அவதாரிகை
இப்படி கால விளம்பம் போறாது ஒழிந்தாலும்
அவன் தானே வந்து முகம் காட்ட வேண்டுகையாலே
பதறினாலும் பிரயோஜனம் இல்லை
அவன் தன் நினைவாலே இருக்கிற உமக்கு அவன் விபூதியைக் கண்டு கால ஷேபம் பண்ணி இருக்கக் குறை என் என்ன
ஆஸ்ரித வ்யாமுக்தனாய்
ஆபத் சகனாய்
ஸர்வஞ்ஞனானவனை ஒழிய என் நெஞ்சு வேறே ஒரு விஷயத்தை ஆதரியாது -என்கிறார் –
இப் பாட்டு தோழிக்குத் தலைவி தன் கற்புணர்த்தி அறத்தோடே நின்று உரைத்தல் ஆகவுமாம் –
சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு
இருங்குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91 –
பாசுரம் -91-சுருங்கு உறி வெண்ணெய் தொடு உண்ட –
துறையடைவு–தலைவி தோழியிடம் தன் கற்பு உணர்த்தி அறத்தோடு நிற்றல் –
வார் கடா அருவி -8–4-
பதவுரை
சுருக்கு உறி வெண்ணெய்–சுருங்கக் கட்டப்பட்டுள்ள உறியிலே சேமித்து வைக்கப்பட்ட வெண்ணெய்யை
தொடு உண்ட–வஞ்சனையால் எடுத்து அமுது செய்த
கள்வனை–கள்ளத்தனமுடையவனும்
வையம் முற்றும்–உலக முழுவதையும்
இரு குறள் ஆகி–மிக்க வாமனவடிவ முடையனாகி
இசைய–(அவன் தானே தானம் பண்ணுவதற்கு) இசையும்படி
ஓர் மூ அடி வேண்டி–ஒரு மூன்றடி நிலத்தை யாசித்துக்கொண்டு
ஒருங்கு உறு உண்ட–ஒருசேர விடாமல் உட்கொண்ட
பெரு வயிற்றாளனை–பெரிய திருவயிற்றை யுடையவனும்
மாவலி மாட்டு–மஹாபலி சக்கரவர்த்தியினிடத்தில்
சென்ற–எழுந்தருளின
பெரு கிறியானை அல்லால்–மிக்க தந்திரமுடையவனுமான திருமாலை யல்லாமல் (வேறொருத்தனை)
அடியேன் நெஞ்சம் பேணாது–(அவனுக்கே) அடிமையான எனது மனம் விரும்பாது.
சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை
கள்ளக் கயிறு உருவிக் கட்டுகையால் சுருங்கின உறியிலே சேமித்து வைத்த வெண்ணெயைக் களவிலே புக்கு
அமுத செய்த க்ருத்ரிமனானவனை
இத்தால்
இச்சரீரமாகிற சிக்கத்திலே கட்டுண்ட நவநீத ப்ராயனான முமுஷு சேதனனைப்
பிறர் அறியாதபடி அபி நிவிஷ்டனாய் புஜிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது –
வையமுற்றும் ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை
இப்படி ஆஸ்ரிதர் உகந்த விஷயத்தை உகக்கும் அளவு அன்றிக்கே
ஸாமான்யமான ஜகத்துக்கு பிரளய ஆபத்து வந்தால் ஒன்றும் பிரி கதிர்ப் படாமல்
பசியர் யுண்டால் போலே மேல் விழுந்து திரு வயிற்றிலே வைத்து நோக்கும்படியான ரக்ஷகத்வ சக்தியின் மிகுதியை யுடையவனை –
(மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாறிலே கொழிக்கும் –(ஆச்சார்ய ஹிருதயம்-175)
மாவலி மாட்டு-இருங்குறளாகி இசைய வோர் மூவடி வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால்
மஹா பலி யருகே லோகத்தில் வாமன வேஷம் வளர்ந்து அருளின இடம் என்னும்படி மிக்க வாமனனாய்
அவன் தானே இசையும்படி அத்விதீயமான சிற்றடியாலே மூன்றடி வேண்டி அழகிய நடையிலே மதி மயங்கும்படி சென்ற
பெரிய நல் விரகை யுடையவனை ஒழிய
பெரும் கிறியாரை -என்றும் சொல்லுவார்
இத்தால்
தன்னுடைய வஸ்து பிறர் கொள்ளாமல் தன்னதே யாக்கிக் கொள்ளும் பேர் அறிவுடையவன் என்கை
அடியேன் நெஞ்சம் பேணலதே –
இந்த ஸ்வ பாவங்களால் அவனுக்கே சேஷமான நெஞ்சு
வேறே ஒரு விஷயத்தை ஆதரியாது
அறத்தொடு நிலை
தொடு உண்ட கள்வன் -என்கையாலே
புணர்ச்சி தோற்றிற்று
வையம் இத்யாதியாலே –
நீரிடை யுதவி தோற்றிற்று ( புனல் தரு புணர்ச்சி )
மாவலி மாட்டு -இத்யாதிகளாலே ‘தானே குறை நயந்து வரைந்து கொள்ளும் பேர் அறிவுடைமை தோற்றிற்று
————
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
இங்கே கிடந்தது -காலம் நெடிதாகா நின்றது குறுகா நின்றது என்று
ஆழங்கால் பட்டுக்கிடவாதே நாங்கள் கண்டீரே
புறம்புள்ள விஷயங்களாலே தரித்துக் காலம் நெடுகுதல் குறுகுதல் செய்யாதே ஸூகித்து இருக்கிறோம்
அப்படியே நீரும் பகவத் விஷயத்தில் நின்றும் மாறி நெஞ்சைப் புறம்பே வைக்கைக்குப் பார்த்தாலோ என்ன
அப்படிச் செய்யலாயிற்றே அதுக்கு ஈடாய் இருபத்தொரு நெஞ்சைப் பெற்றோமாகில்
என் நெஞ்சு அவனை ஒழிய வேறு ஓன்று அறியாது என்கிறார்
என் நெஞ்சு தன்னைப் புறம்பே வைக்கலாயிற்று இறே அவன் நவநீத ஸுர்யம் பண்ணானாகில்
வியாக்யானம்
சுருந்குறி வெண்ணெய்
கள்ளக் கயிறு உருவி வைத்த உறி யாயிற்று
வெண்ணெய் தொடு வுண்ட
வைத்த குறி அழியாமே வெண்ணெயைக் களவு கண்டு அமுது செய்த
கள்வனை
களவு தன்னை யாயிற்று களவு கண்டது ஆகிறது –
———————————————————————
அவதாரிகை
இப்படி அனுபவ அர்த்தமாக இவர் ஆதரித்த படியைக் கண்ட ஈஸ்வரன்
நம்மை அபேக்ஷித்தாருக்கு முகம் காட்டாது ஒழிவோமோ
தம் தம்முடைய அபிமத ஸித்தி யர்த்தமாக ப்ரயோஜனாந்தர பரரான தேவர்கள் அகப்பட அபேக்ஷிக்க
வந்து பிறந்து கார்யம் செய்து கொடுக்கிலோமோ என்று-தன் திரு உள்ளக் கருத்தை ஆவிஷ்கரிக்க
உன்னுடைய போக்யமான வடிவை அனுபவிக்க ஆசைப்படாதே
சத்ரு நிரஸனம் பண்ணித் தர வேணும் என்று அபேக்ஷிப்பதே என்று
அவர்களை பழித்து அருளிச் செய்கிறார்
இதுவும் நாயகி வினைத் தொழிலில் பிரியலுற்ற நாயகனைக் குறித்துக் காணலுற்றுக் கவர்ந்து உரைத்தல் ஆகவுமாம் –
பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
தாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92-
பாசுரம் -92- பேண் நலம் இல்லா அரக்கர் –
துறையடைவு—தலைவனைக் குறித்து தலைவி இரங்குதல் –
ஆழி எழ -7–4-
பதவுரை
பேண் நலம் இல்லா (உன்னை) விரும்பிப் பக்திசெய்தலாகிய நற்குணமில்லாத
அரக்கர்–ராக்ஷஸர்களுடைய
முந்நீர பெரு பதி வாய்–கடலாகிய பெரு நீரணை யுடைய பெரிய மலையிடத்திலுள்ள
நீள் நகர்–பெரிய லங்காபுரியில்
நீள் எரி வைத்தருளாய்–தீப்த்த அக்னி பானம் -ஆகிற நெருப்பு -பெரிய நெருப்பை வைத்து அளித்தருள வேணும்
என்று–என்று சொல்லிப் பிரார்த்தித்து
நின்னை–உன்னை
விண்ணோர்–தேவர்கள்
வைகல்–நாள் தோறும்
மாலையும் காலையும்–இரண்டு சந்தி களிலும்
தான் நிலம் தோய்ந்து தொழுவர்–தங்கள் கால்கள் தரையிலே படும்படி வந்து வணங்குவர்;
(அவர்கள் அங்ஙனம் வணங்குதல் தங்கள் பகையைப் போக்குவிக்கும் பொருட்டே யன்றி)
நின் மூர்த்தி–உனது வடிவத்தின்
பல் கூற்றில்–பல அம்சங்களுள்
ஒன்று–ஒன்றையேனும்
காணலும் ஆம் கொல் என்றே–பார்க்க வேண்டுமென்றோ (அன்று என்றபடி.)
