இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-
“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.
————–
அவதாரிகை –
நோற்றால்
அவன் பக்கல் பெறக் கடவ பேறு
சொல்லுகிறார்கள் –
(கீழே சம்யா பத்தி -உபகரணங்கள் பிரார்த்தனை
சா யுஜ்யம் -யுக -சேர்ந்து இருந்து கல்யாண குண அனுபவம் இதில்-
கூடி இருந்து குளிர்ந்து மகிழ்ந்து சாயுஜ்யம் -ஸம்மானம் பிரார்த்தனை
ஆக இரண்டு பட்டாலும்
சாம்யா பத்தியும்
குண அனுபவமும் ஆகிற இரண்டு அர்த்தமும் சொல்லப் பட்டது -)
பெண்காள் நம்மோடு ஓத்தான் ஒருவன் ஈஸ்வரன் உண்டாகில் இறே
நம் பாஞ்ச சன்னியத்தோடு ஒத்த சங்கு உண்டாவது –
இனி தான் சங்கங்கள் பல வேணும் என்றி கோள்-
ஒன்றைத் தேடினோம் ஆகிலும் அத்தோடு ஒத்த பல சங்குகள் கிடையாதே –
1-நம் பாஞ்ச சன்னியத்தையும்
2-புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கையையும்
3-ஆநிரை இனம் மீளப் பசு மேய்க்கும் போது குறிக்கும் சங்கையும் கொள்ளுங்கோள் –
பறை என்றீர்கள்
ஆகில் நாம் உலகு அளந்த போது
ஜாம்பவான் நம் ஜெயம் சாற்றிற்று ஒரு பறை யுண்டு –
அத்தை தரலாய்த்து –
பெரும் பறை என்றி கோளாகில்
நாம் லங்கையை அழித்த போது
நம் ஜெயம் சாற்றிற்று ஒரு பறை யுண்டு அத்தை தரலாய்த்து –
சாலப் பெரும் பறை -என்றி கோளாகில் –
அற விஞ்சின பறையாவது
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்கக் குடமாடுகிற போது –
நம் அரையில் கட்டி ஆடிற்று ஒரு பறை உண்டு அத்தைக் கொள்ளுங்கோள் –
பல்லாண்டு பாடுகைக்கு உங்களுக்கு பெரியாழ்வார் உண்டு –
அவரைப் போலே உங்களுக்கும் நமக்கும் சேரக் காப்பிடுகை அன்றிக்கே
உங்களுக்கே காப்பிடும் நம்மாழ்வாரையும் கொண்டு போங்கோள்
கோல விளக்குக்கு
உபய பிரகாசகையான நப்பின்னை நின்றாள் இறே
கொடிக்கு
கருளக் கொடி ஒன்றுடையீர் (பெரிய திருமொழி -10-8 )என்று
நீங்கள் சொல்லும் பெரிய திருவடியை கொண்டு போரி கோளே
விதானத்துக்கு அன்றோ நாம் மதுரையில் நின்றும் இவ் வூருக்கு வருகிற போது
நம் மேல் மழைத் துளி படாத படி தொடுத்து
மேல் விதானமாய் வந்த நம் அநந்தனைக் கொண்டு போங்கோள் –
உங்களுக்கு செய்ய வேண்டியது இத்தனையே என்றான்
மார்கழி நீராடக் போம் போதைக்கு வேண்டுமவை இவை –
நோற்ற அனந்தரம் நாங்கள் உன் பக்கல் பெறக் கடவ இன்னம் சில
சத்கார விசேஷங்கள் உண்டு –
இவற்றிலும் அவை அந்தரங்கமாக இருப்பன சில
அவையும் நாங்கள் பெறுவோமாக ஆக வேணும் என்று வேண்டிக் கொள்கிறார்கள் –
ஸ்ரீ வைகுண்டம் -நித்ய விபூதி- ஸ்வயம் வியக்தம்-ஸ்வயம் பிரகாசம் –
தத் விஷ்ணோ பரமம் பதம் – -ஸ்திரம் அநந்தம் ஆனந்த மயம் –
ஸ்வேந ரூபேண ஸ்வரூப ஆவிர்பாவம் -அபஹத பாப்மா இத்யாதி அஷ்ட குணங்களில் சாம்யம் –
மரம் சரீரம்-இரண்டு பறவைகள் -சமானம் வ்ருக்ஷம் -ஞான ஆனந்தத்தால் சாம்யம் –
ஓன்று கர்ம அனுபவம் புஜித்து மழுங்கி -ஓன்று அகர்ம வஸ்யனாய் ஆனந்தமே வடிவு
அனுபவம் பொது -சாம்யம் இல்லையே இங்கு –
அங்கு தான் ஸோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா –
கூடி இருந்து அனைத்துக் கல்யாண குணங்களை – அனுபவித்து குளிரலாம் –
ஸாயுஜ்யம் -ஸ யோகம் -கூடி -ஸமான பாவனை -ஆனந்த அனுபவம் –
நோன்புக்கு உண்டான சம்மானங்களைப் பிரார்த்திக்கிறாள் இதில் –
ப்ரஹ்மம் வேறே ஜீவர்கள் வேறே -ஸஹ -கூடவே என்றாலே -தர்சனம் பேவ ஏவச –
ஐக்யா பத்தி இல்லையே -கூடினதாகவே இருக்குமே –
பாஷாண கல்பம் இல்லையே -அநிஷ்ட நிவ்ருத்தி மட்டும் போராதே -இஷ்ட பிராப்தியும் உண்டே –
கூடிற்றாகில் நல் உறைப்பு -அது அதுவே -அவர் அவராக நான் நானாக –
சேஷி ஸ்வாமி சர்வ நியாந்தா சர்வ தார்யமாய் அவன் -சேஷமாய் சொத்தாய் நியமிக்கப்பட்டு தாங்கப்பட்டு நாம் –
தானும் யானும் எல்லாம் தானாய் கலந்து ஒழிந்தோம் -தேனும் பாலும் அமுதமும் கன்னலும் போல்
கூடி இருந்து –அந்தமில் பேர் இன்பத்தோடு அடியாரோடு இருந்தமை –
கீழில்-
தன் ஸ்வரூப சித்தி சொல்லிற்று –
இப்பொழுது அவர்களை அலங்கரித்த படி சொல்லுகிறது –
(அங்கே தான் நாம் நாமாக ஸ்வரூப ஆவிர்பாவம் -மூடிய அழுக்கு நீங்கப் பட்டு –
புண்ய பாப விதூய -நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -ஸ்வேந ரூபேண -இயற்கை ஸ்வரூபம் அடைகிறோம் –
வி குண்டம் குறைவே இல்லாமல் அன்றோ அங்கு – –அர்ச்சிராதி –12 -லோகங்கள் தாண்டி –
விரஜா நீராடி ஸூஷ்ம சரீரம் போக்கி -ஸ்வரூப ஆவிர்பாவம் -சுத்த ஸத்வ திரு மேனி பெற்று -ப்ரஹ்ம அலங்காரம் -)
நேற்று சாம்யா பத்தி மோக்ஷம்-அஷ்ட குண சாம்யம் -உபகரண பிரார்த்தனை –
இன்று சாயுஜ்யம் மோக்ஷம்-ஸோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா – கூடி இருந்து -தமிழ் படுத்தி இங்கு
பக்தைர்ஸ் பாகவத ஸஹ -அனுபவம்-நோன்புக்கு ஸம்மானம் )
(நெய் உண்ணோம் -விரதம் ஆரம்பிக்க -இங்கு முடியும் பொழுது அனைத்தும் வேண்டுமே)
கீழில்-
தன் ஸ்வரூப சித்தி சொல்லிற்று -(ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே )
இப்பொழுது அவர்களை அலங்கரித்த படி சொல்லுகிறது –
(விரஜையில் நீராடி அமானவன் கர ஸ்பர்சம் சதா மாலா ஹஸ்தா -இத்யாதி அலங்காரம் உண்டே)
தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -என்கிறபடியே
கைங்கர்யமே ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் என்று அறுதியிட்டு
பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் உத்தேசியமான புருஷார்த்த ஸித்திக்கும்
அனுகுண அலங்காரம் அவனே பண்ண வேணும் என்கிறது –
நோற்றால் பெறக் கடவ பேறு சொல்கிறது –
இத்தால்
ப்ரஹ்ம அலங்கார ரேனோலங்குர்வந்தி-
என்று அலங்காராதிகளும் பகவத் பிரசாதாயத்தாம் என்கிறது
இப் பாட்டில்
நோற்றால் -அவன் பக்கல் பெருமவற்றைச்
சொல்கிறார்கள்
—————————
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
கூடாரை வெல்லும் –
ஆந்தனையும் பார்த்தால் –
ந நமேயம் -என்பாரை வெல்லும் இத்தனை –
அவர்களை வெல்லுமா போலே கூடினார்க்கு தான் தோற்கும் இத்தனை –
சீர் –
எல்லாரையும் வெல்லுவது குணத்தாலே –
வில் பிடித்த பிடியைக் காட்டி விரோதிகளைத் தோற்பிக்கும் –
அனுகூலரை அழகாலும் சீலத்தாலும் -நீர்மையாலும் -தோற்பிக்கும் –
சர்வஞ்ஞரை -எத்திறம் -எண்ணப் பண்ணும் குணம் இறே-
அம்புவாய் -மருந்தூட்ட தீர்க்கலாம்
நீர் கொன்றாப் போலே இதுக்கு பரிகாரம் இல்லை –
பெண்காள் –
நம்மை எளிவரும் இயல்வினன் என்று
அழகிதாக வறிந்து கொண்டி கோள்
எங்கனே –
அபேக்ஷித்தது தருகிறோம் என்கிற அளவைக் கொண்டு
நம்மையும் நம்முடைய சர்வஸ் வத்தையும் உங்களதாக்கிக் கொண்டு
உங்களை வெல்ல இருந்த நம்மைத் தோற்பித்துக் கொண்டி கோள்
எங்கனே
ஜெய அபஜெயங்கள் நாம் நினைத்த படி இன்றிக்கே இருந்ததீ -என்ன
கூடாரை வெல்லும் சீர்
கூடும் என்பாரை வெல்லும் அத்தனை போக்கி
கூடுவோம் என்பாரை வெல்லலாமோ உன்னால்
கூடாரை வெல்லும்
பரசு ராமன் இருபத்தொரு படி கால் ஷத்ரியரை வென்ற உனக்கு
