Archive for the ‘திருப்பாவை’ Category

ஸ்ரீராமருக்கு சங்கத் தமிழ் மாலை – ஸ்ரீபாவைப்படி ஸ்ரீராமாயணம்— ஸ்ரீசுஜாதா தேசிகன் அவர்கள் தொகுத்து அருளியது

April 9, 2023

ஸ்ரீ பால காண்டம்

1. உத்தமன் யார் என்று நாரதரை வால்மீகி கேட்க
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
உதவ
தேவாதி தேவன் சீர் மல்கும்
அயோத்தியில்
கதிர் மதியமாக
பாரோர் புகழ அவதரித்தான்.
( கதிரவன் குலத்தில் ; நிலவின் குணத்துடன் )

2. தசரதனிடம்
’யாம் வந்த காரியம் –
தவத்தவரை காக்க
ஆற்றப் படைத்த மகன்
ராமனை கொடு என்று விஸ்வாமித்திரர் கேட்க,
தசரதன் அவன்
பூவைப் பூ வண்ணா
என்று மறுக்க
வசிஷ்டர்
இளம் சிங்கம்
ராமரை அனுப்புங்கள் என்று கூற,
ராமனை அனுப்பி வைத்தான் தசரதன்.
3. பொற்றாமரை அடி
கல்லில் பட அகலிகையின் மேல்
சாபம் இழிந்தது.
4. திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற் போல்
ராமன்   சீதையை நோக்க —
செங்கண் சிறுச் சிறிதே …
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலை
நோக்கினாள்.

5. ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல,
வில் அரைவில் ஆக, ஜனகரின் புதல்வி சீதை ராமருக்கு
செல்வ பெண்டாட்டி
ஆனாள்.
———-
ஸ்ரீ அயோத்தியா காண்டம்
6. தசரதன் ராமனுக்கு இளவரசு பட்டத்தை பரிசுரைக்க,
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழத் துயிலணை மேல் இருந்த
தசரதனிடம்
ஒருத்தி ஓர் இரவில்
இரண்டு வரம்
வேண்டுவன கேட்க,
உன்மகன் தான் என்று கேள்விப்பட்டு
ஒருத்தி
வாய் நெகிழ்ந்து துடிக்கத்
தாயைக் குடல் விளக்கம் செய்த
காகுத்தன்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி,
சீதையுடன்
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் என்று கானகம் செல்ல,
உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
என்று லக்ஷ்மணன் முன் சென்றான்.

7.கறவைகள் பின் செல்லும் கன்றுகள் போல்,
நாடெல்லாம்
பின் சென்றது.

8.’பேய்ப் பெண்ணே!’
என்று அந்த ஒருத்தியைப் பரதன் வசை பாடி, காட்டுக்குச் சென்று ’அண்ணா !
வல்லீர்கள் நீங்களே !துன்பதுக்கு காரணம்
நானே தான் ஆயிடுக என்று
எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால்
தத்துவம் அன்று என்று கூறி, 
ஆற்றாது வந்து அடி பணிந்து  நிற்க,
செம்பொற் கழலடியை சம்மானமாக’
கொடுத்தனுப்பினார் ராமர்.

9.கள்ளம் தவிர்ந்து
ராமன்
உள்ளம் புகுந்த
குகனை
‘உம்பியும் நீயும்’
என்று சொந்தம் கொண்டாட,
கூடி இருந்து குளிர்ந்தான்.

10.பாதுகா ராணியைக்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே என்று சீரிய சிங்காசனத்தில்
அமர்த்தினான் பரதன்.
———-
ஸ்ரீ  ஆரண்ய காண்டம்
11. என்றென்றுன் சேவகமே
என்று இருக்கும்
முனிவர்களும் யோகிகளையும்
ராக்ஷசர்களிடமிருந்து
ஆழி போல் மின்னி சீறி அருளினான்.

12. பேய்முலை நஞ்சுண்டு
நற்செல்வன் தங்காய் போல்
வந்த சூர்ப்பணகையின் அகந்தை
அபிமானத்தைப் பங்கமாக்கினார்.

13. போதரிக் கண்ணினாய் (மான் போன்ற கண் உடையவள் )
மாயமானை வேண்டுமெனக் கேட்க, மான்பின் எம்பெருமான் ஓட,
வல்லை உன் கட்டுரைகள்
கேட்ட இளைய பெருமான்
மாற்றமும் தாராமல், வாசல் திறவாதார்
என்று சொல்லி விட்டு சென்றவுடன், சீதையைப்
பொல்லா அரக்கன்
அபகரித்தான்.

14. புள்ளரையன்
ஜடாயுவைப் பார்த்த ராமர்
ஆவாவென்று
அழுது, பின்
ஆராய்ந்து எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்று
மோட்சத்தை நல்கினான்.

15. சபரி ராமரைப் பார்த்து
உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
என்று
முழங்கை வழி வாரக்
கொடுத்த நற் பழங்களை ராமர் சுவைத்த பின் ,
‘உனக்கே நாம் ஆட் செய்வோம்’
என்று அவள் ஆசாரியன் திருவடியை அடைந்தாள்.
————–
கிஷ்கிந்தா காண்டம்
16. ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்த
ராமரைப் பார்த்த அனுமார்
கோது கலம் அடைந்து உய்யுமாறு எண்ணி தன் நேய நிலைக் கதவத்தை திறந்து
அதில் ராமரைப் பிரதிஷ்டை செய்தார்.
17. சீதை
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிக்கக்
கீழே விழுந்த
காசும் பிறப்பும்
சுக்ரீவன் காண்பிக்க ராமர் மனதில் சீதை
பரந்தன காண் ( இடமெங்கும் பரவி யிருந்தது )
என்றென்றும் உன் சேவகமே
என்றார் ராமர்.

18. வாலியை ஒரே அம்பினால் அடிக்க அது
சார்ங்க முதைத்த சரமழை போல்
வீழ்த்தியது.

19. இனித் தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
என்று சுக்ரீவனை எழுப்பி,
தென் இலங்கைக் கோமானைச் செற்ற
அரி என்ற பேரரவத்துடன்
வானரங்கள் கைங்கரியம் செய்ய வந்தது.

20. பாலன்ன வண்ணத்து
கணை யாழியை ராமர் அனுமானிடம் கொடுக்க சீதையைத் தேட நிமிர்ந்து
முழங்கிப் புறப்பட்டார்.
————–
ஸ்ரீ சுந்தர காண்டம்

21. ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
என்பதைப் போல அனுமார் கடலைத் தாண்டினார்.

22. ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே
தசரதன்
மருமகளே ! திருவே
என்று சீதையைக் கண்ட நாள் அனுமாருக்கு
‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாக’ இருந்தது.

23. ஆழி போல் மின்னிய
கணை யாழியைப் பெற்றுக்கொண்ட சீதை
‘மார்கழி நீராட மகிழ்ந்தேலோர்’
என்பது போல மகிழ்ந்தாள்.

24. ராவணன் அனுமார் வாலை தீயினால்
குடல் விளக்கம் செய்த போது,
இஷ்வாகு குலத்தின்
அணி விளக்கான
சீதையின் அருளால் தீ அனுமானுக்கு குளிர்ந்து, இலங்கையைத் தூசாக்கியது.

25. மாமாயன் மாதவன் வைகுந்தனை
இப்போதே எம்மை காக்க வரச் சொல்லு என்று
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே என்று
எதையும் கொடுக்காமல்,
கிங்கிணி வாய்ச் செய்த
தாமரைப் பூப் போன்ற சூடாமணியைக் கொடுத்து அனுப்ப, அனுமார்
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
என்பது போலப் பறந்து, ராமனிடம் சமர்ப்பிக்க
வருத்தமும் தீர்ந்து நாடு புகழும் பரிசாக
அனுமனைக் கட்டித் தழுவிக் கொண்டார்.
—————-
ஸ்ரீ யுத்த காண்டம்
26. கடல் வழி விடாமல் தடுக்க உலகினில் ராமர்
தோற்றமாய் நின்ற சடர் போல
காட்சி அளிக்க, கடலரசன்
அறியாத பிள்ளைகளோம்
அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
என்று சரணாகதி செய்ய, பாலம் கட்டப் பட்டது.

27. பொல்லா அரக்கனை
துறந்து,
ஆற்றாது வந்து உன்னை அடி பணிந்த
என்ற விபீஷணனனை
‘குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது’
என்பது போல
உன் தன்னோடு உற்றோமே யாவோம்
என்று அபயம் அளித்தார் ராமர்.

28. கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனை
கன்று குணிலா எறிந்தாய் என்பது போல வீழ்த்தி,
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலனாக
இந்திரஜித்தை வீழ்த்தி,
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்து,
மண்டோதரிக்கு
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையனாகக் காட்சி யளித்தார்.

29. வங்கக்கடல் கடைந்து
பாலம் கட்டி ராவணனை வீழ்த்த
யாம் வந்த காரியத்தை முடித்த ராமரை,
உக்கமும் தட்டொளியும் தந்து
தன் மணாளனை மீண்டும் கைபிடித்த சீதையுடன்
சீதாராம பட்டாபிஷேகம் அயோத்தியில்
நீங்காத செல்வம் நிறைந்து நடை பெற்றது.

30. மனத்துக்கு இனியானை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தால்,
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்யும் பேறு பெற்று
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்.
—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கோதா ஸ்துதி அனுபவம் —

March 14, 2023

ஸ்ரீமாந் வேங்க‌ட‌நாதார்ய‌: க‌விதார்க்கிக‌ கேஸ‌ரீ |
வேதாந்தாசார்ய‌வ‌ர்யோ மே ஸ‌ந்நிதத்தாம் ஸ‌தா ஹ்ருதி ||

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

————

1-ஸ்ரீ பூர்வாச்சார்யர்களின் ஸூ க்தி நடையை அநு சரித்தல்

முதல் ஸ்லோகம் -ஐந்தாம் ஸ்லோகம் -இவற்றில் காணலாம்

ஸ்ரீவிஷ்ணு சித்த‌ குல‌நந்த‌ன‌ க‌ல்ப‌ வ‌ல்லீம்
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ ஹ‌ரி ச‌ந்த‌ன‌ யோக‌ த்ருஸ்யாம்|
ஸாக்ஷாத் க்ஷ‌மாம் க‌ருண‌யா க‌ம‌லா மிவாந்யாம்
கோதா ம‌நந்ய‌ ச‌ர‌ண‌: ச‌ர‌ண‌ம் ப்ர‌ப‌த்யே || (1)

ஸ்ரீவிஷ்ணுசித்த‌ருடைய‌ குல‌மென்னும் நந்த‌ன‌த் தோட்ட‌த்தில் (தோன்றிய‌) க‌ற்ப‌கக்கொடியும்,
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னென்னும் ஹ‌ரிச‌ந்த‌ன‌ க‌ற்ப‌க‌ விருக்ஷ‌த்தை அணைவ‌தால் (ம‌ண‌ம் புரிவ‌தால்) பார்க்க‌த் த‌க்க‌வ‌ளாயும்,
க்ஷ‌மையின் வ‌டிவேயான‌வ‌ளாயும், (ஸாக்ஷாத் பூமிதேவியாயும்), க‌ருணையினால் ம‌ற்றோர் ல‌க்ஷ்மிதேவி
போன்ற‌வ‌ளாயுமான‌ கோதையை (வாக்கைய‌ளிக்கும் தேவியை) புக‌லொன்றில்லாவ‌டியேன் ச‌ர‌ண‌ம் ப‌ணிகிறேன்.

அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–ஸ்ரீ குணரத்னகோசம் 3–

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்.
அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்.
இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,
அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன.
இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க்கொத்துக்கள் போன்று உள்ளன.
அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்.
இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்பவல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்.
அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

தேவேந்த்ரனுடைய உத்யான வனத்துக்கு -நந்தனம் -என்ற பெயர் உண்டு -அங்கு கற்பகக் கொடி படரும்
வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் குடியாகிற நந்தவனத்தில் தோன்றிய ஆண்டாளும்
தனது திவ்ய ஸூ க்திகள் மூலம் சகல வேதார்த்தங்கள் எல்லாம் விளக்கி அருளுகிறாள்
பெரியாழ்வார் குலம் ஆண்டாள் திருவவதரித்ததால் பெருமை மிக்கு விளங்கியதே
கொடி கொள் கொம்போடே அணைந்து அல்லால் நிற்காதே
எனக்கே தன்னைத் தந்த கற்பகமான எம்பெருமானான பெரிய பெருமாளாகிய கற்பகத் தருவை அணைந்து விளங்கா நிற்கும்

பஞ்சைதே தேவ தரவோ மந்தார பாரிஜாதக சந்தான கல்ப வ்ருஷச் ச பும்ஸி வா ஹரி சந்தனம் -அமர கோசம்
ஐந்து வ்ருக்ஷங்கள் தேவ வ்ருக்ஷங்கள்

ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ ஹ‌ரி ச‌ந்த‌ன‌ கல்ப வ்ருஷ தேந ஸஹ யோகேந -த்ருஸ்யாம் ரமணீயாம் இத்யர்த்த
மானிடவர்க்கு என்று பேச்சுப்பதில் வாழகில்லேன்

ஆக பட்டரை அடி ஒட்டி ஆண்டாளை கற்பக வல்லியாக அருளிச் செய்கிறார் –

———

அஸ்மாத்ருஶாம் அப‌க்ருதௌ சிர‌ தீக்ஷிதாநாம்
அஹ்நாய‌ தேவி த‌ய‌தெ ய‌த‌ஸௌ முகுந்த‌: |
த‌ந் நிஶ்சித‌ம் நிய‌மித‌ஸ் த‌வ‌ மௌளி தாம்நா
த‌ந்த்ரீநி நாத‌ ம‌துரைஶ்ச‌ கிராம் நிகும்பை:||–5-

அன்ன வயல் புதுவை யாண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல் பதியம் இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பூ மாலை பூ மாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு -தனியனைப் பின்பற்றி அருளிச் செய்த ஸ்லோகம்

தேவி கோதாய்! அப‌ராத‌ங்க‌ளைச் செய்வ‌தையே தீக்ஷையாக‌ (வ்ர‌த‌மாக‌) வெகு கால‌மாகக் கொண்டிருக்கும்
என் போன்ற‌வ‌ரிட‌மும், உட‌னே (விரைவில், அன்றே) மோக்ஷ‌ம் கொடுப்ப‌தாக‌ முகுந்த‌ன் த‌ய‌வு ப‌ண்ணுகிறான்
என்ப‌து நிச்ச‌ய‌மாய் உன்னுடைய‌ சிரோமாலையின் நாரினாலும், வீணைக் க‌ம்பிக‌ளின் நாதத்தைப் போல்
ம‌துர‌மான‌ உன்னுடைய‌ நூல்க‌ளாலும் க‌ட்டுப்ப‌ட்டுத்தான். அத‌னாலே தான் அப்ப‌டி அவ‌ன் உட‌னே த‌ய‌வு செய்து முக்தி அளிப்பது.

ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகலிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே கோதா -ஸர்வாத்மநா விதேயனாக ஆக்கிக் கொண்டவள் அன்றோ

————————

2- இந்த ஸ்துதி அவதரித்த வரலாற்றை விலக்ஷணமாக அருளிச் செய்தல்

வைதேசிக: ஸ்ருதி கிராமபி பூயஸிநாம்
வர்ணேஷு மாதி மஹிமா ந ஹி மாத்ருசாம் தே|
இத்தம் விதந்தமபி மாம் ஸஹஸைவ கோதே
மௌந த்ருஹோ முகரயந்தி குணாஸ் த்வதீயா|| .2.

“எண்ணிறந்த ஸ்ருதி வாக்குகளுக்கு நிலமல்லாத (எட்டாத) உன்னுடைய மஹிமை என் போன்றவருடைய
எழுத்துக்களுக்குள் அடங்காதே. இப்படி அறிந்தவனான என்னையும் ஆலோசிக்கவே இடமில்லாமல்
சடக்கென்றும் பலாத்காரமாயும் ஓ, கோதையே! மௌனத்தைக் கோபிக்கும் உன் குணங்கள்
என் வாயைத் திறந்து வைத்துப் பேசச் செய்கின்றன.”

ஸ்வாமி மவ்வ்ன வரத்துடன் எழுந்து அருளி இருக்க
ஆண்டாள் திரு வீதிப் புறப்பாட்டில் -வீதியில்
ஏதோ அனுபபத்தி விளைய -அதன் வழியாக எழுந்து அருள முடியாமல்
இவர் விரதத்தை ஸஹஸா விஸர்ஜனம் செய்து அருளி இந்த ஸ்துதியை விஞ்ஞாபிக்க உபக்ரமித்தார் –

—————

3- அநித அஸாதாரணமான கவித் திறமை

இதற்கு எல்லா ஸ்லோகங்களுமே லஷ்யமானாலும்
ஆறாவது பதினாறாவது ஸ்லோகம் அதி அசாதாரணம்

சோணாத‌ரேZபி குச‌யோர‌பி துங்க‌ப‌த்ரா
வாசாம் ப்ர‌வாஹ‌விப‌வேZபி ஸ‌ர‌ஸ்வ‌தி த்வ‌ம்|
அப்ராக்ருதைர‌பி ர‌ஸைர் விர‌ஜாஸ் ஸ்வ‌பாவாத்
கோதாபி தேவி க‌மிதுர் நநு ந‌ர்ம‌தாஸி|| .6.

தாயே…..உன்னை சேவிக்கும்போது, வார்த்தைகள் வெள்ளம் போல் வருகின்றன. ஏனென்றால் நீயே வெள்ளமாக இருக்கிறாய்.
உனது திருநாமமே கோதா…அதாவது.. கோதா ( கோதாவரி ) ஆனாலும்,
உன் திருவதரத்தை சேவித்தால், சிவந்த ஜலத்தை உடைய சோணையாறாகத்( சோண பத்ரா ) தோன்றுகிறாய்.
சொல் வளத்தில் ஸரஸ்வதி நதி, அந்தர் வாஹினியாக இல்லாமல், பஹிர் வாஹினியாக ஆகிறாய்.
திவ்யமான ச்ருங்கார ரஸங்களினால் (ஜலம்—தீர்த்தம்) ஸ்வயம் வ்ரஜை நதி ஆகிறாய் –வ்ரஜை —குற்றமற்றவள்–.
உன் கணவனுக்கு, நர்மதை ( இன்பம் தருபவள்– பரிஹாச வார்த்தைகளைச் சொல்லி மகிழ்விப்பவள்– நர்மதை நதி ) ஆகிறாய்.
மார்பகங்களில் , நீ , துங்கபத்ரை —துங்கமான தன்மை, பத்திரமான தன்மை —துங்கபத்ரை நதியாக ஆகிறாய்.

இது ஆறாவது ஸ்லோகம். ஆறுகளைப் பற்றியே நிரூபணம்.
ஆறு ஆறுகள்—கோதாவரி, சோணையாறு, சரஸ்வதி நதி, வ்ரஜா நதி ,நர்மதா, துங்கபத்ரா

இதற்கும் மேல் அபி சப்தத்தை ஐந்து தடவை பிரயோகித்து

சோணா அபி துங்க‌ப‌த்ரா-
துங்க‌ப‌த்ரா அபி ஸரஸ்வதீ
ஸ‌ர‌ஸ்வ‌தி அபி விரஜா
விரஜா அபி கோதா –கோதாவரீ
கோதாவரி அபி நர்மதா
என்று இங்கனம் வாக்ய விந்யாஸம் ஸ்வாமிக்கு விவஷிதம்

——–

த்வந் மௌளி தாமநி விபோ: ஶிரஸா க்ருஹீதே
ஸ்வச் சந்த கல்பித ஸ பீதி ரஸ ப்ரமோதா|
மஞ்ஜு ஸ்வநா மதுலிஹோ விதது: ஸ்வயம் தே
ஸ்வாயம்வரம் கமபி மங்கள தூர்ய கோஷம் || .16.

நீ உன் சிரஸில் சூடிய மாலை ப்ரபுவின் சிரஸால் ப்ரதி க்ரஹிக்கப் படபோது, தேன் வண்டுகள் தங்கள்
இஷ்டப்படிக் கெல்லாம் வேண்டிய மட்டும் ஸஹ பானம் செய்து அந்த ரஸத்தாலே களித்து
இனிய சப்தத்தோடே உன் ஸ்வயம்வரத்தில் ஸ்வயமாக ஓர் விலக்ஷணமான மங்கள வாத்ய கோஷம் செய்தன.

இந்த ஸ்லோகத்தில் பிரயோகித்த பதங்கள் யாவுமே மங்களகரமாக அமைந்து உள்ளன
விவாஹ காலங்களிலே பூச்சூடுதல் –மௌளி தாமநி விபோ: ஶிரஸா க்ருஹீதே-
குழாம் கூடி யுண்ணுதல் –ஸ பீதி ரஸ
சந்தோஷமாக அனுபவித்தல் -ப்ரமோதா|-
மங்கள ஒலி மல்குதல் –மஞ்ஜு ஸ்வநா-
இனிய உணவுகளை அனுபவித்தல் –மதுலிஹோ விதது:-
மங்கள வாத்தியங்கள் முழங்குதல் -மங்கள தூர்ய கோஷம்
இவை அனைத்துமே சொல் நடை நயத்தில் அமைந்துள்ள
அழகு அனுபவிக்கத் தக்கது

வஸ்ய வாக்த்வ பிரபாவம் இது

———————-

4- வேதத்தில் உள்ள திறமையைக் காட்டுதல்

வல்மீகத: ஸ்ரவணதோ வஸுதாத்மநஸ் தே
ஜாதோ பபூவ ஸ முநி: கவிஸார்வபௌம: |
கோதே கிமத்புதம் யதமீ ஸ்வதந்தே
வக்த்ராரவிந்த மகரந்தநிபா: ப்ரபந்தா: || (7)

கோதாய்! பூமிப் பிராட்டியேயான உன்னுடைய காதென்று சொல்லும் வல்மீகத்திலிருந்து (புற்றினின்று) பிறந்த
அந்த முனி (வால்மீகி முனிவர்) கவிச் சக்கரவர்த்தியானார். அப்படியிருக்க, உன்னுடைய திருவாயாகிய
தாமரையிலிருந்து பெருகும் தேனுக்கு ஒப்பான இப்பிரபந்தங்கள் இனிமையாயிருக்கின்றன என்பது என்ன ஆச்சர்யம்.

உமது காதின் பெருமையோ லோக விலக்ஷணம்
அரவிந்தத்தில் மகரந்தம் ஸ்ரவிப்பது ஸஹஜமே
வால்மீகி கோகிலத்தில் சொற்களின் இனிமையை விட கிளி மொழி கோதையின் சொற்களே அது மதுரம் என்கிறார்
ஆசிரியரின் இந்த நிரூபணத்துக்கு வேத பாண்டித்யமே உதவிற்று –

—————-

5- ஆழ்வார்களைக் காட்டிலும் ஆண்டாளுக்கு ஏற்றம் கூறுதல் –

போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே
பக்திம் நிஜாம் ப்ரணயபாவநயா க்ருணந்த: |
உச்சாவசைர் விரஹஸங்கமஜை ருதந்தை:
ஸ்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ்த்வதீயா:|| (8)

கோதா தேவியே! உன் குருக்கள் (பெரியோர்கள், ஆழ்வார்கள், உன் பிதா விஷ்ணு சித்தர்) உன்னைப் போலவே
உன் பிரிய தமரான பெருமாளை அனுபவிக்க ஆசை கொண்டு, தங்கள் பக்தியை ராகம், ஸ்நேஹம் என்னும்
காம பாவத்தினால் பேசிக் கொண்டு, கீழும், மேலுமான பற்பல விரஹ ஸ்ருங்கார ஸம்ச்லேஷ ச்ருங்கார
வ்ருத்தாத்தங்களால் தங்கள் மனதை ச்ருங்கார பாவத்தால் நிரப்புகிறார்கள்.

இவளுக்கு ஸ்த்ரீத்வத்வம் ஏறிட்டுக் கொள்ள வேண்டாமே –
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த என் தட முலைகள் என்றும்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள் தங்குமேல் என்னாவி தங்கும் என்று உரையீரே -என்றும்
கொள்ளும் பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு
அவன் மார்பில் எறிந்து என் அழலைத் தீர்வேனே -என்றும்
கொங்கை முலைகள் இடர் தீர இத்யாதி
பாசுரங்களால் ஸ ஹ்ருதய ஹ்ருதயங்கம் -விளங்குமே
அநுராக ரீதியில் உள்ள ஆழ்வார்கள் பாசுரங்கள் போல் அன்ரிக்கே இயற்கையாகவே அமைந்த பகவத் அனுபவ ரஸவத்தரம் விளங்குமே

குரவஸ்த்வதீயா:-அஞ்சு குடிக்கு ஒரு சந்ததி அன்றோ இவள் -அஞ்சுகின்ற குடி என்றுமாம்

———————-

6-ஆண்டாளுடைய திருக்குறளின் மேன்மை

இது பல பாசுரங்களிலும் பேசப்பட்டு இருந்தாலும் பத்தாவது ஸ்லோகம் மிக விலக்ஷணம்

தாதஸ்து தே மதுபித: ஸ்துதி லேசவச்யாத்
கர்ணாம்ருதை: ஸ்துதிஶதைரநவாப்த பூர்வம் |
த்வந் மௌளிகந்த ஸுபகாமுபஹ்ருதய மாலாம்
லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம் || (10)

கொஞ்சம் ஸ்துதி செய்தாலேயே வசப்பட்டு விடக்கூடிய மதுஸூதனன் நூற்றுக்கணக்கான கர்ணாம்ருதமான
ஸ்துதிப் பாசுரங்களாலும் முன்பு மகிழ்ந்து அளிக்காத மஹத்தர பத லாபத்திற்கு அநுகுணமான அநுக்ரஹத்தை
உன்னுடைய தக‌ப்பனார்தானே (அம்மா) உன் கூந்தல் வாசனை ஏறியதால் ஸுபகமான மாலையை ஸமர்ப்பித்துப் பெற்றார்!

கர்ணாம்ருதை: ஸ்துதி-புராதன பாதாம் அன்று -வியஸ்த பாடம் அங்கதம் ஆகும்
கர்ணாம்ருத: ஸ்துதி-என்று ஸமஸ்தமாகவே பாடம் கொள்ள வேண்டும்
கர்ணாம்ருத மான ஸ்துதி ஸதஸ் பாடின ஆழ்வார்களைக் காட்டிலும் அதிக அனுக்ரஹம்
பெற்றுத் தந்ததே இவள் சூடிக் களைந்த மாலையின் பயனாகவே-

————-

7-விரோத ஆபாஸம் காட்டுதல்

சோணா தரேபி -10 பாசுரத்தில் விரோத ஆபாஸம் உண்டாய் இருந்தாலும்
அடுத்த பாசுரம் மிக விலக்ஷணம்
மேல் எழப்பார்க்கும் போது விரோதம் உள்ளது போல் தோன்றி
ஆழ்ந்து பார்க்கும் இடத்து விரோதம் காணாமல் பேசுவதே விரோதி ஆபாஸ லஷ்யம்

திக்தக்ஷிணாபி பரிபக்த்ரிம புண்யலப்யாத்
ஸர்வோத்தரா பவதி தேவி தவாவதாராத் |
யத்ரைவ ரங்கபதிநா பஹுமாநபூர்வம்
நித்ராளுநாபி நியதம் நிஹிதா: கடாக்ஷா:|| (11)

அம்மா கோதாதேவியே! பரிபாகமுடைய புண்யத்தால் பெறக்கூடிய உன் அவதார ஸம்பந்தத்தால்,
தென் திசை கூட வடகோடி திசையாயிற்று. (ஸர்வோத்தரமாயிற்று, ஸர்வ ச்ரேஷ்டமாயிற்று).
ஏனெனில் அந்த திக்கில்தானே ரங்கபதியாகத் தூங்கிக் கொண்டிருக்கையிலும் கௌரவத்தோடு
கடாக்ஷங்கள் இடைவிடாமல் நியதமாக வைக்கப் பட்டிருக்கின்றன!

உத்தர -வட திசைக்கும் உத்க்ருஷ்டமாக இருபதுக்கும்
முந்தின பொருளில் விரோதி உத்பாவநமும்
பிந்தின பொருளில் அதற்குப் பரிஹாரமும்

குடதிசை முடியை வைத்துக் குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டித் தென் திசை இலங்கை நோக்கி -என்றும்
மன்னுடைய விபீடணற்காய் மதிள் இலங்கைத் திசை நோக்கி மலர்க்கண் வைத்து -என்றும்
இருந்தாலும்
ஸ்ரீ வில்லிபுத்தூர் மேல் உள்ள அபி நிவேசத்தாலே தென் திசை நோக்கிப் பள்ளி கொண்டு அருளுகிறார் என்றபடி –

———————–

8-விலக்ஷணமான உல்லேகம் காட்டி அருளுதல்

ப்ராயேண தேவி பவ தீவ்யபதேச யோகாத்
கோதாவரி ஜகதிதம் பயஸா புநீதே|
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதி ப்ரப்ருதயோபி பவந்தி புண்யா: || .12.

அம்மா கோதா தேவியே! உன் பெயரை வஹித்த ஸம்பந்தத்தாலும், பாக்யத்தாலும் கோதாவரீ நதி
இவ்வுலகத்தைத் தன் தீர்த்தத்தால் மிகவும் புண்யமாக(சுத்தமாக)ச் செய்கிறாள்.
எந்த கோதாவரீ நதியில் கங்கை முதலிய புண்ய நதிகளும் சில புண்ய காலங்களில் கூடி
நீண்ட காலம் வஸிப்பதால், பரிசுத்தமாகின்றார்களோ.

ஏகதேசம் தனது திருநாமம் வகிப்பதாலேயே இழந்த தூய்மை பெற்றது என்று சமத்காரமாக அருளிச் செய்துள்ளார் –

—————-

9- ஸாஸ்த்ரார்த்தங்களை விநோதமாகக் காட்டி அருளுதல்

ரங்கேஸ்வரஸ்ய தவ ச ப்ரணயாநுபந்தாத்
அந்யோந்ய மால்ய பரிவ்ருத்தி மபிஷ்டுவந்த: |
வாசாலயந்தி வஸுதே ரஸிகாஸ் த்ரிலோகீம்
ந்யூநாதி கத்வ ஸமதாவிஷயைர் விவாதை: || .21.

அம்மா பூதேவியே! ரங்கேஸ்வரனுக்கும் உனக்கும் அந்யோந்ய ஸ்நேஹத்தால் அந்யோந்யம் மாலை மாற்றிக் கொள்ளும் போது
அவ்வழகைத் துதிப்பவரான ரஸிகப் பெரியோர்கள் தாழ்த்தி, உயர்த்தி, ஸமம் என்ற கக்ஷிகளைப் பற்றிய
விவாதங்களால் லோக த்ரயத்தையும் சப்திக்கச் செய்கிறார்கள். (அதிகப் பேச்சுக் காரர்களாக்குகிறார்கள்.)

நம்பியைக் காண நம்பிக்கு ஆயிர நயனம் வேண்டும்
கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கும் அன்னதேயாம்

எம்பெருமானுக்கு சேஷித்வமும் ஸகல ஜகத் பதித்தவ ப்ரயுக்தமான ஏற்றமும் பிராட்டிக்கு
ஞானீ து ஆத் மைவ மே மதம் -என்பதால் பிராட்டிக்கு ஏற்றமும் உண்டே
ரசிகா -விநோத வார்த்தைகள் இவ்வாறு உண்டே
இவ்வாறு ஏற்றத்தாழ்வுகளும் ஸமத்வத்மமும் வேதார்த்த -சாஸ்த்ர -அர்த்தங்களே

————-

10-அதி லலித வாக் விந்யாஸ வைதக்த்யம்

செவிக்கு இனிய செஞ்சொற்கள் அனைத்துமே –

சதமக மணி நீலா சாருகல்ஹார ஹஸ்தா
ஸ்தநபரமிதாங்கீ ஸாந்த்ரவாத்ஸல்யஸிந்து: |
அளகவிநிஹிதாபி: ஸ்ரக்பிராக்ருஷ்டநாதா
விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா ந: || .28.

இந்த்ரநீலக் கல்லுபோல நீலமானவளும், அழகிய செங்கழுநீர்ப் புஷ்பத்தைக் கையில் கொண்டவளாயும்,
தனபரத்தால் சிறிது வணங்கின தேஹத்தை உடையவளாயும் கனத்த ஸ்நேஹக்கடலாயும், தன் சிரஸில் சூடிய
மாலையால் தன் வசமாக்கப்பட்ட நாதனையுடையவளாயும் பட்டர்பிரான் புத்ரியுமான கோதையானவள் நமது மனதில் விளங்கட்டும்.

த்யான ஸ்லோகம்
இந்த்ர நீலக்கல் போல நீல வர்ணம் உடையவள்; அழகான கருநெய்தல் புஷ்பத்தைத் தன் கரத்திலே வைத்திருப்பவள்;
ஸ்தனங்களின் பாரத்தினால் வணங்கிய திருமேனி உடையவள்;
அடர்த்தியான அன்புக்கடல்; முடியில் ,முன்னுச்சியில் மாலைகளை அணிந்து, கணவனை—ரங்கபதியைத் தன் வசப்படுத்திக்கொண்டவள்;
விஷ்ணுசித்தரின் அருமைக் குமாரத்தி; கோதை—-நமது மனத்தில் என்றும் விளங்குவாளாக

இது அதி விலக்ஷணம்
நித்தியமாக ஸூ ப்ரபாதத்தில் இந்த ஸ்லோகம் அனுசந்தேயம் –

 

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருவேங்கட யாத்திரை சிந்தனம் , அக்ரூரர் கோகுலம் செல்லுதல் சிந்தனம் -அர்ச்சிராதி கதி சிந்தனம் -போவான் போகின்றாரை—

January 23, 2023

போவான் போகின்றாரை’ என்ற இந்தச் சொற்றொடரை நாம் கூர்ந்து கவனித்திருக்க மாட்டோம்.

’போவான் போகின்றாரை’ என்பது போகிற அனுபவத்துக்காகவே போகிறவர்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

ஆச்சார்ய பெருமக்கள் திருவேங்கட யாத்திரை, அக்ரூரர் கோகுலம் செல்லுதல், வைகுண்டம் செல்லும் மார்க்கத்தைப் பற்றி குறிப்பிடுவர்.

கோவிந்தா என்ற நாமத்தில் திருப்பதி போகும் அனுபவம் இருக்கிறது. அந்த நாமத்தைச் சொன்னாலே அனைத்தும் கிட்டும்.

கோ என்பது பத்து அவதாரங்களையும் குறிக்கும். வேதம் என்று பொருள் தருவதால் வேதத்தை மீட்ட மத்ஸ்யாவதாரம் நினைவுக்கு வரும்.

பர்வதம் என்று பொருள் தருவதால் அதை தூக்கிய கூர்மாவதாரம் நினைவுக்கு வரும்

பூமி என்று பொருள் தருவதால் பூமியை உத்தாரணம் செய்த வராக அவதாரம் நினைவுக்கு வரும்.

நரசிம்மனை கோவிந்தா என்று வணங்குவது வழக்கம்.

பூமிக்கடியில் மூன்றடி மண் கேட்டதால் வாமன அவதாரம் நினைவுக்கு வரும்.

பூமி முழுதும் சுற்றிய பரசுராமனும் கோவிந்தன் தான்.

ஆயுதம் என்று பொருள் தருவதால், 50 வித அஸ்திர சாஸ்திரங்களை விச்வாமித்திரரிடம் இருந்து பெற்ற ராமாவதாரம் நினைவுக்கு வரும்.

பூமியை கலப்பையால் இழுத்த பலராமனுக்கு கோவிந்தன் என்ற பெயர் உண்டு.

பசு என்று பொருள் தருவதால் பசுக்களைக் காத்த கிருஷ்ணனும் கோவிந்தன் என்றே அழைக்கப்படுகிறான்.

“கோவிந்தன்” என்ற திருப்பெயர் திருமாலின் பத்து அவதாரங்களையும் குறிப்பதாகப் பெரியோர்கள் சொல்கிறார்கள்..
1. மத்ஸ்யாவதாரத்தில் “கோ” எனப்படும் வேதங்களைத் திருமால் காத்த படியால்,
“கோவிந்தன்” என்கிற திருநாமம், மத்ஸ்யாவதாரத்துக்குப் பொருந்துகிறது..
2. கூர்மாவதாரத்தில் “கோ” எனப்படும் மலையைத் தன் முதுகிலே தாங்கி நின்றதால், அவருக்கும் கோவிந்தன் என்ற பெயர் பொருத்தமானதே!..
.
3. வராக அவதாரத்தில் “கோ” எனப்படும் பூமியை மீட்டதால், அவரையும் கோவிந்தன் எனலாம்..
4. நரசிம்ம அவதாரத்தில் பிரகலாதனின் துதியாகிய “கோ”வை (“கோ” என்றால் நல்வார்த்தை) ஏற்று அருள்புரிந்தபடியால், நரசிம்மரும் கோவிந்தனே!..
5. “கோ” எனப்படும் பூமியை அளந்ததால், வாமன மூர்த்தியும் கோவிந்தன் ஆவார்..
6. “கோ” எனப்படும் பூமியில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டியதால், பரசுராமருக்கும் கோவிந்தன் என்ற பெயர் பொருத்தமாகவே உள்ளது..
7. “கோ” எனப்படும் பூமியை ஆண்டதால், ராமனும் கோவிந்தனே!…
8. “கோ” எனப்படும் பூமியைத் தனது கலப்பையாலே உழுதபடியால், பலராமனையும் கோவிந்தன் எனலாம்..
9. “கோ” எனப்படும் பசுக்களை மேய்த்துக் காத்த கண்ணனும் கோவிந்தனே என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க வாய்ப்பில்லை..
10. “கோ” எனப்படும் பூமியில் அறத்தை நிலைநாட்ட, நாளைய தினம் அவதரிக்கப் போகும் கல்கியையும் கோவிந்தன் என்றே கூறலாம்!…

இப்படி அனைத்து அவதாரங்களையும் உள்ளடக்கியவனாக வேங்கடவன் (கோவிந்தன்) இருக்கிறான்.

ஸ்ரீ வேங்கடமே அர்ச்சா பிரதானம் -கந்தம் -இவனுடன் அர்ச்சா திவ்ய மங்கள ஸ்வாமிகள் அனைவருக்குமே ஸாம்யம் சொல்லலாமே
ஆராவமுதன் உடன் சாம்யம் திருக்குடந்தை ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் சாதித்தது –

1-ஸப்த பிரியவ் –சேஷாத்ரி –வே ங்கடாத்ரி -ஆழ்வார் எழுவரால் மங்களா சாசனம் ஆராவமுதன் -திரு எழு கூற்று இருக்கை சந்தஸ் ரிஷிகள் காண்டம் மோக்ஷம்
2-நிகமவ் பிரியவ் -உபய வேதங்களும் சொல்லுமே -ஸ்ரீ நிவாஸனும் ருக் வேதமும் –
அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி தேபிஷ்ட்வா ஸாதயாமசி -ருக்கு -8-அஷ்டகம் -8-அத்யாயம் -13-வர்க்கம் –முதல் ருக்கு மந்த்ரம்
த்வயி அராயி சதி –குழந்தாய் நீ இஹ லோக பரலோக ஐஸ்வர்யம் இல்லாமல் இருந்தாயானால்
த்வயி காணே சதி -நீ வெளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவனாய் இருந்தால்
த்வயி விக்டே சதி -நீ ஆத்யாத்மீகம் -ஆதி பவ்திக்கம் -ஆதி தைவிகம் -தாப த்ரயங்களால் பீடிக்கப் பட்டு இருந்தாயாகில் —கடம் -தாஹம்
த்வயி ஸதான்வே சதி -புருஷார்த்தங்களை பெற முடியாமல் பிரதிபந்தகங்கள் இருந்தால்
ஸ்ரீம் பீடஸ்ய -திருமகளுக்கு திரு மார்பினால் பீடமாகிய ஸ்ரீ நிவாசனுடைய
கிரிம் -திருமலையைக் குறித்து
ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி கச்ச -ஸ்ரீ நிவாசனுடைய பக்தர்களோடு சென்று சேர்
தேபி -அவர்கள் மூலமாகவே
த்வா ஸ்ரீம் பீடஸ்ய ஸாதயாமசி -நீ ஸ்ரீ நிவாஸனை வேண்டிக் கொள்ள தகுதி பெற்று இருக்கிறாய்-
சமர்பிக்கத் தகுதி பெற்று இருப்பாய் என்றுமாம் –

ஸத்வ கிரி வேத வெற்பு

கண்ணன் அடி இணை எமக்குக் காட்டும் வெற்பு
கடு வினையர் இரு வினையும் கடியும் வெற்பு
திண்ணம் இது வீடு எனத் திகழும் வெற்பு
தெளிந்த பெரும் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு
புண்ணியத்தின் புகல் இது எனப் புகழும் வெற்பு
பொன்னுலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு
வேங்கட வெற்பு என விளங்கும் வேத வெற்பே

வைதிக விமானம் -தேர் வடிவ கர்ப்ப க்ரஹம் -குதிரையும் யானையும் இழுக்கும் –
ஸாகா -யானை நடை போல் ஸம்ஹிதா குதிரை போல் வேகமாக சேவிப்பார்கள்
அந்தணர் -பரமா வேத கோஷம் ஒலிக்கும் திருக்குடந்தை
3- பிருகு பிரியவ் -ஸாத்விக குணம் பரீஷை -ஹேம ரிஷியாக இவரே பிறந்து -பாதாள ஸ்ரீ நிவாஸன் -மேட்டு ஸ்ரீ நிவாஸன் -கோமள வல்லி திருக்கல்யாணம்
4- சிவ பிரியவ் -கபிலேஸ்வரன் -யதா சம்பு அழகை அனுபவித்து -குமார தாரா கார்த்திகேயன் தபஸ் -வேல் கொடுத்த –
கும்பேஸ்வரர் பின் -சூழ்ந்து சூழ்ந்து அனுபவம் இங்கும் -குடமூக்கு -நாகேஸ்வரர் பல வடிவங்கள் கொண்டு
5-பிரியவ் சடாரே -த்வயம் பூர்வ உத்தர -இங்கு -ஆழ்வார் தீர்த்தம் தெளி குரல் அருவி -கைங்கர்யம் செய்ய அழைக்கும்
முதல் திவ்ய தேசம் -கண்ணாவான்–வேங்கட வெற்பனே
ஆராவமுதே-யாருக்கு என்று சொல்லாமல் -தன்னோடு பிறரோடு வாசி அற தனக்கே – -அனைவருக்கும் -ஆராவமுத ஆழ்வார் -சீரார் செந்நெல் -சாத்துப்படி -கவரி வீசும் –
6-தேவர்களுக்கு பிரியவ் -மண்ணோர் விண்ணோர்க்கும் -மண்ணவரும் விண்ணவரும் விரும்பும் வெற்பு -அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன்
அமுதினிலும் ஆற்ற கில்லான் -33 கோடி தேவரும் சூழ்ந்து கருவறையில்
7-பாதாதி கேசாந்தம் ஸ்தோத்ரம் ஆதி சங்கரர் -அபர்யாத அம்ருதம் த்யான சோபனம் பெற்றார்கள்
8- இரண்டு லஷ்மி-திரு மார்பில் -மடலில் திருவடி வருடிய
9-நாராயணனுக்கு அனுக்ரஹம் -நாராயணாத்ரி -ரிஷி தபஸ் செய்த இடம் -லஷ்மி நாராயணன் பக்தர் -ராஜ கோபுரம் கட்டி -அந்திம ஸம்ஸ்காரம் -ஐப்பசி அமாவாசை அன்று ஸ்ரார்த்தம் 12 மணிக்கு தீபாவளி சந்நிதி சாத்தி –
10- வராஹ ஷேத்ரங்கள் இரண்டும் -வராஹ குளம் கும்பகோணத்தில் உண்டு
11-படி ஏறியே போக வேண்டும் -3500 படிகள் -9 படிகள் இங்கு -வாழ்க்கைப்படிகள் -பரமபத சோபனம் -விவேகம் -நிர்வேதம் -விரக்தி -பீதி -பிரசாத ஹேது -சரணாகதி ஐந்தும் நாம் செய்ய
உதக்ரமணம் அர்ச்சிராதி -விராஜா நதி கடந்து -ஸ்ரீ வைகுண்ட பிராப்தி –
12-வைகுண்ட வாசவ் -கலியுக வைகுண்டம்-ஏதானும் ஆவேனே – -பூ லோக வைகுண்டம் ஸ்ரீ ரெங்கம் போல் கும்பகோணம்
பரமபத வாசல் இல்லை –
ஷேத்ரமே புண்யம் -திருமலையே புண்யம்
13-கருணையால் புகழ் -தயா சதகம் -அப்ரமேயம் ப்ரமேயம் கடந்து உள்ளவன் கண்ணுக்கு காட்சி –
14-சார்ங்க ராஜர்கள் -இருவரும் -சாரங்கீ விருஷாத்ரி தயா சதகம் -பாபங்களை பிக்க அருள் அம்புகள் -மூலவரும் சார்ங்க பாணி -த்யான ஸ்லோகம் -சயானம் –
15-வேங்கடேசவ் –பாபங்களைக் போக்கி அருளி -இருவரும் -தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் -ஆழ்வார் வேம் கடம் ஈசன் -தமிழ்
16-இவற்றைக் காட்டிய உபகாரம் இருவருக்குமே சேரும்

———————

கோவிந்தா என்று அழைத்தாலே மனதளவில் திருமலைக்கு யாத்திரை செல்லலாம். அக்ரூரர் போல கோகுலம் போகலாம். வைகுண்டம் செல்லும் மார்க்கமும் புலப்படும்…

குப்ஜா அவரைத் தன்னுடனேயே தங்கும்படி அவள் வற்புறுத்தினாள். அது தன்னால் இயலாதென்ற கிருஷ்ணர், தன்னை மதுராபுரிக்கு கம்சன் உத்தரவின் பேரில் அழைத்து வந்த அக்ரூரனின் இல்லத்துக்கு புறப்பட்டார்.

அக்ரூரர் மிகச்சிறந்த ராஜதந்திரி. கிருஷ்ணரின் மகாபக்தர். அவர், கிருஷ்ணரை தகுந்த முறையில் வரவேற்று அவரது பாதத்தை கழுவி தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டார். அவரது பாதத்தை தன் மடியில் தூக்கி வைத்து வருடினார். கண்ணீர் மல்க அவரைப் பிரார்த்தித்தார். கம்சனையும் அவனது கொடிய நண்பர்களையும் கொன்றதற்காக நன்றி கூறினார். அக்ரூரரை மிக முக்கிய காரியம் நாடியும் கிருஷ்ணர் பார்க்க வந்திருந்தார்.

கிருஷ்ணரின் மைத்துனர்களான பாண்டவர்கள். ஹஸ்தினாபுரத்தில் வசித்து வந்தனர். ஹஸ்தினாபுரம் என்றால் யானைகள் நிறைந்த இடம். யானைகள் கட்டிக் காக்க நிறைய செல்வம் வேண்டும். அந்தளவுக்கு செல்வம் படைத்த பூமி அது. பாண்டவர்களுக்கு எதிராக அவர்களது பெரியப்பா திருதராஷ்டிரனின் மக்களான கவுரவர்கள் செயல்பட்டு வந்தனர்.

அவர்கள் பாண்டவர்களின் பூமியை அபகரித்திருந்தனர். இதுபற்றி விசாரித்து, திருதராஷ்டடரனுக்கு நல்லறிவு புகட்ட தகுதியானவர் அக்ரூரர் என்பதை உணர்ந்திருந்தார் கிருஷ்ணர். மேலும் அவர் பாண்டவர்களின் தாய் குந்திக்கும் உறவினர். அதை அக்ரூரரிடம் எடுத்துச் சொன்னார். அவரது கட்டளையை ஏற்ற அக்ரூரர் சில நாட்களிலேயே ஹஸ்தினாபுரம் புறப்பட்டு விட்டார். திருதராஷ்டிரனின் சகோதரர் விதுரர் நியாயத்துக்கு கட்டுபட்டவர்.

அவர் மூலமாக, ஹஸ்தினாபுரத்தில் நடக்கு விஷயங்களை அறிந்து கொண்டார். அக்ரூரர் அதனால் தான் நியாயத்தைப் பேசும் விதுரரைத் தொடர்பு கொண்டார். பின்னர் குந்தியை சந்தித்து நடந்த விஷயங்களை அறிந்தார். திருதராஷ்டிரன் பிள்ளைப்பாசத்தால், பாண்டவர்களைக் கொல்ல திட்டமிடுவதை உறுதி செய்தி பின்னரே திருதராஷ்டிரனிடம் சென்று அறிவுரை வழங்கினார்.

அவன் செய்வது நியாயமல்ல என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொன்னார். அப்போது திருதராஷ்டிரன் தன் தவறை உணர்ந்திருப்பதை ஒப்புக் கொண்டான். ஆனாலும் அவன் அவரிடம், அக்ரூரரே ! உமது போதனைகள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை என்பதை நானறிவேன். ஆனாலும், ஒருவனுக்கு மரணம் என விதிக்கப்பட்டிருக்கும் வேளையில் யார் அறிவுரை சொன்னாலும் அதனால் பயனில்லாமல் போய்விடும்.

அந்த அறிவுரைகள் அமுதம் என்று தெரிந்தாலும் அதை அவன் ஏற்க மாட்டான். உமது அறிவுரைகளை நான் ஏற்காதது கூட அந்த கடவுளின் சித்தம் தான். ஏனெனில், கடவுளின் சித்தத்தை தடுத்து நிறுத்தும் சக்தி யாருக்கும் இல்லை. அது நம் இருவருக்கும் பொருந்தும். அறிவுரை சொல்பவனும், பெறுபவனும் கூட அதற்கு விதிவிலக்கல்ல. பூமியில் பாவிகளைக் குறைக்க யது வம்சத்தில் பரமாத்மா தோன்றியுள்ளதை நான் அணிந்திருந்தும் என்னால் ஏதும் செய்ய முடியாமைக்கு வருந்துகிறேன், என்றான்.

திருதராஷ்டிரன் நிர்ப்பந்தத்தின் பிடியில் இருக்கிறான் என்பதை அக்ரூரர் அறிந்து கொண்டார். திருதராஷ்டிரனும் தன் பிள்ளைகளைக் காவு கொடுப்பதற்கென்றே நிர்ப்பந்தத்தின் பிடியில் சிக்கியிருந்தான். அக்ரூரர் மதுராவுக்கு திரும்பி, கிருஷ்ண பலராமரிடம் விஷயத்தைச் சொன்னார்.

போரைத் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்த கிருஷ்ணர், பாண்டவர்களுக்காக பலவகையில் போராடி வெற்றி ஈட்டிக் கொடுத்தார். இந்த போர்க்களத்திலே கீதை என்னும் வாழ்க்கையின் யதார்த்த நிலையை உணர்த்தும் அருமருந்தையும் தந்தார்.

கம்சன் கண்ணனுக்குச் செய்த இன்னல்கள் பல. ஒவ்வொரு முறையும் அவனுக்குத் தோல்வி தான். கம்சன் மேலும் ஒரு திட்டம் தீட்டினான். அவனிடம் பணிபுரியும் அக்ரூரரை அழைத்து ( 10.37.38) “தனுர்யாகத்தைக் காணக் கண்ணையும் பலராமனையும் மதுராவிற்கு விரைவில் அழைத்து வாருங்கள்!” என்று ஒரு சதி திட்டம் தீட்டுகிறான்.

மிக்க அறிவு படைத்த அக்ரூரர் ( 10.38.1 ) கண்ணனை அழைத்து வர ரதத்தில் கோகுலம் செல்கிறார். அவர் செல்லும் வழியில் ( ஜருகண்டி, ஜருகண்டியில் தப்பித்து பெருமாள் சேவிக்க வேண்டும் என்பது போல் ) அவர் தாமரைக் கண்ணனிடம்  அன்புமயமான பக்தியில் மூழ்கி  அவனை நினைத்துக்கொள்கிறார்.

நான் என்ன புண்ணியம் செய்தேனோ! என்ன தவம் செய்தேனோ! சான்றோர்களுக்கு ஏதாவது தானம் கொடுத்தேனா ? ஏன் என்றால் இன்று கேசவனைக் காணப் போகிறேன் !

கீழ் ஜாதியில் பிறந்த எனக்கு வேதம் ஓதும் வாய்ப்பு கிடைக்காத போதும், மகான்கள் கொண்டாடும் பகவானின் தரிசனம் எளிதில் கிடைக்க போகிறதே!  யோகிகள் தியானிக்கும் அவன் திருவடிகளை வணங்கி என் பிறவிப் பயனை அடையப் போகிறேன்.

கம்சன் என்ற கொடியவன் இன்று எனக்குப் பேருதவி செய்திருக்கிறான். அவன் திருவடியை வணங்கி, என் அறியாமை இருளை கடக்க போகிறேன்.

அவனுடைய திருவடிகளைப் பிரம்மா, சிவன் முதலிய தேவர்களும், திருமகளும் முனிவர்களும், பக்தர்களும் பூஜித்துள்ளார்கள். கோபர்களுடன் மாடு மேய்க்கக் காட்டில் சுற்றி, கோபிகளின் ஸ்பரிசம் பட்ட அந்தத் திருவடியை நான் காணப் போகிறேன்.

வெளியே கொடிய கம்சனின் தூதுவன் ஆனால் உள்ளே கண்ணனின் அடிமை என் எண்ணத்தைக் கண்ணன் புரிந்துகொள்வான். என்னைப் பார்த்தவுடன் ‘அக்ரூரரே!” என்று கூப்பிடும் அந்த நேரத்துக்கு காத்துக்கொண்டு இருக்கிறேன்.

இப்படி வழிநெடுக கண்ணனைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டே மனத்தால் முன்பே கோகுலம் வந்தடைந்த அக்ரூரர் உடலால் இப்போது வந்து சேர்ந்தார்!

அங்கே கீழே கண்ணனின் திருவடி சுவடுகளைக் கண்டதும் அவருக்கு மகிழ்ச்சி பொங்க, பரபரப்பு மிகுந்து, அன்பால் உடல் புல்லரிக்க, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக, இவை பகவான் கண்ணனின் திருவடித்துகள்கள் அன்றோ! என்று அதன் மேல் விழுந்து புரண்டார்.

அங்கே கண்ணன் அவரை வரவேற்று “அன்புக்குரிய ஐயனே! வழிப் பயணம் நன்கு அமைந்ததா ?” என்று விசாரித்தான்.

அக்ரூரர் வந்த விஷயதை சொல்லி கண்ணையும் பலராமனையும் அழைத்துக் கொண்டு மதுராவிற்கு புறப்பட்டார். வழியில் யமுனையை அடைந்து, கைக்கால்களை சுத்தம் செய்து, தெளிந்த நீரில் நீராடினார். அடிக்கடி கண்ணனும் பலராமனும் பத்திரமாக இருக்கிறார்களா என்று அஞ்சி ரதத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டார்.

அப்படி பயந்துகொண்டு  நீரினுள் முழுகியபோது, அங்கே தண்ணீருக்குள் கண்ணணையும் பலராமனையும் கண்டார். அந்த காட்சி  ( 10.39.46) தொண்டரடிப் பொடியாழ்வார் பாடியது போல

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்

என்று அவனுடைய திருவடியைத் தலைவணங்கித் துதித்துக்கொண்டு இருக்க, ஆயிரம் தலைகளுடன் கூடிய ஆதிசேஷனின் படுக்கையில் தெளிந்த முகம், அழகிய புன்சிரிப்பு, கருணைப் பார்வை, அழகிய புருவங்கள் என்று திருப்பாணாழ்வார் ’காட்டவே கண்ட’ சேவையை அக்ரூரர் சேவித்து கோதுகலமாக (குதூகலமாக) அவன் ஸ்வரூபத்தைக் கண்டு பரமானந்தத்தை அடைந்தார்.

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் என்பதற்கு ஓர் அர்த்தம்  ’எம்பெருமானுக்கு என்ன ஆபத்து வருமோ என்று பயப்படுபவர்களான ஆழ்வார்களுக்கு ஒரே வாரிசு ஆண்டாள்’ என்பதைப் போல அக்ரூரர் பயந்தார்!

அவனுக்கு என்ன ஆகிவிடுமோ என்று தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால், அவன் ஆவாவென்று ஆராய்ந்து அருள் புரிவான்!

ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -72—ஸ்ரீ அக்ரூர ஆகமனம்–

கம்ஸோ அத நாரத கிரா வ்ரஜ வாஸி நம் த்வாமா
கர்ண்ய தீர்ண ஹ்ருதய ஸ ஹி காந்தி நேயம்
ஆஸூய கார் முக மகச்ச லதோ பவந்த
மா நேது மேந மஹி நோத ஹி நாத ஸாயின் –1–

பாம்பணை மேல். பள்ளி கொண்ட குருவாயூரப்பா! தாங்கள் கோகுலத்தில் வசித்து வருவதாக
ஸ்ரீநாரதர் கூறக் கேட்ட கம்ஸன் (தனது முயற்சி வீணானது கண்டு) மனம் நொந்து தனுர்யாகம்’ என்னும்
ஒரு காரணத்தைக் காட்டித் தங்களை அழைத்து வர எண்ணி,
காந்தினி என்பவரின் மகனான அக்ரூரை அனுப்பினான்.

அக்ரூர ஏஷ பவதம் க்ரி பரஸ் சிராய
த்வத் தர்சநா ஷ மமநா ஷிதி பால பீத்யா
தஸ்யாஜ்ஞ யைவ புன ரீஷிதுமுத்ய தஸ்த்வா
மா நந்த பார மதி பூரி தரம் ப பார –2-

அந்த அக்ரூரர் தங்கள் திருவடிகளையே சரணமாகப் பற்றி வெகுகாலமாகவே தங்களைக் காண
வேண்டுமென்ற விருப்பமுடையவராயினும், அரசனான கம்ஸனிடம் கொண்ட பயத்தினால்
தங்களைக் காணலாம் என்று மனதிலும் நினைக்க முடியாது தவித்தவர். அத்தகைய அவர்
இப்பொழுது அதே அரசனுடைய கட்டளையால் தங்களை தரிசனம் செய்ய ஆவல் கொண்டு
மனதில் ஆனந்தத்தின் பூரிப்பை அடைந்தார்.

ஸோ அயம் ரதேந ஸூ க்ருதீ பவதோ நிவாஸம்
கச்சன் மநோ ரத கணாம் ஸ் த்வயி தார்ய மாணான்
ஆஸ்வாத யன் முஹுரா பாய பயே ந தைவம்
ஸம் ப்ராரதயன் பதி ந கிஞ்சிதபி வ்யஜா நாத் –3-

பெரும் பேறு படைத்த அந்த அக்ரூரர் தேரில் ஏறிக் கொண்டு தங்கள் இருப்பிடமான – கோகுலத்தை
நோக்கிச் செல்கையில், தங்களைப் பற்றியே பற்பல சிந்தனைகளில் மூழ்கி அவற்றை சுவைத்துக் கொண்டே
(வழியில் கம்ஸனால் அதற்கு ஏதாவது) தடங்கல் — வந்துவிடுமோ என்று பயந்து இஷ்ட தெய்வங்களை
வேண்டிக் கொண்டு (செல்கையில்) வழியில் – எங்கு என்ன நடக்கிறது என்று எதையுமே உணராது சென்றார்-

த்ரஷ்யாமி வேத சத கீத கதிம் புமாம் ஸம்
ஸ்ப்ரஷ்யாமி கிம்ஸ் விதபி நாம பரிஷ் வஜேயம்
கிம் வஹ்யதே ச கலு மாம் க்வ நு வீக்ஷித ஸ்யா
தித்தம் நி நாய ச பவ ன் மயமேவ மார்கம் –4-

“அடைய வேண்டிய பரமபுருஷன் ஸ்ரீபகவானே என்று வேதங்களால் நூற்றுக்கணக்கான இடங்களில்
கொண்டாடப்படுகின்ற ஸ்ரீகிருஷ்ணனை நான் காண்பேனா? நான் தொடுவேனா? –
இறுகத் தழுவிக் கொள்வேனா? அவர் என்னிடம் அக்ரூரரே’ என்றழைத்துப் பேசுவாரா?
எங்கு சென்றால் அவரைக் காணலாம்?” என்றிவ்வாறு பலபடியாக நினைத்து,
தங்கள் நினைவாகவே அக்ரூரர் வழியைக் கடந்தார்.

பூய க்ரமாத பிவி சந் பவதம் கிரி பூதம்
வ்ருந்தா வனம் ஹர விரிஞ்ச ஸூ ராபி வந்த்யம்
ஆனந்த மக் ந இவ லக் ந இவ ப்ரமோஹே
கிம் கிம் தசாந்தர மவாப ந பங்கஜா ஷை –5-

தங்கள் திருவடிகள் படிந்ததால் மிகப் புனிதமானதும், பரமசிவன், பிரம்மா மற்றும் தேவர்களால்
வணங்கத் தக்கதுமான பிருந்தாவனத்தில் புகுந்ததும் ஆனந்தக் கடலில் மூழ்கினாற் போலும்
மோகத்தில் ஆழ்ந்தாற் போலும் வர்ணிக்க முடியாதவாறு என்னென்ன நிலையைத்தான் அடைந்தாரோ?

பஸ்யன் நவந்தத பவத் விஹ்ருதிஸ் தலா நி
பாம் ஸூஷ் வ வேஷ்டத பவச் சரணாங்கி தே ஷு
கிம் ப்ரூ மஹே பஹு ஜ நா ஹி ததாபி ஜாதா
ஏவம் து பக்தி தரலா விரலா பரமாத்ம ன் –6-

பரமாத்மா, ஸ்ரீ குருவாயூரப்பா! தாங்கள் விளையாடிய இடங்களைக் கண்டதும் வீழ்ந்து வணங்கினார்.
தங்கள் திருவடி இலச்சினை பட்டுள்ள புழுதிகளில் விழுந்து புரண்டார். நாங்கள் என்னதான் சொல்வோம்?
தாங்கள் திரு வவதாரம் செய்திருந்த அச்சமயத்தில் எத்தனையோ பல பெரியோர்கள் தோன்றி யிருந்தும்,
(அக்ரூரரைப் போல) இப்படி பக்தியின் பரவசத்தில் மூழ்கியவர்கள் மிகமிகக் குறைவே.

சாயம் ச கோப பவ நா நி பவச் சரித்ர
கீதாம்ருத ப்ரஸ்ருத கர்ண ரஸயா நாநி
பஸ்யன் ப்ரமோத சரிதேவ கிலோஹ்ய மாநோ
கச்சன் பவத் பவ ந ஸந்நிதி மன்வயா ஸீத் –7-

தங்களது திருவிளையாடல்களை விளக்கும் பாடல்களை கோபர்கள் தங்கள் இல்லங்களில் பாட,
அது அக்ரூரருக்கு அமுதினும் இனிமையாகக் காதுகளில் பரவி நிற்க, அவ்வமுதம் தவழ்ந்து வரும்
கோபர்களின் வீடுகளைக் கண்டு கொண்டே, அச்செவி யமுதப் பெருக்கினால் உந்தித் தள்ளப் பட்டாற்
போன்று மெதுவாக நடந்து மாலையில் தங்களது திருமாளிகை முன் வந்தடைந்தார். –

தாவத் ததர்ச பஸூதோஹ விலோக லோலம்
பக்தோத்த மாகதி மிவ ப்ரதி பால யந்தம்
பூமன் பவந்த மய மக்ர ஜவந்த மந்தர்
ப்ரஹ்ம அநு பூதி ரஸ ஸிந்து மிவோத்வ மந்தம் –8-

எங்கும் நிறைந்து விளங்கும் குருவாயூரப்பா! பசுக்கள் பால் கறத்தலைப் பார்ப்பதில் மகிழ்ச்சி
கொண்டவராகவும், ஓர் உத்தம பக்தனின் வருகையை எதிர் நோக்கி நிற்பவர் போன்றும்
அண்ணனான பலராமனோடு கூட நின்று கொண்டிருப்பவரும், உள்ளம் நிறைந்து அனுபவிக்கப்
பெறும் பிரும்மானந்த அமுதக் கடலை (பக்தனுக்காக) வெளியிலே மடை திறந்து விடுபவர் போன்றும்
உள்ள தங்களை. இந்த அக்ரூரர் கண்டார்.

சா யந்த நா ப்லவ விசேஷ விவிக்த காத் ரவ்
த்வவ் பீத நீல ருசிராம் பர லோப நீ யவ்
நாதி ப்ரபஞ்ச த்ருதி பூஷண சாரு வேஷவ்
மந்த ஸ்மிதார்த்ர வதனவ் ச யுவாம் ததர்ச -9-

மாலையில் நீராடித் தூய்மையான திருமேனியுடன் கண் கவரும் அழகிய மஞ்சள் பட்டும், நீலப்பட்டும்
உடுத்திக் கவர்ச்சியாக, உலகியல் போன்று அதிகமான அணி கலன்கள் அணியாத அதனால்
மிக அழகாக விளங்கும் வேடத்துடன் குளிர்ந்த புன்முறுவல் பூத்த முகத்துடன்
உள்ள உங்களிருவரையும் அவர் தரிசித்தார்.

தூராத் ரதாத் சம வருஹ்ய நமந்த மேந
முக்தாப்ய பக்த குல மௌலி மதோப கூஹன்
ஹர்ஷான் மிதாக்ஷர கிரா குசலாநு யோகீ
பாணிம் ப்ரக்ருஹ்ய சபலோ அத க்ருஹம் நினேத –10-

தொலைவிலிருந்தே (தங்களைக் கண்டதும்) தேரைவிட்டு இறங்கி வணங்கிக் கொண்டே வருகிற
பக்த சிரேஷ்டரான அக்ரூரரை, வாரி எடுத்துத் தழுவிக் கொண்டு. மகிழ்ச்சிப் பெருக்கினால்
பேசத் திறனற்று தழுதழுத்த குரலுடன் ‘க்ஷேமம்’ விசாரித்துவிட்டு, பலராமனோடு கூட
அவரது கரங்களைப் பற்றிக் கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்தீர்கள்.