வியாக்யானம்
பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று
உன் பக்கல் அனுவர்த்தனம் ஆகிற நலம் இல்லாத ராக்ஷஸருடைய
சமுத்ரமாகிற நீர் அரண் யுடைத்தான ஸூ வேலமாகிற பெரிய பர்வத ஸ்தானத்திலே
பெரிய ஓலக்கத்தை யுடைத்தான லங்கையாகிற படை வீட்டிலே
பட்டினி கிடக்கிற அக்னியானவன் பசி தீர்ந்து யுண்டு வளரும்படி ப்ரஷேபிக்க வேணும் என்று அபேக்ஷித்து
நின்னை
நிரதிசய போக்ய பூதனான உன்னை
விண்ணோர்
விலக்ஷண போகம் அறிந்து புஜிக்கிறாராக பாவித்து இருக்கிறவர்கள்
தாள் நிலந்தோய்ந்து தொழுவர்
நிலத்திலே தோய்ந்து தாள் தொழுவர் என்று ப்ரணாமத்தைக் காட்டுகிறது
தேவர்களாய் இருக்கச் செய்தே தங்கள் அர்த்தித்து
அத்தாலே
உத்தரம் தீர மா ஸாத்வ -யுத்த -17-10-என்று பூமியிலே கால் பொருந்தித் தொழுவர் என்றுமாம்
(வடக்குக்கரை அடைந்து -கிழக்குக்கரை இல்லாமல் -லங்கைக்கு வடக்கு தானே –
கால் பூமியிலே படாமல் இருந்தான் விபீஷணன் அங்கு
பொருந்தாமல் இருந்தான் -)
நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காண லுமாங்கொல் என்றே
இப்படி பரம உபாயமான பிரணிபாதாதிகளைப் பண்ணுகிறது நிரதிசய போக்யமாய் ஆஸ்ரித அர்த்தமாக
நீ பரிக்ரஹித்த நாநா வான விக்ரஹங்களிலே ஓர் அம்சத்தைக் காணலாம் என்றோ -அன்றிலே என்றபடி –
போகத்துக்கு ஆசைப்பட்டுக் காலிலே விழுந்தார்களை அறுக்கை தானே செய்யும் என்று கருத்து
வைகல் மாலையும் காலையுமே –
அஹோ ராத்ர விபாக யுக்தமான காலம் உள்ளதனையும் காணலுமாம் கொல் என்று அந்வயம் –
————-
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே -என்றார் கீழே
அளவுடைய அதிகாரி புருஷர்களாக தேவர்களுக்கு இதுவும் இன்றி ஒழிவதே என்கிறார்
என் தான்
அவர்களுக்கு வந்த குறை என் என்னில்
நாம் எல்லாவற்றையும் அழிய மாறிப் பெறக் கடவத்தையும் அழிவுக்கு இட்டு
வேறே சில ப்ரயோஜனங்களைக் கொள்ளா நின்றார்கள் இறே -என்கிறார் –
———
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை
தன் நெஞ்சு வேறே ஒன்றை ஆதரியாது என்று அருளிச் செய்தார்
விண்ணோரும் என்னைப் போலே யாகாதே விருத்த ஸ்வபாவர் ஆவதே என்று
வெறுத்து அருளிச் செய்கிறார் இதில்
பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் தாள் நிலந்தோய்ந்து தொழுவர்
ஸர்வ பூத ஸூஹ்ருத்தான உன்னையே விண்ணில் உள்ளவரான விலக்ஷண ஞான சக்திகரும்
இந்நிலம் நாம் கால் வைப்பதற்கு யோக்யம் அன்று என்று இருக்குமவராய்
ஸ்வ பிரார்த்தனைக்காக இந்நிலத்தில் கால் பதிய வைத்தவர்களாய்
நீணகர்
பஹு காலம் தொடங்கிக் கடல் சூழ்ந்த மஹா த்வீபத்தில் உண்டான இலங்கையில்
நீள் எரி
பஹு நாளாகப் பட்டினி இருக்கிற மஹா அக்னியை
சரமுகத்தால் பிரவேசிப்பிக்க அருள் செய்ய வேணும் என்று உன்னை பிரார்த்திப்பதே
வைகலும்
எப்போதும்
தொழுவர்
இதுக்காக உன்னைத் தொழவும் வேணுமே
நீள் நகருக்கு விசேஷணம்
பேணல் இத்யாதி
உன் விபூதியைப் பேணவும்
உன்னை அனுவர்த்திக்கவும் ஆகிற நன்மை இல்லாத ராக்ஷஸருடைய ஸமுத்ரமாகிற
முந்நீரை யுடைத்தான ஸூ வேலமாகிற பெரிய பர்வத ஸ்தானத்திலே இருக்கிற என்றபடி
இப்படி பர அநர்த்தத்துக்காக உன்னை விண்ணோர் தொழுவர் அத்தனை போக்கி
நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று காண லுமாங்கொல் என்றே
மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரிய தரம் ரூபம் யதத்யத்புதம் -(சதுஸ் ஸ்லோஹி-4 ) -என்றபடியே
உனக்கு நிரதிசய ப்ரியமாய் எங்களுக்கு த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான பலவகைப்பட்ட
திவ்ய மங்கள விக்ரஹ பேதங்களில் ஒன்றை யாகிலும் காணலாமோ என்றே அல்லவே
ஊரைச் சுட்டுக் தர வேணும் என்றதற்காக அத்தனை
வைகல் மாலையும் காலையுமே –
சாயம் ப்ராதஸ் சமயங்களில் -புன புன தொழுவர் என்றபடி –
———————————————
அவதாரிகை
இப்படி ப்ரயோஜனாந்தர பரராய்ப் போருகிற அளவன்றியே ஸம்ஸாரிகள்
அஹோ ராத்ர விபாகத்தாலே காலம் கழிக்கிற படி கண்டு வைத்து
பகவத் விஷயத்தில் அந்வயியாதே இருப்பதே -என்று
அவர்கள் இழவுக்கு வெறுத்து அருளிச் செய்கிறார் –
வியாக்யானம் –
காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – – -93 –
பாசுரம் –93-காலை வெய்யோற்கு முன் ஒட்டுக் கொடுத்த
துறையடைவு—இருளைக் கண்ட தலைவி -தோழி செவிலி தாயாரை வெறுத்தல் —
ஒரு நாயகமாய் -4–1-
பதவுரை
காலை–உதய காலத்தில்
வெய்யோற்கு முன்–ஸூர்யனாகிய சக்கரவர்த்திக்கு எதிரில்
ஒட்டுக் கொடுத்த–நிற்க மாட்டாமல் புறங்கொடுத்தோடுதலைச் செய்த
கங்குல குறும்பர்–இருளாகிய சிற்றரசர்கள்
மாலை–ஸாயங்காலத்திலே
வெய்யோன்–அந்த ஸூர்யனாகிய பேரரசன்
பட–அழிய-அஸ்தமிக்க
வையகம் பரவுவர்–(தாங்கள்) உலக முழுவம் பரவுவார்கள்;
அன்ன கண்டும்–அப்படிப்பட்ட தன்மையைப் பார்த்திருந்தும்.
காலை–காலத்திற்கு ஏற்றபடி
நல் ஞானம் துறை படிந்து ஆடி–நல்ல ஞானமாகிய துறையிலே இறங்கி மூழ்கி
(ஆச்சார்யர் கீழ் படிந்து -பகவத் பக்தியாகிய வெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபட்டு)
கண் போது செய்து–பக்தி பாரவஸ்யத்தாலே கண்களை மூடிக் கொண்டு-
(உலக விஷயத்தில் மொட்டு போல் பகவத் விஷயத்தில் மலர்ந்து)
மாலை–எம்பெருமானை
நல் நாவில் கொள்ளார்–(தங்களுடைய) நல்ல நாவினால் பெயர் கூறித் துதியார்;
அவன் மைபடி–அவனது கரிய திருமேனியை
நினையார்–நினைப்பதற்கு செய்யார்.
வியாக்யானம்
காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
ப்ராத காலத்திலே ஆதித்யன் வருகிறான் என்று அவன் பிரதாபத்துக்கு அஞ்சி
ஏலக்கோலி ஓடிப்போன ராத்ரியாகிற குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்
சாயம் காலத்திலே அந்த பிரதா போத்தரனான ஆதித்யனானவன் அஸ்தமிக்க
லோகம் அடங்கப் பரம்பா நிற்பர்கள்
அன்ன கண்டும்
அப்படிக் கால பேதேந ப்ரகாஸ அந்தகாரங்கள் கலசி வருகிறபடி கண்டு இருக்கச் செய்தேயும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக்
ஸத்வ உத்தர காலத்திலே வைதிகமான அத்யாத்ம ஞானத்துக்குத் துறையான
ஆச்சார்ய விஷயத்தைப் பிராணாமம் பண்ணி
அவன் உபதேசத்தில் அவகாஹித்து
கண் போது செய்து
பாஹ்ய இந்த்ரியத்தைப் புறம்பு போகாதபடி மொட்டுவித்து
மாலை நல் நாவில் கொள்ளார்
ஆஸ்ரித வத்ஸலனான ஸர்வேஸ்வரனை ஸ்தோத்ரம் பண்ண இட்டுப் பிறந்த நாக்கிலே ஸ்வீ கரியார்கள்
நினையார் அவன் மைப்படியே –
அவனுடைய ஸ்யாமளமான திருமேனியை நெஞ்சுக்கு விஷயமன் ஆக்கார்கள்
இப்பொழுதைப் பழுதே போக்குவதே என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று
———–
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
தேவர்கள் தான் ஓர் அபிமான விசேஷத்தாலே இருக்கிறார்கள்
அல்லாதாரோ தான் பகவத் போஜனம் பண்ணுகிறார்களோ
அவர் இவர் என்று விசேஷிக்கிறது என்
எல்லார்க்கும் புறம்பே யன்றோ போது போக்கு என்கிறார்
வியாக்யானம் –
காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்-மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்
உத்பவ அபிபவ ரூபத்தாலே ஆதித்யன் இருளை மேலிடுவது
அந்த ராத்திரி ஆதித்யனை மேலிடுவதாய் இருக்கிற இத்தைக் கண்டு வைத்து
நந்தத்த யுதித ஆதித்யே -அயோத்யா -105-24
விடிந்தவாறே அபிமத விஷயங்களை புஜிக்கும் படி உபகரணங்களைத் தேடுகைக்கு ஈடான காலம் வந்தது என்று உகவா நிற்பர்கள்
