Archive for the ‘திரு வேங்கடம் உடையான்’ Category

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்–ஸ்தோத்திரம்–பிரபத்தி–மங்களாசாசனம்–மூலமும் பொருளும் —

May 24, 2023

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் (29 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம் (11 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி (16 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச மங்களாசாசனம் (14 பாடல்கள்)
ஆகிய நான்கு பகுதிகள்

———–

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்–1-

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு–2-

மாதஸ் சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்-3-

தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே-4-

அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–5-

பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–6-

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–7-

உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–8-

தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–9-

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–10-

யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–11-

பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–12-

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்–13–

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்-14–

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–15–

சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-16-

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–17–

ஸூர்யேந்து பவ்ம புத வாக்பதி காவ்ய சவ்ரி
ஸ்வர்பாநு கேது த்விஷத் பரிஷத் ப்ரதாநா
த்வத் தாஸ தாஸ சரமாவதி தாஸ தாஸ
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–18–

த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–19-

த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!–20-

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–21-

ஸ்ரீ பத்மநாப புரு÷ஷாத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-22–

கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-23–

மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்
ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–24–

ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்–25–

பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்–26–

பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–27–

லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–28–

இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே–29-

***

ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்ரம்

கமலா குசசூசுக குங்குமதோ நியதாருணிதாதுல நீலதநோ

கமலாயத லோசன லோகபதே விஜயீபவ வேங்கட சை’லபதே                       1

ஸ சதுர்முக ஷண்முக பஞ்சமுக ப்ரமுகாகில தைவத மௌளிமணே

ச’ரணாகத வத்ஸல ஸாரநிதே பரிபாலயமாம் வ்ருஷ சை’லபதே                 2

அதிவேலதயா தவதுர்விஷஹை: அனுவேல க்ருதை ரபராத ச’தை

பரிதம் த்வரிதம் வ்ருஷ சை’லபதே பரயா க்ருபயா பரிபாஹி ஹரே           3

அதிவேங்கட சை’லமுதாரமதே: ஜனதா பிமதாதிக தான தராத்

பரதேவதய கதிதாந்நிகமை: கமலாதயிதான ந பரம் கலயே                           4

கலவேணுரவாச’ கோபவதூ ச’தகோடி வ்ருதாத ஸ்மரகோடி ஸமாத்

ப்ரதிவல்லவிகாபிமதாத் ஸுகதாத் வஸுதேவஸுதாந் ந பரம் கலயே       5

அபிராம குணாகர தாச’ரதே ஜகதேக தநுர்தர தீரமதே

ரகுநாயக ராம ரமேச’ விபோ வரதோ பல தேவ தயாஜலதே                           6

அவநீதநயாகம நீயகரம் ரஜநீகரசாரு முகாம்புருஹம்

ரஜனீசரராஜ தமோமிஹிரம் மஹநீயமகம் ரகுராமமயே                                  7

ஸுமுகம் ஸுஹ்ருதம் ஸுலபம் ஸுகதம் ஸ்வநுஜஞ்ஞ ஸுகாய அமோகசரம்

அபஹாய ரகூத்வஹமன்யமஹம் ந கதஞ்சன கஞ்சன ஜாது பஜே                8

விநா வேங்கடேச’ம் ந நாதோ ந நாத: ஸதா வேங்கடேச’ம் ஸ்மராமி ஸ்மராமி –

ஹரே வேங்கடேச’ ப்ரஸீத ப்ரஸீத ப்ரியம் வேங்கடேச’ ப்ரயச்ச ப்ரயச்ச      –9

அஹம்தூரதஸ்தே பதாம்போஜயுக்ம ப்ரணாமேச்சயா (ஆ)கத்யஸேவாம் கரோமி —

ஸக்ருத்ஸேவயா  நித்யஸேவாபலம் த்வம் ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச’        -10

அஜ்ஞாநினா மயா தோஷான் அசேஷான் விஹிதான் ஹரே–11

க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் சே’ஷசை’ல சி’காமணே

***

ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி

ஈஶாநாம் ஜக³தோ(அ)ஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம் ப்ரேயஸீம்
தத்³வக்ஷ꞉ஸ்த²லநித்யவாஸரஸிகாம் தத்க்ஷாந்திஸம்வர்தி⁴நீம் ।
பத்³மாலங்க்ருதபாணிபல்லவயுகா³ம் பத்³மாஸநஸ்தா²ம் ஶ்ரியம்
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்ஜ்வலாம் ப⁴க³வதீம் வந்தே³ ஜக³ந்மாதரம் ॥ 1 ॥

ஶ்ரீமந் க்ருபாஜலநிதே⁴ க்ருதஸர்வலோக
ஸர்வஜ்ஞ ஶக்த நதவத்ஸல ஸர்வஶேஷிந் ।
ஸ்வாமிந் ஸுஶீல ஸுலபா⁴ஶ்ரிதபாரிஜாத
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 2 ॥

ஆநூபுரார்பிதஸுஜாதஸுக³ந்தி⁴புஷ்ப-
-ஸௌரப்⁴யஸௌரப⁴கரௌ ஸமஸந்நிவேஶௌ ।
ஸௌம்யௌ ஸதா³நுப⁴வநே(அ)பி நவாநுபா⁴வ்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 3 ॥

ஸத்³யோவிகாஸிஸமுதி³த்வரஸாந்த்³ரராக³-
-ஸௌரப்⁴யநிர்ப⁴ரஸரோருஹஸாம்யவார்தாம் ।
ஸம்யக்ஷு ஸாஹஸபதே³ஷு விளேக²யந்தௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 4 ॥

ரேகா²மயத்⁴வஜஸுதா⁴கலஶாதபத்ர-
-வஜ்ராங்குஶாம்பு³ருஹகல்பகஶங்க²சக்ரை꞉ ।
ப⁴வ்யைரளங்க்ருததலௌ பரதத்த்வசிஹ்நை꞉
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 5 ॥

தாம்ரோத³ரத்³யுதிபராஜிதபத்³மராகௌ³
பா³ஹ்யைர்மஹோபி⁴ரபி⁴பூ⁴தமஹேந்த்³ரநீலௌ ।
உத்³யந்நகா²ம்ஶுபி⁴ருத³ஸ்தஶஶாங்கபா⁴ஸௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 6 ॥

ஸப்ரேமபீ⁴தி கமலாகரபல்லவாப்⁴யாம்
ஸம்வாஹநே(அ)பி ஸபதி³ க்லமமாத³தா⁴நௌ ।
காந்தாவவாங்மநஸகோ³சரஸௌகுமார்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 7 ॥

லக்ஷ்மீமஹீதத³நுரூபநிஜாநுபா⁴வ-
நீலாதி³தி³வ்யமஹிஷீகரபல்லவாநாம் ।
ஆருண்யஸங்க்ரமணத꞉ கில ஸாந்த்³ரராகௌ³
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 8 ॥

நித்யாந்நமத்³விதி⁴ஶிவாதி³கிரீடகோடி-
-ப்ரத்யுப்ததீ³ப்தநவரத்நமஹ꞉ப்ரரோஹை꞉ ।
நீராஜநாவிதி⁴முதா³ரமுபாத³தா⁴நௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 9 ॥

விஷ்ணோ꞉ பதே³ பரம இத்யுதி³த ப்ரஶம்ஸௌ
யௌ மத்⁴வ உத்ஸ இதி போ⁴க்³யதயா(அ)ப்யுபாத்தௌ ।
பூ⁴யஸ்ததே²தி தவ பாணிதலப்ரதி³ஷ்டௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 10 ॥

பார்தா²ய தத்ஸத்³ருஶஸாரதி²நா த்வயைவ
யௌ த³ர்ஶிதௌ ஸ்வசரணௌ ஶரணம் வ்ரஜேதி ।
பூ⁴யோ(அ)பி மஹ்யமிஹ தௌ கரத³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 11 ॥

மந்மூர்த்⁴நி காளியப²ணே விகடாடவீஷு
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ரே ஶிரஸி ஶ்ருதீநாம் ।
சித்தே(அ)ப்யநந்யமநஸாம் ஸமமாஹிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 12 ॥

அம்லாநஹ்ருஷ்யத³வநீதலகீர்ணபுஷ்பௌ
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ராப⁴ரணாயமாநௌ ।
ஆநந்தி³தாகி²லமநோநயநௌ தவைதௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 13 ॥

ப்ராய꞉ ப்ரபந்நஜநதாப்ரத²மாவகா³ஹ்யௌ
மாது꞉ ஸ்தநாவிவ ஶிஶோரம்ருதாயமாநௌ ।
ப்ராப்தௌ பரஸ்பரதுலாமதுலாந்தரௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 14 ॥

ஸத்த்வோத்தரை꞉ ஸததஸேவ்யபதா³ம்பு³ஜேந
ஸம்ஸாரதாரகத³யார்த்³ரத்³ருக³ஞ்சலேந ।
ஸௌம்யோபயந்த்ருமுநிநா மம த³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 15 ॥

ஶ்ரீஶ ஶ்ரியா க⁴டிகயா த்வது³பாயபா⁴வே
ப்ராப்யே த்வயி ஸ்வயமுபேயதயா ஸ்பு²ரந்த்யா ।
நித்யாஶ்ரிதாய நிரவத்³யகு³ணாய துப்⁴யம்
ஸ்யாம் கிங்கரோ வ்ருஷகி³ரீஶ ந ஜாது மஹ்யம் ॥ 16 ॥

இட் ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி ||

***

ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம்

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்தி நாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                        1

லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே

சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம்             2

ஸ்ரீவேங்கடாத்ரி  ச்ருங்காக்ர மங்களா பரணாங்க்ரியே

மங்களாநாம் நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                   3

ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா சர்வசேதஸாம்

ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம்             4

நித்யாய நிரவத்யாய ஸத்யா நந்தசிதாத்மநே

ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                              5

ஸ்வதஸ் ஸர்வவிதே ஸர்வசக்தயே ஸர்வசேஷிணே

ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம்                                        6

ப்ரஸ்மை ப்ரஹ்மணே பூர்ணகாமாய பரமாத்மநே

ப்ரயுஞ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம்                                      7

ஆகால தத்வ மச்ராந்த மாத்ம நாம நுபச்யதாம்

அத்ருப்த்யம்ருத ரூபாய வேங்கடேசாய மங்கலம்                                   8

ப்ராயஸ் ஸ்வ சரணௌ பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா

க்ருபாய திசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                                       9

தயாம்ருத்தரங்கிண்யாஸ் தரங்கைரிவ சீதலை:

அபாங்கை ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம்                        10

ஸ்ரக்பூஷாம்பர ஹேதீதாம் ஸுஷமாவஹ மூர்த்தயே

ஸர்வார்த்தி ஸமநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்                            11

ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்                                            12

ஸ்ரீமத் ஸுந்தரஜாமாத்ரு முநிமா நஸவாஸிநே

ஸர்வலோகநிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                       13

மங்களாசாஸ நபரைர் மதாசார்ய புரோகமை:

ஸர்வைச்ச பூர்வை ராசார்யைஸ் ஸத்க்ருதாயாஸ்து மங்களம்          14

***

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்-1-

கௌசல்யா தேவி திருக்குமாரா -ஸ்ரீ ராமா -புருஷோத்தமா –
காலைப் பொழுது புலர்கிறது –
நாம் செய்ய வேண்டிய நித்ய வர்ணாஸ்ரம கர்மங்களை செய்ய வேண்டும்
எழுந்திராய்

———-

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருட த்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரை லோக்யம் மங்களம் குரு–2-

ஆநிரை மேய்த்து மகிழ்பவனே
கருடக்கொடியை யுடையவனே
எழுந்திராய்
செந்தாமரையில் வளர் ஸ்ரீ லஷ்மீ தேவியின் நாயகனே
எழுந்திராய்
மூ உலகங்களிலும் -நித்ய முக்த பத்த -க்ருத்ய -அக்ருத்ய -க்ருத்யக்ருத்ய -ஸமஸ்த உலகங்களுக்கும்
நன்மைகள் -மங்களம் நிலவும்படியாகச் செய்வதற்காக
எழுந்திராய்

———-

மாதஸ் சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்–3-

ஸமஸ்த உலகங்களுக்கும் தாயைப் போன்றவளே
மது கைடபர் என்னும் அரக்கர்களை அளித்த ஸ்ரீ மஹா விஷ்ணுவின் திரு மார்பில் விளையாடுபவளே
மனம் கவரும் திவ்ய மங்கள விக்ரஹம் உடையவளே
தெய்வத் தாயே
ஆஸ்ரிதர்களின் ஸமஸ்த அபேக்ஷித்ங்களையும் அளித்து மகிழ்பவளே
ஸ்ரீ வெங்கடேசப்பெருமாளின் தயா தேவியே
உனக்கு நல்ல காலைப் பொழுதாகுக –

———-

தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே–4-

தாமரை மலர்களை போன்ற குளிர்ந்த திருக்கண்களை யுடையவளே
பூர்ண சந்திரன் போல் பொலியும் திரு முக விலாஸம் யுடையவளே
ப்ரஹ்மாதி தேவர்களின் பத்னிகளால் பூஜிக்கப்படுபவளே
கருணையின் உறைவிடம் போன்றவளே
விருஷாசல பதியான ஸ்ரீ திருவேங்கட நாதனின் அன்புக்கு உரியவளே
உனக்கு நல்ல காலைப் பொழுது ஆகுக

————–

அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–5-

அத்ரி முதலான ஸப்த ரிஷிகளும் காலைக்கடன்களை ஸந்த்யாவந்தனாதி நித்ய கர்மங்களையும்
முடித்துக் கொண்டு நின் திருப்பாத கமலங்களை அரசிப்பதற்காக
மனத்தைக் கவரக் கூடிய ஆகாச கங்கையில் மலர்ந்த தாமரை மலர்களை
சேகரித்துக் கொண்டு வந்து நிற்கின்றனர்
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

—————

பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–6-

தேவர்களில் சிறந்த ப்ரஹ்மாதிகளும் சுப்பிரமணியனும் ஞானிகளுமானவர்கள்
ஓங்கி உலகளந்த சரித்திரங்கள் முதலான உனது திவ்ய சேஷ்டிதங்களைப் புகழ்ந்து நிற்கின்றனர்
பாஷா பதி -சொல்லுக்கு அரசனான -தேவ குருவாகிய ப்ரஹஸ்பதி
தூரத்தில் வணக்கத்துடன் நின்று கொண்டு நாட்களுக்குப் பறி ஸூத்தி அளிக்கக் கூடிய
பயன்களைக் கூறும் பஞ்சாங்கம் படிக்கிறார்
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–7-

சற்றே மலர்ந்த தாமரை மலர்கள் -தென்னை பாக்கு மரங்களின் மிகவும் மனத்தைக் கவரும்
இளம் பாளைகளுடைய திவ்யமான நறு மண வாசனையை எடுத்துக் கொண்டு
குளிர்ந்த காலைக் காற்று மெதுவாக வீசுகிறது
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–8–

இரு கண்களையும் திறந்து
கலசங்களில் வைக்கப்பட்டுள்ள வாழைப்பழம் பாயாசம் முதலிய சுவை அமுதுகளை புஜித்து விட்டு
சிறந்த கூண்டுகளில் இருப்பவையும்
கேளிக்கையான விளையாட்டு இன்பத்தை உண்டு பண்ணக் கூடியவையுமான
கிளிகள் மனக்களிப்புடன் உன்னுடைய திரு நாமங்களைப் பாடுகின்றன
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–9-

நல்ல தந்திகளை உடையபடியால் இனிய நாதமுடைய வீணையுடன் நாரதரும்
அழிவற்ற வனான உன்னுடைய திவ்ய சரிதங்களை
காவிய நயம் மிக்க மொழி வண்ணம் தோன்றும்படியாக
வேகமாக மீட்டிப் பாடுகிறார்
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–10-

இரவு முழுவதும் மகரந்த ரஸம் கலந்த தேனைப் பருகிவிட்டு ரீங்காரம் இடும் வண்டுகள்
அருகில் உள்ள பூம் புனல்களில் இருந்து தங்கள் மது அருந்திய தாமரை மலர்களின்
உள் புறத்தில் இருந்து வெளிப்பட்டு உன்னைத் தொழுவதற்காக வருகின்றன
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———–

யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–11-

இடையர்களின் குடிசைகளில் ஆய்ச்சிகள் மத்தினால் பானைகளில் சிறந்த தயிரைக் கடையும் போது
உண்டாகும் உரத்த ஒலியை எண் திசைகளும் பொறுக்க மாட்டாமல் எதிர் ஒலிக்கின்றன
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

——-

பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–12-

ஸூர்யனிடம் அன்புடைய தாமரை மலர்களில் தங்கி இருந்த வண்டினங்கள்
தங்களுடைய கருமையான அங்கங்களில் அழகினால் செருக்கடைந்து
கரிய நிறம் படைத்த பூக்களின் அழகை எதிர்பார்ப்பது போல் உரத்த ரீங்காரம் செய்வது முரசு கொட்டுவது போல் உள்ளது
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்–13-

திருமகள் கேள்வனே
பக்தர்கள் விரும்பிய பலன்களை அளிக்கும் பேர் அருளாளனே
ஸர்வ லோகத்தார்களுக்கும் ஸமஸ்த பந்துவாக உள்ளவனே
அழகிய ஸ்ரீ நிவாஸப் பெருமானே
உலகத்தோர் இடம் கருணை ஒன்றையே கொண்ட பெருமானே
இரண்டு தோள்களின் நடுவில் மஹா லஷ்மியின் வாஸஸ் ஸ்தானமாய் அமைந்த அழகிய திரு மார்பை யுடைய அழகிய பெருமானே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்–14-

அழகிய ஸ்வாமி புஷ்கரணியில் நீராடியதால் உள்ளும் புறமும் அழுக்கு நீங்கிய மேனி உடையவர்களாய்
உலகில் சிறந்து விளங்கும் மேன்மையை விரும்பும் அரனும் அயனும் ஸநகாதி முனிவர்களும்
உனது திருக்கோயிலின் வாசலிலே வாசல் காப்பவர்களால் அடி பட்ட சிற்பங்களுடன் காத்து நிற்கிறார்கள்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–15-

அழகிய
சேஷ மலை
கருட மலை
வேங்கட மலை
நாராயண மலை
விருக்ஷ மலை
என்று நீ வஸிக்கும் திருமலையின் முக்கியமான திரு நாமங்களை எப்பொழுதும் கூறியபடி
அத் தேவர்களும் ரிஷிகளும் ஸ்துதி பாடி நிற்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————

சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–16-

சிவ பெருமான்
தேவர்கள் தலைவனான இந்திரன்
அக்னி
எமன்
நிருதி
வர்ணன்
வாயு ன் குபேரன்
என்ற அஷ்ட திக் பாலர்களும் பக்தியுடன் கர மலர்கள் சிரம் மிசைக் கூப்பி
அஞ்சலி செய்தவர்களாய் உனது ஸேவைக்காகக் காத்து இருக்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–17-

புள்ளரையனான கருடனும்
மிருக ராஜாவான ஸிம்ஹமும்
நாக ராஜாவான ஆதி சேஷனும்
யானைகளுக்கு அரசனான ஐராவதமும்
குதிரைகளுக்கு அரசனான உச்சைஸ் சிரவஸூம்
உனது திருக்கோயில் நடை பாதைகளில் தம் தம் தகுதிக்கு ஏற்ற பெருமையைக் காட்டிலும்
அதிகமாக விரும்புபவர்களாய் உன்னைத் தரிசிக்க நான் முந்தி நீ முந்தி என்று
போட்டியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————

ஸூர்யேந்து பவ்ம புத வாக்பதி காவ்ய சவ்ரி
ஸ்வர்பாநு கேது த்விஷத் பரிஷத் ப்ரதாநா
த்வத் தாஸ தாஸ சரமாவதி தாஸ தாஸ
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–18–

ஸூர்யன்
ஸந்த்ரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
இராகு
கேது
என்று தேவ சபையில் முக்யம் பெற்ற வர்களான நவக்ரஹங்களும்
உன்னுடைய அடியார் அடியார் அடியார் என்று மிகவும் கீழ் நிலையில் உள்ள அடியவர்களாய் நிற்கும்
விருப்பம் யுடையவர்களாய் உனது திருக்கோயிலின் வாசலில் நிற்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———–

த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-19-

ஸூர்யன் முதலான நவக்ரஹ நாயகர்கள் உன்னுடைய திருப்பாத தூளிகள் பட்டு
நிறைந்து விளங்கும் சிரங்களை யுடையவர்களாய்
ஸ்வர்க்கம் மோக்ஷம் முதலான பேற்றுக்களையும் விரும்பாதவர்களாய்
இந்த யுக கல்பங்கள் முடிந்து விட்டால் தங்களுடைய வாழ்வு முடிந்து விடும் என்ற எண்ணத்தால்
மனம் கலங்கி நிற்கின்றனர்
அவ்வாறு வேறு கல்பம் வந்து விட்டால் உனது திருப்பாத ஸேவையை இழந்து
உனது திருப்பாத தூளியைத் தலையால் தரிக்கும் பாக்கியமும்
இழந்தே போவோமே என்ற பயத்துடன் இருக்கிறார்கள்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————

த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!-20-

உனது திருக்கோபுர முனையில் உள்ள கலசங்களைக் கண்டவுடன் வாழ்வின் இறுதி
லஷ்யமான ஸ்வர்க்கம் மோக்ஷம் பதவி அடைந்து மேல் உலகம் செல்பவர்களும்
அவ்வின்பங்களை வெறுத்தவர்களாய் மீண்டும் மனித லோகத்தில் வாழ்ந்து
உன்னைத் தரிசித்து இருப்பதையே விரும்புகின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————–

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–21-

திருமகள் நில மகள் நாயகனே
அருள் முதலான கல்யாண குணங்கள் எனும் அமுதம் விளையும் கடல் போன்றவனே
மனிதர்க்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவாதி தேவனே
சர்வ லோகங்களுக்கும் ஒரே புகலிடமாக விளங்குபவனே
பெருமானே
ஆதி சேஷன் கருடன் விஷ்வக் சேனர் போல்வரால் மலர்கள் தூவி
வானவர் வானவர் கோனுடன் சிந்து பூ மகிழும் அர்ச்சிக்கப்பட்ட திருவடிகள் யுடையவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————–

ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–22-

ஸ்ரீ பத்மநாப
புருஷோத்தம
வாசுதேவ
வைகுண்ட வாஸீ
மாதவ
ஜனார்த்தன
சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸம் என்னும் திரு மறு அடையாளம் சிஹ்னம் உள்ளவனே
சரணாகதர்களுக்கு பாரிஜாதம் போல் ஸமஸ்த அபீஷ்ட ப்ராதனானவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

—————

கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–23-

மன்மதனின் செருக்கை ஒடுக்கக் கூடிய மிக அழகிய திவ்ய மங்கள விக்ரஹம் கொண்டவனே
திருமகள் மருவும் ஆசை மிக்க திருக்கண்களை யுடையவனே
மங்கள கரமான குற்றம் அற்ற குணங்களுக்கு உறைவிடம் போன்றவனே
நல்ல பெருமை வாய்ந்த புகழை யுடையவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————–

மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்
ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–24-

ஸ்ரீ மத்ஸ்ய
ஸ்ரீ கூர்ம
ஸ்ரீ வராஹ நாயகனாக
ஸ்ரீ நரசிம்ஹ வபுவாக
ஸ்ரீ வாமனனாக
ஸ்ரீ பரசு ஏந்திய ரிஷி புத்திரனாக
ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனாக
ஸ்ரீ ஆதி சேஷ அம்சமான ஸ்ரீ பலராமனாக
யாதவ குலத்தில் உலகோர் அனைவரையும் மகிழ்விக்கும் ஸ்ரீ கிருஷ்ணனாக
திரு அவதரித்தவனே
ஸ்ரீ கல்கியாக திரு அவதரிக்கப் போகும் இறைவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———–

ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்–25-

ஏலக்காய் -லவங்கம் -பச்சைக் கற்பூரம் முதலியவற்றின் நறு மணம் கலந்ததும்
மிகச்சிறந்ததுமான ஆகாஸ கங்கையின் தீர்த்தத்தைத் தங்கக்குடங்களில்
நிரப்பிக் கொண்டு தங்கள் தலைகளில் சுமந்தபடி வைதிக நெறிகளில் சிறந்தவர்கள்
மன மகிழ்ச்சியுடன் உனது திருக்கோயில் திருவாசலில் இப்பொழுது நிற்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———-

பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்–26-

கதிரவன் குண திசைச் சிகரம் வந்து அணைந்தான்
மது விரிந்து ஒழுகின மா மலர்கள் எல்லாம் -கமல மலர்கள் விகசிக்கின்றன
ஸ்ரீ வைஷ்ணவ அடியார்கள் உனக்கு எப்பொழுதும் நன்மை தரும் மங்களங்களை வேண்டிக் கொண்டு
உன்னுடைய திருக்கோயில் திருவாசலை வந்து அடைகின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————–

பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–27-

ப்ரஹ்மாதி தேவ ஸ்ரேஷ்டர்களும்
மிகச் சிறந்த முனிவர்களும்
ஸாதுக்களான சநந்தர் முதலான யோகிகளும்
மங்கள உபகரணங்களைக் கையில் ஏந்திக் கொண்டு
உனது திருக்கோயில் திருவாசலிலே வந்து நிற்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

—————-

லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–28–

ஸ்ரீ லஷ்மீ தேவிக்கு நிவாஸமானவனே
குற்றம் அற்றவனே
நற்குண சாகரம் போன்றவனே
பிறவிக்கடலைக் கடக்க நிகரற்ற பாலம் போன்றவனே
வேத வேதாந்தங்களால் அறியத்தக்க உண்மையான சிறப்பை யுடையவனே
பக்தர்களுக்கு இனியவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

—————-

இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே–29-

இந்த வ்ருஷாசல நாதனான திருமலை நாதனைப் பற்றிய திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களை
தினம் தோறும் அதிகாலை வேளையில் பாராயணம் செய்பவர்கள்
தங்களைப் பற்றிய நினைவு துன்பம் அகன்றவர்களாய்
பரம் பொருளையே பரம புருஷார்த்தமாகக் கருதும் பரம பக்தர்கள்
மாத்ரமே அடையக்கூடிய நல்ல அறிவை -பர ஞானத்தை -அடைவார்கள் –

***

ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்ரம்

கமலா குசசூசுக குங்குமதோ நியதாருணிதாதுல நீலதநோ

கமலாயத லோசன லோகபதே விஜயீபவ வேங்கட சை’லபதே                       1

கமலா குச சூசுக குங்குமதோ நியதாருணி தாதுல நீலத நோ-
பெரிய பிராட்டியார் யுடைய திரு முலைத் தடங்களில் அணிந்த குங்குமக்
குழம்பினால் எப்போதும் சிவப்புப் பெற்று ஒப்பற்று விளங்கா நின்ற நீல மேனியை யுடையாய் –
கொவ்வை வாய் மகளிர் கொங்கை குங்குமம் கழுவிப் போந்த தெய்வ நீர் கமழு நாங்கூர்

அகலகில்லேன் இறையும் என்று
அலர் மேல் மங்கை யுறை மார்பா –

இவளோடு கூடியே வஸ்துவிநிடைய உண்மை –
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தையும்
சேதனனுடைய அபராதத்தையும்
கண்டு அகல மாட்டாள் –
முமுஷுப்படி ஸ்ரீ ஸூ க்தி-அனுசந்தேயம் –

கமலாய தலோசன லோகபதே விஜயீ பவ வேங்கட சைலபதே –
கமலம் போன்றவையையும் ஆயதங்களையும் இருக்கும் திருக் கண்கள்
அரவிந்தம் போன்று நீண்ட கண்ணினாய்
உலகங்கட்கே எல்லாம் இறைவனே
திருவேங்கடமலைக்கு இறைவனே
நித்ய ஸ்ரீர்
நித்ய மங்களமாக விளங்குவாயாக –

——

ஸ சதுர்முக ஷண்முக பஞ்சமுக ப்ரமுகாகில தைவத மௌளிமணே

ச’ரணாகத வத்ஸல ஸாரநிதே பரிபாலயமாம் வ்ருஷ சை’லபதே                 2

ஸ சதுர்முக ஷண்முக பஞ்ச முக பிரமுகாகில தைவத மௌலிமணே –
நான்முகக் கடவுளோடு கூடிய
ஸூ ப்ரம்மண்யன் சிவன் முதலான
சகல தெய்வங்களுக்கும் சிரோ பூஷணமாக விளங்குமவனே-
யாம் கடவுள் என்று இருக்கும் எவ்வுலகில் கடவுளர்க்கும்
ஆம் கடவுள் நீ –
ஷண்முக பஞ்ச முகர்களை சதுர்முகனோடு கூடி இருப்பவர்களாக சொன்னது சமுச்சய தாத்பர்யகம்
நோலாதாற்றேன் உனபாதம் காண வென்று நுண் உணர்வின் நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும்
இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே

சரணாகத வத்சல
அடி பணிந்தவர்கள் பக்கலிலே
வாத்சல்யம் யுடையவனே –
வாத்சல்யமே -நிகரில் புகழாய் -என்றதில் சூசகம் –
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதகங்கள் -குணங்கள்
வாத்சல்யம் – ஸ்வாமித்வம் -சௌசீல்யம் -சௌலப்யம்
ஆஸ்ரித கார்ய ஆபாதன்கள் -குணங்கள் –
ஞான பல சக்தி யாதிகள் –
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே -தனிப்பட கத்யத்தில் காட்டி அருளினார் –

சார நிதே
சிறந்த நிதி போன்றவனே –
சிறந்த நிதி
சாரமான குணங்களை கொண்டவன்

அள்ள அள்ள குறை இல்லாமல் அஷயமாய் இருக்குமே
மேல் மேலும் பெருகுமே
நிதியே திரு நீர் மலை நித்திலத் தொத்தே –
நிதியினைப் பவளத் தூணை
வைத்த மா நிதியம் மது சூதனன்
நிதி கண்ணுக்கு புலப்படாத படி போலே
இவனும் -இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
கரந்து எங்கும் பரந்துளன் –
கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவார்கள் என்று கண்ணுக்குத் தோற்றாத படி நின்று
என்று -ஸ்ரீ வசன பூஷன ஸூக்தி
கட்கிலியாய் இருப்பான் –
சில பாக்ய சாலிகளுக்கு புலப்படுவான் –
யானே தவம் செய்தேன்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன்
சித்த அஞ்சனம் அணிந்து கொண்டு பார்ப்பவர்களுக்கு நிதி தோன்றுமே

பரிபாலய மாம் வருஷ சைலபதே –
வ்ருஷபகிரி -என்னப் படுகிற திரு மலைக்கு இறைவனே
அடியேனைக் காத்து அருள வேணும்

———–

அதிவேலதயா தவதுர்விஷஹை: அனுவேல க்ருதை ரபராத ச’தை

பரிதம் த்வரிதம் வ்ருஷ சை’லபதே பரயா க்ருபயா பரிபாஹி ஹரே           3

திருமலை அப்பனே
கங்கு கரை இல்லாமையினாலே
தேவரீருக்கு சஹிக்க கூடாதவைகளையும்
ஷணம் தோறும் செய்யப் பட்டவையாயும் இருக்கின்ற
நூற்றுக் கணக்கான குற்றங்களினால் நிறைந்து இருக்கின்ற
அடியேனை பரம கிருபையாலே விரைந்து காத்தருள வேணும் –

வேலை -கரை – அநு வேலம் -ஷணம் தோறும்
பாப பூயிஷ்டதையைச் சொல்லிக் கொண்டு புகவே பரிஹாரம் பெறலாம்
அஸ்மத் தாதிகளின் அனுசந்தானத்திற்கு இறே பூர்வர்கள்
இங்கனே பணித்து வைத்தது –

———

அதிவேங்கட சை’லமுதாரமதே: ஜனதா பிமதாதிக தான தராத்

பரதேவதய கதிதாந்நிகமை: கமலாதயிதான ந பரம் கலயே                           4

ஔதார்யம் மிக்க திரு உள்ளம் உடையவரும்
அவரவர்கள் விரும்புவதைக் காட்டிலும் அதிகமாக அளித்து அருள வல்ல
வேதங்களால் பர தெய்வமாக ஓதப்பட்ட ஸ்ரீ லஷ்மீ பதியை
காட்டிலும் வேறு ஒரு வஸ்துவை எண்ணு கின்றிலேன்

மற்றோர் தெய்வம் மதிக்கிலேன்
உதாரன் –என்னாமல் –உதார மதி -என்றது
இன்னமும் கொடுக்க வேணும் என்று இருக்கும் ஹிருதய வைசால்யத்தைப் பற்றி –
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ

ஜனத அபிமத அதிக தான ரதான்-என்றது
அர்த்தி தாரத்த பரி தான தீஷிதரான தேவப் பெருமாளில் காட்டில் வாசி சொன்னபடி –
நிகமை-வேதாந்தங்கள் என்ற விவஷையால்-

——————

கல வேணுரவாச’ கோபவதூ ச’தகோடி வ்ருதாத ஸ்மரகோடி ஸமாத்

ப்ரதிவல்லவிகாபிமதாத் ஸுகதாத் வஸுதேவஸுதாந் ந பரம் கலயே       5

இந்த ஸ்லோஹம் முதல் நான்கு ஸ்லோஹகங்களினால்
திருவேங்கடமுடையானை
கண்ணபிரானாகவும் இராமபிரானாகவும் கொண்டு ஏத்துகிறார்
இதல் கண்ண பிரானாக ஸ்துதிக்கிறார்
பொங்கு புள்ளின் வாய் பிளந்த புராணர் தம்மிடம் திருவேங்கடம்
கன்றிமாரி பொழிந்திடக் கடிதா நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திருவேங்கடம் -போலே
குரவை கோத்த குழகனை -சாஷாத் மன்மத அழகை முற்றூட்டாக கொடுத்த படி -சொல்கிறது ஸ்மர கோடி சமாத் -என்று

அதி மதுரமான வேணு நாதத்துக்கு பரவசப்பட்ட
ஆய்ச்சிகளின் திரளால் சூழப் பட்டவனும்
கோடிக் கணக்கான மன்மதர்களை ஒத்தவனும்
ஒவ் ஒரு ஆய்ச்சியும் நமக்கே கணவன் என்று அபிமானித்து இருக்கப் பெற்றவனும்
சாஷாத் தர்மியுமான
வாஸூ தேவனில் காட்டிலும்
வேறு ஒருவரை எண்ணு கின்றிலேன்

கருமலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக் கணித்து ஆங்கே ஒருத்தி தன்பால் மருவி மனம் வைத்து
மற்று ஒருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்குப் பொய் குறித்து
புரிகுழல் மங்கை ஒருத்தி தன்னை புணர்த்தி –
என்பதையே பிரதி வல்லபி ச் அபிமதாத் –

ஸூஹ்ருதாத்
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம்
தர்மமே வடிவு எடுதவனாக
தர்ம ஸ்தாபனம் பண்ணப் பிறந்தவன்
தானே சர்வவ தர்மங்களையும் விட்டு
என்னைப் பற்று என்கையாலே
சாஷாத் தர்மம் தானே -என்கிறது -முமுஷூப்படி ஸ்ரீ ஸூ க்தி-

————————

அபிராம குணாகர தாச’ரதே ஜகதேக தநுர்தர தீரமதே

ரகுநாயக ராம ரமேச’ விபோ வரதோ பல தேவ தயாஜலதே                           6

இந்த ஸ்லோஹம் முதல் மூன்று
ஸ்லோஹங்களாலும் சக்கரவர்த்தி திரு மகனாக அனுபவிக்கிறார் –
அபிராம குணாகர
திருக் கல்யாண குணங்களுக்கு பிறப்பிடம் ஆனவனே –
சூர்பணகை-தாரை -மண்டோதரி -போல்வாரும் புகழும்படி

தாசரதே
தசரதாத் மஜானாகத் தோன்றினவனே –
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம்
ஆத்மானம் மானுஷம் ராமம் தசரதாத் மாசம் –

ஜகத் ஏக தநுர்தர
உலகில் அத்விதீயனான வில்லாளியாய் விழங்கி-
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஒ –

தீரமதே
துணிவு வாய்ந்த திரு உள்ளம் யுடையவனே –
சலிப்பிக்க ஒண்ணாத ஆஸ்ரித ரஷண த்தில் உறைப்பைச் சொல்கிறது –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே
ஸ லஷ்மணாம் ந ஹி பிரதிஜ்ஞ்ஞாம் சம்ஸ்ருத்ய ப்ரஹ்மனேப்யோ விசேஷத -என்றும்
மித்ரா பாவென சம்ப்ராப்தம் ந த்யஜெயம் கதஞ்சன -என்றும் காட்டி அருளினாரே

ரகுநாயக ராம ரமா ஈச விபோ வரதோ பவ தேவ தயா ஜலதே-
ரகுகுல திலகனே
இராமபிரானே
ஸ்ரீ லஷ்மீ பதியே
கருணைக் கடலே
திருவேங்கடமுடையானே
நீ
அடியேனுடைய அபேஷிதங்களை அளித்து அருள்பவனாக ஆக வேணும்-

—————————

அவநீதநயாகம நீயகரம் ரஜநீகரசாரு முகாம்புருஹம்

ரஜனீசரராஜ தமோமிஹிரம் மஹநீயமகம் ரகுராமமயே                                  7

அவநீ தனா கமநீயவரம்
பூமிப் பிராட்டியின் புதல்வியான சீதா பிராட்டி விரும்பத் தக்க மணவாளப் பிள்ளையும் –

ரஜநீ கர சாரு முக அப்ம்புருஹம்
அழகிய முகாரவிந்தத்தை யுடையவனும் –
சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும் எத்தனை செய்யிலும்
என் மகன் முகம் நேர் ஒவ்வாய் –

ரஜநீ சர ராஜ தமோ மிஹிரம்
ராஷ சேஸ்வரனான ராவணன் ஆகிற இருளை அகற்றும் ஸூர்யனும்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடும் சிலை வாய்ச் சரந்துறந்து குலம் களைந்து வென்றானை –

கமநீ யம் ரகுராமம் அஹம் அயே
விரும்பத் தக்க வடிவு படைத்தவனும்
ஆன ஸ்ரீ ராமபிரானை -திருவேங்கடமுடையானை
நான் அடைகிறேன்

அயே -அய பய கதௌ-என்ற தாதுவில் தேறின ரூபம் இது-

———————

ஸுமுகம் ஸுஹ்ருதம் ஸுலபம் ஸுகதம் ஸ்வநுஜஞ்ஞ ஸுகாய அமோகசரம்

அபஹாய ரகூத்வஹமன்யமஹம் ந கதஞ்சன கஞ்சன ஜாது பஜே                8

ஸூ முகம் –
தன்னளிவே வடிவு எடுத்தவனும்

ஸூஹ்ருதம் –
சர்வ பூத ஹூஹ்ருத்தானவனும்

ஸூலபம்-
நீசர்க்கும் எளியனானவனும்

ஸூகதம் –
இன்பம் அழிப்பவனும்

ஸூகுணம் –
நற் குணங்கள் அமைந்தவனும்

ச ஸூ ஜாய-
நல்ல தேவியை யுடையவனும் –

மமோக சரம் –
பழுது படாத அம்புகளை யுடையவனும்

அபஹாய ரகூத்வம் அநயம் அஹம் ந கதஞ்சன கதஞ்சன ஜாது பஜே
இராம பிரானைத் தவிர
வேறு எந்த தேவனையும்
ஒரு விதமாகவும்
ஒரு காலும்
சேவிக்க கில்லேன்

தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -என்றும்
கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ -என்றும்
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் -என்றும்
உள்ள பாசுரங்களை அடி ஒற்றி அருளிச் செய்த ஸ்லோஹம்-

———————

விநா வேங்கடேச’ம் ந நாதோ ந நாத: ஸதா வேங்கடேச’ம் ஸ்மராமி ஸ்மராமி –

ஹரே வேங்கடேச’ ப்ரஸீத ப்ரஸீத ப்ரியம் வேங்கடேச’ ப்ரயச்ச ப்ரயச்ச      –9

விநா வேங்கடேசம் ந நாதோ ந நாதோ
வேங்கடேசம் விநா நாதா ந நாத ந –
திருவேங்கடமுடையானைத் தவிர்ந்து
வேறொரு நாதன் இல்லை எனபது
சத்யம்

சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி –
திருவேங்கடமுடையானை
அனவரதமும்
நினைத்தபடியே இருக்கின்றேன் –

ஹரே வேங்கடேசம் ப்ரசீத பிரசீத-
சகல தாபங்களையும் ஹரிக்க வல்ல அப்பனே
திரு உள்ளம் மிகவும் உகந்து அருள வேணும் –

ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச
வேங்கடேச -ப்ரியம்-ப்ரயச்ச ப்ரயச்ச –
திருவேங்கடத்தானே
நன்மையைப் பயந்து அருளின படியே
இருக்க வேணும்

ஒவ் ஒரு பாதத்திலும் த்வ்ருத்திகள்
ஆதராதிசயத்தால் ஆனவை-

——————

அஹம்தூரதஸ்தே பதாம்போஜயுக்ம ப்ரணாமேச்சயா (ஆ)கத்யஸேவாம் கரோமி —

ஸக்ருத்ஸேவயா  நித்யஸேவாபலம் த்வம் ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச’        -10

பிரபோ வேங்கடேச
வேங்கடேச பிரபோ –
திருவேங்கடத்து எம்பெருமானே

அஹம் தூரதஸ் தே பதாம் போஜ யுகம ப்ரணாம இச்சயா ஆகத்ய சேவாம் கரோமி –
அஹம் தே பதாம் போஜ யுகம ப்ரணாம இச்சயா தூறத ஆகத்ய சேவாம் கரோமி –
அடியேன் உன்னுடைய இணைத் தாமரை அடிகளை
வணங்கும் விருப்பத்தினால்
தூர தேசத்தில் இருந்து வந்து
அத் திருவடிகளில் சேவை செய்கின்றேன் –

சக்ருத் சேவயா நித்ய சேவா பலம் தவம் ப்ரயச்ச ப்ரயச்ச
ஏதோ ஒருகால் செய்யும் சேவையினால்
நித்யமும் செவிப்பதனா ஆகும்
பலனை
நீ அவசியம் கொடுக்க வேணும்

அநந்ய பிரயோஜனமாக சேவிக்கும் அதிகாரிகள்
நித்ய சேவா பலம் ப்ரயச்ச -என்று
பலனை விரும்பக் கூடுமோ என்னில்
அத்தலையில் திரு உள்ள வுகப்பே யாயிற்று இங்கு பலனாக கருதப்படுவது

கதாஹ மைகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி சனாத ஜீவித -ஆளவந்தார்
ப்ரஹர்ஷயிஷ்யாமி -உயிரான ஸ்ரீ ஸூக்தியாகுமே-

—————————

அஜ்ஞாநினா மயா தோஷான் அசேஷான் விஹிதான் ஹரே–11

க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் சே’ஷசை’ல சி’காமணே

சேஷசைலம் ஆகிற
திருவேங்கட மலை யுச்சியிலே
நீல மணி போல் விளங்கும்
எம்பெருமானே
அவிவேகியான அடியேன் செய்த குற்றங்களை எல்லாம்
நிர்ஹேதுக கிருபையினால்
ஷமித்து அருள வேண்டும் என்று
பிரார்த்திக்கிறார் ஆயிற்று-

***

ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி

ஈஶாநாம் ஜக³தோ(அ)ஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம் ப்ரேயஸீம்
தத்³வக்ஷ꞉ஸ்த²லநித்யவாஸரஸிகாம் தத்க்ஷாந்திஸம்வர்தி⁴நீம் ।
பத்³மாலங்க்ருதபாணிபல்லவயுகா³ம் பத்³மாஸநஸ்தா²ம் ஶ்ரியம்
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்ஜ்வலாம் ப⁴க³வதீம் வந்தே³ ஜக³ந்மாதரம் ॥ 1 ॥

ஈசாநாம் ஜகதோச்ய வேங்கட பதேர்விஷ்ணோ பராம் ப்ரேயசீம்-

இவ் வுலகுக்கு எல்லாம் ஈஸ்வரியாகவும்
திருமலை யப்பானுக்கு பிராண வல்லபை யாயும் –
அஸ்யேசா நா ஜகதோ விஷ்ணு பத்நீ -ஸ்ருதி சாயையில் பணித்தது

தத் வஷஸ் ஸ்தல நித்ய வாச ரசிகாம் தத் ஷாந்தி சம்வர்த்திநீம் –
அவனது திரு மார்பிலேயே நித்ய வாசம் செய்வதில்
விருப்பம் யுடையவளாயும்
அவன் மார்பை விட்டுப் பரியில் இவ் வஷரம் விட்டுப் பிரிவது -ஸ்ரீ ஸூக்திக்கு சேர பணித்தது
அப்பெருமானுடைய ஷமா குணத்தை வளரச் செய்பவளாயும் –
புருஷகார பலத்தாலே ஸ்வா தந்த்ர்யம் தலை சாய்ந்தால்
தலை எடுக்கும் குணங்களை சொல்லுகிறது நாராயண பதம் -முமுஷூப்படி
அஸ்தி கர்மார்ஹா பலதே பத்யௌ க்ருத்யத்வயம் சரிய
நிக்ரகுஅத்வ வாரணம் காலே சத்துஷணம் அனுக்ரஹே -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூ க்தி

பத்ம அலங்க்ருத பாணி பல்லவ யுகாம் பத்மாஸ நஸ்தாம் ஸ்ரியம்
தாமரை மலரால் அலங்கரிக்கப் பட்டு
பல்லவம் போன்ற இரண்டு திருக் கைகளை யுடையவளாயும்
தாமரைத் தவிசில் வீற்று இருப்பவளாயும்
பத்ம பரியே பத்மிநி பத்மஹஸ்தே -இத்யாதிகளும் அனுசந்தேயம்

வாத்சல்யாதி குண உஜ்ஜ்வலாம் பகவதீம் வந்தே ஜகன் மாதரம்
வாத்சல்யம் முதலிய குணங்களால் திகழா நின்றவளாயும்
பரம பூஜ்யையாயும்
உலகுக்கு எல்லாம் தாயாயும்
இருக்கின்ற
அலர்மேல் மங்கைப் பிராட்டியை
அடியேன் வணங்குகின்றேன் –

சஹதர்ம சரிம் சௌ ரேஸ் சம்மந்த்ரித்த ஜகத்திதாம்
அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞ்ஞாத நிக்ரஹாம் -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூக்தி

ஆக
இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த பிராட்டியைத்
தொழுகின்றமை கூறி
ஸ்தோத்ரத்தை
தலைக் கட்டினார் ஆயிற்று –

அலர்மேல் மங்கை உறை மார்பன் அடி இணைகள் வாழியே

——–

ஶ்ரீமந் க்ருபாஜலநிதே⁴ க்ருதஸர்வலோக
ஸர்வஜ்ஞ ஶக்த நதவத்ஸல ஸர்வஶேஷிந் ।
ஸ்வாமிந் ஸுஶீல ஸுலபா⁴ஶ்ரிதபாரிஜாத
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 2 ॥

நாராயணனின் கல்யாண குணங்களை அடுக்கி அருளுகிறார் நேராக இதில்
சரண் அடைந்தவர் இடம் வாத்சல்ல்யம் வினத -நத வத்சல -தலை வணங்கியவர் அனைவருக்கும் ஸ்வாமித்வம் படைத்தவன்

சுலபன் திருவேம்கடத்தான்-பாரி ஜாதம் போல் கேட்பது அனைத்தையும் கொடுக்கும் –
எட்டு குணங்கள் -அடுக்குகிறார்-
ஆஸ்ரித சௌகர்யமான குணம் நான்கு -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் —
ஞான சக்தி பிராப்தி பூர்த்தி கார்யம் பண்ண -ஆக எட்டும்-
பயம் நீங்க -ஐயம் நீங்க -உயர்ந்தவன் அவன் தாழ்ந்தவன் நாம் –
குற்றமே குணமாக கொள்பவன்-வாத்சல்யன்-எதிர் குணம் பொறாமை-குணம் குற்றமாக கொள்வது அசூயை-அனசூயை-
அவளை பார்த்து பொறாமை பட முடியாத குணம் கொண்டவள் –வசிஷ்டர் நம்மை விட ஞானி சொல்லுவாமோ
செய்த குற்றம் நாற்றமாக கொள்ளும் -அச்சம் தவிர்க்க வாத்சல்யம் -அச்சம் போன பின்பு ஐயம் வர
சம்பந்தம் உணர்த்த -ஸவாமி–

ஸவாபம் ரசிக்க -நெருப்பு சுடுவது போல தண்ணீர் குளிர்வது போல் குற்றம் பொறுத்து ரஷிகிறான் கண்ணன் பதில் அர்ஜுனனுக்கு

ஸ்வாமி-சொத்து பாவம் – சொத்தை இழக்க மாட்டான் ஸ்வாமி –நாம் சொத்து ஆக இருக்க வேண்டும் -இதற்க்கு சம்மதித்தால் போதும்

ஸ்வாமி தன ஆச்சார்யர் பிள்ளைகளை திருத்திய ஐதீகம் போல்–இவரே தூர்த்த கோஷ்ட்டி நோக்கி காஷாய வேஷத்துடன் போக –
நீர் நம்மை விட்டாலும் நாம் விடேன் -காரேய் கருணை -அனைத்து உலகும் உய்ய வந்த எதிராஜர் –ஐயம் தவிர்த்து
அதிருப்தி பட -தேவ தேவனுக்கு பண்ணுவார்-
யானை மேல் சவாரி செய்பவர் யானைமேல் இருப்பவரை தான் ரஷிப்பார்-
தாழ்ந்தவர் இடம் கலக்க தேடி வருகிறான் சௌசீல்யம் –
ஏழை எதலன் கீழ் மகன் என்னாது –திருப்தியாக –
ஈசன் வானவர்க்கு என்றால் அது தேசமோ திரு வேம்கடத்தானுக்கு நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
என் கண் பாசம் வைத்த பரம் சுடர் –அவர்களுக்கு தலைவன் –
ஆழ்வார் இடம் பாசம் -கிடைக்க அரியவன் அருமை-இழந்தவர்க்கு இன்று கண்கள் காண்பதற்கு அரியனாய் –
இன்று அர்ச்சையாக -ஆட்சியில் தொடர்ச்சி நன்று -அறிக்கை விட்டு-அவதரித்து நாம் சொத்து –
சொல்லி கொண்டு-சரம ஸ்லோகம் சொல்லி -சௌலப்யம் காட்டி சேர்த்து கொள்கிறான்

ஆஸ்ரித சொவ்கர்யமான குணம் இவை நான்கும்
கார்யம் பண்ண ஞானம் -ஸ்ரீ வைகுந்தம் கொடுக்க சர்வக்ஜன் பாபம் தொலைத்து –
சக்தியும் வேண்டுமே சர்வ சக்தன்-அதீத ஞானமும் சக்தியும்
தொடர்பு -பிராப்தி -நமக்கு என்று -தாய் முலை பால் கொடுக்கும் -கன்று குட்டி தன பசுமாடு நோக்கி போகுமே அது போல்
பூர்த்தி இருக்கிறது -அடைய வேண்டியது ஒன்றும் இல்லாத பூரணன் -எதையும் எதிர் பார்க்காதவன்
ஐயோ ஏங்கும் கருணையும் உண்டே –க்ருபா சமுத்ரம்
ஆக ஒன்பது குணங்கள்
கிருபா ஜலநிதே /வாத்சல்யம்/ஸ்வாமின் /சுசீலா/சுலப /நான்கும் சொல்லி சரண் அடைந்து

ஸர்வஞ்ஞன்  சக்தி ஆஸ்ரித பாரிஜாத -வாரி வழங்குபவன்-பூர்த்தி சர்வ சேஷி-பிராப்தி உண்டு

அஞ்சேல் என்று தாங்கும் தாமரை அன்ன பொன்னார் அடிகள்- ஆங்கு வென் நகரத்து அழுந்தும் பொழுது —
சரித சர்வ லோக -அனைத்தையும் படைத்தவன்
ஸ்ரீமன் -பிராட்டி ஆனந்தத்துக்கு படைத்தவன்– மயில் தோகை –திரு முகம் தலை அசைத்து அங்கீகாரம்
அவள் தூண்டுதலின் பேரில் அவள் ஆனந்தத்துக்கு
ஜகம் சிருஷ்டிக்க சரணா கதியே பயன் -அதனால் இதை சொல்கிறார் இங்கு
சர்வ சேஷின்-கைங்கர்யம் கொள்
முகப்பே கூவி பணி கொள் –தாவி அளந்தான்-அவன் ஆனததுக்கு –
அவரே தீண்டி கேட்காமாலே -நன்றி அறிவிக்காமல் காலை தட்டி விட்டாலும் –
குழந்தை தாய் போல் –உறங்கும் பிரஜை முதுகில் கட்டி கொண்டு ஆனந்த படும் தாய் போல்
மோட்ஷம் கொடுப்பதும் அவனே -அதுவும் அவனது இன் அருளே –
சரண் சொல்ல வைப்பதுமட்டுமே நாம் செய்வதும் -அவன் அனுக்ரகத்தாலே
உன் ஆனந்ததுக்காகா  உன்னால் படைக்க பட்ட -உன் சொத்தை –
உன்னால் கொடுக்க பட்ட ஞானத்தால் உன்னால் கொடுக்க பட்ட நாவால் சரண் சொல்ல வைத்து —
உன் ஆனந்தத்துக்கு நீயே மோஷம் கொடுத்து உன் திரு அடிகளில் சேர்த்து கொண்டு-உலகம் சிருஷ்டிக்க இதுவே பலன்

படைப்புக்கும் பிராட்டி-சரணாகதி -கைங்கர்யம் மூன்றுக்கும் சம்பந்தம்
சரண் சகல பலனுக்கும் -கைங்கர்யம் தான் கேட்க வேண்டும்-ஏற்று கொள்ள வேண்டுமே
சர்வ சேஷி-அனைவரும் காத்து இருக்க –கொள்ளுகிற பாக்கியம் கிட்ட வேண்டும்
கிருபை கொண்டே படைக்கிறான் -ஈடு பிரவேசமும்
ஸ்ரீ ய பதியாய் –அவாப்த சமஸ்த காமனாய் -பூரணன்-எதையும் எதிர் பார்க்காமல்-
சமஸ்த கல்யாண குண பூரணன்/சர்வேஸ்வரன்-சம்பந்தம் நான்கும் சொல்லி –அது போல் இங்கும் —
கண்ணாய் ஏழு உலகுக்கு உயிராய எம் கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேம்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்

பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும்
படிக் கேழ் இல்லா பெருமானை பழனக் குருகூர் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்து திரு வேம்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே
அடியீர் வாழ்மின் கைங்கர்யம் ஏற்று கொள்கிறான்
——-

ஆநூபுரார்பிதஸுஜாதஸுக³ந்தி⁴புஷ்ப-
ஸௌரப்⁴யஸௌரப⁴கரௌ ஸமஸந்நிவேஶௌ ।
ஸௌம்யௌ ஸதா³நுப⁴வநே(அ)பி நவாநுபா⁴வ்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 3 ॥

திரு அடி பெருமை அடுத்து சொல்கிறார் இதில்
தோள்கள் இருந்து தொங்கும் திரு மாலை திரு முடி திரு தோள்கள் திரு அடி வரை உறவாடும் புஷ்ப மாலை
என்றும் என்றும் புதிதாக -சதா அனுபவத்துக்கு —
நூபுர கங்கை போல்-ஆ சேது ஹிமாசலம் வரை போல் ஆ நூபுர -ஜாதி மணம் கொண்ட புஷ்பம்

தோமாலை சேவை முக்கியம் திரு மலையில் —

குளிக்கிற ஆசார்யம் -பூப்புனை கன்னி புனிதன்-காப்பு நான் கட்ட -தீர்த்தம் ஆடி வந்தான்

தோள்களில் இருந்து தொங்கும் மாலை –மணம் ஆக இருக்க ஆசை கொண்டு தொங்குகிரதாம்–
சர்வ கந்தன் -அவன்-பரிமளம் கொடுக்கவும்–இரவல் வாங்கி கொள்கிறதாம் மணத்தை திரு அடிகளில் இருந்து -இணை தாமரை அடிகள்-சம சந்நிவேசம் -ஒன்றுக்கு ஓன்று இணை –திரு அடி சேவை கிடைப்பதே துர்லபம் –
நிஜ பாத சேவை-தன் உடைய பாத சேவை-மென்மை பரிமளம் உசத்தி போட்டி ஆசன பத்மதுக்கும் திரு அடி தாமரைக்கும் போட்டி
ஆள் கண்ட சமுத்ரம் -திரு அடி மலர்ந்து -தோத்தவர் ஜெயதிதவர் தாங்கி இருக்கும் –
மங்கள கரமான எப் பொழுதும் அனுபவிக்க -அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதன் –சதா அனுபவம்-நவ அனுபவம் –
புஷ்ப கைங்கர்யம் சிந்து பூ மகிழும் திரு வேம்கடம் –ஸூத்ரவதி உடன் வானவர் கோன் வந்து சேவை–
சிந்திக் கொண்டே இருக்கும் பூ-தானே விழுமாம் கூடையில்-சுமந்து மா மலர் நீர் சுமந்து —
வேம்கட வானர்க்கு  என்னை உய்த்திடுமின் -மத்தறு மலர் குறுக்க மலர்
செண்பக மல்லிகை உடன் என்பகர் பூ -செண்பகமாய் இருக்கும் நிலை ஆசை கொண்டார்
————-

ஸத்³யோவிகாஸிஸமுதி³த்வரஸாந்த்³ரராக³-
-ஸௌரப்⁴யநிர்ப⁴ரஸரோருஹஸாம்யவார்தாம் ।
ஸம்யக்ஷு ஸாஹஸபதே³ஷு விளேக²யந்தௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 4 ॥

சாகச செயல்-சத்யா விகாசம்-அப் பொழுதே மலர்ந்த சமு தித்வர -மேலும் மேலும் மலரும்
சிவந்த -மணம் நிறைந்த மலரோடு-அடை மொழி இவை எல்லாம் –மென்மை யான /நறு மணம் உடைய -அப் பொழுதே அலர்ந்த –
ஒப்புமை இட ஆசை கொண்டு–அடை மொழி சேர்த்து பிரயத்தனம்-அடாத செயல்-
சாகாச செயல்-சாம்ய வார்த்தை-பேச ஆரம்பித்ததும்
மிக உயர்ந்த சாகச பதேஷு-எழுதி வைத்து விலேகயந்தவ் -முரட்டு தனமான எழுத்து எழுத போனது
கட்டுரைக்கில் தாமரை-நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது

பொன்–நன் பொன் -சுட்டு உரைத்த -அடை மொழி ஏற்றி -சொல்லி ஒவ்வாது —
அது போல் தாமரைக்கு -இல்லாத உவமை உவமையாக சொல்வது
திரு அடி மோஷம் கொடுக்கும் -தாமரை கொடுக்காதே –
கைங்கர்யம் கொள்ளாது தாவி உலகம் அளக்காதே –முரட்டு உபமானம்
திரு கமல பாதம் பாவனம் போக்கியம் இரண்டும் –தாமரைக்கு இல்லை-
கண்டேன் கமல மலர் பாதம் கண்டேன் விண்டே ஒழிந்தன வினை –
காலை மாலை கமல மலர் இட்டு -திருஅடி சிவந்து போனதாம் மலர் இட்டதும்-மென்மை–
ஆயிரம் நாக்கு வாங்கி கொண்டு உன் பெருமை பாட முடியாது சொல்ல -பட்டர் —

———–

ரேகா²மயத்⁴வஜஸுதா⁴கலஶாதபத்ர-
-வஜ்ராங்குஶாம்பு³ருஹகல்பகஶங்க²சக்ரை꞉ ।
ப⁴வ்யைரளங்க்ருததலௌ பரதத்த்வசிஹ்நை꞉
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 5 ॥

இலச்சினை -லஷணம் சொல்கிறார்-
ஆள வந்தார் கதா புன  வஜ்ரா லாஞ்சனம் -ஸ்லோஹம் போல்
படிக்கு அளவாக நிமிர்ந்த பாத பங்கயமே தலைக்கு அணியாய்-
ரேகை வடிவான–ஒன்பது சொல்கிறார்-
கொடி-அமிர்த கலசம்-குடை-வஜ்ரம்-அம்குசம் -சங்கு -சக்கரம் -கல்பக
ஒரு காலில் சங்கு  ஒரு காலில் சக்கரம் -இலச்சினை பட நடந்து –
பரம புருஷன் அடையாளம் பரதத்வ சிஹ்நை-அலங்க்ருதம்-பவை-பவித்ரம்
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார்-பெரிய பெருமாளுக்கு இரண்டு திரு கைகள்-
காட்டவே கண்டார் -ரேகை சொல்கிறார் தேசிகன்
அதிதி தேவி-போல் கௌசல்யை சந்தோஷித்தாள்-வாமனனை பெற்றது போல் ராமனை பெற்று-
வஜ்ர பாணி-இந்த்ரனை சொல்லாமல் ரேகை பொருந்திய திரு கைகள்
————–

தாம்ரோத³ரத்³யுதிபராஜிதபத்³மராகௌ³
பா³ஹ்யைர்மஹோபி⁴ரபி⁴பூ⁴தமஹேந்த்³ரநீலௌ ।
உத்³யந்நகா²ம்ஶுபி⁴ருத³ஸ்தஶஶாங்கபா⁴ஸௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 6 ॥

சத்வம் ரஜஸ் தமஸ் தாண்டி வெளி திரு அடி நீல கல்லை வெல்லும் உள் திரு அடி தாமரையை வெல்லும்
நகம் -வரிசை-சந்த்ரனை வெல்லும் மூன்றையும் வெல்லும் திரு அடிகள் -தாம்ரம்-சிவந்த உதர -உள்
பாஹ்யர் -வெளி- இந்திர நீல ரத்னம் வென்றது
அகம் அம்சுபி -ஒளி சசாங்கம் சந்தரன் ஒளி தோற்றது —
சத்வம் வெள்ளை   வென்றது
கரு நீலம்
சிகப்பு
பிராக்ருத ரஜஸ் தமோ சத்வம் வென்றது –பூர்ண சந்தரன் -கருப்பு -இருக்கும் -களங்கம் இன்றி நகம்
சுத்த சத்வ மாயம் அப்ராக்ருத
கருப்பு கடல் நுரை போல் நக கணுக்கள்
பார் கடல் வெளுப்பு நீல கடல் போல் -திரு மேனி-

——————

ஸப்ரேமபீ⁴தி கமலாகரபல்லவாப்⁴யாம்
ஸம்வாஹநே(அ)பி ஸபதி³ க்லமமாத³தா⁴நௌ ।
காந்தாவவாங்மநஸகோ³சரஸௌகுமார்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 7 ॥

சாஸ்திரம்–சிஷ்டாசாரம் -பிரபத்யே -மனசில் உறுதி பாடு
உப அயதே சமீபத்தில் அழைத்து செல்லுவது-பலத்துக்கு அருகில் -உபாயம்
பல பிரத்வம் வேறு-பலம் கொடுப்பவன் பகவான் ஒருவனே
சித்த உபாயம் –நம் முயற்சி இன்றி -சித்தமாக இருக்கிறான் -உபாயமும் பிராப்யமும் அவன் திரு அடிகள்
மாம் ஏகம்-என் ஒருவனையே பற்ற அவன் சொல்ல திரு அடிகளை பற்றுகிறோம்  -இதுவே அனுஷ்டானம்
ஈஸ்வரேனே கை விட்டாலும் திண் கழலாக இவை கொடுக்கும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் ஏக சிந்தனையாய்
வந்து உன் அடி இணை அடைந்தேன் –
துத் சரனாரவிந்தே -துத் பாதாரவிந்த -அடி இணை வந்து அடைந்தேன் -அடிக் கீழ் அமர்ந்து
உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்

லோக விக்ராந்தவ் சரணவ் சரணம்

அவன் திரு உள்ளம் படி அனுஷ்டானம்
காலில் விழ சொல்ல மாட்டான்
மித்திரன் போல் கை பிடி -நண்பன் என்று பிராட்டி அருளியது போல்
பிரிந்த தசையிலும் உபதேசிகிறாள் -அரச மரியாதை -பெருமாள் திரு உள்ளம் அறிந்து உபதேசம்
அழைக்கின்ற அடி நாயேன் -உள்ளம் குழையும்-ஆழ்வார்
கோவில் மகா ஜனம் பட்டரை-லகு சம்ப்ரோஷனம் ஐதீகம்   திரு அடி பிடிக்க கூட யோக்யதை இல்லை
மாம் ஏகம்-திரு மார்பை காட்டி கண்ணன் சொல்கிறான்
பிரார்த்தனா மதி சரணாகதி —

குழந்தை தாய் முலையில் வாய் வைப்பது போல் திரு அடி பற்றி சரண்

சந்தரன் -சசாங்கம்-கருப்பு திட்டு முயல் வடிவில்-சச =முயல்-இதனால் அடையாளம்
களங்கம் தீர பத்து விரல்களில் கைங்கர்யம் -நிஷ் களங்கமாக –
திரு வேம்கடம்-மதி தவழ குடுமி மால் இரும் சோலை –
வைப்பன் மணி விளக்காம் மா மதியை-பூர்ண சந்த்ரனை-ஆகாசத்தில் மதி –
இங்கு மா மதி -மாலுக்கு என்று எப் பொழுதும் கை நீட்டும் யானை
வேடர்கள் இவற்றை பார்த்து -வில் எடுக்கும் மலை வேம்கடம்
பகர் அல்லை பகல் செய்-இரவை பகல் ஆக்கும் –
திருஅடி  நிச்சலும் பிடித்து விட பிராட்டி ஆசை –
சொரூபம் பார்த்து ஆசை –
குணம் பார்த்து அச்சம் -இரண்டும்
சேஷத்வம் பார்த்து -அவனுக்கு பெருமை சேர்க்க – பரகத அதிசய ஆதன –சு பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலன் –
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே பேசி செய்து நினைத்து –பயம் நீங்கும் –
இதனால் -நடந்த கால்கள் நொந்தவோ-பேசி வாழி கேசனே –கூசி பிடிக்கும் மெல் அடிகள் –
பாரதந்த்ர்யம்
திரு கைகளால் பிடித்தால் கன்னி சிவக்குமே அச்சம்-ஆசை வென்று-பிடிக்க –
சிகப்பே நம் சம்சாரம் கழித்து கொடுக்கும்
ச பிரேம பீதி-கமலா கர பல்லவம்-முகிழ் கொழுந்து போன்ற திரு கைகள் –காந்தி-ஈர்க்கும்

வாக்குக்கும் மனசுக்கும் எட்டாமல் இருக்கும் சொவ்குமார்யம் –

ரஷகன்-பார்த்து எழுப்ப -சொவ்குமார்யம் பார்த்து – அம கண் மா ஞாலம் கடாஷம் கேட்ட பின்பு ஆண்டாள்
மாரி மலை –இங்கனே போந்து அருளி–போற்றி அருளுகிறாள் அடுத்து —
வந்த திருஅடிகள் நொந்தனவோ அது போல்
அங்கும் இங்கும் வானவர் -உன்னை வேலை வாங்க -வருவார் செல்வார் –
சங்கு சுமந்து -மற்று அடியேன் உளன் ஆழ்வார்
சொரூப ரூபகுணம் வகை –மார்த்வம் சொவ்குமார்யம் இரண்டிலும் –
உள்ளத்திலும் உடம்பிலும் –விட்டு கொடுக்க மாட்டான்
சரண் அடைந்த நீசனான என்னையும் கொள்வான் -மறை முக அர்த்தம் –
பிரிந்து பல ஜன்மம் இருக்கிறோமே -கோடி காட்டினால் புரிந்து கொள்வான்
பிரிந்து கடினமாக ஆகுமே திரு அடியும் திரு உள்ளமும்
திரு ஆபரணம் பிராட்டிக்கு எங்கு சாத்தலாம் என்று தோழிமார் பார்த்தாலே கன்னி போகும் திரு மேனி சீதை பிராட்டிக்கு
நடந்து போனாலே பொன் துகள்கள் சிந்தி கொண்டே போகுமாம்
அவள் பெருமாளை தொட்டால் சிவக்கும் படியான மெல் அடிகள்
திரு காட்கரை -மருவிய மாயன்-ஆள் கொள்வான் ஒத்து என் உயிர்–ஆர் உயிர் பட்டது என் ஆர் உயிர் பட்டது –
ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன்
தெளிந்த என் சிந்தை -காய்சின வேந்தே -கூப்பிடு தூரம் –
ராமானுஜர் கேட்டு வியந்த ஐதீகம் –கூவுதல் வருவுதல் செய்யாயே அடியேன் பிடிக்க
பூமி பாலன் திரு அடிகளை தாயார் பிடித்து விட –
கொடு வினையேனும் மெல் அடியை பிடிக்க கூப்பாடு போடா கூடாதா -ஆழ்வார் கேட்கிறார்

திரு காட்கரையில் கொடுக்கிறேன் என்றான்-
வந்தான்-ஆழ்வாரை அமர சொன்னான்
நம் ஆசை ஆணை
முகம் கன்னி போக கூடாது என்று அமர
திருஅடி பற்றி விட
பாரதந்த்ர்யம் நினைவு வர -அவனுக்கு பிடித்த படி இருக்க வேண்டுமே
அடிமை  தனம் விட அவன் திருஉள்ளம் படி நடப்பதே முக்கியம்
அடுத்த காலை நீட்ட -மலர்ந்த திரு கண்கள்-கப்யாசம் புண்டரீக அஷணீ–
தேவரீர் சொத்து -அடியேனால் அடியேன் ஆத்மா சமர்பிக்க -அதுவும் உன் சொத்தே
பதக்கம் எடுத்து நாமே சமர்ப்பித்தது போல் –
இப்படி என்ன பண்ணுவது என்ற படி-தோள் களை ஆர தழுவி -அகவிலை செய்தனை —
சம்சாரம் கண்டு பயந்து பரந்யாசம் அதுவும் அவனது செய்ய வேண்டாம் எத்தை கொண்டு சமர்பித்து –
உணர்வினுள்ளே இருதினினே அதுவும் அவனது இன் அருளே –அதுபோல் பிராட்டியும் பிரீதி பீதி இரண்டும் கொண்டு –தயிர் கடையோசை நட்டுவாங்கம் கொண்டு கண்ணன் தாண்டவம் ஆட –
கீசு கீசு என்று -மத்தினால் ஓசை -கேட்டே -ஆடி ஆடி-சிவந்த திரு அடிகள் பிராட்டி திரு கைகளால் ஆசுவாச படத்த –
பட்டர்–பெருமாள் பிராட்டி  பெருமை மாறி மாறி  பேசுவது போல்–

தளிர் புரையும் திரு அடி என் தலை மேல் –
மின் உரு பொன் உரு பின் உரு -மூன்று தத்வமும் அவன் தானே ஆழ்வாரை கொண்டதும்
சருகாக இருந்த திரு அடி தளிர் விட -பக்த ஸ்பர்சத்தால் -புஷ்ப ஹாச மலர்ந்த திருஅடிகள்–
அபிலோசன உற்று நோக்கினாலே முத்தரை குத்தினால் போல் -சந்தனம் பூசி கொண்ட கண்ணனை பார்த்த
மதுரை பெண்களின் வேல் விழி கயல் விழி  மான் விழி திரு மார்பில் பதிந்தது போல்  —
கோபால  சூடா மணி –அழியாமல் சாந்தணி தோள் சதுரன் மலை– மல்லரை மாட்டிய தேவாதி தேவன் –
கொடுத்த பரிசு மாறாமல் இருந்தான் –

———-

லக்ஷ்மீமஹீதத³நுரூபநிஜாநுபா⁴வ-
நீலாதி³தி³வ்யமஹிஷீகரபல்லவாநாம் ।
ஆருண்யஸங்க்ரமணத꞉ கில ஸாந்த்³ரராகௌ³
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 8 ॥

மூன்று தேவிமாரை பற்றி இதில் அருளுகிறார்

மகா லஷ்மி மஹீ பூமி தேவி- நீளா தேவி -திரு மகள் மண் மகள் ஆய மகள்-சிகப்பு பச்சை ஊதா நிறம்
மூவரிந்தளிர் போன்ற திரு கைகள் -ஆருன்ய சிகப்பு -அருணோதயம் –
மகர சங்கராந்தி-சங்கரமணம் -ஒன்றுடன் ஓன்று சேர்ந்து –
இதன் சிகப்பு வீசி-கரு நீல திரு அடிகள் -சிகப்பு தொற்றி கொண்டு மாற சாந்த்ர ராகவ்-சிகப்பு ஏறி-
மையார் கரும் கண்ணி கமல மலர் மேல் செய்யாள் —
மதம் கொண்டு சிகப்ப-ஐஸ்வர்யா செருக்கால் குதறி சிவக்க -ராகம்-அடியார் பற்றுவார் என்ற ஆசை உடன் -கரிய வாகி புடை பெயர்ந்து  மிளிர்ந்து –நேர் எதிர் -கருப்பு திரு மேனி கண் சிவந்து இவருக்கு
அவளுக்கு சிவந்த திரு மேனி கரிய திரு கண்கள் –எதனால்-நடந்தது –
அது போல்–கண்களால்பார்க்க இவன் திரு மேனியில் ஏற இவன் சிவந்த கண்களால் பார்க்க அவள் திரு மேனி சிவப்பு –
அதற்க்கு இது இதற்க்கு அது –மாறுதலும் நித்யம்-அபிமத அநுரூப தாம்பத்யம் -திரு மகள் மண் மகள் ஆயர்மதா மகள் என்று இவர் மூவர் —
கூந்தல் மலர் மங்கைக்கும்  மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் —
வார்த்தை பார்த்து -மங்கை மடந்தை கொழுந்து -பெதும்பை பேர் இளம் பெண் மங்கை-பருவ நிலைகள்-

பின்னை கொல் நில மா  மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள் —
ஆழ்வாருக்கு ஒப்பு சொல்லு -கடி மா மலர் உடன் உள்ள சாம்யம்
அவளும் நின் ஆகத்து –இவளை சொல்லு-சாம்யம்-சொல்ல இவளுக்கு ஏற்றம்-
பூ மேல் இருக்கும் திரு -அத் திரு அவனை பற்றும் இத் திரு இருவரை பற்றும் –நடுவாக வீற்று இருக்கும் நாரணன் -ஸ்ரீ ரெங்க நேதா-தலைவன்-திரு அடி சிவக்க –
மௌலி சக்கரவர்த்தி கிரீட ரத்ன ஒளியாலா –அடியார் திரு உள்ளம் ஆசனமாக அமர்ந்ததாலா
ஆசையால் சிவந்த திரு உள்ளம்–கமலா கரேப்யே -மூன்றும் பட்டர் அருளியது போல் —

————

நித்யாந்நமத்³விதி⁴ஶிவாதி³கிரீடகோடி-
-ப்ரத்யுப்ததீ³ப்தநவரத்நமஹ꞉ப்ரரோஹை꞉ ।
நீராஜநாவிதி⁴முதா³ரமுபாத³தா⁴நௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 9 ॥

நித்யானவதி விதி பிரம்மா சிவன் இந்த்ரன் -போல்வார் கிரீடம் பட -ரத்னம் -தனுஷ்கோடி-ஒளி- கிரீட நுனி-ரத்ன கல்

கிரீடம் -மகுட -ஸூடவதம்சே மும் முடிக்கு பேர் அரசு–ஆதி ராஜ்ய ஜல்பிதா -பிதற்றுகிறதாம்-
யார் தலையில் உட்கார்ந்து இருக்கிறேனோ அவன் தான் ஜகத்துக்கு அதிபதி என்று சொல்லி கொண்டு—நீல கரு மேக சியாமளன் போல் உதய கிரிக்கு மேல் ஸூர்யன் போல் கிரீடம் -கோள் சொல்லி கொடுக்கும் அவனை —
எளியவன் வேஷம் போட்டு தேவாதி ராஜன் ஹஸ்த கிரிக்கு வர -கிரீடம் பராத் பரன் காட்டி கொடுக்கும் —
முத்து குடை தங்க குடை ரத்ன மேல் மூடி இருக்கும் -அபிமான பங்கமாய் சங்கம் இருப்பார் போல்-ஒளி மலர-திரு அடியில் பட்டு வளருமாம்-திரு அடிக்கு ஹாரத்தி காட்டுமாம் இந்த ஒளியால்-நீராஞ்சனம்-ஹாரத்தி-
வைகாசி விசாகம் தீர்த்தவாரி-ஆழ்வாரே இறங்கி-
மனோ ரதம் நிறைவேற்றுவார் நீராஞ்சனம் சேவித்து பெறலாம் -200  தேங்காய் மூடி விளக்காக இருக்கும் —
ஆழ்வார் மட்டும் குளிர்ந்து-பைம் கமலா தன் தெரியல்-ஆழ்வார் மாலை குளிர்ந்து இருக்கும்-அகிலாண்ட கோடி பிரம்மாண்ட கண் எச்சில் படாமல் ஹாரத்தி-திரு அந்தி காப்பு-திரு வெள்ளறை காப்பு இட்டார் பெரியாழ்வார்-
உபாதா தானவ்-ஏற்று கொள்ளும் திரு அடிகள் -மனு குல அரசர் -இஷ்வாகு திலீபன் தசரதன் பெருமாள்-பரம்பரை திரு ஆராதனம்
கிரீடம் -ராமனுக்கு சூட்டி பட்டாபிஷேகம்–நவ ரத்ன ஒளி பெரிய பெருமாள் திரு அடியில் காணலாம் இன்றும்-
அது போல் இவன் நின்று பெற்றார் அடியரோர்க்கு அகலாமோ –கிடந்ததோர் கிடந்த அழகுக்கு ஹாரத்தி

பெண் மீன் உருவம் பதிந்து இருக்குமாம்-கண் கிரீடத்தில் இருப்பது
அடுத்து அருளுகிறார்
உள் திருஅடி சேவை கிடைப்பது துர் லபம்
திரு கோளூரில் ஜன்னல் வழியாக சேவிக்கலாம்

————–

விஷ்ணோ꞉ பதே³ பரம இத்யுதி³த ப்ரஶம்ஸௌ
யௌ மத்⁴வ உத்ஸ இதி போ⁴க்³யதயா(அ)ப்யுபாத்தௌ ।
பூ⁴யஸ்ததே²தி தவ பாணிதலப்ரதி³ஷ்டௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 10 ॥

யாரும் பார்க்க முடியாத பரம பதம்-மாக வைகுந்தம் தெளி விசும்பு திரு நாடு-காண்பதற்கு
என் மகம் ஏக எண்ணும் ஆகம் சேர் நரசிங்கம் அதாகி ஓர் ஆகம் வள உகிரால் பிளந்தான் உறை
மா வைகுந்தம் காண மனம் ஏக எண்ணும் –

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்-

புண்ணில் புலி பெய்தால் போல் திரு அடியில் மது தாரை பொழியும் என்பர்–
அதை எங்கும் தேடி போக வேண்டாம் -இங்கே அழுந்த இருக்க திரு கை காட்டி காட்டுகிறான்

எந்த திரு அடிகளில் உயர்ந்த வேதாந்த புகழும் -மது பெருகும்-போக்யதை உள்ள திரு அடி-அனுபவ தக்க –
பெருமை இனிமை இரண்டும் உண்டு–பரம போக்கியம் –ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே
இங்கேயே இருகிறதே வலது திரு கைகளால் காட்டுகிறேர் -சரணம்-பிராப்யம் –
அனுபவிக்க தான் திரு அடி -உபாயமாக நாம் ஆக்கி கொண்டோம் -கரு முகை மாலையை சும்மாடு போல் உபயோகித்தோம் —
அனுபவிக்க கொடுத்ததை -விதி அற்று உபாயமாக ஆக்கி கொண்டோம்.-

———–

அடுத்து பார்தந்தன் தேர் முன் நின்று அருளியதை அபிநயம் காட்டிக் கொண்டு இருக்கிறீர்

பார்தா²ய தத்ஸத்³ருஶஸாரதி²நா த்வயைவ
யௌ த³ர்ஶிதௌ ஸ்வசரணௌ ஶரணம் வ்ரஜேதி ।
பூ⁴யோ(அ)பி மஹ்யமிஹ தௌ கரத³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 11 ॥

ஏற்ற சாரதி-பிடித்த -தேர் பாகன்-மாம் ஏகம் சரணம் விரஜ -என்று அருளியதை-
காலில் விழுந்தவரையும் கை பிடிக்கும் ஓங்கி உலகு அளந்த உத்தமன்-மறு படியும் திரு கைகளால் காட்ட பட்டன –
வலது திரு கையால் காட்டி கொண்டு இருகிறாய் –ஆர் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்-
சுட்டி காட்டுகிறாய் இது தான் என்று –தொட்டு காட்டுகிறார் –மாம்–மற்றவை விட்டு தன்னை

திரு மேனியில் எது -அதில் திரு அடி காட்டி மற்றவை விட்டு காட்டுகிறார்
சத்ருச சாரதி இவர் தான் -பார்த்த சாரதி-பார்த்தன் தன் தேரை ஊன்றான் –
தாழ்ந்த தஞ்சயனுக்கு -கர்மம் அறியாத -ஆகி-பஷ பாதமாக ஆகி –
மணி தின் தேர் உஊர்ந்தவன் -நர நாராயணனே அருஜுனன் கண்ணன்–ஆச்சர்ய சிஷ்ய பாவம் மாறி இருந்தார்கள்–
கருணனுக்கு பிடிக்காத சாரதி சத்யன்
சாமான்ய விசேஷ நியாயம்-மாம்-திரு அடி -காட்டி கொண்டு-
சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் இடம் திரு அடி காட்டி கொண்டு இருக்கிறான்
———————

மந்மூர்த்⁴நி காளியப²ணே விகடாடவீஷு
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ரே ஶிரஸி ஶ்ருதீநாம் ।
சித்தே(அ)ப்யநந்யமநஸாம் ஸமமாஹிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 12 ॥

சௌசீல்யம் -கூராளும்–தனி உடம்பன்-விஸ்வ ரூபத்தில் அனைத்தையும் காட்டி

உயர்வு தாழ்வு இன்றி ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -உயர்வு தாழ்வு பாராமல் -அனைவருக்கும்-சேவை சாதிகிறாய்–

பரம பக்தர் பர வேதாந்தி பரம பாமரன்-அனைவர் தலையிலும் -லோக விக்ராந்த  சரணவ் –
உலகம் அளந்த பொன் அடி-

தாள் பரப்பி மண தாவிய ஈசன் இவனே–தாவி அன்று உலகம் எல்லாம் தளவிலா கொண்ட எந்தாய்

ஆவியே அமுதே -தொண்டர் அடி பொடி ஆழ்வார்

நீசன் விலகி போக -வெள்கி போய் விலவர சிரித்திட்டேனே-உள்ளுவார் உள்ளத்து எல்லாம் உறைகின்ற —
கோவர்த்தன கிரி கீழும் அனைவரும் பண்டித பாமர விவேகம் அற–
மன் மூர்த்னி- என் தலையில்– நீசன்-வேதாந்தம் மேலும் விளங்கி –
ஆனால் அவனோ தளிர் புரையும் திரு அடி ஆழ்வார் தலையை தீண்டிய பின்பு –
அவன் வைக்கும் இடம் ஏற்றம் பெறுகிறது-பண்பும் அவன் சம்பந்தம் பெற்று நல்ல பண்பாகும் ..
அடியேன் தலையில்-காளிங்கன் பாம்பின் தலையில்/தொல் கானம்-அடர்ந்த காட்டில்-ஸ்ரீ வேம்கடாத்ரி சிகரம்-ஸ்ருதி தலை வேதாந்தம் தலையில்-அநந்ய மனச படைத்தவர் அவனையே அவனுக்காகா நினைப்பவர் –
இங்கு எல்லாம் திரு அடி வைத்தவன் ஆறு இடங்கள்-துவய சப்தம் ஆறு என்பதால் –
என் தலை தொடக்கி அநந்ய சித்தம் -நீச நிலை தொடக்கி உயர்ந்த இடம் வரை-கூரத் ஆழ்வான் வரதராஜ ஸ்தவத்தில் அருளியது போல் –வேழ மலை மேல் இருப்பதா –  –
பக்தர் ஹிருதயம்-வேத சிரஸ் -கமல- தாமரை மேல் -நம் ஆழ்வார் திரு உள்ளத்திலா –
மந்த ஸ்மிதம்-ரோம ஹர்ஷம் வேழ மலை அழகால்-புது பொலிவால் –ராச கிரீடை கோபிகள் பூமி பார்த்து கேட்டார்கள் —
முதல் அடி பூ-கவிழ்த்து அலர்த்தி –ஒரு திருஅடி கீழும் ஓன்று மேலும் –

சௌசீல்யம்-அனைவரையும் சமம் –வாத மா மகன் மர்கடம்- விலங்கு மற்று ஓர் சாதி உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
திரு கண்ண புரம் திரு நறையூர் இரண்டுக்கும் நூறு பாசுரம் திரு அரங்கம் மட்டுமே ஒரே ஐம்பது பாசுரம் அருளி
திரு மங்கை ஆழ்வார் அத்வதீயம் திரு அரங்கம் காட்டி-வேருவாதால் வாய் வேறுவி வேம்கடமே வேங்கடமே என்கின்ற –
வாயு குமாரன்-மனிதன் மற்று ஓர் ஜாதி மர்கடம் சொல்லி-செருக்கு உள்ள குரங்கு என்பதால் வாய் குமரன் சொன்னார்
முலையோ முழு முற்றும் பொந்தில -கலையோ அறை இல்லை நாவோ குளறும் மிளிரும் கண்   –
கடல் வண்ணன் என்றோ விலையோ-சிறு பிராயம் அனைவரையும் சமமாக பார்க்கும் —
சைதன்யம் இருந்தும் தப்பு பண்ணி-இரு கால் மாடு போல்-அதனால் காளிங்கன் தேவலை —
ஸ்ரீ பாஷ்யம் கேட்டு தரை தட்டி இது போன்று புரிந்து கொண்டேன் சொன்ன ஐதீகம்-
அடுத்து வெம் கானம்-காலின்கனுக்கு சில அறிவு உண்டே -அதனால்-வெப்பம் குற்றம் இல்லை-
அடுத்து உயர்ந்த வேம்கடம்-உசத்தி- வேதாந்தம் முடியில்-திரு வேம்கடம் உயர்ந்தது என்று சொல்லியதால் —
அடுத்து அநந்ய மனச-சிஷ்ட பரிக்ரகம் பூர்வர் அனுஷ்டானம் வேண்டுமே -சகஸ்ர நாமம் ஏற்றம் –
வேதாந்தம்-பீஷ்மர் அறிந்த தர்மம்/வியாசர் -போல் இங்கும் அநந்ய மனஸ் ஏற்றம்

ஆழ்வார் திரு உள்ளம்-என் உச்சி உளானே–வந்து என் உச்சி உளானே–
முதலில் திரு வேம்கடம் வந்து-நின்று இருந்தால் கிளம்ப போகிறான்-மாரி மாறாத தன் அம் மலை-
தாமர பரணி நதி ஓடும்-கருணை வர்ஷம்–கமல கண்ணன் என் கண்ணின் உளான்–
திரு முடி தர்சனம் அங்கு தான்-பொலிந்து நின்ற பிரான் ஆழ்வார் திரு முடி மேல்-ஆதி  பிரான் நின்ற பெருமான்-
இருவரையும் மங்களாசாசனம் ஆழ்வார் பண்ணி கொண்டு –பட்டயம் வாசிப்பார்கள் உமக்காக தந்தோம்–கொண்ட கோவலன் விஷ்ணு சித்தன் மனத்தில் –பருபதத்து  கயல் பதித்த பாண்டியன் -மீன கொடி நாட்டியது போல்-
மலை கேட்காமல் மன்னன் வைத்தது போல்–காளியின் உச்சியில் நடனம் –பூத்த நீள் கடம்பேறி –
அவன் திரு அடி பட்டதும் பசக் பசக் பசுமை பெற்றதாம் -குரவை கூத்து குட கூத்து ராச கிரீடை –
பல வித நடனம்-போர் களமாக நிருத்தம் செய்தான் -காலால் காளியன் தலையில் மிதித்தது முதலா
பரல் கல் மேல் புளிதி சோர பெருமாள் நடந்தான் –மெல் அடி –
ஆழி அம் கையானை அம்மானை-அம்மனை தொடர்ந்து ஏத்தாமல் –ஆழ்வார் –
ராமானுஜர் அந்த இடத்தில் பக்கம் இருந்து தலையால் திரு அடி தாங்கி இருக்காமல் போனோமே

