Archive for the ‘பெரியவாச்சான் பிள்ளை’ Category

ஸ்ரீ கேசவாதி திரு நாமங்களின் மஹிமை —

April 29, 2023

ஸ்ரீ பன்னிரு திருநாமப் பாடல்கள்

 ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி:2.3.1-13

 ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய்மொழி: 2.7.1-13

———–

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி 2-3 -ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

(பன்னிரு திரு நாமப் பதிகம் இது
இதே போல் கேசவன் தமர் –2-7-திருவாய் மொழியும்
கலியனும் )

அவதாரிகை –
கீழில் திருமொழியில் –
இவனுடைய பால்ய அனுகுணமாக முலை உண்கையை மறந்து கிடந்து
உறங்குகிறவனை எழுப்பி -முலை உண்ண வேண்டும்  என்று அபேஷித்து-
அவன் இறாய்த்து இருந்த அளவிலும் விடாதே -பஹுமுகமாக நிர்பந்தித்து –
யசோதை பிராட்டி முலை ஊட்டின பிரகாரத்தை –
அவளுடைய ப்ராப்தியையும் ( மாத்ரு பாவநா ) சிநேகத்தையும் உடையராய் கொண்டு –
தத் காலம் போலே அவனைக் குறித்து பேசி அனுபவித்து இனியரானார் –

அவள் அவனுக்கு
1-காது குத்தி –
2-காது பெருக்கி –
3-காது பணிகளும் இட்டு அனுபவிக்க ஆசைப்பட்டு –
காது குத்துகையாகிற உத்சவத்துக்கு -ஊரில் பெண்களை எல்லாம் அழைத்து விட்டு –
வந்தவர்களை சம்பாவிகைக்கு ஈடான பதார்த்தங்களும் சம்பாதித்து வைத்து –
அவனை-காது குத்த -என்று அழைக்க

அவன் -நோம் -என்று அஞ்சி -மாட்டேன் -என்னச் செய்தேயும் –
(இது நோவு அறிகிற பருவம்
கீழே முலை உண்ணாமல் உறங்கினான் )
அவன் அஞ்சாதபடியான வசனங்களைச் சொல்லியும் –
அவனுக்கு அபிமதமான பதார்த்தங்களை காட்டியும் உடன் படுத்திக் கொண்டு –
காது பெருக்கின பிரகாரத்தை –
தாமும் அவளைப் போலே அனுபவிக்க ஆசைப்பட்டு –
தத் அவஸ்த ஆபந்னராய் கொண்டு –
தத் காலம் போலே அவனைக் குறித்து
அப் பாசுரங்களைப் பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிறார் இத் திருமொழியில் –

——————————–

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரும்  இல்லை கடல் வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் – 2-3 1- –

பதவுரை

பாடு உடைய–பெருமையை உடைய-ஸூவ ஜன ரக்ஷண பரிவை உடைய –
நின் தந்தையும்–உன் தகப்பனும்
போய்–(வெளியே) போய்
தாழ்த்தான்–(திரும்பி வருவதற்குத்) தாமஸித்தான்;
பொரு திறல்–போர் செய்யுந் திறமை யுள்ள
கஞ்சன்-கம்ஸனோ
கடியன்–(உன் விஷயத்தில்) மிகவும் க்ரூரனாயிராநின்றான்;
கடல்–கடல் போன்ற (ச்ரமஹரமான)
வண்ணா–வடிவை யுடையவனே!
உன்னை–உன்னை
காப்பாரும்–பாதுகாப்பவரான வேறொருவரும்
இல்லை–(இங்கு இப்போது) இல்லை;
(நீயோவென்றால்)
தனியே போய்–அஸஹாயனாய்ப் போய்
எங்கும்–கண்ட விடங்களிலும்
திரிதி–திரியா நன்றாய்;
பேய்–பூதனையினுடைய
முலை பால்–முலைப்பாலை
உண்ட–உட்கொண்ட
பித்தனே–மதி மயக்கமுள்ளவனே!
கேசவ-கேசவனே!
நம்பி–பூர்ணனானவனே!
உன்னை காது குத்த–உன் காதுகளைக் குத்துவதற்காக
ஆய் பாலர்–இடைச்சியர்களாகிய
பெண்டுகள் எல்லாரும்–எல்லாப் பெண்களும்
வந்தார்–வந்திரா நின்றார்கள்;
நான்–நானும்
அடைக்காய்–(அவர்களுக்கு ஸம்பாவிக்க வேண்டிய) வெற்றிலை பாக்குகளை
திருத்தி வைத்தேன்–ஆய்ந்து வைத்திருக்கிறேன்.

போய் இத்யாதி –
பாடுடைய நின் தந்தையும் -போய் -தாழ்த்தான் -புத்திர  ரஷணத்திலும் ஸுவ ஜன ரஷணத்திலும் –
இடமுடைய நெஞ்சை உடையனான -உன்னுடைய பிதாவும் -பசுக் கடையிலே சென்று வருகிறேன் –
வரும் அளவும் நீ பிள்ளையை ரஷித்துக் கொள் -என்று போய் வரவு தாழ்த்தான் –

அன்றிக்கே –
போய் -என்ற இது –
மிகுதிக்கு வாசகமாய் -(போய்ப்பாடு-மிகுதியான பாடு -ரக்ஷணம் )
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணத்தில் மிகவும் அளவு உடையனாய் –
கூர்  வேல் கொடும் தொழிலன் -என்கிறபடியே நீ பிறந்த அன்றே தொடங்கி-
வேலைப் புகர் எழ கடைந்து பிடித்து -தொட்டில் கீழே ஒரு எறும்பு ஊரிலும் –
சிம்ஹத்தின் மேலே சீறுமா போலே சீறி -உன்னை நோக்கிக் கொண்டு திரியும்
பிதாவானவனும் கார்யார்தமாக போன இடத்தே விளம்பித்தான் என்னவுமாம் –

பொரு திறல் கஞ்சன் கடியன் –
பொருகையில்  மிடுக்கை உடையனான கம்சன் -உன்னளவில் மிகவும்
க்ரூரன்-உன்னை நலிகைக்கு இடம் பார்த்து திரிகிறவன் ஆகையால் –
ஆரை வரவிடும் -எது செய்விக்கும் -என்று தெரியாது –

காப்பாரும் இல்லை –
அதுக்கு மேலே விரகு அறிந்து -ரஷிக்க வல்லாரும் இங்கு இல்லை –
ரஷகரான அவர் வந்திலர் –
நானோ அபலை -வேறோர் பரிவர் காண வில்லை -யார்தான் ரஷிப்பார்

கடல் வண்ணா உன்னை –
தன்னேராயிரம் பிள்ளைகள்-என்கிறபடியே -இவ்வூரிலே திரிகிற அநேகம்
பிள்ளைகளுக்கு உள்ளே நானும் ஒருவனாய் திரியா நின்றால்
என்னை  அவர்கள் அறிய புகா நின்றார்களோ என்றால்-
என்னை அவர்கள் அறியப் புகா நின்றார்களோ என்று – நீ நினைக்க வேண்டா –
கடல் போலே ஸ்ரமஹரமாய் இருக்கிற உன் வடிவழகே உன்னை காட்டிக் கொடாதோ –
இப்படி இருக்கிற உன்னை உணர்ந்து ரஷிப்பாரும் இல்லை -என்னுதல்-

ஒரு விரோதிகளே இல்லை ஆயினும் -அஸ்த்தானே பய சங்கை  பண்ணி
மங்களா சாசனம் பண்ண வேண்டும்படியான அழகு உடைய உன்னை –
விரோதி பூயிஷ்டமான இவ்விடத்தில் பரிவராய் ரஷிப்பார் யாருமில்லை என்னுதல் –

தனியே போய் எங்கும் திரிதி –
பிள்ளைகள் தன்னோடு திரிகிறாய் என்னவும் ஒண்ணாதபடி –
அவர்களையும் விட்டு தனியே போய் எங்கும் சஞ்சரியா நின்றாய்
அவர்கள் தன்னோடு கூடப் போனால் தான் பிரயோஜனம் என்-

பேய்ப் பால் முலை உண்ட பித்தனே –
பேயானவள் தாய் வடிவை கொண்டு வர -அவளைத் தாயாகவே நினைத்து –
அவள் முலைப்பாலை இருந்துண்ட  பிராந்தன் நீ அல்லையோ –
ஆகையால் -மாயா ரூபிகளான அசுரர்கள் ஒக்க வடிவுடைய
பிள்ளைகளோடு ஒத்த வடிவைக் கொடு வந்து கலசி நின்றாலும் -அவர்களை பிள்ளைகளோ பாதி
தோழன் மாறாக நினைப்பான் ஒருவன் இறே நீ என்கை

கேசவ நம்பீ –
இப்படி நீ என் செய்ய பயப்படுகிறது -நான் கேசவ நம்பி அன்றோ -என் கையிலே
கேசி பட்டது அறியாயோ என்று -தன் ஸௌர்ய பூர்த்தியை காட்ட –
அத்தை (அந்த பயத்தை ) அவ்வளவிலே விட்டு –
தான் உபக்ரமித்த கார்யத்தில் புரிந்து –

நானே அன்று காண்-
உன்னைக் காது குத்துவதாக ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்கள்-
வந்தவர்களை சம்பாவிகைக்கு ஈடான அடைக்காய் முதலானவையும் நான் திருத்தி வைத்தேன் –
ஆன பின்பு நீ காது குத்தும்படி வர வேணும் -என்கிறாள் –

——————————————

வண்ணப் பவள மருங்கினில் சாத்தி மலர் பாத கிண் கிணி ஆர்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய்
எண்ணற்கு அரிய பிரானே -திரியை எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகு உடைய கனகக் கடிப்பும் இவையா -2 3-2 – –

பதவுரை

நண்ணி தொழுமவர்–கிட்டி வணங்குகின்றவர்களுடைய
சிந்தை–மநஸ்ஸில் நின்றும்
பிரியாத–விட்டு நீங்காத
நாராயணா–நாராயணனே!
(நீ)
வண்ணம்–(மிக்க செந்) நிறத்தையுடைய
பவளம்–பவழ வடத்தை
மருங்கினில்–திருவரையிலே
சாத்தி–சாத்திக் கொண்டு
மலர்–தாமரை மலர் போன்ற
பாதம்–பாதங்களிலணிந்த
கிண் கிணி–சதங்கை
ஆர்ப்ப–ஒலிக்கும்படி
இங்கே வாராய்
(உன் மேல் அன்பில்லாதவர்களுக்கு)
எண்ணற்கு அரிய பிரானே–நினைப்பதற்கு அருமையான ஸ்வாமியே!
திரியை–நூல் திரியை
எரியாமே–எரிச்சலுண்டாகாதபடி
காதுக்கு-(உன்) காதுகளுக்கு
இடுவன்–இடுவேன்;
(அப்படித் திரியை யிட்டுக் காது பெருக்கினால் பின்பு நீ அணிய வேண்டியவையான)
கண்ணுக்கு நின்றும் அழகு உடைய–கண்களுக்கு மிகவும் அழகை யுடைய (தர்ச நீயமான)
கனகம் கடிப்பும்–பொற் கடிப்பும்
இவை–இவையாகும்;
ஆ–ஆச்சர்யம்.

வண்ணம் இத்யாதி –
ஆகரத்தில் பிறக்கையாலே நிறம் உடைத்தாய் இருந்துள்ள -பவளத்தினுடைய வடத்தை –
அது தனக்கும் அழகு கொடுக்க வற்றான திரு வரையில் சாத்தி –

மலர் இத்யாதி –
தாமரைப் பூ போலே இருக்கிற திருவடிகளில் சதங்கைகளானவை த்வநிக்க-

திரு வரையும் பவள வடமுமான சேர்த்தி அழகு தோற்றும்படியாகவும் –
திருவடிகளில் சாத்தின சதங்கை த்வநிக்கும் படியாகவும்
வர வேண்டும் என்று கருத்து –

நண்ணி இத்யாதி –
அஹங்காராதிகளாலே உன்னை அகன்று திரிகை அன்றிக்கே –
தத் ராஹித்யத்தாலே உன்னைக் கிட்டி –
ஸ்வ சேஷத்வ அனுரூபமாக தொழுகையே யாத்ரையாக இருக்கும் அவர்களுடைய நெஞ்சை –
நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும் (பெரிய திருவந்தாதி )-என்கிறபடியே
இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாகக் கை கொண்டு
ஷண காலமும் விட்டுப் பிரியாதே வர்த்திக்கும் –
நாராயணனே நான் அழைக்கிற இவ் விடத்தே வராய் –

எண்ணற்கு அரிய பிரானே –
உன் பக்கல் சிநேகம் இல்லாதவர்க்கு -நினைக்கைகும்  கூட அரியனாய்
இருக்கும் உபகாரனானவனே-

1-ஆஸ்ரிதருக்கு சுலபனாய் இருக்கையும் –
2-அநாஸ்ரிதர்க்கு துர்லபனாய் இருக்கையும் –
3-மங்களா சாசன பரராய் இருப்பார்க்கு தம் பேறாய் இறே இருப்பது –

நீ என்னை அழைக்கிறது -திரியை என் காது எரிய இடுக்கைக்கு அன்றோ என்ன –

திரியை எரியாமே காதுக்கு இடுவன் –
திரியை உன் காதுகளுக்கு எரிச்சல் வாராதபடி
அனுகூலமாக இடுவன் –

கண்ணுக்கு இத்யாதி –
திரி ஏற்றி காது பெருக்கினால் -உனக்கு இடுதலாக சமைத்த –
கண்ணுக்கு மிகவும் அழகை உடைத்தாய் இருக்கிற -பொற் கடிப்புகளான இவையும்
இருக்கிறபடி பாராய் –
அழகும் என்ற இடத்தில் -ச சப்தம் அவ்யயம் –

நன்றும் அழகும் உடைய என்றும் –
கனகப் கடிப்பு என்றும் -சொன்ன இவை இரண்டாலும் –
பணித் திருத்தமும்
உபாதான வைலக்ஷண்யமும் சொல்லுகிறது –

———————————————————–

வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன்
உய்ய இவ்வாயர்  குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே
மையின்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் 2- 3-3 –

பதவுரை

உய்ய–(நாங்களெல்லாம்) உஜ்ஜீவிக்கும்படி
இ ஆயர் குலத்தினில் தோன்றிய–இந்த இடையர் குலத்திலே வந்து பிறந்த
ஒண் சுடர்–மிக்க ஒளியையுடைய
ஆயர் கொழுந்தே–இடையர்களின் கொழுந்து போன்றவனே!
வையம் எல்லாம் பெறும்–இந்த வுலகங்களை யெல்லாம் (தனக்கு) விலையாகக் கொள்ளக் கூடிய
வார் கடல் வாழும் மகரம் குழை–பெரிய கடலிலே வாழ்கின்ற சுறா மீனின் வடிவமையச் செய்யப்பட்ட மகரக் குழையை
கொண்டு வைத்தேன்–(உன் காது பெருகியிடும்படி) கொண்டு வந்திருக்கிறேன்;
(உன் காதுக்குத் தினவு உண்டாகாமலிருக்கும் பொருட்டு)
வெய்யவே–வெம்மை யுடனிருக்கும் படி
காதில் திரியை இடுவன்-(உன்) காதிலே திரியை இடுவேன்;
வேண்டியது எல்லாம்–நீ விரும்பிய பொருள்களை யெல்லாம்
(பாஷ்ய அபூவம் -கூட அபூவம்-அப்பம் -மாஷா அபூவம் அப்பம் வடை)
தருவன்–கொடுப்பேன்;
மா தவனே–ஸ்ரீ யபதியே!
இன ஆய்ச்சியர் உள்ளத்து–மடமைப் பருவமுடைய இடைப் பெண்கள் மநஸ்ஸிலே
மையன்மை செய்து-வ்யாமோஹத்தைச் செய்து கொண்டு
இங்கே வாராய்:-.

வையம் இத்யாதி –
பொற் கடிப்பு அளவே அல்ல -காது பெருக்கினால் இடும்படியாக பூமி எல்லாம்
பெறும்  பெரு விலையனான-நீண்ட கடலிலே வர்த்திக்கும் பெரிய மகரம் போலே இருக்கிற காதுப்
பணி கொண்டு வைத்தேன்  -என்ன –

நீ இது சொல்லுகிறது -இப்போது என் காதுக்கு திரி இடுகைகாக
அன்றோ -திரி இட்ட போதே காது தினவு தின்று வரும் -எனக்கு வேண்டா என்ன –

வெய்யவே காதில் திரியை இடுவன் –
தினவு-கண்டூதி சமிக்கும்படி –
வெச்சாப்போடே-அல்பமான உஷ்ணத்தை யோடு -காதுகளில் திரியை இடுவன் என்ற
இடத்திலும் -அவன் இசையாமையாலே -இசைகைக்காக –

நீ வேண்டியது எல்லாம் தருவன் –
நீ விரும்பி இருக்கும் அபூப  பலாதிகள் எல்லாம் தருவேன் என்ன-
அவ் வளவிலும் அவன் வாராமையாலே –

உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே –
இருந்ததே குடியாக குடி (இருந்ததே ஹேதுவாக )உஜ்ஜீவிக்கும்படி இவ்விடைக் குலத்தில் வந்து பிறந்து –
அது தானே உனக்கு மிகவும் தேஜஸ்சாம்படி இருப்பானாய்-
வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே –
இடையருக்கு ஒரு வியசனம் வரில் -முந்துற உன் முகம் வாடும்படி -அவர்களுக்கு தலைவன் ஆனவனே –

மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே
ஒரு பருவத்தின் இடைப் பெண்களை உன்னுடைய ஸுந்த்ர்யாதிகளாலே மதி மயங்கும்படி பண்ணி –
அவர்களுடைய நெஞ்சுக்கு சர்வ காலமும் -விஷயமாம்படி இருப்பானாய் –

மாதவனே
உன்னுடைய நெஞ்சத்து இறை (அபஹரித்து )கொள்ளும் பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே –

இங்கு வாராய் என்று
ஸ்துதி பூர்வகமாக அழைக்கிறாள் –

——————————————————–

வண நன்றுடைய வைரக் கடிப்பு இட்டு வார் காது தாழப் பெருக்கி
குண நன்றுடைய இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலாப் பழம் தந்து
சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் நான் சோத்தம்பிரான் இங்கே வாராய் -2 3-4 – –

பதவுரை

இக் கோபாலர் பிள்ளைகள்– இந்த இடைப் பிள்ளைகள்
வார் காது-(தமது) நீண்ட காதை
தாழ பெருக்கி–(தோளளவுந்) தொங்கும்படி பெருக்கி
வணம் நின்று உடைய–நல்ல நிறத்தை மிகுதியாகவுடைய
வயிரம் கடிப்பு–வயிரக் கற்கள் அழுத்திச் செய்த கடிப்பை
இட்டு–அணிந்து கொண்டு
(இப்படி தமது தாய்மார் சொல்லியபடி செய்து)
நன்று குணம் உடையர்–ஸத் குணசாலிகளாயிரா நின்றார்கள்;
கோவிந்தா–கோவிந்தனே!
நீ–நீயோ வென்றால்
சொல்லு–(தாயாகிய என்னுடைய) சொல்லை
கொள்ளாய்–கேட்கிறாயில்லை;
(இப்படி யிராமல் எனது சொல்லைக் கேட்டு)
இணை–ஒன்றோடொன்றொத்து
நன்று அழகிய–மிகவு மழகியனவா யிருக்கிற
இ கடிப்பு–இக் கடிப்பை
இட்டால்–அணிந்து கொண்டால்
நான்–நான்
இனிய பலாப்பழம் தந்து–தித்திப்பான பலாப் பழங்கள் கொடுத்து
சுணம் நின்று அணி முலை–சுணங்கையுடைய மிகவுமழகிய முலையையும்
உண்ண–(நீ) பருகும்படி
தருவன்–கொடுப்பேன்;
பிரான்–ஸ்வாமியே!
சோத்தம்–(உனக்கு) ஸ்தோத்ரம்;
இங்கே வாராய்.

வணம் இத்யாதி –
இப்படி ஸ்துத்திக் கொண்டு அழைத்த இடத்திலும் வாராமையாலே -இது தன்னை
சொன்னாகிலும் வருமோ என்று –
இந்த இடை பிள்ளைகள் ஆனவர்கள் -நல்ல நிறத்தை உடைத்தான வயிரக் கடிப்பிட்டு –
ஒழுகு நீண்ட காதானது தோள் அழவும் தாழும் படி பெருக்கி –
தாய்மார் முதலானோர் சொல்லிற்று செய்து மிகவும் குணம் உடையராய் இருக்கிற படி பாராய் –
நீயும் இப்படி இருக்க வேண்டாவோ

கோவிந்தா -நீ சொல்லுக் கேளாய் –
ஸுலப்யதுக்கு  கோவிந்தன் என்று பேர் இட்டு கொண்டு இருக்கிற நீ –
என் சொல்லு  கைக் கொள்ளுகிறாய் இல்லை என்ன –

உன் சொல்லு கேட்டு நான் கடிப்பு இடுவித்துக் கொண்டால் எனக்கு என்ன தருவாய் என்ன –

இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் –
ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் -மிகவும்
அழகியதாய் இருக்கிற இந்த கடிப்பை இட்டால்-

இனிய பலாப் பழம் தந்து –
உனக்கு இனிதான பலாப் பழம் தந்து –

சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் –
நான்-சுணங்கை உடைத்தாய் –
நன்றாய் அழகியதான -முலையை நீ அமுது செய்யும்படி தருவன் நான் என்ன –
சுணங்கு -முலை போல் தோன்றும் நிறம்
நன்றாகை-மிருதுவாக இருக்கை
(சன்னிவேச வை லக்ஷண்யம் )

சோத்தம்பிரான் இங்கே வாராய் –
இப்படி சொன்ன அளவிலும் வாராமையாலே
பிரானே உன்னைக் கும்பிடுகிறேன் -இங்கே வாராய் என்று இரந்து அழைக்கிறாள்

சோத்தம் -என்கிற இது –
அஞ்சலி பண்ணும் அவர்கள் அதுக்கு அனுகூலமாக தாழ்ச்சி தோற்ற
சொல்லுவதொரு சப்த விசேஷம் –

————————————————

சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரோடு நீ போய்
கோத்து குரவை பிணைந்து இங்கு வந்தால் குணம் கொண்டு இடிவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன  அப்பம் தருவன் பிரானே திரி இட ஓட்டில்
வேய்த் தடம் தோளார் விரும்பு கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் -2 3-5 –

பதவுரை

பிரான்–தலைவனே!
சோத்தம்–உனக்கு ஓரஞ்ஜலி
என்று–என்று சொல்லி
இரந்தாலும்–(வர வேணுமென்று) கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலும்
கொள்ளாய்–(நீ என் சொல்லைக்) கேட்டு வருகிறதில்லை;
நம்பீ–பூர்ணனே!-க்ருத்ரிம செயல்களால் பூர்ணன் –
நீ–நீ
சுரி குழலாரொடு–சுருண்ட கூந்தலை யுடைய பெண்களோடு
போய்–(ஏகாந்த ஸ்தலத்திலே) போய்
கோத்து–கை கோத்து
குரவை பிணைந்து–குரவைக் கூத்தாடி
இங்கு வந்தால் ;–(பின்) இங்கே வந்தால்
(நீ அப்படி செய்ததை)
குணம் கொண்டிடுவனோ–(உனக்குத்) தகுதியானதாக (நான்) கொள்வனோ?
பிரானே–உபகாரகனே!
திரி இட ஒட்டில்–திரியை (உன்காதிலே) இடலாம்படி நீ யிசைந்தால்
பேர்த்தும்–மறுபடியும் மறுபடியும்
பெரியன அப்பம்–பெரிய பெரிய அப்பங்களை
தருவன்–கொடுப்பேன்;
வேய் தட தோளார்–மூங்கில் போன்ற பெரிய தோள்களை யுடைய மகளிர்
விரும்பு–விரும்புகைக்கு உரிய
கரு குழல் விட்டுவே–கரு நிறமான கூந்தலை யுடைய விஷ்ணுவே!
(நீ இங்கே வாராய்).

சோத்தம் இத்யாதி –
சோத்தம்பிரான் இங்கே வாராய் -என்ற இடத்திலும் -அவன் வாராமையாலே –
பிரானே உன்னைத் தொழுகிறேன் என்று -இரந்தாலும் –
என் சொல்லைக் கை கொண்டு -நீ வருகிறாய் இல்லை என்றவாறே –

நீ அழைக்க நான் வந்த இடத்தில் குணம் கொள்ளாமல் –
நேற்று என்னை அடித்தவள் அன்றோ நீ -என்ன –

அதுவோ –
சுரி குழலாரோடு நீ போய்  கோத்து குரவை பிணைந்து இங்கே வந்தால் -குணம் கொண்டாடுவனோ நம்பீ –
ஆளற்ற இடத்தில் நீ போய் -சுருண்ட குழலை உடையராய் இருக்கும் பெண்களோடு கை கோத்து –
குரவை பிணைந்து ஆடி இங்கே வந்தால் பொடியாதே குணவான் என்று உன்னைக் கொள்வனோ நம்பீ
என்று இவள் சொன்னவாறே-

நிருத்தரனாய் நிறக –

அவ்வளவிலே கையில் திரியை எடுத்து -இத்தை இடும்படி வாராய் -என்ன –

அவன் -இது இட ஒட்டேன் -என்ன

பிரானே திரி இட ஓட்டில் பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் –
எனக்கு எல்லாப் படியாலும் உபகாரன் ஆனவனே –
திரி இத்தனையும் இட ஒட்டுதியாகில் -நீ சிறிது சிறிது என்று பொகடப் பொகட நீ விரும்பும்படி
பெரியனவான அப்பங்களை தருவேன் என்ற இடத்திலும் -அவன் வாராமையாலே –

வேய் இத்யாதி –
பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் செவ்வைக்கும் மூங்கில் போலேயாய் –
பெருத்து இருந்துள்ள தோளை உடையரான பெண்கள் விரும்பும்படியாய் –
இருண்டு நீண்ட திருக் குழலை உடையனான

விஷ்ணுவே -நீ இங்கே வாராய் என்று –
அவன் வைலக்ஷண்யத்தை சொல்லி –
புகழ்ந்து கொண்டு அழைக்கிறாள் –

—————————————————-

விஷ்ணுவை மது சூதனன் என்கிறாள் இதில் –

விண்ணெல்லாம்  கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி அதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டேன் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று அறிந்தேன்
புண் ஏதும் இல்லை உன் காது மறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார் முகிலே கடல்வண்ணா காவலனே முலை உணாயே – 2-3 6- –

பதவுரை

விண் எல்லாம் கேட்க–மேலுலகங்கள் முழுவதும் கேட்கும்படி
அழுதிட்டாய்–அழுதாய்;
(நீ அப்படி அழுகையில்)
நான்–(தாயாகிய) நான்
விரும்பி–ஆதரங்கொண்டு
உன் வாயில்–உன் வாயிலே
அதனை–(நீ மண் உண்ட) அதை
நோக்கி–பார்க்கும் போது
(அவ் வாயில்)
மண் எல்லாம் கண்டு–லோகங்களை யெல்லாம் பார்த்து
என் மனத்துள்ளே அஞ்சி–என் மநஸ்ஸினுள்ளே பயப்பட்டு
மதுசூதனே என்று–‘இவன் மதுஸூதனே யாவ’னென்று
அறிந்தேன்–தெரிந்து கொண்டேன்;
(உன்னுடைய காதிலே)
புண் ஏதும் இல்லை–புண் ஒன்றுமில்லை;
உன் காது மறியும்–(கடிப்பிடும் போது) உன் காது சிறிது மடங்கும்;
(அதை மாத்திரம்)
இறை போது–க்ஷண காலம்
பொறுத்து இரு–பொறுத்துக் கொண்டிரு;
நம்பி–பூர்ணனே!
கண்ணா–கண்ணனே!
கார் முகிலே–காளமேகம் போன்றவனே!
கடல் வண்ணா–கடல் போன்ற திரு நிறத்தவனே!
காவலனே–ரக்ஷண வியாபாரத்தில் வல்லவனே!
என் முலை உணாய்.

விண் இத்யாதி –
மண் தின்றாய் -என்று அடித்தவாறே –
ஆ -என்ன –
ஆகாசப் பரப்பு அடங்கலும்
கேட்க்கும்படி அழுத உன்னுடைய வாயில் –
மண் உண்ட சுவடு உண்டாகில் பார்ப்போம் -என்று
விரும்பி அத்தை நான்  பார்த்த அளவில் –

முன்பு போலே வாய் வழியே பூமி எல்லாம் உள்ளே இருக்கிறபடியை கண்டு –
நம்முடைய பிள்ளை என்று இவனை நலிந்தோமே -என்று
என் மனசிலே பயப்பட்டு –
இவன் நம்முடைய பிள்ளை அல்லன் –
சர்வேஸ்வரன் என்று அறிந்தேன் – என்றவாறே –

அஹம் வோ பாந்தவ ஜாத-என்னும் அவனாகையாலே –
இவள் அந்யனாக்கி வார்த்தை சொன்னது சகியாமையாலே அத்தை மறப்பித்து –
தன் பிள்ளை -என்று
இவள் அணைத்துக் கொள்ளும்படி வந்து கிட்டி நிற்க –

அவ்வளவிலே இவள் –
காதுக்கு கடிப்பு இடுவதாக உத்யோகிக்க –
என்னுடைய காது புண் -எனக்கு அது வேண்டா -என்று அவன் சொல்ல –

புண் ஏதும் இத்யாதி –
புண் ஒன்றும் இல்லை -உன்னுடைய காது தண்டு புரளும் –
சற்றுப் போது பொறுத்து இரு நம்பீ என்ன –

அவன் பொறுத்த படியால் ப்ரீதையாய்
கண்ணா –
எனக்கு சுலபன் ஆனவனே

என் கார் முகிலே –
ஜல ஸ்தல விபாகம் பாராமல் -உபகரிக்கும் காள மேகம் போலே
எனக்கு உன்னை உபகரித்தவனே

கடல் வண்ணா –
எனக்கு அனுபாவ்யமான கடல் போன்ற நிறத்தை உடையவனே

காவலனே –
எனக்கு ரஷகன் ஆனவனே –
என்று ஸ்தோத்ரம் பண்ணி
முலை உண்ண  வேணும் என்று அபேஷிக்கிறாள்

———————————————-

முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின் காதில் கடிப்பை பறித்து எறிந்திட்டு
மலையை எடுத்து மகிழ்ந்து கன்  மாரி காத்துப்  பசு நிரை மேய்ததாய்
சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திரு ஆயர்பாடிப் பிரானே
தலை நிலா போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே – 2-3 7- –

பதவுரை

முலை–‘முலையையும்
ஏதும்–(மற்றுமுள்ள பக்ஷணாதிகள்) எதையும்
வேண்டேன்–(நான்) விரும்ப மாட்டேன்’
என்று ஓடி–என்று சொல்லி ஓடிப் போய்
நின் காதில் கடிப்பை–(நான்) உன் காதிலிட்ட காதணியை
பறித்து எறிந்திட்டு–பிடுங்கி யெறிந்து விட்டு
மலையை–கோவர்த்தன மலையை
எடுத்து–(குடையாக) எடுத்துத் தூக்கி
மகிழ்ந்து–திருவுள்ளமுகந்து
கல் மாரி–கல் வர்ஷத்தில் நின்றும்
காத்து–(இடையர் முதலானாரை) ரக்ஷித்து
பசு நிரை–பசுக்களின் திரளை
மேய்த்தாய்–மேய்த்தவனே!
ஒன்று சிலை–ஒப்பற்றதொரு ருத்ர தநுஸ்ஸை
முறித்தாய்–(பிராட்டியை மணம் புரிய) முறித்தவனே!
திரிவிக்கிரமா–த்ரிவிக்ரமனே!
திரு ஆயர்பாடி–திரு வாய்ப்பாடிக்கு
பிரானே–உபகாரகனே!
தலை நிலா போதே–தலை நிற்காமலிருக்கிற இளங்குழந்தைப் பருவத்திலேயே
உன் காதை பெருக்காது–உன் காதை(த் திரியிட்டு)ப் பெருக்காமல்
விட்டிட்டேன்–விட்டு வைத்தேன்;
(அப்படி விட்டு வைத்தது)
குற்றமே அன்றே–என்னுடைய அபராதமன்றோ?

முலை இத்யாதி –
இப்படி ஸ்தோத்ரம் பண்ணி முலை உண்ண சொன்னவாறே –
முலை உண்பானாக தொடங்கின அளவிலே –
கடிப்பை எடுத்து காதிலே இட –
அத்தாலே சீறி –
முலை ஏதும் வேண்டேன்  என்று ஓடி –
நீ தருகிற முலையும்-மற்றும் உண்டான அபூபாதிகளும் -வேண்டேன் என்று –
எனக்கு பிடி படாது கை கழிய ஓடி –
நான் பின் தொடர்ந்த அளவில் எனக்கு தரிப்பாக –

நின் காதில் கடிப்பை பறித்து எறிந்திட்டு –
உன் காதில் இட்ட கடிப்புகளை க்ரோதம் தோற்ற பிடுங்கி –
என் முன்னே எறிந்து பொகட்டு-

அவ்வளவிலே இந்திரன் பசிக் கோபத்தாலே வர்ஷிப்பிக்க –
அதில் ரஷ்ய வர்க்கம் நோவு படாதபடி -மலையை எடுத்து -முன்பு ரஷகம் என்று சொன்ன
கோவர்த்தன கிரி தன்னையே குடையாக எடுத்து –

மகிழ்ந்து –
மலையை சுமந்து கொடு நிற்கிற அளவில் -சற்றும் இளைப்பு இன்றிக்கே –
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணம்  பண்ணப் பெற்றோம் -என்று உகந்து –

கன் மாரி காத்து –
அந்த கல் வர்ஷத்தில் ஒரு பசு மேலே  ஆதல் -ஒரு இடையன் மேலே ஆதல் –
ஒரு துளி விழாதபடி ரஷித்து-

பசு நிரை மேய்ததாய் –
இன வாநிரை பாடி அங்கே ஒடுங்க-( திருவாய் -7-4-) -என்கிறபடியே –
மலை பசு மேய்க்கிற இடம் தன்னில்
சென்று ஏங்கும் ஒக்க கவிகையாலே -பசுக்களை இடையர் மேய்க்கும்படி பண்ணினவனே-

சிலை ஓன்று இறுத்தாய் –
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளுக்கு சுல்கமாக விட்டதாய் -ஒருவரால் பேர்க்க எடுக்க
ஒண்ணாதபடி -அத்வீதியமாய் இருந்துள்ள -ரவ்த்ரமான வில்லை இறுத்தவனே
(வில் விழா –அந்த வில் -ஓன்று -அத்விதீயம் இல்லையே ஆகையால் இங்கு இந்த வியாக்யானம் )

திரிவிக்ரமா –
இந்திரன் இழந்த ராஜ்யத்தை மீட்டுக் கொடுக்கைக்காக -எல்லை நடப்பாரைப் போலே
திருவடிகளால் -சர்வ லோகத்தையும் அளந்தவனே –

திரு ஆயர்பாடிப் பிரானே –
திரு ஆய்ப்பாடியில் உள்ள ஜனங்களுக்கு சர்வ பிரகாரத்தாலும்
உபகாரன் ஆனவனே –
(குடை பிடித்த ஒன்றை கீழே சொல்லி –
இங்கு மற்ற ஸர்வ பிரகார ரக்ஷணம் )

இப்படி எல்லாருக்கும் உபகாரன் ஆன-நீ –
என்னுடைய அபேஷிதமும் செய்ய வேணும்  காண் என்று –
முன்பு பறித்து எறிந்த கடிப்புகளை இடுவதாக உத்யோகிக்க –
அவன் அதுக்கு இசையாது ஒழிய –

தலை நிலா இத்யாதி –
தலை செவ்வே நில்லாத இளம் பருவத்திலே உன்னுடைய காதுகளைப்
பெருக்காதே -விட்டு இட்டு வைத்த என்னுடைய குற்றம் அன்றோ –
உன்னை வெறுக்கிறது என் என்று தன் செய்தி தாழ்வை சொல்லி நோவு படுகிறாள் –

——————————————–

என் குற்றமே என்று சொலவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டி இற்றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்–
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி இட்டு சொல்லுகேன் மெய்யே -2 3-8 – –

பதவுரை-

(நான் இப்போது உன் சொல்லைக் கோளமலிருப்பது)
என் குற்றமே என்று–‘என்னுடைய குற்றமே யாகும்’ என்று
சொல்லவும் வேண்டா காண்–நீ சொல்லுதலும் வேண்டியதில்லை காண்:
(ஏனெனில்;)
நான் மண் உண்டேன் ஆக–நான் மண் ணுண்டதாகச் சொல்லி
என்னை–(மண் திண்ணாத) என்னை
பிடித்தும்–பிடித்துக் கொண்டும்
அன்பு உற்று–அன்பை ஏறிட்டுக் கொண்டு (அன்புடையவன் போல)
நோக்கி–(என் வாயைப்) பார்த்து
அடித்தும்–(என்னை) அடித்தும்
அனைவர்க்கும்–எல்லார்க்கும்
காட்டிற்றிலையே–காட்டின தில்லையோ?
(என்று கண்ணன் சொல்ல அதற்கு யசோதை)
வல் புற்று அரவின்–வலிய புற்றில் வஸிக்கின்ற பாம்புக்கு
பகை–விரோதியான கருடனை
கொடி–கொடியாக வுடைய
வாமந நம்பி–வாமந மூ­ர்த்தியே!
(இப்படி நீ ஒன்று சொல்ல நானொன்று சொல்வதாகப் போது போக்கிக் கொண்டிருந்தால்)
உன் காதுகள் தூரும்–உன்னுடைய (குத்தின) காதுகள் தூர்ந்து விடும்;
(உன்னை யடுத்தவர்கள்)
உற்றன–அடைந்தனவான
துன்பு எல்லாம்–துன்பங்களை யெல்லாம்
தீர்ப்பாய்–போக்குமவனே!
பிரானே–உபகாரகனே!
திரி இட்டு–(உன் காதில்) திரியை யிட்டு
மெய்யே சொல்லுகேன்–(உன்னை யடிக்க மாட்டேனென்று நீ நம்பும் படியான) சபதத்தைச் சொல்லுவேன்
(என்கிறாள். )

செல்லுகேன் -என்ற பாடம் ஆன போது –
உன் காதில் திரியை இட்டு விட்டு மெய்யே
கடக்கப் போய் விடுகிறேன் -என்று பொருளாகக் கடவது

என் குற்றம் இத்யாதி –
நீ உன் குற்றம் சொல்லி வெறுக்கிறது -நான் உன் சொல்லிற்று செய்திலன் என்று –
என் குற்றத்தை நினைத்தன்றோ -என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் -என்ன –
உன் குற்றம் இல்லையோ -என்ன –

உன்னை நான் என் செய்தேன் -என்ன –

என்னை நான் மண் உண்டேனாக –
மண் உண்ணாத என்னை
நான் மண் உண்டேனாக நினைத்து –

அன்புற்று நோக்கி –
ஸ்நேஹிதிகளைப் போலே -என்னுடைய வாயிலும் கையிலும் மண் சுவடு உண்டோ என்று பார்த்து –

அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்று இலையோ –
சுவடு கண்டாரைப் போலே என்னை பிடித்தும் –
அவ்வளவும் அன்றிக்கே –
அடித்தும் –
பாரிகோள் இவன் மண் தின்னும்படி -என்று எல்லோர்க்கும்
காட்டிற்று இலையோ -என்ன

கஸ்மா ன்ம்ருத மதாந் தாத்மன் பவான் பஷிதவான் ரஹ
வதந்தி தாவ காஹ்யேத குமாராஸ்தே அக்ரஜோப்யயம் நாஹம் பஷித வா நம்ப
ஸர்வேம் இத்யாபி ஸம் ஸிந யதி ஸத்ய கிரஸ் தர்ஹி சமஷம் பஸ்யமே முகம் -என்றது அனுசந்தேயம்

வன் புற்று அரவின் பகைக் கொடி வாமன நம்பீ
வலிய புற்றிலே  பாதக பீதியாலே கிடக்கும் பாம்புக்கு -பகையான கருடனை த்வஜமாக உடையவனை –
கொடும் கோளால் நிலம் கொண்ட வாமனான முதலியானவனே-

இத்தால்
திரு வனந்த ஆழ்வானை படுக்கையாக கொண்டு –
பெரிய திருவடியை த்வஜமாக கொண்டு இருப்பான் ஒருவன் என்கையாலே –
லோகத்திலே ஒன்றுக்கு ஓன்று சேராதாய் உள்ளவற்றை சேர்த்து நடத்த வல்லனுமாய்-
(வெல்லும் வ்ருத்த விபூதி நாயகன் அன்றோ இவன் )
க்ரூரமாக செய்தவற்றை ந்யாயமாக்கவும் வல்லவன் அன்றோ -என்கை

உன் காதுகள் தூரும்-
இப்படி நீ ஓன்று சொல்ல –
நான் ஓன்று சொல்லிப் போது போக்கி இருந்தால்
உன்னுடைய காதுகள் தூரும் காண் –

துன்புற்றவன எல்லாம் தீர்ப்பாய் பிரானே –
ஆஸ்ரிதரனாவர்கள் துக்கப்படும் அவை எல்லாம்
போக்கும் உபகாரகன்  ஆனவனே -என்ன –

நீ என்னை ஸ்தோத்ரம் பண்ண வேண்டா –
இனி முன் போல் பிடிக்குதல் அடிக்குதல்  செய்யேன் -என்று மெய்யாக ஒரு வார்த்தை சொல்லு –
நான் திரி இடுகைக்கு இசையும்படி என்ன –

திரி இட்டுச் சொல்லுகேன் மெய்யே –
திரியை இட்டு விட்டவாறே பின்னை மெய்யே சொல்லக் கடவேன் -என்கிறாள் –

————————————————–

மெய்யென்று சொல்லுவார் சொல்லைக்  கருதி தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக் காணவே கட்டிற்று இலையே
செய்தன சொல்லி சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன் காது தூரும்
கையில் திரியை இடு கிடாய் இந்நின்ற காரிகையார் சிரியாமே -2 3-9 – –

பதவுரை

சொல்லுவார் சொல்லை–சொன்னார் சொன்ன பேச்சுக்களை யெல்லாம்
மெய் என்று கருதி–(நீ) மெய்யென்றெண்ணி
வெண்ணெயை–வெண்ணெயை
தொடுப்பு உண்டாய்–களவு கண்டு உண்டாய்
என்று–என்று (என் மீது பழி சுமத்தி)
கையை பிடித்து–(என்) கையைப் பிடித்து
காண்–(பலரும்) கண்டு பரிஹஸிக்கும்படி
கரை உரலோடு–விளிம்பிலே வேலை செய்திருக்கிற உரலில்
என்னை–(ஒன்றும் திருடாத) என்னை
கட்டிற்றிலையே–நீ கட்ட வில்லையா?
(என்று கண்ணன் யசோதை மேல் குற்றஞ்சாட்டிச் சிரித்து நிற்க)
(அதற்கு யசோதை சொல்லுகிறாள்):
சிரிதரா–ஸ்ரீதரனே!
செய்தன–(நான் முன்பு) செய்தவற்றை
சொல்லி–சொல்லிக் கொண்டு
சிரித்து–புன் சிரிப்புச் செய்து
அங்கு–அங்கே (தூரத்தில்)
இருக்கில்–(பொழுது போக்கிக் கொண்டு) இருந்தால்
உன் காது–உன் காதுகள்
தூரும்–தூர்ந்து விடும்;
இ நின்ற காரிகையார் சிரியாமே–(உன் முன்னே) நிற்கிற இந்தப் பெண்கள் சிரியாதபடி
கையில் திரியை–(என்) கையிலுள்ள திரியை
இடுகிடாய்–இட்டுக் கொள்வாயாக.

மெய் இத்யாதி –
திரி இட்டு சொல்லுகேன்  மெய் -என்றவாறே –

உன் வார்த்தை விஸ்வசிக்க போகாது –
சொன்னார் சொன்ன வார்த்தை கேட்டு -என்னை சிஷிப்பாள் ஒருத்தி
அன்றோ -என்ன –

நான் அப்படி செய்தது உண்டோ -என்ன –

மெய்யென்று சொல்லுவார் சொல்லை  கருதி –
இவன் வெண்ணெய் களவு கண்டான் -என்று சொல்லுவார் சொல்லும் வார்த்தையை மெய்யென்று புத்தி பண்ணி –
தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று -வெண்ணெயை களவிலே ஜீவித்தாய் என்று-தொடுப்பு -களவு

கையை பிடித்து இத்யாதி –
என் கையை பிடித்துக் கொண்டு -பாரமான கரை உரலோடே-எல்லாரும்
காணும் படி என்னை கட்டிற்று இலையோ என்று சொல்லி மந்த ஸ்மிதம் செய்து இருக்க –
கரை உரலாவது -விளிம்பு சுற்றணையான  உரல்

செய்தன இத்யாதி-
இப்படி நான் செய்த குற்றங்களை சொல்லி -ஸ்மிதம் பண்ணிக் கொண்டு
என் பக்கல் வாராதே போது போக்கி -நீ அங்கே இருக்கில்

ஸ்ரீதரனே-உன் காது தூரும் காண் –
அவர்களுக்கு ஆகவாகிலும் வா என்ன –

அவ்வளவிலும் அவன் வாராமையாலே –

கையில் திரியை இத்யாதி –
நீ விரும்ப தக்க அழகை உடையார் -உன் பக்கல் ப்ராவண்யத்தால் –
உன்னை விட்டு போக மாட்டாமல் சந்நிஹிதைகளாய் நிற்கிற இப் பெண்கள் ஆனவர்கள்-
கூழைக் காது சுணைக் காது – என்றால் போலே சொல்லி சிரியாதபடி
உன் காது பெருக்கும்படி என் கையில் திரியை இடு கிடாய் என்கிறாள்

——————————————————-

காரிகையாருக்கும் உனக்கும் இழுக்கு உற்று என் காதுகள் வீங்கி எரியில்
தாரியாது ஆகில்  தலை நொந்திடும் என்று விட்டிட்டேன் குற்றமே அன்றே
சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காது பெருக்கி திரியவும் காண்டி
ஏர்விடை செற்று இளம் கன்று எறிந்திட்ட விருடீகேசா என் தன் கண்ணே -2-3 -10- –

பதவுரை

காதுகள்–(என்னுடைய) காதுகள்
வீங்கி–வீங்கிப் போய்
எரியில்–எரிச்சலெடுத்தால்,
காரிகையார்க்கும்–(பரிஹஸிக்கிற,) பெண்களுக்கும்
உனக்கும்–(என் காதில் திரியிற் நிற்கிற) உனக்கும்
உற்ற(து)–நேரிட்டதான
இழுக்கு–சேதம்
என்–ஏதேனுமுண்டோ?
(என்று கண்ணன் சொல்ல, யசோதை சொல்லுகிறாள்)
(நீ இன்னும் இளம் பருவத்தில் இருந்த போது)
தாரியாது ஆகில்–‘(திரியை இடுவது) பொறாமற்போனால்
தலை நொந்திடும் என்று–(குழந்தைக்குத்) தலை நோய் உண்டாய் விடுமே’ என்று நினைத்து
விட்டிட்டேன்–(முன்னமே காது குத்தாமல்) இருந்து விட்டேன்
அன்பினால் அப்படி விட்டிருந்தது)
குற்றமே அன்றே–(என்னுடைய) குற்றமேயாமல்லவா?
ஏர் விடை–அழகிய ரிஷபத்தின் வடிவு கொண்டு வந்த அரிஷ்டாஸுரனை
செற்று–அழித்து
இள கன்று–சிறிய கன்றின் வடிவான் வந்த வத்ஸாஸுரனை
எறிந்திட்ட–(குணிலாகக் கொண்டு விளா மரத்தின் மேல்) வீசிய
இருடீகேசர்–ஹ்ருஷீகேசனே’
என்றன் கண்ணே–எனக்குக் கண் போன்றவனே’
சேரியில்–இவ் விடைச் சேரியில்
பிள்ளைகள் எல்லாரும்–எல்லாப் பிள்ளைகளும்
காது பெருக்கி–காதைப் பெருக்கிக் கொண்டு
திரியவும்–திரியா நிற்பதையும்
காண்டி–நீ காணா நின்றாயன்றோ’

காரிகையார் இத்யாதி –
கையிலே திரியை இடு கிடாய் -என்றவாறே –

சிரிக்கிற காரிகையார்க்கும் -திரி இட வந்து நிற்கும் உனக்கும் -ஏதேனும் சேதம் உண்டோ –
என்னுடைய காதுகள்;வீங்கி எரியுமாகில் -என்று அவன் சொல்லி -கைக்கு எட்டாதபடி நிற்க –

தாரியாதாகில் இத்யாதி –
இளம் பருவத்திலே காதை பெருக்கலாய் இருக்க –
திரி முதலானவற்றை இடுகிறது பொறாதாகில்-
உன் தலையிலே நோக்காடு உண்டாம் என்று -அப்போது செய்யாமல்
விட்டு வைத்த என்னுடைய குற்றமே அன்றோ -என்ன –
தன்னை வெறுத்து -பின்னையும் விடாதே

(லோகத்தில் இளம் பிள்ளைகளுக்கு
காது குத்தினால் சிலருக்கு நோம்
சிலருக்கு குத்தா விடில் நோம் -அரும்பதம் )

சேரி இத்யாதி –
இவ்வூரில் உன் திறத்தின் பிள்ளைகள் எல்லாரும் காது பெருக்கி திரியவும் காணா
நின்றாய் இறே என்றவாறே –
அவன் அனுமதி தோற்ற நிற்க –

ஏர் விடை இத்யாதி –
வம்பு அவிழ் கானத்து மால் விடை -என்கிறபடியே -காட்டுக்குள்ளே உன்னை நலிவதாக எதிர்ந்து வந்த –
அரிஷ்ட நேமியாகிற ரிஷபத்தை நிரசித்து –
கன்றுகள் மேய்கிற இடத்தில் – இளம் கன்றான வடிவை கொண்டு வந்து -ஓர் அசுரன் நிற்க -அந்த கன்றை எடுத்து
விளவாய் நின்ற அசுரன் மேலே எறிந்து -இரண்டு தலையும் -முடித்து –
அவற்றின் கையிலே அகப்படாதே –
உன்னை நோக்கித் தந்தவனாய்-உன்னைக் கண்டவர்களுடைய சர்வ இந்திரியங்களையும் உன் வசமாக்கிக்
கொள்ளுகையாலே ஹிருஷீகேசன் என்னும் திரு நாமத்தை உடையவனாய் –
எனக்கு திருஷ்டி பூதனானவனே என்று உகந்து சொல்லுகிறாள் –
(கண்ணாவான் மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் அவனே
இவருக்கு எல்லா அவஸ்தையிலும் கண்ணாவான் அவனே காணும் )

—————————————

கண்ணைக் குளிரக் கலந்து எங்கு நோக்கிக் கடி கமழ் பூம் குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்று நோவாமே காதுக்கு இடுவன்
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பத்ம நாபா இங்கே வாராய் -2 3-11 – –

பதவுரை

குளிர–மனங்குளிரும்படி
கண்ணை-(உன்) கண்ணை
(இடைப் பெண்களுடைய கண்களோடு)
கலந்து–சேர்த்து,
எங்கும்–(அவர்களுடைய) வடிவம் முழுவதும்
நோக்கி–பார்த்து,
கடி கமழ்–வாஸனை வீசுகின்ற
பூ–புஷ்பங்களணிந்த
குழலார்கள்–கூந்தலை யுடைய அப்பெண்களினுடைய
எண்ணத்துள்–மநஸ்ஸினுள்ளே
என்றும் இருந்து–எப்போது மிருந்து கொண்டு
தித்திக்கும்–ரஸிக்கின்ற
பெருமானே–பெருமையை யுடையவனே1
எங்கள் அமுதே–எங்களுக்கு அமுருதம் போன்றவனே’
உண்ண– தின்பதற்கு
கனிகள்–(நாவல் முதலிய) பழங்களை
தருவன்–கொடுப்பேன்
கடிப்பு–காதணியை
ஒன்றும் நோவாமே–சிறிதும் நோவாதபடி
காதுக்கு–(உன்னுடைய) காதிலே
இடுவன்–இடுவேன்
சகடம்–(அஸுராவிஷ்டமாகா) சகடத்தை
பண்ணை கிழிய உதைத்திட்ட–கட்டுக் குலையும்படி உதைத்தருளின
பத்மநாபா–பத்மநாபனே’
இங்கே வாராய் –

கண்ணை இத்யாதி –
இள வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் அவன் ஆகையாலே –
கண்ணைக் குளிரக் கலந்து –
உன்னுடைய கண்ணை அவர்களுடைய கண்களோடு குளிரக் கலந்து –
இத்தால் -கண் கலவியை சொன்னபடி –

எங்கும் நோக்கி –
அவர்கள் வடிவை சமுதாயேன பார்த்து

கடி கமழ் பூம் குழலார்கள் –
பரிமள பிரசுரமான பூக்களாலே அலங்ருதமாய் இருந்துள்ள குழலை உடையவர்களுடைய –

எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பிரானே –
நெஞ்சுக்கு உள்ளே சர்வ காலமும் இருந்து -ரசிக்கும் பெரியோனே –

அன்றிக்கே –
கண்ணை -என்கிற இடத்தில் –
ஐகாரத்தை அவ்யயமாக்கி –
கடி கமழ் பூம் குழலானவர்கள் தங்கள் கண் குளிரும்படியாக
உன்னுடைய அவயவ சோபையை கலக்கக் கொண்டு
எங்கும் ஒக்க பார்த்து –
உன்னுடைய கலவியின் பிரகாரங்களை எண்ண-
அவர்களுடைய அபிமத அனுரூபமான எண்ணம் கடவாமல் -அதுக்குள்ளே என்றும் ஒக்க இருந்து –
அவர்களுக்கு நிரதிசய போக்கினாய் நிற்கும் பெருமையை உடையவனே -என்னவுமாம் –

எங்கள் அமுதே –
எங்களுடைய நிரதிசய போக்யனுமாய் -சத்தா தாரகனுமாய் இருக்கிறவனே –
உனக்கு அபிமதைகளான அவர்களுக்கும் –
பரிவரான  எங்களுக்கும் உகப்பாம்படி –
உன் காது பெருக்குகைக்கு வா -என்ன-

நான் வருகிறேன் -நீ எனக்கு என்னம் தருவாய் என்ன –

உண்ணக்  கனிகள் தருவன் –
நீ விரும்பி அமுது செய்யும் படி உனக்கு பழங்கள் தருவேன் -என்ன

ஆனாலும் கடிப்பு இடப் புகுந்தால் காது நோவுமே என்ன –

கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன் –
சற்றும் நோவு வாராதபடி உன் காதுகளுக்கு கடிப்பு
இடுவேன் என்றவாறே

உடன் பட்டமை தோற்றா நிற்க –

பண்ணை இத்யாதி –
கண் வளர்ந்து அருளுகிற தனி இடத்திலே -காவல் வைத்த
சகடம் அசூர விசிஷ்டமாய் உன்னை நலிய வர -அத்தை கோப்பு குலைய உதைத்துப்
பொகட்டு ஜகத்துக்கு வேர்ப் பற்றான உன்னை நோக்கித் தந்தவன் அல்லையோ –

இங்கனே வாராய்
என்று புகழ்ந்து கொண்டு அழைக்கிறாள் –

———————————————————–

வா என்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்கு உற்றேன் காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளை
சாவப் பாலுண்டு சகடு இறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் -2 3-12 – –

பதவுரை
(கண்ணன் யசோதையைப் பார்த்து)
வா என்று சொல்லி-‘(நான் காதில் திரியிட இங்கே) வருவாயாக‘ என்று சொல்லி
என் கையை பிடித்து–என் கையைப் பிடித்துக் கொண்டு
காதில்–காதிலே
நோவ–நோம்படி
கடிப்பை–காதணியை
இங்கு–இப்போது
வலியவே–பலாத்காரமாக
தரிக்கில்–இட்டால்
உனக்கு–உனக்கு
இழுக்கு உற்ற(து) என்–சேதமுண்டானதென்ன?
காதுகள்–(என்) காதுகள்
நொந்திடும்–நோவெடுக்கும்
கில்லேன்–(அதைப் பொறுக்க வல்ல) வல்லமை யுடையேனல்லேன்
(என்று மறுத்துச் சொல்ல – யசோதை சொல்லுகிறாள்-)
நம்பீ–பூர்ணனே’
நாவல் பழம்–(உனக்கு இஷ்டமான) நாவற்பழங்களை
கொண்டு வைத்தேன்–கொண்டு வைத்திருக்கிறேன்
இவை–இவற்றை
காணாய்–பார்ப்பாயாக
முன்–முன்பு
வஞ்சம் மகள்–வஞ்சனை யுள்ள பூதனையானவள்
சாவ–மாளும்படி
பால்–(அவளது) முலைப் பாலை
உண்டு,–பாநம் பண்ணி,
சகடு–சகடாஸுரன்
இற–முறியும்படி
பாய்ந்திட்ட–(கால்களைத்) தூக்கி யுதைத்த
தாமோதரா’ இங்கே வாராய் –

வா இத்யாதி –
பத்ம நாபா இங்கே வாராய் என்றவாறே –

வா என்று சொல்லி என் கையைப் பிடித்து –
என்னை வா என்று சொல்லி அழைத்து –
நான் வரக் கொள்ள –
என் கையை உறைக்கப் பிடித்துக் கொண்டு –

வலியவே காதில் கடிப்பை நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்கு உற்றேன் –
பலாத்காரேன என் காதில் – கடிப்பை நோம்படி திரிகி இடுவுதியாகில்
உனக்கு இங்கு சேதம் ஆவது உண்டோ –
என் காதுகள் நோம் காண்-வர மாட்டேன் என்ன –

நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ –
இவன் வருகைக்காக -நீ உகக்கும் நாவற் பழம் கொண்டு வைத்தேன் –
இவற்றை பாராய் நம்பீ -என்று காட்ட –
அத்தைக் கண்டவாறே -வருவாரைப் போலே நிற்க –

முன் இத்யாதி –
முன்பு தன் வடிவை மறைத்து -தாய் வடிவு கொண்டு -வஞ்சகையாய் வந்த பேய்ச்சியை
சாம் படியாக முலைப் பாலை உண்டு –
நலிவதாக மேலிட்டு வந்த சகடத்தை முறிய உதைத்து பொகட்டு –
அவ் விரோதிகள் கையில் அகப்படாமல் -உன்னை நோக்கித் தந்தவனாய் –

அந்த சக்திமானாய் இருக்கச் செய்தே –
அசக்தரைப் போலே என் கையிலே பிடி உண்டு –
நான் கட்டின கயற்றின் தழும்பு உன் வயற்றிலே கிடைக்கையாலே தாமோதரன் என்று பேராம்படி
என் கையாலே கட்டுண்டு நின்ற நீர்மையை உடையவன் அன்றோ –

இங்கே வாராய் என்று
உகந்து அழைக்கிறாள் –

——————————————

அச்யுத அனந்த கோவிந்த -இவற்றுக்கு இந்த பாசுரம்

அவதாரிகை –
நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

வார் காது தாழப் பெருக்கி அமைத்து மகரக் குழை இட வேண்டிச்
சீரால் அசோதை  திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – 2-3 13- –

பதவுரை

அசோதை–யசேதையானவள்
வார்–(ஸ்வபாவமாகவே) நீண்டிருக்கிற
காது–காதுகளை
தாழ–தொங்கும்படி
பெருக்கி–வளர்த்து
அமைத்து–ஓரளவிலே நிற்கும்படி செய்து
மகரம் குழை இட வேண்டி–மகர குண்டங்களை இட விரும்பி
திருமாலை–ஸ்ரீய பதியான கண்ணனை
சீரால் சொன்ன–சிறப்புக் குறையாதபடி அழைத்த
சொல்–சொற்கள்
சிந்தையுள்–(தம்முடைய) மநஸ்ஸிலே
நின்று–நிலையாகப் பொருந்தி
திகழ–விளங்க,
(அச் சொற்களை),
பார் ஆர் தொல் புகழான்–பூமியில் நிரம்பிய பழமையான-அச்யுத அனந்த கோவிந்த -இவற்றுக்கு இந்த பாசுரம் – யசஸ்ஸை யுடையவரும்
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
மன்னன்–நிர்வாஹகருமான’ பெரியாழ்வார்
பன்னிரு நாமத்தால் சொன்ன–த்வாதச நாமங்களோடுஞ் சேர்த்துச் சொல்லி யழைத்த
ஆராத–(ஓத ஓத) த்ருப்தி பிறவாத
அந்தாதி–அந்தாதித் தொடையினாலாகிய
பன்னிரண்டும்–பன்னிரண்டு பாட்டுக்களையும்
வல்லார்–ஓத வல்லவர்கள்
அச்சுதனுக்கு–எம்பெருமானுக்கு
அடியார்–அடிமை செய்யப் பெறுவர்-அந்தரங்க கிங்கராவார் –

வார் இத்யாதி –
ஸ்வபாவமே ஒழுகு நீண்ட காது வேண்டும் அளவும்  தாழப் பெருக்கி –
மட்டிலே அமைத்து -மகரக் குழை சாத்த வேண்டும் என்று ஆசைப் பட்டு-

சீரால் இத்யாதி –
சீர்மை குன்றாதபடி யசோதை பிராட்டி –
ஸ்ரீ யபதியானவனைக் குறித்து சொன்ன சொலவுகளானவை

சிந்தையுள் நின்று திகழ –
தம்முடைய திரு உள்ளத்தின் உள்ளே சர்வ காலமும் நின்று விளங்க –

பார் இத்யாதி –
பூமியில் உள்ளாருடைய ஹ்ருதயங்கள் நிறையும்படி –
பழையதான புகழை உடையராய் –
திருப் புதுவைக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார்

பன்னிரு நாமம் இத்யாதி –
வைஷ்ணவ சிஹ்னமான திரு த்வாதச நாமங்களோடே அருளிச் செய்ததாய் –
அத ஏவ
அனுபவிதாக்களுக்கு ஒரு காலும் திருப்தி பிறவாதே –
மேன் மேலும் அபேஷிக்கும்படி-நிரதிசய போக்யமாய் இருக்கிற –
அந்தாதியான இவை பன்னிரண்டு பாட்டையும் –
சாபிப்ராயமாக வல்லவர்கள்

அச்சுதனுக்கு அடியாரே –
ஆஸ்ரிதரை ஒருகாலும் நழுவ விடாத ஸ்வபாவன் ஆனவனுக்கு
அநவரத கிஞ்சித்கார பரராகப் பெறுவர்-

————————————————–

கேசவன் தமர் பிரவேசம் –

ஆடியாடியிலே -வாடி வாடும் -என்கையாலே ஒரு நீர்ச் சாவியாய் வாடினபடி சொல்லிற்று –
அந்த ஒரு நீர்ச் சாவியானது தீர காரார் கருமுகில் கலந்து வர்ஷித்த படி சொல்லிற்று –அந்தாமத்து அன்பில் –
அப்படி வர்ஷித்த படியாலே –ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்-என்று வெள்ளமிட்டு பெருகின படி சொல்லிற்று வைகுந்தா மணி வண்ணனில்
எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் மா சரிது பெற்று -என்கையாலே அவ்வெள்ளம் இரு கரையும் புரண்ட படி சொல்லுகிறது கேசவன் தமரில்-

இவர் ஆடியாடியில் பட்ட ஆர்த்தி தீர வந்து கலந்த படி சொல்லிற்று அந்தாமத் தன்பு
அக்கலவியால் பிறந்த ப்ரீதி அவனதானபடி சொல்லிற்று -வைகுண்ட மணி வண்ணன் –
அந்த ப்ரீதி தான் ஆழ்வார் ஒருவர் அளவிலும் அன்றிக்கே நம்மோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும்
வெள்ளமிட்டுப் பெருகின படியைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில் -(வைகுந்த மணி வண்ணா -அதி சங்கை போக்கி -இதில் -எமர் கீழ் மேல் ஏழு பிறப்பும் –அதி சங்கா நிவர்த்தகம் அங்கு-இங்கு -ஆழ்வார் சம்பந்திகள் அளவும் –
உன்னை நான் பிடித்தேன் சிக்கனவே -உன்னை எங்கனம் – விடுவேனோ -முடிவில் இதுவே லஷ்யம் அங்கு –உபக்ரமம் அப்பியாசம் உப சம்ஹாரம் –
இங்கு -முதல் – எமர் கேசவன் தமர் ஆனார்கள் –மேவும் தன்மையன் -ஆக்கினான் -பகவத் வ்யாமோஹ பரம் இங்கு)

சர்வேஸ்வரன் ஆழ்வாரோடு வந்து சம்ச்லேஷித்து அத்தாலே பிறந்த ப்ரீதி தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே தம்மோடு
பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் பெருகின படியை –மா சதிர் இது பெற்று -கண்டு -இது இவன் என் பக்கல்
பண்ணின பஷபாத அதிசயம் இறே-என்று இனியராய் தம்மை விஷயீகரிக்கைக்கு ஈடான குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து
அவற்றுக்கு வாசகமான திருத் த்வாதச நாமத்தாலே அவனைப் பேசி அனுபவிக்கிறார்
சர்வேஸ்வரன் ஒருவனை விஷயீகரித்தால்-அது பின்னை அவன் அளவிலே நில்லாது இறே –

மரணாந்தாநி வைராணி -ருஷிகள் குடியிருப்பை அழித்து -மைதிலியைப் பிரித்து நம் உயிர் நிலையிலே நலிந்தால் போலே
ஸ்ரீ ஜடாயு மகாராஜரை நலிந்து -இவை எல்லாம் செய்ய மாட்டானே இனி இவன்
நிர்வ்ருத்தம் ந பிரயோஜனம் –இவன் ஜீவிக்கிற நாளிலே நாம் செய்யும் நன்மை இவன் விலக்காது ஒழிவது காண் என்று இருந்தோம்
-அது அந்நாளிலே பெற்றிலோம் -நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம் இறே
க்ரியாதாம் அஸ்ய சம்ஸ்கார -இவன் நான் செய்யும் நன்மை விலக்காதனான அளவு பிறந்த இன்றும் இழக்க வேணுமோ -வேண்டுவன செய்யப் பாரும்
மமாப்யேஷ யதா தவ —யுத்த -114-99–நீர் இறாய்த்து இருந்தீர் ஆகில் குடல் துடக்குடையாரிலே ஒருவன் செய்யும் அத்தனை அன்றோ (புதல்வரால் பொலிந்தார் உந்தை -என்று அன்றோ ஸ்ரீ விபீஷணனை பார்த்து பெருமாள் வார்த்தை -குடல் துடக்கு -சாமான்ய சம்பந்தம் -)
நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய நீர் பின்னைக் கடக்க நில்லீர்-என்றார் இறே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கல் ஓரம் ராவணன் அளவும் சென்றது இறே

மகாரஜர்க்கு சத்ரு என்று வாலியை நிரசித்து வைத்து மகா ராஜர் கண்ண நீர் பொறுக்க மாட்டாதே
-சஞ்ஜாத பாஷ்ப -கிஷ்கிந்தா -23-24-என்று தாமும் கண்ண நீர் விழ விட்டார் இறே
தர்மே மனச்ச தே பத்ர –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-27-ஸ்ரீ மாலா காரர் பக்கலிலே விஷயீ காரம் அவர் சந்தானத்து அளவும் சென்றது இறே (போகங்கள் இங்கும் ஸ்வர்க்கத்திலும் -திவ்ய லோகம் அடைவாய் -தர்மத்தில் உன் உள்ளம் நிற்கும் -சந்ததிகளுக்கு தீர்க்க ஆயுள் -ஸ்வர்க்கம் கிட்டும் -ஸூர்யன் இருக்கும் வரை இவை இவை நடக்கும் -என்று ப்ரஹ்மாதிகள் போலே அன்றோ ப்ரீதியால் கண்ணன் மாலா காரருக்கு அருளினான்  )
ஸ்ரீ கண்டா கர்ணன் பக்கல் பண்ணின விஷயீ காரம் அவன் தம்பி யளவும் சென்று -நீ அவனுக்கு நல்லையாகில் அவன்
முன்னாகப் போ -என்று அருளிச் செய்தான் இறே-(ஸ்வர்க்கமும் அடைந்து இந்திரன் போலே அனுபவித்து -சாயுஜ்யம் அடைவாய் -இவன் தம்பிக்கு இவன் போவதற்கு முன் நீயும் அடைவாய் )
குபேரன் கண்டா கர்ணனுக்கு திரு அஷ்டாஷர மந்த்ரமும் த்வாதச அஷர மந்தரத்தையும் உபதேசித்து த்வாரகை சென்று
ஸ்ரீ கிருஷ்ணனை ஆஸ்ரயிக்க உபதேசித்தார் –

எம்பார் இத் திருவாய் மொழியை அருளிச் செய்யப் புக்கால் -ஸ்ரீ வைஷ்ணவன் ஆனேன் என்கிறார் என்பாராம்
வைஷ்ணத்வ சிஹ்னம் இறே திரு த்வாதச திரு நாமம் –
ஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும் -எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும்- இரண்டாயிற்று நெடுமாற்கு அடிமை –
அதில் எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத் திருவாய் மொழி –

————————————————————–

அவதாரிகை –

சம்பந்தி சம்பந்திகள் பக்கலிலும் எம்பெருமான் அபிநிவிஷ்டனான படியைக் கண்டு
இது எல்லாம் என் பக்கல் உண்டான விஷயீகார அதிசயம் இறே -என்று ஹ்ருஷ்டராகிறார் –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

நாராயணனாலே – நிரதிசய வாத்சல்யத்தால் –எமர் எல்லாம் கேசவன் தமர் -அவன் தமர் இவர் எமரானால் தான் –ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ -வாழ்வு என் என்று கொண்டாடுகிறார்
ஏழு ஏழு -நம் அளவும் வர மீண்டும் மீண்டும் இத்தையே அனுசந்தானம் செய்ய வேண்டுமே-

கேசவன் தமர்
1-பிரசஸ்த கேசனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் -என்னுதல் –
2-விரோதி நிரசன சீலதையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
3-தஸ்மாத் கேசவ நாமவான் -என்கிறபடியே சர்வ நிர்வாஹனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
சர்வேஸ்வரன் உடையார் -என்றாயிற்று -ஆழ்வார் இவர்களை விரும்புகிறது-(1-ஸ்வரூபம் -ப்ரஹ்மாதிகளுக்கும் -நியாந்தா/ 2-ரூபம் -ஸுரி பெருமாள் -பிரசஸ்த கேச பாசம் உள்ளவன் / 3-குணம் -கிலேச நாசன் -கேசவா என்ன கெடும் இடராய எல்லாம் கெடுமே /4-சேஷ்டிதங்கள் கேசி ஹந்தா –நான்கையும் சொல்லும் கேசவ திரு நாமம் )
எமர் -என்று ஆழ்வாருடைய சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது
இத்தால் ஒரு வைஷ்ணவ அபிமானமே வேண்டுவது அவன் விஷயீகரிக்கைக்க் என்றபடி
கேசவன் தமர்
அவனுடைய அவயவ சௌந்த்ர்யத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
எமர் கீழ் மேல் ஏழேழு இறப்பும் கேசவன் தமரானார்கள் –
ஏகாஹம் அபி கௌந்தேய பூமிஸ் தமுதகம் குரு குலம் தாரயதே தாத சப்த சப்த ச சப்த ச –என்கிறபடியே தச பூர்வான் தசாபரான் ஆத்மா நஞ்ச —
மாசரிது பெற்று
1-விதி சூழ்ந்ததால் என்கிற ஆகஸ்மிக பகவத் கிருபை யாதல்
2-மாதவன் என்றதே கொண்டு என்கிற உக்தி மாத்ரத்தை யாதல்
3-தம் பெற்ற பேற்றை தம்மோடு சம்பந்தம் உடையாரும் பெறும்படியான பேற்றை பெற்று என்னுதல்
மா சரிது பெற்று
பெரும் சரிதுபெற்று -தடக்கை சதுரனைப் பெற்று என்றபடி
தந்தலையால் வந்ததாகில் இறே சாவதியாய் இருப்பது
இது பெற்று
காணக் காண அவன் சிரசா வஹிக்கிறபடி
நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
நம்மோடு சம்பந்தமுடையாரையும் அவன் இப்படி விஷயீ கரிக்கிறது நம்முடைய சம்பத்து இறே
நம்முடைய வாழ்வு –
ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்து
வாய்க்கின்றவா –
ஊற்று மாறாதே மேன்மேல் என பெருகி வருகிறபடி —ஏழ் படி கால் என்றது தான் ஓர் அளவு இல்லை –இன்று நம் அளவும் வரச் செல்லுகிறது இறே –
இப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது ஹேது என் என்னில்
ஈசன்-
வகுத்த ஸ்வாமி யாகையாலே
என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் –
கண் அழகாலே என்னை அனந்யார்ஹன் ஆக்கி தன வடிவழகை என்னை அனுபவிப்பித்தவன்
விண்ணோர் நாயகன் எம்பிரான் எம்மான் –
நித்ய ஸூ ரிகளைத் தோற்ப்பிக்குமா போலே -என்னை அவ்வடிவு அழகைக் காட்டித் தோற்ப்பித்து-என்னை அவ்வடிவு அழகை அனுபவிப்பித்த உபகாரகன் –
நாராயணனாலே –
தன் மேன்மையைப் பாரதே உகவாதாரையும் விட மாட்டாதபடி வத்சலனாய் உள்ளவனாலே சமிதை பாதி சாவித்திரி பாதியாக
வன்றிக்கே-அவனுடைய நிர்ஹேதுக கிருபையாலே –
திருக் கண்கள் அழகையும் திருமேனி அழகையும் -இரண்டையும் -காட்டி அருளியது காருண்யத்தாலே -என்றபடி
நாராயணனாலே -எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் -கேசவன் தமரானார்கள் -மா சரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா-(உபாயமாக நாராயணனை பற்றி )
நாராயணனாலே என்ற இடம் –மாசதிரினுடைய உபபாதனம் -நாராயணன் ஆகிற பெரும் பேற்றைப் பெற்று கேசவன் அடியார்கள் ஆனார்கள் என்றவாறு -(நாராயணனாலே -முதல் வேற்றுமை ஆக்கி ஆகிய – வாத்சல்யம் -மா சதிர் – கிருபை -ஆகிய பேறு)

—————————————————————————————

அவதாரிகை –

நாராயணனாலே என்று நாராயண சப்தம் பிரஸ்துதம் ஆயிற்றே -அதுக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக சப்தத்தை உபாதானம் பண்ணுகிறார்

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-

கீழ் யுக்தமான –நாராயண -அர்த்தம் சொல்லி –ஸூ விஷய பக்ஷபாதத்தை அருளிச் செய்கிறார் –
நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–நாரணன் -திரு நாமம் சொல்லி –எண் பெருக்கு அந்நலத்து ஒண் புகழ் ஈறிலா -வண் புகழ் நாரணன் -திண் கழல் சேரே -கீழே
வேதமயன்-அந்த நாரணன் சப்தத்தையே வேதங்கள் பிரதானமாக பிரதிபாதிக்கப்படும் —ப்ரஹ்மம் ஆத்மா சத் பொதுவான சொற்கள் –நாராயணனையே குறிக்கும் –
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை-த்ரிவித காரணமும் இவனே –
காரணம் -கிரியா ஹேது -தண்டம் சக்கரம் – கிரியை -சுழலுதல் –கருமம் -குடம் –அந்தர்யாமி -நிர்வாககன்-என்றபடி –
சீரணங்கு அமரர்-குணத்தால் உயர்ந்த திவ்யர் —ஸ்ரீ லஷ்மி -சீரணங்கு என்றுமாம் –
பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று-தேவர் முனிவர் மனுஷ்யர் -யாவரும் தொழுது ஏத்தும் படி
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே-எனக்கு பிரகாசித்த -ஸமஸ்த விபூதி நாதன் இவற்றை காட்டி பிரகாசிப்பித்து அருளிய உபகாரம் –
அமலன் ஆதி பிரான் -தானே அமலன் ஆதி என்று காட்டி அருளிய உபகாரகன் போலே
என்னை அநந்யார்ஹன் ஆக்கி அருளிய சேஷி -ஸ்ரீ யபதி-என்றவாறு –
கேசவன் நாராயணன் மாதவன் -ஸ்ரீ யபதி –மாதவன் பேர் சொல்வதே ஒத்தின் சுருக்கு –
வங்க கடல் கடைந்த –மாதவனை கேசவனை –நாராயணனே முதல் பாசுரம் -கேசவன் மூர்த்தி சொல்லி-அவனே -திருமாலே -கோதோ உபநிஷத்

நாரணன் –இதுக்கு அர்த்தம் என் என்னில்
முழு வேழ் உலகுக்கும் நாதன்
சர்வ ஸ்வாமி-
இவ்வர்த்தத்தில் பிரமாணம் என் என்னில்
வேதமயன்
நாராயண பரம் ப்ரஹ்ம இத்யாதிகளால் சர்வ ஸ்வாமி என்று ஓதப்படுகிறவன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன்
தன் விபூதியில் காரணமாயும் -கார்யமாயும் -உதகா ஹரணம் ஆகிற பலமாயும் வரக் கடவதான இவற்றுக்கு நியந்தாவாய் உள்ளான் –
க்ரியா சாதனம் -அதடியாக வரும் க்ரியை -தத் சாத்தியமான கார்யம் -இவற்றுக்கு நிர்வாஹகனாய் இருக்கும் என்றுமாம்-(காரணம் -மண் / கார்யம் -குடம் / கிரியை -தண்ணீர் கொண்டு வரும் பலன் -போலவே-பஞ்ச பூதங்கள் /அண்டாதிகள் /ஆத்மாக்கள் பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் பலனுக்காக- -)
காரணம்-செயல்பாடு -பலன் -என்றுமாம் (விசிஷ்ட ப்ரஹ்மம் -மூன்றுக்கும் -நிமித்த உபாதான சஹகாரி -ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டா ப்ரஹ்மம் -மண் மாறும் -/ சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் -நிமித்த -குயவன் / ஸ்தூல விசிஷ்ட சித் அசித் ப்ரஹ்மம் பலன் -ஞான சக்தாதி கல்யாண குண- விசிஷ்ட ப்ரஹ்மம் சஹகாரி-அபின்ன நிமித்த காரணம் ப்ரஹ்மம் –சதேவ சோம்ய- -ஏக மேவ அத்விதீயம் /)
எந்தை
எனக்கு ஜனகன் ஆனவன்
சீரணங்கு
ஸ்ரீ யான அணங்கு -என்று தெய்வப் பெண் என்றபடி -பெரிய பிராட்டியார்
அன்றியே
சீரணங்கு அமரர்
நித்ய ஸூரிகளுக்கு விசேஷணம் ஆகவுமாம்
சேஷத்வ அனுரூபமான ஆத்மா குணங்களை தரியா நிற்பாராய்-அப்ராக்ருத ஸ்வபாவரான நித்ய ஸூரிகள்
பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று வாரணத்தை மருப்பொசித்த பிரான்
இவ்வருகு உண்டான சம்சாரிகள் -இப்படி சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே எல்லாரும் எழுத்து வாங்கி ஏத்தும் படி நின்று-(அங்குலி விச்சேதம் -ஏகலைவன் போலே -அக்ஷரம் எழுதுவது-உதிரத்தில் பதித்து -குழந்தைக்கு பெயர் -தாஸ்யம் சதுஷ்ட்யம் என்பர் )
குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன முறித்த உபகாரகன் –ந சமம் யுத்த மித்யாஹூ-என்னும்படியாக
என் மாதவனே —
நான் தோற்ற துறை
மாதவனான நாராயணன் எந்தை
ஸ்ரீ மன் நாராயணன் எனக்கு ஸ்வாமி என்கிறார்-

————————————————————————————————-

அவதாரிகை –

கீழே –மா சதிரிது பெற்று -என்றார் -இந் நன்மைக்கு அடி என் என்ன -நினைவு இன்றிக்கே இருக்க அந்தபுர வாசிகள் சொல்லும்
வார்த்தையைச் சொன்னேன் -என்கிறார் –ஜாமாதா-தயிதஸ்தவேதி -பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம் பச்யேம –என்றார் இ றே பட்டர் -(என் திருமகள் –சேர் மார்வன் –என்றபடி -அந்தப்புர வாசிகள் –ஸ்ரீ வைஷ்ணவ வார்த்தை அன்றோ –நாராயணன் -கேசவன்- உபாசகர்களும் சொல்வார்களே)

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-

மாதவன் என்றதே கொண்டு –அஹ்ருதய யுக்தி
என்னை –வாசி அறியாத என்னை
இனி -உக்திக்கு அனந்தரம்
இப்பால் பட்டது-மேல் உள்ள காலங்கள் எல்லாம்
யா தவங்களும் சேர்கொடேன்-அவித்யாதிகள் சேரக் கூடாது என்று சங்கல்பித்து
என்று என்னுள் புகுந்திருந்து-என் நெஞ்சுக்குள் புகுந்து -அநன்ய பேரனாக இருந்து
தீதவம் கெடுக்கும் -தீது புத்தி பூர்வகமாக -தெரியாமல் இரண்டையும் கெடுத்து
அமுதம் செந்தாமரை கட்குன்றம்-ஸ்திரமான அழகான வடிவு
கோதவமிலன் -குற்றம் இல்லாத
கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே-கருப்புக்கட்டி –கோதும் அவமும் -இல்லாத –அபூத உவமை -ஜாலம் சேர்த்தால் தானே சக்கரை உண்டாகும் -ஜல வாசனை வருமே -வஸ்து அந்தர சம்சாரக்கம் -பாக தோஷம் –உண்டாகும் –ஈஸ்வரனுக்கு கோது அவன் -உபகார ஹேது ஸகத்வத்வமும் -அபேஷா நிரபேஷமாக செய்யும் –அவம்-ஸூ பிரயோஜன அர்த்தத்வமும் -சொத்தை ஸ்வாமி பெறுவது போலே /என் அமுதம் கறுப்புக் கட்டி கண்ணனே -தானே –

மாதவன் என்றதே கொண்டு
நான் மாதவன் என்ற உக்தி மாதரத்தைக் கொண்டு
இத்தையே திரு உள்ளத்திலே குவாலாகக் கொண்டு
என்னை-அல்லாத திரு நாமங்களுக்கும் இதுக்கும் வாசி அறிவதே என்று இத்
அல்லாத திரு நாமங்களுக்கும் இதுக்கும் வாசி அறியாத என்னை
இனி
முன்பு கழிந்த காலம் கழிந்தே விட்டது இறே
மேல் அத்யல்ப காலமாய்த் தோன்றா நின்றதாயிற்று ஈஸ்வரனுக்கு
பழுதே பல காலும் போயின என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதனன் இருக்கும் இருப்பைத் தான் என் பக்கலிலே இரா நின்றான்
புத்த்வா காலம் அதீ தஞ்ச முமோஹ-என்று இரா நின்றான் ஆயிற்று
இப்பால் பட்டது
அணைக்கு கிழக்குப் பட்ட நீரோ பாதி இறே போன காலம்
இனி மேல் உள்ள காலமாகிலும்
யா தவங்களும் சேர் கொடேன் என்று
உன்னை யாதொரு தபஸ்ஸிலும் புக்கு கிலேசிக்க விடேன் என்று
அம்மி துணையாக ஆறு இழிகை இறே இவனை விட்டு உபாயாந்தரத்தைப் பற்றுகை
அவங்கள் –1-நரக ஹேதுவான அவித்யாதிகள்-
2-புறம்பே சில பிரயோஜனங்களைக் கொண்டு போக விடுதல் -3–அயோக்யன் என்று அகல விடுதல்-
4–உபாயாந்தர பரிக்ரஹம் பண்ண விடுதல் செய்யேன் என்று
என்று
ஏதத் வ்ரதம் மம-என்கிறபடியே சங்கல்பித்து
என்னுள் புகுந்திருந்து
இப்படி சங்கல்பித்து நெடுங்கை நீட்டாக இருக்கை அன்றிக்கே
என் ஹிருதயத்திலே வந்து புகுந்து
புகுந்தாலும் போக்கு வரத்து உண்டாமாகில் வாலி போன வழியை அடைத்து மகா ராஜர் குறும்பு செய்தால் போலேயாம் என்று
இருந்து-ஸ்தாவர பிரதிஷ்டையாக இருந்து
புகுந்திருந்து
இவரை வர நிறுத்த ஒண்ணாதே இவருக்குமாக தான் புகுந்து இருந்தான் அத்தனை
புகுந்து செய்த கிருஷி ஏது என்னில்
தீதவம் கெடுக்கும்
தீ தாவது -பொய் நின்ற ஞானத்துக்கு முன்பு புத்தி பூர்வகமாகப் பண்ணிப் போந்த பாபம்
அவமாவது ஞானம் பிறந்த பின்பு ப்ராமாதிகமாகப் பண்ணினவை
இரண்டாலுமாக பகவத் பிராப்தி பிரதிபந்தக கர்மங்களைச் சொல்லுகிறது
அன்றிக்கே
கோக் நே சைவ ஸூ ராபே ச சோரே பக்ன வரதே ததா -நிஷ்க்ருதிர் விஹிதா சத்பி க்ருதக்னே நாஸ்தி நிஷ்க்ருதி- என்கிறபடியே
நிஷ்க்ருதி உள்ள பாபங்களையும் இல்லாத பாபங்களையும் சொல்லிற்று ஆகவுமாம்
இவற்றைக் கெடுப்பது கஷாய பானத்தை பண்ணுவித்தோ என்னில்
அமுதம்
தன்னுடைய போக்யதையை அனுபவிப்பித்தாயிற்று
செந்தாமரை கட்குன்றம்
ரச நேந்த்ரியத்துக்கே யன்றிக்கே கண்ணுக்கும் போக்யமாய் இருக்கை
குன்றம்
இத்தலையில் தீதும் அவமும் போக்கினனாய் இருக்கை அன்றிக்கே தனக்கு உண்டாய் கழிந்தது என்று தோற்றும்படி
வடிவில் பிறந்த ஔஜ்வல்யம்
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்று இருக்குமவன் இறே

கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –
கோதாவது-த்ரவ்யாந்தர சம்சர்க்கத்தாலே வருமது
அவமாவது பாகத்தாலே வருமது
த்ர்ஷ்டாந்திகத்தில் கோதும் அவமும் ஆகிறது ஆன்ரு சம்சயத்துக்கு ஆதல் -இவனுக்கு உபகாரமாகவாதல் விஷயீகரிக்கை
தனக்கு புறம்பாய் இருப்பதொரு போக்ய வஸ்து இல்லாதபடி தான் போக்யனாய் இருக்கும்
எம்மான்
நான் வேறு ஓன்று போக்யம் என்று இராதபடி என்னைத் தோற்ப்பித்தவன்
என் கோவிந்தனே
‘கிருஷ்ணாவதாரமும் தமக்கு என்று இருக்கிறார்
ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோ -பெரியாழ்வார் திருமொழி -1-7-1-இறே

—————————————————————————————-

அவதாரிகை –

என்னோடு பரம்பரயா சம்பந்தம் உடையாரையும் கூட என்னைப் போலே யாக்கினான் ஒருவனுடைய
சாமர்த்தியம் இருக்கும் படியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-

ஸூ சம்பந்த குல சம்பந்தி பர்யந்தமாக செய்ய வல்ல சாமர்த்யன்
கோ விந்தன் -கோ ஸம்ருத்தி
குடக்கூத்தன் -தனம் விஞ்சி ப்ராஹ்மணர் -யாகாதிகள் போலே ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக
கோவலன்-ஐஸ்வர்யம் சேஷ்டிதம் அனுகூலமான ஜென்மம்
என்று என்றே குனித்து–தனி தனி கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் -ஒன்றுக்கும் ஒரு சஹஸ்ர நாமம் -சொல்லி –
பரத்வ -ஸ்ரீ யபதி ஸுலப்யம் -சொல்லி கூத்தாடி
தேவும் தன்னையும் -பரத்வத்தையும் தானான நீர்மையையும்
பாடியாடத் திருத்தி-நித்யர்களில் ஒரு கோவையாக்கி
என்னைக் கொண்டு என்-பாவம் தன்னையும் பாறக் கைத்து -பிரதிபந்தகங்களை ஒட்டி
எமர் ஏழேழு பிறப்பும்-மேவும் தன்மையம் ஆக்கினான் -தன்னை பிராபிக்கும் தன்மை
வல்லன் எம்பிரான் விட்டுவே –நினைத்ததை செய்யும் வல்லவன் -சர்வ வ்யாபி -ஒருவரை பிடிக்க ஊரை வளைப்பாரை போலே

கோவிந்தன் –
ஸ்ரீ வைகுண்டத்தில் இல்லாததொரு சம்பத்து இறே இது –
கோ சம்ருத்தியால் உண்டான ஐஸ்வர்யம் உள்ளது இங்கேயே இறே -(வாக்மி ஸ்ரீ மான் -பூமி -பசுக்கள் -பெருமாள் வராஹ கிருஷ்ணன் மூவருக்கும் கோவிந்தன் சப்தார்த்தம் உண்டே )
குடக்கூத்தன் –
ப்ராஹ்மணர் ஐஸ்வர்யம் விஞ்சினால் யாகங்கள் பண்ணுமா போலே இடையர் ஐஸ்வர்யம் மிகுத்தால் செருக்குப் போக்கு விடுவது ஒன்றாயிற்று –
குடக்கூத்தாவது –அவாக்ய அநாதர-என்று இருக்கக் கடவ வஸ்து தைர்ய பங்கம் பிறந்து செருக்குக்குத் தலைச் சாவி வெட்டி ஆடினபடி இறே
கோவலன்
இவற்றுக்கு அடியான பிறப்புடையவன்-பிறந்து படைத்த ஐஸ்வர்யம் இறே இது
என்று என்றே குனித்து
இக் குணங்களை மாறாதே சொல்லா நின்று கொண்டு -உடம்பு இருந்த இடத்தில் இராதே ஆடி –
அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்தால் இவருக்கு பேசாது இருக்க ஒண்ணாது இறே –
தேவும் தன்னையும்
தேவும் -என்கிறது – ஐஸ்வர்யத்தை –தன்னை -என்கிறது- ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை -அது இ றே தானான தன்மை
ஆத்மானம் நாதி வர்த்தேதா -என்றான் இ றே -வசிஷ்டர் –ஆத்மபூதம் பரதம் நாதி வர்த்தேதா-என்கிறான் என்று சிலர் சொல்லுவார்கள் –
பட்டர் -நீரான தன்மை யாகிறது ஆஸ்ரித பரதந்த்ரனாகை-உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து நீரான
தன்மையை இழவாதே கொள்ளும் என்கிறார் -என்றார்
உன் தன்மையை இழக்காதே பரதன் சொல் படி கேட்க வசிஷ்டர் பெருமாள் இடம் சொன்ன வார்த்தை –
பாடியாடத் திருத்தி –
என்று என்றே குனித்து என்கிற இடத்துக்கும் –பாடியாட -என்கிற இடத்துக்கும் வாசி என்-என்னில்
கீழ் சௌலப்ய பரம்-
இங்கு ஐஸ்வர்யமும் சௌலப்யமும் இரண்டும் உண்டு
விஷய பேதத்தால் சொல்லவுமாம்
அன்றிக்கே என்று- என்றே- என்கிற இடம் அஹ்ருதயமான உக்தி மாத்ரமாய் –குனிக்கையாவது – உத்தியோகத்து அளவாய்
இங்கு-பாடியாட -சஹ்ருதயமாகப் பாடுவது ஆடுவதான படியாய்
என்று என்றே குனித்துப் பாடுவது ஆடுவதாம்படி -என்றாதல் –
திருத்தி –
தரிசு கிடந்த தரையைச் செய்காலாம் படி திருத்துவாரைப் போலே நித்ய ஸூரிகள் யாத்ரையே -யாத்ரையாம் படி திருத்தி –
என்னைக் கொண்டு -என் பாவம் தன்னையும் பாறக் கைத்து
என்னைக் கைக் கொண்டு -ஓர் உபாய அனுஷ்டானத்தை பண்ணுவித்து என்னில் -இப்போது இவர்க்கு அபசித்தாந்தமாம் —
பகவத் பிரசாதத்தாலே பெற்றார்க்கும் சொல்லுமதுக்கும் சேராது
ஆனால் என் சொல்லுகிறது என்னில் -சேற்றில் விழுந்த மாணிக்கத்தை எடுத்து கழுவி விநியோகம் கொள்ளுமா போலே என்னை
சுவீகரித்து என்னால் போக்கிக் கொள்ள ஒண்ணாத பாபங்களையும் உருமாய்ந்து போம்படி ஒட்டி-
எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன்
இது தான் என் ஒருவன் அளவன்றிக்கே என்னோடு சம்பந்தம் உடையார் ஏழேழு பிறப்பும் தன்னைக் கிட்டுகையே
ஸ்வபாவமாக யுடையோம்பாம்படி பண்ணினான் –
எம்பிரான் விட்டுவே –
எனக்கு உபகாரகனான சர்வேஸ்வரன் –
நினைத்த கார்யம் செய்து தலைக் கட்ட வல்லவன்
சர்வ சக்தி மாட்டாதது உண்டோ –வ்யாப்தியும் தமக்காக –என்று இருக்கிறார் –

———————————————————————————-

அவதாரிகை –

திருமாலை யாண்டானோடே எம்பெருமானார் திருவாய் மொழி கேட்டருளுகிற நாளில் பாட்டுக்கள் தோறும் சில வார்த்தைகள் அருளிச் செய்து-(தம்மையும் தம் உடையராயும் விஷயீ கரித்த- அவனை கொண்டாடுகிறார் -முதல் நிர்வாகம் -திருமாலை ஆண்டான் )
இது அர்த்தமானாலோ -என்றால் -இது விஸ்வாமித்ரர் சிருஷ்டி -ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டறியேன் -என்று பணிக்குமாம் ஆண்டான்
ஆண்டான் இப்பாட்டுக்கு விச்வாமித்ர சிருஷ்டி வேண்டாவாய் இருந்ததீ-என்ன -இப்பாட்டால் தன் அவயவ சௌந்தர்யத்தாலே
என்னைத் தனக்கு ஆக்கினான் -என்கிறார் -என்று அருளிச் செய்து அருளினாராம்
அதுவும் கிடக்க பட்டர் அருளிச் செய்வது ஓன்று உண்டு –ஆழ்வாரையும் ஆழ்வார் பரிகரத்தையும்-விஷயீ கரித்து அத்தாலே
திருமேனியிலே பிறந்த ஔஜ்வல்யத்தை சொல்லுகிறது -என்று
விசோதிதஜட ஸ்நாதசசித்ர மால்யாநுலேபன மகார்ஹவஸநோ ராமஸ் தஸ்தௌ தத்ர ஸ்ரீ யா ஜ்வலன் –யுத்த -131-15-என்று
பெருமாள் பிராட்டி உடன் பட்டாபிஷேக திருக் கோலத்துடன் நின்றாப் போலே என்றவாறு –

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-

ச பரிகரமாக அங்கீ கரித்ததால் வந்த உஜ்வலம்
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விஷ்ணு -உடைய -முதல் திரு நாமம் –பாட்டுகளில் மரியாதை குலைய கூடாதே -உகரம் குற்றியலாக கொள்வது
இலங்கு -விளங்கும் -என்றவாறு
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு-விகசிதம் -விளங்கா நிற்கும் -அழகிய வடிவு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி-அம் சாரியை -மதி சீர் சங்கு -/ மலையே திரு உடம்பு -தாமரையே பாதம் -சாமானாதி கரண்யம்-/ உபமானமே உபமேயம் -பொருந்திய படியால் –
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
மதகு திறந்தால் போலே விட்டு விளங்கா நின்றுள்ள -சிவந்த ஒளியை உடைத்தான தாமரை போலே யாயிற்று
நாம் தோற்று விழும் திருவடிகள் –தம்மை அணைத்த கை –குளிர நோக்கின திருக் கண்கள்
இவை உபமேயத்துக்கு உபமானம் நேராகப் போராமையாலே அது தன்னையே சிஷித்துச் சொல்கிறார்
அன்றிக்கே –விட்டுவுக்கு இலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் -என்று அந்வயம்-
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
சோபயன் தண்ட காரண்யம் -என்னுமா போலே இரா நின்றது வடிவு அழகு
தம்மை அணைத்த போதைக் குளிர்ந்த வடிவு இருந்தபடி –
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு
விட்டிலங்குகிற பிரகாசத்தை உடைய சந்தரனைப் போலே யாயிற்று ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்
சீர் சங்கு –
பகவத் பிரத்யாசத்தியாலே வந்த ஐஸ்வர்யம் –உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே –
பிரசாதத்தைச் சூடி கைப்புடையிலே கிடப்பாரைப் போலே அவன் வாயாலே ஊட்ட உண்டு -வடிவை பாராத் திருக்கையிலே சாயும் அத்தனை
சீர் சங்கு
உன் செல்வம் சால அழகியது -என்னும்படி வாயது கையதான ஐஸ்வர்யம் இறே –
சக்கரம் பரிதி –
கண்டதில் மின்னிற்று ஒன்றை உபமானமாகச் சொல்லும் அத்தனை இறே -ஆதித்யனைப் போலே அன்றே திரு வாழி வாழ்வான் இருப்பது (பத்ம பர்வத சந்த்ர -உபமானம்–கீழே விசேஷித்து சொல்லி இங்கு -விசேஷணம் சொன்னாலும் திருச் சக்கரத்துக்கு நிகர் ஆகாதே -ஆக சொல்லாமல் -கண்டத்தில் மின்னும் ஒன்றை சொல்லி விட்டார் அத்தனை )
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –
இவை இத்தனையும் தன் புகராலே முட்டாக்கு இடுமாயிற்று திரு அபிஷேகம் –
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவன் ஆனவனுக்கு –(மது சூதனன் தனக்கு என்றும் –மது சூதனனான விஷ்ணுவுக்கு என்று இரண்டு அன்வயம் )
விட்டுவுக்கு இலங்கு இத்யாதி -என்று முதலாக அந்வயம் –

——————————————————————————————–

அவதாரிகை –

தன் பக்கல் நான் பிரவணன் ஆகைக்கு எம்பெருமான் வருந்திற்று எல்லாம் தன் கிருபையாலே -என்கிறார் –

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-

கிருபா பாரவஸ்யம் -உஜ்வல்யம் -உபகாரம் -விட்டு வல்லன் -இவற்றுக்கு ஹேது -கிருபை தானே
மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
மது கைடபர் –ஹய சிரஸ் / கண்ணன் -/ உபாயாந்தர ப்ராப்யாந்த்ர சம்பந்தம் இல்லாமல்
நம் பிரதிபந்தகங்களை போக்கி என்றபடி -/அஹங்காராதிகள்–/ காரியமே அற்று –
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
ஸ்தோத்ர பாடல்களால் சூழ்ந்து -கல்ப கல்ப காலம் -பாடுவது -கல்ப கல்ப காலமும் நாம் ஒரு கால் பாட -அவன் அனுக்ரஹம் பண்ண
அவன் குணக் கூட்டங்களை சூழ்ந்து -ஸ்வயம் பிரயோஜனமாக -நின்று பாடி ஆட -பிறப்புக்கள் தோறும் -கல்ப கல்பம் -பல் நெடும் காலமாக -திருத்த முயலுவான் -அபிமுகனாக ஈடாக
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
சூழ்ச்சி -திட்டம் வைத்து என்னை பிடிக்க -தன் சொத்தை தான் பெற -எனக்கே -அசாதாரனமான விசேஷம் -பிரதம கடாக்ஷம் தொடங்கி பர பக்தி பர்யந்தமாக –
அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம் என்று உணரும் படி –அருள்கள் –
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே
கிருபை தடுக்க ஒண்ணாத்தாதே -அதுவே விதி -/ஏலு கிற பொருந்துகிற –எனக்கு தகுதியான -தாழ்ந்த நீசனுக்கு தக்கபடி என்றபடி –கிருபை -என்னை சூழ்ந்து -திரிவிக்ரமனையும் சூழ்ந்து -என்றபடியே -என் அளவுக்கு தன்னை தாழ்த்துக் கொண்டு கிருபை செய்து அருளினான் என்றபடி-

மது சூதனை யன்றி மற்றிலேன் என்று –
விரோதி நிரசன ஸ்வபாவன் ஆனவனை ஒழிய வேறு சிலரைத் தஞ்சமாக வுடையேன் அல்லேன் என்றாயாயிற்று இவர் இருப்பது (வேதங்களை மீட்ட மதுசூதனன் -கொழுப்பு -ரஜஸ் தமஸ்- கோடரி போலே உலகத்துக்கு -இருவர் -தானவர்களில் கொடியவர் -ஹயக்ரீவர் முகத்தில் வந்து –மது சூதனை )
சத்வம் தலை எடுத்த போது ஒரு கால் இவ்வார்த்தை சொல்லுமது நமக்கும் உள்ளது ஓன்று இறே -இவர்க்கு வாசி என் என்னில்
எத்தாலும் கருமமின்றி –
அந்த உக்திக்குச் சேர்ந்த அனுஷ்டானம் உண்டாய் இருக்கும்
ப்ராப்ய ஆபாசங்களிலும் பிராபக ஆபாசங்களிலும் நெகிழ்ந்து -அவனை ஒழிந்த எல்லா வற்றாலும் ஒரு பிரயோஜனம் இன்றிக்கே இருப்பர்

துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட -நின்றூழி யூழி தொறும்
1-ஸ்தோத்ராத்மகமான பாடல் -என்னுதல்
2-ஸ்துதிய குணங்களை விளாக்குலை கொள்ளும்படியான பாடல்கள் என்னுதல்
கல்பம் தோறும் கல்பம் தோறும் துதி சூழ்ந்த பாடல்களைக் கொண்டு பாடுவது ஆடுவதாம் படி பண்ணினான் –
நின்று
தேஹி மே-ததாமி தே- என்று பிரயோஜனங்களைப் பற்றி அகலுகை யன்றிக்கே இருக்கை-
இப்படி அவன் பண்ணுகைக்கு ஹேது என் -என்னச் சொல்கிறார் –
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய -விதி சூழ்ந்ததால்
விதி சூழ்ந்ததால் -எதிர் சூழல் புக்கு –
ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் அவன் போம் வரம்புக்கு எதிர் வரம்பே வருமா போலே -இவர் பிறந்த ஜன்மங்கள் தோறும்
தானும் எதிரே பிறந்து வந்தான் யாயிற்று
இவர் கர்மம் அடியாக பிறக்க -அவன் அனுக்ரஹத்தால் பிறந்து வந்த இத்தனை –சூழல் என்று அவதாரத்தைச் சொல்லக் கடவது இறே –
எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய -விதி சூழ்ந்ததால் -என்கிறார்
விதி என்கிறது பகவத் கிருபையை -பகவத் கிருபையை விதி என்பான் என் என்னில் -அவனுக்குத் தப்ப ஒண்ணாத தாகையாலே
நாம் நினைத்தவை தலைக் கட்ட வொட்டாத
கர்மம் போலே ஈஸ்வரன் நினைத்த கார்யங்களும் க்ருபா பரதந்த்ரனாய்த் தலைக் கட்ட மாட்டான்
வதார்ஹம் அபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34-
காகுத்ஸ்த-தங்களிலும் கிருபையே விஞ்சி ரஷித்துக் கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்
வதார்ஹமான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் கண்னழிவு பண்ணுமவர் இறே
எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே-
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -ஸ்ரீ வாமனனாய் வந்து அவதரித்து -மூன்று அடியாலே த்ரைலோக்யத்தையும் திருவடிகளின்
கீழே இட்டுக் கொண்டு எல்லாரோடும் பொருந்தின -குள்ளர்களை திரிவிக்ரமன் என்று சொல்லும் படியான குறள் மாணாய் போலே-
சௌலப்யம் தானே பரத்வம் என்னும் படி என்னை விஷயீ கரிக்கைக்கு-(எனக்கே -இரண்டு தடவை /ஸ்வாமி -எனக்கே அசாதாரணமான / உபகாரம் -பண்ண ஒரு தடவை / கிருபையால் அருள்கள் செய்ய எனக்கே / எனக்கு என்ன கிருபையும் உபகாரமும் என்றபடி -)
ஒரு விதி சூழ்ந்தது -அம்மான் திருவிக்ரமனை என்னை அருள்கள் செய்ய -எனக்கு என்னவே ஒரு விதி சூழ்ந்தது

——

அவதாரிகை –

உன்னுடைய குண அனுசந்தான பூர்வகமாக ஸ்துதி பிரணாமங்களைப் பண்ணிக் கொண்டு உன்னை அனுபவிக்கும்
இதுவே பிரயோஜனமாய் இருக்கும் மனஸை எனக்குத் தந்தாய் -என்கிறார் –

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-

பிரயோஜனம் முதலில் சொல்லி -உபாயமான வாமனன் பின்பு சொல்லுமே –
திருவிக்ரமன் திருக்கண்களை -எப்படி சேவித்தார் ஆழ்வார் –
ஸூவ அனுபவ யோக்யமான சர்வ உத்தரமான மனசைத் தந்து அருளினான் –என்கிறார் –
திரிவிக்ரமன் -அனன்யார்ஹன் ஆக்கினான் உலகத்தை
செந்தாமரைக் கண் -ஆழ்வாரை வெல்ல இந்த உபகரணம் -ஜிதந்தே புண்டரீகாஷ-தாமரை கண்ணனை விண்ணோர் பரவும்
எம்மான் -அடிமை ஆக்கிக் கொண்டவன்
என் செங்கனி வாய் உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன்-உருவம் -நிறம் –பொலிந்த-ஸ்படிகம் போலே
-திருப் பற்கள் -ஸ்மிதம் -மந்த -திரு முத்து நிறத்தை
என்று என்று-தனித் தனியே —உள்ளி-சேஷ்டிதம் கண் அழகு முறுவலையும் நெஞ்சாலே அனுபவித்து
பரவிப் பணிந்து -உள்ளடங்காமையாலே அக்ரமாக பரவி -பணிந்து -ப்ரீதி ப்ரேரிதனாய் கொண்டு திருவடிகளில் விழுந்து
பல்லூழி யூழி நின் பாத பங்கயமே -பல காலம் -கல்பங்கள் -பிராப்தனான உன்னுடைய போக்யமான திருவடிகளில்
மருவித் தொழும் மனமே தந்தாய்-அனன்ய பிரயோஜனமான அடிமை ஆக்கி அருளிய -சக்தன் –

திரிவிக்ரமன் –
மூன்று அடிகளாலே சகல லோகங்களையும் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன் –ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியன் –
செந்தாமரைக் கண் எம்மான் –
நோக்காலே என்னைத் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன்-
காலும் கண்ணும் -சம்பந்தம் -திருமழிசை ஆழ்வார் -கட்டை விரலிலே கண் -பக்தி சாரர்
என் செங்கனி வாய் -உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன்
இவர் ஜிதம்-என்ற பின்பு அவன் ஸ்மிதம் பண்ணின படி -என்னை அனந்யார்ஹன் ஆக்குகையாலே சிவந்த கனிந்த
திரு வதரத்தின் உருவிலே -அழகிலே -நிறத்திலே
பொலிந்த பரபாகத்தாலே சம்ருத்தமாய் பரிசுத்தமான ஸ்படிகம் போலே இருக்கிற திரு முத்து நிரையினுடைய நிறத்தை யுடையவன்
முத்துப் பல் வரிசை –
என்று என்று உள்ளி –
இதர விஷயங்களினுடைய ஸ்மிதத்தில் உண்டான ஸ்ம்ருதி- அகவாய் கண்டவாறே விட்டு அல்லது நிற்க ஒண்ணாததாய் இருக்கும் இறே-(விஷயாந்தரங்கள் விஷயத்தில் அகவாய் -உள்ளே உள்ள ஜலம் இத்யாதி நினைவில் வர ஸ்மிதம் விடுவோமே என்றவாறு  )
அக வாய் —இதர உள் விஷயம் என்றும் பகவத் ஸ்மிதம் என்றும் –சாடு -இது -பகவத் ஸ்மிதம்-மாறாதே அனுசந்திக்கலாம் இறே
அழகு ஆறு திரு அபிஷேகத்தில் இருந்து விழ –ஸ்மிதம் -அழகு சேர -ஹார அழகு பிராட்டி அழகு சேர
மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட –
-இடை சிறுத்துததால் சுழல் -திரு நாபி சரஸ் -ஆனதே –
பரவிப் பணிந்த
அக்ரமாகக் கூப்பிட்டு -நிர்மமனாய்த் திருவடிகளில் விழுந்து
இப் பேறு தான் ஒரு நாள் உண்டாய் மற்றை நாள் மறுக்கை யன்றிக்கே
பல்லூழி யூழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் –
1–கல்பம் தோறும் கல்பம் தோறும் பரம போக்யமான உன் திருவடிகளையே அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனசைத் தந்தாய் –
2–விஷயாந்தரங்கள் அஸ்தரம் ஆகையாலும் அபோக்கியம் ஆகையாலும் ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை யாகையாலே
மனஸ்ஸூ -சஞ்சலம் ஹி மன –ஸ்ரீ கீதை -6-34-என்று சஞ்சலமாய் இறே இருப்பது
அப்படி இன்றியே நித்யமுமாய் நிரதிசய போக்யமுமாய் இருக்கையாலே –மருவித் தொழும் மனசைத் தந்தாய் -என்றுமாம்
3–பழைய நெஞ்சைத் திருத்தின அளவன்றிக்கே கருவுகலத்தில் ஒரு நெஞ்சைத் தந்தாய் —திவ்யம் ததாமி தே -ஸ்ரீ கீதை -11-8-போலே –
பழைய நெஞ்சு -இது என்று பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாத படி இரா நின்றது
என் வாமனனே –வல்லை காண்
கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்கு ஒன்றேயோ பரிகரம்-
ஆழ்வாரைக் கொண்டார் -மனசைக் கொடுத்தார் -ஔதாரன் பட்டம் கொடுத்தார் -உலகைக் கொண்டார் -தருவதும் பரிப்பதும்- ஒரே உபகரணத்தாலே
வாமன வேஷத்தைக் காட்டி என் நெஞ்சைத் திருத்தித் தந்தாய்
அவ்வழகாலே மகா பலி என்னது என்று இருந்த பூமியை அபகரித்தாய்
வல்லை காண் -என்று உகக்கிறார் –

———————————————————————————————

அவதாரிகை –

எம்பெருமான் தம் திறத்தில் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் காணாமல் தடுமாறுகிறார் –

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

வாமனன் -குள்ளன் மட்டும் இல்லையே —ஸூகம் நயதி -திரு மேனி காந்தியால் சேவித்தவர்கள் மகிழ்வார்
பொல்லாங்கை நீக்கி -அனுபவத்துக்கு உறுப்பு அல்லாத -இதற்கு பிரத்யுபகாரம் உண்டோ
என் மரகத வண்ணன்-வடிவு அழகு –தாமரைக் கண்ணினன்-போக்தாவை குளிர நோக்கும்
காமனைப் பயந்தாய் -உத்பாதகன் ஆனவன் –சாஷாத் மன்மத மன்மதன்
என்று என்று உன் கழல் பாடியே பணிந்து தூ மனத்தனனாய் -பிரயோஜ நாந்தரங்களில் போகாமல்
பிறவித் துழதி நீங்க என்னைத் தீ மனம் கெடுத்தாய் -விஷயாந்தரங்களில் போகும் தீமையை கெடுத்து அருளி
உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே-பூரணன் -அவாப்த சமஸ்த காமன் -ஸ்ரீ யபதி என்ன செய்வேன் –

வாமனன் –
வடிவு அழகைச் சொல்லுதல் -என்னுதல்
நன்மைகளைத் தருமவன் என்னுதல் -இனிய அனுபவங்களைக் கொடுப்பவன் –
என் மரகத வண்ணன் –
ஸ்ரமஹரமான வடிவு அழகை என்னை அனுபவிப்பித்தவன்
தாமரைக் கண்ணினன்-
வடிவு அழகே அன்றிக்கே அகவாயில் தண்ணளிக்கு பிரகாசகமான திருக் கண்களை உடையவன்
காமனைப் பயந்தாய் –
வடிவு அழகாலே நாட்டை வெருட்டித் திரிகின்ற காமனுக்கு உத்பாதகன் ஆனவனே
அனுசந்தானாத்தாலே ஒரு வைசத்யம் பிறந்தவாறே முன்னிலை போலே தோற்றும் -அப்படியும் சொல்லிக் கூப்பிடுவார்
அதுக்கு மேலே சில பரிமாற்றங்களை ஆசைப்பட்டு அது கிடையாமையாலே படர்க்கையாகவும் சொல்லிக் கூப்பிடுவார்-
அப்பாஞ்ச ஜன்யமே -முன்னிலையாக இருந்து படர்க்கையாக அங்கும் –
இவை இரண்டுக்கும் அடி அபிநிவேசம்
என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
இத் திரு நாமங்களை இப்படி வாயாலே மாறாதே சொல்லா நிற்கத் திருவடிகளிலே விழுந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான நெஞ்சு இன்றிக்கே மோஷத்துக்கே ஏகாந்தமான நெஞ்சை உடையனாய்
பரி சுத்த அந்தக்கரணனாய்-அதின் பலமாய் வருமதே ஜன்மம் போமது
பிறவித் துழுதி உண்டு —தூர் -துக்கம் -அது நீங்கும் படியாக
என்னைத் தீ மனம் கெடுத்தாய்
அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும்
உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய்
நல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் –
தேஷாம் சத்த யுக்தாநாம் பஜதாம் -ஸ்ரீ கீதை -10-10-
தேஷா மேவா நுகம் பார்த்தம் அஹம் அஜ்ஞ்ஞானாஜம் தம நாசயாமி ஆத்ம பாவஸ்ய -ஸ்ரீ கீதை -10-11-போலே
உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே —
பண்ணின உபகாரத்தின் கனத்தாலே பிரத்யுபகாரம் பண்ணி யல்லது தரிக்க மாட்டு கிறிலேன்-அதுக்கு விரகு காண் கிறிலேன்
நான் ஒரு உபகாரம் கொள்ளாது ஒழிதல்-நீ குறைவாளன் ஆதல் செய்யப் பெற்றிலேன் –சிரீதரனே-புஷ்கலனாய் இருக்கிற
உனக்கு நான் எத்தைச் செய்வேன்

—————————————————————————————–

அவதாரிகை –

ஆடியாடியில் பிறந்த வ்யசனம் எல்லாம் நான் மறந்து மிகவும் பிரீதனாம் படி பண்ணி இந்த்ரியங்களைத் தான் இட்ட வழக்காக்கினான் என்கிறார் –
பக்தி பூர்வகமாக உன்னை அனுபவியா நிற்கச் செய்தே –பிரதி பந்தகங்களும் நீங்கி— நிரதிசய ஹர்ஷமும் பிறக்கும்படி
உன்னை என்னுள்ளே வைத்தாய் என்று ப்ரீதர் ஆகிறார் என்னுமாம் –

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –-2-7-9-

விஸ்லேஷ துக்கும் தீரும் படி என் நெஞ்சுக்குள் புகுந்து நான் ஹ்ருஷ்டராம் படி அனுபவிப்பித்தான் -தூ மனத்தில் தோற்றும் -பக்திக்கு விஷயமாம் படி –
அழுக்கு நீக்கி -நல்ல நெஞ்சு -அதற்கு விஷயம் -மூன்று பாசுரங்கள்
சிரீ இதரன்-ஸ்ரீ பீடன் – செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து -எங்கும் நாடி நாடி கண்கள் நீர் மல்கிகுவளை ஒண் கண்ண நீர் கொண்டாள்
வெவ்வுயிர்த்து உயிர்த்து –மரீ இய தீ வினை -ஆடியாடியில் உள்ள விசனம்
மாள இன்பம் வளர-2-4 தீ வினை /2-5 கலந்த இன்பம் -அந்தாமத்து அன்பு வளர – வைகல் வைகல் இரீஇ
உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே-விதேயமான நெஞ்சில் -இருத்தி –பைந்தாமரைக் கண்ணன் எங்கும் பக்க நோக்கு அறியாமல்
பக்தி பாரவச்யத்தால் வந்த ஆழ்வார் துடிப்பை -விகாரம் –தீ வினை-பிராப்தி பிரதிபந்தக நிவ்ருத்தி -பூர்வகமாக —இன்பம்  வளர – -அனுபவ ஆனந்தம்-வளரும் படி செய்து அருளினான் –

சிரீ இதரன் –
பெரிய பிராடியாரைத் திரு மார்விலே உடையவன்
செய்ய தாமரைக் கண்ணன்
நீர் பாய்ந்த பயிர் செவ்வி பெற்று இருக்குமா போலே -அவள் திரு மார்விலே இருக்கையாலே குளிர்ந்த கண் அழகை உடையவன்
வஷஸ் ஸ்தலேந ஸ்ரீ யமுத்வஹன் விபு விஸ்தாரி பத்மோத் பல பத்ர லோசந –ஸ்ரீ விஷ்ணு தர்மம் என்கிறபடியே
என்று என்று
இப்படி மாறாதே சொல்லி
இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –
இவர் பக்தி பரவசர் ஆகையாலே இவருடைய தேக யாத்ரை இருக்கும் படி என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும் படி
அன்றிக்கே –பட்டர்
இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள-என்கிற இடத்தளவும்
ஆடியாடியிலே இவர்க்கு ஓடின தசையாய்
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை-என்கிற இது அந்தாமத்து அன்பு -தொடங்கி- கேசவன் தமர் அளவும்
வர உண்டான பரிதியைச் சொல்லுகிறது -என்று
இராப்பகல் வாய் வெரீ இ -என்கிறது –இவள் இராப்பகல் வாய் வெரீ இ -என்றத்தை
அலமந்து -என்கிறது- எங்கும் நாடி நாடி- என்றத்தை
கண்கள் நீர் மல்கி -என்கிறது –தன் குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் -என்றத்தை
வெவ்வுயிர்த்து உயிர்த்து-என்கிறது –உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் -என்றத்தை
மரீ இய தீ வினை மாள
ஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே ஆனை இடர் பட்டால் போலே –ஆடியாடியில் ஆற்றாமை
இவருக்கு இப்படி பொருந்தின விஸ்லேஷ வ்யசனம் ஆரும்படியாக
இன்பம் வளர
அந்தாமத்து அன்பு தொடங்கப் பிறந்த ப்ரீதி
வைகல் வைகல்
கழிகிற காலம் தோறும்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை
உன்னை என்னுள்ளே இருத்தி வைத்தனை
யென்னிருடீ கேசனே –
எனக்குப் பரிகரமாய் விரோதித்த இந்த்ரியங்களும் உன் பக்கலிலே படையற்றன
பரம சேஷியைக் கண்டார் த்வார சேஷிகள் அளவில் நில்லார்கள் இறே -இந்த்ரியங்கள் என்னது — ஈசன் நீ —

———————————————————————————-

அவதாரிகை –

நமக்கு உபகாரகன் ஆனவனை நீ ஒரு காலும் விடாதே கண்டாய் -என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-

சர்வ பிரகார உபகாரன் -விடாமையில் உண்டான அபேஷையை வெளியிடுகிறார்
இருடீகேசன் -தச இந்த்ரிய ஆனனன்-மானச இந்த்ரியத்தை நியமித்து
எம்பிரான் -உபகாரகன்
இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் -எனக்கு செய்தது இதுவும் என்கிறார் -முருடான ராவணனை
லோக கண்டகன் கொடூரமான-ராஷச குலத்துக்கு பலமான ராவணன்
எம்மான் -என்னை அனுபவிப்பித்த ஸ்வாமி
அமரர் பெம்மான் என்று என்று -பலபடியாக அனுசந்தித்து
தெருடியாகில் நெஞ்சே வணங்கு -அறிவுடையை -தெளிவு -ஆகில் -வணங்கும் படி
திண்ணம் அறி அறிந்து -புத்தி பண்ணி -உறுதியாக -சிக்கென
மருடி யேலும் விடேல் கண்டாய் -அயோக்யா அனுசந்தானம் கலக்கம் வந்தாலும் -இதுவே மருள் –
நம்பி பற்ப நாபனையே–குண பூர்ணனான -காரண பூதன் -இம் மஹா உபகாரகனை -விட்டு விடாதே

இருடீகேசன் எம்பிரான் –
தன்னை அறிகைக்கு பரிகரமாக தந்த இந்த்ரியங்களைக் கொண்டு சப்தாதி விஷயங்களை விரும்பி நான் அனர்த்தப்படாமே
தன்னையே அறிகைக்கு பரிகரமாம்படி பண்ணி உபகரித்த மகா உபகாரகன் –நாடாத மலர் நாடி –வைக்கவே வைக்கின்றது-
இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் –
இவருடைய இந்த்ரிய வசதியைத் தவிர்த்த படி -இலங்கையில் ராஷச ஜாதியில் விபீஷணாதிகளை வைத்து முருடரான
ராவணாதிகளை நிரசித்தால் போலே யாயிற்று
எம்மான் அமரர் பெம்மான்
இந்த்ரியங்களுடைய இதர விஷய பிராவண்யத்தை தவிர்த்த மாத்ரம் அன்றிக்கே நித்ய ஸூரிகளுக்கு தன்னை அனுபவிக்கக்
கொடுக்குமா போலே -எனக்குத் தன்னை அனுபவிக்கத் தந்தவன் –
என்று என்று
இப்படிச் சொல்லா நின்று கொண்டு
தெருடியாகில் நெஞ்சே வணங்கு
தெருளுதியாகில் -ஜ்ஞான பிரகாச த்வாராமிகில் –நெஞ்சே வணங்கு -ஜ்ஞான இந்த்ரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான
ஏற்றம் உனக்கு உண்டாகில் உபகாரகன் ஆனவன் திருவடிகளிலே விழப் பார் –
விபரீத ஆகாரதையை போக்கின படி -மனசுக்கு ஞானம் உண்டோ -வெளி புறப்பட வழி- மனஸ் சஹகாரத்தா
ஞான இந்த்ரியங்கள் வேலை என்பதால் –
யோகிநாம் -தச இந்த்ரியங்கள் -கோரம் மநோ ராஜநீசரண் -ராஷசர் போலே –விவேக சரம் -ராம பானம் போலே -யோக மார்க்கம் –
தேகாத்ம விவேகம் -அந்ய சேஷத்வ -விவேகம் -ஸ்வ ஸ்வா தந்த்ர்யா விவேகம் -ஆகிய சரம் என்றவாறு
திண்ணம் அறி
இத்தை ஒலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாகப் புத்தி பண்ணு –
வார்த்தை பதின் கலம்-வழியில் ஓர் எண் கலம் -தெரு முலையில் அறு கலம் –
கொடுத்தது முக்கலம் -ஆள் கலம் போக்கி பதர் கலம் போக்கி கிடைத்தது ஒரு கலம் -சபை வார்த்தை –
அறிந்து
அறிகை தானே போரும் பிரயோஜனம் -அதுக்கு மேலே
மருடி யேலும் விடேல் கண்டாய்
உனக்கு ஒரு பிச்சு உண்டு இறே-அவன் வைலஷண்யத்தைப் பாரா வருவது –
நாம் இவ்விஷயத்தை தூஷிக்கையாவது என்-என்று அயோக்ய அனுசந்தானத்தாலே அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -அத்தைத் தவிரப்பார் கிடாய்
நம்பி பற்ப நாபனையே —
கெடுவாய் இவ்விஷயத்தை விட்டு புறம்பே போய் மண்ணை முக்கவோ
மண்ணை அளந்தவனும் அவன் -உண்டவனும் அவன் உமிழ்ந்தவனும் அவன் –ஜகமே நியத பிரகார சரீரம் –
1-அவன் குண பூர்த்தி இருந்த படி கண்டாயே —நம்பி
2-வடிவு அழகு இருந்தபடி கண்டாயே —பத்ம நாபனையே –கொப்பூழில் ஏழு கமலப் பூ அழகர்
3-முன்பு நமக்கு உபகரித்த படி கண்டாயே–நம்பி-பத்ம நாபனையே –இருடீகேசன்

——————————————————————————————–

அவதாரிகை –

பற்பநாபன்-அத்யந்த விலஷணனாய் இருந்து வைத்து –தாமோதரனே-அத்யந்த ஸூலபனாய்
எந்தை-என்னை அடிமை கொண்டவன் –எற்பரன்-என்னை யல்லது அறியானானான் என்கிறார் –

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11-

சர்வ பிரகாரன் ஆனான் என்கிறார் -போக்கிடம் இல்லை என்று நெஞ்சு இங்கேயே இருக்கப் பண்ணினானே
பற்பநாபன்-ஜகத் உத்பத்தி ஹேதுவான திரு நாபி கமலம் உடையவன்
உயர்வற உயரும் பெரும் திறலோன் -உத்பன்ன ஜகத்தை ரஷிக்க பெரும் சக்தன்
எற்பரன் -இந்த மேன்மை யுடனே சிலபனாக என் பரமாகவே உள்ளான் -நானே இலக்காக உள்ளானே
என்னை யாக்கிக் கொண்டு -என்னை அங்கீ கரித்து
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -ஏவகாரம் -அசாதாராண -சம்பந்த சம்பந்திகள் நமக்கும் உண்டே
என்னமுதம் -பரம போக்கியம்
கார் முகில் போலும்-தரம் பார்க்காமல் உபகரிக்கும்
வேங்கட நல் வெற்பன் -யோக்ய ஸ்தலமான -வெண்நீல மேகங்கள் விரித்தால் போல் –
விசும்போர் பிரான் -ஆஸ்ரித பவ்யத்தை உடையவன்
எந்தை எனது ஸ்வாமி
தாமோதரனே-ஆஸ்ரிதர் கட்டும் படி
எனக்கே தன்னைத் தந்த -1-அர்த்தியை உண்டாக்கியும் -2–அவனைத் தானே ச்வீகரிக்கையும் -3–அபேஷிதத்தை கொடுக்காமல் தன்னையே கொடுக்கையும் –
4-தானே போக்யமாகவும் இருப்பதால் கற்பக வியாவ்ருத்தி உண்டே இவனுக்கு

பற்பநாபன் –
சகல ஜகத் உத்பத்தி காரணமான திரு நாபி கமலத்தை உடையவன்
உயர்வற உயரும் பெரும் திறலோன் –
பேசப் புக்கால் பரிச்சேதித்துப் பேச ஒண்ணாத படியான சௌர்ய வீர்யாதி குண ப்ரதையை உடையவன்
திறல் -பர அபிபுவன சாமர்த்தியம் –அல்லாத குணங்களுக்கும் உப லஷணம் இது –
காரணத்வ பிரயுக்தமான மேன்மை அது -பர அபிபவன சாமர்த்தியம் தொடக்கமான குணங்கள் அவை –
இப்படி இருக்கிறவன்
எற்பரன் –
மதேக சித்தன்
என்னையாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
ஔதார்யத்தில் பிரசித்தமாய் இருப்பது கல்பகம் இறே -அதில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –என்னையாக்கிக் கொண்டு
1-அர்த்திகளை உண்டாக்கிக் கொடுக்கும் அது இல்லை இறே அதுக்கு
எனக்கே –
2-ஒருவனுக்கே குறைவறக் கொடுக்குமது இல்லை இறே அதுக்கு
தன்னைத் தந்த –
3-சில பிரயோஜனன்களை கொடுக்குமல்லது-தன்னைக் கொடுக்குமது இல்லை இறே அதுக்கு
என்னமுதம் –
4-தான் போக்யமாய் இருக்குமது இல்லை இறே அதுக்கு –
எனக்கு நிரதிசய போக்யமானவன் –
ஒரே சரம் ஒரே சொல் -சக்ருத்-துர் நாபிபாஷதே
கார் முகில் போலும் வேங்கட நல் வெற்பன் –
இந்த ஔதார்யத்துக்கு அடி திருமலையின் சம்பந்தம்-
சஹ்யம் பற்றின ஔதார்யம் இறே -பிரவாஹம் நீர் வீழ்ச்சி என்றவாறே –
சஹ்யாத்ரி -காவேரி -போலே -ஔதார்யத்துக்கு சங்கோசம் இல்லை –
கொடுத்தத்தை நினையாதே கொடுக்கும் மேகம் போன்ற ஸ்வபாவத்தை உடைய திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையவன்
சமன் கொள் வீடு தரும் சமன் குன்றமே –
விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே —
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் இருந்து வைத்து -ஆஸ்ரிதரான இடையருக்கும் இடைச்சிகளுக்கும் கட்டவும் அடிக்கவுமாம் படி
வந்து அவதரித்து அச்செயலாலே அடிமை கொண்டவன் -பிரதம விபூஷணம் -உதர பந்தனம் –
விசும்போர் பிரானாய்–எந்தையே –என் அமுதம் ஆனவன் -என் பரன் -என்று அந்வயம்-
உபாயத்வம் –ஆக்கிக் கொண்டு -/அமுதம் -உபேயத்வம் /பரத்வம் /சௌலப்யம் /சௌர்யம் வீர்யம் பராக்கிரமம்
அனைத்தும் சொல்லி –தன்னை ஒழிய போகாதவன் –
தாயார் -குழந்தை பிதற்றலை கேட்டு சயனித்து -நாபியில் –நாஹம் -அறிய வில்லையே சொல்லி பிதற்றி -ஸ்ரீ பத்ம நாப ஸ்ரீ யே -தேசிகன்

——————————————————————————–

அவதாரிகை –

எற்பரன் என்கிறபடியே என்னளவில் அவன் செய்தால் போல்-நிர்ஹேதுக அனுக்ரஹம்- செய்வார்க்கு அவனைக் காணலாம் அல்லது
ஸ்வ யத்னத்தாலே அறிவோம் என்பார்க்கு அறியப் போகாது என்கிறார்

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே —2-7-12-

அதிசயித ஞானாதிகருக்கும் தன்னளவில் செய்த உபகாரம் அறியார்
தாமோதரனைத் -ஆமோ தரமறிய-இப்படி என்றால் நாராயணனை அறிய முடியுமோ-ஆஸ்ரித பரதந்த்ரன்
தனி முதல்வனை -நிமித்த -உபாதான காரணம் -சமஸ்த ஜகத் ஏக காரணத்வன்
ஞாலம் உண்டவனை -பிரளயத்தில்
ஆமோ தரமறிய ஒருவர்க்கு -தங்களை தவிர வேறு யாராலும் முடியாதே -ஆகாது –
என்றே தொழுமவர்கள்-
தாமோதரன் உருவாகிய –சிவற்கும் திசை முகற்கும்-சரீரம் தானே -இவர்கள் இப்படி சொல்லி தொழுகிறார்கள் –
பிரகாரதயா சேஷம் -பிரியாமல் சார்ந்து
கடுகிலே கடலை மடுத்தால் போலே -என்னிடம்
ஆமோ தரமறிய -இவர்களா தெரிந்து கொள்வார்கள் -இவர்கள் அந்த பரத்வன் தாமோதரன் என்பார் -என்னிடம் கலந்தது அறியாதார்களே
தாமோதரனாக வந்து என்னளவு வந்தது அறியாதவர்கள் -என்றவாறு
எம்மானை என்னாழி வணனையே -சமுத்திர வர்ணன் -கடுகிலே கடலை மடுத்தால் போலே –(குண ஆர்ணவம் -என்னுள் வைத்த உபகாரகம்- தாமோதரத்வம் பரத்வம் என்னலாம் படி அன்றோ )-இந்த சௌலப்யம் யாரே அறிவார் –
விசேஷ உபகாரம் அறிவது அரிது -யசோதை கையால் கட்டுப்பட்டதை அறிந்தாலும்

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்கென்றே யாயிற்று ப்ரஹ்மாதிகள் சொல்லுவது
தாமோதரனை –
அவன் ஆஸ்ரித பரதந்த்ரனாய் நிற்கிற நிலையை அறியப் போமோ
தனி முதல்வன் –
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் என்கிறபடியே த்ரிவித காரணமும்
தானேயாய் இருக்கிற இருப்பை அறியப் போமோ
ஞாலம் உண்டவனை –
உண்டாக்கி விடுகை யன்றிக்கே ஆபத் சகனாய் நிற்கும் நிலையை அறியப் போமோ –
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரமறிய-
ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு என்னா நிற்பார்கள்-தாங்கள் எல்லாம் அறிந்தார்களாக நினைத்து தொழுமவர்கள்
யஸ்ய மதம் அமதம் -யஸ்ய அமதம் தஸ்ய மதம் -அப்பால் பட்டவன் என்றே சொல்ல முடியும் –
ஆமோ தரம் அறிய ஒருவற்கு என்றே தொழும்வராய் -தாமோதரன் உருவாகிய சர்வேஸ்வரனுக்கு சரீரவத் விதேயரான
சிவர்க்கும் திசை முகர்க்கும் தரமறிய யாமோ
அல்லாதாரில் காட்டில் தாங்கள் அறிந்தார்களாக அபிமானித்து இருக்கிறவர்களாலே தான் அறியப்போமோ –
ஆரைத் தான் என்னில்
எம்மானை என்னாழி வணனையே —
குளப்படியில் கடலை மடுத்தால் போலே தான் குண ஆர்ணவமாய் இருக்கிற இருப்பை எனக்கு அறிவித்தவனை –
இப்படி அவன் தானே காட்டக் கண்ட நான் கண்டால் போலே காண்பார்க்கு காணலாம் அத்தனை அல்லது –
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போமோ –
தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள் தாமோதரன் உருவாகிய
சிவற்கும் திசை முகற்கும் எம்மானை என்னாழி வணனையே தரமறிய ஆமோ –என்று அந்வயம் –

————————————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றவர்களை இத் திருவாய் மொழி தானே எம்பெருமான் திருவடிகளைச் சேர்த்து விடும் -என்கிறார் –

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூர்ச் சடகோபன்  
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-13-

பகவத் பிராப்தியே பலம்
வண்ண மா மணிச் சோதியை -நிறம் -பெரு விலையனான -நீல மணி -தேஜஸ் -ஜோதி மணி உருவம் -விக்ரகம் என்றுமாம்
அமரர் தலைமகனை -நித்ய ஸூ ரிகளும் அழகை பரிச்சேதிக்க ஒண்ணாத படி
கண்ணனை –ஆஸ்ரிதரை -தானே அனுபவிப்பிக்கும் -சௌலப்யம்
நெடுமாலைத் -வ்யாமோஹம்
தென் குருகூர்ச் சடகோபன்  -அழகிய –நிர்வாஹகர்
பண்ணிய -செய்த -பகர்ந்த -பண்ணில் அமைத்து அருளிச் செய்த
தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும் -சர்வாதிகாரம் -திராவிட சந்தர்பம் கூட்டு –
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு -பண்ணிலே வர்த்திக்கும் திரு த்வாதச திரு நாமம்
அண்ணல் தாள் அணைவிக்குமே-கேசவன் தமராக்கும் -சர்வேஸ்வரன் திருவடிகளை பிராபிக்கும் –

வண்ண மா மணிச் சோதியை –
அழகிய நிறத்தை உடைத்தாய் -பெரு விலையனான ரத்னம் போலே இருக்கிற விக்ரகத்தை உடையவனை –
வண்ணம் -நிறம்
மா மணி -மா கறுப்பு -கறுத்த மணி போலே -நீல ரத்னம் போன்ற வடிவில் தேஜஸ்சை உடையவன் -என்றுமாம் –
இவ் வழகைக் கொள்ளை கொள்ளும் போக்தாக்களைச் சொல்லுகிறது –அமரர் தலைமகனை –
ஒரு நாடாக அனுபவியா நின்றாலும் தன் அழகைப் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கிறவனை
கண்ணனை
அவர்களே அனுபவித்துப் போகாமே -இங்கு உள்ளாரும் அனுபவிக்கும் படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை
நெடுமாலைத்
ஒருவனை விஷயீ கரித்தால்-அவன் அளவில் தலைக் கட்டாத வ்யாமோஹத்தை உடையவனை –
தென் குருகூர்ச் சடகோபன்  பண்ணிய –தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும் -பண்ணில்
வேதம் போலே பிறப்பிலி யன்று -அபௌருஷேயம்-என்னும் அதிலும் வீறு உண்டாய் இருக்கிறதாயிற்று-வக்த்ரு விசேஷத்தாலே
சடாரி -ஸ்ரீ ஸூ க்தி -அகில ஹேய -ஞான அனுதயம் -அந்யதா ஞானம் -விபரீத ஞானம் -கர்மா வாசனா ருசி போக்கி
-சகல ஹேய நிரசன பூர்வகம் -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் வார்த்தை அன்றோ
பகவத் பிரசாத லப்த பரி பூர்ண ஞான வைபவம் அகில சேதன உஜ்ஜீவன ஆசை கொண்ட ஆழ்வார் –
பிரத்யஷ சமாநாகார பரிவாஹ-வேதத்துக்கு இதுவும் அடியாய் இருக்கும் -சாஷி – உயர்ந்த பிரமாணம் ஆகுமே –வக்த்ரு விசேஷம்
இவை பண்ணிலே யாயிற்று நடந்தது
பன்னிரு நாமப் பாட்டு-
வைஷ்ணத்வ சிஹ்னமான திரு நாமங்களை வைத்துப் பாடினவை –
இவை செய்வது என் என்னில்
அண்ணல் தாள் அணைவிக்குமே–
சர்வேஸ்வரன் திருவடிகளிலே சேர்த்து விடும்
இத் திருவாய் மொழி யோட்டை சம்பந்தம் தானே கேசவன் தமர் ஆக்கி விடும் –

முதல் பாட்டில் தம்மோடு சம்பந்தி சம்பந்திகளும் எல்லாரும் தம்மைப் போலே விஷயீ க்ருதரானார்கள் -என்றார்
இரண்டாம் பாட்டில் அதுக்கு அடி நாராயணன் ஆகையாலே என்றும் அந் நாராயண சப்தார்த்தத்தையும் அருளிச் செய்தார் –
மூன்றாம் பாட்டில் இப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது சொன்னார் –
நாலாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படி பண்ணினான் என்றார்
அஞ்சாம் பாட்டில் இப்படி தன்னை அனுபவித்ததனாலே அவன் வடிவில் வந்த புகரைச் சொன்னார்
ஆறாம் பாட்டில் இப்படி என்னை விஷயீ கரிக்கைக்கு அடி நிர்ஹேதுக கிருபை என்றார்
ஏழாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படியான நெஞ்சைத் தந்தான் என்றார்
எட்டாம் பாட்டில் தந்த அளவன்றிக்கே விரோதியான நெஞ்சையும் போக்கினான் என்றார்
ஒன்பதாம் பாட்டில் தன்னுடைய கல்யாண குணங்களையே நான் அனுபவிக்கும் படி என் ஹிருதயத்திலே புகுந்தான் -என்றார்
பத்தாம் பாட்டில் அனுபவ விரோதியான இந்த்ரியங்களையும் தன் வழி யாக்கிக் கொண்டான் என்றார்
பதினோராம் பாட்டில் ஏவம் பூதனானவன் என்னை அல்லாது அறியானானான் என்றார்
பன்னிரண்டாம் பாட்டில் என்னைப் போலே காண்பார்க்கு காணலாம் அது ஒழிய ஸ்வ யத்னத்தால் அறியப் போகாது என்றார் –
நிகமத்தில் பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தே கேசவ அபிமத தாம பஜந்த ஹந்த
யே மாமகா இதி வதன் நதி ஸப்தமம் ச
தஸ்ய ஸ்வரூப குண சேஷ்டித வாசி நாம
பூதன் விஷட் க முகரோ முமுதே முதீந்த்ர–17-

ஹந்த —என்ன ஆச்சர்யம்
யே மாமகாகா இதி வதன் —திருதராஷ்ட்ரன் மாமகாகா கூட உள்ளோர் அனைவரையும் தொலையப் பண்ணிற்று —
இவரது மாமகாகா இவர் சம்பந்த சம்பந்திகள் அனைவரையும் உஜ்ஜீவித்தது
அதி சப்தமம் -சக —ஏழாவது பதிகம் -21 தலைமறை என்றுமாம்

——————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

ஸர்வாதிஸ் ஸர்வ நாதஸ் த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் ஸுவ ஆஸ்ரிரார்த்தி
விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ விமத நிரசனஸ் ஸுவ அங்க்ரி சத்  பக்தி தாயீ
விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – ஸுவ விபவ ரஸதஸ் ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய
ஸ்வார்த்தேஹோ பந்த மோக்தா ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே –2-7-

1-ஸர்வாதிஸ் –கேசவன் தமர் இத்யாதி -க இதி ப்ரஹ்மணோ நாம -இத்யாதிகள் படியே ஸர்வ காரணமாய்

2-ஸர்வ நாதஸ் —நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–ஸர்வ ஸ்வாமியுமாய்

3-த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் –மாதவன் என்றதே கொண்டு–பெரிய பிராட்டிக்கு வல்லபனுமாய் –

4-ஸுவ ஆஸ்ரிரார்த்தி–எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான்—
பஹு வாக ஆஸ்ரிதர் உண்டாக வேணும் என்று பிரார்த்திக்குமவனாய் –

5-விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ —விட்டிலங்கு கருஞ்சுடர் இத்யாதி –நிரவதிக தேஜோ ரூபனுமாய்

6-விமத நிரசனஸ் —மது சூதனை யன்றி மற்றிலேன்—விரோதி நிராசனனுமாய் –

7-ஸுவ அங்க்ரி சத்  பக்தி தாயீ —நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய்—தன் திருவடிகளிலே அநந்ய ப்ரயோஜனையான பக்தியை ஆஸ்ரிதற்குக் கொடுக்குமவனாய் –

8–விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – -வாமனன் என் மரகத வண்ணன்—மஹா பலி யாலே அபஹ்ருதமான வாமன யுடையவனுமாய் –

9–ஸுவ விபவ ரஸதஸ் –சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்–
தன்னுடைய ஸ்ரீ யபதிவத்தையும்-புண்டரீகாக்ஷதை-போன்ற ஐஸ்வர்யத்தை ஸர்வ காலமும் சொல்லி அலற்றும்படி பண்ணுமவனாய் –

10–ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய—இருடீகேசம் எம்பிரான் இத்யாதி –ஹ்ருஷீகேசன் ஆகையால் மனசை
தன் திருவடிகளில் நின்றும் பேராதபடி நிர்வஹிக்க வல்லவனுமாய் –

11–ஸ்வார்த்தேஹோ –எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்–
ஸ்வார்த்தமாகச் சேதனரை அர்த்திகள் ஆக்கித் தன்னை அனுபவிக்கக் கொடுக்குமவனை

12-பந்த மோக்தா—-தாமோதரனைத் தனி முதல்வனை–தாமோதரம் பந்த கதம் -என்கிறபடியே பந்த கதருக்கு
மோக்ஷ ஹேதுவான தாமோதரத்வத்தை யுடையனுமாய் இருக்கிற எம்பெருமான் –
நியாய சாஸ்திரம் வெட்கி காட்டில் ஒழியும் படி பண்ணினார்
எதோ உபாசனம் ததோ பலம் -பொய்த்ததே
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றியவன் -கர்மங்கள் விலங்கு பட்டன படும்

ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே -ஆஸ்ரிதருடைய சம்பந்த சம்பந்திகளுக்கும் ரக்ஷகன் என்று –
கேசவன் தமர் -என்கிற துவாதச நாம காதையிலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

——————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 17-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு
ஆறு என்று நெஞ்சே அணை——–——17-

———————————————————————–
அவதாரிகை –

இதில்
கீழ் மேல் உண்டானவர்கள் எல்லாரும்
தம்முடைய சம்பந்தத்தாலே
பகவத் தாஸ்ய லாபத்தை லபித்தார்கள் என்று
ஹ்ருஷ்டராய்ப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்
தம் அளவில் உண்டான உகப்பு தம் ஒருவர் அளவிலும்
சுவறி விடுகை அன்றிக்கே
தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினர் -என்கிற
விரோதி நிவ்ருத்தி அளவன்றிக்கே
பலத்தாலும் வெள்ளமிட்டு-அலை எறிகிற படியைக் கண்டு –
மமாப்யேஷ யதாதவ -என்னும்படி
ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே என்று வித்தராய்
தம்மை இப்படி சபரிகரமாக விஷயீ கரிக்கைக்கு அடியான
அவன் குண சேஷ்டிதங்களை
திருத் த்வாதச நாம முகத்தாலே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிற
கேசவன் தமரில் -அர்த்தத்தை
கேசவனால் எந்தமார்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

———————————————————————————

வியாக்யானம்–

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும் தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த –
எம்பிரான் எம்மான் நாராயணனாலே-
எமர் -கீழ் மேல் ஏழ் பிறப்பும் –
கேசவன் தமர் -ஆனார்கள்
மாசரிது பெற்று –
அத்தாலே –நம்முடைய வாழ்வு வாய்க்கின்ற வா –
என்றத்தை நினைக்கிறது –

கேசவனால் எந்தமர்கள் –
ஜகத் காரண பூதனாய்
விரோதி நிரசனம் பண்ணுமவனாய் –
பிரசஸ்த கேசவனான
அவனாலே

மதீயர் தேசு அடைந்தார் என்று
தேஜஸ் சைப் பிராபித்தார்கள் என்று –
கேசவன் தமராகை இறே இவர்களுக்கு தேஜஸ்
தாஸ்யம் இறே ஆத்மாவுக்கு தேஜஸ் கரமாவது –
அத்தை தம்மோட்டை சம்பந்தத்தாலே
கீழ் மேல் உண்டான சம்பந்தி பரம்பரையில் உள்ளவர்கள் எல்லாரும்
லபித்தார்கள் என்று
அந்த யுபகார கௌரவத்தாலே
அவன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய்
வைஷ்ணத்வ சிஹ்னமாய்
கேசவன்
நாரணன்
மாதவன்
கோவிந்தன்
விட்டு
மது சூதனன்
திரி விக்ரமன்
வாமனன்
சிரீதரன்
இருடீகேசன்
பற்ப நாபன்
தாமோதரன் –
என்கிற திரு த்வாதச திரு நாமங்களை பேசி அனுபவித்து
ஹ்ருஷ்டராய்
அத்தை இப்படி நன்றாக அருளிச் செய்த –
சிறப்பு -நன்று –

வீசு புகழ் மாறன்-
சம்பந்த சம்பந்திகள் அளவும்
வைஷ்ணத்வம் ஏறிப் பாயும் படியான
வைபவத்தால்
வந்த பிரசுரமான யசஸ்சை உடைய
ஆழ்வார் உடைய-

மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று –
புஷ்பம் போன்ற திருவடிகளே
நித்தியமான ஆத்மாக்களுக்கு எல்லாம்
உஜ்ஜீவிக்கைக்கு
உசித உபாயம் என்று –

நெஞ்சே அணை-
அவர்களிலே ஒருவனாய்
அம்சம் பெறும்படியான எனக்கு உபகரணமாய்
சௌமனச்யம் உள்ள மனசே
பிரஸூன சமமான திருவடிகளை நீயும் சமாஸ்ரயணம் பண்ணு–

நாராயணனாலே -என்று –
அவனுடைய ச்வீகாரமே நிரபேஷ உபாயம் என்றதின்
அனுவாதமான
கேசவனால் என்கிற இப்பதத்திலே -தத் விவரணமாக
மாதவன் என்றதே கொண்டு -என்றும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் மேவும் தன் மயமாக்கினான் -என்றும்
என்னைக் கொண்டு -என்றும்
தன் பேறு ஆனமைக்கு –விட்டிலங்கு செஞ்சோதி -என்றும்
அம்மான் திரிவிக்ரமனை எனக்கே அருள் செய்ய –எனக்கு என்ன –விதி சூழ்ந்தது –என்றும்
தொழும் மனமே தந்தாய் -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
உன்னை என்னுள் வைத்தேன் என் இருடீகேசனே -என்றும்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்றும்
தாமோதரனை -என்றும்
அருளிச் செய்த சந்தைகளும் அனுசந்தேயங்கள்-

——————————————————————————————

1) கேசவா – நீண்ட கேசத்தை உடையவன்; கேசி என்ற அரக்கனை வென்றவன்.
2) மாதவா – திருமகள் மணாளன்
3) நாராயணா – உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்
4) கோவிந்த-பூமியைப் பிரளயத்திலிருந்து காத்தவன்; பசுக்களை மேய்த்தவன்
5) விஷ்ணு – அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்
6) மதுஸுந-இந்திரியங்களை ஈர்ப்பவன்; மது என்னும் அரக்கனை வென்றவன்
7) திரிவிக்ரமா – மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்
8) வாமனா – குள்ளமான உருவம் உடையவன்
9) ஸ்ரீதரா – ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்
10) ருஷீகேசா – தன் ஆணைப்படி புலன்களை நடத்துபவன்
11) பத்மநாபா – நாபியில் தாமரையை உடையவன்
12) தாமோதரா-கயிற்றால் கட்டப்பட்ட தழும்பு கொண்ட வயிறு உடையவன்.

இப்பன்னிரு திரு நாமஙகளை “வைகுந்தவாசன்வாமனாவதாரன்கிருஷ்ணாவதாரன் நாமங்கள்” என மூன்று வகையாக பிரிக்கலாம்.

 வைகுந்தவாசன்: நாராயணா, விஷ்ணு.
 வாமனாவதாரன்: திரிவிக்ரமா, வாமனா.
 கிருஷ்ணாவதாரன்: கேசவா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, ஸ்ரீதரா, ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.

———–

|| ஸ்ரீ த்வாதச நாம பஞ்ஜரம் ||

புரஸ்தாத் கேசவ: பாது சக்ரீ ஜாம்பூநதப்ரபு: |
பஸ்சாந் நாரயண: சங்கீ நீலஜீமூத ஸந்நிப: || 1 ||

இந்தீவர தளஸ்யாமோ மாதவோர்த்வம் சுதாதர: |
கோவிந்தோ தக்ஷிணே பார்ச்வே-
-தந்வீ சந்த்ரப்ரபோ மஹாந் || 2 ||

உத்தரே ஹலப்ருத் விஷ்ணு: பத்பகிஞ்ஜல்க ஸந்நிப: |
ஆக்நேயாம் அரவிந்தாபோ முஸலீ மதுஸூதன: || 3 ||

த்ரிவிக்ரம: கட்கபாணிர் நிர்ருத்யாம் ஜ்வலநப்ரப: |
வாயவ்யாம் வாமநோ வஜ்ரீ தருணாதித்ய தீப்திமாந் || 4

ஜசாந்யாம் புண்டரீகாப: ஸ்ரீதர: பட்டஸாயத: |
வித்யுத்ப்ரபோ ஹ்ருஷீகேசோ– ஹ்யவாச்யாம் திசிமுத்கரீ || 5 ||

ஹ்ருத்பத்மே பத்மநாபோ மே ஸஹஸ்ரார்க்க ஸமப்ரப:|
ஸர்வாயுத: ஸர்வசக்தி: ஸர்வக்ஞ: ஸர்வதோமுக: || 6 ||

இந்த்ரகோபக ஸங்காச: பாசஹஸ்தோ ऽபராஜித: |
ஸ பாஹ்யாப்யந்தரம் தேஹம்-
– வ்யாப்ய தாமோதரஸ்தித: || 7 ||

ஏவம் ஸர்வத்ர மச்சித்ரம் .நாம த்வாதசபஞ்ஜரம் |
ப்ரவிஷ்டோऽஹம் ந மே கிஞ்சித் பயமஸ்தி கதாசந: || 8 ||

பயந்நாஸ்தி கதாசந ஓம் நம இதி |

|| ஸ்ரீ த்வாதச நாம பஞ்ஜரம் ஸம்பூர்ணம் ||

——————-

புரஸ்தாத் கேசவ பாது , சக்ரீ ஜாம்பு நாத பிரபா, பச்சன் நாராயண சங்கீ நீலா ஜீமூத சன்னிபா. 1 

கிழக்கே முகமாய், உருகிய தங்கச் சக்கரத்தை ஏந்திய கேசவனால் நான் காக்கப்படுகிறேன், மேற்கில் நான் நாராயணனால் காக்கப்படுவேன்.
சங்கு வைத்திருப்பவர், செழுமையான நீலமேகத்தை ஒத்தவர்.

இந்தீவர தல ஷ்யாமோ மாதவோ ஊர்த்வா கதாதர,
கோவிந்தோ, தக்ஷிணே பார்ஸ்வே தந்வீ சந்த்ர ப்ரபோ மஹான். 2

உச்சியில் இருந்து, நீல அல்லி நிறமும் சூலாயுதமும் கொண்ட மாதவனால் என்னைக் காக்கட்டும்,
தெற்கில் சந்திரனின் குளிர்ந்த பிரகாசத்தை உடையவனும் அம்பு ஏந்தியவனுமான கோவிந்தனால் என்னைக் காக்கட்டும்.

உத்தரே ஹல ப்ருத் விஷ்ணு, பத்ம கிஞ்சல்க சன்னிபா,
அக்நேயம் அரவிந்தபோ முசலீ மதுசூதனா. 3

வடக்கே என்னை விஷ்ணு பகவான் காக்கட்டும்.
தாமரை இழையின் நிறமுடையவனும், கலப்பையை வைத்திருப்பவனும்,
தென்கிழக்கில், தாமரையைப் போன்றவனும், பூச்சியை ஏந்தியவனுமான மதுவைக் கொன்றவனே என்னைக் காக்கட்டும்.

த்ரிவிக்ரம கட்க பாணி, நிர்யாத்யம் ஜ்வலனா பிரபா,
வாயவ்யம் வாமனோ வஜ்ரி தருணாதித்ய தீப்திமான். 4

தென் மேற்கில் திரிவிக்ரமனால் என்னைக் காக்கட்டும்.
வாளை ஏந்தி நெருப்பு போல் பிரகாசிப்பவன்,
வடமேற்கில் வாமனனால் காக்கப்படுபவன்,
இடியை ஏந்தி இளம் சூரியனைப் போல் பிரகாசிப்பவன்.

ஜசாந்யாம் புண்டரீகாப: ஸ்ரீதர: பட்டஸாயத: |
வித்யுத்ப்ரபோ ஹ்ருஷீகேசோ– ஹ்யவாச்யாம் திசிமுத்கரீ || 5 ||

வடகிழக்கில் தாமரையின் நிறமும் ஈட்டியும் ஏந்திய ஸ்ரீதரால் என்னைக் காக்கட்டும்,

கீழே இருந்து மின்னலைப் போலவும் சுத்தியலைப் பிடித்தவனுமான ஹிருஷிகேசனால் என்னைக் காக்கட்டும் .

ஹ்ருத் பத்மே பத்மநாபோ மே ஸஹஸ்ர அர்க ஸம ப்ரபா, ஸர்வாயுத ஸர்வ சக்தி ஸர்வஜ்ஞ ஸர்வதோ முக. 

கோடி சூரியன்களின் பிரகாசத்துடன், என் இதயத்தை ஆக்கிரமித்து, அனைத்து ஆயுதங்களுடனும், அனைத்து சக்திகளுடனும், அனைத்தையும் அறிந்தவராகவும், பத்மநாபா பகவான், எல்லாத் திசைகளிலும் முகங்களுடன் என்னை எப்போதும் காக்கும்.

இந்த்ர கோப ஸங்காஸ பாஸ ஹஸ்தோ அபராஜித,
ஸ பாஹாய அந்தரம் தேஹம் வ்யாப்ய தாமோதர ஸ்திதா. 7

எனக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் தாமோதரன்,
நீலத் தேனீயின் நிறத்தை உடையவனும்,
கைகளில் கயிறுகளை உடையவனும்,
வெல்ல முடியாதவனுமான தாமோதரன் என்னை எப்போதும் காக்கட்டும்.

ஏவம் ஸர்வத்ர மச் சித்ரம் நாம த்வாதச பஞ்சரம்,
ப்ரவிஷ்டோஹம் ந மே கிஞ்சித் பயமஸ்தி கதாச்சன. 8

இவ்வாறு உடைக்க முடியாத கூண்டுக்குள் நுழைந்து,
எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் பன்னிரண்டு பெயர்களில்,
நான் எப்போதும் எல்லா இடங்களிலும் பாதுகாக்கப்படுகிறேன்,

பயம் நாஸ்தி கதாசன ஓம் நம இதி.
எந்த நேரத்திலும் பயப்பட வேண்டாம்.

எந்த நேரத்திலும் பயம் இல்லை.

——————–

துவாதச புண்டரம் :

[ஶ்ரீசூர்ணம் (தாயார்) – திருமண் (பெருமாள்) – ஸ்தாநம் – நிறம்]

கேசவன் 
தோள்களாம் நாலிலும் ஆள்கின்ற சக்கரம் !
நீள்திரு மார்பில் மலர்மகள்சேர் — வேள்வித்தீ 
பொன்னன்! அடியார் திரு நெற்றிக் கேசவன் !
அன்னை சிரிதேவி யாம்!
நாரணன் 
சங்குதங்கு நாற்கரம்! சேமநல் வீடுசேர்
மங்கலத் தாளினன்! தேவியும் — பொங்கலைவாய் 
தோன்றினாள்! வான்நீல வண்ணத்தெம் அண்ணல்மால்
ஒன்றுமிடம் பத்தர்(மேல்) வயிறு!
மாதவன் 
கருநீலம் தோய்நிறமும் நீள்புயம் நான்கில்
பெருவலத்த நாந்தகமும் தாங்கிப் — பொருந்தும்
அமலன்அங் கைமா தவன்தன் தேவி
கமலையும் சேரிடம் மார்பு!
கோவிந்தன் 
 
குளிர்முத்தின் வெண்ணிறமும் கோலவில் நான்கும்
மிளிர்முன் கழுத்தின் அமர்ந்து — அளிபொறை
அன்னை அவள்பெயரும் தண்மதியின் மிக்கொளியாள் !
முன்னை வினைமுடிப்பர் சேர்ந்து.
விஷ்ணு 
 
தாமரைத் தாதன்ன பொன்னிறத் தோள்கள்
சுமக்கும் கலப்பைஓர் நான்கும் — நமக்கு
வயிற்றின் வலப்புரம்சேர் விட்டுவவன் மாது
துயக்கறுக்கும் தோன்றக் கிடந்து.
மதுசூதனன் 
உலக்கை ஒருநான்கும் தாமரையின் மென்நிறமும்
மாலாய் உலகாளும் மாயோன் — வலப்புயது 
செவ்விக்கு செவ்விசேர் வைட்டணவி மாதொடும்
தவ்வை அவள்வௌவல் மாய்த்து.
திரிவிக்ரமன் 
 
அனலோன் அணிநிறமும் கைசுரிகை நான்கும்
தனதாகி, வேட்டும் வரம்ஈட்டும் — கோனவன்தோள்
மாட்டுயர்  வஞ்சிக் கொடியென் ஏறினாளைத்
தீட்டும் கழுத்தின் வலத்து .
வாமனன் 
அருக்கன் அழல்நிறமும் கைநான்கு தாங்கு
உருப்பொலிந்த வஜ்ரமும் எம்மின் – பெருவுதரம் 
சேர்இடபால் ஆங்கு அரியவன் தேவியும்
பேர்ந்திடாது மேவும் மகிழ்ந்து.
ஸ்ரீதரன் 
 
வெண்டா மரைமென் நிறமும் பட்டயமும்
கொண்டானை  கைநின்ற சார்ங்கம்சேர் —  தண்டா 
மரைதா யவளும் திகழுமிடம் நம்தோள்
மறைநூல் இடது புரம்.
ஹிருஷீகேசன்
மின்னின் நிறவண்ணன் மற்கரம் கைபூண்டு
மன்னுபுகழ் மால்தேவ தேவிசேர் — மன்னன்
திகழ்விடம் நம்மின் கழுத்திட மாக;
புகழது எந்தை குடிக்கு.
பத்மநாபன் 
பகலவன் பொன்நிறமும் தன்பெரும் தேவி 
அகல்மார்வத் தோடும் அவன்கை — திகழ்வதாம்
ஐம்படை சேரத் துலங்குவான் பின்முதுகு 
தம்மிடமாய் போற்றும் வகைத்து .
தாமோதரன் 
உதயபானு போல்நிறமும் காணுலுகில் பேரழகி 
யாத மலர்மகள் மங்கல — நாதனும்
பாசம்கை   பற்றி  இசைவிடம் பின்கழுத்து,
வாசன்வாய் பேசும் புகழ்ந்து.

——————————————-

ஸ்ரீ பன்னிரு நாமம் -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

இந்த திவ்ய பிரபந்தமும் பேர் அருளாளன் விஷயமே –ஸ்ரீ கேசவாதி திரு நாமங்களை சொல்லி பன்னிரு திருமண் காப்புகளில்
அவ்வவ் வெம்பெருமான்களை ஆவாஹனம் செய்ய வேண்டும் -இந்த பிரபந்தத்தில் அவ்வெம்பெருமான்களின் திருமேனி நிறம் –
அவர்கள் அணிந்து இருக்கும் திவ்ய ஆயுதங்கள் -அவர்கள் தலைவராய் வீற்று இருக்கும் திசை –
நம் சரீரத்தில் புண்ட்ர ரூபமாய் அவர்கள் வகிக்கும் பாகம் ஆகியவற்றை ஸ்ரீ தேசிகன் வெளியிட்டு அருளுகிறார் –

———————————

பன்னிரு நாமம் திருவத்தியூர்ப் பரன் பாதம் என்று
நன்னிற நாமம் படை திக்கு இவை யாவையும் நாம் அறியத்
தென்னம் தமிழ்த் தொடைச் சீரார் கலித்துறை யோதி ஈந்தான்
மின்னிரு நூலார் வேங்கட நாதன் நம் தேசிகன் —சிறப்புத் தனியன் –

மின்னிரு நூலார் வேங்கட நாதன் நம் தேசிகன் —பிரகாசம் பொருந்திய திரு யஞ்ஜோபவீதம் அமைந்த திரு தூப்பூல் திருவேங்கடமுடையான் ஆகிய நம் தேசிகர்
பன்னிரு நாமம் திருவத்தியூர்ப் பரன் பாதம் என்று -பன்னிரண்டு ஊர்த்வ புண்டரங்களும் பெருமை பொருந்திய ஸ்ரீ ஹஸ்திகிரி நாதனான
பேர் அருளாளனுடைய திருவடி வடிவம் கொண்டன என்று நினைத்து
நன்னிற நாமம் படை திக்கு இவை யாவையும் நாம் அறியத் -அந்த புறங்களின் தேவதையாகிய எம்பெருமானுடைய
சிறந்த நிறம் திரு நாமம் திவ்ய ஆயுதம் வசிக்கும் திசை ஆகிய அனைத்தையும் நாம் அறியும் படி
தென்னம் தமிழ்த் தொடைச் சீரார் கலித்துறை யோதி ஈந்தான்-தெற்கே வழங்கும் அழகிய தமிழினால் ஆகிய பாட்டுக்களுக்குள் சிறப்புப் பொருந்திய
கட்டளை கலித் துறை என்னும் பாவினத்தால் அருளிச் செய்து நாம் அனுசந்திக்கத் தந்து அருளினார் –

——————————-

கார் கொண்ட மேனியன் பாதாம் புயத்தைக் கருத்திருத்தி
ஏர் கொண்ட கீர்த்தி இராமானுசன் தன் இணை அடி சேர்
சீர் கொண்ட தூப்பூல் திருவெண்காடாரியன் சீர் மொழியை
யார் கொண்டு போற்றிடினும் அம்மாள் பாதத்தை அடைவிக்குமே —சிறப்புத் தனியன் –

கார் கொண்ட மேனியன் பாதாம் புயத்தைக் கருத்திருத்தி –மேகத்தை ஒத்த திருமேனியையுடைய பேர் அருளானுடைய
திருவடித் தாமரையை மனத்தில் உறுதியாகத் தியானித்து
ஏர் கொண்ட கீர்த்தி இராமானுசன் தன் இணை அடி சேர் –அழகிய புகழையுடைய ஸ்ரீ பாஷ்யகாரருடைய இரண்டு திருவடித் தாமரைகளை சேர்ந்த
சீர் கொண்ட தூப்பூல் திருவேங்கடாரியன் சீர் மொழியை-பெருமை பெற்ற ஸ்ரீ தூப்பூல் திருவேங்கடமுடையானுடைய சிறந்த ஸ்ரீ ஸூக்தீயை
யார் கொண்டு போற்றிடினும் அம்மாள் பாதத்தை அடைவிக்குமே —மனத்தில் கொண்டு யார் ஸ்துதித்தாலும்
அவ்வெம்பெருமானுடைய திருவடிகளை அந்த ஸ்ரீ ஸூக்திகளே பெறுவிக்கும் –

—————————————————–

கேசவனாய் நின்று கீழைத் திசையிலும் நெற்றியிலும்
தேசுடை ஆழிகள் நான்குடன் செம் பசும் பொன் மலை போல்
வாசி மிகுத்து என்னை மங்காமல் காக்கும் மறையதனால்
ஆசை மிகுத்த யயன் மக வேதியில் அற்புதனே –1- ஸ்ரீ கேசவன் -பொன் நிறம் -நான்கு திருச் சக்ராயுதங்கள்- கிழக்கு -புண்டர ஸ்தானம் நெற்றி –

மறையதனால் ஆசை மிகுத்த யயன் மக வேதியில் அற்புதனே –வேதாந்தார்த்த நிச்சயத்தால் பேர் அருளானனே பரன் என்று தேறி
அவனிடம் அன்பு மிகுதியாகப் பெற்ற ப்ரஹ்மாவினுடைய யாக வேதியிலே திரு அவதரித்த அதிசய சேஷ்டிதங்களை யுடைய பேர் அருளாளன்
கேசவனாய் நின்று கீழைத் திசையிலும் நெற்றியிலும் -கேசவன் என்னும் திரு நாமத்தை யுடையனாய் கிழக்குத் திசையிலும் பாகவதர்கள் நெற்றியிலும்
தேசுடை ஆழிகள் நான்குடன் செம் பசும் பொன் மலை போல்
வாசி மிகுத்து என்னை மங்காமல் காக்கும்–பிரகாசமுள்ள திருச் சக்ராயுதங்கள் நான்குடன் சிவந்த மாற்று உயர்ந்த பொன்னினால் அமைந்த
மலை போல் நிலை பெற்று சிறப்பு மிகுந்து என்னைக் கெட்டுப் போகாமல் ரஷித்து அருளுகிறார் –

————————————–

நாரணனாய் நல் வலம் புரி நாலும் உகந்து எடுத்தும்
ஊர் அணி மேகம் எனவே உதரமும் மேற்கும் நின்றும்
ஆரண நூல் தந்து அருளால் அடைக்கலம் கொண்டு அருளும்
வாரண வெற்பின் மழை முகில் போல் நின்ற மாயவனே–2-ஸ்ரீ நாராயணன் -நீல நிறம் -நான்கு திவ்ய சங்காயுதங்கள் -மேற்கு -புண்ட்ர ஸ்தானம் வயிறு –

நாரணனாய் நல் வலம் பூரி நாளும் உகந்து எடுத்தும்
ஊர் அணி மேகம் எனவே உதரமும் மேற்கும் நின்றும்
ஆரண நூல் தந்து அருளால் அடைக்கலம் கொண்டு அருளும்
வாரண வெற்பின் மழை முகில் போல் நின்ற மாயவனே–நாராயணன் –ஸ்ரீ ஹஸ்த கிரியிலே குளிர்ந்த மேகம் போலே நிற்கின்ற அதிசய சேஷ்டிதங்களையுடைய பேர் அருளாளன்
நாரணனாய் நல் வலம் புரி நாலும் உகந்து எடுத்தும் -நாராயணனாய் இருந்து சிறந்த வலம் புரிச் சங்கங்கள் நான்கையும் மகிழ்ந்து திரு க் கையில் ஏந்தியும்
ஊர் அணி மேகம் எனவே உதரமும் மேற்கும் நின்றும் -நிலத்தில் சஞ்சரிக்கும் அழகிய மேகம் என்னும்படியாகவும் வயிற்றிலும் மேற்குத் திசையிலும் நின்றும்
ஆரண நூல் தந்து அருளால் அடைக்கலம் கொண்டு அருளும் -வேதமாகிய சாஸ்திரத்தைப் பிரவர்த்திப்பித்து கிருபையால்
அடியேனை ரஷிக்கப் பட வேண்டிய வஸ்துவாக ஏற்றுக் கொண்டு அருள்கிறான் –

————————————————————-

மாதவ நாமமும் வான் கதை நான்கும் மணி நிறமும்
ஓதும் முறைப் படி ஏந்தி யுரத்திலும் மேலும் அல்கிப்
போதலர் மாதுடன் புந்தியில் அன்பால் புகுந்து அளிக்கும்
தூதனும் நாதனுமாய தொல் அத்தி கிரிச் சுடரே –3-ஸ்ரீ மாதவன் –இந்த்ர நீல நிறம் -நான்கு திவ்ய கதைகள் –ஊர்த்வ திசை -புண்ட்ர ஸ்தானம் -மார்பு —

தூதனும் நாதனுமாய தொல் அத்தி கிரிச் சுடரே -பாண்டவர்களுக்குத் தூதனாயும் அனைவருக்கும் ஸ்வாமியாயும் உள்ள அநாதியான
ஸ்ரீ ஹஸ்திகிரியில் உள்ள தேஜஸ்ஸாகிய பேர் அருளாளன்
மாதவ நாமமும் வான் கதை நான்கும் மணி நிறமும் -மாதவன் என்கிற திரு நாமத்தையும் -வலிய திவ்ய கதை நான்கையும் -இந்த்ர நீல ரத்னத்தின் நிறத்தையும்
ஓதும் முறைப் படி ஏந்தி யுரத்திலும் மேலும் அல்கிப் -சாஸ்திரங்களில் கூறும் முறைப்படி தரித்து -மார்பிலும் மேல் நோக்கும் திசையிலும் இருந்து
போதலர் மாதுடன் புந்தியில் அன்பால் புகுந்து அளிக்கும் -அடியேன் இடம் அன்பினால் என் மனசில் தாமரை மலரில் விளங்கும் பிராட்டியுடன் பிரவேசித்து ரஷித்து அருள்கிறான் –

——————————————-

கோவிந்தன் என்றும் குளிர் மதியாகிக் கொடியவரை
ஏவும் தனுக்களுடன் தெற்கிலும் உட் கழுத்திலும் நின்று
மேவும் திருவருளால் வினை தீர்த்து எனை யாண்டு யருளும்
பூவன் தொழ வத்தி மா மலை மேல் நின்ற புண்ணியனே -4-ஸ்ரீ கோவிந்தன் –சந்த்ரநிறம் -நான்கு திவ்ய வில்கள்௦புன்ற ஸ்தானம் உட் கழுத்து –

பூவன் தொழ வத்தி மா மலை மேல் நின்ற புண்ணியனே –கமலத்தில் அவதரித்த ப்ரஹ்மா சேவித்து அனுபவிக்கும் படி
ஸ்ரீ ஹஸ்த மஹா கிரியின் மேல் நிலை பெற்று நின்றவனுமான புண்ய ஸ்வரூபனான பேர் அருளாளன்
கோவிந்தன் என்றும் குளிர் மதியாகிக் கொடியவரை -கோவிந்தனாகவும் நிறத்தில் எப்பொழுதும் குளிர்ந்த சந்த்ரனாகவும் இருந்து துஷ்டர்களை
ஏவும் தனுக்களுடன் தெற்கிலும் உட் கழுத்திலும் நின்று -போக்குகின்ற நான்கு திவ்ய விற்களுடன் தெற்குத் திசையிலும் கழுத்தின் உட் புறத்திலும் நிலை பெற்று நின்று
மேவும் திருவருளால் வினை தீர்த்து எனை யாண்டு யருளும்–பொருந்திய சிறந்த கருணையால் பாபங்களை போக்கி அடியேனை அடிமையும் கொண்டு அருள்கிறான் –

———————————————————-

விட்டு வல வயிற்றின் கண் வடக்கும் விடாது நின்று
மட்டவிழ்த் தாமரைத் தாது நிறம் கொண்ட மேனியனாய்த்
தொட்ட கலப்பைகள் ஈர் இரண்டாலும் துயர் அறுக்கும்
கட்டு எழில் சோலைக் கரிகிரி மேல் நின்ற கற்பகமே -5-
ஸ்ரீ விஷ்ணு -தாமரைத் தாதுவின் பொன்நிறம்–நான்கு திவ்ய கலப்பைகள் -வடக்கு திசை -புண்ட்ர ஸ்தானம் -வயிற்றின் வலப் புறம் –

கட்டு எழில் சோலைக் கரிகிரி மேல் நின்ற கற்பகமே -மிக்க அழகுள்ள சோலைகள் சூழ்ந்த ஸ்ரீ ஹஸ்தி கிரியின்
மேலே எழுந்து அருளி யுள்ள கல்பவ்ருக்ஷம் போன்ற பேர் அருளாளன்
விட்டு வல வயிற்றின் கண் வடக்கும் விடாது நின்று –விஷ்ணுவாக இருந்து வயிற்றின் வலப் புறத்திலும் வடதிசையிலும்நீங்காது தங்கி
மட்டவிழ்த் தாமரைத் தாது நிறம் கொண்ட மேனியனாய்த் -தேன் ஒழுகுகின்ற தாமரையின் மகரந்தத்தை நிறத்தைக் கொண்ட திருமேனியுடையனாய்
தொட்ட கலப்பைகள் ஈர் இரண்டாலும் துயர் அறுக்கும் –கையில் ஏந்திய கலப்பைகள் நான்கினாலும் அடியேன் துன்பத்தை போக்கி அருள்கிறான் –

——————————————————————-

மதுசூதனன் என் வலப் புயம் தென் கிழக்கு என்று இவற்றில்
பதியாய் இருந்து பொன் மாது யுறை பங்கய வண்ணனுமாய்
முது மா வினைகள் அறுக்கும் முயலங்கள் ஈர் இரண்டால்
மதுவார் இளம் பொழில் வாரண வெற்பின் மழை முகிலே -6-
ஸ்ரீ மது ஸூ தனன் -தாமரை நிறம் –நான்கு திவ்ய உலக்கைகள் –தென் கிழக்கு –புண்ட்ர ஸ்தானம் –வலது புஜம் —

மதுவார் இளம் பொழில் வாரண வெற்பின் மழை முகிலே –தேன் நிறைந்த இளம் சோலை சூழ்ந்த ஸ்ரீ ஹஸ்திகிரியில்
எழுந்து அருளியுள்ள வர்ஷா கால மேகம் போன்ற பேர் அருளாளன்
மதுசூதனன் என் வலப் புயம் தென் கிழக்கு என்று இவற்றில் -மது ஸூ தனனாக இருந்து எனது வலது புஜமும் தேன் கிழக்கும் ஆகிய இந்த ஸ்தானங்களில்
பதியாய் இருந்து பொன் மாது யுறை பங்கய வண்ணனுமாய் -ஸ்திரமாய் இருந்து ஸ்ரீ லஷ்மீ பிராட்டி நித்ய வாசம் செய்கின்ற தாமரையின் நிறம் யுடையவனாய்
முது மா வினைகள் அறுக்கும் முயலங்கள் ஈர் இரண்டால் -திவ்ய உலக்கைகள் நான்கினால் என்னுடைய அநாதியான பெரிய கர்மங்களை ஒழித்து அருள்கிறான் –

————————————————

திரிவிக்ரமன் திகழ் தீ நிறத்தன் தெளிவுடை வாள்
உருவிக் கரங்களில் ஈரிரண்டு ஏந்தி வலக் கழுத்தும்
செரு விக்கிரமத்து அரக்கர் திக்கும் சிறந்து ஆளும் இறை
மருவிக் கரிகிரி மேல் வரம் தந்திடும் மன்னவனே -7-
ஸ்ரீ திரிவிக்ரமன் –அக்னி நிறம் -நான்கு திவ்ய வாள் –தென் மேற்கு திசை -புண்ட்ர ஸ்தானம் –கழுத்தின் வலப்புறம் –

மருவிக் கரிகிரி மேல் வரம் தந்திடும் மன்னவன் இறை –ஸ்ரீ ஹஸ்திகிரியின் மீது பொருந்தி வேண்டிய வரத்தைக் கொடுத்து அருள்கின்ற சக்கரவர்தியாகிய பேர் அருளாளன்
திரிவிக்ரமன் திகழ் தீ நிறத்தன் தெளிவுடை வாள்-உருவிக் கரங்களில் ஈரிரண்டு ஏந்தி -ஸ்ரீ திரிவிக்ரமனாய் இருந்து ஜ்வலிக்கின்ற அக்னி போன்ற நிறம் உடையவனாய் –
திருக் கைகளிலே பிரகாசம் பொருந்திய திரு வாள்கள் நான்கையும் உருவித் தாங்கி
வலக் கழுத்தும் -செரு விக்கிரமத்து அரக்கர் திக்கும் சிறந்து ஆளும் -கழுத்தின் வலப் புறத்திலும் போரில் வலிமையைக் காட்டுகின்ற
ராக்ஷஸர்களுடைய திசையாகிய நைருதி-தென் மேற்கு திக்கிலும் சிறந்து நின்று ரஷித்து அருள்கிறான் –

—————————————

வாமனன் என் தன் வாமோதரமும் வாயுவின் திசையும்
தாமம் அடைந்து தருண அருக்கன் நிறத்தனுமாய்ச்
சேம மரக்கலம் செம் பாவி ஈர் இரண்டால் திகழும்
நா மங்கை மேவிய நான்முகன் வேதியில் நம் பரனே -8-
ஸ்ரீ வாமனன் –நான்கு திவ்ய வஜ்ரம் –வட மேற்கு திசை –புண்ட்ர ஸ்தானம் -வயிற்றின் இடது புறம் –

நா மங்கை மேவிய நான்முகன் வேதியில் நம் பரனே –சரஸ்வதி உடன் பொருந்திய ப்ரஹ்மாவின் யாக வேதியில் திரு அவதரித்த நம் சர்வேஸ்வரனான பேர் அருளாளன்
வாமனன் என் தன் வாமோதரமும் வாயுவின் திசையும் –வாமனனாய் என் இட வயிற்றையும் வாயுவின் திசையான வட மேற்கையும்
தாமம் அடைந்து தருண அருக்கன் நிறத்தனுமாய்ச் –ஸ்தானமாகக் கொண்டு உதித்த ஸூர்யன் யுடைய நிறமுடையவனாய்
சேம மரக்கலம் செம் பாவி ஈர் இரண்டால் திகழும் –அடியார்களை சம்சார சமுத்திரத்தில் இருந்து கரை சேர்த்து க்ஷேமத்தைக் கொடுக்கும்
ஓடமாக இருந்து சிவந்த திவ்ய வஜ்ராயுதம் நான்கினோடு பிரகாசித்து அருள்கிறான் –

———————————-

சீரார் சிரீதரனாய்ச் சிவன் திக்கும் இடப் புயமும்
ஏரார் இடம் கொண்டு இலங்கு வெண் தாமரை மேனியனாய்ப்
பாராய பட்டயம் ஈர் இரண்டாலும் பயம் அறுக்கும்
ஆரா வமுது அத்தி மா மலை மேல் நின்ற அச்சுதனே-9-
ஸ்ரீ தரன் –வெண் தாமரை நிறம் –நான்கு திவ்ய பட்டாக் கத்தி -வட கிழக்கு திசை –புண்ட்ர ஸ்தானம் -இடது புஜம் –

ஆரா வமுது அத்தி மா மலை மேல் நின்ற அச்சுதனே—எவ்வளவு அனுபவித்தாலும் தெவிட்டாத அமுதமாய் உள்ளவனும்
ஸ்ரீ ஹஸ்தி மஹா கிரியின் மேல் நிலை பெற்றவனும் அடியவர்களைக் காய் விடாதவனுமான பேர் அருளாளன்
சீரார் சிரீதரனாய்ச் சிவன் திக்கும் இடப் புயமும் –சிறப்பு நிறைந்த ஸ்ரீ தரனாய் சிவனுடைய திசையாகிய வட கிழக்கையும் இடது புஜத்தையும்
ஏரார் இடம் கொண்டு இலங்கு வெண் தாமரை மேனியனாய்ப் -அழகு பொருந்திய ஸ்தானமாகக் கொண்டு பிரகாசிக்கின்ற வெண்மையான தாமரையின் நிறமுடையவனாய்
பாராய பட்டயம் ஈர் இரண்டாலும் பயம் அறுக்கும் -பருத்த பட்டயம் என்னும் ஒருவகையான திவ்ய வாள்கள் நான்கினாலும் என் பயத்தைப் போக்கி அருள்கிறான் –

———————————————

என்னிடிகேஷன் என் இறை கீழ் இடக் கழுத்து என்று இவற்றில்
நல் நிலை மின் உருவாய் நாலு முற்கரம் கொண்டு அளிக்கும்
பொன் அகில் சேர்ந்து அலைக்கும் புனல் வேகை வட கரையில்
தென்னன் உகந்து தொழும் தேனை வேதியர் தெய்வம் ஒன்றே -10-
ஸ்ரீ ஹ்ருஷீ கேசன் –மின்னல் நிறம் -நான்கு திவ்ய சம்மட்டி –கீழ்ப் பாகம் –புண்ட்ர ஸ்தானம் –கழுத்தின் இடப் புறம் —

பொன் அகில் சேர்ந்து அலைக்கும் புனல் வேகை வட கரையில் -பொன்னையும் அகில் கட்டையையும் கொண்டு
அலை மோதுகின்ற ஜலத்தை யுடைய வேகவதி நதியின் வடகரையில்
தென்னன் உகந்து தொழும் தேனை வேதியர் தெய்வம் ஒன்றே -புண்ய ராஜன் மகிழ்ந்து வணங்குகின்ற தேனம் பாக்கத்தில் உள்ள
வைதிகப் பெரியோர்களின் ஒரே தெய்வமாகிய பேர் அருளாளன்
பெருமாள் கோயிலுக்கு மிகச் சமீபத்தில் தேனம் பாக்கம் என்னும் ஸ்ரீ கிராமம் –இத்தை ஸ்ரீ காஞ்சீ புரத்து ஒரு வீதியாகவும் கொள்ளலாம் –
அங்கு ஸ்ரீ பாஞ்ச ராத்ர சாஸ்திரங்களில் கரைகண்ட பரம பாகவதர்கள் எழுந்து அருளி இருந்து பேர் அருளாளனை குல தெய்வமாகக் கொண்டு
வழுவாது திரு வாராதானம் செய்து வந்தனர்
அவர்களுடைய ஆத்மகுணங்களைக் கண்ட ஆஸ்திக சிகாமணியான பாண்டிய ராஜன் ஒருவன் அவர்களுக்கு ஸம்மானம் அளித்து
அவர்களை வணங்கி வந்தான் என்னும் வரலாறு கர்ண பரம்பரையாக அறியக் கிடக்கின்றது –
மேலும் பெருமாள் கோயில் பாண்டிய நாட்டில் அடங்கியதாகச் சில காலம் இருந்ததாகவும் அப்பொழுது பாண்டிய ராஜன் பேர் அருளாளன் யுடைய அருளாலே
பெருமை பெற்று வாழ்ந்து வந்தது பற்றியும் அவ்வரசன் பேர் அருளாளனைத் தொழுது வந்ததாகவும் சிலா சாசனம் உளது என்றும் சிலர் பணிப்பர்
என்னிடிகேஷன் என் இறை கீழ் இடக் கழுத்து என்று இவற்றில் -ஹிருஷீகேசன் என்னும் என் ஸ்வாமியாய் இருந்து கீழ்ப் பாகமும் கழுத்தின் இடப் புறமும்
ஆகிய இந்த இடங்களில்
நல் நிலை மின் உருவாய் நாலு முற்கரம் கொண்டு அளிக்கும் -நன்கு நிலை பெற்ற மின்னைப் போன்ற நிறமுடையவனாய் இருந்து
நான்கு திவ்ய சம்மட்டிகளை திவ்ய ஆயுதமாகக் கொண்டு ரஷித்து அருள்கிறான் –

————————————————

எம் பற்பநாபனும் என் பின்மனம் பற்றி மன்னி நின்று
வெம் பொன் கதிரவன் ஆயிரம் மேவிய மெய் உருவாய்
அம் பொன் கரங்களில் ஐம் படை கொண்டு அஞ்சல் என்று அளிக்கும்
செம் பொன் திரு மதிள் சூழ் சிந்துரா சலச் சேவகனே -11-
ஸ்ரீ பத்ம நாபன் –ஸூர்யன் நிறம் –திவ்ய சக்கரம் சங்கு வாள் வில் தண்டு என்னும் பஞ்ச திவ்ய ஆயுதங்கள் -ஸ்தானம் -மனாஸ் -புண்ட்ர ஸ்தானம் -பின்புறம்

செம் பொன் திரு மதிள் சூழ் சிந்துரா சலச் சேவகனே –சிவந்த பொன்னாலாகிய அழகிய மதிள் சூழ்ந்த ஸ்ரீ ஹதிகிரியில் உள்ள மஹா வீரனான பேர் அருளாளன்
எம் பற்பநாபனும் என் பின்மனம் பற்றி மன்னி நின்று -எம்முடைய பத்ம நாபனுமாகி என்னுடைய பின் பாகத்தையும் மனசையும் பற்றிக் கொண்டு ஸ்திரமாய் நின்று
வெம் பொன் கதிரவன் ஆயிரம் மேவிய மெய் உருவாய் -உஷ்ணமான சிவந்த ஆயிரம் ஸூர்யனோடு ஒப்பான திரு மேனி நிறமுடையவனாய்
அம் பொன் கரங்களில் ஐம் படை கொண்டு அஞ்சல் என்று அளிக்கும் -அழகிய சிவந்த திருக்கைகளில்
திவ்ய பஞ்ச ஆயுதங்களைத் தரித்து அஞ்சாதே என்று கூறி ரஷித்து அருள்கிறான் –

——————————

தாமோதரன் என் தன் தாமங்கள் நாலு கரங்களில் கொண்டு
ஆமோ தரம் என ஆக்கத்தின் உட் புறம் பிற் கழுத்தும்
தாம் ஓர் இளம் கதிரோன் என என் உள் இருள் அறுக்கும்
மா மோகம் மாற்றும் மதிள் அத்தியூரில் மரகதமே-12-
ஸ்ரீ தாமோதரன் –உதிக்கின்ற ஸூர்யன் நிறம் -நான்கு திவ்ய பாசங்கள் -சரீரத்தின் உட் புறமும் வெளிப் புறமும் –புண்ட்ர ஸ்தானம் –கழுத்தின் பின் புறம்

மா மோகம் மாற்றும் மதிள் அத்தியூரில் மரகதமே–பெரிய அஞ்ஞானத்தைப் போக்குகின்ற திரு மதிள்கள் சூழ்ந்த
ஸ்ரீ ஹஸ்திகிரியில் உள்ள மரகத ரத்னம் போன்ற பேர் அருளாளன்
தாமோதரன் என் தன் தாமங்கள் நாலு கரங்களில் கொண்டு -என் தாமோதரனாகி நான்கு திவ்ய பாசங்களை திருக் கைகளிலே ஏந்திக் கொண்டு
ஆமோ தரம் என ஆக்கத்தின் உட் புறம் பிற் கழுத்தும் -இந்தப் பெருமை மற்றவருக்கு உண்டோ என்னும் படி சரீரத்தின் உள்ளேயும் வெளியிலும் கழுத்தின் பின் புறத்தும் நின்று
தாம் ஓர் இளம் கதிரோன் என என் உள் இருள் அறுக்கும் -தான் ஓர் உதிக்கின்ற ஸூர்யன் என்னும்படி நிறமுடையவனாய் இருந்து
எனது மனத்துள் இருக்கும் அஞ்ஞானம் ஆகிய இருளை போக்கி அருள்கிறான் –

————————————–

கத்தித் திரியும் கலைகளை வெல்லும் கருத்தில் வைத்துப்
பத்திக்கு உரு துணை பன்னிரு நாமம் பயில்பவர்க்கு
முக்திக்கு மூலம் எனவே மொழிந்த இம்மூன்றும் நான்கும்
தித்திக்கும் எங்கள் திருவத்தி யூரரைச் சேர்பவர்க்கே -13-

கத்தித் திரியும் கலைகளை வெல்லும் கருத்தில் வைத்துப் -சாரம் இல்லாமல் ஆடம்பரத்தோடு கத்திக் கொண்டே திரிகின்ற
பயன் அற்ற வித்யைகளை வாதத்தில் ஜெயிக்க கூடிய உறுதியை யுடைய மனசில்
பத்திக்கு உரு துணை பன்னிரு நாமம் பயில்பவர்க்கு –பக்திக்குத் தக்க சாதனமான கேசவாதி பன்னிரண்டு திரு நாமங்களையும் ஊன்றி அனுசந்தித்து பரிச்சயம் செய்பவர்க்கு
முக்திக்கு மூலம் எனவே மொழிந்த இம்மூன்றும் நான்கும் -மோக்ஷம் அளிக்க காரணமாகும் என்னும்படி அருளிச் செய்த இந்த பன்னிரண்டு பாசுரங்களும்
தித்திக்கும் எங்கள் திருவத்தி யூரரைச் சேர்பவர்க்கே -எங்கள் பேர் அருளாளரை ஆஸ்ரயித்த பாகவதர்களுக்கே பரம போக்யமாய் இன்பம் கொடுப்பனவாகும் –

—————-

அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….கிரேசி மோகன்
—————————————————————————————————————

“கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய ,வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய”…..ஆக பெருமாளின் 12 திவ்ய நாமங்கள்….கிரேசி மோகன்….

கேசவன்
——————

“களமுற பார்த்தனின் கலவர வேர்த்தலைக்  கழுவிடு தீர்த்தமாம் கீதையதால்
உளமுரம் கூட்டினை ஒருரதம் ஓட்டினை பலமுற காட்டினை பாதையதை
பொலபொல என்றுதி காலையை முந்திடும் பரவசக் கோதையின் பாசுரத்தால்
அலைகடல் விட்டுயர் பட்டரின் பெட்டையை கட்டிடக் கேட்டிடும் ”கேசவனே”….(1)
ஹரிஹரி கோகுலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

நாராயணன்
————————–
“சரிய பிதாம்பரம் நழுவ கதாயுதம் பிளிறும் கஜேந்திரன் குரல் கேட்டு
பறவைசு தாகரம் விரையவ னாந்திரம் எறிய சுதர்சனம் விரல்விட்டு
துரிதநி வாரண முனிகள் தபோவனம் பறையும் கதாம்ருத காரணனே
முரளி மனோகர கமல பதாம் புய அனந்த”நாராயண” பூரணனே”….(2)
ஹரிஹரி கோகுல பாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

மாதவன்
——————

“அவையென இவையென அளவிடல் தவறென கவிமணி மலையணில் கூட்டியதை
புவிதனில் ஏழையை பிள்ளையை வேழனை மகிழ்வுறச் செய்ததைக் காட்டினையே
தவியுற ஆய்க்குடி தளிர்விரல் தூக்கிட குளிர்மழை காத்தனை யாதவனே
கவிகளின் காப்புக் கடவுள்முன் தோப்புக் கரணம் செய் காக்கும் ”மாதவனே”….(3)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

கோவிந்தன்
————————

“அலமுவை கட்டினை அதிகடன் பட்டனை அடைத்திடத் தொட்டனை ஏழுமலை
பலரிட உண்டியில் சிலறையை ஒண்டியாய் புகல்ஜர கண்டியில் வாழயிலை
துளசியை மென்றிட குறையிலை என்றிடும் நிலைதர நின்றிடும் ”கோவிந்தா”
அலைகடல் சேடனில் அணிமகள் கூடலில் வளர்துயி லாடிடும் வைகுந்தா”….(4)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

விஷ்ணு
—————-

“செதிளதில் ஆரணம் முதுகினில் மேருவும்முகநுனி தாரணி கொண்டவனே
சதையுறி உந்தியில் பதபலி புந்தியில்விதவித பந்தியில் உண்டவனே
விதையுழு ராமனும் மழுமுனி ராமனும் தொழுரகு ராமனும் பாகவதக்
கதைசொலும் க்ருஷ்ணனும் பலபல ஸ்ருஷ்டியும் சதைவுயிர் ”விஷ்ணுவின்” சாகசமே”….(5)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

திரிவிக்ரமன்
—————————-

“அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம் உணர்குரு சுக்கிரர் கட்டளையை
பலியிட அக்கணம் குறள்”திரி விக்ரம” வடிவினில் திக்கது தொட்டனனே
புலனுரு வாமனம் பழகிட நீமனம் பெருகுவை ஆணவ கந்தையிலே
சலணரு ணேசரின் சிசுரம ணேசரை சரணடை கோவண சந்நிதியில்”….(6)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

வாமனன்
——————

“சிறைவசு தேவகி கருவச மாகிட இரவினில் ஏகினன் கோகுலமே
கறவைகள் மேய்த்தனன் கம்சனை சாய்த்தனன் தீர்த்தனன் ஆயரின் வ்யாகுலமே
மறைதிரு மச்சமும் அரைதனில் கச்சமும் குடுமியின் உச்சமும் பூமணமாய்
குறளுரு வாயொரு குடைபுயம் சாய்வுற களபலி சேய்வளர் ”வாமனனே” ….(7)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

சீதரன்
————

“இலைமரு தாணியின் மணமுறை மேனியள் திருமகள் பூணிடும் ”சீதரனே”
அலைகலை மங்கையர் அடிதொழும் சுந்தரி மலைசிவ சங்கரி சோதரனே
அலைகடல் சங்கொடு நந்தகி ஆழியும் சிலைபரு தண்டமும் கண்டவுடன்
விலையென ஏறிடும் வெவ்வினை ஆறிடும் விடுமெமை வேறிடம் சேருமதே”….(8)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

ரிஷிகேசன்
——————–
“அசுரநி சாசரர் அதரும நீசர்கள் அழியச ராசரம் வந்தவனை
தசவித வேஷனை முனிமன வாசனை தவ”ரிஷி கேசனை” வந்தனம்செய்
தசமுகன் சாகவும் குசலவர் ஏகவும் ரகுபதி ராகவ ரூபமெடு
தசரத மைந்தனை குகனோடு ஐந்தென தரணியில் உய்ந்தவன் தாபமுறு”….(9)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

பதுமநாபன்
————————
“கரனுடன் தூஷணை வனஉழை வேஷனை தசமுக பூஷனை இம்சைதரும்
இரணிய ராட்ஷசன் இணையிரண் யாட்ஷகன் துரியனின் சூழ்ச்சியை ,கம்சனையும்
குறைசிசு பாலனை மதுகைட பாணனை வதம்புரி மாலனை நம்பிடுவாய்
பிரமனுய் நாபனை புவியுமிழ் நாபனை ’’பதுமம்கொள் நாபனை’’ கும்பிடுவாய்”….(10)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

தாமோதரன்
————————-

“கரமொடு களவாய் பிடிபட உனதாய் உரலிட இழு”தா மோதரனே”
மரமதை சாய்த்தனை மருதிடை வாய்த்தவர் மறுவுல கேத்திடும் ஆதரவே
புரிவிஷ மத்தினில் முடிவில்ந லத்தினை வெளியுற வைத்திடும் யவ்வனனே
சரியென தப்பென அறியும்ம னத்தினை அரிகழல் வைத்தறு வெவ்வினையே”….(11)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

மதுசூதனன்
———————

“மகளிர்உ டுப்பினை மறைவிளோ ளித்தனை பிறகுஅ ளித்திடும் திட்டமொடு
துகிலுரி துட்டனை தளர்வுற கொட்டினை துருபதைக் எட்டிட பட்டதனை
புகுவிட பூதனை விடவுடல் வேதனை முலையுறி மா”மது சூதனனே”
புகுகருங் காளியுன் பிறவியைக் கோளிட வ்ரஜநிலம் ஏளிய சோதரனே….(12)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே…

———————-

திருவாய்மொழி நாராயணனுக்கே

பரமாத்மாவுக்கு ஆயிரம் ஆயிரம் நாமங்கள் இருப்பினும், (விஷ்ணு சஹஸ்ரநாமம்), துவாதச நாமங்கள் என்று பன்னிரண்டு நாமங்கள் இருப்பினும், (கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேச, பத்மநாப மற்றும் தாமோதர), வியாபக நாமங்களாக (வியாபகம் என்றால், விரிந்து பரந்து எங்கும் இருப்பது). மூன்று (விஷ்ணு, வாசுதேவ, நாராயண) சொல்லப்பட்டாலும், ஆழ்வார் நாராயணன் என்ற நாமத்தையே திருவாய்மொழியில் அறுதி இட்டு சொல்லி உள்ளார்.

வனமாலீ  கதீ  சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ, ஸ்ரீமான் நாராயணோ  விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது.” என்ற ஆதிசங்கரரின் ஸ்லோகம் இங்கே குறிப்பிடலாம். இங்கு ஆதிசங்கரர் விஷ்ணுவின் வியாபக நாமங்களான நாராயண, விஷ்ணு மற்றும்  வாசுதேவ என்ற மூன்றையும் குறிப்பிட்டு உள்ளார்.  ‘வனமாலி என்ற மாலையை அணிந்து கௌமோதகி என்னும் கதை, பாஞ்சசன்னியம் என்னும் சங்கு, சுதர்சன என்னும் சக்கரம், சார்ங்கம் என்னும் வில், நந்தகம் என்னும் வாள் ஆகியவற்றுடன் விளங்கும் நாராயண, விஷ்ணு, வாசுதேவன் என்ற நாமங்களைக் கொண்ட திருமால் என்னைக் காக்க வேண்டும்’ என்பது இதன் பொருள்.

கண்ணன், இராமன், நரசிம்மன், த்ரிவிக்ரமன் மற்றும் வராகன் போன்ற அவதார நாமங்களை ஆழ்வார் திருவாய்மொழியின் பல இடங்களில் உபயோகித்து இருந்தாலும், ‘நாராயணன்’ என்ற நாமமே பரமாத்மாவின் முக்கியமான விஷேச குணநலன்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் நாமம் ஆகும். அதனால்தான், நாராயண  நாம அர்த்தத்தை, நாம், நம் ஆச்சார்யனிடம் கேட்டு தெரிந்து .கொள்ள வேண்டும்.

முதலில் நாராயணன்

திருவாய்மொழியின், முதல், இடை, முடிவு எல்லாம் பரமாத்மாவான நாராயணனையே சொல்லும்.

முதல் திருவாய்மொழியிலே ‘உயர்வற உயர்நல முடையவன்’ என்று தொடங்கி, நாராயணனே பரம்பொருள் என்பதற்காக ‘நாராயண‘ சப்தத்தின் பொருளை முதல் பதிகத்திலேயே அருளிச் செய்தார்.   ‘நாராயணன்’ என்பதின் பொருள், தனக்கு நிகரோ, மேம்பட்டவர்களோ இல்லாதவன், எல்லா நல்ல குணங்களும் கொண்டவன், எல்லா உலகங்களுக்கும் தன்னிகரில்லாத தலைவன் என்பதாகும்.  ‘வண்புகழ் நாரணன்’  (1.2.10) என்று இரண்டாம் பதிகத்தில் தொடங்கி, பின் ‘செல்வ நாரணன்’(1.10.8), ‘நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன்’(2.7.2), ‘திருநாரணன்’ தாள் காலம் (4.1.1) என்று ஆழ்வார் திருவாய்மொழி முதல் சில பத்துகளில் நாராயணன் பெயரைக் கூறி உள்ளார்.

இடையில் நாராயணன்

திருவாய்மொழி திருமந்திரத்தின் அர்த்தத்தை சொல்கின்றன என்று நம்  ஆச்சார்யர்கள் சொல்வார்கள். திருவாய்மொழியின் இடையில் வருகின்ற ஆறாம் பத்து (6.10) திருமந்திரத்தின் முதல் பதமான “ஓம்” என்பதனையும், மற்றும் ஏழாம் பத்தில் உள்ள பதிகங்கள் 7.1 இரண்டாம் பதமான “நம” என்பதனையும் மற்றும் 7.2 மூன்றாம் பதமான நாராயணாய என்பதனையும்   குறிக்கும்.

கங்குலும் பகலும் (7.2) என்ற பதிகத்தில் உள்ள ஒவ்வொரு பாடலின் மூலம், ஆழ்வார் தான் திருவாய்மொழியில், பத்து பத்துக்களால் என்ன சொல்லவந்தோம் என்பதை தேறிய பொருளாக தெரிவிப்பதாலும், முன்பு சொன்னதுபோல், திருவாய்மொழி நாரயணனுக்கே என்பதாலும்,  திருவாய்மொழி இடையிலும் நாராயணனே உள்ளதாக கூறப்படுகிறது.

இறுதியில் நாராயணன்

‘காராயின காள நன்மேனியன் நாராயணன்’ (9.3.1), ‘திண்ணம் நாரணம்,’ (10.5.1) ‘வாழ் புகழ் நாரணம் (10.9.1) என்று திருவாய்மொழி இறுதியிலும் நாரணனையே கூறி ஆழ்வார் முடிக்கிறார்.

மேலே சொல்லியவை ஒரு சில உதாரணங்களே, இருப்பினும், ஆழ்வார் திருவாய்மொழி முழுவதும் நாராயணனைக் கொண்டே சுவாசித்து உள்ளார்.

——————

த்வாதஸ ஊர்த்வ புண்ட்ரங்களுக்கும்‌ இப் பன்‌னிரண்டு திரு நாமங்களும் ௮நுஸந்திக்கப்படுகின்‌றன,
புருஷோத்தமனுடைய அம்ஸ சாரத்தைப்‌ பெற்ற த்வாதச ஆதித்யர்களுக்கும்‌ இப் பன்னிரு நாமங்களே கூட்டப்‌ பெற்றிருக்கின்‌றன.
எம்பெருமானுக்குப்‌ பரம்‌, வியூஹம்‌, விபவம்‌, அந்தர்யாமி, அர்ச்சை என்று. ஐந்து ௮வஸ்கைகள்‌ உள்ளனவென்பது
ஸகல ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ் புராண பாஞ்சராத்ர ஸரஸ்த்ரங்களில்‌ கோஷிக்கப்படுகின்றது.
இவ்வைந்து அவஸ்தைகளும்‌ இப் பன்னிரு நாமங்களிலும்‌ அநுஸந்திக்கப்‌ படுகின்‌ றன.
மாலரி கேசவன்‌ நாரணன்‌ மாதவன்‌ கோவிந்தன்‌ வைகுந்தன்‌” என்று நம்மாழ்வார்‌ அருளிச்‌ செய்கையாலே “
கேசவன்‌ நாராயணன்‌, மாதவன்‌ கோவிந்‌தன்‌ ” என்னுமிந்த நான்கு திருநாமங்களும்‌
ஸ்ரீவைகுண்ட நாதனாய் எழுந்தருளியிருக்கும்‌ பராவஸ்தையைக்‌ குறிக்கின்‌றன வென்‌பது விளங்குகிறது,

“விஷ்ணு” எனும்‌ அடுத்த திரு நாமம்‌ அநிருத்த நாரரயணனாகிய வியூஹத்தைக் குறிப்பதன்‌ மூலம்‌
மற்ற வியூஹங்களையும்‌ உணர்த்துகிறது.
மது ஸூதன்ன்‌’ என்பதும்‌ அந்த வியூஹ மூர்த்தியின்‌ சேஷ்டிதத்தைச்‌ சொல்லுகிறது.
“திரிவிக்ரமன்‌. வாமனன்‌. தாமோதரன்‌ என்னும்‌ திரு நாமங்கள்‌ விபவாவதாரங்களைச்‌ சொல்லுகின்‌றன.
ஸ்ரீதரன்‌” என்னும்‌ திருநாமம்‌ அவ் விபவ அவதாரங்களிலும்‌ பகவான்‌ பிராட்டியுடனேயே
அவதரிக்‌ கிறானென்று காட்டுகிறது.
“ஹ்ருஷீகேசன்‌’ என்னும்‌ திரு நாமம்‌ அந்தர்யாமியாய்‌ நின்று இந்திரியங்களை நியமிக்கும்‌ இருப்பை உரைக்கிறது.
‘ஸ்ரீதரன்‌” , எல்லாத்‌ திரு நாமங்களும்‌ திருமலை முதலிய திவ்ய ஷேத்ரங்களில்‌ எழுந்து யிருக்கும்‌
ஸ்ரீநிவாஸன்‌ முதலிய அர்ச்சா மூர்த்திகளையும்‌ உணர்த்துகின்‌ றன.
“பத்மாபன்‌’ என்று இவ் வவதாரங்‌களுக்கெல்லாம்‌ மூல அவதாரமான க்ஷீராப்தி நாதனைப்‌ பேசுகிறது. ,
ஆக, இப்படி ஐந்து அவஸ்தைகளும்‌ இந் நாமங்களில்‌ அநுபவிக்கப்படுகின்‌றன.

————

இனி இத் திருநாமங்களின்‌ அர்த்‌ தங்களைச்‌ சிந்திப்போம்‌.
(கேசவன்‌ )
ககாரத்தினால்‌ சொல்லப்‌ படும்‌ பிரமனையும்‌,
“ஈசன்‌? என்று பெயர்‌ பெற்ற சிவனையும்‌ உண்டாக்கினவன்‌,
“க இதி ப்‌,ரஹ்மணோ நாம ஈஸ்வர அஹம் ஸர்வ தே,ஹிநாம்‌ | .
ஆவாம்‌ தவாங்கே, ஸம்பூதெள தஸ்மாத்‌ கேஸவ நாமவார்‌ ||”
[‘க:’ என்று ப்ரஹ்மாவுக்குப் பெயர்‌;
தேஹத்தில்‌ அபிமான முள்ள எல்லாருக்கும்‌ நான்‌ ஈசன்‌;
ப்ரஹ்ம ருத்ரர்களாகிய நாங்கள்‌ இருவரும்‌ உன்னுடைய சரீரத்தனின்‌றும்‌ பிறந்‌தோம்‌;
ஆகையால்‌ நீ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனாயிருக்கிறாய்‌.
என்‌று ஹரிவம்சத்தில்‌ பேச நின்ற சிவனாலும்‌ பேசப்பட்டது.
-‘நாராயணாத்‌, ப்‌,ரஹ்மா ஜாயதே। நாராயணாத்‌, ருத்ரோ ஜாயதே|”
நாராயணனிடமிருந்து பிரமன்‌ பிறக்கிறான்‌:
நாராயணனிடமிருந்து ருத்திரன்‌ உண்டாகிறான்‌.
என்பது முதலான வேதவாக்கியங்களையும்‌.
மற்ற ப்ரமாணங்களையும்‌,
“தெய்வ நான்முகக்கொழுமுளை ஈன்று முக்கணீசனொடு தேவு பல (–முதலிய ஆழ்வார்‌ அருளிச்செயல்களையும்‌
இவ்விடத்தில்‌ அநுஸந்திப்பது.
(கேசவன்‌ )
பிரமனையும்‌ சிவனையும்‌ தன் வசத்தில்‌ வைத்திருப்‌பவன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
‘நாராயணாத்‌ ப்ரஜா யந்தே।| நாராயணாத்‌ ப்ரவர்த்தந்தே | நாராயணே ப்ரலீயந்தே।’்‌
பிரமன்‌ முதலிய எல்லாரும்‌ நாராயணனிடமீருந்து உண்டாகிறார்கள்‌:
நாராயணனால்‌ வாழ்கிறார்கள்‌:
நாராயணனிடமே லயமடைரார்கள்‌. என்று சொல்லிற்று

சுடர்மிகு சுருதியும்‌,
“கள்வா! எம்மையும்‌ ஏழுலகும்‌ நின்‌ உள்ளே தோற்றிய இறைவ! என்று
வெள்ளேறன்‌ நான்முகன்‌ இந்திரன்‌ வானவர்‌ புள்ளூர்தி கழல்‌ பணிந்(து) ஏத்துவரே.”’ _என்‌றும்‌,
“நெற்றியுள்‌ நின்றென்னையாளும்‌ நிறைமலர்ப் பாதங்கள்‌ சூடி
கற்றைத்‌ துழாய்‌ முடிக் கோலக்‌ கண்ணபிரானைத்‌ தொழுவார்‌
ஒற்றைப் பிறையணிந்தானும்‌ நான்முகனும்‌ இந்திரனும்‌” என்றும்‌ ஆழ்வார்‌ அருளிச் செய்தார்‌.
“விண்ணோர் தலைவா கேசவா” என்று நம்மாழ்வார்‌ இத் திரு நாமத்துக்குப்‌ பொருள்ள உரைத்தார்‌,
“கேசவா புருடோத்தமா” என்றார்‌ பெரியாழ்‌வாரும்‌.
உத்க்ருஷ்ட புருஷர்களான ப்ரஹ்ம ருத்ரர்களைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌ என்றபடி.
(கேசவன்‌ )
சோதி மயமான ஸூர்யன்‌ முதலியவைகளின்‌ கரணங்கள்‌ கேச ஸப்தத்தினால்‌ சொல்லப்படுகின்‌ றன,
அவைகளைத்‌ தன்‌ வசக்தில்‌ கொண்டிருக்கையால்‌ கேசவன்‌ எனப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.

“அம்ரவோ யே ப்ரகரமாந்தே மம தே கேமுஸம்ஜ்ஞிதா: |
ஸர்வஜ்ஞா: கேஸவம்‌ தஸ்மாந்‌ மம ஹார்த்‌,விஜஸத்தமா:।’”
உலகில்‌ பிரகாசிக்கும்‌ என்‌னுடைய கிரணங்கள்‌ கேசமெனப்‌படுகின்‌ றன.
ஆகையால்‌ எல்லாமறிந்த ப்ராஹ்மண ஸ்ரேஷ்‌டர்கள்‌ என்னைக்‌ கேசவனென்‌று சொல்லுகிறார்கள்‌.
என்று மஹாபாரதத்தில்‌ சொல்லப்பட்டது .
கோவிந்த நாம வியாக்கி யானத்தில்‌ எடுக்கப்பட்டவையான ” தத்ர ஸூர்யோ பாதி” முதலிய ப்ரமாணங்களை இங்கும்‌ அநுஸந்திப்பது.

“திருவடியை நாரணனைக்‌ கேசவனைப்‌ பரஞ்சுடரை ‘ என்று ஆழ்வார்‌ இவ் வர்த்தத்தை உணர்த்தினர்‌.
(கேசவன்‌ )
“கேயாாத்‌, வோ அந்யதரஸ்யாம்‌” பூ மநிந்த; ப,வந்தி மதுபளத,ய: ‘ என்கிற வியாகரண விதிகளின் படி
கேயாப்தத்தின்மேல்‌ வ:’ என்னும்‌ ப்ரத்யயம்‌ வந்து “ப்ரஸஸ்த கேஸ வான்‌’
( புகழ்ப் பெற்ற கேசங்களை உடையவன் ) என்னும்‌ பொருளைத் தருகிறது.
அதாவது: “ய ஏஷ அந்த ராதித்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருங்யதே ஹிரண்ய ஸ்ம்ருர்‌ ஹிரண்ய கேஸ ;”
ஸூர்யனுக்கு நடுவில்‌ யாவனொரு ஸுவர்ண மயனான புருஷன்‌ விளங்குகிறானோ,
அவன்‌ ஸூவர்ணம்‌ போன்று அழகான மீசையையும்‌.கேசங்களையும்‌ உடையவன்‌.
என்று வேதத்தாலும்‌ புகழப் பெற்ற மயிர் முடிகளை உடைய வன்‌ என்று பொருள்‌.
“கொள்கின்ற கோளிருளைச்‌ சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின்‌
உள்கொண்ட நீல நன்னூல்‌ தழைகொல்‌? அன்று
மாயன்குழல்‌ விள்கின்‌ற பூ்ம் தண் துழாய்‌ விரைகால்
வந்தென்னுயிரைக்‌ கொள்கின்றவாறறியீர்‌ அன்னைமீர்‌ கழறா நிற்றீரே.” என்றும்‌.
“முன்னமுகத்தணியார்‌ மொய்குழல்கள்‌ ‘ என்றும்‌,
“சுருண்‌ டிருண்ட குழல்‌ தாழ்ந்த முகத்தான்‌” என்றும்‌ –
மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ”’ என்றும்‌,
“குழலழகர்‌” என்றும்‌ ஆழ்வார்கள்‌ இக் கேச லெளந்தர்யத்தை அநுடவித்தார்கள்‌.
(கேசவன்‌ )
இத்தால்‌ சிக்குத்தலையரான இதர தெய்வங்களிற்‌ காட்டிலும்‌ வ்யாவ்ருத்தி சொல்லப்படுகிறது.”
“பிங்கள ஜடோ தே,வ:’ என்றும்‌,
“ஒருருவம்‌ பொன்னுருவம்‌ ஒன்று செந்தீ ” என்றும்‌ சொல்லுகிற
ப்ரஹ்ம ருத்ரர்கள்‌ மயிர் போலே யன்‌ றிக்கே,
* நீல குஞ்சத மூர்த்‌ த,ஜம்‌ *,
* குழலிருண்டு சுருண்டு ‘ என்கிறபடியே
கண்டவர்‌கள்‌ கண்களிலே அஞ்ஜனமெழுதினாற் போலே ஸ்யாமளமா யிருக்கை”என்‌று
மை வண்ண நறுங்குஞ்சி வியாக்க்யானத்தில்‌ கலி த்‌வம்ஸநாசார்யர்‌ அருளிச் செய்தது
இங்கு அநுஸந்திக்கத்‌ தக்கது.

“நரகே பஸ்யமாநஸ்து யமேந பரிபாவஷித: |
கிம்‌ த்வயா நார்ச்சிதோ தே,வ: கேஸவ: க்லேஸ நாஸந : ||”
நரகத்தில்‌ வேதனையை அனுபவிக்கும்‌ ஒரு மனிதன்‌
“அடே! உன்னால்‌ கிலேசங்களை யெல்லாம்‌ போக்கும்‌ சேசவன்‌ ஏன்‌ அர்ச்சிக்கப்படவில்லை?” என்‌று
யமனால்‌ கேட்கப் பட்டான்‌. –என்று புராணம்‌ சொல்லிற்று.
கேஸவ: க்லேஸமநாமரந: ‘ என்றதின்‌ தாத்பர்யத்தை.
“தாப த்ரயாதுரரோடு விரஹதாபதுரரோடு வாசியற ஸர்வருக்கும்‌ ஸ்ரமஹரமாம்படி
காண்‌ திருக்குழலின்‌ பரிமளம்‌ மிகுந்தபடி;
*கேமரவ: க்லேஸ நாஸநா சமா:”? என்னக் கடவதிறே ;.
த்ருஷ்டி மாத்ர ப்ரியமாயிருக்கை யன்‌றிக்கே நெஞ்சில்‌ ஸ்ரமமெல்லாம்‌ போம்படி காண்‌
திருக்குழலின்‌ பரிமளம்‌ மிகுந்து இருக்கும்படி ” என்று
பரம காருணிகரான பெரிய வாச்சான் பிள்ளை மை வண்ண ஈறழங்குஞ்சி வியாக்க்யானத்தில்‌ அருளிச் செய்தார்‌.

(கேசவன்‌ )
கேசி என்னாம்‌ அஸுரனைக்‌ கொன்‌ற க்ருஷ்ணன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
“யஸ்மாத்‌ த்வயைவ துஷ்டாத்மா ஹத; கேஸவ ஐநார்த்தந ; |
தஸ்மாத்‌ கேஸவ நாமா தவம்‌ லோகே க்ஹவாதிம்‌ கமிஷ்யஸி।”’
ஜனார்த்தனனே! ( உன்னைக்‌ கொல்ல வேணுமென்னும்‌ ) கெட்ட எண்ணத்துடன்‌ வந்த கேசி
உன்னாலேயே கொல்லப்‌ பட்டானாகையால்‌ நீ உலகில்‌ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்‌தால்‌ கீர்த்தி பெறுவாய்‌.
என்று நாரதரால்‌ ஸ்ரீவிஷ்ணு புரரணத்தில்‌ இப்பொருள்‌ பேசப்பட்டது.
கேஸவம்‌ கேஸி ஹந்தாரம்‌” என்றும்‌ மற்றோரிடத்தில்‌ இவ்வர்த்தம்‌ சொல்லப்பட்ட து. –
கேஸவ: கேஸி ஹந்தா ”’ என்று இப் பொருள்‌ ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திலும்‌ ஆதரிக்கப்பட்டது
“கண்ணன்‌ கேசவன்‌” என்றும்‌, `
” நாராயணன்‌ மூர்த்தி கேசவன்‌” என்றும்‌
ஆழ்வார்களாலும்‌ இவ் வர்த்தம்‌ அறு ஸந்திக்கப்பட்டது.
இப்படிப்‌ பொருள் கொள்ளும் போது எம்பெருமானுடைய விரோதி , நிரஸன ஸீலத்வம்‌ தோற்றுகிறது.

கண்ணன்‌ கேசவன்‌ நம்பி’ :
கேசவ நம்பீ உன்னைக்‌ காது குத்த”
“கேசவ நம்பியைக்‌ கால் பிடிப்பாள்‌ என்னுமிப்‌ பேறு எனக்கு அருள் கண்டாய்‌” என்று
இத் திருநாமத்தின்‌ குண பூர்த்தியை அனுஸந்தித்தார்கள்‌.
“கேஸவ ; க்லேஸ நாஸநா -மஹா லோகே த்‌வை ரூப்யேண ஸ்திதெள ஸ்தித: |
மதுராக்‌,யே மஹாஷேத்ரே வாராணஸ்யாமபி த்‌விஜ ॥”’
விப்ரரே! கிலேசங்களைப் போக்கடிக்கும்‌ குழலழகையுடைய பெருமான்‌.
மதுரை என்னும்‌ மஹா ஷேத்திரத்திலும்‌
வாராணஸி எனப்படும்‌ காசியிலும்‌
பூமியில்‌ கோயில் கொண்‌ டெழுந்தருளியிருக்கிறான்‌..] என்னும்‌ ப்ரமாணத்தைக் காட்டி.
பட்டர்‌ இத் திருநாமத்தை அர்ச்சாவதார பரமாக வியாக்கியானம்‌ செய்தருளினார்‌.
இப்படிப்‌ பர விபவ அர்ச்சாவதாரங்‌களைக் குறிக்கக்‌ கூடியதே யாகிலும்‌
கேசவன்‌ நாரணன்‌ சீமாதவன்‌ கோவிந்தன்‌ வைகுந்தன்‌?’ என்று நம்மாழ்வார்‌ அருளிச் செய்கையால்‌.
இத் திருநாமத்துக்குப்‌ பராவஸ்தை யைக் குறிக்கும்‌ பொருளே இங்கு முக்கியார்த்தமாகக்‌ கடவது.

——————

கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தினால்‌ பிரம ருத்திரர்‌ களுக்கும்‌ உத்பாதகன்‌ என்‌ று உரைக்கப்பட்ட து.
இப்படிப்‌ பட்டவன்‌ யார்‌ என்னும்‌,கேள்வி எழ.
‘நாராயணன்‌’ என்று வேதாந்த ஸித்தமான அஸாதாரணமான திருநாமத்தைப்‌ படிக்கிறது.

இத் திருநாமத்தை வேதங்களும்‌. இதிஹாஸ புராணங்களும்‌ ஆழ்வார்களும்‌ மிகவும்‌ ஆதரித்துப் போந்‌ தார்களென்பது ஸுப்ரஸித்தம்‌.
இதிலுள்ள ணகாரமான து வேறெந்த தெய்வத்திற்கும்‌ இத் திரு நாமம்‌ பொருந்தா தென்பதைக்‌ காட்டுகிறது.
இத் திருநாமத்தின்‌ அர்த்தங்‌களோ ஆயிரம்‌ நாவுடடைத்த ஆதிசேஷனாலும்‌ அளவிட்டுச்‌ சொல்லமுடியாதவை.
நாராயணனுடைய பெருமையை அறிந்தாலும்‌ அறியலாம்‌;
நாராயண நாமத்தினுடைய அர்த்த, வைபவத்தை எவராலும்‌ அறியமுடியாது.
பரம காருணிகர்களும்‌ ஸர்வஜ்ஞ ஸார்வ பெனமர்களுமான நம்‌ ஆழ்வார்களும்‌ ஆசாரியர்களும்‌
இத் திருநாமத்தின்‌ பொருளைப்‌ பலவிடங்களில்‌ பேசியிருக்கிறார்கள்‌.
அந்த ஸ்ரீஸக்திகளைத்‌ துணையாகக் கொண்டு நாமும்‌ இத் திரு நாமத்தின்‌ பொருட்‌ பெருமையை
இயன்‌ற வரையில்‌ அநுபவிக்க முற்படுவோம்‌.

“ ரிங்‌-க்ஷயே ”’ என்று தாதுவாகையாலே. ‘ர’ என்னும்‌ எழுத்து க்ஷயித்துப்போகும்‌ பதரர்த்தங்களைக்‌ குறிக்கிறது. ந’ என்னும்‌ எழுத்து அதை நிஷேதி,க்கிறது. ஆக, நர: என்று நித்யமாய்‌ விளங்கும்‌ வஸ்துவைக்‌ குறிக்கிறது. *“நராணாம்‌ ஸமூஹ: நார: என்‌ கிறபடியே “- நர என்‌னும்‌ பதம்‌ இப்படிப்பட்ட நித்யவஸ்‌துக்களின்‌ ஸமூஹத்தைக்‌ குறிக்கிறது. ‘நாரா:’ என்னும்‌ பன்மையால்‌ அப்படிப்பட்ட நித்ய வஸ்‌துக்களின்‌ ஸமூஹங்கள்‌ பல உள என்று உணர்த்தப்‌ படுகிறது. இப்படிப்பட்ட இந்த நித்ய வஸ்‌ துக்களின்‌ ஸமூஹங்கள்‌ எவை என்‌பதைப்‌ பரமகாருணிகரான பெரிய வாச்சான்பிள்ளை ** அவையாவன: ஜஞாநமக் த்யா தி, திவ்‌, யாத்ம குணங்களும்‌, குண ப்ரகாஸ்கமான திவ்யமங்கள விக்ரஹங்களும்‌. விக்ரஹ குணமான ஸெளந்தர்யாதிகளும்‌. அந்த ஸெளந்தர்யாதிகளோபாதி பூத்தாப்போலே சாத்தின கிரீடமகுடாதி திவ்யா பரணங்களும்‌, அவ்வா பரணங்களோடு விகல்பிக்கலாம்படியான சங்க,சக்ராதி திவ்யாயுதங்களும்‌, இத்தனையும்‌ காட்டிலெரித்த நிலாவாகாதபடி அருகே யிருந்து அனுபவிக்கிற லக்ஷ்மீ ப்ரப்ருதி மஹிஷீ வர்க்கங்களும்‌, அச் சேர்‌த்தியிலே அடிமை செய்கிற அநந்‌த கருட விஷ்வக்ஸேந ப்ரமுகரான ஸூரி ஸங்க,மும்‌, அவர்களோபாதி போய்‌ அடிமை செய்கிற ( அவர்களுக்கு அடிமை செய்கைக்குப்‌ பரிகரமான சத்ர சாமராதி,பரிச்‌ச- அவ்வடிமைக்கு வர்த்த,கமாய்‌ பஞ்சோபனிஷந் மயமான  குண த்ரயாத்மிகையான மூலப்‌ரக்ருதியும்‌, புருஷ சமஷ்டியும்‌, அஹோ ராத்ராதி விபாக யுக்தமான காலதத்வமும்‌. ப்ரவாஹ ரூபேண நித்யமான மஹதாதிகளும்‌. தத் கார்யமான அண்டங்‌களும்‌. அண்டாரந்தர்வர்த்திகளான சதுர் வித பூதங்களும் .

பஞ்சோபனிஷஹ மயமாகையாலே பரமபதமும்‌ மஹாத்மகமாயிருக்கும்‌; குணத்ரய த்யிகையாகையாலே மூலப்ரக்ருதியும்‌ ஸமூஹுத்மகையாயிருக்கும்‌ அஹோராத்‌ ராதி,விபாகங்கள்‌ காலமும்‌ ஸமூஹாத்மகமாயிருக்கும்‌” என்று பரந்த ரஹஸ்யத்தில்‌ பரகக அருளிச்செய்தார்‌.

அடுத்தபடியாகவுள்ள அயந சப்தம்‌ பல பொருள்களை உடையது. அவைகளில்‌ இருப்பிடம்‌ ‘ என்பதும்‌ ஒன்று.  அயநம்‌ யஸ்ய ஸூ;-—நாராயண:” [நித்ய பதரர்த்த ஸமூஹங்களாகிற நாரங்கள்‌ எவனுக்கு இருப்பிடமோ. அவன்‌ நாராயணன்‌ ] என்று நாராயண சப்தத்துக்கு ஒரு பொருள்‌ ஏற்படுகிறது. இத்தால்‌ இவன்‌ எல்லாப்‌ பதார்த்தங்‌களையும்‌ : உடல்‌ மிசை உயிரெனக்கரந்தெங்கும்‌ பரந்துளன்‌ ‘. என்று சொல்லப்பட்டதாகிறது.

“சேதநாசேதநம்‌ ஸர்வம்‌ விஷ்ணோர்‌ யத்‌, வ்யதிரிச்யதே |
நாரம்‌ தத,யநஞ்சேத,ம்‌ யஸ்ய நாராயணஸ்து ஸ: ॥”
விஷ்ணுவைக் காட்டிலும் வேறுபட்டதான எல்லாச்‌ சேதநா சேதனங்களும்‌ நார சப்தத்தால்‌ சொல்லப்படுகின்‌றன.
அது எவனுக்கு இருப்பிடமாயுள்ளதோ அப்பரமாத்மா நாராயணன் எனப்படுகிறான்‌.–என்று இவ்வர்த்தத்தை சாஸ்திரம்‌ சொல்லிற்று.
இந்த பஹுவ்ரீஹி ஸமாஸப்‌ பொருளில்‌ அந்தர் வ்யாப்தியும்‌, அடுத்தபடியாகச்‌ சொல்லப்படும்‌
தச்புருஷ ஸமாஸப்‌ பொருளில்‌ பஹிர் வ்யாப்தியு
உணர்த்‌தப் படுகின்றன என்று ஆசார்யர்கள்‌ அருளிச் செய்வர்‌.

“யச்ச கிஞ்சித்‌ ஜக,த்யஸ்மிர்‌ த்‌,ருங்யதே ங்ரூயதே$பி வா |
அந்தர்‌ ப,ஹிம்ச தத்‌ ஸர்வம்‌, வ்யாப்ய நாராயண: ஸ்தி,த: |” [
இவ்வுலகில்‌ காண்பனவும்‌. கேட்பனவுமான எல்லா வஸ்துக்‌ களிலும்‌ உள்ளும்‌ புறமும்‌ நாராயணன்‌ வியாபித்து நிற்கிறான்‌–என்று பண்டை மறையிலும்‌,
“ஆக்கையுள்ளும்‌ ஆவியுள்ளும்‌ அல்ல புறத்தினுள்ளும்‌ நீக்கமின்றி எங்கும்‌ நின்றாய்‌! ‘ என்று தமிழ்‌ வேதத்திலும்‌
இவ்வர்த்தம்‌ சொல்லப்பட்ட.து.
இப்பொருளில்‌ எம்பெருமானுடைய ஸர்வவ்யாபகத்வம்‌ சொல்லப்படுகிறது.
“நாராணாம்‌ அயநம்‌ ய: ஸ:”
நித்யபதளர்த்த, ஸமூஹங்க ளாகிற நாரங்களுக்கு எவனொருவன்‌ இருப்பிடமாயிருக்‌கிறானோ
அவன்‌ நாராயணன்‌ – என்ற தத்புருஜ ஸமாஸத்தின்‌ படியும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
இத்தால்‌ எல்லா வஸ்துக்‌ களையும்‌ நாராயணன்‌ தரிக்கிறான்‌ என்று சொல்லப்படுகிறது, ^”
நாராணாமயநத்வாச்ச நாராயண இதி ஸ்ம்ருத: ” [63-62]
நார சப்தத்தனால்‌ சொல்லப்படும்‌ நித்யவஸ்‌துஸமுஹங்‌ களுக்கு இருப்பிடமாயிருப்பதால்‌ நரராபணனெனப்படு கிறான்‌-
என்று இவ்வர்த்தம்‌ பாரதம்‌ உத்யோக பர்வத்தில்‌ உரைக்கப்பட்ட து.

நார சப்சத்துக்கு மற்றொரு வகையாகவும்‌ பொருளுரைப்பதுண்டு.
நார:’ என்று ஸ்வரூபத்திலும்‌ ஸ்வபாவத்திலும்‌ சிறிதும்‌ விகாரம் அற்றவனான பரமபுருஷன்‌ சொல்லப்படுகிறான்‌.
*நராத்‌ ஜாதாநி ‘ என்கிறப்டியே புருஷோத்தமனிடமிருந்‌து உண்டானவை நாரங்க ளெனப்படுகின்‌றன.
அவைகளை இருப்பிடமாக உடைத்தா யிருக்கையா லும்‌, அவைகளுக்கு இருப்பிடமாயிருக்கை யாலும்‌
நாராயணனெனப்படுகிறான்‌ என்று
முன் போலவே இருவகையாகவும்‌ பொருள்‌. ““நராஜ்ஜாதாநி தத்த்வாதி நாராணீதி ததோ விது, |
தாந்யேவ சாயநம்‌ தஸ்ய தேந நாராயண: ஸ்ம்ருத: |!”
நரனாகிற எம்பெருமானிடமிருந்து உண்டானவைகளை நாரங்களென்‌ று அறிகின்றார்கள்‌.
அவைகளையே இருப்பிடமா யுடையவனாயிருப்பதால்‌ அவன் நாராயணனெனப்படுகிறான்‌–
என்று இவ்வர்த்தம்‌ ஹரி வம்சத்திலும்‌ சொல்லப்பட்டது,
இவ்வர்‌த்தத்தை “யாவையும்‌ யாவரும்‌ தானாம்‌ அமைவுடை நாரணன்‌” என்று நம்மாழ்வார்‌ அருளி செய்தார்‌.

° நார பதத்தில்‌ சொல்லப்பட்ட அநந்தமான வஸ்த்துக்களில்‌ சிலவற்றைச்‌ சிற்சில விடங்களில் எடுத்து ஆழ்வார்கள்‌ நாராயண சப்தத்துக்கு வியாக்யானம்‌ செய்து அருளி இருக்‌கிறார்கள்‌.
நார சப்த்த்‌துக்கு அநந்த கல்யாண குணங்களையும்‌ பொருளாகக் கொண்டு
“: ஈறில வண்‌ புகழ்‌ நாரணன்‌ ” என்‌றும்‌
` வாழ் புகழ்‌ நாரணன்‌” என்றும்‌ நம்மாழ்வாரும்‌.
நல முடை நாரணன்‌ என்று பெரியாழ்வாரும்‌,
நலந்திகழ்‌ நாரணன்‌” என்று குலசேகராழ்வாரும்‌ செய்தருளினார்கள்‌.

நார சப்தத்‌.துக்கு திவ்ய மங்கள விக்ரஹத்‌தையும்‌ அதன்‌ குணங்களையும்‌ பொருளாகக்‌ கொண்டு.
“ காராயின காளநன்‌ மேனியினன்‌ நாராயணன்‌ ” என்று . நம்மாழ்வாரும்‌.
“‘ கார்மேனிச்‌ செங்கண்‌ கதிர்மதியம்போல்‌ முகத்தான்‌ நாராயணனே ” என்றும்‌,
` நாற்றத்துழாய்‌ முடி நாராயணன்‌” என்றும்‌ ஆண்டாளும்‌ அருளிச் செய்தனர்‌.

திவ்யா பரணங்களை நார சப்தத்‌தக்குப்‌ பொருளாகக் கொண்டு
“உடையார்ந்த வாடையன்‌ கண்டிகையன்‌ உடைநாணினன்‌
புடையார்‌ பொன்னூலினன்‌ பொன்முடியன்‌ மற்றும்‌
பல்கலன்‌ நடையாவுடைத்‌ திருநாரணன்‌” என்று நம்மாழ்வார்‌ அருளினார்‌.
“லக்ஷ்மீ ப்ரப்‌ருதி மஹிஷீ வர்க்கங்களும்‌” என்று ஆச்சான் பிள்ளையால்‌ அருளிச் செய்யப்பட்
பிராட்டிமார்‌ களை நார சப்தத்‌துக்குப்‌ பொருளாகக்கொண்டு “
செல்வ நாரணன்‌ என்‌று நம்மாழ்வார்‌ அருளிச் செய்தார்‌.
விண்ணோர்‌ நாயகன்‌ நாராயணன்‌ ” என்று வேதம்‌ தமிழ் செய்த மாறன்‌
நார சப்தத்துக்கு நித்ய முக்தர்களைப்‌ பொருளாக அருளிச்‌ செய்தார்‌.

நாரசப்தத்துக்குச்‌ சேதனர்களைப்‌ பொருளாகக்‌ கொண்டு “`
எண் பெருக்கந்நலத் தொண் பொருள்‌ ஈறில வண்புகழ்‌ நாரணன்‌ ” என்றும்‌,
“’ எம்பிரான்‌ எம்மான்‌ நாராயணன்‌ ” என்றும்‌ சடகோபனும்‌, =
`” நம்மை யுடையவன்‌ நாராயணன்‌ ” என்றும்‌.
“’ என்னை நலங்கொண்ட நாரணற்கு?” என்றும்‌ ஆண்டாளும்‌
நாராயணன்‌ என்னை யாளி ” என்று திருமழிசைப் பிரானும்‌ அருளிச்செய்தனர்‌.

நாரசப்தத்துக்கு உபயவிபூ,தியையும்‌ பொருளாகக்கொண்டு
“நாரணன்‌ முழுவேழுலகுக்கும்‌ நாதன்‌ “என்று நம்மா ழ்வாரும்‌.
” நாயகன்‌ நாரணன்‌” என்று பெரியாழ்வாரும்‌ அருளிச் செய்தனர்‌. .

( நாராயணன்‌ )
நரனாகிற பெருமானால்‌ படைக்கப்பட்ட ஜலத்தை நார சப்தத்திற்குப்‌ பொருளாகக்‌ கொண்டு
அதை இருப்பிடமாகக்‌ கொண்டவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌,
“ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை ஈரஸிவ: |
தா யத,ஸ்யாயந௩ம்‌ பூர்வம்‌ தேந நாராயண: ஸ்ம்ருத: |”
நரனாகிற ஸர்வேஸ்வரனால்‌ படைக்கப்பட்ட ஜலம்‌ “நாரம்‌ ‘ எனப்படுகிறது.
அது ஆதி காலத்தில்‌ இவனுக்கு இருப்பிடமாயிருக்கையால்‌ இவன் நாராயணனெனப்படுகிறான்‌. ] என்று
மநுஸ்ம்ருதியிலும்‌, விஷ்ணுபுராணத்திலம்‌ உரைக்கப்‌ பட்டது.
இவ்வர்த்தம்‌ “” நடுக்கடலுள்‌ துயின்‌ற நரராயணனே!”’ என்று ஆழ்வராரலும்‌.
“ ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந; ‘”
இவனே பாற்கடலில்‌ பள்ளி கொண்ட ஸ்ரீமந்நாராயணன்‌
என்று புராணத்திலும்‌ பேசப்பட்டது.

“ஸ்ருஷ்ட்வா நாரம்‌ தோயமந்த:ஸ்தி,தோஹம்‌ =, யேரு ஸ்யாந்மே நாம நாராயணேதி”’ [நார சப்தத்தனால்‌ சொல்லப்படும்‌ ஜலத்தை ஸ்ருஷ்டி செய்து அகனுள் நான்‌ வசித்தபடியால்‌ எனக்கு நாராயண னென்னும்‌ நாமம்‌ ஏற்பட்டது. ] என்று ஸ்ரீவராஹ புராணத்‌ தில்‌ பகவானாலும்‌ இவ்வர்த்தம்‌ ஆதரிக்கப்பட்டது.

(நாரா யணன்‌) நாரசப்தத்திற்கு இப்ரக்ருதி மண்டலத்திலுள்ள சேதனாசேதனங்களைப்‌ பொருளாகக்‌ கொண்டு. ப்ரளய காலத்தில்‌ அவைகளுக்குச்‌ சேருமிடமாயுள்ளவன்‌ என்றும்‌ பொருள்கொள்ளலாம்‌. = “” ஞாலமுற்றுமுண்டாலிலைத்‌ துயில்‌ நாராயணனுக்கு ” என்று பெரியாழ்வாரும்‌, ** ஞாலமுற்றும்‌ உண்டுமிழ்ந்த நாராயணனே! ” என்றும்‌. “ஞாலமுண்டாய்‌! ஞானமூர்த்தி! நாராயணா!” என்றும்‌ நம்மாழ்வாரும்‌ இவ்‌ வர்த்தத்தை அநுஸந்தித்தருளினார்கள்‌. இத்தால்‌ ஸர்வ ஸம்ஹர்த்ருத்வமும்‌ சொல்லப்பட்ட தாயிற்று.

(நாராயணன்‌) * நர’ சப்தத்தினால்‌ அழிவற்ற ஸ்வரூபத்தையுடைய ஆத்மா சொல்லப்படுகிறது ; நாரசப்தம்‌ ஆத்ம ஸமூஹுத்தைச்‌ சொல்லுகிறது. அயநசப்தம்‌ : இண்‌ க,தெள ‘ : அய-க,தெள ‘ என்னும்‌ தாதுக்கள்‌ ஒன்‌ றிலிருந்து உண்டானதாகையாலே போய்ச்சேருமிடமாகிற ப்ராப்யத்தையும்‌, போய்ச் சேரும்‌ வழியான உபாயத்தையும்‌ குறிக்கும்‌

ஆக “நாராயணன்‌ ‘. என்று சேதன வர்க்கத்‌திற்கு
மோக்ஷப்ராப்யமாகவும்‌,
மோக்ஷ  உபாயமாகவும்‌ இருப்பவன்‌ என்று பொருள்‌படு கிறது.
இவ்வர்த்தம்‌ “நாரஸ் த்விதி ஸர்வ பும்ஸாம்‌ ஸமூஹ: பரிகீர்த்தித:
க,திராலம்ப;ம்‌ தஸ்ய தேக நாராயண: ஸ்ம்ருத: || ”
நாரமென்‌று சேதனருடைய ஸமூஹம்‌ சொல்லப்‌ படுகிறது.
அச்சேதன சமூகத்துக்கு உபாயமும் உபேயமுமாயும் இருப்பதால்‌ நாராயணனென் று சொல்லப்படுகிறான்‌. ] என்றும்‌.
“நரரோ நராணாம்‌ ஸங்கா தஸ்‌ தஸ்யாஹமயநம்‌ க,தி:।
தேநாஸ்மி முநிபிர்‌ நித்யம்‌ நாராயண இத்ரித: || ”
நரர்களின்‌ கூட்டம்‌ நாரமெனப்படுகிறது.
அதற்கு நான்‌ ப்ராப்யமாகவும்‌. ப்ராபகமாகவும்‌ இருக்கிறேனாகையால்‌ முனிவர்களால்‌
எப்போதும்‌ நான்‌ நாராயணன்‌ என்று சொல்லப்படுகிறேன்‌.] என்றும்‌ ।
“ ஜீவாநாம்‌ ஸமூஹ: ப்ரோச்யதே புததை,! |
தேஷாமயநபூ,தத்வாந்‌ நாராயண இஹோச்யதே |
தஸ்மாந் நாராயணம்‌ பந்தும்‌ மாதரம்‌ பிதரம்‌ குரும்‌ |
நிவாஸம்‌ சரணம்‌ சாஹார்‌ வேத,வேதராந்த பாரகத : |
நார சப்தத்தனால்‌ ஜீவ ஸமூஹம்‌ பெரியோர்களால்‌ சொல்லப்‌ படுகிறது.
அவர்களுக்கு ப்ராப்ய ப்ராபகங்களாகிற அயன மாயிருப்பதால்‌ நாராயணன்‌ என இங்கு சொல்லப்படுகிறான்‌ .
ஆகையால்‌ நாராயணனை
பந்து வாகவும்‌.
தாயாகவும்‌.
தந்தை யாகவும்‌.
ஆச்சார்யனாகவும்
இருப்பிடமாகவும்
வேத வேதார்தங்களைக்‌ கரை கண்டவர்கள்‌ சொல்லு கிறார்கள்‌–
என்றும்‌ சாஸ்திரங்களில்‌ இவ்வர்த்தம்‌ வெகு விரிவாக உபதேசிக்கப்பட்டது.

“ நாராயணனே நமக்கே பறை தருவான்‌ ” என்‌று ஆண்டாளும்‌,
‘வீடாக்கும்‌ மெய்ப்‌ பொருள் தான்‌……நாராயணன்‌ ” என்றும்‌,
நாராயணன்‌ என்னை யாளி நரகத்தில்‌ சேராமல்‌ காக்கும்‌ திருமால்‌ தன்‌ ”’ என்‌றும்‌ திருமழிசைப்‌ பிரானும்‌
இவ் வர்‌த்தத்தை நாராயண சப்தத்தக்குப்‌ பொருளாக அநுஸந்தித்தார்கள்‌.
“நாரணம்‌ கதிர்‌ நாராயண:”’
நாராயணனே மோக்ஷத்தில்‌ அடையப்‌ படுமவனும்‌, அடைவதற்கு வழியுமாவான்‌.
என்று வேதமும்‌ இவ்வர்ததத்தை உத்கோஷித்தது. (நாராயணன்‌)
° நர: என்று அழிவற்றவனான எம்பெருமானையும்‌ குறிக்கும்‌ என்று முன்னரே சொல்லப்பட்ட து.
“ ஜந்ஹார்‌ நாராயணோ நர: ” என்று அவனுடைய நாமமாக வும்‌ படிக்கப்பட்ட து.
`” நரஸ்யே இமே- நாரா: ” (சேர்ந்தவர்கள்‌ நாரங்கள்‌] என்கிற வ்யுத்பத்தியின்‌ படி
“ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்‌ [ஞானி எனக்கும்‌ ஆத்மாவாயிருப்பவனென்று என்‌ ஸித்தாந்தம்‌]
என்று எம்பெருமானாலேயே அபிமானிக்கப்பட்ட அவனடியார்களைச்‌ சொல்லுகிறது.
“நாரா அயநம்‌ யஸ்ய ஸ; ” என்று தன்னடியார்களையே தனக்குப்‌ பரம ப்ராப்யமாகக்‌ கொண்‌டு இருக்குமவன்‌ என்‌று பொருள்‌ படுகிறது. –
‘ நச்சுவார்‌ முன்‌ நிற்கும்‌ நாராயணன்‌ “என்றும்‌.
நண்ணித் தொழுமவர்‌ சிந்தை பிரியாத நாராயணா!” என்றும்‌ பெரியாழ்வாரும்‌;
* அற்புதன்‌ நாராயணன்‌ …நிற்பது மேவி இருப்பதென்‌ நெஞ்சகம்‌ ” என்று நம்மாழ்வாரும்‌
இவ்வர்த்தத்தை ஆதரித்தார்கள்‌.
“நானுன்னை யன்‌றியிலேன்‌ கண்டாய்‌ நாரணனே! ” என்று:
மோக்ஷ உபாயத்வம்‌.
ஸர்வ வ்யாபகத்வம்‌,
ஸர்வ தரரகத்வம்‌ முதலிய குணங்களை
நாராயண சப்தார்த்தமாக அநுஸந்தித்தருளிய திருமழிசையாழ்வார்‌.
நீ என்னை யன்றி இலை’” என்று பக்தரைத் தாரகத்வமாகிற இவ்வர்த்தத்தை அருளிச்செய்தார்‌,

“நண்ணித்‌ தொழுமவர்‌ சிந்தை பிரியாத நாராயணா” என்னுமிடத்துக்கு வியாக்கயானம்‌ செய்தருளிய
பரம ரஸிகரான திருவாய்மொழிப்பிள்ளை
“* இவருடைய நாராயண சப்தார்த்‌ தம்‌ இப்படிப் போலே காணும்‌ இருப்பது ” என்று அருளிச்‌ செய்தார்‌
( நாராயணன்‌ )
நரர்கள்‌ என்று ஒருவிதமான குறைவு மற்றவர்களான ஸ்ரீவைஷணவர்களைச்‌ சொல்லுகிறது.
நாரம்‌ என்று நரர்களாகிற அந்த ஸ்ரீவைஷ்ணவர்களுடைய வாஸ ஸ்தானத்தைச்‌ சொல்லுகிறது.
ஸ்ரீவைஷ்ணவர்களுடைய வாஸஸ்தானத்தையே தனக்கு இருப்பிடமாகக்‌ கொண்டு எழுந்தருளியிருக்கையாலே *
நாராயணன்‌ ‘ எனப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.
“திருக்கோட்டியூர்‌ மன்னு நாரணன்‌ ” என்றும்‌,
“ தென்திரை சூழ் திருப்பேர்க்‌ கிடந்த திரு நாரணா!” என்றும்‌ பெரியாழ்வார்‌ இவ்வர்த்தத்தை உணர்த்தினார்‌.

“ நர ஸம்பந்தி,நோ நாரா நர: ஸ புருஷோத்தம: |
நயத்யலெவிஜ்ஞா௩ம்‌ நாமாயத்யகிலம்‌ தம: ॥
ந ரிஷ்யதி ச ஸர்வத்ர நரஸ்தஸ்மாத்‌ |
நரஸம்ப,ந்திரு: ஸர்வே சேதநா சேதநாத்மகா: ||
நபிதவ்யதயா நாரா தரார்யபோஷ்யதயா ததர |
நியாம்யத்வே ஸ்ருஜ்யத்வ ப்ரவேமுபரணைஸ்‌ ததா ॥
அயதே நிதிலாக்‌ நாராந்‌ வ்யாப்நோதி க்ரியயா ததா |
நாராம்சாப்யாயநம்‌ தஸ்ய தைஸ்தத்‌,பாவநிரூபணாத்‌ ॥
நாராணாமயநம்‌ வாஸஸ்‌ தே ச தஸ்யாயநம்‌ ஸதா |
பரமா ச க,திஸ்தேஷாம்‌ நாராணாமாத்மநாம்‌ ஸதா |
ஆபோ நாரா இதி ப்ரோக்தாஸ்தா அப்யயமஸ்ய ச ।
அதோ நாராயணோ நாம ஹேதுபிர்‌ தர்மமித: பர: ॥ ”’
நரனுடன்‌ ஸம்பந்தம் பெற்றவைகள்‌ நாரங்கள்‌.
புருஷோத்‌ தமனே நரன் எனப்படுகிறான்‌.
தன்னைப் பற்றிய எல்லா அறிவையும்‌ அடைவிக்கிறான் ஆகையா லும்‌,
எல்லா இருளையும்‌ போக்கடிக்கறானாகையா லும்‌.
எங்கும்‌ விகாரமற்றவனாயிருப்ப தாலும்‌,
ஸர்வேஸ்வரனான அப்பரமபுருஷன்‌ நரனெனட்படுகிறான்‌.
நரனாகிய அப்பெருமானுடன்‌ ஸம்பந்தம்‌ பெற்றிருக்கும்‌ எல்லாச்‌ சேதநாசேதநங்களும்‌,அவனால்‌
ஆளப்படுகையா லும்‌,
தரிக்கப்படுகையாலும்‌.
போஷிக்கப்படுகையா லும்‌,
நியமிக்‌ கப்படுகையா லும்‌,
ஸ்ருஷ்டிக்கப்படுவதா லும்‌.
வியாபிக்கப்‌ படுவதாலும்‌.
தாங்கப்படுகையா லும்‌
நாரங்களாகின்‌ றன.
எல்லா நாரங்களையும்‌ (ஸ்வரூபத்தால்‌) அடைவதாலும்‌,
முற்கூறிய செய்கைகளால்‌ வியாபிப்பதாலும்‌.
அவைகளை யிட்டே அவனை நிரூபிக்க வேண்டியிருக்கையாலும்‌
நாரங்கள்‌ அப்புருஷோத்தமனுக்கு அயநமாகின்‌ றன.
இவன்‌ நாரங்‌ களுக்கு இருப்பிடமாயிருக்கிறான்‌:
அவைகளும்‌ எப்போதும்‌ இவனுக்கு இருப்பிடமாயுள்ளன.
நார ஸமூஹங்களான ஆத்மாக்களுக்கு மேலான ப்ராப்யமாகவும்‌, ப்ராபகமாகவும்‌, இவன்‌ விளங்குகிறான்‌.

ஜலமும்‌ நார சப்தத்தால்‌ சொல்லப்‌ படுகிறது.
அதுவும்‌ இவனுக்கு இருப்பிடமாயிருக்கிறது,
ஆகையால்‌, இக் காரணங்களால்‌ நாராயணன்‌ என்னும்‌ திருநாமம்‌ மேலானதென்று காட்டப்படட்டது.
என்று அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில்‌, ( 52-50,…65 )
நரன்‌, நாரம்‌, நாராயணன்‌ என்னும்‌ பதங்கள்‌ வெகு விரிவாக விவரிக்கப்பட்ட தும்‌ இவ்விடத்தில்‌ அநுஸந்திக்கத்தக்கது.
“நாராயணன்‌ ‘ என்று ஸர்வேஸ்வரன்‌ உபய விபூ,தி நிர்வாகஹனாய்‌ ஸ்ரீவைகுண்ட்த்தில்‌ எழுந்தருளியிருக்கும்‌ இருப்பைச்‌ சொல்லிற்று.

———————-

அப்படியிருக்குமவன்‌ ப்ரஹ்மசாரி நாராயணனல்ல, ஸ்ரீமந் நாராயணனே என்னுமத்தைச்‌ சொல்லுகிறது
மாதவன்‌ ‘ என்னும்‌ திருநாமம்‌.
சிவ புராணத்திலும்‌. “வைகுண்டே, து பரே லோகே மியா ஸார்த்த,ம்‌ |
ஆஸ்தே விஷ்ணுர் சந்த்யாத்மா ப,க்தைர்‌ பாக,வதை: ஸஹ”
வைகுண்டமென்னும்‌ மேலான உலகத்தில்‌, உலகிற்கெல்‌லாம்‌ ஸ்வாமியும்‌, எண்ண முடியாத
ஸ்வரூபத்தை யுடையவனுமான பகவான்‌ விஷ்ணு, ஸ்ரீதேவியுடன்‌ கூடியவன்‌,
குண நிஷ்டர்களான பக்தர்களுடனும்‌, கைங்கர்ய நிஷ்டர்‌களான பாகவதர்‌களுடனும்‌ எழுந்தருளியிருக்கிறான்‌–என்று சொல்லப்பட்ட தன்றோ.
(மாதவன்‌)
(மா’ என்னும்‌ பதம்‌ ஸ்ரீதேவியைச்‌ சொல்லுகிறது.
தவ:’என்னும் சொல்‌ “நாதன்‌” என்னும்‌ “பொருளை யுடையது.
“மாயா: தவ: மாதவ: ‘ என்கிறபடியே. மாதவன்‌ என்னும்‌ திருநாமம்‌ லக்ஷ்மீ நாதன்‌’ என்னும்‌ அர்த்தத்தை உடையது.
“மானேய்‌ நோக்கி ம்டவாளை மார்பில்‌ கொண்டாய்‌ மாதவா! ”என்‌று
நம்மாழ்வார்‌ இப் பொருளை மாதவ சப்தரர்த்தமாக அருளிச் செய்தார்‌.
இத் திருநாமம்‌ பகவான்‌ பரம பதத்தில்‌ பெரிய பிராட்டியாருடன்‌ எழுந்தருளி யிருப்பதைக்‌ குறிக்கிறது என்பர் .
,“ வானுடை மாதவா ” என்று பெரியாழ்வாரும்‌, –
மா மாயன்‌ மாதவன்‌ வைகுந்தன்‌ ” என்றும்‌,
மன்னிய மாதவனோடு வைகுந்தம்‌ புக்கிருப்பாரே ” என்றும்‌ ஆண்டாளும்‌, :
கேசவன்‌ நாரணன்‌ மாதவன்‌ கோவிந்தன்‌ வைகுந்தன்‌” என்றும்‌,
“ வடிவுடை மாதவன்‌ வைகுந்தம்‌ ” என்றும்‌ நம்மாழ்வாரும்‌ அருளிச் செய்தனர்‌.
பெரிய பிராட்டியார்‌ எல்லா தசைகளிலும்‌ எம்பெருமானை விட்டுப் பிரியாமலிருப்பவராகையாலே.
எம்‌ பெருமானையும்‌ இப் பிராட்டியை யிட்டு நிரூபிக்க வேண்டு மென்று இத் திருநாமம்‌ உணர்த்துகிறது.

“ ஹ்ரீஸ்ச தே’ லக்ஷ்மீஸ் ச பத்ந் யெள ” என்று வேதமும்‌ பரம புருஷனைப்‌ பிராட்டியை யிட்டு நிரூபித்தது.
“ஸர்வேஷாமேவ லோகாநாம்‌ பிதா மாதா ச மாதவ: | க,ச்ச,த்‌,வமேநம்‌ நாரணம்‌ மாரண்யம்‌ புருஷர்ஷபா : |”
பருஷ ஸ்ரேஷ்டர்களே! எல்லா வுலகுக்கும்‌ லக்ஷ்மீநாதனே தாயாகவும்‌. தந்தையாகவும்‌ விளங்குகிறான்‌; (
ஆகையால்‌) இந்த மாதவனை சரணமடையுங்கள்‌.] என்று
புருஷகார பூதகையான பிராட்டிபுடன்‌ கூடிய நாராயணனே நமக்கு உபாயமாகவும்‌, ஸ்வாமியாகவும்‌ ஆகிறான்‌ என்று பாரதத்தில்‌ பேசப் பட்டது.

“ கடிவார்‌ தீய வினைகள்‌ கொடியாருமள வைக்கண்‌
கொடியா அடுபுள்‌ உயர்த்த வடிவார்‌ மாதவனாரே ” என்று
ஆழ்வாரும்‌ மாதவனே உபாயமாகிறானென்‌று உணர்த்தினார்‌.
“ மாதவன்‌ பூதங்கள்‌ ” என்றும்‌.
`” மாதவனோடு வைகுந்தம்‌ புக்கருப்பாரே ” என்றும்‌
மாதவனே ஸர்வ ஸேஷியாகவும்‌. மோக்ஷ ப்ராப்யனாகவும்‌ ஆகிறானென்று அருளிச்செய்தார்‌கள்‌.
ஸர்வேஸ்வரன்‌ ஜகத் காரணமாம் போ தும்‌. பிராட்டிக்கு ப்ரேரகத்வ ருபமான அந்வயம்‌ உண்டென்பதை
ஆளவந்தார்‌, ஆழ்வான்‌. பட்டர்‌ முதலானோர்‌ தம்‌ ஸ்தோத்ரங்களில்‌ அருளிச்‌ செய்தனர்‌.
பெரியவாச்சான்பிள்ளையும்‌, அவருடைய திருக்‌ குமாரரான நாயனாராச்சான் பிள்ளையும்‌ அருளிச் செய்தது:
ச்லோஹ வியாக்கியானங்களிலும்‌ இவ்விஷயம்‌ விவரிக்கப்‌ பட்ட து
எம்பெருமான்‌ சேதனர்களுடைய ஹ்ருதய கமலத்தில்‌ பிராட்டியுடன்‌ கூடியவனாகவே எழுந்தருளியிருக்றொனென்‌பது
“ஸர்வ பூ,தஹ்ருத,ப்ஜஸ்த; “என்று ப்ராஹ்ம புராணத்திலும்‌,
“மார்வ மென்பதோர்‌ கோயிலமைத்து மாதவனென்‌னும்‌ தெய்வத்தை நாட்டி ” என்று பெரியாழ்வாராலும்‌
பேசப்‌ பட்ட ச, வ்யூஹ விபவார்ச்சாவதாரங்களிலும்‌ இவளுடன்‌ கூடியவனாகவே எம்பெருமான்‌
விளங்குகிறானென்பது ஸகல ப்ரமாண ஸித்தம்‌.

(மாதவன்‌) ” என்று
புருஷஹோத்தமனை அடைவதற்கு ஸாதனமான பர வித்யை சொல்லப் படுவதாகவும்‌
அந்த வித்யைக்கு ப்ரவர்த்தகனாகையால்‌ இவன்‌ மாதவ னெனப்‌ படுகரொனென்‌ றும்‌ கொள்ளலாம்‌.
“மா வித்யா ச ஹரே: ப்ரோக்தா தஸ்யா ஈமோ யதோ பவாந |
தஸ்மாந் மாதவ நாமாஸி த,வ: ஸ்வாமீதி மாப்‌,தி,த: | “` ‘
என்று ஹரியை ப்ரதிபாதிக்கும்‌ வித்யை சொல்லப்‌ படுகிறது.
அதற்கு ஸ்வாமியாயிருப்பதால்‌ நீர்‌ மாதவ னென்று சொல்லப்படுகதிறீர்‌.
* தவன்‌ ‘ என்றும்‌ ஸ்வாமியென்‌ னும்‌ பொருளையுடையது. -என்று இவ் வர்த்தம்‌ ஹரி வம்ஸத்தில்‌ ஆதரிக்கப் பட்டது.

“மளநாத்‌ த்‌யாகாச் ச யோகாச்ச வித்‌,தி, பாரத மாதவம்‌ ”’
பரதகுலத்‌துதித்தவனே! மெளநத்தினாலும்‌. தியானத்தி னலும்‌. யோகத்தினாலும்‌ மாதவனென்று அறிவாயாக. |
என்று வியாஸர்‌ சொல்லியபடியும்‌ மாதவநாமத்திற்குப்‌ பொருள்‌, கொள்ளலாம்‌.
“மது,வித்வா 5வபே த்‌,யத்வாத்‌,வா”
மது வித்யையினால்‌ அறியப்படுமவனகையாலே மாதவ னெனப்படுகிறான்‌ -என்றும்‌ சங்கரர்‌ பொருளுரைத்தார்‌. “
மது,குலே ஜாதத்வாந்‌ மாத,வ: ”
மது குலத்தில்‌ பிறந்தவ னாகையாலே மாதவனாகிறான்‌ ] என்றும்‌ பொருள்கொண்டனர்‌.
“மா லக்ஷமீ: தீ, ஸரஸ்வதீ தே அவதீதி மாத,வ:”
என்று லக்ஷ்மியும்‌. “தீ; ‘ என்று ஸரஸ்வதியும்‌ சொல்லப்‌ படுகின்‌றனர்‌.
அவர்களை ரக்ஷிக்கிறானாகையால்‌ மாதவனா கிறான்‌-என்றும்‌ சங்கரர்‌ பொருள்‌ கொண்டார்‌.
இப்படிப்‌ பல பொருள்களை உடையதாயிருந்த போதிலும்‌, எல்லா ஆழ்வார்களாலும்‌ .ஆதரிக்கப்பட்டதான
லக்ஷ்மீநாதன்‌ என்‌னும்‌ பொருளே இவ்விடத்திற்குப்‌ பொருளாகக் கடவது.

—————-

இப்படி
அச்யுதனாகவும்‌,
கோவிந்தனாகவும்‌,
கேசவனாகவும்‌,
நாராயணனென்‌னும்‌ அஸாதாரணமான திருநாமத்தை உடையவனாகவும்‌,
பிராட்டியுடன்‌ கூடியவனாகவும்‌
எழுந்‌தருளியிருக்கிறவன்‌ ஸர்வேஸ்வரன்‌ என்று இது வரையில்‌ கூறப்பட்டது.

—————

இப்படிப்பட்ட பெருமைகளை யுடையவனாக இவன்‌ எழுந்தருளியிருக்கிறான்‌ என்‌னுமிடத்துக்கு
ப்ரமாண மென்ன? என்ற ப்ரஸ்னம்‌ பிறக்க,
வேத வாக்கியங்களே இவ் விஷயத்தில்‌ ப்ரமாணம்‌ என்று சொல்லுறது
கோவிந்தன்‌ என்னும்‌ திருநாமம்‌,
கோ சப்,தத்தினால்‌ வேத வாக்கியங்‌களைச்‌ சொல்லுகிறதாகையால்‌
வேதத்தால்‌ ப்ரதிபாதிக்கப்‌ படுமவன்‌ என்று கோவிந்த நாமத்திற்குப்‌ டொருள் ஏற்படுகிறது.
இவன்‌ அடியவர்களை நழுவவிடாத அச்யுத என்னுமதுக்கு ப்ரமாணம்‌
* மமாங்வதம்‌ மபிவமச்யுதம்‌ நாரா யணம்‌ ” என்னும்‌ நாராயணா நுவாகம்‌.
த்ரிவித,பரிச்சேத , மற்றவனாகவும்‌, அளவற்ற ரூப குண விபங்களையுடையவனாகவுமுள்ள
அநந்தன்‌ என்பதற்கு
ˆ” ஸத்யம்‌ ஜ்ஞாநம் அநந்‌தம்‌ ப்‌,ரஹ்ம”
“யதே,கமவ்யக்தமநந்தரூபம்‌” –
அநந்தமவ்யயம்‌ கவிம்‌ ஸமுத்‌,ரேந்தம்‌”
முதலான தைத்திர்ய உப நிஷத்‌ வாக்யங்களும்‌.
‘*அநந்தணங்சாத்மா விஸ்வ ரூபோ ஹ்யகர்த்தா” என்னும்‌
வேதாமவதர வாக்கியமும்‌ ப்ரமாணமாகின்‌றன.
இப் பரம புருஷனே பல அவதாரங்களெடுதக்து. தாழ்ந்தோ ருடன்‌ ஒரு நீராகக்‌ கலந்து பரிமாறும்‌ கோவிந்தனாகிறான்‌ என்பதற்கு ப்ரமாணம்‌ —
அஜாயமாநோ பஹுதா விஜா- யதே| தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌’”
பிறப்பில்லாத புருஷோத்தமன்‌ பலபடியாகப்‌ பிறக்கிறான்‌.
புத்திமான்‌களில்‌ சிறந்தவர்களே அவனுடைய பிறப்பின்‌ ரஹஸ்யத்தை அறிதிறார்கள்‌.
“யுவா ஸாுவாஸா: பரிவீத ஆகரத்‌ | ஸ உ ஸ்ரேயோாந்‌ பவதி ஜாயமாந ! தம்‌ தீ,ராஸ: கவய உந்நயந்தி |”
யெளவனத்தை உடையவனாகவும்‌, அழகிய பீதாம்பரத்தை தரித்தவனாகவும்‌. (நித்ய ஸூரிகளால்‌) கூறப்‌ பட்டவனாகவும்‌ அப்பரமபுருஷன்‌ தோன்‌றினான்‌.
அவன்‌ பிறந்த பின்பே மேன்மையை அடைகிறான்‌. அவனை ஞானிகளான கவிகள்‌ அறிகிறார்கள்‌.

“பிதா புத்ரேண பித்ருமாக்‌ யோநியோநெள ஈந வேத,விந்மநுதே தம்‌ ப்‌ருஹந்தம்‌ ‘
ஸர்வலோக பிதாவான புருஷோத்தமன்‌, ஒவ்வொரு அவதாரத்திலும்‌ தன்னால்‌ பிறப்பிக்கப்பட்ட
ஒருவனைப்‌ பிதாவாகக் கொண்டு பிறக்கிறான்‌.
வேதத்தை அறியாதவன்‌ அவனுடைய பெருமையை அறியமாட்டான்‌-முதலியவை.
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்மும்‌ உத்பாதகனாய்‌, புகழப்பட்ட கேசத்தை உடையவனாயுள்ள கேசவன்‌ இவனே என்பதை
“நாராயணாத்‌ ப்ரஹ்மா ஜாயதே | நாராயணாத்‌ ருத்‌;ரோ ஜாயதே?
நாராயணன் இடமிருந்து பிரமன்‌ பிறக்‌கிறான்‌. நாராயணனிடமிருந்து உருத்திரன்‌ உண்டாகிறான்‌.
‘ஹிரண்யகேஸ ரு:”
ஸுவர்ணம்‌’ போன்‌று அழகிய திருக் குழல்‌ கற்றைகளை உடையவன்‌] முகலிய வேதா வாக்கியங்கள்‌ உத் கோஷித்தன.
இவன்‌ நாராயண முகேந எழுந்தருளியிருக்கும்‌ இருப்பும்‌, =
`” விஸ்வம்‌ நாராயணம்‌ ” என்று தொடங்கி
“ நரராயண பரம் ப்‌,ரஹ்ம தத்வம்‌ நாராயண: பர: | நாராயண பரோ ஜ்யோதிர் ஆத்மா நாராயண: பர:।
யச்ச கிஞ்சிஜ் ஜக,த்‌ யஸ்மிந்‌ த்‌ருஸ்ய்தே ஸ்ரூயதே5பி வா। அந்தர்‌ பஹிஸ் ச தத்‌ சர்வம்‌ வ்யரப்ய நாராயண: ஸ்தி,த: ॥ ”
என்று நாராயண அனுவாகத்திலும்‌,
“ ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்‌ ” முதலிய வாக்கியங்களால்‌ மஹோபநிஷத்திலும்‌.
“ சாக்ஷாங்ச த்ரஷ்ட. வ்யஞ்ச நாராயண:।ஸ்ரோத்ரஞ்ச ஸ்மரோதவ்யஞ்ச நாராயண:” என்று தொடங்கி, —
ஸ்ருங்ச ப்ரதி,மமஸ் ச ஸர்வம்‌ ஈாராயண:”‘ என்று ஸுபாலோபனிஷத்திலும்‌.
“ஏஷ ஸர்வ பூதாந்த- ராத்மா…….. ஏகோ நாராயண: ” என்று அந்தர்யாமி ப்ரஹ்மணத்திலும்‌.
மற்றுமுள்ள நாராயண உபனிஷத்‌ முதலியவைகளிலும்‌ கோஷிக்கப்பட்டன.
இப்படிப்பட்ட பெருமையையுடைய இப்பெருமான்‌ பிராட்டியுடன்‌ கூடவே எழுந்தருளியிருக்கிறான்‌ என்பது, ^°
ஹ்ரீஸ் ச தே லக்ஷ்மீஸ் ச பத்ந்யெள ”
உனக்கு ஸ்ரீ பூமிதேவிகள்‌ பத்னிகள்‌.
“’ அஸ்யேமாநா ஜக,தோ விஷ்ணுபத்ந்யா ”
இப் பிராட்டி இந்த ஐகத்தக்கு ஈங்வரியாகவும்‌, விஷ்ணு வுக்குப்‌ பத்தினியாகவும்‌ இருக்கிறாள்‌.
“ஸ்ரத்‌,த,யா தேவோ தேவத்வம் அஸ் நுதே’”
ஸ்ரீ என்னும் சப்தத்தினால்‌ சொல்லப்படும்‌ பிராட்டியினா லேயே ஈஸ்வரன்‌ ஈஸ்வரத் தன்மையை அடைகிறான்‌.
“ஆநீதவாதம்‌ ஸ்வத,யா ததே,கம்‌?’
ஒன்றுமில்‌லாத ப்ரளய காலத்தில்‌ ஸ்வதா சப்தத்தினால்‌ சொல்லப்படும்‌ பிராட்டியுடன்‌ கூடிய பகவான்‌ ஒருவனே இருந்தான்
முதலிய ஸ்ருதி வாக்கியங்களில்‌ கோஷிக்கப்டட்டது.

அச்யுதா என்றும் .“அநந்தன்‌’ என்றும் புருஷோத்தமனுடைய பரத்வம்‌ பேசப்பட்டது.
“அப்படிப்பட்ட பெருமையை உடையவனை அதி நிஹீனரான நம்மால்‌ அணுக முடியுமோ என்று அடியவர்‌ அஞ்சாமைக்காக.
*இடக் கையும்‌ வலக் கையுமறியாத ஆயர்களோடும்‌. பகுத்தறிவற்ற பசுக்களோடும்‌ ஒரு நீராகக் கலந்து
பரிமாறுமவன்‌’ என்னும்‌ பொருளை யுடைய கோவிந்த நாமம்‌ சொல்லப் படுகிறது.
“அச்சுதா! அமரரேறே!’ என்று அச்யுக அநந்த சப்தார்த்தங்களை அநுஸந்தித்த தொண்டரடிப் பொடியாழ்வாரும்‌.
“ஆயர்தம்‌ கொழுந்கதே!” என்று அடுத்தபடியாக கோவிந்த சப்தார்த்‌ தத்தை அருளிச்செய்தாரன்றோ.
(கோவிந்தன்‌ )
“ காவ: விந்த,தி ” [ பசுக்களை அடைகிறான்‌ ] என்ற வ்யுத்பத்தி யின்படியே,
நித்ய ஸூரிகளின்‌ நாதனாயிருக்குமிருப்பில்‌ பொருந்தாமல்‌ அறிவற்றவைகளான பசுக்களை
அடைவதற்‌காக கிருஷ்ணனாய்‌ வந்து திருவவதரித்தவன்‌.,

“அஹம்‌ கிலேந்த்‌,ரோ தேவாநாம்‌ த்வம்‌ க,வாமிந்த்தாம்‌ க,த:।
கோவிந்த, இதி லோகாஸ்த்வாம்‌ ஸ்தோஷ்யந்தி பு,வி ஸமாமவதம்‌ ||.”
நான்‌ தேவர்களுக்கெல்லாம்‌ இந்திரனாயிருக்கிறேன்‌.
நீ பசுக்களுக்கு இர்திரனாயிராக்கும்‌ தன்மையைத்‌ தானாகவே அடைந்தாய்‌.
ஆகையால்‌ இவ்வுலகில்‌ கோவிந்தன்‌ என்று எல்லாரும்‌ எப்போதும்‌ உன்னைத்‌ துதிப்பார்கள்‌–
என்று ஹரி வம்‌சத்தில்‌ கோவர்த்தன தாரியான
ஸ்ரீ கிருஷ்ணனைக் குறித்து தேவேந்திரன்‌ துதித்தானன்றோ.
கோ விந்தேத்தி என்றபடியே பசுக்களுக்குப்‌ புகலிடம்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
“சட்டித் தயிரும்‌ தடாவினில்‌ வெண்ணெயும் உண்‌ பட்டிக்கன்றே!” என்றும்‌
“பட்டி மேய்ந்தோர்‌ காரேறு பல. தேவற்கோர்‌ கீழ்க்கன்றாய்‌ ” என்றும்‌
அருளிச் செய்யும்படி. யன்‌றோ இவன்‌ பசுக்களுடன்‌ புரையறக் கலக்கும்படி.
இந்த மஹா குணத்தை நினைத்து ஆழ்வார்கள்‌ அடிக்கடி வாய் வெருவுவர்கள்‌.
“கோவிந்தன்‌ குணம் பாடி ஆவி காத்திருப்பேனே” என்று ஆண்டாள்‌ இக் குணத்தையே தனக்கு ப்ராண பாரமாகக்‌ கொண்டிருந்தாள்‌.
“கற்றினம்‌ மேய்க்கிலும்‌ மேய்க்கப் பெற்றான்‌ காடுவாழ்‌ சாதியும்‌ ஆகப்பெற்றான்‌
பற்றி யுரலிடை ஆப்புமுண்டான்‌ பாவிகாள்‌! உங்களுக்கேச்சுக்கொலோ”-என்றும்‌,
“இக் கொம்மை முலைகள்‌ இடர்‌தீரக்‌ கோவிந்தற்கு ஓர்குற்றேவல்‌ இம்மைப்பிறவி செய்யாதே
இனிப்‌ போய்ச்செய்யும்‌ தவம் தான் என்‌” என்‌ றும்‌,
“கொங்கைத்‌ தலமிவை நோக்கிக்‌ காணீர்‌ கோவிந்தனுக்கல்லால்‌ வாயில்‌ போகா” என்றும்‌.
சொல்லும்படி யன்‌றோ
கோதைப் பிராட்டிக்குக்‌ கோவிந்கனிடமுள்ள காதல்‌.
“கூட்டிலிருந்‌ து கிளியெப்போ தும்‌ கோவிந்தா! கோவிந்தா! என்றழைக்கும்‌ ” என்று
இவளுடைய கிளியும்‌ இத் திரு நாமத்தை யன்றோ வாய் புலத்துவது.
நம்மாழ்வாரும்‌ “கோவிந்தன்‌ குடக்கூத்தன்‌ கோவலன்‌ என்றென்றே குனித்து” என்று
தமக்கு இத் திரு நாமத்திலுள்ள ஈடுபாட்டை வெளிப்‌ படுத்தினார்‌.

““கோவிந்தே,தி யதரக்ரந்த,த்‌ க்ருஷ்ணா மாம்‌ தூ,ரவாஸிநம்‌ |
ருணம்‌ ப்ரவ்ருத்‌,த,மிவ மே ஹ்ருத,யாந்நாபஸர்ப்பதி ॥’*
வெகு தூரத்திலிருந்த என்னை“கோவிந்தா”என்‌ று த்ரெளடதி கூப்பிட்டதானது விருத்தியடைந்த
கடன் போல்‌ என்‌ மநஸ்ஸிலிருந்து அகலுகிறதில்லை.
என்று. அச்யுதாதி நாமங்‌ களையும்‌ அவள்‌ உச்சரித்தருந்த போதிலும்‌
பகவானுடைய திருவுள்ளத்தைப்‌ புண்படுத்திற்று இத் திருநாமமே யன்றே.
இத் திருநாமத்தன்‌ பெருமையைப்‌ பன்னியுரைக்குங்கால்‌ பாரதமாம்‌.
(கோவிந்தன்‌ )
கோ ஸப்‌தம்‌ பூமியையும்‌ குறிக்கு மாகையால்‌
*கோம்‌ விந்த,தி ? என்று பூமியை ஜலத்தில்‌ நின்றும்‌ குத்தியெடுத்த வராஹ மூர்த்தியைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌.
‘மஹா வராஹோ கோவிந்த,: “என்று ஸ்ரீஸஹஸ்ரநாமத்திலும்‌ இவ்வர்த்தம்‌ ஆதரிக்கப்பட்டது .
“நஷ்டாம்‌ வை தரணீம்‌ பூர்வமவிந்த;ம்‌ வை கு,ஹாசு,தாம்‌ |
கேவிந்த, இதி தேநாஹம்‌ தே,வைர்‌ வாக்‌,பிரபிஷடுத: | ‘
பாதாளத்தில்‌ ஓளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை முன்‌ னொரு காலத்தில்‌ நான்‌ தேடி யடைந்கதேனாகையால்‌.
தேவர்‌களால்‌ கோவிந்தன் என்‌று ஸ்தோத்ரம்‌ செய்யப் பெற்றேன்‌.
என்று பாரதத்தில்‌ மோஷ தர்மத்தில்‌ பகவானாலேயே சொல்லப்பட்டது.
இத்தால்‌ ஆபத்துக் காலத்தில்‌. ரக்ஷ்ய வஸ்தவின்‌ அபேஷையை எதிர்பாராமலே மேல் விழுந்து.
தன்‌ பெருமைக்குப் பொருந்தாத உருவத்தையும்‌ கொண்டு ரக்ஷிக்கும்‌ பெருங்குணம்‌ பேசப்படுகிறது.
“உத்‌,த்‌,ருதா5ஸி வராஹேண க்ருஷ்ணேந ஸாதபளஹுநா `பூமிப்பிராட்டியே! நூறு கைகளை உடையவனும்‌, அநந்த ஸ்வரூபிய்மான வராஹ மூர்ச்தியால்‌
எடுக்கப்பட்டவளாய்‌ இருக்கிறாய்‌. என்று பண்டை மறையிலும்‌,
“ஈனச்‌ சொல்லாயினுமாக எறிதிரை வையம்‌ முற்றும்‌
ஏனத்துருவாய்‌ இடந்தபிரான்‌ இருங்கற்பகம்‌ சேர்‌
வானத்தவர்க்கும்‌ அல்லா தவர்க்கும்‌ மற்றெல்லாயவர்க்கும்‌
ஞானப்பிரானையல்லால்‌ இல்லை நான் கண்ட நல்லதுவே’
“நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்பக்‌
கோலவராகமொன்றாய்‌ நிலம்‌ கோட்டிடைக்‌ கொண்ட எந்தாய்‌!” —என்‌றும்‌,
° பாசிதூர்த்துக்‌ கிடந்த பார்மகட்குப்‌ பண்டொருநாள்‌
மாசுடம்பில்‌ நீர்வாரா மானமிலாப்‌ பன்‌ றியாம்‌
தேசுடைய தேவர்‌ திருவரங்கச்‌ செல்வனார்‌
பேசியிருப்பனகள்‌ பேர்க்கவும்‌ பேராவே” _ என்‌றும்‌
தமிழ்‌ மறைகளிலும்‌ இப்பெருமானின்‌ பெருமைகள்‌ பேசுப்‌ பட்டனவன்‌றோ.

“’கெளரேவைஷா தத;ா வாணீ தாம்‌ ச யத்‌, விந்த,தே ப,வார்‌ |
கேோவிந்தஸ்து ததோ தே,வ முகிபி,: கத்‌,யதே ப,வாந்‌
கோ சப்தமான து :’கெள:’ என்று சொல்லப்படுகிறது.
வார்த்தை களையெல்லாம்‌ நீரே அடைவதால்‌ நீர்‌ கோவிந்தனென்று முனிவர்களால்‌ சொல்லப்படுகிறீர்‌.
என்கிற நிர்வசன த்தின்‌ படியே ஸர்வமாப்‌,த,வாச்யன்‌ என்றும்‌ இத் திருநாமத்துக்குப்‌ பொருள் கொள்ளலாம்‌.
“சொல்லினால்‌ தொடர்ச்சி நீ சொலப்‌ படும்‌ பொருளும்‌ நீ” என்று திருமழிசையாழ்வார்‌ இல்வர்த்‌தத்தை அறுஸந்தித்தார்‌.
(கோவிந்தன்‌ )
கோசப்தம்‌ வேத வாக்கியங்களைக்‌ குறிப்பதாகக் கொண்டு வேதத்தினால்‌ சொல்‌லப்படுமவன்‌ என்றும்‌
பொருள்கொள்ளலாம்‌.
அச்சம்‌… ஏற்றுவான்‌ அச்சுதன்‌ அநந்த கீர்ந்தி ஆதியந்தமில்லவன்‌
நச்சராவணைக்‌ கிடந்த நாதன்‌ ” என்று
அச்சுதன்‌. அந்தன்‌ என்னும்‌ திருநாமங்களுக்கு அர்த்தம்‌ செய்த திருமழிசை யாழ்வார்‌ -‘
வேத கதனே ”’ என்று கோவிந்த சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்‌.
(கோவிந்தன்‌ )
எந்த தேவதையைக்‌ குறித்து ஸ்தோத்ரம்‌ செய்தாலும்‌ அவை இவனையே அடைவதால்‌
கோவிந்தன்‌ எனப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.
“ நும்‌இன்‌ கவிகொண்டு நும்‌நும்‌ இட்டாதெய்வமேத்தினால்‌
செம்மின்‌ சுடர்முடி என்‌ திருமாலுக்குச்‌ சேருமே என்றார்‌ நம்மாழ்வார்‌.
(கோவிந்தன்‌)
கோ சப்தம்‌ ஒளியைக் குறிப்பதால்‌ பரஞ்சோதியாய் இருப்பவன் என்‌றும்‌ பொருள்‌ கொள்ள லாம்‌.
நம்மாழ்வாரும்‌ “பரஞ்சோதி நீ பரமாய்‌ நின்னிகழ்ந்து பின் மற்றோர்‌
பரஞ்சோதியின்‌ மையின்‌ படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம்‌ படைத்த எம்‌
பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே ” என்று
இப் பொருளை அதுஸந்தித் தருளினார்‌.
“நாராயண பரோ ஜ்யோதி:” என்றும்‌.
** பரம்‌ ஜ்யோதி ருப ஸம்பத்‌,ய ” என்றும்‌.
ˆ” ஆதித்ய வர்ணம்‌ ” என்றும்‌,
“ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரஜ தாரகம்‌ நேமா வித்யுதோ பந்தி குதோ 5யமக்‌,நி: |
தமேவ பாந்தமநுபாதி ஸர்வம்‌ தஸ்ய பாஸா ஸர்வமித,ம்‌ ॥”
அப் பரம புருஷனுக்கு முன்‌ ஸூர்யனும்‌ பிரகாசிப்பதில்லை;
சந்திரனும்‌, நக்ஷத்திரங்களும்‌. இந்த மின்‌னல்களும்‌ பிரகாசிக்‌கிறதில்லை.
அக்னியைப்‌ பற்றிச்‌ சொல்லவும்‌ வேண்டுமோ?
ஒளிவிடும்‌ அவனை அநுஸந்தித்தே எல்லாம்‌ ஓளிவிடுகின்‌ றன.
அவனுடைய ஒளியாலேயே இவையெல்லாம்‌ பிரகாசிக்கின்‌றன.என்றும்‌ வேதங்களிலும்‌
“ ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய ப,வேத்‌, யுகவது,த்தி,தா |
யதி, ஸத்‌,ருமீ ஸா ஸ்யாத்‌, பாஸஸ்‌ தஸ்ய மஹாத்மந:।॥”
ஆகாயத்தில்‌, ஒரே ஸமயத்தில்‌ ஆயிரம்‌ ஸூர்யர்களுடைய ஒளி தோன்றிற்றாகில்‌. அவ்வொளி
அந்த மஹாபுருஷனுடைய ஒளிக்கு ஒப்பாகலாம்‌. என்று கீதையிலும்‌ ஒதப்‌ பட்ட தன்றோ.

அந்த கோவிந்தநாமதீதால்‌ ஸெளலப்யகு,ணப்ரகாபகமான கிருஷ்ணாவதாரம்‌ அநுபவிக்கப்பட்டது. இங்கு வேத, ப்ரதிபா தீயத்வமாெெ பரத்வம்‌ பேசப்படுகிறது. ஆகையால்‌ புநருக்தியில்லை,

—————

ஆக, கேசவன்‌ முதலான நான்கு திருநாமங்களால்‌ பரத்வம்‌ பேசப்பட்டது.
இனி விஷ்ணு என்னும்‌ திரு நாமத்தினால்‌ நான்காவது வியூஹமான அநிருத்த மூர்த்தி சொல்லப்படுகிறார்‌.
இவ் விடத்தில்‌ “வ்யூஹமாவ து:-ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹ!ரார்த்தஹமாகவும்‌.
ஸம்ஸாரி ஸம்ரக்ஷணார்த்த, மாகவும்‌,
உபாஸக அனுக்ரஹ மர்த்தமாகவும்‌.
ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்‌த ருபேண நிற்கும்‌ நிலை.
பரத்வத்தில்‌ ஜ்ஞாநாதிகளாறும்‌ பூர்ணமாயிருக்கும்‌.
வ்யூஹத்தில்‌-முற்று இரட்டை குணங்கள் ப்ரகடமாயிருக்கும்‌,
அதில்‌ ஸங்கர்ஷணர்‌ ஜ்ஞாந பலங்கள்‌ இரண்டோடும்‌ கூடி
ஜீவ தத்வத்கை அதிஷ்டி,த்து,
அத்தை ப்ரக்ருதியில்‌ நின்றும்‌ பிரிக்கும் அவஸ்தையையும் பஜித்து,
ஸரஸ்த்ர ப்ரவர்த்தன பண்ணக் கடவராயிருப்பர்‌.
பிரத்யும்நர்‌ ஐஸ்வர்ய வீர்யங்களோடும் கூடி
மநஸ் தத்வத்தை அதிஷ்டி,த்து.
தர்ம உபதேசத்தையும்‌.
மநுஷ்யாதி தொடக்கமான வர்க்க, ஸ்ருஷ்டியையும்‌ பண்ணக் கடவராயிருப்பர்‌.
அநிருத்தர்‌; சக்தி தேஜஸ்ஸுக்கள்‌ இரண்டோடும் கூடி
ரஷணத்துக்கும்‌,
தத்வ ஜ்ஞாந ப்ரதானத்துக்கும்‌
கால ஸ்ருஷ்டிக்கும்‌, கடவராயிருப்பர்‌. ” என்று
பிள்ளைலோகா சார்யர்‌ தத்வ த்ரய த்தில்‌ அருளிச் செய்துள்ள ஸ்ரீஸூக்திகள்‌ அநு ஸந்திக்கத்தக்கவை,
விஷ்ணு சப்தத்தால்‌ சொல்லப்படுகிறவர்‌ அநிருத்தரே என்று நிர்ணயிப்பது எப்படியெனில்‌:
“த்ரிபாதூர்த்‌,வ உதைதத்‌ புருஷ: பாதேர ஸ்யேஹாப,வாத்‌ புந;!
ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸா முகா அபி, |”
பரமபதத்திலுள்ள பரமபுருஷன்‌ மூன்‌று உருவங்களை உடையவராய் ஸங்கல்பித்தார்‌.
பரமபத நாதனுடைய ஒரு அவதாரமான அநிருத்தர்‌ மறுபடியும்‌ இங்கு அவதரித்தார்‌.
அதன் பிறகு ஸர்வ விதமான சேதனர்களையும்‌ ரஷிப்பதற்காக இவ் வுலகையெல்லாம்‌ (
அவதாரம்‌ செய்தவன்‌ மூலம்‌) வியாபித்தார்‌.] என்று புருஷ ஸூக்தத்தில்‌ அநிருத்தரைக் குறித்து விஷ்ணுசப்தார்த்தம்‌ அநுஸந்திக்கப்பட்டது.
மேலும்‌, அநிருத்தரே ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு . இடையில்‌ பத்ம நாபராகிய விஷ்ணுவாக அவதரித்தார்‌ என்று சாஸ்த்ரங்கள்‌ சொல்லுகையாலும்‌.
கார்ய வாசி சப்தம்‌ காரணமாகச் சொல்லுமாகையாலும்‌, “பத்மநாபர்‌’ என்று ப்ரதமாவதாரமான விஷஸ்ணுவைத்‌ தனியே இங்கு எடுக்கையாலும்‌
இங்கு விஷ்ணுசப்தம்‌ அநிருத்த நாராயணனைச்‌ சொல்லக்கடவது.
மற்ற வியூஹங்களுமிருக்க இங்கு அநிருத்தரை எடுத்த துக்குக்‌ கருத்தென்னெனில்‌:
“பத்மநாபாதி,கா: ஸர்வே வைப,வீயாஸ்‌ ததைவ ச |
ஷட்த்ரிம்மமத்ஸங்க்‌,யாஸங்க்‌,யா தா: ப்ராத,ந்யே கணேங்வர |!
ஷட்த்ரிம்ப்த்‌,பே,த,பி,ந்காஸ்தே பத்‌மநாபாதி,கா: ஸுரா: |
ஸமுத்பந்நா தீ,பாத்‌, 8,பா இவேங்வரா: |”
விஷ்வக்ஸேநரே! பத்மநாபன்‌ முதலிய முக்கியமான விபவா வதாரங்கள்‌ முப்பத்தாறாகும்‌.
இப்படி பத்மநாபன்‌ முதலிய முப்பத்தாறு விபவமூர்த்திகளும்‌. விளக்கிலிருந்து உண்டான
விளக்குகள்போல்‌ அநிருத்த மூர்த்தியிடமிருந்து அவதரித்‌ தார்கள்‌. என்று விஷ்வக்ஸேந ஸம்‌ ஹிதையில்‌ சொல்லிய படியே,
பின்‌ சொல்லப் போகும்‌ பத்மநாபன்‌ , திரிவிக்கிரமன்‌ , வாமனன்‌. தாமோதரன்‌ என்னும்‌ மூர்த்திகளுக்கு மூல மூர்த்தி
அநிருத்தரேயாகையால்‌ அவரை இங்கு எடுக்கிறது. நிற்க;
விஷ்ணு பதத்தின்‌ பொருளை இனி விவரிட்மோம்‌.
“ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ” என்று அவதாரத்தினால்‌ வியாபித்திருப்பதை ,
விஷ்ணு சப்தார்த்தமாகப்‌ புருஷ ஸூக்தத்‌தில்‌ பேசப்பட்டது,
“வ்யாப்ய ஸர்வாநிமாக்‌ லோகாந்‌ ஸ்தி,த: ஸர்வத்ர கேமுவ:
ததமச விஷ்ணுநாமாஸி விமோர்‌ தளாதோ: ப்ரவேமுநாத்‌ |!”
கேசவனாகிற தேவரீர்‌ இந்த எல்லா உலகங்களையும்‌ எங்கும்‌ வியாபித்து நிற்கிறீர்‌;
ஆகையால்‌ விஷ்ணுவென்னும்‌ திரு நாமத்தை யுடையவராய்‌ விளங்குகிறீர்‌ ‘
விம’ என்னும்‌ தாது ப்ரவேசித்தல்‌ என்னும்‌ பொருளை யுடைத்தாயிருப்பதால்‌. என்று
ஸ்ரீவராஹபுராணத்தில்‌ சொல்லப்பட்டபடியே எங்‌கும்‌ தன்‌ ஸ்வரூபத்தால்‌ வியாபித்து நிற்பவன்‌ விஷ்ணு வென்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
“யஸ்மாத்‌, விஷ்டமித,ம்‌ விஸ்வம்‌ தஸ்ய முக்த்யா மஹாத்மர: |
தஸ்மாத்‌ ஸ ப்ரோச்யதே விஷ்ணுர்‌ விமேர்‌ த,௱தோ: ப்ரவேமாநாத்‌ ||”
மஹாத்மாவான அப் பரம புருஷனுடைய சக்தியினால்‌ இவ்‌ வுலகமெல்லாம்‌ வியாபிக்கப்பட்டிருப்பதால்‌
அவன்‌ விஷ்ணு வெனப்படுகீறான்‌;
விம ‘ என்னும்‌ தாது வியாபித்தலைச்‌ சொல்லுவதால்‌–என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்‌, ஆதித்ய புராணத்திலும்‌ சொல்லியபடியே
சக்தியினால்‌ எல்லா வஸ்துக்களையும்‌ வியாபித்திருப்பவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
“வ்யாப்ய மே ரோத,ஸீ பார்த்த, காந்திஏப்யதி,கா ஸ்தி,தா |
ஸம்ஸாரவேமுநாத்‌ பார்த்த,! விஷ்ணுரித்யபி,ஸம்ஜ்ஞித: ॥
பார்த்தனே! என்னுடைய மிகவதிகமான ஒளியானது ஆகாயம்‌ முழுவதும்‌ வியாபித்து நிற்கிறது.
இப்படி இவ்‌ வுலகம்‌ முழுவதும்‌ வியாபித்து நிற்பதால்‌ நான்‌ விஷ்ணு வென்று சொல்லப்படுகிறேன்‌.–என்று மஹாபாரதத்தில்‌ சொல்லியபடியே ஸர்வ வ்யாபினியான விக்‌ரஹ காந்தியை உடையவன்‌ என்றும்‌ விண்ணுசப்தத்துக்குப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.

* யதள ஸர்வக,தோ விஷ்ணு: ”
விஷ்ணு வானவர்‌ எப்படி ஸர்வ வியாபியாயிருக்கிறோரோ….] என்று ஸ்ரீவிஷ்ணு புராணத்தில்‌ சொல்லியபடியே
விக்ரஹத்தாலே எங்கும்‌ வியாபித்து நிற்பவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
இவ் வர்‌த்தங்களெல்லாம்‌
” ‘ விஷ்ணுர்‌ விக்ரமணாத்‌ தேவ: “‘ என்று பாரதம்‌ உத்யோக பர்வத்தில்‌ உணர்த்தப்‌பட்டது.

இப்படி இவன்‌ எல்லாவற்றையும்‌ வியாபித்து விளங்குவதால்‌ எல்லாம்‌ இவனே என்று சொல்லலாம்படி யிருக்கறானென்‌பதை
“ஜ்யோதீம்ஷி விஷ்ணுர்‌ பு,வநாநி விஷ்ணுர்‌ வநாநி விஷ்ணுர்‌ கி,ரயோ தி,மமமச |
ஈத்‌,ய: ஸமுத்‌,ராமங்ச ஸ ஏவ ஸர்வம்‌ யத,ஸ்தி யந்காஸ்தி விப்ரவர்ய ॥”’
விப்ரஸ்ரேஷ்டரே! ஜ்யோதிஸ்ஸுக்களும்‌ விஸ்ணுவே;
புவனங்களும்‌ விஷ்ணுவே;
வனங்களும்‌ விஷ்ணுவே:
மலைகளும்‌. திக்குகளும்‌, நதிகளும்‌. ஸழுத்ரங்களும்‌, “ இருக்கிறது என்று
எப்போதும்‌ சொல்லப்படும்‌ ஜீவ தத்வமும்‌.
இல்லை என்னும்‌ வ்யவஹாரத்துக்கு விஷயமான அசிச்தத்வமும்‌ ஆகிய எல்லாம்‌
அந்த பகவான்‌ விஷ்ணுவே. என்று ஸ்ரீ விஷ்ணு புராணம்‌ உத்கோஷித்தது.
“ ஆஸ்ய ஜாநந்தோ நாம சித்‌,விவக்தந மஹஸ்தே விஷ்ணோ ஸுமதிம்‌ பஜாமறஹே ”
விஷ்ணுவே! உன்னுடைய திருநாமத்தை அறியும்‌ நாங்கள்‌. உன்னுடையது போன்‌ற தேஜஸ்ஸையும்‌
தெளிவான ஞானத்தையும்‌ அடைகிறோம்‌. என்று ருக்வேதத்திலும்
தத்‌, விஷ்ணோ: பரமம்‌ பத, என்றும்‌.
`” விஷ்ணோர்‌ யத்‌’பரமம்‌ பத,ம்‌” என்றும்‌,
“ மம ம்நோ விஷ்ணுருருக்ரம: ” என்றும்‌,
பரமே மத்‌,வஉத்ஸ.:”’
வீஷ்ணுவினுடைய மேலான திருவடியிலிருந்து அம்ருத தரைகள்‌ பொழிகின்‌றன.– என்றும்‌,
மற்றும்‌ பல பலவேத வாக்கியங்களிலும் இத் திரு நாமம்‌ மிகவும்‌ ஆதரிக்கப்பட்டது .
“தஸ்மாத்‌, விராட் ,ஜாயத”
அந்த அநிருத்‌த நாராயணனிட யிருந்து பிரமன்‌ உண்டானான்‌. ] என்றும்
ஐகந் நாதோ ப்‌,ரஹ்மாணமஸ்ருஜத்‌ புக: ।”’
நான்காவது மூர்த்தியான பிரமனை ஸ்ருஷ்டித்தார்‌–என்றும்
ஸம்ஹிதையிலும்‌ சொல்லப்பட்டடடியே
பிரமனைப்‌ பிறப்பித்தவரான அநிருத்த மூர்த்தி விஷ்ணு சப்தத்தால்‌ சொல்லப்பட்டார்‌,

————-

அடுத்த படியாக, அப் பிரமனைப்‌ பிறப்பிக்குமளவே யன்று.
அவனுக்குத்‌ துன்பம்‌ வந்த போது அதைப் போக்‌ கடிப்பவனும்‌ இவனே என்று உணர்த்துகிறது
மதுஸூதன்‌” என்னும்‌ திருநாமம்‌.

கேசவன்‌ என்று தொடங்கி கோவிந்தன் என்பது வரை பரத்வம்‌ பேசப்பட்டது.
விஷ்ணுவென்று வியூஹம்‌ உணர்த்தப்பட்டது.
மதுஸூதனன்‌ என்னும்‌ இத் திருநாமம்‌ தொடங்கி விபவாவதாரம்‌ விவரிக்கப்படுகிறது. .

*’ யோ வித,த,தி பூர்வம்‌ யோ வை வேதராம்ங்ச ப்ரஹிணோதி தஸ்மை ˆ”
எவனொருவன்‌ பிரமனை முதலில்‌ பிறப்பித்து, அவனுக்கு வேதங்களை உபதேசிக்‌கிறானோ என்று
வேதத்தில்‌ சொல்லியபடியே ஸர்வேஸ்வரன்‌ வேதங்களை ப்ரஹ்மாவுக்கு உபதேசித்தருளினான்‌.
நான்கு சிசு ரூபமாயிருந்த அந்த நான்கு வேதங்களையும்‌, மது.கைடபன்‌ என்னும்‌ இரு அஸூரர்கள்‌
பிரமனிட மிருந்து பறித்துக் கொண்டு போய்‌, ரஸா தலத்தில்‌ ஒளித்து வைத்தனர்‌.
வேதங்களை இழந்த அப் பிரமனும்‌, “ கண்ணிழந்‌ தேன்‌. தனமிழந்தேன்‌ ‘ என்‌று கேசவனை நோக்கிக்‌ கதறினான்‌.
இக் கூக்குரலைக் கேட்ட கருணா வள்ளலான அப்பெருமானும்‌ ஹயக்ரீவாவதாரம்‌ செய்து
மது கைடபர்களை ஸம்ஹரித்துப்‌ பிரமனுக்கு வேதங்களை மீட்டுக்கொடுத்தான்‌
இப்படி ப்ரதம ஜனான (முதலில்‌ பிறந்தவனான ) பிரமனுக்குச்‌ செய்த உபகாரமாகையாலே
இது அவதாரங்களுள்‌ முதலில்‌ அநு ஸந்திக்கப்படுகிறது.
( மதுஸூதனன்‌ )
மதுவென்னும்‌ அஸாரனைக்‌ கொன்‌ றவன்‌.
“கர்ணமிங்ரோத்‌,ப,வம்‌ சாபி , மஹாஸுரம்‌ |
ப்‌ரஹ்மணோபசிதிம்‌ குர்வங்‌ ஜக, புருஷோத்தம: |
தஸ்ய தாத இத்யாஹு: |”
பகவானுடைய காதிலிருந்து உண்டான மதுவென்னும்‌ பெரிய அஸுரனை பிரமனுக்கு நன்மை செய்வதற்காகப்‌ புருஷோத்தமன்‌ கொன்றான்‌.
குழந்தாய்‌! அவனைக்‌ கொன்றதாலேயே., தேவர்கள்‌. அஸூரர்கள்‌, மனிதர்கள்‌. ரிஷிகள்‌ ஆகிய யாவரும்‌ ஐநார்‌தனனை மதுஸதனனென்று சொல்லு கிறார்கள்‌.] என்று மஹாபாரதத்தில்‌ இந்த நாமத்தின்‌ பொருள்‌ உரைக்கப்பட்டது .
“த,த்‌ருமாதேரவிந்த,ஸ்தழம்‌ ப்‌,ரஹ்மாணமமிதப்ரப,ம்‌ |
ஸ்ருஐஜந்தம்‌ ப்ரத,மம்‌ வேத,ாம்ம்சதுரங்சாருவிக்ரமெள |
ததோ விக்‌,ரஹிணஸ்தாம்ஸ்‌ த த்ருஷ்ட்வா தாவஸுரோத்தமெள |
வேதஞ்ஜக்‌,ருஹதூ ராஜம்‌ ப்‌,ரஹ்மண: பங்யதஸ்‌ ததா ॥
அத, தெள தளநவங்ரேஷ்டெள க்‌,ருஹீத்வா தாந்‌ ஸ௩ராதநார்‌ |
ரஸாம்‌ விவிமதுஸ்‌ தூர்ணமுத,பூர்ணே மஹோத,தெ,ள ||
ததோ ஹ்ருதேஷு வேதே.ஷஃ ப்‌,ரஹ்மா கங்மலமாவியத்‌ |
ததோ வச௩மீமா௩ம்‌ ப்ராஹ வேதைர்‌ விநாக்ருத: ॥
ப்‌,ரஹ்மா:-வேத;ா மே பரமம்‌ சக்ஷார்‌ வேதா மே பரமம்‌ தம்‌।
வேதா மே பரமம்‌ வேத; மே ப்‌,ரஹ்ம சோத்தமம்‌ |
மம வேதரா ஹ்ருதா: ஸர்வே தளாவாப்‌,யாம்‌ ப,லாதி,த: |
அந்த,காரா இமே லோகா ஜாதா வேதைள்‌ விவர்ஜிதா: ||
வேதே, ஹ்ருதே5ஹம்‌ கம்‌ குர்யாம்‌ லோகாந்‌ வை ஸ்ரஷ்டுமுத்‌,யத: |
அஹோ பத மஹத்‌, து, க்சும்‌ வேத;ாமமாஜம்‌ மம |
ப்ராப்தம்‌ துநோதி ஹ்ருதயம்‌ தீவ்ரரேர காமயஸ்த்வயம்‌ |
கோ ஹி மோகார்ணவே மக்‌,நம்‌ மாமிஹாத்‌,ய ஸமுத்‌.த,ரேத்‌।
இத்யேவம்‌ ப,௱ாவுமாணஸ்ய ப்‌,ரஹ்மணோ ந்ருபஸத்தம |
ஹரிஸ்தோத்ரார்த்தமுத்‌;,பூ,தா புத்‌,திர்‌ புத்திமதாம்‌ வர॥
ததோ ஐகெள பரம்‌ ஜப்யம்‌ ப்ராஞ்ஜலி: ப்ரக்‌,ரஹம்‌ ப்ரபு,:॥| ஏதஸ்மிந்நந்தரே ராஜ்‌ தேவேர ஹயமபிரோத,ர:। ஐக்‌,ராஹ வேதளநகலொந்‌ ரஸாதலக,தாந்‌ ஹரி: ॥
ப்ராதாச்ச ப்ரஹ்மணே ராஜர்‌ தத: ஸ்வாம்‌ ப்ரக்ருதிம்‌ யயெள ॥
ததஸ்தயோர்‌ வதே,நா மரு வேதாபஹரணேந ச |
போ காபநயநம்‌ சக்ரே ப்‌, ஹ்மண: புருஷோத்தம: || ””
மது கைடடன்‌ என்னும்‌ அஸுரர்கள்‌ அளவற்ற ஒளியை யுடையவனும்‌. தாமரைமலரில்‌ வீற்றிருப்பவனும்‌,
அழகிய உருவையுடைய நான்கு வேதங்களையும்‌ முதன்முதலில்‌ ஸ்ருஷ்டிப்பவனுமான பிரமனைப்‌ பார்த்தனர்‌
சரீரத்துடன்‌ கூடிய அவ் வேதங்களைக் கண்ட அந்த அஸூரர்கள்‌ பிரமன்‌ கண்டு கொண்டிருக்கும் போதே அவைகளை எடுத்துக்‌ கொண்டனர்‌.
பிறகு அவ் வஸூர ஸ்ரேஷ்டர்கள்‌ பழமை யான அவ்வேதங்களை எடுத்துக் கொண்டு.
நீர் நிறைந்த கடலினுள்ளிருக்கும்‌ ரஸாதலத்தினுள்‌ விரைவில்‌ நுழைந்‌தனர்‌.
இப்படி வேதங்கள்‌ கவரப்பட்டபின்‌ பிரமனைத்‌ துக்கம்‌ பீடித்தது.
அதன் பின்‌ வேதங்களை இழந்த நான்முகன்‌ ஈஸ்வரனைக்‌ குறித்துப்‌ பின்வருமாறு உரைத்தனன்‌ -—
“வேதங்களே எனக்கு மேலான கண்‌; வேதங்களே எனக்கு மேலான தனம்‌. வேதங்களே எனக்கு மேலான ஓளி.
எனக்குப்‌ பெருமையைக்‌ கொடுப்பவைகளில்‌ வேதங்களே சிறந்தவை.
அஸூரர்களுடைய பலத்தினால்‌ என்னுடைய வேதங்களெல்லாம்‌ இங்கிருந்து பறிக்கப்பட்டன.
வேத மற்றவையான இவ்வுலகங்கள்‌ இருள்‌ சூழ்ந்தவையாயின.
லோகங்களை ஸ்ருஷ்டிக்க முற்பட்ட யான்‌ வேதமில்லாமல்‌ என்ன செய்வேன்‌ ?
வேதங்கள்‌ நசித்ததினால்‌ எனக்குப்‌ பெருந்துன்பம்‌ ` வந்தடைந்துவிட்டது..
தீவிர சோகமான இந்த வியாதி : என்‌ மனத்தைத்‌ துன்புறுத்துகிறது.
இத்‌ துன்‌பக்கடலில்‌ முழுகும்‌ என்னை யார்தான்‌ | கரையேற்ற முடியும்‌ ?”
என்று இம்மாதிரியாக ப்ரஹ்மா பேசிக்கொண்டி ருக்கும்போது
‘ ஹரியை ஸ்தோத்ரம்‌ செய்யவேண்டுமென்‌ னும்‌ புத்தி அவருக்கு உண்டாயிற்று.
அதன் பிறகு ப நின்று, மிகச்‌ சிறந்த இந்த ஸ்தோத்ரத்தைப்‌ பாடினார்‌………
இதற்கிடையில்‌ பகவான்‌ ஹரி குதிரை போன்ற முகத்தையுடைய ஹயக்ரீவராய்‌ அவதரித்து, .
ரஸாதலத்திலிருந்த எல்லா வேதங்களை யும்‌ எடுத்துக்கொணர்ந்து பிரமனிடம்‌ கொடுத்தருளினார்‌.
அதன்பின்‌ பிரமன்‌ தன்‌ இயற்கை நிலையை அடைந்தனன்‌.
இப்படி அந்த அஸூரர்களைக்‌ கொன்றும்‌. வேதங்களை மீட்டுக்கொணர்ந்தும்‌
ப்ரஹ்மாவினுடைய சோகத்தைப்‌ புருஷோத்தமன்‌ போக்கடித்தான்‌.] என்று
மஹாபாரதத்‌ தில்‌ இந்த விருத்தாந்தம்‌ விவரிக்கப்பட்ட து.

“ மத,மிவ ம்து,கைடபூஸ்ய ரூப்யதரர்ப்பம்‌ |
ஸ்புடமிவ பரிபூ,ய. களர்வகுள்வோ: இமுபமிமீமஹி ரங்சு,குஞ்ஜரோர்வோ: || ”
மது `கைடபர்களுடைய கொழுப்பைக்‌ குலைத்தது போல்‌, வாழைத் தண்டு, கதையின்‌ வெளிப்புறமான கரப,ப்ரதேசம்‌;
யானைத்‌ துதிக்கை ஆகிய இவைகளின்‌ அழகுச் செருக்கையும்‌ அடக்கி, –
அந்த கர்வத்தினால்‌ பருத்து விளங்குகிற ஸ்ரீரங்க நாதனுடைய திருத்துடைகளுக்கு எப்பொருளை
உபமான மாகச்‌ சொல்லுவோம்‌] என்று பட்டர்‌ ஸ்ரீரங்கராஜஸ்த வத்திலும்‌. ‘
“யிஷ்டதுஷ்டமதுகைடப,8டெள ”
மது கைட்பர்களாகிய துஷ்டப் புழுக்களைப்‌ பிசைந்து கொன்றவை களான இத் திருத்துடைகள்‌] என்று
ஆழ்வான்‌ ஸூந்தர பாஹுஸ்தவத்திலும்‌ அருளிச்செய்தபடியே
மது கைடபர்‌ கள்‌ பகவானால்‌ தொடையினால்‌ இறுக்கிக்‌ கொல்லப்பட்டனர்‌ என்பது பிரஸித்தம்‌.

” காய்ந்திருளை மாற்றிக்‌ கதிரிலகு மாமணிகள்‌
ஏய்ந்த பணக்குதிர்மேல்‌ வெவ்வுயிர்ப்ப-—
வாய்ந்த மதுகைடபரும்‌ வயிறுருகி மாண்டார்‌
அதுகேடவர்க்திறுதியாங்கு ” [மூன்‌ திருவ 68] என்று
எம்பெருமானுடைய . திவ்ய வாஸத்தாலேயே மதுகைடபர்கள்‌ மாண்டனர்‌ என்று
பேயாழ்வார்‌ அருளிச்செய்தார்‌,

அன்‌ றிக்கே.
எம்பெருமான்‌. ஆயாஸம்‌ சிறிதுமின்‌ றி அவர்‌களை முடித்தபடியைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌.
இந்த மது கைடபர்கள்‌ பிரமனுடைய கர்மாநுபவத்தின்‌ பொருட்டு எம்பெருமானாலேயே ஸ்ருஷ்டிக்கப்பட்டனர்‌.
ரஜஸ்‌ தமோ குணங்களே வடிவெடுத்தவர்கள்‌ இவர்களென்‌ று பாஞ்சராத்ர சாஸ்திரத்தில்‌ சொல்லப்பட்ட து.
பிறக்கும்‌ போதே எங்களை நீ கொல்லுவாயாக ” என்று யாரைக்‌ குறித்துத்‌ தாங்கள்‌ சொல்லுகிறார்களோ
அவர்களாலேயே சாவு நேர வேண்டுமென்ற வரத்தைப்‌ பெற்றனர்‌.
வேதங்‌ களுடன்‌ கூடிய ப்ரஹ்மாவைக் கண்டு வேதங்களைக்‌ கவர்ந்து ரஸாதலத்தில்‌ ஜநித்தனர்‌. .
பிரமனால்‌ ஸ்தோத்ரம்‌: செய்யப்‌ பட்ட பகவான்‌ ஹயக்ரீவாவதாரம்‌ செய்து ஓர்‌ இனிய இசையைப்‌ பாட. அவ்வொலியைக் கேட்ட அவ்வஸுரர்கள்‌
வேதத்தை வைத்து விட்டு ஒலி வரும்‌ வழியில்‌ சென்றனர்‌.
பகவான்‌ மற்றொரு வழியாகச் சென்‌று வேதங்களை மீட்டுப்‌ பிரமனிடம்‌ கொடுத்தருளினான்‌.
வேதங்களைக்‌ காணாத அவ்‌ வஸுரர்கள்‌ பாற்கடலில்‌ பையத் துயின்ற பரமனைக் கண்டு
அவனுடன்‌ நெடுங்காலம்‌ போர் செய்தனர்‌.
பல பல காலம்‌ போர் செய்தும்‌ சோர்வடையாத திருமாலைக் கண்டு மனமுவந்து.
“ நீ வேண்டும்‌ வரத்தைக்‌ கேள்‌” என்றார்கள்‌ அவ்‌ வஸுரர்கள்‌.
* உங்களை நான்‌ கொல்லவேணும்‌ ” என்னும்‌ வரத்தை மாயாவியான அம்மாதவன்‌ தன்னால் படைக்கப்‌ பட்‌.டவர்களான அவர்களிடம்‌ வேண்டினான்‌.
அவர்களும்‌ ௮தற்கு இசைந்தவளவில்‌, “ உங்களுக்கு வேண்டிய ஒரு வரத்தைக்‌ கொள்ளுங்கள்‌” என்‌ று பரம புருஷன்‌ உரைத்தான்‌,
* ஒருவரும்‌ சாகாத இடத்தில்‌ நாங்கள்‌ சாக வேண்டும்‌” என்று அவர்கள்‌ வரம்‌ வேண்டினார்கள்‌.
புருஷோத்தமனும்‌ திருத்‌ தொடைகளால்‌ அவர்களை இறுக்கிக்கொன்றான்‌ என்று
இம்‌ மாதிரியாக சாஸ்‌த்ரங்கள்‌ இவ்விருத்தாந்தை விவரிக்கின்‌ றன.
*மது,ஸூத,னன்‌’ என்னுமித் திருநாமத்தில்‌ மதுவைச்‌ சொன்‌ னது ,கைடபனுக்கும்‌ உபலக்ஷணம்‌.
* கைடபாரி ‘ என்றும்‌ எம்பெருமானுக்கு ஒரு திருநாமம்‌ வழங்கி வருகிறது.

இனி, மதுஸூதனன்‌ என்னுமித்திருநாமத்திற்குள்ள மற்றும்‌ சில பொருள்களை விவரிப்போம்‌.
(மதுஸுதனன்‌)
மது,” என்று “ பிப்பலம்‌ ஸ்வாது,” என்றபடியே இனிமையான போக்யப்‌ பொருள்களான அசேதன தத்வத்தையும்‌.
ஆநந்த,ஸ்வரூபியும்‌, பகவானுக்கு ஸ்ரீகெளஸ்துபம்போல்‌ இனியவனுமான சேதன தத்வத்தையும்‌ சொல்லுகிறது.
‘ஸூதனன்‌” என்னும்‌ பதம்‌ தன்‌ வசத்திற்கு அழைத்துச்‌ செல்பவன்‌ என்னும்‌ பொருளை உடையது.
ஆக, ஸர்வ தத்வங்களையும்‌ அழைத்துச்‌ செல்பவன்‌ மதுஸூதனன்‌ என்றதாயிற்று.
“ ஸர்வ தத்வநயநாச்சைவ மதுஹா மதுஸூதந: ”
எல்லாத்‌ தத்துவங்களையும்‌ அழைத்துச்‌ செல்வதாலும்‌ பகவான்‌ மதுஸூதனனாகிறான்‌.
என்று சாஸ்திரம்‌ இப்பொருளை ஆதரித்தது,
* மது, ஸூத,னன்‌ ‘ என்பது ஸகல தத்வங்களாகிற குதிரைகளைத்‌ தூண்டுபவன்‌ என்றும்‌ பொருள்படும்‌. “
மதுரிந்த்‌,ரியநாமா ஸ ததோ மதுநிஷூதந: ”’ [
மது,’ என்று இனியவைகளான இந்திரியங்கள்‌ சொல்லப்‌ படுகின்‌ றன.
அவைகளை அடக்குமவனாகையாலே இப் பெரு மான்‌ மதுஸூதனனாகிறான்‌.என்றும்‌
மதுஸூதந சப்தார்த்‌ தம்‌ விவரிக்கப்பட்ட து.

ஆக, இப்பொருள்களால்‌ விரோதி நிரஸன ஸீலன்‌ மதுஸூதனன்‌ என்றதாயிற்று.
“ கொடு யேனிடர்‌ முற்றவும்‌ மாய்த்தவம்மான்‌ மதுஸூதவம்மான்‌”என்று இவ்வர்‌ததத்தை ஆழ்வார்‌ அருளிச்செய்தார்‌.
இந்த விரோதி, நிரஸனலத்வமாகிற பெருங்குணத்துக்குத் தோற்று
“ மது ஸூதனென்னம்மான்‌ தானும்‌ யானுமெல்லாம்‌ தன்னுள்ளே கலந்தொழிந்தோம்‌
தேனும்‌ பாலும்‌ நெய்யும்‌ கன்னலும்‌ அமுதுமொத்தே ‘* என்றும்‌,
வள்ளலே ! மதுஸூதனா ! “” என்றும்‌.
“ மதுஸூதனை யன்றி மற்றிலேன்‌ ” என்றும்‌. °
வைத்த மா நிதியாம்‌ மதுஸூதனையே அலற்றி” என்றும்‌, நம்மாழ்வார்‌ தம்மை எழுதிக் கொடுத்தார்‌

————
மதுஸூதனன்‌ என்று. பிரமனுக்குச்‌ செய்த உபகாரத்‌தைப்‌ பேசிற்று,

அடுத்தபடியாக, திரிவிக்கிரமன்‌ என்று
இவ் வுலகுக்கெல்லாம்‌ அபேஷா நிரபேக்ஷமாகத்‌ தன்னைக்‌ கொடுத்தபடியைப்‌ பேசுகிறது.
மஹாபலி என்பானோர்‌ அஸுரன்‌ தன்னுடைய பராக்ரமத்தாலே இந்திரனை யுள்‌ளிட்ட மூவுலகையும்‌ ஜயித்துத்‌ தன்‌ வசப்படுத்திக்கொண்‌டான்‌.
இந்திரன்‌ முதலிய தேவர்கள்‌ எம்பெருமானிடம்‌ சென்று முறையிட. அப்பெருமானும்‌
காஸ்யபருக்கும்‌ அதிதிக்‌கும்‌ புத்திரனான வாமனனாய்ப்‌ பிறந்து மஹாபலி யாகம்‌ செய்கையில்‌
அவனிடம்‌ மூவடி மண்ணை யாசித்துப் பெற்று, திரிவிக்ரமனாக வளர்ந்து,
ஈரடியால்‌ உலகங்களையெல்லாம்‌ அளந்து, மூன்றாவதடியை மாவலியின்‌ தலையில்‌ வைத்து,
பாதாள லோகத்தில்‌ அவனுக்கும்‌ பெருமையை உண்டாக்கி வைத்தான்‌ என்னும்‌ விருத்தாந்தம்‌
ஸர்வ லோக ப்ரஸித்தமானது.
இப்படி, ப்ரயோஜநாந்தர பரனான இந்திரனோடு, அவனுக்கு விரோதியான மஹாபலியோடு வாசியற-ஸர்வரையும்‌ ரக்ஷித்‌த அவதாரமாகையாலும்‌, ,
உறங்குகிற ப்ரஜையைத்‌ தடவிக் கொண்டு கிடக்கும்‌ தாயைப்போலே,
உலகங்களையெல்லா।ம்‌ தன்‌ திருவடிகளாலே அபேக்ஷா நிரபேஷமாகத்‌ தடவிக் கொடுத்த பெருமையை உடையதாகையா லும்‌.
பரத்வமும்‌, ஸெளலப்‌யமும்‌ ஒருங்கே ஒளிவிடுகின்ற மேன்மையை உடைத்தாயிீருக்கையா லும்‌,
அடியார்க்காகத்‌ தன்னை அழிய மாறியும்‌ அளிக்கும்‌ அருங்‌ குணத்தை அறிவிப்பதாகையாலும்‌.
வேதங்களோடு. இதிஹாஸ புராணங்களோடு. ஆழ்வார்களோடு வாசி யற எல்லாரும்‌ இவ்வவதாரத்திலே ஈடுபடாநிற்பர்கள்‌. .
“ இதம்‌ விஷ்ணுர்‌ விசக்ரமே ”
“ த்ரீணி பத; விசக்ரமே ” –
“ விசக்ரமே ப்ருதி,வீமேஷ ஏதாம்‌ கத்ராய விஷ்ணு: ” .
மூவடி மண்ணைப்பெறுவதற்காக இந்த உலகையெல்லாம்‌ அளந்தான் விஷ்ணு]:
“த்ரிர்‌ தே,வ: ப்ருதி,வீமிதி ப்ரவிஷ்ணு: ”’ “
ம்‌ நோ விஷ்ணுருருக்ரம:
பெரிய அடிவைப்புகளை யுடைய விஷ்ணு வானவன் நமக்கு மங்களத்தைத் தருவானாக,
“ விஷ்ணுக்ரா ந்தே. வஸுந்த,ரே ”
விஷ்ணுவினால்‌ அளக்கப்‌ பட்ட பூ தேவீயே] என்று பல பல விடங்களில்‌ பண்டை மறை வாய்‌ வெருவிற்று.
“கண்டாயே நெஞ்சே! கருமங்கள்‌ வாய்க்கின்றோர்‌
எண்தானுமின்‌றியே வந்தியலுமாறு
உண்டான்‌ உலகேழும்‌ ஓர்‌ மூவடி கொண்டானைக்‌
கண்டு கொண்டனை நீயுமே ” என்றும்‌.
“அடியை மூன்‌றை யிரந்தவாறும்‌ அங்கே நின்றாழ்கடலும்‌
மண்ணும் விண்ணும்‌ முடிய ஈரடியால்‌ முடித்துக் கொண்ட முக்கியமும்‌
நொடியுமாறவை கேட்குந்தோறுமென்‌ நெஞ்சம்‌ நின்றனக்கே கரைந்துகும்‌
கொடிய வல்வினையேனுன்னை என்றுகொல்‌ கூடுவதே ?”” என்றும்‌.
“பாயோரடி வைத்த தன்‌ கீழ்ப்‌ பரவை நிலமெல்லாம்‌
தாயோரடியால்‌ எல்லா வுலகும்‌ தடவந்த மாயோன்‌
உன்னைக்‌ காண்பான்‌ வருந்தி எனை நாளும்‌ .
தீயோடுடன்‌ சேர்‌ மெழுகாயுலகில்‌ திரிவேனோ ?” என்றும்‌,
“ உலகமெல்லாம்‌ தாவிய வம்மானை எங்கினித்‌ தலைப் பெய்‌வனே ? ” என்றும்‌,
`” தாவி வையம்‌ கொண்ட எந்தாய்‌! ” என்றும்‌,
“பாமரு மூவுலகுமளந்த பற்ப பாதாவோ !’”’ என்றும்‌
நம்மாழ்வார்‌ பிராட.டிமார்‌ தொட்டாலும்‌ சிவக்கும்‌ திருவடி களைக் கொண்டு காடுமோடெல்லாமளந்த
இந் நீர்மையிலே உருகா நிற்பர்‌,
என்னிது மாயம் — வண்ணமே கொண்டளவாய்‌ என்ற மன்னு நமுசியை வானிற் சுழற்றிய மின்னுமுடியனே !” என்றும்‌,
^” ஒருப்படுத்‌ திடுமின்‌ இவளை உலகளந்தானிடைக்கே ”’ என்‌றும்‌, பெரியாழ்‌வாரும்‌,
“ ஓங்கி உலகளந்த உத்தமன்‌ ” என்றும்‌.
“ தேச முன்னளந்தவன்‌ திரிவிக்கரமன்‌ திருக்கைகளால்‌ என்னைத்‌ தீண்டும்‌ வண்ணம்‌ ” என்றும்‌
பொல்லாக்‌ குறளுருவாய்ப்‌ பொற்கையில்‌ நீரேற்று
எல்லாவுலகும்‌ அளந்‌து கொண்ட எம்‌ பெருமான்‌ ‘* என்றும்‌, “
மாணியுருவாயுலகளந்த மாயனைக்‌ காணில்‌ தலைமறியும்‌ ‘” என்றும்‌ ஆழ்வார்‌ திருமகளாரும்‌
இவ்வவதாரத்திலே ஈடுபட்டனர்‌.
“ஏக: ப்ராஸீஸரத்‌ பாதமேக: ப்ராச்க்ஷளந்முத |
அபரோப்யதரந்மூர்த்‌ கா கோதிகஸ்தேஷு க,ண்யதாம்‌ ॥ ””
ஒருவன்‌ திருவடியை நீட்டினான்‌;
(பிரமனாகிய) மற்றொரு வன்‌ மிகவுகந்து அத்திருவடியை விளக்கினான்‌.
(சிவனாகிய) வேறு ஓருவனும்‌ களிப்புடன்‌ அந்நீரைத்‌ தலையிலே தரித்தான்‌.
இவர்களில்‌ எவன்‌ பெரியவன்‌ என்பதை நினைத்‌துப் பாருங்‌கள்‌- என்கிறபடியே
பரம் பொருள்‌ யாரென்பதை நிலை நாட்டித் தருவதன்றோ இவ்வவதாரம்‌.
( திரிவிக்ரமன்‌ )
த்ரயோ விக்ரமாஸ்‌ த்ரிஷா லோகேஷ க்ராந்தா: யஸ்ய ஸ:”’
[மூவுலகங்களையும்‌ அளந்த மூன்று அடிவைப்புகளை உடைய வன்‌ | என்றும்‌. –
த்ரயோ லோகா: க்ராந்தா யே ?’
மூன்று உலகங்களும்‌ எவனால்‌ கடக்கப்பட்டனவோ ௮வன்‌ ] என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. –
த்ரீணி பத; விசக்ரமே ‘* என்றது வேதம்‌.
“ த்ரிரித்யேவம்‌ த்ரயேோ லோகா: கீர்த்திதா முநிஸத்தமை: |
க்ரமஸே தாம்ஸ்த்ரித, ஸர்வாந்‌ த்ரிக்ரமோ$ஸி ஜநார்த்தந।”
(*மூவுலகங்களும்‌ முனிவர்களால்‌ சொல்லப்‌ படுகின்‌ றன. ஓ ஜநார்த்தனனே! அவையெல்லாவற்றையும்‌ மூன்‌ றடிகளால்‌ தாவியபடியால்‌ நீ திரிவிக்கரமன் ஆனாய் ]
என்று ஹரி வம்‌ஸத்தில்‌ சொல்லப்பட்ட து.
“பாஜதேறைகேர விக்ராந்தா ஸர்வேயம்‌ பூர்‌ நரேங்வர।
அந்தரிக்ஷம்‌ த்‌,விதீயேக த்‌,யெளஸ்‌ த்ருத்யேந ஸத்தம |
”’இவ்வுலகம்‌ ஒரு அடி வைப்பினால்‌ அளக்கப்பட்டது.
இரண்‌ டாவது அடிவைப்பினால்‌ அந்தரிஷமும்‌
மூன்றாவதடியால்‌ தேவலோகங்களும்‌ அளக்கப்பட்டன.] என்று
நாரஸிம்ஹ புராணத்திலும்‌ சொல்லப்பட்ட து.
முதலடியினால்‌ ழுலகங்க ளெல்லாவற்றையும்‌.
இரண்டாவதடியினால்‌ மேலுலகங்க ளெல்லாவற்றையும்‌,
மூன்றாவதடியினால்‌ மஹாபலியின்‌ ஸிரஸ்ஸையும்‌ அளந்தவன்‌ என்றும்‌ கொள்ளலாம்‌.
“த்ரிரித்யேவம்‌ த்ரயோ வேதா: கீர்த்திதா முநிஸத்தமை: |
க்ரமஸே தாம்ஸ்தத,ா ஸர்வாரந்‌ த்ரிவிக்ரம இதி ஸ்ம்ருத: ॥”’
த்ரி’ என்னும்‌ பதத்தினால்‌ மூன்‌று வேதங்களும்‌ முனிவர்‌ களால்‌ சொல்லப்படுகின்‌றன.
அவை யெல்லாவற்றையும்‌ வியாபித்திருப்பதால்‌ திரிவிக்கரமனெனப்படுகிறாய்‌. | என்று
சொல்லப்பட்டபடியும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.

வேதங்களால்‌ மிகவும்‌ ஆதரிக்கப்பட்டதாகையாலும்‌,
பரத்வத்தையும்‌. ஸெளலப்யத்தையும்‌ ஒருங்கே காட்டுவ தாகையாலும்‌.
எல்லார்‌ தலையிலும்‌ ஓக்கத்‌ திருவடியை வைத்த பெருங்குணத்தைப்‌ பேசுவதாகையாலும்‌
திரிவிக்ரமாவதாரம்‌ முதலில்‌ அதுபவிக்கப்பட்டது.

————-

அடுத்த படியாக இத் திரிவிக்ரம மூர்த்திக்கும்‌ காரண பூதமான வாமன மூர்த்தியின்‌ பெருமை பேசப்படுகிறது,
“த்ரஷ்ட்ரூக்‌ ஸ்வகாந்த்யா வாமாநி ஸுகரி நயதி’
காண்ப வர்களைத்‌ தன்‌ ஓளியால்‌ ஸுகமுள்ளவர்களாகச்‌ செய்கிறான்‌ என்று வாமன சப்தத்துக்குப்‌ பொருள்‌. “
ஸர்வாணி வாமாநி நயதி “ˆ [எல்லாரையும்‌ ஸுகமுடையவர்களாகச்‌ செய்கிறான்‌.] என்‌ று
சாந்தோக்ய உபனிஷத்‌ இவ்வர்த்தத்தை ஆதரித்தது,
“ கொள்ள மாளா இன்பவெள்ளம்‌ கோதில தந்திடும்‌ என்‌ வள்ளலேயோ!
வையங்கெண்ட வாமனாவோ!” என்று வேதம்‌ தமிழ்‌ செய்த மாறனும்‌ வாமன சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்‌.
“ வாமஸ்‌ ஸுந்தர மூர்த்யோ:” என்கிற படியே
மிகுந்த வடிவழகையுடையவன்‌ என்‌ றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
இவ்விரண்டு பொருள்களாலும்‌ அவன்‌ அலௌகிக ஆகர்ஜஹகமான வடிவழகையுடையவன்‌ என்ற தாயிற்று.
கடலைக்‌ குளப்படியிலே அடக்கினாப்போலே, உலகளந்த திரிவிக்ரம மூர்‌த்தியின்‌ ஸெளந்தர்யமெல்லாம்‌
இச் சிறிய உருவில்‌ வெள்ளமிடுமாகையாலே இப்பெருமானின்‌ அழகு பேச வொண்ணாததாயிருக்கும்‌.
அவாங்மநஸ கோசரமான இவ்வழகிலே வேதமும்‌. புராணங்களும்‌. ஆழ்வார்‌களும்‌ ஆழங்காற்படுவர்கள்‌.
“ ஸர்வாணி வாமாமி நயதி ”’ என்றது வேதம்‌,
ஃஸ வாமநேர தி,வ்யமாரீரத்‌ ருக்‌ ”
திவ்யமான சரீரத்தையுடையவன்‌ வாமனன்‌.என்று புராணம்‌ பேசிற்று.
“மரயக் கூத்தா! வாமனா! வினையேன்‌ கண்ணா! கண்‌ கை கால்‌
தூய செய்ய மலர்களா சோதிச்செவ்வாய்‌ முகிழதா
சாயல்‌ சாமத்திருமேனி தண்பாசடையா தாமரைநீள்‌
வாசத்தடம்போல்‌ வருவானே! ஒருநாள்‌ காண வாராயே?’ என்றும்‌,
“ஒருமாணிக் குறளாகி நிமிர்ந்த அக் கரு மாணிக்‌கம்‌” என்றும்‌,
°” வாமனன்‌ என்‌ மரதக வண்ணன்‌ தாமரைக்‌ கண்ணினன்‌ காமனைப் பயந்தாய்‌ !” என்றும்‌
“ மாண் குறள்‌ கோல வடிவு காட்டி ” என்றும்‌.
“ குரை கழல்கள்‌ நீட்டி மண்கொண்ட கோல வாமனா” என்றும்‌ நம்மாழ்வாரும்‌,
“சத்திரமேந்தித்‌ தனியொரு மாணியாய்‌ உத்தரவேதியில்‌ நின்ற ஒருவனை
கத்திரியர் காணக்‌ காணி முற்றும்‌ கொண்ட பத்திராகாரன்‌ ”’ என்றும்‌,
“காமர்‌ தாதை கருதலர்‌ சிங்கம்‌ காணவினிய கருங்குழல்‌ குட்டன்‌ வாமனன்‌
“ கொண்ட கோலக்‌ குறளுரு ” என்று: ஆண்டாளும்‌
வேதம்‌ புகழ்ந்த இவ்வடிவழகிலே மயங்கினார்கள்‌.’
(வாமனன்‌ )
இப்படி வடிவழகாலே பிறரை உகப்பிப்பதோடன்‌றியில்‌ குணங்களாலும்‌ பிறரை ஆநந்திப்பிப்பவன்‌ என்றும்‌ பொருள்‌. கொள்ளலாம்‌.
“மிக்க பெரும்புகழ்‌ மாவலி வேள்வியில்‌ தக்கதிதன்றென்று தானம்‌ விலக்கிய சுக்கிரன்‌ கண்ணைத்‌ துரும்பால்‌ செறிய சக்கரக்கையனே!” _என்றும்‌,
“ மதியினால்‌ குறுள்மாணாய்‌ உலரகு அளந்த கள்வற்கு” என்றும்‌,
“வாட்டமில்‌ புகழ்‌ வாமனனை” என்‌றும்‌,
** வன்மாவைய மளந்க எம்‌ வாமனா!” என்றும்‌,
“ஞாலங்கொள்வான்‌ குறளாகிய்‌ வஞ்சனே!” என்றும்‌.
“கொள்வன்‌ நான்‌ மாவலி மூவடி தா என்ற கள்வனே!” ‘என்றும்‌
அந்ய ப்ரயோஜனர்களுக்காகவும்‌ தன்னை அழியமாறி அளிக்கும்‌ அருங்குணத்தில்‌ ஆழ்வார்கள்‌ ஆழங்காற்ப்ட்டார்கள்‌
(வாமனன்‌)
“ வடிவழகைச்சொல்லுகிறதென்‌ னுதல்‌;
நன்மை களைத்‌ தருமவனென்னுதல்‌ ” என்று நம்பிள்ளை ஈட்டில்‌ (2-27-6) அருளிச்செய்தபடியே,
வாம சப்தத்தாலே ஸுக,ப்ரத, மான்‌:
வஸ்துக்களைச் சொல்லி வாமனன்‌ ‘ என்று அவைகளைத்‌ தருமவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.

“மருவித்‌ தொழும்‌ ‘மனமே தந்தாய் வல்லை காண என் வாமனனே என்று இவ் வர் த்தத்தை அருளிச்செய்தார்‌.
(வாமனன்‌)
ஆதியத்யத்தை இழந்த இந்திரனுக்கு அதை அளித்தும்‌.
மஹாபலிக்குப்‌ பாதாளத்திலே நிலையான ஸாம்‌ ராஜ்யத்தைக்‌ கொடுத்தும்‌,
உலகிலுள்ள: எல்லாச் சேதனர்‌கள்‌ தலையிலும்‌ தன்‌ திருவடிகளை வைத்தும்‌, –
இப்படி எல்லாருக்கும்‌ ஸுகத்தைத்‌ தந்தவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
* வாமனன்‌ ‘ என்னும்‌ திருநாமத்துக்குச்‌ சிறிய உருவை உடையவன்‌ என்றும்‌ பொருளுண்டு என்பது பிரஸித்தம்‌.
இதையே எல்லா ஆழ்வார்களும்‌ குறளுரு என்று அருளிச்செய்தனர்‌.
(வாமனன்‌) .
‘ மத்யே வாமந மாஸீநம்‌ விங்வே தே,வா உபாஸதே ‘
ஸர்வ சேதனர்களின்‌ ஹ்ருதயத்திலும்‌ வீற்றிருக்கும்‌ வாமனனை ( எல்லா தேவர்‌ களும்‌ உபாஸிக்கிறார்கள்‌.]
என்று வேதத்தில்‌ சொல்லிய படியே ஹ்ருதய கமலத்தில்‌ அங்குஷ்ட மாத்ரனாயெழுந்தருளி யிருக்கும்‌
பெருமான்‌ வாமன சப்தத்தால்‌ சொல்லப்படுவ தாகவும்‌ கொள்ளலாம்‌.
“வாமனன்‌ நிற்பது மேவியிருப்ப என்று ஆழ்வார்‌ இவ் வர்த்தத்தை என்‌ நெஞ்சகம்‌ என்று உணர்த்தினார்‌.

—————-

ஆக: இப்படி வாமனாவதாரத்தைச்‌ சொன்னபின்‌ இப்படி ப்ரஹ்மசாரியாய்‌ அவதரித்த அவதாரத்திலும்‌
பிராட்டியை விட்டுப்‌ பிரியாமல்‌ மார்பிலே தரித்திருப்பவன்‌ என்று உரைக்கிறது
* ஸ்ரீ தரன் . என்னும்‌ திருநாமம்‌.
“ வாமனனே மாதவா ˆ” என்று ஆழ்வாரும்‌ இவ்வர்த்தத்தை அருளிச்செய்கார்‌.
“க்ருஷ்ணாஜிநேக ஸம்வ்ருண்வம்‌ வதூ,ம்‌ வக்ஷ:ஸ்த,லாலயாம்‌”
திருமார்பிலே கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும்‌ பிராட்டியை க்ருஷ்ணாஜினத்தினால்‌ மறைத்‌துக்‌ கொண்டு வந்தான்‌
என்கிற படியே. மஹாபலியின்‌ யாக சாலைக்கு எழுந்தருளிய போதும்‌. திருமார்பிலிருந்த பிராட்டியை
மான்‌ தோலினால்‌ மறைத்துக்கொண்டு வந்தான்‌ வாமனன்‌ என்று ப்ரஸித்தமிறே.
“ஏவம்‌ ஜகத்ஸ்வாம்‌ தேவதே,வோ ஜரார்தந: |
அவதாரம்‌ கரோத்யேஷா தத்ர ஸ்ரீஸ்தத்ஸஹாயிக |! .
ராக,வத்வே ப,வத்‌ ஸீதா ருக்மிணீ க்ருஷ்ணஜந்மநி |
அர்யேஷு சாவதாரேஷு விஷ்ணோரேஷா.அநபாயிநீ ॥
தேவத்வே தே,வதே,ஹயம்‌ மறுஷ்யத்வே ச மாநுஷீ |
விஷ்ணோர்‌ தே,ஹா நுரூபாம்‌ வை கரோத்யேஷாத் மநஸ்த நும்‌।।”
தேவ தேவனாயே பகவான்‌ அவதாரம்‌ செய்யும்போது, இந்த ஸ்ரீதேவியும்‌ அவனுக்குத்‌ துணையாகத்‌ தோன்று கிறாள்‌.
எம்பெருமான்‌ ராகவனாய்‌ அவதரித்த போது இவள்‌ ஸீதை யானாள்‌.
அவன்‌ கிருஷ்ணனாய்ப்‌. பிறந்தபோது இவள்‌ ருக்மிணியானாள்‌.
மற்ற அவதாரங்களிலும்‌ இவள்‌ விஷ்ணுவை விட்டுப்‌ பிரியாதவளாயிருக்கிறாள்‌.
அவன்‌ தேவனாகும் போது தேவ தேஹத்தைக்‌ கொண்டவளாயும்‌
மனிதனாகப் பிறக்கும்‌ போது மனித வுருவம்‌ கொண்டவளாயும்‌,
இப்படி விஷ்ணு வினுடைய தேஹத்திற்குப்‌ பொருந்தியதாகத்‌ தன்னுடைய
திவ்ய மங்கள விக்ரஹத்தைச்‌ செய்து கொள்ளுகிறா பிராட்டி.என்று
விஷ்ணு புராணத்தில்‌ உரைக்கப்பட்டது இங்கு உணரத்தக்கது.
“தாம்‌ ரத்நமிவ அர்ச்சிஷம்‌ புஷ்பமிவ ஸூரபிம்‌ இந்துரிவ சந்த்‌ ரிகாம்‌ அம்ருதமிவ ஸ்வாதுதாம்‌
ஒளத்பத்திகேந ஸம்பந்தே,ந தரரதீதி ஸ்ரீதர :।
“ஹி ஹாது மியம்‌ மக்யா கீர்த்திராத்மவதோ யத; இதி॥”’ ரத்னம்‌ ஒளியை தரிப்பது போலவும்‌,பூ மணத்தை தரிப்பது போலவும்‌ சந்திரன்‌ தன்‌ ஒளியை தரிப்பது போலவும்‌,
அம்ருதம்‌ இனிமையை தரிப்பது போலவும்‌, அந்த ஸ்ரீதேவியை இயற்கையான ஸம்பந்தத்தினால்‌
தரிக்கிறனாகையால்‌ ஸ்ரீதரனாகிறான்‌.
“மனத்தை ஜயித்தவர்களைக்‌ கீர்த்தி வீட்டுப்‌ பிரிய வொண்ணாமல்‌ விளங்குவது போல்‌
இப் பிராட்டியும்‌ ` இப் பெருமானை விட்டுப்‌ பிரியவல்லளல்லள்‌ ” என்று சொல்லப்பட்ட து.
என்‌ று ஆசார்யாக்‌ரேஸரரான பராசர பட்டர்‌. வியாக்க்யானம்‌ செய்தருளினார்‌.
(ஸ்ரீதரன்‌)
‘ ஸ்ரீ்‌ என்று பெரிய பிராட்டியார்‌ சொல்லப்படுகிறார்‌.
அவரைத் தரிப்பவனாகையால்‌ புருஷோத்தமனும்‌ ஸ்ரீதரன்‌ எனப்படுகிறான்‌.
பகவானுக்கு நாராயண நாமம்‌ அஸாதாரணமாய்‌ விளங்குவது போல்‌
பிராட்டிக்கும்‌ ‘ ஸ்ரீ: ‘ என்னும்‌ இத்திரு நாமம்‌ அஸாதராரணமாயிருக்கிறது.
“ ஸ்ரீரித்யேவ ச நாமதே பகதி ப்ரூம: கதம்‌ த்வாம்‌ வயம்‌ ‘”
பெரியபிராட்டியே! உமக்கு *ஸ்ரீ:’ என்பது திருநாமம்‌. உம்‌ டெருமையை ஈாங்கள்‌ எப்படிச்‌ சொல்லுவோம்‌]
என்றாரன்றோே ஆள வந்தார்‌.

நாராயண நாமத்தைப்போல்‌ இத் திருநாமமும்‌ பல பொருள்‌களை உடையது.
அவைகளை இனி விவரிப்போம்‌.
” மிங்‌-ஸேவாயாம்‌ ” என்கிற தாதுவிலிருந்து இந்த ஸ்ரீப்தம்‌ உண்டான்தாகக்கொண்டால்‌.
* (அகில சேதனர்‌ களாலும்‌ ) ஆஸ்ரயிக்கப்படுகிறாள்‌ ”’ என்றும்‌ “
(எம்பெருமானை) ஆஸ்ரயித்திருக்கிறாள்‌ ” என்‌றும்‌ இரு பொருள்கள்‌ ஏற்படும்‌.
°” ய்ரூ-விஸ்தாரே ” என்னும்‌ தாதுவிலிருந்து ஸ்ரீப்ப்தம்‌ தோன்‌ றியதாகக்‌ கொண்டால்‌,
“(அடியார்களுடைய குணங்‌களை) விருத்‌தி யடையச் செய்கிறாள்‌ ” என்றும்‌,
“(தன்‌ குணங்களாலும்‌ விக்‌,ரஹங்களா லும்‌ உலகை யெல்லாம்‌)வியாபித்திருக்‌ கிறாள்‌” என்றும்‌ பொருள்படும்‌;
“’ங்ரு-ஹிம்ஸாயாம்‌” என்கிற தாதவிலே ஸ்ரீ சப்தம்‌ நிஷ்பந்கமாகிறதென்‌ றுகொண்டால்‌, ”
” (அடியார்களுடைய தோஷங்களையெல்லாம்‌) போக்கடிப்ப வள்‌ ” என்று ஸ்ரீசப்தத்துக்குப்‌ பொருளாகும்‌
“ஸ்ரு- ங்ரவணே ” என்கிற தாதுவிலிருந்து ஸ்ரீசப்தம்‌ உண்டாகிற தென்‌ று கொண்டால்‌
^ (அடியார்களுடைய முறையீடுகளைக்‌) கேட்டவள்‌ ^ என்றும்‌,
^” அவைகளை எம்பெருமானைக்‌ கேட்பிப்பவள்‌ ” என்றும்‌ பொருள்படும்‌.
இப்‌ பொருள்களெல்லாம்‌
“” மருணாதி நிகிலாந்‌ தேஷாம்‌ ங்ரூணாதி = குணைர்‌ ஜகத்‌ |
ஸ்ரீயதே சாகிலேர்‌ நித்யம்‌ ஸ்ரயதே ச பரம்‌ ரீயமாணாஞ்ச ம்ருண்வதீம்‌ ங்ருணதீமபி ||”
சேதனர்களுடடய எல்லாப்‌ பாவங்களையும்‌ போக்கடிக்கிறாள்‌ ;
உலகம்‌ முழுவதையும்‌ குணங்களால்‌ வியா பிக்கிறாள்‌;
எல்லாச்‌ சேதனர்களாலும்‌ எப்போதும்‌ ஆஸ்ரயிக்கப்படுகிறாள்‌
பரம ப்ராப்யமான பரம புருஷனை ஸர்வ காலமும்‌ ஆஸ்ர யித்திருக்றொள்‌;
(௭ம்பெருமானை) ஆஸ்ரயித்திருப்பவளா கவும்‌, (மற்றவர்களால்‌) ஆஸ்ரயிக்கப்படுபவளாகவும்‌.
(சேதனர்‌ களின்‌ குறைகளைக்‌) கேட்பவளாகவும்‌,- எம்பெருமானை அக்குறைகளைக்‌ கேட்பிப்பவளாகவும்‌
இவளை அறிகிறார்கள்‌ – என்று பாஞ்சராத்ர சாஸ்த்ரத்தில்‌ பேசப்பட்டன,
“ அதில சேதனர்க்கும்‌ ஆஸ்ரயணீயையாய்‌. தான்‌ அவனை ஆஸ்ரயித்து லப்‌,த.ஸ்வரூடையாய்‌,
ஆஸ்ரித குணங்களை விஸ்தரிப்பித்து, ஆஸ்ரித யோக்திகளை வளர்த்து ,
இவர்களை அங்கீகரிக்கைக் கனுகுணமான வாகாரங்களை அவனுக்கு காட்டி அருளுதல்
முதலான ஆகாரங்கள்‌
புருஷகார பூதையான பிராட்டிக்கு அவஸ்ய அபேஷிதங்களாகையாலே, .
இந்த நிருக்திகளெல்லா த்தையும்‌. ஸ்ரீயப்தத்துக்கு அர்‌ த்தமாகஆசார்யர்கள்‌ அனு சந்திப்பார்கள் ” என்று
(அழகியமணவாளப்பெருமாள்‌) நாயனாராச்சான்‌ பிள்ளை சதுஸ் லோக வியாக்கியானத்திலே அருளிச் செய்தார்‌.
இவருடைய திருத் தமப்பனாரான பெரியவாச்சான்‌ பிள்ளை பிராட்டி இச் சேதனனுடைய குறைகளைக்‌ கேட்கும்‌ ப்ரகாரத்‌ தையும்‌,
எம்பெருமானைக்‌ கேட்பிக்கும்‌ ப்ரகாரத்தையும்‌, பரந்த ரஹஸ்யத்திலே அத்யத்புதமாக அருளிச்‌ செய்தார்‌.
ஸ்ரீஸூக்திகள்‌ பின்வருமாறு: —
“ ஸ்ருணாதி’ என்‌ று கேட்குமென்கையாலே சேநரோடுண்டான பந்த கார்யத்தைச்‌ சொல்லுகிறது.
*ஸ்ராவயதி ‘ என்‌ று கேட்பீயாநிற்கும்‌ என்‌கையாலே ஈஸ்வர னோடுண்டான பந்த கார்யத்தைச்‌ சொல்லுகிறது.
அதாவது:- “புறம்பு பொருத்தமடை.ய அற்று. ஈஸ்வரனுக்கு ஆளாகாதபடி பூர்வாபராதத்துக்கு அஞ்சின எனக்கு
நிருபாதிக ஜனனியான தேவரீர்‌ திருவடிகளொழுியப்‌ புகலில்லை;
இனி நான்‌ ஈஸ்வரனுடைய இரக்கத்துக்கு இரையாய்‌ ரக்ஷித்தல்‌, அவனுக்கு , ஸ்வாதந்தர்ய பாத்ரமாய்‌
நாசத்தோடே தலைக்கட்டுதலொழிய இளைப்பாறுகைக்கு இடமில்லா தபடி அநந்ய க,தி; இனி அடியேனுக்கு ஹிதமின்னதென்று அறிந்து
ரக்ஷித்தருளுகை தேவரீருக்கே பரம்‌’ என்று இவன்‌ சொன்ன வார்த்தையைக்‌ கேட்கையும்‌;
அதுக்கு மேலே வெந்நீருக்குக்‌ குளிர் நீர்போலே, நிரங்குச ஸ்வாதர்த்ர்யத்தாலே ` அமி,த: பாவகோபமம்‌” என்‌கிறபடியே
அநபி,ப,வநீயனான ஈஸ்வரனைச்‌ தன்னுடைய போக்யதா தியயத்தாலே பதமாக்கி:
நாயன்தே! இச் சேதனனை அங்கீகரித்தருளீர்‌ ‘ என்னும்‌; :
ஆவதென்‌? ^ ஸ்ருதி: ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா ‘ என்‌று நம்முடைய ஆஜ்ஞா ரூபமான ஸாஸ்த்ர மர்யாதையை அதிலங்கி,த்து
நம்‌ நெஞ்சு புண்படும்படி தீரக் கழிய அபராதம்‌ பண்ணிப் போந்தவனல்‌ லனோ ?
இவனை யங்கீகரிக்கையாவதென்‌ ? ‘ எள்னும்‌ ஈஸ்வரன்‌ *
அவனுடைய பூர்வாபரா தங்களை உம்முடைய பொறைக்கு இல்க்காக்‌கி ரக்ஷித்கருளீர்‌ ‘ என்னும்‌ பிராட்டி; ‘
பொறையை நோக்குகைக்காக ஸாஸ்‌த்ர மர்யாதையைக்‌ குட நீர்வழியவோ?” என்னும்‌ ஈஸ்வரன்‌; ”
சாஸ்த்ரமர்யாதையை நோக்குகைக்காக உம்முடைய ஸ்வபாவிகமான க்ஷமா தத்வத்தைக்‌ குடநீர்‌ வழியவோ?’ என்னும்‌ பிராட்டி; :
ஷமையை நோக்கில்‌, சாஸ்த்ர மர்யாதை குலையும்‌;
சாஸ்த்ர மர்யாகையை, நோக்கினால்‌ க்ஷமா தத்வம்‌ குலையும்‌;
இரண்டும்‌ குலையாதொழிய வேண்டும்‌; செய்யவடுப்பதென்‌?’ என்னும்‌ ஈஸ்வரன்‌; “
கிங்கர்த்தவ்யதாகுலனாயிருந்தால்‌ அத்தனையே; அவை இரண்டும்‌ குலையாதபடி வழி சொல்லுகிறேன்‌ :
அப்படியே செய்தருளீர்‌ ‘ என்னும்‌ பிராட்டி; :
இரண்டும்‌ குலையாமல்‌ இச் சேதனனை நோக்க வழியுண்டாமாகில்‌ நமக்குப்‌ பொல்‌ லாதோ?
சொல்லிக் காண்‌! ‘ என்னும்‌ ஈஸ்வரன்‌; :
ஆனால்‌. சாஸ்தர மர்யாதையை விமுகர்‌ விஷயமாக்குவது:
உம்முடைய ஷமையை அபிமுகன் விஷயமாக்குவது;
இரண்டும்‌ ஜீவித்த தாயறும்‌ ` என்னும்‌ விஷயவிபாக;ம்‌ பண்ணிக் கொடுக்கும்‌ பிராட்டி;
அத்தைக்‌ கேட்டு : அழகிய விபாக;ம்‌!’ என்று இச்சேதனனை அங்கீகரித்தருளும்‌ ஈஸ்வரன்‌;
ஆக, இப்படி ஸாபராத,ஜந்துவை ஈஸ்வரன்‌ அங்கீகரித்தருளும்படியான வார்த்தைகளைக்‌ கேட்பித்தருளுகையும்‌.
” இப்படிப்‌ பிராட்டியால்‌ புருஷ காரம்‌ செய்யப்பெற்ற சேதனனையே ‘ ஸர்வேஸ்வரன்‌ அங்கிகரிக்கிறான்‌ என்பதை
“என்னைத்‌ தீ மனம்‌ கெடுத்தாய்‌ உனக்கென்‌ செய்கேன்‌? என்‌ சிரீதரனே!” ` என்று ஆழ்வாரும்‌ அருளிச் செய்தார்-

“மாதவன்‌ ‘ என்று
எம்பெருமான்‌ வைகுண்டத்தில்‌ பிராட்டியுடன்‌ எழுந்தருளியிருக்கும்‌ இருப்பைச்‌ சொல்‌லிற்று.
‘ஸ்ரீ தரன்‌’ என்று
அவதாரம்‌ செய்யும் போதும்‌ அவளைத் தரித்திருககிறான் என்கிறது.
ஆகையால்‌ புநருக்‌தி தோஷம் இல்லை..

த்வயத்தில் போல் உபாயத்வ உபேயாத்வ இரண்டு ஆகாரங்களும் உண்டு என்று காட்டவே இந்த இரண்டு திரு நாமங்களும்

“—————

இப்படிப்‌ பராவஸ்தையையும்‌,
வியூஹ விபவாவதாரங்‌ களையும்‌ அநுபவித்த பிறகு,
* ஹ்ருஷீ கேஸன்‌ ‘ என்று
ஸர்வேஸ்வரன்‌ மனுஷ்யர்களுடைய ஹ்ருதயத்தில்‌ அந்தர்‌ யாமியாய்‌ நின்று இந்திரியங்களை நியமித்துக் கொண்டு
வீற்றிருக்கும்‌ இருப்பு அநுபவிக்கப்படுகிறது.

ஸ்ரீதரன்‌ என்ற திருநாமத்திற்குப்பின்‌ படிக்கையாலே
இந்த அந்தர்‌யாம்யவஸ்தையிலும்‌ எம்பெருமான்‌ பிராட்டியுடன்‌ கூடியவனாகவே
எழுந்‌தருளி யிருக்கிறான் என்பது தோற்றுகிறது.

“ஹ்ருஷீ காணீந்த்‌ரியாண்யாஹுஸ்‌ தேஷாமீமோ யதோ பூவாந்‌ |
ஹ்ருஷீகேமுஸ்‌ ததோ விஷ்ணு: க்‌யாதோ தேவேஷு கேஸவ: ॥’
ஹ்ருஷீகங்களென்று இந்திரியங்களைச்‌ சொல்‌லுகிறார்கள்‌;
அவ்விந்திரியங்களை நியமிப்பவராயிருப்பதால்‌. விஷ்ணு கேசவன்‌ என்னும்‌ திருநாமங்களையுடைய நீர்‌
தேவர்களுள்‌ * ஹ்ருஷீகேசன்‌ எனப்படுகுகிறீர்‌.
என்று ஹரிவம்‌சத்தில்‌ ஹ்ருஷீகேச சப்தார்‌த்தம்‌ சொல்லப்பட்ட து.
( ஹ்ருஷீ கேசன்‌ )
ஹ்ருஷீகேச சப்தத்தினால்‌ பத்து இந்திரியங்களாகிய தலைகளைக்‌ கொண்ட மனஸ்ஸாகிற ராவணன்‌: சொல்லப்படுகிறது,
அந்த ராவணனை தன்னைப் பற்றின அறிவாகிய அம்பை ஏவிக்‌ கொல்லுமவனாகையாலே
இப்பெருமான்‌ ஹ்ருஷீகேசனெனப்படுகிறான்‌.
“தஸ ,இந்த்‌,ரியாஙகம்‌ கேரம்‌ யோ மநோரஜநீசரம்‌ |
விவேகமாரஜாலேந மமம்‌ நயதி யோகிநாம்‌ | ”’
யோகிகளுடைப பத்து இந்திரியங்களாகிய தலைகளையுடைய மனஸ்ஸாகிற பயங்கர ராஷஸனை.
தன்னைப் பற்றிய அறிவாகிய அம்புக் கூட்டங்களால்‌ அடக்குகிறான்‌- என்று சொல்லப்பட்ட தன்றோ.
“இருடீகேசன்‌ எம்பிரான்‌ இலங்கை யரக்கர் குலம்‌ முருடுதீர்த்த பிரான்‌ எம்மான்‌” _என்‌று
நம்மாழ்வார்‌ இவ்வர்த்தத்தை உணர்த்தினார்‌. “
அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை இண்‌ டக்குலத்தை எடுத்துக்‌ களைந்த இருடீகேசன் தனக்கு ‘
என்று பெரியாழ்வாரும்‌ இதைப்‌ பாசுரமிட்டருளினார்‌.
*இருடீகேசன்‌ என்னும்‌ இத் திரு நாமத்தினாலும்‌ விரோதி நிரஸந ஸீலத்வம்‌ சொல்லப்படுகிறது.
“ ஏர்விடை செற்றிளங்கன்றெறிந்திட்ட இருடீகேசா”என்‌ று பெரியாழ்வார்‌ இக்குணத்தைப்‌ பேசினார்‌.
(ஹ்ருஷீகேசன்‌)
தன்னைக்‌ கண்டவர்களுடைய இர்திரியங்‌களை வசப்படுத்துமவன்‌.
ரூப ஒவ்தார்ய குணை: பும்ஸாம்‌ த்‌,ருஷ்டி சித்த அபஹாரிணம்‌ “”
தன்னுடைய ரூபம்‌, வண்மை, குணங்கள்‌ முதலியவற்றால்‌ ஆண் பிள்ளைகளுடைய கண்ணையும்‌. மனத்தையும்‌
அபஹரிக்குமவன்‌- என்று சொல்லப்‌ பட்டதன்றோ. ‘
முடியானே ” என்னும்‌ திருவாய்மொழியில்‌ நம்மாழ்வார்‌ :-:
நெடியானே! என்று கிடக்கும்‌ என்‌ நெஞ்சமே” என்றும்‌, ‘*
வஞ்சனே! என்னுமெப்போதுமென்‌ வாசகமே ‘” என்‌ றும்‌. “
தாயவனே! என்று தடவும்‌ என்‌ கைகளே ” என்றும்‌.
“உன்னை மெய் கொள்ளக்‌ காண விரும்புமென்‌ கண்களே ” என்றும்‌. :
‘பண் கொண்ட புள்ளின்‌ சிறகொலி பாவித்துத்‌
திண் கொள்ள ஒர்க்கும்‌ கடந்தென்‌ செவிகளே ” என்றும்‌
தம்முடைய இர்திரியங்கள்‌ ஒவ்வொன்றும்‌ எல்லா இந்திரியங்களின்‌ அ.நுபவத்தையும்‌ ஆசைப்பட்டு
எம்பெரு மானை அநுபவிக்க மேல்விழுந்தன என்று அருளிச்செய்த ரன்றோ.
” நாக்கு நின்னை யல்லாலறியாது ” ,
“கண்டு நானுன்னை உகக்க ”
“ வேறொருவரோடென்‌ மனம்‌ பற்றாது ^”
“என்னப்பா என்னிருடீகேசா ” என்று
தம்முடைய இந்திரி யங்களெல்லாம்‌ எம்பெருமான்‌ பக்கல்‌ ஈடுபட்டபடியைப்‌ பெரியாழ்வாரும்‌ பேசியருளினார்‌.
தன்னுடைய அவயவ சோபை யாலும்‌. ஆபரண சோபையா லும்‌ பிறருடைய இந்திரியங்களை வசப்படுத்துகிறான்‌ -என்று பெரியாழ்வாரும்‌
“மின்னுக் கொடியும்‌ ஓர் வெண் திங்களும்‌ சூழ்‌ பரிவேடமுமாய்‌
பின்னல்‌ துலங்குமரசிலையும்‌ பீதகச்சிற்றுடையொடும்‌
மின்னில்‌ பொலிந்ததோர்‌ கார்முகில்போலக்‌ கழுத்தினில்‌ காறையொடும்‌
தன்னில்‌ பொலிந்த இருடீகேசன்‌ தளர்நடை’ நடவானோ ”” என்று அருளிச்செய்தார்‌,
“இருடீகேசன்‌ வலிசெய்ய முத்தன்ன வெண்முறுவல்‌
செய்ய வாயும்‌ முலையும்‌ அழகழிந்தேன்‌ யான்‌” என்று ஆண்டாளும்‌
தன்னுடைய இர்திரியங்‌களெல்லாம்‌ இருடீ கேசனிட்ட வழக்காயிருக்கின்‌றன என்று அருளிச்செய்தாள்‌.
இப்படி எம்பெருமான்‌ ஹ்ருதய கமலத்திலே திவ்ய மங்கள விக்ரஹத்‌துடன்‌ அந்தர்யாமியாய்‌
எழுந்கருளியிருக்‌ கிறான்‌ என்னுமிடத்தை
“ வெள்ளைச்‌ சுரிசங்கொடாழியேந்தித்‌ தாமரைக்கண்ணனென்‌ நெஞ்சினூடே
புள்ளைக்கடாகின்‌ற வாற்றைக்‌ காணீர்‌ என் சொல்லிச் சொல்லுகேன்‌ அன்னைமீர்காள்‌? “என்றும்
“கல்லும்‌ கனை கடலும்‌ வைகுந்த வானாடும்‌
புல்லென்றொழிந்தன கொல்‌ ஏ பாவம்‌!-—வெல்ல
நெடியான்‌ நிறம்‌. கரியான்‌ உள் புகுந்து நீங்கான்‌
அடியேனதுள்ளத்தகம்‌ ?’ _— என்றும்‌ நம்மாழ்வாரும்‌.
“நிற்பதும்‌ ஒர்‌ வெற்பகத்‌(து) இருப்பதுவும் விண்‌ கிடப்பதும்‌
நற்பெரும்‌ திரைக்கடலுள்‌ நானிலாத முன்னெலாம்‌
அற்புதன்‌ அநந்த சயனன்‌ ஆதிபூதன்‌ மாதவன்‌
இருப்பதும்‌ கிடப்பதும்‌ என்‌ நெஞ்சுள்ளே ”’ என்று திருமழிசைப்பிரானும்‌,
“வடதடமும்‌ வைகுந்தமும்‌ மதிள்‌ துவராபதியும்‌ இடவசைகள்‌ இகழ்ந்திட்டென்பால்‌ இடவகை கொண்டனையே” என்றும்‌,
“அநந்தன் பாலும்‌ கருடன் பாலும்‌ ஐது நொய்தாக வைத்தென்‌ மனந்தன்னுள்ளே வந்து வைகி
வாழச் செய்தாய்‌ எம்பிரான்‌!” என்றும்‌ பெரியாழ்வாரும்‌ அருளிச்செய்தார்‌.
வேதமும்‌ “நீல தோயத மத்‌ யஸ்த; வித்யுல்லேகே,வ பாஸ்வரா” முதலான விடங்களில்‌ இவ்விஷயத்தைச்‌ சொல்லிற்று.
“ லாபஸ்தேஷாம்‌ ஜயஸ்தேஷாம்‌ குதஸ்தேஷாம்‌ பராபவ: |
யேஷாமிந்த,வரஸ்யாமோ ஹ்ருத,யே ஸுப்ரதிஷ்டி,த: ॥ ””
எவர்சளுடைய ஹ்ருதயத்தில்‌ காயாம் பூ வண்ணனான பெருமான்‌ நன்கு பொருந்தி யிருக்கிறானோ,
அவர்களுக்கே லாபமும்‌ ஜயமும்‌ உண்டாம்‌;
அவர்களை அவமானம்‌ அணுகாதே என்று ருஷி களும்‌ இவ்விஷயத்தைச்‌ சொன்னார்கள்‌
“நஞ்சீயர்‌ கோயிலுக்கு எழுந்தருளா நிற்க வழியிலே பிள்ளானைக் கண்டு.
‘ஈஸ்வரனுக்கு ஸ்வரூப வ்யாப் தியேயோ, விக்ரஹ வ்யாப்தியும்‌ உண்டோ?’ என்று. பிள்ளானைக்‌ கேட்க.
பாஷ்யகாரர்‌ தோற்ற அருளிச் செய்து கொண்டு போந்தது ஸ்வரூப வ்யாப்திய।யிருக்கும்‌;
ஆகிலும்‌, எம்பார்‌ ஒருநாள்‌. உபாஸக அநுக்ரஹ ஸஹார்த்தமாக ஆஸ்ரிதருடைய நெஞ்சிலே
விக்ரஹத்தோடே வ்யாபித்திருக்கும்‌? என்று அருளிச்செய்யக்கேட்டேன்‌? என்று பணித்தான்‌ ‘
என்று ஈட்டில்‌ எடுக்கப்பட்ட ஐதிஹ்யமும்‌. இவ்விடத்தில்‌. அனுஸந்திக்கத் தக்கது.
பிள்ளைலோகாசார்யரும்‌ “அந்தர்யாமித்வமாவது: அந்த:ப்ரவிஸ்ய நியந்‌தா வாயிருக்கை.
ஸ்வர்க்காதி ப்ரவேசாதி, ஸர்வாவஸ்தைகளிலும்‌, ஸகல சேதநர்க்கும்‌ துணையாய்‌. அவர்களை விடாதே, நிற்கிற நிலைக்கு மேலே
ஸூ பாஸ்ரயமான திருமேனியோடே ‘கூடிக்கொண்டு அவர்‌ களுக்கு த்‌யேயனாகைக்காகவும்‌,
அவர்களை ரக்ஷிக்கைக்காகவும்‌ -அந்தர் பூதனாய் கொண்டு ஹ்ருதய கமலத்‌திலே எழுந்தருளி யிருக்கும்‌ இருப்பு.” என்று
தத்வ த்ரயத்தில்‌ அருளிச்‌ செய்தார்‌.
(ஹ்ருஷீகேசன்‌)
` ஹ்ருஷ்‌ ” என்னும்‌ தாது அனந்தத்‌தைக் குறிக்கும்‌.
௧” என்னும்‌ பதம்‌ ‘ஸுகம்‌’ என்னும்‌ பொருளையுடையது.
கம்‌ ப்ரஹ்ம ‘ என்ற வேதவாக்யம்‌ காண்க,
ஸம்‌ என்னும்‌ பதம்‌ ஐஸ்வர்யத்தை உடையவன்‌ என்று பொருள்படுகிறது.
ஆக, ஹ்ருஷீகேசன்‌ ‘ என்னும்‌ திருநாமத்தால்‌, ஹர்ஷத்தையும்‌, ஸெளக்யத்தையும்‌, ஐச்வர்‌ யத்தையும்‌
உடையவன்‌ என்று சொல்லப்பட்டதரகிறது,
“ ஹர்ஷாத்‌ ஸெளக்‌,யாத்‌ ஸுகைஹ்வர்யாத்‌ ஹ்ருஷீகேமத்வமங்நுதே ‘
ஹர்ஷத்தையும்‌. ஸெளக்யத்தையும்‌, ஸுகமான ஐஸ்வர்யத்‌ தையும்‌ உடைத்தாயிருக்கையால்‌
ஹ்ருஷீகேசனாயிருக்கும்‌ தன்மையை அடைகிறாய்‌.
என்று இவ்வர்த்தம்‌ புராணங்‌களில்‌ பேசப்பட்டது.
“ஸூர்யாசந்த்‌,ரமஸோ: மரபி, கேரமஸம்ஜ்ஞிதை:।
பேளதயந்‌ ஸ்வாபயம்ங்சைவ ஜக,து,த்திஷ்ட,தே ப்ருத,க்‌॥
பேதநாத்‌ ஸ்வாபநாச்சைவ ஜக,தோ ஹர்ஷணம்‌ பவேத்‌ ।
அக்‌நீஷோமக்ருதைரேவம்‌ கர்மபி,: பாண்டு,நந்தந ॥
ஹ்ருஷ்கேஸ மோ ஹமீமமா நேர வரதே, லோகபாவந: ||
கேசங்கள்‌ எனப்படும்‌ ஸூர்ய சந்திர கிரணங்களால்‌ நான்‌ உலகிலுள்ளவர்களை யெல்வாம்‌ எழுப்பிக் கொண்டும்‌
தூங்கச்‌ செய்து கொண்டும்‌ வீளங்குகிறேன்‌. இப்படி எழுப்புவதி னாலும்‌, தூங்கச்செய்வதா லும்‌
உலகிற்கு ஹர்ஷம்‌ உண்டாகும்‌. பாண்டவ !
ஸூர்ய சந்திரர்களைக் கொண்டு செய்யப்படும்‌ -இக்கருமங்களால்‌, ஈஸ்வரனும்‌. வரமளிப்பவனும்‌,
லோக பாவனனுமான நான்‌ ஹ்ருஷீ கேசன்‌ எனப்படுகிறேன்‌. என்று மோக்ஷதர்மத்தில்‌
ஹ்ருஷீகேச சப்தத்தின்‌ மற்றொரு பொருள்‌ விவரிக்கப்பட்டது.
* ஸூர்யரங்மிர்‌ ஹரிகேஸ : புரஸ்தாத்‌ ”
ஸுூர்ய கிரணமானது பகவான்‌ ஹரியீன்‌ கேச மெனப்படுகிற. து] என்று வேதமும்‌ இவ்வர்த்தத்தை உணர்த்திற்று.
” கேஸ ‘ சப்தத்தினால்‌ எம்பெருமானுடைய திருக்குழல்கற்‌றை சொல்லப்படுவதாகக்கொண்டு.
கண்டவர்களுக்கு ஹர்ஷத்‌ தைக்கொடுக்கும்‌ மயிர்முடியை உடையவன்‌ என்றும்‌ ஹ்ருஷீ கேச சப்தத்திற்குப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
கேசவன்‌ என்னும்‌ திருநாமத்திற்கும்‌, இப்படி ஒரு பொருள்‌ உரைக்கப்‌ பட்டது.
அங்கு அநுஸந்‌ திக்கப்பட்ட ப்ரமாணங்களை இங்கும்‌ படிப்பது.
இப்படிப்‌ பலபொருள்களை உடையதேயானாலும்‌. *அந்தர்யாயியாய்‌ இந்திரியங்களை நியமித்திக் கொண்டு எழுந்‌தருளியிருக்குமவன்‌ ‘ என்னும்‌ பொருளே இங்கு முக்ய மாகக் கடவது.

————–

இம் மாதிரியாக விபவ மூர்த்திகளையும்‌.
அந்தர்யாம் யவதாரத்தையும்‌ அதுபவித்த பிறகு.
இம்மூர்‌த்திகளுக்கெல்லாம்‌ மூலாவதாரமாய்‌ விளங்குபவனும்‌,
பத்மநாபன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனுமான க்ஷீராப்தி நாதனை அனு ஸந்திக்கிறது
பத்மநாபன்‌ என்னும்‌ திருநாமம்‌.
இங்கு சில விஷயங்களை அறியவேண்டும்‌.
அநிருத்த நாராயணனே பிரமனைப்‌ பிறப்பித்தவனென்றும்‌.
எல்லா அவதாரங்‌களுக்கும்‌ மூலமூர்த்தி யென்றும்‌ சொல்லும்‌ ப்ரமாணங்கள்‌ முன்பே காட்டப்பட்டன.
பத்ம நாபன்‌ என்‌ னும்‌ பெயரிலிருந்து ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு நடுவில்‌ படிக்கப்படும்‌
இவ் விஷ்ணு மூர்த்தியே பிரமனைப்‌ படைத்தவரென்று தோற்றுகிறது.
“ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷரார்ணவ நிகேதந 😐
நாக பர்யங்கமுத்ஸ்ருஜ் ஹ்யாகதோ மதுராம்‌ புரீம்‌॥’
என்‌று திருப் பாற் கடலில்‌ துயிலும்‌ பெருமானே கிருஷ்ணன்‌ முதலிய அவதார மூர்த்திகளுக்கு
மூல பூதர்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது.
இவை எப்படிப்‌ பொருந்தும்‌ எனில்‌:
அநிருத்தனிடமிருந்து ஷீராப்தி நாதன்‌ தோன்‌றுகிறான்‌ என்றும்‌
அவரிடமிருந்து மற்ற அவதாரங்கள்‌ எற்படுகின்‌றன என்றும்‌ கொண்டால்‌
அவதார மூர்த்திகளுக்கு அநிருத்தரையும்‌.
திருப்பாற்கடல்‌ நாதனையும்‌ மூல மூர்த்‌தியாகச்‌ சொல்லலாம்‌.
“ பத்ம நாபாதிகா: ஸர்வே….அநிருத்‌,தாத்‌ ஸமுத்பந்நா பாத்‌, இவேஸ்வரா:” என்று
முன்‌ எடுக்கப்பட்ட ப்ரமாணத்தோடும்‌ இது பொருந்தும்‌.
மஹா ப்ரளயத்தில்‌ .அநிருத்தரும்‌.
நைமித்திக ப்ரளயத்தில்‌ க்ஷீராப்தி நாதனும்‌ பிரமனைப்‌ பிறப்பிப்பதாகக்‌ கொள்ளலாம்‌.
அன்‌றிக்கே
தர்ம்யைக்யத்தாலே இருவரையும்‌ ப்ரஹ்மோத்பா தகர்களாகக்‌ கூறுவதாகவும்‌ கூறலாம்‌,
புருஷ ஸூக்தத்திலும்‌, *பாதேள5ஸ்ய” என்று அநிருத்தரை எடுத்து. :
இஹாபவாத்புக:” [இங்கு மறுபடியும்‌ அவதரித்தார்‌] என்று அவருடைய அவதார பூ,தரான ஷீராப்‌தி நாதனைச்‌ சொல்லுவதாகவும்‌,
“ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌’ என்று அவருடைய அவதார வ்யாப்தியைச்‌ சொல்லுவதாகவும்‌,
* தஸ்மாத்‌ விராட,ஜாயத’ என்று
அந்த ஷீராப்தி நாதனிடமிருந்தே பிரமன்‌ பிறந்தான்‌ என்று சொல்லுவதாகவும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும்‌ பத்மநாபே அமரப்‌ரபு,:’ என்று
வ்யூஹத்தில்‌ நான்காவதான அநிருத்தரைக் குறித்தும்‌,
பத்மநாப; ப்ரஜாபதி: ‘ என்று முதல்‌ அவதாரமான விஷ்ணுவைக் குறித்தும்‌
பத்மநாப சப்தம்‌ ப்ரயோகிக்கப்‌ பட்டிருப்பதையும்‌,
பத்மநாப: ப்ரஜாபதி: ‘ , என்‌ற விடத்தில் பாஷ்யத்தில்‌
நைமித்திக ஸ்ருஷ்டி ப்ரளய விஷயம்‌ சைதத்‌ த்‌ஸஏஷ்டவ்யம்‌ ”
இந்த ப்ரஹ்ம ஸ்ருஷ்டி நைமித்திக ஸ்ருஷ்டி ப்ரளய விஷயமானதென்று கருதப்படவேண்டும்‌ |
என்‌று பட்டர்‌ அருளிச் செய்ததையும்‌ இங்கு அதுஸந்திப்பது.