நந்தத்த யஸ்தமிதே ரவவ்
அஸ்தமித்தவாறே இவற்றைக் கொண்டு பிறர் அறியாதபடி அவ்விஷயங்களை புஜிக்கும்படியான காலம் வந்தது என்று களிப்பார்கள்
ஆத்மந இத்யாதி
பகல் என்றும் இரவு என்றும் கூறிட்டுக் கொண்டு இங்கனே தந்தமுடைய ஆயுசை ஈர்க்கிறதோர் ஆயுதம்
சாலில் வார்த்த நீர் போல் நம் ஆயுஸ்ஸூ போகிறபடி படி என்று புத்தி பண்ணுகிறவர்கள் அல்லர்
சாவக்கடவராய் இருக்கிறவர்கள்
காலை -ப்ரபாத சமயத்திலே வெய்யோன் உண்டு ஆதித்யன்
அவனுக்கு முன்னோட்டுக் கொடுப்பர்கள் ஆயிற்று கங்குல் ஆகிற குறும்பர்
அவன் கிரணங்களைப் பரக்க விட ஓடா நிற்பர்கள் இறே
மாலையிலே பெரிய பிரதாபத்தை யுடைய ஆதித்யனை அழித்து அவன் ஆண்ட பரப்பை அடையக் கைக்கொள்வர்கள்
நித்ரையாலே பூமியாகப் பரவசமாம் படி பண்ணிக்கொடு வரும் இறே
அன்ன கண்டும்
அப்படியைக் கண்டு வைத்தும்
பகவத் விஷயம் ப்ரத்யக்ஷத்துக்கு விஷயம் அல்லாமையாலே தான் அறியாது ஒழிகிறார்கள்
இத்தினுடைய அவஸ்தையை ப்ரத்யஷியா நிற்கச் செய்தேயும் நெஞ்சில் படாது ஒழிவதே
காலை
ஸத்வ உத்தரமான காலத்திலே
நன் ஞானத்
ஞானம் ஆகிறது பகவத் விஷயத்தைப் பற்றி யல்லது நில்லாது
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -( முதல் திரு -67 ) என்னக் கடவது இறே
தத் ஞானம் அஞ்ஞானம் அதோ அந்யதுக்தம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-5-87 )
வித்யா அன்யா சில்ப நை புணம் –(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-41 )
புறம்பே ஒன்றைக் கற்றத் தோடு
துன்னம் பெய்யக் -கந்தை தைக்க -கற்றத்தோடு வாசி இல்லை இறே
துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் வன்மைப்படியே
———–
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
நன்மை பெற வல்ல நாக்கால் அனுசந்திப்பதும் செய்யார்கள்
அவன் மை போன்ற திருமேனியை ஸாஸ்த்ரத்தில்
பஞ்சத்தாவிபக்த காலங்களில் ஸ்மரியார்கள்
யூகித்தார்த்த விபரீதமாய்
நந்தத்த் யுதித ஆதித்யே நந்தத்த் யஸ்தமிதே ரவவ் ஆத்மநோ நாவபுத் வந்தே மனுஷ்யா ஜீவிதா ஷயம் -அயோத்யா -105-24-
என்றபடியாய் இரா நின்றார்கள் என்கிறார்–
————————-
அவதாரிகை
மாலை நல் நாவில் கொள்ளார் -என்று நாட்டாரைப் பழித்தீர்
நீர் தாம் நம்மை யுள்ளபடி அறிந்து சொன்னீரே என்று ஈஸ்வர அபிப்ராயமாக
விலக்ஷணரான வைதிகர் அன்றோ அது செய்ய வல்லார்
நான் அவர்கள் போன வழியே போமவன் அன்றோ -என்று அருளிச் செய்கிறார் –
மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — – 94-
பாசுரம் –94-மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் –
துறையடைவு–தலைவியைப் பார்த்த தோழன் தலைவனிடம் வியந்து பேசுதல் –
இருத்தும் வியந்து -8-7–
பதவுரை
மை படி மேனியும்–நீல நிறம் செறிந்த திருமேனியையும்
செம் தாமரை கண்ணும்–செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களையு முடைய
உன்–உனது
திரு அடி–திருவடித் தாமரை மலர்களை
வைத்திகரே–வைதிகர்கள் தாமே
மெய் படியால்–உண்மையான நெறியால்
சூடும்–தம் தலைமேற்கொண்டு வணங்கும்படியான
தகைமையினார்–தன்மை யுடையவர்கள்;
எப்படி ஊர் ஆ மிலைக்க குருடு ஆ மிலைக்கும் என்னும் அப்படி–எப்படி (வெளியில் மேய்ந்து மீண்டு) ஊர் வந்து சேர்ந்த
(கண் தெரியாத) பசுக்கள் (இடமறிந்து) கனைக்கக் குருட்டுப் பசுவும் கூடக் கனைக்கும்மென்று (உலகம்) சொல்லுமோ, அப்படியே
யானும் சொன்னேன்–யானும் உன்னைத் துதித்தேன்.
அடியேன் மற்று யாது என்பன்–அடியவனான நான் வேறு என்ன வென்று சொல்லுவேன்?
வியாக்யானம்
மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும்
அஞ்ஜனத்தின் வடிவு போலே இருக்கிற திருமேனியையும்
அதுக்குப் பரபாகமாய்ச் சிவந்த தாமரை போலே இருக்கிற திருக்கண்களையும்
வைதிகரே
நீல தோயத -தைத்ரியம் என்றும்
யதா கப்யாஸம் புண்டரீகம் -சாந்தோக்யம் என்றும்
திரு வடிவையும் திருக்கண்ணையும் வேதத்தில் சொல்லுகிறபடி அறியுமவர்களே
மெய்ப்படியால்
கேட்டார் வாய்க் கேட்கை அன்றிக்கே
மெய்யாகக் கண்டபடியாலே
உன் திருவடிச் சூடும் தகைமையினார்
பிராப்தமுமாய்
போக்யமுமான உன்னுடைய திருவடிகளை
சிரஸா வஹித்து அனுபவிக்கும் ஸ்வ பாவத்தை யுடையவர்கள்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
ஊர் அணைந்த ஆக்கள் கன்று நிலை கண்டு கனைக்க
கண்ணில்லாத ஆவும் அது கேட்டு ஒக்கக் கனைக்கும் என்று லோகம் யாதொருபடி சொல்லும்
அப்படி யானும் சொன்னேன்
அந்த ப்ரகாரத்திலே வேத வைதிக புருஷர்கள் சொன்ன பாசுரத்தைக் கேட்டு நானும் சொன்னேன்
அடியேன்
சொல்லுகைக்கு அடியான உறவையுடைய நான்
மற்று யாது என்பனே —
அல்லது என் ஞானத்தாலே கண்டு என் சக்தியாலே சொன்னேன் என்ன வல்லேனோ என்றார் ஆயிற்று
————
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
துர்மானத்தாலே இழப்பாரும்
அறிவு கேட்டாலே இழப்பாருமாகா நிற்பார்கள் என்றீர்
உமக்கு குறையில்லையே என்ன
எனக்கும் ஒரு குறை உண்டாக்கி வைத்தாய்
முன்னடி தோற்றாதபடி மயர்வற மதிநலம் அருளினாயே
பக்தி ரூபா பன்ன ஞானத்தை இறே அருளிற்று
அந்த பக்தி பாரவஸ்யத்தாலே ஒன்றும் சொல்ல மாட்டேன் என்னுதல்
வள வேழ் உலகில் படியே அயோக்யதா அனுசந்தானத்தாலே -1-5- ஒன்றும் சொல்ல மாட்டேன் என்னுதல்
———–
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
குருட்டா மிலைக்கும் என்னும் அப்படி யானும் சொன்னேன்
அடியேன் மற்று யாது என்பனே
உனக்கே அடிமைப்பட்ட நான்
என்முன் சொல்லிச் சொல்லும் நான்
நீ சொல்லுவியாத மற்று எத்தைச் சொல்லுவேன் என்கிறார் –
————-
அவதாரிகை
ஊரா மிலைக்கக் குருட்டா மிலைக்கும் என்று கண்டவர்கள் சொன்ன பாசுரத்தைச் சொன்னேன் இத்தனை என்கிறீர்
கதாநுகதிகை யன்றி உமக்குத் தஞ்சமாக பகவத் விஷயத்தில் நீர் செய்த அம்சம் ஏது என்ன
அநாதியான சரீர ஸம்பந்தத்தாலே விஸ்லேஷித்துப் போகாத படி என்னை அங்கீ கரித்து அருள வேணும் என்று நிருபாதிக பந்துவான
ஸ்ரீ யபதியை ஆஸ்ரயித்து இருப்பன் என்று தம்முடைய பிரபத்தி நிஷ்டையை அருளிச் செய்கிறார் –
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95 –
பாசுரம் –95-யாதானும் ஒரு ஆக்கையில் புக்கு —
துறையடைவு–தலைவி அறத்தோடு நிற்கத் துணிதல் –
திருமாலிருஞ்சோலை -10-8-
பதவுரை
உயிர்–உயிரானது
முன்னமே–நெடுநாளாகவே
மூது ஆவியில்–பழமையான (பலவகைப்) பிறப்புகளுள்-ஸூஷ்ம சரீரம் –
யாது ஆனும் ஓர் ஆக்கையில்–யாதாயினும் ஒரு சரீரத்தில்
புக்கு–பிரவேசித்து
அங்கு அவ்வுடம்பில்–ஆப்புண்டும்-பிராரப்த கர்மத்தால் அதிலே உழன்று -பந்தத்தில்
கட்டுப்பட்டு நின்றும்–ஆப்பு அவிழ்ந்தும்
(அங்கு நின்று) தொடர்ச்சி நீங்கியும் தடுமாறும்–நிலைமாறி அலையும் தன்மையுடையது ;
அதனால்–ஆதலால்-வாசனையால் -பதிவினால்
யாது ஆனும் பற்றி–எந்த விதத்தினாலாவது
நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்–(எம்பெருமானை விட்டு) விலகும்படியான கோட்பாட்டை நன்றாக விடுவிக்கக் கடவனான
கைவல்யமும் வீடே -நல் வீடு இல்லையே -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் வேண்டுமே
மாதாவினை–தாய் போன்றவனும்-ப்ரியபரனுமாய் –
பிதுவை–தந்தை போன்றவனுமான-ஹித பரனுமாய்
திருமாலை–ஸ்ரீமந்நாராயணனை
வணங்குவேன்–கரணமடைந்திருப்பேன்.