ஒரு ஷத்ரிய புத்ரன் எதிரோ -என்று பெருமாளை வெல்ல நினைத்து வந்து
தன் கையில் வில்லை அவர் கையிலே கொடுத்து
நான் ப்ராஹ்மணன் என்று நமஸ்கரித்துப் போந்தான் –
வில்லோடு நமஸ்கரித்தான் ஆகில் இவராய்த்து தோற்பது –
ராவணன் இந்த்ராதிகளை வென்ற எனக்கு ஒரு மனுஷ்யன் எதிரோ என்று இருக்க –
திருவடியை இட்டும்
அங்கதனை இட்டும் பின்பு
வில் பொகட்ட அளவில் -இன்று போய் நாளை வா -என்னும் இத்தனையும் சொன்ன இடத்தில் –
வணங்கலில் அரக்கனான பின்பு (9-8 )
ஆந்தனையும் பார்த்தோம் -என் செய்வோம் என்றாய்த்துக் கொன்றது
(வணங்க லிலரக்கன் செருக்களத் தவிய மணி முடி யொருபதும் புரள
அணங்கு எழுந்தவன் தன் கவந்தம் நின்றாட அமர் செய்த வடிகள் தம் கோயில்
பிணங்கலில் நெடு வேய் நுதி முகம் கிழிப்பப் பிரசம் வந்து இழிதரப் பெருந்தேன்
மணம் கமழ் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —9-8-5-)
பின்பு வில்லை எடுத்திலன் ஆகில் பெருமாளை வென்றானாய் விடும் –
லோகம் பண்ணின பாக்யத்தாலே பின்பு வில் எடுத்தான்
பெருமாள் அவனுக்குத் தோற்க்கைக்கு பாக்யம் பண்ணிற்று இலர் –
கூடாரை வெல்லும் சீர்
ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேராக் குலை கொண்ட ஈரைந்து தலையான் —-என்று
ஒரு படியாலும் கூடேன் என்று அவனை இறே வென்றது –
கூடுவேன் என்ற விபீஷணனுக்கு வில்வெட்டி இறே செய்தது –
(வில்வெட்டி இறே செய்தது-அவன் சொன்னது எல்லாம் கேட்டான் )
ஸூக்ரீவ வசனம் ஹனுமான் வசனம் -என்று கூடினாருடைய
குற்றேவல் கொண்டு அபிஷேக பிரதானமும் பிராண ஹரணமும் பண்ணும் படி இறே தோற்ற படி –
அர்ஜுனனோடு உறவு பண்ணுவோம் -கிருஷ்ணன் காலிலே வணங்கோம் என்ற
துரியோதனனை வெல்ல வல்லனானான் –
நீ சொல்லிற்றுச் செய்வேன் என்ற பாண்டவர்களுக்கு –
எல்லிப் பகல் என்னாது எப்போதும் ( பெரிய திருவந்தாதி 19 )-சர்வ காலமும்
தூத்ய சாரத்யாதிகளைப் பண்ணித் திரிந்தான்
(சொல்லில் குறை யில்லை சூதறியா நெஞ்சமே
எல்லிப் பகல் என்னாது எப்போதும் –தொல்லைக் கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
காத்தானைக் காண்டு நீ காண் –19-)
வெல்லும் சீர்
எல்லாரையும் வெல்வது குணத்தால் –
கூடுவாரை சீலத்தாலே வெல்லும் –
கூடாதாரை ஸுர்யத்தாலே வெல்லும்
சீர்
ஸுர்யம் அம்புக்கு இலக்காகும் —
சீலம் அழகுக்கு இலக்காகும் –
(ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங்களோ அறியேன் )
அம்புக்கு இலக்கானார்க்கு மருந்து இட்டு ஆற்றலாம்
சீலமும்
அழகும் நின்று ஈரா நிற்கும்
ஈர்கின்ற கண்கள் -(திருவாய் -8-1 )
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ -(திருவாய் -10-3-1 )
வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-
அம்பு தோல் புரையே போம் –
அழகு உயிர்க் கொலை யாக்கும்
வெல்லும் சீர்
ஸ்வரூப அனுசந்தானம் பண்ணி வாரோம் -என்று இருப்பார்
ப்ரதிஞ்ஜையை அழித்து வர பண்ணிக் கொள்ளவற்றாய் –
ஸ்த்ரீத்வத்வ அபிமானத்தாலே வாசல் விட்டுப் புறப்படோம் என்று
இருப்பாருடைய அபிமானத்தை முறித்து
தன் வாசலிலே வரப் பண்ணின குணம் –
தேஹாத்ம அபிமானிகளை தலை சாய்ப்பிக்கச் சொல்ல வேணுமோ
நலமுடையவன் என்னா-
தொழுது எழு -என்றார் இறே குணங்களுடைய எடுப்புக் கண்டு
வெல்லும் சீர்
அஞ்ஞரை சர்வஞ்ஞராக்கும் –
சர்வஞ்ஞரை எத்திறம் என்னப் பண்ணும்
கூடாரை வெல்லும் –
தங்கள் பட்ட இடரை அறிவித்து அத்தலையை தோற்பிக்க நினைத்தார்கள்
அவன் தன் தோல்வியைக் காட்டி அவர்களைத் தோற்பித்த படியைச் சொல்லுகிறது
எங்களைத் தோற்பித்த நீ யாரை வெல்ல மாட்டாய் -என்கிறார்கள்
அதாவது –
நாங்கள் வந்து -உன் முன்னே நின்று -வார்த்தை சொல்லும்படி -பண்ணினாயே
ஆந்தனையும் பார்த்தால் –
ந நமேயம்(வணங்கலில் அரக்கன் )-என்று கூடாரை வெல்லும் அத்தனை –
கூடினால் தான் தோற்கும் அத்தனை
சீர்
எல்லாரையும் வெல்வது குணத்தாலே –
கூடுவாரை சீலத்தாலே வெல்லும் –
கூடாதாரை ஸூ வீர்யத்தாலே வெல்லும் –
அழகுக்கும் அம்புக்கும் இலக்காகும்(சூர்ப்பணகை ராவணன் )
அஞ்ஞரை சர்வஞ்ஞராக்கும்
சர்வஞ்ஞரை – எத்திறம் -என்னப் பண்ணும்(மூவாறு மாசம் மோஹித்தார் ஆழ்வார் )
சத்யேந லோகான் ஜயதி-இத்யாதி வத்
(சத்தியமே பேசி உலகங்கள் வென்று -ஜடாயு மோக்ஷம் இதனாலே -மனித பாவனையால் –
தீனர்களை தானம் அருளி -குருக்களை அனுகூலம் பண்ணி- சத்ருக்களை வீரத்தால் -வெல்லுமவன் )
அம்பு வாய் மருந்தூட்டித் தீர்க்கலாம் –
இதுக்கு பரிஹாரம் இல்லை -நீர் கொன்றால் போலே
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து(9-6) -என்னக் கடவது இறே
(நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3-)
சத்ருக்களை வில்லைக் காட்டிக் கொல்லும் அத்தனை –
ச சால சாபம் ச முமோச வீர -என்று
வில் பிடித்த பிடியைக் கண்டு வில்லை ராவணன் பொகட்டான்
பின்னை வில் எடாதே ஒழிந்தான் ஆகில் பெருமாளை வென்றே போகலாயிற்று
வில் கை வீரன் பெருமாள் –
வெறும் கை வீரன் ராவணன் என்றான் வால்மீகி ருஷி(அஞ்சலிம் பரமாம் முத்ரை )
தன்னுடைய வடிவு அழகைக் காட்டி கோபிமார்களை ஜெயித்தான்
ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே சர்வ ஸ்மாத் பரனான தன்னுடைய-வை லஷன்யத்தைக் காட்டி ஆழ்வார்களை ஜெயித்தான்
இவை ஒன்றிலும் ஈடுபடாத நம் போல்வாரை ஆழ்வார்-சம்பந்தத்தை வ்யாஜீ கரித்து ஜெயிக்கும் இத்தனை –
விஜிதாத்மா -நான்கு திருக் கல்யாண குணங்கள் காட்டும் கண்ணாடி–விஜிதாத்மா -சங்கரர் -அனைவரையும் வென்றார்
பக்தர்களால் ஜெயிக்கப் பட்டவர் பட்டர் -தோற்கடிக்கப் பட்டவர் – விதேயாத்மா -சேர்த்து -அவிதேயாத்மா -யாருக்கும் கீழ் படாதவர்
வினை கொடுத்து வினை வாங்குவார் போலே அகாரம் சேர்க்க வேண்டாமே-தன்னுடைய அடியவர் சொன்னபடி விதேயர்
சத் கீர்த்தி-இத்தையே கீர்த்தியாக கொண்டவன்–கூடாதார் சத்ருக்கள் மட்டும் இல்லை
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் ஆண்டாள் விரோதிகள் அனைவரையும் வியாக்யானம்-அஞ்சிறையும் மட நாராய் தூது விட வந்து அருளி –
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான்–வளம் மிக்க மால் பெருமை மன் உயிரின் தண்மை–உளமுற்று -தளர்வுற்று நீங்க நினைத்த -மாறனை
பாங்குடனே சேர்த்தான் மகிழ்ந்து -கூடாரை வெல்லும் சீர் –
உயர்வற உயர்நலம் உடையவன் எவன் -சௌசீல்யம் தெரியுமா -கேட்டானாம் மகதோ மந்தைச்ய நீர் சம்ச்லேஷ –
புரை அறக் கலந்து நாடு புகழும் பரிசு -நாம் பெரும் சம்மானம்
இன்னம் அங்கே நட நம்பி–எற்றுக்கு அவளை விட்டு இங்கே வந்தாய்
மட்டை அடி -மின்னிடை மடவார் -நம் ஆழ்வார் -உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் பந்தும் கழலும் தந்து போகு நம்பி
போகு நம்பி -உன் தாமரைக் கண்ணும் செய்ய வாயும் –ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோம்
மின்னிடையார் சேர் கண்ணன் –தான் தள்ளி உன்னுடனே கூடன் என்று –குலசேகரர் ஆழ்வார் -வாசுதேவ உன் வரவு பார்த்தே –
நீ உகக்கும் -கண்ணினாரும் அல்லோம் ஒழி –என் சினம் தீர்வன் நானே-கோபிகள் -பிரணய ரோஷம்
காதில் கடிப்பிட்டு –எதுக்கு இது இது என் இது என்னோ–கதவின் புறமே வந்து நின்றீர் -திருமங்கை ஆழ்வார்
நிச்சலும் என் தீமைகள் செய்வாய்–அல்லல் விளைத்த பெருமானை–குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற நந்த கோபாலன்
விநயம் காட்டி சேர்த்துக் கொள்வான் –
——————–
கோவிந்தா –
கூடுவோம் அல்லோம் என்னும் அபிசந்தி இல்லாத
மாத்ரத்திலே ரஷித்த படி –
கோவிந்தா
கூடுவோம் அல்லோம் என்கிற அபிசந்தி இல்லாத மாத்திரத்தில்
கூடுவோம் என்ன அறியாதாரையும் ரக்ஷிக்குமவன் அன்றோ
கோவிந்தா
பொருந்தோம் என்னும் துர் அபிமானமும் இன்றிக்கே-
ரஷித்தாலும் உபகார ஸ்ம்ருதி இன்றிக்கே இருக்கும் பசுக்களோடு பொருந்துமவனே-
இட்டமான பசுக்களை –
நாலிரண்டு நாள் தீம்பிலே வளர்ந்து நடந்து பெண்களோடு கலந்து வந்தால்
மாதா பிதாக்கள் தாழ்த்து வந்தது என் என்றால்
பசு மேய்க்கப் போனேன் என்று கண்ணழிவு சொல்லலாம் படி ஒதுங்க நிழலாய் இருக்கை –
காமுகராய் இருப்பார் உகந்த விஷயங்களில் காட்டிலும் கடகரை இறே உகப்பது-
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -(திருவாய் -10-3-10 )
கன்று மேய்த்து இனிது உகந்த –
காலி மேய்க்க வல்லாய் -(திருவாய் -6-2 )
கன்று மேய்த்து விளையாட வல்லானை -(பெரிய திருமொழி -2-5 )
சாமான்ய ரக்ஷணமும் –
விசேஷ ரக்ஷணமும் –
தன் வாயாலே பறித்து மேய்வாருடைய -(பசு-உபாயாந்தர பரர் )ரக்ஷணமும் –
தான் பறித்துக் கொடுப்பாருடைய (கன்று -பிரபன்னர் )ரக்ஷணமும்
கோவிந்தா
சேரோம் என்னும் அத்யாவசியம் இல்லாத திர்யக்குகளோடும் பொருந்தும் படியான
நீர்மையை யுடையவன் –
கோவிந்தா –
பசுக்களுக்கும் தோற்குமவனே
கூடுவோம் என்னும் அபி சந்தி இல்லாதாரையும் (தடுக்காதவரை -அத்வேஷம் மாத்ரம் )ரஷித்த படி –
(இது முதல் மூன்று பாசுரங்களில் கோவிந்தா -ஸ்ரீ ரெங்கத்திலும் தேர் இழுக்கும் பொழுதும் கோவிந்தா என்றே சொல்லுவோம் அன்றோ)
————-
வுன் தன்னைப் பாடிப் –
ஹிரண்யாய நம -என்கை தவிர்ந்து
வகுத்த உன்னுடைய பேரை
ஸுயம் பிரயோஜனமாகச் சொல்லப் பெறுவதே -என்கை –
கோபீ ஜன வல்லபனான உன்னை பாடுகையே எங்களுக்கு பிரயோஜனம் போரும் -என்னவுமாம் –
உன் தன்னைப் பாடி
ஹிரண்ய புரம் போலே இவன் பேர் சொல்ல ஓட்டுவார் இல்லை போலே காணும் பண்டு –
அநந்தரத்திலே இவர்கள் கோபிப்பார்கள் என்று தவிர்ந்த இழவு எல்லாம்
சந்நிதியில் பாடப் பெறுகையாலே தீரப் பெற்றது –
உன் தன்னைப் பாடி
வகுத்த உன்னுடைய பேரை ஸ்வயம் பிரயோஜனமாகப் பாடப் பெறுகையாலே –
வாயினால் பாடி( 5 )-என்று உபக்ரமித்தபடி
நா படைத்த பிரயோஜனம் கொள்ளப் பெற்றோம்
உன்னைப் பாடி என்னாதே
உன் தன்னைப் பாடி என்கிறது
அத் தலை இத் தலை யாவதே –
உன் பணியை நாங்கள் ஏறிட்டுக் கொள்வதே
கோவிந்தா உன் தன்னைப் பாடி
கோவிந்தன் குழல் கொடூதின போது -என்று நீ பாடும் போது –
கேயத் தீங்குழல் ஊதிற்றும்-என்னும் படி
பெண்கள் புணர்ப்பை குழலிலே இட்டுப் பாடி –
எங்களை தோற்ப்பிக்கை அன்றிக்கே
எங்கள் வாசல்களில் பாடி ஆவி காத்து இராதே (நாச்சியார் -8-3 )
உன் வாசலிலே வந்து கோவிந்தா என்று பாடும் படி ஆவதே
வுன் தன்னைப் பாடிப்
விலக்கினது பெற்ற படி –
ஹிரண்யாய என்கை தவிர்ந்து (ஓம் நமோ நாராயணாய என்று )உன்னைச் சொல்லப் பெறுவதே என்கை –
பாடி யுன் தன்னை
பெண்கள் புணர்ப்பே தாரகமாகப் பாடித் திரியும் உன்னைப்
பாடுகையே பிரயோஜனம் என்றுமாம்
சீர்
சீலவத்தையின் மிகுதியே என்னவுமாம்(கல்யாண குணங்களையே சீர் என்கிறது _
————–
பறை கொண்டு –
பிராப்யத்திலே
பிரபாக வ்யவஹாரம் –
ஊருக்கு -பறை -என்கிறது -தங்களுக்கு பிராப்யம்-
பறை கொண்டு
பாடிப் பறை கொண்டு என்று அடியில் சொன்ன படியே
ஊரார் இசைந்த பறையைக் கொண்டு –
ப்ராப்யத்தில் ப்ராபக வியவஹாரம் பண்ணுகிறார்கள் ஆற்றாமையால் -ஊருக்கு இறே
தங்களுக்கு ப்ராப்யம் இறே
(பாடுவதே இவர்களுக்கு ப்ராப்யம்
இத்தை உபாயமாக த்வனிக்க ஊராருக்காகப் பாடுகிறார்கள் இப்படி )
பறை கொண்டு
ப்ராப்யத்தில் ப்ராபக வ்யவஹாரம் -ஊருக்குப் பறை என்கிறது(பாடுவதே பறை -ஸ்வயம் பிரயோஜனம் -பாடிப் பறை உபாயம் சப்தம் )
————
யாம் பெரும் சம்மானம் –
தோளில் மாலையை வாங்கி இடுகை -இவருக்கு பெறாப் பேறு -என்கை
பெருமாள் தோளில் மாலையை வாங்கி இட்டார் -என்று ஆழ்வான் பணிக்கும்
பட்டரும் பணிக்கும்
அநாதி காலம் எல்லாராலும் பட்ட பரிபவம் மறக்கும்படி கொண்டாடுகை –
யாம்
தேவகீ புத்ர ரத்னமான உன் வாசி அறிந்து பற்றி உன்னை ஆச்ரயித்தார்க்கு
பேறு தப்பாது என்கிற வ்யவசாயம் யுடைய நாங்கள்
பெறும் ஸம்மானம்
வெறும் ஊரார் காரியமே யாக ஒண்ணாது –
எங்களுடைய அபிமதமும் பெற வேணும்
யாம் பெறும் ஸம்மானம்
பெருமாள் பிராட்டிக்கு பண்ணின ஸம்மானம் போலே –
ஆத்வாரம் தொடர்ந்து ஏத்தின பிராட்டிக்கு தன் தோளில் மாலையை வாங்கி
இட்டு
காலைப் பிடித்து நில் என்று போன ஸத்காரம் இறே
இவர்களுக்குப் பண்ணப் புகுகிறது
அவள் இவர் திருவடிகளைப் பிடிப்பது கைப் பிடித்த முறையால் –
இவர் அவள் காலைப் பிடிப்பது பிரணயித்தவத்தாலே
அவளுக்குச் சொல்லும் ஏற்றம் எல்லாம் ஸ்வரூப நிபந்தனம்-
இவனுக்கு சொல்லும் ஏற்றம் எல்லாம் பிரணயித்தவ நிபந்தனம்
அவனுடைய வியாபாரம் வைதம் –
இது ராக பிராப்தம் –
ஸ்வயம் ப்ரவ்ருத்தனாம் இடத்தில் விதி விஷயம் ஆக மாட்டாதே
அவ் விடத்தில் விதி நுழையுமாகில் போக மாட்டாதே
வெளித் திரு முற்றத்திலே -பிரசாதம் அவ்வளவில் வர
யாம் பெறும் ஸம்மானம் வந்தது என்பர் பட்டர்
யாம் பெரும் சம்மானம்
தங்கள் பேறு-
இவ்வளவில் வெளித் திரு முற்றத்தில் நின்றும் பிரசாதம் கொண்டு ஒருவன் வர
இது யாம் பெறு சம்மானம் வந்தது -என்று பட்டர் அருளிச் செய்தார்
பதி சம்மாநிதா சீதா -என்று தோளில் மாலையை வாங்கியிட்டார் -என்று ஆழ்வான் பணிக்கும்
பட்டர் -பிரணயித்வத்தாலே காலைப் பிடித்து நில் என்றார் என்பர்
தாம் ஸ்ரீரிதி த்வதுப சம்ஸ்ரயணாந் நிராஹூ (ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் )-என்று கொடுத்தால் தட்டென் என்கை
யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் ஈஸ்வராணாம்
ஐஸ்வர்ய ஹேதுரிதி சார்வ ஜநீநம் ஏதத்
தாம் ஸ்ரீ ரிதி த்வத் உபஸம்ஸ்ரியணாத் நிராஹு
த்வாம் ஹி ஸ்ரியஸ் ஸ்ரியம் உதாஹு உதார வாச –(ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்-29-)
யாவளொரு பிராட்டியின் கடாக்ஷமானது இந்திராதி தேவர்களுக்கும் அடிக்கடி ஐஸ்வர்ய ஹேதுவாகிறது என்பது
சர்வ ஜன சம்மதம் ஆனதோ -அந்தப் பிராட்டியை தேவரீர் இடத்தில் ஆஸ்ரயித்து இருப்பது காரணமாகவே
ஸ்ரீ என்று நிருத்தி கூறுகின்றார்கள்
உதார வாக்குகளான திருமங்கை ஆழ்வார் போல்வாரும் தேவரீரை அன்றோ திருவுக்கும் திருவாகிய செல்வன் என்கிறார்கள் )
(சுமந்திரன் செய்தி சொல்ல பெருமாள் பிராட்டிக்கு சம்மாநம் செய்து அருளிச் சென்றதுக்கு இரண்டு நிர்வாஹங்கள்)