இனி இப்பத்மநாப சப்தார்த்தை விவரிப்டோம்‌.
(பத்மநாபன்‌) =
“” ஸர்வ ஜகத் காரணம்‌ யஸ்ய ஸ:””
எல்லா ஜகத்துக்கும்‌ காரணமான “பத்மத்தை . நாபியில்‌ உடையவன்‌ எவனோ அவன்‌.
என்று சங்கர பாஷ்யத்தில்‌. பொருளுரைக்கப்பட்டது . ”
பாமரு மூவுலகும்‌ படைத்த பற்பநாபாவோ!” என்று ஆழ்வாரும்‌. –
* ஊழிமுதல்வன்‌…….. பாழியந்தோளுடைய பற்பநாபன்‌ ” என்று ஆண்டாளும்‌
பத்மநாப சப்தத்திற்கு அர்த்தம்‌ பண்ணினார்கள்‌.
“ தாதோத்‌ தார: ஸம்விமரதி பஞ்சவர்‌ஷமாதாநி து ”
(பத்ம ஸம்பவனான ) பிரமன்‌ (தாமரைக் கொடியில்‌ ) மேல்‌ நோக்கியவனாய்‌ ஐநூறு வருஷங்கள்‌ நுழைந்கான்‌.-என்றும்‌
“ தர்த்துர்‌ நாப்‌,யாம்‌ புஷ்கரம்‌ ப்ராதுர்பவதி”
ஸர்வ லோகத்தை தரிப்பவனான நாராயணனுடைய நாபியில்‌ தாமரை உண்டாயிற்று.] என்றும்‌,
^ அஜஸ்ய நாபாவத்‌,யேகமர்ப்பிதம்‌ ”
பிறப்பிலி யான பெருமானின்‌ நாபியில்‌ ஒரு ( தாமரை ) தோற்றுவிக்கப்பட்டது.] என்‌றும்‌,
‘யந் நாபி பத்மநாப,வந்மஹாத்மா ப்ரஜாதிபர்‌ விஸ்வஸ்ருட்‌, விஸ்வரூப:”
உலகை உருவ மாகச்‌ கொண்டவனும்‌, உலகை ஸ்ருஷ்டிப்பவனுமான பிரமன்‌
எவருடைய நாபீகமலத்திலிருந்து தோன்‌நினானோ ….] என்றும்
மஹா உப நிஷத்திலும்‌, “ ப்ரஹ்ம வை ப்‌,ரஹ்மாணம்‌ புஷ்கரே$ஸ்ருஜத்‌”
ப்ரஹ்மம்‌ பிரமனைத்‌ தாமரையில்‌ தோற்று வித்தது என்றும்
அதர்வண வேதத்திலும்‌, “ ஸ ப்ரஜாபதி ரேக: புஷ்கரபர்ணே ஸம்ப,வத்‌””
அந்தப்‌ பிரமன்‌ ஒருவனே (எம்பெருமானுடைய திருநாபீ) கமலத்தில்‌ தோன்‌ நினான்‌– என்றும்‌
பல வாக்கியங்களால்‌ வேதத்திலும்‌
“யத்‌ தத்‌ பத்மமபூத்‌ பூர்வம்‌ தத்ர ப்‌ரஹ்மா வ்யஜாயத |
` ப ரஹ்மணங்சாபி ஸம்பூ,த: இத்யவதரர்யதாம்‌ |
ஸரிவாத்‌ ஸ்கந்தஸ்‌ ஸ்ம்பபபூவ ஏதத்‌ ஸ்ருஷ்டி சதுஷ்டயம்‌ (|
(பகவானுடைய’ உந்தியிலிருந்‌து) யாதொரு தாமரை முன்‌ உண்டாயிற்றோே அதில்‌ பிரமன்‌ பிறந்தான்‌,
பிரமனிட மிருந்தே-சிவன்‌ பிறந்தானென்று அறியத்தக்கது.
சிவனிட மிருந்து ஸ்கந்தன்‌ உண்டானான்‌.
இது (முதலில்‌ ஏற்பட்ட) நாலு ஸ்ருஷ்டி] என்று மஹாபாரதத்திலும்‌
“கதாசித்‌ தஸ்ய ஸாுப்தஸ்ய நாப்‌,யாம்‌ காமாத,ஜாயத |
திவ்யமஷ்டதனம்‌ பூரி பங்கஜம்‌ பார்த்தி,வம்‌ மஹத்‌ ॥
யஸ்ய ஹேமம திவ்யா கர்ணிகா மேருருச்யதே |”
அப் பெருமான்‌ ஒரு ஸமயம்‌ யோக நித்திரை செய்து கொண்டிருக்கும் போது. அவனுடைய ஸங்கல்பத்தினால்‌
அவனுடைய திருநாபியில்‌, எட்டு தளத்தையுடையதும்‌, ப்ருதிவி ஸம்பந்த முள்ளதும்‌, மிகப்டெரியதும்‌ அழகியதுமான தாமரை உண்டாயிற்று.
அதனுடைய ஸுவர்ண மயமான அழகிய கர்ணிகை மேருமலையாயிற்று என்று சொல்லப்‌படுகிற து. என்று
பாத்ம புராணத்திலும்‌ சொல்லட்பட்ட து.
“’நாவியுள்‌ நற்கமல நான்முகனுக்‌ கொருகால்‌ தம்மனையானவனே!” என்று பெரியாழ்வாரும்‌.
நாட்டைப் படையென்றயன்‌ முதலாத்‌ தந்த நளிர்‌ மாமலருந்தி
வீட்டைப்‌ பண்ணி விளையாடும்‌ விமலன்‌ தன்னைக் கண்டீரே ” என்று ஆண்டாளும்‌
தாமரை மேல்‌ அயனவனைப்‌ படைத்தவனே!” என்று குலசேகராழ்வாரும்‌,
“போது தங்கு நான்முகன்‌ மகன்‌ அவன்‌ மகன்‌ சொலில்‌
மாது தங்கு கூறன்‌ ஏறதூர்தி என்று
வேதநூல்‌ ஓதுகின்‌றதுண்மை அல்லதில்லை
மற்றுரைக்கிலே ” -—என்று திருமழிசைப்பிரானும்‌.
** அயனைப்‌ படைத்ததோர்‌ எழில்‌ உந்தி ” என்று திருப்பாணாழ்வாரும்‌.
‘ அங்கமலத்தயன்‌ ” என்றும்‌. “்‌
ஒருவனை உந்திபூமேல்‌ ஓங்குவித்து” என்றும்‌, திருமங்கைமன்னனும்‌.
“செய்ய மறையான்‌ நின்‌ உந்தியான்‌” என்‌ றும்‌,
“நான்முகற்குப்‌ பூமேல்‌ பகரமறை பயந்த பண்பன்‌ ` என்றும்‌ பொய்கைப்பிரானும்‌. —
இரும் தண்‌ கமலத்‌ திரு மலரினுள்ளே திருந்து திசைமுகனைத்‌ தந்தாய்‌” என்று பூதத்‌ தாழ்வாரும்‌.
“அலரெடுத்த உந்தியான்‌”என்‌ று பேயாழ்வாரும்‌,
“’ ஒரு தானாகித்‌ தெய்வ நான்முகக்‌ கொழுமுளை ஈன்று
முக்‌ கணீசனொடு தேவு பல நுதலி மூவுலகம்‌ விளைத்த
உந்தி மாயக்கடவுள்‌ மாமுதலடியே”’ என்று நம்மாழ்வாரும்‌
எம்‌ பெருமான்‌ ஸர்வ ஜகத் காரணமான பத்மத்தை நாபியிலே கொண்டு விளங்குவதை அநுபவித்தார்கள்‌.

“’அஜநிஷ்ட ச கஸ்ய நாபே,:”
எவனுடைய உந்தியிலிருந்து இவ்வுலகம்‌ உண்டாயிற்று] என்றார்‌ ஆளவந்தாரும்‌.
“த்ரயோ தேவாஸ்‌ துல்யாஸ்‌ த்ரிதயமிதமத்‌,வைதமதி,கம்‌ த்ரிகாத,ஸ்மாத்‌ தத்த்வம்‌ பரமிதி விதர்க்காந்‌ விகடயர்‌ |
நாபீ பத்‌,மோ ப்‌ரூபங்கீ,பரவதி,தி ஸித்‌,த,ாந்தயதி ந: |”
மும்மூர்த்திகளும்‌ ஸமர்‌’ மூவரும்‌ ஒன்றே “மூன்றைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டது பரதத்வம்‌ ‘ என்னும்‌
விதண்டா வாதங்களைப்‌ போக்கடிப்பதாய்‌,
பிரம ருத்திரர்களுக்கு முதற்கிழங்கரயிருப்பதுமான பெரியபெருமாளுடைய திருநாபிக்கமலமான து
அவனையொழிந்த மற்றவையெல்லாம்‌ அவனுடைய புருவ நெரிப்புக்கு வசப்பட்டவை என்று நமக்கு முடிவுகட்டித்‌ தருகின்‌ றது.
என்று பட்டர்‌ அருளிச்‌ செய்தபடியே பரத்வ நிர்த்தாரணம்‌ செய்துதரும்‌ திருநாமமன்றோ இது.
(பத்மநாபன்‌)
” பத்மமிவ நாபி: யஸ்ய ஸ:””
தாமரை போன்‌ற உந்தியை உடையவன்‌ | என்‌ றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
“ ஹ்ருத்பத்மஸ்ய நாபெள மத்‌,யே ப்ரகாமாமாஈத்வாத்‌ வா பத்மநாப;””’
ஹ்ருதய கமலத்தின்‌ ஈடுவில்‌ பிரகாசிப்பதால்‌ பத்மநாபனாகிறான்‌.. என்றும்‌ சங்கரர்‌ பொருள் கெண்டார்‌.
இப்படி ஸகலாவதார மூல மூர்த்தியான பத்மநாபாவதாரம்‌ அநுபவிக்கப்பட்டது.

————–

அடுத்தபடியாக அப்‌ பெருமானுடைய முக்யாவதாரமாகிய க்ருஷணாவதாரம்‌ தாமோதர நாமம்‌ அநுபவிக்கப்படுகிறது.
“பத்மநாபன்‌ என்னும்‌ திருநாமத்தினால்‌ அவதாரத்திலும்‌ பரத்வம்‌ பொலிய நிற்பவனென்று காட்டப்பட்டது.
தாமோதரன்‌’ என்று ஓரிடைச்சிக்குக்‌ கட்டவும்‌ அடிக்கவுமாம்படி நின்ற ஸெளலப்‌, யத்தின்‌ எல்லை நிலத்திலே ஈடுபடுகிறது.
* தாம” என்று விந்‌-16 கயிற்றுக்குப்‌ பெயராகையால்‌ கயிற்றை வயிற்றிலுடையவன்‌ என்று
தாமோதர நாமத்திற்குப்‌ பொருளாகிறது.
“ தயோர்‌ மத்‌,யக,தம்‌ பத்த,ம்‌ த௱ம்நா கடம்‌ தயோத;ரே |
ததங்ச தமோத,ரதாம்‌ ஸ யயெள தாமப,ந்த நாத்‌ |!”
அந்த யசோதையால்‌ வயிற்றில்‌ கயிற்றினாலே கட்டப்‌ பட்டவனாய்‌ அம்மரங்களினிடையில்‌ சென்றான்‌.
கயிற்றால்‌ கட்டப்பட்டதால்‌ தாமோதரனாயிருக்கும்‌ தன்மையை அடைந்தான்‌ என்று சாஸ்த்ரம்‌ சொல்லிற்று,
“தாம்கா சைவோத;ரே பத்‌,த்‌,வா ப்ரத்யப,த்‌,நாதுலூகலே”
கயிற்றால்‌ வயிற்றில்‌ கட்டி உரலில்‌ பிடித்துக்‌ கட்டினாள்‌-என்று விஷ்ணு புராணத்திலும்‌ இத்திருநாமம்‌ விவரிக்கப்‌ பட்டது.
ஸர்வ ஸ்மாத் பரன்‌ ஓரிடைச்சியின்‌ கையிலே கட்டுண்டு கிடந்ததைக்கண்டு
“‘எத்திறம்‌! உரலினொடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே” என்று நம்மாழ்வார்‌ ஆறு மாதம்‌ மோஹித்துக்‌ கிடந்தார்
“கண்ணிநுண்‌ சிறுத்தாம்பி னால்‌ கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்‌’” என்று மதுரகவிகளும்‌.
“கண்ணிக்‌ குறுங்கயிற்றால்‌ கட்டுண்டான்‌ காணேடீ ” என்று திருமங்கையாழ்வாரும்‌
இந்நீர்மையிலே ஈடுபட்டனர்‌.
“தாமாநி பந்தி யஸ்யோத,ராந்தரே | தேர தமோத,ரோ ; ஸ்ரீதரஸ்து ஸமாங்ரித:
தாம சப்தத்தினால்‌ சொல்லப்படும்‌ லோகத்திலுள்ள நாம ரூபங்களெல்லாம்‌ ( பிரளயகாலத்தில்‌ )
அவனுடைய வயிற்றினுள்‌ விளங்குகிறபடியால்‌ ஸ்ரீதரன்‌ தாமோதரனாகிறான்‌.
என்று புராணத்தில்‌ சொல்லியபடியும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
“‘ தாமோதரனைத்‌ தனி முதல்வனை ஞால முண்டவனை ” என்று நம்மாழ்வார்‌ இவ்வர்த்தத்தை உணர்த்‌தினார்‌.
“தமாதி, ஸாதநேந உதாரா உத்க்ருஷ்டா மதிர்யா தயா இதி தமோதர ;,:’
தமம்‌ முதலிய ஸாதனங்‌களால்‌ உதாரமாய்‌ ( உயர்ந்ததாய்‌ ) விளங்கும்‌ புத்தி தமோதரா ‘ எனப்படும்‌.
அந்த புத்தியால்‌ அறியப்படு மவன்‌ தாமோதரன்‌ . என்றும்‌ சங்கரர்‌ பொருள் உரைத்தார்‌.
“தாமாத்‌, தமோதரம்‌ விது;
தாமோதரனை தாமத்தினால்‌ அறிகிறார்கள்‌ என்ற பகவத் வசனம்‌ இவ்வர்த்தத்துக்கு ப்ரமாணம்‌.
“ தேலாநாம்‌ ஸூகமும் ஸித்வாத்‌ த;மாத்‌, தமோதரம்‌ விது; “` தேவர்களுக்கு ஸுகமானவற்றை உபதேசிப்பதாலும்‌.
கயிற்றினால்‌ கட்டப்பட்டகாலும்‌ தாமோதரனென்று அறிகிறார்கள்‌.
என்ற ப்ரமாண த்தின்‌ படியும்‌ பொருள்‌ சொள்ளலாம்‌.

ஆக. இப்பன்னிரு நாமங்களின்‌ பொருளும்‌ விவரிக்கப்‌ பட்டதாயிற்று.
வாஸுதேவன்‌ முதலான நான்கு வியூஹ மூர்த்திகளினின்றும்‌
மூன்று மூன்று மூர்த்திகளாகத்‌ தோன்‌றிய கேசவாதி மூர்த்யந்தரங்களுள்ளதாகவும்‌,
இவர்‌கள்‌ நெற்றி முகலிய அவயவங்களில்‌ நின்‌று கொண்டு சரிரத்தை ரக்ஷிக்கறார்களென்றும்‌.
தியானிப்பவர்களுடைய தாபங்களைப்‌ போக்கடிக்கிறார்களென்றும்‌
பாஞ்சராத்ர சாஸ்த்ரத்‌தில்‌ ப்ரதிபாதிக்கப்பட்டது.
இக் கேசவாதி நாமங்‌ கள்‌ அவர்களைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌.

———————————–

தொடரடைவுகள் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம்
(http://tamilconcordance.in) தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை

————

கேசவ (2)
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4
கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4

கேசவநம்பீ (1)
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த – நாலாயி:139/3

கேசவற்கு (1)
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3610/1

கேசவன் (10)
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – நாலாயி:13/2
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ – நாலாயி:381/3
கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1
கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/3
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3

கேசவன்-தன் (1)
திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன்
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/1,2

கேசவனே (2)
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3

கேசவனை (6)
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ – நாலாயி:480/7
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/1,2
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் – நாலாயி:2181/3
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை – நாலாயி:2649/3
கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1
திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை – நாலாயி:3329/1

கேசவனோடு (1)
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை – நாலாயி:290/3

கேசவா (10)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3
கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே – நாலாயி:771/3,4
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/1,2
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1

கேசனே (1)
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே – நாலாயி:812/4

————-

நாராயணமே (9)
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1538/4
நடந்தானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1539/4
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1540/4
நல்லானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1541/4
நடையா உண்ண கண்டான் நாமம் நமோ_நாராயணமே – நாலாயி:1542/4
நானும் சொன்னேன் நமரும் உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1543/4
நன்று காண்-மின் தொண்டீர் சொன்னேன் நமோ_நாராயணமே – நாலாயி:1544/4
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ_நாராயணமே – நாலாயி:1545/4
நங்கள் வினைகள் தவிர உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1546/4

நாராயணன் (12)
நலிவான் உற கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை – நாலாயி:271/2
நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை – நாலாயி:298/3
நாயக பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி – நாலாயி:480/6
நாற்ற துழாய் முடி நாராயணன் நம்மால் – நாலாயி:483/3
நம்மை உடையவன் நாராயணன் நம்பி – நாலாயி:563/2
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் – நாலாயி:2382/1
நற்பொருள் தான் நாராயணன் – நாலாயி:2394/4
நாராயணன் என்னை ஆளி நரகத்து – நாலாயி:2395/1
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே – நாலாயி:3337/2
நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே – நாலாயி:3438/4
அற்புதன் நாராயணன் அரி வாமனன் – நாலாயி:3735/1
நாராயணன் நங்கள் பிரான் அவனே – நாலாயி:3803/4

நாராயணன்-தன்னை (1)
நச்சுவார் முன் நிற்கும் நாராயணன்-தன்னை
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன – நாலாயி:107/1,2

நாராயணனாலே (1)
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே – நாலாயி:3075/4

நாராயணனுக்கு (1)
ஞாலம் முற்றும் உண்டு ஆலிலை துயில் நாராயணனுக்கு இவள் – நாலாயி:296/1

நாராயணனே (4)
நாராயணனே நமக்கே பறை தருவான் – நாலாயி:474/7
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர் – நாலாயி:1315/2
நாகம் ஏறி நடு கடலுள் துயின்ற நாராயணனே உன் – நாலாயி:3255/3
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே என்றுஎன்று – நாலாயி:3258/2

நாராயணனை (2)
இன்று நாராயணனை வர கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் – நாலாயி:554/4
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி – நாலாயி:3948/1

நாராயணா (17)
நல் வகையால் நமோ_நாராயணா என்று நாமம் பல பரவி – நாலாயி:11/3
நச்சு முலை உண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ – நாலாயி:51/4
நண்ணி தொழும் அவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் – நாலாயி:140/2
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை – நாலாயி:514/1
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:948/4
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:949/4
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:950/4
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:951/4
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:952/4
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:953/4
நல் பொருள் காண்-மின் பாடி நீர் உய்-மின் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:954/4
நல் துணை ஆக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:955/4
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:956/4
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் – நாலாயி:957/4
நாமம் பல சொல்லி நாராயணா என்று – நாலாயி:2289/1
நாராயணா ஓ மணி_வண்ணா நாக_அணையாய் – நாலாயி:2694/4
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா என்றுஎன்று – நாலாயி:3297/2

நாராயணாய (3)
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ_நாராயணாய என்று – நாலாயி:4/3
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ_நாராயணாய என்று – நாலாயி:12/3
நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ_நாராயணாய என்பாரே – நாலாயி:555/4

—————

மாதவ (1)
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் – நாலாயி:2171/1

மாதவம் (1)
கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு – நாலாயி:931/3

மாதவர் (1)
மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் – நாலாயி:925/3

மாதவன் (20)
மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி – நாலாயி:373/3
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை – நாலாயி:442/2
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று – நாலாயி:482/7
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி_வண்ணன் மணி முடி மைந்தன் – நாலாயி:545/1
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் – நாலாயி:557/3
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு-தன்னை – நாலாயி:617/1
மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல் – நாலாயி:641/1
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே – நாலாயி:816/3,4
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் – நாலாயி:1211/3
மாதவன் தான் உறையும் இடம் வயல் நாங்கை வரி வண்டு – நாலாயி:1248/3
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன்
தார் மன்னு தாசரதி ஆய தட மார்வன் – நாலாயி:1684/1,2
வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர் – நாலாயி:2220/3
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் – நாலாயி:2544/3
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில் – நாலாயி:2856/2
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது – நாலாயி:3077/1
வண்டு ஆர் தண் அம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3353/3
மாதவன் என்று என்று – நாலாயி:3941/1
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே – நாலாயி:3982/4
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் – நாலாயி:3983/1
வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே – நாலாயி:3986/4

மாதவன்-தன் (3)
மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய் மாதவன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:162/4
மருப்பு ஒசித்த மாதவன்-தன் வாய் சுவையும் நாற்றமும் – நாலாயி:567/3
மது வாயில் கொண்டால் போல் மாதவன்-தன் வாய் அமுதம் – நாலாயி:575/2

மாதவன்-பால் (1)
மாதவன்-பால் சடகோபன் – நாலாயி:2964/1

மாதவனாரே (1)
வடிவு ஆர் மாதவனாரே – நாலாயி:2963/4

மாதவனே (9)
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் – நாலாயி:141/4
மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமல சுனை வேங்கடவா – நாலாயி:1036/2,3
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால் – நாலாயி:1395/2
வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் – நாலாயி:1611/2
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2219/3
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2225/3
மண் மிசை யோனிகள்-தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம் – நாலாயி:2831/1,2
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே – நாலாயி:3076/4
வாயான் மாதவனே – நாலாயி:3940/4

மாதவனை (9)
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் – நாலாயி:432/1
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை – நாலாயி:503/1
மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள் – நாலாயி:1212/2
மரு தார் தொல் புகழ் மாதவனை வர – நாலாயி:1942/3
மட்டு ஆர் பூம் குழல் மாதவனை வர – நாலாயி:1945/3
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் – நாலாயி:2387/3
மாது ஆய மாலவனை மாதவனை யாதானும் – நாலாயி:2446/2
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு – நாலாயி:2649/3,4
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் – நாலாயி:3933/1

மாதவனோடு (1)
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கு இருப்பாரே – நாலாயி:533/4

மாதவா (8)
வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம் – நாலாயி:138/1
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:384/3
வாக்கு தூய்மை இலாமையினாலே மாதவா உன்னை வாய்க்கொள்ள மாட்டேன் – நாலாயி:433/1
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4
மான் ஏய் நோக்கி மடவாளை மார்பில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா – நாலாயி:2947/1,2
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா – நாலாயி:2948/2,3
மாய்த்த ஆய மாயனே வாமனனே மாதவா
பூ தண் மாலை கொண்டு உன்னை போதால் வணங்கேனேலும் நின் – நாலாயி:3256/2,3
மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா என்ன நாளும் – நாலாயி:3911/1

————

கோவிந்தற்கு (1)
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல் – நாலாயி:635/1

கோவிந்தன் (20)
என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ – நாலாயி:54/3
குட்டன் வந்து என்னை புறம்புல்குவான் கோவிந்தன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:108/4
குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு – நாலாயி:254/2
குட வயிறுபட வாய் கடைகூட கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:276/2
இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:277/2
குறு வெயர் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:282/2
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் – நாலாயி:367/3
கொம்பின் ஆர் பொழில்வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர் – நாலாயி:368/1
கொத்து அலர் பூம் கணை தொடுத்துக்கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி – நாலாயி:506/3
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் – நாலாயி:557/3
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி – நாலாயி:579/3
குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ மிறை செய்து எம்மை – நாலாயி:603/3
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் – நாலாயி:2544/3
கோவிந்தன் குட கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து – நாலாயி:3078/1
எறியும் தண் காற்றை தழுவி என்னுடை கோவிந்தன் என்னும் – நாலாயி:3266/2
கோமள வான் கன்றை புல்கி கோவிந்தன் மேய்த்தன என்னும் – நாலாயி:3268/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கொள்-மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை – நாலாயி:3732/1,2
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் – நாலாயி:3826/3
குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான் – நாலாயி:3952/1

கோவிந்தன்-தன் (2)
குழற்கு அணியாக குழல்வாராய் அக்காக்காய் கோவிந்தன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:167/4
கொண்டு இவை பாடி குனிக்க வல்லார் கோவிந்தன்-தன் அடியார்கள் ஆகி – நாலாயி:212/3

கோவிந்தன்-தனக்கு (1)
குடி அடியார் இவர் கோவிந்தன்-தனக்கு என்று – நாலாயி:3986/1

கோவிந்தனாம் (1)
கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தனாம் எனா ஓடும் – நாலாயி:3269/1

கோவிந்தனாரே (2)
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே – நாலாயி:3907/4
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும் – நாலாயி:3908/1

கோவிந்தனுக்கு (1)
கொங்கை தலம் இவை நோக்கி காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா – நாலாயி:620/3

கோவிந்தனுடைய (1)
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில் – நாலாயி:285/1

கோவிந்தனே (1)
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே – நாலாயி:3077/4

கோவிந்தனை (5)
புற்று அரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்று இனம் மேய்த்து வர கண்டு உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம் – நாலாயி:253/1,2
செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே – நாலாயி:281/4
கோவலர் கோவிந்தனை குறமாதர்கள் பண் குறிஞ்சி – நாலாயி:352/3
கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்-கொலோ – நாலாயி:1828/4
கூடும்-கொல் வைகலும் கோவிந்தனை மதுசூதனை கோளரியை – நாலாயி:3662/1

கோவிந்தனோடு (2)
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில கோவிந்தனோடு இவளை – நாலாயி:288/3
கோடி மூடி எடுப்பதன் முன்னம் கௌத்துவம் உடை கோவிந்தனோடு
கூடியாடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே – நாலாயி:378/3,4

கோவிந்தா (15)
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை உணாயே – நாலாயி:134/4
குணம் நன்று உடையர் இ கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லு கொள்ளாய் – நாலாயி:142/2
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:384/3
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/3
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/3
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன்தன்னை – நாலாயி:500/1
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு – நாலாயி:501/4
இற்றை பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு – நாலாயி:502/5,6
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக்கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மை – நாலாயி:522/2,3
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
குழகனே என்தன் கோமள பிள்ளாய் கோவிந்தா என் குடங்கையில் மன்னி – நாலாயி:714/1
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/2,3
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே – நாலாயி:3123/4
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின் – நாலாயி:3916/1

கோவியர் (1)
பூ_மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி – நாலாயி:1169/3

கோவினார் (1)
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல்_வண்ணா – நாலாயி:1005/2

கோவினை (5)
ஆட்கொள்ள தோன்றிய ஆயர்-தம் கோவினை
நாள் கமழ் பூம் பொழில் வில்லிபுத்தூர் பட்டன் – நாலாயி:85/1,2
கோவினை நாவுற வழுத்தி என்தன் கைகள் கொய் மலர் தூய் என்று-கொலோ கூப்பும் நாளே – நாலாயி:650/4
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தை தலை கோவினை குடம் ஆடிய கூத்தனை – நாலாயி:1570/3
அண்டர்-தம்_கோவினை இன்று அணுகும்-கொல் என் ஆய் இழையே – நாலாயி:1830/4
கோவினை குடந்தை மேய குரு மணி திரளை இன்ப – நாலாயி:2037/2

கோவே (22)
அஞ்சினேன் காண் அமரர்_கோவே ஆயர் கூட்டத்து அளவன்றாலோ – நாலாயி:131/3
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே – நாலாயி:136/4
குடங்கள் எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால்செய்ய வல்ல என் மைந்தா – நாலாயி:188/1,2
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்திப்பூ சூட்ட வாராய் – நாலாயி:188/4
கும்ப களிறு அட்ட கோவே கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே – நாலாயி:199/2
குடத்தை எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டை பணித்தருளாயே – நாலாயி:529/3,4
கல் அணை மேல் கண் துயில கற்றனையோ காகுத்தா கரிய கோவே – நாலாயி:732/4
வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே – நாலாயி:739/4
எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே – நாலாயி:901/4
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே
நால் ஆகிய வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1314/1,2
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர்-தம்_கோவே என்று – நாலாயி:1578/2
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1618/4
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1619/4
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1620/4
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1621/4
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1622/4
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1623/4
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1624/4
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே – நாலாயி:1625/4
ஆடு ஏறு மலர் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1626/4
சுற்ற குழாத்து இளம் கோவே தோன்றிய தொல் புகழாளா – நாலாயி:1886/2
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே – நாலாயி:3863/4

கோவை (14)
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர்-தம் அமுதத்தினை – நாலாயி:473/3
கோவை மணாட்டி நீ உன் கொழும் கனி கொண்டு எம்மை – நாலாயி:599/1
ஆய் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை குரவை முன்னே – நாலாயி:1091/2
கோவை தமிழால் கலியன் சொன்ன – நாலாயி:1367/3
சொன்ன இன் தமிழ் நல் மணி கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார் – நாலாயி:1617/3
இனம் மேவு வரி வளை கை ஏந்தும் கோவை ஏய் வாய மரகதம் போல் கிளியின் இன் சொல் – நாலாயி:1622/3
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலிகன்றி ஒலிசெய்த இன்ப பாடல் – நாலாயி:1627/2,3
வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை
அல்லல் செய்து வெம் சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான் – நாலாயி:1700/1,2
கோவை இன் தமிழ் பாடுவார் குடம் ஆடுவார் தட மா மலர் மிசை – நாலாயி:1846/1
கோவை வாயாள்-பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கை – நாலாயி:3253/1
கோவை வீய சிலை குனித்தாய் குல நல் யானை மருப்பு ஒசித்தாய் – நாலாயி:3253/2
குவளை தடம் கண்ணும் கோவை செ வாயும் பயந்தனள் – நாலாயி:3290/2
கோவை வாய் துடிப்ப மழை கண்ணொடு என் செய்யும்-கொலோ – நாலாயி:3519/4
மது மண மல்லிகை மந்த கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து – நாலாயி:3876/3

——–

விட்டுசித்தர் (2)
வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை – நாலாயி:606/3
மெய்ம்மை பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர் – நாலாயி:616/2

விட்டுசித்தன் (30)
வில்லாண்டான்-தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல் – நாலாயி:12/2
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இ – நாலாயி:22/3
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை – நாலாயி:63/3
வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார் – நாலாயி:96/3
வேய் தடம் தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து – நாலாயி:117/2
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த – நாலாயி:127/2
வேத பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை – நாலாயி:201/3
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் – நாலாயி:212/2
செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டுசித்தன் சொல் – நாலாயி:253/3
வண்ணம் வண்டு அமர் பொழில் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:263/3
குழல் முழவம் விளம்பும் புதுவை_கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார் – நாலாயி:285/3
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன – நாலாயி:296/3
செந்தமிழ் தென் புதுவை விட்டுசித்தன் சொல் – நாலாயி:317/3
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல் – நாலாயி:348/3
மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே – நாலாயி:359/4
கோது இல் பட்டர்பிரான் குளிர் புதுவை மன் விட்டுசித்தன் சொல் – நாலாயி:370/3
பத்தராய் இறந்தார் பெறும் பேற்றை பாழி தோள் விட்டுசித்தன் புத்தூர்_கோன் – நாலாயி:380/2
வீர் அணி தொல் புகழ் விட்டுசித்தன் விரித்த சொல் – நாலாயி:390/2
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்_கோன் விட்டுசித்தன் விருப்புற்று – நாலாயி:401/2
திருவரங்க தமிழ் மாலை விட்டுசித்தன் விரித்தன கொண்டு – நாலாயி:411/3
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார் – நாலாயி:422/3
வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:432/3
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் – நாலாயி:442/3
பரவுகின்றான் விட்டுசித்தன் பட்டினம் காவல் பொருட்டே – நாலாயி:452/4
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவை_கோன் விட்டுசித்தன்
ஒன்றினோடி ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே – நாலாயி:462/3,4
வேயர்-தங்கள் குலத்து உதித்த விட்டுசித்தன் மனத்தே – நாலாயி:473/1
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:513/3
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:626/3
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை – நாலாயி:636/2
விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல் – நாலாயி:646/2

விட்டுசித்தன்-தன் (1)
வேத வாய் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன்-தன்
கோதை வாய் தமிழ் வல்லவர் குறைவு இன்றி வைகுந்தம் சேர்வரே – நாலாயி:523/3,4

விட்டுவே (2)
வேய் தடம் தோளார் விரும்பும் கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் – நாலாயி:143/4
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே – நாலாயி:3078/4

———–

மதுசூத (2)
மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடி மேல் – நாலாயி:3538/1
மாய்த்த அம்மான் மதுசூத அம்மான் உறை – நாலாயி:3731/2

மதுசூதற்கு (1)
மாவை வல் வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி – நாலாயி:3534/3

மதுசூதன் (8)
மழை வந்து எழு நாள் பெய்து மா தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை – நாலாயி:265/2
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னை – நாலாயி:561/3
மன் ஆகி நின்ற மதுசூதன் வாய் அமுதம் – நாலாயி:571/3
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற – நாலாயி:1393/3
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் – நாலாயி:1684/1
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டு அவன்-கண் பாசத்தால் நைவாயே – நாலாயி:3013/3,4
வான் உளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் – நாலாயி:3031/2
மணி நின்ற சோதி மதுசூதன் என் அம்மான் – நாலாயி:3930/3

மதுசூதன்-தன்னை (1)
மன கேதம் சாரா மதுசூதன்-தன்னை
தனக்கே தான் தஞ்சமா கொள்ளில் எனக்கே தான் – நாலாயி:2442/1,2

மதுசூதனன் (5)
மன்னர் அஞ்சும் மதுசூதனன் வாயில் குழலின் ஓசை செவியை பற்றி வாங்க – நாலாயி:279/2
மன்னவன் மதுசூதனன் என்பார் வானகத்து மன்றாடிகள் தாமே – நாலாயி:377/4
வண்டு உண் துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன் – நாலாயி:2526/3
வள பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல்வினையேன் – நாலாயி:2536/3
விட்டு இலங்கு முடி அம்மான் மதுசூதனன் தனக்கே – நாலாயி:3079/4

மதுசூதனன்-தன்னை (1)
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் – நாலாயி:442/2,3

மதுசூதனனே (2)
வருக என்று உன் மகன்-தன்னை கூவாய் வாழ ஒட்டான் மதுசூதனனே – நாலாயி:204/4
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மதுசூதனனே – நாலாயி:3563/4

மதுசூதனனை (2)
வங்கம் விட்டு உலவும் கடல் பள்ளி மாயனை மதுசூதனனை மார்பில் – நாலாயி:376/3
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் – நாலாயி:432/1

மதுசூதனா (2)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
வள்ளலே மதுசூதனா என் மரகத_மலையே உனை நினைந்து – நாலாயி:3067/1

மதுசூதனே (2)
மண் எல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று இருந்தேன் – நாலாயி:144/2
மல்லா குடம் ஆடீ மதுசூதனே உலகில் – நாலாயி:1476/3

மதுசூதனை (2)
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி – நாலாயி:3080/1
கூடும்-கொல் வைகலும் கோவிந்தனை மதுசூதனை கோளரியை – நாலாயி:3662/1

மதுசூதனையே (1)
வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி – நாலாயி:3527/1

மதுசூதா (5)
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறு அட்ட பிரானே – நாலாயி:440/1,2
வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் – நாலாயி:1611/2
மணியே மணி மாணிக்கமே மதுசூதா
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதீ – நாலாயி:2029/3,4
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/3
மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய் – நாலாயி:3638/1

————–

திரிவிக்கிரமன் (5)
தெண் புழுதி ஆடி திரிவிக்கிரமன் சிறு புகர்பட வியர்த்து – நாலாயி:94/2
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னை தீண்டும் வண்ணம் – நாலாயி:510/3
வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன்
தேன் அமர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1832/2,3
திரிவிக்கிரமன் செந்தாமரை கண் எம்மான் என் செம் கனி வாய் – நாலாயி:3081/1
தெய்வ_நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடி இணை மிசை – நாலாயி:3417/1

திரிவிக்கிரமனையே (1)
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே – நாலாயி:3080/4

திரிவிக்கிரமா (1)
சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திரு ஆயர்பாடி பிரானே – நாலாயி:145/3

———-

வாமன் (3)
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே – நாலாயி:2202/2,3
பேர் வாமன் ஆகா-கால் பேராளா மார்பு ஆர – நாலாயி:2600/2
பேர் வாமன் ஆகிய காலத்து மூ அடி மண் – நாலாயி:2693/1

வாமன (2)
வன் புற்று அரவின் பகை கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும் – நாலாயி:146/3
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே – நாலாயி:203/1

வாமனன் (13)
மண் பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:112/4
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை – நாலாயி:442/2
வாட்டம் இன்றி மகிழ்ந்து உறை வாமனன்
ஓட்டரா வந்து என் கை பற்றி தன்னொடும் – நாலாயி:535/2,3
அறிந்துஅறிந்து வாமனன் அடி இணை வணங்கினால் – நாலாயி:825/1
வாமனன் அடி இணை மருவுவரே – நாலாயி:1457/4
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் – நாலாயி:1684/1
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண் மிசையே – நாலாயி:2830/4
வாமனன் என் மரகத_வண்ணன் தாமரை_கண்ணினன் – நாலாயி:3082/1
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல் – நாலாயி:3202/2
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் – நாலாயி:3264/1
அற்புதன் நாராயணன் அரி வாமனன்
நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம் – நாலாயி:3735/1,2
பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து என்தன் – நாலாயி:3737/3
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே – நாலாயி:3910/4

வாமனனாய் (2)
வாய் மொழிந்து வாமனனாய் மாவலி-பால் மூவடி மண் – நாலாயி:2299/1
கோட்டு அங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் கண்டுமே – நாலாயி:3610/4

வாமனனார் (1)
மச்சு அணி மாட மதில் அரங்கர் வாமனனார்
பச்சை பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற – நாலாயி:610/1,2
வாமனனே (4)
மருவி தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே – நாலாயி:3081/4
மாய்த்த ஆய மாயனே வாமனனே மாதவா – நாலாயி:3256/2
மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய் – நாலாயி:3638/1
மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய் – நாலாயி:3643/1

வாமனனை (2)
வாமனனை மறி கடல் சூழ் வயல் ஆலி வள நாடன் – நாலாயி:1677/2
வாட்டம் இல் புகழ் வாமனனை இசை – நாலாயி:3052/1

வாமனா (4)
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனம் ஆய வாமனா – நாலாயி:788/4
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின் – நாலாயி:3133/1
குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா
குரை கழல் கைகூப்புவார்கள் கூட நின்ற மாயனே – நாலாயி:3259/1,2
மாய கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால் – நாலாயி:3715/1

வாமனாவோ (1)
வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்றுஎன்று – நாலாயி:3298/2

—————

சீதனையே (1)
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – நாலாயி:2556/4
சிதை_மணாளனை (1)
சீற்றமிலாதானை பாடி பற சீதை_மணாளனை பாடி பற – நாலாயி:310/4

சீதை_மணாளா (1)
சிற்றாயர் சிங்கமே சீதை_மணாளா சிறுக்குட்ட செங்கண்மாலே – நாலாயி:248/2
மாதவன் (1)
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
சீரன் (1)
வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3277/2
சீராமா (2)
சிற்றவை-தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ – நாலாயி:724/4
சிலை வலவா சேவகனே சீராமா தாலேலோ – நாலாயி:726/4
சீராளா (1)
சீராளா செந்தாமரை கண்ணா தண் துழாய் – நாலாயி:1897/3

சீரான் (2)
சீரான் திருவேங்கடம் – நாலாயி:2157/4
உரு ஆகிக்கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான்
திரு ஆகம் தீண்டிற்று சென்று – நாலாயி:2604/3,4

சீரானை (3)
சீரானை எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை – நாலாயி:1088/2
கிடந்தானை கேடு இல் சீரானை முன் கஞ்சை – நாலாயி:2315/3
சீரானை செம் கண் நெடியானை தேன் துழாய் – நாலாயி:2708/4

————–

இருடீகேசன் (6)
தன்னில் பொலிந்த இருடீகேசன் தளர் நடை நடவானோ – நாலாயி:88/4
ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே – நாலாயி:233/4
இடைவழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே – நாலாயி:375/4
எ திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய – நாலாயி:550/1
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே என்று – நாலாயி:622/2
இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம் – நாலாயி:3084/1

இருடீகேசன்-தனக்கு (1)
இண்ட குலத்தை எடுத்து களைந்த இருடீகேசன்-தனக்கு
தொண்ட குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி – நாலாயி:5/2,3

இருடீகேசனுக்கு (1)
ஏதம் இன்றி உரைப்பவர்கள் இருடீகேசனுக்கு ஆளரே – நாலாயி:370/4

இருடீகேசனே (1)
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே – நாலாயி:3083/4

இருடீகேசா (3)
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா முலை உணாயே – நாலாயி:133/4
ஏர் விடைசெற்று இளம் கன்று எறிந்திட்ட இருடீகேசா என்தன் கண்ணே – நாலாயி:148/4
என் அப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – நாலாயி:467/4

————-

நாபனுக்கு (1)
செங்கமல_நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே – நாலாயி:1675/4

நாபி (1)
பின்னை தன் நாபி வலயத்து பேர் ஒளி சேர் – நாலாயி:2715/3

நாபியான் (1)
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ் பிறப்பும் – நாலாயி:2250/3
பற்பநாபன் (4)
பாடிப்பாடி வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன் – நாலாயி:137/2
பாழியம் தோள் உடை பற்பநாபன் கையில் – நாலாயி:477/4
பால் நிற கடல் கிடந்த பற்பநாபன் அல்லையே – நாலாயி:774/4
பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன் – நாலாயி:3085/1

பற்பநாபனையே (1)
மருடியேலும் விடேல் கண்டாய் நம்பி பற்பநாபனையே – நாலாயி:3084/4

பற்பநாபனோடும் (1)
பாஞ்சசன்னியத்தை பற்பநாபனோடும்
வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை – நாலாயி:576/1,2

பற்பநாபா (3)
பட்டி கன்றே கொட்டாய் சப்பாணி பற்பநாபா கொட்டாய் சப்பாணி – நாலாயி:79/4
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய் – நாலாயி:149/4
பா மரு மூ_உலகும் படைத்த பற்பநாபா ஓ – நாலாயி:3616/1

பற்பபாதன் (1)
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்பபாதன் அல்லையே – நாலாயி:783/4

பற்பபாதா (1)
பா மரு மூ_உலகும் அளந்த பற்பபாதா ஓ – நாலாயி:3616/2

———

தாம்பால் (4)
பழம் தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்தான் – நாலாயி:26/3
பதரப்படாமே பழம் தாம்பால் ஆர்த்த – நாலாயி:31/3
ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால்
சோப்பூண்டு துள்ளி துடிக்கத்துடிக்க அன்று – நாலாயி:122/2,3
தாம்பால் ஆப்புண்டாலும் அ தழும்பு தான் இளக – நாலாயி:2602/1

தாம்பினால் (2)
கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டு உண்ண – நாலாயி:937/1
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம் மோதர கையால் ஆர்க்க தழும்பு இருந்த – நாலாயி:1890/2,3

தாம்பு (1)
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செ வாயும் – நாலாயி:715/2

தாம்புகளால் (1)
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடை கலந்தானை எம்மானை என் சொல்லி புலம்புவனே – நாலாயி:2563/3,4

தாம்பே (1)
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு – நாலாயி:2103/4
தாமோதரற்கு (1)
தமரும் பிறரும் அறிய தாமோதரற்கு என்று சாற்றி – நாலாயி:299/2

தாமோதரன் (6)
தடம் கை விரல் ஐந்தும் மலர வைத்து தாமோதரன் தாங்கு தட வரைதான் – நாலாயி:270/2
தன் பேரிட்டுக்கொண்டு தரணி-தன்னில் தாமோதரன் தாங்கு தட வரைதான் – நாலாயி:272/2
சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் – நாலாயி:570/1
வண்டு உண் துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண் நேர் அன்ன ஒள் நுதலே – நாலாயி:2526/3,4
தாமோதரன் உரு ஆகிய சிவற்கும் திசைமுகற்கும் – நாலாயி:3086/3
சார்வே தவநெறிக்கு தாமோதரன் தாள்கள் – நாலாயி:3924/1

தாமோதரன்-தன் (1)
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய் தாமோதரன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:169/4

தாமோதரனாய் (1)
தானாய் பின்னும் இராமனாய் தாமோதரனாய் கற்கியும் – நாலாயி:1727/2

தாமோதரனார் (1)
தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமைசெய் என்றால் செய்யாது எமக்கு என்று – நாலாயி:2616/1,2

தாமோதரனே (1)
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே – நாலாயி:3085/4

தாமோதரனை (3)
குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் – நாலாயி:242/1
தாயை குடல்_விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவி தொழுது – நாலாயி:478/4,5
தாமோதரனை தனிமுதல்வனை ஞாலம் உண்டவனை – நாலாயி:3086/1

தாமோதரா (8)
சாவ பால் உண்டு சகடு இற பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் – நாலாயி:150/4
தாய் சொல்லு கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே – நாலாயி:209/4
சூடி வருகின்ற தாமோதரா கற்று தூளி காண் உன் உடம்பு – நாலாயி:246/2
சாடு இற பாய்ந்த தலைவா தாமோதரா என்று – நாலாயி:386/3
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா – நாலாயி:463/2
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே – நாலாயி:699/4
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரை_கண்ணனே சப்பாணி – நாலாயி:1890/4
தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்றுஎன்று – நாலாயி:3299/2

———–

(துவாதச திருநாமங்கள் வரிசையிலே இப்பாசுரம் -கேசவன் நாராயணன் மாதவன்
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு-பல்லாண்டு பாட -ஆள்செய்ய -கைங்கர்யம் செய்ய தூண்டுகிறார் )

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–பெரிய திருவந்தாதி-65-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீராமருக்கு சங்கத் தமிழ் மாலை – ஸ்ரீபாவைப்படி ஸ்ரீராமாயணம்— ஸ்ரீசுஜாதா தேசிகன் அவர்கள் தொகுத்து அருளியது

April 9, 2023

ஸ்ரீ பால காண்டம்

1. உத்தமன் யார் என்று நாரதரை வால்மீகி கேட்க
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
உதவ
தேவாதி தேவன் சீர் மல்கும்
அயோத்தியில்
கதிர் மதியமாக
பாரோர் புகழ அவதரித்தான்.
( கதிரவன் குலத்தில் ; நிலவின் குணத்துடன் )

2. தசரதனிடம்
’யாம் வந்த காரியம் –
தவத்தவரை காக்க
ஆற்றப் படைத்த மகன்
ராமனை கொடு என்று விஸ்வாமித்திரர் கேட்க,
தசரதன் அவன்
பூவைப் பூ வண்ணா
என்று மறுக்க
வசிஷ்டர்
இளம் சிங்கம்
ராமரை அனுப்புங்கள் என்று கூற,
ராமனை அனுப்பி வைத்தான் தசரதன்.
3. பொற்றாமரை அடி
கல்லில் பட அகலிகையின் மேல்
சாபம் இழிந்தது.
4. திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற் போல்
ராமன்   சீதையை நோக்க —
செங்கண் சிறுச் சிறிதே …
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலை
நோக்கினாள்.

5. ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல,
வில் அரைவில் ஆக, ஜனகரின் புதல்வி சீதை ராமருக்கு
செல்வ பெண்டாட்டி
ஆனாள்.
———-
ஸ்ரீ அயோத்தியா காண்டம்
6. தசரதன் ராமனுக்கு இளவரசு பட்டத்தை பரிசுரைக்க,
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழத் துயிலணை மேல் இருந்த
தசரதனிடம்
ஒருத்தி ஓர் இரவில்
இரண்டு வரம்
வேண்டுவன கேட்க,
உன்மகன் தான் என்று கேள்விப்பட்டு
ஒருத்தி
வாய் நெகிழ்ந்து துடிக்கத்
தாயைக் குடல் விளக்கம் செய்த
காகுத்தன்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி,
சீதையுடன்
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் என்று கானகம் செல்ல,
உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
என்று லக்ஷ்மணன் முன் சென்றான்.

7.கறவைகள் பின் செல்லும் கன்றுகள் போல்,
நாடெல்லாம்
பின் சென்றது.

8.’பேய்ப் பெண்ணே!’
என்று அந்த ஒருத்தியைப் பரதன் வசை பாடி, காட்டுக்குச் சென்று ’அண்ணா !
வல்லீர்கள் நீங்களே !துன்பதுக்கு காரணம்
நானே தான் ஆயிடுக என்று
எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால்
தத்துவம் அன்று என்று கூறி, 
ஆற்றாது வந்து அடி பணிந்து  நிற்க,
செம்பொற் கழலடியை சம்மானமாக’
கொடுத்தனுப்பினார் ராமர்.

9.கள்ளம் தவிர்ந்து
ராமன்
உள்ளம் புகுந்த
குகனை
‘உம்பியும் நீயும்’
என்று சொந்தம் கொண்டாட,
கூடி இருந்து குளிர்ந்தான்.

10.பாதுகா ராணியைக்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே என்று சீரிய சிங்காசனத்தில்
அமர்த்தினான் பரதன்.
———-
ஸ்ரீ  ஆரண்ய காண்டம்
11. என்றென்றுன் சேவகமே
என்று இருக்கும்
முனிவர்களும் யோகிகளையும்
ராக்ஷசர்களிடமிருந்து
ஆழி போல் மின்னி சீறி அருளினான்.

12. பேய்முலை நஞ்சுண்டு
நற்செல்வன் தங்காய் போல்
வந்த சூர்ப்பணகையின் அகந்தை
அபிமானத்தைப் பங்கமாக்கினார்.

13. போதரிக் கண்ணினாய் (மான் போன்ற கண் உடையவள் )
மாயமானை வேண்டுமெனக் கேட்க, மான்பின் எம்பெருமான் ஓட,
வல்லை உன் கட்டுரைகள்
கேட்ட இளைய பெருமான்
மாற்றமும் தாராமல், வாசல் திறவாதார்
என்று சொல்லி விட்டு சென்றவுடன், சீதையைப்
பொல்லா அரக்கன்
அபகரித்தான்.

14. புள்ளரையன்
ஜடாயுவைப் பார்த்த ராமர்
ஆவாவென்று
அழுது, பின்
ஆராய்ந்து எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்று
மோட்சத்தை நல்கினான்.

15. சபரி ராமரைப் பார்த்து
உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
என்று
முழங்கை வழி வாரக்
கொடுத்த நற் பழங்களை ராமர் சுவைத்த பின் ,
‘உனக்கே நாம் ஆட் செய்வோம்’
என்று அவள் ஆசாரியன் திருவடியை அடைந்தாள்.
————–
கிஷ்கிந்தா காண்டம்
16. ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்த
ராமரைப் பார்த்த அனுமார்
கோது கலம் அடைந்து உய்யுமாறு எண்ணி தன் நேய நிலைக் கதவத்தை திறந்து
அதில் ராமரைப் பிரதிஷ்டை செய்தார்.
17. சீதை
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிக்கக்
கீழே விழுந்த
காசும் பிறப்பும்
சுக்ரீவன் காண்பிக்க ராமர் மனதில் சீதை
பரந்தன காண் ( இடமெங்கும் பரவி யிருந்தது )
என்றென்றும் உன் சேவகமே
என்றார் ராமர்.

18. வாலியை ஒரே அம்பினால் அடிக்க அது
சார்ங்க முதைத்த சரமழை போல்
வீழ்த்தியது.

19. இனித் தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
என்று சுக்ரீவனை எழுப்பி,
தென் இலங்கைக் கோமானைச் செற்ற
அரி என்ற பேரரவத்துடன்
வானரங்கள் கைங்கரியம் செய்ய வந்தது.

20. பாலன்ன வண்ணத்து
கணை யாழியை ராமர் அனுமானிடம் கொடுக்க சீதையைத் தேட நிமிர்ந்து
முழங்கிப் புறப்பட்டார்.
————–
ஸ்ரீ சுந்தர காண்டம்

21. ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
என்பதைப் போல அனுமார் கடலைத் தாண்டினார்.

22. ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே
தசரதன்
மருமகளே ! திருவே
என்று சீதையைக் கண்ட நாள் அனுமாருக்கு
‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாக’ இருந்தது.

23. ஆழி போல் மின்னிய
கணை யாழியைப் பெற்றுக்கொண்ட சீதை
‘மார்கழி நீராட மகிழ்ந்தேலோர்’
என்பது போல மகிழ்ந்தாள்.

24. ராவணன் அனுமார் வாலை தீயினால்
குடல் விளக்கம் செய்த போது,
இஷ்வாகு குலத்தின்
அணி விளக்கான
சீதையின் அருளால் தீ அனுமானுக்கு குளிர்ந்து, இலங்கையைத் தூசாக்கியது.

25. மாமாயன் மாதவன் வைகுந்தனை
இப்போதே எம்மை காக்க வரச் சொல்லு என்று
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே என்று
எதையும் கொடுக்காமல்,
கிங்கிணி வாய்ச் செய்த
தாமரைப் பூப் போன்ற சூடாமணியைக் கொடுத்து அனுப்ப, அனுமார்
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
என்பது போலப் பறந்து, ராமனிடம் சமர்ப்பிக்க
வருத்தமும் தீர்ந்து நாடு புகழும் பரிசாக
அனுமனைக் கட்டித் தழுவிக் கொண்டார்.
—————-
ஸ்ரீ யுத்த காண்டம்
26. கடல் வழி விடாமல் தடுக்க உலகினில் ராமர்
தோற்றமாய் நின்ற சடர் போல
காட்சி அளிக்க, கடலரசன்
அறியாத பிள்ளைகளோம்
அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
என்று சரணாகதி செய்ய, பாலம் கட்டப் பட்டது.

27. பொல்லா அரக்கனை
துறந்து,
ஆற்றாது வந்து உன்னை அடி பணிந்த
என்ற விபீஷணனனை
‘குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது’
என்பது போல
உன் தன்னோடு உற்றோமே யாவோம்
என்று அபயம் அளித்தார் ராமர்.

28. கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனை
கன்று குணிலா எறிந்தாய் என்பது போல வீழ்த்தி,
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலனாக
இந்திரஜித்தை வீழ்த்தி,
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்து,
மண்டோதரிக்கு
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையனாகக் காட்சி யளித்தார்.

29. வங்கக்கடல் கடைந்து
பாலம் கட்டி ராவணனை வீழ்த்த
யாம் வந்த காரியத்தை முடித்த ராமரை,
உக்கமும் தட்டொளியும் தந்து
தன் மணாளனை மீண்டும் கைபிடித்த சீதையுடன்
சீதாராம பட்டாபிஷேகம் அயோத்தியில்
நீங்காத செல்வம் நிறைந்து நடை பெற்றது.

30. மனத்துக்கு இனியானை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தால்,
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்யும் பேறு பெற்று
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்.
—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்–ஸ்ரீ அயோத்தியா காண்டம் .

April 8, 2023

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுதஸூநவே |
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதர: ஸதா ||–தனியன்

ஸ்ரீ யாமுனரின் திருக் குமாரரும்,
யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ
அந்த ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

ஸ்ரீ அயோத்தியா காண்டம்

கொங்கைவன் கூனி சொற்கொண்டு

கொடிய கைகேயி வரம் வேண்ட

கொடியவள் வாய்க் கடிய சொற் கேட்டு

மலக்கிய மா மனத்தினனாய் மன்னவனும் மறாது ஒழிய
குலக்குமரா ! காடுறையப் போ என்று விடை கொடுப்ப

இரு நிலத்தை வேண்டாது

ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து

மைவாய களிறொழிந்து  மா ஓழிந்து தேர் ஒழிந்து

கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து

அங்கங்கள் அழகு மாறி

மான் அமரும் மெல் நோக்கி  வைதேகி இன் துணையா

இளங்கோவும்

வாளும்  வில்லும் கொண்டு பின் செல்லக்

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் நடந்து போய்ப்

பக்தியுடைக் குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து

வனம் போய்ப் புக்கு

காயோடு நீடு கனி உண்டு

வியன் கானம் மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயின்று

சித்திர கூடத்து இருப்ப,

தயரதன் தான்

நின் மகன் மேல் பழி விளைத்திட்டு

என்னையும் நீள் வானில் போக்க

என் பெற்றாய் கைகேசீ!

நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் என்று வான் ஏறத்

தேன் அமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து

ஆனை புரவி தேரோடு காலாள் அணி கொண்ட சேனை

சுமந்திரன் வசிட்டருடன் பரத நம்பி பணியத்

தம்பிக்கு மரவடியை வான் பணையம் வைத்துக் குவலயமும்

துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்

எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்துத்

திருவுடை திசைக் கருமம் திருந்தப் போய்த்

தண்ட காரண்யம் புகுந்து

————-

கொங்கை வன் கூனி சொற் கொண்டு

கொங்கை வன் கூனி சொற் கொண்டு குவலயத்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கருளி வன் கானிடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் –2-1-8-

கொங்கை வன் கூனி சொற் கொண்டு –
குப்ஜைக்கு கொங்கை போலே இறே முதுகிலே வலிய கூன் இருப்பது
இவளுடைய யுடம்பில் வக்கிரம் போலே காணும் இவளுடைய அறிவும்

இவளுடைய வசனத்தைக் கொண்டு -மாத்ரு பித்ரு வசன பரிபாலனம் செய்யப் போனார் என்கை ஒழிந்து
குப்ஜா வசனம் செய்யவோ போய்த்து என்னில்
கூன் தொழுததை கடிய சொல்லும் யுண்டாயிற்று
அந்தக் கடிய சொல்லைக் கேட்டு இறே சக்கரவர்த்தி அனுமதி செய்தது
எல்லாத்துக்கும் ஹேது இவள் ஆகையாலே இவள் சொல் கொண்டு போனார் என்னலாம் இறே -பீஜாங்குர  நியாயத்தாலே-

————-

கொடிய கைகேயி வரம் வேண்ட

கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓரடையாளம்–3-10-3-

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
கைகேயி யானவள் குப்ஜையாலே கலக்கப் பட்ட மனஸ்ஸை யுடையளாய்
எனக்குப் பண்டே தருவதாக அறுதியிட்ட வரம் இப்போது தர வேணும் என்று –
அது தன்னை -இன்னது இன்னது -என்று வியக்தமாகச் சொல்ல

———

கொடியவள் வாய் கடிய சொற் கேட்டு

கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு 
ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தானூர்
தேன் தொடுத்த மலர் சோலை  திருவரங்கம் என்பதுவே -4- 8-4 –

கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
இவளுடைய கொடிய வார்த்தையை கேட்டவளுடைய கடிய சொற்களைக் கேட்டு

அவள் இவன் முகம் பாராது இறே துர் யுக்திகளை சொல்லிற்று –
இவள் ரமயதீதி ராம -என்கிறவருடைய முகத்தைப் பார்த்து இறே சொல்லிற்று
இவள் அவளிலும் கடியவள் இறே
அவளுக்கும் தாஸி இவள் இறே

கூன் தொழுத்தை சிதகுரைப்ப –
கூனியாகிற அடியாட்டி ஆனவள் –
திரு அபிஷேக மகோத்சவத்துக்கு அழிவான துருக்திகளை சொல்ல –

அதாவது –
ஜ்ஞாதி தாசீ யதோ ஜாத கைகேயாச்து  சஹோஷிதா –
பிரசாதம் சந்த்ர சங்காஸம்   ஆருரோஹா யதார்ச்சயா -என்கிறபடியே
ஜ்ஞாதி தாசியான இவள் யதார்ச்சிகமாக மாளிகை தளத்தின் மேலே ஏறிப் பார்த்தவாறே –

பெருமாளுடைய திரு அபிஷேகத்துக்கு
திருப் படை வீடு எல்லாம் கோடித்து கிடக்கிற படியையும் –
ப்ருந்தம் ப்ருந்தம் அயோத்யாயாம் -என்கிறபடியே
திரள் திரளாக வந்து கிடக்கிற ஜன சம்ருதத்தையும் –
மங்கள வாத்திய கோஷங்களையும்
கண்டு சஹிக்க மாட்டாதே தளத்தின் நின்றும் இறங்கி வந்து

கைகேயியை பர்த்சித்து -உன்  மாற்றாட்டி மகன் அபிஷேகம் செய்ய தேடுகிறான்
உன் மகன் அவனுக்கு  இனி இழி தொழில் செய்து இருக்கும் அத்தனை இறே
இத்தைப் பார்த்து கொண்டு நீ இருக்கிறது ஏது
அவனுடைய அபிஷேகத்தை குலைத்து உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கும்படி
ராஜாவோடே சொல்லு –

அதுக்கு உபாயம் –
முன்பே உனக்கு தந்து இருப்பது இரண்டு வரம் உண்டே
அவை இரண்டையும் உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்
ராமனை காடேற போக விடுகையும் -என்று வேண்டிக் கொள்

சத்ய தர்ம பரரான ராஜாவால்  செய்யாது ஒழியப் போகாது காண் -என்று
திரு அபிஷேகத்துக்கு விக்நமான
துருக்திகளை சொன்னாள் இறே

கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு –
இப்படி குப்ஜை  சொன்ன வார்த்தையாலே கலங்கி
பின்பு ராஜா உடனே
முன்பு சொன்ன இரண்டு வரமும் எனக்கு இப்போது தர வேணும் -அதாவது –
என் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்
ராமனை பதினாலு சம்வத்சரம் வனவாச அர்த்தமாக போக விடுகையும் -என்ன –

இத்தை கேட்டு ராஜா அதுக்கு இசையாமை தோற்ற இருக்க –

அறுபதினாயிரம் சம்வத்சரம் சத்ய தர்மத்தை தப்பாமல் நடத்தி போந்தவன்
இப்போது சத்தியத்தை அதிகிரமிக்கிறான்
சகல தேவதைகளுக்கும் இத்தை – அறிவியுங்கோள்-என்று இவள் கூப்பிட்ட வாறே –

அவன் -செயல் அற்றுப் போய் – செய்வதற்கு அனுமதி பண்ண
அவ்வளவிலே அவள் சுமந்த்ரனை போக விட்டு பெருமாளை அழைத்து விட

அவர் எழுந்து அருளி வந்து -சக்கரவர்த்தி கலங்கிக் கிடக்கிற படியை கண்டு
இதுக்கு அடி என் -என்று இவளைக் கேட்க –

இச் செய்திகளை எல்லாம் சொல்லி –
உம்மை காடேற போக விடுவதாக அழைத்து விட்டார்
உம்மை கண்ட வாறே சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் இத்தனை –

உங்கள் ஐயர் சத்ய தர்மத்தை நோக்கவும்
நீர் அவருக்கு பிரியம் செய்யவும்
வேண்டி இருந்தீர் ஆகில் -அவர் நினைவு நான் சொல்லுகிறேன் –
நீர் கடுகக் காடேறிப் போம் -என்று சொன்ன
கொடுமையை உடையளான கைகேயி வாயில் இந்த வெட்டிய சொல்லை கேட்டு

—————-

மலக்கியமா மனத்தினனாய் மன்னவனும் மறாது ஒழிய
குலக்குமரா ! காடுறையப் போ என்று விடை கொடுப்ப

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியதும் ஓர் அடையாளம் –3-10-3-

மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
அவன் இசையாது ஒழிய
அறுபதினாயிரம் ஸம்வத்ஸரம் ஸத்ய ப்ரதிஞ்ஞனாய்ப் போந்த நீ இன்று
அஸத்ய ப்ரதிஞ்ஞனானாயோ -என்றால் போலே
சிலவற்றைச் சொல்லி விமுகையான வளவே அன்றிக்கே அபரி ஹார்யமான கோபத்தாலே
மலக்கப்பட்ட மனஸ்ஸை யுடையவனாய்

தர்ம சம்மூட சேதஸ்-(மனஸ்) வானால்
யஸ் ஸ்ரேயஸ் யான் நிஸ்சிதம் ப்ரூஹி -என்னவும் ஒருவரும் இன்றிக்கே
(அங்கு கீதாச்சார்யர் பேசி கலக்கம் போக்கினார் இங்கு ராமாச்சார்யன் பேச மாட்டானே )
நியாய நிஷ்டூரத்தை நியாயமாக நினைத்து மலங்கி
அந்த மலக்கத்திலே பெரிய விசாரத்தை யுடையவனாய்
நெடும் காலம் தர்ம தாரதம்யமும் -அதர்ம தாரதம்யமும் -தர்மாதர்ம தாரதம்யமும் எல்லாம் ஆராய்ந்து போந்து
போந்த நெஞ்சில் பரப்பு எல்லாம் கலக்கத்துக்கு உடலாய்
இவள் வார்த்தையும் மறுக்க மாட்டாது இருப்பதே –

பிள்ளாய்
ஸாஸ்த்ர முகத்தாலும் -ஆச்சார்ய வசனத்தாலும் -பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனமான தெளிவு பிறந்தவர்கள்
நித்ய ஸம்ஸாரிகளாய்த் தெளிவிக்க அரிதானவர்களையும்
தங்களோட்டை தர்சன ஸ்பர்சன சம்பாஷண ஸஹ வாசாதிகளாலே
மிகவும் தெளிவிக்கிறாப் போலே

ப்ரத்யக்ஷமான பர ஸம்ருத்த் யஸஹ ப்ரயோஜனராய்
ஐம்புலன் கருதும் கருத்துளே பிறரைக் கேள்வி கொள்ளாமே திருத்திக் கொண்டவர்கள்
தாங்கள் கலங்குகிற அளவு அன்றிக்கே
தங்களுடைய தர்சன ஸ்பர்சன ஸம் பாஷாணாதி களாலே
கலங்காதவர்களையும் கலக்க வல்லவர்களாய்

கலங்கினவர்கள் அனுதாப பூர்வகமாகத் தெளிந்தார்களே ஆகிலும்
கலக்கினவர்கள் சரீர அவசானத்து அளவும்
தெளிய மாட்டார்கள் என்று தோன்றா நின்றது இறே –

குலக் குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
மறுக்க மாட்டாமையாலே ராஜாவானவன் சோகித்துக் கிடக்க —
அவ்வளவிலே
ரகு குல திலகரான பெருமாள் காலம் தாழ்த்தது என்று அந்தப்புரக் கட்டிலிலே புகுந்து
ஐயர் எங்கே -என்ன

உம்மை வன வாஸ ப்ராப்தராம் படி சொல்ல மாட்டாமையாலே எனக்கு முன்னே வர பிரதானம் செய்தவர்
அது எனக்குப் பலிக்கிற காலத்திலே சோகித்துக் கிடக்கிறார் -என்ன

எனக்கு அவர் வேணுமோ
நீர் அருளிச் செய்ததே போராதோ
ஐயரை எழுப்பிக் கண்டு போகலாமோ என்ன

அவரை நான் எழுப்பி சோகம் தீர்த்துக் கொள்ளுகிறேன்
நீர் இக் குலத்தை நோக்க ப்ராப்தருமாய் (குலக் குமரா)
எங்களுக்குப் பிள்ளை என்று இருந்தீராகில்
எங்கள் வசன பரிபாலனம் செய்ய வேணும் காணும்
அவர் விடை தந்தார்
நான் போ என்கிறேன் -என்று நினைத்து
வன வாச ப்ராப்தியில் சீக்கிரமாகப் போகையிலே ஒருப் படீர்-என்ன

——

இரு நிலத்தை வேண்டாது

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

இரு நிலத்தை வேண்டாதே –
உம்மைப் பிரியில் முடிவோம் -என்று வளைப்புக் கிடக்கிற நகர ஜனங்களை எல்லாம் ஒளித்து-
அவர்களைக் கை விட்டு

——-

ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து

கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தானூர்
தேன் தொடுத்த மலர் சோலை திருவரங்கம் என்பதுவே -4- 8-4 –

ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய  
ஏக புத்ரையான நான் உம்மை பிரிந்து இருக்க மாட்டேன் -கூடப் போரும் இத்தனை –
என்று பின் தொடர்ந்த பெற்ற தாயாரான கௌசல்யை யாரையும்
ஸ்தாவரங்களோடு ஜங்கமங்களோடு வாசி அற
தன் குணங்களில் ஈடுபட்டு
பிரியில் தரிக்க மாட்டாத படி இருக்கிற இராச்சியத்தையும் கை விட்டு

ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்–ஐயரைத் தேற்றிப் பொகிடீர் -என்ன

நான் அவரை சோக நிவ்ருத்தி பண்ணிக் கொள்கிறேன்
புத்தி பேதிக்கிலும் நீர்
இப்போதே போம் என்ற சொல்லைக் கேட்பதாம்

லோக ரக்ஷணார்த்தமாகவும்
தன்னுடைய ஸ்நேஹ கார்யமாகவும்
பெற்று எடுத்தவள் வார்த்தை கேளாமல் –
விஸ்லேஷ அஸஹ மாநத்தாலே வாடின சராசரங்களை ஒழியக்

———–

மைவாய களிறொழிந்து  மா ஓழிந்து தேர் ஒழிந்து

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

வென்றி மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து-மா ஒழிந்து
வென்றியை விளைப்பதாய்-அஞ்சன கிரி போலே
பெரிய வடிவை உடைத்தாய் இருக்கிற ஆனை என்ன -தேர் என்ன -குதிரை என்ன -இவற்றை ஒழிந்து

———

கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து அங்கங்கள் அழகு மாறி

பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே! வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-

பூம் துகில் சேர் அல்குல் காமர் எழில் விழல் உடுத்து
அறுபதினாயிரம் ஆண்டு தேடின திருப் பரியட்டங்களில் நல்லவை எல்லாம் சாத்தக் கடவ திருவரையிலே –
கண்டார் விரும்பும் படி விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி

கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஸ்வா பாவிகமான அழகு ஒழியத் திரு ஆபரணங்கள் சாத்தாமையாலே அத்தாலே வரும் அழகு இன்றியே

———-

மான் அமரும் மெல் நோக்கி  வைதேகி இன் துணையா

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான்   காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே —-11-5-1-

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா –கானமரும் கல் லதர் போய்க் காடுறைந்தான்   –
ஒண்  டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப (திருவாய் )-என்கிறபடியே –
தனக்கும் அவளுக்கும் யோக்யமான நிலத்திலே –
நிரதிசய ஆநந்த யுக்தனாய் இருக்கக் கடவ வவன் –
அங்கு நின்றும் போந்து –
அவதரித்து –
திரு அயோத்யையும் அவ்விடத்தோபாதி காற்கடைக் கொண்டு  –
தங்களுக்கு அயோக்யமான காட்டிலே –
மானோடு ஒத்து இருப்பதாய் -மிருதுவான நோக்கை உடைய
விதேக ராஜன் புத்ரியை தனக்கு இனிய துணையாக
காட்டிலே
முளைத்தால் போலே இருக்கிற கல் வழியே போய் –
இவ் வெய்யில் வெம்மைக்கும்
பாலை நிலத்தின் வெம்மைக்கும்
பரிஹாரமான நீரும் நிழலும் எல்லாம்
இவளேயாய்ப் போனார் –

(காடுறைய வைதேஹி இன் துணையாகப் போவான் என் என்ன
அவளும் அவனது ரக்ஷணத்தை ஸ்தூணா நிஹனநம் நியாயத்தால் திருடி கரிக்கிறாளே

பின்பு -பாபா நாம் -என்கிற பிராட்டி
காட்டிலே வர்த்திக்கிற நாளிலே ஆயுதம் வேண்டா
நீர் சா யுதராய் திரியப் புக்கவாறே நிழல் மரமாய்த் தோற்றுவீர்-
ஆர்த்தராய் சரண்யன் தேட்டமாய் திரிகிறவர்கள் உம்மை -நிழல் மரம் -என்று ஒதுங்குவார்கள் –
சரணாகதரை கை விடாமை உமக்கு ஸ்வ பாவமாய் இருக்கும் ஆகையாலே ராஷசரை அழியச் செய்வீர்
அது தான் சத்தைக்கு கைம் முதலாக நினைத்து இருக்கும் உம்முடைய சத்தையும் அழியும் படி தலைக் கட்ட அடுக்கும் –
ஆன பின்பு காட்டில் வர்த்திக்கும் நாள் இத்தனையும் ஆயுதத்தைப் பொகட்டு
கண்டார் இரங்கும்படி தாபஸ வேஷத்தோடு திரிய அமையாதோ -என்று
அவள் பிரஜைகள் உடைய ரஷணத்தில்  நிற்கிறவர்
(ஊற்றத்தின் எல்லையில் இருப்பதை அறியவே சீதாபிராட்டி வார்த்தை )

அப்யஹம் த்வாம் வா –
அசாதாரணராய்
தங்களோடு அனந்யராய்
இருப்பாரை வைத்தோ -தந்தாமை விடுவார் விடுவது –
உண்டாம் அன்று ஒக்க உண்டாய்
இல்லையாம் அன்று ஒக்க இல்லையாம்படி அன்றோ இருப்பது –

(சீதா உன்னையே விட்டாலும் அதுக்கும் மேலே -லஷ்மணன் -அவனையும் விட்டாலும் —
தன்னையே -விட்டாலும் ப்ரதிஜ்ஜை விட மாட்டேன் -சொன்ன சொல்லையே தம் தம்மை -என்கிறார் -)

நது-
நான் தொடங்கின வற்றில் தவிர மாட்டாதது ஈது ஒன்றுமே
அது தன்னில் சாயுதராய் ஸ்வ ரஷணத்தில் அயோக்யதை உடையராய் இருக்கை அன்றிக்கே
நம்மைப் பார்த்து இருக்கும் பிராமணரை ரஷிக்கிறோம் என்று சொல்லி வைத்து தவிர மாட்டோம் –

———–

இளங்கோவும்

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக
நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு

எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே ?–
கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் –
என்னாயனே நான் என் செய்கேன் –

———-

வாளும்  வில்லும் கொண்டு பின் செல்லக்

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-அப்படி ஆனாலும் நந்தகம் ஸ்ரீ சார்ங்கம் -கொண்டு –
இளைய பெருமாளை போலே மற்று வேறு ஒருவர் இல்லை -உன் பெருமைக்கு இரண்டாவது ஆள் கூடாதோ
அடியேனுக்கு அருள் செய்து கூவிப் பணி கொள்ள வேண்டும்

வாளும் வில்லும் கொண்டு-
எதற்கு பஞ்சாயுதங்கள் -பரம ஸ்வாமி கொண்டாட்டம் வாங்கிக் கொள்ளவோ –
இளைய பெருமாளைப் போலே ஒருவர் பின்னே கொடு சென்றால் ஆகாதோ-

ஆளுமாளார் -சுமப்பார் தாம்– பின் செல்வார் மற்றில்லை -என்கிறது
பரிவரான நீர் அவற்றுக்கு அன்றோ -என்று தம்மை ஏவுகைக்காக

—————

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் நடந்து போய்ப்

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டலை நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்ராமம் அடை நெஞ்சே —-1-5-1-

காட்டின் கொடுமையை சொல்ல யானை சிங்கம் புலி சொல்லாமல் –கலையும் -என்றது மாயமான் –
பிராட்டி பட்டது எல்லாம் மூல காரணம் என்பதால்
அன்றிக்கே மாரீசன் உபகாரனே அன்றி அபகாரகன் அல்லன்
கூச்சல் போடாமல் இருந்தால் சிறை புகுந்து தேவர் கார்யம் செய்ய முடியாதே
கானம் கடந்து போய் -காட்டில் இருந்து வேறு காடு -தே வநேன வனம் கத்வா-வால்மீகி

———–

பக்தி யுடைக் குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து வனம் போய்ப் புக்கு

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே— 10-4–

கங்கையின் துறை தன்னை பத்தி உடை குகன் கடத்த
தம்பிமாரைக் காட்டில் ஸ்நேஹத்தை உடையனாய் -பிரியில் தரியாத படி ஸ்ரீ பெருமாள் நியமிக்கையாலே நின்றவனுமாய்
ஸ்ரீ பரத ஆழ்வானையும் கூட அசிர்க்கும் படியான ஸ்ரீ குஹப் பெருமான் கங்கையைக் கடத்த

வனம் போய் புக்கு-
மனுஷ்ய சஞ்சாரம் இன்றியே துஷ்ட ம்ருஹங்களேயான காட்டிலே போய்ப் புக்கு –

———–

காயோடு நீடு கனி உண்டு

காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாயோது வேதம் மலிகின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-2-

பருவம் இளைதான காய்களையும்
வெய்யிலிலும் காற்றிலும் உலர்ந்து பசையற்ற கனிகளையும் புஜித்து வீசின வெட்டிய காற்றைப் பருகி
நெடும் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸு பண்ண வேண்டா
ஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர்
(வைப்பவர்கள் இல்லை -வைக்க நினைத்தாலே போதும் அவன் உள்ளே புக தான்
காத்துக் கொண்டு இருக்கிறானே விலக்காமையே வேண்டுவது )

————

வியன் கானம் மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயின்று

கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன் குலமதலாய்! குனி வில்லேந்தும்
மல்லணைந்த வரை தோளா! வல் வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல்லணை மேல் முன் துயின்றாய் இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயில கற்றனையோ? காகுத்தா! கரிய கோவே! —–9-3–

வியன் கான மரத்தின் நீழல்-
காட்டில் வர்த்திப்பார் தாங்களும் வெருவும்படி-காட்டிலே -இலை இல்லாத மரத்தின் நிழலின் கீழே

கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?
பாறைகளை யணையாகக் கண் வளரும் படி கற்றீரோ

காகுத்தா! கரிய கோவே!-
இச் செயல்கள் உம்முடைய குடிப் பிறப்புக்கும் சேராது -உம்முடைய வடிவு அழகுக்கும் சேராது –

————-

சித்திர கூடத்து இருப்ப,

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
வண்டுகள் மாறாத பொழிலை யுடைத்தான
திருச் சித்ர கூட பர்வதத்திலே ஏகாந்த போகம் அனுபவிக்கிற காலத்திலே

———–

தயரதன் தான்

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக
ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை

————–

நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய் கைகேசீ!

பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என் மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே– 9-8-

நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
உன்னை அல்லது வேறு ஒருவரை தாய் என்று இராத ஸ்ரீ பெருமாளையும் ஸ்ரீ இளைய பெருமாளையும்
வனத்திலே போக விட்டு

என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய்? கைகேசி!
இச் செயல்கள் எல்லாம் செய்து நீ பெற்ற பிரயோஜனம் என்

இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே–
சம்சார ஸூகம் ஆகிறது -புத்ரர்களோடும் பர்த்தாவோடும் கூடி இருக்கை யாய்த்து –
உனக்கு புத்ரரான ஸ்ரீ பெருமாளைக் காட்டிலே போக்கி என்னையும் ஸ்வர்க்கத்திலே
போக்குகையாலே சம்சார ஸூகம் அழகியதாக அனுபவிக்கக் கடவை இறே –

———————

நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் என்று வான் ஏறத்

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும் சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–

கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து
நான் போகச் சொன்னேன் -என்னுமத்தையே கொண்டு ஒருவர்க்கும் சஞ்சரிக்க அரிதான காட்டை விரும்பி –
திரு அபிஷேகத்துக்கு அலங்கரித்து இருக்கிற ஊரை நீ கை விட்டாய் என்று நானும் ஸ்ரீ திரு அயோதயையைத் துறந்து

நானும் வானகமே மிக விரும்பி போகின்றேன்-
நீ இல்லாத நகரி இறே -அத்தாலே ஸ்வர்க்கமே யாகிலும் நீ இல்லாத ஊரை விட்டுப் போகின்றேன்

மனு குலத்தார் தங்கள் கோவே! –
மநு குலோத்பவனானவனே-

———–

தேன் அமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
வண்டுகள் மாறாத பொழிலை யுடைத்தான
திருச் சித்ர கூட பர்வதத்திலே ஏகாந்த போகம் அனுபவிக்கிற காலத்திலே

————

ஆனை புரவி தேரோடு காலாள் அணி கொண்ட சேனை

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமர்ந்து
நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே–6-5-3-

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்-
ராவணனுடைய படை எழுச்சியை
அந்த க்ரமத்திலே  பேசுகிறார் –
மலைகள் நடந்தால் போலே யானைகளைப் புறப்பட விட்டு
அநந்தரம் –
குதிரைகளை விட்டு
அநந்தரம்
தேர்களாலே அலங்கரித்து –
இவை அத்தனைக்கும் காவலாக காலாளைப் புறப்பட விட்டு
இப்படிப் பட்ட சேனா சமூஹத்தை துகைத்து கழித்து
இலங்கையை அழியச் செய்த
தசரதாத் மஜன் வர்த்திக்கிற ஊர் –
(ஒரு வில்லால் செற்றவன்-தாசாரதி பெயரே உகக்கும் பெருமாள் – )

———–

சுமந்திரன் வசிட்டருடன் பரத நம்பி பணியத்

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம்
மீண்டு எழுந்து அருள வேணும் என்று
பாரதந்தர்யத்தாலே பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து
பிரபத்தி செய்ததும் ஓர் அடையாளம் —

———-

தம்பிக்கு மரவடியை வான் பணையம் வைத்துக்

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய  திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய்-
கைகேயி -ராஜன் -என்று ஸ்வா தந்த்ர்யத்தை ஆரோபித்து வார்த்தை சொன்ன போதே பிடித்து
தத் கத சித்தனாய் இருந்து –
ஸ்ரீ சக்கரவர்த்திக்கு சாஸ்த்ரார்தங்களை பண்ணி விட்ட அநந்தரம்
தன்னை அபிஷேகம் செய்வதாக உத்யோகித்து கொண்டு இருந்த ராஜ லோகத்தில் உள்ளாறும் –
பௌரஜான பதந்க்களுமாய் உள்ள சபா மத்யத்திலே வந்து –

தன்னுடைய ஆற்றாமை தோற்ற
பிரலாபித்து புரோஹிதனான வசிஷ்ட பகவானையும் கர்கித்து
ஸ்ரீ பெருமாளுக்கு சேஷ பூதனான நான் -முடி சூடி ராஜ்யம் பண்ணுகைக்கு  அர்ஹன்  அல்லேன் –
என்னும் இடத்தை அறிவித்து –

பின்பு எல்லாரையும் கூட்டிக் கொண்டு –
ஸ்ரீ திருச் சித்ர கூடத்தில் வந்து தன்னுடைய ஆர்த்தி தோற்ற திருவடிகளில் விழுந்து சரணம் புகுந்து –
தான் விண்ணப்பம் செய்தது மாறாமல் செய்கைக்கு ஈடான ப்ராப்திகளை எல்லாம் புரஸ்கரித்து-
தேவரீர் மீண்டு எழுந்து அருளி திரு அபிஷேகம் பண்ணி அருள வேணும் -என்று
கண்ணும் கண்ணீருமாய் கொண்டு பிரார்த்தித்த தம்பியான ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு –

பிள்ளாய் நீ  நம்மை நிர்பந்திக்க கடவை அல்ல –
உன்னை ஸ்வதந்த்ரனாக்கி வார்த்தை சொன்னார் எதிரே
உன் ஸ்வரூப அனுரூபமான பாரதந்த்ர்யத்தை பெற்று நீ போ–
நான் பதினாலு சம்வத்சரமும் கழிந்தால் ஒழிய மீளுவது இல்லை –
என்று ஒருபடிப்பட அருளிச் செய்கையாலே –

திரு உள்ளக் கருத்து இது –
ஆன பின்பு நாம் இனி நிர்பந்திக்க கடவோம் அல்லோம் -என்று மனசு மீண்டு
அடியேனுடைய ஸ்வா தந்த்ர்யா நிவ்ருத்திக்கும் –
தேவரீர் மீண்டு எழுந்து அருளி விடுவீர் என்னும் விச்வாசத்துக்கும்
ஹேதுவானது தான் ஏது-என்ன

இரண்டுக்குமாக இத்தைக் கொண்டு போ -என்று திருவடி நிலைகளைக் கொடுத்து
பாதுகேசாஸ்ய ராஜ்யாய ந்யாசம் தத்வா புன புன நிவர்த்தயா மாச ததோ பரதம் பரதாக்ரஜ  -என்கிறபடியே
இத்தை பலகாலும் அருளிச் செய்து –
ஸ்ரீ பரத ஆழ்வானை உகப்பித்து -மீள விட்டு -எழுந்து அருளுகையாலே –
மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து போய் -என்கிறார் –

பணயம் ஆவது –
விஸ்வாச ஹேதுவாய் உள்ளது

வான் பணையம் -என்கையாலே
மகா விஸ்வாச ஹேதுவாய் உள்ளது என்னும் இடம் தோற்றுகிறது

வான் -என்று
வலியதால் –
பெருமை யாதல் –

——–

குவலயமும் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கு அருளி 

கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத்
துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வான் கானடை
அம் கண்ணன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2 1-8 –

குவலய துங்க கரியும் –
பூமியில் யானைகள் எல்லாவற்றிலும் -விஞ்சின சத்ருஜ்ஜயன் முதலான யானைகளும் –
பரியும் -அப்படியே லோக விலஷனமான குதிரைகளும் –
இராச்சியமும் -அகண்டகமான ராஜ்யமும்
எங்கும் -இஷ்வாகூணா மியம் பூமி  ஸ்சைல வன காநனா-என்கிறபடியே
எழுந்து அருளுகிற காடு தானும் –
பரதற்கு அருளி
கைகேயி வர அனுகுணமாக சக்ரவர்த்தி வசனத்தின் படியே ஸ்ரீ பரதாழ்வானுக்கு கொடுத்து –

—————

விடை கொடுத்துத்

———

திருவுடை திசைக் கருமம் திருந்தப்

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய  திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-

செரு உடைய திசைக் கருமம் திருத்தி –
செரு -என்று யுத்தம்
செரு உடைய திசை-என்று தஷிண திக்கை சொல்லுகிறது
இத் திக்கிலே இறே ராவணாதி ராஷசர் எல்லாம் கூடிக் கொண்டு இருந்தது

இந்த திசைக் கருமம் திருத்துகை யாவது
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு (திருவாய் -7-5 )-என்கிறபடியே
தன்னுடைய அபிமான அந்தர்பூதமான நாட்டை நலிந்து திரிகிற ராஷசர் ஆனவர்களை
இருந்த இருந்த இடங்களிலே தேடிச் சென்று கொன்று -(சென்று கொன்ற வீரனார் )
ஜனஸ்தானத்தில் இருந்த ராஷசரை முதலற முடித்த விசேஷத்தைக் கேட்டு –

ராவணன் வந்து –
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எழுந்து அருளி இருக்கச் செய்தே  –
ஸ்ரீ பிராட்டியை பிடித்துக் கொண்டு போக –
அது நிமித்தமாக

கரிஷ்யே மைதிலீ ஹேதோர் அபிசாசம ராஷசம் -என்று சங்கல்பித்து –
அவர்களை தேடித் திரியச் செய்தே –
ராஜ்ய தாரங்களை இழந்து ஜூரம் (சுரம் -ருஷ்ய சிங்க மலை என்றுமாம் )அடைந்து கிடந்த
ஸ்ரீ மகாராஜரைக் கண்டு -அவரோடு உறவு கொண்டு –
அவருக்கு சத்ருவான வாலியை நிரசித்து –
அவரை ராஜ்ய தாரங்களோடு கூட்டி –

பின்பு அவரையும் அவரது பரிகிரகத்தையும் துணையாகக் கொண்டு
கடலை அணை செய்து –
மறுகரை அதனாலே ஏறி (பெருமாள் திருமொழி )-என்கிறபடியே
அவ் வழியாலே இலங்கையிலே போய் புக்கு
எரி நடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு -என்கிறபடியே
இலங்கை பாழ் ஆம் படி ராவணனுடைய பரிகரமான ராஷசரை அடையக் கொன்று
பின்பு ராவணன் தன்னையும் முடித்து –
இலங்கைக்கு ராஜாவாக ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அபிஷேகம் பண்ணுவிக்கை

——–

போய்த் தண்ட காரண்யம் புகுந்து

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ பேயாழ்வாரும் ஸ்ரீ திருமழிசைப் பிரானும் பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள்-அன்யாப தேச–திருத்தாயார் பாசுரம் —

April 7, 2023

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -69-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இத் திருவந்தாதிகள் எல்லா வற்றுக்குமாக
இப்பாட்டை அன்யாப தேசமாக
நிர்வஹித்துப் போருவது ஓன்று உண்டு –

அதாகிறது
ஆழ்வாரான அவஸ்தை   போய்
பகவத்  விஷயத்திலே அபி நிவிஷ்டை யானாள் ஒரு  பிராட்டி
அவஸ்தையைப் பஜித்து
அவளுடைய பாசுரத்தையும்
செயல்களையும்
திருத் தாயார் சொல்லுகிறாள்  –

—————————————————————————————

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

பதவுரை

வெற்பு என்று–ஏதேனும் ஒரு மலையைச் சொல்லநினைத்தாலும்
வேங்கடம்–திருமலையைப் பற்றி
பாடும்–பாடுகின்றாள்,
கற்பு என்று–குல மரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய்–விலக்ஷணமான திருத்துழாயை
கரு குழல் மேல்–(தனது) கரிய கூந்தலில்
சூடும்–அணிந்து கொள்ளுகிறாள்.
மல்–மல்லர்களை
பொன்ற–பொடி படுத்தின
நீண்ட தோள்–நீண்ட திருத் தோள்களை யுடைய
மால்–ஸர்வேச்வரன்
கிடந்த–சயனித்திருக்கப் பெற்ற
நீள் கடல்–பரிந்த திருப்பாற் கடலிலே
நீராடுவான்–தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம்–விடிந்த விடிவுகள் தோறும்
புகும்–புறப்படுகிறாள்.

—————————————————————————————

வியாக்யானம் –

வெற்பு என்று வேங்கடம் பாடும் –
பாடுகை
சூடுகை
குளிக்கை
முதலான
லோக  யாத்ரையும்
இவளுக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும் –

ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் புக்கால் ஆகிலும்
திருமலையைப் பாடா நிற்கும்
திருமலையை ஒழிய
வேறு ஒரு மலை அறியாள் –

வியன் துழாய் கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் –
ஏதேனும் ஒன்றைச் சூட நினைத்தாள் ஆகில் –
திருத் துழாயைத்
தன் குழலிலே வையா நிற்கும் –

வியன் துழாய் –
விஸ்மயமான திருத் துழாயை-

கற்பு என்று சூடும் –
இக்குடிக்கும் மர்யாதையாய்ப் போருவது ஒன்று என்று –
பாதி வ்ரத்ய தர்மம் -என்னவுமாம் –

சூடும் கருங்குழல் மேல் –
நாறு பூச் சூட அறியாள்
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் – திருப்பல்லாண்டு -9-
என்னும்படியே
திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்-

மற்பொன்ற நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான் பூண்ட நாள் எல்லாம் புகும் —-
இனி ஓர் இடத்தே   நீராட வென்று   நினைத்தாள் ஆகில்
மல்ல ஜாதியாகப் பொடி படும்படி
வளர்ந்த திருத் தோள்களை யுடைய  சர்வேஸ்வரன்
சாய்ந்து அருளின
பரப்பை உடைத்தான
கடலிலே நீராடுகைக்காக
விடிந்த விடிவுகள் தோறும் புகா நிற்கும் –

மற்பொன்ற நீண்ட தோள்-
விரோதி நிரசனத்துக்காக வளர்ந்த தோள் –

மால் கிடந்த –
வ்யாமுக்தனானவன் கிடந்த –

நீள் கடல் நீராடுவான் –
திருப்பாற் கடல் ஒழிய
வேறு ஒன்றில் குளித்தால்
விடாய் கெடாது -என்று இரா நின்றாள் –

அன்றிக்கே –
பிரகரணத்தில் கீழும் மேலும்
அந்யாப தேசம் இன்றிக்கே இருக்க
இப்பாட்டு ஒன்றும் இப்படி கொள்ளுகிறது என் -என்று
பரோபதேசமாக நிர்வஹிப்பார்கள் –

அப்போது
அம்மலை அம்மலை என்று வாயாலே ஒரு மலையை வாயாலே சொல்லப்
பார்த்தி கோளாகில் -திருமலையைப் பாடும் கோள்-

ஒரு பூச்சூட நினைத்தி கோள் ஆகில்
அவன் உகக்கும் திருத் துழாயைச் சூடும் கோள் –

ஒன்றிலே இழிந்து ஸ்நானம் பண்ணப் பார்த்தி கோள் ஆகில்
ப்ராத ஸ்நானம் பண்ணப் பார்த்தி கோள் ஆகில்

அவன் சாய்ந்த கடலிலே நாடோறும்
அவகாஹிக்கப் பாரும் கோள் –

இத்தால்
அவனோடு ஸ்பர்சம் உள்ள தீர்த்தங்கள் எல்லா வற்றுக்கும் உபலஷணம்-

மற்பொன்ற நீண்ட தோள்-
கொன்று வளர்ந்த தோள் –

பூண்ட நாள் எல்லாம்-
விடிந்த விடிவுகள் எல்லாம்

பாடும் –
பாடுங்கோள்-

சூடும் –
சூடுங்கோள்-

புகும் –
புகுங்கோள்-

—————————————————

ஆழ்வாரான அவஸ்தை போய் ஒரு பிராட்டி அவஸ்தியைப் பஜித்து
அவளுடைய தசையை தாயார் சொல்லுகிறாள் –

இப்படிப் பட்ட திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து
தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் –
அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் –

(முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60–பிரஸ்தாபம் வந்தாலே -திருவேங்கடம் என்று கற்கும் வாசகம் )

(முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள்  என்பதோர்   தேசிலள்  என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கண புரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே–8-2-9-)

(பாடும் -சூடும் -நீராடுவான்- புகும் -மூன்று வினைச் சொற்கள்
திருத் துழாய் சூடிக் கொள்ள பாசுரம் –
குலசேகரப் பெருமாள் குஹ்யதே -திருவரங்கம் போல் இவள் திருவேங்கடம் தினம் தினம்-பூண்ட நாள் எல்லாம் புகும்)

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

பதவுரை

வெற்பு என்று–ஏதேனும் ஒரு மலையைச் சொல்ல நினைத்தாலும்
வேங்கடம்–திருமலையைப் பற்றி
பாடும்–பாடுகின்றாள்,-
கற்பு என்று–குல மரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய்–விலக்ஷணமான திருத் துழாயை
கரு குழல் மேல்–(தனது) கரிய கூந்தலில்
சூடும்–அணிந்து கொள்ளுகிறாள்.
மல்–மல்லர்களை
பொன்ற–பொடி படுத்தின
நீண்ட தோள்–நீண்ட திருத் தோள்களை யுடைய
மால்–ஸர்வேச்வரன்
கிடந்த–சயனித்திருக்கப் பெற்ற
நீள் கடல்–பரந்த திருப்பாற் கடலிலே
நீராடுவான்–தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம்–விடிந்த விடிவுகள் தோறும்
புகும்–புறப்படுகிறாள்.

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்-
லோக யாத்திரையும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயே
திருமலையை ஒழிய வேறு ஒரு மலையையும் அறியாள்-

(நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க   வினி  யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-)

கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் —
காட்டுப் பூ சூடாள்-
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்-என்கிறபடியே
விஸ்மயமான திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்–

(திருத் துழாய் ஒன்றே இவனைக் காட்டும் பூ)

(வாராயின முலையாளிவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நன்றோயிது தெய்வத் தண்ணந்துழாய்
தாராயினும், தழையாயினும் தன் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே-திரு விருத்தம் )

கற்பு என்று பாதி வ்ரத்யம் –

(அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10-)

மற்பொன்ற-நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் —
விரோதி நிரசனத்துக்காக வளர்ந்த தோளை யுடையனாய் –
வியாமுக்தனானவன் கிடந்த நீள் கடலிலே
விடிந்த நாள் எல்லாம் புகா நின்றாள்-
திருப் பாற் கடல் ஒழிய வேறு ஒன்றில் குளித்தால் விடாய் கெடாது என்று இருக்கிறாள்

இப் பிரகரணத்தில் கீழும் மேலும் அந்யாபதேசம் இன்றிக்கே இருக்க
இப்பாட்டு ஒன்றும்
இப்படிக் கொள்ளுகிறது என் என்றும் நிர்வஹிப்பர்கள்-

(சூடும் பாடும் நீராடும் -வினை முற்றுச் சொற்கள்-நம்மைப் பார்த்து சொல்வதாக -தாமான தன்மை)

அம்மலை இம்மலை என்று ஒன்றைச் சொல்லக் கடவி கோள் இறே –
ஆன பின்பு திருமலையைப் பாடுங்கோள்-

ஒரு பூவைச் சூடக் கடவி கோள் இறே –
ஆன பின்பு வகுத்தவன் உகக்கும் திருத் துழாயைச் சூடுங்கோள்

பிராதஸ் ஸ்நானம் பண்ணக் கடவி கோள் இறே –
ஆன பின்பு விரோதி நிரசன சீலனானவன் கிடந்த திருப் பாற் கடலிலே முழுகுங்கோள்–

(மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -எங்கு சயனித்து இருந்தாலும் பாற் கடல் போலவே கொள்ளலாம்)

பாடோமே எந்தை பெருமானைப் பாடி நின்று
ஆடாமே ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து
சூடாமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம்
கூடாமோ கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே —ஸ்ரீ பெரிய திருமொழி-11-3-8-

——————————————————

திருமலையைப் பெற்று மற்று ஒன்றுக்கு உரியேன் ஆகாதே க்ருதார்த்தன் ஆனேன் –
நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார் –

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்-40-

பதவுரை

வெற்பு என்று–பலமலைகளையும் சொல்லி வருகிற அடைவிலே
வேங்கடம் பாடினேன்–திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
வீடு ஆக்கி நிற்கின்றேன்–‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்–‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘
என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற–ஓதப்படுகிற
நூல்–வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த–வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
நூலாட்டி கேள்வனார்–லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்–திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்து நிற்கின்றேன்.
காண் – முன்னிலையசை

யாத்ருச்சிகமாகத் திருமலை என்னும் காட்டில்
ப்ரீதி பூர்வகமாகத் திருமலையை அனுசந்தித்தேனாய்க்
க்ருதக்ருத்யனாய்ப் பிறருக்கும் மோஷ பிரதனானேன்

இப்பேற்றை நின்று அனுசந்திப்பதும் செய்யா நின்றேன் –

பரோபதேசம் தவிர்ந்து சாஸ்ரைக சமதி கம்யனாய்-
ஸ்ரீ யபதி யுடைய  திருவடிகள் ஆகிற
வலையிலே அகப்பட்டு மற்று ஒன்றுக்கு உரித்தாய்த்திலேன் நான் –
நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார்-

—————————————————————

செய்த கார்யமோ மிகச் சிறியது
பெற்ற பலனோ மிகப் பெரியது என்கிறார் இதில்

(திருமாலிருஞ்சோலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
சாஸ்திரமும் அறியாதே பிறரும் அறியாதே நாமும் அறியாமல் ஈஸ்வர சங்கல்பம் –
ஸூஹ்ருத தேவர் -வேறே யாரும் இல்லையே
திருமலை கூட சொல்லாமல் வெறும் வெற்பு மட்டுமே சொன்னேன்
மலை என்றாலே திருமலையைத் தான் குறிக்கும்
வரவாறு ஓன்றும் இல்லை- வாழ்வு இனிதால் -விதி வாய்க்கின்றது காப்பார் யார்
நூல் வலையும் கால் வலையும் -பிரசித்த உபன்யாச தலைப்பு )

அப்பிள்ளை உரை -அவதாரிகை –
திருமலையை யாதிருச்சிகமாக சொன்ன மாத்திரத்தாலே க்ருதக்ருத்யனாய் விட்டது
ஸ்ரீயபதியின் திருவடிகளில் மற்ற ஒன்றுக்கு ஆளாகாதபடி அகப்பட்டேன்
என் நெஞ்சே நீயும் அவனை அனுபவி
(காண் -என்றதன் அர்த்தம் இதில் ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் -)

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால் வலையில் பட்டிருந்தேன் காண்-40–

பதவுரை

வெற்பு என்று–பல மலைகளையும் சொல்லி வருகிற அடைவிலே
வேங்கடம் பாடினேன்–திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
வீடு ஆக்கி நிற்கின்றேன்–‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்–‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘
என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற–ஓதப்படுகிற
நூல்–வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த–வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
பட்டிருந்த-பட்டு இருந்த பிரித்தே அர்த்தம்
நூலாட்டி கேள்வனார்–லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்–திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்து நிற்கின்றேன்.
பட்டிருந்த-பட்டு இருந்த பிரித்தே அர்த்தம்
காண் – முன்னிலையசை

மலை என்று சொல்லும் போது திருமலையைப் பாடா நின்றேன்
அதனால் மோக்ஷத்தை யுண்டாக்கிக் கொண்டு இரா நின்றேன்
ஸ்திரமாக இருந்து பலம் பெற்ற படியை தியானியா நின்றேன்
அத்யயனம் செய்யப்பட ஸாஸ்த்ரம் ஆகிற வலையில் -அகப்பட்ட -ப்ரதிபாதிக்கப் பட்ட –
ஸ்ரீ தேவியின் வல்லபனான ஸர்வேஸ்வரனுடைய திருவடிகள் ஆகிற வலையில் அகப்பட்டுக் கொண்டேன் பாருங்கோள் –

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் –
விசேஷித்து ஓன்று செய்தது இல்லை –
அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி
இத்தைச் சொல்ல -திருமலை -ஆயிற்று –

வீடாக்கி நிற்கின்றேன் –
அநேக யத்னத்தால் பெரும் மோஷத்தை-
இச் சொல்லாலே உண்டாக்கிக் கொண்டு
நின்று ஒழிந்தேன்

நின்று நினைக்கின்றேன் –
எது சொல்லிற்று
எது பற்றிற்று என்று-
விசாரியா நின்றேன்

கற்கின்ற நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டிருந்தேன் காண்
ஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிக்கப் படுகிற-
பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன்
திருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன்

(யாதிருச்சிகமாக கொல்லி மலை குடமலை இமயமலை போலே
மலைத் தொடர்கள் பேர்களை சொல்லுமா போல்
என்னை அறியாமல் திருவேங்கட மலை என்றும் சொல்லி வைத்தேன்
பெற்ற பலமோ பரம புருஷார்த்தமாக இருந்ததே -)

(மாதவன் பேர் சொல்லுவதே வேதத்தின் சுருக்கு
யந் ந தேவா ந முனயோ ந ச அஹம் ந ச சங்கர
ஜா நந்தி பரமே சஸ்யே தத் விஷ்ணோ பரமம் பரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மந
ஸ்வயைவ ப்ரபயா டாஜன் துஷ் ப்ரேஷம் தேவதா ந வைவ –பாரதம்
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் -பெரிய திருவந்தாதி –59-
இந்த ஆச்சர்யம் நினைத்து ஸ்தப்த்தனானேன் -நிலை நின்றேன்
நூல் வலை -வேத ஸாஸ்த்ர வலை -அதில் சிக்கிய எம்பெருமானும் பிராட்டியும்
வேதைஸ் ச ஸர்வைர அஹம் ஏவ வேத்ய –15-15-வேத ப்ரதிபாத்யன்
அவனைச் சொன்ன இடங்கள் எல்லாம் பிராட்டியையும் சொல்லிற்று ஆகவுமாம் அன்றோ –
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிரிதில்லை
பூவின் மேல் மாது வாழ் மார்பினாய்
நான் முந்தி நான் முந்தி என்று ரக்ஷிக்கும் மிதுனம் அன்றோ –
அந்தரங்க விசேஷணம் ஸ்வரூப நிரூபக தர்மம்
எங்கு அவனைச் சொன்னாலும் அஹம் ஏவ வேத்ய -என்றாலும் -அப்ருத்க் ஸித்த -அவளையும் குறிக்கும்
அஹந்தாவே அவள்
ஸ்ரீ யபதி -விஷ்ணு பத்னி -இருவருக்கும் ஒவ்வொருவரை வைத்து திரு நாமங்கள் –
சாதனமாக இருந்தால் சிக்க மாட்டேன்
சிக்கி வைத்தவனும் அவனே -)

அப்பிள்ளை உரை
அல்லாத மலைகளை சொல்லுகிறோ பாதி
சாமான்யேன பொதுவாக -பிரபாவம் அறியாமல் -இதுவும் ஒரு மலை என்று
கோல் விழுக்காட்டாலே
வெற்பு -சொன்னாலும் -பாட்டாக ஆக்கிக் கொண்டான்
மோக்ஷமே தருமவன்
ப்ரீதிக்குப் போக்கு வீடாக -பாடினேன் -ஆகக் கொண்டான் அவன்
என்னளவு அன்றிக்கே -என்னுடன் சேர்ந்தார்க்கும் பெரு வருத்தத்துடன் பெறக் கடவ
மோக்ஷத்தை உண்டாக்கிக் கொண்டு -நிச்சயமாக -உறுதியாக க்ருதக்ருத்யனாகா நின்றேன்
வீடாக்கி நிற்கின்றேன் -வீடாக்கினேன் என்று சொல்லாமல்
எது சொல்லிற்று எது பற்றிற்று
சாதன லாகவத்தையும்
சாத்ய கௌரவம்
ஒரு படிப் பட அனுசந்தித்து -சிந்தித்து
வித்தனாகா நின்றேன்
(சஞ்சலம் ஹி மனஸ்ஸூ -இருக்க இதுவும் ஒரு ஆச்சர்யம் தானே )
ச கிரமமாக ஓதப்படுகிற -கற்கின்ற வேத சாஸ்த்ரத்தால்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவி சால்யமாக
கல் வெட்டு போல்
விஷ்ணு பத்னி என்கிற அலர்மேல் மங்கைக்கு வல்லபனான
திரு வேங்கடமுடையான் அடிக்கீழ் அமர்ந்து புகுந்து –அடியார் வாழ்மின் -திருவடியில் வாழ்ச்சி –
என்று அருள் கொடுக்கும்
திருவடிகளாகிற வலையில் அகப்பட்டு -மற்ற ஒன்றுக்கு உரித்தாக்காமல்
நல் தரிக்கப் பெற்றேன் —
நெஞ்சே நீயும் அவனைக் கண்டு அனுபவிக்கப் பார் -என்கிறார்
முடிப்பான் சொன்ன ஆயிரம்
கிடைக்கும் உறுதி அறிந்தால் போதுமே
விஷ்ணு பத்னிக்கு பார்த்தா என்றே அடையாளம்
அஸ்ய ஈஸா நா ஜகத் விஷ்ணு பத்னி
ஒவ்வொருவரும் மற்ற ஒருவருக்கு நிரூபகம்

—————————————————————

வெற்பென்று வேங்கடம்‌ பாடும்‌ வியன் துழாய்‌
கற்பென்று சூடும்‌ கருங் குழல் மேல்‌ – மற்பொன்ற
நீண்ட தோள்‌ மால் கிடந்த நீள் கடல்‌ நீராடுவான்‌
பூண்ட நாள்‌ எல்லாம்‌ புகும்‌. (ஸ்ரீ பேயாழ்வார்‌ -மூ. தி, 69) வியன் துழாய்‌ – வியக்கத்தக்க துளசி;

மற்பொன்ற – மல்‌ பொன்ற, மல்லர்கள்‌ அழியும்படியான;
மால்‌ – திருமால்‌;
நீள் கடல்‌ -திருப்பாற்கடல்‌.

ஆழ்வார்‌ ஒரு தலைவி நிலையை அடைந்து பாடுவது முதலிய செயல்களை அவளது திருத்தாயார்‌ கூறுவதாக இச்செய்யுள்‌ அமைந்துள்ளது.
இது தாய்ப்பாசுரம்‌ என்பர்‌.
என்‌ மகளானவள்‌ ஏதேனும்‌ ஒரு மலையைப்‌ பற்றிய பேச்சு நேர்ந்தாலும்‌, திருவேங்கட மலையைப்‌ பற்றிப்‌ பாடுகிறாள்‌.
தனது கற்புக்குத்‌ தகுந்ததென்று வியக்கத்தக்க துளசியைத்‌ தனது கருங்கூந்தலில்‌ சூடிக் கொள்கிறாள்‌.
மல்லர்கள்‌ அழியும்படியான நீண்ட தோள்களை யுடைய திருமால்‌ பள்ளி கொண்டுள்ள பரந்த திருப்பாற்கடலிலே
நீராடுவதற்காக விடிந்த விடிவுகள்‌ தோறும்‌ புறப்படுகின்றாள்‌.
இப் பாசரத்தில்‌
‘கற்பென்று” பாதி வ்ரத்யத்தையும்‌,
கருங்குழல்‌” என்று பெண்ணின்‌ கூந்தலையும்‌ கூறுவதால்‌,

‘என்‌ மகள்‌’ என்று ஒரு பெண்ணை எழுவாயாகக்‌ கொள்ள வேண்டும்‌.
மற்பொன்ற: மல்லர்களை யழித்த;
கடலில்‌ புகுந்து மதுகைடபர்‌ என்னும்‌ அசுரர்களைக்‌ கொன்றதையும்‌,
கிருஷ்ணாவதாரத்தில்‌ சாணூரன்‌, முஷ்டிகன்‌ என்கிற மல்லர்களை அழித்ததையும்‌ கூறுகிறார்‌.
பூண்ட நாள்‌ எல்லாம்‌: பூண்ட – பூட்டிய) சூரியனுடைய தேரிலே குதிரையைப்‌ பூட்டிய நாள்‌ எல்லாம்‌’ என்கிறபடியே,
“விடிந்த விடிவுகள்‌ தோறும்‌’ என்று பொருள் பட்டது.
எம்பெருமானை அனுபவித்தல்‌ பல வகைப்பட்டிருக்கும்‌:
அவனுடைய திரு நாமங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌,
திருக் கல்யாண குணங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌,
திவ்ய சேஷ்டிதங்களை (அவதாரச்‌ செயல்களைச்‌) சொல்லி அனுபவித்தல்‌,
வடிவழகை வருணித்து அனுபவித்தல்‌,
அவனுகந்தருளிய திவ்ய தேசங்களின்‌ வளங்களைப்‌ பேசி அனுபவித்தல்‌,
௮ங்கே அபிமானமுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களின்‌ பெருமையைப்‌ பேசி அனுபவித்தல்‌
என்று இப்படிப்‌ பலவகைப்பட்டிருக்கும்‌ பகவதனுபவம்‌.
இவ் வகைகளில்‌ பரம விலக்ஷ்ணமான மற்றொரு வகையுமுண்டு:
அதாவது –
தாமான தன்மையை (ஆண்மையை/ விட்டுப்‌ பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக்கொண்டு
வேற்று வாயாலே பேசி அனுபவித்தல்‌ (இது அந்யாபதேசம்‌ எனப்படும்‌).
இப்படி அனுபவிக்கும்‌ இடத்தில்‌ தாய்ப் பாசுரம்‌, தோழிப் பாசுரம்‌, மகள்‌ பாசுரம்‌ என்று மூன்று வகுப்புகளுண்டு.
இவை நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்களது அருளிச்செயல்களில்‌ (பாட்டுகளில்‌) விசேஷமாக வரும்‌.
முதலாழ்வார்களின்‌ திருவந்தாதிகளில்‌ ஸ்திரீ பாவனையினாற்‌ பேசும்‌ பாசுரம்‌ வருவதில்லை.

ஸ்ருங்கார ரஸத்தின்‌ ஸம்பந்தம்‌ சிறிதுமின்றியே கேவலம்‌ சுத்த பக்தி ரஸமாகவே பாசுரங்கள்‌ அருளி செய்தவர்கள்‌ முதலாழ்வார்கள்‌.
ஆயினும்‌ இப் பாசுரம்‌ ஒன்று தாய் வார்த்தையாகச்‌ செல்லுகிறது.
பேயாழ்வாராகிய பெண் பிள்ளையின்‌ நிலைமையை அவளைப்‌ பெற்று வளர்த்த திருத்தாயார்‌ பேசுவதாக அமைக்கப்பட்ட பாசுரம்‌ இது.
“என்னுடைய மகளானவள்‌” என்ற எழுவாய்‌ இதில்‌ இல்லையாதலால்‌ கற்பித்துக் கொள்ள வேண்டும்‌.
இப்பிரபந்தத்தில்‌ அந்யாபதேசப்‌ பாசுரம்‌ வேறொன்றும்‌ இல்லாதிருக்க இஃ்தொன்றை மாத்திரம்‌
இங்ஙனே தாய்ப் பாசுரமாகக்‌ கொள்ளுதல்‌ சிறவாதென்றும்‌,
“என்‌ மகள்‌” என்ற எழுவாய்‌ இல்லாமையாலும்‌
இவ் வர்த்தம்‌ உசிதமன்று என்றும்‌ சிலர்‌ நினைக்கக்‌ கூடுமாதலால்‌
இப் பாசுரத்திற்கு வேறு வகையான நிர்வாஹமும்‌ பூர்வர்கள்‌ அருளிச்‌ செய்துள்ளனர்‌.
எங்ஙனே எனில்‌:
”பாடும்‌, சூடும்‌, புகும்‌! என்ற வினை முற்றுக்களை முன்னிலையில்‌ வந்தனவாகக்‌ கொண்டு,
**உலகத்தவர்களே! நீங்கள்‌ ஏதாவதொரு மலையைப்‌ பாடவேண்டில்‌ திருவேங்கடமலையைப்‌ பாடுங்கள்‌;
ஏதேனும்‌ ஒரு மலரைக்‌ குழலில்‌ சூடவேண்டில்‌ திருத்துழாய்‌ மலரைச்‌ சூடிக்கொள்வதே
சேஷத்வத்திற்கு உரியதென்று கொண்டு அதனைச்‌ சூடுங்கள்‌;
நீராடுவதற்குத்‌ திருப்பாற்கடலிலே சென்று புகுங்கள்‌” என்பதாக.
இங்கே பெரியவாச்சான்‌ பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி காண்மின்‌:
‘*இப்பிரகரணத்தில்‌ (பிரபந்தத்தில்‌) கீமும்‌ மேலும்‌ அந்யாபதேசமின்றிக்கே யிருக்க
இப்பாட்டொன்றும்‌ இப்படிக்‌ கொள்ளுகிறதென்னென்று நிர்வஹிப்பர்கள்‌…
திருமலையைப்‌ பாடுங்கோள்‌… திருத்துழாயைச்‌ சூடுங்கோள்‌…
விரோதி நிரஸத சீலனானவன்‌ கிடந்த திருப்பாற்கடலிலே முழுகுங்கோள்‌” என்று.
திருவேங்கடத்தின்‌ புகழைப் பாடியும்‌, துளசியைப்‌ போற்றிச்‌ சூடியும்‌ வந்தால்‌,
நாம்‌ திருப்பாற்கடலிலே நித்யம்‌ நீராடலாம்‌; நிச்சயம்‌ வைகுந்தம்‌ புகுவோம்‌ என்பது குறிப்பு …

——————————–

வெற்பென்று வேங்கடம்‌ பாடினேன்‌ வீடாக்கி
நிற்கின்றேன்‌ நின்று நினைக்கின்றேன்‌ – கற்கின்ற
நூல்வலையில்‌. பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்‌
கால்வலையில்‌ பட்டிருந்தேன்‌ காண்‌ (ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ -நா. தி, 40),

வீடு – மோட்சம்‌;
நூல் வலை – வேதங்களாகிய வலை;
நூலாட்டி – வேதமாகிய நூலில்‌ போற்றப்படும்‌ லட்சுமி;
கேள்வனார்‌ – கணவர்‌, இங்கே திருமால்‌.

மலைகளின்‌ பெயர்களைச்‌ சொல்லி வருகையில்‌, தற்செயலாக வேங்கடமலை என்றேன்‌;
இதன்‌ பலனாகவே மோட்சம்‌ நிச்சயம்‌ என்றுணர்ந்து நிற்கின்றேன்‌…
“*நாம்‌ சொன்ன சிறிய சொல்லுக்குப்‌ பெரிய பேறு கிடைத்த பாக்கியம்‌ எத்தகையது!” என்று
நினைத்து, வியந்து, மலைத்துப்‌ போனேன்‌!
ஓதப்படுகின்ற வேத சாஸ்திரங்களாகிய வலையில்‌ அகப்பட்டிருக்கும்‌ லக்ஷ்மீநாதனின்‌
திருவடிகளாகிய வலையில்‌ அகப்பட்டு நிலைத்து நிற்கின்றேன்‌.
“மலை’ என்று வருகிற பெயர்களை யெல்லாம்‌ அடுக்காகச்‌ சொல்லுவோம்‌ என்று விநோதமாக முயற்சி செய்து
‘பசு மலை, குருவி மலை’ என்று பலவற்றையும்‌ சொல்லி வருகிற அடைவிலே,
என்னையும்‌ அறியாமல்‌ ‘திருவேங்கடமலை’ என்று என்‌ வாயில்‌ வந்துவிட்டது
இவ் வளவையே கொண்டு எம்பெருமான்‌ என்னைத்‌ திருவேங்கடம்‌ பாடினவனாகக்‌
கணக்கு செய்து கொண்டான்‌ என்பது இதன்‌ கருத்து.
நின்று நினைக்கின்றேன்‌: நாம்‌ புத்தி பூர்வமாக ஒரு நல்ல சொல்லும்‌ சொல்லாது இருக்கவும்‌,
எம்பெருமான்‌ தானே மடிமாங்காயிட்டு
இதனையே அநுஸந்தித்து ஈடுபட்டு நின்றேன்‌ என்கை.
கால்வலையிற்‌ பட்டிருந்தேன்‌? மூன்றாமடியில்‌ சாஸ்திரங்களை எம்பெருமானுக்கு வலையாகவும்‌,
ஈற்றடியில்‌ அவ்வெம்பெருமான்‌ திருவடிகளைத்‌ தமக்கு வலையாகவும்‌ அருளிச்‌ செய்தார்‌.
எம்பெருமானை சாஸ்திரங்களிலிருந்து எப்படிப்‌ பிரிக்க முடியாதோ அப்படியே என்னை
அப்பெருமான்‌ திருவடிகளிலிருந்து பிரிக்கமுடியாது என்றவாறு.

எம்பெருமான்‌ ஒரு வலையில்‌ அகப்பட்டான்‌, –
நானொரு வலையில்‌ அகப்பட்டேன்‌ என்று சமத்காரமாகச்‌ சொல்லுகிறபடி.
வேதங்களையும்‌, ஸ்ம்ருதி இதிகாச புராணங்களையும்‌ சம்பிரதாயமாக ஓதும்‌ முறையைப்‌ பின்பற்றி
ஆராய்ந்தபோது, எம்பெருமானும்‌, பெரிய பிராட்டியும்‌ (லட்சுமியும்‌) இருவரும்‌ நமக்குத்‌ தெய்வம்‌ என்ற தெளிவு உண்டாயிற்று…
சரணாகதரைக்‌ காப்பதாகக்‌ கூறி ௮வன்‌ அதுபடி நடக்கவில்லையாகில்‌ நூலாட்டி (லட்சுமி)
அந்நூல்களே * எதற்கென்று கேள்வனை (ஸ்ரீநிவாஸனைக்‌) கேட்பாள்‌.
ஏதோ வெற்பொன்றைப்‌ பாட நினைத்த போதும்‌ அவனது வேங்கடத்தைப்‌ பாடும்படியாயிற்று,
அதனால்‌ அதை எனக்கு வீடாக்கினான்‌.
அதே மோட்சத் தானம்‌.
இப்படி எனக்கு வாய்த்ததற்கு யானே வியந்து அசையாது நின்று என்ன வாத்ஸல்யமென விசாரியா நின்றேன்‌ (ஆராய்ந்தேன்‌).
இனி நிலைத்து நின்று இடையூறின்றி வேங்கடத்தையே தியானிக்கவும்‌ வாய்த்தது என்றபடி.
இங்கே பாடுதல்‌, நிற்றல்‌, நினைத்தல்‌ என்று வாக்கு, காயம்‌, மனோ ரூப முக்கரணங்களின்‌
வியாபாரங்கள்‌ (செய்கைகள்‌) மொழியப்‌ பெற்றன.

———————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள் -நான்முகன் மடியில் குழவியாய் ராவணன் தலைகளை எண்ணிக் காட்டிய வ்ருத்தாந்தம் —

April 7, 2023

பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு-
நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான்-
கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய் தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு —முதல்  திருவந்தாதி–45-

(ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —மூன்றாம் திருவந்தாதி –77-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் திருவந்தாதி -44-

——————————

அவதாரிகை –

இப்படி இருக்கிறவனுடைய நீர்மை
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும்
நிலம் அன்று கிடீர்
என்கிறார் –

—————————-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு —45-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள் பணிந்த–திருநாபிக் கமலத்திற் பொருந்திய
மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆஸ்ரயித்த
வாள் அரக்கன்–கொடிய இராவணனுடைய
நீள் முடியை–நீண்ட பத்துத் தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு– அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே–பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க–அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;
நாமே அறிகிற்போம்–(எம்பெருமானுடைய நீர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.

————————————————————————

வியாக்யானம் –

ஆமே யமரர்க்கு அறிய –
ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனை அறிந்ததாகப் போமோ
இவர்களால் அறியப் போகாமைக்கு
மேன்மையோடு நீர்மையோடு வாசி இல்லை –

வது நிற்க –
அதுக்கு மேலே –

நாமே யறிகிற்போம் –
அதிசய ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளும் மதி கெட்டுக் கிடக்க
நாமே அவனை அறியப் புகுகிறோம்

அங்கன் அன்றிக்கே
அது கிடக்க
நாம் ஆகில் அவனை அறிவுதோம் -என்றுமாம் –
அவன் தானே காட்டக் கண்ட நமக்குக் காண வரிதோ –

நன்னெஞ்சே –
அவர்களுக்குக் காண ஒண்ணாமைக்கு அடி-தம் தம் நெஞ்சு தம்தாமுக்கு விதேயம் அல்லாமை –
விதேயமாகப் பெற்ற எனக்கு ஒரு குறைவுண்டோ –

பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை   –
அவர்கள் அறியாமைக்கு அடி சொல்லுகிறது

சர்வேஸ்வரன் உடைய திரு நாபீ கமலத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையனாய்த்
தபஸ் ஸாலே பெரியனாய் உள்ள ப்ரஹ்மாவின் காலில்
விழுந்த ராவணானவன்
இவன் பக்கலிலே தனக்கு வேண்டின வரம் எல்லாம் கொள்ளா நிற்க
அவ்வளவிலே ஒரு பாலகனாய் கொண்டு
அந்த ப்ரஹ்மாவின் மடியிலே இருந்து
கெடுவாய் உனக்கு இது கார்யம் அன்று கிடாய் -என்னும் இடத்தைத்
தன் திருவடிகளாலே கீறிக் காட்டி
அந்தர்த்தானம் பண்ணினான் ஆய்த்து-

இவன் அறுப்புண்ணப் புகுகிற தலைகள்
இவற்றைப் பூண் கட்டிக்  கொடுப்புதியாகில் உனக்கு
குடி இருப்பும் இழவு கிடாய் -என்னும்
இவற்றை தெரிவித்தான் ஆய்த்து –

பாதமத்தால் எண்ணினான் பண்பு –
எனக்கு போக்யமான திருவடிகளைக் கொண்டு கிடீர் கீறிக் காட்டிற்று

தனக்கும் கூட ஹிதம் அறியாதே
சூழ்த்துக் கொள்ளப் புக்கவனோ
சர்வேஸ்வரன் உடைய குணங்களை அறியப் புகுகிறான் –

————————————————————

(சாகா வரம் கொடுக்கும் சமயத்தில் இவன் குழந்தை ரூபத்தால் தலைகளைத் தொட்டுக் காட்டி அருளி
மூன்றாம் திருவந்தாதி -நான்முகன் திருவந்தாதி பாசுரங்கள் இதே போல் உண்டே)

இது அவன் காட்டக் கண்ட வருக்கு ஒழிய அல்லாதாருக்கு அறியப் போகாது -என்கிறார் –

இப்படி இருக்கிற அவன் நீர்மை ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் –

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு –45-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள் பணிந்த–திருநாபிக் கமலத்திற் பொருந்திய மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆஸ்ரயித்த(தப ஆலோசனை-ஸ்ருஷ்டிக்குத் தக்க ஞானம் கொண்டவன் )
வாள் அரக்கன்–கொடிய இராவணனுடைய
நீள் முடியை–நீண்ட பத்துத் தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு– அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே–பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க–அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;(நாய மாத்ம ஸ்ருதி )
நாமே அறிகிற்போம்–(எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.

ஆமே யமரர்க்கு அறிய –எத்தனையேனும் அதிசயித ஞானரான தேவர்களுக்கும் அறியப் போகாது என்கிறார்
வது நிற்க-நாமே யறிகிற்போம் –அவ் விடையாட்டம் நிற்க -நமக்கு அறிய தட்டு என் –
நன்னெஞ்சே -அவன் காட்டக் கண்ட நெஞ்சே (இதனாலே நல் விசேஷணம் )

பூமேய-மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை-பாதமத்தால் எண்ணினான் பண்பு –
ப்ரஹ்மாவின் மடியில் ஒரு சிறு பிள்ளையாய் கண் வளருவாரைப் போலே கிடந்தது -இவனுக்கு வரம் கொடுக்க வேண்டா
இது அநர்த்தமாம் -என்று ராவணன் தலைகளை தன் திருவடிகளாலே எண்ணினவனுடைய நீர்மையை அமரர்க்கு அறியவாமே -என்கிறது –

(அடிச்சியாம் –உன் கோலப்பாதம் தலை மிசை அணியாய் -10-3–என்றும் கதா புன என்றும் பிரார்த்திக்க பெறாமல் இவன் பெற்றானே)

இத்தால் ப்ரஹ்மாவினுடைய அறிவு கேடு சொல்லுகிறது -ஆமே -அபிமானிகளான ப்ரஹ்மாதிகளுக்கும் எளியனாம் –
தாள் பணிந்த வாளரக்கன்-புதுத் தண்டன் கண்டு இறுமாந்து விளைவது அறியாதே வரம் கொடுத்த படி —

(ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —மூன்றாம் திருவந்தாதி –77-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் திருவந்தாதி -44-

தப ஆலோசநே
யஸ்ய ஞான மயம் தபஸ் -தபஸ் என்று அறிவையே சொன்னபடி

அடிச்சியாம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா நின் கோலப்பாதம் -10-3-6- என்று நாங்கள் ஆசைப்பட்டுப் பிரார்த்திப்பதை
ஓர் அரக்கன் தலையிலே வைப்பதே -)

——————————————————–

இப்படி இருக்கிற அவன் நீர்மை ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் –

என் நினைவிலே நடக்கும் நல்ல நெஞ்சே -திரு நாபீ கமலத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக யுடையனாய் ஜகத் ஸ்ருஷ்டிக்கு
உபகரணமான தபஸ் சப்த வாசியான ஞானத்தை யுடையனான ப்ரஹ்மாவினுடைய கால் கீழே தலை மடுத்து
எனக்கு வரம் வேணும் என்று ஆஸ்ரயித்த சாயுதனான (ஆயுதம் கொண்ட )ராவணனுடைய ஒக்கத்தை யுடைத்தான தலைகளை
புதுக் கும்பீடு கண்டு இறுமாந்து -மேல் விளைவது அறியாமல் அந்த ப்ரஹ்மா அவனுக்கு வேண்டிய வரங்களை கொடுப்பதாக ஒருப்படுகிற அளவிலே

ஒரு பாலகனாய்க் கொண்டு அவன் மடியிலே வந்து ஆவிர்பவித்து அவைகள் அறுப்புண்ணப் போகும் தலைகள் என்னும் இடத்தை
எனக்கு நிரதிசய போக்யமான அந்த திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டி அந்த ப்ரஹ்மாவின் அனர்த்தத்தை பரிஹரித்த
சர்வேஸ்வரனுடைய குணங்களை -தங்கள் ஹிதம் அறியாமல் அனர்த்தத்தை சூழ்த்துக் கொள்ளக் கடவ
ப்ரஹ்மாதி தேவர்களுக்கு அறியப் போமோ –

அது கிடக் கிடாய் -அவன் அருளாலே தெளியக் காண வல்ல நாமே அறிக்கைக்கு சக்தர் ஆகா நின்றோம் –
பேர் அளவுடைய ப்ரஹ்மாதிகள் மதி கெட்டு நிலம் துழவா நிற்க நாமே அவனை அறிய புகா நின்றோம் -என்றுமாம் -(நைச்ய அனுசந்தானம் -அவனுக்கே தெரியாத பொழுது நாம் எங்கனம் அறிவோம் என்றவாறு )

—————————————————–

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்  —–77-

பதவுரை

ஆய்ந்த–ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான்–அருமையான வேதங்களை யுடையனான
நான் முகத்தோன்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில்–அழகிய மடியிலே
வாய்ந்த–நேர் பட்ட
குழவி ஆய்–இளங்குழந்தை யாயிருந்து கொண்டு
வாள் அரக்கன்–இராவணனுடைய
போது ஏய்ந்த–புஷ்ப மாலை பொருந்தின
முடி–தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான்–பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது–திருவடித்தாமரைகள்
நங்கட்கு–நமக்கு
ஆர்ந்த அரண்–குறையற்ற சரணம்.

—————————————————————————————-

வியாக்யானம் –

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன்-
சர்வேஸ்வரனாலே ஒதுவிக்கப் பட்டு
அழகிதாக ஆராய்ந்து
தரித்து
வேத வேதாந்த நிரூபணம் பண்ண வல்ல
சதுர்முகனுடைய –

நன் குறங்கில்-
நன்றான மடியிலே –
வாய்ந்த குழவியாய் –
நேர்பட்ட முக்த சிசூவானவனாய்
அழகிய பிள்ளையாய் –
ராவணன் தன வரம் பெறுகைக்காக
ப்ரஹ்மாவின் பக்கலிலே வந்து தண்டன் இட்டுக் கிடக்க
அவனும் தனக்கு
ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமையாலே
புதுக் கும்பீட்டைக் கண்டு இறுமாந்து
தங்கள் அநர்த்தம் அறியாதே
சொன்னது எல்லாம் கொடுக்கப் போக –
ப்ரஹ்மாவின் பக்கலிலே வந்து இவனாலே நோவு பட்டாலும்
நம்முடைய பாடே  இறே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து
அப்போது
சர்வேஸ்வரன் இவன் மடியிலே ஒரு பிள்ளையாய் வந்திருந்து
இவனுக்கு வரங்களை கனக்கக் கொடுப்புதியாகில்
நாடு குடி கிடவாது
உனக்கும் குடி இருப்பு அரிதாம்
ஆனபின்பு அவன் வத்யன் கிடாய் -என்னும் இடம் தோற்ற
அவனுடைய தலைகளைத் தன் திருவடிகளாலே கீறி
எண்ணிக் காட்டித் தான் அந்தர்த்தானம் பண்ணினான் –

வாளரக்கன் –
சாயுதனான ராஷசனுடைய –

ஏய்ந்த  முடிப்போது-
அறுக்கைக்குத் தகுதியான தலைகளிலே
மாலைகள் இட்டு வா வென்று –

மூன்று ஏழு என்று எண்ணினான் –
தன் மௌக்த்யம் தோற்ற எண்ணின படி யாய்த்து –

மூன்று ஏழு –
ஏழும் மூன்றும் என்னாதே  –

ஆர்ந்த அடிப்போது நங்கட்கு அரண்  –
அவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகள் ஆகிற
செவ்விப் பூ நமக்கு ரஷை-
அவனுடைய அபேஷிதம் செய்ய வற்றான திருவடிப்பூ
ஆகிஞ்சன்யராய்
அநந்ய பிரயோஜனரான
நமக்கும் அரண் –

ஆர்ந்த அடிப் பூ –
போக்யதையால் பரிபூரணமான
திருவடிகள் ஆகிற பூ –

———–

கீழ் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் பாபங்கள் எல்லாம் போம் என்றது-
இதில் அளவுடையரான ப்ரஹ்மாதிகளுக்கு வழி கேடாகப் புக்கால் பரிஹரிப்பான் அவனே என்கிறது –

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –

(காமம் ஆஸ்ரய துஷ்பூரம் நடைவேற முடியாத தப்பான காரியத்துக்காக தவம் செய்வார் ராவண ஹிரண்யாதிகள்
விளையப் போகும் அநர்த்தம் அறியாமல் வரங்களை தேவர்கள் அளிப்பார்கள்-இன்புறும் இவ் விளையாட்டுடையவன் -)

(சமுத்திர ராஜன் -மீறக்கூடாது என்று நீரே ஸ்ருஷ்ட்டி செய்தபின் எவ்வாறு வழி விடுவேன்
நளன் தபஸ் பண்ணி வரம் நொண்டி சாக்கு வைத்து அணை கட்டி
அனைத்துக்கும் ஸம் ஐயம் செய்து அன்றோ நீர் நிர்வஹிக்கிறீர்)

(கோலம் போல் ராமாயணம் பாரதம் -புள்ளி வைத்து கோலம் -கோலம் முடிந்ததும் புள்ளிகள் தெரியாதே
அனைத்துக்கும் தாத்பர்யங்கள் ஆச்சார்யர்கள் காட்டி அருளுகிறார்
உன்னுடைய விக்ரமம் ஒழியாமல் எல்லாம் நீயே காட்டிக் கொடுக்கிறாய் ஆழ்வாராதிகளுக்கு)

(ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும் (ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்)
பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில் உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||–ஶ்லோகம் 13 –

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?)

(ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு -ஸ்ரீ முதல் திருவந்தாதி- –45-)

(கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் அந்தாதி -44-)

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்  —–77-

பதவுரை

ஆய்ந்த–ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான்–அருமையான வேதங்களை யுடையனான
நான் முகத்தோன்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில்–அழகிய மடியிலே
வாய்ந்த–நேர் பட்ட
குழவி ஆய்–இளங்குழந்தை யாயிருந்து கொண்டு
வாள் அரக்கன்–இராவணனுடைய
போது ஏய்ந்த–புஷ்ப மாலை பொருந்தின
முடி–தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான்–பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது–திருவடித் தாமரைகள்
நங்கட்கு–நமக்கு
ஆர்ந்த அரண்–குறையற்ற சரணம்.

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன் —
சர்வேஸ்வரனாலே ஓதுவிக்கப் பட்டு வேதார்த்த நிரூபணம் பண்ண வல்ல ப்ரஹ்மாவினுடைய குறங்கிலே–

(யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தஸ்மை )

ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமை யாலே புதுக் கும்பிடைக் கண்டு இறுமாந்து
தாங்கள் அநர்த்தம் அறியாதே ராவணனுக்குத் தேடிற்று எல்லாம் கொடுக்கப் புக –

இவனால் நோவு பட்டாலும் நம்முடைய பாடே இறே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து –

வாய்ந்த குழவியாய்–
அழகிய பிள்ளையாய்

வாளரக்கன்-
சாயுதனான ராக்ஷஸன் யுடைய

ஏய்ந்த-முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த-அடிப்போது நங்கட்கு அரண்  —
ராக்ஷஸனுடைய தலைகளை முஃயத்தாலே-மூன்று ஏழு என்று எண்ணினவனுடைய
அபேக்ஷித்தத்தைச் செய்யவற்றாய் போக்யமான திருவடிகள் நமக்கு ரக்ஷை –

(ஆச்சார்யர்கள் திருவடி ஸ்தானம் -உபதேஸிக்கப் பண்ணுகிறான் நம்மையும் திருத்திப் பணி கொள்ளவே
அவர்கள் ஆதி பணிந்து உஜ்ஜீவனம் அடையலாம்-திருவடிகளே அவனுக்கும் ரக்ஷகம் )

——————————————————————-

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –

அர்த்த ஸஹிதமாக ஆராய்ந்து அதிகரிக்கப் பட்ட பெறுதற்கு அரிய வேதத்தைத் தனக்கு நிரூபகமாக யுடையனான
சதுர்முகனுடைய அழகிய மடியிலே நேர் பட்ட முக்த சிஸூவாய்க் கொண்டு சாயுதனான ராவணனுடைய
அறுப்புண்கைக்குத் தகுதியான மாலை கட்டின தலைகளைத் தன் முஃத்யம் தோற்ற மூன்றும் ஏழும் என்று
அறுப்புண்கைக்கு யோக்யம் என்னும் இடம் தோற்றத் திருவடிகளால் எண்ணிக் காட்டி ப்ரஹ்மாவை ரஷித்தவனுடைய
போக்யத்தையால் பரி பூர்ணமான திருவடிகள் ஆகிற செவ்விப் பூக்கள் –அகிஞ்சனராய் அநந்ய பிரயோஜனரான நமக்கு ரக்ஷை –

(மாறுசெய்த வாள்அரக்கன்*  நாள்உலப்ப அன்றுஇலங்கை* 
நீறுசெய்து சென்று கொன்று*  வென்றி கொண்ட வீரனார்,*
வேறுசெய்து தம்முள் என்னை*  வைத்திடாமையால்,*  நமன்- 
கூறுசெய்து கொண்டுஇறந்த*  குற்றம் எண்ண வல்லனே.  -வாள் அரக்கன் -சந்த்ரஹாசம் வாள் சிவன் கொடுக்க -பிரமன் கொடுக்கும் நாள் )

—————————————————————————————————

ப்ரஹ்மாதிகள் தங்களுக்கு ஹிதம் அறியாத போது அறிவித்து-
பிரதிகூல நிரசன சீலனானவன் நிற்கிற
திருமலையிலே கரண பாடவம் யுள்ள போதே
எல்லாரும் போங்கள் என்கிறார் –

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

பதவுரை

குமரர் உள்ளீர்–கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு–முன்பொருகால்
குடங்கால் மேல்–மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்–எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்–அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்–நித்ய யுவாவான எம்பெருமான்
நிற்கும்–நிற்குமிடமான
தண்டம் அரக்கன்–தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை–பத்துத் தலைகளையும்
தாளால்–திருவடியாலே
எண்ணி–கீறி எண்ணிக் காட்டி விட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே–சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்துபோம்–ஆசை கொண்டு செல்லுங்கோள்

கொண்டு -இத்யாதி –
ப்ரஹ்மா தன்னை ஆஸ்ரயித்த ராவணனுக்கு வரம் கொடுக்க புக்கவாறே-
எடுத்து மடியிலே வைத்த பிள்ளை வடிவாய்-
இவன் -வத்யன்-வரம் கொடுக்கலாகாது என்று தோன்றும்படி
அவன் தலைகளைத் திருவடிகளாலே அவனுக்குத் தெரியாதபடி
விளையாடுவாரைப் போலே வத்யமாய்ப் போம் என்று பண்டே எண்ணிப் பின்பு
போன ஆஸ்ரிதருக்கு ஹித காமனான குமரன் நிற்கிற திருச் சோலைகளை யுடைத்தான திரு மலையிலே
கால் கடியார் எல்லாரும் விரைந்து போங்கோள்  என்கிறார் –

————————————————————————–

(குமரருள்ளீர்-பாலர் ஆகையாலே கால் நடை தருமே –
கால் நடை ஆடும் போதே ஆஸ்ரயித்து போருங்கோள்-)

அறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-
ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற திருமலையிலே-
படு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

(குமரர் உள்ளீர் பாசுரம் -அப்பொழுது தான் கரணங்கள் நன்றாக இருக்கும்
சீமாலிகன் -மல்லிகை மா மலர் கொண்டு ஆர்த்ததும் -இதுவும் –
போகத்தில் வழுவாத ஆழ்வார்கள் மட்டும் கண்டு அருளிச் செய்தவை
புராணங்களில் இல்லை )

அப்பிள்ளை உரை அவதாரிகை
அறிவுடையாரும் மேல் வரும் அநர்த்தம் அறிந்து பரிகரிக்க மாட்டாமல் கலங்கி
(தபஸ்ஸூ பண்ணினான் என்று வரம் கொடுத்து )
அநர்த்தம் வந்து கலங்கிய அப்படிப்பட்ட தசையிலும் ஹிதைஷியாய் ரஷிக்கும் சர்வேஸ்வரன் –
திரு வேங்கடத்தானை -கரணங்கள் நல்ல தசையில் இருக்கும் போதே
சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

பதவுரை

குமரர் உள்ளீர்–கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு–முன்பொருகால்
குடங்கால் மேல்–மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்–எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்–அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்–நித்ய யுவாவான எம்பெருமான்
நிற்கும்–நிற்குமிடமான
தண்டம் அரக்கன்–தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை–பத்துத் தலைகளையும்
தாளால்–திருவடியாலே
எண்ணி–கீறி எண்ணிக் காட்டி விட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே–சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்து போம்–ஆசை கொண்டு செல்லுங்கோள்-
புரிந்து — ஆஸ்ரயித்து
(விஷய ஞானம் உள்ளாரை வரச் சொல்வார் )

ப்ரஹ்மாவினால் எடுத்துக் கொண்டு மடியில் வைத்துக் கொள்ளப் பட்ட சிறு பிள்ளையாய்
தண்ட்யனான ராவணாசூரனுடைய தலைகளை முன்பு
திருவடிகளால் எண்ணி
அந்தர் தானமான நித்ய யுவாவான ஸர்வேஸ்வரன் எழுந்து அருளி இருக்கிற
தோப்புக்களை யுடைய திருமலையை நல்ல வயஸ்ஸை யுடையவர்களே ஆஸ்ரயித்துப் போருங்கோள் –

எடுத்து மடியில் வைக்கும் பிள்ளையாய்-
தண்ட்யனான ராஷசன் தலை பத்தும் அறுக்கப்படும் என்று-
திருவடிகளாலே கீறிக் காட்டி
அந்தர்த் தானம் பண்ணின முக்தன் நிற்கும்-திருமலைக்கே
கால்நடை யாடும் போதே
ஆஸ்ரயித்துப் போருங்கோள்-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு -ஸ்ரீ முதல் திருவந்தாதி- –45-

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —–ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி –77-

(குமரர் உள்ளீர்
பால்யேந திஷ்டா சேத் -ப்ரஹ்ம ஞானி குழந்தையைப் போல் இருக்கக் கடவன்
பரமாத்ம ஞானி குழந்தை யுள்ளம் படைத்தராய் இருப்பார் )

அப்பிள்ளை உரை
ப்ரஹ்மா தன்னை ஆஸ்ரயித்த ராவணனுக்கு வரம் கொடுக்கும் தசையில்
(மா மதலைப்பெருமாள் திருச்சேறை )
எடுத்து மடியில் வைத்துக் கொள்ளும்படி முக்த சிசுவாக வடிவைக் கொண்டு
அநீதியை செய்து போகும்-கை வளருகையாலே –
சித்ரவதம் பண்ணி தண்டிக்க யோக்யனான ராவணன்
இவை அறுபடப் போகும் தலைகளை ஒரு நாளிலே
அவனுக்கும் தெரியாதபடி திருவடிகளால் கீறி எண்ணிக் காட்டி
ஆஸ்ரித விஷயத்தில் ஹித காமனான முக்தன்
(திருமலை அப்பனுக்கு பிள்ளைத்தனம்
குழந்தையாக சேவித்துக் காட்டி அருளி-தப்பே தெரியாத படி அனுக்ரஹம் –
ஸர்வஞ்ஞனுக்கு ஒன்றும் தெரியாமல் இருக்க குழந்தை தானே )
அவன் வர்த்திக்கும் திருச் சோலைகள் நிறைந்த திருமலைக்கே
படு கரணராய் -மனமும் ஒன்றி- இளமை குன்றாத நிலையிலேயே
அபிமுகராய்க் கொண்டு சடக்கென வந்து ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்–

March 27, 2023

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தொகுத்து அருளிய பாசுரப்படி ராமாயணம்

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்ற பெருமகனார், நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களிலுள்ள
சொற்றொடர்களையை தொகுத்து, ஸ்ரீ ராமாயணமாக அருளிச் செய்துள்ளார்.
இதனைத் தினமும் பாராயணம் செய்தால்
ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைப் பாராயணம் செய்த பலனும்,
ஸ்ரீ ராமாயண பாராயண பலனும் ஒருங்கே கிடைக்கும்.
இதைப் பாராயணம் செய்ததின் பலனாக நல்ல கணவனையும்,
மக்கட் செல்வத்தையும் அடைந்து சௌபாக்கியம் பெற்றவர் பலர்.

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுதஸூநவே |
யத்கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதர: ஸதா ||–தனியன்

ஸ்ரீ யாமுனரின் திருக்குமாரரும்,
யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ
அந்த ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

நாம் எல்லோரும் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து
நம் ஸம்ப்ரதாயத்திற்கு  அவருடைய அர்ப்பணிப்பை எப்பொழுதும் ஞாபகத்தில் கொள்வோமாக.

திருநக்ஷத்ரம்: ஆவணி ரோகிணி
அவதார ஸ்தலம்: சங்கநல்லூர் (சேங்கனூர்)
ஆசார்யன்: நம்பிள்ளை
சிஷ்யர்கள்:  நாயனாரச்சான்  பிள்ளை, வாதிகேசரிஅழகிய மணவாள ஜீயர், பரகால  தாசர் முதலியவர்கள்

ஸ்ரீ க்ருஷ்ணரின் அவதாரமாக,  சேங்கனூரில் இருந்த ஸ்ரீ யாமுனர்  என்பவருக்கு  பிறந்த இவர்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார்.
இவர் ஸ்ரீ நம்பிள்ளையின் பல சிஷ்யர்களுள் முதன்மையானவராகத் திகழ்ந்து
அவரிடமிருந்தே எல்லா சாஸ்திர அர்த்தங்களையும் கற்றுக கொண்டார்.
ஸ்ரீ நம்பிள்ளையின் அனுக்ரஹத்தால் நம்முடைய சம்ப்ரதாயத்தின் ப்ரஸித்தி பெற்ற ஆச்சார்யனாகத் திகழ்ந்தார்.

ஸ்ரீ பெரிய திருமொழி 7-10-10 இல் குறிப்பிட்டுள்ளபடி ஸ்ரீ திருக்கண்ணமங்கை எம்பெருமான் ,
ஸ்ரீ திருமங்கையாழ்வார் பாசுரங்களின் அர்த்த விசேஷங்களை ஸ்ரீ கலியன் வாயிலாகக் கேட்க விரும்பினார்.
எனவே அருளிச் செயலின் அர்த்த விசேஷங்களைக் கற்பதற்காக ஸ்ரீ கலியன் ஸ்ரீ நம்பிள்ளையாகவும்,
ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதாரம் செய்ததாக பெரியோர்கள் நிர்வாகம்.
இவருக்குஸ்ரீ வ்யாக்யானச் சக்கரவர்த்தி என்றும்
ஸ்ரீ அபய ப்ரத ராஜர் என்றும்  வேறு சிறப்புப் பெயர்களும் உண்டு.
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளையை தன் ஸ்வீகார புத்ரராக ஏற்றுக் கொண்டார்.

இவர் வாழ்ந்த காலத்தில், பின்வரும் ஸ்ரீ ஸூக்திகளை அருளி உள்ளார்

4000 திவ்ய பிரபந்தம் (அருளிச்செயல்  பாசுரங்கள்) – எல்லாவற்றுக்கும் இவர் வ்யாக்யானம் அருளியுள்ளார்.
அவற்றுள் பெரியாழ்வார் திருமொழியிலிருந்து சுமார் 400 பாசுரங்களின் வ்யாக்யானங்கள் தொலைந்துபோக
அவற்றுக்கு மட்டும் மாமுனிகள் வ்யாக்யானம்  அருளியுள்ளார்.
ஸ்தோத்ர க்ரந்தங்கள் –
இவர் பூர்வாசார்யர்களின் ஸ்தோத்ர ரத்னம், சதுச்லோகி, கத்யத்ரயம் ,
மற்றும் ஜிதந்தே ஸ்தோத்ரம் போன்றவைகளுக்கு வ்யாக்யானம்  அருளியுள்ளார்.
ஸ்ரீராமாயணம் –
ஸ்ரீராமாயணத்திலிருந்து முக்கியமான  சில ச்லோகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுற்கு விளக்கமான
வ்யாக்யானத்தை ஸ்ரீராமாயண தனி ச்லோகியில்  எழுதியுள்ளார்.
இவருடைய விபீஷண சரணாகதி பற்றிய புலமை மிக்க மிகச் சிறந்த விளக்கங்களுக்காக
இவர்  அபய ப்ரத ராஜர் என்ற பெயர் சூட்டப்பட்டார்.

இவர் மாணிக்க மாலை, பரந்த ரஹஸ்யம், ஸகல பிரமாண தாத்பர்யம் போன்ற பல ரஹஸ்ய க்ரந்தங்களை எழுதியுள்ளார்.
அவைகள் ரஹஸ்ய த்ரயம் பற்றி மிகச் சிறப்பாக விளக்குகின்றன.
ரஹஸ்ய த்ரயம் பற்றிய விளக்கங்களை ஏடு படுத்தியதில் இவர் முதன்மையாகத் திகழ்ந்தார்.
பிள்ளை லோகாசார்யார் நம்பிள்ளை மற்றும் பெரியவாச்சான் பிள்ளையின் விளக்கங்களிருந்து
முக்கியமான ஸாராம்சத்தைக் கொண்டு தன்னுடைய அஷ்டாதச ரஹஸ்ய கிரந்தத்தை எழுதினர்.

நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிடப்
பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால்
இன்பா வருபத்தி மாறன் மறைப் பொருளை சொன்னது
இருபத்து நாலாயிரம்.

நம்பிள்ளை தம்முடைய கருணையினால் பெரியவாச்சான் பிள்ளையிடம் திருவாய்மொழிக்கு உரை எழுதப் பணிக்கிறார்.
அதை மனதில்  கொண்டு பெரியவாச்சான் பிள்ளையும், சகல வேதங்களின் சாரமான திருவாய்மொழிக்கு
மிகவும் அனுபவிக்கத்தகுந்த ஒரு வ்யாக்யானம் எழுதினார் 24000 ஸ்லோகங்கள் அடங்கிய
ஸ்ரீ ராமாயணத்தைப் போன்றே 24000 படிகள் கொண்டதாக எழுதினார்

பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால்
அரிய அருளிச்செயல் பொருளை ஆரியர்கட்கிப்போது
அருளிச்செயலாய்த் தறிந்து.

பெரியவாச்சான் பிள்ளையின் வ்யாக்யானத்தினாலே தான் பிற்காலத்தில் உள்ளவர்கள்
அருளிச்செயலின் அர்த்தத்தை புரிந்து கொள்ளவும்
அதன் உண்மையான அர்த்தங்களைப் பரப்பவும் முடிந்தது.
இவருடைய வ்யாக்யானம் நமக்குக் கிடைக்காமல் போயிருந்தால் யாராலும்
அருளிச்செயலின் அர்த்தத்தையறிந்து கொண்டிருக்கவே முடியாது.
மேலும் மாமுனிகள் தம்முடைய 39 வைத்து பாசுரத்தில், திருவாய்மொழியின்
பிரதான 5 வ்யாக்யான கர்த்தாக்களில் இவரும் ஒருவர் என்றும்
அந்த வ்யாக்யானங்களைப் பாதுகாத்து நம்மிடையே பரப்பியிராவிட்டால் நம்மால்
அருளிச்செயலின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டே இருக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்.

அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை வார்த்தை மாலை என்ற க்ரந்த்தத்தின் மூலமும்
நம் பூர்வாசார்யர்களின்  க்ரந்தங்களின் மூலமும்
அறிந்து கொள்ளலாம்.
அவைகளில் சில கீழே:

“நாம் எல்லோரும் “எம்பெருமானின் கிருபைக்குப் பாத்திரர்களா அல்லது
அவருடைய லீலைக்குப் பாத்திரர்களா?” என்று ஒருவர் கேட்க,
அதற்கு பெரியவாச்சான் பிள்ளை “அகப்பட்டோம் என்றிருந்தால் க்ருபைக்கு விஷயம்
உடன்பட்டோம் என்றிருந்தால் லீலைக்கு விஷயம்
[நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் பிடிபட்டு உழல்கிறோமே என்று நினைத்தால்
நாம் எம்பெருமானின் க்ருபைக்குப் பாத்திரர்கள்.
ஆனால் நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக எண்ணினால்
அப்போது நாம் எம்பெருமானின் லீலைக்குப் பாத்திரர்களாகிறோம்]” என்கிறார்.

இன்னொருவர் கேட்கிறார் “பாரதந்த்ரியம் என்றால் என்ன” என்று.
பெரியவாச்சான் பிள்ளையின் பதில் “எம்பெருமானின் சக்தியில் முழுமையாகச் சார்ந்து இருப்பது,
உபாயாந்தரங்களை முழுவதுமாக விட்டு விடுவது
(சுய முயற்சியும் சேர்த்து), எப்பொழுதும் பகவத் கைங்கர்ய மோக்ஷத்திற்காகவே ஏங்குவது.
இவையே பாரதந்த்ரியம்”.

மற்றொருவர்  கேட்கிறார்.  “உபாயம் என்றால் என்ன?
நாம் நம்முடைய எல்லாவிதமான பற்றுதல்களையும் விடுவதா
அல்லது அவனைப் பிடித்துக் கொள்வதா”.
பெரியவாச்சான் பிள்ளையின் பதில “இரண்டுமே உபாயம் அல்ல.
எம்பெருமானே நாம் விடுவதற்கும் பிடித்துக் கொள்வதற்கும் ஏதுவாகிறான். அவனே உபாயம்”.

ஒரு சமயம் பெரியவாச்சான் பிள்ளையின் பந்துக்களில் ஒருவர் அவரிடம் ” நான் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
நான் அநாதி காலம் இந்த சம்சார சாகரத்தில் உழன்று கொண்டுச் கர்மங்களை சேர்த்துக் கொண்டு இருக்கிறேன்.
எனக்கு எம்பெருமான் எப்படி மோக்ஷம் அளிப்பான்”.
அதற்கு அவர் பதிலுரைக்கிறார “நாம் எல்லோரும் எம்பெருமானின் சொத்து,
அவன் நம்மை எப்பொழுது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறானோ அப்போது
நம் கர்மாக்களை எதுவும் பார்க்காமல் நம்மை சேர்த்துக் கொள்வான்” என்று கூறினார்.

ஒரு ஸ்ரீவைஷ்ணவன் இன்னொரு ஸ்ரீவைஷ்ணவனிடம் குறை காணும் பொழுது,
பெரியவாச்சான் பிள்ளை “எமன் தன்னுடைய வேலையாட்களிடம் ஸ்ரீவைஷ்ணவர்கள்
குறையைப் பார்க்காது அவர்களிடமிருந்து தள்ளியே  இருக்கச் சொல்கிறார்.
பிராட்டியும் சொல்கிறாள் ‘ந கஸ்ச்சின் ந அபராத்யாதி‘ –
பிறரிடம் குற்றம் காணாதீர்கள். எம்பெருமான் ‘என்னுடைய பக்தர்கள் குற்றம் செய்தாலும்
அதுவும் நன்மைக்கே’ என்கிறான்.

ஆழ்வார் பெருமானின் பக்தர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொண்டாட வேண்டும் என்கிறார்.
இவர்கள் எல்லோரும் பக்தர்களைக் கொண்டாடும் பொழுது, பக்தர்களை நிந்திக்கவும் ஒருவர் வேண்டுமே,
அதை நீரே செய்யக் கடவது” என்கிறார்.

ஒரு முறை பாகவதர்களின் பெருமைகளை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது
வேறு ஒருவர் எம்பெருமான் விஷயமாகப் பேச உடனே பெரியவாச்சான் பிள்ளை விசேஷ விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது
எதற்கு சாமான்ய விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று கூறினாராம்.
ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அருளிச் செயலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

——-

ஸ்ரீ பால காண்டம்

திருமடந்தைமண்மடந்தைஇருபாலும் திகழ

நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்

அந்தம்இல்பேரின்பத்துஅடியரோடு

ஏழுலகம் தனிக்கோல் செல்ல விற்று இருக்கும்

அயர்வறும்அமரர்கள் அதிபதி யான அணியார் பொழில்சூழ்அரங்கநகரப்பன்

அலைநீர்க்கடலுள்அழுந்தும்நாவாய்போல் ஆவார் ஆர்துணை என்று துளங்கும்

நல் அமரர்

துயர் தீர

வல்லரக்கர் இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி

மண் உய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய

அயோத்தி என்னும் அணி நகரத்து

வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்க்

கௌசலை தன் குல மதலையாய்த்

தயரதன் தன் மகனாய்த்  தோன்றிக்

குணம் திகழ் கொண்டலாய்

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து,

வந்து எதிர்த்த தாடகை தன் உரத்தைக் கீறி

வல் அரக்கர் உயிர் உண்டு

கல்லைப் பெண்ணாக்கிக்

காரார் திண் சிலை இறுத்து

மைதிலியை மணம் புணர்ந்து

இருபத்தொரு கால் அரசு களை கட்ட

மழுவாளேந்தி வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு

அவன் தவத்தை முற்றும் செற்று,

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி

அரியணை மேல்

மன்னன்  ஆவான் நிற்க;

————-

 

ஸ்ரீ அயோத்தியா காண்டம்

கொங்கைவன் கூனி சொற்கொண்டு

கொடிய கைகேயி வரம் வேண்ட

கொடியவள் வாய்க்கடியசொற்கேட்டு

மலக்கியமாமனத்தினனாய்மன்னவனும்மறாது ஒழிய

குலக்குமரா ! காடுறையப் போஎன்று விடை கொடுப்ப

இருநிலத்தை வேண்டாது

ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும்ஆங்கொழிந்து

மைவாய களிறொழிந்து  மாஓழிந்துதேர்ஒழிந்து

கலன்அணியாதேகாமர்எழில்விழல் உடுத்து

அங்கங்கள்அழகுமாறி

மான்அமரும்மெல் நோக்கி  வைதேகி இன்துணையா

இளங்கோவும்வாளும்  வில்லும்கொண்டுபின் செல்லக்

கலையும்கரியும்பரிமாவும்
திரியும் கானம் நடந்து போய்ப்
பக்தியுடைக்குகன்கடத்தக்கங்கைதன்னைக் கடந்து
வனம்போய்ப்புக்குகாய்யோடுநீடுகனிஉண்டு

வியன்கானம் மரத்தின் நீழல்

கல்லணைமேல்கண்துயின்று

சித்திரக்கூடத்துஇருப்ப, தயரதன் தான்

நின் மகன்மேல்பழிவிளைத்திட்டு

என்னையும் நீள் வானில்போக்க

என் பெற்றாய்கைகேசீ!

நானும் வானகமேமிகவிரும்பிப்போகின்றேன்

என்று வான்எறத்

தேன் அமரும்பொழில்சாரல்சித்திரக்ககூடத்து

ஆனை புரவி தேரோடுகாலாள்

அணிகொண்ட சேனை சுமந்திரன்

வசிட்டருடன்பரதநம்பிபணியத்

தம்பிக்குமரவடியைவான்பணையம் வைத்துக் குவலயமும்

துங்கக்கரியும்பரியும்இராச்சியமும்

எங்கும் பரதற்குஅருளிவிடைகொடுத்துத்

திருவுடைதிசைக்கருமம்திருந்தப் போய்த்

தண்டகாரண்யம் புகுந்து

————-

ஸ்ரீ ஆரண்ய காண்டம்

தயங்குமறைமுனிவர்க்கு
‘அஞ்சேன்மின் !’என்று அருள் கொடுத்திட்டு
வெங்கண்விறல்விராதன்உகவில்குனித்து
வண்தமிழ்மாமுனிகொடுத்தவரிவில்  வாங்கி
புலர்ந்து  எழுந்த காமத்தால்
சுடுசினத்துச் சூர்ப்பணகா
பொன்னிறம் கொண்ட
சீதைக்குநேராவன்என்றுவரக்
கொடிமூக்கும் காது இரண்டும்
கூரார்ந்தவாளால்ஈராவிடுத்துக்
கரனொடு  தூடணன்தன்உயிரை வாங்க
அவள்கதறித் தலையில் அங்கை வைத்து
மலைஇலங்கைஓடிப்புக,
கொடுமையில்கடுவீசை அரக்கன்
அலைமலிவேற்கண்ணாளைஅகல்விப்பான்
ஓர் உருவு ஆயமானை அமைத்து சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக்குரம்பையில்  தனி இருப்பில்
கனிவாய்த்திருவினைப் பிரித்து
நீள்கடல்சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்குநஞ்சாகக்கொடுபோந்து
வம்புலாமகடிகாவில்சிறையா  வைக்க
அயோத்தியர்  கோன்  மாயமான்மாயச்செற்று
அலைமலிவேற்  கண்ணாளை அகன்று  தளர்வைய்தி
சடாயுவை  வைகுந்தத்து  எற்றிக்
கங்குலும்பகலும்கண்துயில்  இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்
கணை ஒன்றினால்கவந்தனை  மடித்துச்
சவரி தந்த கனி உவந்து,

————

ஸ்ரீ கிஷ்கிந்தா காண்டம்

வன மருவு கவி அரசன் தன்னோடு காதல் கொண்டு-(பெருமாள் 10-6)

மராமரங்கள் ஏழும் எய்து

உருத்து ஏழு வாலி மார்பில் ஒரு கணை உருவ ஓட்டி

கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி அரசு அளித்து

வானரக் கோன் உடன் இருந்து வைதேகி தனைத் தேட

விடுத்த திசைக் கருமம் திருத்திக்

திறல் விளங்கு மாருதியும்

மாயோன் தூது உரைத்தல் செய்ய

———-

ஸ்ரீ சுந்தர காண்டம்

 

சீராரும் திறல் அனுமன் -3-10-10

மா கடலைக் கடந்தேறி-10-2-6-

மும் மதிள் நீள் -திரு எழு கூற்று இருக்கை

இலங்கை புக்குக்-3-9-10

கடிகாவில்,-10-2-5-

வாராரும்  முலை மடவாள் வைதேகி தனைக் கண்டு-3-10-10-

‘நின் அடியேன் விண்ணப்பம்-3-10-1-

கேட்டருளாய்!திரு விருத்தம் 1

அயோத்தி தன்னில் ஓர்,

இடவகையில்  எல்லி அம்போது இனிது இருக்க

மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்;

கலக்கிய மா மனத்தினளாய் கைகேயி வரம் வேண்ட

மலக்கிய மா மனத்தினனாய் மன்னவனும் மறாதொழியக்

‘குலக்குமரா! காடு உறையப்போ  என்று விடை கொடுப்ப

இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்

கங்கை தன்னில்

கூர் அணிந்த  வேல் வலவன் குகனோடு

சீர்  அணிந்த தோழமை கொண்டதுவும்;

சித்திர கூடத்து இருப்பப் பரத நம்பி பணிந்ததுவும்;

சிறு காக்கை முலை தீண்ட அனைத்துலகம் திரிந்து ஓடி

‘வித்தகனே !ராமவோ ! நின்அபயம் ! ‘ என்ன

அத்திரமேஅதன்கண்ணைஅறுத்ததுவும்;

பொன் ஒத்த  மான் ஒன்று புகுந்து இனிது விளையாட

நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்

பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்

‘அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்;-3-10-10-ஆறு அடையாளங்கள் சொல்லும் பொருளும்

‘ஈது அவன் கை மோதிரமே’என்று

அடையாளம்  தெரிந்து உரைக்க,
மலர்க் குழளால் சீதையும்,
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சி மேல் வைத்து உகக்க,
திறல் விளங்கு மாருதியும்-10-11-
இலங்கையர் கோன்-8-5-7-

மாக் கடிகாவை இறுத்துக் காதல் மக்களும் சுற்றமும் கொன்று-10-2-6
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர் கோன்-திருமாலை  11

சினம் அழித்து,-8-6-9-

மீண்டு, அன்பினால்,
அயோத்தியர் கோன் தளிர் புரையும் அடி இணை பணிய;

————

                                ஸ்ரீ யுத்த காண்டம்–38 பாசுரங்கள் 

காண எண்கும் குரங்கும் முசுவும் படையாக் 6-10-6-

கொடியோன் இலங்கை புகலுற்று-8-6-4-

அலையார் கடற்கரை வீற்றிருந்து–4-1-3

செல்வ வீடணற்கு  நல்லவனாய்(நல்லானாய் )-6-8-5

விரி நீர் இலங்கை அருளிச்-7-6-9-

சரண் புக்க

குரை கடலை அடலம்பால் மறுக எய்து,10-7

கொல்லை விலங்கு  பணி செய்ய-8-6-4

மலையதனால் அணை கட்டி-8-8-

மறு கரையை ஏறி-10-7

(வால்மீகி
கும்பகர்ணன் முதலில்
இந்திரஜித் 5 நாள்
இராவணன் 7 நாள்

கம்பராமாயணம் மாறுபாடு உண்டு

இங்கு ஆழ்வார் பாசுரப்படி)

இலங்கை பொடி பொடியாகச்-siriya thiru  madal-26

சிலைமலி  நெஞ்சரங்கள்  செல உய்த்துக்-11-4-7-

கும்பனோடு நிகும்பனும் பட 10-2-5

இந்திரசித்தழியக் கும்பகர்ணன் பட-10-3-2-

அரக்கர் ஆவி மாள,4-8-5-

அரக்கர் கூத்தர் போலக் குழமணி தூரம் ஆட,-10-3-1-

இலங்கை மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிரச்-3-9-5

சிலை வளைத்துச்-8-5-5-

சரமழை பொழிந்து-thiruppaavai -4

(கரம் துணிந்து பாட பேதம் )வென்றி கொண்ட செருக் களத்துக்-6-6-8

கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்-naanmukan -42

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்-poykai -52

மற்றுமுள்ள வானவர்-thiruchchantha viruththam 87

மலர்மழை பொழிந்து-10-9-3

மணி முடி பணித அடியிணை வணங்கக்–periya thirumoli 1-2-6-

கோலத், திரு மா மகளோடு-6-9-3

செல்வ வீடணன்-6-8-5

வானரக் கோனுடன்-3-10-8-

இலகும்-9-7-5-

அணி நெடுந்தேர் ஏறிச்-5-4-9-

சீரணிந்த குகனோடு கூடி-3-10-4-

அங்கண் நெடு  மதிள் புடை சூழ்  அயோத்தி எய்தி-10-1

நன்னீராடிப்-thiru viruththam -21

பொங்கிள ஆடை அரையில் சாத்தித்-perumaal 6-9

திருச்செய்ய  முடியும் ஆரமும் குழையும் -thiruvaay 8-4-7

முதலா  மேதகு பல் கலன் அணிந்து-thiruvaasiriyam -1

சூட்டு நன் மாலைகள் அணிந்து-21

பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமணனோடு  இரவும்  நன் பகலும்-2-3-7-

வடிவிணை இல்லாச் -9-2-10-

சங்கு தங்கு முன்கை நங்கை-thiruchchantha- 58

மலர்க் குழலாள் சீதையும் தானும்-3-10-9

கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து -thiruppaavain -23

ஏழுலகம் தனிக் கோல் செல்ல–4-5-1-

வாழ்வித்தருளினார்.”–

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்–ஸ்ரீ பால காண்டம் .

March 26, 2023

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுதஸூநவே |
யத்கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதர: ஸதா ||–தனியன்

ஸ்ரீ யாமுனரின் திருக்குமாரரும்,
யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ
அந்த ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

———

ஸ்ரீ பால காண்டம்

திரு மடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ

நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்

அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு

ஏழுலகம் தனிக் கோல் செல்ல விற்று இருக்கும்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யான
அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பன்

அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல்

ஆவார் ஆர் துணை என்று துளங்கும்

நல் அமரர் துயர்தீர

வல்லரக்கர்

இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி

மண் உய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய

அயோத்தி என்னும் அணிநகரத்து

வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்க்

கௌசலை தன் குல மதலையாய்த்

தயரதன் தன் மகனாய்த்  தோன்றிக்

குணம் திகழ் கொண்டலாய்

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து,

வந்து எதிர்த்த தாடகைதன்உரத்தைக் கீறி

வல் அரக்கர் உயிர் உண்டு கல்லைப் பெண்ணாக்கிக்

காரார் திண் சிலை இறுத்து

மைதிலியை மணம் புணர்ந்து

இருபத்தொரு கால் அரசு களை கட்ட

மழுவாளேந்தி வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு

அவன் தவத்தை முற்றும் செற்று,

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி

அரியணை மேல்  மன்னன்  ஆவான் நிற்க;

————-

ஸ்ரீ பால காண்டம் .

25 பாசுரங்கள்..திரு மடந்தை மண் மடந்தை -தொடங்கி

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-1-

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
ந கச்சின் ந அபராத்யதி -என்று குற்றத்தைப் பொறுப்பிக்கும் பிராட்டியும்
முதலில் குற்றம் தன்னை காண்கிறது என்–பின்னைப் பொறுக்கிறது என் -என்று
குற்றம் கண்டு பொறுக்கையும் கூட மிகையாம்படி இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டியும்
இரண்டு இடத்திலும் விளங்க –

குற்றத்தைப் பொறுப்பிக்கைக்கு பிராட்டி –
குற்றம் கண்டு கைவிட ஒண்ணாத இடத்தில்
குற்றம் கணக்கிடும் இதுக்கு பலம் என் -என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி-

———-

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

நலமந்த மில்லதோர் நாடு–ஆனந்தம் அளவில்லாமல் — சாம்யா பத்தி உண்டே – அத்விதீயமான தேசம்

மாயாவாதி சாருவாகன் போலே-யன்றிக்கே ஆப்த தமரான இவர் நன்மைக்கு முடிவில்லாததொரு
தேசவிசேஷம் உண்டாக அருளிச் செய்தார் இறே –உயிர்கள் ஆதிப்பரன் உடன் ஒன்றும் –அல்லல் எல்லாம் வாதில் வென்றான் – –
தத் பதம் பிராப்து காமா –ஆனந்த மயா லோகா -போகா -அநந்த லஷணம் -பரமானந்த லஷணம் –

———–

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

அந்தமில் பேர் இன்பத்து –
அநந்த கிலேச பாஜநம் சம்சாரம் –எல்லை இல்லாத கிலேசங்களுக்கு எல்லாம் எதிர் தட்டே அன்றோ –
இந்த உலக வாழ்க்கையில் சுகம் என்று மயங்கும் இத்தனையே உள்ளது துக்கமேயாம்-அநந்த ஸ்திர பலம் -இது -அல்ப அஸ்திர பலம் அது

அடியரொடு இருந்தமை –
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10 என்று ஆசைப் பட்டபடியே இருந்தமை –

பர்வத பரமாணு வாசி இதனால் தானே -ரிஷிகள் -ஆழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள் -மதுரகவி ஆழ்வார் —
————

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

வீற்றிருந்து –
வீற்று என்று வேறுபாடாய், தன் வேறுபாடு அடங்கலும் தோற்ற இருந்து.
ஈண்டு ‘வேறுபாடு’ என்றது, தன்னினின்று வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தனக்கு அடிமையாகத் தான்
இறைவன் ஆகையாலே வந்த வேறுபாட்டினை. இங்ஙன் அன்றாகில்,
ஒன்றற்கு ஒன்று வேறுபாடு எல்லாப் பொருள்கட்கும் உண்டே அன்றோ?
ஆதலால், இங்கு ‘வேறுபாடு’ என்றது, உயர்த்தியால் வந்த வேறுபாட்டினையே என்க.
எல்லா ஆத்துமாக்களுக்கும் ஞானமே வடிவமாய் இருப்பதாலே, அவனோடு ஒப்புமை உண்டாயிருக்கச் செய்தேயும்,
எங்கும் பரந்திருத்தல், எல்லாப்பொருள்கட்கும் இறைவனாயிருத்தல்,
எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாயிருத்தல் ஆகிய
இவை அந்தச் சர்வேசுவரன் ஒருவனிடத்திலேயே கிடக்குமவை அல்லவோ?’
தன்னை ஒழிந்தார் அடையத் தனக்கு அடிமை செய்யக்கடவனாய், தான் எங்கும் பரந்திருப்பவனாய்,
ஆகாசம் பரந்திருத்தலைப் போல அன்றிக்கே,
ஜாதி பொருள்கள் தோறும் நிறைந்திருக்குமாறுபோலே இருக்கக்கடவனாய், இப்படிப் பரந்திருத்தல் தான் ஏவுவதற்காக அன்றோ?
இவ்வருகுள்ளாரை அடையக் கலங்கும்படி செய்யக்கூடியவைகளான அஞ்ஞானம் முதலானவைகள்-
தர்மாதீ பீடம் ஞான அஜ்ஞ்ஞான –தர்ம அதர்ம –வைராக்ய -அவைராக்ய –ஐஸ்வர்யம் அநஸ்வர்யம்-எட்டு கால்கள் –
முழுதும் தன் ஆசனத்திலே கீழே அமுக்குண்ணும்படி அவற்றை அதிஷ்டித்துக்கொண்டு இருக்கும் படியைத் தெரிவிப்பார்,
‘இருந்து’ என்கிறார்.
அன்றிக்கே, ‘தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களையும் உடையவன் ஆகையால்
வந்த ஆனந்தம் தோற்ற இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது’ என்னுதல்.

ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல –
சுற்றுப்பயணம் வந்து உலகத்தையெல்லாம் நிர்வாகம் செய்கையன்றிக்கே, இருந்த இருப்பிலே
உலகமடையச் செங்கோல் செல்லும் படியாக ஆயிற்று இருப்பது. ‘ஏழ் உலகு’ என்று பரமபதமும் அதற்குக் கீழே உள்ள
உலகங்களுமான இரு வகை உலகங்களையும் சொல்லிற்றாதல்;
பரமபதத்திற்கு இப்பால் உள்ள உலகங்கள் மாத்திரத்தைச் சொல்லிற்றாதல். இரு வகையான உலகங்களையும் சொல்லும் போது
மூன்று வகையான ஆத்துமாக்களையும் நான்கு வகையான பிரகிருதியையும் சொல்லுகிறது.
நான்கு வகையான பிரகிருதிகளாவன : காரிய காரண உருவமான இரு வகைப்பட்ட பிரிவுகள் அங்கு;
இங்கும், அப்படியுண்டான இரு வகைப்பட்ட பிரிவுகள். லீலாவிபூதி மாத்திரத்தைச் சொன்னபோது,
கீழேயுள்ள உலகங்களையும் பூமியையும் கூட்டி ஒன்று ஆக்கி, பரமபதத்திற்கு இப்பாலுள்ள உலகங்களை ஆறு ஆக்கி,
ஆக ஏழையும் சொல்லுகிறது என்று கொள்க.

அணியார் பொழில் சூழ் அரங்க நரகரப்பா
துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு
மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி  -11-8-8-

அணியார் பொழில் சூழ் –
அழகு மிக்கு இருந்துள்ள பொழில் -என்னுதல்-
திரட்சி மிக்க பொழில் -என்னுதல் –

அரங்க நரகரப்பா –
நிருபாதிக பந்துவானவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் ஆகையாலே உத்தேச்யம் –
வாசஸ் ஸ்தானமான தேசம் தான் நிரதிசய போக்கியம் ஆகையாலும் உத்தேச்யம் –

————-

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

நான் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும்படி தன் கிருபையால்
பிரகிருதி சம்பந்தம் இல்லாத வடிவோடே வந்து கலந்தான் என்கிறார்.

துணை ஆவார் ஆர் என்று –
துணை ஆவார் யார்? என்று.

அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க-
கொந்தளிப்பையுடைய கடலுக்குள்ளே அழுந்துகிற நாவாய் போலே, பிறவிப் பெருங்கடலிலே நின்று நான் நடுங்க.
நாவாய் போல்’ என்கிற இடத்தில், நாவாய் மாத்திரத்தை நினைத்த போது, ‘ஆவார் ஆர் துணை’ என்றதனைக் கரையிலே
நின்றவர்களுடைய வார்த்தை ஆக்குக. அதற்குக் கருத்து, நோவு படா நிற்கவும் உணர்த்தி அற்று இருந்தபடியைத் தெரிவித்தபடி.
நடுங்குகையாவது, அசைந்து வருகை.-மானஸ சலனம் நாவாயில் உள்ளோரை குறிக்கும் பொழுது –
திரு நாவாய் – –பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் –சூர்ணிகை -180-
அன்றிக்கே, ‘நாவாய் போல்’ என்பதனைக் ‘கட்டில் கத்துகிறது’ என்பது போன்று ஆகு பெயராகக் கொண்டு, ‘நாவாய்’ என்பதற்கு,
நாவாயிலே இருக்கின்ற மக்கள் என்று பொருள் கோடலுமாம்.

—————–

நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10-

நல்லமரர் –
தங்கள் ஆபத்துக்கு இவனே உபாயம் என்று அறிகையாலே-நல் அமரர் -என்கிறார் –
அசுரர்களைக் காட்டிலும் வேறுபாடு இத்துனையே யாம் –
ஈஸ்வர அபிமானிகளாக இருந்தாலும் நல் அமரர் என்கிறது இத்தைப் பற்றி இறே-

——————–

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித்
தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்
தேனமரும் பொழில் தழுவும் எழில் கோள் வீதிச் செழு மாட மாளிகைகள் கூடம் தோறும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணி யழுந்தூர்  நின்றுகந்த வமரர் கோவே –7-8-6-

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி –
அநந்ய சரண்யராய்
அவனை அல்லாது அறியாத
தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து  தோன்றுமவர்களுக்குக்காக அன்றிக்கே
கார்யம் செய்து தலைக் கட்டின அநந்தரம்
நான் ஈஸ்வரன் என்னும் தேவர்களுக்கு
அசூரர்களால் வந்த துக்கம் போம்படி வந்து அவதரித்து –

குன்று குடையாய் எடுத்த குணம் போற்றி..கல் எடுத்து கல் மாரி காத்தான்-அனுகூலர் தப்பை மன்னித்த குணம்.

————–

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-

வல்லரக்கர் புக்கு அழுந்த –
பெரு மிடுக்கரான அசுரர்கள் புக்கு-அழுந்தும்படி –

———

சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடு விசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறி கடல் நெறி பட மலையால்
அரி குலம்  பணி கொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே—5-7-7-

இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி –
இலங்கை மூலையடியே நாயும் நரியும் போம்படியாக
பாழ் படுத்தும்படி மநோ ரதித்து

————

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா
சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்
இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
நைமித்திக பிரளய ஆபத்துக்கு இளையாத ப்ரஹ்ம லோகம் முதலாக
மேலுண்டான லோகங்கள் உய்ய –
அங்குண்டான ப்ரஹ்மாதிகளும் ஜீவிக்க வாய்த்து
ப்ரஹ்ம லோகத்தில் ஸ்ரீ கோயில் ஆழ்வார் எழுந்து அருளி இருந்த படி –

மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்காக-அங்கு நின்றும் இங்கு ஏற எழுந்து அருளுகையாலே
பூமியும்
பூமியில் உண்டான சேதனரும் உஜ்ஜீவிக்க

———–

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை
தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிர காணும் நாளே— 10-1-

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை உடைத்தாய்
ஆகாச அவகாசம் எல்லாம் தானேயாம்படி நிமிர்ந்த மதிளாலே சூழப் பட்ட ஸ்ரீ அயோத்யை-
அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்
என்னும் –
ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே
சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை –

அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்-
சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே -நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது

வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
ஜகத்தில் அந்தகாரம் எல்லாம் நீக்கக் கடவ ஆதித்யன் வம்சத்திலே -அவனைப் போலே
இரவு கலவாத அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –

—————-

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ !
கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !—8-3–

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
மிக்க பரிமளத்தைப் புறப்பட விடுகிற இருண்ட குழலை உடைய ஸ்ரீ கௌசலையாருடைய
குலத்துக்கு உத்தாரகன் ஆனவனே

————-

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக
ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை

——————

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

ஆத்ம குண ஔஜ்ஜ்வல்ய யுக்தராய் -ஆத்ம குணங்கள் தன்னை சர்வ விஷயமாக உபகரித்து அருளும் பரம ஔ தாரராய் –

குண ஔஜ்ஜ்வலராய் இந்த பிரேமத்தை எல்லாருக்கும் உபகரிக்கும்-பரம ஔதாரரான ஸ்ரீ எம்பெருமானார்

குணம் திகழ் கொண்டல் –
இப்படிப்பட்ட பக்தி யாகிற மகா குணம் –
தன்னிடத்திலே சென்று நிறம் பெற்று பிரகாசிக்கவே -முகச் சோதி வாழியே -என்கிறபடியே
தம்முடைய ஞான பக்தி வைராக்யங்களையும் –
அந்த பிரமாதக்களுடைய பிரபாவத்தையும் –
அந்த பிரமாணத்தின் உடைய பிரபாவத்தையும் –
அப்ரமேயம் ஹிதத்தேஜோ யச்யஸா ஜனகாத்மஜா -என்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியாரையும் –
மையல் ஏற்றி மயக்க வல்ல பிரேமத்தினுடைய பிரபாவத்தையும் –
ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கும் வர்ஷூ கவலாஹகம் போலே –
சர்வாதிகாரமாக சர்வ ஜனங்களுக்கும் சர்வதா கொடுத்தும் உபதேசித்தும் உபகரித்து அருளும் பரமோதாரான

குணம் திகழ் கொண்டலான இராமானுசன் எம் குலக்கொழுந்து–கொழுந்து -தலைவர்
இனி கொழுந்து -என்று உருவகமாய் –குலம் -வேராய்
தாம் கொழுந்தாய் வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே
இக்குலத்துக்கு ஒரு தீங்கு வரில் முற்படத் தம் முகம் வாடி இருக்குமவர்

ராமானுஜரை அடைந்து குணங்கள் பெருமை பெற்றன
அவர் குணமும் இவனுக்கும் உண்டு என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை இங்கு

—————

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப் பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி

——-

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–

வந்து எதிர்ந்த தாடகை
தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு – ஒப்பில்லாதவள் –
தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –

தன் உரத்தை கீறி-
ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து

வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை
மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து

————

கல்லைப் பெண்ணாக்கி -ஆழ்வார் பாசுரங்கள் இல்லை
பெண்மணி
நெஞ்சினால் பிழைக்கிலள்-கம்பர் -இந்திரனே வந்தானே என்று அறிந்தவள்

அஞ்சன வண்ணத்தான்தன்   அடித் துகள் கதுவாமுன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை   வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை  நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன   முனிவனும். கருத்துள் கொண்டான்.*

அஞ்சன = அஞ்சனம் என்றால் மை. மை போன்ற
வண்ணத்தான்தன் = வண்ணம் கொண்ட இராமனின்
அடித் துகள் = திருவடி துகள்–திருவடியால் கூட வேறே பெண்ணைத் தீண்டாத ஏக பத்னீ விரதன் அன்றோ பெருமாள்
கதுவா முன்னம்.= படுவதற்கு முன்
வஞ்சி போல் = வஞ்சிக் கொடி போன்ற
இடையாள் = இடையை உள்ள அகலிகை
முன்னை வண்ணத்தள் = முன்பு இருந்ததை போன்ற வண்ணத்துடன்
ஆகி நின்றாள்; = மாறி நின்றாள்
நெஞ்சினால் பிழைப்பு இலாளை = மனதால் தவறு செய்யாதவளை
நீ அழைத்திடுக!’ என்ன. = நீ (கௌதமனாகிய நீ) அவளை ஏற்றுக் கொள் என்று கூறினான்
கஞ்ச மா மலரோன் அன்ன = தாமரை மலரில் உள்ள பிரமனை போன்ற
முனிவனும்.= கௌதமனும்
கருத்துள் கொண்டான் = மனத்தில் கொண்டான்

கம்ப இராமாயணம் – அகலிகை, நெஞ்சினால் பிழை இலாதாள்

இராமன் பாதத்துளி பட்டு கல்லுருவாய் இருந்த அகலிகை பெண் உரு பெற்றாள்.

இராமன், விஸ்வாமித்திரன், கௌதமன், லக்ஷ்மணன், அகலிகை என ஐந்து பேரும் நிற்கும் இடம்.

இராமன் அகலிகையை வணங்கி, உன் கணவனோடு சேர்ந்து வாழ் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்புகிறான்.

முடிவாக விஸ்வாமித்திரன் இந்த படலத்தை முடிக்கிறான்…

“இவள் மனத்தால் பிழை ஏதும் செய்யாதவள். இவளை நீ ஏற்றுக் கொள்ளவேண்டும்” என்று கௌதமனிடம் விஸ்வாமித்திரன் சொல்கிறான்.

அதை கௌதமனும் ஏற்றுக் கொள்கிறான் என்பதோடு அகலிகை கதை முடிவுக்கு வருகிறது.

 அ + ஹல்யா = மாசு அற்றவள்!

கை வண்ணம் அங்குக் கண்டேன்= உன் கை வண்ணம், தாடகை அழிப்பிலே கண்டேன்!
* கால் வண்ணம் இங்குக் கண்டேன்= உன் கால் வண்ணம், அகலிகை வாழ்விலே கண்டேன்!

வால்மீகி= “உடல் உணர்ச்சி”
* கம்பன்= “உள்ள உணர்ச்சியால் உடல் உணர்ச்சி”
அவன் திருவடி பெருமையை சொல்ல இத்தைச் சொல்ல வேண்டுமே
கல்லைப் பெண்ணாக்கி பெரிய வாச்சான்பிள்ளை

—————–

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-8-

மைதிலியை மணம் புணர்வான்
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக
பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா சமேபிதா சிந்தார்ணவகத பாரம்
நாசசாதாப் லவோயதா -அயோத்யா காண்டம்-

காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற
வில்லை முறித்த
உபமான ரஹிதமான பருவத்தை உடையவன்
வர்த்திக்கிற தேசம்

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இறுத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு
வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே—-10-3-

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி-சின விடையோன் சிலை இறுத்து 
அஸி தேஷணா -என்கிறபடியே -கண் அழகிலே தோற்று சினத்தை உடைய ரிஷபத்தை
தனக்கு வாஹநமான ருத்ரனுடைய வில்லை
ஒருவரால் கிட்ட ஒண்ணாதே வில்லை அநாயாசேன முறித்து அச் செயலிலே தோற்ற
ஸ்ரீ பிராட்டியை திருமணம் புணர்ந்து

இயம் சீதா மம சுதா மம காரம் விட்டவனின் மம காராம் தூண்டுமாம்

அவள் பெருமை சகதர்ம சரிதவ….நம்பியை காண  ஆயிரம் கண்கள் வேண்டும் கொம்பினை காணும் தோறும் ஆயிரம் கண்கள் வேணும்

இதுவரை சொன்னதுக்கு எல்லாம் சீதா கல்யாணத்துக்காக என்றே அத்தை நேராக குறைவாக சொல்கிறாள்
அவள் தன்னை ஏற்றுக்கொள்ள அடியவர் ரக்ஷணம் -அகல்யா சாப விமோசனம் -தாடகா நிராசனம் இவற்றால் அவளை மகிழ்விக்கவே செய்தான்

——————

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-

இருபத்தொருகால் அரசு களை கட்ட வென்றி நீள் மழுவா –
மிடுக்கரான அரசர்களை இருபத்தொருபடிகால் வென்ற உனக்கு அபலைகளான எங்களை வெல்லுகை பெரிய பணியோ?
“எனக்கு” என்று இருப்பாரையும் உனக்கு ஆக்கிக் கொள்ளவல்ல உனக்கு உனக்கேயாய் இருப்பாரை வெல்லுகை பெரிய ஏற்றமோ?
இராஜாக்களை வென்ற உனக்கு ஆய்ச்சியர்களை வென்றாய் என்பது ஓர் ஏற்றமோ?
அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் நாட்டினைப் பட அடித்துத் திரிந்த க்ஷத்திரிய குலத்தைக் கிழங்கு எடுத்த மிடுக்கனே!
களை கட்டுகையாவது – எடுத்துப் பொகடுகை.
ஜீவ ஸ்வா தந்த்ரமே மறம் கிருஷி பலன் பெற்றோம் என்று மகிழ்வானே

———-

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இருத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு
வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே—-10-3-

மழு வாள் ஏந்தி செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
வழியிலே வந்து தோற்றின -தன் க்ரைர்யத்துக்குத் தக்க மழுவாகிற ஆயுதத்தையும் உடைய
ஸ்ரீ பரசுராம ஆழ்வானுடைய-வெம்மையை உடைத்தாய் தர்ச நீயமான வில்லை வாங்கி
இவனை வென்று தான் திருவவதாரம் பண்ணின
ஷத்ரிய குலத்துக்கு பகை தீர்ந்த வீரத்தை யுடையவனை

—————

முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் நோயின் வருத்தமும் ஒன்றாக கொள்ளாது
என்னையும் என் மெய் உரையும் மெய்யாக கொண்டு வனம் புக்க எந்தாய்!
நின்னையே மகனாய் பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே —9-9-

முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி
முன் ஒரு காலத்திலே மழுவை ஆயுதமாக உடைய ஸ்ரீ பரசுராமன் கையிலே
ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லை வாங்கி

அவன் தவத்தை முற்றும் செற்றாய்
அவன் லோகாந்தரங்களை ப்ராபிக்கக் கடவதாக ஆர்ஜித்த தபஸ்ஸை அவ்வம்பாலே அழித்துப் பொகட்டாய்

————-

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான் தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே— 10-8–

அம்பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
திரு அபிஷேகத்துக்கு ஈடாக அலங்கரித்து -தர்ச நீயமாய் ஒக்கத்தை உடைத்தாய் நல்ல ரத்னங்களாலே சமைக்கப் பட்ட
மாடங்களை உடைய ஸ்ரீ திரு அயோத்யையிலே ஜகத்தை எல்லாம் உகக்கும் படி மீண்டு எழுந்து அருளிப் புகுந்து

அரசு எய்தி
ராஜ்யம் புநரவாப்தவான் -என்னும்படியாக ஜகத்தை எல்லாம் வாழும்படியாக சாம்ராஜ்யத்திலே அதிகரித்து

———-

வன் தாள் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னனாவான்
நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை நெடும் கானம் படர போகு
வென்றாள் எம்மி ராமாவோ! உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன் நன் மகனே! உன்னை நானே—- 9-1–

மன்னனாவான் நின்றாயை –
திரு அபிஷேகத்துக்கு முன்புள்ள கர்த்தவ்யங்கள் எல்லாம் தலைக் கட்டி திரு அபிஷேகம் பண்ணுகைக்கு
திருக் காப்பு நாண் சாத்தி நிற்கிற யுன்னை

அரி அணை மேல் இருந்தாயை
சிம்ஹாசனத்திலே பதஸ்தனாய் இருந்தான் என்னும் படி தோற்றச் சமைந்து இருக்கிற யுன்னை

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ திருவாய் மொழி-தசக த்வந்த்வ- ஏக கண்ட்யம் —

February 28, 2023

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரமும் ஸ்ரீ  திருவாய் மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

वेदापहारिणं दैत्यं मीनरुपी निराकरोत। तदर्थहारिणस्सर्वान् व्यासरुपि महेश्वरः॥

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.

அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தர மீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.

இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் *  (65) என்று காட்டியருளினார்

ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார். ஸ்வாமி வேதாந்தவாசிரியர் தம்முடைய திரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் இதனை *ஆதௌ ஶாரீரகார்த்தக்ரமமிஹ விஶதம் விம்ஶதிர் வக்தி ஸாக்ரா * ( 5 ) என்கிற ஶ்லோகத்தில் காட்டியருளினார்.

ஶாரீரகத்தின் அர்த்தங்களாவன் முறையே அத்யாய-பாத முறைப்படி விஶதமாக முதல் இருபது (20) பாசுரங்களாலே சொல்லப்பட்டன என்று காட்டியருளினார்.

இதனையே விரிவாக எப்படி அந்த 20 பாசுரங்கள் காட்டுகின்றன என்பதனை ஸ்ரீபாஷ்ய த்ரமிடாகமாத்ய தசக த்வந்த்வ ஐககண்ட்யத்தில் வாதிகேஸரி மடத்தினை அலங்கரித்தருளின ஜீயர் ஸ்வாமி விசதமாகக் காட்டியருளியுள்ளார்.

இவையனைத்துக்கும் மூலம் ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள். அவர் தாமும் வீடுமின் ப்ரவேசத்தில் * .. தத்வபரமாயும், உபாஸநபரமாயுமிறே மோக்ஷ ஶாஸ்த்ரம்தான் இருப்பது; அதில் தத்வபரமாகச் சொல்ல வேண்டுவதெல்லாம் சொல்லிற்று கீழில் (உயர்வற பதிகத்தில்) திருவாய்மொழியில். உபாஸநபரமாகச் சொல்ல வேண்டுவமவற்றுக்கெல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத்திருவாய்மொழி. * என்றருளிசெய்துள்ளது நோக்கத்தக்கது.

—————————-

ஸ்ரீ பாஷ்ய த்ராவிடாக மாத்யதசக த்வந்த்வ ஐக கண்ட்யம்–
ஸ்ரீ ஈட்டில் இரண்டாம் திருவாய் மொழி பிரவேசத்திலே அருளிச் செய்த பிரதம சங்கதி கிரந்தத்திற்கு விவரணம் –

முதல் திருவாய் மொழியும் இரண்டாம் திருவாய் மொழியும் அத்யாய சதுஷ்டயாத்மக சாரீரக மீமாம்ஸா சாஸ்த்ர சமாநார்த்தகமாய் இருக்கும் –
சாரீரகார்த்தம் தான் ப்ரஹ்ம காரணத்வமும் -ததபாத்யத்வமும் -முமுஷு உபாஸ்யத்வமும் -முக்த ப்ராப்யத்வமும் –
காரணத்வமபாத்யத்வம் உபாயத்வம் உபேயதா -என்னக் கடவது இறே-
இவ்விரண்டு திருவாய் மொழியும் வேதாந்த சாஸ்த்ர சமாநார்த்தம் என்னும் இடத்தை நம்பிள்ளை ஈட்டிலே-வீடுமின் முற்றின ப்ரவேசத்திலே –
தத்வ பரமாயும் உபாசன பரமாயும் இறே மோக்ஷ சாஸ்திரம் தான் இருப்பது –
அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய் மொழியிலே –உபாசன பரமாகச் சொல்ல வேண்டுமவற்றுக்கு எல்லாம்
சங்கரஹமாய் இருக்கிறது இத்திருவாய் மொழி என்று அருளிச் செய்தார் –
இத்தையும் கொண்டு வேதாந்தாசார்யரும் த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியிலே
ஆதவ் சாரீரகாரத்த க்ரமமிஹ விசதம் விம்சதிர் வக்தி சாக்ரா -என்று அருளிச் செய்தார் –

இன்னமும் –புரா ஸூத்ரைர் வ்யாசம் சுருதி சத சிரோர்த்தம் க்ரதிதவான் விவவ்ரே தம் ஸ்ராவ்யம் வகுளதர தாமேத்ய ச புநர் உபாவேதவ் க்ரந்தவ் கடயிதுமலம் யுக்தி பிரசவ்
புநர் ஜஜ்ஜே ராமாவரஜ இதி ச ப்ரஹ்ம முகுர-என்று சாமானையென சாரீரகத்துக்கும் திருவாய் மொழிக்கும் உண்டான ஐகமத்யத்தை ஆச்சான் பிள்ளையும் அருளிச் செய்தார் –
ஆகையால் இரண்டு திருவாய் மொழியும் பூர்வ உத்தர த்விகாத்மகமான சாரீரக சாஸ்த்ர சமா நார்த்தம் என்று கொள்ள வேணும் –
இஸ் ஸம்ப்ரதாயார்த்தத்தை பாட்டுக்கள் உபபத்தியுடனே ஏறிட்டு பிரகாசிப்பிக்கிறோம் –

முதல் திருவாய் மொழி பூர்வ த்விகத்தோடு சேரும்படியைத் தெரிவிக்கிறோம் -அது எங்கனே என்னில்-
முதல் பாட்டு -நாலடியும் சதுஸ் ஸூத்ர்யர்த்தமாகவும்
மனனகம் -என்கிற இரண்டாம் பாட்டு -ஈஷத்ய-ஆனந்தமய -அந்தராதித்ய அதிகரண அர்த்தமாகவும்
இலனது -என்கிற மூன்றாம் பாட்டு ஆகாச பிராண ஜ்யோதி இந்த்ர பிராணாதி கரண அர்த்தமாகவும்
நாமவன் -அவரவர் -நின்றனர் -என்கிற நாலாம் பாட்டு தொடங்கி மூன்று பாட்டும் த்ரிபாத் யர்த்தமாகவும்
ஆக -ஆறு பாட்டும் பிரதம அத்யாய அர்த்தமாய் –

திட விசும்பு என்கிற ஏழாம் பாட்டு த்வதீய லக்ஷண பிரதம பாதார்த்தமாகவும்
சுரரறி -உளன் எனில் -என்கிற எட்டாம் பாட்டும் ஒன்பதாம் பாட்டும் தர்க்க பாதார்த்தமாகவும்
பரந்த தண் -என்கிற பத்தாம் பாட்டும் நிகமன பாட்டும் வியத்பாத துரீய பாதார்த்தமாகவும்
ஆக -ஏழாம் பாட்டு தொடங்கி நிகமத்து அளவும் த்விதீயாத்ய யர்த்தமாய்
இத்திருவாய் மொழி பூர்வ த்விகார்த்தமாகக் காணலாம் –

அதில் முதல் பாட்டில் -உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் -என்கிற சந்தை பிரதம அதிகரண சமாநார்த்தம் -அது எங்கனே என்னில்
பிரபாகர் மதரீத்யா சப்தத்துக்கு கார்யார்த்தத்திலே போதகதவை சக்தியாகையாலும்
பரிநிஷ்பந்ந வஸ்துவில் சப்தத்துக்கு போதகதவை சக்தி இல்லாமையாலும் வேதாந்தங்கள் பரிரிஷ்பந்நமான ப்ரஹ்மத்திலே பிரமாணம் ஆக மாட்டாது –
பிரமாணம் அல்லாமையாலே சாங்க அத்யயனம் பண்ணினவனுக்கும் அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதி வர மாட்டாது –
அக்ஷய்யம் ஹ வை சாதுர்மாஸ்யயாஜி நஸ் ஸூக்ருதம் பவதி–இத்யாதி வாக்கியங்களில் சாதுர்மாஸ்யாதி கர்மங்களுக்கும் அக்ஷயமான பலம் ஸ்ருதம் ஆகையாலும்
கர்ம அல்ப அஸ்திர பலத்தவ நிர்ணயம் ஸித்தியாது-ஆகையால் கர்மணாம் அல்ப அஸ்திர பலவத்வ நிர்ணய ஸஹித அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதி ரூப
விசிஷ்ட ஹேது சித்தியாமையாலே வேதாந்த ஆரம்பம் கடியாது என்கிற பூர்வ பக்ஷத்திலே-
அம்பா தாத மாதுலாதி சப்தங்களில் சித்த ரூபமான மாதா பித்ராத் யர்த்தங்களில் பிரதம வ்யுத்பத்தி காண்கையாலும்-அது கார்ய ரூப அர்த்தத்தில் என்கிற நிர்பந்தம் இல்லாமையாலும் வேதாந்தங்களுக்கு பரி நிஷ்பந்ந போதனா சாமர்த்தியம் யுண்டாய் அதுகள் பிரமாணம் ஆகையால் அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதி ரூப விசேஷயாம்சம் லபிக்கும்-
கர்ம விசாரம் பண்ணினவனுக்கு ஆவ்ருத்தி விதாநாதிகளாலே கர்மங்களுக்கு சாதிசய பலத்தவம் அவகதம் ஆகையாலும்
அக்ஷய்யத்தவ கீர்த்தனம் சிரகால ஸ்தாயித்வ அபிப்ராயமாக வாயுஸ் சாந்தரிக்ஷஞ்சை ததம்ருதம்-என்கிற இடத்தில் அம்ருதத்வம் போலே நிர்வஹிக்க வேண்டுகையாலும்
கர்மாணாம் அல்ப அஸ்திர பலத்வ நிர்ணய ரூப விசேஷணாம்சம் சித்திக்கும் –

இப்படி விசிஷ்ட ஹேது லபிக்கையாலே சாஸ்த்ரா ஆரம்பம் கடிக்கும் என்று இறே பிரதம அதிகரணர்த்தம்-

இனி உயர்வற யுயர் நலமுடையவன் என்று அநவதிக ஆனந்த ஸ்திர பல ரூப குண விபூதி மத்தையைச் சொல்லி –
யவன் -என்று இவ்வர்த்தத்துக்கு -ஆனந்தோ ப்ரஹ்ம -இத்யாதி -சுருதி பிராமண ப்ரஸித்தியையும் காட்டுகையாலே சித்த வஸ்துவான பர ப்ரஹ்ம
வேதாந்த வேத்யம் என்று சித்திக்கையால் இச்சந்தை விசேஷயாம்சமான அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதியை ஸூசிப்பிக்கிறது –

உயர்வற -என்கிற இது ப்ரஹ்மாதிகளுடைய கர்ம அதீன உச்சராயம் பகவத் உச்சராய அபேக்ஷயா இல்லை என்னும்படி இருக்கும் என்று
சொல்லுகையாலே கர்மங்களினுடைய அல்ப அஸ்திர பலத்வ நிர்ணயத்தை ஸூசிப்பிக்கிறது –

ஆக –உயர்வற உயர்நலம் யுடையவன் யவன் -என்கிற அளவிலே விசிஷ்ட ஹேதுவை ஸூசிப்பிக்கையாலே –
சாரீரக ஆரம்ப சமர்த்தந பர பிரதம ஸூத்ரார்த்தம் இச்சந்தை என்னக் குறையில்லை –

கிஞ்ச-ப்ரஹ்ம சப்த ப்ரவ்ருத்தி நிமித்தமான நிரதிசய ப்ருஹத்த்வத்தை -உயர்வற உயர்நலம் யுடையவன் -என்று முக்த கண்டமாக அருளிச் செய்து –
அவன் துயரறு சுடரடி தொழுது ஏழு -என்று அவன் திருவடிகளைத் தொழுது உஜ்ஜீவி என்று ஜிஜ்ஞாசா பல நிர்ணய கார்ய யுக்தி முகேந
ஜிஜ்ஞாச சப்தார்த்தத்தை ஸூசிப்பிக்கையாலும் இச்சந்தை பிரதம அதிகரணர்த்தம் –

இப்பாட்டுத் தான் வாக்யைக வாக்கியமாக ஓர் அன்வயத்தையும் வாக்ய த்ரயமாக ஓர் அன்வயத்தையும் உடைத்தாகையாலே
வாக்ய த்ரய பக்ஷத்தில் இவ்வர்த்தம் ஸ்வ ரசமாய் சித்திக்கும் –

மயர்வற மதிநலம் அருளினன் யவன் -என்கிற இது ஜென்மாதிகாண ப்ரமேயமானபடி எங்கனே என்னில்-
ப்ரஹ்ம வித்தையில் வேதாந்தம் பிரமாணம் ஆனாலும் லக்ஷணம் ப்ரஹ்மத்துக்குக் கிடையாமையாலே ப்ரஹ்ம பிரதிபத்தி வர மாட்டாது -அது எங்கனே என்னில் –

யாதோ வா விமானி -இத்யாதி வாக்யம் ஜென்ம காரணத்வாதிகளை லக்ஷணமாக அறிவிப்பிக்க மாட்டாது –

ஜென்ம காரணத்வாதிகளை விசேஷணம் என்கிறீரோ உப லக்ஷணம் என்கிறீரோ –

விசேஷண பேத ப்ரயுக்த விசேஷ்ய பேதம் பிரசங்கிக்கையாலே விசேஷணம் என்னக் கூடாது –
உப லக்ஷய உப லக்ஷண வ்யதிரிக்த உப லஷ்ய கத ஞாதாம்சம் கிடையாமையாலே உப லக்ஷணம் என்னவும் கூடாது -என்று பூர்வ பக்ஷம் ப்ராப்தமாகும் அளவில்
அநேக விசேஷண விசிஷ்ட விசேஷ ஐக்யஸ்ய-தேவதத்த ஸ்யாமோ யுவா லோஹிதாஷ-இத்யாதி ஷூ தர்சநாத் –

கண்டோ முண்ட பூர்ண ஸ்ருங்கோ கவ்-இத்யாதிஷூ
கண்டத்வ முண்டத்வாதி விருத்த விசேஷணா நாமேவ விசேஷ்ய பேதகத்வ தர்சநாத் ஜென்மாதி காரணத்வாதே கால பேதேந ப்ரஹ்மணி அவிருத்த த்வாச்ச விசேஷணத்வம் உபபன்னம்-

உபலக்ஷண உப லஷ்ய வ்யதிரிக்த உப லஷ்ய கத ப்ரஹ்மத்வாதியான த்ருதீயாகாரம் லபிக்கையாலே உபலக்ஷணத்வமும் கூடும் –

இப்படி ஜென்ம காரணத்வாதிகள் ப்ரஹ்ம லக்ஷணம் ஆகையாலேலக்ஷணங்களால் ப்ரஹ்ம பிரதிபத்தி வருகையால் ப்ரஹ்ம விசாரம் கடிக்கும் என்று இறே ஜென்மாதிகரண ப்ரமேயம் –

இனி இவ்விடத்தில் -மயர்வற மதிநலம் அருளினன் எவன்-என்று அஞ்ஞான அந்யதா ஞான விபரீத ஞான ரூபமான மயர்வு போம்படி பக்தி ரூபாபன்ன ஞானத்தை அருளினன் என்று சொல்லுகையாலே அனுக்ராஹத்வம் த்யேயத்வ வ்யாப்தமாய் -காரணம் து த்யேய-என்கிறபடியே த்யேயத்வம் காரணத்வ அபேக்ஷகமாய் இருக்கையாலே
தத் அஷேபக த்யேயத்வ அஷேபகமான அனுக்ராஹ கத்வ ரூப தர்மகதந முகேந ஜென்ம காரணத்வ ரூப ப்ரஹ்ம லக்ஷணத்தை ஸூசிப்பிக்கையாலே
ஜென்மாதிகரண பிரமேயம் இச்சந்தை –

கிஞ்ச -மயர்வற என்று அஞ்ஞான நிவ்ருத்தியைச் சொல்லுகையாலே அவித்யா நிவ்ருத்தி ரேவ ஹி மோக்ஷ -என்கிற முக்தி காரகத்வம் கண்டா யுக்தமாய் இருக்கிறது –

அந்த மோக்ஷம் தான் ஜகத் உத்பவஸ்தி ப்ரணாச சம்சார விமோச நாதய-என்று உத்பவஸ்திதி ப்ரணாசங்களைப் போலே சம்சார விமோசனத்தையும்
ப்ரஹ்ம கார்யமாக அபியுக்தர் அருளிச் செய்கையாலே ப்ரஹ்ம கார்யம் இறே-அது தானும் ஜென்ம காரணத்வாதிகளைப் போலே ப்ரஹ்ம லக்ஷணம் –
யத் பிரயந்த்யபி சம்விசந்தி என்கிற ஸ்ருதியிலே யத் அபி சம்விசந்தி என்று ஜகத் பிரளய காரணத்வத்தையும் சம்சார விமோசன காரணத்வத்தையும் சொல்லிற்று இறே –

ஸ்ருத பிரகாசிகையிலே பட்டரும் அப்படியே வியாக்யானம் செய்து அருளினார் –

ஆனால் ஜென்ம காரணத்வம் ஸ்திதி காரணத்வம் ஜகாத் சம்ஹார காரணத்வம் இவை இத்தனையும் விட்டு மோக்ஷ காரணத்வ மாத்ரத்தையே அருளிச் செய்வான் என் என்னில்
ஜென்ம காரணத்வாதிகள் சமுதிதமே ப்ரஹ்ம லக்ஷணம் என்கிற நிர்பந்தம் இல்லை -ஏகைகமும் லக்ஷணமாம் என்கிற அர்த்தத்தை ஸூசிப்பிக்கைக்காக –
மோக்ஷ காரணத்வ மாத்ரத்தை அருளிச் செய்தார் –

ஆனால் ஜென்ம காரணத்வாதிகளில் அந்நிய தமத்தை அருளிச் செய்தாலும் இந்த பிரயோஜனம் ஸித்திக்குமே-
விசேஷித்து மோக்ஷ காரணத்வத்தை அருளிச் செய்வான் என் என்னில்

வேதாந்த சாஸ்திரத்துக்கு பிரயோஜனம் மோக்ஷம் ஆகையாலும் தமக்கு எம்பெருமான்
மோக்ஷத்தை தந்து அருளுகையாலும் மோக்ஷ காரணத்வத்தை அருளிச் செய்தார் –
ப்ரஹ்மத்தினுடைய ஸ்ருஷ்ட்டி காரணத்வாதிகள் ஏகைகமே சித்த அசித் வ்யாவருத்தமாய் இறே இருப்பது -ஸூத்ர பாஷ்யங்களில் ஜென்ம காரணத்தவாதிகளை
சமுதிதமாகச் சொல்லுகைக்கு பிரயோஜனம் ஜிஜ்ஞாஸ்ய ப்ரஹ்மத்தினுடைய நிரதிசய ப்ருஹத்த்வ சித்தி என்று
ஸ்ருத பிரகாசிகையிலே ஸ்பஷ்டமாக பட்டர் அருளிச் செய்ததை கண்டு கொள்வது –

ஆகையால் மயர்வற என்று சம்சார விமோசன காரணத்வத்தை முக்த கண்டமாக அறிவிப்பிக்கிற இச்சந்தை ஜென்மாதி கரண சமாநார்த்தம் என்னக் குறையில்லை –

ஆக எல்லாவற்றாலும் மயர்வற மதி நலம் அருளினான் என்கிற இரண்டாம் அடி ஜென்மாதி கரண ப்ரமேயம்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் -என்கிற மூன்றாம் அடி சாஸ்த்ர யோநித்வாதி கரண அர்த்தமானபடி எங்கனே என்னில்-
வேதாந்தங்களை ஸித்தமான ப்ரஹ்ம வஸ்துவில் போதகத்வ சக்தியுண்டாய் -ஜென்ம காரணத்வாதிகள் ப்ரஹ்ம லக்ஷணமாய் ப்ரஹ்ம பிரதிபத்தி லபித்தாலும் வேதாந்த ஆரம்பம் கடியாது –

சாஸ்த்ர ரூப பிரமாணம் -பிரமாணாந்தரா பிராப்தமுமாய் -பிரமாணாந்தரா விரோதமுமாய் இன்றிக்கே இருக்கிற அர்த்தத்தில் போதகமாய் இருக்கும் –

இனி ப்ரஹ்மத்தினுடைய நிமித்தத்வ அம்சம் -ஷித்யாதிகம் சகர்த்ருகம் காரயத்வாத் கடவத்-என்கிற அனுமானத்தாலே சித்திக்கும் –

உபாதான அம்சம் -நிமித்த பூதனான குலாலாதிகளில் உபாதாளத்வம் காணாமையாலே ப்ரத்யஷாதி பிராமண விருத்தமாகையாலே சாதக பாதக பிராமண விரஹிதமல்லாமையாலே
ப்ரஹ்ம கரணத்வத்தை வேதாந்தங்கள் போதிக்க மாட்டாமையாலே தத் விசாரம் அநாரம்பணீயம் என்கிற பூர்வ பக்ஷத்தில் -அனுமானத்தாலே
ப்ரஹ்மத்தினுடைய நிமித்த காரணத்வத்தை சாதிக்கும் அளவில் லோக த்ருஷ்ட குலாலாதி ஷேத்ரஞ்ஞ சஜாதீயனாய் சித்தப்பன் ஒழிய
விவஷிதனான ஈஸ்வரன் சித்தியாமையாலே அனுமானத்தாலே ஈசுவரனுடைய நிமித்தத்வ அம்சத்தை சாதிக்க ஒண்ணாமையாலே -அனுமானம் சாதிக்க மாட்டாது –

அபரிமித சக்திகனான நிமித்த ஈஸ்வரனுக்கே லோகா பரித்ருஷ்டமான உபாதானத்வ அம்சமும் ப்ரமாணாந்தர பாதிதம் அல்லாமையாலே உபாதானத்வ அம்சத்தில் ப்ரமாணாந்தரம் பாதகமாக மாட்டாது –

ஆகையால் சாதக பாதக பிராமண விரஹிதமான ப்ரஹ்ம காரணத்வத்தில் வேதாந்தமே பிரமாணமாக வேண்டுகையாலே தத் விசாரம் ஆரம்பணீயம் என்று இறே சாஸ்த்ர யோநித்யதி கரண ப்ரமேயம் –
இனி அயர்வறும் அமரர்கள் அதிபதியவன் -என்று பகவத் விஸ்ம்ருதி யற்ற நித்ய ஸூரி சேஷித்வத்தை அருளிச் செய்தார் –
ஸூரி சேவ்யம் தான் பிரமாணாந்தர பிராப்தமும் அன்று -பிரமாணாந்தர விருத்தமும் அன்று –

இப்படி சாதக பாதக பிராமண விரஹிதமான ஸூரி சேவ்யத்வத்தை அருளிச் செய்கையாலே -தத் சாமான்யாதி தரேஷூ ததாத்வம் -என்கிற நியாயமாக ஸர்வஞ்ஞத்வாதி குண விஸிஷ்ட ப்ரஹ்மத்தினுடைய ஜகத் காரணத்வத்துக்கும்
வேதாந்தமே பிரமாணம் ஆகவேண்டும் என்று அறிவிப்பித்து அருளினாராம் அத்தனை –
ஆகையால் அப்ராப்தமும் அவிருத்தார்த்தமும் சாஸ்திரம் என்கிற அர்த்தத்தைக் காட்டுகிற இச்சந்தை சாஸ்த்ர யோந் அதிகரண பிரமேயம் என்னத் தட்டில்லை-
மிஞ்ச -அதிபதி -என்கிறவிடத்தில் -பதி என்கிற இத்தாலே பாலன கர்த்ருத்வ ரூப நிமித்தத்வத்தை அருளிச் செய்து –

அதிக பதி அதிபதி -என்று-அந்தப் பதி சப்த வாச்யனான நிமித்த பூதனுடைய ஆதிக்யத்தை அருளிச் செய்தார் –

அந்த ஆதிக்யம் தானும் லோக சித்த நிமித்த பூதரான குலாலாதி வைலக்ஷண்யம் –
தத் வை லக்ஷண்யம் தானும் -ஜகத் உபாதாநத்வம் முதலானவை -இப்படி நிமித்த உபாதான ஐக்யத்தை -அதிபதி -என்று அருளிச் செய்கையாலே
ப்ரமணாந்தாரா ப்ராப்த ப்ரமணாந்தாரா விருத்தார்த்தக சாஸ்த்ர ப்ராமாண்யத்தை இச்சந்தை ஸூசிப்பிக்கிறது –
ஆகை இவை எல்லா வற்றாலும் இது சாஸ்த்ர யோந்யதி கரண ப்ரமேயம் –

துயரறு சுடரடி தொழுது ஏழு என்கிற நாலாமடி சமன்வய அதிகரண சமா நார்த்தமான படி எங்கனே என்னில்
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பரமாய் இருக்கிற அர்த்தார்த்தீ ராஜ குலம் கச்சேத்–மந்தாக்நிர் நாம்பு பிபேத் –ஸ்வர்க்காமோ யஜத–ந களஞ்சம் பஷயேத்-இத்யாதி வாக்யங்களுக்கே ப்ரயோஜன பர்யவசாயித்வம் உண்டு -சித்த வஸ்து போதக வாக்யங்களுக்கு அது இல்லை -ஆகையால் ஸித்தமான ப்ரஹ்ம ப்ரதிபாதக வாக்யங்களுக்கு ப்ரயோஜன பர்யவசானம் இல்லாமையாலே வேதாந்த சாஸ்திரம் அநாரம்பணீயம் என்று பூர்வ பக்ஷம் ப்ராப்தமாம் அளவிலே

நிதி போலே ப்ரஹ்மமே ஸ்வயம் பிரயோஜன ரூபம் –
தத் ப்ரதிபாதக வேதாந்த வாக்யங்களே சாஷாத் பிரயோஜன பர்யவாசிகள் –

இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹார சாதன போதனத்வாரா ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பர வாக்யங்களுக்கு
ப்ரயோஜன பர்யவசாயித்வம் ஒழிய நேரே ப்ரயோஜன பர்யவசாயித்வம் இல்லை –

ஆகையால் அநந்த கல்யாண குண பரிபூரணமான ப்ரஹ்மமே ப்ரயோஜனமாய்
தத் ப்ரதிபாதிதமான சாஸ்திரம் பிரதானமாய் சித்திக்கையாலே சித்த ப்ரஹ்ம ப்ரதிபாதிதமான சாஸ்திரம் ஆரம்ப நீலம் என்று இறே சமன்வயதி கரணத்தின் பொருள் –

இனி துயரறு சுடரடி தொழுது ஏழு -என்று துக்க நிவர்த்தகமாய் விகேஸ்வர தேஜோ ரூபமான திருவடிகளில் கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவி என்று அருளிச் செய்தார் –
அத்தாலே பொன்னடி -பெரிய திருமொழி -5–8–9-/ பெரியாழ்வார் -3–2–8-என்று சொல்லுகிற திருவடிகளே ப்ரயோஜனமாய் தத் பரிச்ரயையே புருஷார்த்தமாக பிரார்த்தித்து விலக்ஷணமான ப்ரஹ்மமே பரம பிரயோஜனம் என்று அறிவிப்பிக்கையாலே ப்ரஹ்மத்தினுடைய சாஷாத் ப்ரயோஜனத்வத்தை சாதித்து சாஸ்திரம் ஆரம்ப ணீயம் என்று சொல்லுகிற சமன்வயதி கரண அர்த்தம் இச்சந்தை –

ஆகையால் முதல் பாட்டு ஸ்வரூபமாக சாஸ்த்ர ஆரம்ப சமர்த்தந பாரமான சதுஸ் ஸூத்ர் யர்த்தமாக சதாசார்ய பிரசாத லாபத்தை வேதாந்த த்வய சிரவணம்
யுடையவர்களுக்குக் கைக் கொள்ளக் குறையில்லை —

பக்தாம்ருதாத் யகாதாயாஸ் சதுஸ் ஸூத்ர் யேக கண்டதா
நிரூபித்த வேத மௌலி த்வய நிஷ்ட சதாம் முதே-

இதி பிரதமாகாதா சதுஸ் ஸூத்ர் யைக கண்ட்யம்-முதல் பாட்டு சதுஸ் ஸூத்ர்யர்த்தம் என்னும் இடம் உபபாதிக்கப் பட்டது –

முதல் பாட்டு சதுஸ் ஸூத்ர்யர்த்தம் என்னும் இடம் உபபாதிக்கப் பட்ட பின்பு மேல் இரண்டு பாட்டுக்கள் -ஈஷதேர் நா சப்தம் என்று தொடங்கி
பாத சேஷ சமாநார்த்தமாய் இருக்கும் படி உபபாதிக்கப் படுகிறது –
இப் பாத சேஷம் தானும் சாஷாத் காரண வாக்ய நிரூபண பரமான பிரதம பேடிகை அதிகரண பஞ்சகாத்மகமாய் த்விதீய பேடிகை அதிகரண த்வயாத்மகமாய் இருக்கும் –

பிரதம பேடிகையும்

சாமான்ய சப்தங்களுக்குப் பரமாத்ம ரூப விசேஷ பர்யவசாயித்வ ப்ரதிபாதகமாய் ஒரு பேடிகையும்

அர்த்தாந்தர ப்ரசித்தங்களான ஆகாச பிராணாதி விசேஷ சப்தங்கள் உட்படப் பரமாத்ம ரூப விசேஷ பரவசாயி என்று ஒரு பேடிகையும்

என்று இப்படி அவாந்தர பேடிகா த்வய யுக்தமாய் இருக்கும் –

இதில் –மனனகம் என்கிற இரண்டாம் பாட்டு காரண வாக்ய நிரூபண பரமாயுள்ள பிரதம பேடிகையில் சாமான்ய சப்தங்கள்
பரமாத்ம ரூப விசேஷ விசேஷ பர்யவசாயிகள் என்கிற ஈஷத்யாநந்த மயாந்த ராதித்யாதி கரண ரூப அவாந்தர பிரதம பேடிகா சங்க தார்த்தமாய் இருக்கும்

இலனது -என்கிற மூன்றாம் பாட்டு பிரதம பேடிகையில் அவாந்தர ரூபமான ஆகாச பிராணாதி கரண ரூப அவாந்தர த்விதீய பேடிகையோடும் காரணத்வ
சமவ்யாப்தமான தர்மகதந முகேந காரண வாக்ய நிரூபண பரமாயுள்ள ஜ்யோதிரிந்த்ர பிராணாதி கரண ரூபமான பிரதான த்விதீய பேடிகையோடும் சமாநார்த்தமாய் இருக்கும் –

மனனகம் -என்கிற பாட்டு -ஈஷத்ய ஆனந்தமய அந்தராதித்ய அதிகரண ப்ரமேயமான படி என் என்னில்-
இம்மூன்று அதிகாரங்களில் ஈஷாத்யதி கரணத்தில் —
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் -இத்யாதி வாக்கியத்தில் ஜகத் காரணதயா ப்ரதிபன்னமான ஸச் சப்த வாஸ்ய வஸ்து பிரதானமாக வேணும் –
இதம் சப்த வாஸ்யமான சத்வ ரஜஸ் தமோமய ஜகத்துக்கு தத் யுக்தமான பிரதானம் காரணமாம் ஒழிய சத்வ ரஜஸ் தமோ விதுரமான ப்ரஹ்மம் காரணமாக மாட்டாது –
இன்னமும் அனுமான ஆகார வாக்ய வேத்யதயா ஆனுமானிக பிரதானம் இவ்வாக்கியத்தில் காரணமாய்த் தொற்றுகிறது என்று பூர்வ பக்ஷம் வருமளவில்
ஜகத் சர்க்க உபயுக்த முக்யேஷணம் பிரதானத்துக்கு கூடாமையாலும் சர்வஞ்ஞமான ப்ரஹ்மத்துக்கு உள்ளது ஒன்றாகையாலும்
சித்த அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் ஜகத் காரணம் ஆகையால் சரீரபூத சித் அசித்வாரா சத்வ ரஜஸ் தமோமய அந்வயம் கூடுகையாலே
ஜகத் சாலக்ஷண்யம் ப்ரஹ்மத்துக்கும் உண்டாகையாலும் அனுமான அன்வயங்களில் பிரதானமான ஹேத்வவயம் அனுபாத்தம் ஆகையாலே இவ்வாக்கியத்துக்கு அனுமான ஆகாரத்வம் அசித்தமாகையாலும் ஸச் சப்த வாஸ்யமான காரணம் பிரதானம் அன்று –
பரமாத்மா வென்று சித்தாந்தித்து ப்ரஹ்மத்தினுடைய அசித் வ்யாவ்ருத்தி ப்ரதிபாதிக்கப் பட்டது –

ஆனந்த மய அதிகரணத்தில் ப்ரஹ்மம் அசித் வ்யாவ்ருத்தமே யாகிலும் ஜீவா வ்யாவ்ருத்தமாக மாட்டாது –
தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத் அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய -என்கிறவிடத்தில் ஆனந்தமய சப்த வாச்யன் ஜீவனாகையாலே
அவன் ஜீவனாகைக்கு அடி -தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா -என்று சரீர சம்பந்த ஸ்ரவணமும் –

அநேந ஜீவேநாஸ் ஆத்மந அநு ப்ரவிஸ்ய-என்று சாமாநாதி கரண்யத்தாலே ஜீவ ப்ரஹ்மணோர் ஐக்யமும் –

ஆகையால் ஜகத் காரணதயா நிரதிஷ்டனான ஆனந்தமயன் ஜீவனே என்று பூர்வபக்ஷம் ப்ராப்தமாம் அளவில் –
சத குணிதோத்தர க்ரமேண அப் யஸ்யமாந ஆனந்தம் ஸூகலவ பாகியாய் அபரிமித கர்மவஸ்யனான ஜீவனுக்கு கடியாமையாலும் பரமாத்வுக்கே அது உள்ளது ஒன்றாகையாலும்

சாரீரன் என்கிறது ஜகத் சரீரம் என்கிறதாய் கர்மக்ருத சரீரத்வம் இல்லாமையாலும்

சாமாநாதி கரண்ய நிரதேசத்தாலே சரீராத்மா பாவ நிபந்தமான ஐக்யத்தைச் சொல்லுகிறது ஒழிய ஸ்வரூப ஐக்யத்தைச் சொல்லாமையாலே ஜீவ ப்ரஹ்ம பேதம் சித்திக்கையாலும்

ஜகத் காரண பூதனான ஆனந்த மயன் பக்த முக்த அவஸ்த்தை ஜீவன் அன்று -தத் விலஷணனான பரமாத்மா என்று சித்தாந்திக்கப் பட்டது –

அந்தராதித்ய அதிகரணத்திலே -கேவல ஜீவன் ஜகத் காரணமாக மாட்டானேயாகிலும்
உபசித புண்ய விசேஷர்களான ஆதித்யாதி சேதனர்களில் ஒருவன் ஜகத் காரணமாகலாம் -அது எங்கனே என்னில் –
ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ த்ருச்யதே ஹிரண்யஸ் மஸ்ரு-இத்யாதி சாந்தோக்ய வாக்யத்திலே
கர சரணாதி ரூப சரீர சம்பந்தம் காரண வஸ்துவுக்கு ப்ரதிபாதிதமாய் இருக்கையாலும்
அது உள்ளது கர்மக்ருத சாரீர சம்பந்தமுடைய ஜீவனுக்கே யாகையாலும் விலக்ஷண ஜீவனே ஜகத் காரணம் என்று பூர்வபக்ஷம் வரும் அளவில் –
சர்வேப்ய பாப்மப்ய உதித-என்று அபஹத பாப்மத்வம் ஸ்ருதம் ஆகையாலும்-பரமாத்மாவுக்கும் சுருதி ஸ்ம்ருதி ப்ரஸித்தமாய் அப்ராக்ருதமாய் இருந்துள்ள
திவ்ய மங்கள விக்ரஹங்கள் உண்டாகையாலும் விலக்ஷண விக்ரஹ யுக்தனாய் இவ்வாக்கியத்தில் ப்ரதிபாதிக்கப் பட்டவன்
உபசித புண்ய விசேஷனான ஜீவன் அல்லன்-தத் விலக்ஷணனான பரமாத்மா வென்று சித்தாந்திக்கிக்கப் பட்டது –

இனி பொறியுணர்வு அவையிலன் -என்று ஐந்த்ரியக ப்ரத்யக்ஷ விஷயமான அச்சித்தின் படி யல்லன் என்கையாலே இச்சந்தை அசித் வ்யாவ்ருத்தமான
ப்ரஹ்ம ஸ்வரூபத்தை சாதிக்கிற ஈஷாத் யதிகரணார்த்தம் என்று அறியலாம் –

மனனாக மலமற மலர்மிசை எழுதரு மனன் உணர்வு அளவிலன்-என்று மநோ நிஷ்டமான அவித்யாதிகள் யோகாப்யாஸ பலத்தாலே கழியக் கழிய
மேல் நோக்கி அபிவ்ருத்தமாய் வருகிற மானஸ ஞானத்துக்கு விஷயமான ஆத்மாவின் படியல்லன்-என்கையாலே ஸூத்ய அஸூத்ய யுபய அவஸ்த
ஜீவ வ்யாவ்ருத்தியை ப்ரஹ்மத்துக்கு அறிவிப்பிக்கிற ஆனந்த மய அதிகரண சமா நார்த்தம் இச்சந்தை என்னும் இடம் ஸ்பஷ்டமாக அறியலாம் –

உணர் முழு நலம் -என்று கட்டடங்க ஞானத்தவ ஆஸ்ரயனாயும் ஆனந்த ஆஸ்ரயனாயும் இருப்பான் என்று அருளிச் செய்கையாலே
காரண வஸ்துவுக்கு அசேதன பிராதான்னா வ்யாவர்த்தகமான ஜகத் சர்க்கே க்ஷணாதி தர்மத்தையும்
ஜீவ வ்யாவர்த்தகமான நிரதிசய ஆனந்த அப்யாஸத்தையும் ஸூசிப்பித்து அருளினார் –

ஆகையாலே -ஈஷதே-அப்யாசாத்-என்கிற ஹேத்வம்சம் இச்சந்தையாலே ஸூசிதம்-

எதிர் நிகழ் கழிவினும் இனனிலன் மிகுநரையிலன் -என்று கால த்ரயத்திலும் தன்