வியாக்யானம்
யாதானும்
முன்பு பரிக்ரஹித்த சரீரத்துக்கு ஜாதி நியமம் இல்லை
ஆஸ்ரய நியமம் இல்லை
கர்ம அனுரூபமாக உப பன்னமானது -என்கை
ஓர் ஆக்கையில்
பந்தகமாம் இடத்தில் கர்மத்துக்கும் தான் வேண்டும்படி அத்விதீயமாய் இருக்கை
ஆக்கை என்று
சரீரத்தைச் சொல்லுகையாலே
பந்தகத்வமே ஸ்வரூபமாய் இருக்கும் என்கை
புக்கு
சரீர பிரவேசம் சேதனனுக்கு வந்தேறி என்கிறது
அங்கு ஆப்புண்டும்
அந்த சரீரத்திலே அஹம் அபிமாநாதிகளைப் பண்ணி
போக ஆயதநத்வாதிகளாலே ஸக்தனாயும்
ஆப்பு அவிழ்ந்தும்
இஸ் சங்கம் நடவா நிற்கச் செய்தே பந்தக கர்ம விச்சேதத்தாலே சரீர விஸ்லேஷம் பிறந்தும் –
மூதாவியில் தடுமாறும்
இவனை விடாதே பழையதாய்ப் போருகையாலே முதிர்ந்து இருப்பதாய்
ப்ராணஸ் தேஜஸி -சாந்தோக்யம் என்று
ப்ராண ஆஸ்ரயம் ஆகையாலே ஆவி என்று சொல்லப்படுவதான ஸூஷ்ம சரீரத்தில் நின்று
ஸ்வர்க்க நரகங்களிலே யாத ஆயாதம் பண்ணித் தடுமாறா நிற்கும்
உயிர்
ஜீவனானது
முன்னமே –
இப்பிரக்ருதி ஸம்பந்தம் -அநாதி மாயயா ஸூப்த -மாண்டூக்ய காரிகா -என்கிறபடியே அநாதியாய் இருக்கும்
அதனால்
இப்படி இஸ் ஸம்ஸாரி சேதனனுக்கு சரீர ஸம்பந்தம் அநாதி ஆகையாலே
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களிலே ஏதேனும் ஒன்றை அவலம்பித்து பகவத் விஷயத்தை விஸ்லேஷித்தே போரும்படியான
இஸ் ஸம்ஸாரி சேதனனுடைய ஸங்கல்பத்தை
நல் வீடு செய்யும்
நன்றாக புந ப்ரரோஹம் பிறவாதபடி விடுவிக்கக் கடவனான
மாதாவினைப் பிதுவை
பிரிய பரனுமாய்
ஹித பரனுமாய் உள்ளவனை
வத்சலனுமாய் ஸ்வாமியுமாய் யுள்ளவனை என்றுமாம்
திரு மாலை
அந்த வாத்சல்ய ஸ்வாமித்வங்களுக்கு ப்ரகாசகமான ஸ்ரீ யபதித்வத்தை யுடையவை
வாத்ஸாலும்மும் பந்தமும் தோற்றுவது புருஷகார பூதையான ஸ்ரீ லஷ்மீ ஸம்பந்தத்தாலே இறே
பிதா மாதா ச மாதவ -பாரதம் ஆரண்ய -189-
மாத்ருத்வ பித்ருத்வங்கள் விஸிஷ்ட விஷயம் என்றுமாம்
அதாவது
ஸ்புரத்தா ஹேதுவான விசேஷண ப்ரதாந் யத்தாலே மாத்ருத்வமும்
சத்தா ஹேதுவான விசேஷ்ய ப்ரதாந் யத்தாலே பித்ருத்வமும் என்றபடி
வணங்குவனே –
ஏவம் பூத விஷயத்தை ஆஸ்ரயித்து இருப்பன் என்று தம்முடைய ஸ்வ பாவ கதநம் பண்ணுகிறார்
கால ஷேப அர்த்தமாகவும் பிரபதனம் ஒழிய ப்ரவ்ருத்தி இல்லை என்று அருளிச் செய்தார் ஆகவுமாம் –
(வர்த்தமான பிரயோகம் வணங்கிக் கொண்டே இருக்க வேண்டுமே)
—————–
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
பக்தி பாரவஸ்யத்தாலே யாதல்
அயோக்யதா அநு சந்தானத்தாலே யாதல்
ஏதேனும் ஒருபடி கண்ணழிவு சொல்லிக் கை வாங்காமே
தன் பக்கலிலே ப்ராவண்ய அதிசயத்தை யுடையேனுமாய்
இதர விஷயங்களில் அருசி யுடையனுமாம் படி பண்ணின
மஹா உபகாரத்தை அனுசந்தித்து அவன் திருவடிகளிலே விழுகிறேன் என்கிறார்
இவ்விடத்தில் உருத்தோறும் குறியாக ஜீயர் அருளிச் செய்வதொரு வார்த்தை யுண்டு
பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே அங்கே ராமானுஜ தாசர் என்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்
திரு விருத்தம் அருளிச் செய்ய வேணும் -என்ன
நம்பெருமாளைப் பிரிந்த சோகத்தால் செவி சீ பாய்ந்து இருக்கையாலே நான் ஒன்றுக்கும் ஷமன் அல்லேன்
ஜீயர் நீர் சொல்லும் என்று அருளிச் செய்ய
ஜீயர் அருளிச் செய்து கொடு போகா நிற்க
வளவன் பல்லவதரையர் என்று திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தை யுடையார் ஒருவரும் அதை அனுசந்தித்திக் கொண்டு போந்தாராய்
அவர் இப்பாட்டு அளவிலே வந்தவாறே கண்ணும் கண்ண நீருமாய் புள கீக்ருத காத்ரருமாய் இருக்கிற இத்தைக் கண்டு
இப்பாட்டில் வார்த்தை சொல்லுவது இனி
ப்ரசங்க மாத்திரத்திலே வித்தரானீர் இது என் என்ன
நம்பி எனக்கு ஹிதம் அருளிச் செய்த அனந்தரத்திலே
எம்பெருமான் திரு முன்பே இப்பாட்டை நாள் தோறும் விண்ணப்பம் செய் -என்று அருளிச் செய்தார்
அத்தை இப்போது ஸ்மரித்தேன்-என்ன
அவர் இதுக்கு ஏதேனும் வார்த்தை அருளிச் செய்தது உண்டோ என்ன
எனக்கு அவை போகாது -இப்பாசுரத்தை நினைத்து இருப்பன் -என்றாராம்
நம்பி ஆதரித்த பாட்டாகாதே என்று இப்பாட்டை ஐந்தாறு நாழிகைப் போது கொண்டாடினாராம் –
வியாக்யானம்
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு
ஏதேனும் ஒரு சரீரத்தே பிரவேசித்து
அறவும் தண்ணிய ஸூகர ஜென்மத்தில் ஜனித்தாலும்
மமாயம் தேஹ -என்று கொண்டு
அதிலே அபிமானித்து
அங்கே உண்டானவற்றோடே சில ஸம்பந்த விசேஷங்களும் உண்டாய்
அவற்றை விட மாட்டாதேயுமாய்ப் போறா நிற்குமாயிற்று
ஆக்கை என்கையாலே
உபசயாத்மகம் என்று தோற்றுகிறது
புக்கு
சேதனனுக்கு அசித் சம்சர்க்கம் ஸ்வத உள்ளது அன்று -கர்ம நிபந்தனம் என்கை
அங்கு ஆப்புண்டும்
கர்ம வாஸனையாலே ருசி வாசனையாய்
அதிலே பத்தனாய் இருக்கும்
இது தண்ணிது என்று அறியா நிற்கச் செய்தேயும்
இத்தை விடில் செய்வது என் -என்று துணுக்குத்
——————–
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை
முமுஷுக்களான சிலர்
சம்சரண நிவர்த்தகன் படியையும்
எந்தக் கிரமத்தால் நாம் எத்தைச் செய்ய அவன் தன் நிவர்த்தகனாமது அத்தையும்
நமக்கு அவனோடு உண்டான சம்பந்தத்தையும் அருளிச் செய்யீர் என்ன
தாம் தத்வித ஜனதாதா பத்ம்யதா பன்னராய் நான் செய்யுமது இதுவே என்று
நம்மையும் இதில் அந்வயிப்பிக்க ஸித்த ஸாத்ய உபாயங்களை க்ரமத்தால் அருளிச் செய்கிறார் இதில் –
வியாக்யானம்
ஜீவ வர்க்கமானது அநாதியான ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலே யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு
அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும் மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே –
ஆப்பு அவிழ்தவன் ஸ்வதித அஹங்கார மமகார னானவன்
அதுக்கும் மேலே
மூதாவியில் உயிர்
அநாதியாய்ப் பழையதாக ஓட்டின் ப்ராணாதி வாயு ஸம் சக்த ஸூஷ்ம சரீரத்தால்
இந்த லியோக -லோகாந்தர -சஞ்சரண துக்க ஸூக அனுபவங்களால்
அலைச்சல் படும் ஜீவ வர்க்கமானது எல்லாம்
முன்னமே
யாவதாத்ம உபக்ரமாயே
அதனால்
ஏவம்பூத சக்ர ப்ரவ்ருத்தி மூல காரணமான அநாதி ப்ரக்ருதி சம்பந்தத்தால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
அப்ராப்த விஷயங்களையும் கர்மங்களையும் அவலம்பித்து
ப்ராப்த விஷய கர்மங்களை விட்டுத் திரியும் விரதம்
நியமபூர்வ ப்ரவ்ருத்தியை
விவேக நிர்வேத விரக்தி பீதிகள் உள்ளவரில்
நல் வீடு
நிச்சேஷமாக நிவர்த்திப்பிக்க வல்லளான
மாதாவினைப்
வேரி மாறாத பூ மேல் இருக்கிற-4-5-11-ஜகன் மாதாவை
வணங்குவனே –
பகவத் வசீகரணத்துக்கு முன்பு புருஷகார வசீகரணத்தைச் செய்வேன்
தத் அநந்தரமே
பிதுவை திரு மாலை வணங்குவனே –
ஜகத் காரண பூதனான ஜகத் பிதாவை ஆத்ம வித்யா நிவர்த்தகையான தெருவில் மால் செய்யுமவனை
ஆத்ம ராஷா பர ஸமர்ப்பணத்தால் வசீகரிப்பேன் என்று
முமுஷு ஜனங்களால் வசீகரிக்க வேண்டிய க்ரமத்தை
தத்தாதாத்ம்யா புத்தியால் தாம் அனுஷ்டித்ததாக அருளிச் செய்தார் ஆயிற்று
இத்தால்
திருமாலே ஸித்த உபாயம் என்றும்
தத் வசீகரணமே ஸாத்ய உபாயம் என்றேனும்
அருளிச் செய்து
தத் அனுஷ்டான கிரமத்தை அருளிச் செய்தார் –
————————————
அவதாரிகை
இப்படி
விரோதி நிவர்த்தகத்வத்தையும்
பந்தத்தையும்
புருஷகார யோகத்தையும்
முன்னிட்டுத் தாம் ஆஸ்ரயித்த படியைச் சொல்லக்கேட்ட ஈஸ்வரன்
ஸம்ஸாரிகள் நாநா மத பேதங்களாலே நாநா தேவதைகளை ஆஸ்ரயித்து அநர்த்தப்பட்டுப் போகா நிற்க
நீர் நம்மை உறவு அறிந்து ஆஸ்ரயிக்கப் பெறுவதே
இனி உமக்கு நிரந்தர அனுபவமே க்ருத்யம்
நீர் செய்யப் பார்த்தது என் என்று
இவரைக் கொண்டு ஜகத்தைத் திருத்தப் பார்த்து இருக்கிறவன்
ஸா பிப்ராயமாக இவருக்கு கார்யம் செய்ய உத்யோகிப்பாரைப் போலே அருளிச் செய்ய
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே –திரு விருத்தம் -93- என்று
ஸம்ஸாரிகள் இழவுக்கு நொந்தவர் ஆகையாலே
நீ ப்ரவர்த்திப்பித்த பாஹ்ய மார்க்கத்தாலே உன் பக்கல் விமுகமான ஜகத்தை
உன் பக்கலிலே ப்ராவண்யம் உண்டாம்படி பண்ணக் கடவேன் என்று
ஈஸ்வரன் திரு உள்ளக் கருத்தைத் தாமே அருளிச் செய்கிறார் –
வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – -96 –
பாசுரம் -96-வணங்கும் துறைகள் பல பல ஆக்கி –
துறையடைவு–தலைவி வெறி விலக்குவிக்க நினைத்தால் –
ஒன்றும் தேவும் -4-10-
பதவுரை
வணங்கும்–(தெய்வத்தை) வணங்குகிற
துறைகள் பலபல–வகைகள் பற்பலவற்றை-முதலில் மத உபதேஷ்டாக்கள் குருக்கள் -துறை –
ஆக்கி–உண்டாக்கி
மதி விகற்பால்–அறிவின் வேறுபாட்டால்
பிணங்கும்–(ஒன்றொடொன்று) மாறுபடுகிற
சமைய் பலபல–மதங்கள் பலவற்றையும்
ஆக்கி–உண்டாக்கி
அவை அவை தோறு–அந்தந்த மதங்கள் தோறும்
அணங்கும் பலபல–தெய்வங்கள் பற்பலவற்றையும்.
ஆக்கி–உண்டாக்கி
நின்மூர்த்தி–(இங்ஙனம்) உனது வடிவத்தைப் -சரீரத்தை -பரவச் செய்து வைத்துள்ளாய்-ஜகத் ஸர்வம் சரீரம் தே அங்க -அங்கீ பாவம்
இணங்கும் நின்னோரை இல்லாய்–உன்னோடு இணைத்துச் சொல்லத் தக்க உன் போல்வார் எவரையு மில்லாதவனே!-இணைவனாம் சத்ருஸ்த்தம் தோற்றி -முதல் -வைலக்ஷண்யம்
நின் கண்–உன்னிடத்திலேயே
வேட்கை–பக்தியை
எழுவிப்பன்–வளரச் செய்வேன்-
வியாக்யானம்
வணங்கும் துறைகள் பல பல வாக்கி
ஆஸ்ரயிக்கைக்கு இழியும் தீர்த்தங்களை நாநா விதமாக்கி
அதாவது
தத் தத் மத ப்ரவர்த்தக புருஷர்களைச் சொன்னபடி
மதி விகற்பால் பிணங்கும் சமயம் பல பல வாக்கி
பரஸ்பர விருத்தங்கள் ஆகையாலே மதி பேதம் பிறக்கையாலே
அந்யோன்யம் விவாத சீலமான ஸாங்கேதிக ஸித்தாந்தங்களையும் நாநா விதமாக்கி
அவை யவை தோறு அணங்கும் பல பல வாக்கி
அந்த ஸித்தாந்தங்கள் தோறும் ஆஸ்ரயணீயமான தேவதைகளையும் நாநா விதமாக்கி
பல பல என்ற
வீப்சையாலே அந்த தேவ ஜாதிகளுடைய
ஸ்வரூப பேதத்தையும்
அவாந்தர பேதத்தையும் நினைக்கிறது
நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
உன்னுடைய சரீரமானத்தை விஸ்தீர்ணமாக்கி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய்
இத் தேவ ஜாதிகளில் இணைத்துச் சொல்லலாம்படி உன் போல்வாரை உடையான் அல்லாதவனே
நின் கண் வேட்கை எழுவிப்பனே –
இப்படி ஸமாப்யதிக தரித்ரனாய்
ஸர்வ சரீரியான உன் பக்கலிலே அபிநிவேசத்தைப் பிறப்பிப்பன் –
———–
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
உம்முடைய மநோ ரதங்கள் எல்லாம் கைபுகுந்து நம் பக்கல் உபகார ஸ்ம்ருதியாலே வணங்கும்படி யானீர் இறே
இனி உமக்கு ஒரு கர்தவ்ய அம்சம் இல்லையே என்ன
எனக்கு ஒரு கர்தவ்யம் உண்டு என்கிறார்
ஸம்ஸாரிகளையும் என் படி ஆக்கி யல்லது நான் ஓர் இடத்தில் இரேன் என்கிறார்
நீ கை விட்டால் உன் கார்யம் செய்யப்போந்த நானும் கை விடவோ
சித் சக்தியையும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தியையும் அடியிலே இவை அசித் கல்பமாய்க் கிடக்கிற சமயத்திலே
இவற்றினுடைய தய நீய தசையைக் கண்டு புருஷார்த்தத்தை இன்னது என்று அறிந்து
ருசித்துப் பற்றுகைக்கு ஈடாகக் கொடுத்து விட –
அவை தான் இதர விஷயங்களை ருசிக்கைக்கும் அதுக்கு ஈடாக ப்ரவர்த்திகைக்கும் பொதுவாகையாலே
கர்ம ப்ரவாஹம் அடியாக வந்த இத்தைக் கொண்டு இதர விஷயங்களிலே ஒழுக
நீயும் அனுமதி தானத்தைப் பண்ணி உதாசீனனாய் இருக்கையாலே
இவை ஸம்ஸரிக்கைக்கு ஈடாக ப்ரவர்த்திப்பித்தாய் நீ என்னலாம்படி இருந்தது
பிரஜை கிணற்றில் விழா நின்றால் வாங்காத தாயை தள்ளினாய் என்னக் கடவது இறே –
வியாக்யானம்
நாம் இவை ஸம்ஸரிக்கைக்கு ஈடாக ப்ரவர்த்திப்பிக்கை யாவது என் என்ன
வணங்கும் இத்யாதி
ரஜஸ் தமஸ்ஸூக்களை உடையவர்களாய் இறே புருஷர்கள் இருப்பது
அவ்வவ குண அனுகுணமாக ருசி பிறந்தால் அவ்வளவிலே ராஜஸராயும்
———
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
தன் மார்க்க ப்ரவர்த்தந பூஜா தத் விக்ரஹ ஸ்தாபன பஜ நாதிகளையும்
தத் தத் தேவதா விக்ரஹ துல்யத்வாதி பிரம விஷயமாம் படியான உன் திவ்ய மங்கள விக்ரஹங்களையும் எங்கும் வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய்
உன் போல்வாரையும்
உன் ஸமர் அல்லாரையும் இல்லாத
நின் கண் வேட்கை எழுவிப்பனே –
இங்கனே உன் பிரகிருதி பரவசராய் உன் நிக்ரஹத்தால் தானே அந்நிய விஷய ப்ரவணர்க்கு
அடியேன் எங்கனே உன்னில் ப்ராவண்யத்தைப் பிறப்பிக்கக் கடவேன்
எங்கனே என்பது இதில் அர்த்த ஸித்தம் –
———
அவதாரிகை
நின் கண் வேட்கை எழுவிப்பனே -என்று ஜகத்தைத் திருத்துகையிலே இவர் ஒருப்பட்ட பிரகாரத்தைக் கண்ட பார்ஸ்வஸ்த்தர்
இவர் பகவத் அனுபவம் பண்ணப் பரகு பரகு என்னாதே ஜகத்திலே கண் வைக்கப் பெற்றோம் இறே என்று ஸந்துஷ்டாராக
அத்தைக் கண்டவர்
அஸ்திரமான ஸம்ஸாரத்தை அகலத் தேடுமது ஒழிய அநுபவத்திலே ப்ராவண்யம் உடையோருக்கு
அனுபாவ்ய விஷய பிரகாசம் ஸங்கோசிக்குமோ என்று அருளிச் செய்கிறார் –
(எம்பார் -இருளே காண வில்லையே என்றார் அன்றோ)
எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – – 97-
பாசுரம் -97-எழுவதுவும் மீண்டு படுவதும் பட்டு –
துறையடைவு–தலைவனைப் பிரிந்து தூக்கம் இல்லாமல் தலைவி வருந்துதல் –
பரிவதில் ஈசனை -1-6-
பதவுரை
எழுவதும்–ஸூர்யன் உதிப்பதையும்
மீண்டே படுவதும்–மறுபடி அஸ்தமிப்பதையும்.
பட்டு–இங்ஙனம் நிகழ்ந்து
எனை ஊழிகள்–எத்தனையோ காலங்கள்
போய் கழிதலும்–சென்று கழிவதையும்
கண்டு கண்டு–பார்த்துப் பார்த்து
எள்கல் அல்லால்–வருந்துதலே யல்லாமல்
இமையோர்க்கள் குழாம் -தேவர்கள் கூட்டம்–
தொழுவதும் வணங்குவதையும்–
சூழ்வதும் (பரிவாரமாகச், சூழ்ந்து கொள்வதையும்.
செய்–செய்யப் பெற்று
தொல்லை மாலை–ஆதியந்த மில்லாதவனான திருமாலை
கண் ஆர கண்டு–கண்கள் த்ருப்தியடைய ஸேவித்து
கழிவது ஓர் காதல் உற்றார்க்கும்–(அவன் பக்கல்) மிக்க தொரு வேட்கையைப் பொருந்தினவர்க்கும்
உம்மைத் தொகை -தோழி சொல்ல இவள் பதில் என்பது தேறும்
கண்கள் துஞ்சுதல்–கண்ணுறக்கம் கொள்ளுதல்
உண்டோ–உள்ளதோ? (இல்லை என்ற படி.)