யாம் பெறு சம்மானம்
அநாதி காலம் எல்லாராலும் பட்ட பரிபவம் மறக்கும் படி அவள் கொண்டாடும்படி சொல்கிறது –
—————-
நாடு புகழும் பரிசினால் –
ஒருவன் கொடுக்கும்படியே
சிலர் பெறும்படியே-
என்று நாட்டார் கொண்டாட வேணும் –
நாடு புகழும் பரிசினால்
அநாதி காலம் எல்லாராலும் பட்ட அவமானம் மறக்கும் படியாக
ஒருவன் கொடுத்த படியே –
சிலர் பெறும் படியே என்று
நாட்டார் கொண்டாடும்படியாக வேணும் –
பாரோர் புகழ (1 )என்னும் படியே தலைக் கட்ட வேணும் —
கிருஷ்ணனும் சத்யபாமை பிராட்டியும் அர்ஜுனனும் திரௌபதியுமாக கால் மேல் கால் ஏறிட்டு கொண்டு இருக்க
சஞ்சயன் திருவாசலிலே வந்தான் என்று அறிவிக்க –
கிருஷ்ணன் அருளிச் செய்கிறான் -நம்முடைய இருப்புக் கண்டால் உகப்பானும் உகவாதார் மண் உண்ணும் படி
இவ் விருப்பைச் சொல்ல வல்லானும் ஒருவன் புகுர விடுங்கோள் என்ன
அவனும் புகுந்து -கண்டு -அப்படியே போய் –
துரியோதனனுக்கு கெடுவாய் –
அவர்கள் இருப்பு கண்டேனுக்கு உன் கார்யம் கெட்டது கிடாய் என்றான் இறே –
சுக சாரணர்கள் சென்று ராவணனுக்கு அவருடைய ஓலக்கத்தில் மதிப்பும்
அவருடைய வீரப்பாடும் கண்டோமுக்கு உனக்கு ஒரு குடி இருப்பு
தேடிக் கொள்ள வேண்டி இருந்தது –
ஊற்று மாறாதே நித்தியமாய் நடக்கிற ஐஸ்வர்யத்தை யுடையராய் உனக்கு வரம் தந்து
உன் கையாலே தகர்ப்புண்ணும் அவர்களை போல் அன்றிக்கே
உனக்கு முடி தந்தார்க்கும் முடி கொடுத்த ராஜா உன் தம்பிக்கு
லங்கையைக் கொடுத்தான் -வானரங்களும் ஆர்த்துக் கொண்டது –என்று சொன்னார்கள் இறே –
இப்படி தன்னை ஆஸ்ரயித்தாரை நாடு புகழும் படி இறே வாழ்விப்பது –
வாழ்வர் வாழ்வு எய்து ஞாலம் புகழ (திருவாய் -3-3-11 )-என்கிறபடியே –
நாடு புகழ என்று
யசஸ் பரராய்ச் சொல்லுகிறார்கள் அன்று –
புகழ்ந்து நாட்டார் உஜ்ஜீவிக்கை ஸ்வ லாபமாக நினைக்கையாலே
ஸூத்ரனை ஒளித்து வேண்டிப் பெறுமது இறே லோகம் இகழ்வது –
சர்வ ஸமாஸ்ரயணீயன் தானே
மேல் விழுந்து சத்கார பூர்வகமாகக் கொடுக்கிறது ஆகையால் புகழும் இறே
நாடு புகழும் பரிசினால்
பாரோர் புகழ -1-என்னும்படியே -ஒருவர் கொடுக்கும்படியே –
சிலர் பெறும்படியே-என்று கொண்டாட வேணும் –
சஞ்சயனும் ஸூக சாரணர்களும் இவனுடைய ஆஸ்ரித பக்ஷபாதத்தை புகழ்ந்து பேசினால் போலே
(சஞ்சயன் அர்ஜுனனும் திரௌபதியும் கண்ணனும் சத்யபாமையும் சேர்ந்து இருந்த பொழுது உள்ளே வரவிட்டு
ஆஸ்ரித பக்ஷ பாதி-அஸூயை இல்லாத சஞ்சயன் -யத்ர யோகேஷ்வர: க்ருஷ்ணோ
யத்ர பார்தோ தனுர்-தர: தத்ர ஷ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம
சுக சாரணர்கள் ராவண தூதர்கள் -கண்டு உன்னால் வெல்ல முடியாது -என்று சொன்னார்கள் அன்றோ
விரோதிகளும் புகழும் படி ஆஸ்ரித பக்ஷ பாதம்)
——————
நன்றாகச் –
இந்த்ரன் வரக் காட்டின ஹாரத்தை
பெருமாளும் பிராட்டியும் கூட இருந்து
திருவடிக்கு பூட்டினாப் போலே பூண வேணும் –
சிலரை இட்டு ஒப்பிக்கை அன்றிக்கே
தானும் பிராட்டியும் கூட இருந்து ஒப்பித்த தன்னேற்றம் –
ஆபரணத்தைப் பூண்டு அவன் வரவு பார்த்து இராது ஒழிகை -என்றுமாம்
நன்றாக
இவனை ஒழிந்தாரைப் பாட வேண்டிப் பெறுமது பரிமித பலமாகையாலே –
படி வைக்க யுண்பார் பாடே பிச்சை புக்கு உண்ணும் மாத்ரம் –
காலன் கொண்ட பொன்னிட்டு ஆபரணம் பண்ணிப் பூண்பார் மாத்ரம் –
நாடும் புகழும் அளவன்றிக்கே அவன் தானும் சத்தை பெற்று நாமும் சத்தை பெற வேணும் –
இவர்களை ஒப்புவிக்கை அவனுக்கு ஸ்வரூபம் –
அவன் ஒப்பிக்க இசைகை இவர்களுக்கு ஸ்வரூபம் –
நன்றாக
இந்திரன் வரக் காட்டின ஹாரத்தைப் பெருமாள் பிராட்டிக்குக் கொடுத்து அருள –
திருக் கையிலே பிடித்துக் கொண்டு இருந்து
பெருமாளை ஒரு கண்ணாலும் திருவடியை ஒரு கண்ணாலும் பார்க்க –
பெருமாள் பிராட்டி திரு உள்ளத்தில் ஓடுகிறதை அறிந்து
அடியார் தரம் அறிந்து கொண்டாடும் வீறுடைமைக்கு பர்யவசான பூமியான நீ கொடு என்ன
திருவடியை ஒப்புவித்தால் போலே
கிருஷ்ணன் நப்பின்னை பிராட்டியை விடுவித்து ஒப்பிக்கை யாய்த்து
நன்றாக ஒப்பிக்கை யாவது –
இவர்கள் நோக்குதியேல் என்னப் பண்ணிற்று ஒரு பூர்ண கடாக்ஷம் உண்டு இறே –
அப் பார்வை பட்ட இடம் இருக்கும் படியை மேலே சொல்லுகிறார்கள் –
நன்றாகச்
நாடு சிரிக்கும் படி –
காலன் கொண்ட பொன்னையிட்டு ஆபரணம் பூண்கை அன்றிக்கே
ப்ரதேஹி ஸூபகே ஹாரம் யஸ்ய துஷ்டாசி பாமிநி-என்று இந்திரன்
வரக் காட்டின ஹாரத்தைப் பெருமாள் பிராட்டிக்குக் கொடுக்க
அத்தை ஒரு கையிலே பிடித்து பெருமாளை ஒரு கண்ணாலும்
இத்தை இவனுக்குக் கொடுப்பது என்று திருவடியை ஒரு கண்ணாலும் பார்க்க
பெருமாள் அத்தை அறிந்து அருளி –
ஆஸ்ரிதரை அறிவாய் நீ யன்றோ கொடுக்கலாகாதோ என்று அருளிச் செய்யக் கொடுத்தால் போலே
இருவரும் கூடிக் கொடுக்கும் ஆபரணம் -என்கை –
நன்றாக
தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -(கௌஷீகிதி )என்று
விரஜைக்கு அக்கரைப் பட்டாரை-எம்பெருமான் தன்னை ஒப்பிப்பாரை இட்டு ஒப்பிக்கக் கடவது
இங்கு அங்கன் இன்றிக்கே தானும் பிராட்டியும் கூட ஒப்பித்த தன்னேற்றம் சொல்லுகிறது
(பஞ்ச சதான் அப்சரஸ் சதம் மாலா ஹஸ்தா சதம் அஞ்சனம் ஹஸ்தா
சதம் சூர்ணம் ஹஸ்தா சதம் வாசோ ஹஸ்தா )
நன்றாக
ஆபரணத்தைப் பூண்டு அவர் வரவு பார்த்து இராது ஒழிகை என்றுமாம் –
——————
சூடகமே-
பிரதமத்தில் ஸ்பர்சிக்கும் கைக்கிடும் ஆபரணம்
பரம பிரணயி ஆகையாலே தன தலையிலே வைத்துக் கொள்ளும் கை –
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -என்று
இவர்களுக்கு அவன் சொல்லுமா போலே சொல்லி
மார்பிலும் தலையிலும் வைத்துக் கொள்ளும் கை இடும் சூடகம் –
சூடகமே
அணி மிகு தாமரைக் கையை (பெரிய திருமொழி கள்வன் கொல் )-என்று
தன் கையை இவர்கள் ஆசைப் படுமா போலே –
இவர்கள் ஆபரணம் பூண்ட கையை
அவன் மார்பிலும் தோளிலும் தலையிலும் வைத்துக் கொள்ள இறே அவனும் ஆசைப்படுவது –
அக் கைக்கு இடக் கடவ ஆபரணம் சூடகம் –
வெள்ளி வளைக் கை பற்ற என்கிறபடியே –
அநன்யார்ஹைகளாய் பிடித்த கைகளை இறே முதல் ஆபரணம் பூட்டுவது –
(பாணி கிரஹணம் முதல் அன்றோ )
சூடகமே
வெள்ளி வளைக் கைப் பற்ற -என்கிறபடியே
அநன்யார்ஹைகளாகப் பிடித்த கைகளிலே இறே முதல் ஆபரணம் பூட்டுவது
அடிச்சியோம் தலைமிசை நீ யணியாய் -என்னுமா போலே
அவன் சொல்லி மார்விலும் தலையிலும் வைத்துக் கொள்ளூம் கைக்கு இடும் சூடகம்
தம் மணிம் ஹ்ருதயே க்ருத்வா -இத்யாதி வைத்த -முந்துறக் காணும் இடம்
முந்துறத் தான் உறவு பண்ணும் இடம்
கைத்தலம் பற்ற –
(கை -தோள் —-பாடகமே –ஆரோகணம் அவரோகணம் இல்லாமல்
கைத்தலம் பற்ற கானாக்கண்டேன்
வெள்ளி வளைக் கைப்பற்ற அநந்யார்ஹத்வம் பாணிக்ரஹணம் -சூடகம் -முதல் ஆபரணம்)
கள்வன்கொல்? யான் அறியேன்-கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்-தன் மட மானினைப் போத என்று
வெள்ளி வளைக் கைப் பற்ற பெற்ற தாயரை விட்டு அகன்று
அள்ளல் அம் பூங் கழனி அணி ஆலி புகுவர்கொலோ?
————-
தோள் வளையே –
அந்த ஸ்பர்சத்தாலே
அணைக்க வேண்டும் தோளுக்கு இடும் ஆபரணம் –
தோள் வளையே
கையைப் பிடித்த அனந்தரம் –
அணைக்கும் தோள்களில் கிடந்து அவன் கழுத்தில் உறுத்தும் ஆபரணம் –
அவன் நாண் தழும்பின் சரசரப்பு முலைகளுக்கு உத்தேசியமானவோபாதி-
இவர்களுடைய வளைத் தழும்பும் அவன் தோளுக்கு ஆசையாய் இருக்கும் இறே
வேய் இரும் தடம் தோளினார் (திருவாய் – 6-2 )-என்று
சுந்தரத் தோளுடையான்-தோற்கும் படி தோள் படைத்த தோளுக்கு இடம் ஆபரணம்
வேய் மரு தோளிணை (திருவாய்-10-3-1 )-மெலியும் காலத்தில் இறே வளை பொறாது ஒழிவது –
இப்போது அணைக்கிற காலம் இறே
தோள் வளையே
அத்தலையில் ஸ்பர்சம் அணைக்க வேண்டி இருக்கையாலே
அணைத்த தோளுக்குத் தோள் வளையும் -என்கை
—————–
தோடே –
பொற்றோடு பெய்து -என்று
பண்டே தோடு இட்டாலும்
அவன் இட்டாப் போலே இராது இறே –
தோடே
தங்கள் கைக்கும் தங்கள் தோளுக்கும் ஆபரணம் போல் அன்றே –
அவன் தோளுக்குப் பூணும் ஆபரணமும் பூண வேணும் –
இவர்களுடைய காதுப் பணியும் செவிப் பூவும் பட்ட விமர்த்தத்தாலே வந்த
சோபையைக் கோட் சொல்லும் இறே அவன் தோள்கள் –
கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-என்று
அவனுடைய கரண பூஷணம் அவன் தோள்களுக்கு ஆபரணம் ஆனால் போலே
இவர்களுக்கு காதுப் பணியும் செவிப்பூவும் தோள்களுக்கும் அலங்காரமாய் இறே இருப்பது –
தோடே
பொற்றோடு பெய்து -என்று
பண்டே தோடிட்டாலும் இவன் இட்டால் போலே இராதே
தோடே
அணைத்தாலும் உறுத்துமவை -ப்ரியாவதம் ஸோத்பல –
கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-என்னுமா போலே
நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா* நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்*
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய* இப்பால்-
கைவளையும் மேகலையும் காணேன்* கண்டேன்- கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்*
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு* இது அன்றோ எழில் ஆலி? என்றார் தாமே
————–
செவிப் பூவே –
அணைத்த திருக் கையில் உறுத்தும் ஆபரணங்கள் போல் அன்றிக்கே
அணைத்த அநந்தரம் ஆக்ராணத்துக்கு விஷயமான இடம் –
செவிப் பூவே
அணைத்த அனந்தரம் ஆக்ரணத்துக்கு (முகந்து பார்க்க )விஷயமான இடம்
செவிப் பூவே
ஆக்ராணம்-பண்ணும் இடம் -(மேல் காதுக்கு -மேல் தோன்றிப்பூ ஆழ்வார் )
கண்ணாகவுமாம்
————–
பாடகமே –
அணைத்தால் தோற்றுப் பிடிக்கும் காலுக்கு இடும் ஆபரணம் –
பாடகம்
அணைத்துத் தோற்றவர்கள் விழுந்து பிடிக்கும் காலுக்கு ஆபரணம்
பாடகமே
அணைத்தால் துவண்டு விழுமிடம் –
அஸி தேஷணை ஆகையாலே- ஜிதந்தே புண்டரீ காக்ஷ -என்று அவன் தோற்று விழும் இடம்
———
சூடகமே இத்யாதி
1-பிடித்த கைக்கும் –
2-அணைத்த தோள்களுக்கும்
3-அணைத்த இடத்தே உறுத்துமதுக்கும்
4-ஸ்பர்சத்துக்கும்
5-தோற்று விழும் துறைக்கும்
சூடகமே பாடகமே
கைத்தலம் பற்ற —
திருக்கையால் தாள் பற்ற –
கையைக்
காலைப் பிடித்து இறே
நடுவுள்ளது எல்லாம் நடத்துவது –
——–
என்றனைய பல்கலனும்-
பருப்பருத்தன சில சொன்னோம் இத்தனை –
நீ அறியும் அவை எல்லாம் என்கை –
பல பலவே யாபரணம் இறே –
என்றனைய பல் கலனும்
இவ்வளவிலே இருந்தது எண்ணுமது அன்றே –
பருப் பெருத்தன சிலவற்றைச் சொன்னோம் –
நீ அறியுமவை எல்லாம் என்கிறார்கள்-
பல பலவே ஆபரணம் -என்னக் கடவது இறே அவன் தனக்கு உட்பட –
என்றனைய பல்கலனும்
பருப் பெருத்தன சில சொன்ன இத்தனை -நீ அறியுமவை எல்லாம் என்கை –
பல பலவே ஆபரணம் இத்யாதி –இத்தசையிலே எண்ணப் போமோ –
பல பலவே யாபரணம் பேரும் பல பலவே,
பல பலவே சோதி வடிவு பண்பெண்ணில்,
பல பல கண்டுண்டு கேட்டுற்று மோந்தின்பம்,
பல பலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ-2-5-6-
————–
யாம் அணிவோம் –
வ்யதிரேகத்திலே-மலரிட்டு நாம் முடியோம் -என்கிறவர்கள்
பூண்போம் -என்கிறார்கள்
அவனுக்கு இவர்கள் அனுமதி பண்ணுகையே அமையும் -என்கை-
யாம் அணிவோம் –
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்க வல்ல அவயவங்களிலே கிடந்து தானும் நிறம் பெற்று –
பூட்டின தானும் நிறம் பெற்று போம்படி வடிவு படைத்த நாங்கள் –
இவ் வெல்லை வரும் வளவு இறே மலரிட்டு நாம் முடியோம் என்றது –
நாம் முடியோம் என்றால் பூட்ட மாட்டான்
அணிவோம் என்றால் பூட்டாது இருக்க மாட்டான் —
அவன் அலங்கரிக்கைக்கு இவர்கள் அனுமதியே அமையும்
யாம் அணிவோம்
ஒருவரை ஒருவர் மாறி மாறி ஒப்பிக்கக் கணிசிக்கிறார்கள் –
நாடு புகழும் பரிசினால் –யாம் அணிவோம்
நிறை புகழ் ஆய்ச்சியர் –(நாச்சியார் 4-11 )
அணி இழை யாய்ச்சியார் (திருவாய் 9-10-11 )-என்கிற இரண்டும் பெற வேணும் –
யாம் அணிவோம்
மலரிட்டு நாம் முடியோம் -2-என்ற இவர்கள் அனுமதி பண்ண அமையும் என்கை
————
ஆடை யுடுப்போம்-
பண்டு உடுத்தார்களோ -என்னில்
அவன் உடுத்து உடாதது உடை அன்று இறே என்று இருப்பது –
அவன் திருப் பரியட்டம் இவர்கள் அறையிலே யாம்படி கூறை
மாற வேணும் -என்றுமாம் –
நோன்பை முடிக்கையாலே நல்ல பரிவட்டம் உடுக்க -என்றுமாம் –
உடுத்துக் களைந்த -என்னுமவர்கள் இறே இவர்கள்
ஸ்வேத கந்த உக்தமாய் அவன் உடுத்து முசிந்த ஆடை -என்றுமாம் –
அதன் பின்னே பாற் சோறு மூட நெய் பெய்து –
அதுக்கு மேலே பாற்சோறு மூடும்படியாக நெய் பெய்து –
இத்தால்
பகவத் சம்பந்தமுள்ள திருவாய்ப்பாடியிலே
சம்ருத்தி எல்லாம் பிரியமாய் இருக்கும்படி –
ஆடை யுடுப்போம்
புனை இழைகள் அணிவும் என்றால் ஆடையுடையும் என்று அடைவு -(திருவாய் 8-9 )
காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுங்கும் (பெரியாழ்வார் -3-9 )-என்றால்
பின்னை கூறை யுடுக்கை இறே அடைவு –
நாடு புகழும் பரிசினால் –ஆடை யுடுப்போம் –
கூறை யுடுக்கும் –அயர்க்கும்-(பெரியாழ்வார் -3-9 )-என்று
வசை சொல்லாத படி அரையிலே தொங்கும் படி உடுக்கை
கோவிந்தா உன் தன்னைப் பாடி –ஆடை யுடுப்போம் –
இவன் தூர வாசியான போது கோவிந்தன் -என்று புடவை பெறுகிறவள்
இவன் சந்நிதியில் சொன்னால் புடவை பெறக் கேட்க வேணுமோ
ஆடை யுடுப்போம்
முன்பு உடாதே இருந்து இப்போது உடுப்போம் என்கிறார்கள் அன்று –
அவன் உடுத்த உடுத்தும் இறே -உடையாவது –
இவர்கள் யுடுக்க உபக்ரமிக்க உடுத்தபடி பொல்லாது என்று
அவன் அழிக்கை இறே நன்றாக யுடுக்கை யாவது
நன்றாக –ஆடை யுடுப்போம்
அரையில் பீதக வண்ண வாடை கொண்டு(நாச்சியார் -13-1) -என்கிறபடியே
அவனைப் போலே வெளுப்போடே வாங்கி உடுத்தது அன்றிக்கே
உடுத்து முசித்து வேர்ப்பு மணத்தோடு கூடின கூறை மாறாடப் பட்ட உடையாய் இருக்கை
அணிவோம் –உடுப்போம்
பிரிந்து இருக்கில் இறே வரி
வளையால் குறைவிலமே–(திருவாய் -4-8 )
மேகலையால் குறைவிலமே -என்ன வேண்டுவது
பல் கலனும் யாம் அணிவோம் ஆடை யுடுப்போம்
எண்ணில் பல் கலன்களும் ஏலும் ஆடையும்(திருவாய் 4-3 ) -என்னக் கடவது இறே
அதன் பின்னே
பீதக வாடை யுடுத்தால் -கலத்தது உண்ணும் அத்தனை இறே
அதன் பின்னே
புறம்பே ஒன்றைப் பற்றினால்
அவையும் இல்லை –
அவனையும் கிடையாது –
அவனைப் பற்றினார்க்கு சர்வ லாபமும் உண்டு –
ஆடையுடுப்போம்
பண்டு உடார்களோ என்னில் —
கோவிந்தா உன்தன்னைப் பாடி ஆடை யுடுப்போம்
ஒருத்திக்குப் புடவை கொடுத்தது இவர்களுக்குச் செய்யச் சொல்ல வேணுமோ –
அவன் உடுத்துக் கொடுத்தது உடை -உடுத்துக் கொடுக்காத உடை அன்று என்கை
அதாவது கூறை மாறுகை -மாறாடுகை
புனை இழைகள் அணியும் ஆடையுடையும் புதுக்கணிப்பும் நினையும் நீர்மையதன்று இத்யாதி –
அப்பன் திருவருள் மூழ்கினள்-என்கிறபடியே –
புனை யிழைகள் அணிவும் ஆடை யுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மை யதன்று இவட் கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுல காளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-குட்ட நாட்டுத் திருப்புலியூர் அப்பனோட்டை சம்பந்தமே இவளுக்கு புதுக்கணிப்பு
அவனோட்டை சம்பந்தமே இவர்கள் நன்மைக்கு எல்லாம் அடி என்கை
புதுக் கணிப்பும் –
அவன் உகப்பு ஒழிய தங்கள் உகப்பு பொகட்ட படி
நோன்பு முடிக்கையாலே நல்ல புரியட்டம் உடுக்க என்றுமாம்
உடுத்துக் களைந்த நின் பீதகவாடை -என்னுமவர்கள் இறே
—————
முழங்கை வழி வாரக்
நம்பி திரு வழுதி வளநாடு தாசர் -நெய் படாதோ -என்ன
கிருஷ்ண சன்னதியாலே த்ருப்தைகளாய் இருந்தவர்களுக்கு
சோறு வாயில் தொங்கில் அன்றோ
நெய் வாயில் தொங்குவது -என்று பட்டர் அருளிச் செய்தார் –
வ்யதிரேகத்தில் நெய் உண்ணோம் பால் உண்ணோம் -என்று
சொன்னவர்கள் இன்று ஆசைப் படுகிறார்கள் –
பாற் சோறு மூட நெய் பெய்து
நெய் உண்ணோம் பால் உண்ணோம் என்கிற விரதங்கள் ஸமாப்பித்து –
இவர்கள் வ்ரதத்துக்காகத் தவிர்ந்து இவர்கள் தவிருகையாலே
அவன் தவிர்ந்து ஊரில் நெய்க்கும் பாலுக்கும் போக்கில்லையே –
நெய் பெருமையாலும்
பால் பெருமையாலும் நீரிலே யாக்காதே
பாலில் யாக்கி
நெய்யை நிரம்ப விட்டு
நெய்யிடையிலே
சோறு உண்டோ என்று தடவி எடுக்க வேண்டும் படி இருக்கை
முழங்கை வழி வார
கிருஷ்ணன் சந்நிதியில் திருப்தைகளாய் இருக்கிறவர்களுக்கு
உள்ளுத் தொங்குகிறது அன்றே -கை வழியே வழிய
(அலங்காராசனத்துக்குப் பின் போஜ்யாசனம் தானே)
அதன் பின்னே பாற்சோறு-மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்(ஓங்கு பெரும் செந்நெல் கீழ் )
பகவத் சம்பந்தம் உண்டான திருவாய்ப்பாடியிலே ஸம்ருத்திகள் எல்லாம் இவளுக்கு பிரியமாய் இருக்கிறபடி-
நம்பி திருவழுதி வளநாடு தாசர் -நெய் வாயில் படாதோ என்ன
ஓரவல் (ஓர் அவில் -ஒரே அரிசி மணியாவது )வாயில் தொங்கில் அன்றோ நெய் வாயில் படுவது -என்று பட்டர் அருளிச் செய்தார்
கிருஷ்ண சந்நிதியாலே த்ருபத்தைகளாய் இருக்கிறார்கள்
பால் தொங்கில் அன்றோ நெய் தொங்குவது
நெய் யுண்ணோம் பாலுண்ணோம் -2-என்றது தனியாகை –
(எழ பிரார்த்தனை – கடாக்ஷம் பிரார்த்தனை – நடை அழகைப் பிரார்த்தகித்து மங்களா சாசனம் பண்ணி
அவன் இடம் அவனையே பிரார்த்தித்து -நோன்புக்கு உபகரணங்களை பிரார்த்தித்து -கீழ் எல்லாம்
இங்கு தானே அவன் சந்நிதி கிட்டிற்று)
————-
கூடி இருந்து –
பிரிந்து பட்ட கிலேசம் தீரக்
கூடி தொட்டுக் கொண்டு இருக்கையே பிரயோஜனம் –
புஜிக்கை பிரயோஜனம் அன்று –
கூடி இருந்து
பசி கெட யுண்கிறார்கள் அன்றே –
எல்லாரும் கூட தொட்டுக் கொண்டே இருக்கை இறே உத்தேச்யம் –
கூடி –
பிரிந்த பட்ட வியாசனம் எல்லாம் தீரக் கூடி –
எனை நாள் வந்து கூடுவன்-(திருவாய் -10-10 )என்ற இழவும் தீர்ந்த படி
இருந்து
வாசல்கள் தோறும் அலமந்து எழுப்பிக் கொண்டு திரிந்த கிலேசம்
எல்லாம் தீர இருந்து –
————-
குளிர்ந்து –
பிரிந்து கமர் பிளந்த நெஞ்சுகள் குளிரும்படி –
நம்பெருமாள் திருநாள் -என்று ஒரு பேரை இட்டு
ஸ்ரீ வைஷ்ணவர்களைத் திரட்டிக் காணுமா போலே
ஒருவருக்கு ஒருவர் போக்கியம் இறே
ஸ்ருதி அர்த்தம் இப்பாட்டில் சொல்கிறது —
குளிர்ந்து
பிரிந்து கமர் பிளந்த நெஞ்சுகள் வவ்வல் இடும்படி குளிர்ந்து –
கோவிந்தா உன் தன்னைப் பாடி கூடி இருந்து குளிர்ந்து
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து –
காமத் தீயுள் புகுந்து கதுவா நிற்க இராதே –
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தனோடு சாம்யாபன்னைகளாய் இருக்கை –
ஆக இரண்டு பட்டாலும்
சாம்யா பத்தியும்
குண அனுபவமும் ஆகிற இரண்டு அர்த்தமும் சொல்லப் பட்டது –
விராஜா ஸ்நானத்தில் உத்யுக்தனாய் போருமவனுக்கு
காளங்கள்-வலம் புரிகள் தூர்ய கோஷம் –(பெரியாழ்வார் -4-4 )
ஆண்மின்கள் வானகம்-(திருவாய்-10-9 )என்கிற மங்களா சாசனம் –
நிறை குட விளக்கம் –
கொடி அணி நெடு மதிள்-என்னும் படி கட்டின கொடியும் மேல் கட்டியுமாய்
ஆதி வாஹிகர் தொடக்கமான வர்கள் சத்கரிக்கப் போய்
விராஜா ஸ்நாநம் பண்ணின அனந்தரம்
ஸ்ரீ வைகுண்ட நாதனை ஒப்பிக்கக் கடவராய் இருக்கும்
திவ்ய அப்சரஸ் ஸூக்கள் பல ஹஸ்தைகளுமாய்
வாசோ ஹஸ்தைகளுமாய் வந்து
ப்ரஹ்ம அலங்காரம் பண்ணி ஸ்ரீ வைகுண்ட நாதனோடு கூட ஸூரிகளோடே சேர்ந்து இருந்து
சம்சார தாப ஸ்பர்சம் இன்றிக்கே நிரதிசய போக்யமாய் –
உண்ணும் சோறு -என்று சொல்லப் பட்ட போக்கிய விஷயத்தை –
பாலே போல் சீர் என்கிற குணங்களோடு
கை கழியப் போருகிற ஸ்நேஹத்தோடே புஜித்துக் களிக்கக் கடவ பரிமாற்றத்தை
ஒரு முகத்தால் ஸூசிப்பிக்கிறார்கள் –
முக்தரானவர்களுக்கு இஸ் ஸத்காரமும்
இவ் வனுபவமும் சித்திக்கிறது –
கோவிந்தன் தன் தனக்கு குடி குடியார் என்று இறே -(திருவாய் -10-9-8 )
கோவிந்தா உன் தன்னைப் பாடி
தேஹாந்த்ரே தேசாந்தரே பெறக் கடவ பேற்றை எங்களுக்கு
நீ சம்மானமாகப் பண்ணித் தர வேணும் என்று
சாம்யா புத்தியையும்
குண அனுபவத்தையும் அபேக்ஷித்தார்களாய் இருக்கிறது
திருவடி -திருவனந்த ஆழ்வான் -திவ்ய ஆயுத ஆழ்வார்கள் தொடக்கமான ஸூரி வர்க்கம்
திவ்ய மஹிஷிகள்
முமுஷுக்கள்
அசாதாரணமான நாடு ஈஸ்வரன் தானே எல்லாரும் சம்மானம் பண்ணும் படியான விஷயம்
முமுஷுவாய் முக்தனாம் என்கிற ஸ்ருதி யர்த்தம் ஸூசிதமாகிறது-
கூடி இருந்து குளிர்ந்து –பல் கலனும் யாம் அணிவோம்
பிரிந்த போது பர்யட்டங்களையும் ஆபரணங்களையும் கட்டி எங்கேனும் பொகட்டு
ராக்ஷஸிகள் நடுவு இருக்கிற எனக்கு என் செய்ய என்று
இருந்த பிராட்டியை போலே இருந்தார்கள் இவர்கள் –
ஸ்நாநமும் வஸ்த்ரங்களும் ஆபரணங்களும் பரதனை ஒழிய நமக்கு என் என்று இருந்த
பெருமாளை போலே இருந்தான் கிருஷ்ணன் –
நீராட்டம் அமைத்து குளிக்க அழைத்தாலும் வராதே
நப்பின்னை காணில் சிரிக்கும் என்றாலும் இசையாதே
குளியாது இருந்தமை அவர்களும் அறிகையால் இறே –
உன் தன் மணாளனை எம்மை நீராட்டு என்றது இவர்கள் (20)
இவர்களோடு கூடின பின்பு
விசோதித ஜடராய் (ஜடை முடி ஷவரம் பண்ணி)
ஸ்நாநம் பண்ணி
சித்ரமால்யா நுலேபநராய்
மஹார்ஹ வசனமும் யுடுத்து விளங்கி நின்றால் போலே
இவனும்
இவர்களோடு கூடிக் குளித்து
ஒப்பித்து விளங்க வேண்டுகையாலே
கூடி இருந்து இப்படிச் செய்யக் கடவோம் என்கிறார்கள்
கூட்டரவாக வேணும் நன்னாள் இறே வருகிற கூட்டரவு ஆகையால் நன்றாக கூட வேணும் இறே
நன்றாகக் கூடி இருந்து குளிர்ந்து
இனி விஸ் லேக்ஷம் கலசாமல் கூடி
நல்ல நாளிலே வருகிற கூட்டரவாக வேணும் நன்னாள் இறே வருகிற கூட்டரவு ஆகையால் நன்றாக கூட வேணும் இறே
உன் தன்னைப் பாடி -கூடி –குளிர்ந்து
வாய் பாட
உடம்பு கூட
நெஞ்சு குளிர
கூடி –குளிர்ந்து
குள்ளக் குளிர நீரிலே தோயாதே நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் –
(நீரிலே தோயாதே–உபாயாந்தரங்களிலே இழியாதே
நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் -ப்ராப்யத்திலேயே ஆழ்ந்து இருக்க வேண்டும் )
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்-
தனியே புஜிக்கக் கடவது அன்று –
உண்கை உத்தேச்யம் அன்று-
பிரிந்து பட்ட கிலேசம் தீரத் தீர கூடித் தொட்டுக் கொண்டு இருக்கை பிரயோஜனம்
நம்பெருமாள் திரு நாள் என்று ஒரு பேரை இட்டு ஸ்ரீ வைஷ்ணவர்களை யடையத் திரட்டிக் காணுமா போலே
ஸோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்ஸிதா-
அஹம் அன்னம் -இத்யாதிப் படியே ஒருவருக்கு ஒருவர் போக்யம் என்கை
(உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத
படியாய்க் கிடந்து உன் பவள வாய்க் காண்பேனே)
குளிர்ந்து
பிரிந்து கமர் பிளந்த நெஞ்சங்கள் வவ்வலிடும்படி –
—————————————–
கூடாரை வெல்லும் சீர் –
கரண களேபர பிரதானம் –
முதலாக சாங்க சாஸ்திர பிரதானம் பண்ணின விடத்திலும்
ந நமேயம் என்று இருப்பாரை
தன்னுடைய சௌர்யாதி குணங்களாலும்
சீலாதி குணங்களாலும் வெல்லும் இத்தனை –
வில் பிடியைக் காட்டி ராவணனை ஜெயித்தான் –
இது பிரதம யுத்தத்திலே இவனும் அதுக்கு எதிர்பார்த்து போந்தவன் தோலாமை இல்லை இறே
ஆனால் மறுபடியும் யுத்தமுண்டான படி எங்கனே என்னில்
பெருமாளுடைய நிரதிசய சௌர்யத்தை
பிரகாசிப்பிக்கைக்காக மறுபடியும் யுத்தம் பண்ணினான் இத்தனை
என்று நம்முடைய ஆச்சார்யர் அருளிச் செய்வர் –
தன்னுடைய வடிவு அழகைக் காட்டி கோபிமார்களை ஜெயித்தான்
ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே சர்வ ஸ்மாத் பரனான தன்னுடைய
வை லஷண்யத்தைக் காட்டி ஆழ்வார்களை ஜெயித்தான்
இவை ஒன்றிலும் ஈடுபடாத நம் போல்வாரை ஆழ்வார்
சம்பந்தத்தை வ்யாஜீ கரித்து ஜெயிக்கும் இத்தனை –
கோவிந்தா –
சர்வ சுலபன் ஆனவனே –
வுன்தன்னைப் பாடிப் –
சர்வ ஸ்மாத் பரனாய்
சர்வ சுலபனான உன்னை
த்வத் அனுபவ ஜனித ப்ரீதிக்கு போக்கு வீடாக பாடி –
பறை கொண்டு –
புருஷார்த்தத்தை லபித்து –
யாம் பெரும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக-
நாடு ஸ்வ அபிப்ராயத்தால் கொண்டாடும் பிரகாரத்தாலே
உன் பக்கல் கை பார்த்து இருக்கும் நாங்கள்
லபிக்கிற பஹூமானம்
உன் பக்கல் நன்றாக யாம் பெரும் சம்மானம் -என்றுமாம் –
சூடகமே –
காப்பே
தோள் வளையே –
திரு இலச்சினையே
தோடு –
திரு மந்த்ரமே
செவிப்பூவே
த்வயமே
பாடகமே
சரம ஸ்லோகமே
இவை
ஸ்வரூபஞ்ஞனான முமுஷுவான அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதங்களாய் –
பகவத் சம்பந்த த்யோதகங்களாய் -இருப்பன
இதில் தோடு –
மண்டல ஆகாரமாய் -மந்திர சேஷ விவரிணி யான
பிரணவ ஆகாரத்துக்கு த்வதோகமாய் -இருக்கையாலே –
திருமந்த்ரத்தை சொல்லுகிறது –
செவிப்பூ
ஸுவயம் போக ரூபம் ஆகையாலே -போக பிரதானமான
த்வயத்தை சொல்லுகிறது –
பாடகம்
பத்த ரூபம் ஆகையாலே -உபாயாந்தர நிவ்ருத்தி பரமான
சரம ஸ்லோகத்தை சொல்லுகிறது –
இம் மூன்று ரகஸ்யங்களாலும்
ஞான பக்தி வைராக்யங்களை சொல்லுகிறது –
அது எங்கனே என்னில் –
திருமந்தரம் -ஆத்ம ஸ்வரூப யாதாம்ய ஞான பரம் ஆகையாலும்
த்வயம் -உத்தர கண்டத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு
பூர்வ பாவியான பக்தி பிரதானம் ஆகையாலும்
சரம ஸ்லோஹம் த்யாஜ்ய அம்சத்தில் வைராக்யம் பிரதானம் ஆகையாலும்
ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –
என்று அனைய
என்று சொல்லப் படுகிற
பல் கலனும்
ஞான பக்தி வைராக்யங்கள் மூன்றும்
ஓர் ஒன்றே விஷய பேதத்தாலே -அநேகமாக இருக்கும் இறே-
ஆகையால் -பல் கலனும் -என்கிறார்கள் –
யாம் அணிவோம்
உன்னோடு கூடாத அன்று இவை ஒன்றும் வேண்டாத நாம்
இன்று அணியக் கடவோம்
பகவத் சம்பந்தம் இன்றியிலே ஞான பக்தி வைராக்யங்கள் உண்டானாலும் அபாயம் இறே பலிப்பது –
பௌத்தனுக்கும் ஞான பக்தி வைராக்யங்கள் உண்டு இறே –
ஆடை உடுப்போம்
சேஷத்வ ஞானம் ஆகிற வஸ்த்ரத்தை உடுப்போம்
அதன் பின்னே –
அதுக்கு மேலே
பால் சோறு
கைங்கர்யம் ஆனது
மூட நெய் பெய்து
மறையும்படி பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு –
கூடி இருந்து குளிர்ந்து –
போக்தாவான உன்னோடு
போக்யரான நாம்
சம்பந்தித்து இருந்து -விஸ்லேஷ வ்யசனம் எல்லாம் தீரப் பெற்றோம் –
இது வன்றோ நாம் உன் பக்கல் பெரும் சம்மானம்-
—————-
ஆழ்வார் கோஷ்டி என்று சேவிக்கிறோம்–அஹம் அன்னம் -இந்த பாசுரம்–விரஜா ஸ்நானம்
ஆண்மின்கள் வானகம் மங்களா சாசனம்–ஆதிவாகார் சத்கரிக்க–சதம் ஹச்தாகா அலங்கரிக்க ஒப்பிக்கும் படி-ப்ரஹ்ம அலங்காரம்
சம்சார தாப ஸ்பர்சம் இன்றிக்கே-நிரதிசய போக்கியம் அனுபவிக்க
அஹம் அன்னம்–அந்நாதா அன்னம் புஜிக்க–அஹம் அன்னம் புஜிக்கிறவனை சாப்பிடுகிறேன் —மூன்றாலும் சொல்லி –
பாலே போல் சீர் -கை கழிய போகிற சிநேகம்–முகத்தாலே சூசிபபிகிறார்கள்-இதில் சாம்யாபத்தி என்றும் கீழே குணா அனுபவம் என்றும் சொல்லாலாம்
கோவிந்தன் தன குடி அடியார் -தனக்கு முடி உடை வானவர் எதிர் கொல்ல–கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
உன் தன்னை பாடி–தேசாந்தரே தேகாந்தரே இல்லாமல்–இங்கே இந்த தேசத்தில்–சூரி வர்க்கம் திவ்ய மகிஷி பரமபதம்
முமுஷு முக்தன் சூசகம்–கூடி இருந்து பாலகனும்–ஆடை உடுப்போம் சேர்த்து
கூடி இல்லாத காலத்தில் ஆடை ஆபரணம் பால் சோறு வேண்டாம்–பிரிந்த போது -சீதை பரியட்டம் ஆபரணங்கள் எங்கேயேனும் பொகட்டு-கிஷ்கிந்தை
ராஷசிகள் நடுவில் இவை எதற்கு–பிராட்டி சேர்த்த பின்பு சர்வாலங்கார பூஷிதை
பரதனை கிட்டிய பின்பே ஸ்நானம் வஸ்த்ரம் அலங்காரம் பெருமாள் போலே கிரிஷ்ணனும் -கோபிகள் -சேர்ந்த பின்பு
கைகேயி புத்ரம் பாரதம் –
பரத ஆழ்வான் கூடின பின்பு ஜடை களைந்து ஸ்நானம் மாலை சந்தானம் வஸ்த்ரம் உடுத்து-இவனும் கூடி குளித்து ஒப்பித்து
கூடி இருந்து பல் கலனும் யாம் அணிவோம் கண்ணனையும் சேர்த்து–கூடி இருந்து ஆடை உடுப்போம்
கூடி இருந்து பால் சோறு நெய் பேர்ந்து–விச்லேஷம் இல்லாத நல கூட்டம்
வாய் பாட -முக்கரணங்களும் அவன் இடம்-குளிர்ந்து -நீர் வண்ணன் மார்பிலே தோய வேண்டும்-
சூடகமே —காப்பே
தோள் வளையே —திரு இலச்சினையே
தோடு —திரு மந்த்ரமே
செவிப்பூவே–த்வயமே
பாடகமே–சரம ஸ்லோகமே
இவை
ஸ்வரூபஞ்ஞனான முமுஷுவான அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதங்களாய் —பகவத் சம்பந்தத்யோதகங்களாய் -இருப்பன
இதில் தோடு –
மண்டல ஆகாரமாய் -மந்திர சேஷ விவரிணி யான பிரணவ ஆகாரத்துக்கு த்வதோகமாய் -இருக்கையாலே -திருமந்த்ரத்தை சொல்லுகிறது –
செவிப்பூ
ஸுவயம் போக ரூபம் ஆகையாலே -போக பிரதானமான த்வயத்தை சொல்லுகிறது –
பாடகம்
பத்த ரூபம் ஆகையாலே -உபாயாந்தர நிவ்ருத்தி பரமான-சரம ஸ்லோகத்தை சொல்லுகிறது –
இம் மூன்று ரகச்யங்களாலும்-ஞான பக்தி வைராக்யங்களை சொல்லுகிறது –
அது எங்கனே என்னில் –
திருமந்தரம் -ஆத்ம ஸ்வரூப யாதாம்ய ஞானபரம் ஆகையாலும்
த்வயம் -உத்தர கண்டத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு-பூர்வ பாவியான பக்தி பிரதானம் ஆகையாலும்
சரம ச்லோஹம் த்யாஜ்ய அம்சத்தில் வைராக்யம் பிரதானம் ஆகையாலும்–ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –
என்று அனைய–என்று சொல்லப் படுகிற–பல்கலனும்-ஞான பக்தி வைராக்யங்கள் மூன்றும்
ஓர் ஒன்றே விஷய பேதத்தாலே -அநேகமாக இருக்கும் இ றே-
ஆகையால் -பல்கலனும் -என்கிறார்கள் –
யாம் அணிவோம்
உன்னோடு கூடாத அன்று இவை ஒன்றும் வேண்டாத நாம்-இன்று அணியக் கடவோம்
பகவத் சம்பந்தம் இன்றியிலே ஞான பக்தி வைராக்யங்கள் உண்டானாலும் அபாயம் இ றே பலிப்பது –
பௌத்தனுக்கும் ஞான பக்தி வைராக்யங்கள் உண்டு இ றே –
ஆடை உடுப்போம்–சேஷத்வ ஞானம் ஆகிற வஸ்த்ரத்தை உடுப்போம்
அதன் பின்னே —அதுக்கு மேலே
பால் சோறு-கைங்கர்யம் ஆனது
மூட நெய் பெய்து–மறையும்படி பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு –
கூடி இருந்து குளிர்ந்து –போக்தாவான உன்னோடு-போக்யரான நாம்-சம்பந்தித்து இருந்து -விஸ்லேஷ வ்யசனம் எல்லாம் தீரப் பெற்றோம் –
இதுவன்றோ நாம் உன் பக்கல் பெரும் சம்மானம்
சூடகமே -கையில் தோள் வளையே -தோடு -செவிப்பூவே பாடகமே–ஐந்து ஆபரணங்கள் பஞ்ச சம்ஸ்காரம்
திரு ஆபரணங்கள் ஆத்மாவை அலங்கரிக்க
தாப -எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டம் -தீயில் -அக்னியில் காட்டிலும் அக்னியில் காட்டிய -பொலிகின்ற செஞ்சுடர் –கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடி குடி ஆட செய்கின்றோம் -திரு இலச்சினை–தோள் வளையே -திரு இலச்சினை–கங்கணம் கட்டி -சூடகம்–
பட்டம் சூடகம் ஆவன -பூட்டும் ஆத்மபூஷணங்கள்-பரகுரு -சம்சார நிவர்தகமான திரு மந்த்ரம் உபதேசித்த-உத்தாராக ஆசார்யர் –
சிந்தனாசார்யர் அவரகுறு –பட்டம் கட்டி -பாடகமும் சிலம்பும் இட்டமாக வளர்த்து பெரியாழ்வார் –
புண்டர -தோடு செவிப்பூ இரண்டு காதுக்கு குரு பரம்பரை ரகஸ்ய த்ரயம் –அர்த்தங்கள் —பாடகமே -காலுக்கு முகுந்த மாலை ஹரே கச்சான்க்ரி–சீரார் வேம்கடமே -ஆலயம் –
அனைய பல்கலனும் யாம் அணிவோம் -ஐந்து மட்டும் இல்லை
சாம்யாபத்தில் கீழ் பாசுரத்தில்–குண அனுபவம் இங்கே–ஆண்மின்கள் வானகம்-வலம்புரிகள் கலந்து எங்கும் இசைத்தன
சங்கு -திருச்சின்னம்–விரஜா ஸ்நானம் -கோஷம்–மங்களா சாசனம்
ஆதி வாஹிகர் சத்கரிக்க–ஒப்பிக்க கடவர் அலங்காரம்–சதம் அஞ்சன ஹஸ்தா ஆபரணம் ஹஸ்தா–வஸ்த்ரம் சந்தனம் வாசனாதி திரவியம்
கூடிஇருந்து குளிர்ந்து –
சீர் -ஸ்வாமி ஸ்வரூபம் ரூபம் குண விபூதிகள்
வடுக நம்பி போலவும்–வாழி எதிராசன் -மா முனிகள் போலேயும்–உன் தன்னோடு உற்றோமே ஆவோம்
கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்–உன் தன மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்
கூடியிருந்து குளிர்மாலை -சாற்றி அருளுகிறாள்
மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும் இவையும் தன்னோடு கூடுவது இல்லை யான் –
நூலின் நேர் இடையார் திறத்து நிற்கும் ஞாலம் தன்னொடும் கூடுவது இல்லையான் –
மாறனார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும் பாரினாரோடும் கூடுவது இல்லையான் –
உண்டியே உடையே உகந்தொடும் இம் மண்டலம் தன்னொடும் கூடுவது இல்லையான் –
தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய் நீதியாரோடும் கூடுவது இல்லையான் –
கூடத்தகாதவர்களை ஸ்ரீ குலசேகர ஆழ்வார்
கூடத் தகுந்தவர்களை -மறம் திகழு –தொல் நெறிக் கண் நின்ற தொண்டர் –
நினைந்து உருகி யேத்துமவர்கள்
அணி யரங்கத்து திரு முற்றத்து அடியவர்கள்
மால்கொள் சிந்தையராய் –அழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் –
ஒருகாலும் பிரிகிலேனஎன்று இருக்குமவர்கள்
பழுதே பல காலும் போயின -அஞ்சி அழுது இருக்குமவர்கள்
த்ருணீ க்ருத விரிஞ்சாதி நிரந்குச விபூதிகர்கள்
ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண சாலிகள்
வரவரமுனி ப்ருத்யைரச்து மே நித்ய யோக -நித்ய குதூகுல சாலிகள்
மணவாள மா முனிவன் பொன்னடியாம் செங்கமலப் போதுகளை உன்னிச் சிரத்தாலே தீண்டுமவர்கள்
நித்ய அனுபவ யோக்யர்கள்
இன்னும் அங்கே நட நம்பி -புள்ளுவம் பேசாதே போகு நம்பி
கூடோம் என்று ஊடினவர்கள்
அக்கொடிய நிலை எல்லாம் தொலைந்து எப்போதும் கூடுவோம் என்று கூடி இருந்து குளிர்வோம்
கூடி இருந்து கண் வளர்ந்து போது போக்காமல் குளிர்ந்து-
——————————————————————————————————–
27. பாலேபோல் சீர் :
தே மதுர பாலே போல் சீர் தன்னால் தன் பால்
நமவெனலார் தாம் தோற்ப தன் குணம் காட்டி
சமன் கொள் நல் வீடு செய் மாலுக்கு தொண்டு
அமைந்தோமாய் கூடிக் களித்து .
கீழ் பாசுரத்தில் நோன்புக்கு உபகரணமாக
போல்வன சங்கங்கள்
சாலப் பெரும் பறையே
பல்லாண்டு இசைப்பாரே
கோலா விளக்கே
கொடியே
விதானமே
என்று தன்னதேயான
பாஞ்சஜன்யம்
பேரிகை
நம்மாழ்வார், பெரியாழ்வார்,
நப்பின்னை
கருடன்
ஆதிசேஷன்
ஆன கேட்டவை அனைத்தும்
நதே ரூபம் நசாகாரம் நஆயுதாநி . . . பக்கத்தானாம் துவாம் பிரகசாஸசே என்பதாக கொடுத்தாகி விட்டது.
அது ஸாரூப மோக்ஷம் என்றால்,
மாரி மலை முழைஞ்சில் பாசுரத்தில் இங்கனே போந்தருளி என்று ஸாலோக , ஸாமீப்ய மோக்ஷத்தைப் பெற்றாள்.
இப்போது இந்த பாசுரத்தில், நோன்பு நோற்றதற்கான சன்மானம் என்ற பெயரில் ஸாயுஜ்ய மோக்ஷத்தைப் பிரார்த்திக்கிறாள் ஆண்டாள்.
பேற்றுக்கு வேண்டியது விலக்காமையும், இரப்பும் என்ற கணக்கில் -2 ஆம் பாட்டில் நெய் உண்ணோம், பாலுண்ணோம்,
மலரிட்டு நாம் முடியோம் என்று தாங்கள் விலகினதை இப்போது இந்த பாட்டில்
சூடகமே, தோள்வளையே, தோடே , செவிப்பூவே என்று பல்கலனும் யாம் அணிவோம் .
அத்தை நீ கொடுக்கும் போது விலக்க மாட்டோம் என்பதான அப்பிரதிசேஷத்தை சூசிப்பிக்கிறாள்.
சரணாகதி கத்யமும் கோத கீதையும் :
பகவத் விஷயத்தில் செய்யப் போகிற சரணாகதி பலிக்க வேண்டி முதலில் புருஷகார பிரபத்தி.
அடுத்து பகவத் குணாநுசந்தானம்.
அடுத்து அவனுடைய பூஷணங்கள்.
அதை அடுத்து பத்னி பரிவாரங்கள் பற்றி அநுசந்தித்து
ஶ்ரீமந் நாராயண! துவத் பாதரவிந்த சரணமஹம் பிரபத்யே என்று சரணாகதியை அநுட்டித்தார்.
இதுவரை துவய பூர்வகண்டார்த்த அநுசந்தானமாயித்து.
மேலே கீதா ஸ்லோகங்கள் மூன்றை உதாகரித்து ஸ்லோக த்ரியோஜித, ஸ்தான த்ரியோஜித ஞானமாகிற –
பரபக்தி, பரஞான, பரமபக்தியைக் கொடு என்கிறார் ஸ்வாமி எம்பெருமானார்.
ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கையும், விஸ்லேஷத்தில் தரியாமையும் பரபக்தி. ஆர்த்தி தலை எடுத்து
வழியல்லா வழியிலாவது அவனை அடைய நினைப்பது , தர்சன ஸமாகார ஸாட்சாத்கரம் இரண்டும் பரஞானம்.
பிரியாதே கூடி அநுபவிக்ககை பரமபக்தி.
பகவத் குணானுப கைங்கரயத்துக்கு பசி போலே இந்த பரபக்தி, பரஞான, பரம்பக்தி.
ஆண்டாள்
இந்த பாசுரத்தில் சொல்லப்பட்ட பாலே போல் சீர்குணங்களை அனுபவிக்க வேண்டிய அவளுடைய அவாதான் பசி. அத்தால்
அவனை
வாயினால் பாட , மனத்தினால் சிந்திக்க,
முகில் வண்ணன் பேர்பாட,
மனத்துக்கினியானைப் பாட
என்ற இவையே பரபக்தி, பரஞான, பரமபக்தியாய் பசி வளர வளர பகவத் குணானுபவம் சிறக்கும் படியாய்
ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிது – என்று
பரம பதத்தில் பெரும் களிப்பாய் கூடி இருந்து குளிர்வதையே ஆண்டாளும்
பால் சோறு மூடநெய் பெய்து கூடி இருந்து குளிர்ந்து என்கிறாள் .
இங்கு முழங்கை வழி வார கூடி இருந்து குளிர்ந்து என்பதின் ஸ்வாரஸ்யம், முக்தபோக அனுபவத்தில் ,
அன்நாதனாக அவனிருக்க, அன்னமாய் இவர்கள் நின்று, அவனானந்தம் கண்டு
இவர்கள் ஆனந்திப்பதையே முழங்கை வழிவார என்கிறாள் .
அனுபவம் நித்யமாய், எப்போதும் நடவா நிற்பதை முழங்கை வழிவார என்று continuous tense ல் அமைத்தமை நோக்கத்தக்கது.
பாலே போல் சீரை அனுபவிக்க முதல் நிலை பசி பர பக்தி. அது இன்னும் அதிகமாக அதிகமாக
பரஞான பரம பக்தியாக பழுக்கிறது. அதுபோல அனபவாதிசயமும் விசத, விசத தர, விசத தமமாக
பரார்த்த ஆனந்தம்; பரார்த்த கைங்கர்யம்; குணானுபவமே புருஷார்த்தமாக கனிவது சொல்லப்பட்டது.
—————————————————————————————
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —
————————————————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –