந்து ரிஷி முனிவர் எந்த அளவுக்கு பறவைகள், மிருக்கங்களைக் கவனித்து இருக்கிறார்கள் என்பது புலப்படும்.
இது நோய்வாய்ப்பட்ட ஒருவரைக் காப்பதற்காக பாடப்பட்டது போலத் தோன்றினாலும் மூலிகைகைகளின் பெருமையையே அதிகமாகப் பேசுகிறது!

அதர்வண வேதம், ஆறாவது காண்டம், துதி 19; சூக்தம் எண்  192

1.தேவர்கள் என்னைத் தூய்மை செய்க!

மானிடர்கள் என்னை அறிவால் தூய்மை செய்யட்டும்!

உலகிலுள்ள எல்லாப் பொருட்களும் என்னைத்  தூய்மைப் படுத்தட்டும்!

தூய்மை செய்பவன் / பவமானன்  என்னைத்  தூய்மைப்  படுத்தட்டும் !

2.விவேகம் பெறவும்சக்தி பெறவும்நீண்ட ஆயுள் பெறவும்அசைக்கமுடியாத பாதுகாப்பு பெறவும் என்னைத்  தூய்மைப்  படுத்தட்டும் !

3.ஸவித்ரு தேவனே சோம ரஸத்தை நசுக்கிப் பிழிவதாலும் வடிகட்டுவதாலும் சுத்தப்படுத்துமாறு   தூய்மைப்  படுத்துக

அதர்வண வேதம்; காண்டம் 6; துதி 18; சூக்தம் 191

தலைப்பு – பொறாமை ; ஈர்ஷ்யா விநாசனம்

1.பொறாமை எண்ணம் முதலில் வந்தவுடனே, அதற்கான மூலத்தை, பொறாமையினால் ஏற்படும் வயிற்று  எரிச்சலை — இருதயக் கனலை – அணைக்கிறோம்

2.பொறாமை மனம் படைத்தவனின் மது மென்மையாகட்டும் ; பூமிக்கு உணர்ச்சி இல்லை; செத்துப்போனவனை விட உணர்ச்சியற்றது பூமி. அது போல பொறாமை மனது மிருது ஆகட்டும் .

3.உனது பொறாமை என்னும் சூடான காற்று /எரிச்சல், தோல் பையிலிருந்து வெளியேறும் காற்றுப்போல வெளியே செல்லட்டும்

மூன்றாவது மந்திரத்தில் உள்ள உவமை பொறாமைக்குப் பொருத்தமான உவமை. சம்ஸ்க்ருதத்தில் பொறாமையை இருதயக் கனல் (HEART BURN) என்று வருணித்தார் புலவர். தமிழில் இருதயம் என்ற உறுப்புக்கு சொல்லே கிடையாது; என் நண்பன் HEART OPERATION  ஹார்ட் ஆபரேஷன் செய்து கொண்டான் என்பதை தமிழில் சொல்லவே முடியாது; ஆகையால் வயிற்று எரிச்சல் STOMACH BURN என்போம். அதற்கேற்ற உவமை கொல்லன் துருத்தி (த்ருதி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து பிறந்தது ) அதிலிருந்து எப்பாடி சூடான காற்று வெளியேறுமோ அப்படி உன் பொறாமைத் தீயை வெளியேற்று(வேன் ) என்கிறது மந்திரம்.

அதர்வண வேதம் தொடாத SUBJECT சப்ஜெக்ட்டே  இல்லை.

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி வியாக்கியான ப்ராமணத் திரட்டு —

July 2, 2021

1-ப்ரத்யஷே குரவ ஸ்துத்யா –பாரதம் -ஆற -188-94
ஆச்சார்யர்கள் நேரிலேயே ஸ்துதிக்கத் தகுந்தவர்கள்

2-குரு பாதாம்புஜம் த்யாயேத் குரோர் நாம ஸதா ஜபேத்
குரு ஸேவாம் ஸதா குர்யாத் ஸோ அம்ருதத்வாய கல்பதே -பிரபஞ்ச ஸாரம்

ஆச்சார்யனின் திருவடித்தாமரையை எப்போதும் தியானிக்க வேண்டும்
திருநாமத்தை எப்போதும் ஜபிக்க வேண்டும்
கைங்கர்யத்தையே எப்போதும் செய்ய வேண்டும்
இப்படிச் செய்பவன் மோக்ஷத்திற்குத் தகுந்தவன் ஆகிறான்

3- மச் சித்தா மத்கத ப்ராணா போதயந்த பரஸ்பரம்
கதயந்தஸ் ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமேந்தி ச –கீதை -10-9-

என்னிடமே நிலைத்த மனத்தை யுடையவர்களாய் என்னிடமே தங்கள் உயிரியை வைத்தவர்களாய்
என்னுடைய குணங்களையே ஒருவருக்கு ஒருவர் அறிவிப்பவர்களாய்
என்னை எப்போதும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களாய் சந்தோஷிக்கிறார்கள் -ஆனந்திக்கிறார்கள்

4-ப்ராகேவ து மஹா பாக ஸுமித்ரிர் மித்ரா நந்தன
பூர்வ ஜஸ்யாநு யாத்ரார்த்தே த்ரும சீ ரைர லங்க்ருத –ஸூந்தர –33-28-

மஹா பாக்யவானாய் அனுகூலங்களை உகப்பாய்வானுமாய் இளைய பெருமாள்
தமயனுக்கு பின் செல்ல பூர்வமேவேயே மரவுரிகளாலே அலங்கரித்துக் கொண்டான்

5-தீப்த மக்நி மரண்யம் வா யதி ராம பிரவேஷ்யதி
ப்ரவிஷ்டம் தத்ர மாம் தேவி தவம் பூர்வமாவதாரய –அயோத்யா –21-17-

அம்மா கொழுந்து விட்டு எறியும் அக்னியில் உள்ளாவது காட்டில் உள்ளாவது பெருமாள் நுழைவார் ஆகில்
நான் முன்னமேயே அதனுள் நுழைந்து இருப்பேன் என்று அறிவாயாக

6-பவாம்ஸ் து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநு ஷு ரம்ஸ்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதஸ் ச தே –அயோத்யா -31-25

நீர் பிராட்டியுடன் மலைத்தாழ்வாரைகளிலே விளையாடுவார்
அடியேன் நீங்கள் விழித்துக் கொண்டு இருக்கும் போதும் தூங்கும் போதும்
எல்லா அடிமைகளையும் செய்வேன்

7-ஸ்ருஷ்டஸ் தவம் வன வாஸாய ஸ்வ நுரக்தஸ் ஸூஹ் ருஜ்ஐநே
ராமே பிரமாதம் மா கார்ஷீ புத்ர பிராத்தரி கச்சதி –அயோத்யா –40-5–

கைங்கர்யத்துக்காகவே பிறந்துள்ளாய்
பெருமாள் நடக்கும் பொழுது அந்த அழகிலே ஈடுபட்டு அவனுக்குத் தீங்கு செய்வோரை
கவனிக்காமல் இருக்கும் தவற்றைச் செய்யாமல் இரு

8-யதி தவம் பிரஸ்திதோ துர்க்கம் வனமத்யைவ ராகவ
அக்ர தஸ்தே கமிஷ்யாமி ம்ருத் நதி குச கண்டகாந் -அயோத்யா –27-6-

நீர் செல்ல அரிதான வனத்திற்கு இன்றே புறப்பட்டாலும் தர்ப்பைகளையும் முட்களையும் மிதித்து
அழித்துக் கொண்டு நானும் உமக்கு முன்னால் செல்வேன்

9-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ் ச நேதி –தைத்ரியம் -ஆனந்தவல்லி –9-1-

எந்த ப்ரஹ்மத்தின் இடம் இருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட அறியாமல் திரும்புகின்றனவோ
அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எதன் இடமும் பயப்பட மாட்டான்

10-கோ சத்ருஸோ கவய -கவய சத்ருஸோ கவ்

காவியம் என்னும் மிருகம் மாட்டைப்போல் உள்ளது
மாடு கவயம் என்னும் மிருகத்தைப் போல் உள்ளது

11–தத்வே ந யஸ்ய மஹி மார்ண வஸீ கராணு
சக்யோ ந மாது மபி சர்வபிதா மஹாத்யை
கர்த்தும் ததீய மஹி மஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ அஸ்து கவயே நிரபத் ரபாய –ஸ்தோத்ர ரத்னம் -7-

எந்த எம்பிரானுடைய மஹிமைக்கடலில் ஒரு திவலையில் அணு அளவும் கூட சிவன் பிரமன்
முதலியவர்களாலும் உள்ளபடி அளவிட முடியாததோ
அப்பெருமானுடைய பெருமையைப் பற்றிய ஸ்துதியைச் செய்ய ஆரம்பித்து இருப்பவனும் வெட்கம் அற்றவனும்
கவி என்ற பெயர் கொண்டவனுமான எனக்கே நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும்

12-மன பூர்வ வாக் உத்தர -தைத்த சம்ஹிதை -7-5-3-

முதலில் மனஸ்ஸூம் அடுத்த படியாக வாக்கும் பிரவர்த்திக்கின்றன –

13-தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ –சாந்தோக்யம் –1-6-7-

ஸூர்ய மண்டலத்தின் நடுவிலுள்ள அப்புருஷனுக்கு ஸூர்யனால் மலர்ந்த தாமரை போன்ற இரு கண்கள் உள –

14-கர்மண்யே வாதி காரஸ்தே மா பலேஷு கதாசன –கீதை -2-47-

முமுஷுவான உனக்கு நித்ய நைமித்திகாதி கர்மங்களை செய்வதற்கே அதிகாரம்
ஒரு பொதுமணகர்ம பழத்தில் அதிகாரம் இல்லை

15-மன்மனா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ் யஸி ஸத்யம் தே பிரதி ஜாநே ப்ரியா அஸி மே –கீதை –18-65-

என்னிடத்திலேயே மனத்தை வைத்தவனாகவும்
என்னுடைய பக்தனாகவும்
என்னை ஆராதிப்பவனாகவும் ஆவாயாக
என்னை நமஸ்கரிப்பாயாக என்னையே அடைவாய் இது சத்யம்
உனக்கு ப்ரதிஜ்ஜை செய்கிறேன்
எனக்குப் பிரியவன் அன்றோ நீ

16-அசன்னேவ ஸ பவதி அஸத் ப்ரஹமேதி வேத சேத்
அஸ்தி ப்ரஹமேதி சேத் வேத சந்தமேநம் ததோ வித்து –தைத்த-ஆனந்த -6-

17- சரீரம் ஏவ மாதா பிதாரவ் ஜனயத ஸ ஹி வித்யா தஸ்
தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம –ஆபத் ஸூ –1-1-6-

18-ஏஷ பந்தா விதர்ப்பா நாம் ஏஷ யாதி ஹி கோசலான்

இது விதர்ப்ப தேசத்துக்குவேஜ் செல்லும் வழி
இது கோசல தேசத்துக்குச் செல்லும் வலி

19-நாயமாத்மா ப்ரவச நே ந லப்யோ ந மேதயா ந பஹுநா ஸ்ருதே ந
யமே வைஷ வ்ருணுதே தேந லப்ய தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே த நூம் ஸ்வாம் –கட –1-2-23 –

இந்தப் பரமாத்மா பக்தி அற்ற ஸ்ரவணத்தினாலும் -மனத்தினாலும் தியானத்தினாலும் -அடையத் தக்கவன் அல்லன்
இப்பரம புருஷன் எவனை வரிக்கிறானோ அவனாலேயே அடையத் தக்கவன் –
அவனுக்கு இப்பரமாத்மா தன் திரு மேனியைக் காட்டுகிறான்

20-அவிவேகக நாந்த திங்முகே பஹுதா சந்தத துக்க வர்ஷிணி
பகவன் பவ துர்த்திநே பத ஸ்கலிதம் மாம வ லோக யாச் யுத –ஸ்தோத்ர ரத –49-

ஞான சக்த்யாதி குணங்கள் நிறைந்தவன் -அடியாரைக் கை விடாதவனே –
விவேகம் இன்மையாகிற மேகங்களால் இருள் அடைந்த திசைகளை யுடையதும் பலவிதமாக இடைவிடாமல்
துன்பங்களைப் பொழிகின்றனது மான ஸம்ஸாரமாகிய மழை கால இருளிலே
நல் வழியில் இருந்து தவறிய அடியேனைக் கடாக்ஷித்து அருள்வாயாக

21- ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூ ச –கீதை –18-66

மோக்ஷ சாதனமான எல்லா தர்மங்களையும் வாசனையுடன் விட்டு என்னை ஒருவனையே உபாயமாக அடை
நான் உன்னை எல்லாப் பாபங்களின் நின்றும் விடுவிக்கிறேன் துக்கிக்காதே

22-ஆர்த்தோ வா யதி வா திருப்த பரேஷாம் சரணாகத
அரி பிராணன் பரித்யஜ்ய ரஷிதவ்ய க்ருதாத்மநா –யுத்த –18-28

எதிரிகளுக்கும் சரணம் அடைந்த சத்ருவானவன் -வர்த்தத்தாலே சரணம் அடைந்த ஆர்த்தனாயினும்
அரை மனதாகச் சரணம் அடைந்த திருப்தனாகிலும் பண் பட்ட மனத்தையுடைய புருஷனாலே
தன் பிராணனை விட்டு ரக்ஷிக்கத் தக்கவன்

23-ஈர்ஷ்யோ ரோஷவ் பஹிஷ் க்ருத்ய புக்த சேஷ மிவோ தகம்
நய மாம் வீர விஸ்ரப்த பாப்பம் மயி ந வித்யதே –அயோத்யா –27-8-

வீரனே அஸூயை கோபம் இவ்விரண்டையும் குடித்து மிகுந்த ஜலத்தைப் போலே தள்ளிவிட்டு
என் வார்த்தையை நம்பி என்னை அழைத்துச் செல்வீராக
உம்மைப் பிரிந்து இருக்கைக்கு காரணமான பாப்பம் எனக்கு இல்லை

24-யதா தம் புருஷ வ்யாக்ரம் காத்ரை சோகாபி கர்சிதை
ஸம்ஸ் ப்ருசேயம் சாகமாஹம் ததா குரு தயாம் மயி –ஸூந்தர –40-2-

பெருமாள் இடம் பேர் அன்பு மிகுந்த யான் புருஷ ச்ரேஷ்டரான அவரை துக்கத்தால் இழைத்த
இந்த என் அவயவங்களாலேயே தொடத்தக்கவளாம் படி என்னிடத்தில் நீ கருணை புரிவாயாக

25- மஹதா தபஸா ராம மஹதா ஸாபி கர்மணா
ராஜ்ஞா தசரதே நாஸி லப்தோ அம்ருத மிவா மரை –ஆரண்ய –66-3-

பெருமாளே தேவர்கள் அம்ருதத்தைப் பெற்றால் போல் பெரும் தவத்தாலும் பெரும் கார்யங்களாலும்
தசரத மஹாராஜரால் நீர் அடையப் பெற்று இருக்கிறீர்

26-ஜென்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத
த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன –கீதை -4-9-

அர்ஜுனா என்னுடைய அப்ராக்ருதமான பிறப்பையும் சேஷ்டிதங்களையும்
எவன் இப்படி உண்மையாக அறிகிறானோ
அவன் தேகத்தை விட்டு மறு ஜென்மம் அடையாமல் என்னையே அடைகிறான்

27-அஜாய மாநோ பஹு தா விஜாயதே தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் –புருஷ ஸூக்தம்

பிறப்பு அற்றவனாய் இருந்தும் பலபடியாகப் பிறக்கிறான்
அவனுடைய அவதார ரஹஸ்யத்தை புத்திமான்களே நன்றாக அறிகிறார்கள்

28-ஏஷ தா ஆத்மா அந்தர்யாம் யம்ருத –ப்ருஹதாரண்யம் –5-7-

ஸர்வ அந்தர்யாமியான இப்பரம புருஷனே இயற்கையான அம்ருதத்தை யுடையவனாய்
உனக்கு ஆத்மாவாக விளங்குபவன் –

29-யஸ்யா மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத ஸ
அவிஞ்ஞாதம் விஜா நதாம் விஞ்ஞாத மவிஜாநதாம் –கேந –2-3-

எவனுக்கு ப்ரஹ்மம் அளவிட்டு அறியப்பட வில்லையோ அவனுக்கில்லை அது அறியப்பட்ட தாகிறது
எவனுக்கு ப்ரஹ்மம் அறியப்பட்டதாகிறதோ அவன் அதை அறிய வில்லை
அளவிட்டு அறிந்தவர்களுக்கு அறியப்படாததாயும்
அளவிட்டு அறியாதவர்களுக்கு அறியப்பட்டதாகவும் ஆகிறது பெற ப்ரஹ்மம்

தேஷாம் ஞானீ நித்ய யுக்த ஏக பக்திர் வி ஸிஷ்யதே
ப்ரியா ஹி ஞாநிநோ அத்யர்த்தம் அஹம் ச மம ப்ரிய –கீதை –7-17-

என்னுடன் எப்போதுமே சேர்ந்து இருப்பவனும் என்னிடம் மட்டுமே அன்பு செய்பவனுமான ஞானி
அந்த நால்வருக்கும் மேலானவன்
நான் ஞானிக்கு மிகவும் பிரியம் அன்றோ -அப்படியே அவனும் எனக்குப் பிரியமானவன்

31- பரதஸ்ய வச குர்வன் யாஸமா நஸ்ய ராகவா
ஆத்மாநாம் நாதி வர்த்தேதா ஸத்ய தர்ம பராக்ரம –அயோத்யா –111-7

ராகவன் சாத்தியமான தர்மத்தையும் பராக்ரமத்தையும் உடையவனே
யாசிக்கும் பரதனுடைய வார்த்தைப்படி செய்வதன் மூலம் உன்னுடைய ஸ்வரூபமான
ஆஸ்ரித பாரதந்தர்யத்தை மீறாமல் இருப்பாயாக –

32-யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூஹ்ருச்சைவ ஜநார்த்தன
ஹார்ஸ் த்ரை லோக்ய நாதஸ்ய கிந்து தஸ்ய ந நிர்ஜிதம் -பாரதம் -ஆற –49-20

மூ உலகங்களுக்கும் நாத்தனாய் ஜனார்த்தனன் என்றும் ஹரி என்றும் சொல்லப்படுமவனான அந்த பகவான்
எந்த தர்ம புத்திரனுக்கு மாதிரியாகவும் ரக்ஷகனாயும் ஸ்நே ஹிதனாயும் இருக்கிறானோ
அந்த தர்மபுத்ரனால் ஜெயிக்கப் படாதது யாது

33-மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ
பந்தாய விஷயங் சங்கி முக்த்யை நிர்விஷயம் மன –ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-7-28-

மனிதர்களுக்கு சம்சாரத்துக்கும் மோக்ஷத்திற்கும் மனது தான் காரணம்
சப்தாதி விஷயங்களில் ஈடுபட்ட மனம் ஸம்ஸார ஹேதுவாகிறது
விஷயங்களில் பற்று அற்ற மனம் முக்தி ஹேதுவாகிறது

34-யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா
இதி ஜாநந் பராம் ப்ரீதிம் கச்ச ராம மயா ஸஹ -அயோத்யா –30-18-

பிரானே உம்முடன் இருப்பதுவே எனக்கு சுவர்க்கம் -உம்மை விட்டுப் பிரிந்து இருப்பதுவே எனக்கு நரகம்
என்னுடைய மேலான அன்பை இம்மாதிரி அறிந்து என்னுடன் கூட வனத்துக்குச் செல்வீராக

35-பூமவ் ஸ்திதஸ்ய ராமஸ்ய ரதஸ்தஸ்ய ச ரக்ஷஸ
ந சமம் யுத்த மித்யாஹுர் தேவ கந்தர்வ தாநவா –யுத்த –103-5-

பூமியில் இருக்கும் ராமனுக்கும் ரத்தத்தில் இருக்கும் ராக்ஷஸனுக்கும் யுத்தம் சமமானது அல்ல என்று
தேவர்களும் கந்தர்வர்களும் அஸூரர்களும் சொன்னார்கள்

36-சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ் ஜலா நிதி சாந்த உபாஸீத –சாந்தோக்யம்

ப்ரஹ்மத்தின் இடம் இருந்து உபண்டானதாலும் -ப்ரஹ்மத்திலேயே லயிப்பதாலும்
ப்ரஹ்மத்தாலேயே உயிர் வாழ்வதாலும்
இவை எல்லாம் ப்ரஹ்மமே யாகும் என்று நினைத்துக் கொண்டு சாந்தனாக உபாஸிக்கக் கடவன்

37-யதாவத் கதிதோ தேவைர் ப்ரஹ்மா ப்ராஹ தத ஸூரான்
பராவரேஸம் சரணம் வ்ரஜத்வம ஸூ ரார்த்த தனம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-9-35-

தேவர்களால் தங்கள் துன்பங்களை நன்கு அறிவிக்கப்பட்ட பிரமன் மேலானவர்களோடே கீழானவர்களோடே
வாசியற எல்லாருக்கும்
ஈஸ்வரனாய் இருப்பவனும் அஸூர ஸத்ருவானவனுமான பகவானை சரணம் அடையுங்கோள் –
என்று தேவர்களிடம் சொன்னான்

38-சத்த்வாத் சஞ்சாயதே ஞானம் ரஜஸோ லோப ஏவ ச
ப்ரமாதமோதவ் தமஸோ பவதோ அஞ்ஞான மேவ ச –கீதை –14-7-

சத்வ குணத்தில் இருந்து ஞானம் உண்டாகிறது
ரஜோ குணத்தில் இருந்து ஸ்வர்க்கம் முதலிய பலன்களில் ஆசை உண்டாகிறது
தமோ குணத்தில் இருந்து கவனமின்மையினாலே ஏற்படும் அசத் கர்ம ப்ரவ்ருத்தியும்
விபரீத ஞானமும்ந அஞ்ஞானமும் ஏற்படுகின்றன

39-த்யா யதோ விஷயான் பும்ஸஸ் சங்கஸ் தேஷூப ஜாயதே
சங்காத் சஞ்சாயதே காம காமத் க்ரோதோ அபி ஜாயதே –கீதை -2-62-

விஷயங்களை இடைவிடாமல் எண்ணும் மனிதனுக்கு அவற்றில் அதிகமான சேர்க்கை -சங்கம் -உண்டாகிறது
அந்த சங்கத்தினால் காமம் உண்டாகிறது -காமத்தினால் கோபம் ஏற்படுகிறது

40-கோவிந்தேதி யதா க்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூர வாஸி நம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாந் நாப சர்ப்பதே –பார -உத்யோக –47-22-

‘திரௌபதியானவள் வெகு தூரத்தில் இருந்த என்னைக்குறித்து கோவிந்தா என்று கூக்குரல் இட்டது
வட்டியினால் வ்ருத்தி யடைந்த கடனைப் போலே என் ஹ்ருதயத்தில் இருந்து அகலுகிறது இல்லை

41-ப்ரஹ்ம தாண்ட ப்ரகாசா நாம் வித்யுத் ஸத்ருச வார்ச்சஸாம்
ஸ்மரன் ராகவா பாணா நாம் விவ்யதே ராக்ஷஸேஸ்வர –யுத்த –60-3-

ப்ரஹ்ம தண்டத்தைப் போன்ற ஒளி யுள்ளவையும் மின்னலைப் போன்ற தேஜஸ்ஸைப் பெற்றவையுமான
ராம பாணங்களை நினைத்து ராக்ஷஸாதி பதியான ராவணன் மிக வருந்தினான்

42-தாதூ நாமிவ சைலேந்த்ரோ குணா நாமா கரோ மஹான் –கிஷ்கிந்தா –15-21-
ஒரு சிறந்த மலை தாதுக்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் உள்ளது போலே
ஸ்ரீ ராமபிரானும் குணங்களுக்கு எல்லாம் பெரியதோர் இருப்பிடமாவார்

43-பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் ஸாஸ்வதம் சிவம் அச்யுதம் –தைத்ரியம்

உலகங்களுக்கு எல்லாம் பாதியாகவும் தனக்குத் தானே ஈஸ்வரனாகவும் நித்யனாகவும்
மங்கள கரனாகவும் அடியார்களை நழுவ விடாதவனாகவும் இருப்பவனே நாராயணன் –

44-ருத்ரம் ஸமாஸ்ரிதா தேவா ருத்ரோ ப்ராஹ்மாணம் ஆஸ்ரித
ப்ரஹ்மா மாம் ஆஸ்ரிதோ ராஜன் காஞ்சிதுபாஸ்ரித –பாரதம் -ஆஸ் –118-37-

தேவர்கள் ருத்ரனை அண்டி இருக்கின்றனர்
ருத்ரன் தன் தகப்பனாக பிரமனை ஆஸ்ரயித்து இருக்கிறான்
பிரமனோ என்னில் -அவனையும் பிறப்பித்த என்னை அடைந்து இருக்கிறான்
அரசனே நான் ஒருவனையும் பற்றி இருக்க வில்லை

45–ஸ்ருஷ்ட்டி ஸ்திதித் எந்த கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம்
ஸ ஸம் ஜ்ஞாம் யாதி பகவாநேந ஏவ ஜனார்தன –அதர்வசிகை –2-15-

படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத் தொழில்களை செய்யும் பிரமன் விஷ்ணு சிவன்
என்னும் பெயர்களை ஜனார்த்தனன் எனப்படும் அந்த பகவானே அடைகிறான்

46-ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ராஸ் தே ஸர்வே ஸம் ப்ரஸூ யந்தே

பிரமன் விஷ்ணு ருத்ரன் இந்திரன் ஆகிய இவர்கள் எல்லாரும் பிறக்கிறார்கள்

47-மத்யே விரிஞ்ச கிரிஸம் ப்ரதமாவதார
தத் சாம்யத ஸ்த கயிதும் தவ சேத் ஸ்வரூபம்
கிம் தே பரத்வபி ஸூநைரிஹ ரங்க தாமன்
ஸத்வ ப்ரவர்த்தன க்ருபா பரிபால நாத்யை –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் –2-51-

ஸ்ரீ ரெங்க நாதரே பிரம ருத்ராதிகளின் நடுவிலே உமக்கு ஏற்பட்ட முதல் அவதாரம்
அவ்விருவருடன் ஒன்றாய் இருப்பதைக் காட்டி உம்முடைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொள்வதற்காக வாகில்
ஸத்வ குணத்தை நிர்வஹிப்பது கிருபையால் பிரமன் ருத்ரன் முதலியவர்களை ரக்ஷிப்பது முதலான
மேன்மையைக் காட்டும் காரியங்களால் உமக்கு என்ன பிரயோஜனம்

48-யத் தூரே மனஸோ யதேவ தமஸ பாரே யதத் யத்புதம்
யத் காலா தப சேளி மம் ஸூர புரீ யத் கச்சதோ துர்க்கதி
ஸாயுஜ் யஸ்ய யதேவ ஸூதி ரதவா யத் துர்க்ரஹம் மத் கிராம்
தத் விஷ்ணோ பரமம் பதம் தவ க்ருதே மாத சமாம் நா ஸி ஷு –ஸ்ரீ குணரத்ன கோசம் –21-

தாயே எவருடைய மனத்திற்கும் எட்டாததாய் -பிரக்ருதிக்கு அப்பால் பட்டதாய் மிக அத்புதமாய் காலத்தால் மாறுபடாததாய்
தன்னை அடைய விரும்புமவர்களை தேவ லோகத்தையும் துர்க்கைதியாக நினைக்கச் செய்வதாய்
ஸாயுஜ்யத்தை அளிப்பதாய் என்னுடைய வாக்குக்கு எட்டாததாய் விஷ்ணுவினுடைய யாதொரு பரமபதம் உள்ளதோ
அது உனக்காகவே விளங்குகிறது என்று வேதங்கள் விளம்புகின்றன

49–ந தேவ லோகா க்ரமணம் நாம ரத் வமஹம் வ்ருணே
ஐஸ்வர்யம் வா அபி லோகா நாம் காமயே ந த்வயா விநா –அயோத்யா –3-5-

நித்ய ஸூரிகள் வாழும் உலகான ஸ்ரீ வைகுண்டத்தில் வாழ்ச்சியையும் கைவல்யத்தையும்
உலகங்களின் ஐஸ்வர்யத்தையும் உன்னைப் பிரிந்த நான் விரும்ப மாட்டேன்

50-வாஸூ தேவே மநோ யஸ்ய ஜப ஹோமார்ச்சநா திஷு
தஸ்ய அந்தராயோ மைத்ரேய தேவேந்திரத் வாதிகம் பதம் =பலம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –2-6-41-

மைத்ரேயனே ஜபம் ஹோமம் அர்ச்சனம் முதலியவைகளில் எவனுடைய மனம் வாஸூ தேவனிடம் லயித்து
இருக்கிறதோ அவனுக்கு தேவேந்திரனாய் இருக்கை முதலிய பலங்கள் இடையூறாகவே ஆகின்றன

51-மச் சித்தா மத்கத ப்ராணா போதயந்த பரஸ்பரம்
கதயந்தஸ் ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமேந்தி ச –கீதை -10-9-

என்னிடமே நிலைத்த மனத்தை யுடையவர்களாய் என்னிடமே தங்கள் உயிரியை வைத்தவர்களாய்
என்னுடைய குணங்களையே ஒருவருக்கு ஒருவர் அறிவிப்பவர்களாய்
என்னை எப்போதும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களாய் சந்தோஷிக்கிறார்கள் -ஆனந்திக்கிறார்கள்

52-ஸம் ஜ்ஞாயதே யேந ததஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மல மேக ரூபம்
ஸந்த்ருச்யதே வாப்யதி கம்யதே வா தத் ஜ்ஞாநம் அஞ்ஞானம் அதோ அந்யதுக்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-5-87-

எந்த அறிவினால் தோஷம் ஏற்றதும் சுத்தமானதும் மிகவும் மலம் ஏற்றதும் ஒருபடிப்பட்டதுமான
அப் பர வஸ்து அறியப்படுகிறதோ காணப்படுகிறதோ அடையப்படுகிறதோ அதுவே ஞானம்
அதைக்காட்டிலும் வேறானது அஞ்ஞானம்

53-தத் கர்ம யந்ந பந்தாய ஸா வித்யா யா விமுக்தயே
ஆயாசாயா பரம் கர்ம வித்யாந்யா சில்பநை புணம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-19-41

எந்தக் கர்மம் பந்தத்திற்குக் காரணம் அல்லவோ அதுவே கர்மம்
எது முக்திக்குக் காரணமோ அதுவே வித்யை
மற்ற கர்மம் சிரமத்திற்கே
மற்ற வித்யை சில்ப பாண்டித்யம் போன்றதே —

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–பாசுரங்கள் -81-87–

July 1, 2021

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

(குண அனுபவ யோக்யதை பகல் -யோக்யதை இரவு
குண அனுபவம் ஒழியாமல் இருக்கும் படி பண்ணி அருளினான்
அஹோராத்ர புஷ் கரணி -பகல் இரா இல்லாதது உண்டே )

பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை
இகல் செய்து இரு பொழுது மாள்வர்-தகவாத்
தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
செழும் பரவை மேயார் தெரிந்து–81-

பதவுரை

செழு பரவை மேயார்–அழகிய திருப்பாற் கடலிலே பொருந்திக் கண் வளர்ந்தருளும் பெருமான்,
இவர் தகவாதொழும்பர்–“இவ்வாழ்வார் நம்முடைய அருளுக்குப் பாத்திரமாகக் கூடாத நீசர்;
சீர்க்கும் துணை இலர்–சீர்மை பொருந்திய துணையை உடையவருமல்லர்”
என்று தெரிந்து ஓரார்–என்பதை ஊன்றி ஆராயாதவனாய்
பகல் இரா என்பதுவும் பாவியாது இரு பொழுதும்–பகற்போது இராப்போது வாசியின்றியே எப்போதும்
இகல் செய்து–வலி கட்டாயப்படுத்தி
எம்மை ஆள்வர்–அடியேனை அநுபவியா நின்றான்.

பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை இகல் செய்து இரு பொழுது மாள்வர்-
பகல் போது போக்குவது ஓன்று
இரா வைகும் போது போக்குவது ஓன்று என்று பாராதே
எல்லாப் போதும் ஒரு போகியாகத்
தம்முடைய குணங்களாலே
எடுப்பும் சாய்ப்புமாக யுத்தம் பண்ணி இரண்டு போதும் ஆள்வர்

(மோஹன அஸ்திரம்- மயங்கி தூங்க வைத்து -அவன் இடம் ஈடுபாடு
ஜ்ரும்பனாஸ்திரம் -சிற்றம் சிறு காலை எழுந்து மற்றவர்களை எழுப்புகிறாள் )

குணம் ஈடுபடுத்துமோ என்ன அருளிச் செய்கிறார்
அம்பு பட்ட புண்ணுக்கு மருந்து உண்டு
குணத்தால் ஈடுபட்ட புண்ணுக்கு மருந்து இல்லை இறே

போது போக்குவர் போது போக்க மாட்டார் என்று விசாரியாதே -என்றபடி
இகல் -யுத்தம்

தகவாத்தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
தம்முடைய கிருபைக்கும் அவிஷயமான சிறிதென்றும்
தம்முடைய குணங்களைக் கொண்டு
போதயந்த பரஸ்பரம் -பண்ணுகைக்குக் கூட்டும் இல்லை என்றும் விசாரியார்

தெரிந்து செழும் பரவை மேயார்
ஆஸ்ரிதரோடே ஸம்ஸ்லேஷிக்கும் தேசம் ஆராய்ந்து
திருப்பாற் கடலிலே மேவினவர் –

தெரிந்து செழும் பரவை மேயார்
தகவாத்தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை இகல் செய்து இரு பொழுது மாள்வர்-
என்று அந்வயம்

———-

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82-

பதவுரை

தீ வினையேன்–மஹா பாபியான நான்
தெரிந்த உணர்வு ஒன்று இன்மையால்–விவேக வுணர்ச்சி சிறிது மில்லாமையினாலே
அந்நான்று–முன்பொரு காலத்தில்
கரந்த உருவிய அம்மானை பின் தொடர்ந்து–நிஜமான வுருவத்தை மறைத்துக் கொண்டு வந்த அந்த மாரீச மானைப் பின் தொடர்ந்து கொன்ற
ஆழி அம் கை அம்மானை–அறுகாழி மோதிரத்தை அழகிய திருக்கையி லணிந்திருந்த இராம பிரானை
கைகேயி கழற்றாமல் விட்ட கணையாழி ஒன்றே பெருமாளிடம் அப்போது இருந்தது –
அத்தையும் திருவடி இடம் கொடுத்தார் அன்றோ
ஏத்தாது–தோத்திரம் செய்யாமல்
அயர்த்து–அறிவு கெட்டு
கீழ் நாள்கள் எல்லாம் வானா இருந்தொழிந்தேன்–கீழ்க் கழிந்த காலமெல்லாம் வீணாக இருந்து விட்டேன்.

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால்
அது பத்து
இது எட்டு
என்னும் ஞானம் இத்தனை அல்லது
பகவத் விஷயத்தை ஆராயும் ஞானம் ஒன்றும் இல்லாமையால்
தத் ஞானம் அஞ்ஞானம் அதோந்ய துக்தம்
வித்யாந்யா சில்பநை புணம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்னும் ஞானம் யுண்டாகையால்

(ப்ரஹ்மம் காணவும் அடையும் உள்ள ஞானமே ஞானம்
சம்சாரத்தில அழுத்தாமல் ப்ரஹ்மம் அடையும் கின்பணமே வித்யை
தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால்-துளி கூட ஞானம் இல்லை
கர்மம் -வித்யா -இரண்டையும் சொல்லி
ப்ரவ்ருத்தி மார்க்கம் இவை )

தீ வினையேன்
பகவத் அனுபவ யோக்யமான காலத்தைப் பாழே போக்கின
பாபத்தைப் பண்ணினேன்

வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம்
குனியக் குறுணி பற்றும் காலம் எல்லாம் வ்யர்த்தமே இருந்தேன்
(ஆனுகூல்ய லேசம் இருந்தாலே பேறு என்றவாறு )

அவதரித்து அல்ப அநுகூலயத்திலே விஷயீ கரிக்கும் காலம் போயிற்று என்று தாத்பர்யம்

கரந்த உருவின் அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
கைகேயி வாரத்தில் அகப்படா விட்டது திருக் கையில் அருகாழி ஒன்றுமே யாகாதே
வடிவைக் கரந்து வர்த்திக்கிற அம் மாய மானை
அன்று தொடர்ந்த
அருகாழியைக் கையிலே யுடைய ஸர்வேஸ்வரனை
இளைய பெருமாளும் உதவாத தசையில் ஏத்தப் பெறுவது
அறிவு கெட்டுக் கிடந்த நான் பழுதே போக்கினேன்

அம் மானை ஏத்தாது அயர்த்து
ஏத்துகை -அடிமையாய்
இப்படி அடிமை செய்யப் பெற்றிலேன் என்று இழவு பட்ட பேர் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –

(பேய் முலை உண்ட அவ்வாயன் நிற்க இவ்வாயன்-ஆயப்பிள்ளை
அதே போல் இங்கும் அம்மானை பத பிரயோகம் )

பெருமாள் மாய மானை எய்து மீண்டு எழுந்து அருளுகிற போது
அடிக் கொதித்து நடக்க மாட்டாமை தளிர்களை முறித்திட்டு அதின் மேலே எழுந்து அருளினார் -என்று
ஒருவன் கவி பாடவும்
எம்பெருமானார் கேட்டு அருளி
மாறி இடுகிற திருவடிகளிலே என் தலையை வைக்கப் பெற்றிலேன் -என்று அருளிச் செய்தார்

————–

அயர்ப்பாய் அயயர்ப்பாய் நெஞ்சமே சொன்னேன்
உயப்போம் நெறி யிதுவே கண்டாய் -செயற்பால
வல்லவே செய்கிறுதி நெஞ்சமே யஞ்சினேன்
மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து –83-

பதவுரை

நெஞ்சமே–ஓ மனமே!
செயற்பால அல்லவே–செய்யத் தகாதவற்றையே
செய்கிறுதி-செய்ய முயல்வாயென்று
அஞ்சினேன்–(உன்னைப் பற்றிப்) பயப்படுகின்றேன்;
மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து–மல்லர்களின் ஆயுளை முடித்த கண்ண பிரானை மங்களா சாஸநம் பண்ணிக் கொண்டிரு
உயப்போம் நெறி இதுவே கண்டாய்–உஜ்ஜீவிக்கலாம் வழி இதுவே காண்;
அயயர்ப்பாய்–(அப் பெருமானை) மறந்து கெட்டாலும் கெடு;
அயர்ப்பாய்–மறவாமல் நினைந்து வாழ்ந்தாலும் வாழ்;
சொன்னேன்–(உனக்கு நான் சொல்ல வேண்டிய ஹிதத்தைச்) சொல்லி வைத்தேன்.

அயர்ப்பாய் அயயர்ப்பாய்
அவனை மறந்து அநர்த்தப் படிலும் படு
நினைத்து வாழிலும் வாழு

நெஞ்சமே சொன்னேன்
ஒருத்தன் கிணற்றிலே விழா நின்றால் கரையிலே நின்று அவனுக்குக் கூப்பிட வேணும் இறே
அவ்வோபாதி சொன்னேன்

உயப்போம் நெறியிதுவே கண்டாய் –
அல்லாது எல்லாம் விநாசத்துக்குக் கண்ட வழி
உஜ்ஜீவிக்கக் கண்ட வழி இதுவே

செயற்பால வல்லவே செய்கிறுதி
நான் தப்பச் செய்கிறது உண்டோ என்னில்
செய்யப்படாதவை செய்யா நின்றாய்

செய்யப்படாதவை யாவது –
அயோக்யன் என்று அகலுகை –
தேவதாந்த்ர பஜனங்கள்

நெஞ்சமே யஞ்சினேன்
புகழ்வோம் பழிப்போம் என்கிற இத்தை அஞ்சினேன்
அயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகல வேண்டா
பயப்படாமல் வாழ்த்து என்றபடி –

மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து
நம்முடைய விரோதிகள் செய்வது என் என்னில்
மல்லரில் காட்டில் மிடுக்கு உண்டோ
அவற்றுக்கு மல்லருடைய ஆயஸ்ஸை க்ரஸித்தவனை வாழ்த்து

(நம்முடைய தோஷங்களை போக்குவதற்கு மங்களா சாஸனமே ஒரு வழி என்றவாறு )

———————-

(மனஸ்ஸூ ஒத்துழைத்தால் தானே கைகளைக் கூப்புவோம் –
தலையைத் தாழ்த்துவோம் -திருவடிகளில் பூ புனைவோம் -வாயால் ஏத்துவோம்
ஆகவே இவற்றை அதுக்கே உபகரணமாகக் கொண்டு அருளிச் செய்கிறார்
ஆழ்வாருக்கு சத்தையே இவைகள்
நமக்கும் இப்படியே இருக்க வேண்டும் என்று நெஞ்சை வியாஜ்யமாகக் கொண்டு உபதேசிக்கிறார் )

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–84-

பதவுரை

அவன் அடியை வாழ்த்தி–“அப்பெருமானுடைய திருவடிகளை மங்களா சாஸநம் பண்ணி
பூ புனைந்து–(அத் திருவடிகளிலே) பஷ்பங்களைச் சாத்தி
நின் தலையை தாழ்த்து–உன் தலையை வணங்கு;
இரு கை கூப்பு–இரண்டு கையையுங் கொண்டு அஞ்ஜலி பண்ணு”
என்றால்–என்று சொன்னால்
கூப்பாத–அப்படி செய்யாத
பாழ்த்த விதி–பாழும் விதியை யுடைய
என் நெஞ்சமே–என்னுடைய மனமே!
அவனை–அந்த ஸர்வேச்வானை
எங்கு உற்றாய் என்று ஏத்தாது–‘எங்கே யிருக்கிறாய்’ என்று சொல்லி யழைத்துத் துதியாமல்
தங்க ஆம் எனில்–தரித்திருக்கக் கூடுமாகில்
தங்கு–தரித்திரு.
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–தான்-அசைச் சொல்லாக்க கொண்டு –தங்க ஆம் எனில் தங்கு

பகவத் விஷயத்திலே ஒன்றும் செய்யாத நெஞ்சே
அவனை வாழ்த்தி அவன் திருவடிகளிலே பூக்களைப் புனைந்து
உன் தலையை அவன் திருவடிகளில் தாழ்ந்து இரண்டு திருக்கையையும் கூப்பு என்றால் கூப்பாதே
(தமது கைகளை திருக்கைகள் என்று வெறுப்பால் அருளிச் செய்கிறார் )

எங்குச் சென்றாகிலும் கண்டு -திருவாய் –6-8-5-என்னும்படி
ஆதரத்தோடே அவனை ஏத்தாத நெஞ்சமே
அவனைப் பற்றாதே கால் பாவலாம் ஆகில் தங்கு

பாழ்த்த விதி என்று
தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம்
பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்

என்னெஞ்சமே
யவனடியைப் பூ புனைந்து வாழ்த்தி
நின் தலையைத் தாழ்த்தி
இரு கை கூப்பு என்றால் கூப்பாதே
எங்குற்றான் என்றவனை ஏத்தாத
தங்க தான் ஆம் ஏலும் தங்கு
என்று அந்வயம்

நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த
செங்கட் கருமுகிலைச் செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை
எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!-6-8-5-

————-

பகவத் விஷயத்திலே எடுப்பும் சாய்ப்புமாய் இன்னாதாகா
இன்னாதாகா நிற்கச் செய்தே
லோக யாத்திரையை அனுசந்தித்து -மேகத்திலே கண் வைக்கை –
அங்கும் அதுவேயாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –

(ஓடிக் கொண்டே தபஸ்ஸூ பண்ணிட்றே
நின்றாலே நமக்கு த்யானம் வரவில்லையே
என்ன மாயம்
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்டி அங்கும் எடுப்பும் சாய்ப்புமாகவே உள்ளதே
இவன் ஒருவனே இன்னம் கார் வண்ணன் –
வெளுக்காமல் இருக்கவே தபஸ்ஸூ பண்ணுகிறதோ)

தங்கா முயற்றிய வாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத் தவம் செய்திட்டன கொல் -பொங்கோதத்
தண்ணம் பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய
கண்ணன் பால் நல் திறம் கொள் கார்–85-

பதவுரை

பொங்கு ஓதம்–கிளர்ந்த அலைகளை யுடைத்தாய்
தண் அம்–குளிர்ந்து அழகிய
பால் வேலை வாய்–திருப்பாற்கடலிலே
நல் நிறம் கொள் கார்–நல்ல-அழகிய கறுமை – திருமேனி நிறத்தைக் கொள்ளை கொண்டிருக்கிற மேகங்கள்
தங்கா முயற்சிய ஆய்–மாறாத முயற்சியை யுடையனவாய்க் கொண்டு
தாழ் விசும்பின் மீது பாய்ந்து–விசாலமான ஆகாசத்தின் மேலே ஸஞ்சரித்து
கண் வளரும்–திருக் கண் வளர்ந்தருளுகிற
என்னுடைய கண்ணன் பால்–எமது கண்ண பிரானிடத்திலுள்ள
எங்கே புக்கு–எந்த தேசத்திலே போய்
எத் தவம் செய்திட்டன கொல்–எவ் வகையான தபஸ்ஸைச் செய்தனவோ? (அறியேன்.)

தங்கா முயற்றியவாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து எங்கே புக்கு எத்தவம் செய்திட்டன கொல் –
உத்யோகித்த உத்யோகம் மாறாதே
ஆகாச அவகாஸம் எல்லாம் உலாவி
எங்கே புக்கு என்ன தபஸ்ஸூ பண்ணிற்றனவோ

தாழ் விசும்பு -எங்கும் ஓக்க ஒத்து ஏக ரூபமாய் இருக்கை –

பொங்கோதத்தண்ணம்பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய கண்ணன் பால் நல் திறம் கொள் கார்
கிளர்ந்த திரையை யுடைத்தாய்க் குளிர்ந்து இருந்த திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற
என் கண்ணனுடைய விலக்ஷண நிறத்தைக் கொள்ளுகிற மேகங்கள்
எவ்விடத்தே புக்கு என்ன தபஸ்ஸூ பண்ணிற்றினவோ

(தனக்கு என்று இல்லாமல் பர உபகாரார்த்தமாகவே இருப்பதால் தபஸ்ஸில் ஸ்வ அர்த்தம் இல்லையே

மேகங்களோ உரையீர் திருமால் திரு மேனி ஒக்கும்
யோகங்களும் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நல நீர்கள் சுமந்துநும் தம்
ஆக்கங்கள் நோவ வருத்தும் தவம் மா அருள் பெற்றதே –திரு விருத்தம் –32)

————

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-

பதவுரை

கார் கலந்த மேனியான்–மேகத்தோடொத்த திருமேனியை யுடையவனும்
கை கலந்த ஆழியான்–கையோடு சேர்ந்த திருவாழியை யுடையவனும்.
பார் கலந்த வல் வயிற்றான்–(பிரளய காலத்தில்) உலகமெல்லாம் வந்து சேரப் பெற்ற வலிய திருவயிற்றை யுடையவனும்
தண்ணீரால் கண்டு பிடித்து கரைக்க முடியாமல் ரக்ஷித்து அருளினான் அன்றோ
பாம்பு அணையான்–திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையவனுமான பெருமானுடைய
சீர் கலந்து–திருக் குணங்கள் நிரம்பிய
சொல்–ஸ்ரீஸூக்திகளை
நினைந்து-அநுசந்தித்து
சூழ் வினையின் ஆழ் துயரை போக்கார் –கொடிய பாவங்களினாலுண்டாகும் மிக்க துன்பங்களைப் போக்கிக் கொள்ளார்களாகில் (ஒழியட்டும்)
என் நினைந்து இப்போது போக்குவர்–வேறு எதை அநுஸந்தித்து இந்தப் போதைப் போக்குவார்கள்.

கார் கலந்த மேனியான்
ஸர்வதா ஸத்ருசமான மேகத்தோடே
ஒத்த திரு மேனியை யுடையவன்

கை கலந்த வாழியான்
திருக் கையிலே வேர் விழுந்த திருவாழியை யுடையவன்
(வேர் மரம் கிளை பூ போல் பொருந்தி அன்றோ இருக்கிறது )

பார் கலந்த வல் வயிற்றான்
பிரளயம் தேடி வந்தாலும் தோற்றாத படி
கலந்த பூமியை யுடையவனுமாய்
வயிற்றிலே புக்க வற்றுக்கு ரக்ஷகமான வயிற்றை யுடையவன்

(நமக்கு வல் வயிறு எத்தை உண்டாலும் ஜெரிக்க வேண்டும்
அவனுக்கு அனைத்தையும் ரக்ஷிக்கவே திருவயிற்றிலே கொள்கிறான் )

பாம்பணையான் -சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
வடிவு அழகுக்கும்
குணங்களுக்கும் வாசகமாய்ப்
பசும் கூட்டான சொற்களை நினைத்து
அனுபவ விநாஸ்யமான பாப பலமான துக்கத்தைப் போக்காராகில்

என்னினைந்து போக்குவார் இப்போது
பாபம் போக்க வேண்டா வாகில்
காலத்தைச் செல்ல விடும்படி எங்கனே

இப்போது –
இப்போதை -இக்காலத்தை -என்றபடி

(கார் கலந்த மேனியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ ராமாயணம்
கை கலந்த வாழியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ பாகவதம்
பார் கலந்த வல் வயிற்றான் சீர் கலந்த சொல் –இதிஹாசங்கள் புராணங்கள்
பாம்பணையான் -சீர் கலந்த சொல் -அருளிச் செயல்கள்
சீர் கலந்த சொல்–திருநாமங்கள் என்றுமாம் )

———

லோகத்தாரைக் கொண்டு கார்யம் இல்லை இறே
நீ
முன்னம் எப்போதும் இத்தையே சொல் -என்று
நெஞ்சுக்கு உபதேசிக்கிறார் –

(பயனன் றாகிலும் பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-

ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லையோ என்னில் –
க்ருத்ஸ்நாம் வாப்ருதிவீம் தத்யான்ன தத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே-
பஞ்சாசத் கோடி விச்தீர்ணையான பூமியும் சத்ருசமம் அல்ல என்று இறே சாஸ்திரம் –
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது அங்கும் இங்கும் -என்கிறபடி முமுஷு திசையிலும் முக்தி திசையிலும்
இனி எத்தைச் செய்வோம் என்கிற தலை சீய்ப்போடே காலம் போக்கும் அத்தனை –
உபகாரம் அதுக்கு பிரத்யுபகாரம் தேடுகையிலே மூட்டும் -உபகார கௌரவம் -பிரத்யுபகாரம் இல்லாதபடி பண்ணும் –
அதுக்கு சத்ருச பிரத்யுபகாரமாக வேணும் –
அது உண்டாகில் இறே இவன் பண்ணலாவது-இனி எத்தைச் செய்வோம் என்கிற தலை சீய்ப்போடே காலம் போக்கும் அத்தனை –
இவன் திருத்தித் தருகையாலே ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு ஆத்ம சமப்பர்ணம் பண்ணலாம் –
இவன் தானே திருத்தினவற்றை இவனுக்குச் கொடுக்கை சத்ருசம் அன்றே –
ஸ்ரீ ஆச்சார்யர் திருத்தி ஸ்ரீ பகவான் இடம் கொடுக்கையாலே ஆத்மா ஆச்சார்யர் சொத்து ஆகி விட்டதே –
அதனாலே அத்தை ஸ்ரீ பகவானுக்கு சமர்ப்பிக்கலாம் -ஸ்ரீ ஆச்சார்யருக்கு முடியாதே என்றபடி )

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
நம் மேல் வினை கடிவான்–நம்மிடத்திலுள்ள பாவங்களைப் போக்குவதற்காக
எப்போதும் கை கழலா நேமியான்–ஒரு போதும் கையை விட்டுப் பேராத திருவாழியை யுடையனான எமபெருமானுடைய
மொய் கழலே–அழகிய திருவடிகளையே
ஏத்த–ஸ்துதிக்க
முயல் உத்ஸாஹப்படு;
இப்போதும்–இக் காலத்திலும்
இன்னம் இனி சிறிது நின்றாலும்–மேலுள்ள காலத்திலும்
எப்போதும்–ஆக எந்தக் காலத்திலும்
ஈதே சொல்–இதுவே (உனக்கு நான் சொல்லும்) ஹிதோபதேசமாகும்.

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல்
இக்காலத்திலும் வரும் காலத்திலும் மற்றும் எல்லாக் காலத்திலும்
இது தன்னையே சொல்லு

நல் நெஞ்சே –
நான் புக்க இடத்தே புகக் கடவ நெஞ்சே

எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
எல்லாக் காலத்திலும் கையை விட்டு அகலாத திருவாழியை யுடையவன்
நம் பக்கல் பாபத்தைப் போக்குவான்

மொய் கழலே ஏத்த முயல்
போக்யமான திருவடிகளை ஏத்த உத்ஸாஹி
பற்றினாரை விட்டுக் கொடாத திருவடிகளை என்றுமாம் –

ஈதே சொல்லு

மொய் கழல்
அழகாதல்
மிடுக்காதல்

(ஈதே சொல்-
கீழே சீர் கலந்த சொல் -என்பதாகவுமாம்
அல்லது சொல்ல முயல் -என்ற இப்பாசுரம் சொல்லவே அமையும் )

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரண

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–பாசுரங்கள் -71-80–

July 1, 2021

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

(மாதா பிதா -என்றாலே காரணத்வம் பலிக்குமே
அடியேனுக்கு மட்டும் அன்றி ஸமஸ்த பிரபஞ்சத்துக்கும் த்ரிவித காரணமும் இவனே அன்றோ
பரத்வம் முதல் பத்து -இதுக்கு வேண்டிய மூன்றும்
காரணத்வம் இரண்டாம் பத்து –வியாபகத்வம் மூன்றாம் -நியந்த்ருத்வம் நாலாம் பத்து
நின்ற காரணம் பிரளயத்தில் இவன் ஒருவனே
தனி காரணம் ஒப்பில்லாத த்ரிவித காரணம்
அகில ஜகத் ஸ்வாமி -அஸ்மின் ஸ்வாமி
ஸ்ரீ ரெங்க நாத -மம நாத
என்று பரத்வமும் நீர்மையும் போல் இப்பாசுரம் )

ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அகப்பட உடம்பு கொடுத்தான் என்கிற நீர்மையைச் சொல்லிற்று ஆகவுமாம்
அவர்களுக்கு சத்தா ஹேதுவானான் என்கிற ஐஸ்வர்யத்தைச் சொல்லுகிறது என்றுமாம் –

இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
தனி நின்ற சார்விலா மூர்த்தி -பனி நீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின்னுந்தி முதல்–71-

பதவுரை

தனி நின்ற–தானொருவனுமே காரணமாய் நின்றவனும்
நின்ற காரணம் பிரளயத்தில் இவன் ஒருவனே
தனி காரணம் ஒப்பில்லாத த்ரிவித காரணம்
சார்வு இலா–வேறொருவரைத் தனக்கு ஆதாரமாக உடைத்தாகாதவனுமான
மூர்த்தி–எம் பெருமானே!
அகத்து பனி நீர் உலவு செம்சடையான்–உள்ளே குளிர்ந்த கங்கை நீர் தங்குகின்ற சிவந்த ஜடையை யுடையனான சிவன்.
ஆகத்தான்–உன் திருமேனியை ஆச்ரயித்து வாழ்பவன்;
நான்கு முகத்தான்–நான்முகக் கடவுள்
நின் உந்தி முதல்–உனது திருநாபிக் கமலத்தை மூல காரணமாக வுடையவன்;
இனி–இப்படியான பின்பு
நின் பெருமை–உனது மேன்மையை
யான் நின்று உரைப்பது என்னே-தான் முயன்று சொல்வது எங்ஙனே?
(என்னால் சொல்லப் போகாதென்கை)

இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
உன் ஐஸ்வர்யத்தை நான் தானே சொல்லுவது உண்டோ -என்னவுமாம்
உன்னுடைய நீர்மையை நான் சொல்லுவது உண்டோ என்னவுமாம்

தனி நின்ற சார்விலா மூர்த்தி –
கார்ய ஜாதம் எல்லாம் அழிந்து
காரண அவஸ்த்தமாய்
நாம ரூப விபாக அநர்ஹமாய்
தான் என்ற சொல்லிலே அடங்கித்
தனக்கு வேறே ஒரு அபாஸ்ரயம் இன்றிக்கே நின்றவனே

பதிம் விஸ்வஸ்ய-என்னா
ஆத்மேஸ்வரம் -என்னுமா போலே
ருத்ரம் ஸமாஸ்ரிதா தேவா ருத்ரோ ப்ராஹ்மாணம் ஆஸ்ரித -என்று இத்யாதிப்படியே
தனக்குச் சேர்த்துச் சொல்லலாம் ஒப்பை யுடையன் அல்லன் என்றுமாம்

(பதிம் விஸ்வஸ்ய–விஸ்வத்துக்குப் பதியாயும்
ஆத்மேஸ்வரம்–தானே தனக்கு ஈஸ்வரனாயும் –
தனி நின்றும் சார்வு இல்லாமலும் –
இது தானே மறையை தமிழாக அருளிச் செய்தது_

சார்வு -ஆச்சர்யம் ஆதல் -ஒப்பு ஆதல் –

பனி நீர் அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான்
கங்கையை ஜடையிலே தரித்தானாய் இருக்கிற ருத்ரன்
வலத்தனன் –திருவாய் -1-3-9- என்னுமா போலே
உன்னுடைய திரு மேனியில் ஏக தேசத்தில் ஆனான்

நான்கு முகத்தான் நின்னுந்தி முதல்
சதுர்முகன் உன்னுடைய நாபியைக் காரணமாக யுடையவன்
இனி நின் பெருமை யான் உரைப்பது என்னே

(அன்மொழித் தொகை உந்தித்தாமரையே முதல் -காரணம்
வேர் முதல் வித்து போல் )

————–

(சாம்யாவாதி மூவரும் சமம் என்பர்
ஏகத்துவ வாதி -ஐக்ய வாதி -உப லக்ஷணம் முறையில் இத்தையும் சொன்னதாக கொள்ள வேண்டும்
மூவருமே ப்ரஹ்மம் இல்லை நாலாவது உத்தீர்ண வாதி
பரா அஸ்ய சக்தி விவிதையா ஸ்ரூயதே –இவனது சக்தி அளவிடமுடியாதே -என்பதை
பராசக்தி வேறே ப்ரஹ்மம் என்று எல்லாம் சொல்வார்கள் உண்டே
மூவரையும் நிரஸித்து
தனது சித்தாந்தம் ஸ்தாபிக்கிறார்
உந்தித் தாமரையே இத்தைக் காட்டுமே
காரணம் வேறே கார்யம் வேறே )

(பாருருவி நீர் எரி கால் விசும்புமாகி
பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற
விமையவர் தம் திரு வுரு வேறு எண்ணும் போது
ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ
யொன்று மா கடலுருவம் ஒத்து நின்ற
மூ வுருவம் கண்ட போது ஒன்றாம் சோதி
முகிலுருவம் எம் அடிகள் உருவம் தானே-–ஸ்ரீ திரு நெடும் தாண்டகம்–2-)

கீழில் பாட்டிலே
எல்லாருக்கும் ஆஸ்ரயணீயன் -என்று சொல்லிற்று
இதிலே
வேறு ஸமாஸ்ரயணீயராய் இருப்பாராம் சிலரும் உண்டாய் இருக்க
இவனே ஆஸ்ரயணீயன் என்று சொல்லும் படி எங்கனே என்ன
அல்லாதாருடைய மதங்களை உபஸ்த்தாபித்து தூஷித்து ஸ்வ ஸித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –72-

பதவுரை

முதல்வா–ஸகல காரண பூதனான பெருமானே!
மூன்று திரு உருவம் முதல் ஆம் என்பர்–பிரமன் விஷ்ணு சிவன் என்கிற மூன்று திவ்ய மூர்த்திகள் தலைவராவர்’ என்று சிலர் சொல்லுவார்கள்;
மூன்றுக்கும் ஒன்றே முதல் ஆகும் என்பர்–‘மேற் சொன்ன மூன்று மூர்த்திகளுக்கும் வேறொரு தத்துவம் தலையாயிருக்கும்’ என்று மற்றுஞ் சிலர் சொல்லுவார்கள்.
நிகர் இலகு கார் உருவா–மேகமொன்று சொல்லலாம்படி அதனோடொத்து விளங்கா நின்ற திருமேனியை யுடையவனே!
புகர் இலகு தாமரையின் பூ–ஜகத் காரணமாம் ஆகிய பெருமிதத்தால் தேஜஸ்ஸு மிக்கு விளங்குகின்ற தாமரைப் பூவானது
நின் அகத்தது அன்றே–உன்னிடத்திலுள்ளதன்றோ? (திருநாபிக் கமலமே உனது பரத்வத்தை வெளியிட வல்லது என்றவாறு.)

முதலாம் திருவுருவம் மூன்று என்பர்
ஜகத்துக்குக் காரண பூதர் மூவர் என்பர்கள்
(முதலாம்-காரணமாம் )

ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்
மூவருக்கும் காரண பூதன் வேறே ஒருவர் என்பர்கள்

என்பர் என்கிற இத்தால்
ஸ்வ சித்தாந்தம் அன்று என்கிறது

முதல்வா
இதுக்கு எல்லாம் காரண பூதனே

நிகரிலகு காருருவா
மேகம் என்று சொல்லலாம்படி பதிவை யுடையவனே

நின்னகத்தன்றே புகரிலகு தாமரையின் பூ
ப்ரஹ்மாவுக்கு உத்பத்தி ஸ்தானமான தாமரைப்பூ உன் திரு நாபியதன்றோ

இத்தால்
ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனுக்கு ஸமர் அல்லர் என்னும் இடமும்
அவர்களில் ஒருவன் ஜகத்துக்குக் காரணம் என்னும் இடமும்
மூவரையும் ஒழிய-மூவரில் பிரதானராய் இருக்கிற விஷ்ணுவையும் ஒழிய –
வேறே ஓன்று ஜகத்துக்குக் காரணம் அன்று என்னும் இடமும் சொல்லுகிறது

மூவரில் அவனே காரணம் என்னுமத்துக்கும்
விஷ்ணுவுக்கும் பிறப்பு உண்டாகச் சொல்லா நிற்க அவன் காரணமான படி எப்படி
அவதரித்தான் என்ற இடம் உண்டோ என்ன
பிரமாணங்கள் அருளிச் செய்கிறார்

ஸ்ருஷ்ட்டி ஸ்திதி அந்தக்கரணம் –ஏக ஏவ ஜனார்த்தனம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் )-இத்யாதி-என்னும் படியே
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ராஸ்தே ஸர்வே ஸம் ப்ரஸூ யந்தே-(அதர்வணம் ) -என்கிற இது அவதார விஷயம்
மத்யே விரிஞ்ச கிரிசம் பிரதம அவதார (ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் )-என்னும்படியே

(அணைவது அரவணை மேல் இருவர் அவர் இணைவனாம் -முதல்வனாக இருந்து அன்றோ இணைகிறீர்
மற்றவர் கர்மாதீனம் -இவனது இச்சா க்ருஹீதம்
அஜாயமானா பஹுதா விஜாயதே
பிறப்பில் பல் பிறவி பெருமான் இவன் ஒருவனே )

(மத்யே விரிஞ்ச கிரிஸம் பிரதம அவதார
தத் சாம்யத ஸ்தகயிதும் தவ சேத் ஸ்வரூபம்
கிம் தே பரத்வ பிசுநை இஹ ரங்க தாமந்
சத்த்வ ப்ரவர்த்தந க்ரூபா பரிபாலந ஆத்யை –(ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்-உத்தர -51-)

ஹே ரங்க தாமந்
மத்யே விரிஞ்ச கிரிஸம்–பிரம ருத்ராதிகளின் நடுவே
தவ பிரதம அவதார–தேவருடைய முதன்மையான அவதாரமானது
தத் சாம்யத –அவர்களுடன் ஒற்றுமை நயம் காட்டி
ஸ்தகயிதும் தவ சேத் ஸ்வரூபம்–தேவருடைய பரத்வ ஸ்வரூபத்தை மறைத்துக் கொள்வதற்காகில்
தே பரத்வ பிசுநை –தேவருடைய பரத்வத்தை கோள் சொல்லக் கடவதான
சத்த்வ ப்ரவர்த்தந க்ரூபா பரிபாலந ஆத்யை–வேத உபதேச யோக உபதேசத்தி ரூபமான சத்வ ப்ரவர்த்தனம் என்ன
கிருபையினால் ரஷித்து அருளுவது என்ன இவை முதலிய கார்யங்களினால்
இஹ கிம் -இங்கே என்ன பயன் –
நீர்மையைக் காட்டி அருளவே இந்த அவதாரம்
பரத்வத்தை வருந்தியும் மறைக்க முடியாதே –

———-

இவனே ஆஸ்ரயணீயன் என்று அறுதியிட்டால்
பின்னை அனுபவமே இறே உள்ளது

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண் தோறும் -பாவியேன்
மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று –73-

பதவுரை

பூவையும்–பூவைப் பூவையும்
காயாவும்–காயாம் பூவையும்
நீலமும்–கரு நெய்தல் பூவையும்
பூக்கின்ற–புஷ்பிக்கின்ற
பிரான்–எம்பெருமானுடைய
உருவே என்று–திரு வுருவமே என்ற கொண்டு
பாவியேன்–அடியேனுடைய
பூரிப்பதால் பாக்யனான அடியேன் -பாவி விபரீத லக்ஷணை
காவி மலர்–செங்கழுநீர்ப் பூவையும்
என்றும் காண் தோறும்–பார்க்கிற போதெல்லாம்
அவ் அவை எல்லாம்–அந்தந்த மலர்களெல்லாம்
மெல் ஆவி–மிருதுவான உயிரும்
மெய்–சரீரமும்
மிகவே பூரிக்கும்–மிகவும் பருத்து வளர்கின்றது

பூவை காயா நீலம் பூவா நின்ற காவி மலர் இவை கண்ட பொது எல்லாம்
பிரான் உருவே என்று அறிவுடைய நெஞ்சு
பூரிக்கை அன்றிக்கே
உடம்பும் அகப் படப் பூரியா நின்றது

காவி -செங்கழு நீர்
ஆவி -நெஞ்சு
மெய் -உடம்பு

(ஆத்மாவுக்குத் தானே அறிவு
தர்மபூத ஞானத்துக்கும் அறிவு இல்லை
அறிவு வெளிப்படும் த்வாரமே தானே நெஞ்சு
இங்கு ஆவி என்ற சொல்லால் நெஞ்சு
கண் காது எலும்பு எல்லாம் ஜடப்பொருளாக இருந்தாலும்
கண்ணால் தெரிவதால் -ஞான இந்திரியம் -ஞானத்துடன் சம்பந்தம் என்பதால் உயர்வாகத் தோன்றும்
அதை விட மனஸ் ஸ்ரேஷ்டம்
ஆகவே அறிவுடைய நெஞ்சு என்கிறார்
நெஞ்சும் உடம்பும் பூரிக்கிறதே என்கிறார் )

—————-

சரீர பரிக்ரஹம் பண்ணி
ருசி பிறந்த பின்பு
அபேக்ஷித்தது
காலம் எல்லாம் இரந்தாராய்த் தோற்றுகிற படி
(ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ அன்றோ )

என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -குன்று
குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி –-74-

பதவுரை

ஒரு நாள் ஒழியாமை-ஒருநாளும் தப்பாமல்
என்றும்–எந்நாளும்
யான் இரந்தால்–அடியேன் பிரார்த்தித்தால்,
குன்று குடை ஆக ஆ காத்த கோவலனார்–(முன்பு) கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திப்
பசுக்களை ரக்ஷித்த கோபால கிருஷ்ண பகவான்
ஒன்றும் இரங்கார்–சிறிதும் தயவு செய்கிறாரில்லை;
உரு காட்டார்–தன் திருமேனியைக் காட்டுகிறாரில்லை;
நெஞ்சே–ஓ மனமே!
புவி–நாமிருக்கும் இடம்
பெரிதே புடை தான்–(அவருடைய அருள் வெள்ளம் ஏறிப் பாய முடியாத) மிகப் பெரிய மேட்டு நிலமோ?

என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால் ஒன்றும் இரங்கார் உருக் காட்டார் –
காலம் எல்லாம் நான் இரந்து போர
இருந்த இடத்திலே இருந்தாலும் இவன் நம்மை இரவா நின்றான் என்று இரங்குவதும் செய்கிறிலர்
தம் வடிவைக் காட்டுவதும் செய்கிறிலர்

குன்று குடையாக ஆ காத்த கோவலனார்
இரங்கி உருக்காட்டாதவர்
காட்டிற்று இலராகில் தரிக்கலாம் இறே
உபகாரம் அறியாத பசுக்களுக்கும் உதவுமவர் கிடீர் நமக்கு உதவாது ஒழிகிறார்
(ஆபால கோபாலருக்கும் காட்டுபவன் அன்றோ எனக்கு காட்டாமல் இருக்கிறான் )

நெஞ்சே புடை தான் பெரிதே புவி
அவருக்கு நீர்மை இல்லை என்னப் போகாது இறே
அவர் நீர்மை ஏறிப் பாயாததோர் இடம் தேடி எங்கே கிடந்தோம்

(புடை என்று குஹையாய்
அவன் கடாக்ஷ குஹையிலே கிடந்தோம் என்றபடி )

——————————-

(நம் பெரியவர் என்று பிராட்டியும் அவனும் அபிமானிக்கும் படி அன்றோ
நமது ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
என்னை நினைத்து தவிக்க வைத்தேனே என்று அவன் சமாதானம் செய்ய
சமாதானம் அடைந்து ஹ்ருஷ்டராய் நான் பெரியன் என்று லோக ப்ரஸித்தம்
நீ பெரியை என்பதனை யார் அறிவார் –
என்னுள்ளம் புகுந்து அன்றோ நீ சத்தை பெறுகிறாய்
என்று தாமே சொல்லிக் கொள்ளும் படி பண்ணி அருளுகிறார் )

உமக்கு என்றும் உதவிலோமாக நீர் சொல்லுவான் என்
உருக் காட்டிற்று இல்லையே என்று வெறுக்கும் படி உம்மைப் பண்ணினோமே -என்ன
அத்தை அனுசந்தித்து
என்னோடே ஒப்பார் உண்டோ என்கிறார்

புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு–75

பதவுரை

ஊன் பருகு நேமியாய்–(அஸுர சரீரத்திலுள்ள) மாம்ஸங்களைக் கவர்கின்ற திருவாழி யாழ்வானைக் கையிலேந்தியுள்ள பெருமானே!,
புவியும்–இவ் வுலகமும்
இரு விசும்பும்–விசாலமான மேலுலகமும்
என் உள்ளாய்–என் பக்கல் இரா நின்றாய்:
என்னுள்ளம் புகுந்து அன்றோ நீ சத்தை பெறுகிறாய்
யான் பெரியன்–நானே பெரியவன்;
நின் அகத்த–உன்னிடத்தே யுள்ளன;
நீ–உபய விபூதியையும் உள்ளே அடக்கிக் கொண்டிருக்கின்ற நீ
என் செவியின் வழி புகுந்து–என் காது வழியே புகுந்து
அவிவு இன்றி–ஒரு நாளும் விட்டு நீங்காமல்
நீ பெரியை என்பதனை யார் அறிவார்–நீ பெரியனென்று அறிவாருண்டோ?
உள்ளு–இதை நீயே ஆலோசித்துப் பார்.

புவியும் இரு விசும்பும் நின்னகத்த
உபய விபூதியும் உன் ஸங்கல்பத்திலே கிடக்கின்றன

நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளே அவிவின்றி
உபய விபூதி யுக்தனான நீ
என்னுடைய ஸ்ரோத்ர இந்திரியத்தை வழியே புகுந்து
விச்சேதம் இன்றிக்கே என் ஹ்ருதயத்திலே உளையாகா நின்றாய்

(உளன் ஆகிறான் –
உளையாகா நின்றாய் முன்னிலையாக பேசுகிறார் -சத்தை பெறுகிறாய் என்றபடி
ஸ்ரீ ருக்மிணி தேவி புவந ஸூந்தர காதின் வழியே புகுந்து உள்ளே புகுந்தாய் என்றாள் அன்றோ )

யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
உபய விபூதியை யுடைய நீயோ
விபூதிமானை யுடைய நானோ
பெரியார் யார் என்று அறிவார் யார்

(விஸ்வம் பர பரா ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் -சமக்யா பந்ததி -ஆழ்வாரை
இப்பாசுரம் அடியாகவே அருளிச் செய்கிறார் )

ஊன் பருகு நேமியாய் உள்ளு
அப்ரதிஹத சக்தியான நீ அறிவுதி யாகில் சொல்லு

ஊன் பருகு நேமி
சத்ரு சரீரங்களைப் பருகுகிற திருவாழி

————–

ஸ்ரவண ஞான அனந்தர பாவியான மனனத்தைச் சொல்லுகிறது –

உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப் படலம்
விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால் உள்ள
உலகளவும் யானும் உளனாவன் என் கொலோ
உலகளந்த மூர்த்தி உரை –76-

பதவுரை

உலகு அளந்த மூர்த்தி–த்ரிவிக்ரம பகவானே,
உன்னை உள்ளிலும்–உன்னை(நெஞ்சில்) அநுஸந்தித்த மாத்திரத்திலும்
உள்ளம்–எனது நெஞ்சானது
துடிக்கும்–(ஸந்தோஷத்தினால்) பூரிக்கின்றது
வினை படலம் விள்ள–பாவங்களின் கூட்டங்கள் என்னை விட்டு ஒழிந்து போம்படி
விழித்து–உன்னாலே நான் கடாக்ஷிக்கப் பெற்று
ஸ்ரமணி விதுரர் -ரிஷி பத்னிகளை – பூதராக்கின நெடும் நோக்கு
ஜாயமானம் புருஷன் யம் பஸ்யதி மது ஸூதன கடாக்ஷம்
உன்னை மெய்யுற்றால்–(பரம பதத்திலே வந்து) உன்னை உள்ளபடியே அடைந்து விட்டேனாகில்
இங்கு மானஸ ஸாஷாத் கரித்தால் -மெய் -பாஹ்ய சாஷாத்காரம் ஸமான
உள்ள உலகு அளவும்–நீ வியாபித்திருக்கிற உலகமெங்கும்
யானும் உளன் ஆவன்–நானும் வியாபித்தவனாவேன்;
ஸ்வரூப வியாப்தி இல்லையே அணு ஸ்வரூப ஆத்மா விபு போல் ஆகுமே -தர்ம பூத ஞான வியாப்தி
என் கொலோ–நான் சொல்லுகிற விது ஸம்பாவிதநதானோ?
உரை–நீயே சொல்லு.

உள்ளிலும் உள்ளம் தடிக்கும்
உன்னை அனுசந்திக்கில் ஸ்த்தூலமான தேகம் போலே
அமூர்த்தமான ஹ்ருதயம் தடியா நின்றது

வினைப் படலம் விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால்
பாப ஸமூஹம் விண்டு போம்படி நீ பார்த்து
உன்னை சாஷாத்கரித்து-என்றுமாம்

மெய்யுற்றால் -சாஷாத்கரித்தால்
இங்கே மானஸ சாஷாத்காரம் ஆதல்
அங்கே பாஹ்ய சாஷாத்காரம் ஆதல்

உள்ள உலகளவும் யானும் உளனாவன் என்கொலோ
வியாபக தத்வம் இரண்டு ஆகிறது போலே
(வியாபகத்வம் இரண்டு ஸ்வரூபமம் ஞானமும் -அவனைப் போலவே ஆனதே )

ஞான வியாப்தி இவரது

உலகளந்த மூர்த்தி உரை
சிறிய வடிவைக் கொண்டு லோகத்தை எல்லாம் வ்யாபித்து இருக்கிற நீயே சொல்லு
இந்த ஆச்சர்யத்தை நீ சொல் என்றபடி

————-

அறியாதே நன்று என்று பிரமித்து
வேறே சிலர் உற்றார் என்று இருக்கும் அத்தனை இறே
விமர்த்த ஸஹரான-(பாதக ஸஹர் )- பந்துக்கள் வேறே உண்டோ என்கிறது –

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பெல்லாம்
நின்னன்றி மற்றிலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர்
சொல் நன்றி யாகும் துணை–77-

பதவுரை

இரைக்கும் கடல்–கோக்ஷிக்கின்ற திருப்பாற் கடலிலே
கிடந்த–பள்ளிக் கொண்டிரா நின்ற
எந்தாய்–ஸ்வாமீ!-என்னைத் தேடி -கைக்கொள்ள அன்றோ ஷீராப்தி நாதனாக சாதனம் பண்ணுகிறாய்
உரைக்கில்–ஆராய்ந்து சொல்லில்,
ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே–(நீ தவிர) தாயாதிகளென்றும் பந்துக்களென்றும் சொல்லக் கூடியவர்கள் எனக்கு ஆரேனுமுண்டோ?
எனது உயிர்க்கு–என் ஆத்மாவுக்கு
ஓர் சொல்–‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய’ என்கிற சரம ச்லோகமாகிற ஒரு சொல்லாலே
நன்றி ஆகும் துணை–உதவி செய்யும் துணையும்
உரைப்பு எல்லாம்–மற்றும் சொல்லப்படுகிற எல்லா வகையான துணையும்
நின் அன்றி மற்று இலேன் கண்டாய்–உன்னைத் தவிர வேறொருவரையும் உடையேனல்லேனும் காண்.
நவவித சம்பந்தமும் அவனே -பிதா ச இத்யாதி

(பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல் படி கால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-)

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே
ஆரே என்று கேட்டால்
வேறே சிலர் இல்லை
நானே யுள்ளேன் -என்று
அவன் தனக்குச் சொல்ல வேணும் போலே

இரைக்கும் கடல் கிடந்த எந்தாய்
நித்ய ஸூரிகள் ஸதா அனுபவம் பண்ணா நிற்கச் செய்தே
திருப்பாற் கடலிலே அவஸர ப்ரதீஷனாய் வந்து கிடக்கிறவனே

உரைப்பெல்லாம் நின்னன்றி மற்றிலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர் சொல் நன்றி யாகும் துணை
துர்த் தசையில்
மா ஸூச என்று நற் சொல்லு சொல்லும் அத்தனை

உரைக்கப் படுவது எல்லாம் உன்னை ஒழிய வேறே ஒருவர் இல்லை
துணையாக உரைக்கப்படுவது எல்லாவற்றிலும் உன்னை ஒழியத் துணை இல்லை -என்றபடி

——-

(முதல் ஆழ்வார்கள் அயோனிஜர் -மூன்று திருவந்தாதிகள்
நான்முகன் திருவந்தாதி
பெரிய திருவந்தாதி
இந்த ஐந்தும் அர்த்த பஞ்சகம் -பரத்வாதி பஞ்சகம் சொல்ல வந்தவை என்றும் கொள்ளலாமே )

கீழ் உற்றார் இல்லை என்றது
உற்றார் உண்டாகிலும்
ஸம்ஸாரம் இனிதாகிலும்
உன் அனுபவத்தை ஒழியப் புறம்பு உண்டோ -என்கிறார் –

துணை நாள் பெருங்கிளையும் தொல் குலமும் சுற்றத்
திணை நாளும் இன்புடைத்தா மேலும் -கணை நாணில்
ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக வுண்–78-

பதவுரை

துணை–ஸ்நேஹிதர்களும்
நாள்–ஆயுஸ்ஸும்
பெரு கிளையும்–பிள்ளைகள் பேரன்கனென்கிற பெரிய ஸந்தானமும்
தொல் குலமும்–பரம்பரையாக வருகிற நற்குலமும்
சுற்றத்து இணை–பந்துக்களோடே சேர்ந்திருப்பதும்
(ஆகிய இவை யெல்லாம்)
நாளும்–நாள்தோறும்
இன்பு உடைத்து ஆம் ஏலும்–(துக்கத்தை யுண்டு பண்ணாமல்) ஸந்தோஷத்தை யுண்டு பண்ணுவன வென்றே வைத்துக் கொண்õடலும்,
நல் நெஞ்சே–நல் மனமே!
(நீ அவற்றில் ஆசை கொள்ளாமல்)
கணை நாணில் ஒவா தொழில் சார்ங்கன்–அம்புகள் நாணில் நின்றும் ஒருகாலும் மாறாதபடி
வீரத் தொழில் செய்து கொண்டே யிருக்கிற வில்லை யுடையனான இராமபிரானுடைய
தொல் சீரை–இயற்கையான நற் குணங்களையே
ஓவாத ஊண் ஆக உண்––தடை அற்ற -நித்ய போக்யமாக அநுபவிக்கக் கடவாய்.

துணை நாள் பெருங்கிளையும் தொல்குலமும் சுற்றத் திணை நாளும் இன்புடைத்தா மேலும் –
துணை
ஆயூஸூ
பெருங்கிளை
ஆபி ஜாத்யம்
பந்துக்களோட்டைச் சேர்த்தி
இவை நித்யமுமாய் இனிதாயே யாயிற்றே யாகிலும்

கணை நாணில்
அம்பானது நாணில் இடைவிடாதே வியாபிக்கிற வில்லை யுடையவன்

கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை
என்றும் ஆஸ்ரிதர் கார்யம் மாறாதே செய்து போருமவருடைய கல்யாண குணங்களை

நல் நெஞ்சே
ஸோபாதிக பந்துக்களுக்கும்
நிருபாதிக பந்துக்களுக்கும்
வாசி யறியும் நெஞ்சே

எம்பெருமானைப் பற்று என்று
சொல்லப் பாங்கான நெஞ்சு -என்னவுமாம்

ஓவாத ஊணாக வுண்
விச்சேதம் இல்லாத போகமாக புஜி

————

உண்ணாட்டுத் தேசன்றே ஊழ் வினையை யஞ்சுமே
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-மண்ணாட்டில்
ஆராகி என் இழிலிற்று ஆனாலும் ஆழி யங்கைப்
பேராயற்கு ஆளாம் பிறப்பு –79-

பதவுரை

மண் நாட்டில்–இந்த மண்ணுலகத்திலே
ஆர் ஆகி–எப் பிறவியிலே பிறந்தவராயினும்
என் இழிலிற்று ஆனாலும்–எப்படிப்பட்ட இழி தொழில்களை யுடையவர்களாயினும்
ஆழி அம் கைபேர் ஆயற்கு ஆன் ஆம் பிறப்பு–திருவாழியை அழகிய கையிலே யுடைய
ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு அடிமைப்பட்ட வர்களாகப் பிறக்கும் பிறவியானது.
உன் நாடு தேச அன்றே–பரம பதத்திள்ள தேஜஸ்ஸை யுடையதன்றோ?
ஊழ் வினையை அஞ்சுமே–அநாதியான பாவங்களைக் குறித்து அஞ்ச வேணுமோ?
விண் நாட்டை–ஸ்வர்க்க லோகத்தை
ஒன்று ஆக–ஒரு பொருளாக
மெச்சுமே–விரும்பக் கூடுமோ?

ஆழியங்கைப் பேராயற்கு ஆளாம் பிறப்பு
ஸர்வேஸ்வரனாய் வைத்து இதர ஸஜாதீயனாய்ப் பிறந்தவனுக்குக்
கைங்கர்யம் பண்ணுகைக்கு யோக்யமான ஜென்மம்
பரம பதத்தில் இருக்கும் தேஜஸ்ஸை யுடைத்தன்றே என்றுமாம்

உண்ணாட்டுத் தேசன்றே
உள் நாடு என்று பரம பதமாகக் கொள்ளுகிறது-பகவத் அபிப்ராயத்தாலே
(அக்கரை -சம்சாரம் இக்கரை பரமபதம் என்று உண்டே )

தேசன்றே -தேசன்றோ என்றபடி

(தேவத்மும் நிந்தை யானவனுக்கு
ஒளி வரும் ஜனிகள் போலே
ப்ரஹ்ம ஜன்மமும்
இழுக்கு என்பார்க்கு
பண்டை நாளில் பிறவி
உள் நாட்டு தேசு இறே–ஆச்சார்ய ஹிருதயம்-81-

தாஸ்ய ரசம் அறிந்தார்க்கு -பண்டை நாள்- 9-2–என்ற திரு வாய் மொழியில்
பல் படி கால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும் தொண்டர் -என்றும்
உன் பொன் அடி கடவாதே வழி வருகின்ற அடியார்-என்றும்
தொல் அடிமை வழி வரும் தொண்டர்-என்றும் சொன்ன படியே
தாஸ்ய விரோதியான ஜன்மாத்ய அபிமானம் இன்றிக்கே கைங்கர்ய அனுரூபமான குடிப் பிறவி-
ஆழி அம் கை பேராயருக்கு ஆளாம் பிறப்பு -உள் நாட்டு தேசு அன்றே –பெரிய திருவந்தாதி -79-
என்கிறபடியே -பகவத் விமுக பிரசுரம் ஆகையாலே
புற நாடான லீலா விபூதி போல் அன்றிக்கே பகவத் அனுகூல்ய ஏக போக ரசத்திலே
நெருங்கி போக விபூதியாய் ,அவனுக்கு அந்தரங்கமாய் இருக்கிற பரம பதத்தில்
வர்த்திக்கிற தேஜசை உடைத்து இறே என்கை —
பரம பதத்தில் பகவத் கைங்கர்ய அனுகுணமாக பரிக்ரஹிக்கும் தேஹத்தோபாதி
சேஷ வஸ்துவான ஆத்மாவுக்கு இதுவும் தேஜஸ் கரம் என்று கருத்து
ச ஏக பவதி இத்யாதி போல் அங்கு கைங்கர்யத்துக்கு எடுத்துக் கொள்ளும் பிறப்புக்களில் ஒன்றே இதுவும் )

ஊழ் வினையை யஞ்சுமே விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-
ப்ரஹ்மாதிகள் குடியிருப்பை ஒன்றாக எண்ணுமே
ஸூர புரீ யத் கச்சதோ துர்க் கதி (ஸ்ரீ குண ரத்ன கோஸம் ஸ்ரீ பராசர பட்டர் )

அஞ்சுமே -அஞ்சான் என்றபடி –

ஸ்வர்க்கத்துக்குப் போம் வழி தண்ணிது -என்கிறது
ந தேவ லோகா க்ரமணம் (ஸ்ரீ ராமாயணம் லஷ்மணன் வாரத்தை )
பறைச் சேரியில் அடியிடுமா போலே ஸ்வர்க்கத்தில் அடியிடுகை
வேண்டேன் என்கிறார்
தஸ்யாந்த ராயோ மைத்ரேய தேவேந்த்ராத் வாதிகம் பதம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )
பகவத் விஷயத்திலே கை வைத்தவனுக்கு அந்தராயமாவது இந்த்ரனாய் இருக்கும் இருப்பு இறே

உள் நாடு என்று ஸம்ஸாரமாகக் கொண்ட பக்ஷத்திலே
விண்ணாடு என்று பரம பதமாகக் கடவது

மண்ணாட்டில் ஆராகி எவ்விழி விற்றானாலும்
ஸம்ஸாரம் தான் தண்ணிது
அதிலே நிஹீன ஜென்மம் ஆகவும் அமையும்
எல்லா இழிவையும் யுடைத்ததாகவும் அமையும்
பகவத் அனுபவ யோக்கியமான ஜென்மமே வேண்டுவது
இதுக்குப் புறம்பான ஜென்ம வ்ருத்தங்கள் அப்ரயோஜகங்கள்

ஆராகி
எந்த ஜென்மம் ஆகிலும்

எவ்விழிவில்
எந்த வியாபாரம் ஆகிலும் என்னவுமாம்

பேராயர் என்று
அல்லாத இடையர் நித்ய ஸூரிகள் என்னும்படி இவனுடைய இடைத் தனத்தில் முதிர்ச்சி சொல்லுகிறது –

மண்ணாடு தொடங்கி ஒன்றாக எண்ணுமே –என்று கிரியை –

————–

(கீழே ஐஸ்வர்யாதிகள் வேண்டாம்
இதில் கைவல்யமும் ஜரா மரண மோக்ஷம் (ஸ்ரீ கீதை -7 )கிடைத்தாலும் பொருட்டாக எண்ண மாட்டேன்
அவனை மறந்து ஒரு க்ஷணமும் தரியேன் என்கிறார் )

பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் -மறப்பெல்லாம்
ஏதமே என்றல்லால் எண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்–80-

பதவுரை

பிறப்பு–பிறவியையும்
இறப்பு–மரணத்தையும்
மூப்பு–கிழத் தனத்தையும்
பிணி–வியாதிகளையும்
துறந்து–ஒழிந்து
பின்னும்–அவ்வளவோடு மல்லாமல்
இறக்கவும்–மிகவும் இன்பு உடைத்து ஆம் ஏலும்–ஆநந்தமுடையதான கைவல்ய மோக்ஷம் உண்டாவதானாலும்
மண் அளந்தான் பாதமே ஏத்தா பகல்–உலகளந்த பெருமானுடைய திருவடிகளை வாழ்த்தப் பெறாத காலங்களிலுண்டான
மறப்பு எல்லாம்–மறப்புகள் எல்லாம்
ஏதமே என்று அல்லால் எண்ணுவனே–துன்பமென்றே எண்ணுவனே யொழிய வேறு வகையாக எண்ணுவனோ?

பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும் இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் –
ஸம்ஸார ஸம்பந்தம் அற்று
அளவிறந்த ஆத்ம அனுபவம் உண்டாயிற்றாகிலும்

பின்னும் இறக்கவும் –
இறக்கை அளவிறகையாய்
மிகவும் என்றபடி

மண்ணளந்தான் –பாதமே ஏத்தாப் பகல்–மறப்பெல்லாம் ஏதமே என்றல்லால் எண்ணுவனே
திரு உலகு அளந்து அருளின நீர்மையை யுடையவன் திருவடிகளை ஏத்தாத
பகலில் மறப்பெல்லாம்
துக்கமே என்று அல்லது மநோ ரதிப்பானோ

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–பாசுரங்கள் -61-70–

July 1, 2021

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

லோக யாத்ரையை-ஆகாசத்தைப் பார்க்கையே லோக யாத்ரை – அனுசந்திக்கப் புக்காலும்
அவனை முன்னாக அல்லது காண மாட்டாமை சொல்லுகிறது

சிறியாச்சான் –
சப்தாதி விஷயங்களில் நின்றும் நாம் மீள மாட்டாதால் போலே
ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் நின்றும் மீள மாட்டார்கள் –என்று
நம் பிள்ளைக்குப் பணித்தான்

ப்ரஹ்மாதிகளுக்குப் பரம பதத்தில் இருக்கும் இருப்பு அனுபவிக்க நிலம் அன்று
உகந்து அருளின இடங்களிலே அனுபவிக்கும் அத்தனை

(நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள் -காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்
எங்கு இருந்தாலும் உத்பலா விமானம் பார்ப்பாள் பரகால நாயகி
நாமோ அங்கே இருந்தாலும் உத்பலா விமானம் தெரியாது )

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந் நாள்
மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்–61

பதவுரை

தாழ் விசும்பின் மீது–வெளியான ஆகாசத்திலே
இலசி கிடக்கும் மீன்–விளங்கா நின்ற நக்ஷத்திரங்களானவை
இறை முறையான்-ஸ்வாமியான முறைமையை யுடைய எம்பெருமான்
ஈஸி ஈஸித்வய -நியமனத்துக்கு உட்பட்ட -சம்பந்தம் உண்டே
மண் அளந்த அந்நாள்–தனது உடைமையான உலகளந்த அக் காலத்திலே
வான் நாடர்–வானுலகத்திலுள்ளாரெல்லாரும்
கூடி–கும்பல் கூடி-ஓன்று சேர்ந்து –
சே அடி மேல்–(அப்பெருமானது) செவ்விய திருவடிகளின் மேல்
மறை முறையால்–வேதங்களிற் சொல்லிய விதிப்படி
தாது இலகு பூ–தாதுக்களாலே விளங்கா நின்றுள்ள புஷ்பங்களை
முறை முறையின்–முறை முறையாக
தெளித்தால் ஒவ்வாதே–தெளிந்தாற் போன்றுள்ளன வன்றோ?

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந்நாள்
ஈஸ்வரனான முறையாலே திரு உலகு அளந்து அருளினவனுடைய திருவடிகளிலே

மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தேவர்கள் வேதம் சொன்ன முறையாலே திரு உலகு அளந்து அருளின திருவடிகளிலே

முறை முறையின் –
முறை முறையாக -வரிசை யடைவே

தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின் மீதிலகித் தான் கிடக்கும் மீன்
உஜ்ஜ்வலமான புஷ்பங்கள் தெளித்தால் போலே யன்றோ
ஒத்த விசும்பின் மேல் கிடக்கிற நக்ஷத்திரங்கள் இருக்கிறது
(விசும்பு -விஷ்ணு பதம் ஆகாயம் இடம் திருவடி மூன்றுமே பதார்த்தம் )

இறை முறையான் சேவடி மேல்
வந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி
முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்
என்று அந்வயம் –

—————

(த்ரிவிக்ரம அனுபவம் பின்னாட்டுகிறது இதிலும் )

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான் குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-

பதவுரை

மீன் என்னும் கம்பில்–நக்ஷத்திரங்களாகிற கம்புகளை யுடையதும்
வெறி என்னும் வெள்ளி வேய்–சந்திரனாகிற வெள்ளிக் குழையை யுடையதும்
நக்ஷத்ர பதி சந்திரனும் வெள்ளி சுக்ரனும் -இவர்கள் தலைவர்கள்
இவர்களுக்கு அடங்கி தானே நக்ஷத்திரங்கள்
குழை -வளைந்த கம்பி போல் குடையைத் தங்கி இருக்குமே
வான் என்னம்–ஆகாசமென்கிற பெயருடையதும்
கேடு இலா–ஒருநாளும் அழிவில்லாததுமான
முதலில் படைக்கப்பட்டு இறுதியில் அழிக்கப் படுவதே தானே ஆகாசம்
வான் குடைக்கு–பெரிய குடைக்கு
ஓர் மணி காம்பு போல் நிமிர்ந்து–ஒப்பற்ற நீல மணி மயமான காம்பு போல வளர்ந்து
மண் அளந்தான் தான்–உலகளந்தவனான பெருமாள்
பின்–மேலுள்ள காலமெல்லாம்
நங்கள் பிணிக்கு–நம்முடைய (ஸம்ஸாரமாகிற) வியாதிக்கு
பெரு மருந்து ஆம்–சிறந்த ஔஷதமாவன்

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய் வான் என்னும் கேடிலா வான்குடைக்கு
தானோர் மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான்
நக்ஷத்திரங்கள் ஆகிற கம்புகளையும்
உடு பதி என்னுமா போலே
நக்ஷத்ரங்களுக்கு ராஜாவான சந்த்ர சுக்ரர்களைக் குழலாக யுடைத்தான
நித்யமாய்ப் பெருத்த ஆகாசமாகிற குடைக்கு
நீல மணியாலே சமைந்த தொரு காம்பு போலே வளர்ந்து
பூமியை அளந்தான்
(நக்ஷத்ராணாம் அஹம் சசி -கீதை )

நங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின்-
திரு வுலகு அளந்து தேவர்களுடைய துக்கத்தைப் போக்கினால் போலே
நம்முடைய ஸம்ஸாரத்துக்கு பரமான ஒவ்ஷதம்

மண் அளந்த அபதானத்துக்குக் குடையும் காம்புமாக்கி நிரூபிக்கிறார்
வெறி -சந்திரன் -தாராபதி
வெள்ளி -சுக்ரன்
வேய் என்று குடையில் அடியிலே இருக்கிற மூங்கில் குழல்

———————

(அவதாரம் முடித்து ஷீராப்தி அடைந்தது போல்
மேகம் திரும்ப வந்தது போல் என்றால் லிங்க குறை வரும்
படி -சொல் அத்யாஹாரம் தருவிக்க வேண்டிய குறையும் உண்டே
ராமனின் தன்மைக்கு மேகத்தின் தன்மை உவமானம் தன்மை படி
பரன் -வாய்மைத்து அஃறிணை கூடாதே வாய்மையன் வசனம் மாறாடிக்கொள்ள வேண்டுமே
மேகம் அவன் மீண்டால் போல் என்று நம்பிள்ளை நிர்வாகம் )

பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய்
வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று
திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும்
பருச் செவியும் ஈர்ந்த பரன்–63-

பதவுரை

பின் துரத்தும் காற்று இழந்த சூல் கொண்டல்–பின்பற்றித் தள்ளுகிற காற்றையிழந்து கடலிலே போய்ச் சேர்ந்த காள மேகமானது
(எப்படி யிருக்கின்றதென்றால்)
திரு செய்ய நேமியான்–வீர வெற்றி லஷ்மி கொண்ட அழகிய சிவந்த சக்கரத்தை யுடையவனும்,
தீ அரக்கி–கொடிய ராக்ஷஸியான சூர்ப்பணகையினது
மூக்கும்–மூக்கையும்
பரு செவியும்–பருத்த காதுகளையும்
அன்று–ஸ்ரீராமாவதாரத்தில்
ஈர்த்த–அறுத்தொழித்தவனுமான
பரன்–ஸ்ரீராமபிரான்
பேர்ந்தும் போய்–(அவதார காரியத்தை முடித்த பின்பு) மறுபடியும் சென்று
வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்து–பெரிய திருப்பாற்கடலிலே வந்து சேர்ந்தபடியை ஒத்திருக்கின்றது.