வியாக்யானம்
எழுவதும்
உத்பன்னமான பிரகாரத்தையும்
மீண்டே படுவதும்
உத்பத்தி தசையிலே மற்றைப்படியே நசிக்கிற பிரகாரத்தையும்
படு எனை யூழிகள் போய்க் கழிவதும்
உத்பன்னமாய் அநேக காலம் சென்று முடிகிற பிரகாரத்தையும்
இங்கு பட்டு என்று
முத்துப் பட்டு என்னுமா போலே உத்பத்தியைச் சொல்லுகிறது
கண்டு கண்டு எள்கல் அல்லால்
இப்படி அல்ப கால உத்பத்தி விநாசத்தையும்
சிர கால உத்பத்தி விநாசத்தையும்
பிரதி க்ஷணம் அபரோக்ஷித்து நெகிழுமது ஒழிய
இமையோர்கள் குழாம் தொழுவதும் சூழ்வதும் செய்
அஸ்க்கலித (நழுவாத குறையாத )ஞானரான ஸூரிகளுடைய சங்கமானது
நித்ய அஞ்சலி பந்தத்தையும்
கைங்கர்ய பரராய்க் கொண்டு பரிசர ஸேவையையும் பண்ணா நிற்கிற
தொல்லை மாலைக்
இவ் வாத்மாவின் பக்கல் அநாதியான வாத்சல்யத்தை யுடையவனை
மால் என்று
பெரியவனாய் -ஸ்வாமித்வத்தைச் சொல்லிற்று ஆகவுமாம்
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும்
கண்கள் நிறையும்படி அனுபவித்துக் காலம் கழியும்படி
அத்விதீயமான ஆசையிலே நின்றவர்களுக்கும்
உண்டோ கண்கள் துஞ்சுதலே –
அவன் பக்கல் வைத்த கண்கள் செம்பளிக்கைக்கு விரகுண்டோ
பகவத் அனுபவ அபிநிவிஷ்டரானார்க்கு ஞான ஸங்கோசம் பிறக்க விரகு இல்லை என்று கருத்து –
——————–
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
கண் உறங்கிற்றோ
பகவத் விஷயத்தில் கை வைத்தாரில் இதுக்கு முன் கண் உறங்கினார் உண்டு என்று கேட்டு அறிவார் உண்டோ
———-
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை
எஞ்ஞான்று தலைப்பெய்வன் என்பது தவிர்ந்து
ஸூக ஸூபத்தராய் இரீர் என்று பகவத் அபிப்ராயமாக
தெளி விசும்பில் உள்ள இமையோர்கட்க்கு எல்லாம் இதுவே ஸ்வ பாவமாய் இருக்க
அவர்களில் ஒருவரான எனக்கு அது உண்டோ என்கிற
அபிப்ராயத்தால் இவ்வர்த்தத்தை ஸ்வ ஸித்தாந்தஸ்த்தரிலும் அறிய அருளிச் செய்கிறார் இதில்
வியாக்யானம் –
எழுவதும்
ஆதித்யாதி கிரஹங்கள் உதிப்பதும்
மீண்டே
உதய கார்யம் கழிந்தவாறே
படுவதும்
அஸ்தமிப்பதும்
படு எனை யூழிகள் போய்க் கழிவதும்
சதுர் முகர் செத்து அநேக கல்பங்களாகக் காலம் கழிவதும்
கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
ஸதா பஸ்யந்தி ஸூரய-ருக்வேதம் -என்கிறபடியே
இதுகளை எல்லாம் அவரோக்ஷித்துக் கண்டு ஐயோ என்ற
ஆர்த்த ஹ்ருதயம் ஒழிய நித்ய ஸூரி சங்கத்துக்கு கண் துஞ்சுதல் உண்டோ என்று அந்வயம்
இமையோர்க்கு விசேஷணம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் -என்பது
தொல்லை மாலை
அநாதியாக த்ரிவித ஆத்ம வர்க்கத்தில்
ஆதேயத்வ சேஷத்வ ஸ்வா யத்த சத்தாஸ்தேம ப்ரயத்ன பலத்வங்களால்
ஸ்வ தேஹமாகவே விபூதி த்வயத்திலும் எப்போதும் மால் செய்யுமவனை ஸதா கண்டு கொண்டு
ஸ்வா பாவிக ஸர்வ ஸாஷாத் காரம் உள்ளவர்களாய் என்றபடி
கண்ணார
யாவத் தர்மபூத ஞான வியாப்தியும்
திவ்ய விக்ரஹங்களில்
தொழுவதும் -அடிமை செய்வதும்
நம புரஸ்தாதத ப்ருஷ்ட தஸ்தே -ஸ்ரீ கீதை -11-40-
சூழ்வதும்
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –திருப்பல்லாண்டு -12-
யேந யேந ததா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி -பரம ஸம்ஹிதை -என்றபடி செய்து கொண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கு
காலம் கழியக் கழிய அத்விதீயமான அன்பும் ஆர்வமும் வளர்ந்து வருமவர் களானவர்களுக்கு
உண்டோ கண்கள் துஞ்சுதலே –
கண்கள் துஞ்சுதல் உண்டோ
அவர்களில் தலைவனான எனக்கு அது இல்லை என்பது கை முத்ய ஸித்தம் என்று அபிப்ரேதம்-
————–
அவதாரிகை
இப்படி அனுபாவ்யனான ஈஸ்வரனுடைய-1- மேன்மையிலும் -2-நீர்மையிலும் உண்டான
போக்யதை பரிச்சேதிக்க அரிது என்கிறார்
துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 –
பாசுரம் -98-துஞ்சா முனிவரும் அல்லாதாவரும் –
துறையடைவு-தலைவனது அருமையை தோழி கூறுதல் –
கெடுமிடராய-10-2-
பதவுரை
துஞ்சா முனிவரும்–கண்ணுறங்குதலில்லாத ரிஷிகளும்-ஸநகாதி முனிவர்கள் -ப்ரஹ்ம ஏக பாவனை
அல்லாதவரும்–தேவர்கள் முதலிய மற்றையோரும்
தொடர நின்று–பின்பற்றி வழிபட நிற்பவனும்
எஞ்சா பிறவி இடர் கடிவான்–(அடியார்களுடைய) குறைவற்ற -சுருக்கம் அற்ற -பிறப்புத் துன்பங்களைப் போக்கி யருளுபவனும்
தன் சார்வு இலாத–தன்னோடு இணைத்துச் சொல்லலாம் படி ஓர் உவமை பெறாத
தனிபெரும் மூர்த்தி தன்–ஒப்பற்ற சிறந்த ஸ்வரூபத்தை யுடையவனுமான எம்பெருமானது.
வெண்ணெய் ஊண் என்னும் ஈனம் சொல்–வெண்ணெய் உணவாயிற்றென்று சொல்லப்படுகிற இழி சொல்லுக்கு இடமான
மாயம்–ஆச்சரியம்
இமையோர் தமக்கும் மேலுலகத்தாருக்கும்–ஞான சங்கோசம் இல்லாத நித்ய ஸூரிகள்
செவ்வே நெஞ்சால் நினைப்பு அரிது–நன்றாய் மனத்தால் நினைப்பதற்கும் அருமையானதாம்.
செவ்வே நெஞ்சால்-திருட்டுக்கு உண்மையான -யதார்த்த ஆழ்ந்த ஞானம் கொண்ட நெஞ்சு-யோ வேத்தி தத்வதக
வியாக்யானம்
துஞ்சா முனிவரும்
முடிவில்லாத மனனத்தை யுடைய ஸநகாதிகளும்
அல்லாதவரும்
ஸ்வ அதிகார தத் பரரான ப்ரஹ்மாதிகளும்
தொடர நின்ற
தந்தாமுடைய அபிமத ஸித்தி யர்த்தமாக அனுவர்த்திக்க
அவர்களுக்குப் புருஷார்த்த ப்ரதனாய் நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான்
குன்றாது இருக்கிற சரீர ஸம்பந்த நிபந்தனை துக்கத்தைப் போக்குமவன்
சரீர ஸம்பந்தம் அறுக்கை ஈஸ்வரனுக்கு ஸ்வா பாவிக வேஷம்
அல்லாத புருஷார்த்தங்களை அபேக்ஷைக்கு ஈடாகக் கொடுக்கும் என்றபடி
இமையோர் தமக்கும் தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தராய் அபரிச்சின்ன ப்ரகாஸ யுக்தரான நித்ய ஸூரிகளுக்கும்
தன்னோடு சேர்த்தி சொல்ல ஒண்ணாதபடி அத்யந்த விலக்ஷணமாய்
த்ரிவித (கால தேச வஸ்து )பரிச்சேத ரஹிதமான ஸ்வரூபத்தை யுடையவன்
இவ் விடத்தில் மூர்த்தி என்று
ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது
ஸ்வாமித்வம் ஆகவுமாம்
(தன் சார்வு இல்லாத மூர்த்தி
தனி மூர்த்தி
பெரு மூர்த்தி)
தன் சால்வு -என்றபாடமாய்
தன்மை இல்லாத என்றுமாம்
தன் மாயம் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால்
இப்படி பெரியனானவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதமானது
நேரே நெஞ்சால் பரிச்சேதித்து நினைக்கை அரிது
அவ் வாச்சர்யம் ஏது என்னில்
வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே –
வெண்ணெயை அமுது செய்தான் என்று சொல்லப்பட்ட அபக்ருஷ்ட வசனம்
இவ் வபதானத்திலும்
இவ் வபதான ப்ரஸம்ஸியான வசன ஸாரஸ்யம் தான் பரிச்சேதிக்க அரிது என்று கருத்து –
(அவனது சீற்றமும் அருள் தானே
எந்த குணமும் எந்த சேஷதீதமும் அவன் இடம் இருப்பது ஸ்ரேஷ்டம்)
—————
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
ஸம்ஸாரிகளையும் என் படி ஆக்கக் கடவேன் என்றீர்
பகவத் விஷயத்தில் கை வைத்தார்க்குக் கண் உறக்கம் இல்லை என்றீர்
இப்படி கிடந்தது அலமாவாதே உம்முடைய பாழி யன்றோ கிருஷ்ண அவதாரம்
நவநீத ஸுர்ய விருத்தாந்தத்தை அனுசந்தித்து ஈடுபடுமவர் அன்றோ நீர்
ஆனபின்பு அத்தை அனுசந்திக்கப் பார்த்தாலோ என்ன
அல்லா இடங்களில் கரை மேலே யாகிலும் போகலாம்
இதில் இழிய என்றால் நினைக்கவும் போகாது
அதில் இழிவதில் கை வாங்கி இருக்கையை நன்று என்கிறார் –
வியாக்யானம்
துஞ்சா முனிவரும்
ஸம்ஸாரிகள் ஸப்தாதி விஷயங்களிலே உணர்ந்து இருக்குமா போலே
ஆத்ம விஷயத்திலும் ஈஸ்வர விஷயத்திலும் உணர்த்தியை உடையவர்களாய்
தமோ குண அபி பூதர் இன்றிக்கே இறே ஸநகாதிகள் இருப்பது
யா நிசா –ஸ்ரீ கீதை -2-69-
இவர்கள் தங்களை ஸர்வேஸ்வரன் ஸ்ருஷ்டிக்கைக்கு உடலாக உண்டாக்கி இருக்கச் செய்தேயும்
ஜன்மாந்தரத்தில் ஸூ ஹ்ருதத்தாலே ஸம்ஸாரத்தில் விரக்தராய் முமுஷுக்களாய் இருக்கிறபடியைக் கண்டு
இவர்கள் இதுக்கு ஆள் அல்லர்
இதுக்கு புறம்பே ஆள் தேடிக்கொள்ள வேணும் -என்னும்படி இருந்தவர்கள் இறே
அல்லாதவரும்
ஸூஹ்ருத தாரதம்யத்தாலே அவர்கள் போல் அன்றிக்கே
கர்ம பாவனையும் ப்ரஹ்ம பாவனையும் இரண்டும் கூடி இ ப்ரஹ்மாதிகள் இருப்பது
எஞ்சாப் பிறவி இடர் கடிவான்
ஒருகாலும் சுருங்கக் கடவது அன்றிக்கே முடிவு காண ஒண்ணாத படியாய்
அனாதையாய் வருகிற ஜென்ம பரம்பரையால் உண்டான இடரைத் தவிர்த்துக் கொள்ளுகைக்காக
துஞ்சா முனிவரும் அல்லாதவரும் எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
———–
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
வியாக்யானம்
துஞ்சா முனிவரும்
இவ்வகண்ட காலத்தில் சிஷ்ய குரு பரம்பரா விச்சேதம் இல்லாமலே சாதன பக்தி யதிக்ருதரான ஸர்வரும்
அல்லாதவரும்
அப்படியே ஸாத்ய பக்தி க்ருதரான ஸர்வரும்
மற்றும் ஸ்ரோத ஸ்மார்த்த கர்மாதி க்ருதரும்
தொடர நின்ற எஞ்சாப் பிறவி இடர் கடிவான்
ஸம்ஸாரி ஆத்மாவைத் தொடர்ந்து நின்ற எண்ணப்படாத ஜன்ம பரம்பரைகளால் வந்த ஜரா மரணாதி துக்க பரம்பரையைக்
கடிவான்
நிச்சேஷமாக நிவர்த்திக்குமவன்
இமையோர் தமக்கும் தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி
நித்ய ஸூரிகளுக்கும் ஸ்வ விக்ரஹங்களால் தன் விக்ரஹங்களுக்குச் சேர்த்தி சொல்ல ஒண்ணாதபடி
அத்விதீயமான ஸ்வ பாவமுள்ள திவ்ய மங்கள விக்ரஹங்களையும்
அப்படியே அபரிச்சின்னமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுமுடையவன்
தன் மாயம் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால்
மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாத் மாயிநம் து மஹேஸ்வம் -ஸ்வேதாஸ்வரம்
மயே த்யஷேண ப்ரக்ருதி ஸூயதே ஸ சதாசனம் -ஸ்ரீ கீதை -9-10-
ப்ரக்ருதிக்யா மயாக்யாதா வ்யக்தா வ்யக்த ஸ்வரூபிணி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-39-இத்யாதிகளில்
சொல்லப்பட்ட அவனுடைய ப்ரக்ருதி ஸ்வரூபாதிகள் தான் வாங் து மனஸ் பரிச்சேத்யமோ
நெஞ்சால் தான் இவ்வளவு என்று எண்ணப் போமோ
இனி அவன் ஸ்வரூபாதிகளையோ இவ்வளவு என்று எண்ணுவது
மூடர்காள் ஸ்ருதிகளாலும் யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ -தைத்ரியம் என்னப்பட்ட
அவன் ஆனந்தாதிகளில் நாம் அபரிச்சிந்ததையைச் சொல்ல வேணுமோ
வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே –
அவனுடைய ஒரு கிருஷ்ண அவதாரத்தில் ஒரு போதில் வெண்ணெய் யூண் தான் தத் காலகத்தில் சொன்ன ஹிதச் சொற்கள் தான்
பக்தர் நெஞ்சால் தான் நினைத்துத் தரிக்கப் போமோ
ஒவ்வொன்றில் -எண்ணானாய் என்னானாய் -திருநெடும் -10-என்று உருகினீராய் நீ மக்நராய்க் போக வேண்டாவோ -என்கிறார் –
——————-
அவதாரிகை
போக்யதையில் நவநீத ஸுர்ய அபதாநத்தில் காட்டில் இல்லை என்றீர்
ஸம்ஸார உத்தாரணத்துக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது இவ்விஷயத்தை என்ன
பிரஜை விழுந்த கிணற்றிலே ஒக்கக் குதித்து எடுக்கும் தாயைப் போலே
ப்ரளயம் கொண்ட பூமியை முழுகி எடுத்த மஹா உபகாரகனே என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்கிறார் –
ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99-
பாசுரம் -99-ஈனச் சொல் ஆயினும் ஆக –
துறையடைவு–தலைவி தன் அன்புறுதியைத் தோழிக்கு கூறுதல் –
செஞ்சொல் கவிகாள் -10-7-
பதவுரை
ஈனம் சொல் ஆயினும் ஆக–(என்னுடைய ஸித்தாந்தம் சிலர்க்கு) -பிரயோஜனம் அல்லாத -இழி சொல்லாயினும் ஆகுக.;
எறி திரை வையம் முற்றம்–வீசுகிற அலைகளையுடைய பிரளய வெள்ளத்திலாழ்ந்த பூமி முழுவதையும்
ஏனத்து உரு ஆய் கிடந்த–பாதாளத்தில் இருந்தும் -வராஹ மூர்த்தியாய்க் கோட்டாற் குத்தி எடுத்து வந்த
பிரான்–தலைவனும்
இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும்–பெரிய கல்பவ்ருக்ஷங்கள் பொருந்திய ஸ்வர்க்கலோகத்திலுள்ள தேவர்கட்கும்
அல்லாதவர்க்கும்–அவர்களலல்லாத நித்ய ஸூரிகள் -மற்றும் மனிதர்கட்கும்
மற்று எல்லாயவர்க்கும்–மற்றுமுள்ள நரகர் முதலியோ ரெல்லோர்க்கும்
ஞானம்–அறிவைக் கொடுக்கிற
பிரானை அல்லால்–தலைவனுமாகிய எம்பெருமானையன்றி
நான் கண்ட நல்லது இல்லை–நான் அறிந்த நற்பொருள் வேறு இல்லை.
வியாக்யானம்
ஈனச் சொல்லாயினுமாக
நான் சொல்லுகிற பரமார்த்தம் விமுகரான ஸம்ஸாரிகள் ஏற்றுக் கொள்ளாதே இகழும்படி தண்ணிதான சொல்லாகிலுமாக
அர்த்த பவ்ருஷாதிகள் (சொத்து வீரம் )ரக்ஷகம் என்று நினைத்து இருக்கிற தேஹாத்ம அபிமானிகளுக்கு
ஸாஸ்த்ர கம்யமான பகவத் விஷயம் உத்தார ஹேது என்று உபதேசிக்கை
இகழுகைக்கு உறுப்பாம் என்று கருத்து –
எறி திரை வையம் முற்றும் ஏனத்துருவாய் யிடந்த பிரான்
எறிகிற திரையை யுடைத்தான ப்ரளயத்திலே பூமி எல்லாவற்றையும்
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ ரூபத்தைப் பரிக்ரஹித்து
அண்ட கபாலத்தில் நின்றும் ஒட்டு விடுவித்து எடுத்த மஹா உபகாரகன்
இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும்
அபிமத பல பிரதத்வத்தாலே வந்த பெருமையை யுடைத்தான கற்பக வ்ருக்ஷங்களினுடைய
செறிவை யுடைத்தான சுவர்க்கத்தில் வாஸத்தை யுடைய தேவர்களுக்கும்
(எனக்கே தன்னைத் தந்த கற்பகம் இல்லையே இவை)
அல்லாதவர்க்கும்
அத் தேவ ஜாதி தானே உத்க்ருஷ்டம் என்னும்படியான மனுஷ்ய ஜாதீயருக்கும்
மற்று எல்லா யவர்க்கும்
இவர்களிலும் அபக்ருஷ்டரான திர்யக் ஸ்தாவர ஜாதி பேதங்களில் உள்ளார் எல்லாருக்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை
ஸ்திதே மனஸி -வராஹ சரம ஸ்லோகம் இத்யாதியாலே
உத்தாரக ஹேதுவான ஞானத்தை உபதேசித்த ஸ்வாமியை ஒழிய இல்லை
நான் கண்ட நல்லதுவே –
நான் அறுதியிட்டு நல்ல அர்த்தம் என்று தம்முடைய நிஷ்கர்ஷத்தை அருளிச் செய்தார் ஆயிற்று
———–
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
பகவத் விஷயத்தில் நீர் இன்ன போது மோஹித்துக் கிடப்புதீர் என்று அறிகிறிலோம் -உம்மை விஸ்வஸிக்கப் போகிறது இல்லை
அத்ய ராஜ குலஸ் யாஸ்ய த்வததீனம் ஹி ஜீவிதம் புத்ர வ்யாதிர் நதே கச்சித் சரீரம் பரி பாததே -அயோத்யா -87-9-
ரஸவாதம் கீழ் போனால் போலே பரதாழ்வான் மோஹித்துக் கிடக்கத் திருத்தாய்மார் சொல்லுகிறார்கள் –
படைவீடாக உன்னைக் கொண்டு அன்றோ ஜீவிக்க இருக்கிறது
சக்கரவர்த்தியும் துஞ்சினான்
பெருமாள் காடேறப் போனார்
நீ இருந்தாய் என்று அன்றோ நாங்கள் இருப்பது
உன் முகத்தில் பையாப்புக் கண்டால் மீளுவர் என்னும் நசையாலே யன்றோ ஜீவித்துக் கிடக்கிறது
நீ இல்லை என்று அறிந்தால் இத் திக்கு என்று நோக்குவதோ
புத்ரேத்யாதி அபி வ்ருஷா -அயோத்யா -59-4-என்கிறபடியே படை வீட்டில் சுத்தாவரங்களும் கூட நோவு ஒன்றாய் இருக்கச் செய்தே
பிள்ளாய் உனக்கு நோவு என் என்று கேட்க வேண்டும்படி இறே சடக்கென மோஹித்து விழுந்தபடி
இப்படி ஸத் ப்ரக்ருதிகளாய் இருக்கையாலே இன்ன போது மொஹிப்பார் என்று தெரிகிறது இல்லை
ஸுலப்ய குணத்தை உபதேசிக்கப் புக்கு எத்திறம் என்று மோஹித்துக் கிடக்குமவர் இறே இவர்
ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்கப் புக்கால் பிள்ளை உறங்கா வல்லி தாசர் கண்ணும் கண்ணீருமாய்
(அத்தை இத்தை பரத்வத்தை ஸுலப்யத்தை ) ப்ரசங்கித்து சிதிலராய்க் கிடப்பர்
அத்தைக்கு கூரத்தாழ்வான் கண்டு -மஹா பாஷ்யம் கற்று சதுரஸ்ரமாக ஒன்றை நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே
பகவத் குண ப்ரசங்கத்திலே சிதிலராம்படி பிறந்த உம்முடைய ஜென்மம் ஒரு ஜென்மமே -என்று கொண்டாடினான்
ஆழ்வான் வீராணத்தில் ஒரு பெண் பிள்ளையை குடங்காலிட்டு
கள்வன் கொல் யான் அறியேன் -பெரிய திருமொழி -3-7-1- என்று சந்தையிட்டு மேலடி தோற்றாமல் மோஹித்தாராம்
இப்படிப்பட்டவர் இறே தன்னை வன்னெஞ்சராகச் சொல்லுகிறார்-
ஸ்வாமிகள் திருமழிசை தாஸரும் நஞ்சீயருமாகத் திருவாய் மொழி ஓதா நிற்க
———-
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவனே
அவன் சரமத்தால் யுக்தார்த்த ஞானமே உங்களுக்கு மோக்ஷ உபாயத்தில் நல்லதும்
அவனை அல்லால் மற்றொரு ஸித்த உபாயமாவை இல்லை
அவனால் யுக்த உபாயம் அல்லது வேறொரு ஸாத்ய உபாயம் இல்லை
இது என் ஸித்தாந்தம் என்கிறார் –
—————————–
அவதாரிகை
இப்படி ஸர்வேஸ்வரன் திருச் செவி படும்படி(கேட்டு அருளாய் )
தத் விஷயத்திலும்
ததீய விஷயத்திலும்
தமக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தையும்
தத் விஸ்லேஷ ஹேதுவான தேச வாஸாதிகளால் உண்டான உத்வேக யோகத்தையும் வெளியிட்டு
இம் முகத்தாலே தம்முடைய விருத்த கீர்த்தனம் பண்ணின இப்பிரபந்தத்தில் அபி யுக்தரானவர்களுக்குப் பலம்
தாம் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அபேக்ஷித்த ஸம்ஸார நிவ்ருத்தி என்று அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்
நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100-
பாசுரம் -100-நல்லார் நவில் குருகூர் நகரான் —
துறையடைவு–
முனியே நான்முகன் -10-10-
பதவுரை
நல்லார்–நல்ல குணங்களையும் நல்ல காரியங்களையுமுடையரான மஹான்கள்
நவில்–புகழ்ந்து கூறப்பெற்ற
குருகூர் நகரான்–திருக்குருகூரென்னும் திருப்பதியில் திருவவதரித்தவரும்.