நந்தேந சாக மமிதாத ரமர்ச யித்வா
தம் யாதவம் தது திதாம் நிசமய்ய வார்தாம்
கோபே ஷு பூ பதி நிதேச கதாம் நிவேத்ய
நாநா கதாபிரிஹ தேந நிஸாம நை ஷீ –11-

அங்கு ஸ்ரீநந்தகோபருடன் சேர்ந்து யதுகுலத் தோன்றலான அக்ரூரரை முறைப்படி – வரவேற்று உபசரித்து,
அவர் கூறிய செய்தி கேட்டு, அந்த அரச கட்டளையை கோபர்கள் அனைவருக்கும் தெரிவித்தீர்கள்.
பின் அவரோடு பற்பல கதைகளைப் பேசிக் கொண்டே அவ்விரவைக் கழித்தீர்கள்.

சந்த்ரா க்ருஹே கிமுத சந்த்ர பகா க்ருஹே நு
ராதா க்ருஹே நு பவநே கிமு மைத்ர விந்தே
தூர்தோ விலம்பத இதி ப்ரமதா பிருச்சை
ரசாங்கிதோ நிசி மருத் புர நாத பாயா –12-

இன்று ஸ்ரீ கிருஷ்ணன் சந்திரை சந்த்ர பாகை ராதை அல்லது மித்ரா விந்தையின் வீட்டில்
தங்கி இருக்கிறான் என்று கோபிகள் தங்களை சந்தேகித்தார்கள் –
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –

—————–

பாகவத புராணத்தில் அக்ரூரரின் பிருந்தாவன யாத்திரையும், மண்ணுலக வாழ்வில் திருவேங்கட யாத்திரையும், ஆன்மிக வாழ்கையில் ஆன்மா வைகுந்தம் நோக்கிச் செல்லும் “அர்ச்சிராதி கதி” என்ற புனித யாத்திரையும் மிகப் புகழ்பெற்றவை. நம்மாழ்வாரும் இராமனுசரும் செய்துள்ள பேருதவியால் பரமபதப் பயணத்தின் இனிமையையும் பரமபதத்தின் உயர்வையும் வேதங்களில் அர்ச்சிராதி மார்க்கம் என்று சொல்லப்பட்டுள்ளது.-

உயிர் உடலை விட்டுப் பிரிகின்ற போது ஏற்படும் பொறுக்கமுடியாத துன்பங்களுக்கு மாற்றாக எம்பெருமான் தோன்றி அருள்வதையும் வழியில் பல உலகங்களையும் தாண்டிச் செல்லும் போது ஏற்படும் இன்ப அநுபவங்களையும் நித்ய சூரிகளும் பிராட்டியுடன் எம்பெருமானும் மகிழந்து வரவேற்று அருள்வதையும் விளக்குகிறார், ஆழ்வார்.

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே –10-9-1-

நாரணன் தமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழி வனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

அதாவது;

ஜீவாத்மா என்ற முமுக்ஷீ – மோஷத்தில் விருப்பமுடையவன் உடலைத்துறந்து, பரமபதம் புறப்படுவதைப் பார்த்து, மேகங்கள் மகிழச்சியால் இசைக்கருவிகள் போன்று முழங்கின. கடல்கள், அலைகளாகிய கைகளை வீசி ஆராவரம் செய்தன.

வைகுந்தம் செல்பவனை அழைத்துச் செல்லும் ஆதி வாஹிகர்கள், தமது கைகளால் தொழுது, வரவேற்றனர். அங்கு வாழும் ரிஷிகள் மலர்மாரி பொழிந்து, தமது மௌன நிலையையும் கடந்து, வாய்த்திறந்து “இங்கே எழுந்தருளுக” என்று கூறி வரவேற்றனர், வைகுந்தம் செல்பவர், ஆங்காங்கே தங்கிச் செல்லும் பொருட்டு, தங்கும் இடங்கள் அமைத்தனர். கின்னரர் முதலியோர், இனிய இசைப்பாடல்கள் பாடினர். வேதங்களில் வல்லவர்கள் தாம் செய்த யாகங்களின் பலன்களை, வைகுந்தம் செல்பவர்களுக்குப் பரிசாக அருள்கின்றனர் குளிர்ந்த அருட்பார்வையுடன் கூடிய பென்கள், இவர்களை அருளுடன் பார்த்து வாழ்த்தினார். மருதர் வசுக்கள் முதலியோர், இவர்களைப்பின் தொடர்ந்து தோத்திரங்கள் சொல்லிக்கொண்டே வர பகவானின் வியூக நிலையிலும் விபவ அவதாரங்களிலும், விருப்பம் கொண்டு இருப்பதோடு நின்றுவிடாமல், அர்ச்சாவதாரத்திற்கு, எம்பெருமானின் எளிமையில் ஈடுபட்ட சிறப்பை நினைத்து, இவர்களைப் போற்றுகிறார்களாம். அர்ச்சாவதாரத்திற்கு அதிலும் மற்ற திவ்ய தேசங்களுக்குத்கிடைக்காமல், திருக்குடந்தைக்கு மடடும் கிடைத்த தனிச் சிறப்பே இது. பயணம் தொடர்கிறது. பரமபதத்தில் எம்பெருமான் விளங்கும் திருக்கோயிலின் கோபுர வாசலில் நித்யசூரிகள் வரவேற்கின்றனர்.

பரமபதத்தில், எம்பெருமானுக்கும், நித்திய சூரிகளுக்கும் ஒரே வகையான வடிவம் இருக்குமாதலால், எம்பெருமானுக்கு க்ரீடம் உண்டு. (எம்பெருமான்) ரக்ஷகத்துவத்துக்கு (அடியார்களை காக்கும் தொழிலில்) முடி சூடி இருக்கும் இவர்கள் அடிமை செய்கைக்கு (கைங்கர்யம் புரிவதற்கு) முடி சூடி இருப்பார்கள் என்று இருவருக்கும் வேறுபாடு தோன்றும் முறையில் வைணவ மரபிற்கு ஏற்ப நயமாக உரை உள்ளது.

வைகுந்தம் செல்வோர் இவ்வாறு “கொடி அணி நெடுமதி்ள் கோபுரம் குறுகினர்” என்றபடி கோபுரத்தை அடைந்தனர். இவர்களை வரவேற்கும் பரமபதநாதனை, “வடிவுடை மாதவன்” என்கிறார் ஆழ்வார். புதிய பேரழகு வாய்ந்த எம்பெருமான் என்பது பொருள் வைகுந்தத்துக்கு வருபவரைக் கண்டவுடன், எம்பெருமான் புதிய பேரழகோடு விளங்குகிறானாம்

திரு வாசல் காக்கும் முதலிகள் என்று கூறப்படும் துவாரபாலகர் வரவேற்றனர். கைப்பிடித்து அழைத்துச் சென்று, பணி செய்யத்தக்க முறையில் தங்கள் கையில் அதன் அடையாளமாக வைத்திருந்த பிரம்பை, வந்தவர் கையில் கொடுப்பார்களாம்.

சமுத்ரஜலம் ஆறு உற்பத்தியாகும் மலையைச் சேர்ந்தாற்போன்று, உலகவாழ்வில் அல்லற்பட்டவர்கள், பரமபதத்தை அடைந்ததைக் கண்டு அவர்கள் வியந்தனர். வேதம் வல்லவர் வைகுந்தத்திற்கு வந்தவரின் திருப்பாதங்களைப் புனித நீரால் கழுவினால். இவர்கள் வருகையால் முகம் மலரப்பெற்ற வைகுந்தப் பெண்டிதர், வைகுந்தம் செல்வோர்க்குச் செல்வம் போன்ற திருவடி நிலைகளையும், மணம் மிகுந்த வண்ணப்பொடிகளையும் கைகளில் ஏந்தி, தாம் செய்த புண்ணியத்தின் பயனாகத் தான் இவர்கள் வந்துள்ளதாகக் கருதி மகிழ்ந்தனர்.

இவ்வாறான வரவேற்பைப் பெற்று, எம்பெருமாள் விளங்கும். திருமாமணி மண்டபத்தில், அந்தமில் பேரின்பத்து அடியரோடும், எம்பெருமானோடும், கூடி இருந்து குளிர்ந்தார்கள் என்ற இனிய விளக்கத்தை நாம் திருவாய் மொழியில், நம்மாழ்வாரின் அருளிச் செயலாகக் காணும் போது, வியப்பால் மகிழ்ச்சி வருகிறது.

ஸ்ரீ ராமானுஜர், பரமபதம் பற்றியும் எம்பெருமானைப் பற்றியும், அப்பெருமானை எப்போதும் தம் விழிகளால் பருகிவாழும் நித்ய சூரிகளைப், பற்றியும் வேதவாய் மொழிகொண்டு விளக்கி இருக்கும், “வேதாந்த சங்கிரகம்” என்கிற க்ரந்தத்தில் சொல்கிறார்.

பரப்ரஹ்மம் என்று கூறப்பெறுவது ஸ்ரீ மந்நாராயணன் ஒருவனே, இவனுடைய வடிவம் ‘பல பலவே சோதி வடிவு” என்றபடி அளவற்றது. மாசு இல்லாதது. இப்பெருமானிடம் ஞானம், பலம், ஐச்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ் போன்ற எண்ணற்ற குணங்கள் இப்பெருமானைத் தவிர உள்ள, சேதந அசேதநப் பொருள்கள் இப்பெருமானின் விருப்பத்திற்கு ஏற்பச் செயல்படுகின்றன. இவைகள் நிறைந்த “விபூதி” என்று ,வழங்கப்படும்.

பெருமானுக்கு திவ்ய ஆபரணங்கள் திவ்ய ஆயுதங்கள் திவ்ய தேவிமார்கள் திவ்ய பரிஜனங்கள் திவ்ய வடிவம் முதலியவை யாராலும் செய்யப்படாமல் (அப்ராக்ருதம்) எம்பெருமானைப் போன்றே உண்மைப் பொருள்களாக நிலைத்த பொருள்களாக உள்ளன.

எம்பெருமானின் முதன்மையான தேவி பெரிய பிராட்டியாக திருமகள் பூமிதேவியாகிய நிலமகளும் ஒரு தேவி நெருங்கியப் பணி செய்வோர் (பரிஜனங்கள்) எண்ணற்றவர் பணிவிடை செய்வதற்கு உதவியாக அளவற்ற கருவிகள் உண்டு இத்தகைய எம்பெருமானின் இருப்பிடம் வைகுண்டம் இதனை நித்ய விபூதி பரமபதம் என்று கூறுவர். இத்தகைய ) வைகுந்தத்தில் எம்பெருமானை எப்போதும் இடைவிடாமல் சேவித்துக் கொண்டிருக்கும் நித்திய சூரிகள் உண்டு இவை எல்லாமே எம்பெருமானைப் போன்றே என்றும் அழியாத உண்மைப் பொருள்கள். இத்தகைய செய்திகள் எல்லாவற்றையும் ஸ்ரீ இராமானுஜர் விவரமாக அருளியுள்ளார்.

பிரளய காலத்தில் மற்றவை எல்லாம் அழிய எம்பெருமான் ஒருவன் மட்டுமே விளங்குவது போல் அப்பெருமானின் தேவியர் பரிஜனங்கள் அணிகள் ஆயுதங்கள் நித்ய விபூதி நித்ய சூரிகள் ஆகிய அனைவரும் அழியாமல் நிலைத்து வாழ்பவர் என்பது ஸ்ரீ இராமானுஜர் அருளிய சிறந்த விளக்கமாகும். இக்கருத்துகளை விளக்கவந்த இதிகாஸ புராணத்தொடர்களையும் வியாஸரிஷி அருளிய ப்ரஹ்ம ஸீத்ரத்தையும் எடுத்துக்காட்டி ஸ்ரீ இராமானுஜர் விளக்கியுள்ளார்.

பரமபதத்தின் இத்தகைய நிலையைத் தான் கம்பரும் பரமபதம் கால இல்லாதது நிலையானது சுருக்கமோ பெருக்கமோ இல்லாதது சத்வ குணம் மாறாதது ஐந்து பூதங்களும் அழிந்தாலும் தான் அழியாது இருப்பது என்கிறார்.

“சிறு காலை இலா நிலையோ திரியா குறுகா நெடுகா குணம் வேறுபாடா
உறுகால் கிளர் பூதம் எலாம் உகினும் மறுகா நெறி”

ஜீவாத்மாவின் குறிக்கோள் பரமபதத்தை அடைவதே என்பதை வேதங்களும், உபநிஷத்துக்களும் சொல்லி வழிகளையும் சொல்கின்றன.

இவ்வுலகில் பாற்கடலையும், பரம பதத்தையும் நம் மானிடக் கண்களால் காண முடியாது. என்பதை பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி திருவரங்கத்துமாலை இவற்றில் சொல்லியுள்ளார்.

“ஒத்து அமரர் ஏத்தும், ஒளிவிசும்பும் (வைகுந்தம்) பாற்கடலும் இத்தலத்தில் காண்பரிய” தேவர்களில் கூடப் பலர், இதுவரை, வைகுந்தம் கண்டது இல்லை என்றும், அப்படிச் சென்றவர் கூடத் திரும்பவும் அங்கிருந்து வந்தது இல்லை “வான் நாடரில் சிலர், சென்று, கண்டார் இல்லை, மற்று அதனில் போனாரில் மீளப் புவியில் வந்தார் இல்லை”

ஸ்ரீமத் வைகுண்ட தாம்நி ப்ரதித விரஜயாலங் க்ருதே திவ்ய லோகே,,
நித்யே நந்தாங்க யுக்தே ச்ருதிசிகர நுதே வ்யோமயாநேச லக்ஷ்ம்யா
ஆஸீநம் சாதிசேஷே கலசபவதிசம் வீக்ஷமாணம் ஸீரேட்யம்,
கம்பீரோ தாரபாவம் ஸகலஸீரவரம் வாஸிதேவம் ப்ரபத்யே–( ஸ்ரீ விஷ்ணு ஸ்தலாதர்சம்–தியானச்லோகம்)

இடர் உடையேன், சொல்ல எளிதோ பிரமன்
அடரும் விடையோற்கும் அரிதே தொடரும்
கருவையாகும், தம் பிறவிக்கட்டு அறுத்த மீளாத்
திருவைகுந்தம் பெறுவார் சிலர்.”

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பாவை நோன்பும் தை நீராடலும் –ஸ்ரீ மதி ஜெயஸ்ரீ சாரநாதன்–ஸ்ரீ சங்கத் தமிழ் மாலை —

January 20, 2023

கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜன ஹிதம் த்ருஷ்ட்வைவ ஸர்வாத்மநாம்

ப்ரோக்தம் ஸ்வஸ்ய ச கீர்த்தனம் ப்ரபதனம் ஸ்வஸ்மை ப்ரஸூநார்பணம் |

ஸர்வேஷாம் ப்ரகடம் விதாது மநிசம் ஸ்ரீதன்வி நவ்யே புரே

ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தனயாம் கோதாம் உதாராம் ஸ்தும: ||–ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 3

ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில் பாரை உண்டு – பார் உமிழ்ந்து – பார் இடந்த எம்பெருமான், ஸ்ரீ வராஹ மூர்த்தியாய், மானமிலா பன்றியாய் பூமி பிராட்டியை ரக்ஷித்து கொடுத்தான்! அப்போது காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு சுலபமான, எல்லோரும் செய்யும்படியான உபாயத்தை அருளிச் செய்ய வேண்டும் என்று ஜகன் மாதாவான பூமி பிராட்டி பகவானிடம் நமக்காகப் பிரார்த்திக்கிறாள். இதையே ‘கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜநஹிதம்’ என்று அனந்தாழ்வான் சதுஸ்லோகியில் அழகாக உறுதிப்படுத்துகிறார்.

அப்போது எம்பெருமான் 3 இலகு உபாயங்களை சொல்கிறார்.

  1. கீர்த்தனம்‘ – பகவானின் திருநாமத்தை வாய்விட்டு உச்சரிக்க வேண்டும்.
  2. தஸ்மை ப்ரசுரார்ப்பணம்‘ என்று அவன் திருவடியில் புஷ்பங்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும்.
  3. ‘ப்ரபதன’ சுலபன் அவன் – ஆச்ரயிப்பவர்களுக்கு சுலபனாக இருப்பதால், அவனது திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

இம்மூன்றும் எளிதாக செய்யக்கூடியது. இதை எப்போதும் செய்ய வேண்டும் என்கிறார் ஸ்ரீ வராஹ மூர்த்தி. பூமி பிராட்டியை ரட்ஷித்து இடது பக்கம் அமர்த்தி கொண்டு -அவரே திருக்கையால் நாம் முதலில் பூமா தேவியை பற்றி கொண்டு அவனை பற்ற வேண்டும் என்று காட்டி கொடுக்கிறார். ஆண்டாள் அவதாரத்துக்கு மூலமான அவதாரம் வராஹ அவதாரம். ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிவனத்தில் பெரியாழ்வாரின் திருமகளாய் ஆண்டாள் அவதரித்தாள்.

ஸ்ரீ வராஹ மூர்த்தி அருளிய 3 உபாயங்களை, ஸ்ரீ ஆண்டாள்,

  1. தூமலர் தூவித்தொழுது 🌹🙏
  2. வாயினால் பாடி ️🎵 ️
  3. மனத்தினால் சிந்திக்க 👣

என மூன்று யுகம் தாண்டி நமக்கு புரியும் படி அருளினாள். “உதாராம் கோதாம்” – பாட வல்ல நாச்சியார் ஆக திருஅவதரித்து பாட்டின் பெருமையை நமக்கு அருளினாள்!

  • திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்கள் ‘ எம்பெருமான் திருநாமங்களை பாடு’ என வலியுறுத்திச்சொல்லியும்;
  • 2-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்’ என்றும்;
  • 3-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்’ என்றும் சொல்லி வராஹ மூர்த்தியிடம் கேட்ட மூன்று விஷயங்களை மூன்று, பத்து பாசுரங்களில் பாடினாள் ஆண்டாள்.

“மாயனை வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்” என்று பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய ஔதார்யத்தை ஆச்ரயித்து நாம் கோதாவின் ஸ்ரீஸூக்திகளை, திருப்பாவையை ஸேவிப்போம். பாடி தொழுது வணங்குவோம்!

கல்பத்தின் ஆதியில் எம்பெருமானால் உலகோர்கள் யாவருடைய நன்மையையும் மனதில் கொண்டு, தன்னை ஏத்திப் பாடுதல், தன்னையே அடைந்திருத்தல், தன்னைப் புஷ்பங்களால் அர்ச்சித்தல் ஆகியவை சொல்லப்பட்டது. அதைக் கேட்ட பூமிப்பிராட்டியார் இவற்றை உலகோர்கள் யாவரும் அறியும்படி செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் பரமவைதிகரான ஸ்ரீவிஷ்ணுசித்தரான பெரியாழ்வார் திருமகளாராய் வந்து பிறந்தார். அந்த உதாரகுணமுடைய கோதை நாச்சியாரைப் போற்றுகிறோம்!

—————————

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம் அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த
தந் நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளி தாம்நா தந்த்ரி நிநாத மதுர ச கிராம் நிகும்பை

ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாஸ்த்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம்.
ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார்.
தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்?
அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான்.
அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய்.
அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார்.
அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம்

—————-

மார்கழியும் திருப்பாவையும் நமக்கு நினைவூட்டுவது பாவை நோன்பென்னும் பண்டைய வழக்கம். மார்கழி மாதம் பாவை நோன்புக்குப் பெயர் பெற்றது. தைந் நீராடல் என்பதும் பிரசித்தி பெற்ற ஒன்று. மார்கழியிலும் நீராட்டம் உண்டு. இந்தச் செய்திகளை எல்லாம் அரைகுறையாகக் கேட்டுள்ளோம். இவை குறித்த இலக்கியச் செய்திகளைத் தொகுத்துத் தருவதே இக்கட்டுரை.

பாவை நோன்பின் முக்கிய அம்சமே இளம் சிறுமியர், மார்கழி மாதம் விடியலுக்குமுன் எழுந்து, ஆற்றங்கரை சென்று, சில்லிடும் ஆற்று நீரில் நீராடி, ஆற்று மணலில் பாவை எனும் பொம்மை செய்து, அதற்குப் பூச்சூட்டி விளையாட்டாக வழிபடுதலே ஆகும். சற்று யோசித்துப் பார்த்தால் இதெல்லாம் தேவையா என்று தோன்றும். இளம் சிறுமியரை பகல் நேரத்தில் விளையாட அனுப்பக் கூடாதா? விடியலுக்கு முன்னால் எழுப்பி, குளிரில் ஏன் அனுப்ப வேண்டும்? அதுவும் ஆற்றங்கரைக்கு அனுப்பி, ஆற்றில் இறங்கிக் குளிக்கச் சொல்வது நல்லதா என்றெல்லாம் எண்ணத் தோன்றும். ஆனால் இந்தப் பாவை நோன்பில் பொதிந்துள்ள சில கருத்துகள், பொதுநலத்தையும், அக வாழ்வின் நன்மையையும் இணைத்து, மக்கள் சமூகத்தின் ஒரு முக்கியக் கடமையாகவே பாவை நோன்பினைக் காட்டுகின்றன.

அக வாழ்வு என்னும் பொழுது, மனம் நிறைந்த வாழ்க்கையை, கண் நிறைந்த கணவனுடன் இப்பிறப்பு மட்டுமில்லாமல், அடுத்த பிறவியிலும் வாழ வேண்டும் என்னும் வேண்டுதல் செய்யப்படுகிறது.

பொது நலம் என்னும் பொழுது, வரப்போகும் மாரிக்காலம் தப்பாமல் மழை கொடுக்க வேண்டுமெனில் மார்கழி மாதம் ஆற்றங்கரையில் நோன்பிருக்க வேண்டும். மாதம் முப்பது நாள்களும் செய்யும் இந்த நோன்பினை பெரியவர்கள் செய்தாலும்கூட, சில குறிப்பட்ட விதங்களில் இளம் சிறுமியர் செய்வதே பலனளிக்கும் வண்ணம் இருக்கும். இது எப்படி என்று பார்பதற்குமுன், இந்த வழக்கம் எப்பொழுது ஆரம்பித்திருக்கக் கூடும் என்று பார்ப்போம்.

பெண்பால் பிள்ளைத் தமிழ் இலக்கணத்தைக் கூறுமிடத்தே, பிங்கலந்தை நிகண்டு, சூத்திரம் 1369 இவ்வாறு கூறுகிறது:

பேணும் சிறப்பின் பெண் மகவாயின் …..
ஐந்தின் முதலா ஒன்பதின்காறும்
ஐங்கணைக் கிழவனை யார்வமொடு நோற்றலும்
பனி நீர் தோய்தலும் பாவை யாடலும்.

ஐந்து முதல் ஒன்பது வயது வரையிலான பருவத்தில் உள்ள சிறுமியர் பனி நீர் தோய்ந்து, பாவை ஆடி, ஐங்கணைக் கிழவன் எனப்படும் ஐந்து பாணங்களை உடைய காம தேவனுக்கு ஆர்வமோடு நோன்பு நோற்பர் என்பது இதன் பொருள்.

இதுவே தமிழ் மரபென்றால், வட நாட்டில் மார்கழி மாதத்தில், யமுனை ஆற்றங்கரையில், கார்த்யாயினி என்னும் பெண் தெய்வத்தைக் குறித்து பாவை செய்து, நோன்பு நோற்பர் என்னும் குறிப்பு ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. இங்கே காமதேவன், அங்கே கார்த்யாயினி. ஆனால் குறிக்கோள் ஒன்றே. கண்ணன் போல, திருமால் போல, மனம் கவர் கணவனை அடைதல் என்பதாகும்.

இதைச் செய்யும் பருவம், கணவன் என்பதும் திருமணம் என்பதும் என்னவென்றே அறியாத சிறார்ப் பருவம்! அப்பருவத்தில் எதற்கு இப்படி ஒரு நோன்பு என்று நோக்கினால், அங்கேதான் புலப்படுகிறது, ஒரு பொதுநலம்.

வசிஷ்டர், காஷ்யபர் போன்ற முனிவர்கள் சொன்ன ஒரு கருத்து, பின்னாளில், வராஹமிஹிரரால் மனித குலம் அறியும்வண்ணம் எழுதி வைக்கப்பட்ட ஒரு கருத்து-  மார்கழி மாதம் வைகறைப் பொழுது தொடங்கி காணப்படும் சில இயற்கைச் சூழ்நிலைகள், ஆறு மாதங்கள் கழித்து, வளமான மழைக்காலம் வருவதற்கு ஏதுவாகும் என்பது. இந்த இயற்கைச் சூழ்நிலைகள் உண்டாவதற்கு, ஆண்டாள் கூறுவது போன்ற ‘கீசு கீசு’ என்னும் ஆனைச் சாத்தான், சிலும்பும் புள்ளினங்கள், கொட்டில் விட்டு வெளி வரும் எருமைக் கன்றுகள் எழுப்பும் ஓசைகள் – அவை தவிர ஆற்று நீரில் கூக்குரலிட்டு நீராடி, பாவை விளையாடும் சிறுமியர் எழுப்பும் இனிய குரலோசை போன்றவை முக்கியத் தேவைகள்.

மூவகையில் கவனிக்கப்படும் இயற்கைச் சூழ்நிலையில், முதல் வகை மேலே கூறப்பட்ட வைகறைப் பொழுதின் சலசலப்புகள். நீர் சம்பந்தப்படும்படி, விடியலுக்கு முன்னரே வாசல் தெளித்துக் கோலமிடுவதும் இதில் அடக்கம். மக்கள் கூட்டத்தையும் சேர்த்து உயிரினங்கள் பலவும் வைகறைக் குளிரை வெப்பப்படுத்த வேண்டும். நடமாடுவதன் மூலமும் நீரை அளைப்பதன் மூலமும் ஓசையின் மூலமும் இது செய்யப்படுகிறது. மக்கள் தொகுதியைப் பொருத்த மட்டில், காவலும் கண்டிப்பும் இல்லாத நிலையில் கூவித் திரிந்து விளையாடும் இளம் சிறுமியரின் பொம்மை விளையாட்டும், மணல் விளையாட்டும், ஆற்று நீராட்டமும் இந்த இயற்கைச் சூழலுக்கு ஒத்துப் போகின்றன. இதனால்தான், பெண் குழந்தைகளை ஈடுபடுத்தும் வண்ணம் விளையாட்டாக இந்த நோன்பினை முனிவர்கள் அமைத்துள்ளனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இரண்டாவது வகை, காற்று மண்டலம், மேகக்கூட்டம், வைகறையின் வண்ணங்கள் முதலியன. கீழ் வானம் வெள்ளென்று இருக்கும் நிலையை ஆண்டாள் சொல்வது, முக்கிய இயற்கைக் குறிப்பு. மார்கழி மாதம், விடியல் நேரத்தில் வானம் வெண்ணிறமாக இருக்க வேண்டும், மாறாக சிவந்து இருந்தால் மாரிக் கால மழை ஓரளவேனும் அடிபடும் என்று அறியப்பட வேண்டும். சிவந்த விடியல் வானம் தை, மாசி மாதங்களில் நல்லது. ஆனால் மார்கழியில் வைகறை வானம் தூய்மையாய், வெண்ணிற மலர் போல இருக்க வேண்டும் என்பது முனிவர்கள் கருத்து. காற்று மெலிதாக வீச வேண்டும். மெல்லிய மேகக் கீறுகள் வானில் தென்பட வேண்டும். முக்கியமாக பனிப் படலம் கூடாது. தை பிறந்தபின் பனி வர வேண்டும். மார்கழியில் அல்ல. தற்சமயம், நம் நாட்டின் பல பகுதிகளில் பனிப் படலம் தென்படுவது, அடுத்த மழைக்காலம் குறைவுடையது என்பதை முன்கூட்டியே காட்டும் ஒருகாலம்- காட்டி.

மூன்றாவது வகை வான்வெளியில் உள்ள கிரக அமைப்புகள். ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்று ஆண்டாள் கூறியது சாதாரணச் செய்தி அல்ல. மார்கழி மாத சூழ்நிலை வகை தெரிந்துதான் அவள் ஒவ்வொன்றையும் பாடியிருக்கிறாள். மார்கழி விடியல் நேரத்தில், ஒரு கிரகம் உதித்து, மற்றொரு கிரகம் அஸ்தமனம் அடைவது விண்வெளி குறித்த நல்ல காரணியாகும். வரப் போகும் மாரிக் காலம் சிறப்பாக இருக்கும் என்பதற்கு இது ஒரு முன்-காட்டி. கிரகங்கள் நீச்சமடையாமல் இருப்பதும், கிரக யுத்தம் என்று சொல்லும்படி கிரகங்கள் கூடி இல்லாமல் இருப்பதும், கிரஹணங்கள் ஏற்படாமல் இருப்பதும், அடுத்த மாரியின் வளப்பமான பொழிதலை உறுதிப்படுத்துவது ஆகும்.

தற்சமயம் மார்கழியில் இருக்கும் இம்மூவகை நிலையை எண்ணிப்பார்த்தே, அடுத்த ஆண்டின் மழை எப்படி இருக்கும் என்று வாசகர்கள் கணித்துவிடலாம். இந்த் வகையில் கணித்தவர்கள்தான் நம் தமிழ் முன்னோர்.

பாவை நோன்புக்கும், மழைக்கும் உள்ள தொடர்பு அறிந்த நம் முன்னோர், சரியான காலத்தில், சரியான அளவில் மழைக் காலம் தொடங்கி விட்டது என்று திருப்திபடுவதுடன் அல்லாமல், அடுத்த மார்கழியையும் சரியாகவே வரவேற்போம் என்று வரவேற்றனர். பாவை நோன்பைப் பற்றி பரிபாடல் பாடியுள்ள ஆசிரியர் நல்லந்துவனார், ஆவணித் திங்கள் அவிட்ட நாளில் கோள்கள் நிலை சொல்லி, இவ்வாறு அமையப் பெறவே, சைய மலையின் கண் மழை துவங்கும் என்பது உறுதி என்னும் விதிப்படி, மழை பெய்யலாயிற்று என்றார். அதனுடன் நில்லாமல், அதற்கடுத்த மார்கழியில், எவ்வாறு மக்கள் ஆர்வத்துடன் பாவை நோன்பிருந்தனர் என்றும் விவரிக்கின்றார்.

பாவை நோன்பு செய்யும் முறை

மார்கழி மாதம் பௌர்ணமியன்று பாவை நோன்பைத் தொடங்குவர். அன்று திருவாதிரை நட்சத்திரத்தில், நிலவு பூரணம் அடையும். ஆதி இறை என்பதாலும், திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி என்பதாலும், ஆதிரையான் என அழைக்கப்பட்ட முக்கண்ணன், திருவாதிரையன்று வணங்கப்படுபவன். அக்கடவுளே மழை பொழிய அருள்பவன். அதனால், திருவாதிரை நட்சத்திரத்தில், சந்திரனானது முழுமை அடையும் மார்கழி மாதப் பௌர்ணமியன்று, ஆற்றங்கரை தோறும் ஹோமத்தீ வளர்த்து, ஆதிரையானுக்கு பூசை செய்து, பாவை நோன்பினைத் துவக்குவர். அன்றிலிருந்து ஆறு மாதம் கழித்து, அதே ஆதிரை நட்சத்திரத்தில், சூரியன் நுழையும் போது இருக்கும் கால, நேரம், நாள், ஓரை ஆகியவற்றின் அடிப்படையில், மாரிக் காலம் எப்படி இருக்கும் என்று மீண்டும் கணிக்கப்பட்டு, உறுதி செய்யப்படும். அதன் அடிப்படையில்தான் என்ன பயிரிடுவது, எப்பொழுது பயிரிடுவது என்று முடிவு செய்வர். பாவை நோன்பின் போது, சரிவர பூசனைகள் செய்வதாலும் நேர்த்தியாக நோன்பிருப்பதாலும் வரப்போகும் மாரிக்காலம் வளமாக இருக்கும் என்பது இந்த நோன்பில் பிணைந்துள்ள பொதுநலக் கருத்து.

இந்தக் கருத்தினை திருப்பாவையிலும் காணலாம்.

“நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்” என்ன பயன் என்று ஆரம்பித்திலேயே ஆண்டாள் தெரிவிக்கிறாள். அதன் பயன், “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்தல்” என்பதே. பாவை நோன்பிருந்தால் மாதம் மூன்று முறை மழை பொழியும்.

அது மட்டுமல்ல, அடுத்த பாசுரத்தில் (‘ஆழி மழைக் கண்ணா’), மாரிக்காலத்தில் இருண்டு திரண்டு மேகங்கள் மழை பொழிவதைக் குறிப்பிட்டு, “வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்” என்று மார்கழி நீராட்டத்திற்கும், மழைக் காலத்திற்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறாள். ஆக, பாவை நோன்பின் முதல் நோக்கம், பொதுநலம் அல்லது நாட்டு நலம் என்னும் மழை வளம் வேண்டுதல்.

இந்த நோன்பை விவரிக்கையில், பரிபாடல் 11-இல் நல்லந்துவனார் இவ்வாறு கூறுகிறார்.

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை விரிநூல்
அந்தணர் விழவு தொடங்க, புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!’ என
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,

பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின் ஊதை ஊர்தர,
உறை சிறை வேதியர் நெறி நிமிர்
நுடங்கு அழல் பேணிய சிறப்பின்,

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.

கதிரவன் அதிகம் காயாத, குளிர்ந்த கடை மாரியையுடைய மார்கழித் திங்களில், சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் முழுமை பெற்ற அந்தப் பௌர்ணமி நன்னாளில், விரி நூல் அந்தணர் விழவு தொடங்குவர். முப்புரி நூலை உடைய அந்தணர் (அந்தணர் என்றால் வேதாந்தத்தை அணவினவர் என்பது நச்சினார்க்கினியர் கருத்து) இறைவனுக்கு பலிப் பொருள் (நைவேத்தியப் பொருள்) பெய்த பொற்கலங்களை ஏந்தி நிற்க, “வெப்பமடையாமல் இந்நில உலகம் குளிர்வதாக!” என்று வாழ்த்தி, “அம்பாவாடல்” என்னும்படி, அம்பா என்று சொல்லப்படும் தாயோடு, இளம் கன்னியர் ஆற்றினில் நீராடி வர, அவர்களுக்கு, ‘முனித் துறை முதல்வியர்’ எனப்படும், சடங்குகள் அறிந்த முதிய பார்ப்பனப் பெண்டிர் நோன்பு செய்யும் முறையைச் சொல்லிக் கொடுக்க, நோன்பு நோற்கும் கன்னிப் பெண்கள், குளிர்ந்த ஆற்று நீரில் குளித்தமையாலும், குளிர் தாளாததாலும், உடுத்தின ஈரத் துணியுடனே இருப்பதாலும், அந்தக் குளிர் தணியும் வண்ணம், ஹோமத் தீயின் அருகே வந்து, தங்கள் ஈரத்துணியைக் காட்டி உலர்த்தும் வண்ணம் இருப்பர். அந்தத் துணியிலிருந்து கிளம்பும் நீராவியானது, வைகை ஆற்றுக்குத் தரும் அவிப் பொருள் போன்று இருக்கும். ‘வையை! நினக்கு மடை வாய்த்தன்று’ என்று , கன்னியர் ஈரத் துணியில் கிளம்பும் நீராவியே வைகை உண்ணும் ஹவிஸ் என்னும் ஹோமப் பொருள் என்று புலவர் கூறுகிறார்.

அடுத்து ஒரு முக்கியக் குறிப்பைத் தருகிறார்.

மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர்,
அவர் தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ,
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!

இவ்வாறு ஹோமமும், நோன்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, மறுபுறம், இளம் பெண்கள் நடனம் ஆடுவர். இங்கே சிறுவர்கள் பற்றியும் புலவர் குறிப்பு தருகிறார். மையோலை பிடித்து கவி பாடும் மழ புலவர் என்றால் முதன் முதலாக ஓலைச் சுவடி பிடித்து பாடம் பயில ஆரம்பிக்கும் சிறுவர் என்பது பொருள். அவர்கள் படிக்கும் பாடலுக்கு மாறாக, அந்தப் பெண்கள் பொய்யாடல் ஆடுவர் என்கிறார். பூசையின் பகுதியாக, அந்தக் குளிரிலும், அபிநயம் பிடித்து அவர் ஆடுவர். அது பொய்யாடல் என்கிறார். கள்ளமில்லாப் பருவத்தினராக இருப்பதால், அந்தப் பாடல்களுக்குக் காமக் குறிப்பின்றி ஆடுதல் ‘பொய்யாடல்’ எனப்படும் என்கிறார் உரை ஆசிரியர் பரிமேலழகர். இதன் மூலம் அந்தப் பாடல்களில் காதல் ரசம் அல்லது, நல்ல கணவனை விரும்பும் விழைவு இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் கள்ளமிலா அந்தச் சிறுமியர் அபிநயித்தபோது, அது வைகைக்கு வைக்கும் ஒரு விண்ணப்பம் ஆகிறது.

அது என்ன விண்ணப்பம் என்றால், நீரின் கண் ஆடியும், தீயின் கண் (ஹோமத் தீ) நின்றும், பொறியையும், புலனையும் அடக்கி இந்தச் சிறுமியர் ஆடுவது, இவர்தம் முன் பிறப்புகளிலும், இவ்வாறு ஆடினமையின் காரணமாகவோ? இந்தப் பேறுக்குரிய காரணத்தை நீயே சொல்வாய் வைகை நதியே- இவ்வாறு கூடியிருப்போர் நினைப்பர், கேட்பர். புலவரும் கேட்கிறார்.

“தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?” என்னும் இந்த வரிகளின் மூலம், தைந் நீராடுதல் என்பது, ‘தவத்தை நீராடுதல்’ என்னும் சொற்களின் சேர்க்கையே என்று தெரிகிறது. இந்த வரிகள் சொல்லப்படும் காலமும் இடமும், மார்கழி மாதத்து பாவை நோன்பு ஆரம்பிக்கும் முதல் நாள். தை மாதம் இன்னும் வரவில்லை. ஆனால் மார்கழி மாதத்து பாவை நோன்பின் நீராட்டத்தையே, தைந் நீராடல் என்று புலவர் கூறுகிறார். பொதுநலம் கொண்ட பாவை நோன்பில் பிணைக்கப்பட்டுள்ள அக நலம் காட்டும் பகுதி இது.

சிறு வயதிலேயே புலன்கள் அடக்கி, ஆண்டாள் சொன்னது போல, மை இடுதலையும், மலர் சூடுதலையும், தங்களை அழகுபடுத்திக் கொள்வதையும் விடுத்து, நெய் சோறும், பால் சோறும் விரும்பி உண்ணும் அந்தப் பருவத்தில் அவற்றையும் விட்டொழித்து, இனிய தூக்கத்தையும் கலைத்துக் கொண்டு, குளிரையும் பொருட்படுத்தாமல், சில்லிடும் ஆற்று நீரில் குளித்து நோன்பிருக்கிறார்களே, இதுவே தவம். ‘தவமும் தவமுடையார்க்காகும்’ என்பது முதுமொழி. ஒருவர் வழி வழியாக தவம் மேற்கொண்டிருந்தால்தான், இப்பிறப்பிலும், தவத்தை மேற்கொள்வர். ஆகவே அந்தச் சிறுமியரும் முன்னரே இருந்த தவத்தைப் பற்றியே இன்று, வைகையே, உன் முன்னரும் தவத்தை ஆகும் பேறு பெற்றனரோ, நீ கூறு என்கிறார் புலவர்.

தை என்றால் பிணைத்தல் அல்லது தைத்தல் என்பது பொருள். தைந் நீராடல் என்பது, பிறவி தோறும் கடைபிடித்த தவத்தை, இப்பிறவியிலும் பிணைக்கும் ஒரு நீராடல், எனவே அதை ‘தவத் தைந் நீராடல்” என்கிறார் புலவர். மார்கழிப் பாவை நோன்பே தைந் நீராட்டமும் ஆகும் என்பது இதன் மூலம் புலனாகிறது.

அந்தப் பௌர்ணமியன்று ஆரம்பிக்கும் பாவை நோன்பு அன்றுடன் முடிவதில்லை.

பௌர்ணமியன்று ஆரம்பிக்கும் பாவை நோன்பு அன்றுடன் முடிவதில்லை.

‘நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்’ என்பர் அங்குக் கூடியுள்ள மகளிர். காட்டாற்று வெள்ளமெனப் பெருகி வந்த ஆற்று நீர், மார்கழி மாதம் தெளிந்து, முகம் பார்க்கும் கண்ணாடி போல இருக்கும். அதுவே தக்க நீர். எதற்குத் தக்கது என்றால், தங்கள் மன விருப்பங்களையும், தவத்தையும் அந்த நீரிடம் கூறும்பொழுது, கண்ணாடி போல் தெளிந்த அந்நீர் அவற்றைத் தைத்துக் கொள்ளும். அதுவே ‘தைந் நீர்’. தெளிந்து இருக்கும் அந்நீர், அந்த மகளிரின் தவத்தை அப்படியே வாங்கிகொண்டு, நிறைவேற்றிக் கொடுக்கும்.

அவர்கள் இயற்றும் தவம்தான் என்ன என்பதை அடுத்த வரிகளில், புலவர் கூறுகிறார். இங்கேதான் அக வாழ்வின் வேண்டுதல்களைப் பொது நலம் கொண்ட பாவை நோன்புடன் தைக்கும் அருமையான கருத்துகள் புலனாகின்றன.

‘ “கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,
விழுத் தகை பெறுக!” என வேண்டுதும்’ என்மாரும்,
‘பூ வீழ் அரியின் புலம்பப் போகாது,
யாம் வீழ்வார், ஏமம் எய்துக!’ என்மாரும்,
‘ “கிழவர் கிழவியர்” என்னாது, ஏழ்காறும்,
மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!” என்மாரும்

“எம் கழுத்தைச் சுற்றித் தழுவிய எம் காதலர் (கணவர்) எம்மைப் பிரியாது இருக்க வேண்டும். பல பூக்களை நாடும் வண்டுகள் போல, எம் கணவர் பிறரை நாடாமல் என்றும் எம்மோடு இருக்க வேண்டும். எம் கணவரும், யாமும், கிழவர், கிழவியர் என்று உலகத்தோர் கூறாவண்ணம், பேரிளம் பெண் என்னும் எமது ஏழாம் பருவம் எய்துமளவும், இந்த இளம் பருவத்தினராகவே இன்று இங்கு தைந் நீராடுவது போல என்றும் நிலைபெற வேண்டும்.”

இப்படி வேண்டிக் கொண்டு, பரிபாடல் இசைத்துப் பாடி இறுதியாக அவர் வேண்டுவது இது.

முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்;
மறு முறை அமையத்தும் இயைக!
நறு நீர் வையை நயத் தகு நிறையே!

“நாங்கள் முன்பிறப்பில் செய்த தவத்தாலே, இப்பிறவியில் நின்பால் இத் தைந் நீராடலாகிய தவத்தைப் பெற்றோம். அத்தவத்தினை யாவரும் விரும்பத்தக்க நினது நீர் நிறைவின் கண்ணே மறுபிறப்பிலும் நாங்கள் பெறுவோமாக,” என்று பிறவி தோறும் தொடரும் தவமாக, இந்த வேண்டுதல் நடப்பதே பாவை நோன்பின் அகத் திறமும், தைந் நீராடலின் மகத்துவமும் ஆகும்.

இந்த வர்ணனைகள் பாவை நோன்பின் முதல் நாளான மார்கழி பௌர்ணமியன்று நடப்பவை. அதன் பின்னரும் என்ன ஆயிற்று, எவ்வளவு நாட்கள் இந்த நோன்பு தொடர்ந்தது என்று பார்க்கும் முன், இந்நோன்பில் கலந்து கொண்டவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

பிள்ளைப்பருவத்தின் ஐந்து முதல் ஒன்பது வரையிலான வயதுச் சிறுமியர் செய்வது என்று கூறப்படும் இந்தப் பாவை நோன்பில், முது பெண்டிர் கலந்து கொண்டு, மற்றவர்களுக்கு செய்யும்முறை சொல்லிக் கொடுக்கின்றனர். கன்னிப்பெண்கள் கலந்து கொள்கின்றனர். இதே பாடலில் ஓரிடத்தில், பாவை ஆடிய கன்னிப் பெண்ணைக் கண்டு மயங்கின இளமகனைப் பற்றிய விவரங்கள் வருகின்றன. கணவனை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் என்று வேண்டும் இள மங்கையர் கலந்து கொள்கின்றனர். ஆக, வயது வித்தியாசம் இல்லாமல் பெண்கள் அனைவரும் இந்த நோன்பை மேற்கொண்டுள்ளனர். வருடம் தோறும் செய்திருக்கின்றனர்.

ஹோமம் செய்யும் ஆண் மக்கள் அங்கே இருக்கின்றனர். பெண்கள் பாடுவதையும், ஆடுவதையும் வேடிக்கை பார்க்கும், இளம் பருவ ஆண்கள் அங்கே நீராடித் திரிந்து கொண்டிருக்கின்றனர். நோன்பில் கலந்து கொண்டவர்கள் என்று சொல்லத்தக்க வகையில், இளம் சிறுவரும் அங்கே இருந்துள்ளனர். அவர்கள் பாடிய பாடலுக்கு மாறாக, சிறுமியர் அபிநயித்துள்ளனர் என்று புலவர் கூறுகிறார்.

மறுநாள் முதல், ஆற்றங்கரைக் காட்சியாக இந்தச் சிறுவரும், சிறுமியரும் ஆற்றில் நீராடி, சிறுமியர் பாவை சமைக்க, அவர்களோடு சேர்ந்து சிறுவர்களும் விளையாடுவர். இந்த வர்ணனையை புற நானூறு 243 -இல் காணலாம்.

தொடித்தலை விழுத்தண்டினார் என்னும் புலவர், தான் போகும் வழியில், ஆற்றங்கரையில் பாவைப் படிமங்கள் செய்யும் சிறுமியரையும், அவர்களோடு கைகோத்து, நீரிலும், மணலிலும் குதித்து, கள்ளமில்லாமல் விளையாடும் சிறுவர்களையும் பார்த்து, அவர்களைபோன்ற இளமைக்காலம் போய்விட்டதே என்று அங்கலாய்க்கிறார்.

“திணிமணல் செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு உயர்சினை”

என்னும் இவ்வரிகளில் சிறுவர்- சிறுமியர் ஒன்றாகப் பாவை ஆடி விளையாடியமை தெரிகிறது.

“அரி மயிர்த் திரள் முன்கை
வால் இழை, மட மங்கையர்
வரி மணற் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து”

என்னும் புறநானூறு 11-இன் மூலம் இள மங்கையரும் மணலில் பாவை செய்து, மலர் சொரிந்து வழிபட்டனர் என்று தெரிகிறது.

நோன்பின் காலம்

ஆண்டாள் கூறும் முறைப்படி, மார்கழி முழுவதும், ஆற்றங்கரையில் நோன்பிருக்கப்பட்டது. அது தை, மாசி மாதங்களிலும் தொடர்ந்திருக்கின்றது. பங்குனி நாள் வரை என்று நாச்சியார் திருமொழியில், இரண்டு இடங்களில் ஆண்டாள் குறிப்பிடுகிறாள். மழைத் தொடர்பு வகையில் பார்த்தால், மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் இருக்கும் மூன்று வகைப்பட்ட இயற்கைச் சூழ்நிலையைப் பொருத்தே, ஆவணி மாதம் தொடங்கி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை உட்பட நான்கு மாதங்களிலும் மழை இருக்கும். மார்கழி தொடங்கி நான்கு மாதங்களிலும், என்றெல்லாம் மூவகைச் சூழ்நிலைகள் நன்றாக இருந்தனவோ, அன்றிலிருந்து 195ஆம் நாள் நல்ல மழை பொழியும். இதன் அடிப்படையில், பங்குனி வரை நோன்பு தொடர்ந்திருக்க வேண்டும்.

நாச்சியார் திருமொழி அடிப்படையில் நோக்கும் போது, மார்கழியில், மணலில் பாவை சமைத்தாலும், தையில் சிற்றில் இழைத்தலும் இருந்திருக்கக்கூடும். திருக்கூடல் போன்ற பிற மணல் விளையாட்டுகளையும், சிறுமியர் பிற மாதங்களில் விளையாடியிருக்கின்றனர்.

திருக்கூடல் என்பது, மணலில் வட்டமாக வரைந்து, கையை எடுக்காமல் அப்படியே அந்த வட்டத்தின் உட்புறம் சுழிகள் பல வரைய வேண்டும். பிறகு, இரண்டிரண்டாக சுழிகளை என்ன வேண்டும். கடைசியில் இரட்டைபடையில் கூடினால், நினைத்தது நடக்கும். ஒற்றைப்படையில் கூடினால், நினைத்தது நடக்காது. ஆண்டாள் நினைத்தது, நாராயணனே தன்னிடம் வரவேண்டும், தன்னை மணம் புரிய வேண்டும் என்பது. நோன்பின் தொடர்ச்சியான இந்த விளையாட்டுகளிலும், வரப்போகும் கணவனைப்பற்றியே வேண்டுதல்கள் இருந்திருக்கின்றன.

அதன் ‘க்ளைமாக்ஸ்’ பங்குனித் திருநாள்! அதுதான் பங்குனி உத்திரம் என்னும், பங்குனி மாதப் பௌர்ணமி. அன்றுதான் காமன் பண்டிகை. காதலர்களை காமதேவன் சேர்த்து வைத்த நாள். அன்றுதான், யார் காரணமாக காமதேவன் மலர்க்கணை தொடுத்து, அதனால் சிவனால் எரிக்கப்பட்டு, அனங்கன் என்று ‘உருவம் இல்லாதவன்’ என்னும் பெயர் பெற்றானோ, அந்தப் பார்வதி, பரம சிவனை மணந்த நாள். அதுவே, ராமன் சீதையை மணந்த நாள். பாற்கடலில் ஸ்ரீதேவி தோன்றிய நாள், அது மட்டுமல்ல, அந்த நாராயணனையே மணந்த நாள். அரங்கநகர் பெருமான், தாயாரை மணந்த நாளும் அதுவே. அந்தப் பங்குனி உத்திரப் பெரு விழா ஸ்ரீரங்கத்தில் தொன்றுதொட்டு நிகழ்ந்து வந்திருக்கின்றது என்று அக நானுறும் பறை சாற்றும் திருநாள். அன்றுதான் ஆண்டாளும், அரங்கனை மணந்தாள். அந்நாளே சேர்த்தி – திருமணப் பிணைப்பில் சேர்த்து வைக்கும் நாள் எனப்படுகிறது.

பாவை நோன்பின் ஒரு பகுதியாக காமதேவனைத் தொழுவர். பரிபாடலில் மங்கையர் தெரிவிக்கும் விருப்பங்களைப் பார்த்தால், கணவன் அன்பு குறையாமல், தம்மை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் என்னும் காமதேவன் அருளும் வரங்களே. சிவனை நோக்கியே மலர்க்கணை தொடுத்தவன் காமதேவன் என்னும் மன்மதன். அவன் தமக்கும் அருள் புரிய வேண்டும். தாம் விரும்பும் மணவாளனை அடைய உதவ வேண்டும். அடைத்த கணவன் என்றும் அன்புடனும், பிரியாமலும் இருக்க வேண்டும் என்பது பாவையாடும் பெண்டிர் விருப்பம். இதை ஆண்டாளும் தெரிவிப்பதை நாச்சியார் திருமொழியில் காணலாம்.

marriage4ஹோலிப் பண்டிகையன்று கொண்டாடப்படும், பங்குனி உத்திரமே பாவை நோன்பின் முடிவு நாள். திருமணப் பருவத்தில் இருக்கும் கன்னியர் மார்கழியில் இந்த நோன்பை ஆரம்பிக்க, அடுத்த மூன்று மாதத்திற்குள் அவர்களுக்கு வரன் அமைந்து, பங்குனி உத்திரத்திற்குள் மண வாழ்கை அமைய முன்னேற்பாடுகள் நடந்து விடும். இதைத்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றனர் நம் முன்னோர்.

பாவை உருவம்

மணலில் பாவை என்னும் பொம்மை செய்வர் என்று பார்த்தோம். அது என்ன பொம்மை என்று வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. ஆனால் ஸ்ரீமத் பாகவதத்தில், கார்த்யாயினி என்னும் பெண் தெய்வத்தைப் பாவையாக வடிப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. நம் தமிழ் மண்ணில் என்ன செய்திருப்பார் என்று ஆராய்வோம்.

வெளிப்படையாகத் தெரிவது, பாவை என்பது கொல்லிப் பாவை என்னும் பெண் தெய்வமாக இருக்கலாம். பாவைப் பாட்டு என்பது முன்பு இருந்தது என்று தொல்காப்பிய உரையில் காணப்படுகிறது. அதுபோல பாவைக் கூத்து அல்லது பாவை ஆட்டம் என்பதும், பதினோரு கூத்து வகைகளுள் ஒன்று. இதை ஆடியவள் செய்யோள் என்னும் செந்நிறம் கொண்ட திருமகள். அவளுக்குக் கொல்லிப் பாவை என்று பெயர் உண்டு. போருக்கு வந்த அசுரர்கள் மோகித்து, மெலிந்து விழும்படி அவள் புனைத்து கொண்ட உருவம், கொல்லி மலையின் மேற்புறத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அதை காண்போர் அப்பொழுதே மோகிப்பர் என்று சொல்லப்படுகிறது. மோகத்தைத் தரும் காமதேவன் போல, இவள் பாவை உருவமே மோகத்தைத் தரும். எனவே இவள் உருவைப் பாவையாக அமைத்திருக்கலாம்.

முன்னிக்கடலை” என்னும் திருவெம்பாவையிலும், சக்தியின் உருவாக வருணிக்கப்பட்டு, மழை பொழிதலுடன் பாவை நோன்பு சொல்லப்படுகிறது. எனவே, பராசக்தி என்னும் பெண் தெய்வத்தையே வடித்திருக்கலாம்.

ஆனால் சிலப்பதிகாரத்தில் வஞ்சின மாலையில், புகார் நகரில் வாழ்ந்த ஏழு பத்தினிப் பெண்டிரில் ஒருவராக ஒரு இளம் பெண் வடித்த பாவை பற்றிய குறிப்பு வருகிறது. பொன்னிக் கரையில் மணல் பாவை அமைக்கிறாள் அந்தப் பெண். அதுவே அவள் கணவனாகும் என்று மற்ற பெண்கள் சொல்லுகின்றனர். பிறகு அவர்கள் எல்லோரும் வீடு திரும்பிய பின்னரும், அந்தப் பெண் மட்டும் அங்கிருந்து அகலவே இல்லை. அந்தப் பாவையே தன் கணவன் என்று அவள் அந்த இடத்திலேயே இருக்கிறாள். அப்பொழுது ஆற்று நீர் கரை புரண்டு மணலில் பாய்கிறது. ஆனால் அவள் வடித்த பாவையை மட்டும் அழிக்காமல், அதைச் சுற்றிக் கொண்டு போகிறது. தான் வடித்த பாவை தன் கணவன்தான் என்று அவள் இருந்தமை அவள் பத்தினித்தனத்துக்குச் சாட்சி என்று சொல்லப்படுகிறது.

இங்கே இரண்டு விஷயங்கள் புலனாகின்றன. ஒன்று, இப்படிப்பட்ட உருவம் கொண்டவன்தான் தன் கணவனாக வரவேண்டும் என்று அவ்வுருவைப் பாவையாக அமைக்கும் வழக்கம் இருந்திருக்கின்றது.

மற்றொன்று, அந்த உருவம் கொண்டவனே அவள் கணவனாவான் என்று மெய்ப்பிப்பது போல ஆற்று நீரும் நடந்து கொண்டிருக்கின்றது. இது பிறவி தோறும் பாவை நோன்பு நோற்பதனால் ஏற்படும் பயனைத் தெரிவிப்பதாக இருக்கின்றது. இப்பிறவியில் இனி வரப்போகும் கணவன், முன் பிறவியிலும், இவளுக்குக் கணவனாக இருந்திருக்கின்றான். இவளது ஆழ் மனதில் பதிந்துள்ள அவன் உருவத்தையே பாவை நோன்பின்போது, மணலில் பாவையாக வடித்துள்ளாள். அவள் கணவன் அவனே என்று அவள் உறுதியாக அவ்விடத்திலேயே இருந்ததை, அவள் நோன்பினை ஏற்றுக்கொண்ட ஆற்று நீர், ஆமோதிக்கும் வண்ணம் அந்தப் பாவையை சிதைக்காமல் சென்றது. அவள் கணவன் யார் என்பதை அவளது பல பிறவிகளிலும், அந்த ஆற்றங்கரையில் அவள் நோன்பிருந்தமையால், ஆற்று நீர் தெரிந்து கொண்டிருக்கிறது.

இதற்கு மாறாக, சிறுமியர் வடித்த பாவையை, வைகை நீர் சிதைத்தது. அதனால் அவர் அழுவர் என்னும் வருணனையும் பரிபாடல் -7 இல் வருகிறது. தாங்கள் வடித்த பாவை சிதைந்து விட்டதே என்னும் துக்கம் இருக்கலாம். அல்லது, மேற்கூறிய வகையில் தன் கணவன் உருவம் என்று சமைத்த உருவம் சிதைந்ததே என்றும் அழுதிருக்கலாம்.

இந்த வகையில் சிந்திக்கும் போது, ஆண்டாள் வடிவமைத்த பாவை நிச்சயமாக கண்ணன் அல்லது விஷ்ணுவின் அவதாரங்களாகவோ அல்லது வேங்கடம், மாலிரும் சோலை போன்ற பதிகளில் உள்ள திருமால் உருவமாகவோ இருந்திருக்கலாம்.

பின்னாளில் பாவை நோன்பு

பாவை நோன்பு விவரிக்கும் பரிபாடல், அப்பாடல் எழுதப்பட்ட காலத்தைக் கணிக்கும் விதமாக கோள்களின் நிலையைக் கூறுகிறது. நான் தேடின வரையில் கி.மு. 1042, ஆவணி மாதம் இருந்த கோள் நிலை அதை ஒட்டி வருகிறது. பரிபாடல்கள் முதல் சங்கக் காலத்திலிருந்தே பாடப்பட்டு வந்திருக்கின்றன. பிறவி தோறும் பெண்டிர் பாவை நோன்பு நோற்றமை பற்றிக் கூறவே இந்நோன்பும், அது பற்றி விளக்கும் இப்பாடலும் மிகப் பழமை வாய்ந்தவையாக இருக்க சாத்தியக்கூறுகள் அதிகம்.

பிற்கால வழக்கிலும் இந்நோன்பு இருந்திருக்குமா என்று தேடினால், சிலப்பதிகாரத்தில் இதை ஒத்த ஒரு நோன்பு சொல்லப்படுகிறது. கணவனைப் பிரிந்து வாடும் கண்ணகியைப் பார்த்து, பார்ப்பனப் பெண்ணான அவள் தோழி தேவந்தியும் வருந்துகிறாள். தீய கனவு கண்டு வருந்தும் கண்ணகியிடம், கணவனைப் பிரியாமல் இருக்கச் செய்யும் நோன்பினை முன்பிறவியில் கண்ணகி செய்திருக்க மாட்டாள். அதனால்தான் இத்துன்பம் வந்திருக்கிறது. இருந்தாலும், இப்பிறவியில், அந்த நோன்பைச் செய்ய காவிரி நதியானது கடலில் சங்கமிக்கும் புகார்த் துறையில், சோம குண்டம், சூரிய குண்டம் என்னும் இரு துறைகளில் நீராடி, காமதேவனைத் தொழுதால் இப்பிறவியிலும் கணவனைப் பிரியாது இருக்கலாம். மறு பிறவியிலும் போக பூமியில் பிறந்து கணவனைப் பிரியாது இருக்கலாம் என்கிறாள். ஆனால் கண்ணகி தங்களுக்கு அது வழக்கம் இல்லை என்கிறாள்.

(கனாத்திறம் உரைத்த காதை)
கணவற்கு ஒருநோன்பு
பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக உய்த்துக்
கடலொடு காவிரி சென்றுஅலைக்கும் முன்றில்
மடல்அவிழ் நெய்தல்அம் கானல் தடம்உள
சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாம்இன் புறுவர் உலகத்துத் தையலார்
போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாம்ஒருநாள்
ஆடுதும் என்ற அணிஇழைக்குஅவ் ஆய்இழையாள்’

பாண்டிய நாட்டில் வைகை நதி தைந் நீராக – தக்கதாக இருந்தது போல, சோழ நாட்டில், காவிரி ஆறு இருந்திருக்கின்றது. சோம குண்டம் என்பது சந்திரன் துறை. சந்திரனும், சூரியனும் ஒருவரை ஒருவர் பார்க்கும் மார்கழித் திருவாதிரையில் பாவை நோன்பு ஆரம்பித்தார்போல, இவை இரண்டும் எதிர்நோக்கும் துறைகளாக இருந்திருக்கலாம். அங்கே நீராடி, காமதேவனைத் தொழுதல், பாவை நோன்புக்கு இணையாக இருக்கிறது.

பின்னால், கோவலனுடன், கண்ணகியும் மதுரை புறப்பட்ட போது, இதே சங்கமத் துறைக்கு வருவது சொல்லப்படுகிறது. ஆனால், காமதேவனைத் தொழும் நேரமல்ல அது. அவ்விடத்தில் மணிவண்ணன் கோட்டத்தை வலம்வந்து, பயணத்தைத் தொடர்கின்றனர். மணிவண்ணன் என்பது திருமால். காமதேவன் திருமாலின் மைந்தன். சங்கமிருந்து காமதேவன் தொழுது, அருகில் திருமாலை வணங்கிச் செல்லும் வழக்கம், அந்நோன்பு நோற்றாரிடை இருந்திருக்க வேண்டும். அந்தணர்கள் குடும்பத்தில் இந்த வழக்கம் இருந்திருக்க வேண்டும். பாவை நோன்பிலும், அந்தணப் பெண் நோன்பு செய்யும் முறையைச் சொல்லிக் கொடுப்பாள் என்று வருகிறது. சிலம்பிலும், அந்த நோன்பைப் பற்றிக் கூறுபவள் ஒரு அந்தணப் பெண்.

சிலப்பதிகாரம் காலத்திற்குப் பிற்பட்டு, ஆண்டாள் காலத்திலும் இந்த வழக்கம் இருந்திருக்கலாம். கண்ணனை அவள் அடைய விரும்பவே, தான் இருக்கும் இடமே ஆயர்பாடி என்று அவள் உருவகித்து, திருப்பாவை அமையும் களம் ஆயர்பாடி எனப் பாடியிருக்கலாம்.

‘அங்கண் மா ஞாலத்து’ எனத் தொடங்கும் பாசுரத்தில், அரசர்களும் ‘சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்’ என்று சொல்வதன் மூலம், புகாரின் கண் உள்ள சங்கத் துறையைக் கோடிக் காட்டியிருக்கலாம். சோம குண்டம், சூரிய குண்டம் போல, அந்தப் பாடலில் ‘திங்களும், ஆதித்யனும்’ பற்றிய குறிப்பும் வருகிறது.

பாண்டிய, சோழ நாட்டில் மட்டுமல்ல, சேர நாட்டிலும் இந்த வழக்கம் இருந்திருக்கின்றது என்று கோபால பணிக்கர் என்பவர் எழுதிய புத்தகம் கூறுகிறது.

தமிழ் கூறும் உலகம் என்று மட்டுமல்லாமல், யமுனைக் கரையிலும், இந்த நோன்பு செய்யப்பட்டது என்பதால், இது, மழையை நம்பி இருக்கும் எல்லா இடங்களிலும் பொதுநலம் கருதி, ஆன்மிகமும் இணைத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். மழைக்குக் காரணன் இந்திரன். மழையை நம்பி இருக்கும் நிலங்களில் அவனுக்குப் பெயர் உண்டு. பாகவதத்தில் வரும் ஒரு குறிப்பில், இமயமலைப் பகுதியில் யாரும் இந்திரனை நம்பி இல்லை. ஊற்று நீரும், பனி உருகிய நீருமே அவர்களுக்குப் போதும் என்று வருகிறது. அந்த இமயப் பகுதியில் சேடி நாட்டைச் சேர்ந்த புது மணத் தம்பதியர், காமன் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு, புகார் நகரில் இந்திர விழா காணப் புறப்பட்டனர் என்று சிலப்பதிகாரம் கூறிகிறது.

பங்குனி உத்திரத்தில் வரும் காமன் பண்டிகை இமயத்தில் பிரசித்தமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை – அது பார்வதியின் பிறந்தகமாக இருக்கவே. தென் கோடியிலும் காமன் பண்டிகை, வட கோடியிலும் காமன் பண்டிகை. மனமொத்த மண வாழ்க்கையை விரும்பும் மக்கள், பாரதத்தில் எங்கிருந்தாலும், காமதேவனைக் குறித்து ஏதேனும் தவமோ நோன்போ இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்திர விழா என்பது மழையை எதிர் நோக்கி வாழும் தமிழ் பூமியில் நடந்திருக்கின்றது.

இந்திரனுக்கும் சேடி நாட்டுக்கும் ஒரு தொடர்புண்டு. இந்திரக் கொடியை நாராயணனிடமிருந்து இந்திரன் பெற்றுக் கொள்கிறான். மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கொடியை சேடி நாட்டவரிடம் இந்திரன் கொடுத்ததாக வராஹா மிஹிரர் கூறுகிறார். அந்த இந்திரனுக்கு எடுக்கப்படும் விழவு என்பதால், சேடி நாட்டு தம்பதியர் புகார் வருவதற்கு ஒரு காரணமாக இருக்க வேண்டும்.

மாறுபாடு உடையது என்ற பேச்சுக்கே இடமில்லாமல், ஒன்றே மதம், ஒரே வித வழக்கம் என்று இந்த பாரதப் பெரு நிலம் இருந்து வந்திருக்கின்றது என்பதற்கு இவையெல்லாமே சாட்சி.

தெய்வம் என்பதே இல்லை என்பதுதான் பகுத்தறிவு என்று கூறும் இன்றைய தமிழர் வாழும் இந்நாட்டில், இயற்கையும், மானுடமும் ஒத்து வாழ்ந்த இயல்பினைக் காட்டுவது பாவை நோன்பாகும். இயற்கையைப் பேணுங்கள், இயற்கை உங்களைப் பேணும் என்னும் உயரிய கருத்தின் அடிப்படையில் அமைந்தது இந்நோன்பு. அறிவியலும், ஆன்மிகமும் கலந்த பண்பாட்டினைப் பேசுவதுதான் இந்நோன்பு. இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ‘தங்களுக்கு வழக்கம் இல்லை’ என்று கூறிய கண்ணகியே, தெய்வமான பிறகு, இளங்கோ அடிகளிடம் சொன்னாளே அதை மறவாமல் இருக்க வேண்டும்..

“தெய்வம் தெளிமின்: தெளிந்தோர்ப் பேணுமின்:
….தானம் செய்மின்: தவம் பல தாங்குமின்.”

கார்த்யாயினி என்பது நமது கன்னியாகுமரியில் இருக்கும் சிறு பெண்வடிவில் இருக்கும் கன்னித் தெய்வமே!

இதை “கார்த்தியாயினி வித்மஹே கன்னியகுமாரி தீமஹி தந்நோ துர்கிப் ப்ரசோதயாத் ” என்பதே துர்கா காயத்ரி மந்தரம் மூலம் அறியலாம்

—————

ஸ்ரீ சங்கத் தமிழ் மாலை —

ஸ்ரீ மத் பாகவதம் -10-22-காத்யாயினீ விரதம் பற்றிச் சொல்லும்

ஹே மந்தே ப்ரதமே மாசி நந்த வ்ரஜ குமாரிகா சேருர் ஹவிஷ்யம் புர்ஜானா காத்யாயனி யர்ச்சன விரதம்

ஹேமந்தருவின் முதல் மாதத்தில் நந்தனுடைய ஆயர்பாடியில் உள்ள கன்னிகைகள் ஹவிஸ்ஸை
உணவாகக் கொண்டு காத்யாயினியைப் பூஜிக்கும் விரதத்தை அனுஷ்ட்டித்தார்கள்

ஆப் லுத் யாம்ப ஸி காளிந்த்யா ஜலாந்தே சோதயேருணே க்ருத்வா ப்ரதி க்ருதம் தேவீம் ஆனர்ச ந்ருப ஸை கதிம்

அருணோதயத்தில் யமுனை நதியில் நீராடி நீரின் கிட்டே மணலினால் தேவியின் உருவத்தைச் சமைத்து அர்ச்சித்தார்கள்

கந்தர் மால்யை ஸூரபி பிர் பலி பிர் தூப தீபகை உச்சா வசைது சோபஹார ப்ரவாள பல தண்டு லை

மணமுள்ள புஷ்ப சந்தனங்களால் அர்ச்சித்தும் தூப தீபங்கள் காட்டியும் பலிகள் உபகாரங்களாய்
சிவந்த பழங்களும் ரிஷிகளும் கொடுத்தார்கள்

காத்யாயனி மஹா மாயா மஹா யோகின் யதீஸ்வரி நந்த கோப ஸூதம் தேவி பதம் மே குருதே நம

அவர்கள் செய்த ஸ்தோத்ரம் -மஹா மாயையான ஸ்வரூபமாயும் மஹா யோகினியாயும்
எல்லாவற்றுக்கும் மேலான காத்யாயினி தேவியே உனக்கு நமஸ்காரங்கள் -நந்தகோபன் குமரனை எனக்குப் பதியாகச் செய்து அருள்

இதி மந்த்ரம் ஜபந்த்யஸ்தா பூஜாம் சக்ரு குமாரிகா ஏவம் மாஸம் வ்ரதம் சேரு குமார்ய க்ருஷ்ண சேதஸ

இந்த மந்த்ரத்தை ஜெபிப்பவர்களாய் கன்னிகைகள் பூஜை செய்தார்கள் –
இவ்விதம் கிருஷனையே மனதில் உடையவர்களாக பூஜை செய்தார்கள்
ஒரு மாதம் விரதம் அனுஷ்ட்டித்தார்கள்

பத்ர காளீம் ஸமானர்சு பூயான் நந்த ஸூத ப்பகு யுஷஸ் யுத்தாய கோத்ரை ஸ்வைரஸ் யோன்யா பத்த பாஹவஸ்

நந்தகோப குமரன் பதியாக வேண்டும் என்று பத்ரகாளியை ஆராதித்தார்கள்-

தினம் தோறும் யமுனையில் நீராடப் போகும் பொழுது கிருஷ்ண நாமத்தை உரத்த குரலில் பாடிக் கொண்டும்
ஒருவரை ஒருவர் கை கோர்த்துக் கொண்டும் சென்றார்கள் –

கதி -அயன -என்ற இரண்டு பதங்களால் மோக்ஷ மார்க்கங்கள் எவை என்று விசாரிக்கும் கத்யயனர் ரிஷி குலம்

தவத்தைந் நீராடல் என்று நீராட்டம் தபஸ்ஸாகவே பரிபாடல் சொல்லும்
தாய் அருகா நின்று தவத்தைந் நீராடல்
அம்பா வாடலின் ஆய் தொடிக் கன்னியர்

பேணும் சிறப்பில் பெண் மகவாயின் மூன்றாம் ஆண்டில் குழ மணை மொழிதலும்
ஐங்கணைக் கிழவனை ஆர்வமோடு போற்றுதலும் பனி நீர் தோய்தலும் பாவை யாடலும் பிங்கலந்த நிகண்டில் -1369-

ஐங்கணைக் கிழவனை-மன்மதனை கால் பிடித்தாள் அன்றோ கேசவ நம்பியைக் கால் பிடிக்க

பிங்கல நிகண்டு நூலைப் பிங்கலம் என்றும் வழங்குவர்.
இது சோழர்கள் ஆண்ட கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது.
இவர் திவாகர முனிவரின் மாணவர்களில் ஒருவர். சமண சமயத்தைச் சார்ந்தவர். இந் நிகண்டில் 10 பிரிவுகள் உள்ளன,
அவற்றுள் 4121 சூத்திரங்களால் 14,700 சொற்களுக்கு விளக்கம் தரப்படுகின்றது.
மேலும் 1091 சொற்களுக்குப் பல பொருட்கள் கூறப்படுகின்றன.
அகத்தியம் என்னும் நூலழிந்து தொல்காப்பியம் நிலை பெற்றது போல், ஆதி திவாகரத்தின் அடியாய்ப் பிறந்தது இந்நூல்.
காலத்தில் முந்தைய இந்நூல், நிகண்டுகளுள் கடைசியாக அச்சிடப்பட்ட நிகண்டாகும். திவாகர நிகண்டைக் காட்டிலும் பல சொற்கள் கொண்டது இந்நூல்.

இந்த நீராட்டம் -ஆதிரைத் திரு நாளாக மலையாளத்தில் -திருவாதிரைக்கு ஒரு வாரம் முன்பு தொடங்கி
பெண்டிர் கூட்டமாகச் சென்று நீராடி திருவாதிரை அன்று புதிய ஆடை ஆபரணங்கள் சூடி
விசேஷ பாயாசம் கூடாரை வெல்லும் சீர் -போல் கொண்டாடுகிறார்கள் –

பத்ம புராணத்தில் ஸ்ரீ மத் பாகவத மஹாத்ம்யம்
மார்கழி சுக்ல பக்ஷ நவமி தொடங்கி ஏழு நாள்கள் பவ்ர்ணமி வரை
ஸ்ரீ மத் பாகவதம் சப்தாகம் பாராயணம் ஸ்ரேஷ்டம் என்கிறது

ஸ்ரீ மத் பாகவதத்தில் காத்யாயினி விரதம் அனுஷ்ட்டித்து வஸ்த்ர சோரம் நடந்து பின்பு கோவிந்தா பட்டாபிஷேகம் செய்தால் போல் இங்கும் உண்டே

————-

மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல் -ஸ்ரீ வராஹ நாயனார் விதைத்த வித்தே கோல் தேடி எழும் கொழுந்தாக ஆண்டாள்

நீளா துங்க3 ஸ்தந கி3ரி தடீ1 ஸுப்தம் உத்3போ3த்யத்4ய க்ருஷ்ணம்
பாரார்த்ய2ம் ஸ்வம் ஶ்ருதி ஶத ஶிரஸ் ஸித்3த4ம் அத்4யாபயந்தீ |
ஸ்வோச்சிஶ்ட்டாயாம் ஸ்ரஜி நிக3ளிதம் யா ப3லாத் க்ருத்ய பு4ங்க்தே
கோ3தா3 தஸ்யை நம இத3ம் இத3ம் பூ3ய ஏவாஸ்து பூ4ய: ||–ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்தது

நீளா துங்க3 ஸ்தந கி3ரி தடீ1 ஸுப்தம்–மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்தது உறங்கும் -பாசுரக் கருத்தும்(மாரி -ஆண்டாள் கூந்தல் -மலை -ஸ்தனம் -முழைஞ்சு குகை -ஹ்ருதய குஹரம்-ஹார்த்த விக்ரஹம் -யஸீதை இளம் ஸிம்ஹம் -ந்ருஸிம்ஹ குட்டி )
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேலும் வைத்துக் கிடந்த மலர் மார்பா -பாசுரக் கருத்தும்
ஆஸ்ரிதர்களுடைய வளர்ந்து -பருத்து -உயர்ந்து -நிமிர்ந்து நிற்கும் பக்தியே மலை -முலை

இவன் தூக்கமே-பரமனின் பையத்துயில் -எழுப்புவது -விசேஷ பக்திக்கு பரவசனாகி இருப்பவனை எழுத்து அத்வேஷ மாத்திரம் உள்ளோர்க்கும்
அருளி ஸூ முகனாகி அவர்கள் பக்தியையும் வளர்க்கத் தூண்டுவதே ஆகும்

அத்4யாபயந்தீ |-நினைவூட்டுகிறேன் -ஞாபயே ந சிஷயே -கண்டிக்கிறேன் இல்லை

இத3ம் இத3ம் பூ3ய ஏவாஸ்து பூ4ய-இதம் இதம் பூய பூய -நான்கு தடவை -ஸ்லோகத்தில் உள்ள (நீளா-க்ருஷ்ணம்-ஶ்ருதி ஶத ஶிரஸ்-கோ3தா3)நான்கு தத்துவங்களையும் வணங்குகிறேன்

————

ஸ்ரீ உய்யக் கொண்டார் அருளிச் செய்தவை

அன்னவயல் புதுவை ஆண்டாள் * அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் * – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

அன்ன வயல் -சரீரத்தை வளர்க்கும் நெல் வளரும் இடம் -நினைவுகள் முளைத்து எழுந்து வளரும் மனம்
அன்னம் -சாரப் பொருளை விவேகிக்கும்
மார்கழி நீராட்ட நோன்பு -பகவத் ப்ரீதி யர்த்தம் -மோக்ஷ பிராப்தி பர்யந்தமான ஸ்ரேயஸை அருளும் ப்ரஹ்ம வித்யை –
இதில் பகவத் அர்ப்பணம் ஆனால் தான் வேத வித்யை ஆகும் என்பதால் அரங்கற்கு இன்னிசையால் கொடுத்தாள்

பூ மாலை -நற் சித்தம் -ஸூ மனஸ்ஸூ
சூடிக் கொடுத்த பூ மாலையில் -பூமிக்கு உரிய மணங்கள் -க்ராண இந்திரிய இன்ப ஹேது
பாடிக் கொடுத்த பா மாலையில் வேத மணம் கமழும் -ஞான அனுஷ்டான அபி விருத்திக்கும் -மோக்ஷ பிராப்தி பர்யந்தமான ஆத்ம ஸூ கத்துக்கும் ஹேது

———–

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே! * தொல்பாவை
பாடி அருள வல்ல பல்வளையாய்! * – நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் *
நாம் கடவா வண்ணமே நல்கு

சுடர் கொடியே –
திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன்
அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா
வெளிச்சம் இல்லா விடில் சூர்யன் வெறும் தோசைக் கல்லு தானே

தொல் பாவை
பனி நீர் தோய்தலும் பாவை யாடலும் -பரிபாடல்

————–

பாவைப் பிரபந்தம் ஒரு முத்தமிழ் நூல் வகை. எப்படியெனில் வெண்பாவுக்குரிய வெண்தளை கொண்டு எட்டடித் தரவுக் கொச்சகக் கலிப்பாவாகப் பாடப்படுகிறது.

—————-

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.–1-இப் பாசுரம் பர அவதார அனுபவம்

ஹார்த்த விக்ரஹத்தையே பாவ -என்று விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 7 திருநாமம்
மதி நிறைந்த அளவைக்காட்ட -ஆல் -கார்த்திகை நக்ஷத்ரம்
சுக்ல பக்ஷ த்ரயோதசை -13 கலைகள் நிறைந்த சந்திரன் ஸூசிதம்
இரவில் 26 நாழிகை வெளிச்சம் -மீதி உள்ள 4 நாழிகை அடுத்த நாள் உஷஸ் காலம் என்பதால் வெளிச்சம் –
திரயோதசி சதுர்த்தி பவ்ர்ணமி -மூன்று நாள்களுக்குமாக 30 பாசுரங்கள் –
சீர் -வைதிக ஸ்ரீ ஆத்ம உத்கர்ஷம் அடைய ஸ்ரீ -பகவத் ப்ரீதி யர்த்தமாக இந்த நோன்பு

நேரே நடக்கும் செங்கோல் வளைந்து கொடுங்கோல்
யசோதா பிராட்டிக்கு உபாஸனா தெய்வம் நரஸிம்ஹன் -ஆகவே இவன் இளம் சிங்கம்
ஏல் ஓர் எம்பாவாய் -உணர்ந்து ஏற்றுக் கொள்வாய் -என்று கார்த்த விக்ரஹத்துக்கு அர்ப்பணம்
நீராடுதல் -பகவத் ஆஞ்ஞா ரூபம் படி -வகுத்து வைத்த நீர்மை யாகிற அனுஷ்டானம் –
ஸூத்தாந்த ஸித்தாந்தி -அந்தப்புர-மறந்தும் புறம் தொழா தவர்கள் –

ஆய்ப்பாடியை” இந்த இருள் தருமாஞாலமாயும், எம்பெருமானின் கல்யாண குணங்களை அறிந்தும், அறியாத சிறுவர்கள் போன்றவர்களாய் “சீர்மல்கும் செல்வச்சிறுமீர்காள்” எனவும் உருவகப்படுத்தியுள்ளார். இவர்கள் ஆத்ம குணங்களும் நிறைந்தவர்களாகையால், இந்த நன்னாளில் சிறந்த “ப்ரபத்தி உபாயம்” அனுஷ்டிக்க அழைப்பதுவே “நீராடப் போதுவீர்…. நேரிழையீர்” என்பதாகும்.
கூர்மையான வேல் போன்ற ஸங்கல்பம் உடையவனும், நம் பாபங்களை அழிக்க வல்லவனும், நித்ய யுவாவுமாயுள்ள இவனே க்ருஷ்ணாவதாரம் செய்துள்ள ஸர்வேஶ்வரன். ப்ரபத்தி செய்த நமக்கே மோக்ஷானந்தத்தைத் தருவான் என்பதை
“ஏரார்ந்த….பறை தருவான்” என்றவரிகளால் சொல்கிறாள்.
கண்ணபிரான் கர்ம, ஞான, பக்தியோகம் செய்ய முடியாது கலங்கிய அர்ச்சுனனுக்குக் கடைசியாகக் காட்டிய ஶரணாகதி மார்க்கத்தை,
ஆண்டாள் இந்த முதல் பாசுரத்தாலே காட்டியுள்ளாள்.

———–

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.–2-இப்பாசுரம் வ்யூஹ அவதார அனுபவம்

வையம் -மிக உயர்ந்த வண்டி -சொல் பொருள் -அனைத்து ஆத்மாக்களுக்கு உரிய ப்ரஹ்ம வித்யை இதுவே
பூணி இன்றி பொறியின் இயங்கும் மானமே வையம் -பெரும் காதை
மாடு குதிரை பூட்டாமல் இந்த்ரியங்களால் இயங்கும் உயர்ந்த வண்டி
பையத்துயின்ற -காளிதாசன் ஸ்வ பதோ ஜாக ரூகஸ்ய -உன்னைப் போல் விழித்துக் கொண்டே தூங்குபவன் இல்லையே –
ஐயம் -விதி வழி கொடுத்தல்
பிச்சை -இஷ்டப்படி கொடுத்தல்
நாட் காலே -பொழுது புலரும் வேளை -நாள் கால் வைத்திடும் நேரம்

வராஹ அவதாரத்தில் எம்பெருமான் சொல்ல வந்த அவதாரமே ஆண்டாள்.
க்ருஷ்ணானுபவத்துக்கு தேஹாலங்காரம் வேண்டாம். ஆத்மாலங்காரம்தான் முக்யம். பொறுமை, புலனடக்கம், காமமின்மை ஆகியன ஆத்மாவின் ஆபரணங்கள். உய்யும் வழி ஶரணாகதி அதனை அடைய ஆறு அங்கங்கள் என்பதனை “உய்யுமாறு” என்கிற பதம் காட்டுகிறது.
தர்மத்தையே நினை, பாடு, பேசு, அனுமதி கேள், பார் என்கிறது இப்பாசுரம்.
இதனை அனுஷ்டிப்பவர்களுக்கு ஆசார்யனுக்ரஹமும், எம்பெருமானின் கடாக்ஷமும் கிடைத்து மோக்ஷம் கிடைக்கும்.

“நாமும் நம்பாவைக்கு….பாடி”—
நமக்காக ஏற்பட்ட ஶரணாகதி என்ற நோன்பைச் செய்யவும், அதற்கு வேண்டிய சடங்குகளைச் செவியால் கேட்டும், அனுஷ்டித்தும் பயன் பெறுவீர்களாக. த்வயமந்த்ரத்தின்
த்யான ஶ்லோகத்தின்படி அவனை வணங்கி அம்மந்த்ரத்தைச் சொல்லி ப்ரபத்தி செய்தல்வேண்டும்.

“நெய் உண்ணோம்……தீக்குறளை ஓதோம்”—-காம விகாரங்களைத் தரும் பொருட்களை உண்ணாமலும், காம்ய கர்மாக்களை விலக்கியும் சரீர அலங்காரங்களைத் தவிர்த்தும் நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்தும், பர ஹிம்சை, நிஷித்த கர்மா பாகவத அபசாரம் இவைகளைச் செய்யாமல், வாக்காலே தவிர்க்க
வேண்டியவைகளைத் தவிர்த்து செயல் படவேண்டும்.
“ஐயமும்….காட்டி..” ஆசார்ய உபகாரம், பாகவத கைங்கர்யம்
முடிந்த வரை செய்து உய்யும் வகை நினைந்து சந்தோஷிக்க கற்க வேண்டும்.

———-

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.-3-இப்பாசுரம் விபவ – அவதார அனுபவம்

முதல் வேற்றுமைத் தொகையாகக் கொண்டு -உலகளந்த-உலகு அளவு கோலாக அவனை அளந்து –தனது சிறுமையையும் அவனது பெருமையையும் உணர்ந்ததே
பரத்வத்துக்கும் வ்யூஹத்துக்கும் மேல் உயர்ந்த விபவம் அன்றோ

அர்ஜுந உவாச–
ஸ்தாநே ஹ்ருஷீகேஷ தவ ப்ரகீர்த்யா–ஜகத் ப்ரஹ்ருஷ்யத் யநுரஜ்யதே ச.–
ரக்ஷாம்ஸி பீதாநி திஸோ த்ரவந்தி–ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்த ஸங்கா—৷৷11.36৷৷

அர்ஜுனன் கூறுகிறான் -இந்திரியங்களை நியமிக்கும் தலைவனே -உன்னுடைய புகழைக் கண்டு இப்போரைக் காண
வந்து இருக்கும் தேவர் கந்தர்வர் முதலிய உலகு அனைத்தும் உன்னை மிகவும் உகக்கின்றது -ஈடுபடவும் செய்கின்றது –
அரக்கர்கள் பயந்தவர்களாய் எல்லாத் திக்குகளிலும் ஓடுகிறார்கள் –
சித்தர் கூட்டங்கள் அனைவரும் வணங்கவும் செய்கின்றார்கள் -இவை அனைத்தும் பொருத்தமே

ஓங்கு பெரும் செந்நெல் -அவனது அருளால் இவர்கள் நெஞ்சில் பக்தி பெருகி
ஊடு கயல் உகள -அவன் ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் இவர்கள் மனத்தில் ஓடி ஒளி வீச
குவளைப் போது -மலராத மனஸ்ஸூ
பொறி வந்து -சங்கு சக்கரங்கள் ஒற்றிக் கொண்ட ஆச்சார்யர்கள்
கண் படுப்ப -சிஷ்யர்கள் மனஸ் மலரும் அவகாஸம் பார்த்து இருக்கும் ஆச்சார்யர்கள் –
இவர்களையே வள்ளல் பசுக்கள் என்கிறாள்
ஞானம் அனுஷ்டானம் நிறைந்து -கிருபை சுரந்து -அர்த்த ஞானம் அருளி -இவர்களுக்காக தானே பிரபத்தி பண்ணி
அபிமானத்தால் பாதார விந்தங்களிலே சேர்த்துக் கொள்ளுமவர்கள்
மோக்ஷ பர்யந்தமாக அருளும் செல்வமே நீங்காத செல்வம்
சிஷ்யன் கார்யம் இவர்கள் அருளிச் செய்வதை வாங்கும் பாத்திரமாக இருப்பதே –

பரக்கும் புகழ் வரும் பைம் பொருள் வாய்த்திடும் பத்தர்களாய்
இரக்கின்றவர்க்கு இவை ஈந்தால் அறம் உளது என்று இயம்பார்
கரக்கும் கருத்துடைத் தேசிகர் கன்று என நம்மை எண்ணிச்
சுரக்கும் சுரவிகள் போல் சொரிகின்றனர் சொல்லமுதே –ஸ்ரீ அமிருதாசுவாதினி -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-14-

இப் பாடலில் பக்தன் எப்படி இருத்தல் வேண்டும் என்னும் வரையறை விதிக்கப்படுகிறது. கழனியில் தலை சாய்ந்து நிற்கும் கதிர்போலப் பக்தன் அடக்கத்துடன் தலைக்கனமின்றி இருக்க வேண்டும். அக் கழனியின் தண்ணீரில் வாழும் கயல் மீன்களைப் போல் (அறியாமை, தீவிரம் நீங்கிய) விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். கரு நெய்தல் மலர் போல இல்லறத்திலிருப்பினும் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்க வேண்டும்.

அஷ்டாக்ஷரமாகிய திருநாமம் பாடினால் அவனுகந்து நம்மை ஏற்பான். கட்டிப் பொன் போல எம்பெருமான் பணிப் பொன் போன்றது அவன் நாமம். நாமத்தை தரிக்கவும் பாடவும் முடியும் அனன்ய சேஷத்வம், அனன்ய உபாயத்வம், அனன்ய போக்யத்வம் என்ற மும் மழையால் ஆத்மா பலம் பெறுகிறது செந் நெல் உயர்வது போல். கயல்கள உழல்வது எம்பெருமான் பெறும் கைங்கர்யம்.
வாங்கக் குடம் நிறைக்கும் பெரும் பசுக்கள் போல ஆசார்யர்கள் வள்ளண்மையால் நமக்கு அளிக்கும் ஞானம் சொல்லப்படுகிறது. நீங்காத செல்வம் என்பது எம்பெருமானுடனே சேர்ந்து நாம் அனுபவிக்கும் அந்த மிலா பேரின்பம்.
“ஓங்கி உலகளந்த……தீங்கின்றி”-
த்ரிவிக்ரமனாக வளர்ந்து உலகங்களை அளந்த க்ருஷ்ணனுடைய “யத் ப்ரபத்திம் விநா ஸர்வைர்யஸ்ய மாயா துரத்யயா
தனஞ்ஜய ரதோத்தம்ஸம் தத் ப்ரபத்யே பரம் மஹ:”
—என்ற தனியனின் அர்த்தத்தை (அவன் விரித்த வலையில் சிக்கி நாம் அல்லல்படுகிறோம். அம் மாயத் திரை விலக, அர்ஜூனன் தேர் தட்டில் ப்ரகாசமாக ஒளிரும் பரம் பொருளாகிய க்ருஷ்ணனை சரண் புகுகிறேன்) நினைத்து ஶரணாகதி ரஹஸ்யத்தைப் பலரும் அறியும் வகையில் உபதேசித்து அனுஷ்டித்தால் அனன்ய சேஷத்வம் முதலான தீங்கின்றி இருப்பர்.

—————-

ஆழி மழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.—4-அந்தர்யாமி -பரமான பாசுரம் –

முதல் மூன்றும் பர வ்யூஹ விபவ -வாழ்த்துப் பாசுரங்கள்
அடுத்து வான் சிறப்பு பாசுரம் -மேகமே நாராயணன் -அந்தர்யாமி -பரமான பாசுரம் –
வலம்புரி போல் நின்று அதிர்ந்து-என்பதையே விவரித்து
மேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியம் -26-
ஊழி முதல்வன் –ஊழியான் முதல்வன் -ஸம்ஹார கர்த்தா -ஸ்ருஷ்ட்டி கர்த்தா இரண்டும் இவனே

மழையே இறைக் கருணையாவது பாடலின் சிறப்பு. மேகம் கடல் நீரை உண்டு எடுத்துக் கொள்வதைப் போல இறைவன் பக்தியை எடுத்துக்
கொள்கிறான். எங்கும் பரந்து செயல்படும் சக்தியாகிறான். மின்னலின் ஒளிர்வும் இடியின் முழக்கமும் போலத்
தப்பாது தெரிய வரும் வடிவம் கொள்கிறான். தனது கருணையைப் பக்தனுக்கு மட்டுமன்றி உலகுக்கே
பொழிகிறான். இப்படியாக இறைக் கருணையின் அளப்பற்ற பெருமையை பக்தன் தவறாது உணர்கிறான்.

மேகங்கள் உப்பு நீரை மதுரமாக்கித்
தருவது போல் ஆசார்யன் வேதார்த்ங்களை நமக்களித்து ஞானம் பெறச் செய்கிறார்.
ப்ரத்யுபகாரம் எதிர் பார்க்காத மழை போல் ஆசார்யனும் எந்த லாபமும் எதிர்பார்ப்பதில்லை.
மேகங்கள் போல ஆசார்யனும் சஞ்சாரம் செய்து ஞான மழை பொழிகின்றார்.
மழை மேகம் மின்னுவது போல ஆசார்யன் ஞானத்தால் ப்ரகாசிக்கிறார். சங்க முழக்கம் போல தம் கருத்தை ஸ்தாபிக்க ஆசார்யனும் சிம்ஹ கர்ஜனை செய்கிறார்.
மேகம் வர்ஷிக்கும் மழை போல் ஆசார்யனும் வாதங்களை வர்ஷித்து எம்பெருமானை ஸ்தாபிக்கிறார்.

————

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.–5-திருவாராதனம் செய்யும் முறை விளக்கம் –

தூய பெருநீர் யமுனைத் துறைவனை–உபாயாந்தரங்கள் -பக்தி -பிரபத்தி -இவற்றிலும் வ்யாவ்ருத்தமான ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் –
அணி விளக்கு -ஸம்ஸார ஆரணவத்துக்கு கலங்கரை விளக்கு –
அக்கரை சேர போதம் -நாவாய் -நயாமி பரமம் கதிம் –
மனம் மொழி செயல்கள் -பெரிய திருமொழி -1-6-7 தொடக்கி மூன்று பாசுரங்களால்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது-திருவாராதனம் செய்யும் முறை விளக்கம் –

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொன்னெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவர் தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—-1-6-7-

ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா
பாவினாரின் சொல் பன் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-8-

ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பை பிரியும் போது உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய்
நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-9-

எம்பெருமானின் எல்லா அவதாரங்களையும் ஆண்டாள் குறிப்பிடுகிறாள் இப்பாசுரத்தில்.
  • மாயன் —பரரூபம்
  • மதுரை மைந்தன் —விபவம் (திருப்பாற்கடல்)
  • துறைவனை —வ்யூகம்
  • விளக்கு —அந்தர்யாமி 
  • தாமோதரன் —அர்ச்சை
தூய பெருநீர் என்பது விரஜையைக் குறிக்கும்.
தேவகி, யசோதை என் இரு தாய்மார்கள் அவனுக்கு.
அது போல காயத்ரி, அஷ்டாக்ஷரம் என்ற இரு மந்த்ரங்களும் நமக்குத் தாய்க்கு ஒப்பானவை. இதன் பொருளை பகவான் நரநாரண அவதாரம் செய்து விளக்குகிறான். பக்தி என்ற கயிற்றுக்கு கட்டுப்படுபவன் எம்பெருமான். அவனைச் சரணாகதி செய்தோமாகில் சஞ்சித பாபங்களும், புத்தி பூர்வமாய் பின்னால் செய்யும் பாபங்களும் பொசுங்கி விடும்.

———-

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.–6-

ப்ரஹ்ம முஹுர்த்தே உத்தாய -ஸூர்ய உதயத்துக்கு முந்திய 2 ஹோரை 5 நாழிகைப் பொழுது தான் ப்ரஹ்ம முஹூர்த்தம்

மெய், மனம், ஆன்மா என்ற மூன்றையும் எழுப்பும் விதத்தில் இந்தப் பாட்டு அமைந்திருக்கிறது என்று கொள்ளலாம்.

ஹம்ஸாவதாரம் எடுத்த பகவானும், அவனருள் பெற்ற ஆசார்யர்களும் ஸத்வ குணம் பெற்ற சங்கைப் போல ப்ரணவத்தின் அர்த்த விசேஷங்களை நமக்கு உபதேசிப்பது கேட்க வில்லையா என்கிறாள்.
அவித்யை என்ற பூதனையை அழித்து, சரீரமாகிய வண்டியை
கெட்ட வழிகளில் ஈடுபடாமல் நல்வழிப் படுத்துவோர் ஆசார்யர்கள். இவர்கள் ஸம்ஸார போகத்தில் ஆசைப்படாது ப்ரபத்தி மார்க்கத்தில் சேதனர்களை சேர்த்து ஹரி என்ற பேரொலி எழுப்பி அவனுள்ளம் குளிரச் செய்து நம்மை அவன் கைங்கர்யத்தில் ஈடுபடுத்தி உபகாரம் செய்கிறார்கள்.

——

கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.-7-

கிளியும் பூவையும் பேசும் பறவைகள்
பூவை -நாகணை வாய்ப்புள் –நார்த்தம் பிள்ளை -கறுப்பும் மஞ்சளு மான இறக்கைகள் -குருவிகளைக் காட்டும் பெரியவை
கீசு -க ஈசு -ஈஸாவாஸ்ய உபநிஷத் ஸித்தமானவன் -எவன் என்று பக்ஷிகள் கேட்க ஹரி என்று ரிஷிகள் பதில் –

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையாய் வைக்கப் படும் -அலகை -பேய்
காசு -பொன்னாலான அணிகலன்
பிறப்பு -சிப்பிகளில் தானாக விளையும் முத்து -கடலில் விளையும் பவளம் பொருள்கள் –
மலை சுரங்கம் இவற்றில் உள்ள ரத்னம் வைரம் கோமோதகம் போல்வன

ஆனைச் சாத்தன் என்ற பறவை கரிக்குருவி என்றும் செம்போத்து என்றும் பலவாகக் கூறுவார்கள். கரிக்குருவி கதிரவன் எழும் காலையிலும் கதிரவன் மறையும் மாலையிலும் ஜிவ்வென்று மேலெழும்பிச் செங்குத்தாகக் கீழே பாய்ந்து வானத்தின் குறுக்கே பறந்து மீண்டும் மெலெழும்பிப்
பறக்கும் இயல்புடையது. மேலேறும் போது சீச்சென்ற குரல் உயர்ந்தொலித்துக் கீழே விழும் போது மெல்ல மறைந்து பறக்கும் போது இல்லாமல் போய் மீண்டும் ஒலித்துக் குறைந்து தேயும். எனவே இந்தப் பாடல் குறிப்பது கரிக் குருவியைத் தான் என்பது தெளிவு. எனினும் கரிக் குருவி காலையில் பறப்பதில்லை. மாலையில் மட்டுமே பறக்கும் என்றும் சொல்வார்கள். அதுவன்றியும் கரிக் குருவிக்குத் தமிழில் கஞ்சனம் என்றே பெயர் என்பதையும் சுட்டிக் காட்டுவார்கள். செம்போத்து என்று சொல்வாரும் உண்டு. ஆனால் செம்போத்து கீசு கீசென்று ஒலி
எழுப்புவதில்லை. பொதுவாகக் காலை நேரத்துப் பறவைகளின் ஒருமித்த ஒலிகளின் சங்கமம் என்று கொள்வது
பொருத்தமாக இருக்கும். ஆயினும் ஆனைச் சாத்தன் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதால் அப்படிக் கொள்வதும்
சரியெனத் தெரியவில்லை.

வ்ரஜபாஷையில் கன்ஹா என்பதை நாம் கண்ணன் என்கிறோம். கிச்சா என்பதை கீசு கீசு என்று பறவைகள் சப்திப்பதாய்க் கொள்ளப்படுகிறது.
“கூட்டிலிருந்து கிளி எப்போதும் கோவிந்தா” “காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி” என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பறவைகள் எம்பெருமான் பேர் சொல்லும் அழகைக் காட்டுகிறாள்.
கேசவன், நாராயணன் எனப்பாடி பகவதானுபவம் செய்ய எழுந்து வரும்படி தலைவியை அழைக்கிறார்கள்.
ஆனைச்சாத்தம் கலந்து பேசுதல் என்பதன் மூலம் காலக்ஷேப கோஷ்டியில் சேர அழைக்கிறாள். இதிகாஸ புராணங்கள் இந்த உரையாடல்களை கீழ்க் கண்டபடி இப் பாசுரத்தில் ஸ்லாகிக்கின்றன.
க்ருஷ்ணார்ஜுன ஸம்வாதம், ஸுகர் பரீக்ஷித் ஸம்வாதம், உத்தவர் விதுரர் ஸம்வாதம், மைத்ரேயர் விதுரர் ஸம்வாதம் ஆகியன ப்ரஸித்தமானவை.
காசு என்பது த்வயமந்த்ரமாகவும்
பிறப்பு என்பது திருமந்த்ரமாயும் கொள்ளப்படுகின்றன. இரண்டும் ஆசார்யர்கள் நமக்களிக்கும் ஆபரணங்கள்.
அவர்கள் ஞானப் பிறப்பையளித்து பகவானுடன் நம்மைச் சேர்த்து வைக்கிறார்கள் இந்த காசும் பிறப்பும் கடைந்தெடுத்து அளிப்பனவே இதிகாச புராணங்களும், ப்ரபந்தங்களும். ஆக இந்த பகவதனுபவம் பெற நாயகியை தோழிகள் எழுப்புகின்றனர்.
ஞானம், அனுஷ்டானம் என்ற இரு இறக்கைகளைக் கொண்டு ஆசார்யர்கள் சேதனனை உய்விக்கச் செய்யும் மந்த்ரோபதேசங்கள், பதவாக்யார்த்தங்கள் திருமாளிகை தோறும் ஒலிப்பதே “கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தம் கலந்து பேசின பேச்சு” என்பது.
உபநிஷத்துடன் பகவத் விஷயமும் சேர்ந்து கமழ்வது “வாஸ நறுங்குழல் ஆய்ச்சியர் கூந்தல் மணம் போல”.
புத்தி என்ற மத்தினால் த்வயமாகிய தயிரைக் கடைந்து நாராயணனாகிய வெண்ணெயை எடுத்து மோக்ஷ வழி காட்டுகின்றார்
ஆசார்யன். இத்தகைய ஸப்தங்களைக் கேட்டும் இன்னும் உறங்குகிறாயே! க்ருஷ்ணானுபவத்தால் தேஜஸ்வியாகிய நீ எங்களது அஞானத்தையும் போக்க எழுந்துவா. நாராயணன், மூர்த்தி, கேசவனைப் பாடலாம் என்கிறார்கள் தோழிகள்.

———

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.–8-

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் போல் புல் விட்ட தளிரை -விடு என்னும் பகுதி அடியாக வீடு -சிறு வீடு -என்கிறாள்

ஸம்ஸாரம் என்ற இருட்டிலிருந்து ஸத்வ குணம் மேலோங்கிய ஶரணாகதனுக்கு விடியல் கிடைக்கிறதை “கீழ்வானம் வெள்ளென்று” என்பது குறிக்கிறது.
எருமையின் மெத்தனம் போல மெதுவாக மோக்ஷம் வேண்டும் பக்தி யோகத்தை “எருமை சிறுவீடு” எனக் காட்டுகிறார்.
பக்தி யோகம் செய்யப் போகிறவர்களைத் தடுத்து
ஆசார்யனிடம் ஶரணாகதி செய்ய அனுப்புகிறாள் – “போகாமல் காத்து உன்னைக் கூவுவான்” என்று.
மா வாய் பிளந்தானை என்பதில் அஹங்காரத்தை அழிக்கிறான் என்கிறார்.
காமம் க்ரோதம் என்ற இரு மல்லர்களை அழித்து கண்ணனிடம் ஆசை ஏற்படச் செய்கிறார் ஆசார்யன்.
இத்தகைய ப்ரம்ஹ தத்வத்தை நமக்களிக்கும் ஆசார்யன் தேவாதி தேவன். அவர் தனியன்களை ஸ்மரித்து அவரை ஸேவிப்போம் வாருங்கள் என்கிறாள் ஆண்டாள்.

————–

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.–9-

ஊமையோ -மௌன விரதம் -செவிடோ -ப்ரத்யாஹாரம் -ஸ்ரோத்ரிய இந்திரிய அடக்கம் —
அனந்தலோ –
வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே யானாலும்,
புயல் மே ம் போல் திருமேனி அம்மான் புனைபூங் கழலடிக் கீழ்,
சயமே யடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி, இம்மையே
பயனே யின்பம் யான் பெற்ற துறுமோ பாவி யேனுக்கே?—போல்

ஜகத் ஶ்ருஷ்டிகர்த்தாவாகிய எம்பெருமான் மிக்க ஸௌலப்யத்துடன் இந்த ஆய்ப்பாடியில் வந்து பிறந்துள்ளான்.

அவனே “மாமாயன்” அவனுக்கு சுப்ரபாதம் பாட வாருங்கள். “லோகபந்துர், லோகநாதோ, மாதவோ, பக்த வத்ஸல:” என்ற ஸஹஸ்ர நாம வரிகளை ஆண்டாள் பிடிக்கிறாள்.

கண் படைத்த பயன் கண்ணனைத் காண, நா படைத்த பயன் அவன் நாமங்களைச் சொல்ல, காது படைத்த பயன் அவன் புகழ் கேட்க என்பதனை உணர்த்துகிறாள்.
“சிறையிருந்து ஏற்றம் பெற்றாள் ஸீதாபிராட்டி” என்றால் “சிறையில் பிறந்து ஏற்றம் பெற்றவன் இந்த மா மாயன்”.
ஶரணாகதி செய்தவன் ஆத்மாவைக் காக்கும் பொறுப்பை எம்பெருமானிடம் விட்டு விடுவதால் பயமும் , பரமும் தொலைந்தவனாய் மார்பில் கை வைத்து தூங்குகிறான்.
ஆசார்யன் தந்தையைப் போல் தன் சிஷ்யனுக்கு எம்பெருமான் பற்றிய ஞானத்தை ப்ரகாசிக்கச் செய்கிறான். அந்த ஞானம் பெற்றதால் சிஷ்யன் துயிலணை மேல் கண்வளர அவனை எழுப்புகிறார்.
ஒரு ஜீவன் தன் தனயனுக்கு பிறவி தந்து, ப்ரும்ஹோபதேசம் செய்து, அன்னமளித்து மூன்று முறை தந்தையாகிறார்.
ஆசார்யன் என்பவர் ஞானமளித்து, பயத்தை நீக்கி இரண்டு முறை தந்தையாகிறார்.
ஆக 2 தந்தைகள் ஒருவனுக்கு. உபதேசம் பெற்று
த்வயமர்த்தானுஸந்தானம் செய்யும் த்யான நிலையே “ஊமையோ அன்றிப் செவிடோ” என்பது.

———

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற
அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.–10-

ஆழ்வார்களின் இலக்கியத்தில் மிக அதிகமாகப் பேசப்படுவது கண்ணன் அவதாரம்தான் .–முதல் மூன்று ஆழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் பாடல்களிலேயே பேசப்படும் அவதாரங்களின் எண்ணிக்கை பின் வருமாறு அமைந்துள்ளது.

கண்ணன் = 60, வாமனன் = 51, நரசிம்மன் = 19, ராமன் = 15, வராகம் = 12, கூர்மம் = 1.

நாற்றத்துழாய் நாச்சியாருக்குச் சொல்லும் கதைகள் பல.
“நீலார்  தண்ணந்துழாய் கொண்டு என்நெறிமென் குழல் மேல் சூட்டீரே” என்கிறாள். கண்ணன் வரவை எதிர்நோக்கி பதட்டத்துடனிருந்த ருக்மிணி பிராட்டியின் மனதுக்கு ஶாந்தி அளித்தது க்ருஷ்ணன் சூடி வந்த துளசி கந்தமே.
பெரிய மாலையானால் –  “தோளிணைமேலும்” 
சிறிய மாலையானால் – “சுடர்முடிமேலும்”
உதிரியாயிருப்பின் –“தாளிணைமேலும்” புணர்ந்த தண்ணந்துழாய் அம்மான் என்கிறார் நம்மாழ்வார்.

“மாற்றமும் தாராரோ” என்பதில் மதுரகவிக்கு அருளியது சொல்லப்படுகிறது.
நான்காம் வர்ணத்தில் பிறந்த நம்மாழ்வார் முதல் வர்ணத்தில் பிறந்த மதுர கவிக்கு ஆசார்யனாகிறார்.
“அத்தை தின்று அங்கே கிடக்கும்” – என்று முன்முதலாக மதுர கவிக்குத் திருவாய் மலர்ந்தருளினார்.

—–

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம்
பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.–11-

இந்தப் பாடல் முதலாழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரைக் குறிப்பதாகச்
சம்பிரதாய விளக்கங்கள் காண்கின்றன. முதலாழ்வார்கள் மூவரும் ஓரிடத்தில் நிலையாகத் தங்காதவர்களாக
எங்கும் திரிந்து யோகியராக இருந்தவர்கள். தமது பாடல்கள் வழியாக அறியாமையையும் இறைத் தொடர்பு உணர்வு இல்லாமையையும் நீக்க எங்கும் திரிந்தவர்கள் இந்த ஆழ்வார்கள். அதனாலேயே எங்கும் தேடிப் போய் ஆணவத்தை அடக்கியதாகக் கூறுவது இவர்களுக்கு மிகவும்
பொருத்தமாக அமைகிறது. இம் மூவரும் பெண் வழியாகப் பிறந்தவர்களாக அன்றிப் பொய்கையிலிருந்தும்
பூவிலிருந்தும் கிணற்றிலிருந்தும் தோன்றி வந்தவர்கள் என்பதால் எவ்விதக் குற்றமும் இல்லாதவர்கள். தவிரவும்
எந்த வித உலகப் பந்தத்தோடும் தம்மைப் பிணைத்துக் கொள்ளாதவர்கள். துறப்பதென்பது கூட இவர்களைப்
பொறுத்த அளவில் எந்தப் பொருளுமில்லாதது. ஏனென்றால் ஏதாவது இருந்தால்தானே அதைத் துறக்க முடியும்?
எனவே குற்றமொன்றில்லாதவர்கள் என்ற விளக்கம் முதலாழ்வார்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.

இப்பாசுரம் நம்மாழ்வாரைக் குறிப்பதாயுள்ளது. நாஸ்திக வாதிகளை வாதமிட்டு ஓடச் செய்யும் பராங்குசன். “செற்றார் திறலழிய சென்று செறுச் செய்யும்” என்பதால் பிறந்தது முதல் அழாது, பேசாது புளியம் பொந்தில் இருந்ததால் “குற்றமொன்றில்லாதவர்”.
அழகில் சிறந்த இந்த ஆழ்வார் மீது எம்பெருமானே மையல் கொண்டாராம். ஆழ்வார் மேல் கொண்ட ஈடுபாடு, அவரைத் திருமேனியுடனேயே வைகுந்தம் அழைத்துச் செல்லத் துணிந்ததிலிருந்து வெளிப்படுகிறது.
(திருவாய்மொழி 7-2-10)
“முகில் வண்ணன் அடி அடைய”,
முகில் வண்ணன் அடிமேல் சொன்ன”
“முகில் வண்ண வானத்து இமையவர்” என்ற வரிகளை ஆண்டாள் இதில் பொருத்திக் காட்டுகிறாள். நாயகி ரூபத்தில் கொண்டையுடன் கூடிய ஆழ்வாரின் திவ்ய மங்கள விக்ரஹமே “செல்வ பெண்டாட்டி” என்பதில் தெரிகிறது.
க்ருஷ்ணன் தன் கரங்களாலேயே கறவைக் கணங்களைத் தான் ஒருவனாக அடங்க கறக்கிறான்.
ஈவிலாத தீவினைகளால் பலகோடி ஜீவராசிகளைப் பிறப்பித்து நிர்வகிக்கிறான் இந்த பசுக் கணங்கள் போல. பகைவன் இருப்பிடம் சென்று வென்று தன் திறலைக் காட்டுபவன் எம்பெருமான். தன் மேல் கர்மாதீனமான பாபங்கள் ஒட்டாதவாறு பல அவதாரங்களை செய்வதால் அவன் தோஷமற்றவன்.

——–

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்
அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.–12-

தானாகப் பெருகிப் பாயும் பால் இறைவனின் கருணை என்பார்கள். அருச்சுனன் கேட்காத போதும் கீதையில் கண்ணன் தானாக முன்வந்து உபதேசம் அளித்ததை நினைவில் கொள்ளவேண்டும்.

“திருமாலிருஞ்சோலை என்றேன் திருமால் என் நெஞ்சு நிறையப் புகுந்தான்”–என்பது போல தன்னையே தரும் கற்பகம் எம்பெருமான் என்பது “கனைத்து” என்ற சொல் உணர்த்துகிறது.
நற் செல்வன் என்பதால் பாகவத கைங்கர்யம் கொள்ளப்படுகிறது.
பரதன், ஶத்ருக்னன், லக்ஷ்மணன்,‌ விபீஷணன் ஆகியோர் கைங்கர்ய செல்வர்களாகிறார்கள். ராவண பாணம் ஹனுமானைத் தாக்கியதால் சினம் கொண்டான் ராமன். ஸீதா பிராட்டியைப் பிரிந்து வருந்தி அவள் மனத்துக்கினியானாகினான்.
ஆசார்யன் தனியன்களை தான் ஸேவித்து சிஷ்யர்களையும் ஸேவிக்கச் செய்வது “கனைத்து” என்ற பதம் உணர்த்துகிறது.
“பனித்தலை” என்பதன் மூலம் வேதங்களின் சிரோ பூஷணமாகிய உபநிஷத்துக்களையும்,
“நனைத்தில்லம் சேறாக்கும்” என்பதால் பால் பெருக்கெடுத்தோடுமாப்போல அதனை பகவத் விஷயத்துடன் கலந்து சிஷ்யர்களுக்கு அளிப்பது கூறப்படுகிறது.
“நற் செல்வன்” என்பவன் க்ருஷணானுபவமும், அவனது தங்கை மனத்துகினியானாகிய ராமானுபவம் செய்பவர்கள்.
கன்று நான்கு காம்பு மூலம் சுரப்பது போல் ஆசார்யன் சிஷ்யர்களுக்கு நான்கு விதமாக விஷயங்களை சாதிக்கின்றனர்‌.

  1. கருணையுடன் தானாகவே உகந்து உபதேசித்தல்
  2. தான் பெற்ற ப்ரும்ஹானுபவத்தை பகிர்தல்
  3. சிஷ்யன் ப்ரார்த்திப்பதைச்சொல்வது.
  4. பரமத நிரஸனம் செய்து நம் ஸம்ப்ரதாயத்தின் மேன்மை சொல்வது.
நற்செல்வன் தங்காய் என்பதற்கு “ஞானச்செல்வனாகிய ஆசார்யன்
தன் சிஷ்யனுககு பதம்படா நெஞ்சைச் சேறாக்க வல்ல சில
ஈரச் சொற்களைச் சில தார்மிகர்கள் வைத்துப் போந்தார்களே”
 என்று ஈடு வ்யாக்யானம் காட்டுகிறது.

——–

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.–13-

உயிரும் உடலும் உடலாக ஓங்கித்
தயிர் வெண்ணெய் தாரணியோடு உண்டான் -பயிரில்
களை போல் அசுரரைக் காய்ந்தான் தன் கையில்
வளை போல் எம்மாசிரியர் வாக்கு –ஸ்ரீ அமிருத ரஞ்சனி –ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர்-5–

போதரிக் கண்ணினாய் என்கிறார்கள். செவ்வரி ஓடிய அழகிய கண்கள். உணர்வின் முகிழ்வாய்த் தெரியும் கண்கள்.

அரி என்றால் மான். துள்ளித் திரியும் மானின் கண்களைப் போன்ற கண்களைப் பெற்றவள் என்றும் பொருள் காணலாம்.

போது என்றால் மலர்; அரி என்றால் மான்.
பாவையின் கண்கள் குவளை மலர்களைப் போலும் மானின் விழிகளைப் போலும் அழகாக இருக்கின்றன என்றும் பொருள் கொள்ளலாம்.

போது என்றால் மலர்: அரி என்றால் வண்டு என்றும் பொருள்.
மலரில் கிடக்கும் வண்டைப் போலக் கண்மணி சுழல்கிறதாம்.

போது என்றால் மலர்; அரி என்றால் போட்டி என்றும் பொருள்.
அழகில் மலருக்குப் போட்டியாகும் கண்கள் என்றும் சொல்லாம்.

புள்ளின்வாய் கீண்டானை என்பது கொக்கு போல் கபடமான (சிறிய மீன்களை விட்டு பெரிய மீனைப் பிடிக்கக் காத்திருக்கும் கபடம்) செயல்களைச் செய்பவர்களை நாம் வெறுக்க வேண்டும் என்ற கருத்தை அறிவிக்கிறது.
பொல்லா அரக்கன் ராவணன். சாது அரக்கன் விபீஷணன். ராமனால் ஸஹோதரனாய் பாவிக்கப் பட்டவன்.
கிள்ளிக் களைந்தான் எனில் ராமன் நகத்தால் கிள்ளி எறிவதுபோல பாணத்தால் அநாயசமாய் செய்தான் என்பதாகும்.
“அத்திர அரக்கன் முடி பத்தும் ஒரு கொத்தென உதிர்த்த திறலோன்”-என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
எம்பெருமான் ராவணன், பகாசுரன் ஆகியோரை அழித்து தம்மை நமக்கு அளித்த படியால் “கீர்த்தி” என்கிறாள் ஆண்டாள்.
ராம க்ருஷ்ணாவதாரங்களை முடித்துக்கொண்டு சென்ற
பின்பும் “திருவணை (ராம சேது), கீதை” இரண்டையும் நாம் உய்ய விட்டுச்சென்ற பரம உபகாரத்தைப் புகழ்ந்து பாட அழைக்கிறாள்.
ராவண குடும்பமே ராமனின் குணானுபவத்தில் மூழ்கிப் புகழ்ந்தது. ராவணன் ராமனின் வீரத்தைப் புகழ்ந்தான். கும்பகர்ணன் சௌர்யத்தில் ஈடுபட்டான். விபீஷணன் ஸௌஸீல்யத்தை ஸ்லாகித்தான். ஸுரப்பனகா அவன் ஸௌந்தர்யத்தில் மயங்கினாள்.

“பிள்ளைகள் எல்லாரும் பாவைக்களம் புக்கார்”—ப்ரபத்திக்கு அதிகாரிகளான எல்லாரும் ஆத்ம ஞானம் பெற ஆசார்யர்கள் காலக்ஷேபம் சொல்லுமிடம் சேர்ந்தனர் என்பதாகும்.

“வெள்ளி—–உறங்கிற்று”—ஞானம் பிறந்து அஞானம் அழிந்தது.
“குள்ள குளிர…..கள்ளம் தவிர்ந்து”—மோக்ஷத்தை அடைய விரும்பாதவளாய், ஸம்ஸாரத்தில் தூங்குகிறாயே! நல்ல ஞானம் பெற்று ஆத்மாபஹரத்தை விட்டு பகவதனுபவம் பெறுவாயாக என்பது உள்ளார்த்தம்.

—————

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.–14-

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து என்னும் சொற்றொடரால், உணர்வின் மிகுதியால்
உதடுகள் துடிப்பது குறிப்பாக உணர்த்தப்படுகிறது. கூடலை எதிர்பார்த்து உதடுகள் மெல்லப் பிளப்பதைக் காட்சியாக்குகிறது. கடவுளோடு இணைந்து விடுவதில் உள்ள இன்பம் சிறப்பாக வெளிப் படுத்தப் படுகிறது.

இறைவனிடம் கூடல் கைகூடாத போது உள்ளம் சாம்பிப் போய் முகம் கூம்பிவிடுமே. அதையே, “ஆம்பல் வாய் கூம்பின காண்” என்றாள் ஆண்டாள். இப் பாடலின் முதலிரண்டு அடிகள் இறைவனுடன் கூடும் இன்பத்தையும் இன்னும் போய் அவனிடம் போய்ச் சேர்ந்தாக வில்லையே என்ற ஏக்கத்தையும் சேர்த்துக் குறிக்கிறது.

சிவப்பும் வெள்ளையும் அடுத்தடுத்து வருவதைப் பாருங்கள். சிவப்பு மலர்கள், வெள்ளை மலர்கள் – காவி உடை, வெண்பற்கள் – வெள்ளைச் சங்கு, தீயெனச் சிவந்து ஒளிரும் சக்கரம் என்று இப்படி வெள்ளையும் சிவப்பும் ஒன்றுக்கொன்று இட்டு நிரப்பிப் பாடல் முழுவதும் வரக் கடைசியில் இரண்டும் இணைவதைப் பாருங்கள். வெண் தாமரையில் செவ்வரிகள் போலக் கண்கள் கூர்ந்து நோக்க, வெண்மை தன் பரிசுத்தத்தால் இறைவனைக் குறித்தால் சிவப்பு தாயாரின் நிறத்தைக் குறிக்கிறது

சேதனர்களின் ஹ்ருதயத்தில் ஞானம் மலர்ந்து, அஞானம் நீங்குவதை “செங்கழுநீர். …கூம்பினகாண்” என்று கூறுகிறார்.
முதன் முதலில் சிறிய திருவடி ராமனைப் பார்க்கும் போதே அவர் பரமாத்மா எனத் தெரிந்து கொண்டாராம். அதுபோல உள்ளே உறங்குபவள் ஞானம் உள்ளவளாயும், நா வன்மை உடையவளாயும் இருக்கிறாள்.
பேயாழ்வார் எம்பெருமானை மங்களாஸாசனம் செய்யும் போது நாபிக் கமலத்தில் ப்ரும்ஹா வீற்றிருப்பதை பார்க்கிறார்.

அக்கமலம் மலர்ந்து மூடுவதை அவனது திறந்து மூடிய கண்களின் நோக்கால் நிகழ்வது என உணர்ந்தாராம்.

“எங்களை முன்னம்……எழுந்திராய்”…வெகுகாலமாய் ஸம்ஸாரத்தில் தூங்கும் எங்களுக்கு குணபூர்ணரான நீ ஞானம் போதித்து அனுக்ரஹிக்க வேணும் என்கிறாள். தேவதாந்த்ர வ்யாவர்த்தகமாக அடையாளங்களைப் பெற்ற பகவானை உபதேசித்தருள வேண்டுகிறாள்.

—-

எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.–15-

ஶ்ரீவைஷ்ணவ லக்ஷணம் கூறும் இப்பாசுரம் “இளங்கிளியே” என்று திருமங்கையாழ்வாரைக் குறிக்கிறது. இவ்வாழ்வார் வளர்த்த கிளி ஸ்வாமி தேஶிகன். தன்னை ஒரு கூண்டுக் கிளியாக எண்ணியே அச்சுத ஶதகம் பாடினார் ஸ்வாமி.
பாகவதர்களின் பேச்சு ரஸமானதாயிருக்கும் என்பது “வல்லை உன் கட்டுரைகள்” என்பதன் பொருளாகிறது. தி‌ருமங்கையாழ்வார் நான்கு கவிகளில் (ஆசு கவி, சரள கவி, மதுர கவி, சித்ர கவி) வல்லவர் திரு எழுகூற்றிருக்கை (ரத பந்தம்) சித்ரகவிக்கு உதாரணம்.
“வல்லானை…..பாடு”—-யானை போல பலமான நம் இந்த்ரியங்களை அடக்க வல்லவனும் மோக்ஷ விரோதிகளையும் அழித்து,
நம்மிடம் உள்ள மாயயைத் தன் வசமாக்குபவனும் ஆகிய பகவானை துதிக்க வருவாய் என்று கூப்பிடுகின்றனர்.

———

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும்
தோரண வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.–16-

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து –நான்முகன் -81-

நெஞ்சினால் நினைக்கவும் முடியாத ஜ்ஞாந சக்திகளையுடையனான நீ என்னுடைய வாக்கில் வரும் சொற்களுக்குப் பொருளாயிருந்து
கொண்டு என்னுடைய நெஞ்சமாகிற நிலத்திலே தமிழாகிற விதையை விதைத்துப் பக்தியாகிற பயிர் செழித்து
விளையும்படி செய்தாயாகையாலே நிலை நின்ற நெஞ்சுடையேனாயினேன் என்றாராயிற்று.

தருமமும் ஞானமும் தவமும் வேலியாய்
மருவரும் பெருமையும் பொறையும் வாயிலாயக்
கருணை யம் கோயிலுள் இருந்த கண்ணனை
அருள் நெறி எய்திச் சென்று அடி வணங்கினான் -கம்பர் அடைக்கலப் படலம் -47-நேய நிலைக் கதவம்

கண்ணன் உள்ளே உறங்குவதால் நந்தகோபன் மாளிகையைக் கண்ணும் கருத்துமாய் காவல் காக்கின்றனர்.

நித்யசூரிகள் ஶ்ரீ வைகுண்டத்தைக் காக்குமாப்போல ஶ்ரீரங்கத்தைப் பஞ்சாயுதங்களும் காக்கின்றன என்கிறார் குலசேகராழ்வார்.

“உறகல் உறகல் உறகல் ஒண்சுடராழியே சங்கே*
அறவெறிநாந்தக வாளே 
அழகிய சார்ங்கமே தண்டே” – என்கிறார் பெரியாழ்வார்.
“புஜங்கம விஹங்கம ப்ரவர ஸைன்ய நாதா: ப்ரபோ*
ததைவ குமுதாதயோ நகர கோபுர 
த்வாரபா:”—என்று அபீதிஸ்தவத்தில் ஸ்வாமி தேஶிகன், நித்யசூரிகள், கோபுரம் காப்போர், வாயில் காப்போர் எல்லோரும் விழித்திருந்து இந்த பூமியயையும் ஶ்ரீரங்கத்தையும் காப்பாற்றுங்கள் என்கிறார்.
கைங்கர்யபரர்களை அவர்களது கைங்கர்யத்தையொட்டி அழைக்கும் வழக்கம் ஆண்டாள் காலத்திருந்தது என்பது “கோயில் காப்பான், வாயில்காப்பான்” என்றழைப்பதிலிருந்து புரிகிறது. இதனையே எம்பெருமானார் கோயில் கைங்கர்யங்களில் பின்பற்றினார்.
“கொடிதோன்றும் தோரண வாயில்காப்பான்” என்பதில் ஆசாராயர்களிடம் நம்மைக் கொண்டு சேர்ப்பவரை உபாஸிப்பதாய்க் காட்டுகிறாள் ஆண்டாள். ராமாவதாரத்தில்
ஶ்ரீராமனை மகரிஷிகள் அனுபவிக்கக் கேட்டதை “நென்னலே வாய் நேர்ந்தான்” எனக் குறிப்பிடுகிறாள் க்ருஷ்ணாவதாரத்தில் கோபிகைகளாக. விபீஷணனின் நல்ல உள்ளத்தை அறிந்து அனுமன் ராமனிடம் அழைத்துச் சென்றது போல உண்மையான பக்தி கொண்ட எங்களை உள்ளே செல்ல அனுமதிக்க வேணும் என்கிறாள்.நேராக பகவானை உபாஸிக்காமல் ஆசார்யனை முன்னிட்டுக் கொண்டு செல்ல வேணும் என்கிறாள் ஆண்டாள்.
(நேராக பகவானை அடைய நினைத்த ஸூர்ப்பநகாவின் மூக்கும் காதும் அறுபட்டது) என்பது திருக்குடந்தை ஆண்டவன் நிர்வாகம்.
குருடன் மற்றொருவர் உதவியுடன் செல்வது, நொண்டி படகோட்டி உதவியுடன் அக்கரை சேர்வது, ராஜாவைப் பார்க்காமலேயே ராஜ ஸேவகர்களின் குடும்பம் ராஜ போகம் அனுபவிப்பது போல ஆசார்யனை முன்னிட்டுக் கொண்டு அரங்கனை அடைய முடியும் என்கிறார் ஸ்வாமிதேஶிகன் (ந்யாஸ திலகம் – 21)
க்ருஷ்ணன் இருக்க நந்தகோபனை நாயகன் என விளிக்கக் காரணம் ஶ்ரீவைகுண்டத்தில் பொறுப்புக்கள் அனைத்தும் விஷ்வக்ஸேனர் கையிலிருப்பது போல இங்கே நந்தகோபனிடம் ஒப்படைத்திருப்பதைக் குறிக்கிறது. ராமன் பிறந்தது த்ரேதாயுகம் தர்மத்திற்குக் குறைவில்லை. ராமனோ மஹா வீரன். அண்டை நாட்டு ராஜாக்கள் அவனுள் அடக்கம். தந்தை தஶரதனோ பேரரசன். அதனால் அவனுக்குக் காவல் வேண்டாம் ஆனால் க்ருஷ்ணனோ கலி யுகத்தின் தோளைத் தொட்ட த்வாபர யுகத் தில் பிறந்ததால் அதர்மம் மிகுதி. தந்தையோ புல்லை மிதிக்க யோசிக்கும் ஸாத்வீகன். மகனோ இடைப்பிள்ளை. எடுப்பார் கைப்பிள்ளை. கம்ச பயத்தோடு சுற்றியிருந்த அரசர்களும் பகைவர்கள். அதனால் காவல் அதிகம் நந்தன் மாளிகைக்கு.
நாயகானாகிய ஆசார்யன் கோயில் காப்பானாக ப்ரணவத்தையும், அஷ்டாக்ஷரத்தையும் உபதேசிக்கும் பொருட்டு, வாயில் போன்ற “நம:” ஶப்தத்தின் பொருளைச் சொல்லி நம்மைத் தயார் செய்கிறார். ஜீவன் ஸ்வதந்த்ரனல்லன். அகிஞ்சனன் என் உணர்த்தி மோக்ஷவாயிலைத் திறக்க உதவுபவராக ஆசார்யனை “மணிக் கதவம்” என்பதன் மூலம் உணர்த்துகிறாள் ஆண்டாள்.

———-

அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த
உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.–17-

ஊனில் உயிரினில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேன் -மூன்றைச் சொல்லி
அன்பு ஆர்வம் இடு திரி இன்புருகு சிந்தை -மூன்றும் போல்
நந்தகோபன் யசோதை நம்பி மூத்த பிரான் இங்கும்

அசுரபயத்தைவிட, தோழிப் பெண்களிடமிருந்து க்ருஷ்ணன் பத்ரமாகக் காப்பாற்றப் படுகிறான். க்ருஷ்ணனின் பேரன் அநிருத்தனை மஞ்சத்துடன் கடத்தியவர்களாயிற்றே இப்பெண்கள்!தஶரதன் போல ராமனை அனுபவிக்க விடாத லோபியல்ல இந்த நந்த கோபர். பரம உதாரனாகிய இவர் க்ருஷ்ணனை அனைவரும் அனுபவிக்க அளிப்பவராதலால் முதலில் அவரை எழுப்புகின்றனர்.
க்ருஷ்ண ஸ்பர்சம் பட்டதால் கோகுலமே புனிதமாகியது. த்ரௌபதிக்கு வஸ்த்ர தானம் செய்த க்ருஷ்ணன் கோகுலம் பசுக்களுக்கு நீர் தானம் செய்தான்.
 
“அம்பரமே தண்ணீரே” மாடு மேய்த்துக் கொண்டிருந்த க்ருஷ்ணன், தோழர்களுக்கேற்பட்ட பசியை ரிஷி பத்னிகள் யாகத்துகுச் செய்த ப்ரசாதத்தை கொண்டு போக்கினான்.
இது “சோறே அறம் செய்யும்” சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் என்று எம்பெருமானுக்கு சேவை செய்பவராயிற்றே பலராமனாகிய ஆதிசேஷன். மரவடியாக இருக்கும் (பாதுகை) பலராமனை “செம்பொற்கழலடிச்செல்வன்” என்கிறாள்.
அம்பரமாய், (ஆகாசம்) நீராய், உணவாய் இருக்கும் க்ருஷ்ணனை எங்களிடம் தரவேண்டும் என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.
ஶரீரத்தை வஸ்த்ரம் மறைத்து வ்யக்தியைக்காண்பிப்பது போல
எம்பெருமான் இந்த ப்ரபஞ்சத்தை யோகிகளின் உணர்வுகளிலிருந்து மறைக்கிறான் என்பது ஸ்வாபதேசம்.
தத்வ, ஹித புருஷார்த்தங்களை பலன் எதிர்பாராது உபதேசிக்கும் ஆசார்யனாக நந்த கோபலாரைச் சொல்கிறாள். இத்தகைய ஞானத்தைக் தரும் மந்த்ரங்களின் ப்ரதானமாக இருக்கும் நிலை யசோதைக்கு. அடுத்து ஸர்வ வ்யாபியான எம்பெருமான் க்ருபையைக் கோருகிறார். அடுத்து அவன் சம்பந்தப்பட்ட பாகவத கைங்கர்யத்தை யாசித்து ஆக எல்லோரும் அனுக்ரஹப்பீர்களாக என்று வேண்டுகிறாள்.