பின்னே துரக்கிற காற்றை இழந்த சூல் கொண்டல்
திரியட்டும் கடலிலே புக்குக் கிடந்த வாய்மையன் -மெய்யான ஒப்பாய் உடையன் என்று

வாய்மைத்து என்றத்தை
வாய்மையின் என்று வசனத்தை மாறாடிக் கொள்ளவுமாம்

வசனத்தை மாறாடுகை –
வாய்மைத்து என்ற நபும்சகத்தை
வாய்மையன் என்று புல்லிங்க மாக்குகை

படி என்று ஸ்வ பாவமாய்
அத்யா ஹார்ய பக்ஷத்தில் லிஙகவ்யத்யயம் வேண்டா –

பருச்செவியுமீர்ந்த பரன் படி என்று அத்யா ஹரித்துக் கொள்ளவுமாம்

ஒன்றுக்கு வசந வ்யத்யயம் பண்ண வேணும்

ஒன்றுக்குப் படி என்று அத்யாஹரிக்க வேணும்

இரண்டு மிறுக்கும் ஒழிய
உபமான உபமேயங்களை மாறாடாதே
நேரே யோஜிக்கப் போம் என்று நம் ஜீயருக்கு (நம்பிள்ளை )விண்ணப்பம் செய்தபடி

பின் திறக்கும் காற்று இழந்து சூல் கொண்டல்
பெருமாள் ராவண விஜயம் பண்ணி
திரியட்டும் திருப்பாற் கடலிலே போய்க் கண் வளர்ந்தால் போலே இருந்தது

(லக்ஷணையால் ராவண வதம் பர்யந்தம் கொள்ள வேண்டும்
தேவ பிரார்த்தனை முடித்த பின்பே திருப்பாற் கடலிலே போய்க் கண் வளர்ந்தார் )

மேகத்தின் ஸ்வபாவம் போலே இருக்கிற பெருமாள் படி என்றால் மிறுக்கு உண்டு
பெருமாளுடைய ஸ்வபாவம் போலே இருக்கிற மேகத்தின் படி என்றால் மிறுக்கு இல்லை என்று கருத்து

மேகமானது
ராவண வதம் பண்ணித் திருப்பாற் கடலிலே அளைந்த வாய்மைத்து -ஸ்வபாவத்தை
யுடைத்து என்று பலிதம் –

—————

(உயர் திண் அணை ஓன்று -நான்கும் பரத்வ ஸ்வரூபம் –
பரத்வே பரத்வம் -தொடங்கி அர்ச்சா பரத்வம் ஈறாக எல்லா திசையிலும் –
மோக்ஷ பிரதத்வம் இருப்பதாலும் பரத்வம்
இதில் விபவ பரத்வம்
இங்கேயே பரத்வ ஸுலப்யாதிகள் அனுபவிக்கலாய் இருக்க பரமபதமும் வேண்டுமோ என்றபடி
மரா மரம் ஏழும் எய்த முதல்வாவோ மரம் இரண்டின் போன முதல்வாவோ -அங்கும் ராமகிருஷ்ண அவதார பரத்வம்
ஜடாயு மோக்ஷம் போன்ற சில இடங்களில் ராமனின் பரத்வம்
வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுள்ளே
அப்பூச்சி காட்டி -பரத்வம் வியக்தம் கிருஷ்ண அவதாரத்தில் )

பரனாம் அவனாதல் பாவிப்பராகில்
உரனால் ஒரு மூன்று போதும் மரம் ஏழு அன்று
எய்தானைப் புள்ளின் வாய் கீண்டானையே அமரர்
கை தான் தொழாவே கலந்து–64-

பதவுரை

அன்று–முற்காலத்தில்
மரம் ஏழ் எய்தானை–(ஸுக்ரீவனுடைய நம்பிக்கைக்காக) ஸப்த ஸால வ்ருக்ஷங்களைத் துளைத்த இராமபிரானென்ன,
புள்ளின் வாய் சீண்டானை–பகாஸுரனது வாயைக் கிழித்தெறிந்த கண்ணபிரானென்ன
இவர்களை நோக்கி
அவன் பரன் ஆம் ஆதல்–‘அந்த இராமபிரானும் அந்த கண்ணபிரானும் (நம்மைப் போன்ற மனுஷ்யரல்லர்;)
ஸாக்ஷாத் பரம புருஷரே யாவர்’ என்கிற விஷயத்தை
உரனால்-தங்களுடைய மனத்தினாலே
பாவிப்பர் ஆகில்–அநுஸந்திப்பர்களே யானால்
(அப்படிப்பட்ட விவேகிகளை)
அமரர் கை-தேவர்களின் கைகளானவை
கலந்து–ஒன்று சேர்ந்து
ஒரு மூன்று போதும்–எப்போதும்
தொழாவே–ஸேவிக்க மாட்டாவோ.

பரன்
மனுஷ்யத்வே பரத்வத்தை அனுசந்தித்தார் ஆகில்
பரம பதம் என்று வேறே ஆஸ்ரயணீய ஸ்தலம் வேணுமோ என்கிறது

உரன் என்று உரஸ்ஸாய் –
அத்தாலே நெஞ்சைச் சொல்லுகிறது

பரன் இத்யாதி
மனஸ்ஸாலே மூன்று போது அவன் பரன் என்று அனுசந்திப்பராகில்
ஆஸ்ரித விரோதி நிரஸனம் பண்ணினவனையே
அபிமானிகளான தேவர்களுடைய கையும் கலந்து தொழும் இறே
அபிமானத்தாலே தங்களோடு ஸஜாதீயனாக புத்தி பண்ணி அநர்த்தப் படுகிறார்கள் இறே

பாவிப்பாராகில் -என்கையாலே
அனுசந்தித்தால் தொழுவர்கள்
அநுஸந்தியாமையாலே தொழார்கள் என்றபடி –

———————–

(துவாதச திருநாமங்கள் வரிசையிலே இப்பாசுரம் -கேசவன் நாராயணன் மாதவன்
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு-பல்லாண்டு பாட -ஆள்செய்ய -கைங்கர்யம் செய்ய தூண்டுகிறார் )

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–65-

பதவுரை

நெஞ்சே-வாராய் மனமே!
கலந்து-நம்மோடு கூடவே யிருந்து
நலியும்–ஹிம்ஸிக்கின்ற
கடு துயரை–கடுமையான துக்கங்களை
மலங்க அடித்து மடிப்பான்–முகம் சிதறப் புடைத்துத் துரத்த வேண்டில்,
விலங்கல் போல்–மலை போன்றவனும்
தொல் மாலை–அநாதி காலமாக நம் மேல் வ்யாமோஹமுடையவனும்
கேசவனை–சிறந்த திருக் குழல் கற்றையை யுடையவனும்
நாரணனை–ஸ்ரீமன் நாராயணனும்
மாதவனை–திருமகள் கேழ்வனுமான பெருமான் விஷயத்திலே
சொல் மாலை–பாசுரங்களாகிற மாலைகளை
எப்பொழுதும்–ஸர்வ காலமும்
சூட்டு–ஸமர்ப்பி.

உடனே வந்து கலந்து நலியா நின்ற அநுபவ விநாஸ்யமான பாபத்தை மலங்க அடித்துத் திரிய விடுகைக்காக
அபேத்யனாய் -(பிளக்க முடியாத -விலங்கல் போல்)
அபரிச்சின்னனாய் -(தொல் மாலை)
பிரசஸ்த கேசனாய் -(கேசவனை)
ஆஸ்ரித வத்ஸலனாய் -(நாரணனை) இருந்த
ஸ்ரீ யபதியை -(மாதவனை)
பரிமளம் மாறாத மாலையை எப்போதும் சூட்டும்படி தன்னைத் தாழ்த்துத் தரும் –

ஸ்ரீ ஸூக்தி -சொல் மாலை –
மற்ற மாலைகளில் நின்றும் வ்யாவ்ருத்தமாக அன்றோ இருப்பது –

(வாடாத மணம் மாறாத மாலை தானே சொல் மாலை
அவனோ பராத்பரன்
நாம் சூட்டும் மாலை போகுமோ என்கிற சங்கைக்கு
தன்னைத் தாழ விட்டு
நாராயணன் கேசவன் மாதவன் ஆனபடியால்
வாத்சல்யம் மிக்கு -அழகு ஈர்க்கும் -பிராட்டி இருக்க ஏற்றுக் கொள்ள வைப்பவளும் அருகில் உண்டே )

—————

(விரோதியைப் போக்குபவன் அன்றோ அவன் –
விரோதிகள் இருக்கவே பாடாமல் கைங்கர்யம் செய்யாமல் இழந்தோம்
அதுக்கும் மேல் இனியவர் போக்யன்
அதுக்கும் மேலே வகுத்த ஸ்வாமி -ப்ராப்யன்
ஆக இங்கும் நாம் கைங்கர்யம் செய்தே ஆக வேண்டும் என்பதுக்கு மூன்று காரணங்கள் )

(ராமன் -திருவாழி -சேருமோ என்னில் -பரத்வம் காட்டாதவன்
தேவேந்திரன் ஐராவதம் இருக்க ரிஷிகள் இடம் போகாதவன்
ஆத்மாநாம் மானுஷம் மணியே தசாரதாத்மஜம் என்பவன் அன்றோ என்னில்
அது இயற்க்கை
எந்த ஆயுதமும் ஸூ தர்சன அம்சம் தானே )

சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை -ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது–66-

பதவுரை

நெஞ்சை–ஓ மனமே!
சூடு ஆய நேமியான்–(ஆயுதமாயிருக்கும் மாத்திரமல்லாமல்) அலங்காரமாயுமிருக்கிற திருவாழியை யுடையவனும்
மாட்டே–அவன் பக்கத்திலிருந்து கொண்டே
துயர் இழைத்த–துன்பப் படுத்தின
மாயவனை–ஆச்சர்யனும்
ஈட்ட–திரண்ட
வெறி கொண்ட–பரிமளம் மிக்க
தண் துழாய்–குளிர்ந்த திருத் துழாய் மாலையை யணிந்த
தொல் அரக்கன் இன் உயிரை–வெகு காலமாகத் தீமை செய்து கொண்டிருந்த இராவணனுடைய இனிய உயிரை.
ஹிரண்யாக்ஷன் ஹிரண்ய கசிபு ராவணன் கும்ப கர்ணன் சிசுபாலன் தந்தவக்கரன் -தொன்மையான அரக்கன்
வேதியனை–வைதிகனுமான எம்பெருமானை
அறி கண்டாய்–அநுஸந்தித்திரு;
அது சொன்னேன்–ஒருவர்க்கும் சொல்ல வொண்ணாத அப்படிப்பட்ட இவ் விஷயத்தை உனக்குச் சொன்னேன்.
(ராஜ வித்யை ராஜ குஹ்யம் போல் இங்கும் )

சூட்டாய நேமியான்
விரோதி நிரசனம் பண்ணுகை அன்றிக்கே
அழகுக்குமான திருவாழியை யுடையவன்

தொல்லரக்கன் இன்னுயிரை மாட்டே துயர் இழைத்த மாயவனை –
ராவணன் பேணிப் போந்த உயிரை
அருகே ஸ்ம்ருதி விஷயமாய் நின்று முடித்த
ஆச்சர்ய பூதனை
ஸ்மரன் ராகவா பாணா நாம் விவ்யதே ராக்ஷஸேஸ்வர (விவ்யதே -நினைந்து இருந்து நடுங்கிக் கொண்டே இருந்தானே )
ஆண்ட படை எல்லாம் பெருமாள் என்று எழுத்து வெட்டின திருச் சரங்களை நினைத்துக் கிடந்தது
குலைக்கும் போது அவிகைக்கு உடலானது அத்தனை

(ராம பெயரைக் கண்ணுற்றானே வாலியும் பாணத்தில் )

ஈட்ட வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே அறி கண்டாய் சொன்னேன் அது
பரிமளம் திரண்ட திருத் துழாயை யுடையனுமாய்
வேதங்களாலேயே ப்ரதிபாத்யனுமானவனை
நெஞ்சே
அறி கண்டாய்
சொன்னேன் உனக்கு அத்தை

1-விரோதி நிரஸனம் பண்ணுவானுமாய்
2-போக்யனுமாய்
3-வகுத்தவனுமானவனை
அறி என்று சொன்னேன்
இது சிலருக்குச் சொல்லுமது அன்று
இத்தைப் புத்தி பண்ணு

———————-

(அங்கு அது நன்று என்று அறிந்து -வானவர் நாடு தானே அது –
அமரர் நித்ய ஸூரிகள் நாடு தருவது மிகவும் எளிதே – –
உமக்குப் பெரு வீடு தந்தோம் என்பான் மகிழ்ந்து –
அத்தை விட்டு
கீழே இரண்டு பாசுரங்களில் சொல்மாலை சூட்ட பல ஹேதுக்களை அருளிச் செய்து
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவர் ஆகையால் அவர் துறையிலே இழிகிறார்
மங்களா சாசனத்தில் ஆழ்கிறார்
நின் புகழில் வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ வைகுந்தம் என்று கொடுக்கும் வான் )

அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-

பதவுரை

மட நெஞ்சே–அறிவு கெட்ட மனமே!
அதுவோ நன்று என்று–(இப்பூபதியிலிருப்பைவிட) அந்தப் பரமபதாநுபவம் சிறந்ததென்று கொண்டு
அங்கு அவர் உலகு வேண்டில்–அந்தப் பரம பதாநுபவத்தை விரும்புகிற பக்ஷத்தில்
மண் நின்று ஆள்வேன் எனினும்–இந்த மண்ணுலகத்தில் நிலை நின்று ஐச்வரியத்தை ஆள வேணுமென்று விரும்பினாயாகிலும்
கூடும்–அதையும் அவன் எளிதில் அருளக் கூடும்;
அது ஓர் பொருள் இல்லை அன்றே–அதனைக் கொடுப்பது (எம்பெருமானுக்கு) அஸாத்யமான காரியமல்லவே;
அது ஒழிந்து–அந்தப் பரமபதாநுபவத்தை உபேக்ஷித்து விட்டு
கண்ணன்–ஆகவிப்படி உபய விபூதியையும் அளிக்க வல்லவனான எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
வாழ்த்துவதே–மங்களாசாஸநம் பண்ணுவதையே
கல்–அப்பஸிக்கக் கடவாய்.

அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில் அதுவோர் பொருள் இல்லை
கண் கண்டது ஒழியப் போகை அரிது
இது பொல்லாது என்று -பரம பதம் வேணும் என்று இருக்கில்
அவன் உகப்பதாகையாலே அது தருகையில் அவனுக்குப் பொருள் இல்லை

(கண் காண முடியாத வானவர் நாடு -இதுவோ கண்ணால் காணலாம்
இது -சம்சாரம் பொல்லாது என்று எண்ணி
அவனோ உன் அடியார்க்கு என் செய்வோம் என்றே இருப்பவன் )

அன்றே அது ஒழிந்து மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும்
அது ஒழிய
பூமியை ஆள்வோம் என்று நினைக்கும் அதுவும் தரும்

மட நெஞ்சே
பவ்யமான நெஞ்சே

அவனுக்கு அது தருகையில் குறை இல்லை
நம்முடைய ஆபி முக்யம் அரிது
ஆசைப்பட்டு போகை அரிது
காணானதை ஆசைப் பட்டாலும் தரும் என்றபடி

அது என்கையாலே
அதுக்குப் பிரதி கோடியாய் இது ஸம்ஸாரம்

கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்
ஸூலபனானவனுடைய திருவடிகளைக் கற்றாகிலும் வாழ்த்தப் பார்
அவன் உபய விபூதியும் தந்தாலும்
நீ அத்தை விட்டு அவனை மங்களா ஸாஸனம் பண்ணிப்
போது போக்குவதையே கல் என்றபடி –

(உபய விபூதி அனுபவமும் வேண்டாம் திருநாம சங்கீர்த்தனமே –
இச்சுவை இங்கே இருக்க -அச்சுவை பெறினும் வேண்டா என்கிறார் )

————-

கீழ் அவனுடைய திருவடிகளை வாழ்த்துகை ஒழிய
போக மோக்ஷங்களை வேண்டா என்னும்படி தம்முடைய ஐக்யம் சொல்லுகிறது

(ஐக்யம் -உள்ளத்தில் கலந்தான் என்றபடி
அனைவர் உள்ளமும் இப்படி இருந்தாலும் உணர வேண்டுமே
அவனும் உபய விபூதியும் வேண்டாம்
உமது திரு உள்ளமே வேண்டும் என்கிறான்
பிரதான பாசுரம் இதுவே
பெரிய வராக இது அன்றோ ஹேது
அவன் தம்மிடம் வந்து மன்னி பொருந்தி -தீர்த்தம் ப்ரசாதியாமல் -இருக்கையாலே
அவனுக்கும் நமக்கும் உண்டான ஐக்யம்
இப் பாட்டில் சொல்லுகிறது என்றபடி )

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–68-

பதவுரை

வெல்ல நெடியான்–மிக வுயர்ந்தவனும்
நிறம் கரியான்–நிறத்தால் கரியவனுமான கண்ண பிரான்
உள் புகுந்து–உள்ளே பிரவேசித்து
அடியேனது உள்ளத் தகம் நீங்கான்–அடியேனது உள்ளத்தை விட்டு நீங்குகின்றனில்லை;
(ஆகையாலே)
கல்லும்–திருவேங்கட மலையும்
கனை கடலும்–கோஷிக்கின்ற திருப்பாற்கடலும்
வைகுந்தம்–வைகுண்டமென்கிற
வான் நாடும்–வானுலகமும்
புல்லென்று ஒழிந்தன கொல்–அல்பமாய் விட்டன போலும்;
புல் மண்டி -புல்லிய -தாழ்ந்த என்றும்
ஏ பாவம்–ஐயோ பாவம்!பாபம் வர ப்ரசக்தியே இல்லையே என்ன வியப்பு என்றவாறு

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல்லென்று ஒழிந்தன கொல்
திருமலையை கல் என்றும்
திரு அனந்தாழ்வானை பாம்பு (நாச்சியார் -10-3)என்றும்
தன்னை மாணியாய் மண் அளந்தாய் என்றும்
சொல்லலாம் படி உறவுடைமை இருக்கிறபடி

(வெற்பு என்று வேங்கடம் பாடினேன் என்பார்களே
அடே போடா வா என்னலாமே நெருக்கமாக இருப்பவரை )

திரு மலையும் திருப்பாற் கடலும் பரமபதமும் என்கிற தேசங்கள்
உள வாகவுமாம்
அளவாகவுமாம்
இப்படி சில விசாலமாக பிரதேசங்கள் இருக்கவுமாம் -என்றும் அர்த்தம்

அவற்றிலே தனக்கு ருசி யுண்டாகவுமாம் தோற்றும் இருக்கிறிலன் –
என்னோடே கலந்த பின்பு

ஸுபரி ஐம்பது பெண்களோடே (மாந்தாதாவுடைய பெண்கள் )கலந்து போருகிற இடத்தில்
தன் மக்களைத் தனித்தனியே -பிதா உனக்கு குறை இல்லையே என்று கேட்க
என்னுடன் பிறந்தாரை ஒருத்தரையும் அறியாதே எப்போதும் என்னோடே இருக்கும் இதுவே வெறுப்பு
வேறே ஒரு குறையில்லை என்று
சொன்னால் போலே
இவரும் தம்முடைய எல்லா ஸ்தானங்களையும் மறந்து
என்னை அல்லது அறிகிறிலர் என்கிறார்

புல் என்று
புல்லியதாய் -குறையாக நினைத்து என்றபடி

ஏ பாவம்
பாபத்தினுடைய பிராசர்யத்தைச் சொல்லுகிறது
வி லஷிதார்த்தமாக ஒரு ஸப்தத்தைப் பிரயோகியாமையாலே
(பாபம் சப்தம் சேராதே -ஹந்த- வியப்பு என்றபடி )

வெல்ல நெடியான்
கடக்க நெடியான்
இனி நெடியான் இல்லை என்னும்படி நெடியவன்

வெல்ல –
ஜெயிக்க எண்ணுதல் –
மிகவும் என்னுதல்

நிறம் கரியான்
குணங்கள் இல்லை என்னிலும் விட ஒண்ணாத வடிவு அழகை யுடையவன்

உள் புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்தகம்
அடியேனுடைய ஹ்ருதயத்தினுள்ளே நீங்குவானாய் இருக்கிறிலன்
புறம் படி இவனைக் கிடையாது என்னும்படி இரா நின்றான்

(நீங்கினால் தாரகம் இல்லை என்று இருப்பவன்
மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்தவம் கூடு பூரிக்கும்
நாராயனோ வசதி சங்கு சக்ர )

—————–

இவன் பண்ணின ஐக்யாந்தத்தாலே
சரீர ஆரம்பத்துக்கு அடியான பாபமும் போயிற்று என்கிறார்

(யதோ வாசோ நிவர்த்தந்த -அவனது சீர்க்கடலையுமே அடக்கினேன் –
அவனே புகுந்து அனுபவிப்பிக்கிறானே )

அகம் சிவந்த கண்ணினராய் வல்வினை யாராவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திரு மால்
சீர்க் கடலை யுள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து –69-

பதவுரை

வல் வினையர் ஆவார்–கடுமையான பாவங்களானவை
(தங்களுடைய குடி யிருப்பை யிழந்தமையாலே)
அகம் சிவந்த கண்ணினர் ஆய்–(கோவத்தினால் உள்ளே சிவந்த கண்களையு டையனவாய்
முக்கி–வருந்தி
முகம் சிதைவராம் அன்றே–முகம் வாடியிருக்கின்றன வல்லவோ?
மிகும்–எல்லாரிலும் மேற்பட்டவனான
திருமால்–திருமாலினுடைய
சீர் கடலை–கல்யாண குணங்களாகிற கடலை
உள் பொதிந்த–உள்ளே அடக்கிக் கொண்ட
சிந்தனையேன் தன்னை–சிந்தனையை யுடையேனான என்னை
செவ்வே–செவ்வையாக
அடர்ந்து–நெருக்கி
ஆர்க்கு அடல் ஆம்–யாரால் உபத்ரவிக்க முடியும்? (ஒருவராலும் என்னைத் திரஸ்கரிக்க முடியாது.)

அகம் சிவந்த கண்ணினராய் வல்வினை யாராவார் முகம் சிதைவராம் அன்றே முக்கி
முதலியாராய் வர்த்தித்த நம் பாபத்தினார்
கோபத்தினால் சிவந்த கண்ணை யுடையராய்
செருக்கராய்த் திரிந்த நாம் இப்படி படுவதோ என்று முக்கி முகம் கீழ்ப்பட்டு
இழப்புண்டு சிதைந்த முகமுமாய்த் திரியும் அத்தனை இறே

மிகும் திரு மால் சீர்க் கடலை யுள் பொதிந்த
குணா நாமா கரோ மஹான் -என்று
அபரிச்சின்ன விஷயத்தைப் பரிச்சின்னம் ஆக்கினேன்
(கிஷ்கிந்தா தாரை வார்த்தை குணங்களுக்கு எல்லாம் இருப்பிடம் என்கிறாள்
உள் பொதிந்த என்கையாலே பரிச் சின்னம் ஆக்கினேன் என்கிறது )

சிந்தனையேன் தன்னை ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து
இனி என்னைப் பரிச்சின்னர்க்குப் புகுந்து நலியப் போமோ

(செவ்வே அடர்த்து ஆர்க்கு அடலாம் –
என்னை ஒருத்தருக்கும் அடர்க்கப் போகாது என்றபடி )

————

(ரக்ஷித்தாலும் விட்டாலும் உன்னை விடேன் -என்று அநந்யார்ஹத்வம் அருளிச் செய்கிறார் இதில்
வித்துவக்கோடு அம்மான் பதிகம் போல்
எதிரிகளை அதற்கும் -தரிசன மாத்திரத்தாலே அழியச் செய்யும் திரு அபிஷேகம் –
கண்ட மாத்திரத்திலே இவனே தேவ தேவன் -மூன்று முடிக்கு உரிய பேர் அரசு –
அழகால் ஈர்க்கும் –
ராஜாதி ராஜன் ஸர்வேஷாம் என்பதைக் காட்டும் –
ஸ்வாதந்த்ர அபிமானிகளை அழிக்கும் )

அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதே யினி–70-

பதவுரை

அடர் பொன் முடியானை–அடர்ந்த பொன் மயமான திருவபிஷேகத்தை யுடையவனும்
ஆயிரம் பேரானை–ஸஹஸ்ர நாமங்களால் பிரதிபாதிக்கப் படுபவனும்
சுடர்கொள் சுடர் ஆழியானை–(சந்திர ஸூர்யன் முதலியன) சுடர்களை யெல்லாம் வென்று விளங்குகின்ற
திருவாழியை யுடையவனுமான எம்பெருமானை.
இடர் கடியும் மாதா பிது ஆக–துக்கங்களைப் போக்க வல்ல தாயும் தந்தையுமாக
எனது உள்ளே வைத்தேன்–என்னுடைய ஹ்ருதயத்திலே இருத்தினேன்;
இனி–இனி மேல்
யாது ஆகில் யாதே–(எனக்கு) என்ன நேர்ந்தாலென்ன?

அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
தர்சநீயமாய்
ஆதி ராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகத்தை யுடையவனை
இவ் வழகுக்கு வாசகமான அநேகம் திரு நாமங்களை யுடையவனை

(ஸ்வரூப ப்ரதிபாத்யமான திரு நாமங்களை விட ரூப
அழகுக்கு ப்ரதிபாத்யமான திரு நாமங்கள் ஆழ்வாருக்கு உகந்தது
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று –
ஸுலப்ய ஸ்ரீ யாபதித்தவம் பரத்வம் ஒவ் வொன்றுக்கும் சஹஸ்ர நாமங்கள் உண்டே )

அடர் –
எல்லாரையும் அடர்க்கிற முடி என்றபடி

சுடர் கொள் சுடர் ஆழியானை
விரோதி நிரசனத்துக்கு அன்றிக்கே
அழகுக்குமான திருவாழியை யுடையவனை

இடர் கடியும் மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே யாதாகில் யாதே யினி
சரீரத்தைப் பூண் கட்டி இடரை விளைக்கும் மாதா பிதாக்கள் இறே அல்லாதார்
இவன் சரீர பரிக்ரஹம் பண்ணுகைக்கு நோன்பு நோற்குமவர்கள் இறே அவர்கள்

யாதாகில் யாதேயினி
இனி பாபம் தன்னை அனுபவிக்கில் எனக்கு வந்தது என்
பாப நிமித்தமாக பயம் இல்லை என்றபடி –

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–பாசுரங்கள் -51-60–

June 30, 2021

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

(கீழே வலிய மனம் கொண்டவன் என்று வெறுத்து அருளிச் செய்தார் அன்றோ
அநேக காலம் ஆபி முக்யம் காட்டி விலகி நின்ற நாம் அவன் முயற்சியால் அத்வேஷம் லேசம் பிறந்து
பசித்த குழந்தைக்கு சோறு இடும் தாய் போல்
ருசி வந்த உடனே அனுக்ரஹித்து மேலே மேலே வளர்த்து உபகரிப்பவன் அன்றோ
ஸ்ரீ வித்துவக்கோடு அம்மானையே பார்த்து இருக்க அருளிச் செய்த ஸ்ரீ குலசேகரப் பெருமாள் போல் இந்த பாசுரம் )

சேஷ பூதன் சேஷி செய்த படி கண்டு இருக்கும் அத்தனை அல்லது
வெறுத்துத் தப்பச் செய்தோம்–என்கிறார்

மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை
சினமாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து -புனமேய
தண் துழாயான் அடியைத் தான் காணும் அஃது அன்றே
வண் துழாம் சீரார்கு மாண்பு –51-

பதவுரை

மனம் ஆளும்–மனத்தையும் தங்கள் வசத்திலே அடக்கி ஆளுமவையான
ஓர் ஐயர்–ஒப்பற்ற பஞ்சேந்திரியங்கனென்கிற
வன் குறும்பர் தம்மை–பிரபலர்களான துஷ்டர்களை
சினம் மாள்வித்து–கோவமடங்கச் செய்து
ஓர் இடத்தே சேர்த்து–(பகவத் விஷயமாகிற) ஒரு நல்ல இடத்திலே கொண்டு மூட்டி,
புனம் மேய தண் துழாயான் அடியை–தன்னிலத்திலே பொருந்திய குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள அப்பெருமானது திருவடிகளை
தாம் காணும் அஃது அன்றே–ஸேவித்துக் கொண்டிருப்பதன்றோ
வண் துழாம் சீரார்க்கு மாண்பு–அழகிய விசாலமான நற் குணங்களை யுடையவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அழகு.

மனமாளும் ஓர் ஐவர்
பள்ளிகள் கலஹம் போலே –
ஈஸ்வரனுக்கு ஆத்மா சேஷமாய் –
ஆத்மாவுக்கு மனஸ்ஸூ சேஷமாய்
மனஸ்ஸூ போன வழியே போகக் கடவதான இந்திரியங்கள் இருக்கும் முறை அன்றிக்கே
மனஸ்ஸை இந்திரியங்கள் ஆளும்படி இருக்கை

வன் குறும்பர்
மனஸ்ஸைத் தங்கள் போன வழியே கொடு போக வல்லராய் இருக்கை
இன்னதனை த்ரவ்யத்துக்கு அரசு செய்வாரைக் கிடைக்கும் என்னும் வன்னியரைப் போலே

ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை சினமாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து –
கர்ம பலமான க்ரோதத்தை முடித்து
காமாத் க்ரோதோபி ஜாயதே (2-62 )
(காமம் க்ரோதம் இரண்டும் ரஜோ குண பிள்ளைகள் –
நிறைவேறாத காமம் க்ரோதத்தில் கொண்டு போய் விடுமே )
பகவத் வ்யதிரிக்த விஷயங்கள் எல்லாம் இந்திரியங்களுக்கு இரை போராது இறே
எல்லா இந்திரியங்களும் அனுபவிக்கப் புக்கால் அனுபாவ்ய அம்சம் பெருத்து இருப்பது பகவத் விஷயம் இறே

இன்னம் கெடுப்பாயோ –திருவாய் -6-9-8-என்றும்
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ -திருவாய் –6-9-9- என்றும்
சிற்று இன்பம்–திருவாய் –6-9-9-என்றும் இறே இதர விஷயங்கள்
எல்லா இந்திரியங்களும் புஜித்தாலும் போக்யதை அளவிறந்து இருக்கும் என்னும் இடத்தைச் சொல்கிறது

சினம் ஆள்வித்து -சினத்தை முடித்து –
அத்தால் வந்த க்ரோதத்தைப் போக்க என்றபடி
புனமேய தண் துழாயான் அடி -என்று

வண்டுழாஞ்சீரார்கு மாண்பு–
மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை சினமாள்வித்து
ஓர் இடத்தே சேர்த்துப்
புனமேய தண் துழாயான் அடியைத் தான் காணும் அஃது அன்றே
வண்டுழாஞ்சீரார்கு மாண்பு–
என்று அந்வயம்

ஆத்ம குண உபேதர்க்கு –வண்மை -துழாவின -சீரை யுடையவர்களுக்கு அழகாவது
இந்திரியங்களை ஜெயித்து (சினமாள்வித்து )
அவ்விந்திரியங்கள் எல்லாவற்றையும் பகவத் விஷயத்திலே சேர்த்து (ஓர் இடத்தே சேர்த்து)
செவ்வித் திருத்துழாய் மாலையை யுடையனாய் இருந்துள்ள ஸர்வேஸ்வரன்
திரு வடிகளைக் காண்கை அன்றோ முறை
அந்தோ வலிதே கொல் (50)-என்று வெறுக்கக் கடவதோ

வண் துழாம் சீர் என்கையாலே
சேஷி செய்தபடி கண்டிருக்கை ஒழிய வெறுக்கக் கூடாது என்கிறது

மாண்பு -அழகு -முறை என்றாய் பிராப்தம் என்றபடி –

————

(ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மாண்பு எது என்று பொதுவாக கீழே சொல்லி
இதில் தமக்கு திரிவிக்ரமன் கண்ணன் ஒருவரையே சேர்ந்து
பெற்ற அனுபவத்தை வெளியிட்டு அருளுகிறார்
உலகமாகத் தொட்ட அவதாரத்தையும் ஊராகத் தொட்ட அவதாரத்தையும் தாழ நின்ற ஸ்பர்சித்தவன் அன்றோ
எண்ணக் கண்ட விரல்களால் உண்ணக் கண்ட தனது ஊத்தை வாய்க்கு கவளம் போடுகிறார்களே -பெரியாழ்வார்
வாய் அவனைத்தவிர வாழ்த்தாது போல் இங்கும் )

பொதுவிலே சொன்னேன்
அது தான் எனக்கு உண்டாயிற்று -என்கிறார் –

மாண் பாவித்து அந் நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான் நம்
கண் அவா மற்று ஓன்று காணுறா சீர் பரவாது
உண்ண வாய் தானும் உறுமோ ஓன்று –52–

பதவுரை

அஞ்ஞான்று–முன்னொரு காலத்தில்
மாண்–வாமந வேஷத்தை
பாவித்து–பாவனை செய்து கொண்டு-ஏறிட்டுக் கொண்டு என்றபடி
மண் இரந்தான்–(மாவலியிடத்துச் சென்று) பூமியை யாசித்தவனும்
மாயவள்–பூதனையென்னும் பேய்ச்சியினுடைய
நஞ்சு–(முலையிலே தடவியிருந்த) விஷத்தை
ஊண் பாவித்து உண்டானது–உண்பதாகப் பாவனை செய்து அமுது செய்தவனுமான பெருமானுடைய
ஓர் உருவம்–விலக்ஷணமான திருமேனியை
காண்பான்–ஸேவிக்கும் விஷயத்திலே
நம் கண் அவா–நமது கண்களுக்கு ஆசை;
மற்று ஒன்று காண உறா–வேறொன்றையும் காண விரும்புகின்றனவில்லை!
வாய் தான்–வாக்கானது
சீர் பரவாது–(அவனது) திருக் குணங்களைப் புகழ்வது தவிர்த்து
ஒன்று–வேறொன்றை (சோற்றை)
உண்ண-உண்பதற்கு
உறுமோ–விரும்புமோ?

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான்
மஹா பலி நான் தருவேனானால் இன்னும் அகல இரக்க மாட்டாயோ என்ன
இரந்ததுக்கு மேலே வேண்டா -என்று இருக்கிற
பால்யம் பாவித்து
அத்தைப் பொய் -என்கிறது அன்று –
அத்தையும் மெய்யாக்குகை

மாயவள் நஞ்சு ஊண் பாவித்துண்டானதோ ருருவம்
தாய் வேஷத்தைக் கொண்டு இவனுக்கு முலை கொடா விடில் தரியேன் -என்று
அவள் முலை கொடுத்தால் போலே
இவனும் உண்ணா விடில் தரியேன் என்று தாரமாகவே யுண்டான்
பேய் முலை நஞ்சு ஊணாக யுண்டான் -முதல் திரு -11-என்னும்படியே

காண்பான் நம் கண் அவா
கண்ணுக்கு அவா ஊண் பாவித்து உண்டானதோர் உருவம் காண்பான்

மற்று ஓன்று காணுறா
அது ஒன்றும் காண்கை செய் -என்று காண்கை
நாணி வேறே ஓன்று காணாமையே முடியும்
நயன இந்த்ரியத்துக்குகே யன்று
இந்த அர்த்தம் வாக் இந்த்ரியத்துக்கும் ஒக்கும்

சீர் பரவாது உண்ண வாய் தானும் உறுமோ ஓன்று
அவனுடைய கல்யாண குணங்களைச் சொல்லாதே வாக்கு
வேறே ஒன்றை உண்ண உறாது –

——————

(செங்கண் மாலே -கலங்கிய உனக்கு தெளிந்த அடியேன் சொல்ல வேண்டுமே –
இப்படிப்பட்ட உன்னை நினைந்து பரம ஆனந்தம் கொண்ட நாம் வேறே ஒன்றைப் பார்ப்பேனோ -நினைப்பேனோ )

என்னுடைய இந்திரியங்களும் உன்னை அனுபவிக்கும் படி யாயிற்று -என்ன
அவ்வளவேயோ –
இன்னும் சில யுண்டு காணும் உமக்குச் செய்யக் கடவது என்ன
எனக்குச் செய்யாதது உண்டோ -என்கிறார் –

ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-

பதவுரை

செம்கண் மால்–(அடியார்கள் மீது வாத்ஸ்ல்யத்தாலே) சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலே;
யான் உரைப்பது–அடியேன் விண்ணப்பஞ் செய்வது
ஒன்று உண்டு–ஒரு விஷயமுண்டு;
அவர்க்கு–இப்படி பார்க்கின்ற நீ அடியவர்களுக்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–ஸ்ரீவைகுண்டமென்று சிறப்பித்துச் சொல்லி உதவுகின்ற பரம பதமானது.
நீ–நீயோ வென்றால்
உன் அடியார்க்கு–உனது அடியார்களுக்கு
(எத்தனை நன்மை செய்தும் த்ருப்தி பெறாமல்)
என் செய்வன் என்றே இருத்தி–இன்னமும் என்ன நன்மை செய்வோமென்றே பாரித்திரா நின்றாய்;
நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் இனிதோ–உனது திருக் குணங்களிலேயே ஊன்றி யிருக்கப் பெற்ற
தமது சிந்தையிற் காட்டிலும் சிறந்ததோ?

ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது
ஆரேனுமாகத் தெளிந்தார் கலங்கினார்க்குச் சொல்லக் கடவது இறே

உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
நிரபேஷர்க்கு–என் செய்வன் -என்று இருக்கிற தர்மம் தான் எப்போதும் ஒருபடிப் பட்டு இருக்கும்
தூர வாஸிநம் ருணம் ப்ரவ்ருத்த மிவமே ஹ்ருதயான் நாபசர்பதே –
பாண்டவர்கள் முடி சூடின அன்றும்
திரௌபதி குழல் முடித்த பின்பும்
பார்த்தாக்கள் சந்நிஹிதராய் இருக்க அவர்களை ரக்ஷகர் என்று நினையாதே
தன் பேர் சொன்னவளுக்குத் திரு உள்ளத்திலே தனிசு -ருணம் – பட்டு இருக்குமா போலே
அந்த ஆனு கூல்யமுடையார்க்கு என்றும் என் செய்வேன் என்று இருத்தி –

நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு வைகுந்தம் என்று அருளும் வான்
உன் புகழிலே தங்குகிற சிந்தையில் காட்டில் இனிதோ
நீ போரப் பொலியச் சொல்லிக் கொடுக்கிற பரமபதம்
ஸித்தத்துக்கு இடை நிற்குமோ ஸாத்யம்
இதுக்கு அது யுக்தி ஸாரமே காரணம்

(குண அனுபவ யோக்கியமான இந்த ஜென்மத்தில் காட்டில் பரம பதம் ஸ்லாக்யம் என்கைக்குக் காரணம்
பரமபதம் யுக்தி சாரமாய் இருப்பதே என்று யதா ஸ்ருத பங்க்தி தாத்பர்யம் )

—————-

உம்முடைய பிரதிபந்தகம் செய்தது என் -என்ன
நானும் அறிகிறிலேன் -என்கிறார் –

வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54-

பதவுரை

ஆன் ஈன்ற கன்று–பசுவினால் பெறப்பட்ட வத்ஸாஸுரனை
உயர எறிந்து–(விளா மரத்தின்) மேலே வீசி யெறிந்து
காய் உதிர்த்தார்–(அவ்விளா மரத்தின்) காய்களை உதிர்த்த கண்ண பிரானுடைய
தாள்–திருவடிகளை
பணிந்தோம்–ஆஸ்ரயித்தோம் (அதன் பிறகு)
(கன்று குணிலா எறிந்த கழல் போற்றி )
வன் துயரை–வலிய (நமது) பாவங்களை
மருங்கு கண்டிலம்–ஸமீபத்தில் காணோம்;
ஒருங்கிற்று–(அப் பாவங்கள்) மறைந்து போனவிடம்
வானோ–ஆகாசமோ?
மறி கடலோ–மடிந்து மடிந்து அலை யெறிகிற கடலோ?
மாருதமோ–காற்றோ?
தீயகமோ–நெருப்போ?
கானோ–காடோ?
(இன்ன விடத்தில் மறைந்து போயின வென்று தெரிய வில்லை;)
ஆ ஆ ஆல்–ஐயோ பாவம்.

வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ கானோ
ஆகாஸ கமனம் பண்ணிற்றோ
மஹா ப்ரஸ்த்தானம் -மஹா விந்த்யம் -பண்ணிற்றோ

ஒருங்கிற்றும்
இவற்றில் எங்கே சேர்ந்தது

மருங்கும் கண்டிலமால் –
(கீழ் உள்ள உம்மைத் தொகை இங்கும் சேர்த்து )
சமீபத்திலே காணாது ஒழிகையால்
ஒருங்கிற்றுக் கண்டிலமால் -என்றதிலே
மருங்கு என்றது பொருள் இன்றிக்கே நிற்கும்
என் அருகில் காணோம் என்றபடி –

ஆ ஈன்ற கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம் வன் துயரை ஆ ஆ மருங்கு
பிரபல பிரதிபந்தகங்களைப் போக்குமவர் திருவடிகளிலே பணிந்தோம்
நம்மோடே நெடு நாள் பழகிப் போந்த வலிய துயரை அருகும் கண்டிலோம்
இவர் எங்கே புக்கு முடித்தார்
ஐயோ ஐயோ என்கிறார் –

—————-

(பிரதிபந்தகங்கள் போன பின்பு பலம் அனுபவிப்பதே கர்தவ்யம்
அவனே வந்து காட்டக் கண்டு விலக்காமல் அனுபவிக்கலாம் )

மருங்கோத மோதும் மணி நாகணையார்
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே
எமக்கு அவரைக் காணலாம் எப் பொழுதும் உள்ளால்
மனக் கவலை தீர்ப்பார் வரவு –55-

பதவுரை

வரவு–(தம்முடைய) வருகையினாலே
மனம் கவலை தீர்ப்பார்–(நமது) மனத்திலுள்ள துன்பங்களைத் தொலைப்பவரும்
மருங்கு ஓதம் மோதும்–ஸமீபத்திலே கடலலை மோதும் படியாக. (திருப்பாற்கடலிலே)
மணி நாக அணையார்–மாணிக்கத்தை யுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையவருமான பெருமான்.
மருங்கே வர அரியர் எலும்–(ஒருவர்க்கும் ஸ்வ ப்ரயத்தாலே அணுகி வந்து) கிட்ட முடியாதவராயினும்
எமக்கு–நமக்கு
அவரை–அப் பெருமானை
உள்ளால்–மனத்தினால்
ஒருங்கே–ஒரே தன்மையாக
எப்பொழுதும் காணலாம்–எப்போதும் கண்டு அநுபவிக்கட்டும்.

வரவு மனக் கவலை தீர்ப்பார்
அருகே கடலில் திரைத் திவலை துடை குத்தத் திருவனந்த ஆழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளுகிறவர்
அருகே செல்ல அரியரேலும் நமக்கு ஒருபடிப்பட ஹ்ருதயத்திலே எப்போதும் உளர்

வரவு
மனக் கவலை தீர்ப்பார்
மருங்கோத மோதும் மணி நாகணையார் மருங்கே வர அரியரேலும்
நமக்கு
ஒருங்கே
உள்ளால்
அவரை எப்பொழுதும் காணலாம்
என்று அந்வயம்

மனஸ்ஸிலே ஒருபடிப்பட எப்போதும் காணலாம் என்றபடி

(பிரஜாபதி தும் வேத –இத்யாதி –நாம் அறிந்து பற்ற அடைந்தாலும் அடையலாம் அடையாமலும் போகலாம்
யார் ஒருவனை அவன் வரிக்கிறானோ அவன் நிச்சயமாக அடைகிறான் )

————–

(உபாயம் அனுஷ்டிப்பவன் அவன் தானே நம்மை பெற்று
மகிழ்ந்து நம்மையும் மகிழ்விக்க
அனுபவமே நமது கர்தவ்யம்
தானும் அறியாதே ஸாஸ்திரமும் சம்மதியாதே
தானே அறிந்த ஸூஹ்ருத விசேஷம் வியாஜ்யமாக அருளுபவர் அன்றோ )

எல்லாருக்கும் அருகும் செல்ல அரியவன்
உமக்கு எளியனான படி என் -என்ன
நானும் அறியேன் -என்கிறார் –

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–56—

பதவுரை

ஒருவன்–எந்த சேதனனும்
ஒரு ஆறு–எந்த உபாயாந்தரத்திலும்
புகா ஆறு–பிரவேசிக்க வேண்டாதபடி
(அவர்களுடைய காரியத்தைத் தானே ஏற்றுக் கொண்டு நடத்துவதற்காக)
உரு மாறும்–தனது ஸ்வரூப ஸ்வபாவங்களை மாற்றிக் கொள்ளுகிற
(தூதன் சாரதி மாணிக்குறள் போல் உரு மாறினவன் அவன் தானே )
ஆயவர் தாம்–ஸ்ரீகிருஷ்ணனானவனும்
சேயவர் தாம்–ஆஸுர ப்ரக்ருதிகளுக்கு) எட்ட முடியாதவனும்
அன்று உலகம் தாயவர் தாம்–முன்பொருநாள் உலகங்களைத் தாவி யளந்தவனும்
மாயவர் தாம்–ஆச்சர்யமான சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான்
காட்டும் வழி–காட்டுகிற உபாயம்
வரவு ஆறு ஒன்று–இன்ன வழியாக வந்ததென்று தெரியாது;
வாழ்வு இனிது–பலன் போக்யமாயிரா நின்றது;
ஆல் எல்லே–ஆச்சரியம்

வரவால் என் மனக் கவலை தீர்ப்பார் -வரவாறு ஓன்று இல்லையால்
அடி இல்லை யாகில் பலம் சுருங்கி இருக்குமோ என்னில்

வாழ்வு இனிதால்
பலம் அதிகமாய் இருக்கும்

எல்லே ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும் ஆயவர் தாம்
நமக்கு அடி யில்லை -என்று ஆராய வேண்டாதபடி
ஒரு வழியில் ஒருவனைப் புகாதபடி
தன்னுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களை அழியமாறும்
எல்லா உபாயங்களையும் விட்டு என்னையே பற்று என்கை
போக்தாவினுடைய உபாய அனுஷ்டானங்களை அவர்க்காகத் தான் அனுஷ்ட்டிக்கும் என்று கருத்து
எல்லாம் விட்டு என்னைப் பற்று என்னும் இவர்

சேயவர் தாம்
அர்ஜுனனுக்குக் கையாளாய் இருக்கச் செய்தேயும்
துர்யோத நாதிகளை அம்புக்கு இரையாக்கி அவர்களுக்குத் தூரியராய் இருக்குமவர்

அன்று உலகம் தாயவர் தாம் மாயவர் தாம் காட்டும் வழி
நினைத்த போது தாமே வந்து கிட்டுமவர்

இப்படி ஆச்சர்ய பூதரானவர் காட்டும் உபாயம்
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால்

—————–

வழித் தங்கு வல் வினையை மாற்றானோ நெஞ்சே
தழீ இக் கொண்டு பேராவுணன் தன்னை சுழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றி புலால் வெள்ளம் தானுகள
வாழ்வடங்க மார்விடந்த மால் –57-

பதவுரை

நெஞ்சே–நெஞ்சமே!
போர்–யுத்த பூமியிலே
அவுணன் தன்னை–இரணியாசுரனை
தழீஇக் கொண்டு–அழுந்தக் கட்டிக் கொண்டு,
புலால் வெள்ளம்–ரத்த ப்ரவாஹமானது
தாழ்வு இடங்கள் பற்றி–பள்ள நிலங்கள் பக்கமாக
எங்கும் சுழித்து உகள–கண்டவிடமெங்கும் சுழித்துக் கொண்டு அலையெறிந்து கிளரும் படியாக
வாழ்வு அடங்கா–(அவ்விரணியனுடைய செல்வச் செருக்கு ) வாழ்ச்சி முடியும்படி
மார்வு இடந்தமால்–அவனது மார்பைப் பிளந்த பெருமான்,
வழி தங்கு வல் வினையை–இடை வழியிலே நம்மைத் தங்கப் பண்ணுகிற (பிரதிபந்தகமான) வலிய பாவங்களை
மாற்றோனோ–(போக்கி யருள மாட்டானோ? (போக்கியே விடுவன்.)

வழித்தங்கு வல்வினையை மாற்றானோ
வந்தேறிகளான அவித்யாதிகளையும்
ப்ராப்ய ஆபாசங்களையும் போக்கானோ
ஹிரண்யனைப் போக்கினவனுக்கு இது ஒரு பொருளோ

நெஞ்சே தழீ இக் கொண்டு பேராவுணன் தன்னை சுழித்து
முரட்டு ஹிரண்யனை ஸ்பர்சித்துப் பள்ளம் எல்லாம் ருதிர வெள்ளம் சுழிக்கும் படி

எங்கும் தாழ்விடங்கள் பற்றி புலால் வெள்ளம் தானுகள வாழ்வடங்க மார்விடந்த மால்
பெரு நீரில் மும்மை பெரிது (பெரிய திருமொழி -11-4-4) -என்னும்படி
ருதிரம் வெள்ளம் இட அவன் ஐஸ்வர்யம் ஒடுங்க மார்விடந்த ஸர்வேஸ்வரன்
வழித் தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே

போர் அவுணன் -யுத்த உன் முகன்
தாழ்விடம் -தாழ்ந்த இடமாய் பள்ளம் என்றபடி
புலால் வெள்ளம் -ரக்த வெள்ளம் –

தளையவிழ் கோதை மாலை யிருபால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண்
அள வெழ வெம்மை மிக்க வரியாகி யன்று பரியோன் சினங்கள் அவிழ
வளை யுகிர் ஒளி மொய்ம்பின் மறவோனதாகம் மதியாது சென்று ஒரு உகிரால்
விள வெழ விட்ட குட்டமது வையமூடு பெரு நீரின் மும்மை பெரிதே –11-4-4-

———–

இனி உன்னுடைய அனுபவத்துக்கு அவிச்சேதமே வேண்டுவது -என்கிறார்
(திவி வா புவி வா மமஸ்து வாஸோ நரகே வா நரகாந்தக பிரகாமம்
அவதீரிதா சாரதார விந்தவ் சரணவ் தே மரணே அபி சிந்தயாமி –முகுந்த மாலை ஸ்லோகமும் இதே போல் உண்டே
இங்கேயே பரமபதத்தில் உள்ளார் போல் மறப்பின்னை ஆகிற பெரும் செல்வம் வேண்டும் என்கிறார் சமத்காரமாக )

மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-

பதவுரை

மாலே–திருமாலே!
உனது–உன்னுடைய
பால் போல் சீரில் பழுந்தொழிந்தேன்-பால் போலப் பரம போக்யாமன திருக் கல்யாண குணங்களில் ஆழ்ந்து விட்டேன்;
கல்யாண குணங்கள் -இது தானே ஆழ்ந்து அனுபவிக்க முடியும் -பால் போல் ருசிக்கும்
தேஜஸ் சேவிக்க திருமேனி
இனி–இனிமேல்
பிறப்பு இன்மை பெற்று–வீடு பெற்று
அடிக் கீழ்–(உனது) திருவடி வாரத்திலே
குற்றவேல்–கைங்கரியம் பண்ணுவது
யான் வேண்டும் மாடு அன்று–அடியேன் அபேஷிக்கிற செல்வமன்று;
படிச் சோதி–(உன்னுடைய) திவ்ய மங்கள விக்ரஹ தேஜஸ்வை
சோதியை யுடைய படி -திவ்ய மங்கள விக்ரஹம்
மாற்றேல்–எனக்கு ஒரு காலும் மாற்றாமல் நித்யாநுபவ விஷயமாக்க வேணும் ;
மேலால்–மேலுள்ள காலத்திலே
(உன் திருவடிகளில் கைங்கரியம் பண்ண வேணுமென்று அடியேன் ஆசைப்பட வில்லை.)
மறப்பு இன்மை–உன்னை மறவாதிருந்தால் போதுமென்பதே
யான் வேண்டும் மாடு–அடியேன் ஆசைப்படும் செல்வம்.

மாலே படிச் சோதி
ஸர்வேஸ்வரத்வத்தையும்
ஸ்வா பாவிகமான விக்ரஹத்தையும் சொல்லுகிறது

ஆசா லேசமுடையார் பக்கல் வ்யாமோஹத்தையும்
த்வேஷம் பண்ணினாலும்
விடப் போகாத படியையும் சொல்லுகிறது என்றுமாம்
(யதிவா ராவண ஸ்வயம் என்றவர் தானே )

ஆத்ம குணங்களையும் தேஹ குணங்களையும் சொன்னதாகவும்
ஸ்வரூபம் ரூபம் இரண்டையும் சொன்னவாறு

படிச் சோதி –
ஸ்வா பாவிகமான விக்ரஹம் -என்னுதல்
விக்ரஹத்தினுடைய காந்தி என்னுதல்

மாற்றேல் இனி
வைத்த இறையிலியை -அநந்ய போக்யத்வத்தை -மாற்றாதே கொள்
(இறையிலி- வரி இல்லா நிலம் போல் நிர்ஹேதுகமாக )

இறையிலி ஏது என்னில்
உனது பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் –
இவ்விறையிலியை மாற்றாதே கொள்

மேலால் பிறப்பின்மை பெற்று அடிக்கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு
ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாகப் பரம பதத்திலே உன் திருவடிகளிலே அடிமை செய்கை யன்று எனக்கு தனம்
பரமபதத்தில் நீ இருக்கும் இருப்பை மறவாமை
பரமபதத்திலே போனால் அல்லது மறவாமை இல்லாமையாலே பரம பதமும் வேண்டினாராய்ப் பலித்தது

(பாவியேன் என்று சொல் பாவியேன் காண வந்தே -சமத்காரமாக அருளியது போல்
சேவித்த மாத்திரத்திலே தொலையுமே
நித்தியமான அனுபவம் கொடு என்றாலே நித்ய விபூதியில் தானே நடக்கும் )

ஸாவித்ரியினுடைய பார்த்தாவை மிருத்யு கொடு போக என் பர்த்தாவைத் தர வேணும் -என்று அவனை அபேக்ஷிக்க
இது ஒன்றும் ஒழிய வேறே சில வேண்டிக் கொள் என்ன
இவன் வயிற்றிலே எனக்கு ஒரு பிரஜை யுண்டாக வேணும் -என்று வேண்டிக் கொண்டால் போலே –

இவருக்கு மறப்புத் தான் உண்டோ என்னில்
ப்ரக்ருதி ஸம்பந்தம் உடையார்க்கு வருமது நமக்கும் வாராதோ என்று பயப்படுகிறார்
ஊரடைய வெந்து கொண்டு வாரா நின்றால்
நம் அகம் ஒன்றும் பிழைக்கும் -என்று பயம் கெட்டு இருப்பார் உண்டோ –

——————-

(நித்யம் மறவாமை -என்று பிரார்த்தித்த மாத்திரத்தாலே -தத் அபிஷந்தி விராத மாத்ராத் –
பரமபத பிராப்தியும் -அதுக்கடியான கர்ம நிவ்ருத்திகளும் உண்டே
அத்தை இங்கே அருளிச் செய்கிறார்
அனுகூல்ய சங்கல்பம் மாத்திரத்தாலே பேறு அன்றோ
நமனும் உதகலனும் பேச கேட்கவே நரகமே ஸ்வர்க்கமாகுமே )

மாடே வரப் பெறுவாராம் என்றே வல் வினையார்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார் -ஊடே போய்
பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து –59-

பதவுரை

பேர் ஓதம்–விசாலமான கடலிலே
சிந்து திரை ஊடே போய்–சிதறி விழுகின்ற அலைகளினுள்ளே சென்று
கண் வளரும்–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
மா கடல் நீருள்ளான் -என்றும் ஷீராப்தி நாதன் என்றும்
பேராளன்–எம்பெருமானுடைய-ஆஸ்ரித பக்ஷபாதத்துக்கு எல்லை இல்லாதவன் –
பேர்–திரு நாமங்களை
ஓத–அநுஸந்திக்க வேணுமென்று
சிந்திக்க–நினைத்த மாத்திரத்திலே,
வல் வினையார்–கொடிய பாவங்கள்
பேர்ந்து–நம்மை விட்டுக் கிளம்பி
காடானும் ஆதானும் கைக் கொள்ளார்–காடுகளிலோ மற்றேதேனு மோரிடத்திலோ போய்ச் சேராமலிருக்கின்றனவே, (இது)
மாடு வரப் பெறுவராம் என்றே?–இன்னமும் நம்மிடத்திலே வாழப் பெறலாமென்கிற எண்ணத்தினாலோ?

கடலில் திரைகள் முறிந்து வந்து சிறு திவலை யாய்த் துடை குத்தக் கண் வளரா நின்று
ஆஸ்ரித விஷயத்தில் ஓரத்துக்கு எல்லை இன்றிக்கே இருக்கிறவருடைய
திரு நாமம் சொல்ல நினைத்தது அறிந்தால்
வல் வினையார் இங்கு நின்றும் போந்து தமக்குப் புகலாக
மலையாகிலும் கடலாகிலும் ஏதேனும் ஓன்று கைக் கொள்ளுகிறிலர்
கைக்கொள்ளாது ஒழிகிறது என்னருகே வரலாம் என்றே

ஊடே போய் –
உள்ளே போய் -திருமேனி அண்டையிலே போய் என்றபடி

ஊடே போய் பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து
வல்வினையார்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார்
மாடே வரப் பெறுவாராம் என்றே
என்று அந்வயம் –

—————

(ஈஸ்வரனை ஒளிந்தவர் ரக்ஷகர் அல்ல என்று ப்ரபன்ன பரித்ராணத்தில் சொன்னோம்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்
கண்ணில்லை மற்ற ஓர் கண்ணே )

பேர்ந்து ஓன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன் துழாய் மாயனையே என்னெஞ்சே-பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லை காண் மற்றோர் இறை–60–

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
பேர்ந்து ஒன்று நோக்காது–வேறொன்றையும் கணிசியாமல்
ஈன் துழாய் மாயனையே பின் நிற்பாய்–போக்யமான திருத் துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானையே பற்றி நின்றும் நில்லு;
நில்லாப்பாய்–அப்படி அவனைப் பற்றாதொழியினும் ஒழி;
தொல்லை–அநாதியாய்
மா–பெரிதாய்
வெம்–கடினமான
நரகில்–நரகத்திலே
சேராமல்–போய்ப் புகாமல்
காப்பதற்கு–நம்மை ரக்ஷிப்பதற்கு
பேர்ந்து மற்று ஓர் இறை–வேறொரு ஸ்வாமி
எங்கும் இல்லை காண்–ஓரிடத்திலுமில்லை கிடாய்.

பேர்ந்து ஓன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
வேறே ஒரு பதார்த்தத்தை நோக்காதே
அவனை அநு வர்த்திக்கிலும் அநு வர்த்தி
உனக்கு உரியையாய் அநர்த்தப் படிலும் படு
ஸ்வா தந்தர்ய அபிமானத்துடன்-விஷயாந்தர படு குழியில் விழுந்தாலும் விழு

ஈன் துழாய் மாயனையே என்னெஞ்சே-பேர்ந்து எங்கும் தொல்லை மா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு இல்லை காண் மற்றோர் இறை
ஸம்ஸார ஸம்பந்தம் அறுமைக்கு எங்குப் புக்காலும் அவனை ஒழிய ஆஸ்ரயணீய தத்வம் இல்லை
அவனை அநு வர்த்தி
ஸ்வ தந்த்ரமாய்க் கெடிலும் கெடு –

என்னெஞ்சே
தொல்லை மா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
எங்கும்
பேர்ந்து
மற்றோர் இறை
இல்லை காண்
ஆன பின்பு
பேர்ந்து ஓன்று நோக்காது
ஈன் துழாய் மாயனையே
பின்னிற்பாய்
நில்லாப்பாய்
என்று அந்வயம்

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–பாசுரங்கள் -41-50–

June 30, 2021

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

பூதநா ப்ரசங்கத்தாலே
மல்லரை நிரஸித்த படி சொல்லுகிறது –

(பூதனா சம்ஹாரம் தொடங்கி மல்லரை மாட்டியது பர்யந்தம் உண்டே
பூமி பலகாலம் -சாக்ஷியாக நிற்கும்
சத்தை பெற்றது -அவன் அன்று அழித்ததால்
பரம சுகுமாரமான திருக்கையால் செய்தானே -இனிமையில் ஆழங்கால் பட்டு மாய்ந்து போகாமல் உள்ளார்கள் –
என்று மூன்று நிர்வாகங்கள்)

வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர்
வலிய முடி யிடிய வாங்கி -வலிய நின்
பொன்னாழிக் கையால் புடைதிடுதி கீளாதே
பல் நாளும் நிற்குமிப்பார்–41-

பதவுரை

வலியம் என நினைந்து–நாமே பலசாலிகள்’ என்று நினைத்துக் கொண்டு
வலிய முடி–வலிதான தலைகள்
இடிய–சிதறி யொழியும்படி
வாங்கி–போக்கடித்து
நின்–உன்னுடைய
வலிய பொன் ஆழி கையால்–வலிதாயும் அழகிய திருவாழியை யுடையதாயுமுள்ள திருக் கையாலே
புடைத்திடுதி–(அந்த மல்லர்களை) அடித்து விட்டாய்;
வந்து எதிர்த்த மல்லர்–எதிரிட்டு வந்த -சாணூர முஷ்டிகர் -மல்லர்களுடைய
(நீ கை நோவக் காரியம் செய்ததைக் கண்ணால் கண்டு வைத்தும்)
இப் பார்–இவ் வுலகமானது
கீளாதே–-கேசி பகாசூரர்களை போல் -வயிறு வெடித்து மாய்ந்து போகாமல்
பல் நாளும் நிற்கும்–சிரஞ்ஜீவியாயிருக்கின்றதே! (என்ன கல் நெஞ்சோ!)

வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர் வலிய முடி யிடிய வாங்கி –
வெல்வோம் என்று நினைத்து வந்து எதிர்த்த மல்லருடைய
திண்ணியதான முடியை வாங்கி

முடியிடிய-
முடி யிடியும்படி -புடைத்திடுதி

வலிய நின் பொன்னாழிக் கையால் புடைதிடுதி
மிடுக்கை யுடைத்தான திருவாழியைப் பிடித்த கையாலே
கேசியைப் போலே வாயைக் கிழியாதே
மல்லுக்கு ஈடாகப் புடைத்திடுதி

பல் நாளும் நிற்குமிப்பார்
தனியே முறட்டு மல்லரை வென்ற வெற்றிக்கு என்றும் ஸாக்ஷி பூமி இறே
அம் மல்லரை ஜெயித்த ஜெயத்தாலே இறே பூமி நிலை நின்றது என்றுமாம்

கீளாதே பல் நாளும் நிற்குமிப்பார்
ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு முரட்டு மல்லரோடே பொருகிற படி கண்டால்
இப் பூமியில் சேதனர் முடிய வேண்டாவோ
அது கண்டு ஸஹித்து இருந்த இவர்களுக்கு நூறே பிராயம்
ந சமம் யுத்த மித்யாஹு என்ற மாத்ரமும் சொல்லாத இவர்களுக்கு
ஒரு நாளும் அழிவு இல்லை என்றுமாம்

(யுத்த காண்ட ஸ்லோகம்
ராக்ஷஸன் ராவணன் தேரில் இருந்து -மாயா யுத்தம் -அதர்ம யுத்தம்
ராமனோ மனுஷ்யன் பூமியில் இருந்து தர்ம யுத்தம்
என்று மேலைத்தேவர் கந்தர்வர்கள் சொன்னார்களே )

இப் பார் –
பாரில் உள்ளார்

நிற்கும் –
சாக்ஷியாக நிற்கும் என்னுதல்
சத்தை நிற்கும் என்னுதல்
ஈடுபட்டு அழியாதே நிற்கும் என்னுதல்

——–

ஸர்வேஸ்வரனே ஆஸ்ரயமாக வேண்டாவோ -என்கிறது –

(கீழே பூமி நிலை பெற்றது கண்ணனால்
அது மாத்ரமோ
இவன் ஒருவனே புகல் -சர்வ வித பிரகாரங்களில் ரக்ஷகன் இவனே
முன் படைத்தான் -பஹுஸ்யாம் ப்ரஜாயேய -மஹா பிரளயம் -அவாந்தர பிரளயம் இல்லை )

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன் படைத்தான் என்பரால் -பாரிடம்
ஆவானும் தானானால் ஆரிடமே மற்று ஒருவர்க்கு
ஆவான் புகவாலவை–42-

பதவுரை

(ஸ்ரீமந் நாராயணனே)

பார் உண்டான்–(பிரளய காலத்தில்) பூமியை விழுங்கினான்;
பார் இடந்தான்–(மஹா வராஹமாகிப்) பூமியை ஒட்டு விடுவித் தெடுத்தான்;
பார் அளந்தான்–(திரிவிக்கிரமனாகிப்) பூமியை அளந்து கொண்டான்;
முன்–முதல் முதலாக
பார் இடம் படைத்தான்–இப் பூமியை யெல்லாம் உண்டாக்கினான்
என்பர்–என்ற சாஸ்த்ர ஞானிகள் சொல்லுகிறார்கள்;
பார் உமிழ்ந்தான்–(பிறகு) அதைப் புறப்பட விட்டான்;
பார் இடம் ஆவானும் தான்–அவனே ஸகல ப்ரபஞ்ச ஸ்வருபியாகவுமிருக்கிறான்;
ஆனால்–ஆன பின்பு (நமக்கு)
இடம் ஆர்–ஆஸ்ரயமாகக் கூடியவர்கள் வேறு யார்? (ஆருமில்லை)
அவை–இவ் வுலகங்கள்
மற்று ஒருவர்க்கு–ஸ்ரீமந் நாராயணனைத் தவிர மற்றொரு தெய்வத்துக்கு
ஆவான் புகா–சேஷப் பட்டிருக்க மாட்டா.
ஆவான் புகவாலவை-அவை -ஆவான் -புகா -ஆல்
ஆல் -அசைச் சொல்

பாருண்டான்
பிரளயம் வருகிறது என்று தன் திரு வயிற்றிலே வைத்து ரஷித்தும்

பாருமிழ்ந்தான்
வெளி நாடு காண உமிழ்ந்தும்

பாரிடந்தான்
அண்ட பித்தியில் நின்றும் பூமியை ஸ்ரீ வராஹ ரூபமாய் ஒட்டு விடுத்தும்

பாரளந்தான்
மஹா பலி அபஹரிக்க எல்லை நடந்தும்

பாரிடம் முன் படைத்தான்
கரண களே பர விதுரமாய்
போக மோக்ஷ ஸூன்யமான இவற்றை ஸ்ருஷ்ட்டித்தும்

என்பரால் –
இப்படி ஆனைத் தொழில்கள் செய்வான் என்று
நிர்த்தோஷ பிரமாணமும்
பிரமாணத்தை அங்கீ கரித்த ருஷிகளும் (பிரமாதாக்கள் )
சொல்லுகையாலே

பாரிடம் ஆவானும் தானானால்
ஜகத்தாகிறான் ஈஸ்வரன்
ரஷ்ய ரக்ஷக பாவாதி ஸம்பந்தங்களாலே ஐக்யம்
ஸ்வரூபத -அன்று

ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம (சாந்தோக்யம் )-என்று (ப்ரதிஜ்ஜை சொன்னால் போலே )
பிரபஞ்சத்துக்கு ப்ரஹ்மத்துக்கும் ஐக்யத்தைச் சொல்லி
தஜ்ஜலாநிதி (தஜ்ஜ -தல்ல -தத்தனு இதி )-என்று ஹேது சொன்னால் போலே –

(கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் கடல் ஞாலம் -ஆவேனும் யானே என்னும் )

ஆனால் ஆரிடமே
இப்படி யானால் இஜ் ஜகத்துக்கு ஆஸ்ரயம் ஆவாரார்

மற்று ஒருவர்க்கு ஆவான் புகவாலவை
ஜகத்தில் இச் சேதனர் வேறே ஒருவனுக்கு சேஷம் ஆவான்

புநா (புகா)
உண்டு உமிழ்ந்த தொழில்கள் வேறே ஒரு வியக்திக்கு ஆகா என்றுமாம் –

அவை -சேதனர் ஆதல்
கீழ்ச் சொன்ன வியாபாரம் ஆதல்

———–

பிரபல பிரதிபந்தகங்களைப் போக்குமவனைப் பற்றாதார்க்கு வரும்
மநோ துக்கங்களைப் போக்க ஒண்ணாது

அவயம் என நினைந்து வந்த சுரர் பாலே
நவையை நளிர்விப்பான் தன்னை -கவையில்
மனத்து உயர வைத்திருந்து வாழ்த்தார்க்கு உண்டோ
மனத் துயரை மாய்க்கும் வகை–43-

பதவுரை

அவயம் என நினைத்து வந்த–அபயம் வேண்டி வந்து சரணமடைந்த
சுரர் பால்–தேவதைகளிடத்திலுள்ள
நவையை–குற்றங்குறைகளை-காரணமான பாபங்களை என்றுமாம்
நளிர்விப்பான் தன்னை–போக்கடிக்கு மெம்பிரானை
கவை இல் மனத்து–ஒரு படிப்பட்ட மனத்திலே-கவை -சம்சயம் –
உயர வைத்து இருந்து–பரிபூர்ணமாக வைத்துக் கொண்டிருந்து
வாழ்த்தா தார்க்கு–மங்களாசாஸனம் பண்ணாதவர்களுக்கு
மனம் துயரை மாய்க்கும் வகையுண்டோ?– தங்கள் மனத்திலே யுள்ள துக்கங்களைப் போக்கிக் கொள்ள வழி ஏது?

அவயம் என நினைந்து வந்த சுரர் பாலே நவையை நளிர்விப்பான் தன்னை –
பராவரேசம் சரணம் வ்ரஜஸ் த்வம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்னும்படி
அபயம் என்று நினைத்து வந்த தேவதைகளை
அந்த துக்கத்தை நடுங்கப் பண்ணிப் போக்குமவன் தன்னை

நவை -என்று
துக்க ஹேதுவான குற்றம் ஆகவுமாம்
(நவை -துக்கமாதல் -பாபமாதல் )

கவையில் மனத்துயர வைத்திருந்து வாழ்த்தார்க்கு உண்டோ
இவ்விஷயங்களைப் பற்றுவோமோ
ஈஸ்வரனைப் பற்றுவோமோ
அயோக்யன் என்று அகலுவோமோ
அகலாது ஒழிவோமோ
என்று இரண்டும் இன்றிக்கே இருக்கிற மனஸ்ஸிலே
இவனை உயர வைத்து
மங்களா ஸாஸனம் பண்ணார்த்தாருக்கும் உண்டோ

(அவனே ப்ராப்யம் பிராபகம்—
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை —
தாரகம் போக்யம் போஷகம்-
வாழ் முதல் வளர் முதல் மகிழ் முதல்
என்று நினைத்து உயர வைத்து )

மனத் துயரை மாய்க்கும் வகை
மனத் துயர் மாய்க்கும் பிரகாரம்

——————

இதுக்கு பட்டர் ஒருபடியும்
பிள்ளை திரு நறையூர் அரையரும் ஒரு படியும்
அருளிச் செய்வர்

(பண்டைய கர்மங்களின் பலனே வாழ்த்தாது இருக்கிறோம் என்றும்
பாடாததே-வாழ்த்தாதே இருப்பதே பாபம் என்றும்
வாழ்த்தாது இருப்பார் இது வன்றே மேலைத் தாம் செய்யும் வினை -முற்கால கர்ம பலன் என்றும்
வாழ்த்தாது இருந்தால் மேல் உள்ள காலங்களில் கர்மங்களை சேர்ப்போம் என்றும்
இதனாலே பாபம் –பட்டர்
பாபத்தாலே இது -அரையர்
என்றும் இரண்டு நிர்வாகங்கள் )

வகை சேர்ந்த நல் நெஞ்சம் நாவுடைய வாயும்
மிக வாய்ந்து வீழா வெனிலும்-மிக வாய்ந்து
மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பார் இது வன்றே
மேலைத் தாம் செய்த வினை–44-

பதவுரை

வகை சேர்ந்த நல் நெஞ்சும்–(ஞானத்திற்கு) மார்க்கமாக ஏற்பட்டிருக்கிற நல்ல நெஞ்சும்
மிக வாய்ந்து வீழா எனினும்–(எம் பெருமானை) நன்றாகக் கிட்டி அநுபவிக்கா விட்டாலும்,
தாம்–சேதநராயப் பிறந்திருக்கிற தாங்கள்
மிக ஆய்ந்து–நன்றாக ஆராய்ச்சி பண்ணி
நா உடைய வாயும்–(எம்பெருமானைப் பேசுவதற்கு உறுப்பான) நாவோடு கூடிய வாக்கும்
மாலை–எம்பெருமானை
வாழ்த்தாது இருப்பர்–வாழ்த்தாமல் வாளா கிடக்கின்றார்கள்
மேலை தாம் செய்யும் வினை இது அன்றே–மேலுள்ள காலமும் கெட்டுப் போவதற்காகத்
தாங்கள் செய்து கொள்ளுகிற பாவமன்றோ இது.

இதுக்கு பட்டர் ஒருபடியும்
பிள்ளை திரு நறையூர் அரையரும் ஒரு படியும்
அருளிச் செய்வர்

வகை சேர்ந்த நல் நெஞ்சம்
சரீர பரிக்ரஹம் பண்ணின ஆத்மாவுக்கு
ஞானப் பிரசரத்துக்காகச் சேர்ந்த நெஞ்சம்

நாவுடைய வாயும்
ஸர்வேஸ்வரனை ஸ்துதிக்கக் கண்ட வாயும்

மிக வாய்ந்து வீழா வெனிலும்-
குண த்ரய வஸ்யராகையாலே
ரஜஸ் தமஸ்ஸூக்கள் வர்த்தித்த போது
(நெஞ்சும் வாயும் )இவன் பக்கலிலே வந்தன வில்லை யாகிலும்

மிக வாய்ந்து மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பார்
ஸத்வாத் சஞ்சாயதே ஞானம்-(ஸ்ரீ கீதை -14 -ரஜஸ் லோபம் -பிரமாதம் லோகம் தபஸ் )என்று
ஸத்வ கார்யமான ஞானத்தாலே ரஜஸ் தமஸ்ஸூக்களைத் தள்ளி
ஸர்வேஸ்வரனை வாழ்த்தாதே இருப்பர்கள்

இதுவன்றே மேலைத் தாம் செய்த வினை
இது வன்றோ சம்சாரம் நித்யமாக இவர்கள் பண்ணின பாபம்

மேலை –
மேலைக்கு -சம்சாரம் நித்யமாக

வினை –
பாபமாதல் –
பாப பலமாதல்

(இதுவரை பராசர பட்டர் நிர்வாகம்
மேல் அரையர் நிர்வாகம்
சேர்ந்த நெஞ்சும்-ஞான பிரசுரத்துக்காக பட்டர்
குணங்களில் சேர்ந்த நெஞ்சும் -அரையர்
மிக வாய்ந்து -எல்லா குணங்களிலும் உள் புகும்படி ஆராய்ந்து
பாப பலமே வினை அரையர்
மேலை –பண்டு -அரையர் )

ஈஸ்வரனுடைய குணங்களில் சேர்ந்த நெஞ்சும்
குணம் ஒன்றையுமே ஏத்தும் வாயும்
அல்லாத குணங்களிலும் உள் புக்கதில்லை யாகிலும்
எல்லா குணங்களிலும் உள் புகும்படி ஆராய்ந்து ஸர்வேஸ்வரனை ஏத்தாது இருப்பர்கள்
இது வன்றோ பண்ணின பாபத்த்தின் பலம் என்று பிள்ளை திரு நறையூர் அரையர் நிர்வாகம்

————-

நீர் இதில் செய்தது என் என்னில்
பிரிந்தால் வரும் அநர்த்தத்தை நினைத்து அவன் திருவடிகளை ஏத்தினேன்-என்கிறார்

(ஆழ்வாருக்கு -வினை என்றாலே பகவத் விஸ்லேஷம் தானே
தினை ஆம் சிறிது அளவும்-அதி அல்ப காலமும் )

வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி
தினையாம் சிறிது அளவும் செல்ல -நினையாது
வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும்
நாயகத்தான் பொன்னடிகள் நான் –45-(வெம்மையையே -பாட பேதம் )

பதவுரை

வினையார்–பாவங்கள்
தர முயலும்–நமக்கு உண்டு பண்ண நினைக்கிற
வெம்மையை அஞ்சி–கொடிய துன்பங்களுக்கு அஞ்சி
தினை ஆம் சிறிது அளவும்–தினையளவு சிறிய அற்ப காலமும்
செல்ல நினையாது–வீணாகக் கழிய விரும்ப மாட்டாமையினாலே,
நான்–அடியேன்
வானோர்–நித்ய ஸூரிகள்
தொழுது இறைஞ்சும் நாயாகத்தான்–தொழுது வணங்கும் பெருமை வாய்ந்த பெருமானுடைய
மநோ காய வாக் கார்யங்கள் –
பொன் அடிகள்–திருவடிகளை
வாசகத்தால் ஏத்தினேன்–சொற்களாலே துதிக்கின்றேன்.
கீழே வாயில் நா என்றாரே -ஸ்துதிக்கவே கொடுத்த வாய் அன்றோ

வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி தினையாம் சிறிது அளவும் செல்ல -நினையாது வாசகத்தால் ஏத்தினேன்
பிரிவாலே பிறக்கும் வெம்மையை அஞ்சி
க்ஷண மாத்ரமும் அவனை ஒழியக் காலம் செல்லப் பாராதே
வாக் இந்த்ரியத்தைக் கொண்டு ஏத்தினேன்
(ஞானி நித்ய யுக்தர் -கூடவே இருக்கும் அபி நிவேசம் கொண்டவர்கள் தானே )

வினையார் –வினை -என்று -பாப கார்யமான விஸ்லேஷம்
தர முயலும் -கொடுக்க உத்யோகிக்கும்

வானோர் தொழுது இறைஞ்சும் நாயகத்தான் பொன்னடிகள் நான்
நித்ய ஸூரிகள் மநோ வாக் காயங்களாலே அடிமை செய்யும் ஸர்வேஸ்வரனுடைய
விலக்ஷணமான திருவடிகளைப் பெற்று
அதைப் பிழைக்க ஒண்ணாது என்று ஏத்தினேன்

(இறைஞ்சி வாயினால் பாடி –
தொழுது -மனதினால் சிந்தித்து தொழுது என்றும் தூ மலர் தூவித் தொழுது -இரண்டும்
பொன் -உபாயமாகவும் ப்ராப்யமாகவும் இருக்குமே )

————

கீழே தேஹ யாத்ரை செல்லும்படி சொல்லிற்று
இதில் ப்ராப்ய பிராப்பகங்கள் அவனே என்று நினைத்து இரு என்கிறார் –

(கீழே பொன் அடிகள் -உபாயமாகவும் ப்ராப்யமாகவும் இருக்குமே-ஸூ ஷ்மமாகக் கோடி காட்டினார்
இத்தை வியக்தமாக இதில்
வெந் நரகில்–கொடிய ஸம்ஸாரத்திலே- சேராமல் காப்பதற்கு நீ கதியாம்-உபாயமாகவும்
செங் கண் மால் -நீங்காத-மா கதி-பரம ப்ராப்யம்
மீளுதலாம் ஏதமிலா விண்ணுலகில் ஏகம் எண்ணும் மாறன் -தாள தாமரை பாதிக நூற்று அந்தாதி பாசுரம் )
இரண்டும் கதி
மா கதி சிறப்பு -ப்ராப்யமாகவே கொள்ள வேண்டுமே

(நாலாயிர சுருக்கமே இதுவே தானே
அவனாலே அவனை அடையுங்கோள் -இதுவே ஆழ்வார்கள் உபதேசம் நமக்கு
ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே)

நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள் நாளும்
தேங்கோத நீருருவம் செங் கண் மால் -நீங்காத
மா கதியாம் வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதியாம் நெஞ்சே நினை –46-

பதவுரை

தேங்கு ஓதம் நீர் உருவன்–ஓடாமல் தேங்குகின்ற கடல் போன்ற திரு நிறத்தை யுடையவனும்.
செம் கண்-செந்தாமரை போன்ற திருக் கண்களை யுடையவனுமான
மால்–ஸர்வேச்வரன்
நீங்காத–ஒருநாளும் விட்டுப் பிரியக் கூடாத
மா கதி ஆம்–சிறந்த உபேயமாயிரா நின்றான்; (அவ்வளவு மல்லாமல்,)
வெம் நரகில்–கொடிய ஸம்ஸாரத்திலே
சேராமல்–பொருந்தாமல்
காப்பதற்கு–நம்மை ரக்ஷிப்பதற்கு
கதி ஆம்–உபாயமாகவும் இரா நின்றான்;
நெஞ்சே நினை–நெஞ்சே! (இதை) நீ அநுஸந்திக்கக் கடவை;
நாள் நாளும்–நாள்தோறும் (உனக்கு) நான்
நான் கூறும் கூற்று ஆவது இத்தனையே–சொல்லும் சொல்லாவது இங்ஙனமே காண்.

நான் கூறும் கூற்றாவது இத்தனையே
ஒரு நாளையோ இப்படிச் சொல்லுவது என்னில்

நாள் நாளும்
என்றும் இத்தனையே

தேங்கோத நீருருவம்
தேங்கின கடல் போலே இருந்த திரு மேனியையும்

செங்கண் மால் –
ஐஸ்வர்ய ஸூசகமான கண்களை யுமுடைய ஸர்வேஸ்வரனை

நீங்காத மா கதியாம் வெந் நரகில் சேராமல் காப்பதற்கு நீ கதியாம் நெஞ்சே நினை
மீட்சி இல்லாத ப்ராப்யமாகவும்
ஸம்ஸாரத்திலே சேராத படிக்கு ஈடான ப்ராபகமாகவும்
நெஞ்சே நினை

இத்தால்
ப்ராப்ய ப்ராபகங்களும் அவனே என்னும் இடமும்
ப்ராப்தாவுக்கு பிரதிபத்தி மாத்ரமே என்னும் இடமும்
ப்ரபன்னனுக்கு இரு காலும் -மற்று ஒன்றும்- சொல்ல வேண்டுவது இல்லை என்னும் இடமும் சொல்லுகிறது

நினை என்கையாலே
பிரதிபத்தியும் –
அது தான் (அந்த நினைவும் )ஒரு கால் என்னும் இடமும் தோற்றுகிறது

—————-

நீர் நம்மை ப்ராப்யமாகும் ப்ராபகமாகவும்
நம்மை ஏத்துகையே தேஹ யாத்ரையாகவுமாக இரா நின்றீர்
இதுக்கு விபரீதமாய் இருப்பான் என் சம்சாரம்-என்ன
உன் கடாக்ஷம் இல்லாதபடி இருக்கை குற்றமோ என்கிறார் –

(நாம் கேட்பதாகவும் பெருமாளே வெறுப்பில் கேட்பதாகவும் கொண்டு
உனது கடாக்ஷம் என் அளவிலே இன்று பலித்ததே
இன்றாக நாளையாக -என்றாவது பலிக்குமே )

நினைத்து இறைஞ்சி மானிடவர் ஓன்று இரப்பர் என்றே
நினைத்திடவும் வேண்டா நீ நேரே -நினைத்து இறைஞ்ச
எவ்வளவர் எவ்விடத்தோர் மாலே அது தானும்
எவ்வளவும் உண்டோ எமக்கு –47

பதவுரை

மாலே–அளவிட்டு அறிய முடியாத ஸர்வேச்வரனே!
மானிடவர்–“இவ்வுலகத்தவர்கள்
நினைத்து இறைஞ்சி–நம்மை ஒரு பொருளாக நினைத்து வணங்கி
ஒன்று–ஏதாவதொரு அற்ப பலனையாவது
இரப்பர்–நம்மிடத்தில் வேண்டிக் கொள்வர்கள்
என்றேயும்–என்று கூட
நீ நினைத்திட வேண்டா–நீ நினைக்க வேண்டா;
(இப்பாவிகள் அற்ப பலன்களை விரும்பி தேவதாந்தரங்களின் பக்கல் ஓடுமவர்களே யொழிய
அவற்றுக்காகவும் உன்னருகு வர மாட்டார்கள்; இப்படியான பின்பு.)
நேரே நினைத்து இறைஞ்ச–(இவர்கள்) உன்னையே உபாயமாகவும் உபேயமாகவும் நினைத்துத் தொழுவதற்கு
எவ் அளவர்–என்ன அறிவுள்ளவர்கள்?
எவ் இடத்தோர்–அப்படிப்பட்ட அறிவு உண்டாகக்கூடிய இடத்தில் தானுள்ளவர்களோ?
(இருள் தரு மா ஞானத்திலுள்ளவர்களன்றோ.)
எமக்கு–உன்னுடைய நிர்ஹேதுக கடாஷத்திற்குப் பாத்திராமன அடியோங்களுக்கோ வென்றால்
எமக்கே -பத்து ஆழ்வார்களும் -அவரே குல கூடஸ்தராகக் கொண்ட நமக்கும்
அது தானும்–கீழ் சொன்ன மானிடவர்களுக்குமான -ஷூத்ர பலன் வேண்டி நிற்கும் -துர்ப் புத்தி
எவ்வளவும்–சிறிதேனும்,
உண்டோ–உண்டாகக் கூடியதோ?
(உபாயமும் உபேயமும் நீயே யென்கிற உறுதி எமக்கு நிலை பெற்றதன்றோ.)

நினைத்து இறைஞ்சி மானிடவர் ஓன்று இரப்பர் என்றே நினைத்திடவும் வேண்டா நீ
நம்மை நினைத்து
நம் காலிலே விழுந்து
உம்மைப் போலே நம்மையே பிரயோஜனமாகப் பற்றாதே
ப்ரயோஜனாந்தரத்துக்கும் அடி ஒப்பர் என்று நினைக்க வேண்டா –

நேரே நினைத்து இறைஞ்ச எவ்வளவர் எவ்விடத்தோர்
நீயே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று நினைத்து இறைஞ்ச
எங்கு உள்ளார்க்குப் போம்
எவ்வளவில் உள்ளாருக்குப் போம்

எவ்வளவர்
எவ்வளவில் உள்ளார்
எப்படிப்பட்ட ஞானத்தை யுடையார்
அது தானும் அந்த ப்ரயோஜனத்தைக் கொள்ளுகை –

மாலே
உன்னைச் சிலவராலே பரிச்சேதிக்கப் போமோ

அது தானும் எவ்வளவும் உண்டோ எமக்கு
உன் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு ப்ரயோஜனாந்தரத்திலே முதலடி இட வேண்டா
உன் கடாக்ஷம் இல்லாதார் இப்படிச் செய்தார் என்று உனக்கு வெறுக்க ஒண்ணுமோ

——————

எமக்கு பிரபல பிரதிபந்தகம் போக்குமவனை உபாயமாக நெஞ்சிலே கொண்டு
அவனால் பெறுவதும் பரம பதம் என்று நினைத்து இருந்தோம்
இது அன்றோ இருக்கும் படி என்கிறார் –

எமக்கி யாம் விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை
அமைத்து இருந்தோம் அஃது அன்றே யாம் ஆறு அமைப் பொலிந்த
மென் தோளி காரணமா வெம்கோடு ஏறு ஏழுடனே
கொன்றானையே மனத்துக் கொண்டு –48-

பதவுரை

அமை பொலிந்த மென் தோளி காரணம் ஆ–மூங்கில் போல் பருத்து விளங்குகின்ற
மெல்லிய தோள்களை யுடையவளான நப்பின்னைப் பிராட்டிக்காக
வெம்கோடு ஏழ் ஏறு–கொடிய கொம்புகளை யுடைய ஏழு காளைகளை
உடனே–ஒரு நொடிப் பொழுதில்
கொன்றானையே–முடித்த எம்பெருமானையே
மனத்து கொண்டு–சிந்தையில் தியானித்துக் கொண்டு
யாம்–அடியோம்
விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை–மேலுலகங்களுக்கெல்லாம் மேற்பட்டதான பரம பதத்தை
எமக்கு அமைத்திருந்தோம்–எமக்கு (ப்ராப்ய பூமியாகப்) பாரித்துக் கொண்டிருக்கின்றோம்.
அஃது அன்றே ஆம் ஆறு–அப்படி யிருப்பதுன்றோ (முழுக்ஷுத்வத்திற்கு) ஏற்றிருப்பது.

எமக்கி யாம் விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை
நமக்கு நாம் ப்ரஹ்மாதிகளுடைய -ப்ரஹ்மாதிகளுக்கு -மேலான
பரம பதத்தைப் பாரித்து இருந்தோம்

இது அன்றே செய்யும் வழி
ப்ரஹ்மாதிகளுடைய லோகத்துக்கு மேலாய்
பரம பதத்துக்குப் புறம்பாய் இருக்கும் கைவல்ய மோக்ஷத்தை
உச்சமதாம் -மேலான வீட்டை

அமைத்து இருந்தோம்
வேண்டா என்று இருந்தோம் என்றுமாம்

அமைத்து இருந்தோம் –
அமைவு -சமைவாய் -பாரித்து இருந்தோம் -என்னுதல்
அமைவு -அமையும் என்றாய் -வேண்டா என்னுதல்
பரம பதம் தன்னையும் வேண்டா என்னுதல்
இவ்வர்த்தத்தைத் திருவடியை த்ருஷ்டாந்தம் ஆக்கி அருளிச் செய்கிறார்

அஃது அன்றே யாம் ஆறு அமைப்பொலிந்த மென்தோளி காரணமா வெம்கோடு ஏறு ஏழுடனே கொன்றானையே மனத்துக் கொண்டு
பெருமாள் குணங்களிலே பழகின உடம்பு ஒழிய பரம பதம் வேண்டா என்று இருந்தால் போலே
அசாதாரணையாய் வேய் போலே விளங்கி மிருதுவான தோளை யுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக
வெவ்விய கோட்டை யுடைய எருதுகள் ஏழையும் உடனே செற்றவனையே நெஞ்சிலே கொண்டு
இவ் வனுபவத்தில் காட்டில் பரம பதம் வேண்டா என்று இருந்தோம் என்றுமாம் —

கோடு -கொம்பு –

(அச்சுவை பெறினும் வேண்டேன்
பாவோ நான்யத்ர கச்சதி
நப்பின்னை மணந்த கண்ணனை -உன்னைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றினைக் காணா -என்கிறார் )

————————-

அவனே ப்ராபகன் –என்று அறுதி இட்டாருக்கு
சரீர அவசானத்து அளவும் இருக்கும் படி சொல்லுகிறது

(இருக்கும் நாளில் உகந்து அருளினை நிலங்களில் குண அனுபவமே போது போக்காகக் கொள்ள வேண்டும்
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
இதில் அனுபவம் சொல்கிறது
யுத்த க்ருத்யம் ரஹஸ்யத்ரய சாரத்தில் தேசிகர் )

கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத் தான் -கண்ட நாள்
காருருவம் காண்டோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார்
பேருருவம் என்று எம்மைப் பிரிந்து –49-

பதவுரை

கொண்டல் தான்–மேகங்களையும்
மால் வரை தான்–பெரிய மலைகளையும்
மா கடல் தான்–பெரிய கருங்கடலையும்
மற்று கார் உருவம் தான்–மற்றுமுள்ள (குவளை, குயில், மயில் முதலிய) கறுத்து உருவங்களையும்
கண்ட நாள்–பார்க்குங் காலத்தில்
காண் தோறும்–பார்க்கும் போதெல்லாம்
கூர் இருள் தான்–செறிந்த இருளையும்
பிள்ளை உறங்கா வல்லி தாசர் இருட்டை சேவிப்பாரே கண்ணனை ரக்ஷித்ததால்
வண்டு அறா பூவை தான்–(தேனில் நசையாலே) வண்டுகள் விட்டு நீங்காத பூவைப் பூவையும்
நெஞ்சு–என் மனமானது
கண்ணனார் பேர் உரு என்று–இவை கண்ண பிரானுடைய அழகிய திருமேனி என்றெண்ணி
எம்மை பிரிந்து–என்னை விட்டு நீங்கி
ஓடும்–அங்கே ஓடும்.

கொண்டல் தான் மால்வரை தான் மா கடல் தான் கூரிருள் தான் வண்டு அறாப் பூவை தான் மற்றுத்தான் -கண்ட நாள்
உபமானங்களைக் கண்டால் உபமேயம் என்று நம்மை விட்டு நெஞ்சு ஓடா நின்றது
மேகத்தை – கறுத்த மலையை -கடலை -கூரிய இருளை -வண்டு மாறாத பூவை -என்கிற வ்ருக்ஷத்தைக் கண்ட போது –

காருருவம் காண்டோறும் நெஞ்சோடும்
(மாற்றுக் கார் உருவம் என்று கூட்டி அருளிச் செய்கிறார் )
அனுக்தமான கருத்த பூங்குவளை நீலம் காயா இத்யாதி காணும் தோறும் என்றுமாம்
வடிவு கண்டால் இதுக்கு அவன் அன்று காண் -என்று கேட்டு அறிந்தாலும்
பின்னையும் கண்ட போது எல்லாம்

(ஸ்மாரக -ஸத்ருச பதார்த்தங்கள் -நினைவூட்டும்
இது அவன் அல்ல -மலை இத்யாதி அவன் இல்லை
இதுக்கு அவன் அல்ல -நெஞ்சுக்கு சொன்னதாக )

கண்ணனார் பேருருவம் என்று எம்மைப் பிரிந்து
இதன் நெடு வாசி அறிகிறதில்லை
பேர் உருவம் என்று ஓடா நின்றது

(இவை சிற்று உருவம்-அவன் பேர் உருவம் என்று அறியாமல்
வர்த்தமானத்தைப் பற்ற அருளிச் செய்கிறார் )

—————-

உபமானங்களைக் கண்டு உபமேயம் என்று இருக்கும்படியான எம்மை
இவர் நோக்காது ஒழிவதே -என்று வெறுக்கிறார்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும்-திருவாய் -2-7-6- -என்னும்படியை எண்ணுகிறிலர்

அவன் கொடுத்த சரீரம் கொண்டு ருசி பிறந்த பின்பு
இவனைத் -இறைத்-தாழ்த்ததும் குற்றமாய்த் தோன்றா நின்றது
தான் பரிக்ரஹித்த சரீரம் தோறும் அவஸர ப்ரதீஷனாயத்
தம் பக்கல் முகம் பெறாதே திரிந்தது தோற்றுகிறது இல்லை
இத் தலையில் அபேக்ஷை பிறந்தால் அவனுக்கு வாராதே இருக்கை முறை அன்று போலே காணும்
பிரஜை எல்லாத் தீம்பும் செய்ததே யாகிலும் பசித்த போது சோறு இட்டிலள் யாகில்
தாய்க்குக் குற்றமாகக் கடவது இறே

(நச்சுப் பொய்கை ஆகாமல்- நாடு திருத்த- பிரபந்தம் தலைக்கட்ட- ஆழ்வாரை வைத்தான் அன்றோ
ஆஸ்ரிதர் இடம் எளியவன் என்பதையே பார்த்தேன்
கேசியை நிரசித்த வண்மையைப் பார்க்க வில்லையே )

பிரிந்து ஓன்று நோக்காது தம்முடைய பின்னே
திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை புரிந்து ஒரு கால்
ஆவா வென இரங்கார் அந்தோ வலிதே கொல்
மா வாய் பிளந்தார் மனம்–50-

பதவுரை

பிரிந்து–தம்மை விட்டுப் பிரிந்து
ஒன்று நோக்காது–வேறொன்றிலும் கண் வையாமல்
தம்முடைய பின்னே–தம்மோடு கூடவே
திரிந்து உழலும்–அலைந்து கொண்டு திரிகிற
சிந்தனையார் தம்மை–என் நெஞ்சினாரை
ஒரு கால்–ஒரு காலாகிலும்
புரிந்து–அன்பு கூர்ந்து
ஆ ஆ என இரங்கார்–ஐயோ வென்று அருள் புரிகின்றலர் (பகவான்);
அந்தோ–கஷ்டம்!;
மா வாய் பிளந்தார் மனம்–கேசி யென்னும் குதிரையின் வாயைக் கீண்டொழித்த அப் பெருமானுடைய நெஞ்சு
வலிதே கொல்–கடினமோ;

பிரிந்து ஓன்று நோக்காது தம்முடைய பின்னே திரிந்து உழலும்
வேறு ஒன்றை அநுஸந்தியாதே தம்மையே பற்றித் திரிகிற

சிந்தனையார் தம்மை புரிந்து ஒரு கால் ஆவா வென இரங்கார் அந்தோ வலிதே கொல்
தம்மை ஒழிய வேறே ஒருத்தர் இல்லை என்று புரிந்து பார்த்து
ஐயோ என்று இரங்கு கிறிலர்

மாவாய் பிளந்தார் மனம்
ஆஸ்ரிதருக்காக விரோதி நிரஸனம் பண்ணிப் போந்தவருடைய மனஸ்ஸூ
இப்போது திண்ணிதான படி என்
மாவாய் பிளந்தாருடைய மனம் அந்தோ வலிதே கொல்

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–பாசுரங்கள் -31-40–

June 30, 2021

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

ஸர்வேஸ்வரனைக் கொண்டே விரோதியையும் போக்கி
அங்குத்தைக்குக் கைங்கர்யம் பண்ணும்படியும் ஆனோம் என்கிறார் –

(சென்றால் குடையாம் இத்யாதி -நிழலும் அடி தாறுமானாலே கைங்கர்யம் தானே )

அழகும் அறிவோமாய் வல் வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடி தாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடங்கடலை மேயார் தமக்கு–31-(வல் வினையும் தீர்ப்பான் -பாட பேதம் )

பதவுரை

நல் வினையை தீர்ப்பான்–வலிய பாவங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக
அழகும் அறிவோம் ஆய்–அழகிய உபாயத்தை அறிந்தோமாக,
குடங்கள்–குடங்களை
தலை மீது எடுத்துக் கொண்டு–தலையின் மேலே எடுத்து வைத்துக் கொண்டு
சுழல ஆடி–ஆகாசத்திலே சுழன்று வரும்படி கூத்தாடி
அன்று–முற்காலத்திலே (அக் குடக் கூத்தாடின விடாய் தீர்வதற்காக)
அத் தட கடலை மேயார் தமக்கு–(முதலில் விட்டு வந்த) அப் பெரிய திருப்பாற் கடலிலேயே போய்ச் சேர்ந்த பெருமானுக்கு
நிழலும் அடி தாறும் ஆனோம்–பாத நிழலாகவும் பாத ரேகையாகவும் உடன்பட்டோமானோம்.
(வல் வினையைத் தீர்ப்பதற்கு அறிந்த உபாயம் இதுவே.)

அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான் நிழலும் அடிதாறும் ஆனோம்
வல் வினையும் -பாட பேதம்
புதுப்புடைவை அழுக்குக் கழற்றுமா போலே
எலி எலும்பான -அல்ப சக்திகரான -நாம் கர்மத்தாலே நம்முடைய பாபத்தைப் போக்குகை அன்றிக்கே
ஸர்வேஸ்வரனைக் கொண்டு நம் பாபத்தைப் போக்கும் அழகை யுடையோமாய்
ஸர்வேஸ்வரனுக்கு சாயை போலவும் -பாதுகை -பாத ரேகை போலவும் ஆனோம்
(அடி தாறு -பாதுகை யாதல் -பாத ரேகை யாதல்
பாதுகை யானது எப்படி என்ன அருளிச் செய்கிறார்
இரண்டுமே திருவடிக்கு அளவாகவே தானே இருக்கும் )
அடி தாறு -அடிக்கு அளவாய் இருக்குமது

சுழலக் குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத் தடங்கடலை மேயார் தமக்கு
ஆகாசத்திலே சுழலும் படிக்கு ஈடாகக் குடங்களை எடுத்தாடி
தன்னை -மன்றிலே -நாற்சந்தியிலே –
ஸர்வ ஸ்வ தாநம் பண்ணிக் குடமாடின வேர்ப்புப் போகத்
திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற இவனுக்குச்
சாயை போலவும் ஆனோம்

(குடங்கடலை -குடங்கள் தலை
ஆடினவன் என்கையாலே வேர்ப்புப் போக –என்கிறது )

இளைய பெருமாள் படை வீட்டிலும்
காட்டிலும் ஓக்க அடிமை செய்தால் போலே
கிருஷ்ண அவதாரத்திலும்
திருப்பாற் கடலில் கண் வளர்ந்து அருளுகிற இடத்திலும்
ஓக்க அடிமை செய்யும் படி யானோம் –

அவனைக் கொண்டே பாபத்தைப் போக்கிக் கொள்ள வேணும்
என்கிற ஞானத்தை யுடையோம் என்றபடி –

————–

தாம் அடிமை செய்ய நிச்சயிக்க
நெஞ்சு ப்ரக்ருதி சம்பந்தத்தை உணர்ந்து பிற்காலியா நின்றது என்கிறார் –

(முந்துற்ற நெஞ்சே ஆரம்பம்
இங்கு விலகுவதால் குத்தலாக
நெஞ்சு மனம் போன படி -நெஞ்சுக்கும் மனமா
ஆழ்வார் நெஞ்சு இப்பேர் பட்டவனுக்கு நெருங்கவோ
ஆகவே பகவத் கைங்கர்யத்தில் இழிய மாட்டேன்
ஆழ்வாருக்கு இது தானே தீ வினை
அவனோ தாமோதனார் -மேல் விழுந்து -உயர்ந்த அபிப்ராயத்தால் -ஆர் -சப்த பிரயோகம்
நெஞ்சினார் -விலகுவதால் வெறுப்பில் ஆர் இங்கு )

தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கென்று
தாம் செய்யும் தீ வினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
யாம் செய்வது இவ் விடத்து இங்கி யாது–32-

பதவுரை

தமக்கு அடிமை வேண்டுவார்–தாம் அடிமையாயிருப்பதற்கு ஆசைப்படுமவரான
ஆசா லேசம் உள்ளாருக்கும் அடிமை செய்ய வேண்டுவானே
தாமோதரனார் தமக்கு–தாம்பாலாப்புண்ட பெருமானுக்கு
அடிமை செய் என்றால்–(நெஞ்சே! நீ) அடிமை செய் என்று சொன்னால்
நெஞ்சினார்–எனது நெஞ்சானது
செய்யாது–அப்படியே அடிமை செய்யாமல்
எமக்கென்று–என் வார்த்தை கேளாத ஸ்வாகத் திரியம் பாராட்டி
தாம் செய்யும தீ வினைக்கே–(வெகு காலமாகத்) தான் செய்து வருகிற தப்புக் காரியத்திலேயே
தாழ்வுறுவர்–ஊன்றியிருக்கின்றது;
நைச்யம் பாவித்து விலக்குவதே ஸ்வ பாவம்
அவன் ஒட்டி வர தம் மனம் போல் வெட்டிக் கொண்டு போவதே –
பெரிய நெஞ்சினார் குத்தலாக ஆர்
இங்கு–இப்படிப்பட்ட நிலைமையில்
யாம் செய்வது யாது–நான் செய்யத்தக்கது என்னோ?

தமக்கு அடிமை வேண்டுவார்
(தாம் ஆஸ்ரிதற்கு அடிமை செய்கையை வேண்டி இருப்பார் என்றபடி )
கைத்தது உகப்பார் புளித்தது உகப்பார் என்னுமா போலே
தமக்கு அடிமையை உகக்குமவர்
அது எங்கே கண்டோம் என்றால்

தாமோதரனார்
அநு கூலையான தாயார்க்கு
அடி யுண்பது
கட்டு யுண்பது ஆன இடத்திலே கண்டோம்

(தமக்கு ஆஸ்ரிதரை அடிமை கொள்ள வேண்டி இருப்பவர் என்று அர்த்தமாக்கி )
தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கென்று
எம்மை விட்டுத் தமக்கு என்னவே ஒரு நினைவுடையராய்

தாம் செய்யும் தீ வினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
முதலியார்

(நெஞ்சு கருவி நான் கர்த்தா –
இங்கு நெஞ்சுக்கு நெஞ்சு –
தமக்கு என்று ஒரு நினைவு கொண்ட முதலியார் பெரியவர் )

யாம் செய்வது இவ்விடத்து இங்கி யாது
நம்முடைமையான நெஞ்சுக்கு ஆவோமோ
நம்மை யுடையவர்க்கு ஆவோமோ

—————

அறிவுடைத்தாகில் அவனைப் பற்ற வேண்டாவோ என்கிறது –

யாதானும் நேர்ந்து யாதானும் ஓன்று அறியில் தன் உகக்கில் என் கொலோ
யாதானும் நேர்ந்து அணுகா வாறு தான் -யாதானும்
தேறுமா செய்யா வசுரர்களை நேமியால்
பாறு பாறாக்கினான் பால்–33-

பதவுரை

யாதானும் தேறும் ஆ செய்யா அசுரர்களை–கொஞ்சமும் விச்வஹிக்கும்படியான செயலைச் செய்யாதவர்களான அஸுரர்களை
(எப்போதும் தீங்கையே செய்பவர்களை)
நேமியால்–திருவாழியினாலே
பாறு பாறு ஆக்கினான் பால்–துண்டம் துண்டமாகத் துணித்தொழித்த எம்பெருமான் பக்கலில்
யாதானும் நேர்ந்து–எதையாவது ஸமர்ப்பித்து-தன்னுடையது அல்லாத ஏதேனும் சமர்ப்பித்து -நேர்ந்து -பெரிய கார்யம் -ஆத்ம சமர்ப்பணம்
அணுகா ஆறுதான் என் கொல்–கிட்டாமலிருப்பது என்னோ?
(சிறந்த பெருமானை அயோக்யமான நாம் கிட்டவாமோ என்னில்)
யாதானும் ஒன்று அறியில்–எதையாவது ஒரு வஸ்துவை அறியக் கூடிய சைதந்யத்தை யுடைத்தாயிருந்து வைத்தும்
தான் உகக்கில்–தான் ஆநந்தப் படுவதைத் தன்மையாக உடைத்தாயிருந்து வைத்தும்
அணுகாவாறு தான் என் கொல்?

(நமக்கு நல்லது நம்மால் செய்ய முடியாதே
அவனது அன்புக்குப் பாத்திரமாகவே வேணும்
அவனுக்கு விருப்பமானவற்றைச் செய்வதே நமக்கு நன்மை
நன்மையையும் தீமையும் பிறர் தர வாரா -பிறர் சொல்லுக்குள் நாமும் உண்டே அவன் தானே அருள வேணும் )

யாதானும் நேர்ந்து யாதானும் ஓன்று அறியில்
ஏதேனும் ஒரு பதார்த்தத்தை அறியில்
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு என்னும்படியே
ஏதேனும் ஒன்றினுடைய ஞானத்துக்கும் அவனை முன்னிட்டு அறிய வேண்டுகையாலே
அவனை அறிந்ததாய் விடும் –

இதம் என்று புரோ நிட்ட -(நிஷ்ட முன் நிற்கும் )பதார்த்தங்களில் ஒன்றை அறியும் போதும்
ஸர்வ ஸப்த வாஸ்யனானவன் ஆகையால்
இத்தை அறியும் ஞானம் அவன் அளவிலும் போம் என்றபடி

தன் உகக்கில்
ஒன்றை அறியா விட்டாலும் தன்னை யுகக்க வேணுமே
தன்னை யுகக்கை யாவது -அவனை யுகந்ததாய் விடும்
அவன் உகப்பு ஒழியத் தனக்கு ஒரு நன்மை இல்லாமையாலே

என் கொலோ யாதானும் நேர்ந்து அணுகா வாறு தான் –
யாதானும்
அவனதை அவனுக்குக் கொடுத்தே யாகிலும் அவனைக் கிட்ட வேண்டாவோ

நேர்ந்து என்பான் என் என்னில்
பிராந்தி தசையிலே கண்டது எல்லாம் எனக்கு என்னும் அத்தனை
ஸ்வ தந்த்ரனாகவும் இறே நினைத்து இருப்பதும்
இத்தை எல்லாம் அழிக்கிறான் ஆகையால்
நேர்ந்து என்னலாம் இறே

(நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னை
அஹங்காரம் மமகாராம் தொலைத்து அன்றோ ஆத்ம சமர்ப்பணம்
நம்முடையது அல்லாதவற்றை சமர்ப்பித்தால் அலாப்ய லாபம் பெற்றதால்
இவன் மகிழ -பித்து இவனும் அவளும் பித்து -மயல் முற்றிய சம்ப்ரதாயம் )

தோள்களை ஆர –திருவாய் -8-1-10-என்று தொடங்கி
கண்கள் ஆயிரத்தாய் என்று உபகார ஸ்ம்ருதியாலே
இவர் அவன் உடைமையைத் தம்மது என்று கொடுக்க
அவனும் தன்னது அல்லாதது பெற்றால் போலே விஸ்திருதனானான் இறே
ஆகையால் அத் தலைக்கு அவத்யத்தை விளைத்தே யாகிலும் கிட்ட வேண்டாவோ

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10-

யாதானும் இத்யாதி
தன் விரோதியைப் தான் போக்கிக் கொள்ளத்
தானும் கையிலே திருவாழியைப் பிடித்தானோ

யாதானும் இத்யாதி
அஸூர வர்க்கத்திலே ஒருத்தன் அனுகூலிக்குமாகிலும் அவ் வர்க்கமாக நோக்கும்
(ப்ரஹ்லாதனுக்காக மகாபலி வாணன் போல் வர்க்கம் ரஷித்தான் அன்றோ )
இவனுக்கு ஒரு படியும் விஸ்வசிக்கப் போகாதபடி செய்த அஸூரர்களைத் திருவாழியாலே துணித்தால் போலே
தன் விரோதியைப் போக்கின என் பக்கலில் எல்லாம் நேர்ந்தாலும் கிட்ட வேண்டாவோ
அசக்தனுக்கு சர்வ சக்தியைப் பற்ற வேணும்
ஆகையாலே அவனையே பற்ற வேணும் –

ஒன்றை அறியவே தன்னை அறியப்படுமவனாய்
ஒன்றை யுகக்கவே தன்னை யுகக்கப் படுமவனாய்
விரோதி நிரஸனத்தைப் பண்ணுமவனாய்
இருக்கிறவன் பக்கலிலே
யாதானும் நேர்ந்து அணுகா வாறு என் கொலோ -என்று அந்வயம் –

———-

ஏதேனும் நேர்ந்தாகிலும் அவனையே பற்ற வேணும் என்றார்
ஆகில் அவனைக் கிட்ட ஒண்ணாது என்கிறார் –

(முதலில் விஷயாந்தர ப்ராவண்யம் அடியாக விலகி
அடுத்து நைச்யம் பாவித்து விலகி
அடுத்து உள்ளம் சிதிலமாகி -தளர்ந்து -அனுபவிக்க முடியாமல் தளும்புகிறார்
நீலாழிச் சோதியாய் -நின் சார்ந்து நின்று -ஸுந்தர்யம்
ஆதியாய் நின் சார்ந்து நின்று -பிராப்தி
தொல் வினை எம் பால் கடியும் நீதியாய் நின் சார்ந்து நின்று -விரோதி நிரஸனம்
கால் கர்ம இந்திரியம் ஐந்தும்
கண் ஞான இந்திரியம் ஐந்தும்
நெஞ்சு -மனஸ் )

பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -நீலாழிச்
சோதியாய் ஆதியாய் தொல் வினை எம் பால் கடியும்
நீதியாய் நின் சார்ந்து நின்று —34-

பதவுரை

நீலாழி சோதியாய்–நீலக் கடல் போன்ற நிறத்தை யுடையவனே!
ஆதியாய்–முழு முதற் கடவுளே!
எம் பால் தொல் வினை கடியும் நீதியாய்–எம்மிடத்திலே யுள்ள பழைய பாவங்களைத் தொலைக்கு மியல்வுடையவனே!
யாம்–அடியோம்
நின்-உன்னை
சார்ந்து நின்று-அணுகி,
நீ பால் ஆழி கிடக்கும் பண்பை–நீ திருப்பாற் கடலில் சயனிக்கு மழகை
கேட்டேயும்–காதாற்கேட்ட மாத்திரத்திலும்
கால் ஆழும்–கால்கள் தடுமாறுகின்றன;
நெஞ்சு அழியும்–நெஞ்சு சிதிலமாகா நின்றது;
கண் சுழலும்–கண்கள் சுழல விடா நின்றன.

நீலாழிச் சோதியாய் பாலாழி நீ கிடக்கும்
ஒரு வெள்ளைக் கடலிலே
ஒரு கருங்கடல் சாய்ந்தால் போலே இருக்கிறபடி

நீ கிடக்கும்
கிடந்ததோர் கிடக்கை (திருமாலை )-என்னும்படியே

பண்பை யாம் கேட்டேயும்
அழகைக் கேட்டும்
ஸ்ரவண மாத்ரத்திலே இப்படி அழிகிறவர்
ஸாஷாத் கரித்தால் என் படுகிறாரோ

காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல்
மேலும் எழா மயிர்க் கூச்சமறா வென தோள்களும் வீழ் ஒழியா
மாலுகளா நிற்கும் என் மனமே உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன்
சேலுகளா நிற்கும் நீள் சுனை சூழ் திரு மால் இரும் சோலை எந்தாய் –-ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி 5-3- 5-

காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் ஆதியாய்
வடிவு அழகேயாய் பிராப்தி இன்றிக்கே இருக்கிறதோ
இதுக்குக் காரணமானவனே

தொல்வினை எம்பால் கடியும்
உபகாரகனுமானவனே
என்னுடைய விரோதியை என் பக்கலில் நின்றும் போக்குகையே
ஸ்வ பாவமாக யுடையவனே

நீதியாய் நின் சார்ந்து நின்று
உன்னைப் பற்றி நின்று
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்-

————–

இவன் செவி தாழ்த்தால் அவன் படும்படி சொல்லுகிறது–

(கேட்டேயும் -இசைந்து வந்த ஒன்றுக்கே அவன் செய்யும் அதி ப்ரவ்ருத்திகளை
இங்கு அருளிச் செய்கிறார் )

நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும்
ஒன்றுமோ வாற்றான் என் நெஞ்சு அகலான் -அன்று அம் கை
வன் புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான்
அன்புடையன் அன்றே அவன்–35-

பதவுரை

அன்று–முற் காலத்தில்
அம் கை வன் புடையால்–அழகிய திருக் கைகளாலே ஓங்கி அறைந்ததனால்
பொன் பெயரோன் வாய் தகர்ந்து–இரணியாசுரனுடைய (ப்ரஹ்லாதனை அதட்டின) வாயைப் புடைத்து
நின்றும்–(என்னெஞ்சிலே) நின்று கொண்டிருந்தும்
இருந்தும்–வீற்றிருந்தும்
கிடந்தும்–சயனித்திருந்தும்
திரி தந்தும்–எழுந்து உலாவியும்
ஒன்றும்–கொஞ்சமும்
மார்பு இடந்தான் அவன்–(அவ்விரணியனுடைய) மார்பைக் கிழித்தெறிந்த பெருமான்.
அன்பு உடையான் அன்றே–(ஆச்ரிதர் திறத்தில்) மிக் அன்புடையவனன்றோ;
(ஆனது பற்றியே)
ஓவாற்றான்–திருப்தி யடைகிறானில்லை;
என் நெஞ்சு அகலான்–என்னுடைய நெஞ்சை விட்டு நீங்குகிறானில்லை.

நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும்
உகந்து அருளினை தேசங்களிலே
நிற்கிறதும்
இருக்கிறதும்
கண் வளர்ந்து அருளுகிறதும்
உலாவுகிறதும்
எல்லாம் என்னைப் பெருகைக்காகவே

ஒன்றுமோ வாற்றான்
எல்லாம் செய்தும்
ஒன்றுமே செய்யாதானாய் இருக்கும்

ஓ -என்று
ஆச்சர்யத்திலே
அசைச் சொல்லாய்க் கிடக்கவுமாம்

என் நெஞ்சு அகலான் –
என் நெஞ்சுக்குப் புறம்பு காட்டுத் தீயோடே ஒக்கும்

அன்று அம் கை வன் புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான்
பிராட்டி பக்கல் பரிமாறும் போது கூசிப் பரிமாற வேண்டும்படியான
திருக் கையைக் கொண்டு
முரட்டு ஹிரண்யனுடைய பண்ணின ப்ரதிஜ்ஜையை இல்லை என்ற வாயை நெரித்து
அவன் மார்பைக் கீண்டவன் அன்புடையவன் அன்றோ

பிதா பகையாக அவனில் அண்ணிய உறவாய் வந்து உதவினவன் அவனோ அன்புடையோன்
அயோக்யன் என்று அகலுகிற நாமோ அன்புடையோன்
அன்புடையன் அன்றே அவன்

(அவனே மிக்க அன்புடையவன் என்றவாறு
யாதானும் பற்றி நீங்கும் நாம் அன்புடையோன் அல்லோம் )

புடை என்று வழியாய்
வலிய ஸ்தானமான அழகிய திருக் கையாலே என்றபடி –

————

அவன் இப்படி இருக்க (35 பாசுர சுருக்கம் )
அவன் பக்கலிலே ஸம்சயத்தைப் ப்ரவேசிப்பித்துக்
கை வாங்குகை கார்யம் அன்று என்கிறது

அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
அவனாம் அவன் என்று இராதே -அவனாம்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலுமாம் —36-

பதவுரை

அவன் ஸர்வேச்வரனானவன்
அவன் ஆம்–துர்பலனாயிருப்பனோ?
இவன் ஆம்–ஸுலபனாயிருப்பனோ?
உவன் ஆம்–மத்யஸ்தனாயிருப்பனோ?
மற்று உம்பரவன் ஆம்–அல்லது, மிகவும் உயர்ந்தவனாய் எட்டாதேயிருப்பனோ?
என்று இராதோ–என்றிப்படி பலவகையான ஸந்தேஹங்கள் கொண்டிராமல்
அவன் அவனே ஆம் என தெளிந்து–எம்பெருமானுடைய ஸ்வரூபமே லௌலப்யம் என்று தெளிவாகத் தெரிந்து கொண்டு
கண்ணனுக்கே தீர்ந்தால்–அந்த ஸௌவப்யத்தை க்ருஷ்ணாவதார முகத்தாலே விளங்கக் காட்டிய அவனுக்கே ஆட்பட்டால்
அவனே–அப்பெருமானே
எவனேலும் ஆம்–எல்லா வுறவு முறையுமாவன்.
எல்லாவித ரக்ஷகன் ஆவான்
பாலன சாமர்த்தியம் இவன் ஒருவனுக்கே

அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
திருப்பாற்கடல் நாயகன் -துர்லபனாய் இருக்கும்
அர்ச்சாவதாரம் ஸூல பனாய் இருக்கும்
அப்படியே இருக்கும் -உம்பர் மேலாய் -பரமபத நாதன்
இப்படியே இருக்கும்
அதுக்கு மேலாய் இருக்கும் என்று சம்சயித்துக் கை விடப் பாராதே

(அப்படியும் இருப்பார் இப்படியும் இருப்பார் எப்படியும் இருப்பார்
பரத்வமும் ஸுலபயமும் சேர்ந்து
உவனாம் -ரிஷிகளுக்கு அந்தர்யாமி இவனாம் -அல்லாருக்கு அவனால்
வைக்கிற வாதம் இல்லை கிட்டாது என்று இல்லாமல்
கிட்டும் என்றே இருக்க வேண்டும் )

அவனாம் அவன் என்று இராதே -அவனாம்
அவனே அவனால் என்றாய்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
ஆத்மாநம் ந அதி வரத்தேதா (பரதன் சொல் படி ராகவா நட -உன்னை நீ மீறி நடக்காதே )என்னும்படியே
ஆஸ்ரித பாரதந்தர்யமே அவனுக்கு ஸ்வரூபம் என்று தெளிந்து
ஸூலபனான கிருஷ்ணனுக்கே அற்றால்

அவனே எவனேலுமாம்
யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூஹ்ருச்சைவ ஜனார்தன -என்னும்படியே
இவனுக்கு எல்லாப்படியும் ரக்ஷகனாம்

———-

இப்படி இருக்கை புறம்பு உள்ளார்க்கு அரிது
நமக்கு உண்டாயிற்றே -என்கிறார்

(தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனாய் –அநந்யார்ஹ சேஷ புதராக அற்றுத்தீர்ந்து இருப்பது துர்லபம்
பகவத் அனுக்ரஹத்தாலே பெறப்பெற்றோமே என்று ஹ்ருஷ்டராகிறார்
பூ மேய மதுகரம் -தேன் -மேய்ந்து கொண்டு இருக்கும் துளசி மாலை -அணிந்த
அவரை வாழ்த்துவதே கரம் -கடைமை-கரம் -உறுதியாக த்ருடமாக என்றவாறு –
வாழ்த்தாம் அது-பல்லாண்டு பாடுகை –
நெஞ்சு அசேதனம் -ஞானம் இல்லா விட்டாலும் சேதன சமாதியால் சொல்கிறார் -முந்துற்ற நெஞ்சு அன்றோ )

ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
நாமே யது வுடையோம் நன்னெஞ்சே –பூ மேய
மது கரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம்
அது கரமே அன்பால் அமை —37-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
ஆம் ஆறு அறிவு உடையார் ஆவது–யுக்தமான அறிவை உடையவராக ஆவது
அரிது அன்றே–(உலகில் யார்க்கும்) அருமை யன்றோ;
அது–அப்படிப்பட்ட அறிவை
நாமே உடையோம்–(பகவத் கிருபையால்) பெற்றிருக்கின்றோம்;
(ஆகையால் நீ செய்யத் தக்கது என்ன வென்றால்)
பூ மேய் மதுகரம் மே தண் துழாய்–பூக்களிலே மேய்கின்ற வண்டுகள் படிந்துள்ள குளிர்ந்த திருத்துழாயை யுடையனாய்
மாலாரை–(ஆஸ்ரிதர் திறத்தில்) வ்யாமோஹமுடையான பெருமாளை
வாழ்த்து ஆம் அது–வாழ்த்துவதாகிற அக்காரியமொன்றிலேயே
அன்பால்–பக்தியுடன்
கரமே–திண்ணமாக
அமை–ஊன்றியிரு.

ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
வழியான அறிவுடையார் யாவது அரிது அன்றே
யுக்தமான அறிவுடையாராகை கிடையாது
ஆமாறு -ஆறு -வழி

நாமே யதுவுடையோம்
நாம் நல்ல அறிவுடையோம்
(ஆறு எனக்கு நின் பாதமே சரணாகதி தந்து ஒழிந்தாய் )

நன்னெஞ்சே –
எல்லாத்துக்கும் ஒரு மிடறாகை இறே இது ஸித்தித்தது
மிடறு -சாடு (கழுத்து கருத்து )
மந ஏவ மனுஷ்யாணாம் -இத்யாதியாலே
பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் அடி இது இறே

பூ மேய மதுகரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம் அது கரமே அன்பால் அமை
பூவிலே பொருந்தும் வண்டு மேவின திருத்துழாய் மாலையை யுடைய ஸர்வேஸ்வரனை
அன்பாலே வாழ்த்துதலாகிற இத்தை த்ருடமாக அமை

மேய -மேவி
அமை -சமைவாய் -பொருந்து -என்றபடி –

———–

தாம் வாழ்த்தச் சொல்ல
நெஞ்சு இறாய்க்க
அத்தை தப்பச் செய்தோம்-என்கிறார்

(பேசாமல் இருந்தால் பிழை -தப்பு
பிழை கர்மங்கள் பேசவே போகுமே
ஏசியாவது பேசுங்கோள் -இடைச்சிகள் போல் -அன்பால் ஏசினார்கள் அன்றோ
சிசுபாலனைப் போல் ஏசக்கூடாதே )

அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே
இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத் திறங்கள்
ஏசியே யாயினும் ஈன் துழாய் மாயனையே
பேசியே போக்காய் பிழை –38-

பதவுரை

நெஞ்சே–ஓ மனமே!
ஆராயில்–ஆராய்ந்து பார்த்தால்
இமைக்கும் பொழுதும்–ஒரு க்ஷண காலமாகிலும்
அமைக்கும் பொழுது உண்டே–வீண் போது போக்க முடியுமோ?
இடைச்சி குமை திறங்கள்–யசோதையின் கையிலே அகப்பட்டு இவன் நலிவு பட்ட பாடுகளை
குமை -தண்டித்தல்
ஏசியே ஆயினும்–பரிஹா ஸோக்தியாகச் சொல்லியாவது
ஈன் துழாய் மாயனையே–போக்யமான திருத்துழாய் மாலையை அணிந்துள்ள அப்பெருமானைப் பற்றியே
மாயன் -ஆச்சர்ய பூதன்
பேசியே–(எதையாவது) பேசிக் கொண்டே
பிழை–உனது பாவங்களை
போக்காய்–போக்கிக் கொள்ளப் பார்.

அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே
நெஞ்சே ஒரு ஆபாத ப்ரதீதி இன்றிக்கே உள்ளே ஆராயப் புக்கால்

இமைக்கும் பொழுதும்
ஒரு க்ஷண மாத்ரமும் ஆறி இருக்கப் போது உண்டோ

இடைச்சி குமைத் திறங்கள்
பரம பதத்திலே சென்று சாஷாத் கரித்தார்க்கு அன்றோ விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கலாவது என்னில்
அது வேண்டா
தன்னை இதர ஸஜாதீயனாக்கி
ஸூலபனாக்க
என் மகன் -என்று
எடுத்ததே குடியாக தாயார் குமைக்கும் திறங்களை

ஏசியே யாயினும்
ஏசியே யாயினும் பேசிப் போக்குகிறிலை

ஈன் துழாய் மாயனையே பேசியே போக்காய் பிழை
பிழை -தப்பு
ஈன் துழாய் மாயனையே பேசிப் பிழையைப் போக்காய் -என்னவுமாம்

ஸ்நேஹித்துச் செய்தவற்றை ஸ்நேஹம் இல்லாத நாம் பேசினால் அவனுக்கு ஏச்சாகாதோ என்னில்
ஏச்சாகிலும் அவனைப் பேசாதே இருக்கும் இடமே தப்பு

நெஞ்சமே ஆறாயில் இமைக்கும் பொழுதும் அமைக்கும் பொழுது உண்டே
ஏசுகை -ஸ்நேஹம் இன்றிக்கே சொல்லுகை –

(தேனே இன்னமுதே –கூத்துக்களை சொல்ல
பொய்யே கைம்மை சொல்லி –மெய்யே பெற்று ஒழிந்தேன் )

———–

பேச என்று புக்கவாறே
போக்யமாய் நெஞ்சுக்குப் பொருந்தினவாறே
நாம் பார்த்த இடம் தப்பச் செய்தோமோ -நெஞ்சே -என்கிறார் –
தப்பச் செய்யவில்லையே
நன்றாகவே செய்தோம் என்கிறார் –

(நெஞ்சு வியாஜ்யமாக
நாம் விலக்கப் பார்க்க கழுத்தைப் பிடித்து அவன் இடம் சேர்த்த ஆழ்வார்
சேர்ந்த பின்பு உள்ள போக்யத்தையில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
இங்கே இருந்து குணம் பாடுவதே புருஷார்த்தம்
வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ வைகுந்தம் என்று கொடுப்பது பிரானே )

பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை -அழைத்து ஒரு கால்
போய் யுபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே
வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு –39—

பதவுரை

நெஞ்சமே–ஓ மனமே!
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை–தழைத்தோங்குகின்ற திருத்துழாய் மாலையைத்
திருமார்விலே யுடையனான எம்பெருமானைக் குறித்து
அழைத்து–கூப்பிட்டு
ஒரு கால்–அவனுக்குத் திருவுள்ளமானவொரு காலத்திலே
போய்–பரமபதத்திலே சென்று
பொலிய–நன்றாக
உபகாரம்–கைங்கரியங்கள் செய்கையாகிற உபகாரத்தை
கொள்ளாது–கொள்ள முயலாமல்
அவன் புகழே–அப்பெருமானது திருக்குணங்களையே
வாய் உபகாரம் கொண்ட–வாயாலே சொல்லிக் கொண்டருக்கையாகிற
வாய்ப்பு–இந்த நேர் பாடு
பிழைக்க முயன்றோமோ–தப்பு செய்ததாமோ?
பேசாய்–நீ சொல்வாய்.

பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய் தழைக்கும் துழாய் மார்வன் தன்னை -அழைத்து ஒரு கால்
போய் யுபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு
ஒரு வாடல் மாலையை இட்டாலும் தழைக்கும் துழாய் மார்வை யுடையவனை அழைத்து
அவன் கிட்டக் கொண்டு
பரமபதத்தில் வந்து-(போய் என்றபடி ) அசங்குசிதமான போகத்தைப் புஜிப்பிக்கிறேன் என்னாதே
வாய்க்கு உபகாரகமாய்க் கொண்ட இந்த வாய்ப்புத் தப்ப முயன்றோமோ
சொல்லாய் என்கிறார்

(பரமபதத்துக் கைங்கர்யம் இங்கே கூடுமோ என்ன அருளிச் செய்கிறார் )

ஞானம் உண்டாய் இருக்க
சரீர சமனந்தரத்திலே கைங்கர்யம் பண்ணுகை யாவது –
பகவத் விஷயத்தில் ருசி இல்லாமை இறே

—————

வாய்ப்போ இது ஒப்ப மற்றில்லை வா நெஞ்சே
போய்ப் போய் வெந்நரகில் பூவியேல்-தீப்பால
பேய்த்தாய் உயிர் கலாய் பாலுண்டு அவள் உயிரை
மாய்த்தானை வாழ்த்தே வலி –40-

பதவுரை

வா நெஞ்சே–வாராய் மனமே!
இது ஒப்ப வாய்ப்பு மற்று இல்லை–இப்போது நமக்கு வாய்திருக்கிற மாதிரி மற்று எப்போதும் வாய்க்க மாட்டாது காண;
வெம் நரகில்–(நைச்சியம் பேசிப் பின் வாங்குவதாகிற) கொடிய நரகத்திலே
பூவியேல்–கொண்டு தள்ளி விடாதே;
தீ பால–தீயதான தன்மையை யுடையளான
பேய் தாய்–தாய் வடிவு கொண்டு வந்த பூதனையினுடைய
உயிர்–பிராணனை
பால்–அவளது முலைப் பாலோடே
கலாய்–கலந்து
உண்டு–அமுது செய்து
அவன் உயிரை மாய்த்தானை–அப் பூதனை யினது உயிரை முடித்த பெருமானை
வாழ்த்தே–வாழ்த்துதலே
வலி–நமக்கு மிடுக்காம்.

வாய்ப்போ இது ஒப்ப மற்றில்லை வா நெஞ்சே
இத்தோடு ஒக்கும் நேர் பாடு மற்று இலை நெஞ்சே

போய்ப் போய் வெந்நரகில் பூவியேல்-
அயோக்யன் என்று அகலுகை யாகிற கொடிய நரகத்தில் புகுவியாதே கொள்
நிரயோ யஸ் த்வயா ஸீதா

(சம்சாரமே வெந்நரகம் -வெந்நரகம் நகு நெஞ்சே
நைச்யம் பாவித்து அகலுகையும் கொடிய நரகம்
கச்ச ராம மயா ஸஹ என்று முன்னே சென்றாள் அன்றோ ஸ்ரீ சீதா பிராட்டி )

தீப்பால பேய்த் தாய் உயிர் கலாய் பாலுண்டு அவள் உயிரை மாய்த்தானை வாழ்த்தே வலி
தீப்பால பேய்த்தாய்-பொல்லாத ஸ்வ பாவத்தை யுடைய பேய்ச்சி
கலாய்-கலசி-
பெற்ற தாய் வேஷத்தைக் கொண்டு வந்த பேயினுடைய
உயிரைப் பாலோடே கலசி யுண்டு அவள் உயிரை முடித்தவனை
வாழ்த்துகை நமக்கு மிடுக்கு
வாழ்த்துகையிலே துணி என்றுமாம்

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–பாசுரங்கள் -21-30–

June 29, 2021

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

ஓர் இடத்தில் போகாதபடி நிஸ் சேஷமாக க்ரஹிக்கப் பார்த்தால்
அவகாசம் பெற்று அன்றோ க்ரஹிப்பது -என்கிறது
(இடுக்குண்ட என்றதைப் பற்ற அவதாரிகை அருளிச் செய்கிறார்
என் நெஞ்சிலே அகப்படுகையாலே புறம்பே போகத் திருவடிகளுக்கு அவகாசம் இல்லாமையால்
சம்சாரிகள் ஓர் இடத்தில் போகாதபடி நிஸ் சேஷமாக திருவடிகளை உள்ளே க்ரஹிக்கிறோம்
என்றாலும் இனிப் போகாது என்றபடி -)

(பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
இதுவும் பெரிய திருவந்தாதி பெயர் வரும்படி அருளிச் செய்த பாசுரம்
ஓங்கி உலகம் அளந்த திரிவிக்ரமன் திருவடியை நெஞ்சிலே அடக்கிக் கொண்டேனே என்கிறார் )

சென்று அங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட -அன்று அங்குப்
பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய
காருருவன் தான் நிமிர்த்த கால்–21-

பதவுரை

அன்று–முன்பு மாவலியால் உலகம் நெருக்குண்ட காலத்தில்
அங்கு–அந்த மாவலியின் யாக பூமியிற் சென்று
பார் உருவும்–பூமியாகிற வஸ்துவும்
பார் வளைத்த நீர் உருவும்–அந்த பூமியைச் சூழ்ந்து கிடக்கிற ஜல தத்துவமும்
கண் புதைய–மறையும்படி
கார் உருவன் தான் நிமிர்த்த கால்–காளமேகத் திருவுருவனான எம்பெருமான் நிமிர்த்தருளிய திருவடிகள்
அங்கு வெம் நரகில் சென்று சேராமல் காப்பதற்கு–கொடிய அந்த நரகங்களிலே நான் சென்று சேராதபடி
என்னை உஜ்ஜீவிக்கச் செய்யும் பொருட்டு
இன்று–இப்போது
இங்கு–இவ்விடத்தில்
என் நெஞ்சால்–என்னுடைய நெஞ்சிலே
இடுக்குண்ட–நெருக்குப் பட்டுக் கிடக்கின்றன.

சென்று அங்கு வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
வெந் நரகு -என்று அகலுகைக்குப் பேர்
சம்சாரத்துக்கும் பேர்
அறிவார்க்கு நரகமாவது -ஸம்ஸாரம் இறே
(நின் பிரிவிலும் சுடுமோ காடு -உன்னை விட்டுப் பிரிவதே நரகம்
நரகத்தை நகு நெஞ்சே -ஆழ்வார் )

இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட –
நினைவு இன்றிக்கே என்னுடைய நெஞ்சிலே நெருக்குண்டது
(என்னைப் பிடிக்கவே ஊராக வளைத்தான் )

அன்று அங்குப் பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய காருருவன் தான் நிமிர்த்த கால்
இன்று இங்கன் நெஞ்சால் இடுக்குண்டது
(அன்று அங்கு) பூமியும் பூமியடையச் சூழ்ந்த ஜலங்களும் மறையும்படி பரம்பின மேகம் போலே ஸ்யாமமான
வடிவை யுடையவனுடைய திருவடிகள் (இன்று இங்கன்) என் நெஞ்சிலே இடுக்குண்டது

(அன்று உலகம் அளந்தாய் அடி போற்றி
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய் )

அன்று அங்குப் பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய
தான் நிமிர்த்த
காருருவன்
கால்
அங்கு
சென்று வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட
என்று அந்வயம்

————

நம்முடைய பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள் கால் பொதும் படி-
(வெடிக்கும் படி -முள்ளுத் தைக்கையுமாம் )
தடுமாறிக் கூப்பிட்டுத் திரியும் அத்தனை இறே இன நாள் என்கிறார்

(மாலார் தானே குடி புகுந்தார் -பர கத ஸ்வீ காரம்
நாம் அடைய முற்பட்டால் வலிய வினைகளை போக்கியே அடைய வேண்டும்
அவர் நம்மை அடைய வந்ததுமே இவை தன்னடையே போகுமே )

காலே பொதத் திரிந்து கத்துவராம் இன நாள்
மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -மேலால்
தருக்கும் இடம் பாட்டினொடும் வல் வினையார் தாம் வீற்று
இருக்குமிடம் காணாது இளைத்து –22-

பதவுரை

என் மனத்தே–எனது நெஞ்சினுள்ளே
மாலால் குடி புகுந்தார்–திருமால்-ஸர்வேஸ்வரன் – வந்து சேர்ந்து விட்டார்;-பரிகரங்களோடே வந்து சேர்ந்தார் –
வல் வினையார் தாம்–(இது வரையில் இங்கே குடியிருந்த) கொடிய பாவங்கள்.
வல்வினையார் -கொடுமைக்குக் கொடுத்த மதிப்பு / மாலார் பெருமைக்கு கொடுத்த மதிப்பு
வீற்றிருக்கும் இடம் காணாது–(இனி மேலும்) அதிகாரம் செலுத்திக் கொண்டு தங்கியிருக்க இடம் காணாமல்
வீறு கொண்டு வேற்றுமை தோன்ற இருத்தல் வீற்று இருத்தல்
கால் பொத திரிந்து–கால் நோவத் திரிந்து அலைந்ததனால்
மேலால்–முன்பெல்லாம்-அவனை விலக்கி புக ஒட்டாமல் பழுதே போன பல காலம் முன்பு எல்லாம்
தருக்கும்–என்னைத் துன்பப் படுத்திக் கொண்டிருந்த
இடம் பாட்டினொடும்–பெருமையோடே-செல்வச் செருக்குடன்
இளைத்து–வருத்தமுற்று
இன நாள்–இப்போது
கத்துவாரம்–கத்திக் கொண்டு கிடக்கின்றன போலும்.

காலே பொதத் திரிந்து கத்துவராம் இன நாள் மாலார் குடி புகுந்தார் என் மனத்தே –
அரவத்து அமளியினோடும் இத்யாதிப்படியே
ஸர்வேஸ்வரன் என் மனஸ்ஸிலே புகுந்தான்

மேலால் தருக்கும் இடம் பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று இருக்குமிடம் காணாது இளைத்து
பண்டு நம்மை ஹிம்ஸித்துப் போந்த அளவுடைமையோடே கூட வல் வினையார் விஸ்திருதமாக
இருக்கும் இடம் காணாதே இளைத்துக்
கால் தேயும்படி தடுமாறிக் கூப்பிட்டுக்
கொடு திரியும் அத்தனை இறே இன நாள்

தருக்குகை -நெருக்குகையாய்
ஹிம்ஸிக்கை –

என் மனத்தே
மாலார் குடி புகுந்தார்
வல் வினையார் தாம்
மேலால்
தருக்கும் இடம்
பாட்டினொடும்
வீற்று இருக்குமிடம் காணாது இளைத்து
காலே பொதத் திரிந்து
இன நாள்
கத்துவராம்
என்று அந்வயம்

———

(இதில் வியதிரேகத்தில் அருளிச் செய்து
அடுத்த பாட்டில் அவன் ரக்ஷிக்காமல் விடமாட்டான் என்று
அந்வய முகத்தால் அருளிச் செய்து த்ருடீ கரிக்கிறார் )

(பற்றினாலும் பற்றா விட்டாலும் அவன் ரக்ஷகன்
அவர் ரஷிக்கா விட்டாலும் நீ பற்றுதலை விடாய்
அவனைப் பற்றினால் இளைக்க மாட்டோம்
உலக விஷயங்களைப் பற்றினால் இளைப்போமே
அவனைப் பற்றாமல் இருந்தால் இளைப்போமே
உலக விஷயத்தால் பற்றாமல் இருந்தால் இளைக்க மாட்டோம்
மாதா நாராயணா பிதா நாராயணா -ஸ்வாபாவிக பந்து அந்தோ
தானே தாயும் தந்தையும் ஆவான் –
சேலேய் கண்ணியரும் –மேலாத் தாய் தந்தையரும் –மற்றும் யாவரும் அவரே
ரக்ஷிக்கா விட்டாலும் தந்தை தந்தை தானே
இத் தந்தையோ ரக்ஷிக்காமல் போக மாட்டான் )

இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன்
இளைக்க நமன் தமர்கள் பற்றி -இளைப்பெய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்
தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான் –23-

பதவுரை

நெஞ்சமே–ஓ மனமே!
நமன் தமர்கள்–யம படர்கள்
இளைக்க பற்றி–பிடிக்கிற பிடியிலே நாம் துடிக்கும்படி நம்மைப் பிடித்து
இளைப்பு எய்த–அதற்கு மேலும் அதிகமாகத் துடிக்கும்படி
நாய் தந்து மோதாமல்–நாய்களை ஏவி நலியாமற்படி
நல்குவான் நல்காப்பான்–(எம்பெருமான் நமக்கு) அருள் செய்தாலும் சரி, அருள் செய்யா விட்டாலும் சரி;
தான்–அந்த எம்பெருமான் தான்
எவ் வுயிர்க்கும்–எல்லாப் பிராணிகளுக்கும்
தாய் தந்தை–தாயும் தமப்பனுமாவன்;-ஸ்வா பாவிக பந்துத்வம் இவன் இடம் தானே –
சொன்னேன்–(இவ் வுண்மையை உனக்குச்) சொல்லி விட்டேன்;
இளைப்பாய் இளையாப்பாய்–இனி நீ அநர்த்தப் பட்டாலும் படு; சுகப் பட்டாலும் படு.

இளைப்பாய் இளையாப்பாய்
பற்றுவாய்
பற்றாது ஒழிவாய்

அவனைப் பற்றிலும் பற்று
விஷயத்தைப் பற்றிலும் பற்று

நெஞ்சமே சொன்னேன்
ஈஸ்வரனே சர்வ வித பந்து -என்னும் இடம் ஒருத்தருக்கும் சொல்லுமது அன்று
அத்தை யுனக்குச் சொன்னேன்

இளைக்க நமன் தமர்கள் பற்றி –
பற்றும் போதே இளைக்கும்படிக்கு ஈடாகப் பற்றி

இளைப்பெய்த நாய் தந்து மோதாமல்
இளைக்கும் படிக்கு ஈடாக நாய்களை விட்டு மோதாதபடி

நல்குவான் நல்காப்பான்
ரக்ஷிக்கிலும் ரக்ஷிக்கிறான்
ரஷியாது ஒழியிலும் ஒழிகிறான்

தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான்
ஸர்வ ரக்ஷகனானவன்
ரக்ஷகன் ரக்ஷணத்திலே நெகிழ நின்றான் என்று அரஷகரைப் பற்ற ஒண்ணாதே
களைவாய் துன்பம் களையாது ஒழி வாய் களைகண் மற்று இலேன் -என்னும்படியே –

(வேறே ஒருவரை ரக்ஷகராகப் பற்ற ஒண்ணாது என்னாமல் அரஷகரைப் பற்ற ஒண்ணாதே
என்பதால் இவரை ஒழிந்தவர் ரக்ஷகர் அல்லர் என்பதை பிரபந்த பரித்ராணத்தில் அருளிச் செய்தார் )

(ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை–நூற்று நாற்பத்து ஆறாம் வார்த்தை

ஆச்சான் பிள்ளை சிறிய தாயார் —
பெரிய பிள்ளையையும் -(பெரியவாச்சான் பிள்ளை தகப்பனார் யமுனாசார்யர் -யாக இருக்கக் கூடும் )-
ஆச்சான் பிள்ளையையும் சேவித்து போருகிற காலத்தில் –
இவள் சோகார்த்தையாக —

ஆச்சான் பிள்ளை -நீ சோகிக்கிறது என் என்ன

அநாதி காலம் பாப வாசனைகளாலே –
ஜந்மாதிகளிலே ஈஸ்வரன் இன்னம் என்னைத்-தள்ளப் புகுகிறானோ என்று பயப்பட்டு நின்றேன் -என்ன

கெடுவாய் -இது ஆர்கேடென்று இருந்தாய் –
உனக்கு ஸ்ருஷ்டிக்க வேண்டுமோ –
அவதரிக்க வேண்டுமோ –
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -என்றும்
பொருள் என்று இவ்வுலகம் படைத்தான் -என்றும் –
சம்பவாமி யுகே யுகே என்றும் –
ஒருவனைப் பிடிக்க ஊரை வளையுமா போலே –
அகில ஜகத் ஸ்வாமி யாயிற்று -அஸ்மத் ஸ்வாமி யாகைக்கு யன்றோ -என்று அருளிச் செய்தார் -)

————–

அந்வய
வ்யதிரேகங்கள்
இரண்டாலும் அவனே ரக்ஷகன் என்கிறது
இளைக்கில் என்றது வ்யதிரேகம்
மீண்டு அமைக்க -என்று அந்வயம்

தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஓன்று இல்லாதான்
தானே பிறர்கட்கும் தற்தோற்றல் -தானே
இளைக்கில் பார் கீழ் மேலாம் மீண்டு அமைப்பான் ஆனால்
அளக்கிற்பார் பாரின் மேலார்–24-

பதவுரை

தானே தனி தோன்றல்–அவ்வெம்பெருமானொருவனே புருஷோத்தமன்;-
இவர் ஒருவரே கர்மாதீனமாக தோன்றாமல் கிருபாதீனமாக
இச்சா பரிக்ருஹீத பிறப்பில் பல் பிறவி பெருமான் அன்றோ
ஒப்பற்ற அவதாரங்கள் உடையவன் -இதில் ஒப்பற்றவன்
தானே தன் அளப்பு ஒன்று இல்லாதான்–அவனே ஒப்பற்றவன்;அளவு என்பதே அளப்பு -விகாரம்
தானே பிறர்கட்கும் தற்தோற்றல்–அவனே மற்றெல்லாப் பொருள்களிலும் வியாபித்திருப்பவன்;
உள்ளே அந்தர்யாமியாய் இருந்து ஸர்வ நியாமகனாய் இருந்து ரக்ஷிக்காமல் போவானோ
ஸர்வஸ் அஹம் ஹ்ருதய நிவாஸி
(தானே)–இப்படிப்பட்ட எம்பெருமான்றானே
இளைக்கில்–(ரக்ஷிக்குந் தொழிலில்) சளைத்து நின்கிற பக்ஷத்தில்
பார்–இவ்வுலகமானது
கீழ் மேல் ஆம்–தலை கீழாக விபரீதமாய் விடும்;
மீண்டு அமைப்பான் ஆனால்–(தலை கீழானவற்றை அவனே) மறுபடியும் சரிப்படுத்தப் புகுந்ததால்
பாரின் மேல் ஆர் அளக்கிற்பார்–இப் பூமியில் ஆர் தாம் (அவனுடைய ரக்ஷகத்வத்தை) அளவிட வுரியர்?
அவனது ரக்ஷகத்வ பாரிப்பு அளவிட்டுச் சொல்ல ஒண்ணாதே

தானே தனித் தோன்றல்
ஒரு ஹேத் வந்தரத்தாலே-(கர்மத்தால் பிறக்குமவன் அன்றே)
தோன்றுமவன் அல்லன்

தன் அளப்பு ஓன்று இல்லாதான்
உபமான ரஹிதன்

தானே பிறர்கட்கும் தற்தோற்றல் –
அல்லாதார்க்கும் சத்தை அவனே
தச் சப்தம் -அந்தர்யாம் யம்ருத-என்ற ப்ரஸித்தியைப் பற்ற
(சத்தை என்றாலே ஸ்திதி நிவ்ருத்தி பிரவிருத்தி அனைத்துமே இவன் அதீனமே )

தானே இளைக்கில் பார் கீழ் மேலாம்
அவன் ரக்ஷணத்திலே நெகிழ நிற்கில் பூமி அத ரோத்தரையாம் (அதர உத்தரமாகும் )

மீண்டு அமைப்பான் ஆனால்
அவன் தானே திரியட்டும் ரக்ஷிப்பானாகில்

அளக்கிற்பார் பாரின் மேலார்
பூமியில் அவனைப் பரிச்சேதிக்க வல்லார் உண்டோ
(அவனது உபகார பரம்பரைகள் ரக்ஷகத்வ பாரிப்பு அளவிட்டுச் சொல்ல ஒண்ணாதே )

———–

பூமியில் உள்ளாரை எல்லாம் நம்மாலே திருத்தப் போமோ
நாம் முன்னம் பகவத் விஷயத்திலே அவகாஹிக்கப் பெற்றோம் இறே -என்று ஹ்ருஷ்டராகிறார்
வழி பறிக்கும் இடத்தே தப்பிப் போனவன் கிழிச் சீரையை அவிழ்த்துப் பார்த்து
இது தப்பப் பெற்றோமே -என்று உகப்பாரைப் போலே –

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத் தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் —25-

பதவுரை

ஆரானும் ஆதானும் செய்ய–யாராவது எதையாவது செய்து கொள்ளட்டும்;
அகல் இடத்தை ஆராய்ந்து–விசாலமான இப் பூமியை ஆராய்ந்து
அது திருத்தல் ஆவதே—அவரவர்களது காரியங்களைத் திருத்த நம்மாலாகுமோ?
யான்–நானோ வென்றால்
சீர் ஆர் மனத்தலை–(எனது) சிறந்த மனத்திலுள்ள
பகவத் குணங்கள் இருக்கும் இடம் சீரார் மனம்
வன் துன்பத்தை–வலிய துன்பங்களை
வானோர் இனம் தலைவன் கண்ணனால்–நித்ய ஸூரிகளின் திரளுக்குத் தலைவனான கண்ண பிரானால்
மாற்றினேன்–நீக்கிக் கொண்டேன்.

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே –
எல்லாரும் ஏதேனும் செய்க
பூமிப் பரப்பு எல்லாம் நம்மாலே ஆராய்ந்து திருத்தப் போமோ

சீரார் மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர் இனத் தலைவன் கண்ணனால் யான்
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய் வைத்துத்
தன்னை இதர சஜாதீயனாக்கி
ஸூலபனான கிருஷ்ணனாலே
பகவத் சம்பந்தம் ஆகிற ஐஸ்வர்யத்தை யுடைத்தான மனஸ்ஸிலே
தலையிலே கிடக்கிற ஸம்ஸார துக்கத்தை மாற்றினேன்
எல்லாரையும் நம்மாலே திருத்தப் போமோ என்கிறார் –

(திருவாசிரியத்திலும் ஓ ஓ உலகின் இயல்பே என்று தொடங்கி
தாம் தப்பினோமே என்று நிகமிக்கிறார் )

வானோர் இனத் தலைவன் கண்ணனால் யான்
சீரார் மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன்
ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே
என்று அந்வயம்

————–

மாற்றினேன் என்று கர்த்ருத்வம் தோற்றச் சொன்னார்
அந்த கர்த்ருத்வமாவது
அவன் மேல் விழ –
என்னுடைய விலக்காமையே -என்கிறார் –

(கர்த்தா சாஸ்திரார்த்வாத் -ஸாஸ்த்ரம் கர்த்தாவுக்கு தானே உபதேசிக்க வேண்டும் –
நீ கர்த்தா இல்லை கீதையில் உபதேசம்
இதில் கர்த்தா என்றாலே தடுக்காமல் இருந்ததே என்கிறார்
பரத்வ சவுந்தர்ய ஸுலப்யம் மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் -காருணிகர் பகவான்
எளிமை சுருக்கம் தெளிவு மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் பெரியவாச்சான் பிள்ளை பரம காருணீகர் )

யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26-

பதவுரை

ஓர் இருள் தான் அன்ன மாமேனி–இருள் தானே ஒரு வடிவு கொண்டாற்போலிருக்கிற விலக்ஷணமான திருமேனியை யுடைய
எம் இறையார்–எம்பெருமான்
தந்த–அளித்த
அருள் என்னும் தண்டால்–க்ருபையாகிற ஒரு தடியினாலே
வல் வினையை–கொடிய பாவங்களை
அடித்து–புடைத்து,
கானும் மலையும் புக–(அவை) காடுகளிலும் மலைகளிலும் சென்று புருரும்படியாக
கடிவான்–துரத்துவதற்கு
யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம்–நானும் என் மனமுமாகிற இருவரும் இசைந்து நின்றோம்.

யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம்
இத் தலையில் குறைவற்றது
பொருந்தாத தலையும் பொருந்திற்று
பொருந்துமவன் பொருந்தச் சொல்ல வேண்டா இறே

தானோர் இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த அருள் என்னும் தண்டால் அடித்து
மற்று ஓன்று காணாமல் ஸ்ரம ஹரமான வடிவை யுடைய என் ஸ்வாமியுடைய
ப்ரஸாதமாகிற தண்டாலே ஹிம்ஸித்து
(மற்று ஓன்று காணாமல்-வினையைப் போக்குகைக்கு வேறே ஒரு உபாயம் காணாமல்
அவன் அருளாலே போக்கினான் என்றபடி )

வல் வினையைக் கானும் மலையும் புகக் கடிவான்
அவன் பிரிவாகிற மஹா பாபத்தைக்
காட்டிலும்
மலையிலும் புகும்படி ஒட்டும்படிக்கு ஈடாக
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் –

(மற்றை நம் காமன்கள் மாற்று பிரபல தர விரோதி -கைங்கர்யத்தில் ஸூவ போக்த்ருத்வ புத்தி
இங்கும் நைச்யத்தால் பிரிந்த வல்வினை
பரிமித ஸ்வா தந்தர்யமே ஜீவனுக்கு இசைவது மாத்திரமே )

————–

இசைந்து ஒழிந்தோம் -என்கிற இத்தாலே –
தம் தலையிலே குறை யற்றது
அருள் என்னும் தண்டால் -என்கையாலே
பெறுவதும் அவன் பிரஸாதத்தாலே என்னும் இடம் சொல்லிற்று
இனி அவர்க்கு அநுபவத்திலே இறே அந்வயம்
ஆகையாலே அநுபவிக்கிறார்

(முன்பு இருந்த குறை -இசையாமல் இருந்தது
நெஞ்சு இசைந்து ஒழிந்த பின்பு
அருள் என்னும் தண்டாலே பிரதிபந்தகங்கள் போன பின்பு
நானும் வேண்டாம் நீயும் வேண்டா -தன்னடையே போகும் அன்றோ
ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி பின்பு அனுபவம் தன்னடையே வரும் அன்றோ )

அடியால் படி கடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27-

பதவுரை

நெடியாய்–பகவானே!-த்ரிவிக்ரமனே -சர்வாதிகனே-
செறி கழல் கொள் தான் நிமிர்த்து–செறிந்த வீரக் கழலை அணிந்த திருவடிகளை நீட்டி
உலகம் எல்லாம் சென்று நீ அளந்த அன்று–கீழுலகம் மேலுலகமெல்லாம் வியாபித்து அளந்த காலமாகிய த்ரி விக்கிரமாவதாரத்திலே
அடியால் படி சடந்த முத்தோ–திருவடியால் பூமி முழுவதையும் அளந்து கொண்டதனாலுண்டான ஸந்தோஷமோ?
ஆமோதம் -முத்தோ
அது அன்றேல்–அல்லது
முடியால் விசும்பு அளந்த முத்தோ–திருவடியால் மேலுலகத்தை யெல்லாம் அளந்து கொண்டதனாலுண்டான ஸந்தோஷமோ?
அறிகிலம்–அவ் விரண்டு ஸந்தோஷங்களுள் எந்த ஸந்தோஷம் இப்போது உன் நெஞ்சில் ஓடுகிறதென்பதை அறிகிறோமில்லை.
காரணம் அறியோம் -ஸூ கமாக அனுபவிக்கிறோம் அவனது கிருபை அடியாகவே

அடியால் படி கடந்த முத்தோ –
முத்து என்று மவ்க்த்யமாய் -(பிள்ளைத்தனமாய் )
அத்தாலே -லக்ஷணையாலே -அழகாய்
அடியாலே பூமியை அளந்த அழகோ

அது அன்றேல் முடியால் விசும்பு அளந்த முத்தோ –
திரு முடியாலே ஆகாசத்தை அளந்த அழகோ -என்னவுமாம்

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – திரு விருத்தம்-50-

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த மண் ———மூன்றாம் திருவந்தாதி —90-

செறி கழல் -என்கையாலே
திருவடிகளிலே முத்து உண்டாகையாலும்

நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய் —என்கையாலே
திரு முடியிலே முத்து உண்டாகையாலும்

அடியிலே படியை அளந்தன முத்துக்களோ
முடியாலே விசும்பை அளந்தன முத்துக்களோ

சிலம்பும் செறி கழலும் (மூன்றாம் திரு –90)-என்று
இதுக்கு உள்ளீடான முத்து ப்ரகாசமாதல் –
சாத்தின முத்தாதல்

நெடியாய் நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று
அறிகிறி லோம்
ஆல் ஆச்சர்யம்

இப்போது உனக்கு ஓடுகிற ஹர்ஷம்-முத் -வடசொல் -ஹர்ஷமே –
திருவடிகளில் கீழே பூமியை இட்டுக் கொண்ட ஹர்ஷமோ
திரு முடியாலே ஆகாச அவகாசத்தை எல்லாம் வியாபித்த ஹர்ஷமோ -என்றுமாம்

அடியாலும் முடியாலுமோ என்னுதல்
அவற்றில் உண்டான முத்தாலேயே என்னுதல்

முத்து என்றது
அழகாதல்
முத்துத் தான் ஆதல்

நெடியாய் நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
நீ யளந்த யன்று
அடியால் படி கடந்த முத்தோ –
அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ
அறிகிலமால்
என்று அந்வயம்

—————

திரு உலகு அளந்து அருளின வடிவை அநுஸந்திக்கையாலே அவனைக் காண ஆசைப் பட்டு
அது கிடையாமையாலே வெறுத்தவர்
அவன் பக்கல் குறை யுண்டோ
நம்முடைய குறை இறே என்று திருப்தராகிறார்

(திருப்தி சொல்லுகையாலே வெறுப்பு அர்த்தாத் வந்தது
நெஞ்சு என்னும் உள் கண்ணாலே உணர்ந்தால் இன்றும் காணலாம்
அது இல்லாமையாலே காணப் போகாது
ஆகையாலே அவன் பக்கல் குறை யுண்டோ
நம்மது அன்றோ குறை என்று திருப்தராகிறார் -என்றபடி )

(பர பக்தி பர ஞானம் பர பக்தி -ஞானம் தர்சனம் பிராப்தி -அறிவு கங்கை அடைகை
உள் கண்ணால் -தர்சன சமனாத்கார சாஷாத் காரம்
பரம பக்தி வந்தால் மோக்ஷம்
சூழ் விசும்பு பரஞானம்
முனியே நான் முகனே-பரமபக்தி
இன்னும் வர வில்லை
அடுத்த பாசுரத்தில் பரபக்தி வந்தமையை அருளிச் செய்கிறார் )

அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் -என்றேனும்
கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால் காணும் உணர்ந்து –28-

பதவுரை

என்றேனும்–எக் காலத்திலும்
கண் கண்ணால்–வெளிக் கண்ணாலே(பெயர் மட்டும் உடைய கண் )
காணாக–காணக் கூடாத
அவ் வுருவை–அப்படிப்பட்ட விலக்ஷணமான திரு வுருவத்தை
நெஞ்சு என்னும் உன் கண் உணர்ந்து காணுமேல்–நெஞ்சாகிற அகக் கண் விகஹித்து ஸாக்ஷாத்கரிக்குமாகில்,
அன்றே–அப்போதே,
ஆழியான் கார் உருவம்–திருவாழியை நிரூபகமாக வுடையனான எம்பெருமானுடைய கரிய திருமேனியை
நம் கண் காணும்–நமது புறக் கண்ணும் காணப் பெறும்;
நாம் காணாதிருப்பதுவும் இன்றே–நாம் அவ் வுருவத்தைக் காணாமல் வருந்திக் கிடப்பது அகக் கண் மலராத இப்போது மாத்திரமே.

அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம் இன்றே நாம் காணாது இருப்பதுவும் –
ஸர்வேஸ்வரன் கறுத்த திருமேனியை நம்முடைய கண் அன்றே காணும்

என்றேனும் கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும் உட் கண்ணால் காணும் உணர்ந்து
ஒரு நாளும் பகவத் விஷயத்தைக் காணாமையாலே
பீலிக்கண் -என்றவோபாதி
கண் என்று பேரான கண்ணால் காணப் போகாத அவனுடைய திருமேனியை
நெஞ்சாகிற உள் கண் உணர்ந்து காணுமாகில் அன்றே நம் கண் காணும் ஆழியான் கார் உருவம்

(கட் கண் -மீமிசையாலே கண் என்று பேராய் இருக்கிற கண் என்றபடி
ஞானம் உண்டால் காணலாம்
இல்லாத போது காணப் போகாது என்றபடி )

இன்றே நாம் காணாது இருப்பதுவும்
நெஞ்சாகிற உள் கண் உணர்ந்து காணாத இன்றே நாம் காணாது இருப்பது
உணர்ந்து காணும் அன்று நம் கண் காணும்

யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்று சொன்னாராகில்
உள் கண் காணாது ஒழிகை யாவது என் என்னில்
பரம பக்தி பிறந்து அவ்வஸ்துவை ஒழியச் செல்லாமை யாதொரு போது பிறக்கும்
அப்போது காணும் நம் கண்
அவ் வஸ்துவை ஒழியச் செல்லும் இன்று காணப் போகாது என்கிறது
கட் கண் என்றது -பீலி போலேயான புறக்கண்

நெஞ்சு என்னும் உட் கண்ணால் காண உணர்ந்த
அன்றே நம் கண் காணும்
உணராத இன்றே நாம் காணாது இருப்பதுவும்
என்று அந்வயம்

————

எல்லார்க்கும் இவ் வவஸ்தை பிறக்கை அரிது
எனக்கு இவ் வவஸ்தை பிறந்தது என்கிறார் –
எனக்கு எளியன் என்கையாலே எனக்கு இவ் வவஸ்தை என்கிறது –
எளியர் ஸ்நேஹிகள் –
(இதில் பரபக்தி-அவஸ்தை -தசை – வந்தமையை ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் )

உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே
இணரும் துழாய் அலங்கல் எந்தை -உணரத்
தனக்கு எளியர் எவ் வளவர் அவ் வளவர் ஆனால்
எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு –29-

பதவுரை

இணரும் துழாய் அலங்கல் எந்தை–(திருமேனியின் ஸம்பந்தத்தாலே) மேன் மேலும் தழைத்தோங்கு கின்ற
திருத் துழாய் மாலையை யுடைய எம்பெருமான்
தனக்கு எளியர்–தனக்கு அடிமைப் பட்டவர்கள்
எவ் வளவர்–(தன் மேல்) எவ்வளவு அன்பு உடையவர்களோ
அவ்வளன்–தானும் தன்னை அவ் வளவு காட்டிக் கொடுப்பவன் (திருமால்)
ஒருவர்க்கு–(தாமாகவே முயற்சி செய்பவர்களில்) ஒருவர்க்காவது
செவ்வே–நேராக
உணர எளியனே?–அறியக் கூடியவனோ? (ஒருவர்க்கும் அறியக் கூடியவனல்லனாயினும்)
ஆனால்–ஆகையினாலே
இங்கு–இவ்விடத்தில்
எம்பெருமான்–எம்பெருமான்
எனக்கு–என்னால் வறிந்து
உணர எளியன்–கொள்ளக் கூடியவன்.

உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே
ஒருத்தருக்கும் ஈத்ருக் தயா-த்ருஷ்டாந்த தயா –
இயத்தயா-இவ்வளவு என்று
பரிச்சேதித்து – உணரப் போகான்
யஸ்யா மதம் தஸ்ய மதம் அவிஞ்ஞாதம் விஜாநதாம்
(உபமான ராஹித்யன்
த்ரி வித அபரிச்சேத்யன் அன்றோ )

இணரும் துழாய் அலங்கல் எந்தை –
அபரிச்சின்ன வஸ்துவினுடைய லக்ஷணம்
திருத் தோளில் திருத் துழாய் மாலையை யுடையவனாகை

இணரும்
தன் நிலத்திலும் இவன் தோளில் விகஸியா நிற்கும்
தேவர்கள் தோளில் மாலை வாடாது
சர்வாதிகன் ஆகையாலே இவன் தோளில் இட்டது அரும்பியா நிற்கும்

உணரத் தனக்கு எளியர் எவ் வளவர் அவ் வளவர்
தனக்கு நல்லவர்கள் உணர எவ் வளவர்-அவ் வளவனாய் நிற்கும்
ப்ரியோ ஹி ஞாநிநோத் யர்த்தம் 7-14-
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் -என்னும்படியே

ஆனால் எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு
தனக்கு நல்லவர்கள் நினைத்த அளவிலே யமைக்கும் ஆகையாலே
என் ஸ்வாமி எனக்கு எளியன் –

(தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விஸிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோऽத்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய:–7-14-

தேஷாம் நித்யயுக்த-அவர்களில் நித்திய யோகம் பூண்டு,
ஏகபக்தி: ஜ்ஞாநீ விஸிஷ்யதே-ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன்,
ஹி ஜ்ஞாநிந:-ஏனெனில் ஞானிக்கு,
அஹம் அத்யர்தம் ப்ரிய:-நான் மிகவும் இனியவன்,
ஸ ச மம ப்ரிய:-அவன் எனக்கு மிகவும் இனியன்.

அவர்களில் நித்திய யோகம் பூண்டு ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன்.
ஞானிக்கு நான் மிகவும் இனியவன்; அவன் எனக்கு மிகவும் இனியன்.

————-

அவன் அருமையும் பெருமையும் கிடக்க கிடீர்
நம்மை நலிந்து போந்த பகவத் பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்களுக்கு
நம்முடைய பக்கல் இருப்பிடம் இல்லை என்கிறார் –

இங்கு இல்லை பண்டு போல் வீற்று இருத்தல் என்னுடைய
செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் -அங்கே
மடி யடக்கி நிற்பதனில் வல் வினையார் தாம் ஈண்டு
அடி எடுப்பதன்றோ அழகு–30-

பதவுரை

இங்கு–என்னுடைய இந்த நெஞ்சில்
பண்டு போல்–இத்தனை நாளும் போலே
என்னுடைய செம் கண் மால்–என் மேல் வாத்ஸல்யத்தாலே சிவந்த திருக் கண்களை யுடையனான பெருமானுடைய
சீர்க்கும்–கல்யாண குணங்களுக்கே
உள்ளம் சிறிது–எனது நெஞ்சு இடம் போராத தாயிருக்கின்றது.
அங்கே–முன்பு விசாலமாக வாழ்ந்த விடத்திலே
வீற்றிருத்தல் இல்லை–(பாவங்கள் இனி) தங்கி யிருக்க முடியாது (ஏனென்றால்)
வல் வினையார் தாம்–கொடிய பாவங்கள்

மடி அடக்கி நிற்பதனில்–துணியை இடுக்கிக் கொண்டு நெருக்கமாக நிற்பதை விட
ஈண்டு–இவ்விடத்தில் நின்றும்.
அடி எடுப்பது அன்றோ அழகு–கால் பேர்ந்து வெளிக் கிளம்பிப் போவதன்றோ அழகியது.

இங்கு இல்லை பண்டு போல் வீற்று இருத்தல்
பண்டு போல் இங்கு விஸ்திருதமாக இருக்க ஒண்ணாது
வீற்று இருக்க ஒண்ணாது

என்னுடைய செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் –
வகுத்த விஷயத்துக்கு இடம் போராது
ஐஸ்வர்ய வாத்ஸல்ய ஸூசகமான கண்களை யுடைய ஸர்வேஸ்வரனுடைய
குணங்களுக்கு என்னுள்ளம் சிறிது

(சீர்க்கும் -குணங்கள் இருக்க இடம் ஒழிய பாபத்துக்கு இடம் இல்லை -என்றபடி
குண ஸ்மரணத்தாலேயே பாபம் போம் என்று தாத்பர்யம் )

அங்கேமடி யடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு அடி எடுப்பதன்றோ அழகு
அங்கே ஒரு மூலையிலே ஒதுங்கித் திரிந்தாலோ என்னில்
முதன்மை செய்த வூரிலே புடைவையை ஒதுக்கிக் கொடு திரிவதில்
அங்கு நின்றும் சடக்கெனக் கால் வாங்குகை யன்றோ அழகு

மடி -முந்தானை –

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்