வியன் காண மரத்தின் நீழல்-கல் ஆணை மேல் துயில கற்றாயே காகுத்தா
காடு நடந்த பொன் அடி
கண்ணன் ஐந்து வயசில் மாடு மேய்க்க போனானே
குடையும் செருப்பும் கொடாமே காதில் திரி இட்டு தாமோதரனை –பசு மாடு தூசி படித்த குழல்-
பொன் தடுவுவது போல் -ப்ருந்தாவனந்த பண்டிதன்
நமக்கு நாதன் உடையவராக ஆக்குமே செடி கொடிகள் –வெம் கானம் போக்கினேனே
வேம்கட திரு மலை-க்ரீடாத்ரி விளையாட்டு மலை-ஸ்ரீ வைகுண்டமே ஆனந்த நிலைய விமானம் ஸ்வாமி புஷ்கரணி
வேம்கடத்து உச்சியில் கண்டு போய்-முதலில் திருஅடி பதிந்த இடம் சேவிக்க வேண்டும்

—————–

அம்லாந ஹ்ருஷ்ய த³வநீதல கீர்ணபுஷ்பௌ
ஶ்ரீவேங்கடாத்³ரி ஶிக²ராப⁴ரணாயமாநௌ ।
ஆநந்தி³தாகி²ல மநோநயநௌ தவைதௌ
ஶ்ரீவேங்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 13 ॥

ஸ்ரீ வேங்கடேசா -வாடா மலர்களாகத் தரை மேல் கிடக்கும் மற்ற மலர்களின் இடையே காணப்படுகின்றவையும்
திருவேங்கட மலைச்சிகரம் பெற்ற சிறந்த அணிகலன்களாக விளங்குபவையும்
சகல ஜீவன்களுடைய கண்களையும் மனங்களையும் களிப்படையச் செய்கின்றவையுமான
இந்த உன்னுடைய திருவடிகளே சரணம் என்று அடைகிறேன்

————

ப்ராய꞉ ப்ரபந்ந ஜநதா ப்ரத²மாவகா³ஹ்யௌ
மாது꞉ ஸ்தநாவிவ ஶிஶோரம்ருதாயமாநௌ ।
ப்ராப்தௌ பரஸ்பரதுலாமதுலாந்தரௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 14 ॥

ஸ்ரீ வேங்கடேசா -உன்னை வந்து அடைக்கலம் வந்து புகுந்த அநேகம் ஜனங்களுக்கு
முக்கியமாக அனுபவிக்கத்தக்க சொத்துப் போலே உள்ளவையும்
குழந்தைகளுக்குத் தாயின் மார்பகம் போல் அமுதாகின்றவையும்
ஒன்றுடன் ஓன்று இணையாக அமையப்பெற்றவையும்
தனக்கு நிகராக வேறே ஓன்று இல்லாதவையுமான
உனது திருவடிகளே சரண் என்று அடைகிறேன் –

—————

ஸத்த்வோத்தரை꞉ ஸததஸேவ்யபதா³ம்பு³ஜேந
ஸம்ஸாரதாரகத³யார்த்³ரத்³ருக³ஞ்சலேந ।
ஸௌம்யோபயந்த்ருமுநிநா மம த³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 15 ॥

ஸ்ரீ வேங்கடேசா நற்குணம் நிறைந்தவர்களால் ஸதா காலம் வணங்கத் தக்க பாத கமலங்களை யுடையவரும்
பிறவிக்கடலைத் தாண்ட உதவும் கருணையால் குளிர்ந்த
திருக்கண்களை யுடையவருமான
ஸ்ரீ மணவாள மா முனிகளால் எனக்கு காண்பிக்கப்பட்ட
எனது திருவடிகளே சரணாக அடைகிறேன் –

———

ஶ்ரீஶ ஶ்ரியா க⁴டிகயா த்வது³பாயபா⁴வே
ப்ராப்யே த்வயி ஸ்வயமுபேயதயா ஸ்பு²ரந்த்யா ।
நித்யாஶ்ரிதாய நிரவத்³யகு³ணாய துப்⁴யம்
ஸ்யாம் கிங்கரோ வ்ருஷகி³ரீஶ ந ஜாது மஹ்யம் ॥ 16 ॥

ஸ்ரீ விருக்ஷ மலைக்கு இறைவனே
ஸ்ரீ யப்பதியே
நீ இறங்கும் பொழுது நின் திருவருள் கிடைக்கும்படி செய்து அருளுபவளும்
பிறவிக்கடல் கடந்து நான் அடையத்தக்க பயனாக நீ மாறும் காலத்து உன்னுடன் சேர்த்து
வைத்தும் அருள்பவளுமான திருமகளால் அடையப்பட்டவனும்
குற்றமற்ற குணங்களை உடையவனுமான உனக்கு நான் பணி செய்வதையே விரும்புபவனே தவிர
என்னையே நான் பெரிது என்று எண்ணி எனக்கு -என்னுடைய ஆனந்துக்காகவே
பணி செய்வேனாக இருக்க மாட்டேன் –

இட் ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி ||

***

ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம்

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்தி நாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்     -1-

திருமகள் விரும்பும் நாதனும்
ஸர்வ மக்களுக்கும் நிதி போன்றவனும்
யாசிப்பவர்களுக்கு வரையாது வழங்கும் பொற் குவை போன்றவனும்
திருவேங்கட திருமலையில் நித்ய வாஸம் செய்து அருளுபனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு ஸர்வ மங்களங்களும் உண்டாகட்டும்

———

லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே

சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம்             2

திருமகளும் வியந்து நோக்கத்தக்க அழகிய புருவங்கள் இணைந்து விளங்கும் திருக்கண்கள் யுடையவனும்
கண்ணாவான் மண்ணோர் விண்ணோர்க்கும் என்றபடியே
ஸகல லோகங்களுக்கும் கண் போன்றவனுமாகிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———-

ஸ்ரீவேங்கடாத்ரி  ச்ருங்காக்ர மங்களா பரணாங்க்ரியே

மங்களாநாம் நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்    3-

திரு வேங்கட மலைச் சிகரத்துக்கு மங்கள திரு ஆபரணமாக விளங்குகின்ற திருவடிகளை யுடையவனும்
ஸர்வ மங்களங்களுக்கும் இருப்பிடமானவனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———–

ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா சர்வசேதஸாம்

ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம்             4

அங்கங்கள் யாவுமே அழகு என்னும் செல்வத்தால் அனைவருடைய உள்ளங்களையும்
எப்பொழுதுமே மயங்கிப்போய் இருக்கும்படிச் செய்யக் கூடிய அழகிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———————

நித்யாய நிரவத்யாய ஸத்யா நந்தசிதாத்மநே

ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்   5-

அழிவற்றவனும்
அழுக்கு அற்றவனும்
ஆனந்த ஸ்வரூபனும்
ஞான ஸ்வரூபனுமாக
எல்லார் உள்ளத்திலும் உயிராக விளங்கும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

————-

ஸ்வதஸ் ஸர்வவிதே ஸர்வசக்தயே ஸர்வசேஷிணே

ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம்        –6-

தானாகவே எல்லாமும் அறிந்தவனுக்கு
ஸர்வ சக்திகளும் பெற்றவனும்
ஸமஸ்த இதர வைலக்ஷணம் கொண்டவனும்
நல்ல ஒழுக்கம் உடையவனும்
எளிதில் சென்று அடையும்படி பின்னானார் வணங்கும் ஜோதியுமுமானவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

————–

ப்ரஸ்மை ப்ரஹ்மணே பூர்ணகாமாய பரமாத்மநே

ப்ரயுஞ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம்      -7-

எங்கும் நிறைந்த பரம் பொருளும்
எண்ணியவை யாவையும் நிறைவேற்றி வைக்கக் கூடியவனுமான
பரமாத்மாவாகவும்
எல்லாமே தம் தம் பணிகளில் இயங்கக் காரணமாய் இருப்பவனுமான
பரதத்வ உண்மைப் பொருள் அனைத்திலும் உயர்ந்தவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

———–

ஆகால தத்வ மச்ராந்த மாத்ம நாம நுபச்யதாம்

அத்ருப்த்யம்ருத ரூபாய வேங்கடேசாய மங்கலம்    -8

காலம் உள்ளவரை அயராமல் ஸேவிக்கும் பக்தர்களுக்குத் திருப்தி அளிக்கக் கூடிய
ஆரா வமுதமாய் இருக்கக் கூடிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

————-

ப்ராயஸ் ஸ்வ சரணௌ பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா

க்ருபாய திசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்     –9-

தனது திருவடிகளே சரணம் என்று சகல ஜீவன்களுக்கும்
தனது திருக்கரத்தால் அன்புடன் காட்டிக் கொடுத்து அருளும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

————

தயாம்ருத் தரங்கிண்யாஸ் தரங்கைரிவ சீதலை:

அபாங்கை ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம்     -10-

கருணை என்னும் அமுதக்கடலினுடைய அலைகளைப் போலே
குளிர்ந்த திருக் கடைக் கண்களால் உலகத்தை நினைக்கின்ற
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

—————

ஸ்ரக்பூஷாம் பர ஹேதீதாம் ஸுஷமாவஹ மூர்த்தயே

ஸர்வார்த்தி ஸமநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்    –11

தான் அணியும் மாலைக்கும்
அணி மணிகள் உடை ஆயுதம் இவைகளுக்கும்
அழகை யுண்டு பண்ணி அருளும் திவ்ய மங்கள விக்ரஹம் உடையவனும்
சகல துக்கங்களையும் போக்கி அருள் செய்பவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

—————

ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்    12-

ஸ்ரீ வைகுண்டத்தில் பற்று நீங்கி
ஸ்ரீ ஸ்வாமி புஷ்கரணி தடாகத்தின் கரையில்
திருமகளோடு விளையாடி அருளும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

——–

ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிநே

ஸர்வலோக நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்     –13

ஸ்ரீ மணவாள மா முனிகள் போன்ற பக்தர்களின் திரு உள்ளங்களில் நித்ய வாஸம் செய்து அருள்பவனும்
எல்லா உலகங்களில் எல்லாப் பொருள்களிலும் கன்னுக்குத் தெரியாமல்
கரந்து எங்கும் பரந்துள்ளவனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

———–

மங்களாசாஸ நபரைர் மதாசார்ய புரோகமை:

ஸர்வைச்ச பூர்வை ராசார்யைஸ் ஸத்க்ருதாயாஸ்து மங்களம்    -14-

எம்பெருமானுக்கு மங்களங்கள் உண்டாகட்டும் என்று
என்னுடைய ஆச்சார்யர்களாலும்
மற்றும் உள்ள ஆச்சார்யர்களாலும்
பூஜிக்கப் பட்டவருமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

***

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் ஓங்கார பரமார்த்தாய நம:
ஓம் நர நாராயணாத்மகாய நம:
ஓம் மோக்ஷலக்ஷ்மீ ப்ராணகாந்தாய நம:
ஓம் வேங்கடாஶல நாயகாய நம:
ஓம் கருணாபூர்ண ஹ்ருதயாய நம:
ஓம் டேங்காரஜப ஸௌக்யதாய நம:
ஓம் ஶாஸ்த்ர ப்ரமாண கம்யாய நம:
ஓம் யமாத்யஷ்டாங்க கோசராய நம:
ஓம் பக்தலோகைக வரதாய நம:
ஓம் வரேண்யாய நம: 10

ஓம் பயநாஶநாய நம:
ஓம் யஜமாந ஸ்வரூபாய நம:
ஓம் ஹஸ்தந்யஸ்த  ஸுதர்ஶநாய நம:
ஓம் ரமாவதார மங்கேஶாய நம:
ஓம் ணாகாரஜவ ஸுப்ரியாய நம:
ஓம் யஜ்ஞேஶாய நம:
ஓம் கதிதாத்ரே நம:
ஓம் ஜகதீவல்லபாய நம:
ஓம் வராய நம:
ஓம் ரக்ஷஸ்ஸந்தோஹ ஸம்ஹர்த்ரே நம: 20

ஓம் வர்சஸ்விநே நம:
ஓம் ரகுபுங்கவாய நம:
ஓம் தாநதர்மபராய நம:
ஓம் யாஜிநே நம:
ஓம் கநஶ்யாமள நம:
ஓம் ஹராதி ஸர்வதேவேட்யாய நம:
ஓம் ராமாய நம:
ஓம் யதுகுலாக்ரணயே நம:
ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
ஓம் மஹாத்மநே நம: 30

ஓம் தேஜஸ்விநே நம:
ஓம் தத்வஸந்நிதயே நம:
ஓம் த்வமர்த்த லக்
ஓம் பாவநாய நம
ஓம் ஸர்வேஶாய நம:
ஓம் கமலாகாந்தாய நம:
ஓம் லக்ஷ்மீ ஸல்லாப ஸம்முகாய நம:
ஓம் சதுர்முக ப்ரதிஷ்டாத்ரே நம: 40

ஓம் ராஜராஜ வரப்ரதாய நம:
ஓம் சதுர்வேத ஶிரோரத்நாய நம:
ஓம் ரமணாய நம:
ஓம் நித்யவைபவாய நம:
ஓம் தாஸவர்க்க பரித்ராத்ரே நம:
ஓம் நாரதாதி முநிஸ்துத்யாய நம:
ஓம் யாதவாசலவாஸிநே நம:
ஓம் கித்யத் பக்தார்தி பஞ்ஜநாய நம:
ஓம் லக்ஷ்மீப்ரஸாதகாய நம:
ஓம் விஷ்ணவே நம: 50

ஓம் தேவேஶாய நம:
ஓம் ரம்ய விக்ரஹாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் லோகநாதாய நம:
ஓம் லாலிதாகில ஸேவகாய நம:
ஓம் யக்ஷகந்தர்வ வரதாய நம:
ஓம் குமாராய நம:
ஓம் மாத்ருகார்ச்சிதாய நம:
ஓம் ரட்த்பாலக போஷிணே நம:
ஓம் ஶேஷஶைல க்ருதஸ்தலாய நம: 60

ஓம் ஷாட்குண்ய பரிபூர்ணாய நம:
ஓம் த்வைததோஷ நிவாரணாய நம:
ஓம் திர்யக்ஜந்த் வர்ச்சிதாங்க்ரயே நம:
ஓம் நேத்ராநந்த கரோத்ஸவாய நம:
ஓம் த்வாதஶோத்தம லீலாய நம:
ஓம் தரித்ரஜந ரக்ஷகாய நம:
ஓம் ஶத்ரு க்ருத்யாதி பீதிக்நாய நம:
ஓம் புஜங்கஸயந ப்ரியாய நம:
ஓம் ஜாக்ரதே நம:
ஓம் ரஹஸ்யாவாஸாய நம: 70

ஓம் ஶிஷ்டபரிபாலகாய நம:
ஓம் வரேண்யாய நம:
ஓம் பூர்ணபோதாய நம:
ஓம் ஜந்ம ஸம்ஸார பேஷஜாய நம:
ஓம் கார்த்திகேய வபுர்த்தாரிணே நம:
ஓம் யதிஶேகர பாவிதாய நம:
ஓம் நரகாதி பயத்வம்ஸிநே நம:
ஓம் ரதோத்ஸவ கலாதராய நம:
ஓம் லோகார்ச்சா முக்யமூர்த்தயே நம:
ஓம் கேஶவாத் யவதாரவதே நம: 80

ஓம் ஶாஸ்த்ர ஶ்ருதாநந்த லீலாய நம:
ஓம் யமஶிக்ஷா நிபர்ஹணாய நம:
ஓம் மாநஸம்ரக்ஷண பராய நம:
ஓம் நேத்ரஹீநாக்ஷிதாயிநே நம:
ஓம் மதிஹீந மதிப்ரதாய நம:
ஓம் ஹிரண்யதாந க்ராஹிணே நம:
ஓம் மோஹஜால நிக்ருந்தநாய நம:
ஓம் ததிலாஜாக்ஷதார்ச்யாய நம:
ஓம் யாதுதாந  விநாஶநாய நம: 90

ஓம் வேங்கடாய நம:
ஓம் தக்ஷிணாஸ்திதாய நம:
ஓம் ஸாரபுஷ்கரிணிதீராய நம:
ஓம் ராத்ரௌ தேவகணார்ச்சிதாய நம:
ஓம் யத்நவத் பலஸந்த்தாத்ரே நம:
ஓம் ஸ்ரீம்ஜபாத் தநவ்ருத்திக்ருதயாய நம:
ஓம் க்லீம்காரஜாபி காம்யார்த்த ப்ரதாந ஸதயாந்தராய நம:
ஓம் ஸ்வஸர்வசித்தி ஸந்தாக்ரே நம:
ஓம் நமஸ்கர்த்து ரபீஷ்டதாய நம: 100

ஓம் மோஹிதாகில லோகாய நம:
ஓம் நாநாரூப வ்யவஸ்திதாய நம:
ஓம் ராஜீவலோசநாய நம:
ஓம் யஜ்ஞவராஹாய நம:
ஓம் கணவேங்கடாய நம:
ஓம் தேஜோராஶீக்ஷணாய நம:
ஓம் ஸ்வாமிநே நம:
ஓம் ஹார்தா வித்யா நிவாரணாய நம:  108

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி சமாப்தம்:

————–

வ்ருஷசைலாதிப ஏவ தைவதம் ந

வ்ருஷபாத்ரீச்வர ஏவ தைவதம் ந
பணி சைலாதிப ஏவ தைவதம் ந

பகவான் வேங்கட ஏவ தைவதம் ந————————–11-

—————————————————-

வ்ருஷசைலம் -என்பதும்
வ்ருஷபாத்ரி -என்பதும்
பணி சைலம் -என்பதும்
பர்யாய நாமங்கள் ஆதலால்
எல்லாவற்றாலும்
திருமலை அப்பனே அடியேன் தொழும் தெய்வம்
என்றது ஆயிற்று

—————————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ ஸ்ரீ நிவாச பர தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச பரமம் தனம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச குல தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீனிவாச பரமா கதிர் ந—12

ஸ்ரீ ஸ்ரீநிவாசன
நமக்கு பர தேவதையும்
பெரும் செல்வமும்
குல தேவதையும்
பரம கதியும்
ஆவான் -என்கிறார் ஆயிற்று-

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ வேங்கடேச பாகவதம் -ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் அனுபவிக்கும் ஸ்ரீ திருவேங்கடம் —

March 17, 2023
ஸ்ரீ வேங்கடேச த்வாதச நாம ஸ்தோத்திரம்‌ 

வேங்கடேசோ வாஸுதேவ: வாரிஜாஸன வந்தித: 
ஸ்வாமி புஷ்கரிணீவாஸ: சங்கசக்ர கதாதர: 
பீதாம்பரதரோ தேவ: கருடாரூட ஸோபித: 
விஸ்வாத்மா விஸ்வலோகேச: விஜயோ வேங்கடேஸ்வர: 
(வாரிஜாஸன வந்தித: தாமரைமலரை ஆசனமாகக்‌ கொண்ட பிரம்மனால்‌ வணங்கப்பட்டவனே.) 
ஏதத்‌ த்வாதஸ நாமானி த்ரிஸந்த்யம்‌ ய: படேன்‌ நர: 
ஸர்வபாப வினிர்முக்தோ விஷ்ணோஸ்ஸாயுஜ்ய மாப்னுயாத்‌. 
-----------

1. பொய்கையார்‌ பாஞ்சசன்னியம்‌ (சங்கு) 
2. பூதத்தார்‌ கெளமோத$ (கதாயுதம்‌] 
3. பேயார்‌ நாந்தகம்‌ (வாள்‌) 
4-திருமழிசையார்‌ சுதர்சனம்‌ (சக்கரம்‌) 
5. சடகோபர்‌ விஷ்வக்சேனர்‌ (சேனை முதலி) 
6. மதுரகவி வைநதேயர்‌ (கருடன்‌) 
7. குலசேகரர்‌ கெளஸ்துபம்‌ (மணி) 
8. விஷ்ணுசித்தர்‌ கருடன்‌ (வாகனம்‌) 
9. ஆண்டாள்‌ பூமாதேவி (பிராட்டி) 
10. தொண்டரடிப்பொடி வைஜயந்தி (வனமாலை) 
11, திருப்பாணர்‌ ஸ்ரீ வத்ஸம்‌ (மருவு) 
12. திருமங்கை மன்னன்‌ சார்ங்கம்‌ (வில்‌).
----------
பொய்கையாழ்வார்‌ 
1. வேங்கடமே! வானோர்‌. மனச்சுடரைத்‌ தாண்டும்‌ மலை --26-
2. வேங்கடமே! வெண்சங்கம்‌ ஊதியவாய்‌ மரல்‌ உகந்த ஊர்‌, --57
3. வேங்கடமே! மேலகரர்‌ எம்மென்னும்‌ மாலது இடம்‌--36-
4. வேங்கடமே! பேரோத வண்ணர்‌ பெரிது (நின்றதுவும்‌], --39
5. வேங்கடமே! மேலசுரர்‌ கோன்‌ வீழக்‌ கண்டு உகந்தான்‌ குன்று --40-
6. வேங்கடமே! மேலொருநாள்‌ மான்மாய எய்தான்‌ வரை 

வேங்கடத்தாய்‌! நால்வேதப்‌ பண்ணகத்தாய்‌. 
விண்‌ கொடுக்கும்‌ மண்ணளந்த சீரான்‌ திருவேங்கடம்‌. 
வேங்கடமும்‌ நின்றான்‌ என்றால்‌ கெடுமாம்‌ இடர்‌. 
வேங்கடத்து மேயானும்‌ உள்ளத்தின்‌ உள்ளானென்று ஓர்‌. 
வேங்கடத்தான்‌ முன்னொரு நாள்‌ மாவாய்‌ பிளந்த மகன்‌. 
வேங்கடவனையே! வாய்திறங்கள்‌ சொல்லும்‌ வகை. 
வேங்கடத்தான்‌ விண்ணோர்‌ முடி தோயும்‌ பாதத்தான்‌. 
வேங்கடமென்று உளங்கோயில்‌ உள்ளம்‌ வைத்து உள்ளினேன்‌. 

வகையறு நுண்கேள்வி வாய்வார்கள்‌ நாளும்‌ 
புகை விளக்கும்‌ பூம்புனலும்‌ ஏந்தி - திசை திசையின்‌. 
வேதியர்கள்‌ சென்று இறைஞ்சும்‌ வேங்கடமே! வெண்சங்கம்‌ 
ஊதியவாய்‌ மால்‌ உகந்த ஊர்‌.

இப்பாசுரம்‌ ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதக்‌ காட்சிகளைக்‌  கண்முன்‌ கொண்டுவந்து நிறுத்துகிறது. 
ஆழ்வார்கள்‌ காலத்தில்‌  இவ்விதமே திருமலையில்‌ சுப்ரபாதம்‌, தோமாலை சேவை, 
அர்ச்சனை போன்றவை நடந்தன போலும்‌. 
பொய்கையாரின்‌  பாசுரத்தை ஒட்டியே ஸ்ரீ. வேங்கடேச சுப்ரபாதத்திலும்‌ ஒரு 
சுலோகம்‌ அமைந்திருக்கிறது: 

**ஏலாலவங்க கநஸார சுகந்த தீர்த்தம்‌ திவ்யம்‌ வியத்ஸரிதி ஹேமகடேஷு பூர்ணம்‌ 
தருத்வாத்ய வைதிக சிகாமணய: ப்ரஹ்ருஷ்டா: திஷ்டந்தி வேங்கடபதேர்‌ தவ சுப்ரபாதம்‌'* 
இதன்‌ தமிழாக்கம்‌: 

“ஏல முது நடு லவங்க கணசார மணங்கமழும்‌ 
சீலமிகு தெய்வீக திருதீர்த்தம்‌ தலை சுமந்து 
ஞாலமுய்ய வேதமொழி நவற்றுணர்ந்த வேதியர்கள்‌ 
கோலமிகு கோயிலுற்றார்‌, வேங்கடவா எழுந்தருள்வாய்‌! 

உலகளந்த மாயர்‌' என்பது ஏழுமலையானுக்குச்‌  சிறப்பாகப்‌ பொருந்துகிறது. 
'*தாள்‌ பரப்பி மண்தாவிய ஈசன்‌:'  என்று நம்மாழ்வார்‌ திருவேங்கடவனைப்‌ பாடியுள்ளார்‌. 
எல்லோரையும்‌ திருவடியின்‌ கீழிட்டுக்கொண்டும்‌, கானமும்‌ வானரமும்‌ ஆனவற்றுக்கும்‌ முகங்கொடுத்துக்‌ கொண்டும்‌ 
திருமலைமீது நிற்கிறபடியால்‌ திருவேங்கடமுடையானை  உலகளந்த பெருமானாகச்‌ சொல்லப்‌ பொருத்தமுண்டென்பர்‌  ஆசிரியர்கள்‌. ்‌ 

எம்பெருமான்‌ உலகமளக்க திரிவிக்ரமனாக வளர்ந்தபோது, 
அவன்‌ திருமேனிபோல்‌ அவன்‌ திருக்கைகளிலிருந்த ஆயதங்கள்‌ 
ஜந்தும்‌ தங்கள்‌ குணங்களோடு இருமேனிக்குத்‌ தகுமாறு வளர்ந்து  அழகாய்‌ விளங்கின என்றபடி, 

உலகளந்த சோர்வு தீரப்‌ பாற்கடலில்‌ . படுத்திருக்கிறான்‌. 
இளைப்பாறியதும்‌,  திருவேங்கடத்திற்கு வந்து நின்று கொண்டிருக்கிறான்‌! 

தீக்கனல்‌ பறக்கும்‌ சக்கரம்‌, வெப்பம்‌ வீசும்‌ “வெய்ய' கதை, சார்ங்கம்‌; உஷ்ணமும்‌, ஒளியும்‌ உமிழும்‌ 'வெஞ்சுடர்‌' வாள்‌; 
இவற்றிற்கும்‌ வேங்கடத்திற்கும்‌ சூடான பொருத்தமுண்டு. 
“வேம்‌”  என்றால்‌ வெப்பமான, கொளுத்துகின்ற; 
'கடம்‌' என்றால்‌ பாலை,  நீரற்ற மலைப்பிரதேசம்‌. 
*வேங்கடம்‌' என்பது மலைமீது  குளிர்ச்சியாக இருப்பினும்‌, கீழே கடும்‌ வெயில்‌ கொளுத்தும்‌ 
வறண்ட  மலைக்கூட்டங்கள்‌ன உள்ள நிலப்பகுதியில்‌  அமைந்துள்ளது. 
எனவே வேங்கடமும்‌ ஐம்படைகளைப்‌  போன்றே வெப்பம்‌ மிகுந்தது. 
அதே சமயத்தில்‌ மேகம்‌ நிறைந்த  திருமலையுச்சி, பாற்கடலைப்‌ போல்‌ குளிர்ந்திருக்கிறது! 
திருமாலின்‌ வெஞ்சுடர்‌ வாளாகிய பேயாழ்வார்‌ இந்த ஐம்படைப்‌ பாசுரத்தை, “பயிலும்‌ சுடர்‌ ஒளி மூர்த்தி'யாகிய வேங்கடநாதனுக்கு 
முற்றும்‌ பொருந்தும்‌ விதத்திலேயே அமைத்துள்ளார்‌! 
---------
பூதத்தாழ்வார்‌ 
7. வேங்கடமே! விண்ணவர் தம்‌ வாயோங்கு தொல்புகழான்‌ வந்து--25-
8. வேங்கடமே! பன்னாள்‌ பயின்றது மணிதிகழும்‌ வண்தடக்கை--40-
8. வேங்கடமே! யாம்‌ விரும்பும்‌ வெற்பு 
வேங்கடவன்‌ மலரடிக்கே செல்ல அணி வேங்கடவன்‌ பேராய்ந்து. 
திருவேங்கடம்‌ கண்டீர்‌! வான்கலந்த வண்ணன்‌ வரை. 

பேயாழ்வார்‌ 
10, வேங்கடமே! மேலொரு நாள்‌ மண்‌ கோட்டுக்‌ கொண்டான்‌ மலை. --45
11-வேங்கடமே! மேலொரு நாள்‌ மண்மதியில்‌ கொண்டுகந்தான்‌ வாழ்வு. --50-
12. வேங்கடமே! மேல்நாள்‌ விளங்கனிக்குக்‌ கன்றெறிந்தான்‌ வெற்பு.--68
13-. வேங்கடமே! மேல்நாள்‌ குழக்கன்று கொண்டு எறிந்தான்‌ --குன்று. --71
14. வேங்கடமே! மேலை இளங்குமரர்‌ கோமான்‌ இடம்‌. --78
15. வேங்கடமே! மேலொருநாள்‌ தீங்குழல்‌ வாய்வைத்தான்‌  சிலம்பு.--88-
நால்பால்‌ வேதத்தான்‌ வேங்கடத்தான்‌. 
வேங்கடம்‌ என்‌ சிந்தை அனந்தன்‌ இறைபாடியாய இவை. 
வேங்கடமும்‌ இடமாகக்‌ கொண்டார்‌ கோபாலகன்‌. 
வேங்கடத்தான்‌ உள்ளத்தின்‌ உள்ளே உளன்‌. 

திருமழிசையாழ்வார்‌. 
18-வேங்கடமே! வானோர்க்கும்‌ மண்ணோர்க்கும்‌ வைப்பு. --நான்முகன் -45
19- வேங்கடமே! நாடு வளைத்து ஆடுதுமேல்‌ நன்று. 
20. வேங்கடமே! விண்ணோர்‌ தொழுவதும்‌ மெய்ம்மையால்‌ 
21. வேங்கடமே! மெய்வினை நோய்‌ தீர்ப்பதுவும்‌. 
22. வேங்கடமே! வானவரைக்‌ காப்பான்‌ மலை.
சென்று வணங்குமினோ சேணுயர்‌ 
வேங்கடமும்‌ தாம்‌ கடவார்‌ தண்துழாயார்‌.

வேங்கடத்தான்‌ மண்ணொடுங்கத்தான்‌ ௮ளந்த மன்‌ :
.பண்டெல்லாம்‌ வேங்கடம்‌ பாற்கடல்‌ வைகுந்தம்‌.
வேங்கடம்‌ தன்‌ குடங்கை நீரேற்றான்‌ தாழ்வு.

வேங்கடம்‌ பாடும்‌ மால்கிடந்த நீள்கடல்‌ புகும்‌.

வேங்கடவனையே கண்டு வணங்கும்‌ களிறு.

வேங்கடத்து நின்றான்‌ குரைகழலே கூறுவதே நலம்‌.

28. வேங்கடத்துள்‌ நின்று குடந்தையுள்‌ கடந்த மாலும்‌  அல்லையே? 
24. வேங்கடம்‌ மாலபதமே அடைந்து நாளும்‌ உய்ம்மினோ. 
24, வெறுப்பனோ வேங்கடத்து மேயானை. 
23. அழைப்பன்‌ திருவேங்கடத்தானைக்‌ காண. 
26. வேங்கடம்‌ பாடினேன்‌ வீடாக்கி நிற்கின்றேன்‌. 
27. வேங்கடவா! என்னுள்ளம்‌ புகுந்தாய்‌ திருவேங்கடமதனைச்‌ சென்று. 
சென்று வணங்குமினோ சேணுயர்‌ வேங்கடத்தை. 
வேங்கடத்தானை கங்குல்‌ புகுந்தார்கள்‌ காப்பணிவான்‌ 
போம்‌! குமரன்‌ நிற்கும்‌ பொழில்‌ வேங்கடமலைக்கே! 
கானமும்‌ வானரமும்‌ வேடும்‌ உடை வேங்கடம்‌. 
விண்ணாள வேண்டுவார்‌ வேங்கடத்தான்‌ பால்‌ வைத்தாரே பன் மலர்கள்‌.
நம்மாழ்வார்‌ 
23. வேங்கடமே! அருமா மாயத்து எனதுயிரே! எனதுடலே! --10-7-6-

-----------

அருள்‌ மிகுத்ததொரு வடிவாய்க்‌ கச்சிதன்னில்‌ 
ஐப்பசி மாதத்‌ திருவோணத்து நாளில்‌ 
பொருள்‌ மிகுத்த மறை விளங்கப்‌ புவியோர்‌ உய்யப்‌ 
பொய்கைதனில்‌ வந்து உதித்த புனிதா! முன்னாள்‌- 
இருளதனில்‌ தண்கோவல்‌ இடைகழிச்‌ சென்று 
இருவருடன்‌ நிற்கவும்‌ மால்‌ இடை நெருக்கத்‌ 
திருவிளக்காம்‌ எனும்‌ வையந்தகளி நூறாம்‌ 
செழும்பொருளை எனக்கு அருள்‌ செய்திருந்த நீயே. (பிரபந்த சாரம்‌, 8) 

மாமயிலைப்‌ பதியதனில்‌ துலா மாதத்தில்‌ 
வரும்‌ சதயத்து அவதரித்துக்‌ கோவலூரில்‌ 
தூமுனிவர்‌ இருவருடன்‌ துலங்க நின்று 
துன்னிய பேரிருள்‌ நீங்கச்‌ சோதி தோன்ற 
சேமமுடன்‌ நெடுமாலைக்‌ காணப்‌ புக்குத்‌ 
திருக்கண்டேன்‌ என உரைத்த தேவே! உன்றன்‌- 
பாமருவு தமிழ்மாலை நூறு பாட்டும்‌ ்‌ 
பழவடியேனுக்கு அருள்செய்‌ பரம நீயே, (பிரபந்த சாரம்‌, 4)
திருக்கோவலூர்‌ இடைகழியில்‌ முதலாழ்வார்கள்‌ ஏற்றிய  ஞானத்தமிழ்‌ விளக்கின்‌ ஒளியில்‌ ஈடுபட்டு அவர்களை ஸ்ரீதேசிகன்‌ 
புகழ்ந்தருனின பாசுரமாவது: 

““பாட்டுக்குரிய பழையவர்‌ மூவரைப்‌ பண்டொருகால்‌ 
மாட்டுக்கு அருள்தருமாயன்‌ மலிந்து வருத்துதலால்‌ 
நாட்டுக்கு இருள்செக நான்மறை அந்தி நடைவிளங்க 
வீட்டுக்கு இடைகழிக்கே வெளிகாட்டும்‌ இம்மெய்விளக்கே'”,
சகல வேதங்களின்‌ சாரமானது வேதமாதா எனப்படும்‌ காயத்ரீ  மந்திரம்‌. 
அதற்கும்‌ தாயாயிருப்பது திருவெட்டெழுத்தாகிய  நாராயண மந்திரம்‌. 
அதற்கும்‌ மூலமாயிருப்பது 'ஓம்‌' என்னும்‌ பிரணவ மந்திரம்‌. 


“நான்மறை அந்தி நடை விளங்க” 
முதலாழ்வார்கள்‌ அருளிச்செய்த திருவந்தாதிகளின்‌ முதற்‌ பாசுரங்களை, காயத்ரீ,  எட்டெழுத்து, 
பிரணவ மந்திரங்களை உள்ளடக்கிபவைகளாக  . 
மேற்கூறிய  மந்திரங்கள்‌ அனைத்தும்‌ மூன்று பதங்களாகப்‌ பிரியக்‌  கூடியவையாதலால்‌, 
ஒவ்வொரு ஆழ்வார்‌ பாசுரமும்‌ ஒரு  பதத்தைக்‌ கூறுவதாக, 8ழ்க்கண்டவாறு பொருள்‌ கூறப்படும்‌: 

ஆழ்வார்‌... பொய்கையார்‌ பூதத்தார்‌ பேயார்‌ 
பாசுரம்‌ வையந்தகளி அன்பேதகளி திருக்கண்டேன்‌ 
பிரணவம்‌ ௮. உ ம 
உலகம்‌ பூ: புவ: ஸுவ: 
வேதம்‌ ர்க்‌ யசார்‌ சாம 
சாதனை ச்ரவணம்‌ மனனம்‌ சாட்க்ஷாத்காரம்‌ 
பக்திநிலை பரபக்தி பரஞானம்‌ பரமபக்தி 
திருமந்திரம்‌ ஓம்‌ நமோ நாராயணாய 
வேங்கடேச ஓம்‌ நமோ வேங்கடேசாய 

மந்திரம்‌ ்‌ 
காயத்ரீ தத்‌ ஸவிதுர்‌ பர்கோ தயோயோந:  வரேண்யம்‌ தேவஸ்ய ப்ரசோதயாத்‌ 
தீமஹி நாராயண நாராயணாய வாச்தேவாய தன்னோ  காயத்ரீ வித்மஹே தீமஹி விஷ்ணு ப்ரசோதயாத்‌ 

ஓம்‌' என்பதை தமிழில்‌ 'வோம்‌' என்று எழுதினாலும்‌  உச்சரிப்பு அநேகமாக ஒன்றே; 
“வையம்‌' என்பதை“வோம்‌”  என்பதன்‌ தரிபாகக்‌ கொள்ளலாம்‌.
ஒங்காரத்திலிருந்து பிறந்ததே வையம்‌ (உலகம்‌).
வையம்‌' என்கிற சொல்‌ வைகுந்தம்‌, வேங்கடேசன்‌  என்பவை போலவே வகாரத்தில்‌ துவங்குகிறது. 
பொய்கையார்‌  வேங்கடேச பக்தராகையால்‌ வகாரத்தை முதலிட்டுப்‌ பாடினார்‌ 

**வையம்‌' என்றால்‌ உலகம்‌, பூவுலகு என்று பொருள்‌.
ருக்‌  வேதத்திலிருந்து பூ: என்னும்‌ சப்த விசேஷம்‌ தோன்றியது என்பர்‌. 
எனவே வையந்தகளி ருக்‌ வேதம்‌, பூ: இரண்டையும்‌ குறிப்பதாகக்‌  கொள்ளலாம்‌.
ஓம்‌" என்கிற ப்ரணவம்‌ ௮, ௨, ம என்று விரியும்‌. 
வையம்‌,  வார்கடல்‌, வெய்ய கதிரோன்‌ போன்ற ஸ்தூலப்‌  பொருட்களடங்கிய சகல ஐகத்துக்கும்‌ காரணன்‌: நாராயணன்‌.
“சூட்டினேன்‌' என்பதில்‌ 'நான்‌' என்னும்‌ சொல்‌  மறைந்துள்ளது; “நான்‌ சூட்டினேன்‌' என்று கூறத்‌ தேவையில்லை.
“நான்‌” என்று கூறும்‌ மகாரப்‌ பொருளான  ஜீவாத்மா, அகாரப்‌ பொருளான நாராயணனுக்கு அடிமை என்கிற 
சேஷத்வத்தை ''சுடராழியான்‌ அடிக்கே சூட்டினேன்‌'' என்பது  கூறுகிறது. 
ப்ரணவத்திலுள்ள உகாரம்‌ ஏவகாரம்‌, தமிழில்‌ “ஏ:  என்பது போன்றது. ''நாராயணனுக்கே நான்‌ அடிமை” என்பதே 
௮, ௪, ம என்று விரியும்‌ ஓங்காரத்தின்‌ உட்பொருள்‌. இதையே 
வையந்தகளி கூறுகிறது. ஏவகாரம்‌ “அடிக்கே! என்பதில்‌ உள்ளது. 

**இடராழி நீங்குக!” என்பது வேங்கட பதத்தின்‌  பொருளை நேரடியாக விளக்குகிறது. 
வேம்‌ * கடம்‌ - வேங்கடம்‌. -வேம்‌ - எரிக்கப்படுகின்ற, நீக்கப்படுகின்ற, கடம்‌ - பாவங்கள்‌, 
இடராழி. இடராழியை நீக்குவது வேங்கடம்‌. 

'"இடராழி நீங்குக”! என்பது வேங்கட பதத்தின்‌ பொருளாக  அமைந்திருப்பதால்‌, 
சுடராழியான்‌ அடியை, திருவேங்கடவனின்‌  அடியாகக்‌ கொள்ளத்‌ தடையில்லை. 
உலகனைத்தையும்‌ தன்‌  அடிக்குள்‌ வைத்துத்‌ திருமலையில்‌ நிற்பதால்‌ திருவேங்கடவனின்‌  திருவடிக்குத்‌ தனிச்சிறப்புண்டு.
நம்மாழ்வாரும்‌ 
'“திருவேங்கடத்தானே! புகலொன்றில்லா அடியேன்‌ உன்‌ அடிக்8ழ்‌  அமர்ந்து புகுந்தேனே”" என்
ஏழுமலையானின்‌  திருவடிகளிலேயே சரணமடைகிறார்‌. 
“வேங்கடவன்‌  திருமலையை விரும்புமவன்‌ வாழியே!”', என்கிறது பொய்கையாழ்வாரின்‌ வாழித்திருநாமம்‌.
ஸ்ரவணம்‌ கீர்த்தனம்‌ விஷ்ணோ: ஸ்மரணம்‌ பாதசேவனம்‌ 
அர்ச்சனம்‌ வந்தனம்‌ தாஸ்யம்‌ ஸக்யம்‌ ஆத்மநிவேதனம்‌. 

வையந்தகளி, அன்பேதகளி என்னும்‌ முதலிரண்டு  ஆழ்வார்களின்‌ பாசுரங்கள்‌ பிரகலாதன்‌ கூறும்‌ ஒன்பதுவித பக்தி 
சாதனைகளைக்‌ குறிப்பிடுகின்றன; 
''திருக்கண்டேன்‌'' என்னும்‌  மூன்றாவது ஆழ்வாரின்‌ பாசுரம்‌ பகவானை நேரில்‌ கண்ட  பேரின்ப நிலையை விவரிக்கிறது. 

““வையந்தகளி'* பாசுரத்தில்‌ 
'“சொன்மாலை'' என்பது  விஷ்ணோ: ஸ்ரவணம்‌ (பகவானைப்‌ பற்றிக்‌ கேட்டல்‌), கீர்த்தனம்‌ 
(அவன்‌ புகழ்‌ பாடுதல்‌); ''சுடராழியான்‌ அடிக்கே சூட்டினேன்‌'' என்பது ஸ்மரணம்‌ (பகவானை சதா நினைவு கூறுதல்‌); 
“அடிக்கே” என்பது வந்தனம்‌, தாஸ்யம்‌ (அடிமையாய்‌ இருத்தல்‌), பாதஸேவனம்‌; 
சொன்மாலை சூட்டினேன்‌ என்பது அர்ச்சனம்‌ (பூஜித்தல்‌); . ்‌ 
காயத்ரீ மந்திரம்‌: 
ஓம்‌ பூர்புவஸ்ஸுவ:  தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌ 
பர்கோ தேவஸ்ய தீமஹி  தியோ யோ ந: ப்ரசோதயாத்‌. 

பூ: புவ: ஸுவ: ஆகிய மூன்று சொற்கள்‌ பூலோகம்‌, புவர்லோகம்‌, சுவர்க்கம்‌ ஆகிய மூவுலகங்கள்‌. 
ய: (யோ) - யார்‌; ந: - நம்முடைய; திய: - அறிவை; 
ப்ரசோதயாத்‌ - தூண்டுகிறாரோ; தத்‌ - அந்த; தேவஸ்ய - 
சுடருடைய; ஸவிதுர்‌ - கடவுளின்‌; வரேண்யம்‌ - மேலாண, பர்க: 
- ஒளியை; தீமஹி: - தியானிப்போமாக. 

காயத்ரீமின்‌ பொருள்‌: 
யார்‌ நம்‌ அறிவைத்‌ தூண்டுகிறாரோ, அந்த சுடர்வீசும்‌ கடவுளின்‌ மேலான ஒளியைத்‌ தியானிப்போமாக. 

பிரம்ம காயத்ரீ அல்லது சூரிய காயத்ரீ எனப்படும்‌ இதுவே 
பல்லாயிரம்‌ ஆண்டுகளாக பாரத நாட்டின்‌ தேயப்‌  பிரார்த்தனையாக இருந்து வருகிறது. 
இதற்கு ரிஷி விசுவாமித்திரர்‌; 
தேவதை, ஸவிதா (சூரியன்‌, பரமாத்மா). 
தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌: 1 

வையந்தகளியில்‌ பொய்கையாழ்வார்‌ “ஸவிதா'' என்பதை  நேரடியாகத்‌ தமிழில்‌ 'கதிரோன்‌' என்று குறிப்பிட்டுள்ளதால்‌, 
இப்பாசுரம்‌ காயத்ரீ மந்திரத்தின்‌ முதற்பதத்தை விளக்குவதாகக்‌ கொள்ளலாம்‌.
'“தேவஸ்ய ஸவிதுர்‌”! (சுடருடைய கடவுளின்‌) என காயத்ரீயில்‌ வருவதை ஆழ்வார்‌. சுடர்‌ ஆழியான்‌! எனக்‌ கூறுவதோடு ஒப்பிடலாம்‌. 
'*தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌'' என்பதே ரிக்வேதமானது. 

விஷ்ணுகாயத்ரீ: மிகவும்‌ பிரசித்தி பெற்ற காயத்ரீ மந்திரத்தையொட்டி, 
பற்பல இந்துமத தெய்வங்களுக்கும்‌ உரிய காயத்ரீ மந்திரங்கள்‌ தோன்றின. 
மஹா நாராயண உபநிஷதத்தில்‌ விஷ்ணுவிற்குத்‌ தரப்பட்டுள்ள நாராயாண காயத்ரீ இது: 
நாராயணாய வித்மஹே, வாசுதேவாய தீமஹி தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்‌” 
பொகுள்‌: நாராயணனை அறிவோமாக, அதற்காக, வாசுதேவனை தியானிப்போமாக, 
அந்த தியானத்தில்‌, விஷ்ணு நம்மைத்‌ தூண்டுவாராக. 
' நாராயணாய வித்மஹே: உலகனர்‌ நாராயணனை அறிந்து உய்வடைய வேண்டுமென்றே 
பொய்கையார்‌ 'வையந்தகளி' என்று தொடங்கி நூறு பாசுரங்கள்‌ அருளிச்‌ செய்தார்‌. 
'“சுடராழியான்‌ அடிக்கே சூட்டினேன்‌ சொன்மாலை” என்கிற அடியில்‌ 
'*நாராயணனை அறிவோமாக'' என்னும்‌ ஆழ்வாரின்‌ நோக்கம்‌ தெரிகிறது. 
வையந்தகளியின்‌ இயற்கை வர்ணனை: காயத்ரீ மந்திரம்‌ சூரியோதம்‌, உச்சி, அஸ்தமனம்‌ ஆகிய மூன்று சந்தி காலங்களிலும்‌ ஜபிக்கப்படும்‌. 
பொய்கையார்‌ வைணவத்தின்‌ விடிவெள்ளி போன்றவர்‌. 
வையந்தகளி சூரியோதயத்தை வர்ணிப்பதுபோல்‌ அமைந்துள்ளது. 
திருவேங்கடமுடையானே, * வேங்கடகிருஷ்ணன்‌, பார்த்தஸாரதி என்கிற திருநாமங்களுடன்‌ எழுந்தருளியிருக்கும்‌ திவ்விய தேசம்‌, 
சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி. 
முதலாழ்வார்கள்‌ மூவரும்‌: திருமழிசையாழ்வாருடன்‌ இங்கு வந்து எம்பெருமானை சேவித்ததாகக்‌ கூறுவர்‌. 
திருவல்லிக்கேணியில்‌ புகழ்பெற்ற மெரீனா கடற்கரையில்‌  
விடிகாலை, சூரியன்‌ உதயமாகும்‌ நேரம்‌. நம்‌ காலடியில்‌ கடல்மண்‌, வையம்‌, பூமி. சற்று நிமிர்ந்து பார்த்தால்‌ 
வார்கடல்‌, விரித்து, அலைபாயும்‌ சமுத்திரம்‌. கடல்பரப்பின்‌ எல்லை வளைந்து தென்படுகிறது. 
மெதுவாக சூரியன்‌, இளஞ்சிவப்பு நிறத்துடன்‌, கடலின்‌ மறுகோடியில்‌ எழுகிறது. 
' இந்த அற்புதமான இயற்கைக்‌ காட்சியைத்தான்‌ ஆழ்வார்‌ சிறந்த உவமையாகப்‌ பயன்படுத்தியுள்ளார்‌.

நம்‌ காலுக்கடியிலுள்ள பூமி, மண்ணாலான அகல்‌ விளக்கைப்‌  போலுள்ளது; 
அதற்கு மேலேயுள்ள கடல்‌, உருக்கிய நெய்போல்‌  இளமஞ்சள்‌ நிறத்துடன்‌ காணப்படுகிறது. 
அதற்கும்‌ மேலே, உதய  சூரியன்‌ விளக்கைப்போல்‌ ஒளி வீசுகிறது. 
இந்த இயற்கைக்‌  காட்சியில்‌ ஒன்று கவனிக்க வேண்டும்‌, திரி இல்லை!
எனவே  ““வையந்தகளி'' பாசுரத்திலும்‌ திரி இல்லை; 
ஆனால்‌ அடுத்து  பூதத்தார்‌ பாடிய ''அன்பே தகளி'' பாசுரத்தில்‌ இரி உண்டு|
எனவே 
““வையந்தகளி'' விடிகாலையில்‌ செய்யப்படும்‌ சந்தியாவந்தனம்‌ போன்றது. 

காயத்ரீ மந்திரத்தின்‌ ரிஷியான விசுவாமித்திரரே  பாலசூரியனைப்‌ போன்ற ஸ்ரீ ராமச்சந்திரனை, 
'“கெளசல்யா  சுப்ரஜா ராம, பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே'* (கோசலையின்‌ உத்தம 
புத்திரனான ராமனே! கிழக்கில்‌ சூரியன்‌ உதயமாகிவிட்டது) என்று எழுப்பியதாக வால்மீகி ராமாயணம்‌ கூறுகிறது. 
உலகிற்கு காயத்ரீயை உபதேசித்த விசுவாமித்திர ரிஷியே, ஸ்ரீ வேங்கடேச  சுப்ரபாதத்தின்‌ முதலடியையும்‌ நமக்கு வழங்கியிருக்கிறார்‌! 

தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌ அருளிச்‌ செய்த  திருப்பள்ளியெழுச்சியும்‌-- 

“கதிரவன்‌ குணதிசைச்‌ சிகரம்‌ வந்து அணைந்தான்‌ 
கன இருள்‌ அகன்றது காலையம்பொழுதாய்‌'' 
என்று சூரியோதய வர்ணனையுடன்‌ துவங்குவதும்‌ இங்கு  ஒப்பு நோக்கத்தக்கது. 

“பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே'' என்பதை ''வையந்தகளியா,  வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன்‌ விளக்காக”! என்றும்‌; 
**கெளசல்யா சுப்ரஜா ராம'' என்பதை ''செய்ய சுடராழியான்‌'"  என்றும்‌ ஆழ்வார்‌. அருளிச்‌ செய்திருப்பதாகக்‌ கொள்ளலாம்‌. 
வையந்தகளி ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதமாகி விடுகிறது!
----------------
இந்த (பொய்கையாரின்‌ வையந்தகளி] பாசுரத்தின்‌  மகிமையால்‌ அந்த இடைகழியில்‌ பளிச்சென்று ஏதோ ஒரு திரை 
விலகி எப்படியோ ஒளியும்‌ வந்து விடுகின்றது. புறத்தே கவிந்து  கிடக்கும்‌ இருளும்‌ நீங்கி விடுகின்றது. 
அதே சமயத்தில்‌  பூதத்தாழ்வாரும்‌ ஞான விளக்கொன்றை ஏற்றுகின்றார்‌. 
அன்பை  அகலாகவும்‌, பொங்கி வரும்‌ ஆர்வத்தை நெய்யாகவும்‌,  
சிந்தையைத்‌ திரியாகவும்‌ கொண்டு ஞான விளக்கை ஏற்றுகின்றார்‌ பூதத்தார்‌.
இந்த விளக்கினால்‌ அகத்தே மண்டிக்கிடந்த உள்‌  இருட்டும்‌ நீங்கி விடுகின்றது. 

உடனே அந்தப்‌ பேயாழ்வார்‌  நான்காவது ஆளைக்‌ கண்டுபிடித்து விடுகின்றார்‌. 

“அன்பே தகளி”” விளக்குபவை: ்‌ 
௮ன்பேதகளி, உகாரம்‌, நமோ (நம: பதம்‌), “பர்கோ 
தேவஸ்ய தீமஹி'' என்டுற காயத்ரீ மந்திரத்தின்‌ இரண்டாவதுபதம்‌, 
வாசுதேவாய தீமஹி என்னும்‌ பதம்‌ ஆகியவற்றை விளக்குவதாகக் கொள்ளலாம்.

அன்பே தகளியில்‌, ஆழ்வார்‌ ''நாரணற்கு'' என்று  கூறியிருப்பதை ''நாராயணனுக்கே, நாராயணனுக்கு மட்டுமே”! 
என்று பொருள்‌ கொள்ளவேண்டும்‌. 
எனவே அன்பேதகளி, உகார  பத அர்த்தத்தை விளக்குகிறது எனலாம்‌. உகாரத்தால்‌  அந்நியசேஷத்வம்‌ கழிக்கப்படுகிறது. 

லக்ஷ்மியை நாராயணன்‌ திருமார்பில்‌ தரிக்கிறான்‌. பிராட்டிக்கு  “உ என்று திருநாமம்‌. 
'*நாரணற்கு!' என்பதால்‌ பிராட்டிக்கும்‌  சேர்த்தே ஞானத்தமிழ்‌ பாடியிருக்கிறார்‌ பூதத்தார்‌

அடுத்துப்‌ பாடிய பேயாழ்வார்‌ “'திருக்கண்டேன்‌'"  (லக்ஷ்மிப்‌ பிராட்டியைக்‌ கண்டேன்‌) என்றே துவங்குவதால்‌ இது  உறுதியாகிறது. 

நம: பதம்‌: 
“ஓம்‌ நமோ நாராயணாய”, ஓம்‌ நமோ வேங்கடேசாய”  என்னும்‌ மந்திரங்களின்‌ இரண்டாவது பதம்‌. 
ம: என்றால்‌ எனது”!  என்கிற மமகாரம்‌, ஆத்மா தனக்குரியது என்னும்‌ செருக்கு. 
“ந!  என்றால்‌ '“இல்லை”"', மமகாரத்தை இல்லை என்கிறது. 
அகங்கார, மமகாரங்களே (யான்‌, , எனது என்னும்‌ செருக்கு) ஆத்மாவுக்கு  விரோதி, 

அன்பே தகளியில்‌, **நாரணற்கு ஞானத்தமிழ்‌ புரிந்த நான்‌”! 
என்று வருவதால்‌ நான்‌, எனது என்பதெல்லாம்‌ நாராயணனுக்கே அடிமை என்பது தெளிவாகிறது.
இது நம: பதார்த்தமாக உள்ளது  எனலாம்‌
நமப்பதம்‌ சப்தத்தாலும்‌, அர்த்தத்தாலும்‌ உபாயத்தை  அறிவிக்கிறது. நாராயணனே உபாயம்‌ என்பது இதன்‌ பொருள்‌. 
இது ஸ்வசேஷத்தையும்‌, பகவத்‌ சேஷத்வத்வத்துக்கு இசையாமையையும்‌ கழிக்கறது

அன்பேதகளியில்‌, ஞானச்சுடர்‌ : தேவஸ்ய, ஒளியுடைய; 
நாரணற்கு - .ஸவிது:, கடவுளின்‌; விளக்கேற்றிய - பர்‌க;, ஒளியை. 

“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக 
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி'” 
என்னும்‌ முதலிரண்டு அடிகள்‌ - தீமஹி, தியானிப்போமாக என்று 
நேரடியாகப்‌ பொருள்படுவது இன்புறத்தக்கது. 

“பர்கோ தேவஸ்ய தீமஹி'' என்பதன்‌ விளக்கமாகவே 
"அன்பே தகளி'' அமைந்திருக்கிறது என்றால்‌ மிகையாகாது. 

வாசுதேவாய தீமஹி: 
இது விஷ்ணு காயத்ரீபின்‌ இரண்டாவது பதம்‌. 
*'வாசுதேவனை தியானிப்போமாக”* என்று பொருள்‌. 
மஹாநாராயண உபநிஷத்தில்‌ வரும்‌ நாராயண காயத்ரீக்கு  உரையெழுதிய பட்டபாஸ்கரர்‌, “வாசுதேவன்‌” என்பதற்கு 
“எல்லா ஜீவராசிகளிலும்‌ அந்தர்யாமியாக வசிப்பவன்‌'” என்று பொருள்‌ கூறுகிறார்‌. 

அன்பேத்களியில்‌, பூதத்தாழ்வார்‌ தமது இதயக் குகையிலே  அந்தர்யாமியாக எழுந்தருளியிருக்கும்‌ வாசுதேவனையே 
தியானித்து, ஞானச்சுடர்‌ விளக்கேற்றினார்‌ என்க. 


பிரகலாதன்‌ விவரிக்கும்‌ பக்து சாதனைகள்‌: 
வையந்தகளியில்‌ ''சுடராழியானடிக்கே சூட்டினேன்‌''  என்றார்‌. திருவடியைப்‌ பேசியதால்‌ இது தாஸ்யம்‌ ஆயிற்று. 
அன்பேதகளியில்‌, :*நாரணற்கு'' என்றுள்ளது, திருவடி கூறப்படவில்லை. 
மற்றும்‌, அன்பு, ஆர்வம்‌, இன்புருகு சிந்தை ஆகிய சொற்கள்‌ 'ஸக்யம்‌'' (பகவானிடம்‌ நட்பு) என்னும்‌ 
நெருங்கிய உறவைக்‌ கூறுவது போலுள்ளன. 
''நன்புருக'' என்பது  ஞானமய்மான ஆத்மா பகவதனுபவத்தில்‌ உருகுவதைக்‌ குறிப்பிடுவதால்‌, இது ''ஆத்ம நிவேதனம்‌”” ஆயிற்று. 

எனவே வையந்தகளி பிரகலாதன்‌ கூறும்‌ சாதனைகளில்‌ முதல்‌ ஏழையும்‌, 
௮ன்பேதகளி கடைசி இரண்டையும்‌ பற்றிப்‌ பேசுகின்றன. 

ஞானச்சுடர்‌ விளக்கேற்றினேன்‌ நாரணற்கு: -இதற்குப்‌ ''ப்ரபந்தரக்ஷை'' உரை: 
நாரணன்‌ விஷயமான விளக்கு நாராயண சப்தத்தின்‌ பொருளான அவனது ஸ்வரூப 
ரூப குண விபவாதிகளிலெங்கும்‌ பரவுகின்றது பற்றி ''ஞானச்சுடர்‌ விளக்கு" என்றது. 
ஞானச்சுடர்‌ என்பதற்கு ப்ரஞானமென்ற  விளக்கு என்ற பொருள்‌ முன்னோர்‌ இசைந்ததன்று. 
பர ஞானம்‌  நாரணனின்‌ அனுக்ரஹத்தாலே தானே வருவதாம்‌. அதை ஏற்றுவது  வேறொருவராகார்‌. 
அதற்கு வேண்டும்‌ பரபக்தியை ஏற்றுகிறார்‌ 
எல்லார்‌ நெஞ்சிலும்‌ ஆழ்வார்‌. “*ஏற்றினேன்‌'' என்று இறந்த  காலமாக ப்ரபந்தத்தன்‌ தொடக்கத்திலேயே அருளினது 
ப்ரபந்தத்தை எம்பெருமான்‌ நன்கு முடித்தருள்வது திண்ணமெனக்‌  கண்டதனால்‌ என்க. 

பொய்கையாரின்‌ '*வையந்தகளி”' பாசுரமும்‌, பூதத்தாரின்‌  “அன்பே தகளி'' பாசுரமும்‌ 
தகளி, நெய்‌, விளக்கு ஆகியவற்றுடன்‌  பக்தர்களுக்குக்‌ கலங்கரை விளக்கம்‌ போல்‌ வழிகாட்டுகின்றன. 
இவ்விரண்டு ஒளிவீசும்‌ பாசுரங்களையும்‌ இங்கே ஒப்பு நோக்குவோம்‌. 

வையந்தகளி: அன்பேதகளி: 

1. புறவிளக்கு; சூரியனை விளக்காக்கியது--அக விளக்கு; ஆத்மாவை விளக்காக்கியது
2. புறவிருளைக்‌ களைகிறது. ௮௧ இருளை அற்றுவறைது. 
3. திரி இல்லாமலே சிந்தையையே திரியாகத்‌ விளக்கேற்றினார்‌! திரித்து விளக்கேற்றினார்‌! 
4. மறைமுகமாக -ஆழியான்‌'' என்றார்‌.பரபக்தியைக்‌ கூறுகிறது;  ''சுடர்‌ நேரடியாக '“நாரணற்கு”* -பரஞானத்தைக்‌ கூறுகிறது;
எனவே அடிக்கே! என்றார்‌. 
தமிழ்‌ பற்றிப்‌ பேசவில்லை. 
“ஞானச்சுடர்‌' என்றார்‌. 
“'ஞானத்தமிழ்‌'' என்று  தமிழ்த்தாய்‌ வாழ்த்தாகவும்‌  துவங்கினார்‌. 

பேயாழ்வாரின்‌ “திருக்கண்டேன்‌”! 
பூதத்தாழ்வார்‌. ''அன்பேதகளி'' என்று தொடங்கி நூறு பாசுரங்கள்‌ பாடி முடித்ததும்‌, 
மூன்றாவது ஆழ்வாராகிய பேயார்‌ “*“திருக்கண்டேன்‌'' என்று கம்பீரமாகத்‌ துவங்கப்‌ பாடலானார்‌: 
திருக்கண்டேன்‌ பொன்மேனி கண்டேன்‌ திகழும்‌ 
அருக்கன்‌ அணிநிறமும்‌ கண்டேன்‌ - செருக்கிளரும்‌ 
பொன்னாழி கண்டேன்‌ புரிசங்கம்‌ கைக்கண்டேன்‌ 
என்னாழி வண்ணன்பால்‌ இன்று. 
திரு - ஸ்ரீ, மஹாலட்சுமி, பெரியபிராட்டியார்‌; அருக்கன்‌ - சூரியன்‌; செரு - போர்‌; கிளரும்‌ - கிளம்பும்‌; 
ஆழி - சுதர்சனச்‌ சக்கரம்‌; புரிசங்கம்‌ - வலம்புரிச்‌: சங்கு, பாஞ்சசன்னியம்‌; 
ஆழி வண்ணன்‌ - கடல்நிறக்கடவுள்‌, விஷ்ணு. 

என்னுடைய கடல் வண்ணனான ஸ்ரீநிவாஸனிடம்‌ இன்றைய தினம்‌ பெரிய பிராட்டியாரை சேவிக்கலானேன்‌. 
பொன்னிறமான  திருமேனியைக்‌ கண்டேன்‌. பிரகாசிக்கும்‌ சூரியன்‌ போன்ற அழகிய நிறத்தையும்‌ கண்டேன்‌. 
போர்க்களத்தில்‌  சீறி யெழுந்து  செயல்படும்‌ அழகிய சுதர்சனச்‌ சக்கரத்தையும்‌ கண்டேன்‌. 
மற்ற  திருக்கையில்‌ வலம்புரிச்‌ சங்கையும்‌ சேவிக்கப்‌ பெற்றேன்‌. 

எல்லா உலகங்களும்‌ சரீரமாகக்‌ கொண்ட பெருமானைக்‌  காணும்‌ காட்சியிலே எல்லாவற்றையும்‌ கண்ட ஆழ்வார்‌ அன்பின்‌ 
மிகுதியாலே அவனுடைய பெருமைக்குக்‌ காரணமான சிலவற்றை “அது கண்டேன்‌, இது கண்டேன்‌'' என்கிறார்‌. 

பேயாழ்வார்‌ முதன்‌ முதலாகப்‌ பெரிய பிராட்டியாரின்‌ ௮ருள்‌  வடிவத்தைக்‌ காண்கின்றார்‌; 
பொன்மேனியையுடைய அன்னையாருடன்‌ கூடிய எம்பெருமானின்‌ மரகதத்‌ திருமேனி 
இப்போது பொன்மேனியாகவே காட்சியளிக்கிறது. 
மரகத மலையில்‌ உதித்து ஒளிவீசி வரும்‌ இளஞாயிறு போலத்தோன்றி 
இருவரது ஒளியையும்‌ -- பொன்‌ ஒளியும்‌, மரகத ஒளியும்‌ கலந்து 
ஒளிர்கின்ற அந்தக்‌ கலப்பு ஒளியையும்‌ -- காண்கின்றார்‌; 
'திகழும்‌  அருக்கன்‌ ௮ணிநிறமும்‌ கண்டேன்‌! என்பதால்‌ இது பெறப்படுகின்றது. 
'*இருவர்‌ சேர்த்தியால்‌ பிறந்த முதாய சோபை”! என்பது பெரியவாச்சான்‌ பிள்ளையின்‌ வியாக்கியான விளக்கம்‌. 

“திருக்கண்டேன்‌' விளக்குபவை: 
மகாரம்‌, ஸுவர்லோகம்‌, சாமவேதம்‌, காரண சீரம்‌,  சத்துவகுணம்‌, சாட்க்ஷாத்காரம்‌, ஆனந்தம்‌, ஈசுவரன்‌,  புருஷார்த்தம்‌, 
“தியோ யோ ந; ப்ரசோதயாத்‌'' என்னும்‌ காயத்ரீ  மந்திரத்தின்‌ மூன்றாவது பதம்‌, 
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்‌, 
நாராயணாய, வேங்கடேசாய. 
மகாரம்‌: 

௮, ௨, ம்‌ என்று பிரியும்‌ 'ஒம்‌' என்கிற பிரணவ மந்திரத்தின்‌ 
மூன்றாவது எழுத்து. மகாரம்‌ “மந” என்ற தாதுவிலே தோன்றியது. 
இதற்கு ஞானம்‌ என்று அர்த்தம்‌. இதனால்‌ ஆத்மா ஞானமயமானது என்றதாயிற்று. 
“மநு” என்ற தாதுவும்‌ மகாரத்துக்குக்‌ காரணம்‌. இதற்கு அறிதல்‌ என்று பொருள்‌. 
மகாரம்‌ இருபத்தைந்தாம்‌ எழுத்து. இதனால்‌ இருபத்து நான்கு  தத்வங்களான ப்ரக்ருதியைக்‌ காட்டிலும்‌, 
இருபத்தைந்தாம்‌  தத்வமான ஆத்மா வேறுபட்டவன்‌; ஆனந்தமயமானவன்‌ என்பது  பெறப்படும்‌. 

"திருக் கண்டேன்‌' பாசுரம்‌ ஜீவாத்மா (இங்கே ஆழ்வார்‌) பரம  புருஷார்த்தமாகிய பகவதனுபவத்தை நேரடியாக அறிந்து, 
ஆனந்தமடைவதாகக்‌ கூறுவதால்‌, மகாரத்தை விளக்குவதாயிற்று. 

சாமவேதம்‌, ஸுவர்லோகம்‌: 
சாமவேதத்திலிருந்து ஸ்வ: என்னும்‌ சப்த விசேஷம்‌ பிறந்தது. 
ஸுவ: என்பது சுவர்க்க லோகம்‌. 
எண்ணத்தைக்‌ கடவுள்பால்‌  செலுத்துவதே சுவர்க்க லோகமாகிறது. 
ஸ்ரீமந்நாராயணனை  தரிசிப்பதே நிலையான சொர்க்க அனுபவம்‌. 'திருக்கண்டேன்‌: இதையே விவரிக்கிறது. 
வைகுண்ட ஏகாதசியன்று பெருமாளைக்‌  காணச்‌ செல்லும்‌ வழி '*சொர்க்கவாசல்‌'” எனப்படுவதை நாம்‌  அறிவோம்‌. 

சத்துவ குணம்‌ மேலோங்கிய நிலையிலேயே ஸமாதி  நிலையை மனம்‌ அடைந்து, ஜகத்காரணனாகிய ஈசுவரனைக்‌ 
கண்டு, பரமானந்தம்‌ அடைய முடியும்‌. இதுவே பகவத்‌  சாட்க்ஷாத்காரம்‌, மோட்சம்‌ என்கிற புருஷார்த்தம்‌. 
“திருக்கண்டேன்‌'பாகரம்‌ சத்துவகுணம்‌, காரணம்‌, சாட்க்ஷாத்காரம்‌ (நேரில்‌ இறைவனைக்‌ காணுதல்‌), 
ஆனந்தம்‌, ஈசுவரன்‌, புருஷார்த்தம்‌ ஆகியவற்றின்‌ விளக்கமாகவே அமைந்திருக்கிறது 
என்பது நன்கு விளங்குகிறது. 


தியோ யோ ந: ப்ரசோதயாத்‌: 
“யார்‌ நம்முடைய அறிவைத்‌ தூண்டுகிறாரோ'' என்னும்‌  பொருளுடைய காயத்ரீ மந்திரத்தின்‌ மூன்றாவது பதம்‌. 

தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்‌: 
அந்த தியானத்தில்‌; ந: - நம்மை; விஷ்ணு, ப்ரசோதயாத்‌ -  தூண்டுவாராக
இது விஷ்ணு காயத்ரீ மந்திரத்தின்‌ மூன்றாவது பதம்‌. 

ஈசுவரனாகிய மகாவிஷ்ணு பக்தனுக்கு இரங்கி, அவனது அறிவைத்‌ தூண்டி, அருள்‌ புரிந்தால்தான்‌, 
எம்பெருமானுடைய  திருக்காட்சி கிட்டும்‌. இவ்விதமே ஆழ்வார்‌ பகவதனுபவம்‌ பெற்று 'திருக்கண்டேன்‌' பாடினார்‌ என்க. 

நாராயணாய, வேங்கடேசாய: 
“ஓம்‌ நமோ நாராயணாய,:'' “ஓம்‌ நமோ வேங்கடேசாய* என்னும்‌ மந்திரங்களின்‌ கடைப்பதம்‌. 
நாராயண - நார * அயந.  “நார! என்றால்‌ அழியாத பொருள்களின்‌ கூட்டம்‌; 
அயந -  ஆதாரம்‌. நாரங்களுக்கெல்லாம்‌ அந்தர்யாமியாய்‌ வியாபித்து  ஆதாரமாய்‌ இருப்பவன்‌ நாராயணன்‌. 
நாராயணாய என்பது  நான்காம்‌ வேற்றுமை, பிரார்த்தனைப்‌ பொருளில்‌ வந்தது. 

“ஓம்‌ நமோ நாராயணாய”' :என்னும்‌ திருமந்திரம்‌ 
**சர்வகாரணனாய்‌ சர்வரக்ஷகனான எம்பெருமானுக்கே  உரியவனான நான்‌ சர்வசேஷியான அந்நாராயணனுக்கே எல்லா 
அடிமைகளையும்‌ செய்யப்‌ பெற வேணும்‌'' என்று பொருள்படும்‌  பிரார்த்தனை. ்‌ 

“திருக்கண்டேன்‌' பாசுரம்‌ நாராயணன்‌, பக்தர்களுக்கு  எளியவனாய்‌ தன்னை வெளிப்படுத்திக்‌ காட்டுவதை விவரிக்கும்‌ 
வகையில்‌ அமைந்துள்ளதால்‌ '*'நாராயணாய”'' என்பதன்‌  விளக்கமாக, உள்ளது எனலாம்‌. 

திரு - அலர்மேல்‌ மங்கை, மகாலட்சுமி, ஸீ 
ஆழிவண்ணன்பால்‌ - கடல்வண்ணக்‌ கடவுளிடம்‌; கண்டேன்‌ என்பதால்‌ ::ஸ்ரீநிவாஸனைக்‌ கண்டேன்‌'”  
ஸ்ரீமந்நாராயணன்‌  செளலப்யனாய்‌ நமக்கெல்லாம்‌ மிக எளியவனாகக்‌ காட்டிக்  கொடுக்கும்‌ அர்ச்சை நிலையே ஸ்ரீ வேங்கடேசன்‌. 
எனவே ஸ்ரீநிவாஸ பத விளக்கமாக “*“திருக்கண்டேன்‌'' அமைந்துள்ளது. 

விஷ்ணுவின்‌ ஐவகை நிலைகள்‌: 
உலகங்களை நிர்ஹிக்கும்‌ பொருட்டு, ஸ்ரீமந்நாராயணன்‌ 
பரத்வம்‌, வியூகம்‌, விபவம்‌, அந்தர்யாமித்வம்‌, அர்ச்சாவதாரம்‌  என்று ஐவகை நிலைகளில்‌ எழுந்தருளியிருக்கிறான்‌. , 
““திருக்கண்டேன்‌'* பாசுரத்தில்‌ பேயாழ்வார்‌ ஐந்து முறை *“கண்டேன்‌'' என்று பேசியிருப்பதால்‌, 
எம்பெருமானின்‌ ஐவகை  நிலைகளையுமே கண்டிருப்பார்‌ என்றே தோன்றுகிறது. 
கீழ்ப் பாசுரங்களில்‌ ஆழ்வார்‌ எம்பெருமானின்‌ ஐவகை  நிலைகளையும்‌ பன்முறை பேசியிருப்பதும்‌ இங்கு நினைவு கூறத்தக்கது. 
திருவேங்கடத்தை மங்களாசாஸனம்‌ செய்யும்‌ ஒரு  பாசுரத்தில்‌ பேயாழ்வார்‌ எம்பெருமானின்‌ ஐந்து நிலைகளையும்‌ குறிப்பிடுகிறார்‌. 

பாற்கடலும்‌ வேங்கடமும்‌ பாம்பும்‌ பனிவிசும்பும்‌ 
நூற்கடலும்‌ நுண்ணூல தாமரைமேல்‌ - பாற்பட்‌ 
டிருந்தார்‌ மனமும்‌ இடமாகக்‌ கொண்டான்‌ 
குருந்தொசித்த கோபாலகன்‌. 

பாற்கடல்‌ - திருப்பாற்கடல்‌ - வியூக நிலை. 
வேங்கடம்‌ - அர்ச்சாவதார நிலை.  
பனிவிசும்பு - வைகுந்தம்‌ - பரத்வ நிலை, 
மனம்‌ - அந்தர்யாமித்வ நிலை. 
கோபாலகன்‌ - விபவம்‌ (அவதார நிலை). 
எனவே '“திருக்கண்டேன்‌” பாசுரமும்‌ விஷ்ணுவின்‌ ஐந்து  நிலைகளையும்‌ கூறுவதாகக்‌ 8&ழே காண்போம்‌: 

திருக்கண்டேன்‌: . 
திரு நாட்டில்‌ (வைகுந்தத்தில்‌) திருமகளுடன்‌ திருமால்‌ திரு மா மணி மண்டபத்தில்‌ எழுந்தருளியிருப்பதைக்‌ கண்டேன்‌; -பரத்வநிலை. 
பொன்மேனி கண்டேன்‌: 
பொன்‌ . ஆபரணங்களால்‌ அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ  வேங்கடாசலபதியின்‌ திருமேனியைக்‌ கண்டேன்‌; அர்ச்சாவதார நிலை. 
ஸ்ரீயின்‌ சேர்த்தியாலும்‌ பொன்மேனி எனலாம்‌. 
அருக்கன்‌ அணிநிறமும்‌ கண்டேன்‌: 
சர்வ வியாபியாகிய சூரியனின்‌ அழகிய ஏழு நிறங்களைக்‌  கண்டேன்‌; எல்லா உயிர்களிலும்‌ சூரிய நாராயணன்‌ 
வியாபித்திருக்கும்‌ அந்தர்யாமித்வ நிலை. 
பொன்னாழி கண்டேன்‌... என்னாழி வண்ணன்பால்‌ இன்று: 
ஆழி - சக்கரம்‌, கடல்‌; கடல்‌ வண்ணனைக்‌ கண்டதாகக்‌  கூறுவதால்‌, திருப்பாற்கடல்‌ நாதனைக்‌ குறிக்கிறது.
இது வியூக நிலை. 
புரிசங்கங்‌ கைக்கண்டேன்‌: 
பாஞ்சசன்னியம்‌ ஊதிய பார்த்தஸாரதியைக்‌ கண்டேன்‌. --அவதார நிலை. 

த்வய மந்திரம்‌ அல்லது மந்த்ர ரத்னம்‌: 
ஸ்ரீமந்‌ நாராயண சரணெள சரணம்‌ ப்ரபத்யே; 
ஸ்ரீமதே நாராயணாய நம:'' 
என்பதே ஸ்ரீவைஷ்ணவத்தில்‌ பிரசித்தி பெற்ற துவயமந்திரம்‌. 
இரண்டு வாக்கியங்களால்‌ ஆன துவயத்தை ஆசாரியர்கள்‌ அனைவரும்‌ ஆதரித்து, மந்த்ர ரத்னம்‌ என்று பாராட்டினர்‌, 

ஸ்ரீ என்றால்‌ திரு, மகாலட்சுமி, பெரிய பிராட்டியார்‌. எனவே  “'ஸ்ரீயுடன்‌ கூடிய நாராயணனின்‌ திருவடிகளையே சரணமாகப்‌  பற்றுகிறேன்‌; 
ஸ்ரீபுடன்‌ கூடிய நாராயணனுக்கே தொண்டு செய்ய  விரும்பி, வணங்குகிறேன்‌! என்பதே துவயத்தின்‌ பொருள்‌.
பூர்வ (முதல்‌) வாக்கியம்‌ உபாயம்‌ (வழி) எது என்பதையும்‌, உத்தர (இரண்டாவது) வாக்கியம்‌ உபேயம்‌, ப்ராப்யம்‌ (குறிக்கோள்‌) 
என்ன என்பதையும்‌ காட்டுகின்றன. 

த்வயத்தின்‌ மகிமை 
ஸ்ரீ என்னும்‌ மகாலட்சுமித்‌ தாயார்‌ அனைத்து ஜீவர்களுக்கும்‌ அன்னை, கருணையே வடிவானவள்‌, பக்தர்களுக்கு உடனே 
மனமிரங்கி, அருள்புரியும்படி, நாராயணனிடம்‌ புருஷகாரம்‌ (சிபாரிசு) செய்பவள்‌. 
பிராட்டியை முன்னிட்டுச்‌ சரசணடைவதே, சுலபமாக உய்வடைய வழி. பிராட்டியே உபாயம்‌ (வழி), பிராட்டியே உபேயம்‌ 
(குறிக்கோள்‌). எனவே இவளை 'புருஷகார பூதை' என்பர்‌. 

திருவந்தாதிகள்‌ துவய மந்திர சாரமானவை 
முதலாழ்வார்களின்‌ முதற்பாசுரங்கள்‌ 8ழ்க்கண்டவாறு துவய மந்திர சாரமானவை: 
ஆழ்வார்‌ பேயார்‌ பூதத்தார்‌ பொய்கையார்‌ 
பாசுரம்‌ திருக்கண்டேன்‌ அன்பேதகளி வையந்தகளி 
ஆழ்வார்‌ திரு நாரணற்கு அடிக்கே சூட்டினேன்‌ 
வாக்கு 
பூர்வ ஸ்ரீமந்‌ நாராயண  சரணெள சரணம்‌ 
வாக்கியம்‌ ப்ரபத்யே 
உத்தர ஸ்ரீமதே நாராயணாய நம 
வாக்கியம்‌ 

திருக்கண்டேன்‌ பாசுரத்தில்‌ வரும்‌ “திரு”, ஸ்ரீமந்‌, ஸ்ரீமதே என்பதையும்‌; 
அன்பேதகளியில்‌ வரும்‌ 'நாரணற்குஷ்‌ நாராயண, நாராயணாய என்பதையும்‌; 
வையந்தகளியில்‌ வரும்‌ 'அடிக்கே சூட்டினேன்‌' என்பது 'சரணெள (அடிகளை) சரணம்‌ ப்ரபத்யே", 
நம: என்பதையும்‌ குறிக்கும்‌ வகையில்‌ அமைந்துள்ளன. 
எனவே  மூன்று இரத்தினங்கள்‌ போன்ற இப்பாசுரங்களிலும்‌, மந்திர இரத்தினமான துவயம்‌ பரிமளிக்கறது! 

இதைத்‌ தவிர முதலாழ்வார்கள்‌ பற்பல பாசுரங்களில்‌ “திரு” என்று ஸ்ரீயுடன்‌ சேர்த்தே ஸ்ரீநிவாஸனைப்‌ பாடியிருக்கிறார்கள்‌. 
ஸ்ரீநிவாஸன்‌ துவயமந்திர வடிவினன்‌ 
திருமலைக்‌ கோயிலில்‌ பிராட்டிக்குத்‌ தனி சன்னிதி  கிடையாது.
ஸ்ரீநிவாஸனின்‌ திருமார்பிலேயே அலர்மேல்‌ மங்கைத்‌ தாயார்‌ நித்தியவாசம்‌ செய்கிறாள்‌. 
திருமலையப்பன்‌ அம்மையப்பன்‌! இதனால்தான்‌ இவனை வழிபடுபவர்களுக்கு, 
கைம்மேல்‌ பலன்‌ உடனடியாகக்‌ இடைத்துவிடுகிறது! 

ஸ்ரீதிவாஸனை 'பாலாஜி' (பாலா என்பது தாயாரின்‌ திருநாமம்‌) என்றாலே வடநாட்டில்‌ தெரியும்‌. அர்ச்சாவதார ரத்தினமான 
வேங்கடரத்தினம்‌ மந்திர ரத்தினமான துவயவடிவினன்‌ என்பதை ஆழ்வார்‌. ரத்தினங்கள்‌ மூவரும்‌ நன்கு அறிந்திருந்தனர்‌! 
ஸ்ரீநிவாஸன்‌ சிறப்பாக துவயமந்திரம்‌ பொலியும்‌ திருவடிவம்‌ கொண்டவன்‌ என்பதாலேயே முதலாழ்வார்கள்‌ விஷ்ணுவின்‌ 
அர்ச்சை நிலையில்‌ இவனுக்கே முதலிடம்‌ கொடுத்துப்‌ பாடியிருக்கிறார்கள்‌. ! 

---------------

பரபக்தி, பரஞானம்‌, பரமபக்தி: 
பொய்கையாரின்‌ ''வையந்தகளி'" என்று தொடங்கும்‌ முதல்‌  திருவந்தாதி பரபக்தியையும்‌; 
பூதத்தாரின்‌ “அன்பே தகளி” எனத்துவங்கும்‌ இரண்டாம்‌ திருவந்தாதி பரஞானத்தையும்‌; 
பேயாழ்வாரின்‌ ''திருக்கண்டேன்‌'' என்று துவங்கும்‌ மூன்றாம்‌ திருவந்தாதி பரமபக்தியையும்‌ சொல்வதாக சிலர்‌ கொள்வர்‌. 

“பரபக்தி' என்பது எம்பெருமானை நேரில்‌ காணவேண்டும்‌ என்கிற ஆவல்‌; 
அவனை நேரில்‌ காணல்‌ 'பரஞானம்‌
பின்பு மேன்மேலும்‌ இடையறாது அனுபவிக்க வேண்டும்‌ என்னும்‌ ஆவல்‌ 'பரமபக்தி', 

இவற்றை மற்றொரு விதமாகவும்‌ பண்டைய ஆசிரியர்கள்‌ விளக்குவர்‌: 
எம்பெருமானோடு கலந்தபோது ஸூகிக்கும்படியாகவும்‌,  பிரிந்தபோது துக்கிக்கும்படியாகவும்‌ இருக்கும்‌ நிலை 'பரபக்தி". 
எம்பெருமானுடைய முழுநிறைவு நேர்காட்சி “பரஞானம்‌”. 
அவனுடைய அனுபவம்‌ பெறாவிடில்‌ தீரைவிட்டுப்‌ பிரிந்த மீன்போல மூச்சு அடங்கும்படி இருத்தல்‌ 'பரமபக்தி", 


முதலாழ்வார்களும்‌, நமது நிலையும்‌ 
பரபக்தி, பரஞானம்‌, பரமபக்தி ஆகிய மூன்று நிலைகளையும்‌ 
முதலாழ்வார்கள்‌ மட்டுமின்றி திருவேங்கடமுடையானின்‌ 
பக்தர்கள்‌ அனைவருமே தகுதிக்கேற்றபடி  சிறிதளவாவது அனுபவிக்கிறார்கள்‌ எனலாம்‌! 

சம்சார வாழ்க்கையில்‌ உழன்று கொண்டிருந்தாலும்‌,  திருமலையின்‌ பெருமையையும்‌, ஏழுமலையானின்‌ 
மஹிமையையும்‌ பூர்வ ஜன்ம புண்ணியத்தால்‌ நாம்‌ கேட்கிறோம்‌. 
பூலோக வைகுந்தமாகிய திருமலைக்குச்‌ சென்று ஸ்ரீநிவாஸனை தரிசிக்க வேண்டும்‌ என்கிற ஆவல்‌ நமக்கு எழ, 
“'திருவேங்கடம்‌  அடை நெஞ்சமே!" என்று திருமங்கையாழ்வாரைப்‌ போல்‌ 
உற்சாகத்துடன்‌ கிளம்புகிறோம்‌. இது லேசான பரபக்தி! 

பிறகு திருமலைக்குச்‌ சென்று, எப்படியாவது முண்டியடித்துக்‌  கொண்டு, ஸ்ரீவேங்கடேசனை நொடிப் பொழுதாவது நேரில்‌ 
காண்கிறோம்‌. இது லேசான பரஞானம்‌! 

ஆயினும்‌ திருவேங்கடமுடையானை ஒருமுறை காண்பது  திருப்தியளிப்பதில்லை. பின்பு மேன்மேலும்‌ அவனை 
இடையறாது கண்டு அனுபவிக்க வேண்டும்‌ என்கற ஆவல்‌  எழுகிறது. இது லேசான பரமபக்தி! 

---------------

ஞானம்‌, பக்தி, சாக்ஷாத்காரம்‌ (இறைக்காட்சி) 

மூன்று திருவந்தாதிகளும்‌ முறையே ஞான, பக்தி, சாக்ஷத்காரங்களைப்‌ பற்றியவை என்று பெரியவாச்சான்‌ பிள்ளை 
அருளிச்‌ செய்திருக்கிறார்‌. 
“ஞானச்சுடர்‌' என்பதற்கு  "பரமபக்தியாகிற விளக்கு” என்றது அவருரை. 
மூன்றாம்‌ திருவந்தாதி அவதாரிகையிலும்‌--- 
*"ஞானத்தைச்‌ சொல்லுகிறது வைசந்தகளி; ஞான  விபாகமான பக்தியைச்‌ சொல்லுகிறது அன்பே தகளி. 
பக்தியாலே  சாக்ஷாத்கரித்த படி  சொல்லுகிறது இதில்‌ (திருக்கண்டேன்‌)'* என  அவர் தாமே அருளியுள்ளார்‌. 
 
இங்ஙனம்‌ ஞான, பக்தி, ஸாக்ஷாத்காரங்களை இவர்கள்‌ அருளிச்‌ செய்கிறார்கள்‌ என்றதைக்‌ கொண்டு, 
““பொய்கையாழ்வாருக்கு சாஸ்திர ஞானம்‌ மட்டுமே யுள்ளது. 
பூதத்தாழ்வாருக்கு அத்துடன்‌ பக்தியும்‌ சேர்ந்தது. 
பேயாழ்வாரே  சாசக்ஷாத்காரம்‌ செய்தவர்‌' என்ற பாகுபாடு கொள்ள வேண்டா. 
மூவரும்‌ மூன்றுமுள்ளவராயினும்‌, அம்மூன்றும்‌ முறையே வரவேண்டியவை யாகையாலே தமக்கு அம்முறையை அறிவிக்கக்‌ 
கருதி, அவரவர்‌ அடைவதாக அவற்றை அருளினார்கள்‌ என்பதே தத்துவம்‌. 

திரிவிக்ரமன்‌ திருவடியினின்று பெருகிய கங்கை மூன்றாகப்‌  பிரிந்தது போல்‌, அவன்‌ விஷயமான இவர்களின்‌ ப்ரபந்தம்‌ மூன்று 
பிரிவுற்றதென்றார்‌ ஸ்ரீதேசிகள்‌. 

இப்ரபந்தக்‌ கர்த்தாக்கள்‌ மூவராயினும்‌ பொருள்‌ ஒற்றுமை  பற்றி இம்மூன்றும்‌ ஒரு ப்ரபந்தமாகவே அமைகிறது. 
ஒரு  வ்யாகரணத்திற்குப்‌ பாணிநீ, காத்யாயனர்‌, பதஞ்சலி ஆடிய மூவரும்‌ கர்த்தாக்கள்‌ ஆனாப்போலே, 
இப்ரபந்தங்களுக்கும்‌  இம்முனிவர்‌ மூவரும்‌ கர்த்தாக்கள்‌ என்று உரையாசிரியர்‌  துள்ளார்‌. 
வேங்கடவன்தமர்‌ ஏற்றிய வேதவிளக்கு: 

முதலாழ்வார்கள்‌ ஸ்ரீநிவாஸப்‌ பிரியர்களாகையால்‌ அவர்களை 'வேங்கடவன் தமர்‌' எனலாம்‌. 
அவர்கள்‌ ஏற்றிய 
வையந்தகளி, அன்பேதகளி விளக்குகள்‌ ''நான்மறை அந்தி நடை விளங்கச்‌'' செய்வதால்‌ வேதவிளக்குகள்‌ ஆயின. - 
திருமலைக்கே வேதகிரி: என்றொரு பெயருண்டு. 
'“வேங்கட  வெற்பென விளங்கும்‌ வேதவெற்பே”' (வெற்பு - மலை) என்று  ஸ்ரீ தேசிகனும்‌ அருளிச் செய்தார்‌. 

திருவேங்கடவனையே ''உணர்வாரார்‌ உன்‌ பெருமை... வேங்கடத்தாய்‌! நால்வேதப்‌ பண்ணகத்தாய்‌!'' என்று ஸ்ரீ 
பொய்கையாரும்‌, 
“வேதத்தான்‌ வேங்கடத்தான்‌ விண்ணோர்‌ முடிதோயும்‌ பாதத்தான்‌ பாதம்‌ பயின்று'” என்று பூதத்தாரும்‌, 
பேயாரும்‌ பாடியுள்ளனர்‌. வேதகிரி என்னும்‌ ்‌ குன்றின்‌ மேலிட்ட வேத விளக்கே வேங்கடவன்‌. 

இவற்றைக்‌ கருதியே இங்கே, ''வேங்கடவன் தமர்‌ ஏத்திய  வேத விளக்கு'' என்னும்‌ தலைப்பு அமைந்தது! 

வானரம்‌ வணங்கும்‌ வேங்கடம்‌ 

சமீப காலம்வரை, திருமலை என்றாலே வேங்கடேச பக்தர்களுக்கு அங்கே குரங்குகள்‌ செய்யும்‌ அட்டகாசங்களே 
நினைவுக்கு வரும்‌! வானர சேஷ்டைகளை நினைத்தே திருப்பாணாழ்வார்‌ 'மந்திபாய்‌ வடவேங்கடமாமலை' என்று 
மங்களாசாஸனம்‌ செய்திருக்கிறார்‌ போலிருக்கிறது. 
குரங்குகள்‌  ஏழுமலையில்‌ குதித்துக்‌ களிப்பூட்டிய காலம்‌ இன்று அநேகமாக மலையேறிவிட்டது எனலாம்‌. 
குரங்குகளுக்கு பதில்‌ குடில்களே திருமலையில்‌ எங்கும்‌ தென்படுகின்றன. ' 


பிள்ளைப்பெருமாள்‌ அய்யங்கார்‌ பதினேழாவது 
நூற்றாண்டில்‌ வாழ்ந்தவர்‌. மாபெரும்‌ ரங்கநாத பக்தரான இவர்‌ 
திருவரங்கக்‌ கலம்பகம்‌, திருவரங்கத்து அந்தாதி, திருவரங்கத்து  மாலை என்கற சிறந்த நூல்களை இயற்றினார்‌. 
திருவேங்கடவன்‌  இவர்‌ கனவில்‌ தோன்றித்‌ தன்னையும்‌ பாடும்படி கட்டளையிட, 
அய்யங்கார்‌. ''அரங்களைப்‌ பாடிய வாயால்‌ குரங்கனைப்‌  பாடுவேடீனோ?'” என்று அட்சியம்‌ செய்தார்‌. 
இதனால்‌ கோபம்‌  கொண்ட ஸ்ரீநிவாஸப்‌ பெருமாள்‌, 'கண்டமாலை' என்னும்‌ கொடிய நோயை விளைவிக்க, 
அய்யங்கார்‌ வேங்கடவளைப்‌  பாடியதாக வரலாறு. 
இவர்‌ 'திவ்விய கவி: எனப்படுவர்‌; 
இவர்‌ இயற்றிய எட்டு நூல்கள்‌ 'அஷ்டப்பிரபந்தம்‌' எனப்படும்‌. 

'குரங்கன்‌' என்றே வேங்கடவனை அலட்சியம்‌ செய்த திவ்வியகவி, அதற்குப்‌ பரிகாரமாக வேங்கடத்துக்‌ குரங்குகளையே 
பாடி, வானத்தை வரம்பாக உடையது திருமலை என்று போற்றியுள்ளார்‌. அற்புதமான கவிதை, 
'கவி' என்று ஆண்‌ குரங்கிற்குத்‌ தமிழில்‌ பெயரும்‌ உண்டு; 'கபி' என்னும்‌ வடசொல்‌, 
கவி என்றாகும்‌. 

"திருவேங்கடத்து மாலை” என்னும்‌ - நூலில்‌ பிள்ளைப்‌ பெருமாள்‌ அய்யங்கார்‌ காட்டும்‌ வேங்கடக்‌ காட்சிகளைக்‌ காண்போம்‌. 


“மண்மூலம்‌ தா என்று மந்திகடுவற்குரைப்ப  விண்மூலம்‌ கேட்டேங்கும்‌ வேங்கடமே.” (25) 

மண்மூலம்‌ - கிழங்கு; விண்மூலம்‌ - மூல நட்சத்திரம்‌; மந்தி - 
பெண்குரங்கு. கடுவன்‌ - ஆண்சுரங்கு. 

திருமலையில்‌ வாழும்‌ பெண்குரங்கு, தன்‌ காதலனிடம்‌ 
““மண்மூலம்‌ தா!” என்று கேட்கிறது. அதாவது, 
*“மண்ணிலிருக்கும்‌ கிழங்கை அகழ்ந்தெடுத்து, எனக்கு உணவாகக்‌ கொடு'' என்கிறது. 
இதை “விண்மூலம்‌', வானத்திலுள்ள மூல  நட்சத்திரம்‌ கேட்டு, தன்னைத்தான்‌ மந்தி பிடித்துக்‌ கொடுக்கச்‌ 
சொல்வதாக நினைத்து, பயத்தால்‌ நடுங்குகிறது. 

திவ்விய கவியின்‌ வருணனை, திவ்வியமான வருணனை! 
மூல நட்சத்திரத்தின்‌ வரை உயர்ந்து வானளாவ நிற்கிறது  திருமலை. எனவேதான்‌ குரங்கு கேட்பது நட்சத்திரத்திற்குத்‌ 
தெளிவாகக்‌ கேட்டு விடுகிறது. 'ஆண்மூலம்‌ அரசாளும்‌” என்பர்‌, 
ஆண்‌ குரங்கு மூல நட்சத்திரத்தில்‌ அவதரித்தது போலும்‌! 
வேங்கடத்துக்‌ கடுவன்‌ நட்சத்திர நாயகர்களான தேவகணங்களும்‌ 
அஞ்சத்தக்க அசாத்திய வலிமை படைத்தது என்பதும்‌ தெரிகிறது! 

மாம்பழம்‌ போல்‌ தித்திக்கும்‌ இன்னொரு திருமலைக் காட்சியையும்‌ திவ்விய கவி உட்டியுள்ளார்‌: 

"*வாவு கவின்‌ மந்தி நுகர்‌ மாங்கனிக்குக்‌ கற்பகத்தின்‌  மேவு கவி கைநீட்டும்‌ வேங்கடமே: (42 

வாவு .- தாலிச்செல்லும்‌; கவின்‌ - அழகிய; மேவு - பொருந்திய; கவி - கபி, ஆண்குரங்கு. 

திருவேங்கடத்தில்‌ பெண்‌ குரங்கு மாமரத்தில்‌ பழுத்துத்‌ தொங்கும்‌ தேமாங்கனியைப்‌ பறித்து, தாவிச்‌ செல்கின்றது. 
இதை  தேவலோகத்தில்‌ கற்பகத்‌ தருவில்‌ உட்கார்ந்திருக்கும்‌ ஆண்குரங்கு  பார்த்துவிடுகிறது; 
தனக்குத்‌ தருமாறு அங்கேயி௫ந்து கையை நீட்டுகின்றது! 

கவி இங்கே மறைமுகமாகக்‌ கூறுவது: திருமலை, தேவலோகம்‌ வரை உயர்ந்து நிற்கிறது. 
கற்பக மரத்தின்‌  பழத்தைவிட, வேங்கடத்தில்‌ மந்தி பறித்த மாம்பழம்‌ சுவையானது, பரம போக்யமானது. 
எனவே தேவலோகத்தையும்‌ விட உயர்ந்தது பூலோக வைகுண்டமாகய திருமலை. 


“குரங்கன்‌” என்று ஏழுமலையானை இகழ்ந்தவர்‌, அவன்‌ அருளைப்‌ பெற்றதும்‌, அரங்கனை விடவும்‌ உயர்வாகப்‌ புகழ்ந்து 
பாடிவிட்டார்‌ போல்‌ தோன்றுகிறது. 'வானர வம்பன்‌” என்பது போல்‌ வேங்கடவனை நிந்தனை செய்த பிள்ளைப்பெருமாள்‌ 
அய்யங்கார்‌ [வான வரம்பன்‌' ஆகவே அவனை வந்தனையும்‌ செய்து விடுகிறார்‌! அரங்கனுக்கும்‌, வேங்கடவனுக்கும்‌ இடையே 
மூர்த்தபேதம்‌ இல்லை என்பதை நேரடியாக உணர்ந்தவர்‌ நம்‌ திவ்விய கவி, 


அய்யங்காரின்‌ இவவிய கவிதை மாந்தோப்பில்‌ இரண்டு மாங்கனிகளைப்‌ பறித்துச்‌ சுவைத்த நம்முடைய 'மனம்‌ என்னும்‌ 
மாயக்குரங்கு' அடுத்து ஆழ்வார்களின்‌ பக்திப்பூங்காவில்‌ தாவிக்‌ குதிக்கிறது! 
பக்தி ரசம்‌ சொட்டும்‌ ஞானப்பழங்கள்‌ நாலாயிரத்தின்‌ ஜன்மபூமிக்கு அல்லவா வந்துவிட்டோம்‌? 
வந்த இடத்தில்‌ வேண்டிய சரக்கிற்குப்‌ .பஞ்சமேயில்லை என்பதை அறிந்து, 
இதற்குமுன்‌ ஆடிய களைப்புத்‌ நீர, நம்‌ மனக்குரங்கு சற்றே  கண்ணயர்கிறது, 
பூதத் திருவடி என்னும்‌ கற்பக மரத்தின்‌ இளையில்‌. பளபளவென்று பொழுதும்‌ புலர்ந்து விடுகிறது. 
இனி: நம்‌  மனக்குரங்கு என்ன செய்ய வேண்டும்‌ என்பதை பூதத்தாழ்வாரே கூறுகிறார்‌. 
ஆழ்வார்‌ கூறுவதிலிருந்து நாம்‌ வந்திருக்கும்‌ இடம்‌ திருமலையே என்பதையும்‌ தெரிந்து இன்புருகு சிந்தையராகிறோம்‌! 
ஸ்ரீ பூதத்தாழ்வார்‌ 
போது' அறிந்து வானரங்கள்‌ பூஞ்சுனை புக்‌(கு) ஆங்கு அலர்ந்த 
போது” அரிந்து கொண்டு ஏத்தும்‌ போ(து) உள்ளம்‌ - போதும்‌ 
மணி வேங்‌ கடவன்‌ மலரடிக்கே செல்ல 
அணி வேங்‌ கடவன்‌ பேர்‌ ஆய்ந்து. (72) 

போது" - விடியற்காலம்‌, பொழுது; போது” - மலர்‌; அரிந்து -கொய்து; போதுள்ளம்‌ உள்ளமே போ, புறப்படு; .பேர்‌ - திருநாமம்‌. 

திருமலைக்‌ குரங்குகள்‌ பொழுது விடிந்ததை அறிந்து, சுவாமி புஷ்கரிணி, பாபநாசம்‌ அருவி, பூஞ்சுனைகள்‌ போன்ற 
தீர்த்தங்களில்‌ புகுந்து நீராடும்‌. அப்போதே நீர்நிலைகளில்‌ அன்றலர்ந்த புத்தம்புதிய பூக்களைப்‌: பறித்துக்கொண்டு ஸ்ரீ 
ஸ்ரீ வேங்கடேசனுக்கு சமர்ப்பித்துத்‌ துதி செய்யும்‌. 
என்‌ மனமென்னும்‌  மாயக்குரங்கே! நீயும்‌ புறப்படுவாய்‌. உலகத்திற்கு மணிமகுடம்‌ வைத்ததுபோல்‌ திகழும்‌ திருமலையிலுள்ள 
ஸ்ரீ வேங்கடேசனின்‌  சஹஸ்ரநாமங்களை ஓதிக்கொண்டு, ' திருவேங்கடவனுடைய 
திருவடித்‌ தாமரைகளிலே சென்று சேரும்படியாக பூக்களை  சமர்ப்பிக்கக்‌ கடவாய்‌! 

திருமலை வானரங்கள்‌ அதிகாலையில்‌ ஏழுமலையானை  வணங்க நிகழ்த்தும்‌ ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாத சேவையை ஆழ்வார்‌ 
அழகாகப்‌ பாடியுள்ளார்‌. 
ஆஞ்சநேயர்‌ அவதரித்த அஞ்சனாத்ரி ஏழுமலைகளில்‌ ஒன்று. சமீபத்தில்‌ இம்மலைமீது அனுமாருக்குப்‌ 
பெரிய சிலை வைக்கப்பட்டிருக்கிறது. எனவே அஞ்சனாத்ரி  வானரங்கள்‌ சிறிய திருவடியாகிய அனுமன்‌ அடிச்சுவட்டில்‌ 
வேங்கடராமனை வழிபடுவதில்‌ ஆச்சரியம்‌ ஒன்றுமில்லை. 
ஆழ்வார்‌ அருளியபடியே, இன்று ஸ்ரீ வேங்கடேசன்‌ சன்னிதிக்கு நேர்‌ எதிரே, கோயிலுக்கு வெளியில்‌, ஆஞ்சநேயரே 
கைகூப்பியபடி காட்சியளிக்கிறார்‌. 
அலைபாயும்‌ நம்‌ மனக்குரங்கிற்கு ஆழ்வார்‌ சிறந்த உபதேசம்‌  செய்துள்ளார்‌. திருப்பதிக்குச்‌ சென்றுதான்‌ திருவேங்கடவனை 
சேவிக்க முடியும்‌ என்பதில்லை. தாம்‌ எங்கிருந்தாலும்‌, காலையில்‌ நீராடி, சுப்ரபாதம்‌ முதலிய துதிபாடி, மானசீகமாகவே பகவான்‌ 
திருவடிகளில்‌: புஷ்பாஞ்சலி செய்து அவனை தியானிக்கலாம்‌. 
இத்தகைய மானசீக பூஜையும்‌, ஜபமுமே மிகச்  சிறந்தன என்று  சாஸ்திரங்கள்‌ அனைத்துமே கூறுகின்றன. 
அடுத்து பேயாழ்வார்‌ இரண்டு அற்புதமான திருமலை வானரக்‌ காட்சிகளைக்‌ கண்முன்‌ கொண்டு வந்து நிறுத்துகிறார்‌. 
இவையே திவ்விய கவியின்‌ மேற்கூறிய பாடல்களுக்கு முன்னோடியாக அமைந்தவை. 
இப்பொழுது பூதத்தாழ்வார்‌  என்னும்‌ மாமரத்திலிருந்து நம்முடைய மனக்குரங்கு, பாய்ந்து 
**பிடித்தாலும்‌ பிடித்தான்‌, புளியங்கொம்பாய்ப்‌ பிடித்தான்‌'' என்று 
சொல்வார்களே, அதுபோலப்‌ பேயாழ்வார்‌ என்னும்‌ ஆன்மீகப்‌ புளியம்கொம்பைப்‌ பிடித்து விடுகிறது! 

தெளிந்த சிலாதலத்தின்‌ மேல்‌ இருந்த மந்தி 
அளிந்த கடுவனையே நோக்கி - விளங்கிய
வெண்மதியம்‌ தா என்னும்‌ வேங்கடமே! மேலொரு நாள்‌ . 
மண்மதியில்‌ கொண்டு உகந்தான்‌ வாழ்வு. (58) 

தெளிந்த - பளபளப்பான; சிலாதலம்‌ - கற்பாறையின்‌ தலம்‌, இங்கே படிகப்பாறை; மந்தி '- பெண்குரங்கு; 
அளிந்த - அன்புடைய; கடுவன்‌ - ஆண்‌ குரங்கு; மதியம்‌ - சந்திரன்‌; 
மண்‌ மதியில்‌ கொண்டு - பூமியை புத்தி சாதுர்யத்தினால்‌  ஏற்றுக்கொண்டு. 

பளபளப்பான படிகப்பாறையின்‌ மீது உட்கார்ந்திருக்கும்‌ பெண்குரங்கு, தன்னிடம்‌ காதல்‌ கொண்ட ஆண்‌ குரங்கை நோக்கி 
“ஒளி வீசும்‌ வெண்மையான பூர்ணசந்திரனைத்‌ தா!'' என்று கேட்குமிடமே வேங்கடம்‌." 
முன்னொரு காலத்தில்‌, மூன்றடி  மண்ணை புத்திசாதுர்யத்துடன்‌ கேட்டு, மகாபலிச்‌ சக்கரவர்த்தியிடமிருந்து அதை இன்னும்‌ 
அதிசாமர்த்தியமாக உலகங்களையே மூன்றடியால்‌ அளந்து எடுத்துக்கொண்டு திருப்தியடைந்த உலகளந்தப்‌ பெருமாள்‌ வாழுமிடம்‌ இது! 
 
மந்திக்குச்‌ சந்திரன்‌ எதற்காகா கண்ணாடி போல்‌  பளபளப்பான வஸ்து என்றால்‌ குரங்குக்கு அதில்‌ ப்ரீதி (பிரியம்‌) 
உண்டாவது இயற்கை, 'விளங்கிய வெண்மதியம்‌' என்ற அடைமொழியின்‌ கருத்தைப்‌ பெரிய வாச்சான்பிள்ளை கூறினது - 
**சந்திரனுடைய மேற்புற மாகையினாலே களங்கமற்று  உஜ்வலமாயிருந்துள்ள சந்திரமண்டலத்தை'* என்றவாறு. 
திருமலை சந்திரமண்டலத்திற்கு மேல்‌ வளர்ந்திருப்பது என்றபடி. 
அளிந்த - ப்ரணயகலஹம்‌ (ஊடல்‌) நீங்கத்தான்‌ ஏதேனும்‌ செய்ய விரும்பியது ஆண்குரங்கு
மதியின்‌ கொண்டு - கேட்டதிலும்‌ சாதுர்யம்‌, கொண்ட வகையிலும்‌ சாதுர்யம்‌. ' 

வெண்மதியம்‌ தா: 
ஆஞ்சநேயர்‌ அஞ்சனாத்ரி என்னும்‌ திருமலையின்‌ மீது பிறந்தவுடனேயே சூரியனைப்‌ பழம்‌ என்று நினைத்து 
அதைப்பிடிக்க ஆகாயத்தில்‌ தாவினார்‌. திருமலையில்‌ பிறப்பவர்களின்‌ ஆற்றல்‌ அத்தகையது. 
“நீயும்‌ அதே மலையில்‌ பிறந்து, அதன்‌ மீதே வாழ்கிறாய்‌. அனுமனைப்போல்‌ சூரியனைப்பிடிக்கும்‌ சக்தி இல்லாவிட்டாலும்‌, 
உன்னால்‌  குறைந்தபட்சம்‌ வெகு அருகிலுள்ள சந்திரனையாவது பிடித்துத்‌ தர முடியாதா?” என்று 
ஆண்குரங்கற்கு பலப்பரீட்சை வைக்கிறது மந்தி, இதைக்கேட்ட சந்திரன்‌ நடுங்குகிறான்‌, 
'*குரங்கு: கையில்‌  கிடைத்த பூமாலைபோல நம்‌ கதியும்‌ அதோகதி ஆகிவிடுமோ?” 
என்று பயந்து. திருமலையின்‌ உயர்வும்‌, மகத்துவமும்‌ அத்தகையது! 

“வெண்‌ மதியம்‌ தா” என்னும்‌ பேயாழ்வாரின்‌ கருத்தை ' மூலமாகக்‌ கொண்டே, பிள்ளைப்பெருமாள்‌ அய்யங்காரும்‌, 
“மண்மூலம்‌ தா என்று மந்தி கடுவற்குரைப்ப 
விண்மூலம்‌ கேட்டேங்கும்‌ வேங்கடமே'' --என்று பாடினார்‌. 

திருமலையின்‌ குரங்குகளுக்கே சந்திரனையும்‌, மூலநட்சத்திரத்தையும்‌ பிடித்துத்‌ தரும்‌ ஆற்றல்‌ உண்டென்றால்‌, 
அங்கெழுந்தருளியிருக்கும்‌ வேங்கடவனுக்கு எத்தகைய சர்வசக்தி இருக்க வேண்டும்‌? 
எல்லா உலகங்களையும்‌ காலால்‌ அளந்து “மண்‌ மதியில்‌ கொண்டு உகந்தான்‌!! ஆகத்தானே அவன்‌ இருக்கமுடியும்‌? 
இவ்விதமே அற்புதமாகப்‌ , பாசுரத்தை முடித்திருக்கிறார்‌. பேயார்‌!
அனுமார்‌ ஒரே தாவலாக இலங்கையைத்‌ தாண்டியதுபோல, மந்தி, கடுவன்‌ காட்சியை 
விவரித்த ஆழ்வாரின்‌ மனம்‌ ஒரே அடியில்‌ மலையுச்சிக்குப்‌ போய்த்‌ திருவேங்கடமுடையானையே சிக்கெனப்‌ பிடித்து விடுறைது
சந்திரனையும்‌, சூரியனையும்‌ பிடித்து என்ன பயன்‌? 
இவையனைத்தையும்‌ படைத்த ஏழுமலையானின்‌ திருவடிகளைப்‌ பிடிப்பதுதானே பிறவிப்பயன்‌? 
இதை ஆழ்வார்களைப்போல்‌ செய்கிறவர்களே வாழ்வில்‌ உகப்படைவர்‌ என்பது 'உகந்தான்‌ 
வாழ்வு" என்பதிலிருந்து அறியக்கடக்கிறது. 
மண்மதியிற்‌  கொண்டுகந்தான்‌ வாழ்வு - திருமலையப்பனின்‌ திருவடி மண்ணை 
மதியிற்‌ கொண்டு உகப்பவர்களின்‌ வாழ்வே வாழ்வு. 

கண்ணாடிபோல்‌ மின்னும்‌ வெண்ணிலாவில்‌ தன்னுடைய முகத்தழகைப்‌ பார்த்துக்‌ கொள்ள விரும்பி ''வெண்மதியம்‌ தா”! 
என்று குரங்கு கேட்டதை மேற்பாசுரத்தில்‌ கண்டோம்‌. 
கண்ணாடிபோல்‌ முகம்‌ காட்டும்‌ நீர்நிலையில்‌ தன்‌ முகத்தை  ஆண்குரங்கு பார்த்தால்‌ என்ன செய்யும்‌? 
இதைக்‌ கீழ்ப் பாசுரத்தில்‌ ஆழ்வார்‌ பாடுகிறார்‌--ஸ்ரீ பேயாழ்வார்‌ 

பார்த்த கடுவன்‌ சுனைநீர்‌ நிழல்‌ கண்டு 
பேர்த்து ஓர்‌ கடுவன்‌ எனப்பேர்ந்து - கார்த்த 
களங்கனிக்குக்‌ கைநீட்டும்‌ வேங்கடமே! மேனாள்‌ 
விளங்கனிக்குக்‌ கன்று எறிந்தான்‌ வெற்பு (68) 

பேர்த்து - அப்புறப்படுத்த முயன்று; பேர்ந்து - தானே அசைந்து; கார்த்த - கரிய; களங்கனி - களாக்காய்‌, பழம்‌; 
மேனாள்‌ - மேல்‌ நாள்‌, முன்னொரு நாள்‌; விளங்கனி - விளீஈம்பழம்‌; 
கன்று - இங்கு சன்று வடிவில்‌ வந்த வத்ஸாசுரன்‌; வெற்பு - மலை. 

திருவேங்கடமலையிலுள்ள சுனைநீரில்‌ ஓர்‌ ஆண்‌ குரங்கு தன்னுடைய நிழல்‌ தெரிவதைப்‌ பார்த்து, அதைத்‌ தன்‌ எல்லையில்‌ 
புகுந்து ஆக்கிரமிக்க முயலும்‌ இன்னொரு ஆண்குரங்கு என்று நினைத்துத்‌ துரத்தியடிக்க முயல்கிறது! பயனில்லாமல்‌ போகவே 
தானே அங்கிருந்து நகர்ந்து விடுகிறது. அப்பொழுது ஓர்‌ களாப்பழம்‌ நேரிலோ, நீரில்‌ நிழலாகவோ தோன்ற அதைப்‌ 
பறிப்பதற்குக்‌ கடுவன்‌ தன்‌ கையை நீட்டுகிறது. முன்னொரு காலத்தில்‌ விளாம்பழத்தைப்‌ பறிப்பதற்காக, வத்ஸாசுரன்‌ என்கிற 
'கன்றை விட்டெறிந்த கிருஷ்ணனுடைய மலை இது. 
திருமலைச்‌ சுளைநீர்‌ பளிங்குபோல்‌ முகம்‌ காட்டுமளவிற்கு சுத்தமானது. அதில்‌ தத்ரூபமாகத்‌ தெரிந்த தன்‌ உருவத்தைப்‌ பார்த்த 
ஆண்குரங்கு பிரமித்துவிட்டது. . களங்கனியைப்‌ பறிக்கக்‌ கைநீட்டிய குரங்கை விவரித்த ஆழ்வாருக்கு உடனே, கன்று 
வடிவில்‌ தன்னைக்‌ கொல்வதற்கு வந்த வத்ஸாசுரனை எறியக்‌ கைநீட்டிய கண்ணனின்‌ நினைவு வந்து விடுறது. 
விளங்களிக்குக்‌ கன்று எறிந்தான்‌ வெற்பு: 
அசுராவேசங்கொண்டு, கோபர்களைக்‌ கொல்லக்‌ காத்திருந்த விளம்பழங்களை வீழ்த்தினான்‌; அதற்காக கன்று வடிவில்‌ வந்து 
ஒளிந்து கொண்டிருந்த வத்ஸாசுரனை, எறிதடியாக, மலைப்பிஞ்சாகப்‌ பயன்படுத்தினான்‌ கிருஷ்ணன்‌, ஒரே கல்லில்‌ 
இரண்டு மாங்காய்‌ அடிப்பதுபோல! விளங்கனியை அடித்த வேங்கடகிருஷ்ணனுக்குக்‌ களங்கனி பிரியமென்று நினைத்தே 
திருமலைக்‌ கடுவன்‌ அதைப்‌ பறிக்கக்‌ கைநீட்டியது போலும்‌! 

பேயாழ்வாரின்‌ பாசுரத்திலுள்ள சிறந்த கருத்தைக்‌ கைநீட்டிப்‌ பறித்துக்‌ கொள்கிறார்‌ திவ்விய கவி பிள்ளைப்பெருமாள்‌ 
அய்யங்கார்‌. பறித்தவா்‌-- 
“*வாவு கவின்‌ மந்தி நுகர்‌ மாங்கனிக்குக்‌ கற்பகத்தின்‌ 
மேவு கவி கைநீட்டும்‌ வேங்கடமே” --என்று தம்முடைய கவித் திறத்தையும்‌ சேர்த்தே பாடுூறார்‌. 
------------

வேடர்‌ வில்வளைக்கும்‌ வேங்கடம்‌ 
வேடர்‌ என்பவர்கள்‌ காட்டிலே வேட்டையாடியே பிழைப்பவர்கள்‌. குறவர்‌ எனப்படுபவர்கள்‌ இவர்களை விடச்‌ 
சற்று நாட்டுடன்‌ அதிகத்‌ தொடர்பு உடையவர்கள்‌ எனலாம்‌. 
குறவர்கள்‌ தினைப்பயிரிடுவது, பிரம்பு அறுத்துக்‌ கூடைகள்‌ பின்னுவது, மலையில்‌ கிடைக்கும்‌ தேன்‌, கழங்கு போன்றவற்றை 
விற்பது ஆகியவற்றைச்‌ செய்து பிழைப்பர்‌. 
வேடர்களும்‌,  குறவர்களும்‌ வேங்கடத்தில்‌ வில்‌ வளைத்த காட்சிகளை ஆழ்வார்கள்‌ பாடியிருக்கின்றனர்‌. 

மலையும்‌, மலைசார்ந்த இடமும்‌ தமிழில்‌ 'குறிஞ்சி' என வழங்கப்படும்‌. எனவே வேங்கடம்‌ குறிஞ்சி நிலத்தைச்‌ சேர்ந்தது. 
“இத்தகைய இடத்தின்‌ கருப்பொருளாகிய குறவர்‌, யானை, குரங்கு, பாம்பு போன்றவற்றை ஆழ்வார்கள்‌ குறிப்பிட்டுச்‌ 
சொல்லும்‌ அழகு அவர்களுடைய கவித்திறனைக்‌ காட்டுவதுடன்‌ நம்மையும்‌ கவிதை அநுபவத்தின்‌ கொடு முடிக்குக்‌ கொண்டு 
செலுத்துகின்றது”,  
பொய்கையாழ்வார்‌ ஒரு பாசுரத்தில்‌ வேங்கடமலையின்‌ குறவர்‌, யானை, பாம்பு ஆகியவற்றை இணைத்துப்‌ பாடுறார்‌, 
இப்பாட்டில்‌ பேசப்படும்‌ பொருட்கள்‌ யாவுமே திருமாலுடன்‌ விசேஷத்‌ தொடர்பு கொண்டவை என்பதும்‌ இதன்‌ சிறப்பு. 

ஊரும்‌ வரியரவம்‌ ஒண்குறவர்‌ மால்யானை 
பேர எறிந்த பெருமணியை - காருடைய 
மின்னென்று புற்றடையும்‌ வேங்கடமே! மேலகரர்‌ 
எம்மென்னும்‌. மாலது இடம்‌. (ஸ்ரீ பொய்கையாழ்வார்‌ -38) 

ஊரும்‌ - ஊர்ந்து செல்லும்‌; வரி - கோடு; அரவம்‌ - பாம்பு; மால்‌ யானை - பெரிய யானை; ஒண்‌ - அழகிய, சிறப்பு வாய்ந்த; 
மணி - மாணிக்கம்‌; கார்‌ - மேகம்‌; மின்‌ - மின்னல்‌; எம்மென்னும்‌ * எம்முடையது என்று கொண்டாடும்‌; மாலது - திருமாலுடைய. 

திருவேங்கடம்‌ என்னும்‌ திவ்ய தேசத்தில்‌ வாழ்வதால்‌ சிறப்புடைய குறவர்கள்‌ தங்கள்‌ இனைப்புளங்களில்‌ பட்டி மேயும்‌ 
யானையைத்‌ துரத்துவதற்காகப்‌ பரண்களில்‌ இருந்தபடியே பெரிய, பெரிய மாணிக்கக்‌ கட்டிகளை அதன்மேல்‌ வீசுகின்றனர்‌. 
அப்பொழுது அங்கு ஊர்ந்து சென்று கொண்டிருக்கும்‌ மலைப் பாம்புகள்‌ யானை மீது பொழியும்‌ மாணிக்க மழையைக்‌ காண்கின்றன; 
யானையை மேகமாகவும்‌, இரத்தினங்களை மின்னல்களாகவும்‌ எண்ணி மயங்குகின்றன. 
மின்னலுடன்‌  இடிதோன்றும்‌ என்று மிரண்டு, பாம்புகள்‌ தங்கள்‌ புற்றுக்களில்‌ புகுந்து கொள்கின்றன. 

ஒண்குறவர்‌ எறிந்த பெருமணி; 
திருமலை வேங்கடேசனிடமிருந்து எந்நேரமும்‌ மகத்தான ஆன்மீக அலைகள்‌ எழுந்து உலகெங்கும்‌ பரவுகின்றன. 
இங்கே பூசிப்பவர்‌, தியானிப்பவர்‌, வாழ்பவர்‌ அனைவருமே தங்களை யறியாமல்‌ இதனால்‌ உயர்ந்த மனநிலைகளை அடைந்து, 
ஆனந்தத்தை அனுபவிக்கின்றனர்‌. அத்தகைய ஆனந்த நிலையம்‌ இது. இத்தகைய சக்திவாய்ந்த திவ்ய தேசத்தில்‌ தொடர்ந்து 
வாழ்வதால்‌, அங்குள்ள குறவர்களும்‌ சத்துவ குணம்‌ மேலோங்கியவர்களாக ஆகி விடுகின்றனர்‌. 
விலை மதிக்க முடியாத மாணிக்கங்களும்‌, இரத்தினங்களும்‌ அவர்களுக்கு சற்றும்‌ இலட்சியமில்லை! 
யானையை அடிப்பதற்கு கற்களுக்கு பதில்‌  மாணிக்கக்‌ கட்டிகளையே உபயோகிக்கின்றனர்‌. 
சமயக் குரவர்களையும்‌ - விஞ்சிவிடுவர்‌  போலிருக்கிறதே. நம்‌ திருமலைக் குறவர்கள்‌! 
எனவே ஆழ்வார்‌ இவர்களை 'ஒண்குறவர்‌' எனகிறார்‌. ஒண்‌ - ஒளிவீசும்‌. மகா தேஜஸ்‌ வீசும்‌ குறவர்கள்‌ இவர்கள்‌. 
கிருஷ்ணன்‌. தங்களிடையே அவதரித்ததால்‌ சிறப்புற்ற ''அறிவொன்றும்‌ இல்லாத ஆய்க்குலத்து'' கோபர்களைப்‌ போன்றே, 
ஸ்ரீ வேங்கடாசலபதி  திருமலைக்‌ குறவர்களிடையே குறிஞ்சி நிலத்‌ தலைவனாக உறைவதால்‌ இவர்களும்‌ ஆழ்வாரால்‌ உயர்வாகப்‌ 
பேசப்படுகன்றனர்‌. 
“ஓண் குறவர்‌' என்பது அழகிய  குறவர்கள்‌, சிறந்த குறவர்கள்‌ என்று பொருள்படும்‌. 
“ஒண்மையாவது இவர்கள்‌ பாட்டன்‌-பூட்டனிலே ஒருத்தன்‌ பூமியிலே இறங்கினான்‌ என்றும்‌ 
பழியின்றிக்கே இருக்கை” என்பது வியாக்கியானம்‌. 
அஃதாவது, 
வழி வழியாகத்‌ திருப்பதி மலையை விட்டுக்‌ 8ழே இறங்காமல்‌ அங்கேயே பெயராது வாழும்‌ சிறப்பு அந்தக்‌ குறவர்கட்கே உரியது 
என்று கூறி ஆழ்வாரின்‌ கருத்தை விளக்குவர்‌ பெரியவாச்சான்‌ பிள்ளை. 
அக்குறவர்கள்‌ கற்களுடன்‌ மாணிக்கக்‌ கற்களையும்‌ எறிவர்‌ என்பது வெறும்‌ உயர்வு நவிற்சியன்று; 
அவர்களுடைய மதிப்பிட்டில்‌ கல்லும்‌, மாணிக்கமும்‌ ஒன்றே என்பது குறிப்பு. 

பெகுமணி: 
பெரிய மாணிக்கம்‌. குறவர்கள்‌ வீரியெறியும்‌ இது, திருவேங்கடவனுக்கும்‌ பொருந்தும்‌. கருநிறம்‌, 
விலைமதிப்பின்மை, ஒளிவீசுதல்‌, பெறுவதற்கு அருமை போன்ற தன்மைகள்‌ கொண்டதால்‌ எம்பெருமானுக்கு மாணிக்கத்தை 
உவமையாகக்‌ கூறுதல்‌ மரபு. 
'அண்ணல்‌ மாயன்‌' என்று தொடங்கும்‌ பாசுரத்தில்‌ (3-3-3) நம்மாழ்வார்‌ திருவேங்கடவனை 
“கண்ணன்‌ செங்களனிவாய்க்‌ கருமாணிக்கம்‌”* என்று குறிப்பிடுகிறார்‌. 
திருமலைக்கும்‌ 'சிந்தாமணிகிரி' என்கிற  மணியான  திருநாமமுண்டு. 
வேண்டியதைத்‌ தருபவர்‌ திருமலையாழ்வார்‌! மணிவண்ணனுக்கு ஏற்ற மணிமலை! 

மால் யானை: 
மால்‌ - இங்கு, *பெரிய' என்று பொருள்படும்‌. மற்றபடி “மால்‌' என்றால்‌ திருமால்‌. இதற்கு வ்யாமோகமே (பிரேமையே) 
வடிவானவன்‌, தன்னை ஆச்ரமித்தவர்கள்‌ (பற்றியவர்கள்‌) விஷயத்தில்‌ பெரும்‌ பித்தன்‌, பக்தவத்ஸலன்‌ என்று பொருள்‌. 
இவ்விதமே யானையும்‌ தன்னைப்‌ பற்றிய பாகன்‌ முதவியோரிடத்திலே மிகுந்த அன்பு செலுத்தும்‌; இத்துடன்‌ 
கருநிறம்‌, நெடிய உருவம்‌, காண்பவர்க்கு எப்பொழுதும்‌ களிப்பூட்டுதல்‌ போன்றவற்றால்‌ .. யானையைத்‌ திருமாலுக்கு 
உவமை கூறுவதும்‌ மரபாகிறது. எனவே ஆழ்வார்‌ மால்‌, பானை ஆகியே இரு பதங்களையுமே சேர்த்து அர்த்தபுஷ்டியாக 
“மால்யானை' என்று அழகுற அமைத்திருப்பது, கற்கக்‌ கற்க களிப்பூட்டுகின்றது! 

ஊரும்‌ வரி அரவம்‌: 
சளர்ந்து செல்லும்‌, கோடுகளை உடைய பாம்பு. இதற்கும்‌ திருமலைக்கும்‌ நிறைய சம்பந்தம்‌ உண்டு. திருமலையே 
ஆதிசேஷன்‌, அரவணை என்பர்‌. எனவே திருமலையாழ்வார்க்கு அரவகிரி, சேஷகிரி, சேஷாத்ரி என்ற திருநாமங்களுண்டு. 
சேஷாசலத்தின்‌ மீது பேருந்தில்‌ நாம்‌ ஊர்ந்து செல்லும்போது, பாதையும்‌ 'ஊரும்‌ வரி அரவம்‌' போன்றே வளைந்து, வளைந்து 
செல்கிறது! போகும்‌ வழி 'ஊரும்‌ வரி அரவம்‌' என்றால்‌, போகும்‌ ஊரும்‌ அரவ கிரி. 

காருடைய மின்‌: 
யானையைக்‌ கார்மேகமென்றும்‌, குறவர்கள்‌ அதைத்‌ துரத்த வீசிய மணியின்‌ ஒளியை மின்னலென்றும்‌ நினைத்து பயந்து 
பாம்பு புற்றை அடைகிறது. யானை, மேகம்‌, மணி ஆகிய மூன்றுமே திருமாலுக்கு உவமைகளாகக்‌ கூறப்படுபவை; 
மூன்றையும்‌ ஒரே இடத்தில்‌ ஒன்றாகக்‌ கண்டு மயங்குகிறது அரவம்‌. மயக்குபவன்‌ மாயோன்‌, திருமால்‌; அவனுக்கு 
உவமையாகக்‌ கூறப்படும்‌ பொருள்களும்‌ இவ்விதமே மயக்கும்‌ தன்மையுடைன போலும்‌! மேகங்கள்‌ எப்பொழுதும்‌ தவழ்ந்து 
கொண்டிருப்பது திருமலை; அதன்‌ மீது மேக வண்ணனாகிய வேங்கடவன்‌ நின்று கொண்டிருப்பது பொருத்தமே! 
இவனுக்கு  ஸ்ரீ ஆண்டாள்‌ மேகவிடுதூதும்‌ அருளிச்‌ செய்துள்ளாள்‌. 

மின்னலைப்‌ போல்‌ ஒளிர்பவள்‌ பொன்னிறமுடைய மகாலட்சுமி. கார்மேகத்தினிடையே மின்னல்‌ ஜொலிப்பது 
போல, பிராட்டியுடன்‌ கூடிய “அலர்மேல்‌ மங்கையுறை மார்பன்‌: திகழ்வதை, 'திருக்கண்டேன்‌, பொன்மேனி கண்டேன்‌' என்று 
பேயாழ்வார்‌ பாடியுள்ளார்‌. 
எனவே 'காருடைய மின்‌' என்பது ஸ்ரீதரன்‌, : மாதவன்‌, லட்சுமி நாராயணன்‌, ஸீதாராமன்‌, 
ராதாகிருஷ்ணன்‌, ஸ்ரீநிவாஸன்‌ போன்ற பிராட்டியுடன்‌ கூடிய  திருமாலைக்‌ குறிக்கிறது. ்‌ 

புற்றடையும்‌ வேங்கடமே! 

**காருடைய மின்‌'' என்று பயந்து திருமலையில்‌ பரம்பு மாத்திரமா புற்றை அடைந்தது? 
மின்னல்‌ போல்‌ ஒளிரும்‌  திருமகளைப்‌ பிரிந்த, கார்மேக வண்ணனாய. வைகுந்தவாசனும்‌ 
அல்லவா சேஷாசலத்தில்‌ பிரம்மதேவனால்‌ படைக்கப்பட்ட திந்திரினி (புளிய] மரத்தின்‌ 8ழிருந்த புற்றை அடைந்ததாக ஸ்ரீ 
வேங்கடேச புராணம்‌ கூறுகிறது! 

இரத்தினத்தைக்‌ கண்டு பயந்து திருமலையில்‌ பாம்பு  புற்றையடைந்தது. 
ரத்னாகரன்‌ என்கிற வேடன்‌ நாரதரிடம்‌ மந்திரம்‌ பெற்று, தன்னைச்‌ சுற்றிலும்‌ எறும்புப்‌ புற்று எழும்படி தவம்‌ 
செய்ததால்‌ *வால்மீகி' என்று பெயரடைந்ததாக வரலாறு கூறுகிறது. 
வால்மீகி முனிவருக்கு ஏதாவது கைம்மாறாக இராமபிரான்‌ செய்ய வேண்டாமா? ஒருவன்‌ செய்ததை அப்படியே 
செய்வது, முன்‌ செய்தவனுக்குப்‌ பெருமையைக்‌ கூட்டும்‌. எனவே பார்த்தார்‌ பெருமாள்‌. நாமும்‌ வால்மீகியைப்‌ போல்‌ சிறிது காலம்‌ 
புற்றுக்குள்‌ கிடப்போம்‌ என்றெண்ணிப்‌ புற்றடைந்தார்‌ வேங்கடத்தில்‌. 
எம்பெருமானைப்‌ பின்பற்றியே நாமும்‌ புற்றுக்குள்‌ எறும்புகள்‌ ஆயிரக்கணக்கில்‌ செல்வது போல, வேங்கட மலைமீது 
சளர்ந்து செல்கிறோம்‌. 

மேலசுரர்‌ எம்மென்னும்‌ மாலது இடம்‌: 
மேல - மேம்பட்டவர்களான, சுரர்‌ - தேவர்கள்‌, நித்யஸூரிகள்‌. 
இவர்களெல்லாம்‌ “ஸ்ரீநிவாஸன்‌ எங்களுடையவன்‌'' என்று  அபிமானித்துக்‌ கொண்டாடும்‌ இடமே திருமலை, 
இது போலவே  நம்மில்‌ பலரும்‌ கொண்டாடுகிறோம்‌ என்பதே கஷ்டகாலமான 
இந்தக்‌ கலியில்‌ நாம்‌ செய்யும்‌ நல்ல காரியங்களில்‌ சிறந்தது;  தவறாமல்‌ பலன்‌ தருவது; 
“மேலசுரர்‌ எம்மென்னும்‌ மாலது இடம்‌”  என்பது இன்றும்‌ உண்மை; நித்ய ஸூரிகளே திருமலையில்‌ பற்பல 
வடிவங்களையெடுத்து உலவுகின்றனர்‌ என்று பெரியோர்‌ பணிப்பர்‌. 

திருவேங்கடத்தில்‌ வாழும்‌ குறவர்‌, அரவம்‌, யானை, அதன் மேல்‌ எறியும்‌ மணி யாவும்‌ பெருமானைப் போல்‌ 
சிறப்புடையன” என்கிறார்‌ ஆழ்வார்‌. 
திருவேங்கட மலையே நித்யஸூரி ' நிர்வாஹகனான எம்பெருமான்‌ திருவுள்ளம்‌ உவந்து எழுந்தருளியிருக்கும்‌ இடம்‌ என்றார்‌. 
திவ்யதேசங்களிலுள்ள சராசரங்கள்‌ (அசையும்‌, அசையாப்‌ பொருட்கள்‌) முற்றும்‌ மெய்யன்பர்கட்கு உத்தேச்யமாய்‌ 
(உகந்தவையாய்‌) இருக்கும்‌. ஸ்ரீ குலசேகர ஆழ்வார்‌ தம்முடைய "பிரபந்தத்தலே நான்காம்‌ திருமொழியிலே 
''வேங்கடத்துக்‌ கோனேரி வாழும்‌ குருகாய்ப்‌ பிறப்பேனே'' என்று தொடங்கித்‌, 
திருமலையில்‌ பலவகைப்‌ பிறவி பிறக்க குதூஹலித்து, 
கடைசியாக “திருவேங்கடம்‌ என்னும்‌ எம்பெருமான்‌ பொன்மலைமேல்‌ ஏதேனும்‌ ஆவேனே”! என்று தலைக்கட்டுகிறார்‌. 
அதற்கேற்ப, இக் குலசேகர ஆழ்வாரைப்‌ போன்ற ஆர்வம்‌ உடைய . மஹான்‌௧ளே திருமலையில்‌ 
பாம்பாகவும்‌, -குறவராகவும்‌, யானையாகவும்‌, புற்றாகவும்‌ பிறந்திருப்பார்கள்‌ ஆகையாலே அப்பொருள்களையும்‌ 
எம்பெருமானைப்‌ போலவே உத்தேச்யமாகக்‌ கொண்ட இவ்வாழ்வார்‌ இப்பாசுரத்தாலே தம்முடைய எண்ணத்தை வெளியிடுகிறார்‌ என்க. 

திருமலை கோபர்களாகிய குறவர்கள்‌ தினைப்புனம்‌ காப்பதை பொய்கைப்‌ பிரான்‌ பாடிவிட்டார்‌ 
நாம்‌ திருவேங்கடத்தின்‌ கோபிகைகளான குறமகளிர்‌ 'பெளர்ணமி நிலவில்‌ பனிவிழும்‌ இரவில்‌' . விளையாடுவதைப்‌ பாடுவோம்‌” 
என்று அருளிச்‌ செய்கிறார்‌ ஸ்ரீ பேயாழ்வார்‌: 

குன்று ஒன்றினாய குறமகளிர்‌ கோல்‌ வளைக்கை 
சென்று விளையாடும்‌ தீங்கழைபோய்‌ - வென்று 
விளங்குமதி கோள்விடுக்கும்‌ வேங்கடமே! மேலை 
இளங்குமரர்‌ கோமான்‌ இடம்‌. (ஸ்ரீ பேயாழ்வார்‌ -72) 
குன்று : இங்கே, திருமலை; கழை - மூங்கில்‌; மதி - சந்திரன்‌; கோள்‌ - ராகு; மேலை - மேலான பரமபதத்திஜிருக்கும்‌; 
இளங்குமரர்‌ - பிராயம்‌ எப்போதும்‌ இருபத்தைந்தேயுள்ள  நித்ப ஸூரிகள்‌; கோமான்‌ - தலைவன்‌. 

திருமலையிலேயே என்றும்‌ வசிப்பவர்கள்‌ அழகிய வளைகளை யணிந்த கைகளை யுடைய குறத்திகள்‌. 
இவர்கள்‌  அழகிய மூங்கில்கள்‌ வளரும்‌ இடத்திற்குப்‌ போய்‌ விளையாட்டாக. ஏறி அவற்றை வளைப்பர்‌; 
அதனால்‌ சந்திர மண்டலம்‌ வரை ஓங்கி வளர்ந்த மூங்கில்கள்‌ அசைந்து, சந்திரனைப்‌ பீடித்திருக்கும்‌ 
ராகுவை வென்று அப்புறப்படுத்தி, அதை கரகணத்தினின்று விடுவித்து, மீண்டும்‌ முழு நிலவாக பிரகாசிக்கச்‌ செய்யும்‌. 
இத்தகைய வேங்கடமே, நித்ய யுவர்களாகவே இருக்கும்‌ நித்ய ஸூரிகளின்‌ தலைவனான ஸ்ரீவேங்கடாசலபதியின்‌ உறைவிடம்‌. 

திருமலையை விட்டு ஒரு நொடிப்பொழுதும்‌  இழிந்தாலும்‌ குலப்‌பழியாம்‌ என்று திருமலையை விடாதே அங்கே 
நித்தியவாஸம்‌ பண்ணுகின்ற குறத்திகள்‌ அவர்கள்‌ ஊஞ்சலாடுகை முதலான விளையாடல்களுக்காக ' மூங்கில்‌ மரங்களிலே 
ஏறியிருப்பதுண்டு. அப்படிப்பட்ட மூங்கில்களானவை, சந்திரனை க்ரஹிக்கின்ற ராகுவைக்‌ குத்தி அப்புறப்படுத்தி அச்சந்திரனை 
மகழ்விக்கின்றனவாம்‌. 

இப்பாட்டுக்கு மற்றும்‌ பல வகையாகப்‌ பொருள்‌ கூறுவர்‌. 
விளையாடுகின்ற. குறத்திகளின்‌ கோல்‌ வளைக்கையானது சென்று நல்ல மூங்கிற்செறிவை நீக்கி, 
சந்திரன்‌ இங்கு புகப்பெறாமையால்‌ பெற்றிருந்த இடரை நீக்கும்‌ என்றுமாம்‌. 
அன்றியே 
குறத்திகளின்‌  வளைகளின்‌ ஒளியானது சந்திர ஒளி புகுரப்பெறாத மூங்கிலிருளை 
அகற்றி, வெளிச்சமாக்்‌க, சந்திரன்‌ மருவையும்‌ போக்கும்‌ என்றுமாம்‌. 

மேலையிளங்குமரர்‌: 
நித்ய ஸூரிகள்‌, என்றும்‌ பன்னிரண்டு வயது வாய்ந்திருப்பர்‌  எனவும்‌ கூறுவர்‌. 

ஆழ்பொகுள்‌: 

சந்திர மண்டலம்‌ வரை உயர்ந்தது திருமலை என்றார்‌. 
சந்திரனின்‌ கஷ்டத்தை நீக்கு, அதைக்‌ கவ்விக்கொண்டிருந்த இராகுவை விரட்டியடித்து அபாயத்திலிருந்து திருமலை 
காக்கிறது. இதனால்‌ பக்தர்களை அபாயத்திலிருந்து விடுவித்து விளங்கச்‌ செய்வதும்‌ திருமலையே என்பது கூறப்பட்டது. 

திருமலைக்‌ குறவர்களைப்‌: பற்றிய மற்றொரு பேயாழ்வார்‌ பாசுரம்‌: , 

முடிந்த பொழுதில்‌ குறவாணர்‌ ஏனம்‌ 
படிந்து உழுசால்‌ பைந்தினைகள்‌ வித்த - தடிந்து எழுந்த 
'வேய்ங்கழை போய்‌ விண்‌ திறக்கும்‌ வேங்கடமே! மேலொருநாள்‌ 
தீங்குழல்‌ வாய்வைத்தான்‌ சிலம்பு. (89) 

முடிந்த பொழுதில்‌ - ஆயுட்காலம்‌ முடிந்த நிலையிலுள்ள; குறவாணர்‌ - குறசாதியர்‌, குறவர்‌ தலைவர்கள்‌; ஏனம்‌ - பன்றி; 
படிந்து உழு - தோண்டி உழுத; சால்‌ - கட்டியுதிர்ந்து பதமான மண்ணிலே; வித்த - விதைக்க; வேய்ங்கழை - மூங்கில்‌ தடிகள்‌; 
சிலம்பு - மலை. 
 
மரணமடையும்‌ நிலையிலுள்ள இழவர்களான குறவர்‌ தலைவர்கள்‌ திருமலையில்‌ புதிய தனை விதைகளை 
விதைக்கின்றனர்‌. எங்கே எனில்‌, காட்டுப்பன்றிகள்‌ தங்கள்‌ செருக்காலே மூங்கில்கள்‌ வேரோடு விழும்படி 
கோரைப்பற்களினால்‌ மண்ணை அகழ்ந்து உழுத நிலங்களிலே! 
இங்ஙனம்‌ அறுபட்டாலும்‌, நிலத்தின்‌ வளத்தாலும்‌, திருமலையின்‌ மஹிமையாலும்‌ மூங்கிற்‌ கழைகள்‌ மீண்டும்‌ தடித்து வளர்ந்து, 
ஆகாயத்தைப்‌ பிளந்து நிற்கின்றன வேங்கடத்தில்‌. 
முன்பொரு நாள்‌ மதுரமான புல்லாங்குழலைத்‌ தன்‌ பவளச்செவ்வாயில்‌ வைத்து ஊதிய கண்ணபிரானுடைய திருமலை இது! 

திருவேங்கடமலையில்‌ வாழும்‌ குறவர்களோடும்‌, திருவேங்கடமுடையானோடும்‌ . வாசியறத்‌ தமக்கு 
விருப்பமாயிருத்தலை விளக்குகிறார்‌ ஆழ்வார்‌. 
திருமலையின்‌ நிலவளத்தையும்‌, ஒக்கத்தையும்‌ (உயரத்தையும்‌) ஒரு சமத்காரமாகப்‌ பேசுகிறார்‌. இதில்‌. 
தேன்‌ -இரட்டுதல்‌, வேட்டையாடி மிருகங்களைப்‌ பிடித்து வருதல்‌ முதலியன குறவர்களின்‌ தொழிலாகும்‌; 
இத்தொழில்கள்‌ நல்ல வயதிலுள்ள குறவர்கட்குச்‌ செய்ய இயலுமேபன்றி, இழக்குறவர்கட்குச்‌ செய்ய இயலா. 
ஆகவே அவர்கள்‌ இருஷியினால்‌ (உழவினால்‌) ஜீவிக்கப்‌ பார்ப்பார்கள்‌; அது தன்னிலும்‌ தாங்களே உழுது பயிரிடுதலும்‌ அவர்கட்கு இயலாது. 
கலப்பை பிடித்து உழமாட்டாத 'முடிந்த பொழுதில்‌ குறவாணர்‌: ஆதலால்‌, வயதான குறவர்கள்‌ தாங்கள்‌ பூமியைப்‌ பதம்‌ செய்ய 
முடியாதவர்களானாலும்‌ பன்றிகள்‌ வேருணவுக்காகப்‌ பூமியை எங்கும்‌ தோண்டுவதால்‌- அதுவே பண்சால்‌ உழுத பூமிபோல்‌ 
பண்பட அனுகூலமாகிறது. ஆங்காங்குள்ள மூங்கில்களும்‌ வேர்‌ அறுக்கப்பட்டு விழுந்துவிடுகன்றன.
இனி அங்கு. மூங்கில்‌  வளராதென வைத்து, அவர்கள்‌ விதைக்கிறார்கள்‌. 
ஆயினும்‌ பூமியின்‌ வளத்தால்‌ அறுக்கப்பட்டு விழுந்த மூங்கில்களும்‌ வானளாவ வளர்கின்றன. இங்ஙனம்‌ ஸாரமான திருமலையே 
திருமாலின்மலை என்றபடி. 

தீங்குழல்‌: 
குறவர்களும்‌ பன்றிகளும்‌ சுயநலம்‌ கருதி மூங்கில்களை முறித்தாலும்‌ அவை வானளாவ வளர்கின்றன. அதற்கு 
வேங்கடத்தில்‌ இருத்தலே காரணம்‌. வேங்கடமுடையான்‌ வேய்ங்குழல்‌ ஊதுகின்றவனாகையால்‌ அவன்‌ திருமேனி 
ஸம்பந்தம்‌ பெற்ற புல்லாங்குழலின்‌ சு௫தியிற்‌ பிறந்த மூங்கில்களுக்கு உண்டாம்‌ நீங்கெல்லாம்‌ தானே முடிகிறது. 
ஆக எம்பெருமானை ஆச்ரயித்தாரை (பற்றியவரைச்‌) சார்ந்தார்க்கு அயலார்‌ அபகாரம்‌ செய்ய இயலாது என்றதாயிற்று. 
திருவேங்கடத்தில்‌ மூங்கில்‌ வளர்வது கரத தமாவ தாம்‌ வளர்ந்தது போலவே! 

தீங்குழல்‌ வாய் வைத்தான்‌ சிலம்பு: 
கோவர்த்தன மலையின்‌ அருகே இருந்துத்‌ தீங்குழல்‌ ஊதி கோபிகளையும்‌,. கோக்கள்‌ (பசுக்கள்‌), மிருகங்கள்‌, செடி கொடி 
மரங்கள்‌, கந்தர்வர்‌ முதலானோரான எல்லாப்‌ பிராணிகளையும்‌ தனக்கு வசமாக்கிக்‌ கொண்ட எம்பெருமான்‌ 
சதையின்‌ முடிவிலே, ஆயுள்‌ முடிவுக்குள்ளே முடிந்தபோது நாம்‌ அவனை ஆச்ரயிருக்க 
வேண்டுமென்று உபதேசித்தருளின பொருளை இப்போதும்‌ அர்ச்சையில்‌ விளக்குவது திருவேங்கடம்‌, ஆகையால்‌ அதுவே 
அவனது மலையாம்‌. 

குறவர்களும்‌, பன்றிகளும்‌ வெட்டித்தள்ளினாலும்‌, திருமலை மூங்கில்கள்‌ கிருஷ்ணனுக்குக்‌ குழல்‌ தந்த புண்ணியத்தால்‌ ஓங்கி 
வளர்கின்றன; காற்றிலே அசைந்து 'ஊய்‌, ஊய்‌' என்று ஓசை எழுப்புகின்றன. ''புல்லாங்குழல்‌ கொடுத்த மூங்கில்களே, எங்கள்‌ 
புருஷோத்தமன்‌ புகழ்‌ பாடுங்களேன்‌'' என்பது போல்‌ மதுரகீதம்‌  பாடுகின்றன! முன்பொரு நாள்‌ மதுரமாக தையைப்‌ பாடிய 
வேணுகோபாலனே திருமலையில்‌ ஸ்ரீநிவாஸனாக நிற்பதால்‌ 
அவனே இவ்விதம்‌ வேணுகானம்‌ செய்கிறானோ, என்று. நாம்‌ சற்று அசந்து விடுகிறோம்‌. 

இப்பாசுரம்‌ மூன்று அவதாரங்களை நினைவூட்டுகிறது. 
“ஏனம்‌ (பன்றி) படிந்துழுசால்‌' என்பது முன்பு ஆதிவராகப்‌ பெருமாள்‌ நிலத்தை அகழ்ந்தெடுத்ததை நினைவுறுத்துகிறது. 
இவர்‌ திருமலையில்‌ சுவாமி புஷ்கரிணி தீர்த்தக்கரையில்‌ எழுந்தருளியிருப்பதால்‌ திருமலைக்கு 'வராக கிரி! என்றொரு 
பெய்ருமுண்டு. இத்தகைய வராக க்ஷேத்திரத்தில்‌, காட்டுப்பன்றிகள்‌ தங்கள்‌ செருக்கால்‌ மூங்கில்கள்‌ சரியும்படி 
நிலத்தை உழுவது எவ்வளவு பொருத்தமாகறது!
மூங்கில்கள்‌ மீண்டும்‌ வானளாவ வளர்வது, உலகளந்த திரிவிக்கிரமனை நினைவூட்டுகிறது. 
வானையே அளப்பதுபோல்‌ உயர்ந்த மலையில்‌ நிற்பதால்‌, தருவேங்கடவனைத்‌ திரிவிக்ரமன்‌ என்பது பொருந்தும்‌ 
என்று பணிப்பர்‌ பெரியோர்‌. இதுவே இருஷ்ணாவதாரத்தில்‌ குழல்‌ ஊதியவனின்‌ மலையுமாகும்‌. 

அடுத்து, திருமழிசையாழ்வார்‌ திருமலை வேடர்களையும்‌, குறவர்களையும்‌ பாடும்‌ இரு பாசுரங்களைக்‌ காண்போம்‌.
இவர்‌  பார்க்கவ முனிவருக்கு மகனாய்‌ அவதரித்து, பிரம்பு அறுக்கும்‌ குறவர்‌ சாதியிற்‌ வளர்ந்தவர்‌ என்று கூறுவர்‌. 

வைப்பன்‌ மணிவிளக்கா மாமதியை மாலுக்கு என்று 
எப்பொழுதும்‌ கைநீட்டும்‌ யானையை - எப்பரடும்‌ 
வேடு வளைக்கக்‌ குறவர்‌ வில்லெடுக்கும்‌ ,வேங்கடமே! 
நாடு வளைத்து ஆடுதுமேல்‌ நன்று. --ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ 

வேடு - வேடர்‌; நாடு - நாட்டு மக்கள்‌; வளைத்து ஆடுதுமேல்‌ - பிரதட்சிணம்‌ செய்து வணங்குதல்‌. 
 
“சிறந்த சந்திரனைத்‌ திருவேங்கடமுடையானுக்கு மங்களதீபமாக சன்னிதியில்‌ வைப்பேனாக'' என்றெண்ணித்‌ 
திருமலை யானை அதைப்‌ பிடிப்பதற்கு எப்போதும்‌ துதிக்கையை உயரத் தூக்கியபடியே உள்ளது. 
பானையைப்‌ பிடிக்க வேடர்கள்‌ அதை நாற்புறமும்‌ சுற்றி வளைத்துக்‌ கொள்கிறார்கள்‌.
அங்குள்ள குறவர்கள்‌ யானையைக்‌ காக்க வேடர்களை எதிர்த்து (வேடர்களுடன்‌ சேர்ந்து யானையை அடிக்க, என்றும்‌ கூறுவர்‌) 
வில்லை எடுப்பர்‌. தாட்டு மக்கள்‌ அனைவரும்‌ அத்திருமலையைச்‌ சூழ்ந்து, பிரதட்சிணம்‌ செய்து வணங்குவது நன்று. 

திருமலை சந்திரமண்டலத்தை எட்டியிருக்கிறதென்று அதன்‌ ஓக்கம்‌ (உயரம்‌, பெருமை) வெளியிடப்பட்டதாம்‌.
இதனால்‌, மலைகளில்‌ சந்திரன்‌ மிக்க ஸமீபத்தில்‌ இருப்பதாகக்‌ காணும்‌ மலைப்பிராணிகள்‌ அவனைக்‌ கைக்கொள்ள விரும்பி பல 
முயற்சிகள்‌ செய்வது இயல்பு. 
யாளை சந்திரனைப்‌ பிடிக்க முயற்சி செய்வது வெளிக்குத்‌ தெரியுமேயன்றி இன்ன காரியத்திற்காக 
அதனைப்‌ பிடிக்க முயல்கிறது என்பது தெரியமாட்டாதே; 
திருமலையப்பனுக்கு நந்தாவிளக்காக வைப்பதற்குப்‌ பிடிக்க முயல்கிறதென்று ஆழ்வார்‌ எங்ஙனே அறிந்தார்‌? : என்று சிலர்‌ கேட்கக்கூடும்‌; 
திருமலையில்‌ பிறக்கப்பெற்ற பெருமையினால்‌ அவ்யானைக்கு இப்படிப்பட்ட நற்கருத்தே இருக்கத்தகும்‌ என்று 
திருவுள்ளம்‌ பற்றினர்‌ என்க. 
அன்றியும்‌ “*வாயுந்திரையுகளும்‌'* என்கிற திருவாய்மொழியிற்படியே, பிறர்‌ செய்யும்‌ காரியங்களை 
எல்லாம்‌ தாம்‌ செய்யும்‌ காரியங்கள்போல்‌ பகவத்‌ விஷய ப்ராவண்யத்தால்‌ செய்வனவாகவே கொள்வது மெய்யன்பர்களின்‌ வழக்கமாகும்‌. 
ஆழ்வார்‌ சந்திரனைப்‌ பார்க்கும்போது '“இவன்‌ திருவேங்கடமுடையானுக்கு நந்தாவிளக்காக அமையத்தகும்‌"” 
என்று தோற்றவே, இத்தோற்றமே அவ்விடத்து யானைக்கும்‌ இருந்ததாகக்‌ கொண்டு கூறுதல்‌ பொருந்தியதே. . 

இங்கு (திருமலையில்‌, எல்லாம்‌ எம்பெருமானின்‌ கைங்கர்யத்தில்‌ ஈடுபட்டவை. யானை சந்திரனைக்‌ கண்டு 
கைநீட்டுவது, அதை நந்தாவிளக்காக நம்‌ திருமாலுக்கு அமைக்கலாம்‌ என்கிற நோக்கத்தினால்‌. “இப்படி 
கைங்கர்யபரமான ' யானையை ஏன்‌ வில்லெடுத்து வருத்துகின்றனர்‌. அது நன்றோ?” என்னில்‌ - 
யானைப்பிடிக்க  வளைத்து வரும்‌ வேடரை விலக்கக்‌ குறவர்‌ வில்லெடுக்கன்றனர்‌ என்க. 
அப்போது பாகவத விரோதிகளை வெல்ல முயல்வது என்ற நன்மையாம்‌. 
அங்குள்ள வேடர்கள்‌ மட்டும்‌ அவ்வாறு நடப்பரோ என்னில்‌, அவர்கள்‌ புறம்புள்ளவரே, அங்குள்ளவரல்லர்‌ என்க. 
இனி வேடர்களும்‌, குறவர்களும்‌ யானையைப்‌ பிடிக்கின்றனர்‌ என்றே கொண்டாலும்‌, யானை சந்திரனை இந்த நோக்கத்துடன்‌ 
பார்க்கிறது என்பதை அவர்‌ அறியார்‌. யானையைப்‌ பிடித்து வசப்படுத்தினால்‌ எம்பெருமான்‌ ஸன்னிதியில்‌ கைங்கர்யத்திற்கு 
அதைப்‌ பயன்படுத்தலாம்‌ என்பது அவர்கள்‌ கருத்து எனலாம்‌. 
நித்ய விபூதியிற்போலே திருமலையிலுள்ள ஜங்கம ஸ்தாவர பூதங்கள்‌ (செடி கொடி, விலங்குகள்‌) எல்லாம்‌ திருமாலின்‌ 
விபூதியாய்‌ அவனது கைங்கர்யத்திலே ஈடுபட்டவை என்று அதன்‌ பெருமையை (இப்பாகரத்தில்‌) அனுபவித்து, (அடுத்த பாட்டில்‌) 
வேங்கடமே ஸர்வோத்க்ருஷ்டம்‌ (அனைத்திலும்‌ சிறந்த புண்ணியத்தலம்‌) என்கிறார்‌. 
: 
“விலங்குகளும்‌ கிட்டி அடிமை செய்யும்‌ திருமலையை நாட்டார்‌ சுற்றி வலம்‌ வந்து வணங்குவார்கள்‌ எனில்‌ நலமாம்‌'* என்றார்‌. 

“வெண்‌ மதியம்‌ தா!” என்று மந்தி கடுவனைக்‌ கேட்டதை பேயாழ்வார்‌, பாடினார்‌. 
இதை கஜேந்திர ஆழ்வார்‌ பரம்பரையில்‌ பிறந்த திருமலை யானை கேட்டு விட்டது. 
““பெண்‌ குரங்கின்‌ பேச்சைக்கேட்டு, ஆண்‌ குரங்கு குரங்குத்தனமாக எதையாவது செய்துவிடப்‌ போகிறதே! 
இத்தனை அழகிய முழுநிலவு குரங்கு கையில்‌ கிடைத்த பூமாலையின்‌ துர்கதியை ௮டைவதார? அதற்கு 
முன்‌ நாமே சந்திரனைப்‌ பறித்து ஸ்ரீ வேங்கடாசலபதிக்கு மணிவிளக்காய்‌ வைப்போம்‌!'” என்று திருமலை தும்பிக்கை 
ஆழ்வார்‌ அவசர அவசரமாகக்‌ கையை நீட்டுகிறார்‌. 
பெளர்ணமி இருமாலை பூஜிப்பதற்குச்‌ சிறந்த நாள்‌, "மார்கழித்‌ இங்கள்‌ மதி நிறைந்த தன்னாள்‌'' என்றே திருப்பாவை துவங்குகிறது. 
நம்மாழ்வார்‌ வைகாசி விசாகத்திலும்‌, திருமங்கையாழ்வார்‌ கார்த்திகை கார்த்திகையிலும்‌, பெளர்ணமி திதியில்‌ அவதரித்தனர்‌. 
''சரி, நம்மால்‌ ஆன பெளர்ணமி பூஜையைப்‌ பெருமாளுக்குச்‌ செய்வோம்‌!” என்று நினைத்தே 
திருமலை கஜேந்திரர்‌ சந்திரனைப்‌ பிடிக்க முயல்கிறார்‌. 

யானை துதிக்கையைத்‌ தூக்குவது வணங்குவது  போலிருக்கும்‌; துதிக்கும்‌ கையே துதிக்கை. '*மாலுக்கென்று 
எப்பொழுதும்‌ கைநீட்டும்‌ யானை' என்பதால்‌ திருமலை. யானை எப்பொழுதும்‌ துதிக்கையைத்‌ தூக்கி ஏழுமலையானை ஏத்தித்‌ 
துதித்தே நிற்கும்‌ என்பது தெரிகிறது. ஆபத்துக்‌ காலத்தில்‌ “ஆதிமூலமே” என்று அலறிய பாகவத புராணத்து கஜேந்திரனை 
விடவும்‌ பக்தியிற்‌ சிறந்தது நான்முகன்‌ திருவந்தாதி' திவ்வியப்‌ பிரபந்த யானை!
''சந்திரன்‌ திருமலைக்கு நேரே எப்பொழுது வரும்‌? வந்தவுடன்‌ 'லபக்‌'கென்று பிடித்து மணிவிளக்காய்‌  வைத்து விடுவோம்‌,'' என்று நினைத்தே, தயார்நிலையில்‌ 
எப்பொழுதும்‌ துதிக்கை தூக்கியபடியே இருக்கிறார்‌. சில யோகியர்‌ மன வலிமையை வளர்த்துக்‌ கொள்ள, பகவானை 
நினைத்தே எப்பொழுதும்‌ கைதூக்கியபடி இருப்பர்‌; சிலர்‌ எப்பொழுதும்‌ நின்றுகொண்டே இருப்பர்‌. நம்‌ திருமலை 
கஜேந்திரயோகி இத்தகையவரே. வேடர்கள்‌ தம்மைச்‌ சூழ்ந்து கொண்டது, குறவர்கள்‌ வில்லை எடுப்பது ஒன்றுமே தெரியாமல்‌ 
கருமமே கண்ணாக இருக்கிறார்‌. “கை கூப்பிய நிலையிலேயே ஆழ்வார்களும்‌, ஆசார்யர்களும்‌ எழுந்தருளியிருக்கின்றனர்‌. நமக்கு 
இருப்பதோ ஒரே ஒரு கை. நம்மால்‌ கைகூப்ப இயலாது. எனவே கைதூக்கிய  நிலையிலேயே நிற்போம்‌'' என்றிருக்கிறார்‌. 

நாடு வளைத்து ஆடுமேல்‌ தன்று: 
நாட்டிலுள்ளவர்கள்‌ திருமலையை வலம்‌ வந்து, திருவேங்கடமுடையானைக்‌ குறித்து கீதங்கள்‌ பாடியும்‌, ஆடியும்‌ 
தொழுவது நாட்டிற்கும்‌ நல்லது, வீட்டிற்கும்‌ நல்லது என்றார்‌ ஆழ்வார்‌. ஏழு மலைகளும்‌ பரந்து கிடப்பதால்‌, 
கிரிப்பிரதட்சிணெமாக வலம்‌ வருதல்‌ கருடாழ்வாருக்கே இயலும்‌. 
ஏழு மலைகளையும்‌ நடந்து ஏறுவதே வலம்‌ வருதலாகக்‌ கொள்ளலாம்‌. திருமலையைப்‌ பொறுத்தவரையில்‌, 
கிரிப்பிரவேசமே கிரிப்பிரதட்சிணம்‌. 'நாடு வளைத்து' என்று ஆழ்வார்‌. அன்று அருளியபடியே, திருமலையைச்‌ சுற்றிய 
காடுகளெல்லாம்‌ மாயமாய்‌ நிறைந்து, மக்கள்‌ வாழும்‌ நாடாக  விட்டதை இன்று காண்கிறோம்‌! திருமலையை' நாடு வளைத்து வருகிறது. ்‌ 

நன்‌ மணிவண்ணன்‌ ஊர்‌ ஆளியும்‌ கோளரியும்‌ 
பொன்மணியும்‌ முத்தமும்‌ பூமரமும்‌ - பன்மணி நீர்‌ 
ஓடு பொருது உருளும்‌ கானமும்‌ வானரமும்‌ 
வேடும்‌ உடை வேங்கடம்‌. (-ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ 47) 

ஆளி - யாளி, கோளரி - கோள்‌ -* அரி; கோள்‌ - பலம்‌, மிடுக்கு; அரி - சிங்கம்‌. 
நீரோடு என்பது “நீர்‌ ஓடு என்று இங்கு பிரித்து எழுதப்பட்டது. வேடு - வேடர்‌ இனம்‌ 
 
யாளி என்ற மிருகங்களும்‌, பலமுள்ள சிங்கங்களும்‌, பொன்னும்‌, மாணிக்கங்களும்‌, முத்துக்களும்‌, பூத்த மரங்களும்‌, 
பலவகைப்பட்ட ரத்தினங்கள்‌ அருவி நீருடன்‌ கலந்து உருண்டு விழும்‌ காடுகளும்‌, வானரங்களும்‌, வேடர்‌ இனங்களும்‌ உடையது வேங்கடம்‌
இதுவே நீலமணிவண்ணனாகிய திருமாலின்‌ நல்ல திவ்ய தேசம்‌. 

““ஸர்வேச்வரன்‌ உகப்பது திருமலை. ௮வன்‌ உறையும்‌ திவ்ய தேசத்திலுள்ள சேதன அசேதனங்களும்‌ (உயிருள்ள, உயிரற்ற 
பொருட்கள்‌) அவன்‌ விரும்புவன; அவை நித்யஸூரிகளே”' என்று அம்மலையை மண்டி அநுபவிக்கிறார்‌ ஆழ்வார்‌.  

நித்பஸூரிகளே எம்பெருமான்‌ எழுந்தருளியிருக்கும்‌ திருமலைக்கேற்ப பல உருவங்களை எடுத்துக்கொண்டு அதனைச்‌ 
சிறப்பித்து வருகின்றனர்‌. ஆகையால்‌ திருமலை பரமபதத்திற்குக்‌ குறைந்ததன்று. பரமபதத்தில்‌ யாளி, மணி, மரம்‌, வானரமென்றாற்‌ 
போன்றவைகள்‌ இருக்குமாயினும்‌ வேடர்‌, குறவர்‌ போன்றோர்‌ இடைப்பதரிது. வேடுமுடையதானபடியாலே வேங்கடத்திற்கு 
ஏற்றமுண்டு. மணிவண்ணனும்‌ லீலாவிபூதியில்‌ உள்ளாருக்கும்‌ சுலபனாயிருந்து தனது மணிவண்ணத்தன்மை, அதாவது மணி 
முன்றானையிலே முடிக்கப்பட்டு அடக்கப்படுமாப்‌ போலே எல்லோருக்கும்‌ எளிதில்‌ இடைக்கப்படுகின்றமை தெரியும்படி 
இங்கே விளங்குகிறான்‌. ஆகவே இதுவே அவனுக்கு நல்ல ஊர்‌. 
இனி நாம்‌ பரமபதத்தை எவ்வாறு நினைக்க வேண்டும்‌ எனில்‌, 
இராமன்‌ அரண்யத்திற்கு எழுந்தருவின பிறகு அயோத்தியை எவ்வாறு பாவிக்க வேண்டுமென்று இலக்குமணனுக்கு அவரது 
தாய்‌ உபதேசித்தாள்‌ என்பதை நினைக்க. 

நன்மணி: 
நல்‌ என்பதை மணியோடு சேர்ப்பதை விட ஊரோடு சேர்ப்பது நலம்‌. 
ஊர்‌: 
திருமலையைக்‌ காடென்று நினைக்கலாகாது, ஊரேயாம்‌ அது. பலவகை விவேகிகள்‌ நிறைந்த இடத்தைக்‌ 
காடென்னலாமோ?  ஆளிகள்‌, ஆள்கின்ற நித்யஸூரிகள்‌; கோளரிகள்‌, நரசிங்க மூர்த்தியைப்‌ போன்றவர்கள்‌. இப்படி எல்லாம்‌ சிறந்தவை. 

வேங்கடம்‌: 
பாபம்‌ கழிந்தாரைப்‌ பெறுவது பரமபதம்‌. பாபிகளின்‌ பாபத்தையும்‌ போக்குவது இது. 
எனவே பரமபதத்தையும்‌ விட உயர்ந்தது வேங்கடம்‌. 
“இராமன்‌ இருக்குமிடம்‌ அயோத்தி என்பதுபோல்‌ பரமபதநாதன்‌ இக்கலியுகத்தில்‌ உஈச்‌ஈமிடமான திருவேங்கூமே பரமபதம்‌. 

“வேடும்‌ உடை வேங்கடம்‌”: என்று பாசுரத்தை ஆழ்வார்‌ முடித்திருப்பதை ஒட்டியே நம்‌ தலைப்பும்‌ அமைந்தது; 
நாம்‌ இதுவரை கண்ட திருமலை வேடர்‌, குறவர்‌ காட்சிகளும்‌ முடிகிறது! 
முன்பொருநாள்‌ ஒரு வேடுவன்‌ பறவை என்று நினைத்து வில்லை வளைத்து அம்பை எய்ய, அது திருவடிகளில்‌ 
தோய்ந்ததால்‌ கிருஷ்ணாவதாரம்‌ முடிவுற்றது. 
திருவடிகளில்‌ அம்பு தோய்ந்ததால்‌ மறைந்தவன்‌ மீண்டும்‌ அர்ச்சையாகத்‌ தோன்றியதால்‌, அவனுடைய திருவடிகள்‌ தோய்ந்த மலை எது? 
வேடர்‌ வில்‌ வளைக்கும்‌ வேங்கடம்‌, கானமும்‌, வானரமும்‌, வேடும்‌ உடை வேங்கடம்‌-

----------------

வேழம்‌ வழிபடும்‌ வேங்கடம்‌ 
வேங்கடத்தை மங்களாசாஸனம்‌ செய்த முதலாழ்வார்கள்‌, 
அதன்‌ யானைக்காட்சிகளை மிக அற்புதமாக வர்ணித்துள்ளனர்‌. 
பொய்கையாழ்வார்‌ காட்டும்‌ யானைக்காட்சி இது: 

பெருவில்‌ பகழிக்‌ குறவர்‌ கைச்‌ செந்தீ 
வெருவிப்‌ புனந்‌ துறந்த வேழம்‌ இருவிசும்பில்‌ 
மீன்நீழக்‌ கண்டஞ்சும்‌ வேங்கடமே! மேலசுரர்‌ 
கோன்வீழக்‌ கண்டுகந்தான்‌ குன்று (ஸ்ரீ பொய்கையாழ்வார்‌ -40) 

பகழி - அம்பு; செந்தீ - வட்டி; புனம்‌ - கொல்லை, வயல்‌; வேழம்‌ - யானை, விசும்பு - ஆகாயம்‌; மேல்‌ - முன்னொரு 
காலத்தில்‌; அசுரர்‌ கோன்‌ - இரணியன்‌; குன்று - திருமலை; 

பெரிய வில்லையும்‌, அம்புகளையும்‌ உடைய குறவர்கள்‌, கொளுத்திய தீவட்டியையும்‌ ' கையிலேந்திக்‌ கொண்டு, 
இனைப்புனத்தில்‌ பட்டி மேயும்‌ யானையை கட்டித்‌ துரத்துகிறார்கள்‌. இதனால்‌ பயந்த யானை வயலைவிட்டு 
ஓடுகிறது. அப்பொழுது ஆகாயத்திலிருந்து அகஸ்மாத்தாக ஒரு எரிநட்சத்திரம்‌ மிகுந்த ஒளியுடன்‌ யானைக்குமுன்‌ விழுகிறது. 
இருதலைக்‌ கொள்ளி எறும்புபோல்‌, யானை செய்வதறியாது திகைத்து, அஞ்சி நிற்கிறது, திருமலையில்‌. 

இந்த வேங்கடமே, முன்னொரு காலத்தில்‌ அசுரர்‌ அரசனாகிய இரண்யகசிபுவைக்‌ கொன்று, (தன்னுடைய பக்தனாக 
பிரகலாதனைத்‌ துன்புறுத்திய விரோதி தொலைந்தான்‌) என்று மகிழ்ந்த நரசிம்ம மூர்த்தபினுடைய மலை. ்‌ 
தன்னுடைய பக்தர்களின்‌ விரோதிகளை அழித்து, அவர்களைக்‌ காக்கும்‌ பொருட்டே ஸ்ரீ வேங்கடேசப்‌ பெருமாள்‌ 
திருமலையில்‌ எழுந்தருளியிருக்கிறான்‌ என்கிறார்‌. 

தீவட்டி தடியர்களின்‌ மிரட்டலாலும்‌, எரிநட்சத்திரம்‌ தன்‌ பாதையில்‌ விழுந்ததாலும்‌, யானை பயந்தது போலவே பக்தனும்‌ 
இவ்வுலகில்‌ பலவித பிரச்சனைகளில்‌ சிக்கி கதிகலங்குவதுண்டு. 
இவ்விதமே மகாபத்தனாகிய பிரகலாதனும்‌, பாகவத விரோதியான இரணியகசிபுவினால்‌ பலவித இன்னல்களுக்கு இரையானான்‌. 
“அன்று நீ பிரகலாதனை, நரசிம்மமாக அவதரித்துக்‌ காத்தது போதாது; இன்றும்‌ பக்தர்கள்‌ 
துன்பமடையும்போது அவர்களைக்‌ காப்பது உன்‌ கடமை'' என்று ஏழுமலையானுக்கு ஆழ்வார்‌ நினைவூட்டுகிறார்‌. 

"ஞானத்‌ தமிழ்‌ புரிந்த நான்‌” என்றே பாடத்‌ தொடங்கிய இரண்டாவது ஆழ்வாராகிய தவத்திரு பூதத்தடிகள்‌,
“யானே தவஞ்செய்தேன்‌; யானே தவமுடையேன்‌; யானே பெருந்தமிழன்‌!" 
என்று மும்முறை ஒரு பாசுரத்தில்‌ மீண்டும்‌”தம்மைக்‌ குறித்து பெருமிதம்‌ கொள்கிறார்‌. 
கஜேந்திரனை முதலையின்‌ வாயிலிருந்து... விடுவித்த ஸ்ரீ வேங்கடேசனுக்கு அடிமை பூண்டு, திருமலையில்‌ 
புஷ்பகைங்கர்யம்‌ செய்தது குறித்தே விளைந்த பெருமிதம்‌ இது என்பது இதற்கு முந்தைய பாசுரத்திலிருந்து தெரிய வருகிறது. 

இதைக்கேட்ட வேங்கடேசப்‌ பெருமாள்‌ ஆழ்வாரை நோக்கு, “'நீர்‌ நல்ல பெருந்தமிழர்‌ என்பதை நாடு நகரமும்‌ நன்கறிய ஒரு கவி 
சொல்லும்‌, பார்ப்போம்‌!”” என்கிறார்‌. உடனே நம்‌ பெருந்தமிழர்‌ திருவேங்கடத்தைக்‌ குறித்து அற்புதமாக ஒரு யானைப்‌ 
பாசுரத்தைப்‌ பாடித்‌ தம்‌ கைவரிசையைக்‌ காட்டுகிறார்‌. 
“*யானே, யானே, யானே!'' என்று பெருமைப்பட்டவர்‌ ** 
யானை! என்று கீழ்க்காணும்‌ பாசுரத்தில்‌ யானையைக்‌ காட்டி நம்மை மகிழ்விக்கிறார்‌: 

பெருகு மதவேழம்‌ மாப்பிடிக்கு முன்‌ நின்‌(று) 
இருகண்‌ இனமூங்கில்‌ வாங்கி - அருகிருந்த 
தேன்‌ கலந்து நீட்டும்‌ திருவேங்கடம்‌ கண்டீர்‌ 
வான்‌ கலந்த வண்ணன்‌ வரை", (75) 

வேழம்‌ - ஆண்‌ யானை; பிடி - பெண்‌ யானை; வரை - மலை. 

பெருகுகின்ற மதநீரையுடைய ஆண்‌ யானை, தனது சிறந்த பெண்‌ யானைக்கு முன்நின்று, இரண்டே கணுக்களையுடைய 
இளம்‌ மூங்கில்‌ குருத்தைப்‌ பறித்து, அதை அருகிலிருந்த தேனடையில்‌ தோய்த்துத்‌ தேனுடன்‌ கலந்து நீட்டுகின்றது 
திருவேங்கடமலையில்‌. நீலமேக சியாமளனாகிய ஸ்ரீநிவாஸன்‌ நித்யவாசம்‌ செய்யும்‌ திருமலையல்லவா இது! 
ஏற்கனவே மதம்‌ பிடித்து, திருமலையில்‌ செருக்கித்‌ திரிகின்றது வேழம்‌. அழகான பெண்‌ யானையைக்‌ கண்டதும்‌, 
காதல்‌ ரசம்‌ வேறு அதன்‌ தலைக்கேறி விடுகிறது! உடனே பிடிக்குப்‌ பிடித்தமான இனிய உணவை அதற்குத்‌ தந்து, அதனைக்‌ கவர நினைக்கிறது. 
'*இதயத்தில்‌ இடம்‌ பிடிக்கும்‌ வழி, வயிற்றின்‌ வழியாகவே செல்கிறது"' என்கிற உண்மையை நன்கு தெரிந்து வைத்திருக்கிறது வேங்கடத்து. வேழம்‌. 
உடனே பசுமையான இளம்‌ மூங்கில்‌ குருத்தைப்‌ பிடுங்கித்‌ தேனிலே தோய்த்து, 
“குளோப்‌ ஜாமுனை' ஊட்டுவதைப்போல்‌, பேடையின்‌ வாயில்‌ ஊட்டுகிறது! முதலில்‌ தேன்‌ உணவு; அடுத்துத்‌ தேன்‌ நிலவு. 

“இலக்கிய ரசம்‌' என்னும்‌ இளம்‌ மூங்கில்‌ குருத்திலே, “பக்தி ரசம்‌” என்கற தேனைக்‌ குழைத்து நம்‌ வாயிலும்‌ ஊட்டிவிடுகிறார்‌ 
பூதத்தார்‌] ஆழ்வார்‌ நமக்குப்‌ படைக்கும்‌ ஆரா அமுது இது. 
“தேனும்‌ பாலும்‌ கன்னலும்‌ ௮முதுமாகி'' ஆராவமுதனாகிய திருவேங்கடமுடையான்‌ அன்பர்களின்‌ இதயங்களிலே தித்திப்பது 
போலவே, வேங்கடப்பிடிக்கும்‌, திருமலையாழ்வார்‌ விளைவித்த மூங்கில்‌ 'ரஸகுல்லா” தித்திக்கிறது;
நமக்கும்‌ பெருந்தமிழரின்‌ பாசுரம்‌ திருப்பதி லட்டு போல்‌ தித்திக்கிறது! 

திருமலையிலுள்ள விலங்குகளும்‌ தம்முடைய காப்பை நோக்கி வாழும்‌ பேட்டிற்கு ஆதாரம்‌ காட்டுவதால்‌, பிராட்டியோடு 
உறையும்‌ பெருமான்‌ நம்மிடம்‌ ஆதாரங்கொண்டு காப்பான்‌ என்பது ஆழ்பொருள்‌. 
எம்பெருமான்‌ பிராட்டியை உவப்பிக்கும்படியைக்‌ கூறுதல்‌ இதற்கு உள்ளுறைப்‌ பொருள்‌. 

எம்பெருமானார்‌ (ஸ்ரீ ராமானுஜர்‌) திருமலைக்கு எழுந்தருளி, த்வயத்தின்‌ பொருளைத்‌ திருமத்திரத்தோடும்‌ சரம 
ஸ்லோகத்தோடும்‌ சேர்த்து இனிமைப்படுத்தி உபந்யஸித்தருளினபோது, அனந்தாழ்வான்‌ இப்பாசுரத்தை ஸ்வாமி பரமாக நிர்வஹித்தருளினார்‌. 

திருமந்திரம்‌, துவயம்‌, சரமஸ்லோகம்‌: 
இப்பாசுரத்தில்‌, இளமூங்கில்‌ - 'ஓம்‌ நமோ நாராயணாய: என்கிற திருமந்திரம்‌. 
'ஓம்‌' என்பது பிரணவம்‌ எனப்படும்‌. ப்ர  நவம்‌ - ப்ரணவம்‌, எப்பொழுதும்‌ புதிதானது, இளமையானது என்று பொருள்‌. 
இங்கே 'இள' என்பது பிரணவத்தைக்‌ குறிக்கும்‌. 
மூங்கில்‌ கிருஷ்ணாவதாரத்தில்‌ புல்லாங்குழல்‌ கொடுத்தது; எனவே நாராயணனைக்‌ குறிக்கும்‌. 
'வேங்கடவன்‌ 'ஓம்‌ நமோ நாராயணாய என்கிற திருமந்திர வடிவினன்‌; 
இளமூங்கில்‌ குழல்‌  ஊதிய கிருஷ்ணாவதாரக்‌ கூறுடையவன்‌. தருபூலையில்‌ விளைந்த 
இளமூங்கில்‌ இங்கே வேங்கடவனையே சிறப்பாகக்‌ குறிக்கும்‌. 
திருமந்திரம்‌ வைணவர்களுக்கு இயல்பானது; எனவே இளமூங்கில்‌ "இயல்‌ தமிழ்‌" ஆகிறது! 

இருகண்‌ - துவயம்‌. 
“ஸ்ரீமந்‌ நாராயண சரணெள சரணம்‌ ப்ரபத்யே; ஸ்ரீமதே நாராயணாய , நம:' என்பதே இரண்டு அடிகளையுடைய துவய மந்திரம்‌.
எனவே இங்கு இளமூங்கிலில்‌ உள்ள இரண்டு கணுக்கள்‌ துவயத்தைக்‌ குறிக்கும்‌
ஆண்‌ யானை பெண்‌ யானைக்கு இருகண்‌ இளமூங்கில்‌' சத்துணவை அன்புடன்‌ ஊட்டுவது போலவே, துவய மந்திரத்தை வைகுந்தத்தில்‌ 
முதன்முதலாக ஸ்ரீமந்‌ நாராயணன்‌, மகாலட்சுமிப்‌ பிராட்டீயாருக்கு உபதேசித்து, ஊட்டி உவந்தான்‌. 
ஆண்‌ யானையை எம்பெருமானுக்கு உவமையாகக்‌ கூறுதல்‌ மரபு; எனவே பெண்‌ யானை பிராட்டிக்கு உவமையானது; 
உவகை ஊட்டும்‌ உவமை! 
அலர்மேல்‌ மங்கையுறை மார்பினன்‌. ஆகையாலே நம்‌ ஸ்ரீநிவாஸன்‌ துவயமந்திர வடிவினன்‌ ஆகிறான்‌. 
இருவர்‌  இணைந்து இசைத்ததால்‌, 'இருகண்‌' இசைத்தமிழே!
இருகண்‌ இளமூங்கிலின்‌ குழலோசையுடன்‌, இலக்குமி-நாராயணன்‌ இருவரும்‌ இணைந்து இசைத்த இன்னிசை விருந்தே துவயம்‌. 

தேன்‌ கலந்து - சரம ஸ்லோகத்தைக்‌ கலந்து. ““ஸர்வதர்மான்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ”' (அனைத்து தர்மங்களையும்‌ 
கைவிட்டு, என்னையே சரணடை) என்னும்‌ கீதையின்‌ சுலோகம்‌ இது. சரம ஸ்லோகம்‌, மிகவும்‌ சுலபமான இறுதி ௨பாயத்தைக்‌ 
கூறுவதால்‌ பக்தர்களுக்குத்‌ தேன்‌ போன்றது, எனவே இதைத்‌ “தேன்‌' என்றார்‌. 
'மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ (என்னையே சரணம்‌ அடை) என்பதையே வேங்கட கிருஷ்ணன்‌ தனது வலது 
திருக்கையால்‌, திருவடிகளைக்‌ காட்டி, நமக்கு உபதசித்துக்‌ கொண்டிருக்கிறான்‌. இதை நாடகமாகவே நடித்து, அபிநயமும்‌ 
பிடித்துக்‌ காட்டுவதால்‌ ஏழுமலையான்‌ சரம சுலோக ச8ரனே ஆகி, அசல்‌ பார்த்தசாரதியையும்‌ அசத்திவிடுகிறான்‌! எனவே 'தேன்‌ 
கலந்த' ஆழ்வார்‌ பாசுரம்‌ தேன்போன்ற நாடகத்தமிழ்‌ ஆகவே தித்திக்கிறது. 
திரு.மலையில்‌ ஸ்ரீராமானுஜர்‌ உபதேசம்‌: 
திருமலையில்‌ திரிந்த ஆண்‌ யானை, பேடைக்கு 'இருகண்‌ இளமூங்கில்‌ தேன்‌ கலந்து' ஊட்டியது.
அதுபோலவே, ஸ்ரீராமானுஜர்‌. திருமலையில்‌ அனந்தாழ்வான்‌ முதலிய சீடர்களுக்குத்‌ திருமந்திரம்‌, துவயம்‌, சரமஸ்லோகம்‌ ஆகிய 
மூன்றையும்‌ குழைத்துத்‌ தாயினும்‌ சாலப்‌ பரிந்து ஊட்டினார்‌ என்பதை அறிகிறோம்‌. 

பெருந்தமிழரின்‌ பெருந்தன்மை: 
திருமந்திரம்‌, துவயம்‌, சரமஸ்லோகம்‌ ஆகியவை சம்ஸ்‌கிருதத்தில்‌ அமைந்தவை. ஞானத்தமிழ்‌ புரிந்த 
பூதத்தாழ்வாரோ, 'பெருந்தமிழன்‌ யானே! யானே! யானே! என்று மும்முறை ஒரே பாசுரத்தில்‌ பெருமிதத்துடன்‌ மார்தட்டியவர்‌. 
பார்த்தார்‌ ஆழ்வார்‌. மூன்று சம்ஸ்கிருத மந்திரங்களையும்‌ முறையே 'இளமூங்கில்‌' இயல்‌ தமிழ்‌; 'இருகண்‌' இசைத்‌ தமிழ்‌; 
“தேன்‌ கலந்த நாடகத்‌ தமிழ்‌ என்று உள்ஞ்றைப்‌ பொருளாகவே வைத்துப்‌ பாடிவிட்டார்‌. மூன்று தமிழையும்‌ ஒரே பாசுரத்தில்‌ 
ஒன்றாகக்‌ குழைத்து, அலர்மேல்‌ மங்கைத்‌ தாயினும்‌ சாலப்‌ பரிந்து நமக்கு ஊட்டும்‌ இவரல்லவோ முத்தமிழ்‌ வித்தகர்‌, 
ஸர்வமந்த்ர ஸ்வதந்த்ரர்‌! ஸ்ரீராமானுஜர்‌ இருமலையில்‌ அன்று ஏீடர்களுக்கு மட்டுமே புகட்டியதை, ஆழ்வார்‌ இன்றும்‌ தமிழர்கள்‌ 
அனைவருக்கும்‌ ஊட்டிக்‌ கொண்டிருப்பதால்‌, இதைப்‌ *பெருந்தமிழரின்‌ பெருந்தன்மை' என்றோம்‌. 

வேங்கடத்தில்‌ மதவேழம்‌ மாப்பிடியோடு கூடி, தேன்‌ கலந்த இளமூங்கில்‌ ஊட்டியதைப்‌ பாடினார்‌ பூதத்தார்‌;
கூடியதைப்‌  பாடிவிட்டார்‌, நாம்‌ ஊடியதைப்‌ பாடுவோம்‌ என்று பேயாழ்வார்‌ அருளிச்‌ செய்துள்ளார்‌. 

புரிந்து மதவேழம்‌ மாப்பிடியோடு ஊடி 
திரிந்து சினத்தால்‌ பொருது - விரிந்தசீர்‌ 
வெண்கோட்டு முத்து உதிர்க்கும்‌ வேங்கடமே! மேலொருநாள்‌ 
மண்கோட்டுக்‌ கொண்டான்‌ மலை. (ஸ்ரீபேயாழ்வார்‌ -45). 

வேழம்‌ - ஆண்யானை, பிடி - பெண்யானை; புரிந்து - கூடி, கலந்து; கோடு - யானை, பன்றிகளின்‌ தந்தம்‌; 'விரிந்த சர்‌ - வீரச்ரீ நிறைந்த. 

மதம்‌ பிடித்த ஆண்‌ யானை பெண்‌ யானையுடன்‌ கூடி, பின்பு கலகம்‌ ஏற்பட்டதால்‌ ஊடி அதனைப்‌ பிரிந்து சென்றது. அதனால்‌ 
ஏற்பட்ட கோபத்திற்குப்‌ போக்குவீடாக வேழம்‌ அங்குமிங்கும்‌  திரிந்து கோபத்தினால்‌  மணிப்பாறைகளில்‌ மோதி, 
வீர ஸ்ரீயையுடைய தனது வெண்மையான தந்தங்களிலிருந்து முத்துக்களை உதிர்க்கறது. 
இந்தத்‌ திருவேங்கடமே முன்னொரு காலத்தில்‌, தன்னுடைய கோரைப்பல்லினால்‌ பூமியை அகழ்ந்தெடுத்த ஆதிவராகப்‌ பெருமாளின்‌ மலை. 
பொருது: 
போர்‌ செய்து; திருமலையிலுள்ள பளிங்குப் பாறைகளிலே யானை தன்‌ நிழலைக்‌ கண்டு, எதிர்யானையென்று பிரமித்து 
அதனோடே போர்‌ செய்கின்றதாகவும்‌ கொள்ளலாம்‌. 
திருமலையிலே ஸ்ரீ வேங்கடேச அவதாரத்திற்கு முன்பே ஆதிவராகர்‌ சுவாமி புஷ்கரணியின்‌ கரையில்‌ ததால்‌ பல 
மங்களாசாஸனம்‌ செய்கிறார்‌. 

எம்பெருமானைப்‌ பெறுவதற்கு எங்கோ போக வேண்டுமென்று நினைக்க வேண்டா. திருவேங்கடமே அவனது திருமலையாம்‌. 
மதயானைகள்‌ நிறைந்த மாமலை அது. யானை பெண்யானையோடு கலந்திருந்தபோது ஏதோ கலஹம்‌ ஏற்பட 
அதனால்‌ விட்டுப்பிரிந்து அந்தக்கோபம்‌ தாங்காது மதத்தினால்‌, செய்வது தெரியாமல்‌ மலைப்பாறைகளில்‌ தந்தங்களால்‌ குத்திப்‌ 
போர்புரிய அப்போது ச்ரேஷ்டமான அதன்‌ தந்தங்களில்‌ உண்டான முத்துக்கள்‌ 8ழே கண்டவிடத்தில்‌ சிதறி விழுகின்றன. 
இத்தகைய  வேங்கடமே முன்‌ பூமியைக்‌ இடந்தெடுத்த ஆதி வராஹமூர்த்தி பூதேவியோடு உல்லாசமாய்‌ வஸிக்கப்‌ பரமபதத்தினின்று 
கொணர்ந்த திருமலையாம்‌. 
முதலீரடிகளாலே தன்னை அண்டி சிற்சில பலன்களை அபேகூஷிப்பார்க்கு (வேண்டுவோர்க்கு) 
எம்பெருமான்‌ அதனையளித்து அதில்‌ வைராக்யம்‌ வர வழியும்‌ ஏற்படுத்துவதும்‌, 
“விரிந்தசீர்‌  - முத்துதிர்க்கும்‌' என்றதால்‌ அப்படிப்பட்டவன்‌ சேகரித்த பணத்தையும்‌ விடுவதும்‌ சொன்னதாம்‌. 
இதனால்‌ அர்த்தகாமங்களை த்யாகம்‌ செய்வித்து வினைகளைப்‌ போக்கும்‌ ௮ம்மலை என்றபடி. 

இப்படி தந்தங்களினின்று முத்து உதிர்த்து, அர்த்த காமங்களை விட்டொழிக்கின்றது வேங்கடத்து வேழம்‌. 
வேங்கடவன்‌ அதனுடைய வினைகளைப்‌ போக்கி, நற்புத்தியளிக்கிறான்‌. 
களிறு  கஜேந்திரனைப்‌ போலவே ஸ்ரீ வேங்கடேசனைக்‌ கண்டு வணங்குகிறது. இக்காட்சியை அடுத்து அருளிச்‌ செய்கிறார்‌. 

புகுமதத்தால்‌ வாய்பூசிக்‌ கீழ்தாழ்ந்து அருவி 
உகுமதத்தால்‌ கால்கழுவிக்‌ கையால்‌ - மிகுமதத்தேன்‌ 
விண்டமலர்‌ கொண்டு விறல்‌ வேங்கடவனையே 
கண்டு வணங்கும்‌ களிறு. --ஸ்ரீ பேயாழ்வார்‌ -

புகு - வாயில்‌ புகும்‌; வாய்‌ பூசி.- கொப்பளித்து; உகு - பெருகிற; மிகு. மதத்தேன்‌ - மிகுந்த மதத்தை விளைவிக்கக்கூடிய 
தேன்‌; விண்ட - மலர்ந்த; விறல்‌ - வீரம்‌, வெற்றி மிடுக்கு; களிறு -ஆண்‌ யானை. 

திருமலையிலுள்ள ஆண்‌ யானை, தன்‌ மத்தகத்தினின்றும்‌, கன்னங்களினின்றும்‌ வாயில்‌ புகும்‌ மதஜலத்தால்‌ வாய்‌ 
கொப்பளித்து, ஆசமனஞ்செய்கறது. மேலிருந்து கீழ்வரை அருவிபோல்‌ பெருகும்‌ மதநீரினால்‌ கால்களையும்‌ கழுவிச்‌ சுத்தம்‌ 
செய்துகொள்கிறது. மிகுந்த மதத்தை (களிப்பை) உண்டாக்கக்கூடிய தேன்‌ நிறைந்ததும்‌, அப்பொழுதே 
மலர்ந்ததுமான பூவைத்‌ துதிக்கையில்‌ எடுத்துக்கொண்டு, வெற்றி மிடுக்கு நிறைந்த ஸ்ரீ வேங்கடாசலபதியை, சேவித்து வணங்குகின்றது. 

பெருமானை அண்டுவதற்குத்‌ தகுதி வேண்டாமோ? எனில்‌, 
விலங்குகளும்‌ கூட அவனை எளிதில்‌ பற்றித்‌ தொண்டு செய்கின்றன என்கிறார்‌, 

திருமலையில்‌ மதயானைகள்‌ தாமரைப்‌ பூக்களைப்‌ பறித்து  அப்பன்‌ திருவடிகளில்‌ சமர்ப்பித்து வணங்குகிறபடியை ஒரு 
சமத்காரம்‌ பொலியப்‌ பேசுகிறார்‌. எம்பெருமான்‌ ஸந்நிதியில்‌ தொண்டு செய்யப்போமவர்கள்‌ வாயைக்‌ கொப்பளித்துக்‌ 
கைகால்களை சுத்தி செய்துகொண்டு, புஷ்பங்களை எடுத்துக்கொண்டு போவது வழக்கம்‌. 
இவ்வாசாரம்‌ சாஸ்த்ரவச்யர்களான மானிட சாதியர்க்கு மாத்திரமல்ல, 
இருமலையிலுள்ள அஃறிணைப்‌ பொருள்கட்கும்‌ கோல்விழுக்காட்டிலே அமைந்திருக்கின்றது என்றார்‌. 

விறல்‌ வேங்கடவன்‌: 
இங்ஙனே திருமலையிலுள்ள திர்யக்‌ ஜந்துக்களும்‌ தன்னை வணங்குமாறு ஜ்ஞாநத்தைக்‌ , கொடுக்க சக்தனான 
திருவேங்கடமுடையான்‌ என்ப. 

விறல்‌ வேங்கடவனையே -- விறல்‌ - வெற்றியுடைய; ““மோக்ஷ்பர்யந்தமான பலன்‌ அளிக்கும்‌ 
திருவேங்கடமுடையானிடம்‌ பாரமை காந்த்யம்‌ (இது ஈசுவரனையே உபாயமாகப்‌ பற்றி, ஆசாரியன்‌ சொல்படி நடக்கும்‌ 
மிகவுயர்ந்த பக்தனின்‌ நிலை) கொள்கிறது களிறு. 
திர்யக்குகளும்‌  திருவேங்கடமுடையானை ஆசாரத்துடன்‌ தொழ முயன்று வருகின்றன என்றால்‌ அவனுடைய வெற்றியை என்னவென்று சொல்வது? 
வேங்கடம்‌ வெற்றி பெறும்‌ ஸ்தானம்‌ என்று ஸ்ரீ 
தேசிகனும்‌ அருளிச்‌ செய்தார்‌. வல்வினைகள்‌ போர்புரிய அவற்றை 
மாய்க்க ப்ரயாஸப்பட்டு (பாடுபட்டு) கருணை என்ற கவசமணிந்து 
கையும்‌ வில்லுமாய்‌ வெற்றி பெறுமிடமான வேங்கடமேறி அருளினான்‌ சார்ங்கமேந்தும்‌ திருமால்‌ என்றாரே". 

“சுவாமி புஷ்கரிணிப்‌ பொய்கையிலே நீராடி, தேன்‌ சொட்டும்‌ மலரைத்‌ துதிக்கையில்‌ எடுத்துக்கொண்டு யானை 
திருவேங்கடவனை வணங்குகிறது”! என்னும்‌ இப்பாசுரம்‌ நமக்கு உடனே கஜலட்சுமியைக்‌ கண்முன்‌ கொண்டு வந்து நிறுத்துகிறது. 
இரண்டு கைகளில்‌ தாமரைப்‌ பூக்களையேந்தி, ஒரு பொய்கை நீரில்‌ விரிந்த ஆயிரம்‌ இதழ்களுடைய தாமரையின்மீது மகாலட்சுமிப்‌ 
பிராட்டி, அலர்மேல்‌ மங்கையாக நின்று கொண்டிருக்கிறாள்‌, ஸ்ரீ வேங்கடேசனைப்‌ போலவே அவளுடைய முன்‌ வலதுகரம்‌ 
அபயஹஸ்தமாக விளங்குகிறது; தங்கக்‌ கையினாலே பொற்காசுகளை பக்தர்களுக்கு அள்ளி வீசிக்‌ கொண்டிருக்கிறாள்‌ 
அன்னை! இரண்டு பக்கங்களிலும்‌ இரண்டு யானைகள்‌ உயரத்தூக்கிய துதிக்கையில்‌ தாமரையை ஏந்திக்கொண்டு, 
இலட்சுமிக்கு சமர்ப்பிக்க, நீரில்‌ வந்து கொண்டிருக்கின்றன. 
சாதாரணமாக மலர்மகள்‌ இவ்விதமே சித்தரிக்கப்படுகிறாள்‌. யானைகளின்‌ நெற்றியில்‌ மகாலட்சுமி வாசம்‌ செய்வதாகக்‌ கூறுவர்‌. 
இவ்வாறு கஜங்களால்‌ தொழப்படுவதால்‌, அலர்மேல்‌ மங்கைத்‌ தாயார்‌ 'கஜலட்சுமி' என்றும்‌ அழைக்கப்படுவாள்‌. 

திருமலை கஜேந்திரன்‌ அலர்மேல்‌ மங்கையை வணங்காமல்‌ ஸ்ரீநிவாஸனையே தொழுவது ஏன்‌? பிராட்டிக்குத்‌ திருமலையில்‌ 
கோயில்‌ இல்லை. “அகலகில்லேன்‌ இறையும்‌' என்று ஸ்ரீநிவாஸனின்‌ திருமார்பிலேயே மகாலட்சுமி வாசம்‌ செய்வதால்‌, 
அப்பன்‌ 'அலர்மேல்‌ மங்கையுறை மார்பன்‌' என்றே பிரசித்தமானான்‌. திருமலை கஜேந்திர ஆழ்வார்‌ இவ்வளவையும்‌ 
தெரிந்து, வைத்திருக்கிறார்‌! யானை புத்திசாலி அல்லவா? 

“வேழம்‌: வழிபடும்‌ வேங்கடம்‌' என்று பேயாழ்வார்‌. காட்டும்‌ இந்த கஜேந்திர ஆழ்வாரை நினைத்தே தலைப்பும்‌ இங்கே சூட்டினோம்‌. 
மனிதர்களில்‌ சிலர்‌ கடவுள்‌ இல்லை: என்று வணங்காமுடிகளாகத்‌ திரிவதைப்‌ போலவே, இருமலையிலும்‌ 
யானைகள்‌ திரிந்ததுண்டு. இவைகளின்‌ முடிவு பரிதாபகரமானது! 
இதிலூட்டும்‌ யானைக் காட்சி ஒன்றைக்‌ கண்முன்‌ கொண்டு வந்து நிறுத்தி, கீழ்ப்பாசுரத்தில்‌ நம்மை அசத்திவிடுகிறார்‌ ஆழ்வார்‌! 

களிறு முகில்குத்தக்‌.கை எடுத்து ஓடி 
"ஒளிறு மருப்பு ஒசிகை யாளி- பிளிறி 
விழக்‌ கொன்று நின்று அதிரும்‌ வேங்கடமே! மேனாள்‌ 
குழக்கன்று கொண்டு எறிந்தான்‌ குன்று (ஸ்ரீ பேயாழ்வார்‌ )

களிறு - யானை; முகில்‌ - மேகம்‌; கை - துதிக்கை; ஒளிறு ஒளிரும்‌, ஒளிவீசும்‌; மருப்பு - கொம்பு, தந்தம்‌; 
ஓசிகை - ஒடிக்கின்ற கை; பிளிறி - யானை வாய்விட்டு அலறி; அதிரும்‌ - பெருமுழக்கம்‌ செய்யும்‌; 
மேனாள்‌ - மேல்‌ நாள்‌, முன்னொரு காலம்‌; குழக்கன்று - இளம்‌ கன்று, இங்கு வத்ஸாசுரன்‌. 

திருவேங்கடமலையில்‌ யானையானது தனது துதிக்கையைத்‌ தூக்கிக்கொண்டு, வேசுமாக ஓடி, மதயானை போலெழுந்த 
மேகங்களைக்‌ குத்துகிறது. இதைக்‌ கண்ட யாளியானது அந்த யானையின்‌ ஒளிவீசும்‌ தந்தங்களைக்‌ கையினால்‌ முறிக்கிறது; 
யானையை அங்கேயே வாய்விட்டு அலறி விழும்படிக்‌ கொன்றும்‌ விடுகிறது. பிறகு யாளிஅங்கேயே நின்று கொன்டு பெருமுழக்கம்‌ செய்கிறது. 
முன்னொரு காலத்தில்‌ இளங்கன்றின்‌ வடிவெடுத்துக்‌ கொண்டு தன்னைக்‌ கொல்ல வந்த வத்ஸாசுரனை எறிதடியாகக்‌ 
கொண்டு, விளாம்பழ வடிவிலிருந்த கபித்தாசுரனின்‌ மீது எறிந்து, இரண்டு அசுரர்களையும்‌ கொன்ற: ஸ்ரீ கிருஷ்ணன்‌ நித்யவாசம்‌ 
செய்வது திருமலையாகும்‌. 

யாளி - சிங்கத்தைப்‌ போல்‌ வலிய மிருகம்‌; இதன்‌ சிற்பங்களைக்‌ கோயில்களில்‌ காணலாம்‌. இப்படி ஒரு மிருகம்‌ 
இருந்ததா, கவிஞர்களின்‌ கற்பனையா என்று தெரியவில்லை. இங்கே 'யாளி' என்பதை சிங்கம்‌ என்றும்‌ கொள்ளலாம்‌. 

“மதயானை போலெழுந்த மாமுகில்காள்‌!"! '*கரிய மாமுகற்‌ படலங்கள்‌ கடந்தவை முழங்கிடக்‌ களிறென்று”” என்றும்‌ 
சொல்லுகிறபடியே யானைக்கும்‌, மேகத்திற்கும்‌ ஒப்புமை பிரஸித்தம்‌. ஆகவே திருமலையிலுள்ள யானையானது 
மலைமுகட்டில்‌ படிந்திருந்த மேகத்தை எதிரியானதொரு 
"யானையென்று மயங்கிப்‌ பெரிய வேகத்தோடே சென்று துதிக்கையினால்‌ குத்த, இதனை ஒரு யாளி கண்டு 'இக்களிற்றுக்கு 
இவ்வளவு மதமா?! என்று சினந்து ஓடி வந்து ௮வ்‌ யானையின்‌ மேற்‌ பாய்ந்து அதன்‌ கொம்பை முறித்தெறிந்து அது வாய்விட்டு 
அலறிக்கொண்டு விழும்படியாகக்‌ கொலையுஞ்‌ செய்து, அவ்வளவிலும்‌ சீற்றம்‌ தணியாமையாலே அவ்விடத்திலேயே 
நின்று மற்றுள்ள மிருகங்களும்‌ மண்ணுண்ணும்படியாக கர்ஜிக்கின்றதாம்‌ திருமலையில்‌. 
பாசுரத்தின்‌ உட்ககுத்து: 
 “தனது அன்பர்களின்‌ விரோதிகளைப்‌ போக்கும்‌ பெருமான்‌ உறையும்‌ திருவேங்கட மலையில்‌ விலங்குகளும்‌ இதே 
இயல்புடையன”' என்கிறார்‌. 
அண்டினவரின்‌ தாபத்தைப்‌ போக்கித்‌ திருமால்‌: போல்‌ விளங்கும்‌ முகிலை மதம்‌ பிடித்த யானையானது தனக்குத்‌ 
துதிக்கை, எம்பெருமானைத்‌ துதித்துத்‌ தொழ ஏற்பட்டதென எண்ணாமே உதறித்தள்ள வாய்த்ததாக வைத்து ஓடி அதனால்‌ 
குத்தும்போது, முகில்‌ வண்ணனைப்‌ போன்ற முகிலை விரோதிக்கும்‌ அதை மருப்பொசிக்க (தந்தத்தை ஓடிக்கக்‌) 
கையோங்கி விரைந்து வந்து அது கூச்சலிட்டு விழுந்தழியும்படி கொன்று நின்று யாளியானது, விரோதிகளை வெல்லவே 
ஏற்பட்டது வேங்கடமென மீண்டும்‌ முழங்கி வரும்‌. 
௮சுரனாய்‌ வேற்றுருவம்‌ கொண்டு தீங்கிழைக்க வருமவரைக்‌ கொல்லும்‌ கண்ணனுக்கு மேக மண்டலமளாவிய இம்மலையே தகுமான 
திருப்பதி யென்றபடி. 
மேகமண்டலம்‌ அளாவியது மலையென்றார்‌. ஆச்ரித விரோதிகளைக்‌ (ஆச்ரிதர்‌ - பக்தர்‌] கொல்வது கூறப்பட்டது. 

திருமலையில்‌ திருமாலிடம்‌ பக்தி பூணாமல்‌ திரிந்த யானையை யாளி அடித்துக்‌ கொன்றதைக்‌ கண்டோம்‌. 
இது பேயாழ்வார்‌ நீட்டிய சொல்லோவியம்‌. இதையே தூக்கி சாப்பிட்டு விடும்‌ காட்சியைத்‌ திருமழிசையாழ்வார்‌ சித்தரிக்கிறார்‌! 
குருவை மிஞ்சிய சிஷ்யர்‌ போலும்‌! திருமலையில்‌ யானைகளை அப்படியே சுளையாக விழுங்கி ஏப்பம்‌ விடும்‌ பிரம்மாண்டமான 
மலைப்பாம்புகள்‌ உண்டு என்றார்‌. பயந்து விடாதீர்கள்‌. இந்நாளில்‌ அப்படி எதுவும்‌ இருப்பதாகத்‌ தெரியவில்லை! 
மனிதனே இன்று உலகிலுள்ள விலங்குகளையெல்லாம்‌ சீக்கிரம்‌ முடித்து விடுவான்‌ போலிருக்கிறது; பயப்பட வேண்டியது அவையே! 

அழைப்பன்‌ திருவேங்கடத்தானைக்‌ காண 
இழைப்பன்‌ திருக்கூடல்‌ கூட -- மழைப்பேர்‌ 
அருவி. மணிவரன்றி வந்து இழிய யானை 
வெருவி அரவு ஒடுங்கும்‌ வெற்பு --ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ 

வரன்றி வந்து இழிய - திரட்டிக்‌ கொண்டு வந்து விழ; வெருவி - பயந்து; அரவு - பாம்பு; வெற்பு - மலை. 

திருவேங்கடத்தானைக்‌ காண விரும்பி நான்‌ வாய்விட்டு அழைக்கிறேன்‌. மழைபோல்‌ பொழியும்‌ பெரிய அருவிகள்‌ 
அங்குமிங்கும்‌ கிடக்கும்‌ இரத்தினங்களைத்‌ திரட்டிக்கொண்டு வந்து திருமலையில்‌ விழுகின்றன. 
இரத்தினங்கள்‌ வீசும்‌ ஒளியை அக்னிப்பிழம்பாக நினைத்து யானைகள்‌ பயந்து ஓடுகின்றன; 
மலைப்பாம்புகள்‌ அதை மின்னல்‌ என்று நினைத்து மயங்கி புற்றுக்குள்‌ ஒடுங்கிக்‌ கொள்கின்றன. 
இத்தகைய திருமலை சென்று சேரவேண்டுமென்று விரும்பி நான்‌ 'திருக்கூடல்‌' என்றும்‌ சகுனம்‌ இழைத்துப்‌ பார்க்கிறேன்‌. . 
திருக்கூடல்‌ இழைப்பன்‌: 
கூடல்‌ இழைத்தலாவது, ஒரு பெரிய வட்டம்‌ வரைந்து, அதற்குள்‌ சுழி சுழியாக முழுவதும்‌ எழுத வேண்டும்‌. 
பிறகு அவற்றை இரண்டிரண்டாகக்‌ கூட்டி மீதமில்லாமல்‌ இருந்தால்‌ வேண்டியது நடக்கும்‌; 
இல்லாவிடில்‌ கூடாது என்று அறிவது 
பழந்தமிழர்‌ சகுனம்‌ பார்க்கும்‌ வகைகளில்‌ ஒன்று. சுழிகளை சுழிக்கும்போதே சாமர்த்தியமாக முன்கூட்டியே எண்ணிக்கையைக்‌ 
கூட்டி, இரட்டைப்‌ படையில்‌ முடியுமாறு பார்த்துக்‌ கொள்ளக்கூடாது! 
இது கூடல்‌, கூடல்‌ இழைத்தல்‌, கூடல்‌ வளைத்தல்‌, கூடற்குறி என வழங்கப்படும்‌. 

கூடலிழைத்தல்‌ பெண்டிர்க்கே உரியதென்றும்‌, இங்கு ““இழைப்பன்‌ திருக்கூடல்‌”! என்று ஆழ்வார்‌ அருளிச்‌ செய்தது 
நாயகி ஸமாதியில்‌ என்றும்‌ அழகிய மணவாளச்சீயர்‌ அருளிச்செய்வர்‌. 

பின்னடிகட்கு இரண்டு வகையாகக்‌ கருத்துரைக்கலாம்‌.... 
அருவிகளில்‌ விழுந்த ரத்னங்களைக்‌ கண்ட யானைகள்‌ ''இவை கொள்ளிவட்டம்‌'” என்று ப்ரமித்து ஓடப்புக்கவாறே 
மலைப்பாம்பின்‌ வாயிலே விழும்படியாயின எனவுமாம்‌. 
சில மலைப்பாம்புகள்‌ யானையைப்‌ பார்த்து ௮ஞ்சி ஒடுங்கி ஓடிப்போய்விடும்‌ என்றும்‌, 
பல மலைப்பாம்புகள்‌ யானையை அணுகி விழுங்கி விடுமென்றும்‌ தமிழ்‌ நூல்களால்‌ தெரிகிறது. 

“திரையன்‌ பாட்டு' என்ற ஓர்‌ பழைய நூலில்‌-- 
“கடுங்கண்‌ யானை நெடுங்கை சேர்த்தி 
திடங்கொண்டறைதல்‌ திண்ணமென்றஞ்சிப்‌ 
படங்கொள்‌ பாம்பும்‌ விடரகம்புகூஉம்‌ 
தடங்கொள்‌ உச்சித்‌ தாழ்வரையடுக்கத்து' என்றதனால்‌ மலைப்பாம்பு யானையைக்‌ கண்டு அஞ்சி ஒளிக்கும்‌ என்பது தெரிகின்றது. 

சிறிய கண்ணையுடைய யானை தனது நீண்ட துதிக்கையால்‌ பலமாக அறைந்து விடுவது நிச்சயம்‌ என்று பயந்து, படமெடுக்கும்‌ 
பாம்பு, மலைச்சரிவிலுள்ள புற்றில்‌ புகுந்து கொள்ளும்‌. 
*இடிகொள்‌ வேழத்தை எயிற்றொடும்‌ எடுத்துடன்‌ விழுங்கும்‌ 
கடியமாசுணம்‌ கற்றறிந்தவர்‌ என அடங்கிச்‌ 
சடைகொள்‌ சென்னியர்‌ தாழ்விலர்‌ தாமித்தேறப்‌ 
படிகடாமெனத்‌ தாழ்வரை கிடப்பன பாராய்‌” -என்ற கம்பராமாயணப்‌. பாட்டிலிருந்து மலைப்பாம்பு யானையை விழுங்கும்‌ எனத்‌ தெரிகிறது. 

கம்பர்‌ பாடலின்‌ கருத்து: 

இடிபோல்‌ முழங்கும்‌ யானையை தந்தத்துடன்‌ எடுத்து, உடனடியாக மலைப்பாம்பு விழுங்கிவிடும்‌. இருப்பினும்‌ அது 
சடைமுடி தரித்த முனிவர்களைக்‌ கண்டதும்‌ கற்றறிந்தவர்களைப்போல அடங்கி, அவர்கள்‌ தன்னை மிதித்து 
மலையேறுவதற்கு ஏற்றபடி, மலைச்சரிவில்‌ படிபோல்‌ படுத்துக்கொள்கிறது. 

மிகவும்‌ அற்புதமான சொல்லோவியத்தைக்‌ கவிச்சக்கரவர்த்தி தீட்டியுள்ளார்‌. முதலாழ்வார்களைப்‌ போன்ற மகான்களின்‌ 
முன்னிலையில்‌ யானையை விழுங்கும்‌ பாம்பும்‌ சாதுவாக விடுகிறது! சத்சங்கம்‌ அத்தனை மகத்துவம்‌ வாய்ந்தது. 
“'படியாய்க்‌ இடந்து உன்‌ பவளவாய்‌ காண்பேனே! என்று திருமலையில்‌ படியாகக்‌ இடந்து வேங்கடவனின்‌ பவளவாய்‌ காண விரும்பிய 
குலசேகர ஆழ்வாரைப்‌ போல, கம்பநாடரின்‌ மலைப்பாம்பு, 
முனிவர்களும்‌, அடியார்களும்‌ கிடந்து இயங்கும்‌ படியாகவே, சாஷ்டாங்கமாகத்‌ தரையில்‌ படுத்துவிடுகிறது. 

**யானையைக்‌ கண்டு மலைப்பாம்பு அஞ்சும்‌!" என்று “திரையன்‌ பாட்டுப்‌' பாடிய புலவர்‌; 
''யானையை அது .விழுங்கி விடும்‌!” என்று பாடிய கவிச்சக்கரவர்த்தி கம்பர்‌; 
இருவரையுமே  சேர்த்து விழுங்கிவிடும்‌ அளவிற்குக்‌ கவித்திறம்‌ படைத்த 
தெய்வப்புலவர்‌ நம்‌ திருமழிசைப்‌ பிரான்‌ என்பது இப்பாசுரத்திலிருந்து தெரிகிறது. எப்படி என்‌ன்‌றீர்களா? 
குறள்‌ போல்‌ அமைந்துள்ள கடைசி இரண்டு அடிகளைப்‌ பாருங்கள்‌-- 

“அருவி மணிவரன்றி வந்து இழிய யானை 
வெருவி அரவு ஒடுங்கும்‌ வெற்பு'” என்கிறார்‌. 
இங்கே ''யானை வெருவி அரவு ஒடுங்கும்‌ வெற்பு” என்பதற்கு இரண்டு விதமாகப்‌ பொருள்‌ கூறலாம்‌: 

௮] யானையைக்‌ கண்டு, (அல்லது அருவி அடித்து வரும்‌ இரத்தினத்தை மின்னல்‌ என நினைத்து] பாம்பு ஒடுங்கும்‌ 
திருமலை. இதுவே திரையன்பாட்டின்‌ கருத்து. 

ஆ] அருவி அடித்து வரும்‌ இரத்தினங்களைக்‌ கொள்ளிக்கட்டைகள்‌ என்று நினைத்து ஒடும்‌ யானை, 
மலைப்பாம்பின்‌ வாயிலே புகுந்து ஒடுங்கி, அடங்கும்‌ திருமலை. 
இதுவே கம்பன்‌ கூறிய கருத்து. ்‌ 

இப்படி இருபுலவர்களும்‌ . விரித்துக்கறிய இருவேறு கருத்துக்களை ஒரேயடியாக ஈரடிகளில்‌ ஒடுக்கி விடுகிறார்‌ திருமழிசையார்‌! 

இயற்கை என்னும்‌ இங்கரும்பை ஆராய்ந்து எடுத்து, கவித்திறன்‌ என்னும்‌ உருளையால்‌ ௮தை நெருக்கிச்‌ சாறு பிழிந்து, 
அதில்‌ பக்திரசம்‌ என்னும்‌ பனிக்கட்டியையும்‌ சேர்த்து, உலக ஆசை என்னும்‌ தாகம்‌ தணிய நமக்குத்‌ தருகின்றனர்‌ இன்கவி பாடிய 
இப்பரம கவிகள்‌! 
 
“இயற்கையை நாம்‌ காண்பது ஒரு வகை. நம்‌ மனத்தில்‌ அஃது ஒருவித சலனத்தையும்‌ ஏற்படுத்துவதில்லை. 
அது கவிஞர்களிடம்‌ பல்வேறு வித சலனங்களை ஏற்படுத்தப்‌ பல்வேறு கற்பனைக்‌ காட்சிகளைப்‌ படைக்கத்‌ தூண்டுகின்றது. 
கவிஞர்கள்‌ பக்தர்களாக இருப்பின்‌ அவர்கள்‌ பிறிதோர்‌ உலகத்தையே படைத்து விடுகின்றனர்‌; 
அதில்‌ தத்துவக்‌ கருத்துக்களையும்‌ மிளிரச்‌ செய்து விடுகின்றனர்‌. 
இவை இயற்கையைத்‌ துய்ப்பவர்கட்கு எழிலைக்‌ காட்டி மகழ்விக்கன்றன; முருகுணர்ச்சியையும்‌ தூண்டுகின்றன. 
பக்திக்கண்‌ கொண்டு நோக்குபவர்கட்கு பரவசத்தை ஏற்படுத்திப்‌ பரமனின்‌ விசுவரூப தரிசனத்தையே காட்டி விடுகின்றது. 
இத்தகைய பாசுரங்களைப்‌ படித்து அநுபவிக்கக்‌ கற்றுக்கொள்ளாவிடில்‌ நமக்கு இவ்வுலகில்‌ ஆறுதல்‌ 
அளிக்கும்‌ பொருளே இல்லை என்று ஆகிவிடும்‌'". 

------------

முதலாழ்வார்கள்‌ கண்ட திருமலை 
சித்‌, அசித்‌, ஈசுவரன்‌ என்று மூவகைப்பட்ட வைணவத்‌ தீத்துவம்‌ 'தத்துவத்‌ திரயம்‌' (திரயம்‌ - மூன்று) எனப்படும்‌. 
சித்‌ (உயிருள்ள ஜீவராசிகள்‌), அசித்‌ (ஜடப்பொருள்‌) ஆகிய இரண்டும்‌ ஈசுவரனுக்கு உடல்‌ என்பர்‌; 
இந்த உறவு 'சரீர - சரீரி பாவனை! எனப்படும்‌. அசித்தும்‌ பகவான்‌ படைப்பாதலால்‌ அதுவும்‌ வழிபாட்டிற்குரியது. 

திருமலையின்‌ நாம்‌ கண்ட வானரங்கள்‌, யானைகள்‌, வேடர்கள்‌, குறவர்கள்‌ 'சித்‌' வகையைச்‌ சேர்ந்தவர்‌. 
மலை 'அசித்‌” ஆகும்‌. வைகுந்தத்திலிருந்த கருடாசலமே கருடபகவானால்‌ ஸ்ரீமத்நாராயணன்‌ ஆணைப்படி கொண்டு வரப்பட்டு பூவுலகில்‌ 
வைக்கப்பட்டதால்‌, இருமலை கருடாசலம்‌' எனப்படும்‌. 
ஆதிசேஷனே சேஷகிரியாசு எழுந்தருளியிருப்பதாகக்‌ கூறுவர்‌, 
ஏழுமலை வெறும்‌ கல்‌ அல்ல; எம்பெருமானின்‌ சத்துவகுணமே இறுகத்‌  திருமலையானது எனலாம்‌. 
எனவே வேங்கடம்‌ 'திருமலையாழ்வார்‌' என்றே போற்றப்படும்‌. 
மிகவும்‌ பிரசித்தி பெற்ற இந்த ஆழ்வார்‌ ஏகப்பட்ட திருநாமங்களுடன்‌ எழுந்தருளியிருக்கிறார்‌. 
சிந்தாமணகிரி, 
ஞானகிரி, 
வேங்கடகிரி, 
ஸ்ரீனிவாச கிரி, 
தீர்த்தகிரி, 
சுவர்ணகிரி, 
ஸ்ரீசைலகிரி, 
ஆனந்தகிரி, 
நாராயணகிரி, 
வைகுந்தகிரி, 
வேதகிரி, 
யமகிரி, 
சிம்மகிரி, 
வராககிரி, 
நீலகிரி என்றும்‌, 
சேஷசைலம்‌, 
கருடாசலம்‌, 
வேங்கடாசலம்‌, 
சேஷாசலம்‌ என்றும்‌; 
வேங்கடாத்ரி, 
நாராயணாத்ரி, 
விருஷபாத்ரி, 
விருஷாத்ரி, 
அஞ்சநாத்ரி, 
சேஷாத்ரி, 
ஆநந்தாத்ரி, என்றும்‌ அழைக்கப்படும்‌ ஏழுமலை. 
இருப்பினும்‌ 
வேங்கடம்‌, திருமலை ஆகிய திருநாமங்களே இதற்கு சாதாரணமாக வழங்கப்படும்‌. 

“சென்று சேர்திரு வேங்கடமாமலை 
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே”” என்று நம்மாழ்வார்‌ இருமலையை மங்களாசாஸனம்‌ செய்திருக்கிறார்‌. 
திருமலையாழ்வாரை வணங்கினாலே  நம்முடைய பாவவினைகள்‌ அழிந்து விடும்‌. 
முதல்‌ நான்கு  ஆழ்வார்கள்‌. திருமலையைக்‌ குறித்துப்‌ பாடியுள்ள சில பாசுரங்களை இங்கு காண்போம்‌. 

எழுவார்‌ விடைகொள்வார்‌ ஈன்துழாயானை 
வழுவா வகை நினைந்து வைகல்‌ - தொழுவார்‌ 
வினைச்சுடரை நந்துவிக்கும்‌ வேங்கடமே! வானோர்‌ 
மனச்சுடரைத்‌ தூண்டும்‌ மலை. (-ஸ்ரீ பொய்கையாழ்வார்‌ -மு.தி. 26) 

வழுவா வகை - பிரியாமல்‌ இருக்க வகை; வைகல்‌ - இனந்தோறும்‌; நந்துவிக்கும்‌ - அணைக்கும்‌, அழிக்கும்‌; 
மனச்சுடர்‌  திருவுள்ளமாகிய விளக்கு. 

சிலர்‌ (எழுவார்‌) செல்வம்‌ வேண்டி ஏழுமலையானை வணங்குவர்‌; 
சிலர்‌ (விடை கொள்வார்‌) கைவல்யம்‌ (மோட்சம்‌) வேண்டி, அதைப்‌ பெற்றதும்‌ அவனை விட்டுப்‌ பிரிவர்‌; 
ஆயினும்‌ பக்தர்கள்‌ இனிய துழாய்‌ (துளசி) மாலைகளணிந்த ஸ்ரீவேங்கடாசலபதியை என்றும்‌ பிரியாமலிருக்க விரும்பி 
௮வனை நாள்தோறும்‌ தொழுவார்கள்‌. அவரவர்களது பாவவினைகளாகிய தீயை ௮ணைக்கக்கூடியது வேங்கடம்‌. 
நித்யஸூரிகளுடைய திருவுள்ளமாகிய விளக்கைத்‌ தூண்டி விளங்கச்‌ செய்வதும்‌ திருமலையே. 
அவதாரத்திற்குப்‌ பிற்பட்டவர்களாகய நாம்‌ தொழுது உய்யுமாறு திருமலையிலே பெருமான்‌ உறைந்துள்ளான்‌. 

கீழ்ப்பல பாசுரங்களில்‌ விபவாவதார சேஷ்டிதங்களை (செயல்களைப்‌) பேசி அநுபவித்த ஆழ்வார்‌, என்றைக்கோ கழிந்த 
அவ்வவதாரங்களின்‌ திருக்குணங்கள்‌ இன்றைக்கும்‌ நன்கு விளங்குமாறு, பின்னானார்‌ (பின்‌ தோன்றியவர்கள்‌) வணங்கும்‌ 
சோதியாக சேவை சாதித்து அருள்கின்ற அர்ச்சாவதாரங்களையும்‌ அனுபவிக்க ஆசை கொண்டு, 
'*தென்னனுயர்‌ பொருப்பும்‌ தெய்வவடமலையும்‌'' என்னும்‌ இரண்டு திருமலைகளுள்‌ 
திருவேங்கடமலையிலே திருவுள்ளஞ்சென்று அவ்விடத்தைப்‌ பேசி அனுபவிக்கிறார்‌ இப்பாட்டில்‌. 
எம்பெருமானிலுங்காட்டில்‌ எம்பெருமானோடு சம்பந்தம்‌ பெற்ற பொருள்களே பரம 
உத்தேச்யமென்று கொள்ளுகிறவர்கள்‌ ஆகையாலே, 
திருவேங்கடமுடையான்‌ வரையில்‌ போகாமல்‌, அவனுடைய சம்பந்தம்‌ பெற்றதான திருமலையோடே தின்று அனுபவிக்கிறார்‌. 

எழுவார்‌: 
இங்கு 'எங்களுக்கு ஐச்வர்யத்தைத்‌ தரவேணும்‌'” என்று பிரார்த்தித்து அது கைப்பட்டதும்‌ எம்பெருமானைவிட்டு எழுந்து 
போகிறவர்கள்‌ என்றாவது, ஐச்வர்யம்‌ வேணுமென்று மேலே மேலே பிரார்த்திக்குமவர்கள்‌ என்றாவது கொள்க. 
இவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது ஐச்வார்ய ப்ராப்திக்கு 
விரோதியான பாவங்களைத்‌ தொலைத்து ஐச்வர்ய விருப்பத்தை நிறைவேற்றுகை. 

விடைகொள்வார்‌ என்றால்‌ விட்டு நீங்குகிறவர்கள்‌ என்கை; 
ஸந்தர்ப்பம்‌ நோக்கி இங்கே கைவல்யார்த்திகளைச்‌ சொல்லுகிறது. 
அவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது ்‌ 
ஆத்மானுபவத்திற்கு விரோதியான பாவங்களைத்‌ தொலைத்துக்‌ கைவல்யாநுபவத்தை நிறைவேற்றுகை. 

ஈன்துழாயானை வழுவாவகை நினைந்து வைகல்‌ தொழுவார்‌ 
ப்ரமைகாத்துகளான பகவத்பக்தர்கள்‌; 
அவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது மாறிமாறிப்‌ பலபிறப்பும்‌ 
பிறக்கும்படியான தீவினைகளைத்‌ தொலைத்து முத்தியளிக்கை 

ஆக வேண்டுவோர்‌ வேண்டினபடியே அநிஷ்ட நிவருத்தியையும்‌ (வேண்டாததை விலக்கியும்‌) இஷ்டப்ராப்தியையும்‌ 
செய்விக்கவல்லது திருவேங்கடம்‌ என்றதாயிற்று. 

வானோர்‌ மனச்சுடரைத்‌ தூண்டும்‌ மலை: 
ஒரு நெருப்பை அணைக்கும்‌; ஒரு நெருப்பை அபிவிருத்தி செய்யும்‌ என்று சமத்காரமாக அருளிச்‌ செய்கிறார்‌. 
வானோர்‌ மனச்சுடரைத்‌ தூண்டுகையாவது - பரமபதத்திலே பரத்வகுணத்தை அனுபவித்துக்‌ கொண்டிருக்கிற நித்யஸூரிகளை, 
இங்கு. வந்து ஸெளலப்ய, ஸெளரில்யாதி குணங்களை அனுபவிக்குமாறு  உத்ஸாஹமூட்டுதலாம்‌. 

நெறியார்‌ குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து 
அறியாது இளங்கிரி என்றெண்ணி - பிரியாது 
பூங்கொடிகள்‌ வைகும்‌ பொருபுனற்‌ குன்றென்னும்‌ 
வேங்கடமே! யாம்‌ விரும்பும்‌ வெற்பு, (-ஸ்ரீ பூதத்தாழ்வார்‌ -இ.தி. 53) 

நெறி - வழி, பாதை; நெறியார்‌ - திருமலை வழியிலே இருப்பவர்கள்‌; குழற்கற்றை - சடைமுடி; இளங்கிரி - சிறியமலை; 
வைகும்‌ - படரும்‌; பொருபுனல்‌ - அலையெறியும்‌ அருவி; வெற்பு ” மலை. 

திருமலைக்குச்‌ செல்லும்‌ வழியில்‌ தவம்‌ செய்யும்‌ தவசியர்களது சடைமுடிக்கற்றைகள்‌ முன்புறம்‌ உயர்ந்தும்‌, 
பின்னே முதுகுப்புறம்‌ தாழ்ந்தும்‌ இருக்கின்றன. மனிதன்‌ என்று அறியாமல்‌, சிறிய மலை என்றெண்ணி, அவ்விடம்‌ விட்டுப்‌ 
பிரியாமல்‌ பூங்கொடிகள்‌ அவர்கள்‌ மீதே படர்கின்றன. 
அலையெறிகின்ற அருவிகளையுடைய “திருமலை” என்று புகழ்பெற்ற வேங்கடமே நாம்‌ விரும்பும்‌ மலையாகும்‌. 

திருவேங்கடமலையை ஒரு சமத்காரம்‌ பொலிய வருணிக்கிறார்‌. திருமலை யாத்திரை வருகின்ற மஹான்கள்‌ பலர்‌ 
“வெறியார்‌ தண்சோலைத்‌ திருவேங்கடமலைமேல்‌ நெறியாங்க்‌ கிடக்கும்‌ நிலையுடையேன்‌ ஆவேனே! என்று ஸ்ரீ குலசேகரப்‌ 
பெருமாள்‌ விரும்பினபடியே, திருமலை ஏறும்‌ வழியிலே மிக்க ஆதாரம்‌ வைத்து, திருமலை மேலே சென்று வாழ்வநிற்காட்டிலும்‌ 
திருமலை வழியிற்‌ கிடப்பதையே பரம உத்தேச்யமாகக்‌ கொண்டு அவ்வழியிலே' :வீற்றிருந்து எம்பெருமானைச்‌ சிந்தை செய்கின்றனர்‌. 
அப்போது மூச்சுவிடுதல்‌, உடம்பு அசைத்தல்‌ முதலியன ஒன்றுஞ்செய்யாதே, வால்மீகி ' முதலிய 
மஹரிஷிகளைப்போலே யோகநிலையில்‌ ஆழ்ந்து கிடக்கின்றனர்‌. 
அன்னவர்களது கூந்தல்‌ கற்றையானது முன்னின்று பின்‌ தாழ்ந்திருப்பதைக்‌ கண்ட பூங்கொடிகளானவை 'சில மனிதர்கள்‌ 
வீற்றிருக்கின்றார்கள்‌' என்றும்‌ அவர்களுடைய குழல்கற்றை தாழ்ந்திருக்கின்றது' என்றும்‌ தெரிந்து கொள்ளாமல்‌, “இவை 
சிறுமலைகள்‌' என்றெண்ணி அவற்றின்‌ மேலே படர்கின்றனவாம்‌. 
படர்ந்து, வால்மீகி முனிவர்மீது புற்று மூடினாற்போலே இந்த பக்தர்களின்‌ மேலும்‌ பூங்கொடிகள்‌ படர்ந்திருப்பது அற்புதமான 
ஒரு காட்சியாய்‌ அமைந்தது. இப்படிப்பட்ட காட்சிக்கு இடமான திருமலையே நாம்‌ விரும்பத்தக்க மலையாம்‌ - என்றாயிற்று. 

வெற்பென்று வேங்கடம்‌ பாடும்‌ வியன்துழாய்‌ 
கற்பென்று சூடும்‌ கருங்குழல்மேல்‌ - மற்பொன்ற 
நீண்டதோள்‌ மால்கிடந்த நீள்கடல்‌ நீராடுவான்‌ 
பூண்டநாள்‌ எல்லாம்‌ புகும்‌. (ஸ்ரீ பேயாழ்வார்‌ -மூ. தி, 69) 

வியன்துழாய்‌ - வியக்கத்தக்க துளசி; மற்பொன்ற - மல்‌ பொன்ற, மல்லர்கள்‌ அழியும்படியான; மால்‌ - திருமால்‌; நீள்கடல்‌ -திருப்பாற்கடல்‌. 

ஆழ்வார்‌ ஒரு தலைவி நிலையை அடைந்து பாடுவது முதலிய செயல்களை அவளது திருத்தாயார்‌ கூறுவதாக இச்செய்யுள்‌ 
அமைந்துள்ளது. இது தாய்ப்பாசுரம்‌ என்பர்‌. 

என்‌ மகளானவள்‌ ஏதேனும்‌ ஒரு மலையைப்‌ பற்றிய பேச்சு நேர்ந்தாலும்‌, திருவேங்கட மலையைப்‌ பற்றிப்‌ பாடுகிறாள்‌. தனது 
கற்புக்குத்‌ தகுந்ததென்று வியக்கத்தக்க துளசியைத்‌ தனது கருங்கூந்தலில்‌ சூடிக்கொள்கிறொள்‌. மல்லர்கள்‌ அழியும்படியான 
நீண்ட தோள்களையுடைய திருமால்‌ பள்ளிகொண்டுள்ள பரந்த திருப்பாற்கடலிலே நீராடுவதற்காக விடிந்த விடிவுகள்‌ தோறும்‌ புறப்படுகின்றாள்‌. 

இப்பாசரத்தில்‌ 'கற்பென்று” பாதிவ்ரத்யத்தையும்‌, 
கருங்குழல்‌” என்று பெண்ணின்‌ கூந்தலையும்‌ கூறுவதால்‌, 
'என்‌ மகள்‌' என்று ஒரு பெண்ணை எழுவாயாகக்‌ கொள்ள வேண்டும்‌. 
மற்பொன்ற: 
மல்லர்களையழித்த; கடலில்‌ புகுந்து மதுகைடபர்‌ என்னும்‌ அசுரர்களைக்‌ கொன்றதையும்‌, கிருஷ்ணாவதாரத்தில்‌ சாணூரன்‌, 
முஷ்டிகளன்‌ என்கிற மல்லர்களை அழித்ததையும்‌ கூறுகிறார்‌. 

பூண்ட நாள்‌ எல்லாம்‌: 
பூண்ட - பூட்டிய) சூரியனுடைய தேரிலே குதிரையைப்‌ பூட்டிய நாள்‌ எல்லாம்‌' என்கிறபடியே, “விடிந்த விடிவுகள்‌ 
தோறும்‌' என்று பொருள்பட்டது. 

எம்பெருமானை அனுபவித்தல்‌ பல வகைப்பட்டிருக்கும்‌: 
அவனுடைய திருநாமங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌, திருக்கல்யாண குணங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌, 
திவ்யசேஷ்டிதங்களை (அவதாரச்‌ செயல்களைச்‌) சொல்லி அனுபவித்தல்‌, வடிவழகை வருணித்து அனுபவித்தல்‌, 
அவனுகந்தருளிய திவ்ய தேசங்களின்‌ வளங்களைப்‌ பேசி அனுபவித்தல்‌, ௮ங்கே அபிமானமுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களின்‌ 
பெருமையைப்‌ பேசி அனுபவித்தல்‌ என்று இப்படிப்‌ பலவகைப்பட்டிருக்கும்‌ பகவதனுபவம்‌. 

இவ் வகைகளில்‌ பரம விலக்ஷ்ணமான மற்றொரு வகையுமுண்டு: அதாவது - தாமான தன்மையை (ஆண்மையை/ 
விட்டுப்‌ பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக்கொண்டு வேற்றுவாயாலே பேசி அனுபவித்தல்‌ (இது அந்யாபதேசம்‌ 
எனப்படும்‌). இப்படி அனுபவிக்கும்‌ இறத்தில்‌ தாய்ப்பாசுரம்‌, தோழிப்பாசுரம்‌, மகள்‌ பாசுரம்‌ என்று மூன்று வகுப்புகளுண்டு. 
இவை நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்களது அருளிச்செயல்களில்‌ (பாட்டுகளில்‌) விசேஷமாக வரும்‌. 
முதலாழ்வார்களின்‌ திருவந்தாதிகளில்‌ ஸ்திரீபாவனையினாற்‌ பேசும்‌ பாசுரம்‌ வருவதில்லை. 
ச்ருங்கார ரஸத்தின்‌ ஸம்பந்தம்‌ சிறிதுமின்றியே கேவலம்‌ சுத்த பக்திரஸமாகவே பாசுரங்கள்‌ அருளிச்செய்தவர்கள்‌ முதலாழ்வார்கள்‌. 
ஆயினும்‌ இப்பாசுரம்‌ ஒன்று தாய்வார்த்தையாகச்‌ செல்லுகிறது. பேயாழ்வாராகிய 
பெண்பிள்ளையின்‌ நிலைமையை அவளைப்‌ பெற்று வளர்த்த திருத்தாயார்‌ பேசுவதாக அமைக்கப்பட்ட பாசுரம்‌ இது. 
“என்னுடைய மகளானவள்‌'' என்ற எழுவாய்‌ இதில்‌ இல்லையாதலால்‌ கற்பித்துக்கொள்ள வேண்டும்‌. 

இப்பிரபந்தத்தில்‌ அந்யாபதேசப்‌ பாசுரம்‌ வேறொன்றும்‌ இல்லாதிருக்க இஃ்தொன்றை மாத்திரம்‌ இங்ஙனே 
தாய்ப்பாசுரமாகக்‌ கொள்ளுதல்‌ சிறவாதென்றும்‌, “என்‌ மகள்‌” என்ற எழுவாய்‌ இல்லாமையாலும்‌ இவ்வர்த்தம்‌ உசிதமன்று என்றும்‌ 
சிலர்‌ நினைக்கக்‌ கூடுமாதலால்‌ இப்பாசுரத்திற்கு வேறுவகையான நிர்வாஹமும்‌ பூர்வர்கள்‌ அருளிச்‌ செய்துள்ளனர்‌. 

எங்ஙனே எனில்‌: ''பாடும்‌, சூடும்‌, புகும்‌! என்ற வினைமுற்றுக்களை முன்னிலையில்‌ வந்தனவாகக்‌ கொண்டு, 
**உலகத்தவர்களே! நீங்கள்‌ ஏதாவதொரு மலையைப்‌ பாடவேண்டில்‌ திருவேங்கடமலையைப்‌ பாடுங்கள்‌; 
ஏதேனும்‌ ஒரு மலரைக்‌ குழலில்‌ சூடவேண்டில்‌ திருத்துழாய்‌ மலரைச்‌ சூடிக்கொள்வதே சேஷத்வத்திற்கு உரியதென்று கொண்டு 
அதனைச்‌ சூடுங்கள்‌; நீராடுவதற்குத்‌ திருப்பாற்கடலிலே சென்று புகுங்கள்‌'' என்பதாக. 

இங்கே பெரியவாச்சான்‌ பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி காண்மின்‌: '*இப்பிரகரணத்தில்‌ (பிரபந்தத்தில்‌) கீமும்‌ மேலும்‌ 
அந்யாபதேசமின்றிக்கே யிருக்க இப்பாட்டொன்றும்‌ இப்படிக்‌ கொள்ளுகிறதென்னென்று நிர்வஹிப்பர்கள்‌... 
திருமலையைப்‌ பாடுங்கோள்‌... திருத்துழாயைச்‌ சூடுங்கோள்‌... விரோதி நிரஸத சீலனானவன்‌ கிடந்த திருப்பாற்கடலிலே முழுகுங்கோள்‌'' என்று. 
திருவேங்கடத்தின்‌ புகழைப்பாடியும்‌, துளசியைப்‌ போற்றிச்‌ சூடியும்‌ வந்தால்‌, நாம்‌ திருப்பாற்கடலிலே நித்யம்‌ நீராடலாம்‌; 
நிச்சயம்‌ வைகுந்தம்‌ புகுவோம்‌ என்பது குறிப்பு ... 

வெற்பென்று வேங்கடம்‌ பாடினேன்‌ வீடாக்கி 
நிற்கின்றேன்‌ நின்று நினைக்கின்றேன்‌ - கற்கின்ற 
நூல்வலையில்‌. பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்‌ 
கால்வலையில்‌ பட்டிருந்தேன்‌ காண்‌ (ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ -நா. தி, 40), 
வீடு - மோட்சம்‌; நூல்வலை - வேதங்களாகிய வலை; நூலாட்டி - வேதமாகிய நூலில்‌ போற்றப்படும்‌ லட்சுமி; 
கேள்வனார்‌ - கணவர்‌, இங்கே திருமால்‌. 
 
மலைகளின்‌ பெயர்களைச்‌ சொல்லி வருகையில்‌, தற்செயலாக வேங்கடமலை என்றேன்‌; இதன்‌ பலனாகவே 
மோட்சம்‌ நிச்சயம்‌ என்றுணர்ந்து நிற்கின்றேன்‌... “*நாம்‌ சொன்ன சிறிய சொல்லுக்குப்‌ பெரிய பேறு கிடைத்த பாக்கியம்‌ 
எத்தகையது!” என்று நினைத்து, வியந்து, மலைத்துப்‌ போனேன்‌! 
ஓதப்படுகின்ற வேத சாஸ்திரங்களாகிய வலையில்‌ அகப்பட்டிருக்கும்‌ லக்ஷ்மீநாதனின்‌ திருவடிகளாகிய வலையில்‌ 
அகப்பட்டு நிலைத்து நிற்கின்றேன்‌. 

"மலை' என்று வருகிற பெயர்களையெல்லாம்‌ அடுக்காகச்‌ சொல்லுவோம்‌ என்று விநோதமாக முயற்சி செய்து 'பசுமலை, 
குருவிமலை' என்று பலவற்றையும்‌ சொல்லி வருகிற அடைவிலே, என்னையும்‌ அறியாமல்‌ 'திருவேங்கடமலை' என்று 
என்‌ வாயில்‌ வந்துவிட்டது; இவ்வளவையே கொண்டு எம்பெருமான்‌ என்னைத்‌ திருவேங்கடம்‌ பாடினவனாகக்‌ கணக்கு 
செய்து கொண்டான்‌ என்பது இதன்‌ கருத்து. 

நின்று நினைக்கின்றேன்‌: 
நாம்‌ புத்திபூர்வமாக ஒரு நல்ல சொல்லும்‌ சொல்லாது இருக்கவும்‌, எம்பெருமான்‌ தானே மடிமாங்காயிட்டுத்‌ திருவுள்ளம்‌ 
பற்றுகிற இது என்ன ஆச்சரியம்‌! என்று இதனையே அநுஸந்தித்து ஈடுபட்டு நின்றேன்‌ என்கை. 
கால்வலையிற்‌ பட்டிருந்தேன்‌? 
மூன்றாமடியில்‌ சாஸ்திரங்களை எம்பெருமானுக்கு வலையாகவும்‌, ஈற்றடியில்‌ அவ்வெம்பெருமான்‌ திருவடிகளைத்‌ 
தமக்கு வலையாகவும்‌ அருளிச்‌ செய்தார்‌. எம்பெருமானை சாஸ்திரங்களிலிருந்து எப்படிப்‌ பிரிக்க முடியாதோ அப்படியே 
என்னை அப்பெருமான்‌ திருவடிகளிலிருந்து பிரிக்கமுடியாது என்றவாறு. 
எம்பெருமான்‌ ஒரு வலையில்‌ அகப்பட்டான்‌, -நானொரு வலையில்‌ அகப்பட்டேன்‌ என்று சமத்காரமாகச்‌ சொல்லுகிறபடி. 

வேதங்களையும்‌, ஸ்ம்ருதி இதிகாச புராணங்களையும்‌ சம்பிரதாயமாக ஓதும்‌ முறையைப்‌ பின்பற்றி ஆராய்ந்தபோது, 
எம்பெருமானும்‌, பெரிய பிராட்டியும்‌ (லட்சுமியும்‌) இருவரும்‌ நமக்குத்‌ தெய்வம்‌ என்ற தெளிவு உண்டாயிற்று... சரணாகதரைக்‌ 
காப்பதாகக்‌ கூறி ௮வன்‌ அதுபடி நடக்கவில்லையாகில்‌ நூலாட்டி (லட்சுமி) அந்நூல்களே  * எதற்கென்று கேள்வனை 
(ஸ்ரீநிவாஸனைக்‌) கேட்பாள்‌. ்‌ 
ஏதோ வெற்பொன்றைப்‌ பாட நினைத்த போதும்‌ அவனது வேங்கடத்தைப்‌ பாடும்படியாயிற்று, அதனால்‌ அதை எனக்கு 
வீடாக்கினான்‌. அதே மோட்சத்தானம்‌. இப்படி எனக்கு வாய்த்ததற்கு யானே வியந்து அசையாது நின்று என்ன 
வாத்ஸல்யமென விசாரியா நின்றேன்‌ (ஆராய்ந்தேன்‌). இனி நிலைத்து நின்று இடையூறின்றி வேங்கடத்தையே தியானிக்கவும்‌ 
வாய்த்தது என்றபடி. 
இங்கே பாடுதல்‌, நிற்றல்‌, நினைத்தல்‌ என்று வாக்கு, காயம்‌, மனோரூப முக்கரணங்களின்‌ வியாபாரங்கள்‌ 
(செய்கைகள்‌) மொழியப்‌ பெற்றன. 

வேங்கடமே விண்ணோர்‌ தொழுவதும்‌ மெய்ம்மையால்‌ 
வேங்கடமே மெய்வினை நோய்‌ தீர்ப்பதுவும்‌ - வேங்கடமே 
தானவரை வீழத்தன்‌ ஆழிப்படைதொட்டு 
வானவரைக்‌ காப்பான்‌ மலை, (ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ -நா. தி. 48) 

மெய்ம்மையால்‌ - உண்மையான பக்தியுடனே; மெய்வினை நோய்‌ - முன்பிறவியில்‌ செய்த பாவவினைகளால்‌ உடலை வருத்தும்‌ நோய்‌; 
தானவர்‌ - அசுரர்கள்‌; ஆழிப்படை - சக்கராயுதம்‌; வானவர்‌ - தேவர்கள்‌. 

நித்யஸூரிகளால்‌ உண்மையான பக்தியூடனே தொழப்படுவது வேங்கடமே. 
பாவ வினைகளால்‌ விளைந்து உடலை வருத்தும்‌ கர்மவியாதிகளைத்‌ தீர்ப்பதும்‌ வேங்கடமே. 
அசுரர்கள்‌ அழியும்படி, சக்கராயுதத்தை ஏவி, தேவர்களைக்‌ காத்தருளும்‌ பெருமானுடைய திருமலையும்‌ வேங்கடமே. 
வேங்கடமே விண்ணோர்‌ தொழுவதும்‌: விண்ணோர்‌ வைகுந்தத்திலிருக்கும்‌ முக்தர்களும்‌, நித்யஸூரிகளும்‌. 

 “ஸதா பச்யந்தி ஸூரய:'” என்கிறபடியே நித்யஸூரிகள்‌ 
பரமபதத்திலே எம்பெருமானை இடைவிடாது அநுபவிக்கப்பெற்றாலும்‌, அங்கே பரத்வத்துக்கு உரிய மேன்மைக்‌ 
குணங்களை அநுபவிக்கலாகுமேயன்றி ஸெளலப்ய (எளிதில்‌ அணுகும்‌ தன்மை) ஸெளரில்யங்களுக்குப்‌ (வேறுபாடின்றிப்‌ 
பழகும்‌ தன்மை) பாங்கான எளிமைக்‌ குணங்களை இத்நிலத்திலே வந்து அநுபவிக்க வேண்டியிருப்பதால்‌ அந்த லோதி குணங்களை 
அநுபவிப்பதற்காகத்‌ திருமலையில்‌ வந்து தொழும்படியைக்‌ கூறுவது முதலடி. 

வேங்கடமே மெய்வினை நோய்‌ நீர்ப்பதுவும்‌: 
இது 'வேங்கடம்‌' என்பதற்கு விளக்கம்‌. வேம்‌ - பாவம்‌; கடம்‌ - எரித்தல்‌. 
தேவர்களுக்கு அசுரர்களால்‌ .நேரும்‌ துன்பங்களைத்‌ திருவாழியால்‌ (சக்கரத்தால்‌ தொலைத்துக்‌ காத்தருளும்‌ எம்பெருமான்‌,
அப்படியே நம்‌ போன்ற பக்தர்களுடைய துன்பங்களையும்‌ துடைக்கவே எழுந்தருளியிருக்கும்‌ இடம்‌ திருமலை என்பன பின்னடிகள்‌. 

“'வேங்கட அம்ருத பீஜம்‌ கடமைச்வர்யம்‌ உச்யதே'' என்றபடி வேங்கடம்‌ என்ற சொல்லுக்கு மோட்சம்‌, ஐச்வர்யம்‌ இரண்டுமான 
மலையென்ற பொருளுமுண்டு. மோட்சமென்பதற்கு ஏற்ப விண்ணோர்‌ தொழுகின்றனர்‌. 
ஐச்வர்யம்‌ என்பதற்கிணங்க வானவர்‌ வணங்குகின்றனர்‌. 
வினைகளை எரிப்பதால்‌ வேங்கடம்‌ என்ற பொருளைக்‌ கருதி அனைவரும்‌ இதனையே வணங்கி 
எல்லாத்‌ துயரங்களையும்‌ தீர்த்துக்கொள்வது கண்கூடு. 
ஆகவே எல்லாவற்றிற்கும்‌ மேலானது. இவ்வாறு வேங்கடம்‌ என்ற சொல்லின்‌ பொருளைக்‌ கருதி மூன்றுதரம்‌ வேங்கடமென்றது. 

-----------
 
முதலாழ்வார்கள்‌ கண்ட திருவேங்கடவன்‌ 

முதலாழ்வார்கள்‌ மாபெரும்‌ வேங்கடேச பக்தர்கள்‌ என்பது அவர்கள்‌ பாடிய திருவந்தாதியிகளிலிருந்து நன்கு 
வெளிப்படுகிறது. மொத்தம்‌ 300 பாசுரங்களில்‌, இவர்கள்‌ வேங்கடவனைக்‌ குறித்துப்‌ பாடியவை 39;
ஸ்ரீ ரங்கநாதனைக்‌ குறித்தவை 7; 
திருமழிசையாழ்வார்‌ சரிசமமாகவே, முறையே 15,  பாடல்களைப்‌ பாடியுள்ளார்‌; 
இந்நால்வரும்‌ வேங்கடவனைப்‌ பாடிய பாசுரங்களில்‌ சிலவற்றை இங்கு காண்போம்‌. 

உணர்வாரார்‌ உன்பெருமை? ஊழிதோறு ஊழி 
உணர்வாரார்‌ உன்‌ உருவம்‌ தன்னை? உணர்வாரார்‌? 
விண்ணகத்தாய்‌! மண்ணகத்தாய்‌! வேங்கடத்தாய்‌! நால்வேதப்‌ 
பண்ணகத்தாய்‌! நீ கிடந்தபால்‌. (ஸ்ரீ பொய்கையாழ்வார்‌ )

உணர்வாரார்‌ - உணரக்கூடியவர்‌ யார்‌? ஊழி - பிரளயம்‌, காலவெள்ளம்‌; விண்ணகம்‌ - வைகுந்தம்‌. 

வைகுண்டத்தில்‌ இருப்பவனே! மண்ணுலகில்‌ அவதரித்தவனே! வேங்கடத்தில்‌ நின்று அருள்பவனே! 
ஸ்வரப்ரதானமான நான்கு வேதங்களின்‌ பண்கள்‌ மயமானவனே! 
உன்‌ பெருமையை ழி முதல்‌ அடுத்த ஊழிவரை காலமெல்லாம்‌ ஆராய்ந்தாலும்‌ யார்‌ அறியவல்லார்‌? உனது திவ்யாத்ம 
சொரூபத்தைத்தான்‌ யார்‌ அறியவல்லார்‌? நீ திருப்பாற்கடலில்‌ பாம்பணைமேல்‌ கிடக்கும்‌ நிலையைத்தான்‌ யார்‌ அறியவல்லார்? 

“திருமாலை அறிவதே அறிவு!" என்று கீழ்ப்பாட்டில்‌ அருளிச்செய்த ஆழ்வார்‌ ௮றிவுக்கு எல்லைநிலம்‌ எம்பெருமான்‌ 
அல்லது இல்லை என்னும்படி இருந்தாலும்‌, அவன்‌ தன்மை அறிவார்தான்‌ இல்லை என்று இப்பாட்டில்‌ அருளிச்செய்கிறார்‌. 
இவ்வாறிருப்பது வஸ்துவின்‌ (திருவேங்கடவனின்‌) சுபாவமே ஒழிய, அறிவின்‌ குறைவன்று என்பதும்‌ அறியத்தக்கது. 
*'உணர்வாரார்‌?'” என்ற வினாவினால்‌ ஸர்வஜ்ஞனான உன்னாலும்‌ உன்‌ தன்மை அறியமுடியாது என்பதும்‌ காட்டப்படும்‌.
''தனக்கும்‌ தன்‌ தன்மை அறிவரியான்‌'' என்றார்‌ நம்மாழ்வாரும்‌. 

உளதென்று இறுமாவார்‌ உண்டு இல்லை என்று 
தளர்தல்‌ அதன்‌ அருகுஞ்சாரார்‌ - அளவரிய 
வேதத்தான்‌ வேங்கடத்தான்‌ விண்ணோர்‌' முடிதோயும்‌ 
பாதத்தான்‌ பாதம்‌ பயின்று. (ஸ்ரீ பூதத்தாழ்வார்‌ -இ.தி. 45) 

உளது என்று - செல்வம்‌, பகவானை வழிபடும்‌ பேறு தமக்கு உள்ளது என்று; இறுமாவார்‌ - கர்வம்‌ கொள்ளமாட்டார்‌; 
விண்ணோர்‌ - நித்யஸூரிகள்‌; பயின்று - பழக. 

அளவிட முடியாதபடி அனந்தமாயுள்ள வேதங்களால்‌ போற்றப்படும்‌ திருவேங்கடமுடையான்‌, நித்யஸூரிகளது 
தலைமுடிகள்‌ படியும்படி பணியப்பெற்ற திருவடிகளை யுடையவன்‌. ஸ்ரீவேங்கடாசலபதியினுடைய பாதங்களை 
வணங்கிப்‌ பழகிய பக்தர்கள்‌ தமக்குச்‌ செல்வமோ, அவனை வணங்கும்‌ 'பேறோ உள்ளதென்று கர்வம்‌ கொள்ளமாட்டார்கள்‌; 
அவை நேற்று இருந்து இன்று இல்லையென்னும்படி அழிந்தன” என்னும்‌ மனத்தளர்ச்சியின்‌ பக்கமே செல்லமாட்டார்கள்‌. 
வேங்கடேச பக்தர்கள்‌ தம்முடைய பணம்‌, பதவி பறிபோனாலும்‌, மனம்‌ தளர்ந்து அவனைத்‌ தொழுவதைக்‌ கைவிட 
மாட்டார்கள்‌; ''ஸ்ரீ வேங்கடேச சரணெள சரணம்‌ ப்ரபத்யே” (ஸ்ரீ வேங்கடேசனின்‌ இரண்டு திருவடிகளையும்‌ சரணடைகிறேன்‌) 
என்றே எப்பொழுதும்‌ இருப்பார்கள்‌. 
இத்தகைய ''ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி,” 'வேங்கடத்தான்‌ விண்ணோர்‌ முடிதோயும்‌ பாதத்தான்‌ 
பாதம்‌ பயின்று என்பதனால்‌ கூறப்பட்டது. 
வேங்கடத்தான்‌ பாதத்தான்‌ - ஸ்ரீ வேங்கடேச சரணெள; பாதம்‌ பயின்று - சரணம்‌ 
ப்ரபத்யே, சரணமாகப்‌ பற்றுகிறேன்‌. 
எனவே இப்பாசுரம்‌ ஸ்ரீ வேங்கடேசப்‌ பிரபத்திக்கு இலக்கணம்‌ கூறுகிறது. 

உளதென்று இறுமாவார்‌ உண்டில்லை என்று: 
இதற்கு இருவிதமாகப்‌ பொருள்‌ கூறப்படுகிறது; 
செல்வத்தைக்‌ குறித்துச்‌ செருக்கடைதல்‌; நித்யஸூரிகள்‌ முடி. தோயும்‌ 
ஸ்ரீ வேங்கடேசனின்‌ பக்தர்கள்‌ நாம்‌ என்று பெருமைப்படுதல்‌ என்று. 

பாகவதர்களின்‌ பெருமையைப்‌ பேசுகிறார்‌. 
எம்பெருமானுடைய திருவடிகளிற்‌ பழகுகின்ற பாகவதர்கள்‌ செல்வம்‌ படைத்தாலும்‌ செருக்குக்‌ கொள்ள மாட்டார்கள்‌; இருந்த 
செல்வம்‌ அழிந்து போனாலும்‌, “ஐயோ! ஏழைமை வந்துவிட்டதே!'' என்று சிறிதும்‌ தளர்ச்சியடைய மாட்டார்கள்‌. 
களிப்பும்‌ கவர்வுமற்று' என்ற பாசுரத்திற்‌ சொன்னபடி லாபநஷ்டங்களில்‌ , ஒருபடிப்பட்ட சிந்தை உடையராயிருப்பர்‌. 
““முனியார்‌ துயரங்கள்‌ முந்திலும்‌, இன்பங்கள்‌ மொய்த்திடினும்‌ கனியார்‌... எங்கள்‌ இராமாதுசனை வந்தெய்தினர்‌'' (இராமாநுச 
நூற்றந்தாதி, 17) என்ற ஸ்ரீராமாநுஜபக்தனைப்‌ போன்றிருப்பர்‌ பகவத்பக்தர்களும்‌. 

தாழ்சடையும்‌ நீள்முடியும்‌ ஒண்மழுவும்‌ சக்கரமும்‌ 
சூழவும்‌ பொன்நாணும்‌ தோன்றுமால்‌ - சூழும்‌ 
திரண்டருவி பாயும்‌ திருமலைமேல்‌ எந்தைக்கு 
இரண்டுருவும்‌ ஒன்றாய்‌ இசைந்து (ஸ்ரீ பேயாழ்வார்‌ -மூ.தி. 63) 

தாழ்சடை, ஒண்மழு, சூழ்‌ அரவு - சிவனுக்குரியவை. 
நீள்முடி, சக்கரம்‌, பொன்‌ நாண்‌ - விஷ்ணுவுக்குரியவை. 

தாழ்ந்த சடாமுடியும்‌, நீண்ட மகுடமும்‌; அழகிய மழுவாயுதமும்‌, சக்கரமும்‌; சுற்றிலும்‌ அணிந்துள்ள 
நாகாபரணமும்‌, பொன்‌ அரைநாணும்‌; நாற்புறமும்‌ அருவிகள்‌ இரண்டு பாயும்‌ திருமலைமேல்‌ எழுந்தருளியிருக்கும்‌ எந்தை ஸ்ரீ 
வேங்கடேசனுக்கு இவ்விதம்‌ சிவன்‌, விஷ்ணு ஆகிய இருவரின்‌ உருவமும்‌ ஒரே வடிவமாக அமைந்து விளங்குகிறது; என்ன ஆச்சரியம்‌! 

இப்பாசுரத்திற்கு அவரவர்கள்‌ விருப்பப்படி பலவாறாகப்‌ பொருள்‌ கூறுவர்‌. சைவர்கள்‌ சங்கர - நாராயணனைக்‌ கூறுவதாகக்‌ 
கொள்வர்‌. இதையொட்டியே சைவ - வைணவர்களுக்கிடையே திருமலை யாருடையது என்று ஒரு பிரச்னை ஏற்பட்டதாகவும்‌, 
ஸ்ரீ ராமானுஜர்‌ அது வைணவருடையதே என்று நிலைநாட்டியதாகவும்‌ வரலாறு கூறுகிறது. ஸ்ரீ ராமானுஜர்‌ ஸ்ரீ 
வேங்கடேசன்‌ சன்னிதியில்‌ பலர்‌ காண சங்கு, சக்கரமும்‌, சிவனுக்குரிய ஒண்மழுவும்‌, திரிசூலமும்‌ வைத்து, எவையேனும்‌ * 
ஒன்றை ஏற்றுப்‌ பிரச்னையை தீர்த்து வைக்கும்படி இறைவனை வேண்டி, இரவில்‌ கதவை மூடினார்‌. மறுநாள்‌ 
திருவேங்கடமுடையான்‌ சங்கு, சக்கரங்களுடன்‌ காட்சி தந்ததாகக்‌ கூறுவர்‌. 

வேங்கடவன்‌ நாகத்தை அணிந்திருப்பது வாஸ்தவமே. 
எம்பெருமானின்‌ க்ரீடத்துக்குக் கீழ்  காணப்படும்‌ நீண்ட ரேகையைச்‌ தாழ்சடையாக்‌. கொள்வது கற்பனை என்பர்‌ வைணவர்‌. 
இப்பாசுரத்தையே இடைச்செருகல்‌, பேயாழ்வார்‌ பாடியதாக இருக்க முடியாது என்றே சிலர்‌ கூறுவர்‌. 

இது எங்நனமிருப்பினும்‌ பேயாழ்வார்‌ சைவ வைணவ சமரச  நோக்கு உடையவர்‌ என்பதற்கு இப்பாசுரம்‌ சான்றாக அமைகறது. 
இருப்பினும்‌ இவர்‌ திருமாலே முழுமுதற்‌ கடவுள்‌ என்று  கொண்டு, சைவராக இருந்த திருமழிசையாரை வாதத்தில்‌ வென்று 
வைணவராக்கனவர்‌ என்பதையும்‌ நினைவுகூர வேண்டும்‌. 

இன்று அவைதீக சமயங்களின்‌ தீவிரப்‌ பிரசாரத்தினாலும்‌, மதமாற்று முயற்சிகளாலும்‌ வைதீக மதங்களான சைவத்திற்கும்‌ 
வைணவத்திற்கும்‌ இடையே முன்பொரு காலம்‌ நிலவிய பூசல்களும்‌, வாக்குவாதங்களும்‌ , மறைந்து சமரச நோக்கே 
மிகுந்திருப்பது மூழ்ச்சிக்குரிய விஷயமாகும்‌, 
ஸ்ரீ வேங்கடேஸ்வரன்‌ என்று சைவர்களாலும்‌, ஸ்ரீநிவாஸன்‌ என்று வைணவர்களாலும்‌, 'பாலாஜி' என்று சாக்தர்களாலும்‌ மற்றும்‌ 
அவைதீக சமயத்தினராலும்‌ கூட வணங்கப்படும்‌ கண்கண்ட தெய்வமாகத்‌ திருவேங்கடமுடையான்‌ திகழ்கின்றது கண்கூடு, 

சென்று வணங்குமினோ சேணுயர்‌ வேங்கடத்தை: 
நின்று வினைகெடுக்கும்‌ நீர்மையால்‌ - என்றும்‌ 
கடிக்கமல நான்முகனும்‌ கண்மூன்றத்தானும்‌ 
அடிக்கமலம்‌ இட்டேத்தும்‌ அங்கு (ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ -நா.தி. 42) 

சேண்‌ - உயர்ந்த; சேணுயர்‌ - மிகவுயர்ந்த; நீர்மை - இயல்பு, சுபாவம்‌; கடி - வாசனை மிகுந்த; கமலம்‌ - தாமரை; 
நான்முகன்‌ பிரம்மா) கண்மூன்றத்தான்‌ - முக்கண்ணன்‌, சிவன்‌. 
 
(அன்பர்களே!) மிகவும்‌ உயர்ந்த வேங்கடத்தைச்‌ சென்று வணங்குங்கள்‌! அத்திருமலை, இயல்பாகவே பாவங்களை நின்று போக்குவது. 
அங்கு பரிமளம்‌ மிக்க தாமரையில்‌ பிறந்த பிரம்மனும்‌, முக்கண்ணனாகிய சிவனும்‌, என்றும்‌ ஸ்ரீ வேங்கடாசலபதியினுடைய திருவடிகளில்‌, 
தாமரைப்‌ பூக்களை சமர்ப்பித்து, துதித்துக்கொண்டிருப்பர்‌. வேங்கடத்தை நின்று வினைகெடுக்கும்‌ நீர்மையால்‌: 

வேம்‌ - பாவங்கள்‌, வினை. கடம்‌ - எரிப்பது, கெடுக்கும்‌; “வேங்கடம்‌” என்பதற்குப்‌ பொருள்‌ கூறியிருக்கிறார்‌. 
“வெங்கொடும்‌ பாவங்களெல்லாம்‌ வெந்திடச்‌ செய்வதால்‌ 
நல்மங்கலம்‌ பொருந்துஞ்சர்‌ வேங்கடமலையானதென்று -என்கிறது ஒரு புராணச்‌ செய்யுள்‌. 

பிரம்மாதி தேவர்களே “புஷ்பமண்டபம்‌' என்றே புகழ்பெற்ற பொன்மலையில்‌ ஸ்ரீ வேங்கடேசனது திருவடிகளில்‌ புஷ்பாஞ்சலி 
செய்து, தங்கள்‌ அதிகாரத்தைப்‌ பெற்றிருக்கின்றனர்‌. நீங்களும்‌ அவ்விதமே செய்து உய்வடைவுங்கள்‌ என்று உபதேசிக்கிறார்‌. 
சமரச . நோக்குடைய பேயாழ்வாரைப் போல்‌ அல்லாது, திருமழிசையார்‌ வீரவைணவர்‌ என்பதும்‌ இதிலிருந்து தெரிகிறது. 

முதலாழ்வார்கள்‌ வாழித்‌ திருநாமங்கள்‌ (அப்பிள்ளை திருவாய்மலர்ந்தருளியது) 

அரசனுக்குப்‌ பிரஜைகள்‌ ''வாழ்க, வாழ்க!”” என்று வாழ்த்து தெரிவிப்பது போலவே, இறைவனுக்கும்‌, மெய்யடியார்களுக்கும்‌ 
வாழ்த்துக்கூறுவது மரபாகும்‌. வைணவத்தில்‌ ஆழ்வார்களுக்கும்‌, ஆசாரியர்களுக்கும்‌ இவ்விதம்‌ வாழித்‌ திருநாமங்கள்‌ கூறுவது 
வழக்கில்‌ உள்ளது. முதலாழ்வார்களைக்‌ குறித்த இந்நூல்‌ அவர்களுடைய வாழித்‌ திருநாமங்களுடன்‌ நிறைவடைகறது. 

செய்ய துலா ஓணத்தில்‌ செகத்துதித்தான்‌ வாழியே
திருக்கச்சி மாநகரம்‌ செழிக்க வந்தோன்‌ வாழியே 
வையந்தகளி நூறும்‌ வகுத்து உரைத்தான்‌ வாழியே 
வனசமலர்க்‌ கருவதனில்‌ வந்தமைந்தான்‌ வாழியே 
வெய்யகதிரோன்‌ தன்னை விளக்கிட்டான்‌ வாழியே 
வேங்கடவர்‌ திருமலையை விரும்புமவன்‌ வாழியே 
பொய்கைமுனி வடிவழகும்‌ பொற்பதமும்‌ வாழியே 
பொன்முடியும்‌ திருமுகமும்‌ பூதலத்தில்‌ வாழியே. 

அன்பேதகளி நூறும்‌ அருளினான்‌ வாழியே 
ஐப்பசியில்‌ அவிட்டத்தில்‌ அவதரித்தான்‌ வாழியே 
நன்புகழ்சேர்‌ குருக்கத்தி நாண்மலரோன்‌ வாழியே 
நல்ல திருக்கடன்மல்லை நாதனார்‌ வாழியே 
இன்புருகு சிந்தை திரியிட்ட பிரான்‌ வாழியே 
எழில்‌ ஞானச்சுடர்‌ விளக்கேற்றினான்‌ வாழியே 
பொன்புரையும்‌ திருவரங்கர்‌ புகழுரைப்போன்‌ வாழியே 
பூதத்தார்‌ தாளிணை இப்பூதலத்தில்‌ வாழியே 

திருக்கண்டேன்‌ என நூறும்‌ செப்பினான்‌ வாழியே 
சிறந்த ஐப்பசியில்‌ சதயம்‌ செனித்த வள்ளல்‌ வாழியே 
மருக்கமழும்‌ மயிலைநகர்‌ வாழ வந்தோன்‌ வாழியே 
மலர்க்கரிய நெய்தல்தனில்‌ வந்துதித்தான்‌ வாழியே 
நெருக்கிடவே இடைகழியில்‌ நின்ற செல்வன்‌ வாழியே 
நேமிசங்கன்‌ வடிவழகை நெஞ்சில்‌ வைப்போன்‌ வாழியே 
பெருக்கமுடன்‌ திருமழிசைப்பிரான்‌ தொழுவோன்‌ வாழியே 
பேயாழ்வார்‌ தாளிணையிப்‌ பெருநிலத்தில்‌ வாழியே. 

“ஸ்ரீவேங்கடேச பாகவதம்‌" என்னும்‌ இந்தப்‌ புத்தகத்திலுள்ள குற்றம்‌, குறைகளைப்‌ பொறுத்து அருளும்படி, 
திருவேங்கடமுடையானை வேண்டிக்‌ கொள்வதோடு நூல்‌ நிறைவடைகிறது;  

ஸ்ரீவேங்கடேச நத்தம்‌ 
அஞ்ஞானினா மயா தோஷான்‌ அசேஷான்‌ விஹிதான்‌ ஹரே 
ச்ஷமஸ்வத்வம்‌ க்ஷமஸ்வத்வம்‌ சேஷசைல சிகாமணே 
அறியாமையால்‌ புரி தீவினை புரியாதுளத்‌ தற நீக்கிடு! 
பொறுத்தே அருள்‌! பொறுத்தே அருள்‌! பெருமாமணி வேங்கடவா! 

--------
சுதர்சனச்‌ சக்கரம்‌, பாஞ்சசன்னியம்‌, என்கிற திருச்சங்கு, சார்ங்கம்‌  என்கிற வில்‌ ஆகிய திருமாலின்‌ முப்படைகளை 
ஆண்டாள்‌  மின்னல்‌, இடி, மழையின்‌ வேகம்‌ ஆகியவற்றுக்கு உவமைகளாகச்‌  சொல்கிறாள்‌. 
திருக்கோவலூர்‌ மழையோ, எம்பெருமானுடைய  முப்படைகளின்‌ அவதாரங்களாகிய முதலாழ்வார்கள்‌ மீதே தன்‌ 
கை வரிசையைக்‌ காட்டியது! 
பாஞ்சசன்னியப்‌ பொய்கையார்‌;  கதாயுத பூதத்தார்‌; நாந்தகப்‌ பேயார்‌ ஆூய மூவரும்‌ 
அடைமழையில்‌ சிக்கியபோது, ஆண்டாள்‌ மார்கழி. நீராடி மூழ்ந்ததைப்போல்‌ ஆனந்தப்பட்டார்களோ என்னவோ 
தெரியாது; ஆயினும்‌ மழையில்‌ ஒதுங்குவதற்கு ஒரு புகலிடம்‌ தேடி, இருளில்‌ அலைந்தனர்‌. 

தங்களுடைய உலகநிலையைப்‌ பற்றிய  நினைவேயில்லாமல்‌, ஒருவரையொருவர்‌ விசாரித்து அறிந்து 
கொண்டு, திருமால்‌ பெருமையைப்‌ பேசி ம$ழ்ந்த வண்ணம்‌  இருந்தனர்‌. இத்தகைய இறையன்பர்கள்‌-- 

“செங்கண்‌ திருமுகத்துச்‌ செல்வத்‌ திருமாலால்‌ எங்கும்‌ திருவருள்‌ பெற்று இன்புறுவர்‌' 
என்று கோதை பலசுருதியாகப்‌ பாடியுள்ளாள்‌. 
எனவே இவர்கள்‌  மத்தியில்‌ திருமாலும்‌ வந்து சேர்ந்ததில்‌ ஆச்சரியமில்லை. 

இடைகழி அவ்வளவு சிறியது! ஸ்ரீ  வேங்கடாசலபதியை சேவிக்கும்போது இங்ஙனமே பக்தர்கள்‌ 
இன்று நெருக்கமாக நிற்க நேரிடுகிறது. நெரிசலுக்குப்‌ பிறகே  தரிசனம்‌! 
முதலாழ்வார்களும்‌ எம்பெருமானை இவ்விதமே  அனுபவித்தனர்‌. 

திருமாலின்‌ நான்கு அர்ச்சை நிலைக்‌ கோலங்களைப்‌  பொய்கையாழ்வார்‌ 
''நின்றான்‌ இருந்தான்‌ கிடந்தான்‌ நடந்தானே'"  என்று பாடியுள்ளார்‌. 
திருப்பதி கோவிந்தராஜப்‌ பெருமாள்‌  மேற்கொண்டுள்ளது கிடந்த கோலம்‌; 
திருமலை ஆதிவராக மூர்த்தி இருந்த (அமர்ந்த) கோலத்தில்‌ சேவை சாதிக்கிறார்‌. 
திருமலை வேங்கடவன்‌ ஏற்றுள்ளது நின்ற நிலை. 
இம்மூன்று நிலைகளையும்‌  தொடர்ந்து இடைகழியில்‌ ஆழ்வார்களும்‌ மேற்கொள்ள நேரிட்டது அதிசயிக்கத்தக்கது! 
முதலில்‌ பொய்கையார்‌ கடந்தார்‌; 
பூதத்தார்‌ வந்ததும்‌ இருவரும்‌ இருந்தனர்‌; 
மூன்றாமவர்‌ வந்ததும்‌  மூவரும்‌ நின்றனர்‌. 
திருக்கோவலூரில்‌ திரிவிக்கிரமன்‌ உலகளந்த நிலையில்‌ இருப்பது “நடந்த கோலம்‌' எனப்படும்‌. 
பெயருக்கேற்றவாறே கோவலூரில்‌ எம்பெருமான்‌ நடந்தே வந்து  ஆழ்வார்களுக்குத்‌ தெரியாமல்‌ அவர்கள்‌ மத்தியிலே புகுந்தான்‌ 
பொய்கைப்பிரான்‌ முதல்‌ திருவந்தாதி 85-ஆவது பாசுரத்தில்‌ 
இடைகழியில்‌ புகுந்து நெருக்கிய இறைவனைப்‌ பாடியுள்ளார்‌: 

“நீயுந்‌ திருமகளும்‌ நின்றாயால்‌ குன்றெடுத்துப்‌ 
பாயும்‌ பனி மறைத்த பண்பாளா!- வாசல்‌ 
கடை கழியா, உள்புகாக்‌ காமர்பூங்‌ கோவல்‌ 
இடைகழியே பற்றியினி.'” (86)
முந்தைய பாசுரத்தில்‌ ஆழ்வார்‌ தமது திருவுள்ளத்தைக்‌ குறித்து, “பெருமானை அனுபவிக்கவில்லையே”” என்று கூற 
திருமால்‌ பிராட்டியுடன்‌ இவர்‌ இருந்த: இடைகழிக்கே வந்து நின்றான்‌. 
எம்பெருமான்‌ அலர்மேல்‌ மங்கையுறை மார்பனாகப்‌  பிராட்டியுடன்‌ நின்ற கோலத்தில்‌ வந்திருந்ததால்‌, வந்தவன்‌ 
வேங்கடவனே எனக்கொள்ளலாம்‌.
பக்தர்களுடன்‌ கலந்த மகிழ்ச்சியால்‌ திருமால்‌ இடைகழியில்‌ நின்றான்‌. 
''காமுகர்கள்‌ உகந்த விஷயத்தினுடைய கண்வட்டம்‌  விட்டுப்‌ போக மாட்டாதாப்‌ போலே”! என்பார்‌ உரையாசிரியர்‌. 

முதலாழ்வார்கள்‌ சந்தித்து, திருமாலைக்‌ கண்டு அருந்தமிழில்‌ 
அந்தாதி பாடியதை, வில்லிப்புத்தூராரின்‌ திருமகனார்‌ வரந்தருவார்‌  இங்ஙனம்‌ போற்றிப்‌ புகழ்வர்‌: 
*பாவரும்‌ தமிழால்‌ பேர்பெறு பனுவல்‌ 
பாவலர்‌ பாதிநாள்‌ இரவில்‌ 
மூவரும்‌ நெருக்கி மொழிவிளக்கு ஏற்றி 
முகுந்தனைத்‌ தொழுத நன்னாடு” 

திருக்கோவலூரை மங்களாசாஸனம்‌ செய்யும்‌ ஒரு பெரிய திருமொழிப்பாசுரம்‌ முதலாழ்வார்களைக்‌ குறிப்பிடுவதாக 
திருமங்கையாழ்வார்‌  பாடிய ''தாங்கரும்‌ போர்‌'" என்று தொடங்கும்‌ பாசுரத்திலுள்ள  சில வரிகள்‌ இவை. 

“அடியவர்க்கு ஆரமுதம்‌ ஆனான்‌ தன்னை... 
குழாவரி வண்டு இசைபாடும்‌ பாடல்‌ கேட்டு 
தீங்கரும்பு கண்வளரும்‌ கழனி சூழ்ந்த 
திருக்கோவலூர்‌ அதனுள்‌ கண்டேன்‌ நானே! (210.4) 

அடியவாககு ஆரமுதம அனான: 
அடியவர்கள்‌ என்றது முதலாழ்வார்களை. அவர்கட்கு 
“தேனும்‌ பாலும்‌ கன்னலும்‌ அமுதுமாகத்‌: தித்தித்தவன்‌  இத்தலத்து எம்பிரான்‌.  திருக்கோவலூர்‌ திங்கரும்பு: 

இங்கு தீங்கரும்பாகச்‌ சொன்னது திருக்கோவலூர்‌ திரிவிக்ரமப்‌  பெருமாளை. 
குழாவரி வண்டிசை பாடும்‌ பாடலாவது, (முதலாழ்வார்கள்‌ பாடிய மூன்று திருவந்தாதிகள்‌. 
இந்த அந்தாதி  இசை கேட்டு, திருக்கோவலூர்‌ தீங்கரும்பாகிய  திருவேங்கடமுடையான்‌ கண்ணுறங்குமாம்‌. 
முதலாழ்வார்கள்‌  பாடிய அந்தாதிகளில்‌ மிக அதிகமாகத்‌ திருவேங்கடவன்‌  திருநாமமே அடி.படுவதால்‌ 
இங்ஙனம்‌ கொள்ளத்‌ தடையில்லை. 
வண்டுகளை மூன்று ஆழ்வார்களாகக்‌ கொள்ளலாம்‌. 

ஸ்ரீ வேதாந்த தேசிகர்‌ அருளிச்‌ செய்த '“தேஹளீச ஸ்துதி  ஏழாவது சுலோகத்தில்‌ 
முதல்‌ மூன்று ஆழ்வார்களைக்‌ கரும்பு  பிழியும்‌ சர்க்கரை ஆலையின்‌ மூன்று உருளைகளாகவும்‌, 
அவர்களால்‌ நெருக்கப்பட்ட திருமாலைத்‌ தீங்கரும்பாகவும்‌, 
எம்பெருமானின்‌ செளலப்ய குணத்தைச்‌ சாறாகவும்‌ கூறப்பட்டிருக்கிறது. 
இந்த அற்புதமான உவழைக்கு மேற்கூறிய 
திருமங்கையாழ்வார்‌. பாசுரம்‌ அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும்‌ 
 
கண்ணன்‌ அடியினை எமக்குக்‌ காட்டும்‌ வெற்பு 
கடுவினையரிரு வினையும்‌ கடியும்‌ வெற்பு 
திண்ணமிது வீடென்னத்‌ திகழும்‌ வெற்பு 
தெளிந்த பெருந்தீர்த்தங்கள்‌ செறிந்த வெற்பு 
புண்ணியத்தின்‌ புகலிதெனப்‌ புகழும்‌ வெற்பு 
பொன்னுலகிற்‌ போகமெலாம்‌ புணர்க்கும்‌ வெற்பு 
விண்ணவரும்‌ மண்ணவரும்‌ விரும்பும்‌ வெற்பு 
வேங்கடவெற்பென விளங்கும்‌ வேத வெற்பே. --ஸ்ரீ வேதாந்த தேசிகர்‌ அருளிச்‌ செய்தது
----------------------------------------

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவேங்கட திருமலை வைபவம் —

March 11, 2022

திருமாலையே பாடிய ஆழ்வார்கள் பதினொருவரில் தொண்டரடிப் பொடியாழ்வார் தவிர பத்து ஆழ்வார்கள் பாடிய
திவ்யதேசம் திருவேங்கடம் எனப்பெறும் திருப்பதி திருமலைக் கோயிலாகும்.
திவ்ய பிரபந்த பாசுரங்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தைத் திருவரங்கமும் ( 274 பாசுரங்கள்)
இரண்டாம் இடத்தை (203) பெற்ற திவ்ய தேசம் திருவேங்கடமலையும் ஆகும்.

பெரியாழ்வார் ஏழும், ஆண்டாள் பதினாறும், குலசேகர ஆழ்வார் பதினொன்றும், திருமழிசையாழ்வார் பதினைந்தும்,
திருப்பாணாழ்வார் இரண்டும், திருமங்கை ஆழ்வார் அறுபத்து இரண்டும்,
பொய்கை ஆழ்வார் பத்தும், பூதத்தாழ்வார் ஒன்பதும், பேயாழ்வார் பத்தொன்பதும், நம்மாழ்வார் ஐம்பத்து இரண்டும் என
இருநூற்று மூன்று பாசுரப்பதிகங்கள் திருவேங்கட மாமலை உறை வேங்கடநாதனைப் புகழ்ந்துரைக்கின்றன.

பாம்பணையின் மேல் பள்ளி கொண்ட கோலத்தில் திருமால் திகழும் திருக்கோயிலாக திருவெஃகா எனப்பெறும்
காஞ்சிபுர நகரத்துக் கோயிலை பெரும் பாணாற்றுப் படையும், பரிபாடல் மதுரைக்கு அருகில் உள்ள
திருமாலிருஞ் சோலையில் நின்ற வண்ணம் திகழும் நெடியோனின் கோலத்தை விவரிக்கின்றன.

சிலப்பதிகாரம் எனும் அருந்தமிழ் நூலில் இளங்கோவடிகள் காடுகாண் காதையில் பாம்புப்படுக்கையில் பள்ளி கொண்டவாறு
திருமால் திகழும் இடமாகக் காவிரி நடுவண் உள்ள திருவரங்கத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அதே நூலில் கடலாடுகாதையில் வேங்கடமலை பற்றி கூறும் அடிகளார் வேன்றி காதையில் தமிழ் நாட்டு எல்லைகளைக்
குறிக்குமிடத்து வேங்கடமலையையும் குமரிக்கடலையும் பின்வருமாறு சுட்டியுள்ளார்.
‘‘நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்’’ என்பது அவர் வாக்கு.

இங்கு நெடியோன் என்பது திருவேங்கடவனையும், தொடியோள் என்பது கன்னியாகுமரி பகவதியையும் சுட்டுவதாகும்.
எனவே நெடியோனாகிய திருமாலுக்கு வேங்கடமலையில் கோயில் திகழ்ந்து என்பது சிலப்பதிகாரத்தின் கூற்றாகும்.
கடந்த 150 ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் பல சமயச் சார்புடையவர்களால் இருவேறு கருத்துக்கள் தொடர்ந்து கூறப்பெற்று வந்துள்ளன.

திருமலைத்திருப்பதி கோயில் கருவறையில் நின்ற கோலத்தில் திகழும் மூலஸ்தானத்து திருமேனி கொற்றவையாகிய
தேவியின் திருவடிவம் என்று ஒரு சாரரும், இல்லை அத்திருமேனி குறிஞ்சிக் கடவுளாகிய முருகப் பெருமானின் திருவடிவமே
என்று தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகின்றனர்.

இவர்களின் மாறுபட்ட கருத்துக்களுக்கெல்லாம் உரிய பதிலாக கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டிலேயே இளங்கோ அடிகள்
தம் சிலப்பதிகாரக் காப்பியத்தின் காடுகாண் காதையில் பாடலடிகள் வாயிலாகக் கூறியுள்ளார்.

‘‘வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய இடை நிலைத்தானத்து மின்னுக்கொடி உடுத்து விளங்குவில் பூண்டு நல்நிறமேகம் நின்றது போலப்
பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும் தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி நளங்கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ வாடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்’’என்பதே
அவர் விவரிக்கும் திருவேங்கடவனின் திருக்கோலமாகும்.

பண்டு இளங்கோ அடிகள் காலத்தில் திருப்பதி திருமலைமேல் இருந்த திருக்கோயிலின் மூலஸ்தானத்தில்
திருமால் வில்லினைத் தரித்தவாறு மேகம் போன்ற கறுப்பு வண்ணத்தில் பகைவரை அழிக்கக் கூடிய சக்கரத்தையும்,
பால் போன்ற அவருடைய திருக்கைகளில் இடமும் வலமும் ஏந்தியவாறு அழகுடைய மணி ஆரத்தை மார்பிலே தரித்தும்
பொன்னாலாகிய பூ ஆடையைப் பூண்டும் சிவந்த தாமரை போன்ற திருக்கண்களுடன் நின்ற கோலத்தில் காட்சி நல்குகிறார் என்று கூறியுள்ளார்.

சிலப்பதிகாரமே திருப்பதி திருமலைத்தெய்வம் நின்ற கோலத்திருமால் தான் என்று சான்று பகரும்போது,
தேவியின் வடிவம் என்றும், முருகன் வடிவம் என்றும் கூறுவது தேவையற்ற சர்ச்சைகளாகும்.

தமிழ் நாட்டுப் பண்பாட்டுக் கூறுகளை தெளிவுற விளக்கமாக எடுத்துரைக்கும் நூலான அகநானூற்றின் 213 ஆம் பாடல்,
‘‘வினை நவில் யானை விறற் போர்த்தொண்டையர் இனமழை தவிழும் ஏற்றரு நெடுங்கோட்டு ஓங்கு வெள் அருவி வேங்கடம்’’எனக்கூறி
திருவேங்கடமலை தொண்டைமான் மன்னர்களுக்கு உரிய மலை என்பதைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.

குறுந்தொகையின் 260 ஆம் பாடலும் தொண்டைமான் மன்னர்களின் மலையே வேங்கடம் என உரைக்கின்றது.
வேங்கட கோட்டத்து மன்னன் புல்லி என்பானின் வேங்கடமலையின் சிறப்புக்களை அகநானூற்றின் எட்டுப் பாடல்கள், தெளிவுற உரைக்கின்றன.
அப்பெருமகன் களவர் குலத்தோன்றல் என்பதையும், தொண்டைமான் எனப்பட்டம் புனைந்த அவன் மரபினரே பிற்காலத்தில்
காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தனர் என்பதையும் சங்கத்தமிழ் நூல்கள் எடுத்துரைக்கின்றன.

10ஆம் நூற்றாண்டில் கி.பி, 952ல் பராந்தகச் சோழனின் ஆட்சியில் தொண்டை மண்டலம் வியத்தகு முறையில் வளர்ந்ததால்,
நிறைய பொன்னாபரணங்களை அளித்தான். சைவர்களும், வைஷ்ணவர்களும் திருமாலின் திருவடியைப் போற்றினர்.

பெரும்பான்மையான தஞ்சைச் சோழர்கள் சைவர்களாக இருந்தாலும் திருமலைக்குச் சொத்துக்களை அளித்தபடி இருந்தனர்.
11 ஆம் நூற்றாண்டில், தென்பகுதியில் சோழர்களின் ஆட்சிக் காலம் பொற்காலமாகத் திகழ்ந்தமையால் பெற்ற
ராஜராஜ சோழனின் காணிக்கைகளோடு சோழ அரசி ‘அம்மார்’ என்ற மாதரசி 57 கழஞ்சுப் பொன்னை திருமலை ஆலயத்திற்கு அளித்தாள்.

கி.பி. 1016ல் சோழப் பேரரசில் வாழ்ந்தத பிராமணர் ஒருவர் 26 கழஞ்சு பொன் அளித்தார் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது.
13 ஆம் நூற்றாண்டில் யாதவ, சாளுவ, காகதீய, ஹொய்சாள மன்னர்கள் இத்திருக்கோயிலைப் போற்றி நிலங்களும் பொருட்களும் கொடுத்தனர்.
கி.பி. 1130ல் ஸ்ரீ ராமனுஜர் திருப்பதி ஆலயத்தின் நிர்வாகம், வழிபாடு முதலியவற்றைச் சீர்படுத்தி ‘ஜீயர் களை’ நியமித்து
ஆலயத்தின் நிர்வாகத்தை அவர்களிடம் ஒப்படைத்தார்.

1356ல் விஜய நகர மன்னரான சாளுவமங்கதேவர் ஆட்சிக் காலத்தில் திரும்பவும் திருக்கோயிலுக்குப் பொன் வேய்தல் திருப்பணி நிகழ்ந்தது.
விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு திருமலைத் தெய்வம் குலதெய்வமானபடியால் பொருள் வளம் பெருகத் தொடங்கிற்று.
இரண்டாம் ‘ஹரிஹரர்’ 1404ல் ஸ்ரீ வேங்கடேஸ்வராய நமஹ என்ற மந்திரத்தினைப் பதிக்கச் செய்த நாணயத்தினை வெளியிட்டார்.

—————-

அஞ்சனாத்ரி த்ரேதா யுகத்தில் –
வால்மீகி ராமாயணம் திருவேங்கடம் குறிப்பு உண்டே

————

செக்கர் மா -திருவாசிரியம் போல்

———-

கம்பர் -கம்பத்தில் இருந்து வந்த நரஸிம்ஹர் பெயர்
ஆச்சார்யர்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்
தொங்கல் பாசுரம் -கம்பர் -மூன்று
திருவெழு கூற்று இருக்கை -சிறிய திருமடல் -பெரிய திருமடல்
சடகோபர் அந்தாதி சாதித்து

திரு மறையோர் வாழும் திருவேங்கடம் -கம்பர்
அநந்தாழ்வான் இருந்தமையைக் காட்டி
ஆக இவர் பராசர பட்டர் சிஷ்யர்
புலியும் யானையும் சேர்ந்து வாழும் திருமலை
புகு மதத்தால் -தேன் விண்ட மலரால் வாழ்த்தும் திருவேங்கடம்
வேங்கை -முயல் என்று சந்திரன் மேல் -மதியின் ஒண் முயலைப் பாய்ந்து -ஆழ்வார் பாசுரம் போல் கம்பர்
மோக்ஷம் அடைவார் திருமலையில் தேடாதீர் -சுக்ரீவன்
கிட்டே கூடப் போகாதீர் –
திருமலை -சர்வாதிகாரம்
திருவேங்கமுடையான் -அதிகிருதா அதிகாரம்
அவனை விட பெருமை என்பதால் -திரு மலையையே பாடினார் கம்பர்
மலையே திரு உடம்பு -ஆழ்வார்
மலை ஒன்றுமே தொழ வினைகள் போமே
ஆச்சார்யர் கோஷ்ட்டியில் கேட்ட அர்த்தங்கள் கம்பர் அருளிச் செய்கிறார்

—————-

ஆராத்தி ஏழை செல்வம்
காணே -உள் கண் கட் கண் -ஞானம்
விகடே-தாப த்ரயம் போக்க திரு மலைக்கு வா
தடங்கல் -திருமலைக்கு வந்தால் திருப்பம் உண்டாகும்
க்ரீம் கச்ச
ஸ்ரீ பீடஸ்ய
ஸ்ரீ நிவாஸன் -மஹா லஷ்மிக்கு பீடம் இவன்
அகலகில்லேன் இறையும்
சத்வம் நிறைந்த அடியார்களுடன் நாடி வா
உரியவனாய் ஆவாய்
பரன் சென்று சேர் மலை ஒன்றையுமே தொழ வினைகள் அனைத்துமே போகுமே
வேதத்தால் மங்களா ஸாஸனம்
பஞ்சாயுதம்
ஐந்து மொன்றும் அஷ்ட குண சாம்யம்
ஐம்பூதங்கள் சரீரம் பிறப்பு அடைய மாட்டான்

————–

சமயம் கடந்த, தமிழ்ச் செல்வரான இளங்கோவடிகள்! (3rd CE)
வேங்கடம் என்னும் மலையையும் பாடுகிறார்

= சமயம் கடந்து, தமிழைத் தமிழாய் அணுகி!
= துதிப் பாட்டாய் இல்லாது, இயற்கையும் தமிழுமாய்!
= வேங்கட மலை மேல் நிற்பது யார்? அதையும் சொல்லிடறாரு இளங்கோவடிகள்!

சிலப்பதிகாரம் காட்டும் – வேங்கட மலையில் இருப்பது யார்?

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல

பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!

நூல்: சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் – காடு காண் காதை (lines 41-51)
கவிஞர்: இளங்கோ அடிகள்

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை

நீர் பெருகி அருவிகள் பாயும் வேங்கட மலை!
அந்த ஓங்கிய மலை உச்சியிலே மலைப் பாதையில் நடந்து செல்லும் போது,
ஆங்காங்கே சில்லென்று சிற்றருவிகள்!

விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து

கதிரவனும் திங்களும் மாறி மாறிக் காயும் மலை உச்சி!
ஆங்கே, இரண்டு பக்கத்து மலைக்கும் இடையே…

மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல

கோடி = புதுத் துணி
பூவுக்கே வழியில்லாமல் இருந்த இறைவனுக்கு, வைரக் கிரீடம்-தங்கத் தட்டு போன்ற Capitalistic வித்தைகள்;
ஆனா, ஆழ்வார்களின் வேங்கடவன் Business வேங்கடவன் அல்லன்; குறையொன்றுமில்லாக் குன்றத்து விளக்கன்;

கோடி = திருமணக் கூறைப் பட்டு; அதை உடுத்தி,
தோளிலே வில்லேந்தி…
நல்ல கருப்பான மேகம்..
மழை பொழியத் தயாராய் நிற்பது போல், மலை மேல்

பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி

* பகை அஞ்சும் ஆழி = (சக்கரம்)
* பால் வண்ணச் = (சங்கு)
தன் தாமரைக் கையிலே ஏந்தி = யாரு சங்கு-சக்கரம் ஏந்தி இருப்பா?
அவனே அவன்! = வேங்கட மலை மேல் நிற்பவன்!

நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய

அழகான ஆரம் – அதை மார்பிலே பூண்டு..
பொற்பூ ஆடையில், பொலியத் தோன்றும்
(இன்னிக்கும் பூ-ஆடை = பூலங்கி சேவை உண்டு; ஒவ்வொரு வியாழக் கிழமையும் “பூலங்கி தரிசனமுலு“;
பூவால் நெய்த ஆடை = பொலம் பூ ஆடையில் பொலியத் தோன்றிய -ன்னு அன்றே காட்டும் இளங்கோ)

செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!

செங் கண், நெடியோன்! = சங்கத் தமிழ்க் கடவுள்! முல்லை நிலத் தொன்மம்;
திருமால் என்னும் அவன் = அவனே, வேங்கட மலையில் நின்ற வண்ணமே!

ஒரு பக்கம் கதிரவன் – மறு பக்கம் நிலவு! நடுவால கருமேகமாம்
அதே போல்…
ஒரு பக்கம் ஆழி(சக்கரம்) – மறு பக்கம் வெண் சங்கு! நடுவால கருத்த மாயோன்
உவமை காட்டும் இளங்கோ அடிகளின் தமிழ்ச் சுவை, சொல் அடர்த்திச் சுவை!

——–

இளங்கோ மட்டுமல்லாது, முற்பட்ட எட்டுத் தொகையிலும்.. “வேங்கட மலை மேல் திருமால்”!

பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த,
இருவேறு மண்டிலத்து இலக்கம் போல,
நேமியும் வளையும் ஏந்திய கையாற்,
கருவி மின்ன விரி இலங்கும் பொலம்பூண்,
அருவி உருவின் ஆரமொடு அணிந்த, நின் திருவரை அகலம்!

வேங்கடத்தின் மேல் நிற்பது = நேமியும் வளையும்-சக்கரமும் சங்கும்..
ஏந்திய கையான் என்றே காட்டும் தமிழ்த் தகைமை!

மாயோன் என்ற முல்லை நில நடுகல்…
பிற் சங்க காலத்தில் “பெருந்தெய்வம்” ஆகி விட்டாலும்…,

அந்த ஆயர்க் குடி வழக்கங்களே இன்னிக்கும் கைக்கொள்ளும் தொன்மம்!
அந்தணர்களுக்கு முதல் தரிசனம் இல்லை;
இன்றளவும்… ஆயர்-கோனாரே, கதவம் திறப்பித்து, முதல் காட்சி காணும் முன்னுரிமை!

வேங்கடேஸ்வரன், பாலாஜி போன்ற வடமொழிப் பெயர்களால், இன்று சூழ்ந்து நின்று Capital Clout ஆக்கி விட்டாலும்…
திருவேங்கடமுடையான், திருமலை-அப்பன், முல்லையின் மாயோன்,
மலை குனிய நின்றான், மாயோன் மேயக் காடுறைக் கடவுள்… என்பதே சங்கத் தமிழும்,
ஆழ்வார்களும், “ஆசையால் பராவி” அழைத்த தமிழ்த் திருப்பெயர்கள்!

* சமயம் சாராச் செந்தமிழ்ச் செல்வர் இளங்கோ காட்டும்… வேங்கடவன் – இவனே!
* எட்டுத் தொகைச் சங்கத் தமிழும் காட்டும்… வேங்கடவன் – இவனே!
* இவனே – அவன் எவனே

———–

திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என்பதால், இதற்கு ‘திருப்பதி’ என்ற பெயர் வந்தது.

கிருஷ்ண அவதாரத்தில், பகவான் தன்னுடைய திருக்கரங்களால் கோவர்த்தன மலையைத் தாங்கினார்.
தன்னை ஏந்திய கிருஷ்ணனை, தான் தாங்க வேண்டும் என விரும்பியதாம் கோவர்த்தன மலை.
அதன்படி இந்த கலியுகத்தில் திருப்பதி ஏழுமலையானை திருவேங்கட மலையாய் இருந்து தாங்கி நிற்பதாக புராணங்கள் சொல்கின்றன.
வேங்கடாத்ரி,
சேஷாத்ரி,
வேதாத்ரி,
கருடாத்ரி,
விருஷபாத்ரி,
அஞ்சனாத்ரி,
ஆனந்தாத்ரி எனும் ஏழு சிகரங்களுடன் வேங்கடமுடையானைத் தாங்கி நிற்கிறது, வேங்கட மலை.

வேங்கட மலை:
வேம் என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’.
பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர்.
இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

சேஷ மலை:
பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார்.
இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.

வேதமலை
வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.

கருட மலை:
இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார்.
அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.

விருஷப மலை:
விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான்.
அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.

அஞ்சன மலை:
ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள்.
அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.

ஆனந்த மலை:
ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார்.
இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர்.
இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.

ஒருமுறை பூமாதேவியைப் பாயாகச் சுருட்டி பாதாளத்தில் அடைத்து வைத்தான் இரண்யாட்சன் என்னும் அசுரன்.
திருமால் பூமாதேவியைக் காக்கும் பொருட்டு வராகமாக அவதரித்தார்.
பின்பு இரண்யாட்சனுடன் போரிட்டு அவனைக் கொன்று பூமாதேவியை மீட்டார்.
பூமித்தாயை தன் மடியில் தாங்கி வராக மூர்த்தியாய் தேவர்களுக்கு காட்சிக்கொடுத்தார்.
அப்போது பிரம்மதேவன் திருமாலை வேண்டி, ‘வராக மூர்த்தியாகியத் தாங்கள், கலியுக மக்களைக் காக்கும் பொருட்டு
திருவேங்கடத்தின் சேஷாத்ரி சிகரத்தில் எழுந்தருளவேண்டும்’ என்றார்.
அதன்படி வராகமூர்த்தி திருமலை எனும் திருவேங்கடத்தில் எழுந்தருளினார்.

திருவேங்கடம் என்பதற்கு இருவகை பொருளுண்டு.
ஒன்று தன்னை அண்டியவர்களுடைய பாவங்களை எரித்துவிடுதல்
மற்றொன்று தன்னை அண்டியவர்களுக்கு அழிவில்லாத ஐஸ்வரியங்களைத் தருதல் .
சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இத்தலத்தை திருவேங்கடம் என்றே குறிக்கின்றன.
திருமலையை மேல்திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.
திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என்பதால், இதற்கு ‘திருப்பதி’ என்ற பெயர் வந்தது.

————–

இளங்கோ -சேர மன்னனின் தம்பி இளவல் என்பர்
கோவலன் -கோபாலன் என்பதின் மருவு
இளங்கோ வுடன் எவ்வாறு நடந்தனையோ
ஜைனர் வைஷ்ணவர் சம்பந்தம் உண்டே
புத்தர் சைவர் சம்பந்தமும் உண்டே
ஜைனர் வழிபாட்டில் ஆச்சார்ய சம்பாவனை ராமானுஜருக்கு உண்டாம்
ஜைனர்கள் வழிபாட்டு ஸ்தலங்களில் கீழ் உள்ள ஸ்லோகம் கல்வெட்டுக்களில் உண்டே

பாஷண்ட ஸாகர மஹா படபா முகாக்நி
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ—-ஐந்தாம் ஸ்லோகம்–

படபா என்பது ஒரு பெண் குதிரையின் பெயராகும்.
அது கடலுக்கு அடியில் தனது முகத்தில் எப்போதும் நெருப்புடன் உள்ளதாகும்.
ப்ரளய காலத்தின் போது கடலிலிருந்து வெளி வந்து உலகை அழிக்கும் என்பது புராணங்கள் கூறுவதாகும்.

பாஷண்டர்கள் என்ற கடலுக்கு இப்படிப்பட்ட படபா அக்னி போன்று எம்பெருமானார் உள்ளார்.

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தனது தலையில் வைத்தபடி நின்று நீச மதங்களை அழித்தார்.

ஸ்ரீமந் நாராயணன் அமர்ந்துள்ள பரமபதம் செல்லும் வழியைக் காட்டினார்.

இப்படிப்பட்ட எம்பெருமானாருக்குப் பல்லாண்டு, யதிகளின் தலைவருக்குப் பல்லாண்டு.

1-பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி –
பாஷண்டர்களாகிற கடலின்
கொந்தளிப்பை யடக்கும்
விஷயத்தில்

2-பாடபாக்நி போன்றவரும் –
அவர்களுடைய பொங்குதலை அடக்கி ஒழித்தவர்
படபா –என்று பெண் குதிரைக்கு பெயர்
கடலின் இடையிலே ஒரு பெண் குதிரை இருப்பதையும்
அதன் முகத்திலே நெருப்பு ஒரு காலும் அவியாது இருப்பதையும்
மழை நீர் முதலியவற்றால் கடல் பொங்காத படி
அதிகமாய் வரும் நீரை அது உறிஞ்சி நிற்பதாகவும்
அதுவே பிரளய காலத்துக் கடலில் நின்றும் வெளிப்பட்டு
உலகங்களை எரித்து அளிப்பதாகவும்
புராணங்கள் கூறும் –

3-ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ –
ஸ்ரீ ரங்க நாதனுடைய
திருவடித் தாமரைகளிலே
பரம பக்தி யுக்தரும் –

4-ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள
திரு மா மணி மண்டபத்தைச் சேரும்
வழியைத் தந்து அருள்பவரும் –

5-ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ –
யதிகளுள் மிகச் சிறந்தவருமான
எம்பெருமானார்
சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்கா நின்றார்

தென்னரங்கன் கழல் சென்னி வைத்து
நீசச் சமயங்களை நீக்கி
அடியார்க்கு உஜ்ஜீவன உபாயம் காட்டி
அருளா நின்ற எம்பெருமானார்
சகல வைபவங்களும் பொலிய வாழ்ந்து அருளா நின்றார் என்றது ஆயிற்று –

—————

கோவில் வரலாறு : தொண்டைமான் எனும் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன்
முதன் முதலாக கோவில், பிரகாரம் கட்டி தினசரி வழிபாட்டிற்கு வழிசெய்தான் எனக் கூறப்படுகிறது.
அவனைத் தொடர்ந்து பல சோழ மன்னர்கள் பல சேவைகளை செய்துள்ளனர்.
ஆனால் இன்றுள்ள வளங்களில் பெரும்பாலானவை விஜயநகர பேரரசுக் காலத்தில் வந்தவை.
கிருஷ்ணதேவராயர் இக்கோவிலுக்கு பலவசதிகளை செய்து கொடுத்து எக்கச்சக்கமான தங்க வைர ஆபரணங்களையும் பரிசளித்தார்.

1843லிருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம்
ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது.
1932-ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது.
1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அலர் மேல் மங்கா சமேத ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கடத்தந்தாதி –81-100-

February 21, 2022

வந்தித்து இருக்கு மறை போற்றும் வேங்கட வாண மலர்
உந்தித் திருக் குங்குமம் அணி மார்ப உள் வஞ்சனையும்
புந்தித் திருக்கும் வெகுளியும் காமமும் பொய்யும் விட்டுச்
சிந்தித் திருக்குமது எக்காலம் யான் உன் திருவடியே –81-

(இ – ள்.) இருக்கு மறை – ருக்முதலிய வேதங்கள்,
வந்தித்து போற்று – வணங்கித் துதிக்கப்பெற்ற,
வேங்கட வாண – திருவேங்கடமலையில் வாழ்பவனே!
மலர் உந்தி திரு குங்குமம் அணி மார்ப – திருநாபித்தாமரைமலரையும் திருமகளோடு குங்குமச்சாந்தை யணிந்த திருமார்பையு முடையவனே! –
யான் -, உள் வஞ்சனையும் – மனத்திலடங்கிய வஞ்சனைகளையும்,
புந்தி திருக்கும் – அறிவின் மாறுபாட்டையும்,
வெகுளியும் – கோபத்தையும்,
காமமும் – சிற்றின்பவிருப்பத்தையும்.
பொய்யும் – பொய்யையும்,
விட்டு – ஒழித்து.
உன் திரு அடி சிந்தித்திருக்குமது – உனது திருவடிகளைத் தியானித்திருப்பது,
எ காலம் – எப்பொழுதோ? (எ – று.)

————-

திருவடி வைக்கப் புடவி பற்றாது அண்டம் சென்னி முட்டும்
கருவடிவைக் கலந்து ஆற்றா எண் திக்கும் கடல் மண் கொள்வான்
பொரு வடிவைக் கனல் ஆழிப் பிரான் புனல் ஆழி கட்டப்
பெரு வடிவைக் கண்ட அப்பன் எவ்வாறு அடி பேர்ப்பதுவே –82-

(இ – ள்.) பொரு – போர்செய்கின்ற,
வடி – (பலவகைப்படைக்கலங்களில்) தேர்ந்தெடுத்த,
வை – கூர்மையான,
கனல் ஆழி – அக்கினியைச்சொரிகிற சக்கராயுதத்தையுடைய,
பிரான் – தலைவனும்,
ஆழி கட்ட – சமுத்திரத்தை அணைகட்டிக் கடப்பதற்காக,
புனல் பெரு வடிவை கண்ட – (அக்கடலின்) நீர்மிக்கவற்றுதலை அடையும்படி செய்த,
அப்பன் – ஸ்வாமியுமான திருவேங்கடமுடையான், (திரிவிக்கிரமாவதாரங்கொண்ட காலத்து),
திருஅடி வைக்க புடவி பற்றாது – (அப்பெருமான் தனது) ஒரு திருவடியை வைப்பதற்கே பூமிமுழுவதும் இடம்போதா தாயிற்று;
சென்னி அண்டம் முட்டும் – (அப்பெருமானது) திருமுடியோ அண்டகோளத்தின் மேன் முகட்டைத் தாக்கியது;
எண் திக்கும் கரு வடிவை கலந்து ஆற்றா – எட்டுத்திக்குக்களும் (அவனது) கருநிறமான திருமேனி பொருந்துதற்கு இடம்போதாவாயின;
(இங்ஙனம் பெருவடிவனான அத்திருமால்), கடல் மண் கொள்வான் – கடல்சூழ்ந்த நிலவுலகத்தில் (மூன்றடியிடம்) அளந்துகொள்வதற்காக,
அடி பேர்ப்பது – திருவடிகளை எடுத்துவைப்பது, எ ஆறு – எப்படியோ?

அளத்தலாவது ஒருவன் நின்றவிடமொழிய மற்றோரிடத்தில் மாறிக் காலிடுத லாதலால், அங்ஙனம் அடிமாறியிட
வொண்ணாதபடி நிலவுலகமுழுவதும் ஓரடிக்குள்ளே யடங்குமாறு பெருவடிவுடையவன் மூன்றடி நிலத்தை அளந்து
கொள்ளுதற்கு இடம் ஏது? எனத் திரிவிக்கிரமாவதாரஞ்செய்த திருமாலினது வடிவத்தின் பெருமையை வியந்து கூறியவாறாம்;
பெருமையணி. திருமால் வஞ்சனையால் மாவலியை மூன்றடிநிலம்வேண்டி அதுகொடுக்க அவன் இசைந்தவுடன்
உலகங்களை அளந்துகொண்டன னென்று ஒரு சாரார் கூறும் ஆக்ஷேபத்துக்கு ஒருசமாதானம் இதில் தோன்றும்;
சரீரம் இயல்பிலே வளருந்தன்மையதாதலால், முந்தியவடிவையேகொண்டு அளந்தில னென்று குறைகூறுதல் அடா தென்க.
கலந்து = கலக்க; எச்சத்திரிபு. கொள்வான் – எச்சம். ஈற்றடியில், வடிவு – வடிதல்; தொழிற்பெயர்.

————-

பேர் ஆனைக் கோட்டினைப் பேர்த்தானை வேங்கடம் பேணும் துழாய்த்
தாரானை போதானைத் தந்தானை எந்தையை சாடு இறப் பாய்ந்து
ஊர் ஆனை மேய்த்து புள் ஊர்ந்தானை பஞ்சவர்க்கு உய்த்து நின்ற
தேரானை நான் மறை தேர்ந்தானை தேரும் நும் தீது அறுமே –83-

(இ – ள்.) பேர் – பெரிய, ஆனை – (குவலயாபீடமென்னும்) யானையினது,
கோட்டினை – தந்தங்களை,
பேர்த்தானை – பெயர்த்துஎடுத்தவனும், –
வேங்கடம் பேணும் – திருவேங்கடமலையை விரும்பித் தங்குமிடமாகக் கொண்ட,
துழாய் தாரானை – திருத்துழாய்மாலையையுடையவனும், –
போதனை தந்தானை – பிரமனைப் படைத்தவனும், –
எந்தையை – எமது தலைவனும், –
சாடு இற பாய்ந்து – சகடாசுரன் முறியும்படி தாவியுதைத்து,
ஊர் ஆனை மேய்த்து – ஊரிலுள்ள பசுக்களை மேய்த்து,
புள் ஊர்ந்தானை – கருடப்பறவையை வாகனமாகக்கொண்டு ஏறிநடத்தியவனும், –
பஞ்சவர்க்கு – பஞ்சபாண்டவரில் ஒருவனான அருச்சுனனுக்கு,
உய்த்து நின்ற – செலுத்திநின்ற,
தேரானை – தேரையுடையவனும், –
நால் மறை தேர்ந்தானை – நான்கு வேதங்களாலும் ஆராயப்பட்டவனுமான திருமாலை,
தேரும் – (முழுமுதற்கடவுளாக) அறிந்து தியானித்துத் துதியுங்கள்; (அங்ஙனஞ் செய்தால்),
நும் தீது அறும் – உங்கள் துன்பங்களெல்லாம் நீங்கும்; (எ – று.)

ஊர் – இங்குத் திருவாய்ப்பாடி. பஞ்சவர்க்கு உய்த்துநின்ற தேரான் – அருச்சுனனுக்குச் சாரதியாய்நின்று தேரோட்டியவன்.
பஞ்சவர் – ஐவர்; இது, ஐந்து என்னும் பொருள்தரும் பஞ்ச என்ற வடமொழியெண்ணுப்பெயரடியாப் பிறந்த பெயர்;
இங்கே, பாண்டவர்க்கு, தொகைக்குறிப்பு. இப்பொதுப் பெயர், சிறப்புப்பொருளின் மேலதாய்,
இங்கு அருச்சுனனைக் குறித்தது. ‘தேறும்’ என்பதும் பாடம்.

இச்செய்யுளின் அடிகளில், பேரானை, பேர்த்தானை, தாரானை, தந்தானை, ஊரானை, ஊர்ந்தானை,
தேரானை தேர்ந்தானை என்பவை எதிர்மறையும் உடன்பாடுமாய் ஒன்றுக்கொன்று மாறுபடுவதாக மேல்நோக்கில்தோன்றி,
பொருளையுணருமிடத்து வேறுவகையாப்பொருள்பட்டு மாறுபாடின்றிமுடிதலால், முரண்விளைந்தழிவணி;
வடநூலார் விரோதாபாஸாலங்காரமென்பர். இது, சொல்லால்வந்த முரண்தொடை;
“சொல்லினும் பொருளினும் முரணுதல் முரணே” என்றது காண்க.
அழகரந்தாதியின் 83 – ஆஞ்செய்யுளும் இத்தன்மையதாம்; அது வருமாறு :-
“தொலைந்தானை யோதுந் தொலையானை யன்னை சொல்லான் மகுடங்,
கலைந்தானை ஞானக் கலையானை யாய்ச்சி கலைத்தொட்டிலோ,
டலைந்தானைப் பாலினலையானை வாணன்கையற்றுவிழ,
மலைந்தானைச் சோலைமலையானை வாழ்த்தென் மட நெஞ்சமே.”
“மாத்துளவத், தாரானை வேட்கை யெலாந் தந்தானை மும்மதமும், வாரானை யன்றழைக்க வந்தானைக் –
காரான, மெய்யானை யன்பருக்கு மெய்த்தானைக் கண்கைகால், செய்யானை வேலையணைசெய்தானை –
வையமெலாம், பெற்றானைக்காணப்பெறாதானைக் கன்மழைக்குக், கற்றானைக்காத்ததொரு கல்லானை –
யற்றார்க்கு, வாய்ந்தானைச் செம்பவளவாயானை மாமுடியப், பாய்ந்தானை யாடரவப்பாயானை” என்ற
திருநறையூர் நம்பிமேகவிடு தூதினடிகளையுங் காண்க.

————–

அறுகு ஊடு கங்கை தரித்தான் அயன் அழைத்தாலும் இச்சை
அறு கூடு மால் அடியார் அடிக்கே அப்பன் வேங்கடவன்
மறுகு ஊடு மாதர் ஏறி பூண் எறிக்கும் மதில் அரங்கன்
மறு கூடு நம்மை மருவாமல் வாழ்விப்பன் மா மனமே –84-

(இ – ள்.) மா மனமே – சிறந்த (எனது) மனமே! –
அறுகு ஊடு கங்கை தரித்தான் – (முடியிற்சூடிய) அறுகம்புற்களினிடையே கங்காநதியைத் தரித்தவனான சிவனும்,
அயன் – பிரமனும்,
அழைத்தாலும் – (வலியவந்து உன்னைத் தம்மிடத்துக்கு) அழைத்தாலும்,
இச்சை அறு – (அவர்கள்பக்கல்) விருப்பங்கொள்ளாதொழிவாய்:
மால் அடியார் அடிக்கே கூடு – திருமாலினது அடியார்களின்திருவடிகளிலேயே சேர்வாய்: (அங்ஙனஞ் சேர்ந்தால்), –
ஊடு மாதர் எறி பூண் மறுகு எறிக்கும் மதில் அரங்கன் – (தம்கணவரோடு) பிணங்கிய மகளிர் கழற்றியெறிந்த
ஆபரணங்கள் (எடுப்பவரில்லாமல்) வீதிகளிலே (கிடந்து) ஒளிவீசப்பெற்றதும் மதிள்கள் சூழ்ந்ததுமான ஸ்ரீரங்கத்தை யுடையவ னாகிய,
அப்பன் வேங்கடவன் – ஸ்வாமியான திருவேங்கட முடையான்,
மறு கூடு மருவாமல் நம்மை வாழ்விப்பன் – (இவ்வுடம்புநீங்கிய பின்) மற்றோருடம்பிற்சேராதபடி நம்மை வாழச்செய்வன்
(மீண்டும் பிறப்பில்லாதபடி நமக்கு முத்திதந்து அதில் நம்மை அழிவின்றிப் பேரின்பநுகர்ந்து வாழ்ந்திருக்கச்செய்வன்); (எ – று.)

சிவபிரான் பிரியங்கொண்டு சூடுபவற்றில் அறுகம்புல்லும் ஒன்றாதலால், “அறுகூடு தரித்தான்” என்றார்;
சிவபூசைக்கு உரிய பத்திரபுஷ்பாதிகளில் அறுகம்புல்லும் ஒன்றாதல் காண்க.
இச்சா என்ற வடசொல், இச்சையென விகாரப்பட்டது. அடிக்கு – உருபுமயக்கம்.
ஊடலாவது – இன்பநிலையில் அவ்வின்பத்தை மிகுவிக்குமாறு ஆடவர்மீது மகளிர் கோபித்தல்; இது, பிரணயகலக மெனப்படும்.
செல்வம் நிரம்பிய மகளிர் அங்ஙனம் கோபங் கொள்ளுகின்றபொழுது தாம் அணிந்துள்ள ஆபரணங்களைக் கழற்றித்
தெருவில் எறிதலையும், அனைவரும் செல்வவான்களாதலால் அங்ஙனம் பிறர்கழித் தெறிந்தவற்றை எவரும்
விரும்பியெடுத்துக் கொள்ளாராக அவை அங்கங்கேயே கிடந்து விளங்குதலையும்,
“கொல்லுலைவேற்கணல்லார் கொழுநரோடூடி நீத்த,
வில்லுமிழ்கலன்கள்யாவும் மிளிர்சுடரெறிக்குமாற்றால்,
எல்லியும் பகலுந் தோன்றா திமையவருலகமேய்க்கும்,
மல்லன் மாவிந்தமென்னும் வளநகர்” என்ற நைடதத்துங் காண்க.
ஊடுமாதர் – வினைத்தொகை. பூணப்படுவது பூண் எனக்காரணக்குறி.
“செம்பொன் மதிலேழுடுத்த திருவரங்கப் பெருங்கோயில்” என்றபடி ஏழுமதில்கள் சூழப்பெற்ற தாதலால்,
அச்சிறப்புத் தோன்ற, “மதிலரங்கம்” என்றார்.
பறவைதங்குதற்கு இடமாகிற கூடு போல உயிர்தங்குமிட மாதலால், உடல், ‘கூடு’ எனப்பட்டது; உவமையாகு பெயர்;
“கூடுவிட்டிங், காவிதான்போயினபின்பு” என்ற ஒளவையார்பாடலையுங் காண்க.
பந்தமோக்ஷங்களுக்கு மனம் காரணமாதலால், ‘மாமனம்’ எனப்பட்டது;
இனி, மனத்தைத் தம்வசப்படுத்துதற் பொருட்டு அதனை ‘மாமனமே’ எனக் கொண்டாடி விளித்தன ரெனினுமாம். மூன்றாமடி – வீறுகோளணி.

தேவதாந்தரபஜநம் பந்தத்துக்கே காரணமாதலால், அவ்வழியிற்செல்வதைவிட்டு மோக்ஷத்தை யடையுமாறு
பாகவதபஜநஞ் செய்வா யென்று தம்மனத்துக்கு அறிவுறுத்தினார்.

இச்செய்யுளில் முன்னிரண்டடிகளிலும், பின்னிரண்டடிகளிலும் தனித்தனி யமகம் காண்க; மேல் 98 – ஆஞ் செய்யுளும் இது.

—–

மாமன் அங்காந்த வல் வாய்ப் புள்ளை ஏவமடித்து பித்தன்
நா மனம் காந்த அன்று ஓட எய்தான் நறும் பூங்கொடிக்குத்
தாமன் அம் காந்தன் திருவேங்கடத்து எந்தை தாள்களில் என்
தீ மனம் காந்தம் கவர் ஊசி போல் என்று சேர்வதுவே –85-

(இ – ள்.) மாமன் – மாமனான கம்சன்,
அங்காந்த வல் வாய் புள்ளை ஏவ – திறந்த வலியவாயையுடைய பறவையை (பகாசுரனை) அனுப்ப,
மடித்து -(அதனைக்) கொன்று,
பித்தன் நா மன் அம் காந்த அன்று ஓட எய்தோன் – சிவன் (தனது) நாவிற்பொருந்திய நீர் வற்றுமாறு அக்காலத்தில்
(பாணாசுரயுத்தத்தில்) ஓடும்படி அம்பெய்தவனும்,
நறும் பூ கொடிக்கு தாமன் அம் காந்தன் – பரிமளமுள்ள தாமரைமலரில் வாழ்கின்ற கொடிபோன்ற பெண்ணுக்கு
(திருமகளுக்கு) இருப்பிடமானவனும் அழகிய கணவனுமான,
திருவேங்கடத்து எந்தை – திருவேங்கடமலையிலெழுந்தருளியிருக்கிற எம்பெருமானுடைய,
தாள்களில் – திருவடிகளில்,
என் தீ மனம் – எனது கொடியமனமானது,
காந்தம் கவர் ஊசிபோல் சேர்வது – காந்தத்தினாற் கவரப்பட்ட ஊசிபோலச் சேர்ந்துபற்றுவது,
என்று – எப்பொழுதோ? (எ – று.)

மாமன் – இங்கே, தாயுடன்பிறந்தவன். மன் அம் – வினைத்தொகை. நாமன்அம் காந்த – நாஉலர.
கொடி – உவமையாகுபெயர். பூங்கொடி – மலர்க்கொடிபோன்றவ ளெனினுமாம்.
திருமகளைத் திருமார்பில் வைத்துள்ளதனால், “நறும்பூங்கொடிக்குத்தாமன்” எனப்பட்டான்.
ஊசி – ஸூசீ என்ற வடசொல்லின் விகாரம். எந்தைதாள்களில் என்தீமனம் காந்தங்கவரூசி போற்சேர்வது –
“இரும்பைக் காந்த மிழுக்கின்ற வாறெனைத், திரும்பிப் பார்க்கவொட்டாமல்” திருவடிக், கரும்பைத்தந்து” என்பர் பிறரும்.
காந்தம். இரும்பைக் கவர்ந்து இழுத்தல், வெளிப்படை.

—————

சேரும் மறுக்கமும் நோயும் மரணமும் தீ வினையின்
வேரும் அறுக்க விரும்பி நிற்பீர் வட வேங்கடத்தே
வாரும் மறுக்க அறியான் எவரையும் வாழ அருள்
கூரும் மறுக் கமலை அணி மார்பன் கைக் கோதண்டனே –86–

(இ – ள்.) சேரும் – (கருமகதியால் வந்து) அடைகின்ற,
மறுக்கமும் – மனக்குழப்பங்களையும்,
நோயும் – வியாதிகளையும்,
மரணமும் – மரணத்தையும்,
தீவினையின் வேரும் – கொடியகருமத்தின்மூலத்தையும்,
அறுக்க – ஒழிப்பதற்கு,
விரும்பி நிற்பீர் – விருப்பங்கொண்டு நிற்பவர்களே! (நீங்கள்),
வடவேங்கடத்தே வாரும் – வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையினிடத்தே வாருங்கள்: (அங்கு எழுந்தருளியிருக்கிற),
மறு கமலை அணி மார்பன் – (ஸ்ரீவத்ஸமென்னும்) மறுவையும் இலக்குமியையுங் கொண்ட (வலத்திரு) மார்பை யுடையவனும்,
கை கோதண்டன் – கையில் வில்லை யுடையவனுமான திருமால்,
எவரையும் மறுக்க அறியான் – (தன்னைச் சரணமடைந்தவர்) எத்தன்மையராயினும் அவரை விலக்க அறியான்:
(எவரையும்) வாழ அருள்கூரும் – தனது அடியவரனைவரையும் இனிதுவாழுமாறு கருணைபுரிவன்: (எ – று.)

அடியார்களின் பிழைகளைப் பாராட்டாது பொறுத்து ஆட்கொண்டருளுதற்குப் புருஷகாரமாகிற திருமகள்
எப்பொழுதும் விட்டுப்பிரியாமல் உடனிருக்கப்பெற்றவ னாதலால் அனைவரையும் மறாது அருள்செய்வ னென்பது தோன்ற,
‘மறுக்கவறியான் எவரையும் வாழ அருள்கூரும் கமலையணி மார்பன்’ என்றார்.
இடையிலுள்ள ‘எவரையும்’ என்றதை மத்திமதீபமாகக் கொண்டு, முன்நின்ற ‘மறுக்கவறியான்’ என்றதனோடும்,
பின்நிற்கும் ‘வாழவருள்கூரும்’ என்பதனோடுங் கூட்டுக. மறுக்கம் – தொழிற்பெயர்.

————

கோதண்டத்தான் நந்தன் வாள் கதை நேமியன் கோல வட
வேதண்டத்தான் அத்தன் இன் இசையான் மண்ணும் விண்ணும் உய்ய
மூதண்டத் தானத்து அவதரித்தான் எனில் முத்தி வினைத்
தீது அண்டத்தான் அத்தனு எடுத்தான் எனில் தீ நரகே –87-

(இ – ள்.) கோதண்டத்தான் – வில்லையுடையவனும்,
நத்தன் – சங்கத்தையுடையவனும்,
வாள்கதைநேமியன் – வாளையும் கதையையும் சக்கரத்தையுமுடையவனும்,
கோலம் வட வேதண்டத்தான் – அழகிய வடமலையான திருவேங்கடத்தை இடமாகவுடையவனும்,
அத்தன் – (எல்லாவுயிர்கட்குந்) தலைவனும்,
இன் இசையான் – இனிமையான வேய்ங்குழலினிசையையுடையவனுமான திருமால்,
மண்ணும் விண்ணும் உய்ய – நிலவுலகத்திலுள்ள மனிதர்முதலியோரும் மேலுலகத்திலுள்ள தேவர்முதலியோரும் துன்பந்தவிர்ந்து வாழ்தற்காக,
மூது அண்டம் தானத்து – பழமையான அண்டத்துக்கு உட்பட்ட இடங்களில்,
அவதரித்தான் – திருவவதாரஞ்செய்தான்,
எனில் – என்று (மெய்ம்மையுணர்ந்து) கூறினால்,
முத்தி – பரமபதங் கிடைக்கும்; (அத்திருமால்),
வினை தீது அண்ட – ஊழ்வினையின்தீமை வந்து தொடர,
தான் அ தனு எடுத்தான் – தான் அந்தந்தத்தேகத்தை யெடுத்துப் பிறந்தான்,
எனில் – என்று (உண்மையுணராது) கூறினால்
தீ நரகே – கொடியநரகமே நேரும்: (எ – று.)

ஜீவாத்மாக்கள் தேவ திர்யங் மநுஷ்ய ஸ்தாவர ரூபங்களாய்ப் பிறப்பது போலக் கருமவசத்தினா லன்றி,
பரமாத்மா உபேந்திர மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்கள்செய்வது துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலநத்தின்பொருட்டும்
தருமத்தை நிலைநிறுத்துதற்பொருட்டும் அப்பெருமான்கொண்ட இச்சையினாலேயே யாகு மென்ற இவ்வுண்மையை உணர்தல்,
அவதாரரஹஸ்யஜ்ஞாந மெனப்படும். இந்தஞானத்தையுடையராய்ப் பகவதவதாரங்களை அவனது சங்கல்பத்தினாலாயவை
யென்றுகொண்டு அப்பெருமானது அருள் ஆற்றல் அடியவர்க்கெளிமை முதலிய திருக்கல்யாணகுணங்களில் ஈடுபட்டுத்
துதிப்பவர் முத்தியையடைவர்:
அங்ஙனமன்றி, அவ்வவதாரங்களைக் கருமவசத்தாலாயவையென்றுகொண்டு இகழ்பவர் நரகமடைவர் என்பது, கருத்து.
“தராதலத்து, மீனவதாரமுதலானவை வினையின்றி யிச்சை, யானவதாரறிவா ரவரே முத்தராமவரே” என்பர் அழகரந்தாதியிலும்.

திருமால் பஞ்சாயுதங்களை யுடைமையை ‘கோதண்டத்தான் நத்தன்வாள் கதை நேமியன்’ என்று குறித்தார்.
வேதண்டம் – மலை. இன்இசையான் – கேட்டற்கு இனிய புகழையுடையவ னெனினுமாம். மண், விண் – இடவாகுபெயர்.

————

நரகம் அடங்கலும் சென்று எய்த்த பாவிக்கு நாரியர் மேல்
விரகம் அடங்க மெய்ஞ்ஞானம் வெளி செய வீடு பெற
உரகம் மடங்க நடித்த பொற்றாள் இன்று என் உச்சி வைப்பாய்
வரகமடம் கயல் ஆனாய் வடமலை மாதவனே –88–

(இ – ள்.) வரம் கமடம் கயல் ஆனாய் – சிறந்த ஆமையும் மீனுமாய்த் திருவவதரித்தவனே!
வடமலை மாதவனே – திருவேங்கடமலையி லெழுந்தருளியிருக்கிற திருமாலே! –
நரகம் அடங்கலும் சென்று எய்த்த பாவிக்கு – (இதுவரையிலும் பலபிறப்புக்கள்பிறந்து பலதீவினைகளைச்செய்து) நரகங்களனைத்திலும் போய் வருந்திய பாவியான எனக்கு, நாரியர்மேல் விரகம் அடங்க – மகளிர்விஷயமாக உண்டாகின்ற ஆசைநோய் தணியவும்,
மெய் ஞானம் வெளி செய – தத்துவஞானம் தோன்றவும்,
வீடு பெற – பரமபதம் கிடைக்கவும்,
உரகம் மடங்க நடித்த பொன் தாள் இன்று என் உச்சி வைப்பாய் – (காளியனென்னும்) பாம்பு தலைமடங்கும்படி
(அதன்முடியின்மேலேறி) நடனஞ்செய்த (நினது) அழகியதிருவடிகளை இப்பொழுதே எனது சிரசின்மேல் வைத்தருள்வாய்: (எ – று.)

அடங்கலும் என்றது, எஞ்சாமை குறித்தது, எய்த்தல் – இளைத்தல், மெலிதல். பாவிக்கு – தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி.
பாபீ, நாரீ, விரஹம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. பாவி – தீவினைசெய்தவன்.
மெய்ஞ்ஞானம் – பிறப்புவீடுகளையும் அவற்றின்காரணங்களையும் பரமாத்மஜீவாத்மஸ்வரூபங்களையும்
விபரீதஐயங்களாலன்றி உண்மையால் உணர்தல்.
உரகம் என்ற வடசொல் – மார்பினால் (ஊர்ந்து) செல்வதென்று பொருள்படும்.
பொன் தாள் – பொன்னினாலாகிய கழலென்னும் அணியை அணிந்த திருவடி யெனினுமாம்:
இப்பொருளில், பொன் – கருவியாகுபெயர். வர கமடம் – வடமொழித்தொடர்.

கண்ணன் காளியனுடைய முடியின்மே லேறி, ஐந்துதலைகளையுடைய அந்நாகம் எந்தெந்தப் படத்தைத் தூக்குகின்றதோ
அந்தந்தப்படத்தைத் துவைத்து அழுத்திநின்று அப்பாம்பின்வலிமையை அடக்கி அதனை மூர்ச்சையடையச்செய்கையில்,
பலவகைநடனத்திறங்களைச் செய்துகாட் டியமை தோன்ற, ‘உரகமடங்க நடித்த பொற்றாள்’ என்றார்.
அத்தன்மையை, ‘ஸ்வாமி, நர்த்தநமுறையில் வட்டமாய்ச்சுற்றுவது முதலான பிராந்தி கதிகளினாலும்,
ஒரு பக்கத்திலிருந்து மற்றொருபக்கத்துக்குப் போவது முதலிய ரேசககதிகளினாலும்,
பாதத்தை முன் நீட்டிவைப்பதாகிய தண்ட பாதகதியினாலும், அந்தச்சர்ப்பராசன் நசுங்கி மிகுந்த உதிரத்தையுங் கக்கினான்’ என்ற
விஷ்ணுபுராணவாக்கியத்தால் நன்கு அறிக.
“கானகமாமடுவிற் காளியனுச்சியிலே, தூயநடம்பயிலுஞ் சுந்தர,”
“காளியன்பொய்கை கலங்கப்பாய்ந்திட்டவன், நீண்டமுடியைந்திலு நின்று நடஞ்செய்து” என்ற
பெரியாழ்வாரருளிச்செயல்களையுங் காண்க.

முன்னொருகாலத்திற் பிரமதேவன் கண்துயில்கையில், சோமகனென்னும்அசுரன் வேதங்களையெல்லாங் கவர்ந்துகொண்டு
கடலினுள் மறைந்து செல்ல, பிரமன்முதலிய தேவர்களின் வேண்டுகோளினால் திருமால் ஒரு பெருமீனாகத்திருவவதரித்துக்
கடலினுட்புக்கு அவ்வசுரனைத் தேடிப் பிடித்துக் கொன்று, அவன்கவர்ந்துசென்ற வேதங்களை மீட்டுக் கொணர்ந்து கொடுத்தன னென்றும்;
திருப்பாற்கடல் கடைந்தபொழுது மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே சென்று அழுந்திவிடாதபடி திருமால் மகா கூர்ம ரூபத்தைத்
தரித்து அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தா னென்றும் கூறப்படுகின்ற வரலாறுகள்பற்றி,
‘வரகமடங் கயலானாய்’ என்றார். வர என்று தனியே எடுத்து, சிறந்தவனே யென்று கொள்ளினுமாம்; வரன் என்பதன் விளி.

————

மாதிரம் காதல் மனை வாழ்க்கை என்று எண்ணி வான் பொருட்டு
மாதிரம் காதம் பல உழல்வீர் இன்னும் மைந்தன் என்று ஓர்
மாது இரங்காத படி வணங்கீர் அரிமா வொடு கைம்
மா திரங்காது அமர் செய்கின்ற சேட மலையினையே –89-

(இ – ள்.) காதல் மனை வாழ்க்கை – விருப்பத்துக்குஇடமான மனையாளோடுகூடி இல்லத்துவாழ்தலை,
மா திரம் என்று எண்ணி – மிக்கநிலையுள்ளதென்று நினைத்து, (அந்தஇல்லறவாழ்வுக்கு உபயோகமாக,)
வான் பொருட்கு – மிக்க செல்வத்தை ஈட்டுதற்பொருட்டு,
மாதிரம் – திக்குக்கள்தோறும்,
பல காதம் வளைவீர் – அநேககாததூரம் சுற்றியலைபவர்களே! –
இன்னும் மைந்தன் என்று ஓர் மாது இரங்காதபடி – இன்னமும் (உங்களைப்) புத்திரனென்று ஒருபெண் அன்புசெய்யாதபடி
(இனியாயினும் பிறப்பற்று முத்திபெறுமாறு),
அரிமாவொடு கைம்மா திரங்காது அமர் செய்கின்ற சேடமலையனை வணங்கீர் – சிங்கங்களோடு யானைகள் பின்வாங்காமற்
போர் செய்யப்பெற்ற சேஷகிரியெனப்படுகிற திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானை வணங்குங்கள்; (எ – று.)

மீண்டும் பிறப்பில்லாதபடி யென்ற பொருளை ‘இன்னும்மைந்தனென்று ஓர்மாது இரங்காதபடி’ என்று
வேறுவகையாற் கூறினது, பிறிதினவிற்சியணி.
‘அரிமாவொடு கைம்மா திரங்காது அமர்செய்கின்ற’ என்றது, மலைவளங் கூறியவாறாம்.
கஜேந்திராழ்வானைப் பாதுகாத்தவனும் நரசிங்காவதாரஞ்செய்தவனுமான திருவேங்கட முடையானைச் சார்ந்து
அவனதருள் பெற்ற யானைக ளாதலால், சிங்கத்துக்கு அஞ்சுகின் றனவில்லை யென்க.

மஹாஸ்திரம், சேஷன் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. வான் – உரிச்சொல். வணங்கீர் – ஏவற்பன்மை.

————–

மலையின் அரக்கர் உடன்று எழுந்தார் என்று மா மறை நூல்
கலையினர் அக்கருடன் இந்திராதியர் காட்ட செய்யும்
கொலையினர் அக்கருடன் ஏறும் வேங்கடக் குன்றர் என்றால்
உலையின் அரக்கு அருள் தந்திலர் ஏனும் என் உள் அவர்க்கே –90-

(இ – ள்.) மா மறை நூல் கலையினர் அக்கர் உடன் – சிறந்தவேதசாஸ்திரங்களாகிய கல்வியில் தேர்ந்த பிரமதேவரும்
எலும்புமாலையைத்தரித்தவரான சிவபிரானு மாகிய இருமூர்த்திகளுடன்,
இந்திர ஆதியர் – இந்திரன் முதலிய தேவர்கள்,
மலையின் அரக்கர் உடன்று எழுந்தார் என்று காட்ட – “மலைகள்போல இராக்கதர்கள் உக்கிரங்கொண்டு ஓங்கினார்கள்” என்று சொல்லி முறையிட,
செய்யும் கொலையினர் – செய்த (அவ்விராக்கத) வதத்தையுடையவரான,
அ கருடன் ஏறும் வேங்கடம் குன்றர் – அந்தக்கருடனாகிய வாகனத்தின்மேல் ஏறியருள்கிற திருவேங்கடமலையை யுடையவர்,
என்றால் – என்றுசொன்னால்,
அருள் தந்திலர் ஏனும் என் உள் அவர்க்கு உலையின் அரக்கு – (அவர் என்பக்கல்) கருணைபுரியாராயினும்
அவர் விஷயத்தில் என்மனம் உலைக்களத்திலிட்ட அரக்காம் (நெகிழ்ந்துஉருகும்).

பகவத்விஷயத்தில் தமக்குஉள்ள பக்திமிகுதியா லாகும் நெஞ்சுருக்கத்தை இதில் வெளியிட்டார்.
எம்பெருமான் அருள்புரிந்தாலும் புரியாவிட்டாலும் அவன்திறத்தில் அன்புசெலுத்துதல் முமுக்ஷுக்களுக்கு
(முத்தி பெறவிரும்புவார்க்கு)க் கடமையாதல் காண்க.
இச்செய்யுளை, விரகவேதனையுற்ற தலைவியின் கூற்றாகவுங் கொள்ளலாம்.
அரக்கரெழுந்தாரென்று பிரமருத்திரருடன் இந்திராதியர் காட்ட –
“விதியொடு முனிவரும் விண்ணுளோர்களும், மதிவளர்சடைமுடிமழுவலாளனும்,
அதிசயமுட னுவந்தய லிருந்துழிக், தொள்வேலரக்கர்தங் கொடுமை கூறினார்” என்ற கம்பராமாயணங் களுக்கு –
தன்மையிற் இராவணன் முதலியோர். பிரமன் திருமாலினிடம் வேதசா என்ற வடசொற்கள் பிறர்க்கு வெளியிட்டதனால்,
அவனை, ‘மாமறைநூற்கலையினர்’ என்றார். அக்கர் – ருத்திராக்ஷமாலையையுடையவ ரெனினுமாம்.
கலையினர், அக்கர் – உயர்வுப்பன்மை. இனி, மா மறை நூல் கலையினர் அக்கருடன் என்பதற்கு –
சிறந்த வேதசாஸ்திரங்களில் வல்லவர்களான முனிவர்களும், யக்ஷர்களுமாகிய இவர்களோடு என்று உரைத்தலுமொன்று;
அவ்வுரைக்கு, யக்ஷ ரென்ற வடசொல் அக்கரெனச் சிதைந்த தென்க;
யசோதை = அசோதைஎன்பதுபோல. யக்ஷர் – பதினெட்டுத்தேவ கணங்களுள் ஒருசாரார். யக்ஷராஜனான குபேரனுக்கு
இராவணன் பகைவனானதனால், அரக்கரெழுச்சியை முறையிடுதற்கு இயக்கரும் உரியவராவர்.

“அக் கருடன்” எனச் சுட்டினது, பிரசித்தி பற்றி: அழகிய கருட னெனினுமாம். கருடன் – பக்ஷிராஜன்;
இவனுக்கு, வைஷ்ணவசம்பிரதாயத்தில் ‘பெரிய திருவடி’ என்று பெயர் வழங்கும்.

————-

தோழி தலைமகனை ஏதம் கூறி இரவு வரல் விலக்கல் –

உள்ளம் அஞ்சாய்வலியாய் வலியார்க்கும் உபாயம் வல்லாய்
கள்ளம் அஞ்சு ஆயுதம் கை வரும் ஆயினும் கங்கு லினில்
வெள்ள மஞ்சு ஆர் பொழில் வேங்கடக் குன்றினில் வீழ் அருவிப்
பள்ளம் அம்சாரல் வழி வரில் வாடும் இப்பாவையுமே –91–

(இ – ள்.) (நீ), உள்ளம் அஞ்சாய் – (எதற்கும்) மனம் அஞ்சுகின்றாயில்லை;
வலியாய் – வலிமையையுடையாய்;
வலியார்க்கும் உபாயம் வல்லாய் – வல்லமையுடையவர்க்கும் உபாயங்கற்பிக்கும்படி உபாயம்வல்லை;
கள்ளம் – களவும்,
அஞ்சு ஆயுதம் – பஞ்சாயுதங்களும்,
கைவரும் – (உனக்குப்) பழக்கமாயுள்ளன;
ஆயினும் -, கங்குலினில் – இரவிலே,
வெள்ளம் மஞ்சு ஆர் பொழில் வேங்கடம் குன்றினில் – வெள்ளமாகப் பொழிகின்ற மேகங்கள் தங்குகிற சோலைகளையுடைய திருவேங்கடமலையில்,
வீழ் அருவி பள்ளம் – விழுகிற அருவிப்பெருக்கையுடைய பள்ளங்களோடு கூடிய,
அம்சாரல் வழி – அழகிய மலைப்பக்கத்து வழியாக,
வரில் – (நீ) வந்தால்,
இ பாவையும் வாடும் – (நினதுவரவை மகிழ்ச்சியோடு எதிர்ப்பார்ப்பவளான) இப் பெண்ணும் வருந்துவள்; (எ – று.)

இயற்கைப்புணர்ச்சிபெற்ற தலைமகன் பின்பு தலைமகளினது தோழியி னுதவியைக்கொண்டு தலைமகளைப்
பகலிலும் இரவிலும் களவுநெறியில் ஏகாந்தத்திலே சந்தித்தல் இயல்பு; அது, பகற்குறி இரவுக்குறி எனப்படும்.
தலைமகனது வேண்டுகோளின்படி ஒருநாள் இரவிற் குறிப்பிட்டதொரு சோலையினிடத்தே
அத்தலைமகனையுந் தலைமகளையுஞ் சந்திக்கச்செய்த தோழி, பின்பும் அக்களவொழுக்கத்தையே வேண்டிய தலைமகனுக்கு,
அவன் வரும்நெறியின் அருமையையும், அது கருதித் தாங்கள் அஞ்சுதலையுங்குறித்து
“நீ எந்த இடத்திலும் எந்தப்பொழுதிலும் அஞ்சாது வரக்கூடிய தேகபலம் மநோபலம் தந்திரம் வஞ்சனை படைக்கலத்
தேர்ச்சி இவற்றையுடையாயாயினும், நின்வரவு எங்கட்குத் துன்பமாகத் தோன்றுதலால்,
இனி இவ்விருளிடை நீ இங்ஙனம் வரற்பாலையல்லை’ என்று கூறி விலக்குதல், இச்செய்யுளிற் குறித்த அகப்பொருள் துறையாம்;
இது, ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவியின்பாற்படும்; (ஆறு – வழி, கிளவி – பேச்சு:)
தலைவன் வரும் வழி மிகவும் இன்னாது, நீருடையது, கல்லுடையது, முள்ளுடையது, ஏற்றிழிவுடையது,
கள்ளர் புலி கரடி யானை பாம்பு முதலிய கொடிய பிராணிகளை யுடையது என்று கவலுங் கவற்சியாற் சொல்லுவ தென்க.
இதில், மெய்ப்பாடு – அச்சம். இதன் பயன் – வெளிப்படையாகவந்து மணஞ்செய்துகொள்ளுதலை வற்புறுத்துதல்.
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்ற ஐவகைநிலங்களுள் மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சியா மென்பதும்,
“புணர்தல் நறுங்குறிஞ்சி” என்றபடி புணர்ச்சி குறிஞ்சித்திணைக்குஉரிய பொரு ளென்பதும்,
“குறிஞ்சி, கூதிர் யாம மென்மனார் புலவர்” என்ற படி பெரும்பொழுதினுட் சரத்காலமும் சிறுபொழுதினுள்
நள்ளிரவும் குறிஞ்சிக்கு உரிய கால மென்பதும் அறியத்தக்கன.
“துறைமதியாம லிக்கான்யாறுநீந்திச் சுரங்கடத்தல்,
நிறைமதியாளர்க் கொழுக்கமன்றால் நெடு மாலரங்கத்,
திறைமதியாவருமாராவமிர்தன்ன விந்தநுதற்,
குறைமதியாள் பொருட்டாற் கங்குல்வார லெங்கொற்றவனே” என்ற திருவரங்கக்கலம் பகச்செய்யுளையுங் காண்க.

சாரல் – மலையைச் சார்ந்தது; மலைப்பக்கம்: தொழிலாகு பெயர் ‘இப்பாவை’ என்றது, தலைமகளை;
உம்மையால், தோழி தான்வாடுதலையும் உணர்த்தினாளாம்.

அஞ்சாமை, வலிமை, தந்திரம், மாயை, ஐம்படை இவற்றையுடைமையால் எவ்வகைச்செயலையுஞ் செய்ய
வல்லவனான சர்வேசுவரன், இருள்போலப் பொருள்களை உள்ளபடி எளிதிற் காணவொண்ணாது மறைப்பதான
மாயையின் பிரசாரத்தையுடைய இந்த இருள்தருமாஞாலத்திலே ஐயங்கார் வாழும்பொழுது
அவரது நெஞ்சென்னும் உட்கண்ணுக்கு ஒரோசமயத்து இலக்காகி மறைய, நிரந்தராநுபவத்திலே பிரியமுடையரான ஐயங்கார்,
அவ்வளவிலே திருப்திப்படாததோடு, பொங்கும்பரிவுடைய பெரியாழ்வார்போல, எம்பெருமானுடைய ஸர்வசக்தித்வம் முதலிய
திவ்வியகுணங்களைக் கருதுதற்குமுன்னே எதிர்ப்பட்ட சௌந்தர்ய சௌகுமார்யங்களில் ஈடுபட்டு,
‘காலாதீதமான வைகுண்டத்திலேயிருக்கின்ற இவ்வரும்பொருள் காலம் நடையாடப்பெற்ற இவ்வுலகத்தில்வந்து
புலனாதலால் இதற்கு என்ன தீங்குவருமோ?’ என்று அதிகமானபயசங்கை கொண்டவராக,
அந்த அதிசங்கையை ஐயங்காரது அன்பர்கள் எம்பெருமான் பக்கல்விண்ணப்பஞ்செய்து, இனி இவர்க்கு
இவ்வகைக்கலக்கமுண்டாகாதபடி இவரைக் காலாதீதமான வைகுண்டத்திற் சேர்த்துக்கொள்ளவேண்டு மென்று
விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறைபொருள். விவரம் கேட்டுணர்க.
இரணியன் இராவணன் முதலியோர் எவ்வளவோ சாமர்த்தியமாக வேண்டிப்பெற்ற வரங்களெல்லாம் ஒவ்வொருவகையால்
ஒதுங்கும்படி சூழ்ச்சி செய்து அவர்களையழித்தமையும். துரியோதனன் முதலியோர் செய்த அளவிறந்தசூழ்ச்சிகட் கெல்லாம்
மேம்பட்ட சூழ்ச்சிசெய்து அவர்களைத்தொலைத்தமையும் பற்றி, ‘வலியார்க்கு முபாயம் வல்லாய்’ என்றார்.

————–

பாவை இரங்கும் அசோதைக்கு முத்து பதுமச் செல்விக்கு
ஏவை இரண்டு அன்ன கண்மணி நீலம் இடு சரணப்
பூவை இரந்தவர்க்கு இன்ப வளம் புல் அசுரர்க்கு என்றும்
மா வையிரம் திரு வேங்கடத்து ஓங்கும் மரகதமே –92–

(இ – ள்.) திருவேங்கடத்து ஓங்கும் மரகதம் – திருவேங்கடமலையின் மீது உயர்ந்துதோன்றுகின்ற மரகதரத்தினம்போல
விளங்குந் திருமேனி நிறத்தையும் ஒளியையுமுடைய பரம்பொருளானது, –
பாவை இரங்கும் அசோதைக்கு – சித்திரப்பிரதிமைகளும் (இவ்வகையழகு எமக்கு இல்லையே யென்று) இரங்கும்படியான (கட்டழகுடைய) யசோதைக்கு,
முத்து – (அருமையால்) முத்துப்போலும்;
பதுமம் செல்விக்கு – தாமரைமலரில் வீற்றிருக்கின்ற செல்வத்தலைவியான திருமகளுக்கு,
இரண்டு ஏவை அன்ன கண்மணி நீலம் – (அருமையால்) இரண்டு அம்புகளைப்போன்ற கண்களிலுள்ள கருவிழிபோலும்;
இரு சரணம் பூவை இரந்தவர்க்கு – உபயதிருவடித்தா மரைமலர்களைப் பிரார்த்தித்தவர்கட்கு,
இன்ப வளம் – பேரின்பப் பெருக்காம்;
புல் அசுரர்க்கு – இழிகுணமுடைய அசுரர்கட்கு,
என்றும் – எப்பொழுதும்,
மா வையிரம் – பெரும்பகையாம்; (எ – று.)

திருவேங்கடத்துஓங்கும் மரகதரத்தினமொன்றே யசோதைத்தாய்க்கு முத்தாகவும், பெரியபிராட்டிக்கு நீலமணியாகவும்,
அடியார்க்குப் பவளமாகவும், அசுரர்க்கு வைரமாகவும் ஆகின்றது எனச் சொற்போக்கில்
ஒருவகை வியப்புத் தோன்றக் கூறியது, பலபடப்புனைவணி. இதில் பஞ்சரத்தினங்களின்பெயர் அமைந்திருப்பது காண்க.
யசோதை – கண்ணனை வளர்த்த தாய்; நந்தகோபன் மனைவி.
அருமைக்குழந்தையாகிய கண்ணன் அவளால் “முத்து” என்று பாராட்டப்படுதல்பற்றி, “யசோதைக்கு முத்து” என்றார்.
அம்பைக்குறிக்கும் ஓரெழுத்தொருமொழியாகிய “ஏ” என்ற பெயர்ச்சொல், “ஐ” என்று இரண்டனுருபை யேற்கும்போது
“ஏமுனிவ்விருமையும்” என்றபடி வகரவுடம்படுமெய்பெற்று ‘ஏவை’ எனநின்றது.
மணிநீலம் = நீலமணி: கருமணி, கருவிழி. இதுவும், அருமைபாராட்டப்படுதற்கு உவமம்.
‘இன்ப வளம்’ எனவே, பேரின்ப மென்றாம்; வளம் – சிறப்பு. அஸுரர் என்ற வடசொல் – தேவர்கட்கு எதிரானவரென்றும் (சுரர் – தேவர்),
பாற்கடலினின்று உண்டான சுரையைப் பானஞ்செய்யாதவரென்றும் (சுரை – மது),
பகைவருயிரைக் கவர்பவரென்றும் (அஸு – உயிர்) காரணப்பொருள்படும்.
மா வைரம் – தவறாது அழிப்பவ னென்றபடி. வைரம்என்பது வையிரம் எனப்போலிவிகாரம்பெற்றது, திரிபுநயத்தின்பொருட்டு.
மரகதம் – பச்சையிரத்தினம்; நிறமும் ஒளியும்பற்றி, ‘மரகதம்’ என்றார்: மரகதம்போன்ற எம்பெருமானை மரகத மென்றது, உவமையாகுபெயர்.

————–

மரகதத்தைக் கடைந்து ஒப்பித்தது ஒத்தன வாழ்த்தினர் தம்
நரகதத்தைத் தள்ளி வைகுந்தம் நல்கின நப்பின்னை ஆம்
விரகதத்தைக்கு விடை ஏழ் தழுவின வேங்கடவன்
குரகதத்தைப் பிளந்தான் தோள்கள் ஆகிய குன்றங்களே –93-

(இ – ள்.) குரகதத்தை பிளந்தான் – குதிரைவடிவாய்வந்த (கேசியென்னும்) அசுரனை வாய்பிளந்தழித்தவனான,
வேங்கடவன் – திருவேங்கடமுடையானுடைய,
தோள்கள் ஆகிய – புயங்களாகிய,
குன்றங்கள் – மலைகள் (மலைகள் போன்ற தோள்களானவை), –
மரகதத்தை கடைந்து ஒப்பித்தது ஒத்தன – மரகதமென்னும் பச்சையிரத்தினத்தைக் கடைந்து ஒப்பனைசெய்தாற் போன்றன;
வாழ்த்தினர்தம் – (தம்மை) வாழ்த்திய மெய்யடியார்களுடைய,
நரக தத்தை – நரகத்துன்பங்களை,
தள்ளி – ஒழித்து,
வைகுந்தம் நல்கின – (அவர்கட்குப்) பரமபதத்தைக் கொடுத்தன;
நப்பின்னை ஆம் – நப்பின்னைப்பிராட்டியாகிய,
விரக தத்தைக்கு – ஆசைநோயால் தவிக்கப்பட்டவளான பெண்ணை மணஞ்செய்தற்பொருட்டு,
விடை ஏழ் தழுவின – ஏழுஎருதுகளைத் தழுவி வலியடக்கின; (எ – று.)

இது, புயவகுப்பு.

நிறமும், ஒளியும், திரண்டுருண்டு நெய்ப்புடைமையும்பற்றி, ‘மரகதத் தைக்கடைந் தொப்பித்த தொத்தன’ என்றார்.
பின்னையென்பது – அவள் பெயர்; ந – சிறப்புப்பொருளுணர்த்துவதோர் இடைச்சொல் (உபசர்க்கம்):
நச்செள்ளை, நப்பாலத்தன், நக்கீரன் என்றாற்போல; நம்பின்னையென்பதன் விகாரமுமாம்.
நற்பின்னை யென்பாரு முளர்.
விரஹதப்தா, வ்ருஷம் என்ற வடசொற்கள் – விரகதத்தை, விடை என்று விகாரப்பட்டன. விரகம் – காதல் நோயையுடைய,
தத்தைக்கு – கிளிபோன்ற (இன்மொழிபேசுகின்ற) பெண்ணுக்கு என்று உரைப்பாரு முளர்.
கண்ணன் நப்பின்னைப் பிராட்டியைத் திருமணஞ்செய்து கொள்ளுதற்காக, அவள்தந்தை கந்யாசுல்கமாகக்குறித்தபடி
யாவர்க்கும் அடங்காத அசுராவேசம் பெற்ற ஏழெருதுகளையும் ஏழு திருவுருக்கொண்டுசென்று வலியடக்கித் தழுவினதற்கு
முன்னமே கண்ணபிரான்பக்கல் காதல்கொண்டிருந்தமை தோன்ற, ‘நப்பின்னையாம் விரக தத்தைக்கு விடையேழ்தழுவின’ என்றார்.

குர கதம் என்ற வடசொல், (ஒற்றைக்) குளம்புகளாற் செல்வதென்று பொருள்படும்.
பருத்தவடிவமும் வலிமையும் படைக்கலங்களால் அழித்தற்கருமையும்பற்றி, தோள்கள் குன்றங்க ளெனப்பட்டன.
குன்றங்கள் என்ற உபமானப்பொருள், ஒத்தலும் வைகுந்தநல்குதலும் விடையேழ் தழுவுதலுமாகிய செய்கையிற்
பயன்படும்பொருட்டு உபமேயமாகிய தோள்களினுருவத்தைக் கொள்ளத் திரிதலால், ‘தோள்களாகிய குன்றங்கள்’ என்றது. திரிபணி;
உருவக மன்று. குன்றங்கள் என்ற ஈற்றில் நின்ற சொல், முன்னுள்ள ஒத்தன நல்கின தழுவின என்ற முற்றுக்களோடு முடிந்தது, கடைநிலைத்தீவகம்.

————-

குன்றுகள் அத்தனையும் கடல் தூராக் குவித்து இலங்கை
சென்று களத்து அனைவோரையும் மாய்த்து திருச் சரத்தால்
அன்று களத்தனை அட்டானை அப்பனை ஆய் மகள் தோள்
துன்று களத்தனை ஏத்த வல்லார்க்கு இல்லை துன்பங்களே –94-

(இ – ள்.) குன்றுகள் அத்தனையும் – மலைகளையெல்லாம்
கடல் தூர குவித்து – கடல்தூர்ந்திடும்படி (வாநரங்களைக்கொண்டுகொணர்ந்து) ஒருங்கு சேர்த்து (அணைகட்டி),
இலங்கை சென்று – (அதன்வழியாகப்) போய் இலங்காபுரியைச் சார்ந்து,
களத்து அனைவோரையும் மாய்த்து – போர்க்களத்தில் அரக்கர்களெல்லாரையுங் கொன்று,
திரு சரத்தால் – சிறந்த அம்பினால் (பிரமாஸ்திரத்தால்),
அன்று – அந்நாளில்,
களத்தனை (கள்ளத்தனை) – வஞ்சகனான இராவணனை,
அட்டானை – கொன்றவனும்,
ஆய் மகள் தோள்துன்று களத்தனை – இடைச்சாதிமகளான நப்பின்னையினது கைகளால் தழுவப்பட்ட கழுத்தையுடையவனுமான,
அப்பனை – திருவேங்கடமுடையானை,
ஏத்த வல்லார்க்கு – துதிக்கவல்லவர்கட்கு,
துன்பங்கள் இல்லை – எவ்வகைத்துன்பமும் உளவாகா; (எ – று.)

அனைவர் அனைவோர் எனச் சிறுபான்மை ஈற்றயல்அகரம் ஓகாரமாயிற்று. இராவணன் சீதையை வஞ்சனையாற்
கவர்ந்துசென்றதனால், ‘கள்ளத்தன்’ எனப்பட்டான். களத்தன் – தொகுத்தல்விகாரம். ஆய் – சாதிப்பெயர்.
தோள் – இங்கே, கை; சீவகசிந்தாமணியில், “தோளுற்றொர் தெய்வந்துணையாய்” என்றவிடத்திற் போல.
நான்காமடியில், களம் – வடசொல்.

————-

துன்பம் களையும் சனனம் களையும் தொலைவு அறு பேர்
இன்பம் களையும் கதி களையும் தரும் எங்கள் அப்பன்
தன்பங்கு அளையும் படி மூவரை வைத்து தாரணியும்
பின்பு அங்கு அளையும் இழுதும் உண்டானுடைப் பேர் பலவே –95–

(இ – ள்.) மூவரை – (பிரமன் சிவன் இலக்குமி என்ற) மூன்றுபேரை,
தன் பங்கு அளையும்படி – தனது திருமேனியின் பாகங்களிலே பொருந்தும்படி, வைத்து-,
தாரணியும் – (கற்பாந்தகாலத்திலே) பூமியையும்,
பின்பு – பிறகு (கிருஷ்ணாவதாரத்திலே),
அங்கு – அவ்விடத்தில் (திருவாய்ப்பாடியில்),
அளையும் இழுதும் – தயிரையும் நெய்யையும்,
உண்டான் – அமுதுசெய்தவனான,
எங்கள் அப்பனுடை – எமது திருவேங்கட முடையானுடைய,
பேர் பல – பல திருநாமங்கள், –
துன்பம் களையும் – (தம்மைச் சொன்னவர்களுடைய) கிலேசங்களையொழிக்கும்;
சனனம் களையும் – பிறப்பை வேரோடு அழிக்கும்;
தொலைவு அறு பேர் இன்பங்களையும் கதிகளையும் தரும் – முடிவில்லாத பேரின்பங்களையும் சிறந்தபதவிகளையும் தரும்; (எ – று.)

இது, திருநாம மகிமை.
“குலந்தருஞ் செல்வந்தந்திடு அடியார்படுதுய ராயினவெல்லாம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெரு நிலமளிக்கும்,
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்றதாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான்கண்டுகொண்டேன் நாராயணாவென்னுநாமம்” என்ற பெரியதிருமொழியையுங் காண்க.
ஸ்ரீமந்நாராயணன் தனதுதிருமேனியில் திருநாபியிலே பிரமனையும், வலப்பக்கத்திலே சிவனையும்,
திருமார்பிலே திருமகளையும் வைத்திருத்தலை, ‘தன்பங்களையும்படி மூவரை வைத்து’ எனக்குறித்தார்;
“பிறைதங்குசடையானை வலத்தேவைத்துப் பிரமனைத்தன் னுந்தியிலே தோற்றுவித்துக்,
கறைதங்குவேற்றடங்கண்திருவை மார்பிற் கலந்தவன்”,
“ஏறனைப் பூவனைப் பூமகள்தன்னை, வேறின்றிவிண்தொழத் தன்னுள்வைத்து”,
“திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ், ஒருவிடமும் எந்தைபெருமாற்கு அரன்”,
“ஏறாளு மிறையோனுந் திசைமுகனுந் திருமகளுங், கூறாளுந் தனியுடம்பன்”,
“சிவனொடு பிரமன் வண்திருமடந்தை சேர் திருவாசகம்”,
“மலர்மகள் நின் ஆகத்தாள் – செய்ய, மறையான் நின்உந்தியான் மாமதிள்மூன்றெய்த, இறையான் நின்ஆகத்திறை” என்ற
ஆழ்வார்களருளிச்செயல் பல காண்க.
மூவர் – தொகைக்குறிப்பு. தொலைவறு பேரின்பம் – “அந்தமில் பேரின்பம்.” ‘உண்டானடிப்பேர்பல’ என்ற பாடத்துக்கு,
எம்பெருமானுடைய திருவடிகளின் திருநாமங்கள் பல வென்க; அடி – தொன்றுதொட்டுவருகிற எனினுமாம்.

—————

தலைவனைப் பிரிந்த தலைவி கடலை நோக்கி இரங்கிக் கூறல் –

பல குவளைக்குள் சில கஞ்சம் போலும் படிவ அப்பன்
நலகு அளைக்கு முன் உண்டான் நின் மாட்டும் நணுகிலனோ
உலகு வளைக்கும் கடலே நின் கண் முத்து உகுத்து இரங்கி
இலகு வளைக் குலம் சிந்தி துஞ்சாய் இன்று இரா முற்றுமே –96-

(இ – ள்.) உலகு வளைக்கும் கடலே – உலகத்தைச்சூழ்ந்திருக்கிற கடலே! –
நின் கண் முத்து உகுத்து – உனதுகண்களினின்று முத்துப்போன்ற நீர்த்துளிகளைச்சொரிந்து (உன்னிடத்தினின்று முத்துக்களைச் சிந்தி).
இரங்கி – புலம்பி (ஒலித்து),
இலகு வளை குலம் சிந்தி – விளங்குகின்ற கைவளைகளின் வரிசையைக் கீழேசிந்தி (விளங்குகிற சங்குகளின் கூட்டத்தை வெளியேசிதறி),
இன்று இரா முற்றும் – இன்றை யிராப்பொழுது முழுவதும்,
துஞ்சாய் – தூங்குகின்றாயில்லை (அமைதிகொண்டிருக்கின்றாயில்லை); (ஆதலால்),
பல குவளைக்குள் சில கஞ்சம் போலும் படிவம் அப்பன் – பலநீலோற்பலமலர்களின் இடையிடையே சிலசெந்தாமரைமலர்கள்
(பூத்தன) போன்ற திருமேனியையுடைய ஸ்வாமியான,
அளைக்கு முன் நல கு உண்டான் -(கிருஷ்ணாவதாரத்தில்) வெண்ணெயையுண்பதற்குமுன்னே (கற்பாந்தகாலத்திலே)
நல்லபூமியை விழுங்கியவனுமான தலைவன்,
நின்மாட்டும் நணுகிலனோ – (என்னிடத்திற்போலவே) உன்னிடத்திலும் வந்துசேர்ந்திலனோ?

இதற்குத் துறைவிவரம், கீழ் 19 – ஆஞ்செய்யுட்குக் கூறியதுகொண்டு உணர்க. அது, தோழிகூற்று; இது, தலைவிகூற்று.
இது, கடலைநோக்கித் தன்னோடொப்பத் துன்பமுறுவதாகக்கருதிக் கூறியது.
இங்ஙனம் தலைவி சொல்லுதலின் பயன் – தலைமகன் கேட்பின், விரைவில் வெளிப்படையாக மணம்புரிந்து கொள்வன்;
தோழி கேட்பின், தலைவனுக்குச் சொல்லி விரைவில் மணம்புரிந்துகொள்ளச்செய்வள்; யாரும் கேளாராயின், தலைவிதானே சொல்லி ஆறினளாம்.
‘நின்மாட்டும்நணுகிலனோ’ என்பதற்கு – (இத்தலைவியிடத்திற் போலவே) உன்னிடத்திலும் வந்து சேர்ந்திலனோ? என்று பொருள்
கொண்டு, இதனையும் தோழிகூற்றென்றலுமாம். இதுவும், செம்மொழிச்சிலேடையுவமையணி கொண்டது.
‘நின்கண் முத்துகுத்து’ என்றது முதலிய தொடர்கள் இருபொருள்பட்டமை காண்க.
தலைவி வளையல்களைச் சிந்துதல், பிரிவாற்றாமைத்துயரால் உடல் மிகமெலிந்தது பற்றி.

பல குவளைமலர்கள் – எம்பெருமானது நீலநிறமுள்ள திருமேனிக்கும்,
அவற்றிடையே சிலசெந்தாமரைமலர்கள் – வாய் கண் கை உந்தி பதம் ஆகிய திருவவயவங்கட்கும் உவமை.
குவலயம் என்ற வடசொல், குவளை என விகாரப்பட்டது. கஞ்ஜம் – வடசொல்: நீரில் தோன்றுவதென்று பொருள்படும்:
கம் – நீர். நல – நல்ல என்பதன் தொகுத்தல். கு – வடசொல். நின்மாட்டும், உம் – இறந்தது தழுவிய எச்சம்.
முத்து – நீர்த்துளியைக் குறிக்கும்போது, உவமையாகுபெயர்.

எம்பெருமானது பிரிவை யாற்றாமல் வருந்துகின்ற ஐயங்கார் தமக்கு உள்ள கலக்கத்தால் தம் கண்ணெதிர்ப்படுகிற
பொருள்களையெல்லாம் தம்மைப்போலவே எம்பெருமானது பிரிவினால் வருந்துகின்றனவாகக்கொண்டு,
கடலைநோக்கி ‘நீயும் நான்பட்டது படுகின்றனையோ?’ என்று வினவுதல், இதற்கு உள்ளுறைபொருள்.
தம்மைப்போலவே பிறரையும் பாவித்தல், பெரியோரியல்பு. இவர்க்கு, வளைக்குலம் சிந்துதல் – அடிமைக்கு அறிகுறியான
ஆத்மகுணங்கள் குலையப்பெறுதல்; பாரதந்திரியம்நீங்கி ஸ்வாதந்திரியம் மிகுதல். மற்றவை, முன்கூறியவாற்றால் விளங்கும்.

“காமுற்ற கையறவோ டெல்லே யிராப்பகல்,
நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்,
தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த,
யாமுற்றதுற்றாயோ வாழிகனைகடலே” என்ற திருவாய்மொழிப்பாசுரத்தைப் பின்பற்றியது, இது.
“வாயினிரங்கினை யாரமெறிந்தனை வால்வளை சிந்தினை தண்,
பாயலையுந்தினை மாலை யடைந்தனை பாரிலுறங்கிலையால்,
கோயிலரங்கனை மாகனகந்திகழ் கோகனகம்பொலியும்,
ஆயிழைநண்பனை நீயும்விரும்பினையாகு நெடுங்கடலே” என்றார் திருவரங்கக்கலம்பகத்தும்.
இவை, பிரிவுக்காலத்திற் கடலைநோக்கிப் பெண்பால் இரங்கியன.
(இங்ஙனமே ஆண்பால் இரங்குதலை,
“போவாய் வருவாய் புரண்டுவிழுந் திரங்கி
நாவாய் குழற நடுங்குறுவாய் –
தீவாய், அரவகற்றுமென்போல வார்கலியே மாதை,
யிரவகற்றி வந்தாய்கொ லின்று” என நளவெண்பாவிற் காண்க.)

———–

நீட்டித்து வந்த தலைவனொடு தலைவி ஊடிப் பேசுதல் –

முற்றிலை பந்தை கழங்கை கொண்டு ஓடினை முன்னும் பின்னும்
அற்றிலை தீமை அவை பொறுத்தோம் தொல்லை ஆலின் இளங்
கற்றிலை மேல் துயில் வேங்கடவா இன்று உன் கால் மலரால்
சிற்றிலைத் தீர்த்ததற்குப் பெரு வீட்டினைச் செய்தருளே –97-

(இ – ள்.) தொல்லை – முற்காலத்தில் (பிரளயகாலத்தில்),
ஆலின் இளங்கன்று இலைமேல் – இளமையான ஆலங்கன்றினது இளந்தளிரின்மேல்,
துயில் – பள்ளிகொண்டு யோகநித்திரை செய்த,
வேங்கடவா – திருவேங்கடமுடையானே! –
முன்னும் – முன்னமும், (நீ எம்முடைய),
முற்றிலை – சிறுமுறத்தையும்,
பந்தை – பந்தையும்,
கழங்கை – (ஆடுதற்குஉரிய) கழற்காய்களையும்,
கொண்டு ஓடினை – எடுத்துக்கொண்டு ஓடினாய்;
பின்னும் தீமை அற்றிலை – பின்பும் (எம்பக்கல்) தீங்குசெய்தலை ஒழிந்தாயில்லை;
அவை பொறுத்தோம் – அப்பொல்லாங்குகளையெல்லாம் யாம் பொறுத்திட்டோம்;
இன்று – இப்பொழுது,
உன் கால் மலரால் – உனது திருவடித்தாமரையினால்,
சிற்றிலை தீர்த்ததற்கு – (யாம் மணல்கொண்டு விளையாட்டாக அமைத்த) சிறுவீட்டைச் சிதைத்ததற்கு ஈடாக,
பெரு வீட்டினை செய்தருள் – பெரியதொரு வீட்டை (எமக்கு)க் கட்டிக்கொடுப்பாய்; (எ – று.)

இன்றியமையாததொரு காரியத்தினிமித்தம் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் மீண்டுவருவதாகக் குறித்த பருவத்தில்
வாரானாய்க் காரிய வசத்தாற் சிறிதுநீட்டிக்க, அதற்குள்ளே தலைவி ‘தலைவன்வாராதது, என்னை உபேக்ஷித்து
என்னினும் அழகுசிறந்த வேறுபலமகளிர்பக்கல் உறவுகொண்டதனாலாம்’ என்று எண்ணிப் பிணங்கி
‘இனி அவன் வந்தாலும் நாம் முகங் கொடுப்பதில்லை’ என்று நிச்சயித்துத் தனது தோழியரையும்
தான்வளர்த்த கிளி பூவை முதலிய பேசும்பறவைகளையும் தன்வழிபடுத்திவைத்துக்கொண்டு ஓரிடத்திலே அவர்களோடு
விளையாடுகிற வியாஜத்தாற் பராமுகமாயிருக்க, பின்பு மிக்க அன்போடு வெகுவிரைவாக மீண்டுவந்த தலைவன்,
பிரணயகோபத்தால் அணுகவொண்ணாதபடி யிருக்கின்ற இவளிருப்பைக் கண்டு வருந்திச் சிந்தித்து அருகிற்சென்று
தோழியர்மூலமாக இவளுடைய ஊடலைத் தீர்க்கக் கருதி நோக்கியவிடத்து,

அவர்களும் தலைவியின்கோட் பாட்டின்படி தங்களில் ஒருமித்து அவனை அநாதரித்து முகம்மாறி மிக்க கோபங்காட்ட,
அவ்வாயிலைப் பெறானாய்க் கிளி பூவை முதலியவற்றைக் கொண்டு ஊடல் தணிக்கப்பார்த்து அவையும் தலைவியின்
சங்கேதப்படி தன்னை உபேக்ஷித்ததனால் அவ்வாயிலையும்பெறாது மிகவருத்தமுற்று, அசேதநமாகையால்
தன்னை உபேக்ஷித்துப்போகமாட்டாமல் அங்குக்கிடந்த இவளுடைய விளையாட்டுக்கருவிகளான
முற்றிலையும் பந்தையும் கழங்கையும் எடுத்து அவற்றைத் தன்உடம்பின்மேற்படவைத்துத் தழுவியும் அன்போடு நோக்கியும்
கண்களில் ஒற்றியும் தலைமேல் வைத்துக்கொண்டு தான் ஒருவாறு ஆறித் தனதுகாதலையும் தலைவிக்குப் புலப்படுத்த,

அச்செயல்களை யெல்லாம் அவள் வேறுசில மகளிரைப் பிரிந்த ஆற்றாமையால் இவன்செய் கின்றன வெனக்கொண்டு
சீற்றங்காட்டி உறவறப்பேச, முதலில் தலைவி நோக்கையும்பெறாதிருந்த அத்தலைவன்,
முகம்பார்த்து அவ்வளவு வார்த்தை பேசப்பெற்றதையே தாரகமாகக்கொண்டு, அவ்வார்த்தைகட்கு ஏற்றவிடை கள்
சொல்லுகிறவியாஜத்தாற் பேச்சுவளர்த்திக்கொண்டே மேன்மேல்நெருங்கிக் கிளிபூவைகளோடுகொஞ்சிப்பேசுதல்,
அருகிற்கிடந்த அவளது விளையாட்டு மரப்பாவையை யெடுத்தல், அவள்கையிலுள்ள பாவையைத் தொட்டுப் பறித்தல்,
அங்குநில்லாமல் தோழியருடன் அப்பாற்செல்லப்புக்க அவளைக் கைகளால் வழிமறித்துத்தடுத்தல் முதலியன செய்து
அவளை ஊடல்தணிக்க முயன்றவிடத்தும்

அவள் சினந்தணியாள்போன்று தனது உள்ளக்காதலைப் புலனாகாதபடி மறைத்துக்கொண்டு அவனைப் புறக்கணித்துத்
தோழியரோடு மணலிற் சிற்றிலிழைத்து விளையாடாநிற்க, இவளது கடைக்கண் பார்வையை ஏதேனும்
ஒருவிதத்தாற்பெற்றுத் தான் உய்யலாமென்று பார்த்து அவன் இவளமைத்தசிற்றிலைத் தன்கால்களாற்சிதைக்க,

அப்பொழுது அவனுடைய முகத்தைப் பார்த்து அவனது கண்ணழகு முதலியவற்றால் நெஞ்சுருகி நிலைகலங்கியவளவிலும்
அவள் முந்தின புலவியின் தொடர்ச்சியாற் சிறிது ஊடல்காட்டிப் பேசியது, இது. திருவாய்மொழியில் ஊடற் பாசுரமான
“மின்னிடை மடவார்கள்” என்ற திருப்பதிகம் முழுவதும் இச்செய்யுட்கு மூலமாம்.

“பின்னும் அற்றிலை தீமை” என்றது – கிளிபூவைகளோடு கொஞ்சிப் பேசுதல், மரப்பாவையையெடுத்தல்,
கையிற்பாவைபறித்தல், வழிமறித்தல் முதலியவற்றைக் குறித்தது. “பொறுத்தோம்” என்றதை,
உயர்வுபற்றிவந்த தனித்தன்மைப்பன்மை யென்றாவது, தோழியரையுங் கூட்டிச்சொன்ன உளப்பாட்டுத் தன்மைப்பன்மை யென்றாவது கொள்க.
“ஆலினிலைமேல் துயில் வேங்கடவா” என்றது, பிரமன் முதலிய சகலதேவர்களு முட்பட யாவும் அழிந்துபோகின்ற
கல்பாந்தகாலத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு அண்டங்களை யெல்லாம் தன்வயிற்றில்வைத்து அடக்கிக்கொண்டு
சிறுகுழந்தை வடிவமாய்ப் பிரளயப்பெருங்கடலிலே ஆதிசேஷனது அம்சமானதோர் ஆலிலையின்மீது பள்ளிகொண்டு
அறிதுயில்செய்தருள்கின்றன னென்ற வரலாறு பற்றி. இங்கு இதுகூறி விளித்தது,
நினது செயற்கரியனசெய்யுந்திறம் விசித்திர மென்றவாறாம். “பெருவீட்டினைச் செய்தருள்” என்றது,
இனி என்னைப் பிரியாது என்னுடன் என்றுங் கூடியிருந்து சிறந்த இல்வாழ்க்கையின்பத்தைத் தந்தருள்வாயென்று
வேண்டுகிற குறிப்பாதலால், இது, ஊடல்தணிகிறநிலைமையில் நிகழ்ந்த பேச்சென்க.

அற்றிலை – முன்னிலை யொருமை யெதிர்மறை யிறந்தகாலமுற்று; அறு – பகுதி. தொல்லை –
தொன்மை; ‘ஐ’ விகுதிபெற்ற பண்புப்பெயர்; இது, பண்பாகுபெயராய், பழையநாளைக் குறித்தது.
கன்று + இலை = கற்றிலை; மென்றொடர், வேற்றுமையில் வன்றொடராயிற்று. ‘நன்று’ என்றது,
இங்கு, மரத்தின் இளமைப்பெயர்; இளமரம். பிரளயப்பெருங்கடலிற் புதிதாகத்தோன்றியதோ ராலமரத்தின்
இளமையானஇலை யென்பார், “ஆலினிளங்கற்றிலை” என்றார். சிறுமை + இல் = சிற்றில்;
பண்புப்பெயர் ஈறுபோய்த் தன்னொற்றுஇரட்டிற்று: இல் – வீடு.

தியானநிலையிலே ஐயங்காரது அகக்கண்ணுக்குப்புலனாகிமறைந்த எம்பெருமான் மீளவும்வந்து தோன்றானாக,
இவர் தம்மினும்விலக்ஷணரான வேறு பல அடியார்கள்பக்கல் அன்பினால் தம்மை உபேக்ஷித்தனனென்று கொண்டு கலங்கி,
அக்கலக்கமிகுதியால் ‘இனி அவன்தானேவந்தாலும், மீளவும்பிரிந்து வருத்துவனாதலால்,
யாம் கண்ணெடுத்துப்பார்ப்பதில்லை’ என்று பிரணயரோஷங் கொண்டிருக்கிறநிலையில்,

அடியவரைக்கைவிடாத இயல்புடையனான அப்பெருமான் மீளவும்வந்து அவர்க்குவந்தேறியாயுள்ள பராமுகத்தன்மையைப் போக்கி
அவரை அபிமுகராக்கிக்கொள்ளப் பலவகையால் முயன்றபோது, அவர் தமதுமுந்தினமநஸ்தாபந் தோன்ற
அப்பெருமானைநோக்கிப் பேசும் வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள்.

“முற்றில்” என்றது, கொள்வன தவிர்வன ஆய்ந்துணரவல்ல விவேகத்தை. “பந்து” என்றது, சரீரத்தை;
ஸத்வகுணம் ரஜோகுணம் தமோகுணம் என்கிற மூன்று குணங்களோடு விசித்திரமான கர்மமாகிய கயிறு
கொண்டு கட்டி எம்பெருமான் அந்த ராத்மாவாயிருந்து செலுத்த விழுந்தும் எழுந்தும் சுழன்றும் உழன்றும் சமய
பேதத்தால் விரும்பவும் வெறுக்கவும் படுவதான உடம்பு, செந்நூல் வெண்ணூல் கருநூல்கொண்டு புனையப்பட்டு
உரியவர் விளையாட்டாகச்செலுத்த விழுந்துஎழுந்து சுழன்றுஉழன்று கூடியநிலையில் விரும்பவும் கூடாத நிலையில்
வெறுக்கவும் படுவதான பந்தென்னத் தகும். “கழங்கு” என்றது,

ஐம்பொறிகளை: ஐம்புலநுகர்தற்கருவியான பஞ்சேந்திரியங்கள், சிறுகி அஞ்சாயிருக்கிற விளையாட்டுக்கருவியான கழங்குக ளெனப்பட்டன.
இவற்றை முன்பு அவன் கொண்டு ஓடியதாவது – இவருடைய விவேகம் முதலியவற்றை முன்னமே அவன் இவர்வசமின்றித்
தன்வசப்படுத்திக் கொண்டமை. மற்றும் இவருடைய ஐம்புலன் முதலியவற்றையும் அவன் வலியத் தன்வசப்படுத்திக்
கொண்டதை “பின்னும்அற்றிலை தீமை” என்று குறித்தார்.

இடையிலே அவன் உபேக்ஷித்துவிட்டதாக இவர் கருதிக் கொண்ட வெறுப்பினால், அந்நன்மையையே “தீமை” என்றார்.
‘அவைபொறுத்தோம்’ என்றது, நீசெய்கின்ற செயல்கட்கெல்லாம் இலக்காம்படி யாம் பரதந்திரமாயிருந்தோ மென்றபடி;
பன்மை, தனித்தன்மைப்பன்மை யென்றாவது, அன்பர்களைக் கூட்டிச்சொன்ன தென்றாவது கொள்ளத்தக்கது.
‘தொல்லையாலி னிளங்கற்றிலைமேல்துயில் வேங்கடவா’ என்றது, லோகரக்ஷணத்தில் ஜாக்கி ரதையுள்ளவனே யென்றபடி.
‘இல்’ ஆவது, போகாநுபவத்திற்கு உரிய இடம். ‘சிற்றில்’ என்றது, சிற்றின்பநுகர்ச்சிக்கு உரிய பிரபஞ்சவாழ்க்கையை.
உனது திருவடிஸ்பரிசத்தால் எனது இவ்வுடல்வாழ்விலாசையை யொழித்த தற்கு ஈடாக மீண்டும் இவ்வகை
நிலையிலாவாழ்க்கையைத் தராமல் பெருவீடான பரமபதத்தைத்தந் தருள்க வென்பது,

இறுதிவாக்கியத்தின் கருத்து. இடையீடுள்ள நினது அநுபவமாயின் எமக்கு வேண்டா:
நிரந்தராநுபவம் தந்தருள்வதானால் தந்தருள் என்ற போக்கு அமைய “பெருவீட்டினைச்செய்தருள்” என்றதனால்,
இது மநஸ்தாபந்தீர்கிறநிலையில் நிகழ்ந்த பேச்சென்க. இங்குக் குறிப்பாகக்காட்டிய ஸ்வாபதேசார்த்தங்களின் விவரணம்,
ஸ்ரீவைஷ்ணவசம்பிரதாயம்வல்லார்வாய்க் கேட்டு உணரத்தக்கது.

————-

அரும்பாதகன் பொய்யன் காமுகன் கள்வன் அருள் சிறிதும்
அரும்பாத கல் நெஞ்சன் ஆறாச் சினத்தான் அவாவில் நின்றும்
திரும்பாத கன்மத்தன் ஆனேற்கு சேடச் சிலம்பு அமர்ந்து அ
திரும் பாத கஞ்சம் தரில் அது காண் உன் திருவருளே –98–

(இ – ள்.) அரும் பாதகன் – (போக்குதற்கு) அரிய பாவங்களையுடையவனும்,
பொய்யன் – பொய்பேசுபவனும்,
காமுகன் – சிற்றின்பவிருப்பமுடையவனும்,
கள்வன் – களவுசெய்பவனும்,
அருள் சிறிதும் அரும்பாத கல் நெஞ்சன் – கருணையென்பதுசிறிதேனுந்தோன்றப்பெறாத கல்லைப்போன்ற கடின சித்தமுடையவனும்,
ஆறா சினத்தன் – தணியாக்கோபமுள்ளவனும்,
அவாவினின்றும் திரும்பாத கன்மத்தன் – ஆசையினின்று மீளாத கருமத்தை யுடையவனும்,
ஆனேற்கு – ஆகிய எனக்கு,
சேடன் சிலம்பு அமர்ந்து அதிரும் பாத கஞ்சம் தரில் – திருவேங்கடமலையி லெழுந்தருளிப் பாததண்டைகள்) ஒலிக்கப்பெற்ற
(நினது) திருவடித்தாமரைமலர்களைக் கொடுத்தால்,
அதுகாண் உன் திரு அருள் – அதுவன்றோ உனது மேலானகருணையாம்; (எ – று.) – காண் – தேற்றம்.

தீக்குணந் தீச்செயல்கட்கெல்லாங் கொள்கலமான என்னை உன் திருவடிக்கு ஆளாக்கிக் கொள்ளுதலே நினது
திருவருட்குச் சிறப்பு என்பதாம். “அரும்பாதகன்” என்றது முதலாகத் தமதுதாழ்வை எடுத்துரைத்தார்.
எம்பெருமானுக்கு இயல்பில் அடிமையாகவுள்ள தமதுஆத்மாவை அங்ஙனம் எண்ணாது ஸ்வதந்திரமென்று எண்ணுதல்
அவனுக்கு உரியபொரு ளைக் களவுசெய்த தாகுதலால், அங்ஙனம் அகங்காரமுடையே னென்பார், தம்மை “கள்வன்” என்றார்;
“பண்டேயுன்தொண்டாம் பழவுயிரை யென்ன தென்று, கொண்டேனைக் கள்வனென்று” என்னும்
நூற்றெட்டுத்திருப் பதியந்தாதியையும் காண்க.
“அவாவென்ப வெல்லாவுயிர்க்குமெஞ்ஞான்றுந், தவா அப்பிறப்பீனும்வித்து” என்றபடி அவா கர்மத்துக்கு மூலகாரணமாதலால்,
‘அவாவினின்றுந் திரும்பாத கன்மம்’ எனப்பட்டது.
சிலம்பு – மலை. அணியப்பட்ட ஆபரணத்தின் அதிர்ச்சியை அணியும்உறுப்பான திருவடியின் மே லேற்றிச் சொன்னது,
இடத்துநிகழ்பொருளின்தொழிலை இடத்தின் மேற் சார்த்திக்கூறிய உபசாரவழக்கு.

காமுகன் – காமமுடையவன். சேஷன் என்ற பெயர் – (பிரளயகாலத்திலும் அழியாது) சேஷித்திருப்பவனென்று காரணப்பொருள்படும்;
சேஷித்தல் – மிச்சப்படுதல். ஈற்றடியில், ‘திருப்பாதகஞ்சம்’ என்பது மெலித்தல் விகாரம் பெற்றுவந்த தெனக்கொண்டு,
சேஷகிரியில் நின்ற திருவடித்தாம ரைமலர்கள் என்று உரைகொள்ளுதலும் உண்டு.

————

திருமந்திரம் இல்லை சங்கு ஆழி இல்லை திரு மண் இல்லை
தருமம் திரம் ஒன்றும் செய்து அறியீர் செம்பொன் தானவனை
மருமம் திரங்கப் பிளந்தான் வடமலை வாரம் செல்லீர்
கருமம் திரண்டதை எத்தால் களையக் கருதுதிரே –99–

(இ – ள்.) (பேதைச்சனங்களே! உங்கள்பக்கல்),
திரு மந்திரம் இல்லை – பெரியதிருமந்திரமெனப்படுகிற திருவஷ்டாக்ஷரமகாமந்திரம் இல்லை;
சங்கு ஆழி இல்லை – சங்கசக்கரமுத்திரை இல்லை;
திருமண் இல்லை – திரு மண்காப்பும் இல்லை;
தருமம் திரம் ஒன்றும் செய்து அறியீர் – (எம்பெருமானைச்சரணமடைதலாகியசரணாகதி) தருமத்தை நிலையாகச்சிறிதும் செய்து பயின்றீரில்லை;
செம் பொன் தானவனை – சிவந்த பொன்னின்நிறமுள்ள இரணியாசுரனை,
மருமம் திரங்க – மார்பு வருந்த,
பிளந்தான் – (நரசிங்க மூர்த்தியாய்ப்) பிளந்திட்டவனான எம்பெருமானுடைய,
வட மலை வாரம் – திருவேங்கடமலையின் அடிவாரத்திலேனும்,
செல்லீர் – சென்றீரில்லை; (இத்தன்மையரானநீங்கள்),
கருமம் திரண்டதை எத்தால் களைய கருதுதிர் – (உங்கள்) ஊழ்வினை தொகுதிப்பட்டுள்ளதை எவ்வாற்றால் நீக்க நினைக்கிறீர்கள்?

இங்ஙனம் இரங்கிக் கூறியதனால், இனியேனும் நீங்கள் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணமாய் உஜ்ஜீவநோபாயமாகிற
திருமந்த்ரோபதேசத்தையும், தப்தசங்க சக்ரமுத்திரை தரிக்கப்பெறுதலாகிய திருவிலச்சினையையும்,
கேசவாதி துவாதசநாமங்களை முறையேசொல்லிஉடம்பிற்பன்னிரண்டிடத்தில் திருமணிடுதலாகிய ஊர்த்வபுண்டரத்தையும்
நல்ல ஆசிரியரது அருளாற் பெற்று, பிரபத்திமார்க்கத்தி லிழிந்து, துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலந சீலனான
எம்பெருமானுடைய திவ்வியதேசத்தைச் சார்ந்து, ஊழ்வினையொழித்து வாழ்வீர்க ளென்று அவைஷ்ணவர்கட்குக் குறிப்பித்தபடியாம்.

சங்காழி, திருமண், திருமந்திரம் என்பது முறையாயினும், தலைமைபற்றித் திருமந்திரத்தை முதலில் வைத்து,
மந்திரோபதேசத்திற்கு அங்கமாகின்ற தாபத்தையும் புண்டரத்தையும் அதன்பின் நிறுத்தினார்.
பஞ்சஸம்ஸ்காரங்களில் தாபம் புண்டரம் மந்திரம் என்ற மூன்றைக் கூறினது, நாமம் யாகம் என்ற மற்றையிரண்டற்கும் உபலக்ஷணம்;
(நாமம் – அடிமைப்பெயரிடப்பெறுதல். யாகம் – திருவாராதநக்கிகரமம் அருளப்பெறுதல்.)

“எல்லாத்தருமங்களையும் பற்றறவிட்டு என்னையொருவனைச் சரணமாக அடை, நான் உன்னை எல்லாத்
தீவினைகளினின்றும் விடுவிப்பேன், வருந்தாதே” என்றது ஸ்ரீகீதையிற் கண்ணன் அருளிய முடிவுரையாதல்கொண்டு,
தருமம்என்பதற்கு – சரணாகதியென்று உரைக்கப்பட்டது.
செம்பொற்றானவன் – செம்பொன்னின் பெயரையுடைய அசுர னெனினுமாம்; பொன் என்ற தென்மொழியும்,
ஹிரண்யம்என்ற வடமொழியும் பரியாயநாமமாதல் காண்க. பிறப்பு அநாதி யாய்வருதலின் உயிரால் அளவின்றியீட்டப்பட்ட
வினைகளின் பயன்கள் மலைபோலப் பெருந்தொகுதியாகக் குவிந்துள்ளதனால், “கருமந் திரண்டது’ என்றார்.
எது என்ற வினாப்பெயர் “ஆல்” என்ற மூன்றனுருபை யேற்கும்போது இடையிலே தகரவொற்றுவிரிந்து, எத்தால் என நின்றது.
கருதுதிர் என்ற முன்னிலைமுற்று, நிகழ்காலத்தில் வந்தது.

————

கருமலையும் மருந்தும் கண்ணும் ஆவியும் காப்பும் அவன்
தரும் அலை உந்திய பேரின்ப வெள்ளமும் தாய் தந்தையும்
வருமலையும் திருப்பாலாழியும் திரு வைகுந்தமும்
திரு மலையும் உடையான் எனக்கு ஈந்த திருவடியே –100-

(இ – ள்.) வரு மலையும் – பொருந்திய திருக்கடல்மல்லை யென்கிற ஸ்தலத்தையும்,
திரு பால் ஆழியும் – திருப்பாற்கடலையும்,
திரு வைகுந்தமும் – பரமபதத்தையும்,
திருமலையும் – திருவேங்கடமலையையும்,
உடையான் – (தனக்குத் தங்குமிடமாக) உடையவனான எம்பெருமான்,
எனக்கு ஈந்த – அடியேனுக்கு அருளிய,
திரு அடி – சீர்பாதங்கள், – (அடியேனுக்கு), –
கரு மலையும் மருந்தும் – பிறவிநோயையொழிக்கிற மருந்தும், கண்ணும் -,
ஆவியும் – உயிரும்,
காப்பும் – பாதுகாவலும்,
அவன் தரும் அலை உந்திய பேர் இன்ப வெள்ளமும் – அவன் (பரமபதத்தில்) தந்தருளும் அலைகளை யெறிகிற பேராநந்தப்பெருக்கும்,
தாய் தந்தையும் – தாய்தந்தையருமாம்; (எ – று.)

கரு மலையும் மருந்து – “மருந்தாங் கருவல்லிக்கு” என்பர் நூற்றெட்டுத்திருப்பதியந்தாதியிலும்.
திருவடியை ‘மருந்து’ என்றதற்கு ஏற்ப, பிறவியை “நோய்” என்னாததனால், ஏகதேசவுருவகவணி.
இன்றியமையாதனவாய் அருமைபாராட்டப்படுதல்பற்றி ‘கண்’ என்றும், அங்ஙனம் தாரகமாதல் பற்றி ‘உயிர்’ என்றுங் கூறப்பட்டன.
காப்பு – ரக்ஷகம். வெள்ளமென்றதற்கு ஏற்ப ‘அலையுந்திய’ என்ற அடைமொழி கொடுத்தது,
பேரின்பத்தின்மிகுதியை யுணர்த்தும்; இது, சஞ்சலத்தையொழித்த என்றும் பொருள்படும்.
அன்புடன் ஆவனசெய்தலில், தாயும் தந்தையுமா மென்க. இச்செய்யுள் – பலபடப்புனைவணி.
மூன்றாமடியில், மல்லை யென்பது ‘மலை’ எனத் தொகுத்தல்விகாரப்பட்டது.
திருக்கடன்மல்லை – தொண்டைநாட்டுத்திருப்பதிகளி லொன்று. வரும் அலையும் என்று எடுத்து,
இரண்டுபெயரெச்சங்களையும் திருப்பாற்கடலுக்கு அடைமொழியாக்குதலு மொன்று. வரும் அலை – பிரளயப்பெருங்கடல் எனினுமாம்.

———-

தற்சிறப்புப் பாசுரம் –

மட்டளை தண்டலை சூழ் வடவேங்கட வாணனுக்குத்
தொட்டளை யுண்ட பிரானுக்கு அன்பாம் பட்டர் தூய பொற்றாள்
உள் தளை யுண்ட மணவாள தாசன் உகந்து உரைத்த
கட்டளை சேர் திரு அந்தாதி நூறு கலித் துறையே –

(இ – ள்.) பட்டர் – பட்டரென்ற ஆசாரியருடைய,
தூ பொன் தானுள் பரிசுத்தமான அழகிய திருவடிகளிலே, தளை யுண்ட – பக்தியினாலாயே சம்பந்தம்பெற்ற,
மணவாளதாசன் – அழகியமணவாளதாசன்,
உகந்து உரைத்த – விரும்பிப் பாடிய,
திரு அந்தாதி – சிறந்த அந்தாதிப்பிரபந்தவடிவமான,
நூறு கட்டளை சேர் கலித்துறை – நூறு கட்டளைக்கலித்துறைச் செய்யுள்களும், –
அளை தொட்டு உண்ட பிரானுக்கு – வெண்ணெயைக் கையினா லெடுத்து அமுதுசெய்த பிரபுவான,
மட்டு அளை தண்டலை சூழ் வடவேங்கட வாணனுக்கு – வாசனை நிறைந்த சோலைகள் சூழ்ந்த வடக்கின் கணுள்ள
திருவேங்கடமலையில் வாழ்கிற எம்பெருமானுக்கு,
அன்பு ஆம் . பிரியமாம்; (எ – று.)

பட்டர் தூயபொற்றாளுள்தளையுண்ட – பட்டரது அந்தரங்கசிஷ்யரான என்றபடி. பட்டர் – கூரத்தாழ்வானுடைய குமாரர்,
எம்பாருடைய சிஷ்யர்: பண்டிதர்க்கு வழங்குகிற பட்ட ரென்ற பெயர், இவர்க்குச் சிறப்பாக வழங்கும்;
இவர், ஸ்ரீபாஷ்யகாரரால் நாமகரணஞ்செய்தருளப்பெற்றவர்.
கட்டளைசேர்கலித்துறை – கலிப்பாவின் இனம் மூன்றனுள் ஒன்றான கலித்துறையினும் வேறுபட்டுவருவது;
அதன் இலக்கணம் – “முதற்சீர்நான்கும் வெண்டளைபிழையாக், கடையொருசீரும் விளங்காயாகி, நேர்பதினாறே நிரைபதினேழென்,
றோதினர் கலித்துறை யோரடிக் கெழுத்தே” எனக் காண்க.
மட்டு – தேனுமாம். தாள் உள் தளையுண்ட – தாளினிடத்து மனப் பிணிப்புப் பொருந்திய எனினுமாம்.

இச்செய்யுள், நூலாசிரியர் தாமே தம்மைப் பிறன்போலும் பாயிரங் கூறியது.
(பிரயோகவிவேகநூலார் ‘இது, தன்னைப் பிறன்போலும் நாந்தி கூறுகின்றது,’ வடநூலார் தாமே பதி+மும் உரையுஞ் செய்வார்’,
‘இனிச் சம்பந்தர் சடகோபர் முதலாயினாரும் திவாகரரும் பதினெண்கீழ்க்கணக்குச் செய்தாரும் முன்னாகப்
பின்னாகப் பதிகங்கூறுவதுங் காண்க’ என்றவை கருதத்தக்கன.) இது, தற்சிறப்புப்பாயிர மெனப்படும்.

திருவேங்கடத்தந்தாதி முற்றிற்று.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கடத்தந்தாதி –61-80-

February 21, 2022

பண்டை இருக்கும் அறியாப் பரம பதத்து அடியார்
அண்டை இருக்கும் படி வைக்கும் அப்பனை அண்டத்துக்கும்
தண் தையிருக்கும் மலர்ந்த செவ்வாயனை தாள் வணங்கா
மண்டை யிருக்கும் விடுமோ சனன மரணமுமே –61-

(இ – ள்.) பண்டை இருக்கும் அறியா – பழமையான வேதங்களும் முழுதும் அறியமாட்டாத,
பரம பதத்து – (தனது உலகமாகிய) ஸ்ரீவைகுண்ட த்தில்,
அடியார் அண்டை இருக்கும்படி – (நித்தியமுக்தர்களாகிய) அடியார்களின் அருகில் இருக்கும்படி,
வைக்கும் – (தன்னைச்சரணமடைந்தவர்களை) வைத்தருள்கின்ற,
அப்பனை – திருவேங்கடமுடையானும்,
அண்டத்துக்கும் தண் தயிருக்கும் மலர்ந்த செவ் வாயனை – (பிரளயகாலத்தில்) உலகங்களை விழுங்குதற்கும்
(கிருஷ்ணாவதாரத்திலே) குளிர்ச்சியான தயிரை யுண்ணுதற்கும் திறந்த சிவந்த திருவாய்மலரை யுடையவனுமான எம்பெருமானை,
தாள் வணங்கா – திருவடிதொழாத,
மண்டையிருக்கும் – தலையையுடைய வர்களாகிய உங்களுக்கும்,
சனனம் மரணமும் விடுமோ – பிறப்பும் இறப்பும் நீங்குமோ? (நீங்கா என்றபடி); (எ – று.)

வேதம் ஒருகாலத்தில் தோன்றியதன்றி நித்தியமாதலால், “பண்டையிருக்கு” எனப்பட்டது.
பண்டு – பழமைகுறிக்கும் இடைச்சொல். பண்டை – ஐயீற்றுடைக் குற்றுகரம். உம் – உயர்வுசிறப்பு.
தயிர் – தையிர் என இடைப்போலிபெற்றது, திரிபுநயத்தின்பொருட்டு. “மலர்ந்த” என்ற வினையின் ஆற்றலால், வாய், மல ரெனப்பட்டது.
மண்டையிர் – முன்னிலைப்பன்மைக் குறிப்பு வினையாலணையும் பெயர்; இர் – விகுதி;
அப்பெயரின்மேல், உ – சாரியை, கு – நான்கனுருபு; உம் – இழிவுசிறப்பு.
“கோளில்பொறியிற் குணமிலவே யெண்குணத்தான், தாளை வணங்காத் தலை” என்றபடி இறைவனது திருவடிகளை
வணங்காத தலை பயன்படாதாதலின், அதனது இழிவு தோன்ற, தலையோட்டைக்குறிக்கிற, ‘பண்டை’ என்ற சொல்லாற் குறித்தார்.
ஓ – எதிர்மறை. பரம பதம் – (எல்லாப்பதவிகளினும்) மேலான ஸ்தாநம்; வடமொழித்தொடர்.

———–

மரணம் கடக் குஞ்சரம் நீங்க வாழ்வித்து வல் அரக்கர்
முரண் அங்கு அடக்கும் சர வேங்கடவ கண் மூடி அந்தக்
கரணம் கடக்கும் சரமத்து நீ தருகைக்கு எனக்கு உன்
சரணம் கடக்கும் சரண் வேறு இல்லை தந்து தாங்கிக் கொள்ளே –62-

(இ – ள்.) கடம் குஞ்சரம் – மதத்தையுடைய யானை,
மரணம் நீங்க – (முதலையினால்) இறத்தலை யொழியும்படி,
வாழ்வித்து – (அக்கஜேந்திராழ்வானை) உயிர்வாழச்செய்து,
வல் அரக்கர் முரண் அங்கு அடக்கும் – வலிய இராக்கதர்களுடையபலத்தை அக்காலத்தில் (ஸ்ரீராமாவதாரத்தில்) அடக்கிவிட்ட,
சர – அம்புகளையுடையவனே!
வேங்கடவ – திருவேங்கடமுடையானே! –
கண் மூடி – கண்கள் இருண்டு,
அந்தக்கரணம் கடக்கும் – மனம் அழியும்படியான,
சரமத்து – (எனது) அந்திமதசையில்,
நீ எனக்கு தருகைக்கு – நீ எனக்கு அளித்தற்கு,
உன்சரணம் கடக்கும் சரண் வேறு இலை – உனது திருவடியன்றி வேறுரக்ஷகம் இல்லை;
தந்து தாங்கிக்கொள் – (அதனை) அளித்து (என்னை) ஏற்றுக்கொள்; (எ – று.)

அங்கு – அவ்விடத்தி லெனினுமாம். அந்த:கரணம் – வடசொல்; அகத்துஉறுப்பு. சரமம், சரணம் – வடசொற்கள்.
சரண் – சரணமென்ற வட சொல்லின் விகாரம். எனக்கு உன்சரணங்கடக்குஞ் சரண் வேறு இலை –
“உன் சரணல்லாற் சரணில்லை” என்றார் குலசேகராழ்வாரும்.

————-

தாங்கு அடல் ஆழி வளை தண்டு வாள் வில்லில் தானவரை
ஈங்கு அட வீசி குறித்து அடித்து துணித்து எய்து வெல்லும்
பூங்கடல் வண்ணன் நிலை கிடை வந்தது போக்கு இடுப்பு
வேங்கடம் வேலை அயோத்தி வெங்கானகம் விண்ணுலகே –63–

(இ – ள்.) தாங்கு – (தனதுதிருக்கைகளில்) ஏந்திய,
அடல் – வலிமை யையுடைய,
ஆழி – சக்கரமும்,
வளை – சங்கமும்,
தண்டு – கதையும்,
வாள் – வாளும்,
வில்லின் – வில்லும் ஆகிய பஞ்சாயுதத்தால், (முறையே),
தானவரை – அசுரர்களை,
ஈங்கு – இவ்வுலகத்தில்,
அட – அழிக்குமாறு,
வீசி – சுழற்றிவீசியும்,
குறித்து – ஊதிமுழக்கியும்,
அடித்து – அடித்தும்,
துணித்து – அறுத்தும்,
எய்து – அம்பெய்தும்,
வெல்லும் – சயிக்குந்தன்மையனான,
பூ கடல் வண்ணன் – அழகிய கடல்போன்ற திருநிறமுடைய திருமால்,
நிலை – நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கிற இடமும்,
கிடை – பள்ளிகொள்கிற இடமும்,
வந்தது – வந்துதிருவவதரித்த இடமும்,
போக்கு – நடந்துசென்ற இடமும்,
இருப்பு – வீற்றிருக்கின்ற இடமும், (முறையே),
வேங்கடம் – திருவேங்கடமலையும்,
வேலை – திருப்பாற்கடலும்,
அயோத்தி – அயோத்யாபுரியும்,
வெம் கானகம் – வெவ்விய காடும்,
விண் உலகு – பரமபதமுமாம்.

ஆழியின்வீசி, வளையிற்குறித்து, தண்டின் அடித்து, வாளின் துணித்து, வில்லின்எய்து என முதலடியோடு இரண்டாமடியும்;
நிலைவேங்கடம், கிடைவேலை, வந்தது அயோத்தி, போக்குக்கானகம். இருப்புவிண்ணுலகு என மூன்றாமடியோடு நான்காமடியும்
முறைநிரனிறைப்பொருள்கோளாதல் காண்க. இச்செய்யுளில், முன்னிரண்டடியும், பின்னிரண்டடியும் – தனித்தனி கிரமாலங்காரம்;
(மேல் 80 – ஆஞ் செய்யுளில் நான்கடிகளிலுந் தொடர்ந்து வருகிற கிரமாலங்காரத்தோடு இதற்குள்ள வேறுபாட்டை உணர்க.)
வந்தது – இராமனாய்த் திருவவதரித்தது. இராமவதாரத்திற் பதினான்கு வருடம் வனவாசஞ்சென்றதும்,
கிருஷ்ணாவதாரத்திற் கன்றுகாலிகளைமேய் த்தற்பொருட்டு வனத்திற்சென்றதும், “போக்கு வெங்கானகம்” என்றதற்கு விஷயம்.

தண்டு – தண்டமென்ற வடசொல்லின் விகாரம். பூங்கடல்வண்ணன் – தாமரைமலர் பூக்கப்பெற்றதொரு
வடிவமுடையானுமாம்; “அம்பரந்தாமரை பூத்தலர்ந்தன்ன வவயவர்” என்றாற் போல.
கிடை – கிடக்கும்இடம் – அயோத்யா என்ற வடசொல் – (பகைவராற்) போர்செய்து வெல்லமுடியாத தென்று காரணப்பொருள்படும்.

—————

உலகம் தர உந்தி பூத்திலையேல் சுடர் ஓர் இரண்டும்
இலகு அந்தரமும் புவியும் எங்கே அயன் ஈசன் எங்கே
பலகந்தரமும் உணவும் எங்கே பல் உயிர்கள் எங்கே
திலகம் தரணிக்கு என நின்ற வேங்கடச் சீதரனே –64-

(இ – ள்.) தரணிக்கு திலகம் என நின்ற – பூமிக்குத் திலகம்போல அழகுசெய்துநின்ற,
வேங்கடம் – திருவேங்கடமலையிலெழுந்தருளியிருக்கிற,
சீதரனே – திருமாலே! – (நீ),
உலகம் தர – உலகங்களைப் படைக்க,
உந்தி பூத்திலை ஏல் – திருநாபித்தாமரை மலர்ந்திராயாயின், –
சுடர் ஓர் இரண்டும் – (சூரியசந்திரராகிய) இருசுடர்களும்,
இலகு அந்தரமும் – அவைவிளங்கு மிடமான ஆகாயமும்,
புவியும் – பூமியும்,
எங்கே – எவ்விடத்தே தோன்றும்?
அயன் ஈசன் எங்கே – பிரமனும் சிவனும் எவ்விடத்தே தோன்றுவர்?
பல கந்தரமும் உணவும் எங்கே – பலமேகங்களும் (அவற்றாலாகிற) உணவுகளும் எவ்விடத்தே தோன்றும்?
பல் உயிர்கள் எங்கே – பலவகைப்பிராணி வர்க்கங்கள் எங்கே தோன்றும்? (எ – று.)
சராசரப்பொருள்கள்யாவும் உளவாகா என்பதாம்.

“உண்டிறக்கும்புவ னங்களை மீளவுமிழ்ந்திலையேற், பண்டிறக்கும்பதுமத்தோன்புரந்தரன்பைந் தழல்போற்,
கண்டிறக்குஞ்சங்கரன் முதலோர்களைக் கண்டவரார், திண்டி றக்குஞ்சரஞ்சேர் சோலைமாமலைச் சீதரனே” என்ற
அழகரந்தாதிச் செய்யுளோடு இச்செய்யுளை ஒப்பிடுக.
“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத், துப்பாயதூஉ மழை” என்றபடி பிராணிகளின் பசி தாகங்களை
நீக்கும் உணவுக்கெல்லாம் மேகம் ஏதுவாதலால், அக்காரணகாரியமுறைப்படி ‘கந்தரமுமுணவும்’ என்றார்.
ஈற்றடி = “திலதமுலகுக்காய்நின்ற திருவேங்கடத் தெம்பெருமானே” என்ற திருவாய்மொழியடியை அடியொற்றியது;
“ஸ்த்ரீகளுக்குப் பூரணமான ஆபரணம்போலே யாய்த்து, பூமிக்குத் திருமலை’ என்று அங்கு வியாக்கியானமிட்டனர் நம்பிள்ளை.
திலகம் – நெற்றிப்பொ ட்டு; அது நெற்றிக்கு அழகுசெய்வதுபோல, பூமிக்கு அழகுசெய்வது திரு வேங்கட மென்க.

உலகம் – லோக மென்ற வடசொல்லின் விகாரம்; (இதனைத் தமிழ் மொழியேயா மென்பர், ஆசிரியர் நச்சினார்க்கினியர்.)
அந்தரம், புவி, தரணீ, ஸ்ரீதரன் – வடசொற்கள். தரணி – (பொருள்களைத்) தரிப்பது. ஸ்ரீதரன் – திருமகளை (மார்பில்) தரிப்பவன்.

————-

சீவார் கழலை இரண்டையும் செப்பு என்று தீங்கு உளவி
னாவார்கழலைப் பயில் செங்கையார் நலம் பேணும் ஐவர்
ஆவார் கழல் ஐ இரண்டாம் அவத்தையின் அன்று எனக்கு உன்
பூவார் கழலை அருள் அப்பனே அண்ட பூரணனே –65-

(இ – ள்.) அப்பனே – திருவேங்கடமுடையானே!
அண்ட பூரணனே – அண்டமுழுவதிலும் வியாபித்து நிறைந்திருப்பவனே! –
கழலை பயில் செம் கையார் – கழற்சிக்காயையாடுகிற சிவந்த கைகளையுடையவர்களான மகளிரது,
சீ வார் கழலை இரண்டையும் – சீஒழுகுகின்ற கழலைக்கட்டியாகிய தன மிரண்டையும்,
செப்பு என்று – கிண்ணங்களென்று புனைந்துரைத்து,
தீங்கு உள வினாவார் – (அவர்களிடத்து) உள்ளனவான தீமைகளை விசாரித்தறி யாதவர்களாய்,
நலம் பேணும் – (அவர்களுடைய) இன்பத்தை விரும்புகிற,
ஐவர்ஆவார் – பஞ்சேந்திரியங்கள்,
கழல் – (தம்தமதுஆற்றல்) ஒழியப்பெறுகிற,
ஐ இரண்டு ஆம் அவத்தையின் அன்று – பத்தாம்அவத்தையாகிய மரணம் நேர்கிற அந்நாளில்,
எனக்கு – உன் பூ ஆர் கழலை – உனது தாமரை மலர்போன்ற திருவடிகளை,
அருள் – தந்தருள்; (எ – று.)

“ஈச்சிறகன்னதோர் தோலறினும் வேண்டுமே, காக்கை கடிவதோர் கோல்” என்ப வாதலால்,
மார்பில் திரண்டெழுந்து பால்பெருகுந்தனங்களை அருவருப்புத்தோன்ற ‘சீ வார் கழலை யிரண்டு’ என்றார்;
(“சிலந்திபோலக் கிளைத்துமுன்னெழுந்து, திரண்டுவிம்மிச் சீப்பாய்ந்தேறி, யுகிராற்கீற வுலர்ந் துள்ளுருகி,
நகுவார்க்கிடமாய் நான்றுவற்றும், முலையைப் பார்த்து முளரி மொட்டென்றுங், குலையுங் காமக்குருடர்” என்றார் பிறரும்.)
உள – பலவின் பாற்பெயர். வினாவார் – எதிர்மறைப்பலர்பால்முற்றெச்சம்; வினாவல் – உசாவுதல்.
இனி, தீங்கு உள வினாவார் என்பதற்க – தீமைவிளைக்கின்ற சொற்களையுடையவரென்று உரைத்து,
மகளிர்க்கு அடைமொழியாக்குதலு மொன்று.
இனாஎன்று எடுத்தால் பரிகாசவார்த்தையென்றும், இன்னா என்பதன் தொகுத்த லெனக்கொண்டால்
இனியவையல்லாத செயல் களென்றும் பொருள்படுமாதலால், அவற்றையுடையவரெனினுமாம்.
தீம் குளம் வினாவார் என்று பிரித்து இனிமையான வெல்லம்போன்ற சொற்களையுடையவரென்றும்,
தீங்கு உளவின் ஆவார் என்று பிரித்துக் கொடியவஞ்சனையிற் பொருந்துபவ ரென்றும் உரைக்கவும்படும்.
“தீங்குழலினாவார்” என்ற பாடத்துக்கு – தீம் – இனிமையான, குழலின் – புள்ளாங்குழலி னிசைபோன்ற,
நாவார் – நாவினாற்பேசுஞ்சொற்களையுடையவர் என்று பொருள் காண்க.
கழல் என்ற கொடியின் பெயர் – அதன்காய்க்கு முதலாகுபெயர். ‘கழலைப் பயில்செங்கையார்’ என்றது –
கவலையின்றி விளையாடுபவ ரென்றும், தம் விளையாட்டினால் ஆடவரை வசீகரிப்பவரென்றும் கூறியவாறாம்.

“ஐவராவார்” என்றவிடத்து, “ஆவார்” என்றது – முதல்வேற்றுமைச் சொல்லு ருபாய் நின்றது.
நினைவு பேச்சு இரங்கல் வெய்துயிர்த்தல் வெதுப்பு துய்ப்பனதெவிட்டல் அழுங்கல் மொழிபலபிதற்றல் மிகுமயக்கு
இறப்பு என்ற மந்மதபாணாவஸ்தை பத்தில் ஈற்றதாதல் கொண்டு, இறத்தல் ‘ஐயிரண்டாமவத்தை’ எனப்பட்டது.
மன்மதாவஸ்தை பத்து – காட்சி அவா சிந்தனை அயர்ச்சி அரற்றல் நாணொழிதல் திகைத்தல் மோகம் மூர்ச்சை இறந்துபடுதல்
எனக் கூறவும்படும். ஐயிரண்டு – பண்புத்தொகை. அவத்தை – அவஸ்தா என்ற வடசொல்லின் விகாரம்.
அண்டபூர்ணன் – வடமொழித்தொடர்.

பூவார்கழல் என்றவிடத்து, ‘ஆர்’ என்றது – உவமவாசகமாய் நின்றது; ஆர்தல் – பொருந்துதல்:
இனி, ‘பூவார்கழல்’ என்ற தொடர் – (அடியார்கள் அருச்சித்துஇட்ட) மலர்களால் எப்பொழுதும் நிறைந்துள்ள
திருவடிக ளென்றும் பொருள்படும்:
‘வானவர்வானவர்கோனொடுஞ், சிந்துபூமகிழுந் திருவேங்கடம்” என்றபடி பரமபதத்திலுள்ளார் பூமாரிசொரியு மிட மாதலாற்
புஷ்பமண்டபமெனப்படுகிற திருமலையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானது திருவடிகள்,
அப்பரமபதவாசிகள் அர்ச்சிக்கின்ற அப்ராக்ருத புஷ்பங்களும், தேவர்கள் அர்ச்சிக்கின்ற கற்பகமலர்களும்,
முனிவர்கள் அர்ச்சிக்கின்ற கோட்டுப்பூ முதலியனவும், தொண்டைமான்சக்கரவர்த்தி அர்ச்சித்த ஸ்வர்ணபுஷ்பங்களும்,
குரவைநம்பி அர்ச்சித்த மண்பூவும் பொருந்தப்பெறு தலால், “பூவார்கழல்” என்று சிறப்பாக வழங்கப்படும்;
“தேவாசுரர்கள் முனிக்கணங்கள் விரும்புந் திருவேங்கடத்தானே,
பூவார்கழல்க ளருவினை யேன் பொருந்துமாறு புணராயே” என்ற திருவாய்மொழியையும்,
“வேங்கடமே….. பூவார்கழலார்பொருப்பு” என்ற திருவேங்கடமாலையையும், இந்நூலின் 70 – ஆஞ் செய்யுளையுங் காண்க.

————–

பூரணன் ஆரணன் பொன்னுலகு ஆளி புராரி கொடி
வாரணன் ஆர் அணன் வாழ்த்தும் பிரான் வட வேங்கடத்துக்
காரணன் ஆர் அணங்கு அனா இறைவி கணவன் மண் ஏழ்
பாரணன் நாரணன் என்பார்க்கு நீங்கும் பழுது அவமே –66-

(இ – ள்.) பூரணன் – எங்கும் நிறைந்தவன்:
ஆரணன் – பிரமனும்,
பொன் உலகு ஆளி – பொன்மயமான சுவர்க்கலோகத்தை அரசாள்பவனான இந்திரனும்,
புர அரி – திரிபுரசங்காரஞ்செய்தவனான சிவனும்,
கொடி வாரணன் – துவசத்திற் கோழிவடிவையுடையவனான சுப்பிரமணியனும்,
ஆர் அணன் – (அவனுக்குப்) பொருந்திய தமையனான விநாயகனும்,
வாழ்த்தும் – பல்லாண்டு பாடித் துதிக்கிற,
பிரான் – பிரபு:
வட வேங்கடத்து – வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற,
காரணன் – (அனைத்துக்குங்) காரணமானவன்:
ஆனா – (தன்னை) விட்டுநீங்காத,
இறைவி தலைவியாகிய,
ஆர் அணங்கு – அருமையான திருமகளுக்கு, கணவன் -;
மண் ஏழ் பாரணன் – ஏழுவகையுலகங்களையும் உண்டவன்:
நாரணன் – நாராயணன்:
என்பார்க்கு – என்று (எம்பெருமானுடைய குணஞ்செயல்களையும் மகிமையையும் திருநாமத்தையுங்) கருதிச் சொல்பவர்க்கு,
பழுது அவம் நீங்கும் – (அவர்கள் முன்புசெய்த) தீவினைகளெல்லாம் பயன் தராதனவாய் ஒழியும்; (எ – று.)

ஆரணம் – வேதம்; அதனை ஓதுபவன் – ஆரணன். ஆளி, இ – கருத் தாப்பொருள்விகுதி. புராரி – புர + அரி;
தீர்க்கசந்திபெற்ற வடமொழித் தொடர்: திரிபுரத்துக்குச் சத்துரு. கொடிவாரணன் – கோழிக்கொடியோன்;
“கொடிக்கோழிகொண்டான்” என்றார் நம்மாழ்வாரும். ஆர் அணன் – வினைத்தொகை; அணன் – அண்ணன்: தொகுத்தல்.
காரணன் – ஆதிமூலப்பொருள். அணங்கு – மகளிரிற் சிறந்தவள், தெய்வப்பெண். ஆனாமை – நீங்காமை.
“அகலகில்லேனிறையுமென்று அலர்மேன்மங்கையுறை மார்பா,….. திருவேங்கடத்தானே” என்றபடி
திருமகள் திருமாலை ஒரு பொழுதும்விட்டுப்பிரியாமையால், “ஆனாவிறைவி” எனப்பட்டாள்.
இறைவி – தேவி. மண்ஏழ் – பூலோகம் புவர்லோகம் ஸுவர்லோகம் மகர்லோகம் ஜநலோகம் தபோலோகம் சத்தியலோகம்
என்ற மேலேழுலகங்களும், அதலம் விதலம் ஸுதலம் தராதலம் ரஸாதலம் மகாதலம் பாதாலம் என்ற கீழேழுலகங்களும் ஆகிய ஈரேழுலகங்கள்;
மண் என்ற பூமியின்பெயர், இங்கு உலகமென்ற மாத்திரமாய் நின்றது: சிறப்புப்பெயர், பொதுப்பொருளின் மேலது.
பழுது – எழுவாய். ‘ஆரணங்காணாவிறைவி’ என்று பாடமோதி, வேதங்களும் கண்டறியமாட்டாத திருமக ளென்பாரு முளர்.

————–

பழுத்தெட்டி பொன்ற நடுச் செல்வர் பின் சென்று பல் செருக்கால்
கொழுத்து எள் தினை அளவு எண்ணம் அற்றீர் குவடு ஏறி மந்தி
கழுத்து எட்டி அண்டர் பதி நோக்கும் வேங்கடக் காவலனை
எழுத்து எட்டினால் எண்ணி ஏத்தீர் பரகதி ஏறுவதற்கே –67–

(இ – ள்.) பழுத்த எட்டி போன்ற – பழுத்தஎட்டிமரம்போன்ற (பிறர்க் குப்பயன்படாத),
நடு செல்வர் பின் – (பரம்பரையாக அமைந்த செல்வ மன்றி) இடையிலே வந்த செல்வத்தை யுடையவர்களின் பின்னே,
சென்று – தொடர்ந்து சென்றும்,
பல் செருக்கால் கொழுத்து – பலவகைச் செருக்குக் களினாற் கொழுத்தவர்களாகியும்,
எள் தினை அளவு எண்ணம் அற்றீர் – எள்ளளவு தினையளவேனும் (கடவுளைப்பற்றின) சிந்தனை யில்லாதவர்களே!-
(இனியாயினும் நீங்கள் பழுதே பலபகலும்போக்காமல்),
பர கதி ஏறுதற்கு – (எல்லாவுலகங்கட்கும்) மேலுள்ளதான பரமபதத்தில் ஏறிச்சென்று சேர்தற் பொருட்டு, –
மந்தி குவடு ஏறி கழுத்து எட்டி அண்டர் பதி நோக்கும் வேங் கடம் காவலனை – பெண்குரங்குகள் சிகரத்திலேறிக் கழுத்தைத்
தூக்கி மேலுள்ள தேவலோகத்தை எட்டிப்பார்க்கப்பெற்ற திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற ஸ்வாமியை,
எழுத்து எட்டினால் எண்ணி ஏத்தீர் – அஷ்டா க்ஷரமகாமந்திரத்தைக்கொண்டு தியானித்துத் துதியுங்கள்; (எ – று.)

பழுத்தஎட்டியென்பது பழுத்தெட்டி யெனப் பெயரெச்சவீறு தொ குத்தல்விகார மடைந்தது.
தொன்றுதொட்டு வறியராயிருந்து இடையே செல்வங்கிடைக்கப்பெற்றவர் அச்செல்வத்தினருமையைக்கருதிப்
பிறர்க்கு உதவாது லோபிகளாயிருத்தலும், “அற்பன் பணம்படைத்தால் அர்த்தராத் திரியிற் குடைபிடிப்பான்” என்றபடி
பிறரைமதியாத இறுமாப்புடையரா யிருத்தலும் பெரும்பான்மை யாதலால், அந்நடுச்செல்வரை எடுத்துக்கூறி னார்.
பிறர்க்குஉதவாமைபற்றி, அவர்க்கு, பழுத்தஎட்டி உவமைகூறப்பட்டது;
(“ஈயாதபுல்ல ரிருந்தென் னபோயென்ன எட்டிமரம், காயாதிருந்தென்ன காய்த்துப் பலனென்ன” என்பர் பிறரும்.)
செல்வர்பின்செல்லுதல், தாம் அவராற் செல்வம் பெறலாமென்னும் நசையினால். எள் தினை என்ற தானி யங்கள்,
சிறுமைக்கு அளவையாக எடுத்துக்காட்டப்பட்டன. குவடு – மரக் கிளையுமாம்.
மந்தி – குரங்கின் பெண்மைப்பெயர்; ஆண்மைப்பெயர் – கடுவன்.
‘குவடேறி மந்தி கழுத்தெட்டி யண்டர்பதி நோக்கும் வேங்கடம்’ என்றது, மலையின் உயர்வை விளக்குந் தொடர்புயர்வுநவிற்சியணி.
இவ் வருணனை கூறியது, அங்குச்சேர்கிற அனைத்துயிரும் உயர்கதியைப்பெறு மென்ற குறிப்பு.
எழுத்துஎட்டு – எட்டுஎழுத்துக்களையுடைய பெரியதிருமந்திரம். எழுத்தெட்டினா வெண்ணியேத்தீர் பரகதியேறுதற்கே –
“எட்டெழுத்து மோதுவார்கள் வல்லர் வானமாளவே” என்பது பெரியார்பாசுரம்.

————–

ஏறு கடாவுவர் அன்னம் கடாவுவர் ஈர் இரு கோட்டு
உறு கடா மழை ஓங்கல் கடாவுவர் -ஓடு அருவி
ஆறு கடாத அமுது எனப் பாய அரிகமுகம்
தாறுகள் தாவும் வட வேங்கடவரைத் தாழ்ந்தவரே –68-

(இ – ள்.) ஓடு அருவி ஆறு – நதிகளாக விரைந்து செல்லுகின்ற நீரருவிகள்,
கடாத அமுது என – கடுக்காத (இன்சுவையுடைய) அமிருதம் போல,
பாய – பாய்ந்துவர, (அவற்றிற்கு அஞ்சி),
அரி – குரங்குகள்,
கமுகம் தாறுகள் தாவும் – பாக்கு மரக்குலைகளின் மேல் தாவியேறப்பெற்ற,
வடவேங்கட வரை – வடக்கின் கணுள்ள திருவேங்கடமலையி லெழுந்தருளியிருக்கிற பெருமானை,
தாழ்ந்தவர் – வணங்கினவர்கள், –
ஏறு கடாவுவர் – ருஷபத்தை வாகனமாகக்கொண்டு ஏறிநடத்துவர்;
அன்னம் கடாவுவர் – அன்னப்பறவையை வாகனமாகக்கொண்டு ஏறிநடத்துவர்;
ஈர் இரு கோடு – நான்கு தந்தங்களையுடையதும்,
ஊறு கடாம் மழை – மேன்மேற்சுரக்கின்ற மதநீர்ப்பெருக்கையுடையதுமான,
ஓங்கல் – மலைபோன்ற (ஐராவத) யானையை,
கடாவுவர் – ஏறிநடத்துவர்; (எ – று.)

திருவேங்கடமுடையானை வணங்கினவர் அதன்பயனாக மறுமையில் ருத்திரபதவி பிரமபதவி இந்திரபதவிகளை யடைவ ரென்பதாம்.
ருத்திர பதவி முதலியவற்றை யடைவ ரென்ற பொருளை “ஏறுகடாவுவர்” என்பது முதலியசொற்களாற் குறித்தது,
பிறிதினவிற்சியணியின் பாற்படும். ருஷபம் சிவனுக்கும், அன்னப்பறவை பிரமனுக்கும், ஐராவதயானை இந்திரனுக்கும் வாகனமாம்.
“ஊறுகடாமழை யோங்கல” எனவே யானையென்றும், “ஈரிரு கோட்டுஓங்கல்” எனவே ஐராவதயானை யென்றும் ஆயிற்று.
ஐராவதம், இரு புறத்தும் இரட்டைத்தந்த முடையது.

ஏறு – பசுவின் ஆண்மைப்பெயர். அன்னம் – ஹம்ஸ மென்ற வடசொல் லின் சிதைவு.
ஈரிருகோடு – பண்புத்தொகைப்பன்மொழித்தொடர். கடாம் – கடமென்பதன் விகாரம்.
ஓங்கல் – உயர்ச்சி; மலைக்குத் தொழிலாகுபெயர்: அல் – கருத்தாப்பொருள்விகுதி யென்றுங் கொள்ளலாம்;
யானைக்கு உவமை யாகுபெயர். கடாத – இன்னாச்சுவை பயவாத; கடு – பகுதி.
தாபந்தவிர்த் துக் களிப்பையளிக்கும் மலையென்று பின்னிரண்டடிகளால் விளங்கும்.

—————-

தாழ்ந்த அருக்கம் தரு ஒக்குமோ பல தாரகையும்
சூழ்ந்த அருக்கன் சுடர் ஒக்குமோ தொல் அரக்கர் என்று
வாழ்ந்த வருக்கம் களைந்தான் வடமலை மால் அடிக்கீழ்
வீழ்ந்தவருக்கு அன்பருக்கு ஒப்பரோ அண்டர் மெய்த்தவரே –69-

(இ – ள்.) தாழ்ந்த – இழிவான,
அருக்கம் – எருக்கஞ்செடியானது,
தரு ஒக்குமோ – பெரிய மரத்துக்கு ஒப்பாகுமோ?
பல தாரகையும் – பல நக்ஷத்திரங்களும்,
சூழ்ந்த அருக்கன்சுடர் ஒக்குமோ – சுற்றிலும் பரவுகின்ற சூரியனது ஒளிக்கு ஒப்பாகுமோ? (ஒப்பாகா: அவைபோல),
அண்டர் – தேவர்களும்,
மெய்தவர் – உண்மையான தவத்தையுடைய முனிவர்களும், –
தொல் அரக்கர் என்று வாழ்ந்த வருக்கம் களைந்தான் – பழமையான இராக் கதர்க ளென்று பிரசித்திபெற்று
வாழ்ந்த கூட்டங்களையெல்லாம் வேரோடழித்தவனான,
வட மலை மால் – திருவேங்கடத்துறைவானது,
அடிக்கீழ் – திருவடிகளில்,
வீழ்ந்தவருக்கு – வீழ்ந்துவணங்கின அடியார்கட்கு,
அன்பருக்கு – அன்பு பூண்டொழுகுபவர்க்கு,
ஒப்பரோ – ஒப்பாவரோ? (ஆகார் என்றபடி); (எ – று.)

பாகவதர்க்கு அடிமை பூண்பவர் தேவரிஷிகணங்களினும் மேம்பட்டவ ரென அவர்கள்மகிமையை எடுத்துக்கூறியவாறாம்.
முதலிரண்டுவாக்கியங் கள் – உபமானம்; மூன்றாவதுவாக்கியம் – உபமேயம்: உபமான உபமேயவாக் கியங்களினிடையில்
உவமவுருபுகொடாமற் கூறினமையால், எடுத்துக்காட் டுவமையணி.

அர்க்கம், தரு, தாரகா, அர்க்கன், வர்க்கம் – வடசொற்கள். ஓகாரங் கள் – எதிர்மறை. மெய்த் தவம் – பழுதுபடாத தவம்;
கூடாவொழுக்கமொழிந்த தவம். அண்டம் – வானம், மேலுலகம்; அதிலுள்ளவர், அண்டர் சூழ்ந்த – திரண்டனவாயினும் எனினுமாம்.

————-

மெய்த்தவம் போர் உக வெஞ்சொல் இராமன் வில் வாங்கி வளைத்து
உய்ந்த அம் போர் உகம் நாலும் செய்தோர் உயர் வேங்கடத்து
வைத்த அம் போருகப் பூ ஆர் கழலை மறை மனு நூல்
பொய்த்த வம்போர் உகவார் காமம் வேட்டுப் புரளுவரே –70-

(இ – ள்.) மெய் தவம் – உண்மையாகச்செய்த தவம்,
போர் – யுத்தத்தில் உக – பழுதுபட்டொழியுமாறு,
வெம் சொல் இராமன் வில் வாங்கி வளைத்து உய்த்த அம்போர் – கடுஞ்சொற்களைப்பேசிவந்த பரசுராமனுடைய
வில்லை (அவன்கையினின்று தம்கையில்) வாங்கி வளைத்து எய்த அம்பையுடைய வரும்,
உகம் நாலும் செய்தோர் – நான்குயுகங்களையுஞ் செய்தவருமான திருமால்,
உயர் வேங்கடத்து வைத்த – உயர்ந்த திருவேங்கட மலையில் வைத்துநின்ற,
அம்போருகம் பூ ஆர் கழலை – தாமரைமலர்போன்ற திருவடிகளை,
மறை மனு நூல் பொய்த்த வம்போர் – வேதங்களையும் மநுதர்மசாஸ்திரத்தையும் பொய்யென்று கூறுகிற வம்புப் பேச்சையுடையவர்கள்,
உகவார் – விரும்பாதவர்களாய்,
காமம் வேட்டு புரளுவர் – சிற்றின்பத்தை விரும்பிப் புரண்டுவருந்துவர்; (எ – று.) – ஈற்றுஏகாரம் – கழிவிரக்கம்: அந்தோ! என்றபடி.

சீதாகலியாணத்தின்பின் தசரதசக்கரவர்த்தி திருக்குமாரர்களுடனே மிதிலையினின்று அயோத்திக்கு மீண்டுவருகையில்,
பரசுராமன் வலியச்செ ன்று எதிர்த்து ‘முன்பு ஹரிஹரயுத்தத்தில் இற்றுப்போன சிவதநுசை முறித்த திறத்தை அறிந்தோம்!
அதுபற்றிச் செருக்கடையவேண்டா: இந்த ஸ்ரீ மகாவிஷ்ணுதநுசை வளை, பார்ப்போம்’ என்று அலட்சியமாகச்
சொல்லித் தான் கையிற்கொணர்ந்த ஒருவில்லைத் தசரதராமன்கையிற் கொடுக்க,
அப் பெருமான் உடனே அதனைவாங்கி எளிதில்வளைத்து நாணேற்றி அம்புதொ டுத்து ‘இந்தப்பாணத்துக்கு இலக்கு என்?’ என்று வினாவ,
பரசுராமன் அதற்கு இலக்காகத் தனது தபோபலம் முழுவதையுங் கொடுக்க, அவன்
க்ஷத்திரியவம்சத்தைக் கருவறுத்தவனாயிருந்தாலும் வேதவித்தும் தவவிரதம் பூண்டவனுமா யிருத்தல்பற்றி
அவனைக் கொல்லாமல் அவனதுதவத்தைக் கவர்ந்தமாத்திரத்தோடு ஸ்ரீராமன் விட்டருளின னென்ற வரலாறு, இங்கு முதல்விசேஷணத்திற் குறிக்கப்பட்டது.

“என்வில்வலிகண்டுபோ வென் றெதிர்வந்தான், தன்வில்லினோடுந் தவத்தை யெதிர்வாங்கி” என்றார் பெரி யாழ்வாரும்.
விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஆறாமவதாரமான பரசுராமனும் ஏழாமவதாரமான தசரதராமனும் ஒருவரோடொருவர் பொருதலும்,
அவர்களில் ஒருவர்மற்றொருவரைவெல்லுதலும் பொருந்துமோ? எனின், –
துஷ்டர்களாய்க் கொழுத்துத்திரிந்த அரசர்களைக் கொல்லுதற்பொருட்டுப் பரசுராமனிடத்தில் ஆவேசித்திருந்த
விஷ்ணுசக்தி அக்காரியம் முடிந்த பின்பு அவ்விஷ்ணுவின் அவதாரமான தசரதராமனாற் கவர்ந்துகொள்ளப் பட்ட தாதலிற் பொருந்து மென்க.
இதனால், ஆவேசாவதாரத்தினும் அம் சரவதாரத்துக்கு உள்ள ஏற்றம் விளங்கும்.
வெஞ்சொல் – “இற்றோடியசிலையின்றிற மறிவென் னினியா னுன்,
பொற்றோள்வலிநிலை சோதனைபுரி வா னசையுடையேன்,
செற்றோடிய திரடோளுறு தினவுஞ் சிறிதுடை யேன்,
மற்றோர் பொருளிலை யிங்கிதென்வரவென்றன னுரவோன்” என்றது முதலாகக் காண்க.
“வெஞ்சொலிராமன்” எனவே, பரசுராமனாவன்; தசரதராமன் பிறர் கடுஞ்சொற்கூறினாலும் தான் கடுஞ்சொற்கூறுதலின்றி
எப் பொழுதும் இன்சொல்லே பேசுபவ னென்பது பிரசித்தம்: (வால்மீகிராமா யணம், அயோத்தியாகாண்டம், 1 – 10.)
பரசுராமன், பிறப்பிலேயே கோப மூர்த்தியாதலால், வெஞ்சொல்லுக்கு உரியன்.

யுகம் நான்கு – கிருதயுதம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்பன. காலம் நித்தியமாயிருக்கவும்.
‘உகநாலுஞ் செய்தோர்’ என்றது, காலத்துக்குநியாமகன் கடவு ளென்ற கருத்துப்பற்றி;
அன்றியும், காலத்தின்அளவு பகவானது சிருஷ்டிக்கு உட்பட்ட சூரியசந்திராதியரால் நிகழ்தலுங்காண்க.
உய்த்த அம்போர் = அம்புய்த்தோர். உகம் – யுகமென்ற வடசொல்லின் விகாரம்.
நான்கு என்பது, ஈற்றுஉயிர்மெய்கெட்டு னகரமெய் லகரமாய் நால் என நின்றது.
அம்போருஹம் என்ற வடசொல் – நீரிற்பிறப்பதென்று காரணப்பொருள்பெறும்; அம்பஸ் – ஜலம்.
மனுநூல் – மநுவென்னும்அரசனாற் செய்யப்பட்ட அறநூல். வம்போர் – வம்பர்; நேரில்லார்.

—————

புரண்டு உதிக்கும் உடற்கே இதம் செய் பொருள் ஆக்கையின் நால்
இரண்டு திக்கும் தடுமாறும் நெஞ்சே இனி எய்துவம் வா
திரண்டு திக்கும் அரன் வேள் அயனார் முதல் தேவர் எல்லாம்
சரண் துதிக்கும் படி மேல் நின்ற வேங்கடத் தாமத்தையே –71-

(இ – ள்.) புரண்டு உதிக்கும் – நிலைநில்லாது மாறிமாறித்தோன்றுந் தன்மையுள்ள,
உடற்கே – உடம்புக்கே,
இதம் செய் – நன்மையைச் செய்கிற,
பொருள் – செல்வத்தை,
ஆக்கையின் – சம்பாதித்தற்காகு,
நால் இரண்டு திக்கும் தடுமாறும் – எட்டுத் திசைகளிலும் திரிந்துஉழலுகின்ற,
நெஞ்சே – (எனது) மனமே! – இனி – –
திக்கும் அரன் – (நெற்றிக்கண்ணின் நெருப்பினால்) எரிக்குந்தன்மையுள்ள சிவனும்,
வேள் – சுப்பிரமணியனும்,
அயனார் – பிரமதேவரும்,
முதல் – முதலிய,
தேவர் எல்லாம் – தேவர்களெல்லாரும்,
திரண்டு – ஒருங்குகூடி,
சரண் துதிக்கும்படி – (தனது) திருவடிகளைத் தோத்திரஞ்செய்யும்படி,
வேங்கடம் மேல் நின்ற – திருவேங்கடமலையின் மேல் நின்றதிருக்கோலமாக எழுந்தருளியிருக்கிற,
தாமத்தை – ஒளிவடிவமுள்ள கடவுளை, எய்துவம் – அடைவோம்: வா -; (எ – று.)

புரண்டு உதித்தல் – இறப்பதும் மீண்டும் பிறப்பது மாதல். யாக்கை நிலையாமையை விளக்குவார், “புரண்டுஉதிக்கும் உடல்” என்றார்.
எய்துதல் – இடைவிடாது நினைத்தல்; (“மாணடி சேர்ந்தார்” என்றவிடத்தில், “சேர்தல்” போல.)
மனத்தை வசப்படுத்தினா லன்றி நன்முயற்சி இனிது நிறைவேறா தாதலால், அதனை முன்னிலைப்படுத்தி அறிவுறுத்துகிறார்.
திரண்டு துதிக்கும்படி என இயையும். தீக்கும் என்பது, திக்கும் எனக் குறுக்கலென்னுஞ் செய்யுள்விகாரமடைந்தது;
(“திருத்தார் நன்றென்றேன் தியேன்” என்றதில் “தீயேன்” என்பது ‘தியேன்’ என்றும்,
“பரிதியொ டணிமதிபனி வரைதிசைநில, மெரிதியொ டெனவினவியல்வினர் செலவினர்” என்றவிடத்து
“தீ” என்பது “தி” என்றுங் குறுகினமை காண்க.
( அரன் வேள் அயனார் முதல் தேவர்எல்லாம் சரண் துதிக்கும்படி மேல்நின்ற வேங்கடத்தாமம் –
“நீலார்கண்டத்தம்மானும் நிறைநான்முகனு மிந்திரனுஞ், சேலேய் கண்ணார்பலர் சூழ விரும்புந் திருவேங்கடத்தானே”,
“நிகரி லமரர் முனிக்கண ங்கள் விரும்புந் திருவேங்கடத்தானே” என்பன திருவாய்மொழி.

————–

பிரிவாற்றாத தலைவி தோழியரை நோக்கி இரங்கிக் கூறுதல் –

தாம் மத்து அளை வெண்ணெய்உண்ட அந்நாள் இடைத் தாயார் பிணி
தாமத் தளை உவந்தார் வேங்கடாதிபர் தாமரைப் பூந்
தாமத்தளை அணியும் மணி மார்பில் நல் தண் அம் துழாய்த்
தாமத்து அளைவது என்றோ மடவீர் என் தட முலையே –72-

(இ – ள்.) மடவீர் – மடமையையுடையவர்களே! –
மத்து அளை வெண்ணெய் – மத்துக்கொண்டு கடைந்தெடுக்கப்பட்ட வெண்ணெயை,
தாம் உண்ட – தாம் (களவுசெய்து) விழுங்கிய,
அ நாளிடை – அந்த நாளிலே (கிருஷ்ணாவதாரஞ்செய்துவளர்ந்த இளம்பருவத்திலே),
தாயர்பிணி – வளர்த்த தாயாரான யசோதைப்பிராட்டி கட்டின,
தாமம் தளை – கயிற்றினாலாகிய கட்டை,
உவந்தார் – விரும்பி யேற்றுக்கொண்டவரான,
வேங்கட அதிபர் – திருவேங்கடமுடையானுடைய,
தாமரை பூ தாமத்தளை மணியோடு அணி மார்பில் – தாமரைமலரை இடமாகவுடையளான திருமகளையும்
(கௌஸ்துப மென்னும்) இரத்தினத்தையும் அணிந்த திருமார்பில் (தரித்த),
நல் தண் அம் துழாய் தாமத்து – சிறந்த குளிர்ந்த அழகிய திருத்துழாய்மாலையில்,
என் தட முலை அளைவது – எனது பெரிய தனங்கள் பொருந்துவது, என்றோ – எந்நாளோ? (எ – று.)

தலைவனைப்பிரிந்த தலைவி, இனித் தலைவனது சேர்க்கை நேர்வது எக்காலமோ வென்று இரங்கிக் கூறினள்.

கண்ணன் இளம்பிராயத்தில் திருவாய்ப்பாடியிலுள்ள ஆயர்மனைகளிற் சென்று அவர்களுடைய
பால் தயிர் வெண்ணெய் முதலியவற்றைக் களவு செய்து உண்டமையை ஆய்ச்சியர் சொல்ல அறிந்த யசோதை
அக் குற்றத்துக்கு ஒரு தண்டனையாகக் கண்ணனை வயிற்றிற் கயிற்றினாற்கட்டி உரலோடு பிணித்துவைத்தனள்
என்ற வரலாறு, முதல்விசேஷணத்திற் குறிக்கப்பட்டது.
“பத்துடையடியவர்க்கெளியவன் பிறர்களுக்கரியவித்தகன்” என்றபடி தேவாதிதேவனான சர்வேசுவரன் திருவருளினால்
இங்ஙனம் எளிமைபூண்டு கட்டுப்பட்டதாகிய சௌலப்யகுணாதிசயத்தில் ஈடுபட்டு “தளையுவந்தார்” என்றார்.
அப்பொழுது முதலில் யசோதை கட்டத்தொடங்கிய கயிறு சிறிதளவுபோதாதாம்படி கண்ணன் இடைபருத்துக்காட்டி,
அது கண்டு அத்தாய் இடையர்வீடுகளிலுள்ள தாம்புகளையெல்லாங் கொணர்ந்துசேர்த்து ஒன்றாக
முடிந்து கட்டப்புகுந்தோறும் அதுவும் போதாதாம்படி அத்திருமகன் வளர்ந்துவந்து, பின்பு அவள் கை
சலித்து மெய்வேர்த்துக் கண்பிசைந்து வருந்தக் கண்டு உடல்சிறுத்துக் கட்டுண்டனன் என்ற விவரமும்,
“உவந்தார்” என்றதனாற் குறிக்கப்படும்.

தாயர் – உயர்வுப்பன்மை. நாள் இடைத்தாயர் என்றும் பிரிக்கலாம். திருமால் திருமகளை வலத் திருமார்பிலும்,
கௌஸ்துபமென்னுந் திவ்வியரத் தினத்தை இடத்திருமார்பிலுந் தரித்துள்ளான்.
மடமை – மகளிர்க்குச் சிறந்த பேதைமை யென்னுங் குணம்;
அது, நாணம் முதலிய மற்றைப்பெண் குணங்கட்கும் உபலக்ஷணம்: இளமையுமாம்.

எம்பெருமானது பிரிவை யாற்றாத ஐயங்கார், “எனதுபக்தி அப்பெருமா னோடுசேர்ந்து இனிமையை நுகர்தற்குப்
பாங்காவது எக்காலமோ” என்று, தம்பக்கல் பரிவுள்ள அன்பர்களை நோக்கிக் கூறுதல், இதற்கு உள்ளுறை பொருள்.
அந்யாபசேத்தில் “முலை” என்றது, ஸ்வாபதேசத்தில் பக்தியாம். மகளிருறுப்பாய்ச்சிறக்கின்ற இது,
அடியார்க்கு இலக்கணமாய்ச் சிறக்கின்ற அதனைக் குறிப்பிக்கும்.
தலைவனைச் சேர்ந்து அனுபவித்தற்கு உபகரணமாதல் இரண்டுக்கும் உண்டு.
“தடமுலை” என்றது, பக்குவமாய் முதிர்ந்த பக்தி யென்றவாறு: பரமபக்தி யென்க. ஸ்வாபதேசத்தில்,
துழாய் – இனிமை. விஸ்தாரம் ஆய்ந்து உணர்க.

இது, யமகச்செய்யுள்.

———–

தடவிகடத் தலை வேழ முன் நின்றன சாடு உதைத்துப்
படவிகள் தத்து அலை ஈர் எழ் அளந்தன பூந்திரு வோடு
அடவி கடத்தலை வேட்டன -வேங்கடத்து அப்பன் புள்ளைக்
கடவி கடத்தலை நெய் உண்ட மாதவன் கால் மலரே –73-

(இ – ள்.) புள்ளை கடவி – (கருடப்) பறவையை வாகனமாகக் கொண்டு ஏறி நடத்துபவனும்,
கடத்தலை – குடத்தில் வைத்திருந்த,
நெய் – நெய்யை,
உண்ட – அமுது செய்த,
மாதவன் – மதுகுலத்துத் தோன்றியவனுமான,
வேங்கடத்து அப்பன் – திருவேங்கடமுடையானுடைய,
கால் மலர் – தாமரை மலர் போன்ற திருவடிகள், –
தட – பெரிய,
விகடம் தலை – (கும்ப ஸ்தலங்களையுடைமையால் மேடுபள்ளங்கொண்டு) மாறுபாடுற்ற தலையை யுடைய,
வேழம் முன் – (கஜேந்திராழ்வானாகிய) யானையின் முன்னிலையில்,
நின்றன – சென்று நின்றன;
சரடு உதைத்து – சகடாசுரனை உதைத்துத் தள்ளி,
தத்து அலை புடவிகள் ஈர் எழ் அளந்தன – பாய்ந்து வருகின்ற அலைகளை யுடைய கடல் சூழ்ந்த பூமி முதலிய உலகங்கள் பதினான்கையும் அளந்தன;
பூ திருவோடு – தாமரை மலரில் வாழ்கின்ற திருமகளின் அவதாரமான சீதாபிராட்டியுடனே,
அடவி கடத்தலை வேட்டன – வனத்தைக்கடப்பதை விரும்பி நடந்தன; (எ – று.)

இது, இந்நூலின் முதற்செய்யுள் போன்ற பாதவகுப்பு.

பூலோகத்தையளந்ததில் அதன்கீழுலகங்களேழும், மேலுலகத்தையள ந்ததில் புவர்லோகம்முதலிய ஆறும் அடங்குதலால்,
“புடவிகளீரேழளந்தன” என்றார்.
திருமால் இராமனாகத் திருவவதரித்துபோது திருமகள் சீதையாகவும்,
அப்பெருமான் கண்ணனாகத் திருவவதரித்தபோது அப்பிராட்டி ருக்மிணியாகவும் அவதரித்தன ளென்று புராணங் கூறுதலால்,
“பூந்திரு” என்றது – ஜாநகியைக் குறித்தது. தாய் தந்தையர்சொற் காத்தற்பொருட்டு வனவாசஞ் செய்தலே யன்றித்
தண்டகாரணியங்கடந்து இராவணவதத்தின் பொருட்டு இலங்கைக்குச் செல்லவேண்டுமென்னும் உத்தேசமும் இராமபிரானுக்கு இருத்தலால்,
“அடவிகடத்தலை வேட்டன” என்றார்; பெருமானது விருப்பத்தை அவனதுதிருவடியின்மே லேற்றிக் கூறினது, உபசாரவழக்கு.

சாடு – சகடமென்பதன் விகாரம். “தத்தஅலை” என்பது – வினைத்தொகையன்மொழியாய், கடலின்மேல் நின்றது.
கடவி, இ – கருத்தாப்பொருள்விகுதி: சங்கேந்தி, உலகாளி, குடமாடி என்ற பெயர்களிற் போல. கடம் – வடசொல்; தலை – ஏழனுருபு.

————–

கானகம் உண்டு அதில் போம் என்னின் நீங்கிக் கடும் பிணி காள்
தேன் அக முண்டகத் தாள் வேங்கடேசனை சென்று இரக்கும்
போனாக முண்ட வெண் நீற்றான் அயனொடும் பூமியொடும்
வானகம் உண்ட பெருமானை இன்று என் மனம் உண்டதே –74-

(இ – ள்.) சென்று இரக்கும் போனகம் – (பலவிடங்களிலுஞ்) சென்று யாசித்துப் பெறும் பிச்சை யுணவைக் கொள்கிற,
முண்டம் – (பிரம) கபாலத்தையேந்திய,
வெள் நீற்றான் – வெண்ணிறமாகிய விபூதியைத் தரித்தவனான சிவனும்,
அயனொடும் – பிரமனும் ஆகிய இருமூர்த்திகளோடும்,
பூமியொடும் வானகம் – நிலவுலகத்தையும் மேலுலகங்களையும் (ஆகிய அனைத்தையும்),
உண்ட – (பிரளயகாலத்தில்) உட்கொண்டருளிய,
பெருமானை – பெருமையை யுடையவனான,
தேன் அகம் முண்டகம் தாள் வேங்கட ஈசனை – தேனைத் தனது அகத்தேயுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளையுடைய திருவேங்கடமுடையானை,
இன்று – இப்பொழுது,
என் மனம் உண்டது – எனது மனம் உட்கொண்டது; (ஆதலால்),
கடும் பிணிகாள் – கொடியநோய்களே! (நீங்கள்),
என்னின் நீங்கி – என்னை விட்டு நீங்கி,
கானகம் உண்டு அதில் போம் – காடு உளது அதிற் செல்லுங்கள்; (எ – று.)

இச்செய்யுள், கீழ் 6 – ஆஞ்செய்யுள்போலவே வியாதிகளை முன்னிலைப் படுத்திக்கூறியது.
இதனை, “ஒங்காரவட்டத்து மாசுணப்பாயி லுலோகமுண்ட,
பூங்கார் விழிக்குப் புலப்பட்டதா லெப்பொழுதுமென்னை,
நீங்காதிடர்செயுந்தீவினைகா ளினிநின்று நின்று,
தேங்காது நீரு மக்கானிடத்தே சென்றுசேர்மின்களே” என்ற திருவரங்கத்துமாலைச் செய்யுளோடு ஒப்பிடுக.
எம்பெருமான் எல்லாநோய்க்கும் மருந்தாவ னென்பது போதரும்.
‘நீற்றானயனொடும் பூமியொடும் வானகமுண்ட பெருமானை மனமுண்டது’ என்ற விடத்துச்
சிறிய ஆதாரத்திற் பெரிய ஆதேயம் அடங்கியதாகச் சொன்னது,பெருமையணியின் பாற்படும்;

“சூழ்ந்ததனிற்பெரிய பரநன்மலர்ச்சோதீயோ,…… சூழ்ந்ததனிற்பெரியவென்னவா” என்பது நம்மாழ்வார் பாசுரம்.
“கானகமுண் டதிற்போம்” என்ற முன்வாக்கியத்தை “பெருமானையென்மனமுண்டது” என்ற பின்வாக்கியம் சாதித்து நிற்பது,
தொடர்நிலைச்செய்யுட்குறியணி.
நீங்கி அதிற்போம் என்ற விடத்து, “கானகமுண்டு” என்ற வாக்கியம் இடைப்பிறவரலாய் நின்றது. அகம் – உள்ளிடம்.

————-

மனம் தலை வாக்கு உற எண்ணி வணங்கி வழுத்தும் தொண்டர்
இனம் தலைப் பெய்தனன் ஈது அன்றியே இமையோரும் எங்கள்
தனம் தலைவா எனும் வேங்கடவாண தடம் கடலுள்
நனந்தலை நாகணையாய் அறியேன் அன்பும் ஞானமுமே –75–

(இ – ள்.) இமையோரும் – தேவர்களும்,
‘எங்கள் தனம் – எங்கட்குச் செல்வம்போன்றவனே!
(எங்கள்) தலைவா – எங்கள் தலைவனே!’
எனும் – என்று துதிக்கப்பெற்ற,
வேங்கட வாண – திருவேங்கடமுடையானே!
தட கடலுள் – பெரிய (திருப்பாற்)கடலில்,
நனந் தலை நாக அணையாய் – பரந்த இடமுள்ள ஆதிசேஷனாகிய சயனத்தை யுடையவனே! –
மனம் தலை வாக்கு – மனமும் தலையும் வாக்கும் ஆகிய திரிகரணங்களாலும்,
உற – தகுதியாக, (முறையே),
எண்ணி வணங்கி வழுத்தும் – (உன்னைத்) தியானித்து நமஸ்கரித்துத் துதிக்கின்ற,
தொண்டர் – (உனது) அடியார்களுடைய,
இனம் – கூட்டத்தோடு,
தலைப்பெய்தனன் – சேர்ந்தேன்;
ஈது அன்றியே – இதுவே யல்லாமல்,
அன்பும் ஞானமும் அறியேன் – ஞானபக்திகளின் தன்மையை (அடியேன்) அறிகிறேனில்லை; (எ – று.)

அன்புஞானங்களை அறியேனாயினும், அவற்றையறிந்து திரிகரணத்தாலும் நின்னைவழிபடுகிற
மெய்யடியார்களோடு சேர்ந்தேனாதலால், அச்சம்பந்தத்தையே வியாஜமாகக்கொண்டு என்னைக் காத்தருளவேண்டு மென்பதாம்.
முதலடியில் மனத்தினால் எண்ணி, தலையினால் வணங்கி, வாக்கினால் வழுத்தும் என முறையே சென்று இயைதல்,
முறைநிரனிறைப்பொருள்கோள். உற – மனம் முதலியவற்றைப் பெற்றதன் பயன்சித்திக்க என்றபடி.
தலைப்பெய்தல் – ஒரு சொல்; இதில், தலைஎன்பது – தமிழுபசர்க்கம்: பெயர்க்கும் வினைக்கும் முன் அடையாய் நின்று
பொருள் தராதும் அப்பெயர்வினைப் பொருளை வேறுபடுத்தியும் வரும் இடைச்சொல் வடமொழியில் உபசர்க்கமெனப்படும்;
கைகூடல், தலைப்பிரிதல், கண்தீர்தல், மேற்கொள்ளல், பரிமாறல், பாதுகாத்தல் என்றவற்றில் –
கை, தலை, கண், மேல், பரி, பாது என்பன தமிழுபசர்க்கமாம். ஈது – சுட்டு நீண்டது. ஈதன்றியே, ஏ – பிரிநிலை.

இமையோர் – கண்இமையாதவர்; எதிர்மறை வினையாலணையும்பெயர். எதிர்மறை ஆகாரம் புணர்ந்துகெட்டது.
விகுதிமுதல்ஆகாரம் ஓகாரமாயிற்று. இமையோர் – ஞானசங்கோசமில்லாத நித்தியசூரிகளுமாம். உம் – உயர்வுசிறப்பு.
அதனால், பிறர்துதித்தல் தானே பெறப்படும். தனம் – அண்மைவிளியாதலின், இயல்பு.
ஆபத்துக்காலத்தில் உதவுதல்பற்றியும், விருப்பத்துக்கிடமாதல்பற்றியும், “எங்கள்தனம்” என்றார்.

“கறங்காழி நாலெட்டிலக்கமியோசனை கட்செவியின், பிறங்காக மும்மையிலக்க மியோசனை பேருலகி,
லிறங்காழிமேகமெனவேயரங்கத்திலெந்தையதி, லுறங்காகநீளமைந்தைம்பதினாயிரமோசனையே” என்பது நூல்துணிபாதலால்,
“தடங்கடலுள் நனந்தலைநாகணையாய்” என்றார்.
ஆசிரியர் நச்சினார்க்கினியர் பத்துப்பாட்டுள் முல்லைப்பாட்டில் “நனந்தலை யுலகம்” என்றதற்கு
“அகலத்தை இடத்தேயுடைய உலகம்” என்றும், மதுரைக்காஞ்சியில் “நாளங்காடிநனந்தலை” என்றதற்கு
“அகற்சியையுடைத்தாகிய இடத்தினையுடைய நாட்காலத்துக்கடை” என்றும் உரைத்தமை உணர்க.
தொல்காப்பியத்து “நனவேகளனும் அகலமுஞ் செய்யும்” என்ற உரிச்சொல்லியற்சூத்திரத்தால்,
நனவென்னும் உரிச்சொல் அகலமென்னும் பொருளை யுணர்த்துதல் காண்க.
நாகவணை என்பது நாகணை யெனத் தொகுத்தல்விகாரப்பட்டது;
“நஞ்சுபதி கொண்ட வளநாகணை” எனச் சீவக சிந்தாமணியிலும்,
“நச்சுநாகணைக் கிடந்த நாதன்” எனத் திருச்சந்தவிருத்தத்திலும்,
“நாராயணாவோ மணிவண்ணா நாகணையாய்” எனச் சிறியதிருமடலிலுங் காண்க.
காரியகாரணமுறைபற்றி, ‘அன்புஞானமும்’ என்றார்.
மநோ வாக் காயமென்ற முறைபிறழக் கூறினார், செய்யுளாதலின்: யமகநயத்தின்பொருட்டென்க.
மெய்யென்னுமிடத்துத் தலையைக் கூறினது, உத்தம அங்கமாதலின்.

———-

ஞானக் கண் தா கனவு ஒக்கும் பவம் துடை நஞ்சு இருக்கும்
தானக் கண்டா கனற்சோதி என்று ஏத்தும் வன் தாலமுடன்
வானக் கண் தா கன வண்ணா என்று ஒது ஒலி வந்து அடையா
ஈனக் கண்டா கனற்கு ஈந்தான் பர கதி என் அப்பனே –76-

(இ – ள்.) “நஞ்சு இருக்கும் – விஷம் தங்குகின்ற,
தானம் – இடமாகிய,
கண்டா – கழுத்தையுடையவனே!
கனல் சோதி – அனற்பிழம்பின் வடிவமானவனே!
ஞானம் கண் தா – (எனக்கு) ஞானமாகிய கண்ணைக் கொடு;
கனவு ஒக்கும் பவம் துடை – கனாத்தோற்றத்துக்குஒப்பான பிறப்பை (எனக்கு) ஒழித்தருள்வாய்,”
என்று – என்றுசொல்லி,
ஏத்து – (சிவபிரானைத்) துதிக்கிற,
வல் தாலமுடன் – வலிய நாவினுடன் (கூடி),
வானக்கண் தாகனம் வண்ணா என்று ஓது ஒலி வந்து அடையா – “வானத்தில் தாவிச் செல்லுகிற மேகம் போன்ற
நிறத்தையுடையவனே!” என்று (திருமாலைத்) துதித்துச்சொல்லும் ஓசை தன் (செவிகளில்) வந்துநுழையப் பெறாத,
ஈனம் கண்டாகனற்கு – இழிவையுடைய கண்டாகர்ணனென்னும் பூதகணநாதனுக்கும்,
என் அப்பன் – எனது தலைவனான திருவேங்கடமுடையான்,
பரகதி ஈந்தான் – பரமபதத்தைத் தந்தருளினன்; (எ – று.)தாலமுடன் அடையா என்று இயையும்.

“எந்தைவானவர்க்கும், வணங்கரியா னன்றிக் காப்பாரில்லாமை விண்மண்ணறியும்,
வணங் கரியானவர் வாணன் கண்டாகனன் மார்க்கண்டனே” என்றபடி
ஸ்ரீமந்நாராயணனே பரம்பொருளென்று சாதித்தற்குச் சாக்ஷியாகிற திவ்வியசரித்திரங்களுள் முதலிற்
சிவபக்தியோடு விஷ்ணுத்வேஷமும் மேலிட்டிருந்த கண்டாகர்ணன் பின்புசிவனால் முத்திபெறமாட்டாது
கண்ணபிரானாற் பெற்றனனென்ற வரலாறு சிறத்தலால், அதனை இங்கு எடுத்துக்காட்டினர்,
‘திருமாலினிடத்து இத்துணைக்காலமாக மனப்பதிவில்லாது பெரும்பாதகராய் மாறுபாடுகொண்டிருந்த நாம் இப்பொழுது
அப்பிரானைச் சரண்புக்கால் அவன் காப்பனோ? காவானோ?’ என்று ஐயுறுவாரது சந்தேகத்தைப் போக்கக் கூறியதாக
இச்செய்யுட்குச் சங்கதி காணலாம்.
(“பாதகக்கண்டா கன்னனெனுமியக்கன் பத்தியற் றுன்பெரும்புகழைக்கேளோமென்று,
காதிரண்டிற் சத்தமிகு மணியைக் கட்டிக் கணப்பொழுதுமோயாம லசைத்திருக்கத்,
தீதுநினைந்தானென்றுன்மனத்தெண்ணாமற் சிந்தையினான் மறவாமல் தியானித்தானென்று,
ஏதமற வவனுக்குமவன் தம்பிக்கு மிரங்கி முத்தியளித்தனையே யெம்பிரானே” என்றார் பின்னோரும்.)

தத்துவப்பொருள்களை உள்ளபடிகாணுதற்குக் கருவியாதலால், ஞானம் ‘கண்’ எனப்பட்டது.
காண்பது கண் எனக் காரணக்குறி. ‘கனவொக்கும் பவம்’ என்றது, சொப்பனத்திலே காணப்பட்ட பொருள் போலப்
பிரபஞ்சவாழ்க்கை சிறிதும் நிலைபேறின்றி அழியுந்தன்மையதாதலால்;
“கண்டகனாவின் பொருள்போல யாவும்பொய்” என்பது திருவரங்கத்தந்தாதி.
பிறப்பை ஒழித்தருளுதலாவது – இனிப் பிறவியில்லாதபடி மீளாவுலகமாகிய முத்தியை யளித்தல்.

திருப்பாற்கடல்கடைகையில் அதனினின்று எழுந்ததோர் அதிபயங்கரமான பெருவிஷத்தைக் கண்டமாத்திரத்தில்
அதன்கொடுமையைப் பொறுக்கமாட்டாமல் அஞ்சியோடிச் சரணமடைந்த தேவர்களின் வேண்டுகோளினால்
அவ்விஷத்தைச் சிவபிரான் அமுதுசெய்து கண்டத்தில் நிறுத்தி அனைவரையும் பாதுகாத்தருளின னென்றும்,
தாம்தாம் கடவுளென்னுங் கருத்துக்கொண்டு ஒருவர்க்கொருவர் பகைமைபூண்டு போர்தொடங்கிய
பிரமவிஷ்ணுக்களின் மாறுபாட்டை யொழித்தற்பொருட்டுப் பரமசிவன் அவ்விருவர்க்கும் நடுவில்
ஒரு பெரிய சோதிமலைவடிவமாய்த் தோன்றி நின்றனனென்றும் சைவபுராணங்களிற் கூறப்படுகிற வரலாறுகளை
யுட்கொண்டு சைவர்கள் சிவனைத் துதிக்கிற மரபின்படி மகாசைவனாயிருந்த கண்டாகர்ணன்
“நஞ்சிருக்குந்தானக்கண்டா, கனற்சோதி” என்று ஏத்தினனென்றார்.
“கனச்சோதி” என்ற பாடமும் – திரண்ட சோதிவடிவானவனே யெனப் பொருள்படும்.
“விஷகண்டா! தழல்வண்ணா!” என்று கடுஞ்சொற்களால் துதிப்பவன் “முகில்வண்ணா! என்ற செவிக்கினிய
சொல்லைக் கேட்கவும் மாட்டாத வனாயின னெனக் கண்டாகர்ணனது இழிபை விளக்கியவாறு;
இங்கு “காணிலும்முருப்பொலார் செவிக்கினாதகீர்த்தியார்,
பேணிலும்வரந்தரமிடுக்கிலாத தேவரை,
யாணமென்றடைந்துவாழுமாதர் காளெம்மாதிபாற்,
பேணிநும்பிறப்பெனும் பிணக்கறுக்ககிற்றிரே” என்ற திருச்சந்தவிருத்தம் கருதத்தக்கது.

தாடையைக்குறிக்கிற “தாலு” என்ற வடசொல், தமிழில் நாவென்ற பொருளில் வருதலை “தமிழிலே தாலை நாட்டி” எனக்
கம்பராமாயணச் சிறப்புப்பாயிரத்திலுங் காண்க. தாலம், அம் – சாரியை, தா கனம் – வினைத்தொகை;
கீழ் 11 – ஆஞ்செய்யுளின் ஈற்றடியில் “தாமரை” என்றது போல, “வானக்கண் தா” என்றது, மேகத்துக்கு அடைமொழி;
மேகவண்ணனுக்கு அடைமொழியாகக் கொண்டால், உலகளந்த வரலாற்றைக் குறிக்கும்.

———–

என் அப்பன் ஆகத்துப் பொன் நூலன் வேங்கடத்து எந்தை துயில்
மன் அப்பன் நாகத்துக்கு அஞ்சல் என்றான் பல் மணி சிதறி
மின்னப் பல் நாகத்துப் பாய்ந்தான் கதை அன்றி வெவ்வினைகள்
துன்னப் பல் நா கத்துப் பொய்ந்நூல் புகா என் துளைச் செவிக்கே –77–

(இ – ள்.) என் அப்பன் – எனது ஸ்வாமியும்,
ஆகத்து பொன் நூலன் – திருமார்பிலே பொன்னினாலாகிய பூணூலைத் தரித்தவனும்,
துயில் மன் அப்பன் – சயனித்துத் துயில் பொருந்துதற் கிடமாகிற கடலையுடையவனும்,
நாகத்துக்கு அஞ்சல் என்றான் – (“ஆதிமூலமே” என்ற) யானைக்கு ‘அஞ்சாதே’ என்று சொல்லி அபயமளித்து (அதனை)ப் பாதுகாத்தவனும்,
பல்மணி சிதறி மின்ன – (பல முடிகளிலுமுள்ள) பலமாணிக்கங்கள் தெறித்து மின்னல்போல விளங்கும்படி,
பல் நாகத்து பாய்ந்தான் – பற்களையுடைய (காளியனென்னும்) பாம்பின்மீது வலியப்பாய்ந்திட்டவனுமான,
வேங்கடத்து எந்தை – திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுடைய,
கதை அன்றி – திவ்வியசரித்திரங்கள் என்காதுகளிற் செல்லுமேயல்லாமல், –
வெவ்வினைகள் துன்ன – கொடிய தீவினைகள் நெருங்க,
பல் நாகத்து – (பரசமயத்தாரது) பலநாக்குக்கள் கத்துதலையுடைய,
பொய் நூல் – பொய்யான சமயநூல்களின் பொருள்கள்,
என் துளை செவிக்கு புகா – எனது செவித்தொளைகளில் நுழையா; ( எ – று.)

“மறந்தும் புறந்தொழா மாந்தர்” என்றபடி தேவதாந்தரங்களிடத்தில் தமக்கு உள்ள உபேக்ஷையையும்,
பரதேவதையினிடத்தில் தமக்குஉள்ள அபேக்ஷையையும் இங்ஙனங் கூறி வெளியிட்டார்.

“ஆகத்துப் பொன்நூலன்” என்பது – திருமார்பிலே பொன்னையும் (திருமகளையும்) பூணூலையும் உடையவனென்றும் பொருள்படும்.
உபவீதத்தைப்போலவே பெரியபிராட்டியையும் எப்பொழுதும் நீங்காது தரிப்பவனென்க.
துயில் மன் அப்பன் – அப்பில் துயில் மன்னுபவன்; அப்பு – ஜலம்; இங்கு, பிரளயப்பெருங்கடல்; அப் – வடசொல்.
நாகத்தின் விஷப்பற்கள், காளி காளாத்திரி யமன் யமதூதி எனப் பெயர்பெறும்.

கத்து – முதனிலைத்தொழிற்பெயர்; இரண்டாம் வேற்றுமையுருபும்பயனுமுடன் தொக்கதொகை;
கத்துகிற என வினைத்தொகையாகக் கொண்டால், கத்துப்பொய்ந்நூல் என வருமொழிமுதல்வலிமிகாது,
துளைச்செவிக்கு – உருபுமயக்கம்.
“கேட்பினுங் கேளாத்தகையவே கேள்வியாற், றோட்கப்படாத செவி” என்றபடி நூற்கேள்வி யில்லாதசெவி
செவிட்டுச் செவியாதலால், அங்ஙனமன்றிப் பெரியோரிடத்து நுண்ணியபொருளைக் கேட்ட செவியென்பார், “துளைச்செவி” என்றார்.

———–

நாரை விடு தூது

செவித்தலை வன்னியன் சூடு உண்ட வேய் இசை தீப்பதும் யான்
தவித்து அலை வன்மயலும் தமர் காப்பும் தமிழ்க் கலியன்
கவித்தலைவன் திரு வேங்கடத்தான் முன் கழறுமின் பொன்
குவித்து அலை வந்து உந்து கோனேரி வாழும் குருகினமே –78-

(இ – ள்.) அலை – அலைகள்,
பொன் குவித்து வந்து உந்து – பொன்னைக் கொழித்துக்கொண்டுவந்து (கரைகளில்) மோதப்பெற்ற
கோனேரி – கோனேரியில்,
வாழும் – வாழ்கிற,
குருகு இனமே – நாரைகளின் கூட்டங்களே! –
வன்னியின் சூடுண்ட வேய் இசை – நெருப்பிற் சுடப்பட்ட மூங்கிலினாலாகிற புள்ளாங்குழலின் இசைப்பாட்டு,
செவித்தலை தீப்பதும் – (எனது) காதுகளினிடத்தைச் சுடுவதையும்,
யான் தவித்து அலைவல் மயலும் – யான் விரகதாபங்கொண்டு வருந்துகிற வலிய (எனது) மோகத்தையும்,
தமர் காப்பும் (பாங்கியர் செவிலியர் முதலிய) உற்றார் (சைத்யோபசாரஞ்செய்து என்னைப்) பாதுகாக்கும் வகையையும்,
தமிழ் கலியன் கவி தலைவன் திருவேங்கடத்தான் முன் கழறுமின் – தமிழ்ப்பாஷையில் தேர்ந்த திருமங்கை யாழ்வார் பாடிய
பாட்டுக்களுக்குத் தலைவனான திருவேங்கடமுடையானது முன்னிலையிற் (சென்று) சொல்லுங்கள்; (எ – று.)

தலைவனைப் பிரிந்த தலைவி அப்பிரிவாற்றாது வருந்தும்போது, அங்ஙனம் இரங்குமிடம் நெய்தல்நில மாதலால்,
திருவேங்கடமலையின் மீதுள்ள கோனேரியெனப்படுகிற ஸ்வாமிபுஷ்கரிணியில் வாழ்கிற குருகென்னும்
நீர்வாழ்பறவைகள் அந்நெய்தனிலத்துக்கழிக்கரையில் இரைதேடுதற்குவர அவற்றைநோக்கி
“எனது நிலைமைகளை எனது தலைவனான திருவேங்கடமுடையான் பக்கல் சொல்லுதற்கு
நீங்கள் எனக்குத் தூதாகவேண்டும்” என வேண்டுகிறாள்.

கூடினநிலையில் இன்பஞ்செய்யும் பொருள்கள்யாவும் பிரிந்தநிலையில் துன்பஞ்செய்தல் இயல்பாதலால்,
வேய்ங்குழலின் இனியசங்கீதம் தன் செவிகளைச் சுடுகிறதென்றாள்.
இடையர் மாலைப்பொழுதிற் பசுக்களை ஊர்க்கு ஓட்டிவரும்போது ஊதுகிற வேய்ங்குழலின்இசை அம்மாலைப்
பொழுதுக்குச்சூசகமாய்க் காமோத்தீபகமாகிப் பிரிந்தாரைவருத்து மென்பதை உணர்க;
“தீங்குழலீரூமாலோ” என்பது நம்மாழ்வார்பாசுரம்.
‘வன்னியிற் சூடுண்ட’ என்றது, வேய்க்கு அடைமொழி; பதப்படுதற்காக மூங்கிலை நெருப்பிற் காய்ச்சுதல் இயல்பு.
வேயிசைக்கு அடைமொழியாக்கொண்டு, நெருப்புப்போலச்சுடுதல் கொண்ட வேய்ங்குழலிசை யெனினுமாம்.
மயல் – ஆசை நோயாலாகிய மயக்கம். தோழியர்முதலியோர் செய்யுஞ் சீதோபசாரங்கள் விரகதாபத்தைத் தணிக்க
மாட்டாமையையு முட்படச் சொல்லுங்க ளென்பாள், “தமர்காப்புங் கழறுமின்” என்றாள்.

கோனேரி – கோன்ஏரி; ஸ்வாமி புஷ்கரிணி: திருவேங்கடமலையின்மேல் திருக்கோயிலுக்கு அருகிலுள்ள பிரதாநமான திவ்வியதீர்த்தம் இது.
திருவேங்கடமுடையானுக்கு அருகில் வாழ்கின்ற வாதலால் அவன் சந்நிதியிற் சொல்லுதற்கு உரியனவா மென்று உட்கொண்டு,
“திருவேங்கடத்தான்முன் கழறுமின் கோனேரிவாழுங்குருகினமே” என்றாள்.
‘கோனேரிவாழுங் குருகினமே’ என விளித்ததனால், அப்பறவைகள்போலத் தானும் திருவேங்கடமுடையான் கருணைக்கு
இலக்காகி அவனருகில் கோனேரிதீரத்தில் வாழ்தலை வேண்டினாளாம்.

ஐயங்காரது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமான் மறைந்த வளவிலே, அவனது நிரந்தராநுபவத்தைப் பெற
விரும்பிய ஐயங்கார் தமது நிலைமையை அப்பெருமான் சந்நிதியில் விண்ணப்பஞ்செய்யும்படி
ஆசாரியர்களைப் பிரார்த்தித்தல், இதற்கு உள்ளுறைபொருள்.
வெண்ணிறமுடையனவாய் இரண்டு இறகுகளுடன்கூடி எங்குங் கவலையற்றுத்திரிந்து தம்மையே யன்றித்
தமது பரிவாரத்தையும் பாதுகாப்பனவாய்க் கருமமேகண்ணாயிருந்து உத்தேசித்தகாரியத்தைச் சமயம் வாய்க்கும்போது
தவறாதுசெய்து முடித்துக்கொள்வனவான நாரைகளை, சுத்தசத்துவகுணமுடைமையால் உள்ளும்புறமும்
ஒக்க நிர்மலஸ்வபாவராய் ஞானம் ஒழுக்கம் என்ற இரண்டு சாதனங்களுடன் கூடித் திவ்விய தேசங்களிலெல்லாம்
கவலை யற்றுயாத்திரை செய்பவராய்த் தம்மையேயன்றித் தம்மையடுத்தவர்களையும் பாதுகாப்பவராய்க் காரியமே
கருத்தாயிருந்து அதனை உரியகாலத்தில் தவறாதுசெய்து முடிக்கவல்ல ஆசாரிய ரென்னத்தகும்.

“செவித்தலை வன்னியிற்சூடுண்ட வேயிசைதீப்பது” என்றது, பிரபத்தி மார்க்கத்தில் நிற்கிற தமக்குப்
பிரபஞ்ச விஷயங்கள் வெறுப்பைவிளைத்தலைக் கூறியவாறாம்.
“யான்தவித்தலை வன்மயல்” என்றது, தாம் அடைந்திருக்கிற மோகாந்தகாரத்தை உணர்த்தும்.
“தமர்காப்பு” என்றது, பரிவுடையாரும் ஞானிகளுமான அன்பர்கள் தம்மை ஆதரித்தலை.
“கோனேரிவாழுங் குருகினம்” – எம்பெருமானது திருக்கலியாணகுணங்களில் மூழ்கி ஆனந்தமடைகிற ஆசாரியரென்றபடி.
பாகவதர்கள் ஸ்வாமி புஷ்கரிணியில் நீராட்டஞ்செய்து களிப்பவராதலாலும்,
அவர்களை “கோனேரிவாழுங் குருகினம்” என்னலாம்.
இதனால், திருமலைவாஸத்தில் ஐயங்கார்க்குஉள்ள அபேக்ஷை குறிப்பிக்கப்பட்டதாம்;
பெருமாள்திருமொழியில் “வேங்கடத்துக், கோனேரிவாழுங் குருகாய்ப் பிறப்பேனே” என்றதும்,
அதன் வியாக்கியானத்தில் “வர்த்திக்குமென்கிற விடத்துக்கு வேறே வாசகசப்தங்கள் உண்டாயிருக்கச்செய்தே
“வாழும்” என்கிற சப்தத்தை இட்டபடியாலே, அங்குத்தைவாஸந்தானே போகரூபமாயிருக்கு மென்கை’ என்றதும் அறியத்தக்கவை. விரிப்பிற் பெருகும்.

திருவேங்கடமுடையான் திருமங்கையாழ்வாரது பாடல் பெற்றவனாதலால், “கலியன்கவித்தலைவன்” என்றார்.
நான்குவேதங்கட்கு ஆறுஅங்கங்கள்போல, நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு பிரபந்தங்கட்கு ஆறு அங்கங்களாகத்
திருமங்கையாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்,
திருவெழுகூற்றிருக்கை, சிறியதிருமடல், பெரியதிருமடல் என்ற ஆறு திவ்வியப்பிரபந்தங்களுள்
திருக்குடந்தையின் விஷயமான திருவெழுகூற்றிருக்கையொன்றிலன்றி மற்றை ஐந்திலும் திருவேங்கடமுடையான் பாடப்பட்டுள்ளதனால்,
“கலியன்கவித்தலைவன் திருவேங்கடத்தான்” என்றல் தகும்.

“என்னாவிலின்கவி யானொருவர்க்குங் கொடுக்கிலேன்,
தென்னாதெனாவென்று வண்டுமுரல் திருவேங்கடத்து,
என்னானையென்னப்ப னெம்பெருமானுளனாகவே” என நம்மாழ்வார் தமது திவ்யப்பிரபந்தங்களின் தலைவன்
திருவேங்கடமுடையானே யென அறுதியிட்டுள்ளதனால், அவற்றின் அங்கங்களான கலியனது திவ்வியப்பிரபந்தங்கட்கும்
திருவேங்கடமுடையானே தலைவனென்னலா மென்பர் ஒருசாரார்.
கலியன் – மிடுக்குடையவன். சோழமண்டலத்தில் திருமங்கையென்னும்நாட்டிற் சோழராசனுக்குச் சேனைத்தலைமைபூணும்
பரம்பரையில் தோன்றி நீலனென்னும்பெயருடையராய்ப் படைக்கலத்தேர்ச்சி பெற்று அவ்வரசனுக்குச் சேனாபதியாகிப்
பகைவென்று அம்மன்னன்கட்டளைப்படி மங்கைநாட்டுக்கு அரசராகிய இவர்,
குமுதவல்லியென்னுங் கட்டழகியை மணஞ்செய்துகொள்ளுதற்பொருட்டு அவள்சொற்படி நாள்தோறும்
ஆயிரத்தெட்டு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுதுசெய்வித்து வருகையில், கைப்பொருள் முழுதும் செலவாய்விட்டதனால்,
வழிபறித்தாகிலும் பொருள்தேடிப் பாகவத ததீயாராதநத்தைத் தடையறநடத்தத்துணிந்து வழிச்செல்வோரைக்
கொள்ளையடித்துவரும்போது, ஸ்ரீமந்நாராயணன் இவரை ஆட்கொள்ளக்கருதித் தாம் ஒருபிராமணவேடங்கொண்டு
பல அணிகலங்களைப் பூண்டு மணவாளக்கோலமாய் மனைவியுடனே இவரெதிரில் எழுந்தருள,
இவர் கண்டு களித்து ஆயுதபாணியாய்ப் பரிவாரத்துடன்சென்று அவர்களைவளைந்து வஸ்திராபரணங்களையெல்லாம் அபகரிக்கையில்,
அம்மணமகன் காலிலணிந்துள்ள மோதிரமொன்றைக் கழற்றமுடியாமையால் அதனையும் விடாமற் பற்களாலே கடித்துவாங்க
அம்மிடுக்கை நோக்கி எம்பெருமான் இவர்க்கு “கலியன்” என்றுபெயர் கூறினான்.
பின்இவர் பறித்த பொருள்களையெல்லாம் சுமையாகக்கட்டிவைத்து எடுக்கத்தொடங்குகையில்,
அப்பொருட்குவை இடம்விட்டுப்பெயராதிருக்க, கண்டு அதிசயித்து அவ்வந்தணனைநோக்கி
“நீ என்ன மந்திரவாதம் பண்ணினாய்? சொல்” என்று விடாது தொடர்ந்து நெருக்க,
அப்பொழுது அந்த அழகிய மணவாளன் “அம்மந்திரத்தை உமக்குச் சொல்லுகிறோம் வாரும்” என்று
இவரை அருகில் அழைத்து அஷ்டாக்ஷரமகாமந்திரத்தை இவர்செவியில் உபதேசித்தருளி உடனே
கருடாரூடனாய்த் திருமகளோடு இவர்முன் சேவைசாதிக்க,
அத்திருவுருவத்தைத் தரிசித்ததனாலும், முன்பு காலாழிவாங்கியபொழுது பகவானுடைய திருவடியில் வாய்வைத்ததனாலும்,
இவர் அஜ்ஞாநம் ஒழிந்து தத்துவஞானம் பெற்றுக் கவிபாடவல்லராகிச் சிறந்த ஆறுபிரபந்தங்களைப் பாடினர்.
இவர் “நாலுகவிப்பெருமாள்” என்ற பிருது பெறும்படி தமிழ்வல்ல ராதலால், “தமிழ்க்கலியன்” எனப்பட்டனர்.
கலியனது தமிழ்க்கவி யென்று இயைப்பினுமாம்.

————–

குருகூரர் அங்க மறைத் தமிழ் மாலை குலாவும் தெய்வ
முருகு ஊர் அரங்கர் வட வேங்கடவர் முன் நாள் இலங்கை
வரு கூரர் அங்கம் துணித்தார் சரணங்கள் வல்வினைகட்கு
இரு கூர் அரங்கள் கண்டீர் உயிர்காள் சென்று இரவுமினே –79-

(இ – ள்.) உயிர்காள் – பிராணிகளே! –
அங்கம் – (திருமங்கையாழ்வார் அருளிச்செய்த ஆறுபிரபந்தங்களாகிய ஆறு) அங்கங்களையுடைய,
குருகூரர் மறை தமிழ் மாலை – நம்மாழ்வார் அருளிச்செய்த நான்குதமிழ்வேதமாகியபாமாலைகளில்,
குலாவும் – பொருந்திய,
தெய்வம் முருகு – தெய்வத்தன்மையுள்ள நறுமணம்,
ஊர் – வீசப் பெற்ற,
அரங்கர் – ஸ்ரீரங்கநாதரும்,
முன்நாள் இலங்கை வரு கூரர் அங்கம் துணித்தார் – முற்காலத்திலே இலங்காபுரியில் வந்துசேர்ந்த கொடியவர்களான இராக்கதர்களுடைய உடம்புகளைச் சேதித்தவருமான, வடவேங்கடவர் – வடதிருவேங்கடமுடையானது,
சரணங்கள் – திருவடிகள்,
வல் வினைகட்கு இரு கூர் அரங்கள் கண்டீர் – வலியஇருவினைகளையும் அறுத்தற்கு இரண்டு கூரிய வாள்விசேடங்களாம்;
சென்று இரவுமின் – (எம்பெருமான் பக்கல்)சென்று (உங்கள்வினைகளை அறுக்குமாறு அத்திருவடிகளைப்) பிரார்த்தியுங்கள்; (எ – று.) – கண்டீர் – தேற்றம்.

நம்மாழ்வாரது பாடல்களைப் பெற்றவ ரென்பது, முதல்விசேடணத்தினால் தேர்ந்தபொருள்.
பிரபந்தங்களை “தமிழ்மாலை” என்றதற்குஏற்ப, அவற்றின் சம்பந்தம் பெற்று விளங்குதலை முருகூர்தலாகக் குறித்தார்;
ஊர்தல் – பரத்தல். சிக்ஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற ஆறுசாஸ்திரங்களும்
நான்கு வேதங்கட்கு அங்கமாதல்போல, நம்மாழ்வாரது நான்குபிரபந்தங்கட்குத் திருமங்கையாழ்வாரது ஆறுபிரபந்தங்களும் அங்கமென்க.
“முன்னா ளிலங்கைவரு கூரரங்கந் துணித்தார்” என்றது – இராமாவதாரத்தில் இராவணன் முதலியராக்ஷசர்களை அழித்ததையேயன்றி,
அதற்குமுன்பு இலங்கையில் வாழ்ந்த மாலிமுதலிய பூர்விகராக்ஷசர்களைத் திருமாலின்வடிவமான உபேந்திரமூர்த்தி அழித்திட்டதையுங் குறிக்கும்.
இருதிறத்தரக்கர்களும் இலங்கையிற்பிறந்தவரன்றி அங்குக்குடியேறினவ ராதலால், ‘இலங்கைவருகூரர்’ எனப்பட்டனர்.
கூரர் – க்ரூரர் என்ற வடசொல்லின் விகாரம். அரம் – இரும்பு முதலிய வலியபொருள்களை அராவி
யழிக்குந்தன்மையுள்ள ஒருவகைவாள்.
இங்கு எம்பெருமான் திருவடிகள் கொடிய கருமங்களையொழிப்பனவாதலால், “வல்வினைகட்கு இருகூரரங்கள்” எனப்பட்டன;
உருவகவிசேடம். சரண் நங்கள் என்று பிரித்தும் பொருள் கொள்ளலாம்.

————–

இரணிய நாட்டன் இரணியன் ஈர் ஐந் தலையன் கஞ்சன்
முரணிய கோட்டின் நகத்தின் சரத்தின் முன் தாளின் துஞ்சத்
தரணியில் குத்தி இடந்து எய்து உதைத்தவன் சர்ப்ப வெற்பன்
அரணிய கேழல் அரி ராகவன் கண்ணன் ஆகி வந்தே –80-

(இ – ள்.) சர்ப்ப வெற்பன் – சேஷகிரியென்று ஒருபெயர் பெற்ற திருவேங்கடமலை யிலெழுந்தருளி யிருப்பவனான திருமால், –
அரணிய – அரண்போல அடுத்தவர்களைக் காக்குந்தன்மையுள்ள,
கேழல் – வராகமூர்த்தியும்,
அரி – சிங்கப்பிரானும்,
ராகவன் – ஸ்ரீராமனும்,
கண்ணன் – கிருஷ்ணனும், ஆகி வந்து -, – (முறையே), –
இரணியநாட்டன் – ஹிரண்யாக்ஷனும்,
இரணியன் – ஹிரண்யனும்,
ஈரைந்தலையன் – பத்துத்தலைகளையுடையவனான இராவணனும்,
கஞ்சன் – கம்ஸனும், –
முரணிய – வலிமையுள்ள,
கோட்டின் – கொம்பினாலும்,
நகத்தின் – நகங்களினாலும்,
சரத்தின் – அம்புகளாலும்,
முன் தாளின் – முந்திநீட்டிய காலினாலும்,
துஞ்ச – இறக்கும்படி, -(அவர்களை) தரணியில் – பூமியிலே,
குத்தி – குத்தியும்,
இடந்து – பிளந்தும்,
எய்து – தொடுத்தும்,
உதைத்தவன் – உதைத்தவனாவன்; (எ – று.)

கேழலாகி வந்து இரணிய நாட்டன் துஞ்சக் கோட்டினாற் குத்தியவன், அரியாகி வந்து இரணியன் துஞ்ச நகத்தினால் இடந்தவன்,
ராகவனாகி வந்து ஈரைந்தலையன் துஞ்சச் சரத்தினால் எய்தவன், கண்ணனாகி வந்து கஞ்சன் துஞ்ச முன்தாளினால் உதைத்தவன்
என நான்கடிகளிலும் முறையே இயைந்து பொருள்படுதலால், நிரனிறையணி.

ஹிரண்யாக்ஷன் என்ற பெயர் – பொன்னிறமான கண்களையுடையவனென்று பொருள்படுதலால்,
அதன் பரியாயநாமமாக “இரணியநாட்டன்” என்றார்; நாட்டம் – கண்; நாடுதற்கருவி.
ராகவன் – சூரியகுலத்துப் பிரசித்திபெற்ற ரகுவென்னும் அரசனது மரபில் தோன்றியவன்; தத்திதாந்தநாமம்.
ஆகிவந்து – இங்ஙனம் திருவவதரித்து என்றபடி. “சரத்தின்” என்றவிடத்து, “கரத்தின்” என்றும் பாடமுண்டு;
அப்பொழுது, கரத்தின் – கைகளால், எய்து – அம்புதொடுத்து என்க. அரண் – கோட்டை, மதிள், காவல். அரண்ய என்ற வடசொல்,
அரணிய என்று விகாரப்பட்ட தெனக்கொண்டு, காட்டிலே (சஞ்சரிக்குந்தன்மையுள்ள) என்று உரைத்தலு மொன்று.
சரண்ய என்ற வடசொல் அரணிய என்று விகாரப்பட்டுவந்த தெனக்கொண்டால், ரக்ஷகமான என்று பொருள்படும்.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கடத்தந்தாதி –41-60-

February 21, 2022

கருத்து ஆதரிக்கும் அடியேனைத் தள்ளக் கருதிக் கொலோ
திருத்தாது அரிக்கும் ஐவர்க்கு இரை ஆக்கினை செண்பகத்தின்
மருத்தாது அரிக்கும் அருவி அறா வட வேங்கடத்துள்
ஒருத்தா தரிக்கும் படி எங்கனே இனி உன்னை விட்டே –41-

(இ – ள்.) செண்பகத்தின் – சண்பகமலர்களினுடைய,
மரு – வாசனை யுள்ள,
தாது – மகரந்தப்பொடிகளை,
அரிக்கும் – அரித்துக்கொண்டுவருகிற,
அருவி – நீரருவிகள்,
அறா – எந்நாளும்இடைவிடாது பெருகப்பெற்ற,
வட வேங்கடத்துள் – வடக்கின்க ணுள்ள திருவேங்கடமலையில் எழுந்தருளி யிருக்கின்ற,
ஒருத்தா – ஒப்பற்றகடவுளே! –
கருத்து ஆதரிக்கும் – மனத்தில் (உன்னையே) விரும்புகின்ற,
அடியேனை – தாசனான என்னை,
தள்ள – (உன் பக்கல் சேர்த்துக்கொள்ளாது) தள்ளிவிட,
கருதிக்கொல்ஓ – எண்ணியோ,
திருத்தாது – (ஆட்கொண்டு) சீர்திருத்தாமல்,
அரிக்கும் ஐவர்க்கு இரை ஆக்கினை – கெடுக்கின்ற பஞ்சேந்திரியங்களுக்கு (என்னை) உணவாக்கிவிட்டாய்;
இனி உன்னை விட்டு தரிக்கும்படி எங்ஙனே – இனி (நான்) உன்னையின்றி உய்யும்வகை எவ்வாறோ? (எ – று.)

இங்ஙனம் தனது அநந்யகதித்வத்தை (அதாவது – திருவேங்கடமுடை யானையன்றி வேறொருரக்ஷகனை யின்றிருப்பதை) வெளியிட்டார்.
“செண்பகத்தின்மருத்தா தரிக்குமருவியறா” என்றது, மலைவளத்தை யுணர்த்தும். கருதிக்கொலோ, கொல் – அசை.
இரையாக்கினை – இலக்காக்கினை யென்ற படி. சம்பகமென்றவடசொல்லின்விகாரமான சண்பக மென்பது,
மோனைத் தொடையின்பொருட்டு, செண்பகம் என்று விகாரப்பட்டது. இந்த மரத்தின்பெயர் – இங்குப் பூவுக்கு முதலாகுபெயர். ஒருத்தன் – ஏகமூர்த்தி.

————-

உன்னைக் கரிய மிடற்றன் அயன் முதல் உம்பர் எல்லாம்
பொன்னைக் கரி ஒத்த போதும் ஒவ்வார் புகழ்க் கோசலை ஆம்
அன்னைக்கு அரிய முத்தே அப்பனே உன்னை அன்றி பின்னை
முன்னைக் கரி அளித்தாய்க்கு உவமான மொழி இல்லையே –42-

(இ – ள்.) புகழ் – கீர்த்தியையுடைய,
கோசலை ஆம் – கௌசல்யையாகிய,
அன்னைக்கு – தாய்க்கு,
அரிய முத்தே – அருமையான முத்துப்போன்ற குமாரனே!
அப்பனே – திருவேங்கடமுடையானே! –
கரி பொன்னை ஒத்த போதும் – கரியானது பொன்னை யொத்தபோதிலும்,
கரிய மிடற்றன் அயன் முதல் உம்பர் எல்லாம் உன்னை ஒவ்வார் – நீலகண்டனான சிவன் பிரமன்
முதலிய தேவர்களனைவரும் உன்னை யொக்கமாட்டார்கள்; (ஆதலால்), –
முன்னை கரி அளித்தாய்க்கு – முன்பு கஜேந்திராழ்வானைப் பாதுகாத்தவனான உனக்கு,
உன்னை அன்றி பின்னை உவமானம் மொழி இல்லை – உன்னையே உபமானமாகக் கூறுவதன்றி
வேறோர்உபமானங் கூறும்வகை இல்லை; (எ – று.) – ஈற்றுஏகாரம் – தேற்றம்.

“தன்னொப்பா ரில்லப்பன்”,
“ஒத்தாரை மிக்காரை யிலையாய மாமாயா”,
“ஈடுமெடுப்புமிலீசன்” என்ற திருவாய்மொழியையும்,
“தனக்குவமை யில்லாதான்” என்ற திருக்குறளையுங் காண்க.
கரியமிடற்றன் – நஞ்சுண்ட தனாற் கறுத்த கழுத்தையுடையவன். உம்பர்என்ற மேலிடத்தின்பெயர் – அங்குள்ள தேவர்க்கு இடவாகுபெயராம்;
இதில், உகரச்சுட்டு – மேலிடத்தைக் குறித்தது: இதன் எதிர்மொழி – இம்பர் (இவ்விடம்), அம்பர் என்பன.
புகழ் – “என்னநோன்பு நோற்றாள்கொலோ இவனைப் பெற்ற வயிறுடை யாள்,”
“செம்மலைப் பயந்த நற்றாய் செய்தவ முடையள்” என்றபடி நற்குணநற்செய்கைகளிற் சிறந்த புருஷோத்தமனான
இராமபிரானைப் பெற்ற தனா லாகிய கீர்த்தி. கோசலை – கௌஸல்யா என்ற வடசொல்லின் விகாரம்;
கோசலதேசத்தரசனது மக ளென்பது பொருள்: தத்திதாந்தநாமம். கோசலம் – உத்தரகோசலம் தக்ஷிணகோசலம் என இரண்டு பிரிவுள்ளது;
அவற்றில் தக்ஷிணகோசலத்தரசன் மகள் இவள்: (தசரதன், உத்தரகோசலத்து அரசாண்டவன்.)
முத்துப்போ லருமையான மகனை “முத்து” என்றது, உவமையாகுபெயர். உபசாரவழக்கு;
தெளிவுக்கும் நீர்மைக்கும் குளிர்ச்சிக்கும் முத்து உவமைகூறப்படும்:
மேலும் (92-ஆங் கவியில்) “பாவையிரங்கு மசோதைக்கு முத்து” என்பர். “பின்” என்ற இடைச்சொல் – வேறு என்ற பொருளில் வந்தது.
முன் – காலமுன். இவற்றில், ஐ – சாரியை. பின்னை முன்னை என்ற மாறுபட்ட சொற்கள் தொடர்ந்து வந்தது, தொடைமுரணின்பாற்படும்.

————–

இல்லைக் கண்டீர் இன்பம் துன்பம் கண்டீர் கண்ட ஏந்திழையார்
சொல்லை கண்டு ஈர் அமுது என்னும் தொண்டீர் தொல் அசுரன் நிறம்
கல் ஐக் கண்டீரவத்தை திரு வேங்கடவக் காவலனை
மல்லைக் கண் தீர் தரத் தேய்த்தானை வாழ்த்துமின் வாழுகைக்கே –43-

(இ – ள்.) கண்ட – கண்ணுக்கு இலக்காகிய,
ஏந்து இழையார் – தரித்த ஆபரணங்களையுடைய மகளிரது,
சொல்லை – சொற்களை,
கண்டு ஈர் அமுது என்னும் – (இனிமையினாற்) கற்கண்டு என்றும் குளிர்ந்த அமிருதம் என்றும் சொல்லுகிற,
தொண்டீர் – (அவர்கட்குத்) தொண்டுபூண்டொழுகுபவர்களே! –
இன்பம் இல்லை கண்டீர் – (அவ்வாறுஒழுகுதலில் உண்மையான) இன்பம்இல்லை யென்று அறிவீர்கள்;
துன்பம் கண்டீர் – பலவகைத்துன்பமே உண் டென்றும் அறிவீர்கள்;
வாழுகைக்கு – (இனி நீங்கள்) பேரின்பவாழ்வு பெறுகைக்காக, –
தொல் – பழமையான,
அசுரன் – இரணியாசுரனுடைய,
நிறம் – மார்பை,
கல் – கீண்ட,
ஐ கண்டீரவத்தை – அழகிய சிங்கமூர்த்தியா னவனும்,
மல்லை – மல்லர்களை,
கண் தீர்தர தேய்த்தானை – கண்கெடும்படி சிதைத்தவனுமான,
திருவேங்கடம் காவலனை – திருவேங்கடமுடையானை, வாழ்த்துமின் – பல்லாண்டுபாடித் துதியுங்கள்; (எ – று.)

முதலடியில் இரண்டிடத்து உள்ள “கண்டீர்” என்ற சொல் – தேற்றமு முணர்த்திற்று. கண்ட – பார்த்த.
ஏந்து இழையார் – செய்கையழகினால் மேனிமினுக்குபவர் என்றபடி.
“தொல்லசுரன்” என்றது, நெடுங்காலமாக அழிக்கப்படாது கொழுத்துச் செருக்கித்திரிந்த தேவசத்துரு என்றவாறு.
கல் ஐக்கண்டீரவம் – வினைத்தொகை; கல்லுதல் – இடத்தல். கண்டீரவம் என்ற வடசொல் – மிடற்றில்தொனியுடைய தென்று பொருள்படும்;
கண்டம் – கழுத்து, ரவம் – ஓசை. திருவேங்கடக்காவலன் – திருவேங்கடமலைக்குத் தலைவன்,
காவலன் – அரசன்; இது, கா வலன் என்று பிரிந்து காத்த லில்வல்லவ னென்றும்,
காவல் அன் என்று பிரிந்து காத்தற்றொழிலையுடை யவ னென்றும், பொருள்படும்.
மல் – மற்போர்; ஆயுதங்கொண்டன்றித் தேகபலங்கொண்டு செய்யும் போர்: அதனையுடையவர்க்கு ஆகுபெயர்.
கண் தீர்தர என்பதற்கு – கண்ணோட்டமில்லாம லென்று பொருள்கொள் ளினுமாம்.
இனி, கை கால் தலை என்பனபோல, கண்என்பதை உபசர்க்க மென்றலும் ஒன்று.

————-

கைத்தனு மோடுஇசை வெற்பு எனக் காண வெவ்வாணன் என்னும்
மத்தன் நுமோடு இகல் செய்வன் என்றே வந்துவை உறு வேல்
அத்தனும் மோடியும் அங்கியும் ஓட என் அப்பனுக்குப்
பித்தனும் ஓடினன் அங்கத்துத் தான் என்றும் பெண்ணன் என்றே –44-

(இ – ள்.) கை தனு – கையிலேந்திய வில்லானது,
மோடு இசை வெற்பு என காண – உயர்ச்சி பொருந்திய மலைபோலத் தோன்ற,
வெவ் வா ணன் என்னும் மத்தன் – கொடிய பாணாசுரனென்கின்ற உன்மத்தன்,
உமோடு இகல் செய்வன் என்றே வந்து – “உம்முடனே போர்செய்வேன்” என்று வீரவாதங்கூறிக்கொண்டே (கண்ணபிரானுடன் போர்க்கு) வந்த போது, –
என் அப்பனுக்கு – எம்பிரானாகிய அத்திருவேங்கடமுடையானுக்கு முன்,
வை உறு வேல் அத்தனும் – கூர்மைமிக்க வேலாயுதத்தை யேந்திய கையையுடையவனான முருகக்கடவுளும்,
மோடியும் – துர்க்கையும்,
அங்கியும் – அக்கினியும்,
ஓட – தோற்றுஓட,
பித்தனும் – பித்தனாகிய சிவனும்,
அங்கத்து தான் என்றும் பெண்ணன் என்று ஓடினன் – உடம்பில் தான் எப்பொழுதும் பெண்ணையுடையவ னென்றுசொல்லிக்கொண்டு ஓடி னான்; (எ – று.)

“மோடி யோட வங்கி வெப்பு மங்கியோட வைங்கரன், முடுகியோட முருகனோட முக்கணீசன் மக்களைத்,
தேடியோட வாணனாயிரம்புயங்கள் குருதிநீர், சிந்தியோட நேமி தொட்ட திருவரங்கராசரே” என்றார் திருவ ரங்கக்கலம்பகத்திலும்.

“பெண்ணென்றாற் பேயு மிரங்கும்” ஆதலின், எதிர்த்துப் பொருகின்ற கண்ணபிரான் தன்னையழியாமல் உயிரோடு விட்டிடுமாறு
அப்பெருமானுக்கு இரக்கமுண்டாதற்பொருட்டுச் சிவபிரான் “அங்கத்துத் தான் பெண்ணன்” என்று சொல்லிக் கொண்டு ஓடின னென்க.
“அங்கத்துத் தான் என்றும் பெண்ணன்” என்ற தொடரில் – உடம்பில் (ஒருபாதி) தான் எப்போதும் பெண்வடிவையுடையவனான
நபும்ஸக னென்ற பொருளும் தொனிக்கும்: ஒருசார் ஆணுறுப்பும் ஒருசார் பெண்ணுறுப்பும் விரவி ஒருவகையாயினும்
நிரம்பாமல் நிற்றல் பேட்டின்இலக்கணமாதல் காண்க; தான் ஆண்மை நிரம்பாதவ னென்று தெரிவித்துக்கொண்டு ஓடினனென்பது போதரும்.
முருகன் வேற்படையிற் சிறந்தவனாய் வேலனென்று ஒருபெயர் பெறுதலால், “வையுறுவேல் அத்தன்” எனப்பட்டான்;
இவன், சிவபிரானது இளையகுமாரன்: (மூத்தவன் – விநாயகன்.) துர்க்கை – பார்வதியின் அம்சமானவள்.
“உம்மோடு” என்ற முன்னிலைப்பன்மை, கண்ணபிரானுடன் சென்ற பலராமன் பிரத்யும்நன் முதலாயினாரை உளப்படுத்தியது.

மத்தன் – கொழுத்தவன்: புலன்வேறுபட்டவன்; வடசொல். வந்து = வர: எச்சத்திரிபு;
“சொல்திரியினும் பொருள்திரியா வினைக்குறை” என்பது நன்னூல்.
அத்தம் – கை; ஹஸ்த மென்ற வடசொல்லின் விகாரம்; அதனை யுடையவன்,
அத்தன், பித்தன் – மதிமயங்கியவன்; செய்வன தவிர்வன அறியாதவன்; தமோகுணதேவதை. உம் – இறந்ததுதழுவியது.

————–

பெண் ஆக்கு விக்கச் சிலை மேல் ஒருதுகள் பெய்த பொற்றாள்
அண்ணாக்கு விக்கல் எழும் போது எனக்கு அருள்வாய் பழிப்பு
நண்ணாக் குவிக்கச்சு இள முலைப் பூ மகள் நாயகனே
எண் ஆக குவிக்கக் குழல் ஊதும் வேங்கடத்து என் கண்ணனே –45-

(இ – ள்.) பழிப்பு நண்ணா – யாதொருநிந்தனையும் அடையாத,
குவிகச்சு இள முலை பூ மகள் – குவிதலையுடையனவும் கச்சணிந்தனவும் என்றும் இளமை மாறாதனவுமான
தனங்களையுடையவளும் செந்தாமரைமலரில் வாழ்பவளுமாகிய திருமகளுக்கு,
நாயகனே – கணவனே!
எண் ஆ குவிக்க – பேரெண்ணையுடைய (மிகப்பலவான) பசுக்களை ஒருங்குசேர்த்தற்பொருட்டு,
குழல் ஊதும் – புள்ளாங்குழலை ஊதியருளிய,
வேங்கடத்து என் கண்ணனே – திருவேங்கடமலையில்எழுந்தருளியிருக்கிற எனதுகண்ணபிரானே! –
பெண் ஆக்குவிக்க சிலை மேல் ஒரு துகள் பெய்த பொன் தாள் – (ஒருகல்லை அகல்யையென்னும்) பெண்ணாகச் செய்விக்குமாறு
அக்கல்லின்மேல் ஒருதூளியை யிட்ட (நினது) அழகிய திருவடிகளை,
அண்ணாக்கு விக்கல் எழும்போது எனக்கு அருள்வாய் – உள்நாக்கிலிருந்து விக்குள் உண்டாகும் போது (அந்திமகாலத்தில்) அடியேனுக்குத் தந்தருள்வாய்; (எ – று.)

“திருவடியே வீடாயிருக்கும்” என்ற கோட்பாடுபற்றி, “தாள் எனக்கு அருள்வாய்” என்றன ரென்க.
நினதுதிருவடியை என்மீது வைத்தருள்வா யென்றும், என்னை நினதுதிருவடியிற் சேர்த்தருள்வா யென்றுங் கொள்ளலாம். முதலடியினால்,
மிகவலிய கல்லையும் மிகமெல்லிய பெண்ணாக்கவல்ல தெனத் திருவடியின் சிறப்பை விளக்கினார்.

பலவிடங்களிற் பரவிமேய்கின்ற பசுக்கூட்டங்களை ஒருங்குசேர்த்தற் பொருட்டும் அவற்றை மகிழ்வித்தற்பொருட்டும்
கண்ணன் வேய்ங்குழலூதி னமை, பிரசித்தம்.
“பூவிற்குத் தாமரையே” என்றபடி எல்லாமலர்களிலும் தாமரை சிறத்தலால், அது வாளா “பூ” எனப்பட்டது;
“பூவெனப்படுவது பொறிவாழ்பூவே” என்றார் பிறகும்: (பொறி – இலக்குமி.) இரட்டுறமொழித லென்னும் உத்தியால்,
பூமகள் என்பதற்கு – பூமிதேவியென்றும் பொருள் கொள்ளலாம்; (“வாயுமனைவியர் பூமங்கையர்” என்பர் நூற்றெட்டுத்திருப் பதியந்தாதியிலும்:)
இப்பொருளில், பூ – வடசொல். குவி – முதனிலைத்தொ ழிற்பெயர்; இரண்டாம்வேற்றுமையுருபும்பயனுந்தொக்கதொகை;
குவிகிற என்று பொருளுரைத்து, வினைத்தொகை யென்ன லாகாது;
வினைத்தொகையில் “குவிக்கச்சு” என வருமொழிமுதல்வலி மிகா தாதலின். கச்சு – கஞ்சுக மென்ற வடசொல்லின் சிதைவு.
எண் – தொகை; இங்குப் பெருந்தொகை. இனி, எண் – நன்குமதிக்கத்தக்க, ஆ – பசுக்க ளெனினுமாம்.

—————

கண் நனையேன் நெஞ்சு உருகேன் நவைகொண்டு என் கண்ணும் நெஞ்சும்
புண் அணையேன் கல் அணையேன் என்றாலும் பொற் பூங்கமலத்
தண் அனையே நல்ல சார்வாக வேங்கடம் சார்ந்து மணி
வண்ணனையே அடைந்தேற்கு இல்லையோ தொல்லை வைகுந்தமே –46-

(இ – ள்.) கண் நனையேன் – (பக்திமிகுதியாலாகிற ஆநந்தக் கண்ணீரினாற்) கண்கள் நனையப்பெறுகிறேனில்லை;
நெஞ்சு உருகேன் – மனமுருகப் பெறுகிறேனில்லை;
அவை கொண்டு – அக்கண் நனையாமையையும் நெஞ்சுருகாமையையுங் கொண்டு,
என் கண்ணும் நெஞ்சும் புண் அனையேன் கல் அனையேன் – எனது கண்ணும் மனமும் (முறையே) புண்களுக்கு
ஒப்பானவ னாயினேன் கல்லுக்கு ஒப்பானவனாயினேன்;
என்றாலும் – இங்ஙனம் ஆனாலும். –
பொன் பூ கமலம் தண் அனையே நல்ல சார்வு ஆக – அழகிய செந் தாமரைப்பூவில்வீற்றிருக்கின்ற தண்ணளியையுடைய
தாயான பெரியபிராட் டியாரையே நல்லதுணையாகக் கொண்டு,
வேங்கடம் சார்ந்து மணி வண்ணனையே அடைந்தேற்கு – திருவேங்கடமலையை யடைந்து (அங்குஎழுந்தருளியிருக்கிற)
நீலமணிபோலுந் திருநிறமுடையவனான எம்பெருமானையே சரண்புக்கவனாகிய எனக்கு,
தொல்லை வைகுந்தம் இல்லையோ – அநாதியான பரமபதம் கிடையாமற்போகுமோ? (போகாது: நிச்சயமாய்க் கிடைக்கும் என்றபடி); (எ – று.)

பக்திவசப்படுதலாலாகும்மெய்ப்பாடுகளிற் குறைவுற்றிருந்தாலும், பிரா ட்டிபுருஷகாரமாகப் பெருமாள்பக்கல் சரண்புக்கது
பழுதுபடாது பரகதிபெறுவிக்கு மென்பதாம்.
கண்ணும் நெஞ்சும் புண்ணனையேன் கல்லனை யேன்” என்ற தொடர் – கண் புண் அனையேன், நெஞ்சு கல்அனையேன்
என முறையே சென்றுஇயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள்.
பகவத் விஷயத்தில் ஈடுபட்டு ஆநந்தபாஷ்பம்பெறாதஊனக்கண்களின் இழிவுதோ ன்ற அவற்றை “புண்” என்றும்,
அவ்விஷயத்தில் இளகாத மனத்தை “கல்” என்றுங் கூறினார். நவைகொண்டு என்று பதம்பிரித்து,
(கண்நனையாமையும் நெஞ்சு உருகாமையுமாகிய) குற்றங்களைக் கொண்டு என்றலு மொன்று.
மூன்றாமடியில், அனை – அன்னையென்பதன் தொகுத்தல். நல்ல சார்வு – பரகதிக்கு உற்றதுணை.

—————

வைகுந்தம் ஆய விழி மாதர் வேட்கையை மாற்றி என்னை
வைக்கும் தம் ஆய வினை நீக்கிய முத்தர் மாட்டு இருத்தி
வை குந்தம் மாய ஒசித்தாய் வட திரு வேங்கடவா
வைகுண்ட மாயவனே மாசு இலாத என் மா மணியே –47-

(இ – ள்.) குந்தம் மாய ஒசித்தாய் – குருந்தமாம் அழியும்படி முறித்திட்டவனே!
வட திருவேங்கடவா – வடக்கின்கணுள்ள திருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனே!
வைகுந்தம் மாயவனே – ஸ்ரீவைகுண்டத்துக்குத் தலைவனான திருமாலே!
மாசு இலாத – குற்றமில்லாத,
என் மா மணியே – எனது தலைவனான சிறந்த மாணிக்கம்போன்றவனே! –
வை குந்தம் ஆய விழி மாதர் வேட்கையை மாற்றி – கூரிய வேற்படை போன்ற கண்களையுடைய மகளிர்
பக்கல் (உண்டாகிற) ஆசையை (எனக்கு) ஒழித்து,
என்னை -, வைகும் தம் ஆயம் வினை நீக்கிய முத்தர்மாட்டு இருத்திவை – தங்கிய தமது தொகுதியான
கருமத்தைப் போக்கிய முக்தர்களில் ஒருவனாக இருக்கச்செய்துவைத்தருள்வாய்; (எ – று.)

குந்தம் – வடசொல், ஆய – உவமஉருபு; இத்தெரிநிலைப்பெயரெச்சத்தில் ய் – இறந்தகாலஇடைநிலை.
முக்தர் – முத்திபெற்றவர்; வடசொல். மாணிக்கம் – ஒளிக்கும், பெறற்கருமைக்கும் உவமை.
என்மாமணியே – “என்தன்மாணிக்கமே” என்பது திருவிருத்தம்.

—————–

பிரிவாற்றாகத தலைவியின் துயர் கண்ட செவிலித்தாய் இரங்கல் –

மணி ஆழி வண்ணன் உகந்தாரைத் தன் வடிவு ஆக்கும் என்றே
துணி ஆழிய மறை சொல்லும் தொண்டீர் அது தோன்றக் கண்டோம்
பணி யாழின் மென்மொழி மாலாகி பள்ளி கொள்ளாமல் சங்கோடு
அணி ஆழி நீங்கி நின்றாள் வேங்கடேசனை ஆதரித்தே –48-

(இ – ள்.) தொண்டீர் – அன்பர்களே! –
“மணி ஆழி வண்ணன் – நீல மணியும் கடலும் போன்ற திருநிறமுடையவனான திருமால்,
உகந்தாரை – தன்னை விரும்பினவர்களை,
தன் வடிவு ஆக்கும் – தன்னைப் போன்ற வடிவமுடையவராகச் செய்துவிடுவான்,’ என்றே -.
துணி ஆழிய மறை சொல்லும் – (பொருள்களைத்) துணிந்துகூறுவதும் ஆழ்ந்தபொருளுள்ளது மான வேதம் சொல்லும்;
அது தோன்ற கண்டோம் – அத்தன்மை இங்குக் கட்புலனாகத் தெரியப் பார்த்தோம்; (எங்ஙனமெனின், –)
பணி யாழின் மெல் மொழி – நுனிவளைந்த வீணையின் இசைபோன்ற மென்மையான சொற்களை யுடைய இப்பெண், –
வேங்கடேசனை ஆதரித்து – திருவேங்கடமுடையானான அத்திருமாலை விரும்பி, (அவனைப்போலவே),
மால் ஆகி பள்ளி கொள்ளாமல் சங்கோடு அணி ஆழி நீங்கி நின்றாள் – ; (எ – று.)

திருமால் தன்னையுகந்தவரைத் தன்வடிவாக்குதலாவது –
தனது அன்பர்க்குத் தான் முத்திநிலையில்தந்தருள்கிற ஸாலோக்யம் ஸாமீப்யம் ஸாரூப்யம் ஸாயுஜ்யம் என்ற நான்கு நிலைமைகளில்
ஸாரூப்யநிலையினால் அவர்களைத் தன்வடிவுபோன்ற வடிவமுடையவராகச் செய்தல்.
(ஸாலோக்யம் – கடவுளின் உலகத்தில் வாழ்தல். ஸாமீப்யம் – கடவுளினருகில் வாழ்தல்.
ஸாரூப்யம் – கடவுளின் உருவம்போன்ற உருவத்தைப் பெறுதல்.
ஸாயுஜ்யம் – கடவுளோடு ஒன்றிவாழ்தல்.)

தலைமகளுக்கு – மாலாகுதல் – ஆசைமயக்கமுடையவளாதல்;
பள்ளிகொள்ளாமை – விரகவேதனையால் எப்பொழுதும்படுக்கை கொள்ளாமை;
சங்கோடு அணிஆழி நீங்கிநிற்றல் – (பிரிவுத்துயரால் உடல் மெலிந்தமைபற்றிக் கைகளிலணிந்த) சங்கவளைகளும்
விரலிலணிந்த மோதிரமும் கழன்றுவிழப்பெறுதல்.
திருவேங்கடமுடையானுக்கு – மாலாகுதல் – திருமாலென்னும்பெயருடையனாதல்;
பள்ளிகொள்ளாமல் நிற்றல் – சயனத்திருக்கோலமாகவன்றி நின்றதிருக்கோலமாய் எழுந்தருளியிருத்தல்;
சங்கோடு அணி ஆழி நீங்கியமை – தனதுசங்கசக்கரங்களைத் தொண்டைமான் சக்கரவர்த்திக்குக் கொடுத்துவிட்டதனாற்
சிலகாலம் திருக்கைகளில் திருவாழி திருச்சங்கு இன்றியிருந்தமை;

முன்னொருகாலத்தில் திருவேங்கடமுடையான் தன்மெய்த்தொண்டனான தொண்டைமான் சக்கரவர்த்திக்கு அரியபகைவர்களை
வெல்லுதற்பொருட்டுத் தனது சங்கசக்கரங்களைத் தந்தருளி அதற்கு அடையாளமாகப் பின்பு அவனது வேண்டுகோளால்
அவற்றை அங்கு விக்கிரகரூபத்தில் வெளிப்படையாகக்கைக் கொள்ளாதிருந்தன னென்பதும்;
ஸ்ரீபாஷ்யகாரர் சிஷ்யர்களுடன் திவ்வியதேசயாத்திரையிலே திருமலைக்கு எழுந்தருளினவளவில், அங்குச் சைவர்கள்
திருவேங்கடமுடையானைத் தங்கள்தெய்வமென்று வழக்குப்பேச, உடையவரும்,
‘சூலடமருகங்களையும் ஸ்ரீசங்கசக்கரங்களையும் எம்பெருமான் திருமுன்னர் வைப்பது; அவைகளில் அப்பெருமான்
எவற்றைத் தரித்தருள்கின்றனனோ, அதுகொண்டு அவனை இன்னகடவுளென்று நிச்சயித்துக்கொள்வது’ என்று அருளிச்செய்ய,
அந்த இராமாநுசன்வார்த்தைக்கு அனைவரும் சம்மதித்து அங்ஙனமே செய்ய, ஸ்ரீநிவாஸன் இளையாழ்வார் திருவுள்ளத்தின்படி
திருவாழிதிருச்சங்கு தரித்தபடியைக் கண்டு எல்லாரும் ஆனந்தித்துத் திருவேங்கடமுடையானைத் திருமாலென்றே நிச்சயித்தன ரென்பதும்,
இங்கு அறியத்தக்க கதைகள்.

திருமாலுக்கும் தலைமகளுக்கும் உவமைகாட்டுதற்குப் பொதுத்தன்மையாய் வந்த
“மாலாகிப் பள்ளிகொள்ளாமற் சங்கோடணியாழி நீங்கி நின்றாள்” என்ற தொடர்,
இங்ஙனம் இருபொருள்பட்டுச் சிலேடைக்கு உபகாரமாகநின்றதனால்,
இது, சிலேடைபற்றிவந்த உவமையணியின் பாற்படும்; செம்மொழிச்சிலேடை.

தொண்டீர்என்றது, தலைவியின் தோழியரை விளித்தது. மறைசொல்லும் அதுதோன்றக் கண்டோம் –
பிரதியக்ஷம் அநுமானம் உபமானம் ஆகமம் என்ற பிரமாணங்களில் ஆகமப்பிரமாணத்திற்கண்ட விஷயத்தைப் பிரதியக்ஷத்திற்கண்டோ மென்றபடி.
(பிரளயத்தில் உலகத்தை) அழிப்பதுஎன்பது பற்றியாவது, ஆழ்ந்துள்ளது என்பது பற்றியாவது ஆழியென்று கடலுக்குப் பெயர்வந்ததென்க.
துணிதல் – பொருள்களின்நிலைமையை ஐயந்திரிபற உள்ளபடி சித்தாந்தஞ்செய்து வெளியிடுதல். ஆழிய – இறந்தகாலப்பெயரெச்சம்;
இதில், “இன்” என்ற இடைநிலை ஈறுதொக்கது.
(சிலசாதியார்க்கும் பெண்பாலார்க்கும் ஓதுவிக்கவும் ஓதவும் கேட்கவும் ஆகாதென்று) மறுக்கப்படுதலாலும்,
(எளிதில் உணரலாகாதபடி) மறைந்த ஆழ்பொருளுடைமையாலும், மறையென்று வேதத்திற்குக் காரணக்குறி.
பணியாழின்மென்மொழி – அவ்வகைமொழியையுடைய பெண்ணுக்கு அடையடுத்த சினையாகுபெயர்;
இப்பெயரை அன்மொழித்தொகையென்றல் பொருந்தாது;
“ஐந்தொகைமொழிமேற் பிறதொக லன்மொழி” என்றல் இலக்கணமாதலும், யாழின்என்பது ஐந்தாம்வேற்றுமைவிரியாதலுங் காண்க.
யாழ் – அதன்இசைக்கு முதலாகு பெயர். பணி – யாழ்க்கு அடைமொழி. பணி – பணிவுள்ள என்று உரைத்து,
அதனை மொழிக்கு அடைமொழியாக்குதலு மொன்று. சங்கு – சங்கவளைக்குக் கருவியாகுபெயர். ஆழி – வட்டவடிவமுடையது.
வேங்கடேசன் – வேங்கட + ஈசன்; குணசந்திபெற்ற வடமொழித்தொடர்; “அஆமுன்இஈவரின் இரண்டுங் கெட ஓர் ஏகாரம் தோன்றும்:
” திருவேங்கடமலைக்குத் தலைவனென்பது பொருள். ஆதரித்து – ஆதரமென்ற பெயர்ச்சொல்லின் மேற்பிறந்த இறந்தகாலவினையெச்சம்.

எம்பெருமானை நிரந்தராநுபவம்பண்ணவேண்டு மென்று அபேக்ஷை கொண்டு அவ்வவா உடனே நிறைவேறப்பெறாமையால்
வருந்துகிற ஐயங்காரது நிலைமையை நோக்கிய ஞானிகள், அன்பர்களைநோக்கி, இவர்க்கு இத் தன்மைகள்
எம்பெருமான் அநுக்கிரகித்த ஸாரூப்யபதவியினால் நேர்ந்தன போலுமென்று உரைத்தல், இதற்கு உள்ளுறைபொருள்.
பணியாழின்மென்மொழி – விநயத்தோடுபேசும் செவிக்குஇனிய செஞ்சொற்களை யுடையவர்.
மாலாகுதல் – வியாமோகங்கொள்ளுதல். பள்ளிகொள்ளாமை – கவலையற்றிராமை.
சங்கோடணியாழி நீங்குதல் – பரதந்திரமாயிருத்தல் முதலிய ஆத்மாலங்காரமான குணங்கள் நிலைகுலையப்பெறுதல். விவரம் உணர்ந்து கொள்க.

————–

ஆதரிக்க பட்ட வாள் நுதல் மங்கையர் அங்கை மலர்
மீ தரிக்கப் பட்ட நின் அடியே வெள் அருவி செம்பொன்
போது அரிக்கப் பட்டம் சூழ் வேங்கட வெற்ப போர் அரக்கர்
தீது அரிக்க பட்ட கானகத்தூடு அன்று சென்றதுவே –49-

(இ – ள்.) வெள் அருவி – வெண்ணிறமான நீரருவிகள்,
செம் பொன் – சிவந்த பொன்னையும்,
போது – மலர்களையும்,
அரிக்க – அரித்துக்கொண்டுவர,
பட்டம் சூழ் – நீர்நிலைகள் சூழப்பெற்ற,
வேங்கட வெற்ப – திருவேங்கடமலையையுடையவனே! –
பட்டம் வாள் நுதல் – பொற்பட்டத்தையணிந்தபிரகாசமான நெற்றியையுடைய,
மங்கையர் – பட்டத்து மனைவியர்,
ஆதரிக்க – அன்புசெய்யவும்,
அம் கை மலர் மீ தரிக்க – அழகிய தாமரைமலர்போன்ற தங்கள்கைகளின்மீது தாங்கவும்,
பட்ட – பெற்ற,
நின் அடியே – உனது திருவடியே, –
அன்று – அந்நாளில் (இராமாவதாரத்தில்),
போர் அரக்கர் தீது அரிக்க – போர்செய்யவல்ல (இராவணன்முதலிய) இராக்கதர்களா லாகிய தீங்கை யழிப்பதற்கு,
பட்ட கானகத்தூடு சென்றது – உலர்ந்த காட்டிற் சென்றது! (எ – று.) – ஈற்று ஏகாரம் – இரக்கம்.

பட்டமகிஷிகளால் அன்போடு கைம்மலர்மீதுகொண்டு வருடப்படுனவான நினதுதிருவடிகள் துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனஞ்செய்தற்
பொருட்டுக் கொடியவனவாசஞ்செய்தனவே! என்று இரங்கிக்கூறியவாறாம்.
பட்டமங்கையர் என்றது, ஸ்ரீவைகுண்டத்திலும் திருப்பாற்கடலிலும் ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி வீரலக்ஷ்மி விஜயலக்ஷ்மி
முதலிய தேவிமாரையும், இராமாவதாரத்திற் சீதாபிராட்டியையும்,
கிருஷ்ணாவதாரத்தில் ருக்மிணி ஸத்யபாமை ஜாம்பவதி ஸத்யை மித்ரவிந்தை சுசீலை ரோகிணி லக்ஷணை என்ற
எட்டுப்பட்ட மகிஷிகளையும் குறிக்கும். பட்டகானகம் – நிழலில்லாதபடி மரங்கள் பட்டுப்போகப்பெற்ற கொடுஞ்சுரம்.

வாள் – ஒளியையுணர்த்துகையில், உரிச்சொல். ‘வெள்ளருவி செம்பொன்’ – முரண்தொடை.
அரக்கர் – ரக்ஷஸ் என்ற வடசொல்லின் சிதைவு. அடியென்பது – சாதியொருமையாதலால், சென்றது என்ற ஒருமை முற்றைக்கொண்டது.

————

கிள்ளை விடு தூது –

சென்ற வனத்து அத்தை மைந்தரை வாழ்வித்து தீய மன்னர்
பொன்ற அனத்தத்தைச் செய்த பிரான் புகழ் வேங்கடத்துள்
நின்றவன் அத்தத்துஜ ஆயுதன் பாதத்துஎன் நேசம் எல்லாம்
ஒன்ற வனத்தத்தை காள் உரையீர் அறம் உண்டு உமக்கே –50-

(இ – ள்.) வனம் தத்தைகாள் – அழகிய கிளிகளே! –
சென்ற வனத்து – (பன்னிரண்டுவருஷம்) வனவாசஞ்சென்ற காட்டினிடத்து,
அத்தை மைந்தரை வாழ்வித்து – தனது அத்தையான குந்தியின் புத்திரர்களாகிய பாண்டவர்களை (த் தீங்கின்றி) வாழச்செய்து,
(பின்பு), தீய மன்னர் பொன்ற அனத்தத்தை செய்த – கொடிய (துரியோதனன்முதலிய) அரசர்கள் அழியு மாறு (அவர்கட்குக்) கேட்டை விளைத்த,
பிரான் – பிரபுவும்,
அத்தத்து ஐ ஆயுதன் – திருக்கைகளில் ஐந்துஆயுதங்களை யுடையவனுமான,
புகழ் வேங்கடத்துள் நின்றவன் – கீர்த்தியையுடைய திருவேங்கடமலையில் நின்றதிருக் கோலமாக எழுந்தருளியிருக்கிற எனதுதலைவனுடைய,
பாதத்து – திருவடிகளில்,
என் நேசம் எல்லாம் – எனதுஅன்புமுழுவதையும்,
ஒன்ற உரையீர் – பொருந்தச் சொல்லுங்கள்:
உமக்கு அறம் உண்டு – உங்கட்குப் புண்ணிய முண்டு; (எ – று.)

தலைவனைப்பிரிந்த தலைவி, இங்ஙனஞ்சொல்லி, தலைவனிடத்துக் கிளிகளைத் தூதுசெல்லவேண்டுகிறாள்.
“இயம்புகின்றகாலத்து எகினம் மயில்கிள்ளை, பயம்பெறு மேகம் பூவை பாங்கி –
நயந்தகுயில், பேதைநெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்துமே, தூதுரைத்து வாங்குந் தொடை” என்ற இரத்தினச் சுருக்கத்தால்,
தூதிற்கு உரியவை இன்னவை யெனக் காண்க.
பிரிந்த தலைவன் வந்திடுவனென்று ஆறியிருக்கவொண்ணாதே அதன்வரவுக்கு விரைந்து ஆள்விடும்படியாயிற்று, ஆற்றாமைமிகுதி.

“கானகமருங்கில் மேவலன் பணியாற் கடும்பசியுடன் வருங் கடவுண்,
மானவமுனிவன் தாபமுஞ் சாபவருத்தமு முறாவகை யொழித்தாய்” என்ற படி பாண்டவர் வனவாசஞ்செய்கையில்
துரியோதனன் துர்வாசமுனிவனைக் கொண்டு அவர்கட்குச் சாபம்பெறுவித்து அவர்களை அழிக்கமுயன்றபோது
அதற்குக் கண்ணபிரான் தக்கபரிகாரஞ்செய்து அவர்களைச் சாபம்பெறாத படி பாதுகாத்தது முதலிய வரலாறுகள்பற்றி
“சென்றவனத்து அத்தை மைந்தரை வாழ்வித்து” எனப்பட்டது. அவ்வரலாறு வருமாறு: –

“சாபத்தாலும் சாபமொழி தன்னால்வளருந் தவத்தாலும், கோபத்தாலும் பேர்படைத்த கொடிய” துர்வாசமுனிவன்
பாண்டவர் வனவாசகாலத்தில் ஒருநாள் பல முனிவர்களோடும் துரியோதனனரண்மனைக்குச்சென்று அறுசுவையமைந்த
அருவிருந்துண்டு மகிழ்ந்து “உனக்குவேண்டும்வரம் வேண்டுக” என்ன, அவன் செல்வச்செருக்கினாலும் பாண்டவர்களை
இம்முனிவர்சாபத்துக்கு உட்படுத்த வேண்டு மென்னுங் கருத்தினாலும் “இன்றைக்கு எமது மனையில் அமுது செய் ததுபோலவே
நாளைக்குப் பாண்டவர்பக்கல்சென்று அமுதுசெய்யவேண்டு வதே எனக்குத்தரும் வரம்” என்ன,
அங்ஙனமே அம்முனிவன் அநேகமுனி வர்களோடு அடுத்தநாள் மத்தியான மானபொழுது பாண்டவர் இருந்த
ஆச்சிரமத்துக்கு வந்துசேர்ந்து “இன்றைக்குஎங்கட்குநல்லுணவு இடவேண்டும்” என்றுசொல்ல,
அதற்குமுன்னமே பலமுனிவர்களோடும் வேண்டியவாறு உண்டு சூரியனருளின அக்ஷயபாண்டத்தைக் கழுவிக் கவிழ்த்துவிட்ட
பாண்டவர்கள் அம்முனிவர்களை நீராடிவரச் சொல்லியனுப்பிவிட்டு “இதற்கு என் செய்வது!” என்று மனங்கலங்கித்
திரௌபதியுந்தாமுமாகக் கிருஷ்ணனைத் தியானிக்க,

அப்பெருமான் உடனே அங்குஎழுந்தருளிப் பாண்டத்தைக் கொணரச் சொல்லி அதிலுள்ளதொரு சோற்றுப்பருக்கையைத்
தான்உண்டமாத் திரத்தில், அம்முனிவர்யாவரும் வயிறுநிரம்பிப் பசிதணிந்து தெவிட்டித்தேக் கெறிந்து மிகமகிழ்ந்து
பாண்டவர்க்கு ஆசீர்வாதஞ்செய்து போயினர் என்பதாம்.

மற்றும், அமித்திரனென்னும் முனிவனுக்கென்றே பழுக்கின்றதொரு நெல்லிப்பழத்தை வனவாசகாலத்தில் திரௌபதியின்
விருப்பத்தின்படி அருச்சுனன் அம்பெய்து கொய்து அவட்குக் கொடுக்க, அதுகண்ட அங்குள்ளார் பலரும்
“இதனை அம்முனிவன்காணில் அவன்சாபத்தால் உங்கள்கதி என்னாகுமோ!” என்று இரங்கிச்சொல்ல,
அதுகேட்டு அஞ்சிய பஞ்சபாண்டவரும் திரௌபதியும் “இதற்கு என்செய்வது?” என்று பலவாறு ஆலோசித்து
அதற்குப் பரிகாரம் வேறொன்றுங் காணாது கண்ணபிரானைத் தியானிக்க,

உடனே அங்குஎழுந்தருளி நிகழ்ந்தசெய்திசொல்லக்கேட்ட அப் பெருமான்
“நீவிர் அறுவரும் நும்நும்மனத்தினுட்கொண்ட கோட்பாட்டை உரைப்பீராயின், இக்கனி மீண்டும்
அம்மரக்கிளையிற் போய் ஒட்டிக்கொள்ளும்” என்று அருளிச்செய்தபடி தருமன்முதலியஅறுவரும் தம்தம்கருத்து நிகழ்ச்சியை
உண்மையாகச்சொல்ல, ஸ்ரீகிருஷ்ணபகவானது சங்கல்பத் தின்படியே அப்பழம் அம்மரக்கொம்பிற் சென்று சேர்ந்து பழையபடி யிருக்க,
பாண்டவர் அபாயத்தினின்று நீங்கின ரென்ற வரலாறு முதலியன வும் இங்குப் பொருந்தும்.

தீயமன்னர் பொன்ற அனத்தத்தைச் செய்தது – மகாபாரதயுத்தத்திற் கண்ணன் பாண்டவர்க்குப் பலவாறு உதவி அவர்களைக்
கொண்டு துரியோதனாதி துஷ்டராசர்களைத் தொலைத்தமை.
வேங்கடத்துக்குப் புகழ் – “எப்பூதலமும் இறைஞ்சித் திசைநோக்கி மெய்ப்பூசனை புரி”யப்படுந் திறம்.
“ஆழி வளை வாள் தண்டு வில்” என்ற திருமாலின் பஞ்சாயுதங்களுள் சக்கரம் சுதர்சநமென்றும், சங்கம் பாஞ்சஜந்யமென்றும்,
கதை கௌமோதகியென்றும், வாள் நந்தகமென்றும், வில் சார்ங்கமென்றும் பெயர்பெறும்.
“குலமகட்குத் தெய்வங் கொழுநனே” என்றபடி உயர்குலத்திற்பிறந்தவளான தான் தனதுதலைமகனையே தெய்வமாகக் கொண்டு
அவனது திருவடிகளிற் பக்திசெய்யுந்திறந் தோன்ற, ‘ஐயாயுதன்பாதத்து’ என்றாள்.
ஒன்ற உரையீர் – சமயமறிந்து தக்கபடி சொல்லியுணர்த்துங்கள் என்றவாறு.

எல்லாம் என்பது, இங்குப் பொருட்பன்மை குறியாது எஞ்சாமை குறித்தது. பிரான் – உபகாரகன்.

ஐயங்கார் தமது ஆற்றாமையை ஆசாரிய மூலமாக எம்பெருமானுக்குத் தெரிவித்துத் தமது துயரந்தணியக்கருதி
அவர்களைத் தமக்குப்புருஷகாரமா கும்படி வேண்டுதல், இதற்கு உள்ளுறைபொருள்.
ஸ்வாபதேசத்தில் “தூது என்பது, கடகமான ஆசார்யவிஷயத்தை” என்றனர் ஆன்றோர்.
பிரிந்த தலைவிதலைவரைச் சேர்த்தற்குத் தூதர்போலப் பிரிந்துநின்ற ஜீவாத்மபர மாத்மாக்களைச் சேர்த்தற்கு
ஆசாரியர் உரியவராதல் காண்க. தம்மையாத ரிப்பவர்பக்கல் அன்புடைமையாலும் அன்பர்கட்கு எளிமையினாலும்
எடுப்பார் கைப்பிள்ளையாகிச் செவிக்கினிய செஞ்சொற்களைக் கொஞ்சிப்பேசுந் தன்மையராய் எம்பெருமானது
பசுஞ்சாமநிறத்தை ஸாரூப்யத்தாற்பெறும் ஆசாரியரைக் கிளியென்னத்தகும். பறவைகட்கு இரண்டு இறகுகள்போல,
ஆசாரியர்க்கு ஞானமும் அநுட்டானமும் உயர்கதிச்செலவுக்கு உறுதுணை யென்க. விவரம் நோக்கிக்கொள்க.

———————

தலைவி செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல்

உண்ட மருந்து கைக்கும் அன்னை மீர் மதன் ஓர் ஐந்து அம்பும்
கொண்டு அமர் உந்து கைக்கும் குறு காமுனம் கொவ்வைச் செவ்வாய்
அண்டம் அருந்து கைக்கும் திறந்தான் அப்பன் போல் பரியும்
எண் தமரும் துகைக்கும் பொடி காப்பு இடும் இன்று எனக்கே –51-

(இ – ள்.) அன்னைமீர் – தாய்மார்களே! –
உண்டமருந்து – உண்ணப்படு கிற அமிருதமும்,
கைக்கும் – (எனக்குக்) கசக்கும்:
மதனும் – மன்மதனும்,
ஓர் ஐந்து அம்பும் கொண்டு – (தனது) ஒப்பற்ற ஐந்துஅம்புகளையுங் கொண்டு,
அமர் உந்துகைக்கு குறுகா முனம் – போர்செய்வதற்கு வந்துநெருங்குதற்குமுன்பு, –
இன்று – இப்பொழுதே, – எனக்கு – , –
கொவ்வை செவ் வாய் – கோவைப்பழம்போன்ற சிவந்த வாயை,
அண்டம் அருந்துகைக்கும் திறந்தான் – (கிருஷ்ணாவதாரத்தில் வெண்ணெய்முதலியன உண்ணுதற்கே யன்றிக் கற்பாந்தகாலத்தில்)
அண்டகோளங்களை விழுங்குதற்காகவும் திறந்தவனான,
அப்பன் போல் – திருவேங்கடமுடையான் போலவே,
பரியும் – (உயிர்கள்பக்கல்) அன்புகொள்ளுகின்ற,
எண் தமரும் – மதிக்கத்தக்க அடியார்கள்,
துகைக்கும் – மிதிக்கின்ற,
பொடி – திருவடிப்புழுதியை,
காப்பு இடும் – காப்பாக இடுங்கள்; (எ – று.)

குறுகாமுனம் இடும் என இயையும். இரண்டாமடியில் ‘உந்துகைக்கும்’ என்ற உம்மை, எடுத்து முதலடியில் “மதன்” என்பதனோடு கூட்டப்பட்டது.
நான்காமடியில் “தமரும்” என்ற உம்மை – அசைநிலை.

திருவேங்கடமுடையானாகிய தலைவனைக் களவொழுக்கத்தாற் கூடிப் பிரிந்த தலைவி அப்பிரிவாற்றாமையாற் பலவாறு நோவுபட,
அத்துயரமாத் திரத்தையேகண்ட செவிலித்தாயர் அந்நோயின்காரணமும் அதற்குப்பரிகா ரமும்,
இன்ன வென்று உணராது வேறுபலவகையாக ஆராய்ந்து பரிகாரஞ் செய்யத்தொடங்கியபோது,
நோயொன்றும் மருந்தொன்று மாதலாலே அந்நோய் தீராது வளர, அதனையாற்றமாட்டாத அத்தலைவி நாணந்துறந்து
தானே தனது நோயையும் நோயின் காரணத்தையும் அந்நோய்தீர்க்கும் மருந்தையும் அம்மருந்தைப் பிரயோகிக்கும் விதத்தையும் உணர்த்துதல்,
இச்செய்யுளிற் கூறிய விஷயம்.

இங்ஙனம் களவை வெளிப்படுத்துதலின் காரணம், தன்கருத்தைச் செவிலித்தாயர்மூலமாக நற்றாய்க்கும்
அவள்மூல மாகத் தந்தைக்கும் மற்றும்பெரியோர்க்குந் தெரிவித்துத் தன்னை அவனுக்கே விரைவில் வெளிப்படையாக
மணஞ்செய்துவைக்கும்படி செய்து கொள்ளும் விருப்பம்.
(“வாராயினமுலையாளிவள் வானோர்தலைமகனாஞ்,
சீராயின தெய்வநன்னோயிது தெய்வத்தண்ணந்துழாய்த்,
தாராயினுந் தழையாயினுந் தண்கொம்பதாயினுங் கீழ்,
வேராயினும் நின்றமண்ணுயினுங் கொண்டு வீசுமினே” என்றபடி)
தலைவனோடு நேரிலாவது இடையிட்டாவது சம்பந்தம் பெற்ற பொருள் இந்நோய்க்குப் பரிகாரமா மென்பாள்
அப்பன் போற் பரியுந் தமர் துகைக்கும் பொடி காப்பிடும்” என்றாள்.
அன்றியும், தன்னைப் போலவே தலைவன்பக்கல் அன்புகொண்டவர்களுடைய சம்பந்தம் தனது நோய்க்குப் பரிகார மென்றுகருதி
இங்ஙனங் கூறினாளுமாம்;
(“தணியும் பொழுதில்லைநீரணங்காடுதிரனனைமீர், பிணியுமொழிகின்றதில்லை பெருகு மிதுவல்லால்,
மணியிலணிநிறமாயன், தமரடிநீறுகொண், டணியமுயலின் மற்றில்லைகண்டீ ரிவ்வணங்குக்கே” என்ற திருவாய்மொழிப் பாசுரத்தையும்,
அதன்வியாக்கியாநங்களில்
“அழகுக்கு ஈடுபட்ட இவளுக்குப் பரிஹாரம், அத்துறையிலகப்பட்டாருடைய அநுபந்தமே யென்றபடி,”
“சௌந்தர்ய சீலாதிகளிலேயாய்த்து இவள் மோகித்தது: நீங்களும், சௌந்தர்யசீலாதிக ளிலே தோற்றிருக்கும்
ஸ்ரீவைஷ்ணவர்களுடைய பாதரேணுவைக்கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்; பொடிபடத் தீரும்” என்ற வாக்கியங்களையுங் காண்க.

மன்மதனம்பு ஐந்து – தாமரைமலர், மாமலர், அசோகமலர், முல்லை மலர், நீலோற்பலமலர் என்பன.
இவற்றின் பெயர் – முறையே உந்மத்தம், மதநம், சம்மோகம், சந்தாபம், வசீகரணம் எனப்படும்.
இவை செய்யும் அவத்தை – முறையே சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம் என்பன.
அவையாவன – சுப்பிரயோகம் – சொல்லும், நினைவும்;
விப் பிரயோகம் – வெய்துயிர்த்திரங்கல்;
சோகம் – வெதுப்பும், துய்ப்பன தெவிட்டலும்;
மோகம் – அழுங்கலும், மொழிபலபிதற்றலும்; மரணம் – அயர்ப்பும், மயக்கமும்.
“நினைக்கும்அரவிந்தம் நீள்பசலைமாம்பூ, அனைத்துணவு நீக்கும்அசோகு –
வனத்திலுறு, முல்லைகிடைகாட்டும் மாதே முழுநீலம், கொல்லும் மதனம்பின்குணம்” என்ற இரத்தினச் சுருக்கத்தையுங் காண்க.
இவற்றில் மூன்றாவதான அசோகமலரின் அவத்தையாகிய துய்ப்பனதெ விட்டல், “உண்ட மருந்து கைக்கும்” என வெளியிடப்பட்டது.
“மதன் ஐந்தம்புங்கொண்டு அமர்உந்துகைக்குக் குறுகாமுனம்” என்றது, பிரிந்தாரைக் கொல்லும் ஐந்தாம் அம்பான
நீலோற்பலமலரு முட்பட எல்லா அம்புகளையும் மன்மதன் பிரயோகித்தற்குமுன்பு என்றபடி;
அவன் மரணவேதனைப் படுத்திக் கொல்லாதமுன் என்றவாறு. “கொவ்வைச் செவ் வாய்” என்றது, வாயழகில் ஈடுபாடு.

‘மருந்து என்றவிடத்து உயர்வுசிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. மதன் – மதநன் என்ற வடசொல்லின் விகாரம்;
அது, (பிராணிகளைக்காதலாற்) களிக்கச் செய்பவனென்று பொருள்படும்: “மந்மதன்” என்பதன் முதற் குறையுமாம்.
கொவ்வை என்ற கொடியின் பெயர், அதன் பழத்துக்கு முதலாகுபெயர். அண்டமருந்துகைக்கும் என்ற உம்மை – எச்சப்பொருளது.
காப்பு – காத்தல்; ரக்ஷக மென்ற பொருளில், தொழிலாகுபெயர்.

எம்பெருமான் ஒருகால்வந்துகாட்சிகொடுத்து மறைய, பின்பு பிரிவாற்றாதுவருந்துகிற ஐயங்கார், தம்பக்கல்பரிவுடைய ஞானிகளை நோக்கி, (“நாதனைநரசிங்கனைநவின்றேத்துவார்க ளுழக்கிய, பாததூளி படுதலா லிவ்வுலகம் பாக்கியஞ்செய்ததே,”
“தொண்டரடிப்பொடி, யாடநாம்பெறிற்கங்கை நீர்குடைந்தாடும்வேட்கை யென்னாவதே”,
“தொண்டர்சேவடிச் செழுஞ்சேறு என்சென்னிக் கணிவனே” என்றபடி)
அதிபரிசுத்திகரமான பாகவதபாததூளியைக் கொணர்ந்து என்மேல்இட்டு என்னை ரக்ஷிக்கப் பாருங்கள்
என்று பிரார்த்தித்தல், இதற்கு உள்ளுறைபொருள்.

ஆராவமுதான எம்பெருமான்பக்கல் ஈடுபட்டு
“உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாங், கண்ண னெம்பெருமான் என்று” கருதி யிருப்பவர்க்குத்
தேவாமிருதத்தினினிமையும் ஒருபொருளாகத்தோன்றா தாதலால், “உண்ட மருந்து கைக்கும்” என்றன ரென்க.
(“தாயொக்குமன்பின்” என்றபடி) தம்பக்கல் பேரன்புடைமையும், தம்மைக் கொண்டு செலுத்த வல்ல திறமுடைமையும்பற்றி,
ஞானிகள் “தாயரே!” என விளிக்கப்பட்டனர். மதன் ஓரைந்தம்புங் கொண்டு அமருந்துகைக்குக் குறுகாமுனம் –
பேரின்பமயனான சர்வேசுவரன் மறைந்தசமயம்பார்த்துக் காமதேவன் வந்துபுகுந்து என் மனத்தைச் சிற்றின்பவழியிற்
செலுத்தாதமுன்பு என்க. ஜீவகாருண்யத்தில் பகவானும் பாகவதருமே ஒருவர்க்கொருவர் ஒப்பானா லுண்டன்றி
வேறுஒப்புமை காணப்பெறாமையால், “அப்பன்போற் பரியு மெண் தமர்’ எனப்பட்டனர். பகவானிடத்துப்போலவே
பாகவதரிடத்தும் ஐயங்கார்க்கு உள்ள பரமபக்தி இங்கு வெளியாகின்றது.

————

எனக்குப் பணியப் பணி ஒரு கால் இரு காலும் நல்க
உனக்குப் பணி இங்கு இருவேம் பணியில் என் ஓர் பணியும்
நினக்குப் பணி வித்துக் கொண்டு உம் பணி நீ பணித்திலை என்
தனக்குப் பணி வெற்பின் மீது ஓங்கி நின்ற தனிச் சுடரே –52-

(இ – ள்.) பணி வெற்பின்மீது ஓங்கி நின்ற – சேஷகிரியெனப்படுகிற திருவேங்கடமலையின்மேல் உயர்ந்து நின்றதிருக்கோலமாய் எழுந்தருளி யிருக்கிற,
தனி சுடரே – ஒப்பற்ற ஒளிவடிவமானவனே! –
ஒரு கால் பணிய எனக்கு பணி – (தலைவனான உன்னை) ஒருதரம் வணங்குதல் (அடியவனான) எனக்கு உரிய தொழில்;
இரு காலும் நல்க உனக்கு பணி – (அடியவனான எனக்கு உனது) இரண்டு திருவடிகளையுங் கொடுத்தல் (தலைவனான) உனக்கு உரிய தொழில்:
இங்கு இருவேம் பணியில் – இவ்வாறுகுறித்த நம்இருவரது வேலைகளில்,
என் ஓர் பணியும் நினக்கு பணிவித்துக்கொண்டு – (ஒருகால் பணிதலாகிய) எனதுதொழிலைமாத்திரம் (உனக்கு நீ) செய்வித்துக்கொண்டு,
உன் பணி என் தனக்கு நீ பணித்திலை – (இருகாலையும்நல்குதலாகிய) உனதுதொழிலை எனக்கு நீ செய்கின்றாயில்லை; (எ – று.)

யான் உன்னை ஒருகால்சரணமடைந்தே னாதலால், நீ எனக்கு முத்தி தந்தருளவேண்டும் என்பதாம்.
பரமபதநாதனதுகட்டளையின்படி அவனுக்குப் பலவகைக்கைங்கரியங்களைச் செய்யும் ஆதிசேஷனே அப்பெருமான்
இனிஎழுந்தருளியிருத்தற்கு மலைவடிவமானதனாலும், மேருமலையினிட மிருந்து ஆதிசேஷனுடனே வாயுவினாற்
கொணரப்பட்ட மலை யாதலாலும், திருவேங்கடத்துக்கு ‘சேஷகிரி’ என்ற பெயர் வாய்த்தது;
‘பணிவெற்பு’ என்றது, அதன்பரியாயநாமமாக நின்றது. சூரியன் சந்திரன் அக்கினி முதலிய சோதிகளெல்லாவற்றினும்
மேம்பட்ட சோதி யென்பார், ‘தனிச்சுடரே’ என்றார்; அகவிருளொழிக்கும்ஆதித்த னென்க. சுடர்என்றது,
நித்தியமாய் ஸ்வயம்பிரகாசமான ஞானத்தைக் குணமாகவும் சொரூபமாகவும் உடையவ னென்றபடி.

எனக்கு, உனக்கு என்ற நான்கனுருபுகள் – தகுதிப்பொருளன. பணிய, நல்க என்ற செயவெனெச்சங்கள் – தொழிற்பெயர்த்தன்மைப்பட்டு
‘பணி’ என்ற பெயர்ப்பயனிலைக்கு எழுவாயாய்நின்றன; ஒருகால், இருகால்’ என்ற விடத்து முரண்தொடை காண்க.
இருவேம் – தன்மைப்பன்மைக்குறிப்புவினை யாலணையும்பெயர்; முன்னிலையை உளப்படுத்திய தன்மைப்பன்மை.
(‘ஒரு கால்பணிய’ எனத் தென்கலைசம்பிரதாயமே உரைக்கப்பட்ட தென்பர்.)
பணிஎன்ற சொல் ஒரேபொருளிற் பலமுறைவந்தது, சொற்பொருட்பின் வருநிலையணி; பணியப்பணி,
ஒருகாலிருகாலும் என வந்தமை – பிராசமெ ன்னுஞ் சொல்லணி: இவ்விரண்டுஞ் சேர்ந்துவந்தது, சேர்வையணி.

————-

தலைவியின் பிரிவாற்றாமை கண்ட செவிலி இரங்கல் –

தனித் தொண்டை மா நிலத்தே புரிவார்க்கு அருள் தாள் உடையாய்
தொனித் தொண்டைமான் நெடுவாய் பிறந்தாய் துங்க வேங்கடவா
முனித் தொண்டை மான் கையில் சங்கு ஆழி நல்கி என் மூரல் செவ்வாய்க்
கனித் தொண்டை மான் கையில் சங்கு ஆழி கோடல் கருமம் அன்றே –53-

(இ – ள்.) மால் நிலத்தே – பெரிய நிலவுலகத்திலே,
தனி தொண்டை புரிவார்க்கு – ஒப்பற்ற அடிமைத்தொழிலைச் செய்யும் மெய்யடியார்கட்கு,
அருள் – தந்தருளுகிற,
தாள் உடையாய் – திருவடியை (பரமபதத்தை) யுடையவனே! –
தொனி தொண்டை மான் – கனைக்கின்ற குரலையுடைய தொண்டையையுடைய குதிரையினது,
நெடு வாய் – பெரிய வாயை,
பிளந்தாய் – பிளந்தவனே!
துங்கம் வேங்கடவா – உயர்ந்த திருவேங்கடமலையில் எழுந்த ருளியிருப்பவனே! – (நீ),
முனி தொண்டைமான் கையில் சங்கு ஆழி நல்கி – ராஜரிஷியான தொண்டைமான்சக்கரவர்த்தியின் கையிலே (நினது)
சங்காழிகளை (சங்கசக்கரங்களை)க் கொடுத்தருளி,
என் மூரல் செவ் வாய் கனி தொண்டை மான் கையில் சங்கு ஆழி கோடல் – புன்சிரிப்புள்ள சிவந்த வாயாகிய
தொண்டைப் பழத்தையுடைய மான்போன்றவளான என்மகளது கைகளிலுள்ள சங்குஆழிகளை
(சங்குவளையல்களையும் மோதிரங்களையும்) கவர்ந்துகொள்ளுதல்,
கருமம் அன்று – செய்தக்கசெயலன்று; (எ – று.)

இப்பாட்டுக்குத் துறைவிவரணம், கீழ் 15 – ஆஞ் செய்யுட்குக் கூறிய வாறே கொள்க.
பின்னிரண்டடியிற்கூறிய விஷயம், கீழ் 46 – ஆஞ் செய்யுளில் “சங்கோடணியாழி நீங்கி” என்றதற்கு கூறிய உரைகளால் விளங்கும்.
தொண்டைமான்சக்கரவர்த்தி க்ஷத்திரியசாதியா னாயினும் தவவொ “க்கத்திற்சிறந்து முனிவரையொக்கும்பெருமைவாய்ந்து
திருவேங்கடமு டையான்பக்கல் பக்திமேலிட்டு அப்பெருமானை எப்பொழுதுஞ்சேவித்துக் கொண்டு திருமலையிலேயே
வாசஞ்செய்திருத்தலை யுணர்ந்த பகையரசர்கள் அவனதுநாட்டைக் கைக்கொள்ள, தொண்டைமான் அதனைத்
திருவேங்கடமுடையான்சந்நிதியில் விண்ணப்பஞ்செய்து வணங்கிநிற்க,
பெரு மான் தனது திவ்வியாயுதங்களாகிய சங்சசக்கரங்களைக் கொடுத்து ‘இவற்றைக்கொண்டு, நீ,
பகையரசரைத் தவறாது வென்றிடுக’ என்று சொல்லியருள, தொண்டைமான் அங்ஙனமே பகைவென்று அரசு பெற்றன னென்ற வரலாற்றை,
வேங்கடாசலமாகாத்மியத்திற் பரக்கக் காண்க.

தலைவனது பிரிவு தலைவிக்கு மெலிவைவிளைத்து அவள்கையினின்று வளைகளும் விரல்களினின்று மோதிரங்களும்
கழன்று விழும்படிசெய்தலை அத்தலைவன்மேலேற்றி, “என்மான்கையிற் சங்காழிகோடல் கருமமன்று” என்றாள்:
(“கைப் பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரிநீர், செய்ப்புரளவோடுந் திருவரங்கச்செல்வனார்” என்பது நாச்சியார்திருமொழி.)
ஒருவரிடத்துப் பொருளைக்கொடுத்தால் மீண்டும் அப்பொருளை அவரிடத்தினின்றே வாங்க வேண்டியதாயிருக்க
அப்பொருளை வேறொருவரிடத்தில் வாங்குகின்றா யெனத் தொடர்பின்மையணி தோன்றக் கூறியவாறு. ஈற்றுஏகாரம் – தேற்றத்தோடு இரக்கம்.

தொனி – த்வநி யென்ற வடசொல்லின் விகாரம். தொண்டை – மிடறு. தொண்டைமான் – தொண்டைநாட்டரசன்.
மூரல் – பற்களுமாம். கனித் தொண்டை – கோவைப்பழம். மான் – அதுபோன்ற பெண்ணுக்கு உவமையாகு பெயர்; பார்வையில் உவமம்.

எம்பெருமானது பிரிவை யாற்றாது வருந்துகிற ஐயங்காரது நிலைமைக ளைக் கண்ட பரிவுடையறிவுடையாளர்,
அப்பெருமானைநோக்கி “நினக்கு ஆபரணகோடியிற்சேர்கிற ஆயுதங்களை நின்பக்கல் மெய்யன்பு
செய்தவ னுக்கு அருள்பவனான நீ இவரது ஆத்மாலங்காரமான பாரதந்திரியம் முதலிய குணங்களை நிலைகுலையச் செய்தல் நீதியன்று”
என்று அவனுக்கு இவர் பக்கல் இரக்கமுண்டாகுமாறு விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறை பொருள்;
பெருக்கம் ஆய்ந்துஉணர்க. முதல் விளி – சிஷ்டபரிபாலநஞ் செய்தலையும், இரண்டாம் விளி – துஷ்டநிக்கிரகஞ்செய்தலையும் விளக்கும்.

“களிகொண்டெமக்கருள் வேங்கடவா வெதிகட்கரசன்,
அளிகொண் டளித்த வளையாழி வாங்கினை யற்புதமா,
நளிகொண்டபூங்குழற்பெண்ணர சாயினநங்கை செங்கை,
ஒளிகொண்டவால்வளையாழி கைக்கொள்வ துசித மன்றே” என்ற திருவேங்கடக்கலம்பகச்செய்யுள், இதனை ஒருசார் அடி யொற்றியது.

———

பிரிவாற்றாத தலைவி பிறை கண்டு வருந்துதல்

கரு மாதவா இருந்து ஆவன செய்து என் கருத்து இருளைப்
பொரும் ஆதவா விருந்தா வனத்தாய் பொற் சவரி என்னும்
ஒரு மாது அவா விருந்தா வனக்கா உயர் வேங்கடத்து எம்
பெருமா தவா இரும் தாவு அனல் ஏயும் பிறைக் கொழுந்தே –54-

(இ – ள்.) கரு மாதவா – கரிய திருநிறமுள்ள மாதவனென்னுந் திருநா மத்தையுடையவனே!
என் கருத்து இருந்து – எனது மனத்தில் வந்து வீற்றிருந்து,
ஆவன செய்து – (எனக்கு) ஆகவேண்டிய நன்மைகளைச் செய்து,
இருளை பொரும் – அகவிருளாகிய அஜ்ஞாநத்தை மோதியொழித்தற்கு உரிய,
ஆதவா – சூரியனாயுள்ளவனே!
விருந்தாவனத்தாய் – பிருந்தாவனத்தில் விளையாடினவனே!
பொன் சவரி என்னும் – உத்தமகுணமுள்ள சபரியென்கிற,
ஒரு மாது – ஒருபெண்ணுக்கு,
அவா விருந்தா – விரும்பப்பட்ட விருந்தினனானவனே!
வனம் கா உயர் – அழகிய சோலைகள் உயர்ந்திருக்கப் பெற்ற,
வேங்கடத்து – திருவேங்கடமலையி லெழுந்தருளியிருக்கிற,
எம்பெருமா – எமது தலைவனே! –
பிறை கொழுந்து – இளம்பிறையானது, –
தவா – கெடாத,
இரு – பெரிய,
தாவு – தாவியெரிகின்ற,
அனல் – நெருப்பை,
ஏயும் – ஒத்துச்சுடுகின்றது; (எ – று.)

இயற்கைப்புணர்ச்சி முதலியவகைகளால் தலைவியைக் களவிற்கூடி நின்ற தலைவன் அங்குப் பழியெழுந்ததென்று
தோழியால் விலக்கப்பட்ட பின்னர் அப்பழியடங்கச் சிலநாள் ஒருவழிப்பிரிந்துறைதல், ஒருவழித்தண த்த லெனப்படும்.
அங்ஙனம் பிரிந்துறைகின்ற சமயத்தில் அப்பிரிவையாற்றாதுவருந்துகிற தலைவிக்கு
“காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலரு மிந்நோய்” என்றபடி கலவிக்கு உரிய காலத்தின் தொடக்கமான
மாலையிலே விரகவேதனை வளர, அப்பொழுது விளங்கிய இளம்பிறையும் பிரிந்தார்க்குத் துயர்க்கேதுவான
பொருள்களு ளொன்றாதலால் இவளை இன்னும் அதிகமாக வேதனைப்படுத்த,
அத்தாபத்தை யாற்றாத அத்தலைவி தனது நினைப்புமிகுதியால் தலைவனை எதிரில்நிற்கின்றவாறு போலப்பாவித்து,
அங்ஙனம் உருவெளித்தோற்றத்திலே வெளிப்பட்ட அத்தலைவனை முன்னிலைப்படுத்தி இரங்கிக் கூறியது, இது.

ஒருவழித்தணந்து வந்த தலைவன் சிறைப் புறமாக அதனையுணர்ந்த தோழி அவனை முன்னிலையாக்கிக்கூறிய தென்று
இதற்குத் துறைகொள்ளுதலு மொன்று. மற்றும், இது, சந்திரோபாலம்பநத்தின் பாற்படும்; அதாவது –
விரகநோய்கொண்டதலைவி சந்திரனை நிந்தித்தல், கூடினாரை மகிழ்விக்குந் தன்மையதான பிறை பிரிந்து
நிற்கிறஎன்னை இங்ஙனம் தவித்திடாதபடி விரைந்துவந்து வரைந்தருள்வாய் என்பது, குறிப்பு.

விருந்தாவனம் என்பது – கண்ணன் அவதரித்த வடமதுரைக்குச் சிறிது தூரத்தில் யமுநாநதிதீரத்திலுள்ள இடம்.
கண்ணன்வளர்ந்தஇடமான கோகுல மெனப்படுகிற திருவாய்ப்பாடியிலுள்ள நந்தகோபர்முதலான ஆயர்கள்,
அங்குப் பூதனைவந்துஇறந்தது. சகடுமாறிவீழ்ந்தது இரட்டைமருதமரம் முறிந்தது முதலியவற்றை உற்பாதங்களெனக்கொண்டு
அஞ்சி மஹாவநமெ னப்படுகிற அவ்விடத்தை விட்டுக் கன்றுகாலிமுதலிய எல்லாப்பொருள்க ளோடும்
பிருந்தாவனத்திற் சென்று குடியேறினர். நெருஞ்சிற்காடாய்க் கிடந்தஅந்தப்பிருந்தாவனம், கிருஷ்ணபகவான் குளிர்ந்த
திருவுள்ளத்தோடு அநுக்கிரகித்ததனால், பசுக்கள்முதலானவை விருத்தியடைதற்குஏற்ப மிகச் செழிப்புற்றது.
பின்பு அங்கு நெடுநாள் கண்ணன் கன்றுகளையும் பசுக்களையும் மேய்த்தல் முதலிய பலதிருவிளையாடல்கள்
செய்துகொண்டுவளர்ந் தனனாதலால், “விருந்தாவனத்தாய்” என்று விளிக்கப்பட்டனன்.
விருந்தாவனம் – ப்ருந்தாவந மென்ற வடசொல்லின் விகாரம்; நெருஞ்சிக்கா டென்பது பொருள்.

சவரி – ரிசியமூககிரியில் மதங்காச்சிரமத்தில் மதங்கமுனிவரது சிஷ்யர்களுக்கு உபசாரஞ்செய்துகொண்டு
வசித்துவந்த துறவறம்பூண்ட ஒருதவப் பெண்.
க்ஷத்திரியஜாதிஸ்திரீயினிடம் வைசியசாதிபுருஷனுக்குப் பிறந்த பிரதி லோமசாதியார், சபர மெனப்படுவர்; இச்சாதியாரது தொழில் –
தேன்கொ ணர்ந்துவிற்றல். சபரனென்பதன் பெண்பால் – சபரீ; அவ்வடசொல், சவரி யென்று விகாரப்பட்டது.
யோகப்பயிற்சியுள்ள அச்சபரி, தான்வசிக்கும் மதங்காச்சிரமத்துக்கு இராமலக்ஷ்மணர் எழுந்தருளுஞ்செய்தியை
முன்னமே அறிந்து எதிர்நோக்கி, அவ்வனத்திலுள்ள நல்லகனிகளைச் சேர்த்துவைத் துக்கொண்டிருந்து,
அவர்கள் அவ்வாச்சிரமத்துக்கு எழுந்தருளியவுடன் அப்பழங்களை அவர்கட்குச் சமர்ப்பித்து உபசரித்து,
இராமபிரானருளால் தனதுபிறப்பை யொழித்து நற்கதியடைந்தன ளென்பது, இராமாயணவரலாறு;
அதுபற்றி, “பொற்சவரி யென்னும் ஒருமாது அவாவிருந்தா” என்றார்.

ஆவன – பெயர். கருதுவது கருத்து எனக் காரணக்குறி. விருந்தன் = விருந்தினன்.
விருந்து – புதுமை; பண்புப்பெயர்: புதியனாய்வருபவன், விருந்தன்; “இன்” சாரியை பெறாது நின்றது.
அது ஈறுகெட்டு ஈற்றயல்நீண்டு விளியேற்று ‘விருந்தா’ என்று ஆயிற்று. கா – காக்கப்படுவது என்பது
பற்றிச் சோலைக்கு வந்த காரணக்குறி. தவா என்ற ஈறுகெட்ட எதிர்மறைப்பெய ரெச்சத்தில், தபுஎன்பதன் மரூஉவான தவு – பகுதி.
இருந் தா வனல் – இருமையென்ற பண்புப்பெயர் ஈறுபோய் இனமெலி மிக்கது. தாவனல் – வினைத்தொகை.
ஏயும் – உவமவாசகம். பிறப்பது பிறை யெனக் காரணக் குறி; ஐ – கருத்தாப்பொருள்விகுதி:
பிற என்ற பகுதியின் ஈற்றுஅகரம் தொக்கது. “கொழுந்து” என்றது, இளமைகுறித்தது.

பேறுகிடைக்குந் தருணத்தில் மகிழ்ச்சிசெய்வதான ஞானவிளக்கம் உரியகாலத்திற் பேறுகிடையாமையாலே நலிவுசெய்ய,
ஐயங்கார் தாம் அடைந்த தாபத்தை எம்பெருமானைக்குறித்து விண்ணப்பஞ்செய்தல், இதற்கு உள்ளுறைபொருள்.
இத்தளர்ச்சிநீங்க விரைவில் உன்பக்கல் என்னைச் சேர்த்துக்கொள்ளவேண்டுமென்பது, குறிப்பு.
பிறைக்கொழுந்து என்றது – ஸ்வாபதேசத்தில், ஞானோதயத்தையாம். பிறவும் நோக்கிக்கொள்க.

———–

பிறை மாலையால் ஒரு பேதை நைந்தாள் அந்த பேதைக்கு நின்
நறை மாலை தா என்று மானிடம் பாடிய நா வலர்காள்
நிறை மாலை அற்று கவி மாலையால்நினையீர் திரு வெள்
ளறை மாலை வேங்கடத்தே உறை மாலை அரங்கனையே –55-

(இ – ள்.) “பிறை மாலையால் – பிறைச்சந்திரனது தோற்றத்தையுடைய மாலைப்பொழுதினால்,
ஒரு பேதை நைந்தாள் – (உன்பக்கல் காதல்நோய் கொண்ட) ஒருபெண் மெலிவுற்றாள்:
அந்த பேதைக்கு – அப்பெண்ணுக்கு,
நின் நறை மாலை தா – உன்னுடைய வாசனையுள்ள பூமாலையைக் கொடு,” என்று –
மானிடம் பாடிய – (அகப்பொருட்டுறையமைத்து) மனிதர்களின் மேற் கவிபாடிய,
நாவலர்காள் – புலவர்களே! – (நீங்கள்),
நிறை மாலை அற்று – (இங்ஙனம் உங்கள்மனத்தில்) நிறைந்த மயக்கத்தை நீங்கி,
கவி மாலையால் – பாமாலை கொண்டு,
திருவெள்ளறை மாலை அரங்கனை வேங்கடத்தே உறை மாலையே நினையீர் – திருவெள்ளறைலி லெழுந்தருளியிருக்கிற பெரியோனும்
ஸ்ரீரங்கநாதனும் ஆகிய திருவேங்கடமலையிலெழுந்தருளியிருக்கிற எம்பெருமானையே கருதிப் பாடுவீராக; (எ – று.)

பகவத்குணாநுபவத்திலாசையுடைய ஐயங்கார், லௌகிகரைப்பார்த்து, “நரஸ்துதிபண்ணினால் என்னபயன் உண்டாகும்?
வேண்டியபயன்களை வே ண்டியவாறே பெறும்படி, என்னோடொப்ப எம்பெருமானை ஸ்தோத்ரம்பண் ணுங்கள்” என்று
இதோபதேசஞ் செய்கின்றார்.
“சொன்னாவில்வாழ் புலவீர் சோறுகூறைக்காக மன்னாதமானிடரை வாழ்த்துதலால் –
என்னாகும், என்னுடனேமாதவனை யேத்தும்” என்ற அருளிச்செயலையுங் காண்க.
“கவி பாடலாகாது” என்ற நிஷேதசாஸ்திரத்துக்கு இலக்கு அஸத்விஷயத்திலாதலும்,
‘கவிபாடுதல் புகழ்முதலியபலவற்றைப் பயக்கும்’ என்ற விதிசாஸ்தி ரத்துக்கு இலக்கு ஸத்விஷயத்திலாதலுமாகிய வேறுபாடு காணத்தக்கது.

கவி தனக்குப் பிரபுவின்பக்கல் உள்ள அன்பை, ஒரு தலைவி அத்தலை மகனிடத்துக் காதல்கொண்டு வருந்த
“அவள்வருத்தத்தை யாற்றுமாறு நின்தோளிற் சாத்திய மாலையை நீ அவட்குக்கொடு’ என்று தூதுசென்ற வித்தகர்
பேசுங் கிளவித்துறைவகையாற் பாடி வெளியிடும் இயல்பைக் குறிப்பிட்டு முதலிரண்டடியில் விளித்தார்.
பிறைமாலையால் – மாலைப்பிறையால் என மொழிமாற்றினுமாம். பேதை – பேதைமையுடைய பெண்ணுக்குப் பண்பாகுபெயர்.
நறை – தேனுமாம். மாநுஷரென்ற வடசொல்லின் விகாரமான மானிடரென்பது –
(காசியபமுனிவனது மனைவியருள்) மநுவென்பவளதுமரபினரான மனிதரையுணர்த்தும்; தத்திதாந்தநாமம்.
இங்கு “மானிடம்” என்றது, சாதிவாசகமாய் நின்றது; மனிதர்களிலும் உயர்ந்தவர் தாழ்ந்தவ ரெனப் பகுத்து
உணராது கண்டவரையெல்லாம் ஒருநிகராகப்பாடுபவ ரென்பது போதரும்:
அன்றியும், இழிப்புப்பற்றி அஃறிணையாகக்கூறின ரென்றுங் கொள்க;
(திருவாய்மொழியில் “வளனாமதிக்கு மிம்மானிடத்தைக் கவி பாடியென்” என்றவிடத்து,
நம்பிள்ளை ‘மநுஷ்யரென்றுசொல்லவும் பாத்தங்காண்கிறிலர் காணும்! அசேதநங்களைச் சொல்லும்படியிலே சொல்லுகிறார்.
தன்னை மெய்யாக அறியாதவன் அசித்பிராய னிறே’ என்று வியாக்கியாந மிட்டமையுங் காண்க.)
நாவலர் – கவிபாடுதல்முதலிய நாவின்வல்ல மையை யுடையவர். மால் – மயக்கம். கவிமாலை – பிரபந்தம். நினையீர் = பாடீர்;
காரணம், காரியமாக உபசரிக்கப்பட்டது. திருவெள்ளறை – சோழநாட்டுத் திருப்பதிகளில் ஒன்று.

————

அரங்கம் குடந்தை குருகூர் குறுங்குடி அட்டபுய
கரம் கண்ண மங்கை நறையூர் கடல் மலை கச்சி கண்ண
புரம் கண்டியூர் தஞ்சை மாலிருஞ்சோலை புல்லாணி மெய்யம்
தரங்கம் பரமபதம் வேங்கடேசற்குத் தானங்களே –56-

(இ – ள்.) அரங்கம் குடந்தை குருகூர் குறுங்குடி அட்டபுயகரம் கண்ண மங்கை நறையூர் கடன்மல்லை
கச்சி கண்ணபுரம் கண்டியூர் தஞ்சை மாலி ருஞ்சோலை புல்லாணி மெய்யம் தரங்கம் (திருப்பாற்கடல்)
பரமபதம் (ஸ்ரீவைகுண்டம்)என்பன, திருவேங்கடமுடையானுக்கு உரியதலங்களாம்.

“ஈரிருபதாஞ்சோழம் ஈரொன்பதாம் பாண்டி, ஓர்பதின்மூன்றா மலை நாடு ஓரிரண்டாஞ் – சீர்நடுநாடு,
ஆறோடீரெட்டுதொண்டை அவ்வடநா டாறி ரண்டு, கூறுதிருநா டொன்றாக் கொள்” என்று வகுக்கப்பட்ட
நூற்றெட்டுத் திருமால் திருப்பதிகளுட் சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதிற் சேர்ந்தவை –
திருவரங்கம் திருக்குடந்தை திருக்கண்ணமங்கை திருநறையூர் திருக்கண்ணபுரம் திருக்கண்டியூர் திருத்தஞ்சை என்பன.
பாண்டியநாட்டுத் திருப்பதிகள் பதினெட்டிற் சேர்ந்தவை – திருக்குருகூர் திருக்குறுங்குடி திருமா லிருஞ்சோலைமலை திருப்புல்லாணி திருமெய்யம் என்பன. தொண்டைநாட்டுத்திருப்பதிகள் இருபத்திரண்டிற் சேர்ந்தவை – திருவட்டபுயகரம் திருக்கடன்மல்லை திருக்கச்சி என்பன.
வடநாட்டுத்திருப்பதிகள்பன் னிரண்டிற் சேர்ந்தது – திருப்பாற்கடல். திருநாடு – பரமபதம்.
இச்செய்யுளில் அரங்கம்முதற் பரமபதம்ஈறாகப் பதினேழுதிவ்வியதேசங்களின் பெயரை அடைமொழியில்லாதபடி
அடக்கிவைத்திருக்கின்ற அழகு அறியத்தக்கது. வேங்கடேசன், ஸ்தாநம் – வடசொற்கள்.

————-

தான அல் நாக மருப்பு ஒசித்தானுக்கு தான் உகந்தது
ஆன வல் நாக முடியில் நின்றானுக்கு தாள் வணங்காத்
தானவன் ஆகம் இடந்தானுக்கு ஆள் என்று தனை எண்ணா
தான் அவனாக நினைந்திருப்பாற்கு என்றும் தான் அவனே –57-

(இ – ள்.) தானம் – மதத்தையுடைய,
அல் – இருள்போன்ற – (கருநிறமுள்ள),
நாகம் – (குவலயாபீடமென்ற) யானையின்,
மருப்பு – தந்தங்களை,
ஒசித்தானுக்கு – ஒடித்தவனும்,
தான் உகந்தது ஆன – தான் விரும்பிய இடமான,
வல் நாகம் – வலிய திருவேங்கடமலையினது,
முடியில் – சிகரத்தில்,
நின்றானுக்கு – நின்றதிருக்கோலமாக எழுந்தருளியவனும்,
தாள் வணங்கா – (தனது) திருவடிகளை வணங்காத (தானே தெய்வமென்று செருக்கிய),
தானவன் – அசுரனான இரணியனது,
ஆகம் – மார்பை,
இடந் தானுக்கு – பிளந்தவனுமான எம்பெருமானுக்கு,
ஆள் என்று – அடிமையென்று,
தன்னை எண்ணா – தன்னைநினையாமல்,
தான் அவன் ஆக நினைந்திருப்பாற்கு – (ஜீவாத்மாவாகிய) தானே அப்பரமாத்மாவாக நினைத்திருக்கிற விபரீதஞானிக்கு,
என்றும் தான் அவனே – எப்பொழுதும் அப்பெருமான் பயன்படாதவனேயாவன்; (எ – று.) –
அவன் – பயனின்மை; அங்ஙனமாகுபவன், அவன்: ஏ – தேற்றம்.

சித் அசித் ஈசுவரன் என்ற தத்துவம்மூன்றில் சித்எனப்படுகிற ஜீவாத்மாவுக்கு ஈசுவரனெனப்படுகிற பரமாத்மா
நியாமகனும் தாரகனுமாய்த் தலைவனாதலும், அப்பரமாத்மாவுக்கு ஜீவாத்மா நியாம்யமும் தார்யமுமாய் அடிமையாதலும்
முதலிய மிக்கவேறுபாடுகள் சாஸ்திரப்பிரசித்தமாக இருக்க, அவற்றையெல்லாம்கருதித் தன்னை
எம்பெருமானுக்கு ஆளென்று எண்ணாமல், “உண்மையாகவுள்ள பரமாத்மாவாகிய பொருளொன்றே மாயையாற்
பிரபஞ்சமாகக் காணப்படுகின்றதே யன்றி ஜீவாத்மாவென்றுஒரு பொரு ளில்லை” என்று துணிந்துகூறும் அத்வைதி,
“ஜீவாத்மாவென்னும் நான் அப்பரமாத்மா” என்னும் பாவனை யுடைய னாதலால்,
“ஆளென்று தன் னையெண்ணாத் தானவனாக நினைந்திருப்பான்” எனப்பட்டான்.
அங்ஙனம் ஜீவாத்மபரமாத்மசொரூபங்களைப் பகுத்துணர்ந்து சர்வேசுவரனுக்கு ஆட் படாதவனுக்கு
அப்பெருமான் அருள்புரியா னென்பது, “என்றும் தான் அவனே” என்பதனால் விளக்கப்பட்டது.
சர்வேசுவரனது திருவடிகளை வணங்காமல் தானே சர்வேசுவர னென்று சொன்ன இரணியனை அப்பெ ருமான் நிக்கிரகித்ததும்,
சர்வேசுவரனுக்கு அடிமையென்று தன்னை யெண் ணிய இரணியபுத்திரனானபிரகலாதனை அப்பெருமான் அநுக்கிரகித்ததும் பிரசித்தம்;
ஆகவே, “தாள்வணங்காத் தானவனாக மிடந்தானுக்கு” என்ற விசேஷ்யம் இங்கு ஓர் அபிப்பிராயத்தோடு கூறப்பட்ட தாகுதலால்,
கருத் துடையடைகொளியணி. தான் அவனாக நினைந்திருக்கின்ற ஜீவாத்மாவுக் குப் பரமாத்மா அந்நினைப்பிற்கு
ஏற்பத் தான் அவனேயாவன்என ஒருசமத் காரந்தோன்றக் கூறினார்; “அவன்” என்பதை இருவகைப்பொருள்படவைத்த நயம், இங்குக் கருதத்தக்கது:
(இதனை, “கழல்வளையைத் தாமுங் கழல்வளையே யாக்கினரே” என்றாற்போலக் கொள்க.)
இது – பிரிநிலைநவிற்சியணி யின்பாற்படும்; பெயர்ச்சொற்களுக்கு உறுப்பாற்றலால் வேறொரு பொருளைத் தந்துரைத்தல்,
இதன் இலக்கணம். அவனாக – எம்பெருமான்போல ஸ்வதந்திரனாக என்றுங் கொள்க.

நாகம – யானையென்ற பொருளில், நகத்தில்வாழ்வ தென்று காரணப் பொருள்படும்: நகம் – மலை.
திருவேங்கடம் எம்பெருமானது திருவுள்ளத்துக்கு மற்றையெல்லாத் திவ்விய தேசங்களினும் மிகப்
பாங்கான வாஸஸ்தாந மாதலால், “உகந்ததான நாகம்” எனப்பட்டது;
அங்ஙனஞ் சிறப்புடையதாதல், புராணங்களினாலும் விளங்கும். “நாகமுடியினின்றானுக்கு” என்பதற்கு –
காளியனென்னும் பாம்பினது தலையின்மேல்நின்று நடனஞ்செய்தவனுக்கு என்று பொருள்கூறுதல் பொருந்தாது;
அங்ஙனங்கொள்ளின், இவ்வகைப்பிரபந்தத்திற் செய்யுள்தோறும் பிரபந்தத்தலைவன்பெயரையேனும்
அவனது ஊர்ப்பெயரையேனுங் கூறும் மரபு இச்செய்யுளில் தவறிய தாய்விடும்;
“உகந்ததான” என்ற அடைமொழியின் உரிமையையும் உய்த்துணர்க. தானவனென்பது, அசுரனென்றமாத்திரமாய் நின்றது;
இரணியன் காசியபமுனிவர் மனைவியருள் திதியென்பவளது மகனாதலின்.

இது, யமகச்செய்யுள்.

————–

தானவர் ஆகம் தடிவார் வடமலைத் தண் அம் துழாய்
ஞான வராகர் தரும் அண்டம் யாவையும் நண்ணி அவர்
கால் நவராக விரல் தோறும் அத்திக் கனியின் வைகும்
வானவர் ஆக இருப்பார் அவற்றுள் மசகங்களே –58-

(இ – ள்.) தானவர் – அசுரர்களுடைய,
ஆகம் – உடம்பை,
தடிவார் – துணிப்பவரான,
வட மலை தண் அம் துழாய் ஞானம் வராகர் – திருவேங் கடமலையில்எழுந்தருளியிருக்கிற குளிர்ந்த அழகிய
திருத்துழாய்மாலையை யுடைய ஞானவராகமூர்த்தியான எம்பெருமான்,
தரும் – படைத்த,
அண்டம் யாவையும் – அண்டகோளங்களெல்லாம், –
அவர் கால் நவ ராக விரல்தோறும் – அவருடைய திருவடிகளின் புதிய செந்நிறமாகத்தோன்றுகின்ற விரல்கள்தோறும்,
அத்தி கனியின் – அத்திப்பழங்கள் (அம்மரத்தில் ஒட்டிக்கிடத்தல்) போல,
நண்ணி வைகும் – பொருந்தித் தங்கும்;
வானவர் ஆக இருப்பார் – (அவ்வண்டங்களில்) தேவர்களாக விளங்குபவர்கள், –
அவற்றுள் மசகங்களே – அவ்வத்திப்பழங்களில் மொய்த்துக்கிடக்கின்ற கொசுகுகள் போல்வர்; (எ – று.)

“ஆழிப்பிரானடிக்கீ “ற்பவித்தழியும், பரவையில்மொக்குளைப்போற் பலகோடி பகிரண்டமே” என்றதனாலும்,
அண்டகோளங்கள் எம்பெருமான்திருவடியில் தோன்றுவனவாதல் அறிக.
பிரளயப்பெருங்கடலில்மூழ்கி யிருந்த பூமியை மேலேயெடுக்கநினைத்துத் திருமால் பன்றிவடிவுகொண் டருளிக் கோட்டு
நுனியாற் பூமியையெடுத்துவந்து பூமிதேவியை இடுப்பில் ஏந்திக்கொண்டு அவட்கு ஞானோபதேசஞ்செய்கிற வியாஜத்தால்
தத்துவப் பொருள்களை உலகத்துக்குஉணர்த்தியருளியதனால், “ஞானவராகர்” எனப் பட்டனர்.

தாநவர் என்ற வடமொழிப்பெயர் – (காசியபமுனிவரது மனைவியருள்) தநுவென்பவளது சந்ததியா ரென்று பொருள்படும்;
தத்திதாந்தநாமம். ஜ்ஞாநவராஹர், நவராகம், மசகம் – வடசொற்கள். கனியின், இன் – ஐந்தனுருபு, ஒப்பு – உவமையணி.

இதனால், எம்பெருமானது விராட்ஸ்வரூபத்தின் பெருமையையும், மற்றைத்தேவர்களின் சிறுமையையும் உணர்த்தினார்.
நால்வகைத்தோற்றத்து எழுவகைப்பிறப்பினுட் சிறந்த தேவர்களை மசகங்க ளென்றதனால், மற்றையுயிர்களின் இழிவு தானே விளங்கும்.

—————

பாங்கி வெறி விளக்கிச் செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல்

மசகம் தரம் என்னல் ஆய நிலையா உடல் வாழ் உயிரை
அசகம் தர வல்லதோ அன்னைமீர் அண்டம் உண்டு உமிழ்வா
ரிசசுந்தர வண்ணர் வேங்கட வாணர் இலங்கையர் கோன்
தெகந்தரம் அறுத்தார் திருப் பேர் சொல்லும் தீங்கு அறவே –59-

(இ – ள்.) அன்னைமீர் – தாய்மார்களே! –
மசகம் தரம் என்னல் ஆய் – கொசுவுக்குச்சமான மென்று சொல்லத்தக்கதாய்,
நிலையா – நிலையில்லாத தாகிற,
உடல் – உடம்பில்,
வாழ் – (விதிவசத்திற்குஏற்ப) வாழ்கிற, உயிரை -,
அச கம் தர வல்லதோ – ஆட்டின்தலையானது கொடுக்கவல்லதோ? (அன்று என்றபடி); (இனி நீங்கள்),
தீங்கு அற – (இத்தலைவிக்கு நேர்ந்துள்ள) துன்பம் ஒழியுமாறு, –
அண்டம் உண்டு உமிழ் வாரிச கந்தர வண்ணர் – அண்ட கோளங்களை (ப்பிரளயகாலத்திலே) வயிற்றினுட்கொண்டு,
(பிரளயம்நீங்கினவாறே) வெளிப்படுத்தியவரும் தாமரை பூத்ததொரு மேகம் போன்ற வடிவமுடையவரும்,
இலங்கையர்கோன் தெச கந்தரம் அறுத்தார் – இலங்காபுரி யில்வாழ்ந்த இராக்கதர்க்கு அரசனாகிய இராவணனது பத்துத்தலைகளையும் துணித்திட்டவருமான,
வேங்கட வாணர் – திருவேங்கடத்துறைவாரது,
திரு பேர் – திருநாமங்களை,
சொல்லும் – சொல்லுங்கள்; (எ – று.) – தீங்கறச் சொல்லும் என இயையும்.

களவொழுக்கத்தால் தலைமகளைக்கூடிய தலைமகன் பின்பு அவளை வெளிப்படையாக மணஞ்செய்துகொள்ளும்பொருட்டுப்
பொருள்தேடிவருதற்காக அவளைப் பிரிந்துசெல்ல, அந்நிலையிற் பிரிவாற்றாது மிகவருந்திய தலைமகளைச் செவிலித்
தாய்மார் எதிர்ப்பட்டு அவளது வடிவுவேறுபாட்டை நோக்கி இவள் இங்ஙனம் மெலிதற்குக்காரணம் என்னோ?’ என்று
கவலையுற்றுக் கட்டுவிச்சியைக் குறிகேட்க,
அவளும் தன் மரபின்படி ஆராய்ந்து ‘இவளுக்கு’முருகக்கடவுள் ஆவேசித்ததொழியப் பிறிதொன்றுமில்லை’ என்றுகூற,
அது கேட்ட செவிலித்தாயர் உடனே தலைமகள்பக்கல் தமக்குள்ள அன்பின்மிகுதியால் ஏதேனும் ஒரு தெய்வத்தை வழி
பட்டாகிலும் இவளை உயிர்த்திருக்கப் பெறில் அதுவே நமக்கு ஆத்மலாப மென்றெண்ணி வழியல்லாவழியிலே யிழிந்து
அதற்குப் பரிஹாரமாக வேலனெனப்படுகிற வெறியாட்டாளனை யழைப்பித்து அவனைக்கொண்டு ஆவேசம் ஆடுவித்து
ஆடுபலியிடுதல், கள்ளிறைத்தல், இறைச்சிதூவல், கருஞ்சோறுசெஞ்சோறுவைத்தல் முதலிய காரியங்களை இடைவிடாது
ஒன்றன் மேலொன்றாகச் செய்யத்தொடங்க நோயொன்றும் மருந்தொன்று மாதலால் தான்காதலித்த புருஷோத்தம னான
தலைமகனது தகுதிக்கு ஏலாத அச்செயல்களை நோக்கித் தலைமகள் மேன்மேல் மிகவருந்த,
அவளது துன்பத்தின் மெய்க்காரணத்தை யறிந்த தோழி அச்சமயத்திற் செவிலியரை நோக்கிச் சிலகூறி
வெறிவிலக்கித் தலைவியினது துன்பத்தின் உண்மைக்காரணத்தை யுணர்த்துகின்ற துறை, இது.
இதன் மெய்ப்பாடு, பெருமிதத்தைச்சார்ந்தநகை, பயன் – அறத்தொடுநிற்றல்.

ஆடுபலிகொடுத்தல், இவளுடம்பினின்று உயிர்நீங்காதபடிசெய்து மரண வேதனைப்படுகிற இவளைப்
பிழைப்பிக்கமாட்டாது என்ற பொருளை “உடல் வாழுயிரை அச கம் தரவல்லதோ’ என்றாள்;
தான் கரையேறாதவன் பிறரைக் கரையேற்றமாட்டாமைபோல, தான் கழுத்தறுப்புண்டு இறக்கின்ற ஆடு
இவளுயிரைப் பிழைப்பிக்கமாட்டா தென்க:
“வீழ்வார்க்கு வீழ்வார் துணை” என்றபடி இறக்கிற ஓர்உயிரோ மற்றோர் இறக்கிற உயிரைக் காத்தற்குத் துணையாகும்! என்றாள்.
க்ஷுத்ரதேவதையின் ஆவேசத்தால் வரும் நோய்க்குப் பரிஹாரமாகிற, இவ்விழிப்பொருள் பரம்பொருளிலீடு பாட்டினால்
வந்த நோய்க்குப் பரிஹரமாகா தென்றவாறு.
அற்பப்பிராணியான மசகத்தை உவமை கூறினது, யாக்கைநிலையில்லாமையை விளக்குதற்கு.
அன்னை மீர் – உண்மைக்காரணமுரைக்கப்படுதற்கு உரிமையையும் இவளியல்பிற்கு ஏற்றபடி நன்மைசெய்யும்
வாற்சலியத்தையும் உடையவர்களேயென்றபடி. லோகஸம்ரக்ஷணத்தில் எம்பெருமானுக்கு உள்ள ஆதரத்தையும்,
அற்புதசக்தியையும் குறித்தற்கு, ‘அண்டமுண்டுமிழ் வேங்கடவாணர் இலங்கையர் கோன்தெசகந்தரமறுத்தார்’ என்றார்.
‘வாரிச கந்தர வண்ணர்’ என்றது, தலைவனது திருமேனியழகில் ஈடுபாடு.
அத்தன்மையானவரது திருநாமத்தைச் சொல்லு மென்றது, உலகமுழுவதுக்கும்வந்த நோயைப் பரிஹரித்தவனது
பெயர் தானே இவள்நோயைப்பரிகரித்தற்குத் தக்கதென்றபடி.
நம்மாழ்வார் திருவாய்மொழியில் வெறிவிலக்குத்திருப்பதிகத்தில்
“மருந்தாகுமெ ன்றங்கோர் மாயவலவைசொற்கொண்டு நீர்,
கருஞ்சோறும் மற்றைச்செஞ்சோறும் களனிழைத் தென்பயன்,
ஒழுங்காகவேயுலகேழும் விழுங்கியுமிழ்ந் திட்ட, பெருந்தேவன்பேர் சொல்லகிற்கில் இவளைப்பெறுதிரே’ என்று அருளிச்செய்தமை அறிக.
இந்நோய்தீர்த்தற்குத் தலைவனது திருநாமம் தக்கமந்திரமென்க. அம்மந்திரமாகிய மருந்தை இவள் செவியின்
வழியாகச் செலுத்துங்க ளென்றாள்.
திருமாலாகிய தலைமகனால் நேர்ந்த நோய்க்கு அவனது நாமசங்கீர்த்தனமொழிய வேறுபரிகார மில்லை யென்றாள்.

“வாநிசகந்தரவண்ணர்’ என்பதற்கு – கீழ் 11 – ஆஞ் செய்யுளில்
“அம்பரந்தாமரைபூத்தலர்ந்தன்னவவயவர்” என்றதற்கு உரைத்தாங்கு உரைக்க.
அஜகம், வாரிஜகந்தரவர்ணர், தசகந்தரம் என்ற வடமொழித்தொடர்கள் விகாரப்பட்டன.
வாரிஜம் – நீரில்தோன்றுவது: தாமரைக்குக் காரண விடுகுறி: மலர்க்கு முதலாகுபெயர்.
கந்தரம் என்பது – மேகமென்ற பொருளில் நீரைஉட்கொண்ட தென்றும்,
கழுத்தென்றபொருளில் தலையைத்தரி ப்ப தென்றும் காரணப்பொருள்பெறும்: கம் – நீர், தலை. ஒ – எதிர்மறை.
வேங்கடவாணர் – திருவேங்கடமலையில் வாழ்பவர். வாழ்நர்என்பது, வாணர் என மருவிற்று.
தெசகந்தர மென முதலில் எகரம் பெற்றது, மோனைத் தொடையின் பொருட்டு.

எம்பெருமானது சேர்க்கையைப் பெறாமல் வருந்துகின்ற ஐயங்காரது துயரத்தைக்கண்ட ஞானிகள், அவர் பக்கல்
வைத்தபரிவா லுண்டான கலக்கத்தால், எம்பெருமான் உபாயாந்தரங்களால்அடையத்தக்கவனல்ல னென்பதை மறந்து,
தேவதாந்தரபஜநத்தாலாவது இவரது ஆற்றாமையைத் தணிப்பிக்கலாமோவென்று தொடங்கியநிலையில்,
ஐயங்காரதுதன்மையை அறிந்த அன்பர்கள் விலக்கிக்கூறும் வார்த்தை, இதற்கு உள்ளுறைப்பொருள்.
ஞானிகள் தாம் அங்ஙனம் வழியல்லாவழியிலே இழிவார்களோ வென்னில், – ஐயங்கார்பக்கல் தாம்கொண்ட பரிவின்
மிகுதி தம்மைக் கலங்கப்பண்ணு கையால், அமார்க்கங்களாலேயாகிலும் பரிஹரிக்கப்போமோ வென்று முயன்றன ரென்க;
(இதனை, “அயோத்தியாபுரியிலுள்ள சனங்களெல்லாரும் இராமனுடையக்ஷேமத்தின் பொருட்டு எல்லாத்
தேவர்களையும் வணங்கினர்’ என்றதனோடு ஒப்பிடுக.)
“அன்னைமீர்’ என்று விளித்ததனால், முதியரானநீர் இளையரானஎமது வார்த்தையை உபேக்ஷிக்கலாகாதென்று குறிப்பித்தபடி.
“அண்டமுண்டுமிழ்…. திருப்பேர்சொல்லும்’ – காக்குங்கடவுளின்நாமோச் சாரணமே துயரனைத்தையுந் தீர்க்கு மென்றதாம். பிறவுங் கண்டுகொள்க.

—————-

தீங்கு அடமால் அத்தி முன் நின்று காலிப்பின் சென்ற கொண்டல்
வேங்கடமால் கழலே விரும்பார் விலை மாதர் மல
ஆம் கடம் மால் செய மாலாய் அவர் எச்சில் ஆகம் நச்சி
தாங்கள் தமால் அழிவார் இருந்தாலும் சவப் பண்டமே –60-

(இ – ள்.) தீங்கு அட – (முதலையினாலாகிய) தீமையை அழிக்குமாறு,
மால் அத்தி முன் நின்று – (கஜேந்திராழ்வானாகிய) பெரியயானையின் எதிரிலே வந்துநின்று,
காலி பின் சென்ற – (கிருஷ்ணாவதாரத்தில்) பசுக்களை மேய்த்தற்பொருட்டு அவற்றின்பின்னேபோன,
கொண்டல் – நீர்கொண்ட காளமேகம்போன்றவனான,
வேங்கடம் மால் – திருவேங்கடமலையி லெழுந் தருளியிருக்கின்ற திருமாலினது,
கழலே – திருவடிகளையே,
விரும்பார் – விரும்பாதவர்களாய், –
விலை மாதர் – வேசையருடைய,
மலம் ஆம் கடம் – அசுத்தம்நிறைந்த பாண்டம் போன்ற உடம்பு,
மால் செய – மயக்கத்தைச் செய்ய,
மால் ஆய் – (அவர்கள்பக்கல்) மோகங்கொண்டு,
அவர் எச்சில்ஆகம் நச்சி – அவர்களுடைய எச்சிலாகிய உடம்பை விரும்பி,
தாங்கள் தமால்அழிவார் – தாங்கள் தங்கள் குணக்கேட்டினாலேயே அழிபவர்கள், –
இருந்தாலும் – (இறவாமல் உலகத்தில்) உயிர்வாழ்ந்திருந்தாலும்,
சவம் பண்டமே – பிணமாகிய பொருளே யாவர்; (எ – று.)

பகவத்விஷயத்தில் ஈடுபடாது விஷயாந்தரத்தில் ஈடுபட்டவர்களுடைய சன்மம் வீண் என்பதாம்.
மனிதசன்மமெடுத்ததன்பயனான நற்கதிப் பேற்றை அவர்கள் அடையாமையால், அவர்களுயிர்வாழ்க்கை பழுதெனப் பட்டது.
விலைமாதர் – விலைகொடுப்பவர்யாவர்க்கும் தம்நலத்தை விற்கும் பொதுமகளிர்.
மலம் ஆம் கடம் மால் செய மாலாய் அவராகம் நச்சி –
“ஊறியுவர்த்தக்கவொன்பதுவாய்ப்புலனுங், கோதிக்குழம்பலைக்குங்கும்பத் தைப் – பேதை,
பெருந்தோளி பெய்வளா யென்னும் மீப்போர்த்த, கருந் தோலாற் கண்விளக்கப்பட்டு” என்ற நாலடியாரைக் காண்க.
எச்சிலாவது – உண்டு எஞ்சியது; (எஞ்சு – பகுதி, இல் – பெயர்விகுதி, வலித்தல் – விகாரம்.)
விலைமாதருடம்பு, பலரும்விரும்பி நுகர்ந்துவிட்ட தாதலால், ‘எச்சிலாகம்’ எனப்பட்டது.
“நன்னிலைக்கட் டன்னை நிறுப்பானுந் தன்னை, நிலைகலக்கிக் கீழிடுவானும் –
நிலையினும், மேன்மே லுயர்த்து நிறுப்பானும் தன்னைத், தலையாகச் செய்வானும் தான்” என்றபடி
தம்தம் உயர்வுதாழ்வுகட்கு அவரவரு டையசெயலே காரண மாதலால், ‘தாங்கள் தமால்அழிவார்’ என்றார்.
கொண்டல் – எம்பெருமானுக்கு, நிறத்தினாலன்றி, குளிர்ச்சி கைம்மாறுகருதாது கருணைமழைபொழிதல்
தாபந்தீர்த்தல் முதலிய குணங்களாலும் உவமை.

அத்தி – ஹஸ்தீயென்ற வடசொல்லின் விகாரம்; ஹஸ்தம் – கை: இங்கே, துதிக்கை;
அதனையுடையது ஹஸ்தீ எனக் காரணக்குறி. முதலடியில், “முன்நின்று பின்சென்ற” என்றவிடத்து முரண்தொடை காண்க.

—————————————————————–————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய ஸ்ரீ திருவேங்கடத்தந்தாதி –21-40-

February 21, 2022

இருபது மந்தரத் தோளும் இலங்கைக்கு இறைவன் சென்னி
ஒருபதும் அந்தரத்தே அறுத்தோன் அப்பன் உந்தி முன் நாள்
தருபதுமம் தர வந்தன நான்முகன் தான் முதலா
வருபதுமம் தரம் ஒத்த பல் சீவனும் வையமுமே –21-

(இ – ள்.) இலங்கைக்கு இறைவன் – இலங்காபுரிக்கு அரசனான இராவணனுடைய,
இருபது மந்தரம் தோளும் – மந்தரமலைபோன்ற இருபது தோள்களையும்,
சென்னி ஒருபதும் – பத்துத்தலைகளையும்,
அந்தரத்தே அறுத்தோன் – ஆகாயத்தே அறுத்திட்டவனான,
அப்பன் – திருவேங்கடமுடையானுடைய,
உந்தி முன் நாள் தரு பதுமம் – திருநாபி ஆதிகாலத்திற்பூத்த தாமரைமலர்,
தர – படைக்க, –
நான்முகன் தான் முதல் ஆ வரு – பிரமன் முதலாக வருகின்ற,
பதுமம் தரம் ஒத்த – பதுமமென்னுந் தொகையளவினவான,
பல் சீவனும் – பலபிராணிவர்க்கங்களும்,
வையமும் – உலகங்களும்,
வந்தன – தோன்றின; (எ – று.)

“ஒருநாலுமுகத்தவனோ டுலகீன்றா யென்பரதுன், திருநாபிமலர்ந்ததல் லால் திருவுளத்தி லுணராயால்” என்றார்
திருவரங்கக்கலம்பகத்தும்.
குலபர்வதங்களிலொன்றாய்ப் பாற்கடலைக்கடைந்த மலையாகிய மந்தரம், போரிற் பகைவர்சேனைக்கடல்கலக்கவல்ல
வலிய பெரியதோள்களுக்கு உவமை கூறப்பட்டது.
இறைவன் – இறைமையென்றபண்பினடியாப் பிறந்த பெயர்; வ் – பெயரிடைநிலை.
இராவணனது தோள்களும் தலைகளும் ஆகாயத்தை யளாவிவளர்ந்துள்ளன வாதலால், அவற்றை “அந்தரத்தேயறுத்தோன்” என்றார்.
“அந்தரத்தே யறுத்தோன்” என்பதற்கு – (உடம்பினின்று) வேறுபடும்படி அறுத்திட்டவ னென்றும்,
(போரின்) இடையிலே அறுத்திட்டவ னென்றும் பொருள்கொள்ளலாம்; அந்தரம் – ஆகாயம்,
வேறுபாடு, இடை. பத்மம், ஜீவன் – வடசொற்கள். நான்முகன் – நான்குதிசையையும் நோக்கிய நான்குமுக முடையவன்.
தான் – அசை. பதுமமென்பது – ஒரு பெருந்தொகை; அது, கோடியினாற் பெருக்கிய கோடி. ஒன்று, பத்து, நூறு, ஆயிரம்,
பதினாயிரம், நூறாயிரம் (லக்ஷம்), பத்துலக்ஷம், நூறுலக்ஷம் (கோடி), பத்துக்கோடி, நூறுகோடி, ஆயிரங்கோடி, பதினாயிரங்கோடி,
லக்ஷங்கோடி, பத்துலக்ஷங்கோடி, நூறுலக்ஷங்கோடி என முறையே எண்வகுப்புக் காண்க:
இங்ஙனம் ஒன்றுமுதற் பதினைந்தாவதுதானமான நூறுலக்ஷங்கோடியே பதுமமென வழங்கும்; (100000000000000).
கோடாகோடி யெனவும் படும். இங்குப் பதுமமென்றது, பெருந்தொகை யென்றவாறாம். வையம் – (பொருள்களை) வைக்கும் இடம்.

———–

வையம் அடங்கலும் ஓர் துகள் வாரி ஒருதிவலை
செய்ய மடங்கல் சிறு பொறி மாருதம் சிற்றுயிர்ப்பு
துய்ய மடங்கல் இல் ஆகாயம் தான் விரல் தோன்றும் வெளி
வெய்ய மடங்கல் வடிவான வேங்கட வேதியற்கே –22-

(இ – ள்.) வெய்ய மடங்கல் வடிவு ஆன – பயங்கரமான நரசிங்கவடிவ மாகிய,
வேங்கட வேதியற்கு – திருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனும் வேதங்களினால் எடுத்துரைக்கப்படுபவனுமான எம்பெருமானுக்கு, –
(ஐம்பெரும்பூதங்களில்), வையம் அடங்கலும் – பூமிமுழுவதும்,
ஓர் துகள் – ஒருதூசியாம்:
வாரி – ஜலம்முழுவதும்,
ஒரு திவலை – ஒரு நீர்த்துளியாம்;
செய்ய மடங்கல் – செந்நிறமான அக்கினிமுழுவதும்,
சிறு பொறி – சிறிய ஓர் அனற்பொறியாம்;
மாருதம் – காற்றுமுழுவதும்,
சிறு உயிர்ப்பு – சிறிய ஒருமூச்சாம்;
துய்ய மடங்கல் இல் ஆகாயம் தான் – சுத்தமானதும் மடங்குதலில்லாது பரந்ததுமான ஆகாயம் முழுவதும்,
விரல் தோன்றும் வெளி – விரல்களினிடையே தோன்றுகின்ற சிறிய வெளியிடமாம்; (எ – று.)

இரணியனைச் சங்கரித்தற்பொருட்டு நரசிங்கவடிவங்கொண்ட திருமால் விசுவரூபமாய்வளர்ந்த வடிவத்தின்
பெருமையை யெடுத்துக்கூறுவார், அப்பெருவடிவுக்கு முன் பஞ்சமகாபூதங்கள் மிகச்சிறுபொருளாகத் தோன்றுதலை விளக்கினார்.
மற்றநான்குபூதங்களும் தன்னுள் ஒடுங்கப்பெற்றுநிற்கும் பெருமைதோன்ற,
ஆகாயத்திற்கு “மடங்கலில்” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. தான் – அசை. வாரி, மாருதம், ஆகாசம் – வடசொற்கள்.
மடங்கல் – (பிடரிமயிர்) மடங்குதலையுடைய தென ஆண்சிங்கத்துக்குக் காரணக்குறி; தொழிலாகுபெயரென்றாவது,
அல் – கருத்தாப் பொருள்விகுதியென்றாவது இலக்கணங் காண்க. வேதியன் – வேதவேத்யன், வேதப்ரதிபாத்யன்.
“அடங்கலும்” என்பதை எல்லாப்பூதங்கட்கும் எடுத்துக் கூட்டுக. துய்ய என்ற குறிப்புப்பெயரெச்சத்தில்,
தூய்மையென்ற பண்புப்பகுதியின் ஈறு போய் முதல்நெடில் குறுகிற்று.

இச்செய்யுளில், பஞ்சபூதங்களும் முறைபிறழாமற் சொல்லப்பட்டது, அரதனமாலையணி;
வடநூலார் ரத்நாவளியலங்கார மென்பர்: சொல்லும் பொருள்களை முறைவழுவாதுவரச்சொல்லுதல், இதன் இலக்கணம்.

———–

வேதா வடம் அலை வெங்காலன் கையில் விடுவித்து என்னை
மாதா வடம் அலை கொங்கை உண்ணாது அருள் -மண் அளந்த
பாதா வடம் அலை மேல் துயின்றாய் கடற் பார் மகட்கு
நாதா வட மலையாய் அலர் மேல் மங்கை நாயகனே –23-

(இ – ள்.) மண் அளந்த பாதா – பூமியை யளந்த திருவடியை யுடைய வனே!
அலைமேல் வடம் துயின்றாய் – பிரளயப்பெருங்கடலில் ஆலிலை யின்மீது பள்ளிகொண்டு யோகநித்திரைசெய்பவனே!
கடல் பார் மகட்கு நாதா – கடல்சூழ்ந்த நிலவுலகத்தின் அதிதேவதையான பூமிப்பிராட்டிக்குத் தலைவனே!
வட மலையாய் – வடக்கிலுள்ள திருவேங்கடமலையில் எழுந் தருளியிருப்பவனே!
அலர்மேல் மங்கை நாயகனே – அலர்மேல்மங்கைப் பிராட்டிக்குக் கணவனே! – என்னை -,
வேதா வடம் அலை வெம் காலன் கையில் விடுவித்து – பிரமனும் பாசத்தாற்கட்டிவருத்துகிற கொடிய யமனும் என்கிற
இவர்களது கைகளினின்று விடுதல்பண்ணி,
மாதா வடம் அலைகொ ங்கை உண்ணாது – (யான் இனி) ஒருதாயினது ஆரங்கள்புரளப்பெற்ற தனங் களின் பாலை உண்ணாதபடி,
அருள் – கருணைசெய்வாய்; (எ – று.)

படைத்தற்கடவுளான பிரமனது கைவசத்தினின்று விடுவித்தலாவது – பிறப்புத்துன்பமில்லாதபடி செய்தல். பிராணிகளை
யழிப்பவனான யமனது கைவசத்தினின்று விடுவித்தலாவது – மரணவேதனையும் நரகத்துன்பமுமில் லாதபடி செய்தல்.
மாதாகொங்கை யுண்ணாதருளுதலாவது – மீளவும் பிறப் பில்லாதபடி செய்தல். எனக்கு ஜநந மரணதுக்கங்களைப் போக்கி
யான் மீண்டும் ஒருபிறப்பெடுக்கவேண்டாதபடி எனதுகருமங்களையெல்லாந் தொலைத்து மீளாவுலகமாகியமுத்தியை
எனக்குத்தந்தருளவேண்டு மென்ற பொருளை இங்ஙனம் வேறுவகையாற்கூறினது, பிறிதினவிற்சியணி.
வேதாஎன்றவட மொழிப்பெயர் – விதித்தற்கடவுளென்றும், காலன் என்ற வடமொழிப்பெயர் –
(பிராணிகளின்) ஆயுட்காலத்தைக் கணக்கிடுபவ னென்றும் காரணப் பொருள்படும்.
வடம் – கயிற்றுவடிவமான யமனாயுதம். வடம் மலை என்றும் பதம்பிரிக்கலாம்: மலைதல் – பொருதல்.
கையில் – இல் – ஐந்தனுருபு, நீக்கம். வடம் – மணிவடம். அலர்மேல்மங்கை என்றது, திருவேங்கடமுடையானது தேவியாரின் திருநாமம்;
“அகலகில்லேனிரையுமென் றலர்மேன் மங்கை யுறைமார்பா,…… திருவேங்கடத்தானே” என்ற திருவாய்மொழியைக் காண்க:
தாமரைமலரின்மேல் வாழ்கின்றவ ளென்பது பொருள்; பத்மாவதீ என்ற வடமொழித்திருநாமமும் இப்பொருள்படுவதே.
“பார்மகட்கு நாதா” என்பதற்கு – பூமிதேவியின் பெண்ணான (பூமியினின்று தோன்றியவளான)
சீதாபிராட்டிக்குக் கொழுநனே யென்றும் உரைக்கலாம்.

———-

நாயகராத் திரியும் சில தேவர்க்கு நாண் இலை கொல்
தூய கராத்திரி மூலம் எனாமுனம் துத்திப் பணிப்
பாயக ராத்திரி மேனி அம்மான் பைம்பொன் வேங்கடவன்
தீய கராத்திரி சக்கரத்தால் கொன்ற சீர் கண்டுமே –24-

(இ – ள்.) தூய கராத்திரி – பரிசுத்தமான யானை,
மூலம் எனா முனம் – ஆதிமூலமேயென்றுகூப்பிடுதற்குமுன்னமே (கூப்பிட்டவுடனே வெகுவிரைவில் என்றபடி),
துத்தி பணி பாயகம் ராத்திரி மேனி அம்மான் பைம் பொன் வேங்கடவன் – புள்ளிகளையுடைய படமுள்ள ஆதிசேஷனாகிய சயநத்தையும் இருள்போலுங் கரியதிருமேனியையுமுடைய தலைவனும் பசும் பொன்விளையுந்திருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான்,
தீய கரா – (அந்தயானையைக்கௌவியிருந்த) கொடிய முதலையை,
திரி சக்கரத்தால் கொன்ற – சுழற்றிவிட்ட சக்கராயுதத்தினாற் கொன்ற,
சீர் – சிறப்பை,
கண்டும் – பார்த்திருந்தும், –
நாயகர் ஆ திரியும் சில தேவர்க்கு நாண் இலைகொல் – கடவுளரென்று திரிகின்ற வேறுசில தேவர்களுக்கு வெட்கமில்லையோ? (எ – று.)

திருமாலே பரம்பொரு ளென்ற உண்மையை இங்ஙனங் காரணங் காட்டி வெளியிட்டார்.
கஜேந்திராழ்வான் இன்னதெய்வமென்று பெயர் குறியாது “ஆதிமூலமே!” என்று பொதுப்படக் கூப்பிட்டபொழுது
திருமாலல்லாத பிறதேவரெல்லாரும் தாம்தாம் அச்சொல்லுக்குப் பொருளல்ல ரென்று கருதி யொழிய,
அதற்குஉரிய அத்திருமால்தானே வந்து அருள் செய்தமை கருதத்தக்கது;

“அழைத்தது செவியிற்கேட்டும் அயனரனாதியாயோர்,
புழைக்கைவெங்கரிமுன் காப்பப் புகுந்தில ராதியாகித்,
தழைத்த காரணனேயென்ற தனிப்பெயர்ப்பொருள் யாமல்லோம்,
இழைத்தகாரியம் யாமாவோ மென்செய்துமாலின் றென்றார்” என்ற ஸ்ரீபாகவதத்தையுங் காண்க.

“கானேந்துதாமரைவாவியுளானை கராவினயர்ந்து,
ஊனேந்திமூலமெ ன்றோதியநாட்சென்றுதவுகையால்,
தேனேந்து சோலையரங்கனல்லால் தெய்வமில்லையென்றே,
மானேந்துகையன் மழுவேந்தினா னிந்தமாநிலத்தே”,

“மத்தக் கரியைக் கராப்பற்றிநின்றதொர் வாவியுள்ளே,
சித்தந்தெளிந்து முறையிடும்போது செழுந்துளவக்,
கொத்துக்கிளர்முடிக் கோவிந்தவென் றதுகூப்பிட்டதோ,
செத்துக்கிடந்தனவோ கெடுவீ ருங்கள்தெய்வங்களே”,

“வெங்கண்வேழமூலமென்ன வந்த துங்கள்தேவனோ” என்று இவ்வாசிரியர் பிறவிடங்களிற் கூறியவை இங்கு ஒப்புநோக்கத்தக்கன.

மூலமென்றவுடனே கொன்றவென விரைவுகுறித்தற்பொருளில் ‘மூலமெனாமுனம் கொன்ற’ எனக் காரணத்தின்
முன் காரியம் நிகழ்ந்ததாகக் கூறினது, மிகையுயர்வுநவிற்சியணி.
ஆக, இல்லை, என்னா, முன்னம் என்பன – ஆ. இலை, எனா, முனம் என்று தொகுத்தல்விகார மடைந்தன.
பரம்பொருளுணர்ச்சி கைகூடப் பெற்றதனால், ‘தூயகராத்திரி’ என்று சிறப்பித்துக் கூறினார்.
கராத்திரி – தீர்க்கசந்திபெற்ற வடமொழித்தொடர்; கரஅத்ரி என்றுபிரிந்து, துதிக்கையையுடையமலை யென்றுபொருள்படும்:
எனவே, யானையாயிற்று; ‘கைம்மலை’ என்பது, இப்பொருள்கொண்ட தமிழ்ப் பெயர்; பிறகுறிப்பு.
பணம் – படம்; அதனையுடையது பணீ என வடமொ ழிக்காரணக்குறி; இது ஈயீறு இகரமாய்ப் பணியென நின்றது.
பாய் அகம் – பாயின்இடம். ராத்ரி, க்ராஹம், சக்ரம், ஸ்ரீ என்ற வடசொற்கள் விகாரப் பட்டன. ராத்திரிமேனி –
“இருளன்னமாமேனி” ராத்திரி இருளுக்குக் காலவாகுபெயர். அம்மான் – அந்த மகான்.
பொன் க