திருமால்–லக்ஷ்மீபதியான எம்பெருமானது
திருபேர்–திருநாமங்களை
நல்லார்–பயின்றவரான அடியார்களுடைய
அடி–திருவடிகளாகிற
கண்ணி–பூமாலையை
சூடிய–தமது முடிக்கு அணியாகக் கொண்டவருமான
மாறன்–நம்மாழ்வார்
விண்ணப்பம் செய்த–(பகவத் ஸந்நிதாநத்திலே) விஜ்ஞாபநஞ்செய்த
சொல் ஆர் தொடையல்–சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை வடிவமான
இ நூறும்–இந்த நூறு பாசுரங்களையும்
வல்லார்–கற்று வல்லவர்கள்
பிறப்பு ஆம்–ஸம்ஸாரத்திற்குக் காரணமும் காரியமுமாகிய
பொல்லா அருவினை–ஆத்மாவை கெடுக்க வல்ல கொடியவையாய் போக்க முடியாதவையான அரியதான ஊழ்வினைகளாகிற
மாயம் வல் சேறு அள்ளல்–ருசி வாசனைகளை பிறப்பித்து வஞ்சிக்குமதான கொடிய சேற்றின் அடர்த்தியை யுடைய
பொய் நிலத்து–பொய்யாகிய பிரகிருதி மண்டலத்தில்
அழுந்தார்–அழுத்தமாட்டார்கள் (முக்தராகப் பெறுபவர்கள் என்றவாறு.)
வியாக்யானம்
நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
நல்லார் ஆகிறார் ஆச்சார்ய விஷயத்திலே சேஷத்வ ரக்ஷகத்வாதிகளை ஏறிட்டு
ஈஸ்வரனை தத் ஸம்பந்த த்வாரா அனுபவித்துப் போரும் மதுரகவிகள் போல்வார்
அவர்களாலே நவிலப்பட்ட-ஸ்துதிக்கப்பட்ட -திருக்குருகூர் என்று
திரு நாமமான திரு நகரி யுடையவர்-
திரு மால் திருப் பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன்
ஸ்ரீ யபதிக்கு வாசகமான மூல மந்த்ர த்வயங்களில் அர்த்த அபி யுக்தரான பரம பாகவதருடைய திருவடிகள் ஆகிற
பூம் கொத்தை சிரஸா வஹித்துப் போருகிற ஆழ்வார்
இத்தால் -ஸஹோ வாஸ வ்யாஸ பாராசர்ய -யஜுர் என்றும்
வால்மீகிர் பகவான் ருஷி -பால -4-1- என்றும் சொல்லுமா போலே
விலக்ஷண பரிக்ரஹத்தையும்
ஜென்ம தேச பூர்த்தியையும்
வல்லார் அடிக்கண்ணி சூடிய என்று ஞானாதிக்யமும் சொல்லுகையாலே
பிரபந்த கர்த்தாவான ஆழ்வாருடைய ஆப்த தமத்வம் தோற்றிற்று
விண்ணப்பம் செய்த
என்று பாரதந்தர்யத்தாலே ஸ்வரூப ஞானம் ப்ரகாசிக்கையாலே
பிரம விப்ர லம்பாதி தோஷ ராஹித்யம் தோற்றிற்று –
சொல்லார் தொடையில்
என்று ஸப்த சந்தர்ப்பத்தை மாலாகாரம் ஆக்குகையாலே
இது கர்த்தவ்ய புத்த்யா செய்தது அன்று -கைங்கர்ய புத்த்யா செய்தது என்றபடி
இந்நூறும்
என்று இப்பாட்டுக்கள் நூறும் தனித்தனியே மாலா ரூபமாய்
பகவத் விஷயத்துக்கு சிரஸா வாஹ்யமாயும் ஹ்ருத்த்ய மாயும் இருக்கிற படி உகப்புக்கு விஷயம் என்றதாயிற்று –
வல்லார்
இப்பாட்டு நூற்றினுடையவும் பாவ கர்ப்பமான அர்த்தத்தை அனுசந்திக்க வல்லவர்கள்
அழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே –
பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே –நிலத்து – அழுந்தார்
பிறப்பாலே உண்டாகக் கடவதாய் துக்க ஹேதுவாய் இருக்கிற
கடக்க அரிய கர்மத்தை யுடைத்தாய்
அறிந்தாலும் கால் வாங்க ஒண்ணாத படியான ஆச்சர்யத்தை யுடைத்தான
புத்ர தாராதி சங்கம் ஆகிற சிக்கென்ற சேற்றையும் கொண்டு முழுக்கும்படியான நரகம் ஆகிற அள்ளலை யுடைத்தாய்
அஸத்ய ஸப்த வாஸ்யமான ப்ரக்ருதி மண்டலத்தில் எழுந்தார்கள்
பொய்ந் நிலத்தில் அழுந்தாரே
என்று ஏகாரம் தேற்றம் ஆகவுமாம்
பொய்ந் நிலத்தே என்று ஈற்று அசையாகவுமாம்
———–
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
இப்பாட்டில் பிரபந்தம் கற்றாருடைய பேறு சொல்லுகிறது
பகவத ப்ரஸாத லப்த்த ஞானத்தை யுடையீருமாய்
இப்படி அறுதியிட்டுக் காண்கைக்கு ஈடான சக்தியை யுடையீருமாய் இருக்கையாலே நீர் இப்பேறு பெற்றீர்
உம்மைப் போலே ஞானம் இன்றிக்கே பாக்ய ஹீனராய்ப் பிற்பாடருமான ஸம்ஸாரிகள் செய்வது என் என்ன
அவர்களுக்கு என்னத்தனை ஞானம் இல்லையே யாகிலும் நான் சொன்ன இப்பாசுர மாத்ரத்தைச் சொல்ல வல்லாரும் எல்லாம்
நான் பெற்ற பேறு பெறுவார்கள் என்கிறார்
வியாக்யானம்
நல்லார் நவில்
லோகத்தில் சத்துக்கள் அடைய ஆழ்வார் ஆழ்வார் என்னும் அத்தனை
ராமோ ராமோ ராம -யுத்த -131-101-இதிவத்
ஸர்வதா பிகத ஸத்பி -பாலா -1-16-
பெருமாள் ஸ்ரமம் செய்து விட்டு ஒரு நிழலிலே இருந்த அளவிலே பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனரானவர்கள்
தங்களுக்கு உறுப்பானவை கற்கைக்காக வந்து படுகாடு கிடப்பர்கள்
ஸமுத்ர இவ ஸிந்துபி
இப்படிக் கிடக்கிறது இவர் குறை நிரப்புகைக்கோ என்னில் பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புகைக்கு அன்று இறே ஆறுகள் வந்து புகுருகிறது
நடுவு தரிப்பில்லாமை இத்தனை இறே
பேராளன் பேரோதும் பெரியோர் -பெரிய திரு -7-4-4-என்னுமா போலே இவர்களை நல்லார் என்னும் இத்தனை ஒழியப் பாசுரம் இடப்போகாது
இவர்கள் பேச்சுகளும் தலை மிக்கு இருக்கும்
திருமால் இத்யாதி
அவர்கள் அடைய ஆழ்வார் ஆழ்வார் என்னா நிற்கச் செய்தே
இவர் தாம் பயிலும் திருவுடையார் யாவரேலும் கண்டீர் –எம்மை ஆளும் பரமர் –3-7-1- என்னா நிற்பார்
ஸ்ரீ யபதியினுடைய திரு நாமங்களை சொல்லுகைக்கு அதிகாரம் உள்ளவர்களுடைய
திருவடிகளாகிற மாலையைச் சூடுகிற இத்தையே நிரூபகமாக யுடைய ஆழ்வார்
விண்ணப்பம் செய்த
அடியேன் செய்யும் விண்ணப்பமே -திருவிருத்தம் -1-என்று தொடங்கி
விண்ணப்பம் செய்த வார்த்தை யாயிற்று
சொல்லார் தொடையல்
ஆப்த வாக்கியம் என்று ஆதரிக்க வேண்டா
பாட்யே கேயே சதுரம் -பாலா -4-8- என்று இருக்கிற இதில்
ஸாரஸ்யத்துக்காக ஆதரிக்க வேண்டும்
இந்நூறும்
பாரதம் போலே பரந்து இருத்தல்
ப்ரணவம் போலே சுருங்கி இருத்தல் செய்யாதே நூறு பாட்டாய் ஞாதவ்ய அம்சம் அடைய உண்டாய் இருக்கை
வல்லார் அழுந்தார்
பலத்தை முற்படச் சொல்லுகிறார்
அது எங்கே என்னில்
பிறப்பாம்
ஜென்மம் ஆகிற
பொல்லா
ஞான ஆனந்த லக்ஷணமாய்
ஈஸ்வர சேஷமாய் இருக்கிற ஆத்ம வஸ்துவுக்கு அனுரூபம் அன்று இறே அசித் ஸம் சர்க்கம் –
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .