Archive for the ‘திரு நெடும் தாண்டகம்’ Category

ஸ்ரீ அருளிச் செயல்களில் பண் -இராகங்கள் -தாளங்கள் -இசைக் கருவிகள் -நைவளம்-நுடங்கு கேள்வி இசை–

November 30, 2022

நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா
நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வளவில் என் மனமும் கண்ணும் ஓடி
எம்பெருமான் திருவடிக் கீழ் அணையை இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்
கனமகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு
இது வன்றோ எழில் ஆலி என்றார் தாமே–ஸ்ரீ திரு நெடும் தாண்டகம்-22-

நைவளம் –
கேட்டாரோடு சொன்னாரோடு வாசி அற -நைவிக்கும்படியான
அழகை உடைத்தான பண்ணை நுணுக்கி
நட்ட பாஷையை -குண யோகத்தால் –நைவளம் –என்று பேரிடுகிறது –
நுடங்கு கேள்வி இசை -என்னக் கடவது இறே –

பால்என்கோ! நான்கு வேதப் பயன்என்கோ! சமய நீதி
நூல்என்கோ! நுடங்கு கேள்வி இசைஎன்கோ! இவற்றுள் நல்ல
மேல்என்கோ! வினையின் மிக்க பயன்என்கோ! கண்ணன் என்கோ!
மால்என்கோ! மாயன் என்கோ வானவர் ஆதி யையே.–3-4-6-

ஓன்று –
அல்லாத இசைகளில் காட்டிலும் பிறரை வசீகரிக்க வற்றாய் இருக்கையும் –
இதுக்கு வசீக்ர்தராகா விட்டால் வேறு கதி அற்று இருக்கையும் -பற்ற அத்விதீயம் -என்கிறது –

(‘நைவளம்‘ என்று ஒரு பண்ணுக்குப் பெயர்.
பாட்டுப் பாடுகிறவர்களையும் பாட்டு கேட்கிறவர்களையும் நைவிக்கும்படியான வளத்தை யுடைய தாதல் பற்றி
நைவளமென்று பெயரிடப்பட்ட தென்று யோகார்த்தமும் அருளிச் செய்வர்.
மற்ற இசைகளிற் காட்டில் இந்த இசை பிறரை வசீகரி்க்கும் விஷயத்தில் இன்றியமையாததாதலாலும்
இதற்கு வசப்படா விட்டால் வேறு கதி யில்லாமையாலும் ‘நைவளம் ஒன்று‘ எனப்பட்டது.

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில்,”நைவளம் பழநிய பாலை வல்லோன் கைவிர் நரம்பின் இம்மென இமிரும்…”(146-147)
நட்டராகம் என்னும் பண்ணின் இயல்பு அமைந்த பாலைப் பண்ணை வாசிக்க வல்லவன் தன் கையினால் இசைக்கும்
யாழ் நரம்பின் ஓசை போன்ற…. என்பதாம்.

மேலும், இடை கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் நைவளம் பற்றிய குறிப்பைக் கீழ்க் காணும் வரிகளில் சிறப்பிக்கின்றார்.
“பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின் இன்குரல் சீறியாழ் இடவயின் தழீ இ
நைவளம் பழநிய நயம் தெரி பாலை கைவல் பாண் மகள் கடனறிந்து இயக்க”- சிறுபாணாற்றுப்படை (34-37)
பொற்கம்பியினை யொத்த முறுக்கு அடங்கின நரம்பினது இனிய ஓசையை யுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி,
நட்டராகம் என்னும் பாலைப் பண்ணை வாசித்தலில் வல்ல பாணன் முறைமை யறிந்து வாசிக்க…. என்பதாம்.
மேற்கண்ட வரிகளில் காணப்படும் நைவளம் என்னும் பண் பகல் பொழுதுகளில் வாசிக்கப்பெறும் இராகமாகும்.
பாலை யாழில் வாசிக்கப் பெறும் நட்டராகம் இதுவேயாகும். நட்டபாடை என்று அழைக்கப்படும் இராகமும் இதுவே.
பண்டைய இசைத்தமிழ் வல்லோர்கள் இரவுப் பண்கள், பகற் பண்கள் எனவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைப் பண்கள்
எனவும் தாம் வாழ்ந்த நிலம் சார்ந்த இராகங்கள், அந்நிலம் சார்ந்த இசைக் கருவிகள் என இயற்கையோடும்,
இயற்கை சார்ந்த வாழ்வியலோடும் இசை பட வாழ்ந்தார்கள்.)

நைவளம் என்னும்-குறிஞ்சி  யாழ்ப்  பண்ணின்   வகையாகிய   நட்டபாடைப்பண்  போல

நைவளம் எனும் பண்ணைப் பற்றி, குறிஞ்சிப்பாட்டு சிறுபாணாற்றுப்படை , பரிபாடல் களில் குறிப்புகள் உள.
இப்பண் பகற்பொழுதில் இசைக்க வேண்டிய பண் என்றும்,
பாணன் யாழிசையுடன் பாடினான் என்றும், இப்பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது.
மேலும் குறிஞ்சி, செவ்வழி, பஞ்சுரம், படுமலை, பாலை, மருதம், விளரி என்ற பண்களைப் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.
இப்பண்கள் இசைக்கும் காலம், நிலம், இப்பண்கள் தரும் உணர்வுகள் பற்றியும் தமிழர் இசை எனும் நூலில் ஏ.என். பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.
நம் சங்கத் தமிழர்கள் மிகச்சிறந்த இசை வல்லுநர்களாக வாழ்ந்துள்ளனர்.
நிலமும் நிலம் சார்ந்த பண்கள், பொழுதுகள் சார்ந்த பண்கள் எனப் பல வகைகளாகப் பகுத்துள்ளனர்.
பாலை யாழில் வாசிக்கப்படும் சிறந்த இன்னிசைப் பண்ணான நைவளம் பற்றிய குறிப்புகள் சங்கப் பாடல்கள் வழி நமக்குக் கிடைக்கின்றன.

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில்,

“நைவளம் பழநிய பாலை வல்லோன் கைவிர் நரம்பின் இம்மென இமிரும்…” (146-147)

நட்டராகம் என்னும் பண்ணின் இயல்பு அமைந்த பாலைப்பண்ணை வாசிக்க வல்லவன் தன் கையினால் இசைக்கும் யாழ்நரம்பின் ஓசை போன்ற…. என்பதாம்.

மேலும், இடைகழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் நைவளம் பற்றிய குறிப்பைக் கீழ்க் காணும் வரிகளில் சிறப்பிக்கின்றார்.

“பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின் இன்குரல் சீறியாழ் இடவயின் தழீ இ

நைவளம் பழநிய நயம்தெரி பாலை கைவல் பாண்மகள் கடனறிந்து இயக்க”- சிறுபாணாற்றுப்படை (34-37)

பொற்கம்பியினையொத்த முறுக்கு அடங்கின நரம்பினது இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி, நட்டராகம் என்னும் பாலைப் பண்ணை வாசித்தலில் வல்ல பாணன் முறைமை யறிந்து வாசிக்க…. என்பதாம்.

மேற்கண்ட வரிகளில் காணப்படும் நைவளம் என்னும் பண் பகல் பொழுதுகளில் வாசிக்கப் பெறும் இராகமாகும். பாலையாழில் வாசிக்கப்பெறும் நட்டராகம் இதுவேயாகும். நட்டபாடை என்று அழைக்கப்படும் இராகமும் இதுவே.

பண்டைய இசைத்தமிழ் வல்லோர்கள் இரவுப்பண்கள், பகற்பண்கள் எனவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைப் பண்கள் எனவும் தாம் வாழ்ந்த நிலம் சார்ந்த இராகங்கள், அந்நிலம் சார்ந்த இசைக் கருவிகள் என இயற்கையோடும், இயற்கை சார்ந்த வாழ்வியலோடும் இசை பட வாழ்ந்தார்கள்.

சங்க இலக்கியங்களில் பண்கள்

சங்க இலக்கியங்களில் பண்கள் பற்றிய குறிப்புகள் காணப் பெறுகின்றன.

ஆம்பல் பண், காஞ்சிப் பண், குறிஞ்சிப் பண், நைவளம் போன்ற பண்களைப் பற்றிய குறிப்புகள் உள.

  • ஆம்பல்பண்

    ஆம்பல் என்பது ஒருவகைப் பண்ணாகும்.

இப்பண்ணைப் பற்றிய செய்திகள் நற்றிணை (123 : 10), ஐங்குறுநூறு (215 : 3-5), குறிஞ்சிப்பாட்டு (221-222)ஆகிய பாடல்களில் காணப் பெறுகின்றன.

கோவலர்கள் ஆம்பல் பண்ணை இசைக்கின்றனர்.     

தட்டை,     தண்ணுமை    போன்ற இசைக் கருவிகளுடன்     மாலைக் காலத்தில் இசைத்து மகிழ்கின்றனர்.

ஆம்பலங் குழலின் ஏங்கி          (நற்றிணை : 123: 10)
  • காஞ்சிப் பண்

    காஞ்சிப் பண் துயருறும் மக்களின் துயரம் போக்கப் பயன்படுத்தப்பட்டு்ள்ளது.

விழுப்புண் பட்டவர்கள், பேய் பிடித்தவர்களின் வருத்தம் தீர இப்பண்ணினைப் பாடிய குறிப்பு, புறநானூறு 296-யில் காணப்பெறுகிறது.

  • குறிஞ்சிப் பண்

    மலையுறை    தெய்வங்களை மகிழ்விக்க, கூத்தரும் விறலியரும் குறிஞ்சிப் பண்ணைப் பாடியதாக மலைபடுகடாம் குறிப்பிடுகிறது.

  • நைவளம்

    நைவளம் எனும் பண்ணைப் பற்றி, குறிஞ்சிப்பாட்டு(146), சிறுபாணாற்றுப்படை(36-38),பரிபாடல்(18-20-21) வரிகளில் குறிப்புகள் உள. இப்பண் பகற்பொழுதில் இசைக்க வேண்டிய பண் என்றும், பாணன் யாழிசையுடன் பாடினான் என்றும், இப்பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது.

மேலும் குறிஞ்சி, செவ்வழி, பஞ்சுரம், படுமலை, பாலை, மருதம், விளரி என்ற பண்களைப்     பற்றிய குறிப்புகளும்     காணப்படுகின்றன. இப்பண்கள் இசைக்கும் காலம், நிலம், இப்பண்கள் தரும் உணர்வுகள் பற்றியும் தமிழர் இசை எனும் நூலில் ஏ.என். பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.

வ. எண்
பண்
காலம்
நிலம்
உணர்வு
1.
ஆம்பல்
மாலை, முன்னிரவு
முல்லை
ஏக்கம்
2.
காஞ்சி
—-
—-
துன்பம்
3.
காமரம்
—-
மருதம்
இன்பம்
4.
குறிஞ்சி
நள்ளிரவு
குறிஞ்சி
அச்சம்
5.
செவ்வழி
மாலை
முல்லை, நெய்தல்
இரக்கம்
6.
நைவளம்
பகல்
—-
இன்பம்
7.
பஞ்சுரம்
—-
பாலை
அச்சம்
8.
படுமலை
—-
—-
இன்பம்
9.
பாலை
நண்பகல்
பாலை
இன்பம்
10.
மருதம்
காலை
மருதம்
இன்பம்
11.
விளரி
—-
நெய்தல்
ஏக்கம்

.

1150.
நைவளம் நவிற்று மொழி நண்ண வரலோடும்.
வையம் நுகர் கொற்றவனும். மா தவரும். அல்லார்
கைகள் தலைபுக்கன; கருத்துளதும் எல்லாம்
தெய்வம் என உற்ற; உடல் சிந்தை வசம் அன்றோ?
நைவளம் நவிற்று மொழி நண்ண வரலோடும்-நைவளம் என்னும்
குறிஞ்சி  யாழ்ப்  பண்ணின்   வகையாகிய   நட்டபாடைப்பண்  போல
இனியமொழிபேசும்  பிராட்டி. அருகே  நெருங்கி  வருகின்ற  அளவில்;
வையம்   நுகர்  கொற்றவனும்   மாதவரும்  அல்லார்   கைகள்
தலைபுக்கன 
-பூவுலகை ஆண்டு. அதன் (இன்பதுன்பங்களை) நுகர்கின்ற
தசரத வேந்தனும் (வசிட்டன். விசுவாமித்திரன்)  ஆகிய முனி  சிரேட்டர
களும் அல்லாத அனைவர்  கரங்களும்  (பிராட்டியை  வணங்குமுகமாக)
அவரவர்   தலைகளின்  மேலே   (இயல்பாகவே)  சென்று   குவிந்தன;
கருத்து. உளதும் எல்லாம்  தெய்வம்  என  உற்ற  
–  ஏன் எனில்.
அனைவரது   மனமும்.   மற்றும்   உள்ள   புத்தி  முதலிய   அந்தக்
கரணங்கள்  யாவையும்   (பிராட்டியைத்)   தெய்வம்  என்றே  கருதின;
உடல்  சிந்தை   வசம்  அன்றோ?  
–  (செயல் கருவியாகிய)  உடல்
(எண்ணுதற் கருவியாகிய) மனத்தின் வசப்பட்டுச் செயல்படுவதன்றோ?
வையம்  நுகர்  மாதவர் என்பதில். இரட்டுற மொழிதலாகக் கொண்டு
இராமனையும்   சனகனையும்  அடக்குவர்.  கருத்தும் (மற்றும்)  உளதும்
எல்லாம்  எனற்பாலது  உம்மை   விகாரத்தால்  தொக்கு  கருத்துளதும்
எல்லாம்  என்றாகியது.  பிராட்டியைத்  தெய்வம் எனத்  தான்  கருதும்
கருதுகோளை.  இடம்  அறிந்து   ஏற்றி.  வணங்குவித்த  கவிஞர்பிரான்
திறம்  உணர்க.  உளதும் எல்லாம் – ஒருமை பன்மை  மயக்கம்.  சீதை
வணங்குரியார்  சிலர்  தவிர. அவையிருந்த  ஏனையோர்  அனைவரின்
கரங்களும்   சிரமேற்  குவிந்தன   என்பதற்கு.  உளநூல்   அறிஞரான
கவிஞர் பிரான் கூறும் காரணம்: உடல்  சிந்தை  வசம் என்பது.  சிந்தை
சீதையைத்   தெய்வம்   என   நினைக்க.   கடையுடைக்   காவலாளர்
(மெ.நா.9)    அனைவோர்   கரங்களும்    தெழுது    செயற்படுத்தின.
மனந்தூயதாயின்.  ஒழிந்த  மொழியும்  செயலும்   தாமே   தூயவாகும்
எனும்  அடிப்படையில்  “மனத்துக்கண்  மாசிலன் ஆதல்”  (திருக். 34)
என மொழிந்தமையும் இங்கு நினைக.                           34

சம்பந்தரின் தோடுடைய செவியன் என்ற முதற்பாட்டு நைவளம் (நட்டபாடை) என்னும் பண்ணிலும்

காரைக்கால் அம்மையாரிம் சில முதல் பாட்டுகளும் இதே பண்ணில் பாடப்பட்டதும் ஒப்புநோக்கத் தக்கது.

————————————————————————————————————————–

பண்களுக்குரிய இராகங்கள் : பண்கள் குறிப்பிடப்பட்டுள்ள திருமுறைப்பாடல்களை, அப்பண்களைக் கற்றுணர்ந்தவர் அவ்வாறே இசைப்பதே முறை. தமிழிசை கற்றியாதார், தமிழிசைப் பண்களுக்கு ஒத்த கருநாடக மரபு இராகங்களிலும் இசைக்கலாம்.
தமிழிசைப் பண் அதற்கொத்த இராகம்
1. நட்டபாடை (நைவளம்) – நாட்டை, கம்பீர நாட்டை
2. தக்கராகம் – காம்போதி
3. தக்கேசி – காம்போதி
4. பழந்தக்கராகம் – சுத்தசாவேரி
5. குறிஞ்சி – ஹரிகாம்போதி
6. வியாழக்குறிஞ்சி – ஸெளராஷ்ட்ரம்
7. அந்தாளிக்குறிஞ்சி – சாமா
8. மேகராகக் குறிஞ்சி – நீலாம்பரி
9. யாழ்மூரி – அடாணா
10. காந்தாரம் – நவரோஸ்
11. பியந்தைக் காந்தாரம் – நவரோஸ்
12. கொல்லி – நவரோஸ்
13. கொல்லிக் கௌவாணம் – நவரோஸ்
14. இந்தளம் – மாயாமாளவகௌளை
15. சீகாமரம் – நாதநாமக்ரியா
16. நட்டராகம் – பந்துவராளி
17. சாதாரி – பந்துவராளி
18. செவ்வழி – யதுகுலகாம்போதி
19. காந்தார பஞ்சமம் – கேதாரகௌளை
20. பஞ்சமம் – ஆகிரி
21. பழம்பஞ்சரம் சங்கராபரணம்
22. கௌசிகம் பைரவி
23. புறநீர்மை (நேர்திறம்) – பூபாளம், பௌளை
24. செந்துருத்தி (செந்திறம்) – மத்யமாவதி
25. திருக்குறுந்தொகை – மாயாமாளவகௌளை
26. திருத்தாண்டகம் – ஹரிகாம்போதி
27.திருநேரிசை – நவரோஸ் (ஸாமகான இசை போல)
28. திருவிருத்தம் – பைரவி, சங்கராபரணம், அல்லது ஒத்த ராகங்கள்.
திருத்தாண்டகம்’ இருவகையாகும்.
எண்சீர் விருத்தத்தில் அமைந்தது ‘நெடுந்தாண்டகம்’ எனும் இசைப் பாடலாகும்.
குறைந்த சீர்கள் உள்ள தாண்டகப் பாடல்கள் ‘குறுந்தாண்டகம்’ எனப்படும்.

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

தாண்டகம் -இலக்கணக்குறிப்புகள் —

July 7, 2022

அறுசீரடி அல்லது எண்சீரடி பயின்ற செய்யுளினால்  கடவுளரை பாடுவதற்குரியது தாண்டகம் எனும் சிற்றிலக்கிய வகை (பிரபந்தம்).

அறுசீரடியினாலாகிய தாண்டகத்தினைக் குறுந்தாண்டகம் என்றும்

எண்சீரடியால் அமைந்ததினை நெடுந்தாண்டகம் என்றும் பன்னிருபாட்டியல் பகருகிறது.

  • பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலே தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம்.
  • தாண்டகம் என்பது ஒருவகைச் செய்யுள் யாப்பு ஆகும். தாண்டக யாப்பினால் இயற்றப்பட்டவை தாண்டகம் என்னும்
    இலக்கிய வகையாகப் பெயர் பெறுகின்றன. இதனை முறையே யாப்பருங்கல விருத்தியாலும் (95-ம் நூற்பா உரை)
    வீரசோழியத்தாலும் (129) அறிய முடிகின்றது. இவ்வகையான நூல்களையும் பக்தி இலக்கியம்தான் நமக்கு முதலில் அறிமுகம் செய்கின்றது. திருநாவுக்கரசரின் ஆறாம் திருமுறை முழுவதும் இத்தாண்டக யாப்பே. 981 பாடல்கள் கொண்ட அவரது 99 பதிகங்கள் திருத் தாண்டகம் என்றே வழங்குகின்றன.
  • திவ்வியப் பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார் பாடிய
    திருத் தாண்டகங்கள் பாவின் குறுமை, நெடுமை ஆகிய அளவு கருதி முறையே திருக்குறுந்தாண்டகம்,திருநெடுந்தாண்டகம் எனப்பெயர் பெறுகின்றன.
  • வடமொழித் தாண்டகத்தையே தமிழுக்குரிய தாண்டகமாக்கி வீரசோழியமும் யாப்பருங்கல விருத்தியும் குறிப்பிடுகின்றன. இங்கு ஒரு வேறுபாடு எண்ணத்தகும். வீரசோழியம் தண்டகம் என்றே குறிக்க யாப்பருங்கல விருத்தி மட்டும் தாண்டகம் எனக் கூறுகிறது. வடமொழி யாப்புப்படி விருத்தம் என்னும் பொதுப்பெயர்,
    அளவொத்த  நான்கடியையும் அனைத்துச் செய்யுளையும் குறிக்கும். அடிகளிற் பயிலும் எழுத்துகளின் எண்ணிக்கை அடிப்படையில்
    விருத்தங்களைச் சந்தம் எனவும், தண்டகம் எனவும் பிரிப்பர்.
    ஓரெழுத்து முதல் இருபத்தாறு எழுத்தளவும் உடைய அடிகளால் ஆகிய செய்யுள் சந்த விருத்தமாம்.
    இருபத்தேழு  எழுத்துகளுக்கு மேல்வரின் அது தண்டக விருத்தமாகும்.
    இதனையே தாண்டக விருத்தம் எனப் பெயரிட்டு விளக்குகிறது
    யாப்பருங்கல விருத்தி. ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகத்தில் சிற்சில அடிகள் 27 எழுத்துகளும் அவற்றின்மிக்கு 28, 29 எழுத்துகளும் பெற்று வருகின்றன.
    முப்பது பாசுரத்திற்கும் மொத்தம் உள்ள நூற்றிருபது அடிகளில் இவ்வாறு தாண்டக  அடிகளாக வருவன 24 அடிகள் மட்டுமே.
    எனினும் ஒரு பாசுரம் கூட முழுவதும் தாண்டக அடிகளைக்  கொண்டிருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
    உதாரணத்திற்கு முதல் பாசுரத்தில் முதலாம் அடியில் 26 எழுத்துகள், 2-ம் அடியில் 27 எழுத்துகள், 3-ம் அடியில் 28
    எழுத்துகள், 4-ம் அடியில் 27 எழுத்துகள் அமைந்துள்ளன. இவ்வாறு எழுத்துகளைக் கணக்கிட்டால்,
    திருநெடுந்தாண்டகத்தில் தாண்டக அடிகளாக அதாவது 27 முதலாக அவற்றின் மிக்க எழுத்துகளைப் பெற்று வருவன 24
    அடிகள் மட்டுமே. (எழுத்துகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் போது, குற்றியலுகரமும், ஒற்றும் நீங்கலாகக்
    கணக்கிடப்படும்)
    யாப்பருங்கல விருத்தி கூறும் தாண்டக யாப்பு, தமிழில் உள்ள திருத்தாண்டகங்களுக்குப் பொருந்தி வரவில்லை
    இனித்தாண்டகம் தமிழ் யாப்பே என்பார் கூற்றினை நோக்குவோம். அதற்கு முன்னர் ஆழ்வார் பாடிய
    திருத்தாண்டகங்களின் யாப்பமைதி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். ஆழ்வார் காலத்திற்குப் பின்னர் வளர்ச்சியுற்ற
    யாப்பிலக்கணத்தின்படி நோக்கினால், ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகம் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள்
    முப்பது கொண்டதாகும். இவ்வகை விருத்தத்தில் 1,2,5,6 ஆகிய நான்கு சீர்களும் காய்ச்சீர்களாகவும் 3,4,7,8 ஆகிய நான்கு
    சீர்களும் இயற்சீர்களாகவும் வரும். இயற்சீர் நான்கினுள் 3,7 ஆகிய சீர்கள் புளிமா, அன்றித் தேமாவாக வரும். 4,8 ஆகிய சீர்கள் தேமாவாக மட்டுமே அமையும். எனவே இவ்வகை விருத்தம்
    காய்-காய்-மா-தேமா-காய்-காய்-மா-தேமா–என்னும் வாய்பாடு கொண்டதாகும்.
    இப்போது திருக்குறுந்தாண்டகத்தை நோக்குவோம். இவ்வகை விருத்தத்தில் எல்லாச் சீர்களும் இயற்சீர்களாகவே வரும்.
    சிறுபான்மை காய்ச்சீர் வருதலுமுண்டு. பெரும்பாலும் 1,4 ஆகிய சீர்கள் விளச்சீராகவும், 2,3,5,6 ஆகிய சீர்கள் மாச்சீர்களாகவும் வரும். சுருங்கக் கூறின்,
    விளம்-மா-தேமா-விளம்-மா-தேமா–என்னும் வாய்பாடு கொண்டதாகும்.
    தாண்டக யாப்பு தமிழ் மரபினதே எனக் கூறும் க.வெள்ளை வாரணன், தொல்காப்பியர் கருத்துப்படி அதனை எண்சீரான் வந்த கொச்ச ஒரு போகு என்பர்.
    ஆதலின் இயல்வகை குறித்த தாண்டகம் என்னும் இப்பெயரினை பெறாவாயின என விளக்குகிறார். மேலும், அவர்
    திருநாவுக்கரசரது திருத்தாண்டக யாப்பு, கழிநெடிலடிக்கு மேலெல்லையாகிய இருபது எழுத்தென்னும் அளவினைக்
    கடந்து இருபத்தேழு எழுத்திற்கு உட்பட்டு வருவதாகும். யாப்பருங்கல விருத்தியில் தாண்டகம் என்ற பெயராற்
    குறிக்கப்பட்ட தாண்டக யாப்பு இருபத்தேழு எழுத்து முதலாக அவற்றின் மிக்க எழுத்துகளை பெற்று வருவதாகும் என
    இரண்டனுக்குமுள்ள வேற்றுமையையும் எடுத்துக் காட்டுகிறார். இங்குத் தாண்டகம் தமிழ் யாப்பின் வழிப்பட்டதே
    என்பதற்கு அவர் கூறும் விளக்கமும் யாப்பருங்கல விருத்தியில் கூறப்படும் தாண்டகம் வேறு, திருநாவுக்கரசரின் தாண்டகம் வேறு என்பதற்கு அவர் சில காரணங்களைக் காட்டுகிறார்.
    மேற்குறித்தவாறு திருநாவுக்கரசரின் திருத்தாண்டகத்தைத் தமிழ் மரபினதாகக் காட்டும் வெள்ளைவாரணன்,
    திருமங்கையாழ்வாரின் திருத்தாண்டகங்களையும் தமிழ் யாப்பு வழிப்பட்டதாகவே ஏற்றுக் கொள்கிறார். அவர்
    கருத்துப்படி, ஆழ்வாரின் நெடுந்தாண்டகம் அப்பரின் திருத்தாண்டகத்துக்கும், ஆழ்வாரின் குறுந்தாண்டகம் அப்பரின்
    திருநேரிசைக்கும் இணையாகின்றன. திருநாவுக்கரசரின் திருநேரிசைப் பதிகங்களும், ஆழ்வாரின் குறுந்தாண்டகமும் ஒரே
    வகை யாபில் அமைந்தவை. அதாவது, விளம்-மா-தேமா, விளம்-மா-தேமா என்னும் வாய்பாடு கொண்ட அறுசீர்
    விருத்தங்கள் அவை. இங்ங்கனமாக, ஒன்று திருநேரிசை எனவும், மற்றொன்று திருக்குறுந்தாண்டகம் எனவும்
    வெவ்வேறு பெயர் பெறுகின்றன. இப்பெயர் மாற்றத்துக்கு என்ன காரணம்? அறுசீரில் இருபது பாசுரங்கள் கொண்ட
    தாண்டகமும் எண்சீரில் முப்பது பாசுரங்கள் கொண்ட தாண்டகமும் ஆழ்வார் பாடினார். எண்சீரினும் ச்றுசீர் குறியது.
    அன்றியும் அறுசீர் யாப்பிலான பாடற்பகுதி, எண்சீர் யாப்பிலான பாடற்பகுதியினும் குறைந்த எண்ணிக்கை கொண்டது.
    ஆதலின் அவை குறுந்தாண்டகம், நெடுந்தாண்டகம் என வேறுபடுத்தப்பட்டன எனலாம். இவ்வமைதி ஆழ்வாரின் இரண்டு தாண்டகங்களைப் பொறுத்தவரை ஏற்கத்தக்கதாகும்.
    ஆயின் அப்பரின் திருநேரிசைப் பதிகங்கள் குறுந்தாண்டகமாகக் கொள்ளப்படவில்லையே. இது ஏன்?என்னும் வினாவுக்கு
    விடை காண இயலவில்லை. மற்றொரு சிக்கலும் உண்டு. குறுந்தாண்டகம் என்று அழைக்கப்படும் ஆழ்வாரின்
    பாடற்பகுதி முதலில் தாண்டகம் ஆகுமா? என்பதுவே அச் சிக்கலாகும். ஆழ்வாரின் குறுந்தாண்டகப் பாடல்களும்,
    அப்பரின் திருநேரிசைப் பாடல்களும் இருபது எழுத்துக்கு மேற்படாது அடங்கிவரும் அடிகளையுடைய அறுசீர் விருத்த
    யாப்பினமாகும். அங்ஙனமாயின் க.வெள்ளைவாரணன் தாண்டகத்துக்குக் கூறிய இலக்கணப்படி அடிக்கு இருபது
    எழுத்துகளைத் தாண்டாத இவை தாண்டகமாகா. வடமொழி மரபுப்படி இருபத்தேழு எழுத்து என்னும் எல்லைக்கு இங்கு
    இடமே இல்லை. ஆகத் தமிழ்மரபு வடமொழி மரபு ஆகிய இரண்டினாலும் தாண்டகமாகாத ஆழ்வாரின் பாடற்பகுதி
    குறுந்தாண்டகம் எனப் பெயர் பெற்றது எவ்வாறு என்பது விளங்கவில்லை.
    இயற்சீர் = ஈரசைச் சீர்= அகவற்சீர் . பழம் பெயர் தான்.
    “ ஈரிசை கூடிய சீரியற் சீர் ; அவை
     ஈரிரண் டென்ப இயல்புணர்ந்  தோரே “
    இயலல்- பொருந்துதல்
  • பின்வந்த பாட்டியலாரும் இச் சிக்கலுக்கு ஓர் தீர்வினைத் தந்திடவில்லை.
    மூவிரண் டேனும் இருநான் கேனும்
    சீர்வகை நாட்டிச் செய்யுளி னாடவர் 
    கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற்றுள்
    அறுசீர் குறியது நெடியதெண் சீராம்-எனப் பன்னிருபாட்டியல் கூறுகின்றது.
  • இந்நூற்பாவில் தாண்டகத்துக்குரிய எழுத்தெண்ணிக்கை பற்றிய குறிப்பு இல்லை.
    அன்றியும் ஆழ்வார் அறுசீர் யாப்பில் பாடியவற்றைக் குறுந்தாண்டகம் என ஏற்றுக்கொண்டே இந்நூற்பா இலக்கணம்
    கூறுகின்றது. பன்னிரு பாட்டியலார் கூறும் இவ்விலக்கணம் திருமங்கையாழ்வார் முறையே அறுசீரிலும் எண்சீரிலும்
    பாடிய இலக்கியங்களுக்கான இலக்கணம் ஆகின்றது. அஃதாவது இலக்கியம் கண்டதற்கு அமைந்த இலக்கணம் இது.
    எனினும் தாண்டக சதுரர் எனச்சிறப்பிக்கப் பெற்ற திருநாவுக்கரசரின் ‘தாண்டக இலக்கியம்’ பற்றிப் பன்னிரு பாட்டியல் குறிப்பிடவில்லை.
    ஆழ்வாரின் திருத்தாண்டகப் பாசுரங்களினும் (30+20) திருநாவுக்கரசரின் திருத்தாண்டகப் பாடல்கள் எண்ணிக்கையில் (981)
    பன்மடங்கு மிக்கன. போற்றித் திருத்தாண்டகம், காப்புத் திருத்தாண்டகம், நின்ற திருத்தாண்டகம், தனித் திருத்தாண்டகம்,
    வினா விடைத் திருத்தாண்டகம் எனப் பொருளடிப்படையில் பலவாறு பெயர் பெறுவன. இவ் வியல்புகளைப் பாட்டியல்கள்
    கருத்திற்கொண்டு இலக்கணம் கூறாததற்கான காரணம் தெரியவில்லை. திருநாவுக்கரசர், திருமங்கையாழ்வார் ஆகிய
    இருவரது தாண்டகங்களையும் ஒப்ப வைத்தும் உறழ்ந்து நோக்கியும் பாட்டியல் நூலார் இலக்கணம் கூறியிருந்தால்
    இன்று நமக்கு எழக்கூடிய சிக்கல்கள் தோன்றியிருக்க மாட்டா.
    பின்வந்த முத்து வீரியம் தாண்டக யாப்புக்குரிய இலக்கணத்தையும் பின்வருமாறு கூறுகின்றது.
    இருபத்தேழு எழுத்து ஆதி யாக
    உயர்ந்த எழுத்தடி யினவாய் எழுத்தும்
    குருவும் இலகுவும் ஒத்து வந்தன
    அளவியல் தாண்டகம் எனவும் அக்கரம்
    ஒவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வந்தன
    அளவழித் தாண்டகம் எனவும் பெயர்பெறும் —என்பது அந்நூற்பாவாகும்.
  • (நூற்பா-1115) வீரசோழியம், யாப்பருங்கல விருத்தி ஆகிய நூல்கள் புகுத்திய புதுமரபிற்கேற்ப
    முத்து வீரியம் இங்குத் தாண்டகத்திற்கு இலக்கணம் கூறுகின்றது. அளவியல் தாண்டகம், அளவழித் தாண்டகம் ஆகிய
    இரு வகைகளையன்றி குறுந்தாண்டகம், நெடுந்தாண்டகம் என்னும் பகுப்புமுறை இங்கு இடம் பெறாமை கவனிக்கத்தக்கது. ஆக பாட்டியல்கள் கூறும் தாண்டக இலக்கணம் இரு வகையில் அமைகின்றது.
    1. பன்னிருபாட்டியல் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் கூறியது ஒரு வகை
    2.முத்துவீரியம், யாப்பருங்கலவிருத்தியைத் தழுவிப் புதிய மரபில் இலக்கியம் காண்பதற்கு இலக்கணம் கூறியது மற்றொரு வகை.
    மற்றொரு வகை.
    இங்ங்னம் தாண்டகம் பற்றிய கருத்துகள் தமிழ் இலக்கண ஆசிரியர்களிடம் மாறுபட்டும் குழம்பியும் காணப்படுவதால்
    அதனை நாம் இன்று தெளிவாக உணர முடிவதில்லை. ஆழ்வார் பாசுரங்களுக்கு யாப்பு வகை குறித்த திவ்யபிரபந்தப்
    பதிப்பாசிரியர்களும் தாண்டகம் பற்றித் தெளிவான விளக்கம் தரவில்லை. “பகவானுடைய திவ்ய சேஷ்டிதங்களைத்
    தாண்டக ரூபத்தில் நிரூபிக்கிறபடியால் . . . ” இத்திருநாமம் பெற்றதாகக் கூறுவர் கோமடம் எஸ்.எஸ்.ஐயங்கார். இங்கு
    அவர் தாண்டக ரூபம் என்றாரே தவிர அதன் ரூபம் (வடிவம்) பற்றியோ இலக்கணம் பற்றியோ எதுவும் கூறாதது
    கவனிக்கத்தக்கது.
  • திருமங்கையாழ்வாரின் தாண்டகங்களைப் பொறுத்தவரை மற்றொரு தடையும் உண்டு. எண்சீரும் அறுசீருமாகப் பாடிய
    பாசுரப்பகுதிகள் திவ்யபிரபந்தத்தில் உள்ளன.
    விளம்-மா-தேமா, விளம்-மா-தேமா –என்பது குறுந்தாண்டக யாப்பு
    காய்-காய்-மா-தேமா, காய்-காய்-மா-தேமா–என்பது நெடுந்தாண்டக யாப்பு.
    இதே வாய்பாடில் இதே ஆழ்வார் எழுதிய பாடல்கள் அனைத்தும் தாண்டகம் எனப்பெயர் பெறாமை கவனிக்கத்தக்கது.
    தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய திருமாலை முழுவதும் குறுந்தாண்டகம் போல அறுசீர் ஆசிரிய விருத்த  யாப்பிலானதே.
  • மேலும் திருமாலை, குறுந்தாண்டகம் ஆகிய இவ்விரு நூல்களிலும் முறையே 17, 13 ஆம் பாசுரங்களின்
    ஈற்றடிகள் மிகுதியும் ஒத்திருத்தலும் இங்குச் சுட்டத்தக்கது.
    விரும்பிநின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை
    இரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை உருகும் வண்ணம்
    சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
    கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணிணை களிக்கு மாறே (திருமாலை-17)
    இரும்பனன் றுண்ட நீரும் போதரும் கொள்க என்றன்
    அரும்பிணி பாவ மெல்லாம் அகன்றன என்னை விட்டு
    சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
    கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணிணை களிக்கு மாறே (திருக்குறுந்தாண்டகம்-13)
    3,4 ஆம் அடிகள் முற்றிலும் ஒத்திருந்தாலும் திருமாலை ஏன் தாண்டகம் என்ற பெயர் பெறவில்லை?
    சைவத்திலும் இந்நிலையுண்டு. அப்பர் தாண்டகத்துக்குக் கையாண்ட அதே எண்சீர் யாப்பில் திருஞானசம்பந்தர் 11 பதிகங்களும், சுந்தரர் 27 பதிகங்களும், மாணிக்கவாசகர் 6 பதிகங்களும் பாடியுள்ளனர். ஒன்பதாம் திருமுறையில் 11 பாடல்களும், பதினொராந்திருமுறையில் 36 பாடல்களும் அதே யாப்பில் அமைந்துள்ளன. எனினும் அவை தாண்டகம்
    எனக் குறிக்கப் பெறாமையை அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
    இந்நிலையில் யாப்பருங்கல விருத்தியுரை காரர் தரும் ஒரு குறிப்பு, சிறிது வெளிச்சம் காட்டுகிறது. தாண்டகம் என்பது
    தொல்காப்பியரால் கொச்சக ஒருபோகு எனவும், காக்கைபாடினியார் போன்ற ஒருசார் ஆசிரியரால் பாவினமாகவும்
    கொள்ளப்பட்டது என்பது அவர் தரும் குறிப்பாகும். அதன்படி தாண்டகத்துக்குப் பயன்பட்ட அறுசீர் யாப்பு, ஒருசார்
    ஆசிரியரால்ஆசிரியப்பாவின் இனமான விருத்தமாகக் கொள்ளப்பட்டது என்பது உறுதி ஆகின்றது. அவ்வகை விருத்தங்கள்
    வடமொழித் தாண்டகத்தின் தனித்தன்மைகளுள் ஏதேனும் ஒன்றைப் பெற்றுத் தமிழில் தாண்டகம் எனப்பெயர்
    பெற்றிருக்கலாம் எனக் கருத இடமுள்ளது. அளவொத்த நான்கு அடிகளைக் கொண்ட வடமொழித் தாண்டக யாப்பு, ஓர்
    அடிக்கு 27 முதல் 999 வரை நீண்டு சென்று முடியும் என்பர். அவ்வகை நீட்சி காரணமாக எச்சங்களைத் தொடர்ந்து
    செல்லும் போக்குத் தண்டக விருத்தங்களில் அமைந்தது. குறிப்பிடத்தக்க இத்தனித் தன்மையைத் தமிழ்த் தாண்டகப் பாக்களிலும் காண முடிகின்றது.
    தேசிகரின் கருட தண்டகத்தையும், காளிதாசனின் சியாமளா தண்டகத்தையும்
    எழுத்தெண்ணிக்கை பார்த்ததில்,
    கருட தண்டகத்தில் ஒவ்வொரு பாடலும் 108 எழுத்துகள் இருக்கின்றன. அடிமுடி தெரியாதலால், ஒரு அடிக்கு சராசரி 27 எழுத்துக்கள் என்று கொள்ளலாம்.
    சியாமளா தண்டகத்தில் என்னிடம் உள்ள பதிப்பில் பாடல்கள் தொடர்ச்சியாக உரைநடைபோல் தட்டச்சு
    செய்யப்பட்டிருப்பதால் எழுத்தெண்ணிக்கையை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. ஒரு மாதிரியாக, பகுத்துப் பார்த்ததில்
    ஒரு சீரான எழுத்தெண்ணிக்கை வரவில்லை என்றுதான் தோன்றுகிறது. வேறு பதிப்புகளில் பாடல் ஒவ்வொன்றும்
    சரியாகப் பகுத்துக் கொடுக்கப் பட்டிருந்தால் அன்பர்கள் எழுத்தெண்ணிக்கையைச் சரி பார்க்கவும்.
    எச்சங்களாகத் தொடர்ந்து செல்லும் போக்கு நெடுந்தாண்டகத்தில் எவ்வாறு அமைந்துள்ளது என்று பார்ப்போம்.
    மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
    . . விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்
    பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப்
    . . பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணா தெண்ணும் 
    பொன்னுருவாய் மணியுருவில் பூத மைந்தாய்
    . . புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி
    தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை
    . . தளிர்புரையும் திருவடியென் தலைமே லவே
     (ஈற்றுச்சீர் தேமாவாக இருக்க லாவே என்றிருக்கலாம். ஆயின் மூலத்தில் இப்படித்தான் உள்ளது)
    என்னும் திருநெடுந்தாண்டகத்தில் முதற்பாகத்தைக் கவனித்தால் பாசுர அடிகளின் இடையிலோ முடிவிலோ முற்றின்றி,
    வினையெச்சமாய்த் தொடர்ந்து இறுதியிலேயே முற்றுப் பெறுதலைக் காணலாம். பெரும்பாலான பாசுரங்கள் இவ்வகைப்
    போக்கிலேயே3 அமைந்து உள்ளமை கவனிக்கத்தக்கது.
  • திருநெடுந்தாண்டகத்தில் முதல் பத்துப் பாசுரங்கள் தாமான  தன்மையிலும்,
  • அடுத்த பத்துப் பாசுரங்கள் தாய் கூற்றிலும்,
  • இறுதிப்பத்துப் பாசுரங்கள் மகள் கூற்றிலும் அமைந்தன  என்பர்.
  • இங்ங்னம் கூற்றுநிலை மாறுபட்டபோதும் மேற்குறித்த அமைப்பு மாறுபடவில்லை.
    இப்போது தாய் கூற்றாக அமைந்த ஒரு பாடலை ஆராய்வோம்.
    கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்னும்
    . . காமருபூங் கச்சியூ ரகத்தாய் என்னும்
    வில்லிறுத்து மெல்லியள்தோள் தோய்ந்தாய் என்னும்
    . . வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே என்னும்
    மல்லடர்த்து மல்லரையன் றட்டாய் என்னும்
    . . மாகீண்ட கைத்தலத்தென் மைந்தா என்னும்
    சொல்லெடுத்துத் தன்கிளியைச் சொல்லே என்று
    . . துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின் றாளே
    என்னும் பாசுரத்தில் மகள் கூற்று தனித் தனியாக முற்றுப் பெறுவதுபோல் தோன்றினும் தாய் அதனை மீண்டும் எடுத்துச் சொல்லும் போக்கில்,
    கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்னும்
    . . காமருபூங் கச்சியூ ரகத்தாய் என்னும்
    இடையறாத் தொடர்ச்சியுடன் கூற்று அமைதல் காணலாம்.
  • இப்போது மகள் கூற்றாக அமைந்த ஒரு பாடலின் பகுதியைக் காண்போம்.
    மைவண்ண நறுங்குஞ்சிக் குழல்பின் தாழ
    . . மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட
     
    எய்வண்ண வெஞ்சிலையே துணையா யிங்கே
    . . இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்
    என்னும் பாசுரப்பகுதி மகள் கூற்றாக அமைவது. இதன்கண், இருவராய் வந்தார்என் முன்னே நின்றார் என்பதில் வந்தார் என்னும் முற்று வந்து என எச்சப் பொருளே தந்து தொடர்தலும் நோக்குதற்குரியது.
    வந்தார் என்பது வந்தவர் என்னும் பொருள்படும். மேற்படி  சொன்னவண்ணம் வந்தவராகிய அவர் என்றும் கொள்ளலாம்]
திருக்குறுந்தாண்டகத்தில் இத் தன்மை மிகுந்து காணப்படுகிறது.
நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டுமுன் அண்ட மாளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கியென் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகி லேனே–என்பது முதற்பாசுரம்.
இப்பாசுர முடிவில் விதியினை என்பதற்குப் பின்னர் முற்றாக வருகின்ற (கண்டு . . விடுகிலேனே)
பகுதிகளை விலக்கி, அடுத்துவரும் மூன்று பாசுரங்களிலும் இம்முறையே மேற்கொண்டால் ஆழ்வார் இறைவனைத் தொடர்ச்சியாக அடுக்கிப் போற்றுதல் பின்வருமாறு அமையும்.
“நிதியினை, பவளத்தூணை, நினைய வல்லார் கதியினை, அண்டமாளும் மதியினை, மாலை, விதியினை, காற்றினை,
புனலை, தீயை, இலங்கை செற்ற ஏற்றினை, எழில்மணித்திரளை, இன்ப ஆற்றினை, அமுதம் தன்னை, அவுணர்
கூற்றினை, வானோர்க்கு அமுதம் கொண்ட அப்பனை, எம்பிரானை, மாலிருஞ்சோலை மேய மைந்தனை, கேழலாய்
உலகங்கொண்ட பூக்கெழு வண்ணனை, வேட்கை மீதூர விழுங்கினேன்”
என்பது முதல் நான்கு பாசுரங்களின் பொருட்சுருக்கம் ஆகும்.
இடையில் 5-ஆம் பாசுரம் ஒன்று தவிர 6,7,8 ஆகிய  பாசுரங்களிலும் இவ்வகையான தொடர் அடுக்கினைக் காணலாம்.
9 முதல் 11 முடியவுள்ள பாசுரங்கள் இறைவனை முன்னிலைப்படுத்திப் பேசும் முறையில் உள்ளன.
12 முதல் 20 முடியவுள்ள எஞ்சிய பாசுரங்களில் ஆழ்வார் தமது
பலவாறான இறையனுபவங்களைச் சொல்லி இப்பிடபந்தத்தைத் தலைக்கட்டுகிறார்.
இவ்வாறு கூற்றுநிலை மாறுபடினும்  எச்சங்களை வருவித்து அடுக்கிக்கூறும் தொடர்ச்சிப் போக்கு நூல் முழுதும் ஒத்திருக்கின்றது.
எனவே இத்தகையதொரு தனித்தன்மை ஒன்றினால் அறுசீர் விருத்தங்களால் ஆன பிற நூல்களினின்றும் வேறுபடுத்தி
இவை தாண்டகம் என அழைக்கப் பெற்றன போலும். அன்றியும் இசையும் ஒரு காரணமாய் இருந்திருக்கக் கூடும்.
ஆழ்வாரின் தாண்டகங்கள், பெரிய திருமொழியின் இறுதியில் இடம் பெறுகின்றன.
திவ்யபிரபந்தத்தில் இயற்பா நீங்லாக  உள்ள ஏனைய மூன்று ஆயிரங்களும் இசைப்பாக்கள் என்பது இங்கு மனக்கொள்ளத்தக்கது.
திருநெடுந்தாண்டகப் பாசுரம்  ஒன்றில் “நைவளம் ஒன்றாயா நம்மை நோக்கா” என்னும் தொடர் காணப்படுகின்றது. இதில் வரும் நைவளம் என்னும்
பண்ணைக் குறித்துப் பின்வருமாறு விளக்கம் தருவார் பெரியவாச்சான்பிள்ளை.
“கேட்டாரோடும் சொன்னாரோடும்  வாசியற நைவிக்கும் படியான அழகையுடைத்தான பண்ணை நுணுங்கி” என்பது அவர் தரும் விளக்கம். இதனால்,
உள்ளத்தை உருக்கும் அந்தப்பண்ணின் இயல்பினை அறியலாம்.
நைவளம் என்னும் பண் நாட்டக்குறிஞ்சி என்று சொல்கிறார். கண்ணன்
குழலூதும் போது இந்தப் பண்ணை மிக உகந்து குழலூதுவான் என்றும், அதுகேட்ட சேதன, அசேதனப் பொருட்கள் யாவும்
இப்பண்ணில் மயங்கி நிற்கும் என்பார். இப்படிப்பட்ட பண்ணில் பாடி, பரகால நாயகியை (ஆழ்வாரை) ஆட்கொள்ளக்
கண்ணன் வந்தபோதும் பாராமுகமாக ஆழ்வார் இருந்துவிட்டார் என்று இந்தப் பாடலில் பொருள் வருகின்றது. அதாவது
சேதன, அசேதனப் பொருட்களையும் மயக்கவல்ல பண்ணிற்கும் மயங்காமல் என் மனம் கல்லாகிப் போனதே என்ற வருத்தம் தோன்றப் பாடிய பாசுரம்]
ஆழ்வாரின் தாண்டகத்தில் இடம்பெறும் இசை பற்றிய இக்குறிப்பு மட்டுமன்றிக் குரு பரம்பரை கூறும் மற்றொரு செய்தியும் இங்குச் சுட்டத் தகும். திருமங்கையாழ்வார் தாமே தமது திருநெடுந்தாண்டகப் பாசுரங்களைத் திருவரங்கன்
சன்னிதியில் மனமுருகிப் பாடினார் எனக் குருபரம்பரை கூறுகின்றது.
எனவே இவற்றைப் பாடுதற்கென்று அந்நாளிற் பின்பற்றப்பெற்ற ஒருவகை இசைமரபு பற்றியும் இவை, தாண்டகம் எனப்
பெயர் பெற்றிருக்கலாம். அம்மரபினை இன்று நாம் அறியமுடியவில்லை. மேலும் ஒன்று; தாண்டகம் இசைப்பாட்டே
என்றும் அதில் சிறப்பாகக் கையாளப்படும் இலக்கியக்கொள்கை இறைவனிடம் விண்ணப்பம் செய்து கொள்வதற்கு
இசைப்பாட்டைப் பயன்படுத்துவதாகும் என்று கூறுவர். இதுவரைக் கூறிய வற்றால், தாண்டகம் என்பதே தனிவகையான
யாப்பு என்பது புலப்படும். ஆனால், இதுவரை அச்சான திவ்யபிரபந்தப் பதிப்புகளில் திருக்குறுந்தாண்டகம்
அறுசீர்விருத்தமென்னும் திருநெடுந்தாண்டகம் எண்சீர் விருத்தமென்னும் குறிக்கப் பட்டுள்ளன. கால ஓட்டத்தில்
தாண்டகம் பற்றிய கருத்து தமிழ் இலக்கிய உலகில் மறைந்தது போலும்.
எனவே கடந்த நூற்றாண்டு தொட்டு, திவ்யபிரபந்தப் பதிப்பாசிரியர்கள் தாண்டகத்தை ஆசிரிய விருத்தமாகக்
கொண்டுள்ளனர். அவர்தம் கொள்கை இற்றைநாள் திறனிகளுக்குத் தாண்டகத்தைத் தனி யாப்பாக அறிய உதவவில்லை.
தாண்டகம் என்பது ஒருவகை யாப்பே ஆகும். தாண்டக யாப்பினைப் பற்றிய கருத்துகள் தமிழ் இலக்கண ஆசிரியர்களிடம்
மாறுபட்டும் தெளிவின்றியும் காணப்படுவதால் இன்றைய நிலையில் அதனை நாம் முழுமையாக அறிய முடியவில்லை.
‘பாசுரங்களில் எச்சங்களாகத் தொடர்ந்து செல்லும் போக்கு’ அவற்றைப் பாடுதற்குப் பின்பற்றிய ‘ஒருவகை இசை மரபு’
ஆகிய தனித்தன்மைகளால் தாண்டக யாப்பு முன்னாளில் வேறுபடுத்தி அறியப்பட்டிருக்கலாம்.
 அவை பற்றிய விளக்கமான குறிப்புகள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. தாண்டக யாப்பினைத் தனியே கருத்திற் கொள்ளாமல்
திருக்குறுந்தாண்டகம் அறுசீர் விருத்தமென்றும், திருநெடுந்தாண்டகம் எண்சீர் விருத்தமென்றும் திவ்யப்ரபந்தப்
பதிப்பாசிரியர் சிலர் யாப்புவகை காட்டியது பொருத்தமாகத் தோன்றவில்லை.
திருமங்கையாழ்வார், திருநாவுக்கரசர் ஆகியோரது தாண்டகங்களுக்குப் பிறகு தமிழில் தாண்டக இலக்கியங்கள்
தோன்றவில்லை. எனவே, தமிழில் பிற்றைநிலை வளர்ச்சி பெறாத ஓர் இலக்கிய வகையாகத் திகழ்வது தாண்டகம் எனலாம்.

திருநாவுக்கரசர் பாடிய திருத்தாண்டகங்களுக்குள் கிடைக்கப்பெற்றனவற்றுள் முதலாகப் பாடப்பெற்ற பதிகம் 

மறுமாற்றத் திருத்தாண்டகம்‘ (6.98).

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
.. நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
.. இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
.. சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
.. கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.–6.98.1

வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
.. வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
.. எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
.. அனலாடி ஆன்அஞ்சும் ஆட்டு கந்த
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்
.. செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.-6.95.2

சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
.. தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
.. மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
.. ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
.. அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே.–6.95.10

அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும் மடி
.. அழகெழுத லாகா அருட்சே வடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்த வடி
.. சோமனையுங் காலனையுங் காய்ந்த வடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும் மடி
.. பிழைத்தார் பிழைப்பறிய வல்ல வடி
திருந்துநீர்த் தென்கெடில நாடன் னடி
.. திருவீரட் டானத்தெஞ் செல்வன் னடி.–6.6.4-

—-
தருமை ஆதீனம் வெளியிட்ட ஆறாம் திருமுறை உரைநூலின் முன்னுரைகளில் காண்பது:

“…..நாவரசர் அருளிய தேவாரம் நம்மை இறைவன் திருவருளிலே அழுந்தச் செய்யும் மந்திரங்கள்.

தேவாரத் திருமுறைகள் பண்ணாங்கம்சுத்தாங்கம் என இரண்டு பிரிவுகள் உடையன.

அவற்றுள் பண்ணாங்கம் தாள அமைப்புடன் கூடிய பதிகங்களாகும்திருநாவுக்கரசர் தேவாரத்தில் திருவிருத்தம்திருத்தாண்டகம் ஆகியன சுத்தாங்கமாகப் பாடுவதற்கு உரியன. …. …

திருவிருத்தம் நான்காம் திருமுறையில் அமைந்துள்ளது.

திருத்தாண்டகம் ஆறாம் திருமுறையாக விளங்குகிறது.

பன்னிரு திருமுறைகளில் தாண்டகம் என்ற யாப்பு வகையில் திருமுறை அருளியவர் திருநாவுக்கரசு சுவாமிகளே ஆவார்.

அதனால் இவர் தாண்டக வேந்தர்தாண்டகச் சதுரர் எனப் போற்றப்படுகிறார்.

இறைவன் புகழை விளங்க விரித்துரைக்கும் முறையில் தாண்டக யாப்பு வகை இவருக்குப் பெரிதும் துணை செய்துள்ளது. …..”

பெரிய புராணத்தில்:
நாமார்க்குங் குடியல்லோ‘ மென்றெடுத்து நான்மறையின்
கோமானை நதியினுடன் குளிர்மதிவாழ் சடையானைத்
தோமாலைச் செந்தமிழின் செழுந்திருத்தாண் டகம்பாடி
யாமாறு நீரழைக்கு மடைவிலமென் றருள்செய்தார்.

தேமாலைச் செந்தமிழின் செழுந் திருத்தாண்டகம் – திருத்தாண்டகப் பதிகத்தைப் பற்றிக் கூறநேர்ந்த இடம் இதுவே முதலாதலின் அதன் தன்மையை இவ்வாறு விரித்தனர்.

தேம் – சொல்லினிமையும் ஓசையினிமையும்,

மாலை – ஒரு பாட்டினுள்ளே பல பெயரும் தொடர்ந்துவந்து ஓரிடத்து முடிபுறும் தன்மையும்,

செந்தமிழ் – நிரம்பிய தமிழினிமையும்,

இன் – பொருளினிமையும்,

செழுமை – பயனினிமையும்,

திரு – இறைவனது தன்மை பற்றிய நிலையும்,

தாண்டகம் – யாப்பும் பண் வகையும் உணர்த்தின.

இங்குக் கூறிய அடைமொழிகள் தாண்டகங்கட்குப் பொதுவாகவும்இப்பதிகத்துக்குச் சிறப்பாகவும் உரியன.

தேவாரத்தினைத் தாண்டகச் செய்யுளால் திருநாவுக்கரசர் ஒருவரே யருளியிருத்தலால் அவர்க்குத் தாண்டக வேந்தர் என்று பெயராயிற்று.


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் – அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும்–

April 24, 2019

பிரவேசம் –

ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் ஆகிறார் –
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி-
வேல் கணார் கல்வியே கருதி –என்று
ஸ்ரீ சர்வேஸ்வரன் விபூதி அடைய இவர் துடைக்கு கீழே கிடக்கிறதோ வென்று
சங்கிக்க வேண்டும்படி -அதிசய அஹங்காரராய் –
அதுக்கடியான தேகாத்ம அபிமானத்தை உடையவராய் –
அத்தாலே -சாந்தேய்ந்த மென்முலையார் தடம் தோள் இன்ப வெள்ளம் தாழ்ந்தேன் -என்கிறபடியே
ஆத்மவிஷயம் ஆதல்-ஸ்ரீ ஈஸ்வர விஷயம் ஆதல்
ஜ்ஞானம் பிறக்கைக்கு யோக்யதை இல்லாதபடி விஷய ப்ரவணராய் போந்தார் ஒருவர்

ஸ்ரீ சர்வேஸ்வரன் இவருக்கு இப்படி உண்டான விஷயாந்தர பிரசித்தியைக் கண்டு
இவரை இதில் நின்றும் மீட்கும் விரகு தேடித் பார்த்து –
விஷயாந்தர பிரவணராய் போந்த இவரை
சாஸ்த்ரத்தைக் காட்டி மீட்க ஒண்ணாது
நம் அழகைக் காட்டி மீட்க வேணும் என்று பார்த்து
இவருக்கு விஷயங்களில் உண்டான ரசிகத்வத்தையே பற்றாசாகக் கொண்டு
தன் அழகைக் காட்டிக் கொடுக்கக் கண்டு –
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது –
அடியேன் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் -என்று
தமக்கு ஈஸ்வர விஷயத்தில் உண்டான போக்யதை
தத் விஷய வை லஷ்ண்ய பிரயுக்தமோ-என்னும்படி இவ் விஷயத்தில் அவஹாஹித்தார் –

ஸ்ரீ ஆழ்வார் தம் பக்கலில் ஆழம் கால் படக் கண்ட ஸ்ரீ ஈஸ்வரன் –
இவருக்கு நம் பக்கல் உண்டான ப்ரேமம் விஷய சாமான்யத்தில் போல் அன்றியே
சம்பந்த ஜ்ஞான பூர்வகமாக வேணும் -என்று
கிழிச் சீரையோடே தனத்தைக் கொடுப்பாரைப் போலே –
சர்வார்த்த பிரகாசமான ஸ்ரீ திரு மந்தரத்தையும் –
சௌசீல்யாதி குணாதிக்யத்தையும்
ஸ்ரீ திருமந்த்ரார்த்ததுக்கு எல்லை நிலமான ஸ்ரீ திருப்பதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்டு –
வாடினேன் வாடி -தொடங்கி
ஒரு நல் சுற்றம் -அளவும்
உகந்து அருளின இடமே
ஆஸ்ரயணீயமும் -சாதனமும் -போக்யமும் –
என்று அனுபவித்தார் –

இப்படியே இவர் ஸ்ரீ திருப்பதிகளிலே மண்டி அனுபவிக்கிறபடியைக் கண்டு –
இவ்வனுபவம் அவிச்சின்னமாம் படி -ஒரு தேச விசேஷத்தே கொடு போக வேணும்
அதுக்காக சம்சாரத்தின் உடைய தண்மை அறிவிப்போம் என்று பார்த்து -அத்தை அறிவிப்பிக்க
பீத பீதராய் –
மாற்றமுளவிலே
இருபாடு உறு கொள்ளி யினுள்ளே எறும்பே போலே- என்றும்
ஆற்றங்கரை வாழ் மரம் போலே அஞ்சுகிறேன் -என்றும்
பாம்போடு ஒரே கூரையிலே பயின்றால் போல் -என்றும்
இப்படி தம்முடைய பயத்துக்கு அநேகம் த்ருஷ்டாந்தங்களைச் சொல்லிக் -கூப்பிட்டார்-

இவர் கூப்பிடச் செய்தேயும்
பிரஜை கூப்பிடா நிற்கச் செய்தேயும் ஆமம் அற்று பசிக்கும் தனையும் சோறு இடாத தாயைப் போலே
தன்னை அனுபவிக்கு ஈடான விடாய் வளருவதற்கு ஈடாக-ஸ்ரீ ஈஸ்வரன் முகம் காட்டாது ஒழிய
ஒரு ஷணமும் தரிக்க மாட்டாது -பெரு விடாய் பட்டார் –
நீரிலே விழுந்து நீரைக் குடிப்பது
நீரையே ஏறிட்டுக் கொள்ளுவதாப் போலே
அவனை வாயாலே பேசியும்
தலையாலே வணங்கியும்-
நெஞ்சாலே நினைத்தும்-
தரிப்போம் என்று பார்த்து
அதிலே உபக்ரமித்தார் -ஸ்ரீ திருக் குறும் தாண்டகத்தில்-

பெரு விடாயர் குடித்த தண்ணீர் ஆறாதே மேலும் விடாயைப் பிறப்பிக்குமா போலே
அது பழைய அபிநிவேசத்துக்கு உத்தம்பகமாய்
ஸ்ரீ திரு வெழு கூற்று இருக்கையிலே -நின் அடி இணை பணிவன்
வரும் இடர் அகலமாற்றோ வினையே -என்று-ஆர்த்தராய் சரணம் புக்கார்

அநந்தரம் அபேஷிதம் பெறாமையாலே கண்ணாம் சுழலை இட்டு
ஸ்ரீ பெருமாள் முந்துற கடலை சரணம் புக்கு அவன் முகம் காட்டா விட்டவாறே
சாபமாநய சௌமித்ரே -என்று
கொண்டு வா தக்கானை -என்னுமா போலே
வழி அல்லா வழியே மடலூர்ந்து –
இரண்டு தலையும் அழித்தாகிலும் முகம் காட்டு வித்துக் கொள்ளுவோம் -என்று மடல் எடுக்கையில் உபக்ரமித்தார் –

அதில் -ஸ்ரீ சிறிய திருமடலில்
அவன் ஐஸ்வர்யத்தையும் -தேவும் தன்னையும் –என்று
தானான தன்மையாய் அபிமானித்து இருக்கும்
அவதாரங்களில் உண்டான நீர்மையையும் அழிக்கிறேன் -என்றார் –

அதுக்கும் முகம் காட்டிற்று இலன் –
அதுதான் பர தசை என்னும்படி நீர்மைக்கு எல்லை நிலமான கோயில்களும் உண்டு இறே
என்று இருந்தான் -என்று கொண்டு
அவனுக்கும் தமக்கும் வைப்பான ஸ்ரீ கோயில்களில் உண்டான நீர்மையையும்
அழிக்கிறேன் -என்றார் ஸ்ரீ பெரிய திருமடலிலே –

இனி முகம் காட்டாது ஒழியில் ஜகத்து அநீச்வரமாம் என்று பார்த்து –
ஸ்ரீ ப்ரஹ்லாதிகளுக்கு முகம் காட்டுமா போலே இவருக்கு முகம் காட்டி
தானும் இவரும் ஜகத்தும் உண்டாம்படி பண்ணினான்-

ஸ்ரீ சுகாதிகளும் ஸ்ரீ முதல் ஆழ்வார்களும் பரத்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ சனகாதிகளும் ஸ்ரீ திரு மழிசைப் பிரானும் அந்தர்யாமித்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ வால்மிகீகாதிகளும் ஸ்ரீ குலசேகரப் பெருமாளும் ஸ்ரீ ராமாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ பராசர ஸ்ரீ பாராசாராதிகளும் -ஸ்ரீ நம் ஆழ்வாரும் ஸ்ரீ பெரியாழ்வாரும் ஸ்ரீ ஆண்டாளும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ நாரதாதிகளும் ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் ஸ்ரீ திருப் பாண் ஆழ்வாரும் கோயிலிலே ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ சௌநக பகவானும் இவரும் அர்ச்சாவதாரத்திலே ஊன்றி இருப்பார்கள் –

அல்லாத ஸ்ரீ ஆழ்வார்களைப் போலேயும் ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளைப் போலேயும் அன்றிக்கே
சம்ச்லேஷாசஹமான சௌகுமார்யத்தை உடையராய் இருப்பார் –
அதாவது – விச்லேஷித்த போது -உம் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை -என்று
மலையாளர் ஊட்டுப் போலே அனுபவிக்கவும் வல்லராய் –
பிரிந்தாலும் சில நாள் தரிக்கவும் வல்லர்களான ஸ்ரீ ஆழ்வார்களோடும்
பத்து மாசம் பிரிந்து இருந்த ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளோடும்
ஷண காலம் விஸ்லேஷ அசஹனான என்னை கூட நினைக்கலாமோ -என்னும்படி இருக்கையும் –
சம்ச்லேஷ தசையிலே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
சம்ச்லேஷ ரச அனுபவத்தால் கண்ணாம் சுழலை இட்டு முன்னடி தோற்றாதே
அசாதாராண லஷணத்தை காணச் செய்தேயும் அறுதி இட மாட்டாது இருக்கையும் –

ஆக
ஸ்ரீ எம்பெருமான் இவருக்கு நிர்ஹேதுகமாக -சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும் காட்டிக் கொடுக்கக் கண்டு –
அனுபவத்து -அதனில் பெரிய என் அவா -என்று
தம்முடைய அபிநிவேசத்துக்கு இறை போராமையாலே
அலமந்து கூப்பிட்டு பின்பு தாம்
அவா அற்று வீடு பெற்று த்ருப்தரான தசையைப் பேசித் தலைக் கட்டுகிறார் -இப் பிரபந்தத்தில்-

——————————————————————-

அவதாரிகை –
முதல் பாட்டில் –
தேகாத்ம அபிமான நிவ்ருத்தி தொடக்கமாக ஸ்ரீ திருவடிகளோட்டை சம்பந்தம் பர்யந்தமாக
சாஷாத் கரிப்பித்த உபகார பரம்பரைகளைப் பேசுகிறார் –

மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1-

மின்னுருவாய் முன்னுருவில் –
முன்னுருவில் மின்னுருவாய் –
பிரத்யஷ -பரித்ர்ஷ்டமான பதார்த்தங்களில் –
மின்னின் உடைய ஸ்வபாவத்தை பிரகாசிப்பித்தான் –
அதாவது –
பிரத்யஷ பரித்ர்ஷ்டமான -பிரகிருதி ப்ராக்ருதங்களின் அஸ்த்ரையத்தை பிரகாசிப்பித்தான் -என்கை –
இப்பிரக்ருதி சேதனனோட்டை சம்பந்தத்துக்கு ஹேது பேதம் உண்டான போது –
இதுக்கு ஸ்வபாவ பேதம் உண்டாகக் கடவது –
ஹேது பேதம் -ஆவன –
1-கர்மத்தால் பந்திக்கையும் –
2-கிருபையால் பந்திக்கையும்
3-இவர்களுக்கு மயர்வற மதிநலம் அருளுகையும்
4-மற்று உள்ளார்க்கு ஜாயமான கடாஷம் பண்ணுகையும் –

அதாவது –
கர்மத்தால் பந்தித்த போது -ஆத்ம பரமாத்மா ஸ்வரூபங்களுக்கு திரோதாயகமாய் இருக்கையும் –
தன் பக்கல் -அஸ்த்ர்யத்தையும் அபோக்யதையும் மறைத்து
ஸ்த்ர்யத்தையும் போக்ய புத்தியையும் பிறப்பிக்க கடவதுமாய் இருக்கும்-

ஸ்ரீ பகவத் பிரசாதத்தாலே பந்தித்த போது
ஸ்வ விஷயத்திலும் ஸ்வ கீயங்களிலும் கிடக்கிற
அஸ்த்ரையத்தையும் அபோக்யதையையும் பிரகாசிக்கக்கடவதாய்
ஆத்ம பரமாத்மா ஸ்வரூபங்களையும் பிரகாசிப்பிக்க கடவதாய் இருக்கும் –
இப்போது
ஸ்ரீ பகவத் பிரசாதம் அடியாகையாலே-பிரகிருதி பிராக்ருதங்களில் அஸ்தைர்யம் பிரகாசிப்பித்தது
த்யாஜ்யதா பிரதிபத்தி உண்டாய்த்து -என்கை –
விசித்ரா தேக சம்பத்தி ஈச்வராய நிவேதிதும் -பூர்வமேவ க்ர்தா -என்றும்
சரீரமாத்ரம் கலு தர்ம சாதனம் -என்றும் –
புருஷார்த்த சாதனம் என்றும்-
தர்மத்துக்கு பிரதான உபகரணமான பிரக்ருதியாதிகளை த்யாஜ்யம் என்னக் கடவதோ -என்னில் –
போஜநார்த்தமாக அங்கீ கரித்த கலமும்
போஜன அநந்தரம் அஸ்பர்சமாப் போலேயும் –
அவப்ர்த ஸ்நான அநந்தரம் யூபாதிகள் அஸ்பர்சமாப் போலேயும்
இதுவும் கார்ய அநந்தரம்-ஜ்ஞானம் பிறந்த பின்பு – த்யாஜ்யமாகக் கடவது –

மின்னுருவாய் -என்ற
சாமாநாதி கரண்யம் -உபகார்யா உபகார பாவ சம்பந்த நிபந்தனம் –
இப்படி இவை அஸ்தரம் ஆனால் அநந்தரம் ஸ்திரமான ஆத்மவஸ்துவே-ஜ்ஞாதவ்யமாகக் கடவது –
அஹம் -என்று பிரத்யஷிக்கிற ஆத்ம வஸ்துவை
தேஹம் என்பார்
இந்த்ரியம் என்பார்
மனஸ் என்பார்
பிராணன் என்பார்
புத்தி என்பார்
இப்படி பண்ணுகிற விப்ரதிபத்தி -சமித்து யதாஜ்ஞானம் பிறக்கைக்கு
சாஸ்திர அபேஷை உண்டாகையாலே
சாஸ்திர பிரதானம் பண்ணினார் -என்கிறார் மேல் –

வேத நான்காய் –
ஆத்மாவின் உடைய யாதாம்ய பிரதிபாதன பரமான வேதங்கள் நான்குமாய் –
வெறும் ஆத்மா பரமயோ வேதங்கள் என்னில் -தத்வ த்ரயத்தையும் பிரதி பாதியா நிற்க –
அல்லாத தத்வ த்யவமும் இவனுக்கு இன்னது த்யாஜ்யம்-இன்னது உபாதேயம்
என்கைக்காக பிரதிபாதிக்கப் படுகிறது இத்தனை ஒழிய ஆத்ம பரமேயாகக் கடவது –
ஆனால் த்யாஜ்ய உபாதேயங்களைச் சொல்ல அமையாதோ –
ஆத்ம ஸ்வரூபம் சொல்லுகிறது என் என்னில் –
த்யாஜ்ய உபாதேயங்களுக்கு நிர்ணாயக பிரமாணம் ஸ்வரூபம் ஆகையாலே
ஸ்வரூப அனுரூபமான த்யாஜ்யம் இன்னது
ஸ்வரூப அனுரூபமான உபாதேயமின்னது -என்று அறியும் போது ஸ்வரூபத்தை அறிய வேணும் இறே –
ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் இல்லாத போது-சரீர மாத்ரம் த்யாஜ்யமாய்
புத்திர பசு அந்நாதி மாத்ரம் உத்தேச்யம் ஆதல் –
சரீர வியதிரிக்தம் ஆத்மாவான போது
புத்திர பசு அந்நாதிகள் த்யாஜ்யமாய்-ஸ்வர்க்கம் உத்தேச்ய மாதல் செய்யும் இறே-
சாஸ்திர அபேஷை சேதனனுக்கே ஆகையாலே சேதன பரமாகக் கடவது –
ஸ்ரீ ஈஸ்வரன் ஸ்வதஸ் சர்வஞ்ஞன் ஆகையாலும்
அசித் தத்வம் ஜடம் ஆகையாலும் சாஸ்திர அபேஷை இல்லை –

இனி சாஸ்திர வச்யனுமாய் -ஜ்ஞாதாவுமான சேதனனைப் பற்றி -சாஸ்திரம் உதிக்கக் கடவது –
வேதம் பிரதிபாக்கிற மாத்ரம் அன்றிக்கே வேதம் உண்டாக்கினதும் இவனுக்கே –
இவ்விடத்தில் ஸ்வார்த்த பிரகாசத்வத்தைப் பற்ற -ஸ்ருதி மறை -என்னாமல் –வேதம் -என்கிறது –
பிரகாசம் உண்டோ என்னில்
மறையாய நால் வேதம் -என்கிறபடியே
தன்னை அதிலங்கித்தார்கு ஸ்வார்த்த திரோதாயகமாயும்
தன் பக்கலிலே புபுத்ஷூக்களுக்கு -ஸ்வார்த்த பிரகாசமாயும் இருக்கும் –
போத்தும் இச்சு புபுத்ஷூ -அறிய வேணும் என்கிற இச்சை உடையவன் -என்றபடி –
பத்துடை அடியவர்க்கு எளியவன் -பிறர்க்கு அரிய வித்தகன் -என்கிறபடியே
பிரமேய ஸ்வ பாவம் பிரமாணத்துக்கும் உண்டாய் இருக்கும் -என்கை –
இங்கு வேதம் நான்கு -என்கிற சாமாநாதி கரண்யம் –
வேதைஸ் ச சர்வை ரஹ மேவ வேத்ய – என்று
பிரதிபாத்ய பிரதிபாதிக பாவ சம்பந்த நிபந்தனம் அன்று –
மாநம் பிரதீபமிவ காருணிகோ ததாதி -என்கிறபடியே
பிரதார்த் பிரத்தேய பாவ சம்பந்த நிபந்தனம் –

அநந்தரம் இந்த சாஸ்திர ஜன்யமான ஜ்ஞானத்தையும்
எனக்கு உண்டாக்கினான் -என்கிறார் –
விளக்கொளியாய் –
விளக்கு ஒளியின் ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –
விளக்கொளி -என்றது சாஸ்திர ஜன்ய ஜ்ஞானத்தைச் சொல்கிறது –
அதாகிறது -தீபமாகிறது அந்தகாரத்தைப் போக்கி பதார்த்தங்களைப் பிரகாசிப்பிக்குமா போலே
அஞ்ஞானத்தைப் போக்கி ஸ்வரூபத்தை பிரகாசிப்பிக்கக் கடவதாய் இருக்கை –
அந்தம் தம இவா ஜ்ஞானம் தீபவ ஸ்சேந்த்ரி யோத்பவம் – என்று
ஸ்ரவண ஜ்ஞானத்தை தீபமாகச் சொல்லக் கடவது இறே –

ஹர்த்தும் தமஸ் சதஸ தீவ விவேகத்து மீசோ மாநம் பிரதீபமிவ காருணிகோ ததாதி-என்னக் கடவது இறே-
இத்தால் -ஸ்ரோதவ்ய -என்று சொல்லுகிற ஸ்ரவணத்தை சொல்லிற்றாய் யாய்த்து –

முளைத்து எழுந்த திங்கள் தானாய் –
என்று -மந்தவ்ய நிதித்த்யாசிதவ்ய த்ரஷட்வய -என்கிற
மனந நிதித்யாசன தர்சனங்களைச் சொல்லுகிறது –

முளைத்து –
பர்வதாக்ரத்திலே தோன்றின சந்தரனைப் போலே
தீப த்ர்ஷ்டாந்தத்தால் சொன்ன ஸ்ரவண ஜ்ஞானத்தில் காட்டிலும்
பிரகாச ரூபமான மனந தசையைச் சொன்னபடி –

எழுந்து –
பர்வதாக்ரத்தை விட்டு ஆகாசத்தில் எழுந்த சந்தரனைப் போலே
மனந அவஸ்தையில் காட்டிலும் அதி பிரகாசமான அநவரத பாவனையைச் சொல்லிற்றாயிற்று

திங்கள் தானாய் –
சாஷாத் காரத்தைச் சொல்லுகிறது –
எங்கனே என்னில் –
தானான திங்கள் -என்று –
ஆகந்துகமான களங்கம்- இன்றியே இருக்கிற சந்த்ரனைச் சொல்லுகையாலே
ஆகந்துகமான களங்கம் -பூமியினுடைய சாயை பிரதிபலிக்கையாலே –
சந்த்ர பிரபா ஸ்தானத்திலே ஆத்மாவுக்கு பிரபா ரூபமான தர்ம பூத ஜ்ஞானம் –
பிரகிருதி சம்சர்க்கம் நேராக அற்று
நிஷ்க்ர்ஷ்டமான ஆத்ம வஸ்துவைச் சொன்னபடி –
நிஷ்க்ர்ஷ்ட ஸ்வரூபத்தைக் கண்டால் இறே-
சாஷாத்காரம் சித்தித்ததாவது –
சாஷாத்கார விசிசிஷ்ட ஆத்மா -சாஷாத்காரம் தந்தவன் -என்று -பரமாத்மா சாஷாத்காரம் –
சந்திர த்ர்ஷ்டாந்தத்தாலே –
சதி ஆஹ்லாதே -என்கிறபடியே
ஆஹ்லாத ரூபம் தோற்றுகைக்காகவும்
பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே
அனாயாச சித்தியால் வந்த அம்லானதை தோற்றுகைக்காவும்-சந்திரனை த்ருஷ்டாந்திக்கிறார் –
யதா ஸூர்யஸ் ததா ஞானம் -என்று
ஸூர்யனை தருஷ்டாந்திதது சந்திரனுக்கு ஸ்வ யத்னத்தால் வந்த க்லிஷ்டதை தோற்றுக்கைக்காக –

பின்னுருவாய் –
பின்னான தத்வமாய் –
பஞ்ச விம்சோயம் புருஷ பஞ்ச விம்ச ஆத்மாபவதி –
இருபத்தஞ்சாவது தத்வமான ஆத்மா சாஷாத்க்ர்த்யன் ஆகையாலே
சதுர்விம்சதி தத்வாத்மிகையான பிரகிருதிக்கு அவ்வருகாய் பிரிந்து தோற்றுகிறபடி –
தேகேந்த்ரிய மன பிராண தீப்யோன்ய அநந்ய சாதன
நித்யோவா பீப்ரதி ஷேத்ர மாத்மாபின்னஸ் ஸ்வதஸ் ஸூகி –என்னக் கடவது இறே –

அநந்தரம் -இப்படிப் பட்ட ஆத்ம வஸ்து
வ்யாப்தகதமான தோஷங்களால் ஸ்பர்சிக்கப் படான் -என்கிறார் –
முன்னுருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய் –
முன்னுருவாகிறது -கீழே மின்னுரு -என்று கொண்டு சொன்ன ப்ரத்யக்ஷ பர்த்ர்ஷ்டமான பிரகிருதி பிராக்ருதங்களை –
அதில் உண்டான பிணி மூப்பு பிறவிகளோடு ஸ்பர்சம் இல்லாத ஆத்மவஸ்து –
பிணி -துக்கம் –

இத்தால் அஞ்ஞாநாதிகளை உப லஷிக்கிறது –
மூப்பு பிறப்பு -என்கையாலே ஷட் பாவ விகாரங்களை உப லஷிக்கிறது –
நிர்வாண மய ஏவாய மாத்மா ஜ்ஞான மயோமலா -என்று-துக்காதிகள் பிரகிருதி தர்மமாய்
ஆத்மாவோடு சம்பந்தம் இல்லை -என்னக் கடவது இறே –
ஸவதஸ் ஸூகியாய் இருக்கிற ஆத்மாவுக்கு துக்க அஜ்ஞாநாதிகள் கூடாதோவோபாதி
ஜடமான பிரக்ருதிக்கும் துக்க அஜ்ஞாநாதிகள் கூடாதே யாகிலும்
ஊமத் தங்காய் உடைய சம்சர்க்கத்தாலே ப்ரமம் வருகிறாப் போலே
பிரகிருதி சம்சர்க்கத்தாலே ஆத்மாவுக்கு துக்காதிகள் வருகையாலே துக்காதிகள் பிரகிருதி தர்மமாகவே கடவது

இறப்பதற்கே எண்ணாது –
இறக்கை யாவது -மரிக்கை
மரணத்தை எண்ணாதே
கீழ் -ஷட் பாவ விகாரங்களிலே தேக அனுபந்தியான மரணத்தைச் சொல்லிற்று
இங்கே ஸ்வரூப அனுபந்தியான மரணத்தைச் சொல்லுகிறது -அதாகிறது
கைவல்யம் –
ஸ்வதஸ் ஸூகியான ஆத்மாவினுடைய அனுபவ ஸ்வரூபமாய்-தனியே ஒரு புருஷார்தமாய்
புனராவர்த்தி இல்லாத கைவல்யத்தை மரணம் என்னக் கடவதோ -என்னில்
மரணம் ஆகிறது
ஆத்மவியோகமாக லோகத்திலே பிரத்யஷியா நின்றது இறே –
இதுவும் அப்படியே
சாஷாத் ஆத்ம பூதனான ஸ்ரீ பரமாத்மா வியோகத்தாலே மரணம் ஆகக் கடவது –
பிரத்யஷமாக ம்ர்தமான சரீரம் நஷ்டம் ஆகை போலே
இது நசியாமையாலே இத்தை மரணம் என்னலாமோ -வென்னில்
ஸ்வரூப அனுரூபமான போகம் இல்லாமையாலே
பர ஹ்ர்தயத்தால் மரணமாகக் கடவது –
ம்ர்தோ தரித்ர புருஷ -என்று
போக்தாவானவன் தரித்ரனை ம்ர்தன் என்னுமா போலே
இந்த கைவல்யம் அந் நாதனுக்கு மரணமாகத் தோற்றுகையாலே-மரணம் –என்கிறது –

எண்ணாது –
இத்தை தருகைக்கு எண்ணாதே போந்தான் –
ஜரா மரண மோஷாயா மாமாச்ரித்ய தந்தியே -என்று இத்தை புருஷார்தமாகக் கொடுக்கக் கடவன் –
அவன் இப்போது இப்படி படு குழியில் விழாதபடி இத்தை எனக்கு எண்ணாதே போந்தான் –
அவனது எண்ணம் கொண்டே நமக்கு ஜீவனம் ஆகையாலே எண்ணாது -என்கிறார் –

இவ் வாபன் நிவ்ருத்தியை பண்ணினது மேலே
தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களை பிரகாசிப்பித்தான் -என்கிறார் மேல்
எண்ணும் பொன்னுருவாய் -என்று
திவ்யாத்ம ஸ்வரூபத்தை பிரகாசிப்பித்தான் -என்கிறார் –
எண்ணும் –
போக்யாதிசயத்தாலே
நேதி நேதி -என்கிறபடியே
அது அது -எண்ணும் இத்தனை போக்கி
இதம் -என்று பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –
ஏகைக குணாவதீப்சயா சதா ஸ்திதா -என்று
ஒரோ குணம் தான் அபரிச்சின்னமாய் இருக்க
ஈத்ர்சமாய் அசங்கயாதமான குணங்களுக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை
பரிச்சேதிக்க ஒண்ணாது எண்ணும் இடம் சொல்ல வேணுமோ –

பொன்னுருவாய் –
பொன்னின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –அதாகிறது-
1- -ஸ்பர்ஹணீயமாய் இருக்கையும் –
2-உண்டு என்ன உயிர் நிற்கையும் –
3-இத்தைக் கொண்டு சர்வ அபேஷிதங்களையும் சாதித்துக் கொள்ளலாய் இருக்கையும் –
4-இத்தை உடையவன் காலில் லோகம் அடங்க விழும்படியாய் இருக்கையும்-

மணி வுருவில் பூதம் ஐந்தாய் –
உபாதான பூதங்கள் ஐந்தாய் –
மணிவுருவில் –
மணியின் ஸ்வ பாவாத்தை உடைத்தான வடிவில்
1-தேஜோமயமாய் இருக்கையும்
2-மாணிக்கச் செப்பிலே பொன் போலே தனக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்துக்கும்
ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்களுக்கும்-தான் சுத்த சத்வம் ஆகையாலே பிரகாசமாய் இருக்கையும் –
3-தான் ஸ்வரூப குணங்களில் காட்டில் போக்யமாய் இருக்கையும் –
இதுக்கு உபாதான பூதமான பூத பஞ்சகம் ஆகிறது –பஞ்ச உபநிஷத்
ஒரு தேச விசேஷமாக பஞ்ச உபநிஷண் மயமாய் இறே இருப்பது –
பரமேஷ்டீ புமான் விச்வோ நிவ்ர்த்தஸ் சர்வ ஏவஸ-

மணி வுருவில் பூதம் ஐந்தாய் –என்று
திரோதாயகமாய் இருந்துள்ள சரீரத்துக்கு உபாதான பூதமான பூதங்களை வ்யாவர்த்திக்கிறது
அதவா
மணி வுருவிலும் வர்த்திக்க கடவதாய்
ப்ராக்ர்தமான பூதங்களிலும் வர்த்திக்கக் கடவனாய் இருக்கை –
இத்தால்
அசாதாரண மான விஹ்ரகதோபாதி இவையும் விதேயம் -என்கை –
பத்தனோடு பந்தகத்தொடு வாசி அற-இரண்டும் விதேயமாக வேணும் இறே விமோசகனுக்கு –
பிரதான புருஷேச்வர -என்னக் கடவது இறே-

இப்படி விலஷணமாய் இருக்குமவன் துர்லபமாய் இருக்குமோ வென்னில் –
புனல்வுருவாய் –
வசிஷ்ட சண்டாள விபாகம் அற-ஒரு துறையிலே விநியோகம் கொள்ளலாய் இருக்கும் ஜலம் போலே -என்க-

இப்படி சர்வ ஸூலபன் ஆனால் என் வருகிறதோ என்று வயிறு பிடிக்க வேண்டாதபடி
ஆஸ்ரித சுலபனானோபாதி
பிரதிகூலர்க்கு அக்னி போலே அநபிபவனாய் இருக்கும் என்கிறார் -மேல் –
அனலுருவில் திகழும் –
அபிதபாவ கோப மம் -என்று
நினையாத போது அந்தரங்கருக்கும் அநபிபவனாய் இருக்கும் அவன்
உகவாதார்க்கு அநபிபவனாய் இருக்கும் என்னும் இடம் சொல்ல வேண்டா விறே –

சோதி தன்னுருவாய் –
கீழே ஸ்பர்ஹணீ யதையாலே பொன்னுருவாய் -என்று
ஸ்வரூபம் சுவயம் பிரகாசமாய் இருக்கும் என்றது –

நாட்டில் ஜ்யோதிஸ் பதார்த்தங்களுக்கு ஜ்யோதிஸூ உண்டாகிறது
தன்னோட்டை சம்பந்தத்தால் யாம்படி இருக்கை –
தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி -என்னக் கடவது இறே —

என்னுருவில் நின்ற —
என்னுடைய ஆத்மாவில் நிற்கிலும் தனக்கு அவத்யவஹமாய் இருக்க
எனக்கு த்யாஜ்யமான வடிவில் வந்து நின்றான் என்க –

நின்ற –
இவர் மடல் எடுக்கையாலே -தன்னுடைய சாத்தா ஹாநி பிறக்கும்படியான-கலக்கம் சமித்து -தரித்து நின்றபடி –

எந்தை –
சத்தையோபாதி சேஷித்வமும் உறுதிப் படுத்திய படி –

தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே –
என் தலை மேலவே –தளிர் புரையும் அடி –
அமரர் சென்னிப் பூவான -திருவடிகளே கிடீர் எனக்கு சிரோ பூஷணம் ஆய்த்து –
ஆருடைய கால் இருந்த தலையிலே ஆருடைய திருவடிகள் இருக்கிறது –
இவர் தலையிலே திருவடிகளை வைத்த பின்பு
அவன்
சத்தையும்
சேஷித்வமும்
விக்ரஹமும்
பெற்றானே -இருக்கிறபடி –
ஆக
1-பிரகிருதி ப்ராக்ருதங்களில் அஸ்த்ரத்தையை பிரகாசிப்பித்த அவ் அளவு போராதோ –
2-ஸ்வ ஸ்வரூபத்தை பிரகாசிப்பித்த அவ் அளவு போராதோ –
3-கைவல்யத்தில் போகாதபடி நோக்கின அவ் அளவு போராதோ –
அதுக்கு மேலே
4-தன்னுடைய ஸ்வ ரூபத்தையும்
5-ஸ்வரூப பிரகாசமான விக்ரஹத்தையும் காட்டித் தந்தது போராதோ –
6-அதுக்குமேலே த்யாஜ்யமான என் சரீரத்தில் புகுந்து நிற்பதே –
அதுக்கு மேலே
7-தன்னுடைய திருவடிகளை என் தலை மேல் பொருந்த வைப்பதே –
என்று தமக்கு அவன் பண்ணின உபகார பரம்பரைகளை கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

ஆக
இப்பாட்டால்
1-தத்வ த்ரயங்களின் உடைய நிஷ்க்ர்ஷ்டமான ஸ்வ ரூபமும்
2-அவை மூன்றும் புருஷார்த்தம் என்னும் இடமும்
3-அவற்றில் ஒன்றே ஸ்வரூப பிரயுக்தமான முக்ய புருஷார்த்தம் –
4-அல்லாதவை நிஹீன புருஷார்த்தம் என்னும் இடமும் –
5-அந்த முக்ய புருஷார்த்த பூதனான ஈஸ்வரன் உடைய-ஸ்வரூப ரூப குணங்களின் உடைய வை லஷண்யமும்-
6-அவற்றை ஸ்ரீ ஈஸ்வரன் தன ஆஸ்ரிதர்க்குக் காட்டும் போது தன் பேறாக காட்டும் படியையும்-சொல்லுகிறது –

—————-

நிகமத்தில் –
ஸ்வ லாபத்தை சொல்லா நின்று கொண்டு இப் பிரபந்தத்தை அத்யவசித்தவர்கள் உடைய
சாம்சாரிகமான சகல துக்கங்களையும் தாங்களே முதலரிய வல்லார் –என்கிறார் –

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப்
பழ வினையை முதலரிய வல்லார் தாமே -30-

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா –
மின்னி முழங்கி வில் விட்டு-தர்ச நீயமாய் – வர்ஷியாது இருப்பதொரு வர்ஷூக வலாஹகம் போலே
இருந்துள்ள வடிவை உடையவனே –
ஒரு நீர்ச்சாவியிலே ஒரு காளமேகம் வர்ஷித்தால் போலே
அடி நாயேன் நினைந்திட்டேனே -என்று
இவருடைய ஆர்த்த நாதத்தை கேட்டு -இவருடைய தாபம் எல்லாம் நீங்கும்படியாக
குளிர நோக்கிக் கொண்டு -காளமேக நிபஸ்யாமமான வடிவோடு வந்து முகம் காட்டின படியைச் சொல்கிறது –

கீழில் பாட்டிலே –(29)
பரோஷ நிர்த்தேசம் பண்ணி இருக்க
இங்கே அபரோஷித்துச் சொல்லுகையாலே -வந்து முகம் காட்டினமை தோற்றுகிறது –
பிரணய ரோஷம் அகிஞ்சித்கரமான தசையிலும்-ஸ்வ தோஷ ஞாபநம் கார்யகரமான படி –

ஸ்ரீ நம் ஆழ்வார் ஜகத் காரணத்வத்திலே உபக்ரமித்து –
அவா வறச் சூழ் அரியை அயனை அரனை -என்று ஜகத் காரணத்தோடு தலைக் கட்டினார்
இவர் வடிவிலே -மணிவுருவில் பூதம் ஐந்தாய் -என்று -உபக்ரமித்து
மின்னு மா மழை தவழும் -என்று வடிவோடு தலைக் கட்டுகிறார் –

விண்ணவர் தம் பெருமானே –
இவ் வடிவைப் படியிட ஜீவித்து இருக்குமவர்களைச் சொல்லுகிறது –
அயர்வறும் அமரர்களுக்கு உன்னை அனுபவிக்க கொடுத்துக் கொண்டு இருக்கிறவனே –
கடலிலே வர்ஷித்தால் போலே அவர்களுக்கு உன்னைக் கொடுக்குமது ஒரு ஏற்றமோ –
அவர்கள் உன்னை சதா தர்சனம் பண்ணுமா போலே
நானும் உன்னை-சரீர சம்பந்தம் அற்று-சதா தர்சனம் பண்ணும்படி கிருபை பண்ணி அருள வேண்டும்

அருளாய் என்று
பரமபக்தி பர்யந்தமான விடாய் – பிறந்த இடத்திலும் இரக்கமே சாதனம் என்று இருக்கிறார் –
ஆழியான் அருளே -என்று விஷயாந்தர நிவ்ருத்திக்கும்
இரக்கமே சாதனம் -என்கிறார் –
ஸ்ரீ பகவத் அனுபவத்துக்கும் இரக்கமே சாதனம் -என்கிறார்-

அன்னமாய் –
தமக்கு அவன் வந்து தன்னைக் கொடுத்தபடிக்கு த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார் –
ப்ரஹ்மாவுக்கு பிரமாணத்தை வெளி யிட்டால் போலே யாய்த்து
தமக்கு பிரேமேய பூதனான தன்னை வெளி இட்ட படியும் –

முனிவரோடு அமரர் ஏத்த
ரிஷிகளோடே கூட ப்ரஹ்மாதிகள் வேத சஷூஸ்சை இழந்தோம் என்று தன்னை ஆஸ்ரயித்து ஏத்த –
ரிஷிகளுக்கு ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக பிரமாண அபேஷை உண்டு
ப்ரஹ்மாதிகளுக்கு ஸ்ர்ஷ்டாதி வியாபாரத்துக்கு பிரமாண அபேஷை உண்டு –

அன்னமாய் –
அபௌருஷேயத்வம் குலையாத படி ஸ்ரீ ஹம்ஸ ரூபியாய் –

அரு மறையை –
பெறுதற்கு அரிய வேதம் –
பெறுதற்கு அரியது பிரமேயம் அன்று –
பிரமாணம் ஆய்த்து –

வெளிப்படுத்த –
பிரமாணத்துக்கு உத்பத்தி விநாசம் ஆவது
பிரகாச -அப்ரகாசங்கள் -என்கை –

அம்மான் தன்னை –
ஸ்ரீ சர்வேஸ்வரன் இவர்களுக்கு வேத பிரதானம் பண்ணுகைக்கு அடி
உடையவன் ஆகையாலே -என்கை –

மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
இவர் தரித்த வாறே
ஊரும் ஸ்திரமான படி –
கல்பாவசாநத்து அளவும் அழிவு இன்றிக்கே
ஸ்லாக்கியங்களான ரத்னங்களாலே
செய்யப்பட மாடங்களை உடைத்தான ஸ்ரீ திருமங்கை –

மங்கை வேந்தன் –
பஷியின் காலில் விழுந்தவர் ஸ்ரீ திரு மங்கைக்கு நிர்வாஹகர் ஆனார்

மான வேல் பரகாலன் –
கிஞ்சித் கரிக்கவும் பெற்றார் -என்கை –
அத்தலையிலே பரிவாலே எடுத்த வேல் -இறே –

மான வேல்
கா புருஷன் எடுக்கிலும் ஸ்ரீ திரு மங்கை மன்னன் ஆக்க வல்ல வேல் –
மான வேல் பரகாலன் -என்னுதல்-

பர காலன் –
கையில் வாளாலும்
பிரதிபாதனத்தாலும்
பிரதிபஷத்தை வென்று
வைதிக மரியாதையை ஸ்தாபித்தவர் –

கலியன் –
உபயத்துக்கும் அடியான மிடுக்கை சொல்கிறது
கலி -மிடுக்கு
அங்கன் இன்றியே
கலி காலத்தை கடிந்தவர் -என்னுதல் –

பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் –
பன்னுதல் -பரம்புதல்
ஸ்வரூப ரூப குண விபூதிகள் இத்தனையும்
விளாக்கொலை கொண்டு இருக்கை –
நூல் -சர்வ லஷணோபேதமாய் இருக்கை –
பின்பு லஷணம் கட்டுவாருக்கும் இது கொண்டு செய்ய வேண்டும்படி இருக்கை –
தமிழ் -சர்வாதிகாரமாய் இருக்கை –

மாலை
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு சிரஸா தார்யமாய் இருக்கை –

தொல்லை இத்யாதி
கார்ய காரண ரூபத்தாலே அநாதியாய் வருகிற -அவித்யா கர்ம வாசனா ருசி ப்ரக்ருதி
சம்பந்தங்களை தாங்களே சவாசனமாக போக்க வல்லவர்கள்

வினை
அதாகிறது -புண்ய பாப ரூபமான கர்ம த்வயம்
இது தான் பூர்வோத்தர ராக பிராரப்த ரூபமாய் இருக்கும்
இது தான் அல்லாத
ஜ்ஞான அநுதயம்
அந்யதா ஜ்ஞானம்
விபரீத ஜ்ஞானம்
ஸ்தூல சூஷ்ம ரூபமான அசித் சம்பந்தம்
வாசனா ருசிகளுமாகிற -விரோதி வர்க்கத்துக்கும் உப லஷணம் –

தொல்லைப் பழ வினை –
இவைதான் பழையதாய் இருக்கையும்
அடி காண ஒண்ணாதாய் இருக்கையும் -அதிசயத்தைப் பற்றி சொல்லுதல்
அறவும் பழையதான வினை -என்னுதல் –

தாமே –
இப் பிரதிபந்தங்களை எல்லாம் தாங்களே சவாசனமாக போக்க வல்லார் –
ஸ்ரீ ஈஸ்வரன் முழங்கை தண்ணீர் வேண்டாம் -என்கை –

அருளாய் என்று முனிவரோடு அமரர் ஏத்த -என்று
அவர்களுக்கு விசேஷணம் ஆன போது –
ஸ்ரீ எம்பெருமானைக் கண்ட போதே -என் அவா அறச் சூழ்ந்தாயே –
என்ன சக்தர் அல்லாமையாலும்
கீழில் பாட்டில் போலே இப்பாட்டில் இயலின் பல
ஹானி தோற்றி இராமையாலும்
ஸ்ரீ எம்பெருமான் திரு மேனி வர்ஷூக வலாஹம் போலே இருக்கையாலும்
அயர்வறும் அமரர்களுக்குத் தன்னை புஜிக்க கொடுத்துக் கொண்டு இருக்கும்படியைச் சொல்லுகையாலும்
தாமே வேல் எடுக்க சக்தராகையாலும்
பிரதி பஷத்தை நிரசித்தபடியை அருளுகையாலும்
இப்படிப்பட்ட பேச்சுக்கள் எல்லாவற்றாலும்
தம்முடைய பல ஹானி போய்
தம்முடைய அபேஷிதம் பெற்று
திருப்தரானார் என்னும் இடம்
இப்பாட்டிலே வ்யக்தம் –

முனிவரோடு அமரர் ஏத்த –
அன்னமாய் அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை –
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் மானவேல் பரகாலன் கலியன்
மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே அருளாய் -என்று -சொன்ன –
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே -என்று அந்வயம் –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் –– அருளிச் செயலில்– பாசுரங்கள் பிரவேசம் -சங்கதி –

April 24, 2019

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –
பிரவேசம் –

ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் ஆகிறார் –
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி-வேல் கணார் கல்வியே கருதி –என்று
ஸ்ரீ சர்வேஸ்வரன் விபூதி அடைய இவர் துடைக்கு கீழே கிடக்கிறதோ வென்று சங்கிக்க வேண்டும்படி -அதிசய அஹங்காரராய் –
அதுக்கடியான தேகாத்ம அபிமானத்தை உடையவராய் –
அத்தாலே -சாந்தேய்ந்த மென்முலையார் தடம் தோள் இன்ப வெள்ளம் தாழ்ந்தேன் -என்கிறபடியே
ஆத்ம விஷயம் ஆதல் ஈஸ்வர விஷயம் ஆதல் ஜ்ஞானம் பிறக்கைக்கு யோக்யதை இல்லாதபடி விஷய ப்ரவணராய் போந்தார் ஒருவர்

ஸ்ரீ சர்வேஸ்வரன் இவருக்கு இப்படி உண்டான விஷயாந்தர பிரசித்தியைக் கண்டு
இவரை இதில் நின்றும் மீட்கும் விரகு தேடித் பார்த்து –
விஷயாந்தர பிரவணராய் போந்த இவரை-சாஸ்த்ரத்தைக் காட்டி மீட்க ஒண்ணாது
நம் அழகைக் காட்டி மீட்க வேணும் என்று பார்த்து
இவருக்கு விஷயங்களில் உண்டான ரசிகத்வத்தையே பற்றாசாகக் கொண்டு தன் அழகைக் காட்டிக் கொடுக்கக் கண்டு –
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது –
அடியேன் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் -என்று
தமக்கு ஈஸ்வர விஷயத்தில் உண்டான போக்யதை
தத் விஷய வை லஷ்ண்ய பிரயுக்தமோ-என்னும்படி இவ் விஷயத்தில் அவஹாஹித்தார் –

ஸ்ரீ ஆழ்வார் தம் பக்கலில் ஆழம் கால் படக் கண்ட ஸ்ரீ ஈஸ்வரன் –
இவருக்கு நம் பக்கல் உண்டான ப்ரேமம் விஷய சாமான்யத்தில் போல் அன்றியே
சம்பந்த ஜ்ஞான பூர்வகமாக வேணும் -என்று
கிழிச் சீரையோடே தனத்தைக் கொடுப்பாரைப் போலே –
சர்வார்த்த பிரகாசமான ஸ்ரீ திரு மந்தரத்தையும் –சௌசீல்யாதி குணாதிக்யத்தையும்
ஸ்ரீ திருமந்த்ரார்த்ததுக்கு எல்லை நிலமான ஸ்ரீ திருப் பதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்டு –
வாடினேன் வாடி -தொடங்கி–ஒரு நல் சுற்றம் -அளவும்-ஸ்ரீ உகந்து அருளின இடமே
ஆஸ்ரயணீயமும் -சாதனமும் -போக்யமும் – என்று அனுபவித்தார் –

இப்படியே இவர் திருப்பதிகளிலே மண்டி அனுபவிக்கிறபடியைக் கண்டு –
இவ்வனுபவம் அவிச்சின்னமாம் படி -ஒரு தேச விசேஷத்தே கொடு போக வேணும்
அதுக்காக சம்சாரத்தின் உடைய தண்மை அறிவிப்போம் என்று பார்த்து -அத்தை அறிவிப்பிக்க
பீத பீதராய் –
மாற்றமுளவிலே
இருபாடு உறு கொள்ளி யினுள்ளே எறும்பே போலே- என்றும்
ஆற்றங்கரை வாழ் மரம் போலே அஞ்சுகிறேன் -என்றும்
பாம்போடு ஒரே கூரையிலே பயின்றால் போல் -என்றும்
இப்படி தம்முடைய பயத்துக்கு அநேகம் த்ருஷ்டாந்தங்களைச் சொல்லிக் -கூப்பிட்டார்-

இவர் கூப்பிடச் செய்தேயும்
பிரஜை கூப்பிடா நிற்கச் செய்தேயும் ஆமம் அற்று பசிக்கும் தனையும் சோறு இடாத தாயைப் போலே
தன்னை அனுபவிக்கு ஈடான விடாய் வளருவதற்கு ஈடாக-ஈஸ்வரன் முகம் காட்டாது ஒழிய
ஒரு ஷணமும் தரிக்க மாட்டாது -பெரு விடாய் பட்டார் –நீரிலே விழுந்து நீரைக் குடிப்பது -நீரையே ஏறிட்டுக் கொள்ளுவதாப் போலே
அவனை வாயாலே பேசியும்-தலையாலே வணங்கியும்- நெஞ்சாலே நினைத்தும்- தரிப்போம் என்று பார்த்து
அதிலே உபக்ரமித்தார் -திருக் குறும் தாண்டகத்தில்-

பெரு விடாயர் குடித்த தண்ணீர் ஆறாதே மேலும் விடாயைப் பிறப்பிக்குமா போலே அது பழைய அபிநிவேசத்துக்கு உத்தம்பகமாய்
ஸ்ரீ திரு வெழு கூற்று இருக்கையிலே -நின் அடி இணை பணிவன்-வரும் இடர் அகலமாற்றோ வினையே -என்று
ஆர்த்தராய் சரணம் புக்கார்

அநந்தரம் அபேஷிதம் பெறாமையாலே கண்ணாம் சுழலை இட்டு ஸ்ரீ பெருமாள் முந்துற கடலை சரணம் புக்கு அவன் முகம் காட்டா விட்டவாறே
சாபமாநய சௌமித்ரே -என்று கொண்டு வா தக்கானை -என்னுமா போலே
வழி அல்லா வழியே மடலூர்ந்து –
இரண்டு தலையும் அழித்தாகிலும் முகம் காட்டு வித்துக் கொள்ளுவோம் -என்று மடல் எடுக்கையில் உபக்ரமித்தார் –

அதில் -ஸ்ரீ சிறிய திருமடலில்-அவன் ஐஸ்வர்யத்தையும் -தேவும் தன்னையும் –என்று
தானான தன்மையாய் அபிமானித்து இருக்கும் அவதாரங்களில் உண்டான நீர்மையையும் அழிக்கிறேன் -என்றார் –

அதுக்கும் முகம் காட்டிற்று இலன் –
அதுதான் பர தசை என்னும்படி நீர்மைக்கு எல்லை நிலமான கோயில்களும் உண்டு இறே
என்று இருந்தான் -என்று கொண்டு
அவனுக்கும் தமக்கும் வைப்பான ஸ்ரீ கோயில்களில் உண்டான நீர்மையையும் அழிக்கிறேன் -என்றார் ஸ்ரீ பெரிய திருமடலிலே –

இனி முகம் காட்டாது ஒழியில்-ஜகத்து அநீச்வரமாம் என்று பார்த்து –ஸ்ரீ ப்ரஹ்லாதிகளுக்கு முகம் காட்டுமா போலே
இவருக்கு முகம் காட்டி தானும் இவரும் ஜகத்தும் உண்டாம்படி பண்ணினான்-

ஸ்ரீ சுகாதிகளும் ஸ்ரீ முதல் ஆழ்வார்களும் பரத்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ சனகாதிகளும் ஸ்ரீ திரு மழிசைப் பிரானும் அந்தர்யாமித்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ வால்மிகீகாதிகளும் ஸ்ரீ குலசேகரப் பெருமாளும் ஸ்ரீ ராமாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ பராசர பாராசாராதிகளும் -ஸ்ரீ நம் ஆழ்வாரும் ஸ்ரீ பெரியாழ்வாரும் ஸ்ரீ ஆண்டாளும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ நாரதாதிகளும் ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் ஸ்ரீ திருப் பாண் ஆழ்வாரும் ஸ்ரீ கோயிலிலே ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ சௌநக பகவானும் இவரும் அர்ச்சாவதாரத்திலே ஊன்றி இருப்பார்கள் –

அல்லாத ஆழ்வார்களைப் போலேயும் ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளைப் போலேயும் அன்றிக்கே
சம்ச்லேஷாசஹமான சௌகுமார்யத்தை உடையராய் இருப்பார் –
அதாவது –
விச்லேஷித்த போது -உம் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை -என்று
மலையாளர் ஊட்டுப் போலே அனுபவிக்கவும் வல்லராய் –
பிரிந்தாலும் சில நாள் தரிக்கவும் வல்லர்களான ஸ்ரீ ஆழ்வார்களோடும்
பத்து மாசம் பிரிந்து இருந்த ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளோடும்
ஷண காலம் விஸ்லேஷ அசஹனான என்னை கூட நினைக்கலாமோ -என்னும்படி இருக்கையும் –
சம்ச்லேஷ தசையிலே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
சம்ச்லேஷ ரச அனுபவத்தால் கண்ணாம் சுழலை இட்டு முன்னடி தோற்றாதே
அசாதாராண லஷணத்தை காணச் செய்தேயும் அறுதி இட மாட்டாது இருக்கையும் –

ஆக
எம்பெருமான் இவருக்கு நிர்ஹேதுகமாக -சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும் காட்டிக் கொடுக்கக் கண்டு –அனுபவத்து –
அதனில் பெரிய என் அவா -என்று தம்முடைய அபிநிவேசத்துக்கு இறை போராமையாலே அலமந்து கூப்பிட்டு பின்பு தாம்
அவா அற்று வீடு பெற்று த்ருப்தரான தசையைப் பேசித் தலைக் கட்டுகிறார் -இப் பிரபந்தத்தில்-

——————————————————————-

அவதாரிகை –
முதல் பாட்டில் –
தேகாத்ம அபிமான நிவ்ருத்தி தொடக்கமாக-திருவடிகளோட்டை சம்பந்தம் பர்யந்தமாக
சாஷாத் கரிப்பித்த உபகார பரம்பரைகளைப் பேசுகிறார் –

மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1-

—————————

முதல் பாட்டில் –
தேகாத்ம அபிமான ராஹித்யம் தொடக்கமாக
பிராப்தி பர்யந்தமாக ஈஸ்வரன் தமக்கு பண்ணின உபகார பரம்பரைகளை அருளிச் செய்தார் –
இதில் – தமக்கு த்ரிமூர்த்தி சாம்ய ப்ரமத்தை அறுத்து தந்தபடியை அருளிச் செய்கிறார் –
எண்ணும் பொன்னுருவாய் -என்று ஸ்வரூப வைலஷண்யத்தை சொன்ன போதே
இதுவும் அதிலே அர்த்ததா உக்தம் அன்றோ -என்னில் –
சிம்ஹாவ லோக ந்யாயத்தாலே -கீழ்ச் சொன்ன உபகாரங்களை மறித்துப் பார்த்து அல்லாத உபகாரங்களை உண்டு அறுக்கிலும்
இந்த த்ரிமூர்த்தி சாம்ய கூழ்ப்பை அறுத்துத் தந்த உபகாரத்தை உண்டறுக்கப் போமோ -என்று –
அவற்றின் உடைய ஆதிக்யத்தாலே திரியட்டும் சொல்லுகிறார் –
கூழ்ப்பு -சம்சயம்
விஷயாந்தர ப்ராவண்யத்தில் நின்றும் மீட்ட உபகாரம் போலேயோ –
கைவல்யம் ஆகிற ஆபத்தில் நின்றும் மீட்ட உபகாரம் போலேயோ –இந்த உபகாரம் -என்கிறார்-

1-இருவர் சேஷமாய் -ஒருவன் சேஷியாய்
2-இருவர் உத்பாதகராய் -ஒருவன் உத்பாதகனாய் –
3-இருவர் சரீரமாய் -ஒருவன் சரீரியாய் –இருக்கிறபடியை எனக்குக் காட்டித் தந்தான் –என்கிறார் –

பாருருவி நீர் எரி கால் விசும்புமாகி
பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற
விமையவர் தம் திரு வுரு வேறு எண்ணும் போது
ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ
யொன்று மா கடலுருவம் ஒத்து நின்ற
மூ வுருவம் கண்ட போது ஒன்றாம் சோதி
முகிலுருவம் எம் அடிகள் உருவம் தானே-–2-

————————

முதல் பாட்டிலே -விஷயாந்தர ப்ராவண்யா நிவ்ருத்தி தொடக்கமாக ஸ்வரூப பிராப்தமான சேஷ சேஷித்வ பர்யந்தமாக
ஸ்ரீ ஈஸ்வரன் தன் பேறாக சாஷாத்கரிப்பித்த உபகாரத்தைக் கண்டு விஸ்மிதர் ஆனார் –
தான் அபேஷிக்க அவன் செய்யுமது இறே பிராப்தமாய் இருப்பது –
தாம் விமுகராய் இருக்க அவன் தானே மேல் விழுந்து கார்யம் செய்கையாலே விஸ்மயமாய் இருக்கும் இறே –
இரண்டாம் பாட்டிலே –அந்ய சேஷத்வத்தை அறுத்துத் தந்தான் -என்கிறார் –
த்ரிமூர்த்தி சாம்ய பிரமத்தாலே பிரமித்தது அந்ய சேஷத்வம் இறே –
இப்பாட்டில் –
மணி வுருவில் பூதம் ஐந்தும் -என்றும் –
முகில் உருவம் -என்றும் –
ஸ்வரூபத்துக்கும் ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்களுக்கும் பிரகாசகமாய் –
நிரதிசய போக்யமாய் காள மேக நிபச்யாமமாய் -இருக்கிற வடிவை ஆசா லேசம் உடையாருக்கு
ருசி அனுகுணமாக அழிய மாறி -உபகரிக்கும் படியையும் –
தமக்கு ஸ்வாபாவிகமான வடிவு தன்னையே நிர்ஹேதுக கிருபையாலே காட்டித் தந்த படியையும் கண்டு
நான் கண்டாப் போலே யார் காண வல்லார் -என்கிறார் –
பதிவ்ரதையானால் பர்த்தா சம்ச்லேஷத்தில் இழியுமா போலே-சேஷத்வ சித்தி உண்டாய் –
அனன்யார்ஹதை உண்டானால் –பின்னை அனுபவத்தில் இழியும் இத்தனை -இறே –
ஸ்வரூபத்தை கால் கடைக் கொண்டு பற்ற வேண்டும் படி இருக்கும் குணங்கள் –
உபயத்தையும் கால் கடைக் கொண்டு பற்ற வேண்டும்படி இறே -வடிவின் போக்யதை இருப்பது –

இத்தால் –வடிவை -அனுபவிக்கிறார் –

திரு வடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
த்ரேதைக் கண் வளை யுருவேத் திகழ்ந்தான் என்றும்
பெருவடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை
ஒரு வடிவத் தோர் உருவன் என்று உணரலாகாது
ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கருவடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக்
கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே–3-

———————

கீழ் மூன்று பாட்டாலும் ஸ்ரீ திருமந்த்ரார்தம் ஆய்த்து –
முதல் பாட்டில் –சேஷ சேஷித்வம் சாஷாத்க்ர்தம் ஆய்த்து –
இரண்டாம் பாட்டில் –அந்ய சேஷத்வம் நிவர்த்தம் ஆய்த்து –
மூன்றாம் பாட்டில் -போக்யதை குறைவற்றது –
இனி அனுபவத்துக்கு சஹகாரிகளைத் தேடும் இத்தனை இறே –
அதில் -நித்ய ஸூரிகள் தேச விப்ரக்ர்ஷ்டர் ஆகையாலும்-சம்சாரிகள் விஷய பிராவணர் ஆகையாலும் –
துணையாக மாட்டார்கள் –
இனி தமக்கு அவர்ஜநீயமாய் இருந்துள்ள திரு உள்ளம் இறே சஹகாரி யாவது –
ஆகையால் -நெஞ்சே -நாம் இவ் விஷயத்தை அனுபவிக்கப் பாராய் – என்கிறார் –
கீழ்ச் சொன்ன விலஷண விக்ரஹ விசிஷ்டன் உடைய ஜகத் காரண பிரயுக்தமான
வைபவத்தை ஸ்வரூப பிரகாசமான திருமந்திர முகத்தாலே அனுபவிக்கப் பாராய் -என்கிறார் –
இவர் தாம் ஸ்ரீ திரு மந்திர முகத்தாலே அனுபவிக்கிறார் ஆகில்-அதுக்கு
உபயவிபூதி நாதத்வமும் சமஸ்த கல்யாண குணாத்மகத்வத்மமும் அன்றோ அர்த்தம் -என்னில்
அதுவும் பிரமாண ப்ராசுர்யத்தாலே காரணத்வத்திலே ஒதுங்கி இருக்கக் கடவது –
ஏகோஹவை நாராயணா ஆஸீத் -என்றும்
நராஜ்ஜாதானி தத்வானி-என்றும்
ஆபோ நாரா இதி ப்ரோக்தா -என்றும் இத்யாதிகளாலே
ஜகத் காரணத்வத்தை ஸ்ரீ நாராயண சப்தார்த்தமாக சொல்லக் கடவது இறே –
அது தனக்கு கருத்து என் என்னில் -முறை அழிந்து கிடக்கிறது இத் தேசம் ஆகையாலே
பிரமாண அபேஷை உள்ளது இத் தேசத்துக்கு இறே –
தம் காணியைப் பிறர் ஆளும் போது இறே பிரமாணம் காட்ட வேண்டுவது –ஆகையால் சொல்லுகிறது
ஆகையால் –நெஞ்சே ஸ்ரீ ஜனகனை அனுபவிக்கப் பாராய் -என்கிறார் –

இந்த்ரற்கும் பிரமனுக்கும் முதல்வன் தன்னை
யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித்
திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா
வந்தணனை வந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும்
வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே–4-

—————————-

ஜகத் காரண பூதனாய்-ஜகத் சரீரியாய் இருக்கிற படியை அனுசந்தித்தார் –
அநந்தரம்
ஸ்ரீ நாராயண சப்தார்த்தத்தை-ஸ்ரீ நாராயண அனுவாகம் ஆகிற ஓலைப் புறத்தே கேட்டுப் போகாதே –
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி ஸ்ரீ வாமனனாய் அவதரித்து திரு உலகு அளந்த படியை அனுபவிக்கிறார் —
சேஷ சேஷித்வ சம்பந்தம் இறே – ஸ்ரீ நாராயண சப்தார்த்தம் ஆகிறது –
ஜகத் காரணத்வத்தால் -ஸ்ரீ ஈஸ்வரனோடு இவ் வாத்மாவுக்கு உள்ள சம்பந்தத்தை இறே சொல்லுகிறது – –
காண்மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த -என்று
சர்வ லோகமும் இவ்வர்தத்தைக் கண்ணாலே காணும்படி இறே -திரு உலகு அளந்து அருளினது –
ஆகையாலே -ஸ்ரீ நாராயண சப்தார்த்தமான -திரிவிக்கிரம அபதானத்தை அனுபவிக்கிறார் –
யஞ்ஞ வாடத்தே சென்றபடியையும் –அர்த்தித்த படியையும் சொல்லாதே –
எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்த இவ் வம்சத்தைச் சொல்லுகையாலே –
சேஷ சேஷித்வ பாவ சம்பந்தத்தை அனுபவிக்கிறார் என்று தோற்றுகிறது இறே –

ஸ்ரீ வாமன அவதாரத்தால் சீலம் காட்டி-ஸ்ரீ திரு விக்கிரம அவதானத்தாலே சம்பந்தம் உணர்த்தி அருளினானே
ஸ்ரீ வாமனன் -உபாயம் /ஸ்ரீ திரிவிக்ரமன்-உபேயம் –ஸ்ரீ ஆழ்வார்கள் ஈடுபாடும் அத்தாலே

ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப
ஒரு காலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்ட மீது போகி
இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர்ந்து ஓடித்
தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை
மலர் புரையும் திருவடியே வணங்கினேனே–5-

—————————–

மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் -என்று
ஸ்ரீ திருமந்த்ரத்தை பிரமாணத்தாலே கண்டு போகை அன்றிக்கே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
வந்து அவதரித்து எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து முறையால் உணர்த்தின சம்பந்தத்தையும்
தத் காலத்தில் செவ்வியையும்-அதுக்கு பிற்பாடர் ஆகையாலே அனுபவிக்கப் பெற்றிலோம் என்று – விஷண்ணராக–
அவதாரத்துக்கு பிற்பட்டாரை அனுபவிப்பைக்கு உறுப்பாக அன்றோ நாம் செவ்வியோடு ஸ்ரீ திருக் கோவலூரிலே
வந்து நின்றோம் என்று உகந்து அருளின தேசத்தைக் காட்டிக் கொடுக்க
நெஞ்சே -நமக்கு வாய்த்தது -அனுபவிக்கப் பாராய் -என்கிறார் –

ஸ்ரீ திருமந்த்ரார்தத்துக்கு எல்லை உகந்து அருளின நிலங்கள் இறே –
ஸ்ரீ திரு மந்த்ரத்தை பிரதம பிரபந்தத்திலே லபித்தது-அதின் அர்த்தத்தை அனுபவிக்கிற இடத்தில்
சூழ் புனல் குடந்தையே தொழுது -என்று அன்றே அனுபவித்தது –
ஆனால் –புலம் புரந்து பொன் விளைக்கும் பொய்கை வெளி பூம் கோவலூர் தொழுதும் -என்ன அமையாதோ
கீழ் எல்லாம் சொல்ல வேண்டுவான் என் என்னில்
உகந்து அருளின நிலங்கள் உடைய அடிப்பாடு சொல்லுகிறது –
மேன்மையும் நீர்மையும் போலே காணும் ஸ்ரீ நாராயண சப்தார்த்தம் ஆகிறது –

அலம் புரிந்த நெடும் தடக்கை யமரர் வேந்தன்
அஞ்சிறைப் புள் தனிப்பாகன் அவுணர்க்கு என்றும்
சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன்
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை யீர்த்த
நெடு வேய்கள் படு முத்தம் உந்த வுந்திப்
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப்
பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே –6-

———————————-

தாம் இருந்த இடம் ஸ்ரீ திருக் கோவலூராகப் பெறாமையாலும்-
அவன் தாம் இருந்த இடம் வந்து முகம் காட்டாமையாலும் –
அவன் வந்து முகம் காட்டுகைக்கு ஹேதுவான ஸ்வ பாவங்களை பற்றிக் கூப்பிட்டாராய் நின்றார் கீழ் –
இதில் –
திரு உலகு அளந்து அருளின போதை செவ்வியை அனுபவிக்க வேணும் என்று
ஆசைப்பட்டவருக்கு அச் செவ்வியோடு ஸ்ரீ திருக் கோவலூரிலே வந்து நின்ற படியைக் காட்டிக் கொடுத்தோம் ஆகில்
சாபேஷரான தாம் நம் பக்கலிலே வந்து அனுபவிக்கும் அத்தனை அன்றோ-என்று நினைத்து இருந்தானோ வென்றும்
நாம் அயோக்யர் என்று முகம் தாராது இருந்தானோ என்றும் சங்கித்து – அவன் படியைப் பார்த்தால்
ஆசாலேசம் உடையார் இடத்தே சென்று முகம் கொடுக்குமவன்-யோக்யதை அயோக்யதை பாராதே முகம் கொடுக்குமவன்
ஆகையால் அக்குறை அவனுக்கு உண்டாக மாட்டாது –
இனி இழைக்கைக்கு அடி என் பாபம் இறே-ஆகையால் யாதனா சரீரம் போலே முடியவும் பெறாதே தரிக்கவும் பெறாதே
கிடந்தது உழையா நிற்கும் இதுவே யாய்விட்டது என் கார்யம் என்று தம் அவஸ்தையை அனுசந்தித்து விஷண்ண்ர் ஆகிறார் –

வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர்
மல்லையாய் மதிட்கச்சி யூராய் பேராய்
கொங்குத்தார் வளம் கொன்றை யலங்கல் மார்வன்
குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்
பங்கயத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
பனி வரையின் உச்சியாய் பவளவண்ணா
எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி
ஏழையேன் இனி இங்கனே உழி தருகிறேனே–9-

——————————-

ஆஸ்ரிதர் இருந்த இடத்தே சென்று முகம் கொடுக்குமவனாய் யோக்யதை அயோக்யதை பாராதே முகம்
கொடுக்குமவனாய் இருக்க சர்வதா நமக்கு முகம் காட்டாது ஒழிந்தது – அடியிலே –
மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் வாழலாம் –என்று சொன்னவர் –
சாதனத்தில் அந்வயித்து வந்து முகம் காட்டாது ஒழிந்தானாக வேணும் என்று சங்கித்து
சம்பந்த ஜ்ஞாபகமான ஸ்ரீ திரு மந்த்ரத்தை உபகரணமாகக் கொண்டு –இங்கே அனுபவிப்பார்க்கு
அங்கே யாவதாத்மபாவி அனுபவிக்கலாம் என்று கால ஷேப அர்த்தமாக சொன்ன இத்தனை ஒழிய
பிராப்யம் உன்னை ஒழிய வேறு ஓன்று உண்டு என்று அறியில் அன்றோ –
பிராபகம் உன்னை ஒழிய வேறு ஓன்று உண்டு என்று அறிவது –நான் என் அறிவன் -என்கிறார்-

மந்தரத்தால் -என்கையாலே -ஒரு சாதன பாவமும்
மறவாது வாழ்தியேல் -என்கையாலே -ஒரு கர்த்தவ்யமும் –
வாழலாம் -என்கையாலே -ஒரு பலமுமாய்த் தோற்றும் இறே –
இவருடைய நோற்ற நோன்பு இருக்கிறபடி –
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -என்று ஆகிஞ்சன்யத்தைச் சொல்லி யாகிலும்
இனி உன்னை விட்டு ஓன்று மாற்ற கிற்கின்றிலேன் -என்று ருசியில் குறைவற்று இருக்கிறபடியையும்
அருளிச் செய்தார் இறே –

பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என்னானாய் என்னானாய் என்னால் அல்லால்
என்னறிவேன் ஏழையேன் உலகமேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபாலனாய்
குணபால மதயானாய் இமையோர்க்கு என்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி
திரு மூழிக் களத்தனாய் முதலானாயே–10-

—————————-

ஆற்றாமையோடு –முதலானாய் -என்றார் –அந்த வெக்காயத்தோடே –ஆண் பெண்ணாய் –
அது தன்னிலும் தன் வாயாலே சொல்லுகைக்கு யோக்யதை இல்லாதபடி – மோஹங்கதையாய் –
வைத்து வாயாலே கூப்பிடும்படியாய்ச் செல்கிறது மேல் –
அதாகிறது-
இயற்கையிலே புணர்ந்து பிரிந்து பிரிவு ஆற்றாதாள் ஒரு ஸ்ரீபிராட்டி மோஹம் உணர்த்தியும் –
இவை முதலான தசா விசேஷங்களும் ஒருகால் பிறக்கையும் அது தானும் அக்ரமாக பிறக்கையுமாக செல்லா நிற்க
பந்து வர்க்கத்தில் உள்ளாறும் யுக்த அயுக்த நிரூபணம் பண்ண மாட்டாதே இருக்க-இந் நோவுக்கு நிதானம் அறியாதே
பேஷஜ குசலரும் மந்திர வாத குசலரும் புகுந்து பிரவர்த்தியா நிற்கும் அளவிலே
பகவத் பரையாய் இருக்குமவள் ஒரு கட்டுவிச்சி-இவளுடைய நோவுக்கு நிதானம் அறிகிலிகோள்-
இவளுக்கு ஸ்ரீ எம்பெருமான் அடியாக வந்த நோவு –இது அவனாலே பரிஹ்ர்தமாக வேணும் என்று
அவள் சொன்ன வார்த்தையைக் கேட்ட திருத் தாயார் –வினவ வந்தார்க்கு இப் பெண் பிள்ளை உடைய பிரவ்ர்த்தியையும்
கட்டுவிச்சி சொல்லுகிற வார்த்தையையும் சொல்லுகிற பாசுரத்தாலே தம் தசையை அருளிச் செய்கிறார் –

இவர் பிராட்டி தசையை பிராபிக்கை யாகிறது -அனுபபன்னம் அன்றோ -என்னில் –உபபன்னம் –
பிராட்டிமார்க்கும் இவருக்கும் அனன்யாரஹ சேஷத்வம் ஆகிற சம்பந்தம் ஒத்து இருக்கையாலும்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை -என்கிறபடிபோகம் சமானமாய் இருக்கை யாலும் –
முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யாவிவோத்ர்தௌ -என்று
ஸ்ரீ இளைய பெருமாள் ஸ்ரீ பிராட்டியோடு ஏக பிரக்ருதியாய் தம்மைச் சொல்லுகையாலே –
வியதிரேகத்தில் ஆற்றாமை ஒத்து இருக்கையாலும் ஸ்ரீ பிராட்டி தசையைப் பிராபிக்க தட்டில்லை –

ஆனாலும் தான் ஸ்திரீ என்கிற புத்தி பிறக்கக் கூடுமோ என்னில் –
ஸ்வாமித்வாத்மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாத் யாஸ் ஸ்வாமி நோ குணா
ஸ்வேப்யோதாசத்வ தேஹத்வ சேஷித்வ ஸ்த்ரீத் வதாயின -என்கிறபடியே
ஸ்ரீ புருஷோத்தமன் உடைய பும்ஸ்த்வம் ஆவது எதிர்தலைக்கு ஸ்த்ரீத்வதயாய் இருக்கையாலே-
நான் ஸ்திரீ என்று புத்தி பிறக்க தட்டில்லை –
ஸ்திரீ என்ற புத்தி பிறக்கை யாவது -தான் ஸ்திரீகளோடே ஆகார சாம்யத்தாலே பிறக்கும் புத்தி யல்ல-
புருஷ விஷயத்தில் ஸ்திரீகளுக்குப் பிறக்கும் அனுராக விசேஷ புத்தி பிறக்கை-–

சஜாதீய விஷயத்தில் விஜாதிய புத்தி பிறக்க எங்கே கண்டோம் என்னில்
பாஞ்சால்யா பத்ம பத்ராஷாயா ச் ஸ்னாயந்த்யா ஜகனம் கனம்
யாஸ்த்ரியோ த்ரஷ்ட வத்யஸ்தா பும்பாவம் மானசா யயு – என்று எதிர் தலையில் வைலஷண்யத்தாலே
சஜாதிகளான ஸ்திரீகளுக்கு ஸ்திரீகளைக் கண்டால் புருஷர்க்கு பிறக்கும் அனுராக புத்தி பிறந்தது இறே
அப்படியே -புருஷோத்தம விஷயமாக இவருக்கு பிறக்கும் அனுராக விஷயம் பிறக்க தட்டில்லை –
எதிர் தலையில் வைலஷண்யம் இறே விஜாதீய புத்திக்கு உத்பாதகம் –ஆகையாலே ஒரு பிராட்டி தசையை பிராபிக்கிறார் –

இன்னமும் இயற்கையில் புணர்ச்சி என்கிற இதுவுக்கு நினைவு என் என்னில்
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சேதன விஷயத்திலே ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக விஷயீ கரிக்கும்
நிர்ஹேதுக விஷயீ காரத்தை சொல்லுகை –எங்கனே என்னில்
பாஹ்ய உபவனத்தில் ஒரு ஸ்ரீ பிராட்டி புறப்பட்டு புஷ்பாபசம் பண்ணுகிற சமயத்தில்
அபிமதனான காந்தனும் ம்ர்க வியாஜத்தாலே வர
தோழிமார்களும் அந்ய பரைகளாய் இருக்கிற தசையிலே தர்மி பிரயுக்தமான ஸ்த்ரீத்வ பும்ஸ்த்வங்களே ஹேதுவாக
ஜ்ஞாபகரும் இன்றிக்கே-கடகரும் இன்றிக்கேஇருக்க –சம்ச்லேஷிக்கை இறே -இயற்க்கை புணர்ச்சி ஆகிறது-

ஆசார்ய க்ர்த்ய்த்தையும் புருஷகார க்ர்த்யத்தையும் தானே ஏறிட்டுக் கொண்டான் –

ஸ்த்ரீத்வம் ஆகிறது ஒரு விஷயத்துக்கு அனன்யார்க சேஷமாய் இருக்கை இறே –
எதிர்தலையில் பும்ஸ்த்வம் ஆவது -வகுத்த விஷயமுமே -சர்வ வித ரஷகமுமாய் -இருக்கை இறே –
ஆகையால் நிர்ஹேதுக விஷயீகாரத்தை சொல்லுகிறது –

ஆனால் ஜ்ஞாபகராய் இருப்பார் சில ஆச்சார்யர்களும்-
பொறுப்பித்து சேர்ப்பிக்கைக்கு சில புருஷகார பூதரும் வேண்டி அன்றோ இருப்பது
ஈஸ்வர விஷயீ காரம் இருப்பது என் என்னில் –
அப்போதும் ஆசார்யன் ஜ்ஞாபகன் ஆகிறதும் -இந்த சேஷ சேஷித்வத்தை பிரகாசிப்பிக்கைக்காக –
தேகத்தில் ஆத்மபுத்தியையும் -தத் சம்பந்த நிபந்தனமான ஸ்வாதந்த்ர்யத்தையும் நிவர்த்திப்பிக்கை இறே –
புருஷகார பூதையான ஸ்ரீ பிராட்டியும் பூர்வ வர்த்தத்தை ஷமிப்பிபதும் இஸ் சம்பந்தத்தையும்
இதன் அடியாக வரும் வாத்சல்யத்தையும் முன்னிட்டு இறே –

இன்னமும் ஸ்ரீ பிராட்டியினுடைய நோவுக்கு நிதானம் அறியாதே-மந்திர ஔஷாதிகளால் வியாபிக்கிறார் சிலரும்
அத்தை நிஷேதிக்கிறாள் ஒரு கட்டு விச்சி வார்த்தையும் ஆக செல்லுகிற இதுக்கு கருத்து யாது என்னில் –
விஷயாந்தர பிராவண்யம் அடியாக வந்த அவசாதம் –சாதநாந்தர நிவ்ர்த்த்யம் –
பகவத் பிராவண்யம் அடியாக வந்த அவசாதம் –
அதுக்கு ஹேது பூதனாய் இருந்துள்ள ஈஸ்வரன் தானே வந்து முகம் காட்டிப் போக்க வேணும் –

தத் சம்ச்லேஷம் யாவதாத்மபாவி யாகையாலும்
இந்த பிரேமாதிசயம் ஸ்வரூப பிராப்தம் ஆகையாலும் -அநிவர்த்யம் –
ஸ்வ வாக்யத்தோபாதி-திருத் தாயார் வார்த்தையாலும் பேசுகிறார் தாமாய் இரா நின்றது –
இது சங்கதம் ஆகிறபடி எங்கனே என்னில் –
ஒரு ஆறு பெருகிப் போகா நின்றால் கரையைப் பற்றி போம் அளவு அன்றிக்கே –
பெருக்கு மிக்கு இருந்தால் கைவாய்க்கால்களாப் போம் போக்கும் நிரம்பிப் போகா நிற்க –
தானும் குறையாதே சென்று கடலிலே புகுமாறு போலே –
இவருடைய பிரேமாதிசயத்தாலே –
திருத் தாயார் வார்த்தையும் குறைவற்று செல்லா நிற்க செய்தே
தம் வார்த்தையும் குறைவற்று செல்லுகை யாகிறது -இது சங்கிதம் –

இன்னமும் பெண் பிள்ளை மோஹங்கதையாய் இருக்க-
பர்ச்வம் பவதி துக்கித -என்று அவளிலும் தான் அவ சன்னையாய் இருக்க –
பிராப்தமாய் இருக்க தெளிந்து வார்த்தை சொல்லுகிற இது யுக்தாமோ வென்னில்
ஸ்ரீ பிராட்டியைப் பிரிந்த சமயத்தில் ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனாருக்கு பிறந்த அவசாதத்தில் காட்டில்
ஸ்ரீ இளைய பெருமாளும் அவருடைய அவசாதால் வந்ததும் தம்முடைய காவல் சோர்வால் வந்த அவசாததுமாய்க் கொண்டு
அவசாதம் இரட்டித்து இருக்க –அவற்றைப் பொறுத்து தெளிந்து வார்த்தை சொல்ல வேண்டும் சமயம் அறிந்து
ஸ்ரீ பெருமாளைத் தேற்றினாப் போலே இவளும் இப் பெண் பிள்ளையினுடைய உஜ்ஜீவன அர்த்தமாக தெளிந்து இருக்கையும் உக்தமே-

ரஷய பூதர் அவசன்னராய் இருக்க வமையும் –
அவசாதம் ஒத்து இருக்கச் செய்தேயும் அத்தை அறிந்து பொறுத்து தெளிந்து இருந்து வார்த்தை
சொல்ல வேண்டும் அருமை உண்டு இறே -ரஷகருக்கு
இவளுடைய வார்த்தை இவளுக்கு ஜீவன ஹேது ஆனபடி என் என்னில்
கட்டுவிச்சி வார்த்தை ஸ்ரீ பகவத் பரமாய் இருக்கையாலும்
இவள் தன்னுடைய வியாபாரம் விரக்தி பரமாய் இருக்கையாலும்
இவள் அழகில் அவன் படும் பாட்டை இவள் படுவதே -என்று அவனை பிரசங்கிக்கை யாலும் –
தீர்ப்பாரை யாமினியில் கட்டுவிச்சி போல் அன்றியே –ஸ்ரீ திருமடலில் கட்டுவிச்சி போலே-
மகா பாகவதையாள் இருப்பாள் ஒருத்தி – யாகையாலே
நோவு தீர்க்கை அன்றியே –வர்த்திக்கிலும் அவள் ஸ்பர்சமம் அமையும் என்னும்படி இருக்கிறவனை
பிரசங்கிக்கையாலும்-ஆசுவாச ஹேதுவாகத் தட்டு இல்லை –

இன்னமும் முதல் பத்து -இவர் தம்முடைய வார்த்தை –
இரண்டாம் பத்து -திருத் தாயார் வார்த்தை –
மூன்றாம் பத்து -ஸ்ரீ பிராட்டியார் வார்த்தை –
மச் சித்தா -மத் கத ப்ராணா – போதயந்த பரஸ்பரம் -என்றபடியே மூன்று பத்துக்கும் மூன்று வாக்யார்த்தம் –
மச் சித்தா –
விஷயாந்தரம் கலசாத படி -அனந்யார்கராய் அநந்ய போக்யராய் -இருக்கிறபடியை பேசுகையாலே முதல் பத்து -ஜ்ஞான பரம் –
இரண்டாம் பத்து -அந்த ஜ்ஞான கார்யமான –வைராக்ய பூர்வகமாக பகவத் பிராவண்ய அதிசயத்தைச் சொல்கிறது –
பிரேம பூர்வகமானால் பிராப்தி அளவும் செல்ல நிலவரோடே கால ஷேபம் பண்ணும்படியைச் சொல்லுகிறது -மூன்றாம் பத்து –

இரண்டாம் பத்து –மத் கத ப்ராணா -என்றது இறே –
தன் மூச்சடங்க தாயார் வார்த்தையாகச் செல்லுகையாலே
போத யந்த பரஸ்பரம் -என்றது இறே தோழி யோடு வ்ர்த்த கீர்த்தனம் பண்ணுகையாலே-

இதில் -முதல் பாட்டில் –
திருத் தாயார் இவளுடைய விரக்தியையும் கட்டுவிச்சி சொன்ன வார்த்தையையும் வினவ வந்தார்க்கு சொல்லுகிறாள் –
அவர்களுக்கு சொல்லுகிற வார்த்தை ஒன்றும் –தன்னுடைய பாவ வ்ர்த்தி என்றும் ஆய்த்து இருக்கிறது –
விச்லேஷத்தில் இப்படி அவசன்னையாம்படி –பிரணயத்தில் தேசிகை யாவதே –
என்கிற உகப்பு ஆய்த்து உள் வாயில் தனக்குச் செல்லுகிறது –

தனக்கு அபிமதமாய் இருந்தால் அது தன்னை இவர்களுக்கு சொல்ல குறை என் என்னில் –
இயற்கையில் புணர்ச்சி யாகையாலே அவர்களுக்கு சொல்ல மாட்டுகிறிலள் –
கடகர் அடியாக பிறந்த சம்பந்தம் ஆகில் இறே சொல்வது –
ஸ்ரீ ஆசார்ய உபதேச பூர்வகமாக ஸ்ரீ பகவத் சம்பந்தம் உக்தனாகில் இறே -நமக்கு கொண்டாடல் ஆவது –
ஜ்ஞான கார்யமான கலக்கம் யதா ஜ்ஞானத்தாலே நிவர்த்த்யம்
யதா அஞ்ஞான கார்யமான கலக்கம் -யாவதாத்மபாவி அநிவிர்த்யம்-என்னும் அது இறே
இப் பாட்டில் பிரகாசிக்கிறது –

பட்டுடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள்
பனி நெடும் கண்ணீர் ததும்ப பள்ளி கொள்ளாள்
எட்டுணைப் போது என் குடங்காலில் இருக்க கில்லாள்
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
மட்டுவிக்கி மணி வண்டு முரலும் கூந்தல்
மடமானை இது செய்தார் தம்மை மெய்யே
கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்
கடல் வண்ணர் இது செய்தார் காப்பாராரே –11-

————————-

கடல்வண்ணர் -என்று கட்டுவிச்சி திரு நாமம் சொல்லுகையாலும்
அத்தை திருத் தாயார் அனுபாஷித்தும்-வினவ வந்தார்க்கு சொல்லியும்
இவள் தான் வாய் வெருவினாள் போலே –
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் -என்று தன் வாயாலே திரு நாமத்தை சொல்லுகையாலும்
பூர்வ அவஸ்தையில் காட்டிலும் சிறிது உணர்த்தி பிறந்து-அவ்வளவிலும் அபிமதன் வந்து முகம் காட்டாமையாலே
அதுவும் ஆற்றாமைக்கு உடலாய் -இடைவிடாமல் கூப்பிடத் தொடங்கினாள்-
அத்தை வினவ வந்தார்க்கு சொல்லி இன்னாதாகிறாள் –
இவளுடைய கிலேசம் நின்ற நிலை இது –
ஸ்வரூப ஹானி நின்ற நிலை இது –
எனக்கு அபவ்யையான படி இது –
இத்தனைக்கு அடி என் பாபம் இறே என்று -அவர்களுக்குச் சொல்லி இன்னாதாகிறாள் –
லோக அபவாதம் பரிஹரிக்க சொல்லுகிறாள் இத்தனை போக்கி
அகவாயில் இவ்விஷயத்தில் இவளுடைய அவகாஹனம்
தனக்கு அநிஷ்டமாய் இருக்கிறது அன்று இறே –

நெஞ்சுருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்
நெடிதுயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்
நஞ்சரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்
வம்பார் பூம் வயலாலி மைந்தா வென்னும்
அஞ்சிறைய புட்கொடியே ஆடும் பாடும்
அணியரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
என் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்
இரு நிலத்தோர் பழி படைத்தேன் ஏ பாவமே-12-

———————————

திருத் தாயார் -இவள் திரு நாமத்தை தன் வாயால் சொல்லா நின்றாள் –
திருநாமம் சாத்மிக்கும் தசை போலே இருந்தது என்று பார்த்து -இவள் வார்த்தை கேளாதே –
உறாவிக் கிடக்கிற கிளியை இவள் கண் முகப்பே வைத்து திரு நாமத்தை சொல்லுவிக்க –
இவளுக்கு ஆஸ்வாசம் பிறக்கும் என்று நினைத்து –
இவள் முன்பே கிளியைக் கொண்டு விட்ட இடத்திலும் அது பேசாதே இருக்க-இவள் திரு நாமத்தை சொல்லீர் -என்றாள் –
இவள் தசையைக் கண்டு உறாவி இருக்கையாலும்
சேஷ பூதரான நாம் இவள் கற்பித்தவையே யாகிலும்
இவள் சந்நிதியில் சொல்லக் கடவோம் அல்லோம் -என்னும் நினைவாலும் பேசாமல் இருந்தது –
ஆச்சார்யன் போதித்தனவையே யாகிலும் தத் சந்நிதியில் சொல்லக் கடவது அல்ல என்கிற சாஸ்திர
அர்த்தம் இவ்விடத்தில் வெளிப்படுத்தப் படுகிறது –
நான் உச்சரிக்க-அநந்தரம்-உனக்கு உச்சரிக்கலாமே -என்ன-அடியிலும் கற்பித்த பிரகாரம் அது வாகையாலே அதுக்கு இசைய
தான் ஆதி க்ரஹணம் பண்ண -அநந்தரம் -சொன்னவாறே
இது ஒரு முகத்தாலே -ஆபத்சகம் முதலான வ்ர்த்த முகத்தாலே -சாத்மிகாமையாலே தளர்ந்தாள் -என்கிறாள் –

திருநாமம் சாத்மிக்கும் தசை என்றும் சாத்மியாத தசை என்றும் ஓன்று உண்டோ -என்னில் –திருநாமம் தான்–
1- ஓர் அவஸ்தையிலே பாவனமுமாய்
2-ஓர் அவஸ்தையிலே போக்யமுமாய்-
3-ஓர் அவஸ்தையிலே சம்சார பய நிவர்தகமுமாய் –
4-ஓர் அவஸ்தையிலே சாதனமுமாய் –
5-ஓர் அவஸ்தையில் தாரகமுமாய்-
6-ஓர் அவஸ்தையில் நஞ்சுமுமாய் –இருக்கும் –
தேக ஆத்மா அபிமானிகளுக்கு அன்னம் -இத்தனையும் -ஆகா நின்றது இறே –
ஆகார சுத்தௌ சத்வ சுத்தி -என்கிறபடியே
1-அன்னம் பாவனமாயும் இருக்கும் –
2-தாரகமாயும் இருக்கும்
3-போக்யமுமாயும் இருக்கும்
4-தாநாதி முகத்தாலே –புருஷார்த்த சாதனமாயுமாய் இருக்கும் –
5-அதிசயித்தவாறே நஞ்சுமுமாயும் இருக்கும் -இறே –
அப்படியே பரசேஷம் ஆத்மா என்று இருக்கிறவனுக்கு –
பவித்ரானாம் ஹி கோவிந்த பவித்ரம் பரமுச்யதே -என்கிறபடியே பிரதமத்தில் பாவனமாய் இருக்கும்
அநந்தரம்
புண்யா நாமபி புண்யோ சௌ-என்கிறபடியே உஜ்ஜீவன சாதனமாயும் இருக்கும் –
மங்களாநாஞ்ச மங்களம் -என்கிறபடியே பிராப்யமுமாய் இருக்கும் –
யன் நாம சந்கீர்தனதோ மகா பயாத் விமோஷ மாப்நோதி -என்கிறபடியே
சம்சார பய நிவர்த்தகமுமாய் இருக்கும்-இது ரிஷிகள் கோஷ்டியில் பரிமாற்றம்

ஆழ்வார்கள் கோஷ்டியில் ஒன்றாய்த்து –
திருநாமம் போக்கியம் என்றும்
தாரகம் என்றும்
பாவனம் என்றும்
நஞ்சு என்றும் சொல்லுகிற இது –
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே -என்று திரு நாமம் போக்யமாம் இருக்கிற படியை சொன்னார்கள்
நின்நாமம் கற்ற ஆவலிப்பு -என்று பாவனம் என்னும் இடம் சொன்னார்கள் –
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேன் -என்று தாரகம் என்னும் இடம் சொன்னார்கள்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்றும்
பிழைப்பில் பெரும் பெயர் -என்றும்-நஞ்சு என்னும் இடத்தைச் சொன்னார்கள்

கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்
காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல்லடர்த்து மல்லரையன் அட்டாய் என்னும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-13-

————————-

திருநாமம் சாத்மியாத தசையும்-சாத்மிக்குமோ என்று சங்கிக்கிகும் தசையும்
சாத்மிக்கும் தசையுமாய் இருக்கிற படியை -இறே
இம் மூன்று பாட்டிலும் சொல்கிறது –
ஆபத் சகங்களான திரு நாமங்களை தான் ஆதிக்ரஹணம் பண்ணித் தந்து சொல்லச் சொல்லுகையாலே சொன்னோம்
அது மோஹ ஹேதுவாய்த்து என்று பார்த்து
கிளி தன்னுடைய விவேகத்தாலே முன்பு தெளிந்த காலத்திலே தான் உஜ்ஜீவித்த பிரகாரத்தாலே கற்பித்த திரு நாமங்களை
அடைவே சொல்லக் கேட்டு தரித்து –வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக -என்று கிளியைக் கொண்டாடுகிறாள் –

முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே –14-

————————————–

கீழ் பாட்டில் –
கிளி திரு நாமத்தை சொல்லக் கேட்டு ஆச்வஸ்தையாய்
அதின் பக்கல் உபகார ஸ்ம்ர்த்தியும் கொண்டாடினாளாய் நின்றது –
இதில் –
அத்தசை போய் –தன் வாயாலே திரு நாமத்தை சொல்லி-அது தன்னை வீணையிலே ஏறிட்டு நுணுக்கினாள்-
அந்த வீணையோடு ஸ்பர்சம் பிரத்யபிஞ்ஞா பிரத்யஷத்தாலே
சம்ஸ்லேஷ தசையில் தன் படிகளையும் அவன் படிகளையும் வீணையிலே ஏறிட்டு வாசிக்கும் படிக்கு
ஸ்மாரகமாக-அந்த வீணை முகத்தாலே அவன் வடிவை சாஷாத் கரித்து
அந்த வீணையை அவனாகக் கொண்டு அவனோட்டை சம்ஸ்லேஷ தசையில் பண்ணும் வியாபாரங்களை
இவ் வீணையிலே பண்ணா நின்றாள்
இவள் உணர்ந்தால் என்னாய் விழப் புகுகிறதோ என்று இன்னாதாகிறாள்

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு என்றும் கடல் கிடந்த கனி என்றும்
அல்லியம்பூ மலர்ப் பொய்கை பழன வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித்
தூ முறுவல் நகை யிறையே தோன்றநக்கு
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவியாங்கே
மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே–15-

—————————-

மென் கிளி போல் மிக மிழற்றும் -என்று சம்ஸ்லேஷ தசையில் தன்னுடைய ஜெயமும் அவனுடைய அபஜயமும்
தோற்ற மேலிட்டு வார்த்தை சொன்ன இடத்தில் அவனும் அப்படியே மேலிட்டு வார்த்தை சொல்லக் கேட்டிலள் –
அத்தாலே நின்ற நிலை குலைந்து –தன் கர்வமும் -தானும் -வீணையுமாய் -விட்டது – கூப்பிடத் தொடங்கினாள் –
பர்த்தாரம் இவ சம்ப்ராப்தா ஜாநகீ முதிதா பவத் -என்று உகந்த சமனந்தரம் –
ஹா ராம ஹா லஷ்மணா ஹா ஸூ மித்ரே -என்று ஸ்ரீ பிராட்டி கூப்பிட்டாப் போலே
ஹா ராமா -என்று போக்ய வஸ்துவை நினையா
ஹா லஷ்மணா -என்று புஜிப்பாரை நினையா –
ஹா ஸூ மித்ரா –என்று நிமித்த பூதரை நினையா கூப்பிட்டாள்
அப்படியே – இறே –
வரையாதே ரஷிக்கும் படியையும்-முகம் கொடுக்கும் படியையும் சொல்லிக் கூப்பிட்டு தரைப் படா நின்றாள்
என்கிறாள் –

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்ற மரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே–16-

——————————–

இவள் முழு மிடறு செய்து கூப்பிட்டு அத்தோடு தரைப் பட்ட படியைக் கண்ட கிளியும் வீணையும் ஆஸ்வாச ஹேதுவாம் என்று
அவற்றை முன்னே வைத்துப் பார்த்தோம் –
அவையும் அகிஞ்சித்கரமாய்த்து என்று அவற்றை ஒருங்க விட்டு நாம் ஹிதம் சொன்னால் அது ஜீவிக்கை யாமோ என்று பார்த்து –
நீ இங்கனே வாய் விட்டுக் கூப்பிடுகையும் மோகிக்கிகையும் ஆகிற இது
உன்னுடைய ஸ்த்ரீத்வத்துக்கு போராது -இக்குடிக்கும் அவத்யம் என்ன
அவற்றையோ நான் இப்போது பார்த்து இருக்கிறதோ என்ன-அது தான் கிடக்க –
நீ தான் ஆதரிக்கிற விஷயம் தன்னைப் பேண வேண்டாவோ
ஆசாலேசம் உடையார்க்கு முகம் காட்ட கடவ வஸ்து தன்னை ஒழிய செல்லாமையாலே நோவு பட்டு கூப்பிடுகிற
பிரணயிநிக்கு முகம் காட்டாது ஒழிவதே-என்று நாட்டார் சொல்லும் அவத்யத்தை பரிஹரிக்க வேண்டாவோ என்ன
எனக்கு ஓடுகிற தசையை அறியாதே ஹிதம் சொல்லுகிற இவள் முகத்தில் விழியாதே
பிரிந்தார் படும் நோவை அறியும் அவன் முகத்தில் விழிக்க வல்லளே என்று அவனைப் பற்றிக் கூப்பிடுகிறாள் –

பொங்கார் மென் இளம் கொங்கை பொன்னே பூப்பப்
பொரு கயல் கண்ணீர் அரும்பப் போந்து நின்று
செங்கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்
சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து ஆங்கே
தண் காலும் தண் குடந்தை நகரும் பாடித்
தண் கோவலூர் பாடி யாடக் கேட்டு
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே–17-

——————————–

நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே –என்று தான் சொன்ன-ஹிததத்தைக் கடந்த படியாலே
இனி இவளை ஹிதம் சொல்லி மீட்கை என்று நமக்கு ஓன்று இல்லை என்று கூடி உடன்பட்டு -இவள் கருத்தை கேட்போம் பார்த்து
உனக்கு ஓடுகிற கருத்து என் என்ன –
இங்கு இருந்து கூப்பிடக் கடவேன் அல்லேன் –அவன் இருந்த தேசம் ஏறப் போகக் கடவேன் என்ன –
அளவுடையாரும் குமுழி நீர் உண்ணும் விஷயத்தில் தான் மேல் விழுந்து அனுபவியா நின்றாள் –
இது அன்றோ ஸ்த்ரீத்வத்தை பாராதே விஷய வைலஷண்யத்தை பார்த்தார் படி இருக்கும் படி-வினவ வந்தாருக்கு சொல்கிறாள்
நிறை வழிந்தார் நிற்குமாறு -இது வன்றோ -என்று இவளுக்கு பிரணயத்வத்தில் உண்டான தேசிகத்வம்
தனக்கு இஷ்டம் என்னும் இடம் ஹார்த்தமாக போந்தது –அத்தை இங்கே பிரகாசிப்பிகிறாள்

இவ்விடத்தில் ஓர் அர்த்தத்தை தாயார் வார்த்தையால் பூர்வ பஷித்து-மகள் வார்த்தையாலே சித்தாந்திக்கிறது –

பிரதமத்திலே ஸ்வரூபத்தை அனுசந்தித்து
பின்னை ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தில் இழிய வேண்டாவோ என்று யாய்த்து தாயார் சித்தாந்தம்
அது வேண்டுகிறது என் என்னில்
சாஸ்த்ரங்களில் ஸ்வர்க்காதிகளையும் புருஷார்த்தமாக சொல்லுகையாலே
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் இது என்னும் நிர்ணயிக்கும் போது-ஸ்வரூபம் முன்னாக வேணும் என்கை –

அது ஓர் ஆர்த்தம் அன்று காண்-போக அனுரூபம் ஸ்வரூபமாம் இத்தனை ஒழிய
ஸ்வரூப அனுரூபமாயோ போகம் இருப்பது என்று ஆய்த்து மகள் சித்தாந்தம் –

———————————————————————————————–

கார் வண்ணம் திரு மேனி கண்ணும் வாயும்
கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம்
பார்வண்ண மட மங்கை பத்தர் பித்தர்
பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன்
ஏர் வண்ணம் என் பேதை என் சொல் கேளாள்
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்
இது வன்றோ நிறை வழிந்தார் நிற்குமாறே–18-

———————————

தான் சொன்ன ஹிதம் கேளாமையாலேஇது வன்றோ நிறை வழிந்தார் நிற்குமாறு – என்று தானும்
அதிலே உடன்பட்டமை தோன்ற வார்த்தை சொன்னாள் –
அவ்வளவிலே வினவ வந்தவர்கள்-ஸ்த்ரீத்வத்தை பார்த்திலளே ஆகையாலும்
ஆதரிக்கிறவன் தான் ஒரு விஷயத்திலே அந்ய பரன்-உனக்கு முகம் தர மாட்டான் என்று சொல்லா விட்டது என் -என்ன
அதுவும் சொன்னேன் -அது விபரீத பலமாய்-அதுவே ஹேதுவாக -அவன் இருந்த தேசத்து ஏறப் போனாள் -என்கிறாள் –

முற்றாரா வன முலையாள் பாவை மாயன்
மொய்யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறைவு இழந்தாள் ஆவிக்கின்றாள்
அணி யரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேசக் கேளாள்
பேர்பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்
பொருவற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே –19-

—————————–

பொருவற்றாள் -என்று – ஊர் தடைகள் விட்டால் -ஊர்க்கதிர் காவல் விட்டால் –
அறுப்பது -கிடா விடுவதாய் கொண்டு -ஆழி மூழையாய்ச் செல்லுமா போலே
இவளும் தாய்க்காவல் விட்டவாறே
அவனுடைய சர்வ ரஷகத்வத்தை வாய் விட்டுப் பேசி கால ஷேபம் பண்ணா நின்றாள் –
இவளை மகா பாக்யவதி -என்னுமது ஒழிய உவமை இட்டுச் சொல்லப் போமோ -என்கிறாள் –
மகிஷிக்கு உதவினபடியையும்-
பேரனுக்கு உதவினபடியையும் –
ரஷக அபேஷை உடையாரை ரஷித்த படியையும் –
அதுவும் இல்லாரை தன் கிருபையால் ரஷித்த படியையும் –
தன் பக்கல் விமுகராய் இருப்பார்க்கும் அகப்பட தூளிதானம் பண்ணின படியையும் வாய் விட்டுப் பேசா நின்றாள் -என்கிறாள் –

முதல் பத்தில் தாமான நிலையில் நின்று ஸ்ரீ திருக் கோவலூரை அனுபவிக்கப் பார்த்து –
தாம் இருந்த இடம் திருக் கோவலூராக பெறாமையால் வந்த ஆற்றாமையாலே
கூப்பிட்ட விடத்திலும் அவன் வந்து முகம் காட்ட காணாமையாலே
மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் –வாழலாம் -என்று தாம் கால ஷேப அர்த்தமாக அனுபவிக்க இழிந்து
அது கிட்டாமையால் வந்த ஆற்றாமையாலே சாதன புத்தி பண்ணி வந்து முகம் காட்டாது ஒழிந்தானோ என்று சங்கித்து
பொன்னானாய் -என்கிற பாட்டிலே ஸ்ரீ ஈஸ்வரனுடைய புத்தி சமாதானம் பண்ணினார்
இவ்விடத்க்தில் வினவ வந்தவர்கள் இவளுடைய ஆற்றாமையாலே சாதன புத்தி பண்ண
ஸ்ரீ தாயார் நிலையில் நின்றவர்கள் உடைய ஹ்ர்தயத்தை சமாதானம் பண்ணி தலைக் கட்டுகிறார் –

இத்தால் –
சித்த சாதனம் பரிக்ரஹம் பண்ணினவர்களுக்கு
யாவதாயுஷம் பகவத் குண சேஷ்டிதங்கள் கால ஷேபத்துக்கு விஷயம் என்றது -ஆய்த்து –

தேராளும் வாளரக்கன் செல்வம் மாளத்
தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ யொல்கிப்
போராளன் ஆயிரம் தோள் வாணன் மாளப்
பொரு கடலை யரண் கடந்து புக்கு மிக்க
பாராளன் பாரிடந்து பாரையுண்டு
பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன் பேரோதும் பெண்ணை மண் மேல்
பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே –20-

——————————-

மச்சிதா மத்கதப்ராணா போதயந்த பரஸ்பரம் -என்ற இத்தை ஸூக்ரஹமாக மூன்று பத்துக்கும்
வாக்யார்த்தமாக அருளிச் செய்வர் –பட்டர் –

மச் சித்தா
மத் ஏக சித்தாக – விஷயாந்தரம் கலசாமே அவனையே ஜ்ஞானத்துக்கு விஷயமாக்குகை –
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்று
ஒரு மிதுனைத்தை விஷயீகரித்து இருக்கும் அதுவே வேஷம்-என்று அருளிச் செய்தார்கள் இறே ஆழ்வார்கள் –
இத்தை ஒழிந்தவை எல்லாம் வியபிசாரமே -என்கை –
தேவதாந்தரங்களைப் பற்றிய ஜ்ஞானம் வ்யபிசாரம் –
பிரகிருதி பிராக்ருதங்களைப் பற்றிய ஜ்ஞானம் வியபிசாரம் –
இவ் விஷயம் தன்னை பிரிய பிரிதிபத்தி பண்ணும் ஜ்ஞானமும் வியபிசாரம் -என்கை –

மத்கத பிராணா —
ஆவியை அரங்கமாலை –என்கிறபடியே-தத்கத பிராணனை வுடையராய் இருக்கை –
பிராணன் தத்கதையாய் இருக்கை யாவது –
அவனோடு கூடின போது சத்தை உண்டாய் -பிரிந்த போது –மோஹம் கதையாய் இருக்கை –

போதயந்த பரஸ்பரம் –
புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே –என்று கேட்டு தரித்தல்
கோவிந்தன் குணம் பாடி –ஆவி காத்து இருப்பேனே -என்று சொல்லி தரித்தலாம்படியாய் இருக்கை-

தன்னுடைய வ்ருத்த கதனம் பண்ணி தரித்தும்
தோழிமார் வார்த்தை கேட்டும் தரித்தும் -இறே இப்பத்து செல்கிறது –

முதல் பத்து -ஸ்ரீ பராசர ஸ்ரீ பராசர்யாதிகளான ரிஷிகளுடைய ரீதியாய் இருக்கும் –
ஜ்ஞானப் பிரதானராய் இறே அவர்கள் இருப்பது –
நடுவில் பத்து –ஸ்ரீ ஆழ்வார்கள் உடைய ரீதியாய் இருக்கும்
தத் சம்ஸ்லேஷ விஸ்லேஷ ஏக சுக துக்கராய் இறே இவர்கள் இருப்பது –
மூன்றாம் பத்து –ஸ்ரீ பிராட்டிமார்கள் உடைய ரீதியாய் இருக்கும்
வ்ருத்த கீர்த்தன ரூபமாய் இறே இருக்கும்-

இதுக்கு கீழ் பாட்டோடு சங்கதி என் என்னில்
தான் ஹிதம் கேட்கும் அவஸ்தை அல்லாமையாலே
மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசலாமே -என்று கொண்டாடி கடக்க நின்றாள் திருத் தாயார் –
அவன் இவ் வாற்றாமை ஸ்வ க்ர்ஷியின் பலம் ஆகையாலே-அதிலே திருப்தனாய் கடக்க நின்றான் –
இவள் தன் ஆற்றாமையாலே அவசன்னையாய் கிடந்தாள் –
இவளுடைய தசையைக் கண்ட தோழி –
ஏவம் பஹூவிதாம் சிந்தாம் சிந்தயித்வா -என்று-ஸ்ரீ திருவடி விசாரித்தாப் போலேயும்
இவளும்-ஹிதம் சொல்லுகை அசஹ்யமாய் இருந்தது –

இனி இவளை தரிப்பிக்கும் விரகு ஏதோ என்று பல முகங்களையும் சிந்தித்து –
வ்ருத்தமான சம்ஸ்லேஷத்தை ஸ்மரிப்பிக்கவே இவள் தரிக்குமோ என்று பார்த்து –
இயற்கையால் புணர்சியாகையாலே நானும் சந்நிஹிதை –
அவன் வந்தபடி என் –
உன்னோடு கலந்தபடி என் –
பின்பு பிரிகிற போது -உனக்கு ஆஸ்வாசமாக சொல்லிப் போன வார்த்தை தான் என்ன
வ்ருத்த கீர்த்தனம் ஆகையால் தரித்து அவற்றை இவளுக்கு சொல்லுகிறாளாய் செல்லுகிறது –

முதல் பாட்டில் –
அவனுடைய அழகையும் சீலத்தையும் கண்டு வைத்து-
கைப்பட்ட வஸ்துவை கடலிலே பொகட்டாப் போலே –
அந்யதா பிரதிபத்தி பண்ணி இழந்தோம் கண்டாயே -தோழி -என்கிறாள் –
அவன் வந்தபடி என் என்று தோழி கேட்க -பிரதமத்திலே வந்தபடியைச் சொல்கிறாள் –

இப்பாட்டு –
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் தலைமகனாய்-ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் தலைமகளாக ப்ரவர்த்தம் ஆகிறது –

—————

கஜ்ஜௌகார சௌகந்த்ய வஹாளக நிகும்பனம்
விவ்ர்ணோதி குரோ ப்ராப்தம் கலிவித் வேஷி கிங்கர –

ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்யும் அவதாரிகை –
நாயகனோடு கலந்து பிரிந்து பிரிவாற்றாமல் நோவு படுகிறாள் ஒரு நாயகி உபாயத்தாலே உபவனத்திலே பூக் கொய்ய என்று புறப்பட
நாயகனும் வேட்டைக்கு என்று வர-அங்கே உபாயம் பலித்து சம்ஸ்லேஷம் ப்ரவர்த்தமாய்
நாயகனும் போன அளவிலே இத்தைக் கடிப்பித்து தலைக் காவலாக நின்ற தோழி வந்து கிட்டி அவன் செய்தபடி என் என்று கேட்க
அவளுக்கு பிரவர்த்தமான படியை நாயகி சொல்கிறாள் –இப்பாட்டால் –

1-முதல் பத்து -ஸ்ரீ ஆழ்வார் தாமான பாசுரம்-/ இரண்டாம் பத்து -திருத் தாயார் பாசுரம்/மூன்றாம் பத்து -பெண் பிள்ளை பாசுரம்
2-முதல் பத்து மச்சிதா என்கிறது / இரண்டாம் பத்து மத்கதபிராணா என்கிறது /மூன்றாம்பத்து -போதயந்த பரஸ்பரம் -என்கிறது –
3-முதல் பத்தாலே திருமந்தார்த்தம் சொல்லிற்று -/இரண்டாம் பத்தாலே த்வயார்த்தம் -/ மூன்றாம் பத்தாலே சரம ச்லோகார்த்தம் –
4-முதல் பத்தாலே –பக்தி / இரண்டாம் பத்தாலே -பிரபத்தி / மூன்றாம் பத்தாலே –புருஷாகாரம்/
5-முதல் பத்தாலே –பிரண வார்த்தம் / இரண்டாம் பத்தாலே –நமஸ் சப்தார்த்தம் -/மூன்றாம் பத்தாலே –நாராயண சப்தார்த்தம்-
6-முதல்பத்திலே –அகாரார்தம்-/ இரண்டாம்பத்திலே – உகாரார்தம்-/மூன்றாம் பத்திலே –மகாரார்தம் –
7-முதல் பத்தாலே –அதர்சனே தர்சன மாத்ரகாமா -என்னும் அர்த்தம் /இரண்டாம் பத்தாலே –த்ரஷ்டா பரிஷ்வங்க ரசைக லோலா -என்னும் அர்த்தம் /
மூன்றாம் பத்தாலே –ஆலிங்கதாயம் புநராய தாஷ்யா மாசாஸ் மஹே விக்ரஹ யோர பேதம் –என்னும் அர்த்தம் சொல்லிற்று –

முதல் பத்து ஸ்ரீ ஆழ்வார் பாசுரமான படி என் என்னில் –
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே –என்னும் பாசுரம் ஆகையாலே
இரண்டாம் பத்து –திருத்தாயார் பாசுரமான படி எங்கனே என்னில் –
என் குடங்கால் இருக்க கில்லாள் -என்றும்-பெற்றேன் வாய்ச்சொல் இறையும் பேசக் கேளாள் -என்றும் சொல்லுகையாலே –
மூன்றாம் பத்து பெண் பிள்ளை பாசுரமானபடி என் என்னில் –
என் முன்னே நின்றார் -என்றும் –தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோம் -என்றும்-
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு -என்றும் -சொல்லுகையாலே

மச் சித்தா -என்றபடி என் என்னில் –
இமையவர் தம் திரு வுருவே எண்ணும் போது -என்றும்
அந்தணனை அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல்
வாழலாம் மட நெஞ்சமே -என்றும் சொல்லுகையாலே
மத்கத பிராணா-என்றபடி என் என்னில் –
நெஞ்சுருகி கண் பணிப்ப நிற்கும் சோரும் -என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-என்றும் சொல்லுகையாலே
போதயந்த பரஸ்பரம் -என்றபடி என் என்னில்
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி -என்றும்
வரை வுருவில் மா களிற்றைத் தோழி என் தன பொன் இலங்கு
முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு -என்றும் சொல்லுகையாலே –

ஸ்ரீ திருமந்த்ரார்த்தம் சொன்னபடி என் என்னில் –
என்னுருவில் நின்ற வெந்தை -என்று சொல்லுகையாலே ஸ்ரீ பிரணாவார்த்தம் சொல்லிற்று-
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே -என்று சொல்லுகையாலே நமஸ் சப்தார்த்தம் சொல்லிற்று –
மின்னுருவாய் முன்னுருவில் தொடங்கி அனலுரு வறுதியாக–ஸ்ரீ நாராயண சப்தார்த்தம் சொல்லிற்று –

ஸ்ரீ த்வயார்த்தம் சொன்னபடி என் என்னில் –
வில்லிறுத்து மெல்லியள் தோள் தோய்ந்தாய் -என்றும் –
திருமாலைப் பாடக் கேட்டு -என்றும் –ஸ்ரீ மத் பதார்த்தம் சொல்லுகையாலும் –
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் – என்று தொடங்கி-
துன்று குழல் கரு நிறத்து என் துணையே –என்கிற அளவாக ஸ்ரீ நாராயண சப்தார்த்தம் சொல்லுகையாலும் –
அடி இணையும் கமலவண்ணம் –என்று சரண சப்தார்தம் சொல்லுகையாலும் –
இது செய்தார் -என்றும்
பேர்பாடி -என்றும் சரண சப்தார்த்தம் சொல்லுகையாலும் –
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் -என்றும்
நீராடப் போனாள் -என்றும் பிரபத்யே சப்தார்த்தம் சொல்லுகையாலும்
பாவை மாயன் மொய்யகத்து இருப்பாள் -என்றும்
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -என்றும்
உத்தர கண்டத்தில் ஸ்ரீ மச் சப்தார்த்தம் சொல்லுகையாலும்
பாரையுண்டு -இத்யாதியாலே உத்தர கண்டத்தில் ஸ்ரீ நாராயண சப்தார்த்தம் சொல்லுகையாலும்
பேர்பாடி தண் குடந்தை நகரும் பாடி -என்று நமஸ் சப்தார்த்தம் சொல்லுகையாலும்-

ஸ்ரீ சரம ச்லோகாரார்த்தம் சொன்னபடி என் என்னில் –
கை வளையும் மேகலையும் காணேன் -என்றும்
இரு கையில் சங்கு இவை நில்லா -என்றும் -சொல்லுகையாலே
சர்வ தர்ம பரித்யஜ்ய -த்தின் அர்த்தம் சொல்லுகையாலும்
கரு முகிலே ஒப்பர் வண்ணம் -என்றும்-
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி இங்கே வந்து -என்றும்
கையும் சங்குமாய் கொண்டு சந்நிஹிதம் ஆகையாலே
மாம் ஏகம் பதார்த்தம் சொல்லுகையாலும்

என் தன் பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு -என்றும்
அன்றாயர் குலமகளுக்கு அரையன் தன்னை –அடி நாயேன் நினைந்திட்டேன் –என்றும்-
சரணம் -வ்ரஜ -என்கிற பதங்களின் உக்தமான அர்த்தத்தை அனுஷ்டான பர்யந்தமாக சொல்லுகையாலும்
மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே -என்றும்
அஹம் சப்தார்த்தம் சொல்லுகையாலும்
அருளாய் -என்கிற இடத்தில் என்னை அருளாய் என்ன வேண்டுகையாலும்
த்வா -என்கிற பதார்த்தம் சொல்லுகையாலும்
தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே -என்று
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்கிற பதங்களின் அர்த்தம் சொல்லுகையாலும்
அருளாய் -என்கிற இத்தால் மாசுச -வினர்த்தம் சொல்லுகையாலும்

பக்தி சொன்னபடி –
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் -என்றும் –
காரணந்துத்யேய-என்றும்
தஜ்ஜலா நீதி சாந்த உபாசீத -என்றும்
காரண வஸ்து உபாஸ்யம் என்னும் இடம் சொல்லுகையாலும்
மந்தரத்தால் என்றும் வாழ்த்தியேல் -என்றும் த்ருவ அனு ஸ்ம்ருதி சொல்லுகையாலும் –

பிரபத்தி சொன்னபடி –
அணி யரங்கம் ஆடுதுமோ தோழி -என்று நாயக சம்ச்லேஷத்துக்கு உபாயம் சிந்தித்தாலோ என்று தோழியை கேட்கையாலும்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் – என்று சிந்தித்த உபாயாத்தை அனுஷ்டிக்கையாலும்–புருஷகாரம் சொன்னபடி
பெரும்தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து புலவி தந்து –
என்று ததீயர் புருஷகாரமாக சம்ச்லேஷித்தபடி சொல்லுகையாலே –பிரணாவார்த்தம் சொன்னபடி –
என்னுருவில் நின்ற வெந்தை -என்றும்
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி -என்று
சேஷி சேஷ சீஷத்வம் மூன்றும் ஓர் அஷரமாய் நின்ற படியும் –
அகார உகார மகார இதி -என்று அஷர த்ரயமும் ஒன்றானபடி சொல்லுகையாலே –
நமஸ் சப்தார்தம் சொன்னபடி –
என் குடங்கால் இருக்க கில்லாள் -என்றும்
என் சிறகின் கீழே அடங்கா பெண் பெற்றேன் -என்றும் -இப்புடைகளிலே சொல்லுகையாலே
மமகார நிவர்த்தி சொல்லிற்று –ஸ்ரீ நாராயண சப்தார்த்தம் சொன்ன படி –
வண்ண -என்கிற பாட்டும்-
பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி -என்று
இப்புடைகளிலே ஆயுத ஆபரண விக்ரஹம் ஸ்ரீ நாராயண சப்தார்த்தமான
பரத்வ சௌலப்யாதிகள்-சொல்லுகையாலே-அகார்தார்தம் சொன்னபடி –
வற்புடைய -என்கிற பாட்டில் அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக
அவ ரஷணே-என்கிற தாத்வர்த்தமான ரஷகத்வம் சொல்லுகையாலே-உகார்த்தம் சொன்னபடி –
நெஞ்சுருகி -என்கிற பாட்டாலே
அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமாக -பகவத் ஏக காந்தத்வம் சொல்லுகையாலே மகாரார்த்தம் சொன்னபடி –
அவர் நிலைமை கண்டும் -என்றும்
தேவர் என்று அஞ்சினோம் -என்றும்
கண்டேன் கன மகரக் குழை இரண்டும் -இத்யாதிகளாலே
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வாதிகள் -சொல்லுகையாலே

அதர்சனே தர்சன மாத்திர காமா -என்கிறபடி என் என்னில்
எங்குற்றாய் எம்பெருமான் -என்று அவனை காண வேண்டும் என்று ஆசைப் படுகையாலே

த்ர்ஷ்டே பரிஷ்வங்கர சைகலோலா -என்றபடி என் என்னில் –
முற்றாரா வன முலையாள் -என்று துடங்கி ஸ்ரீ நாச்சியார் திரு மார்பிலே அணைத்துக் கொண்டு இருக்கிறது கண்டு
தானும் அப்படி இருக்க வேணும் என்று அறுதி இட்டாள் என்கையாலே –
ஆஸாஸ் மஹே விக்ரஹே யோர பேதம் – என்கிறபடி என் என்னில் –
யான் காண்பான் கண்ட போது புள்ளூரும் கள்வாநீ போகல் என்பன்-என்று –
என்னை விட்டு நீ போகாதே கொள் என்று அபேஷிக்கையாலே –

8-முதல் பத்திலே –ஸ்வரூப ரூப குண விபூதிகளைச் சொன்ன படி –
முதல் பாட்டு துடங்கி ஸ்பஷ்டம் –
இரண்டாம் பத்தில் –விஸ்லேஷித்து கலங்கின படி –
பட்டுடுக்கும் என்று துடங்கி -பெண் பிள்ளையினுடைய கிலேசம் சொன்ன -தாயார் பாசுரத்தாலே கண்டு கொள்வது –
மூன்றாம் பத்தில் கிலேசம் தீர்ந்து சம்ஸ்லேஷ வியாபாரம் பண்ணினபடி –

மை வண்ண நறும் குஞ்சி துடங்கி –
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு —எழில் ஆலி என்றார் தாமே –என்றும்
புனல் அரங்கமூர் என்று போயினர் -என்றும் இத்யாதிகளாலே சொல்லுகையாலே –
காந்தர்வேண விவா ஹேன பாஹ்வோ ராஜர்ஷி கன்யகா
ஸ்ருயந்தே பரிணிதாஸ்தா பித்ர்ப்ச்சாபி நந்திதா -என்கிறபடியே
உபய அனுராக நிபந்தனமாக நாயக நாயகிகளுக்கு சம்ச்லேஷம் பிரவர்த்தமாக
இத்தைக் கேட்ட தாய் மார்
நங்காய் நம் குடிக்கு இது நன்மையோ என்ன -என்றும்
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் -என்றும்
அன்னை என்னோக்கும் என்று அஞ்சுகின்றேன் -என்றும் பயப்பட்டு –
நாயகன் பக்கல் செல்லாது ஒழிய
அவனும் சாசங்கனாய் –
இவள் பக்கல் நேர் -கொடு நேரே வரக் கூசி -இவள் அபிப்ராயம் அறிய வேணும் என்று
ஸ்வயந்தூத்யம் என்றும் பரதூத்யம் என்றும் இரண்டாகையாலே –
முதல் கலவி கலந்த படியாலே பர தூத்ய அபேஷை இல்லை –ஸ்வயந்தௌத்யம் பண்ணத் தேடி –
குசூமாந்யவசின்வந்தி சசார மதி ரேஷண -என்றும்
சத்யம் புரீபரி சரெபி – என்றும் ஊரைச் சூழ்ந்த உபவனத்தே புறப்பட்டு
இவள் பூ கொய்யப் போகிறாள் என்று கேட்டு –
தத ஸ்தவ வநதம் சாப மாதா யாத்ம விபூஷணம் ஆபத் த்யசகலா பௌ த்வௌ ஜகா மோதக்ர விக்கிரம – என்று
வேட்டை வித்யாதரனாக எடுத்துக் கட்டின மயிரும்
பிடரியிலே தழைந்தலைகிற குழலும் -இறுக்கின சாணமும் -கட்டின கச்சும்-
முன்னே உடுத்த உடைத் தோலும் -இடக்கையிலே கட்டின கச்சும்
வலத் தோளில் இட்ட மெத்தையும் -பெரு விரலிலே சாடின சரடும்
இடக்கையிலே நடுக்கொடத்தப் பிடித்த வில்லும் -வலக்கையில் தெரிந்து பெருக்கின வம்பும் –
முதுகிலே கட்டின அம்புறா துணியுமாய்க் கொண்டு – –
வேட்டைக்கு என்று புறப்பட்டு –இவள் பூ கொய்கிற உபவனத்திலே செல்ல
அவளும்-
காமஸ் சாஷ்ட குணம் பவேத் -என்கிறபடியே புருஷனில் அதிசயித்த ஆசை உடையவள் ஆகையாலே
எங்கனயோ அன்னைமீர்காள் -என்கிற பாட்டை அனுசந்தித்து –
செல்கின்றது என் நெஞ்சமே -என்றும்
அன்னை என் செய்கிலென் ஊர் என் செய்கிலென் விடுமினோ –என்று கலக்கம் அற்று மன்றாடி –
அணி அரங்கம் ஆடுதுமோ தோழி -என்று தோழியைப் பார்த்து
சுனையாடல் என்றும் –புனல் ஆடல் என்றும் -சம்போகத்துக்கு பேராகையாலே –
பயலான பேச்சாலே கேட்க
அவளும் இவள் அபிப்ராயஜ்ஞள் ஆகையாலே
பூ கொய்ய என்று கொண்டு போக விட்ட தாய் மாரும் ஊரவரும்
வடும்பிடுகிறார் களோ என்று தலைக் காவலாக வழியிலே போய் நிற்க
போக உபோத்காதமாக உபய அபிப்ராயஜ்ஞ்ஞானம் பிறந்து-சம்ஸ்லேஷமும் பிரவர்த்தமாய்
புனல் அரங்கம் ஊரென்று போயினர் – என்று நாயகனும் போய்
இவளும் மீண்டு -உயிர் தோழியானவள் செய்த படி என் என்று கேட்க –
பிறந்த வ்ருத்தாந்தத்தை தோழிக்கு சொல்கிறாள்–இப்பாட்டில்

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை யிருபாடு இலங்கியாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே–21-

——————————

கீழ் பாட்டில் –அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே -என்று
அதஸ்மின் ஸ்த்த புத்தி பண்ணினோம் கண்டாயே தோழி -என்றாள்-
நீ அகன்றாய் ஆகில் -அவன் உன்னோடு சம்ச்ச்லேஷித்த படி என் என்ன –
அவன் வசீகரித்த படியும் -சம்ஸ்லேஷித்த படியும் இது தான் -என்கிறாள் –

தன்னுடைய சௌந்த்ர்யத்தையும் சீலத்தையும் காட்டின இடத்திலும் கார்யகரம் இல்லாமையாலே –
போம் இத்தனையோ என்று நினைத்தான் –
ஸ்ரீ பாதம் பேர்ந்தது இல்லை –
நித்ய சாபேஷ்யமான விஷயத்தை குறித்து -நித்ய நிரபேஷன் ஆனவன் -கால் வாங்க மாட்டாது நிற்கையாவது என் என்ன –
சேஷி யாகையாலே சேஷ வஸ்து அகன்றால் இழவு தன்னதாய் –அத்தால் பெரும் பேறும் தன்னதாய் இருக்கையாலும்
இவளை ஒழிய செல்லாத கரமுகத்வத்தாலும்
நம் அழகு இங்கே ஜீவிக்கை யாய்த்து இல்லை என்று மீளுவோம் ஆகில்
புறம்பு நமக்கே சர்வ ஸ்வம்மாய் இருந்துள்ள அழகை தயாரிப்பார் இல்லை என்கிற அபிமானத்தாலும்
கால் வாங்க மாட்டிற்று இலன் –
உத்தம ராஜ கன்யை பக்கல் உத்தம ராஜ புத்திரன் சென்று -அழகு ஜீவிக்கை யாகாதே மீண்டான் என்றால்
புறம்பு ஜீவிக்கை யாகாது இறே –
ருசியே தொடங்கி பிறரை வசீகரிக்கும் பரிகரமாக தான் நினைத்து இருப்பது அழகை இறே –
அது நிஷ்ப்ரயோஜனம் ஆனால் அபிமானம் கால் கட்டும் இறே
சக்தி கொண்டு கார்யம் கொள்ளிலும் விஷயம் இல்லாமையாலே மேல் விழுந்து அணைக்க மாட்டிற்று இலள் –
எதிர்தசையில் இசைவின்றிகே மேல் விழுந்தால் ரசம் இல்லை இறே –
அழகும் சீலமும் கார்யகரம் ஆய்த்தில்லை –
சக்தி கொண்டு கார்யம் கொள்ளும் நிலம் அன்றியிலே இருந்தது –
இனி இவளை வசீகரிக்கும்படி என் என்று பார்த்தார்
முன்பு ஸ்ரீ திருவாய்ப்பாடியிலே பெண்கள் தன் குழல் ஓசையில் வசீக்ர்தரான படியைக் கண்டபடியாலே
தம்முடைய மிடற்று ஓசையாலே வசீகரிப்போம் என்று பார்த்து ஒரு பண்ணை நுணுக்கினான் –

இவனுடைய –ஏவம் பஹூவிதாம் சிந்தாம் -இருக்கிறபடி –
ம்ர்கயார்த்தமாக வந்தோம் ஆகையாலே பாடுகிறவன் ஆர் என்று கேட்பார் இல்லை
இவளை வசீகரிக்கும் பரிகரம் இது வென்று ஒரு பண்ணை நுணுக்கினான் –
அதிலே ஈடுபட்டு மேல் விழுந்து கலந்தேன் -இது காண் செய்தபடி என்கிறாள் –
ம்க்ர்கையைக் குறித்து வந்தவர்கள் ஸ்ரமம் தீர ஒரு மரத்தின் நிழலிலே ஒதுங்குகையும் –
முகத்திலே நீரை இட்டுக் கொள்ளுகையும்-
கர்ப்பூர நிகரத்தை வாயிலே இடுகையும்-
ஒரு பண்ணை நுணுக்குகையும் -பிராப்தம் இறே-

நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா
நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வளவில் என் மனமும் கண்ணும் ஓடி
எம்பெருமான் திருவடிக் கீழ் அணையை இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்
கனமகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு
இது வன்றோ எழில் ஆலி என்றார் தாமே–22-

—————————————————————————————————

தானே கிருஷி பண்ணி வந்து கலந்தவன் பிரிகிற போது
போகாதே கொள் -என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டிற்று இல்லையோ -என்ன –
அதுவும் சொன்னேன் –அது அகார்யமாய்த்து -என்கிறாள் –
உனக்கு பவ்யனாய் இருக்கிறவன் உன் வார்த்தை கேளாது ஒழியுமோ -என்ன –
நிலமல்லாத நிலத்தில் நீ இருக்கக் கடவதோ என்று ஸ்ரீ பெரிய திருவடி கொண்டு போக போனான் -என்கிறாள் –
ரஷகனுடைய வியாபாரம் ஆகையாலே கூடுகையும் –
ரஷகமாய் பிரிகையும் –
ரஷகமாய் இறே இருப்பது –
போகம் உன்மஸ்தகம் ஆனால் -சாத்மிப்பிவித்து அனுபவிப்பிக்க வேணும் என்று இருக்கும் இறே அவன் –
ஸ்வ ரஷணத்திலே சிந்தை இல்லாமையாலே கூடு பூரிக்கிறாள் இறே இவள் –

உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து –
என்னொளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
தெள்ளூரும் இளம் தெங்கின் தேறல் மாந்திச்
சேலுகளும் திருவரங்கம் நம்மூர் என்ன
கள்ளூறும் பைம் துழாய் மாலையானைக்
கனவிடத்தில் யான் காண்பது கண்டபோது
புள்ளூரும் கள்வா நீ போகல் என்பன்
என்றாலும் இது நமக்கோர் புலவி தானே–23-

—————————

ஸ்ரீ பெரிய திருவடி கொண்டு போனான் ஆகில் – யச்யை தே தஸ்ய தத்தனம் -என்கிறபடியே
அவன் தான் உனக்கு பவ்யனாய் இருந்தானாகில் –
அவனுக்கு சேஷபூதனான ஸ்ரீ பெரிய திருவடி உனக்கும் சேஷமாய் அன்றோ இருப்பது
அது கிடக்க-மகிஷி வர்க்கத்துக்கு ஸ்வரூபேண தாஸ பூதனாய் அன்றோ அவன் இருப்பது –
இரண்டாலும் அவனை நீ போகல் என்று நீ நியமிக்க குறை என்ன -என்ன
அவன் ஒருவனுமே ஆகில் அன்றோ அது செய்யலாவது
நித்ய விபூதியில் உள்ளார் அடங்க வந்து சூழ்ந்து கொண்டார்கள்
அவர் தாம் பண்டு போல் அன்றியே
வடிவில் பௌஷ்கல்யத்தாலும் -மேன்மையினாலும் –அநபிபவ நீயராய் இருந்தார் –
அத்தாலே –
சென்று கிட்டவும்
வார்த்தை சொல்லவுமாய்
இருந்தது இல்லை காண் -என்கிறாள் –

இரு கையில் சங்கிவை நில்லா வெல்லே பாவம்
இலங்கொலி நீர்ப் பெரும் பௌவம் மண்டியுண்ட
பெரு வயிற்ற கரு முகிலே யொப்பர் வண்ணம்
பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி
உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து என்
பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து
புனலரங்க மூரென்று போயினாரே –24–

————————-

அத்தலையில் உள்ளதை நேராகக் காட்டி-இத்தலையில் உள்ளதை நேராகக் கொண்டு போனான் என்கிறாள் –

மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும்
கரி முனிந்த கைத்தலமும் கையும் வாயும்
தன்னலர்ந்த நறுந்துழாயின் மலரின் கீழே
தாழ்ந்திலங்கு மகரம் சேர் குழையும் காட்டி
என்னலனும் என்னிறைவும் என் சிந்தையும்
என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு
பொன்னலர்ந்த நறும் செருந்திப் பொழிலினூடே
புனலரங்க மூரென்று போயினாரே–25-

—————————

அவன் இவளுடைய ஆற்றாமை ஸ்வ கிருஷியின் பலம் ஆகையாலே-அதிலே முகம் மலர்ந்து கடக்க நிற்கையாலும்
தாயும் ஹிதம் சொல்லும் அளவு அல்லாமையாலே ஸ்லாகித்துக் கடக்க நிற்க்கையாலும்
தோழி -இவ்வளவில் இவளை ஆஸ்வசிப்பிக்கும் விரகு ஏதோ –என்று பூர்வ வ்ருத்தத்தைக் கேட்க
வ்ருத்த கீர்த்தனம் ஆகையாலே தரித்து –
அத்தை இரண்டு பாட்டாலே இவளுக்கு சொன்னாள் –
பின்பும் அங்கே ஓர் அவகாசம் கண்டு இப்படி அவன் உனக்கு பவ்யனாய் இருந்தால் –
பிரிகிற போது போகாதே கொள் -என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டிற்று இல்லையோ என்ன -அதுவும் சொன்னேன் –
அவன் பர ப்ரேரிதனாய் போகையாலே இது கார்யகர மாய்த்து இல்லை என்கிறாள் -மூன்றாம் பாட்டிலே –
கொண்டு போனவன் தன்னை நியமிக்க மாட்டிற்று இல்லையோ என்ன
ஒருவர் இருவரோ பரிகரம் எல்லாம் வந்து சூழ்ந்து கொண்டது -என்றாள் –
நாலாம் பாட்டிலே –அது தன்னை நியமித்து விட்டாள் –
ஐஞ்சாம் பாட்டிலே – சர்வ ஸ்வதானம் பண்ணுவாரைப் போலே வந்து-அத் தலையில் உள்ளதை நேராகக் காட்டி
இத் தலையில் உள்ளத்தை நேராக அபஹரித்துக் கொண்டு போகிறவர்
என் சத்தை கிடக்க வேணும் என்று ஊரின் பேரைச் சொல்லிப் போந்தான் -என்றாள் –

ஆறாம் பாட்டிலே
ப்ரஸ்னம் இல்லாமையாலே -பிரதிவசனம் இல்லையே-பழைய ஆற்றாமை தலையெடுத்து
நம்முடைய ஆற்றாமை அறியாமையாலே வாராது ஒழிகிறான் -இத்தனை
அத்தை அறிவிக்கவே சர்வதா வரும் என்று பார்த்து-சில வண்டுகளைத் தூது விடுகிறாள் –
தன்னுடைய பந்து வர்க்கம் தனக்கு முன்னே தரைப்பட்டு கிடைக்கையாலும்
சேதனர் தூது போன இடத்தில் அது கார்யகரமாகக் காணாமையாலும்
ஸ்ரீ ராமாவதாரத்தில் திர்யக்குகள் தூது போன விடத்தில் அது கார்யகரமாக காண்கையாலும்-
திர்யக்குகளைத் தூது போக விடுகிறாள் –
பரம சேதனன் ஸ்ரீ கிருஷ்ணன் தூது போன விடத்தில் ஊர்ப்பூசல் வந்தான் இத்தனை இறே செய்தது –
ஆனால் குரங்கைத் தூது விடாதே வண்டைத் தூது விடுவான் என் என்னில்
அங்கே பெண் தூதன் ஆகையாலே –
விரக்தனுமாய்
சமர்த்தனுமாய்
இருப்பான் ஒருவன் தூது போக வேண்டிற்று –
விஸ்லேஷத்தில் ஆற்றாமை அறிவாராய் போக விட வேண்டுகையாலும்
இவை தன்னுடைய சந்நிதியிலேயே கலந்து சுகித்து இருக்கக் காண்கையாலும்-இவற்றைத் தூது விடுகிறாள்

ஆனால் கலவியிலே பிரவணமாய் இருக்கிற இவை போகக் கூடுமோ என்னில் –ஆத்ம சாம்யத்தாலே சொல்லுகிறாள் –
தானும் அவனும் சம்ஸ்லேஷிக்கும் அளவில் சில துக்கிகள் கூடினால்
அவர்கள் கார்யத்தை முடித்த பின்பு இறே தங்கள் போகத்தில் இழிவது –
பிரதமத்தில் வண்டுகளைக் கொண்டாடுகிறாள் -தனக்கு இரங்கி கார்யம் செய்கைக்காக –
கடகரை ஸ்துத்யராகச் சொல்லக் கடவது இறே –

தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்
தேனதனை வாய் மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி யினிதமர்ந்து பொறியிலார்ந்த
அறுகால சிறுவண்டே தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த யமரர் கோமான்
அணியழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்றோர் மாது
நின்னயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே -26-

——————————

கீழ் பாட்டில்-வண்டுகளைத் தூது விட்டாள் –
அது சென்று சொல்லி மறு மாற்றம் கொண்டு வரும் அளவும் தரித்து இருக்க சக்தி இல்லாமையாலே
ஒரு நாரையைத் தூது விடுகிறாள் –
திஷூ சர்வா ஸூ மார்க்கம் தே -என்றும் பிராட்டியைத் தேடுகைக்காக
ஸ்ரீ வானர வீரரை அடைய ஏவினால் போலே இவரும் கண்டவற்றை அடைய ஏவுகிறாள்
ஸ்ரீ ராமாவதாரத்தில் வானர ஜாதி ஸ்லாக்கியமானால் போலே
காணும் ஸ்ரீ ஆழ்வார்களைத் தோற்றி பஷி ஜாதி ஸ்லாக்கியமானபடி –

செங்கால மட நாராய் இன்றே சென்று
திருக் கண்ணபுரம் புக்கு என் செங்கண் மாலுக்கு
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தி யாகில்
இது வொப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும்
பைம் கானம் ஈதெல்லாம் உனதே யாகப்
பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன் தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்
இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே–27-

————————

ஸ்ரீ நம் ஆழ்வார் -வைகல் பூம் கழிவாயில் -தூத ப்ரேஷணம் பண்ணி
அநந்தரம்-அவன் முகம் காட்டக் காணாமையாலே-பிரணய ரோஷம் தலை எடுத்து ஊடினால் போலே
இவளும் தூது விட்டு-இதிலே ஊடுகிறாள் –
தூத ப்ரேஷணம் பண்ணும்படியான ஆற்றாமைக்கு அவ்வருகே ஒரு தசா விசேஷம் இறே பிரணய ரோஷம் ஆகிறது –
அப்படியே அத் தசையிலே வெள்ளிடி விழுந்தால் போலே-மன பிரசாதம் பிறந்து தெளிந்து –
நம் ஆற்றாமை இருந்தபடியாலும்
தூத ப்ரேஷணம் பண்ணுகையாலும் –
ஸூப நிமித்தங்கள் செய்கையாலும் –
அவன் வரவு தப்பாது என்று நிர்ணயித்து –
அவன் வந்தால் முகம் கொடுக்கக் கடவோம் அல்லோம் –என்று அத்யவசித்தாள்-
அதுக்கு ஹேது என் என்னில் –
அவனுடைய சம்ஸ்லேஷம் விஸ்லேஷாந்தமாய் இல்லாது இராமையாலே
இன்னும் ஒரு விஸ்லேஷத்துக்கு இலக்காய் இருந்து கிலேசப்படுமதில் காட்டில்
அவன் வந்தால் முகம் கொடாதே-அவன் சந்நிதியிலே முடிந்து பிழைக்க கடவோம் -என்று பார்த்தாள் –
தாம் தாம் முடிய நினைப்பார்-வெற்றிலை தின்பது பூ சூடுவது சிரிப்பதாமா போலே
அகவாய் அழியா நிற்கச் செய்தே -இவள் தெளிந்து இருக்க
அத்தைக் கண்ட தோழி யானவள் –
பிரணய ரோஷம் தலை எடுக்கும் படியான ஆற்றாமை செல்லா நிற்கச் செய்தே
நிஸ் சங்ககமாக இவள் தெளிந்து இருந்தாள் –
இதுக்கு ஹேது என் என்று பார்த்து –நெஞ்சில் ஓடுகிறது என் என்று கேட்க –
அவன் வந்தால் பண்டு போலே முகம் கொடுக்க கடவேன் அல்லேன் –
அவன் சந்நிதியிலே முடியக் கடவதாக அத்யவசித்தேன் -என்ன
கெடுவாய் -மலையோடு மலை பொராத மல்லர் உண்டோ –
உபய விபூதி நாயகனாய்
சர்வ சக்தியாய் இருக்கிறவர் உடன்
அபலையான நீ எதிர் இடுகை யாவது என் என்று –
தோழிக்கு இவள் தன்னிலும் காட்டில் ரோஷம் கனத்து இருக்கையாலே
பிரணயிநிகள் உடன் செய்யும் அத்தை பிரபுக்களோடு செய்யக் கடவையோ -என்ன
அவர் பிரபுத்வமும் நாடாளும்படி என் கையில் படும் பாடு பாராய் –என்ன

இவள் அத்வாசாயம் இருந்தபடியால் முடியும் போல் இருந்தது –
பிரணய ரோஷத்தின் அளவிலேயாவது முடியாதபடி நோக்க வேணும் என்று பார்த்து
ஆஸ்ரிதர்க்கு அவன் முகம் கொடுக்கும் படி இது காண் என்று சொல்ல அமையும் -எல்லாம் பகட்டு காண் –
நான் முடிகை தவிரேன் -என்கிறாள் –
பிரணியிநியான இவளை ஒழிய தோழிக்கு ரோஷம் தலை எடுக்க கூடுமோ என்னில்
வீத ராகனாய் சருகு இல்லை தின்று போந்த ஸ்ரீ வால்மீகி பகவான் பிராட்டியைக் கண்டு
ஹீநோயாத நயா பிரபு -என்று
ஸ்ரீ பெருமாள் நாடாளவும் ஆனை குதிரை கட்டவும் கற்றார் இத்தனை போக்கி
பிரணயித்வத்தில் புதியதுண்டிலர் ஆகாதே -என்றான் இறே –
முற்படத் தோழி-அவன் ஆஸ்ரிதர்க்கு முகம் கொடுத்த பிரகாரத்தை சொல்ல
அத்தை அனுபாஷித்து அவை எல்லாம் பகட்டுக் காண் என்கிறாள்

தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாளச்
சென்றுலகம் மூன்றினையும் திரிந்தோர் தேரால்
மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த
வரைவுருவின் மா களிற்றைத் தோழீ எந்தன்
பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு
போகாமை வல்லேனாய்ப் புலவி எய்தி
என்னிலங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த
எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே–28–

———————————-

முதல் பத்தில் –
ஸ்வ ஸ்வரூப -பர ஸ்வரூபங்களை நிர்ணயித்து –
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தை நிர்ணயித்து –
தத் விரோதியையும் நிர்ணயித்து –
விரோதி நிவ்ருத்திக்கும் -புருஷார்த்த சித்திக்கும் அனுரூபமான உபாயத்தையும் நிர்ணயித்து –
இத்தனைக்கும் வாசகமான -ஸ்ரீ திரு மந்த்ரத்தை -வாக் இந்த்ரியத்துக்கு விஷயமாக்கி —
இவ் வர்த்தத்தை நெஞ்சுக்கு விஷயமாக்கி –தெளிந்து கால ஷேபம் பண்ணினார் –

நடுவில் பத்தில் —
கால ஷேப அர்த்தமாக அனுசந்தித்த அனுசந்தானத்து அளவிலே பர்யவசியாதே
கண்ணான் சுழலை இட்டு-கண்ணாலே கண்டு அனுபவிக்கும் படியான ஆற்றாமை விளைந்து –
தான் நினைத்தபடி அனுபவிக்கப் பெறாமையாலே-அப்ரக்ர்திங்கராய் -பிறர் வாயாலே வார்த்தை
சொல்ல வேண்டும்படியான மோஹமாயச் சென்றது –

மூன்றம் பத்திலே –
இவள் தசையைக் கண்ட தோழி இவளை ஆஸ்வசிப்பிக்க வேணும் என்று பூர்வ சம்ஸ்லேஷத்தை முன்னிட
வ்ர்த்த கீர்த்தனம் ஆகையாலே தரித்து நின்று பேசினாள்-

பின்னை
ப்ரஸ்ன பிரதி வசனங்கள் இல்லாமையாலே-பழைய ஆற்றாமையே மேலிட்டு தூத ப்ரேஷணத்தில் அன்வயித்தாள் –

அநந்தரம்
அவன் வந்து முகம் காட்டாமையாலே ப்ரணய ரோஷம் தலை எடுத்தது –
ஸ்ரீ நம் ஆழ்வாரைப் போலே ப்ரணய ரோஷம் நிலை நிற்கில் இறே -அவன் வந்து முகம் காட்டுவது –
அது செய்யாதே நடுவே எளிமைப் பட்டு பழைய ப்ரக்ருதியிலே இழிந்தார் –
விழுந்த இடத்திலும் தரித்து இருக்கலாவது அவன் முகம் காட்டினால் இறே –
அது இல்லாமையாலே
ஸ்ரீ நம் ஆழ்வாருக்கு -முனியே நான்முகனில் -பிறந்த பரம பக்தி -இவருக்கு பிறந்து –
தம்முடைய அநந்ய கதித்வத்தையும் –
ஸ்வ தோஷ பூயஸ்வத்தையும்-முன்னிட்டு
பிரணயியான நீ -எனக்கு முகம் காட்டாது ஒழிவதே -என்று கூப்பிடுகிறார் –

ஸ்ரீ நம் ஆழ்வார் பரத்வத்தையும் அவதாரத்தையும் பற்றிக் கூப்பிட்டார் –
இவருக்கு பராவஸ்தையும் அவதாரம் ஆகையாலே
அவதாரத்தையும் அர்ச்சாவதாரத்தையும் பற்றிக் கூப்பிடுகிறார் –

அன்று ஆயர் குலமளுக்கு அரையன் தன்னை
அலை கடலைக் கடைந்த அம்மான் தன்னைக்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக்
கொடுஞ்சிலை வாய்ச் சரம் துரந்து குலங்களைந்து
வென்றானைக் குன்றெடுத்த தோளினானை
விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானைத் தண் குடந்தை கிடந்த மாலை
நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –29-

—————————–

நிகமத்தில் –
ஸ்வ லாபத்தை சொல்லா நின்று கொண்டு-இப் பிரபந்தத்தை அத்யவசித்தவர்கள் உடைய
சாம்சாரிகமான சகல துக்கங்களையும் தாங்களே முதலரிய வல்லார் – என்கிறார் –

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப்
பழ வினையை முதலரிய வல்லார் தாமே -30-

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம் –ஸ்ரீ .உ .வே .அடூர் அசூரி மாதவாச்சாரியார் -2014-

November 10, 2015

திரு வேகா சேது ஸ்தோத்ரம் -திரு வெக்காவுக்கு தேசிகன் அருளி -உள்ளுவார் உள்ளத்தே -எல்லா திவ்ய தேசங்களுக்கும் உப லஷணம்
களவா -ஆஸ்ரயிப்பார்கள் உடைய பாபங்களை திருடுபவன் -மனசை அபஹரித்துக் கொள்வான் -ராம கமல பத்ராஷா ருபம் ஔதார்யம் காட்டி பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம் –
கிளைக்கு கிளைக்கு தாவும் வானரத்தையும் கவர்ந்த திருக் கண்கள் அன்றோ –
ஸ்ரீ ரெங்க நாதா மம நாதா -எனக்கும் நாதன் -உள்ளுவார் உள்ளத்து -இருந்தும் -எனக்கும் இருப்பை பேராது என் நெஞ்சில் உள்ளாய்-என்கிறார் –
பெருமானே உன் திருவடியைத் தேடினேனே -என்கிறார்
திருப்பேர் நகர் -திரு வாயிரப்படி வர காரணம் -ஸூ சிப்பிக்கிறார் இத்தால்
வங்கத்தாய் –பங்கத்தாய் -சிவ பெருமானை கொண்டவனே -பாற்கடலாய் -அடுத்த பாசுரம் —பவள வண்ணா எங்குற்றாய்
மா மணி-வந்து உந்தும் -முந்நீர் -திருக் கடல் மல்லை-சுவாமி திருமேனி சம்பந்தம் பெற –
பனிவரை மேல் உச்சியாய் பவள வண்ணா -திருமலை மேல் உள்ள -கீழே நரசிம்ஹன் மேலே தேவ பெருமாள்
அர்ச்சாவதார அனுபவம் இல்லாத ஏழைத் தனம்
பவள வண்ணா எங்குற்றாய் -தசரத சக்ரவர்த்தி நிலையில் -கண் அவன் பின்னே போயிற்று -தொகு இந்த்ரியம் போயிற்றோ இல்லையோ
என்று கையாலே தடவி பாராய்
அது போலே ஆழ்வார் கதறுகிறார் -கூக்குரல் இடுகிறார் – எங்குற்றாய் ஒவ் ஒரு திவ்ய தேச பெருமாள் இடமும் சேர்த்து பட்டர் நிர்வாஹம்
10 நின்ற திருக்கோலம் -மலையாள திவ்ய தேச திருப்பதிகள் –இரண்டு கிடந்த -ஓன்று இருந்த திருக் கோலம்
இந்த பாசுரம் -ஐந்து நிலைகளையும் அனுபவிக்கிறார் -ஸ்வா பதேச பொருள் இதில் -திரு மூழிக் களம் அனுபவிக்கிறார் -உலகம் ஏத்தும் தென்னானாய் –பின்னானார் வணங்கும் சோதி -அர்ச்சை –
பொன்னானாய் -சர்வ ஏவ ஸ்வர்ணா -திருச் சார்ங்கமாக இருந்த திருமேனி அனுபவம் -பரத்வத்தையே அர்ச்சையில் கண்டு அனுபவிக்கிறார்
திரு உடம்பு வான் சுடர் -நம் ஆழ்வார் -பொழில் ஏழும் காவல் பூண்ட புகழானாய் -இமையோர்க்கு முன்னானாய் -தேவாதி தேவன் -முன் சென்று கப்பம் தீர்த்தான் -ரஷனம் -அஞ்ஞானம் போக்கி ஞானம் கொடுத்து -பீஷ்மாதிகளைக் கொண்டு -தாம் அருளிச் செய்தவற்றை மூதலித்து
இகழ்வாய -தொண்டனேன் இகழும் வாயை உடையவன் என்றுமாம்
தென்னானாய் வடவானாய் -எல்லா திக்குகளிலும் அர்ச்சா ரூபம் கொண்டு -சர்வ வ்யாப்தி என்றுமாம்
பொன்னுலகம் ஆளீரோ -பொன்னானாய் -அவன் சொத்து என்பதால் -என்னானாய் என்னானாய் -எந்த விதமாக அனுபவிப்பேன் –
என்னுடைய யானையே மீமிசை -உறுதிப் பட சொல்ல
கந்த களிறு -மத களிறு -நாமும் மீண்டும் அழுக்கு பாபம் சேர்த்து கொண்டு -மதம் பிடித்த யானை போலே உள்ளோம் –யானை தன் மேலே
அழுக்கு போட்டுக் கொள்வது போலே -தேசிகன் -தயா சதகம் —கர்மா சங்கிலியால் கட்டி வைக்கிறான் –
அவனுக்கும் யானைக்கும் பல ஒற்றுமைகள் உண்டே
என்னடியார் அது செய்யார் -பிராயச்சித்தத்தால் மன்னிக்க முடியாத பாபம் செய்யார் -அது -தேசிகன் -கைக்கு எட்டினாரை கழுத்தில் வைக்கும் மத யானை
பிரபத்தி வியாஜ்யம் சாதனம் ஆக்கி தன்னிடம் சேர்த்து கொள்கிறான் -ஆஜ்ஞ்ஞை மீறினால் சங்கல்பம் இல்லை வர்ணாஸ்ரமம் அனுஷ்டிக்கா விடில்
ஷிபாமி தள்ளுவான் –
குண பால மத யானாய் -குட்டி யானை -திருக் கண்ணபுரம் -காட்டு மன்னார் எம்பெருமானார் நிர்வாஹம்
-யௌவனம் மிக்க பெருமாள் -ஆளவந்தார் நாத முனிகளுக்கு கிருதஞ்ஞை காட்டி அருள –

தாய் பாசுரங்கள் – -அடுத்த 10 பாசுரங்கள் –எம்பெருமான் திருவரங்கம் எங்கே -என்னும் —
-எங்கும் சுற்றி ரெங்கன் இடம் வந்து சேர்ந்த தசை –பட்டுடுக்கும் –காப்பார் யாரே
அபராத சஹத்வ திருக் கல்யாண குணம் உண்டே -அவனுக்கு
முரலும் கூந்தல் -மடமானை இது செய்தார் தன்னை -கட்டு விச்சி விழித்து -மெய்யே -சொல் என்கிறாள் -சொல் என்ன சொன்னாள்-
கடல் வண்ணன் இது செய்தார் இனி காப்பார் யார் –
இதில் ஒரு ஐதிக்யம் உண்டே –
சீரார் செந்நெல் திருக்குடந்தை -சீரார் சுளகு -ஆராவமுதனுக்கு அமுதாகும் நெல் என்பதால் சீரார் செந்நெல் –
சொல் என்ன சொன்னாள் கட்டுவிச்சி -பர தத்வ ஸ்தாபனம் துஷ்ட தேவதை கழித்து கடல் உருவம் மட்டுமே கொண்டு செந்தீ பொன்னுருவம் தள்ளி
திருக் கோஷ்டியூர் நம்பி -18 தடவை -எம்பெருமானார் -ஐதிகம் -உடையவர் போலே இந்த கட்டுவிச்சியோ கீதாசார்யன் போலே இந்த கட்டுவிச்சி –செவி தாழ்ந்தார்க்கு எல்லாம் வார்த்தை சொன்னார் எம்பெருமானார் -ருசியைப் பிறப்பித்து வார்த்தை சொன்னான் கீதாசார்யன் –
நெஞ்சு உருகி -உருகி அருளிச் செய்த பாசுரம் -என் சிறகின் கீழ் அடங்காத –
கள்வன் கொல் நாயகி —பரகால நாயகி –உண்ணும் சோறு நாயகி -பராங்குச நாயகி -மனஸ் இந்த்ரியங்கள் பிராணன் இவை இவர் ஆதீனத்தில் இல்லை –
ஆராவமுதே –நின் பால் உருகி நீராய் கரைந்து -போலே
மாதுர்யம் -குட மூக்கிலே பர்யவசிக்கும் -உண்டு அறியாள் அர்ச்சாவதார அனுபவத்துக்கு பின்பு பரகால நாயகி நிலை –
புட்கொடி ஆடுவது போலே இவளும் ஆடுகிறாளே -ஆடும் பாடும் -அணி அரங்கம் ஆடுதுமோ என்று தோழியையும் கூப்பிடுகிறாள்
ஆடும் பாடும் -தாயார் எனது தசையைப் பார்த்து தவிக்க -நீ சமாதானம் சொல்லி பாடிக் காண் என்கிறாள் -ஆட வேண்டும் பாட வேண்டும் என்கிறாள்
தேவரீர் சாதிக்க வேண்டும் என்னுமா போலே ஆடும் பாடும் -என்கிறாள்
ஆடவும் பாடவும் அணி யரங்கம் போவோம் -ஆடவும் பாடவும் -அங்கே தானே -யோக நித்தரை செய்து அருளுகிறான்
என் சிறகின் கீழ் அடங்கா பெண்ணைப் பெற்றேன் -கை மீறி போனாள்-பிறந்தது முதலிலே இப்படியே அர்ச்சாவதார அதீனமாக இருக்கிறாள்
கல் எடுத்து -கல் மாரி காத்தாய் என்னும் — முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே
மாசி கருடசேவை காசிக்குப் போனாலும் கிடைக்காது என்பர் -கிளிக்கு பகவத் விஷயம் சொல்லி குணா கீர்த்தனம் சொல்லிக் காட்டச் சொல்லி
-வளர்த்ததனால் பயன் பெற்றேன்
இவளும் கிளி மொழியாள்-மடக் கிளியை கை கூப்பி வணங்கினாள்-இதுவும் அடுத்த பாசுரமும் –
கல் எடுத்து –ஊரகத்தாய் -குன்றம் எடுத்து –அவனே உலகம் அளந்தான் -இரண்டு நாயகிகளும் ஒரே மாதிரி அனுபவம்
பூஜித்தால் தெய்வம் கை விடாது காட்டி அருள தூக்கினான்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் -சிவா தனுஸ் முறித்து சீதா பிராட்டி தோளை அணைத்தாய்
கிருஷ்ண -இந்திர பூஜை -மறுத்து -திரி விக்ரமன் -மூன்றாலும் இவனே பராத்பரன் -என்பதை காட்டி அருளி
பார்த்து வா என்றார் விஸ்வாமித்ரர் –
யத்தோத்த காரி -ஜனகன் விஸ்வாமித்ரர் சக்கரவர்த்தி மூவர் சொல்லையும் -செய்த பெருமாளே சொன்ன வண்ணம் செய்த பெருமாள் –
பிராட்டி தோளை தோய்ந்தே அங்கே சயனம் -என்றவாறு
சரஸ்வதிக்கு உபதேசம் செய்து -சேர்ந்து இருந்து காட்டி அருளுகிறார் -என்றுமாம் –
ஐதிகம் -உடையவர் கோஷ்டியை பெரிய நம்பி பிரநாமம் -மடக் கிளியை கை கூப்பி வணங்கினாள்
கல் எடுத்து கல் மாறி காத்தான் -கல் மாறி யாகையாலே கல்லை எடுத்து ரஷித்தான் நீர் மாறி யாகில் கடலை எடுத்து ரஷித்து இருப்பான்
-சத்திய சங்கல்பன் அன்றோ –
முளைக் கதிரை –வளர்த்ததனால் பயன் பெற்றேன் -வருக என்று மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே
குறுங்குடி முகில் என்று கிளி நினைவு படுத்த
முகிலை -உள் முகிலை
வெளி மேகம் -போலே இல்லாமல் எப்போதும் சேவை சாதித்திக் கொண்டு உள் முகில் –
மூ உலகு –பக்த முக்த நித்யர் -கொங்கு பிராட்டி மூலம் -தேசிகன் அவதாரம் ஸூசகம் -திரு வேங்கடமுடையான் -திரு மணி -ராமானுஜர் -மூவரும் சேர்ந்து -மூ உலகுக்கும் அப்பால் மிக்க முதலாய் -நின்ற -அளப்பரிய -ஆராவமுது –
கண்ண புரம் கை தொழும் பிள்ளையை -பிள்ளை என்ன மாட்டாமல் பூஜ்யராக கொள்வாரே -மடக் கிளியை கை கூப்பி வணங்கினாரே -எம்பெருமானாகவே நினைத்து கை கூப்பினாள் -ஆசார்ய ஸ்தானத்தில் -தன்னால் சொல்ல முடியாததை -இந்த திவ்ய தேசங்களுக்கு சென்று சொல்வேன் என்றதே அப்புள்ளார் கிளையை பழக்கி வைக்குமா போலே -கிடாம்பி அப்புள்ளார் -தேசிகன் என்ற கிளி பாடக் கேட்டு
பெரியாழ்வார் -பரத்வம் ஸ்தாபித்த பின்பு வடபத்ர சாயி -எதிர் கொண்டு அழைத்து -வளர்த்ததனால் பயன் பெற்றேன்
மடாதிபதிகளுக்கும் ஸ்ரீ சடகோபன் திருமாலை பரிவட்டம் முதலிய எழுந்து அருளப் பண்ணி ஸ்வாகதம் இன்றும் –
நடதூர் அம்மாள் கடாஷிக்கப் பெற்ற தேசிகன் –
கிளி பாட திவ்ய தேச அனுபவத்திலே பரகால நாயகி ஆழ்ந்து வீணை மீட்டி பாடகிளியும் கூடப் பாட தாயார்
-தனது தோழி இடம் பேசுவது போலே அடுத்த பாசுரம் –
முலை மேல் தாங்கி என் பேதை -சொல் உயர்ந்த – நெடு வீணை —
பராங்குச மடம் அஹோபில மேடம் வண் சடகோபன் என்பர் பரகால மடம் –
தூ முறுவல் -மெல் விரல்கள் சிவப்பு எய்த –மென் கிளி போல் -மிழற்றும் -ஆலாபனை செய்கிறாள் –
வீற்று இருக்கும் யானை -வரதனையும் -ஸ்ரீ காஞ்சியில் -மற்ற திவ்ய தேசங்கள்
கடல் கிடந்த கனி -ஷீராப்தி நினைவு வர –அணி அழுந்தூர் -நின்று உகந்த பெருமாள் -நினைவு வர –

கடல் கனி -சயன திருக் கோலம் –பாண்டிய தூதன் வீற்று அணி அழுந்தூர் நின்ற அம்மான் மூன்றையும் ஆசைப் படுகிறாள்
நின்றவாறும் கிடந்த வாறும் இருந்த வாறும் -வீற்று இருந்து ஏழு உலகம் தனிக் கோல் செய்வானே
தானும் பாட -கிளியுடன் பாட -வீணையும் வாசிக்க –சீரார் செந்நெல் கவரி வீசும் எல்லாம் உத்தேச்யம் -அவனைப் பற்றி இருப்பதால்

கரு நிறம் -கரியான் ஒரு காளை -கருணை மிக்கவன் -தயை தூண்ட -தயா சதகம் –
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்-ஸுய வர்ணாஸ்ரமம் தானும் செய்து மற்றவர்களும் செய்வதால் இனிது உகப்பான் –
பின்புள்ளார் இழவாமைக்காக அன்று கன்று மேய்த்த கண்ணனே திருக் கண்ண புரம் சேவை பூர்வர்
பட்டர் -அன்று கன்று மேய்த்தவன் -இங்கே புகுந்து சேவை சாதிக்கிறான் -கற்றுக் கறவை கணங்கள் பல உண்டே -அவை இங்கே வந்தனவாம்
-எதிர் சூழல் புக்கு அவற்றை ரஷிக்க வேறு வழிகளில் இங்கே வந்தானாம் -பட்டர் நிர்வாஹம் -சோலை வாய்ப்பாலே இளைப்பாற இங்கே வந்தானாம்
-திரு வாய்ப்பாடி போலே இருந்ததாம்
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை -என்ன நேராக தலை மகள் இடமும் -தாய்மார் தோழிகள் இடம் சொல்வதாகவும் –
மேலும் ஆட பாட -அடக்கம் இல்லாமல் -கூப்பிட -நறையூரும் சேர்த்து பாடி -அர்ச்சாவதார அனுபவம் தலை மண்டி என் நெஞ்சினால் நோக்கிப் பாராய் –
ஆழ்வார் மனஸ் அலை பாய்ந்து –
அடியேன் என்னப் பண்ணும் மாதுர்யம் குடமூக்கிலே பர்யவசிக்கும் -அஹங்காரம் மமகாரம் நான் என்னது என்பாரை அடியேன் தாசன் பிரபன்னன் –
சக்ருத் தர்சனம் மாத்ரத்திலே -ஒரே தர்சனத்தில் -தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு
இளம் கொங்கை மேல் பொங்கி – -பொரு கயல் கண்ணீர் அரும்பப் போந்து நின்று
சிறு குரலுக்கு உருகி -ஆங்கே -நாயகனை நினைத்து -கீசு கீசு என்று ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் உண்டே
நங்காய் -பாடி ஆடியத்தை கேட்டு கண்டேன் -குண பூர்த்தி உள்ளவள் பூர்வர் நிர்வாகம்
-அவன் தான் மேல் விழும்படி இருக்க -முக்யமானவள் -இவளை அடைய அவன் நோன்பு நோற்க வேண்டும் நீ மேல் விழக் கடவையோ –
அவனுக்கு அடிமை என்ற ஸ்வரூபம் அறிந்து -இஷ்ட விநியோக அர்ஹமாய்-சீதா பிராட்டி போலே -என் ஸ்வரூபம் திருவடி ஸ்வரூபம் பெருமாள் ஸ்வரூபம் -நிறம் பெற -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருந்தது போலே -பிரபன்ன சந்தானம் நம் குடிக்கு ஆகாதே –

பரகால நாயகி பராங்குச நாயகி நிலையில் அருளிச் செய்யும் பாசுரங்கள் -இருந்த இடத்திலே அர்ச்சாவதார எம்பெருமான்
பலரும் சேவை சாதிக்க பாடி ஆடுகிறாள் –
ரூபத்தையும் குணங்களையும் வர்ணித்து -அந்த திவ்ய தேசம் கிளம்பி -இருக்கும் இடத்தில் இருக்க ஒட்டாமல் –
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் -மலையே மரமே -சீதையை கண்டாயா பெருமாள் நிலை போலே
ரூபம் குணம் அழகாலே மனசை கொள்ளை கொண்ட அரங்கன் எங்கே என்கிறாள்

கள்வன் கொல் -நாயகி -பரகால நாயகி -கண்ணன் கை பிடித்து கூட்டிப் போனதால் -பயம் அதிகம் தாயாருக்கு –
இருவரும் பிச்சேறி-ச்பர்சத்தால் -லங்கா த்வாரம் புகுவர் கொலோ
கார் வண்ணம் திரு மேனி –ஏர் வண்ணம் என் பேதை -எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் –
உண்ணும் சோறு நாயகி -பராங்குச நாயகி —திண்ணம் என் இள மான் திருக் கோளூர் புகுவர் கொலோ -உத்தேச்யம் அவன் என்பதால்
பார் வண்ண மட மங்கை பத்தர்-பந்தம் உள்ளவன் -கட்டுப் பட்டவன் -பூமி பிராட்டிக்கு –பித்தர் -பனி மலர் மேல் பாவைக்கு -பெரிய பிராட்டியாருக்கு –
பெரிய பெருமாள் விஸ்வ ரூபம் தர்சனம் எல்லா திவ்ய தேச பெருமாளையு சேவித்தால் போலே பிரமாணங்கள் சொல்லும்
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும் -இது வன்றோ நிறை -பூர்த்தி -அழிந்தார் -நிற்கும் நிலை
சிலரை மயங்கப் பண்ணும் சிலரை நர்த்தனம் பண்ணப் பண்ணும் சிலரை உறங்கப் பண்ணும்
பெண் சொல்வதாக தாயார் சொல்கிறாளா -தாயாரே சொல்கிறாளா -இரண்டு நிர்வாஹங்கள்
பாவம் செய்த -தன்னைத் தாயார் சொல்லிக் கொள்ள –
பெண் ரூபங்கள் குணங்களில் ஈடுபட்டு சொல்ல அத்தை அனுவதித்து தாயார் பேசுவதாக –
ஏர் வண்ணம் என் பேதை –இவளுக்குத் தக்க அழகன் அவன் -பத்தர் பித்தர் பன்மையில் பேசி நீர் வண்ணன் -ஒருமையில் சொல்லி
–விரோதமாக -பெண்ணை விட்டுப் போனவன் என்பதால் -ஆண்டவன் நிர்வாஹம் –
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி —சர்வ பல அர்த்தங்கள் உண்டே -இத்தால் -தீய கர்மாக்கள் மட்டும் சொல்வது அல்ல
-புண்யங்களும் மோஷ தடங்கல் ஆகுமே என்பதால் -கர்மா விடுவிக்க என்றபடி
அது போலே இங்கே பாபம் -புண்ய அர்த்தம்-என்ன பாக்கியம் செய்தேன் என்கிறாள் என்றுமாம் –
நீர் மலைக்கே போவேன் -அனைவரும் ஸ்ரீ ரெங்கநாதன் என்ற நினைவு -இவளுக்கு –
இப் பெண் பிள்ளை ஆற்றிலே கெடுத்து குளத்திலே தேடுகிறாள் -நம்பிள்ளை இது வன்றோ நிறை வழிந்தார் நிற்குமாறு
-இப்படி நிலை தான் வரும் பகவத் குண அனுபவம் உள்ளவர் –
அஸ்து மே -பிரார்த்திக்க பிராட்டியாரும் அப்படியே என்று அருள் பாலித்து அருளினார் கத்யத்திலே
பக்தி நிஷ்டருக்கு சாஷாத்காரம் பகவத் அனுபவம் இங்கேயே உண்டே விளம்பமாக கிடைத்தாலும் -பஜன ஸூ கம் -த்யானம் செய்வதே ஸூ கம் ஏகச்ய விபுலம் -பரஸ்ய -பிரபன்னனுக்கு சீக்கிரமாக கிட்டும் தேசிகன் –ஆனால் பரிமித -குறைந்த காலம் -அந்த ஆனந்தம் வேண்டும் என்று அபேஷித்தார் அஸ்து மே -த்யான ஸூ கம் கேட்டிட்டார் அஸ்து தே ததைவ சம்பத் சம்பத் திருமுக பாசுரம் -இவன் மறுக்க மாட்டாதே -இதனாலே பித்தர் பனி மலர் பாவைக்கு –
ஏற்கனவே பனி மலர் பாவைக்கு பித்தாய் உள்ள பெண்ணுக்கு உபதேசம் செய்யக் கூடாதோ என்று அந்த நங்கை தாய் இடம் கேட்க –
முற்றாத வனமுலையாள் –மொய்யகலத்துள் இருப்பான் -பாசுரம் –ஞான வைராக்யங்கள் முலை இடை —பொரு வற்றாள் -என் பெண்ணுக்கு ஒப்புமை இல்லை என்கிறாள் -இதில் -பாவம் செய்தேன் என்றவள் -அங்கும் என்ன புண்ணியம் செய்தேன் என்கிறாள் –
அந்த நங்கை -உடைய நங்கை -பெரிய விசேஷார்த்தம்
உன் மகளும் அப்படியோ என்று பரகால நாயகி தாயார் இவள் இடம் கேட்கிறாள்
யுவதிச்ய குமாரிணி -பெரிய பிராட்டியார் -இவன் யுவா குமாரா -நமக்கும் பூவின் மிசை கேள்வனுக்கும் அன்பனாய் –
தன்னுடைய ஏகாந்தத்தில் எம்பெருமானை அடக்கிக் கொள்ளும் அவயவ சோபை உள்ள -பெரிய பிராட்டியார்
அவன் திரு மார்பில் -ஏகாந்தத்தில் இவளும் அடங்கி –
அஃதும் கண்டும் அற்றாள் -நின் ஆகத்து இருப்பது அறிந்தும் -விடாமல் -போலே
அஹம் அண்ணாதா -அஹம் அங்கு -கொள்ளலாம் -சாத்விக அஹங்காரம் -ஆசார்யர் அடைந்த நமக்கு யார் நிகர் அகல் ஞாலத்தில்
ஜன்மா சாபலம் அடைந்தது -தேசிகன் -செய்த வேள்வியார் –அன்னம் -ப்ரஹ்மம்-அவனுக்கு பிரகாரம் ஸ்வாமி -என்கிறோம்
அறிந்து அவனுக்கு அற்று தீர்ந்து -ஜீவாத்மா ஒவ் ஒருவருக்கும் பெரிய பிராட்டியார் போலே சாம்யம் உண்டே கைங்கர்ய சாம்ராஜ்யம் உண்டே
பொற்றாமரை கயம நீராடப் போனாள்-கோமள வல்லி தாயார் – -ஹேம புஷ்கரணியில் திருவவதரித்து -பெரிய பெருமாள் அனுபவத்திலே
ஈடுபட்டாள்-என்பதே விசேஷார்த்தம் -ஹரி சரஸ் -முகுந்த மாலை
ஸ்ரீ ரெங்கம் சூகமாச்ய-ஸ்ரீ ரெங்கம் போன்ற ஷேத்ரங்கள் வியாக்யானம் கதய த்ரய பாஷ்யம் உப லஷணம்-பிரபஞ்சமே ரெங்கம் அரங்க மேடை -தானே
மொய் அகலத்து உள் இருப்பாள் –அஃதும் கண்டும் –அவளுக்கு மட்டும் தானா இடம் -கௌஸ்துபம் போலே நாம்
உள் இருப்பாள் -நம் ஹிருதயத்திலும் அவனுடன் சேர்ந்து இருப்பாள் -பெரிய பிராட்டியும் இவளுக்கு ஒப்பில்லை
உன் பெண்ணும் நிலையம் இப்படியா -என்று தாய் நங்கை இடம் கேட்கிறாள் -மொய் அகலத்துள் இருப்பாள் –
ஸ்வரூப நிரூபக தர்மம் அன்றோ அவள் -நித்ய திவ்ய மங்கள விக்ரஹம் -எங்கும் வியாபித்து இருப்பார்கள் சேர்ந்தே –
போக வேளையோடு-ஸ்வரூப வேளையோடு -மிதுனமே உத்தேச்யம்
பகவத் அனுபவம் பண்ணி ஆடும் இடமே ஸ்ரீ ரெங்கம் -மரகத மணித் தடம் -வாசத் தடம் போல் வருவானே -இவனே
-ஒப்பார் இல்லாமல் -பொறுமை யற்று பொருந்தி இல்லாமல் அலை பாய்ந்து அர்ச்சாவதாரங்கள் தோறும்
-என்னுடன் பொருந்தி இல்லாமல் பகவத் அனுபவம் சென்று
தாய் பெருமிதம் -பெரும் தவத்தள் என்று பேசலாமே –
தன்னையும் -தன பெண்ணையும் சொல்லிக் கொள்ளலாமே
சாத்விக அஹங்காரம் -தென்னிலங்கை -திருவடி மதித்த ஐஸ்வர்யம் –
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் பேசி மேல் -பாரிடந்து –பார் உண்டு -பார் உமிழ்ந்து -பார் அளந்து –பாரை ஆண்ட பேராளான்
ஸ்ரீ ரெங்கம் வழி எங்கே என்று கேட்ட உடனே அர்ச்சிராதி மார்க்கம் காட்டும் பித்தன் அன்றோ அவன் -எம்பெருமானது திவ்ய தேச பெயரை சொல்வதே இவளுக்கு உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வற்றிலை என்னும் நிலைமை யான பின்பு
பக்தி ஸ்ருன்ஹாரம் -கண்ணனுக்கே ஆமது காமம் –
கண்ணுக்கு இனியவன் கண்ணன் மனத்துக்கு இனியவன் ராமன் -இருவராய் வந்தார் -கிருஷ்ண பலராமன் -ராமன் கிருஷ்ணன் –
இங்கே ராம லஷ்மணர் அனுபவம் -மை வண்ண நறும் குஞ்சி -மோகினி அலங்காரம் கண் முன்னே நிற்கிறதே
திரிதண்டம் துணை –விஷ்ணு ஸ்தானம் என்பர் -விஷ்ணு ஆவாஹனம் செய்து இருப்பார் -சன்யாசிக்கு –
இவரும் எய் வண்ணம் சிலையே துணையா வந்தார் –இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
பர்த்தாவாக அனுபவித்து கொண்டே இருக்க -தோழி இடம் எனக்கு -பழைய வாசனை தொடர்ந்து வந்ததே -தெய்வமாகவே நினைக்கத் தொடங்க
-அவரை நாம் தேவர் என்று அஞ்சிநோமே–கௌசல்யா லோக பார்த்தாராம் -லோகத்துக்கு பார்த்தா அன்றோ பெருமாள்
சீதை பிராட்டிக்கும் அச்சம் உண்டா – கோபிமார்கள் கிருஷ்ணன் பரிமாற்றம் அறிவோமே -அஞ்சி அஞ்சலி பண்ணினேன் –
-புருஷோத்தமன் உத்தம புருஷன் –
இருவராய் வந்தார் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -கைங்கர்யம் செய்ய வந்த ஜீவாத்மா -உடன் பரமாத்மா -ஏகம் ஏவ அத்விதீயம் -விசிஷ்ட ப்ரஹ்மம்
மகரம் சேர் -குழை -இருபால் இலங்கி ஆட –அபி மத விஷயத்தை கண்டால் -முகத்திலே சில அசைவுகள் உண்டாக கடவதே -பட்டர் நிர்வாஹம்
-இவளை மயக்க அவனது வியாபாரம் இருந்த படி
புறப்பாட்டில் ஆட்டமும் இப்படியே
அங்கன் அன்றிக்கே முன்பைக் காட்டுவது பின்பைக் காட்டுவது எத்தனம் செய்தான் இவளுடைய ஸ்த்ரீத்வம் அளிக்க -நஞ்சீயர் அனுபவம்
அனந்யாரஹை ஆக்கி அருளினான் முன் பின் அழகைக் காட்டி என்றபடி
ராமன் தோளைப் பற்றிய பலத்தால் சிங்கம் யானை அபூர்வ வஸ்துக்களைப் போலே பார்க்க –
பரத்வம் கண்டு விலகாமல் அஞ்சாமல் சௌலப்யம் கண்டு கிட்ட வேணுமே -மாலாய் இருந்தாலும் மணி வண்ணன் அன்றோ
வில்லும் கையுமாய் இருவராய் வந்து -ஏக பத்னி வரதன் அன்றோ என்றும் அஞ்சினாள்
காணேன் கன வளையும் மேகலையும் -கண்டேன் மகர குழை இரண்டும் தோள்கள் நான்கும் -துன்னைக் காணேன் துணியைக் காணேன் என்றால் போலே
திரு முகம் திருத் தோள்கள் கண்டேன் -திருவடிக் கீழ் அணைந்தேன் -திரு மார்பை அணைந்தால் போலே -புல்கு பற்ற அற்றே -எம்பெருமானாகவும் நாயகனாகவும் அணைக்க லாமே -எம்பெருமான் கோயில் எவ்வளவு என்றேர்க்கு இது வன்றோ திரு வாலி என்று காட்டினானே
திருவடியில் அணைந்தால் தன்னைத் தானே காட்டி அருளுவான்
அரங்கன் கனவில் வந்து -கலந்தான் -எனது மனஸ் இந்த்ரியங்கள் அவன் ஆதீனம் ஆயின பின்னர் பிரிந்தான்
-இது நமக்கோர் புலவி தானே -பிரிவில் வருத்தம் தோழிக்கும் சேர்ந்து தான -சுக்ரீவன் வாலி மரித்த அநந்தரம் பெருமாளும் அழுதாரே
கனவிடத்தில் நான் காண்பன் -வர்த்தமானம் -கண்ட போது-புள்ளூரும் கள்வா -என்றேன் -அனைத்தையும் கொள்ளை கொண்டானே –
திருவரங்கம் நம்மூர் என்றான் –உனக்கும் அதே தான் தேசம் என்றான் –
தோளிணை மேலும் –தண் அம் துழாயன் -நீ போகல் என்றேன் -என்றாலும் இது நமக்கு ஓர் புலவி தானே -இருவருக்கும் சேர்ந்தே துக்கம்
-நோய் எனக்கே தந்து போனான் என்றாள்-இருந்தாலும் தோழிக்கும் துக்கம் உண்டே இவளுக்கு முன்னே –

ஆளவந்தாருக்கும் தமக்கு பின் சித்தாந்தம் ரஷகராக யார் என்னும் சிந்தை நோய் வர பெரிய பெருமாள் பிரணாவாகார விமானம்
அதுக்கு உள்ளே புண்ய கோடி விமானம் சேவை சாதித்து -அத்தை சேவித்து -ஆ முதல்வன் எம்பெருமாரை கடாஷித்து தேவ பெருமாள்
இடம் பிரார்த்தித்து -எம்பெருமானாரை உடையவர் ஆக்கி அருளினாரே

எம்பெருமானாருக்கும் அது போலே புண்ய கோடி விமானம் -அதற்கு உள்ளே பிரணாவாகார விமானம் சேவை சாதித்து -அங்கே செல்ல நினைக்க
திருக் கச்சி நம்பி மூலம் ஆறு வார்த்தை அருளப் பெற்றார் -நம் சித்தாந்தம் ஸ்வப்பனம் மித்யை அல்ல -உண்மை தான்
நம்மூர் -திருத் துழாயில் தேன் சொட்டும் என்று அவனே சொல்லும்படி -கள்ளூறும் பைம் துழாய் மாலையானை -கண்டாள்-பர வாசு தேவனோ இவன் என்று இவள் சங்கிக்க
திருவரங்கம் நம்மூர் -அவனே சொல்லி -அத்தை தோழிக்கு சொல்கிறாள்
-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் -உணர்வு என் ஒளி வளையும் மாமையும் கொண்டான் -கனவிலே
அறிவு இல்லா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில் –
பாதுகா தேவி சீதா தேவியை விட உயர்ந்ததே -பெருமாள் வார்த்தை கேட்டு ஸ்ரீ பரத ஆழ்வான் பின்னே போயிற்று
அது போலே அவன் வார்த்தைக்கு மறுப்பு சொல்லாதபடி என்னை ஆக்கிப் போனான் -நோயைக் கொடுத்து விட்டு தான் போனானே –
-எனக்கு இல்லாத படி ஒளி வளையும் மாமையையும் அபஹரித்து போனான்
காண்பன் என்பன் -வர்த்தமானம் -நேரில் கண்டது போலே உள்ளத்தை உள்ளபடியே தோழி இடம் சொல்கிறாள்
தென்னையில் -தேன் பெருகி வெள்ளம் இட மத்ச்யங்கள் சஞ்சரிக்கும் -திருத் துழாய் –
ஸ்ரீ ரெங்கத்து அரிசி என்று பொய் சொல்லி வியாபாரம் செய்தாலும் யம தூதார்கள் அணுகார் -என்பர்
திருவாலி விட்டு இங்கேயே வா -என்கிறான் அரங்கன்
அவனைப் பற்றிய சி ந்தனை நோய் நினைவை மட்டும் விட்டு விட்டு -என்னுடைய சர்வத்தையும் கொண்டு போனான்
தாயே தந்தையே -என்னும் நோயே பட்டு ஒழிந்தேன் –
என்னை பிரிந்த நோய் அவனுக்கும் உண்டே எனக்கு தந்து ஒழிந்தான்
இது நமக்கு ஓர் -ஒப்பற்ற -நீயும் என்னுடன் சேர்ந்து அவனுக்கே அற்று தீர்ந்து உள்ளேயே என்றபடி
உனக்கு என்ன வேறு உடையை -இவள் -எனக்கே தந்தான் இந்த நோய் என்கிறாள் இவரைப் போன்ற அர்ச்சாவதார அனுபவம் யாருக்கும் இல்லையே
பெரும் தபஸ் உடையவர் –பிரபன்னர் -அரும் தபஸ் உடையவர் -உபாசகர்கள் -சூழ்ந்த அரங்கம் -அழ வைப்பான் -பொரு கயல் கண்ணீர் அரும்ப –
-புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே
யாழின் இசையே -அறிவின் பயனே சங்கீதமே கூப்பிடுகிறார் ஆராவமுதனை –
போகல் என்பன் -இத்தைக் கொண்டே மாடு மேய்க்கும் கண்ணா நீ போக வேண்டாம் கண்ணே –
கண்ணில் அவன் வாத்சல்யம் -என்னை விட ப்ரீதி அவனுக்கு என்பதை -நைவளம் பாடி ஸூ சிப்பித்தான் –
பெரும் தவத்தர் அரும் தவத்தர் முனிகள் சூழ -நேராக சொல்ல முடியாதே இங்கிதம் -புனல் அரங்கம் நம்மூர் என்று போயினாரே
பொரு கயல் கண்ணீர் அரும்பும் படி புலவி தந்து போயினாரே
ஆசையை கிளறி விட்டு போனாரே
நித்ய கிங்கரராக எப்போது ஆவேன் -ஆளவந்தார் -ஒழிவில் காலம் எல்லாம் வழு விலா யடிமை செய்ய வேண்டும் –
காவேரி நதிக்கரையில் 40 திவ்ய தேசங்கள் உண்டே -உலகினில் தோற்றமாய் நின்ற சுடர் -பஹூவிதா ஜாயதே –
உலகம் உண்ட பெருவாயா -திருமலை -பெரிய பெருமாள் அனைவரையும் அனுபவிக்கிறார்
கரு முகிலே ஒப்பர் -அபூத உவமை
பக்தர் பாகவதர் சக -பெரும் தவத்தர் அரும் தவத்தர் சூழ -பிரபன்னர் பக்தர் சூழ -பலத்தில் துல்யம் -ஆனந்த தாரதம்யம் உண்டே
பகவத் ப்ரீத்யர்த்தம் -சாத்விக த்யாகம்-பிரபன்னர் – த்யான சுகம்-உபாயத்தில் சேராது –த்யானமே பகவத் பரிதியே பலன் –
கூனி கூனை நிமிர்த்த பின் வஸ்த்ரம் பிடித்து இழுத்தாளாம் யுவதி யானதால் கிருஷ்ணன் இடம் கோபிகள் போலே -பாகவத்ம்
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே
சைவ வைஷ்ணவ புலவர் -ஒப்புமை திக்யம் -பார்வதி சிவன் பிரிந்து -எலும்பும் சாம்பலும் உடைய தலை மகன் –
சுடர் அடி –முடிச் சோதி –அடிச் சோதி –அடிச்சோதி -சோதிமயன் அன்றோ ஆழ்வார் அனுபவம் எல்லாம்
பரகால நாயகி திரு உள்ளத்தில் ஊறி மின்னிலங்கு திரு உருவம்
திருத் துழாய் இவன் திருமேனி அடைந்து -தன்னலர்ந்த -புகர் பெறுமே -கடாஷத்தாலே மலர்ந்த துழாய் என்றபடி –
அதுபோலவே மகர குண்டலங்களும் –
என் நலனும் -அந்நலம் உடையவனை நண்ணினம் நாமே -என் வளையும் –என் சிந்தையும் -என் நிறையும் கொண்டு
என்னை ஆளும் கொண்டு போனான் -அடிமை ஆக்கி -அனந்யார்ஹை ஆக்கி -கொண்டான்
திருவாலி தொடக்கி திருவரங்கம் வரை பொழில் நிறைந்து -பொழில் ஊடே போனான்-சோலைகள் நிறைந்து -ஒரு காள மேகம்
வர்ஷித்துக் கொண்டு போகா நின்றால்-கண்ட இடம் எங்கும் தளிரும் முளிரும் ஆகாதோ -பட்டர் –
சிந்தை நோய் எனக்கே தந்து -நாயகி வருத்தம் –பிரிந்து சென்றாலும் திருமேனி -மின்னிலங்கு திரு உருவம் –
பெருமையை சொல்லி -தோழிக்கு -இதுவே வைஷ்ண புலவர் -பெருமை விக்கிரம சோழன் -புகழ்ந்து பேசின ஐதிகம் –
தேவன் என்று அஞ்சி -நாயகன் எம்பெருமான் -இரண்டு எண்ணம் -வண்டி தூது விடுகிறாள் தேர் அழுந்தூர் பெருமாளுக்கு –
நாயகன் என்றே எண்ணிக் கொள் -எம்பெருமான் உணர்த்தி பெரும் தவத்தர் அரும் தவத்தர் சூழ நேராக சொல்ல முடியாமல்
ஸூசிப்பித்து சொல்லி விட்டு செல்ல வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு –கருடன் மேல் ஏறி புறப்பாட்டான் -பிரபன்னர் பக்தர் குழாம் சூழ –
-பெரிய பிராட்டியார் தேவர் குழாம் இருக்க திரு மார்பில் ஏறி அமர்ந்தாள் -இவள் பரகால நாயகி
என்னைச் சேர்ப்பிக்கும் வண்டுகளே -ஆசார்யர் ஸ்தானம் -இன்றே சென்று –
அறுகால சிருவண்டே தொழுதேன் உன்னை -குரு பரம்பரை த்வயம் -வக்தவ்யம் -பராங்குச நாயகில் போலே பரகால நாயகியும் பேசுகிறாள்
-பேடையுடன் சேர்ந்து உள்ள வண்டு
விளம்பம் ஆனால் கூட –பொறுமையாக இருந்து -ஆ மருவி அப்பன் நின்ற திருக் கோலம் –
ஒரு மாது நின் நயந்தாள் -என்று சொல் -காலை மாற்றி மாற்றி போட்டுக்கத் தான் ஆறு கால் -ஆறு கார்யம் ஆச்சார்யர்களுக்கு உண்டே
-அத்யயனம் யஞ்ஞம் தானம் செய்தும் செய்வித்தும்
பிராட்டி உடன் இருக்கும் இந்த சமயமே செல் -பேடையுடன் சந்தோஷமாக இருக்கும் நீ அந்த மிதுனம் இடம் இந்த ஜீவாத்மாவை சேர்
மருவி -பொருந்தி அணி அழிந்தூர் நின்றான் -ஆ மருவி அப்பன் -இன்றே பொய் சொல் -நீ மருவி அஞ்சாதே –
மருவி நின்று -காத்து இருந்து -சொல்-ஓர் மாது -உண்ணும் சோறு -பராங்குச நாயகி நிலை அடைந்த பரகால நாயகி அல்லையோ
செங்கால மட நாராய் –திருக் கண்ண புரம்-தூது அடுத்து – போற்றி உகப்பதும் -பிரத்யுபகாரம் குரு பிரகாசம் செய்வதே –
குண கீர்த்தனம் -செய்து கொண்டே –மந்திரம் மந்திர ரஷனம் ரஷணம்-நல்ல பாத்ரங்களுக்கு சொல்லி அனுஷ்டித்து இருத்தல்
உடையவர் -ப்ரஹ்ம ஞானம் உடையவர் -பைங்கானம் ஈதெல்லாம் உனதேயாக -கடக வத மகா பூதி யுக்மம் -உபய விபூதியையும் உடையவர்
அண்ணல் ஞானம் வந்து தோன்றிய அப் பொழுதே நன்னறு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே
பொன்னுலகம் ஆளீரோ-உபய விபூதியும் இவர் ஆதீனம்
இன்றே புக்கு -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -செங்கண் மாலுக்கு -ஆஸ்ரித வ்யாமோஹம் -மாலாய் பிறந்த நம்பி –
பெரிய பிராட்டியார் திருக் கண்கள் போலே கடாஷம் ஸ்ரீ சௌரி பெருமாளுக்கு என்பர்
என் காதல் உரைத்தியாகில் -என் என் என்று மீண்டும் அருளி –இது ஒப்பது வேறு எமக்கு -நமக்கு என்றுமாம்
வேறு ஒப்பதுஇல்லை -அவனுக்கும் -வேறு ஒப்பு இல்லை
சேதன லாபம் ஈஸ்வரனுக்கு -மகா புருஷார்த்தமாக நினைப்பான் -ஆசார்யர்களுக்கும் இதுவே மகா புருஷார்த்தம் பைங்கானம்
எல்லாம் உனதேயாக பழன மீன் கவர்ந்து உண்ணும் படி தருவேன் –நீயும் உன் பேடையும் இங்கே இருந்து இனிதாக வாழலாம்
-சரணாகதி செய்த பின்பு ஆசார்யர் சிஷ்யர் பகவான் மூவருக்கும் ஆனந்தம் உண்டே –
-தேக அவாசனம் காலம வரை நிர்பயமாக ஆனந்தமாக வர்த்திக்கலாமே

பிராட்டிக்கு மோஷ ப்ரதம் கொடுக்க அதிகாரம் உண்டே ஆகிலும் பைங்கானம் -இது இவற்றுக்கு அபிமதம் ஆகையாலே –
இந்த ஆழ்வாருக்கு இந்த அர்ச்சாவதார அனுபவமே போக்யமாகுமே -எல்லா எம்பெருமாங்களும் பரகால நாயகிக்கு நாயகன்
-ஸ்ரீ பூமா நீளா தேவி மார் போலேவே ஸ்ரீ பரகால நாயகியும்
அறுகால சிறு வண்டே -பூர்வர் -சீக்கிரம் சிரமம் இல்லாமல் போகலாம்
கமன சாதனம் சிறகு தான் –பட்டர் நிர்வாஹம் -ஆசார்யர் திருவடிகள் போலே பத்னி புத்ரர் -திருவடிகளும் உத்தேச்யம்
தொழுதேன் உன்னை -என்கையாலே -தலை மேலே தொழும் பொழுது ஆறு கால்களும் பட வேண்டும் –
திருக் கண்ணபுரத்து எம்பெருமான் சம்ச்லேஷம் நினைவை நினைந்தே இருப்பேன் -பட்டர் அனந்தாழ்வான் சோமாசி ஆண்டான் நம் ஆழ்வார்
அழகிய மணவாளன் -திருவேங்கடமுடையான் -எம்பெருமானார் தொலை வில்லி மங்கலம் சொல்லுவது போலே
பரகால நாயகி திருக் கண்ணபுரம் சொல்வதும்
திருக் குடந்தை ஆராவமுதன் மேல் ஆழ்வார்கள் பன்னி பன்னி மங்களா சாசனம் செய்த பலனே
-ஸ்ரீ நாத முனிகள் மூலம் நாம் திவ்ய பிரபந்தங்கள் பெறுவதற்கு காரணம்
பிரபன்ன சம்சார கூடஸ்தர் ஸ்ரீ நாத முனிகள்
பிரணய கலஹ பாசுரம் இது -அவன் கட்டாயம் வருவான் -முகம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்கிறாள் தோழி இடம்
ஓர் தேராலே மன்னிலங்கு பாரதத்து –ஒப்பற்ற தேர் -கொண்டே வென்றான் இலங்கை வென்றான் உலகு அளந்தான் கர்வம் கொண்டான்
-அவன் வந்தால் கட்டிப் போட்டு விடுவேன் என்கிறாள் –பக்தியினால் கட்டிப் போடலாம் -சொல்லி விட்டு முகம் காட்ட மாட்டேன் என்கிறாள்
-பிரணய கலஹம் வார்த்தை -சம்ச்லேஷம் என்றால் விச்லேஷத்திலே முடியும் அன்றோ
என்னில் அங்கம் எல்லாம் –இன்பம் உற நினைந்து மகிழ்ந்து இருப்பேனே -சம்ச்லேஷ ரசம் அனுபவித்ததை -சொல்லி இந்த பாசுரம் நிகமிக்கிறார்
முனியே நான் முகனே முக்கண் அப்பா அனுபவம் போலே -சாற்றுமுறை பாசுரங்கள் -அந்தரயாமித்வம் சொல்லி –
தண் குடந்தை கிடந்த -மாலை நெடியானை – -புருஷோத்தமன் ஆராவமுதன் –
சீதளம் -தண்ணீர் போலே -தண் குடந்தை -நாலாயிரம் மறைந்து கிடைக்க அருள் புரியும் -ஈரச் சொற்கள் அன்றோ -கூடாரையும் வெல்பவன் அன்றோ –
சுக்காம் தரை போலே கமர் பிளந்து உள்ள ஹிருதயங்களையும் உருகப் பண்ணுமே
அடி நாயேன் நினைந்திட்டேனே -நீசனேன் நிறை ஒன்றும் இலேன் போலே
வேதாந்த சாஸ்திரம் போன்ற இந்த பிரபந்தத்தை வல்லார் தொல்லை பழ வினையை முதலரிய வல்லார் தாமே

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸ்ரீ .உ .வே .அடூர் அசூரி மாதவாச்சாரியார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பாவையும் திரு நெடும் தாண்டகமும் –ஸ்ரீ .உ .வே .அடூர் அசூரி மாதவாச்சாரியார் -2014-

November 10, 2015

ஸ்ரீ ராமாயணம் -சரணாகதி சாஸ்திரம் போலே -சரணாகதி பிரபந்தங்கள் -திருப்பாவையும் திரு நெடும் தாண்டகமும்-
60 ஆவர்த்தி உபன்யாசங்கள் அருளிச் செய்த அனுபவம்
ப்ரஹ்மம் தெரிந்து ப்ரஹ்மம் போலே ஆகிறான் -விசிஷ்டாத்வைதம்
ப்ரஹ்மமாக ஆகிறான் -அத்வைதம்
ப்ருஹத்வாது -பெரியதாக இருந்து பெரியவனாக ஆக்கும்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் –
பரிசுத்தமான ஆத்மாவால் மட்டுமே -அறிய முடியும்
சாருவாதமதம் -உடம்பே ஆத்மா -காதாலே கேட்கலாம் ப்ரஹ்மத்தை பற்றி -கண்ணாலே காண முடியா விடிலும் –
யோகம் செய்ய பின்னம் -தடைகள் நிறைய உண்டே
திரு நெடும் தாண்டகம் -முப்பதும் தத்வ த்ரய ஞானம் -ப்ரஹ்ம ஞானம் – அர்த்த பஞ்சக ஞானம் -கொடுப்பவை தானே
நீர் தொறும் பரந்துளன் –கரந்து எங்கும் பரந்துளன் -பக்தி யோகம் ஸ்தானத்தில் சரணாகதி செய்து –
-யோகம் செய்ய உள்ள தடைகளை தாண்டலாம் –ஞாச விதியை -சரணாகதி
அவதார ரகசியம் -தாழ்ந்து நெருங்கி சர்வ பூத ஸூஹ்ருதம் -சௌலப்யம் காட்டி அருளி
ஸ்ருதி சொல்வதையே -ஸ்ம்ருதி -நினைவு படுத்தி -ஸ்ரீ கீதையும் ஸ்ம்ருதி –
அறியாத இடைச்சிகளும் அறியும் வண்ணம் -திருப்பாவை -ஆசையே தகுதி -நீராடப் போதுவீர் போதுமினோ நேர் இழையீர்
-போங்கோ இல்லை வாங்கோ அர்த்தம் -ஆசை உடையோர் எல்லாரும் வம்மின்
பத்துடை அடியவர்க்கு எளியவன் ஆசா லேசம் -என்பதே வியாக்யானம் –
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணா அவதார முகேன இத்தையும் காட்டி அருளி –தன்னை நொந்துக் கொண்டு -ஆசை உடன் -வர வேண்டும் –
அவஜானந்தி மாம் மூடா -புரிந்து கொள்ள வில்லையே
பரதத்வம் நம்முடன் வந்து கலக்கிறதே -என்ற எண்ணம் இல்லாமல் –
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி –எல்லா சித்தாந்தங்களும் உண்டே ஸ்ரீ கீதையில்
அவதாரம் பலன் இல்லை
கடலாழி -நீர் தோற்றி அதன் உள்ளே கண் வளரும் -சர்வ சக்தன் -அடல் ஆழி அம்மான் அன்றோ -பராக்கிரமம் உண்டவன் –
-கண்டக்கால் இது சொல்லி அருளாழி வண்டே –
ஷீராப்தி -வந்து சொத்தை பிடிக்க -சரீரம் பிரகாரம் -நாம் –
அபராத சஹத்வம் குணம் உண்டே சொன்னால் போதும் -ஸ்ருதிகள் கடக -ஸ்ருதிகள் -சேர்த்து –
பேத அபேத ஸ்ருதிகள் சமன்வயப்படுத்தி -ஸ்ரீ மதே ராமானுஜாயா நம –சொல்லி -கிரந்தி படுத்தி -அனுஷ்டாநித்துக் காட்டி
-குரு பரம்பரை மூலம் நமக்கு வரும்படி அருளையும் –
கடி சேர் நாற்றத் துள்ளாலை-
கரியும் நாற்றமும் -இரண்டும் பரிமளம்
ஆலை -மது -சர்வ ரசத்துக்கும் உப லஷணம்
நாற்றம் -சர்வ கந்ததுக்கும் உப லஷணம்
கடி சேர் நாற்றத் துள்ளாலை இன்பத் துன்பக் கழி நேர்மை ஓடியா இன்பப் பெருமையொன் -திருவாய் -8-8-2–என்று
பூவில் கந்தத்தையும் -மதுவில் ரசத்தையும் பிடித்து
அவை தன்னிலும் அல்ப அஸ்த்ரத்வாதி தோஷங்களையும் கழித்து ஸ்திரமாக்கிச் சேர்த்துப் பார்த்தால் சிறிது ஒப்பாம் என்னுமா போலே
ஓர் உபமானத்தாலே அறியலாம் அத்தனை -தன்னையே இழிந்து அறியப் போகாது என்றபடி
உணர் முழு நலம்-
முழு உணர்வுமாய் -முழு நலமுமாய் இருக்கும்
கட்டடங்க ஜ்ஞானமுமாய் -கட்டடங்க ஆனந்தமுமாய் இருக்கும்
அனுகூல ஜ்ஞானமே யாகிலும் ஆனந்தமாகிறது பிரித்து வ்யவஹரிக்க கடவதாய் இருக்கும் இறே
படகு -சரணாகதி -வைத்து போந்தாரே நாமும் அங்கே செல்ல –
ஸ்ரீ பூமிப் பிராட்டி -தானே வந்து ஸ்ரீ கீதா சாஸ்திரம் அர்த்தம் அருளுவேன் -ஆண்டாள் -ஆகார த்ரயா சம்பன்னாம் –
சாஷாத் கருணையே -கோதை -விஷ்ணு சித்த கொடி வல்லி –
காலத்தைக் கொண்டாடி -அக்ரூர் -சகுனம் நல்ல -சேவை கிடைப்பது நிச்சயம் -மான்கள் பிரத்யஷமாக போகின்றன

—————————

பாவை நோன்பு என்பதே சரணாகதி -சுலபமாக வசப்படுவான் –
வையத்து வாழ்வீர்காள் -சரீரத்தில் வாழும் -சரீரமே வண்டி -ஆத்மானம் ரதிநம் வித்தி -சரீரம் ரதமேவ புத்தி -சாரதி -கடிவாளம் மனஸ் –
பரமன் அடி பாடவே இந்த்ரியங்கள் -ஜிஹ்வே கேசவ கீர்த்தனம் -பகவத் சிந்தனமே மனஸ் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி –
நெய் உண்ணோம் பால் உண்ணோம் -உடம்புக்குத் தானே -இவை -இதையே திரு நெடும் தாண்டகம் சொல்லும்
மை இட்டு -எழுதோம் ஞான யோகம் செய்யோம் –
-மலர் இட்டு -பக்தி யோகம் செய்யோம் –
சாத்விக தானம் செய்வோம் –
ஐயமும் பிச்சையும் -ஒன்றும் இல்லாதவர்க்கு -கொடுப்பது பிச்சை –
சத் பாத்ரம் -கொடுப்பது ஐயம் -பிரதிபலன் எதிர்பார்க்காமல் கொடுப்பது –
அபி நவனமாக தசாவாதாரம் ஆழ்வார்கள் -பகவத் அம்சம் –
ஸ்ரீ பாகவதம் ஸூசிப்பிக்கும் -நாராயண பராயணா கொசித் கொசித் –தாமரபரணி காவேரி —
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே -தேசிகன் –
398 வருஷம் -கலி யுகம் பிறந்து நள வருஷம் பௌர்னமி கார்த்திகையில் கார்த்திகை திருவவதாரம் கலியன் –
சர்வார்த்த க்ரஹணம்-பண்ணினவர்
எல்லா ஆபரணங்களையும் அபஹரித்தவர் -எல்லா அர்த்தங்களையும் கொண்டவர் –
ஆறு பிரபந்தங்கள் -வேத அங்கங்கள் -போலே
40 சிறிய திருமடல் என்பர் தேசிகன்
78 பெரிய திருமடல்
86 திவ்ய தேசங்கள் மங்களா சாசனங்கள்
106 சம்வச்தரங்கள் இருந்து -ஸ்ரீ சார்ங்கம் அம்சம் –
எல்லே இளம் கிளியே -சார்ங்கம் உதைத்த சர மழை போலே –
பிண்டியார் –திருக் கண்டியூர் பாசுரம் -இது ஒன்றே –
திருக் குடந்தை பெருமாள் இடம் ஆரம்பித்து அதிலே முடிப்பார் —
உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் —
கச்சி -திருக் கடல் மல்லை மண்டினார்க்கு உய்யல் அல்லால் மற்றை யாருக்கு உய்யலாமே
ஷேத்ரங்கள் திருநாமம் சொல்ல படிப் படியாக மேலே கூட்டிச் செல்லும்
மூன்று தத்வங்களையும் திரு நெடும் தாண்டகம் முதல் பாசுரத்தில் அருளி –
ஈச்வரனே ஸ்வ தந்த்ரர் நாம் சேஷ பூதர் கர்ம அனுகுணமாக
சரீரம் ப்ரேரிதா அவன்
ஒப்பார் மிக்கார் இல்லாதவன் இவன் ஒருவனே மோஷம் ப்ரதன்- இச்சேத் ஜனார்த்தனன் –
கர்ம சம்பந்தம் இல்லாமல் –ஒரே மரம் இரண்டு பறவை -போக்தா போக்கியம் ப்ரேரிதா –
நாக்கில் ஒட்டாத சக்கரைப் பொங்கல் -கையை அலம்ப சீயக்காய் பொடி-கதை –
வாயு அதிஷ்டன் -ஆத்மா அதிஷ்டன் -எங்கும் வியாபித்து –
காரண வாக்கியம் -ஸ்ருதி -யத்ர யத்ர பூமா –அத்ர அத்ர அக்னி -புகை -அக்னி -கார்ய காரண பாவம் –
மார்கழி திங்கள் மதி -இதுவே உண்மையான மதி-அசேதனம் சேதனம் விட்டு ப்ரஹ்மமே த்யானத்துக்கு –
இமானி பூதானி -உண்டானதோ -ரஷிக்கப் படுகிறதோ -காக்கப் படுகிறதோ -தத் ப்ரஹ்மேதி -இதுவே மின்னுருவாய் முதல் பாசுரம் பொருள் –
திரு உடம்பு வான் சுடர் -திவ்ய மேனி உண்டு ஞான பல கிரியாச -குணங்கள் உண்டு -ஞானத்தை குணமாக கொண்டவனே ப்ரஹ்மம்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி பரம சாம்யம் உபைதி அவனைப் போலே ஆகிறார்கள் -அவனாகவே இல்லை
அசேதனங்களும் சேதனங்களும் அவனுக்கு சரீரம்
முன்னுருவாய் -சரீரம் அசேதனம் தானே முன்னால் தெரியும் -அதிலும் புகுந்து அந்தர்யாமியாய் இருக்கிறான் -24 தத்வங்களிலும் –
-பிரக்ருதியில் இருந்து வந்தவை –25 தத்வம் ஜீவாத்மா -26- தத்வம் பரமாத்மா –
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா -ச ப்ரஹ்ம -அனைவரும் அங்கங்கள் -சீக்கிரம் பலம் கொடுக்க -இவர்களை நியமித்து
-பின்பு சாஸ்வத ஸ்திரமான பலம் தேடி வருவார்கள் –
ஆதி சங்கரர் -வாசு தேவம் சர்வமிதி -சமம் ஆத்மா –நினைப்பவன் துர்லபம்-அவனே மஹாத்மா – உண்ணும் சோறு இத்யாதி
-சர்வாத்மகம் -சர்வாந்தராத்மகம் ஸ்ரீ மன் நாராயாணம்-சங்கரர் வியாக்யானம் –
கரந்த பாலுள் நெய்யே போலே –7 தோஷங்கள் அசித் வஸ்துக்கள் -அல்ப்த்வ -அஸ்திரத்வ-துக்க மிஸ்ரத்வ -துக்க மூலத்வ –
துக்க அபிவிருத்த்வ -விபரீத அபிமான மூடத்வ -விபர்ரீத ஞான ஜனனி –

—————————–

ஆழி மழைக் கண்ணா -அந்தர்யாமி அர்த்தம் –
கர்ஜித்து சிம்ஹாசானம் இருந்து ஆசார்யர் உபதேசம் -ஆழி உள் புக்கு முகந்து கொடு –
ரகஸ்யார்த்தங்கள்–ஆழி போல் மின்னி தேஜஸ் மிக்க குருக்கள்
வேதம் நான்காய் –முளைத்து எழுந்த திங்கள் தானாய் -ஞானம்
தேகாத்மாபிமானம் ஒழித்து -பிராந்தி போக -லஷணம் அறிந்து கொள்ள வேண்டுமே -ஸுவ ஸ்வதந்த்ரம் ஒழிந்து
சரீரம் ஷட்பாவம் -உண்டே –
மின்னுருவாய் -மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் –
முன்னுருவாய் -சரீரம் -முன்பு -இப்பொழுது -பின்பு வரும் மூன்றுக்கும்
அநேக ஜன்மாக்கள் -புண்ய ஜன்மானம் அந்தே -அப்புறம் தான் ஞானம் வரும் -ஸ்ரீ கீதா பாஷ்யம்
அசேதனத்துக்கும் நியந்தா சொன்னார் இத்தால்
வேதம் நான்காய் -அஷ்டாஷரம் -அறிந்து -சேஷத்வ ஞானம் –
தனம் மதியம் தவ பாத பங்கஜம் -ஞானமே ஆத்மா இல்லை ஞானம் உடையவன் விசேஷணம் விசேஷ்யம்
விளக்கொளியாய் -திங்கள் தானாய் -எழுந்த திங்கள் தானாய் -முளைத்து எழுந்த திங்கள் தானாய் -பிரித்து அனுபவம் –
விளக்கு -பிரகாசம் -தன்னையும் காட்டி மற்றவற்றையும் காட்டும் -வேதம் நான்காய் -ஞானம் வேதம் பரவுமே –
ஸ்ரவண ஞானம் -ஆசார்யரே ப்ரஹ்மம்
உபநிஷத் -ஸ்ரவணம் -த்ரஷ்டவ்ய -இத்யாதி
விளக்கு ஒளி -ஸ்ரவண ஞானம் -பக்தி நவவித பிரகலாதன் –
முளைத்து எழுந்த -ஸ்ரவணத்தால் -முளைத்து எழுந்த மந்தவ்ய மனனம் –
அதனால் வரும் த்யானம் -நிதித்யாசனம் வேண்டுமே –
திங்கள் -மதி -அமிர்த மயம் -ஆனந்த மயம் -மேலே சொல்வார் –
பின்னுருவாய் -பின்பு வரும் ஞானம் -முன்னுருவில் -அசேதனம்
பிணி மூப்பு இல்லா -பிறப்பிலி இறப்பதற்கே என்னாது கைவல்யம் -அபஹத பாப்மாதிகள் -உண்டே -கர்மாவால் திரோதானம் –

சங்கு பிரணவம் -அர்த்தம்
பறவைகள் சப்தம் -ஆச்சார்யர் ஸ்ரீ ஸூக்திகள் பஷிகள் ஞானம் அனுஷ்டானம்
திருமாளிகை -யில் திரு மந்த்ரார்த்தங்கள் சொல்வதையே பஷிகள் சப்தம் என்கிறாள் ஆண்டாள்
புள்ளரையன் கோயில் -அகாரார்த்தம்
பூதனை -அஜ்ஞ்ஞானம் அவித்யை
சகடாசுரன் -காமம் குரோதம் ரஜோ குணத்தால் -தகுந்த இடத்தில் ஆசை வேண்டும் -தகுந்த இடத்தில் கோபம் –
கோபஸ்ய வசம் ஆனான் -தலை அறுப்பேன் என்றார் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
என் நின்ற யோனியுமாய் பிறந்தான்
அஜாயமானோ பஹூதா விஜாயதா –
இறப்பதற்கே எண்ணாது-
பகவான் நினைவு நம்மிடமே -எப்படி கூட்டிச் செல்வோம் -சஹஜ காருண்யம் சௌஹார்த்தம்
எண்ணாதே -கைவல்ய ஆசையைத் தவிர்ப்பிப்பான் பிரபன்னர்களுக்கு
கர்ம யோகம் -இந்த்ரியங்கள் வெல்ல
ஞான யோகம் -சாஷாத்காரம்
கர்ம யோகத்தாலே கூட சாஷாத்காரம்-கிட்டும் ஞானமும் அதிலே இருப்பதால்
பஞ்சாக்னி வித்யை-பரமாத்மாவை நினைத்தே செய்து -அஹம் பரமாத்மா சேஷ பூதன் -சொல்லி –
நம்மை பிரதானமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது -பிராப்தி விரோதி அதிகாரம்
தன்னை பிரதானம் ஆக்கிக் கொண்டால் சிறிது காலம் கைவல்யம் இருந்து பின்பு தான் பரமாத்மா அனுபவம் என்பர் தேசிகன் –
ஞானி -எனக்கு ஆத்மா -மே மதம் -என்னுடைய சித்தாந்தம்-பரமை காந்தி -உன் பொற்றாமாரை அடியே போற்றும் -என்று இருப்பவர் –
இறப்பதற்கே எண்ணாது –பிறப்பு இறப்பு -தேக சம்பந்தம் -கைவல்யம் இறப்பு என்கிறார் -கைவல்யத்தை விரும்பாமல் என்றவாறு –
அங்காதும் சோராமே -ஆள்கின்ற செங்கோல் -எல்லாம் அவனது –இங்கே கொஞ்சமாவது உத்சவாதிகளை சேவிக்கிறோம் –
கைவல்யம் -உள்ளவனுக்கு அது கூட அனுபவம் இல்லையே
தாத்பர்ய சந்த்ரிகை –தேசிகன் –பகவத் ப்ரீத்யர்த்தம் சங்கல்பம் செய்து செய்தாலே போதும் -ஆத்மா அவனுக்கு சேஷ பூதன் –
இங்கே செய்வது எல்லாம் கைங்கர்ய சேஷமாக அனுசந்தித்து -சம்சார கைவல்ய கொடுமை தாண்டி பரம புருஷார்த்தம் கிட்டும்
மோஷ சேஷமாக -இருக்க வேண்டும் என்பதையே இறப்பதற்கே எண்ணாது -என்கிறார்
சாந்தோக்யம் -பரஞ்சோதி உபசம்பத்ய -ஞான யோகியும் அடைகிறான் –
அஸ்வத்தாமா -நரகம் தர்சனம் பண்ண வேண்டிற்றே தர்ம புற்றுக்கு –
அது போலே தன்னை பிரதானமாக நினைத்தால் கைவல்யம்
இருந்து பின்பு போவான் -என்கிறார்
ஸ்வ தந்திர பிரபத்தி நிஷ்டை -பக்தி ஸ்தானத்தில் அவனை நிறுத்தி –நாம் –
போவான் போகின்றாரை போகாமல் காத்து -அர்ச்சிராதிகதி -வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து -பாதங்கள் கழுவினர் –
சஞ்சலம் -மனஸ் -நின்றவா நில்லா நெஞ்சு எண்ணாது எண்ணும் -அவன் நினைவே கார்ய காரம்
பொன்னுருவாய் -உள்ளவன் அன்றோ -திருமேனி பக்தாநாம் என்று இருப்பவன்
மணி உருவில் பூதம் ஐந்தும் -புனல் உருவாய் அனல் உருவில் திகழும் சோதி
பலபலவே ஆபரணம் -அதுபுதம் பாலகம் -முடிச் சோதியாய் அவனது முக்ச்சோதி-சர்வ ஏவ ஸ்வர்ண –

————————————

வகுள பூஷண பாஸ்கரர் -இருள் நீக்கி -கீழ் வானம் வெள் என்று -நம் ஆழ்வார் –
பேயாழ்வார் -என்பர் ஸ்ரீ ஆண்டவன் -போகாமல் காத்து -திருமழிசை ஆழ்வாரை காத்து அருளி -என்பதால் –
எருமை சிறு வீடு -மேய்வான் -கிருஷ்ணன் போகின்றான் -அவனை சரண் அடைய -மிக்கு உள்ள பிள்ளைகளும்
-500000 பெண்கள் உண்டே -பாகவத சம்ருதியை அபேஷிக்கிறாள்
வந்து நின்றோம் -திரு நாமம் சொன்னால் போதுமே -அறிவில்லா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் ஆகில்
நரகம் எல்லாம் புல் ஒழிந்து போகுமே –
தஹர வித்யை -கீழ் வானம் வெள் என்று
மந்த கதி எருமை –
மண்டோதரி -தாரை -பெருமாள் திருமேனி கொண்டாட -வாலியும் திருமேனியை சேவித்து -சரம அவஸ்தையில்
தளிர் புரையும் திருவடி தலை மேலே என்றார் –
திருவடி -ஆஸ்ரயித்த பின்பு
ஸ்வரூப ஸ்வ பாவம் மூவருக்கும் கண்ட பின்பு நீங்களே அறிவீர்கள்
பஞ்ச பூதங்களும் அவன் அதீனம்
பார் உருவில் -பிரம்மா சிவன் விஷ்ணு பரமாக்கி-
கடல் போன்ற நிறமும் ஸ்வ பாவமும் கொண்டவனே பரஞ்சோதி
வந்திடம் நெஞ்சம் கொண்ட வானவர் கொழுந்தே -தெளியாத மறைகளால் தெளியப் பெரும் படி -ஆழ்வார்கள் ஈரச் சொற்கள் –

————————————————-

தூ மணி மாடம் -ஆசார்யர் திரு மேனி
ஐஞ்சு பூதமாய் -பஞ்ச உபநிஷத் மயம் -அவனது ஐந்து நிலைகளிலும் –
மனுஷ்யர் போலே திருவவதரித்தும் -அவதார சத்யத்வம் -அஜக்ஸ் ச்வதஸ் பாவ –
அரி முகன் அச்சுதன் -அழகியான் தானே அரியுருவம் தானே -நாரசிம்ஹ வபுஸ் ஸ்ரீ மான் –
அபிநயம் -மனுஷ்யர் போலே நடத்திக் காட்டுவான் –
சுற்றும் விளக்கு -வேதம் வேதாங்கங்கள் ஸ்மிருதி இதிஹாச புராண ஞானம் -அருளிச் செயல் –
தூபம் கமழ -திவ்ய பிரபந்த வாசனை -பெரிய பெருமாள் சுருதி பரிமளம் -தேசிகன்
துயில் அணை -சரணாகதி செய்த பின்பே -மார்பில் கண் வைத்து உறங்கலாம்
மணிக்கதவம் -அஷ்டாஷா மந்த்ரார்த்தம் -தாள் திறவாய்
தமோ குணம் நீங்கும் படி ஆசார்யர் உபதேசம்
பூமா வித்யை பகவத் த்யானம் செய்பவன் பேச மாட்டானே
செவிடோ -வேறு பேச்சு -ந அந்யது ச்ருணோதி —
மா மாயன் -700 சன்யாசிகள் சுவாமி இடம் கால ஷேபம்
74 சிம்ஹாசானாதிபதிகள் 12000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் உண்டே
மா தவன் -ஸ்ரீ உடைய ஆசார்யர் -பகவத் ஞானமே ஸ்ரீ -ஸ்ரீ பாஷ்யம் சுவாமி அருளியது ஒன்றே –
தேசிகன் -20 வயசில் 30 தடவை ஸ்ரீ பாஷ்யம் வியாக்யானம் திருமழிசை ஆழ்வாரை உணர்த்துகிறாள் இத்தால்
-பாருலகில் –உன் உருவம் -2-மூவருக்கும் திரு உருவம் -வேறு எண்ணும் பொழுது
பார் உருவில் -பல்வேறு சமயமுமாய் பறந்து நின்ற -எல்லா சித்தாந்தங்களும் -அவனால் உண்டானவையே
விசும்புமாகி -ஆகாசமும் ஆகி -பார் -பிருத்வி –
பஞ்ச பூதங்களாக ஆகி -அசேதனமும் ஆகி -சூஷ்ம ஸ்தூல இரண்டு நிலைகள் ப்ரஹ்மத்துக்கு உண்டே
புருடன் மணிவரமாக -பிரதம சதகம் தீஷ்ய வரதம் –
சமயம் -காலம் /சித்தாந்தம் –
ப்ரஹ்ம சம்பந்தம் அனைவருக்கும் உண்டே -சர்வ சப்த வாச்யம் ப்ரஹ்மமே-
நாம ரூபங்கள் கொடுக்கிறான் –

—————————————————-

அதிகரண சாராவளி -முதல் ஸ்லோகம் -அரங்கனையே நாம ரூபம் தருவதாக -வேதாந்தாசார்யர் விருது -பெற்றவர்
ஸ்ரீ பாஷ்யம் ஸ்லோகம் ரூபமாக செய்து அருளி அந்த விருதுக்கு ஏற்ப நடத்திக் காட்டி அருளினார்
சமயம் -விவஸ்தை என்றும் அர்த்தம் -காலம் சித்தாந்தம் –
சர்வ சப்த வாச்யன் அவனே
எல்லா விவகாரங்களும் அவன் -என்கோ–திகழம் ஆகாசம் என்கோ அனைத்தும் என்கோ
பல்வேறு சமயமுமாய் பரந்து நின்றவன் என்கிறார் நம்மாழ்வார்
ஸ்ருதி ஸ்ம்ருதி மமை ஆஞ்ஞை –
வ்யஷ்டி சிருஷ்டியில் பிரம்மாவுக்கும் ஏருருவு உண்டு அழகான ரூபம்
சர்வஜ்ஞ்ஞனாய் -ருத்ரன் -தேசிகன் -ஆசார்யர்களைப் போலே உபதேசித்தான் -ஞானம் கொடுத்தானே மோஷம் விரும்பினாய் ஆகில்
அவனை ஆஸ்ரயீ என்றானே
ஓர் உருவு ஒப்பற்ற உரு அவனுக்கும் உண்டே
மும்மூர்த்தி சொல்லாமல் மூ உருவே இமையவர் -உயர் திணை -வெவேறு ஆத்மாக்கள் மூவரும்
ஒரே ஆத்மா மூன்று சரீரம் என்கிற மதம் நிரசிக்கிறார் –
திரு உரு வேறு என்னும் போது -திரு உள்ளது விஷ்ணுவுக்கு விஷ்ணு ஸ்ரீ அனபாயினி -என்று சிந்திக்கும் பொழுது
வேறாக உள்ளதே திரு மூவருக்கும் -சரஸ்வதி பார்வதி அவர்களுக்கு
ஓர் உருவம் பொன்னுருவம்-ஓன்று செந்தீ —
பிரம்மாவுக்கு ஸ்வர்ண மயமான திரு மேனி –
அழகும் மனசை கவர்வதுமான சிருஷ்டி செய்து -கௌரவமும் கொடுத்து –ஸ்வர்ணம் ஆபரணங்களுக்கு அநு கூலமாக இருப்பது போலே
you see thro my eyes என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்
செந்தீ -அக்னி ரூபம் சம்ஹாரத்துக்கு ஏற்ப -ஓன்று மா கடல் உருவம் -விஷ்ணுவுக்கு -விசேஷணங்கள்
கடல் போன்ற -நீல மேக சியாமள –
மா கடல் உருவம்
ஓன்று மா கடல் உருவம் –
ஆத்மா ரஷணம் அவன் ஒருவனாலே முடியும் -விஷ்ணு போதம் -மோஷ ப்ரதத்வம் –

———————————————-

பத்து இந்த்ரியங்கள் எழுப்புவது போலே -பத்து -பாசுரங்கள் -இவை தானே தடைகள் பகவத் பிராப்திக்கு –
ஆழ்வார் பரமாகவும் சொல்வார் –
ஆசார்யர் பரமாகவும் சொல்வார் -முக்காலமும் உணர்ந்தவர் -சுகர் -பாகவதத்தில் ஆசார்யர் கலி யுகத்தில் வருவதை பவிஷ்யந்தி -என்கிறார் –
ஸ்வர்க்கம் -பகவத் அனுபவமே -சீதா ராமன் -சேர்ந்து இருந்தால் ஸ்வர்க்கம் பிரிந்து இருந்தால் நரகம்
கடக உபநிஷத்தில் -ஸ்வர்க்கம் -அக்னி வித்யை -இதற்கு பரமபதம் என்றே வியாக்யானம் –
நசிகேசத்க்கு யம தர்ம ராஜன் உபதேசம் அங்கு

கேசவ பிரியே -துளசி -தோளிணை மேலும் –தாளிணை மேலும் புனைந்த –அம்மான் –
பெரும் துயில் -500000 பெண்களை எழுப்பி வைத்த தூக்கம் அன்றோ உன்னது –
நோற்ற ஸ்வர்க்கம் -நம்மாழ்வார் -யோகத்தால் நாத முனி பெற்றதை கொண்டு ஆண்டவன் சுவாமி நிர்வாகம் –
தேற்றமாய் வந்து திற -யோகம் தீர்ந்து உபதேசித்தார் –
குரு பரம்பரையில் நம் ஆழ்வார் மட்டுமே -அவயவி மற்ற ஆழ்வார்கள் –
அரும் கலம் இவர் தானே -அவதார கிரமத்திலே பாசுரார்த்தம் செய்வார்
முக்த துல்யர் -கிருதக்ருத்ரரர் இவர் –
பெரிய பெருமாள் -ஆசார்யர் ஆஞ்ஞை எதிர்பார்த்து உள்ளார் -பாதுகா சஹாஸ்ரம் -தேசிகன்
கடல் உருவம் -சர்வ தேவதா நமஸ்காரம் கேசவம் கச்சதி
சமுத்திர இவ ரத்னாங்கம் -ஸ்ரீ ராமாயணம் -நீர்மை -சௌசீல்யம் கடல் உருவம் –
மூ வுருவும் கண்ட போதே அறியலாமே வேறு பிரமாணங்கள் வேண்டாமே

ஆத்மா ரஷா பரம் –அவன் இடம் -அபேஷித்து-ரஷகனாய் பிரசித்தமான அவன் இடமே தானே –
ஓன்று மா கடல் உருவம் -ஊற்றம் உடையாய் பெரியாய் –
பாண்டவர்களுக்கு –ரஷணம் பண்ணி அருளி -நஹி பாலான சாமர்த்தியம் மற்றவர்களுக்கு –
சமுத்ரத்தில் இருந்து முகில் தோன்றி கறுத்து -ஓன்று மா கடல் உருவம்
பர வாசுதேவன் -ஷீராப்தி -முகில் வண்ணன் -விஷ்ணு -வியன் மூ உலகுக்கும் அமிர்தம் கொடுத்து அருளி
மூ வுருவம் ஒன்றாம் சோதி -முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே -அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் –
மா -கறுப்பு/பெருமை /
கறுப்பு தமோ குணம் அன்றோ என்னில் -‘
கடலை ஒரு கடல் ஸ்பர்சித்தால் போலே பெருமாள் -சரணாகதி -கருணையின் நிறம் கரியோ -கம்பர்
பிரம்மா ரஜோ குண பிரசுரர்
சிவன் ரஜோ குண பிரசுரர்
விஷ்ணு சத்ய குணம் பிரசுரர்
தங்கம் -ஆசையை வளர்க்கும் -சம்சார ஐ ஹிக பலன்களில் ஆசையை வளர்க்கும் -சரீரம் ரூபம் நாமம் கொடுத்தவனும் அவனே
அக்னி -நாசம் உண்டாக்கும் -வஸ்து அழிக்கும்-தமோ குணம் வளர்க்கும் இதுவும் அவன் நியமனம் அடியாக
விஷ்ணு சத்வ குணம் மது சூதன கர்ப்ப கடாஷம் மோஷார்த்த சிந்தனை சாத்விகர்
எம் அடிகள் -இவரே என் ஸ்வாமி-அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் கொண்டவன்
ப்ரஹ்மாதிகள் கர்ம வச்யர்
பிண்டியார் மண்டை ஏந்தி -சாற்று முறை பாசுரம் -கர்ம பலன் அனுபவிப்பார்கள் இவர்கள்
பேச நின்ற –நாயகன் அவனே கபால நல மோஷத்தில் கண்டு கொண்மின்
நீல மேக சியாமள -முகில் வண்ணன் –
வெண் கம்பளம் -paambu ஆவிஷம் -உபநிஷத் பட்டு பூச்சி இந்திர கோபம் போன்ற நிறம்
குசும்பு –வித்யுத் -ஆழி போல் மின்னி –
வேண்டிய நிறம் எடுக்க வல்லவன்
முகில் வண்ணமே அவன் ஆசை படும் வண்ணம் –

————————————————

செல்வப் பெண்டாட்டி -ஆசார்யர்கள் -இவளைப் பெற அவன் நோற்க வேண்டும் படி இருக்கும் இறே
கற்றுக் கறவை கணங்கள் பல -யுவா குமாரா -பஞ்ச விம்சதிகர்களை போலே கன்றாகவே இருந்து கறக்குமே –
ஸ்ரீ கிருஷ்ணன் கர ஸ்பர்சம் பட்டும் வேணு கானம் கேட்டும் வளர்ந்தவை அன்றோ
கன்றுகள் உடைய பசுக்கள் என்றுமாம் -ஆசார்யர்கள் -பாலகனாகவே தம்மை நினைத்துக் கொண்டு -சிஷ்யர் சம்ருத்தி நிறைந்து
எல்லே இளம் கிளியே -யுவாவாகவே
குலசேகர ஆழ்வார் -என்பர் இப்பாசுரம் மூலம் -ஆண்டவன் சுவாமி -சத்ருக்களை வென்ற அரசன் -சென்று செருச் செய்யும் குற்றம் ஒன்றும் இல்லாத
பாகவதர் ஸ்ரீ வைஷ்ணவர் இடம் குற்றம் பார்க்காதவர்
துய்ய குலசேகரன் -தேசிகன் –
ஆச்சார்யர் இடம் சேர்ந்த பின்பு -மாஸுசா -சொல்லி ஏற்றுக் கொண்டு ஆத்ம ரஷணம் செய்வான் எம் அடிகள் முகில் வண்ணன் -என்றார் கீழ்
மூன்றாம் பாசுரம் நான்காம் பாசுரம் -திருமேனியை பற்றி விவரிக்கும் -த்யானம் பண்ண சுபாஸ்ரயம் என்று காட்டி அருள –
தரமி ஐக்கியம் -அர்ச்சாவதார மூர்த்திகள் -பல நிறங்கள் பல ரூபங்கள் -கொண்டவன் –
நம்பியை -எம்பிரானை என் சொல்லி மறப்பேனே –
திருவடிவில் -பாவை மெல் விரலாள்-விரும்பும் திருமேனி கொள்பவன் –
திரு வடிவில் கரு நெடுமால் -திரு உடைய வடிவில் ஆசை கொள்பவன் -சொத்தை சேர்த்து வைக்கிறாள் –
ஆகையால் ப்ரீதி வ்யாமோஹம் கொண்டவன் அன்றோ
கரு நீல வண்ணன் -பல வண்ணங்கள் உடையவன் அன்றோ

——————————————–

கீழே பால் வெள்ளம் -நடுவில் மால் வெள்ளம் -மேலே பனி வெள்ளம் –
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான்
தண்ணீருக்கும் சினம் உண்டோ
மனதுக்கு இவன் இனியான் கண்ணுக்கு அவன் இனியான்
உபநிஷத் காவ -பால் -ஞானம் ஸ்ரீ கீதை -அமிர்தம் போக்தா கோபால நந்தனன் பார்த்தோ வத்சன் -கன்றுக்குட்டி –
கனைத்து இளம் கன்றுக்கு இரங்கி -பெரியாழ்வார் -என்பர் ஆண்டவன் சுவாமி –
வேண்டிய வேதம் -சம்பந்தம் கொண்ட உபநிஷத் அர்த்தம் ஓதி -வேதங்கள் –தமிழ் மறைகளும் ஓதி -பாண்டிய தேசம் –
இங்கு வேண்டிய ஓதம் இவையே -நல செல்வன் தங்காய் –
பனித்தலை -உபநிஷத் அர்த்தங்கள் -பால் வெள்ளம் -அருளிச் செயல் அர்த்தங்கள் -உபய வேதாந்தம் -சொல்லி பரத்வம் ஸ்தாபித்தார் –
கரு நீல வண்ணன் தன்னை -தனது அமிர்தம் பெற்ற பின்பு –
கட்டுரையே -பூர்ணமாக கண்டு அனுபவித்து பேச வல்லார் யார் —
அபரிச்சேத்யமான ஆராவமுதக் கடல் -அங்கும் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே -சதா பஸ்யந்தி ஸூரயா -அகஸ்த்ய பாஷையாலே
அங்கும் -தேசிகன்
சாந்தோக்ய தசை -அவனை அவனே அனுபவிப்பான் –

————————————————-

புள்ளின் வாய் கீண்டானை -கள்ளம் தவிர்ந்து கலந்து -இனியது தனி அருந்தேல் -கூடியே இருந்து குளிர
-போத யந்த பரஸ்பரம் -மத சிந்த -மத கத பிராணா –
போதரிக் கண்ணினாய் -அவனே வருவான் இந்த கண் அழகை பார்க்க என்று இருப்பவ இங்கே -திவ்யம் சஷூஸ்
பொல்லா அரக்கன் -விபீஷணஸ்து தர்மாத்மா -ராவணனை -ஹிரண்யனை -கிள்ளிக் களைந்தானே -நகத்தாலே செய்ததால் –
ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ ராம ஸ்ரீ நரசிம்ஹ அவதாரம் -அஹோபில சிஷ்யர் –
ராம விருத்தாந்தம் சொன்னோம் கிருஷ்ண விருத்தாந்தம் சொன்னோம் -நரசிம்ஹ விருத்தாந்தமும் சொன்னோம்
வியாழன் போய் வெள்ளி -பிருஹஸ்பதி நஷத்ரம் -சுகர -அசுர குரு-தனது சிஷ்யனை காத்தார் –
புள்ளின் வாய் கீண்டான் -பேராசை அழிக்கும் ஆசார்யன் -பொல்லா அரக்கன் -மனஸ் இந்த்ரியங்கள் –
மீண்டும் புள்ளும் சிலம்பின கால ஷேபம் எங்குமே உண்டே போதரிக் கண்ணினாய் ஆனந்த மயன் -சாரூப்யம் பெற்று போகம் அனுபவிக்க –
பொழுது போனதே தெரியாமல் -அதுவாகும் கண் பயன் ஆவதே -தேட்டறும் திறல் -குலசேகர ஆழ்வார்
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருப் பள்ளி உணர்த்துகிறாள் –
யுகம் தோறும் இருந்தவனை ஸ்தோத்ரம் பண்ணத் தானே முடியும் -கட்டுரையே யார் ஒருவர் காண்பிப்பாரே
வாக்யமே சாஷாத்கரம் உண்டு பண்ணாதே -வாக்கியம் -தத்வமஸி-வாக்ய ஜன்ம ஞானத்தாலே மோஷம் என்பர் அத்வைதி
-தத் தவம் அஸி நீ ப்ரஹ்மத்துக்கு சரீரமாக இருக்கிறாய் -நம் சம்ப்ரதாயம் -சாரீரிகன் அவன் –
கட்டுரையே -இது
பக்தி பிரபத்தி மூலமே மோஷம் -மந்தவ்ய ச்ரோதவ்ய நிதித்யாசிதவ்ய —
கட்டுரை தான் உண்டோ -என்றும் காண்பது தான் உண்டோ -முழுவதும் எழுதவும் காண்பதுவும் முடியாதே –
வேத வாக்யங்களும் யதோ வாசோ நிவர்த்தந்தே -சொல்லிற்றே
மட நெஞ்சே -உசாத் துணைக்கு வேற ஆள் இல்லாமையால் நெஞ்சு கூட்டிக் கொள்கிறார் நாலாம் பாசுரத்தில்
-திருமந்திர த்யானம் ஒன்றே -உஜ்ஜீவன ஹேது என்கிறார்
சர்வம் அஷ்டாஷர மந்த்ரம் –
அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் -மந்த்ரம் -ரகசியம் பகவானையே சொல்லும் –
திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து வாழலாம் மட நெஞ்சமே –
நந்த கோபாலன் -ப்ரஹ்ம விசாரம் செய்து ஆனந்த மயமாய் இருக்கும் ஆசார்யர்
சாரதமம் சாஸ்திரம் ரகஸ்ய த்ரயம் -அந்தி வைத்த மந்த்ரம் –
கந்தம் கமழும் குழலி -உபநிஷத் வாசனை -சர்வ கந்தக -அவன் –
கோழி -சாரத்தை பொருக்கி எடுக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்
இவ்வாத்மாவுக்கு ரகஸ்ய த்ரயமே உபாதேய தமம் -தேசிகன்
குயில்கள் -வால்மீகி கோகுலம் –ஆசார்யர்கள் -குயில் இனங்கள் கூவின -ஆசார்யர்கள் கோஷ்டி என்றவாறே
பந்தார் விரலி -நாரம் ஒரு கையிலே நாராயணன் ஒரு கையிலே -போகோ உபகரணம் ஒரு கையிலே லீலா உபகரணம் ஒரு கையிலே –
வளை-சப்தம் -மந்த்ரார்த்தங்கள்
சரணாகதி அங்கங்கள் பேசுகிறாள் ஏற்ற கலங்கள் முதல் –
வெண் பல் தவத்தவர் -வம்பற்றவர் -பரகால ஜீயர் -பரிசாரக ஜீயர் -திரு வேங்கடத்தில்
அஹோபில ஜீயர் -அர்ச்சக ஜீயர் -விக்ரஹ ஆராதனம் செய்பவர்கள் –
உங்கள் புழக்கடை திருப் பாண் ஆழ்வார்
எல்லே -திரு மங்கை ஆழ்வார் -தேசிகன் என்றும் நிர்வஹிப்பார்
செங்கழு நீர் -வாய் -மலர்ந்து ஆம்பல் -அஜ்ஞ்ஞானம் நீங்கி ஞானம் மலர -அந்தணனை அந்தணர் மாட்டு அந்தி வைத்த -மந்த்ரத்தை -பாசுரார்த்தம்
புழக்கடை -அதர்வண வேதம் -தோட்டத்து வாவி -அதில் உபநிஷத் -அஷ்டாஷர மந்த்ரம் -நாராயண உபநிஷத்
-ஓம் இத்யேகாஷரம்-இத்யாதி -அதர்வண சிரஸ்-பிரவணம் சேஷத்வ ஞானம் பெற –பாரதந்த்ர்ய ஞானம் கிட்டும் -நம சப்தம் –
தாச பூதா ஸ்வதஸ் சர்வே -இயற்கையில் அனைவரும் அடிமைகள் –இந்திரற்கும் பிரமனுக்கும் முதல்வன் தன்னை
பழ மறையின் பொருளும் கொண்டவை அமலனாதி பிரான் -முனி வாகன போகம் –
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் –நாணாதாய் நாவுடையாய்
நந்த கோபாலா எழுந்திராய் -ஆசார்ய பரம்
யசோதா அறிவுறாய் -மந்திர ஸ்தானம்
மந்திர தேவதை -அம்பரமூடி ஓங்கி உலகு அளந்த பகவத் பக்தி –அம பரமே -அழகிய பரப் ப்ரஹ்மம்-
ஓம் சொல்லாமல் அம் -ஸ்திரீ என்பதால் மூல மந்த்ராதிகாரம்
தண்ணீரே -சாத்விக த்யாகம் — -கர்த்ருத்வ த்யாகம் -மமதா -த்யாகம் -பல த்யாகம்
பாகவத பக்தி -செல்வா பல தேவா
அஜ்ஞ்ஞானத்தால் விடுவது தாமஸ த்யாகம்
ராஜச த்யாகம் -காய கிலேசத்தால் விடுவது -துக்கம் நினைத்து செய்யாமல் விடுவது உடம்புக்கு கிலேசம் என்று எண்ணி
தண்ணீரே அறம் செய்யும் –அம்பரமே அறம் செய்யும்- சோறே அறம் செய்யும் -சாத்விகமாக செய்து கிருஷ்ணார்ப்பப்ணம் விட்டு –
சரணாகதிக்கு பலம் பகவத் ப்ரிதியே என்ற எண்ணம் வேணும்
மந்த்ரத்தை -அந்தணனை இரண்டுமே பகவானையே காட்டும் –
தமிழ் ஓசை வட சொல் ஆகி -இரண்டாலும் பேசப் படுபவன் அவனே
இடையர் செல்வம் -குடக் கூத்தாடு போலே -அந்தணர் மாடு -வேதம் ஓதி ஒதுவிப்பது
மாடு அந்தி -மாட்டு முலைகள் போலே உபநிஷத் -ப்ரஹ்மம் -கர்ம பாகத்தில் ரகஸ்யம் உபநிஷத்தில் ஸ்பஷ்டமாக காட்டும்
தன்னை சொல்பவனை காப்பவன் -மந்திர -சகஸ்ர நாமாவளி -சந்த்ராம் ஸூ பாஸ்கரத் ஸ்துதி அப்புறம்
விருத்தா -சம்ருத்தி பூரணன் -குணம் ஐஸ்வர்யம் ஜீவ சமூகத்தால்
ஸ்பஷ்டாஷாரன் -ஸ்பஷ்ட வர்ணங்களை கொண்டவன் -சொற்கள் எல்லாம் அவனையே குறிக்கும் –
மந்திர -சந்த்ராம்சூ பாஸ்கரத்துதி திங்கள் ஞாயிருமாகி –
பூதம் ஐந்தாய் வட சொல்லாகி திங்கள் ஞாயிறாகி -மந்த்ரத்தை -ஆய கைங்கர்யம் கிட்டும் மந்த்ரத்தை மறவாமல் வாழ்ந்தால் –
பெரு நாடு காண இம்மையிலே பிஷை -தாம் கொள்வர் திருநாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமின் பரமபதம் செல்ல
ஆசார்யர் இடம் ஞான பிஷி தாம் கொள்ளலாம்
எங்கள் மேல் சாபம் நீ நோக்குதியால் போகும் –
ஒண் மிதியில் –5 பாசுரம் -ஓங்கி -இரண்டு அவதாரம் ஒரே பதத்தால் -ஆண்டாள் காட்டி –
அன்று ஞாலம் அளந்த பிரானே குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் பரன் சென்று சேர் திருவேங்கடம் ஒன்றுமே தொழ-வினை மாயுமே –
ஸ்ரீ லஷ்மி கடாஷம் வேண்டுமே ஸ்ரீ வாமன மூர்த்திக்கு யாசகம் சித்திக்க –மான் தோலை வைத்து மறைத்து கொண்டு போனான்
பாதுகை தான் அவனை ரஷித்ததாம் சூர்ய மண்டலம் தாண்டி செல்லும் பொழுது -தேசிகன் -ஆசார்யன் -தானே பெருமாளை ரஷிப்பான்
-இல்லை என்பாருக்கு உபதேசம் செய்து ஈஸ்வர தத்வம் நிலை நாட்டி
வேதம் வல்லாரைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து –
சுக்ராசார்யார் வந்தவன் பராத்பரன் என்றதுமே அஹங்காரம் மமகாரங்கள் விட்டானே மகா பலி –
மகா பலிக்கு கிடைத்த பாக்கியம் நமக்கு கிடைக்க வில்லையே என்று ஆழ்வார்கள் உருகி இத்தை அருளிச் செய்கிறார் -அர்ச்சாவதார ஈடுபாடு வேண்டுமே
அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து -எட்டு வித புத்திகள்
-1-கிரஹணம்–2-தாரணம் –3-ஸ்மரணம் –4-பிரதிபாதனம் –பிறருக்கு சொல்லிபார்த்து திடமாக்குவது
5- ஊகித்தல் -6-அபோதனம் -வேண்டாதவற்றை தள்ளி -7-அர்த்த விஜ்ஞ்ஞானம் -விஷயத்தை தெளிவாக தெரிந்து கொள்ளுதல் –
-8-தத்வ ஜ்ஞானம் ஆகிய அஷ்ட புத்தி வகை
ஒண் மதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப —
தேவகி சிங்கம் -ராகவ சிங்கம் -நர சிங்கம் -இராமானுஜ சிங்கம் -மாரி மழை முழைஞ்சில்
பாதுகை சாத்தி இருப்பதால் நடை அழகு நம் பெருமாளுக்கு -தேசிகன் -நித்யர்களும் வந்து சேவிக்கும் படி
ஆசன விசேஷத்தாலே வார்த்தை பழுது போகாது இறே
கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து –
வேதாந்தம் உபநிஷத் குகையில் -சாந்தோக்ய தசையில் தன்னையே அனுபவித்துக் கொண்டு இருக்க -அசித் அவிசிஷ்டாயா மகா பிரளயம்
-மெழுகிலே ஒட்டின பொன் பொடி போலே ஒட்டிக் கொண்டு இருக்குமாம் –
வலி மிக்க சீயம் -ஞானம் என்கிற பலம் கொண்ட ராமானுசன் –
அஹோபிலம் -மாலோலன் -பக்தி மார்க்கம் பிரசாரம் பண்ண அருளி –
நூபுரமும் பெரியதாகி உலகு அளந்த பொழுது -ஆழி எழ சங்கும் வில்லும் எழ –மண்ணை துழாவி –வாமனன் மண் இது என்னும் –

——————————-

உபய பிரதான திவ்ய தேசம் -திருக்குடந்தை-மூலவர் உத்சவர் இருவருக்கும் மங்களா சாசனம்
-உத்தான சாயி -கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –
திருப்பாவையில் திருப்பல்லாண்டு -அன்று -போற்றி
பாஷ்யகாரர் -ஸ்ரீ பாஷ்யம் -அருள -சென்ற திருவடி போற்றி
அஹங்காரம் அழித்த ஸ்வாமி -தென் இலங்கை செற்ற திறல் போற்றி –பிரதி வாதி -சென்று அழித்த திறல் போற்றி –
சகடாசுரன் -காமம் குரோதம் ஒழித்த ஆசார்யர் திருவடி போற்றி –
லோபம் மோஹம் கன்று குணிலா எரித்தாய் கழல் போற்று -ஆஸ்ரித ரஷணம் குன்று குடையாய் -எடுத்த குணம் போற்றி
ஞானம் கொடுத்து -அபராதி சிஷ்யர்களையும் கிருபையால் அனுக்ரஹனம் செய்து அருளி
சங்கு சக்கரம் -வேல் போற்றி –நித்ய திருவாராதனம் இவற்றுக்கும் செய்வார்கள் ஆசார்யர்கள் -பறை-ஆசார்ய கைங்கர்யம் –

—————————————

திருத்தக்க செல்வமும் -திரு விரும்பிய செல்வம் -ஒன்றே வேண்டும் உன்னை அர்த்தித்து வந்தோம்
ஓர் இரவில் -ஒப்பற்ற இரவு -இதுவே உதவிற்று மாதா பிதாக்கள் உதவாத போதும்
ஒருத்தி மகனாய் பிறந்து -இத்யாதி -திரு மந்த்ரத்தில் பிறந்து த்வ்யத்தில் வளர்ந்து –
என் குட்டன் வந்து புறம் புல்குவான் -அவனை நம்மை கொள்வான் -திருமேனியை பூரணமாக அனுபவிப்பிப்பான்
திருக் கோவலூரில் வந்து -காட்சி -பொய்கை வேலி-மூவரும் மங்களா சாசனம் செய்த திவ்ய தேசம் ஸூ சிப்பிக்கிறார்
தான் அநாத-நாதன் இல்லாமல் -சர்வேஸ்வர தத்வம் இரப்பாளனாக-
அலம் புரிந்த நெடும் தடக்கையன் -அமரர் வேந்தன் -அலம் -போதும் -போதும் -என்பவன் –
மகா பலி வேந்தன் -இவன் அமரர் வேந்தன் -ராஜ்ஜியம் வேண்டும் என்பாருக்கும் வேண்டாம் என்பாருக்கும் இவனே வேந்தன் –
வந்து -காலே வந்து -சிறு காலே வந்து –சிற்றம் சிறு காலே வந்து -கங்கா ஸ்நானம் பண்ண ஆசை கொண்ட
நொண்டி மேலே கங்கை கொட்டினால் போலே என்பர் தேசிகர் -ராகவம் சரணம் கத -வம்சம் வேறே காட்டினானே
-சீதையை மீட்பது அப்புறம் -அபயபிரதானம் -சாரம் –
வாரிக் கொண்டு விழுங்க -ஆழ்வாரை அனுபவிக்க திருக் குருகூர் வர பாரித்து இருக்கும் மால் –
வ்யாமோஹமே வடிவாக கொண்டவன் -ஸ்ரீ கிருஷ்ணன் –
மணி வண்ணன் -14 அம்சம் சாம்யம் உண்டே –
பகவத் அனுபவம் நம்மை நர்த்தனம் பண்ணப் பண்ணும் ஆடி ஆடி அகம் கரைந்து -நாடி நாடி நரசிம்ஹா என்று
சர்வ வ்யாப்தன் நிரூபித்து காட்டிய அவதாரம் அன்றோ
சிலரை உறங்கப் பண்ணும் மயங்கப் பண்ணும் –
நாவுடையேற்கு மாறுளதோ -சொல்லப் பண்ணும்
உடையவர் காலிலே விழுகையும் -ப்ரஹ்ம ஜ்ஞானம் உடையவர் -த்ரவ்யம் உள்ளவர் இடம் ஆஸ்ரயிப்போம்-
நாரதர் -வால்மீகி -பராசரர் மைத்ரேயர் -திருவடிகளில் விழுந்தால் போலே –
ஆசார்யர் திருமேனியில் அஷ்டாஷர அர்த்தம் கிட்டுமே –
கேட்டியேல் தொடை தட்டி எழுப்புகிறாள் ஆண்டாள் -மார்கழி நீராடுவான் -மம சாதர்ம்யம் ஆகாதா -போக மாதரம் சாம்யம் -ப்ரஹ்மம் போலே ஆகிறான்
மேலையார் செய்வனகள் -பூர்வாச்சார்யர் -பால் அன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் -பிரணவார்த்தம் போல்வன –
பறை -பாரார்த்த ஞானம் -உகாரார்த்தம் -அவனுக்கே அற்று தீர்ந்து
-களவு கொண்டு ஆபரணம் பூணுவார் போலே –தானாகவே பூர்வாசார்யர்கள் சொல்லாத ஸ்ரீ சூக்திகள் சொல்வார் பயப்படுவார் தேசிகன் –
ஆசார்யர் பாதுகைகள் பிரீதி அடையட்டும் -வாழ்த்துவார் சரணாகதனை-
கோல விளக்கு -தீபம் போன்ற பாகவத கைங்கர்யம் –கொடியே -பகவத் கைங்கர்யம் விதானம்
-சாத்விக த்யாகம்–நம்மைக் கொண்டு அவனே அவனுடைய ப்ரீதிக்காக செய்து கொண்டான் -என்ற எண்ணம் வேணும் –
பூர்வாசார்யர் ஸ்ரீ சூக்திகளே உஜ்ஜீவன ஹேது
போல்வன சங்கங்கள் –பாஞ்ச ஜன்யம் -ஆ நிரைகளை கூப்பிட சங்கு -எடுத்து ஊதுவான் -ருக்மிணி பிராட்டிக்கு –
ஒலித்த சங்கமும் உண்டே -ஆக மூன்று சங்கங்கள்
துளசி வாசனையும் சங்கொலியும்-கேட்டு ஆஸ்வாசப் பட்டாள் –
கோல விளக்கே -தீபம் போன்ற ஆதி சேஷன் -கொடியே விதானமே திருவடியையும் கொடுப்பேன் -உன்னை அர்த்தித்து வந்தோம் சொன்னீர்
பாட வல்ல நாச்சியார் -ஆண்டாள் உன் தன்னைப் பாடி பறை கொண்ட
அக்கரை இக்கரை யாயிற்றே –ஷீரான்னம் -பகவான் -ஷட்குணம்–அன்னம் ப்ரஹ்மேதி பவதி -பால் சோறு -அவனே –
முக்குணம் அன்னம் நாம் உண்ணுவது -சாத்விக ரஜஸ் தமஸ் கலந்தவை

—————————-

ந தர்ம நிஷ்டோச்மி -சந்த்யா வந்தனம் நித்ய கர்மா செய்தாலும் கர்ம யோகாதிகள் இல்லை என்கிறார் ஆளவந்தார் -கறைவைகள் -ஆகிஞ்சன்யம்
திருக்குடந்தை ஆண்டவன் -16 தமிழ் பாசுரங்களால் 16 ஸ்ரீ பாஷ்ய அதிகார அர்த்தங்களைக் காட்டி அருளி இருக்கிறார்
பரத்வமும் சுலப்யமும் சேர்ந்த அவதாரம் கிருஷ்ணாவதாரம் தானே -அவனே பூம் கோவலூரில் உள்ளான் என்கிறார்
விஷ்ணு துர்க்கை -கண்ணனால் அனுப்பப்பட்ட மாயை -கம்சனால் அனுப்பப்பட்ட மாயை பேய்-அன்றோ -காசியில் சிவன் ராம நாமம் ஒதுவாராம் –
6/7 பாசுரங்கள் நெஞ்சை திருக் கோவலூர் கூட்டிச் செல்கிறார் -அலம் புரிந்த -ஹலம் -கலப்பை என்றுமாம்
-அவனே பூம் கோவலூரில் -உலகம் ஆண்டு -10000 வருஷம் ஆண்ட ராமன் -அவனும் இங்கே –
கற்புடைய -பாதி வரதம் ஸ்ரீ மன் நாராயணனே பர தெய்வம்
சேஷ சேஷி பாவம் கூரத் ஆழ்வானுக்கு மாறிக் கிடந்ததே
அழகர் இடம் உடையவர் திருவடி சேவை மீண்டும் பெற பிரார்த்தித்து –
ஸ்ரீ ரங்கத்தில் இருந்து உடையவர் திருவடி வாரத்தில் கைங்கர்யம் செய்ய வேண்டும் -பிராரத்து பெற்றார்
ஆளவந்தார் தம் சிஷ்யர் உடையவரை பெற வரத ராஜர் இடம் பிரார்த்தித்தாரே -சம்ப்ரதாயம் காத்த தேவாதி ராஜன் –
நிறைந்த கச்சி–ஊரகத்தாய் -திவ்ய தேசங்கள் பல உண்டே
நெடு வரை உச்சி மேலாய் -திருமலை –
சென்று இறைஞ்சி -ஸ்வாமி சேஷ பாவம் அறிந்தால் மட்டும் போறாது செல்ல வேண்டும்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்து -புகுதல் ஆத்மா ரஷண சமர்ப்பணம் -செய்ய வேணும் -கோப்த்ருத்வ வரணம் -உபாய ஸ்தானத்தில் இருந்து ரஷிக்க வரித்து –
திருக் குருகை பிரான் பிள்ளான் -எம்பெருமானார் திருப்பேர் நகர் மங்களா சாசனம் செய்து உள்ள நேரத்தில் எழுந்து அருளி —
பிடித்தேன் -பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் -பாசுரம் -பிரபத்திக்கு முன்பு சோகித்தவனும் அப்புறம் சோகிக்காதவனும் அதிகாரி -தேசிகன்
திருப் பேர் நகரான் பாசுரம் அனுபவமோ -நீரே வியாக்யானம் செய்ய அதிகாரி நியமித்தார் —
பேராது என் நெஞ்சின் உள்ளே -மன்னு பேரகத்தாய் –
ராமானுஜர் நெஞ்சில் உள்ளத்தை அறிந்து பிள்ளான் சொல்லப் போகிறார் ஸூ சகம் –
தூப்புல் தேசிகன் -திருவவதாரம் ஸூ சகம் -கூட மேலே வரும்
எங்குற்றாய் –தேடிக் கொண்டு மங்களா சாசனம் செய்கிறார் ஆழ்வார் -நீரகத்தாய் –இத்யாதி
தசரதத சக்ரவர்த்தி போன்ற நிலை ஆழ்வாருக்கு – ரதம் நிறுத்த சொல்ல -பெருமாள் -போகச் சொல்ல –
காதில் விழ வில்லை சொல்லும் என்றானாம்
பெருமாள் –காதில் விழுந்தாலும் அதன் படி அனுஷ்டிக்க முடியவில்லையே
நீ நான் சொல்வதை கேட்காவிடில் நாசம் -கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சாபம் -கேட்ட படி நடக்க வில்லை -ஸ்ரீ கீதா பாஷ்யம்
அத்புதம் -மற்ற அவதாரங்கள் –பாகவதம் -அத்யத்புதம் -நரசிம்ஹ அவதாரம் -பெரிய பெரிய பெருமாள் நரசிம்ஹம் என்பர்
-ஆசார்யர் ஆராதனா தேவதைகள் அல்லவா
உள்ளுவார் உள்ளத்தாய்–நெடுவரையின் உச்சி மேலாய் –தேவ பெருமாளையை சொல்லலாமே உத்தமூர் ஸ்வாமி ஆண்டவன் ஸ்வாமி -சம்வாதம் –
பெரியவாச்சான் பிள்ளை -திருமலை சொல்வார் -இப்படி சொல்லாம் என்பதாலே உள்ளுவார் உள்ளத்தாய் -என்கிறார்
அத்திகிரி -நெடு வரியின் உச்சி -வாரண கிரி சிரஸ்-
கரி மலை நின்று அளித்து காக்கின்றானே -தேசிகன்
நரசிம்ஹன் மேல் தேவ பிரான் -என்றும் சொல்லலாம் -நரசிம்ஹன் ஆராதனம் செய்த ஸ்ரீ நிவாசனையும் சொல்லலாம்
-திருமங்கை ஆழ்வார் எங்கும் அலை பாயுமே
நிலாத் துங்க துண்டத்தாய் -அர்த்த சந்திர மௌலி -ஏகாம்பரர் கோயிலுக்கு உள்ளே இருக்கும் பெருமாளையும் மங்களா சாசனம்
-ராமன் உள்ள இடமே அயோதியை என்பார் போலே
ஒண் துறையில் வெக்கா-வேகவதி நதிக்கு அணையாக சயனம் -உபாய பல பாவமாக ஸ்வயம் வ்யக்தம் –
தேசிகன் அமிர்தம் ஆகிய மோஷத்துக்கு அணை -உபநிஷத் –
சேது என்றால் அடையப் படும் வஸ்து வேறாக இருக்க வேண்டுமா -பலாதிகரணம் -ஸ்ரீ பாஷ்யம் -உபாயமாகவும் பலமாகவும் இருப்பவன்
கலி பிறந்து 46வருஷம் -பெரியாழ்வார் திரு அவதாரம் – 96 -வருஷம் கழித்து ஆண்டாள் திருத் துளசி வனத்தில் ஆவிர்பவிக்க
வாரணம் ஆயிரம் -நரசிம்ஹன் வந்ததாக கனவாம் –
அரி முகன் அச்சுதன் -கை மேல் -பொறி முகம் தட்ட கனாக் கண்டேன்
நரசிம்ஹன் -ருக்மிணி காலே நரசிம்ஹ -காலத்தில் வந்த அவன் போலே வர வேணும் என்றால்
நீங்களும் சிசுபாலன் பிறந்த லக்னத்தில் பிறந்தீர்களோ -கைங்கர்யம் ஸ்வீகரித்துக் கொண்டே ஆக வேணும் -என்று ஆறி இருக்க வேண்டும் –
நாச்சியார் திரு மொழி -பிரபத்திக்கு பின்பு அர்ச்சாவதார அனுபவம் போலே –
ஆண்டாள் -ரஷிக்கிறவள் -ஆண்டவன் -சம்ப்ரதாயத்தை ரஷித்தீரே -என்று ஆண்டவன் பெயராம்
ஆண்டாள் -10 த்வய தேசம் பெரியாழ்வார் -20 திவ்ய தேசம் மங்களா சாசனம்
நான் மறையும் -வேள்வியும் வேள்விப் புகையும் -பதங்களின் பொருளும் -பர வாசு தேவன் -தானே அரங்கன் மேலே கந்தம்
தோலாத தனி வீரன் தொழுத கோயில் -சேராத பயன் எல்லாம் சேர்க்கும் கோயில் செழும் மறையின் முதல் எழுத்து -இவனே

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸ்ரீ .உ .வே .அடூர் அசூரி மாதவாச்சாரியார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திரு நெடும் தாண்டகம்-பாசுரங்கள்-26-30- -திவ்யார்த்த தீபிகை —

September 30, 2014

தலைவியை ஒருமுகத்தாலே ஆர்றுவிக்க வேணுமென்று நினைத்த தோழி யானவள் சில கேள்விகள் கேட்க,
அவற்றுக்கு மறுமாற்ற முரைக்கும் வகையாக
மைவண்ண நறுங்குஞ்சி தொடங்கி ஐந்துபாசுரங்கள் சென்றன.
தோழி தான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விடைவந்துவிட்டபடியால் அவள் வாளா கிடந்தாள்;
தலைவிக்கோ ஆற்றாமை மீதூர்ந்தது. கண்ணிற் கண்டதொரு வண்டைத் தூதுவிடுகிறாள் இப்பாசுரத்தில்.
ஸ்ரீராமவதாரத்தில் திர்யக்குக்கள் தூதுசென்று காரியம் தலைக்கட்டிவைக்கக் காண்கையாலே
வண்டுவிடுதூதிலே முயல்கிறாள் இப்பரகாலநாயகி–

தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத் தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும்,
பூமருவி யினி தமர்ந்து பொறியி லார்ந்த அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,
ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று,
நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது நின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே.

பதவுரை

தேன் மருவு-தேன் வெள்ளம் நிறைந்திருக்கப் பெற்ற
பொழில் இடத்து-சோலைப் புறத்திலே
மலர்ந்த போது-மலர்ந்த புஷ்பங்களிலுண்டான
தேன் அதனை–தேனை
வாய் மடுத்து–பானம் பண்ணி
உன் பெடையும் நீயும்–உனது பேடையும் நீயும்
பூ மருவி–புஷ்பத்திலே பொருந்தி
இனிது அமர்ந்து–இனிமையாகப் புணர்ந்து
பொறியின் ஆர்ந்த–மேனியிற் புகர் அதிகரிக்கப் பெற்ற
அறுகால சிறு வண்டே–ஆறு கால்களை யுடைய சிறிய வண்டே!
உன்னை தொழுதேன்–உன்னை வணங்கி யாசிக்கின்றேன்;
ஆநிரை–பசுக் கூட்டங்களை
மருவி மேய்த்த–விரும்பி மேய்த்தவனும்
அமரர் கோமான்-நித்யஸூரிகளுக்குத் தலைவனும்
அணி அழுந்தூர் நின்றானுக்கு–அழகிய திருவழுந்தூரிலே நிற்பவனுமான எம்பெருமான் பக்கலிலே
இன்றே நீ சென்று-இப்போதே நீபோய்
அஞ்சாதே–பயப்படாமல்
மருவி நின்று–பொருந்தி நின்று
ஓர் மாது–ஒரு பெண்பிள்ளை
நின் நயத்தாள் என்று–உன்னை ஆசைப் பட்டிருக்கின்றாள்‘ என்று
இறையே–சிறியதொரு வார்த்தையை
இயம்பிக் காண்–சொல்லிப் பார்.

முன்னடிகளில் வண்டைவிளித்துத் தொழுது, பின்னடிகளில், அது செய்ய வேண்டிய காரியத்தை விதிக்கின்றாள்.
திருவழுந்தூர் ஆமருவியப்பன் திருவடிவாரத்திலே சென்று தனது நிலைமையைச் சொல்லுமாறு வேண்டுகின்றாள்;
அந்த வண்டு தன் பேடையோடே கலந்து மலரிலே மதுபானம் பண்ணிக் கொண்டிருந்தமையால்
‘நான் துணைவனைப் பிரிந்து உணவும் உறக்கமுமற்று வருந்திக்கிடக்கும்போது
நீ இப்படி உன்காரியமே கண்ணாக இருப்பது தகுதியோ? என்னுங்கருத்து முன்னடிகளில் வெளிவரும்.

நாம் வருந்தி யொடுங்கி -மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ என்று கிடக்கும்போது
இந்த வண்டு மாத்திரம் மலர்களிலே ஏறிக்கிடப்பதற்கு யாதுகாரணமென்று பார்த்தாள்;
அது நம்மைப்போலே விரஹ வேதனைப்படாமல் துணை பிரியாதிருப்பதனால் மலரிலே கால் பாவவும்
மதுவைப் பருகவும்
மேனி நிறம் பெற்றிருக்கவும் பெறுகின்றதென்றுணர்ந்து அங்ஙனமே விளிக்கின்றாள்.
பூவைக் கண்டால் அருவருத்தும் போக்ய வஸ்துக்களில் வெறுப்புற்றும் மேனி நிறமழிந்தும் இரா நி்ன்ற என்னையும்
உன்னைப்போலே யாக்க வேண்டாவோ?
நானும் துணைவனோடு கலந்து வாழும்படி நீ காரியஞ் செய்யவேண்டாவோ? என்பது உள்ளூறை.

“உளங்கனிந்திருக்குமடியவர் தங்களுள்ளத்துளூறிய தேன்“ என்னப்பட்ட பகவத் விஷயமாகிற மதுவை விரும்பியும்,
“போந்தெ தென்னெஞ் சென்னும் பொன்வண்டு உனதடிப்போதிலொண்சீராந் தெளிதேனுண்டமர்ந்திடவேண்டி“ என்கிறபடியே
ஆசார்ய பாதாரவிந்த ஸேவையாகிற மதுவைப் பருகுதலையே விரதமாகவுடைத்தாகியும்,
உயர்கதிக்கு ஸாதனமாகிய இரண்டு சிறகுகள் போன்ற கர்ம ஜ்ஞானங்களையுடையராகியும் ஸாரக்ராஹிகளாயுமிருக்கின்ற
ஸ்ரீவைஷ்ணவர்களை வண்டாகச் சொல்லுவது வழக்கம்.
அப்படிப்பட்ட ஸ்ரீவைஷ்ணர்களை நோக்கி ‘நீர் எம்பெருமான் திருவடிகளிலே புருஷகாரஞ்செய்து
அடியேனையும் உம்மைப்போலே பகவதநுபவமே நித்தியமாய்ச் செல்லுமாறு ஆட்படுத்திக் கொள்ளவேணும்‘ என்று
பிரார்த்தித்தல் இதற்கு உள்ளூறை பொருள்.
வேதம் வல்லர்களைக்கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிவது ஸம்ப்ரதாயமென்க.

போது + தேன், போதைத்தேன்; பூவிலுள்ள தேன் என்றபடி.

(அறுகால சிறுவண்டே தொழுதேனுன்னை.)
வண்டுக்கு ஆறு கால்கள் உள்ளமை இயல்வாதலால் இவ் விசேஷணம் இங்கு ஏதுக்கு? என்று கேட்கக்கூடும்;
இரண்டு காலாகவும் நான்கு காலாகவுமின்றியே விரைந்து செல்லுகைக் குறுப்பாக ஆறுகால்கள் இருக்கப்பெற்ற பாக்கியம் என்னே!
என்று வியந்து கூறுவதாகச் சில ஆசார்யர்கள் நிர்வஹித்தார்களாம்.
இந்த நிர்வாஹத்தில் ஸ்வாரஸ்யமில்லை;
வண்டு செல்லுதற்குச் சாதனம் சிறகே யன்றிக் கால்கள் அல்லவே;
ஆதலால் ‘அறுகால‘ என்னு மடைமொழிக்கு அங்ஙனே கருத்துரைத்தல் பொருந்தாதென்று, பட்டர் அருளிச் செய்ததாவது-
“தொழுதேனுன்னை“ என்று மேலே யிருக்கையாலே,
என்தலையிலே வைப்பதற்கு ஆறுகால்களுண்டாகப் பெற்றதே! என்று வியந்த சொல்லுகிறபடி என்பதாம்.

தூதுசென்று மீண்டுவந்தால் வண்டின் கால்களைத் தன்தலை நிறைய வைத்துக்கொண்டு கூத்தாடக் குதூஹலித்திருப்பதனால்
அதற்குச் சேர இங்ஙனே கருத்துரைத்தல் மிகப்பொருந்தும்.
“எங்கானலகங்கழிவாயிரை தேர்ந்து இங்கினி தமருஞ், செங்காலமட நாராய்! திருமூழிக்களத்துறையுங்,
கொங்கார் பூந்துழாய் முடியென்குடக்கூத்தற்கென் தூதாய் நுங்கால்களென் தலைமேல் கெழுமீரோ நுமரோடே“ (9-7-1)
என்ற திருவாய் மொழிப்பாசுரத்தின் ஈற்றடி இங்குக் குறிக் கொள்ளத்தக்கது.

சிறுவண்டே! =
ஏற்கனவே நீ சிறியையாயிருப்பதும் ஒரு பாக்கியம்;
அனுமான் இலங்கைக்குத் தூதுசென்ற போது சிலவிடங்களில் தன்வடிவைச் சிறுக்கடித்துக் கொள்ளவேண்டி யிருந்தது;
அங்ஙனே உனக்குத் தேவையில்லை; உருவமே சிறியையாயிரா நி்ன்றாய் காண் என்று விசேஷார்த்தங்காண்க.
ஹனுமானாகில் ‘இந்தக் குரங்கு இங்கே ஏதுக்கு வந்தது?, என்று ஆராய்ச்சிப்பட வேண்டியிருக்கும்;
நீ வண்டாகையாலே
தோளிணை மேலும் நன்மார்பின் மேலும் சுடர்முடிமேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணந்துழாய் மாலையில்
இஷ்டமானதோரிடத்திலே யிருந்து கொண்டு வார்த்தை சொல்லலாம்படியான ஜன்மமன்றோ உன்னது என்பதும் விவக்ஷிதம்.

பரஸ்வரஸம்ச்லேஷ ஸுகத்தாலே மயங்கி மதிகெட்டுக் கிடக்கிற வண்டின் செவியிலே உறுத்தும்படி
‘பூமருவியினதமர்ந்து பொறியிலார்ந்த அறுகால சிறுவண்டே!‘ என்று உரக்கக் கூவினவாறே
வண்டு துணுக்கென்று எட்டிப்பார்க்க, தொழுதேனுன்னை என்கிறாள்.
தலைமகனுடைய திருவடிகள் எனக்கு ஏதுக்கு? உன்னைத் துதிப்பதும் உன்காலிலே விழுவதுமன்றோ எனக்குப்பணி என்றவாறு.
எம்பெருமானைக் காட்டிலும் புருஷகார பூதரான ஆசார்யர்கள் மிகவும் உத்தேச்யர் என்ற சாஸ்த்ரார்த்த முணர்க.

என்னைத் தொழுவதேன்? வேண்டின காரியத்தைச் சொல்லலாகாதோவென்று வண்டு கேட்க;
காரியத்தைக் கூறத் தொடங்குகிறாள் பின்னடிகளில்.
அமரர்கோமான் பக்கலிலே சென்று தூது சொல்லுங்கோள் என்றாள்;
அந்தோ! அயர்வறுமமரர்களதிபதியன்றோ? அந்த மேன்மையிலே எங்களால் கிட்டப்போமோ? என்ன;
ஆமருவிநிரைமேய்த்த அமரர் கோமான் என்றாள்;

பரத்வம் ஒருபுறத்தே கிடக்கச் செய்தேயும் பசுக்களோடே பொருந்தி அவற்றோடே போது போக்குமவன் காண்;
நித்ய ஸூரிகளுக்குத் தன்னை யொழியச் செல்லாதாப்போலே பசுக்களை யொழியத் தனக்குச் செல்லாதபடியான
குடிப் பிறப்புடையவன்காண்;
மேன்மையைக் கண்டு தியங்காதே செல்லலாமென்றாள்; ஆமாம்; அது ஒருகாலத்திலன்றோ?
க்ருஷ்ணாவதாரங் கடந்து நெடுநாளாயிற்றே! என்ன;
அணியழுந்தூர் நின்றனுக்கு என்கிறாள்.
அக்காலத்தில் பசுக்களை ரக்ஷித்தாற்போலே அக்காலத்திற்குப் பிற்பட்டவர்களாய்ப பசு ப்ராயராயிருப்பாரையும்
ரக்ஷிக்கைக்காகப் * பின்னானார் வணங்குஞ் சோதியாகத் திருவழுந்தூரிலே நிற்கிறான் காண்;
அங்கேபோய் அறிவிக்க வேணுமென்றாளாயிற்று.

எம்பெருமான் பிரிந்துபோகிறபோது
* சேலுகளுந் திருவரங்கம் நம்மூர் என்றும் *
புனலரங்கமூர் என்றும் சொல்லிச் சென்று திருவரங்கத்திலே போயிருக்க.
திருவழுந்தூரிலே தூதுவிடுகை பொருந்துமோ? என்னில்; கேண்மின்;
‘புனலரங்கமூரென்று போயினாரே‘ என்றது உண்மைதான்;
ஆயினும், பிரிந்து போனவர் முழுதும் போயிருக்க மாட்டார்; திருவழுந்தூரிலே பின் தங்கி நின்றிருக்கக் கூடும்;
அங்கே சென்று அறிவிக்கலாமென்கிறாள் போலும்
அன்றியே;
புனலாங்கமூரென்று போயினார்; திருவரங்கத்தே போய்ப் பார்த்தார்; நீர் வாய்ப்பு் நிழல் வாய்ப்பும் கண்டவாறே
தனிக்கிடை கிடப்பதற்குப் புறப்பட்டிருப்பர்; இப்போது திருவழுந்தூரளவிலே எழுந்தருளியிருக்கக்கூடும்;
அங்கே சென்று அறிவிக்கவமையும் என்கிறாள் என்றுங் கொள்ளலாம்.

அணியழுந்தூர் நின்றானுக்கு =
இத்தலத்தைக் கடந்து அப்பால் போகமாட்டாமை யாலே அங்கே ஸ்தாவர ப்ரதிஷ்டையாக நிற்கிளானென்கிறாள்.
திருவாலி திருநகரியிற் பரகாலநாயகி பக்கலில் நின்றும் ஆள்வருவது எப்போதோவென்று
எதிர்பார்த்தபடியே நிற்கிறானென்கிறாள் என்னவுமாம்.

இன்றே சென்று =
நாளைச் செய்கிறேனென்ன வொண்ணாது; நாளைக்கு நான் இருக்கப் போகிறேனோ?
நானில்லையானால் அவன்தான் இருக்கப்போகிறானோ?
இரண்டுதலையும் அழிந்த பின்பு நீ எங்குச் சென்று யார்பக்கலிலே என்ன சொல்லப் போகிறாய்?
இரண்டு தலையும் அழிந்ததென்றால் பி்ன்னை உலகந்தானுண்டோ? நீயும் அழிந்தாயாவாய்;
ஆக, நாங்களும், பிழைத்து நீயும் வாழ வேண்டியிருந்தாயாகில் இன்றே சென்று அறிவியாய் என்றாளாயிற்று.

நீ மருவி =
அவன் ஆமருவி நிரை மேய்த்தவனாகையாலே திர்யக் ஜாதியான உனக்கும் முகந்தரும்; நீ சென்று கிட்டலாம்.
அவனுடைய சீல குணத்தைக்கண்டு வைத்தும் “அவரை நாம் தேவரென்றஞ்சினோமே“ என்று மருண்டு
பின்வாங்கின என்னைப் போலல்லாமல் அருகே பொருந்தி நிற்கலாம் நீ.

(அஞசாதே நின்று.)
வார்த்தை சொல்லும் விஷயத்தில் சிறிதும் அஞ்சவேண்டா;
‘நம்முடைய அந்த புறத்தில் நின்றும் வந்தவர்கள்‘ என்று தோற்றும்படி செருக்கி வார்த்தை சொல்லவேணும்.

அவர்க்கு அறிவிக்கவேண்டும் வார்த்தை ஏதென்ன;
ஓர் மாதுநின் நயந்தாளென்று = என்பெயரைச் சொல்லவேண்டா;
ஒருத்தி‘ என்னும்போதே
அவர்தாமே தெரிந்துகொள்வர்;
‘ஒருகாட்டிலே ஒருமான் அம்புபட்டுக்கிடந்து துடிக்கின்றது‘ என்றால் உடனே எய்த வனககுத் தெரியுமன்றோ.

(நின்நயந்தாள்.)
ஓர்மாது‘ என்றாலே போதுமானது;
அதற்கு மேலும் ஒருவார்த்தை சொல்லவேணுமென்றிருந்தாயாகில் “நின்நயந்தாள்“ உன்னை ஆசைப்பட்டிருக்கின்றாள்) என்று சொல்லு.
படுகொலைப்பட்டாளென்று சொல்லு என்றபடி.
ஒரு க்ஷுத்ரபுருஷனை ஆசைப்பட்டாளல்லள், பரமபுருஷனை உன்னை ஆசைபட்டாளென்று சொல்லு.
பரத்வத்திலே ஆசைப்பட்டிலள், வியூகத்திலே ஆசைப்ட்டிலள், விபவாவதாரங்களிலே ஆசைப்ட்டிலள்,
அந்தர்யாமித்வத்திலே ஆசைப்பட்டிலள்; ஆசைப்படுதற்குரிய அர்ச்சவதாரத்திலே ஆசைப்பட்டாளென்று சொல்லு.

இறையே இயம்பிக் காண் =
முற்றமுடிய வார்த்தை சொல்ல வேண்டுமோநீ;
சிறிது வாயைத் திறக்கும் போதே உன்னை அவர் எங்ஙனம் கொண்டாடப்போகிறார் பார்;
“ஏஷ ஸர்வஸ்வபூதஸ்து பரிஷ்வங்கோ ஹூமத;“ என்கிறபடியே அனுமான் பெற்ற பரிசும் ஏகதேசமென்னும்படியன்றோ
நீ பஹுமாநம் பெறப்போகிறாய்; இது நான் சொல்ல வேணுமோ? அநுபவத்தில் பார்த்துக் கொள்ளாய் என்றாளாயிற்று.

தலைவி ஆற்றாமை மிக்கு கண்ணில் கண்ட ஒரு வண்டைத் தூது விடுகிறாள்
அது துணையுடன் மலரிலே கால் பாவி -மது பருகி -மேனி நிறம் பெற்று இருக்கக் கண்டு
என்னையும் உன்னைப் போல் ஆக்க வேண்டாவோ என்கிறாள்
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேன்-விரும்பி
போந்தது என் நெஞ்சம் என்னும் பொன் வண்டு அடிப் போதில் ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி -என்கிறபடி
ஆச்சார்யா பாதாரவிந்தம் சேவை ஆகிற மதுவை
ஞான அனுஷ்டானங்கள் சிறகு
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் பாதம் பணிந்து
போது +தேன் = போதைத்தேன்-பூவில் உள்ள தேன் என்றபடி

அறுகால சிறு வண்டே தொழுதேன் உன்னை
விரைந்து போக ஆறு கால் சிலர் நிர்வாஹம்
பட்டர் தொழுதேன் உன்னை பின்பு இருப்பதால்
என் தலையில் வைப்பதற்கு ஆறு கால்கள் உண்டாகப் பெற்றனவே
எங்கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மடநாராய் திரு மூழிக் களத்துறையும் கொங்கார்
பூந்துழாய் முடி என் குடக் கூத்தற்கு என் தூதாய்
நுங்கால்கள் என் தலை மேல் கெழுமீரோ-திருவாய் மொழி -9-7-1-

சிறுவண்டே
திருவடி போலே சிறிய வடிவு எடுத்துக் கொள்ள வேண்டாமே
நீ வண்டாகையாலே-
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண் அம் துழாயில்
இஷ்டமானதோர் இடத்தில் இருந்து வார்த்தை சொல்லலாமே

பூமருவியினிது அமர்ந்து பொறியிலார்ந்த அறு கால சிறு வண்டே-என்று
உரக்க கூப்பிட்டதும்
எட்டிப் பார்க்க
தொழுதேன் உன்னை
என்கிறாள்
புருஷகார பூதரான ஆச்சார்யர்கள் உத்தேச்யம்

பராத்பரன் அன்றோ என்ன
ஆமருவி நிறை மேய்த்த அமரர்கோன்
நித்ய சூரிகளுக்கு தன்னை ஒழிய செல்லாதது போலே
இவனுக்கும் ஆ நிரைகள் விட்டு தரிக்க முடியாத படி குடிப்பிறப்பு உடையவன்-

அது என்றோ என்ன
அணி அழுந்தூர் நின்றானுக்கு
பிற்பட்டவர்களாய் பசு பிராயராய் உள்ளாரையும் ரஷித்து அருள பின்னானார் வணங்கும் சோதியாய்
பிரிந்து போகும் பொழுது புனல் அரங்கம் நம்மூர் என்று போயினாரே
திருவழுந்தூரில் தூது விடுகை எதுக்கு
முழுவதும் போய் இருக்க மாட்டார் -பின் தங்கி நின்று இருக்கக் கூடும் அங்கே சென்று அறிவிக்க அமையும்
அன்றியே
திருவரங்கம் போய் பார்த்தார்
நீர் வாய்ப்பும் நிழல் வாய்ப்பும் கண்டவாறே தனிக்கிடை கிடக்க பொருந்தி இராது
எதிர்கொண்டு வர புறப்பட்டு இருப்பார்
இப்போது திரு அழுந்தூரில் எழுந்து அருளி இருக்கக் கூடும்
அங்கே சென்று அறிவிக்க அமையும்

அணி அழுந்தூர் நின்றானுக்கு
அப்பால் போக மாட்டாமையால் ஸ்தாவர பிரதிஷ்டையாக நின்றான்
திருவாலி திருநகரியில் இருந்து பரகால நாயகி ஆள் வருவது எப்போது என்று எதிர் பார்த்து நிற்கிறான்

இன்றே சென்று
நாளை நான் இருப்பேனா
நான் இல்லை என்றாள் அவன் இருப்பானா
பின்பு உலகம் தான் உண்டா
ஆக
நாங்களும் பிழைத்து நீயும் வாழ இன்றே சென்று அறிவியாய்

நீ மருவி
அவன் ஆ மருவி அப்பன்
திர்யக் ஜாதி ஆகையால் உனக்கும் முகம் தருவான்
சீல குணத்தை கண்டும் தேவர் என்று அஞ்சி பின் வாங்கின என்னை போல் அன்றிக்கே
நீ அங்கே பொருந்தி நிற்கலாம்

அஞ்சாதே நின்று
நம்முடைய அந்தபுரத்தில் நின்றும் வந்தவர்கள் என்று தோற்றும்படி
செருக்கி வார்த்தை சொல்ல வேணும்

ஒரு மாது நின் நயந்தாள் என்று
என் பேரைச் சொல்ல வேண்டா
ஒருத்தி என்னும் போதே அவர் தெரிந்து கொள்வார்
ஒரு காட்டிலே ஒரு மான் அம்பு பட்டு துடிக்கின்றது என்றால் எய்த வேடன் அறிவான் இறே

ஒரு மாது என்றாலே போதும்
அதுக்கும் மேலே வார்த்தை சொல்ல வேண்டுமானால்
நின் நயந்தாள் –
உன்னை ஆசைப் பட்டு இருக்கிறாள்.
படு கொலைப் பட்டாள் என்று சொல்லு
ஒரு சூத்திர புருஷனை ஆசைப் பட்டாள் இல்லை
பரம புருஷனான உன்னை ஆசைப் பட்டாள்
பரத்வத்திலே ஆசைப் பட்டிலள்
வ்யூஹத்திலே ஆசைப் பட்டிலள்
விபவ அவதாரங்களில் ஆசைப் பட்டிலள்
அந்தர்யாமியிலே ஆசைப் பட்டிலள்
ஆசைப் படுவதற்கு உரிய அர்ச்சாவதாரத்தில் இறே ஆசை பட்டாள் என்று சொல்லு –

இறையே இயம்பிக் காண்
முற்ற முடிய வார்த்தை சொல்ல வேண்டுமா
சிறிது வாயைத் திறக்கும் போதே கொண்டாடுவார்
ஏஷ சர்வஸ்வபூதஸ்து பரிஷ்வங்கோ ஹனூமத -என்னும் படி
திருவடி பெற்ற பரிசும் ஏக தேசம் என்னும் படி அன்றோ நீ பஹூ மானம் பெறப் போகிறாய்
இது நான் சொல்ல வேணுமோ நீயே அனுபவத்தில் பார்த்து கொள்ளப் போகிறாய்-

—————————————————————–

கீழ்ப்பாட்டில் ஒரு வண்டைத் தூதுவிட்டாள்; அது போய்த் தூதரைத்துத் திரும்பி வருமளவும்
தரித்திருக்கமாட்டாமையாலே பின்னையும் ஒருநாரையைத் தூது விடுகிறாள்.

“திக்ஷு ஸர்வஸு மார்க்கந்தே“ என்கிறபடியே பிராட்டியைத் தேடுதற்கு எல்லாத் திசைகளிலும்
வாநர முதலிகளை ஏவினாப்போலே இவளும் கண்ணாற் கண்டவற்றை எல்லாம் ஏவுகிறாள்.
ராமாவதாரத்திலே வாநர ஜாதி வீறு பெற்றது போலே ஆழ்வார்களவதரித்துப் பக்ஷிஜாதி வீறு பெற்றது என்பர்.

செங்கால மடநாரா யின்றெ சென்று திருக்கண்ணபுரம்புக்கென்செங்கண்மாலுக்கு
என்காதலென்துணைவர்க்குரைத்தியாகில் இதுவொப்பதெமக்கின்பமில்லை*நாளும்
பைங்கானமீதெல்லாமுனதேயாகப் பழனமீன்கவர்ந்துண்ணத்தருவன்*தந்தால்
இங்கேவந்தினிதிருந்துன்பெடையும்நீயும் இருநிலத்திலினிதென்பமெய்தலாமே.

பதவுரை

செம் கால–சிவந்த கால்களையுடைய
மட நாராய்–அழகிய நாரைப்பறவையே!
இன்றே சென்று-இன்றைக்கே புறப்பட்டுப்போய்
திருக்கண்ணபுரம் புக்கு–திருக்கண்ணபுரத்தில் புகுந்து
என் செங்கண் மாலுக்கு-செந்தாமரைக் கண்ணராய் என்மீது வியாமோஹங் கொண்டவரும்
என் துணைவர்க்கு–எனக்குத் துணைவருமான சௌரிப் பெருமாள் பக்கலிலே
என் காதல்–எனது விருப்பத்தை
உரைத்தி ஆகில்–சொல்லுவாயாகில்
எமக்கு-(அவரைப் பிரிந்து வருந்திக் கிடக்கின்ற) நமக்கு
இது ஒப்பது இன்பம் இல்லை–இதுபோன்ற ஆனந்தம் வேறொன்றுமில்லை;
(இதற்காக உனக்கு நான் செய்யக்கூடிய உதவி யாதெனில்;)

செங்காலமடநாராய் =
பரகாலநாயகி தான் எம்பெருமானோடு ஸம்ச்லேஷித்திருந்த காலத்திலே அவன் தனது காலை நோக்கி
‘இதொரு காலும் சிவப்பும் இருந்தபடி என்!‘ என்று கொண்டாடக் கண்டவளாதலால்
நாரையின் மற்ற அவயங்களை விட்டுக் காலைக் கொண்டாடத் தொடங்குகிறாள்.

இனிதாகச் சூடவேண்டிய ஸுகுமாரமான கருமுகை மாலையைச் சும்மாடு கொள்வது போல,
கண்கொண்டு காணவேண்டிய உனதுகாலைக் கொண்டு தூதுபோக விடுகை மிகையாயிருக்கின்றதே! என்செய்வேன்?
உன்காலைப்பற்றியே என்காரியம் தலைக்கட்ட வேண்டியிருக்கின்றதே என்கிறாள்
‘நாராய்!‘ என்னும் விளி அம்மே! என்னுமாபோலேயிருக்கின்றது.
வழிபறியுண்கிற வளவிலே தாய் முகத்திலே விழித்தாற்போலே யாயிற்று தலைவனைப் பிரிந்து நோவுபடுகிறவளவிலே
இந்த நாரையின் காட்சியுண்டாயிற்று.
பிராட்டியைப் பிரிந்து நோவுபட்டுத் தடுமாறி நின்றவளவிலே பம்பைக்கலையில் அனுமான் வந்து தோன்றின போது
பெருமாளுக்குண்டான அத்தனை ஹர்ஷம் இப்போது பரகால நாயகிக்கு உண்டாயிற்றுப்போலும்.

“செங்காலமடநாராய்!“ என்று மிக்க இரக்கந்தோற்றக் கூவினவாறே நாரை
‘என்னை இவ்வளவு போற்றிப் புகழ்ந்து அழைக்க வேணுமோ?
திருவுள்ளம் பற்றின காரியத்தைச் சொல்லலாகாதோ?“ என்று கேட்கிறாப்போலே இசைவு தோற்ற அருகே வந்து நிற்க
இன்றேசென்று என்று தொடங்கிச் சொல்லுகிறாள்.
நாளை பார்த்துக் கொள்ளுவோ மென்று இருந்துவிடலாகாது; இப்போதே செய்ய வேண்டிய காரியங் காண்.
“ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாம் அஸிதேக்ஷணம்“
(அந்த ஸீதையைப் பிரிந்து ஒரு நொடிப் பொழுதும் நான் பிழைத்திருக்கமாட்டேன்) என்ற அவர் படியைப் பார்த்தாலும்
கால தாமதம் செய்யலாகாது;
“ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ – மஹூர்த்த மபி ஜீவாவோ ஜலாந்மத்ஸ்யாவிவோத்த்ருதௌ.“
என்னத்தக்க என் படியைப் பார்த்தாலும் கால தாமதம் செய்யலாகாது. இப்போதே புறப்படவேணும்.

எவ்விடத்திற்கு? என்ன ; திருக்கண்ணபுரம் புக்கு என்கிறாள்.

கீழ்ப்பாட்டில் “அணியழுந்தூர் நின்றனுக்கின்றே சென்று“ என்று திருவழுந்தூறே வண்டைத் தூது விட்ட இத்தலைமகள்
இப்பாட்டில் இத்திருப்பதியை விட்டுத் திருக்கண்ணபுரத்திலே தூது விடுவானேன்? என்னில்;
முற்பாட்டில் தூதுவிட்ட வண்டை அவன் திருவழுந்தூரிலே கண்டிருப்பன்;
அங்குத் தரித்திருக்க மாட்டாமல் அந்த வண்டோடு கூடவே அரைகுலையத் தலைகுலைய எதிரே வந்து
ஒருபயணம் புகுந்து திருக்கண்ணபுரத்தேற வந்திருக்கிற ஸமயமாயிருக்கும் இப்போது;
அங்குச் செல்லலாம் என்கிறாள் போலும்.
பொதுவாக எம்பெருமானை நோக்கித் தூது விடுகிறாளத்தனை யாதலால் எந்தத் திருப்பதியை நோக்கித்
தூதுவிடினுங் குறை யொன்றுமில்லை யென்க.

திருக்கண்ணபுரத்தில் அவரைக் கண்டுபிடிக்கும் வகை ஏதென்ன;
என்செங்கண் மாலுக்கு என்கிறாள்.
அவர் என்னிடத்தில் கொண்டிருக்கிற வியாமோஹமெல்லாம் திருக்கண்களிலே காணலாம்படியிருக்குங் காண்;
“கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே“
என்கிறபடியே என்னைப் பிச்சேற்றின கண்களே அவரைக் கோட் சொல்லித் தருமே
என்னைப் பிரிந்திருக்கையாலே அவர்க்கு உறக்கம் இராது; அதனாலும் கண்கள் குதறிச் சிவந்திருக்கும்;
அந்த அடையாளங்கொண்ட அவரைக் கண்டு பிடித்துக் கொள்ளலா மென்கிறாளாயிற்று.

(என் துணைவர்க்கு)
எந்த நிலைமையிலும் எனக்குத் துணையாயிருப்பவர் அவர்;
கலந்து பிரிந்த போதும் ஸத்தை குலையாதபடி குணாநுபத்தாலே தரிப்பிக்கவல்ல துணைவர் என்றபடி.
இப்போதுண்டான ஆற்றாமையைப் பரிஹரிப்பதற்க அவரே துணைவர்;
“எருத்துக் கொடியுடையானும் பிரமனுமிந்திரனும் மற்று, மொருத்தருமிப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை“.

அவரைக் கண்டு கூற வேண்டிய வார்த்தை என்னென்ன;
என் காதல் உரைத்தியாகில் என்கிறாள் நீ அவர்க்கு வேறொன்றுஞ் சொல்ல வேண்டா,
‘இங்ஙனே ஆசைப்பட்டுக் கிடக்கிறாளொருத்தி‘ என்று இவ்வளவு சொன்னால் போதும்.
மற்றையோருடைய காதலைக் காட்டிலும் தன்னுடைய காதல் பரம விலக்ஷணம் என்பது தோன்ற ‘என்காதல்‘ என்கிறாள்.
“சொல்லாதொழிய கில்லேன் அறிந்த சொல்லில், நும்மடியாரெல்லாரோடுமொக்க எண்ணியிருந்தீரடியேனை,
நல்லாரறிவீர் தீயாரறிவீர் நமக்கிவ்வுலகத்து எல்லாமறிவீர் ஈதேயறியீரிந்தளூரீரே. (4-9-6) என்ற பாசுரம்
இங்கு அநுஸந்திக்கத்தக்கது.

(என்காதல்)
என்னுடைய காதல்
மற்றுள்ள முமுக்ஷிக்களின் காதல் கோலுமன்று;
அயர்வறு மமரர்களின் காதல் போலன்று,
அயர்வறுமமரர்களதிபதியின் காதல் போலுமன்று; என்னுடைய காதல்‘ என்றே சொல்லுமித்தனை.
‘பாதாழ்வானுடையநோய்‘ என்றால் விலக்ஷணமென்று ப்ரஸித்தமன்றோ, அதுபோலே.

உரைத்தியாகில் =
அங்குச் சென்றவாறே அவருடைய வடிவழகிலே கால் தாழ்ந்து போன காரியத்தை மறக்கவுங்கூடுமே;
தன்னையும் மறக்கும்படியாயன்றோ அவ்விடத்து இனிமை தானிருப்பது.
அப்படிப்பட்டவதில் கால் தாழாமல் தரித்து நின்று என்காதலை அவர் பக்கலில் உரைக்க வல்லையாகில் என்கிறான்.
நீ வாய் படைத்ததற்கு இதுவன்றோ பிரயோஜனம்;
பல வார்த்தைகளையும் சொல்லிப் போருகிற உன்வாயிலே என்விஷயமாக இந்த ஒருவார்த்தை வந்தாலாகாதோ?

நான் சொன்ன மாத்திரத்தால் அவர் வந்திருவாரோவென்ன;
உரைத்தியாகில் இது வொப்பதேமக்கின்பமில்லை யென்கிறாள்.
அவர் வரட்டும், வராமற்போகட்டும்; நீ அவரிடம் சென்று என் காதலைச் சொல்லுமதுவே எனக்குப் பரமாநந்த மென்கிறாள்.
அவர் பரமசேத நரன்றோ; தூதுரை செவிப்பட்டால் வராதொழிவரோ? வந்தே தீருவர் என்றிருக்கிறான்.

எனக்காகச் சென்று தூதுரைத்தல் மாத்திரம் போதாது;
அவ்வுபகார ஸ்மிகுதியாலே நான் உனக்குப் பண்ணும் கிஞ்சித்காரத்தையும் அங்கீகரிக்கவேணுமென்கிறாள்.
(நாளும் பைங்கானமீதெல்லாமுனதேயாகப் பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன்)
பிரிந்தாரிரங்கு மிடம் நெய்தலாகையாலே கடற்கரையிலே தானிருக்கிறாளாய்,
‘பரப்புடைத்தான கடற்கரைச் சோலை யெல்லாம் எந்நாளும் உன் அதீனமாம்படி பண்ணி வைப்பேன்;
ஆனைக் கன்று போலே யிருக்கிற மீன்களை நீ மேல் விழுந்து புஜிக்கும்படியாக சேகரித்துத் தருவேன்‘ என்கிறாள்.
இத்தால் புருஷகார க்ருத்யம் பண்ணி பகவத் விஷயத்திலே சேர்ப்பிக்கும் ஆசார்யனுக்கு
“பொனனுலகாளீரோ“ என்னுமா போலே உபயவிபூதியுமளித்தாலும் தகும் என்றதாயிற்று.
ஆசார்யன் ஒருகால் உபகரித்துவிடுமித்தனை;
சிஷ்யன் வாழ்நாளுள்ள வளவும் அநுவர்த்திக்கக் கடவன் என்கிற சாஸ்த்ரார்த்தமும் இதில் விளங்கக் காண்க.
“பழனமீன் கவர்ந்து உண்ணத்தருவன்“ என்றதன் உள்ளூறை பொருளாவது –
நாரைக்கு மீன் எப்படி இனிதோ அப்படி ஆசார்யனுக்கு உகப்பான பொருளைத் தந்து கிஞ்சித்தகரிக்க வேணுமென்பதாம்.

தந்தால் இங்கே வந்து இனிதிருந்து உன் பெடையும் நீயும் இருநிலத்திலினிதின்பமெய்தலாம் =
நான் பண்ணின கிஞ்சித்காரத்தை ஸ்வீகரித்து நானிருந்தவிடத்தே வந்து புஜிக்க வேணும்;
ஏகாகியாய் வந்திருக்கவொண்ணாது.
அபிமத விஷயத்தோடேகூட வந்திருக்க வேணும்.
நான் தனியிருந்து படுகிற வருத்தந் தீர உன்னையாவது கூடியிருக்குமிருப்பிலே காணப்பெறவேணும்.
இங்ஙனே நானும் வாழ்ந்து நீயும் இனிது வாழ்ந்து நோக்கவேணுமென்றளாயிற்று.

வண்டு போய் தூது உரைத்து திரும்பி வரும் அளவும் தரித்து இருக்க மாட்டாமையால்
பின்னையும் ஒரு நாரையையும் தூது விடுகிறாள்
திஷூ சர்வாஸூ மார்க்கந்தே -எல்லா திக்குகளிலும் வானர ஜாதிகளை ஏவினால் போலே
ஆழ்வார்கள் திருவவதரித்து பஷி ஜாதி வீறு பெற்றதே

செங்கால மட நாராய்
சம்ச்லேஷம் போது இது ஒரு கால் இருந்த படியே என்று கொண்டாடக் கேட்டவள் ஆகையாலே
எல்லா அவயவங்களையும் விட்டு காலைக் கொண்டாடுகிறாள்
கருமுகை மாலையை சும்மாடு கொள்வாரைப் போலே
உன் காலைப் பற்றி என் கார்யம் கொள்ள வேண்டி இருக்கிறதே
நாராய்
அம்மே போன்ற விளி
பிராட்டி பிரிந்து பம்பை கரையிலே நோவு பட்ட பெருமாளுக்கு திருவடி தோன்றினால் போலே
அத்தனை ஹர்ஷம் இவளுக்கு நாரையைக் கண்டு உண்டாயிற்றே

அருகே வந்து நிற்க இன்றே சென்று —
ந ஜீவேயம் ஷணம் அபி விநா தாம் அஸி தேஷணாம்-அவர் படியைப் பார்த்தாலும் கால தாமதம் ஆகாது
ந ச சீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ -முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்த்ருதௌ-
என்னத் தக்க என் படியைப் பார்த்தாலும் கால தாமதம் கூடாது

எவ்விடத்துக்கு என்ன -திருக்கண்ணபுரம் புக்கு -என்கிறாள்
முன் தூது விட்ட வண்டை அவன் திரு அழுந்தூரிலே கண்டு இருப்பான்
தரித்து இருக்க மாட்டாமையாலே அரைகுலைய தலை குலைய வண்டுடன்
பயணம் புகுந்து திருக் கண்ணபுரம் ஏற வந்து இருக்கும் சமயம் ஆகி இருக்கும் இப்போது
எம்பெருமானை நோக்கி தூது விடுகிறவள் எந்த திருப்பதிக்கும் தூது விடலாம் இறே என்னவுமாம்

அவனை கண்டுபிடிக்கும் வகை என்ன என்ன –
என் செங்கண் மாலுக்கு
என்னிடம் அவன் கொண்டு இருக்கும் வ்யாமோஹம் எல்லாம் திருக் கண்களிலே தெரியுமே
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட அப்பெரியவாய கண்கள் என்னை பேதைமை செய்தனவே
உறக்கம் வராமல் குதறிச் சிவந்து இருக்கும்

என் துணைவர்க்கு
எந்த நிலையிலும் எனக்கு துணை
கலந்து பிரிந்தாலும் குணானுசந்தானத்தாலே தரித்து இருக்கப் பண்ணுபவன்
இப்போது ஆற்றாமைக்கு அவரே துணைவர்
எருத்துக் கொடியானும் பிரமனும் இந்த்ரனும் மற்றும் ஒருத்தரும்
இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை

கண்டு சொல்ல வேண்டிய வார்த்தை என் என்னில்
என் காதல் உரைத்தியாகில் –
என் காதல்-
அவர் காதலை விட தன்காதல் பரம விலஷணம் என்று என்காதல் – என்கிறாள்
சொல்லாது ஒழிய கில்லேன் -அறிந்தது சொல்லில் நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ்வுலகத்து எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரிரே-4-9-6-

என் காதல்
முமுஷுக்கள் காதல் போல் அன்று
அயர்வறும் அமரர்கள் காதல் போல் அன்று
அயர்வறும் அமரர்கள் அதிபதியின் காதல் போலும் அன்று
என்னுடைய காதல் -என்று சொல்லும் அத்தனையே
பரதனுடைய நோய் என்னுமா போலே விலஷணம் அல்லவா

உரைத்தியாகில்
அவன் வடிவு அழகிலே கால் தாழ நேரிடும்
தரித்து நின்று உரைக்க வேண்டுமே
வாய் படைத்ததுக்கு இது வன்றோ பிரயோஜனம்
பல விஷயம் பேசும் உன் வாயால் என் விஷயமாக ஒரு வார்த்தை சொன்னால் ஆகாதோ

உரைத்தால்; அவர் வந்திடுவாரோ என்ன
உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை
அவர் வரட்டும் வராமல் போகட்டும்
நீ சொல்லுவதே பரமானந்தம்
அவர் பரம சேதனர் -தூது செவிப்பட்டதும் வந்தே தீருவர் என்று இருக்கிறாள்

நான் செய்யும் கிஞ்சித் காரத்தையும் அங்கீ கரித்து கொள்ள வேணும்
நாளும் பைம்கானம் எல்லாம் உனதேயாக பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன்
பிரிந்தார் இரங்கும் இடம் நெய்தல்
கடல்கரையில் தான் இருக்கிறாளாய்-பரப்புடைத்தான கடல் கரை சோலை எல்லாம் எந்நாளும் உன் ஆதீனம்
ஆனைக் கன்று போல் இருக்கும் மீன்களை நீ மேல் விழுந்து புஜிக்கும் படி சேகரித்து தருவேன்
பொன்னுலகு ஆளீரோ போலே உபய விபூதியும் அளித்தாலும் தகுமே
ஆச்சார்யனுக்கு உகப்பான பொருளை தானே கிஞ்சித் கரிக்க வேணும்
தந்தால் இங்கே வந்து இனிதிருந்து உன் பெடையும் நீயும் இருநிலத்தில் இனிது இன்பம் எய்தலாம்
நான் இருந்த இடத்தே வந்து புஜிக்க வேணும்
ஏகாங்கியாய் இல்லாமல் அபிமத விஷயத்தோடு வர வேணும்
நான் தனியாய் இருக்கும் வருத்தம் தீர உன்னை யாகிலும் கூடி இருக்கும் இருப்பில் காண வேணும்
இங்கனே
நானும் வாழ்ந்து
நீயும் இனிது வாழ்ந்து
நோக்க வேணும் -என்கிறாள் ஆயிற்று-

—————————————————————————-

திருவாய்மொழியில் நம்மாழ்வார் * பூங்கழிவாயென்னுந் திருப்பதிகத்தில் எம்பெருமான் பக்கல் தூதுவிட்டு,
அநந்தரம் அவன் வந்து முகங்காட்டக் காணாமையாலே பிரணய ரோஷம் தலையெடுத்து ஊடல் செய்தாப்போலே
இப்பரகால நாயகியும் கீழே தூதுவி்ட்டவள் இதிலே ஊடுகின்றாள்.
‘இப்போது நம்முடைய ஆற்றாமை கனத் திருக்கையாலும்
தூது அனுப்பியிருக்கிறோமாகையாலும்
சில சுபநிமித்தங்கள் தோன்றி யிருக்கிறபடியாலும்
கடுவே அவன் வந்து நிற்கப்போகிறாள்; அப்படி அவன் வந்தால் முகங்கொடுத்து வார்த்தை சொல்லுவோமல்லோம்;
ஏனென்றால்,
அவனுடைய ஸம்ச்லேஷம் உடனே விச்லேஷத்தை விளைவித்தல்லது நிற்கமாட்டாமையாலே
இன்னமொரு விச்லே ஷத்துக்கு இலக்காயிருந்து மீண்டு மீண்டும் வருத்தப்படுவதிலுங்காட்டில்
அவனுக்கு முகங்கொடாதே அவன் கண்வட்டத்திலே முடிந்து பிழைப்பது நன்று‘ என்று நிச்சயித்துக் கொண்டாள்.

தம்மை முடித்துக்கொள்ள நினைப்பவர்கள் வெற்றிலை தின்னுதல் பூச்சூடுதல் சரந்தணிதல் சிரித்தல் முதலியன செய்யுமா போலே
இவளும் முடிவுக்குப் பூர்வாங்க மாகத் தெளிவு பெற்றிருந்தாள்.
உள்ளே யுருகி நையாநிற்கச் செய்தேயும் மேலுக்குத் தெளிந்திருந்தாள்; அதைக் கண்ட தோழியானவன்
‘இந்த நிலைமையிலே இவள் தெளிந்திருக்கைக்குக் காரணமில்லையே‘ எனச் சிந்தித்து
அவளையே வாய்விட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்வோம் என்றெண்ணி
‘நங்காய் இப்போது உன்னெஞ்சிலே கிடக்கிறதென்‘ என்று கேட்க;

‘அப்பெரியவர் வந்தால் பண்டு போலே முகங்கொடுக்கக் கடவேனல்லன்; அவர் கண்ணெதிரே உயிரை விட்டு
முடிந்துபோவதாகத் துணிந்திருக்கின்றேன்‘ என்று தலைவி சொல்ல;
அதுகேட்ட தோழியானவள் ‘கெடுவாய், மலையோடேமல் பொருத மல்லருண்டோ?
உபயவிபூதி நாதராய் ஸர்வசக்தராயிருக்கிறவரோடே அபலையான நீ எதிரிடுவதென்று ஒரு காரியமுண்டோ?
“நல்லவென்தோழி! நாகணைமிசை நம்பரர் செல்வர் பெரியர்சிறுமானி டவர் நாம் செய்வதென்?“ என்று
சொன்னவர்களைக் கேட்டதில்லையோ?
ப்ரணயிகளிடத்துச் செய்யத்தக்கதை ப்ரபுக்களிடத்துச் செய்யலாகுமோ?” என்று சொல்ல:

அவருடைய ப்ரபுத்வம் என்கையிலே படுகிறபடி பாராய்‘ என்று தலைவி சொல்ல;
‘இவளுடைய உறுதியைப் பார்த்தால் முடிந்தேதீருவள் போலேயிருக்கிறது;
ப்ரணய ரோஷத்தோடே நின்று, உயிர்துரக்குமளவு ஆகாதபடி இவளை நோக்கவேணும்‘ என்று பார்த்த தோழியானவள்.
‘நங்காய்! அவர்க்குள்ள ஆச்ரித பக்ஷபாதம் உனக்குத் தெரியாது போலும்; ஒரு பிராட்டிக் காகத் தென்னிலங்கை செற்றவர்காண்;
இந்திரனுக்காக மாவலியை வலிதொலைத்து மூவுலகளந்தவர்காண்;
பாண்டவர்கட்குப் பக்ஷபாதியாயிருந்து தேரை நடத்தினவர்காண்‘ என்று சில சேஷ்டிதங்களை யெடுத்துக் கூற,
‘ஆமாம் தோழீ!, எல்லாம் நானுமறிவேன்; அவை யெல்லாம் வஞ்சகச் செயலத்தனையே காண்;
நான் முடியாமலிருக்க மாட்டேன்‘ என்று தன் உறுதியை வெளியிடுகிறாளிதில். பரகாலநாயகி.

தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாளச் சென்றுலக மூன்றினையும் திரிந்தோர் தேரால்,
மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த வரையுருவின் மாகளிற்றைத் தோழீ, என்றன்
பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு போகாமை வல்லேனாய்ப் புலவி யெய்தி,
என்னிலங்க மெல்லாம்வந் தின்ப மெய்த எப்பொழுதும் நினைந்துருகி யிருப்பன் நானே.

பதவுரை

தோழீ–வாராய் தோழியே!,
தென் இலங்கை-தென்னிலங்கையிலுள்ள
அரண்–கோட்டைகள்
சிதறி–அழிந்து
அவுணன் மாள–இராவணனும் முடியும்படியாக
சென்று–(ஆங்கு) எழுந்தருளி (வெற்றி பெற்றவரும்)
உலகம் மூன்றி னையும் திரிந்து-(த்ரி விக்கிரமாவதார காலத்தில்) மூவுலகங்களையும் வியாபித்தவரும்
மன் இலங்கு–அரசர்கள் விளங்கா நின்ற
பாரதத்தை மாள–பாரத யுத்தம் முடியும்படியாக
ஓர் தேரால் ஊர்ந்த–ஒரு தேரைக் கொண்டு நடத்தின
வரை உருவின் மா களிற்றை–மலை போன்ற உருவங்கொண்ட பெரிய யானை போன்ற பெருமானை,
என் தன்–என்னுடைய
பொன் இலங்கு முலை குவட்டில்–பசலை நிறம் படர்ந்த முலைகளாகிற கம்பத்திலே
பூட்டிக்கொண்டு-அணைத்துக்கொண்டு
போகாமை வல் லேன் ஆய்-அப்பால் போகவொண்ணாதபடி தடுத்து வளைக்க வல்லவளாகி
புலலி எய்தி–அவரைப் பிரிந்துபட்ட கருத்தமெல்லாம் அவரெதிரே பட்டு
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த-என்னுடைய எல்லா அவயவங்களும் என்னிடத்தே வந்து சேர்ந்து ஆனந்த மடையும் படியாக
எப்பொழுதும்-எல்லாக் காலத்திலும்
நான்-நான்
நினைந்து-அவரையே சிந்தித்து
உருகி இருப்பேன்-முடிந்து பிழைப்பேன்.

தென்னிலங்கை யரண் சிதறி =
மேலே “வரையுருவின் மாகளிற்றை“ என்கையாலே மத யானையின் வியாபாரமாகச் சில சேஷ்டிதங்களைப் பேசுகிறாள்.
(தோழி சொன்ன சேஷ்டிதங்களை அநுபவித்துப் பேசுகிறபடி.)
ஒரு மதயானை வழிபோகா நின்றால் எதிரே கண்ட வற்றையெல்லாம் கையாலும் காலாலும் அழித்துக்கொண்டு போமோபோலே
கர தூஷ்ணாதி களைக் கொன்றும் வாலியை வதைத்தும் கடற்கரையிலே சென்று கடலை அணை செய்து
இலங்கையை அமைதிப்படுத்தின படியைக் கண்டபோதே இராவணன் செத்துப் போனவனாக ஆயினான்
என்பது தோன்றப் பாசுரம் தொடுத்திருக்குமழகு காண்மின்.

(தென்னி லங்கை யரண் சிதறி அவுணன் மாளச் சென்று)
பெருமாள் போன போக்கிலேயே இராவணன் முடிந்தானென்கை. ஒருபிராட்டிக்காக அவர் பண்ணின யானைத்தொழில்
இது வன்றோ என்று தோழிசொல்ல
‘ஆமாம், அவர் பரம ப்ரணயிதான்; அபலைகளாயிருப்பாரை அகப்படுத்திக் கொள்வதற்காகச் செய்த
செயலாகையாலே பகட்டுக் காண்‘ என்று கழித்துப் பேசுகிறபடி இது.

உலகமூன்றினையுந்திரிந்து =
உலகளந்தபடியை நினைக்கிறது இங்கு. ஒரு மதயானை யதேஷ்டமாகத் திரியுமாபோலே
எல்லார் தலைகளிலும் திருவடியை யிடடத் திரிந்தவாறு.
‘அந்ய சேஷத்வத்தாலும் ஸ்வாதந்த்ரிய ப்ரதிபத்தியாலும் விமுகராயிருப்பவர்களின் தலைகளிலும் திருவடியை வைத்து
உய்வு பெறுத்து மவர்காண்‘ என்று தோழிசொல்ல;
ஆமாம், அவர் விமுகர்தலைகளிலே திருவடியை வைப்பவரேயன்றி
“அடிச்சியோந் தலைமிசை நீயணி யாய் ஆழியங்கண்ணாவுன் கோலப்பாதம்“ என்று
பல் பன்னிரண்டும் காட்டி இரப்பவர் கட்கு முகங்கொடுக்கும் தயாளு அல்லர் காண் என்று சொல்லிக் காட்டுகிறபடி.

ஓர் தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாளவூர்ந்த =
எதிரிகளான் துரியோதனாதியர் கிருஷ்ணன் ஆயுதமெடுக்கவேண்டா‘ என்றார்களேயல்லது
‘ஸாரதியாய் நிற்கவேண்டா‘ என்றும் சொல்லவில்லையே;
ஆகையாலே ஸாரதியாய் நின்று ஒரு தேராலே ப்ரதிபக்ஷங் களை அழியச் செய்தானாயிற்று.
“பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக், கந்தார் களிற்றுக் கழன்மன்னர் கலங்கச்
சங்கம் வாய்வைத்தான்“ என்கிறபடியே த்ரௌபதியின் குழலை முடிப்பிக்கைக்காக அவர் பண்ணின வியாபாரமன்றோ வென்று தோழி சொல்ல;
ஒருத்திக்காக இப்படி காரியஞ் செய்கிறவனென்று நாட்டாரைப் பகட்டுகைக்காகச் செய்தாரித்தனை;
தம்மையே புகலாக நம்பியிருப்பாருடைய கூந்தலை விரிப்பிக்குமவர் காண் என்று சொல்லுதல் இங்கு உள்ளுறை.

ஆக இப்படிப்பட்ட வரையுருவின் மாகளிற்றை =
திண்மையில் மலைபோன்று செருக்கில் ஆனை போன்றிருக்கின்ற அவரை. (தோழீ!) அன்னவரை நான்
என்ன பாடுபடுத்தப் போகிறேன் காணாய் தோழீ! ; நீ விலக்காம லிருக்கவேணும்;
விலக்காதிருந்தாயாகில் அவர் படும் பாடுகளை யெல்லாம் காணலாமென்கை.

என்றன் பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக்கொ்ணடு =
என்கையில் ப்ரஹ்மாஸ்த்ரமிருக்க எனக்கு வெல்ல வொண்ணாத நிலமுண்டோ?
எம்பெருமானாகிற அந்த மதயானை என்னுடைய முலையாகிற ஸ்தம்பத்தோடே சேர்த்துக் கொண்டு இறுக்கிக் கட்டிவிடுவேன்;
முகங்கொடுத்துப் பேசமாட்டேன், வெண்ணெய் திருடின கண்ண பிரானை யசோதை உரலிலே கட்டிப் போட்டு வைத்தாப் போலே,
என்னைப் படுகொலை யடித்த பெருமானை முலைக் குவட்டிலே கட்டிப் போடடு வைப்பேன்;
இதுவாயிற்று அவனுக்கு நான் செய்யும் பெரிய சிக்ஷ. என்னிடத்திலே முகம் பெறாமையாலே அவன் ஓடிப்போகத் தேடுவேன்;
(போகாமை முலைக்குவட்டில் பூட்டிக்கொண்டு)
“குற்றமற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு, அற்றகுற்ற மவைதீர அணைய வமுக்கிக் கட்டீரே“
என்கிறபடியே அவனாலும் நெகிழ வொண்ணாதபடி கட்டிப் போட்டு வைப்பேன்.

அவன் வந்து முகங்காடடினால் நெஞ்சு மேல்விழாதிருக்க வேணும்;
அவனை ஒரு சரக்காகவே நினையாமல் துரும்பாக நினைப்பேனாக வேணும்;
நீ அவனுக்குப் புருஷகாரமாக நிற்காம லிருக்கவேணும்; இவ்வளவும் பெற்றேனாகில் என் எண்ணம் ஈடேறும் என்ற கருத்துப்பட,
‘வல்லேனாய்‘ என்கிறாள்.

(புலவி யெய்தி)
அவனைப் பிரிந்து பட்ட வருத்தமெல்லாம் அவன் கண்முன்னே படக்கடவேனென்கிறாள்.
அன்றியே,
அவனைப் பிரி்ந்து நாம் பட்டபாடெல்லாம் அவன்றான் என்முன்னே படும்படி பண்ணக்கடவே னென்கிறாள் என்னவுமாம்.
இப்பொருளில், எய்தி என்றது‘ ‘எய்த‘ என்றபடி: எச்சத்திரிபு.

என்னில் அங்கமெல்லாம் வந்து இன்பமெய்த =
இப்போது ஸம்ச்லேஷிப்பதும் மறுபடியும் விச்லேஷிப்பதும் மீண்டும் ஸம்ச்லேஷிப்பதும் மீண்டும் விச்லேஷிப்துமாகி
மேன்மேலும் வருத்தங்கட்டு இலக்காயிராதபடி அவன் கண் வட்டத்திலே முடிந்து பிழைக்கடவேனென்கை.
கண் கை கால் முலை முதலிய ஸகல அவயவங்களும் முடியக் கடவன.
முடிந்து போவதே பேரின்ப மெய்துதலாம் இங்கு.
ஏழையாய்ப் பெரிய குடும்பியாயிருக்கு மவன் க்ஷாம காலத்தில் குடும்பத்தினுடைய பசியும் தன் பசியும் பொறுக்க மாட்டாமையாலே
குடும்பத்தோடு ஆற்றிலே விழுந்து முடிந்து மகிழக்கடவேனென்று நினைக்குமாபோலே இவளும் நினைக்கிறாளாயிற்று.
அவன் வந்தவாறே இந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு ஸம்ச்லேஷிக்க வொருப்படுவேனென்று நினைக்க வேண்டா;
எப்போதைக்கும் இதுவே துணிவு. நினைத்த மாத்திரத்திலே உருகிப் போவதே என் பிரக்ருதி காண்மின் என்கிறாள்.

இப்பாட்டில் எல்லை கடந்த ப்ரணய ரோஷத்தை வெளியிடும் முகத்தால் தன்னுடைய ஆற்றாமையின் கனத்தை வெளியிட்டவாறு.
இனிப் பெற்றல்லது தரிக்க வொண்ணாத படியான ‘முடிந்தவவா‘ என்கிற பரமபக்தி முதிர்ந்தமை சொன்னபடி.

வைகல் பூம் கழிவாய் -என்னும் திருப்பதிகத்தில் தூது விட்டு முகம் காட்டாமையால்
பிரணய ரோஷம் தலை எடுத்து ஊடல் செய்தால் போலே
இதில் பரகால நாயகியும் ஊடுகின்றாள்
ஆற்றாமை கனத்து
தூது விட்டு
சுப நிமித்தங்கள் தோன்ற
கடுக வந்து நிற்கப் போகிறான்
முகம் காட்டாது -அவன் கண் வட்டத்திலே முடிந்து பிழைப்பது நன்று என்று நிச்சயித்து
முடிவுக்கு பூர்வாங்கமாக தெளிந்து
உள்ளே உருகி நைந்து இருந்தாலும் மேலுக்கு தெளிவு பெற்றால் போலே இருக்க
தோழியானவள் -மலையோடு பொருத மல்லர் உண்டோ
நல்ல வென் தோழி நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடர் நாம் செய்வது என்
பிரணயிகள் இடம் செய்யத் தாக்கத்தை பிரபுக்கள் இடம் செய்யவோ என்று சொல்ல
அவன் உடைய பிரபுத்வம் படப் போகிற பாட்டை பார்க்கப் போகிறாய் என்ன
தோழி யானவள்
அவனுடைய ஆஸ்ரித பஷபாதம் அறியாயோ
பிராட்டிக்காக இலங்கை அழித்து
இந்த்ரனுக்காக உலகு அளந்து
பாண்டவர்களுக்காக பலவும் செய்து -சொல்ல
எல்லாம் வஞ்சக செயல் அத்தனை காண்
நான் முடியாமல் இருக்க மாட்டேன் -என்று தன் உறுதியை வெளியிடுகிறாள்
புலவி எய்தி -அவரை பிரிந்த வருத்தம் எல்லாம் அவர் எதிரே பட்டு
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த -என்னுடைய எல்லா அவயவங்களும்
என்னிடத்தே வந்து சேர்ந்து ஆனந்தம் அடையும்படி
எப்பொழுதும் நான் நினைந்து உருகி இருப்பன் -எல்லா காலத்திலும் நான் அவரையே சிந்தித்து முடிந்து பிழைப்பேன் என்கிறாள்-

தென்னிலங்கை அரண் சிதறி அவுணன் மாளச் சென்று
ஒரு மத்த கஜம் -மேலே வரை உருவின் மத களிற்றை -என்பர்
வியாபாரமாக சில சேஷ்டிதங்கள் பேசுகிறாள்
தோழியின் வார்த்தையை அனுவதித்து
மத கஜம் கண்டவற்றை அழித்து போவது போலே
கர தூஷணாதிகள் முடித்து
வாலியை வதைத்து
கடல் கரையிலே சென்று கடலை அடைத்து
இலங்கையை அடை மதில் படுத்தி
பெருமாள் போன போக்கிலே இராவணன் முடிந்தான்
பிராட்டிக்காக செய்த செயல் என்று தோழி சொல்ல
ஆமாம் அவன் பரம பிரணயி தான்
அபலைகளாய் இருப்பாரை அகப்படுத்திக் கொள்வதற்காக
செய்த செயலாகையாலே இது பகட்டு காண் -என்று கழித்து பேசுகிறபடி-

உலகு மூன்றினையும் திரிந்து
மத கஜம் எதேஷ்டமாக திரியுமா போலே
எல்லார் தலைகளிலும் திருவடி இட்டு திரிந்த படி
அந்ய சேஷத்வத்தாலும்
ஸ்வா தந்த்ரய பிரதிபத்தியாலும்
விமுகராய் இருப்பவர்களின் தலைகளிலும் திருவடியை வைத்து உய்வு பெறுத்துமவர் காண் என்ன
ஆமாம் விமுகர் தலைகளில் வைப்பவர்
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா வுன் கோலப் பாதம் -என்று
பல் பன்னிரண்டும் காட்டி இரப்பார்க்கு முகம் கொடுக்கும் தயாளு அல்லர் காண் -என்று சொல்லிக் காட்டுகிறபடி-

ஒரு தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த
பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்க பாரதத்துக்கு
கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்க சங்கம் வாய் வைத்தான் –
த்ரௌபதி குழல் முடிக்க செய்து அருளிய வியாபாரம் என்று தோழி சொல்ல
நாட்டாரை பகட்டுக்கைக்காக செய்தான்
தம்மையே புகலாக நினைந்து இருப்பார் உடைய குழலை விரிப்பவர் அல்லர் காண்

இப்படிப் பட்ட
வரை வுருவின் மா களிற்றை
செருக்கி ஆனை போன்று இருக்குமவரை என்ன பாடு படுத்தப் போகிறேன் பார்
தோழி நீ விலக்காமல் மட்டும் இருந்தால் போதும்

என் தன் பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு
என்னிடம் பிரஹ்மாஸ்திரம் உண்டே
அந்த மத யானையை முலை யாகிற ஸ்தம்பத்துடன் சேர்த்துக் கொண்டு இறுக்கிக் கட்டி விடுவேன்
முகம் கொடுத்து பேச மாட்டேன்
என்னிடத்தில் முகம் பெறாமையால் ஓடிப் போக தேடுவன்

போகாமை முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு
குற்றமற்ற முலை தன்னை குமரன் கோலப் பணைத் தோளோடு
அற்ற குற்றமவை தீர அணைய வமுக்கிக் கட்டீரே -என்கிறபடியே
அவனாலும் அவிழ்க்க ஒண்ணாத படி கட்டிப் போட்டு விடுவேன்

வல்லேனாய்
அவன் வந்து முகம் காட்டினால் நெஞ்சு மேல் விழாது இருக்க வேணும்
அவனை சரக்காக நினையாமல் துரும்பாக நினைத்து இருக்க வேணும்
நீ அவனுக்கு புருஷாகாரமாக நிற்காமல் இருக்க வேணும்
இவ்வளவும் பெற்றேனாகில் என் எண்ணம் ஈடேறும்

புலவி எய்தி
அவனைப் பிரிந்து பட்ட வருத்தம் எல்லாம் அவன் கண் முன்னே படக் கடவன்
அன்றிக்கே
அவனைப் பிரிந்து நாம் பட்டது எல்லாம் அவன் தானே என் முன்னே படும்படி பண்ணக் கடவேன்
இப்பொருளில் எய்தி என்றது எய்த என்றபடி -எச்சத் திரிபு-

என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த
இப்போது சம்ஸ்லேஷிப்பதும்
பின்பு விஸ்லேஷிப்பதும்
மீண்டும் சம்ஸ்லேஷிப்பதும்
விஸ்லேஷிப்பதும்
மேன்மேலும் வருத்தங்களுக்கு இலக்காகாமல்
அவன் கண் வட்டத்திலேயே முடிந்து பிழைக்கக் கடவேன் -என்கை
கண் கை கால் முலை -சகல அவயவங்களும் முடியக் கடவன
பெரிய குடும்பு ஏழையாய் அனைவரும் ஆற்றில் விழுந்து முடிய நினைக்குமா போலே
அவன் வந்தவாறே இந்த எண்ணம் மாற்றி சம்ஸ்லேஷிக்க ஒருப்பட வேண்டா
இந்த முடிவில் உறுதியாக -எப்போதும் இதே துணிவு
நினைத்த மாத்ரத்திலே உருகிப் போவது என் பிரகிருதி காண்

ஆற்றாமையின் கனத்தை அறிவித்தவாறு
பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படியான
முடிந்த அவா என்கிற பரம பக்தி முதிர்ந்தமை சொன்ன படி-

————————————————————————

கீழ்ப்பாட்டில் ப்ரணயரோஷந் தலையெடுத்து ஒரு நிலை நின்றார்; அதாவது
‘எம்பெருமான் வந்தவாறே அவனுக்கு ஏதொவொரு சிஷை செய்து தாம் முடிந்து பிழைப்பதாகப் பேசினார்.
அவன் வந்தாலன்றோ அது செய்யலாவது; வரக் காணாமையாலே கதறிக் கூப்பிடுகிறார்.
விபவாவதாரங்களையும் அர்ச்சாவதாரங்களையும் பேசிக் கதறுகிறார்.
நம்மாழ்வார்க்கு * முனியேநான் முகனே யென்கிற திருவாய்மொழி போலே யிருக்கிறதாயிற்று இவர்க்கு இப்பாசுரம்.

அன்றாயர் குலமகளுக் கரையன் றன்னை அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் றன்னை,
குன்றாத வலியரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலங்க ளைந்து
வென்றானை, குன்றெடுத்த தோளி னானை விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானை, தண்குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே.

பதவுரை

அன்று–முன் பொருகாலத்தில்
ஆயர் குலம் மகளுக்கு–இடைக் குலத்துச் சிறந்த மகளாக அவதரித்த நப்பினைப் பிராட்டிக்கு
அரையன் தன்னை–நாயகரானவரும்
அலை கடலை கடைந்து-அலையெறிகின்ற கடலைக் கடைந்தவரும்
அடைத்த அம்மான் தன்னை–(அதில்) அணை கட்டின ஸ்வாமி யானவரும்
குன்றாத வலி–குறைதலில்லாத மிடுக்கை யுடைய
அரக்கர் கோனை மாள–இராவணன் முடியும்படியாக
கொடும் சிலைவாய்–கொடிய வில்லிலே
சரம் துரந்து–அம்புகளைத் தொடுத்துப் பிரயோகித்து
குலம் களைந்து வென்றானை–அரக்கர் குலங்களை நிர்மூலமாக்கி வெற்றி பெற்றவரும்
குன்று எடுத்த–கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த
தோளினானை–புஜத்தை யுடையவரும்
விரி திரை நீர் விண்ணகரம் மருவி–பரந்த அலைகளை யுடைய பொய்கைகள் நிரம்பிய திருவிண்ணகரிலே பொருந்தி
நாளும் நின்றானை–எப்போதும் ஸந்நிதி பண்ணி யிருப்பவரும்
தண் குடந்தை–குளிர்ந்த திருக்குடந்தை யிலே
கிடந்த மாலை–பள்ளிக் கொண்டிருக்கும் ஆச்ரித வத்ஸலரும்
நெடியானை–ஸர்வோத்தமருமான பெருமானை
நாய் அடியேன்–நாய் போல் நீசனான அடியேன்
நினைந்திட்டேன்–நினைத்தேன்.

அன்று ஆயர்குலமகளுக்கு அரையன்றன்னை =
தம்மோடொத்த திவ்ய மஹிஷிகளுக்கு உதவினபடியைப் பேசத் தொடங்கி முந்துறமுன்னம்
நப்பின்னைப் பிராட்டிக்கு உதவினபடியைப் பேசுகிறார். ‘அரையன்‘ என்பது ‘அரசன்‘ என்ற பதத்தின் போலி.
நப்பின்னையின் துயரத்தைத் தொலைத்த பிரபு என்றபடி.

அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் கன்னை =
கடலைக் கடைந்ததும் கடலில் அணைகட்டினதும் பிராட்டிக்காக.
பிராட்டியைப் பெறுவதற்காகக் கடலைக் கடைந்தது; அவளுடைய தனிமையைத் தீர்க்கைக்காகக் கடலை யடைத்தது.
தேவர்கட்கு அமுதங்கொடுப்பதற்காகவன்றோ கடல் கடைந்த தென்னில்; அன்று;
பிராட்டியைப் பெறுதலே முக்கிய மான பலன்; மற்றது ஆநுஷங்கிகம் என்க.
“விண்ணவரமுதுண அமுதில்வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமானே!“ என்றாரே இவர் தாமே.

(குன்றாத வலியரக்கர் இத்யாதி)
வர பலத்தையும் புஜ பலத்தையும் பற்றாசாகக் கொண்டு பர ஹிம்ஸையே போது போக்காயிருக்கும்
ராக்ஷஸ ஜாதிக்கெல்லாம் தலைவனாயிருந்த இராவணன் தொலையும்படியாக ஸ்ரீசாரங்கவில்லிலே அம்புகளைத் தொடுத்து
நடத்தி வெற்றி பெற்ற வீறுயுடைமை சொல்லுகிறது.
ராக்ஷஸ குலத்தவரான விபீஷணாழ்வான் வாழ்ந்து போயிருக்க, ‘குலம் களைந்து‘ என்னலாமோ வென்னில்;
அவர், தம்முடைய நினைவாலும் இராவணனுடைய நினைவாலும் சக்ரவர்த்தித் திருமகனாருடைய நினைவாலும்
ராக்ஷஸ குலத்தில் நின்றும் பிறிகதிர்ப்பட்டு இக்ஷ்வாகு குலத்திற்புகுந்து விட்டாரென்பது
வான் மீகி முதலிய முன்னோர்களின் ஸித்தாந்தம். இது ஸ்ரீவசநபூஷணாதிகளில் விரியும்.

இராவணனொருவனே குற்றமியற்றினவனாயினும் அவனுடைய ஸம்ஸர்க்கமே ஹேதுவாகக் குலங்குலமாக நசித்தொழிந்தது.
“கேசவன் தமர் கீழ்மேலெமரேழெழுபிறப்பும், மாசதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா“ என்கிறபடியே
ஒருவன் அநுகூலனானால் அவனுடைய ஸம்பந்தி ஸம்பந்திகளும் உஜ்ஜீவிக்குமாபோலே
ஒருவன் பிரதிகூலனான இராவணனுடைய ஸம்ந்தத்தாலே ராக்ஷஸகுலமடங்கலும் பாழ்பட்டன;
அது கூலனான ஸுக்ரீவனுடைய ஸம்பந்தத்தாலே வாநரஜாதியடங்கலும் வாழ்ச்சி பெற்றன.

குன்றெடுத்த தோளினானை =
ஆயர்க்கு நேர்ந்த ஆபத்தைப் போக்கினது ஒரு பெருமையோ?
என்னுடைய ஆபத்தைப் போக்கவேண்டாவோ வென்பது இங்கு உள்ளுறை.

விரிதிரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை =
கீழ்ச்சொன்ன விபவாதாரங்களுக்குப் பிற்பட்டவர்களையும் அநுக்ரஹிக்கைக்காகவன்றோ
திருவிண்ணகரிலே நித்ய வாஸம் பண்ணுகிறது.
திருவிண்ணகர் – ஒப்பிலியப்பன் ஸந்நிதி என்றும், உப்பிலியப்பன் ஸந்நிதி என்றும் வழங்கப்பெறும்.
சோழநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று.

திருவிண்ணகரிலே நின்றான், திருக்குடந்தையிலே கிடந்தான்;
நின்றால் எங்கேனும் புறப்பட்டுப்போக நினைவுண்டு போலும் என்று நினைக்கும்படியாயிருக்கும்;
பள்ளிகொண்டிருந்தால் அங்ஙனே நினைப்பாரில்லையே:
‘ஸம்ஸாரம் கிழங்கெடுத்தாலல்லது போகோம்‘ என்றுகிடக்கிற கிடையாயிற்று.

(மாலை) “மாயாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை“ என்கிறபடியே
தானும் வ்யாமோஹ சாலியாய் அடியார்களையும் வ்யாமோஹ சாலிகளாக ஆக்குமவன் என்க.

(நெடியானை)
இப்படிப்பட்டவன் இப்போது எனக்கு எட்டாதவனாயினானென்று காட்டுகிறபடி.

அடிநாயேன் நினைந்திட்டேனே =
அவனுடைய மேன்மைக்கு எல்லையில்லாதாப் போலே என்னுடைய தாழ்வுக்கும் எல்லையில்லை;
திறந்த வாசலெல்லாம் நுழைந்து திரியும் ஐந்து போலே மிகத் தண்ணியன்.
இப்படிப்பட்ட நான் அப்படிப்பட்ட பரம புருஷனை நினைந்திட்டேன் –
அம்மானாழிப் பிரானவன் எவ்விடத்தான் யானார், எம்மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங்கண்டீர்‘
என்றாப் போலே, மிக நீசனான அடியேனுக்கும் விதி வசத்தாலே நேர்ந்த இக்கலவி
நித்யமாய்ச் செல்ல வேணுமென்று நினைந்திட்டே னென்றவாறு.

பிரணய ரோஷம் உடன் பேசினார் கீழ்
ஆகில் வந்தால் அன்றோ செய்யக் கடவது
வரக் காணாமையாலே கதறிக் கூப்பிடுகிறார்
விபவாதாரங்களையும் அர்ச்சாவதாரங்களையும் பேசிக் கதறுகிறார்
முனியே நான்முகனே -திருவாய் மொழி போலே யாயிற்று இப்பாசுரம்

அன்று ஆயர் குல மகளுக்கு அரையன் தன்னை –
நப்பின்னை பிராட்டிக்கு உதவினபடி
அரையன் -அரசன்
நப்பின்னை துயரம் தொலைத்த பிரபு

அலை கடல் கடைந்த அம்மான் தன்னை
கடலை கடைந்ததும் கடலில் அணை கட்டினதும் பிராட்டிக்காக
பிராட்டி பெற கடைந்து தனிமை தீர்க்க அணை கட்டி
மற்ற பலங்கள் ஆநு ஷங்கிகம்
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்றார் இவர் தாமே

குன்றாத வலி அரக்கர் -இத்யாதி
இராவணன் தொலையும்படி ஸ்ரீ சாரங்க வில்லாலே அம்புகளை தொடுத்து வெற்றி பெற்ற வீறுடைமை
குலம் களைந்து என்றது ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இஷ்வாகு குலத்தில் புகுந்ததால்
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் பிறப்பும் மா சதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா -என்கிறபடியே
அனுகூலர் ஆனால் சம்பந்தி சம்பந்திகளும் உஜ்ஜீவிக்குமா போலே
பிரதி கூல சம்பந்தத்தால் ராஷச குலம் அடங்கலும் பாழ்பட்டன
சுக்ரீவன் சம்பந்தத்தால் வானர ஜாதி அடங்கலும் வாழ்ச்சி பெற்றன

குன்று எடுத்த தோளினானை
ஆயருக்கு நேர்ந்த ஆபத்தை போக்கினது பெருமையோ
எனது ஆபத்தை போக்க வேண்டாவோ

விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை -தண் குடந்தை கிடந்த மாலை –
பிற் பட்டார்களுக்கும் அனுக்ரஹிக்கைக்காக அன்றோ
திரு விண்ணகரில் நித்ய வாசம் பண்ணுகிறது
திரு விண்ணகரிலே நின்றான்
திருக் குடந்தையிலே கிடந்தான்
நின்றால் புறப்படுவான் என்று நினைக்க தோன்றும்
கிடந்தால் -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது போகோம்-என்று கிடக்கிற கிடையாகுமே

மாலை –
மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
தானும் வ்யாஹமோசாலியாய்
அடியார்களையும் வ்யாஹமோசாலியாய்-ஆக்குமவன்

நெடியாய் –
இப்படிப் பட்டவன் எனக்கு எட்டாமல் இருக்கிறானே என்று காட்டுகிறாள்

அடி நாயேன் நினைந்திட்டேனே –
அவனுடைய மேன்மைக்கு எல்லை இல்லை போலே
என்னுடைய தாழ்வுக்கு எல்லை இல்லை
திறந்த வாசல் எல்லாம் நுழைந்து திரியும் ஜந்து போலே மிகவும் தண்ணியன்
இப்படிப் பட்ட நான் அந்த நெடியானை நினைந்திட்டேனே
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார்
எம்மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்றது வாய்க்கும் கண்டீர்
என்றால் போலே முகவும் நீசனான அடியேனுக்கும்
விதி வசத்தாலே நேர்ந்த இக் கல்வி
நித்தியமாய் செல்ல வேணும் என்று நினைந்திட்டேன் -என்றவாறு –

————————————————————

இத்திவ்வியப் பிரபந்தம் கற்பார்க்குப் பயனுரைத்துத் தலைகட்டும் பாசுரம் இது.
“பன்னிய நூல் தமிழ் மாலைவல்லார் தொல்லைப் பழவினையை முதலரிய வல்லார் தாமே“ என்று
பயனுரைக்கும் முகத்தால்
அப்படிப்பட்ட பேற்றைத் தாம் பெற்று மகிழ்ந்தமை தொனிப்பிக்கப்பட்டதாகும்.

மின்னுமா மழைதவழும் மேக வண்ணா விண்ணவர்தம் பெருமானே அருளாய், என்று,
அன்னமாய் முனிவரோ டமர ரேத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் றன்னை,
மன்னுமா மணிமாட வேந்தன் மானவேல் பரகாலன் கலியன் சொன்ன பன்னியநூல்
தமிழ்மாலை வல்லார் தொல்லைப் பழவி னையை முதலரிய வல்லர் தாமே.

பதவுரை

முனிவரோடு அமரர் ஏத்த-முனிவர்களும் தேவர்களும் ஸ்தோத்ரம் பண்ண அன்னம் ஆய் ஹம்ஸ ரூபியாய் அவதரித்து
அருமறையை-அருமையான வேதங்களை
வெளிப்படுத்த-பிரகாசிப்பித்த
அம்மான் தன்னை-ஸர்வேச்வரன் விஷயமாக,
மன்னு மாமாணி மாடம்மங்கை வேந்தன்-சாச்வதமான சிறந்த மணிமாடங்களை யுடைய திருமங்கை நாட்டுக்குத் தலைவரும்
மானம் வேல்-பெருமை தங்கிய வேற்படையை யுடைவரும்
கலியன்–திருமங்கையாழ்வார்
மின்னும் மா மழை தவழும் மேகம் வண்ணா-‘மின்னலோடுகூடியும் மிகவும் குளிர்ந்தும் தவழ்ந்து வருகின்ற மேகம் போன்ற வடிவையுடையவனே!
விண்ணவர் தம் பெருமானே–தேவாதி தேவனே!
அருளாய்-அருள்புரியவேணும்
என்று சொன்ன–என்று பிரார்த்தித்து அருளிச் செய்த
பன்னிய -மிகவும் பரம்பின
தமிழ் நூல்-தமிழ் சாஸ்த்ரமாயிராநின்ற
மாலை-இச் சொல் மாலையை
வல்லார் தாம்–ஓத வல்லவர்கள்
தொல்லை–அநாதியான
பழ வினையை–முன்னே வினைகளை
முதல்-வேரோடே
அரிய வல்லார்–களைந்தொழிக்க வல்லவராவர்.

மின்னுமா மழைதவழும் மேகவண்ணா =
மின்னி முழங்கி வில்லிட்டு அழகியதாய் வர்ஷிப்பதொரு காளமேகம் போன்ற வடிவுபடைத்த பெருமானே!
இங்கே வியாக்கியான வாக்கியம் காண்மின்; –
அடிநாயேன் நினைந்திட்டேனே என்ற இவருடைய ஆர்த்த நாதத்தைக் கேட்டு இவருடைய தாபமெல்லாம் நீங்கும்படியாகக்
குளிர நோக்கிக் கொண்டு காளமேக நிபச்யாமமான வடிவோடே வந்து முகங்காட்டின படியைச் சொல்லுகிறது.“

விண்ணவர்தம் பெருமானே! அருளாய் என்று =
கீழ்ச்சொன்ன மின்னுமா மழைதவழும் மேகவண்ண வடிவை ஓவாத ஊணாக உண்டு களிக்கப்பெற்ற
அயர்வறுமமரர்களுக்கு அதிபதியே!,
கடலிலே வர்ஷிப்பது போலவும் மீனுக்குத் தண்ணீர் வார்ப்பது போலவும் அவர்களுக்கு உன்னைக் கொடுப்பது ஓரேற்றமோ?

(அருளாய்)
அவர்கள் உன்னை நித்யாநுபவம் பண்ணுமா போலே
நானும் உன்னை நித்யாநுபவம் பண்ணும்படி கிருபை பண்ண வேணும்

(என்று மன்னுமானமணி மாடமங்கை வேந்தன் மானவேற் பரகாலன் கலியன் சொன்ன பன்னிய நூல் தமிழ மாலை)
மங்கை நாட்டுக்கு அரசராய், வேல் பிடித்துப் பகைவெல்லுந் தொழிலிலே. ஊன்றிக்கிடந்தவர்
“அரசமர்ந்தானடி சூடுமரசையல்லால் அரவாகவெண்ணேன் மற்றரசுதானே“ என்றாற்போன்ற
அத்யவஸாயத்தின் கனத்தாலே இங்ஙனே பேசினாராயிற்று

எம்பெருமானும் அவனடியார்களும் உவந்து முடிமேற் கொள்ளும் பிரபந்தமாதலால் மாலை எனப்பட்டது.

ஆக இப்படிப்பட்ட திவ்ய ப்ரபந்தத்தை ஓதவல்லவர்கள்
அநாதியான ஸம்ஸாரத்தை யடியறுத்து
நித்ய கைங்கரியம் பெற்று வாழப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.

நிகமத்தில் –
இப்பிரபந்தம் கற்பார்க்கு பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே -என்று
பயன் உரைக்கும் முகத்தால்
அப்படிப் பெற்ற பேற்றை தாம் பெற்று மகிழ்ந்தமை தொனிக்கப் பட்டதாகும்

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
அடி நாயேன் நினைந்திட்டேன் -என்ற
இவருடைய ஆர்த்த நாதத்தைக் கேட்டு
இவருடைய தாபம் எல்லாம் நீங்கும் படியாக
குளிர நோக்கிக் கொண்டு
காள மேக நிபாஸ்யமான வடிவோடு
வந்து முகம் காட்டின படியை சொல்கிறது
விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று
கீழ்ச் சொன்ன மின்னு மா மழை தவழும் மேக வண்ண
வடிவை ஓவாத ஊணாக உண்டு கழிக்கப் பெற்ற
அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியே
கடலிலே வர்ஷிப்பது போலேயும்
மீனுக்கு தண்ணீர் வார்ப்பது போலேயும்
அவர்களுக்கு உன்னைக் கொடுப்பது ஓர் ஏற்றமோ

அருளாய் –
அவர்கள் உன்னை நித்ய அனுபவம் பண்ணுமா போலே
நானும் உன்னை நித்ய அனுபவம் பண்ணும் படி
கிருபை பண்ண வேணும்

என்று மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் மான வேல் பரகாலன்
கலியன் சொன்ன பன்னிய நூல் தமிழ் மாலை
மங்கை நாட்டுக்கு அரசராய்
வேல் பிடித்து பகை வெல்லும் தொழிலிலே ஊன்றிக் கிடந்தவர்
அரசமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேன் மற்று அரசு தானே -என்றால் போன்ற
அத்யாவசாயத்தின் கனத்தாலே இங்கனே பேசிற்றார் ஆயிற்று –
எம்பெருமானும் அவன் அடியார்களும் உகந்து முடி மேல் கொள்ளும் பிரபந்தம் ஆகையால் மாலை -எனப்பட்டது –
ஆக
இப்படிப் பட்ட திவ்ய பிரபந்தத்தை ஓத வல்லவர்கள்
அநாதியான சம்சாரத்தை அடி அறுத்து
நித்ய கைங்கர்யம் பெற்று
வாழப் பெறுவார் என்று
பயன் உரைத்து தலைக் கட்டுகிறார்-

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திரு நெடும் தாண்டகம்-பாசுரங்கள்-21-25- -திவ்யார்த்த தீபிகை —

September 30, 2014

இத்திருத்தாண்டகம் மூன்று பத்தாக வகுக்கப்பட்டுள்ளது.
முதற்பத்துப் பாசுரங்கள் ஆழ்வார் தாமான தன்மையிலே யிருந்து பேசினவை
அதற்குமேல் பத்துப் பாசுரங்களாகிய நடுவிற்பத்து, தாய்பாசுரமாகச் சென்றது.
இனி, இதுமுதலான பாசுரங்கள் தலைமகள் பாசுரமாகச் செல்கின்றன.

பகவத்கீதையில் (10-9) “மச்சித்தா மதகதப்பராணா; போதயந்த; ப்ரஸ்பரம், கதயந்தச் சமாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்திச. “
(அதாவது, சித்தத்தை நமக்கென்றே பறிகொடுத்து அப்படியே நம்மைப்பிரிந்தால் தரிக்கமாட்டாமல் பிராணனையும்
நம்அதீனமாக்கி, தாம்தாம் அனுபவித்த நம்குணங்களை யெடுத்து ஒருவர்க்கொருவர் சொல்லிக்கொண்டு
அப்படியே நாம்செய்த திவ்யசேஷ்டிதங்களையும் எடுத்துப் பேசிக்கொண்டு ஆனந்திக்கிறார்கள்.)
என்றுள்ள ச்லோகத்தை இத்திருத்தாண்டகத்தின் மூன்றுபதிகங்கட்கும் வாக்கியார்த்தமாக நிர்வஹிப்பர் பட்டர்.
* மச்சித்தா; * என்றதற்குப் பொருந்தியிருக்கும் முதற்பதிகம்;
*மத்கதப்ராணா; * என்றதற்குப் பொருந்தியிருக்கும் நடுவிற்பதிகம்;
* போதயந்த; ப்ரஸ்பரம் * என்றதற்குப் பொருந்தியிருக்கும் கடைப்பதிகம்.
தம்முடைய ஞானத்திற்கு எம்பெருமானையே இலக்காக்கி ஜ்ஞாந ப்ரதாநரான வ்யாஸ பராசராதி மஹர்ஷிகளின்
ரீதியிலே பேசுகையாலே முதற்பத்து (மச்சித்தா;) என்றபடியாகிறது;
தன் மூச்சடங்கி வேற்று வாயாலே பேசினதாகையாலே நடுவிற் பத்து (மத்கதப்ராணா;) என்றபடியாகிறது.
தோழிமார்களுக்குச் செய்தியறிவித்தும் தோழிமார்களின் வார்த்தைகளைக் கேட்டும் தரித்துப் பேசின தாகையாலே
இப்பத்து (போதயந்த; பரஸ்பரம்) என்றபடியாகிறது.

“அதர்சநே தர்சநமாத்ரகாமா; த்ருஷ்ட்வா டரிஷ்வங்கரஸைகலோலா;,
ஆலிங்கிதாயாம் புநராயதாக்ஷயாம் ஆசாஸதே விக்ரஹயோரபேதம்“
(கண்ணாற் காணாதளவில் ஒருதடவை கண்ணாற் காணப்பெற்றால் அமையும் என்று காதலிப்பர்கள்;
அப்படியே காணப்பெற்றுவிட்டால் ஒருகால் அணைத்துக் கொள்ளவேணும் என்று காமுறுவர்;
அப்படியே அணைத்துக்கொள்ளவும் பெற்றால் ‘இரண்டு சரீரமாக இருப்பதேன்?
இரண்டுடலும் ஓருடலாக ஒற்றுமைப்பட்டாலாகாதோ? என்று அபேதத்தை விரும்பிப் போருவர்கள்.) என்றொரு ஸுபாஷிதமுண்டு.
இதுவும் அடைவே மூன்று பத்துக்கும் வாக்கியார்த்தமாக அமையும். எங்ஙனேயென்னில்,
முதற்பத்தில் “எங்குற்ற யெம்பெருமானுன்னை நாடி ஏழையேனிங்ஙனமே யுழிதருகேனே“ என்று
அவனைக் காணவேணுமென்னுமாசை கிளர்ந்திருக்கின்றமை தோற்றச் சொல்லுகையாலே
* அதர்சநே தர்சநமாத்ர காமா; * என்றபடியாகிறது.
இரண்டாம் பத்தில் “முற்றாராவனமுலையாள்பாவை, மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாளஃதுங்கண்டு மற்றாள்“ என்று
நாச்சியாரைப்போலே தானுந் திருமார்பிலே அணைய வாசைப்பட்டமை தோற்றச் சொல்லுகையாலே
* த்ருஷ்ட்வா பரிஷ்வங்கரஸைகலோலா; * என்றபடியாகிறது.
இனி‘ இப்பத்தில் “கள்ளூரும் பைந்துழாய்மாலையானைக் கனவிடத்தில் யான் காண்பன் கண்டபோது,
புள்ளூரும்கள்வா! நீ போகாமைவல்லேனாய்ப் புலவியெய்தி என்னில் அங்கமெல்லாம் வந்தின்பமெய்த
எப்பொழுதும் நினைந்துருகியிருப்பன்நானே“ என்றும் சொல்லுகையாலே * ஆசாஸதே விக்ரஹயோரபேதம் * என்றபடியாகிறது.

‘காந்தர்வவிவாஹ மென்னப்படுகிற இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தாள் பெண்பிள்ளை‘ என்று கேள்விப்பட்ட திருத்தாயார்
‘நங்காய்! நங்குடிக்கிதுவோ நன்மை‘ என்று சீற,
மகளானவள் ‘அன்னை என்னோக்குமென் றஞ்சுகின்றேன்‘ என்கிறபடியே பயப்பட்டுத் தலைமகன் பக்கலில் செல்லாதிருக்க,
அவனும் என்னோவென்று சங்கைகொண்டவனாய் இவள்பக்கலிலே நேரேவரக்கூசி
இவளது அபிப்பிராயமறியவேணுமென்று பார்த்து, பிறரைத் தூதுவிடுவதிற்காட்டில் தானே
ஒரு வியாஜமாகவந்து கருத்தறிதல் நன்றென்று நினைத்து,
‘தலைவியானவள் ஊரைச் சூழ்ந்ததொரு பூந்தோப்பிலே பூக் கொய்யப் புறப்பட்டுப் போகிறா ளென்று கேள்விப்பட்டு,
தான் வேட்டையாடிவருவானாக எடுத்துக்கட்டின குழற்கற்றையும் பிடரியிலே தழைந்தலைகிற மயிரும்
இறுக்கின சாணமும் கட்டின கச்சும் வலத்தோளிலிட்ட மெத்தையும் பெருவிரலிலே பூட்டின சரடும்
இடக்கையிலே நடுக்கோத்துப் பிடித்த வில்லும் வலக்கையிலே இறுக்கின அம்பும் முதுகிலேகட்டின அம்பறாத்தூணியுமாய்க்
கொண்டு அந்தப் பூந்தோப்பில்தானே சென்றுசேர,
தலைமகளுடன்கூட இருந்ததோழி தானும் ஒருவியாஜத்தாலே பேரநிற்க, தைவயோகத்தாலே
நாயக நாயகிகளுக்குக் கலவி கூடிற்றாய்,
நாயகனும் “புனலரங்க மூரென்று போயினாரே“ என்கிறபடியே வெளிப்பட்டுச் செல்ல
அவ்வளவிலே உயிர்த்தோழியானவள் வந்தணுகி ‘நங்காய்! தலைவன் வந்தபடியென்? செய்தபடியென்?“ என்று கேட்க,
தலைவி தோழிக்கு வ்ருத்தகீர்த்தநம்பண்ணுகிற பாசுரமாய்ச் செல்லுகிறது இப்பாட்டு.

கீழ்ப்பாட்டில், தாயானவள் தான்சொன்ன ஹிதத்தை மகள் கேளாதவளானபடி யாலே
இனி இவளை அடக்கியாளுகை முடியாத காரியமென்று நிச்சயித்துப்
‘பேராளன் பேரோதும் பெண்ணைமண்மேற் பெருந்தவத்தளென்றல்லாற் பேசலாமே“ என்று கொண்டாடி உதாஸீநையானாள்;
‘தலைவிக்கு இங்ஙனம் ஆற்றாமை மீதூர்ந்தது நம் க்ருஷி பலித்த படியன்றோ என்று நினைத்து மகிழ்ந்து
எம்பெருமானும் உதாஸீநனாய் நின்றான்;
இந்த நிலைமையிலே நாமும் உதாஸீநித்திருந்தால் இவளை இழந்தோமாகவேணு மத்தனையென்று எண்ணின உயிர்த்தோழி,
கீழ்நடந்த கலவியை நினைப்பூட்டினால் அது கண்டு இவள் ஒருவாறு தரித்திருக்கக் கூடுமென்று பார்த்து
‘அவன் வந்தபடி என்? உன்னோடு கலந்தபடி என்? பின்பு பிரிகிறபோது உனக்குத் தேறுதலாகச்
சொல்லிப் போன வார்த்தை ஏதேனுமுண்டோ? சொல்லிக்காணாய்‘ என்ன, அவற்றைத் தோழிக்குச் சொல்லுகிறாள்.

அவனுடைய அழகையும் சீலத்தையும் கண்டுவைத்து, கைப்பட்ட பொருளைக் கடலிலே வீசியெறிந்தாற்போலே,
ஏதோவேறாக நினைத்து அஞ்சி இழந்தோமோ தோழீ! என்கிறாள்.

“இப்பாட்டு, சக்ரவர்த்தி திருமகன் தலைமகனாய் ஸ்ரீஜநகராஜன் திருமகள் தலைமகளாக ப்ரவ்ருத்தமாகிறது“
என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி அறியத்தக்கது.
ஆழ்வார்தாம் ஸ்ரீஜநகராஜன் திருமகளான நிலைமையிலே நின்று பேசுகிறாரென்றவாறு.

மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட,
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும் கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே,
அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே.

பதவுரை

மை வண்ணம் நறு குஞ்சி குழல் தாழ-கறுத்தநிறமுடைத்தாய் மணம் மிக்கதாய்
அலகல காயிருந்துள்ள திருக்குழற் கற்றையானது பின்னே அலையவும்
இரு பாடு-இருபுறத்திலும்
மகரம் சேர் குழை–மகரகுண்டலங்கள்
இலங்கி ஆட-அசைந்து விளங்கவும்
எய் வண்ணம் வெம்சிலையே துணை ஆ–ப்ரயோகித்தலை இயல்வாக வுடைய வெவ்வியவில்லையே துணையாகக் கொண்டு
இங்கே-இந்தத் திருமணங்கொல்லையிலே
இருவர் ஆய் வந்தார்-(தாமும் இளைய பெருமாளுமாக) இருவராய் வந்து என்னெதிரே நின்றார்;
(அவருடைய)
கை-திருக்கைகள்
தாமரை வண்ணம்-செந்தாமரைப் பூப்போலு மழகுடையன;
வாய்–திருப்பவளமும்
கமலம் போலும்–தாமரையொக்கும்;
கண் இணையும்–திருக்கண்களும்
அரவிந்தம்–அத்தாமரையே
அடியும்-திருவடிகளும்
அஃதே-அந்நத் தாமரையே;
அவ்வண்ணத்தவர்-அப்படிப்பட்ட அழகு வாய்ந்த அவருடைய
நிலைமை-நிலைமையை
கண்டும்-கண்டுவைத்தும்
தோழீ-தோழியே!
அவரை-அவரைக் குறித்து
தேவர் என்று அஞ்சினோம்- பரதேவதையென்கிற பிரதிபத்தியாலே பயப்பட்டோமே!

மைவண்ணநறுங்குஞ்சிக்குழல் பின்தாழ =
திருக்குழலுக்குக் கருநிறம் இயற்கையாயிருக்க மைவண்ணம் என்று எடுத்துச் சொல்லுவானேன்? என்னில்;
* கொள்கின்ற கோளிருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின், உட்கொண்ட நீல நன்னூல் தழை கொல்; * என்று சங்கித்து
“அன்று மாயன்குழல்“ என்ன வேண்டும்படி
விலக்ஷணமான கருநிறங்கொண்டதாதல் பற்றி மைவண்ணமென்று சிறப்பித்துக் கூறப்பட்டது.
திருக்குழலைக் கண்ட கண்ணனுக்கு அவனுடைய திருமேனி நிறம் ஸ்படிக வர்ணம் என்னத் தக்கதாயிருக்கும் போலும்.

வண்ணத்தின் சிறப்புமாத்திரமேயோ? பரிமளமும் விலக்ஷணமாயிருக்கிறபடி காண்.
தாபத்ரயத்தினால் தபிக்கப்பட்டவரோடு விரஹ தாபத்தினால் தபிக்கப்பட்டவரோடு வாசியற
அனைவர்க்கும் சிரமம் தீர்க்கவல்லதான திருக்குழற் பரிமளத்தை என் சொல்லுவேன்!.

நிறமும் மணமுமேயோ ஆகர்ஷகமாயிருக்கிறன;
திரள்திரளாகக் குழன்றிருக்கை யன்றியே அலகலகாகப்பிரிந்து சுருண்டிருக்கும் பரிசுதான் சொல்லத் தரமோ?
ஆக இப்படிப்பட்ட திருக்குழற்கற்றை பின் பிடரியிலே அசைந்தலையவும்.

இவள் பின்புறத்தே காண் ப்ரஸக்தி என்னென்னில்;
பெருக்காறு பெரு வெள்ளமாக ப்ரவஹிக்கப் புக்கால் அதனை எதிர்நோக்க முடியாதாப்போலே
இவளுடைய ஸௌந்தர்ய ஸாகாதரங்களைக் கண்டு நேர் முகம் பார்க்கமாட்டாமையாலே முகத்தைத் திருப்பினார்,
அச்சமயத்தில் கண்டாளென்ப.

மகரஞ்சேர்குழை யிருபாடிலங்கியாட =
மைவண்ண நறுங்குஞ்சிக் குழற்கற்றையின் இருட்சியாலே கண்கள் இருண்டு திருமுகம் தோற்றாதிருக்க,
அவ் வளவிலே இரண்டு சந்திரர்கள் உதித்தாற்போலே காண் திருமகரக் குழைகளிருந்தபடி.
இலங்கையில் திருவடி பிராட்டியைத் தேடுகிற ஸமயத்திலே சந்திரோதயம் உதவினாப்போலே,
திருக்குழலாலே இருண்ட திருமுகத்திற்கு இம் மகரக்குழைகள் பிரகாசமாக வாய்த்தன வென்க.
‘திருமகரக்குழைகள் திருக்குழலுக்கு ஆபரணமாயிருக்கிறதோ,
திருக்குழல்தான் திருமகரக்குழைகட்கு ஆபரணமா யிருக்கிறதோ‘ வென்று விகல்பிக்கலாம்படியாக
விளங்குகை இலங்கி என்பதன் பொருள்.

‘ஆட‘ என்றதற்கு மூன்று வகையாக அருளிச்செய்வர்;
‘ஆட இருவராய் வந்தார்‘ என்று அந்வயித்தால்,
ஒரு கடல் அசைந்து வந்தாற்போலே காண் வருகிற போது இரண்டருகும் திருமகரக் குழைகள் அசைய வந்தபடி என்கிறாளென்க.
‘ஆட என் முன்னே நின்றார்‘ என்று அந்வயித்தால்
அபிமத விஷயத்தைக் கண்டால் முகத்திலே சில அசைவுகளுண்டாகுமே; அதைச் சொன்னபடி யென்க.
நஞ்சீயர் அருளிச்செய்வதாவது-‘முன்பைக் காட்டுவது பின்பைக் காட்டுவதாக எத்தனை ஆடல்கள் செய்தான்
இவளுடைய பெண்மையை அழிக்கைக்காக!‘ என்றாம்.

கூட வந்த பேர் ஆரேனுமுண்டோ?‘ என்ன.
எய்வண்ணவெஞ்சிலையே துணையா என்கிறாள்.
கையில் வில்லே துணையாக வந்தாரென்க.
வில்லிறுத்து மெல்லியள் தோள் தோய்ந்தவராகையாலே முன்பு நம்மைச் சேர விட்டது இந்த வில்லையன்றோ வென்று
நன்றி பாராட்டி அதனைத் துணை கொண்டு வந்தா ர்போலும்.
‘வெஞ்சிலையே துணையா‘ என்ற தனால் ஸம்ச்லேக்ஷிக்கைக்கு ஏகாந்தமாம் படி வந்தார் என்பது தோன்றும்.
யாரேனுங் கண்டு ‘இங்கு வந்ததென்?‘ என்றால் ‘வேட்டையாட வந்தோம்‘ என்று மறுமொழி சொல்லப் பாங்காக வில்லெடுத்துவந்தபடி.

‘இங்கே வந்தார்‘ என்று திருமணங்கொல்லையைக் காட்டுகிறாள்.
நான் நிதிகண்டெடுத்தவிடம் இது காண்! என்கிறாள்.
“கலந்து பிரிந்த பின்பும் மண்ணை மோந்து கொண்டு கிடக்கலாம்படிகாண் இலச்சினை பட நடந்த
அடிச்சுவடிருந்தபடி“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்.

“எய்வண்ண வெஞ்சிலையே துணையா“ என்று சொல்லிவைத்து
‘இருவராய் வந்தார்‘ என்கை அஸங்கதமன்றோ வென்னில்;
வில் போலவே இளைய பெருமாளும் விசேஷண பூதராகையாலே ஒருவரென்னவுங் குறையில்லை.
இதுவொரு விசிஷ்டாத்வைதம்.
இளைய பெருமாளைச் சொல்லுமிடத்து “ராமஸ்ய தக்ஷிணோ பாஹு:” (இராமபிரானது வலக்கை லக்ஷ்மணன்) என்றது காண்க.
கையும் வில்லுமாய் வந்தா ரென்றவாறு.

அப்படியாகில் இருவராய் வந்தார் என்னவேணுமோ? வேற்றுமை தோற்ற சொல்லுவானென்? என்னில்;
அணைக்குந்தோளோடே வந்தார்‘ என்று சொன்னால் வேற்றுமை தோற்றச் சொன்னதாக மாட்டாதாப் போலே இதனையுங்கொள்க.
ஸம்ச்லேஷிக்கை வருகிறவன் படுக்கையோடே வருகை மிகையன்றே.
(இளைய பெருமாள் படுக்கையோ வென்னில்; * சென்றாற்குடையா மெனப்பட்ட ஆதிசேஷனேயிறே லக்ஷ்மணனாக வந்து பிறந்தது.)

இனி, “இருவராய்வந்தார்“ என்பதற்கு
தெய்வத்தன்மையும் மானிடத் தன்மையும் கலசி வந்தார் என்றும் பொருளுரைப்பர்.
சேஷத்வமும் சேஷித்வமுமாகிற இரண்டு படியுங் கலசிவந்தார் என்று முரைப்பர்.-
“தம்முடைய காலை என்தலையிலே வைக்கக் கடவதாக வந்து என்காலைத் தம் தலையிலே வைத்துக் கொண்டாரென்கிறாள்.
பரணிக்ரஹணம் பண்ணும் போது சேஷியாயிருக்கையும்
படுக்கையிலே முறைகெடப் பரிமாறுகையுமாயிறே யிருப்பது.
வகுத்த ஸ்வாமியாகவும் வேணும்;
ந சாஸ்த்ரம் நைவ ச க்ரம: ஆகவும் வேணுமிறே“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் போக்யமாக அநுஸந்திக்கத் தக்கன.

இருவராய் வந்தார் =
இருவராம்படியாக வந்தார்; (தாமும் நாமுமேயாம்படியாக வந்தார் என்றவாறு.) என்றும் உரைத்தருளினர்.
ஆய் என்பதற்கு ‘ஆம்படி‘ என்று பொருள்படுவது சிரமமாயினும்,
அர்த்தத்தின் சீர்மையைப் பற்ற இங்ஙனே உரைக்கக் குறையில்லை யென்ப.

‘இருவராவந்தார்‘ எனப் பாடமிருந்தால்
முந்தின பொருள்களும் இப்பொருளும் செவ்வனே கொள்ளக் கிடக்குமென்று கூறுவாருமுளர்.
“சப்தத்தை நியமித்து“ என்று வியாக்கியான மிருக்கும்போது வேறுபாடங் கற்பிக்க அதிகாரமுடையோ மல்லோம்.

தாமிருக்குமிடத்திலே நாம் மடலெடுத்துச் சென்று கிட்ட வேண்டும் படியாயிருக்க,
நாமிருந்த விடத்தேற அவர் வந்தார் காண்! என்ற அற்புதந்தோன்ற, வந்தார் என்கிறாள்.
அவர் வரும்போது நடந்த நடையழகை நீ காணப் பெற்றிலையே தோழீ! என்பதும் இச்சொல்லில் உள்ளூறை.

வந்தார் என் முன்னே நின்றார் =
மிக்க பரபரப்போடே வந்தவர் கடல் கண்டு தியங்கினாற் போலே என்னைக் கண்டு
மேல் அடியிடமாட்டாதே தியங்கி முன்னே நின்றார். மேல் போக்கிட மில்லாமையாலே நின்றார்.
‘வந்தார்‘ என்றது முற்றெச்சம்; வந்து என்றபடி.

இனிமேல், அவருடைய ஸௌந்தர்ய ஸாகரத்தில்தான் அகப்பட்ட சுழிகளைச் சொல்லுகிறாள்
கைவண்ணந்தாமரை யென்று தொடங்கி
திருவடி தொடங்கித் திருமுடி யீறாகச் சொல்லுதல்,
திருமுடி தொடங்கித் திருவடியீறாகச் சொல்லுதலாகிற முறைமைகளை அடைவு இதுவாகையாலே.
முதலிலே, தன்னை மேல்விழுந்து பாணி க்ரஹணம் பண்ணின கையைச் சொல்லுகிறாள்;
கையைப் பிடித்த பின் ‘இதுவொரு வடிவழகிருந்தபடி என்!, இதுவொரு முலையழகிருந்தபடி என்!,
இதுவொரு கண்ணழகிருந்தபடி என்!‘ என்று இன் சொல்லுச் சொன்ன திருவாயை அதற்குப் பின்னே சொல்லுகிறாள்.
இன்சொல்லுச் சொல்லத் தொடங்கி முற்ற முடியச் சொல்லித் தலைக்கட்ட மாட்டாமல்
உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்து வக்தவ்ய சேஷத்தைக் கண்ணாலே சொல்லித் தலைக் கட்டுகையாலே
அதற்குப் பின் கண்ணைச் சொல்லுகிறாள்.
அக் கண்ணழகுக்குத் தோற்றுத் தான் திருவடியிலே விழுந்தமை தோற்ற அதற்குப்பின்னே அடியைச் சொல்லுகிறாள்.

கீழ்ப் பதினெட்டாம்பாட்டில்
“கண்ணும் வாயுங் கைத்தலமு மடியிணையுங் கமலவண்ணம்“ என்று உபமேயமான அவயவங்களை யெல்லாம்
ஒரு சேரச் சொல்லி முடிவில் உபமாந வஸ்துவைச் சொன்னது போல இங்கும் சொல்லலாமா யிருக்க,
‘கைவண்ணம் தாமரை, வாய் கமலம் போலும், கண்ணினையும் அரவிந்தம்‘ என்றிப்படி
ஒரு உபமாநவஸ் துவையிட்டே பல வாக்கியங்களாகப் பேசுவானேன்? என்னில்;
இதில் ஒரு விலக்ஷணமான போக்யதையுண்டு என்று சொல்லலாமத்தனை.

கூரத்தாழ்வான் தாமும் வரதராஜஸ்தவத்தில் “அப்ஜபாணிபதம் அம்புஜநேத்ரம்“ என்றும்
ஸுந்தரபாஹுஸ்தவத்தில் “அப்ஜபாத மரவிந்தலோசநம் பத்மபாணிதலம்“ என்றும் இங்ஙனே பேசி யநுபவிக்கிறார்.
பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் “கமலபதகராக்ஷம்“ என்று சேரப் பேசியநுபவித்ததுமுண்டு.
உபமாந வ்யக்தி ஒன்றேயா யிருக்கச்செய்தேயும் தத்பர்யாயமான பல சொற்களையிட்டு
(தாமரை, கமலம், அரவிந்தம் என்றாற்போல)ச் சொல்லுதல்
வாக்ய பேதம் பண்ணுதலும்
அநுஸந்தாக போக்யதா ப்ரகர்ஷ ஸூசகமத்தனை.

“அடியும் அஃதே“ என்றதில் உபேக்ஷ தோற்றும்;
‘எம்பெருமானது திவ்யாவயவங்களுக்கு இத்தாமரை ஏற்ற உவமையன்று;
ஆயினும் ஏதேனுமொரு உவமையை யிட்டுப் பேசி அநுபவிக்க வேண்டியிருப்பதால்
அதற்காகச் சொன்னபடி‘ என்பது இதில் தொனிக்கும்.

இங்ஙனே தலைமகள் சொல்லக் கேட்ட தோழியானவள்
‘நங்காய்! அவர் வந்த வரவை நீ சொல்ல நான் கேட்டாற்போ லிருக்கையன்றியே
நானே நேரில் ஸாக்ஷாத்கரிப்பது போலிராநின்றதே நீ பேசுகிற பேச்சின் வாய்ப்பு! என்று சொல்ல;
தோழீ! அவர் வந்த வரவின் வீறுபாட்டையும் அவரது அவயவங்கள் பொலிந்த பொலிவையும் நான் என்னென்று சொல்லுவேன்?
அவ்வண்ணத்தவர் என்று சொல்லலாமத்தனை யென்கிறாள்.
நீ கேட்கையாலே உனக்கொரு உவமையை யிட்டுச் சொல்லலாம்படி யன்று காண் அவர் வடிவருவிந்தபடி;
‘அப்படிப்பட்ட வடிவுடையவர்‘ என்று இரண்டுகையுந் தூக்கிச் சொல்ல வேணும் காண் என்கிறாள்.

அவ்வண்ணத்தவர்நிலைமை கண்டுந்தோழீ! அவரைநாம் தேவரென்று அஞ்சினோமே =
அவருடைய வடிவழகிருந்தபடியையும் அவருடைய சீலமிருந்தபடியையும் கண்டுவைத்தும்
“அம்மானாழிப்பிரா னவனெவ்விடத்தான் யானார்“ என்றாற்போலே மயங்கி அஞ்சி இழந்தேனே யென்கிறாள்.
அவருடைய ஸௌசீல்ய ஸௌலப்யங்களைக் கண்டு அஞ்சாதே கூசாதே கலந்து பரிமாறலாயிருக்க,
அந்தோ! * ஒன்றுந்தேவு முலகுமுயிரும் மற்றும் யாதுமில்லாவன்று நான்முகன் றன்னோடு
தேவருலகோ டுயிர்படைத்த பெருமானன்றோ இவர்!
நரநாரணனா யுலகத் தறநூல் சிங்காமை விரித்த பெருமானன்றோ இவர்! என்றாற்போலே பரத்வத்தையே நினைத்துப்
பாவியேன் இறாய்த்து இழந்தொழிந்தேனே என்கிறாள்.
ஸம்ச்லேஷம் ப்ரவ்ருத்தமாகிப் பின்பு விச்லேஷம் நிகழ்ந்தபடியைத் தெரிவிக்கிற புடை இது என்க.

“ஆத்மாநம் மாநுஷம் மந்யே என்னுமவர் நினைவைவிட்டு
பவாந் நாராயணேதேவ: என்னும் வழிப் போக்கர் வார்த்தையைப் பற்றிக் கெட்டாமே! என்கிறாள்.
தன்னோடு ஸுகதுக்கங்கள் ஒத்தவளான தோழியையுங் கூட்டி நாம் என்கிறாள்.“

இப்பாசுரத்தின் ஈற்றடியின் விசேஷார்த்தங்களைப் பன்னியுரைக்குங்காற் பாரதமாம்‘
பூருவர்களின் வியாக்கியானங்களிற் கண்டு அநுபவித்துக் களிக்க.

இது முதல் தலை மகள் பாசுரமாக செல்லுகிறது –
மத் சித்தா மத் கத பிராணா போதயந்த பரஸ்பரம் கதயந்தச் ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்திச-கீதை -10-9-
முதல் பத்து -மத் சித்தா -ஞானத்துக்கு எம்பெருமானை இலக்காக்கி
வியாச பரசராதி மக ருஷிகளின் ரீதியிலே பேசுவது
நடுவில் பத்து -மத் கத பிராணா -தம்மூச்சு அடங்கி வேற்று வாயாலே பேசினது ஆகையாலே
இந்த பத்து -போதயந்த பரஸ்பரம் -தோழி மார்களுக்கு அறிவித்தும் அவர்கள் வார்த்தைகளை கேட்டும்
தரித்து பேசும் பதிகம்

அதர்சனே தர்சன மாத்ர காமா
த்ருஷ்ட்வா பரிஷ்வங்க ரசைகலோலா
ஆலிங்கதாயாம் புநராய தாஷ்யாம் ஆசசாதே விக்ரஹ யோரபேதம் -ஸூ பாஷித ஸ்லோஹம்
கண்ணால் காணாத அளவில் -ஒரு தடவை காணப் பெற்றால் அமையும் என்பார்கள்
அப்படிக் காணப் பெற்றால் அணைத்துக் கொள்ள ஆசைப் படுவார்கள்
அணைத்துக் கொள்ளப் பெற்றதும் இரு உடல் ஒன்றாக கூடாதோ என்று காமுறுவர்

எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்கனமே யுழி தருகேனே -ஆசை கிளர்ந்து -முதல் பத்து

முற்றாரா வன முலையாள் பாவை மாயன் மொய் யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டு அற்றாள்-என்று
பிராட்டி போலே தானும் அணைய ஆசைப்பட்டமை -இரண்டாம் பத்து

கள்ளூறும் பைந்துழாய் மாலையானை கனவிடத்தில் யான் காண்பன்
கண்ட போது புள்ளூரும் கள்வா நீ போகேல் என்பன் – என்றும்
என் தன் பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு போகாமை வல்லேனாய்
புலவி எய்தி என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த
எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே -மூன்றாம் பத்து

தலைவி பூ கொய்ய புறப்பட்டதை கேள்விப் பட்டு
வேட்டையாடும் வ்யாஜத்திலே அவனே
எடுத்துக் கட்டின குழல் கற்றையும்
பிடரியிலே தழைந்து அலைகிற மயிரும்
இருக்கின சாணமும்
கட்டின கச்சும்
வலத் தோளில் இட்ட மெத்தையும்
பெரு விரலிலே பூட்டின சரடும்
இடக்கையிலே நடுக்கோத்து பிடித்த வில்லும்
வலக்கையிலே இறுக்கின அம்பும்
முதுகிலே கட்டின அம்புறா துணியுமாய்
கொண்டு அந்த பூம் தோப்பிலே தானே சேர
தோழியும் ஒரு வ்யாஜத்தாலே பேர நிற்க
தெய்வ யோகத்தாலே கலவி கூடிற்றாய்
நாயகனும்
புனல் அரங்கம் என்று போயினாரே -என்கிற படி வெளிப்பட்டு செல்ல
அவ்வளவில் தோழி தலைவன் வந்த படி என்
செய்தபடி என்-என்று கேட்க
தலைவி தோழிக்கு வ்ருத்த கீர்த்தனம் பண்ணுகிற பாசுரமாய் செல்லுகிறது இப்பாசுரம்

அவனுடைய அழகையும் சீலத்தையும் கண்டு வைத்து
கைப்பட்ட பொருளை கடலிலே வீசி எறிந்தால் போலே
வேறாக நினைந்து அஞ்சி இழந்தோமே
இப்பாட்டு சக்கரவர்த்தி திருமகன் தலைமகனாய்
ஸ்ரீ ஜனகராஜன் திரு மகள் தலை மகளாய் பிரவ்ருத்தம் ஆகிறது

மைவண்ண நறும் குஞ்சி சுழல் பின் தாள
கொள்கின்ற கோளிருளை சுகிர்ந்திட்ட கொழும் சுருளின் உட்கொண்ட நீல நன்னூல் தழை கொள் -என்று சங்கித்து
அன்று மாயன் குழல் -என்ன வேண்டும்படி விலஷணமான
கரு நிறம் கொண்ட குழல்
பரிமளமும் விலஷணம்
கண்டவர் தாப த்ரயங்கள் ஆறும் படி
நிறமும் மணமுமேயோ
திரள் திரளாக குழன்று இருக்கை அன்றிக்கே அலகு அலகாக பிரிந்து சுருண்டு இருக்கும் பரிசு சொல்லத் தரமோ
பின் புடரியிலே அசைந்து அசைந்து அலைய கண்டாள்
இவளுடைய சௌந்தர்ய சாகர தரங்களை நேர்ந்கொண்டு நேர் பார்க்க மாட்டாமல் திரு முகத்தை திருப்ப
அப்பொழுது கண்டாள்

மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட
சந்த்ரர்கள் உதித்தால் போலே
திருக் குழல் திரு மகர குழைகள் ஆபரணமா
அன்றி
திரு மகர குழைகள் திருக் குழலுக்கு ஆபரணமா -என்பதால் இலங்கி –
ஆட
மூன்றுவகை
ஆட இருவராய் வந்தார் -கடல் அசைந்து வந்தால் போல் இரண்டு அருகும் மகர குழைகள் அசைந்து
ஆட என் முன்னே வந்தார் -அபிமத விஷயம் கண்டால் முகத்திலே அசைவுகள் உண்டாகுமே -அதைச் சொன்னபடி
நஞ்சீயர் நிர்வாஹம் -முன்பைக் காட்டுவது பின்பை காட்டுவது-எத்தனை ஆடல்கள் செய்தான் இவளுடைய பெண்மையை அழிக்கைக்காக

எய் வண்ண வெஞ்சிலையே துணையா வந்தார்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்ததால் –
நம்மை முன்பு சேர விட்டது வில்லே அன்றோ -நன்றி பாராட்டி -கொண்டு வந்தார்
வெஞ்சிலையே துணையா -சம்ச்லேஷிக்கைக்கு ஏகாந்தமாக வந்தார்
வேட்டை யாட வந்தோம் என்று கண்டார் வினவ மறுமொழி சொல்ல பாங்காக வந்தார்

இங்கே வந்தார்
திரு மணம் கொல்லையை காட்டுகிறாள்
நான் நிதி கண்டு எடுத்த இடம் இது காண்
கலந்து பிரிந்த பின்பும் மண்ணை மோந்து கொண்டு கிடக்கலாம் படி காண் இலச்சினை பட நடந்த அடிச் சுவடு

இருவராய் வந்தார்
இளைய பெருமாளும் வில் போலவே விசேஷண பூதர்
இது ஒரு விசிஷ்டாத்வைதம்
ராமஸ்ய தஷிணோ பாஹூ
வேற்றுமை தோன்ற சொல்லுவான் என்னில் அணைக்கும் தோள் உடன் வந்தார்
சம்ச்லேஷம் பண்ண படுக்கை உடன் வந்தார்

இருவராய் வந்தார்
தெய்வத் தன்மையும் மானிடத் தன்மையும் கலசி வந்தார்

சேஷத்வமும் சேஷித்வமும்-இரண்டு படியும் கலசி வந்தார்
தம்முடைய காலை என் தலையிலே வைக்கக் கடவதாக வந்து என் காலை தம் தலையிலே வைத்து கொண்டார்
பாணி க்ரஹணம் பண்ணும் போது சேஷியாய் இருக்கையும்
படுக்கையிலே முறைகெட பரிமாறுகையும்
வகுத்த ஸ்வாமியாகவும் வேணும் -ந சாஸ்திரம் நைவ ச க்ரம

இருவராம் படியாக வந்தார்
தாமும் நாமுமே யாம்படி வந்தார் -ஆய் -ஆம்படி –

வந்தார்
நாம் மடல் எடுத்து சென்று கிட்ட வேண்டி இருக்க நாம் இருந்த இடத்தே அவர் வந்தார் காண்
வரும் போது நடை அழகை நீ காணப் பெற்றிலை காண்-

வந்தார் என் முன்னே நின்றார்
பர பரப்புடன் வந்தவர் கடல் கண்டு தயங்கினால் போலே என்னைக் கண்டு மேல் அடி இட மாட்டாதே தயங்கி முன்னே நின்றார்
வேறு போக்கிடம் இன்றி நின்றார் -வந்தார் முற்று எச்சம்

கை வண்ணம் தாமரை
அனுபவித்த அடைவிலே சொல்லுகிறாள்
முதலிலே தன்னை மேல் விழுந்து பாணிக் க்ரஹணம் பண்ணின கையைச் சொல்லுகிறாள்

இது ஒரு அழகு இருந்தபடி என் –முலை அழகு இருந்த படி என் –வாய் அழகு இருந்தபடி என்
இன் சொல்லு சொன்ன திரு வாயைச் சொல்லுகிறாள்

முற்ற முடிய சொல்லித் தலைக் கட்ட முடியாமல் உள் எலாம் உருகி -வக்தவ்ய சேஷத்தை –
கண்ணாலே தலைக் கட்டுவதால் கண்ணை சொல்கிறாள்

கண் அழகுக்கு தோற்று திருவடியில் விழுந்தமை தோற்ற அடியை சொல்லுகிறாள்

கீழ் 18 பாட்டில் கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் அம் கமல வண்ணம் போல்
உபமேய அவயவங்களை ஒரு சேரச் சொல்லி உபமான வஸ்துவை ஒரு தடவை சொல்வது போல் அன்றி
உபமான வஸ்துவை பல காலும் சொல்லுவது
விலஷணமான போக்யதை உண்டு என்று காட்ட
கூரத் ஆழ்வான்-ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் அப்ஜ பாணி பதம் அம்புஜ நேத்ரம்

அடியும் அக்தே-திவ்ய அவயவங்களுக்கு தாமரை ஏற்ற உவமை அன்று -உபேஷை தோற்ற அருளுகிறாள்-

அவ் வண்ணத்தவர்
வரவின் வீறுபாட்டையும் அவயவங்களின் பொலிவையும் அப்படிப் பட்ட என்று இரண்டு கையையும் தூக்கி
உனக்காக ஒரு திருஷ்டாந்தம் இட்டு சொன்னேன் -என்று சொல்ல

நிலைமை கண்டும் தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே
அழகையும் சீலத்தையும் கண்டு வைத்தும்
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார்
சௌலப்யம் சௌசீல்யம் கண்டு அஞ்சாதே கூசாதே பரிமாறலாய் இருக்க அந்தோ
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று
நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்த பெருமான் அன்றோ -என்றும்
நர நாரணனாய் உலகத்து அற நூல் சிங்காமை விரித்த பெருமான் அன்றோ
இறாய்த்து இழந்து ஒழிந்தேன்
சம்ச்லேஷம் பிரவ்ருத்தமாகி பின்பு விச்லேஷம் நிகழ்ந்த படி

ஆத்மானம் மானுஷம் மன்யே -என்னும் அவர் நினைவை விட்டு
பவான் நாராயணா தேவதா -என்ற வழிப் போக்கர் வார்த்தையை பற்றிக் கேட்டோமே

நாம் -தோழியையும் சேர்த்து -தன்னோடு சுக துக்கங்களில் ஒத்தவர் –

——————————————————————

கீழ்ப்பாட்டில் ‘அவரை நாம் தேரரென்றஞ்சினோமே‘ என்று ப்ரமத்தாலே தான் இறாய்த்தமை சொன்னாள்;
அதைக்கேட்ட தோழியானவள் ‘நங்காய்! நீ இறாய்த்து அகன்றாயாகில் அவர் உன்னோடு கலந்தபடி என்?‘ என்று கேட்க,
‘அவர் என்னை வசப்படுத்திக் கொண்டபடியும் என்னோடு கலந்தபடியும் இது காண்‘ என்கிறாள் இப்பாட்டில்.

அவர் தம்முடைய விலக்ஷணமான வடிவழகையும் சீலத்தையும் காட்டின விடத்திலும்,
அவரைத் தேவரென்றஞ்சி இறாய்த்தபடியாலே
‘இனி நாம் வந்தவழியே திரும்பிப் போகவேண்டு மத்தனையன்றோ‘ என்று நினைத்தார்; கால் பெயர மாட்டிற்றில்லை;
சேஷவஸ்து கைப்படுவது சேஷியானவனுக்குப் பரம லாப மேயன்றொ:
வடிவழகைக் காட்டுவதும் சீலத்தைக் காட்டுவதும் எதற்காக? கைப்படாத வஸ்துவைக் கைப்படுத்துகைக்காக வன்றோ?
தாம் உத்தேசித்து வந்த விஷயம் இங்குக் கைபுகுந்ததில்லை-எவ் வகையினாலேனும் வசீகரித்தாக வேணுமே,
அதற்கு வழி யென்ன? என்று பார்த்தார்;
முன்பு திருவாய்ப்பாடியிற் பெண்கள் தம்முடைய திருக்குழலோசையிலே வசப்படக் கண்ட வாஸநையாலே
இங்கு நம்முடைய மிடற்றோசையாலே வசீகரிக்கப்போமென்று பார்த்து ஒரு பண்ணை நுணுங்கத் தொடங்கினார்;
நாம் வேட்டையாடுகிற வியாஜமாக வந்தோமாகையாலே ‘பாடுகிறது ஏதுக்கு?‘ என்று கேட்பாரில்லை;
ஆகவே தாராளமாகப் பாடலாமென்று துணிந்து ஒரு பண்ணை நுணுங்கினார்;
அதிலே யீடுபட்டு மேல்விழுந்து கலந்தேன் என்று வரலாறு சொல்லுகிறாள் பரகாலநாயகி.

நைவளமொன் றாராயா நம்மை நோக்கா நாணினார் போலிறையே நயங்கள் பின்னும்,
செய்வளவி லென்மனமும் கண்ணு மோடி எம்பெருமான் திருவடிக்கீழ் அணைய, இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன் கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும்,
எவ்வளவுண் டெம்பெருமான் கோயில்? என்றேற்குஇதுவன்றோ எழிலாலி? என்றார் தாமே.

பதவுரை

ஒன்று–மிகச் சிறந்ததான
கைவளம்–கைவளமென்கிற பண்ணை
ஆராயா-ஆராய்நது பாடி
நம்மை நோக்கா–நம்மைப் பார்த்து
இறையே நாணினார் போல்–சிறிது வெட்கப்பட்டவர் போல நின்று
பின்னும்–அதற்குப் பிறகும்
நயங்கள் செய்வளவில்–நயமான வார்த்தைகளையிட்டுப் பண்ணிலே பாடினவளவில்
என் மனமும் கண்ணும்-எனது நெஞ்சம் கண்களும்
ஓடி-பதறிச் சென்று
எம்பெருமான் திருஅடிக்கீழ் அணைய-அப்பெருமானது திருவடிவாரத்திற் பதிய
இப்பால்–அதன்பின்
கைவளையும்–என் கையில் தரித்திருந்த வளைகளையும்
மேகலையும்-அரையில் மேவிய கலையையும்
காணேன்-காணமாட்டாமல் இழந்தேன்;
கனம் மகரத்குழை இரண்டும்-கனமான மகரகுண்டலங்களிரண்டையும்
நான்கு தோளும்-நான்கு திருத்தோள்களையும் காணப்பெற்றேன்;
(அதன்பிறகு)
எம் பெருமான் கோயில் எவ்வளவு உண்டு என்றேற்கு-“தேவரீருடைய இருப்பிடம் (இவ்விடத்திலிருந்து) எவ்வளவு தூரமுண்டு?‘ என்று கேட்ட எனக்கு
எழில் ஆலி இது அன்றோ என்றார்-அழகிய திருவாலிப்பதி இதோ காண்! என்று சுட்டிக் காட்டினார்.

நைவளம் ஒன்று ஆராயா =
‘நைவளம்‘ என்று ஒரு பண்ணுக்குப் பெயர்.
பாட்டுப் பாடுகிறவர்களையும் பாட்டு கேட்கிறவர்களையும் நைவிக்கும்படியான வளத்தையுடைய தாதல் பற்றி
நைவளமென்று பெயரிடப்பட்ட தென்று யோகார்த்தமும் அருளிச் செய்வர்.
மற்ற இசைகளிற்காட்டில் இந்த இசை பிறரை வசீகரி்க்கும் விஷயத்தில் இன்றியமையாததாதலாலும்
இதற்கு வசப்படாவிட்டால் வேறுகதி யில்லாமையாலும் ‘நைவளம் ஒன்று‘ எனப்பட்டது.

கபிலரின் குறிஞ்சிப் பாட்டில்,”நைவளம் பழநிய பாலை வல்லோன் கைவிர் நரம்பின் இம்மென இமிரும்…”(146-147)
நட்டராகம் என்னும் பண்ணின் இயல்பு அமைந்த பாலைப்பண்ணை வாசிக்க வல்லவன் தன் கையினால் இசைக்கும்
யாழ்நரம்பின் ஓசை போன்ற…. என்பதாம்.

மேலும், இடைகழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் நைவளம் பற்றிய குறிப்பைக் கீழ்க்காணும் வரிகளில் சிறப்பிக்கின்றார்.
“பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின் இன்குரல் சீறியாழ் இடவயின் தழீ இ
நைவளம் பழநிய நயம்தெரி பாலை கைவல் பாண்மகள் கடனறிந்து இயக்க”- சிறுபாணாற்றுப்படை (34-37)
பொற்கம்பியினையொத்த முறுக்கு அடங்கின நரம்பினது இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி,
நட்டராகம் என்னும் பாலைப்பண்ணை வாசித்தலில் வல்ல பாணன் முறைமையறிந்து வாசிக்க…. என்பதாம்.
மேற்கண்ட வரிகளில் காணப்படும் நைவளம் என்னும் பண் பகல் பொழுதுகளில் வாசிக்கப்பெறும் இராகமாகும்.
பாலையாழில் வாசிக்கப்பெறும் நட்டராகம் இதுவேயாகும். நட்டபாடை என்று அழைக்கப்படும் இராகமும் இதுவே.
பண்டைய இசைத்தமிழ் வல்லோர்கள் இரவுப்பண்கள், பகற்பண்கள் எனவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைப்பண்கள்
எனவும் தாம் வாழ்ந்த நிலம் சார்ந்த இராகங்கள், அந்நிலம் சார்ந்த இசைக்கருவிகள் என இயற்கையோடும்,
இயற்கை சார்ந்த வாழ்வியலோடும் இசைபட வாழ்ந்தார்கள்.

கருமயோக ஜ்ஞாநயோகங்களால் அஸாத்யமானதை பக்தியோகத் தாலே ஸாதிக்கலாம்;
அதனாலும் அஸாத்யமானதை ப்ரபத்தியாலே ஸாதிக்கலாம்;
அதுவும் பலித்தலில்லை யென்றால் வேறு கதியில்லை என்றிருப்பதுபோல,
காதலன் தானும் இப் பரகால நாயகியைப் பெறுகைக்ககுச ஸரமோபாயமான பண்ணைக் கைகண்டபடி.

ஆராய்தல் – நன்றாக நுணுங்குதல்.
‘ஆராயா‘ என்றது செய்யா என்னும் வாய்பாட்டிறந்தகால வினையெச்சம்; ஆராய்ந்து என்றபடி.
மேலே ‘ நோக்கா“ என்றதையும் இங்ஙனமே கொள்க.

நைவளம் என்கிற பண்ணைத் தாம் நுணுங்கினவாறே தாம் உருகினார்;
‘முரட்டு ஆணாகிய நாமே உருகுகிற போது மெல்லியலான இவள் உருகக் கேட்க வேணுமோ?
வயிரத்தை யுருக்குமது அரக்கை யுருக்கச் சொல்லவேணுமோ? இது இவளையும் அழித்தே தீரும்‘ என்றறுதியிட்டு என்முகத்தைப் பார்த்தார்;
உண்மையில் அவ் விசையினால் நான் உள்ளெலா முருகிக் குழைந்திருக்கச் செய்தேயும்
அந்த உருக்கத்தையும் ஈடுபாட்டையும் எப்படியோ மறைத்து, சிறிதும் விகாரப்படாதவள் போல முகத்திற் காட்டிக் கொண்டேன்;
அப்படிப் பட்ட நிலைமையைக் கண்டு அவர்க்கு வெட்கமுண்டாயிற்று. ஏன்?
நம்முடைய எண்ணம் பழுதாயிற்றேயென்று லஜ்ஜித்தார்;
அவர் தம்முடைய காம்பீர்யத்தாலே நாணினமை தோற்றாதபடி யிருக்கப்பார்த்தும் நாணினார் போலவே காணப்பட்டார்;
‘நம்முடைய சரமோபாயமும் நிஷ்பலமாயிற்றே‘ என்று அவரால் வெட்கப்படாமலிருக்க எங்ஙனே முடியும்.
அந்த வெட்கத்தாலே நேர்முகம் பார்க்கமாட்டாதே சோலையைப் பார்ப்பதும் பக்கங்களைப் பார்ப்பதுமாக ஆனார்.

பின்னும் நயங்கள் செய்வளவில் = ‘பின்னும்‘ என்றது,
நைவளமென்கிற பண்ணைப் பாடினவளவோடு நில்லாமல் என்றபடி. அது பலிக்கவில்லையென்று வாளா கிடந்திலர்;
‘அடியேன், குடியேன்‘ என்றாற்போலே சில நைச்ய பாஷணங்களைப் பண்ணிலே ஏறிட்டுப் பாடத்தொடங்கினார்; அவ்வளவிலே.

என்மனமுங் கண்ணுமோடி எம்பெருமான்திருவடிக்கீழ் அணைய =
விகாரத்தை வெளிக் காட்டாதிருக்கவேணுமென்று நான் எவ்வளவோ முயற்சி செய்தும் பலிக்கப் பெற்றதில்லை;
அடக்கிக் கொண்டிருந்தும் என்னால் அடக்க முடியவில்லை; கடல் உடைந்தாற்போலே உடைந்தது.
நெஞ்சும் கண்ணும் ஆச்ரயத்தைவிட்டுப் பதறியோடிற்று;
தம் மிடற்றோசை யாலே என்னை யீடுபடுத்தினவருடைய திருவடிவாரத்தின்கீழே சென்றணைந்தன. –

வியாக்கியான வாக்கியங்காண்மின்; – “அவர் நினைத்தவளவன்று காண் நான் அழிந்தபடி யென்கிறாள்.
என்முலையைத் தம் மார்விலே நெருக்கித் தழுவிக் கொள்ளவாயிற்று அவர் நினைத்திருந்தது;
நான் அவர் காலைத் தலையிலே வைத்துக் கொண்டே னென்கிறாள்“.

இப்பால் கைவளையும் மேகலையுங் காணேன் =
இதனால் விரஹ வ்ருத்தாந்தம் சொல்லுகிறதன்று; உந்மஸ்தகமான ஸம்ச்லேஷ ரஸம் சொல்லுகிறது.
கைவளையையும் மேகலையையுங் காணாமை விச்லேஷத்திலன்றோ வென்னில், அங்ஙனே ஸம்ச்லேஷத்திலுமுண்டு.

ஸம்ச்லேஷரஸம் மீதூர்ந்து உண்டான தேஹப் பூரிப்பினால் வளைகள் வெடித் தொழிந்தமையாலுண்டான இழவைச் சொன்னபடி.
கலவியிலும் வளையிழப்பது பிரிவிலும் வளையிழப்பது என்றனால், பின்னை வளை தங்கியிருக்கும் நிலைமை எது வென்னில்;
ஸம்ச்லேஷரஸம் உந்மஸ்தகமாகாமல் ஸாத்மி்க்கு மளவாகும் தசையிலே வளை தங்கியிருக்கு மென்க.

(மேகலையுங்காணேன்)
மே – அரையில் மேவுகின்ற, கலை – வஸ்திரம் என்று கொள்க.
“பரியட்ட மாறாட்டத்தாலே என்பரியட்டப்பட்டுங் கண்டிலே னென்கை.
அவன் பரியட்டம் தன்னரையிலேயிருக்கக் கண்டாளித்தனையிறே“ என்ற வியாக்கியான வாக்கியமுங் காண்த்தக்கது.
இதுவும் ஸம்ச்லேஷரத்தின் உந்மஸ்தகத்வத்தை வெளியிடவற்று.

“கைவளையும் மேகலையுங் காணேன்“ என்றதற்கு ‘அஹங்காரமமகாரங்கள் ஒழிந்தன‘ என்று கூறுதல்
ஸ்வாபதேசப்பொருள் என்றருளிச்செய்வர்.
உபாயவிரோதி, ப்ராப்யவிரோதி, புருஷார்த்த விரோதி என் மூன்று வகையான இடையூறுகளும் தொலைந்து
“உன்றன்னோடுற்றோமே யாவோ முனக்கே நாமாட்செய்வோம், மற்றைநங்காமங்கள்மாற்று“ என்கிற
பிரார்த்தனை பலித்தமை சொன்னவாறு.
‘நான் போக்தாவன்று, எனக்குப்போகமன்று; போக்தாவும். அவனே, போகமும் அவனுடையதே‘ என்ற
ஸ்வரூப தத்துவத்தின் அநுஸந்தானம் முதிர்ந்தமை சொல்லிற்றாயிற்று.

கண்டேன் கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும் =
அணைத்தபோது உறுத்தின திருமகரக் குழைகளையும், அணைத்த திருக்கைகளையும் கண்டேனென்கிறாள்.
கலந்தவள் சக்ரவர்த்தி திருமகனாயிருக்க, நான்கு தோள் என்கிறதென்னென்னில்;
தன்னைத் தழுவுகையாலே தோள்கள் பணைத்தபடி.
அன்றி,
உண்மையான சதுர்ப்புஜ ஸ்வரூபத்தை வெளியிட்ட படியாகவுமாம்.

எவ்வளவுண் டெம்பெருமான்கோயில்? என்றேற்கு =
வந்தவிடத்திலே கலந்து பிரிந்து போகையன்றியே அவருடைய இருப்பிடத்தே உடன் சென்று
நித்ய ஸம்ச்லேஷம் பண்ணிக் களிக்கவேணுமென்னும் விருப்பாலும்,
சிறிது தூரமாகிலும் கூடவே தோள்மேல் தோளிட்டுக்கொண்டு போகவேணு மென்னும் விருப்பாலும்,
தகுதியான பரிஜனங்களோடே அநுபவிக்கவேணு மென்னும் விருப்பாலும்
‘தேவரீருடைய வாழ்விடம் இங்குத் தைக்கு எத்தனை தூரமுண்டு?‘ என்று கேட்டேன்;
இதோ காண்கிற திருவாலித் திருநகரி காண் என்று சொல்லி அந்தர்த்தானமாய்விட்டார்.
அந்தோ! ‘எவ்வளவுண்டெம்பெருமான் கோயில்‘ என்று பாவியேன் நானே யன்றோ பிரிவை ப்ரஸ்தாவித்தேன்;
அது கேளாதிருந்தேனாகில் இன்னமும் சற்றுப்போது அநுபவிக்கலாமாயிருந்ததே!
நானே கெடுத்துக் கொண்டேனே யென்கிறாள் போலும்.

அவர் தன்னை வசப்படுத்திய படியையும் கலந்த படியையும் தோழிக்கு சொல்கிறாள்
தேவர் என்று அஞ்சியதும் பின் போக நினைத்தார்
கால் பெயர மாட்டிற்று இல்லை
சேஷ வஸ்து பெறுவது சேஷிக்கு பரம லாபம் அன்றோ
அழகையும் சீலத்தையும் காட்டி அருளி வீணாக போகவா
முன்பு ஆய்ப்பாடி பெண்கள் திருக் குழல் ஓசை ஈடு பட்டது போலே
மிடற்று ஓசையால் வசீகரிப்போம் என்று பண்ணை நுணுங்கத் தொடங்கினார்
அதிலே ஈடுபட்டு மேல் விழுந்து கலந்தேன் என்கிறாள்

நை வளம் ஓன்று ஆராயா
பாடுவாரையும் கேட்பாரையும் நைவிக்கும் பண் நைவளம்
ஆராய்தல் நுணுங்குதல்

நோக்கா
நாமே உருக இவளும் உருகுவாள் என்று நோக்கினான்
விகாரம் இல்லாதது போல் முகத்தை வைத்துக் கொண்டேன்

நம்முடைய சரம உபாயமும் நிஷ் பலமா என்று வெட்கினார்
கம்பீரத்தால் லஜ்ஜித்தது தோற்றாமல் இருக்க பார்த்தார்
நேர் முகம் பார்க்காமல் சோலை பக்கம் பார்ப்பதாக ஆனார்

பின்னும் நயங்கள் செய் வளவில்
-பின்னும் -நை வளம் பண்ணை பாடினதொடு நில்லாமல்
அடியேன் குடியேன் போன்ற நைச்ய பாஷாணங்கள்
பண்ணிலே ஏறிட்டு பாடத் தொடங்கினார்

என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய
விகாரம் காட்டக் கூடாது என்று நான் இருந்தாலும்
கடல் உடைந்தால் போல்
நெஞ்சும் கண்ணும் ஆஸ்ரயத்தை விட்டு ஓடின
அவர் நினைத்த அளவன்று காண் நான் அழிந்த படி -என்கிறாள்
என் முலையை தம் மார்பிலே நெருக்கித் தழுவிக் கொள்ள வாயிற்று அவர் நினைத்து இருந்தது
நான் அவர் காலை தலையிலே வைத்துக் கொண்டேன் -என்கிறாள் –

இப்பால் கை வளையும் மேகலையும் காணேன்
விரஹ விருத்தாந்தம் சொல்ல வில்லை
உன்மத்தமான சம்ச்லேஷ ரசம்
தேக பூரிப்பினால் வளைகள் வெடித்து ஒழிந்தன
மே -அரையிலே மேவுகின்ற
கலை -வஸ்த்ரம்
பரியட்ட மாறாட்டத்தாலே என் பரியட்டப் பட்டும் கண்டிலேன் என்கை
அவன் பரியட்டம் தன் அரையிலே இருக்கக் கண்டாள் இத்தனை இறே

அஹங்காரம் மமகாரம் ஒழிந்தன -ஸ்வாபதேசம்

உபாய விரோதி பிராப்ய விரோதி புருஷார்த்த விரோதி இடையூறுகளும் தொலைந்து
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று –
என்கிற பிரார்த்தனை பலித்தமை சொல்லிற்று
நான் போக்தா அன்று
எனக்கு போகம் அன்று
போக்தாவும் அவனே
போகமும் அவனுடையதே
ஸ்வரூப தத்தவத்தின் முற்றின அனுசந்தானம் சொல்லிற்று-

கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
அணைத்த போது உறுத்தின திரு மகரக் குழைகளையும்
அணைத்த திருக் கைகளையும் கண்டேன்
தன்னை அணைத்த படியால் தோள்கள் பணைத்த படி -நான்கு தோள்
சதுர புஜ ஸ்வரூபத்தை வெளியிட்டதாகவுமாம்

எவ்வளவுண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு
அவன் இருப்பிடம் சென்று நித்ய சம்ச்லேஷம் பெறவும்
கூடவே தோள் மேல் தோள் போட்டு போக விரும்பியும்
பரிஜனங்கள் உடன் சேர்ந்து அனுபவிக்கவும்
தேவரீர் வாழ்விடம் இங்குத்தைக்கு எத்தனை தூரம் என்றேன்

இதோ காண்கிற திருவாலி திரு நகரி காண் என்று சொல்லி அந்தர்தானமாய் விட்டார்
பாவியேன் நான் அன்றோ பிரிவை பிரஸ்தாவித்தேன்
நானே கெடுத்துக் கொண்டேன் –

——————————————————————-

தன் பேறாகத் தானே வந்து கலந்தவன் பிரிகிறபோது ‘போக வேண்டா‘ என்று ஒருவார்த்தை சொல்ல மாட்டிற்றிலையோ?
என்று தோழி கேட்க, அது சொல்லாமலிருப்போனோ? அதுவுஞ் சொன்னேன், பலிக்கப் பெற்றதில்லை யென்கிறாள்.
கலவியிலே உன் கைக்கு அடங்கின சரக்காயிருந்தவர் உன் வார்த்தையை அலக்ஷியஞ் செய்து போவரோ?‘ என்ன,
‘நிலமல்லாத நிலத்திலே இப்படி நெடும் போது நிற்கலாகுமோ‘ என்று பெரிய திருவடி தூக்கிக் கொண்டு போகப் போயினாரென்கிறாள்.

உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென் ஒளிவளையும் மாநிறமும் கொண்டா ரிங்கே,
தெள்ளூரு மிளந்தெங்கின் தேறல் மாந்திச் சேலுகளும் திருவரங்கம் நம்மூ ரென்னக்
கள்ளூரும் பைந்துழாய் மாலை யானைக் கனவிடத்தில் யான்காண்பன் கண்ட போது,
புள்ளூரும் கள்வாநீ போகேல், என்பன் என்றாலு மிதுநமக்கோர் புலவி தானே?

பதவுரை

உன் ஊரும்-உள்ளுக்குள்ளேயே படரும்படியான
சிந்தை நோய்-மனோவியாதியை
எனக்கேதந்து-என்னொருத்திக்கே உண்டாக்கி
என் ஒளி வளையும்-எனது அழகிய வளைகளையும்
மா நிறமும்-சிறந்த மேனிநிறத்தையும்
இங்கே-இந்தத் திருமணங் கொல்லையிலே
கொண்டார்-கொள்ளை கொண்டு போனார்; (அப்படி அவர் போகிய போது)
சேல்-மீன்களானவை
தெள் ஊரும் இளதெங்கின் தேறல் மாந்தி-தெளிவாகப் பெருகுகின்ற இளந்தென்னங் கள்ளைப் பானம் பண்ணி
உகளும்-களித்துத் தடித்துத் உலாவா நிற்கப்பெற்ற
திரு அரங்கம்-ஸ்ரீரங்கம்
நம் ஊர் என்ன-நமது இருப்பிடம் என்று சொல்லிப்போக,
கள் ஊரும் பைந்துழாய் மாலையானை-தேன் வெள்ளமிடாநின்ற பசுமைதங்கிய திருத்துழாய் மாலையையுடைய அப்பெருமானை
கனவு இடத்தில் யான் காண்பன்-கனவிலே நான் காணப்பெறுகிறேன்;
கண்ட போது-அப்படி காணும்போது
புள் ஊரும் கள்வா-கருடப்பறவையை ஏறிநடந்துகிற கள்வனே!
நீபோகேல் என்பன்-இனிநீ என்னைவிட்டுப்பிரி்ந்து போகலாகாது என்பேன்;
என்றாலும்-அங்ஙனஞ் சொன்னாலும்
நமக்கு-நமக்கு
இது-அப்பெருமானது கல்வியானது
ஓர் புலவிதானே-வருத்தமேயாய்த் தலைக்கட்டு மது.

உபயவிபூதி நாதராய்ப் பரம உதாரராயிருக்குமவர்க்கு நீ வாழ்க்கைப்பட்டிருந்தாயாகில் அவர் போம்போது
உனக்குத் தந்துபோன செல்வம் ஏதேனுமுண்டோவென்று கேட்க,
உள்ளுருஞ் சிந்தைநோய் எனக்கே தந்து என்கிறாள்.
தோழீ! இதுகாண் அவர் எனக்குத் தந்துபோனது என்கிறாள்,
கண்ணாலே பார்த்துச் சிகித்ஸை பண்ணத்தக்க நோயையன்று கொடுத்தது;
ஸர்ப்பம் ஊர்ந்தாற்போலே உள்ளுக்குள்ளே ஸஞ்சாரியாயிருக்கின்ற ப்ரேமவியாதியைத் தந்துபோனார்.
“தக்கார் பலர் தேவிமார் சாலவுடையீர்“ என்கிறபடியே அவர்க்குத் தேவிமார் மற்றும் பலருண்டாகிலும்
அவர்களை அவர் பொருள் படுத்தவேயில்லை; என்னொருத்திக்கே ஸர்வ ஸ்தானமாகக் கொடுத்தாராயிற்று.

அவர் கொடுத்ததற்கு நீ ஏதேனும் பிரதிஸம்பாவனை செய்ததுண்டோ? என்று தோழிகேட்க,
“என்னொளிவளையும் மாநிறமுங் கொண்டாரிங்கே“ என்கிறாள்.
நான் கொடுக்கவேண்டிற்றுண்டோ?
அவர்தாம் கொள்ளை கொள்ளிக்குறும்பராயிற்றே; தாமே கொள்ளைகொண்டுபோனார்.

கீழ்ப்பாட்டில் ‘கைவளையும் மேகலையுங் காணேன்“ என்ற விடத்திற்கொண்ட அர்த்தத்திற்கு
எதிரான அர்த்தம் இங்குக்கொள்ளவேண்டும்.
அங்கு ஸம்ச்லேஷத்தாலுண்டான பூரிப்பு; இங்கு விச்லேஷத்தாலுண்டான இளைப்பு.

ஏற்கனவே பூரிப்பினால் வளைகள் வெடித்துப் போயிருக்க, என்னொளி வளையைக் கொண்டார் என்று
இங்குச் சொல்வதற்கில்லையே; கையில் வளையிருந்தாலன்றோ கொண்டாரென்னலாம் என்று சிலர் சங்கிக்கக்கூடும்;
வளைகொண்டாரென்றதில் தாற்பரியமாகிய உடலிளைப்புமாத்திரமே இங்கு விலக்ஷிதமென்று கொள்க;
உடல் ஈர்க்குப்போல இளைக்கும்படி செய்துவிட்டாரென்றவாறு.

அஹங்காரமமகாரங்கள் நன்கு ஒழியப்பெற்றவர் தம்வாயாலே ‘என்னொளிவளை‘ என்னலாமோ? என்னில்;
ஸம்ச்லேஷகாலத்தில் இந்த வளையும் நிறமும் காதலனுடைய கொண்டாட்டத்திற்கு மிகவும் உறுப்பாயிருந்ததனால்
அவனுக்கு ஆதரணீயமானது என்னும் வழியாலே தமக்கு ஆதரணீயமாகக் குறையில்லை என்க.

கூடியிருக்குங்காலத்தில் நாயகன் ‘இதுவொரு வளையிருக்கு மழகு என்னே! ;
சேர்த்தியால் வந்த ஒளியிருக்குமம்படி என்னே; வடிவில் நிறமிருக்கும்படி என்னே!‘ என்று பலகாலும் வாய் வெருவுவது
வழக்க மாகையாலே அதனை அநுவாதம் செய்கிறவத்தனை.

இங்கே யென்று
தான் வழிபறியுண்ட விடத்தைக் காட்டுகிறாள்;
மைவண்ணநறுங்குஞ்சியில் ‘இங்கே‘ என்று தான் நிதியெடுத்த விடத்தைக் காட்டினள்;
இப்பாட்டில் ‘இங்கே‘ யென்று
நிதியிழந்தவிடத்தைக் காட்டுகிறாள். நான் வழிபறிக்க வந்து வழிபறியுண்டேனென்கிறாள்.

நங்காய்! உன் ஒளிவளையும் மாநிறமுங்கொண்டு அவர் போகிறபோது உம்முடைய ஊர் ஏதென்று கேளாவிட்டதென்?
என்று தோழிகேட்க; அது நான் கேட்கவேண்டிற் றில்லை;
பிரிவில் தரித்திருக்கைக்காகத் தாமே சொல்லிப் போனாரென்கிறாள் தெள்ளூருமித்யாதியால்.
தெளிந்து தெங்கினின்றும் பெருகிவாரா நின்றுள்ள தேனை நுகர்ந்து சேல்மீன்கள் உகளும்படியான
திருவரங்கம் நம்மூர் என்று சொல்லிப்போனார்.

‘என்ஊர்‘ என்றாவது, ‘உன் ஊர்‘ என்றாவது சொல்லாமல் ‘நம்மூர்‘ என்றதில் இவளுக்கு ஒரு ஆநந்தம்.
என்னூர் என்றால் அவனுடைய ஆச்ரித பாரதந்திரியம் குலையும்;
உன்னூர் என்றால் இவளுக்கு ஸ்வரூப ஹாநியாகும்.
இரண்டு தலைக்கும் பாங்காக நம்மூர் என்று சொல்லிப் போனார்.
“திருமந்த்ரம்போலே இருவர்க்கும் பொதுவானவூர்“ என்று வியாக்கியான ஸ்வாரஸ்யம் நோக்குக.

அப்படி அவர் கருணையற்றுப் பிரிந்துபோகச் செய்தேயும் அவருடைய வடிவின் போக்யதை
இவளைக் கனக்க ஈடுபடுத்தியிருக்கையாலே கள்ளூரும்பைந் துழாய் மாலையானை யென்று வாய்வெருவுகின்றாள்.
தோளிலிட்ட தனிமாலையுந் தாமுமாய் அவர் இருந்த இரும்பை நீ காணப்பெற்றிலையே தோழீ! என்கிறாள்.
அவ்வூர் படுமதெல்லாம் அவருடம்பும் படுகிறது காண்.
தெள்ளூருமிளந்தெங்கின் தேறல் அவ்வூர்த் திருவீதிகளிலே வெள்ளமிடுமாபோலவே
அவருடம்பும் பைந்துழாய்மாலையின் மதுவெள்ள மொழுகப்பெற்றிருந்தது.

கனவிடத்தில் யான் காண்பன் =
கனவு என்றது ஸ்வப்நத்தையாகவுமாம்; இவ்விபூதியின் வாழ்க்கையை ஸ்வப்நபர்யாயமாக ஞானிகள்
அத்யவஸிப்பராகையாலே கனவிட மென்று இவ்விபூதியைச் சொல்லிற்றாகவுமாம்.
அவர் கூடவே கலந்து வாழ்கிற பாவனையைக் காட்டிக் கொண்டிருக்குமளவிலே, மறைந்திருந்த பெரிய திருவடி வந்து
“வந்த காரியம் தலைக்கட்டிற்றே, இனி யெழுந்தருளலாகாதோ“ என்று நிற்க, அவன் மேலேறிப் போகப் புறப்பட்டார்;
இத்தனை காலமும் நம் கைச்சரக்காயிருந்தவர் நாம் ஒரு வார்த்தை சொன்னால் கேளாதொழிவரோ வென்று நினைத்து
“புள்ளூருங்கள்வா! நீபோகேல்“ என்று சொல்லியும் இங்ஙனே வருத்தப்பட வேண்டிய நிலைமைதானேயாயிற்று.
ஸம்ச்லேஷத்துக் கடுத்தபடி விச்லேஷம் விளைந்தாலல்லது ஸாத்மியாது என்பது அவருடைய கருத்துப்போலும்.
அதனை நினைந்து ஆறியிருக்கப்போமோ நமக்கு? துடிப்பதே தொழிலாயிற்று என்கிறாள்.

நிலமல்லா நிலத்திலே இப்படி நெடும் போது நிற்கலாமா என்று பெரிய திருவடி தூக்கிக் கொண்டு போக போயினான்
உபயவிபூதி நாதன் போகும் பொழுது எனக்கு தந்து போன செல்வம் என்ன -என்ன
உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து
தக்கார் பல தேவிமார் சால உடையவர் என் ஒருத்திக்குமே என்று இத்தை கொடுத்து போந்தான் -சர்வ ஸ்வதானமாக —

நீ ஏதேனும் பிரதி சம்பாவனை செய்தது உண்டோ -என்ன
என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
நான் கொடுக்க வேண்டாம்
அவனே கொள்ளை குறும்பன் அன்றோ
தாமே கொள்ளை கொண்டு போனார்
இங்கு விஸ்லேஷத்தால் உண்டான இளைப்பு
முன்பு சம்ஸ்லேஷத்தால் உண்டான பூரிப்பு

அஹங்காரம் மமகாரங்கள் ஒழிந்தவர்
என் ஒளி வளை-என்னலாமோ என்னில்
சம்ஸ்லேஷ தசையில் அவனுக்கு ஆதரணீயம் என்னுமத்தால் உத்தேச்யம்
இது ஒரு வளை இருக்கும் அழகு என்ன
இது ஒரு சேர்த்தி அழகு என்ன
இப்படி அவன் வாய் வெருவினதை அனுவாதம் செய்கிறாள்

இங்கே
வழி பரியுண்ட இடத்தை காட்டுகிறாள்
மை வண்ண நறும் குஞ்சி பாசுரத்தில்
இங்கே
நிதி எடுத்த இடத்தை காட்டினாள்
இதில் நிதி இழந்த இடத்தை காட்டுகிறாள்-

போகும் பொழுது அவரே-தெள்ளூரும் -இத்யாதி — நம்மூர்
என்னூர் என்றால் ஆஸ்ரித பாரதந்த்ர்யம் குலையும்
உன்னூர் என்றால் இவளுக்கு ஸ்வரூப ஹானியாகும்
திரு மந்த்ரம் போலே இருவருக்கும் பொதுவான ஊர்

பிரிந்து போகும் பொழுதும் வடிவு அழகின் போக்யதை கனக்க ஈடுபடுத்தியது
கள்ளூறும் பைந்துழாய் மாலையானை
தோளில் இட்ட தனி மாலையும் தாமுமாய் இருந்த சேர்த்தி அழகை நீ காணப் பெறவில்லையே
தெள்ளூரும் இளம் தெங்கின் தேறல் அவ்வூர்த் திரு வீதிகளிலே வெள்ளம் இடுமா போலே
அவர் உடம்பும் பைந்துழாய் மாலையின் மது வெள்ளம் ஒழுகப் பெற்று இருந்தது

கன விடத்தில் யான் காண்பன்
ஸ்வப்னம்
இந்த விபூதியை சொல்லிற்று ஆகவுமாம்

மறைந்து இருந்த பெரிய திருவடி வந்து
வந்த கார்யம் தலைக் கட்டிற்றே-இனி எழுந்து அருளலாகாதோ
போகப் புறப்பட்டார்

நம் கைச் சரக்கு-என்று நினைத்து
புள்ளூறும் கள்வா நீ போகேல்
சம்ஸ்லேஷம் விஸ்லேஷத்துடன் தலைக் கட்டும்
அதனை நினைத்து ஆறி இருக்கப் போமோ
துடிப்பதே தொழில் ஆயிற்று-

———————————————————————————

“புள்ளூருங்கள்வா! நீ போகேலென்பன் என்றாலுமிது நமக்கோர் புலவி தானே“ என்றாள் கீழ்ப்பாட்டில்;
அது கேட்ட தோழியானவள், ‘நங்காய்! பெரிய திருவடி வந்து தூக்கிக் கொண்டு போய்விட்டானென்கிறாயே;
அந்தப் பெரிய திருவடி தானும் உனக்கு அடங்கினவனல்லனோ?
“ஒருவன் அடிமை கொள்ளும் போது க்ருஹிணிக்கென்றன்றே ஆவணை யோலை எழுதுவது;
ஆகிலும் பணிசெய்வது க்ருஹிணிக்கிறே“ என்ற நியாத்தாலே கணவனுக்கு அடிமைப் பட்டாரெல்லாரும்
மனைவியர்க்கும் அடிமைப் பட்டிருத்தல் முறைமை யன்றோ;
பகவானுக்கு அடிமைப் பட்டபோதே உனக்கும் அடிமைப் பட்டவனாயன்றோ அக்கருடனிருப்பது;
அப்படி விதேயனான அவனை நீ போகேலென்று நியமிக்கக் கூடாதோ?‘ என்று கேட்க;
ஆமாம் தோழீ!, அவன் ஒருவனுமேயாகிலன்றோ நியமிக்கலாம்; நித்ய விபூதியிலுள்ளரடங்கலும் வந்து சூழ்ந்துகொண்டார்கள்;
அவர் தாமும் முன்புபோலின் றியே இப்போதுண்டான விலக்ஷணமான மேன்மையினாலே எதிர்த்துப் பேச
வொண்ணா தபடியாயிருந்தார்; அதனாலே சென்று கிட்டவும் வார்த்தை சொல்லவும் அருமையாயிருந்தது!,
என் செய்வேன் என்கிறாள்.

இருகையில்சங் கிவைநில்லா எல்லே பாவம் இலங்கொலிநீர் பெரும்பெளவம் மண்டி யுண்ட,
பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம் பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ
ஒருகையில்சங் கொருகைமற் றாழி யேந்தி உலகுண்ட பெருவாய ரிங்கே வந்து,என்
பொருகயல்கண் ணீரரும்பப் புலவி தந்து புனலரங்க மூரென்று போயி நாரே.

பதவுரை

உலகு உண்ட பெரு வாயர்–பிரளயகாலத்தில் உலகங்களை யெல்லாம் அமுதுசெய்த பெரிய திருவாயையுடைய வரும்,
இங்கே வந்து-இவ்விடத்தே வந்து
பொரு கயல்-ஒன்றோடொன்று போர்செய்கின்ற கயல் மீன்களைப் போன்ற
என் கண்-எனது கண்களிலிருந்து
நீர் அரும்ப–நீர்த் துளிகள் துளிக்கும்படி
புலவி தந்து–விரஹ வேதனையை யுண்டாக்கி,
இலங்கு ஒலி நீர் பெரு பௌவம் மண்டி உண்ட பெரு வயிற்ற கரு முகில் ஒப்பர்-விளங்குகின்ற ஓசையை யுடைய
நீர் நிறைந்த பெருங்கடலில் ஆழ்ந்து நீரைப் பருகின பெருவயிற்றை யுடைய காளமேகத்தின் நிறத்தை ஒத்தவருமான பெருமாள்
பெருந்தவத்தர் அருதவத்து முனிவர் சூழ-பரமபக்தி யுக்தரான ஸ்ரீவைஷ்ணவர்களும் மஹா தபஸ்லிகளான ரிஷிகளும் சூழ்ந்து நிற்க
ஒரு கையில்-ஒரு திருக்கையிலே
சங்கு-திருச்சங்கையும்
மற்றொரு கை–மற்றொரு திருக் கையிலே
ஆழி-திருவாழியையும்
ஏந்தி-தரித்துக் கொண்டு
புனல் அரங்கம் ஊர் என்று-நீர்வளம் பொருந்திய திருவரங்கம் தம்மூர் என்று சொல்லிவிட்டு
போயினார்-அகன்றுபோனார்;
(அதுவே காரணமாக)
இரு கையில்-(எனது) இரண்டு கைகளிலும்
சங்கு இவை நில்லா-இந்தச் சங்குவளைகள் கழன்றொழிந்தன
எல்லே பாவம்–என்ன மஹா பாபமோ!.

இருகையிற் சங்கு இவை நில்லா =
போகிறவர் தாம் மாத்தி்ரம் போகையன்றியே என்கையில் வளைகளையுங் கொண்டுபோனார்.
அவர் போய்விட்டாலும் அவர் உகந்த வளைகளாவது கையிலிருந்தால் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாகிலும்
ஒருவாறு போதைப் போக்கலாமென்று நினைத்துக் கையில் வளையைப் பார்த்தாள்;
வளை அவர்க்கு முன்னே போய் நின்றது. இன்னொரு கையிலாவது வளை தங்கியிருக்கிறதோவென்று பார்த்தாள்;
அதுவும் அதுக்கு முன்னே போய் கிடந்தது; அந்தோ! என்செய்வேன்!, இருகையிற் சங்கிவை நில்லா வென்கிறாள்.

‘சங்கு நில்லா‘ என்னாமல் ‘சங்கு இவை நில்லா‘ என்றதற்குக் கருத்தென்னன்னில்;
அவர் நில்லாதொழிந்தால் இவையும் நில்லாதொழிய வேணுமோ?
அவர் சேஷியாகையாலே போகிறார்; எனக்கு சேஷமான இவையும் நில்லாதே போகவேணுமோ?
அவர் சேதநராகையாலே என்னிடத்தில் ஏதேனுங் குறைகண்டு போகலாம்; அசேதனமான இவையும் போகவேணுமோ?
வந்து கலந்தவராகையாலே போகிறார் அவர்; ஸஹஜமான இவையும் போகவேணுமோ?
நம் கைக்கு அடங்காதவராகையாலே அவர் போனார்; நம் கைக்ககு அடங்கின இவையும் போகவேணுமோ?
அவர் நிற்கிலும் இவை நிற்கின்றனவில்லையே யென்கிறாள்.
போகேலென்னச் செய்தேயும் அவர் போனாப்போலே இவையும் பலகால் எடுத்தெடுத்துக் கையிலேயிடச் செய்தேயும்
கழலுகின்றமை தோற்றும் நில்லா என்றதில்.

எல்லே பாவம்! =
ஈதென்ன கஷ்டகாலம்!? சேதனப்பொருளோடு அசேதனப் பொருளோடு வாசியற எல்லாம்
என்னைக் கைவிடும்படியாக என்ன பாபம் பண்ணினோனோ வென்கிறாள்.
கைப்பட்டதும் போகும்படியான பாபத்தை யன்றோ பண்ணினே னென்கிறாள்.

தன்னோடு கலந்து பிரிந்துபோகிறபோது அவருடைய வடிவிற்பிறந்த புதுக்கணிப்பைச் சொல்லுகிறாள்
இலங்கொலி நீர்ப் பெரும் பௌவம் மண்டியுண்ட பெருவயிற்ற கருமுகிலேயொப்பர் வண்ணம் என்று.
தன்னை வெறுந்தரையாக்கினபடிக்கு ஒரு க்ருஷ்டாந்த மிட்டுச் சொல்லுகிறாள் போலும்.
இயற்கையான வொளிமிக்க கம்பீரமான மஹாமுத்ரத்தை வெறுந்தரையாகப் பருகி நீர் கொண்டெழுந்த காளமேகம் போலே
காண் போகிற போது அவரது வடிவு இருந்தபடி.

கீழ்ப்பாட்டில் “என்னொளிவளையும் மாநிறமுங் கொண்டார்“ என்றாளே;
இங்கு நின்றுங் கொண்டதெல்லாம் அங்கே குடிகொண்டதாக வேணுமே, அது தோன்றச் சொல்லுகிறபடி.
பரகாலநாயகி, தன்னைப் பெருங்கடலாகவும் அவரைக் காளமேகமாகவுங் கருதி இது சொல்லுகிறாளென்க.
மேகமானது பெரிய அபிநிவேசத்தோடே வந்து கடலில் ஸாரத்தைக் கவர்ந்து செல்வதுபோல
அவரும் இத்தலையில் ளெஸந்தர்ய ஸாகரத்தைக் கவர்ந்து சென்றமை சொன்னபடி.
அதுதானும் அவரது வடிவிலே நன்கு தோன்றியிருக்கையாலே ஸ்பஷ்டமாயிற்று.

பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ண மென்று பெருமாளுடைய இயற்கையான அழகு சொல்லுகிறதன்று;
தற்காலத்திலுண்டான அழகைச் சொல்லுகிறாள்.
ஐயோ! மேகம் முகக்குமிடமாகப் பெற்றேனே. மேகம் முகந்து பெய்யுமிடமாகப் பெற்றிலேனே! என்கிற வருத்தம்
‘மண்டி யுண்ட‘ என்றதில் தொனிக்கும்.
அன்றியும்,
இத் தலையிலுள்ள தெல்லாவற்றையும் கொள்ளை கொண்டும் இன்னமும் அவருடைய வயிறு நிரம்பவில்லையே,
அவருக்கு த்ருப்தி பிறக்க வில்லையே! என்பது ‘பெருவயிற்ற‘ என்பதில் தொனிக்கும்.

அவர் பிரிந்து போகிறபோது வடிவில் புகர் இருந்தபடியும் சுற்றும் புடைசூழ நின்றார்
பெருவெள்ளமிருந்தபடியும் மேன்மை யிருந்தபடியும் தோழீ! நீ காணப் பெற்றிலையே!,
அவற்றை என் சொல்லவல்லேனென்வாய்கொண்டு?
(பெருந்தவத்த ரருந்தவத்து முனிவர் சூழ ஒரு கையிற் சங்கொருகை மற்றாழியேந்தி உலகுண்ட பெருவாயர் போயினார்.)
ஒருவ ரிருவராய் வந்து கிட்டினார்களோ?
கடலில் அமுதந் தோன்றினவன்று அதனை அமரர் சுற்றிலும் சூழ்ந்துகொண்டாப்போலே காண் என்னைப் பிரிந்து போகிறபோது
அவரைப் பரிகாரம் வந்து சூழ்ந்துகொண்டது.
வைகுண்ட து பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி;, ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ * என்று
சொல்லப்பட்ட பக்தர்களும் பாகவதர்களும் வந்து சுற்றிலும் சூழ்ந்து கொண்டார்கள்.
அந்தப்பெருங் கூட்டத்தை விலக்கிக் கொண்டு நான் கிட்டிச்சென்று அவரைப் போகேலென்று சொல்வது எங்ஙனே?

அந்தப் பெருவெள்ளத்தை ஒருபடி நீஞ்சிக்கொண்டு சென்றோமேயாகிலும்,
“குழுமித் தேவர்குழாங்கள் கைதொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு“ என்னப்பட்ட
அவருடைய திருவுரு கண்ணால் முகக்கலாயிருந்ததோ?
கையுந் திருவாழியுமாய்நின்ற மேன்மை கிட்டலாம்படியிருந்ததோ?

(ஒருகையிற் சங்கு ஒருகை மற்றாழியேந்தி)
அவர்தாம் வந்த போதிலே என்கையைப் பிடித்த கையும் என்காலைப் பிடித்த கையும் இப்போது சங்கும் சக்கரமும் பொலிய நின்றனவே!.
கலந்தபோது அவர்க்கு இருந்த நீர்மைக்கு எல்லையில்லாதாப்போலே காண்
போகிறபோதிருந்த மேன்மைக்கு எல்லை யில்லாதிருந்தபடியும்.
“வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு, படை போர்புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே“ என்று
நெடுந்தூரத்திலே நின்று அந்த மேன்மைக்குப் பல்லாண்டு பாடும்படியா யிருந்ததத்தனையன்றி
அணுகிச் சென்று வாய்திறக்க வழியுண்டாயிருந்ததோ வென்கிறாள்.

(உலகுண்ட பெருவாய ரிங்கேவந்து)
இத்தால் பிரளமாகிற பெரிய ஆபத்துக்கு உதவினவர் என்று சொல்லுகிறதன்று,
அவர் தன்னோடு கலக்க வருகிறபோது இருந்த ரீதியைப்பற்றிச் சொல்லுகிறாள்.
பிரளய காலத்திலே உலகங்கட்கெல்லாம் தம்மையொழியச் செல்லாமையிருந்தாப் போலே
என்னை யொழியச் செல்லாதவராயன்றோ அவர் ஸம்ச்லேஷிக்கவந்தபோதில் இருந்தபடி என்கை.

பொருகயற்கண் நீரரும்பப் புலவிதந்து =
அவர் வந்து கலந்ததனால் நான்பெற்ற பேறு இதுகாணென்கிறாள்.
“கண்ணீர் பெருக“ என்னாமல் ‘அரும்ப‘ என்றதனால் விரஹ சோகாக்நியாலே உள்ளூலர்ந்து கிடக்கின்றமை தோன்றும்.
உள்ளே உலர்ந்து கிடக்கும் போது கண்ணீர் பெருகுவதெங்ஙனே?

(புலவி தந்து)
தன்னைக் கிட்டினாரை “வீவிலின்பம் மிகவெல்லை நிகழ்ந்தனன்“ என்கிறபடியே
ஆனந்தத்தின் எல்லையிலே நிறுத்த வல்லவரான அவர் காண் எனக்கு இப்போது துயரத்தை விளைத்தது.

(தந்து)
உபயவிபூதிநாதரான அவர் தம் முடைய பணப்பையில் நின்றும் அவிழ்த்துத் தந்த செல்வம்
இதுகாணென்கிறாள் போலும்.

அவர் தமக்கு நெஞ்சில் இரக்கமில்லாமை வந்தேறியானாலும் இயற்கையிலே கருணை யுண்டாகையாலே
அதனால் தூண்டப் பெற்று ஒருவார்த்தை சொல்லிப்போனார் காண்;
பிரிவில் நான் தரித்திருக்க வேணுமென்று பார்த்து ‘நம்ஊர் திருவரங்கம் பெரியகோயில்‘ என்று
அழகும் போன போதை யழகும் தோழீ! நீ காணப் பெற்றிலையே! என்றாளாயிற்று.

அந்த பெரிய திருவடி உனக்கு அடங்கினவன் அல்லனோ
ஒருவன் அடிமை கொள்ளும் போது க்ருஹிணிக்கு என்று அன்றே ஆவணை ஓலை எழுவது
ஆகிலும் பணி செய்வது க்ருஹிணிக்கு இறே
அவன் ஒருவன் மட்டும் இல்லையே நியமிக்க
நித்ய ஸூரிகள் அனைவரும் வந்து சூழ்ந்து கொண்டார்களே
விலஷணமான மேன்மையினாலே எதிர்த்து பேச ஒண்ணாத படி இருந்தாரே

இரு கையில் சங்கு இவை இல்லா –
அவர் போனாலும் அவர் உகந்த வளையல்கள் இருந்தால் போதைப் பாக்கலாமே
ஒரு கை மட்டும் இல்லை
இரு கைகளிலும் இல்லை
இவர் இல்லாது ஒழிந்தாலும் இவையும் நில்லாமல் போகவோ சங்கு -இவை நில்லா
சேஷியான அவர் போகலாம்
சேஷமான இவையும் போகலாமோ
சேதனர் -குறை கண்டு போகலாம்
அசேதனங்கள் இவை போகலாமோ
வந்து கலந்தவர் போகலாம்
சகஜமான இவையும் போகலாமோ
கைக்கு அடங்காதவர் போகலாம்
கைக்கு அடங்கின இவையும் போகலாமோ
அவன் நிற்கிலும் இவை நிற்காமல் போக வேண்டுமோ
போகேல் என்ன அவர் போனது போல இவையும் பல கால் எடுத்து எடுத்து பூண்டாலும் கழன்று போகின்றனவே-

எல்லே பாவமே

இலங்கு ஒளி நீர்ப் பெரும் பௌவம் மண்டியுண்ட பெரு வயிற்ற
கரு முகிலே யொப்பர் வண்ணம்
பிரிந்து போகும் பொழுது வடிவில் பிறந்த புதுக் கணிப்பை திருஷ்டாந்தம் இட்டு சொல்கிறார்
ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் என்றாள் கீழ்
இங்கு நின்றும் கொண்டது எல்லாம் அங்கு குடி இருக்க வேணுமே
தன்னை பெரும்கடல் -அவர் காளமேகம் -மேகம் அபி நிவேசதுடன் கடல் சாரம் கவர்ந்து
போவது போலே இவள் உடைய -சௌந்தர்ய சாகரம் கொள்ளை கொண்டு
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் -என்கிறாள்
ஐயோ மேகம் முகக்கும் இடமாகப் பெற்றேனே
மேகம் முகந்து பெய்யும் இடமாக பெற்றிலேனே
என்பதால் மண்டி யுண்ட என்கிறாள்
அன்றிக்கே
இவ் வளைவையும் கொள்ளை கொண்டும் வயிறு நிரம்ப வில்லையே -திருப்தி இல்லையே
பெரு வயிற்று-

அவர் பிரிந்து போகும் பொழுது வடிவில் பிறந்த புகர் வெள்ளம் இருந்த படியை நீ காணப் பெற வில்லையே
பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகுண்ட பெரு வாயர் போயினர்
ஓர் இருவராய் வந்து கிட்டினார்களோ
கடலில் அமுததுக்காக அன்று அமரர் சூழ்ந்தது போலே
வைகுண்ட து பரே லோகே ச்ரியா சார்த்தம் ஜகத்பதி
ஆஸ்தே விஷ்ணு ர சிந்த்யாத்மா பக்தைர் பாகவ தைஸ் சஹ
பக்தர்களும் பாகவதர்களும் சூழ
விலக்கி கிட்டே சென்று போகேல் சொல்ல முடியுமா

குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு -கண்ணால் முகக்கலாய் இருந்ததோ
கையும் திரு ஆழியுமாய் இருந்த மேன்மை கிட்டலாம் படி இருந்ததோ
என் கையைப் பிடித்த கையும் காலைப் பிடித்த கையும் சங்கு சக்கரம் ஏந்தி இருக்கின்றனவே
கலந்த போது நீர்மைக்கு எல்லை இல்லாதவோ பாதி
இப்பொழுது மேன்மைக்கு எல்லை இன்றி இருந்ததே
வடிவார் சோதி -சுடர் ஆழியும் பல்லாண்டு –அப்பாஞ்ச ஜன்யமும் பல்லாண்டு -என்று
மேன்மைக்கு மங்களா சாசனம் பண்ணுமது ஒழிய அணுகி வாய் திறக்கவோ

உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து
பிரளய காலத்தில் தன்னை அன்றி செல்லாத இருந்த உலகமோபாதி
என்னை ஒழிய செல்லாதவராய் இங்கே சம்ஸ்லேஷிக்க வந்தார்

பொரு கயல் கண் நீர் அரும்ப புலவி தந்து
கலவியின் பேறு இது தான்
கண்ணீர் பெருக இல்லை அரும்ப
விரஹ சோக அக்னியால் உள்ளுலர்ந்து கிடக்கின்றாள்

புலவி தந்து
தன்னை கிட்டினாரை-வீவில் இன்பம் மிக வெள்ளை நிகழ்நதனன் -என்கிறபடி
ஆனந்தத்தின் எல்லையில் நிறுத்த வல்லவாரன அவர்
என்னை துயரத்தின் எல்லையில் நிறுத்தி

தந்து
உபய விபூதி நாதர் தனது பணப்பையில் நின்று அவிழ்த்து எனக்கு செல்வம் கொடுத்து அருளினார் இந்த செல்வம் பாராய்

பிரியில் தான் தரித்து இருக்க கருணை உடன்
நம்மூர் திருவரங்கம் பெரிய கோயில் -என்கிற
தர்ம வார்த்தை சொல்லிப் போந்தார்
சொல்லும் போது திரு அதர அழகையும்
போன போதை அழைகையும் தோழி நீ காணப் பெறவில்லையே-

————————————————————————–

தலைமகன் தன் பக்கலிலுள்ளவை அனைத்தையுங் காட்டி என் பக்கலிலுள்ளவை
யெல்லாவற்றையுங் கொள்ளை கொண்டு போயினானென்கிறாள்–

மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்,
தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி
என்னலனும் என்னிறையும் எஞ்சிந் தையும் என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு,
பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலி னூடே புனலரங்க மூரென்று போயி னாரே.

பதவுரை

மின் இலங்கு திரு உருவும்-மின்னல்போலப் பளபளவென்று விளங்குகின்ற திருமேனியும்
பெரிய தோளும்-பெரிய திருத்தோள்களும்
கரி முனிந்த கைத் தலமும்-குவலயாபீடமென்கிற யானையைச் சீறிப்புடைத்த திருக்கைகளும்
கண்ணும்–திருக் கண்களும்
வாயும்–திரு அதரமும்
தன் அலர்ந்த நறு துழாய் மலரின் கீழே–தன்னிலத் திற்காட்டில் செவ்வி பெற்றதாய்ப் பரிமளம் மிக்கதான திருத்துழாய் மாலையின் கீழே
தாழ்ந்து இலங்கு–தாழ்ந்து விளங்குகின்ற
மகரம் சேர் குழையும்–மகர குண்டலங்களுமாகிற இவற்றை
காட்டி–ஸேவை ஸாதிப்பித்து
என் நலனும்–என்னுடைய அழகையும்
என் நிறைவும்–என் அடக்கத்தையும்
என் சிந்தையும்–என் நெஞ்சையும்
என் வளையும்–என் கை வளைகளையும்
கொண்டு–அபஹரித்துக் கொண்டதுமன்றி
என்னை ஆளும் கொண்டு–என்னை அடிமை யாக்கிக் கொண்டு,
பொன் அலர்ந்த–பொன் போல் மலர்ந்த
நறு–பரிமளம் மிக்க
செருந்தி பொழிலின் ஊடே–ஸுரபுன்னைச் சோலையினிடத் தேயிருந்து
புனல் அரங்கம் ஊர் என்று போயினார்–நீர் வளம் மிக்க திருவரங்கம் தம் மூரென்று சொல்லிப் போய் விட்டார்!.

மின்னிலங்கு திருவரங்கம் =
மின் போலே விளங்கா நின்றுள்ள திருமேனியை முதலிலே காட்டினாரென்கிறாள்.
“கார்வண்ணந் திருமேனி“ என்றும்
“கருமுகிலேயொப்பர்வண்ணம்“ என்றும்
“முகிலுருவமெம்மடிகளுருவந்தானே“ என்றுங்கீழே சொல்லி யிருக்க,
இங்கே ‘மின்னலங்கு திருவுரு‘ என்றது என்னனெனில்;
ஔதார்யத்திற்கும் விடாய்தீர்க்குந் தன்மைக்கும் மேகத்தை ஒப்புச் சொல்லிற்றுக் கீழ்;
எதிர்விழி விழிக்க வொண்ணாதபடியான தன்மையை நோக்கி இங்கு ‘மின்னலங்கு திருவுரு‘ என்றது.

ஆனாலும் காளமேகத்தின் நிறமேயன்றோ வடிவின்நிறமென்னில்;
திருவாழியாழ்வானுடைய புகர் திருமேனியெங்கும் பரவியிருக்கையாலே இங்ஙனே சொல்லக் குறையில்லை யென்க.
அருண கிரணத்தாலே திருப் பல்லாண்டும் நோக்குக.
“ஒருகையிற்சங்கொருகை மற்றாழியேந்தி உலகுண்ட பெருவாயரிங்கேவந்து“ என்று கீழே சொல்லிற்றும் இங்கே நினைக்கத்தக்கது.
பெரிய மேன்மையைக் காட்டினமை சொல்லிற்றாயிற்று.

பெரியதோளும் =
காலமுள்ளதனையும் அனுபவித்தாலும் வேறொரு அவயவத்தில் போக வொட்டாதபடி துவக்க வல்ல
அளவிறந்த போக்யதை வாய்ந்த திருத்தோள்கள்.
“தோள் கண்டார் தோளே கண்டார்“ என்னும்படியானவை.
ஆகவே, பெரிய என்று போக்யதையிலுள்ள பெருமையைச் சொன்னபடி.

இனி, “பாஹுச்சாயாமவஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மந;“ என்கிறபடியே
தோள் நிழலிலே உலகமெல்லாம் ஒதுங்கினாலும் ஒதுங்கினவர்கள் சுருங்கி
நிழலே மிக்கிருக்கும்படியான பெருமையைச் சொல்லிற்றாகவுங் கொள்ளலாம்.

கரிமுனிந்த கைத்தலமும் =
கம்ஸனால் மதமூட்டி நிறுத்தப்பட்டிருந்த குவலயாபீட மென்கிற யானையைத் தொலைத்த மிடுக்க விளங்க நின்ற திருக்கைகள்.
ஒரு விசேஷணமிட வேண்டாதே இயற்கையாகவே பரமபேக்யமா யிருந்துள்ள கண்ணும் வாயும்.

(தன்னலர்ந்த நறுந்துழாய் இத்யாதி)
தன்னிலத்திற் காட்டிலும் செவ்வி பெற்று நறுமணம் மிக்க திருத் துழாய் வளையத்தினருகே
திருத்தோளளவுந் தாழ்ந்து விளங்குகின்ற மகர குண்டலங்களும்,
ஆக இவற்றையெல்லாம் ஸேவை ஸாதிப்பித்து.

(என்னலனு மென்னிறைவு மென்சிந்தையும் என்வளையுங் கொண்டு என்னையாளுங் கொண்டு)
ஸர்வஸ்வதானம் பண்ணுவாரைப்போலே வந்து ஸர்வஸ்வத்தையுங் கொள்ளை கொண்டார் என்கிறாள்.
நலன் – நலம்; மகரனகரப்போலி. குணம் என்றபடி.
நாண் மடம் அச்சம் பயிர்ப்பு என்கிற ஆத்ம குணங்களையும், அழகு மென்மை முதலிய தேஹ குணங்களையும் சொன்னபடி.

(நாணமாவது, தகாத காரியத்தில் மனமொடுங்கிநிற்பது.
மடமாவது, எல்லாமறிந்தும் அறியாதுபோலிருத்தல்.
அச்சமாவது, மிகச்சிறிய காரணத்திலும் மனம் நடுங்குதல்.
பயிர்ப்பாவது, பரபுருஷர்களின் ஆடை முதலியன தம்மேற்பட்டால் அருவருப்புக் கொள்வது.)

ஆக
இக்குணங்களையும் அழகு முதலியவற்றையுங் கொள்ளை கொண்டாரென்றது,
வைவர்ணியப்படுத்தி வாய் பிதற்றச் செய்தாரென்றபடி.

“என்னலனும் நிறைவும் சிந்தையும் வளையுங் கொண்டு“ என்று சொல்லாதே
‘என்‘ என்பதை ஒவ்வென்றிலுஞ் சேர்த்து ‘என்னிறைவும் என்சிந்தையும் என்வளையும்‘ என்று சொல்லுவானென்? என்னில்;
இதில் ஒரு ஸ்வாரஸ்யமுண்டு; அவருடைய ஆபரணங்களையுங் கொள்ளை கொள்ளப் பிறந்தவள் நானாயிருக்க,
என்னுடையவற்றை அவர் கொள்ளை கொண்டது என்ன அற்புதம்! காண்மின்!! என்று எடுத்தெடுத்துக் காட்டுகிறபடி.

என்னையாளுங்கொண்டு =
என் ஸர்வ ஸ்வத்தையும் அபஹரித்துக் கொண்டு போன மாத்திரமேயோ?
அவற்றைச் சுமந்துகொண்டு போவதற்கு. ஆளாகவும் என்னையே அமைத்துக் கொண்டபடி என்னே! என்கிறாள்.
ஒருவனுடைய வீட்டிலே கொள்ளை கொள்ளப் புகுந்து ஸர்வஸ்வத்தையும் பறித்து அவற்றை அந்த வீட்டுக்குடையவனது
தலையிலேயே வைத்துச் சுமக்கச் செய்து கொண்டு போமா போலே யிருந்ததீ! என்கிறாள்.
அன்றியே,
“கொம்மை முலைகளிடர்தீரக் கோவிந்தற்கோர் குற்றவேல்“ என்கிறபடியே
அவரோடு கலந்து பரிமாறின பரிமாற்றத்தையே அடிமையாக நினைத்திருக்கையாலே அதனைச் சொன்னபடியுமாம்.

இங்ஙனே மறுபடியும் ஒருகால் கொள்ளை கொள்வதற்கு ஆச்ரயம் இருக்கவேணுமே;
முதலே போய் விட்டால் பின்னையுங் கொள்ளை கொள்வதற்கு இடமில்லைபாகுமே.
‘உள்ளம். புகுந்தென்னை நைவித்து நாளுமுயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்“ என்று –
போகிற உயிரையும் போகவொட்டாமல் நிறுத்தி வைப்பது மேன்மேலும் ஹிம்ஸைகளைச் செய்வதற்கு ஆச்ரயம் வேணுமென்றாயிற்று.
அப்படியே, பின்னையும் கொள்ளை கொள்வதற்கு ஆச்ரயம் நிறுத்த வேண்டி –
(நான் ஸத்தை பெற்றிருப்பதற்காக) ஊரைச் சொல்லிப் போனாரென்கிறாள்;
பொன்போலேயலர்ந்து பரிமளம் மிக்கிருந்துள்ள பூவையுடைய ஸுர புன்னபை் பொழிலினூடே
உபய காவேரீ மத்தியத்திலுள்ள திருவரங்கம் பெரிய கோயில் நம்மூர் என்று சொல்லிக் கொண்டே போயினார் என்கிறாள்.

இங்கே வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்;-
“திருநகரியில் நின்றும் கோயிலளவுஞ் செல்லப் பொழிலாய்க் கிடந்ததோ வென்னில்;
ஒரு காளமேகம் வர்ஷித்துக் கொண்டு போகா நின்றால் கண்ட விடமெங்கும் தளிரும் முறியுமாகாதோ? என்று பட்டாருளிச் செய்வர்“ என்று.

முற்காலத்தில், விக்ரமசோழதேவன் என்பானொரு அரசன் தமிழில் ரஸிகனாயிருந்தான்;
அவனது ஸபையில் வைஷ்ணவ பண்டிதர்களும் சைவ பண்டிதர்களும் அடிக்கடி செல்லுவதுண்டு;
ஒருகால் இரு சமயத்து வித்வான்களும் கூடியிருந்த போது அவ்வரசன்
“தலைமகன் பிரிந்தபோது தலைவி இன்னாப்போடே சொல்லும் பாசுரம் எங்ஙனே யிருக்கிறது? சொல்லுங்கள், கேட்போம்‘
என்று இரு வகுப்பினரையுங் கேட்க,
ஸ்ரீவைஷ்ணவ வித்வான்
“மின்னலங்கு திருவுருவம் பெரியதோளும்“ என்று தொடங்கி இப்பாசுரத்தை யெடுத்துச் சொன்னார்;
சைவ வித்வான்
“எலும்பஞ்சாம்பலு முடையவனிறைவன்“ என்று தொடங்கி ஒரு செய்யுளைச் சொன்னான்;
இரண்டையுங் கேட்டு அரசன்
‘நெஞ்சில் கிலாய்ப்போடே சொல்லச் செய்தேயும் மின்னிலங்கு திருவுருவும் என்று நெஞ்சு பிணிப்புண்ணுமாறு
சொன்னவளே உண்மையில் தலைமையுடையவள்;
மற்றொருத்தி பிணந்தின்னி‘ என்றானாம்.

தன் பக்கல் உள்ள அனைத்தையும் காட்டி
என் பக்கல் உள்ளவற்றையும் கொள்ளை கொண்டான்

மின்னிலங்கு திருவுருவம்
கீழே கார் வண்ணன் -கரு முகில் வண்ணம் -என்றவர் மின்னிலங்கு திருவுரு
எதிர் விழி விழிக்க ஒண்ணாத படியான தசை
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -புகர் திரு மேனி எங்கும் பரவி
பெரிய மேன்மையை சொல்லிற்று ஆயிற்று

பெரிய தோளும்
கால தத்வம் உள்ளதனைத்தும் அனுபவித்தாலும் முடிக்க ஒண்ணாத அளவிறந்த போக்யதை
தோள் கண்டார் தோளே கண்டார்
பாஹூ ச்சாயா மவஷ்டப்தோ யஸ்ய லோகோ மகாத்மனா
ஒதுங்கினவர்கள் சுருங்கி நிழலே மிக்கு
பெருமையை சொல்லிற்று ஆகவுமாம்

கரி முனிந்த கைத்தலமும்
விசேஷணம் இடாத -இயற்கையாகவே பரம போக்யமாய் உள்ள திருக் கண்ணும் திரு வாயும்

தன்னலர்ந்த திருத் துழாய் இத்யாதி
தன்னிலத்தில் காட்டிலும் செவ்வி பெற்ற திருத் துழாய் வளையத்தின் அருளே
திருத் தோள்கள் அளவும் தாழ்ந்து விளங்குகின்ற திரு மகரக் குண்டலங்களும்

ஆகைய இவற்றை எல்லாம் சேவை சாதிப்பித்து

என்னலனும் -நலன் குணம் -நாணம் அச்சம் மடம் பயிர்ப்பு ஆத்ம குணங்களையும்
அழகு மென்மை தேக குணங்களையும் கொண்டான்
என் நிறைவும்
வைவர்ணியப் படுத்தி வாய் பிதற்ற செய்தான்
என் சிந்தனையும்
என் வளையும் கொண்டு
என்னை ஆளும் கொண்டு
சர்வ ஸ்வதானம் பண்ணுவாரைப் போலே வந்து
சர்வ ஸ்வத்தையும் கொள்ளை கொண்டான்
என் -ஒவ் ஒன்றிலும் சேர்த்து
அவருடைய
குணங்களையும்
பும்ஸ்வத்தையும்
நெஞ்சையும்
ஆபரணங்களையும்
கொள்ளை கொள்ள பிறந்தது இருக்க
என்னுடையவற்றை கொள்ளை கொண்ட அற்புதம் காணீர் இது இது என்று எடுத்து காட்டுகிறாள்

என்னை ஆளும் கொண்டு
கொள்ளை கொண்ட சர்வ ஸ்வத்தையும் சுமந்து போக ஆளாகவும் என்னை நியமித்து
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் -என்கிறபடியே
அவரோடு கலந்த பரிமாற்றமே அடிமை யாக நினைத்து சொல்கிறாள் என்னவுமாம்

மீண்டும் கொள்ளை கொள்ள ஆஸ்ரயம் வேணுமே
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர் பெய்து கூத்தாட்டுக் காணும்
நான் சத்தை பெற்று இருப்பதற்காக ஊர் பேரைச் சொல்லி போந்தான்
திரு நகரியில் நின்றும் கோயில் அளவும் செல்ல பொழிலாய் கிடந்ததோ என்னில்
ஒரு காள மேகம் வர்ஷித்துக் கொண்டு போகா நின்றால்
கண்டவிடம் எங்கும் தளிரும் முறியும் ஆகாதோ -பட்டர்

விக்கிரம சோழன் சபையில் தலைமகள் இன்னாப்புடன் சொல்லும் பாசுரம் -தலை மகன் பிரியும் பொழுது
சொல்லுங்கோள் கேட்போம் என்று ஸ்ரீ வைஷ்ணவ வித்வான்களையும் சைவ வித்வான்களையும் கேட்க
மின்னிலங்கு திரு வுருவும் பெரிய தோளும் -இப்பாசுரத்தை இவர்கள் சொல்ல
சைவ வித்வான் எலும்பும் சாம்பலும் உடையவன் என்று தொடக்கி ஒன்றை சொல்ல
இரண்டையும் கேட்ட அரசன்
நெஞ்சில் கிலாப்போடே சொல்லச் செய்தேயும் மின்னிலங்கு திரு வுருவம் என்று
நெஞ்சு பிணிப் புண்ணுமாறு சொன்னவளே உண்மையில் தலைமை உடையவள்
மற்றவள் பிணம் தின்னி -என்றானாம்-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திரு நெடும் தாண்டகம்-பாசுரங்கள்-16-20- -திவ்யார்த்த தீபிகை —

September 30, 2014

“மென் கிளி போல் மிக மிழற்று மென் பேதையே“ என்றது கீழ்ப்பாட்டில்;
நாயகன் எதிரே நிற்கிறானாக நினைத்து மென் கிளி போல் வார்த்தை சொன்ன விடத்தில்
அவனும் அப்படியே மேலிட்டு வார்த்தை சொல்லக் கேட்டிலள்;
அதனால் நின்ற நிலை குலைந்து கூப்பாடு போடத் தொடங்கினாள் என் மகள் என்கிறாள் திருத்தாய்.
அவனுடைய ரக்ஷகத்வமும் லௌலப்ய ளெஸசீல்யாதிகளும் பாவியேனிடத்தில் பலிக்கப் பெற்றிலவே!
என்று கண்ணுங் கண்ணீருமாய்க் கதறுகிற படியைப் பேசுகிறாளாய்ச் செல்லுகிறது.

கன்றுமேய்த் தினிதுகந்த காளாய். என்றும், கடிபொழில்சூழ் கணபுரத்¦ தன் கனியே என்றும்,
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்,வடதிருவேங் கடம்மேய மைந்தா என்றும்,
வென்றசுரர் குலங்களைந்த வேந்தே என்றும், விரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாய்என்றும்,
துன்றுகுழல் கருநிறத்தென் துணையே என்றும் துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே.

பதவுரை

கன்று மேய்த்து-கன்றுகளை ரக்ஷித்து
இனிது உகந்த-மிகவும் மகிழ்ச்சி கொண்ட
காளாய் என்றும்–இளையோனே! என்றும்,
கடி பொழில் சூழ்–வாஸனை மிக்க சோலைகளாலே சூழப்பட்ட
கண புரத்து–திருக் கண்ண புரத்திலே (பழுத்த)
என் கனியே என்றும்–என் பழமே! என்றும்
மன்று அமர கூத்து ஆடி–வீதி யாரக் குடக் கூத்தாடி
மகிழ்ந்தாய் என்றும்–மகிழ்ந்தவனே! என்றும்
வட திரு வேங்கடம்–வட திருவேங்கட மலையிலே
மேய மைந்தா என்றும்–பொருந்தி வாழ்கின்ற யுவாவே! என்றும்,
அசுரர் குலம்–அசுரக் கூட்டங்களை
வென்று–ஜயித்து
களைந்த–வேரோடொழித்த
வேந்தே என்றும்–வேந்தனே! என்றும்
விரி பொழில் சூழ்-விரிந்த சோலைகளாலே சூழப்பட்ட
திருநறையூர்–திருநறையூரிலே
நின்றாய் என்றும்–நின்றருளுமவனே! என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்-அடர்ந்த திருக்குழற் கற்றையையும்
கறுத்த திருமேனியையு முடையனாய் எனக்குத் துணையானவனே என்றும் சொல்லி
துணை முலை மேல்–ஒன்றோடொன்றொத்த தனங்களிலே
துளி சோர–கண்ணீர்த் துளிகள் பெருகும் படியாக
சோர்கின்றாள்–தளர்கின்றாள்

கன்று மேய்த்து இனிது கந்தகாளாய் என்றும் =
ஸர்வ ரக்ஷகனான நீ ரக்ஷணத் தொழிலில் நின்றும் கை வாங்கினாயோ என்கிறாள்.
நித்ய ஸூரிகளை ரக்ஷிக்குமளவோடே நின்றால் ஆறியிருப்பேன்;
ராம கிருஷ்ணாதிரூபத்தாலே வந்தவதரித்து இடக்கையும் வலக்கையுமறியாத இடையரை ரக்ஷித்தவளவோடே நின்றாலும் ஆறியிருப்பேன்;
அறிவு கேட்டுக்கு மேலெல்லையான கன்றுகளையுமுட்பட மேய்த்த உன்னை விட்டு எங்ஙனே ஆறி யிருப்பேனென்கிறாள்.
அறிவில்லாமையில் கடைநின்ற கன்றுகளையும் ரக்ஷித்த நீ, உன் வாசியை யறிந்து உன்னை யொழியச்
செல்லாத வென்னை ரக்ஷியாதொழிவதே!, நானும் கன்றாகப் பிறக்கப் பெற்றிலேனே! என்கிறாள் போலும்.

கண்ணபிரானுக்குப் பசுக்களை மேய்ப்பதில் ஸாதாரணமான உவப்பும்
கன்றுகளை மேய்ப்பதில் இனிது உவப்பும் ஆம் என்பது சொற் போக்கில் தெரியக் கிடக்கிறது;
“திவத்திலும் பசுநிரைமேய்ப்பு உவத்தி“ என்றார் நம்மாழ்வார்;
“கன்றுமேய்த்து இனிது உகந்த“ என்கிறாரிவ்வாழ்வாழ்வார்.

காளாய்! = இளம் பருவத்தைச் சொன்னபடி;
“காளையே எருது பாலைக்கதிபன் நல்லிளையோன் பேராம்“ என்பது திவாகரம்.

கடி பொழில் சூழ் கணபுரத்தென் கனியே யென்றும் =
அவ் வக்காலங்களில் பிற்பட்டாரையும் ரக்ஷிக்கைக்காக வன்றோ திருக் கண்ணபுரத்திலே வந்து இனிய கனி போல் நின்றருளிற்று.

“கன்றுமேய்த்தினிதுகந்த காளாய்“ என்றவுடனே
“கடிபொழில் சூழ்கணபுரத்தென்கனியே“ என்று சொன்ன அமைதியை நோக்கி இவ்விடத்திற்கு
பட்டர் ரஸோக்தியாக அருளிச் செய்வதொன்றுண்டு;-
“கண்ண பிரான் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கும் போது அவை கை தவறிப் போகையாலே
அவற்றை மடக்கிப் பிடிக்கப் போன விடத்திலே விடாய் தீருவிருப்பதொரு சோலையைக் கண்டு
திருவாய்ப்பாடியாக நினைத்துப்புகுந்தான்;
அப் பொழில் -மயல் மிகு பொழிலாகையாலே கால் வாங்க மாட்டிற்றிலன்; அதுவாயிற்றுத் திருக் கண்ணபுரம்“ என்பராம்.

கடி பொழில் சூழ் கணபுரம் =
“ஸர்வகந்த;“ என்கிற சுருதியின் படியே பரிமள மயனாயிருக்கிற எம்பெருமானையும்
கால் தாழப் பண்ணுவித்துக் கொள்ள வல்ல பரிமளமுற்ற பொழில்களென்க.

(கணபுரத்தென் கனியே!)
அச் சோலை பழுத்த பழம் போலும் சௌரிராஜன்,
“என் கனியே“ என்கையாலே உபாயாந்தர நிஷ்டர்களுக்குக் காயாகவே யிருப்பனென்பது போதரும்.
அவர்களுக்கு ஸாதநாநுஷ்டானம் தலைக் கட்டின பின்பு அனுபவமாகையாலே அது வரையில் காயாயிருப்பன்;
ப்ரபந்நர்க்கு அத்யவஸாயமுண்டான ஸமயமே பிடித்துப் பரம போக்யனா யிருக்கையாலே பக்குவ பலமாயிருப்பன்.

அவல் பொதி அவிழ்ப்பாரைப் போலே ஸமுதாய ஸ்தலத்திலே ஸர்வ ஸ்வதானம் பண்ணினாயல்லையோ என்கிறாள்.
மன்று – நாற்சந்தி; அஃது அமரக் கூத்தாடுகையாவது
கூத்தாடி முடிந்த பின்பும் அவ்விடம் கூத்தாடுவது போலவே காணப் படுகையாம்.
“பெருமாள் எழுந்தருளிப் புக்க திரு வீதி போலே காண் திருவாய்ப்பாடியில் அம்பலமிருப்பது“ என்று பட்டர் பணிக்கும்படி.
மன்று என்று இடையரெல்லாரும் திரளுமிடத்திற்கும் பெயராதால், இச்சொல் ஆகு பெயரால்
இடையர்களை உணர்த்தி இடையரெல்லாரும் ஈடுபடும் படும்படியாகக் கூத்தாடினமை சொல்லுகிறதென்றும் உரைப்ப.

மகிழ்ந்தாய் என்றவிடத்திற்குப் பெரியாச்சான் பிள்ளை வியாக்கியானம் காண்மின் ;-
“கூத்துக் கண்டவர்கள் உகக்கை யன்றியே உகப்பானும், தானாயிருக்கை;
அவர்களைத் தன் கூத்தாலே எழுதிக் கொள்வானும் தானாய் உகப்பானும் தானாயிரக்கிறபடி.
ஸஜாதீயர்களை ஈடுபடுத்திக் கொள்ளப் பெற்றோம் என்று உகந்தானாயிற்று.
அந்தணர்க்குச் செல்வம் மிக்க பல யாகங்கள் நிகழ்த்துமா போலவும்
விஷய ப்ரவணர்க்கு ஐச்வரியம் விஞ்சினால் அடுத்தடுத்து விவாஹம் பண்ணிக் கொள்ளுமா போலவும்
இடையர்க்குச் செல்வம் மிகுந்தால் போக்கு வீடாக ஆடுவதொரு கூத்து குடக்கூத்து;
சாதி மெய்ப் பாட்டுக்காகக் கண்ணபிரான் குடக் கூத்தாடினபடி.
ஊர்ப் பொதுவான பண்டம் எனக்கு அரிதாயிற்றே! என்று பரிதாபந் தோற்றச் சொல்லும் வார்த்தை
மன்ற மரக்கூத்தாடி மகிழ்ந்தாய்! என்பது.

வட திவேங்கடம் மேய மைந்தா வென்று =
ஒரு ஊரிலே மன்றிலே நின்று கொள்ளை கொடுத்தது மாத்திரமன்றியே உபயவிபூதிக்கும் நடுவானதொரு
மன்றிலே நின்று தன்னைக் கொள்ளை கொடுத்த படியைச் சொல்லுகிறது;
“கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே“ –
“வானவர் வானவர்கோனொடும் ஈமன்றெழுந் திருவேங்கடம் என்றும்
“கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம்“ என்றுஞ் சொல்லுகிறபடியே
உயர்ந்தாரோடு தாழ்ந்தாரோடு வாசியற அனைவரும் கொள்ளை கொள்ளும் வடிவு எனக்கு அரிதாயிற்றே!
என்று பரிதபித்துச் சொல்லுகிறபடி.

வென்றசுரர்குலங்களைந்த வேந்தே யென்றும் =
அவன்றான் விரோதி நிவ்ருத்தியைச் செய்வதற்கு அசக்தனென்றும்
அது பிறரால் ஆக வேண்டிய தென்றும் இருந்தால் ஒருவாறு ஆறியிருக்கலாம்;
அசுர ராக்ஷஸர்களின் கூட்டங்களைக் கிழங்கெடுத்து வெற்றி பெற்ற பெரு வீரனாய்
அவன் விளங்கும் போதும் நான் இழக்கிறனே! என்று வருந்திச் சொல்லுகிறபடி.

விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாயென்றும் =
வென்று அசுரர் குலங்களைந்த அவதாரத்திலும் இழந்தவர்களுக்கும் முகங் கொடுப்பதற்காகத்
திரு நறையூரிலே வந்து நின்றருளுமவனே! என்கிறாள்.
நறையூர் நம்பியும் நாச்சியாரும் கடாக்ஷிக்க
அக் கடாக்ஷமே விளை நீராக வளருகிற பொழிலாகையாலே விரி பொழிலாயிருக்கும்.
அசேதநங்களைக் கடாக்ஷித்து வளரச் செய்பவன் என்னைக் கடாக்ஷியாதொழிவதே! என்கிறாள்.
பிராட்டி பக்கலிலே பிச்சேறித் தன்னூரை அவள் பெயராலே ப்ரஸித்தப்படுத்தி
நாச்சியார் கோவிலாக்கி இப்படி ஒருத்திக்குக் கை வழி மண்ணாயிருப்பவன் என்னொருத்தியை
விஷமாக நினைப்பதே! என்பதும் உள்ளுறை.

துன்று குழல் கரு நிறத்து என் துணையே யென்று –
மிகவும் நெருங்கி இருண்டிருக்கின்ற திருக் குழற் கற்றையையும் காளமேகம் போன்ற வடிவையுமுடைய
உன் துணைவனே! என்கிறாள்.

ஆக இப்படியெல்லாம் சொல்லா நின்று கொண்டு தன் ஆற்றாமைக்கு ஒரு போக்கடி காணாமையாலே
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்ந்தாளாயிற்று.

கன்று மேய்த்தினிதுகந்த காளாயென்று சொல்லித் துணை முலைமேல் துளிசோரச் சோர்கின்றாள்,
கடி பொழில் சூழ் கணபுரத்தென் கனியே யென்று சொல்லித் துணை முலை மேல்
துளி சோரச் சோர்கின்றாள் என்று தனித்தனியே கூட்டியுரைத்துக் கொள்க.

நிலை குலைந்து கூப்பாடு போடத் தொடங்கினாள் –
அவனுடைய ரஷகத்வமும் சௌலப்ய சுசீல்யாதிகளும் பாவியேன் விஷயத்தில் பலிக்கப் பெற வில்லையே

கன்று மேய்த்து இந்து உகந்த காளாய்
சர்வ ரஷகன் -நிதர ஸூரிகள் ரஷிக்கும் அளவில் இருந்தால் ஆறி இருப்பேன்
ராம கிருஷ்ணாதி ரூபத்திலே வந்து இடக்கை வலக்கை அறியாத இடையர்களை ரஷிக்கும்
அளவோடு இருந்து இருந்தால் ஆறி இருப்பேன்
அறிவு கேட்டுக்கு மேல் எல்லையான கன்றுகளையும் உட்பட
நானும் கன்றாக பிறக்க பெற்றிலேனே
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -கன்று மேய்த்து இனிது உகந்த –

கடிபொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்னும்
கண்ணபிரான் பசுக்களை மேய்த்துக் கொண்டு இருக்கும் போது
அவை கை தவறிப் போகையாலே
அவற்றை மடக்கி பிடிக்கப் போன இடத்தில் விடாய் தீர இருப்பதொரு சோலையைக் கண்டு
திரு வாய்ப்பாடியாக நினைந்து புகுந்தான்
அப் பொழில் மயல் மிகு பொழில் ஆகையாலே கால் வாங்க மாட்டிற்று இலன்
அது வாயிற்று திருக் கண்ணபுரம் -என்பார் பட்டர்

சர்வகந்த வஸ்துவையும் கால் தாழப் பண்ணும் பரிமளம் உள்ள பொழில்கள்
கணபுரத்து என் கனி–அந்த சோலை பழுத்த பழம்போலும் ஸ்ரீ சௌரி ராஜன்
உபாயாந்தர நிஷ்டருக்கு காயாகவும் -சாதனானுஷ்டானம் தலைக் கட்டின பின்பு தானே அனுபவம்
பிரபன்னருக்கு அத்யாவசியம் உண்டான சமயமே பிடித்து பரம போக்யனாய் இருக்கையாலே பக்குவ பலமாய் இருப்பானே

மன்று அமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
மன்று- நால் சந்தி
பெருமாள் எழுந்து அருளிப் புக்க திரு வீதி போலே காண் திருவாய்ப்படியிலே அம்பலம் காண்

மகிழ்ந்தாய்
கூத்துக் கண்டவர்கள் உகக்கை அன்றிக்கே உகப்பானும் தானாய் இருக்கை
அவர்களை தனது கூத்தாலே எழுதிக் கொள்வானும் தானாய்
உகப்பானும் தானாய் இருக்கிறபடி
ஊர் பொதுவான பண்டம் எனக்கு அரிதாயிற்றே

வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
ஒரு ஊரிலே மன்றிலே நின்று கொள்ளை கொடுத்தது அன்றிக்கே
உபய விபூதிக்கும் நடுவான மன்றிலே நின்று தன்னை கொள்ளை கொடுத்த படி
அனைவரும் கொள்ளை கொள்ளும் வடிவு எனக்கு அரிதாயிற்றே

வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
வீரனாய் இருந்தும் இழக்கிறேனே

விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
நம்பியும் நாச்சியாரும் கடாஷிக்க அதுவே விளை நீராக
அசேதனங்களை கடாஷித்து அருளினவன் என்னை கடாஷியாது ஒழிவதே
பிராட்டி பக்கல் பிச்சேறி அவள் பெயராலே தன்னூரை நாச்சியார் கோயில் என்று பிரசித்தப் படுத்தினவன்
என் ஒருத்தியை விஷமாக நினைப்பதே

துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
ஆற்றாமைக்கு போக்கடி காணாமல் இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டு
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோர சோர்ந்தாள்
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்று
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோர சோர்ந்தாள்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்று சொல்லி
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோர சோர்ந்தாள்
என்று தனித் தனியே கூட்டி கொள்க-

—————————————————————-

பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப் பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று
செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே
தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித் தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு,
நங்காய் நங் குடிக்கிதுவோ நன்மை? என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே.

பதவுரை

பொங்கு ஆர் மெல் இள கொங்கை-வளர்த்தி மிக்கதாய் மிருதுவாய் இளையதான தனம்
பொன்னே பூப்ப–வைவர்ணியமடையவும்
பொரு கயல் கண்–சண்டை யிடுமிரண்டு கெண்டைகள் போன்ற கண்கள்
நீர் அரும்ப–நீர்த் துளிகள் அரும்பவும்
போந்து நின்று–(வெளியே வந்து) நின்று
செம் கால மடம் புறவம்பெடைக்கு பேசும்சிறு குரலுக்கு–சிவந்த கால்களை யுடைய இளம் புறாக்கள் தம் பேடைகளோடு சிறு குரலாகப் பேசுகிற படிக்கு
உடல் உருகி–மெய் கரைந்து
சிந்தித்து–(அவன் முறைகெடப் பரிமாறும் படியை) நினைத்து,
ஆங்கே–அவ்வளவில்
தண் காலும்–திருத் தண் காலையும்
தண் குடந்தை நகரும்–திருக் குடந்தைப் பதியையும்
பாடி–(வாயாரப்) பாடி
தண் கோவலூர்-குளிர்ந்த திருக் கோவலூரையும்
பாடி-பாடி
ஆட-கூத்தாட
கேட்டு–அவ் வொலியை நான் கேட்டு,
நங்காய்-‘பெண்ணே!
நம் குடிக்கு–நமது குலத்திற்கு
இது நன்மையோ என்ன–வாய் விட்டுக் கூப்பிடுகிறவிது நலந்தானோ? என்று சொல்ல,
நறையூரும்–திரு நறையூரையும்
பாடுவாள் நவில் கின்றாள்–பாடுவாளாகப் பேசத் தொடங்கினாள்.

கீழ்ப் பாட்டில் “துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே“ என்ற படியே
தன் பெண் பிள்ளை சோர்வுற்றபடியைக் கண்ட திருத்தாயார்
‘இவளுக்கு நாம் ஏதேனும் ஹிதமான வார்த்தை சொல்லிப் பார்ப்போம், அதனாலாகிலும் வழிப்படக் கூடுமோ‘
என்றெண்ணி ‘நங்காய்! நீ இங்ஙனே வாய்விட்டுக் கூப்பிடுகையும் மோஹிக்கையுமாகிற இவை
உன்னுடைய பெண்மைக்குத் தகாது, இக்குடிக்கும் இழுக்கு‘ என்று சொல்ல;
அப்படி அவள் ஹிதஞ் சொன்னதுவே ஹேதுவாக மேன்மேலும் அதி ப்ரவருத்தியிலே பணைத்த படியைச் சொல்லுகிற பாசுரம் இது.

பொங்கார் மெல்லிளங்கொங்கை பொன்னே பூப்ப –
விரஹ வேதனையால் உடலில் தோன்றும் நிற வேறுபாடு பொன் பூத்தலாகச் சொல்லப்படும்; பசலை நிறம் என்பதும் அதுவே.
இதைப் பற்றிக் குறுந்தொகையில் ஒரு செய்யுளுண்டு; அதாவது-
“ஊருண்கேணியுண்டுறைத் தொக்க பாசியற்றே பசலை, காதலர் தொடுவுழித் தொடுவுழி
நீங்கி விடுவுழி விடுவுழிப் பாத்தலானே“ (399) என்பதாம்.
ஊரிலுள்ள ஜனங்களாலே நீருண்ணப் பெறுகிற கேணியினுள்ளே படர்ந்து கிடக்கும் பாசி போன்றது பசலை நிறம்;
தண்ணீரில் நாம் கை வைத்தோமாகில் கைபட்ட விடங்களில் பாசி நீங்கும்;
கையை எடுத்து விட்டோமாகில் மறுபடி அவ்விடமெல்லாம் பாசி மூடிக் கொள்ளும்;
அது போல, கலவியில் கணவனுடைய கைபடுமிடங்களில் பசலை நிறம் நீங்கும்;
அணைத்த கை நெகிழ்த்த வாறே அப்பசலை நிறம் படரும்; ஆதலால் பாசி போன்றது பசலைநிறம் என்றபடி.
(தொடு வுழித் தொடு வுழி – தொட்ட விடங்கள் தோறும். விடு வுழி விடு வுழி- விட்ட விடங்கள் தோறும்.
பரத்தலான் – பரவுகிற படியினாலே.)

பொரு கயல் கண்ணீரரும்ப –
சண்டையிடுமிரண்டு கெண்டைகள் போன்றனவாகக் கண்கள் வருணிக்கப்படும்.
அப்படிப்பட்ட கண்கள் நீர் பெருக நின்றபடி. காதலிகளின் கண்களில் நீர் பெருகுதல் எப்போதுமுள்ள தொன்று;
கலவி நிகழுங்காலத்தில் ஆனந்தக் கண்ணீர் பெருகும்; பிரிந்து வருந்துங் காலங்களில் சோகக் கண்ணீர் பெருகும்.
அதுவாயிற்று இங்குச் சொல்லுகிறது. முலையிலே பசலை நிறம் குடியிருந்தாற்போலே
கண்ணிலே சோக பாஷ்பம் குடியிருந்தது.
கீழ்பாட்டில் “துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாள்“ என்றது;
இங்கு “கண்ணீர் அரும்ப“ என்கிறது;
விரஹத் தீயாலே உள்ளுலர்ந்து உழக்குப் பாலைக் காய்ச்சினால் வாயாலே பொங்கி வழியா நிற்கச் செய்தேயும்
கீழே நீர் அற்றிருக்குமாபோலே கொள்க.

போந்து நின்று –
‘நாயகன் தானே வந்து மேல் விழ வேண்டும் படியான முலையழகையும் கண்ணழகையுமுடைய நீ
மேல் விழுகை பெண்மைக்குப் போராது காண்‘ என்று தாய் சொன்ன ஹிதம் தனக்குச் செவி சுட விருக்கையாலே,
நெருப்புட்பட்ட வீட்டில் நின்றும் பதறிப் புறப்படுமா போலே அத் தாய் இருந்த அகத்தில் நின்றும் சடக்கெனப் புறப்பட்டாள்.
ஸ்ரீவிபீஷணாழ்வான் தன் உபதேசத்திற்குடன்படாத ராவணன் சொன்ன திரஸ்கார வார்த்தையைக் கேட்ட பின்
ஒரு கணப் பொழுதும் அங்குத் தங்கியிருக்க மாட்டாமல் விரைந்து புறப்பட்டாற்போல.

நின்று –
தரிப்புப் பெற்று நின்று என்றபடி. ஹிதஞ்சொன்ன தாயினிருப்பிடத்தை விட்டு
அப்புறப் பட்டவாறே கால் பாவி நின்றாளாயிற்று. நாயகன் பக்கலில் முகம் பெறாத வளவில் ஓரிடத்தில்
கால் பாவி நிற்கக் கூடுமோ வென்னில்; தன்னுடைய பதற்றத்திற்குத் தான் வந்ததே காரணமாகத் தரிப்புப் பெற்று நின்றாளென்க.

இலங்கையைவிட்டு ஆகாசத்திற் கிளம்பின விபீஷணாழ்வான் ஸ்ரீராம கோஷ்டியில் முகம் பெறாதிருக்கச் செய்தேயும்
ராவண பவனத்தை விட்டு நீங்கின வளவையே கொண்டு ஆகாசத்திலே கால் பாவி நின்றாற்போல.
“உத்தரம் தீரமாஸாத்ய கஸ்த ஏவ வ்யதிஷ்டத“ என்றார் வால்மீகி பகவான். (வ்யதிஷ்டத – நன்றாகத் தரித்து நின்றார் என்றபடி.)

செங்காலமடப்புறவம் பெடைக்குப் பேசுஞ் சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்தாங்கே –
பாம்புக்கு அஞ்சியோடினவன் புலியின் வாயிலே விழுந்தாற்போலேயாயிற்று.
தாயின் வாய்ச் சொல் பாதகமாயிருக்கிறதென்று வெளியிலே வந்தவளுக்கு அதனிலுங் கொடிய சொல் செவியிலே விழுந்தது;
அதாவது, புறா ஆணும் பெண்ணுங்கூடிக் கொஞ்சும் பேச்சுக்கள் செவிப்பட்டன! அந்தோ!
இவையுங்கூடத் தம் தம் அபிமதம் பெற்றுக் களித்து வாழா நி்ற்க நம் நிலைமை இங்ஙனேயாயிற்றே! என்று உடலுருகினாள்;
பண்டு அவனும் தானும் இங்ஙனே கலந்து பரிமாறின படிகளை நினைத்துக் கொண்டான்; பின்னையும் உடலுருகினாள்.

(செங்காலமடப்புறவம்)
ஆண் புறாவின் சிவந்த கால்கள் நாயகனுடைய செந்தாமரை யடிகளை நினைப்பூட்டி வருத்தின போலும்.
இது கண்ணுக்கு விஷமானபடி.

(பெடைக்குப் பேசும் சிறுகுரல்)
இது காதுக்கு விஷமானபடி. இங்ஙனே அவன் ரஹஸ்யமாக நம் காதிலே பேசும் பேச்சுக்கள்
கேட்கப் பெறுவது என்றோ வென்று உடலுருகினாளென்க.

(ஆங்கே தண்காலும் இத்யாதி)
இவற்றாலே ஆற்றாமை மீதூர்ந்தவாறே நாயகனோடு பரிமாறுதற்கான ஸங்கேத ஸ்தலங்களைப் பற்றி
வாய் விட்டுக் கூப்பிடத் தொடங்கினாள். திருத்தண்கால், திருக்குடந்தை, திருக்கோவலூர் முதலான
திருப்பதிகளைச் சொல்லிப் பாடத் தொடங்கினாள். தண்கால் – குளிர்ந்த காற்று என்றபடி.
அங்குள்ள எம்பெருமான் குளிர்ந்த தென்றல் போலவே ச்ரமஹமான வடிவை யுடையன யிருக்கையாலே
அத் தலத்திற்கே தண்காலென்று திருநாமமாயிற்றென்ப.
பண்டு அப்பெருமான் தன்னை அணைக்கிற போது சிரமமெல்லாந் தீர்ந்த மிக இனிமையாயிருக்கையாலே
மீண்டும் அங்ஙனேயாக வேணுமென்று தண்காலைப் பாடினாள்.

(தண் குடந்தை நகரும் பாடி)
எம்பெருமான் அமுது செய்த போனகம் சேஷ பூதர்க்கு ஸ்வீகரிக்க வுரியது‘ என்று முறையிருக்க,
திருக்குடந்தை யாராவமுதாழ்வார், தமக்கு ஆக்கின திருப்போனகத்தை முற்படத் திருமழிசைப்பிரானை
அமுது செய்யப் பண்ணுவித்துப் பி்ன்னைத் தாம் அமுது செய்தாரென்று ஒரு ப்ரஸித்துயுண்டு.
இப்படியாக அன்பரோடு புரையறக் கலந்து பரிமாறுகிறவனென்று ஸாபிப்ராயமாகத் திருக்குடந்தையைப் பாடினாள்.

(தண்கோவலூர்பாடி)
‘பாவருந்தழிழாற் பேர்பெறு பனுவற் பாவலர் பாதிநாளிரவின், மூவரு நெருக்கி மொழி விளக்கேற்றி
முகுந்தனைத் தொழுத நன்னாடு“ என்று புகழ்ந்து கூறும்படி முதலாழ்வார் (பொய்கையார் பூதத்தார் பேயார்)
மூவரும் பகவத் ஸ்வரூபத்தை நன்கறிந்து அநுபவித்து ஆனந்தப் பெருவெள்ளமெய்தின வரலாற்றை
நெஞ்சிற்கொண்டு திருக் கோவலுரைப் பாடினா ளென்க.
இவ்விடத்து வியாக்கியான வாக்கியங் காண்மின்;-
‘ஆஸ்ரிதர் வந்து கிட்டினால் பின்னை அவர்களோடு முறை யழியப் பரிமாறுகை யன்றியே தானே மேல் விழுந்து
ஸம்ச்லேஷித்த விடமாயிற்று, திருக்கோவலூராகிறது.
அவர்கள் மழை கண்டு ஒதுங்க அவர்களிருந்த விடத்திலே தானே சென்று தன்னை அவர்கள் நெருக்கத்
தான் அவர்களை நெருக்க இப்படி பரிமாறி, அவர்கள் போன விடத்திலும் அவ்விடத்திலே நிற்கிறானிறே
வாசல் கடைகழியாவுள் புகா என்று“.-

ஆட –
திருத்தண் காலையும் திருக் குடந்தையையும் திருக் கோவலூரையும் வாயாரப் பாடினவிடத்திலும்
த்ருப்தி பிறவமையாலே ஆடவும் தொடங்கினாள்;

இப்படி இவள் ஆடுகிறபடியைக் கண்டும் பாடுகிறபடியைக் கேட்டும் தாயானவள்
‘நங்காய்! நம் குடிக்கு இதுவோ நன்மை?“ என்றாள்;
(அதாவது சேதந லாபம் ஈச்வரனுக்குப் புருஷார்த்தமே யன்றி ஈச்வர லாபம் சேதநனுக்குப் புருஷார்த்தமன்றே;
அவன்றன்னுடைய பேற்றுக்கு அவன்றானேயன்றோ பதறவேணும்; நீ இங்ஙனே பதறக்கடவையோ? என்றாள்.
இவள் இது சொன்னதுவே ஹேதுவாகப் பரகால நாயகி நறையூரும் பாடுவாள் நவில்கின்றாள்.
பெடை யடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமல மடலெடுத்து மதுநுகரும்
வயலுடுத்த திருநறை யூரிலே சென்று சேரப் பெறுவது எந்நாளோ! என்னா நின்றாளென்க.

‘பாடுவான்‘ என்ற பாடமுமுண்டு; வான் விகுதி பெற்ற வினையெச்சம்.

தாயார் ஹிதம் சொன்னதே ஹேதுவாக
மேன்மேலும் அதி பிரவ்ருத்தியில் பணைத்த படி

கொங்கை பொன்னே பூப்ப –கண்ணீர் அரும்ப
சம்ச்லேஷம் ஹர்ஷ கண்ணீர்
விச்லேஷம் -சோக கண்ணீர்
கீழே நீர் சோர இங்கே அரும்ப
விரஹ தீயால் உள்ளுலர்ந்து நீர்ப் பசை அற்று கிடைக்கையாலே அரும்ப -என்கிறாள்

போந்து நின்று
ஹிதம் சொல்ல சொல் இவளை விரட்ட
ராவணன் சொல் கேளாமல் விபீஷணன் போனால் போல்
உத்தரம் தீரமாசாத்ய கச்த ஏவ வ்யதிஷ்டத -நன்றாகத் தரித்து நின்றார் போலே

செங்கால மடப்புறவம் பெடைக்கு பேசும் சிறு குரலுக்கு உடல் உருகி சிந்தித்து ஆங்கே
பாம்புக்கு அஞ்சி ஓடி புலி வாயில் விழுந்தால் போல்
முன்பு அவனும் தானும் பரிமாறின படிகளை நினைவூட்ட
செந்தாமரை அடிகளை நினைவூட்டி
கண்ணுக்கு இது காதுக்கு குரல் விஷமான படி

திருத் தண்கால்
தென்றல் போலே ஸ்ரமஹரமான
பண்டு தன்னை அணைக்கும் பொழுது சிரமம் தீர்ந்து இனிமையாக இருக்கையாலே
மீண்டும் அங்கனேயாக வேணும் என்று பாட

தண் குடந்தை நகரும் பாடி
அன்பர் உடன் புரை அறக் கலந்து
திரு மழிசை பிரான் உண்ட சேஷம் அமுது செய்து

தண் கோவலூரும் பாடி
பா வரும் தமிழால் பேர் பெறு பனுவல் பாவலர் பாதி நாள் இரவின்
மூவரும் நெருக்கி மொழி விளக்கு ஏற்றி முகுந்தனை தொழுத நன்னாடு
ஆஸ்ரிதர் வந்து கிட்டினால் பின்னை அவர்களோடு முறை அழிய பரிமாறுகை அன்றிக்கே
தானே மேல் விழுந்து சம்ச்லேஷித்த இடமாயிற்று திருக் கோவலூர்
அவர்கள் மழை கண்டு ஒதுங்க அவர்கள் இருந்த இடத்திலே தானே சென்று
அவர்கள் நெருக்க தான் அவர்களை நெருக்க இப்படி பரிமாறி
அவர்கள் போன இடத்திலும் அவ்விடத்திலே நிற்கிறான் இறே
வாசல் கடை கழியா உள் புகா என்று

ஆக
திருத் தண கால்
திருக்குடந்தை
திருக் கோவலூர்
மூன்றையும் வாயாரப் பாட மட்டும் திருப்தி இல்லாமல் ஆடத் தொடங்கினாள்

நம் குடிக்கு இதுவோ நன்மை என்றாள் திருத்தாயார்
சேதன லாபம் ஈஸ்வரனுக்கே அவன் தானே பதற வேண்டும்

இந்த ஹிதமே ஹேதுவாக நறையூரும் பாடுவாள் நவில்கின்றாள்
பெடை யடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம் மடல் எடுத்து மது நுகரும் வயலுடுத்த
திரு நறையூரிலே சென்று சேரப் பெறுவது எந்நாளோ
என்னா நின்றாள்
பாடுவான் -பாட பேதம் வான் விகுதி பெற்ற வினை எச்சம்

——————————————————————————————-

கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம்,
பார்வண்ண மடமங்கை பித்தர் பித்தர் பனிமலர்மேல் பாவைக்குப் பாவம் செய்தேன்,
ஏர்வண்ண என்பேதை எஞ்சொல் கேளாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்,
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இதுவன்றோ நிறையழிந்தார் நிற்கு மாறே?

பதவுரை

பாவம் செய்தேன் என்-பாவியான என்னுடைய
ஏர் வண்ணம் பேதை-அழகிய வடிவை யுடைய பெண்ணானவள்
என் சொல் கேளாள்–என் வார்த்தையைக் கேட்கிறாளில்லை;
திருமேனி கார் வண்ணம் என்னும்–(எம்பெருமானது) திருமேனி காளமேக நிறத்து என்கிறாள்;
கண்ணும்–(அவனது) திருக்கண்களும்
வாயும்–திரு வாயும்
கைத் தலமும்–திருக் கைகளும்
அடி இணையும்–திருவடியிரண்டும்
கமலம் வண்ணம் என்னும்–தாமரைப்பூப்போன்ற நிறமுடையன என்கின்றாள்;
பார் வண்ணம் மடமங்கை பத்தர் என்னும்–(அவர்) பூமிப்பிராட்டி இட்ட வழக்காயிருப்பர் என்கின்றாள்;
பனி மலர் மேல் பாவைக்கு பித்தர் என்னும்-குளிர்ந்த செந்தாமரைப் பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்
விஷயத்தில் வியாமோஹங் கொண்டவர் என்கின்றாள்;
எம் பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும்-என்னை அடிமைப் படுத்திக் கொண்ட பெருமானுடைய திருவரங்கம் எங்குள்ளது? என்கின்றாள்;
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்–நீர் வண்ணப் பெருமாள் எழுந்தருளியிருக்கிற திருநீர் மலைக்கே போகக் கடவேன் என்கின்றாள்;
நிறைவு அழி்ந்தார் நிற்கும் ஆறு இது அன்றோ-அடக்கமழியப் பெற்றவர்களின் நிலைமை இங்ஙனே போலும்!

பெண் பிள்ளையின் வாய் வெருவுதல்களை வரிசையாகச் சொல்லுகிறாள் திருத்தாய்
கீழ்ப்பாட்டில் “நங்காய் நங்குடிக்கிதுவோ நன்மையென்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே“ என்று நின்றது.
‘நாம் சொன்ன ஹிதத்தை இவள் கடந்த படியாலே இனி படியாகவே தோற்ற விருந்து இவளுடைய பாசுரங்களைக் கேட்போம்‘
என்றெண்ணிய திருத்தாயார் ‘நங்காய்! உன் எண்ணங்களைச் சொல்லிக் காணாய்‘ என்று சொல்ல,
மகளும் எம்பெருமானுடைய திருமேனியழகை வருணிப்பது,
திருமடந்தை மண்மடந்தையர் பக்கலிலே அப்பெருமான் இருக்குமிருப்பைப் பேசுவது,
அவனூர் எங்கேயென்று வினவுவது,
நானிருங்கேயிருந்து கதறி என்ன பயன்? அவனூருக்கே போய்ச்சேருவேன் என்பது,
ஆக விப்படி நிகழும் மகளது பாசுரங்களைத் தன் உகப்புத் தோன்றத் தான் திருத்தாய்.
‘கார்வண்ணந் திருமேனி கண்ணும் வாயுங் கைத்தலமு மடியிணையுங் கமல வண்ணம்‘ என்பதும்,
‘பார்வண்ணமடமங்கை பத்தர்‘ என்பதும்
‘பனிமலர்மேல் பாவைக்குப் பித்தர்‘ என்பதும்
‘எம்பெருமான் திருவரங்கமெங்கே‘ என்பதும்
‘நீர்வண்ணன் நீர் மலைக்கே போவேன்‘ என்பதும் மகளுடைய வார்த்தைகளின் அநுவாதங்கள்; மற்றவை தாய்ச்சொல்.
‘என்னும்‘ என்கிற வினை முற்று மகளுடைய ஒவ்வொரு வார்த்தையோடும் அந்வயிக்கத்தக்கது.
‘என்மகள் இப்படி சொல்லுகிறாள், இப்படி சொல்கிறாள்‘ என்று ஒவ்வொரு வாக்கியமாக எடுத்துத் தாய் சொல்லுகிறாளாயிற்று.

முந்துற முன்னம் இவள் எம்பெருமானுடைய வடிவழகிலே வாய் வைக்கத் தொடங்கினாளே! என்கிறாள்.
‘திருமேனியானது காளமேக நிறத்தது, திருக் கண்களும் திருவாயும் திருக் கைத்தலமும் திருவடி யிணையும்
செந் தாமரை மலர் நிறத்தன‘ என்று திருமேனியையும் திவ்யாவயவங்களையும் பற்றிப் பேசுகின்றாளாம்.
அடியிலே எம்பெருமான் இவளுக்குத் தன் வடிவை முற்றூட்டாக அநுபவிக்கக் கொடுக்கையாலே
அதுவே வாய்வெருவுதலாயிருக்கின்றாள் காணுமிவள்.

எம்பெருமான் தானுகந்தார்க்கு ஸர்வ ஸ்வதானமாகக் கொடுத்தருள்வது தன் திருமேனியையே.
பரதாழ்வாள், சிறியதிருவடி, அக்ரூரர் முதலானாரிடத்தே இது காணலாம்.
“தம் ஸமுத்தாப்ய காகுத்ஸ்த; சிரஸ்யாக்ஷிபதம் கதம் – அங்கே பரதமாரோப்ய முதித; பரிஷஸ்வஜே“ என்று
பரதாழ்வான் விஷயத்திலே சொல்லப்பட்டது.
(நெடுநாள் கடந்தபின் கண்ணுக்கு இலக்காகித் திருவடிவாரத்தில் வீழ்ந்த பரதாழ்வானை வாரியெடுத்து
மடிமீதிருத்தி மகிழ்ந்து சேரத்தழுவினாள் ஸ்ரீராமபிரான் என்பது இதன் பொருள்)
“ஏஷ ஸர்வஸ்பூதஸ்து பரிஷ்வங்கோஹநூமத; மயா காலமிமம் ப்ராப்ய தத்தஸ் தஸ்ய மஹாத்மந;“ என்று
சிறிய திருவடி விஷயத்திலே சொல்லிற்று.
“ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜக்ருதசிஹ்நேந பரணிநா, ஸம்ஸப்ருச்யாக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே“ என்று
அக்ரூரர் விஷயத்திலே சொல்லப்பட்டது.
மூவர்க்கும் தன் திருமேனியை அணைக்கக் கொடுப்பதே பெரும்பரிசு.

கார்வண்ணந் திருமேனி =
தாப த்ரயத்தினால் தகர்ப்புண்டிருப்பார்க்கு நினைத்த மாத்திரத்தில், அதனை ஆற்றக் கடவதும்
விரஹ தாபத்தாலே வருந்துவார்க்கு அதனைத் தணிக்க வல்லதுமான திருமேனியைப் பேசினபடி.

கண்ணும் வாயுங் கைத்தலமுமடியிணையுங் கமலவண்ணம் =
மேகத்திலே தாமரைக் காடு மலர்ந்தாற்போலே யாயிற்று அவயவங்களிருக்கிறபடி.

பார்வண்ணமடமங்கை பத்தர் =
இங்கும் ‘என்னும்‘ என்கிற வினைமுற்றைக் கூட்டிக் கொள்ளவேணும்;
மகள் பாசுரத்தைத் திருத்தாய் அநுவதிக்கிறபடி.
கடலிலே உழன்று காலங்கழிக்குமவர்கள் மூழ்கி மண்ணெடுக்குமாபோலே, கீழ்ச்சொன்ன ஸௌந்தர்ய ஸாகரத்திலே
அவ லீலையாக ஆழங்காற்பட்டிருப்பவள் பூமிப்பிராட்டி;
அவளிடத்தில் பக்தி யுக்தனாயிருப்பன் எம்பெருமான் என்கிறது.
பூமிப்பிராட்டியாலே எம்பெருமான்றான் ஸேவிக்கப் பட வேண்டியது போய் எம்பெருமான்றான் அவளை ஸேவித்திருக்கிறானாம்
ப்ரணய தாரையில் முதிர்ச்சியாலே. அவளுடைய போக்யத்தையிலே துவக்குண்டு அத்தலை இத்தலையானபடி.
இப்படி ஒருத்தி பக்கலிலே பக்தியைப் பண்ணி நிற்கும் பெருமான், நான் பக்தி பண்ணுகிறனென்றால்
எனது பக்தியைப் பெற்றுக்கொள்வதும் செய்கிறானில்லையே! என்ற வருத்தந் தோற்றப் பார்வண்ண மடமங்கை பத்தர் என்கிறாள் பரகாலநாயகி.

பித்தர் பனிமலர் மேல்பாவைக்கு =
இவ்வி்டத்திலும் ‘என்னும்‘ என்கிற வினைமுற்றைக் கூட்டிக்கொள்வது.
இதுவும் மகள் வார்த்தையைத் திருத்தாய் அநுவதிக்கிறபடி.
குளிர்ந்த தாமரைப்பூவின் பரிமளந்தானே ஒருவடிவு கொண்ட தென்னலாம்படியுள்ள பெரிய பிராட்டியார்
திறத்திலே பித்துக்கொண்டவன். என்கிறது.
“அல்லிமலர்மகள் போகமயக்குக் களாகியும் நிற்குமமம்மான்” என்கிறபடியே
அவளுடைய போகங்களிலேயே மயங்கி என்னை மறந்தான் திடீர் என்றாள் போலும்.

பாவஞ்செய்தேன் =
வினவ வந்தவர்கட்கு அழுது காட்டுகிறாள் திருத்தாய்.
இப் பெண்பிள்ளையைப் பெறும்படியான பாவஞ்செய்தேன் நான் என்று கண்ணீர் சொரிகின்றாளென்க.
இவள் ஈடுபட்ட விஷயத்தின் வைலக்ஷண்யத்தை நம்மால் மாற்றப் போகாது;
இவளுடைய ஆற்றாமையும் நம்மால் அடக்க வொண்ணாது; அவனே உபேக்ஷியா நின்றாள்; இவளோ பதற நின்றாள்;
இந் நிலைமையைக் கண்டு கொண்டிருக்க வேண்டுவது என் பாபமே யன்றோ என்கிறாள்.
பகவத் விஷயத்திலே தன் பெண்பி்ள்ளைக்குண்டான அவகாஹநம் தனக்கு மிகவும் மகிழ்ச்சிக் குடலாயிருக்கையாலே
‘புண்ணியஞ்செய்தேன்‘ என்ன வேண்டுமிடத்து நாட்டாருக்காக மறைத்து “பாவஞ்செய்தேன்“ என்கிறாள்.

காலிப்பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர், ஞாலத்தப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்!
நானே மற்றாருமில்லை‘ என்ற யசோதைப் பிராட்டியைப்போலே
“ஞாலத்துப் புத்திரியைப் பெற்றாள் நங்கைமீர்! நானே மற்றாருமில்லை” என்று சொல்லிக் கொள்ளவே இத்திருத்தாய்க்கு விருப்பம்;
ஆயினும் கட்டுப்பாட்டுக்காக மறைக்கிறாளென்க.

ஏர்வண்ணவென்பேதை =
ஐயோ! இப்பெண்ணை தன்வடிவழகைத் தான் நன்கறிந்தாளாகில் ‘அவன்றானே நமக்காக மடலெத்துப் புறப்படட்டும்‘ என்று கிடக்கலாமே;
தன்படியைத் தான் அறியாமலன்றோ இவள் இப்படி படுகிறாள் என்கிறாள்.
அவனுடைய கார் வண்ணம் இவளுடைய ஏர்வண்ணத்துக்கு ஏற்குமோ?
ஒரு உவமையையிட்டுச் சொல்லும் படியா யிருக்கிறது அவன் வடிவு;
இவள்வடிவுக்கு உவமை இல்லையே; ‘அழகியவடிவு படைத்தவள்! என்று சொல்லலா மத்தனை யொழிய
த்ருஷ்டாந்தமிட்டுச் சொல்ல வழியில் லையே! என்கிறாள்.

என்சொல்கேளாள் =
நான் இவளை அடக்கி யாண்டுகொண்டிருந்த காலமுண்டு; அது கடந்துபோயி்ற்று;
“அவனுடைய திருவருள் தன்னடையே பரிபக்குவமாகும் போது கிடைக்குமே யல்லது நாம் பதறிப் பயனில்லை காண்“
என்று நான் சொல்லப் புறப்பட்டால் நான் வாய் திறப்பதைக் கண்டவுடனே இவள் காதை அழுந்த மூடிக்கொள்ளுகிறாளே!
என் செய்வெனென்கிறாள்.

(என்சொல் கேளாள்)
“மாமேகம் சரணம் வ்ரஜ“ என்றும்,
“அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம“ என்றும் அவன் சொல்லி வைத்த
வார்த்தைகளைக் கேட்டிருக்குமவள் என்சொல்லைக் கேட்பளோ?

எம்பெருமான் திருவரங்கமெங்கே யென்னும் =
என்வார்த்தை கேளாத மாத்திரமேயோ? அவனிருக்கும் தேசத்திற்குச்செல்ல வழியும் தேடுகின்றாள்.
என்னைத் தனக்கே யாக்கிக் கொண்டவனுடைய கோயிலுக்கு எங்ஙனே வழியென்கிறாள்.

நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேனென்னும் =
எம்பெருமான் திருவரங்கமெங்கே யென்று கேட்டவளுக்கு வழி சொல்வாரார்? ஒருவரும் வாய்திறந்திலர்;
அதற்குமேல் தானே சொல்லுகின்றாள் – நீர்வண்ணன் நீர்மலைக்கேபோவேன் என்கிறாள்.
திருக்குறைய லூரில் நின்றும் புறப்பட்டுத் திருநீர்மலைக்குப் போய் அங்கு நின்றும்
திருவரங்கம் பெரிய கோயிலுக்குப் போகவேணும் என்று இங்ஙனே இவள் வழி கண்டிருக்கிறாள் போலும்.
கோவிலிலே கெட்டுப்போன பொருளைக் குளத்திலே தேடுமாபோலே யிருக்கிறது இவள்படி.
திருப்பதிகளிலே தங்கித் தங்கிப்போகப் பார்க்கிறாளாயிற்று.

இதுவன்றோ நிறைவழிந்தார் நிற்குமாறே =
தன் தலையில் ஸ்வரூபத்தைப் பாராதே எதிர்தலையின் வைலக்ஷண்யத்தையே பார்த்துப் பதருவாருடையபடி இதுவன்றோ.
இப்படியும் அடக்கங்கெட்டாளே என்மகள்! என்றாளாயிற்று.

திருத் தாயார் இவளுடைய கருத்துக்கு உடன்பட்டு இவள் பாசுரங்களை கேட்போம்
அவளும் அவன் திருமேனி அழகை வருணிப்பது
நாய்ச்சிமார் பக்கல் அவன் இருக்கும் இருப்பை பேசுவது
அவனூர் எங்கே என்று வினவுவது
நான் இங்கே கதறி என்ன பயன்
அவனூருக்கே போய்ச் சேருவேன்
போலவே கேட்டு
உகந்து
தானும் –
கார்வண்ணம் திரு மேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் -என்பதும்
பார் வண்ண மட மங்கை பத்தர் -என்பதும்
பனிமலர்மேல் பாவைக்கு பித்தர் -என்பதும்
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்பதும்
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் -என்பதும்
மகள் வார்த்தையின் அனுவாதன்கள்
மற்றவை திருத் தாயார் வார்த்தை

அடியிலே தனதுவடிவை முற்றூட்டாக அனுபவிக்கக் கொடுக்கையாலே அதுவே வாய் வெருவுதல்
ஸ்ரீ பரத ஆழ்வான் /திருவடி /அக்ரூரர்
தம் சமுத்தாப்ய காகுஸ்த சிரச்ய அஷிபதம் கதம் -அங்கே பரதம் ஆரோப்ய முதித ப்ரிஷச்வஜே -ஸ்ரீ பரத ஆழ்வான் விஷயம்
ஏஷ சர்வஸ்வ பூதச்து பரிஷ்வங்கோ ஹநூமத மயா காலமிமம் ப்ராப்ய தததச் தஸ்ய மகாத்மான -திருவடி விஷயம்
சோப்யேனம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேன பாணினா சம்ச்ப்ருச்யாக் ருஷ்ய ச ப்ரீத்யா ஸூ காடம் பரிஷச்வஜே -அக்ரூரர் விஷயம்
மூவருக்கும் திரு மேனி அணைக்கக் கொடுத்த பரிசு

சௌந்தர்ய சாகரத்தில் ஆழம் கால் பட்ட பிராட்டிமார் இடம்
அவள் போக்யதையில் ஈடுபட்டு இத்தலை அத்தலையான படி
அல்லி மலர்மகள் போக மயக்குக்கு ஆளாகியும் நிற்கும் அம்மான்
அப்படிப் பட்டவன் எனது பக்தியை பெற்றுக் கொள்ள வில்லையே வருத்தம் தோன்ற பார் வண்ண மட மங்கை பித்தர் –
அவர்கள் போகங்களில் ஈடுபட்டு என்னை மறந்தான்
இவ்வளவையும் திருத் தாயார் அனுவதித்து -சொல்லி

பாவம் செய்தேன்
வினவ வந்தவர்களுக்கு அழுது காட்டுகிறாள்
காலிப்பின்னே வருகின்ற கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர்
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாரும் இல்லை போலே
ஞாலத்து புத்ரியைப் பெற்றாள் நானே மற்றாரும் இல்லை சொல்லிக் கொள்ளவே விருப்பம்
கட்டுப்பாடுக்காக மறைக்கிறாள்

ஏர் வண்ண என் பேதை
இவள் அழகுக்கு அவன் அன்றோ மடல் எடுக்க வேணும்
இவள் வடிவுக்கு உவமை இல்லை சொல்ல

என் சொல் கேளாள்
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம
என்று அவன் சொல்லி இருக்கும் வார்த்தைகளைக் கேட்டு இருக்குமவள் என் சொல்லைக் கேட்பாளோ

எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
என் வார்த்தை கேளாத மாத்ரமேயோ
அவன் இருக்கும் தேசத்துக்கும் வழி தேடுகிறாள்
என்னை தனக்கே யாக்கிக் கொண்டவனுடைய கோயிலுக்கு எங்கே வழி

நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் என்னும்
திருக் குறையலூரில் நின்றும் புறப்பட்டு
திரு நீர் மலைக்கு போய்
அங்கு நின்றும் திருவரங்கம் பெரிய கோயிலுக்கு போக வேணும்
என்று வழி கண்டு இருக்கிறாள் போலும்
கோயிலிலே கெட்டுப் போன பொருளை குளத்திலே தேடுமா போலே இருக்கிறது இவள் படி
திருப் பதிகளில் தங்கி தங்கி போகப் பார்க்கிறாள் ஆயிற்று

இது அன்றோ நிறைவழிந்தார் நிற்குமாறு
தன் தலையிலே ஸ்வரூபத்தை பாராதே
எதிர் தலையில் வைலஷணயத்தையே பார்த்து
பதறுவார் உடைய படி இது அன்றோ
இப்படியும் அடக்கம் கெட்டாளே என் மகள் -என்கிறாள்-

—————————————————————

இதுவன்றோ நிறைவழிந்தார் நிற்குமாறோ“ என்றாள் கீழ்ப்பாட்டில். அதுகேட்ட பெண்டுகள்
‘இப்படியும் சொல்லிக் கைவிடலாமோநீ? ‘நீ விரும்புகிற புருஷன் வேற்றுப் பெண் பிள்ளைகள் பக்கலிலே
சாலவும் ஆழ்ந்து கிடப்பவனாகையாலே அவன் உனக்கு முகந்தரமாட்டான்;
வீணாக ஏன் அவனிடத்து நசை வைத்துக் கதறுகின்றாய்?‘ என்று சொல்லியாவது மகளை மீட்கப் பார்க்கலாகாதோ?‘ என்று சொல்ல;
‘அம்மனைமீர்! அதுவுஞ் சொன்னேன்; நான் சொல்வதில் ஒரு குறையுமில்லை;
என் உபதேசமெல்லாம் விபரீத பலமாய்விட்டது காணீர்‘ என்கிறாளிதில்.

முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள்,தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்,
பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி,
பொற்றாம ரைக்கயம்நீ ரா டப் போனாள் பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே.

பதவுரை

பொருவு அற்றாள் என்மகள்–ஒப்பில்லாதவளான என்பெண்ணானவள்,
முற்று ஆராவனம் முலையாள்–முழுமுற்றும் போந்திலாத அழகிய முலைகளை யுடையவளும்
பாவை-சித்திரப் பதுமை போன்றவளுமான ஸ்ரீ மஹாலக்ஷ்மி
மாயன்-அற்புதனான எம்பெருமானுடைய
பெற்றேன்-பெற்றெடுத்த தாயாகிய நான்,
வாய் சொல் பேச-(ஹிதமாகச் சில) வார்த்தைகள் சொல்ல,
இறையும்-சிறிதேனும்
கேளாள்-காது கொடுத்துங் கேட்பதில்லை;
பேர் பாடி-திருப்பேர் நகரைப் பாடியும்
தண் குடந்தை நகர் பாடியும்-குளிர்ந்த திருக்குடந்தை நகரைப் பாடியும்
மொய் அதலத்துள் இருப்பாள் அஃது கண்டும்-அழகிய திருமார்பினுள் அடங்கிவாழும்படியைக் கண்டு வைத்தும்
அற்றாள்-அவனுக்கே அற்றுத் தீ்ர்ந்தாள்;
தன் நிறைவு அழிந்தாள்-தன்னுடைய அடக்கமொழிந்தாள்;
ஆவிக்கின்றாள்-நெடு மூச்செறியா நின்றாள்;
தோழீ அணி அரங்கம் ஆடுதுமோ என்னும்-தோழீ! திருவரங்கநகர் படிந்தாடுவோமா?‘ என்கிறாள்;
பொன் தாமரை கயம்-திருப்பொற்றாமரைத் தடாகத்திலே
நீர் ஆட-குடைந்தாடுவதற்கு
போனாள்-எழுந்து சென்றாள்;
உம் பொன்னும் அஃதே-(தோழியர்காள்!) உங்கள் பெண்ணின்படியும் இவ்வண்ணமேயோ?

முற்றாராவன முளையாள்பாவை என்கிறது பெரியபிராட்டியாரை.
பிராட்டியின் பருவத்தைப் பற்றிச் சொல்லுமிடங்களில் “யுவதிச்ச குமாரிணீ“ என்று சொல்லப்பட்டது; அதாவது –
குமாரியாயிருக்கும் நிலைமையிலே நிற்பவளாய் அத்தோடு யௌவனமும் வந்து முகங்காட்டுமளவாயிருக்கும் இவள் பருவம் என்றபடி.
அதற்கு இணங்க ‘முற்றாராவன முளையாள்பாவை‘ என்கிறது.
முழுமுற்றும் போந்திலாத அழகிய முலையையுடையளான ஸ்ரீமஹாலெட்சுமி –
உபயவிபூதி நிர்வாஹகனாய் எல்லையில் ஞானத்தனாய் நிரூபாதிக ஸ்வதந்த்ரனாய் அவாப்த ஸமஸ்த காமனாயிருக்கு
மெம்பெருமானையும் தன்னுடைய ஒரு அவயவ விசேஷத்திலே அடக்கியாளப் பிறந்தவளென்கிறது.

மாயன்மொய்யகலத்துள்ளியிருப்பாள் அஃதுங்கண்டும் அற்றாள் =
எம்பெருமான் பிராட்டியின் திருமுலைத் தடத்தைவிட்டுப் பேராதாப் போலே அவள் இவனுடைய திருமார்பை விட்டுப் பேராதிருக்கிறபடி;
இவன் அவளுடைய திருமுலையைப் பற்றி ‘அகலகில்லேனிறையும்‘ என்பன்;
இவள் அவனுடைய திருமார்வைப்பற்றி ‘அகலகில்லேனிறையும்‘ என்பள்.
முலையை யணைந்து அவன் பித்தேறிக்கிடக்க, மார்வையணைந்து இவள் பித்தேறிக்கிடக்க,
இங்ஙனே ஒரு திவ்யதம்பதிகள் பைத்தியம் பிடித்துப் படுகிறபாடு என்! என்னலாம்படி யிருக்கும்.

(அஃதுங்கண்டும் அற்றாள்)
“திவளும் வெண்மதிபோல் திருமுகத்தரிவை செழுங்கடலமுதினிற் பிறந்தவளும்,
நின்ஆகத்திருப்பது மறிந்துமாகிலுமாசை விடாளால்“ என்றவாறு.
உலகத்தில் ஒரு புருஷன் ஒரு ஸ்திரீயினிடத்தில் அளவற்ற அன்பு வைத்திருப்பதாகக் கண்டால் அவனிடத்தில்
மற்றையோர் ஆசைவைப்பது கூடாது; ஏனெனில்;
அவனுடைய ஆசைப்பெருக்கம் முழுதும் ஒருவ்யக்தி வழியிற் பாய்ந்துவிட்டதனால் அது மற்றொரு வ்யக்தியிற் பாய மாட்டாது;
அலக்ஷயஞ்செய்யவே நேரிடும். ஆகவே, ஏற்கனவே ஒரு வ்யக்தியினிடத்தில் காதல் கொண்டிரா நின்ற புருஷனை
மற்றையோர் காதலிப்பது விவேகிக்ருத்யமன்று. இஃது உலகில் ஏற்பட்ட விஷயம்.
இந்த நியாயத்தைக் கொண்டு பார்க்குமளவில், என்மகள்
அல்லிமலர் மகள் போகமயக்குக்களாகியும் நிற்குமம்மா னிடத்தில் ஆசைவைப்பது கூடாது.
அழகிற்சிறந்த திருமகள் ஒரு நொடிப்பொழுதும் விடாது திருமார்பிலேயே அந்தரங்கமாக வாழ்வதைக் கண்டுவைத்தும்
இவள் அவ்விடத்திற்கே அற்றுத் தீர்ந்தாள் காண்மின் என்றாள் திருத்தாய்.

“நீரிலே நெருப்புக் கிளருமாபோலே குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால் பொறுப்பது இவளுக்காக“
என்கிறபடியே குற்றங்களைப் பொறுப்பிக்கவல்ல பெரியபிராட்டியாரும்,
“தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலுஞ் சிதகுரைக்குமேல், என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்றுசெய்தாரென்பர்“
என்கிறபடியே * செய்தகுற்றம் நற்றமாகவே கொள்ளவல்ல என்பெருமானும் கூடியிருக்கிற இவ்விருப்புத்தானே
நமக்குப் பரமஉத்தேச்யமென்று கொண்டு அந்த மிதுனத்திலே ஈடுபடாநின்றாளாயிற்று.

தன்நிறைவழிந்தாள் =
அந்த மிதுனத்தில் ஈடுபட்டமாத்திரமேயோ? தன் பெண்மைக்குரிய அடக்கமும் அழியப்பெற்றாள்.
‘கடல்வற்றிற்று‘ என்பாரைப்போலே சொல்லுகிறபடி காண்மின்.
நிறைவழிந்தாளென்பதை நீ அறிந்தமை எங்ஙனே? என்று கேட்க ஆவிக்கின்றாள் என்கிறாள்.
கீழ் ‘எம்பெருமான் திருவரங்கமெங்கே?‘ என்று திருவரங்கம் பெரிய கோவிலுக்குப்போக வழி தேடினவள்
அதுதெரியப் பெறாமையாலே நெடுமூச்செறியா நின்றாள். இதுவே நிறைவழிந்தமைக்கு அடையாளம்.

அணியரங்கமாடுதுமோ தோழீயென்னும் =
பரகாலநாயகியின் நிலைமையைக் கண்டு ‘எம்பெருமானோ இவளுக்கு முகங்காட்டிற்றிலன்;
ஹித பரையான தாயார் சொல்லும் வார்த்தைகளில் ஒன்றும் இவளுக்கு ப்ரியமல்லாமையாலே தாயைக் கொண்டு
இவள் ஆச்வஸிக்கவழியில்லை; இத்தருணத்தில் இவளுக்கு நாம் அருகே நின்று முகங்காட்டுவோம்‘ என்று
நினைத்துத் தோழிவந்து பக்கத்தில் நின்றாள்;
நின்றவாறே ‘அணியரங்கமாடுதுமோ தோழீ!‘ எனத் தொடங்கினாள்.
ஸ்ரீரங்கநாதனாகிற பொய்கையிலே படிந்து குடைந்தாடி நம்முடைய விரஹதாபமெல்லாம் தணியப் பெறுவோமோ? என்றாளென்க.

பெற்றேன் வாய்ச்சொல் இறையும் பேசக்கேளாள் =
‘இனி நாம் இவள் வருந்தும் படியான ஹித வார்த்தைகளைச் சொல்லக் கடவோமல்லோம்;
இவளுக்கு ப்ரியமான வார்த்தை களையே சொல்லுவோம்‘ என்று நினைத்து இவளுடைய காரியங்களுக்கு
உடன்பாடான வார்த்தைகளைச் சொல்லுவதாக நான் வாய்திறந்தாலும்
‘என்வாயில் வருகிற வார்த்தை‘ என்பதுவே காரணமாக அந்த அநுகூல வார்த்தைகளையும் செவிதாழ்த்துக் கேட்கிறாளில்லை.
‘அணியரங்கமாடுவோம், நீர்வண்ணன் நீர்மலைக்கே போவோம்‘ என்று காதை மூடிக்கொள்ளுகிறளென்றபடி.
அவன் சொன்ன வார்த்தைகளைக் கேளாள். பிரதிகூலமே சொல்லிப் போருவார் வாயிலே அநுகூல வார்த்தைகள் வந்தாலுங் கேட்பாரில்லையிறே.

உன்வார்த்தை கேளாத அவளுடைய வார்த்தை இருந்தபடி என்? என்று கேட்க,
பேர்பாடித் தண்குடந்தை நகரும்பாடி என்கிறாள்.
கோவிலுக்குப் போம் வழியிலுள்ள பாதேயங்களைப் பேசா நின்றாளென்கிறாள்.
திருக்குறையலூரிலிருந்து திருவரங்கம் போக வேண்டுவார் முந்துறத் திருக்குடந்தையைப் பாடிப் பின்னைத்
தென்திருப்பேர்நகரைப் பாட வேண்டுவது ப்ராப்தமாயிருக்க க்ரம ப்ராப்தி பற்றுகிறதில்லை ஆற்றாமையின் கனம்.
(பாதேயம் = வழிப்போக்கில் உணவுச்சாதம்)

பொற்றாமரைக்கயம் நீராடப்போனாள் =
கீழே திருக்குடந்தை ப்ரஸ்துதமாகையாலே அத்தலத்தில் புண்ணியதீர்த்தமாக வழங்கி வருகின்ற பொற்றாமரை என்னும்
புஷ்கரிணியிலே நீராடப்போனாள் என்று பொருள்கொள்ளப் பொருந்துமாயினும்
எம்பெருமான் றன்னையே பொற்றாமரைக்கயமாகப் பேசுகிறாரென்றலும் பொருந்தும்.
தமிழர், ஸம்ச்லேஷத்தைச் சுனையாடலென்றும் நீராட்டமென்றும் சொல்லுவார்கள்.
எம்பெருமானோடு கலவி செய்ய விரும்புவதையே இங்குப் பொற்றாமரைக் கயம் நீராடப்போவதாகச் சொல்லிற்றென்க.

இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்; –
‘மகள் ‘ அணியரங்காடுதுமோ‘ என்று ஊரைச் சொன்னாள்;
தான் * பொற்றாமரைக் கயமென்று பெரிய பெருமாளைச் சொல்லுகிறாள்:
‘தயரதன் பெற்ற மரதக மணித்தடம்‘ என்றும்
‘வாசத்தடம்போல் வருவானே!‘ என்றும் தடாகமாகச் சொல்லக்கடவதிறே“ என்பதாம்.

அவள் பொற்றாமரைக்கயம் நீராடப் புறப்பட்டால் நீ தடை செய்யலாகாதோ? என்ன,
பொருவற்றாள் என்மகள் என்கிறாள். பொருவு – பொருத்தம்; என்னோடு சேர்த்தியற்றாள் என்றபடி.
என் உறவை அறுத்துக் கொண்டவளை நான் எங்ஙனே நியமிப்பேன்? என்கிறாள்.
இனி, ‘பொருவற்றாள்‘ என்பதற்கு ‘ஒப்பில்லாதவள்‘ என்றும் பொருளாகும்.

உம்பொன்னுமஃதே =
இரண்டு வகையான பொருளைக் கருதி இச்சொல் சொல்லுகிறாள்;
உங்கள் வயிற்றிற் பிறந்த பெண்ணும் இவளைப்போலே அடங்காப் பிடாரிதானோ?
அன்றி விதேவையா யிருப்பவளோ? என்று கேட்பது வெளிப்படை. உங்கள் பெண்ணுக்கு இத்தனை வைலக்ஷண்யம் இல்லையே!,
நங்கைமீர்! நீரு மோர்பெண்பெற்று நல்கினீர், எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற வேழையை! என்றாற்போலே கொண்டாட்டம் உள்ளுறை.

“உம்பொன் என்கிறது அல்லாத ஆழ்வார்களை;
‘மத்துறு கடை வெண்ணெய் களவினிலூரவிடையாப்புண்டு, எத்திறம்! உரலினோடிணைந்திருந் தேங்கிய எளிவே!!‘
என்று அவதாரத்தை அநுஸந்தித்திறே அவர்கள் மோஹித்தது; அர்ச்சாவதாரத்திலேயிறே இவள் மோஹிப்பது“
என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

மொய் அகலத்துள் இருப்பாள் அஃது கண்டும் அற்றாள்

முற்று ஆரா வன முலையாள் பாவை -என்கிறது பெரிய பிராட்டியாரை -யுவதிச்ச குமாரிணி
அவாப்த சமஸ்த காமனையும் ஒரு அவயவ விசேஷத்தில் அடக்கி ஆளப் பிறந்தவள்

மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃது கண்டும் அற்றாள்
அகலகில்லேன் இறையும் என்று
முலையை அணைந்து அவன் பிதற்றிக் கிடக்க
மார்பை அணைந்து இவள் பிதற்றிக் கிடக்க
திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்தவளும்
நின்னாகத்து இருப்பதுவும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால்
நீரிலே நெருப்பு கிளருமா போலே குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தால் சீற்றம் பிறந்தால்
பொறுப்பது இவளுக்காக
அவனும் தன அடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என் அடியார் அது செய்யார் செய்தாறேல் நன்றே செய்தார் என்று
குற்றமே நற்றமாக கொள்பவன்
இவ்விருப்பு தானே நமக்கு பரம உத்தேச்யம் என்று மிதுனத்தில் ஈடுபடா நின்றாள்

தன் நிறை வழிந்தாள்
நிறை அழிந்தமைக்கு அடையாளம் எம்பெருமான் திருவரங்கம் எங்கே -என்கிறாள்
தோழியிடம்
அணி அரங்கம் ஆடுதுமோ தோழி
ஸ்ரீ ரெங்கநாதன் ஆகிற பொய்கையிலே குடைந்தாடி விரஹ தாபம் தனியோ பெறுவோமா –

பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்
பெற்றதே குற்றமாக
அவன் சொல்லும் தோழி சொல்லும் கேட்பவள்
அனுகூல வார்த்தை எனது வாயிலே வந்தாலும் கேளாள்

பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி
கோயிலுக்கு போம் வழியில் பாதேயங்களை பேசா நின்றாள்
திருக் குறையலூரில் இருந்து கோயிலுக்கு
முதலில் திருக் குடந்தை பாடுவது இருக்க
ஆற்றாமையின் கனத்தால் க்ரம ப்ராப்தி பற்றுகிறது இல்லை

பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்
மகள் அணி அரங்கம் ஆடுதுமோ என்று ஊரைச் சொன்னாள்
தான் பொற்றாமரைக் கயம் என்று பெரிய பெருமாளைச் சொல்லுகிறாள்
தயரதன் பெற்ற மரகத மணித்தடம் -என்றும்
வாசத்தடம் போல் வருவானே -என்றும்
தடாகமாகச் சொல்லக் கடவது இறே
திருக்குடந்தை புஷ்கரணியை சொன்னாள் என்றுமாம்
ஆனால் வ்யாக்யானத்துக்கு சேர எம்பெருமானையே குறிக்கும்

உம் பொன்னும் அக்தே
உங்கள் வயற்றில் பிறந்த பெண்ணும் இப்படியா சொல் கேளாமல்
உங்கள் பெண்ணுக்கு இவ்வளவு வைலஷண்யம் இல்லையே
நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர் எங்கனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை
என்றால் போல கொண்டாட்டம் உள்ளுறை

உம் பொன் என்கிறது அல்லாத ஆழ்வார்களை
மத்துடை கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு எத்திறம்
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -என்று
அவதாரத்தை அனுசந்தித்தவாறே அவர்கள் மோஹித்தது
அர்ச்சாவதாரத்தில் இறே இவள் மோஹிப்பது –

பொன் என்ற சொல் உவமை ஆகு பெயரால் பெண்ணை குறிக்கும் –

————————————————————————–

பண்டு ஸ்ரீராமாவதாரத்தில் பிராட்டிக்கு உதவினபடியையும்,
ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் பேரனுக்கு உதவினபடியையும்,
வராஹாவதாரத்தில் பூமிப்பிராட்டிக்கு உதவினபடியையும்,
பிரளயகாலத்தில் உலகங்கட்கெல்லா முதவினபடியையும்,
த்ரிவிக்ரமாவதாரத்தில் ஸர்வஸ்வதானம் பண்ணினபடியையும் எடுத்தெடுத்துப் பரகாலநாயகி வாய்விட்டுக்
கதறுகின்றபடியைத் திருத்தாயார் சொல்லாநின்று கொண்டு, இப்படிப்பட்ட என் மகளை இந்நிலவுலகத்தில்
பெரும்பாக்கியம் படைத்தவளென்று சொல்லலாமத்தனையன்றி வேறெதுவும் சொல்லப்போகாதென்று தலைக்கட்டுகிற பாசுரம் இது.

தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீ ஒல்கி,
பேராள னாயிரம் வாணன் மாளப் பொருகடலை யரண்கடந்து புக்கு மிக்க
பாராளன், பாரிடந்து பாரை யுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன், பேரோதும் பெண்ணை மண்மேல் பெருந்தவத்தள் என்றல்லால் பேச லாமே?

பதவுரை

முன்–முன்பொருகால்
தேர் ஆளும் வாள் அரக்கன்–தேர்வீரனும் வாட்படை வல்லவனுமான இராவணனுடைய
செல்வம் மாள-ஐச்வரியம் அழியவும்
தென் இலங்கை மலங்க-(அவனது) தென்னிலங்கா புரி கலங்கவும்
(அனுமானையிட்டு)
செம் தீ ஓங்கி–சிவந்த நெருப்பாலே கொளுத்தி,
(அதுவன்றியும்)
போர் ஆளன்-போர்புரியுந் தன்மையனாய்
ஆயிரம் தோள்-ஆயிரம்தோள்களை யுடையனான
வாணன் பாணாஸுரன்
மாள-பங்கமடையும்படி செய்தற்கு
பொருகடல் அரணை கடந்து-அலையெறிகின்ற கடலாகிற கோட்டையைக் கடந்து
புக்கு–பாணபுரத்திற்புகுந்து
மிக்க-வீரலக்ஷ்மி மிகப்பெற்றவனும்
பார் ஆளன்–பூமிக்குநிர்வாஹகனும்,
பார் இடந்து–(வராஹாவதாரத்தில்) பூமியைக் குத்தியெடுத்தும்
பாரை உண்டு–(பிரளயத்தில்) பூமியைத்திரு வயிற்றிலே வைத்தும்
பார் உமிழ்ந்து–அப்பூமியைப் பிறகு வெளிப்படுத்தியும்
பார் அளந்து–(த்ரிவிக்ரமாவதாரத்தில்) அப்பூமியை அளந்தும்
(ஆக இப்படியெல்லாம்)
பாரை ஆண்ட–இவ்வுலகத்தை ரக்ஷித்தருளின் வனான
பேர் ஆளன்–பெருமை பொருந்தின எம் பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓதும்-இடைவிடாமற் சொல்லுகிற
பெண்ணை-இப் பெண் பிள்ளையை
மண் மேல்-இந்நிலவுலகத்தில்
பெருந்தவத்தன் என்று அல்லால் பேசலாமே–பெருமாபாக்கிய முடையவள் என்று சொல்லலாமத்தனை யொழிய வேறு சொல்லப்போமோ?

தேராளும் வாளரக்கன் செல்வம் மாள =
இத்தனை தேர்களை ஆண்டா னென்று ஒரு கணக்கிட்டுச் சொல்லாத பொதுவிலே ‘தேராளும்‘ என்றது,
தேரென்று பேர் பெற்றவை யெல்லாவற்றையும் ஆண்டவனென்றபடி.
இது சொன்னது ரத கஜ துரக பதாதிகள் என்கிற சதுரங்க பலத்தையும் ஆண்டமை சொன்னவாறு.
பெருவீரர்களைப் பேசும்போது ‘அதிரர்‘ ‘மஹாரதர்‘ என்று தேரையிட்டு நிரூபித்துப் பேசுவது மரபாதலால் இங்கும் தேராளும் என்றது.

(வாளாரக்கன்.)
கீழ்ச்சொன்ன சதுரங்கபலங்களையும் அழகுக்காகக் கட்டி வைத்தானத்தனையே யென்னவேண்டும்படியான தனிவீரன்.
ஆக இப்படிப்பட்ட அரக்கனுடைய

செல்வம்மாள =
ஒன்றுக்கும் விகாரப்படகில்லாத அனுமானும் கண்டு போர்ப்பொலியக் கொண்டாடின செல்வமன்றோ இராவணனது.
“யத்யதர்மோ ந பலவாந் ஸ்யாதயம் ராக்ஷஸே ச்வா; ஸ்தாயம் ஸுரலோகஸ்ய ஸசக்ரஸ்யாபி ரக்ஷிதா.“
(இவ்விராவணனிடத்தில் அதர்மம் ஒன்று மாத்திரம் இல்லாதிருந்தால் இவனே தேவாதி தேவனாக விளங்கவல்லவன்
(என்றாயிற்று அனுமான் பேசினது. அங்ஙனம் வியக்கத்தக்க ஐச்வரியமெல்லாம் தொலையும்படியாக.

தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீயொல்கி =
தென் என்று கட்டளைப்பட்டிருக்குமொழுங்கபாட்டைச் சொன்னபடி.
சுற்றுங்கடலாய் அப்புறம் நாடாய் அங்கே மலையாய் அதன்மேலே மதிளும்
அட்டாலையுமாயிருக்கிற கட்டழகையுடைய இலங்காபுரி என்றபடி.
அப்படிப்பட்ட நகரம் நிலை கலங்கும்படியாக நெருப்பையிட்டுக் கொளுத்திச் சுடுகாடாக்கினபடி.
இதற்கு முன்னே அக்னிபகவான் இராவணனிடம் அஞ்சி நடுங்கி அவனுக்குக் குற்றேவல் செய்து கொண்டு போதுமான
இரைபெறாத உடம்பு வெளுத்துக் கிடந்தான்;
அனுமான் இலங்கை புக்க பின்பு அவனுடைய வாலை அண்டை கொண்டு வயிறுநிரம்பப் பெற்றுத்
தன்னிறம் பெற்றுத் தேக்கமீட்டானென்க.

ஆக இவ்வளவும் பிராட்டிக்காகச் செய்த காரியத்தைச் சொன்னாளாயிற்று.

இனி இரண்டாமடியால் பேரனுக்குச் செய்த காரியஞ் சொல்லுகிறது.
வாணனை உயிரோடு விட்டிருக்கச் செய்தேயும் ‘வாணன் மாள‘ என்றது எங்ஙனே யென்னில்;
பின்பு அவன் உயிரோடிருந்த இருப்பு பிணமாயிருக்குந் தன்மையிற்காட்டில் வாசியற்ற தென்பது விளங்க மாள என்றது.

பொருகடலை அரண்கடந்துபுக்கு மிக்க பாராளன் =
எதிரிகட்கு அணுக வொண்ணாதபடி திரைக் கிளர்த்தியை யுடைத்தான கடலாகிற அரனைக் கடந்து
பரணபுரத்திலே சென்று புகுந்து வீரலக்ஷ்மியாலே மிக்கவனாய்,
பூமிக்குச் சுமையான வாணன் தோள்களை அறுத்தொழிக்கையாலே பூமிக்கு நிர்வாஹகனானவன்.

பாரிடந்து =
பிரளயத்தைச் சார்ந்திருந்த பூமியை மஹா வராஹரூபியாகச் சென்று உத்தரித்து வந்தபடி சொல்லுகிறது.
பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள், மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாந்
தேசுடைய தேவர் என்னை மாத்திரம் இப்படி உபேக்ஷித்திருப்பதே! என்பது கருத்து.

பாரையுண்டு =
பூமியை யடங்கலும் பிரளயப் பெருவேள்ளம் கொள்ளப் புகுகையில் எல்லாவற்றையும் வாரித்
திருவயிற்றிலே வைத்துக் காத்தபடி சொல்லுகிறது.
நானும் அக்காலத்தில் இருந்திருந்தேனாகில் திருமேனியோடே ஸம்பந்தம் பெற்றிருப்பேனே என்றவாறு.

பாருமிழந்து =
பிரளயகாலத்தில் திருவயிற்றினுள்ளே அடக்கின பூமியை மறுபடியும் வெளிப்படுத்திக்
கரண களேபரங்களைக் கொடுத்தருளி உருப்படுத்தினது இங்ஙனம் உபேக்ஷிக்கைக்காகவோ? என்றவாறு.

பாரளுந்து =
உலகளக்கிற வியாஜத்தாலே விரும்பாதார் தலையிலும் திருவடியை வைத்து ஸத்தை பெறுவித்தருளினவன்,
விரும்புகின்ற எனக்குத் திருமார்பைத் தாராவிடினும் ஊர்ப் பொதுவான திருவடியையும் தாரா தொழிவதே!
என்ற கருத்தப்படச் சொல்லுகிறபடி.

பாரையாண்ட =
ஆகக் கீழ்ச் சொன்னவற்றையெல்லாம் திரளப்பிடித்து நிகமனஞ் செய்கிறபடி.

தேராளும் வாளரக்கன் செல்வம்மாளத் தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீயொல்கிப் பாரையாண்ட பேராளன்;
பாரிடந்து பாரையாண்ட பேராளன்; பாரையுண்டு பாரையாண்ட பேராளன்; பாருமிழந்து பாரையாண்ட பேராளன்;
பாரளந்து பாரை யாண்ட பேராளன் – என்றிங்ஙனே அந்வயித்துக் கொள்ளலாம்.

இவை பரகாலநாயகி ஓதின திருநாமங்களாம்.
ஆக இப்படிப்பட்டவையும் இவை போல்வனவுமான திருநாமங்களை இடைவிடாமல் கால ஷேபார்த்தமாகப் பேசவல்ல விவளை,

மண்மேற்பெருத்தவத்த ளென்றல்லால் பேசலாமே? =
நித்யஸூரிகளின் திரளில் நின்று பிறிகதிர்ப்பட்டு வந்தவள் என்னலாமத்தனையொழிய வேறு பேசப்போமோ?
பூமியிலேயிருக்கச் செய்தே நித்யஸூரிகள் பரிமாற்றத்தை யுடையவளென்றே சொல்லி வேணும்.

ஆகத் திருத்தாயார் பாசுரமாகச் சென்ற இடைப்பத்து முற்றிற்று.

தேராளும் வாளரக்கன் செல்வம் மாள
ரத கஜ துரக பதாதிகள் சதுரங்க பலன்களையும் அழகுக்காக கொண்ட தனி வீரன்
வாள் படையும் கொண்டவன்
திருவடி மதித்த ஐஸ்வர்யம் மாள

தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி
திருவடி வாலை அண்டை கொண்டு
வயிறு நிரம்பப் பெற்று தன்னிறம் பெற்று
பிராட்டிக்காக செய்த கார்யம் சொல்லி

பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க பாராளன்
எதிரிகள் அணுக ஒண்ணாத படி திரைக் கிளர்த்தியை உடைய
கடலைக் கடந்து
பாணா புரத்திலே சென்று புகுந்து
வீர லஷ்மி யாலே மிக்கு
பூமிக்கு சுமையான வாணன் தோள்களை அறுத்து ஒழித்து
பூமிக்கு நிர்வாஹகன்
பேரனுக்காக செய்த கார்யம்

பாரிடந்து பாரை உண்டு பாரை உழிந்து
பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானிமிலா பன்றியாய்
தேசுடைய தேவர் என்னை மாதரம் உபேஷிப்பதே
இது எல்லாம் செய்து அருளியது
இப்பொழுது என்னை உபேஷிக்கைக்காகவோ

பாரளந்த
உபேஷிக்காதார் தலையிலும் திருவடியை வைத்து அருளிய நீ
விரும்புகின்ற எனக்கு திரு மார்பைத் தரா விடினும்
ஊர்ப் பொதுவான திருவடியையும் தாராது ஒழிவதே

பாரை ஆண்ட
கீழ் சொன்னது எல்லாம் திரள பிடித்து நிகமனம் செய்கிறபடி
பாரை யாண்ட பேராளன் முன்பு சொன்ன
ஸ்ரீ ராமாவதார
ஸ்ரீ கிருஷ்ணாவதார
ஸ்ரீ வராஹாவதார
பாரை உண்டு பாரை ஆண்ட பேராளன்
பாரை உமிழ்ந்து பாரை ஆண்ட பேராளன்
பார் அளந்து பாரை ஆண்ட பேராளன்
இப்படி ஒவ் ஒன்றிலும் அன்வயித்து
இவை போன்ற திரு நாமங்களை இடை விடாமல்
கால ஷேப அர்த்தமாக பேச வல்ல இவளை

மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசலாமே
நித்ய ஸூரிகளின் திரளின் நின்று
பிறி கதிர் பட்டு வந்தவள் என்னலாம் அத்தனை ஒழிய
வேறு பேசப் போமோ
பூமியில் இருக்கச் செய்தே நித்ய ஸூரிகள் உடைய பரிமாற்றம்
உடையவள் என்றே சொல்ல வேண்டும்
என்று சொல்லி திருத் தாயார் பேச்சாக தலைக் கட்டுகிறார்-

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திரு நெடும் தாண்டகம்-பாசுரங்கள்-11-15- -திவ்யார்த்த தீபிகை —

September 29, 2014

எம்பெருமானை யநுபவித்தல் பலவகைப் பட்டிருக்கும்;
அவனுடைய திருநாமங்களைச் சொல்லி யநுபவித்தல்,
திருக்கல்யாண குணங்களைச் சொல்லியநுபவித்தல்,
வடிவழகை வருணித்து அநுபவித்தல்,
அவனுகந்தருளின திவ்யதேசங்களின் வளங்களைப் பேசியநுபவித்தல்,
அங்கே அபிமாநமுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களின் பெருமையைப் பேசி யநுபவித்தல்-என்றிப்படி பலவகைப்பட்டிருக்கும் பகவதநுபவம்.

இவ்வகைகளில் பரம விலக்ஷணமான மற்றொரு வகையுமுண்டு; அதாவது-
ஆழ்வார் தரமான தன்மையை விட்டுப் பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக்கொண்டு
வேற்று வாயாலே பேசியநுபவித்தல்.
இப்படி யநுபவிக்குந் திறத்தில், தாய் பாசுரம் தோழி பாசுரம் தலை மகள் பாசுரம் என்று மூன்று வகுப்புகளுண்டு.
அப்போது ஆழ்வார்க்குப் பரகாலர் என்ற ஆண்மைப் பெயர் நீங்கி,
‘பரகாலநாயகி‘ என்று பெண்மைக்குப் பெயர் வழங்கப்பட்டுவரும்.
தாய் சொல்வது போலவும்
தோழி சொல்வது போலவும் தலைமகள் சொல்வது போலவும் பாசுரங்கள் வெளி வந்தாலும் பாசுரம் பேசுகிறவர் ஆழ்வாரேயாவர்.
ஒரு ஆறானது பல வாய்க்கால்களாகப் பெருகினாலும் அவற்றுக்குப் பிரதானமான பெயர் ஒன்றேயாயிருக்குமா போலே,
இம் மூன்று நிலைமைகளாகச் சொல் மாலை வழிந்து புறப்பட்டாலும்
“மன்னுமானமணி மாடமங்கைவேந்தன் மான வேற் பரகாலன் கலியன் சொன்ன“ என்று ஆழ்வார் பாசுரமாகவே தலைக்கட்டும்.

ஆழ்வார் தாமான தன்மையை விட்டிட்டு ஸ்த்ரீ பாவனையை ஏறிட்டுக் கொள்ளுதல் ஏதுக்காக வென்னில்;
ஆழ்வார் தாமாக ஏறிட்டுக் கொள்ளுகிறாரல்லர், அந்த அவஸ்தை தானே பரவசமாக வந்து சேருகின்றது.
புருஷோத்தமனாகிய எம்பெருமானது பேராண்மைக்கு முன் உலகமடங்கப் பெண் தன்மையதாய் இருக்கையாலும்,
ஜீவாத்மாவுக்கு ஸ்வாதந்திரிய நாற்றமே யி்ன்றிப் பாரதந்திரியமே வடிவாயிருக்கையாலும்
இவ் வகைகளுக்கேற்ப ஸ்த்ரீ பாவநை வந்தேறியன்று என்றே கொள்ளலாம்.

தண்டகாரண்ட வாஸிகளான முனிவர் இராமபிரானது ஸௌந்தரியத்தில் ஈடுபட்டுப் பெண்மை விரும்பி
மற்றொரு பிறப்பில் ஆயர் மங்கையராய்க் கண்ணனைக் கூடினர் என்ற ஐதீஹ்யமுண்டு.
ஆழ்வார் அப்படியன்றியே அப்போதே பெண்மையை யடைந்து புருஷோத்தமனை அநுபவிக்கக் காதலிக்கின்றனர்.

ஆண், பெண் என்ற வியவஹாரங்கள் சிற்றின்பநுகர்ச்சிக்கன்றோ ஏற்பட்டவை;
பேரின்பவநுபவத்திலே ஊன்றின ஆழ்வார்கள் பெண்மை யெய்துவதாகவும்
கொங்கை முதலிய சொற்களை யிட்டுப் பாசுரங்கள் கூறுவதாகவும் நிகழ்கிறவிது என்னோ? எனின்;
விஷயாந்தரகாமம் என்றும் பகவத் விஷயகாமம் என்றும் காமம் இருவகைப்படும்;
வேதாந்தங்களில் விதிக்கப்பட்ட பக்தியே ஆழ்வார்களுக்கு ச்ருங்கார முறைமையில் பரிணமித்து நிற்கும்.
சிற்றின்பவநுபவத்திற்குக் கொங்கை முதலியன ஸாதநமாயிருப்பது போல,
பகவத் விஷயாநுபவத்திற்குப் பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகள் இன்றியமையாதனவா யிருப்பதால்
அவையே கொங்கை முதலிய சொற்களால் அருளிச் செயல்களிற் கூறப்படுகின்றன வென்றுகொள்க.

ச்ருங்கார ரஸத்தின் ஸம்பந்தம் சிறிதுமின்றியே கேவலம் சுத்த பக்தி ரஸமாகவே பாசுரங்கள் அருளிச் செய்யக் கூடுமாயினும்
ஆழ்வார்கள் ச்ருங்கார ரஸத்தையுங் கலந்து பாசுரங்கள் பேசுவதற்குக் காரணம் யாதெனில்;
ஆரோக்கியத்திற்குக் காரணமாகிய வேப்பிலை யுருண்டையை உட் கொள்ள இறாய்க்குமவர்களுக்கு
வெல்லத்தை வெளியிற் பூசிக் கொடுத்துத் திண்பிப்பது போலச் சிற்றின்பம் கூறும் வகையாற் பேரின்பத்தைக் காட்டி நாட்டுகின்றனரென்ப.

பகவத் விஷயத்தில் அபிநிவேசம் மீதூர்ந் காலத்தில் தன் நிலைமாறிப் பெண் நிலை பெற்றுப் பேசுமிடத்தில்,
தாய் பாசுரமென்றும் தலைவி பாசுரமென்றும் தோழி பாசுரமென்றும் இப்படி வகுத்துக் கூறுவதற்கும் உட்கருத்து உண்டு;-
தோழியாகப் பேசுவதற்குக் கருத்து: –
நாயகனையும் நாயகியையும் இணக்கிச் சேர்க்குமவள் தோழியாவள்.
திருமந்திரத்தில் பிரணவத்தினால் எம்பெருமானோடு இவ்வாத்மாவுக்குச் சொல்லப்பட்ட அநந்யார்ஹசேஷத்வம்
முதலிய ஸம்பந்தங்களை உணருகையே அப்பெருமானோடு இவ்வாத்மா சேருகைக்கு ஹேதுவாகையாலே
அந்த ஸம்பந்த ஞானமாகிற ப்ரஜ்ஞாவஸ்த்தையைத் தோழி யென்பதாகக் கொள்க.

பெற்று வளர்த்துப் பெண் பிள்ளை யௌவன பருவத்தில் நாயகனிடத்துள்ள அன்பு மிகுதியால்
அவனிருப்பிடத்துக்குச் செல்ல வேணுமென்று பதறுமளவில் படி கடந்து புறப்படுகை குல மரியாதைக்குப்
பொருந்தாதென்று தடுப்பவள் உலகில் தாய் எனப்படுவள்;
ஸித்தோபாயமான எம்பெருமானைப் பற்றினவர்கள் பேற்றை விளம்பித்துப் பெறுதலில் காரணமில்லாமையாலே
அதனை விரைவில் பெறவேணுமென்கிற ஆவல் அதிகரிக்கப்பெற்று அதனால் படிகடந்து நடக்கவேண்டி வந்தவளவில்
இது ப்ரபந்நர் குடிக் கட்டுப்பாட்டுக்குச் சேராததென்று விலக்கி
‘எம்பெருமான் தானே வந்து விஷயீகரிக்கக் கண்டிருக்க வேணும்‘ என்று சொல்லித் துடிப்பை அடக்கப் பார்க்கிற
நம: பதத்திற் கூறப்பட்ட உபாய அத்ய வஸாயமாகிற ப்ரஜ்ஞாவஸ்த்தையைத் தாய் என்பதாக் கொள்க.

உறவினர் கூட்டக் கூடுகையன்றியே தானாகவே புணர்ந்து நாயகனுடைய மேம்பாட்டிலே ஈடுபட்டுக் குடியின் கட்டுப்பாட்டையும் பாராமல்
‘அவனைக் கிட்டியல்லது நான் உயிர்வாழ்ந்திருக்கமாட்டேன்‘ என்னும் பதற்றத்தை உடையவளாயிருப்பவள் உலகில் மகள்;
பிரணவத்தினாலும் நமஸ்ஸாலும் சேஷியென்றும் சரண்யனென்றும் உணரப்பட்ட எம்பெருமானுக்கு
நாராயண பதத்தினாற் கூறப்பட்ட ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி முதலியவற்றில் சேர்க்கையாலுள்ள பெருமையை அநுஸந்தித்து
அதனாலே அவனைத் தாமதித்து அநுபவிக்க நிற்க மாட்டாமல் ‘அவனே உபாயம்‘ என்ற கோட்பாட்டை அதிக்கிரமித்து,
கிட்டி யநுபவித்தாலொழியத் தரிப்புற்றிருக்க வொண்ணாதபடி நடக்கிற ப்ரஜ்ஞாவஸ்த்தையை மகள் என்பதாகக் கொள்க.

இம் மூன்று அவஸ்தைகளுள் முதல் அவஸ்தை நடக்கும்படியைத் தோழி பாசுரத்தாலும்,
இரண்டாவது அவஸ்தை நடக்கும்படியைத் தாய் பாசுரத்தாலும்,
மூன்றாவது அவஸ்தை நடக்கும்படியை மகள் பாசுரத்தாலும் வெளியிடுவரென்றதாயிற்று.

இப்பாசுரந் தொடங்கிப் பத்துப் பாசுரங்கள் தாய் வார்த்தையாகச் செல்லுகின்றன.
இவற்றில், ஆழ்வார்க்கு நாயகி யவஸ்தை ஒரு புறத்திலும்
தாயின் அவஸ்தை மற்றொரு புறத்திலும் நடக்கிறபடியாலே,
எம்பெருமானை அநுபவிப்பதில் ஆழ்வார்ககு விரைவு உண்மானமையும்
‘நாம் பதறக்கூடாது‘ என்கிற அத்யவஸாயமும் மற்றொரு புறத்தில் உண்டானமையும் விளங்கும்.
தன் ஸ்வரூபத்தை நோக்குமளவில் அத்யவஸாயம் உண்டாகும்;
அவனுடைய வைலக்ஷண்யத்தை நோக்குமளவில் பதற்றம் உண்டாகும்.

(பட்டுடுக்குமித்யாதி)
பரகால திருத் தாயார் தன் மகளின் நிலைமைகளைக் கண்டு கலங்கி
‘இவளுக்கு இப்படிப்பட்ட அவஸ்தை உண்டானமைக்கு என்ன காரணம்?‘ என்று குறி சொல்லுங் குறத்தியாகிய
கட்டுவிச்சி யொருத்தியை வினவ,
அவள் ‘எம்பெருமான் படுத்துகிறபாடு இது‘ என்று சொல்ல,
அதை வினவ வந்த உறவினர் பாடே சொல்லுகிறாளாய்ச் சொல்லுகிறது இப் பாட்டு–

பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள் பனி நெடுங்கண்ணீர் ததும்பப் பள்ளி கொள்ளாள்,
எட்டனைப்போ தெங்குடங்கால் இருக்க கில்லாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்
மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல் மடமானை இது செய்தார் தம்மை, மெய்யே
கட்டுவிச்சி சொல், என்னச் சொன்னாள் நங்காய் கடல் வண்ணரிது செய்தார் காப்பா ராரே?

பதவுரை

பள்ளி கொள்ளான்–உறங்குகின்றிலன்;
என் துணை போது-ஒரு நொடிப்பொழுதும்
என் குடங்கால் இருக்க கில்லாள்-என்மடியிலே பொருந்த மாட்டுகின்றிலன்;
எம்பெருமான்-எம்பெருமானுடைய
திரு அரங்கம்-ஸ்ரீரங்கக்ஷத்ரம்
எங்கே என்னும்-எங்கிருக்கின்றது? என்கிறாள்;
மணி வண்டு-அழகிய வண்டுகள்
மட்டு விக்கி-(உட்கொண்ட) தேன்விக்கி ரீங்காரஞ் செய்யப் பெற்ற
கூந்தல்-கூந்தலை யுடையவளான
மட மானை-அழகிய மான்போன்ற இப் பெண் பிள்ளையை
இது செய்தார் தம்மை-இப்படிப்பட்ட நிலைமை யடைவித்தவர் இன்னாரென்பதை,
கட்டுவிச்சி-குறி சொல்லுகிறவளே!
மெய்யே சொல் என்ன-உண்மையாகச் சொல்லுவாயாக, என்று நான் கேட்க, (அவள்)
கடல் வண்ணர் இது செய்தார் (என்று) சொன்னாள்-‘கடல் போன்ற நிறத்தை யுடையரான பெருமாள் இந்த நிலைமையை உண்டு பண்ணினார்‘ என்று சொன்னாள்;
நங்காய்-நங்கைமீர்களே!,
ஸ(ரக்ஷகனான எம்பெருமானே இது செய்தானான பின்பு)
காப்பார் ஆரே-இவ் வாபத்தைப் பரிஹரிக்க வல்லார் வேறு யாருளர்?.

பட்டு உடுக்கும் –
இப் பெண்பிள்ளையானவள் புடைவையை உடுக்கத் தொடங்கினாள்; ஏதுக்காக வென்னில்,
நல்ல வுடையை உடுத்தோமாகில் இவ்வுடையழகை இழக்கலாகாதென்று நாயகன் பதறி ஓடிவருவானென்று கருதி உடுக்கத் தொடங்கினாள்;
உடை வாய்த்தவாறே அவன் வருவானென்று மகிழ்ந்திருந்தவள் அவ்வளவிலும் அவன் வரக் காணாமையாலே

(அயர்த்து இரங்கும்)
மோஹிக்கலானாள்.
அயர்த்தல்-மோஹித்தல்; இரங்குதல்-வாய் பிதற்றுதல்.
இரங்குதல் முன்னமும் அயர்த்தல் அதற்குப் பின்பும் நிகழ வேண்டியிருக்க முறைமாறும்படி யாயிற்று விஷய வைலக்ஷண்யம்.

“பட்டுடுக்குமயர்த்திரங்கும்“
என்பதற்கு வேறொரு வகையாகவும் பொருள்கூறுவர்; அதாவது,
பட்டு உடுக்கும்-இப்போது தான் அரையில் துணியுடுக்கும் பருவமாயிருக்கச் செய்தேயும்,
அயர்த்து இரங்கும்=நாயகனைப் பிரிந்த நிலைமையில் மூச்சு அடங்கும்படியாக வுள்ளதாயிற்று இவளுக்கு நிகழ்கிற அவஸ்தை.
மோஹித்திருக்கும் நிலைமையில் ஞானம் நடையாடாமையாலே வருத்தமில்லை;
அதில் ஞானம் குடிபுகுந்து அரற்றுதலாய் செல்லும் நிலைமையில் வருத்தம் மிகுகையாலே அயர்வுக்குப் பின்பு இரக்கம் கூறப்பட்டது.

வாய் பிதற்றி வருந்திக் கிடந்த பெண் பிள்ளையை ஏதேனும் ஒரு விதத்தாலே தரிப்பிக்க வேண்டித் திருத்தாயார்,
பண்டு ஊணுமுறக்கமின்றியே இவள் பார்வையோடே போது போக்கிக் கிடந்தாளாகையாலே
அதைக் கொணர்ந்து தந்தோமாகில் ஒருவாறு ஆறியிருப்பளோவென்று பார்த்துப்
பாவையை (மரப்பாச்சியை)க் கொண்டுவந்து காட்டினாள்;
அது கண்ணுக்கு விஷம் போலே தோற்றினபடியாலே சீறியுதைத்துத் தள்ளினாள்.
பாவையை யொழியப் போதுபோக்காதிருந்தவளன்றோ இப்போது பாவையை அநாதரிக்கிறாள்.
பகவத் விஷயத்திலுண்டான ஸங்கம் இதர விஷயங்களிற் பற்றறுத்தபடி.

பனி நெடுங்கண்ணீர் ததும்பப் பள்ளி கொள்ளாள்=
இவளுடைய கண்களின் பரப்பு உள்ளவளவும் நீர் வெள்ளங் கோத்ததாயிற்று.
குளிர்ந்த ஆனந்தக் கண்ணீர் பெருக வேண்டுங் கண்களிலே அந்தோ! சோகக் கண்ணீர் பெருகும்படியாயிற்றே!
‘நெடுங்கண்‘ என்றது
மஹானான எம்பெருமானையும் ஒரு மூலையிலே அடக்கவல்லதான கண் என்றவாறு.
ஸ்வாபதேசத்தில் கண் என்று ஞானத்தைச் சொன்னபடி.
எம்பெருமானைச் சேரப் பெறாத வருத்தத்தினால் ஞானக் கலக்கமுண்டானமை கூறியவாறு.

‘படுக்கையிலே சாய்ந்து உறங்கப் புகுந்தால் கண்ணீர்த் ததும்புதல் மாறும்‘ என்று சொன்னாலும் பள்ளி கொள்கின்றாளில்லை;
“தொல்லைமாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குமுண்டோ கண்கள்துஞ்சுதல்“ என்றபடியே
கண்ணுறங்க ப்ரஸக்தியுண்டோ?
கூடிக் களிக்குங்கால் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பெற்று உறங்கப் பெறாள்.
பிரிந்து படுங்கால் சோகக் கண்ணநீராலே உறங்கப்பெறாள்.
ஸம்ச்லேஷதசையில் அவன் உறங்கவொட்டான்;
விச்லேஷதசையில் விரஹவேதனை உறங்க வொட்டாது.

தன் வயிற்றிற் பிறந்தவளைப் பற்றிச் சொல்லுமிவ்விடத்து ‘உறங்காள்‘ என்று சொல்லலாமாயிருக்க,
“பள்ளி கொள்ளாள்“ என்று கௌரவச் சொல்லாலே சொன்னது,
வயிற்றிற் பிறந்தவரேயாகிலும் பகவத் ஸம்பந்தம் பெற்றவர்கள் உத்தேச்யதை தோற்றக் கௌரவித்துச்
சொல்லக் கடவர்களென்கிற சாஸ்த்ரார்த்தை வெளிப்படுத்தும்.
“கள்ளவிழ்சோலைக் கணபுரம் கை தொழுதும் பிள்ளையைப் பிள்ளை யென் றெண்ணப் பெறுவரே“
“விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக்கேட்டு,
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருகவென்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே.“ என்ற பாசுரங்களுள் குறிக்கொள்ளத் தக்கன.

எட்டுணைப் போது என் குடங்காலிருக்க கில்லாள்=
பெண் பிள்ளை உறங்கக் காணாமையாலே, முன்பு தன் குடங்காலிலே உறங்கிப் போகக் கண்ட அநுபவத்தாலே
இப்போதும் அதில் உறங்கக் கூடுமோ வென்று பார்த்துத் தன் குடங்காலிலே இருத்தப் பார்த்தாள்;
அது நெருப்போடே அணைந்தாற்போல இருக்கையாலே துணுக்கென்றெழுந்தாள்.

இடைவிடாமல் என்குடங்காலிலேயே யிருந்து உறங்கிப் போது போக்கிக் கொண்டிருந்த விவளுக்கு
இப்போது ஒரு நொடிப்பொழுதும் அதிற் பொருந்தாதபடியாவதே! என வருந்திக் கூறுகிறபடி.
‘எட்டுணை‘ ‘எட்டணை‘ என்பன பாடபேதங்கள். (எள்Xதுணை= எட்டுணை.) எள் X தணை, எட்டணை.)
எள் எவ்வளவு சிறிதோ அவ்வளவு சிறுபொழுதும் – க்ஷண காலமும் என்றபடி.

இனி இவள் வாய்வெருவும் பாசுரமேதென்னில்,
எம்பெருமான் திருவரங்க மெங்கே யென்னும் =
என்னை இப்பாடுபடுத்தினவன் என்னை இங்ஙனே துடிக்கவிட்டு ஒரு விசாரமின்றியே கண்ணுறங்குமிடம்
எங்கே எங்கே யென்று பிதற்றா நின்றாள்.
பாவையைப் பேண் வொண்ணாதபடியும்
தாய் மடியிலே பொருந்த வொண்ணாதபடியும்
என்னைத் தன் பக்கலிலே ஈடுபடுத்திக் கொண்டவனுயையுமிடம் எங்கே யென்கின்றாள்.

காதலனுடைய திரு நாமத்தைச் சொல்லாமல் ‘எம்பெருமான்‘ என்றது ஏனென்னில்;
உற்றாருறவினர் கூட்டக் கூடினதன்றியே இயற்கைப் புணர்ச்சி யாகையாலே
ஆண்மை பெண்மைகளே ஹேதுவாகக் கலந்த கலவியாமத்தனை;
கூட்டுவாருண்டாகிக் கூடிலன்றோ திருநாமமறியலாவது; ஆகையாலே எம்பெருமான் என்கிறாள்.

ஆனால், அவனூர் திருவரங்கமென்பது மாத்திரம் எங்ஙனே அறியப்பட்ட தென்னில்;
ஸம்ச்லேஷகாலத்தில் நாயகன் விச்லேஷத்தை நினைத்து ‘பிரியேன்‘ பிரியில் தரியேன்‘ என்று பிரிவை
ப்ரஸங்கிக்கிறவளவிலே இவள் நம் ஊரைச் சொல்லிக் கொண்டாவது தரித்திருக்கவேணு மென்று
‘நம்மூர் திருவரங்கம் பெரியகோயில்‘ என்று சொல்லுகையாலே ஊரின் பெயர் தெரியலாயிற்றென்ப.

தன் மகளுக்கு நேர்ந்த நிலைமை பகவத் விஷயத்தில் அவகாஹித்ததனாலுண்டாய தென்று தனக்குத் தெரிந்திருந்தாலும்
இதனை உற்றாருறவினர்க்குத் தானே வெளியிடுதலிற் காட்டிலும் கட்டுவிச்சி முகமாக வெளியிடுதல் நன்றென்று
கருதிய திருத்தாய் ஒரு கட்டுவிச்சியைத் தேடிநின்றாள்;அவ்வளவிலே,

“கொங்குங் குடந்தையுங் கோட்டியூறும் பேரும்
எங்குந் திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்த்தூஉ,
கண்டியூராங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லையென்று
மண்டியே திருவேனை யாரிங்கழைத்த்தூஉ,
விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடமும்
மண்ணகரம் மாமட வேளுக்கை தென்குடந்தை
எங்குந்திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்துதூஉ,
நாகத்தணைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் நாவாயும்
எங்குந்திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்த்தூஉ,
வேங்கடமும் விண்ணவரும் வெஃகாவு மஃகாத
பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்னகரும் பூதூரும்
எங்குந் திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்ததூஉ!!!“

என்று தெருவேறக் கூவிக்கொண்டு தானாகவேவந்து சேர்ந்தாள்,
அவளை நோக்கித் தாயானவள்
“மட்டுவிக்கி மணிவண்டு முரலுங்கூந்தல் மடமானை யிருசெய்தார்தம்மை மெய்யே கட்டுவிச்சி! சொல்“ என்றாள்.

குறிசொல்லுகிற குறத்திக்குக் கட்டுவிச்சி யென்று பெயர்
திருவாய்மொழியில் “இது காண்மினன்னைமீர் இக்கட்டுவிச்சி சொற் கொண்டு“ என்றும்,
சிறிய திருமடலில் “அது கேட்டுக் காரார் குழற்கொண்டைக் கட்டுவிச்சிகட்டேறி“ என்றும் வருவன காண்க.

ஐயங்கார் திருவரங்கக் கலம்பதத்தில் –
“காலமுணர்ந்த குறத்தி நான் கருதினை யொன்றது சொல்லுவேன்,
பாலகனுச்சியி லெண்ணெய்வார் பழகியதோர் கலை கொண்டுவா,
கோலமலர்க்குழன் மங்கை! நின்கொங்கை முகக்குறி நன்றுகாண
ஞாலமுவந்திட நாளையே நண்ணுவை நம் பெருமாளையே‘ என்று கட்டுவிச்சியின் பாசுரமாகப்
பாடியுள்ள செய்யுளும் குறிக்கொள்ளத்தகும்.

(மட்டுவிக்கி இத்யாதி)
மதுவைக் கழுத்தளவும் பருகி ரீங்காரஞ் செய்கின்ற வண்டு கள் படிந்த கூந்தலை யுடையவளான இப்பெண் பிள்ளையை,
இதுசெய்தார் தம்மை=குழலிலணிந்த பூவைச் சருகாக்கி வண்டுகளைப் பட்டினி யடிக்கையாகிற இத்தொழில் செய்த பெரியவரை,

கட்டுவிச்சி! மெய்யே சொல் என்ன=
‘வாராய் குறத்தியே! நெஞ்சில் தோன்றின தொன்றைச் சொல்லிவிடக் கூடாது;
உள்ளபடியே சொல்ல வேணும்‘ என்று நான் கேட்க,

(கடல் வண்ணர் இது செய்தார் என்று சொன்னாள்)
கடலின் நிறம் போன்ற நிறமுடையரான பெரிய பெருமாள் செய்த தெய்வ நன்னோய்காண் இது! என்றாள்,
கடல் கொண்டு போன வஸ்துவை நம்மால் மீட்கப் போமோ? என்றாள்.

காப்பார் ஆரே? =
வேலியே பயிரை யழித்தால் நோக்குவாருண்டோ?

ஆக இப்பாசுரத்தால்,
எம்பெருமானுடைய நிர்ஹேதுக விஷயீகாரம் ஆழ்வார்க்கு வாய்த்தபடியும்,
இது நித்ய கைங்கரியத்திற்கு உறுப்பாகமல்
ஆற்றங்கரை வாழ் மரம்போல் அஞ்சும்படியாக இவ்விபூதியிலே இருக்க வைக்கையாலே நோயாகச் சொல்லப்படுகிற தென்பதும்,
இது தான் ஆத்ம ஸ்வரூபாநு பந்தியாகையாலே ஆத்மா உள்ளவரைக்கும் நிலைத்திருக்கக் கூடிய தாய் அபரிஹார்யமான தென்றும்,
இவ்வுண்மையை ஜ்ஞாநாதிகரான பாகவதர்கள் அறிவார்களென்றும் சொல்லிற்றாயிற்று.

நங்காய்! =
தாய் தன்து தோழியை நோக்கிச் சொல்லுகிறபடி.

ஆறு பல வாய்க்கால் வழியாக பெருகி வெவ்வேறு பெயர்கள் உண்டானாலும்
தாய் தோழி தலைமகள் தானான தன்மை பாசுரங்கள் ஆனாலும்
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் மான வேல் பரகாலன் கலியன் சொன்ன பாசுரமாகவே தலைக் காட்டி அருளும்
பெண்மையை அடைந்து புருஷோத்தமனை காதலிக்கிறார்
தண்ட காரண்ய ரிஷிகள் பெண்மை விரும்பு பெருமாளை அனுபவிக்க ஆசை கொண்டது போலே
வேப்பிலை உருண்டை வெல்லத்தில் சேர்த்து கொடுக்குமா போலே பகவத் காமம்-

தாய்- உபாய அத்யாவசியம் நம பதார்த்தம்
தோழி -சம்பந்தம் உணர்த்தும்
மகள் -நாராயண பதார்த்தம்- ஸ்வரூபம் ரூபம் குணங்கள் சேஷ்டிதங்கள்
கிட்டி அனுபவித்தால் அல்லது தரிக்க ஒண்ணாத பிரஞ்ஞா அவஸ்தை
தன் ஸ்வரூபத்தை நோக்கும் அளவில் அத்யாவசாயம் உண்டாகும்
அவனுடைய வைலஷண்யத்தை நோக்கும் அளவில் பதற்றம் உண்டாகும்

பட்டுடுக்கும்
தாயார் கட்டுவிச்சி
எம்பெருமான் படுத்தும் பாடி என்று சொன்னதை
அதை வினவ வந்த உறவினர் இடம் சொல்லுவதாக
நல்ல ஆடை உடுத்தி இதை காண நாயகன் வருவான்
என்று மகிழும்
வரக் காணாமையால்

அயர்த்து இரங்கும்
மோஹித்து வாய் பிதற்றும்
வாய் பிதற்றி மோஹிக்காமல் -முறை மாறும் படி விஷய வைலஷண்யம்
மோஹித்தாலும் ஞானம் புகுந்து அலற்ற வைக்கும்

பாவை பேணாள்
பகவத் விஷய சங்கம் இதர விஷய பற்று அறுத்த படி

பள்ளி கொள்ளாள்
கௌரவ வார்த்தை
கள்ளவிழ் சோலை கணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே
விளக்கொளியை மரகதத்தை திருத் தண் காவில் வெக்காவில் திரு மாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே
தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கு உண்டோ கண்கள் துஞ்சுதல்
சம்ச்லேஷ தசையிலே அவன் உறங்க ஒட்டான்
விஸ்லேஷ தசையிலே விரஹம் உறங்க ஒட்டாது

எட்டுணைப் போதும் என் குடங்கா லில் இருக்க கில்லாள்
எள் துண–எட்டுணை
எள் தனை -எட்டணை

எம்பெருமான் திருவரங்கம் எங்கே எங்கே என்னும்
திரு நாமம் அறியாள்
பிரியேன் பிரியில் தரியேன் -நம்மூர் திருவரங்கம் பெரிய கோயில் -என்று தரிக்க சொல்லிப் போந்தான்

தாய் கட்டுவிச்சி தேடி நிற்க
கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்கும் திரிந்து இன்றே மீள்வேனை யார் இங்கே அழைத்ததூஉ
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டியே திரிவேனை யார் இங்கே அழைத்ததூஉ
விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடமும்
மண்ணகரம் மா மாட வேளுக்கை தென்குடந்தை
எங்கும் திரிந்து இன்றே மீள்வேனை யார் இங்கே அழைத்ததூஉ
நாகத்தணை குடைந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் நாவாயும்
எங்கும் திரிந்து இன்றே மீள்வேனை யார் இங்கே அழைத்ததூஉ
வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் பூதூரும்
எங்கும் திரிந்து இன்றே மீள்வேனை யார் இங்கே அழைத்ததூஉ
என்று தெரு தெருவே கூடிக் கொண்டு தானாகவே வந்து சேர்ந்தாள்
மட்டுவிக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மடமானை இது செய்தார் தம்மை மெய்யே கட்டுவிச்சி சொல் -என்றாள்

ஐயங்கார் திருவரங்க கலம்பகத்தில்
காலம் உணர்ந்த குறத்தி நான் கருதினை ஒன்றது சொல்லுவேன்
பாலகன் உச்சியில் எண்ணெய் வார் பலகியதோர் கலை கொண்டு வா
கோல மலர்க்குழல் உன் மங்கை நின் கொங்கை முகக்குறி நன்று காண்
ஞாலம் உவந்திட நாளையே நண்னுவை நம்பெருமாளையே

மதுவை கழுத்தளவும் பருகி ரீங்காரம் செய்கிற வண்டுகள்
படிந்த கூந்தலை உடைய இப் பெண் பிள்ளையை

கடல் வண்ணர் இது செய்தார்
கடலில் போன வஸ்துவை நம்மால் மீட்கப் போமோ
வேலியே பயிர் அழித்தால் நோக்குவார் உண்டோ

ஆக
நிர்ஹேதுக விஷயீகாரம் ஆழ்வாருக்கு வாய்த்த படியும்
அது நித்ய கைங்கர்யத்துக்கு உருப்பாகாமல் ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சி
இது தான் ஆத்ம ஸ்வரூப அனுபபந்தி ஆகையால்
ஆத்மா உள்ளவரை நிலைத்து இருக்கக் கூடியதாய்
அபரிஹார்யமானது என்றும்
இந்த உண்மையை ஞானாதிகாரரான பாகவதர்கள் அறிவார்கள் என்றும் சொல்லிற்று-

————————————————————–

கீழ்ப் பாட்டில் ‘கடல்வண்ணர்‘ என்று கட்டுவிச்சி சொன்ன திருநாமத்தைத் திருத் தாயர்
வினவ வந்தார்க்குச் சொல்லி அநுவதிக்கையாலும்,
எம்பெருமான் திருவரங்கமெங்கே‘ என்று தானும் வாய் வெருவுகையாலும்
முந்திய அவஸ்தையிற் காட்டிலும் சிறிது உணர்த்தி பிறந்தது;
அவ்வளவிலும் காதலன் வந்து முகங்காட்டப் பெறாமையாலே ஆற்றாமை மீதூர்ந்து இடைவிடாமல் கூப்பிடத் தொடங்கினாள்;
அதனை வினவ வந்தார்க்குச் சொல்லி க்லேசப்படுகிறாள் திருத்தாய்.
இப் பெண் பிள்ளை நின்ற நிலை இது; இவளுடைய ஸ்வரூப ஹாநி இது; எனக்கு இவள் அடங்காதபடியானது இது;
இத்தனைக்கும் நான் செய்த பாபமே காரணமாயிற்றென்று சொல்லி யிரங்குகிறாளாயிற்று.

கீழ்ப்பாட்டில் “அயர்த்து இரங்கும்“ என்று சொன்ன இரக்கத்தின் வகைகளை
“நெஞ்சுருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்“ இத்யாதியாலே விவரிக்கிறபடி.

நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும் நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள்,
நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ என்னும் வம்பார்பூம் வயலாலி மைந்தா என்னும்,
அஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்,
எஞ்சிற கின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன் இருநிலத்து ஓர்பழிபடைத் தேன்ஏ பாவமே.

பதவுரை
(இப் பெண்பிள்ளை)
நெஞ்சு-மனமானது
உருகி-நீர்ப்பண்டமா யுருகி
கண் பனிப்ப நிற்கும்-கண்ணீர் பெருக நிற்கின்றாள்;
சோரும்-மோஹிக்கின்றாள்;
நெடிது உயிர்க்கும்-பெரு மூச்சு விடுகின்றாள்;
உண்டு அறியாள்-போஜனம் செய்தறியாள்;
உறக்கம் பேணாள்-உறங்க விரும்புகின்றிலன்;
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்-விஷத்தை உமிழ்கின்ற திருவனந்தாழ்வான் மீது யோக நித்திரை புரிகின்ற நம்பீ! என்கின்றாள்;
வம்பு ஆர் பூ வய்ல் ஆலி மைந்தா என்னும்-பரிமளம் மிக்க பூக்களை யுடைய கழனிகள் சூழ்ந்த திருவாலியிலுள்ள நித்ய யுவாவே! என்கிறாள்;
அம் சிறைய புள் கொடியே ஆடும்-அழகிய சிறகையுடைய கொடியாகிய பெரிய திருவடியை அநுகரித்து ஆடுகின்றாள்;
பாடும்-பாடுகின்றாள்;
தோழீ அணி அரங்கம் ஆடுதுமோ என்னும்-‘தோழீ! (நாம்) திருவரங்கத் துறையிலே படிந்தாடப் பெறுவோமோ?‘ என்கின்றாள்;
என் சிறகின் கீழ் அடங்கா–என் கைக்கடங்காத
பெண்ணை பெற்றேன்-பெண் மகளைப் பெற்ற நான்
இரு நிலத்து-விசாலமான இப் பூமண்டலத்திலே
ஓர் பழி படைத்தேன்-ஒப்பற்ற பழியை ஸாம்பாதித்துக் கொண்டேன்;
ஏபாவம்–அந்தோ!.

நெஞ்சு உருகி =
நெருப்பினருகே மெழுகு போலே விரஹாக்நியாலே நெஞ்சு பதஞ் செய்யா நின்றது.

கண் பனிப்ப =
உருகின வெள்ளம் உள்ளடங்காமையாலே, நீர் நிரம்பின ஏரிக்குக் கலங்கவெடுத்து
விடுங்கணக்கிலே கண் வழியே புற வெள்ளமிடுகிறபடி.

நிற்கும் =
க்ருத்யாக்ருத்ய விவேகம் பண்ணக் கடவதான நெஞ்சு அழிந்து போகையாலே
ஒரு வியாபாரமும் செய்ய மாட்டாதே நிற்கின்றாள்.

சோரும் =
துவட்சி யடைகின்றாள்;

நெடிது உயிர்க்கும் =
உள்ளுண்டான சோகாவேசத்தாலே நெடுமூச்செறியா நின்றாள்.

உண்டறியாள் =
உணவு இப்படியிருக்க மென்பதே இவளுக்குத் தெரியாது ;
கூடியிருக்குங் காலத்திலே “உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையு மெல்லாங்கண்ணன்“
என்றிருக்கையாலே அப்போதும் ஊண் இல்லை;
விரஹ காலத்தில் உணவு விஷமாயிருக்கையாலே ஊண் இல்லை;
ஆக உணவில் வ்யுத்பத்தியே யில்லை யென்றதாயிற்று.

உறக்கம் பேணாள் =
‘நங்காய்! காதலனுக்கு உன் உடம்பன்றோ தாரகம்; உடம்பன்றோ தாரகம்;
உறங்கா விடில் தேஹம் கெட்டுப் போகுமே; காதலன் பிறகு வருந்துவானே;
அவனுடைய போகம் குன்றாமைக்காகவாவது சிறிது உறங்க வேணும்‘ என்று சொன்னாலும் உறங்கப் பார்க்கின்றிலள்:
இவை யெல்லாம் எங்ஙனே யாயினுமாயிடுக; ஸ்வரூப ஹாநியாம்படி வாய் விட்டுக் கதறுகின்றாளே!,
அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகின்றாளே!,
இதனைப் பாருங்கோளென்கிறாள் நஞ்சரவில் என்று தொடங்கி.

நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீயென்னும் =
திருவனந்தாழ்வானுடைய பரிவுக்கு உகந்து ‘நஞ்சரவு‘ என்கிறாள்.
“ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு“ என்ற திருமழிசைப்பிரான் பாசுரத்தை இங்கு அநுஸந்திப்பது.
பரிவின் மிகுதியினால் அச்சத்திற்கு நிலமல்லாத ஸ்தாநத்திலும் அஞ்சிக் காப்பிடுகின்ற
திருவனந்தாழ்வானுடைய தன்மைக்குத் தான் உகந்தமை தோற்ற ‘நஞ்சரவு‘ என்றாளாயிற்று.
மென்மை, குளிர்த்தி, பரிமளம் என்று படுக்கைக்கு உரியனவாகச் சொல்லப்படுகிற லக்ஷணங்கள்
சாதியியல்வாகவே அமையப் பெற்ற ஆதிசேஷன் நம் தலைவனுக்குப் படுக்கையாகப் பெற்ற பாக்கியம் என்னே! என்று உகக்கிறாள் போலும்.
இப்படிப்பட்ட படுக்கையிலே படுத்து, வீசிவில்லிட் டெழுப்பினாலும் எழுந்திராதபடி கண் வளர்ந்தருளும் போது
தகட்டிலழுத்தின மாணிக்கம் போலே அழகால் குறையற்று விளங்குபவனே! என்று வாய்விட்டுக் கூப்பிடா நின்றாள்.

இப்படி உகந்து சொல்லுகிற ளென்கை யன்றியே ப்ரணய ரோஷந் தோற்றச் சொல்லுகிறாளென்றுங் கொள்ளலாம்;
எங்ஙனே யென்னில் ;
நஞ்சரவு பிரதிகூலர் கிட்டாமைக்கு நஞ்சை உமிழ்கிற னென்றிருந்தோம்;
அது ஒருவியாஜ மாத்திரமாய் என்னைப் போன்ற அநுகூலர்களும் கிட்ட வொண்ணாதபடி விஷத்தை உமிழ்கின்றானே!‘
இருவர் படுக்க வேண்டிய படுக்கையிலே ஒருவராய் எங்ஙனே துயிலமர்ந் திருக்கிறார்!
எனக்குத் தாயின் மடியும் பொருந்தாதிருக்க அவர்க்கு எங்ஙனே படுக்கை பொருந்திற்று என்றவாறு.

வம்பார் பூ வயலாலி மைந்தா வென்னும் =
தன்னைப் பாணி க்ரஹணம் பண்ணின விடத்தைச் சொல்லி வாய் வெருவுகின்றாள்.
எப்போதும் வஸந்த ருதுவே விளங்கும்படி யாகவுள்ள வயல்களாற் சூழப்பட்ட திருவாலியிலே தன்னுடைய
இளம் பருவத்தைக் காட்டி என்னைக் கொள்ளை கொண்டவனே! என்கின்றாள்.
நானிருக்குமிடம் நீரும் பூவும் பரிமளமுமின்றி வறண்டு கிடக்க, தானிருக்குமிடம் தளிரும் முறிவுமாய் விளங்குவதே!
என்று ஊடல் தோற்றத் சொல்லுகிற படியுமாம்.
தான் வாடிக் கிடக்கையாலே தானிருக்குமிடமும் வா