Archive for the ‘திரு வாய் மொழி’ Category

ஸ்ரீ கேசவாதி திரு நாமங்களின் மஹிமை —

April 29, 2023

ஸ்ரீ பன்னிரு திருநாமப் பாடல்கள்

 ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி:2.3.1-13

 ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய்மொழி: 2.7.1-13

———–

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி 2-3 -ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

(பன்னிரு திரு நாமப் பதிகம் இது
இதே போல் கேசவன் தமர் –2-7-திருவாய் மொழியும்
கலியனும் )

அவதாரிகை –
கீழில் திருமொழியில் –
இவனுடைய பால்ய அனுகுணமாக முலை உண்கையை மறந்து கிடந்து
உறங்குகிறவனை எழுப்பி -முலை உண்ண வேண்டும்  என்று அபேஷித்து-
அவன் இறாய்த்து இருந்த அளவிலும் விடாதே -பஹுமுகமாக நிர்பந்தித்து –
யசோதை பிராட்டி முலை ஊட்டின பிரகாரத்தை –
அவளுடைய ப்ராப்தியையும் ( மாத்ரு பாவநா ) சிநேகத்தையும் உடையராய் கொண்டு –
தத் காலம் போலே அவனைக் குறித்து பேசி அனுபவித்து இனியரானார் –

அவள் அவனுக்கு
1-காது குத்தி –
2-காது பெருக்கி –
3-காது பணிகளும் இட்டு அனுபவிக்க ஆசைப்பட்டு –
காது குத்துகையாகிற உத்சவத்துக்கு -ஊரில் பெண்களை எல்லாம் அழைத்து விட்டு –
வந்தவர்களை சம்பாவிகைக்கு ஈடான பதார்த்தங்களும் சம்பாதித்து வைத்து –
அவனை-காது குத்த -என்று அழைக்க

அவன் -நோம் -என்று அஞ்சி -மாட்டேன் -என்னச் செய்தேயும் –
(இது நோவு அறிகிற பருவம்
கீழே முலை உண்ணாமல் உறங்கினான் )
அவன் அஞ்சாதபடியான வசனங்களைச் சொல்லியும் –
அவனுக்கு அபிமதமான பதார்த்தங்களை காட்டியும் உடன் படுத்திக் கொண்டு –
காது பெருக்கின பிரகாரத்தை –
தாமும் அவளைப் போலே அனுபவிக்க ஆசைப்பட்டு –
தத் அவஸ்த ஆபந்னராய் கொண்டு –
தத் காலம் போலே அவனைக் குறித்து
அப் பாசுரங்களைப் பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிறார் இத் திருமொழியில் –

——————————–

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரும்  இல்லை கடல் வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் – 2-3 1- –

பதவுரை

பாடு உடைய–பெருமையை உடைய-ஸூவ ஜன ரக்ஷண பரிவை உடைய –
நின் தந்தையும்–உன் தகப்பனும்
போய்–(வெளியே) போய்
தாழ்த்தான்–(திரும்பி வருவதற்குத்) தாமஸித்தான்;
பொரு திறல்–போர் செய்யுந் திறமை யுள்ள
கஞ்சன்-கம்ஸனோ
கடியன்–(உன் விஷயத்தில்) மிகவும் க்ரூரனாயிராநின்றான்;
கடல்–கடல் போன்ற (ச்ரமஹரமான)
வண்ணா–வடிவை யுடையவனே!
உன்னை–உன்னை
காப்பாரும்–பாதுகாப்பவரான வேறொருவரும்
இல்லை–(இங்கு இப்போது) இல்லை;
(நீயோவென்றால்)
தனியே போய்–அஸஹாயனாய்ப் போய்
எங்கும்–கண்ட விடங்களிலும்
திரிதி–திரியா நன்றாய்;
பேய்–பூதனையினுடைய
முலை பால்–முலைப்பாலை
உண்ட–உட்கொண்ட
பித்தனே–மதி மயக்கமுள்ளவனே!
கேசவ-கேசவனே!
நம்பி–பூர்ணனானவனே!
உன்னை காது குத்த–உன் காதுகளைக் குத்துவதற்காக
ஆய் பாலர்–இடைச்சியர்களாகிய
பெண்டுகள் எல்லாரும்–எல்லாப் பெண்களும்
வந்தார்–வந்திரா நின்றார்கள்;
நான்–நானும்
அடைக்காய்–(அவர்களுக்கு ஸம்பாவிக்க வேண்டிய) வெற்றிலை பாக்குகளை
திருத்தி வைத்தேன்–ஆய்ந்து வைத்திருக்கிறேன்.

போய் இத்யாதி –
பாடுடைய நின் தந்தையும் -போய் -தாழ்த்தான் -புத்திர  ரஷணத்திலும் ஸுவ ஜன ரஷணத்திலும் –
இடமுடைய நெஞ்சை உடையனான -உன்னுடைய பிதாவும் -பசுக் கடையிலே சென்று வருகிறேன் –
வரும் அளவும் நீ பிள்ளையை ரஷித்துக் கொள் -என்று போய் வரவு தாழ்த்தான் –

அன்றிக்கே –
போய் -என்ற இது –
மிகுதிக்கு வாசகமாய் -(போய்ப்பாடு-மிகுதியான பாடு -ரக்ஷணம் )
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணத்தில் மிகவும் அளவு உடையனாய் –
கூர்  வேல் கொடும் தொழிலன் -என்கிறபடியே நீ பிறந்த அன்றே தொடங்கி-
வேலைப் புகர் எழ கடைந்து பிடித்து -தொட்டில் கீழே ஒரு எறும்பு ஊரிலும் –
சிம்ஹத்தின் மேலே சீறுமா போலே சீறி -உன்னை நோக்கிக் கொண்டு திரியும்
பிதாவானவனும் கார்யார்தமாக போன இடத்தே விளம்பித்தான் என்னவுமாம் –

பொரு திறல் கஞ்சன் கடியன் –
பொருகையில்  மிடுக்கை உடையனான கம்சன் -உன்னளவில் மிகவும்
க்ரூரன்-உன்னை நலிகைக்கு இடம் பார்த்து திரிகிறவன் ஆகையால் –
ஆரை வரவிடும் -எது செய்விக்கும் -என்று தெரியாது –

காப்பாரும் இல்லை –
அதுக்கு மேலே விரகு அறிந்து -ரஷிக்க வல்லாரும் இங்கு இல்லை –
ரஷகரான அவர் வந்திலர் –
நானோ அபலை -வேறோர் பரிவர் காண வில்லை -யார்தான் ரஷிப்பார்

கடல் வண்ணா உன்னை –
தன்னேராயிரம் பிள்ளைகள்-என்கிறபடியே -இவ்வூரிலே திரிகிற அநேகம்
பிள்ளைகளுக்கு உள்ளே நானும் ஒருவனாய் திரியா நின்றால்
என்னை  அவர்கள் அறிய புகா நின்றார்களோ என்றால்-
என்னை அவர்கள் அறியப் புகா நின்றார்களோ என்று – நீ நினைக்க வேண்டா –
கடல் போலே ஸ்ரமஹரமாய் இருக்கிற உன் வடிவழகே உன்னை காட்டிக் கொடாதோ –
இப்படி இருக்கிற உன்னை உணர்ந்து ரஷிப்பாரும் இல்லை -என்னுதல்-

ஒரு விரோதிகளே இல்லை ஆயினும் -அஸ்த்தானே பய சங்கை  பண்ணி
மங்களா சாசனம் பண்ண வேண்டும்படியான அழகு உடைய உன்னை –
விரோதி பூயிஷ்டமான இவ்விடத்தில் பரிவராய் ரஷிப்பார் யாருமில்லை என்னுதல் –

தனியே போய் எங்கும் திரிதி –
பிள்ளைகள் தன்னோடு திரிகிறாய் என்னவும் ஒண்ணாதபடி –
அவர்களையும் விட்டு தனியே போய் எங்கும் சஞ்சரியா நின்றாய்
அவர்கள் தன்னோடு கூடப் போனால் தான் பிரயோஜனம் என்-

பேய்ப் பால் முலை உண்ட பித்தனே –
பேயானவள் தாய் வடிவை கொண்டு வர -அவளைத் தாயாகவே நினைத்து –
அவள் முலைப்பாலை இருந்துண்ட  பிராந்தன் நீ அல்லையோ –
ஆகையால் -மாயா ரூபிகளான அசுரர்கள் ஒக்க வடிவுடைய
பிள்ளைகளோடு ஒத்த வடிவைக் கொடு வந்து கலசி நின்றாலும் -அவர்களை பிள்ளைகளோ பாதி
தோழன் மாறாக நினைப்பான் ஒருவன் இறே நீ என்கை

கேசவ நம்பீ –
இப்படி நீ என் செய்ய பயப்படுகிறது -நான் கேசவ நம்பி அன்றோ -என் கையிலே
கேசி பட்டது அறியாயோ என்று -தன் ஸௌர்ய பூர்த்தியை காட்ட –
அத்தை (அந்த பயத்தை ) அவ்வளவிலே விட்டு –
தான் உபக்ரமித்த கார்யத்தில் புரிந்து –

நானே அன்று காண்-
உன்னைக் காது குத்துவதாக ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்கள்-
வந்தவர்களை சம்பாவிகைக்கு ஈடான அடைக்காய் முதலானவையும் நான் திருத்தி வைத்தேன் –
ஆன பின்பு நீ காது குத்தும்படி வர வேணும் -என்கிறாள் –

——————————————

வண்ணப் பவள மருங்கினில் சாத்தி மலர் பாத கிண் கிணி ஆர்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய்
எண்ணற்கு அரிய பிரானே -திரியை எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகு உடைய கனகக் கடிப்பும் இவையா -2 3-2 – –

பதவுரை

நண்ணி தொழுமவர்–கிட்டி வணங்குகின்றவர்களுடைய
சிந்தை–மநஸ்ஸில் நின்றும்
பிரியாத–விட்டு நீங்காத
நாராயணா–நாராயணனே!
(நீ)
வண்ணம்–(மிக்க செந்) நிறத்தையுடைய
பவளம்–பவழ வடத்தை
மருங்கினில்–திருவரையிலே
சாத்தி–சாத்திக் கொண்டு
மலர்–தாமரை மலர் போன்ற
பாதம்–பாதங்களிலணிந்த
கிண் கிணி–சதங்கை
ஆர்ப்ப–ஒலிக்கும்படி
இங்கே வாராய்
(உன் மேல் அன்பில்லாதவர்களுக்கு)
எண்ணற்கு அரிய பிரானே–நினைப்பதற்கு அருமையான ஸ்வாமியே!
திரியை–நூல் திரியை
எரியாமே–எரிச்சலுண்டாகாதபடி
காதுக்கு-(உன்) காதுகளுக்கு
இடுவன்–இடுவேன்;
(அப்படித் திரியை யிட்டுக் காது பெருக்கினால் பின்பு நீ அணிய வேண்டியவையான)
கண்ணுக்கு நின்றும் அழகு உடைய–கண்களுக்கு மிகவும் அழகை யுடைய (தர்ச நீயமான)
கனகம் கடிப்பும்–பொற் கடிப்பும்
இவை–இவையாகும்;
ஆ–ஆச்சர்யம்.

வண்ணம் இத்யாதி –
ஆகரத்தில் பிறக்கையாலே நிறம் உடைத்தாய் இருந்துள்ள -பவளத்தினுடைய வடத்தை –
அது தனக்கும் அழகு கொடுக்க வற்றான திரு வரையில் சாத்தி –

மலர் இத்யாதி –
தாமரைப் பூ போலே இருக்கிற திருவடிகளில் சதங்கைகளானவை த்வநிக்க-

திரு வரையும் பவள வடமுமான சேர்த்தி அழகு தோற்றும்படியாகவும் –
திருவடிகளில் சாத்தின சதங்கை த்வநிக்கும் படியாகவும்
வர வேண்டும் என்று கருத்து –

நண்ணி இத்யாதி –
அஹங்காராதிகளாலே உன்னை அகன்று திரிகை அன்றிக்கே –
தத் ராஹித்யத்தாலே உன்னைக் கிட்டி –
ஸ்வ சேஷத்வ அனுரூபமாக தொழுகையே யாத்ரையாக இருக்கும் அவர்களுடைய நெஞ்சை –
நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும் (பெரிய திருவந்தாதி )-என்கிறபடியே
இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாகக் கை கொண்டு
ஷண காலமும் விட்டுப் பிரியாதே வர்த்திக்கும் –
நாராயணனே நான் அழைக்கிற இவ் விடத்தே வராய் –

எண்ணற்கு அரிய பிரானே –
உன் பக்கல் சிநேகம் இல்லாதவர்க்கு -நினைக்கைகும்  கூட அரியனாய்
இருக்கும் உபகாரனானவனே-

1-ஆஸ்ரிதருக்கு சுலபனாய் இருக்கையும் –
2-அநாஸ்ரிதர்க்கு துர்லபனாய் இருக்கையும் –
3-மங்களா சாசன பரராய் இருப்பார்க்கு தம் பேறாய் இறே இருப்பது –

நீ என்னை அழைக்கிறது -திரியை என் காது எரிய இடுக்கைக்கு அன்றோ என்ன –

திரியை எரியாமே காதுக்கு இடுவன் –
திரியை உன் காதுகளுக்கு எரிச்சல் வாராதபடி
அனுகூலமாக இடுவன் –

கண்ணுக்கு இத்யாதி –
திரி ஏற்றி காது பெருக்கினால் -உனக்கு இடுதலாக சமைத்த –
கண்ணுக்கு மிகவும் அழகை உடைத்தாய் இருக்கிற -பொற் கடிப்புகளான இவையும்
இருக்கிறபடி பாராய் –
அழகும் என்ற இடத்தில் -ச சப்தம் அவ்யயம் –

நன்றும் அழகும் உடைய என்றும் –
கனகப் கடிப்பு என்றும் -சொன்ன இவை இரண்டாலும் –
பணித் திருத்தமும்
உபாதான வைலக்ஷண்யமும் சொல்லுகிறது –

———————————————————–

வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன்
உய்ய இவ்வாயர்  குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே
மையின்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் 2- 3-3 –

பதவுரை

உய்ய–(நாங்களெல்லாம்) உஜ்ஜீவிக்கும்படி
இ ஆயர் குலத்தினில் தோன்றிய–இந்த இடையர் குலத்திலே வந்து பிறந்த
ஒண் சுடர்–மிக்க ஒளியையுடைய
ஆயர் கொழுந்தே–இடையர்களின் கொழுந்து போன்றவனே!
வையம் எல்லாம் பெறும்–இந்த வுலகங்களை யெல்லாம் (தனக்கு) விலையாகக் கொள்ளக் கூடிய
வார் கடல் வாழும் மகரம் குழை–பெரிய கடலிலே வாழ்கின்ற சுறா மீனின் வடிவமையச் செய்யப்பட்ட மகரக் குழையை
கொண்டு வைத்தேன்–(உன் காது பெருகியிடும்படி) கொண்டு வந்திருக்கிறேன்;
(உன் காதுக்குத் தினவு உண்டாகாமலிருக்கும் பொருட்டு)
வெய்யவே–வெம்மை யுடனிருக்கும் படி
காதில் திரியை இடுவன்-(உன்) காதிலே திரியை இடுவேன்;
வேண்டியது எல்லாம்–நீ விரும்பிய பொருள்களை யெல்லாம்
(பாஷ்ய அபூவம் -கூட அபூவம்-அப்பம் -மாஷா அபூவம் அப்பம் வடை)
தருவன்–கொடுப்பேன்;
மா தவனே–ஸ்ரீ யபதியே!
இன ஆய்ச்சியர் உள்ளத்து–மடமைப் பருவமுடைய இடைப் பெண்கள் மநஸ்ஸிலே
மையன்மை செய்து-வ்யாமோஹத்தைச் செய்து கொண்டு
இங்கே வாராய்:-.

வையம் இத்யாதி –
பொற் கடிப்பு அளவே அல்ல -காது பெருக்கினால் இடும்படியாக பூமி எல்லாம்
பெறும்  பெரு விலையனான-நீண்ட கடலிலே வர்த்திக்கும் பெரிய மகரம் போலே இருக்கிற காதுப்
பணி கொண்டு வைத்தேன்  -என்ன –

நீ இது சொல்லுகிறது -இப்போது என் காதுக்கு திரி இடுகைகாக
அன்றோ -திரி இட்ட போதே காது தினவு தின்று வரும் -எனக்கு வேண்டா என்ன –

வெய்யவே காதில் திரியை இடுவன் –
தினவு-கண்டூதி சமிக்கும்படி –
வெச்சாப்போடே-அல்பமான உஷ்ணத்தை யோடு -காதுகளில் திரியை இடுவன் என்ற
இடத்திலும் -அவன் இசையாமையாலே -இசைகைக்காக –

நீ வேண்டியது எல்லாம் தருவன் –
நீ விரும்பி இருக்கும் அபூப  பலாதிகள் எல்லாம் தருவேன் என்ன-
அவ் வளவிலும் அவன் வாராமையாலே –

உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே –
இருந்ததே குடியாக குடி (இருந்ததே ஹேதுவாக )உஜ்ஜீவிக்கும்படி இவ்விடைக் குலத்தில் வந்து பிறந்து –
அது தானே உனக்கு மிகவும் தேஜஸ்சாம்படி இருப்பானாய்-
வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே –
இடையருக்கு ஒரு வியசனம் வரில் -முந்துற உன் முகம் வாடும்படி -அவர்களுக்கு தலைவன் ஆனவனே –

மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே
ஒரு பருவத்தின் இடைப் பெண்களை உன்னுடைய ஸுந்த்ர்யாதிகளாலே மதி மயங்கும்படி பண்ணி –
அவர்களுடைய நெஞ்சுக்கு சர்வ காலமும் -விஷயமாம்படி இருப்பானாய் –

மாதவனே
உன்னுடைய நெஞ்சத்து இறை (அபஹரித்து )கொள்ளும் பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே –

இங்கு வாராய் என்று
ஸ்துதி பூர்வகமாக அழைக்கிறாள் –

——————————————————–

வண நன்றுடைய வைரக் கடிப்பு இட்டு வார் காது தாழப் பெருக்கி
குண நன்றுடைய இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலாப் பழம் தந்து
சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் நான் சோத்தம்பிரான் இங்கே வாராய் -2 3-4 – –

பதவுரை

இக் கோபாலர் பிள்ளைகள்– இந்த இடைப் பிள்ளைகள்
வார் காது-(தமது) நீண்ட காதை
தாழ பெருக்கி–(தோளளவுந்) தொங்கும்படி பெருக்கி
வணம் நின்று உடைய–நல்ல நிறத்தை மிகுதியாகவுடைய
வயிரம் கடிப்பு–வயிரக் கற்கள் அழுத்திச் செய்த கடிப்பை
இட்டு–அணிந்து கொண்டு
(இப்படி தமது தாய்மார் சொல்லியபடி செய்து)
நன்று குணம் உடையர்–ஸத் குணசாலிகளாயிரா நின்றார்கள்;
கோவிந்தா–கோவிந்தனே!
நீ–நீயோ வென்றால்
சொல்லு–(தாயாகிய என்னுடைய) சொல்லை
கொள்ளாய்–கேட்கிறாயில்லை;
(இப்படி யிராமல் எனது சொல்லைக் கேட்டு)
இணை–ஒன்றோடொன்றொத்து
நன்று அழகிய–மிகவு மழகியனவா யிருக்கிற
இ கடிப்பு–இக் கடிப்பை
இட்டால்–அணிந்து கொண்டால்
நான்–நான்
இனிய பலாப்பழம் தந்து–தித்திப்பான பலாப் பழங்கள் கொடுத்து
சுணம் நின்று அணி முலை–சுணங்கையுடைய மிகவுமழகிய முலையையும்
உண்ண–(நீ) பருகும்படி
தருவன்–கொடுப்பேன்;
பிரான்–ஸ்வாமியே!
சோத்தம்–(உனக்கு) ஸ்தோத்ரம்;
இங்கே வாராய்.

வணம் இத்யாதி –
இப்படி ஸ்துத்திக் கொண்டு அழைத்த இடத்திலும் வாராமையாலே -இது தன்னை
சொன்னாகிலும் வருமோ என்று –
இந்த இடை பிள்ளைகள் ஆனவர்கள் -நல்ல நிறத்தை உடைத்தான வயிரக் கடிப்பிட்டு –
ஒழுகு நீண்ட காதானது தோள் அழவும் தாழும் படி பெருக்கி –
தாய்மார் முதலானோர் சொல்லிற்று செய்து மிகவும் குணம் உடையராய் இருக்கிற படி பாராய் –
நீயும் இப்படி இருக்க வேண்டாவோ

கோவிந்தா -நீ சொல்லுக் கேளாய் –
ஸுலப்யதுக்கு  கோவிந்தன் என்று பேர் இட்டு கொண்டு இருக்கிற நீ –
என் சொல்லு  கைக் கொள்ளுகிறாய் இல்லை என்ன –

உன் சொல்லு கேட்டு நான் கடிப்பு இடுவித்துக் கொண்டால் எனக்கு என்ன தருவாய் என்ன –

இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் –
ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் -மிகவும்
அழகியதாய் இருக்கிற இந்த கடிப்பை இட்டால்-

இனிய பலாப் பழம் தந்து –
உனக்கு இனிதான பலாப் பழம் தந்து –

சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் –
நான்-சுணங்கை உடைத்தாய் –
நன்றாய் அழகியதான -முலையை நீ அமுது செய்யும்படி தருவன் நான் என்ன –
சுணங்கு -முலை போல் தோன்றும் நிறம்
நன்றாகை-மிருதுவாக இருக்கை
(சன்னிவேச வை லக்ஷண்யம் )

சோத்தம்பிரான் இங்கே வாராய் –
இப்படி சொன்ன அளவிலும் வாராமையாலே
பிரானே உன்னைக் கும்பிடுகிறேன் -இங்கே வாராய் என்று இரந்து அழைக்கிறாள்

சோத்தம் -என்கிற இது –
அஞ்சலி பண்ணும் அவர்கள் அதுக்கு அனுகூலமாக தாழ்ச்சி தோற்ற
சொல்லுவதொரு சப்த விசேஷம் –

————————————————

சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரோடு நீ போய்
கோத்து குரவை பிணைந்து இங்கு வந்தால் குணம் கொண்டு இடிவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன  அப்பம் தருவன் பிரானே திரி இட ஓட்டில்
வேய்த் தடம் தோளார் விரும்பு கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் -2 3-5 –

பதவுரை

பிரான்–தலைவனே!
சோத்தம்–உனக்கு ஓரஞ்ஜலி
என்று–என்று சொல்லி
இரந்தாலும்–(வர வேணுமென்று) கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலும்
கொள்ளாய்–(நீ என் சொல்லைக்) கேட்டு வருகிறதில்லை;
நம்பீ–பூர்ணனே!-க்ருத்ரிம செயல்களால் பூர்ணன் –
நீ–நீ
சுரி குழலாரொடு–சுருண்ட கூந்தலை யுடைய பெண்களோடு
போய்–(ஏகாந்த ஸ்தலத்திலே) போய்
கோத்து–கை கோத்து
குரவை பிணைந்து–குரவைக் கூத்தாடி
இங்கு வந்தால் ;–(பின்) இங்கே வந்தால்
(நீ அப்படி செய்ததை)
குணம் கொண்டிடுவனோ–(உனக்குத்) தகுதியானதாக (நான்) கொள்வனோ?
பிரானே–உபகாரகனே!
திரி இட ஒட்டில்–திரியை (உன்காதிலே) இடலாம்படி நீ யிசைந்தால்
பேர்த்தும்–மறுபடியும் மறுபடியும்
பெரியன அப்பம்–பெரிய பெரிய அப்பங்களை
தருவன்–கொடுப்பேன்;
வேய் தட தோளார்–மூங்கில் போன்ற பெரிய தோள்களை யுடைய மகளிர்
விரும்பு–விரும்புகைக்கு உரிய
கரு குழல் விட்டுவே–கரு நிறமான கூந்தலை யுடைய விஷ்ணுவே!
(நீ இங்கே வாராய்).

சோத்தம் இத்யாதி –
சோத்தம்பிரான் இங்கே வாராய் -என்ற இடத்திலும் -அவன் வாராமையாலே –
பிரானே உன்னைத் தொழுகிறேன் என்று -இரந்தாலும் –
என் சொல்லைக் கை கொண்டு -நீ வருகிறாய் இல்லை என்றவாறே –

நீ அழைக்க நான் வந்த இடத்தில் குணம் கொள்ளாமல் –
நேற்று என்னை அடித்தவள் அன்றோ நீ -என்ன –

அதுவோ –
சுரி குழலாரோடு நீ போய்  கோத்து குரவை பிணைந்து இங்கே வந்தால் -குணம் கொண்டாடுவனோ நம்பீ –
ஆளற்ற இடத்தில் நீ போய் -சுருண்ட குழலை உடையராய் இருக்கும் பெண்களோடு கை கோத்து –
குரவை பிணைந்து ஆடி இங்கே வந்தால் பொடியாதே குணவான் என்று உன்னைக் கொள்வனோ நம்பீ
என்று இவள் சொன்னவாறே-

நிருத்தரனாய் நிறக –

அவ்வளவிலே கையில் திரியை எடுத்து -இத்தை இடும்படி வாராய் -என்ன –

அவன் -இது இட ஒட்டேன் -என்ன

பிரானே திரி இட ஓட்டில் பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் –
எனக்கு எல்லாப் படியாலும் உபகாரன் ஆனவனே –
திரி இத்தனையும் இட ஒட்டுதியாகில் -நீ சிறிது சிறிது என்று பொகடப் பொகட நீ விரும்பும்படி
பெரியனவான அப்பங்களை தருவேன் என்ற இடத்திலும் -அவன் வாராமையாலே –

வேய் இத்யாதி –
பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் செவ்வைக்கும் மூங்கில் போலேயாய் –
பெருத்து இருந்துள்ள தோளை உடையரான பெண்கள் விரும்பும்படியாய் –
இருண்டு நீண்ட திருக் குழலை உடையனான

விஷ்ணுவே -நீ இங்கே வாராய் என்று –
அவன் வைலக்ஷண்யத்தை சொல்லி –
புகழ்ந்து கொண்டு அழைக்கிறாள் –

—————————————————-

விஷ்ணுவை மது சூதனன் என்கிறாள் இதில் –

விண்ணெல்லாம்  கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி அதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டேன் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று அறிந்தேன்
புண் ஏதும் இல்லை உன் காது மறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார் முகிலே கடல்வண்ணா காவலனே முலை உணாயே – 2-3 6- –

பதவுரை

விண் எல்லாம் கேட்க–மேலுலகங்கள் முழுவதும் கேட்கும்படி
அழுதிட்டாய்–அழுதாய்;
(நீ அப்படி அழுகையில்)
நான்–(தாயாகிய) நான்
விரும்பி–ஆதரங்கொண்டு
உன் வாயில்–உன் வாயிலே
அதனை–(நீ மண் உண்ட) அதை
நோக்கி–பார்க்கும் போது
(அவ் வாயில்)
மண் எல்லாம் கண்டு–லோகங்களை யெல்லாம் பார்த்து
என் மனத்துள்ளே அஞ்சி–என் மநஸ்ஸினுள்ளே பயப்பட்டு
மதுசூதனே என்று–‘இவன் மதுஸூதனே யாவ’னென்று
அறிந்தேன்–தெரிந்து கொண்டேன்;
(உன்னுடைய காதிலே)
புண் ஏதும் இல்லை–புண் ஒன்றுமில்லை;
உன் காது மறியும்–(கடிப்பிடும் போது) உன் காது சிறிது மடங்கும்;
(அதை மாத்திரம்)
இறை போது–க்ஷண காலம்
பொறுத்து இரு–பொறுத்துக் கொண்டிரு;
நம்பி–பூர்ணனே!
கண்ணா–கண்ணனே!
கார் முகிலே–காளமேகம் போன்றவனே!
கடல் வண்ணா–கடல் போன்ற திரு நிறத்தவனே!
காவலனே–ரக்ஷண வியாபாரத்தில் வல்லவனே!
என் முலை உணாய்.

விண் இத்யாதி –
மண் தின்றாய் -என்று அடித்தவாறே –
ஆ -என்ன –
ஆகாசப் பரப்பு அடங்கலும்
கேட்க்கும்படி அழுத உன்னுடைய வாயில் –
மண் உண்ட சுவடு உண்டாகில் பார்ப்போம் -என்று
விரும்பி அத்தை நான்  பார்த்த அளவில் –

முன்பு போலே வாய் வழியே பூமி எல்லாம் உள்ளே இருக்கிறபடியை கண்டு –
நம்முடைய பிள்ளை என்று இவனை நலிந்தோமே -என்று
என் மனசிலே பயப்பட்டு –
இவன் நம்முடைய பிள்ளை அல்லன் –
சர்வேஸ்வரன் என்று அறிந்தேன் – என்றவாறே –

அஹம் வோ பாந்தவ ஜாத-என்னும் அவனாகையாலே –
இவள் அந்யனாக்கி வார்த்தை சொன்னது சகியாமையாலே அத்தை மறப்பித்து –
தன் பிள்ளை -என்று
இவள் அணைத்துக் கொள்ளும்படி வந்து கிட்டி நிற்க –

அவ்வளவிலே இவள் –
காதுக்கு கடிப்பு இடுவதாக உத்யோகிக்க –
என்னுடைய காது புண் -எனக்கு அது வேண்டா -என்று அவன் சொல்ல –

புண் ஏதும் இத்யாதி –
புண் ஒன்றும் இல்லை -உன்னுடைய காது தண்டு புரளும் –
சற்றுப் போது பொறுத்து இரு நம்பீ என்ன –

அவன் பொறுத்த படியால் ப்ரீதையாய்
கண்ணா –
எனக்கு சுலபன் ஆனவனே

என் கார் முகிலே –
ஜல ஸ்தல விபாகம் பாராமல் -உபகரிக்கும் காள மேகம் போலே
எனக்கு உன்னை உபகரித்தவனே

கடல் வண்ணா –
எனக்கு அனுபாவ்யமான கடல் போன்ற நிறத்தை உடையவனே

காவலனே –
எனக்கு ரஷகன் ஆனவனே –
என்று ஸ்தோத்ரம் பண்ணி
முலை உண்ண  வேணும் என்று அபேஷிக்கிறாள்

———————————————-

முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின் காதில் கடிப்பை பறித்து எறிந்திட்டு
மலையை எடுத்து மகிழ்ந்து கன்  மாரி காத்துப்  பசு நிரை மேய்ததாய்
சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திரு ஆயர்பாடிப் பிரானே
தலை நிலா போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே – 2-3 7- –

பதவுரை

முலை–‘முலையையும்
ஏதும்–(மற்றுமுள்ள பக்ஷணாதிகள்) எதையும்
வேண்டேன்–(நான்) விரும்ப மாட்டேன்’
என்று ஓடி–என்று சொல்லி ஓடிப் போய்
நின் காதில் கடிப்பை–(நான்) உன் காதிலிட்ட காதணியை
பறித்து எறிந்திட்டு–பிடுங்கி யெறிந்து விட்டு
மலையை–கோவர்த்தன மலையை
எடுத்து–(குடையாக) எடுத்துத் தூக்கி
மகிழ்ந்து–திருவுள்ளமுகந்து
கல் மாரி–கல் வர்ஷத்தில் நின்றும்
காத்து–(இடையர் முதலானாரை) ரக்ஷித்து
பசு நிரை–பசுக்களின் திரளை
மேய்த்தாய்–மேய்த்தவனே!
ஒன்று சிலை–ஒப்பற்றதொரு ருத்ர தநுஸ்ஸை
முறித்தாய்–(பிராட்டியை மணம் புரிய) முறித்தவனே!
திரிவிக்கிரமா–த்ரிவிக்ரமனே!
திரு ஆயர்பாடி–திரு வாய்ப்பாடிக்கு
பிரானே–உபகாரகனே!
தலை நிலா போதே–தலை நிற்காமலிருக்கிற இளங்குழந்தைப் பருவத்திலேயே
உன் காதை பெருக்காது–உன் காதை(த் திரியிட்டு)ப் பெருக்காமல்
விட்டிட்டேன்–விட்டு வைத்தேன்;
(அப்படி விட்டு வைத்தது)
குற்றமே அன்றே–என்னுடைய அபராதமன்றோ?

முலை இத்யாதி –
இப்படி ஸ்தோத்ரம் பண்ணி முலை உண்ண சொன்னவாறே –
முலை உண்பானாக தொடங்கின அளவிலே –
கடிப்பை எடுத்து காதிலே இட –
அத்தாலே சீறி –
முலை ஏதும் வேண்டேன்  என்று ஓடி –
நீ தருகிற முலையும்-மற்றும் உண்டான அபூபாதிகளும் -வேண்டேன் என்று –
எனக்கு பிடி படாது கை கழிய ஓடி –
நான் பின் தொடர்ந்த அளவில் எனக்கு தரிப்பாக –

நின் காதில் கடிப்பை பறித்து எறிந்திட்டு –
உன் காதில் இட்ட கடிப்புகளை க்ரோதம் தோற்ற பிடுங்கி –
என் முன்னே எறிந்து பொகட்டு-

அவ்வளவிலே இந்திரன் பசிக் கோபத்தாலே வர்ஷிப்பிக்க –
அதில் ரஷ்ய வர்க்கம் நோவு படாதபடி -மலையை எடுத்து -முன்பு ரஷகம் என்று சொன்ன
கோவர்த்தன கிரி தன்னையே குடையாக எடுத்து –

மகிழ்ந்து –
மலையை சுமந்து கொடு நிற்கிற அளவில் -சற்றும் இளைப்பு இன்றிக்கே –
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணம்  பண்ணப் பெற்றோம் -என்று உகந்து –

கன் மாரி காத்து –
அந்த கல் வர்ஷத்தில் ஒரு பசு மேலே  ஆதல் -ஒரு இடையன் மேலே ஆதல் –
ஒரு துளி விழாதபடி ரஷித்து-

பசு நிரை மேய்ததாய் –
இன வாநிரை பாடி அங்கே ஒடுங்க-( திருவாய் -7-4-) -என்கிறபடியே –
மலை பசு மேய்க்கிற இடம் தன்னில்
சென்று ஏங்கும் ஒக்க கவிகையாலே -பசுக்களை இடையர் மேய்க்கும்படி பண்ணினவனே-

சிலை ஓன்று இறுத்தாய் –
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளுக்கு சுல்கமாக விட்டதாய் -ஒருவரால் பேர்க்க எடுக்க
ஒண்ணாதபடி -அத்வீதியமாய் இருந்துள்ள -ரவ்த்ரமான வில்லை இறுத்தவனே
(வில் விழா –அந்த வில் -ஓன்று -அத்விதீயம் இல்லையே ஆகையால் இங்கு இந்த வியாக்யானம் )

திரிவிக்ரமா –
இந்திரன் இழந்த ராஜ்யத்தை மீட்டுக் கொடுக்கைக்காக -எல்லை நடப்பாரைப் போலே
திருவடிகளால் -சர்வ லோகத்தையும் அளந்தவனே –

திரு ஆயர்பாடிப் பிரானே –
திரு ஆய்ப்பாடியில் உள்ள ஜனங்களுக்கு சர்வ பிரகாரத்தாலும்
உபகாரன் ஆனவனே –
(குடை பிடித்த ஒன்றை கீழே சொல்லி –
இங்கு மற்ற ஸர்வ பிரகார ரக்ஷணம் )

இப்படி எல்லாருக்கும் உபகாரன் ஆன-நீ –
என்னுடைய அபேஷிதமும் செய்ய வேணும்  காண் என்று –
முன்பு பறித்து எறிந்த கடிப்புகளை இடுவதாக உத்யோகிக்க –
அவன் அதுக்கு இசையாது ஒழிய –

தலை நிலா இத்யாதி –
தலை செவ்வே நில்லாத இளம் பருவத்திலே உன்னுடைய காதுகளைப்
பெருக்காதே -விட்டு இட்டு வைத்த என்னுடைய குற்றம் அன்றோ –
உன்னை வெறுக்கிறது என் என்று தன் செய்தி தாழ்வை சொல்லி நோவு படுகிறாள் –

——————————————–

என் குற்றமே என்று சொலவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டி இற்றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்–
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி இட்டு சொல்லுகேன் மெய்யே -2 3-8 – –

பதவுரை-

(நான் இப்போது உன் சொல்லைக் கோளமலிருப்பது)
என் குற்றமே என்று–‘என்னுடைய குற்றமே யாகும்’ என்று
சொல்லவும் வேண்டா காண்–நீ சொல்லுதலும் வேண்டியதில்லை காண்:
(ஏனெனில்;)
நான் மண் உண்டேன் ஆக–நான் மண் ணுண்டதாகச் சொல்லி
என்னை–(மண் திண்ணாத) என்னை
பிடித்தும்–பிடித்துக் கொண்டும்
அன்பு உற்று–அன்பை ஏறிட்டுக் கொண்டு (அன்புடையவன் போல)
நோக்கி–(என் வாயைப்) பார்த்து
அடித்தும்–(என்னை) அடித்தும்
அனைவர்க்கும்–எல்லார்க்கும்
காட்டிற்றிலையே–காட்டின தில்லையோ?
(என்று கண்ணன் சொல்ல அதற்கு யசோதை)
வல் புற்று அரவின்–வலிய புற்றில் வஸிக்கின்ற பாம்புக்கு
பகை–விரோதியான கருடனை
கொடி–கொடியாக வுடைய
வாமந நம்பி–வாமந மூ­ர்த்தியே!
(இப்படி நீ ஒன்று சொல்ல நானொன்று சொல்வதாகப் போது போக்கிக் கொண்டிருந்தால்)
உன் காதுகள் தூரும்–உன்னுடைய (குத்தின) காதுகள் தூர்ந்து விடும்;
(உன்னை யடுத்தவர்கள்)
உற்றன–அடைந்தனவான
துன்பு எல்லாம்–துன்பங்களை யெல்லாம்
தீர்ப்பாய்–போக்குமவனே!
பிரானே–உபகாரகனே!
திரி இட்டு–(உன் காதில்) திரியை யிட்டு
மெய்யே சொல்லுகேன்–(உன்னை யடிக்க மாட்டேனென்று நீ நம்பும் படியான) சபதத்தைச் சொல்லுவேன்
(என்கிறாள். )

செல்லுகேன் -என்ற பாடம் ஆன போது –
உன் காதில் திரியை இட்டு விட்டு மெய்யே
கடக்கப் போய் விடுகிறேன் -என்று பொருளாகக் கடவது

என் குற்றம் இத்யாதி –
நீ உன் குற்றம் சொல்லி வெறுக்கிறது -நான் உன் சொல்லிற்று செய்திலன் என்று –
என் குற்றத்தை நினைத்தன்றோ -என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் -என்ன –
உன் குற்றம் இல்லையோ -என்ன –

உன்னை நான் என் செய்தேன் -என்ன –

என்னை நான் மண் உண்டேனாக –
மண் உண்ணாத என்னை
நான் மண் உண்டேனாக நினைத்து –

அன்புற்று நோக்கி –
ஸ்நேஹிதிகளைப் போலே -என்னுடைய வாயிலும் கையிலும் மண் சுவடு உண்டோ என்று பார்த்து –

அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்று இலையோ –
சுவடு கண்டாரைப் போலே என்னை பிடித்தும் –
அவ்வளவும் அன்றிக்கே –
அடித்தும் –
பாரிகோள் இவன் மண் தின்னும்படி -என்று எல்லோர்க்கும்
காட்டிற்று இலையோ -என்ன

கஸ்மா ன்ம்ருத மதாந் தாத்மன் பவான் பஷிதவான் ரஹ
வதந்தி தாவ காஹ்யேத குமாராஸ்தே அக்ரஜோப்யயம் நாஹம் பஷித வா நம்ப
ஸர்வேம் இத்யாபி ஸம் ஸிந யதி ஸத்ய கிரஸ் தர்ஹி சமஷம் பஸ்யமே முகம் -என்றது அனுசந்தேயம்

வன் புற்று அரவின் பகைக் கொடி வாமன நம்பீ
வலிய புற்றிலே  பாதக பீதியாலே கிடக்கும் பாம்புக்கு -பகையான கருடனை த்வஜமாக உடையவனை –
கொடும் கோளால் நிலம் கொண்ட வாமனான முதலியானவனே-

இத்தால்
திரு வனந்த ஆழ்வானை படுக்கையாக கொண்டு –
பெரிய திருவடியை த்வஜமாக கொண்டு இருப்பான் ஒருவன் என்கையாலே –
லோகத்திலே ஒன்றுக்கு ஓன்று சேராதாய் உள்ளவற்றை சேர்த்து நடத்த வல்லனுமாய்-
(வெல்லும் வ்ருத்த விபூதி நாயகன் அன்றோ இவன் )
க்ரூரமாக செய்தவற்றை ந்யாயமாக்கவும் வல்லவன் அன்றோ -என்கை

உன் காதுகள் தூரும்-
இப்படி நீ ஓன்று சொல்ல –
நான் ஓன்று சொல்லிப் போது போக்கி இருந்தால்
உன்னுடைய காதுகள் தூரும் காண் –

துன்புற்றவன எல்லாம் தீர்ப்பாய் பிரானே –
ஆஸ்ரிதரனாவர்கள் துக்கப்படும் அவை எல்லாம்
போக்கும் உபகாரகன்  ஆனவனே -என்ன –

நீ என்னை ஸ்தோத்ரம் பண்ண வேண்டா –
இனி முன் போல் பிடிக்குதல் அடிக்குதல்  செய்யேன் -என்று மெய்யாக ஒரு வார்த்தை சொல்லு –
நான் திரி இடுகைக்கு இசையும்படி என்ன –

திரி இட்டுச் சொல்லுகேன் மெய்யே –
திரியை இட்டு விட்டவாறே பின்னை மெய்யே சொல்லக் கடவேன் -என்கிறாள் –

————————————————–

மெய்யென்று சொல்லுவார் சொல்லைக்  கருதி தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக் காணவே கட்டிற்று இலையே
செய்தன சொல்லி சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன் காது தூரும்
கையில் திரியை இடு கிடாய் இந்நின்ற காரிகையார் சிரியாமே -2 3-9 – –

பதவுரை

சொல்லுவார் சொல்லை–சொன்னார் சொன்ன பேச்சுக்களை யெல்லாம்
மெய் என்று கருதி–(நீ) மெய்யென்றெண்ணி
வெண்ணெயை–வெண்ணெயை
தொடுப்பு உண்டாய்–களவு கண்டு உண்டாய்
என்று–என்று (என் மீது பழி சுமத்தி)
கையை பிடித்து–(என்) கையைப் பிடித்து
காண்–(பலரும்) கண்டு பரிஹஸிக்கும்படி
கரை உரலோடு–விளிம்பிலே வேலை செய்திருக்கிற உரலில்
என்னை–(ஒன்றும் திருடாத) என்னை
கட்டிற்றிலையே–நீ கட்ட வில்லையா?
(என்று கண்ணன் யசோதை மேல் குற்றஞ்சாட்டிச் சிரித்து நிற்க)
(அதற்கு யசோதை சொல்லுகிறாள்):
சிரிதரா–ஸ்ரீதரனே!
செய்தன–(நான் முன்பு) செய்தவற்றை
சொல்லி–சொல்லிக் கொண்டு
சிரித்து–புன் சிரிப்புச் செய்து
அங்கு–அங்கே (தூரத்தில்)
இருக்கில்–(பொழுது போக்கிக் கொண்டு) இருந்தால்
உன் காது–உன் காதுகள்
தூரும்–தூர்ந்து விடும்;
இ நின்ற காரிகையார் சிரியாமே–(உன் முன்னே) நிற்கிற இந்தப் பெண்கள் சிரியாதபடி
கையில் திரியை–(என்) கையிலுள்ள திரியை
இடுகிடாய்–இட்டுக் கொள்வாயாக.

மெய் இத்யாதி –
திரி இட்டு சொல்லுகேன்  மெய் -என்றவாறே –

உன் வார்த்தை விஸ்வசிக்க போகாது –
சொன்னார் சொன்ன வார்த்தை கேட்டு -என்னை சிஷிப்பாள் ஒருத்தி
அன்றோ -என்ன –

நான் அப்படி செய்தது உண்டோ -என்ன –

மெய்யென்று சொல்லுவார் சொல்லை  கருதி –
இவன் வெண்ணெய் களவு கண்டான் -என்று சொல்லுவார் சொல்லும் வார்த்தையை மெய்யென்று புத்தி பண்ணி –
தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று -வெண்ணெயை களவிலே ஜீவித்தாய் என்று-தொடுப்பு -களவு

கையை பிடித்து இத்யாதி –
என் கையை பிடித்துக் கொண்டு -பாரமான கரை உரலோடே-எல்லாரும்
காணும் படி என்னை கட்டிற்று இலையோ என்று சொல்லி மந்த ஸ்மிதம் செய்து இருக்க –
கரை உரலாவது -விளிம்பு சுற்றணையான  உரல்

செய்தன இத்யாதி-
இப்படி நான் செய்த குற்றங்களை சொல்லி -ஸ்மிதம் பண்ணிக் கொண்டு
என் பக்கல் வாராதே போது போக்கி -நீ அங்கே இருக்கில்

ஸ்ரீதரனே-உன் காது தூரும் காண் –
அவர்களுக்கு ஆகவாகிலும் வா என்ன –

அவ்வளவிலும் அவன் வாராமையாலே –

கையில் திரியை இத்யாதி –
நீ விரும்ப தக்க அழகை உடையார் -உன் பக்கல் ப்ராவண்யத்தால் –
உன்னை விட்டு போக மாட்டாமல் சந்நிஹிதைகளாய் நிற்கிற இப் பெண்கள் ஆனவர்கள்-
கூழைக் காது சுணைக் காது – என்றால் போலே சொல்லி சிரியாதபடி
உன் காது பெருக்கும்படி என் கையில் திரியை இடு கிடாய் என்கிறாள்

——————————————————-

காரிகையாருக்கும் உனக்கும் இழுக்கு உற்று என் காதுகள் வீங்கி எரியில்
தாரியாது ஆகில்  தலை நொந்திடும் என்று விட்டிட்டேன் குற்றமே அன்றே
சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காது பெருக்கி திரியவும் காண்டி
ஏர்விடை செற்று இளம் கன்று எறிந்திட்ட விருடீகேசா என் தன் கண்ணே -2-3 -10- –

பதவுரை

காதுகள்–(என்னுடைய) காதுகள்
வீங்கி–வீங்கிப் போய்
எரியில்–எரிச்சலெடுத்தால்,
காரிகையார்க்கும்–(பரிஹஸிக்கிற,) பெண்களுக்கும்
உனக்கும்–(என் காதில் திரியிற் நிற்கிற) உனக்கும்
உற்ற(து)–நேரிட்டதான
இழுக்கு–சேதம்
என்–ஏதேனுமுண்டோ?
(என்று கண்ணன் சொல்ல, யசோதை சொல்லுகிறாள்)
(நீ இன்னும் இளம் பருவத்தில் இருந்த போது)
தாரியாது ஆகில்–‘(திரியை இடுவது) பொறாமற்போனால்
தலை நொந்திடும் என்று–(குழந்தைக்குத்) தலை நோய் உண்டாய் விடுமே’ என்று நினைத்து
விட்டிட்டேன்–(முன்னமே காது குத்தாமல்) இருந்து விட்டேன்
அன்பினால் அப்படி விட்டிருந்தது)
குற்றமே அன்றே–(என்னுடைய) குற்றமேயாமல்லவா?
ஏர் விடை–அழகிய ரிஷபத்தின் வடிவு கொண்டு வந்த அரிஷ்டாஸுரனை
செற்று–அழித்து
இள கன்று–சிறிய கன்றின் வடிவான் வந்த வத்ஸாஸுரனை
எறிந்திட்ட–(குணிலாகக் கொண்டு விளா மரத்தின் மேல்) வீசிய
இருடீகேசர்–ஹ்ருஷீகேசனே’
என்றன் கண்ணே–எனக்குக் கண் போன்றவனே’
சேரியில்–இவ் விடைச் சேரியில்
பிள்ளைகள் எல்லாரும்–எல்லாப் பிள்ளைகளும்
காது பெருக்கி–காதைப் பெருக்கிக் கொண்டு
திரியவும்–திரியா நிற்பதையும்
காண்டி–நீ காணா நின்றாயன்றோ’

காரிகையார் இத்யாதி –
கையிலே திரியை இடு கிடாய் -என்றவாறே –

சிரிக்கிற காரிகையார்க்கும் -திரி இட வந்து நிற்கும் உனக்கும் -ஏதேனும் சேதம் உண்டோ –
என்னுடைய காதுகள்;வீங்கி எரியுமாகில் -என்று அவன் சொல்லி -கைக்கு எட்டாதபடி நிற்க –

தாரியாதாகில் இத்யாதி –
இளம் பருவத்திலே காதை பெருக்கலாய் இருக்க –
திரி முதலானவற்றை இடுகிறது பொறாதாகில்-
உன் தலையிலே நோக்காடு உண்டாம் என்று -அப்போது செய்யாமல்
விட்டு வைத்த என்னுடைய குற்றமே அன்றோ -என்ன –
தன்னை வெறுத்து -பின்னையும் விடாதே

(லோகத்தில் இளம் பிள்ளைகளுக்கு
காது குத்தினால் சிலருக்கு நோம்
சிலருக்கு குத்தா விடில் நோம் -அரும்பதம் )

சேரி இத்யாதி –
இவ்வூரில் உன் திறத்தின் பிள்ளைகள் எல்லாரும் காது பெருக்கி திரியவும் காணா
நின்றாய் இறே என்றவாறே –
அவன் அனுமதி தோற்ற நிற்க –

ஏர் விடை இத்யாதி –
வம்பு அவிழ் கானத்து மால் விடை -என்கிறபடியே -காட்டுக்குள்ளே உன்னை நலிவதாக எதிர்ந்து வந்த –
அரிஷ்ட நேமியாகிற ரிஷபத்தை நிரசித்து –
கன்றுகள் மேய்கிற இடத்தில் – இளம் கன்றான வடிவை கொண்டு வந்து -ஓர் அசுரன் நிற்க -அந்த கன்றை எடுத்து
விளவாய் நின்ற அசுரன் மேலே எறிந்து -இரண்டு தலையும் -முடித்து –
அவற்றின் கையிலே அகப்படாதே –
உன்னை நோக்கித் தந்தவனாய்-உன்னைக் கண்டவர்களுடைய சர்வ இந்திரியங்களையும் உன் வசமாக்கிக்
கொள்ளுகையாலே ஹிருஷீகேசன் என்னும் திரு நாமத்தை உடையவனாய் –
எனக்கு திருஷ்டி பூதனானவனே என்று உகந்து சொல்லுகிறாள் –
(கண்ணாவான் மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் அவனே
இவருக்கு எல்லா அவஸ்தையிலும் கண்ணாவான் அவனே காணும் )

—————————————

கண்ணைக் குளிரக் கலந்து எங்கு நோக்கிக் கடி கமழ் பூம் குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்று நோவாமே காதுக்கு இடுவன்
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பத்ம நாபா இங்கே வாராய் -2 3-11 – –

பதவுரை

குளிர–மனங்குளிரும்படி
கண்ணை-(உன்) கண்ணை
(இடைப் பெண்களுடைய கண்களோடு)
கலந்து–சேர்த்து,
எங்கும்–(அவர்களுடைய) வடிவம் முழுவதும்
நோக்கி–பார்த்து,
கடி கமழ்–வாஸனை வீசுகின்ற
பூ–புஷ்பங்களணிந்த
குழலார்கள்–கூந்தலை யுடைய அப்பெண்களினுடைய
எண்ணத்துள்–மநஸ்ஸினுள்ளே
என்றும் இருந்து–எப்போது மிருந்து கொண்டு
தித்திக்கும்–ரஸிக்கின்ற
பெருமானே–பெருமையை யுடையவனே1
எங்கள் அமுதே–எங்களுக்கு அமுருதம் போன்றவனே’
உண்ண– தின்பதற்கு
கனிகள்–(நாவல் முதலிய) பழங்களை
தருவன்–கொடுப்பேன்
கடிப்பு–காதணியை
ஒன்றும் நோவாமே–சிறிதும் நோவாதபடி
காதுக்கு–(உன்னுடைய) காதிலே
இடுவன்–இடுவேன்
சகடம்–(அஸுராவிஷ்டமாகா) சகடத்தை
பண்ணை கிழிய உதைத்திட்ட–கட்டுக் குலையும்படி உதைத்தருளின
பத்மநாபா–பத்மநாபனே’
இங்கே வாராய் –

கண்ணை இத்யாதி –
இள வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் அவன் ஆகையாலே –
கண்ணைக் குளிரக் கலந்து –
உன்னுடைய கண்ணை அவர்களுடைய கண்களோடு குளிரக் கலந்து –
இத்தால் -கண் கலவியை சொன்னபடி –

எங்கும் நோக்கி –
அவர்கள் வடிவை சமுதாயேன பார்த்து

கடி கமழ் பூம் குழலார்கள் –
பரிமள பிரசுரமான பூக்களாலே அலங்ருதமாய் இருந்துள்ள குழலை உடையவர்களுடைய –

எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பிரானே –
நெஞ்சுக்கு உள்ளே சர்வ காலமும் இருந்து -ரசிக்கும் பெரியோனே –

அன்றிக்கே –
கண்ணை -என்கிற இடத்தில் –
ஐகாரத்தை அவ்யயமாக்கி –
கடி கமழ் பூம் குழலானவர்கள் தங்கள் கண் குளிரும்படியாக
உன்னுடைய அவயவ சோபையை கலக்கக் கொண்டு
எங்கும் ஒக்க பார்த்து –
உன்னுடைய கலவியின் பிரகாரங்களை எண்ண-
அவர்களுடைய அபிமத அனுரூபமான எண்ணம் கடவாமல் -அதுக்குள்ளே என்றும் ஒக்க இருந்து –
அவர்களுக்கு நிரதிசய போக்கினாய் நிற்கும் பெருமையை உடையவனே -என்னவுமாம் –

எங்கள் அமுதே –
எங்களுடைய நிரதிசய போக்யனுமாய் -சத்தா தாரகனுமாய் இருக்கிறவனே –
உனக்கு அபிமதைகளான அவர்களுக்கும் –
பரிவரான  எங்களுக்கும் உகப்பாம்படி –
உன் காது பெருக்குகைக்கு வா -என்ன-

நான் வருகிறேன் -நீ எனக்கு என்னம் தருவாய் என்ன –

உண்ணக்  கனிகள் தருவன் –
நீ விரும்பி அமுது செய்யும் படி உனக்கு பழங்கள் தருவேன் -என்ன

ஆனாலும் கடிப்பு இடப் புகுந்தால் காது நோவுமே என்ன –

கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன் –
சற்றும் நோவு வாராதபடி உன் காதுகளுக்கு கடிப்பு
இடுவேன் என்றவாறே

உடன் பட்டமை தோற்றா நிற்க –

பண்ணை இத்யாதி –
கண் வளர்ந்து அருளுகிற தனி இடத்திலே -காவல் வைத்த
சகடம் அசூர விசிஷ்டமாய் உன்னை நலிய வர -அத்தை கோப்பு குலைய உதைத்துப்
பொகட்டு ஜகத்துக்கு வேர்ப் பற்றான உன்னை நோக்கித் தந்தவன் அல்லையோ –

இங்கனே வாராய்
என்று புகழ்ந்து கொண்டு அழைக்கிறாள் –

———————————————————–

வா என்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்கு உற்றேன் காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளை
சாவப் பாலுண்டு சகடு இறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் -2 3-12 – –

பதவுரை
(கண்ணன் யசோதையைப் பார்த்து)
வா என்று சொல்லி-‘(நான் காதில் திரியிட இங்கே) வருவாயாக‘ என்று சொல்லி
என் கையை பிடித்து–என் கையைப் பிடித்துக் கொண்டு
காதில்–காதிலே
நோவ–நோம்படி
கடிப்பை–காதணியை
இங்கு–இப்போது
வலியவே–பலாத்காரமாக
தரிக்கில்–இட்டால்
உனக்கு–உனக்கு
இழுக்கு உற்ற(து) என்–சேதமுண்டானதென்ன?
காதுகள்–(என்) காதுகள்
நொந்திடும்–நோவெடுக்கும்
கில்லேன்–(அதைப் பொறுக்க வல்ல) வல்லமை யுடையேனல்லேன்
(என்று மறுத்துச் சொல்ல – யசோதை சொல்லுகிறாள்-)
நம்பீ–பூர்ணனே’
நாவல் பழம்–(உனக்கு இஷ்டமான) நாவற்பழங்களை
கொண்டு வைத்தேன்–கொண்டு வைத்திருக்கிறேன்
இவை–இவற்றை
காணாய்–பார்ப்பாயாக
முன்–முன்பு
வஞ்சம் மகள்–வஞ்சனை யுள்ள பூதனையானவள்
சாவ–மாளும்படி
பால்–(அவளது) முலைப் பாலை
உண்டு,–பாநம் பண்ணி,
சகடு–சகடாஸுரன்
இற–முறியும்படி
பாய்ந்திட்ட–(கால்களைத்) தூக்கி யுதைத்த
தாமோதரா’ இங்கே வாராய் –

வா இத்யாதி –
பத்ம நாபா இங்கே வாராய் என்றவாறே –

வா என்று சொல்லி என் கையைப் பிடித்து –
என்னை வா என்று சொல்லி அழைத்து –
நான் வரக் கொள்ள –
என் கையை உறைக்கப் பிடித்துக் கொண்டு –

வலியவே காதில் கடிப்பை நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்கு உற்றேன் –
பலாத்காரேன என் காதில் – கடிப்பை நோம்படி திரிகி இடுவுதியாகில்
உனக்கு இங்கு சேதம் ஆவது உண்டோ –
என் காதுகள் நோம் காண்-வர மாட்டேன் என்ன –

நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ –
இவன் வருகைக்காக -நீ உகக்கும் நாவற் பழம் கொண்டு வைத்தேன் –
இவற்றை பாராய் நம்பீ -என்று காட்ட –
அத்தைக் கண்டவாறே -வருவாரைப் போலே நிற்க –

முன் இத்யாதி –
முன்பு தன் வடிவை மறைத்து -தாய் வடிவு கொண்டு -வஞ்சகையாய் வந்த பேய்ச்சியை
சாம் படியாக முலைப் பாலை உண்டு –
நலிவதாக மேலிட்டு வந்த சகடத்தை முறிய உதைத்து பொகட்டு –
அவ் விரோதிகள் கையில் அகப்படாமல் -உன்னை நோக்கித் தந்தவனாய் –

அந்த சக்திமானாய் இருக்கச் செய்தே –
அசக்தரைப் போலே என் கையிலே பிடி உண்டு –
நான் கட்டின கயற்றின் தழும்பு உன் வயற்றிலே கிடைக்கையாலே தாமோதரன் என்று பேராம்படி
என் கையாலே கட்டுண்டு நின்ற நீர்மையை உடையவன் அன்றோ –

இங்கே வாராய் என்று
உகந்து அழைக்கிறாள் –

——————————————

அச்யுத அனந்த கோவிந்த -இவற்றுக்கு இந்த பாசுரம்

அவதாரிகை –
நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

வார் காது தாழப் பெருக்கி அமைத்து மகரக் குழை இட வேண்டிச்
சீரால் அசோதை  திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – 2-3 13- –

பதவுரை

அசோதை–யசேதையானவள்
வார்–(ஸ்வபாவமாகவே) நீண்டிருக்கிற
காது–காதுகளை
தாழ–தொங்கும்படி
பெருக்கி–வளர்த்து
அமைத்து–ஓரளவிலே நிற்கும்படி செய்து
மகரம் குழை இட வேண்டி–மகர குண்டங்களை இட விரும்பி
திருமாலை–ஸ்ரீய பதியான கண்ணனை
சீரால் சொன்ன–சிறப்புக் குறையாதபடி அழைத்த
சொல்–சொற்கள்
சிந்தையுள்–(தம்முடைய) மநஸ்ஸிலே
நின்று–நிலையாகப் பொருந்தி
திகழ–விளங்க,
(அச் சொற்களை),
பார் ஆர் தொல் புகழான்–பூமியில் நிரம்பிய பழமையான-அச்யுத அனந்த கோவிந்த -இவற்றுக்கு இந்த பாசுரம் – யசஸ்ஸை யுடையவரும்
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
மன்னன்–நிர்வாஹகருமான’ பெரியாழ்வார்
பன்னிரு நாமத்தால் சொன்ன–த்வாதச நாமங்களோடுஞ் சேர்த்துச் சொல்லி யழைத்த
ஆராத–(ஓத ஓத) த்ருப்தி பிறவாத
அந்தாதி–அந்தாதித் தொடையினாலாகிய
பன்னிரண்டும்–பன்னிரண்டு பாட்டுக்களையும்
வல்லார்–ஓத வல்லவர்கள்
அச்சுதனுக்கு–எம்பெருமானுக்கு
அடியார்–அடிமை செய்யப் பெறுவர்-அந்தரங்க கிங்கராவார் –

வார் இத்யாதி –
ஸ்வபாவமே ஒழுகு நீண்ட காது வேண்டும் அளவும்  தாழப் பெருக்கி –
மட்டிலே அமைத்து -மகரக் குழை சாத்த வேண்டும் என்று ஆசைப் பட்டு-

சீரால் இத்யாதி –
சீர்மை குன்றாதபடி யசோதை பிராட்டி –
ஸ்ரீ யபதியானவனைக் குறித்து சொன்ன சொலவுகளானவை

சிந்தையுள் நின்று திகழ –
தம்முடைய திரு உள்ளத்தின் உள்ளே சர்வ காலமும் நின்று விளங்க –

பார் இத்யாதி –
பூமியில் உள்ளாருடைய ஹ்ருதயங்கள் நிறையும்படி –
பழையதான புகழை உடையராய் –
திருப் புதுவைக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார்

பன்னிரு நாமம் இத்யாதி –
வைஷ்ணவ சிஹ்னமான திரு த்வாதச நாமங்களோடே அருளிச் செய்ததாய் –
அத ஏவ
அனுபவிதாக்களுக்கு ஒரு காலும் திருப்தி பிறவாதே –
மேன் மேலும் அபேஷிக்கும்படி-நிரதிசய போக்யமாய் இருக்கிற –
அந்தாதியான இவை பன்னிரண்டு பாட்டையும் –
சாபிப்ராயமாக வல்லவர்கள்

அச்சுதனுக்கு அடியாரே –
ஆஸ்ரிதரை ஒருகாலும் நழுவ விடாத ஸ்வபாவன் ஆனவனுக்கு
அநவரத கிஞ்சித்கார பரராகப் பெறுவர்-

————————————————–

கேசவன் தமர் பிரவேசம் –

ஆடியாடியிலே -வாடி வாடும் -என்கையாலே ஒரு நீர்ச் சாவியாய் வாடினபடி சொல்லிற்று –
அந்த ஒரு நீர்ச் சாவியானது தீர காரார் கருமுகில் கலந்து வர்ஷித்த படி சொல்லிற்று –அந்தாமத்து அன்பில் –
அப்படி வர்ஷித்த படியாலே –ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்-என்று வெள்ளமிட்டு பெருகின படி சொல்லிற்று வைகுந்தா மணி வண்ணனில்
எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் மா சரிது பெற்று -என்கையாலே அவ்வெள்ளம் இரு கரையும் புரண்ட படி சொல்லுகிறது கேசவன் தமரில்-

இவர் ஆடியாடியில் பட்ட ஆர்த்தி தீர வந்து கலந்த படி சொல்லிற்று அந்தாமத் தன்பு
அக்கலவியால் பிறந்த ப்ரீதி அவனதானபடி சொல்லிற்று -வைகுண்ட மணி வண்ணன் –
அந்த ப்ரீதி தான் ஆழ்வார் ஒருவர் அளவிலும் அன்றிக்கே நம்மோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும்
வெள்ளமிட்டுப் பெருகின படியைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில் -(வைகுந்த மணி வண்ணா -அதி சங்கை போக்கி -இதில் -எமர் கீழ் மேல் ஏழு பிறப்பும் –அதி சங்கா நிவர்த்தகம் அங்கு-இங்கு -ஆழ்வார் சம்பந்திகள் அளவும் –
உன்னை நான் பிடித்தேன் சிக்கனவே -உன்னை எங்கனம் – விடுவேனோ -முடிவில் இதுவே லஷ்யம் அங்கு –உபக்ரமம் அப்பியாசம் உப சம்ஹாரம் –
இங்கு -முதல் – எமர் கேசவன் தமர் ஆனார்கள் –மேவும் தன்மையன் -ஆக்கினான் -பகவத் வ்யாமோஹ பரம் இங்கு)

சர்வேஸ்வரன் ஆழ்வாரோடு வந்து சம்ச்லேஷித்து அத்தாலே பிறந்த ப்ரீதி தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே தம்மோடு
பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் பெருகின படியை –மா சதிர் இது பெற்று -கண்டு -இது இவன் என் பக்கல்
பண்ணின பஷபாத அதிசயம் இறே-என்று இனியராய் தம்மை விஷயீகரிக்கைக்கு ஈடான குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து
அவற்றுக்கு வாசகமான திருத் த்வாதச நாமத்தாலே அவனைப் பேசி அனுபவிக்கிறார்
சர்வேஸ்வரன் ஒருவனை விஷயீகரித்தால்-அது பின்னை அவன் அளவிலே நில்லாது இறே –

மரணாந்தாநி வைராணி -ருஷிகள் குடியிருப்பை அழித்து -மைதிலியைப் பிரித்து நம் உயிர் நிலையிலே நலிந்தால் போலே
ஸ்ரீ ஜடாயு மகாராஜரை நலிந்து -இவை எல்லாம் செய்ய மாட்டானே இனி இவன்
நிர்வ்ருத்தம் ந பிரயோஜனம் –இவன் ஜீவிக்கிற நாளிலே நாம் செய்யும் நன்மை இவன் விலக்காது ஒழிவது காண் என்று இருந்தோம்
-அது அந்நாளிலே பெற்றிலோம் -நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம் இறே
க்ரியாதாம் அஸ்ய சம்ஸ்கார -இவன் நான் செய்யும் நன்மை விலக்காதனான அளவு பிறந்த இன்றும் இழக்க வேணுமோ -வேண்டுவன செய்யப் பாரும்
மமாப்யேஷ யதா தவ —யுத்த -114-99–நீர் இறாய்த்து இருந்தீர் ஆகில் குடல் துடக்குடையாரிலே ஒருவன் செய்யும் அத்தனை அன்றோ (புதல்வரால் பொலிந்தார் உந்தை -என்று அன்றோ ஸ்ரீ விபீஷணனை பார்த்து பெருமாள் வார்த்தை -குடல் துடக்கு -சாமான்ய சம்பந்தம் -)
நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய நீர் பின்னைக் கடக்க நில்லீர்-என்றார் இறே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கல் ஓரம் ராவணன் அளவும் சென்றது இறே

மகாரஜர்க்கு சத்ரு என்று வாலியை நிரசித்து வைத்து மகா ராஜர் கண்ண நீர் பொறுக்க மாட்டாதே
-சஞ்ஜாத பாஷ்ப -கிஷ்கிந்தா -23-24-என்று தாமும் கண்ண நீர் விழ விட்டார் இறே
தர்மே மனச்ச தே பத்ர –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-27-ஸ்ரீ மாலா காரர் பக்கலிலே விஷயீ காரம் அவர் சந்தானத்து அளவும் சென்றது இறே (போகங்கள் இங்கும் ஸ்வர்க்கத்திலும் -திவ்ய லோகம் அடைவாய் -தர்மத்தில் உன் உள்ளம் நிற்கும் -சந்ததிகளுக்கு தீர்க்க ஆயுள் -ஸ்வர்க்கம் கிட்டும் -ஸூர்யன் இருக்கும் வரை இவை இவை நடக்கும் -என்று ப்ரஹ்மாதிகள் போலே அன்றோ ப்ரீதியால் கண்ணன் மாலா காரருக்கு அருளினான்  )
ஸ்ரீ கண்டா கர்ணன் பக்கல் பண்ணின விஷயீ காரம் அவன் தம்பி யளவும் சென்று -நீ அவனுக்கு நல்லையாகில் அவன்
முன்னாகப் போ -என்று அருளிச் செய்தான் இறே-(ஸ்வர்க்கமும் அடைந்து இந்திரன் போலே அனுபவித்து -சாயுஜ்யம் அடைவாய் -இவன் தம்பிக்கு இவன் போவதற்கு முன் நீயும் அடைவாய் )
குபேரன் கண்டா கர்ணனுக்கு திரு அஷ்டாஷர மந்த்ரமும் த்வாதச அஷர மந்தரத்தையும் உபதேசித்து த்வாரகை சென்று
ஸ்ரீ கிருஷ்ணனை ஆஸ்ரயிக்க உபதேசித்தார் –

எம்பார் இத் திருவாய் மொழியை அருளிச் செய்யப் புக்கால் -ஸ்ரீ வைஷ்ணவன் ஆனேன் என்கிறார் என்பாராம்
வைஷ்ணத்வ சிஹ்னம் இறே திரு த்வாதச திரு நாமம் –
ஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும் -எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும்- இரண்டாயிற்று நெடுமாற்கு அடிமை –
அதில் எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத் திருவாய் மொழி –

————————————————————–

அவதாரிகை –

சம்பந்தி சம்பந்திகள் பக்கலிலும் எம்பெருமான் அபிநிவிஷ்டனான படியைக் கண்டு
இது எல்லாம் என் பக்கல் உண்டான விஷயீகார அதிசயம் இறே -என்று ஹ்ருஷ்டராகிறார் –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

நாராயணனாலே – நிரதிசய வாத்சல்யத்தால் –எமர் எல்லாம் கேசவன் தமர் -அவன் தமர் இவர் எமரானால் தான் –ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ -வாழ்வு என் என்று கொண்டாடுகிறார்
ஏழு ஏழு -நம் அளவும் வர மீண்டும் மீண்டும் இத்தையே அனுசந்தானம் செய்ய வேண்டுமே-

கேசவன் தமர்
1-பிரசஸ்த கேசனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் -என்னுதல் –
2-விரோதி நிரசன சீலதையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
3-தஸ்மாத் கேசவ நாமவான் -என்கிறபடியே சர்வ நிர்வாஹனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
சர்வேஸ்வரன் உடையார் -என்றாயிற்று -ஆழ்வார் இவர்களை விரும்புகிறது-(1-ஸ்வரூபம் -ப்ரஹ்மாதிகளுக்கும் -நியாந்தா/ 2-ரூபம் -ஸுரி பெருமாள் -பிரசஸ்த கேச பாசம் உள்ளவன் / 3-குணம் -கிலேச நாசன் -கேசவா என்ன கெடும் இடராய எல்லாம் கெடுமே /4-சேஷ்டிதங்கள் கேசி ஹந்தா –நான்கையும் சொல்லும் கேசவ திரு நாமம் )
எமர் -என்று ஆழ்வாருடைய சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது
இத்தால் ஒரு வைஷ்ணவ அபிமானமே வேண்டுவது அவன் விஷயீகரிக்கைக்க் என்றபடி
கேசவன் தமர்
அவனுடைய அவயவ சௌந்த்ர்யத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
எமர் கீழ் மேல் ஏழேழு இறப்பும் கேசவன் தமரானார்கள் –
ஏகாஹம் அபி கௌந்தேய பூமிஸ் தமுதகம் குரு குலம் தாரயதே தாத சப்த சப்த ச சப்த ச –என்கிறபடியே தச பூர்வான் தசாபரான் ஆத்மா நஞ்ச —
மாசரிது பெற்று
1-விதி சூழ்ந்ததால் என்கிற ஆகஸ்மிக பகவத் கிருபை யாதல்
2-மாதவன் என்றதே கொண்டு என்கிற உக்தி மாத்ரத்தை யாதல்
3-தம் பெற்ற பேற்றை தம்மோடு சம்பந்தம் உடையாரும் பெறும்படியான பேற்றை பெற்று என்னுதல்
மா சரிது பெற்று
பெரும் சரிதுபெற்று -தடக்கை சதுரனைப் பெற்று என்றபடி
தந்தலையால் வந்ததாகில் இறே சாவதியாய் இருப்பது
இது பெற்று
காணக் காண அவன் சிரசா வஹிக்கிறபடி
நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
நம்மோடு சம்பந்தமுடையாரையும் அவன் இப்படி விஷயீ கரிக்கிறது நம்முடைய சம்பத்து இறே
நம்முடைய வாழ்வு –
ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்து
வாய்க்கின்றவா –
ஊற்று மாறாதே மேன்மேல் என பெருகி வருகிறபடி —ஏழ் படி கால் என்றது தான் ஓர் அளவு இல்லை –இன்று நம் அளவும் வரச் செல்லுகிறது இறே –
இப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது ஹேது என் என்னில்
ஈசன்-
வகுத்த ஸ்வாமி யாகையாலே
என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் –
கண் அழகாலே என்னை அனந்யார்ஹன் ஆக்கி தன வடிவழகை என்னை அனுபவிப்பித்தவன்
விண்ணோர் நாயகன் எம்பிரான் எம்மான் –
நித்ய ஸூ ரிகளைத் தோற்ப்பிக்குமா போலே -என்னை அவ்வடிவு அழகைக் காட்டித் தோற்ப்பித்து-என்னை அவ்வடிவு அழகை அனுபவிப்பித்த உபகாரகன் –
நாராயணனாலே –
தன் மேன்மையைப் பாரதே உகவாதாரையும் விட மாட்டாதபடி வத்சலனாய் உள்ளவனாலே சமிதை பாதி சாவித்திரி பாதியாக
வன்றிக்கே-அவனுடைய நிர்ஹேதுக கிருபையாலே –
திருக் கண்கள் அழகையும் திருமேனி அழகையும் -இரண்டையும் -காட்டி அருளியது காருண்யத்தாலே -என்றபடி
நாராயணனாலே -எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் -கேசவன் தமரானார்கள் -மா சரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா-(உபாயமாக நாராயணனை பற்றி )
நாராயணனாலே என்ற இடம் –மாசதிரினுடைய உபபாதனம் -நாராயணன் ஆகிற பெரும் பேற்றைப் பெற்று கேசவன் அடியார்கள் ஆனார்கள் என்றவாறு -(நாராயணனாலே -முதல் வேற்றுமை ஆக்கி ஆகிய – வாத்சல்யம் -மா சதிர் – கிருபை -ஆகிய பேறு)

—————————————————————————————

அவதாரிகை –

நாராயணனாலே என்று நாராயண சப்தம் பிரஸ்துதம் ஆயிற்றே -அதுக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக சப்தத்தை உபாதானம் பண்ணுகிறார்

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-

கீழ் யுக்தமான –நாராயண -அர்த்தம் சொல்லி –ஸூ விஷய பக்ஷபாதத்தை அருளிச் செய்கிறார் –
நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–நாரணன் -திரு நாமம் சொல்லி –எண் பெருக்கு அந்நலத்து ஒண் புகழ் ஈறிலா -வண் புகழ் நாரணன் -திண் கழல் சேரே -கீழே
வேதமயன்-அந்த நாரணன் சப்தத்தையே வேதங்கள் பிரதானமாக பிரதிபாதிக்கப்படும் —ப்ரஹ்மம் ஆத்மா சத் பொதுவான சொற்கள் –நாராயணனையே குறிக்கும் –
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை-த்ரிவித காரணமும் இவனே –
காரணம் -கிரியா ஹேது -தண்டம் சக்கரம் – கிரியை -சுழலுதல் –கருமம் -குடம் –அந்தர்யாமி -நிர்வாககன்-என்றபடி –
சீரணங்கு அமரர்-குணத்தால் உயர்ந்த திவ்யர் —ஸ்ரீ லஷ்மி -சீரணங்கு என்றுமாம் –
பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று-தேவர் முனிவர் மனுஷ்யர் -யாவரும் தொழுது ஏத்தும் படி
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே-எனக்கு பிரகாசித்த -ஸமஸ்த விபூதி நாதன் இவற்றை காட்டி பிரகாசிப்பித்து அருளிய உபகாரம் –
அமலன் ஆதி பிரான் -தானே அமலன் ஆதி என்று காட்டி அருளிய உபகாரகன் போலே
என்னை அநந்யார்ஹன் ஆக்கி அருளிய சேஷி -ஸ்ரீ யபதி-என்றவாறு –
கேசவன் நாராயணன் மாதவன் -ஸ்ரீ யபதி –மாதவன் பேர் சொல்வதே ஒத்தின் சுருக்கு –
வங்க கடல் கடைந்த –மாதவனை கேசவனை –நாராயணனே முதல் பாசுரம் -கேசவன் மூர்த்தி சொல்லி-அவனே -திருமாலே -கோதோ உபநிஷத்

நாரணன் –இதுக்கு அர்த்தம் என் என்னில்
முழு வேழ் உலகுக்கும் நாதன்
சர்வ ஸ்வாமி-
இவ்வர்த்தத்தில் பிரமாணம் என் என்னில்
வேதமயன்
நாராயண பரம் ப்ரஹ்ம இத்யாதிகளால் சர்வ ஸ்வாமி என்று ஓதப்படுகிறவன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன்
தன் விபூதியில் காரணமாயும் -கார்யமாயும் -உதகா ஹரணம் ஆகிற பலமாயும் வரக் கடவதான இவற்றுக்கு நியந்தாவாய் உள்ளான் –
க்ரியா சாதனம் -அதடியாக வரும் க்ரியை -தத் சாத்தியமான கார்யம் -இவற்றுக்கு நிர்வாஹகனாய் இருக்கும் என்றுமாம்-(காரணம் -மண் / கார்யம் -குடம் / கிரியை -தண்ணீர் கொண்டு வரும் பலன் -போலவே-பஞ்ச பூதங்கள் /அண்டாதிகள் /ஆத்மாக்கள் பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் பலனுக்காக- -)
காரணம்-செயல்பாடு -பலன் -என்றுமாம் (விசிஷ்ட ப்ரஹ்மம் -மூன்றுக்கும் -நிமித்த உபாதான சஹகாரி -ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டா ப்ரஹ்மம் -மண் மாறும் -/ சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் -நிமித்த -குயவன் / ஸ்தூல விசிஷ்ட சித் அசித் ப்ரஹ்மம் பலன் -ஞான சக்தாதி கல்யாண குண- விசிஷ்ட ப்ரஹ்மம் சஹகாரி-அபின்ன நிமித்த காரணம் ப்ரஹ்மம் –சதேவ சோம்ய- -ஏக மேவ அத்விதீயம் /)
எந்தை
எனக்கு ஜனகன் ஆனவன்
சீரணங்கு
ஸ்ரீ யான அணங்கு -என்று தெய்வப் பெண் என்றபடி -பெரிய பிராட்டியார்
அன்றியே
சீரணங்கு அமரர்
நித்ய ஸூரிகளுக்கு விசேஷணம் ஆகவுமாம்
சேஷத்வ அனுரூபமான ஆத்மா குணங்களை தரியா நிற்பாராய்-அப்ராக்ருத ஸ்வபாவரான நித்ய ஸூரிகள்
பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று வாரணத்தை மருப்பொசித்த பிரான்
இவ்வருகு உண்டான சம்சாரிகள் -இப்படி சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே எல்லாரும் எழுத்து வாங்கி ஏத்தும் படி நின்று-(அங்குலி விச்சேதம் -ஏகலைவன் போலே -அக்ஷரம் எழுதுவது-உதிரத்தில் பதித்து -குழந்தைக்கு பெயர் -தாஸ்யம் சதுஷ்ட்யம் என்பர் )
குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன முறித்த உபகாரகன் –ந சமம் யுத்த மித்யாஹூ-என்னும்படியாக
என் மாதவனே —
நான் தோற்ற துறை
மாதவனான நாராயணன் எந்தை
ஸ்ரீ மன் நாராயணன் எனக்கு ஸ்வாமி என்கிறார்-

————————————————————————————————-

அவதாரிகை –

கீழே –மா சதிரிது பெற்று -என்றார் -இந் நன்மைக்கு அடி என் என்ன -நினைவு இன்றிக்கே இருக்க அந்தபுர வாசிகள் சொல்லும்
வார்த்தையைச் சொன்னேன் -என்கிறார் –ஜாமாதா-தயிதஸ்தவேதி -பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம் பச்யேம –என்றார் இ றே பட்டர் -(என் திருமகள் –சேர் மார்வன் –என்றபடி -அந்தப்புர வாசிகள் –ஸ்ரீ வைஷ்ணவ வார்த்தை அன்றோ –நாராயணன் -கேசவன்- உபாசகர்களும் சொல்வார்களே)

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-

மாதவன் என்றதே கொண்டு –அஹ்ருதய யுக்தி
என்னை –வாசி அறியாத என்னை
இனி -உக்திக்கு அனந்தரம்
இப்பால் பட்டது-மேல் உள்ள காலங்கள் எல்லாம்
யா தவங்களும் சேர்கொடேன்-அவித்யாதிகள் சேரக் கூடாது என்று சங்கல்பித்து
என்று என்னுள் புகுந்திருந்து-என் நெஞ்சுக்குள் புகுந்து -அநன்ய பேரனாக இருந்து
தீதவம் கெடுக்கும் -தீது புத்தி பூர்வகமாக -தெரியாமல் இரண்டையும் கெடுத்து
அமுதம் செந்தாமரை கட்குன்றம்-ஸ்திரமான அழகான வடிவு
கோதவமிலன் -குற்றம் இல்லாத
கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே-கருப்புக்கட்டி –கோதும் அவமும் -இல்லாத –அபூத உவமை -ஜாலம் சேர்த்தால் தானே சக்கரை உண்டாகும் -ஜல வாசனை வருமே -வஸ்து அந்தர சம்சாரக்கம் -பாக தோஷம் –உண்டாகும் –ஈஸ்வரனுக்கு கோது அவன் -உபகார ஹேது ஸகத்வத்வமும் -அபேஷா நிரபேஷமாக செய்யும் –அவம்-ஸூ பிரயோஜன அர்த்தத்வமும் -சொத்தை ஸ்வாமி பெறுவது போலே /என் அமுதம் கறுப்புக் கட்டி கண்ணனே -தானே –

மாதவன் என்றதே கொண்டு
நான் மாதவன் என்ற உக்தி மாதரத்தைக் கொண்டு
இத்தையே திரு உள்ளத்திலே குவாலாகக் கொண்டு
என்னை-அல்லாத திரு நாமங்களுக்கும் இதுக்கும் வாசி அறிவதே என்று இத்
அல்லாத திரு நாமங்களுக்கும் இதுக்கும் வாசி அறியாத என்னை
இனி
முன்பு கழிந்த காலம் கழிந்தே விட்டது இறே
மேல் அத்யல்ப காலமாய்த் தோன்றா நின்றதாயிற்று ஈஸ்வரனுக்கு
பழுதே பல காலும் போயின என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதனன் இருக்கும் இருப்பைத் தான் என் பக்கலிலே இரா நின்றான்
புத்த்வா காலம் அதீ தஞ்ச முமோஹ-என்று இரா நின்றான் ஆயிற்று
இப்பால் பட்டது
அணைக்கு கிழக்குப் பட்ட நீரோ பாதி இறே போன காலம்
இனி மேல் உள்ள காலமாகிலும்
யா தவங்களும் சேர் கொடேன் என்று
உன்னை யாதொரு தபஸ்ஸிலும் புக்கு கிலேசிக்க விடேன் என்று
அம்மி துணையாக ஆறு இழிகை இறே இவனை விட்டு உபாயாந்தரத்தைப் பற்றுகை
அவங்கள் –1-நரக ஹேதுவான அவித்யாதிகள்-
2-புறம்பே சில பிரயோஜனங்களைக் கொண்டு போக விடுதல் -3–அயோக்யன் என்று அகல விடுதல்-
4–உபாயாந்தர பரிக்ரஹம் பண்ண விடுதல் செய்யேன் என்று
என்று
ஏதத் வ்ரதம் மம-என்கிறபடியே சங்கல்பித்து
என்னுள் புகுந்திருந்து
இப்படி சங்கல்பித்து நெடுங்கை நீட்டாக இருக்கை அன்றிக்கே
என் ஹிருதயத்திலே வந்து புகுந்து
புகுந்தாலும் போக்கு வரத்து உண்டாமாகில் வாலி போன வழியை அடைத்து மகா ராஜர் குறும்பு செய்தால் போலேயாம் என்று
இருந்து-ஸ்தாவர பிரதிஷ்டையாக இருந்து
புகுந்திருந்து
இவரை வர நிறுத்த ஒண்ணாதே இவருக்குமாக தான் புகுந்து இருந்தான் அத்தனை
புகுந்து செய்த கிருஷி ஏது என்னில்
தீதவம் கெடுக்கும்
தீ தாவது -பொய் நின்ற ஞானத்துக்கு முன்பு புத்தி பூர்வகமாகப் பண்ணிப் போந்த பாபம்
அவமாவது ஞானம் பிறந்த பின்பு ப்ராமாதிகமாகப் பண்ணினவை
இரண்டாலுமாக பகவத் பிராப்தி பிரதிபந்தக கர்மங்களைச் சொல்லுகிறது
அன்றிக்கே
கோக் நே சைவ ஸூ ராபே ச சோரே பக்ன வரதே ததா -நிஷ்க்ருதிர் விஹிதா சத்பி க்ருதக்னே நாஸ்தி நிஷ்க்ருதி- என்கிறபடியே
நிஷ்க்ருதி உள்ள பாபங்களையும் இல்லாத பாபங்களையும் சொல்லிற்று ஆகவுமாம்
இவற்றைக் கெடுப்பது கஷாய பானத்தை பண்ணுவித்தோ என்னில்
அமுதம்
தன்னுடைய போக்யதையை அனுபவிப்பித்தாயிற்று
செந்தாமரை கட்குன்றம்
ரச நேந்த்ரியத்துக்கே யன்றிக்கே கண்ணுக்கும் போக்யமாய் இருக்கை
குன்றம்
இத்தலையில் தீதும் அவமும் போக்கினனாய் இருக்கை அன்றிக்கே தனக்கு உண்டாய் கழிந்தது என்று தோற்றும்படி
வடிவில் பிறந்த ஔஜ்வல்யம்
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்று இருக்குமவன் இறே

கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –
கோதாவது-த்ரவ்யாந்தர சம்சர்க்கத்தாலே வருமது
அவமாவது பாகத்தாலே வருமது
த்ர்ஷ்டாந்திகத்தில் கோதும் அவமும் ஆகிறது ஆன்ரு சம்சயத்துக்கு ஆதல் -இவனுக்கு உபகாரமாகவாதல் விஷயீகரிக்கை
தனக்கு புறம்பாய் இருப்பதொரு போக்ய வஸ்து இல்லாதபடி தான் போக்யனாய் இருக்கும்
எம்மான்
நான் வேறு ஓன்று போக்யம் என்று இராதபடி என்னைத் தோற்ப்பித்தவன்
என் கோவிந்தனே
‘கிருஷ்ணாவதாரமும் தமக்கு என்று இருக்கிறார்
ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோ -பெரியாழ்வார் திருமொழி -1-7-1-இறே

—————————————————————————————-

அவதாரிகை –

என்னோடு பரம்பரயா சம்பந்தம் உடையாரையும் கூட என்னைப் போலே யாக்கினான் ஒருவனுடைய
சாமர்த்தியம் இருக்கும் படியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-

ஸூ சம்பந்த குல சம்பந்தி பர்யந்தமாக செய்ய வல்ல சாமர்த்யன்
கோ விந்தன் -கோ ஸம்ருத்தி
குடக்கூத்தன் -தனம் விஞ்சி ப்ராஹ்மணர் -யாகாதிகள் போலே ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக
கோவலன்-ஐஸ்வர்யம் சேஷ்டிதம் அனுகூலமான ஜென்மம்
என்று என்றே குனித்து–தனி தனி கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் -ஒன்றுக்கும் ஒரு சஹஸ்ர நாமம் -சொல்லி –
பரத்வ -ஸ்ரீ யபதி ஸுலப்யம் -சொல்லி கூத்தாடி
தேவும் தன்னையும் -பரத்வத்தையும் தானான நீர்மையையும்
பாடியாடத் திருத்தி-நித்யர்களில் ஒரு கோவையாக்கி
என்னைக் கொண்டு என்-பாவம் தன்னையும் பாறக் கைத்து -பிரதிபந்தகங்களை ஒட்டி
எமர் ஏழேழு பிறப்பும்-மேவும் தன்மையம் ஆக்கினான் -தன்னை பிராபிக்கும் தன்மை
வல்லன் எம்பிரான் விட்டுவே –நினைத்ததை செய்யும் வல்லவன் -சர்வ வ்யாபி -ஒருவரை பிடிக்க ஊரை வளைப்பாரை போலே

கோவிந்தன் –
ஸ்ரீ வைகுண்டத்தில் இல்லாததொரு சம்பத்து இறே இது –
கோ சம்ருத்தியால் உண்டான ஐஸ்வர்யம் உள்ளது இங்கேயே இறே -(வாக்மி ஸ்ரீ மான் -பூமி -பசுக்கள் -பெருமாள் வராஹ கிருஷ்ணன் மூவருக்கும் கோவிந்தன் சப்தார்த்தம் உண்டே )
குடக்கூத்தன் –
ப்ராஹ்மணர் ஐஸ்வர்யம் விஞ்சினால் யாகங்கள் பண்ணுமா போலே இடையர் ஐஸ்வர்யம் மிகுத்தால் செருக்குப் போக்கு விடுவது ஒன்றாயிற்று –
குடக்கூத்தாவது –அவாக்ய அநாதர-என்று இருக்கக் கடவ வஸ்து தைர்ய பங்கம் பிறந்து செருக்குக்குத் தலைச் சாவி வெட்டி ஆடினபடி இறே
கோவலன்
இவற்றுக்கு அடியான பிறப்புடையவன்-பிறந்து படைத்த ஐஸ்வர்யம் இறே இது
என்று என்றே குனித்து
இக் குணங்களை மாறாதே சொல்லா நின்று கொண்டு -உடம்பு இருந்த இடத்தில் இராதே ஆடி –
அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்தால் இவருக்கு பேசாது இருக்க ஒண்ணாது இறே –
தேவும் தன்னையும்
தேவும் -என்கிறது – ஐஸ்வர்யத்தை –தன்னை -என்கிறது- ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை -அது இ றே தானான தன்மை
ஆத்மானம் நாதி வர்த்தேதா -என்றான் இ றே -வசிஷ்டர் –ஆத்மபூதம் பரதம் நாதி வர்த்தேதா-என்கிறான் என்று சிலர் சொல்லுவார்கள் –
பட்டர் -நீரான தன்மை யாகிறது ஆஸ்ரித பரதந்த்ரனாகை-உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து நீரான
தன்மையை இழவாதே கொள்ளும் என்கிறார் -என்றார்
உன் தன்மையை இழக்காதே பரதன் சொல் படி கேட்க வசிஷ்டர் பெருமாள் இடம் சொன்ன வார்த்தை –
பாடியாடத் திருத்தி –
என்று என்றே குனித்து என்கிற இடத்துக்கும் –பாடியாட -என்கிற இடத்துக்கும் வாசி என்-என்னில்
கீழ் சௌலப்ய பரம்-
இங்கு ஐஸ்வர்யமும் சௌலப்யமும் இரண்டும் உண்டு
விஷய பேதத்தால் சொல்லவுமாம்
அன்றிக்கே என்று- என்றே- என்கிற இடம் அஹ்ருதயமான உக்தி மாத்ரமாய் –குனிக்கையாவது – உத்தியோகத்து அளவாய்
இங்கு-பாடியாட -சஹ்ருதயமாகப் பாடுவது ஆடுவதான படியாய்
என்று என்றே குனித்துப் பாடுவது ஆடுவதாம்படி -என்றாதல் –
திருத்தி –
தரிசு கிடந்த தரையைச் செய்காலாம் படி திருத்துவாரைப் போலே நித்ய ஸூரிகள் யாத்ரையே -யாத்ரையாம் படி திருத்தி –
என்னைக் கொண்டு -என் பாவம் தன்னையும் பாறக் கைத்து
என்னைக் கைக் கொண்டு -ஓர் உபாய அனுஷ்டானத்தை பண்ணுவித்து என்னில் -இப்போது இவர்க்கு அபசித்தாந்தமாம் —
பகவத் பிரசாதத்தாலே பெற்றார்க்கும் சொல்லுமதுக்கும் சேராது
ஆனால் என் சொல்லுகிறது என்னில் -சேற்றில் விழுந்த மாணிக்கத்தை எடுத்து கழுவி விநியோகம் கொள்ளுமா போலே என்னை
சுவீகரித்து என்னால் போக்கிக் கொள்ள ஒண்ணாத பாபங்களையும் உருமாய்ந்து போம்படி ஒட்டி-
எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன்
இது தான் என் ஒருவன் அளவன்றிக்கே என்னோடு சம்பந்தம் உடையார் ஏழேழு பிறப்பும் தன்னைக் கிட்டுகையே
ஸ்வபாவமாக யுடையோம்பாம்படி பண்ணினான் –
எம்பிரான் விட்டுவே –
எனக்கு உபகாரகனான சர்வேஸ்வரன் –
நினைத்த கார்யம் செய்து தலைக் கட்ட வல்லவன்
சர்வ சக்தி மாட்டாதது உண்டோ –வ்யாப்தியும் தமக்காக –என்று இருக்கிறார் –

———————————————————————————-

அவதாரிகை –

திருமாலை யாண்டானோடே எம்பெருமானார் திருவாய் மொழி கேட்டருளுகிற நாளில் பாட்டுக்கள் தோறும் சில வார்த்தைகள் அருளிச் செய்து-(தம்மையும் தம் உடையராயும் விஷயீ கரித்த- அவனை கொண்டாடுகிறார் -முதல் நிர்வாகம் -திருமாலை ஆண்டான் )
இது அர்த்தமானாலோ -என்றால் -இது விஸ்வாமித்ரர் சிருஷ்டி -ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டறியேன் -என்று பணிக்குமாம் ஆண்டான்
ஆண்டான் இப்பாட்டுக்கு விச்வாமித்ர சிருஷ்டி வேண்டாவாய் இருந்ததீ-என்ன -இப்பாட்டால் தன் அவயவ சௌந்தர்யத்தாலே
என்னைத் தனக்கு ஆக்கினான் -என்கிறார் -என்று அருளிச் செய்து அருளினாராம்
அதுவும் கிடக்க பட்டர் அருளிச் செய்வது ஓன்று உண்டு –ஆழ்வாரையும் ஆழ்வார் பரிகரத்தையும்-விஷயீ கரித்து அத்தாலே
திருமேனியிலே பிறந்த ஔஜ்வல்யத்தை சொல்லுகிறது -என்று
விசோதிதஜட ஸ்நாதசசித்ர மால்யாநுலேபன மகார்ஹவஸநோ ராமஸ் தஸ்தௌ தத்ர ஸ்ரீ யா ஜ்வலன் –யுத்த -131-15-என்று
பெருமாள் பிராட்டி உடன் பட்டாபிஷேக திருக் கோலத்துடன் நின்றாப் போலே என்றவாறு –

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-

ச பரிகரமாக அங்கீ கரித்ததால் வந்த உஜ்வலம்
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விஷ்ணு -உடைய -முதல் திரு நாமம் –பாட்டுகளில் மரியாதை குலைய கூடாதே -உகரம் குற்றியலாக கொள்வது
இலங்கு -விளங்கும் -என்றவாறு
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு-விகசிதம் -விளங்கா நிற்கும் -அழகிய வடிவு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி-அம் சாரியை -மதி சீர் சங்கு -/ மலையே திரு உடம்பு -தாமரையே பாதம் -சாமானாதி கரண்யம்-/ உபமானமே உபமேயம் -பொருந்திய படியால் –
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
மதகு திறந்தால் போலே விட்டு விளங்கா நின்றுள்ள -சிவந்த ஒளியை உடைத்தான தாமரை போலே யாயிற்று
நாம் தோற்று விழும் திருவடிகள் –தம்மை அணைத்த கை –குளிர நோக்கின திருக் கண்கள்
இவை உபமேயத்துக்கு உபமானம் நேராகப் போராமையாலே அது தன்னையே சிஷித்துச் சொல்கிறார்
அன்றிக்கே –விட்டுவுக்கு இலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் -என்று அந்வயம்-
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
சோபயன் தண்ட காரண்யம் -என்னுமா போலே இரா நின்றது வடிவு அழகு
தம்மை அணைத்த போதைக் குளிர்ந்த வடிவு இருந்தபடி –
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு
விட்டிலங்குகிற பிரகாசத்தை உடைய சந்தரனைப் போலே யாயிற்று ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்
சீர் சங்கு –
பகவத் பிரத்யாசத்தியாலே வந்த ஐஸ்வர்யம் –உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே –
பிரசாதத்தைச் சூடி கைப்புடையிலே கிடப்பாரைப் போலே அவன் வாயாலே ஊட்ட உண்டு -வடிவை பாராத் திருக்கையிலே சாயும் அத்தனை
சீர் சங்கு
உன் செல்வம் சால அழகியது -என்னும்படி வாயது கையதான ஐஸ்வர்யம் இறே –
சக்கரம் பரிதி –
கண்டதில் மின்னிற்று ஒன்றை உபமானமாகச் சொல்லும் அத்தனை இறே -ஆதித்யனைப் போலே அன்றே திரு வாழி வாழ்வான் இருப்பது (பத்ம பர்வத சந்த்ர -உபமானம்–கீழே விசேஷித்து சொல்லி இங்கு -விசேஷணம் சொன்னாலும் திருச் சக்கரத்துக்கு நிகர் ஆகாதே -ஆக சொல்லாமல் -கண்டத்தில் மின்னும் ஒன்றை சொல்லி விட்டார் அத்தனை )
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –
இவை இத்தனையும் தன் புகராலே முட்டாக்கு இடுமாயிற்று திரு அபிஷேகம் –
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவன் ஆனவனுக்கு –(மது சூதனன் தனக்கு என்றும் –மது சூதனனான விஷ்ணுவுக்கு என்று இரண்டு அன்வயம் )
விட்டுவுக்கு இலங்கு இத்யாதி -என்று முதலாக அந்வயம் –

——————————————————————————————–

அவதாரிகை –

தன் பக்கல் நான் பிரவணன் ஆகைக்கு எம்பெருமான் வருந்திற்று எல்லாம் தன் கிருபையாலே -என்கிறார் –

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-

கிருபா பாரவஸ்யம் -உஜ்வல்யம் -உபகாரம் -விட்டு வல்லன் -இவற்றுக்கு ஹேது -கிருபை தானே
மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
மது கைடபர் –ஹய சிரஸ் / கண்ணன் -/ உபாயாந்தர ப்ராப்யாந்த்ர சம்பந்தம் இல்லாமல்
நம் பிரதிபந்தகங்களை போக்கி என்றபடி -/அஹங்காராதிகள்–/ காரியமே அற்று –
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
ஸ்தோத்ர பாடல்களால் சூழ்ந்து -கல்ப கல்ப காலம் -பாடுவது -கல்ப கல்ப காலமும் நாம் ஒரு கால் பாட -அவன் அனுக்ரஹம் பண்ண
அவன் குணக் கூட்டங்களை சூழ்ந்து -ஸ்வயம் பிரயோஜனமாக -நின்று பாடி ஆட -பிறப்புக்கள் தோறும் -கல்ப கல்பம் -பல் நெடும் காலமாக -திருத்த முயலுவான் -அபிமுகனாக ஈடாக
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
சூழ்ச்சி -திட்டம் வைத்து என்னை பிடிக்க -தன் சொத்தை தான் பெற -எனக்கே -அசாதாரனமான விசேஷம் -பிரதம கடாக்ஷம் தொடங்கி பர பக்தி பர்யந்தமாக –
அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம் என்று உணரும் படி –அருள்கள் –
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே
கிருபை தடுக்க ஒண்ணாத்தாதே -அதுவே விதி -/ஏலு கிற பொருந்துகிற –எனக்கு தகுதியான -தாழ்ந்த நீசனுக்கு தக்கபடி என்றபடி –கிருபை -என்னை சூழ்ந்து -திரிவிக்ரமனையும் சூழ்ந்து -என்றபடியே -என் அளவுக்கு தன்னை தாழ்த்துக் கொண்டு கிருபை செய்து அருளினான் என்றபடி-

மது சூதனை யன்றி மற்றிலேன் என்று –
விரோதி நிரசன ஸ்வபாவன் ஆனவனை ஒழிய வேறு சிலரைத் தஞ்சமாக வுடையேன் அல்லேன் என்றாயாயிற்று இவர் இருப்பது (வேதங்களை மீட்ட மதுசூதனன் -கொழுப்பு -ரஜஸ் தமஸ்- கோடரி போலே உலகத்துக்கு -இருவர் -தானவர்களில் கொடியவர் -ஹயக்ரீவர் முகத்தில் வந்து –மது சூதனை )
சத்வம் தலை எடுத்த போது ஒரு கால் இவ்வார்த்தை சொல்லுமது நமக்கும் உள்ளது ஓன்று இறே -இவர்க்கு வாசி என் என்னில்
எத்தாலும் கருமமின்றி –
அந்த உக்திக்குச் சேர்ந்த அனுஷ்டானம் உண்டாய் இருக்கும்
ப்ராப்ய ஆபாசங்களிலும் பிராபக ஆபாசங்களிலும் நெகிழ்ந்து -அவனை ஒழிந்த எல்லா வற்றாலும் ஒரு பிரயோஜனம் இன்றிக்கே இருப்பர்

துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட -நின்றூழி யூழி தொறும்
1-ஸ்தோத்ராத்மகமான பாடல் -என்னுதல்
2-ஸ்துதிய குணங்களை விளாக்குலை கொள்ளும்படியான பாடல்கள் என்னுதல்
கல்பம் தோறும் கல்பம் தோறும் துதி சூழ்ந்த பாடல்களைக் கொண்டு பாடுவது ஆடுவதாம் படி பண்ணினான் –
நின்று
தேஹி மே-ததாமி தே- என்று பிரயோஜனங்களைப் பற்றி அகலுகை யன்றிக்கே இருக்கை-
இப்படி அவன் பண்ணுகைக்கு ஹேது என் -என்னச் சொல்கிறார் –
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய -விதி சூழ்ந்ததால்
விதி சூழ்ந்ததால் -எதிர் சூழல் புக்கு –
ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் அவன் போம் வரம்புக்கு எதிர் வரம்பே வருமா போலே -இவர் பிறந்த ஜன்மங்கள் தோறும்
தானும் எதிரே பிறந்து வந்தான் யாயிற்று
இவர் கர்மம் அடியாக பிறக்க -அவன் அனுக்ரஹத்தால் பிறந்து வந்த இத்தனை –சூழல் என்று அவதாரத்தைச் சொல்லக் கடவது இறே –
எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய -விதி சூழ்ந்ததால் -என்கிறார்
விதி என்கிறது பகவத் கிருபையை -பகவத் கிருபையை விதி என்பான் என் என்னில் -அவனுக்குத் தப்ப ஒண்ணாத தாகையாலே
நாம் நினைத்தவை தலைக் கட்ட வொட்டாத
கர்மம் போலே ஈஸ்வரன் நினைத்த கார்யங்களும் க்ருபா பரதந்த்ரனாய்த் தலைக் கட்ட மாட்டான்
வதார்ஹம் அபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34-
காகுத்ஸ்த-தங்களிலும் கிருபையே விஞ்சி ரஷித்துக் கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்
வதார்ஹமான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் கண்னழிவு பண்ணுமவர் இறே
எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே-
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -ஸ்ரீ வாமனனாய் வந்து அவதரித்து -மூன்று அடியாலே த்ரைலோக்யத்தையும் திருவடிகளின்
கீழே இட்டுக் கொண்டு எல்லாரோடும் பொருந்தின -குள்ளர்களை திரிவிக்ரமன் என்று சொல்லும் படியான குறள் மாணாய் போலே-
சௌலப்யம் தானே பரத்வம் என்னும் படி என்னை விஷயீ கரிக்கைக்கு-(எனக்கே -இரண்டு தடவை /ஸ்வாமி -எனக்கே அசாதாரணமான / உபகாரம் -பண்ண ஒரு தடவை / கிருபையால் அருள்கள் செய்ய எனக்கே / எனக்கு என்ன கிருபையும் உபகாரமும் என்றபடி -)
ஒரு விதி சூழ்ந்தது -அம்மான் திருவிக்ரமனை என்னை அருள்கள் செய்ய -எனக்கு என்னவே ஒரு விதி சூழ்ந்தது

——

அவதாரிகை –

உன்னுடைய குண அனுசந்தான பூர்வகமாக ஸ்துதி பிரணாமங்களைப் பண்ணிக் கொண்டு உன்னை அனுபவிக்கும்
இதுவே பிரயோஜனமாய் இருக்கும் மனஸை எனக்குத் தந்தாய் -என்கிறார் –

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-

பிரயோஜனம் முதலில் சொல்லி -உபாயமான வாமனன் பின்பு சொல்லுமே –
திருவிக்ரமன் திருக்கண்களை -எப்படி சேவித்தார் ஆழ்வார் –
ஸூவ அனுபவ யோக்யமான சர்வ உத்தரமான மனசைத் தந்து அருளினான் –என்கிறார் –
திரிவிக்ரமன் -அனன்யார்ஹன் ஆக்கினான் உலகத்தை
செந்தாமரைக் கண் -ஆழ்வாரை வெல்ல இந்த உபகரணம் -ஜிதந்தே புண்டரீகாஷ-தாமரை கண்ணனை விண்ணோர் பரவும்
எம்மான் -அடிமை ஆக்கிக் கொண்டவன்
என் செங்கனி வாய் உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன்-உருவம் -நிறம் –பொலிந்த-ஸ்படிகம் போலே
-திருப் பற்கள் -ஸ்மிதம் -மந்த -திரு முத்து நிறத்தை
என்று என்று-தனித் தனியே —உள்ளி-சேஷ்டிதம் கண் அழகு முறுவலையும் நெஞ்சாலே அனுபவித்து
பரவிப் பணிந்து -உள்ளடங்காமையாலே அக்ரமாக பரவி -பணிந்து -ப்ரீதி ப்ரேரிதனாய் கொண்டு திருவடிகளில் விழுந்து
பல்லூழி யூழி நின் பாத பங்கயமே -பல காலம் -கல்பங்கள் -பிராப்தனான உன்னுடைய போக்யமான திருவடிகளில்
மருவித் தொழும் மனமே தந்தாய்-அனன்ய பிரயோஜனமான அடிமை ஆக்கி அருளிய -சக்தன் –

திரிவிக்ரமன் –
மூன்று அடிகளாலே சகல லோகங்களையும் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன் –ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியன் –
செந்தாமரைக் கண் எம்மான் –
நோக்காலே என்னைத் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன்-
காலும் கண்ணும் -சம்பந்தம் -திருமழிசை ஆழ்வார் -கட்டை விரலிலே கண் -பக்தி சாரர்
என் செங்கனி வாய் -உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன்
இவர் ஜிதம்-என்ற பின்பு அவன் ஸ்மிதம் பண்ணின படி -என்னை அனந்யார்ஹன் ஆக்குகையாலே சிவந்த கனிந்த
திரு வதரத்தின் உருவிலே -அழகிலே -நிறத்திலே
பொலிந்த பரபாகத்தாலே சம்ருத்தமாய் பரிசுத்தமான ஸ்படிகம் போலே இருக்கிற திரு முத்து நிரையினுடைய நிறத்தை யுடையவன்
முத்துப் பல் வரிசை –
என்று என்று உள்ளி –
இதர விஷயங்களினுடைய ஸ்மிதத்தில் உண்டான ஸ்ம்ருதி- அகவாய் கண்டவாறே விட்டு அல்லது நிற்க ஒண்ணாததாய் இருக்கும் இறே-(விஷயாந்தரங்கள் விஷயத்தில் அகவாய் -உள்ளே உள்ள ஜலம் இத்யாதி நினைவில் வர ஸ்மிதம் விடுவோமே என்றவாறு  )
அக வாய் —இதர உள் விஷயம் என்றும் பகவத் ஸ்மிதம் என்றும் –சாடு -இது -பகவத் ஸ்மிதம்-மாறாதே அனுசந்திக்கலாம் இறே
அழகு ஆறு திரு அபிஷேகத்தில் இருந்து விழ –ஸ்மிதம் -அழகு சேர -ஹார அழகு பிராட்டி அழகு சேர
மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட –
-இடை சிறுத்துததால் சுழல் -திரு நாபி சரஸ் -ஆனதே –
பரவிப் பணிந்த
அக்ரமாகக் கூப்பிட்டு -நிர்மமனாய்த் திருவடிகளில் விழுந்து
இப் பேறு தான் ஒரு நாள் உண்டாய் மற்றை நாள் மறுக்கை யன்றிக்கே
பல்லூழி யூழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் –
1–கல்பம் தோறும் கல்பம் தோறும் பரம போக்யமான உன் திருவடிகளையே அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனசைத் தந்தாய் –
2–விஷயாந்தரங்கள் அஸ்தரம் ஆகையாலும் அபோக்கியம் ஆகையாலும் ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை யாகையாலே
மனஸ்ஸூ -சஞ்சலம் ஹி மன –ஸ்ரீ கீதை -6-34-என்று சஞ்சலமாய் இறே இருப்பது
அப்படி இன்றியே நித்யமுமாய் நிரதிசய போக்யமுமாய் இருக்கையாலே –மருவித் தொழும் மனசைத் தந்தாய் -என்றுமாம்
3–பழைய நெஞ்சைத் திருத்தின அளவன்றிக்கே கருவுகலத்தில் ஒரு நெஞ்சைத் தந்தாய் —திவ்யம் ததாமி தே -ஸ்ரீ கீதை -11-8-போலே –
பழைய நெஞ்சு -இது என்று பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாத படி இரா நின்றது
என் வாமனனே –வல்லை காண்
கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்கு ஒன்றேயோ பரிகரம்-
ஆழ்வாரைக் கொண்டார் -மனசைக் கொடுத்தார் -ஔதாரன் பட்டம் கொடுத்தார் -உலகைக் கொண்டார் -தருவதும் பரிப்பதும்- ஒரே உபகரணத்தாலே
வாமன வேஷத்தைக் காட்டி என் நெஞ்சைத் திருத்தித் தந்தாய்
அவ்வழகாலே மகா பலி என்னது என்று இருந்த பூமியை அபகரித்தாய்
வல்லை காண் -என்று உகக்கிறார் –

———————————————————————————————

அவதாரிகை –

எம்பெருமான் தம் திறத்தில் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் காணாமல் தடுமாறுகிறார் –

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

வாமனன் -குள்ளன் மட்டும் இல்லையே —ஸூகம் நயதி -திரு மேனி காந்தியால் சேவித்தவர்கள் மகிழ்வார்
பொல்லாங்கை நீக்கி -அனுபவத்துக்கு உறுப்பு அல்லாத -இதற்கு பிரத்யுபகாரம் உண்டோ
என் மரகத வண்ணன்-வடிவு அழகு –தாமரைக் கண்ணினன்-போக்தாவை குளிர நோக்கும்
காமனைப் பயந்தாய் -உத்பாதகன் ஆனவன் –சாஷாத் மன்மத மன்மதன்
என்று என்று உன் கழல் பாடியே பணிந்து தூ மனத்தனனாய் -பிரயோஜ நாந்தரங்களில் போகாமல்
பிறவித் துழதி நீங்க என்னைத் தீ மனம் கெடுத்தாய் -விஷயாந்தரங்களில் போகும் தீமையை கெடுத்து அருளி
உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே-பூரணன் -அவாப்த சமஸ்த காமன் -ஸ்ரீ யபதி என்ன செய்வேன் –

வாமனன் –
வடிவு அழகைச் சொல்லுதல் -என்னுதல்
நன்மைகளைத் தருமவன் என்னுதல் -இனிய அனுபவங்களைக் கொடுப்பவன் –
என் மரகத வண்ணன் –
ஸ்ரமஹரமான வடிவு அழகை என்னை அனுபவிப்பித்தவன்
தாமரைக் கண்ணினன்-
வடிவு அழகே அன்றிக்கே அகவாயில் தண்ணளிக்கு பிரகாசகமான திருக் கண்களை உடையவன்
காமனைப் பயந்தாய் –
வடிவு அழகாலே நாட்டை வெருட்டித் திரிகின்ற காமனுக்கு உத்பாதகன் ஆனவனே
அனுசந்தானாத்தாலே ஒரு வைசத்யம் பிறந்தவாறே முன்னிலை போலே தோற்றும் -அப்படியும் சொல்லிக் கூப்பிடுவார்
அதுக்கு மேலே சில பரிமாற்றங்களை ஆசைப்பட்டு அது கிடையாமையாலே படர்க்கையாகவும் சொல்லிக் கூப்பிடுவார்-
அப்பாஞ்ச ஜன்யமே -முன்னிலையாக இருந்து படர்க்கையாக அங்கும் –
இவை இரண்டுக்கும் அடி அபிநிவேசம்
என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
இத் திரு நாமங்களை இப்படி வாயாலே மாறாதே சொல்லா நிற்கத் திருவடிகளிலே விழுந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான நெஞ்சு இன்றிக்கே மோஷத்துக்கே ஏகாந்தமான நெஞ்சை உடையனாய்
பரி சுத்த அந்தக்கரணனாய்-அதின் பலமாய் வருமதே ஜன்மம் போமது
பிறவித் துழுதி உண்டு —தூர் -துக்கம் -அது நீங்கும் படியாக
என்னைத் தீ மனம் கெடுத்தாய்
அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும்
உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய்
நல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் –
தேஷாம் சத்த யுக்தாநாம் பஜதாம் -ஸ்ரீ கீதை -10-10-
தேஷா மேவா நுகம் பார்த்தம் அஹம் அஜ்ஞ்ஞானாஜம் தம நாசயாமி ஆத்ம பாவஸ்ய -ஸ்ரீ கீதை -10-11-போலே
உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே —
பண்ணின உபகாரத்தின் கனத்தாலே பிரத்யுபகாரம் பண்ணி யல்லது தரிக்க மாட்டு கிறிலேன்-அதுக்கு விரகு காண் கிறிலேன்
நான் ஒரு உபகாரம் கொள்ளாது ஒழிதல்-நீ குறைவாளன் ஆதல் செய்யப் பெற்றிலேன் –சிரீதரனே-புஷ்கலனாய் இருக்கிற
உனக்கு நான் எத்தைச் செய்வேன்

—————————————————————————————–

அவதாரிகை –

ஆடியாடியில் பிறந்த வ்யசனம் எல்லாம் நான் மறந்து மிகவும் பிரீதனாம் படி பண்ணி இந்த்ரியங்களைத் தான் இட்ட வழக்காக்கினான் என்கிறார் –
பக்தி பூர்வகமாக உன்னை அனுபவியா நிற்கச் செய்தே –பிரதி பந்தகங்களும் நீங்கி— நிரதிசய ஹர்ஷமும் பிறக்கும்படி
உன்னை என்னுள்ளே வைத்தாய் என்று ப்ரீதர் ஆகிறார் என்னுமாம் –

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –-2-7-9-

விஸ்லேஷ துக்கும் தீரும் படி என் நெஞ்சுக்குள் புகுந்து நான் ஹ்ருஷ்டராம் படி அனுபவிப்பித்தான் -தூ மனத்தில் தோற்றும் -பக்திக்கு விஷயமாம் படி –
அழுக்கு நீக்கி -நல்ல நெஞ்சு -அதற்கு விஷயம் -மூன்று பாசுரங்கள்
சிரீ இதரன்-ஸ்ரீ பீடன் – செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து -எங்கும் நாடி நாடி கண்கள் நீர் மல்கிகுவளை ஒண் கண்ண நீர் கொண்டாள்
வெவ்வுயிர்த்து உயிர்த்து –மரீ இய தீ வினை -ஆடியாடியில் உள்ள விசனம்
மாள இன்பம் வளர-2-4 தீ வினை /2-5 கலந்த இன்பம் -அந்தாமத்து அன்பு வளர – வைகல் வைகல் இரீஇ
உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே-விதேயமான நெஞ்சில் -இருத்தி –பைந்தாமரைக் கண்ணன் எங்கும் பக்க நோக்கு அறியாமல்
பக்தி பாரவச்யத்தால் வந்த ஆழ்வார் துடிப்பை -விகாரம் –தீ வினை-பிராப்தி பிரதிபந்தக நிவ்ருத்தி -பூர்வகமாக —இன்பம்  வளர – -அனுபவ ஆனந்தம்-வளரும் படி செய்து அருளினான் –

சிரீ இதரன் –
பெரிய பிராடியாரைத் திரு மார்விலே உடையவன்
செய்ய தாமரைக் கண்ணன்
நீர் பாய்ந்த பயிர் செவ்வி பெற்று இருக்குமா போலே -அவள் திரு மார்விலே இருக்கையாலே குளிர்ந்த கண் அழகை உடையவன்
வஷஸ் ஸ்தலேந ஸ்ரீ யமுத்வஹன் விபு விஸ்தாரி பத்மோத் பல பத்ர லோசந –ஸ்ரீ விஷ்ணு தர்மம் என்கிறபடியே
என்று என்று
இப்படி மாறாதே சொல்லி
இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –
இவர் பக்தி பரவசர் ஆகையாலே இவருடைய தேக யாத்ரை இருக்கும் படி என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும் படி
அன்றிக்கே –பட்டர்
இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள-என்கிற இடத்தளவும்
ஆடியாடியிலே இவர்க்கு ஓடின தசையாய்
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை-என்கிற இது அந்தாமத்து அன்பு -தொடங்கி- கேசவன் தமர் அளவும்
வர உண்டான பரிதியைச் சொல்லுகிறது -என்று
இராப்பகல் வாய் வெரீ இ -என்கிறது –இவள் இராப்பகல் வாய் வெரீ இ -என்றத்தை
அலமந்து -என்கிறது- எங்கும் நாடி நாடி- என்றத்தை
கண்கள் நீர் மல்கி -என்கிறது –தன் குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் -என்றத்தை
வெவ்வுயிர்த்து உயிர்த்து-என்கிறது –உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் -என்றத்தை
மரீ இய தீ வினை மாள
ஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே ஆனை இடர் பட்டால் போலே –ஆடியாடியில் ஆற்றாமை
இவருக்கு இப்படி பொருந்தின விஸ்லேஷ வ்யசனம் ஆரும்படியாக
இன்பம் வளர
அந்தாமத்து அன்பு தொடங்கப் பிறந்த ப்ரீதி
வைகல் வைகல்
கழிகிற காலம் தோறும்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை
உன்னை என்னுள்ளே இருத்தி வைத்தனை
யென்னிருடீ கேசனே –
எனக்குப் பரிகரமாய் விரோதித்த இந்த்ரியங்களும் உன் பக்கலிலே படையற்றன
பரம சேஷியைக் கண்டார் த்வார சேஷிகள் அளவில் நில்லார்கள் இறே -இந்த்ரியங்கள் என்னது — ஈசன் நீ —

———————————————————————————-

அவதாரிகை –

நமக்கு உபகாரகன் ஆனவனை நீ ஒரு காலும் விடாதே கண்டாய் -என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-

சர்வ பிரகார உபகாரன் -விடாமையில் உண்டான அபேஷையை வெளியிடுகிறார்
இருடீகேசன் -தச இந்த்ரிய ஆனனன்-மானச இந்த்ரியத்தை நியமித்து
எம்பிரான் -உபகாரகன்
இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் -எனக்கு செய்தது இதுவும் என்கிறார் -முருடான ராவணனை
லோக கண்டகன் கொடூரமான-ராஷச குலத்துக்கு பலமான ராவணன்
எம்மான் -என்னை அனுபவிப்பித்த ஸ்வாமி
அமரர் பெம்மான் என்று என்று -பலபடியாக அனுசந்தித்து
தெருடியாகில் நெஞ்சே வணங்கு -அறிவுடையை -தெளிவு -ஆகில் -வணங்கும் படி
திண்ணம் அறி அறிந்து -புத்தி பண்ணி -உறுதியாக -சிக்கென
மருடி யேலும் விடேல் கண்டாய் -அயோக்யா அனுசந்தானம் கலக்கம் வந்தாலும் -இதுவே மருள் –
நம்பி பற்ப நாபனையே–குண பூர்ணனான -காரண பூதன் -இம் மஹா உபகாரகனை -விட்டு விடாதே

இருடீகேசன் எம்பிரான் –
தன்னை அறிகைக்கு பரிகரமாக தந்த இந்த்ரியங்களைக் கொண்டு சப்தாதி விஷயங்களை விரும்பி நான் அனர்த்தப்படாமே
தன்னையே அறிகைக்கு பரிகரமாம்படி பண்ணி உபகரித்த மகா உபகாரகன் –நாடாத மலர் நாடி –வைக்கவே வைக்கின்றது-
இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் –
இவருடைய இந்த்ரிய வசதியைத் தவிர்த்த படி -இலங்கையில் ராஷச ஜாதியில் விபீஷணாதிகளை வைத்து முருடரான
ராவணாதிகளை நிரசித்தால் போலே யாயிற்று
எம்மான் அமரர் பெம்மான்
இந்த்ரியங்களுடைய இதர விஷய பிராவண்யத்தை தவிர்த்த மாத்ரம் அன்றிக்கே நித்ய ஸூரிகளுக்கு தன்னை அனுபவிக்கக்
கொடுக்குமா போலே -எனக்குத் தன்னை அனுபவிக்கத் தந்தவன் –
என்று என்று
இப்படிச் சொல்லா நின்று கொண்டு
தெருடியாகில் நெஞ்சே வணங்கு
தெருளுதியாகில் -ஜ்ஞான பிரகாச த்வாராமிகில் –நெஞ்சே வணங்கு -ஜ்ஞான இந்த்ரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான
ஏற்றம் உனக்கு உண்டாகில் உபகாரகன் ஆனவன் திருவடிகளிலே விழப் பார் –
விபரீத ஆகாரதையை போக்கின படி -மனசுக்கு ஞானம் உண்டோ -வெளி புறப்பட வழி- மனஸ் சஹகாரத்தா
ஞான இந்த்ரியங்கள் வேலை என்பதால் –
யோகிநாம் -தச இந்த்ரியங்கள் -கோரம் மநோ ராஜநீசரண் -ராஷசர் போலே –விவேக சரம் -ராம பானம் போலே -யோக மார்க்கம் –
தேகாத்ம விவேகம் -அந்ய சேஷத்வ -விவேகம் -ஸ்வ ஸ்வா தந்த்ர்யா விவேகம் -ஆகிய சரம் என்றவாறு
திண்ணம் அறி
இத்தை ஒலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாகப் புத்தி பண்ணு –
வார்த்தை பதின் கலம்-வழியில் ஓர் எண் கலம் -தெரு முலையில் அறு கலம் –
கொடுத்தது முக்கலம் -ஆள் கலம் போக்கி பதர் கலம் போக்கி கிடைத்தது ஒரு கலம் -சபை வார்த்தை –
அறிந்து
அறிகை தானே போரும் பிரயோஜனம் -அதுக்கு மேலே
மருடி யேலும் விடேல் கண்டாய்
உனக்கு ஒரு பிச்சு உண்டு இறே-அவன் வைலஷண்யத்தைப் பாரா வருவது –
நாம் இவ்விஷயத்தை தூஷிக்கையாவது என்-என்று அயோக்ய அனுசந்தானத்தாலே அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -அத்தைத் தவிரப்பார் கிடாய்
நம்பி பற்ப நாபனையே —
கெடுவாய் இவ்விஷயத்தை விட்டு புறம்பே போய் மண்ணை முக்கவோ
மண்ணை அளந்தவனும் அவன் -உண்டவனும் அவன் உமிழ்ந்தவனும் அவன் –ஜகமே நியத பிரகார சரீரம் –
1-அவன் குண பூர்த்தி இருந்த படி கண்டாயே —நம்பி
2-வடிவு அழகு இருந்தபடி கண்டாயே —பத்ம நாபனையே –கொப்பூழில் ஏழு கமலப் பூ அழகர்
3-முன்பு நமக்கு உபகரித்த படி கண்டாயே–நம்பி-பத்ம நாபனையே –இருடீகேசன்

——————————————————————————————–

அவதாரிகை –

பற்பநாபன்-அத்யந்த விலஷணனாய் இருந்து வைத்து –தாமோதரனே-அத்யந்த ஸூலபனாய்
எந்தை-என்னை அடிமை கொண்டவன் –எற்பரன்-என்னை யல்லது அறியானானான் என்கிறார் –

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11-

சர்வ பிரகாரன் ஆனான் என்கிறார் -போக்கிடம் இல்லை என்று நெஞ்சு இங்கேயே இருக்கப் பண்ணினானே
பற்பநாபன்-ஜகத் உத்பத்தி ஹேதுவான திரு நாபி கமலம் உடையவன்
உயர்வற உயரும் பெரும் திறலோன் -உத்பன்ன ஜகத்தை ரஷிக்க பெரும் சக்தன்
எற்பரன் -இந்த மேன்மை யுடனே சிலபனாக என் பரமாகவே உள்ளான் -நானே இலக்காக உள்ளானே
என்னை யாக்கிக் கொண்டு -என்னை அங்கீ கரித்து
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -ஏவகாரம் -அசாதாராண -சம்பந்த சம்பந்திகள் நமக்கும் உண்டே
என்னமுதம் -பரம போக்கியம்
கார் முகில் போலும்-தரம் பார்க்காமல் உபகரிக்கும்
வேங்கட நல் வெற்பன் -யோக்ய ஸ்தலமான -வெண்நீல மேகங்கள் விரித்தால் போல் –
விசும்போர் பிரான் -ஆஸ்ரித பவ்யத்தை உடையவன்
எந்தை எனது ஸ்வாமி
தாமோதரனே-ஆஸ்ரிதர் கட்டும் படி
எனக்கே தன்னைத் தந்த -1-அர்த்தியை உண்டாக்கியும் -2–அவனைத் தானே ச்வீகரிக்கையும் -3–அபேஷிதத்தை கொடுக்காமல் தன்னையே கொடுக்கையும் –
4-தானே போக்யமாகவும் இருப்பதால் கற்பக வியாவ்ருத்தி உண்டே இவனுக்கு

பற்பநாபன் –
சகல ஜகத் உத்பத்தி காரணமான திரு நாபி கமலத்தை உடையவன்
உயர்வற உயரும் பெரும் திறலோன் –
பேசப் புக்கால் பரிச்சேதித்துப் பேச ஒண்ணாத படியான சௌர்ய வீர்யாதி குண ப்ரதையை உடையவன்
திறல் -பர அபிபுவன சாமர்த்தியம் –அல்லாத குணங்களுக்கும் உப லஷணம் இது –
காரணத்வ பிரயுக்தமான மேன்மை அது -பர அபிபவன சாமர்த்தியம் தொடக்கமான குணங்கள் அவை –
இப்படி இருக்கிறவன்
எற்பரன் –
மதேக சித்தன்
என்னையாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
ஔதார்யத்தில் பிரசித்தமாய் இருப்பது கல்பகம் இறே -அதில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –என்னையாக்கிக் கொண்டு
1-அர்த்திகளை உண்டாக்கிக் கொடுக்கும் அது இல்லை இறே அதுக்கு
எனக்கே –
2-ஒருவனுக்கே குறைவறக் கொடுக்குமது இல்லை இறே அதுக்கு
தன்னைத் தந்த –
3-சில பிரயோஜனன்களை கொடுக்குமல்லது-தன்னைக் கொடுக்குமது இல்லை இறே அதுக்கு
என்னமுதம் –
4-தான் போக்யமாய் இருக்குமது இல்லை இறே அதுக்கு –
எனக்கு நிரதிசய போக்யமானவன் –
ஒரே சரம் ஒரே சொல் -சக்ருத்-துர் நாபிபாஷதே
கார் முகில் போலும் வேங்கட நல் வெற்பன் –
இந்த ஔதார்யத்துக்கு அடி திருமலையின் சம்பந்தம்-
சஹ்யம் பற்றின ஔதார்யம் இறே -பிரவாஹம் நீர் வீழ்ச்சி என்றவாறே –
சஹ்யாத்ரி -காவேரி -போலே -ஔதார்யத்துக்கு சங்கோசம் இல்லை –
கொடுத்தத்தை நினையாதே கொடுக்கும் மேகம் போன்ற ஸ்வபாவத்தை உடைய திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையவன்
சமன் கொள் வீடு தரும் சமன் குன்றமே –
விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே —
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் இருந்து வைத்து -ஆஸ்ரிதரான இடையருக்கும் இடைச்சிகளுக்கும் கட்டவும் அடிக்கவுமாம் படி
வந்து அவதரித்து அச்செயலாலே அடிமை கொண்டவன் -பிரதம விபூஷணம் -உதர பந்தனம் –
விசும்போர் பிரானாய்–எந்தையே –என் அமுதம் ஆனவன் -என் பரன் -என்று அந்வயம்-
உபாயத்வம் –ஆக்கிக் கொண்டு -/அமுதம் -உபேயத்வம் /பரத்வம் /சௌலப்யம் /சௌர்யம் வீர்யம் பராக்கிரமம்
அனைத்தும் சொல்லி –தன்னை ஒழிய போகாதவன் –
தாயார் -குழந்தை பிதற்றலை கேட்டு சயனித்து -நாபியில் –நாஹம் -அறிய வில்லையே சொல்லி பிதற்றி -ஸ்ரீ பத்ம நாப ஸ்ரீ யே -தேசிகன்

——————————————————————————–

அவதாரிகை –

எற்பரன் என்கிறபடியே என்னளவில் அவன் செய்தால் போல்-நிர்ஹேதுக அனுக்ரஹம்- செய்வார்க்கு அவனைக் காணலாம் அல்லது
ஸ்வ யத்னத்தாலே அறிவோம் என்பார்க்கு அறியப் போகாது என்கிறார்

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே —2-7-12-

அதிசயித ஞானாதிகருக்கும் தன்னளவில் செய்த உபகாரம் அறியார்
தாமோதரனைத் -ஆமோ தரமறிய-இப்படி என்றால் நாராயணனை அறிய முடியுமோ-ஆஸ்ரித பரதந்த்ரன்
தனி முதல்வனை -நிமித்த -உபாதான காரணம் -சமஸ்த ஜகத் ஏக காரணத்வன்
ஞாலம் உண்டவனை -பிரளயத்தில்
ஆமோ தரமறிய ஒருவர்க்கு -தங்களை தவிர வேறு யாராலும் முடியாதே -ஆகாது –
என்றே தொழுமவர்கள்-
தாமோதரன் உருவாகிய –சிவற்கும் திசை முகற்கும்-சரீரம் தானே -இவர்கள் இப்படி சொல்லி தொழுகிறார்கள் –
பிரகாரதயா சேஷம் -பிரியாமல் சார்ந்து
கடுகிலே கடலை மடுத்தால் போலே -என்னிடம்
ஆமோ தரமறிய -இவர்களா தெரிந்து கொள்வார்கள் -இவர்கள் அந்த பரத்வன் தாமோதரன் என்பார் -என்னிடம் கலந்தது அறியாதார்களே
தாமோதரனாக வந்து என்னளவு வந்தது அறியாதவர்கள் -என்றவாறு
எம்மானை என்னாழி வணனையே -சமுத்திர வர்ணன் -கடுகிலே கடலை மடுத்தால் போலே –(குண ஆர்ணவம் -என்னுள் வைத்த உபகாரகம்- தாமோதரத்வம் பரத்வம் என்னலாம் படி அன்றோ )-இந்த சௌலப்யம் யாரே அறிவார் –
விசேஷ உபகாரம் அறிவது அரிது -யசோதை கையால் கட்டுப்பட்டதை அறிந்தாலும்

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்கென்றே யாயிற்று ப்ரஹ்மாதிகள் சொல்லுவது
தாமோதரனை –
அவன் ஆஸ்ரித பரதந்த்ரனாய் நிற்கிற நிலையை அறியப் போமோ
தனி முதல்வன் –
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் என்கிறபடியே த்ரிவித காரணமும்
தானேயாய் இருக்கிற இருப்பை அறியப் போமோ
ஞாலம் உண்டவனை –
உண்டாக்கி விடுகை யன்றிக்கே ஆபத் சகனாய் நிற்கும் நிலையை அறியப் போமோ –
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரமறிய-
ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு என்னா நிற்பார்கள்-தாங்கள் எல்லாம் அறிந்தார்களாக நினைத்து தொழுமவர்கள்
யஸ்ய மதம் அமதம் -யஸ்ய அமதம் தஸ்ய மதம் -அப்பால் பட்டவன் என்றே சொல்ல முடியும் –
ஆமோ தரம் அறிய ஒருவற்கு என்றே தொழும்வராய் -தாமோதரன் உருவாகிய சர்வேஸ்வரனுக்கு சரீரவத் விதேயரான
சிவர்க்கும் திசை முகர்க்கும் தரமறிய யாமோ
அல்லாதாரில் காட்டில் தாங்கள் அறிந்தார்களாக அபிமானித்து இருக்கிறவர்களாலே தான் அறியப்போமோ –
ஆரைத் தான் என்னில்
எம்மானை என்னாழி வணனையே —
குளப்படியில் கடலை மடுத்தால் போலே தான் குண ஆர்ணவமாய் இருக்கிற இருப்பை எனக்கு அறிவித்தவனை –
இப்படி அவன் தானே காட்டக் கண்ட நான் கண்டால் போலே காண்பார்க்கு காணலாம் அத்தனை அல்லது –
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போமோ –
தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள் தாமோதரன் உருவாகிய
சிவற்கும் திசை முகற்கும் எம்மானை என்னாழி வணனையே தரமறிய ஆமோ –என்று அந்வயம் –

————————————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றவர்களை இத் திருவாய் மொழி தானே எம்பெருமான் திருவடிகளைச் சேர்த்து விடும் -என்கிறார் –

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூர்ச் சடகோபன்  
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-13-

பகவத் பிராப்தியே பலம்
வண்ண மா மணிச் சோதியை -நிறம் -பெரு விலையனான -நீல மணி -தேஜஸ் -ஜோதி மணி உருவம் -விக்ரகம் என்றுமாம்
அமரர் தலைமகனை -நித்ய ஸூ ரிகளும் அழகை பரிச்சேதிக்க ஒண்ணாத படி
கண்ணனை –ஆஸ்ரிதரை -தானே அனுபவிப்பிக்கும் -சௌலப்யம்
நெடுமாலைத் -வ்யாமோஹம்
தென் குருகூர்ச் சடகோபன்  -அழகிய –நிர்வாஹகர்
பண்ணிய -செய்த -பகர்ந்த -பண்ணில் அமைத்து அருளிச் செய்த
தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும் -சர்வாதிகாரம் -திராவிட சந்தர்பம் கூட்டு –
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு -பண்ணிலே வர்த்திக்கும் திரு த்வாதச திரு நாமம்
அண்ணல் தாள் அணைவிக்குமே-கேசவன் தமராக்கும் -சர்வேஸ்வரன் திருவடிகளை பிராபிக்கும் –

வண்ண மா மணிச் சோதியை –
அழகிய நிறத்தை உடைத்தாய் -பெரு விலையனான ரத்னம் போலே இருக்கிற விக்ரகத்தை உடையவனை –
வண்ணம் -நிறம்
மா மணி -மா கறுப்பு -கறுத்த மணி போலே -நீல ரத்னம் போன்ற வடிவில் தேஜஸ்சை உடையவன் -என்றுமாம் –
இவ் வழகைக் கொள்ளை கொள்ளும் போக்தாக்களைச் சொல்லுகிறது –அமரர் தலைமகனை –
ஒரு நாடாக அனுபவியா நின்றாலும் தன் அழகைப் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கிறவனை
கண்ணனை
அவர்களே அனுபவித்துப் போகாமே -இங்கு உள்ளாரும் அனுபவிக்கும் படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை
நெடுமாலைத்
ஒருவனை விஷயீ கரித்தால்-அவன் அளவில் தலைக் கட்டாத வ்யாமோஹத்தை உடையவனை –
தென் குருகூர்ச் சடகோபன்  பண்ணிய –தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும் -பண்ணில்
வேதம் போலே பிறப்பிலி யன்று -அபௌருஷேயம்-என்னும் அதிலும் வீறு உண்டாய் இருக்கிறதாயிற்று-வக்த்ரு விசேஷத்தாலே
சடாரி -ஸ்ரீ ஸூ க்தி -அகில ஹேய -ஞான அனுதயம் -அந்யதா ஞானம் -விபரீத ஞானம் -கர்மா வாசனா ருசி போக்கி
-சகல ஹேய நிரசன பூர்வகம் -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் வார்த்தை அன்றோ
பகவத் பிரசாத லப்த பரி பூர்ண ஞான வைபவம் அகில சேதன உஜ்ஜீவன ஆசை கொண்ட ஆழ்வார் –
பிரத்யஷ சமாநாகார பரிவாஹ-வேதத்துக்கு இதுவும் அடியாய் இருக்கும் -சாஷி – உயர்ந்த பிரமாணம் ஆகுமே –வக்த்ரு விசேஷம்
இவை பண்ணிலே யாயிற்று நடந்தது
பன்னிரு நாமப் பாட்டு-
வைஷ்ணத்வ சிஹ்னமான திரு நாமங்களை வைத்துப் பாடினவை –
இவை செய்வது என் என்னில்
அண்ணல் தாள் அணைவிக்குமே–
சர்வேஸ்வரன் திருவடிகளிலே சேர்த்து விடும்
இத் திருவாய் மொழி யோட்டை சம்பந்தம் தானே கேசவன் தமர் ஆக்கி விடும் –

முதல் பாட்டில் தம்மோடு சம்பந்தி சம்பந்திகளும் எல்லாரும் தம்மைப் போலே விஷயீ க்ருதரானார்கள் -என்றார்
இரண்டாம் பாட்டில் அதுக்கு அடி நாராயணன் ஆகையாலே என்றும் அந் நாராயண சப்தார்த்தத்தையும் அருளிச் செய்தார் –
மூன்றாம் பாட்டில் இப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது சொன்னார் –
நாலாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படி பண்ணினான் என்றார்
அஞ்சாம் பாட்டில் இப்படி தன்னை அனுபவித்ததனாலே அவன் வடிவில் வந்த புகரைச் சொன்னார்
ஆறாம் பாட்டில் இப்படி என்னை விஷயீ கரிக்கைக்கு அடி நிர்ஹேதுக கிருபை என்றார்
ஏழாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படியான நெஞ்சைத் தந்தான் என்றார்
எட்டாம் பாட்டில் தந்த அளவன்றிக்கே விரோதியான நெஞ்சையும் போக்கினான் என்றார்
ஒன்பதாம் பாட்டில் தன்னுடைய கல்யாண குணங்களையே நான் அனுபவிக்கும் படி என் ஹிருதயத்திலே புகுந்தான் -என்றார்
பத்தாம் பாட்டில் அனுபவ விரோதியான இந்த்ரியங்களையும் தன் வழி யாக்கிக் கொண்டான் என்றார்
பதினோராம் பாட்டில் ஏவம் பூதனானவன் என்னை அல்லாது அறியானானான் என்றார்
பன்னிரண்டாம் பாட்டில் என்னைப் போலே காண்பார்க்கு காணலாம் அது ஒழிய ஸ்வ யத்னத்தால் அறியப் போகாது என்றார் –
நிகமத்தில் பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தே கேசவ அபிமத தாம பஜந்த ஹந்த
யே மாமகா இதி வதன் நதி ஸப்தமம் ச
தஸ்ய ஸ்வரூப குண சேஷ்டித வாசி நாம
பூதன் விஷட் க முகரோ முமுதே முதீந்த்ர–17-

ஹந்த —என்ன ஆச்சர்யம்
யே மாமகாகா இதி வதன் —திருதராஷ்ட்ரன் மாமகாகா கூட உள்ளோர் அனைவரையும் தொலையப் பண்ணிற்று —
இவரது மாமகாகா இவர் சம்பந்த சம்பந்திகள் அனைவரையும் உஜ்ஜீவித்தது
அதி சப்தமம் -சக —ஏழாவது பதிகம் -21 தலைமறை என்றுமாம்

——————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

ஸர்வாதிஸ் ஸர்வ நாதஸ் த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் ஸுவ ஆஸ்ரிரார்த்தி
விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ விமத நிரசனஸ் ஸுவ அங்க்ரி சத்  பக்தி தாயீ
விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – ஸுவ விபவ ரஸதஸ் ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய
ஸ்வார்த்தேஹோ பந்த மோக்தா ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே –2-7-

1-ஸர்வாதிஸ் –கேசவன் தமர் இத்யாதி -க இதி ப்ரஹ்மணோ நாம -இத்யாதிகள் படியே ஸர்வ காரணமாய்

2-ஸர்வ நாதஸ் —நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–ஸர்வ ஸ்வாமியுமாய்

3-த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் –மாதவன் என்றதே கொண்டு–பெரிய பிராட்டிக்கு வல்லபனுமாய் –

4-ஸுவ ஆஸ்ரிரார்த்தி–எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான்—
பஹு வாக ஆஸ்ரிதர் உண்டாக வேணும் என்று பிரார்த்திக்குமவனாய் –

5-விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ —விட்டிலங்கு கருஞ்சுடர் இத்யாதி –நிரவதிக தேஜோ ரூபனுமாய்

6-விமத நிரசனஸ் —மது சூதனை யன்றி மற்றிலேன்—விரோதி நிராசனனுமாய் –

7-ஸுவ அங்க்ரி சத்  பக்தி தாயீ —நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய்—தன் திருவடிகளிலே அநந்ய ப்ரயோஜனையான பக்தியை ஆஸ்ரிதற்குக் கொடுக்குமவனாய் –

8–விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – -வாமனன் என் மரகத வண்ணன்—மஹா பலி யாலே அபஹ்ருதமான வாமன யுடையவனுமாய் –

9–ஸுவ விபவ ரஸதஸ் –சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்–
தன்னுடைய ஸ்ரீ யபதிவத்தையும்-புண்டரீகாக்ஷதை-போன்ற ஐஸ்வர்யத்தை ஸர்வ காலமும் சொல்லி அலற்றும்படி பண்ணுமவனாய் –

10–ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய—இருடீகேசம் எம்பிரான் இத்யாதி –ஹ்ருஷீகேசன் ஆகையால் மனசை
தன் திருவடிகளில் நின்றும் பேராதபடி நிர்வஹிக்க வல்லவனுமாய் –

11–ஸ்வார்த்தேஹோ –எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்–
ஸ்வார்த்தமாகச் சேதனரை அர்த்திகள் ஆக்கித் தன்னை அனுபவிக்கக் கொடுக்குமவனை

12-பந்த மோக்தா—-தாமோதரனைத் தனி முதல்வனை–தாமோதரம் பந்த கதம் -என்கிறபடியே பந்த கதருக்கு
மோக்ஷ ஹேதுவான தாமோதரத்வத்தை யுடையனுமாய் இருக்கிற எம்பெருமான் –
நியாய சாஸ்திரம் வெட்கி காட்டில் ஒழியும் படி பண்ணினார்
எதோ உபாசனம் ததோ பலம் -பொய்த்ததே
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றியவன் -கர்மங்கள் விலங்கு பட்டன படும்

ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே -ஆஸ்ரிதருடைய சம்பந்த சம்பந்திகளுக்கும் ரக்ஷகன் என்று –
கேசவன் தமர் -என்கிற துவாதச நாம காதையிலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

——————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 17-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு
ஆறு என்று நெஞ்சே அணை——–——17-

———————————————————————–
அவதாரிகை –

இதில்
கீழ் மேல் உண்டானவர்கள் எல்லாரும்
தம்முடைய சம்பந்தத்தாலே
பகவத் தாஸ்ய லாபத்தை லபித்தார்கள் என்று
ஹ்ருஷ்டராய்ப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்
தம் அளவில் உண்டான உகப்பு தம் ஒருவர் அளவிலும்
சுவறி விடுகை அன்றிக்கே
தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினர் -என்கிற
விரோதி நிவ்ருத்தி அளவன்றிக்கே
பலத்தாலும் வெள்ளமிட்டு-அலை எறிகிற படியைக் கண்டு –
மமாப்யேஷ யதாதவ -என்னும்படி
ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே என்று வித்தராய்
தம்மை இப்படி சபரிகரமாக விஷயீ கரிக்கைக்கு அடியான
அவன் குண சேஷ்டிதங்களை
திருத் த்வாதச நாம முகத்தாலே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிற
கேசவன் தமரில் -அர்த்தத்தை
கேசவனால் எந்தமார்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

———————————————————————————

வியாக்யானம்–

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும் தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த –
எம்பிரான் எம்மான் நாராயணனாலே-
எமர் -கீழ் மேல் ஏழ் பிறப்பும் –
கேசவன் தமர் -ஆனார்கள்
மாசரிது பெற்று –
அத்தாலே –நம்முடைய வாழ்வு வாய்க்கின்ற வா –
என்றத்தை நினைக்கிறது –

கேசவனால் எந்தமர்கள் –
ஜகத் காரண பூதனாய்
விரோதி நிரசனம் பண்ணுமவனாய் –
பிரசஸ்த கேசவனான
அவனாலே

மதீயர் தேசு அடைந்தார் என்று
தேஜஸ் சைப் பிராபித்தார்கள் என்று –
கேசவன் தமராகை இறே இவர்களுக்கு தேஜஸ்
தாஸ்யம் இறே ஆத்மாவுக்கு தேஜஸ் கரமாவது –
அத்தை தம்மோட்டை சம்பந்தத்தாலே
கீழ் மேல் உண்டான சம்பந்தி பரம்பரையில் உள்ளவர்கள் எல்லாரும்
லபித்தார்கள் என்று
அந்த யுபகார கௌரவத்தாலே
அவன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய்
வைஷ்ணத்வ சிஹ்னமாய்
கேசவன்
நாரணன்
மாதவன்
கோவிந்தன்
விட்டு
மது சூதனன்
திரி விக்ரமன்
வாமனன்
சிரீதரன்
இருடீகேசன்
பற்ப நாபன்
தாமோதரன் –
என்கிற திரு த்வாதச திரு நாமங்களை பேசி அனுபவித்து
ஹ்ருஷ்டராய்
அத்தை இப்படி நன்றாக அருளிச் செய்த –
சிறப்பு -நன்று –

வீசு புகழ் மாறன்-
சம்பந்த சம்பந்திகள் அளவும்
வைஷ்ணத்வம் ஏறிப் பாயும் படியான
வைபவத்தால்
வந்த பிரசுரமான யசஸ்சை உடைய
ஆழ்வார் உடைய-

மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று –
புஷ்பம் போன்ற திருவடிகளே
நித்தியமான ஆத்மாக்களுக்கு எல்லாம்
உஜ்ஜீவிக்கைக்கு
உசித உபாயம் என்று –

நெஞ்சே அணை-
அவர்களிலே ஒருவனாய்
அம்சம் பெறும்படியான எனக்கு உபகரணமாய்
சௌமனச்யம் உள்ள மனசே
பிரஸூன சமமான திருவடிகளை நீயும் சமாஸ்ரயணம் பண்ணு–

நாராயணனாலே -என்று –
அவனுடைய ச்வீகாரமே நிரபேஷ உபாயம் என்றதின்
அனுவாதமான
கேசவனால் என்கிற இப்பதத்திலே -தத் விவரணமாக
மாதவன் என்றதே கொண்டு -என்றும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் மேவும் தன் மயமாக்கினான் -என்றும்
என்னைக் கொண்டு -என்றும்
தன் பேறு ஆனமைக்கு –விட்டிலங்கு செஞ்சோதி -என்றும்
அம்மான் திரிவிக்ரமனை எனக்கே அருள் செய்ய –எனக்கு என்ன –விதி சூழ்ந்தது –என்றும்
தொழும் மனமே தந்தாய் -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
உன்னை என்னுள் வைத்தேன் என் இருடீகேசனே -என்றும்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்றும்
தாமோதரனை -என்றும்
அருளிச் செய்த சந்தைகளும் அனுசந்தேயங்கள்-

——————————————————————————————

1) கேசவா – நீண்ட கேசத்தை உடையவன்; கேசி என்ற அரக்கனை வென்றவன்.
2) மாதவா – திருமகள் மணாளன்
3) நாராயணா – உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்
4) கோவிந்த-பூமியைப் பிரளயத்திலிருந்து காத்தவன்; பசுக்களை மேய்த்தவன்
5) விஷ்ணு – அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்
6) மதுஸுந-இந்திரியங்களை ஈர்ப்பவன்; மது என்னும் அரக்கனை வென்றவன்
7) திரிவிக்ரமா – மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்
8) வாமனா – குள்ளமான உருவம் உடையவன்
9) ஸ்ரீதரா – ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்
10) ருஷீகேசா – தன் ஆணைப்படி புலன்களை நடத்துபவன்
11) பத்மநாபா – நாபியில் தாமரையை உடையவன்
12) தாமோதரா-கயிற்றால் கட்டப்பட்ட தழும்பு கொண்ட வயிறு உடையவன்.

இப்பன்னிரு திரு நாமஙகளை “வைகுந்தவாசன்வாமனாவதாரன்கிருஷ்ணாவதாரன் நாமங்கள்” என மூன்று வகையாக பிரிக்கலாம்.

 வைகுந்தவாசன்: நாராயணா, விஷ்ணு.
 வாமனாவதாரன்: திரிவிக்ரமா, வாமனா.
 கிருஷ்ணாவதாரன்: கேசவா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, ஸ்ரீதரா, ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.

———–

|| ஸ்ரீ த்வாதச நாம பஞ்ஜரம் ||

புரஸ்தாத் கேசவ: பாது சக்ரீ ஜாம்பூநதப்ரபு: |
பஸ்சாந் நாரயண: சங்கீ நீலஜீமூத ஸந்நிப: || 1 ||

இந்தீவர தளஸ்யாமோ மாதவோர்த்வம் சுதாதர: |
கோவிந்தோ தக்ஷிணே பார்ச்வே-
-தந்வீ சந்த்ரப்ரபோ மஹாந் || 2 ||

உத்தரே ஹலப்ருத் விஷ்ணு: பத்பகிஞ்ஜல்க ஸந்நிப: |
ஆக்நேயாம் அரவிந்தாபோ முஸலீ மதுஸூதன: || 3 ||

த்ரிவிக்ரம: கட்கபாணிர் நிர்ருத்யாம் ஜ்வலநப்ரப: |
வாயவ்யாம் வாமநோ வஜ்ரீ தருணாதித்ய தீப்திமாந் || 4

ஜசாந்யாம் புண்டரீகாப: ஸ்ரீதர: பட்டஸாயத: |
வித்யுத்ப்ரபோ ஹ்ருஷீகேசோ– ஹ்யவாச்யாம் திசிமுத்கரீ || 5 ||

ஹ்ருத்பத்மே பத்மநாபோ மே ஸஹஸ்ரார்க்க ஸமப்ரப:|
ஸர்வாயுத: ஸர்வசக்தி: ஸர்வக்ஞ: ஸர்வதோமுக: || 6 ||

இந்த்ரகோபக ஸங்காச: பாசஹஸ்தோ ऽபராஜித: |
ஸ பாஹ்யாப்யந்தரம் தேஹம்-
– வ்யாப்ய தாமோதரஸ்தித: || 7 ||

ஏவம் ஸர்வத்ர மச்சித்ரம் .நாம த்வாதசபஞ்ஜரம் |
ப்ரவிஷ்டோऽஹம் ந மே கிஞ்சித் பயமஸ்தி கதாசந: || 8 ||

பயந்நாஸ்தி கதாசந ஓம் நம இதி |

|| ஸ்ரீ த்வாதச நாம பஞ்ஜரம் ஸம்பூர்ணம் ||

——————-

புரஸ்தாத் கேசவ பாது , சக்ரீ ஜாம்பு நாத பிரபா, பச்சன் நாராயண சங்கீ நீலா ஜீமூத சன்னிபா. 1 

கிழக்கே முகமாய், உருகிய தங்கச் சக்கரத்தை ஏந்திய கேசவனால் நான் காக்கப்படுகிறேன், மேற்கில் நான் நாராயணனால் காக்கப்படுவேன்.
சங்கு வைத்திருப்பவர், செழுமையான நீலமேகத்தை ஒத்தவர்.

இந்தீவர தல ஷ்யாமோ மாதவோ ஊர்த்வா கதாதர,
கோவிந்தோ, தக்ஷிணே பார்ஸ்வே தந்வீ சந்த்ர ப்ரபோ மஹான். 2

உச்சியில் இருந்து, நீல அல்லி நிறமும் சூலாயுதமும் கொண்ட மாதவனால் என்னைக் காக்கட்டும்,
தெற்கில் சந்திரனின் குளிர்ந்த பிரகாசத்தை உடையவனும் அம்பு ஏந்தியவனுமான கோவிந்தனால் என்னைக் காக்கட்டும்.

உத்தரே ஹல ப்ருத் விஷ்ணு, பத்ம கிஞ்சல்க சன்னிபா,
அக்நேயம் அரவிந்தபோ முசலீ மதுசூதனா. 3

வடக்கே என்னை விஷ்ணு பகவான் காக்கட்டும்.
தாமரை இழையின் நிறமுடையவனும், கலப்பையை வைத்திருப்பவனும்,
தென்கிழக்கில், தாமரையைப் போன்றவனும், பூச்சியை ஏந்தியவனுமான மதுவைக் கொன்றவனே என்னைக் காக்கட்டும்.

த்ரிவிக்ரம கட்க பாணி, நிர்யாத்யம் ஜ்வலனா பிரபா,
வாயவ்யம் வாமனோ வஜ்ரி தருணாதித்ய தீப்திமான். 4

தென் மேற்கில் திரிவிக்ரமனால் என்னைக் காக்கட்டும்.
வாளை ஏந்தி நெருப்பு போல் பிரகாசிப்பவன்,
வடமேற்கில் வாமனனால் காக்கப்படுபவன்,
இடியை ஏந்தி இளம் சூரியனைப் போல் பிரகாசிப்பவன்.

ஜசாந்யாம் புண்டரீகாப: ஸ்ரீதர: பட்டஸாயத: |
வித்யுத்ப்ரபோ ஹ்ருஷீகேசோ– ஹ்யவாச்யாம் திசிமுத்கரீ || 5 ||

வடகிழக்கில் தாமரையின் நிறமும் ஈட்டியும் ஏந்திய ஸ்ரீதரால் என்னைக் காக்கட்டும்,

கீழே இருந்து மின்னலைப் போலவும் சுத்தியலைப் பிடித்தவனுமான ஹிருஷிகேசனால் என்னைக் காக்கட்டும் .

ஹ்ருத் பத்மே பத்மநாபோ மே ஸஹஸ்ர அர்க ஸம ப்ரபா, ஸர்வாயுத ஸர்வ சக்தி ஸர்வஜ்ஞ ஸர்வதோ முக. 

கோடி சூரியன்களின் பிரகாசத்துடன், என் இதயத்தை ஆக்கிரமித்து, அனைத்து ஆயுதங்களுடனும், அனைத்து சக்திகளுடனும், அனைத்தையும் அறிந்தவராகவும், பத்மநாபா பகவான், எல்லாத் திசைகளிலும் முகங்களுடன் என்னை எப்போதும் காக்கும்.

இந்த்ர கோப ஸங்காஸ பாஸ ஹஸ்தோ அபராஜித,
ஸ பாஹாய அந்தரம் தேஹம் வ்யாப்ய தாமோதர ஸ்திதா. 7

எனக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் தாமோதரன்,
நீலத் தேனீயின் நிறத்தை உடையவனும்,
கைகளில் கயிறுகளை உடையவனும்,
வெல்ல முடியாதவனுமான தாமோதரன் என்னை எப்போதும் காக்கட்டும்.

ஏவம் ஸர்வத்ர மச் சித்ரம் நாம த்வாதச பஞ்சரம்,
ப்ரவிஷ்டோஹம் ந மே கிஞ்சித் பயமஸ்தி கதாச்சன. 8

இவ்வாறு உடைக்க முடியாத கூண்டுக்குள் நுழைந்து,
எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் பன்னிரண்டு பெயர்களில்,
நான் எப்போதும் எல்லா இடங்களிலும் பாதுகாக்கப்படுகிறேன்,

பயம் நாஸ்தி கதாசன ஓம் நம இதி.
எந்த நேரத்திலும் பயப்பட வேண்டாம்.

எந்த நேரத்திலும் பயம் இல்லை.

——————–

துவாதச புண்டரம் :

[ஶ்ரீசூர்ணம் (தாயார்) – திருமண் (பெருமாள்) – ஸ்தாநம் – நிறம்]

கேசவன் 
தோள்களாம் நாலிலும் ஆள்கின்ற சக்கரம் !
நீள்திரு மார்பில் மலர்மகள்சேர் — வேள்வித்தீ 
பொன்னன்! அடியார் திரு நெற்றிக் கேசவன் !
அன்னை சிரிதேவி யாம்!
நாரணன் 
சங்குதங்கு நாற்கரம்! சேமநல் வீடுசேர்
மங்கலத் தாளினன்! தேவியும் — பொங்கலைவாய் 
தோன்றினாள்! வான்நீல வண்ணத்தெம் அண்ணல்மால்
ஒன்றுமிடம் பத்தர்(மேல்) வயிறு!
மாதவன் 
கருநீலம் தோய்நிறமும் நீள்புயம் நான்கில்
பெருவலத்த நாந்தகமும் தாங்கிப் — பொருந்தும்
அமலன்அங் கைமா தவன்தன் தேவி
கமலையும் சேரிடம் மார்பு!
கோவிந்தன் 
 
குளிர்முத்தின் வெண்ணிறமும் கோலவில் நான்கும்
மிளிர்முன் கழுத்தின் அமர்ந்து — அளிபொறை
அன்னை அவள்பெயரும் தண்மதியின் மிக்கொளியாள் !
முன்னை வினைமுடிப்பர் சேர்ந்து.
விஷ்ணு 
 
தாமரைத் தாதன்ன பொன்னிறத் தோள்கள்
சுமக்கும் கலப்பைஓர் நான்கும் — நமக்கு
வயிற்றின் வலப்புரம்சேர் விட்டுவவன் மாது
துயக்கறுக்கும் தோன்றக் கிடந்து.
மதுசூதனன் 
உலக்கை ஒருநான்கும் தாமரையின் மென்நிறமும்
மாலாய் உலகாளும் மாயோன் — வலப்புயது 
செவ்விக்கு செவ்விசேர் வைட்டணவி மாதொடும்
தவ்வை அவள்வௌவல் மாய்த்து.
திரிவிக்ரமன் 
 
அனலோன் அணிநிறமும் கைசுரிகை நான்கும்
தனதாகி, வேட்டும் வரம்ஈட்டும் — கோனவன்தோள்
மாட்டுயர்  வஞ்சிக் கொடியென் ஏறினாளைத்
தீட்டும் கழுத்தின் வலத்து .
வாமனன் 
அருக்கன் அழல்நிறமும் கைநான்கு தாங்கு
உருப்பொலிந்த வஜ்ரமும் எம்மின் – பெருவுதரம் 
சேர்இடபால் ஆங்கு அரியவன் தேவியும்
பேர்ந்திடாது மேவும் மகிழ்ந்து.
ஸ்ரீதரன் 
 
வெண்டா மரைமென் நிறமும் பட்டயமும்
கொண்டானை  கைநின்ற சார்ங்கம்சேர் —  தண்டா 
மரைதா யவளும் திகழுமிடம் நம்தோள்
மறைநூல் இடது புரம்.
ஹிருஷீகேசன்
மின்னின் நிறவண்ணன் மற்கரம் கைபூண்டு
மன்னுபுகழ் மால்தேவ தேவிசேர் — மன்னன்
திகழ்விடம் நம்மின் கழுத்திட மாக;
புகழது எந்தை குடிக்கு.
பத்மநாபன் 
பகலவன் பொன்நிறமும் தன்பெரும் தேவி 
அகல்மார்வத் தோடும் அவன்கை — திகழ்வதாம்
ஐம்படை சேரத் துலங்குவான் பின்முதுகு 
தம்மிடமாய் போற்றும் வகைத்து .
தாமோதரன் 
உதயபானு போல்நிறமும் காணுலுகில் பேரழகி 
யாத மலர்மகள் மங்கல — நாதனும்
பாசம்கை   பற்றி  இசைவிடம் பின்கழுத்து,
வாசன்வாய் பேசும் புகழ்ந்து.

——————————————-

ஸ்ரீ பன்னிரு நாமம் -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

இந்த திவ்ய பிரபந்தமும் பேர் அருளாளன் விஷயமே –ஸ்ரீ கேசவாதி திரு நாமங்களை சொல்லி பன்னிரு திருமண் காப்புகளில்
அவ்வவ் வெம்பெருமான்களை ஆவாஹனம் செய்ய வேண்டும் -இந்த பிரபந்தத்தில் அவ்வெம்பெருமான்களின் திருமேனி நிறம் –
அவர்கள் அணிந்து இருக்கும் திவ்ய ஆயுதங்கள் -அவர்கள் தலைவராய் வீற்று இருக்கும் திசை –
நம் சரீரத்தில் புண்ட்ர ரூபமாய் அவர்கள் வகிக்கும் பாகம் ஆகியவற்றை ஸ்ரீ தேசிகன் வெளியிட்டு அருளுகிறார் –

———————————

பன்னிரு நாமம் திருவத்தியூர்ப் பரன் பாதம் என்று
நன்னிற நாமம் படை திக்கு இவை யாவையும் நாம் அறியத்
தென்னம் தமிழ்த் தொடைச் சீரார் கலித்துறை யோதி ஈந்தான்
மின்னிரு நூலார் வேங்கட நாதன் நம் தேசிகன் —சிறப்புத் தனியன் –

மின்னிரு நூலார் வேங்கட நாதன் நம் தேசிகன் —பிரகாசம் பொருந்திய திரு யஞ்ஜோபவீதம் அமைந்த திரு தூப்பூல் திருவேங்கடமுடையான் ஆகிய நம் தேசிகர்
பன்னிரு நாமம் திருவத்தியூர்ப் பரன் பாதம் என்று -பன்னிரண்டு ஊர்த்வ புண்டரங்களும் பெருமை பொருந்திய ஸ்ரீ ஹஸ்திகிரி நாதனான
பேர் அருளாளனுடைய திருவடி வடிவம் கொண்டன என்று நினைத்து
நன்னிற நாமம் படை திக்கு இவை யாவையும் நாம் அறியத் -அந்த புறங்களின் தேவதையாகிய எம்பெருமானுடைய
சிறந்த நிறம் திரு நாமம் திவ்ய ஆயுதம் வசிக்கும் திசை ஆகிய அனைத்தையும் நாம் அறியும் படி
தென்னம் தமிழ்த் தொடைச் சீரார் கலித்துறை யோதி ஈந்தான்-தெற்கே வழங்கும் அழகிய தமிழினால் ஆகிய பாட்டுக்களுக்குள் சிறப்புப் பொருந்திய
கட்டளை கலித் துறை என்னும் பாவினத்தால் அருளிச் செய்து நாம் அனுசந்திக்கத் தந்து அருளினார் –

——————————-

கார் கொண்ட மேனியன் பாதாம் புயத்தைக் கருத்திருத்தி
ஏர் கொண்ட கீர்த்தி இராமானுசன் தன் இணை அடி சேர்
சீர் கொண்ட தூப்பூல் திருவெண்காடாரியன் சீர் மொழியை
யார் கொண்டு போற்றிடினும் அம்மாள் பாதத்தை அடைவிக்குமே —சிறப்புத் தனியன் –

கார் கொண்ட மேனியன் பாதாம் புயத்தைக் கருத்திருத்தி –மேகத்தை ஒத்த திருமேனியையுடைய பேர் அருளானுடைய
திருவடித் தாமரையை மனத்தில் உறுதியாகத் தியானித்து
ஏர் கொண்ட கீர்த்தி இராமானுசன் தன் இணை அடி சேர் –அழகிய புகழையுடைய ஸ்ரீ பாஷ்யகாரருடைய இரண்டு திருவடித் தாமரைகளை சேர்ந்த
சீர் கொண்ட தூப்பூல் திருவேங்கடாரியன் சீர் மொழியை-பெருமை பெற்ற ஸ்ரீ தூப்பூல் திருவேங்கடமுடையானுடைய சிறந்த ஸ்ரீ ஸூக்தீயை
யார் கொண்டு போற்றிடினும் அம்மாள் பாதத்தை அடைவிக்குமே —மனத்தில் கொண்டு யார் ஸ்துதித்தாலும்
அவ்வெம்பெருமானுடைய திருவடிகளை அந்த ஸ்ரீ ஸூக்திகளே பெறுவிக்கும் –

—————————————————–

கேசவனாய் நின்று கீழைத் திசையிலும் நெற்றியிலும்
தேசுடை ஆழிகள் நான்குடன் செம் பசும் பொன் மலை போல்
வாசி மிகுத்து என்னை மங்காமல் காக்கும் மறையதனால்
ஆசை மிகுத்த யயன் மக வேதியில் அற்புதனே –1- ஸ்ரீ கேசவன் -பொன் நிறம் -நான்கு திருச் சக்ராயுதங்கள்- கிழக்கு -புண்டர ஸ்தானம் நெற்றி –

மறையதனால் ஆசை மிகுத்த யயன் மக வேதியில் அற்புதனே –வேதாந்தார்த்த நிச்சயத்தால் பேர் அருளானனே பரன் என்று தேறி
அவனிடம் அன்பு மிகுதியாகப் பெற்ற ப்ரஹ்மாவினுடைய யாக வேதியிலே திரு அவதரித்த அதிசய சேஷ்டிதங்களை யுடைய பேர் அருளாளன்
கேசவனாய் நின்று கீழைத் திசையிலும் நெற்றியிலும் -கேசவன் என்னும் திரு நாமத்தை யுடையனாய் கிழக்குத் திசையிலும் பாகவதர்கள் நெற்றியிலும்
தேசுடை ஆழிகள் நான்குடன் செம் பசும் பொன் மலை போல்
வாசி மிகுத்து என்னை மங்காமல் காக்கும்–பிரகாசமுள்ள திருச் சக்ராயுதங்கள் நான்குடன் சிவந்த மாற்று உயர்ந்த பொன்னினால் அமைந்த
மலை போல் நிலை பெற்று சிறப்பு மிகுந்து என்னைக் கெட்டுப் போகாமல் ரஷித்து அருளுகிறார் –

————————————–

நாரணனாய் நல் வலம் புரி நாலும் உகந்து எடுத்தும்
ஊர் அணி மேகம் எனவே உதரமும் மேற்கும் நின்றும்
ஆரண நூல் தந்து அருளால் அடைக்கலம் கொண்டு அருளும்
வாரண வெற்பின் மழை முகில் போல் நின்ற மாயவனே–2-ஸ்ரீ நாராயணன் -நீல நிறம் -நான்கு திவ்ய சங்காயுதங்கள் -மேற்கு -புண்ட்ர ஸ்தானம் வயிறு –

நாரணனாய் நல் வலம் பூரி நாளும் உகந்து எடுத்தும்
ஊர் அணி மேகம் எனவே உதரமும் மேற்கும் நின்றும்
ஆரண நூல் தந்து அருளால் அடைக்கலம் கொண்டு அருளும்
வாரண வெற்பின் மழை முகில் போல் நின்ற மாயவனே–நாராயணன் –ஸ்ரீ ஹஸ்த கிரியிலே குளிர்ந்த மேகம் போலே நிற்கின்ற அதிசய சேஷ்டிதங்களையுடைய பேர் அருளாளன்
நாரணனாய் நல் வலம் புரி நாலும் உகந்து எடுத்தும் -நாராயணனாய் இருந்து சிறந்த வலம் புரிச் சங்கங்கள் நான்கையும் மகிழ்ந்து திரு க் கையில் ஏந்தியும்
ஊர் அணி மேகம் எனவே உதரமும் மேற்கும் நின்றும் -நிலத்தில் சஞ்சரிக்கும் அழகிய மேகம் என்னும்படியாகவும் வயிற்றிலும் மேற்குத் திசையிலும் நின்றும்
ஆரண நூல் தந்து அருளால் அடைக்கலம் கொண்டு அருளும் -வேதமாகிய சாஸ்திரத்தைப் பிரவர்த்திப்பித்து கிருபையால்
அடியேனை ரஷிக்கப் பட வேண்டிய வஸ்துவாக ஏற்றுக் கொண்டு அருள்கிறான் –

————————————————————-

மாதவ நாமமும் வான் கதை நான்கும் மணி நிறமும்
ஓதும் முறைப் படி ஏந்தி யுரத்திலும் மேலும் அல்கிப்
போதலர் மாதுடன் புந்தியில் அன்பால் புகுந்து அளிக்கும்
தூதனும் நாதனுமாய தொல் அத்தி கிரிச் சுடரே –3-ஸ்ரீ மாதவன் –இந்த்ர நீல நிறம் -நான்கு திவ்ய கதைகள் –ஊர்த்வ திசை -புண்ட்ர ஸ்தானம் -மார்பு —

தூதனும் நாதனுமாய தொல் அத்தி கிரிச் சுடரே -பாண்டவர்களுக்குத் தூதனாயும் அனைவருக்கும் ஸ்வாமியாயும் உள்ள அநாதியான
ஸ்ரீ ஹஸ்திகிரியில் உள்ள தேஜஸ்ஸாகிய பேர் அருளாளன்
மாதவ நாமமும் வான் கதை நான்கும் மணி நிறமும் -மாதவன் என்கிற திரு நாமத்தையும் -வலிய திவ்ய கதை நான்கையும் -இந்த்ர நீல ரத்னத்தின் நிறத்தையும்
ஓதும் முறைப் படி ஏந்தி யுரத்திலும் மேலும் அல்கிப் -சாஸ்திரங்களில் கூறும் முறைப்படி தரித்து -மார்பிலும் மேல் நோக்கும் திசையிலும் இருந்து
போதலர் மாதுடன் புந்தியில் அன்பால் புகுந்து அளிக்கும் -அடியேன் இடம் அன்பினால் என் மனசில் தாமரை மலரில் விளங்கும் பிராட்டியுடன் பிரவேசித்து ரஷித்து அருள்கிறான் –

——————————————-

கோவிந்தன் என்றும் குளிர் மதியாகிக் கொடியவரை
ஏவும் தனுக்களுடன் தெற்கிலும் உட் கழுத்திலும் நின்று
மேவும் திருவருளால் வினை தீர்த்து எனை யாண்டு யருளும்
பூவன் தொழ வத்தி மா மலை மேல் நின்ற புண்ணியனே -4-ஸ்ரீ கோவிந்தன் –சந்த்ரநிறம் -நான்கு திவ்ய வில்கள்௦புன்ற ஸ்தானம் உட் கழுத்து –

பூவன் தொழ வத்தி மா மலை மேல் நின்ற புண்ணியனே –கமலத்தில் அவதரித்த ப்ரஹ்மா சேவித்து அனுபவிக்கும் படி
ஸ்ரீ ஹஸ்த மஹா கிரியின் மேல் நிலை பெற்று நின்றவனுமான புண்ய ஸ்வரூபனான பேர் அருளாளன்
கோவிந்தன் என்றும் குளிர் மதியாகிக் கொடியவரை -கோவிந்தனாகவும் நிறத்தில் எப்பொழுதும் குளிர்ந்த சந்த்ரனாகவும் இருந்து துஷ்டர்களை
ஏவும் தனுக்களுடன் தெற்கிலும் உட் கழுத்திலும் நின்று -போக்குகின்ற நான்கு திவ்ய விற்களுடன் தெற்குத் திசையிலும் கழுத்தின் உட் புறத்திலும் நிலை பெற்று நின்று
மேவும் திருவருளால் வினை தீர்த்து எனை யாண்டு யருளும்–பொருந்திய சிறந்த கருணையால் பாபங்களை போக்கி அடியேனை அடிமையும் கொண்டு அருள்கிறான் –

———————————————————-

விட்டு வல வயிற்றின் கண் வடக்கும் விடாது நின்று
மட்டவிழ்த் தாமரைத் தாது நிறம் கொண்ட மேனியனாய்த்
தொட்ட கலப்பைகள் ஈர் இரண்டாலும் துயர் அறுக்கும்
கட்டு எழில் சோலைக் கரிகிரி மேல் நின்ற கற்பகமே -5-
ஸ்ரீ விஷ்ணு -தாமரைத் தாதுவின் பொன்நிறம்–நான்கு திவ்ய கலப்பைகள் -வடக்கு திசை -புண்ட்ர ஸ்தானம் -வயிற்றின் வலப் புறம் –

கட்டு எழில் சோலைக் கரிகிரி மேல் நின்ற கற்பகமே -மிக்க அழகுள்ள சோலைகள் சூழ்ந்த ஸ்ரீ ஹஸ்தி கிரியின்
மேலே எழுந்து அருளி யுள்ள கல்பவ்ருக்ஷம் போன்ற பேர் அருளாளன்
விட்டு வல வயிற்றின் கண் வடக்கும் விடாது நின்று –விஷ்ணுவாக இருந்து வயிற்றின் வலப் புறத்திலும் வடதிசையிலும்நீங்காது தங்கி
மட்டவிழ்த் தாமரைத் தாது நிறம் கொண்ட மேனியனாய்த் -தேன் ஒழுகுகின்ற தாமரையின் மகரந்தத்தை நிறத்தைக் கொண்ட திருமேனியுடையனாய்
தொட்ட கலப்பைகள் ஈர் இரண்டாலும் துயர் அறுக்கும் –கையில் ஏந்திய கலப்பைகள் நான்கினாலும் அடியேன் துன்பத்தை போக்கி அருள்கிறான் –

——————————————————————-

மதுசூதனன் என் வலப் புயம் தென் கிழக்கு என்று இவற்றில்
பதியாய் இருந்து பொன் மாது யுறை பங்கய வண்ணனுமாய்
முது மா வினைகள் அறுக்கும் முயலங்கள் ஈர் இரண்டால்
மதுவார் இளம் பொழில் வாரண வெற்பின் மழை முகிலே -6-
ஸ்ரீ மது ஸூ தனன் -தாமரை நிறம் –நான்கு திவ்ய உலக்கைகள் –தென் கிழக்கு –புண்ட்ர ஸ்தானம் –வலது புஜம் —

மதுவார் இளம் பொழில் வாரண வெற்பின் மழை முகிலே –தேன் நிறைந்த இளம் சோலை சூழ்ந்த ஸ்ரீ ஹஸ்திகிரியில்
எழுந்து அருளியுள்ள வர்ஷா கால மேகம் போன்ற பேர் அருளாளன்
மதுசூதனன் என் வலப் புயம் தென் கிழக்கு என்று இவற்றில் -மது ஸூ தனனாக இருந்து எனது வலது புஜமும் தேன் கிழக்கும் ஆகிய இந்த ஸ்தானங்களில்
பதியாய் இருந்து பொன் மாது யுறை பங்கய வண்ணனுமாய் -ஸ்திரமாய் இருந்து ஸ்ரீ லஷ்மீ பிராட்டி நித்ய வாசம் செய்கின்ற தாமரையின் நிறம் யுடையவனாய்
முது மா வினைகள் அறுக்கும் முயலங்கள் ஈர் இரண்டால் -திவ்ய உலக்கைகள் நான்கினால் என்னுடைய அநாதியான பெரிய கர்மங்களை ஒழித்து அருள்கிறான் –

————————————————

திரிவிக்ரமன் திகழ் தீ நிறத்தன் தெளிவுடை வாள்
உருவிக் கரங்களில் ஈரிரண்டு ஏந்தி வலக் கழுத்தும்
செரு விக்கிரமத்து அரக்கர் திக்கும் சிறந்து ஆளும் இறை
மருவிக் கரிகிரி மேல் வரம் தந்திடும் மன்னவனே -7-
ஸ்ரீ திரிவிக்ரமன் –அக்னி நிறம் -நான்கு திவ்ய வாள் –தென் மேற்கு திசை -புண்ட்ர ஸ்தானம் –கழுத்தின் வலப்புறம் –

மருவிக் கரிகிரி மேல் வரம் தந்திடும் மன்னவன் இறை –ஸ்ரீ ஹஸ்திகிரியின் மீது பொருந்தி வேண்டிய வரத்தைக் கொடுத்து அருள்கின்ற சக்கரவர்தியாகிய பேர் அருளாளன்
திரிவிக்ரமன் திகழ் தீ நிறத்தன் தெளிவுடை வாள்-உருவிக் கரங்களில் ஈரிரண்டு ஏந்தி -ஸ்ரீ திரிவிக்ரமனாய் இருந்து ஜ்வலிக்கின்ற அக்னி போன்ற நிறம் உடையவனாய் –
திருக் கைகளிலே பிரகாசம் பொருந்திய திரு வாள்கள் நான்கையும் உருவித் தாங்கி
வலக் கழுத்தும் -செரு விக்கிரமத்து அரக்கர் திக்கும் சிறந்து ஆளும் -கழுத்தின் வலப் புறத்திலும் போரில் வலிமையைக் காட்டுகின்ற
ராக்ஷஸர்களுடைய திசையாகிய நைருதி-தென் மேற்கு திக்கிலும் சிறந்து நின்று ரஷித்து அருள்கிறான் –

—————————————

வாமனன் என் தன் வாமோதரமும் வாயுவின் திசையும்
தாமம் அடைந்து தருண அருக்கன் நிறத்தனுமாய்ச்
சேம மரக்கலம் செம் பாவி ஈர் இரண்டால் திகழும்
நா மங்கை மேவிய நான்முகன் வேதியில் நம் பரனே -8-
ஸ்ரீ வாமனன் –நான்கு திவ்ய வஜ்ரம் –வட மேற்கு திசை –புண்ட்ர ஸ்தானம் -வயிற்றின் இடது புறம் –

நா மங்கை மேவிய நான்முகன் வேதியில் நம் பரனே –சரஸ்வதி உடன் பொருந்திய ப்ரஹ்மாவின் யாக வேதியில் திரு அவதரித்த நம் சர்வேஸ்வரனான பேர் அருளாளன்
வாமனன் என் தன் வாமோதரமும் வாயுவின் திசையும் –வாமனனாய் என் இட வயிற்றையும் வாயுவின் திசையான வட மேற்கையும்
தாமம் அடைந்து தருண அருக்கன் நிறத்தனுமாய்ச் –ஸ்தானமாகக் கொண்டு உதித்த ஸூர்யன் யுடைய நிறமுடையவனாய்
சேம மரக்கலம் செம் பாவி ஈர் இரண்டால் திகழும் –அடியார்களை சம்சார சமுத்திரத்தில் இருந்து கரை சேர்த்து க்ஷேமத்தைக் கொடுக்கும்
ஓடமாக இருந்து சிவந்த திவ்ய வஜ்ராயுதம் நான்கினோடு பிரகாசித்து அருள்கிறான் –

———————————-

சீரார் சிரீதரனாய்ச் சிவன் திக்கும் இடப் புயமும்
ஏரார் இடம் கொண்டு இலங்கு வெண் தாமரை மேனியனாய்ப்
பாராய பட்டயம் ஈர் இரண்டாலும் பயம் அறுக்கும்
ஆரா வமுது அத்தி மா மலை மேல் நின்ற அச்சுதனே-9-
ஸ்ரீ தரன் –வெண் தாமரை நிறம் –நான்கு திவ்ய பட்டாக் கத்தி -வட கிழக்கு திசை –புண்ட்ர ஸ்தானம் -இடது புஜம் –

ஆரா வமுது அத்தி மா மலை மேல் நின்ற அச்சுதனே—எவ்வளவு அனுபவித்தாலும் தெவிட்டாத அமுதமாய் உள்ளவனும்
ஸ்ரீ ஹஸ்தி மஹா கிரியின் மேல் நிலை பெற்றவனும் அடியவர்களைக் காய் விடாதவனுமான பேர் அருளாளன்
சீரார் சிரீதரனாய்ச் சிவன் திக்கும் இடப் புயமும் –சிறப்பு நிறைந்த ஸ்ரீ தரனாய் சிவனுடைய திசையாகிய வட கிழக்கையும் இடது புஜத்தையும்
ஏரார் இடம் கொண்டு இலங்கு வெண் தாமரை மேனியனாய்ப் -அழகு பொருந்திய ஸ்தானமாகக் கொண்டு பிரகாசிக்கின்ற வெண்மையான தாமரையின் நிறமுடையவனாய்
பாராய பட்டயம் ஈர் இரண்டாலும் பயம் அறுக்கும் -பருத்த பட்டயம் என்னும் ஒருவகையான திவ்ய வாள்கள் நான்கினாலும் என் பயத்தைப் போக்கி அருள்கிறான் –

———————————————

என்னிடிகேஷன் என் இறை கீழ் இடக் கழுத்து என்று இவற்றில்
நல் நிலை மின் உருவாய் நாலு முற்கரம் கொண்டு அளிக்கும்
பொன் அகில் சேர்ந்து அலைக்கும் புனல் வேகை வட கரையில்
தென்னன் உகந்து தொழும் தேனை வேதியர் தெய்வம் ஒன்றே -10-
ஸ்ரீ ஹ்ருஷீ கேசன் –மின்னல் நிறம் -நான்கு திவ்ய சம்மட்டி –கீழ்ப் பாகம் –புண்ட்ர ஸ்தானம் –கழுத்தின் இடப் புறம் —

பொன் அகில் சேர்ந்து அலைக்கும் புனல் வேகை வட கரையில் -பொன்னையும் அகில் கட்டையையும் கொண்டு
அலை மோதுகின்ற ஜலத்தை யுடைய வேகவதி நதியின் வடகரையில்
தென்னன் உகந்து தொழும் தேனை வேதியர் தெய்வம் ஒன்றே -புண்ய ராஜன் மகிழ்ந்து வணங்குகின்ற தேனம் பாக்கத்தில் உள்ள
வைதிகப் பெரியோர்களின் ஒரே தெய்வமாகிய பேர் அருளாளன்
பெருமாள் கோயிலுக்கு மிகச் சமீபத்தில் தேனம் பாக்கம் என்னும் ஸ்ரீ கிராமம் –இத்தை ஸ்ரீ காஞ்சீ புரத்து ஒரு வீதியாகவும் கொள்ளலாம் –
அங்கு ஸ்ரீ பாஞ்ச ராத்ர சாஸ்திரங்களில் கரைகண்ட பரம பாகவதர்கள் எழுந்து அருளி இருந்து பேர் அருளாளனை குல தெய்வமாகக் கொண்டு
வழுவாது திரு வாராதானம் செய்து வந்தனர்
அவர்களுடைய ஆத்மகுணங்களைக் கண்ட ஆஸ்திக சிகாமணியான பாண்டிய ராஜன் ஒருவன் அவர்களுக்கு ஸம்மானம் அளித்து
அவர்களை வணங்கி வந்தான் என்னும் வரலாறு கர்ண பரம்பரையாக அறியக் கிடக்கின்றது –
மேலும் பெருமாள் கோயில் பாண்டிய நாட்டில் அடங்கியதாகச் சில காலம் இருந்ததாகவும் அப்பொழுது பாண்டிய ராஜன் பேர் அருளாளன் யுடைய அருளாலே
பெருமை பெற்று வாழ்ந்து வந்தது பற்றியும் அவ்வரசன் பேர் அருளாளனைத் தொழுது வந்ததாகவும் சிலா சாசனம் உளது என்றும் சிலர் பணிப்பர்
என்னிடிகேஷன் என் இறை கீழ் இடக் கழுத்து என்று இவற்றில் -ஹிருஷீகேசன் என்னும் என் ஸ்வாமியாய் இருந்து கீழ்ப் பாகமும் கழுத்தின் இடப் புறமும்
ஆகிய இந்த இடங்களில்
நல் நிலை மின் உருவாய் நாலு முற்கரம் கொண்டு அளிக்கும் -நன்கு நிலை பெற்ற மின்னைப் போன்ற நிறமுடையவனாய் இருந்து
நான்கு திவ்ய சம்மட்டிகளை திவ்ய ஆயுதமாகக் கொண்டு ரஷித்து அருள்கிறான் –

————————————————

எம் பற்பநாபனும் என் பின்மனம் பற்றி மன்னி நின்று
வெம் பொன் கதிரவன் ஆயிரம் மேவிய மெய் உருவாய்
அம் பொன் கரங்களில் ஐம் படை கொண்டு அஞ்சல் என்று அளிக்கும்
செம் பொன் திரு மதிள் சூழ் சிந்துரா சலச் சேவகனே -11-
ஸ்ரீ பத்ம நாபன் –ஸூர்யன் நிறம் –திவ்ய சக்கரம் சங்கு வாள் வில் தண்டு என்னும் பஞ்ச திவ்ய ஆயுதங்கள் -ஸ்தானம் -மனாஸ் -புண்ட்ர ஸ்தானம் -பின்புறம்

செம் பொன் திரு மதிள் சூழ் சிந்துரா சலச் சேவகனே –சிவந்த பொன்னாலாகிய அழகிய மதிள் சூழ்ந்த ஸ்ரீ ஹதிகிரியில் உள்ள மஹா வீரனான பேர் அருளாளன்
எம் பற்பநாபனும் என் பின்மனம் பற்றி மன்னி நின்று -எம்முடைய பத்ம நாபனுமாகி என்னுடைய பின் பாகத்தையும் மனசையும் பற்றிக் கொண்டு ஸ்திரமாய் நின்று
வெம் பொன் கதிரவன் ஆயிரம் மேவிய மெய் உருவாய் -உஷ்ணமான சிவந்த ஆயிரம் ஸூர்யனோடு ஒப்பான திரு மேனி நிறமுடையவனாய்
அம் பொன் கரங்களில் ஐம் படை கொண்டு அஞ்சல் என்று அளிக்கும் -அழகிய சிவந்த திருக்கைகளில்
திவ்ய பஞ்ச ஆயுதங்களைத் தரித்து அஞ்சாதே என்று கூறி ரஷித்து அருள்கிறான் –

——————————

தாமோதரன் என் தன் தாமங்கள் நாலு கரங்களில் கொண்டு
ஆமோ தரம் என ஆக்கத்தின் உட் புறம் பிற் கழுத்தும்
தாம் ஓர் இளம் கதிரோன் என என் உள் இருள் அறுக்கும்
மா மோகம் மாற்றும் மதிள் அத்தியூரில் மரகதமே-12-
ஸ்ரீ தாமோதரன் –உதிக்கின்ற ஸூர்யன் நிறம் -நான்கு திவ்ய பாசங்கள் -சரீரத்தின் உட் புறமும் வெளிப் புறமும் –புண்ட்ர ஸ்தானம் –கழுத்தின் பின் புறம்

மா மோகம் மாற்றும் மதிள் அத்தியூரில் மரகதமே–பெரிய அஞ்ஞானத்தைப் போக்குகின்ற திரு மதிள்கள் சூழ்ந்த
ஸ்ரீ ஹஸ்திகிரியில் உள்ள மரகத ரத்னம் போன்ற பேர் அருளாளன்
தாமோதரன் என் தன் தாமங்கள் நாலு கரங்களில் கொண்டு -என் தாமோதரனாகி நான்கு திவ்ய பாசங்களை திருக் கைகளிலே ஏந்திக் கொண்டு
ஆமோ தரம் என ஆக்கத்தின் உட் புறம் பிற் கழுத்தும் -இந்தப் பெருமை மற்றவருக்கு உண்டோ என்னும் படி சரீரத்தின் உள்ளேயும் வெளியிலும் கழுத்தின் பின் புறத்தும் நின்று
தாம் ஓர் இளம் கதிரோன் என என் உள் இருள் அறுக்கும் -தான் ஓர் உதிக்கின்ற ஸூர்யன் என்னும்படி நிறமுடையவனாய் இருந்து
எனது மனத்துள் இருக்கும் அஞ்ஞானம் ஆகிய இருளை போக்கி அருள்கிறான் –

————————————–

கத்தித் திரியும் கலைகளை வெல்லும் கருத்தில் வைத்துப்
பத்திக்கு உரு துணை பன்னிரு நாமம் பயில்பவர்க்கு
முக்திக்கு மூலம் எனவே மொழிந்த இம்மூன்றும் நான்கும்
தித்திக்கும் எங்கள் திருவத்தி யூரரைச் சேர்பவர்க்கே -13-

கத்தித் திரியும் கலைகளை வெல்லும் கருத்தில் வைத்துப் -சாரம் இல்லாமல் ஆடம்பரத்தோடு கத்திக் கொண்டே திரிகின்ற
பயன் அற்ற வித்யைகளை வாதத்தில் ஜெயிக்க கூடிய உறுதியை யுடைய மனசில்
பத்திக்கு உரு துணை பன்னிரு நாமம் பயில்பவர்க்கு –பக்திக்குத் தக்க சாதனமான கேசவாதி பன்னிரண்டு திரு நாமங்களையும் ஊன்றி அனுசந்தித்து பரிச்சயம் செய்பவர்க்கு
முக்திக்கு மூலம் எனவே மொழிந்த இம்மூன்றும் நான்கும் -மோக்ஷம் அளிக்க காரணமாகும் என்னும்படி அருளிச் செய்த இந்த பன்னிரண்டு பாசுரங்களும்
தித்திக்கும் எங்கள் திருவத்தி யூரரைச் சேர்பவர்க்கே -எங்கள் பேர் அருளாளரை ஆஸ்ரயித்த பாகவதர்களுக்கே பரம போக்யமாய் இன்பம் கொடுப்பனவாகும் –

—————-

அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….கிரேசி மோகன்
—————————————————————————————————————

“கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய ,வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய”…..ஆக பெருமாளின் 12 திவ்ய நாமங்கள்….கிரேசி மோகன்….

கேசவன்
——————

“களமுற பார்த்தனின் கலவர வேர்த்தலைக்  கழுவிடு தீர்த்தமாம் கீதையதால்
உளமுரம் கூட்டினை ஒருரதம் ஓட்டினை பலமுற காட்டினை பாதையதை
பொலபொல என்றுதி காலையை முந்திடும் பரவசக் கோதையின் பாசுரத்தால்
அலைகடல் விட்டுயர் பட்டரின் பெட்டையை கட்டிடக் கேட்டிடும் ”கேசவனே”….(1)
ஹரிஹரி கோகுலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

நாராயணன்
————————–
“சரிய பிதாம்பரம் நழுவ கதாயுதம் பிளிறும் கஜேந்திரன் குரல் கேட்டு
பறவைசு தாகரம் விரையவ னாந்திரம் எறிய சுதர்சனம் விரல்விட்டு
துரிதநி வாரண முனிகள் தபோவனம் பறையும் கதாம்ருத காரணனே
முரளி மனோகர கமல பதாம் புய அனந்த”நாராயண” பூரணனே”….(2)
ஹரிஹரி கோகுல பாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

மாதவன்
——————

“அவையென இவையென அளவிடல் தவறென கவிமணி மலையணில் கூட்டியதை
புவிதனில் ஏழையை பிள்ளையை வேழனை மகிழ்வுறச் செய்ததைக் காட்டினையே
தவியுற ஆய்க்குடி தளிர்விரல் தூக்கிட குளிர்மழை காத்தனை யாதவனே
கவிகளின் காப்புக் கடவுள்முன் தோப்புக் கரணம் செய் காக்கும் ”மாதவனே”….(3)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

கோவிந்தன்
————————

“அலமுவை கட்டினை அதிகடன் பட்டனை அடைத்திடத் தொட்டனை ஏழுமலை
பலரிட உண்டியில் சிலறையை ஒண்டியாய் புகல்ஜர கண்டியில் வாழயிலை
துளசியை மென்றிட குறையிலை என்றிடும் நிலைதர நின்றிடும் ”கோவிந்தா”
அலைகடல் சேடனில் அணிமகள் கூடலில் வளர்துயி லாடிடும் வைகுந்தா”….(4)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

விஷ்ணு
—————-

“செதிளதில் ஆரணம் முதுகினில் மேருவும்முகநுனி தாரணி கொண்டவனே
சதையுறி உந்தியில் பதபலி புந்தியில்விதவித பந்தியில் உண்டவனே
விதையுழு ராமனும் மழுமுனி ராமனும் தொழுரகு ராமனும் பாகவதக்
கதைசொலும் க்ருஷ்ணனும் பலபல ஸ்ருஷ்டியும் சதைவுயிர் ”விஷ்ணுவின்” சாகசமே”….(5)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

திரிவிக்ரமன்
—————————-

“அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம் உணர்குரு சுக்கிரர் கட்டளையை
பலியிட அக்கணம் குறள்”திரி விக்ரம” வடிவினில் திக்கது தொட்டனனே
புலனுரு வாமனம் பழகிட நீமனம் பெருகுவை ஆணவ கந்தையிலே
சலணரு ணேசரின் சிசுரம ணேசரை சரணடை கோவண சந்நிதியில்”….(6)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

வாமனன்
——————

“சிறைவசு தேவகி கருவச மாகிட இரவினில் ஏகினன் கோகுலமே
கறவைகள் மேய்த்தனன் கம்சனை சாய்த்தனன் தீர்த்தனன் ஆயரின் வ்யாகுலமே
மறைதிரு மச்சமும் அரைதனில் கச்சமும் குடுமியின் உச்சமும் பூமணமாய்
குறளுரு வாயொரு குடைபுயம் சாய்வுற களபலி சேய்வளர் ”வாமனனே” ….(7)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

சீதரன்
————

“இலைமரு தாணியின் மணமுறை மேனியள் திருமகள் பூணிடும் ”சீதரனே”
அலைகலை மங்கையர் அடிதொழும் சுந்தரி மலைசிவ சங்கரி சோதரனே
அலைகடல் சங்கொடு நந்தகி ஆழியும் சிலைபரு தண்டமும் கண்டவுடன்
விலையென ஏறிடும் வெவ்வினை ஆறிடும் விடுமெமை வேறிடம் சேருமதே”….(8)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

ரிஷிகேசன்
——————–
“அசுரநி சாசரர் அதரும நீசர்கள் அழியச ராசரம் வந்தவனை
தசவித வேஷனை முனிமன வாசனை தவ”ரிஷி கேசனை” வந்தனம்செய்
தசமுகன் சாகவும் குசலவர் ஏகவும் ரகுபதி ராகவ ரூபமெடு
தசரத மைந்தனை குகனோடு ஐந்தென தரணியில் உய்ந்தவன் தாபமுறு”….(9)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

பதுமநாபன்
————————
“கரனுடன் தூஷணை வனஉழை வேஷனை தசமுக பூஷனை இம்சைதரும்
இரணிய ராட்ஷசன் இணையிரண் யாட்ஷகன் துரியனின் சூழ்ச்சியை ,கம்சனையும்
குறைசிசு பாலனை மதுகைட பாணனை வதம்புரி மாலனை நம்பிடுவாய்
பிரமனுய் நாபனை புவியுமிழ் நாபனை ’’பதுமம்கொள் நாபனை’’ கும்பிடுவாய்”….(10)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

தாமோதரன்
————————-

“கரமொடு களவாய் பிடிபட உனதாய் உரலிட இழு”தா மோதரனே”
மரமதை சாய்த்தனை மருதிடை வாய்த்தவர் மறுவுல கேத்திடும் ஆதரவே
புரிவிஷ மத்தினில் முடிவில்ந லத்தினை வெளியுற வைத்திடும் யவ்வனனே
சரியென தப்பென அறியும்ம னத்தினை அரிகழல் வைத்தறு வெவ்வினையே”….(11)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

மதுசூதனன்
———————

“மகளிர்உ டுப்பினை மறைவிளோ ளித்தனை பிறகுஅ ளித்திடும் திட்டமொடு
துகிலுரி துட்டனை தளர்வுற கொட்டினை துருபதைக் எட்டிட பட்டதனை
புகுவிட பூதனை விடவுடல் வேதனை முலையுறி மா”மது சூதனனே”
புகுகருங் காளியுன் பிறவியைக் கோளிட வ்ரஜநிலம் ஏளிய சோதரனே….(12)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே…

———————-

திருவாய்மொழி நாராயணனுக்கே

பரமாத்மாவுக்கு ஆயிரம் ஆயிரம் நாமங்கள் இருப்பினும், (விஷ்ணு சஹஸ்ரநாமம்), துவாதச நாமங்கள் என்று பன்னிரண்டு நாமங்கள் இருப்பினும், (கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேச, பத்மநாப மற்றும் தாமோதர), வியாபக நாமங்களாக (வியாபகம் என்றால், விரிந்து பரந்து எங்கும் இருப்பது). மூன்று (விஷ்ணு, வாசுதேவ, நாராயண) சொல்லப்பட்டாலும், ஆழ்வார் நாராயணன் என்ற நாமத்தையே திருவாய்மொழியில் அறுதி இட்டு சொல்லி உள்ளார்.

வனமாலீ  கதீ  சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ, ஸ்ரீமான் நாராயணோ  விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது.” என்ற ஆதிசங்கரரின் ஸ்லோகம் இங்கே குறிப்பிடலாம். இங்கு ஆதிசங்கரர் விஷ்ணுவின் வியாபக நாமங்களான நாராயண, விஷ்ணு மற்றும்  வாசுதேவ என்ற மூன்றையும் குறிப்பிட்டு உள்ளார்.  ‘வனமாலி என்ற மாலையை அணிந்து கௌமோதகி என்னும் கதை, பாஞ்சசன்னியம் என்னும் சங்கு, சுதர்சன என்னும் சக்கரம், சார்ங்கம் என்னும் வில், நந்தகம் என்னும் வாள் ஆகியவற்றுடன் விளங்கும் நாராயண, விஷ்ணு, வாசுதேவன் என்ற நாமங்களைக் கொண்ட திருமால் என்னைக் காக்க வேண்டும்’ என்பது இதன் பொருள்.

கண்ணன், இராமன், நரசிம்மன், த்ரிவிக்ரமன் மற்றும் வராகன் போன்ற அவதார நாமங்களை ஆழ்வார் திருவாய்மொழியின் பல இடங்களில் உபயோகித்து இருந்தாலும், ‘நாராயணன்’ என்ற நாமமே பரமாத்மாவின் முக்கியமான விஷேச குணநலன்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் நாமம் ஆகும். அதனால்தான், நாராயண  நாம அர்த்தத்தை, நாம், நம் ஆச்சார்யனிடம் கேட்டு தெரிந்து .கொள்ள வேண்டும்.

முதலில் நாராயணன்

திருவாய்மொழியின், முதல், இடை, முடிவு எல்லாம் பரமாத்மாவான நாராயணனையே சொல்லும்.

முதல் திருவாய்மொழியிலே ‘உயர்வற உயர்நல முடையவன்’ என்று தொடங்கி, நாராயணனே பரம்பொருள் என்பதற்காக ‘நாராயண‘ சப்தத்தின் பொருளை முதல் பதிகத்திலேயே அருளிச் செய்தார்.   ‘நாராயணன்’ என்பதின் பொருள், தனக்கு நிகரோ, மேம்பட்டவர்களோ இல்லாதவன், எல்லா நல்ல குணங்களும் கொண்டவன், எல்லா உலகங்களுக்கும் தன்னிகரில்லாத தலைவன் என்பதாகும்.  ‘வண்புகழ் நாரணன்’  (1.2.10) என்று இரண்டாம் பதிகத்தில் தொடங்கி, பின் ‘செல்வ நாரணன்’(1.10.8), ‘நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன்’(2.7.2), ‘திருநாரணன்’ தாள் காலம் (4.1.1) என்று ஆழ்வார் திருவாய்மொழி முதல் சில பத்துகளில் நாராயணன் பெயரைக் கூறி உள்ளார்.

இடையில் நாராயணன்

திருவாய்மொழி திருமந்திரத்தின் அர்த்தத்தை சொல்கின்றன என்று நம்  ஆச்சார்யர்கள் சொல்வார்கள். திருவாய்மொழியின் இடையில் வருகின்ற ஆறாம் பத்து (6.10) திருமந்திரத்தின் முதல் பதமான “ஓம்” என்பதனையும், மற்றும் ஏழாம் பத்தில் உள்ள பதிகங்கள் 7.1 இரண்டாம் பதமான “நம” என்பதனையும் மற்றும் 7.2 மூன்றாம் பதமான நாராயணாய என்பதனையும்   குறிக்கும்.

கங்குலும் பகலும் (7.2) என்ற பதிகத்தில் உள்ள ஒவ்வொரு பாடலின் மூலம், ஆழ்வார் தான் திருவாய்மொழியில், பத்து பத்துக்களால் என்ன சொல்லவந்தோம் என்பதை தேறிய பொருளாக தெரிவிப்பதாலும், முன்பு சொன்னதுபோல், திருவாய்மொழி நாரயணனுக்கே என்பதாலும்,  திருவாய்மொழி இடையிலும் நாராயணனே உள்ளதாக கூறப்படுகிறது.

இறுதியில் நாராயணன்

‘காராயின காள நன்மேனியன் நாராயணன்’ (9.3.1), ‘திண்ணம் நாரணம்,’ (10.5.1) ‘வாழ் புகழ் நாரணம் (10.9.1) என்று திருவாய்மொழி இறுதியிலும் நாரணனையே கூறி ஆழ்வார் முடிக்கிறார்.

மேலே சொல்லியவை ஒரு சில உதாரணங்களே, இருப்பினும், ஆழ்வார் திருவாய்மொழி முழுவதும் நாராயணனைக் கொண்டே சுவாசித்து உள்ளார்.

——————

த்வாதஸ ஊர்த்வ புண்ட்ரங்களுக்கும்‌ இப் பன்‌னிரண்டு திரு நாமங்களும் ௮நுஸந்திக்கப்படுகின்‌றன,
புருஷோத்தமனுடைய அம்ஸ சாரத்தைப்‌ பெற்ற த்வாதச ஆதித்யர்களுக்கும்‌ இப் பன்னிரு நாமங்களே கூட்டப்‌ பெற்றிருக்கின்‌றன.
எம்பெருமானுக்குப்‌ பரம்‌, வியூஹம்‌, விபவம்‌, அந்தர்யாமி, அர்ச்சை என்று. ஐந்து ௮வஸ்கைகள்‌ உள்ளனவென்பது
ஸகல ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ் புராண பாஞ்சராத்ர ஸரஸ்த்ரங்களில்‌ கோஷிக்கப்படுகின்றது.
இவ்வைந்து அவஸ்தைகளும்‌ இப் பன்னிரு நாமங்களிலும்‌ அநுஸந்திக்கப்‌ படுகின்‌ றன.
மாலரி கேசவன்‌ நாரணன்‌ மாதவன்‌ கோவிந்தன்‌ வைகுந்தன்‌” என்று நம்மாழ்வார்‌ அருளிச்‌ செய்கையாலே “
கேசவன்‌ நாராயணன்‌, மாதவன்‌ கோவிந்‌தன்‌ ” என்னுமிந்த நான்கு திருநாமங்களும்‌
ஸ்ரீவைகுண்ட நாதனாய் எழுந்தருளியிருக்கும்‌ பராவஸ்தையைக்‌ குறிக்கின்‌றன வென்‌பது விளங்குகிறது,

“விஷ்ணு” எனும்‌ அடுத்த திரு நாமம்‌ அநிருத்த நாரரயணனாகிய வியூஹத்தைக் குறிப்பதன்‌ மூலம்‌
மற்ற வியூஹங்களையும்‌ உணர்த்துகிறது.
மது ஸூதன்ன்‌’ என்பதும்‌ அந்த வியூஹ மூர்த்தியின்‌ சேஷ்டிதத்தைச்‌ சொல்லுகிறது.
“திரிவிக்ரமன்‌. வாமனன்‌. தாமோதரன்‌ என்னும்‌ திரு நாமங்கள்‌ விபவாவதாரங்களைச்‌ சொல்லுகின்‌றன.
ஸ்ரீதரன்‌” என்னும்‌ திருநாமம்‌ அவ் விபவ அவதாரங்களிலும்‌ பகவான்‌ பிராட்டியுடனேயே
அவதரிக்‌ கிறானென்று காட்டுகிறது.
“ஹ்ருஷீகேசன்‌’ என்னும்‌ திரு நாமம்‌ அந்தர்யாமியாய்‌ நின்று இந்திரியங்களை நியமிக்கும்‌ இருப்பை உரைக்கிறது.
‘ஸ்ரீதரன்‌” , எல்லாத்‌ திரு நாமங்களும்‌ திருமலை முதலிய திவ்ய ஷேத்ரங்களில்‌ எழுந்து யிருக்கும்‌
ஸ்ரீநிவாஸன்‌ முதலிய அர்ச்சா மூர்த்திகளையும்‌ உணர்த்துகின்‌ றன.
“பத்மாபன்‌’ என்று இவ் வவதாரங்‌களுக்கெல்லாம்‌ மூல அவதாரமான க்ஷீராப்தி நாதனைப்‌ பேசுகிறது. ,
ஆக, இப்படி ஐந்து அவஸ்தைகளும்‌ இந் நாமங்களில்‌ அநுபவிக்கப்படுகின்‌றன.

————

இனி இத் திருநாமங்களின்‌ அர்த்‌ தங்களைச்‌ சிந்திப்போம்‌.
(கேசவன்‌ )
ககாரத்தினால்‌ சொல்லப்‌ படும்‌ பிரமனையும்‌,
“ஈசன்‌? என்று பெயர்‌ பெற்ற சிவனையும்‌ உண்டாக்கினவன்‌,
“க இதி ப்‌,ரஹ்மணோ நாம ஈஸ்வர அஹம் ஸர்வ தே,ஹிநாம்‌ | .
ஆவாம்‌ தவாங்கே, ஸம்பூதெள தஸ்மாத்‌ கேஸவ நாமவார்‌ ||”
[‘க:’ என்று ப்ரஹ்மாவுக்குப் பெயர்‌;
தேஹத்தில்‌ அபிமான முள்ள எல்லாருக்கும்‌ நான்‌ ஈசன்‌;
ப்ரஹ்ம ருத்ரர்களாகிய நாங்கள்‌ இருவரும்‌ உன்னுடைய சரீரத்தனின்‌றும்‌ பிறந்‌தோம்‌;
ஆகையால்‌ நீ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனாயிருக்கிறாய்‌.
என்‌று ஹரிவம்சத்தில்‌ பேச நின்ற சிவனாலும்‌ பேசப்பட்டது.
-‘நாராயணாத்‌, ப்‌,ரஹ்மா ஜாயதே। நாராயணாத்‌, ருத்ரோ ஜாயதே|”
நாராயணனிடமிருந்து பிரமன்‌ பிறக்கிறான்‌:
நாராயணனிடமிருந்து ருத்திரன்‌ உண்டாகிறான்‌.
என்பது முதலான வேதவாக்கியங்களையும்‌.
மற்ற ப்ரமாணங்களையும்‌,
“தெய்வ நான்முகக்கொழுமுளை ஈன்று முக்கணீசனொடு தேவு பல (–முதலிய ஆழ்வார்‌ அருளிச்செயல்களையும்‌
இவ்விடத்தில்‌ அநுஸந்திப்பது.
(கேசவன்‌ )
பிரமனையும்‌ சிவனையும்‌ தன் வசத்தில்‌ வைத்திருப்‌பவன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
‘நாராயணாத்‌ ப்ரஜா யந்தே।| நாராயணாத்‌ ப்ரவர்த்தந்தே | நாராயணே ப்ரலீயந்தே।’்‌
பிரமன்‌ முதலிய எல்லாரும்‌ நாராயணனிடமீருந்து உண்டாகிறார்கள்‌:
நாராயணனால்‌ வாழ்கிறார்கள்‌:
நாராயணனிடமே லயமடைரார்கள்‌. என்று சொல்லிற்று

சுடர்மிகு சுருதியும்‌,
“கள்வா! எம்மையும்‌ ஏழுலகும்‌ நின்‌ உள்ளே தோற்றிய இறைவ! என்று
வெள்ளேறன்‌ நான்முகன்‌ இந்திரன்‌ வானவர்‌ புள்ளூர்தி கழல்‌ பணிந்(து) ஏத்துவரே.”’ _என்‌றும்‌,
“நெற்றியுள்‌ நின்றென்னையாளும்‌ நிறைமலர்ப் பாதங்கள்‌ சூடி
கற்றைத்‌ துழாய்‌ முடிக் கோலக்‌ கண்ணபிரானைத்‌ தொழுவார்‌
ஒற்றைப் பிறையணிந்தானும்‌ நான்முகனும்‌ இந்திரனும்‌” என்றும்‌ ஆழ்வார்‌ அருளிச் செய்தார்‌.
“விண்ணோர் தலைவா கேசவா” என்று நம்மாழ்வார்‌ இத் திரு நாமத்துக்குப்‌ பொருள்ள உரைத்தார்‌,
“கேசவா புருடோத்தமா” என்றார்‌ பெரியாழ்‌வாரும்‌.
உத்க்ருஷ்ட புருஷர்களான ப்ரஹ்ம ருத்ரர்களைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌ என்றபடி.
(கேசவன்‌ )
சோதி மயமான ஸூர்யன்‌ முதலியவைகளின்‌ கரணங்கள்‌ கேச ஸப்தத்தினால்‌ சொல்லப்படுகின்‌ றன,
அவைகளைத்‌ தன்‌ வசக்தில்‌ கொண்டிருக்கையால்‌ கேசவன்‌ எனப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.

“அம்ரவோ யே ப்ரகரமாந்தே மம தே கேமுஸம்ஜ்ஞிதா: |
ஸர்வஜ்ஞா: கேஸவம்‌ தஸ்மாந்‌ மம ஹார்த்‌,விஜஸத்தமா:।’”
உலகில்‌ பிரகாசிக்கும்‌ என்‌னுடைய கிரணங்கள்‌ கேசமெனப்‌படுகின்‌ றன.
ஆகையால்‌ எல்லாமறிந்த ப்ராஹ்மண ஸ்ரேஷ்‌டர்கள்‌ என்னைக்‌ கேசவனென்‌று சொல்லுகிறார்கள்‌.
என்று மஹாபாரதத்தில்‌ சொல்லப்பட்டது .
கோவிந்த நாம வியாக்கி யானத்தில்‌ எடுக்கப்பட்டவையான ” தத்ர ஸூர்யோ பாதி” முதலிய ப்ரமாணங்களை இங்கும்‌ அநுஸந்திப்பது.

“திருவடியை நாரணனைக்‌ கேசவனைப்‌ பரஞ்சுடரை ‘ என்று ஆழ்வார்‌ இவ் வர்த்தத்தை உணர்த்தினர்‌.
(கேசவன்‌ )
“கேயாாத்‌, வோ அந்யதரஸ்யாம்‌” பூ மநிந்த; ப,வந்தி மதுபளத,ய: ‘ என்கிற வியாகரண விதிகளின் படி
கேயாப்தத்தின்மேல்‌ வ:’ என்னும்‌ ப்ரத்யயம்‌ வந்து “ப்ரஸஸ்த கேஸ வான்‌’
( புகழ்ப் பெற்ற கேசங்களை உடையவன் ) என்னும்‌ பொருளைத் தருகிறது.
அதாவது: “ய ஏஷ அந்த ராதித்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருங்யதே ஹிரண்ய ஸ்ம்ருர்‌ ஹிரண்ய கேஸ ;”
ஸூர்யனுக்கு நடுவில்‌ யாவனொரு ஸுவர்ண மயனான புருஷன்‌ விளங்குகிறானோ,
அவன்‌ ஸூவர்ணம்‌ போன்று அழகான மீசையையும்‌.கேசங்களையும்‌ உடையவன்‌.
என்று வேதத்தாலும்‌ புகழப் பெற்ற மயிர் முடிகளை உடைய வன்‌ என்று பொருள்‌.
“கொள்கின்ற கோளிருளைச்‌ சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின்‌
உள்கொண்ட நீல நன்னூல்‌ தழைகொல்‌? அன்று
மாயன்குழல்‌ விள்கின்‌ற பூ்ம் தண் துழாய்‌ விரைகால்
வந்தென்னுயிரைக்‌ கொள்கின்றவாறறியீர்‌ அன்னைமீர்‌ கழறா நிற்றீரே.” என்றும்‌.
“முன்னமுகத்தணியார்‌ மொய்குழல்கள்‌ ‘ என்றும்‌,
“சுருண்‌ டிருண்ட குழல்‌ தாழ்ந்த முகத்தான்‌” என்றும்‌ –
மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ”’ என்றும்‌,
“குழலழகர்‌” என்றும்‌ ஆழ்வார்கள்‌ இக் கேச லெளந்தர்யத்தை அநுடவித்தார்கள்‌.
(கேசவன்‌ )
இத்தால்‌ சிக்குத்தலையரான இதர தெய்வங்களிற்‌ காட்டிலும்‌ வ்யாவ்ருத்தி சொல்லப்படுகிறது.”
“பிங்கள ஜடோ தே,வ:’ என்றும்‌,
“ஒருருவம்‌ பொன்னுருவம்‌ ஒன்று செந்தீ ” என்றும்‌ சொல்லுகிற
ப்ரஹ்ம ருத்ரர்கள்‌ மயிர் போலே யன்‌ றிக்கே,
* நீல குஞ்சத மூர்த்‌ த,ஜம்‌ *,
* குழலிருண்டு சுருண்டு ‘ என்கிறபடியே
கண்டவர்‌கள்‌ கண்களிலே அஞ்ஜனமெழுதினாற் போலே ஸ்யாமளமா யிருக்கை”என்‌று
மை வண்ண நறுங்குஞ்சி வியாக்க்யானத்தில்‌ கலி த்‌வம்ஸநாசார்யர்‌ அருளிச் செய்தது
இங்கு அநுஸந்திக்கத்‌ தக்கது.

“நரகே பஸ்யமாநஸ்து யமேந பரிபாவஷித: |
கிம்‌ த்வயா நார்ச்சிதோ தே,வ: கேஸவ: க்லேஸ நாஸந : ||”
நரகத்தில்‌ வேதனையை அனுபவிக்கும்‌ ஒரு மனிதன்‌
“அடே! உன்னால்‌ கிலேசங்களை யெல்லாம்‌ போக்கும்‌ சேசவன்‌ ஏன்‌ அர்ச்சிக்கப்படவில்லை?” என்‌று
யமனால்‌ கேட்கப் பட்டான்‌. –என்று புராணம்‌ சொல்லிற்று.
கேஸவ: க்லேஸமநாமரந: ‘ என்றதின்‌ தாத்பர்யத்தை.
“தாப த்ரயாதுரரோடு விரஹதாபதுரரோடு வாசியற ஸர்வருக்கும்‌ ஸ்ரமஹரமாம்படி
காண்‌ திருக்குழலின்‌ பரிமளம்‌ மிகுந்தபடி;
*கேமரவ: க்லேஸ நாஸநா சமா:”? என்னக் கடவதிறே ;.
த்ருஷ்டி மாத்ர ப்ரியமாயிருக்கை யன்‌றிக்கே நெஞ்சில்‌ ஸ்ரமமெல்லாம்‌ போம்படி காண்‌
திருக்குழலின்‌ பரிமளம்‌ மிகுந்து இருக்கும்படி ” என்று
பரம காருணிகரான பெரிய வாச்சான் பிள்ளை மை வண்ண ஈறழங்குஞ்சி வியாக்க்யானத்தில்‌ அருளிச் செய்தார்‌.

(கேசவன்‌ )
கேசி என்னாம்‌ அஸுரனைக்‌ கொன்‌ற க்ருஷ்ணன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
“யஸ்மாத்‌ த்வயைவ துஷ்டாத்மா ஹத; கேஸவ ஐநார்த்தந ; |
தஸ்மாத்‌ கேஸவ நாமா தவம்‌ லோகே க்ஹவாதிம்‌ கமிஷ்யஸி।”’
ஜனார்த்தனனே! ( உன்னைக்‌ கொல்ல வேணுமென்னும்‌ ) கெட்ட எண்ணத்துடன்‌ வந்த கேசி
உன்னாலேயே கொல்லப்‌ பட்டானாகையால்‌ நீ உலகில்‌ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்‌தால்‌ கீர்த்தி பெறுவாய்‌.
என்று நாரதரால்‌ ஸ்ரீவிஷ்ணு புரரணத்தில்‌ இப்பொருள்‌ பேசப்பட்டது.
கேஸவம்‌ கேஸி ஹந்தாரம்‌” என்றும்‌ மற்றோரிடத்தில்‌ இவ்வர்த்தம்‌ சொல்லப்பட்ட து. –
கேஸவ: கேஸி ஹந்தா ”’ என்று இப் பொருள்‌ ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திலும்‌ ஆதரிக்கப்பட்டது
“கண்ணன்‌ கேசவன்‌” என்றும்‌, `
” நாராயணன்‌ மூர்த்தி கேசவன்‌” என்றும்‌
ஆழ்வார்களாலும்‌ இவ் வர்த்தம்‌ அறு ஸந்திக்கப்பட்டது.
இப்படிப்‌ பொருள் கொள்ளும் போது எம்பெருமானுடைய விரோதி , நிரஸன ஸீலத்வம்‌ தோற்றுகிறது.

கண்ணன்‌ கேசவன்‌ நம்பி’ :
கேசவ நம்பீ உன்னைக்‌ காது குத்த”
“கேசவ நம்பியைக்‌ கால் பிடிப்பாள்‌ என்னுமிப்‌ பேறு எனக்கு அருள் கண்டாய்‌” என்று
இத் திருநாமத்தின்‌ குண பூர்த்தியை அனுஸந்தித்தார்கள்‌.
“கேஸவ ; க்லேஸ நாஸநா -மஹா லோகே த்‌வை ரூப்யேண ஸ்திதெள ஸ்தித: |
மதுராக்‌,யே மஹாஷேத்ரே வாராணஸ்யாமபி த்‌விஜ ॥”’
விப்ரரே! கிலேசங்களைப் போக்கடிக்கும்‌ குழலழகையுடைய பெருமான்‌.
மதுரை என்னும்‌ மஹா ஷேத்திரத்திலும்‌
வாராணஸி எனப்படும்‌ காசியிலும்‌
பூமியில்‌ கோயில் கொண்‌ டெழுந்தருளியிருக்கிறான்‌..] என்னும்‌ ப்ரமாணத்தைக் காட்டி.
பட்டர்‌ இத் திருநாமத்தை அர்ச்சாவதார பரமாக வியாக்கியானம்‌ செய்தருளினார்‌.
இப்படிப்‌ பர விபவ அர்ச்சாவதாரங்‌களைக் குறிக்கக்‌ கூடியதே யாகிலும்‌
கேசவன்‌ நாரணன்‌ சீமாதவன்‌ கோவிந்தன்‌ வைகுந்தன்‌?’ என்று நம்மாழ்வார்‌ அருளிச் செய்கையால்‌.
இத் திருநாமத்துக்குப்‌ பராவஸ்தை யைக் குறிக்கும்‌ பொருளே இங்கு முக்கியார்த்தமாகக்‌ கடவது.

——————

கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தினால்‌ பிரம ருத்திரர்‌ களுக்கும்‌ உத்பாதகன்‌ என்‌ று உரைக்கப்பட்ட து.
இப்படிப்‌ பட்டவன்‌ யார்‌ என்னும்‌,கேள்வி எழ.
‘நாராயணன்‌’ என்று வேதாந்த ஸித்தமான அஸாதாரணமான திருநாமத்தைப்‌ படிக்கிறது.

இத் திருநாமத்தை வேதங்களும்‌. இதிஹாஸ புராணங்களும்‌ ஆழ்வார்களும்‌ மிகவும்‌ ஆதரித்துப் போந்‌ தார்களென்பது ஸுப்ரஸித்தம்‌.
இதிலுள்ள ணகாரமான து வேறெந்த தெய்வத்திற்கும்‌ இத் திரு நாமம்‌ பொருந்தா தென்பதைக்‌ காட்டுகிறது.
இத் திருநாமத்தின்‌ அர்த்தங்‌களோ ஆயிரம்‌ நாவுடடைத்த ஆதிசேஷனாலும்‌ அளவிட்டுச்‌ சொல்லமுடியாதவை.
நாராயணனுடைய பெருமையை அறிந்தாலும்‌ அறியலாம்‌;
நாராயண நாமத்தினுடைய அர்த்த, வைபவத்தை எவராலும்‌ அறியமுடியாது.
பரம காருணிகர்களும்‌ ஸர்வஜ்ஞ ஸார்வ பெனமர்களுமான நம்‌ ஆழ்வார்களும்‌ ஆசாரியர்களும்‌
இத் திருநாமத்தின்‌ பொருளைப்‌ பலவிடங்களில்‌ பேசியிருக்கிறார்கள்‌.
அந்த ஸ்ரீஸக்திகளைத்‌ துணையாகக் கொண்டு நாமும்‌ இத் திரு நாமத்தின்‌ பொருட்‌ பெருமையை
இயன்‌ற வரையில்‌ அநுபவிக்க முற்படுவோம்‌.

“ ரிங்‌-க்ஷயே ”’ என்று தாதுவாகையாலே. ‘ர’ என்னும்‌ எழுத்து க்ஷயித்துப்போகும்‌ பதரர்த்தங்களைக்‌ குறிக்கிறது. ந’ என்னும்‌ எழுத்து அதை நிஷேதி,க்கிறது. ஆக, நர: என்று நித்யமாய்‌ விளங்கும்‌ வஸ்துவைக்‌ குறிக்கிறது. *“நராணாம்‌ ஸமூஹ: நார: என்‌ கிறபடியே “- நர என்‌னும்‌ பதம்‌ இப்படிப்பட்ட நித்யவஸ்‌துக்களின்‌ ஸமூஹத்தைக்‌ குறிக்கிறது. ‘நாரா:’ என்னும்‌ பன்மையால்‌ அப்படிப்பட்ட நித்ய வஸ்‌துக்களின்‌ ஸமூஹங்கள்‌ பல உள என்று உணர்த்தப்‌ படுகிறது. இப்படிப்பட்ட இந்த நித்ய வஸ்‌ துக்களின்‌ ஸமூஹங்கள்‌ எவை என்‌பதைப்‌ பரமகாருணிகரான பெரிய வாச்சான்பிள்ளை ** அவையாவன: ஜஞாநமக் த்யா தி, திவ்‌, யாத்ம குணங்களும்‌, குண ப்ரகாஸ்கமான திவ்யமங்கள விக்ரஹங்களும்‌. விக்ரஹ குணமான ஸெளந்தர்யாதிகளும்‌. அந்த ஸெளந்தர்யாதிகளோபாதி பூத்தாப்போலே சாத்தின கிரீடமகுடாதி திவ்யா பரணங்களும்‌, அவ்வா பரணங்களோடு விகல்பிக்கலாம்படியான சங்க,சக்ராதி திவ்யாயுதங்களும்‌, இத்தனையும்‌ காட்டிலெரித்த நிலாவாகாதபடி அருகே யிருந்து அனுபவிக்கிற லக்ஷ்மீ ப்ரப்ருதி மஹிஷீ வர்க்கங்களும்‌, அச் சேர்‌த்தியிலே அடிமை செய்கிற அநந்‌த கருட விஷ்வக்ஸேந ப்ரமுகரான ஸூரி ஸங்க,மும்‌, அவர்களோபாதி போய்‌ அடிமை செய்கிற ( அவர்களுக்கு அடிமை செய்கைக்குப்‌ பரிகரமான சத்ர சாமராதி,பரிச்‌ச- அவ்வடிமைக்கு வர்த்த,கமாய்‌ பஞ்சோபனிஷந் மயமான  குண த்ரயாத்மிகையான மூலப்‌ரக்ருதியும்‌, புருஷ சமஷ்டியும்‌, அஹோ ராத்ராதி விபாக யுக்தமான காலதத்வமும்‌. ப்ரவாஹ ரூபேண நித்யமான மஹதாதிகளும்‌. தத் கார்யமான அண்டங்‌களும்‌. அண்டாரந்தர்வர்த்திகளான சதுர் வித பூதங்களும் .

பஞ்சோபனிஷஹ மயமாகையாலே பரமபதமும்‌ மஹாத்மகமாயிருக்கும்‌; குணத்ரய த்யிகையாகையாலே மூலப்ரக்ருதியும்‌ ஸமூஹுத்மகையாயிருக்கும்‌ அஹோராத்‌ ராதி,விபாகங்கள்‌ காலமும்‌ ஸமூஹாத்மகமாயிருக்கும்‌” என்று பரந்த ரஹஸ்யத்தில்‌ பரகக அருளிச்செய்தார்‌.

அடுத்தபடியாகவுள்ள அயந சப்தம்‌ பல பொருள்களை உடையது. அவைகளில்‌ இருப்பிடம்‌ ‘ என்பதும்‌ ஒன்று.  அயநம்‌ யஸ்ய ஸூ;-—நாராயண:” [நித்ய பதரர்த்த ஸமூஹங்களாகிற நாரங்கள்‌ எவனுக்கு இருப்பிடமோ. அவன்‌ நாராயணன்‌ ] என்று நாராயண சப்தத்துக்கு ஒரு பொருள்‌ ஏற்படுகிறது. இத்தால்‌ இவன்‌ எல்லாப்‌ பதார்த்தங்‌களையும்‌ : உடல்‌ மிசை உயிரெனக்கரந்தெங்கும்‌ பரந்துளன்‌ ‘. என்று சொல்லப்பட்டதாகிறது.

“சேதநாசேதநம்‌ ஸர்வம்‌ விஷ்ணோர்‌ யத்‌, வ்யதிரிச்யதே |
நாரம்‌ தத,யநஞ்சேத,ம்‌ யஸ்ய நாராயணஸ்து ஸ: ॥”
விஷ்ணுவைக் காட்டிலும் வேறுபட்டதான எல்லாச்‌ சேதநா சேதனங்களும்‌ நார சப்தத்தால்‌ சொல்லப்படுகின்‌றன.
அது எவனுக்கு இருப்பிடமாயுள்ளதோ அப்பரமாத்மா நாராயணன் எனப்படுகிறான்‌.–என்று இவ்வர்த்தத்தை சாஸ்திரம்‌ சொல்லிற்று.
இந்த பஹுவ்ரீஹி ஸமாஸப்‌ பொருளில்‌ அந்தர் வ்யாப்தியும்‌, அடுத்தபடியாகச்‌ சொல்லப்படும்‌
தச்புருஷ ஸமாஸப்‌ பொருளில்‌ பஹிர் வ்யாப்தியு
உணர்த்‌தப் படுகின்றன என்று ஆசார்யர்கள்‌ அருளிச் செய்வர்‌.

“யச்ச கிஞ்சித்‌ ஜக,த்யஸ்மிர்‌ த்‌,ருங்யதே ங்ரூயதே$பி வா |
அந்தர்‌ ப,ஹிம்ச தத்‌ ஸர்வம்‌, வ்யாப்ய நாராயண: ஸ்தி,த: |” [
இவ்வுலகில்‌ காண்பனவும்‌. கேட்பனவுமான எல்லா வஸ்துக்‌ களிலும்‌ உள்ளும்‌ புறமும்‌ நாராயணன்‌ வியாபித்து நிற்கிறான்‌–என்று பண்டை மறையிலும்‌,
“ஆக்கையுள்ளும்‌ ஆவியுள்ளும்‌ அல்ல புறத்தினுள்ளும்‌ நீக்கமின்றி எங்கும்‌ நின்றாய்‌! ‘ என்று தமிழ்‌ வேதத்திலும்‌
இவ்வர்த்தம்‌ சொல்லப்பட்ட.து.
இப்பொருளில்‌ எம்பெருமானுடைய ஸர்வவ்யாபகத்வம்‌ சொல்லப்படுகிறது.
“நாராணாம்‌ அயநம்‌ ய: ஸ:”
நித்யபதளர்த்த, ஸமூஹங்க ளாகிற நாரங்களுக்கு எவனொருவன்‌ இருப்பிடமாயிருக்‌கிறானோ
அவன்‌ நாராயணன்‌ – என்ற தத்புருஜ ஸமாஸத்தின்‌ படியும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
இத்தால்‌ எல்லா வஸ்துக்‌ களையும்‌ நாராயணன்‌ தரிக்கிறான்‌ என்று சொல்லப்படுகிறது, ^”
நாராணாமயநத்வாச்ச நாராயண இதி ஸ்ம்ருத: ” [63-62]
நார சப்தத்தனால்‌ சொல்லப்படும்‌ நித்யவஸ்‌துஸமுஹங்‌ களுக்கு இருப்பிடமாயிருப்பதால்‌ நரராபணனெனப்படு கிறான்‌-
என்று இவ்வர்த்தம்‌ பாரதம்‌ உத்யோக பர்வத்தில்‌ உரைக்கப்பட்ட து.

நார சப்சத்துக்கு மற்றொரு வகையாகவும்‌ பொருளுரைப்பதுண்டு.
நார:’ என்று ஸ்வரூபத்திலும்‌ ஸ்வபாவத்திலும்‌ சிறிதும்‌ விகாரம் அற்றவனான பரமபுருஷன்‌ சொல்லப்படுகிறான்‌.
*நராத்‌ ஜாதாநி ‘ என்கிறப்டியே புருஷோத்தமனிடமிருந்‌து உண்டானவை நாரங்க ளெனப்படுகின்‌றன.
அவைகளை இருப்பிடமாக உடைத்தா யிருக்கையா லும்‌, அவைகளுக்கு இருப்பிடமாயிருக்கை யாலும்‌
நாராயணனெனப்படுகிறான்‌ என்று
முன் போலவே இருவகையாகவும்‌ பொருள்‌. ““நராஜ்ஜாதாநி தத்த்வாதி நாராணீதி ததோ விது, |
தாந்யேவ சாயநம்‌ தஸ்ய தேந நாராயண: ஸ்ம்ருத: |!”
நரனாகிற எம்பெருமானிடமிருந்து உண்டானவைகளை நாரங்களென்‌ று அறிகின்றார்கள்‌.
அவைகளையே இருப்பிடமா யுடையவனாயிருப்பதால்‌ அவன் நாராயணனெனப்படுகிறான்‌–
என்று இவ்வர்த்தம்‌ ஹரி வம்சத்திலும்‌ சொல்லப்பட்டது,
இவ்வர்‌த்தத்தை “யாவையும்‌ யாவரும்‌ தானாம்‌ அமைவுடை நாரணன்‌” என்று நம்மாழ்வார்‌ அருளி செய்தார்‌.

° நார பதத்தில்‌ சொல்லப்பட்ட அநந்தமான வஸ்த்துக்களில்‌ சிலவற்றைச்‌ சிற்சில விடங்களில் எடுத்து ஆழ்வார்கள்‌ நாராயண சப்தத்துக்கு வியாக்யானம்‌ செய்து அருளி இருக்‌கிறார்கள்‌.
நார சப்த்த்‌துக்கு அநந்த கல்யாண குணங்களையும்‌ பொருளாகக் கொண்டு
“: ஈறில வண்‌ புகழ்‌ நாரணன்‌ ” என்‌றும்‌
` வாழ் புகழ்‌ நாரணன்‌” என்றும்‌ நம்மாழ்வாரும்‌.
நல முடை நாரணன்‌ என்று பெரியாழ்வாரும்‌,
நலந்திகழ்‌ நாரணன்‌” என்று குலசேகராழ்வாரும்‌ செய்தருளினார்கள்‌.

நார சப்தத்‌.துக்கு திவ்ய மங்கள விக்ரஹத்‌தையும்‌ அதன்‌ குணங்களையும்‌ பொருளாகக்‌ கொண்டு.
“ காராயின காளநன்‌ மேனியினன்‌ நாராயணன்‌ ” என்று . நம்மாழ்வாரும்‌.
“‘ கார்மேனிச்‌ செங்கண்‌ கதிர்மதியம்போல்‌ முகத்தான்‌ நாராயணனே ” என்றும்‌,
` நாற்றத்துழாய்‌ முடி நாராயணன்‌” என்றும்‌ ஆண்டாளும்‌ அருளிச் செய்தனர்‌.

திவ்யா பரணங்களை நார சப்தத்‌தக்குப்‌ பொருளாகக் கொண்டு
“உடையார்ந்த வாடையன்‌ கண்டிகையன்‌ உடைநாணினன்‌
புடையார்‌ பொன்னூலினன்‌ பொன்முடியன்‌ மற்றும்‌
பல்கலன்‌ நடையாவுடைத்‌ திருநாரணன்‌” என்று நம்மாழ்வார்‌ அருளினார்‌.
“லக்ஷ்மீ ப்ரப்‌ருதி மஹிஷீ வர்க்கங்களும்‌” என்று ஆச்சான் பிள்ளையால்‌ அருளிச் செய்யப்பட்
பிராட்டிமார்‌ களை நார சப்தத்‌துக்குப்‌ பொருளாகக்கொண்டு “
செல்வ நாரணன்‌ என்‌று நம்மாழ்வார்‌ அருளிச் செய்தார்‌.
விண்ணோர்‌ நாயகன்‌ நாராயணன்‌ ” என்று வேதம்‌ தமிழ் செய்த மாறன்‌
நார சப்தத்துக்கு நித்ய முக்தர்களைப்‌ பொருளாக அருளிச்‌ செய்தார்‌.

நாரசப்தத்துக்குச்‌ சேதனர்களைப்‌ பொருளாகக்‌ கொண்டு “`
எண் பெருக்கந்நலத் தொண் பொருள்‌ ஈறில வண்புகழ்‌ நாரணன்‌ ” என்றும்‌,
“’ எம்பிரான்‌ எம்மான்‌ நாராயணன்‌ ” என்றும்‌ சடகோபனும்‌, =
`” நம்மை யுடையவன்‌ நாராயணன்‌ ” என்றும்‌.
“’ என்னை நலங்கொண்ட நாரணற்கு?” என்றும்‌ ஆண்டாளும்‌
நாராயணன்‌ என்னை யாளி ” என்று திருமழிசைப் பிரானும்‌ அருளிச்செய்தனர்‌.

நாரசப்தத்துக்கு உபயவிபூ,தியையும்‌ பொருளாகக்கொண்டு
“நாரணன்‌ முழுவேழுலகுக்கும்‌ நாதன்‌ “என்று நம்மா ழ்வாரும்‌.
” நாயகன்‌ நாரணன்‌” என்று பெரியாழ்வாரும்‌ அருளிச் செய்தனர்‌. .

( நாராயணன்‌ )
நரனாகிற பெருமானால்‌ படைக்கப்பட்ட ஜலத்தை நார சப்தத்திற்குப்‌ பொருளாகக்‌ கொண்டு
அதை இருப்பிடமாகக்‌ கொண்டவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌,
“ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை ஈரஸிவ: |
தா யத,ஸ்யாயந௩ம்‌ பூர்வம்‌ தேந நாராயண: ஸ்ம்ருத: |”
நரனாகிற ஸர்வேஸ்வரனால்‌ படைக்கப்பட்ட ஜலம்‌ “நாரம்‌ ‘ எனப்படுகிறது.
அது ஆதி காலத்தில்‌ இவனுக்கு இருப்பிடமாயிருக்கையால்‌ இவன் நாராயணனெனப்படுகிறான்‌. ] என்று
மநுஸ்ம்ருதியிலும்‌, விஷ்ணுபுராணத்திலம்‌ உரைக்கப்‌ பட்டது.
இவ்வர்த்தம்‌ “” நடுக்கடலுள்‌ துயின்‌ற நரராயணனே!”’ என்று ஆழ்வராரலும்‌.
“ ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந; ‘”
இவனே பாற்கடலில்‌ பள்ளி கொண்ட ஸ்ரீமந்நாராயணன்‌
என்று புராணத்திலும்‌ பேசப்பட்டது.

“ஸ்ருஷ்ட்வா நாரம்‌ தோயமந்த:ஸ்தி,தோஹம்‌ =, யேரு ஸ்யாந்மே நாம நாராயணேதி”’ [நார சப்தத்தனால்‌ சொல்லப்படும்‌ ஜலத்தை ஸ்ருஷ்டி செய்து அகனுள் நான்‌ வசித்தபடியால்‌ எனக்கு நாராயண னென்னும்‌ நாமம்‌ ஏற்பட்டது. ] என்று ஸ்ரீவராஹ புராணத்‌ தில்‌ பகவானாலும்‌ இவ்வர்த்தம்‌ ஆதரிக்கப்பட்டது.

(நாரா யணன்‌) நாரசப்தத்திற்கு இப்ரக்ருதி மண்டலத்திலுள்ள சேதனாசேதனங்களைப்‌ பொருளாகக்‌ கொண்டு. ப்ரளய காலத்தில்‌ அவைகளுக்குச்‌ சேருமிடமாயுள்ளவன்‌ என்றும்‌ பொருள்கொள்ளலாம்‌. = “” ஞாலமுற்றுமுண்டாலிலைத்‌ துயில்‌ நாராயணனுக்கு ” என்று பெரியாழ்வாரும்‌, ** ஞாலமுற்றும்‌ உண்டுமிழ்ந்த நாராயணனே! ” என்றும்‌. “ஞாலமுண்டாய்‌! ஞானமூர்த்தி! நாராயணா!” என்றும்‌ நம்மாழ்வாரும்‌ இவ்‌ வர்த்தத்தை அநுஸந்தித்தருளினார்கள்‌. இத்தால்‌ ஸர்வ ஸம்ஹர்த்ருத்வமும்‌ சொல்லப்பட்ட தாயிற்று.

(நாராயணன்‌) * நர’ சப்தத்தினால்‌ அழிவற்ற ஸ்வரூபத்தையுடைய ஆத்மா சொல்லப்படுகிறது ; நாரசப்தம்‌ ஆத்ம ஸமூஹுத்தைச்‌ சொல்லுகிறது. அயநசப்தம்‌ : இண்‌ க,தெள ‘ : அய-க,தெள ‘ என்னும்‌ தாதுக்கள்‌ ஒன்‌ றிலிருந்து உண்டானதாகையாலே போய்ச்சேருமிடமாகிற ப்ராப்யத்தையும்‌, போய்ச் சேரும்‌ வழியான உபாயத்தையும்‌ குறிக்கும்‌

ஆக “நாராயணன்‌ ‘. என்று சேதன வர்க்கத்‌திற்கு
மோக்ஷப்ராப்யமாகவும்‌,
மோக்ஷ  உபாயமாகவும்‌ இருப்பவன்‌ என்று பொருள்‌படு கிறது.
இவ்வர்த்தம்‌ “நாரஸ் த்விதி ஸர்வ பும்ஸாம்‌ ஸமூஹ: பரிகீர்த்தித:
க,திராலம்ப;ம்‌ தஸ்ய தேக நாராயண: ஸ்ம்ருத: || ”
நாரமென்‌று சேதனருடைய ஸமூஹம்‌ சொல்லப்‌ படுகிறது.
அச்சேதன சமூகத்துக்கு உபாயமும் உபேயமுமாயும் இருப்பதால்‌ நாராயணனென் று சொல்லப்படுகிறான்‌. ] என்றும்‌.
“நரரோ நராணாம்‌ ஸங்கா தஸ்‌ தஸ்யாஹமயநம்‌ க,தி:।
தேநாஸ்மி முநிபிர்‌ நித்யம்‌ நாராயண இத்ரித: || ”
நரர்களின்‌ கூட்டம்‌ நாரமெனப்படுகிறது.
அதற்கு நான்‌ ப்ராப்யமாகவும்‌. ப்ராபகமாகவும்‌ இருக்கிறேனாகையால்‌ முனிவர்களால்‌
எப்போதும்‌ நான்‌ நாராயணன்‌ என்று சொல்லப்படுகிறேன்‌.] என்றும்‌ ।
“ ஜீவாநாம்‌ ஸமூஹ: ப்ரோச்யதே புததை,! |
தேஷாமயநபூ,தத்வாந்‌ நாராயண இஹோச்யதே |
தஸ்மாந் நாராயணம்‌ பந்தும்‌ மாதரம்‌ பிதரம்‌ குரும்‌ |
நிவாஸம்‌ சரணம்‌ சாஹார்‌ வேத,வேதராந்த பாரகத : |
நார சப்தத்தனால்‌ ஜீவ ஸமூஹம்‌ பெரியோர்களால்‌ சொல்லப்‌ படுகிறது.
அவர்களுக்கு ப்ராப்ய ப்ராபகங்களாகிற அயன மாயிருப்பதால்‌ நாராயணன்‌ என இங்கு சொல்லப்படுகிறான்‌ .
ஆகையால்‌ நாராயணனை
பந்து வாகவும்‌.
தாயாகவும்‌.
தந்தை யாகவும்‌.
ஆச்சார்யனாகவும்
இருப்பிடமாகவும்
வேத வேதார்தங்களைக்‌ கரை கண்டவர்கள்‌ சொல்லு கிறார்கள்‌–
என்றும்‌ சாஸ்திரங்களில்‌ இவ்வர்த்தம்‌ வெகு விரிவாக உபதேசிக்கப்பட்டது.

“ நாராயணனே நமக்கே பறை தருவான்‌ ” என்‌று ஆண்டாளும்‌,
‘வீடாக்கும்‌ மெய்ப்‌ பொருள் தான்‌……நாராயணன்‌ ” என்றும்‌,
நாராயணன்‌ என்னை யாளி நரகத்தில்‌ சேராமல்‌ காக்கும்‌ திருமால்‌ தன்‌ ”’ என்‌றும்‌ திருமழிசைப்‌ பிரானும்‌
இவ் வர்‌த்தத்தை நாராயண சப்தத்தக்குப்‌ பொருளாக அநுஸந்தித்தார்கள்‌.
“நாரணம்‌ கதிர்‌ நாராயண:”’
நாராயணனே மோக்ஷத்தில்‌ அடையப்‌ படுமவனும்‌, அடைவதற்கு வழியுமாவான்‌.
என்று வேதமும்‌ இவ்வர்ததத்தை உத்கோஷித்தது. (நாராயணன்‌)
° நர: என்று அழிவற்றவனான எம்பெருமானையும்‌ குறிக்கும்‌ என்று முன்னரே சொல்லப்பட்ட து.
“ ஜந்ஹார்‌ நாராயணோ நர: ” என்று அவனுடைய நாமமாக வும்‌ படிக்கப்பட்ட து.
`” நரஸ்யே இமே- நாரா: ” (சேர்ந்தவர்கள்‌ நாரங்கள்‌] என்கிற வ்யுத்பத்தியின்‌ படி
“ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்‌ [ஞானி எனக்கும்‌ ஆத்மாவாயிருப்பவனென்று என்‌ ஸித்தாந்தம்‌]
என்று எம்பெருமானாலேயே அபிமானிக்கப்பட்ட அவனடியார்களைச்‌ சொல்லுகிறது.
“நாரா அயநம்‌ யஸ்ய ஸ; ” என்று தன்னடியார்களையே தனக்குப்‌ பரம ப்ராப்யமாகக்‌ கொண்‌டு இருக்குமவன்‌ என்‌று பொருள்‌ படுகிறது. –
‘ நச்சுவார்‌ முன்‌ நிற்கும்‌ நாராயணன்‌ “என்றும்‌.
நண்ணித் தொழுமவர்‌ சிந்தை பிரியாத நாராயணா!” என்றும்‌ பெரியாழ்வாரும்‌;
* அற்புதன்‌ நாராயணன்‌ …நிற்பது மேவி இருப்பதென்‌ நெஞ்சகம்‌ ” என்று நம்மாழ்வாரும்‌
இவ்வர்த்தத்தை ஆதரித்தார்கள்‌.
“நானுன்னை யன்‌றியிலேன்‌ கண்டாய்‌ நாரணனே! ” என்று:
மோக்ஷ உபாயத்வம்‌.
ஸர்வ வ்யாபகத்வம்‌,
ஸர்வ தரரகத்வம்‌ முதலிய குணங்களை
நாராயண சப்தார்த்தமாக அநுஸந்தித்தருளிய திருமழிசையாழ்வார்‌.
நீ என்னை யன்றி இலை’” என்று பக்தரைத் தாரகத்வமாகிற இவ்வர்த்தத்தை அருளிச்செய்தார்‌,

“நண்ணித்‌ தொழுமவர்‌ சிந்தை பிரியாத நாராயணா” என்னுமிடத்துக்கு வியாக்கயானம்‌ செய்தருளிய
பரம ரஸிகரான திருவாய்மொழிப்பிள்ளை
“* இவருடைய நாராயண சப்தார்த்‌ தம்‌ இப்படிப் போலே காணும்‌ இருப்பது ” என்று அருளிச்‌ செய்தார்‌
( நாராயணன்‌ )
நரர்கள்‌ என்று ஒருவிதமான குறைவு மற்றவர்களான ஸ்ரீவைஷணவர்களைச்‌ சொல்லுகிறது.
நாரம்‌ என்று நரர்களாகிற அந்த ஸ்ரீவைஷ்ணவர்களுடைய வாஸ ஸ்தானத்தைச்‌ சொல்லுகிறது.
ஸ்ரீவைஷ்ணவர்களுடைய வாஸஸ்தானத்தையே தனக்கு இருப்பிடமாகக்‌ கொண்டு எழுந்தருளியிருக்கையாலே *
நாராயணன்‌ ‘ எனப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.
“திருக்கோட்டியூர்‌ மன்னு நாரணன்‌ ” என்றும்‌,
“ தென்திரை சூழ் திருப்பேர்க்‌ கிடந்த திரு நாரணா!” என்றும்‌ பெரியாழ்வார்‌ இவ்வர்த்தத்தை உணர்த்தினார்‌.

“ நர ஸம்பந்தி,நோ நாரா நர: ஸ புருஷோத்தம: |
நயத்யலெவிஜ்ஞா௩ம்‌ நாமாயத்யகிலம்‌ தம: ॥
ந ரிஷ்யதி ச ஸர்வத்ர நரஸ்தஸ்மாத்‌ |
நரஸம்ப,ந்திரு: ஸர்வே சேதநா சேதநாத்மகா: ||
நபிதவ்யதயா நாரா தரார்யபோஷ்யதயா ததர |
நியாம்யத்வே ஸ்ருஜ்யத்வ ப்ரவேமுபரணைஸ்‌ ததா ॥
அயதே நிதிலாக்‌ நாராந்‌ வ்யாப்நோதி க்ரியயா ததா |
நாராம்சாப்யாயநம்‌ தஸ்ய தைஸ்தத்‌,பாவநிரூபணாத்‌ ॥
நாராணாமயநம்‌ வாஸஸ்‌ தே ச தஸ்யாயநம்‌ ஸதா |
பரமா ச க,திஸ்தேஷாம்‌ நாராணாமாத்மநாம்‌ ஸதா |
ஆபோ நாரா இதி ப்ரோக்தாஸ்தா அப்யயமஸ்ய ச ।
அதோ நாராயணோ நாம ஹேதுபிர்‌ தர்மமித: பர: ॥ ”’
நரனுடன்‌ ஸம்பந்தம் பெற்றவைகள்‌ நாரங்கள்‌.
புருஷோத்‌ தமனே நரன் எனப்படுகிறான்‌.
தன்னைப் பற்றிய எல்லா அறிவையும்‌ அடைவிக்கிறான் ஆகையா லும்‌,
எல்லா இருளையும்‌ போக்கடிக்கறானாகையா லும்‌.
எங்கும்‌ விகாரமற்றவனாயிருப்ப தாலும்‌,
ஸர்வேஸ்வரனான அப்பரமபுருஷன்‌ நரனெனட்படுகிறான்‌.
நரனாகிய அப்பெருமானுடன்‌ ஸம்பந்தம்‌ பெற்றிருக்கும்‌ எல்லாச்‌ சேதநாசேதநங்களும்‌,அவனால்‌
ஆளப்படுகையா லும்‌,
தரிக்கப்படுகையாலும்‌.
போஷிக்கப்படுகையா லும்‌,
நியமிக்‌ கப்படுகையா லும்‌,
ஸ்ருஷ்டிக்கப்படுவதா லும்‌.
வியாபிக்கப்‌ படுவதாலும்‌.
தாங்கப்படுகையா லும்‌
நாரங்களாகின்‌ றன.
எல்லா நாரங்களையும்‌ (ஸ்வரூபத்தால்‌) அடைவதாலும்‌,
முற்கூறிய செய்கைகளால்‌ வியாபிப்பதாலும்‌.
அவைகளை யிட்டே அவனை நிரூபிக்க வேண்டியிருக்கையாலும்‌
நாரங்கள்‌ அப்புருஷோத்தமனுக்கு அயநமாகின்‌ றன.
இவன்‌ நாரங்‌ களுக்கு இருப்பிடமாயிருக்கிறான்‌:
அவைகளும்‌ எப்போதும்‌ இவனுக்கு இருப்பிடமாயுள்ளன.
நார ஸமூஹங்களான ஆத்மாக்களுக்கு மேலான ப்ராப்யமாகவும்‌, ப்ராபகமாகவும்‌, இவன்‌ விளங்குகிறான்‌.

ஜலமும்‌ நார சப்தத்தால்‌ சொல்லப்‌ படுகிறது.
அதுவும்‌ இவனுக்கு இருப்பிடமாயிருக்கிறது,
ஆகையால்‌, இக் காரணங்களால்‌ நாராயணன்‌ என்னும்‌ திருநாமம்‌ மேலானதென்று காட்டப்படட்டது.
என்று அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில்‌, ( 52-50,…65 )
நரன்‌, நாரம்‌, நாராயணன்‌ என்னும்‌ பதங்கள்‌ வெகு விரிவாக விவரிக்கப்பட்ட தும்‌ இவ்விடத்தில்‌ அநுஸந்திக்கத்தக்கது.
“நாராயணன்‌ ‘ என்று ஸர்வேஸ்வரன்‌ உபய விபூ,தி நிர்வாகஹனாய்‌ ஸ்ரீவைகுண்ட்த்தில்‌ எழுந்தருளியிருக்கும்‌ இருப்பைச்‌ சொல்லிற்று.

———————-

அப்படியிருக்குமவன்‌ ப்ரஹ்மசாரி நாராயணனல்ல, ஸ்ரீமந் நாராயணனே என்னுமத்தைச்‌ சொல்லுகிறது
மாதவன்‌ ‘ என்னும்‌ திருநாமம்‌.
சிவ புராணத்திலும்‌. “வைகுண்டே, து பரே லோகே மியா ஸார்த்த,ம்‌ |
ஆஸ்தே விஷ்ணுர் சந்த்யாத்மா ப,க்தைர்‌ பாக,வதை: ஸஹ”
வைகுண்டமென்னும்‌ மேலான உலகத்தில்‌, உலகிற்கெல்‌லாம்‌ ஸ்வாமியும்‌, எண்ண முடியாத
ஸ்வரூபத்தை யுடையவனுமான பகவான்‌ விஷ்ணு, ஸ்ரீதேவியுடன்‌ கூடியவன்‌,
குண நிஷ்டர்களான பக்தர்களுடனும்‌, கைங்கர்ய நிஷ்டர்‌களான பாகவதர்‌களுடனும்‌ எழுந்தருளியிருக்கிறான்‌–என்று சொல்லப்பட்ட தன்றோ.
(மாதவன்‌)
(மா’ என்னும்‌ பதம்‌ ஸ்ரீதேவியைச்‌ சொல்லுகிறது.
தவ:’என்னும் சொல்‌ “நாதன்‌” என்னும்‌ “பொருளை யுடையது.
“மாயா: தவ: மாதவ: ‘ என்கிறபடியே. மாதவன்‌ என்னும்‌ திருநாமம்‌ லக்ஷ்மீ நாதன்‌’ என்னும்‌ அர்த்தத்தை உடையது.
“மானேய்‌ நோக்கி ம்டவாளை மார்பில்‌ கொண்டாய்‌ மாதவா! ”என்‌று
நம்மாழ்வார்‌ இப் பொருளை மாதவ சப்தரர்த்தமாக அருளிச் செய்தார்‌.
இத் திருநாமம்‌ பகவான்‌ பரம பதத்தில்‌ பெரிய பிராட்டியாருடன்‌ எழுந்தருளி யிருப்பதைக்‌ குறிக்கிறது என்பர் .
,“ வானுடை மாதவா ” என்று பெரியாழ்வாரும்‌, –
மா மாயன்‌ மாதவன்‌ வைகுந்தன்‌ ” என்றும்‌,
மன்னிய மாதவனோடு வைகுந்தம்‌ புக்கிருப்பாரே ” என்றும்‌ ஆண்டாளும்‌, :
கேசவன்‌ நாரணன்‌ மாதவன்‌ கோவிந்தன்‌ வைகுந்தன்‌” என்றும்‌,
“ வடிவுடை மாதவன்‌ வைகுந்தம்‌ ” என்றும்‌ நம்மாழ்வாரும்‌ அருளிச் செய்தனர்‌.
பெரிய பிராட்டியார்‌ எல்லா தசைகளிலும்‌ எம்பெருமானை விட்டுப் பிரியாமலிருப்பவராகையாலே.
எம்‌ பெருமானையும்‌ இப் பிராட்டியை யிட்டு நிரூபிக்க வேண்டு மென்று இத் திருநாமம்‌ உணர்த்துகிறது.

“ ஹ்ரீஸ்ச தே’ லக்ஷ்மீஸ் ச பத்ந் யெள ” என்று வேதமும்‌ பரம புருஷனைப்‌ பிராட்டியை யிட்டு நிரூபித்தது.
“ஸர்வேஷாமேவ லோகாநாம்‌ பிதா மாதா ச மாதவ: | க,ச்ச,த்‌,வமேநம்‌ நாரணம்‌ மாரண்யம்‌ புருஷர்ஷபா : |”
பருஷ ஸ்ரேஷ்டர்களே! எல்லா வுலகுக்கும்‌ லக்ஷ்மீநாதனே தாயாகவும்‌. தந்தையாகவும்‌ விளங்குகிறான்‌; (
ஆகையால்‌) இந்த மாதவனை சரணமடையுங்கள்‌.] என்று
புருஷகார பூதகையான பிராட்டிபுடன்‌ கூடிய நாராயணனே நமக்கு உபாயமாகவும்‌, ஸ்வாமியாகவும்‌ ஆகிறான்‌ என்று பாரதத்தில்‌ பேசப் பட்டது.

“ கடிவார்‌ தீய வினைகள்‌ கொடியாருமள வைக்கண்‌
கொடியா அடுபுள்‌ உயர்த்த வடிவார்‌ மாதவனாரே ” என்று
ஆழ்வாரும்‌ மாதவனே உபாயமாகிறானென்‌று உணர்த்தினார்‌.
“ மாதவன்‌ பூதங்கள்‌ ” என்றும்‌.
`” மாதவனோடு வைகுந்தம்‌ புக்கருப்பாரே ” என்றும்‌
மாதவனே ஸர்வ ஸேஷியாகவும்‌. மோக்ஷ ப்ராப்யனாகவும்‌ ஆகிறானென்று அருளிச்செய்தார்‌கள்‌.
ஸர்வேஸ்வரன்‌ ஜகத் காரணமாம் போ தும்‌. பிராட்டிக்கு ப்ரேரகத்வ ருபமான அந்வயம்‌ உண்டென்பதை
ஆளவந்தார்‌, ஆழ்வான்‌. பட்டர்‌ முதலானோர்‌ தம்‌ ஸ்தோத்ரங்களில்‌ அருளிச்‌ செய்தனர்‌.
பெரியவாச்சான்பிள்ளையும்‌, அவருடைய திருக்‌ குமாரரான நாயனாராச்சான் பிள்ளையும்‌ அருளிச் செய்தது:
ச்லோஹ வியாக்கியானங்களிலும்‌ இவ்விஷயம்‌ விவரிக்கப்‌ பட்ட து
எம்பெருமான்‌ சேதனர்களுடைய ஹ்ருதய கமலத்தில்‌ பிராட்டியுடன்‌ கூடியவனாகவே எழுந்தருளியிருக்றொனென்‌பது
“ஸர்வ பூ,தஹ்ருத,ப்ஜஸ்த; “என்று ப்ராஹ்ம புராணத்திலும்‌,
“மார்வ மென்பதோர்‌ கோயிலமைத்து மாதவனென்‌னும்‌ தெய்வத்தை நாட்டி ” என்று பெரியாழ்வாராலும்‌
பேசப்‌ பட்ட ச, வ்யூஹ விபவார்ச்சாவதாரங்களிலும்‌ இவளுடன்‌ கூடியவனாகவே எம்பெருமான்‌
விளங்குகிறானென்பது ஸகல ப்ரமாண ஸித்தம்‌.

(மாதவன்‌) ” என்று
புருஷஹோத்தமனை அடைவதற்கு ஸாதனமான பர வித்யை சொல்லப் படுவதாகவும்‌
அந்த வித்யைக்கு ப்ரவர்த்தகனாகையால்‌ இவன்‌ மாதவ னெனப்‌ படுகரொனென்‌ றும்‌ கொள்ளலாம்‌.
“மா வித்யா ச ஹரே: ப்ரோக்தா தஸ்யா ஈமோ யதோ பவாந |
தஸ்மாந் மாதவ நாமாஸி த,வ: ஸ்வாமீதி மாப்‌,தி,த: | “` ‘
என்று ஹரியை ப்ரதிபாதிக்கும்‌ வித்யை சொல்லப்‌ படுகிறது.
அதற்கு ஸ்வாமியாயிருப்பதால்‌ நீர்‌ மாதவ னென்று சொல்லப்படுகதிறீர்‌.
* தவன்‌ ‘ என்றும்‌ ஸ்வாமியென்‌ னும்‌ பொருளையுடையது. -என்று இவ் வர்த்தம்‌ ஹரி வம்ஸத்தில்‌ ஆதரிக்கப் பட்டது.

“மளநாத்‌ த்‌யாகாச் ச யோகாச்ச வித்‌,தி, பாரத மாதவம்‌ ”’
பரதகுலத்‌துதித்தவனே! மெளநத்தினாலும்‌. தியானத்தி னலும்‌. யோகத்தினாலும்‌ மாதவனென்று அறிவாயாக. |
என்று வியாஸர்‌ சொல்லியபடியும்‌ மாதவநாமத்திற்குப்‌ பொருள்‌, கொள்ளலாம்‌.
“மது,வித்வா 5வபே த்‌,யத்வாத்‌,வா”
மது வித்யையினால்‌ அறியப்படுமவனகையாலே மாதவ னெனப்படுகிறான்‌ -என்றும்‌ சங்கரர்‌ பொருளுரைத்தார்‌. “
மது,குலே ஜாதத்வாந்‌ மாத,வ: ”
மது குலத்தில்‌ பிறந்தவ னாகையாலே மாதவனாகிறான்‌ ] என்றும்‌ பொருள்கொண்டனர்‌.
“மா லக்ஷமீ: தீ, ஸரஸ்வதீ தே அவதீதி மாத,வ:”
என்று லக்ஷ்மியும்‌. “தீ; ‘ என்று ஸரஸ்வதியும்‌ சொல்லப்‌ படுகின்‌றனர்‌.
அவர்களை ரக்ஷிக்கிறானாகையால்‌ மாதவனா கிறான்‌-என்றும்‌ சங்கரர்‌ பொருள்‌ கொண்டார்‌.
இப்படிப்‌ பல பொருள்களை உடையதாயிருந்த போதிலும்‌, எல்லா ஆழ்வார்களாலும்‌ .ஆதரிக்கப்பட்டதான
லக்ஷ்மீநாதன்‌ என்‌னும்‌ பொருளே இவ்விடத்திற்குப்‌ பொருளாகக் கடவது.

—————-

இப்படி
அச்யுதனாகவும்‌,
கோவிந்தனாகவும்‌,
கேசவனாகவும்‌,
நாராயணனென்‌னும்‌ அஸாதாரணமான திருநாமத்தை உடையவனாகவும்‌,
பிராட்டியுடன்‌ கூடியவனாகவும்‌
எழுந்‌தருளியிருக்கிறவன்‌ ஸர்வேஸ்வரன்‌ என்று இது வரையில்‌ கூறப்பட்டது.

—————

இப்படிப்பட்ட பெருமைகளை யுடையவனாக இவன்‌ எழுந்தருளியிருக்கிறான்‌ என்‌னுமிடத்துக்கு
ப்ரமாண மென்ன? என்ற ப்ரஸ்னம்‌ பிறக்க,
வேத வாக்கியங்களே இவ் விஷயத்தில்‌ ப்ரமாணம்‌ என்று சொல்லுறது
கோவிந்தன்‌ என்னும்‌ திருநாமம்‌,
கோ சப்,தத்தினால்‌ வேத வாக்கியங்‌களைச்‌ சொல்லுகிறதாகையால்‌
வேதத்தால்‌ ப்ரதிபாதிக்கப்‌ படுமவன்‌ என்று கோவிந்த நாமத்திற்குப்‌ டொருள் ஏற்படுகிறது.
இவன்‌ அடியவர்களை நழுவவிடாத அச்யுத என்னுமதுக்கு ப்ரமாணம்‌
* மமாங்வதம்‌ மபிவமச்யுதம்‌ நாரா யணம்‌ ” என்னும்‌ நாராயணா நுவாகம்‌.
த்ரிவித,பரிச்சேத , மற்றவனாகவும்‌, அளவற்ற ரூப குண விபங்களையுடையவனாகவுமுள்ள
அநந்தன்‌ என்பதற்கு
ˆ” ஸத்யம்‌ ஜ்ஞாநம் அநந்‌தம்‌ ப்‌,ரஹ்ம”
“யதே,கமவ்யக்தமநந்தரூபம்‌” –
அநந்தமவ்யயம்‌ கவிம்‌ ஸமுத்‌,ரேந்தம்‌”
முதலான தைத்திர்ய உப நிஷத்‌ வாக்யங்களும்‌.
‘*அநந்தணங்சாத்மா விஸ்வ ரூபோ ஹ்யகர்த்தா” என்னும்‌
வேதாமவதர வாக்கியமும்‌ ப்ரமாணமாகின்‌றன.
இப் பரம புருஷனே பல அவதாரங்களெடுதக்து. தாழ்ந்தோ ருடன்‌ ஒரு நீராகக்‌ கலந்து பரிமாறும்‌ கோவிந்தனாகிறான்‌ என்பதற்கு ப்ரமாணம்‌ —
அஜாயமாநோ பஹுதா விஜா- யதே| தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌’”
பிறப்பில்லாத புருஷோத்தமன்‌ பலபடியாகப்‌ பிறக்கிறான்‌.
புத்திமான்‌களில்‌ சிறந்தவர்களே அவனுடைய பிறப்பின்‌ ரஹஸ்யத்தை அறிதிறார்கள்‌.
“யுவா ஸாுவாஸா: பரிவீத ஆகரத்‌ | ஸ உ ஸ்ரேயோாந்‌ பவதி ஜாயமாந ! தம்‌ தீ,ராஸ: கவய உந்நயந்தி |”
யெளவனத்தை உடையவனாகவும்‌, அழகிய பீதாம்பரத்தை தரித்தவனாகவும்‌. (நித்ய ஸூரிகளால்‌) கூறப்‌ பட்டவனாகவும்‌ அப்பரமபுருஷன்‌ தோன்‌றினான்‌.
அவன்‌ பிறந்த பின்பே மேன்மையை அடைகிறான்‌. அவனை ஞானிகளான கவிகள்‌ அறிகிறார்கள்‌.

“பிதா புத்ரேண பித்ருமாக்‌ யோநியோநெள ஈந வேத,விந்மநுதே தம்‌ ப்‌ருஹந்தம்‌ ‘
ஸர்வலோக பிதாவான புருஷோத்தமன்‌, ஒவ்வொரு அவதாரத்திலும்‌ தன்னால்‌ பிறப்பிக்கப்பட்ட
ஒருவனைப்‌ பிதாவாகக் கொண்டு பிறக்கிறான்‌.
வேதத்தை அறியாதவன்‌ அவனுடைய பெருமையை அறியமாட்டான்‌-முதலியவை.
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்மும்‌ உத்பாதகனாய்‌, புகழப்பட்ட கேசத்தை உடையவனாயுள்ள கேசவன்‌ இவனே என்பதை
“நாராயணாத்‌ ப்ரஹ்மா ஜாயதே | நாராயணாத்‌ ருத்‌;ரோ ஜாயதே?
நாராயணன் இடமிருந்து பிரமன்‌ பிறக்‌கிறான்‌. நாராயணனிடமிருந்து உருத்திரன்‌ உண்டாகிறான்‌.
‘ஹிரண்யகேஸ ரு:”
ஸுவர்ணம்‌’ போன்‌று அழகிய திருக் குழல்‌ கற்றைகளை உடையவன்‌] முகலிய வேதா வாக்கியங்கள்‌ உத் கோஷித்தன.
இவன்‌ நாராயண முகேந எழுந்தருளியிருக்கும்‌ இருப்பும்‌, =
`” விஸ்வம்‌ நாராயணம்‌ ” என்று தொடங்கி
“ நரராயண பரம் ப்‌,ரஹ்ம தத்வம்‌ நாராயண: பர: | நாராயண பரோ ஜ்யோதிர் ஆத்மா நாராயண: பர:।
யச்ச கிஞ்சிஜ் ஜக,த்‌ யஸ்மிந்‌ த்‌ருஸ்ய்தே ஸ்ரூயதே5பி வா। அந்தர்‌ பஹிஸ் ச தத்‌ சர்வம்‌ வ்யரப்ய நாராயண: ஸ்தி,த: ॥ ”
என்று நாராயண அனுவாகத்திலும்‌,
“ ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்‌ ” முதலிய வாக்கியங்களால்‌ மஹோபநிஷத்திலும்‌.
“ சாக்ஷாங்ச த்ரஷ்ட. வ்யஞ்ச நாராயண:।ஸ்ரோத்ரஞ்ச ஸ்மரோதவ்யஞ்ச நாராயண:” என்று தொடங்கி, —
ஸ்ருங்ச ப்ரதி,மமஸ் ச ஸர்வம்‌ ஈாராயண:”‘ என்று ஸுபாலோபனிஷத்திலும்‌.
“ஏஷ ஸர்வ பூதாந்த- ராத்மா…….. ஏகோ நாராயண: ” என்று அந்தர்யாமி ப்ரஹ்மணத்திலும்‌.
மற்றுமுள்ள நாராயண உபனிஷத்‌ முதலியவைகளிலும்‌ கோஷிக்கப்பட்டன.
இப்படிப்பட்ட பெருமையையுடைய இப்பெருமான்‌ பிராட்டியுடன்‌ கூடவே எழுந்தருளியிருக்கிறான்‌ என்பது, ^°
ஹ்ரீஸ் ச தே லக்ஷ்மீஸ் ச பத்ந்யெள ”
உனக்கு ஸ்ரீ பூமிதேவிகள்‌ பத்னிகள்‌.
“’ அஸ்யேமாநா ஜக,தோ விஷ்ணுபத்ந்யா ”
இப் பிராட்டி இந்த ஐகத்தக்கு ஈங்வரியாகவும்‌, விஷ்ணு வுக்குப்‌ பத்தினியாகவும்‌ இருக்கிறாள்‌.
“ஸ்ரத்‌,த,யா தேவோ தேவத்வம் அஸ் நுதே’”
ஸ்ரீ என்னும் சப்தத்தினால்‌ சொல்லப்படும்‌ பிராட்டியினா லேயே ஈஸ்வரன்‌ ஈஸ்வரத் தன்மையை அடைகிறான்‌.
“ஆநீதவாதம்‌ ஸ்வத,யா ததே,கம்‌?’
ஒன்றுமில்‌லாத ப்ரளய காலத்தில்‌ ஸ்வதா சப்தத்தினால்‌ சொல்லப்படும்‌ பிராட்டியுடன்‌ கூடிய பகவான்‌ ஒருவனே இருந்தான்
முதலிய ஸ்ருதி வாக்கியங்களில்‌ கோஷிக்கப்டட்டது.

அச்யுதா என்றும் .“அநந்தன்‌’ என்றும் புருஷோத்தமனுடைய பரத்வம்‌ பேசப்பட்டது.
“அப்படிப்பட்ட பெருமையை உடையவனை அதி நிஹீனரான நம்மால்‌ அணுக முடியுமோ என்று அடியவர்‌ அஞ்சாமைக்காக.
*இடக் கையும்‌ வலக் கையுமறியாத ஆயர்களோடும்‌. பகுத்தறிவற்ற பசுக்களோடும்‌ ஒரு நீராகக் கலந்து
பரிமாறுமவன்‌’ என்னும்‌ பொருளை யுடைய கோவிந்த நாமம்‌ சொல்லப் படுகிறது.
“அச்சுதா! அமரரேறே!’ என்று அச்யுக அநந்த சப்தார்த்தங்களை அநுஸந்தித்த தொண்டரடிப் பொடியாழ்வாரும்‌.
“ஆயர்தம்‌ கொழுந்கதே!” என்று அடுத்தபடியாக கோவிந்த சப்தார்த்‌ தத்தை அருளிச்செய்தாரன்றோ.
(கோவிந்தன்‌ )
“ காவ: விந்த,தி ” [ பசுக்களை அடைகிறான்‌ ] என்ற வ்யுத்பத்தி யின்படியே,
நித்ய ஸூரிகளின்‌ நாதனாயிருக்குமிருப்பில்‌ பொருந்தாமல்‌ அறிவற்றவைகளான பசுக்களை
அடைவதற்‌காக கிருஷ்ணனாய்‌ வந்து திருவவதரித்தவன்‌.,

“அஹம்‌ கிலேந்த்‌,ரோ தேவாநாம்‌ த்வம்‌ க,வாமிந்த்தாம்‌ க,த:।
கோவிந்த, இதி லோகாஸ்த்வாம்‌ ஸ்தோஷ்யந்தி பு,வி ஸமாமவதம்‌ ||.”
நான்‌ தேவர்களுக்கெல்லாம்‌ இந்திரனாயிருக்கிறேன்‌.
நீ பசுக்களுக்கு இர்திரனாயிராக்கும்‌ தன்மையைத்‌ தானாகவே அடைந்தாய்‌.
ஆகையால்‌ இவ்வுலகில்‌ கோவிந்தன்‌ என்று எல்லாரும்‌ எப்போதும்‌ உன்னைத்‌ துதிப்பார்கள்‌–
என்று ஹரி வம்‌சத்தில்‌ கோவர்த்தன தாரியான
ஸ்ரீ கிருஷ்ணனைக் குறித்து தேவேந்திரன்‌ துதித்தானன்றோ.
கோ விந்தேத்தி என்றபடியே பசுக்களுக்குப்‌ புகலிடம்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
“சட்டித் தயிரும்‌ தடாவினில்‌ வெண்ணெயும் உண்‌ பட்டிக்கன்றே!” என்றும்‌
“பட்டி மேய்ந்தோர்‌ காரேறு பல. தேவற்கோர்‌ கீழ்க்கன்றாய்‌ ” என்றும்‌
அருளிச் செய்யும்படி. யன்‌றோ இவன்‌ பசுக்களுடன்‌ புரையறக் கலக்கும்படி.
இந்த மஹா குணத்தை நினைத்து ஆழ்வார்கள்‌ அடிக்கடி வாய் வெருவுவர்கள்‌.
“கோவிந்தன்‌ குணம் பாடி ஆவி காத்திருப்பேனே” என்று ஆண்டாள்‌ இக் குணத்தையே தனக்கு ப்ராண பாரமாகக்‌ கொண்டிருந்தாள்‌.
“கற்றினம்‌ மேய்க்கிலும்‌ மேய்க்கப் பெற்றான்‌ காடுவாழ்‌ சாதியும்‌ ஆகப்பெற்றான்‌
பற்றி யுரலிடை ஆப்புமுண்டான்‌ பாவிகாள்‌! உங்களுக்கேச்சுக்கொலோ”-என்றும்‌,
“இக் கொம்மை முலைகள்‌ இடர்‌தீரக்‌ கோவிந்தற்கு ஓர்குற்றேவல்‌ இம்மைப்பிறவி செய்யாதே
இனிப்‌ போய்ச்செய்யும்‌ தவம் தான் என்‌” என்‌ றும்‌,
“கொங்கைத்‌ தலமிவை நோக்கிக்‌ காணீர்‌ கோவிந்தனுக்கல்லால்‌ வாயில்‌ போகா” என்றும்‌.
சொல்லும்படி யன்‌றோ
கோதைப் பிராட்டிக்குக்‌ கோவிந்கனிடமுள்ள காதல்‌.
“கூட்டிலிருந்‌ து கிளியெப்போ தும்‌ கோவிந்தா! கோவிந்தா! என்றழைக்கும்‌ ” என்று
இவளுடைய கிளியும்‌ இத் திரு நாமத்தை யன்றோ வாய் புலத்துவது.
நம்மாழ்வாரும்‌ “கோவிந்தன்‌ குடக்கூத்தன்‌ கோவலன்‌ என்றென்றே குனித்து” என்று
தமக்கு இத் திரு நாமத்திலுள்ள ஈடுபாட்டை வெளிப்‌ படுத்தினார்‌.

““கோவிந்தே,தி யதரக்ரந்த,த்‌ க்ருஷ்ணா மாம்‌ தூ,ரவாஸிநம்‌ |
ருணம்‌ ப்ரவ்ருத்‌,த,மிவ மே ஹ்ருத,யாந்நாபஸர்ப்பதி ॥’*
வெகு தூரத்திலிருந்த என்னை“கோவிந்தா”என்‌ று த்ரெளடதி கூப்பிட்டதானது விருத்தியடைந்த
கடன் போல்‌ என்‌ மநஸ்ஸிலிருந்து அகலுகிறதில்லை.
என்று. அச்யுதாதி நாமங்‌ களையும்‌ அவள்‌ உச்சரித்தருந்த போதிலும்‌
பகவானுடைய திருவுள்ளத்தைப்‌ புண்படுத்திற்று இத் திருநாமமே யன்றே.
இத் திருநாமத்தன்‌ பெருமையைப்‌ பன்னியுரைக்குங்கால்‌ பாரதமாம்‌.
(கோவிந்தன்‌ )
கோ ஸப்‌தம்‌ பூமியையும்‌ குறிக்கு மாகையால்‌
*கோம்‌ விந்த,தி ? என்று பூமியை ஜலத்தில்‌ நின்றும்‌ குத்தியெடுத்த வராஹ மூர்த்தியைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌.
‘மஹா வராஹோ கோவிந்த,: “என்று ஸ்ரீஸஹஸ்ரநாமத்திலும்‌ இவ்வர்த்தம்‌ ஆதரிக்கப்பட்டது .
“நஷ்டாம்‌ வை தரணீம்‌ பூர்வமவிந்த;ம்‌ வை கு,ஹாசு,தாம்‌ |
கேவிந்த, இதி தேநாஹம்‌ தே,வைர்‌ வாக்‌,பிரபிஷடுத: | ‘
பாதாளத்தில்‌ ஓளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை முன்‌ னொரு காலத்தில்‌ நான்‌ தேடி யடைந்கதேனாகையால்‌.
தேவர்‌களால்‌ கோவிந்தன் என்‌று ஸ்தோத்ரம்‌ செய்யப் பெற்றேன்‌.
என்று பாரதத்தில்‌ மோஷ தர்மத்தில்‌ பகவானாலேயே சொல்லப்பட்டது.
இத்தால்‌ ஆபத்துக் காலத்தில்‌. ரக்ஷ்ய வஸ்தவின்‌ அபேஷையை எதிர்பாராமலே மேல் விழுந்து.
தன்‌ பெருமைக்குப் பொருந்தாத உருவத்தையும்‌ கொண்டு ரக்ஷிக்கும்‌ பெருங்குணம்‌ பேசப்படுகிறது.
“உத்‌,த்‌,ருதா5ஸி வராஹேண க்ருஷ்ணேந ஸாதபளஹுநா `பூமிப்பிராட்டியே! நூறு கைகளை உடையவனும்‌, அநந்த ஸ்வரூபிய்மான வராஹ மூர்ச்தியால்‌
எடுக்கப்பட்டவளாய்‌ இருக்கிறாய்‌. என்று பண்டை மறையிலும்‌,
“ஈனச்‌ சொல்லாயினுமாக எறிதிரை வையம்‌ முற்றும்‌
ஏனத்துருவாய்‌ இடந்தபிரான்‌ இருங்கற்பகம்‌ சேர்‌
வானத்தவர்க்கும்‌ அல்லா தவர்க்கும்‌ மற்றெல்லாயவர்க்கும்‌
ஞானப்பிரானையல்லால்‌ இல்லை நான் கண்ட நல்லதுவே’
“நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்பக்‌
கோலவராகமொன்றாய்‌ நிலம்‌ கோட்டிடைக்‌ கொண்ட எந்தாய்‌!” —என்‌றும்‌,
° பாசிதூர்த்துக்‌ கிடந்த பார்மகட்குப்‌ பண்டொருநாள்‌
மாசுடம்பில்‌ நீர்வாரா மானமிலாப்‌ பன்‌ றியாம்‌
தேசுடைய தேவர்‌ திருவரங்கச்‌ செல்வனார்‌
பேசியிருப்பனகள்‌ பேர்க்கவும்‌ பேராவே” _ என்‌றும்‌
தமிழ்‌ மறைகளிலும்‌ இப்பெருமானின்‌ பெருமைகள்‌ பேசுப்‌ பட்டனவன்‌றோ.

“’கெளரேவைஷா தத;ா வாணீ தாம்‌ ச யத்‌, விந்த,தே ப,வார்‌ |
கேோவிந்தஸ்து ததோ தே,வ முகிபி,: கத்‌,யதே ப,வாந்‌
கோ சப்தமான து :’கெள:’ என்று சொல்லப்படுகிறது.
வார்த்தை களையெல்லாம்‌ நீரே அடைவதால்‌ நீர்‌ கோவிந்தனென்று முனிவர்களால்‌ சொல்லப்படுகிறீர்‌.
என்கிற நிர்வசன த்தின்‌ படியே ஸர்வமாப்‌,த,வாச்யன்‌ என்றும்‌ இத் திருநாமத்துக்குப்‌ பொருள் கொள்ளலாம்‌.
“சொல்லினால்‌ தொடர்ச்சி நீ சொலப்‌ படும்‌ பொருளும்‌ நீ” என்று திருமழிசையாழ்வார்‌ இல்வர்த்‌தத்தை அறுஸந்தித்தார்‌.
(கோவிந்தன்‌ )
கோசப்தம்‌ வேத வாக்கியங்களைக்‌ குறிப்பதாகக் கொண்டு வேதத்தினால்‌ சொல்‌லப்படுமவன்‌ என்றும்‌
பொருள்கொள்ளலாம்‌.
அச்சம்‌… ஏற்றுவான்‌ அச்சுதன்‌ அநந்த கீர்ந்தி ஆதியந்தமில்லவன்‌
நச்சராவணைக்‌ கிடந்த நாதன்‌ ” என்று
அச்சுதன்‌. அந்தன்‌ என்னும்‌ திருநாமங்களுக்கு அர்த்தம்‌ செய்த திருமழிசை யாழ்வார்‌ -‘
வேத கதனே ”’ என்று கோவிந்த சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்‌.
(கோவிந்தன்‌ )
எந்த தேவதையைக்‌ குறித்து ஸ்தோத்ரம்‌ செய்தாலும்‌ அவை இவனையே அடைவதால்‌
கோவிந்தன்‌ எனப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.
“ நும்‌இன்‌ கவிகொண்டு நும்‌நும்‌ இட்டாதெய்வமேத்தினால்‌
செம்மின்‌ சுடர்முடி என்‌ திருமாலுக்குச்‌ சேருமே என்றார்‌ நம்மாழ்வார்‌.
(கோவிந்தன்‌)
கோ சப்தம்‌ ஒளியைக் குறிப்பதால்‌ பரஞ்சோதியாய் இருப்பவன் என்‌றும்‌ பொருள்‌ கொள்ள லாம்‌.
நம்மாழ்வாரும்‌ “பரஞ்சோதி நீ பரமாய்‌ நின்னிகழ்ந்து பின் மற்றோர்‌
பரஞ்சோதியின்‌ மையின்‌ படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம்‌ படைத்த எம்‌
பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே ” என்று
இப் பொருளை அதுஸந்தித் தருளினார்‌.
“நாராயண பரோ ஜ்யோதி:” என்றும்‌.
** பரம்‌ ஜ்யோதி ருப ஸம்பத்‌,ய ” என்றும்‌.
ˆ” ஆதித்ய வர்ணம்‌ ” என்றும்‌,
“ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரஜ தாரகம்‌ நேமா வித்யுதோ பந்தி குதோ 5யமக்‌,நி: |
தமேவ பாந்தமநுபாதி ஸர்வம்‌ தஸ்ய பாஸா ஸர்வமித,ம்‌ ॥”
அப் பரம புருஷனுக்கு முன்‌ ஸூர்யனும்‌ பிரகாசிப்பதில்லை;
சந்திரனும்‌, நக்ஷத்திரங்களும்‌. இந்த மின்‌னல்களும்‌ பிரகாசிக்‌கிறதில்லை.
அக்னியைப்‌ பற்றிச்‌ சொல்லவும்‌ வேண்டுமோ?
ஒளிவிடும்‌ அவனை அநுஸந்தித்தே எல்லாம்‌ ஓளிவிடுகின்‌ றன.
அவனுடைய ஒளியாலேயே இவையெல்லாம்‌ பிரகாசிக்கின்‌றன.என்றும்‌ வேதங்களிலும்‌
“ ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய ப,வேத்‌, யுகவது,த்தி,தா |
யதி, ஸத்‌,ருமீ ஸா ஸ்யாத்‌, பாஸஸ்‌ தஸ்ய மஹாத்மந:।॥”
ஆகாயத்தில்‌, ஒரே ஸமயத்தில்‌ ஆயிரம்‌ ஸூர்யர்களுடைய ஒளி தோன்றிற்றாகில்‌. அவ்வொளி
அந்த மஹாபுருஷனுடைய ஒளிக்கு ஒப்பாகலாம்‌. என்று கீதையிலும்‌ ஒதப்‌ பட்ட தன்றோ.

அந்த கோவிந்தநாமதீதால்‌ ஸெளலப்யகு,ணப்ரகாபகமான கிருஷ்ணாவதாரம்‌ அநுபவிக்கப்பட்டது. இங்கு வேத, ப்ரதிபா தீயத்வமாெெ பரத்வம்‌ பேசப்படுகிறது. ஆகையால்‌ புநருக்தியில்லை,

—————

ஆக, கேசவன்‌ முதலான நான்கு திருநாமங்களால்‌ பரத்வம்‌ பேசப்பட்டது.
இனி விஷ்ணு என்னும்‌ திரு நாமத்தினால்‌ நான்காவது வியூஹமான அநிருத்த மூர்த்தி சொல்லப்படுகிறார்‌.
இவ் விடத்தில்‌ “வ்யூஹமாவ து:-ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹ!ரார்த்தஹமாகவும்‌.
ஸம்ஸாரி ஸம்ரக்ஷணார்த்த, மாகவும்‌,
உபாஸக அனுக்ரஹ மர்த்தமாகவும்‌.
ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்‌த ருபேண நிற்கும்‌ நிலை.
பரத்வத்தில்‌ ஜ்ஞாநாதிகளாறும்‌ பூர்ணமாயிருக்கும்‌.
வ்யூஹத்தில்‌-முற்று இரட்டை குணங்கள் ப்ரகடமாயிருக்கும்‌,
அதில்‌ ஸங்கர்ஷணர்‌ ஜ்ஞாந பலங்கள்‌ இரண்டோடும்‌ கூடி
ஜீவ தத்வத்கை அதிஷ்டி,த்து,
அத்தை ப்ரக்ருதியில்‌ நின்றும்‌ பிரிக்கும் அவஸ்தையையும் பஜித்து,
ஸரஸ்த்ர ப்ரவர்த்தன பண்ணக் கடவராயிருப்பர்‌.
பிரத்யும்நர்‌ ஐஸ்வர்ய வீர்யங்களோடும் கூடி
மநஸ் தத்வத்தை அதிஷ்டி,த்து.
தர்ம உபதேசத்தையும்‌.
மநுஷ்யாதி தொடக்கமான வர்க்க, ஸ்ருஷ்டியையும்‌ பண்ணக் கடவராயிருப்பர்‌.
அநிருத்தர்‌; சக்தி தேஜஸ்ஸுக்கள்‌ இரண்டோடும் கூடி
ரஷணத்துக்கும்‌,
தத்வ ஜ்ஞாந ப்ரதானத்துக்கும்‌
கால ஸ்ருஷ்டிக்கும்‌, கடவராயிருப்பர்‌. ” என்று
பிள்ளைலோகா சார்யர்‌ தத்வ த்ரய த்தில்‌ அருளிச் செய்துள்ள ஸ்ரீஸூக்திகள்‌ அநு ஸந்திக்கத்தக்கவை,
விஷ்ணு சப்தத்தால்‌ சொல்லப்படுகிறவர்‌ அநிருத்தரே என்று நிர்ணயிப்பது எப்படியெனில்‌:
“த்ரிபாதூர்த்‌,வ உதைதத்‌ புருஷ: பாதேர ஸ்யேஹாப,வாத்‌ புந;!
ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸா முகா அபி, |”
பரமபதத்திலுள்ள பரமபுருஷன்‌ மூன்‌று உருவங்களை உடையவராய் ஸங்கல்பித்தார்‌.
பரமபத நாதனுடைய ஒரு அவதாரமான அநிருத்தர்‌ மறுபடியும்‌ இங்கு அவதரித்தார்‌.
அதன் பிறகு ஸர்வ விதமான சேதனர்களையும்‌ ரஷிப்பதற்காக இவ் வுலகையெல்லாம்‌ (
அவதாரம்‌ செய்தவன்‌ மூலம்‌) வியாபித்தார்‌.] என்று புருஷ ஸூக்தத்தில்‌ அநிருத்தரைக் குறித்து விஷ்ணுசப்தார்த்தம்‌ அநுஸந்திக்கப்பட்டது.
மேலும்‌, அநிருத்தரே ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு . இடையில்‌ பத்ம நாபராகிய விஷ்ணுவாக அவதரித்தார்‌ என்று சாஸ்த்ரங்கள்‌ சொல்லுகையாலும்‌.
கார்ய வாசி சப்தம்‌ காரணமாகச் சொல்லுமாகையாலும்‌, “பத்மநாபர்‌’ என்று ப்ரதமாவதாரமான விஷஸ்ணுவைத்‌ தனியே இங்கு எடுக்கையாலும்‌
இங்கு விஷ்ணுசப்தம்‌ அநிருத்த நாராயணனைச்‌ சொல்லக்கடவது.
மற்ற வியூஹங்களுமிருக்க இங்கு அநிருத்தரை எடுத்த துக்குக்‌ கருத்தென்னெனில்‌:
“பத்மநாபாதி,கா: ஸர்வே வைப,வீயாஸ்‌ ததைவ ச |
ஷட்த்ரிம்மமத்ஸங்க்‌,யாஸங்க்‌,யா தா: ப்ராத,ந்யே கணேங்வர |!
ஷட்த்ரிம்ப்த்‌,பே,த,பி,ந்காஸ்தே பத்‌மநாபாதி,கா: ஸுரா: |
ஸமுத்பந்நா தீ,பாத்‌, 8,பா இவேங்வரா: |”
விஷ்வக்ஸேநரே! பத்மநாபன்‌ முதலிய முக்கியமான விபவா வதாரங்கள்‌ முப்பத்தாறாகும்‌.
இப்படி பத்மநாபன்‌ முதலிய முப்பத்தாறு விபவமூர்த்திகளும்‌. விளக்கிலிருந்து உண்டான
விளக்குகள்போல்‌ அநிருத்த மூர்த்தியிடமிருந்து அவதரித்‌ தார்கள்‌. என்று விஷ்வக்ஸேந ஸம்‌ ஹிதையில்‌ சொல்லிய படியே,
பின்‌ சொல்லப் போகும்‌ பத்மநாபன்‌ , திரிவிக்கிரமன்‌ , வாமனன்‌. தாமோதரன்‌ என்னும்‌ மூர்த்திகளுக்கு மூல மூர்த்தி
அநிருத்தரேயாகையால்‌ அவரை இங்கு எடுக்கிறது. நிற்க;
விஷ்ணு பதத்தின்‌ பொருளை இனி விவரிட்மோம்‌.
“ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ” என்று அவதாரத்தினால்‌ வியாபித்திருப்பதை ,
விஷ்ணு சப்தார்த்தமாகப்‌ புருஷ ஸூக்தத்‌தில்‌ பேசப்பட்டது,
“வ்யாப்ய ஸர்வாநிமாக்‌ லோகாந்‌ ஸ்தி,த: ஸர்வத்ர கேமுவ:
ததமச விஷ்ணுநாமாஸி விமோர்‌ தளாதோ: ப்ரவேமுநாத்‌ |!”
கேசவனாகிற தேவரீர்‌ இந்த எல்லா உலகங்களையும்‌ எங்கும்‌ வியாபித்து நிற்கிறீர்‌;
ஆகையால்‌ விஷ்ணுவென்னும்‌ திரு நாமத்தை யுடையவராய்‌ விளங்குகிறீர்‌ ‘
விம’ என்னும்‌ தாது ப்ரவேசித்தல்‌ என்னும்‌ பொருளை யுடைத்தாயிருப்பதால்‌. என்று
ஸ்ரீவராஹபுராணத்தில்‌ சொல்லப்பட்டபடியே எங்‌கும்‌ தன்‌ ஸ்வரூபத்தால்‌ வியாபித்து நிற்பவன்‌ விஷ்ணு வென்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
“யஸ்மாத்‌, விஷ்டமித,ம்‌ விஸ்வம்‌ தஸ்ய முக்த்யா மஹாத்மர: |
தஸ்மாத்‌ ஸ ப்ரோச்யதே விஷ்ணுர்‌ விமேர்‌ த,௱தோ: ப்ரவேமாநாத்‌ ||”
மஹாத்மாவான அப் பரம புருஷனுடைய சக்தியினால்‌ இவ்‌ வுலகமெல்லாம்‌ வியாபிக்கப்பட்டிருப்பதால்‌
அவன்‌ விஷ்ணு வெனப்படுகீறான்‌;
விம ‘ என்னும்‌ தாது வியாபித்தலைச்‌ சொல்லுவதால்‌–என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்‌, ஆதித்ய புராணத்திலும்‌ சொல்லியபடியே
சக்தியினால்‌ எல்லா வஸ்துக்களையும்‌ வியாபித்திருப்பவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
“வ்யாப்ய மே ரோத,ஸீ பார்த்த, காந்திஏப்யதி,கா ஸ்தி,தா |
ஸம்ஸாரவேமுநாத்‌ பார்த்த,! விஷ்ணுரித்யபி,ஸம்ஜ்ஞித: ॥
பார்த்தனே! என்னுடைய மிகவதிகமான ஒளியானது ஆகாயம்‌ முழுவதும்‌ வியாபித்து நிற்கிறது.
இப்படி இவ்‌ வுலகம்‌ முழுவதும்‌ வியாபித்து நிற்பதால்‌ நான்‌ விஷ்ணு வென்று சொல்லப்படுகிறேன்‌.–என்று மஹாபாரதத்தில்‌ சொல்லியபடியே ஸர்வ வ்யாபினியான விக்‌ரஹ காந்தியை உடையவன்‌ என்றும்‌ விண்ணுசப்தத்துக்குப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.

* யதள ஸர்வக,தோ விஷ்ணு: ”
விஷ்ணு வானவர்‌ எப்படி ஸர்வ வியாபியாயிருக்கிறோரோ….] என்று ஸ்ரீவிஷ்ணு புராணத்தில்‌ சொல்லியபடியே
விக்ரஹத்தாலே எங்கும்‌ வியாபித்து நிற்பவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
இவ் வர்‌த்தங்களெல்லாம்‌
” ‘ விஷ்ணுர்‌ விக்ரமணாத்‌ தேவ: “‘ என்று பாரதம்‌ உத்யோக பர்வத்தில்‌ உணர்த்தப்‌பட்டது.

இப்படி இவன்‌ எல்லாவற்றையும்‌ வியாபித்து விளங்குவதால்‌ எல்லாம்‌ இவனே என்று சொல்லலாம்படி யிருக்கறானென்‌பதை
“ஜ்யோதீம்ஷி விஷ்ணுர்‌ பு,வநாநி விஷ்ணுர்‌ வநாநி விஷ்ணுர்‌ கி,ரயோ தி,மமமச |
ஈத்‌,ய: ஸமுத்‌,ராமங்ச ஸ ஏவ ஸர்வம்‌ யத,ஸ்தி யந்காஸ்தி விப்ரவர்ய ॥”’
விப்ரஸ்ரேஷ்டரே! ஜ்யோதிஸ்ஸுக்களும்‌ விஸ்ணுவே;
புவனங்களும்‌ விஷ்ணுவே;
வனங்களும்‌ விஷ்ணுவே:
மலைகளும்‌. திக்குகளும்‌, நதிகளும்‌. ஸழுத்ரங்களும்‌, “ இருக்கிறது என்று
எப்போதும்‌ சொல்லப்படும்‌ ஜீவ தத்வமும்‌.
இல்லை என்னும்‌ வ்யவஹாரத்துக்கு விஷயமான அசிச்தத்வமும்‌ ஆகிய எல்லாம்‌
அந்த பகவான்‌ விஷ்ணுவே. என்று ஸ்ரீ விஷ்ணு புராணம்‌ உத்கோஷித்தது.
“ ஆஸ்ய ஜாநந்தோ நாம சித்‌,விவக்தந மஹஸ்தே விஷ்ணோ ஸுமதிம்‌ பஜாமறஹே ”
விஷ்ணுவே! உன்னுடைய திருநாமத்தை அறியும்‌ நாங்கள்‌. உன்னுடையது போன்‌ற தேஜஸ்ஸையும்‌
தெளிவான ஞானத்தையும்‌ அடைகிறோம்‌. என்று ருக்வேதத்திலும்
தத்‌, விஷ்ணோ: பரமம்‌ பத, என்றும்‌.
`” விஷ்ணோர்‌ யத்‌’பரமம்‌ பத,ம்‌” என்றும்‌,
“ மம ம்நோ விஷ்ணுருருக்ரம: ” என்றும்‌,
பரமே மத்‌,வஉத்ஸ.:”’
வீஷ்ணுவினுடைய மேலான திருவடியிலிருந்து அம்ருத தரைகள்‌ பொழிகின்‌றன.– என்றும்‌,
மற்றும்‌ பல பலவேத வாக்கியங்களிலும் இத் திரு நாமம்‌ மிகவும்‌ ஆதரிக்கப்பட்டது .
“தஸ்மாத்‌, விராட் ,ஜாயத”
அந்த அநிருத்‌த நாராயணனிட யிருந்து பிரமன்‌ உண்டானான்‌. ] என்றும்
ஐகந் நாதோ ப்‌,ரஹ்மாணமஸ்ருஜத்‌ புக: ।”’
நான்காவது மூர்த்தியான பிரமனை ஸ்ருஷ்டித்தார்‌–என்றும்
ஸம்ஹிதையிலும்‌ சொல்லப்பட்டடடியே
பிரமனைப்‌ பிறப்பித்தவரான அநிருத்த மூர்த்தி விஷ்ணு சப்தத்தால்‌ சொல்லப்பட்டார்‌,

————-

அடுத்த படியாக, அப் பிரமனைப்‌ பிறப்பிக்குமளவே யன்று.
அவனுக்குத்‌ துன்பம்‌ வந்த போது அதைப் போக்‌ கடிப்பவனும்‌ இவனே என்று உணர்த்துகிறது
மதுஸூதன்‌” என்னும்‌ திருநாமம்‌.

கேசவன்‌ என்று தொடங்கி கோவிந்தன் என்பது வரை பரத்வம்‌ பேசப்பட்டது.
விஷ்ணுவென்று வியூஹம்‌ உணர்த்தப்பட்டது.
மதுஸூதனன்‌ என்னும்‌ இத் திருநாமம்‌ தொடங்கி விபவாவதாரம்‌ விவரிக்கப்படுகிறது. .

*’ யோ வித,த,தி பூர்வம்‌ யோ வை வேதராம்ங்ச ப்ரஹிணோதி தஸ்மை ˆ”
எவனொருவன்‌ பிரமனை முதலில்‌ பிறப்பித்து, அவனுக்கு வேதங்களை உபதேசிக்‌கிறானோ என்று
வேதத்தில்‌ சொல்லியபடியே ஸர்வேஸ்வரன்‌ வேதங்களை ப்ரஹ்மாவுக்கு உபதேசித்தருளினான்‌.
நான்கு சிசு ரூபமாயிருந்த அந்த நான்கு வேதங்களையும்‌, மது.கைடபன்‌ என்னும்‌ இரு அஸூரர்கள்‌
பிரமனிட மிருந்து பறித்துக் கொண்டு போய்‌, ரஸா தலத்தில்‌ ஒளித்து வைத்தனர்‌.
வேதங்களை இழந்த அப் பிரமனும்‌, “ கண்ணிழந்‌ தேன்‌. தனமிழந்தேன்‌ ‘ என்‌று கேசவனை நோக்கிக்‌ கதறினான்‌.
இக் கூக்குரலைக் கேட்ட கருணா வள்ளலான அப்பெருமானும்‌ ஹயக்ரீவாவதாரம்‌ செய்து
மது கைடபர்களை ஸம்ஹரித்துப்‌ பிரமனுக்கு வேதங்களை மீட்டுக்கொடுத்தான்‌
இப்படி ப்ரதம ஜனான (முதலில்‌ பிறந்தவனான ) பிரமனுக்குச்‌ செய்த உபகாரமாகையாலே
இது அவதாரங்களுள்‌ முதலில்‌ அநு ஸந்திக்கப்படுகிறது.
( மதுஸூதனன்‌ )
மதுவென்னும்‌ அஸாரனைக்‌ கொன்‌ றவன்‌.
“கர்ணமிங்ரோத்‌,ப,வம்‌ சாபி , மஹாஸுரம்‌ |
ப்‌ரஹ்மணோபசிதிம்‌ குர்வங்‌ ஜக, புருஷோத்தம: |
தஸ்ய தாத இத்யாஹு: |”
பகவானுடைய காதிலிருந்து உண்டான மதுவென்னும்‌ பெரிய அஸுரனை பிரமனுக்கு நன்மை செய்வதற்காகப்‌ புருஷோத்தமன்‌ கொன்றான்‌.
குழந்தாய்‌! அவனைக்‌ கொன்றதாலேயே., தேவர்கள்‌. அஸூரர்கள்‌, மனிதர்கள்‌. ரிஷிகள்‌ ஆகிய யாவரும்‌ ஐநார்‌தனனை மதுஸதனனென்று சொல்லு கிறார்கள்‌.] என்று மஹாபாரதத்தில்‌ இந்த நாமத்தின்‌ பொருள்‌ உரைக்கப்பட்டது .
“த,த்‌ருமாதேரவிந்த,ஸ்தழம்‌ ப்‌,ரஹ்மாணமமிதப்ரப,ம்‌ |
ஸ்ருஐஜந்தம்‌ ப்ரத,மம்‌ வேத,ாம்ம்சதுரங்சாருவிக்ரமெள |
ததோ விக்‌,ரஹிணஸ்தாம்ஸ்‌ த த்ருஷ்ட்வா தாவஸுரோத்தமெள |
வேதஞ்ஜக்‌,ருஹதூ ராஜம்‌ ப்‌,ரஹ்மண: பங்யதஸ்‌ ததா ॥
அத, தெள தளநவங்ரேஷ்டெள க்‌,ருஹீத்வா தாந்‌ ஸ௩ராதநார்‌ |
ரஸாம்‌ விவிமதுஸ்‌ தூர்ணமுத,பூர்ணே மஹோத,தெ,ள ||
ததோ ஹ்ருதேஷு வேதே.ஷஃ ப்‌,ரஹ்மா கங்மலமாவியத்‌ |
ததோ வச௩மீமா௩ம்‌ ப்ராஹ வேதைர்‌ விநாக்ருத: ॥
ப்‌,ரஹ்மா:-வேத;ா மே பரமம்‌ சக்ஷார்‌ வேதா மே பரமம்‌ தம்‌।
வேதா மே பரமம்‌ வேத; மே ப்‌,ரஹ்ம சோத்தமம்‌ |
மம வேதரா ஹ்ருதா: ஸர்வே தளாவாப்‌,யாம்‌ ப,லாதி,த: |
அந்த,காரா இமே லோகா ஜாதா வேதைள்‌ விவர்ஜிதா: ||
வேதே, ஹ்ருதே5ஹம்‌ கம்‌ குர்யாம்‌ லோகாந்‌ வை ஸ்ரஷ்டுமுத்‌,யத: |
அஹோ பத மஹத்‌, து, க்சும்‌ வேத;ாமமாஜம்‌ மம |
ப்ராப்தம்‌ துநோதி ஹ்ருதயம்‌ தீவ்ரரேர காமயஸ்த்வயம்‌ |
கோ ஹி மோகார்ணவே மக்‌,நம்‌ மாமிஹாத்‌,ய ஸமுத்‌.த,ரேத்‌।
இத்யேவம்‌ ப,௱ாவுமாணஸ்ய ப்‌,ரஹ்மணோ ந்ருபஸத்தம |
ஹரிஸ்தோத்ரார்த்தமுத்‌;,பூ,தா புத்‌,திர்‌ புத்திமதாம்‌ வர॥
ததோ ஐகெள பரம்‌ ஜப்யம்‌ ப்ராஞ்ஜலி: ப்ரக்‌,ரஹம்‌ ப்ரபு,:॥| ஏதஸ்மிந்நந்தரே ராஜ்‌ தேவேர ஹயமபிரோத,ர:। ஐக்‌,ராஹ வேதளநகலொந்‌ ரஸாதலக,தாந்‌ ஹரி: ॥
ப்ராதாச்ச ப்ரஹ்மணே ராஜர்‌ தத: ஸ்வாம்‌ ப்ரக்ருதிம்‌ யயெள ॥
ததஸ்தயோர்‌ வதே,நா மரு வேதாபஹரணேந ச |
போ காபநயநம்‌ சக்ரே ப்‌, ஹ்மண: புருஷோத்தம: || ””
மது கைடடன்‌ என்னும்‌ அஸுரர்கள்‌ அளவற்ற ஒளியை யுடையவனும்‌. தாமரைமலரில்‌ வீற்றிருப்பவனும்‌,
அழகிய உருவையுடைய நான்கு வேதங்களையும்‌ முதன்முதலில்‌ ஸ்ருஷ்டிப்பவனுமான பிரமனைப்‌ பார்த்தனர்‌
சரீரத்துடன்‌ கூடிய அவ் வேதங்களைக் கண்ட அந்த அஸூரர்கள்‌ பிரமன்‌ கண்டு கொண்டிருக்கும் போதே அவைகளை எடுத்துக்‌ கொண்டனர்‌.
பிறகு அவ் வஸூர ஸ்ரேஷ்டர்கள்‌ பழமை யான அவ்வேதங்களை எடுத்துக் கொண்டு.
நீர் நிறைந்த கடலினுள்ளிருக்கும்‌ ரஸாதலத்தினுள்‌ விரைவில்‌ நுழைந்‌தனர்‌.
இப்படி வேதங்கள்‌ கவரப்பட்டபின்‌ பிரமனைத்‌ துக்கம்‌ பீடித்தது.
அதன் பின்‌ வேதங்களை இழந்த நான்முகன்‌ ஈஸ்வரனைக்‌ குறித்துப்‌ பின்வருமாறு உரைத்தனன்‌ -—
“வேதங்களே எனக்கு மேலான கண்‌; வேதங்களே எனக்கு மேலான தனம்‌. வேதங்களே எனக்கு மேலான ஓளி.
எனக்குப்‌ பெருமையைக்‌ கொடுப்பவைகளில்‌ வேதங்களே சிறந்தவை.
அஸூரர்களுடைய பலத்தினால்‌ என்னுடைய வேதங்களெல்லாம்‌ இங்கிருந்து பறிக்கப்பட்டன.
வேத மற்றவையான இவ்வுலகங்கள்‌ இருள்‌ சூழ்ந்தவையாயின.
லோகங்களை ஸ்ருஷ்டிக்க முற்பட்ட யான்‌ வேதமில்லாமல்‌ என்ன செய்வேன்‌ ?
வேதங்கள்‌ நசித்ததினால்‌ எனக்குப்‌ பெருந்துன்பம்‌ ` வந்தடைந்துவிட்டது..
தீவிர சோகமான இந்த வியாதி : என்‌ மனத்தைத்‌ துன்புறுத்துகிறது.
இத்‌ துன்‌பக்கடலில்‌ முழுகும்‌ என்னை யார்தான்‌ | கரையேற்ற முடியும்‌ ?”
என்று இம்மாதிரியாக ப்ரஹ்மா பேசிக்கொண்டி ருக்கும்போது
‘ ஹரியை ஸ்தோத்ரம்‌ செய்யவேண்டுமென்‌ னும்‌ புத்தி அவருக்கு உண்டாயிற்று.
அதன் பிறகு ப நின்று, மிகச்‌ சிறந்த இந்த ஸ்தோத்ரத்தைப்‌ பாடினார்‌………
இதற்கிடையில்‌ பகவான்‌ ஹரி குதிரை போன்ற முகத்தையுடைய ஹயக்ரீவராய்‌ அவதரித்து, .
ரஸாதலத்திலிருந்த எல்லா வேதங்களை யும்‌ எடுத்துக்கொணர்ந்து பிரமனிடம்‌ கொடுத்தருளினார்‌.
அதன்பின்‌ பிரமன்‌ தன்‌ இயற்கை நிலையை அடைந்தனன்‌.
இப்படி அந்த அஸூரர்களைக்‌ கொன்றும்‌. வேதங்களை மீட்டுக்கொணர்ந்தும்‌
ப்ரஹ்மாவினுடைய சோகத்தைப்‌ புருஷோத்தமன்‌ போக்கடித்தான்‌.] என்று
மஹாபாரதத்‌ தில்‌ இந்த விருத்தாந்தம்‌ விவரிக்கப்பட்ட து.

“ மத,மிவ ம்து,கைடபூஸ்ய ரூப்யதரர்ப்பம்‌ |
ஸ்புடமிவ பரிபூ,ய. களர்வகுள்வோ: இமுபமிமீமஹி ரங்சு,குஞ்ஜரோர்வோ: || ”
மது `கைடபர்களுடைய கொழுப்பைக்‌ குலைத்தது போல்‌, வாழைத் தண்டு, கதையின்‌ வெளிப்புறமான கரப,ப்ரதேசம்‌;
யானைத்‌ துதிக்கை ஆகிய இவைகளின்‌ அழகுச் செருக்கையும்‌ அடக்கி, –
அந்த கர்வத்தினால்‌ பருத்து விளங்குகிற ஸ்ரீரங்க நாதனுடைய திருத்துடைகளுக்கு எப்பொருளை
உபமான மாகச்‌ சொல்லுவோம்‌] என்று பட்டர்‌ ஸ்ரீரங்கராஜஸ்த வத்திலும்‌. ‘
“யிஷ்டதுஷ்டமதுகைடப,8டெள ”
மது கைட்பர்களாகிய துஷ்டப் புழுக்களைப்‌ பிசைந்து கொன்றவை களான இத் திருத்துடைகள்‌] என்று
ஆழ்வான்‌ ஸூந்தர பாஹுஸ்தவத்திலும்‌ அருளிச்செய்தபடியே
மது கைடபர்‌ கள்‌ பகவானால்‌ தொடையினால்‌ இறுக்கிக்‌ கொல்லப்பட்டனர்‌ என்பது பிரஸித்தம்‌.

” காய்ந்திருளை மாற்றிக்‌ கதிரிலகு மாமணிகள்‌
ஏய்ந்த பணக்குதிர்மேல்‌ வெவ்வுயிர்ப்ப-—
வாய்ந்த மதுகைடபரும்‌ வயிறுருகி மாண்டார்‌
அதுகேடவர்க்திறுதியாங்கு ” [மூன்‌ திருவ 68] என்று
எம்பெருமானுடைய . திவ்ய வாஸத்தாலேயே மதுகைடபர்கள்‌ மாண்டனர்‌ என்று
பேயாழ்வார்‌ அருளிச்செய்தார்‌,

அன்‌ றிக்கே.
எம்பெருமான்‌. ஆயாஸம்‌ சிறிதுமின்‌ றி அவர்‌களை முடித்தபடியைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌.
இந்த மது கைடபர்கள்‌ பிரமனுடைய கர்மாநுபவத்தின்‌ பொருட்டு எம்பெருமானாலேயே ஸ்ருஷ்டிக்கப்பட்டனர்‌.
ரஜஸ்‌ தமோ குணங்களே வடிவெடுத்தவர்கள்‌ இவர்களென்‌ று பாஞ்சராத்ர சாஸ்திரத்தில்‌ சொல்லப்பட்ட து.
பிறக்கும்‌ போதே எங்களை நீ கொல்லுவாயாக ” என்று யாரைக்‌ குறித்துத்‌ தாங்கள்‌ சொல்லுகிறார்களோ
அவர்களாலேயே சாவு நேர வேண்டுமென்ற வரத்தைப்‌ பெற்றனர்‌.
வேதங்‌ களுடன்‌ கூடிய ப்ரஹ்மாவைக் கண்டு வேதங்களைக்‌ கவர்ந்து ரஸாதலத்தில்‌ ஜநித்தனர்‌. .
பிரமனால்‌ ஸ்தோத்ரம்‌: செய்யப்‌ பட்ட பகவான்‌ ஹயக்ரீவாவதாரம்‌ செய்து ஓர்‌ இனிய இசையைப்‌ பாட. அவ்வொலியைக் கேட்ட அவ்வஸுரர்கள்‌
வேதத்தை வைத்து விட்டு ஒலி வரும்‌ வழியில்‌ சென்றனர்‌.
பகவான்‌ மற்றொரு வழியாகச் சென்‌று வேதங்களை மீட்டுப்‌ பிரமனிடம்‌ கொடுத்தருளினான்‌.
வேதங்களைக்‌ காணாத அவ்‌ வஸுரர்கள்‌ பாற்கடலில்‌ பையத் துயின்ற பரமனைக் கண்டு
அவனுடன்‌ நெடுங்காலம்‌ போர் செய்தனர்‌.
பல பல காலம்‌ போர் செய்தும்‌ சோர்வடையாத திருமாலைக் கண்டு மனமுவந்து.
“ நீ வேண்டும்‌ வரத்தைக்‌ கேள்‌” என்றார்கள்‌ அவ்‌ வஸுரர்கள்‌.
* உங்களை நான்‌ கொல்லவேணும்‌ ” என்னும்‌ வரத்தை மாயாவியான அம்மாதவன்‌ தன்னால் படைக்கப்‌ பட்‌.டவர்களான அவர்களிடம்‌ வேண்டினான்‌.
அவர்களும்‌ ௮தற்கு இசைந்தவளவில்‌, “ உங்களுக்கு வேண்டிய ஒரு வரத்தைக்‌ கொள்ளுங்கள்‌” என்‌ று பரம புருஷன்‌ உரைத்தான்‌,
* ஒருவரும்‌ சாகாத இடத்தில்‌ நாங்கள்‌ சாக வேண்டும்‌” என்று அவர்கள்‌ வரம்‌ வேண்டினார்கள்‌.
புருஷோத்தமனும்‌ திருத்‌ தொடைகளால்‌ அவர்களை இறுக்கிக்கொன்றான்‌ என்று
இம்‌ மாதிரியாக சாஸ்‌த்ரங்கள்‌ இவ்விருத்தாந்தை விவரிக்கின்‌ றன.
*மது,ஸூத,னன்‌’ என்னுமித் திருநாமத்தில்‌ மதுவைச்‌ சொன்‌ னது ,கைடபனுக்கும்‌ உபலக்ஷணம்‌.
* கைடபாரி ‘ என்றும்‌ எம்பெருமானுக்கு ஒரு திருநாமம்‌ வழங்கி வருகிறது.

இனி, மதுஸூதனன்‌ என்னுமித்திருநாமத்திற்குள்ள மற்றும்‌ சில பொருள்களை விவரிப்போம்‌.
(மதுஸுதனன்‌)
மது,” என்று “ பிப்பலம்‌ ஸ்வாது,” என்றபடியே இனிமையான போக்யப்‌ பொருள்களான அசேதன தத்வத்தையும்‌.
ஆநந்த,ஸ்வரூபியும்‌, பகவானுக்கு ஸ்ரீகெளஸ்துபம்போல்‌ இனியவனுமான சேதன தத்வத்தையும்‌ சொல்லுகிறது.
‘ஸூதனன்‌” என்னும்‌ பதம்‌ தன்‌ வசத்திற்கு அழைத்துச்‌ செல்பவன்‌ என்னும்‌ பொருளை உடையது.
ஆக, ஸர்வ தத்வங்களையும்‌ அழைத்துச்‌ செல்பவன்‌ மதுஸூதனன்‌ என்றதாயிற்று.
“ ஸர்வ தத்வநயநாச்சைவ மதுஹா மதுஸூதந: ”
எல்லாத்‌ தத்துவங்களையும்‌ அழைத்துச்‌ செல்வதாலும்‌ பகவான்‌ மதுஸூதனனாகிறான்‌.
என்று சாஸ்திரம்‌ இப்பொருளை ஆதரித்தது,
* மது, ஸூத,னன்‌ ‘ என்பது ஸகல தத்வங்களாகிற குதிரைகளைத்‌ தூண்டுபவன்‌ என்றும்‌ பொருள்படும்‌. “
மதுரிந்த்‌,ரியநாமா ஸ ததோ மதுநிஷூதந: ”’ [
மது,’ என்று இனியவைகளான இந்திரியங்கள்‌ சொல்லப்‌ படுகின்‌ றன.
அவைகளை அடக்குமவனாகையாலே இப் பெரு மான்‌ மதுஸூதனனாகிறான்‌.என்றும்‌
மதுஸூதந சப்தார்த்‌ தம்‌ விவரிக்கப்பட்ட து.

ஆக, இப்பொருள்களால்‌ விரோதி நிரஸன ஸீலன்‌ மதுஸூதனன்‌ என்றதாயிற்று.
“ கொடு யேனிடர்‌ முற்றவும்‌ மாய்த்தவம்மான்‌ மதுஸூதவம்மான்‌”என்று இவ்வர்‌ததத்தை ஆழ்வார்‌ அருளிச்செய்தார்‌.
இந்த விரோதி, நிரஸனலத்வமாகிற பெருங்குணத்துக்குத் தோற்று
“ மது ஸூதனென்னம்மான்‌ தானும்‌ யானுமெல்லாம்‌ தன்னுள்ளே கலந்தொழிந்தோம்‌
தேனும்‌ பாலும்‌ நெய்யும்‌ கன்னலும்‌ அமுதுமொத்தே ‘* என்றும்‌,
வள்ளலே ! மதுஸூதனா ! “” என்றும்‌.
“ மதுஸூதனை யன்றி மற்றிலேன்‌ ” என்றும்‌. °
வைத்த மா நிதியாம்‌ மதுஸூதனையே அலற்றி” என்றும்‌, நம்மாழ்வார்‌ தம்மை எழுதிக் கொடுத்தார்‌

————
மதுஸூதனன்‌ என்று. பிரமனுக்குச்‌ செய்த உபகாரத்‌தைப்‌ பேசிற்று,

அடுத்தபடியாக, திரிவிக்கிரமன்‌ என்று
இவ் வுலகுக்கெல்லாம்‌ அபேஷா நிரபேக்ஷமாகத்‌ தன்னைக்‌ கொடுத்தபடியைப்‌ பேசுகிறது.
மஹாபலி என்பானோர்‌ அஸுரன்‌ தன்னுடைய பராக்ரமத்தாலே இந்திரனை யுள்‌ளிட்ட மூவுலகையும்‌ ஜயித்துத்‌ தன்‌ வசப்படுத்திக்கொண்‌டான்‌.
இந்திரன்‌ முதலிய தேவர்கள்‌ எம்பெருமானிடம்‌ சென்று முறையிட. அப்பெருமானும்‌
காஸ்யபருக்கும்‌ அதிதிக்‌கும்‌ புத்திரனான வாமனனாய்ப்‌ பிறந்து மஹாபலி யாகம்‌ செய்கையில்‌
அவனிடம்‌ மூவடி மண்ணை யாசித்துப் பெற்று, திரிவிக்ரமனாக வளர்ந்து,
ஈரடியால்‌ உலகங்களையெல்லாம்‌ அளந்து, மூன்றாவதடியை மாவலியின்‌ தலையில்‌ வைத்து,
பாதாள லோகத்தில்‌ அவனுக்கும்‌ பெருமையை உண்டாக்கி வைத்தான்‌ என்னும்‌ விருத்தாந்தம்‌
ஸர்வ லோக ப்ரஸித்தமானது.
இப்படி, ப்ரயோஜநாந்தர பரனான இந்திரனோடு, அவனுக்கு விரோதியான மஹாபலியோடு வாசியற-ஸர்வரையும்‌ ரக்ஷித்‌த அவதாரமாகையாலும்‌, ,
உறங்குகிற ப்ரஜையைத்‌ தடவிக் கொண்டு கிடக்கும்‌ தாயைப்போலே,
உலகங்களையெல்லா।ம்‌ தன்‌ திருவடிகளாலே அபேக்ஷா நிரபேஷமாகத்‌ தடவிக் கொடுத்த பெருமையை உடையதாகையா லும்‌.
பரத்வமும்‌, ஸெளலப்‌யமும்‌ ஒருங்கே ஒளிவிடுகின்ற மேன்மையை உடைத்தாயிீருக்கையா லும்‌,
அடியார்க்காகத்‌ தன்னை அழிய மாறியும்‌ அளிக்கும்‌ அருங்‌ குணத்தை அறிவிப்பதாகையாலும்‌.
வேதங்களோடு. இதிஹாஸ புராணங்களோடு. ஆழ்வார்களோடு வாசி யற எல்லாரும்‌ இவ்வவதாரத்திலே ஈடுபடாநிற்பர்கள்‌. .
“ இதம்‌ விஷ்ணுர்‌ விசக்ரமே ”
“ த்ரீணி பத; விசக்ரமே ” –
“ விசக்ரமே ப்ருதி,வீமேஷ ஏதாம்‌ கத்ராய விஷ்ணு: ” .
மூவடி மண்ணைப்பெறுவதற்காக இந்த உலகையெல்லாம்‌ அளந்தான் விஷ்ணு]:
“த்ரிர்‌ தே,வ: ப்ருதி,வீமிதி ப்ரவிஷ்ணு: ”’ “
ம்‌ நோ விஷ்ணுருருக்ரம:
பெரிய அடிவைப்புகளை யுடைய விஷ்ணு வானவன் நமக்கு மங்களத்தைத் தருவானாக,
“ விஷ்ணுக்ரா ந்தே. வஸுந்த,ரே ”
விஷ்ணுவினால்‌ அளக்கப்‌ பட்ட பூ தேவீயே] என்று பல பல விடங்களில்‌ பண்டை மறை வாய்‌ வெருவிற்று.
“கண்டாயே நெஞ்சே! கருமங்கள்‌ வாய்க்கின்றோர்‌
எண்தானுமின்‌றியே வந்தியலுமாறு
உண்டான்‌ உலகேழும்‌ ஓர்‌ மூவடி கொண்டானைக்‌
கண்டு கொண்டனை நீயுமே ” என்றும்‌.
“அடியை மூன்‌றை யிரந்தவாறும்‌ அங்கே நின்றாழ்கடலும்‌
மண்ணும் விண்ணும்‌ முடிய ஈரடியால்‌ முடித்துக் கொண்ட முக்கியமும்‌
நொடியுமாறவை கேட்குந்தோறுமென்‌ நெஞ்சம்‌ நின்றனக்கே கரைந்துகும்‌
கொடிய வல்வினையேனுன்னை என்றுகொல்‌ கூடுவதே ?”” என்றும்‌.
“பாயோரடி வைத்த தன்‌ கீழ்ப்‌ பரவை நிலமெல்லாம்‌
தாயோரடியால்‌ எல்லா வுலகும்‌ தடவந்த மாயோன்‌
உன்னைக்‌ காண்பான்‌ வருந்தி எனை நாளும்‌ .
தீயோடுடன்‌ சேர்‌ மெழுகாயுலகில்‌ திரிவேனோ ?” என்றும்‌,
“ உலகமெல்லாம்‌ தாவிய வம்மானை எங்கினித்‌ தலைப் பெய்‌வனே ? ” என்றும்‌,
`” தாவி வையம்‌ கொண்ட எந்தாய்‌! ” என்றும்‌,
“பாமரு மூவுலகுமளந்த பற்ப பாதாவோ !’”’ என்றும்‌
நம்மாழ்வார்‌ பிராட.டிமார்‌ தொட்டாலும்‌ சிவக்கும்‌ திருவடி களைக் கொண்டு காடுமோடெல்லாமளந்த
இந் நீர்மையிலே உருகா நிற்பர்‌,
என்னிது மாயம் — வண்ணமே கொண்டளவாய்‌ என்ற மன்னு நமுசியை வானிற் சுழற்றிய மின்னுமுடியனே !” என்றும்‌,
^” ஒருப்படுத்‌ திடுமின்‌ இவளை உலகளந்தானிடைக்கே ”’ என்‌றும்‌, பெரியாழ்‌வாரும்‌,
“ ஓங்கி உலகளந்த உத்தமன்‌ ” என்றும்‌.
“ தேச முன்னளந்தவன்‌ திரிவிக்கரமன்‌ திருக்கைகளால்‌ என்னைத்‌ தீண்டும்‌ வண்ணம்‌ ” என்றும்‌
பொல்லாக்‌ குறளுருவாய்ப்‌ பொற்கையில்‌ நீரேற்று
எல்லாவுலகும்‌ அளந்‌து கொண்ட எம்‌ பெருமான்‌ ‘* என்றும்‌, “
மாணியுருவாயுலகளந்த மாயனைக்‌ காணில்‌ தலைமறியும்‌ ‘” என்றும்‌ ஆழ்வார்‌ திருமகளாரும்‌
இவ்வவதாரத்திலே ஈடுபட்டனர்‌.
“ஏக: ப்ராஸீஸரத்‌ பாதமேக: ப்ராச்க்ஷளந்முத |
அபரோப்யதரந்மூர்த்‌ கா கோதிகஸ்தேஷு க,ண்யதாம்‌ ॥ ””
ஒருவன்‌ திருவடியை நீட்டினான்‌;
(பிரமனாகிய) மற்றொரு வன்‌ மிகவுகந்து அத்திருவடியை விளக்கினான்‌.
(சிவனாகிய) வேறு ஓருவனும்‌ களிப்புடன்‌ அந்நீரைத்‌ தலையிலே தரித்தான்‌.
இவர்களில்‌ எவன்‌ பெரியவன்‌ என்பதை நினைத்‌துப் பாருங்‌கள்‌- என்கிறபடியே
பரம் பொருள்‌ யாரென்பதை நிலை நாட்டித் தருவதன்றோ இவ்வவதாரம்‌.
( திரிவிக்ரமன்‌ )
த்ரயோ விக்ரமாஸ்‌ த்ரிஷா லோகேஷ க்ராந்தா: யஸ்ய ஸ:”’
[மூவுலகங்களையும்‌ அளந்த மூன்று அடிவைப்புகளை உடைய வன்‌ | என்றும்‌. –
த்ரயோ லோகா: க்ராந்தா யே ?’
மூன்று உலகங்களும்‌ எவனால்‌ கடக்கப்பட்டனவோ ௮வன்‌ ] என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. –
த்ரீணி பத; விசக்ரமே ‘* என்றது வேதம்‌.
“ த்ரிரித்யேவம்‌ த்ரயேோ லோகா: கீர்த்திதா முநிஸத்தமை: |
க்ரமஸே தாம்ஸ்த்ரித, ஸர்வாந்‌ த்ரிக்ரமோ$ஸி ஜநார்த்தந।”
(*மூவுலகங்களும்‌ முனிவர்களால்‌ சொல்லப்‌ படுகின்‌ றன. ஓ ஜநார்த்தனனே! அவையெல்லாவற்றையும்‌ மூன்‌ றடிகளால்‌ தாவியபடியால்‌ நீ திரிவிக்கரமன் ஆனாய் ]
என்று ஹரி வம்‌ஸத்தில்‌ சொல்லப்பட்ட து.
“பாஜதேறைகேர விக்ராந்தா ஸர்வேயம்‌ பூர்‌ நரேங்வர।
அந்தரிக்ஷம்‌ த்‌,விதீயேக த்‌,யெளஸ்‌ த்ருத்யேந ஸத்தம |
”’இவ்வுலகம்‌ ஒரு அடி வைப்பினால்‌ அளக்கப்பட்டது.
இரண்‌ டாவது அடிவைப்பினால்‌ அந்தரிஷமும்‌
மூன்றாவதடியால்‌ தேவலோகங்களும்‌ அளக்கப்பட்டன.] என்று
நாரஸிம்ஹ புராணத்திலும்‌ சொல்லப்பட்ட து.
முதலடியினால்‌ ழுலகங்க ளெல்லாவற்றையும்‌.
இரண்டாவதடியினால்‌ மேலுலகங்க ளெல்லாவற்றையும்‌,
மூன்றாவதடியினால்‌ மஹாபலியின்‌ ஸிரஸ்ஸையும்‌ அளந்தவன்‌ என்றும்‌ கொள்ளலாம்‌.
“த்ரிரித்யேவம்‌ த்ரயோ வேதா: கீர்த்திதா முநிஸத்தமை: |
க்ரமஸே தாம்ஸ்தத,ா ஸர்வாரந்‌ த்ரிவிக்ரம இதி ஸ்ம்ருத: ॥”’
த்ரி’ என்னும்‌ பதத்தினால்‌ மூன்‌று வேதங்களும்‌ முனிவர்‌ களால்‌ சொல்லப்படுகின்‌றன.
அவை யெல்லாவற்றையும்‌ வியாபித்திருப்பதால்‌ திரிவிக்கரமனெனப்படுகிறாய்‌. | என்று
சொல்லப்பட்டபடியும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.

வேதங்களால்‌ மிகவும்‌ ஆதரிக்கப்பட்டதாகையாலும்‌,
பரத்வத்தையும்‌. ஸெளலப்யத்தையும்‌ ஒருங்கே காட்டுவ தாகையாலும்‌.
எல்லார்‌ தலையிலும்‌ ஓக்கத்‌ திருவடியை வைத்த பெருங்குணத்தைப்‌ பேசுவதாகையாலும்‌
திரிவிக்ரமாவதாரம்‌ முதலில்‌ அதுபவிக்கப்பட்டது.

————-

அடுத்த படியாக இத் திரிவிக்ரம மூர்த்திக்கும்‌ காரண பூதமான வாமன மூர்த்தியின்‌ பெருமை பேசப்படுகிறது,
“த்ரஷ்ட்ரூக்‌ ஸ்வகாந்த்யா வாமாநி ஸுகரி நயதி’
காண்ப வர்களைத்‌ தன்‌ ஓளியால்‌ ஸுகமுள்ளவர்களாகச்‌ செய்கிறான்‌ என்று வாமன சப்தத்துக்குப்‌ பொருள்‌. “
ஸர்வாணி வாமாநி நயதி “ˆ [எல்லாரையும்‌ ஸுகமுடையவர்களாகச்‌ செய்கிறான்‌.] என்‌ று
சாந்தோக்ய உபனிஷத்‌ இவ்வர்த்தத்தை ஆதரித்தது,
“ கொள்ள மாளா இன்பவெள்ளம்‌ கோதில தந்திடும்‌ என்‌ வள்ளலேயோ!
வையங்கெண்ட வாமனாவோ!” என்று வேதம்‌ தமிழ்‌ செய்த மாறனும்‌ வாமன சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்‌.
“ வாமஸ்‌ ஸுந்தர மூர்த்யோ:” என்கிற படியே
மிகுந்த வடிவழகையுடையவன்‌ என்‌ றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
இவ்விரண்டு பொருள்களாலும்‌ அவன்‌ அலௌகிக ஆகர்ஜஹகமான வடிவழகையுடையவன்‌ என்ற தாயிற்று.
கடலைக்‌ குளப்படியிலே அடக்கினாப்போலே, உலகளந்த திரிவிக்ரம மூர்‌த்தியின்‌ ஸெளந்தர்யமெல்லாம்‌
இச் சிறிய உருவில்‌ வெள்ளமிடுமாகையாலே இப்பெருமானின்‌ அழகு பேச வொண்ணாததாயிருக்கும்‌.
அவாங்மநஸ கோசரமான இவ்வழகிலே வேதமும்‌. புராணங்களும்‌. ஆழ்வார்‌களும்‌ ஆழங்காற்படுவர்கள்‌.
“ ஸர்வாணி வாமாமி நயதி ”’ என்றது வேதம்‌,
ஃஸ வாமநேர தி,வ்யமாரீரத்‌ ருக்‌ ”
திவ்யமான சரீரத்தையுடையவன்‌ வாமனன்‌.என்று புராணம்‌ பேசிற்று.
“மரயக் கூத்தா! வாமனா! வினையேன்‌ கண்ணா! கண்‌ கை கால்‌
தூய செய்ய மலர்களா சோதிச்செவ்வாய்‌ முகிழதா
சாயல்‌ சாமத்திருமேனி தண்பாசடையா தாமரைநீள்‌
வாசத்தடம்போல்‌ வருவானே! ஒருநாள்‌ காண வாராயே?’ என்றும்‌,
“ஒருமாணிக் குறளாகி நிமிர்ந்த அக் கரு மாணிக்‌கம்‌” என்றும்‌,
°” வாமனன்‌ என்‌ மரதக வண்ணன்‌ தாமரைக்‌ கண்ணினன்‌ காமனைப் பயந்தாய்‌ !” என்றும்‌
“ மாண் குறள்‌ கோல வடிவு காட்டி ” என்றும்‌.
“ குரை கழல்கள்‌ நீட்டி மண்கொண்ட கோல வாமனா” என்றும்‌ நம்மாழ்வாரும்‌,
“சத்திரமேந்தித்‌ தனியொரு மாணியாய்‌ உத்தரவேதியில்‌ நின்ற ஒருவனை
கத்திரியர் காணக்‌ காணி முற்றும்‌ கொண்ட பத்திராகாரன்‌ ”’ என்றும்‌,
“காமர்‌ தாதை கருதலர்‌ சிங்கம்‌ காணவினிய கருங்குழல்‌ குட்டன்‌ வாமனன்‌
“ கொண்ட கோலக்‌ குறளுரு ” என்று: ஆண்டாளும்‌
வேதம்‌ புகழ்ந்த இவ்வடிவழகிலே மயங்கினார்கள்‌.’
(வாமனன்‌ )
இப்படி வடிவழகாலே பிறரை உகப்பிப்பதோடன்‌றியில்‌ குணங்களாலும்‌ பிறரை ஆநந்திப்பிப்பவன்‌ என்றும்‌ பொருள்‌. கொள்ளலாம்‌.
“மிக்க பெரும்புகழ்‌ மாவலி வேள்வியில்‌ தக்கதிதன்றென்று தானம்‌ விலக்கிய சுக்கிரன்‌ கண்ணைத்‌ துரும்பால்‌ செறிய சக்கரக்கையனே!” _என்றும்‌,
“ மதியினால்‌ குறுள்மாணாய்‌ உலரகு அளந்த கள்வற்கு” என்றும்‌,
“வாட்டமில்‌ புகழ்‌ வாமனனை” என்‌றும்‌,
** வன்மாவைய மளந்க எம்‌ வாமனா!” என்றும்‌,
“ஞாலங்கொள்வான்‌ குறளாகிய்‌ வஞ்சனே!” என்றும்‌.
“கொள்வன்‌ நான்‌ மாவலி மூவடி தா என்ற கள்வனே!” ‘என்றும்‌
அந்ய ப்ரயோஜனர்களுக்காகவும்‌ தன்னை அழியமாறி அளிக்கும்‌ அருங்குணத்தில்‌ ஆழ்வார்கள்‌ ஆழங்காற்ப்ட்டார்கள்‌
(வாமனன்‌)
“ வடிவழகைச்சொல்லுகிறதென்‌ னுதல்‌;
நன்மை களைத்‌ தருமவனென்னுதல்‌ ” என்று நம்பிள்ளை ஈட்டில்‌ (2-27-6) அருளிச்செய்தபடியே,
வாம சப்தத்தாலே ஸுக,ப்ரத, மான்‌:
வஸ்துக்களைச் சொல்லி வாமனன்‌ ‘ என்று அவைகளைத்‌ தருமவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.

“மருவித்‌ தொழும்‌ ‘மனமே தந்தாய் வல்லை காண என் வாமனனே என்று இவ் வர் த்தத்தை அருளிச்செய்தார்‌.
(வாமனன்‌)
ஆதியத்யத்தை இழந்த இந்திரனுக்கு அதை அளித்தும்‌.
மஹாபலிக்குப்‌ பாதாளத்திலே நிலையான ஸாம்‌ ராஜ்யத்தைக்‌ கொடுத்தும்‌,
உலகிலுள்ள: எல்லாச் சேதனர்‌கள்‌ தலையிலும்‌ தன்‌ திருவடிகளை வைத்தும்‌, –
இப்படி எல்லாருக்கும்‌ ஸுகத்தைத்‌ தந்தவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
* வாமனன்‌ ‘ என்னும்‌ திருநாமத்துக்குச்‌ சிறிய உருவை உடையவன்‌ என்றும்‌ பொருளுண்டு என்பது பிரஸித்தம்‌.
இதையே எல்லா ஆழ்வார்களும்‌ குறளுரு என்று அருளிச்செய்தனர்‌.
(வாமனன்‌) .
‘ மத்யே வாமந மாஸீநம்‌ விங்வே தே,வா உபாஸதே ‘
ஸர்வ சேதனர்களின்‌ ஹ்ருதயத்திலும்‌ வீற்றிருக்கும்‌ வாமனனை ( எல்லா தேவர்‌ களும்‌ உபாஸிக்கிறார்கள்‌.]
என்று வேதத்தில்‌ சொல்லிய படியே ஹ்ருதய கமலத்தில்‌ அங்குஷ்ட மாத்ரனாயெழுந்தருளி யிருக்கும்‌
பெருமான்‌ வாமன சப்தத்தால்‌ சொல்லப்படுவ தாகவும்‌ கொள்ளலாம்‌.
“வாமனன்‌ நிற்பது மேவியிருப்ப என்று ஆழ்வார்‌ இவ் வர்த்தத்தை என்‌ நெஞ்சகம்‌ என்று உணர்த்தினார்‌.

—————-

ஆக: இப்படி வாமனாவதாரத்தைச்‌ சொன்னபின்‌ இப்படி ப்ரஹ்மசாரியாய்‌ அவதரித்த அவதாரத்திலும்‌
பிராட்டியை விட்டுப்‌ பிரியாமல்‌ மார்பிலே தரித்திருப்பவன்‌ என்று உரைக்கிறது
* ஸ்ரீ தரன் . என்னும்‌ திருநாமம்‌.
“ வாமனனே மாதவா ˆ” என்று ஆழ்வாரும்‌ இவ்வர்த்தத்தை அருளிச்செய்கார்‌.
“க்ருஷ்ணாஜிநேக ஸம்வ்ருண்வம்‌ வதூ,ம்‌ வக்ஷ:ஸ்த,லாலயாம்‌”
திருமார்பிலே கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும்‌ பிராட்டியை க்ருஷ்ணாஜினத்தினால்‌ மறைத்‌துக்‌ கொண்டு வந்தான்‌
என்கிற படியே. மஹாபலியின்‌ யாக சாலைக்கு எழுந்தருளிய போதும்‌. திருமார்பிலிருந்த பிராட்டியை
மான்‌ தோலினால்‌ மறைத்துக்கொண்டு வந்தான்‌ வாமனன்‌ என்று ப்ரஸித்தமிறே.
“ஏவம்‌ ஜகத்ஸ்வாம்‌ தேவதே,வோ ஜரார்தந: |
அவதாரம்‌ கரோத்யேஷா தத்ர ஸ்ரீஸ்தத்ஸஹாயிக |! .
ராக,வத்வே ப,வத்‌ ஸீதா ருக்மிணீ க்ருஷ்ணஜந்மநி |
அர்யேஷு சாவதாரேஷு விஷ்ணோரேஷா.அநபாயிநீ ॥
தேவத்வே தே,வதே,ஹயம்‌ மறுஷ்யத்வே ச மாநுஷீ |
விஷ்ணோர்‌ தே,ஹா நுரூபாம்‌ வை கரோத்யேஷாத் மநஸ்த நும்‌।।”
தேவ தேவனாயே பகவான்‌ அவதாரம்‌ செய்யும்போது, இந்த ஸ்ரீதேவியும்‌ அவனுக்குத்‌ துணையாகத்‌ தோன்று கிறாள்‌.
எம்பெருமான்‌ ராகவனாய்‌ அவதரித்த போது இவள்‌ ஸீதை யானாள்‌.
அவன்‌ கிருஷ்ணனாய்ப்‌. பிறந்தபோது இவள்‌ ருக்மிணியானாள்‌.
மற்ற அவதாரங்களிலும்‌ இவள்‌ விஷ்ணுவை விட்டுப்‌ பிரியாதவளாயிருக்கிறாள்‌.
அவன்‌ தேவனாகும் போது தேவ தேஹத்தைக்‌ கொண்டவளாயும்‌
மனிதனாகப் பிறக்கும்‌ போது மனித வுருவம்‌ கொண்டவளாயும்‌,
இப்படி விஷ்ணு வினுடைய தேஹத்திற்குப்‌ பொருந்தியதாகத்‌ தன்னுடைய
திவ்ய மங்கள விக்ரஹத்தைச்‌ செய்து கொள்ளுகிறா பிராட்டி.என்று
விஷ்ணு புராணத்தில்‌ உரைக்கப்பட்டது இங்கு உணரத்தக்கது.
“தாம்‌ ரத்நமிவ அர்ச்சிஷம்‌ புஷ்பமிவ ஸூரபிம்‌ இந்துரிவ சந்த்‌ ரிகாம்‌ அம்ருதமிவ ஸ்வாதுதாம்‌
ஒளத்பத்திகேந ஸம்பந்தே,ந தரரதீதி ஸ்ரீதர :।
“ஹி ஹாது மியம்‌ மக்யா கீர்த்திராத்மவதோ யத; இதி॥”’ ரத்னம்‌ ஒளியை தரிப்பது போலவும்‌,பூ மணத்தை தரிப்பது போலவும்‌ சந்திரன்‌ தன்‌ ஒளியை தரிப்பது போலவும்‌,
அம்ருதம்‌ இனிமையை தரிப்பது போலவும்‌, அந்த ஸ்ரீதேவியை இயற்கையான ஸம்பந்தத்தினால்‌
தரிக்கிறனாகையால்‌ ஸ்ரீதரனாகிறான்‌.
“மனத்தை ஜயித்தவர்களைக்‌ கீர்த்தி வீட்டுப்‌ பிரிய வொண்ணாமல்‌ விளங்குவது போல்‌
இப் பிராட்டியும்‌ ` இப் பெருமானை விட்டுப்‌ பிரியவல்லளல்லள்‌ ” என்று சொல்லப்பட்ட து.
என்‌ று ஆசார்யாக்‌ரேஸரரான பராசர பட்டர்‌. வியாக்க்யானம்‌ செய்தருளினார்‌.
(ஸ்ரீதரன்‌)
‘ ஸ்ரீ்‌ என்று பெரிய பிராட்டியார்‌ சொல்லப்படுகிறார்‌.
அவரைத் தரிப்பவனாகையால்‌ புருஷோத்தமனும்‌ ஸ்ரீதரன்‌ எனப்படுகிறான்‌.
பகவானுக்கு நாராயண நாமம்‌ அஸாதாரணமாய்‌ விளங்குவது போல்‌
பிராட்டிக்கும்‌ ‘ ஸ்ரீ: ‘ என்னும்‌ இத்திரு நாமம்‌ அஸாதராரணமாயிருக்கிறது.
“ ஸ்ரீரித்யேவ ச நாமதே பகதி ப்ரூம: கதம்‌ த்வாம்‌ வயம்‌ ‘”
பெரியபிராட்டியே! உமக்கு *ஸ்ரீ:’ என்பது திருநாமம்‌. உம்‌ டெருமையை ஈாங்கள்‌ எப்படிச்‌ சொல்லுவோம்‌]
என்றாரன்றோே ஆள வந்தார்‌.

நாராயண நாமத்தைப்போல்‌ இத் திருநாமமும்‌ பல பொருள்‌களை உடையது.
அவைகளை இனி விவரிப்போம்‌.
” மிங்‌-ஸேவாயாம்‌ ” என்கிற தாதுவிலிருந்து இந்த ஸ்ரீப்தம்‌ உண்டான்தாகக்கொண்டால்‌.
* (அகில சேதனர்‌ களாலும்‌ ) ஆஸ்ரயிக்கப்படுகிறாள்‌ ”’ என்றும்‌ “
(எம்பெருமானை) ஆஸ்ரயித்திருக்கிறாள்‌ ” என்‌றும்‌ இரு பொருள்கள்‌ ஏற்படும்‌.
°” ய்ரூ-விஸ்தாரே ” என்னும்‌ தாதுவிலிருந்து ஸ்ரீப்ப்தம்‌ தோன்‌ றியதாகக்‌ கொண்டால்‌,
“(அடியார்களுடைய குணங்‌களை) விருத்‌தி யடையச் செய்கிறாள்‌ ” என்றும்‌,
“(தன்‌ குணங்களாலும்‌ விக்‌,ரஹங்களா லும்‌ உலகை யெல்லாம்‌)வியாபித்திருக்‌ கிறாள்‌” என்றும்‌ பொருள்படும்‌;
“’ங்ரு-ஹிம்ஸாயாம்‌” என்கிற தாதவிலே ஸ்ரீ சப்தம்‌ நிஷ்பந்கமாகிறதென்‌ றுகொண்டால்‌, ”
” (அடியார்களுடைய தோஷங்களையெல்லாம்‌) போக்கடிப்ப வள்‌ ” என்று ஸ்ரீசப்தத்துக்குப்‌ பொருளாகும்‌
“ஸ்ரு- ங்ரவணே ” என்கிற தாதுவிலிருந்து ஸ்ரீசப்தம்‌ உண்டாகிற தென்‌ று கொண்டால்‌
^ (அடியார்களுடைய முறையீடுகளைக்‌) கேட்டவள்‌ ^ என்றும்‌,
^” அவைகளை எம்பெருமானைக்‌ கேட்பிப்பவள்‌ ” என்றும்‌ பொருள்படும்‌.
இப்‌ பொருள்களெல்லாம்‌
“” மருணாதி நிகிலாந்‌ தேஷாம்‌ ங்ரூணாதி = குணைர்‌ ஜகத்‌ |
ஸ்ரீயதே சாகிலேர்‌ நித்யம்‌ ஸ்ரயதே ச பரம்‌ ரீயமாணாஞ்ச ம்ருண்வதீம்‌ ங்ருணதீமபி ||”
சேதனர்களுடடய எல்லாப்‌ பாவங்களையும்‌ போக்கடிக்கிறாள்‌ ;
உலகம்‌ முழுவதையும்‌ குணங்களால்‌ வியா பிக்கிறாள்‌;
எல்லாச்‌ சேதனர்களாலும்‌ எப்போதும்‌ ஆஸ்ரயிக்கப்படுகிறாள்‌
பரம ப்ராப்யமான பரம புருஷனை ஸர்வ காலமும்‌ ஆஸ்ர யித்திருக்றொள்‌;
(௭ம்பெருமானை) ஆஸ்ரயித்திருப்பவளா கவும்‌, (மற்றவர்களால்‌) ஆஸ்ரயிக்கப்படுபவளாகவும்‌.
(சேதனர்‌ களின்‌ குறைகளைக்‌) கேட்பவளாகவும்‌,- எம்பெருமானை அக்குறைகளைக்‌ கேட்பிப்பவளாகவும்‌
இவளை அறிகிறார்கள்‌ – என்று பாஞ்சராத்ர சாஸ்த்ரத்தில்‌ பேசப்பட்டன,
“ அதில சேதனர்க்கும்‌ ஆஸ்ரயணீயையாய்‌. தான்‌ அவனை ஆஸ்ரயித்து லப்‌,த.ஸ்வரூடையாய்‌,
ஆஸ்ரித குணங்களை விஸ்தரிப்பித்து, ஆஸ்ரித யோக்திகளை வளர்த்து ,
இவர்களை அங்கீகரிக்கைக் கனுகுணமான வாகாரங்களை அவனுக்கு காட்டி அருளுதல்
முதலான ஆகாரங்கள்‌
புருஷகார பூதையான பிராட்டிக்கு அவஸ்ய அபேஷிதங்களாகையாலே, .
இந்த நிருக்திகளெல்லா த்தையும்‌. ஸ்ரீயப்தத்துக்கு அர்‌ த்தமாகஆசார்யர்கள்‌ அனு சந்திப்பார்கள் ” என்று
(அழகியமணவாளப்பெருமாள்‌) நாயனாராச்சான்‌ பிள்ளை சதுஸ் லோக வியாக்கியானத்திலே அருளிச் செய்தார்‌.
இவருடைய திருத் தமப்பனாரான பெரியவாச்சான்‌ பிள்ளை பிராட்டி இச் சேதனனுடைய குறைகளைக்‌ கேட்கும்‌ ப்ரகாரத்‌ தையும்‌,
எம்பெருமானைக்‌ கேட்பிக்கும்‌ ப்ரகாரத்தையும்‌, பரந்த ரஹஸ்யத்திலே அத்யத்புதமாக அருளிச்‌ செய்தார்‌.
ஸ்ரீஸூக்திகள்‌ பின்வருமாறு: —
“ ஸ்ருணாதி’ என்‌ று கேட்குமென்கையாலே சேநரோடுண்டான பந்த கார்யத்தைச்‌ சொல்லுகிறது.
*ஸ்ராவயதி ‘ என்‌ று கேட்பீயாநிற்கும்‌ என்‌கையாலே ஈஸ்வர னோடுண்டான பந்த கார்யத்தைச்‌ சொல்லுகிறது.
அதாவது:- “புறம்பு பொருத்தமடை.ய அற்று. ஈஸ்வரனுக்கு ஆளாகாதபடி பூர்வாபராதத்துக்கு அஞ்சின எனக்கு
நிருபாதிக ஜனனியான தேவரீர்‌ திருவடிகளொழுியப்‌ புகலில்லை;
இனி நான்‌ ஈஸ்வரனுடைய இரக்கத்துக்கு இரையாய்‌ ரக்ஷித்தல்‌, அவனுக்கு , ஸ்வாதந்தர்ய பாத்ரமாய்‌
நாசத்தோடே தலைக்கட்டுதலொழிய இளைப்பாறுகைக்கு இடமில்லா தபடி அநந்ய க,தி; இனி அடியேனுக்கு ஹிதமின்னதென்று அறிந்து
ரக்ஷித்தருளுகை தேவரீருக்கே பரம்‌’ என்று இவன்‌ சொன்ன வார்த்தையைக்‌ கேட்கையும்‌;
அதுக்கு மேலே வெந்நீருக்குக்‌ குளிர் நீர்போலே, நிரங்குச ஸ்வாதர்த்ர்யத்தாலே ` அமி,த: பாவகோபமம்‌” என்‌கிறபடியே
அநபி,ப,வநீயனான ஈஸ்வரனைச்‌ தன்னுடைய போக்யதா தியயத்தாலே பதமாக்கி:
நாயன்தே! இச் சேதனனை அங்கீகரித்தருளீர்‌ ‘ என்னும்‌; :
ஆவதென்‌? ^ ஸ்ருதி: ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா ‘ என்‌று நம்முடைய ஆஜ்ஞா ரூபமான ஸாஸ்த்ர மர்யாதையை அதிலங்கி,த்து
நம்‌ நெஞ்சு புண்படும்படி தீரக் கழிய அபராதம்‌ பண்ணிப் போந்தவனல்‌ லனோ ?
இவனை யங்கீகரிக்கையாவதென்‌ ? ‘ எள்னும்‌ ஈஸ்வரன்‌ *
அவனுடைய பூர்வாபரா தங்களை உம்முடைய பொறைக்கு இல்க்காக்‌கி ரக்ஷித்கருளீர்‌ ‘ என்னும்‌ பிராட்டி; ‘
பொறையை நோக்குகைக்காக ஸாஸ்‌த்ர மர்யாதையைக்‌ குட நீர்வழியவோ?” என்னும்‌ ஈஸ்வரன்‌; ”
சாஸ்த்ரமர்யாதையை நோக்குகைக்காக உம்முடைய ஸ்வபாவிகமான க்ஷமா தத்வத்தைக்‌ குடநீர்‌ வழியவோ?’ என்னும்‌ பிராட்டி; :
ஷமையை நோக்கில்‌, சாஸ்த்ர மர்யாதை குலையும்‌;
சாஸ்த்ர மர்யாகையை, நோக்கினால்‌ க்ஷமா தத்வம்‌ குலையும்‌;
இரண்டும்‌ குலையாதொழிய வேண்டும்‌; செய்யவடுப்பதென்‌?’ என்னும்‌ ஈஸ்வரன்‌; “
கிங்கர்த்தவ்யதாகுலனாயிருந்தால்‌ அத்தனையே; அவை இரண்டும்‌ குலையாதபடி வழி சொல்லுகிறேன்‌ :
அப்படியே செய்தருளீர்‌ ‘ என்னும்‌ பிராட்டி; :
இரண்டும்‌ குலையாமல்‌ இச் சேதனனை நோக்க வழியுண்டாமாகில்‌ நமக்குப்‌ பொல்‌ லாதோ?
சொல்லிக் காண்‌! ‘ என்னும்‌ ஈஸ்வரன்‌; :
ஆனால்‌. சாஸ்தர மர்யாதையை விமுகர்‌ விஷயமாக்குவது:
உம்முடைய ஷமையை அபிமுகன் விஷயமாக்குவது;
இரண்டும்‌ ஜீவித்த தாயறும்‌ ` என்னும்‌ விஷயவிபாக;ம்‌ பண்ணிக் கொடுக்கும்‌ பிராட்டி;
அத்தைக்‌ கேட்டு : அழகிய விபாக;ம்‌!’ என்று இச்சேதனனை அங்கீகரித்தருளும்‌ ஈஸ்வரன்‌;
ஆக, இப்படி ஸாபராத,ஜந்துவை ஈஸ்வரன்‌ அங்கீகரித்தருளும்படியான வார்த்தைகளைக்‌ கேட்பித்தருளுகையும்‌.
” இப்படிப்‌ பிராட்டியால்‌ புருஷ காரம்‌ செய்யப்பெற்ற சேதனனையே ‘ ஸர்வேஸ்வரன்‌ அங்கிகரிக்கிறான்‌ என்பதை
“என்னைத்‌ தீ மனம்‌ கெடுத்தாய்‌ உனக்கென்‌ செய்கேன்‌? என்‌ சிரீதரனே!” ` என்று ஆழ்வாரும்‌ அருளிச் செய்தார்-

“மாதவன்‌ ‘ என்று
எம்பெருமான்‌ வைகுண்டத்தில்‌ பிராட்டியுடன்‌ எழுந்தருளியிருக்கும்‌ இருப்பைச்‌ சொல்‌லிற்று.
‘ஸ்ரீ தரன்‌’ என்று
அவதாரம்‌ செய்யும் போதும்‌ அவளைத் தரித்திருககிறான் என்கிறது.
ஆகையால்‌ புநருக்‌தி தோஷம் இல்லை..

த்வயத்தில் போல் உபாயத்வ உபேயாத்வ இரண்டு ஆகாரங்களும் உண்டு என்று காட்டவே இந்த இரண்டு திரு நாமங்களும்

“—————

இப்படிப்‌ பராவஸ்தையையும்‌,
வியூஹ விபவாவதாரங்‌ களையும்‌ அநுபவித்த பிறகு,
* ஹ்ருஷீ கேஸன்‌ ‘ என்று
ஸர்வேஸ்வரன்‌ மனுஷ்யர்களுடைய ஹ்ருதயத்தில்‌ அந்தர்‌ யாமியாய்‌ நின்று இந்திரியங்களை நியமித்துக் கொண்டு
வீற்றிருக்கும்‌ இருப்பு அநுபவிக்கப்படுகிறது.

ஸ்ரீதரன்‌ என்ற திருநாமத்திற்குப்பின்‌ படிக்கையாலே
இந்த அந்தர்‌யாம்யவஸ்தையிலும்‌ எம்பெருமான்‌ பிராட்டியுடன்‌ கூடியவனாகவே
எழுந்‌தருளி யிருக்கிறான் என்பது தோற்றுகிறது.

“ஹ்ருஷீ காணீந்த்‌ரியாண்யாஹுஸ்‌ தேஷாமீமோ யதோ பூவாந்‌ |
ஹ்ருஷீகேமுஸ்‌ ததோ விஷ்ணு: க்‌யாதோ தேவேஷு கேஸவ: ॥’
ஹ்ருஷீகங்களென்று இந்திரியங்களைச்‌ சொல்‌லுகிறார்கள்‌;
அவ்விந்திரியங்களை நியமிப்பவராயிருப்பதால்‌. விஷ்ணு கேசவன்‌ என்னும்‌ திருநாமங்களையுடைய நீர்‌
தேவர்களுள்‌ * ஹ்ருஷீகேசன்‌ எனப்படுகுகிறீர்‌.
என்று ஹரிவம்‌சத்தில்‌ ஹ்ருஷீகேச சப்தார்‌த்தம்‌ சொல்லப்பட்ட து.
( ஹ்ருஷீ கேசன்‌ )
ஹ்ருஷீகேச சப்தத்தினால்‌ பத்து இந்திரியங்களாகிய தலைகளைக்‌ கொண்ட மனஸ்ஸாகிற ராவணன்‌: சொல்லப்படுகிறது,
அந்த ராவணனை தன்னைப் பற்றின அறிவாகிய அம்பை ஏவிக்‌ கொல்லுமவனாகையாலே
இப்பெருமான்‌ ஹ்ருஷீகேசனெனப்படுகிறான்‌.
“தஸ ,இந்த்‌,ரியாஙகம்‌ கேரம்‌ யோ மநோரஜநீசரம்‌ |
விவேகமாரஜாலேந மமம்‌ நயதி யோகிநாம்‌ | ”’
யோகிகளுடைப பத்து இந்திரியங்களாகிய தலைகளையுடைய மனஸ்ஸாகிற பயங்கர ராஷஸனை.
தன்னைப் பற்றிய அறிவாகிய அம்புக் கூட்டங்களால்‌ அடக்குகிறான்‌- என்று சொல்லப்பட்ட தன்றோ.
“இருடீகேசன்‌ எம்பிரான்‌ இலங்கை யரக்கர் குலம்‌ முருடுதீர்த்த பிரான்‌ எம்மான்‌” _என்‌று
நம்மாழ்வார்‌ இவ்வர்த்தத்தை உணர்த்தினார்‌. “
அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை இண்‌ டக்குலத்தை எடுத்துக்‌ களைந்த இருடீகேசன் தனக்கு ‘
என்று பெரியாழ்வாரும்‌ இதைப்‌ பாசுரமிட்டருளினார்‌.
*இருடீகேசன்‌ என்னும்‌ இத் திரு நாமத்தினாலும்‌ விரோதி நிரஸந ஸீலத்வம்‌ சொல்லப்படுகிறது.
“ ஏர்விடை செற்றிளங்கன்றெறிந்திட்ட இருடீகேசா”என்‌ று பெரியாழ்வார்‌ இக்குணத்தைப்‌ பேசினார்‌.
(ஹ்ருஷீகேசன்‌)
தன்னைக்‌ கண்டவர்களுடைய இர்திரியங்‌களை வசப்படுத்துமவன்‌.
ரூப ஒவ்தார்ய குணை: பும்ஸாம்‌ த்‌,ருஷ்டி சித்த அபஹாரிணம்‌ “”
தன்னுடைய ரூபம்‌, வண்மை, குணங்கள்‌ முதலியவற்றால்‌ ஆண் பிள்ளைகளுடைய கண்ணையும்‌. மனத்தையும்‌
அபஹரிக்குமவன்‌- என்று சொல்லப்‌ பட்டதன்றோ. ‘
முடியானே ” என்னும்‌ திருவாய்மொழியில்‌ நம்மாழ்வார்‌ :-:
நெடியானே! என்று கிடக்கும்‌ என்‌ நெஞ்சமே” என்றும்‌, ‘*
வஞ்சனே! என்னுமெப்போதுமென்‌ வாசகமே ‘” என்‌ றும்‌. “
தாயவனே! என்று தடவும்‌ என்‌ கைகளே ” என்றும்‌.
“உன்னை மெய் கொள்ளக்‌ காண விரும்புமென்‌ கண்களே ” என்றும்‌. :
‘பண் கொண்ட புள்ளின்‌ சிறகொலி பாவித்துத்‌
திண் கொள்ள ஒர்க்கும்‌ கடந்தென்‌ செவிகளே ” என்றும்‌
தம்முடைய இர்திரியங்கள்‌ ஒவ்வொன்றும்‌ எல்லா இந்திரியங்களின்‌ அ.நுபவத்தையும்‌ ஆசைப்பட்டு
எம்பெரு மானை அநுபவிக்க மேல்விழுந்தன என்று அருளிச்செய்த ரன்றோ.
” நாக்கு நின்னை யல்லாலறியாது ” ,
“கண்டு நானுன்னை உகக்க ”
“ வேறொருவரோடென்‌ மனம்‌ பற்றாது ^”
“என்னப்பா என்னிருடீகேசா ” என்று
தம்முடைய இந்திரி யங்களெல்லாம்‌ எம்பெருமான்‌ பக்கல்‌ ஈடுபட்டபடியைப்‌ பெரியாழ்வாரும்‌ பேசியருளினார்‌.
தன்னுடைய அவயவ சோபை யாலும்‌. ஆபரண சோபையா லும்‌ பிறருடைய இந்திரியங்களை வசப்படுத்துகிறான்‌ -என்று பெரியாழ்வாரும்‌
“மின்னுக் கொடியும்‌ ஓர் வெண் திங்களும்‌ சூழ்‌ பரிவேடமுமாய்‌
பின்னல்‌ துலங்குமரசிலையும்‌ பீதகச்சிற்றுடையொடும்‌
மின்னில்‌ பொலிந்ததோர்‌ கார்முகில்போலக்‌ கழுத்தினில்‌ காறையொடும்‌
தன்னில்‌ பொலிந்த இருடீகேசன்‌ தளர்நடை’ நடவானோ ”” என்று அருளிச்செய்தார்‌,
“இருடீகேசன்‌ வலிசெய்ய முத்தன்ன வெண்முறுவல்‌
செய்ய வாயும்‌ முலையும்‌ அழகழிந்தேன்‌ யான்‌” என்று ஆண்டாளும்‌
தன்னுடைய இர்திரியங்‌களெல்லாம்‌ இருடீ கேசனிட்ட வழக்காயிருக்கின்‌றன என்று அருளிச்செய்தாள்‌.
இப்படி எம்பெருமான்‌ ஹ்ருதய கமலத்திலே திவ்ய மங்கள விக்ரஹத்‌துடன்‌ அந்தர்யாமியாய்‌
எழுந்கருளியிருக்‌ கிறான்‌ என்னுமிடத்தை
“ வெள்ளைச்‌ சுரிசங்கொடாழியேந்தித்‌ தாமரைக்கண்ணனென்‌ நெஞ்சினூடே
புள்ளைக்கடாகின்‌ற வாற்றைக்‌ காணீர்‌ என் சொல்லிச் சொல்லுகேன்‌ அன்னைமீர்காள்‌? “என்றும்
“கல்லும்‌ கனை கடலும்‌ வைகுந்த வானாடும்‌
புல்லென்றொழிந்தன கொல்‌ ஏ பாவம்‌!-—வெல்ல
நெடியான்‌ நிறம்‌. கரியான்‌ உள் புகுந்து நீங்கான்‌
அடியேனதுள்ளத்தகம்‌ ?’ _— என்றும்‌ நம்மாழ்வாரும்‌.
“நிற்பதும்‌ ஒர்‌ வெற்பகத்‌(து) இருப்பதுவும் விண்‌ கிடப்பதும்‌
நற்பெரும்‌ திரைக்கடலுள்‌ நானிலாத முன்னெலாம்‌
அற்புதன்‌ அநந்த சயனன்‌ ஆதிபூதன்‌ மாதவன்‌
இருப்பதும்‌ கிடப்பதும்‌ என்‌ நெஞ்சுள்ளே ”’ என்று திருமழிசைப்பிரானும்‌,
“வடதடமும்‌ வைகுந்தமும்‌ மதிள்‌ துவராபதியும்‌ இடவசைகள்‌ இகழ்ந்திட்டென்பால்‌ இடவகை கொண்டனையே” என்றும்‌,
“அநந்தன் பாலும்‌ கருடன் பாலும்‌ ஐது நொய்தாக வைத்தென்‌ மனந்தன்னுள்ளே வந்து வைகி
வாழச் செய்தாய்‌ எம்பிரான்‌!” என்றும்‌ பெரியாழ்வாரும்‌ அருளிச்செய்தார்‌.
வேதமும்‌ “நீல தோயத மத்‌ யஸ்த; வித்யுல்லேகே,வ பாஸ்வரா” முதலான விடங்களில்‌ இவ்விஷயத்தைச்‌ சொல்லிற்று.
“ லாபஸ்தேஷாம்‌ ஜயஸ்தேஷாம்‌ குதஸ்தேஷாம்‌ பராபவ: |
யேஷாமிந்த,வரஸ்யாமோ ஹ்ருத,யே ஸுப்ரதிஷ்டி,த: ॥ ””
எவர்சளுடைய ஹ்ருதயத்தில்‌ காயாம் பூ வண்ணனான பெருமான்‌ நன்கு பொருந்தி யிருக்கிறானோ,
அவர்களுக்கே லாபமும்‌ ஜயமும்‌ உண்டாம்‌;
அவர்களை அவமானம்‌ அணுகாதே என்று ருஷி களும்‌ இவ்விஷயத்தைச்‌ சொன்னார்கள்‌
“நஞ்சீயர்‌ கோயிலுக்கு எழுந்தருளா நிற்க வழியிலே பிள்ளானைக் கண்டு.
‘ஈஸ்வரனுக்கு ஸ்வரூப வ்யாப் தியேயோ, விக்ரஹ வ்யாப்தியும்‌ உண்டோ?’ என்று. பிள்ளானைக்‌ கேட்க.
பாஷ்யகாரர்‌ தோற்ற அருளிச் செய்து கொண்டு போந்தது ஸ்வரூப வ்யாப்திய।யிருக்கும்‌;
ஆகிலும்‌, எம்பார்‌ ஒருநாள்‌. உபாஸக அநுக்ரஹ ஸஹார்த்தமாக ஆஸ்ரிதருடைய நெஞ்சிலே
விக்ரஹத்தோடே வ்யாபித்திருக்கும்‌? என்று அருளிச்செய்யக்கேட்டேன்‌? என்று பணித்தான்‌ ‘
என்று ஈட்டில்‌ எடுக்கப்பட்ட ஐதிஹ்யமும்‌. இவ்விடத்தில்‌. அனுஸந்திக்கத் தக்கது.
பிள்ளைலோகாசார்யரும்‌ “அந்தர்யாமித்வமாவது: அந்த:ப்ரவிஸ்ய நியந்‌தா வாயிருக்கை.
ஸ்வர்க்காதி ப்ரவேசாதி, ஸர்வாவஸ்தைகளிலும்‌, ஸகல சேதநர்க்கும்‌ துணையாய்‌. அவர்களை விடாதே, நிற்கிற நிலைக்கு மேலே
ஸூ பாஸ்ரயமான திருமேனியோடே ‘கூடிக்கொண்டு அவர்‌ களுக்கு த்‌யேயனாகைக்காகவும்‌,
அவர்களை ரக்ஷிக்கைக்காகவும்‌ -அந்தர் பூதனாய் கொண்டு ஹ்ருதய கமலத்‌திலே எழுந்தருளி யிருக்கும்‌ இருப்பு.” என்று
தத்வ த்ரயத்தில்‌ அருளிச்‌ செய்தார்‌.
(ஹ்ருஷீகேசன்‌)
` ஹ்ருஷ்‌ ” என்னும்‌ தாது அனந்தத்‌தைக் குறிக்கும்‌.
௧” என்னும்‌ பதம்‌ ‘ஸுகம்‌’ என்னும்‌ பொருளையுடையது.
கம்‌ ப்ரஹ்ம ‘ என்ற வேதவாக்யம்‌ காண்க,
ஸம்‌ என்னும்‌ பதம்‌ ஐஸ்வர்யத்தை உடையவன்‌ என்று பொருள்படுகிறது.
ஆக, ஹ்ருஷீகேசன்‌ ‘ என்னும்‌ திருநாமத்தால்‌, ஹர்ஷத்தையும்‌, ஸெளக்யத்தையும்‌, ஐச்வர்‌ யத்தையும்‌
உடையவன்‌ என்று சொல்லப்பட்டதரகிறது,
“ ஹர்ஷாத்‌ ஸெளக்‌,யாத்‌ ஸுகைஹ்வர்யாத்‌ ஹ்ருஷீகேமத்வமங்நுதே ‘
ஹர்ஷத்தையும்‌. ஸெளக்யத்தையும்‌, ஸுகமான ஐஸ்வர்யத்‌ தையும்‌ உடைத்தாயிருக்கையால்‌
ஹ்ருஷீகேசனாயிருக்கும்‌ தன்மையை அடைகிறாய்‌.
என்று இவ்வர்த்தம்‌ புராணங்‌களில்‌ பேசப்பட்டது.
“ஸூர்யாசந்த்‌,ரமஸோ: மரபி, கேரமஸம்ஜ்ஞிதை:।
பேளதயந்‌ ஸ்வாபயம்ங்சைவ ஜக,து,த்திஷ்ட,தே ப்ருத,க்‌॥
பேதநாத்‌ ஸ்வாபநாச்சைவ ஜக,தோ ஹர்ஷணம்‌ பவேத்‌ ।
அக்‌நீஷோமக்ருதைரேவம்‌ கர்மபி,: பாண்டு,நந்தந ॥
ஹ்ருஷ்கேஸ மோ ஹமீமமா நேர வரதே, லோகபாவந: ||
கேசங்கள்‌ எனப்படும்‌ ஸூர்ய சந்திர கிரணங்களால்‌ நான்‌ உலகிலுள்ளவர்களை யெல்வாம்‌ எழுப்பிக் கொண்டும்‌
தூங்கச்‌ செய்து கொண்டும்‌ வீளங்குகிறேன்‌. இப்படி எழுப்புவதி னாலும்‌, தூங்கச்செய்வதா லும்‌
உலகிற்கு ஹர்ஷம்‌ உண்டாகும்‌. பாண்டவ !
ஸூர்ய சந்திரர்களைக் கொண்டு செய்யப்படும்‌ -இக்கருமங்களால்‌, ஈஸ்வரனும்‌. வரமளிப்பவனும்‌,
லோக பாவனனுமான நான்‌ ஹ்ருஷீ கேசன்‌ எனப்படுகிறேன்‌. என்று மோக்ஷதர்மத்தில்‌
ஹ்ருஷீகேச சப்தத்தின்‌ மற்றொரு பொருள்‌ விவரிக்கப்பட்டது.
* ஸூர்யரங்மிர்‌ ஹரிகேஸ : புரஸ்தாத்‌ ”
ஸுூர்ய கிரணமானது பகவான்‌ ஹரியீன்‌ கேச மெனப்படுகிற. து] என்று வேதமும்‌ இவ்வர்த்தத்தை உணர்த்திற்று.
” கேஸ ‘ சப்தத்தினால்‌ எம்பெருமானுடைய திருக்குழல்கற்‌றை சொல்லப்படுவதாகக்கொண்டு.
கண்டவர்களுக்கு ஹர்ஷத்‌ தைக்கொடுக்கும்‌ மயிர்முடியை உடையவன்‌ என்றும்‌ ஹ்ருஷீ கேச சப்தத்திற்குப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
கேசவன்‌ என்னும்‌ திருநாமத்திற்கும்‌, இப்படி ஒரு பொருள்‌ உரைக்கப்‌ பட்டது.
அங்கு அநுஸந்‌ திக்கப்பட்ட ப்ரமாணங்களை இங்கும்‌ படிப்பது.
இப்படிப்‌ பலபொருள்களை உடையதேயானாலும்‌. *அந்தர்யாயியாய்‌ இந்திரியங்களை நியமித்திக் கொண்டு எழுந்‌தருளியிருக்குமவன்‌ ‘ என்னும்‌ பொருளே இங்கு முக்ய மாகக் கடவது.

————–

இம் மாதிரியாக விபவ மூர்த்திகளையும்‌.
அந்தர்யாம் யவதாரத்தையும்‌ அதுபவித்த பிறகு.
இம்மூர்‌த்திகளுக்கெல்லாம்‌ மூலாவதாரமாய்‌ விளங்குபவனும்‌,
பத்மநாபன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனுமான க்ஷீராப்தி நாதனை அனு ஸந்திக்கிறது
பத்மநாபன்‌ என்னும்‌ திருநாமம்‌.
இங்கு சில விஷயங்களை அறியவேண்டும்‌.
அநிருத்த நாராயணனே பிரமனைப்‌ பிறப்பித்தவனென்றும்‌.
எல்லா அவதாரங்‌களுக்கும்‌ மூலமூர்த்தி யென்றும்‌ சொல்லும்‌ ப்ரமாணங்கள்‌ முன்பே காட்டப்பட்டன.
பத்ம நாபன்‌ என்‌ னும்‌ பெயரிலிருந்து ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு நடுவில்‌ படிக்கப்படும்‌
இவ் விஷ்ணு மூர்த்தியே பிரமனைப்‌ படைத்தவரென்று தோற்றுகிறது.
“ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷரார்ணவ நிகேதந 😐
நாக பர்யங்கமுத்ஸ்ருஜ் ஹ்யாகதோ மதுராம்‌ புரீம்‌॥’
என்‌று திருப் பாற் கடலில்‌ துயிலும்‌ பெருமானே கிருஷ்ணன்‌ முதலிய அவதார மூர்த்திகளுக்கு
மூல பூதர்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது.
இவை எப்படிப்‌ பொருந்தும்‌ எனில்‌:
அநிருத்தனிடமிருந்து ஷீராப்தி நாதன்‌ தோன்‌றுகிறான்‌ என்றும்‌
அவரிடமிருந்து மற்ற அவதாரங்கள்‌ எற்படுகின்‌றன என்றும்‌ கொண்டால்‌
அவதார மூர்த்திகளுக்கு அநிருத்தரையும்‌.
திருப்பாற்கடல்‌ நாதனையும்‌ மூல மூர்த்‌தியாகச்‌ சொல்லலாம்‌.
“ பத்ம நாபாதிகா: ஸர்வே….அநிருத்‌,தாத்‌ ஸமுத்பந்நா பாத்‌, இவேஸ்வரா:” என்று
முன்‌ எடுக்கப்பட்ட ப்ரமாணத்தோடும்‌ இது பொருந்தும்‌.
மஹா ப்ரளயத்தில்‌ .அநிருத்தரும்‌.
நைமித்திக ப்ரளயத்தில்‌ க்ஷீராப்தி நாதனும்‌ பிரமனைப்‌ பிறப்பிப்பதாகக்‌ கொள்ளலாம்‌.
அன்‌றிக்கே
தர்ம்யைக்யத்தாலே இருவரையும்‌ ப்ரஹ்மோத்பா தகர்களாகக்‌ கூறுவதாகவும்‌ கூறலாம்‌,
புருஷ ஸூக்தத்திலும்‌, *பாதேள5ஸ்ய” என்று அநிருத்தரை எடுத்து. :
இஹாபவாத்புக:” [இங்கு மறுபடியும்‌ அவதரித்தார்‌] என்று அவருடைய அவதார பூ,தரான ஷீராப்‌தி நாதனைச்‌ சொல்லுவதாகவும்‌,
“ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌’ என்று அவருடைய அவதார வ்யாப்தியைச்‌ சொல்லுவதாகவும்‌,
* தஸ்மாத்‌ விராட,ஜாயத’ என்று
அந்த ஷீராப்தி நாதனிடமிருந்தே பிரமன்‌ பிறந்தான்‌ என்று சொல்லுவதாகவும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும்‌ பத்மநாபே அமரப்‌ரபு,:’ என்று
வ்யூஹத்தில்‌ நான்காவதான அநிருத்தரைக் குறித்தும்‌,
பத்மநாப; ப்ரஜாபதி: ‘ என்று முதல்‌ அவதாரமான விஷ்ணுவைக் குறித்தும்‌
பத்மநாப சப்தம்‌ ப்ரயோகிக்கப்‌ பட்டிருப்பதையும்‌,
பத்மநாப: ப்ரஜாபதி: ‘ , என்‌ற விடத்தில் பாஷ்யத்தில்‌
நைமித்திக ஸ்ருஷ்டி ப்ரளய விஷயம்‌ சைதத்‌ த்‌ஸஏஷ்டவ்யம்‌ ”
இந்த ப்ரஹ்ம ஸ்ருஷ்டி நைமித்திக ஸ்ருஷ்டி ப்ரளய விஷயமானதென்று கருதப்படவேண்டும்‌ |
என்‌று பட்டர்‌ அருளிச் செய்ததையும்‌ இங்கு அதுஸந்திப்பது.

இனி இப்பத்மநாப சப்தார்த்தை விவரிப்டோம்‌.
(பத்மநாபன்‌) =
“” ஸர்வ ஜகத் காரணம்‌ யஸ்ய ஸ:””
எல்லா ஜகத்துக்கும்‌ காரணமான “பத்மத்தை . நாபியில்‌ உடையவன்‌ எவனோ அவன்‌.
என்று சங்கர பாஷ்யத்தில்‌. பொருளுரைக்கப்பட்டது . ”
பாமரு மூவுலகும்‌ படைத்த பற்பநாபாவோ!” என்று ஆழ்வாரும்‌. –
* ஊழிமுதல்வன்‌…….. பாழியந்தோளுடைய பற்பநாபன்‌ ” என்று ஆண்டாளும்‌
பத்மநாப சப்தத்திற்கு அர்த்தம்‌ பண்ணினார்கள்‌.
“ தாதோத்‌ தார: ஸம்விமரதி பஞ்சவர்‌ஷமாதாநி து ”
(பத்ம ஸம்பவனான ) பிரமன்‌ (தாமரைக் கொடியில்‌ ) மேல்‌ நோக்கியவனாய்‌ ஐநூறு வருஷங்கள்‌ நுழைந்கான்‌.-என்றும்‌
“ தர்த்துர்‌ நாப்‌,யாம்‌ புஷ்கரம்‌ ப்ராதுர்பவதி”
ஸர்வ லோகத்தை தரிப்பவனான நாராயணனுடைய நாபியில்‌ தாமரை உண்டாயிற்று.] என்றும்‌,
^ அஜஸ்ய நாபாவத்‌,யேகமர்ப்பிதம்‌ ”
பிறப்பிலி யான பெருமானின்‌ நாபியில்‌ ஒரு ( தாமரை ) தோற்றுவிக்கப்பட்டது.] என்‌றும்‌,
‘யந் நாபி பத்மநாப,வந்மஹாத்மா ப்ரஜாதிபர்‌ விஸ்வஸ்ருட்‌, விஸ்வரூப:”
உலகை உருவ மாகச்‌ கொண்டவனும்‌, உலகை ஸ்ருஷ்டிப்பவனுமான பிரமன்‌
எவருடைய நாபீகமலத்திலிருந்து தோன்‌நினானோ ….] என்றும்
மஹா உப நிஷத்திலும்‌, “ ப்ரஹ்ம வை ப்‌,ரஹ்மாணம்‌ புஷ்கரே$ஸ்ருஜத்‌”
ப்ரஹ்மம்‌ பிரமனைத்‌ தாமரையில்‌ தோற்று வித்தது என்றும்
அதர்வண வேதத்திலும்‌, “ ஸ ப்ரஜாபதி ரேக: புஷ்கரபர்ணே ஸம்ப,வத்‌””
அந்தப்‌ பிரமன்‌ ஒருவனே (எம்பெருமானுடைய திருநாபீ) கமலத்தில்‌ தோன்‌ நினான்‌– என்றும்‌
பல வாக்கியங்களால்‌ வேதத்திலும்‌
“யத்‌ தத்‌ பத்மமபூத்‌ பூர்வம்‌ தத்ர ப்‌ரஹ்மா வ்யஜாயத |
` ப ரஹ்மணங்சாபி ஸம்பூ,த: இத்யவதரர்யதாம்‌ |
ஸரிவாத்‌ ஸ்கந்தஸ்‌ ஸ்ம்பபபூவ ஏதத்‌ ஸ்ருஷ்டி சதுஷ்டயம்‌ (|
(பகவானுடைய’ உந்தியிலிருந்‌து) யாதொரு தாமரை முன்‌ உண்டாயிற்றோே அதில்‌ பிரமன்‌ பிறந்தான்‌,
பிரமனிட மிருந்தே-சிவன்‌ பிறந்தானென்று அறியத்தக்கது.
சிவனிட மிருந்து ஸ்கந்தன்‌ உண்டானான்‌.
இது (முதலில்‌ ஏற்பட்ட) நாலு ஸ்ருஷ்டி] என்று மஹாபாரதத்திலும்‌
“கதாசித்‌ தஸ்ய ஸாுப்தஸ்ய நாப்‌,யாம்‌ காமாத,ஜாயத |
திவ்யமஷ்டதனம்‌ பூரி பங்கஜம்‌ பார்த்தி,வம்‌ மஹத்‌ ॥
யஸ்ய ஹேமம திவ்யா கர்ணிகா மேருருச்யதே |”
அப் பெருமான்‌ ஒரு ஸமயம்‌ யோக நித்திரை செய்து கொண்டிருக்கும் போது. அவனுடைய ஸங்கல்பத்தினால்‌
அவனுடைய திருநாபியில்‌, எட்டு தளத்தையுடையதும்‌, ப்ருதிவி ஸம்பந்த முள்ளதும்‌, மிகப்டெரியதும்‌ அழகியதுமான தாமரை உண்டாயிற்று.
அதனுடைய ஸுவர்ண மயமான அழகிய கர்ணிகை மேருமலையாயிற்று என்று சொல்லப்‌படுகிற து. என்று
பாத்ம புராணத்திலும்‌ சொல்லட்பட்ட து.
“’நாவியுள்‌ நற்கமல நான்முகனுக்‌ கொருகால்‌ தம்மனையானவனே!” என்று பெரியாழ்வாரும்‌.
நாட்டைப் படையென்றயன்‌ முதலாத்‌ தந்த நளிர்‌ மாமலருந்தி
வீட்டைப்‌ பண்ணி விளையாடும்‌ விமலன்‌ தன்னைக் கண்டீரே ” என்று ஆண்டாளும்‌
தாமரை மேல்‌ அயனவனைப்‌ படைத்தவனே!” என்று குலசேகராழ்வாரும்‌,
“போது தங்கு நான்முகன்‌ மகன்‌ அவன்‌ மகன்‌ சொலில்‌
மாது தங்கு கூறன்‌ ஏறதூர்தி என்று
வேதநூல்‌ ஓதுகின்‌றதுண்மை அல்லதில்லை
மற்றுரைக்கிலே ” -—என்று திருமழிசைப்பிரானும்‌.
** அயனைப்‌ படைத்ததோர்‌ எழில்‌ உந்தி ” என்று திருப்பாணாழ்வாரும்‌.
‘ அங்கமலத்தயன்‌ ” என்றும்‌. “்‌
ஒருவனை உந்திபூமேல்‌ ஓங்குவித்து” என்றும்‌, திருமங்கைமன்னனும்‌.
“செய்ய மறையான்‌ நின்‌ உந்தியான்‌” என்‌ றும்‌,
“நான்முகற்குப்‌ பூமேல்‌ பகரமறை பயந்த பண்பன்‌ ` என்றும்‌ பொய்கைப்பிரானும்‌. —
இரும் தண்‌ கமலத்‌ திரு மலரினுள்ளே திருந்து திசைமுகனைத்‌ தந்தாய்‌” என்று பூதத்‌ தாழ்வாரும்‌.
“அலரெடுத்த உந்தியான்‌”என்‌ று பேயாழ்வாரும்‌,
“’ ஒரு தானாகித்‌ தெய்வ நான்முகக்‌ கொழுமுளை ஈன்று
முக்‌ கணீசனொடு தேவு பல நுதலி மூவுலகம்‌ விளைத்த
உந்தி மாயக்கடவுள்‌ மாமுதலடியே”’ என்று நம்மாழ்வாரும்‌
எம்‌ பெருமான்‌ ஸர்வ ஜகத் காரணமான பத்மத்தை நாபியிலே கொண்டு விளங்குவதை அநுபவித்தார்கள்‌.

“’அஜநிஷ்ட ச கஸ்ய நாபே,:”
எவனுடைய உந்தியிலிருந்து இவ்வுலகம்‌ உண்டாயிற்று] என்றார்‌ ஆளவந்தாரும்‌.
“த்ரயோ தேவாஸ்‌ துல்யாஸ்‌ த்ரிதயமிதமத்‌,வைதமதி,கம்‌ த்ரிகாத,ஸ்மாத்‌ தத்த்வம்‌ பரமிதி விதர்க்காந்‌ விகடயர்‌ |
நாபீ பத்‌,மோ ப்‌ரூபங்கீ,பரவதி,தி ஸித்‌,த,ாந்தயதி ந: |”
மும்மூர்த்திகளும்‌ ஸமர்‌’ மூவரும்‌ ஒன்றே “மூன்றைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டது பரதத்வம்‌ ‘ என்னும்‌
விதண்டா வாதங்களைப்‌ போக்கடிப்பதாய்‌,
பிரம ருத்திரர்களுக்கு முதற்கிழங்கரயிருப்பதுமான பெரியபெருமாளுடைய திருநாபிக்கமலமான து
அவனையொழிந்த மற்றவையெல்லாம்‌ அவனுடைய புருவ நெரிப்புக்கு வசப்பட்டவை என்று நமக்கு முடிவுகட்டித்‌ தருகின்‌ றது.
என்று பட்டர்‌ அருளிச்‌ செய்தபடியே பரத்வ நிர்த்தாரணம்‌ செய்துதரும்‌ திருநாமமன்றோ இது.
(பத்மநாபன்‌)
” பத்மமிவ நாபி: யஸ்ய ஸ:””
தாமரை போன்‌ற உந்தியை உடையவன்‌ | என்‌ றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
“ ஹ்ருத்பத்மஸ்ய நாபெள மத்‌,யே ப்ரகாமாமாஈத்வாத்‌ வா பத்மநாப;””’
ஹ்ருதய கமலத்தின்‌ ஈடுவில்‌ பிரகாசிப்பதால்‌ பத்மநாபனாகிறான்‌.. என்றும்‌ சங்கரர்‌ பொருள் கெண்டார்‌.
இப்படி ஸகலாவதார மூல மூர்த்தியான பத்மநாபாவதாரம்‌ அநுபவிக்கப்பட்டது.

————–

அடுத்தபடியாக அப்‌ பெருமானுடைய முக்யாவதாரமாகிய க்ருஷணாவதாரம்‌ தாமோதர நாமம்‌ அநுபவிக்கப்படுகிறது.
“பத்மநாபன்‌ என்னும்‌ திருநாமத்தினால்‌ அவதாரத்திலும்‌ பரத்வம்‌ பொலிய நிற்பவனென்று காட்டப்பட்டது.
தாமோதரன்‌’ என்று ஓரிடைச்சிக்குக்‌ கட்டவும்‌ அடிக்கவுமாம்படி நின்ற ஸெளலப்‌, யத்தின்‌ எல்லை நிலத்திலே ஈடுபடுகிறது.
* தாம” என்று விந்‌-16 கயிற்றுக்குப்‌ பெயராகையால்‌ கயிற்றை வயிற்றிலுடையவன்‌ என்று
தாமோதர நாமத்திற்குப்‌ பொருளாகிறது.
“ தயோர்‌ மத்‌,யக,தம்‌ பத்த,ம்‌ த௱ம்நா கடம்‌ தயோத;ரே |
ததங்ச தமோத,ரதாம்‌ ஸ யயெள தாமப,ந்த நாத்‌ |!”
அந்த யசோதையால்‌ வயிற்றில்‌ கயிற்றினாலே கட்டப்‌ பட்டவனாய்‌ அம்மரங்களினிடையில்‌ சென்றான்‌.
கயிற்றால்‌ கட்டப்பட்டதால்‌ தாமோதரனாயிருக்கும்‌ தன்மையை அடைந்தான்‌ என்று சாஸ்த்ரம்‌ சொல்லிற்று,
“தாம்கா சைவோத;ரே பத்‌,த்‌,வா ப்ரத்யப,த்‌,நாதுலூகலே”
கயிற்றால்‌ வயிற்றில்‌ கட்டி உரலில்‌ பிடித்துக்‌ கட்டினாள்‌-என்று விஷ்ணு புராணத்திலும்‌ இத்திருநாமம்‌ விவரிக்கப்‌ பட்டது.
ஸர்வ ஸ்மாத் பரன்‌ ஓரிடைச்சியின்‌ கையிலே கட்டுண்டு கிடந்ததைக்கண்டு
“‘எத்திறம்‌! உரலினொடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே” என்று நம்மாழ்வார்‌ ஆறு மாதம்‌ மோஹித்துக்‌ கிடந்தார்
“கண்ணிநுண்‌ சிறுத்தாம்பி னால்‌ கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்‌’” என்று மதுரகவிகளும்‌.
“கண்ணிக்‌ குறுங்கயிற்றால்‌ கட்டுண்டான்‌ காணேடீ ” என்று திருமங்கையாழ்வாரும்‌
இந்நீர்மையிலே ஈடுபட்டனர்‌.
“தாமாநி பந்தி யஸ்யோத,ராந்தரே | தேர தமோத,ரோ ; ஸ்ரீதரஸ்து ஸமாங்ரித:
தாம சப்தத்தினால்‌ சொல்லப்படும்‌ லோகத்திலுள்ள நாம ரூபங்களெல்லாம்‌ ( பிரளயகாலத்தில்‌ )
அவனுடைய வயிற்றினுள்‌ விளங்குகிறபடியால்‌ ஸ்ரீதரன்‌ தாமோதரனாகிறான்‌.
என்று புராணத்தில்‌ சொல்லியபடியும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
“‘ தாமோதரனைத்‌ தனி முதல்வனை ஞால முண்டவனை ” என்று நம்மாழ்வார்‌ இவ்வர்த்தத்தை உணர்த்‌தினார்‌.
“தமாதி, ஸாதநேந உதாரா உத்க்ருஷ்டா மதிர்யா தயா இதி தமோதர ;,:’
தமம்‌ முதலிய ஸாதனங்‌களால்‌ உதாரமாய்‌ ( உயர்ந்ததாய்‌ ) விளங்கும்‌ புத்தி தமோதரா ‘ எனப்படும்‌.
அந்த புத்தியால்‌ அறியப்படு மவன்‌ தாமோதரன்‌ . என்றும்‌ சங்கரர்‌ பொருள் உரைத்தார்‌.
“தாமாத்‌, தமோதரம்‌ விது;
தாமோதரனை தாமத்தினால்‌ அறிகிறார்கள்‌ என்ற பகவத் வசனம்‌ இவ்வர்த்தத்துக்கு ப்ரமாணம்‌.
“ தேலாநாம்‌ ஸூகமும் ஸித்வாத்‌ த;மாத்‌, தமோதரம்‌ விது; “` தேவர்களுக்கு ஸுகமானவற்றை உபதேசிப்பதாலும்‌.
கயிற்றினால்‌ கட்டப்பட்டகாலும்‌ தாமோதரனென்று அறிகிறார்கள்‌.
என்ற ப்ரமாண த்தின்‌ படியும்‌ பொருள்‌ சொள்ளலாம்‌.

ஆக. இப்பன்னிரு நாமங்களின்‌ பொருளும்‌ விவரிக்கப்‌ பட்டதாயிற்று.
வாஸுதேவன்‌ முதலான நான்கு வியூஹ மூர்த்திகளினின்றும்‌
மூன்று மூன்று மூர்த்திகளாகத்‌ தோன்‌றிய கேசவாதி மூர்த்யந்தரங்களுள்ளதாகவும்‌,
இவர்‌கள்‌ நெற்றி முகலிய அவயவங்களில்‌ நின்‌று கொண்டு சரிரத்தை ரக்ஷிக்கறார்களென்றும்‌.
தியானிப்பவர்களுடைய தாபங்களைப்‌ போக்கடிக்கிறார்களென்றும்‌
பாஞ்சராத்ர சாஸ்த்ரத்‌தில்‌ ப்ரதிபாதிக்கப்பட்டது.
இக் கேசவாதி நாமங்‌ கள்‌ அவர்களைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌.

———————————–

தொடரடைவுகள் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம்
(http://tamilconcordance.in) தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை

————

கேசவ (2)
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4
கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4

கேசவநம்பீ (1)
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த – நாலாயி:139/3

கேசவற்கு (1)
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3610/1

கேசவன் (10)
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – நாலாயி:13/2
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ – நாலாயி:381/3
கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1
கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/3
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3

கேசவன்-தன் (1)
திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன்
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/1,2

கேசவனே (2)
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3

கேசவனை (6)
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ – நாலாயி:480/7
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/1,2
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் – நாலாயி:2181/3
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை – நாலாயி:2649/3
கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1
திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை – நாலாயி:3329/1

கேசவனோடு (1)
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை – நாலாயி:290/3

கேசவா (10)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3
கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே – நாலாயி:771/3,4
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/1,2
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1

கேசனே (1)
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே – நாலாயி:812/4

————-

நாராயணமே (9)
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1538/4
நடந்தானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1539/4
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1540/4
நல்லானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1541/4
நடையா உண்ண கண்டான் நாமம் நமோ_நாராயணமே – நாலாயி:1542/4
நானும் சொன்னேன் நமரும் உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1543/4
நன்று காண்-மின் தொண்டீர் சொன்னேன் நமோ_நாராயணமே – நாலாயி:1544/4
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ_நாராயணமே – நாலாயி:1545/4
நங்கள் வினைகள் தவிர உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1546/4

நாராயணன் (12)
நலிவான் உற கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை – நாலாயி:271/2
நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை – நாலாயி:298/3
நாயக பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி – நாலாயி:480/6
நாற்ற துழாய் முடி நாராயணன் நம்மால் – நாலாயி:483/3
நம்மை உடையவன் நாராயணன் நம்பி – நாலாயி:563/2
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் – நாலாயி:2382/1
நற்பொருள் தான் நாராயணன் – நாலாயி:2394/4
நாராயணன் என்னை ஆளி நரகத்து – நாலாயி:2395/1
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே – நாலாயி:3337/2
நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே – நாலாயி:3438/4
அற்புதன் நாராயணன் அரி வாமனன் – நாலாயி:3735/1
நாராயணன் நங்கள் பிரான் அவனே – நாலாயி:3803/4

நாராயணன்-தன்னை (1)
நச்சுவார் முன் நிற்கும் நாராயணன்-தன்னை
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன – நாலாயி:107/1,2

நாராயணனாலே (1)
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே – நாலாயி:3075/4

நாராயணனுக்கு (1)
ஞாலம் முற்றும் உண்டு ஆலிலை துயில் நாராயணனுக்கு இவள் – நாலாயி:296/1

நாராயணனே (4)
நாராயணனே நமக்கே பறை தருவான் – நாலாயி:474/7
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர் – நாலாயி:1315/2
நாகம் ஏறி நடு கடலுள் துயின்ற நாராயணனே உன் – நாலாயி:3255/3
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே என்றுஎன்று – நாலாயி:3258/2

நாராயணனை (2)
இன்று நாராயணனை வர கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் – நாலாயி:554/4
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி – நாலாயி:3948/1

நாராயணா (17)
நல் வகையால் நமோ_நாராயணா என்று நாமம் பல பரவி – நாலாயி:11/3
நச்சு முலை உண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ – நாலாயி:51/4
நண்ணி தொழும் அவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் – நாலாயி:140/2
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை – நாலாயி:514/1
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:948/4
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:949/4
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:950/4
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:951/4
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:952/4
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:953/4
நல் பொருள் காண்-மின் பாடி நீர் உய்-மின் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:954/4
நல் துணை ஆக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:955/4
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:956/4
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் – நாலாயி:957/4
நாமம் பல சொல்லி நாராயணா என்று – நாலாயி:2289/1
நாராயணா ஓ மணி_வண்ணா நாக_அணையாய் – நாலாயி:2694/4
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா என்றுஎன்று – நாலாயி:3297/2

நாராயணாய (3)
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ_நாராயணாய என்று – நாலாயி:4/3
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ_நாராயணாய என்று – நாலாயி:12/3
நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ_நாராயணாய என்பாரே – நாலாயி:555/4

—————

மாதவ (1)
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் – நாலாயி:2171/1

மாதவம் (1)
கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு – நாலாயி:931/3

மாதவர் (1)
மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் – நாலாயி:925/3

மாதவன் (20)
மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி – நாலாயி:373/3
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை – நாலாயி:442/2
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று – நாலாயி:482/7
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி_வண்ணன் மணி முடி மைந்தன் – நாலாயி:545/1
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் – நாலாயி:557/3
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு-தன்னை – நாலாயி:617/1
மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல் – நாலாயி:641/1
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே – நாலாயி:816/3,4
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் – நாலாயி:1211/3
மாதவன் தான் உறையும் இடம் வயல் நாங்கை வரி வண்டு – நாலாயி:1248/3
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன்
தார் மன்னு தாசரதி ஆய தட மார்வன் – நாலாயி:1684/1,2
வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர் – நாலாயி:2220/3
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் – நாலாயி:2544/3
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில் – நாலாயி:2856/2
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது – நாலாயி:3077/1
வண்டு ஆர் தண் அம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3353/3
மாதவன் என்று என்று – நாலாயி:3941/1
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே – நாலாயி:3982/4
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் – நாலாயி:3983/1
வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே – நாலாயி:3986/4

மாதவன்-தன் (3)
மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய் மாதவன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:162/4
மருப்பு ஒசித்த மாதவன்-தன் வாய் சுவையும் நாற்றமும் – நாலாயி:567/3
மது வாயில் கொண்டால் போல் மாதவன்-தன் வாய் அமுதம் – நாலாயி:575/2

மாதவன்-பால் (1)
மாதவன்-பால் சடகோபன் – நாலாயி:2964/1

மாதவனாரே (1)
வடிவு ஆர் மாதவனாரே – நாலாயி:2963/4

மாதவனே (9)
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் – நாலாயி:141/4
மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமல சுனை வேங்கடவா – நாலாயி:1036/2,3
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால் – நாலாயி:1395/2
வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் – நாலாயி:1611/2
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2219/3
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2225/3
மண் மிசை யோனிகள்-தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம் – நாலாயி:2831/1,2
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே – நாலாயி:3076/4
வாயான் மாதவனே – நாலாயி:3940/4

மாதவனை (9)
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் – நாலாயி:432/1
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை – நாலாயி:503/1
மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள் – நாலாயி:1212/2
மரு தார் தொல் புகழ் மாதவனை வர – நாலாயி:1942/3
மட்டு ஆர் பூம் குழல் மாதவனை வர – நாலாயி:1945/3
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் – நாலாயி:2387/3
மாது ஆய மாலவனை மாதவனை யாதானும் – நாலாயி:2446/2
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு – நாலாயி:2649/3,4
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் – நாலாயி:3933/1

மாதவனோடு (1)
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கு இருப்பாரே – நாலாயி:533/4

மாதவா (8)
வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம் – நாலாயி:138/1
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:384/3
வாக்கு தூய்மை இலாமையினாலே மாதவா உன்னை வாய்க்கொள்ள மாட்டேன் – நாலாயி:433/1
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4
மான் ஏய் நோக்கி மடவாளை மார்பில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா – நாலாயி:2947/1,2
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா – நாலாயி:2948/2,3
மாய்த்த ஆய மாயனே வாமனனே மாதவா
பூ தண் மாலை கொண்டு உன்னை போதால் வணங்கேனேலும் நின் – நாலாயி:3256/2,3
மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா என்ன நாளும் – நாலாயி:3911/1

————

கோவிந்தற்கு (1)
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல் – நாலாயி:635/1

கோவிந்தன் (20)
என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ – நாலாயி:54/3
குட்டன் வந்து என்னை புறம்புல்குவான் கோவிந்தன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:108/4
குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு – நாலாயி:254/2
குட வயிறுபட வாய் கடைகூட கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:276/2
இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:277/2
குறு வெயர் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:282/2
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் – நாலாயி:367/3
கொம்பின் ஆர் பொழில்வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர் – நாலாயி:368/1
கொத்து அலர் பூம் கணை தொடுத்துக்கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி – நாலாயி:506/3
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் – நாலாயி:557/3
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி – நாலாயி:579/3
குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ மிறை செய்து எம்மை – நாலாயி:603/3
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் – நாலாயி:2544/3
கோவிந்தன் குட கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து – நாலாயி:3078/1
எறியும் தண் காற்றை தழுவி என்னுடை கோவிந்தன் என்னும் – நாலாயி:3266/2
கோமள வான் கன்றை புல்கி கோவிந்தன் மேய்த்தன என்னும் – நாலாயி:3268/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கொள்-மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை – நாலாயி:3732/1,2
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் – நாலாயி:3826/3
குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான் – நாலாயி:3952/1

கோவிந்தன்-தன் (2)
குழற்கு அணியாக குழல்வாராய் அக்காக்காய் கோவிந்தன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:167/4
கொண்டு இவை பாடி குனிக்க வல்லார் கோவிந்தன்-தன் அடியார்கள் ஆகி – நாலாயி:212/3

கோவிந்தன்-தனக்கு (1)
குடி அடியார் இவர் கோவிந்தன்-தனக்கு என்று – நாலாயி:3986/1

கோவிந்தனாம் (1)
கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தனாம் எனா ஓடும் – நாலாயி:3269/1

கோவிந்தனாரே (2)
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே – நாலாயி:3907/4
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும் – நாலாயி:3908/1

கோவிந்தனுக்கு (1)
கொங்கை தலம் இவை நோக்கி காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா – நாலாயி:620/3

கோவிந்தனுடைய (1)
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில் – நாலாயி:285/1

கோவிந்தனே (1)
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே – நாலாயி:3077/4

கோவிந்தனை (5)
புற்று அரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்று இனம் மேய்த்து வர கண்டு உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம் – நாலாயி:253/1,2
செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே – நாலாயி:281/4
கோவலர் கோவிந்தனை குறமாதர்கள் பண் குறிஞ்சி – நாலாயி:352/3
கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்-கொலோ – நாலாயி:1828/4
கூடும்-கொல் வைகலும் கோவிந்தனை மதுசூதனை கோளரியை – நாலாயி:3662/1

கோவிந்தனோடு (2)
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில கோவிந்தனோடு இவளை – நாலாயி:288/3
கோடி மூடி எடுப்பதன் முன்னம் கௌத்துவம் உடை கோவிந்தனோடு
கூடியாடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே – நாலாயி:378/3,4

கோவிந்தா (15)
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை உணாயே – நாலாயி:134/4
குணம் நன்று உடையர் இ கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லு கொள்ளாய் – நாலாயி:142/2
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:384/3
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/3
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/3
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன்தன்னை – நாலாயி:500/1
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு – நாலாயி:501/4
இற்றை பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு – நாலாயி:502/5,6
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக்கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மை – நாலாயி:522/2,3
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
குழகனே என்தன் கோமள பிள்ளாய் கோவிந்தா என் குடங்கையில் மன்னி – நாலாயி:714/1
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/2,3
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே – நாலாயி:3123/4
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின் – நாலாயி:3916/1

கோவியர் (1)
பூ_மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி – நாலாயி:1169/3

கோவினார் (1)
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல்_வண்ணா – நாலாயி:1005/2

கோவினை (5)
ஆட்கொள்ள தோன்றிய ஆயர்-தம் கோவினை
நாள் கமழ் பூம் பொழில் வில்லிபுத்தூர் பட்டன் – நாலாயி:85/1,2
கோவினை நாவுற வழுத்தி என்தன் கைகள் கொய் மலர் தூய் என்று-கொலோ கூப்பும் நாளே – நாலாயி:650/4
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தை தலை கோவினை குடம் ஆடிய கூத்தனை – நாலாயி:1570/3
அண்டர்-தம்_கோவினை இன்று அணுகும்-கொல் என் ஆய் இழையே – நாலாயி:1830/4
கோவினை குடந்தை மேய குரு மணி திரளை இன்ப – நாலாயி:2037/2

கோவே (22)
அஞ்சினேன் காண் அமரர்_கோவே ஆயர் கூட்டத்து அளவன்றாலோ – நாலாயி:131/3
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே – நாலாயி:136/4
குடங்கள் எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால்செய்ய வல்ல என் மைந்தா – நாலாயி:188/1,2
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்திப்பூ சூட்ட வாராய் – நாலாயி:188/4
கும்ப களிறு அட்ட கோவே கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே – நாலாயி:199/2
குடத்தை எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டை பணித்தருளாயே – நாலாயி:529/3,4
கல் அணை மேல் கண் துயில கற்றனையோ காகுத்தா கரிய கோவே – நாலாயி:732/4
வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே – நாலாயி:739/4
எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே – நாலாயி:901/4
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே
நால் ஆகிய வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1314/1,2
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர்-தம்_கோவே என்று – நாலாயி:1578/2
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1618/4
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1619/4
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1620/4
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1621/4
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1622/4
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1623/4
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1624/4
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே – நாலாயி:1625/4
ஆடு ஏறு மலர் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1626/4
சுற்ற குழாத்து இளம் கோவே தோன்றிய தொல் புகழாளா – நாலாயி:1886/2
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே – நாலாயி:3863/4

கோவை (14)
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர்-தம் அமுதத்தினை – நாலாயி:473/3
கோவை மணாட்டி நீ உன் கொழும் கனி கொண்டு எம்மை – நாலாயி:599/1
ஆய் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை குரவை முன்னே – நாலாயி:1091/2
கோவை தமிழால் கலியன் சொன்ன – நாலாயி:1367/3
சொன்ன இன் தமிழ் நல் மணி கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார் – நாலாயி:1617/3
இனம் மேவு வரி வளை கை ஏந்தும் கோவை ஏய் வாய மரகதம் போல் கிளியின் இன் சொல் – நாலாயி:1622/3
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலிகன்றி ஒலிசெய்த இன்ப பாடல் – நாலாயி:1627/2,3
வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை
அல்லல் செய்து வெம் சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான் – நாலாயி:1700/1,2
கோவை இன் தமிழ் பாடுவார் குடம் ஆடுவார் தட மா மலர் மிசை – நாலாயி:1846/1
கோவை வாயாள்-பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கை – நாலாயி:3253/1
கோவை வீய சிலை குனித்தாய் குல நல் யானை மருப்பு ஒசித்தாய் – நாலாயி:3253/2
குவளை தடம் கண்ணும் கோவை செ வாயும் பயந்தனள் – நாலாயி:3290/2
கோவை வாய் துடிப்ப மழை கண்ணொடு என் செய்யும்-கொலோ – நாலாயி:3519/4
மது மண மல்லிகை மந்த கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து – நாலாயி:3876/3

——–

விட்டுசித்தர் (2)
வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை – நாலாயி:606/3
மெய்ம்மை பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர் – நாலாயி:616/2

விட்டுசித்தன் (30)
வில்லாண்டான்-தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல் – நாலாயி:12/2
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இ – நாலாயி:22/3
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை – நாலாயி:63/3
வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார் – நாலாயி:96/3
வேய் தடம் தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து – நாலாயி:117/2
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த – நாலாயி:127/2
வேத பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை – நாலாயி:201/3
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் – நாலாயி:212/2
செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டுசித்தன் சொல் – நாலாயி:253/3
வண்ணம் வண்டு அமர் பொழில் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:263/3
குழல் முழவம் விளம்பும் புதுவை_கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார் – நாலாயி:285/3
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன – நாலாயி:296/3
செந்தமிழ் தென் புதுவை விட்டுசித்தன் சொல் – நாலாயி:317/3
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல் – நாலாயி:348/3
மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே – நாலாயி:359/4
கோது இல் பட்டர்பிரான் குளிர் புதுவை மன் விட்டுசித்தன் சொல் – நாலாயி:370/3
பத்தராய் இறந்தார் பெறும் பேற்றை பாழி தோள் விட்டுசித்தன் புத்தூர்_கோன் – நாலாயி:380/2
வீர் அணி தொல் புகழ் விட்டுசித்தன் விரித்த சொல் – நாலாயி:390/2
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்_கோன் விட்டுசித்தன் விருப்புற்று – நாலாயி:401/2
திருவரங்க தமிழ் மாலை விட்டுசித்தன் விரித்தன கொண்டு – நாலாயி:411/3
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார் – நாலாயி:422/3
வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:432/3
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் – நாலாயி:442/3
பரவுகின்றான் விட்டுசித்தன் பட்டினம் காவல் பொருட்டே – நாலாயி:452/4
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவை_கோன் விட்டுசித்தன்
ஒன்றினோடி ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே – நாலாயி:462/3,4
வேயர்-தங்கள் குலத்து உதித்த விட்டுசித்தன் மனத்தே – நாலாயி:473/1
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:513/3
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:626/3
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை – நாலாயி:636/2
விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல் – நாலாயி:646/2

விட்டுசித்தன்-தன் (1)
வேத வாய் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன்-தன்
கோதை வாய் தமிழ் வல்லவர் குறைவு இன்றி வைகுந்தம் சேர்வரே – நாலாயி:523/3,4

விட்டுவே (2)
வேய் தடம் தோளார் விரும்பும் கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் – நாலாயி:143/4
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே – நாலாயி:3078/4

———–

மதுசூத (2)
மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடி மேல் – நாலாயி:3538/1
மாய்த்த அம்மான் மதுசூத அம்மான் உறை – நாலாயி:3731/2

மதுசூதற்கு (1)
மாவை வல் வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி – நாலாயி:3534/3

மதுசூதன் (8)
மழை வந்து எழு நாள் பெய்து மா தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை – நாலாயி:265/2
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னை – நாலாயி:561/3
மன் ஆகி நின்ற மதுசூதன் வாய் அமுதம் – நாலாயி:571/3
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற – நாலாயி:1393/3
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் – நாலாயி:1684/1
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டு அவன்-கண் பாசத்தால் நைவாயே – நாலாயி:3013/3,4
வான் உளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் – நாலாயி:3031/2
மணி நின்ற சோதி மதுசூதன் என் அம்மான் – நாலாயி:3930/3

மதுசூதன்-தன்னை (1)
மன கேதம் சாரா மதுசூதன்-தன்னை
தனக்கே தான் தஞ்சமா கொள்ளில் எனக்கே தான் – நாலாயி:2442/1,2

மதுசூதனன் (5)
மன்னர் அஞ்சும் மதுசூதனன் வாயில் குழலின் ஓசை செவியை பற்றி வாங்க – நாலாயி:279/2
மன்னவன் மதுசூதனன் என்பார் வானகத்து மன்றாடிகள் தாமே – நாலாயி:377/4
வண்டு உண் துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன் – நாலாயி:2526/3
வள பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல்வினையேன் – நாலாயி:2536/3
விட்டு இலங்கு முடி அம்மான் மதுசூதனன் தனக்கே – நாலாயி:3079/4

மதுசூதனன்-தன்னை (1)
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் – நாலாயி:442/2,3

மதுசூதனனே (2)
வருக என்று உன் மகன்-தன்னை கூவாய் வாழ ஒட்டான் மதுசூதனனே – நாலாயி:204/4
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மதுசூதனனே – நாலாயி:3563/4

மதுசூதனனை (2)
வங்கம் விட்டு உலவும் கடல் பள்ளி மாயனை மதுசூதனனை மார்பில் – நாலாயி:376/3
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் – நாலாயி:432/1

மதுசூதனா (2)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
வள்ளலே மதுசூதனா என் மரகத_மலையே உனை நினைந்து – நாலாயி:3067/1

மதுசூதனே (2)
மண் எல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று இருந்தேன் – நாலாயி:144/2
மல்லா குடம் ஆடீ மதுசூதனே உலகில் – நாலாயி:1476/3

மதுசூதனை (2)
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி – நாலாயி:3080/1
கூடும்-கொல் வைகலும் கோவிந்தனை மதுசூதனை கோளரியை – நாலாயி:3662/1

மதுசூதனையே (1)
வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி – நாலாயி:3527/1

மதுசூதா (5)
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறு அட்ட பிரானே – நாலாயி:440/1,2
வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் – நாலாயி:1611/2
மணியே மணி மாணிக்கமே மதுசூதா
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதீ – நாலாயி:2029/3,4
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/3
மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய் – நாலாயி:3638/1

————–

திரிவிக்கிரமன் (5)
தெண் புழுதி ஆடி திரிவிக்கிரமன் சிறு புகர்பட வியர்த்து – நாலாயி:94/2
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னை தீண்டும் வண்ணம் – நாலாயி:510/3
வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன்
தேன் அமர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1832/2,3
திரிவிக்கிரமன் செந்தாமரை கண் எம்மான் என் செம் கனி வாய் – நாலாயி:3081/1
தெய்வ_நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடி இணை மிசை – நாலாயி:3417/1

திரிவிக்கிரமனையே (1)
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே – நாலாயி:3080/4

திரிவிக்கிரமா (1)
சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திரு ஆயர்பாடி பிரானே – நாலாயி:145/3

———-

வாமன் (3)
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே – நாலாயி:2202/2,3
பேர் வாமன் ஆகா-கால் பேராளா மார்பு ஆர – நாலாயி:2600/2
பேர் வாமன் ஆகிய காலத்து மூ அடி மண் – நாலாயி:2693/1

வாமன (2)
வன் புற்று அரவின் பகை கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும் – நாலாயி:146/3
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே – நாலாயி:203/1

வாமனன் (13)
மண் பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:112/4
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை – நாலாயி:442/2
வாட்டம் இன்றி மகிழ்ந்து உறை வாமனன்
ஓட்டரா வந்து என் கை பற்றி தன்னொடும் – நாலாயி:535/2,3
அறிந்துஅறிந்து வாமனன் அடி இணை வணங்கினால் – நாலாயி:825/1
வாமனன் அடி இணை மருவுவரே – நாலாயி:1457/4
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் – நாலாயி:1684/1
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண் மிசையே – நாலாயி:2830/4
வாமனன் என் மரகத_வண்ணன் தாமரை_கண்ணினன் – நாலாயி:3082/1
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல் – நாலாயி:3202/2
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் – நாலாயி:3264/1
அற்புதன் நாராயணன் அரி வாமனன்
நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம் – நாலாயி:3735/1,2
பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து என்தன் – நாலாயி:3737/3
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே – நாலாயி:3910/4

வாமனனாய் (2)
வாய் மொழிந்து வாமனனாய் மாவலி-பால் மூவடி மண் – நாலாயி:2299/1
கோட்டு அங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் கண்டுமே – நாலாயி:3610/4

வாமனனார் (1)
மச்சு அணி மாட மதில் அரங்கர் வாமனனார்
பச்சை பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற – நாலாயி:610/1,2
வாமனனே (4)
மருவி தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே – நாலாயி:3081/4
மாய்த்த ஆய மாயனே வாமனனே மாதவா – நாலாயி:3256/2
மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய் – நாலாயி:3638/1
மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய் – நாலாயி:3643/1

வாமனனை (2)
வாமனனை மறி கடல் சூழ் வயல் ஆலி வள நாடன் – நாலாயி:1677/2
வாட்டம் இல் புகழ் வாமனனை இசை – நாலாயி:3052/1

வாமனா (4)
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனம் ஆய வாமனா – நாலாயி:788/4
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின் – நாலாயி:3133/1
குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா
குரை கழல் கைகூப்புவார்கள் கூட நின்ற மாயனே – நாலாயி:3259/1,2
மாய கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால் – நாலாயி:3715/1

வாமனாவோ (1)
வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்றுஎன்று – நாலாயி:3298/2

—————

சீதனையே (1)
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – நாலாயி:2556/4
சிதை_மணாளனை (1)
சீற்றமிலாதானை பாடி பற சீதை_மணாளனை பாடி பற – நாலாயி:310/4

சீதை_மணாளா (1)
சிற்றாயர் சிங்கமே சீதை_மணாளா சிறுக்குட்ட செங்கண்மாலே – நாலாயி:248/2
மாதவன் (1)
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
சீரன் (1)
வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3277/2
சீராமா (2)
சிற்றவை-தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ – நாலாயி:724/4
சிலை வலவா சேவகனே சீராமா தாலேலோ – நாலாயி:726/4
சீராளா (1)
சீராளா செந்தாமரை கண்ணா தண் துழாய் – நாலாயி:1897/3

சீரான் (2)
சீரான் திருவேங்கடம் – நாலாயி:2157/4
உரு ஆகிக்கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான்
திரு ஆகம் தீண்டிற்று சென்று – நாலாயி:2604/3,4

சீரானை (3)
சீரானை எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை – நாலாயி:1088/2
கிடந்தானை கேடு இல் சீரானை முன் கஞ்சை – நாலாயி:2315/3
சீரானை செம் கண் நெடியானை தேன் துழாய் – நாலாயி:2708/4

————–

இருடீகேசன் (6)
தன்னில் பொலிந்த இருடீகேசன் தளர் நடை நடவானோ – நாலாயி:88/4
ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே – நாலாயி:233/4
இடைவழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே – நாலாயி:375/4
எ திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய – நாலாயி:550/1
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே என்று – நாலாயி:622/2
இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம் – நாலாயி:3084/1

இருடீகேசன்-தனக்கு (1)
இண்ட குலத்தை எடுத்து களைந்த இருடீகேசன்-தனக்கு
தொண்ட குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி – நாலாயி:5/2,3

இருடீகேசனுக்கு (1)
ஏதம் இன்றி உரைப்பவர்கள் இருடீகேசனுக்கு ஆளரே – நாலாயி:370/4

இருடீகேசனே (1)
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே – நாலாயி:3083/4

இருடீகேசா (3)
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா முலை உணாயே – நாலாயி:133/4
ஏர் விடைசெற்று இளம் கன்று எறிந்திட்ட இருடீகேசா என்தன் கண்ணே – நாலாயி:148/4
என் அப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – நாலாயி:467/4

————-

நாபனுக்கு (1)
செங்கமல_நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே – நாலாயி:1675/4

நாபி (1)
பின்னை தன் நாபி வலயத்து பேர் ஒளி சேர் – நாலாயி:2715/3

நாபியான் (1)
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ் பிறப்பும் – நாலாயி:2250/3
பற்பநாபன் (4)
பாடிப்பாடி வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன் – நாலாயி:137/2
பாழியம் தோள் உடை பற்பநாபன் கையில் – நாலாயி:477/4
பால் நிற கடல் கிடந்த பற்பநாபன் அல்லையே – நாலாயி:774/4
பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன் – நாலாயி:3085/1

பற்பநாபனையே (1)
மருடியேலும் விடேல் கண்டாய் நம்பி பற்பநாபனையே – நாலாயி:3084/4

பற்பநாபனோடும் (1)
பாஞ்சசன்னியத்தை பற்பநாபனோடும்
வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை – நாலாயி:576/1,2

பற்பநாபா (3)
பட்டி கன்றே கொட்டாய் சப்பாணி பற்பநாபா கொட்டாய் சப்பாணி – நாலாயி:79/4
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய் – நாலாயி:149/4
பா மரு மூ_உலகும் படைத்த பற்பநாபா ஓ – நாலாயி:3616/1

பற்பபாதன் (1)
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்பபாதன் அல்லையே – நாலாயி:783/4

பற்பபாதா (1)
பா மரு மூ_உலகும் அளந்த பற்பபாதா ஓ – நாலாயி:3616/2

———

தாம்பால் (4)
பழம் தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்தான் – நாலாயி:26/3
பதரப்படாமே பழம் தாம்பால் ஆர்த்த – நாலாயி:31/3
ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால்
சோப்பூண்டு துள்ளி துடிக்கத்துடிக்க அன்று – நாலாயி:122/2,3
தாம்பால் ஆப்புண்டாலும் அ தழும்பு தான் இளக – நாலாயி:2602/1

தாம்பினால் (2)
கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டு உண்ண – நாலாயி:937/1
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம் மோதர கையால் ஆர்க்க தழும்பு இருந்த – நாலாயி:1890/2,3

தாம்பு (1)
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செ வாயும் – நாலாயி:715/2

தாம்புகளால் (1)
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடை கலந்தானை எம்மானை என் சொல்லி புலம்புவனே – நாலாயி:2563/3,4

தாம்பே (1)
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு – நாலாயி:2103/4
தாமோதரற்கு (1)
தமரும் பிறரும் அறிய தாமோதரற்கு என்று சாற்றி – நாலாயி:299/2

தாமோதரன் (6)
தடம் கை விரல் ஐந்தும் மலர வைத்து தாமோதரன் தாங்கு தட வரைதான் – நாலாயி:270/2
தன் பேரிட்டுக்கொண்டு தரணி-தன்னில் தாமோதரன் தாங்கு தட வரைதான் – நாலாயி:272/2
சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் – நாலாயி:570/1
வண்டு உண் துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண் நேர் அன்ன ஒள் நுதலே – நாலாயி:2526/3,4
தாமோதரன் உரு ஆகிய சிவற்கும் திசைமுகற்கும் – நாலாயி:3086/3
சார்வே தவநெறிக்கு தாமோதரன் தாள்கள் – நாலாயி:3924/1

தாமோதரன்-தன் (1)
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய் தாமோதரன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:169/4

தாமோதரனாய் (1)
தானாய் பின்னும் இராமனாய் தாமோதரனாய் கற்கியும் – நாலாயி:1727/2

தாமோதரனார் (1)
தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமைசெய் என்றால் செய்யாது எமக்கு என்று – நாலாயி:2616/1,2

தாமோதரனே (1)
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே – நாலாயி:3085/4

தாமோதரனை (3)
குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் – நாலாயி:242/1
தாயை குடல்_விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவி தொழுது – நாலாயி:478/4,5
தாமோதரனை தனிமுதல்வனை ஞாலம் உண்டவனை – நாலாயி:3086/1

தாமோதரா (8)
சாவ பால் உண்டு சகடு இற பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் – நாலாயி:150/4
தாய் சொல்லு கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே – நாலாயி:209/4
சூடி வருகின்ற தாமோதரா கற்று தூளி காண் உன் உடம்பு – நாலாயி:246/2
சாடு இற பாய்ந்த தலைவா தாமோதரா என்று – நாலாயி:386/3
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா – நாலாயி:463/2
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே – நாலாயி:699/4
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரை_கண்ணனே சப்பாணி – நாலாயி:1890/4
தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்றுஎன்று – நாலாயி:3299/2

———–

(துவாதச திருநாமங்கள் வரிசையிலே இப்பாசுரம் -கேசவன் நாராயணன் மாதவன்
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு-பல்லாண்டு பாட -ஆள்செய்ய -கைங்கர்யம் செய்ய தூண்டுகிறார் )

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–பெரிய திருவந்தாதி-65-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்று அந்தாதியில் சொற்களுக்கும் ஸ்ரீ திருவாய் மொழியில் சொற்களுக்கும் ஸாம்யம் –இறுதி ஐந்து பத்துக்கள் —

March 28, 2023

ஸ்ரீ மா முனிகள் பிரயோகித்த ஆழ்வார் திரு நாம பதங்கள்

1-சடகோபன்-15-
2-குருகையர் கோன்–22-
3-குருகூரில் வந்துதித்த கோ–32–
4-தென் குருகூர் ஏறு–37–
5-மொய்ம்மகிழோன்–40-
6-காரி மாறன்–51-
7-குருகையர் கோன்–52–
8-பராங்குசன்–54-
9-சடகோபற்கு–63-
10-அண்ணலை–66-
11-சடகோபனை–75-
12-சடகோபர்–77-
13-காரிமாறன்–78–
14-ஞான முனி–99-
மாறன் -மற்ற அனைத்து -86-பாசுரங்களிலும் –

—————————-

அந்தாதி (12) 
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே - நாலாயி:151/4 
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை - நாலாயி:2382/3 
அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இ பத்தின் - நாலாயி:2942/3 
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3063/3 
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் - நாலாயி:3074/3 
நிரை கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3373/3 
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இ பத்தால் - நாலாயி:3384/3 
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் - நாலாயி:3450/3 
கேழ் இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப்பேரெயில் மேய பத்தும் - நாலாயி:3593/3 
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார் - நாலாயி:3692/3 
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் - நாலாயி:3934/3 
அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே - நாலாயி:4000/4

அந்தாதிகளால் (1)
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த – நாலாயி:4000/3

திருமொழி (2)
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட – நாலாயி:1505/3

திருமொழி எங்கள் தே மலர் கோதை சீர்மையை நினைந்திலை அந்தோ – நாலாயி:1936/3
திருமொழியாய் (1)
திருமொழியாய் நின்ற திருமாலே உன்னை – நாலாயி:2245/3

------------------

அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்களுக்குச்
சொல்லும் பொருளும் தொகுத்துரைத்தான் –நல்ல
மணவாளமாமுனிவன் மாறன் மறைக்குத்
தணவா நூற்றந்தாதி தான்தனியன் 1

இரவும் பகலும், இனிய சொற்களையும் அவற்றின் பொருள்களையும் அறிய விரும்புபவர்களுக்காக,
மணவாள மாமுனிகள் கருணையுடன் தமிழ் வேதமான திருவாய்மொழியின் அர்த்தங்களை,
இச்சிறந்த ப்ரபந்தத்தில் நூறு பாசுரங்களாக அந்தாதி க்ரமத்தில் அருளியுள்ளார்.

மன்னு புகழ் சேர் மணவாள மாமுனிவன்
தன் அருளால் உட்பொருள்கள் தன்னுடனே சொன்ன
திருவாய்மொழி நூற்றந்தாதியாம் தேனை
ஒருவாதருந்து நெஞ்சே! உற்று-தனியன் 2

நெஞ்சே! நித்யமான புகழை உடைய மணவாள மாமுனிகளால்
திருவாய்மொழியின் ஆழ்ந்த அர்த்தங்களை வெளியிடுவதற்காகக் கருணையுடன் அருளப்பட்ட
திருவாய்மொழி நூற்றந்தாதி என்கிற தேனைத் தொடர்ந்து பருகுவாயாக.

————-

ஐம்பத்தொன்றாம் பாசுரம்.
மா முனிகள், பிரிவாற்றாமையால் எம்பெருமானுக்குத் தூது விடும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

வைகல் திருவண்வண்டூர் வைகும் இராமனுக்கு என்
செய்கைதனைப் புள் இனங்காள்செப்பும் என – கை கழிந்த
காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே
மேதினியீர்! நீர் வணங்குமின்–51-

உலகத்தீர்களே!
மிகவும் அன்புடன் “பறவைக் கூட்டங்களே! திருவண்வண்டூரில் நித்ய வாஸம் செய்தருளும்
சக்ரவர்த்தித் திருமகனுக்கு என் நிலைமையை எடுத்துச் சொல்லுங்கோள்” என்று
பறவைகளைத் தூது விடும் ஆழ்வாருடைய திருவடிகளை வணங்குங்கள்.

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1-

காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கரு நாராய்!
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே.–6-1-2-

திறங்களாகி எங்கும் செய்களூ டுழல் புள்ளினங்காள்!
சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூருறையும்
கறங்கு சக்கரக் கைக் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே.–6-1-3-

இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?
விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.–6-1-4-

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண் வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.–6-1-5-

போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.–6-1-6-

ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண் கிளியே!
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலைத் திருவண் வண்டூர்
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.–6-1-7-

திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய்!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே.–6-1-8-

அடிகள் கை தொழுது, அலர் மேல் அசையும் அன்னங்காள்!
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறு கொண்டே.–6-1-9-

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-

மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.–6-1-11-

————————-

ஐம்பத்திரண்டாம் பாசுரம்.
மா முனிகள், ஊடலினால் எம்பெருமானைப் புறம் தள்ளும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
தன் நிலை போய்ப் பெண் நிலையாய்த் தான் தள்ளி – உன்னுடனே
கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே
நாள் தோறும் நெஞ்சமேநல்கு–52-

ஆழ்வார் தன்னிலை மறந்து கோபிகைகளின் நிலையை அடைந்து,
மின்னல் போன்ற இடையுடன் கூடிய பெண்களுடன் இருந்துவிட்டு நேரம் கழித்து வந்த
கண்ணனிடம் கொண்ட ஊடலினால் “நான் உன்னுடன் கூட மாட்டேன்” என்று கூறிப் புறம் தள்ளினார்.
நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை தினமும் வணங்க நீ எனக்கு உதவி செய்.

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-

போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2-

போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை, நம்பீ! நின் செய்ய
வாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந் நாள்;
வேயிருந் தடந் தோளினார் இத் திருவருள் பெறுவார் எவர் கொல்,
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?–6-2-3-

ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன் மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம் பரமே?
வேலினேர் தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4-

கழறேல் நம்பி! உன் கை தவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண் சக்கர
நிழறு தொல் படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.–6-2-5-

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6-

கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில் என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடி பிணக்கே.–6-2-7-

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என் சொல்லார் உகவாதவரே?–6-2-8-

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-

ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல் குரவே.–6-2-11-

————————

ஐம்பத்து மூன்றாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் விருத்த விபூதியை (மாறுபட்ட செல்வங்களை) பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று – எல்லை அறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர்–53-

முன்பு இருந்த விரோதிகளைப் போக்கும் கண்ணன்,
நம்முடைய ஊடலையும் போக்கி, அவனுடன் நாம் கூடும்படிச் செய்தான்.
அந்தக் கண்ணன் விருத்த விபூதியை உடையவன்.
இப்படிப்பட்ட கண்ணனை முடிவில்லாமல் வாழும் ஆழ்வார் கொண்டாடினார்.
தமிழ் மொழியில் மன்னரான இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளைப் பாடுபவர்கள்,
நித்ய ஸூரிகளுக்குத் தகுந்த தலைவர்களாக விளங்குவர்.

நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திரு விண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2-

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3-

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-

கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண் மதிள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே.–6-3-5-

மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ் சுடரே.–6-3-6-

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7-

வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்த்
தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8-

என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள் நிழலே.–6-3-9-

நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய் வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்; காண்மின்களே.–6-3-10-

காண்மின்கள் உலகீர்! என்று கண் முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திரு விண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-

—————–

ஐம்பத்து நான்காம் பாசுரம்.
மா முனிகள், கண்ணன் எம்பெருமானின் எல்லா லீலைகளையும் அனுபவித்துப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள்
இரவு பகல் என்னாமல் என்றும் – பரவு மனம்
பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன்
சொல் தேனில் நெஞ்சே! துவள்–54–

நெஞ்சே! கண்ணன் எம்பெருமானின் ராஸக்ரீடை முதலிய திவ்ய லீலைகளை
இரவு பகல் என்று பாராமல் கொண்டாடக்கூடிய நெஞ்சைக் கொண்டிருப்பதைப் பெருமையுடன் பேசிய
ஆழ்வாரின் தேன் போன்ற இனிமையான ஸ்ரீஸூக்திகளில் எப்பொழுதும் மூழ்கி இரு.

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ் வுலகம் நிகரே.–6-4-2-

நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப் பெற்றேன் எனக்கென் னினி நோவதுவே?–6-4-3-

நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4-

வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க் குலம் புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே?–6-4-5-

இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர் கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும் பல
அகல் கொள் வைய மளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப் பரிப்பே.–6-4-6-

மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்
புனத் துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7-

நீணிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து
வாண னாயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால் வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம் மண்ணின் மிசையே?–6-4-9-

மண் மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற் றிட்டுப் போய்
விண் மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-

நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத்திப் பத்தால் பத்தராவர் துவளின்றியே.–6-4-11-

——————

ஐம்பத்தைந்தாம் பாசுரம்.
மா முனிகள், பகவத் விஷயத்தில் தனக்கிருக்கும் பெரிய காதலைப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும்
துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான் – துவளறவே
முன்னம் அனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில்
மன்னும் உவப்பால் வந்த மால்–55-

ஒரு தோஷமும் இல்லாமல் கல்யாண குணங்கள் நிரம்பிய எம்பெருமானைப் பொருந்தி
அனுபவித்ததால் ஏற்பட்ட ஆனந்தத்தால், ஆழ்வார் ஒரு குற்றமும் இல்லாமல்
முதலிலிருந்தே பகவத் விஷயத்தில் மூழ்கி இருந்தார்.
இப்படிப்பட்ட ஆழ்வார் இயற்கையான பக்தியால், பகவத் விஷயத்தில் தனக்கு
எப்பொழுதும் இருக்கும் விருப்பத்தை வெளி யிட்டார்.

துவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழியாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர் கொடாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவ பிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2-

கரைகொள் பைம்பொழில் தண் பணைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர் மல்க நிற்குமே.–6-5-3-

நிற்கும் நான் மறை வாணர் வாழ் தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவுறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண் மகிழ்ந்து குழையுமே.–6-5-4-

குழையும் வாண் முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர் தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5-

நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை
வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்
நோக்கு மேல் அத் திசையல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும்
வாய்க் கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!–6-5-6-

அன்னைமீர்! அணி மா மயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-

இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே.–6-5-9-

பின்னை கொல்?நில மா மகள் கொல்? திருமகள் கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–6-5-10-

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-

——————-

ஐம்பத்தாறாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானிடத்தில் தான் எல்லாவற்றையும் இழந்ததைப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால்
சால நைந்து தன் உடைமை தான் அடையக் – கோலியே
தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன்
ஊனம் அறு சீர் நெஞ்சே! உண்–56–

எம்பெருமானுடன் கூடியிருக்க முடியாததால், மிகவும் தளர்ந்த ஆழ்வார்
“என்னுடைய ஆத்மாவையும், ஆத்மாவின் உடைமைகளையும் நான் விடுவதற்கு முன்பு,
அவை என்னை விட்டு விலகின” என்று அருளிச்செய்தார்.
நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் குற்றமற்ற கல்யாண குணங்களை அனுபவி.

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1-

சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு
செங்கனி வாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே.–6-6-2-

நிறங்கரி யானுக்கு நீடுலகு உண்ட
திறங்கிளர் வாய்ச் சிறுக் கள்வ னவர்க்கு
கறங்கிய சக்கரக் கையவ னுக்கு என்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.–6-6-3-

பீடுடை நான்முகனைப் படைத் தானுக்கு
மாடுடை வையம் அளந்த மணாளற்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே.–6-6-4-

பண்புரை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண் புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5-

கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற் சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு
நற் பல தாமரை நாண் மலர்க் கையற்கு என்
விற் புரு வக்கொடி தோற்றது மெய்யே.–6-6-6-

மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு
பையர வின் அணைப் பள்ளியி னானுக்கு
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்குஎன்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.–6-6-7-

சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம் படப் பாலுண் பிரானுக்கு என்
வாசக் குழலி இழந்தது மாண்பே.–6-6-8-

மாண்பமை கோலத்து எம் மாயக் குறளற்கு
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண்பெருந் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.–6-6-9-

பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே.–6-6-10-

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சட கோபன் சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே.–6-6-11-

———————

ஐம்பத்தேழாம் பாசுரம்.
மா முனிகள், திருக்கோளூரை நோக்கிச் செல்லத் தொடங்கும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

உண்ணும் சோறாதி ஒரு மூன்றும் எம்பெருமான்
கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணிணைகள் – மண் உலகில்
மன்னு திருக்கோளூரில் மாயன் பால் போம் மாறன்
பொன் அடியே நந்தமக்குப் பொன்–57-

ஆழ்வார், உண்ணும் சோறும் முதலிய தாரக, போஷக, போக்ய பதார்த்தங்கள் எல்லாம்
எம்பெருமான் கண்ணனே என்று, தன் திருக்கண்களில் பெருகும் கண்ணீருடன்,
திருக்கோளூரில் பொருந்தி எழுந்தருளியிருக்கும் ஸர்வேஸ் வரனை நோக்கிச் செல்லத் தொடங்கினார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளே நமக்கிருக்கும் ஒரே சொத்து.

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1-

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக் கண்ணொடு என் செய்யுங்கொலோ?–6-7-3-

கொல்லை என்பர் கொலோ? குணம் மிக்கனள் என்பர் கொலோ?
சில்லை வாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இள மான் செல்ல மேவினளே.–6-7-4-

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5-

இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப் போய்த்
தென் திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனி மல்கவே.–6-7-6-

மல்கு நீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப் போய்ச்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-

ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே.–6-7-8-

காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச்
சேரி பல் பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங் கண் இள மான் இனிப் போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத் தனையும் விடாள் அவன் சேர் திருக் கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10-

வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-

—————-

ஐம்பத்தெட்டாம் பாசுரம்.
மா முனிகள், சோகத்தில் மூழ்கியதால் எம்பெருமானுக்குத் தூதுவிடும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

பொன் உலகு பூமி எல்லாம் புள் இனங்கட்கே வழங்கி
என் இடரை மாலுக்கு இயம்பும் என – மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே
நீடுலகீர்! போய் வணங்கும் நீர்–58-

பறவைக் கூட்டங்களுக்கு நித்ய விபூதி (பரமபதம்) மற்றும் லீலா விபூதி (ஸம்ஸாரம்) ஆகியவற்றை
முழுவதுமாக அளித்து “என்னுடைய துயரத்தை எம்பெருமானிடம் அறிவியுங்கோள்” என்று
அருளிச் செய்த ஆழ்வார், ஸ்ரீவைகுண்டம் முதலிய ஸ்தலங்களுக்கு ஆசையுடன் செய்தி அனுப்பினார்.
பரந்த உலகத்தில் இருப்பவர்களே! இந்த ஆழ்வாரையே நீங்கள் சென்று வணங்குங்கோள்.

பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-

மையமர் வாள் நெடுங்கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2-

ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குரு நாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மா நெடுந் தேர்ப் படை நீறு எழச் செற்ற பிரான்
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே.–6-8-3-

தூ மது வாய்கள் கொண்டு வந்து, என் முல்லைகள் மேல் தும்பிகாள்!
பூ மது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய் செய்தகன்ற
மா மது வார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு
யாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே.–6-8-4-

நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த
செங்கட் கரு முகிலைச் செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை
எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–6-8-5-

என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லிச்
சென்மின்கள் தீ வினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6-

பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என்னாழிப் பிரான்
மாவை வல்வாய பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லிப்
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.–6-8-7-

பாசற வெய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக் குருகே! அருள் செய்தொரு நாள்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறு நோக்கிலள் பேர்த்து மற்றே.–6-8-8-

பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த் திரை மேல் உலவி இரை தேரும் புதா இனங்காள்!
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–6-8-9-

வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர் மேல் அசையும் அன்னங்காள்!
என் திரு மார்வற்கு என்னை இன்னவாறிவள் காண்மின் என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர் மறு மாற்றங்களே.–6-8-10-

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூத பிரான் அடி மேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
தோற்றங்களாயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராயே.–6-8-11-

——————

ஐம்பத்தொன்பதாம் பாசுரம்.
மா முனிகள், கேட்பவர்களின் நெஞ்சை உருக்கும்படி எம்பெருமானைக் கூப்பிடும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பரிதா – ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை
ஓதிடவே உய்யும் உலகு–59-

ஸர்வேஸ்வரன் அழகிய பரம பதத்தில் இருக்க முடியாதபடியும்,
கேட்பவர்களின் நெஞ்சை உருக்கும்படியும்,
ஆழ்வார் ஆராத காதலுடன் எம்பெருமானை அழைத்தார்.
இந்த ஸ்ரீஸூக்திகளைச் சொல்ல, உலகமே உஜ்ஜீவனத்தை அடையும்.

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட
நண்ணி ஒரு நாள் ஞாலத்தூடே நடவாயே.–6-9-2-

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பல நாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே!
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்
பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே!
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே.–6-9-4-

விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண் மீதியன்ற புற அண்டத்தாய்! என தாவி
உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ!–6-9-5-

பாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும்
தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–6-9-6-

உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து
அலகில் பொலிந்த திசை பத்தாய அருவேயோ!
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே.–6-9-7-

அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறி கொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8-

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-

குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி
சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும்
சிறு காலத்தை உறுமோ அந்தோ! தெரியிலே.–6-9-10-

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11-

——————

அறுபதாம் பாசுரம்.
மா முனிகள், திருவேங்கடமுடையான் திருவடிகளில் சரணடையும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளி செய்கிறார்.

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே
அலர் மகளை முன்னிட்டு அவன் தன் – மலர் அடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாள் இணையே
உன் சரணாய் நெஞ்சமே! உள்–60-

இவ் வுலகத்துக்கு உஜ்ஜீவனம் அளிப்பதற்காக ஸர்வேஸ்வரன்
அழகிய, உயர்ந்த திருவேங்கட மலையில் எழுந்தருளியுள்ளான்.
ஆழ்வார், பெரிய பிராட்டியார் புருஷகாரத்துடன் இப்படிப்பட்ட
ஸர்வேஸ்வரனின் திருவடிகளைத் திடமாகப் பற்றினார்.
நெஞ்சே! இப்படிப்பட்ட வகுளாபரணரின் திருவடிகளையே உபாயமாகக் கொள்.

உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1-

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திரு நேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத் தாமரை செந் தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2-

வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.–6-10-3-

ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திரு மா மகள் கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.–6-10-4-

புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒரு வில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துன பாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5-

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந் நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7-

நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–6-10-8-

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9-

அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-

அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.–6-10-11-

———————

அறுபத்தொன்றாம் பாசுரம்.
மா முனிகள், க்ரூரமான இந்த்ரியங்களுக்கு அஞ்சும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

உண்ணிலா ஐவருடன் இருத்தி இவ்வுலகில்
எண்ணிலா மாயன் எனை நலிய எண்ணுகின்றான்
என்று நினைந்து ஓலமிட்ட இன்புகழ் சேர் மாறன் என
குன்றி விடுமே பவக்கங்குல்–61

இனிய பெருமைகளை உடைய ஆழ்வார்,
எல்லையில்லாத ஆச்சர்யமான லீலைகளை உடைய ஸர்வேஸ்வரன், தன்னை இவ்வுலகில்
தன்னுள்ளே இருக்கும் விரோதிகளான இந்த்ரியங்களுடன், இவ்வுலகில்
தன்னை இருக்க வைத்ததை எண்ணிக் கதறினார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரை நினைக்கவே, இந்த ஸம்ஸாரம் என்னும் இருண்ட இரவு நீங்கும்.

உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1-

என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப் பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!–7-1-2-

வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன திருவடிச்
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3-

சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன்னடிப்
போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்
யாதும் யாவரும் இன்று நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலினீளிலை
மீது சேர் குழவி! வினையேன் வினை தீர் மருந்தே!–7-1-4-

தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5-

விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6-

ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்?
அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர்
குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன்னமுதோ!–7-1-7-

இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா!இமையோர் தம் குலமுதலே!–7-1-8-

குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில முதல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9-

என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10-!–

கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.–7-1-11-

——————-

அறுபத்திரண்டாம் பாசுரம்.
மா முனிகள், துயரத்தினால் அழும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகம் உற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து – இங்கிவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னும் நிலை சேர் மாறன்
அஞ்சொல் உற நெஞ்சு வெள்ளையாம்–62-

இரவும் பகலும் துயரம் அதிகமான பராங்குச நாயகி மோஹித்தாள்.
ஆழ்வார், பராங்குச நாயகியின் தாயார் நிலையை அடைந்து ஸ்ரீரங்கநாதனை
“இங்கு இந்தப் பெண்பிள்ளை விஷயமாக நீர் என்ன செய்ய எண்ணி உள்ளீர்?” என்று முறையிட்டார்.
இந்த ஸ்ரீஸூக்திகளை எண்ணினவாறே, நெஞ்சம் தூயதாகும்.

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கை துழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா!
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்!
என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில் வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!
என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்;
வானமே நோக்கும் மையாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட
ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்
காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’
இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;
எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;
‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4-

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்
‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கண்ணீர் மல்க
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே!
அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல் செய் தானே!–7-2-5-

‘மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னும்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள் பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6-

‘பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!
பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட
கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’
என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்
என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7-

‘கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக்
கோ நிரை காத்தவன்!’ என்னும்;
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்;
‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;
எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்;
‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;
செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்!
என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8-

என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண்டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்;
‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்;
‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்;
‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10-

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்
வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை
ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-

————–

அறுபத்துமூன்றாம் பாசுரம்.
மா முனிகள், தென்திருப்பேரில் தன் நெஞ்சை இழந்ததைப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் மோகம்
தெள்ளிய மால் தென் திருப்பேர் சென்று புக – உள்ளம் அங்கே
பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு
அற்றவர்கள் தாம் ஆழியார்–63-

தன் தாயார் சொன்ன பகவானின் இனிய திருநாமங்களைக் கேட்ட ஆழ்வார்,
உணர்த்தி பெற்று, தன்னுடைய நெஞ்சமானது தென்திருப்பேர்நகரில் எழுந்தருளியிருக்கும்
ஸர்வேஸ்வரன் விஷயமாக மிகவும் ஈடுபட்டு இருப்பதையும்,
அங்கே செல்லத் தொடங்குவதையும் அருளிச்செய்தார்.
இப்படிப்பட்ட ஆழ்வாருக்காகவே இருப்பவர்கள், ஆழ்ந்த நெஞ்சை உடையவர்கள்.

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித்
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த
வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே– .–7-3-1-

நானக் கருங்குழல் தோழிமீர் காள்!
அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன்
என் வசம் அன்று இது இராப்பகல் போய்த்
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ்
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன்
செங்கனி வாயின் திறத்ததுவே.–7-3-2-

செங்கனி வாயின் திறத்ததாயும்
செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ!
நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3-

இழந்த எம்மாமைத் திறத்துப் போன
என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!
ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்--7-3-4-

முனிந்து சகடம் உதைத்து மாயப்
பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள்!
முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே
காலம் பெற என்னைக் காட்டுமினே.–7-3-5-

காலம் பெற என்னைக் காட்டுமின்கள்
காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான்
நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த
நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
கூடு புனல் திருப் பேரெயிற்கே.–7-3-6-

பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை
செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப்
பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங்குடையம் தோழீ!
என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது?
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே.–7-3-7-

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக்
கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும்
நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த
தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே.–7-3-8-

சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்!
அன்னையர்காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு?
நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க் கடல் ஞாலம் உண்ட
கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர் வள ஒண் கழனிப் பழனத்
தென் திருப் பேரெயில் மாநகரே.–7-3-9-

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
நாண் எனக்கு இல்லை என் தோழிமீர் காள்!
சிகர மணி நெடு மாட நீடு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
நூற்று வரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என்
நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–7-3-10-

ஊழிதோறு ஊழி உருவும் பேரும்
செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை
அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந் தாதி ஓர் ஆயிரத்துள்
இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார்
அவர் அடிமைத் திறத்து ஆழியாரே.–7-3-11-

————–

அறுபத்துநான்காம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் வெற்றிச் சரித்ரங்களைப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

ஆழி வண்ணன் தன் விசயம் ஆனவை முற்றும் காட்டி
வாழ் இதனால் என்று மகிழ்ந்து நிற்க – ஊழில் அவை
தன்னை இன்று போல் கண்டு தான் உரைத்த மாறன் சொல்
பன்னுவரே நல்லது கற்பார்–64-

கடல்நிற வண்ணனான எம்பெருமான் தன்னுடைய வெற்றிச் சரித்ரங்களை ஆழ்வாருக்குக் காண்பித்து
“இதை அனுபவித்து உம்மை தரித்துக் கொள்ளும்” என்று மகிழ்ச்சியுடன் இருந்தான்.
ஆழ்வார், முற்காலத்தில் நடந்த அந்த வெற்றிச் சரித்ரங்களை தற்போது நடப்பதுபோல் அனுபவித்து,
அதற்கு வெளிப்பாடாக இப்பாசுரங்களை அருளிச் செய்தார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அனுஸந்திப்பவர்கள்
உயர்ந்த வார்த்தைகளைச் சொன்னவர்களாகக் கருதப்படுவர்.

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1-

ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2-

நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–7-4-3-

நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–7-4-4-

ஊணுடை மல்லர் தகர்த்த ஒலி மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–7-4-5-(அறை தட்டுதல் -எறி பாட பேதம் )

போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே.–7-4-6-

மாறு நிரைத் திரைக் குஞ்ச ரங்களின்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே.–7-4-7-

நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக் கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே–7-4-8-

அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே.–7-4-9-

மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.–7-4-10-

குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11- .

———————

அறுபத்தைந்தாம் பாசுரம்.
மா முனிகள், “எம்பெருமானின் வெற்றிகளுக்குக் காரணமான எம்பெருமானின்
திருவவதாரங்களில் ஜனங்களுக்கு ஏன் ஆசை இல்லாமல் இருக்கிறது?” என்று வருந்திப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம்
பற்றாம் விபவ குணப் பண்புகளை – உற்றுணர்ந்து
மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்துரைத்த மாறன் சொல்
பண்ணில் இனிதான தமிழ்ப் பா–65-

தசரதன், வஸுதேவன் முதலியவர்கள் சாஸ்த்ரத்தின் ஸாரத்தை உணர்ந்து,
எம்பெருமானின் வெற்றிக்குக் காரணமான அவனுடைய விபவாவதாரங்களில் அன்பு செய்தார்கள்.
இதை ஆராய்ந்து அறிந்த ஆழ்வார், இவ்வுலகில் மக்கள் இந்த பகவத் விஷயத்தை இழப்பதைத் தகுந்த முறையில் அருளிச்செய்தார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரின் இனிய இசையை உடைய ஸ்ரீஸூக்திகள், தமிழில் அமைந்திருக்கும் சிறந்த சாஸ்த்ரம்.

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-

நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.–7-5-2-

‘கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே .–7-5-3-

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?
பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.–7-5-4-

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திரு வுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே.–7-5-5-

கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்டமிலா வண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க் கிடர் நீக்கிய
கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே.–7-5-6-

கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழு நாள்
இண்டைச் சடை முடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே.–7-5-7-

செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரி யுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே.-7-5-8-

மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே –7-5-9-

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10-சேர்த்து-சேர்த்தி -பாட பேதம் –

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11-

————-

அறுபத்தாறாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் குணங்களைச் சொல்லிக் கூப்பிடும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன்
ஆம் அழகு வேண்டற்பாடாம் அவற்றை – தூ மனத்தால்
நண்ணி அவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலை நண்ணார் ஏழையர்–66-

இங்கே சொல்லப்பட்ட எம்பெருமானை நேரில் அடைந்து, காண ஆசைப்பட்ட ஆழ்வார்,
நன்றாக உருகி, “ஓ” என்று சொல்லிக் கதறி, சந்தத்துடன் கூடிய வேதத்தில் இருந்து,
எம்பெருமானின் திருக் கல்யாண குணங்களை அவனுடைய அழகு மற்றும் மேன்மையுடன் பெற்று
தன் மனக் கண்ணால் கண்டு அனுபவித்தார்.
இப்படிப்பட்ட ஸ்வாமியான ஆழ்வாரைச் சென்று அடையாதவர்கள், ஏழைகள் (அஜ்ஞானிகள்).

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ! தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-

என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர் எரி கால் விண்ணுயிர்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-

காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன் மாரி தன்னைப்
பூத் தண் துழாய் முடியாய்! புனை கொன்றை யஞ் செஞ்சடையாய்
வாய்த்த என் நான்முகனே! வந்து என் ஆருயிர் நீ ஆனால்
ஏத்தருங் கீர்த்தியினாய்!உன்னை எங்குத் தலைப் பெய்வனே?–7-6-3-

எங்குத் தலைப் பெய்வன் நான்! எழில் மூவுலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ
கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–7-6-4-

என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?–7-6-5-

வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச்
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தர மேற் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே.–7-6-6-

என் திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நா மகளை அகம்பாற் கொண்ட நான் முகனை
நின்ற சசி பதியை நிலங்கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ?–7-6-7-

ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–7-6-8-

காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9-

ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10-

புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே.–7-6-11-

—————

அறுபத்தேழாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் திருமுகத்தின் அழகு தன்னை ஒருபடிப்பட்டு நலிவதைப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மால் அழகு
சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க – ஆழு மனம்
தன்னுடனே அவ்வழகைத் தான் உரைத்த மாறன் பால்
மன்னும் அவர் தீவினை போம் மாய்ந்து–67-

எம்பெருமானின் வடிவழகு நிலையில்லாத நெஞ்சைக் கொண்ட ஸம்ஸாரிகளை உருக்கும்.
அதே அழகு ஆழ்வாரைச் சூழ்ந்து, எல்லா இடமும் இருக்க, ஆழ்வாரின் நெஞ்சமும் துக்கக் கடலில் ஆழ்ந்தது.
அந்த நெஞ்சத்துடன் கூடி அந்த அழகை அனுபவித்து அருளிச்செய்தார்.
இப்படிப்பட்ட ஆழ்வாருடன் கூடியிருப்பவர்களின் பாபங்கள் அழிக்கப்படும்.

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திரு மூக்கு எனதாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–7-7-2-

வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினை கொல்?
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோ அறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–7-7-3-திசைகள் எல்லாம் பாட பேதம்

இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்?மதனன்
தன்னுயிர்த் தாதை கண்ணப் பெருமான் புருவம் மவையே
என்னுயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே.–7-7-4-

என்று நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே.–7-7-5-

உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம்? என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர் கொல்?
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே.–7-7-6-

காண்மின்கள் அன்னையார்காள்! என்று காட்டும் வகை அறியேன்!
நாண் மன்னு வெண் திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல்
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?
கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே.–7-7-7-

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8-

கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்
உள் கொண்ட நீல நன்னூல் தழை கொல்?அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.–7-7-9-

நிற்றி முற்றத்துள் என்று நெரித் தகையராய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச் சோதி மணி நிறமாய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்! நசை என் நுங்கட்கே?–7-7-10-

கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.–7-7-11-

—————

அறுபத்தெட்டாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் விசித்ரமான (பரந்த, பலவிதமாக இருக்கும்)
விஸ்வரூபத்தை அனுபவித்து ஆச்சர்யப்பட்டுப் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மாயாமல் தன்னை வைத்த வைசித்திரியாலே
தீயா விசித்திரமாச் சேர் பொருளோடு – ஓயாமல்
வாய்ந்து நிற்கும் மாயன் வளம் உரைத்த மாறனை நாம்
ஏய்ந்துரைத்து வாழு நாள் என்று?--68-

ஆழ்வாரின் சேஷத்வத்தைக் காத்து, ஸர்வேஸ்வரன் தான் பரந்து, விரிந்து இருக்கும் தன்மையில்,
1) தீ தொடக்கமான பஞ்ச பூதங்களுடனும், அவற்றின் பல்வேறுபட்ட உருவங்களுடனும்
2) பல்வேறுபட்ட சேதனர்களுடனும், அவற்றின் தோஷங்களைப் பார்க்காமல் கூடி இருந்தான்.
ஸர்வேஸ்வரனின் இப்படிப்பட்ட பரந்த சொத்துக்களை அருளிச்செய்தார் ஆழ்வார்.
எப்பொழுது நாம் ஆழ்வாரை அடைந்து அவரின் திருநாமங்களைச் சொல்லி வாழ்வோம்?

மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-

அங்கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய்
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுட ராய் இருளாய்ப்
பொங்கு பொழி மழையாய்ப் புகழாய்ப் பழியாய்ப் பின்னும் நீ
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!-7-8-2-

சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்
எத்தனையோர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும்
ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் வியவாய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே!–7-8-3-வித்தகத்தால் பாட பேதம்

கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல் யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–7-8-4-

பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5-

மயக்கா! வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்றருளாய்
அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னு நீ
துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே.–7-8-6-

துயரங்கள் செய்யும் கண்ணா !சுடர் நீள் முடி யாய்!அருளாய்
துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த்
துயரங்கள் செய்து வைத்தி;இவை என்ன சுண் டாயங்களே.–7-8-7-

என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளுங்கண்ணா!
இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை
முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும்
பின்னும் உள்ளாய்!புறத்தாய்!இவை என்ன இயற்கைகளே–7-8-8-.

என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே.–7-8-9-

இல்லை நுணுக்கங்களே இதனி்ற் பிறி தென்னும் வண்ணம்
தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே
அல்லித் துழாய் அலங்கல் அணிமார்ப!என் அச்சுதனே!
வல்லதோர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்காம் வண்ணமே –7-8-10-

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ணத்தால் குரு கூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.–7-8-11-

—————

அறுபத்தொன்பதாம் பாசுரம்.
மா முனிகள், தன்னை எம்பெருமான் திருவாய்மொழி பாடவைத்த செயலை மிகவும் ஈடுபட்டுப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

என்தனை நீ இங்கு வைத்தது ஏதுக்கென மாலும்
என்தனக்கும் என்தமர்க்கும் இன்பமதா – நன்று கவி
பாடவெனக் கைம்மாறு இலாமை பகர் மாறன்
பாடணைவார்க்கு உண்டாம் இன்பம்-69-

ஆழ்வார் எம்பெருமானிடம் “எனக்குப் பொருத்தம் இல்லாத இந்த ஸம்ஸாரத்தில் என்னை ஏன் வைத்தாய்?” என்று வினவ,
எம்பெருமான் “எனக்கும் என் அடியார்களுக்கும் இன்பத்தைக் கொடுக்கும் பாசுரங்களைப் பாட” என்று பதிலுரைத்தான்.
எம்பெருமான் செய்த நன்மைக்குத் தான் எந்த ப்ரத்யுபகாரமும் செய்ய முடியாது என்று அருளிச்செய்தார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரை அடைபவர்கள் மிகவும் ஆனந்தமாக இருப்பர்.

என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-

என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-

ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வந்து புகுந்து நல் இன்கவி
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3-

அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக் கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர் கண்டே.–7-9-4-

சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.–7-9-5-

இன் கவி பாடும் பரம கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6-

வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7-

ஆர்வனோ ஆழி அங் கை எம்பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்
சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே ? –7-9-8-

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9-

உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.–7-9-10-

இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11-

————–

எழுபதாம் பாசுரம்.
மா முனிகள், திருவாய்மொழி பாடிக் கைங்கர்யம் செய்ய ஆசைப்படும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு
அன்புற்று வாழ் திருவாறன்விளையில் – துன்பம் அறக்
கண்டடிமை செய்யக் கருதிய மாறன் கழலே
திண் திறலோர் யாவர்க்கும் தேவு–70-

தன்னுடைய துன்பங்களைப் போக்கி யருளுவதற்காக, தன்னை இனிய திருவாய்மொழியைப் பாட வைக்க,
எம்பெருமான் பெரியபிராட்டியாருடன் திருவாறன்விளையில் ஆனந்தமாக
எழுந்தருளியிருப்பதைக் கண்டு, அங்கே சென்று அவர்களுக்கு தொண்டு செய்ய ஏங்கினார்.
ஆழ்ந்த விஸ்வாஸத்தை உடையவர்களுக்கு, இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளே பர தெய்வம்.

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கை தொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-

ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக் குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கை தொழக் கூடுங்கொலோ?–7-10-2-

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக் கண்டு கை தொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும் புகழ் நான் மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில் திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3-

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-

மலரடிப் போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
உலக மலி புகழ் பாட நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.–7-10-5-

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீ வினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–7-10-6-

நீணக ரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன்
வாண புரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7-

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை
ஒன்றி வலஞ் செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–7-10-8-

‘தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கை தொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–7-10-9-

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-

————–

எழுபத்தொன்றாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் குணங்களையும் உண்மை நிலையையும் ஸந்தேஹப்பட்டு,
அந்த ஸந்தேஹங்கள் தீரப்பெற்ற ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

தேவன் உரை பதியில் சேரப் பெறாமையால்
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் – யாவையும்
தானாம் நிலையும் சங்கித்து அவை தெளிந்த மாறன் பால்
மாநிலத்தீர்! நங்கள் மனம்--71-

திருவாறன்விளையில் இருக்கும் எம்பெருமானுடன் கூடி அவனுக்குத் தொண்டு செய்ய முடியாததால்,
எம்பெருமான் அடியார்களிடத்தில் அடி பணிந்திருக்கும் தன்மையையும்,
சேதனாசேதனங்கள் தான் என்று சொல்லும்படி இருக்கையையும்,
தேவையில்லாமல் ஸந்தேஹப்பட்ட ஆழ்வார், அந்த ஸந்தேஹங்கள் நீங்கப் பெற்றார்.
இப்பரந்த உலகில் வாழ்பவர்களே! நம் நெஞ்சம் அவ்வாழ்வாரிடத்தில் லயித்து இருக்கும்.

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-

எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-

உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான
இவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–8-1-4-

ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த
சீருயிரேயோ ! (சீரியரேயோ) மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-

எங்கு வந்துறுகோ !என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே—8-1-6-

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே ! பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7-

மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகணைப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8-

யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10-

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-

——————

எழுபத்திரண்டாம் பாசுரம்.
மா முனிகள், ஆத்மா மற்றும் ஆத்மாவின் உடைமைகளில் தனக்கு ஆசை இல்லாததை
அறிவித்த ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

நங்கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய
இங்கிவற்றில் ஆசை எமக்குளதென்? – சங்கையினால்
தன் உயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான்
அந்நிலையை ஆய்ந்துரைத்தான் அங்கு–72-

முற்றும் உணர்ந்த எம்பெருமான், ஆழ்வாரின் நெஞ்சை நன்றாக ஆராய,
ஆழ்வாரும் தனக்கு இவ்வுலகில் ஈடுபாடு இருக்குமோ என்று தேவையில்லாமல் ஸந்தேஹப்பட்டு,
தன்னைப்பற்றியும் தன் உடைமைகளைப்பற்றியும் நன்கு ஆராய்ந்து,
தனக்கு அவற்றில் விருப்பம் இல்லை என்பதை உணர்ந்து,
தான் உணர்ந்ததை அவனுக்கு அறிவித்து அருளிச் செய்தார்.

நங்கள் வரி வளை யாயங்களோ
நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-

காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான்
இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் !
இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான்
எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-

கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன்
கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல்
பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர்
ஆழி வலவனை யாதரித்தே–8-2-4-

ஆழி வலவனை ஆதரிப்பும்
ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம்
தோழியர்காள் ! நம்முடையமே தான் ?
சொல்லுவதோ ?இங்கரியது தான்
ஊழி தோறூழி யொருவனாக
நன்கு உணர்வார்க்கும் உணரலாகா
சூழலுடைய சுடர் கொளாதித்
தொல்லை யஞ்சோதி நினைக்கும் காலே-8-2-5-

தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால்
என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை
மா மலர்க்கண் வளர்கின்ற மாலே-8-2-6-

மாலரி கேசவன் நாரணன்
சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் !
என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்பதாணை
உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்!
பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும்
அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி
அவனவை காண் கொடானே–8-2-8-

காண் கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக்
கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9-

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்
யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு
பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான்
நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10-

பாதமடைவதன் பாசத்தாலே
மற்ற வன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல்
வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி
இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-

——————-

எழுபத்துமூன்றாம் பாசுரம்.
மா முனிகள், ஆழ்வார் எம்பெருமானுக்குப் பரிவுகாட்ட யாரும் இல்லை என்று வருந்த,
எம்பெருமான் தனக்குப் பரிவு காட்டுபவர்கள் உள்ளனர் என்பதைக் காட்ட
அதைக் கண்டு பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

அங்கமரர் பேண அவர் நடுவே வாழ் திருமாற்கு
இங்கோர் பரிவரிலை என்றஞ்ச – எங்கும்
பரிவருளர் என்னப் பயம் தீர்ந்த மாறன்
வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார்–73-

மங்களாசாஸனம் செய்யும் நித்யஸூரிகள் நடுவில் பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும்
ஸ்ரீ ய:பதியான எம்பெருமானுக்கு இந்த ஸம்ஸாரத்தில் மங்களாசாஸனம்
செய்பவர்கள் இல்லை என்று ஆழ்வார் பயந்தார்.
எம்பெருமான் “எனக்காகப் பரிவு காட்டுபவர்கள் எங்கும் உளர்” என்று சொல்ல, ஆழ்வாரின் பயம் நீங்கியது.
வரிகள் பொருந்திய சதங்கைகளால் அலங்கரிக்கப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை அடைபவர்கள்
உஜ்ஜீவனத்தை அடைவர்.

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

சரணமாகிய நான்மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான் பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்
கரணப் பல் படை பற்றறவோடும் கனலாழி
அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–8-3-2-

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வதோர் காரிருளூழி யொத்துளதால் உன்
கோலம் காரெழில் காணலுற் றாழும் கொடியேற்கே–8-3-4-

கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5-

பணியா வமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6-

வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-

என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-கொண்டு அருளி -பாட பேதம் –

திருமால் ! நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கரு மா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9-

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-

————

எழுபத்துநான்காம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானுடைய வீரம், சௌர்யம் முதலிய குணங்களையும்
சாபம் மற்றும் அனுக்ரஹத்தைக் கொடுக்கக்கூடியவர்களுடன் சேர்ந்து இருக்கும் தன்மையையும்
அவன் காட்டக் கண்டு, பயமற்றுப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை
அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும்
சீரார் பரிவருடன் சேர்த்தியையும் – பாரும் எனத்
தான் உகந்த மாறன் தாள் சார் நெஞ்சேசாராயேல்
மானிடவரைச் சார்ந்தது மாய்–74-

ஆழ்வாருக்கு இன்னமும் இருக்கும் பயத்தைப் போக்க ஸர்வேஸ்வரன் தன் வீரம் முதலிய குணங்களையும்,
தான் சிறந்த அடியார்களுடன் இருப்பதையும் “பாரும்” என்று சொல்லிக் காட்ட,
அவற்றைக் கண்ட ஆழ்வார் மிகவும் மகிழ்ந்தார்.
நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை அடைவாயாக;
அடையவில்லை என்றால், ஸம்ஸாரிகளை அடைந்து, நசித்துப் போ.

வார்கடா வருவி யானை மா மலையின்
மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து
அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட
மாட மீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர் கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1-

எங்கள் செல் சார்வு யாமுடையமுதம்
இமையவரப்பன் என்னப்பன்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
செங்கயல்களும் தேம் பணை புடை சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர் மற்றென்னமர் துணையே–8-4-2-

என்னமர் பெருமான் இமையவர் பெருமான்
இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள
என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணி கொள் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும்
பிறிதில்லை எனக்கே–8-4-3-

பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப்
பேருருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த
கோல மாணிக்கம் என்னம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்
அடி இணைய யல்லதோர் அரணே-8-4-4-

அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை
அது பொருளாகிலும் அவனை
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது
ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-8-4-5-

எனக்கு நல்லரணை எனதாருயிரை
இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத்
தடங்கடல் பள்ளி யம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர்
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக் கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6-

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட
அத் திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும்
செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-

திகழ வென் சிந்தையுள் இருந்தானைச்
செழு நிலைத் தேவர் நான்மறையோர்
திசை கை கூப்பி ஏத்தும்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை
புகர் கொள் வானவர்கள் புகலிடம் தன்னை
அசுரர் வன்கையர் வெங்கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும்
படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–8-4-8-

படைப்பொடு கெடுப்புக் காப்பவன்
பிரம பரம்பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே
புகழ்வில்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார்
கூரிய விச்சை யோடு ஒழுக்கம்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே–8-4-9-

அமர்ந்த நாதனை யவரவராகி
அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம் பதி
அவனி தேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக் கண் அம்மானை
நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன்
சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும்
பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-

——————

எழுபத்தைந்தாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானுடைய வடிவழகை அனுபவிக்க முடியாமல் மிகவும் வருந்திப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மாயன் வடிவழகைக் காணாத வல்விடா
யாய் அதற விஞ்சி அழுது அலற்றும் – தூய புகழ்
உற்ற சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல்
அற்ற பொழுதானது எல்லியாம்–75-

ஸர்வேஸ்வரனின் திருமேனி அழகைக் கண்டு அனுபவிக்க முடியாததால் மிகுந்த துயரத்தை அடைந்த ஆழ்வார்,
அந்த வருத்தம் மிகவும் அதிகமாகி, அழுது, எம்பெருமானை ஒரு க்ரமமில்லாமல் கூப்பிட்டார்.
இப்படிப்பட்ட பரிசுத்தமான பெருமைகளை உடைய ஆழ்வாருடன் கூடி இருக்கும்பொழுது அது பகல்,
இந்த அனுபவத்திற்குத் தடை வந்தால் அது இருண்ட இரவு.

மாயக் கூத்தா வாமனா
வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா
சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி
தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம் போல் வருவானே
ஒரு நாள் காண வாராயே-8-5-1-

காண வாராய் என்று என்று
கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்டலமந்தால்
இரங்கி யொருநாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயிறுதிக்கும்
கருமா மாணிக்கம்
நாள் நன் மலை போல் சுடர்ச் சோதி
முடி சேர் சென்னி யம்மானே–8-5-2-

முடி சேர் சென்னி யம்மா
நின் மொய் பூந்தாமத் தண் துழாய்
கடி சேர் கண்ணிப் பெருமானே
என்று என்றே ஏங்கி அழுதக்கால்
படி சேர் மகரக் குழைகளும்
பவள வாயும் நால் தோளும்
துடி சேரிடையும் அமைந்ததோர்
தூ நீர் முகில் போல் தோன்றாயே–8-5-3-

தூ நீர் முகில் போல் தோன்றும்
நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர்க் கமலக் கண்களும்
வந்தென் சிந்தை நிறைந்தவா
மாநீர் வெள்ளி மலை தன் மேல்
வண் கார் நீல முகில் போலே
தூ நீர்க் கடலுள் துயில்வானே
எந்தாய் சொல்ல மாட்டேனே-8-5-4-

சொல்ல மாட்டேன் அடியேன்
உன் துளங்கு சோதித் திருப்பாதம்
எல்லையில் சீரிள நாயிறு
இரண்டு போல் என்னுள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு
உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழுதுண்ட
மா நீர்க் கொண்டல் வண்ணனே-8-5-5-

கொண்டல் வண்ணா குடக்கூத்தா
வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன்மேல் தான் மண் மேல்  தான்
விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண
ஒரு நாள் வந்து தோன்றாயே-8-5-6-

வந்து தோன்றாயன்றேல்
உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால்
சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்தமில்லாக் கதிர் பரப்பி
அலர்ந்தது ஒக்கும் அம்மானே–8-5-7-

ஒக்கும் அம்மான் உருவம் என்று
உள்ளம் குழைந்து நாணாளும்
தொக்கமே கப்பல் குழாங்கள்
காணும் தோறும் தொலைவன் நான்
தக்க வைவர் தமக்காயன்று
ஈரைம்பதின்மர் தாள் சாய
புக்க நல் தேர்ப் தனிப் பாகா
வாராயிதுவோ பொருத்தமே-8-5-8-

இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய்
ஏறு மிருஞ் சிறைப்புள்
அதுவே கொடியா வுயர்த்தானே
என்று என்று ஏங்கி யழுதக்கால்
எதுவேயாகக் கருதுங்கொல்
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை
உத்தர மதுரைப் பிறந்த மாயனே-8-5-9-

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா
நீ யின்னே
சிறந்த கால் தீ நீர் வான்
மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல்
இவற்றுள் எங்கும் கண்டு கொள்
இறந்து நின்ற பெரு மாயா
உன்னை எங்கே காண்கேனே-8-5-10-

எங்கே காண்கேன்
ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால்
அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர்
எல்லியும் காலையே-8-5-11-

—————

எழுபத்தாறாம் பாசுரம்.
மாமுனிகள், ஆழ்வாரின் துயரத்தைப் போக்க, எம்பெருமான்
ஆழ்வாருக்கு மிக அருகில் வந்து ஆழ்வாருடன் கலந்ததைப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு
மெல்ல வந்து தான் கலக்க வேணும் என – நல்லவர்கள்
மன்னு கடித்தானத்தே மால் இருக்க மாறன் கண்டு
இந்நிலையைச் சொன்னான் இருந்து--76-

ஸர்வேஸ்வரன் மெதுவே வந்து, பல இரவுகளும் பகல்களுமாக ஆழ்வாருக்கு
இருந்த வருத்தத்தைப் போக்குவதற்காக, சிறந்த வைதிகர்கள் வாழும்
திருக்கடித்தானத்தில் எழுந்தருளினான்.
அதைக் கண்ட ஆழ்வார் நிலைபெற்று, எம்பெருமானைப் பற்றி அருளிச் செய்தார்.

எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-

திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்
ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2-

ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான்
திரு வமர் மார்பன் திருக் கடித் தானத்தை
மறவி யுறைகின்ற மாயப் பிரானே–8-6-3-

மாயப் பிரான் என் வல் வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான்
தேசத்தமர் திருக் கடித் தானத்தை
வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே-8-6-4-

கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5-

கூத்த வம்மான் கொடியேன் இடர் முற்றவும்
மாய்த்த வம்மான் மது சூத வம்மான் உறை
பூத்த பொழில் தண் திருக் கடித் தானத்தை
ஏத்த நில்லா குறிக் கொண்மின் இடரே–8-6-6-

கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே-8-6-7-

தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும்
வானிந்நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தனதாய்ப் பதியே–8-6-8-

தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும்
மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான் உறை
தேசத்தமரர் திருக்கடித் தானத்துள்
ஆயர்க்கதிபதி அற்புதன் தானே–8-6-9-

அற்புதன் நாரணன் அரி வாமனன்
நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம்
நற் புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்
கற்பகச் சோலைத் திருக் கடித் தானமே-8-6-10-

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11-

—————-

எழுபத்தேழாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமான் ஆழ்வாரின் கருத்தைப் பின்பற்றி அவருடன் கலந்ததைப் பேசும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

இருந்தவன் தான் வந்து இங்கு இவர் எண்ணம் எல்லாம்
திருந்த இவர் தம் திறத்தே செய்து – பொருந்தக்
கலந்து இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு–77-

திருக்கடித்தானத்தில் எழுந்தருளியிருக்கும் ஸர்வேஸ்வரன் ஆழ்வார் இருப்பிடம் வந்து,
ஆழ்வாரின் ஆசைகளைப் பூர்த்தி செய்து,
கருணையைப் பொழிந்து ஆழ்வாருடன் ஒரு நீராகக் கலந்தான்.
அதன்பின் எம்பெருமான் ஆனந்தமாக இருப்பதைக் கண்ட ஆழ்வார் அதைப் பற்றி அருளிச் செய்தார்.

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என் தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-

இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2-

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-

மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான்
தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே-8-7-4-

திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார்
புகழும் புகழ் தானது காட்டித் தந்து என்னுள்
திகழும் மணிக் குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே–8-7-5-

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–8-7-6-

செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க் கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–8-7-7-

அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன்
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8–

வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும்
வயிற்றில் கொண்டு நின்ற ஒரு  மூவுலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே—8-7-9-

வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால்
பைத்தேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே –8-7-10-

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடி சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப் பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11-

—————-

எழுபத்தெட்டாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமான் ஆழ்வாருக்கு ஆத்ம ஸ்வரூபத்தின் பெருமையைக் காட்ட
அதைக் கண்டு பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

கண் நிறைய வந்து கலந்த மால் இக்கலவி
திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து – தண்ணிதெனும்
ஆருயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்துரைத்தான்
காரிமாறன் தன் கருத்து–78-

ஆழ்வாருடன் கலந்த எம்பெருமான், இந்தக் கலவி நிரந்தரமாக இருக்க ஆசைப்பட்டு,
ஆழ்வாரின் கண்களை நிறைத்து இருந்து, அணு ஸ்வரூபத்தில் நுண்ணியதாய்
இருக்கும் ஆத்மாவின் பெருமைகளைக் காட்டினான்.
அதை ஆராய்ந்த ஆழ்வார் தன் திருவுள்ளக் கருத்தை வெளியிட்டருளினார்.

கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே–8-8-1-

அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம் படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன் உணர்விலும்பர் ஒருவனே–8-8-2-

உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-

யானும் தானாய் ஒழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4-

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே–8-8-5-

நன்றாய் ஞானம் கடந்து போய்
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ்
உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள்
செற்றுக் களைந்து பசை யற்றால்
அன்றே அப்போதே வீடு
அதுவே வீடு வீடாமே–8-8-6-

அதுவே வீடு வீடு பேற்று
இன்பம் தானும் அது தேறி
எதுவே தானும் பற்று இன்றி
ஆதும் இலிகளா கிற்கில்
அதுவே வீடு வீடு பேற்று
இன்பம் தானும் அது தேறாது
எதுவே வீடு எது இன்பம் என்று
எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே–8-8-7-

எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று
இல்லத்தாரும் புறத்தாரும்
மொய்த்து ஆங்கு அலறி முயங்கத்
தாம் போகும் போது உன்
மத்தர் போல் பித்தே ஏறி
அனுராகம் பொழியும் போது எம் பெம்மானோ
டொத்தே சென்று அங்கு உள்ளம்
கூடக் கூடிற்றாகில் நல்லுறைப்பே–8-8-8-

கூடிற்றாகில் நல் உறைப்பு
கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை யுயர் கொடி
எம்மாயனாவாத துவதுவே
வீடைப் பண்ணி யொரு பரிசே
எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
ஓடித் திரியும் யோகிகளும்
உளரும் இல்லை அல்லரே–8-8-9-

உளரும் இல்லை அல்லராய்
உளராய் யில்லை யாகியே
உளர் எம் ஒருவர் அவர் வந்து
என் உள்ளத்துள்ளே யுறைகின்றார்
வளரும் பிறையும் தேய்பிறையும் போலே
அசைவும் ஆக்கமும்
வளருஞ்சுடரும் இருளும் போல்
தெருளும் மருளும் மாய்த்தோமே–8-8-10-

தெருளும் மருளும் மாய்த்துத்
தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம்
அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன்
ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும்
நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-

—————

எழுபத்தொன்பதாம் பாசுரம்.
மா முனிகள், ஆத்மா எம்பெருமானைத் தவிர மற்றவர்களுக்கு அடிமைப்பட்டு இருப்பதை
விலக்கிப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன்
ஒருமா கலவி உரைப்பால் – திரமாக
அன்னியருக்கு ஆகாது அவன் தனக்கே ஆகும் உயிர்
இந்நிலையை ஓர் நெடிதா–79-

ஆழ்வார் கண்ணனிடத்தில் ஈடுபாடு கொண்ட ஒரு பெண்ணின் (பராங்குச நாயகி) நிலையை அடைந்து,
அவளின் தோழியின் பாவனையில் பராங்குச நாயகியின் திருமேனியில் கலவியின் அடையாளங்களைச் சொன்னாள்.
இந்நிலையில், ஆத்மாவின் நிலையை நன்கு ஆராய்ந்து, ஆத்மா எம்பெருமானுக்கே அடிமைப்பட்டவன் என்றும்
அந்த சேஷத்வம் (அடிமைத்தனம்) தகுந்த தலைவனான எம்பெருமானுக்கு மட்டுமே,
வேறு யவருக்கும் இல்லை என்றும் உணர்ந்து கொள்.

கருமாணிக்க மலை மேல்
மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை
உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல்
குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்
அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-

அன்னைமீரிதற் கென் செய்கேன்
அணி மேருவின் மீதுலவும்
துன்னு சூழ் சுடர் நாயிறும்
அன்றியும் பல் சுடர்களும் போல்
மின்னு நீண் முடி யாரம்
பல்கலன் தானுடை யெம்பெருமான்
புன்னை பூம் பொழில் சூழ்
திருப் புலியூர் புகழும் இவளே–8-9-2-

புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க்
கடல் தீப் பட்டு எங்கும்
திகழும் எரியோடு செல்வது ஒப்ப
செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு
அசுரரைப் பொன்றுவித்தான்
திகழும் மணி நெடு மாடம் நீடு
திருப் புலியூர் வளமே–8-9-3-

ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும்
பெரும் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தண் பணைக் குட்ட
நாட்டுத் திருப் புலியூர்
சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ்
தேவ பிரான்
பேர் வளம் கிளர்ந்ததன்றிப் பேச்சு இலள்
இன்று இப் புனை இழையே–8-9-4-

புனையிழைகள் அணிவும்
ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று
இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும்
தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி
அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-

திருவருள் மூழ்கி வைகலும்
செழு நீர் கண்ண பிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடை
யாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று
சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத்
தது மெல்லியல் செவ்விதழே–8-9-6-

மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க
வீங்கிளந்தான் கமுகின்
மல்லிலை மடல் வாழை
ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து
புல்லிலைத் தெங்கினூடு
காலுலவும் தண் திருப் புலியூர்
மல்லலஞ் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள்
இம் மடவரலே–8-9-7-

மடவரல் அன்னை மீர்கட்கு
என் சொல்லிச் சொல்லுகேன் மல்லைச் செல்வ
வடமொழி மறை வாணர்
வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்
தண் திருப் புலியூர்
படவர வணையான் தன் நாமம் அல்லால்
பரவாள் இவளே–8-9-8-

பரவாள் இவள் நின்று இராப்பகல்
பனி நீர் நிறக் கண்ணபிரான்
விரவாரிசை மறை வேதியரொலி
வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந்தொறும்தாமரைக்கயம்
தீவிகை நின்றலரும்
புரவார் கழனிகள் சூழ்
திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–8-9-9-

அன்றி மற்றோர் உபாயம் என்
இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக்
கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை
குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம்
இவள் நேர் பட்டதே–8-9-10-

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்
நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்
தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை
ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார்
நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-

——————-

எண்பதாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானுக்கே அடிமைப்பட்டிருப்பதன் உயர்ந்த நிலை
பாகவதர்களுக்கு அடிமைப்பட்டு இருப்பது என்று சொல்லும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடு
படுமா நிலை உடைய பத்தர்க்கு – அடிமை தனில்
எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் அது
கொல்லை நிலமான நிலை கொண்டு–80-

ஆழ்வார் ஸர்வேஸ்வரனின் வடிவழகிலும் கருணை உள்ளம் ஆகிய சிறந்த குணத்திலும்
ஈடுபட்டிருக்கும் பாகவதர்களிடம் அடிமை பூண்டிருந்தார்.
அது மட்டும் அன்று, எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருப்பதின் உயர்ந்த நிலையாக
அவன் அடியார்களுக்கு அடிமைப்பட்டிருப்பதைக் கருதினார்.
ஏனெனில் அதுவே உயர்ந்த குறிக் கோளாகையாலே.

நெடுமாற்கு அடிமை செய்வன் போல்
அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள்
முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே
கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ
வியன் மூ வுலகு பெறினுமே-8-10-1-

வியன் மூ வுலகு பெறினும் போய்த்
தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி
அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார்
திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது
உறுமோ பாவியேனுக்கே–8-10-2-

உறுமோ பாவியேனுக்கு
இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த
எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ்
புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார்
இங்கே திரியவே-8-10-3-

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்
இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோ லத்த பவள வாய்ச்
செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய்
புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய்
வழி பட்டு ஓட அருளிலே–8-10-4-

வழி பட்டு ஓட அருள் பெற்று
மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி
வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டு ஓடும் உடலினில்
பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டு ஓடும் கவி அமுதம்
நுகர்ச்சி உறுமோ முழுதுமே–8-10-5-

நுகர்ச்சி உறுமோ மூ வுலகின்
வீடு பேறு தன் கேழ் இல்
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட
பொன் ஆழிக்கை என் அம்மான்
நிகரச் செம் பங்கி எரி விழிகள்
நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உமிழும் புள் பாகன்
பெரிய தனி மாப் புகழே–8-10-6-

தனி மாப் புகழே எஞ்ஞான்றும்
நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய்
உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப்
புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே
நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-

நாளும் வாய்க்க நங்கட்கு
நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும்
சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக்
காவும் நிறை பல் நாயிற்றின்
கோளும் உடைய மணி மலை போல்
கிடந்தான் தமர்கள் கூட்டமே–8-10-8-

தமர்கள் கூட்ட வல்வினையை
நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள்
வில் தண்டாதி பல்படையன்
குமரன் கோல வைங்கணை வேள் தாதை
கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம்
சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9-

வாய்க்க தமியேற்கு ஊழி தோறு ஊழி ஊழி மாகாயாம்-
பூக்கொள் மேனி நான்கு தோள்
பொன்னாழிக்கை என்னம்மான்
நீக்கமில்லா வடியார் தம்
அடியார் அடியார் அடியார் எம்கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும்
நல்ல கோட்பாடே-8-10-10-

நல்ல கோட்பாட்டுலகங்கள்
மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை
அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர்
கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-

——————-

எண்பத்தோறாம் பாசுரம்.
மா முனிகள், மற்றவர்களைப் பார்த்து ஒரு காரணத்தின் அடியாக வரும் தேஹ பந்துக்களை விட்டு
இயற்கையான பந்துவான எம்பெருமானைப் பற்றச் சொல்லும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே அவரை விட்டு – தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்கும் இதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு–81-

அஜ்ஞானிகளுக்கும் நன்மையே செய்யும் பெருமையை உடைய ஆழ்வார்,
கர்மம் என்னும் ஒரு காரணத்தின் அடியாக வந்த மனைவி மக்கள் முதலிய தேஹ பந்துக்களை விட்டு,
தன்னைச் சரணடைபவர்களைத் தன் அடியார்களுடன் சேர்க்கும்
ஸ்ரீ ய:பதியிடம் சரணடையும்படி உபதேசம் செய்கிறார்.

கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-

துணையும் சார்வும் ஆகுவார் போல்
சுற்றத்தவர் பிறரும்
அணையவந்த வாக்கம் உண்டேல்
அட்டைகள் போல் சுவைப்பர்
கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த
எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல் அல்லால்
இல்லை கண்டீர் பொருளே-9-1-2-

பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில்
போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில்
என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க
வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால்
இல்லை கண்டீர் அரணே-9-1-3-

அரணம் ஆவர் அற்ற காலைக்கு
என்று என்று அமைக்கப் பட்டார்
இரணம் கொண்டு தெப்பர் ஆவர்
இன்றி இட்டாலும் அக்தே
வருணித்து என்னே
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால்
இல்லை கண்டீர் சதிரே–9-1-4-

சதிரமென்று தம்மைத் தாமே
சம்மதித் தின்மொழியார்
மதுரபோகம் துற்றவரே
வைகி மற்றொன்றுறுவர்
அதிர்கொள் செய்கை யசுரர் மங்க
வடமதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால்
இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-

இல்லை கண்டீர் இன்பம் அந்தோ
உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர்
தோன்றிக் கழிந்து ஒழிந்தார்
மல்லை மூதூர்
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி யுப்பப் போக வல்லால்
மற்று ஓன்று இல்லை சுருக்கே–9-1-6-

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம்
மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்
கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன்
வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல்
வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-

வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ
மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும்
புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில்
யாதுமில்லை மிக்கதே–9-1-8-

யாதும் இல்லை மிக்கதனில்
என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து
கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட
வடமதுரைப் பிறந்த
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால்
இல்லை கண்டீர் சரணே–9-1-9-

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர்
சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே
வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல்
அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும்
அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-

ஆதும் இல்லை மற்று அவனில்
என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச்
சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை
ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை
ஆளுடையார்கள் பண்டே-9-1-11-

———–

எண்பத்திரண்டாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானுக்கு எல்லா விதமான பந்துக்களும் செய்யும் செயல்களைச்
செய்ய ஆசைப்படும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

பண்டை உறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா உறவின் காரியமும் – தண்டற நீ
செய்தருள் என்றே இரந்த சீர் மாறன் தாளிணையை
உய்துணை என்று உள்ளமே! ஓர்–92-

தன்னுடன் நித்யமான உறவைக் கொண்ட எம்பெருமானைத் திருப்புளிங்குடியில் கண்டு வணங்கி
“எல்லா விதமான உறவுகளின் செயல்களையும் நான் இடைவிடாமல் செய்யும்படி அருளவேண்டும்” என்று ப்ரார்த்தித்தார்.
நெஞ்சே! இப்படிப்பட்ட ஸ்ரீ சடகோபரின் இரு திருவடிகளையும் நம் உஜ்ஜீவனத்துக்கு வழியாக நினை

பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

குடிக் கிடந்து ஆக்கம் செய்து
நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற
அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த
நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம்
கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை
வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-

புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை
இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய்
சிவப்ப நீ காண வாராயே–9-2-4-

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண
வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண்
தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல்
தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக்
காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-

காய்ச்சினப் பறவை யூர்ந்து
பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று
அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி
எம்மிடர் கடிவானே–9-2-6-

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே
இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத்
தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து
நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள்
இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7-

எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம்
இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால்
தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய்
திருவைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள்
இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–9-2-8-

வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து
இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப்
புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடு களும்
செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த
கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9-

கொடு வினைப் படைகள் வல்லையாய்
அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள்
மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-

கூவுதல் வருதல் செய்திடாய் என்று
குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல்
வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும்
இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான்
அடி இணை யுள்ளத்தோர் வாரே–9-2-11-

————–

எண்பத்து மூன்றாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் சீலம் (எளிமை) என்னும் குணத்தில் மூழ்கியிருக்கும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்..

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன்
நாராயணனன்றோ நான் என்று – பேருறவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டி விடும் நம் மனத்து மை–83-

எம்பெருமான் “உம்முடைய ஆசைகளாக எவற்றை எல்லாம் நீர் ஆராய்ந்து வைத்துள்ளீரோ
அவற்றை நான் நிறைவேற்றுகின்றேன். ஸர்வசக்தனான நாராயணன் அன்றோ நான்?” என்று சொல்லி
ஆழ்வாருடன் தனக்கு இருக்கும் எல்லா உறவுகளையும் காட்டினான்.
ஆழ்வார் இப்படிப்பட்ட எம்பெருமானின் சீல குணத்தில் மூழ்கினார்.
ஆழ்வாரின் கருணை நம் மனத்தில் இருக்கும் அறியாமையைப் போக்கும்.

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4-

மனமே யுன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல்
இனமேதும் இலானை அடைவதுமே–9-3-5-

அடைவதும் அணியார் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே யொருங்காகவே–9-3-6-

ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-3-7-

இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து
சென்று தேவர்கள் கை தொழுவார்களே–9-3-8-

தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுது மென்னுமிது மிகை யாதலில்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே–9-3-9-

தாள தாமரையான் உனதுந்தியான்
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ் கோ உனசீலமே–9-3-10-

சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11

————-

எண்பத்து நான்காம் பாசுரம்.
மா முனிகள், சிறந்ததான வடிவழகை உடைய எம்பெருமானைக் காண
ஆசைப் பட்டுக் கூப்பிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மையார் கண் மாமார்பில் மன்னும் திருமாலை
கையாழி சங்குடனே காண எண்ணி – மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டுகந்த மாறன் பேர்
ஓத உய்யுமே இன்னுயிர்–84-

கருநிற மையாலே அலங்கரிக்கப்பட்ட பெரிய பிராட்டியாரைத் தன் திருமார்பில்
நிரந்தரமாக வைத்திருக்கும், திருக்கைகளிலே திருவாழி திருச்சங்கு ஆகியவைகளை வைத்திருக்கும்
ஸ்ரீ ய:பதியை உண்மையான ஆசையுடன் கூப்பிட்டார் ஆழ்வார்.
தான் ஆசைப்பட்டபடி கண்ட ஆழ்வார் ஆனந்தத்தை அடைந்தார்.
இவ்வாழ்வாரின் திருநாமங்களைச் சொல்லவே சிறந்ததான ஆத்மா உஜ்ஜீவனத்தை அடையும்.

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-

கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே – -9-4-2-

அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3-

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4-

அரியாய அம்மானை அமரர் பிரானைப்
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே–9-4-5-

கருத்தே உன்னைக் காண கருதி என் நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே –9-4-6-

உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா
மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கமதாய வுருவே–9-4-7-

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–9-4-8-

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9-

அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10-

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-

————–

எண்பத்தைந்தாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானை நினைவு படுத்தும் வஸ்த்துக்களால் தான் துன்புறுவதை
அருளும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால்
அன்றவனைக் காண எண்ணி ஆண் பெண்ணாய் – பின்னை அவன்
தன்னை நினைவிப்பவற்றால் தான் தளர்ந்த மாறன் அருள்
உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்–85-

ஆழ்வார் தன்னை தரிக்கப் பண்ணும் ஸர்வேஸ்வரன் அவ்வாறே தன் நெஞ்சில் இருப்பதைக் கண்டு,
நேரிலும் தன்னுடைய வெளிக் கண்களால் உடனே காண ஆசைப்பட்டு,
ஆண் தன்மையை இழந்து பெண் தன்மையை அடைந்தார்.
மேலும் எம்பெருமானை நினைவுறுத்தும் மேகக் கூட்டங்கள் போன்ற வஸ்துக்களைக் கண்டு தளர்ந்தார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரின் க்ருபையை த்யானிப்பவர்களின் நெஞ்சம் உருகும்.

இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு
இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின்
குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை
நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும்
இத்தனை வேண்டுமோ–9-5-1-

இத்தனை வேண்டுவது அன்று அந்தோ
அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் உன் சேவலும்
கரைந்து ஏங்குதீர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன்
அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர்
அவன் கையதே–9-5-2-

அவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3-

கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–9-5-4-

அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5-

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6-

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்-9-5-9-

எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-9-5-10-

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே-9-5-11-

—————–

எண்பத்தாறாம் பாசுரம்.
மா முனிகள், வருத்தத்துடன் எம்பெருமானின் திருக் கல்யாண குணங்களை
த்யானிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

உருகுமால் என்னெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை எனப் பேசி – மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்துரைத்த மாறன் சொல்
என்னாச் சொல்லாதிருப்பது எங்கு?–86-

ஆழ்வார் “என் நெஞ்சம் உன்னுடைய லீலைகளை நினைத்து உருகும்;
மேலும் என்னுடைய ஆசை மிகவும் அதிகமாக ஆனது” என்று வருத்தத்துடன்,
எம்பெருமான் காதலனாக இருக்கும் தன்மை, தன் நெஞ்சில் நிலைத்திருக்கும்படி அருளிச் செய்தார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை என்னுடை நாக்கு எவ்வாறு சொல்லாமல் இருக்கும்?

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1-

நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2-

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3-

அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே–9-6-4-

திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–9-6-5-

எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-9-6-6-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8-

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9-

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-

————–

எண்பத்தேழாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானின் வடிவழகை நம்பி எம்பெருமானுக்குத் தூது
விடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

எங்காதலுக்கடி மால் ஏய்ந்த வடிவழகு என்று
அங்காது பற்றாசா ஆங்கவன் பால் – எங்கும் உள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன் தாள்
உள்ளினர்க்குத் தீங்கை அறுக்கும்--87-

ஆழ்வார் “என்னுடைய காதலுக்குக் காரணம் ஸர்வேஸ்வரனின் இயற்கையான, தகுந்ததான வடிவழகு”
என்று சொல்லி அந்நிலையில் அவனுடைய வடிவழகையே நம்பி,
எங்கும் உள்ள பறவைக் கூட்டங்களைத் தூதுவராக அனுப்பினார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை த்யானித்தவர்களின் தீமைகள் அழிக்கப்படும்.

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-

தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-

திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-

தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-

தூதுரைத்தல் செப்புமின்கள்-தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும்-பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே–9-7-6-

சுடர் வளையும் கலையும் கொண்டு-அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக்-களத்து உறையும் பங்கயக் கண்
சுடர் பவள வாயனைக் கண்டு-ஒரு நாள் ஒரு தூய் மாற்றம்
படர் பொழில் வாய்க் குருகினங்காள்-எனக்கு ஓன்று பணியீரே–9-7-7-

எனக்கு ஓன்று பணியீர்காள்-இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும்-வண்டினங்காள் தும்பிகாள்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும்
புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே-9-7-8-

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக்  கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-

தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10-

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11-

——————

எண்பத் தெட்டாம் பாசுரம்.
மா முனிகள், அனுப்பிய தூதுவர்கள் திரும்பி வரும் வரை பொறுக்க முடியாமல்
“உடனே திருநாவாயைச் சென்று அடைய வேண்டும்” என்று சொல்லும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

அறுக்கும் இடர் என்று அவன் பால் ஆங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் – அறப்பதறிச்
செய்ய திருநாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வறியாமல்--88-

“அவன் நம் துயரங்களைப் போக்குவான்” என்று எம்பெருமானிடம் தூதுவர்களை அனுப்பினார் ஆழ்வார்.
ஆனால் அவருடைய திருவுள்ளமோ அந்தத் தூதுவர்கள் திரும்பி வரும் வரை பொறுக்க முடியாமல்,
என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் கலங்கி, சிறந்ததான
திரு நாவாய்க்குச் செல்லலாம் என்று புறப்பட்டார்.

அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2–

எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-

கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6-

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8-

தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ –9-8-9-

அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10-

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-

————–

எண்பத் தொன்பதாம் பாசுரம்.
மா முனிகள், மாலை வேளையில் தன் விருப்பத்தைச் சொல்லும்
ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன்
சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் – செல்கின்ற
ஆற்றாமை பேசி அலமந்த மாறன் அருள்
மாற்றாகப் போகும் என்தன் மால்–89-

ஆழ்வார் ஸர்வேஸ்வரனை “நான் உனக்கு முழுமையாகக் கைங்கர்யம் செய்யும் நாள் என்று?” என்று கேட்டு,
இயற்கையான பக்தியால், எம்பெருமானின் பதிலுக்குக் காத்திருக்க முடியாமல்,
தன்னுடைய தரியாமையைப் பேசி வருந்தினார்.
என்னுடைய அறியாமைக்கு நேர் எதிரான இவ்வாழ்வாரின் கருணையால், என்னுடைய அறியாமை நீங்கும்.

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ
செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

இனி இருந்து என் உயிர் காக்குமாறு என்
இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து
துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பணி இரும் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3-

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ
வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த
எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ
யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-

யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ
அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும்
எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
யாமுடை யார் உயிர் காக்குமாறு என்
அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5-

அவனுடை யருள் பெறும் போதரிதால்
அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெருமள வாவி நில்லாது
அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை
சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-

ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்
ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு
பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப்
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7-

புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ
பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்
கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை
வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்-9-9-8-

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9-

மாலையும் வந்தது மாயன் வாரான்
மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன் நாகுகள் உகளுமாலோ
கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கரு முகைகள்
மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ
என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–9-9-10-

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11-

—————

தொண்ணூறாம் பாசுரம்.
மா முனிகள், தன்னுடைய மோக்ஷத்துக்கு நாள் குறிக்கப்பட்ட பின் மற்றவர்களுக்கு
உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னும் உடம்பின் முடிவில்
சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து – மேலவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நந்தமக்குத் தாள்–90-

ஸர்வேஸ்வரன் “முழு மனதுடன், உம்முடைய விருப்பங்களை ஆத்மாவுடன் கூடியிருக்கும்
இந்த சரீரத்தின் முடிவிலேயே நிறைவேற்றுவேன்” என்று ஆழ்வாருக்குச் சொல்ல,
ஞானம் முதலிய குணங்களை உடைய ஆழ்வார், மிகவும் ஆனந்தித்து
“திருக்கண்ணபுரம் சென்று அங்கிருக்கும் ஸர்வேஸ்வரனின் திருவடிகளைப் பணியுங்கோள்” என்றார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகள் நமக்குக் கருணையைப் பொழியாமல் இருக்குமோ?

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-

கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே–9-10-2-

தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே–9-10-3-

மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத்
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே–9-10-4-

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-

அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே–9-10-6-

மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே-9-10-7-

அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே–9-10-8-

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9-

இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-

—————-

தொண்ணூற்றொன்றாம் பாசுரம்.
மா முனிகள், எம்பெருமானால் நாள் குறிக்கப்பட்டு, எம்பெருமானுடன் சேர்ந்து பரமபதத்துக்குச்
செல்லத் தொடங்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காளமேகத்தை கதியாக்கி – மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக எண்ணும் மாறன் என
கேதம் உள்ளதெல்லாம் கெடும்–91-

தன் திருவடிகளில் சரணடைந்தவர்களுக்கு எம்பெருமான் தானே இறுதிப் பயணத்தில் துணையாக இருக்கிறான்.
ஆழ்வார் அந்தக் காளமேகம் எம்பெருமானையே வழித்துணையாகக் கொண்டு,
திரும்பி வரும் குற்றம் இல்லாத பரமபதத்தைச் சென்றடைய எண்ணினார்.
இப்படிப்பட்ட ஆழ்வாரை நினைக்கவே எவை யெல்லாம் துயரங்கள் என்று நினைக்கிறோமோ
அவையெல்லாம் நசிக்கும்.

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1-

இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2-

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே-10-1-3-

இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே–10-1-4-

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5-

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6-

மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே-10-1-7-

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-

மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறைபொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–10-1-9-

நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10-

ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11-

————-

தொண்ணூற்றிரண்டாம் பாசுரம்.
மா முனிகள், பர பதத்தில் செய்யும் கைங்கர்யத்தைத் திரு வனந்த புரத்தில் செய்ய
ஆசைப் பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார்.

கெடும் இடர் வைகுந்தத்தைக் கிட்டினாற்போல்
தடமுடை அனந்தபுரம் தன்னில் – பட அரவில்
கண்துயில் மாற்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண்தனில் உள்ளோர் வியப்பவே--92-

சிறந்த பரம பதத்தில் இருக்கும் நித்ய ஸூரிகள் வியக்கும்படி ஆழ்வார்
பணங்களுடன் கூடிய ஆதி சேஷனில் சயனித்துக் கொண்டிருக்கும் எம்பெருமானுக்கு,
பரந்த திரு வனந்த புரத்தில், துக்கமே இல்லாத பரம பதத்தை அடைந்து செய்யும்
கைங்கர்யத்தைச் செய்ய ஆசைப் பட்டார்.

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-

இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2-

ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-10-2-3-

பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4-

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-

அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-10-2-6-

துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7-

கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–10-2-8-

நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9-

மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே–10-2-10-

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-

————-

தொண்ணூற்றுமூன்றாம் பாசுரம்.
மா முனிகள், தன்னை ஏன் தன் விருப்பத்து மாறாக ஸம்ஸாரத்தில் வைத்திருக்கிறான்
என்ற ஸந்தேஹத்தை ஸர்வேஸ்வரன் போக்கியதைப் பேசும் ஆழ்வாரின்
ஸ்ரீஸூக்திகளை அடி யொட்டி அருளிச் செய்கிறார் –

வேய்மரு தோளிந்திரைகோன் மேவுகின்ற தேசத்தைத்
தான் மருவாத் தன்மையினால் தன்னை இன்னும் – பூமியிலே
வைக்குமெனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு--93-

ஸ்ரீமந் நாராயணன் வசிக்கும் திவ்ய லோகத்தை அடையாமல்,
பலம் வாய்ந்த மூங்கிலைப் போன்ற தோளை உடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கேள்வன்,
ஆழ்வாருக்கு ஏற்பட்ட தேவையில்லாத ஸந்தேஹமான
“எம்பெருமான் இன்னும் என்னை ஸம்ஸாரத்தில் வைத்திருக்கிறானே” என்பதைப் போக்கினான்.
இப்படித் தகுந்த புகழை உடைய ஆழ்வாரே நமக்குப் புகல்.

வே