———

உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.–18-

புருஷாகாரம் செய்யும் பிராட்டி அருகே இருந்ததால் காகாசுரன் உயிர் பிழைத்தான். ராவணன் எம்பெருமான் கோபத்துக்கு ஆளானான். நம் குறைகளைப் பிராட்டி கேட்டு, பெருமானையும் கேட்கச் செய்வதால் அவளை முன்னிட்டுக் கொண்டே பகவானிடம் செல்ல வேண்டும்.
ஶரணாகதி என்று வந்த ஜீவனின் குற்றங்களுக்கேற்ப தண்டனை
அளிக்க முன்வரும் பகவானிடம் பரிந்துரை செய்து பிராட்டி ஶரணாகதனுக்கு மோக்ஷமும், அல்லாதவர்களுக்கு தண்டனையும் அளித்தால் லோக நிர்வாகம் பாதிக்காது என்று அவனுக்கே உபதேசம் செய்பவள்.

இத்தனை சிறப்பான குணங்களையுடையவள் நப்பின்னை.
க்ருஷ்ணனை மகனாயடைந்த நந்தகோபனுக்கு வஸுதேவர் யானைகளையும், வஸுதேவர்ருக்கு வேண்டிய பசுக்களை நந்தகோபரும் அளிப்பார்களாம்.

ஸீதை தன்னை தஶரதனின் மருமகள் என அறிமுகப் படுத்திக் கொள்கிறாள் ஹனுமனிடம். அதுபோல நப்பின்னை தன்னை நந்தகோபன் மருமகள் எனச்சொல்கிறாள். ஒருகையில் பந்தும், மற்றோர் கையில் கண்ணனையும் பிடித்துக் கொண்டு உறங்குகிறாள்.

நித்ய விபூதி, லீலா விபூதி என இரண்டையும் நிர்வகிக்கும் செல்வாக்கு உடையவள். ராமானுஜர் இந்த பாசுரத்தைப்பாடி பிக்ஷை கேட்டு கதவைத் தட்ட, வந்து திறந்த அத் துழாயை (பெரிய நம்பியின் திருக் குமாரத்தி) ஆண்டாளாக நினைத்து மயங்கி வீழ்ந்ததாக வரலாறு.

உபய விபூதியை நிர்வகிக்கும் யானை போன்றவனும், வீணாகாத ஸங்கல்பம் என்னும் நலத்தைப் பெற்றவரும் ஆகிய எம்பெருமானின் ஜேஷ்ட மகிஷியே! கேசவனை அடையத் தடையாயுள்ள பாபத்தை நீக்குபவள் இவளே!
ஸாரமான தானியங்களை மட்டும் கொத்தும் கோழிகள் போல (ஸார க்ராஹிகள்) எம்பெருமானிருக்குமிடம் சென்று ப்ரபத்தி செய்யும் பாகவதோத்தமர்களைக் குறிக்கிறது. (ஶ்ரீவைஷ்ணவ லக்ஷணங்களாக கொக்கு போல் இருப்பான், கோழி போல் இருப்பான், உப்பைப் போலிருப்பான், உம்மைப் போலிருப்பான் என்பது ப்ரஸித்தம்)
வேதாந்த சாகைகள் மாதவிப் பந்தல் எனவும் அதில் கூறும் ஶ்ரீய: பதியின் பெருமையை உறைக்கும் வால்மீகி, ஸுகர் போன்றவர்களை குயில்கள் எனவும் உருவகப் படுத்தப் பட்டுளது.
பந்து போன்ற எங்களை லீலோபகரணமாக்கி விளையாடும் எம்பெருமானுக்கு நாங்கள் போகோபகரணமாக வேணும். அதற்கு பிராட்டியின் வளை யோசை துணையாயிருந்து சீற்றத்தைத் தணிக்க வேணும் என்பது உட்பொருள்.

——–

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.–19-

பிராட்டியும், பெருமானும் மோக்ஷமளிப்பதில் அவரவர் அடியவர்களை விட்டுக் கொடுப்பதில்லை. நப்பின்னை வீரமங்கை என்பதால் கோட்டுக்கால் கட்டில். ருக்மிணி ராஜபத்னியாகையால் தங்கக் கட்டில்.சத்யபாமா அழகி என்பதால் வெள்ளிக்கட்டில் அமைத்திருந்தனராம். மோக்ஷமடைந்து முக்தன்

ஶ்ரீவைகுண்டம் சேர்ந்து திருமாமணி மண்டபத்தில் ஆதிசேஷ பர்யங்கத்தில் வீற்றிருக்கும் எம்பெருமான் திருமடியில் சென்றமர்கின்றான். அப்படிச் செல்லும்  போது ஆதிஸேஷனைத் துகைத்துக் கொண்டு ஏறுவானாம். இதனையே “மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி” – என்கிறாள்.

மைத்தடங்கண்ணியான நீ உன் மணாளானுடனிருக்கிறாய். க்ருஷ்ணனைப் பிரிந்த ஒரு கணம் ஒருயுகமாயுள்ளது. எங்களை இன்னும் காக்க வைப்பது ஏற்புடையதல்ல என்கின்றனர் தோழிகள். ராவணவதம் முடிந்து ஸீதா பிராட்டியைக்காண வந்த ஹனுமான் ராக்ஷஸிகளை நசுக்கி விடுவாதகக் கூற அவர்களுக்குப் பரிந்து பேசிய பிராட்டி யைப் போல நீயும் எங்களுக்காக இரங்க வேண்டும் என்று வேண்டுகின்றனர் தோழிகள்.

ஸ்திரமான ஸம்ப்ரதாய ப்ரதியே “குத்து விளக்கு” என்பதாம். ஒரு ஆசார்யனிடமிருந்து இன்னொரு ஆசார்யன் வருவதை வழிவழியாக வரும் தீபம் குறிக்கிறது. அஞானத்தைப் போக்கும் ஞான தீபம் இது. நிரபாய ஸம்ப்ரதாய பரம்பரையே இந்த குத்து விளக்கு.
விளக்கு ப்ரகாசத்தால் தன்னையும் காட்டி பிறவற்றையும் காட்டுமாப்போல நப்பின்னையே! நீ உன் க்ருபையைத் தந்து, கண்ணனையும் காட்டித் தர வேணும் என்கின்றனர்.
நான்கு வேதங்களையும் கால்களாய் கொண்ட கோட்டுக்கால் கட்டில் சுமக்கும் திவ்ய தம்பதிகளை அடைவதற்கு முன் அந்த பர்யங்கத்தில் வீழ்கினறனர். குத்து விளக்கின் 5 முகங்கள் போல எம்பெருமானின் ஐந்து நிலைகள், பஞ்ச இந்த்ரியங்கள், அர்த்த பஞ்சகம் முதலியன ஆசார்ய உபதேசத்தால் அறியப்படுகின்றன.
ப்ரளய காலத்தில் அசித்தைப்போலக் கிடக்கும் ஜீவன்களுக்காக இரங்கி மோக்ஷம் வரையில் இவைகளை அழைத்துச்செல்லும் விசாலமான மனமுடையவனே “மலர்மார்பா” என்பதாம்.
இப் பாசுரம் பட்டர் உகந்த பாசுரம் என்பர்.

———

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்
செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.–20-

முப்பத்து மூவர்…அமரர்க்கு”— எல்லா தேவதைகளுக்கும் அந்தர்யாமியாயிருக்கும் எம்பெருமான் நாமளிக்கும் காணிக்கைகளைப் பெற்றுக்கொள்ளும் மிடுக்குடையவன்.

செப்பமுடையாய்–தேர்த்தட்டிலும், கடற்கரையிலும் சொன்னபடி அடைக்கலம் அடைந்தவர்களை ரக்ஷிக்கும் ஆர்ஜவம் உடையவன்!

திறலுடையாய்—தடைகளை நீக்கி நிர்வகிக்கும் திறலுடையவன்.

செற்றார்க்கு—–விமலா – ஆஶ்ரித விரோதிகளிடத்தில் துன்பம் உண்டாக்கப் பண்ணுவது எம்பெருமானுக்குக் குற்றமாகாது. ஜயத்ரதனைக் கொல்லும் பொருட்டு சூர்யனை மறைத்துப் பகலை இரவாக்ககினான் பரமன். பாரத யுத்தத்தில் ஆயுதம் எடுக்கா விடினும், ஒவ்வொரு முறையும் தேரோட்டியாக சாட்டையை சொடுக்கும் போதும் பல எதிரிகள் வீழ்ந்தனர் என்பதை “பற்றலர் வீயக் கோல் கொண்டு பார்த்தன் தேர் முன் நின்றானை”–என்கிறார் கலியன்.

கண்ணன், அர்ஜுனன் தேர்தட்டில் ஏறியவுடனேயே கௌரவ பத்னிகளின் திருமாங்கல்யம் ஒரே சமயத்தில் அசைந்தனவாம்
பாஞ்சாலியின் துயிலுரிந்த வருத்தத்தை அந்த நூறு பத்னிகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளித்தானாம்.

“பாண்டவர் தம்முடைய மறுக்கமெல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை” எனகிறார் பெரியாழ்வார்.

ஆசார்ய வைபவத்தை இப் பாசுரம் அழகாய்க் காட்டுகிறது. ஸ்த்ரீகளுக்கு மூன்று விஷயங்கள் அழகைத் தருவது போல ஆசார்யன் மூன்று விஷயங்களை சிஷ்யனுக்குத் தெரியப் படுத்துகிறார்.
  • சிறு மருங்குல் போல அஷ்டாக்ஷரத்தில் பிராட்டி இருப்பது தெரியாது.
  • மென்முலை யொத்த த்வயத்தில் லக்ஷ்மீ ஸ்பஷ்டமாகத் தெரிகிறாள் சைதன்யஸ்தன்ய தாயினியாக எப்போதும் ரக்ஷிப்பதால்.

இவை யிரண்டையும் ப்ரபன்னனுக்கு ஆசார்யன் திருவாக்கால் (செவ்வாய்) சொல்லித் தெளிய வைக்கிறார் சரம ஶ்லோகமாக.

———–

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.–21-

உகவாதார் அம்புக்குத் தோற்பர்கள். நாங்கள் தோற்றோம் உன் குணத்துக்கே!” — என்று வந்துள்ளனர் தோழியர். பிராட்டி பகவானுக்கு எல்லா விதத்திலும் ஈடானவள். ஆயினும் பகவானுக்கு அடங்கி பாகவதர்களுடன் சேர்ந்து தொண்டு செய்பவளாக தன்னை ஆக்கிக் கொள்கிறாள். தனக்கு மேம்பட்டவர் எவருமில்லாத எம்பெருமானுக்கு விபவத்தில் “நந்த கோபனுடைய மகன்” என்பதில் அளவற்ற சந்தோஷமாம்.
ராவண வதம் முடிந்து வந்த ராமனைத் துதித்த ப்ரம்ஹா, சிவனிடம், “நான் தஶரதன் புத்ரன்”–என்று சொல்லி மகிழ்ந்து, இப்படிச் சொல்வதையே நான் பெரிதாக மதிக்கிறேன் என்றான். நம்மில் ஒருவனாக வந்த இந்த மகன் நம்மைக் கைவிடமாட்டான் என்பது இதன் பொருள்.
“ஊற்றமுடையாய் ……தோற்றமாய் நின்ற சுடரே” என்கிறாள் ஆண்டாள். “சமாதானம் பேசப்போகிறாயா” என்ற த்ரௌபதியிடம், “நான் உன் கோவிந்தா என்ற கதறலுக்குக் கடன் பட்டுள்ளேன். கவலைப்படாதே என்று சொல்லிச் சென்றான் யுத்தத்தை ஆரம்பிக்க, ஆஶ்ருத பாதபக்ஷனாகிய எம்பெருமான்.
ஶ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமானின் கல்யாணகுணங்கள்  சுடர்விடாது.
ஆனால் ப்ருக்ருதி மண்டலத்தில் அவன் பிறக்க பிறக்க சுடர்விட்டு ப்ரகாசிக்கிறது அவனது குணங்கள் என்று உபநிஷத்துக்கள் கொண்டாடுகின்றன.
“ஆற்றாது….போற்றியாம் வந்தோம்” என்பதற்கு “அகங்காரம் மமகாரம் ஒழிந்து உன்னைப் புகழ்ந்து, உன்னடிபணிந்து, எங்கள் இயலாமையை உணர்ந்து வந்துள்ளோம்” என்பது பொருள்.
“ஏற்ற கலங்கள் ….பசுக்கள்” ஸத்பாத்ரங்களான சீடர்களுக்கு பக்ஷபாதமின்றி ஞானமாகிய பாலை மிகுந்தளிக்கும் ஸதாசார்யன் என்பதாகும்.
“ஆற்றப் படைத்தான்…….துயிலெழாய்”…. இத்தகைய ஆசார்யர்களுக்கு புத்ரனாயிருப்பவனாகிய எம்பெருமான் ஸம்ப்ரதாயம் வளர பாஞ்சராத்ரம் போன்ற ஆகமங்களை உபதேசித்து, விபவாதாரங்களைச் செய்து விளங்கினாய் .
இத்தகைய பெருமையுடைய நீ எங்கள் கைங்கர்யத்தை ஏற்க வேணும் என்கிறார்கள்.

——–

அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.–22-

ஐம்புலன்களுடன் கூடிய அழகிய சரீரத்திலிருக்கும் ஜீவராசிகள்
நானே ஸ்வதந்த்ரன் என்பன போன்ற அபிமானங்களை விட்டு ஶ்ரீ வைகுண்டத்தில் உன் பர்யங்கத்தின் கீழ் கூடியிருக்கும் நித்ய முக்தர்களின் கூட்டம் போல நாங்களும் முக்தானுபவம் பெற ஶரணாகதி செய்ய வந்துள்ளோம். எங்கள் பாபத்தைப் பார்த்து கண்களைச் சிறுச்சிறிதே மூடி விழித்தால் உன் பரிபூர்ண கடாக்ஷம் எம்மேல் பட்டு எங்களது ஸஞ்சித, ப்ராரப்த பாவங்களைப் போக்குவாயாக என்பதாம்.
“அபிமான பங்கம்” என்பதற்கு ராமாயணத்திலிருந்து உதாரணம் ஒன்று. ராவண வதம் முடிந்தபின் மந்தோதரி புலம்புகிறாள் இப்படி. “தானவ அரசனான மயன் என் தந்தை. ராக்ஷஸ அரசன் என் கணவன்‌. இந்த்ரனையே ஜெயித்தவன் என் புத்ரன் இந்த்ரஜித். சூர்யனின் ஒளியோ, வெப்பமோ இந்த ராஜ்யத்தில் விழுந்ததில்லை. அப்ஸரஸ்ர ஸ்த்ரீகள் குடையும், சாமரமும் ஏந்தி வருவர் ராவணன் பின்னால். ஆனால் ராவணன் வீழ்ந்ததும் என் இந்த கர்வமும் அழிந்தது. சூர்ய ஒளி இலங்கையில் விழுந்தது. வட்டமிடும் கழுகுகளின் நிழல் ராவணன் மீது விழுந்தது குடை பிடிப்பது போல” என்கிறாள்.
ஶ்ரீரங்கநாதன் புறப்பாட்டிற்குச் செல்லும் போது பாதுகைகளை அணிந்து, ஸயன சமயத்தில் களைவான். திரும்ப காலை எழுந்ததும் அவர் முதலில் கடாக்ஷிக்கும் பாதுகைகள் போல கண்ணா நீ எங்களைக் கடாக்ஷிக்க வேணும் என்கின்றனர் கோபியர்.
ஶரணாகதனின் தோஷத்தைப் பார்க்காத வாத்ஸல்யம் மிக்க திருக்கண் மலராலும், பாபத்தைக் கண்டு தண்டிக்கத் தோன்றும் மற்றொரு சற்றே மூடிய கண்ணாலும் சிறுச் சிறிதாய் எங்களை விழித்துப் பார்த்து எங்கள் பாவங்களைப் போக்குவாயாக என்பதாம்.
அகல்யா சாபம் தீர்த்த ராம பாத தூளிகள் போல, உன் திருவடித் துகள்பட்டு எங்கள் சாபம் தீர வேண்டும் கண்ணா என்கின்றனர் கோபியர்.

——–

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி
மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த காரியம்
ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.–23-

இப்பாட்டில் க்ருஷ்ணாவதார சிறப்பை ஆண்டாள் காட்டுகிறாள். பாற்கடலில் மலைக்கு ஒப்பான ஆதிசேஷனின் பர்யங்கம் என்ற குகையில் பிராட்டியுடன் மன்னி யோகநித்ரை செய்யும் எம்பெருமான் முன்னே பூபாரம் தாங்க முடியாத பூமிதேவி கம்சன், சிசுபாலன் முதலியோரால் உண்டான கஷ்டம் நீங்க வேண்டும் என வேண்டியபடியால் ஸங்கல்ப ஞானத்தைப் பெற்றான் (அறிவுற்று தீவிழித்து) எழுந்த எம்பெருமான் தன் திருமேனியிலிருந்து, கருப்பு, வெண்மைநிற கேஸத்தையும் எடுத்து வீசியதை “வேரிமயிர் பொங்க” என்கிறாள்.

வாஸனை யுடைய இக் கேஸத்தை விடுவித்து, அழகிய தேக உறுப்புக்களை பெற்று ஆதிஸேஷனையும் உதறி, ஆலஸ்யத்தை நீக்கி உடனே அவதாரம் செய்து முழங்கினான் தேவகி வஸுதேவர் மகனாய் வந்துதித்தான்.
பொற்கொல்லன் மெழுகில் ஒட்டிய பொன்னைப்போல ஞானமில்லாத இப்ருக்ருதியில் ஞானமுள்ள ஜீவன் ஒட்டியிருப்பதைக் கண்டு அறிவுற்றுத் தீவிழித்து கரண களேபரங்களுடன், முக் குணங்களையும் அளித்து மூரி நிமிர்ந்து ஶ்ருஷ்டி செய்து ஸ்தூலத்தில் ஸூக்ஷ்மமாயுள்ளான்.
இப் பாசுரம் அஹோபிலத்தில் எழுந்தருளியுள்ள ந்ருஸிம்ஹனைப் பற்றியது என்றும் சொல்வர். அஹோபில மலையில் மன்னிக்கிடந்த மாலோலன் இக் கலியுக ஜனங்கள் நற்கதி பெறும் பொருட்டு பரிவாரங்களுடன் வெளியே வந்து ஸஞ்சாரமாக பல
க்ராமங்களையும், நகரங்களையும் அடைந்து மக்களை தன் வசமாக்கினான் அழகிய சிங்கர்கள் மூலமாக என்பது வ்ருத்தாந்தம்.
மாரி மாறாத தண்ணம்மலையாம் திருமலையிலிருந்து, ஹஸ்தி கிரி சென்று, ஹயக்ரீவ, கருட கடாக்ஷம் பெற்று, நடாதூர் அம்மாள், அப்புள்ளார் அருள் பெருக்கால் அனைத்துக் கலைகளும் கற்றுத் தேர்ந்து, அரங்கம் சேர்ந்து, சீரிய சிங்கமென வாதியரை விரட்டி, கவிதார்க்கிக ஸிம்ஹமாகி, க்ரந்தங்கள் பலவற்றை நம் ஸம்ப்ரதாயம் உய்ய, நமக்காக அருளியுள்ளார் நம் ஸ்வாமி தேஶிகன்.
ஆக நம்பெருமாளின் “கதியே” நமக்கு “கதி” என்றார்.
இவனது நடையழகாகிய “ஸஞ்சாரம்” ஸேவித்தால் நமக்கு
“ஸஞ்சாரம்” (பிறப்பு/இறப்பு) இருக்காது என்பது திண்ணம்.

———

அன்று இவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.–24-

அன்று மகாபலி தர இயலாத மூன்றடியை நான் தருகிறேன் என்கிறாள் ஆண்டாள்
  1. ஓங்கி உலகளந்த
  2. அம்பரம் ஊடறுத்து
  3. அன்றிவ்வுலகமளந்தாய் – என
இரண்டு அடிகளால் மகாபலியின் மமகாரத்தையும், மூன்றாம் அடியால் அவனது அகங்காரத்தை அவன் தலையில் வைத்தும் அழித்தான். ஆக ஜீவர்களாகிய நாம் அவன் திருவடியில் தலையை சேர்க்க வேண்டும். அவன் முன்னே தலை குனிந்தால் வாழ்வில் நிமிரலாம் என்பது தத்துவம்.
தண்டகாரண்யத்தில் ராக்ஷஸர்களால் தங்களுக்கேற்பட்டு வரும் கஷ்டங்கள் தீர ராமபிரான் வரவை எதிர்பார்த்திருந்த ரிஷிகள் அவனைப் பார்த்தவுடன் அவனது அழகில் மயங்கி தம் கஷ்டங்களை மறந்து பல்லாண்டு பாடினர். கருடாரூடனாகிய எம்பெருமானைக் கண்டதும் பெரியாழ்வார் பல்லாண்டு பாடினார்.
“அன்றிவ்வுலகம்……அடிபோற்றி” ஸ்ருஷ்டிகாலத்தில் இந்த எல்லா உலகங்களையும் படைத்த உன் திருவடிகளில் ஶரணாகதி செய்து போற்றுகிறோம்.

“இலங்கைசெற்றாய்…போற்றி”— அவ்வுலகங்களில் விபவமாயும், அந்தர்யாமியாயும், ஆசார்யராயும் அவதரித்து மனதை விவேகம் மூலம் அழிக்கும் திறலைப்போற்றுகிறோம்.“சகடம் உதைத்தாய்….போற்றி”– ஜீவன்களின் கர்மாவாகிய வண்டியை அழிக்கும் உன் கீர்த்தியைப் போற்றுகிறோம்.

“கன்று…..கழல் போற்றி“—கன்று போல் விரும்பக் கூடிய புண்ய பாபங்ஙளை அழிக்கவல்ல உன் வீரத்தைப் போற்றுகிறோம்.

“குன்று…குணம்போற்றி”….சிகரம் போன்ற வைகுண்ட லோகத்தில்
ஏக சக்ராதிபதியாக வெண் கொற்றக் குடையுடன் வீற்றிருக்கும் உன் குணத்தைப் போற்றுகிறோம்.

வென்று…வேல் போற்றி”…. மோக்ஷ விரோதிகளாக தடைகளை அழிக்கும் வேல் போன்ற உன் ஸங்கல்பத்தைப் போற்றுகிறோம்.

“என்றென்றும்…..இரங்கேலோரெம்பாவாய்”—-இவ்விதமாக உன் திருக் கல்யாண குணங்களைப் பாடி பரம பதத்தில் கைங்கர்யம் கொள்வதற்கு வேண்டி வந்துள்ளோம். அருள் புரிவாயாக. என்பது உட்பொருள்.

வானரங்களைக் கொண்டு ராவணனை வென்றான் எம்பெருமான். “இக்கரை” யிலிருந்து “அக்கரை” சேர்க்கும் “அக்கரை”அவனுக்கு மட்டுமே உண்டு.

———

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.–25-

ஸம்ஸாரம் என்பது ஓர் இரவு. இதில் வாழும் நமக்கு இரண்டு தாய்கள். நம்மைப் பிறப்பிக்கும் தாய். இவள் நம் உடலைத் தான் உண்டுபண்ணுகிறாள். ஆனால் ஆத்மாவை அதைப் பற்றிய அறிவை உண்டு பண்ணும் தாய் “காயத்ரீ மந்த்ரம்” என்னும் தாய். இவளையே “ஒருத்தி” என்கிறாள் ஆண்டாள். இவள் மூலமாக மற்றொரு பிறப்பு உண்டாகிறது .
அதனைத்தரும் தாய் “மூலமந்த்ரம்”. இதன் மூலம் எம்பெருமானுக்கு அடிமை என்ற ஞானம் பெற்று பரமைகாந்தி ஆகிறான் ஜீவன்.
திருமந்த்ரத்தில் பிறந்து த்வயத்தில் வளர்ந்து ஶரணாகதி என்னும் உபாயத்தை அனுஷ்டித்து பிறவி நோய் தீர்க்கச் செய்கிறார் ஆசார்யன்.

“தரிக்கிலானாகி….நெடுமாலே”–
ஆனால் மனத்தாலும், வாக்காலும், உடலாலும் செய்யும் பாபங்கள்
“கம்சன்” போன்றவை. அவற்றின் பலனைத் தரிக்க இயலாது தவிக்கிறோம்.
இந்த மோக்ஷ விரோதியாகிய பாபங்களை உன் கருணையால் அழித்து உன் கைங்கர்யத்தில் எங்களைச் சேர்த்து எங்களை மகிழ்விக்க வேண்டும் என்கின்றனர் பாவையர்.

———-

மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.–26-

மாலே! மணிவண்ணா! பக்த வ்யாமோஹம் உள்ளவன் எம்பெருமான். அதனால் மாலே என்கிறாள்‌.
“சமுத்ரத்தின் அக்கரையிலிருந்து கூப்பிட்ட உனக்கு ஆதிமூலமே என்றலறிய யானையைக் காக்க ஓடிவந்தது போல ஓடிவந்து ரக்ஷித்திருக்க வேணும்” என்று கூறி விபீஷணனைக் கண்களால் பருகினாராம். அத்தனை ஆஶ்ருத வாஞ்சை!
திருக்காட்கரை அப்பனாகிய வாமன மூர்த்தி நம்மாழ்வாருக்குத் தர்ஶனம் தரச் சென்றபோது, அவரைத் தன் கண்களால் பருகி ஹ்ருதயத்திலிட்டாராம் ஆழ்வார்.
காட்கரை அப்பனும் கண்களை மலர்த்தி உள்வாங்கினார் ஆழ்வாரை!

“மேலயார் செய்வனகள்”–பெரியோர்கள் அனுஷ்டித்த படியால் நாங்களும் அனுஷ்டிக்கிறோம். தர்மம் அறிந்த பெரியோர்களின் அனுஷ்டானமே ப்ரமாணம். அதில் பலனும் ப்ரசித்தி எற நோன்பைப் பற்றிச் சொல்கின்றனர்.

அடுத்து நோன்புக்கு வேண்டிய உபகரணங்களைக் கேட்கின்றனர்.
“ஞாலத்தை எல்லாம்….கொடியே விதானமே”–அனுஷ்டானம் ப்ரபத்தி என்னும்போது, அதற்கான அங்கங்கள் உபகரணங்களாகின்றன.
த்ருவனைப் பேசவைத்து ஞானமளித்தது இந்த பாஞ்ச ஜன்யமே. க்ருஷ்ணன் செய்த சங்கநாதத்தைக் கேட்டு ருக்மிணி பிராட்டி கண்ணன் அருகே வந்து விட்டான் என்று மகிழ்ச்சி அடைந்தாளாம். “ருக்மிணி பிராட்டிக்குக் கேட்ட சங்கொலியும்,
ஸீதா பிராட்டிக்குக் கேட்ட சார்ங்க ஒலியும் போல் எனக்கு எப்போது கேட்கும்” என்கிறாள் நப்பின்னை.
சங்க நாதம் போன்றது ஆசார்ய ஸூக்திகள்.
பல்லாண்டு பாடும் ஆழ்வார் ஸூக்திகள்.
பறை கொட்டுவது போல் வாத க்ரந்தங்கள் குத்ருஷ்டிகளை மாய்க்க.
கோல விளக்கு போன்ற சாத்வீக ஞானம்.
பக்தி என்பதன் மூலம் யார் என்பதைக் காட்டும் கொடி.
அகங்காரம் நீங்கிய வைராக்யம் விதானம்.
இப்படியான உபாய அனுஷ்டானம் ஆனந்தம் தரவல்லது என்பதனை ஆண்டாள் காட்டுகின்றாள்.

————-

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே
தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.–27-

யுத்தம் செய்த அழகால் ராவணனை வென்றான். கூடமாட்டேன் என்ற ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் ஆகியோரையும் வென்றான்.
கூடமாட்டேன் என்ற ஆழ்வார்கள் முன்னின்று வென்று பாடவைத்தான், வாத்ஸல்யத்தால் வென்றான்.
தன்னுடன் கூடியவரை வெல்ல மாட்டேன் என்பான். பரசுராமனளித்த வில்லை வாங்கிய ராமபிரானை வணங்கிய பரசுராமனின் புண்ணியங்களை எடுத்த அஸ்த்ரத்தால் அழிக்கிறார். சமுத்ர ராஜனிடமும் இதே நிலை தோல்விதான். புல் ப்ரும்ஹாஸ்த்ரமாகியது முதலில். காகாசுரன் ஶரணாகதி செய்த பின் அதற்கு தோற்ற எம்பெருமானின் கருணை ப்ரும்ஹாஸ்த்ரத்தை புல்லாக்கியது.
ராம பட்டாபிஷேகம் நடந்தபின் உலகமே புகழும் வண்ணம் ஹனுமனுக்குத் தன் கழுத்திலிருந்த முத்து மாலையை அளிக்கிறாள் ஸீதை. “நாங்கள் எம்மிலிருந்தொட்டிய  கச்சங்கம் நானும் அவனும் அறிதும்” என்கிறாள் ஆண்டாள்.
அதுபோன்ற சம்மானம் வேண்டும் எனக் கேட்கிறார் ஆண்டாள்.. ஹனுமனிடம் ராமனளித்த மோதிர அடையாளமும், பிராட்டி அளித்த சூடாமணியும் இருவருக்கும் சொல்லிய கதைகள் பல. தபஸ்வினி அனுசூயா தன் ஆபரணங்களை அனைத்தையும் ஸீதாபிராட்டிக்குப் பூட்டி அழகு பார்த்து ராமபிரான் முன்பு நிறுத்துகிறாராம்.
“கோவிந்தா” என்ற நாமம் சுரந்த புடவையால் த்ரௌபதியின் மானஸம்ரக்ஷணம் நடந்தது.
  • ஸத்கர்மாக்களைச் செய்ய மாட்டேன் என்றும் கூடாரை வெல்பவர்ஙள் ஆசார்யர்கள்.
  • சூடகம் என்பது கைகூப்புச்செய்கை.
  • தோள்வளை என்பது சங் கு சக்ரப் பொறி.
  • தோடு, செவிப்பூ என்பன ஆசார்யன் சொல்லும் த்வய மந்த்ரம்.
  • பாடகம் என்பன சிஷ்யன் செய்யவேண்டிய அனுஷ்டானங்கள்.
  • த்வாதச புண்ட்ரம், அணியும் கச்சம் முதலியன பிற அணிகலன்களாகின்றன.
  • மூடநெய்பெய்த பால் சோறு போல பரம போக்யமான க்ருஷ்ணானுபவத்தைப் பெறுகிறான் ஶரணாகதி செய்த சேதனன் என்பது உட்பொருள்.

———–

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்
குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.–28-

வானரங்களுடன் கலந்து பழகிய ராமபிரான் இங்கு மாடுகளுடன் கலந்து நிற்கிறான். “இறைவா” என்றழைத்து அவனது ஸ்வாமித்துவத்தைக் காட்டுகிறாள். க்ருத க்ருத்யனான
ப்ரபன்னனுடைய குறைகளைக் தான் ஏற்றுக்கொண்டு, தன்னிறைவை அவர்களுக்கு அளித்து, ரக்ஷணப் பொறுப்பை ஏற்பதால் “குறையொன்றுமில்லாஎம்த கோவிந்தா” என்கிறாள். இதனையே “தமதனைத்தும் அவர் தமக்கு வழங்கியும் தாம் மிக விளங்கும் அமைவுடைய அருளாளர் அடியிணைகள் அடைந்தேனே”
என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.

எம்பெருமானுக்கும், ஜீவனுக்கும் உள்ள ஆத்ம பந்தம் என்றும் அழியாது என்பதை “உன்னோடுறவேல் .. ‌..ஒழியாது” என்கிறாள்.

  • இந்த ஸம்ஸாரத்தில் ஜீவர்கள் ஸத்கர்மங்கள் செய்வது துர்லபம் என்பதை முதலடி காட்டுகிறது.
  • எம்பெருமான் விஷயமான ஞானமின்றி அலைகிறது என்பது 2ம் அடி.
  • இப்படி பசுப்ராயராக இருக்கும் ஜீவன்களை கடைத்தேற்ற எம்பெருமான் நினைத்து இறங்குவது அவர்களின் புண்ய விசேஷத்தால் என்பது 3ம் அடியின் கருத்து.
  • இப்படி எம்பெருமான் அவதரித்தாலும், அனாதி காலமாய் அவனுக்கும் நமக்கும் இருக்கும் சேஷத்வம் நீங்குவதில்லை என்பது 4ம் அடி தரும் கருத்து.
  • இது ஒழிக்க ஒழியாத ஸம்பந்தம். பகவானை நினையாவிடினும் அவன் சேஷி என்பதில் ஐயமில்லை, என்பது 5ம்அடி.
  • ஸர்வேஶ்வரனாகிய ஸ்வாமியிடம் எப்படி நடக்க வேணும் என்ற சேஷத்வ ஞானமற்றவர்களாயுள்ளனர் ஜீவர்கள் என்பது 6ம்அடி.
  • எம்பெருமான் என்ற உணர்வின்றி ஸ்வதர்மங்களை விடுத்து செய்த கார்யங்களால் நீ கோபிக்காது பொறுத்து க்ஷமிக்க வேணும். எங்களைத் திருத்திப் பணி கொள்ளவேணும் உன் கருணையால் என்பது கடைசி இரு அடிகளின் கருத்து.

———-

சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.–29-

ப்ரபத்தி க்ஷண காலத்தில் அனுஷ்டிக்கப்படும் ஸாத்யோபாயம். “சிற்றஞ்சிறுகாலே” என்பது இந்த ப்ரபத்தியை நாள் கடத்தாது நல்லமன, தேக ஸ்திதி இருக்கும்போது அனுஷ்டிக்க வேண்டியதைக் குறிப்பது.
ஸ்வரூப ஸமர்ப்பணம், பர ஸமர்ப்பணம், பல ஸமர்ப்பணம்
ஆகிய மூன்று தளங்களைக் கொண்டது இந்த ப்ரபத்தி சாஸ்த்ரம் என்பதை ஆண்டாள் காட்டுகிறாள் இந்தப் பாசுரத்தில். இப்படி அனுஷ்டித்துப் பெறும் கைங்கர்யத் தைச் செய்யும்போது
உண்டாகும் உகப்பை உனக்கே அர்ப்பணிப்போம் என்பதை,
“மற்றை நம்….மாற்று” என்ற வரிகாட்டுகிறது. இதனை அனுஷ்டிக்க நமக்கு வழிகாட்டும் ஆசார்யனின் பொற்றாமரைக் திருவடிகளை பற்றி போற்றவேணும்.
ஆசார்யன் சிஷ்யர்களுக்கு ஸம்ப்ரதாய விஷயங்களை ஊட்டிச் செய்யும் கார்யத்தை, “பெற்றம் மேய்த்துண்ணும்” என்ற வரிதெரிவிக்கிறது.
ஆசார்யனுக்கு சிஷ்யன் செய்யும் கைங்கர்யங்களை, “குற்றேவல் எங்களை” என்ற வரிகாட்டுகிறது.
மற்றும் ஒரு விளக்கம்.

  1. ப்ராப்யத்தில் த்வரை (சிற்றம் சிறுகாலே வந்துன்னை)
  2. சாத்யத்தில் சாதனை புத்தி (போற்றும் பொருள் கேளாய்)
  3. சபலமாம்படி அபேக்ஷித்தல்/நிர்பந்தித்து கேட்டல் (குற்றேவல் எங்களைக் கொள்ளாமல்)
  4. ப்ரயோசனாந்த்ர வைமுக்யம். வர்ணாஶ்ரம தர்ம வ்ருத்திக்காக ஆசை (இற்றை பறை கொள்வான்)
  5. விரோதி நிவ்ருத்தி ப்ரார்த்தனை (ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு உறவேல்)
  6. பல ப்ரார்த்தனை (மற்றை நம் காமங்கள் மாற்று)

30 பாசுர மங்களும் தினம் ஸேவிக்காவிடினும், இந்த ஒரு பாசுரத்தையாவது தினம் ஸேவித்து உய்யும் வழி பெறவேணும் என்பது பராசரபட்டரின் கருத்து.

———–

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்
கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.–30-

இழை -இழைதல் -நடந்து கொள்ளுதல் -ப்ரபந்ந நிஷ்டை -அபய பிரதானம் பெற்றவர்கள் -ந்யாஸ வித்யை ஸர்வ உப ஜீவ்யம்

நமக்குப் பறைதரும் நாராயணனை!
பாற்கடலில் பையத்துயின்ற பரமனை!
ஓங்கி உலகளந்த உத்தமனை!
பத்மநாபனை!
மாயனை!
ஹரியை!
கேசவனை!
தேவாதி தேவனை!
வைகுந்தனை!
அருங்கலத் தை!
முகில் வண்ணனை!
மனத்துக்கினியானை!
புள்ளின் வாய் கீண்டானை!
பங்கயக்கண்ணனை!
வல்லானை!
மணிவண்ணனை!
குல விளக்கை!
ஓடாத தோள்வலியனை!
மலர் மார்பனை!
விமலனை!
சுடரை!
அபிமானனை!
பூவைப்பூவண்ணனை!
குன்றைக்குடையாக்கினானை!
நெடுமாலை!
கோல விளக்கை!
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனை!
குறையொன்றுமில்லாத கோவிந்தனை!
அன்று காண் கோவிந்தனை!
செல்வத்திருமாலை!

சேதனர்களாகிய நாமனைவரும் கரணத்ரயம் படைத்ததன் பயனாக உள்ளத்திருத்தி, வாயினால் பாடி, செவியால் கேட்டு அனுபவித்து மகிழ்வோம்!

ஆக இப்படி எம்பெருமானின் இணையில்லா திருநாமங்களைக் கொண்டு தொடுத்த பாமாலையை அனுதினமும் அனுஸந்தித்து ஆண்டாளின் அருளுக்குப் பாத்ரமாவோமாக.

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை ஒரு புதிய கண்ணோட்டம் —

January 17, 2023
ஸ்ரீ  திருப்பாவை ஒரு புதிய கண்ணோட்டம்

கிருஷ்ணாவதாரம் தசாவதாரத்தில் ஒன்பதாவது. எட்டு அவதாரத்தில் செய்ய முடியாததைச் செய்ய கிருஷ்ணாவதாரம் எடுத்தாராம். ஏனென்றால் இதில்தான் நம்மை உய்யச்செய்யும் கீதை சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்வர் பெரியோர்..

பகவான் பாமர ஜனங்களையும் உய்விக்க அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்தில் , அதாவது சாஸ்திர அறிவு இல்லாமல் அன்பு ஒன்றையே அறிந்த ஆய்க்குலத்தில் வளர்ந்து அன்பின் மகத்துவத்தை எடுத்துரைத்தான். இந்த அன்பே பின்னர் கீதையாய் மலர்ந்தது.

ஸஹஸ்ரநாம்னாம் புண்யானாம் த்ரிருக்தானாம் யத் பலம்–தத் பலம் லபதே ஜந்து: க்ருஷ்ண இத்யக்ஷரமாதரத:

கிருஷ்ணா என்ற பெயரை உச்சரித்த மாத்திரத்திலேயே ஆயிரம் நாமங்களை மூன்று முறை கூறிய பலன் , மனிதர் மாத்திரம் அல்ல எந்த உயிருக்கும் கிடைக்கிறது.

அப்படி இருக்கையில் கிருஷ்ணனை சதா ஸ்மரித்துக் கொண்டிருந்த கோப கோபியரைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?

த்வாபர யுகத்தில் கண்ணன் செய்ததை கலியுகத்தில் செய்தவள் ஆண்டாள். திருப்பாவை மூலம் பக்தி, கரம யோகம் ஞானயோகம் எல்லாவற்றையும் காட்டியவள். பக்தியில் மூன்று வகை. முதலாவது பூஜை, அவன் பாதங்களில் மலரிட்டு வணங்குவது. இரண்டாவது நாம சங்கீர்த்தனம் – அவன் நாமங்களை கீர்த்தனம் செய்வது, மூன்றாவது அவனையே சரணம் என்று அடைவது. இந்த மூன்று விதங்களும் முறையே திருப்பாவையின் முதல் பத்து, இரண்டாவது பத்து, மூன்றாவது பத்து பாசுரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

கோதா என்ற சொல்லின் பொருள் என்ன என்று பார்க்கலாமா?

காம் ததாதி இதி – பகவானை அடைய உதவும் வாக்கை அளித்தவள்

கவா தத்தா –பூமியால் கொடுக்கப்பட்டவள்

கா: தமயதி- புலனடக்கத்தை போதிப்பவள்.

அரங்கன் திருவரங்கத்தை விட்டு ஸ்ரீ வில்லிபுத்தூர் வந்தான். திருப்பாவை எல்லா இடத்திலும் ஒலிக்கிறதே அதற்கு ஏன் ஸ்ரீவில்லிபுத்தூர் போக வேண்டும் என்று கேட்டாள் அவனுடன் கலந்து ஒன்றாக இருக்கும் ஆண்டாள். அதற்கு அவன் கூறினான். “ எப்போதும் விளை நிலத்திலேயே போய் விளைந்ததை வாங்குவது வாங்குவது விசேஷம் அல்லவா? ஆகையால் திருப்பாவையை அது விளைந்த நிலமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே கேட்டு ரசிக்க வேண்டும் என்று எனக்கு ஆவல். நான் வடபத்ரசாயியாக அங்கு இருக்கிறேன் நீயும் அங்கு கோயில் கொண்டுள்ளாய் அல்லவா. இருவருமாக உன் தீஞ்சுவைத் தேன் ஆகிய பாசுரங்களை ரசிப்போம். “ என்றான்.

இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் திருப்பாவை சாற்றுமுறை நடந்து கொண்டிருக்கிறது.

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழ படிந்தேலோ ரெம்பாவாய்

அரங்கன் கேட்டான் “ கோதை , நீ என் மார்கழி மாதத்தை தேர்ந்தெடுத்தாய்?” என்று.

கோதை கூறினாள். “ மாதங்களில் நான் மார்கழி என்று கூறிவிட்டு ஒன்றும் அறியாதவர் போல் இந்தக் கேள்வி ஏன்? அது மட்டும் அல்ல. உங்கள் நாமங்களில் கேசவன் என்ற நாமம் மார்கழி மாதத்திற்கு உரியது அல்லவா? அதில் என்ன விசேஷம் என்றால் ‘க’ என்றால் பிரம்மா, ‘ஈச’ என்றால் சிவன். நாராயணன் ஆகிய பரப்ரம்மத்தின் வசம் இருவரும் என்ற பொருள் ‘வ’ என்னும் சொல்லாகும். “

ஒன்றும் அறியாதவன் போல் “அப்படியா” என்ற அரங்கன், மேலும் மார்கழி தேவர்களின் விடியற்காலை அல்லவா? “ என்றான்.

“ அதுமட்டுமா. இந்த மாதம் ஒரு வருடத்தில் பெய்யும் மழையின் வித்தைக் கொண்டது. இந்த பல காரணங்களால் இந்த மாதம் புண்ணிய மாதமாகக் கருதப்படுகிறது. அதனால் இந்த மாதத்தில் செய்யும் புண்ணிய காரியங்கள் நற்பயனை அளிக்கின்றன.” என்றாள் ஆண்டாள்.

அரங்கன் சிரித்து, “ நீ பூமாதேவி என்பதை நிரூபித்துவிட்டாய் . அதுசரி, மதி நிறைந்த நன்னாள் என்று கூறியுள்ளாயே, மாதம் பௌர்ணமி அல்லாத நாளில் பிறந்தால் இது சரிவராதே ?” என்றான்.

“நீ இதயத்தில், வரும் நாள் மதி நிறைந்த நாள் அல்லவா?”என்றாள் கோதை.

“ஆஹா, உன் வார்த்தைகள் எனக்கு என் பிரிய சகோதரியைக் குறித்து அபிராமி பட்டர் கூறியது நினைவுக்கு வருகிறது. அமாவாசை அன்று அவர் பௌர்ணமி இன்று எனக்கூற அவர் வார்த்தையை மெய்ப்பிக்க அவள் அருளால் முழு நிலா வந்ததே !” என்றான் அந்த மாயவன்.

“ ஆம் அவளும் பெரிய மாயக்காரி அல்லவா? உன் மறுபக்கம் தானே அவள்?” “ என்றாள் கோதை.

“இந்த மார்கழியில் எல்லா பெண்களையும் கூட்டிக்கொண்டு நீராடச் சென்றாய், “ என்ற அரங்கனை இடை மறித்து கோதை கூறினாள். “நீராடுவது என்பது உண்மையில் உன்னை அடைவது என்று பொருள்.”

“ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தர் மகளான நீ ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்களை அழைக்கக் காரணம்? , என்ற அரங்கனைப் பார்த்து கோதை,

“எங்கே பிறந்தால் என்ன ? நீ உள்ளத்தே இருக்கையில் நாங்கள் செல்வமுடையோர் , செல்வச் சிறுமீர். அப்சர ஸ்திரீகள் கோபியர்களாக மாறலாம், நாங்கள் மாறக்கூடாதா? “ என்றாள்.

“நீ கிருஷ்ணனானால் நாங்கள் எல்லோரும் கோபியர்தான் , “ என்று ஆண்டாள் சொன்னவுடன் அரங்கன் கிருஷ்ணனாக மாறிவிட்டான்.

கண்ணனாகக் கேட்டான், “ என் தந்தை நந்தகோபர் ஒரு உயிருக்கும் தீங்கிழைக்காத சாதுவானவர். அவரைப் போய் கூர்வேல் கொடுந்தொழிலன் என்று கூறியது நியாயமா?”

ஆண்டாள் கூறினாள். சாதுப் பிராணியான பசுவும் தன் கன்றைக் காக்க புலியையும் எதிர்ப்பதில்லையா ? அது போல உனக்கு தீங்கு நினைப்பவரை எதிர்க்கும் திறன் கொண்டவரஅல்லவோ உன் தந்தை? “

“ஆனாலும் என் தாய் ஏரார்ந்த கண்ணி,அழகிய கண்ணை உடையவள் என்று சொன்னது சரிதான் என்ற கண்ணனிடம்,

”அந்த கண்ணுக்கு அழகு எப்படி வந்தது தெரியுமா? உன்னைப் பார்த்துக் கொண்டே இருந்ததனால்தான்.” என்ற கோதை , “இந்த வார்த்தை உன்னையும் நினைவுபடுத்தியது, ஏரார்ந்தகண்ணி என்றபோது உன் மார்பில் விளங்கும் வைஜயந்தி மாலை நினைவுக்கு வந்ததும் உன் அழகில் ஆழ்ந்துவிட்டேன். அதனால் உன்னை யசோதை இளம் சிங்கம்,கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் என்று வர்ணிக்கத்தோன்றியது” என்றாள்.

கண்ணன் முறுவல் செய்து, “ முதலில் நந்தகோபன் குமரன் , பிறகு யசோதை இளம் சிங்கம், “ என்றவனிடம் ,’ ஆம் உன் தந்தையுடன் இருக்கும்போது தந்தைக்கடங்கின இளம் பிள்ளை. ஆனால் தாயிடம் ஒரு இளம் சிங்கம் போல் இருப்பாய். செல்லப்பிள்ளை அல்லவா? “

“ உன்னை கார்மேனிச் செங்கண் என்று ஏன் வர்ணித்தேன் தெரியுமா? அன்பர்களுக்கு கருணை என்ற மழையைப பொழிவதால். மழை மேகம் போன்று வண்ணம் கொண்டவன் நீ. பக்தர்களைக் கண்டு ஆனந்த மிகுதியால் உன் கண் செந்நிறம் கொண்டது.”

“ கதிர்மதியம் போல் முகத்தான் என்றது உன் கண்கள் பக்தர்களுக்கு தீங்கு இழைப்பவரை நோக்கும்போது கதிரவனைப் போல் தீவிழிக்கும் . பக்தரை நோக்கையில் மதியைப் போல் குளிர்ந்திருக்கும் அல்லவா?” என்றாள் ஆண்டாள்.

“ ஆனால் இடைச் சிறுவனைப் போல் நீ போட்ட வேஷம் எங்களுக்குத் தெரியாதென நினைத்தாயா? நீதான் நாராயணன் என்றறிவோம்,. அதனால்தான் ‘நாராயணனே நமக்கே பறை தருவான் ,’ என்றேன் “ என்ற கோதையைப் பார்த்து கண்ணன் ,

“கோதையே , இந்த உலகம்தான் ஆயர்பாடி . சுலப பக்தியால் என்னை அடையலாம் என்று ஒரு ஆச்சார்ய ஸ்தானத்தில் இருந்து வழி காட்டினாய். நீ காட்டிய பாதை ஒரு மார்க்க சீர்ஷம், தலையான பாதை. இதை மார்கசீர்ஷம் என்னும் இந்த மார்கழியில் கூறியது பொருத்தமே. “ என்றான்.

————-

வையத்து வாழ்வீர்காள் நாங்கள் நம் பாவைக்கு

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பைய துயின்ற பரமனடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டேழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யாதனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி

உய்யும் ஆறெண்ணி உறங்கேலோரெம்பாவாய்

“மிகவும் கடுமையான விரதம்தான் அதுவும் உலகத்தில் உள்ளோர் எல்லோருக்கும் “ என்றான் கண்ணன் இந்தப் பாசுரத்தைக் கேட்டு.

“ ஆம். வையத்து வாழ்வீர்காள் என்று எல்லோரையும் ஏன் கூவி அழைக்கிறேன் தெரியுமா? இந்த மண்ணுலகம் மற்ற உலகங்களைக் காட்டிலும் சிறந்தது. ஏனென்றால் இங்குதான் உன்னை பக்தியுடன் அடைய முடியும். அதனால் தானே பராசர பட்டர் அரங்கனாகிய உன்னை இங்கிருந்து பக்தி செய்வதை விட்டு பரமபதமானாலும் வேண்டாம் என்றார். என்றாள் ஆண்டாள்.

“ அது சரி ஆயினும் உன்னுடைய சட்டதிட்டங்கள் மிகவும் கடுமையானதாகத் தோன்றுகிறது. நான் இப்படி எல்லாமா இருக்கச் சொல்கிறேன்? “ என்ற கண்ணனிடம், “ நீ பக்தவத்சலன். ‘பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி ததஹம் பக்த்யுப்ஹ்ருதம் அச்னாமி பிரயதாத்மன: ‘ என்று ஒரு இலை பூ பழம் அல்லது வெறும் நீர் எதுவானாலும் பக்தியுடன் தருவதை ஏற்கிறேன் என்றாய் . “

“ஆனால் இந்த மனிதர்கள் ஒரு கட்டுப்பாடு இல்லாவிட்டால் நீ ‘பக்தியுடன்’ என்றதையே மறந்து ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்துவிடுவார்கள். எல்லோரும் கோபியர் அல்லவே. உலகத்தில் உள்ள இன்பங்களில் ஈடுபட்டு உன்னை மறந்து விடுவார்கள்.அதனால் உடல் உள்ளம் இவைகளுக்கு ஒரு ஒழுக்க நெறியை விதிக்க வேண்டும். அதனால் உன்னையே நினைக்கும் பக்குவம் வரும் “ என்றாள் ஆண்டாள்.

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்றது கர்மேந்த்ரியங்களை கட்டுப்படுத்த.. மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் என்றது உடல் பற்றை அகற்ற.” என்ற ஆண்டாளைப் பார்த்து கண்ணன் நீங்கள் ஒரு அலங்காரமுமே செய்து கொள்ளாமல் வந்தால் உங்களை யார் பார்ப்பது?” என்று நகைத்தான்.

“ நாங்கள் உன்னை அலங்காரம் செய்வதில் இன்பம் காண்கிறோமே தவிர எங்கள் உடலை அல்ங்கரிப்பதில் அல்ல. ஆனாலும் பரமனடிபாடி என்று உன் நாமசங்கீர்த்தனம் செய்து வரும் எங்களை பார்க்காமல் இருப்பாயா? ‘மத்பக்தா யத்ர காயந்தி தத்ர திஷ்டாமி நாரத’, என் பக்தர்கள் நாமசங்கீர்த்தனம் செய்யும் இடத்திலெல்லாம் நான் இருக்கிறேன் என்று சொன்னவன் ஆயிற்றே” என்றால் ஆண்டாள்.

“ வாயைக்கொடுத்து மாட்டிக்கொள்வது என்பது இதுதான் ,” என்ற கண்ணனிடம் “ நீ இந்த நோன்பு முடியும்போது நாங்கள் கேட்டதை கொடுப்பயல்லவா, அது வரை நாங்கள் நெய்யுண்ணோம் பாலுண்ணோம் மையிட்டெழுதோம் மலரிட்டு முடியோம், பிறகு எல்லா அலங்காரமும் செய்து கொள்வோம் சுவையான பாற்சோறு சாப்பிடுவோம் “ என்ற ஆண்டாளிடம் கண்ணன் குறும்புப் புன்னகையுடன் கூறினான்,

“ இது எனக்கு போன அவதாரத்தில் கைகேயியை நினைவூட்டுகிறது .” என்று.

அதற்கு ஆண்டாள் கூறினாள். அவள் உன் பிரிவை விரும்பினாள். நாங்கள் உன் சேர்க்கையை அல்லவா விரும்புகிறோம்? “

“ எங்கள் விரதம் எப்படி வேறுபட்டது என்றால் மனம் திரிந்த கைகேயி போல் இல்லாமல் மனத்தூய்மையை மேற்கொள்ளும் விரதம் இது.

“செய்யாதனசெய்யோம் என்றால் இரண்டு வகையான காரியங்கள் செய்ய மாட்டோம். அதாவது க்ருத்ய அகரணம், செய்யவேண்டியதை செய்யாமல் இருப்பது அதாவது உன் வழி பாடு எங்கள் நித்ய கடமைகள் முதலியவை. இன்னொன்று அக்ரருத்ய கரணம் செய்யக்கூடாததை செய்வது. இதில் தீக்குறளை சென்றோதோம் என்பது அடங்கும் . தீக்குறளை அதாவது கடும் சொற்கள் கூறுதல் , பிறரை இழித்துரைக்கல் முதலியன, என்று சொன்னவளை இடைமறித்து கண்ணன் கேட்டான் , “அதென்ன சென்றோதோம் , எங்கு சென்று இவைகளை செய்வீர்கள்.?என்றான். ஆண்டாள் கூறினாள், பிறரை பற்றி அவதூறு சொல்பவர்கள் அவரிருக்கும் இடம் சென்றோ அல்லது மற்றவர் இருக்கும் இடம் சென்றோ இதே வேலையை செய்வார்கள் அல்லவா., அதைக் குறிப்பிட்டேன். “

“செய்யாதன செய்யோம், என்று கூறி விட்டாய் . எதை செய்வோம் என்று கூறவில்லையே?’என்ற கண்ணனை நோக்கி அடுத்து என்ன கூறினேன் என்று பார்க்கவில்லையா ? ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி , இவையெல்லாம் செய்ய வேண்டியவை. “

“இதற்கும் விளக்கம் சொல்லிவிடேன் “என்றான் கண்ணன்.

“ ஐயம் என்பது கேட்காமலேயே கொடுப்பது, பிச்சை கேட்டபின் கொடுப்பது , ஆம்தனையும் கைகாட்டி என்றால் இயன்ற அளவு கொடுப்பது. கேட்காமலேயே கொடுப்பவன் நீ., கேட்டபிறகு கொடுத்தவன் மகாபலி. அவனுக்கு இயலாத அளவு த்ரிவிக்ரமனாய் நின்றவன் நீ” என்ற ஆண்டாளிடம் “ இதைத்தான் எதிர்பார்த்தேன் “ என்று சிரித்தான் அக்கள்ளன்.

“ ஆனால் இந்த விதிமுறை எல்லாம் கடுமையாகத் தோன்றுகிறதே தவிர உன்னை மனதில் கொண்ட எங்களுக்கு , உடல் பற்றோ, பசியோ தோன்றுமா என்ன ? உன் நாம்சங்ககீர்த்தனம் என்னும் அமுதம் நாவில் இருக்க வேறு எந்தச் சுவை வேண்டும், உய்யும் ஆறு எண்ணி உகந்திருக்கையில்?” என்ற கோதையிடம். “அதென்ன ஆறு எண்ணி,” என்றான் கண்ணன்.

ஆண்டாள் கூறினாள். “ பகவானாகிய உன் குணங்கள் ஆறு, பிரபத்தியின் அங்கங்கள் ஆறு, அன்று நீ வரதனாக திருக்கச்சிநம்பிகளுக்கு ராமானுஜரின் பொருட்டு கூறிய வார்த்தைகள் ஆறு , த்வயமந்த்ரத்தின் பதங்கள் ஆறு,”

“ அடேயப்பா, அதற்கு மேல் ஆறாகப் பெருகும் உன் பக்தி கடலாகிய என்னை அடைந்துவிட்டது அல்லவா? என்ற கண்ணன் ,

“ நான் பாற்கடலில் பையத் துயின்றவன் என்றாயே அதற்கு என்ன அர்த்தம் ? “ என்றான்

“ அதாவது நீ துயில்கின்றாய் என்று நாங்கள் ஒருபோதும் ஏமாறவில்லை என்று அர்த்தம்” என்ற கோதை, அதனால் தான் பையத்துயின்ற பரமன் என்றேன். நீ பரம்பொருள் , உண்மையில் துயின்றால் உலகம் அழிந்துவிடுமே? ஒரு தந்தை தூங்குவதுபோல் குழந்தைகளை கண் காணிப்பது போலவும் ஒரு குடியானவன் தன் பயிரைக் காக்க வீட்டை விட்டு வந்து வயலில் துயில்வது போலவும், நீ உன் பரமபதத்தை விட்டு எங்களைக் காக்க பாற்கடலில் துயில் கொண்டவன் போல் இருக்கிறாய். ஒரு ஆபத்து என்றால் துள்ளி எழுந்து விடுவாய் என்று எங்களுக்குத் தெரியாதா? அதனால் தான் நாங்களும் இந்த உலகில் நிம்மதியாக இருக்கிறோம். என்றாள் ஆண்டாள்.

கண்ணனின் மயக்கும் புன்னகையே இதற்கு பதிலாக அமைந்தது.

——————-

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி

நாங்கள் நம்பாவைக்கு சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயலுகள

பூங்குவளைப்போதில் பொறிவண்டு கண்படுப்ப

நீகாதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்

கண்ணன் கூறினான்.

“கோதை, முதலில் என்னை நந்தகோபன் குமரன் என்றும், யசோதை இளம் சிங்கம் என்றும் கூறினாய். பிறகு பாற்கடலில் துயில்பவனாகக் காட்டினாய் . இப்போது என்னை ஒருகாலில் நிற்க வைத்து விட்டாய் “ என்றான்.

அதற்கு கோதை பதிலளித்தாள். “ ஒரு முறை அல்ல மூன்று முறை உன் த்ரிவிக்ரமாவதாரத்தை திருப்பாவையில் சொல்லி இருக்கிறேன். ஏன் தெரியுமா? இந்த அவதாரம் எல்லாவற்றிலும் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் அது உன்னுடைய பராக்கிரமம் கருணை இரண்டையும் காட்டிற்று அல்லவா!”

“ ஆனால் சிலர் நான் மகாபலியை வஞ்சித்து விட்டேன் என்று சொல்கிறார்களே? ஒரு வாமனனாய் வந்து அவனை ஏமாற்றிப் பிறகு உலகளந்தானாக மாறியது வஞ்சகம் என்று சொல்கிறார்கள்.”

“விஷயம் தெரியாதவர்கள் ஏதோ கூறிவிட்டுப் போகட்டும். நீ வந்தது அவனை தண்டிக்க அல்ல. அவனுடைய இகலோக சாம்ராஜ்யத்தை எடுத்து விட்டு பக்தி சாம்ராஜ்யத்தைக் கொடுக்க அல்லவா? வாமனனாக வந்தாய் என்றால் அது உன் மாயை. எந்த அவதாரத்தில் நீ மாயம் செய்யாமல் இருந்தாய் ?” என்றாள் கோதை.

அதுவும் அல்லாமல் எல்லாமே உன்னுடையது அதை எடுத்துக்கொள்வது எப்படி வஞ்சகம் ஆகும்? மகாபலியுடன் உன் கருணை முடிந்துவிட்டதா? இல்லையே . உன் பாதகமலத்தில் இருந்து உற்பத்தியான கங்கை உலகம் முழுவதையும் புனிதப் படுத்தவில்லையா? அதனால் தான் ஓங்கி உலகளந்த உத்தமன் என்றேன். என்றாள் ஆண்டாள்.

“மூன்றடி மண் கேட்ட உனக்கு மகாபலி கொடுத்தது ஓரடி மண்தானே . இதை நான் சொல்லவில்லை . நம்மாழ்வார் கூறுகிறார். ஓரடியால் உலகம் முழுதும் வ்யாபித்தான். இரண்டாவது அடிக்கு எங்கே இடம்? என்கிறார். “ என்ற கோதையிடம், “இந்த விரதத்தால் நீவேண்டுவது என்ன?” என்றான் கண்ணன் .

“வேறு என்ன உன்னை அடைவதுதான்’” என்றவளிடம், “ஆனால் இந்த பாசுரத்தில் நீ வேண்டுவது வேறாக உள்ளதே?

1.தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,

2.ஓங்கு பெரும் செந்நெலூடு கயலுகள

3. பூங்குவளைப்போதில் பொறிவண்டு கண்படுப்ப

4.வள்ளல் பெரும் பசுக்கள்

5. இவைகளால் நீங்காத செல்வம்

இவைதானே நீ கேட்பது என்றான்.

ஆண்டாள் கூறினாள். “இவை என் வேண்டுகோள் அல்ல.உன் நாமத்தின் பெருமையை எடுத்துரைத்தேன். ஓங்கி உலகளந்த உத்தமனாகிய உன் பேர் பாடினால் இவை எல்லாம் கிடைக்கும் என்றும் நாமம் நாமியை விட உயர்ந்தது என்று காட்டவும்தான். திரௌபதியையும் கஜேந்திரனையும் காத்தது உன் நாமம் அல்லவா? “

“நீராடல் என்பது உடல் மற்றும் உள்ளத்தூய்மை. சாற்றி நீராடுவது என்றால் எந்தச் செயலையும் உன் கைங்கர்யமாகச் செய்வது “.

இதைச் சொல்கையில் நான் கோகுலத்திற்கே சென்று விட்டேன்.,” என்றாள் ஆண்டாள்.

“ அப்படியானால் மற்ற வரிகள் கோகுலத்தை வர்ணிப்பனவா? என்றான் கண்ணன் .

“ஆம். நீ வந்த பிறகு கோகுலத்தில் மாதம் மும்மாரி மழை பொழிந்தது, தீங்கின்றி , அதாவது அளவாக. அதன் விளைவாக நெற்பயிர்கள் ஓங்கி வளர்ந்தன. நீர்ப் பெருக்கினால் நிறைந்த வயல்களில் மீன்கள் விளையாடின. குவளை மலர்களில் தேன் உண்ட வண்டுகள் வயிறு நிரம்பியதால் அங்கேயே கண் வளர்ந்தன. “ என்றால் ஆண்டாள்.

அதற்கு கண்ணன் “ எனக்கும் கோகுலத்தில் இருப்பதுபோல் இருக்கிறது.” என்றான்,.

“ஆனால் என் மனதில் தோன்றிய காட்சி வேறு. .” என்றாள் ஆண்டாள். “ ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயல் உகள “ என்றபோது அந்த ஓங்கிய பயிர்கள் உன் பக்தர்களின் மனத்தை ஒத்திருந்தன .அதனூடே சென்று விளையாடிய மீன் எது தெரியுமா? பக்தர்கள் மனம் புகுந்து விளையாடும் மகா மத்ஸ்யமான நீயே. அவர்கள் இதயமான் குவளை மலரில் புகுந்து ஆனந்தமாகக் கண்வளர்ந்த பொறிவண்டும் நீயே. என்றாள் கோதை.”

“என் பிரியமான ஆவினத்தைக் கண்முன் கொண்டு நிறுத்திவிட்டாய். ‘தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்’ என்று கூறி. உண்மை. பக்கத்தில் வந்து கை வைக்கும்போதே பாலை சொரிந்து குடம் நிறைத்தவை அவை “ என்ற கண்ணனிப் பார்த்து,

கோதை கூறினாள், “ அவை பெரும் பசுக்களாக இருந்ததற்கும் கை வைத்தவுடன் பாலை சொரிந்ததற்கும் அவை உன்மேல் கொண்ட அன்பல்லவா காரணம் ?”

“நீ சொல்வது முற்றும் உண்மை. கோகுலத்தில் நான் பெற்ற ஆனந்தம் வைகுண்டத்திலும் எனக்கு ஏற்படவில்லை .” கோபாலன்.

“உன்னிடம் வருவோர்க்கெல்லாம வாரி வழங்கும் வள்ளல் பெரும் பசு நீயே அல்லவா? எங்கள் சிறுமதியால் உன்னிடம் குடத்துடன் வருவதற்கு பதில் ஒரு சிறு கோப்பையுடன் வருகிறோம்.. . உன்னையே தரத் தயாராக இருக்கும் உன்னிடம் அல்ப உலக சுகங்களைக் கேட்கிறோம். அது எங்கள் மதியீனமே தவிர உன் கருணையின் குறை அல்ல.” என்றாள் ஆண்டாள்.

——————-

ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகர்ந்துகொடார்த்தேறி

ஊழிமுதல்வன் உருவம் போல் மெய் கருத்து

பாழியன் தோலுடை பற்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்

வாழ் உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்

ஆண்டாளும் கண்ணனும் பேசிக் கொண்டிருக்கையில் மேக மூட்டம் காணப்பட்டது. அதைக்க்கண்டு ஆண்டாள் கூறினாள்.

“ கண்ணா உன்னை நான் ஓங்கி உலகளந்த உத்தமன் என்று கூறியதைக் கேட்டு மேகங்கள் நீ எங்கே கங்கைபெருக்கை உண்டாகியது போல் மழையையும் உண்டாக்கி அவைகளை பயனற்றவையாக செய்துவிடுவாயோ என்று பயந்து விட்டன போலும்.தாமாகவே வந்து நின்றுவிட்டன. “ என்றாள்.

“அல்ல. ஆழிமழைக்கண்ணா என்ற உன் பாசுரத்தைக் கேட்டு கீழ்ப்படிந்து வந்து விட்டன. பஞ்ச பூதங்களும் என் பக்தர்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும். “ என்றான் கண்ணன்.

அதற்கு ஆண்டாள், “ அது சரி. ஆனால் நான் ஆழிமழைக்கண்ணன் என்றது உன்னையல்லவா? எல்லாவற்றிலும் உள்ளே இருந்து இயக்குபவன் நீதானே? கருணையாகிற மழை பொழியும் மேகம் நீயல்லவா? அதனால் ஒன்று நீ கை கரவேல் என்றது பாரபட்சம் இல்லாமல் எங்கும் மழை பொழியட்டும் என்ற பொருள் காணப்பட்டாலும், என் குழந்தைகளான இந்த பூமியில் உள்ள எல்லா உயிர்கட்கும் உன் கருணை மழையைப் பொழிவாயாக என்று உன்னை வேண்டிக்கொள்கிறேன்.” என்றாள்.

“மேகங்கள் நான் அவைகளைத்தான் சொல்கிறேன் என்று வந்து நின்று விட்டதால் அவைகளுக்கு ‘ஆழியுள் புக்கு’ என்று கடலின் உள் புகுந்து நீர் மட்டும் அல்ல, மற்ற முத்து ரத்தினங்கள் இவற்றையும் எடுத்துக்கொண்டு, ‘முகர்ந்து கொடு ஆர்த்தேறி,’ உயரச்சென்று , நடுவில் எங்கும் பெய்து விடாமல் எல்லா உயிர்களும் நன்மை அடையுமாறு , ‘வாழ உலகினில் பெய்திடாய்’ என்றேன், என்ற ஆண்டாள்,

“அந்த மேகங்களைப் பார்த்ததும் உன் கார்மேக வண்ணம்தான் நினைவுக்கு வந்தது. அதனால் ஊழி முதல்வன் போல் ‘மெய்கறுத்து,’ என்றேன்.

கண்ணன் கேட்டான் அதென்ன ‘ஊழிமுதல்வன் போல் ‘?

ஆண்டாள் கூறினாள்,” பிரளயத்திற்குப் பின் படைப்புக்கு முன் கருணையினால் கறுத்த உன் மேனி எல்லா உயிர்களையும் உள்ளே அடக்கினதால் நீருண்ட மேகம்போல் உள்ளதல்லவா? ஆனால் மேகம் மழையைப் பொழிந்த பின்னர் வெண்மை நிறம் கொண்டதாகி விடுகிறது. ஆனால் உன் கருணை என்ற மேகம் எவ்வளவு பொழிந்த போதிலும் நிறம் இழப்பதில்லை. வற்றா நீருள்ள கடலைப்போல. “.

“ஊழிக்காலம் என்றவுடன் அடுத்து வரும் சிருஷ்டி நினைவுக்கு வந்தது போலும். அதனால் என்னை பத்மநாபன் என்றாய் இல்லையா ?” என்றான் கண்ணன்.

“ஆம். பத்மநாபன் என்றபோது உன் நாபியில் உள்ள பிரம்மாவும் நினைவுக்கு வருகிறார் அல்லவா? அதன்பின், சிருஷ்டிக்குப் பிறகு உன் கருணையை வெளிப்படுத்தும் செயல்கள் நினைவுக்கு வந்ததில் என்ன அதிசயம்? ‘ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து ‘ என்றது உன் துஷ்ட நிக்ரஹம் சிஷ்ட பரிபாலனம் இவற்றைக் குறிக்கும் சொற்கள். மின்னல் போல மின்னி தீயோர்க்கு பயத்தை விளைவிக்க, சங்கம் இடிபோல் அவர்களை நடுங்க வைக்கிறது. “ என்றாள் கோதை. “

“ இந்திரன் ஆணைப்படி கோகுலத்தில் பெய்த மழை ஆயர்களை இப்படித்தான் நடுங்க வைத்தது , என்றான் கண்ணன்.

“ஆனால் உன் கருணை என்ற மலை அவர்களைக் காத்ததே? “ என்ற கோதை, “உன் ஆயுதங்களும் உலகைக் காக்கவே. ‘சார்ங்கம் உதித்த சரமழை ,’ என்றது உன்னை சரண் புகுந்த முனிவர்களைக் காக்க ராமாவதாரத்தில் உன் வில்லிலிருந்து புறப்பட்ட சரமழை. மகாபாரதப் போரில் நீ சங்கம் எடுத்து ஊதியவுடன் கௌரவர் மனதில் நடுக்கம் ஏற்பட்டது என்றாரே வியாசர். “ என்றாள் கோதை.

“ இந்த உவமை எனக்கு வேறொரு மேகத்தை நினைவூட்டுகிறது. நம்மாழ்வார் என்ற மேகம் நானாகிய கடலில் இருந்து என் அருளாகிய நீரை எடுத்து நாதமுனியாகிய மலை மேல் வர்ஷிக்க , அது உய்யக்கொண்டார் ராமமிச்ரர் என்கிற அருவிகள் மூலம் ஆளவந்தார் ஆகிய நதியை அடைந்து கடைசியில் ராமானுஜர் ஆகிய ஏரியில் எல்லோரும் நலம் பெறுமாறு தங்கியது. “என்ற கண்ணனிடம் ,

“அந்த நீர் ஆழ்வார்கள் என்ற பல ஊற்றுகளாகவும் பரிணமித்து மக்களுக்கு நன்மை செய்தது. “ என்றால் கோதை.

“ ஆமாம் அந்த ஊற்றுகளில் பேரூற்று நீதானே என்று நகைத்தான் கண்ணன்.

———————-

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர்குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது

வாயினால் பாடி மனதினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய்

“ கோகுலத்தில் ஆரம்பித்து நந்த கோபன் குமரன், யசோதை இளம் சிங்கம் என்று சொல்லிப் பிறகு, நாராயணன், பையத்துயின்ற பரமன், ஓங்கி உலகளந்த உத்தமன், பத்ம நாபன் என்றாய். இப்போது மறுபடி புறப்பட்ட இடத்திற்கே வந்துவிட்டாய் போலும். நான் இப்போது மதுரை மைந்தன், யமுனைத் துறைவன் ஆகிவிட்டேன் . “ என்றான் கண்ணன்.

“ நான் உன்னை மாயன் என்றேன். ஏன் தெரியுமா? உன் கிருஷ்ணாவதாரம் முழுதும் விளக்க முடியாத மாயம். மதுரையில் பிறந்தாய் ஆகையால் மதுரை மைந்தன். கோகுலம் வந்து ஆயர்குலத்து அணி விளக்காக ஆனாய். தூய பெருநீர் யமுனைத் துறையில் நீ செய்த மாயங்கள் கொஞ்சமா? , “என்ற ஆண்டாளிடம்,“அதென்ன தூய பெருநீர் யமுனை ? “ என்றான் கண்ணன்.

“ஆம், யமுனையின் தூய்மை கங்கையிலும் மேலானது. ஏனென்றால் நீ புகுந்து விளையாடியதால். மேலும் வசுதேவர் உன்னைச் சுமந்து வரும்போது கம்சனுக்கு பயப்படாமல் வழி விட்டாள் அல்லவா? கோதாவரியைப்போல் அல்லாமல்? “ என்றால் கோதை.

“ஏன் கோதாவரியுடன் ஒப்பிடுகிறாய்? “ என்ற கண்ணனிடம் கோதை, “ “ராமனாக நீ சீதை எங்கே என்று கேட்ட போது ராவணனுக்கு பயந்து கோதாவரி பதிலுரைக்கவில்லை அல்லவா?’ என்றாள்.

கண்ணன் கூறினான். “ஆனால் வேதாந்த தேசிகர் . சொல்கிறார். ‘ப்ராயேண தேவி பவதீவ்யபதேச யோகாத் கோதாவரி ஜகதிதம் பயஸா புநீதே,’ கோதாவரி நதி கோதா என்ற உன் பெயரை தன்னுள் கொண்டதால் தன் நீரால் இந்த உலகை புனிதமாக்குகிறது என்று.”

அதைக்கேட்டு நாணத்தால் தலை குனிந்த கோதையை பார்த்து , “அதிருக்கட்டும் , தாயைக்குடல் விளக்கம் செய்த தாமோதரன் என்று நான் உரலில் கட்டுப்பட்டதைத்தானே சொல்கிறாய்? “ என்றான்.

“ ஆம். நவநீத சோரனாய் எல்லோர் உள்ளத்தையும் கவர்ந்தாய். உரலில் கட்டுப்பட்டு தாமோதரன் என்று பெயர் பெற்றாய். உன் தாய் உன்னைக் கட்ட எந்தக் கயிறு எடுத்தாலும் அது இரண்டு அங்குலம் குறைவாக இருக்கக் கண்டு அயர்ச்சியுற அப்போது அவ்ளுக்கிறங்கி கட்டுப்பட்டாய். அதை நினைவு கூர்ந்த நம்மாழ்வார் ‘எத்திறம்’ என்று அதிசயித்து ஆறுமாதம் உணர்ச்சிப்பெருக்கால் நினைவற்று இருந்தார் அல்லவா?”

கண்ணன் “ ஆம். அந்த அடையாளத்தை இப்போதும் அரங்கனான என் உந்தியில் காணலாம். என் தாயின் நினைவாக அதை இன்னும் சுமக்கிறேன்.” என்றான் கண்ணன்.

“தாயைக் குடல் விளக்கம் செய்தவன் அல்லவா, தாமோதரன், உதரத்தில் கயிறால் கட்டுப்பட்டவன், என்று சொல்லும்போதே உன் தாய் நினைவும் கூட வருகிறதே அத்துடன் இந்த மாயமும் வாய் திறந்து உலகம் காட்டிய மாயமும் நினைவுக்கு வருகிறது. அதனால் தான் தாயைக் குடல் விளக்கம் செய்தவன் என்றேன். அதாவது அவளுக்கு புகழ் அளித்தவன். “

“அதுவும் உன் மாய லீலை. நலகூபுரர்களின் சாபத்தைத் தீர்க்க. “ என்றவளிடம் கண்ணன் கூறினான்.

“அதனால் தான் வேதாந்த தேசிகர் என்னை உரலில் கட்டுப்பட்டவனாக யார் நினைக்கிறார்களோ அவர்கள் மறுபடி சம்சாரம் என்ற கட்டுக்குள் புக மாட்டார்கள் என்று சொல்லி, அந்த உரலை என் ,மேனி சம்பந்தம் பெற புண்ணியம் செய்த உரல் என்கிறார்.”

“ மிகுதியுள்ள வரிகளைப் பார்க்கலாமா? “ என்ற கண்ணிடம் கோதை கூறினாள்.

“தூயோமாய் வந்து தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி மனதினால் சிந்திக்க. ‘மலர் தூவித் தொழுவது , உடல் தூய்மை, வாயினால் பாடி என்பது வாக்குத்தூய்மை, உன்னை சிந்திப்பது மனத்தூய்மை. இதனால் என்ன பயன்?

“போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும். போய பிழை என்பது இதுவரை பயன் கொடுக்காத ஆனால் வரப்போகும் ஜன்மங்களில் பயன் கொடுக்கும் கர்மம். சஞ்சித கர்மா. புகுதருவான் என்பது இந்த ஜன்மத்தில் செய்யும் கர்மம் இனிமேல் பலனளிக்கக் கூடியது, ஆகாமி கர்மா. நின்றனவும் என்பது இப்போது அனுபவிக்கும் கர்ம பலன் பிராரப்த கர்மா. இம்மூன்றும் தீயிலிட்ட தூசிபோல் அழிந்துவிடும்.”

“ இனி மற்றவரை எழுப்பி பாகவதானுபவத்தில் திளைக்கச் செய்யும் உன் இனிய பாசுரங்களைக் கேட்க ஆவலாக உள்ளேன் என்றான் கண்ணன்.

—————-

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோவிலில்

வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ

பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு

கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சி

வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்து கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெல்ல எழுந்து ஹரி என்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்

கண்ணன் இதைக் கேட்டுவிட்டு கூறினான்.

கோதையாக வந்த உன் நோக்கம் பக்தி ஒன்றே என்னை அடைய எளிதான வழி என்பதைக் காண்பிக்கவே என்று அறிவேன். இந்தப் பாவை நோன்பைத் தொடங்கி இளம் கன்னியரை அதிகாலையில் எழுந்து உன்னுடன் நாம சங்கீர்த்தனம் செய்து அதன் மூலம் அதைக் காண்போர் மனதில் பக்தியை ஊட்டுவது என்பது நல்ல முடிவு. ஆனால் உன் சொற்கள் ஆயர்பாடி சிறுமியரை அல்லவா நினைவூட்டுகின்றன? “ என்றான்.

“ஆம் . என்னை ஒரு கோபியாக பாவித்து மற்ற என் தோழிகளையும் அவ்வாறே கற்பனை செய்தேன். இந்த பாவை நோன்பு வியாசரால் பாகவதத்தில் கோபியர் செய்ததாகத்தானே சித்தரிக்கப் பட்டுள்ளது? “ என்றாள் கோதை.

“முடிவில் என்னைக் கண்டு உங்கள் கோரிக்கையை முன்வைக்கத்தான் கூட்டமாக வந்தீர்களாக்கும் . அப்போது நான் கொடுத்துத்தானே ஆகவேண்டும்? என்றான் கண்ணன்.

“நாங்கள் கூட்டமாக வந்ததன் காரணம் என்னவென்றால், தனியாக வந்தால் உன்னைக் கண்டதும் உலகமே மறந்து விடும்.அப்புறம் எப்படி வேண்டுவன கேட்பது? அதற்குத்தான் சேர்ந்து வந்தோம். ஒருவருக்கொருவர் தைரியம் சேர்க்க,” என்ற கோதை, மேலும் கூறலுற்றாள்.

“ ஒரு மனதிற்கினிய நிகழ்வு மற்றவருடன் சேர்ந்து அனுபவித்தால் அதிகம் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. நல்லதை நாலுபேருடன் பகிந்துகொள்ள வேண்டும் அல்லவா? பரதன் கௌசல்யையிடம் தனக்கு ராமன் காட்டுக்குப் போவதைப் பற்றி முன்னமே தெரிந்திருந்தால் என்னென்ன பாவத்தின் பலனை அனுபவிப்பான் என்று கூறும்போது, ஒரு இனிய பண்டத்தை யாருக்கும் கொடுக்காமல் உண்ணும் பாவத்தையும் செர்த்த்குக் கொள்கிறான் அல்லவா? எங்களுக்கு உன்னை விட இனியது எது?” என்றாள்.

புள்ளினம் கூவும் , சங்கம் ஒலிக்கும் கோவில் புள்ளரையன் கோவில் என்றாயே அது கருடனைத்தானே குறிக்கும் ? என்ற கண்ணனிடம் ,

“புள்ளரையன் கோவில் என்றது உன் கோவிலை. புள்ளரையன் என்பது கருடன் தான் பட்சிகளுக்கு அரசன் என்ற அர்த்தத்தில்ஆனால். அந்தப் புள்ளரையனின் கோ, நீதானே. உன் இல் அல்லது இல்லம் தானே கோவில். “

“ அங்கு ஒலிக்கும் சங்கு உன் அன்பர்களின் மனதில் புகுந்து உன்னை நினைவூட்டுகிறது. அதனால் அதன் ஓசை பேரரவம் ஆகிறது. “

கண்ணன் கூறினான். “பூதனை சகடாசுரன் இவர்களைப் பற்றி சொல்ல விசேஷ காரணம் ஏதும் உளதோ?”

“ஆம், சிறு குழந்தையாய் இருந்தபோதே நீ செய்த அற்புதச் செயல்கள் அல்லவா அவை? “ என்றாள் ஆண்டாள்.

“ நீ பூதனயிடம் ஸ்தன்யபானம் செய்தபோது கண்ணை மூடிக்கொண்டாயாமே அவள் உன் கடாக்ஷம் பட்டால் அவளை கொள்ள முடியாது என்றா? “ என்ற கோதையைப் பார்த்து சிரித்த கண்ணன் “ ஆம் அப்படித்தான் என் பக்தர்கள் கற்பனை செய்து கொள்கிறார்கள். நாராயண பட்டாத்ரி என் கால் பட்டு உடைந்த சகடத்தின் ஒரு துகள் கூட காணப்படவில்லை என்று கூறின மாதிரி.” என்றான்.

“ ஆமா அவர்களுக்கு நீ ஆயர் குல சேய் அல்ல , வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்து என்பது தெரியாதல்லவா? என்றாள் கோதை.

“உலகத்தின் வித்தாகிய நீ பாற்கடலில் பாம்பணை மேல் பள்ளி கொள்ள உன்னை முனிவர்களும் யோகிகளும் உள்ளத்தில் கொண்டு மெல்ல எழுந்திருக்கிறார்கள் தங்கள் த்யானத்தில் இருந்து. ஏன்தெரியுமா ? உன் துயில் கலையக்கூடாதாம். அப்போதுதானே அவர்கள் வந்து உனக்கு திருப்பள்ளி எழுச்சி பாடமுடியும்? “

“அப்படியானால் ஹரி என்ற பேரரவம் எங்கிருந்து வந்தது என்றான்” கண்ணன்.

“அப்படிக்கேள் , நீ உறங்கினால் அல்லவா உன்னை எழுப்ப முடியும்? உன்னைக் கண்டவுடனே மெய்ம்மறந்து ஹரி ஹரி என்று பேரரவம் செய்தார்கள். ‘ என்றாள் ஆண்டாள்.

“வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்து கொண்டு,” என்ற சொற்கள் எனக்கு உன் தந்தையான பெரியாழ்வாரையே சொல்வது போல் இருக்கிறது. அவர்தானே ‘ அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து ‘ என்று நான் அவர் உள்ளத்தில் எவ்வாறு ஆதிசேஷனுடனும் பாற்கடலுடனும் , லக்ஷ்மி யோடும் வந்து புகுந்தேன் என்று பாடினாரே!” என்றான் கண்ணன்.

அதற்குக் கோதை “ அவர் மட்டும் அல்ல, உன் பக்தர்கள் அனைவரும் முனிவர்களும் எல்லோரும் உன் நாமத்தைச் சொல்ல அதுவே பேரரவம் ஆயிற்று.” என்றாள்.

‘ஆம். அந்த பக்தி வெள்ளத்தில் நானும் மூழ்கினேன்.” என்றான் கண்ணன்.

“உண்மையில் சொல்லப்போனால் பாற்கடல் எது? பாலைப்போல் தூயதாக உள்ள உள்ளமே அல்லவா? அதில் அரவு என்னும் ஆயிரம் தலை நாகம் அதாவது உலக இச்சைகள் எல்லாம் அடங்கி அதில் நீ மட்டுமே துயில் கொள்கிறாய். மற்ற இச்சைகள் அடங்கி உள்ளம் பால்போல் தூயதாக ஆகுமேயானால் இறைவனாகிய நீ தானாகவே வந்து வாசம் செய்கிறாய் என்று அர்த்தம்.” என்று சொன்ன கோதையிடம் “நன்று நன்று” என்றான் அந்த ரங்கசாயி.

—————-

கீசு கீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசைப்படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ

நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ

தேசம் உடையாய் திறவேலோரெம்பாவாய்

கண்ணன் கூறினான். “ விடியற்காலையைப் பற்றி ஒரு அழகான வர்ணனை. ஆனைச்சாத்தன் என்ற வலியன் குருவி கீச் கீச் என்று ஒன்றோடுஒன்று கலந்து பேசும் அரவம், ஆய்ச்சியர் தயிர் கடையும் அரவம். இதுதான் எனக்குப் பிடித்தது. வெண்ணை கிடைக்கும் அல்லவா?”

“ தயிர் கடையும் அரவம்ஆயர்பாடியில் ஏன் உரக்கக் கேட்கிறது தெரியுமா? நீ வந்தபின்னர் பால் மிகுந்த ஆடையுடன் இருக்க தயிர் பாறைபோல் கெட்டியாக ஆகிவிட்டது. அதை மிகுந்த பிரயாசையுடன் கடையும்போது , காசும் பிறப்பும் என்னும் அவர்கள் கழுத்தில் உள்ள ஆரம் சப்தம் செய்தது.” என்ற ஆண்டாளைப் பார்த்து,

“வாச நறும் குழல் என்றாயே , நக்கீரர் காதில் விழப்போகிறது. பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் கிடையாது என்று கூறிக்கொண்டு வரப் போகிறார், “ என்று நகைத்தான் கண்ணன்.அதற்கு கோதை பதில் கூறினாள்.

“அவர்கள் யார்? அப்சர ஸ்திரீகள் தானே கோபியராக வந்தனர். அவர்கள் கூந்தலில் நறுமணம் வீசுவதில் வியப்பென்ன?”

“நான் பேசின பேச்சரவம் என்று கூறியது பட்சிகளின் பேச்சை அல்ல. ஒரு யானையைக் கொன்று மற்றொரு யானைக்கு அபயம் அளித்ததால் ஆனைச்சாத்தன் என்றது உன்னை. கலந்து பேசின பேச்சரவம் நீயும் திருமகளும் பக்தர்களைக் காக்க நிகழ்த்திய சம்பாஷணை. உங்களைப் பற்றி நினைவே இல்லாமல், நாங்கள் நாராயணன் மூர்த்தி கேசவன் ஆகிய உன்னைப் பாடுவது கேட்டும் மஞ்சத்தில் கிடந்தவளை பேய்ப்பெண்ணே என்றேன்.” என்றால் ஆண்டாள்.

அப்போது கண்ணன் கேட்டான். “உடனே நாயகப் பெண்பிள்ளாய் என்றாயே , அவள் கோபித்துக் கொள்வாள் என்றா?”

“ இல்லை. அவள் நாங்கள் கூப்பிட்ட உடனே வந்து சேர்ந்து நாம சங்கீர்த்தனத்தில் கலந்து கொண்டதால் நாயகப் பெண்பிள்ளாய் என்றேன்.

“உன் சொற்களுக்கு சில அன்பர்கள் வேறு உள் அர்த்தம் கொள்கிறார்கள். காசு பிறப்பு என்பது ஸ்ருதியும் ஸ்ம்ருதியும். கலகலப்ப என்றால் அவை சேர்ந்து ,என் புகழ் பாடுவது. வேதத்தை நன்கு கற்றுணர்ந்த, வாச நறும் குழல் ஆய்ச்சியர், பக்தி என்னும் மணம் வீசும் ஆசார்யர்கள், கை பேர்த்து, உயர்ந்த கைகளுடன் என் பெருமையைக் கூறுகிறார்கள், என்று பொருள் எனக் கூறுகிறார்கள்.

“அது நான் செய்த பாக்கியம், உன் திருவருள்,” என்ற கோதை, தயிர் கடைவது என்பது பக்தி என்ற மத்தினால் மனத்தைக் கடைவது என்று வைத்துக் கொண்டால் நீ வெண்ணை என உன்னை வெளிப்படுத்துவாய். “ என்றாள்.

—————–

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை

கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய

பாவை எழுந்திராய் பாடிப்பறை கொண்ட

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்

“ கீழ் வானம் வெள்ளென்று அதாவது கிழக்கு வெளுக்க, நீராடப் போகும் மிக்குள்ள பிள்ளைகளை போகாமல் காத்து இந்தப் பெண்ணை எழுப்புகின்றாய். சரி. எருமை சிறு வீடு மேய்வான் என்றாயே அது எதற்கு.” என்ற கண்ணனிடம்,

பொழுது விடிந்ததும் முதலில் எருமைகளை மேய்ச்சலுக்கு விடுவார்கள் பிறகுதான் பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்துப்போவது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது ஏன் என்று கோபாலனாகிய உன்னையன்றி வேறு யார் அறிவார்? “ என்றால் ஆண்டாள்.

“ ஆம். அதைக் கூறவே இந்தக் கேள்வி, “ என்ற கண்ணன் , விடியல்காலையில், புற்கள் மீது பனி படர்ந்திருக்கும்.இது பசுக்களுக்கு ஒவ்வாதது. ஆனால் எருமைகள் அந்தப்புல்லைத் தின்று அதிகமாக பால் கறக்கும் இயல்புடையவை.,.” என்றான் .

“கோதுகலமுடைய பாவை என்றால் அது கௌதூஹலம் என்ற வடமொழிச்சொல்லின் திரிபா “என்றவனிடம் ஆண்டாள் கூறினாள்.

“அப்படியும் எடுத்துக்க்கொள்ளலாம். இது உனக்குப பிரியமான பக்தரைக் குறிக்கிறது. பாவை என்றால் பதுமை போல உன்னையே நினைத்து அசைவற்றிருப்பவர்.

“கோதா என்ற பெயருக்கேற்ப சொல்லின் சக்தியால் பக்தியை ஊட்டும் உன்னை விடவா எனக்கு பிரியமானவர் ஒருவர் இருக்க முடியும்.”

“ சரி, அடுத்த வரிகளைப் விளக்குகிறாயா? “ என்றான் கண்ணன்.

“மாவாய் பிளந்தான் என்பது நீ கேசி என்ற குதிரை வடிவில் வந்த அரக்கனை வாய் பிளந்து அழித்தது. மல்லரை மாட்டிய, என்பது கம்சனால் ஏவப்பட்ட மல்லரை வீழ்த்தியது.”

“அப்படிப்பட்ட உன்னை சென்று நாம் சேவித்தால், ஆவாவென்று ஆராய்ந்து, நம் பக்தியை உள்ளபடி அறிந்து அருள்வாய் என்று கூறினேன்.” என்றாள் ஆண்டாள்.

“நான் ஆராய்ந்தா அருளுகிறேன்? என் பக்தர்கள் யாவரும் எனக்கு ஒன்றுதானே? “என்றான் கண்ணன்.

“ஆம் உண்மை. ஆனால் முதல் அடி நாங்கள் எடுத்து வைக்க வேண்டும் அல்லவா? அதனால்தான் சென்று நாம் சேவித்தால் நம் பக்தியை உணர்ந்து கேட்டதெல்லாம் அருள்வான் என்றேன்.” என்றாள் கோதை.

“கோதா என்ற பெயர் படைத்தவளான உன் வாக்கிலிருந்து வரும் சொற்கள் எல்லாம் உயரிய அர்த்தம் வாய்ந்தவை. இநத பாசுரத்தை என் அன்பர்கள் எப்படி எல்லாம் வர்ணிக்கிறார்கள் தெரியுமா? “ என்ற கண்ணன் மேலும் கூறினான்.

“மாவாய் பிளந்தான் என்பது இந்த்ரியங்களாகிய குதிரைகளை அடக்கி , மல்லரை மாட்டிய அதாவது எதிர்வாதம் செய்தவர்களை ஜெயித்து உலகில் பக்தியை நிலைநாட்டிய ராமானுஜர் போன்ற ஆசார்யர்களைக் குறிக்கிறது. .”

“போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை கூவுவான் என்பது இந்த்ரியங்களின் வழியில் போகின்றவர்களை காத்து நல்வழிபடுத்தும் ஆசார்யர்கள். “

கோதை , “எல்லாம் உன் திருவுள்ளமே அல்லவா? என் வாக்கில் வந்த வார்த்தைகள் நீ தந்தது தானே?” என்றாள்.

————–

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழ துயிலணை மேல் கண்வளரும்

மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ நும் மகள்தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

எமப்பெரும் துயில் மந்திரப்பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றும்

நாமம் பலவும் நவின்றேலோரெம்பாவாய்

“தூமணி மாடம் என்றதும் எனக்கு கோகுலம் நினைவுக்கு வருகிறது. அங்குள்ள எல்லா மாளிகைகளிலும் ரத்தினங்கள் பதிக்கப் பட்டு தூமணி மாடங்களுடன் ஜகஜ்ஜோதியாக விளங்கும் .ஒரு சம்ப்ரதாயத்திற்காகத்தான் அங்கு விளக்கு ஏற்றுவது வழக்கம்.” என்றான் கண்ணன்.

“நானும் கோகுலத்திற்கே போய்விட்டேன் கற்பனையில், அதனால் தான் அந்த மாளிகையில் உறங்கும் பெண்ணை மாமன்மகளே என்றேன். “

“உண்மையில் பக்தர்களுக்கு பகவத்ஸம்பந்தம் உடையோர்தான் பந்துக்கள். அல்லாதார் பிறப்பினால் உற்றார் ஆனாலும் மற்றாரே. மாதவா வைகுந்தா என்று உள்ளத்தில் பக்தியை பிறப்பிப்போரே உண்மையான பெற்றோர்.” என்ற கோதையிடம் “ என்னை மறுபடியும் மாமாயன் என்று கூறிவிட்டாயே?” என்றான் கண்ணன்.

“மாமாயன் என்றால் மா அதாவது லக்ஷ்மியின் பதி , மாதவன் என்று பொருள். ஆனாலும் நீ மாமாயன்தானே. உன் மாயை என்பது ஒரு கறுப்புக் கண்ணாடிக் கதவு. அதன் மூலம் நீ எங்களைப் பார்க்கிறாய் ஆனால் அது உன்னை எங்களுக்கு மறைக்கிறது. “

“விராதன் கூறினானே, ‘பசு அதன் கன்றை எங்கு இருந்தாலும் அடையாளம் கண்டு கொள்ளும். அதுபோல எங்களை நீ அறிவாய் . ஆனால் உன் திருவுள்ளம் அன்றி நாங்கள் உன்னை அறிய முடியாது.; என்று. இந்திரன் முதலிய தேவர்களாலேயே உன்னை இனம் கண்டுகொள்ள முடியாமல் உன் மாயை மறைத்தல்லவா?” என்றாள் கோதை.

“‘அமைவுடை நாரணன் மாயையை அறிவார் யாரே ,’ என்று நம்மாழ்வார் கூறினபடி உன் மாயையை யாரால் அறிய முடியும்? என்ற ஆண்டாளிடம் , “ம்ம், அப்புறம்? “ என்றான் அந்த மாயவன்.

“உன் மாய லீலைகளுக்கு ஒரு எல்லை உண்டா என்ன ? வராஹாவதாரத்தில் சமுத்திரம் உன் கணுக்கால் வரை தான் இருந்தது . ஆனால் கிருஷ்ணாவதாரத்தில் உன் தாய் ஒரு கை ஜலத்தால் உன்னை நீராட்டினாள். அதுமட்டுமா? ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ,’ என்பாதத்தை சரணமடை,’ என்று சொன்னவன் தாய் நீராட்டும்போது அவள் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாயே!” என்றாள் கோதை.

“இப்போது மற்ற வரிகளைக் காண்போமா? “ என்றான் கண்ணன்.“தூமணி என்றது வேதங்கள் ஸத்யஸ்ய ஸத்யம் என்ற உன்னைத்தான் .நீ இருக்கும் உள்ளமே மாடம். சுற்றும் சுருதி ஸ்ம்ருதி புராணம் என்ற விளக்குகள் உன்னைப்பற்றிய அறிவை விளக்குகின்றன. உன்னில் ஆழ்ந்து இருப்பதே துயிலணை மேல் கண் வளர்வது, அந்த நிலையில் உள்ளவன் இந்த்ரியங்கள் வெளிப்பார்வை அற்று ஊமையைப் போலவும் , செவிடைப் போலவும், அனந்தல், அதாவது பித்தனைப் போலவும் தோற்றம் அளிக்கிறான். உலக சிந்தனை அற்று ஏமப் பெருந்துயில் கொண்டவன் போல் காணப் படுகிறான் . அப்படி உள்ளவர்கள் வெளிப்போந்து மற்றவர்க்கு வழி காட்டுவதென்பதே மணிக்கதவம் தாள் திறப்பது.அது நீ திருவுள்ளம் கொண்டால் தான் இயலும் . அதற்குத்தான் மாமீர் என்று புருஷகாரபூதையான திருமகளை அழைக்கிறோம். “ என்றாள்.

“அடேயப்பா, நான் ஏதோ பெரிய மாளிகையில் சுகமான பஞ்சணையில் தூங்கும் பெண்ணை எழுப்புகிற வரிகள் என்று நினைத்தேன்.” என்றான் கண்ணன்.

“ ஒரு பகவதனுபவத்தில் ஈடுபட்ட ஒருவரை உருவகப்படுத்தியதுதான் அந்தப் பெண்ணைப பற்றிய வர்ணனை. “ என்றால் கோதை.

“உன் அடுத்த பாசுரத்திற்காக நான் வேறு வேடம் அணிகிறேன் “ என்று நகைத்தான் கண்ணன்.

“ஆம் வில்லேந்தி வரவேண்டும்.” என்றாள் கோதை.

———————

நோற்றுச்சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத்துழாய் முடி நாராயணன் நம்மால்

போற்றப்பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்

தோற்றும் உனக்கே பெரும் துயில்தான் தந்தானோ

ஆற்ற அனந்தல் உடையாய் அரும் கலமே

தேற்றமாய் வந்து திறவேலோரெம்பாவாய்

“நீ கும்பகர்ணனை சொல்லப்போவதால் நான் ராமனாகிவிட்டேன் .”என்றான் கண்ணன்.

“இந்தப் பெண் உன்னை அடைவதே சுவர்க்கம் என்ற எண்ணத்தை உடையவள். ஆனால் அதை மறந்து இங்கே தூங்குகிறாள். கதவையும் திறக்கவில்லை , மறுமொழியும் தரவில்லை.அதனால் தான் கும்பகர்ணன் என்றேன்.” என்ற கோதை,

உண்மையில் எங்களுக்கு சுவர்க்கம் என்பது உன்னை அடைவதுதான். நோற்று என்றால் பக்தி மூலம் அடைவது. புகுகின்ற அம்மனார் என்பது உன்னை சேர்கின்ற பக்தர்கள்.”

“ வாசல் திறவாதார் யார் ? உன்னை சேரவொட்டாமல் தடுக்கும் த்வாரபாலகர்களான இருவினைகள் . அவை மாற்றமும் தாராரோ, அதாவது புண்ணியமாக மாறி விடாவோ?’

“உனக்கு சர்வ நிச்சயமாக பக்தர்களுக்கு எந்தத்தடையும் ஏற்படாது என்று தெரியுமா?” என்றான் கண்ணன்.

“ஆம், ஏனென்றால் நீ நாராயணன் ஆனாலும் நம் மால் , பக்தர்களை இனவேறுபாடில்லாமல் ஏற்றுக் கொள்பவன். போற்றப் பறை தரும் புண்ணியன். ஜடாயு சபரி இவர்கள் நினவு வந்ததால் ராமனாக உன்னைக் காண்கிறேன் “ என்றாள்.

”அது சரி, அவர்களுடன் கும்பகர்ணனும் நினைவுக்கு வந்தானோ ?” என்று குறும்புப் புன்னகை புரிந்தான் ராமனாக நின்ற கண்ணன்.

ஆண்டாள் கூறினாள். “ முக்திக்கு முக்கிய இடையூறுகள் , உன்னைப் பற்றிய அறிவின்மை, அதனால் உலக இன்பங்களில் ஈடுபாடு. கும்பகர்ணன் இந்த்ரிய சுகங்களில் ஈடுபடாத சமயங்களில் உறங்குவான். இதுதான் கூற்றத்தின் வாய் வீழ்வது,.மரணம், ஜனனம், மரணம் என்ற சுழலில் அகப்படுவது. அவன் ராமனான உன்னால் வீழ்ந்தான் அந்தப பெரும் துயிலை கலியில் மக்களுக்கு அளித்துவிட்டு. அதைத்தான் கூற முயன்றேன். “ என்றாள்.

“அதெல்லாம் சரி. திடீரென்று ராமனாக என்னைக் காண விரும்பியது ஏன்.”

“ சொல்கிறேன் . ராமனான நீ புண்ணியன் , ‘ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்றபடி. மேலும் சரணாகத ரக்ஷகன், ‘அபயம் சர்வபூதானாம் ததாமி இதி ஏதத் வ்ரதம் மம, என்னை சரணம் புகுந்தவன் யாரானாலும் ராவணனே ஆயினும் அவனைக் காப்பாற்றுவேன் என்ற விரதம் பூண்டவன் அதனால் போற்றப்பறை தரும் புண்ணியன் என்றவுடன் உன் ராம ஸ்வரூபம் மனக்கண்முன் தோன்றியது. “ என்றாள் கோதை.

“ஆற்ற அனந்தல் உடையாய் என்பது பரம ஏகாந்தியாக உன்னையே நினைத்திருப்பவர். அவர் அருங்கலமாக எல்லோருக்கும் ஒரு தீபத்தைப் போல் வழி காட்டுகிறார். “ என்ற கோதையிடம் , “நான் வேஷத்தைக் கலைத்துவிடவா ,”என்றவனை “இரு, இரு, இன்னும் ஒரு பாசுரம் ஆகட்டும் அப்புறம் மறுபடி இவ்விதமே வரவேண்டி இருக்கும்.” என்றால் கோதை.

—————-

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து

செற்றார் திறலழிய சென்று செருச்செய்யும்

குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே

புற்றரவல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்துத் தோழிமார் யாவரும் வந்து நின்

முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட

சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ

எற்றுக்குறங்கும் பொருள் ஏலோரெம்பாவாய்

“ இப்போது பசுக்களை கறக்கும் நேரம் வந்துவிட்டதாக்கும்.” என்ற கோபாலன் ,” கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து என்று நீ சொல்வது மிகவும் சரியானதே. ஆயர்பாடியில் கணக்கிலாத பசுக்கள். பால் ஏராளமாக இருந்த போதிலும் அவைகளின் மடிக்கனத்தைக் குறைப்பதற்காகவே கறப்பது வழக்கம். அதுவும் ஒரு தேகப் பயிற்சியாகவே யாதவர்கள் செய்வார்கள். ஏனென்றால் நீ கூறியுள்ளபடி செற்றார் திறலழிய சென்று செருச்செய்பவர்கள் அல்லவா? எதிர்ப்பவர்களை வெல்ல பலம் வேண்டுமே” என்றான் கண்ணன்.

“ ஆனால் ஆயர்களுக்கு யார் எதிரிகள்? உனக்கும் உன் அன்பர்களுக்கும் கெடுதல் நினைப்போரே. ஏனென்றால் அவர்கள் குற்றம் ஒன்றில்லாத கோவலர்கள் அல்லவா?” என்றாள் கோதை.

“ நீ எழுப்ப நினைக்கும் பெண் அப்படி ஒருவர் பெண்ணல்லவா? பொற்கொடி, அழகான பொற்கொடியைப்போன்றவள் , புற்றரவு அல்குல், புற்றில் இருந்து வெளிப்படும் பாம்பைப் போன்ற அளகபாரம் உடையவள், புன்மயில், ஆடும் மயில் என்று வர்ணித்தாயே , பாம்பும் மயிலும் எங்காவது ஒரே இடத்தில் இருக்குமா? “ என்றான் கண்ணன்.

“ பொற்கொடி என்றால் கோல் தேடி ஓடும் கொழுந்தே போல் மால் தேடி ஓடும் மனம் படைத்த பக்தர் , பத்தரை மாற்றுத் தங்கம் போன்றவர். போன்றவர். புற்றரவல்குல் என்றால் ஊருக்குள் இருக்கும் பாம்பு போன்ற பரம ஏகாந்தி. தன் பெருமையை மறைத்துக் கொள்பவர். அதே சமயம் முகில் வண்ணனாகிய உன்னைக் கண்டபோது மேகத்தைக்கண்ட மயில்போல் ஆனந்தம் அடைபவர். “

“அப்படிப்பட்டவர் உன்னுடைய செல்வப்பெண்டாட்டி போன்றவர். உன்னையே நினைந்து சிற்றாதே , அசைவின்றி, பேசாதே , பேச்சின்றி, எற்றுக்கு உறங்கும், , உறங்குவது போல் உன்னில் ஆழ்ந்திருப்பர். “ என்றாள் கோதை.

“ அப்படியானால் முதல் இரு வரிகளின் பொருள் என்ன” என்றான் , கோவிந்தன்.

ஆண்டாள் கூறினாள்.

“கற்றுக் கறவைகணங்கள் என்பது வேதம் உபநிஷத் எல்லாம்.அதை கறந்து பாலை எல்லோருக்கும் கீதை மூலம் வாரி வழங்கியவன் நீ. ‘ஸர்வோபநிஷதோ காவோ தோக்தா கோபாலநந்தன: ,’ என்று சொல்வர் பெரியோர், உபநிஷத் என்ற பசுக்களிடம் இருந்து பாலைக் கரந்தவன் , என்று உன்னை.”

செற்றார் திறல் அழிய சென்று செருச்செய்பவனும் நீயே . பக்தர்களுக்கு ஓர் இடையூறு செய்பவர்களை உடனே சென்று அழிக்கவில்லையா.? கஜேந்திரனுக்கு ஓடி வந்து அபயம் அளித்தாய். பாண்டவர்களுக்கு கெடுதலே செய்துவந்த கௌரவர்களை குருக்ஷேத்ரம் சென்று அழித்தாய்.. ஆகவே குற்றம் ஒன்றில்லாத கோவலன் உனக்கு செல்வப் பெண்டாட்டி போல உள்ள பக்தர்கள் எதற்கு கவலைப்பட வேண்டும்? “ என்றாள்.

“ என்னைசரண் அடைந்தவர்களைக் காப்பது என் கடன்.” என்றான் கோவிந்தன்.

—————-

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலை வழியே நின்று பால்சோர

நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!

அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

“கும்பகர்ணன் வதத்திற்குப் பிறகு இப்போது ராவண வதமா? நான் இன்னும் ராமனாகவே காத்துக்கொண்டிருக்கிறேன் என்றான் கண்ணன்.”’

“ சினந்திங்கு தென்னிலங்கைக் கோமானைச் செற்ற , என்ற வரியின் பொருள் ராவண வதம் மட்டும் அல்ல, “ என்ற கோதையை வியப்புடன் பார்த்து நின்றவனிடம் அவள் கூறினாள்.

‘நோற்றுச்சுவர்க்கம் ‘ என்ற பாசுரத்தில் ‘சென்று செருச்செய்யும் குற்றமொன்றில்லாத கோவலன் ‘ என்று உன்னைக் குறிப்பிட்டதன் பொருள், நீ எப்போதும் மக்களை விட்டு விலகிச் சென்றுதான் போர் புரிவாய். மதுரை மக்களுக்கு இடையூறு நேராத வண்ணம் ஜராசந்தனை வெளியிலே சந்தித்து அவனை நீ ஓடுவதாக ஏமாற்றி த்வாரகைக்கு மக்களையும் அழைத்துச் சென்று விட்டாய். மஹாபாரதப போரும் ஹஸ்தினாபுரத்தில் இருந்து தூரத்தில் குருக்ஷேத்ரத்தில்தான் நடந்தது. ராமாவதாரத்திலும் இலங்கைக்கு வெளியேதான் போர் புரிந்தாய் “ என்ற கோதையைப் பார்த்து, இலங்கையை நான் ஏற்கெனவே விபீஷணனுக்குக் கொடுத்துவிட்டேனே, அதைக் காப்பாற்ற வேண்டாமா என்றான் கண்ணன்.

“அதனால்தான் சினந்து இங்கு தென்னிலங்கைக் கோமானை செற்ற , இலங்கை அரசனைத்தான் அழித்தாயே தவிர இலங்கையை அல்ல , என்ற பொருளில் கூறினேன்.” என்றாள்.

மேலும் கோதை கூறினாள். அதிருக்கட்டும். ராவணனேயானாலும் சரண் அடைந்தவனைக் காப்பேன் என்றாயே, இலங்கையை விபீஷணனுக்கு கொடுத்த பின்பு ராவணன் சரண் அடைந்தால் நீ கொடுத்த வாக்கு என்ன ஆவது?” என்றாள் .

“உன்னையே இழந்தாலும் லக்ஷ்மணனையே இழந்தாலும் கொடுத்த் வாக்கைக் காப்பேன் , என்று நான் சீதையிடம் கூறியதை வைத்துக்கொண்டு என்னை மடக்குகிறாயாக்கும். ராவண யுத்தத்தின்போது என் பதினான்கு வருட வனவாசம் முடியும் தருணம் அல்லவா? அப்போது அயோத்தி என் வசம்தானே? அதை கொடுத்திருப்பேன், என்று சொன்னதும் கோதை, “அய்யய்யோ” என்றாள்.

“பயப்படாதே . அது என் சரணாகதரக்ஷகன் என்ற பெயரை நிலை நாட்டவே. ராவணன் சரணடைய மாட்டான் என்பது எனக்கு மட்டும் தெரிந்த தேவ ரகசியம். அதனால்தான் விபீஷணனுக்கு ‘இந்தா விபீஷணா லங்காபுரி ராஜ்ஜியம்’ என்று கொடுத்தேன்.” என்றான் கண்ணன்.

“ நீ ராமன் வேடத்தில் இருந்தாலும் மாயக் கண்ணன்தான் என்பதை நிரூபித்துவிட்டாய்,” என்ற கோதை,

“அதனால்தான் உன்னை மனத்துக்கினியான் என்று குறிப்பிட்டேன். உன்னை வால்மீகி ‘ஸோமவத் பிரியதர்சன: ‘, உன் தரிசனம் சந்திரனைக் கண்டது போல் ஆனந்தம் அளிக்கிறது என்று கூறினார்.

எருமை தன் கன்றை நினைத்த மாத்திரத்தில் கனைத்து முலைவழியே பால் சோர நிற்பது போல நீ எங்களை நினைத்து உன் அருளாகிய பாலை சொரிந்துகொண்டே இருக்கிறாய், “ என்ற கோதையைப் பார்த்து, “ ஆம் பசுவுக்கு கன்றைப் பார்த்தால்தான் பால் சுரக்கும். பசுக்களைக் கற்க நேரம் ஆனால் அதற்குள் எருமைகள் கன்றை நினைத்து பால் சுரக்கும்,” என்ற கண்ணன் குறும்புடன் கூறினான்.

“ நந்தகோபன் குமரன், யசோதை இளம் சிங்கம் ஆக இருந்த நான் இப்போது எருமை ஆகிவிட்டேனே.”

கோதை அவனுக்கு சளைத்தவளா? “ நீ மட்டும் அல்ல , உன் துணைவியும் கூட.” என்றாள்.

“அப்படியானால் சரி. ஒரு மகிஷத்தின் துணைவியும் மகிஷியாக இருப்பதுதானே நியாயம் “ என்றான் கண்ணன்.

‘ந கச்சித் நாபராத்யதி,’ யார்தான் தவரிழைக்கவில்லை என்று கூறிய சீதா பிராட்டி தன் கன்றை நினைத்துக் கருணைப்பால் சொரியும் மகிஷி , பெண் எருமை போல.அதோடு மட்டும் அல்ல . அவள் உனக்கே கருணையை உபதேசித்தவள், ராவணனுக்கும் ஹிதோபதேசம் செய்தவள்.

நற்செல்வன் தங்காய் என்ற சொல்லும் ஸ்ரீதேவியையே குறிக்கும். தங்காய் என்றது அவள் பொன் வண்ண உருவம். அவள் நற்செல்வனாகிய உனக்கே உரியவள் அல்லவா? செல்வத்திருமகளை அடைந்ததால் நீயும் நற்செல்வன் ஆகிறாய். “ என்ற ஆண்டாளைப் பார்த்து,

“அவளைப் போலவே பூதேவியான உன்னையும் ஆடைந்ததுதான் என்னுடைய பெரும் செல்வம். அவளைப்போலவே நீயும் உன் குழந்தைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு என்னிடம் அவர்களுக்கு அருளும்படி யாசிக்கிறாய் அல்லவா? அதற்காகத்தானே இங்கு அவர்களை நல்வழிப் படுத்த ஆண்டாளாகவும் வந்திருக்கிறாய். “ என்ற கண்ணன் ,

“எனக்கு இந்தப்பாசுரத்தில் ‘அனைத்தில்லம் சேறாக்கும்’, ‘பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி ‘ என்ற வர்ணனை பிடித்திருக்கிறது. இதற்கும் எதாவது விசேஷ விளக்கம் சொல்லப்போகிறாயா” என்றான்.

“ஆம். தலைக்குமேல் நீர்வண்ணம் , அதாவது நீ, கீழே பால்வண்ணம் பாலாக ஓடும் எங்கள் பக்தி, உன்னையே நினைந்து மால்வண்ணம் கொண்ட நாங்கள் அன்பு வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய் நாங்கள் வந்த காரியத்தை மறந்து விடாமல் இருக்க இந்த உடல் உணர்வு என்ற வாசற்படியை விடாமல் பிடித்துக்கொள்ள வேண்டியதாகிறது.

பேருறக்கம் என்பது பகவத் சிந்தனை இன்றி இத்தனை ஜன்மம் கழித்தோமே அதுதான். .” என்றாள்.

————–

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

“இந்தப் பாசுரத்தில் என்னுடைய எந்த ரூபத்தை வர்ணிக்கிறாய் என்று தெரியவில்லையே ? கிருஷ்ணனாகவா, ராமனாகவா அல்லது நரசிம்ஹனாகவா?” என்றான் எல்லாம் அறிந்தவன் ஒன்றும் அறியாதவன் போல்.

ஆண்டாள் கூறினாள். “ என் வாக்கிலிருந்து வரும் எல்லா சொற்களுமே உன் சங்கல்பத்தினால் வருவது. உனக்குத் தெரியாதாக்கும். என் வாயிலாகக் கேட்கவேண்டும் என்பது உன் விருப்பம். சொல்கிறேன்.

“ உண்மையில் மூன்று அவதாரங்களையும் குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம்.

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை என்பதைப் பிரித்து அர்த்தம் கொண்டால்,புள்ளின் வாய் கீண்டான் என்பது நீ கிருஷ்ணனாக நாரை வடிவில் வந்த பகாசுரனைக் கொன்றது. பொல்லா அரக்கன் என்பது ராவணனையும் குறிக்கும் ஆதலால் அது உன் ராமாவதாரத்தையும் சொன்னதாக ஆகிறது. கிள்ளிக்களைநதானை என்பது உன் நரசிம்ஹாவதாரத்தைக் குறிக்கும் , இரணியனை நகத்தால் கிள்ளி அழித்ததால். பிரிக்காமல் ஒரே தொடராகக் கொண்டால், புள்ளின்வாய் கீண்டான், அதாவது ஜடாயுவைக் கொன்ற பொல்லா அரக்கன் ராவணனைக் கிள்ளிக் களைந்தானை, அதாவது ராமனை என்று பொருள்கொள்ளலாம்.”

“பிரமாதம்” என்ற கண்ணன் , “ஆனால் ஒரு சின்ன சந்தேகம். அரக்கன் என்றால் ராக்ஷசன். ஹிரண்ய கசிபு அசுரன் அல்லவா , சுரர்களின் அதாவது தேவர்களின் மாற்றாந்தாய் மக்கள்,” என்ற கண்ணனைப் பார்த்து, “ராமன் என்றதும் கம்ப ராமாயணம் நினைவுக்கு வந்துவிட்டதாக்கும்.. அதையும் என் வாயால் கேட்கவேண்டுமாக்கும் . .கம்ப ராமாயண அரங்கேற்றத்தில் திருவரங்கத்தில் இரணியவதைப் படலத்தின் போது நரசிங்கமாக ஆர்ப்பரித்ததை நானும் கேட்டேனே, “ என்ற ஆண்டாள் கூறினாள்.

“ கம்பன் சொற்படி, “இரக்கம் என்று ஒரு பொருள் இல்லாத நெஞ்சினார், அரக்கர் என்று உளர் அறத்தின் நீங்கினார்.” இந்த முறையில் இரணியனும் அரக்கன் ஆகிறான். பெற்ற பிள்ளை என்று கூடப பாராமல் ப்ரஹ்லாதனைக் கொல்ல முயற்சித்தான் அல்லவா?”

“அருமையாகச் சொன்னாய் “ என்றான் கண்ணன்.

“கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக்களம் புக்கார் , எல்லாப்பெண்களும் உன் புகழ் பாடிக்கொண்டு பாவை நோன்புக்காக வந்து விட்டார்கள். வர மனமிருந்தாலும் எழுந்திருக்க மனமில்லாமல் பள்ளிகொண்டு இருப்பவளைப பற்றிய பாட்டு இது. ‘. போதரிக்கண்ணினாய் என்பது தாமரைக்கண் என்ற பொருளில் சொல்லப்பட்டாலும், அரி அல்லது மனம் என்ற வண்டு, போது அல்லது இந்த்ரியங்களாகிய மலருக்குள் சிறைப்பட்டுக்கிடக்கின்றது. . அதனால் கள்ளம் தவிர்ந்து , கள்ளத்தூக்கத்தை விட்டு வந்து கலந்து கொள் என்று பொருள்,” என்ற ஆண்டாளைப்பார்த்து ,

“அழகான விளக்கம் “ என்ற கண்ணன் கேட்டான், “ஆமாம் நீராடுவது சரி. அதென்ன குள்ளக்குளிர குடைந்து நீராட்டம்? “

ஆண்டாள் கூறினாள், “ நீராட்டம் என்பது உன்னை நினைப்பது. குடைந்து நீராடுவது, உன்னை அர்ச்சாவதாரமாக வழிபடுவது., குளிர நீராட்டம் உன் அவதார ரூபத்தை வழிபடுவது. குள்ளக் குளிர நீராடுவது உன்னை வைகுண்டத்தில் தரிசிப்பது. முதல் இரண்டும் மூன்றாவதற்கு வழி வகுக்கும்,.”

“ ஒன்று சொன்னாய் அதுவும் நன்று சொன்னாய் “ என்றான் கண்ணன்.

——————-

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

“சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் என்று என்னை நாராயணனாகக் காண்கிறாய் அல்லவா இப்போது?” என்றான் கண்ணன்.

“இல்லை , இன்னும் உன்னை கண்ணனாகவே காண்கிறேன். நீ கண்ணனாக அவதாரம் செய்தபோது உன் பெற்றோருக்கு இப்படித்தானே தோன்றினாய்? மேலும் உன்னை பங்கயக்கண்ணன் என்றேனே, எந்த அவதாரம் எடுத்தாலும் நீ உன் தாமரைக் கண்களைக் கொண்டு உன்னை அறிந்துகொள்வோம். ஏனமாய் வந்தாலும் சீயமாய் வந்தாலும் உன் கமலக்கண் உன்னைக் காட்டிக்கொடுக்குமே. “ என்றாள் ஆண்டாள்.

“இந்தப் பாசுரத்தில் உங்களை முன்னம் வந்து எழுப்புவதாகச் சொன்ன பெண்ணை நாணாதாய் நாவுடையாய் என்று எழுப்புகிறாய் போலும்.செங்கழுநீர்ப்பூ மலர்ந்து ஆம்பல் குவிந்தது என்றால் சூரிய உதயம் ஆகிவிட்டது என்று பொருள் அல்லவா? செங்கழுநீர் மலர்வதை வாய் நெகிழ்ந்து என்று கூறினதன் பொருள்? என்ற கண்ணனுக்கு கோதை மறுமொழி கூறினாள்.

“ஏனென்றால் அது வாய் திறந்து சிரிப்பது போல் உள்ளது சூரிய உதயத்தினால் அல்ல. உன் கோவில் திறப்பதை உணர்த்தும் சங்கொலி கேட்டு, உன்னை தான் அலங்கரிக்கப் போவதை உணர்ந்த மகிழ்ச்சியால். அதே காரணத்தால் ஆம்பல் வாய் கூம்பி வருத்தத்தை தெரிவிக்கிறது.”

“செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் என்பது எனக்கு திருப்பாவை ஜீயரான ராமானுஜரை நினைவுபடுத்துகிறது. திருவரங்கத்தில் செங்கல் வண்ண வஸ்திரம் அணிந்து முதலில் தரிசனத்திற்கு வரும் அவரை மனக்கண்முன் காண்கிறேன். “ என்றான் கண்ணன்.

“நினைவுக்கு வருகிறதா? உன் அடியாரை நீ மறந்தால் அல்லவா நினைவுக்கு வருவதற்கு ?” என்றாள் ஆண்டாள்.

“இந்தப் பாசுரத்தில் உங்களை முன்னம் வந்து எழுப்புவதாகச் சொன்ன பெண்ணை நாணாதாய் நாவுடையாய் என்று எழுப்புகிறாய் போலும், செங்கழுநீர் மலர்கள் எங்கும் மலர்ந்திருக்க ‘உங்கள் புழக்கடை தோட்டத்து வாவி என்று சொல்லகாரணம்?” என்றான் கண்ணன் அவள் வாய்மூலம் தத்துவ விளக்கம் வேண்டி,.

“ மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் அதுதான் பொருள். ஆனால் உங்கள் புழக்கடை என்றால் அது சம்சாரம்.அதில் உள்ள தோட்டம் சரீரம். செங்கழுநீர் என்பது ஆத்மகுணங்களான அஹிம்சை, இந்திரிய நிக்ரஹம், ஜீவ காருண்யம், பொறுமை, ஞானம், தவம், தியானம் , சத்யம் இவையாகும். அவை உன் நினைவு என்ற சூரியன் உதிக்கும் போது மனதில் மலர்கின்றன. காமக்ரோதம் முதலிய ஆம்பல்கள் கூம்பி விடுகின்றன.”

“நாணாதாய் என்றால் நாமசங்கீர்த்தனம் செய்ய தயக்கம் தேவையில்லை என்பதைக் குறிக்கிறது. உன் நாமம் சொல்பவர்தான் நாவுடையவர்கள் . மற்றவர்களின் நாவு உண்பதற்கு மட்டுமே. பிற விஷயங்களைப் பற்றி பேசும் நாவு ஒரு வேண்டாத உபயோகமற்ற அங்கம்.” என்ற ஆண்டாளைப் பார்த்து கண்ணன் கூறினான்.‘கோதை, நீ மக்களை நல்வழிப்படுத்த படாத படுகிறாய். . ஆனால் எவ்வளவு தூரம் அது பலனைக் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும். ஏனென்றால் ‘இந்த்ரியாணி ப்ரமாதீனி ஹரந்தி பிரஸபம் மன’: , இந்த்ரியங்கள் பலம் வாய்ந்தவை மனத்தை பலவந்தமாக இழுத்து விடுகின்றன, என்று நான் அன்று அர்ஜுனனுக்கு சொன்னது போல மனித மனம் சஞ்சலிக்கும் சுபாவம் கொண்டது. அதை அடக்குவது மிகவும் கடினம்.” என்றான்.

அதற்கு கோதை, அப்படிச் சொன்ன நீயே ‘ அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேன ச கிருஹ்யதே ‘ என்றுஅதற்கு ஒரு வழியும் கூறினாய் அல்லவா? அதனால் நான் அப்யாஸம், அதாவது முயற்சி, வைராக்கியம், பற்றை விடுவது ஆகிய வழிமுறைகளை உபதேசிக்க முயலுகிறேன். ஒரு சிறு சதவிகிதம் மக்கள் இதைப பின்பற்றினாலும் என் முயற்சி வெற்றி பெற்றதாகக் கருதுவேன்” என்றாள் நம்மை எல்லாம் உய்விக்க வந்த பூமி பிராட்டியான கோதை.

‘எந்த உருவில் நீ வந்தாலும் உன் கமலக்கண் உன்னை காட்டிக் கொடுக்கும்” என்ற கோதையின் வார்த்தைகளை மனதில் கொண்டு எழுந்த பாடல்: ஒரு பக்தன் பகவானை நோக்கிப் பாடும் வகையில் அமைந்தது.

மாயம் எத்தனை செய்தாலென்ன உன் ஜாலம் நானறிவேன்

மறைபொருளாய் நின்று (மாயம் )

சீயமாய் வந்தாலும் ஏனமாய் வந்தாலும் உன்

கமலநயனம் உன்னைக் காட்டிகொடுத்ததே ( மாயம்)

வாமனனாய் வந்து மூவுலகளந்தாய்

வாய் திற என்ற தாய்க்கு புவனம் காட்டினாய்

ஆமையாய் வந்து மலை தாங்கி அமுதம் தந்த

நாடகத்தின் ஊடே நாரணன் உனை அறிந்தேன் ( மாயம்)

——————–

எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?

சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்

வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்

வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

“இது ஒரு புதுமாதிரியாகக் காணப்படுகிறது. வாய்ச்சொல்லில் உனக்கு இணையான பெண்ணாக இருக்கிறாள்.” என்றான் கண்ணன்.

“ஆம் அப்படித்தான் தோன்றுகிறது. எல்லே இளம்கிளியே என்றது எல்லோரையும் விட வயதில் குறைந்தவள் என்ற அர்த்தத்தில் இருந்தாலும் உலகப்பற்று என்ற தங்கக் கூண்டில் உள்ள கிளியைப்போல் பகவத் தியானம் இல்லாமல் இருப்பது உறங்குவதுபோல. பால அல்லது இளம் வயதினர் என்ற சொல் வடமொழியில் ‘ஒன்றும் அறியாத’ என்ற பொருளில் பயன்படுத்தப் படுகிறது அல்லவா?”

“அறியாமை என்ற உறக்கத்தில் ஆழ்ந்தவர்கள் அதிலிருந்து எழுந்திருக்க விரும்புவதில்லை. இன்னம் உறங்குதியோ, என்று எழுப்ப முயற்சி செய்பவர்களையும் நிந்திக்கிறார்கள்..”

:” சில்லென்றழைக்காதீர் , நானே வருவேன் உரிய காலத்தில் என்று சொல்கிறார்கள். “ என்ற ஆண்டாளிடம்

“உரிய காலம் என்றால் ? என்றான் கண்ணன்..

கோதை கூறினாள்.”உரிய காலம் என்றால் இந்த உலக இன்பத்தை அனுபவித்து முடித்த பிறகு என்று அர்த்தம் .”

“அது எப்போது வரும்? அது யயாதிக்கு வரவே இல்லையே .” என்றான் கண்ணன்.

“ இது சங்கரரின் வாக்கை நினைவூட்டுகிறது,

பாலஸ்தாவத் க்ரீடாஸக்த: , குழந்தைப் பருவத்தில் விளயாட்டில் நாட்டம், தருணஸ்தாவத் தருணீஸக்த:, யுவனாக இருக்கையில் பெண்கள் மீது நாட்டம். வ்ருத்தஸ் தாவத் சிந்தா ஸக்த: முதுமையில் தான் அனுபவித்த இப்போது அனுபவிக்க முடியாததை எண்ணி கவலை. ஆனால் எந்த வயதிலும் பகவத் ஸ்மரணம் வருவதில்லை என்று கூறி ‘பஜகோவிந்தம்’ என்றாரே? “

“ஆனால் நீ இந்த மக்களை பகவ்த்பக்தியில் ஈடுபடுத்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறாய். அதைத்தான் வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும் என்றாய் அல்லவா? “ என்றான் கண்ணன்.

“ஆம். உன்னை அடைய விருப்பம் இல்லாதவர் ஆயிரம் வாதங்கள் செய்வார். வல்லீர்கள் நீங்களே , நீங்கள்தான் விதண்டா வாதம் செய்கிறீர்கள் என்று நம்மையே குற்றம் சாட்டுவார்’ பிறகு கொஞ்சம் அறிவு வந்த பின் , சரி சரி என் மேல் தான் தவறு என்று கூறி அப்போதும் வரமாட்டார். நாள் கடத்துவார். “ அதைத்தான் ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை என்றேன்.”

“ வேறுடையை என்றால் தன்னை தயார் செய்து கொண்டு வருகிறேன் என்று தானே பொருள்? என்றான் கண்ணன்.

“ஆம் ஆனால் உன்னை நினைக்கவும் உன்னைப் பாடவும் எதற்காக தயார் செய்து கொள்ள வேண்டும். நான் இன்னும் அந்த நிலைக்கு தயாராகவில்லை என்று ஒருவர் சொன்னால் அது அவர் எந்த நிலையிலும் தயாராக மாட்டார் என்று அர்த்தம்.”

“எப்போது உலகப்பற்று விடும்? நாம்தான் அதை விட வேண்டும்.. கடைசியாக எல்லோரும் போந்தாரோ என்று எல்லோருமா பகவத்த்யானத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்? என்ற கேள்விக்கு போந்தார் போந்தெண்ணிகொள் என்ற பதில் ஒருவர் பகவத் தியானத்தில் ஈடுபட்டுவிட்டால் பக்தர்களைத்தவ்ற வேறு யாரையும் காண மாட்டார்கள் என்பது. “என்ற ஆண்டாளைப் பார்த்து,

“வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க என்றது கஜேந்த்ரனைப் பற்றிய மேற்கோள்தானே ?’என்றான் கண்ணன்.

“வல்லானையாவது குவலயாபீடம் . அதைக் கொன்றவன் நீ. அதற்கு மாற்றாக இருந்த இன்னொரு யானை கஜேந்திரன். அதற்கு மாற்று எதிரியாக வந்த முதலையை அழித்தவன் என்று பொருள் கொள்ளலாம்—- “என்று இன்னும் ஏதோ சொல்ல வருபவள் போல இருக்கும் கோதையைப் பார்த்து கண்ணன்,

“ம்ம் சொல்லு என்றான்.”

“மாறனை மாற்று அழிக்க வல்லான் என்பதற்கு இன்னொரு பொருள் நீ மாற்றான் அதாவது விரோதியை அழிக்காமல் அவனுடைய மாற்று , விரோதத்தை மட்டும் அழிக்க முயல்பவன் என்பது.”

“ அப்படியா ?” என்றான் அந்த மாயன் அவள் வாயிலிருந்தே அதைக் குறித்து கேட்கும் ஆவலில்.

ஆண்டாள் கூறினாள்.

“ ஆம். நீ அவ்வாறு பல சமயங்களில் செய்து இருக்கிறாயே. இரணியனுக்கு கடைசி வரை திருந்த வாய்ப்புக் கொடுத்தாய். ராவணனுக்கு ‘இன்று போய் நாளை வா என்றாய். மகாபலியின் கருவத்தை மாத்திரம் அழித்தாய். இந்திரன் பிரமன் இவர்களின் அகந்தையையும் அழித்தாய்..

அதனால் நீ வல்லான் , எல்லா விரோதிகளையும் அழிக்க வல்லவன் ஆயினும் அவர்களுக்கு கடைசி வரை கருணை காட்டுபவன். ஆனால் மாயன் , மாயைதனை படைப்பாய் மாயையும் துடைப்பாய். “

கண்ணன் கூறினான். “ இப்போது என் மாளிகை வரை வந்தாகிவிட்டது இனிமேல் நேருக்கு நேர் கலந்துரையாடல் தான்”

அதற்கு ஆண்டாள் கூறினாள். “ நீ மாயன் என்பதை இது மூலமே நிரூபித்து விட்டாய். நேருக்கு நேர் உரையாடலா? நான் தானே பேசிக்கொண்டிருந்தேன். நீ எங்கே மறுமொழி கூறினாய் ? “ என்றாள்

“அதற்குத்தான் இப்போது வந்திருக்கிறேனே ,” என்று நகைத்தான் கண்ணன்

————-

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய

கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண

வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

“ இப்போது என் மாளிகை வாயில் காப்பானை கதவைத் திறக்குமாறு வேண்டிக்கொள்கிறாயாக்கும் “ என்றான் கண்ணன்.

அதற்கு கோதை விடையளித்தாள். “ துவாரகையில் உன் மாளிகைக் கதவுகள் திறந்தே இருக்கும். உன்னைப் பார்க்க வந்த குசேலர் நேராக உள்ளே வந்தாரே . ஆனால் ஆயர்பாடியில் நீ செல்லப் பிள்ளை அல்லவா அதனால் உன் பெற்றோர் கதவை மூடியே வைத்திருப்பார்கள். அதனால் வாயில்காப்போனை வேண்டவேண்டியதாயிற்று. “

“ உன் வாயில் காப்போன் கோயில் காப்போனாகவும் இருப்பதால் இலகுவில் எங்களை அனுமதிக்கவில்லை . அவனை நாயகனாய் நின்றவனே. கொடி பறக்கும் தோரண வாயில் காப்பவனே என்று முகஸ்துதி பண்ண வேண்டியதாயிற்று . “

“ த்வார பாலகர்களை திருப்தி செய்துதானே எல்லா இடங்களுக்குள்ளும் செல்ல வேண்டியதாய் இருக்கிறது. ஆனால் உன் த்வார பாலகர்கள் உன் பாகவதோத்தமர்கள். அதனால் அவர்கள் முதலில் ஆராதிக்கப்பட வேண்டியவர்கள். “ என்றாள் ஆண்டாள்.

“பிறகு என்ன சொல்லி உள்ளே வந்தீர்கள் ? “ என்றான் கண்ணன்.

“ நாங்கள் ஆயர் சிறுமியர் . எங்களால் ஒன்றும் ஆபத்தில்லை .தூயோமாய் வந்தோம் கண்ணன் துயில் எழப் பாடுவதற்கு என்று கூறினோம். “

“அப்போதும் உங்களை அவன் அனுமதிக்கவில்லை அல்லவா? “ என்ற கண்ணனிடம் ,

“நீதான் மாயன் மணிவண்ணன் ஆயிற்றே, உன் திருவுள்ளம் இன்றி எது நடக்கும்? ஆனாலும் வைகுண்டத்தில் உன் தவார பாலகர்களுக்கு நேர்ந்த கதியை நினைத்தோ என்னவோ கதவைத் திறந்துவிட்டான். ஆனாலும் கொஞ்சம் அழ வைத்தான். அதனால் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா என்று அவனைக் கெஞ்ச வேண்டியதாயிற்று. பின்னர் கண்ணன் எங்களுக்கு நென்னலே வாய் நேர்ந்தான், முன்னமே அனுமதி அளித்துள்ளான் என்ற பிறகுதான் அந்த நேய நிலைக்கதவம் திறந்தது.”

“ நான் எப்போது அனுமதி அளித்தேன் ?” என்றவனிடம்,

“ என்னை நாடி வந்தவரை நான் கைவிட மாட்டேன் என்று கீதையில் கூறினாய், ராமனாக செய்து காண்பித்தாய். அதனால் இப்போது கிருஷ்ணனான உன்னை சரணமடைந்தோம். என்றாள் ஆண்டாள்,

“இவ்வளவுதானா இல்லை வேறு ஏதாவது அர்த்தம் உள்ளதா?” என்றான் கண்ணன்.

அதற்கு ஆண்டாள் கூறினாள்,

“இந்த பாசுரம் ரஹஸ்ய த்ரயம் என்று சொல்லப்படும் மூன்று மந்திரங்களையும் குறிப்பிடுகிறது. முதல் இரண்டு வரிகள் மூல மந்திரமான் ஓம் நமோ நாராயணாய என்பதைக் குறிக்கும்.

நாயகனாய் என்றது உலகநாயகனாகிய உன்னை.நந்த கோபன் என்பது ஆனந்தத்தை கொடுப்பதனாலும் , கோபன் அதாவது ரக்ஷிப்பவனாக இருப்பதாலும்.கோயில் என்றது ப்ரணவம். ஆனந்தம் ப்ரபத்தியின் மூலமாகவே கிடைப்பதால் நம என்ற சப்தமும் இதில் அடங்கி விட்டது.

கொடித்தோன்றும் தோரணவாயில் காப்பானே என்றது த்வய மந்திரத்தை சுட்டுகிறது. கொடித்தோன்றும் தோரணவாயில் என்பது வைகுண்டத்தில் நீ திருமகளுடன் தோன்றுவது. காப்பான் என்பது சரணமடைந்தவர்களை நீ காப்பதைக் குறிக்கிறது.

ஆயர்சிறுமியரோமுக்கு அறைபறை நென்னலே வாய் நேர்ந்தான் என்பது சரமச்லோகம். அதாவது ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று சரணம் அடைய பக்தி ஒன்றே போதும் குலமோ கல்வியோ ஒரு பொருட்டில்லை என்பதைக் காட்டுகிறது.

நேய நிலைக் கதவம் என்பது, மூன்று மந்திரங்களிலும் உள்ள இரு பாகங்கள். ஓம்,மற்றும் நமோ நாராயணாய, த்வயத்தின் இரு பாகங்கள் சரமஸ்லோக்த்தின் இரு வரிகள்.

இந்தக் கதவுகள் திறக்க வேண்டுமானால் வாயில் காப்போனாகிய ஆசார்யன் கிருபை வேண்டும்.” என்ற ஆண்டாளை கைகொட்டிப் பாராட்டினான் கண்ணன்.

———

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்

எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே!

எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த

உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.

“ரொம்ப சாமர்த்தியம்தான் ,”.

“முதலில் உன் மாமனார் மாமியாரை வேண்டிக்கொண்டு அப்புறம் என்னிடம் வருவதைச் சொன்னேன்.” என்றான் கண்ணன்

கோதை கூறினாள் “ நான் உன் பள்ளியறையில் முதலில் உன் பெற்றோரைத்த் தான் கண்டேன். உடனே உன் தந்தையின் தாராள குணம் நினைவுக்கு வந்தது. அவர் அம்பரம் , தண்ணீர் , சோறு, அதாவது உடுக்க உடை, பருக நீர், உண்ண உணவு, வாரி வாரித்தந்தவர் ஆயிற்றே. அதனால்தானே வேதாந்த தேசிகர் , யாதவாப்யுதயம் என்னும் காவியத்தில், நீ பிறந்தவுடன் நந்தகோபர் கொடையில் கல்பதருவையும் மிஞ்சிவிட்டார் என்றார். ?” என்றாள் ஆண்டாள்.

“ ஆம். யாதவாப்யுதயம் என் சரிதத்தை மிகவும் அழகாகக் கூறுகிறது. தேசிகரின் அறிவார்ந்த புலமைக்கு ஈடு இணை உண்டோ?”

“அடுத்தது உன் அன்னையைக் கண்டேன். கொம்பனார்க்கெல்லாம் கொழுந்து என்றதன் மூலம் அவளுடைய கொடிபோன்ற மேனி படைத்த எல்லா மாதரிலும் சிறந்தவள் என்றேன். மேலும் அவள் யாதவகுல விளக்குஅல்லவா. “

“உண்ணும் சோறு, பருகும் நீர் எல்லாம் கண்ணன் என்று நாங்கள் உணர உன்னை எங்களுக்கு அளித்தனால் நந்தகோபர் எம்பெருமான் ஆகிறார்,. யசோதை எம்பெருமாட்டி. மேலும் யச: என்றால் பிரம்மம் என்கிறது வேதம் அந்த பிரம்மத்தை ஒரு குழந்தையாக உலகுக்கு தந்தவள் , யச: ததாதி இதி யசோதா.” என்ற ஆண்டாளிடம் கண்ணன் கேட்டான்.

“அத்புதமான விளக்கம் . அது சரி. நீ படுத்திருக்கும் வரிசைக்க்ரமத்தில் எழுப்பி வந்தவள் எனக்கு முன்னாள் படுத்திருந்த அண்ணனை விட்டுவிட்டு என்னை முதலில் எழுப்பக் காரணம் ?

“ ஆண்டாள் கூறினாள். “ அதுவா, பலராமன் காலில் இருந்த செம்பொற் கழலைப்பார்த்து நீ என்று நினைத்தேன் . அதனால் உன்னை முதலில் எழுப்ப முயற்சித்தேன். பிறகுதான் உண்மை தெரிந்தது அதனால் அவனை மகிழ்விக்க உம்பியும் நீயும் உறங்கேலாரெம்பாவாய் என்றேன். , உன் சயனமாகிய ஆதிசேஷன் ஆயிற்றே, அவன் எழுந்தால் நீ எழுந்துதானே ஆகவேண்டும்?”

“ நல்ல சாதுர்யம் “ என்ற கண்ணன் “அன்னை அருகில் இங்கு சாதுவாகப் படுத்து உறங்கும் என்னை உலகளந்தானாக பாவிக்க ஏதும் விசேஷ காரணம் உண்டோ” என்றான்.

“நல்ல சாதுப்பிள்ளை “ என்ற ஆண்டாள்,

‘அம்பரம் அதாவது ஆகாயத்தை ஊடறுத்து, பிளந்து ஓங்கி உலகளந்தவன் நீ. உனக்கு உறங்குவதற்கு ஏது இடம் என்று பொருள். “ என்றாள் கோதை.

“ எல்லோரையும் திருப்திப் படுத்தி விட்டாய்,” என்ற கண்ணனைப் பார்த்து கோதை கூறினாள்.

“ நாங்கள் எல்லோரிடமும் உன்னையே காண்கிறோம் அல்லவா? நந்த கோபாலன் என்றது உன்னைத்தான். நந்தம் அல்லது ஆனந்தம் என்பது நீதான், கோ அதாவது, பூமி, வாக்கு, ஆவினம், இந்த்ரியங்கள் முதலிய எல்லாவற்றிற்கும் பாலன், காப்பாற்றுகிறவன் நீதானே.” அம்பரம், வஸ்திரம் திரௌபதிக்குக் கொடுத்தாய் . பாரத யுத்தத்தில் தேரோட்டியாகி களைத்த குதிரைகளுக்கு உன் கையால் நீர் கொடுத்தாய்., சோறு அதாவது உணவு, வற்றின அக்ஷயபாத்திரத்தில் இருந்து துர்வாசர் முதலியோருக்கு உணவளித்தாய்.” என்றாள் கோதை. “ நன்று. நீ செம்பொற்கழல் என்று சொன்னது என் அண்ணனின் காலில் இருந்த வீரக்கழல்.,அவன் வீரச்செயல்களை அறிவாயல்லவா? அவமதித்த கௌரவருக்கு புத்தி புகட்ட தன கோடரியால் ஹஸ்தினாபுரத்தையே கங்கையில் தள்ளவில்லையா? ஒருசமயம் யமுனையை தான் இருக்கும் இடத்திற்கு இழுத்தானே.” என்றான் கண்ணன்.

“ அது மட்டுமா? ஆதிசேஷனான அவன் ஏழு குழந்தைகளை இழந்த பின்னர் உன் தாயான தேவகியின் கர்ப்பத்தில் புகுந்து சர்ப்ப தோஷ நிவாரணம் செய்பவன் போல அதை சுத்தமாக்கி உன் பிறப்புக்கு வழிவகுத்தவன் அல்லவா? “என்றாள் கோதை.

“ நீ சொல்வது உண்மை, சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம் என்று எங்கும் என்னைத் தொடர்பவன் அல்லவா? “ என்றான் கண்ணன்.

“சேஷனாகியவனும், சேஷியாகிய நீயும் ஒன்றே. வால்மீகி ஆதிசேஷனின் அவதாரமான லக்ஷ்மணனை ராமனாகிய உன் உடலுக்கு வெளியே உள்ள உயிர், பஹிர்கதபிராண: என்றல்லவா கூறுகிறார்?’ என்ற கோதையிடம் கண்ணன் கூறினான்.

“எம்பெருமான் நந்த கோபாலன் என்பது, எம்பெருமானார் என்று அழைக்கப்பட்ட ராமானுஜரை நினைவூட்டுகிறது. எல்லோருக்கும் பக்தியை ஊட்டி ஆனந்தத்தை அளித்தததனால் அவரும் நந்த கோபாலனாகிறார். “ என்ற கண்ணிடம் ஆண்டாள் கூறினாள்.

“ உன் அருளால் வரும் எல்லா சொற்களும் எந்த காலத்திற்கும் ஓட்டிவரும் அல்லவா? அம்பரம் என்பது உன் அருள். தண்ணீர் அதனால் பெருகும் பக்தி. சோறு என்றால் பகவத்கைங்கர்யம். இது எல்லாம் ஆசார்யன் அருளால் வருவது.”

“மேலும் அவர் என் பிரியமான அண்ணன் ஆயிற்றே. நான் நேர்ந்து கொண்ட நூறு தடாவில் வெண்ணையும் அக்கறை வடிசிலும் திருமாலிருன்சொலையில் உள்ள உனக்குக் கொடுப்பேன் என்றதை நிறைவேற்றினவர் அல்லவா !” என்றாள் ஆண்டாள்.

“ஆம். அடுத்த பாசுரம் திருப்பாவை ஜீயர் என்று அழைக்கப்பட்ட அவருக்கு உகந்ததாயிற்றே!” என்றான் கண்ணன்.

———–

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்

வந்துஎங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

“இந்தப்பாசுரத்தில் நீ நப்பின்னையை வந்து தாழ் திறக்கும்படி வேண்டுகிறாய். நப்பின்னை கிருஷ்ணாவதாரத்தில் என் தந்தையான நந்தகோபரின் மருமகள். அவள் நீளா தேவியின் அவதாரமாகவும் கருதப்படுகிறாள். அதனால் நந்தகோபாலன் மருமகள் என்று நீ சொன்ன இரு அர்த்தத்திலும் சரியாகப் படுகிறது. “ என்றான் கண்ணன்.

“ நந்தகோபாலன் மருமகள் என்று நான் சொன்னது ஏனென்றால் ஒரு பெண்ணை விவாகம் ஆகுமுன் அவள் இன்னாரின் பெண் என்று சொல்வது போல விவாகம் ஆனதும் இன்னாரின் மருமகள் என்று சொல்வதுதானே சிறப்பு?.சீதை தன்னை ராவணனிடமும் அனுமனிடம் ‘ஸ்னுஷா தசரதஸ்யாஹம்,’ நான் தசரதருடைய மருமகள் என்றுதானே அறிமுகப் படுத்திக் கொள்கிறாள்?’

“அவள் மேலும் ‘ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹானாம் முக்யஸ்ய ‘ இந்த மண்ணுலகில் சிம்ஹம் போன்ற அரசர்களுக்குள் முக்கியமான தசரதர் ‘ என்று சொன்னது போல் நான் ‘உந்துமதகளிற்றன் ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் என்றேன். மத்த கஜம் போல் வலிவுடையவன் அல்லது மத்தகஜம் போன்ற உன்னை உடையவன் , உனக்குத் தீங்கு இழைப்போரைக் கண்டு பயப்படாமல் எதிர்த்து நிற்பவன் என்ற அர்த்தத்தில்.”

“ ஆனால் உண்மையில் நாங்கள் புருஷகார பூதையான திருமகளை எழுப்புகிறோம். ஏனென்றால் நீ கண்ணனாக வந்தாலும் எங்களுக்கு.நாராயணன்தானே. அவள் உன் மார்பில் மருவைப் போல் இருப்பதால் மருமகள். நப்பின்னை என்ற சொல் நல்+ பின்னை, உன் அவதாரங்களில் உன்னைத் தொடர்ந்து வருபவள் என்ற பொருளில்.” என்றாள் ஆண்டாள்.

“ அப்படியானால் பந்தார் விரலி, கைகளில் பந்தை வைத்துக் கொண்டிருப்பவள் , உன் மைத்துனன் பேர் பாட, என்ற சொற்களுக்கு என்ன பொருள்? “ என்றான் கண்ணன்.

“எல்லா ஜீவர்களும் உங்கள் இருவருடைய லீலாவிநோதம் என்ற கைப்பந்து போலத்தானே. ஆனால் அந்த பந்து எப்போதும் திருமகளின் கைகளில்தான் முடிவில் இருக்கும். ஏனென்றால் உன் கருணையை எங்கள் மேல் வீசிக் காப்பது அவள் அல்லவா? “

“ மைத்துனன் என்பது மைதுனம், ஒன்றாக இணைவது, என்ற கருத்தில் ஸ்ரீதேவியின் இணையான உன்னைக் குறிப்பிடுவதாகும்.”

“கந்தம் கமழும் குழலி என்பது திருமகள் கேசத்தின் இயற்கை வாசம்,செந்தாமரைக்கையால் என்றது அவள்கையில் எப்போதும் உள்ள தாமரை.. ஆக, இது திருமகளைக் குறிக்கும் பாசுரம்.

“ நன்று. வந்தெங்கும் கோழி அழைத்தன காண், மாதவிப்பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் ,’ என்ற வரிகளுக்கும் விளக்கம் தந்துவிடு,” என்றான் கண்ணன்.

கோதை கூறினாள், “நேரிடைப் பொருள் கோழிகள் கூவுவதும் குயில்கள் மாதவிக் கொடிகளில் கூவுவதும் தான் என்று இருந்தாலும், கோழி என்பது பகவ்த்பக்தி இல்லாதோர். குயில்கள் பக்தர்கள். எங்கும் காணப் படும் கோழியின் குரல் எப்போதும் உரக்க இருக்கும். குயில்களின் குரல் இனிமையானது. பக்தி இல்லாதவர்கள் எழுந்து அவரவர் வேலையைப் பார்க்கச் சென்று விட்டனர். இதன் நடுவில் பக்தர்களின் இனிய நாமசங்கீர்த்தனம் கேட்பதில்லை. “

“உலகப்பற்றைக் குறிக்கும் விஷயங்கள் எங்கும் உள்ள கோழியின் கூவலைப் போல் நாடெங்கும் இறைந்து கிடக்கின்றன. பகவத்விஷயமான வாக்குகள் , குயில் கூவிவதைப் போல் இனிமையானவை. மாதவிப்பந்தல் என்பது திருமகளின் கேள்வனாகிய உன்னைக் குறிக்கும்.”

“கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம் ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்” என்றபடி,, உன் நிழலில் கவிதை என்னும் கிளையில் இருந்துகொண்டு வால்மீகி , வ்யாசர் போன்ற குயில்கள் மதுரமாக உன் பெருமையை இசைக்கின்றன. அவைகளை தேடிப் போகவேண்டும்.” என்றாள்.“

இந்தப் பாசுரம் இன்னொரு விதத்திலும் மேன்மை வாய்ந்தது. ராமானுஜர் உகந்த பாசுரம். திருப்பாவை சொல்லிக்கொண்டே பிக்ஷைக்குப் போகும்போது, அவர் குருவான பெரியநம்பியின் வீட்டு வாசலில் அவர் மகள் அத்துழாய் பிக்ஷைபோட வெளியில் வந்தாள். இந்தப பாசுரத்தில் லயித்த ராமானுஜர் அவளை ஸ்ரீதேவியாகவே கண்டு உணர்ச்சிவசப்பட்டார்.” என்ற கண்ணன் ,

“இன்னொரு சிறப்பையும் நான் இந்தப பாசுரத்தில் காண்கிறேன். இது பதினெட்டாவது பாசுரம் .” என்றான்.

கோதை கூறினாள், “ ஆம் திருமகளைப் பற்றிய இந்தப பாசுரம் அப்படி அமைந்தது எனக்கும் வியப்பைத் தருகிறது. ஏன் தெரியுமா?ஒன்று , எட்டு இவ்விரண்டின் கூட்டுத்தொகை ஒன்பது. அது ஒரு தெய்வீக எண். அதோடு எந்த எண்ணைக் கூட்டினாலும் கழித்தாலும் பெருக்கினாலும் வரும் எண்ணின் கூட்டுத்தொகை ஒன்பதாகவே இருக்கும். அதுபோல ஸ்ரீதேவி என்றும் மாறாத கருணை உடையவள். மேலும், பதினெட்டு என்ற எண் உன்னோடு சம்பந்தப்பட்டது. நீ கூறிய பகவத் கீதை பதினெட்டு அத்தியாயம் கொண்டது, உன் மகிமையைக் கூறும் பகவத் புராணத்தில் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள். உன் கிருஷ்ணாவதாரத்தின் முக்கிய நோக்கமான் பூபாரம் தீர்க்க நீ நடத்திய பாரத யுத்தமும் பதினெட்டு நாள் நடந்தது.” என்றாள் கோதை.

கண்ணன் கூறினான். “ கருணையில் இருந்து என்றும் மாறாதவள் என்று நீ கூறியதைக் கேட்கையில், எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. திருவரங்கத்தில் நான் மோகினி அலங்காரத்தில் இருக்கையில் திருமகளைப் போல் அழகாக இருக்கிறேனா என்று ஒரு பக்தரிடம் கேட்க அவர் ஆம் ஆனால் அவள் கண்களில் உள்ள கருணை என்னிடம் குறைகிறது என்றார்.”

ஆண்டாள் சிரித்து, “ அது உண்மைதான். நான் ஒரு நூற்று நாற்பத்து மூன்று பாசுரங்கள் பாடியும் நீ இரங்கவில்லையே?” என்றாள்.

“ அது உன் தீஞ்சுவைத் தமிழமுதம் பருகவே.” என்றான்.

ஆண்டாள் கூறினாள். “ அதனால் எவ்வளவு மன வேதனை அனுபவித்தேன் என்று உணர்வாயோ? “என்றாள்.

:”அது உன் பக்தியை உலகறியச் செய்வதற்கே ,” என்ற கண்ணன் “ நான் உன் உள்ளத்தில் எப்போதும் இருக்கிறேனே, என்னை எங்கு சென்று தேட வேண்டும். “ என்றான்.

————–

19. குத்து விளக்கெரிய

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்

மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனை யேலும் பிரிவாற்றகில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.

“பதினேழாவது பாசுரத்தில் உன்னை எழுப்ப முனைந்தோம். புருஷகார பூதையான தாயாரை முன்னிட்டுத்தான் உன்னை ஆராதிக்க வேண்டும் என்ற முறையில் போன பாசுரம் அமைந்தது. இது அவளையும் உன்னையும் சேர்த்துக் கூறுவது. அன்னை உன்னைக் கேட்காமலேயே கருணை காட்டும் இயல்புடையவள். ஆனால் தண்டிப்பது மட்டும் உன் ஆணையின்றி செய்ய மாட்டாள். “ என்ற ஆண்டாளிடம் கண்ணன் “அப்படியா?” என்றான்.

“ஆம் ஹனுமானுக்கு வாலில் நெருப்பு வைத்தபோது அது சுடாமலிருக்க ‘சீதோ பவ ஹநூமத: , குளிர்ந்திருப்பாயாக’ என்று அக்னிதேவனுக்கு ஆணையிட்டாள். ஹனுமனின் கோபத்தில் இருந்து ராக்ஷசிகளை ‘ ந கச்சித் ந அபராத்ய்தி?’ யார்தான் தவறு செய்யவில்லை? ‘ என்றுகூறிக் காப்பாற்றினாள். ஆனால் ‘ராமரின் ஆணையில்லாதனால் உன்னை விடுகிறேன் இல்லையென்றால் பஸ்மமாக்கிவிடுவேன்’ என்று ராவணனிடம்கூறினாளே.” என்றாள் கோதை.

“தியாகராஜரின் சொற்கள் நினைவுக்கு வருகின்றன.. மாஜானகி சட்டபெட்டகா என்ற க்ருதியில் சீதைக்கு ராவணனை அழிக்க எல்லா சக்தியும் இருந்தது. ஆனால் ‘ஸ்ரீநாயக யசமு நீகே கல்க,’ உன் புகழுக்கு மாசு ஏறபடக்கூடாது என்று அப்படிச் செய்யவில்லை என்கிறார்.”

“ ஏக லக்ஷ்யம்தயாயா:’என்று தேசிகர் ஸ்ரீ ஸ்திதியில் சொல்வது போல உங்கள் இருவருக்கும் ஒரே நோக்கம் கருணை காட்டுவதுதானே,” என்றஆண்டாளிடம் கண்ணன் ,

“இப்போது பாசுரத்திற்குப் போவோம். கு’த்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா ‘ என்று அழகாக நான் சயனித்திருப்பதை வர்ணித்தாய் . அப்படிப்பட்ட நிலையில் ‘வாய் திறவாய்’ என்றால் என்னால் எப்படி முடியும்? “ என்றான் குறும்புப் புன்னகையுடன்.
“ உன் வாக் சாதுர்யத்தை என்னிடம் காட்ட வேண்டாம். குத்துவிளக்கு எனப்படுவது ஞான தீபம்.உன் பஞ்ச சயனம் ஆதிசேஷன். பஞ்ச சயனம் என்றால் அதற்கு. மிருதுத் தன்மை , வெண்மை ,நல்ல வாசனை, குளிர்ந்து இருத்தல், அழகு என்ற ஐந்து குணங்கள் இருக்க வேண்டும். இது ஆதிசேஷனுக்கு இருக்கிறது. “ என்ற ஆண்டாளைப் பார்த்து, கோகுலத்தில் நான் ஆதிசேஷனுக்கு எங்கே போவேன்?” என்றான் கண்ணன்.

“ இந்தக் கதையெல்லாம் வேண்டாம். ஒரு பிரபு எங்காவது போவதென்றால் அவன் மெத்தை முன்னால் அனுப்பப்படும். அது போல நீ வருமுன்பே ஆதிசேஷனை அனுப்பி விடுகிறாயே. அதனால் தானே விஸ்வாமித்ரர் காட்டில் தரையில் படுத்துறங்கும் உன்னை ஆதிசேஷன் மேல் சயனித்துள்ளதாகக் கண்டார்?” என்றால் கோதை.

“ ஸ்ரீதேவியும் உன்னை விட்டு எங்கும் போவதில்லை. அதனால்தானே நீ ‘அகலகில்லேன் இறையும் என அலர்மேல் மங்கை உறை மார்பா ‘ என்று அழைக்கப் படுகிறாய். இதுதான் நப்பினை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா என்பதன் பொருள்.

“.சரி. அவளை எல்லையில்லாக் கருணை உடையவள் என்று சொல்லிவிட்டு இப்போது ‘மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனைஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,’ என்பது ஒட்டவில்லையே ? “ என்றான் கண்ணன்.

“ அவளுக்கு உன்னை எப்படி எப்போது எழுப்ப வேண்டும் என்று தெரியும் உன்னை உடனே எழுப்ப மாட்டாள். ஏனென்றால் அவசரமாக எழுந்தாயானால் எங்கள் குற்றங்கள் உன் கண்ணில் படும். நீ எப்படி எழுந்திருக்க வேண்டும் என்று பிறகு சொல்கிறேன்.”என்றாள் கோதை.

“ நான் உண்மையில் உறங்கவில்லை . உன்னுடைய தேனினும் இனிய சொற்களைக் கேட்கவே தாமதித்தேன்.” என்றான் கண்ணன்.

“எனக்குத் தெரியும் அதனால்தான் தத்துவம் அன்று. தகவேல் என்றேன்.

தத் கேட்டும் வாளாவிருபப்து த்வம் அன்று உன் ஸ்வபாவம் இல்லை. தகவேல்- இரங்க வேண்டும் என்று பொருள்.

மேலும் தத் த்வம்(அஸி), என்று உன்னோடு பிரிவில்லாமல் இருப்பது தகவு அல்லது உன் அருள் இன்றேல் சித்திக்காது. அதற்காகத்தான் பிராட்டியின் கருணை வேண்டும்.” என்றாள் ஆண்டாள்.

————

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்

செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்

செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்

நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

“போன பாசுரத்தைக் கேட்டும் நீ எழுந்திருக்க வில்லை. நப்பின்னை நங்காய் திருவே என்று நாங்கள் கூப்பிட்ட்தும் அவள் எழுந்து வந்து விட்டாள் ஆனால் அவளால் உன்னை எழுப்ப முடியவில்லை அல்லவா?> தூங்குகிறவனைத்தானே எழுப்ப முடியும்.” என்றாள் ஆண்டாள்.

“ அவள் உங்களுக்கு அருள் புரியத் திருவுள்ளம் கொண்டுவிட்ட பின் நான் வேறு என்ன செய்வது. . எழுந்திருக்கத்தானே வேண்டும், என்ற கண்ணனிடம் ஆனால் நீ உடனே வந்தாயா? சாவகாசமாகத்தானே வந்தாய்?” என்றாள் ஆண்டாள்.

“அதனால்தானே இன்னும் சில பாசுரங்களைக் கேட்க முடிந்தது. இந்தப் பாசுரத்தில் ஒரே புகழ் மாலையாக இருக்கிறதே ? “ என்றான் கண்ணன்.

“ முப்பத்துமூவர் அமரர்க்கும் முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே என்று ஏன் கூறினேன் தெரியுமா? முப்பதுமுக்கோடி தேவர்களுக்கும் ஏதாவது ஆபத்து என்றால் அதை வருமுன்பே காப்பதில் நாட்டம் உடையவன் நீ. அதுமட்டுமா செப்பம் உடையாய் அதாவது நேர்மை உடையவன் , திறலுடையாய் , சாமர்த்தியம் உடையவன். “

“ ஏலாப் பொய்களுரைப்பான் என்று சொன்னதும் நீதானே இப்போது நேர்மையுடையவன் ஆகிவிட்டேனா? “ என்றான் கண்ணன்.

“நேர்மை அல்லது ஆர்ஜவம் என்பது சாமர்த்தியத்துடன் சேர்ந்து இருந்தால் தான் பலன். உன்னுடைய செய்கைகள் ஏமாற்றுவது போல் தெரிந்தாலும் அது நல்லவர்களைக் காக்கவே .பாரத யுத்தத்தின் போது அமாவாசையை ஒரு நாள் முன்பாக வரவழைத்தது போலும் ஜயத்ரதனை அழிக்க சூரியனை மறைத்தது போலும். அங்கு ஆர்ஜவம் பயன்படாது. கேடுதான் விளைவிக்கும்.”

“ மற்றும் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் என்றது, உன் அன்பர்களுக்கு தீங்கு விளைவிப்பவரைத் தீயாய் சுடுவாய் என்று பொருள்.”

“ அதெல்லாம் சரிதான் , அதென்ன உக்கம் தட்டொளி நீ கேட்டது? உக்கம் என்றால் விசிறி தட்டொளி என்றால் கண்ணாடி. இதனால் உனக்கு என்ன பயன்? “ என்றான் கண்ணன்.

. “ உக்கம், விசிறி என்பது தான் எனற மமதையை அகற்றுவது. தட்டொளியாவது ஆத்மஸ்வரூபத்தை கண்ணாடிபோல் காண்பிக்க.அதற்காக தாயாரின் அருளை வேண்டினேன். “ என்றாள் கோதை.

————

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்

ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்

ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

இன்னாரின் மைந்தன் என்று அபிவாதயே சொல்வது போல் என் தந்தை பெயரை முதலில் கூறிவிட்டாய்.” என்றான் கண்ணன்.

“ ஆம். ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் ஆயிற்றே. கலங்கள் நிரம்பி வழிய மாற்றாதே பால் சொரியும் பசுவைப் போல நாங்கள் கேட்டதை விட மேலான பலனை அளிக்கும் வள்ளலாகிய உன்னைத்தந்தவன் அல்லவா?”

“நீ ஊற்றம் உடையாய் சர்வ சக்திமான், பெரியாய் , எங்கும் நிறைந்தவன், உலகெலாம் தோற்றமாய் நின்ற சுடர், உலகில் தோன்றுவது எல்லாம் நீயே. உன்னிடம் என்ன கேட்பது? நாங்கள் என்ன கேட்டாலும் அது ஒரு சக்ரவர்த்தியிடம் சில பொற்காசுகள் கேட்பது மாதிரி. “ என்ற ஆண்டாளிடம், நான்தான் எல்லாம் தரத் தயாராக உள்ளேனே .நீங்கள் கேட்பதை யார் தடுத்தார்கள்? “என்றான் கண்ணன்.

‘யாவானர்த்த உதபானே ஸர்வத: ஸம்ப்லுதோதகே’ என்று நீ கீதையில் சொன்னபடி, எங்கும் ஜலம் நிறைந்தாலும் ஒரு கிணறு எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவுதான் அதில் நிற்கும். அதுபோல எங்கள் கர்மா அறிவை மறைக்கிறது. அதனால் நீ உன்னையே தரத் தயாராக இருந்தாலும் எங்கள் அறிவுக்கெட்டினவரை தான் உன்னைக் கேட்கத் தோன்றுகிறது. “

“அதனால் மாற்றார் , உன்னை எதிர்த்தோர் , வலி தொலைந்து, உன்னால் ஜெயிக்கப்பட்டு, உன் வாசற்கண் வந்து அடி பணிவது போல, நாங்களும் எங்கள் அறிவற்ற நிலை உணர்ந்து உன்னைப் போற்றுகின்றோம், உன் புகழ் பாடி, “ என்றாள் கோதை.

“உன் வார்த்தைகளில் ஆழமான பொருளை உணர்கிறேன்.ஆற்றப்படைத்தான் என்பது ராமானுஜரைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.ஏனெனில் வற்றாது பால் சொரியும் பசுக்களைப்போல அவருடைய சிஷ்ய பரம்பரை அவர் உபதேசங்களை எங்கும் பரப்புகின்றனர்.அவர் ஆற்றபடைத்தான் என்றால் அவர் மகன் யார்? நானே . ஏனென்றால் என்னை அவர் ‘செல்வப்பிள்ளாய் வருக’ என்று அழைத்தாரல்லவா?” என்றான் கண்ணன் .

“ஊற்றம் உடையாய், பெரியாய், உலகெலாம் தோற்றமாய் , நின்ற, சுடரே , இந்த ஐந்து சொற்களும் சில வைணவப்பெரியார்களால் உன் ஐந்து ரூபங்களைக் குறிப்பிடுவதாக சொல்லப் படுகிறது.”

‘ஊற்றம் உடையாய்’ என்பது உன் பரத்வம், பரவாசுதேவன். ‘பெரியாய்’ என்பது வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யுமான, அநிருத்தன் என்ற உன் வ்யூஹ ரூபம், .’ உலகெலாம் தோற்றமாய்’ என்பது உன் விபவம், அதாவது அவதாரங்கள் , ‘நின்ற ‘ உன் அர்ச்சாவதாரம் ‘சுடரே’ என்பது அந்தர்யாமி ஸ்வரூபம்.

“ இன்னும் சொல்லப்போனால், பரத்வம் என்பது ஆவரண ஜலம் போல வைகுண்டத்தில் இருக்கும் தோற்றம்.நித்ய சூரிகள் மட்டுமே காண்பது. வியூஹம் என்பது பாற்கடல், தேவர்களும் முனிவர்களும் காண்பது அல்லது ஞானிகள் யோகத்தால் காண்பது. விபவம் என்பது பெரும் மழையினால் எப்போதாவது ஏற்படும் வெள்ளம் போல. அந்த சமயம் ஞானிகள் மட்டுமே உன் உண்மை ஸ்வரூபத்தை உணர்வர். மற்றவர் மாயையினால் மயக்குறுவர். அர்சாவதாரம் என்பது ஏரி, குளம் இவற்றில் தங்கியுல்ல நீர் போல எல்லோரும் நன்மையடையக் கூடியது. அந்தர்யாமி ஸ்வரூபம் நிலத்தில் மறைந்துள்ள ஜலம். பக்தியின் மூலம் தோண்டினால் மட்டுமே தெரிவது.” என்றாள்ஆண்டாள்.

‘ அடேயப்பா உன்சொற்களுக்கு இவ்வளவு அர்த்தங்களா என்றான் கண்ணன்.

ஆண்டாள் கூறினாள். என் வாக்கில் வருவதெல்லாம் உன் சொற்கள் அல்லவா? என் கையில் உள்ள கிளியைப்போல நீ சொல்லச்சொல்வதை அல்லவா சொல்கிறேன். என்றாள்.

————

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே

செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்

அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

“உன்னை எழுப்பும் பாசுரங்களில் இதுதான கடைசி. அடுத்த பாசுரத்தில் இருந்து நீ நேரில் வர உன்னைக் கண்டு எங்கள் கோரிக்கைகளை முனவைக்கிறோம்.” என்றால் ஆண்டாள்.

“ இந்தப் பாசுரத்தில் உன் பள்ளிக்கட்டிற்கீழே நீ கண்விழிப்பதைக் காண வந்துள்ளோம், அங்கண்மாஞாலம் , இந்த அழகிய உலகத்தில் அரசர் அபிமான பங்கமாய் அதாவது தங்கள் அகம்பாவம் அழிந்து வந்து உன்னை சூழ்ந்தாற்போல ,” என்ற ஆண்டாளை நோக்கி ,

“அரசர்கள் என்று யாரைச் சொல்லுகிறாய் ,” என்றான்.

எனக்கு ஜராசந்தனால் சிறைப் பிடிக்கப் பட்டு உன்னால் விடுவிக்கப்பட்ட அரசர்கள் ஞாபகம் வந்தது. அவர்கள் தங்கள் ராஜ்யத்திற்குப் போவதை விட உன் கைங்கர்யத்துக்கே ஆசைப்பட்டார்கள் அல்லவா? “

“ பள்ளிக்கட்டிற்கீழே என்றால் உன் காலடியில் என்று பொருள். அதாவது அர்ஜுனன் உன்னை காண வந்து உன் காலடியில் அமர்ந்தது போல வந்து தலைப்பெய்தோம், எவ்வளவோ பிறவிகளுக்குப் பின்னர் புண்ய வசமாக உன்னை அடைந்தோம். நீ கண்விழித்ததும் முதலில் எங்களைக் காணவேண்டும் என்பதற்காக.” என்ற ஆண்டாளை நோக்கி கண்ணன் கூறினான்.

“ கண் விழிப்பது எப்படி என்றும் கூறிவிட்டாயே , செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ என்று.”

“ ஆம்.உன் கண்களை தாமரை மலர்வது போல சிறிது சிறிதாகத் திறக்க வேண்டும். ஏன் தெரியுமா? பாதி மூடிய கண் எங்கள் குறைகளைக் காணாதிருப்பதற்கு. பாதித் திறந்த கண் எங்களைக் காப்பதற்கு. உன் அழகிய கண் , அங்கண் கொண்டு எங்களை நோக்கினாயானால் எங்கள் மேல் உள்ள சாபங்கள் எல்லாம் அழிந்து விடும்.

உன் கண்கள் விழிக்கும்போது, சூர்ய சந்த்ரௌ ச நேத்ரே என்று வேதம் கூறியபடி, திங்களும் ஆதித்தியனும் சேர்ந்து உதித்தது போல. சூரியனைப் போல எங்கள் பாவத்தை எரித்துவிடும்.சந்திரனைப் போல குளிர்ச்சியைத் தந்து எங்களைக் காக்கும். தாமரை சூரியன் உதித்தால் மலரும் சந்திரன் உதிக்கும்போது மூடி விடும். இரண்டும் சேர்ந்து உதித்தால் பாதி மலர்ந்த தாமரை போல் இருக்கும்.” என்ற ஆண்டாளின் சொற்களைக் கேட்டு மகிழ்ந்து கண்ணன் எழுந்து வர ஆண்டாள் பரவசமாகிக் கூறுவது அடுத்த பாசுரம்.

—————-

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன்

கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரியசிங்கா சனத்திருந்து யாம் வந்த

காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்

“நான் நேரில் வந்தபோது என்னை கண்ணனாக அல்லாமல் நரசிங்கமாக கண்டது ஏன்? என்றான் கண்ணன்.

“அதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. பிறகு சொல்கிறேன்.” என்ற ஆண்டாளைப்பார்த்து ,

“ என்னை மலைக்குகையில் உள்ள சிங்கத்துக்கு ஒப்பிட்டது எதனால் “ என்றான் கண்ணன்,.

“உறங்கும் சிங்கம் என்றும் சொன்னேன் அல்லவா? மாரி என்பது பாற்கடலைக் குறிக்கும். மலை என்றது ஆதிசேஷன்.குகை போன்ற அவனுடைய விரித்த படத்தினுள் உறங்கும் நாராயணனான நீ நரசிங்கமாக வந்தாய் அல்லவா?” என்றாள் ஆண்டாள். அதன் பின் வேரி மயிர் பொங்க , உன் சிலிர்த்த பிடரியை எப்பாடும் பேர்த்து உதறி , எடுத்து வீசிவிட்டு, பூவைப்பூ வண்ணனான கண்ணனாக மாறினாய்.”

“மாரிமலை என்பது மலை போன்ற இரணியனின் மாளிகையையும் குறிக்கும்.அதில் குகை போன்ற தூணில், மன்னிக் கிடந்து உறங்கும் சிங்கமாய் இருந்த நீ மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்டு வந்தாயே அது போல இங்கு வந்து சீரிய சிம்மாசனத்தமர்ந்து எங்கள் கோரிக்கைத்யைக் கேட்கவேண்டும் என்ற எண்ணத்தில் எழுந்தது இந்தப் பாசுரம் “ என்றாள் கோதை.

“ அறிவுற்று தீ விழித்து சீரிய சிங்கம் என்றாயே நான் இரணியனைக் கொல்ல அல்லவா அப்படி வந்தேன். உங்களிடையே அப்படி வரலாமா? “ என்றான் கண்ணன்.

“பயங்கரமான உருவமா இல்லை பூவைப்பூவண்ணன் என்றாயே அதுபோல அழகிய உருவத்திலா எதில் வரவேண்டும் “ என்றான் கண்ணன்.

“அந்த உன் உருவத்தைக் அகண்டு பிரஹ்லாதன் பயப்படவில்லையே. நீ பக்தர்களைக் காக்க அல்லவா எந்த உருவத்திலும் திருவுள்ளம் கொண்டுள்ளாய்? “

“ நாரசிம்ஹ வபு: ஸ்ரீமான் என்றல்லவா பீஷ்மர் உன் சஹஸ்ரநாமத்தில் கூறுகிறார். அதாவது நரசிம்ஹ உருவத்திலும் நீ ஸ்ரீமான் அழகியவன் என்று? அதனால்தானே உன்னை அழகிய சிங்கர் அன்று பக்தர்கள் கூறுகிறார்கள்?’என்றாள் ஆண்டாள்.

” ஏதோ முக்கிய காரணம் என்றாயே அது என்ன? “ என்றான் கண்ணன்.

“சொல்கிறேன் அதற்கு முன் இன்னொரு விளக்கம்.”என்ற ஆண்டாளைப் பார்த்து, ‘” காத்திருக்கிறேன் “ என்றான் அந்தக் குறும்புக்காரன்.

ஆண்டாள் கூறினாள், “ விளையாட்டு வேண்டாம் கண்ணா. என் வாயிலிருந்து வரும் சொற்கள் உன் அருளால் அல்லவா? ஆனாலும் குழந்தைகள் மழலையில் இன்புறும் தந்தையைப்போல் எங்கள் வார்த்தைகளை ஒன்றும் அறியாதவன் போல் கேட்டு இன்புறுகிறாய்.”

“மாரிமலை என்பது வேதங்கள். உபநிஷதங்கள் அதில் உள்ள குகைகள். அதில் மன்னிக்கிடந்துறங்கும் சீரிய சிங்கம் என்பது பரப்ரம்மமாகிய வேத வேத்யனாகிய நீ.”

உபநிஷதங்களின் பொருள் அறிந்தோர் அறிவுற்று தீ விழித்து, அறிவுத்தீ சுடரிட, வேரிமயிர் பொங்க, எப்பாடும் பேர்த்துதறி, உடல் மனம் வாக்கு இவை உன் சேவைக்கே அர்ப்பணித்தவராக போதருமாப்போலே , உலகில் உன் புகழ பரப்ப வருவது போல,” என்று பொருள்.

“ நன்று நன்று, இப்போதாவது உன் முக்கிய காரணத்தை சொல்கிறாயா?’ என்ற கண்ணனிடம்,

“அதற்கு முன் நீ இந்த சிங்காசனத்தில் வந்து உட்காரவேண்டும்.இது சீரிய சிங்காசனம். இதில் உட்கார்ந்து கொடுத்த வாக்கை மீற முடியாது உன்னால்” , என்ற கோதையிடம்.

“ ஏதேது கைகேயி தசரதனிடம் வாக்குறுதி கேட்ட மாதிரி இருக்கிறதே?” என்று சிரித்தான் கண்ணன்.

“ நீ பிரம்மாவின் வரத்தை மீறாமலும் பிரஹ்லாதனின் வார்த்தையை மெய்ப்பிக்கவும் நரசிம்ஹனாகத் தோன்றினாய் அல்லவா? அதனால் தான் உன்னை நரசிம்ஹனாகவே பாவித்தேன்..” என்ற ஆண்டாளிடம்“இவ்வளவுதானா,” என்றான் கண்ணன்.“இல்லை, இன்னும் இருக்கிறது , “ என்ற ஆண்டாள்,

“நான் என் கனவைப்பற்றிய பாசுரத்தில் உன்னை அரிமுகன் அச்யுதன் என்றேன் அல்லவா, அது ஏனென்றால் அரிமுகன், அதாவது சிங்கப்பிரானாகிய நீ அச்யுதன், கொடுத்த வாக்கிலிருந்து வழுவாதவன்,. அதனால் தான் ருக்மிணி அவள் கடிதத்தில் உன்னை அச்யுதா என்றும் நரசிம்ஹா என்றும் அழைத்தாள். ஏனென்றால் நீதான் ஏலாப்பொய்கள் உரைப்பவன் ஆயிற்றே? அதனால் கிருஷ்ணா என்று சொல்லவில்லை. “என்றாள்.

“ நல்ல சான்றிதழ் அளித்தாய் ,” என்ற கண்ணன், இது என் லீலாவதாரம் ஆயிற்றே. என் செயல்களைப புரிந்து கொள்ளாவிட்டால் அப்படித்தான் தோன்றும். “.

“ பரம் பாவம் அஜானந்த: மம பூத மஹேச்வரம்,” என்று நான் அர்ஜுனனுக்கு சொன்னபடி, என் உண்மை ஸ்வரூபத்தைப் புரிந்து கொள்ளாதவர் என்செயல்களில் குற்றம் காண்பது இயல்பு. “ என்றான்.

“ உன் மாயையை யார் அறிவார்? ஆனால் இப்போது எங்கள் கோரிக்கையைக் கேட்டு அருளவேண்டும்.” என்றாள் ஆண்டாள்.

——————

அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி

பொன்றச்சகடமுதைத்தாய்! புகழ் போற்றி

கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி

குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி

என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய்

கண்ணன் ஆண்டாளைப பார்த்து, நான் வந்து இந்த ஆசனத்தில் அமர்ந்துவிட்டேன். உங்கள் கோரிக்கைகளைக் கூறு என்றான்.

நீ வந்தமர்ந்த சிம்ஹாசனம் எங்கள் மனம் அல்லவா? உன்னைப் பார்த்ததும் ஆனந்தத்தில் என்ன கேட்கவேண்டும் என்பதே மறந்துவிட்டது.” என்றாள்.

கண்ணன் கூறினான். “நல்லது, என் திரிவிக்ர்மாவதாரத்தை மூன்று முறை கூறிவிட்டாய் அல்லவா? ‘ஓங்கி உலகளந்த உத்தம பேர்பாடி,’ அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகலந்த,’ என்றும், இங்கு ‘அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி,” என்றும்.

அதற்கு ஆண்டாள் “நீ உலகளந்தபொது உனக்குக் கிடைத்தது ஓர் அடி மண்தான் . ஏனென்றால் நீதான் ஒரு அடியில் மண்ணுலகம் முழுவதையும் அளந்து விட்டாயே. இரண்டாவது அடியில் விண்ணை அளந்தாய். மூன்றாவது அடி கிடைக்கவேயில்லை. ஏனென்றால் மகாபலியின் தலை நீ ஏற்கெனவே எடுத்துக்கொண்ட முதலடியில் அடங்கினது அல்லவா? அதனால் தான் நான் இங்கு உனக்கு மூன்று அடி தந்தேன்.” என்றாள்.

“ நன்றி. ஆனால் ஏன் சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் என்று சொன்னாய் நான் இலங்கையை விபீஷணனுக்குக் கொடுத்ததால் அதை அழிக்கவில்லையே? என்றான் கண்ணன்.

இந்தப் பாசுரம் உன்னைப் போற்றுவது போலத் தோன்றினாலும் இது உன் பாதங்களின் சிறப்பைக் கூறுவது. அன்று உலகளந்த பாதங்கள். அயோத்தியிள் இருந்தவாறே ராவணனை அழிக்கும் திறமை இருந்தாலும் முனிவர்களுக்கு அருள தண்டாகாரண்யம் முழுவதும் நடந்த பாதங்கள். அதனால்தான் சென்றங்கு என்று சொன்னேன்.

.தென்னிலங்கை செற்றாய் என்றால் இலங்கையை அழித்தாய் என்று அர்த்தம் இல்லை.இதை நான் ஏற்கெனவே தென்னிலங்கைக் கோமானைச் செற்ற என்ற இடத்தில் சொல்லியிருக்கிறேனே. தென்னிலங்கை என்றால் தென்- அழகிய, நிலம் – தேசம், கை – கைக்கொண்ட , அதாவது ராவணன். அவனை செற்றாய் அழித்தாய் என்று பொருள்.” என்றாள் ஆண்டாள்.

“அடேயப்பா “ நீ உண்மையில் சொல்லின் செல்விதான், “ என்ற கண்ணன் , பின்வரும் அடிகளும் என் அடியைப் போற்றுவதுதானோ?” என்றான்.

ஆம். ‘பொன்றச் சகடம் அதாவது சகடாசுரனை உதைத்தது இந்த அடிதானே இதன் புகழ் போற்றி என்றேன். “ என்ற ஆண்டாளிடம்,

“ ஆனால் என் தாய் நான் உதைத்து அந்தச்சக்டம் பொடிப்பொடியாயிற்று என்று மற்ற சிறுவர்கள் சொன்னதை நம்பவில்லை. என் பாதங்கள் வலிக்குமே என்று தொட்டுப் பார்த்தாள்.” என்றார் கண்ணனிடம்,

“ நீதான் மாயவன் ஆயிற்றே, வேதாந்த தேசிகர் கூறியுள்ளபடி அந்த சகடத்தின் உடைந்த துகள் கூட காணவில்லையோ என்னமோ/” என்றாள் ஆண்டாள்.

கண்ணன் கூறினான். “ அதிருக்கட்டும், கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி என்று கூறியிருக்கிறாயே , என் கைகள் அல்லவா அந்தச் செயல் செய்தன? “ என்றான்.

“ ஆம். ஆனால் நீ அந்த செயலை செய்வதை மனக்கண்ணில் காணும்போது உன் பாதங்கள் ஒன்று முன் ஒன்று பின்னாக வைத்து இருந்த அழகுதான் தெரிந்தது. அதனால்தான் கழல் போற்றி என்றேன். “ என்ற ஆண்டாளிடம் ,“ ஆனால் அடுத்த வரியில் ‘குன்று குடையாய் எடுத்தாய் , என்றது என் கரத்தைப் போற்றுவது தானே ,” என்ற கண்ணனிடம்,

“இல்லை, அங்கும் உன் பாதங்களையே போற்றினேன். பெரும் மழையைக் கண்டு பயந்து உன் பாதங்களில்தானே கோபர்கள் சரணமடைந்தனர். அதனால் உன் பாதங்களுக்கே அந்த மகத்துவம் உரித்தாகும், “ என்றாள் கோதை.

“ அதுவுமல்லாமல் ஏழு நாட்கள் அயராமல் நின்றது உன் பாதங்கள் அல்லவா? அதனால் உன் கரத்துக்கொப்பான பெருமை உன் பாதங்களுக்கும் உண்டு, ஆயர்களைக் காக்க ஏழு நாட்கள் தூக்கிய கரத்துடன் நின்ற உன்ன பக்தவாத்சல்யத்தையே குணம் போற்றி என்று குறிப்பிட்டேன்.” என்றாள் ஆண்டாள்.

“வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி என்று சொல்லி எதிரிகளை அழிக்கும் உன் ஆயுதத்தையும் அதைத் தாங்கும் கரத்தையும் போற்றி விட்டேன், “ என்ற ஆண்டாள், தந்தை கையில் வேல் என்றால் தனயன் கையிலும் அதுதானே இருக்கவேண்டும்?” என்றாள்.

இந்தப் பாசுரத்திற்கு வேறு ஏதாவது பொருள் சொல்லப் போகிறாயா? என்ற கண்ணன்., “இரு நானே சொல்கிறேன் “என்றான்.

“இந்தப்பாசுரம் சரணாகதியைக் குறிக்கிறது. ஆறு போற்றிகளும், பாஞ்சராத்ர ஆகமத்திள் என்னால் சொல்லப்பட்ட சரணாகதியின் ஆறு அங்கங்கள். தென்னிலங்கை என்றால் அழகான இருப்பிடம் கொண்ட , அதாவது தேகத்தைக் கொண்ட மனம்.. செற்றாய் என்றால் அந்த மனத்தை சரியான வழியில் நடத்துவதைக் குறிக்கிறது. சகடம் என்பது ஜீவனை ஜனனமரணம் என்னும் சுழற்சியில் கொண்டு செல்லும் கர்மா. என்னைச் சரணடையும்போது நான் இந்த சக்கரத்தை உதைத்துத் தள்ளுகிறேன். இதைத்தானே சொல்லப் போகிறாய் ? என்றான் கண்ணன்.

“ இன்னும் இருக்கிறது, “ என்ற ஆண்டாள் கூறினாள்.

போற்றி என்று ஆறுமுறை கூறியது, நாராயணனான உன் ஞானம், பலம், ஐஸ்வர்யம், சக்தி,தேஜஸ், வீர்யம் ஆகிய ஆறு பகவத் குணங்களைக் கூறுவது. “

“பொன்றச்ச்கடம் உதைத்தது , கர்ணனுடைய நாகாஸ்திறத்தில் இருந்து அர்ஜுனனைக் காப்பாற்ற நீ தேர்ச்சக்கரத்தை அழுத்தியது. சகடம் உதைத்தாய் என்றால் நீ காளியன் தலைமேல் சுழன்று சுழன்று ஆடியதையும் குறிக்கும்.”

“குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி என்பது, உன் சௌலப்யம், சௌசீல்யம்,வாத்சல்யம், ஸ்வாமித்வம் என்ற குணங்களை குடையாகக் கொண்டு எங்களைக் காப்பது. உன் பாதத்தை சரண் அடையத் தடையை உள்ள எங்கள் பாபங்களை அழிப்பது உன் கை வேல்.”

“அபாரம். சரி. உங்கள் கோரிக்கை என்ன?” என்றான் கண்ணன்.

“என்றென்றும் உன் சேவகமே வேண்டியே இன்று வந்தோம் “ என்ற ஆண்டாளைப் பார்த்து கண்ணன் கூறினான்

“அன்று பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரின் பெண் என்பதை நிரூபித்து விட்டாய், போற்றி போற்றி என்ற இந்தப்பாசுரத்தின் மூலம்” என்றான்.

————-

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைத்த

கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்

நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

“என்றென்றும் உன் சேவகமே வேண்டும் என்பதையே இதிலும் வலியுறுத்துகிறாய். ஆனாலும் அடுத்த பாசுரத்தில் ஒரு நீண்ட பட்டியல் காணப்படுகிறதே? “ என்றான் கண்ணன் .
“அதைப்பிறகு விளக்குகிறேன். “ என்ற ஆண்டாள் “இது உன் அவதார ரஹஸ்யத்தை விளக்கும் பாசுரம்.” என்று மேலும் கூறலுற்றாள்.

“ஒருத்தி மகனாய் பிறந்து என்பதே உன் மாயை. சாதாரண மானிடப் பிறவி என்பது உனக்கு எப்படி வாய்க்கும்? கிழக்கு திக்கில் சூரியன் உதிக்கிறான் என்று சொல்கிறோம். ஆனால் அது உண்மை அல்லவே? சூரியன் எப்போதும் இருக்கிறான் ஆனால் நமக்கு கிழக்கு திக்கில் தோன்றுகிறான். அதே போல நீ தேவகியின் மதலையாய் பிறக்கவில்லை, தோன்றினாய். எங்கேயாவது நான்கு கரங்களுடன் சங்கு சக்கரத்துடன் குழந்தை பிறக்குமா? அதனால் தான் பாகவதம் ‘தம் அத்புத பாலகம் ,’ என்று கூறிற்று.”

“பிறகு, ஒருத்தி மகனாய் ஒளித்து வளரந்தாய். அது தரிக்கிலானாகி, தான் தீங்கு நினைந்த கம்சனைப் பற்றிய பயத்தால் அல்ல.உண்மையில் பயம் அவனுக்குத்தான் அவன் வயிற்றில் கனன்ற நெருப்பென உன்னை நினைத்து பயந்து கொண்டே இருந்தான்.’ஒளித்து வளர்ந்த’ என்றால் உன் ஸ்வரூபத்தை மறைத்துக்கொண்டு ஆயர்சிறுவனாக வளர்ந்தாயே அதைச் சொல்வது.” என்றாள் கோதை.

கண்ணன் கூறினான் . “ ஆம் என் அவதார ரஹஸ்யம் இதுதான். அதனால்தான் அர்ஜுனனிடம், ‘ஜன்ம கர்ம ச மே திவ்யம் யம் ஏவம் யோ வேத்தி தத்வத: த்யக்த்வா தேஹம் புனர்ஜனம் ந ஏதி, மாம் ஏதி’ என் ஜன்மம் கர்மம் இவைகளை யார் தெரிந்துகொண்டார்களோ அவர்கள் மறுபடி பிறப்பதில்லை, என்னை அடைகிறார்கள்’ என்றேன். “

ஆண்டாள் கேட்டாள், “என் ஜன்மம் என்று எதைக் கூறுகிறாய் ? உனக்கு ஏது ஜன்மம்?”

“ அஜாயமானோ பஹுதா விஜாயதே என்ற உபநிஷத் வாக்கியப்படி நான் பிறப்பற்றவன் ஆனால் பலவாகத் தோன்றுகிறேன். தேவகி, கௌசல்யை, அதிதி இவர்கள் என்னைப் பெற்றதாக நினைத்தது என் மாயை. என் ஸ்வரூபத்தை மறைத்துக்கொண்டு இதர உருவத்தில் தோன்றினேன், என்ற கண்ணனைப் பார்த்து, ஆண்டாள் ,

“ உன்னை மறைத்துக் கொள்வது என்பது உன் கைவந்த கலை ஆயிற்றே. இரணியனின் தூணில் மறைந்து இருந்தவன் அல்லவா?, மகாபலியை ஆட்கொள்ள வாமனனாகவும் தண்டகாரண்ய ரிஷிகளைக் காப்பாற்ற ராமனாகவும் வந்த நீ இப்போது யாதவகுலத்தைக் காக்க கோபாலனாய் தோன்றி உள்ளாய்.” என்றாள்.

“ வராஹமாகத் தோன்றி பூதேவியாகிய உன்னை எடுத்து வந்ததை மறந்துவிட்டாயே” என்றான் கண்ணன்.

“ ராமாவதாரத்தை நினைக்கையில் எனக்கு ஒன்று தோன்றுகிறது. தசரதர் செய்த தவப்பயன் நான்கு புதல்வர்கள். கிருஷ்ணாவதாரத்தில் நான்கு பேரின் தவப்பயனாக ஒரு புதல்வன். மேலும் ராமனாக பித்ருவாக்கிய பரிபாலனம் செய்தது வயது வந்த பின். ஆனால் கிருஷ்ணனாக பித்ருவாக்ய பரிபாலனம் பிறந்ததுமே “ என்றாள் ஆண்டாள்.

“எப்படி?என்ற கண்ணனிடம், “கம்சனுக்கஞ்சி உன் திவ்ய ஸ்வரூபத்தை மறைத்துக் கொள்ளும்படி உன் பெற்றோர் கேட்டதால் சாமானிய மானுடக்குழந்தை போல் ஆனாயே அதைச் சொல்கிறேன். “ என்றாள்.

“கிருஷ்ணாவதாரத்திலும் உன் ஸ்வரூபம் அவ்வப்போது வெளிப்படத்தான் செய்தது. வசுதேவர் தேவகியிடம் உன் நிஜ ரூபத்தைக் காட்டினாய். யசோதையிடம் வாய் திறந்து புவனம் காட்டினாய். நீ அசுரர்களை வதைத்தது, காளியனை வென்றது கோவர்தனம் தாங்கியது ஒவ்வொன்றுமே உன் திவ்ய ஸ்வரூபத்தை வெளிப்படுத்தினாலும், உன் மாயையால் எல்லாவற்றையும் மறைத்து விட்டாய்.” என்றாள்.

“ ஆயினும் என் பக்தர்களும் முனிவர்களும் என்னை உணர்ந்திருந்தார்கள், என்ற கண்ணன் , ஒருத்தி மகனைப் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்த என்ற உன் சொற்கள் எனக்கு நம்மாழ்வாரையும் ராமானுஜரையும் நினைவு படுத்துகின்றன. திருவாய்மொழி என்பது வேதம் அதில் உள்ளவன் வேதஸ்வரூபனான நானே. ஆகவே நம்மாழ்வார் தேவகியைப்போல, திருவாய்மொழியை உலகுக்கு அளித்த ராமானுஜர் யசோதையைப் போல.’என்றான் .”

—————

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே

சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

“நீங்கள் வேண்டுவது என்ன என்று கேட்டாயல்லவா? பதில் கூறிவிட்டேன், “ என்ற ஆண்டாளைப் பார்த்து கண்ணன் “ ஏது பெரிய பட்டியலாக இருக்கிறதே?”என்றான்.

“ எங்கள் மூத்தோர் கூறியபடி பாவை நோன்பு செய்வதற்கு வேண்டிய சாமக்ரியைகள் இவை.” என்ற ஆண்டாளைப்பார்த்து,

“நீ கூறியவை தருவதில் ஒரு சங்கடம் இருக்கிறதே. உலகமே நடுங்கும் ஓசை கொண்ட என் பாஞ்சஜன்யம் போன்ற சங்கங்கள் பால் போல் வெண்மையானவை வேண்டும் என்றாய். பாஞ்ச ஜன்யத்தைப் போலே இன்னொரு சங்கம் ஏது? இதை உனக்கு கொடுத்துவிட்டு நான் என் செய்ய?” என்றான்.

“ உன் வாக் சாதுர்யத்தை என்னிடம் காண்பிக்கிறாய். நான் என்ன கேட்கிறேன் என்பது உனக்குத் தெரியாதா? பாலன்ன வண்ணம் என்று சொன்னது வெண்மையான சங்கம் தான் அதிக ஓசை எழுப்பும் என்பதனால். இங்கு வெண்மை என்பது சத்துவ குணம்.அது மனதில் பக்தி என்னும் பெரிய ஓசை எழுப்பி ரஜஸ் தமஸ் இவற்றை போக்கிவிடும்.

“ மேலும் உன்னை ஆலின் இலையாய் என்று குறிப்பிட்ட காரணம் பாற்கடலில் ஆதிசேஷன் மேல் துயின்ற நீ ஒரு ஆலிலை மேல் பாலகனாக தோன்றினாயே உன்னால் ஒன்று என்ன, ஆயிரம் வெண்சங்கங்களை உண்டாக்க முடியாதா?”

“ உன் பாஞ்ச ஜன்யத்தின் ஒலியாலேயே உலகத்தை உருவாக்க முடியும். ஏனென்றால் அது பிரணவமல்லவா. நீ பாஞ்சஜன்யத்தை ஞாலம் எல்லாம் நடுங்க முழங்கினபோதே அத்தனை கௌரவர்களும் அழிந்தனர். யுத்தம் என்பது ஒரு நாடகம். அதனால் கன்னத்தைத் தடவப் பெற்ற துருவன் ஞானத்தைப் பெற்றானே.”

“ஒரு தர்ப்பைப்புல்லை ப்ரும்மாஸ்திரமாக்கினாய். கடல் ஒரு கால்வாய் போல கடந்தாய். குரங்கு சேனையுடன் சென்று ராவணனை ஒரு கொசுவை அடிப்பது போல அழித்தாய். மேலும் கிருஷ்ணாவதாரத்தில் நீ செய்யாத அத்புதமா? என்றாள் ஆண்டாள்.

கண்ணன் கூறினான் . “அது சரி. பாஞ்ச ஜன்யத்தின் உனக்கு மிகவும் ஈடுபாடு இருப்பதாகத் தோன்றுகிறது. அதற்கு மூன்று வரிகளை கொடுத்திருக்கிறாயே?”

“மூன்று வரிதானா ? உன் அதரத்தில் அமரும் பாக்கியம் பெற்ற அதற்கு பத்து பாசுரங்கள் அல்லவா அளித்திருக்கிறேன் “ என்ற ஆண்டாள் மேலும் கூறினாள்.

“இங்கு மூன்றுவரிகள் அமைக்கக் காரணம் பஞ்சஜன்யத்தின் த்வனி ஓம்காரம். அதற்கு அ, உ, ம் என்று மூன்று மாத்திரைகள் . அது மட்டுமா. பாஞ்சஜன்யம் கடலில் பிறந்து அசுரன் உடலில் வளர்ந்து உன் கரத்தை அடைந்தது என்ற மூன்று நிலை. அதே போல நீயும் மதுரையில் பிறந்து, கோகுலத்தில் வளர்ந்து துவாரகையில் குடியேறினாய் அல்லவா?”

“அபாரம்,” என்ற கண்ணன் சங்கத்தைப் போல மற்றவைகளுக்கும் என்ன உண்மையான பொருள் என்று கூறவேண்டியதுதானே ?” என்றான்.

ஆண்டாள் விடையளித்தாள்.

“சாலப்பெரும்பறை பறை வாத்தியம் அல்ல. உன் நாமசங்கீர்த்தனம்.அது எங்கும் முழங்கி மற்ற சப்தங்களை விலக்க வேண்டும். பல்லாண்டிசைப்பாரென்றது உன் பக்தர்களை . அவர்களின் சத்சங்கத்தால் உலக விஷயங்கள் மீது பற்று விலகும்.”

கோலவிளக்கு உன்னைப்பற்றிய ஞானமாகிய தீபம். கொடி, உன் புகழ் பரப்பும் பக்தி என்ற த்வஜம், விதானம் உன் அருள் என்கிற பந்தல்.”

கண்ணன் கூறினான்.

“ இது 26 ஆவது பாசுரம்.. இது அஷ்டாக்ஷரத்தையும் த்வய மந்திரத்தையும் குறிப்பதாக அடியார்கள் கூறுகின்றனர். 2+6 =8, அஷ்டாக்ஷரம். ,2 த்வயமந்த்ரம்.6 என்பது அதன் ஆறு பாதங்களைக் குறிக்கிறது என்று கூறுவர். “

————

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்

பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

நாடுபுகழும் பரிசினால் நன்றாக

சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே

பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்

ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

“இப்போது கோவிந்த நாம சங்கீர்த்தனமா? “என்ற கண்ணன் , ஆனால் அது எனக்கு மிகவும் பிடித்த நாமம். “ என்றான்,

“ இது உன் பக்தரகளுக்கும் பிடித்த நாமம் ஆயிற்றே. ஒருமுறை அல்ல மூன்றுமுறை இந்த நாமத்தால் உன்னை அழைக்கிறேன். அது பற்றிய விளக்கம் என் அடுத்த பாசுரத்தில் வரும்.:” என்ற ஆண்டாள்’

“நீ உன்னை நினையாதவரையும் உன் அன்பினாலும் குணங்களினாலும் தடுத்தாட்கொள்பவன் . அதனால் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் என்றேன். ஆனால் உன்னிடம் அன்புள்ளவர்களால் நீ வெல்லப்படுகிறாய். உன்னை முதலில் நிந்தித்த வாலி பின்னர் புகழவில்லையா? தாராவும் மண்டோதரியும் அவர்கள் கணவர்களைக் கொன்ற உன்னைப புகழ்ந்தார்களே. அவர்கள் உன் குணத்தால் வெல்லப்பட்டார்கள். ராவணன் உன் வீரத்தாலும் சூர்பனகை உன் அழகினாலும், விபீஷணன் உன் கருணையினாலும் வெல்லப்படவில்லையா? “ என்றாள்.

“நீங்கள் கேட்டதைத் தந்தேன். இப்போது உங்கள் அடுத்த நடவடிக்கையைக் காண ஆவல் கொண்டுள்ளேன்.” என்ற கண்ணனிடம்,

ஆண்டாள் கூறினாள்.

“எங்களுடைய கோரிக்கை உன்னுடன் சேர்வதே. நீ அதைத் தர சம்மதித்ததால் நாங்கள் மையிட்டேழுதோம் , மலரிட்டு முடியோம் என்று அன்று சொன்னதன் மாறாக,சூடகம்- வளை, தோள்வளை , தோடு, செவிப்பூ என்னும் ஆபரணம் , பாடகம்- கால் கொலுசு முதலியவை அணிவோம். புத்தாடை அணிவோம். ஏனென்றால் அரசர்க்கரசனான உன் முன் நிற்கத் தகுதி வேண்டும் அல்லவா.”

“நெய்யுண்ணோம் பால் உண்ணோம் என்று அன்று சொன்னோம். இன்று சர்க்கரைப் பொங்கல் மூட நெய் பெய்து முழங்கை வழியாக ஓடும்படி உண்போம்.” என்றாள்.

கண்ணன் கேட்டான். “ அதென்ன முழங்கை வழி வார, நெய்யை ஓடவிடுவானேன். அதை சாப்பிட வேண்டியது தானே ? “ என்றான்.’

“ அது ஏன் என்றால் உனக்கு பால்சோறு அதாவது அக்காரவடிசில் நைவேத்யம் செய்து விட்டு உன் முகத்தையே பார்த்துக் கொண்டு அதை சாப்பிட மறந்து விடுவோம்.” என்றாள்.

“நெய்யிடை சோறும் நியதமும் அத்தாணிச்சேவகமும்

கையிடைக்காயும் கழுத்துக்குப்பூனோடு காதுக்குக் குண்டலமும்

மெய்யிடை சாந்தமும் தந்து எம்மை வெள்ளுயிராக்கவல்ல

பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே

என்று பாடிய பெரியாழ்வார் பெற்ற பெண்பிள்ளை அல்லவா நீ? “ உன்னிடமிருந்து இந்த சொற்கள் வருவதில் வியப்பென்ன? “என்றான் கண்ணன்.

“உண்மையில் நாங்கள் அணியும் பல்கலன் அஷ்டாக்ஷர மந்த்ரம், த்வய மந்த்ரம் , சரம ஸ்லோகம் இவையே . உன்னோடு சேர்ந்து இருக்கும்போது, உண்டாகும் ஆனந்தமே உன் அருளாகிற நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கல். புத்தாடை என்பது உன் கைங்கர்யம்.” என்ற ஆண்டாளைப் பார்த்து, “ உன் முகத்தைப் பார்த்தால் இன்னும் ஏதோ சொல்ல வருவது போல் தெரிகிறதே?” என்றான் கண்ணன்.

“ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள் என்றது நீ இருக்கும் அதே பூமியில் இருப்பது. சாலோக்யம். உன் மாளிகை வருவது சாமீப்யம், உன் அருகாமை. இதற்கு முந்தைய பாசுரத்தில் நாங்கள் கேட்டவை உன்னோடு ஒத்துப்போகும் தன்மை அதாவது சாரூப்யம்.இந்த பாசுரத்தில் கேட்பது உன்னோடு கலத்தல் , சாயுஜ்யம். உன்னோடு கூடியிருந்து அடையும் ஆனந்தமே பாற்சோறு.

————-

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்

அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை

பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்;

குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே;

இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

போன பாசுரத்திற்குப் பிறகு தன்னை ஆயர்பாடியில் இருப்பதாகவே கற்பனை செய்துகொண்ட ஆண்டாள் கூறினாள்.

“உன்னுடன் இணையும் ஆனந்தம் கிடைக்க வேண்டும் என்று கேட்டோம் நீயும் தந்தேன் என்றாய் . ஆனால் எங்களுக்கு அதற்கு தகுதி உண்டா என்று தெரியவில்லை.”

“ ஏன் இந்த திடீர் சந்தேகம்? “ என்றான் கண்ணன்.

“ ஆண்டாள் கூறினாள்.” நீ குறைவொன்றும் இல்லாத கோவிந்தன், நான் இப்போது உன்னை எங்கும் நிறைந்தவனாகக் காண்கிறேன்.

நாங்கள் பசுக்கள் பின்னால் சென்று கானகத்தில் உணவு உண்ணும் அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலம். நீ பிறந்து இங்கு வந்தது நாங்கள் செய்த புண்ணியம். அறியாத பிள்ளைகளாகிய உன் பெருமை தெரியாமல் உன்னை எங்களுக்கு இணையனானவன் போல கண்ணா கோபாலா என்று சிறு பேரால் அழைக்கிறோம். நீ சீறினால் என்ன செய்வது என்ற பயம் வந்து விட்டது. ஆனாலும் உன்னை விட்டுவிட்டு எங்களால் இருக்க முடியாது ஆதலால் அருள வேண்டும்.” என்றாள்.

கண்ணன் கூறினான் .”கண்ணா கோபாலா என்பது சிறு பேறல்ல. நான் இங்கு கிருஷ்ணனாக இருக்கையில் என்னை நாராயணா, என்று அழைத்தால்தான் சிறுபேர்,. வேஷத்திற்கேற்ற பெயர் சொல்லித்தானே கூப்பிடவேண்டும். நாடகத்தில் நடிக்கும் ஒருவனை அவன் இயற்பெயர் சொல்லி அழைப்பார்களா? “

“நான் இந்த இடைக்குலத்திற்கு ஏன் வந்தேன் தெரியுமா? நீங்கள் செய்த புண்ணியம் கோஸம்ரக்ஷணம். பசுவின் தேஹத்தில் பதினான்கு லோகங்களும் இருக்கின்றன. ஆதலால் பசுவை மூன்று தரம் சுற்றி வருவது இந்த பிரபஞ்சத்தை சுற்றி வருவதாகும்.”

“ஆமா அறிவேன். அதனால்தானே கௌதமர் காமதேனுவைச் சுற்றி வந்து அஹல்யையை அடைந்தார். “ என்றால் ஆண்டாள்.

“ நீ அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலம் என்றாயே , நான் பக்தியை மட்டுமே பெரிதாகக் கருதுகிறேன். சாஸ்த்ர அறிவையோ யாகம் தவம் இவைகளையோ அல்ல. ‘நாஹம் வேதைர்ந தபஸா ந தானேன ந ச இஜ்யயா, பக்த்யா து அனந்யயா லப்ய: என்று அன்று பார்த்தனுக்குக் கூறியபடி பக்தியால் மட்டுமே என்னை அடைய முடியும் . தவத்தினாலோ தானதர்மங்கள் செய்வதாலோ யாகங்கள் செய்வதாலோ அல்ல” என்றான் கண்ணன். .

“ ஆம் அறிவேன். சபரியும் குஹனும் உன் அருள் பெறவில்லையா.? ஆனால் சபரி குருவின் அருளால் அவள் கொடுத்த பழங்களை நீ உண்ணும் பாக்கியம் பெற்றாள். குஹனுக்கு அது கிடைக்கவில்லையே. ஆயர் சிறுமியர் குருவுக்கு எங்கே போவது? “ என்றாள் ஆண்டாள்.

“ஆயர்களுக்கு அவர்கள் சேவை செய்யும் பசுக்களே குருமார்கள். திலீபன் நந்தினிக்கு சேவை செய்து அருள் பெற்றது போல.”

“உண்மை அறிவு என்பது என்னை அறிவது மற்றதெல்லாம் அறியாமையே, “ என்ற கண்ணன் , இந்த பாசுரத்தில் கோவிந்தன் என்ற சொல்லுக்கு விளக்கம் கூறுவதாக உரைத்தாயே.” என்றான்.

.” சொல்கிறேன், என்ற கோதை,

“கோ என்றால் மோக்ஷம் அல்லது சுவர்க்கம். அதைக்கொடுப்பதால் நீ கோவிந்தன்..

கோ என்றால் அஸ்த்ர சஸ்த்ரம். அதை நீ விச்வாமித்ரரிடம் இருந்து பெற்றதால் கோவிந்தன்.

கோ, பசுக்கள் அவற்றை அறிந்தவன் அதாவது அவைகள் தண்டகாரண்ய ரிஷிகள் என்று அறிந்தவன்.

கோ என்றால் வேதம் நீ வேதத்தால் அறியப்படுபவன்..

கோ என்றால் வஜ்ராயுதம் அதை இந்திரன் பெற வழிகாட்டியவன்.

உன்னை வேதம் சஹஸ்ராக்ஷ: என்று சொல்கிறது கோ என்றால் கண் என்றும் பொருள்.

கோ என்றால் நெருப்புஜ்வாலை. நீ சூர்யமண்டல மத்ய வர்த்தி என்று கூறுகிறது வேதம்.

கோ என்றால் பூமி. ஜலம், வேதம், இந்த்ரியங்கள் என்றும் பொருள். நீ வராஹமாக பூமியை வெளிக்கொணர்ந்தாய், மத்ஸ்யமாகவும் கூர்மமாகவும் நீரில் சஞ்சரித்தாய், வேதங்களின் உட்பொருள் ஆனாய். இந்த்ரியங்களைக் கட்டுப்படுத்துபவன் , ஹ்ருஷீகேசன்,

“ஆச்சரியமான விளக்கம், “ என்ற கண்ணன் , “ எனக்கே மறந்துவிட்ட பல அர்த்தங்களைக் கூறினாய். அதனால் தான் நீ பிறந்த இந்த ஸ்ரீவில்லிபுத்தூரை கோவிந்தன் வாழுமூர் என்று சொல்கிறார்களோ. “ என்ற கண்ணன் , முக்கியமான அர்த்தத்தை மறந்து விட்டாயோ? ‘ என்றான்.

“இல்லை மறக்கவில்லை . கோவர்தனத்தைத் தாங்கியதால் உனக்கு கோவிந்த பட்டாபிஷேகம் நடந்ததல்லவா? கோ என்றால் மலை என்றும் அர்த்தம் கோ வர்தனம் என்ற பெயர் கோ அதாவது பசுக்களை வர்தனம், செழிக்கச் செய்வதால் அதற்கு கோவர்தனம் என்ற பெயர் பொருத்தமே,’ என்ற ஆண்டாள், உன் கோவிந்த பட்டாபிஷேகம் நீ ராமனாக பட்டாபிஷேகம் செய்துகொண்டதை விட உயர்ந்தது என்று கூறுகிறார்களே , ஏன் தெரியுமா?” என்ற ஆண்டாளைப் பார்த்து

“‘சொன்னால் தானே தெரியும் என்றான்,” அந்த குறும்புக்காரன் கள்ளப் புன்னகையுடன்.

“ வால்மீகி கூறுகிறார் ராமருக்கு வசிஷ்டர் பட்டாபிஷேகம் செய்தது, ‘வஸவோ வாஸவம் யதா’ தேவர்கள் இந்திரனுக்கு செய்தது போல் இருந்தது, என்று. கோவிந்த பட்டாபிஷேகம் அந்த இந்திரனே உனக்கு செய்தானே!” என்றாள் ஆண்டாள்.

“ கோவிந்தா என்று என்னை அழைப்பவர் யாராயினும் அவரை உடனே வந்து காக்கக் கடமைப்பட்டுள்ளேன், த்ரௌபதி கோவிந்தா என்று கூவியவுடன் காத்தது போல. அதனால் எனக்கும் கோவிந்தன் என்பது மிகவும் பிடித்த பெயர். என்றான் கண்ணன்.

————

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

“சிற்றம் சிறு காலே, அதிகாலையில் வந்து கோவிந்தா என்று கூறி உன்னை சேவித்து உன் பொற்றாமரை அடியைப் போற்றும் காரணம் சொல்கிறேன் கேளாய் . சற்றுத் தாமதமாக வந்தால் நீ மாடு மேய்க்கப போய்விடுவாய். மேலும். உன்னுடைய சிற்று அம் சிறுகால் உன் கட்டிலில் இருந்து வெளித்தெரிவதை காண்பது எத்தனை இன்பம்! உன் அந்த பொற்றாமரை அடிதான் எங்களை இங்கு இழுத்து வந்தது.அதைப் போற்றவே வந்தோம்.”
“ என்னைக் கூப்பிட்டால் நானே வந்திருப்பேனே. பனித்தலை வீழ நீங்கள் இவ்வளவு காலையில் வந்திருக்க வேண்டாமே ?” என்ற கண்ணனிடம்,

‘நாங்கள் கூப்பிட்டால் நீ வருவதற்கு நாங்கள் என்ன கஜேந்த்ரனா இல்லை திரௌபதியா? நாங்கள் அவ்வளவு புண்ணியம் செய்தவர்கள்: அல்ல. ஆயினும் பெற்றம் மேய்த்துண்ணும் ஆயர்குலத்தில் உதித்த நீ எங்களைக் கைவிடமாட்டாய் , எங்கள் குற்றேவலை ஏற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கையில் வந்தோம் . என்றாள் ஆண்டாள்.

“மேலும் சிற்றம் சிறு காலை என்பது பிராம்ம முஹூர்த்தம். முனிவர்களும் யோகிகளும் மெல்ல எழுந்து ஹரி என்ற பேரரவம் செய்யும் வேளை. பேரரரவம் என்றால் அவர்கள் த்யானிக்கும் உன் ஸ்வரூபம் ஒன்றாகச் சேர்ந்து விஸ்வரூபம் எடுத்தது போல. அப்போது உன்னை வழிபடுவது சிறந்தது. ஏனென்றால் இந்த உலக வ்யவஹாரத்தின் சபலம் தூண்டுமுன் உன்னை நினைப்பது சுலபம்.”

“ஆன்மீகப் பொருளாவது, சிற்றம் சிறுகாலை என்பது பகவத் விஷயமான அறிவு ஏற்படுவது. அதற்கு முன் அறியாமை என்ற இரவில் தூங்கிக் கொண்டிருக்கிறோம். “

“என்னைப் போற்றும் பொருள் என்ன என்பதை இன்னும் சொல்லவில்லையே? “ என்றான் கண்ணன்.

ஆண்டாள் கூறினாள். “இற்றைப் பறைகொள்வான் அன்று , எங்களுக்கு இந்த உலகத்தின் பொருள் எதுவும் வேண்டாம். கோவிந்தா எனக் கூறி வந்து அன்று விபீஷணன் ‘த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ஸ்ச ராகவம் சரணம் கத:’ என்று உற்றார் உறவினர் எல்லோரையும் விடுத்து வந்தது போல் உன்னையே சரண் எனப்புகுந்தோம். “

எங்களுக்கு வேண்டியதெல்லாம் இற்றைக்கும் ஏழேழுபிறவிக்கும் உன்னோடு உற்றோராக இருக்க வேண்டும்.உனக்கே ஆட்செய்ய வேண்டும். இனி வரும் பிறவிகளிலும் உன் அடியவர்களாகி உன் சேவையில் ஈடுபடவேண்டும். “ மற்றை காமங்கள் மாற்றி எங்களை ஆட்கொள்வாயாக.:” என்றாள் ஆண்டாள்

“ இன்னும் ஏழேழு பிறவி என்றால் முக்தியை நீங்கள் விரும்பவில்லையா? “ என்றான் கண்ணன்.”

ஆண்டாள் கூறினாள். உன் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்தால் ஏழேழு பிறவியும் ஒரே பிறவி போலத்தான் இருக்கும். முக்தி என்பதில் அக்கறை இல்லை. நீ ஒருவன்தான் எல்லாப் பிறவிகளிலும் எங்கள் பந்து. மற்ற பந்துக்கள் இந்தப் பிறவியோடு சரி. “

“ அதாவது மாதா ச லக்ஷ்மீ தேவி பிதா தேவோ நாராயண:, பாந்தவா விஷ்ணுபக்தா: ச வசுதைவ குடும்பகம் “ என்ற வாழ்க்கை வேண்டும் என்கிறாய்”., என்ற கண்ணன் “உன் பாசுரங்கள் மூலம் சரணாகதிதத்துவத்தை நிலைநாட்டிவிட்டாய்.” என்றான்.

ஆண்டாள் கூறினாள். “எவரிடம் சரணாக்தி அடைகிறோம் என்பது முக்கியம். யாரிடம் சக்தி, காருண்யம் இவை உள்ளதோ அவரே சரணம் அடையத் தகுந்தவர். த்வய மந்திரமான ஸ்ரீமன் நாராயண சரணௌசரணம் ப்ரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நம: , பிராட்டியுடன் கூடிய உன்னை சரணம் அடைவதைக் கூறுகிறது. லக்ஷ்மணன் சீதையுடன் நீ இருக்கும்போது காலில் விழுந்தான் தன்னை வனதுக்கு அழைத்துப்போகக் கோரி. சீதையை விட்டு உன்னை மட்டும் கோரிய சூர்பனகை காது மூக்கு இழந்தாள். உன்னை விட்டு சீதையை மட்டும் கவர்ந்த ராவணன் அழிந்தான்.

அதே சமயம் சக்தியற்றவரை சரணம் அடைவது பயனற்றது என்று நீ சமுத்ரராஜனை சரணம் என்று கூறியது காட்டுகிறது. ஏனென்றால் அவன் அஸமர்த்தன்.உன்னைவிட சக்திபடைத்தவன் அல்ல. எனவே ஸமர்த்தனாகவும் காருண்யனாகவும் பிராட்டியுடன் கூடியனாகவும் உள்ள உன்னை சரணம் அடைந்தோம்.” என்றாள் ஆண்டாள்.

மேலும் கூறினாள்.

சரணாகதி என்பது ஒரு யக்ஞம். ஆத்மாதான் ஹவிஸ். அச்சுதனாகிய நீ யாகத்தீ. பிரணவம் என்பது வில். ஆத்மா அம்பு. ஆத்மாவை பிரணவத்தில் பூட்டி பிரம்மமாகிய உன்னைக் குறிவைக்க வேண்டும். “

“கண்ணன் கூறினான்.

“ஆம். உன்னுடைய திருப்பாவை ஆத்ம சமர்ப்பணம் என்ற ஒரு மகாயக்ஞம்.”

————

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை

திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்

செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்

இந்தப பதிவு ஆரம்பத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருப்பாவை சாற்றுமுறை நடக்கையில் அரங்கனும் ஆண்டாளும் வந்து கலந்து கொண்டனர். இப்போது இவர் இருவர் சந்நிதியிலும் அன்பர்கள் பலஸ்ருதி ரூபத்தில் உள்ள இந்த பாசுரத்தைக் கூறி சேவிக்கிறார்கள்.

வங்கக்கடல் கடைந்த மாதவன் மற்றும் கேசவன். அவனை திங்கள் திருமுகத்துச் சேயிழையார் , கோதை தலைமையில் அழகிய முகம் கொண்ட பெண்கள் சென்று, அவன் மாளிகைக்குச்சென்று, இறைஞ்சி, ப்ரார்த்தித்த, பட்டர்பிரான் மகளான் கோதையின் இந்த முப்பது சங்கத்தமிழ் மாலையை எவர் ஈரிரண்டுமால்வரைத் தோள் கொண்ட திருமாலுக்கு சமர்ப்பிக்கிறார்களோ அவர்கள் என்றும் இன்புற்று வாழ்வார் என்பது இதன் சாராம்சம்.இப்போது பாசுரத்தைப் பார்க்கலாம்.

வங்கக்கடல் என்றால் வங்காள விரிகுடாக்கடல் என்று சிலர் நினைக்கலாம் ! மாதவன் கடைந்தது திருப்பாற்கடல். ஏன் வங்க க்கடல் என்று கூறினாள்? வங்க என்றால் அழகிய என்று பொருள். பாற்கடல் அச்சுதன் குடிகொண்டதால் அழகியது. மேலும் அழகே உருவான திருமகளைத் தந்ததாலும் அமுதம் தந்ததாலும் அது அழகியது. வங்க என்ற சொல்லுக்கு அலைகள் நிரம்பிய என்றும் பொருள்.

கடைந்த மாதவன் – இங்கு மாதவன் என்ற பெயர் பொருத்தம் .ஏனென்றால் மாயா: தவ: மாதவ: . மா என்றால் லக்ஷ்மி தவ என்றால் பதி. கடலைக் கடைந்ததனால் லக்ஷ்மீபதியான அவனை இங்கு மாதவன் என்று சொல்கிறாள்.கடைந்தது மட்டும் அல்லாமல் முதலிலிருந்து கடைசி வரை, அவன் உதவினான் அல்லவா?

யாமுனாசார்யர் ஸ்தோத்ரரத்தினத்தில் கூறுகிறார் ,” யதர்த்தம் அம்போதி: அமந்தி அபந்தி ச ,” யார் பொருட்டு கடல் கடையப்பட்டதோ கட்டப்பட்டதோ என்று. அதாவது திருமகளை அடைய கடலைக் கடைந்தான் , திருமகள் அவதாரமான சீதையை அடையக் கடலைக் கட்டினான்.என்கிறார்.

இதை ஆராய்ந்து பார்க்கையில், திருமகளை அடையவே அவ்வளவு ஸ்ரமம் எடுத்துக்கொண்டான் என்று வைத்துக் கொண்டாலும், அவளைத்தன் திருமார்பில் வைத்து அவன் ஹ்ருதயத்தை தயைக்கு இருப்பிடமாகக் கொள்வதற்கே என்று அறியலாம். ஆகையால் அவன் உலகக்ஷேமத்துக்காகவே திருமகளை அடைய விரும்பினான் என்று விளங்குகிறது.

பாற்கடலைக் கடைந்தவன் கோகுலத்தில் தயிர்கடலையும் கடைந்தான் கோபியர் உள்ளத்தையும் கடைந்தான், இது பின்னர் மகாபாரதம் என்ற ரணக்கடலைக் கடைவதற்கோ என்று தோன்றுகிறது.

கேசவன் என்ற சொல் அழகிய கேசத்தை உடையவன் , கேசி என்ற அசுரனைக் கொன்றவன், நாராயணன் என்கிற பரப்ரம்மஸ்வரூபம் க என்ற பிரம்மாவையும் ஈஸ என்னும் சிவனையும் வசத்தில் கொண்டது என்றும் பொருள் கொள்ளலாம். கேசவன் மார்கழி மாதத்தின் அதிஷ்டான தெய்வம், இந்த பாசுரம் கடைசி ஆதலால் அடிபாடி என்று தொடங்கி கேசவன் என்று கேசத்தைக் குறிப்பதாக உள்ளதால் இது பாதாதி கேசாந்த ஸ்தோத்திரம் ஆகிறது.

அடுத்து பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் என்றதன் பொருள், விஷ்ணுசித்தர் அதாவது பெரியாழ்வார் தாமரை மற்றும் துளசி அணிவாராம்.தாமரை ஸ்ரீதேவியையும் துளசி நாராயணனையும் குறிப்பது.

கோதையின் பாசுரங்கள் மேன்மையில் சங்கத்தமிழை ஒத்தது. அதனால் சங்கத்தமிழ் மாலை என்பது பொருத்தமே.சங்கம் என்றால் சேர்வது. பல பக்தர்கள் கூடி இதை அனுபவிக்கிறார்கள்.

ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத்திருமால். மால் போல் அதாவது மலை போன்ற நான்கு தோள்களை உடையவன், தாமரைச்செங்கண் கொண்டவன். இதுவரை சரி. அதென்ன செல்வத்திருமால்?

இதற்குப் பல பொருள் கூறுகிறார்கள்.

திருமால் என்பது ஸ்ரீனிவாசன் திருமகளுடன் சேர்ந்து செல்வத்திருமால் ஆகிறான்.

எண்ணற்ற பக்தகோடிகள்ஆகிய செல்வம் உடையவன்.

ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலை, பாடிக்கொடுத்த பாமாலை என்ற செல்வம் உடையவன்.

நம்மாழ்வார் அவனை செல்வ நாரணன் என்று குறிப்பிடுகிறார்.

ராமானுஜரால் செல்வப் பிள்ளாய் என்று அழைக்கப் பட்டவன்.

இந்த திருப்பாவையை அறிந்து திருமாலை வணங்குபவர் எங்கும், இக லோகம் பரலோகம் இரண்டிலும் திருவருள் பெற்று இன்புறுவர்,

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆ முக்த மால்யதா-(முத்துகளால் ஆன மாலை)- ஸ்ரீ சூடிக்‌ கொடுத்தவள்‌) ஏழாவது அத்யாயம் -ஸ்ரீ கிருஷ்ணதேவராயன்-மொழிபெயர்ப்பாளர்‌ உரை -பன்மொழிப்‌ புலவர்‌ மு. கு. ஜகந்நாதராஜா

January 16, 2023

ஏழாவது அத்தியாயம்‌
திருவுடைய சிவனுக்கும்‌ (மேருமலையை வில்லாக திருமால்‌ பாணமாகவும்‌) திருமகளுக்கும்‌ தன்‌ மேனி தந்தவனே/
(கம்சனுடைய குவலாயாபீடம்‌ எனும்‌) யானையைக்‌ கொன்றவனே/ முதலையை அரிந்த சக்கராயுதத்தை உடையவ?னை/
நல்லோரைக்‌ காப்பவனே! தாமரைப்‌ பாதங்களும்‌ தங்க ஆடையும்‌ உடையவனே! வேங்கடாசலத்‌ திறைவனே! Vil—I1

கேட்பாயாக! அந்த இராச்கதன்‌ வருத்தத்துடன்‌ இவ்விதம்‌ கூறலானான்‌. VII—2

பிரம்மராட்சசன்‌ வரலாறு
சோழவள நாட்டில்‌ ஒரு ஊரில்‌ பதினான்கு கலைகளும்‌ கற்றவனாக இருந்தேன்‌. தருக்க வாதிகளை வாய்ச்சவடாலில்‌
வென்றேன்‌. வேதாந்திகளைக்‌ குற்றம்‌ சொன்னேன்‌. சுவடிகளை விரிக்கக்‌ சுண்டு சிரித்தேன்‌, புரோகிதர்கள்‌ கற்ற
அறிஞர்கள்‌, நூலாய்வு செய்குநர்‌ அனைவரையும்‌ அவமானப்‌ படுத்தினேன்‌. /11–3

இப்படியாக இருந்து மதயாளைபோலச்‌ செருக்குடன்‌, அரைகுறைப்‌ படிப்பினால்‌ அகங்காரம்‌ கொண்டவனாக, அவிழ்க்கவும்‌
முடியவும்‌ அயராத வீசம்‌ (கொஞ்சம்‌) காசுகள்‌ உடைய ரெட்டி.யைப்‌ போல, என்‌ படிப்பே பரம்பிரம்மம்‌ (பேரறிவு) ஆகக்கருதிய
வாறு பெரியோர்களைக்‌ கிளறி, (வாதத்தில்‌, தோற்றாலும்‌ வென்றதாகக்‌ கூறிக்கொண்டு, சில்லரைப்‌ பிரபுக்களை மயக்கி
தட்சிதரைக்கண்டு வேள்வி செய்யும்‌ ஆசை ஏற்பட்டு, பொருள்‌ வேண்டி மதுரைக்குச்‌ சென்று அந்‌ நகரில்‌ VIT—4

(சமூகத்திலிருந்து) வெளியேற்றப்பட்ட (ப௫ிஷ்சாரம்‌ செய்யப்பட்ட) பிராமணனுக்கு (செலவு) குறைந்த பிராயச்‌
சித்தம்‌ (கழுவாய்‌) செய்வித்து, பொன்னுக்ீகாக நான்‌ அவன்‌பந்தியிலமர்ந்து சாப்பிட்டு, வணிகருடைய புரோகிதர்களுடன்‌
கலந்து திதி நாட்களின்‌ (புண்ணியவாசனம்‌) அரிசிக்காக சண்டைபோட்டு, சூரிய சந்திர கிரகண காலங்களில்‌ தவம்‌, நீராடல்‌
முதலியவற்றின்‌ புண்ணியப்‌ பயன்‌” எல்லாம்‌ செல்வந்தர்‌ வீட்டு வாசலிலேயே தாரை வார்த்துவிட்டு, பச்சை மான்தோல்‌,
எரும, அடு, பசுச்களிள்‌ தோல்‌ செருப்புகள்‌ பெற ஊரெல்லாம்‌ திரிந்து தருப்பைப்‌ பீண்டச்‌ சோறு (8ீராத்த தினத்துண்டி)
உண்டு கிடைக்காத போது, நட்பற வாடிச்‌ சென்று தென்புலர்த்‌ கார்க்கிடும்‌ உண்டி மிச்சிலையுண்டும்‌, அதுவும்‌ கிடைக்கா
விட்டால்‌, சாப்பாட்டுக்‌ கடைக்காரர்களிடம்‌ இரந்து அரைச்‌ சாப்பாடு,சாப்பிட்டு இதற்கெல்லாம்‌’ தலையாய துலாபாரதாளம்‌
பெற்றும்‌ பொருள்‌ சேர்த்தேன்‌.
(துலாதாளம்‌ – ஈவோர்‌ தம்‌ எடையளவு/ஏதேனும்‌ பொருள்‌களை தானம்‌ செய்தல்‌) 971 ..5

இவ்விதம்‌ சேர்த்து ஒரு வைசியனுக்குத்‌ தந்து, மீண்டும்‌ வாங்கி, நான்கு மடங்காக்க, வட்டிக்‌ சுணக்குகள்‌ வைத்து
தானியங்களில்‌ முதலீடு செய்து கணக்கில்‌ சண்டையிட்டு அவன்‌“தருவேன்‌, தரமாட்டேன்‌” என்றேதும்‌ கூறாதவனாக இருப்ப,
சபைக்கு முறையிட்டுப்‌ போராடிக்‌ கொண்டிருந்தபோது (திருடன்‌) ஒருவன்‌ கவனித்து வந்தான்‌. VIT—6

புறச்சேரியில்‌ (பறைச்‌?சரி) புதிதாகத்‌ தைத்த செருப்புகளை வாங்கி, எண்ணெய்‌ தேய்த்து ஆவரம்‌ இலைகட்டும்‌ விரைவும்‌,
தாடிமீசை சிரைத்து, வென்னீர்‌ குளியற்‌ கடையில்‌ எண்ணெய்‌ தேய்த்துக்‌ குளிக்கும்‌ நிலையும்‌, சமையல்‌ செய்பவளின்‌ வீட்டுக்கு
முன்னைவிட அதிகமாக பால்‌, தயிர்‌, நெய்‌, காய்கறிகள்‌அனுப்பும்‌ முறையும்‌, அடப்பைப்‌ பெட்டி விரிதிது, வெற்றிலை
பாக்குகள்‌ நிறைக்கும்‌ ம௫ழ்வும்‌, (£டனான) பிரம்மச்சாரி தோளில்‌ சுமக்கும்‌ பையில்‌ உலையரிச, வாங்குவதும்‌, என்‌
மனைவிக்கு நல்ல சேலை வாங்கும்‌ பரபரப்பும்‌, பிற பயணிகளிடம்‌ பயணம்‌ குறித்து கேள்விகள்‌ கேட்டலும்‌ எல்லாம்‌ கண்டு
எனது பயணத்தை அறிந்தவனாக 41]….7

எநிகளோடு சேர்ந்து, ஒரு சிலரை வழிமறித்து (கொள்ளையிட) அனுப்பிவைத்து விட்டு, எல்லோரும்‌ போல
தானும்‌ ஒரு பையைதீ தூக்கிக்‌ கொண்டுவந்து, படுத்தெழுந்ததும்‌ வடக்கே வடக்கே ஒன்று கூறி திசைகாட்டி நடந்தான்‌ 41/8

எழுந்து செல்லவும்‌ விரைந்தெழுந்துகூட வந்தவர்கள்‌ நடக்கவே நானும்‌ மூட்டை முடிச்சுகளை சீடனிடம்‌ தந்து
போகவும்‌, அவன்‌ *இப்படி வருக’ என்று காட்டுப்‌ பாதை காட்டிடவே அவ்வழிச்‌ சென்று ஒரு சிற்றாற்றினைக்‌ கடக்க
இறங்குதலும்‌ (ஈளை) வி௫ல்‌ அடித்தான்‌. VII—9

உடனே, உள்ளங்கை ரேகை காணப்படும்‌ (விடியல்‌) வேளையில்‌ ஒரு அம்பு முன்‌ வந்து வீழ்ந்தது. இதற்குப்‌ பயணிகள்‌
நிற்கவே, விர்‌ விர்‌ என்று கற்கள்‌ வந்து விமுந்தன. வழியின்றி சாத்தரீகல்‌ (பயணியராகிய வணிகர்கள்‌ குழு) நிலை குலைந்தனர்‌ 11-10

பிரளய காலத்தில்‌ பெரும்‌ படயுழன்ற முக்கண்ணனின்‌ பரிவாரஙிகளாகிய பூதங்களைப்‌ போன்ற வலிமையோடு
திருடர்கள்‌ சூழ்ந்தனர்‌. உற்பாதங்களைப்‌ போன்ற அவர்கள்‌ கத்தி வீச்சுகள்‌ ஆலகால விஷத்தோடு போட்டியிட்டன. வாள்‌
வீச்சுக்களை இராகுவெனக்‌ கருதிய சூரியன்‌ பயற்து நிலை குலைந்து போனான்‌. அத்திருடர்‌ கூட்டம்‌ இராக்கதர்களைப்‌
போல விரைந்து “குத்து குத்து” என்று கூறியவாறு சொல்லும்‌ வில்லும்‌ கடுமையுறச்‌ சுற்றி வளைத்து விட்டனர்‌. 11-11

இவ்விதம்‌ காட்டு மரங்களிடையிருந்து வந்து வில்லை வளைத்துக்‌ கொண்டு சூழ்ந்த ௮க்‌ கருநிற மக்களைக்‌ கண்டு
(பயணியர்‌) அல்லகல்லோலப்பட்டுச்‌ சிதறியோடினர்‌. VIT—12

“பசை இல்லை (வலிவில்லை) நில்லுங்கள்‌ பாவிகளே?” என்று கூறி இயற்கைக்‌ கருவிகளை (வேள்விக்கருவிகளை) எடுத்‌
தெறிந்து நிற்பவர்களும்‌, தங்கம்‌ முதலிய முடிச்சுகளை மரத்தில்‌ எறிந்து செப்புச்கம்பி அடிக்குப்‌ பயந்து ஒடியவாறு 3மல்‌
துண்டை கீழே விட்டோடுபவர்களும்‌, சுமையை இறக்கிவைத்து கட்டாரியை உருவி நின்று ““இங்கெங்கே வருகிறீர்கள்‌! என்று
அதட்டி எதிர்த்து நிற்பவர்களும்‌, “ஆடையைக்‌ கொண்டு செல்க! தெய்வ (விக்கரக)த்தைத்‌ தொடாதீர்கள்‌! இது
போனால்‌ பட்டினி கிடக்க வேண்டியதுதான்‌” என்று தயை பிறக்குமாறு வேண்டிக்‌ கொள்பவர்களும்‌,
“எங்களிடம்‌ உள்ளத்தைத்‌ தந்து விடுகிறோம்‌; விலங்குகள்‌! ஆனால்‌ ஒன்று! பெண்களை மட்டும்‌ தொடாகூர்கள்‌ என்று
பெருமிதத்துடன்‌, சுயமரியாதையும்‌ துணிவும்‌ தோன்றக்‌ கூறி (திருடரீகளை) நிற்கச்‌ செய்து கொள்ளை கொழுப்போரும்‌ ஆக
அப்பயணிகள்‌ விலகிச்‌ சென்றனர்‌
(தங்கம்‌ முதலிய முடிச்சுகள்‌ மரத்தில்‌ எறிந்து திருடர்‌ கூட்டம்‌ போனபில்‌ தேடி எடுத்துக்‌ கொள்ள சிலர்‌ முனைவர்‌. 11-13

வில்லில்‌ அம்பு தொடுத்தவன்‌ சென்ற வழிப்‌ போகாமல்‌ எதிரீப்பட்டவர்களை பரபரப்புடன்‌ கத்தியாற்குத்தியும்‌ விடாக்‌
கண்டனாகிய கஞ்சன்‌ போராடவே பெரிதும்‌ துன்புறுத்தாமல்‌ குருதி ஒழுகக்‌ காயம்‌ செய்து கிடைத்த மட்டும்‌ பிடுங்கிக்‌
கொண்டும்‌ செவ்வியறிந்து (சமயமறிந்து) உருவிக்‌ கொண்டேோடு பலனைப்‌ பின்‌ தொடர்ந்து செல்லாது விட்டுத்‌ தொலைத்தும்‌,
சேமிப்பு பணம்‌, சொத்து) ஏதுமில்லாமல்‌, வாட்டசாட்டமாக இருப்பவனை சோதிக்குமாறு அப்புறம்‌ அனுப்பிவித்தும்‌, புதரில்‌
ஒளித்திருப்பவர்களை ஈட்டியால்‌ துழாவுவேன்‌ என்று பயமுறுத்தி வெளிப்படச்‌ செய்து கட்டிய துணிகளையும்‌ அவிழ்த்துக்கொண்டு
தயையுடன்‌ கோவணத்‌ (கெளபீனம்‌) திற்காக பழைய துணியை கொடுத்து விடுத்தம்‌, செருப்பு அட்டைகள்‌ கூட சோதித்தும்‌;
தலை முடிகூட ஆய்ந்தும்‌ அத்திருடரிகள்‌ கொள்ளையிட்டனர்‌.–7-14-

இவ்விதம்‌ அத்திருடர்‌ கூட்டம்‌ கிளர்ந்தெழுந்து அச்சமின்றி பல்விதமாகப்‌ பயணியர்‌ குழுவினைக்‌ கொள்ளையிட்டபோது
ஏற்பட்ட கைகலப்பில்‌, VIT—15

இடையிலிருந்து மார்பு வரை இழுத்துக்‌ கட்டிய கருநிறக்‌ கசிசு மிளிர, பூனைத்தாடி போல வடர்ந்த மீசை வயிறொட்ட
ஊசலாட, நீறுபூயே முகத்தில்‌ வடி கட்டிய மெழுகு பழஞ்சாந்துப்‌ பொட்டெனத்‌ திகழசுண்டு விரலில்‌ பொருந்திக்‌ கடந்த சுரிகை
(கத்தி)யின்‌ ஒளிவீச்சு மிகுந்திருப்ப, நின்ற ஊரிலிருந்துகண்‌ வைத்‌ துக்காத்திருந்த காகமஸ்ரு (காக்காய்‌ மீசையன்‌) என்னும்‌, ஒரு
பயங்கரமான சண்டாளத்‌ இருடன்‌, தப்பி ஓடிய என்னை தற்செயலாக எப்படியோ பார்த்து விட்டான்‌. ViI—16

கூடவந்த பிரம்மசாரி (மாணி) €டனை விட்டு விட்டு நான்‌ ஓட்டம்‌ பிடிக்கவும்‌, சுரிகையை முழங்கால்‌ சதையில்‌ பாய்ச்சவும்‌
ழே விழுந்ததும்‌, தொந்தி மேல்‌ இருந்த ஆடையை அவிழ்த்து, பொன்‌ முடிச்சிளைப்‌ பற்றிக்‌ கொண்டான்‌. நான்‌ தராமல்‌
முரண்டிப்‌ போராட இழுபறியில்‌ அரைஞான்‌ கயிற்றில்‌ பையின்‌ கயிறு இடக்க பை மட்டும்‌ அறுத்துக்‌ கொண்டு, காதிலிருந்த பாம்‌
படம்‌ அறுத்து, தலையிலணிந்த குல்லாயையும்‌ பிடுங்கிக்‌ கொண்டான்‌, 71…

என்‌ வாயில்‌ சனியிருத்ததால்‌ (சும்மா இருக்காமல்‌) **அ3ட/பாவி! பக்கத்‌ தூரில்‌ இரந்தும்‌ அயலானா$ூ மிகுந்த துன்பம்‌
செய்தாய்‌? இந்தப்‌ பணம்‌ எவ்விதத்திலும்‌ உளக்கு கிட்டாது! இர பார்த்துக்‌ கொள்கிறேன்‌’ ” என்றன்‌. VII—18

எனவும்‌ அத்திருடன்‌ “QsS மனிதன்‌ நிறையப்‌ பணம்‌ கொள்ளை கொடுத்ததால்‌ கிராமத்‌ தலைவனையும்‌ அரசனையும்‌
கண்டு (பிடித்துக்‌ கொடுத்து) விடுவான்‌! * என்று அஞ்சியவனாக குறையுயிரையும்‌ போக்க “எண்ணி, மீண்டும்‌ வர, மேல்‌ வரும்‌
மக்களும்‌, திருடர்‌ குழுவும்‌ ,காண்பரென்று அஞ்சியவாறு ஓடும்‌ வேகத்தில்‌ என்னைத்‌ தாறுமாறாகக்‌ குத்தி விட்டுச்‌ சென்றான்‌.

அப்போது, அருகே பெருவழியில்‌ வற்து கொண்டிருந்த மக்களில்‌ என்‌ மனைவியின்‌ சகோதரன்‌ (மைத்துனன்‌) கூடவந்து பயணியர்‌ கொள்ளையடிக்கப்பட்ட செய்தியறிந்து, என்னைத்‌ -தேடி வந்து என்னைக்‌ கண்டு, தான்‌ ஒருவனே மிகவும்‌ நலிந்து டந்த என்னைக்‌ காலடியில்‌ வைத்துச்‌ சுமந்து கொண்டு, என்னை வைது கொண்டே சென்றான்‌. VII—20

கொக்குவால்‌ கத்தியால்‌ வெட்டப்பட்ட காயத்தை விரலால்‌ மேல்‌ சதையை மூடிப்‌ பிடித்து தையல்‌ போட மருத்துவரைத்‌ தேடுபவர்களும்‌, மண்டையில்‌ சிறிய காயத்தில்‌ பழந்துணி எரித்த மையைத்‌ திணித்துக்‌ கொண்டு வீடுகட்குச்‌ சென்று கஞ்ச, கூழ்‌ கேட்டுத்‌ திரிபவர்களும்‌,
தாம்பட்ட பாட்டினைச்‌ சொல்லவும்‌ இரங்கிய உள்ளமுடை யோரால்‌ இகழித்துத்‌ தந்த உடையணிந்து ஈவாரை வாழ்த்து
வாரும்‌ கொள்ளை போன சாக்கில்‌ இருந்தத.ம்‌ இல்லாததுமான செல்வத்தைப்‌ பறிகொடுத்‌ தாகச்‌ சொல்லி உறவினர்‌ வீடு
கட்குப்‌ படை எடுப்போரும்‌, ஆகிய பயணிகள்‌ கூட்டம்‌ நிறைந்த
வர்களின்‌ வழியே என்னை என்‌ மைத்துனன்‌ கொண்டு வந்து இத்த மர நிழலில்‌ இறக்கி வைத்துவிட்டு இவ்வாற்றில்‌ தண்ணீர்‌
குடிக்கச்‌ செல்லவும்‌ நோவின்‌ மிகுதியால்‌ என்‌ மூச்சும்‌ நின்று விடவே, அவன்‌ திரும்பி வருவதற்குள்‌ நான்‌ இந்த(பிரம்ம
ராட்சச) உருவினை அடைந்தேன்‌. 41-21

சண்டையில்‌ ஓடோடி. வந்து என்‌ காயத்தை (உடலை) காயப்‌ (புண்‌) படுத்தி அச்சுறுத்திய அந்த “காக்கை மீசையன்‌*
எனும்‌ சண்டாளனின்‌ பயங்கரத்‌ தோற்றம்‌ கண்ணில்‌ கட்டி விட்டாற்‌ போல இருந்ததால்‌, நான்‌ இறக்கும்‌ தறுவாயில்‌ அவ்‌
வுருவைக்‌ கண்டதால்‌ எனக்கு இந்த பயங்கரமான அவ்வுருவமே வாய்த்தது. *கைசிக கானம்‌ பாடிய பயன்‌ தந்து இந்த உருவை
நீக்குவாயாக” £” என்று வேண்டவும்‌, அவன்‌ (தாசரி) நான்‌ பயன்‌ அறியேன்‌! திருமாலின்‌ திருமுகவிலாசமே பயன்‌ ஆகும்‌,
கட்டளைக்கும்‌ தொண்டுக்கும்‌ பய குறித்து எண்ணுவது பக்தர்‌
களாகிய (பிரபன்னர்கட்கு) எமக்கு உண்டோ? செய்வினைப்‌ பம்‌ பிறவிக்கு வித்தாகும்‌, ஆதலில்‌ அதனைத்‌ தர அஞ்சு
கேன்‌ பகவானே காப்பாற்றுவான்‌! ஆறுதல்‌ அடைக” என்று கூறிய வாய்ச்‌ சொல்‌ வாயிலிருக்கும்‌ போதே அந்த பிரம்ம ராட்சசன்‌ VUI—22

தியஜ்யன்தே களேபரம்‌ தம்தம்‌ மேவைதி கெளன்தேய, சதா தத்பாவ பாவித’ * எனும்‌ தை (18-6) கூற்றுப்படி இறக்கும்‌ போது எதை
நினைப்பாரோ அவ்வுருவடைவரீ என்பது நமது மரபி. சண்டாளனை நினைத்தவாறு இறந்ததால்‌ சோம சர்மன்‌
சண்டாள பிரம்ம ராட்சசனாளனான்‌ என்பது குறிப்பு)

நுண்ணீயதாகத்‌ தலையில்‌ மூன்று பாகம்‌ மழித்து ஒருபாகம்‌ குடுமியுடன்‌ கூடியவனாகவும்‌, பனிபோல்‌ Danes ட்டம்‌ நூல்‌
(பூணூல்‌) அணிந்தும்‌, புனிதப்‌ பன்னிரு நாமங்கள்‌ ஆகிய கொடிகளுடன்‌ துளசி, தாமரைக்‌ கொட்டை மாலைகள்‌ அணிந்தும்‌,
கெளபீனம்‌, அரைஞாண்‌, காவியுடைகளுடனும்‌ நீர்‌ நிறைந்த கமண்டலத்துடனும்‌ கையில்‌ திவ்வியப்‌ பிரபந்நச்‌ சுவடி.
யூடனும்‌ துவய அனுசந்தானத்துடன்‌ கூடிய பிரம்மதேஜசடனும்‌, பாகவதத்‌ திருவுடையவளனாக புகைமண்டலத்திலிருந்தெழும்‌
தீக்கொழுற்து (சுவாலை) போல அந்த (ராட்சச) மேனியை நீக்கி, பார்த்துக்‌ கொண்டிருக்கும்‌ போதே வைணவனாக
அச்சோமசரீமா நின்றான்‌. (இராட்சச சரீரம்‌ புகைக்கும்‌, புதியவைணவ சரீரம்‌ இச்சுடருக்கும்‌ உவமை, நெற்றி கேசவன்‌, வயிறு நாராயணன்‌,
நெஞ்சு மாதவன்‌, கழுத்துக்குமி கோவிந்தன்‌. வயிற்றின்‌ வலப்புறம்‌ விஷ்ணு, தோள்‌ நடுவே மதுசூதனன்‌, கழுத்தின்‌
மேல்‌ திரிவிச்சரமன்‌, வயிற்றின்‌ இடப்புறம்‌ வாமனன்‌, இடத்தோள்‌ ஸ்ரீதரன்‌, கழுத்தின்‌ புறம்‌ ஹ்ருஷிகேசம்‌ பத்ம
நாபம்‌, தாமோதரம்‌”* என்ற நாமமுடைய திருமாலினை உருவ௫ூத்து பன்னிரு நாமங்கள்‌ (துவாதச புண்ட்ரம்‌) போடுவது
வைணவ மரபு ஆகும்‌.) 41-23

இவ்விதம்‌ பாகவதரின்‌ பரிசய (அறிமுக)த்தின்‌ பெருமையால்‌ அந்தணனாதல்‌ மட்டுமன்றி பாகவதத்‌ திருவினையும்‌ அடைந்து,
உப்பு சிந்தி இருமடங்கு ஆவது போல மிக்க மகிழ்ச்சியுற்று, தன்‌ உருவுக்கேற்ப மரபுப்‌ படி அந்த தாசரிக்கு வணக்கம்‌
செலுத்தினான்‌. (உப்பு மண்ணில்‌ சிந்தினால்‌ அம்மண்ணும்‌ உப்பாவது போல என்ற உவமை கூறப்பட்டது.) 11-04

கடத்தற்கரிய பிறவியாகிய தாமரையிலையில்‌ தண்ணீராகத்‌ திகழ்பவனே வெல்க/
இசைச்‌ சக்கரவர்த்தியே வெல்க! திருமால்‌ கதைகளின்‌ சுவை யுணர்ந்த நாவினையுடையவனே வெல்க!
தத்தவ ஐயங்களைக்‌ களைந்தெரியும்‌ பண்ணரிவாள்‌ போன்றவனே வெல்க/ வெல்க/
தன்பெருமையை வெளிக்காட்டாமல்‌ மறைக்கும்‌ சான்றோய்‌ வெல்க
ஆசாரியரின்‌ திருவடிகளே சரணாகக்‌ கொண்ட அண்ணலே
வெல்க! சொன்ன சொல்‌ திலைநிறுத்த உடலைத்‌ துரும்பென மதித்த
தூயனே வெல்க/ இறைவன்‌ கட்டளையை மேற்கொண்டொழுகும்‌ இனியனே வெல்க/
எல்லா உயிர்களையும்‌ சமமெனப்‌ பாவித்து அருள்‌ உள்ளம்‌ கொண்ட அறவோனே வெல்க!
பிறதெய்வங்களைப்‌ பெரிதெனக்‌ கருதும்‌ சாத்திரங்களைக்‌ . கேளாத சாந்தனே வெல்க]
எட்டுவித பக்தி லட்சணங்களையுணர்ந்து திருமாலடி.யார்‌
தம்‌ இருவடித்‌ தாமரைகட்கு தும்பியாசிய தொண்டர்க்கடியனே வெல்க/ VIT—25

என்றிவ்விதம்‌ பாராட்டி, வலம்‌ வற்து, மறு பிறவி வாரா திருக்கும்‌ வழிதேடி, மனை, மனைவி, முதலிய சுகநிகளில்‌ பற்றின்றி, பதரிகாரன்யம்‌ முதலாய திருமாலின்‌ திவ்விய தே௪ங்‌ கட்கு அடிக்கடி தீர்த்தயாத்திரை செய்து, . பரமபதமான மோட்சத்தை அடைந்தான்‌.
இப்புண்ணிய சரிதத்தை, வராக அவதாரமெடுத்த காலத்தில்‌ பூமிதேவி (நிலமகள்‌) :*எனக்குச்‌ செய்யும்‌ கைங்‌ கரியங்களில்‌ பாடுவதே சிறந்த பயன்‌ தரும்‌** என அறிந்து கொண்டவளாய்‌ அவளே பாடுவதில்‌ விருப்புற்று உன்‌ மகளாகப்‌ பிறந்து, இனந்தோறும்‌ பிரிவு எனும்‌ பரிவு காட்டி எனது கதை களைப்‌ பொருளாழம்‌ மிக்க பாசுரங்களால்‌ பாடி.ப்பர வி பொழுது போக்குகிறாள்‌ அன்றி வேறொன்றுமில்லை/
என்ன தவம்‌ செய்கிறாள்‌ என்று கேட்டாய்‌! இதைவீடப்‌ பெரிய தவம்‌ வேறு என்ன இருக்கிறது. எல்லாம்‌ நலமாக
முடிவுறும்‌! திருவரங்கத்திற்கு அரங்களனைச்‌ சேவிக்க அவளையும்‌ அமைத்துக்‌ கொண்டு செல்க/ என்று (திருமால்‌) கூறவும்‌ (பெரியாழ்வார்‌) பிரசாதம்‌ (அருள்‌) என்று வணங்கி தங்கப்‌ பல்லக்கில்‌ கோதையை இருத்தி பரிசாரிகர்களும்‌ பாகவதர்களும்‌ சூட வர மகிழ்வுடன்‌ பயணம்‌ புறப்பட்டார்‌, 11-26

கோதை திருவரங்கம்‌ பெருமானை வணங்குதல்‌

சென்று, விரஜாநதி என்னும்‌ (காவேரி) பெயருடைய சஹ்ய (குடகு) மலையிலிருந்து பிறந்த நதிக்கரையின்‌ நந்தவன மரக்‌
கூட்டங்களின்‌ இலைச்‌ சந்துகளுடாகக்‌ காணப்படும்‌ ஏழு பொற்‌ பிராகாரங்களின்‌ கலசங்களாகிய சுடர்‌ விளச்குகள்‌ சம்பகப்‌
பூக்கள்‌ ஆக, பாவரிகளாகிய வண்டுகள்‌ விலகும்‌ திருவரங்கத்தைக்‌ கண்டான்‌.
(௪ம்பகப்‌ பூக்கள்‌ கண்டால்‌ வண்டுகள்‌ அகல்வது போல இப்பிராகாரங்களைக்‌ கண்டால்‌ பாவம்‌ அசலும்‌ என்பது குறிப்ப
சோழநாட்டு நங்கையரின்‌, செஙிகழுறீர்ப்பூச்‌ செரு$£ய கூந்தலில்‌ மொய்க்கும்‌ யாழிசை முரலும்‌ வண்டுகளின்‌ ஓசையும்‌,
கவேரன்‌ மகள்‌ (காவேரி) உடைய அன்னங்களின்‌ மென்‌ குரலும்‌ சுமந்து வரும்‌ இளங்காற்று , விரதியாகிய விட்டு சித்தனின்‌
களைப்பிளைப்‌ போக்கியது. 1.26

அவன்‌ (பெரியாழ்வார்‌) பாவங்களைப்‌ போக்கும்‌ காவிரிப்‌ புனித நீரில்‌ நீராடி, நண்பகல்‌ நோன்புகள்‌ முடித்து, புளலாடிப்‌, பொலங்கலன்‌ அணிந்த மகளை அழைத்துக்‌ கொண்டு, வைணவர்கள்‌ குழாம்‌ புடைசூழச்‌ சென்று 4//–69
பாதச்‌ சலங்கை ஒலி கேட்டதுமே, களிறுகட்கொதுங்குவது போன்றே காரிகையருக்கும்‌ ஒதுங்கி, (பிச்சையாக) தமக்கிட்ட சைப்பிடி. மாணிக்கங்களை, இல்லறத்தானின்‌ ஆரத்தியிலுள்ள இர.த்தினங்களோடு கலக்குமாறு வாயிலிலே சொரிந்து விட்டு,
(அரிசியன்றி மணிகளை ஏற்றுக்‌ கொள்ளார்‌ என்பது கருத்து)
மலர்‌ முதலியவற்றின்‌ மணத்தையும்‌, ஒவ்வொரு மனையிலும்‌ கோயிற்‌ படையலுக்கான உண்டிகளிள்‌ மணம்‌ போலவே
முகராதவாறு மூச்சடைத்துக்‌ கொண்டும்‌
(கோயில்‌ பிரசாதமான படையல்‌ இருமால்‌ நுகராத முன்பு தாம்‌ நுகர்தல்‌ கூடாதெனமூச்சடிக்கிச்‌ செல்வர்‌ என்பது கரத்து.)
நடனம்‌, பாட்டு முதலிய திருமால்‌ துதிகளை, கிளி, பூவைகள்‌ கூறுவதைக்‌ கேட்பது போல அரை மனதோடு கேட்டும்‌,
(நடனம்‌, கதம்‌ விரும்பாரேனும்‌ திருமால்‌ துதிகள்‌ ஆதலின்‌ கிளியின்‌ பேச்சுப்‌ போல அசைமனத்துடன்‌ கேட்டனர்‌)
மாளிகை மேற்‌ கூரையிலுள்ள மணிகளின்‌ வண்ணங்கள்‌ தம்‌ வெண்துகிலில்‌ பிரதிபலித்து பன்னிறம்‌ காட்ட அதனை
வெறுத்து விரைந்து அரிசி சேட்கும்‌ இல்லங்களை அடையும்‌ பற்றற்ற பாகவதர்கள்‌ திரிவதால்‌ வெள்ளைத்‌ தீவினை ஓத்த
அந்த திருவரங்கத்தை அடைந்தார்‌.
(பெண்கட்கொதுங்கும்‌ பற்றற்ற பாகவதர்கள்‌ வெண்‌ டுகலால்‌ வெண்மையுற்ற திருவரங்கம்‌ வெள்ளைத்‌ தவெனப்‌
பொலியும்‌ என்பது கருத்து)  VII—30

கோபுரக்‌ குகைகள்‌ வரையுலவும்‌, சந்திரபுட்கரணி (தெப்பம்‌) நீர்த்துளிகளை அளைந்து, பனித்த, வெம்மை நீக்கும்‌ இளங்‌
காற்று, மேல்‌ கட்டிலுள்ள மணிச்‌ சலங்கைகளையசைவித்து மெல்லோசையாகய, உரையாடலில்‌ நலம்‌ விசாரிக்கவும்‌ ஆறு
பிரகாரங்களைக்‌ கடந்து சென்று, (ஏழாம்‌ பிரகாரத்தில்‌) அப்போது விரைவுற்ற தேவர்களை சண்டன்‌ எனும்‌ துவார பாலகன்‌ (வாயிற்‌ காப்போன்‌] செவ்வியன்றென அதட்டும்‌ உள்‌ வாசலில்‌ VII—31

பிரம்பைக்‌ கையில்‌ பிடித்து, மணியரங்கில்‌, சித்திரக்‌ கம்பள விரிப்பின்‌ மேல்‌, வெண்டாமரைக்‌ கண்ணன்‌ உருவம்‌ பொறித்த
மோதிரமணிந்த விரல்‌ மிளிர, இரு புறமும்‌ சிறிதே வணகிகயெ வாறசையாதுள்ள யாளை முகத்தினர்‌ நாரற்றவர்‌ பணிந்து நிற்ப,
அமர்நீதுள்ள விஷவச்சேனர்‌ (சேனை முதலியார்‌) தமைக்‌ கண்டு (பெரியாழ்வார்‌) வணங்கவும்‌, அவரும்‌ பக்தியுடன்‌ அன்பு
செய்தார்‌. ்‌ VIJ—32

இந்திரனின்‌ இடியேற்றினையறியாத பொன்மலை (மேரு போன்ற இறகுகளின்‌ ஒளிவீச்சு வானமும்‌ நாற்றிசையும்‌ பரவிதீ
இகழ்ந்து இளவெயில்‌ காயும்படி நின்ற வேதசொருபனாகய கருடனை வணகிகிகி காணவும்‌ (கருடனும்‌) மீண்டும்‌ (தன்னை)
வணங்கக்‌ சண்டாளன்‌. VN—33

பின்னர்‌ அக்கருடனிடம்‌ விண்ணப்பம்‌ செய்து அனுமதி பெற்று, நான்கு தோளுடையவர்களும்‌, முகல்‌ வண்ணத்தினரும்‌,
தாமரைக்‌ சுண்ணரும்‌, மின்பசுந்துகிலுடுத்தியவரும்‌, தளிமாலையணிந்த மார்பினரும்‌, தஇிருமாலின்‌ பிரதி பிம்பமாகக்‌
காணப்‌ படுபவருமான அருகணைந்துள்ள நம்மாழ்வார்‌ முதலிய மூக்தார்களைச்‌ சேவித்து, அவர்களால்‌ ஆதரிக்கப்‌ பெற்றவராய்சி சென்று; மிகப்‌ பரந்த மணிமிடைந்த தரண்களும்‌, பொற்கலசங்‌ களும்‌, அணி செய்யப்‌ பெற்று, சித்திர விதானத்தில்‌ தொங்கும்‌
பல்வகைப்‌ பூச்சரங்களும்‌ முத்துக்‌ கோவைகளும்‌; வெண்‌ ‘ சாமரைகளும்‌, அகழ்‌ புகையும்‌ மண்டிய கருவறை நடுவே, சந்திர
காநீதமேடையில்‌ கால்‌ முதலாகுஅவ்வவ்வவயவங்கள்‌ பொருந்திய தருமன்‌ முதலான நித்திய சூரிகள்‌ அமர்ந்த மன்றம்‌ அமைந்ததும்‌
அமர்ந்த மன்றம்‌ அமைந்ததும்‌, ஒனி௰௦௰யமான, வீரிந்த, கரய, ஆசனத்தில்‌, மணம்‌ நாடிய வண்டுகளின்‌ கூட்டம்‌ மொய்க்கும்‌
தாமரையின்‌ பொன்னிறத்துக்கு கடன்‌ வழங்கும்‌ தன்மைத்தாய்‌, அகன்ற பொகுட்டென அமைந்த மேடையின்‌ கண்‌, பாழ்‌
கடலுக்கு மூல காரணமான பூத தன்மாத்திரை போல, பாத
ரசமும்‌, பளிங்கும்‌, சந்தனமும்‌, நிலவும்‌, வெண்டாமரையும்‌, மாசுறும்படியான தன்‌ மேன்மையான ஒளிமிக்க ஆ௫ுசேடனின்‌
உடலில்‌ தலையணையம்‌ிீது, கேழூர (தோள்வளை)யின்‌ மணி ஒளி படிந்த முழங்கையை ஊன்றி, முனிவர்களின்‌ மனத்துட்‌ பொங்‌
கும்‌ பக்திர௪சம்‌ கழுவியதால்‌ மிகுந்த செம்மையுற்றதோ எனுமாறமைந்த செங்கை, கன்னதில்‌ ஊன்றியவாறு, கற்பகமரத்தின்‌
பூக்களால்‌ மூடப்பட்ட. அதிசேடனின்‌ சட்டையே படுக்கை விரிப்‌பாகக்‌ கொண்டு, ஒரு சாய்த்துப்‌ படுத்துசி உடக்ின்றவனும்‌,
களிற்றினைத்‌ துன்புறுத்திக்‌ கடினமான தன்‌ கைச்‌ சக்கரத்தால்‌ கண்டிக்கப்பட்ட மகரம்‌ (முதலை) வணங்கத்‌ தகுந்த சாயுச்சியம்‌
(தன்னோடிணைதல்‌) பெற்றதோ எனப்படுமாறு, கன்னத்தின்‌ மேற்‌ காணப்படும்‌ மணிகுயின்ற மகர குண்டலங்களின்‌ பிரதி
பலிக்கும்‌ ஒளிவீச்சின்‌ எழில்‌ மிக்க மகரந்தம்‌ ஒழுகும்‌ முகத்‌ தாமரையுடனும்‌, எழில்‌ பெற்றவனும்‌,
இமையாத பாரிவையால்‌ முயன்றது நோக்கும்போது
மிக்கெதுர்ப்படும்‌ வெள்ளியெனப்‌ பொலியும்‌ வெண்ணிற ஒளி வெள்ளத்தில்‌ மூழ்கிக்‌ கண்‌ கசசி செய்யும்‌ பேரொளிப்‌ பிழம்‌
பாகிய தனது மங்கள உருவினை, தனது உருவு, அருவும்‌ ஆய மூர்த்தியாகக்‌ காட்டுமாப்போலே ஒளிர்பவனும்‌, தனதிரு சண்‌
களாகிய சூரிய சந்திரர்கள்‌ தத்தம்‌ மளைவியராகிய இருளும்‌
நிழலும்‌ தம்முடன்‌ கலந்திருத்தல்‌ போலம்‌ காட்டும்‌ கருவிழியும்‌ வெணவிழியும்‌ செவ்வரிபடாந்த கண்ணிலமைகளும்‌ கூடி செந்தா
மரை இதழ்கள்‌ பரப்‌ 4னாற்‌ போலக்‌ காணப்படுகின்ற நோக்‌ கெழில்‌ உடையவனும்‌) பந்தரக மலரை வென்ற இதழ்களின்‌
செம்மை எனும்‌ சாக்கிட்டுப்‌ பிறந்த அக்கினியும்‌, அவன்‌துணைவனான வரயுவை இணைவீத்தாகத்‌ தோன்றும்‌ எள்பூப்‌
போன்ற எழில்‌ நாசி, திகழ்பவனும்‌, வயிற்றில்‌ பிறந்த வெண்மை யான ஓளிமிக்க தாமரையைக்‌ கண்டு, சற்திரன்‌ என ஐயுற்று,

பெரிய இடத்சைச்‌ சார்ந்துள்ளதால்‌ அவன்‌ (சந்திரன்‌) உடன்‌ பிறநிதவளான திருமகளிடம்‌ இராகு தன்‌ பகையை நீக்குமாறு : பொன்‌ வலயமாகிய லஞ்சம்‌ கொடுத்து இறைஞ்சுவது போல இருமாலின்‌ பாதங்களை ஒற்றும்‌ கேயூரமும்‌ (தோள்வளை)
வளையலும்‌ அணிந்த திருமகளின்‌ தோள்கள்‌ தன்‌ தொடைகளில்‌ மிளிரும்படியாக அமைந்தவனும்‌, மார்பிடத்தில்‌ வைத்த
இணையற்ற கெளஸ்துப மணியின்‌ ஒளிச்சுடர்‌ பட்டு தாமரை
யாள்‌ மேனி எழிலோ எனத்‌ ததந்த தூயதாய திருமறுவும்‌, (ஸ்ரீவத்சம்‌). கொண்டு கண்‌ விருந்தளிப்பவனும்‌ கஸ்தூரி மானின்‌
உந்தி மணம்‌ நாடி வந்த வண்டுகள்‌ கூட்டமோ எனுமாறு திகழும்‌ கரும்பசுந்துமாய்‌ மாலை (வனமாலிகை) அணிந்து எழில்‌ பெற்றவனும்‌,
மாயச்சிங்கமாகி, கனகளைக்‌ களன்றுயிர்‌ கவர்ந்த பின்னர்‌ மீண்டும்‌ மானுட உருத்‌ தாங்கும்போது, மறந்துபோய்‌ இடை
மட்டும்‌ அப்படியே இருக்கும்படி விட்டுவிட்டது போல நுண்ணிடை கொண்டெழில்‌ மிக்கவனும்‌ கடிதடத்தில்‌ உதய
இரியில்‌ உதித்தெழும்‌ இளஞாயிற்றின்‌ பொன்வெயில்‌ பொலிவு தோன்றும்‌ அரையின்‌ மென்மையால்‌ வெளித்தோன்றும்‌ தொடை
களின்‌ நுண்மை வெளிய காணப்பட்ட தங்கம்‌. புட்பராகம்‌. வைடூரியம்‌ குயின்ற தூண்‌ இணைகள்‌ போலச்சிறிது கருவண்ணங்‌
காட்டிய தொடையிணைகளையுடையவனும்‌, திரிவிக்கரம னாூய உருவங்கொண்டபோது, சினந்து வானுற வளர்த்‌ தபோது
உடன்‌ பரப்பினது விரைவால்‌ சுற்றிவந்த மணிமயமான சுவர்க்க லோகத்தின்‌ பொற்பிராகார வளையமோ என மிளிரும்‌ கழல்‌
சூடியதால்‌ பிறந்த ஒளி மிக்குடையதாஇியும்‌, ஆலம்பழத்தின்‌எழிற்கோலங்கொண்ட கணைக்காலும்‌, எதிர்காலத்தில்‌தான்‌
எடுக்கும்‌ கூர்மாவதாரத்திற்கு (ஆமைப்பிறப்பு) முன்னோடியாகஅமைந்ததோ எனத்‌ தகைய இளம்‌ ஆமையின்‌ வளமார்ந்த
எழிலை நகும்‌ முழங்காலுடனும்‌ செங்கழுமீர்போவ்ற மென்மை யுடன்‌ உள்ளங்கால்‌ அமைய, மின்னும்‌ விண்மீன்களின்‌ ஒளியை
வென்ற நகங்களின்‌ நிலவினால்‌, அன்பர்களின்‌ இதயத்‌- இருட்டினை நீக்கிெயவாறும்‌. ஏர்‌ வச்சிராயுதம்‌ முதலிய ரேகை
களையுடையதும்‌, திருமகளின்‌ முலைக்‌ குவட்டிலெழுதிய குங்குமத்‌ தொய்யில்‌ படிந்து சிவந்ததுமான திருவடிகளால்‌,
மூவகை (அத்யாத்மிகம்‌, ஆதி தைவிகம்‌, ஆதி பெளதிகம்‌)த்‌துயரீகளைக்‌ கெடுத்து அருள்‌ செய்பவனாயும்‌ உள்ள, ஸ்ரீமத்‌
நாராயணன்‌, புராண புருஷன்‌, புருடோத்த மன்‌, பிரணுதார்த்திகரன்‌ (சரணடைந்தார்‌ துன்பம்‌ நீக்குவோன்‌) வாசுதேவன்‌,
இருடீகேசன்‌, ஈசனால்‌ வணங்கப்படுவோன்‌, வீடணனுக்குநாடளித்துக்‌ காத்தவன்‌, மன்மதனின்‌ தந்‌ைத, திருவரங்கத்துறை
பவன்‌ என்னும்‌ இத்தகைய பெயர்களைப்‌ பூண்ட திருமாலைக்‌கண்டு, தன்னுடன்‌ வந்த பாகவதர்சளுடனும்‌ தானும்‌, தன்‌
மகள்‌ (சூடிக்கொடுத்த சுடரீக்சொடி) தானும்‌, பயபக்தியுடன்‌பணிந்திறைஞ்சி, ஐய ஐய கோஷமிட்டு, சாட்டாங்கமாக வீழ்ந்து
வணங்கி, நின்று தலை மேற்கைகூப்பியவாறு இவ்விதம்‌துதித்தார்‌। 411-034

பிரம்மதேவனின்‌ அழிவற்ற செல்வப்‌ புதையலானவனே சரணம்‌! இட்சுவாகு குலப்‌ புண்ணிய ராசியானவனளே[ சரணம்‌.
குபேரனின்‌ உடன்‌ பிறந்தவனுடைய (விபீஷணன்‌) குலதேவ தையே! போற்றி. வணங்கப்‌ பெற்ற சிவன்‌ முதலாய தேவர்‌
களையுடையவனே[ வணக்கம்‌, : VII—35

சர்வேசனும்‌, எல்லாம்‌ தானேயான எம்பெருமானும்‌ எல்லையற்றவனும்‌, காணற்கியலாதவனும்‌ எல்லா உலற்கும்‌ ஆதார
மானவனும்‌, அணுவுக்கும்‌ அணுவாயமைந்தவனும்‌, ஆதாரமற்றவனுமாகிய நித்திய சத்தியப்‌ பொருளாகிய உன்னை வணங்கு
ஹேன்‌,. VII-—35

நாராயணன்‌, பூமி முதலான பெரும்‌ பொருள்களைவிட விஞ்சிய பெருமையுடையவனை பரமபுருடன்‌, ஆ௫ய உன்னைப்‌
புகழ்ந்து விழைந்து சரணுறுகன்றேன்‌. 11-37

பிரம்மன்‌, வன்‌ முதலாக 740 உலகும்‌ படைதீதுப்‌ பாது காத்து அழிக்கும்‌ முத்தொழிற்‌ பெருமைக்குறைவிடமான
நித்தியனும்‌, எல்லாப்‌ பூதங்களிலும்‌ இருப்பவனும்‌ அப்பாலுக்‌ கப்பாலமைந்த பெரியவனாகிய தின்னை வணங்குகின்றேன் —VII—38

(தேஹேற்திரியங்களுக்கப்பாற்பட்ட) பரபுருஷன்‌ (ஜீவன்‌) தனக்கும்‌ மேலானதத்துவம்‌ (ஈஸ்வரன்‌) ஆனவனும்‌, பரமான்மா வானவனும்‌, வீடு பேற்றுக்காக எப்போதும்‌ யோடயர்களால்‌ போற்றப்படுபவனும்‌; எவனிடம்‌, (சத்துவம்‌, ராஜசம்‌, தமஸ்‌) முக்குணங்களாகிய பிரகிருதி தத்துவங்களின்‌ தொழிற்பாடுகள்‌
அடங்கிக்‌ கடச்குமோ அந்த நிர்மலனை எல்லா பூதங்கட்கும்‌ முற்பட்டவளை, தூயவனான மாயவனை, எங்கும்‌ பரந்துள்ள இறைவனை, கலை, நிமிடம்‌ மதலிய காலக்‌ சணிதங்களை இயக்குபவனை, மறைந்துறையும்‌ இறைமைத்‌ தத்துவத்தை, எல்லாம்‌ க௨ற்த கடவுளாயினும்‌ பெயருக்குப்‌ பரமேசுவரன்‌ எனப்‌ பெயரிட்டழைக்கப்படும்‌ விஷ்ணுவாகிய உன்னை நிளைந்து போற்றுகிறேன்‌. VIT—-39

என்றிவ்வாறு, பரம்பொருளாகிய சொரூபத்தினையும்‌ தேவர்கள்‌ வணங்கும்‌ திவ்விய அவதார லிலைகளைப்‌ புகழ்ந்தும்‌ போற்றியிசைப்ப, கெளஸ்துப மணி அணிந்த திருமால்‌, கருணை
யொழுகுங்‌ கடைக்‌ கண்களால்‌ அப்பெரியாழ்வாரைக்‌ கண்டு, நலம்நாடி உசாவியபின்‌, வளையணிகள்‌ மெல்ல ஒலிப்ப திருவடித்‌ தாாமரைகட்கு மலர்‌ சொரிந்து இறைஞ்சி நிற்கும்‌ பெண்டிர்கட்‌. கெல்லாம்‌ பெரும்‌ பேரணியாஃப்‌ பெரும்‌ பேறுற்ற பேதையாம்‌
கோதையாகியசூடிக்கொடுத்த ஈடர்சிகொடியின்‌ எழிலும்‌ இளமை நலனும்‌ உட்குறிபோடுணரிந்து கண்டு தன்‌ மனத்துள்‌ ViIT—40

இவளது பார்வை, எதிர்ப்பட்டதாலன்றோ திருமகள்‌ மைந்தன்‌ (மன்மதன்‌) தனக்குப்போரின்வெற்றிக்கொடிபெற்றிலங்‌ கினான்‌.
(இவள்‌ மீன்‌ விழியாள்‌ என்றும்‌ மன்மதன்‌ Sows Oars, யோன்‌ என்றும்‌ கருத்து) .
இவளது இடை, (கொடிபோல) அசைந்தாடுவதாலன்றோ
வசந்தன்‌ காலூன்ற முடிந்தது. . ; (இவள்‌ இடை கொடி போன்றது. கொடிகளால்‌ வசந்த சாலம்‌ நிலை பெறுகிறது என்பது கருத்து)
இவளது மென்‌ முலைகள்‌ வளர்ந்ததாலன்றோ இரதி தேவி யின்‌, கின்னரி (சிறுவீணை)யின்‌ நாதத்திற்கு எழில்மிக்கது.
(இவள்‌ முலை கின்னரி (சுரைக்காய்‌) போன்றது என்பது கருத்து) – இவளது முகம்‌ ஓளிர்வதாலன்றோ கலை மகளின்‌
(வாகனமாகிய) அன்னப்‌ பேடுவிற்கு கூடு (இல்லம்‌) கிடைத்தது.
(அன்னம்‌ உறையும்‌ இல்லம்‌ தாமரை. இவள்‌ முகம்‌ தாமரை என்பது கருத்து) . ற்‌ .. இவள்‌ egdangse watgier QaCor வளர்ப்பு
மயிலுக்கு மயக்கம்‌ கிட்டியது. . . த (குருஙிகூற்தல்‌ முகில்‌ ற அதுல்‌ மயில்‌ மகிழ்ந்து மயக்கமுற்‌ என்பது கருத்து து
பகத அள கப்‌ எழில்‌ மிச்கராலன்றோ தேனீச்கட்குதாகம்‌ இரிந்திட மேட்டு நில விளைச்சல்‌ கிடைத்தது. _
(பாதங்கள்‌ தாமரைகள்‌, ஆதலின்‌. தேனிக்கள்‌ தாரம்‌ அலையாமல்‌ அருகிலேயே விளைச்சல்‌ பெற்றன என்பதுகருத்து) 11-41

என்ற ஆர்வத்துடன்‌ திருமால்‌ காமம்‌ கைமிகத்தான்‌ அந்தப்‌புரத்தில்‌ அற்நங்சையைச்‌ சேர்த்து, ஒரு பொய்யான
(மாயநநிகை) நங்கையை (கோதையைப்‌ போன்றே)ச்‌ செய்து, அவர்கள்‌ இருப்பதாகவே கருதச்‌ செய்திருப்ப, VIT—42

அரிச்சசர்சளால்‌ ஸ்ரீபாத தீர்த்தப்‌ பிரசாத பரிவட்டகிகளைதிதரச்‌ செய்து தம்‌ விடுதிக்கு அனுப்பி வைக்கவும்‌, கோயிலிலிருந்து
புறப்பட்டு மாயநங்கையைப்‌ பல்லக்கில்‌ வைத்து இல்லம்‌ போந்து பல்லக்குத்‌ இரை விலக்கப்‌ பார்க்க அங்கற்‌ நநிகையைக்‌ காணாது 37.43

ஒ. கொடுமை! திருவரங்கத்தான்‌ அனியாயமாக என்‌ மகளைக்‌ கைப்படுத்தக்‌ கொண்டான்‌! அவையோர்‌ இந்த
மெலிந்த அந்தணனைப்‌ பாரீரே!’ £ என்று துயர்க்கடலில்‌ வீழ்ந்து கண்ணீர்‌ மிகத்‌ தழுதழுத்த குரலில்‌ முறையிட்டு தோளுயர்த்திய
வாரது கூறினான்‌. VII—44

மிகுந்த காதல்‌ உடையவனானால்‌, திருமணம்‌ செய்து கொடுக்க மாட்டேனா? உடல்‌ பொருள்‌ ஆவி, வீடு, சுற்றம்‌,
செல்வம்‌, பயிர்‌ எல்லாம்‌ நான்‌ சம்பாதித்ததா? எல்லாம்‌ அவனது பக்தர்கட்கு சமர்ப்பணம்‌ செய்வதற்குத்தானே! அந்தோ?
விந்தை என்னே! இச்சிறுமி பெரிதா? (கேட்டால்‌ தர மாட்டேனா) என்னைச்‌ ூறுமைப்‌ படுத்தினால்‌ தன்னை மெச்சுவார்களோ?’ * VUI—45

கவன்‌, பிரம்மன்‌, இந்திரன்‌ முதலானோர்‌ உன்னைச்‌ சேவிப்பவர்கள்‌ ஆதலினால்‌, உன்னை ஒன்றும்‌
மாட்டார்கள்‌! (கண்டிக்கும்‌ இறமையற்றவரீகள்‌) என்‌:பதால்‌ திடையற்ற (சுதந்திரமுடைய) வனாய்‌ உள்ளாய்‌ என்பதாஃம்‌
இிநீதியை மீறலாமா? உலகங்கள்‌ எல்லாம்‌ உன்னுடையதாளாலு உன்னருகே அருள்மிக்க அம்மை (திருமகள்‌) இல்லையா?
பாகவதர்கள்‌ இல்லையா? என்‌ பக்கம்‌ அவர்களாவது கூற மாட்டார்களா?” VII—46

ஏற்கனவே அத்திருமகளஞும்‌, நிலமகளும்‌, நப்பின்னை (நீளாதேவி)யும்‌ இருக்க, உனக்கு இந்த விரத நிட்டைகளை
யுடைய மெல்லியல்பால்‌ மனம்‌  என்ன சொல்வது? ஏழையாக ஏன்னைப்‌ பித்தனாக்குவதற்காகச்‌
செய்த பகீசாசமேயன்றி, (இவளிடம்‌ திருமகளிடம்‌ இல்லாத) புதியதென்ன கண்டாய்‌? உலகில்‌ ஆற்றின்‌ வளைவுகளையும்‌
நீரீ்ப்போக்குகளையும்‌ எவரால்‌ திருத்த முடியும்‌?
(நதியின்‌ வளைவுகளைத்‌ திருத்த முடியாதது போலவே, பெரியவரீசளின்‌ நடத்தைகளையும்‌ மாற்ற முடியாது என்பது கருத்து.) 11-47

என்றிவ்வாறு அந்தணாளன்‌ (பெரியாழ்வார்‌) முறையிடவும்‌, பாகவதரின்‌ துயர்‌ கண்டு அஞ்சிய பரந்தாமனும்‌, அவரது அறியா
மையைக்‌ கண்டு எள்ளுவான்‌ (கேலி செய்வான்‌) போலத்‌ தோன்‌றும்படி மகர குண்டலமணிந்த எழிற்கன்னங்களில்‌ இளநகையரும்‌
இவ்விதம்‌ கூறினான்‌.  ViI—48

“(வயதுக்‌ கோளாறினால்‌) பெரிய ஆழ்வாரே? முதுமதி தப்பினாய்‌ போலும்‌! உமது மகளை வீட்டில்‌ பாதுகாப்பாக வைத்து
விட்டு வந்து (நாலுபேர்‌ அறிய) பகிரங்கமாக வெறும்‌ வசை புராணம்‌ பாடுகிறாய்‌/ வீட்டில்‌ இன்னொரு தடவை ஆராய்ந்து பாரீத்து அந்நந்கையில்லாவிட்டால்‌ வைவாயாச/ அறிவு மயக்கம்‌ உறாமல்‌ போய்ப்‌ பாரீப்பாயாக।!  VIT—49

எனலும்‌ **என்னப்பனே! ஆய்விட்டதா? (உன்‌ காரியம்‌ ஆ௫ விட்டது போலும்‌) என்று கூறி எம்‌ துயர்‌ தீர்த்தனை! ஏதறி
வோம்‌! ௮ருள்‌ கூர்ற்தனை! வெல்க/’* என்று பரவி, கண்ணீர்‌ அடக்கிக்‌ கொண்டு வீட்டிற்கு விரைந்து ஏஏனார்‌” 4711-50

(சென்று) வணங்கிய மகளின்‌ ௨ச்சி மோந்து ஆனறந்தகண்ணீர்‌ சொரிய, கைகளால்‌ முதுகை நீவி “என்‌ தாயே! உன்னைக்‌ கண்‌
டேனல்லவா?* * என்று ம௫ழ்ந்து இல்லத்துறைந்தனன்‌ ViI—51

திருவரங்கத்தான்‌. பிரம்மா, வன்‌, சரஸ்வதி, பார்வதிஆகியோரை தனக்குப்‌ பெண்‌ கேட்குமாறு பணிக்கவும்‌, அவரீ
களும்‌, சேனை முதலியை உடன்‌ கொண்டு வரவும்‌, பெரியாழ்‌வார்‌ பரபரப்புடன்‌ வரவேற்று VIl—52

சேனை முதலி முதியோரை மரியாதையுடன்‌ விருந்தோம்பி, தகுந்த ஆசனங்களை அளித்து அமர்ந்த அவர்களிடம்‌ வந்த கார
ணம்‌ அறிந்து மகிழ்ச்சி மிக்க உள்ளத்தினனாக இவ்விதம்‌ கூறி னான்‌. 9411-53

சேனை முதலி சிவன்‌! பிரம்மன்‌ முதலானவர்களே/ நற்‌பேறுற்றவனானளேன்‌[ அவனுக்கு (இருமாலுக்கு) இக்‌ கன்னியைத்‌
தற்து பிருகு முனிவனும்‌ கடலும்‌ பெற்ற பெருமையையுற்றேன்‌.
(எனினும்‌) இவ்விதம்‌ கேட்டுப்‌ பெறுவது முறைதானா? (லட்சுமி பிருகு முனிவர்க்கும்‌ கடலுச்கும்‌ மகளாகப்‌ பிறந்தாள்‌) Vil—54

கேட்பீராக! கொடுக்கத்‌ தகுந்ததே! எளிய மனிதர்கள்‌ இத்.தச்‌ சம்பந்தப்‌ பொருத்தத்தைப்‌ பாரீத்து (தானாக) சுமந்து
வற்து கொடுத்தான்‌ என்று சொல்லமாட்டாரீகளா? ஆதலின்‌ எநிகள்‌ ஊருக்கு வந்தால்‌ மகளைத்‌ தருவேன்‌. Vif—S55
திருமால்‌ ஆளுமையில்‌ பரமேசுவரனே எனினும்‌, தன்னடி
யிழைஞ்சுவார்பால்‌ தயவுடையவன்‌ ஆதலினால்‌, உங்கள்‌ விருப்‌பம்‌ நிறைவேற்றுவான்‌. தானே கட்டுவித்த மாமனார்‌ வேடத்தை
பூண்ட எமக்குப்‌ பெருமை சேர்ப்பது அவனுக்கே பெருமையாகும்‌.VIT— 56

எனலும்‌, சென்று (திருமாலிடம்‌ சேனை முதலி முதலானோர்‌) விண்ணப்பிக்கவும்‌, அருளொழுகு உள்ளத்தானாகிய
அகிலாஸ்டேசுவரனாகிய திருமால்‌ ௧௫ட வாகனதிதிலைறி,பிரம்மா, முதலிய தேவர்கள்‌ தத்தம்‌ வாகனங்களில்‌ ஏறிச்‌ சூழ்ந்து
வரவும்‌. VII—57

சேனை முதலி முன்னேவர, வான வீதியில்‌ வரிசை வரிசையாக வரும்‌ “மக்களின்‌ அணிகளும்‌, வாளும்‌, வஜ்ராயுதமும்‌,
கோடானுகோடிச்‌ சூரியர்களின்‌ ஒளியை திசை முழுதும்‌ பரப்ப ViI—58

ஸ்ரீவில்லிப்புத்தாருக்குச்‌ சென்று, விசுவகருமா மணிமயமாகக்‌ கட்டிய விடுதியில்‌, அந்த முதன்‌ முதல்‌ மணமகன்‌ இருந்தான்‌.
தேவமகளிர்‌ மஞ்சள்‌ முதலான குளியலுக்கான மஙிகலப்‌ பொருள்‌களைக்‌ கொணர்ந்தணி செய்ய மணமகன்‌ ஆக, தேவதுந்துபிகள்‌
தாரதர்முதலிய வேதமுனிவர்கள்‌ இசை முழங்க, வெள்ளியொத்தவெண்‌ முகில்கள்‌ பொழியும்‌ அமுததாரையில்‌ அபிஷேகம்‌ செய்ய
ப்பட்டவனாய்‌, முத்துமாலையுடன்‌ கெளஸ்துப மணியும்‌,அணிந்த சங்கொத்த கழுத்தினளாயும்‌, மகர குண்ட லம்‌, மகுடம்‌
முதலான அணிகள்‌ அணிந்தவனாய்‌, சந்தனம்‌ பூசப்பெற்றவனாய்‌, பொன்னாடையணிந்தவனாய்‌, துளசி, கற்பகமலர்‌
மாலைகள்‌ பூண்ட மார்புடையவளாய்‌, இருக்கவும்‌, அங்கு(ஆண்டான்‌ இருந்த இடத்தில்‌) அதற்கு முன்பே இல்லம்‌ புகுந்து,
பரபரப்புடன்‌ (திருமண ஏற்பாடுகளில்‌) முனைந்தவனாசுப்‌ பெரியாழ்வார்‌ இருந்தார்‌ VUH—59

மலைமகள்‌, கலைமகள்‌ முதலிய தேவ மகளிர்கள்‌ சிதாராமர்‌ களின்‌ இருமண விழாப்பாட்டுக்களைப்‌ பாடினர்‌, 4917-60

வைபவத்துடனும்‌, அன்புடனும்‌ ஏகாவளி, சரக்விணி எனும்‌ தோழியர்‌ இருபுறமும்‌ இருந்து சாமரை வீச, மஞ்சள்‌ நீரால்‌
விருப்புடன்‌ அந்நங்கையை மணமகள்‌ ஆக்கும்‌ தவமுதுமகளிர்கள்‌ வாழ்த்துரைபுடன்‌ நலுங்கு வைத்தனர்‌, VII—61

இவ்விதம்‌ இருமணச்‌ சடங்குகள்‌ நடத்தி மணமலி என்ணெய்‌ தலையில்பூசி கூந்தலை சந்தன தைலத்தால்‌ தேதய்த்து
பொற்குடத்தில்‌ குளிர்ந்த . பன்னீர்‌ கொணர்ந்து நீராடச்‌ செய்த பின்னர்‌, அந்த உலகநாயகி (ஆண்டாள்‌)க்கு தேவமாது ஒருத்தி ViI—02

ஈரம்‌ புலர்த்தி, மென்துகில்‌ புனைந்து, மணிபீடத்தில்‌ அமர்த்‌தினாள்‌. அந்நங்கையின்‌ ஒளிர்மென்‌ நீள்‌ கூந்தலை புலர்த்தி நறும்‌
புகையிட்டாள்‌ மற்ழொருத்தி, மற்றொரு மான்விழியாள்‌ அன்புடன்‌ கொண்டை போட்டாள்‌. Vil—63

செம்பஞ்சுக்‌ குழம்பு (தொய்யில்‌) ஏற்கனவே சிவந்த பாதந்கங்கட்குப்‌ பூசினாள்‌ ஒருத்தி, மற்றொருத்தி மெல்லடி விரலில்‌
மெட்டி புளைந்தாள்‌. சிலம்பு அணிவித்தாள்‌ ஒருத்தி. குஞ்சம்‌வைத்து பொற்சரிகைக்‌ கரையையுடைய வெண்துகில்‌ எழிலுற
அணிவித்தாள்‌. மற்றொருத்தி, இடையில்‌ பொன்மணி மேகலையும்‌ கழுத்தில்‌ முத்து மாலையும்‌ அணிவித்தாள்‌. இன்னொருத்தி,
வளையல்கள்‌, தோள்வளை, கைச்சரம்‌, மோதிரம்‌ முதலியன அணிவித்து கம்மல்‌ மூக்குத்தி சுட்டி முதலியனவும்‌ கொண்டு
கோலம்‌ புளைந்தாள்‌. VII—064

அந்நங்கையின்‌ இளிமிச்க கண்கட்கு மை தீட்டி, மெய்யில்‌ கஸ்தூரி பூசி, உச்சிப்‌ பொட்டு வைத்து, கூந்தலுக்கு செங்கழுநீர்ப்‌
பூக்கள்‌ சொருக வேறு ஒருத்தி அணி செய்வித்தாள்‌, ViJ—65

இவ்விதம்‌ ஒப்பனை செய்திருப்ப இலக்கினம்‌ (முகூரீதிதம்‌ நெருங்கியதென்று, விண்ணப்பிக்கவும்‌, பாம்பணைப்‌ பள்‌
கொண்ட பெருமாள்‌, பன்னிரு சுடர்களும்‌ (துவாதச ஆதித்தி யர்கள்‌) இவட்டிகளாக ஒளிர, விண்மீன்‌ கூட்டம்‌, முத்துகி
கோவையாக, திங்களஞ்‌ செல்வன்‌ குடை (ஆலலவட்டம்‌)யாக அமைய, கடலரசன்‌ (வருணன்‌) செங்கமழுநீர்ப்‌ பூபிதழ்களுடன்‌
அநிகாடியில்‌ சாண நீர்‌ தெளிப்ப, இயற்கை (மாயை)த்தாய்‌, வரனர மகளிருடன்‌ கூடி பரிசம்‌ ஏற்பாடு செய்ய, ௮க்கினிதேவன்‌,
அஇற்புகை சளறச்‌ செய்ய, மழைக்‌ கடவுள்‌ (மு௫ற்‌ குலம்‌) மேற்‌ – கட்டு (விதானம்‌) இடவும்‌ தொன்முது மறைகள்‌, ஓதுவார்களாய்‌
விருதுகள்‌ வாசிக்க, நாரத சனந்தனர்‌ முதலானோர்‌ மங்கல இசையால்‌ மனங்குளிர மகிழ்வித்திட கருடன்‌ மத யானையபோல
மணி குயின்ற பொற்பீடத்தைச்‌ சுமக்க, தெய்வீக வைபவத்துடன்‌ சென்று, பர மானந்தத்துடன்‌, பாகவத சிரேட்டனாகய
பெரியாழ்வார்‌ பக்தியுடன்‌ வணங்கி, வரவேற்க. வாகளத்திலிருந் திறங்கெய இரு மால்‌, சேனை முதலியார்‌ கைலாகுகதரவும்‌ வாயிற
போந்ததும்‌ ஆங்கு நங்கையர்‌ கழுவிய ஸ்ரீபாத தீர்த்தத்தற்ன மேன்‌ 3மல்‌ வீழ்ந்து தேவர்‌, சித்தர்‌, குழுக்கள்‌ ந௱ன்முந்தி நான்‌
முந்தி என வந்து நிலத்தில்‌ சலமில்லாதவாறு பிடித்தப்‌ பருகலம்‌, புகுந்து, ஆங்குள பொற்பீடத்தில்‌ அமர்ந்து, அவன்‌ மீண்டும்‌
பொற்‌ செம்புகளால்‌ தங்கத்‌ தாம்பாளத்தில்‌ வைத்த தாமரை போன்ற மெல்லடித்‌ தலிர்களைக்‌ கழுவி, சோட சோபசாரங்‌
களுடன்‌, மதுபர்க்கம்‌ (வெல்லம்‌ கலந்ததயிர்‌) தரவும்‌ பெற்று அப்பெரியாழ்வார்‌ இல்லக்‌ இழத்தியுடன்‌ தாரை வார்த்துத்‌ தர
௮ச்கன்னியை (ஆண்டாளை)க்‌ கைப்பிடித்தான்‌ , 11-66

பின்னர்‌, பொன்முலாம்‌ பூசிய  வேலைப்பாடுடைய முத்துக்கள்‌ கோர்த்த கருவண்ணக்‌ சகுரைய/டைய பெருந்திரையை,
இறக்கி, முகூர்த்தம்‌ வரவும்‌ தேவலோகப்‌ பெரியோர்கள்‌, மணமக்களின்‌ மென்மையான கைகளில்‌ வெல்லமும்‌ சீரகமும்‌
தரவே, மிக்க ஆர்வமுடன்‌ கண்‌ ஒளி பாய்ந்துராய (ஒருவரை ஒருவா்‌) கண்டனர்‌. VII—67

பின்‌, கோதை, திருவரநகிகநாதனின்‌ திருமுடியில்‌ முதலில்‌ முத்துக்களை மங்கள அக்ஷ்தை (தலப்ராலு) சொரியவே, அவள்‌
விரல்‌ தளிர்கள்‌ பட்டுப்‌ புளசமுற்று வியர்ப்புற்ற இருமாலின்‌ உடவில்‌ செறிற்துதிரீந்த வியர்வைத்‌ துளிகள்‌, மழைத்‌ துளிகளாக வும்‌, முத்துக்கள்‌ ஆலங்கட்டிகளாகவும்‌: முடலிலிருந்து பெய்துஒளியுடன்‌ மிளிர்வது போலத்‌ தோன்றியது.
(திருமால்‌ கருவண்ணயாதலின்‌ கார்மு௫லாகவும்‌ வியர்வைத்‌ துளிகள்‌ மழைத்‌ துளிகளாகவும்‌, முத்துக்கள்‌ ஆலங்கட்டிக்ளாகவும்‌
உ.வமிக்கப்பட்டன. தெலுங்கு நாட்டுத்‌ திருமணச்‌ சடங்கில்‌ வெல்லமும்‌, €ரகமும்‌, ஒருவர்‌ கையில்‌ ஒருவர்‌ வைத்தக்‌ கொண்டு
தலைகளைத்‌ தொடுவதும்‌, பின்‌ தலப்ராலு எனும்‌ அரிசியை ஒருவர்‌ தலையில்‌ ஒருவர்‌ சொரிதலும்‌ இங்கு வருணிக்கப்‌
பட்டுள்ளன. தலப்ராலு என்பது தலையிற்‌ பெய்யும்‌ அரிச என்பது பொருள்‌) ViI—68

நங்கை யிரு செங்கைசளாலும்‌ தலையரிசி வாரி எடுத்த போது, ஏந்திள வனமுலைகள்பால்‌ ஏந்தல்‌ திருமால்‌ வீரைந்து
,கண்போடவே, அதைப்‌ பார்த்து நாணங்‌ கொண்டு தோள்சளை மேலே தூக்காமலேயே கை முனையால்‌ மேலே விழுமாறு எறிந்த
வாறு சொரிந்தாள்‌, VII—69

இருமால்‌ அச்செல்வீயின்‌ கழுத்தில்‌ மங்கல நாண்‌ (மங்கல சூத்திரம்‌) கட்டினான்‌. அவளது உடல்‌ புளகமுற்றது, நங்கையும்‌
நாயகனும்‌ ஒருவரை ஒருவர்‌ கரங்களில்‌ கங்கணம்‌ சுட்டினர்‌. Vil—70

நங்கையால்‌ விரகமுடன்‌ பொரி வேள்வி (லாஜஹோமம்‌)செய்வித்து சப்தபதி (ஏழடிகள்‌) நடத்தச்‌ செய்தான்‌.
நநிகையுடன்‌ வடமீன்‌ (அருந்ததி நட்சத்திரம்‌) கண்டனன்‌, பிரம்ம ருத்திரரீ முதலிய தேவர்கள்‌ படைத்த காணிக்கைகளை
அருளோடேற்றுக்‌ கொண்டு, அன்போடு அனுப்பி வைத்தான்‌.
தனது திருவரங்க நகருக்கு மிகுந்த சிறப்புடன்‌ நங்கையை அழைத்துச்‌ சென்று, காவேரிக்‌ கரையில்‌ சந்தனமரச்‌ சோலை
களில்‌ கருங்கூந்தலாளைக்‌ கொஞ்சிக்‌ குலாவி மன்மதப்‌ பேரரசின்‌ ஆட்சியளித்து அருளுடன்‌ அகல உலகமும்‌ பரிபாலித்து
வருகிறான்‌. Vil—71

கோளனேரியின்‌ கரையில்‌ மளங்கவரும்‌ முழைகளிலிருந்து வந்த சந்தனம்‌, முல்லை மலர்களை தழுவிய மந்தமாருதம்‌ அசைவித்த
வனமாலை (துள? மாலையை) உடையவனே! தூய கருவண்ணத்‌ துடல்‌ எழிலால்‌ வானத்தை வென்றவனே/ ஆய்ச்சியர்தம்‌
மனத்தை தளிரீவிக்கும்‌ வேய்ங்‌ குழல்‌ இசைவாணனே[ VII—-72

சக்கிராயுதத்தால்‌ தேவ விரோதிகளைக்‌ கண்டித்தவனே! (கருடற்‌) பறவை வாகனனே! உந்தியில்‌ எழுந்த பெருந்தாமரை
மாலரகிய தொன்னை பில்‌ நிறைந்த தேன்‌ எனும்‌ வெள்ளத்தில்‌ பிரம்ம தேவனை நீர்‌ மனிதன்‌ போலத்‌ திகழச்‌ செய்தவனே! VU—73

வாலியைக்‌ கொன்றவனே/ தாமரைக்‌ கண்ணனே! மலை மகளால்‌ புகழப்‌ படுபவை! தோளில்‌ ‘ வில்‌ அமைந்தவேே!
நெற்றிக்‌ கண்ணன்‌ நான்முகன்‌ இந்திரன்‌ முதலானோர்‌ தம்‌ -மகுடங்களின்‌ மணியொளியாற்‌ கோலங்கொண்ட அடியிணை
களையுடையவனே! 4171-74

இஃது நீல மலையில்‌ நீல வண்ணத்துகில்‌ புளைந்தவனான பலராமனும்‌, சுபத்திரையுடன்‌ கூடியுள்ள குவளை மலர்‌ வெல்ற
கண்களையுடைய கண்ணனின்‌ கருணைக்‌ கடைக்‌ கண்களின்‌ அருளால்‌ தோள்‌ வலிமையுடன்‌ தோ ழற்சடிக்கப்பட்ட கடகாதிபதி
யாகிய கஜபதி மன்னர்களை அஞ்சச்‌ செய்த கஇருஷ்ண3தவராய மன்னரால்‌ உருவாக்கப்பட்ட *ஆமுக்த மால்யத* எனும்‌
காவியத்தில்‌ ஏழாவது அத்தியாயம்‌ இனிய செய்யுட்களுடன்‌ நிறைவுறும்‌.
(நீலமலை என்பது பூரி ஜகந்நாத க்ஷேத்திரமாகும்‌. இங்கு கண்ணன்‌, பலராமன்‌, சுபத்திரை மூவரும்‌ இணைந்திருக்கும்‌
சன்னதியைக்‌ காணலாம்‌. தனது தங்கையுடன்‌ தங்கியிருக்கும்‌ இறப்பு இந்தத்‌ தலத்திற்குண்டு. அது கடகம்‌ (ஒரிசா) பகுதி
யாதலின்‌ அதனைவென்ற இருஷ்ணதேவராயர்‌ அப்பகுதி திருமாலையை வழிபட்டு இச்செய்யுள்‌ யாத்த சிறப்பும்‌

ஆமுக்த மால்யத’ முற்றும்‌

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஆ முக்த மால்யதா-(முத்துகளால் ஆன மாலை)- ஸ்ரீ சூடிக்‌ கொடுத்தவள்‌) ஆறாவது அத்யாயம் -ஸ்ரீ கிருஷ்ணதேவராயன்-மொழிபெயர்ப்பாளர்‌ உரை -பன்மொழிப்‌ புலவர்‌ மு. கு. ஜகந்நாதராஜா

January 16, 2023

ஆறாவது அத்தியாயம்‌

செல்வத்தை நல்கும்‌ அருள்‌ நிறைந்த கண்களையுடையவனே வைகுண்டனே! தடையற்றவனே! பக்தர்கட்‌ கருளும்‌
பாதகமலங்களில்‌ பூந்தேன்‌ போல கங்கையையுடையவனே/வேங்கடமலையென்னும்‌ உதயகிரியின்‌ சூரியனே[ Vi—1

அடுத்துள்ள சரிதத்தைக்‌ கேட்பாயாக VI—2

தாசரி
பெயர்‌ சொல்லத்தகாத குலத்தில்‌ (பஞ்சமர்‌ குலத்தில்‌) எனது பகிதன்‌ ஒருவன்‌ இருந்தான்‌. அவன்‌ முன்பு நான்‌
வாமனாவதாரம்‌ எடுத்த புண்ணிய பூமியினைச்‌ (ிருக்குறுஙி குடியில்‌) சார்ந்துள்ள ஒரு யோசனைத்‌ தூரத்திலிருக்கும்‌ ஊரில்‌
வசத்தவனாக, பிரம்ம முகூரித்தத்தில்‌ (விடியற்காலத்தில்‌) வற்து கைக ராகத்தில்‌ பாடுவான்‌. VI—3

தினந்தோறும்‌ அம்மகாத்மா, VI—4

சாதிக்குரிய நடவடிக்கைகளை, என்பால்‌ பக்தியினால்‌ செய்துகொண்டு, தன்‌ மனம்‌ பரிசுத்தமாக அமைய, அழுக்குடை
யில்‌ பொதிந்துள்ள மாணிக்கம்போல குற்றமற்றவனாசக இருந்தான்‌. VI—5

என்னெய்‌ தோய்ந்த தோல்‌ சட்டை, குல்லாய்களுடன்‌ பித்தளைச்‌ சங்கு சக்கரக்‌ குண்டலங்கள்‌ காதில்‌ அமைய,
விளக்குத்‌ தூண்‌ எனும்‌ கருவியும்‌ தோற்பையும்‌ கையம்பும்‌ கொண்டிலங்கி, கழுத்தில்‌ தாழங்குடையுடனும்‌ திகழ்ந்து, எனது
பாதுகையும்‌ குதிரைவால்‌ மயிரால்‌ புனைந்த சுரைக்காய்‌ வீணை யும்‌ மிளிர, சிறுதாளமும்‌ (சங்கி) கக்கத்திலுள்ள சிறுபெட்டியும்‌
நடைவேகத்தால்‌ ஓவ்வொரு சமயம்‌ உரசி கலந்தொலிப்ப, கழுத்தில்‌ துளசிமாலையும்‌, அழுக்குடலும்‌, பட்டைத்‌ திருமண்‌
மணும்‌, அஞ்சிய சிவந்த பார்வையும்‌, மஞ்சல்‌ காவியுடையும்‌ திகழ அந்தப்‌ பஞ்சம வைணவன்‌ என்னைச்‌ சேவிக்க வருவான்‌. VI—6

சண்டாளர்‌ (பஞ்சமர்‌) கள்‌ அல்லாதவர்களின்‌ சீலமுடன்‌ கூடிய அவன்‌, தன்‌ சுமைகளை இறக்கி, பக்தியோடு கூடியவனாக
ஆடிக்கொண்டும்‌, பாடிக்கொண்டும்‌, மழை, காற்று, வெயில்‌, பச என்று பாராமல்‌ கல்லும்‌ கரையுமாறு பறைத்தம்புராவை
மீட்டியவாறு முற்பகலில்‌ கன்னங்களில்‌ ஆனந்தக்‌ கண்ணீர்‌ வழிய எனது தோத்திரங்களைப்‌ பாடிப்பரவசமடைவான்‌, VI—7

இவ்விதம்‌ நெடுநெரம்‌ சேவித்து, நெற்றி நிலந்தோய வீழ்ந்‌இறைஞ்சி, கருவறையிற்‌ கழுவிய தீரீத்தம்‌ கலஷ்தொட்டியில்‌
வீழ்ந்து நிறைந்து கால்வாய்‌ வழியாக கோயிற்புறத்துப்‌ போகவும்‌, சூத்திரன்‌ ஒருவன்‌ எடுத்தூற்றத்தான்‌ குடித்தான்‌.
(தான்‌ பஞ்சமன்‌ ஆதலின்‌ கீண்டாது நாலாம்‌ வருணத்தவரால்‌ தீர்த்தம்‌ எடுத்துத்தருமாறு பணித்து அதனைக்‌ குடித்தான் VI—7

அவன்‌, மேல்வருணத்தாரைக்‌ கண்டு விலஇஒயும்‌, வயில்‌ காற்றுகளில்‌ எவ்வளவு நேரமோ காத்திருந்தும்‌, பிரசாதம்‌ வினியோகிக்கும்போது இருந்து, நான்காம்‌ வருணத்தார்‌ மெச்சிக்‌ கொடுத்த பிரசாதத்தை, தம்புரா ஒதுக்கி, பத்த சிரத்தை களுடன்‌ அடக்கத்துடன்‌ கை ஏந்தி வாக்றி, உண்டு, தீர்த்தம்‌ குடித்து மகிழ்வான்‌. VI—9

இவ்விதம்‌ தன்‌ தாழ்ந்த பிறப்பினால்‌ ஏற்பட்ட ஏமைமை யால்படும்‌ துன்பங்களைக்‌ கண்டு எல்லோரும்‌ இரக்கப்பட கோயில்‌ வெளிப்‌ பிராகாரத்திலுள்ள நீர்‌ விழும்‌ துரம்புவின்‌ அருகில்‌ இருந்துகொண்டு சேவித்து, வலம்வந்து, பொழுது தேறவும்‌, தன்‌ சேரிக்குச்‌ செல்வான்‌, இப்படி. இருக்க ஒரு நாள்‌.
V{—10

நடு இரவில்‌ அந்த தாசரி (தாழ்ந்த குல வைணவ பக்தன்‌) அவ்வருகே, பூனைபுகுந்த குடிலில்‌ உள்ள கோழி பெருங்குரலில்‌
கூவக்கேட்டு, (திருமாலைச்‌ சேவிக்கும்‌) பொழுதாயிற்றெனக்‌
கருதி பாடுவதற்காகச்‌ செல்லும்‌ வழியில்‌, VI—il

மருட்கொடியை மிதித்து, “இருளே என்ன வென்று கேட்கும்‌’ இருட்டில்‌ வழிதவறி காடெல்லாம்‌ திரிந்து இழக்கே
வெளுக்கும்போது ஒரு ஆளரவமற்ற காட்டில்‌ புகுந்து சென்று,
(மருட்கொடியை மிதித்தால்‌ பாதை மறந்துபோகும்‌ என்பது மரபுவழிப்பட்ட நம்பிக்கை, இருளே என்று கூவி என்னவென்று
இருள்‌ பதில்‌ சொல்லும்‌ என்பது இருட்செறிவினை எதிரொலிக்‌ கும்‌ என்ற கருத்தில்‌ வற்த தெலுங்கு மரபுச்‌ சொல்‌ ஆகும்‌.) VI—12

இடிந்த சுவர்களில்‌, நாயுருவி சகாசமரீத்தம்‌, பூளைப்புதர்‌களாலும்‌, கீழே சாய்ந்த சுவரிடுக்குகளிலும்‌ கல்லிடுக்குகளிலும்‌
வூக்கும்‌ பெருச்சாளிகளாலும்‌, பாதி தரசியால்‌ புதைந்த, புல்‌ பூண்டுகளால்‌ வாய்முடப்பெற்ற, கஇணற்று வளைகளும்‌, எறும்பு
கள்‌ அரிசியை இழுத்துக்கொண்டு போக3வ சிதைந்து, காய்ந்‌துலரீந்த வேலித்தட்டிகளில்‌ உள்ள இறுங்கும்‌, தூதுவளை
குப்பை வேளைக்‌£ரைகளில்‌ வயிறொட்டியவாறு மீசை அசைதீதலும்‌ அடங்கிவிட்ட முதிய பூனைககளும்‌, புலங்களில்‌ வளரீந்த
சாரணத்தி, . கோரை முதலானகளைகளும்‌ நிறைந்து, ஏற்றம்‌ கெட்டுவிடவே கல்‌ துண்‌ மட்டும்‌ மிஞ்சியதாக உள்ளதும்‌ ஆன
பாழ்ப்பட்ட நிலத்தின்‌ வழியே சென்றவாறு. [13

தவறான வழியில்‌ சென்று, வழியிலுள்ள (உத்தரேனி) முள்ளைக்கால்களினால்‌ விபரீதமான முறையில்‌ துடைதி
தெறிந்து, நெருஞ்சி முட்களை விழிப்புடன்‌ பிடுங்கி எறிந்து கொண்டு போனான்‌. Iv—14

அவ்வழியில்‌ வைணவன்‌, அரையோசனை (இரண்டு குரோஸ்‌) நீளமுடைய, விழுதுகள்‌ விட்டு பல கிளைகளும்‌
உட்களைகளும்‌ உடைய ஆரமரத்தைக்‌ கண்டான்‌. அக்கிளைகளில்‌ உள்ள புழுக்கள்‌ குடைந்த இலைகள்‌ காற்றால்‌ வீசி
எறியப்பட்டு தூரத்தில்‌ வழிப்போக்கர்கள்‌ முன்பு வீழ்ந்து. இந்த மரத்தில்‌ பிரம்மராட்சசு உள்ளது. அருகே வரவேண்டாம்‌
என்று சொல்லி எச்சரிப்பதுபோல்‌ இருந்தன, அந்த இலைகளின்‌புழுக்க்குடைந்து எழுத்துக்களாகக்‌ காணப்பட்டன. இவ்விதம்‌
எச்சரித்த புண்ணியப்‌ பயனோ எனுமாறு அவ்வாலமரத்தில்‌ பழங்கள்‌ நிறைந்திருந்தன.
(ஆலமரம்‌, புழுக்கள்‌ குடைந்தது எழுத்துக்களாகத்‌ தோன்ற இலைகள்‌ வீசி வழிப்போக்கரை எச்சரித்தது போல இருந்தது
என்றும்‌, அந்தப்‌ புண்ணிய பயனே பழங்கள்‌ எனுமாறு இருந்தது என்றும்‌ கற்பிக்கப்பட்டு ள்ளது), 91.15

அவன்‌ அவ்வாலமரத்தைக்‌ கண்டு அப்பக்கம்‌ ஒரு ஒற்றை யடிப்‌ பாதை செல்வதையும்‌ சுண்டு, வழி கிடைத்ததே பெரும்‌
பாக்கியம்‌ எனக்‌ கரத விரைந்து அம்மரத்தின்‌ அருகே சென்றான்‌. IV—16

இளநீர்க்‌ குரும்பைகள்போல, மூளை எல்லாம்‌ உறிஞ்சி எறிந்ததால்‌ உருண்ட மண்டை ஓடுகளும்‌, இறைச்சியைக்‌ &றிய
கீறல்கள்‌ தோன்றும்படியாக முழுவதும்‌ சுவைத்துதி சுவைத்து, இளம்பச்சையூன்‌ படிந்த எலும்புகளும்‌, முசுமுசுவென மொய்த்த
ஈக்கள்‌ கூட்டம்‌ உருவம்‌ தெரியாமல்‌ மறைத்த முள்கிளைகளில்‌ தொங்கும்‌ பச்சைத்‌ தோலும்‌, தர படிந்து அழுக்கடைந்து,
நாவிதனின்‌ குப்பையோல இளர்ந்து எழுந்து பரவும்‌ காற்றிற்‌ காடும்‌ மயிர்க்குவையும்‌, துண்டுபட்ட மனித உடலுறுப்புக்களை,
கூடிவந்து கடித்து போகும்போது ஒன்றோடொன்று பிணங்கிப்‌ போராடும்‌ நாய்நரிக்‌ கூட்டமும்‌, அதன்‌ கால்பட்டு நகங்கி
இநாற்றம்‌ பரப்பும்‌ வருவல்‌ (உப்புக்‌ கண்டச்‌ சதைகள்‌) களும்‌, கழுகுகளும்‌ மிகுந்திருந்த செறிந்த துர்க்கந்தமிக்க வழியே
சென்று, எதிரே… (கண்டான்‌) VI—17

முன்கால்களால்‌ நீட்டி வளைந்து, மேலே திருட்டுப்‌ பார்வை கள்‌ செலுத்தியவாறு ஓடுகின்ற நாய்களும்‌, புலால்‌ தோரணஙி
இடீரென பறக்கும்போது கிளையடித்துவிட இரைச்சலிட்டோடும்‌ பருற்துகளும்‌, (பிரம்ம ராட்சசனுக்கு)
இடையே வந்ததால்‌ உள்ளங்கையால்‌ அடிபட்டு, இடையை இரு கரத்தாலும்‌ பிடித்துக்‌ கொண்டமும்‌ குரங்குகளும்‌, தற்செயலாக
ஓரிடத்தில்‌ காணப்பட்டு, அவ்விடத்தில்‌ மாயமாகி வேறோரிடத்‌ இல்‌ காணப்படுவதாகிய நடவடிக்கைளும்‌, பார்த்து, “யாரோ
ஒருவன்‌ (இம்மரத்தில்‌) இருக்கிறான்‌ போலும்‌. மனிதன்‌ அல்ல, விறகு, கட்டைகள்‌ சேகரிக்கும்‌ வேளையும்‌ இதுவல்ல, புலால்‌
மணக்காற்று வீசுறது. வழியோ தூரமாக இருக்கிறது”” என்று நினதைது கவலையும்‌ ஐயம்‌ உடையவனாகியிருந்‌த போது
(வேதம்‌ வெங்கட சாஸ்திரி உரையில்‌ பெண்‌ நாய்கள்‌ என்று உரை கூறுவார்‌. பெண்‌ நாய்களே வஞ்சகம்‌ மிக்கதாயும்‌ துணிந்து
வருபவையாகவும்‌ இருக்கும்‌ என்பது உரைக்‌ குறிப்பு: மாவிலைத்‌ தோரணம்‌ போல, உப்புக்கண்டம்‌ போடுவது போல புலால்‌
துண்டுகள்‌ தோரணமாகப்‌ போட்டுள்ளதால்‌ புலால்‌ தோரணம்‌ என வருணிக்கப்பட்டது) VI—~18

இறந்த மனிதப்‌ பிணத்தை தன்‌ கோவணம்‌ (கெளபீனம்‌) ஆக சட்டப்‌. போதாமையின்‌ இழுத்துக்கட்டும்‌ போது இரத்தம்‌
பட்ட உந்தியடைய அரைஞாண்‌ .உடையவனும்‌ முசுறு (முயிறு) மொய்த்த அண்டிமாப்‌ .போலசி சிவந்த போர்வையைப்‌
போர்த்திய கருமேனி உடையவனும்‌, தலை8ழ்‌ ஆக உள்ள யானைத்‌ கலைபோல்‌ தாடை (நாடி)யும்‌
கோரைப்‌ பற்களும்‌ உடைய முகத்தினனும்‌, குளவிகளின்‌ நீண்ட கூட்டைப்போல்‌ கோரோசனை வண்ணத்திலுள்ள தாடி. மீசை
களையுடையவனும்‌, இரைக்காக (தின்பதற்காக) வழிப்போக்கர்‌ யாராவது வருகிறார்களா எனப்‌ பார்க்க மரக்கிளையில்‌ ஏறும்‌
போது நழுவும்‌ குடல்பூனூலைச்‌ சினந்தவாறு மீண்டும்‌ தோள்‌களில்‌ சரிசெய்து வைத்துக்‌ கொள்பவனும்‌, தொங்கும்‌ தொந்தி
யும்‌, யானைக்காலும்‌, வழுக்கைத்‌ தலையும்‌, பிடரி மயிரும்‌ உள்ளவனும்‌…… (மூயிறு–சிவப்பு நிறமாள பெரிய எறும்பு) vi—19

சதை வளர்ந்த கண்களும்‌, பசியினால்‌, வேதாளங்களை (பிசாசுகளை) அடிக்கடி கெட்டவசவு (வசை)கள்‌ வைபவனும்‌
மலைப்பாரம்‌ உடையவனும்‌, முடமூழுகிகால்‌ (கும்பஜானு) எனும்‌ பொருத்தமானப்‌ (காரண) பெயருடையவனுமான ஒரு
பிரம்ம ராட்சசனளைக்‌ கண்டான்‌. VI—20

அவன்‌ (அந்த பிரம்ம ராட்சசனும்‌), “பார்த்தேன்‌! போகாதே! என்று மரங்கள்‌ பொடிப்பொடியாகுமாறு குதித்தான்‌ –
இவனும்‌ (வைணவ தாசரி) முன்பு இரவும்‌ பகலும்‌ போரில்‌ வீரமுடன்‌ போரிட்டவன்‌ ஆதலினால்‌ தைரியமாக நின்று, அந்த
கூரிய அம்பினைக்‌ கொண்டு (ராட்சசனை) அடிக்கவும்‌, அவன்‌ ,அதை (அம்பினை) முறிக்கவும்‌ இவன்‌ வீரமுடன்‌ முனைத்தான்‌.*VI—2!
*(மூற்காலத்தில்‌ பிணந்தின்னும்‌ பேய்மக்கள்‌ சிலர்‌ இருந்தனர்‌ எவ்று தமிழ்‌, வடமொழி இலக்கியச்‌ சான்றுகளால்‌ தெரிகிறது)

(இராட்சசன்‌) இழுக்கவும்‌, (தாசரி) காலடி பெயராமல்‌ அவன்‌ மாரீபில்‌ தட்டி, அந்தப்‌ பக்கம்‌ விலக, குதித்து, அவன்‌
அடிக்கவரவும்‌ வஞ்சித்துப்‌ பின்‌ வாங்கி, அவன்‌ மீண்டும்‌ முனைவதைக்‌ கண்வைத்து (எச்சரிக்கையுடன்‌) பார்தீது, அவன்‌ தன்‌
மேல்‌ பாய முனைந்து வரவும்‌, மார்பில்‌ குறிவைத்தவாறுள்ளபிடிப்பின்‌ வலிமையால்‌ அவனுக்குப்‌ பிடிபடாமல்‌ நின்று, அவன்‌
தன்மேல்‌ பாய முனையவே தான்‌ குனிந்து, தன்‌ கைப்பிடியே . (பாதுகாப்புக்‌) கோட்டையாக அவனை விடாது, திரியும்‌
இடமெல்லாம்‌ திரிந்து, அவன்‌ கொல்கருவிகளைத்‌ (கல்‌, முசலியன) தேடும்போது அவனை நையப்‌ புடைத்து, உதைத்து,
அவன்‌ திரும்பவுமே கைப்பிடியால்‌ முதுகிலும்‌ இடையிலும்‌ குத்தி, என்மேல்‌ பக்தியினால்‌ ஏமாந்து விடாமல்‌ எச்சரிக்கையாக
இருந்து போரிட்டான்‌. VI–22

தள்ளிவிட்டுப்‌ போகப்‌ பார்க்கவும்‌, தனது இராட்சதக்‌ கூட்டத்தை அவன்‌ விளிக்கவும்‌ அவர்களும்‌ ‘(மரத்திலிருந்து)
இறங்கி வரவும்‌, அதோ அவன்‌ போனான்‌, வாருங்கள்‌ வாருங்கள்‌ என்று ஒடிச்‌ சென்று அவர்களும்‌ தானும்‌ (தாசரியை) பிடித்துக்‌
கொள்ளவும்‌, VI—23

காளையொத்த தாசரி அப்போது கால்கை உதைத்து முழங்‌ கையால்‌ இடித்து, இருபக்கமும்‌ குத்திப்‌ போரிட்டவாறு ஏக
அவரீகள்‌ பிடித்து ஆலமரத்தில்‌ கட்டி (இராட்சசன்‌) இவ்விதம்‌ கூறினாள்‌. 13…-24

உன்‌ கொழுப்பிளனைச்‌ சுவைத்தின்புற்று மனநிறைவோடு மகிழ, என்‌ பஞ்ச பிராணங்களும்‌ தாகம்‌ தீருமாறு கத்தியால்‌ உன்‌
செருக்குடைய தலையைக்‌ கொய்து உனது முண்டத்திலிருநீது பொஙிகும்‌ சூடான இரத்தத்தை இனிது பருக இந்தப்‌ பிசாச
(பெண்‌ பேய்‌) இரும்புக்‌ கம்பியில்‌ கோர்த்து நெருப்பில்‌ வாட்டி உன்‌ மாமிசத்‌ துண்டுகளை எடுத்துத்‌ தரக்‌ கடித்து இந்த பனங்‌
காட்டினுள்ளே இருக்கும்‌ மண்டையோட்டு கலஙிகளில்‌ உள்ள கள்வினைக்‌ குடிப்பேன்‌, 41-29

என்னை இவ்வளவு அலைக்கழித்த நீசனாகிய உன்னை மென்மையாகக்‌ கொல்வேனளோ (கடுமையாகச்‌ சித்திரவதை செய்‌
வேன்‌) என்று விண்ணதிர ஆர்ப்பரித்து நெட்டுயிர்த்து, அக்கடை யோன்‌ தாகம்‌ கொண்ட தெளிவற்ற மொழிகளில்‌, VI—26

கத்தியும்‌, கலமும்‌ (இரத்தம்‌ பிடிக்கும்‌ பாத்திரமும்‌) கொண்டு வருமாறு கட்டளையிட்டு, கொடிபோன்ற குடலால்‌ பின்னிய
கயிற்றினை (கோலகக்கர)” (* கோலகக்கர–மாடுகளை லாடம்‌ அடிக்கும்‌ போது நான்கு கால்களையும்‌ கட்டி வீழ்த்தப்‌ பயன்படும்‌ கயிற்றுக்குப்‌ பெயர்‌,)எடுத்துத்‌ தள்ளிவிடவும்‌ மரத்தில்‌ சாய்ந்த (தாசரி) ௮ந்த இராட்சசனிடம்‌ அச்சமற்ற உறுதியான மொழிகளில்‌ அறநெறி கூறலானான்‌. VI—27

இரவில்‌ திரிபவனே (இராட்சசனே) ஒரு சொல்‌ கேட்பாயாக! விரைவு படுதல்‌ (அவசரம்‌) ஏன்‌? உன்னை தேவர்கள்‌ ஆனாலும்‌
வெல்ல முடியுமா? வட்டிலில்‌ வைத்த சோறு நான்‌/ இனி எங்கே போய்‌ விடுவேன்‌! (எனினும்‌) உயிரைக்‌ காப்பாற்றப்‌ போரா
டாமல்‌ இருப்பது பாவம்‌/ (அதனால்‌ தான்‌ பிணங்‌கிப்‌ போராடி .ளேன்‌) அதற்காகக்‌ கோபப்பட வேண்டாம்‌! எனக்கு உடல்‌ மேல்‌
பற்றில்லை! இது (இந்‌.த உடல்‌) போவதே மேலானது. VI—28

இழிந்த (சண்டாளப்‌) பிறப்பு அறுவது! ஏதேனும்‌ ஒரு உயிர்‌ மகிழ்வது, வீடுபேற்றுக்கருகே அடைவது நல்லதேயல்லவா! நிலை
யற்ற உடலை விற்று பரத்தை அடைந்த பிச்‌ சக்கரவர்த்தி மேலான வழிகாட்டியல்லவா
(சிபி-புறவுக்காக தன்‌ உடல்‌ அரிந்து துலைபுக்ககதை பிரசித்தம்‌) INV—29

நோயோ, பேயோ, தேளோ, வாளோ, மனக்கவலையோ, நஞ்சோ, வெள்ளமோ, கள்ளனோ, நீரோ, நெருப்போ, தயோ,
விலங்கோ, சூது, வாது, மாதுகளாலோ, மண்ணிலோ, புண்‌ ணாலோ, இடியோ, பாம்போ, ஏதேனும்‌ ஒன்றால்‌ எளிதில்‌
நாசமடையும்‌ இந்த உடல்‌, இவ்விதம்‌ கெடாமல்‌ ஒரு (பசியால்‌) மெலிந்தவனுக்கு உதவுவதால்‌ கெடுவது நல்லதல்லவா? VI—30

அது அப்படியிருக்க, இன்னொரு நல்லுரை கூறுகிறேன்‌. அதுவும்‌ உயிருக்கஞ்சி, காரியவாதியாகச்‌ சொல்வதாகக்‌ கருதாபல்‌, நடுநிலைமையுடன்‌ பேசுவதாகக்‌ கருதிக்‌ கேட்பாயாக! (நீ) கேட்கா விட்டாலும்‌, உயிர்களின்‌ நலம்‌ கருதிக்‌ கூறப்படும்‌ சொற்களை இறைவனாவது பாராட்டுவானல்லவா? (நீ) புலி, சிங்கம்‌, பன்றி, ஓநாய்‌, நரி முதலான கொல்‌ விலங்குகளில்‌ ஒரு விலங்கன்று. நீ தெய்வப்‌ பிறப்பினன்‌. உனக்கும்‌ எங்களைப்‌ போல கை, கால்‌, முகம்‌ முதலிய அறுப்புக்கள்‌ உள. பேச்சும்‌ எங்களைப்‌ போன்றுதான்‌. செய்யத்தக்கன, செய்யத்தகாதன எனும்‌ பகுத்தறிவும்‌ எம்‌ போன்றதே. ஆ! மறந்து சொன்னேன்‌! தாரவரங்களைவிட புழுப்பூச்சிகட்கும்‌, (ஊர்வன) அவற்றைவிட பறவை, விலங்குகள்‌ (நடப்பன) ஆகியவற்றுக்கும்‌ அவற்றைவிட எங்கட்கும்‌, எம்மைவிட, உங்கட்கும்‌ கை௰ால்‌,, உடல்‌, Baia, அறிவூத்‌ திறனும்‌, மிகுதியாகும்‌. இத்தகைய உனக்கு, முக்கியமாக திந்தைக்குரிய வெறுக்கத்தக்க, தக்கன, க்காதன, உண்பன, உண்ணாதன, பருகுவன, பருகாதன, எனும்‌ விவேகும இல்லா திருப்பது பொருத்தமாகுமா? இந்தத்‌ இய உண்டி (நரமாமிசம்‌) சுவையற்றது, தூய்மையற்றது. அதவும்‌ எல்லாப்‌ பாவங்களிலும்‌ தலையாய கொலையால்‌ வருவது.
கொலை (ப்பாவம்‌) பரலொகத்திலன்றோ பாதிப்பது, பர லோகம்‌ உயிர்‌ நீத்த பிறகன்றோ? நெடுநாள்‌ வாழும்‌ உயிர்‌ களாகிய எமக்கெதற்கு (கொலைப்‌ பாவ) அச்சம்‌? என்று கருத வேண்டாம்‌? பிராணபயம்‌ (உயிர்‌ நீக்கும்‌ அச்சம்‌) எமக்கு (மனிதர்க்கு) இன்றென்றால்‌ உங்கட்கு நாளையோ, நானை மறுநாளோ, முடிவில்‌ யுகரிந்தத்திலோ நீண்ட, குறுகிய கால எல்லைக்குள்‌ எப்படியும்‌ தப்பாது. சாவு வர ஏற்றத்தாழ்வுகள்‌ எப்படி இருந்தால்‌ என்ன? முன்னீரில்‌ (கடலில்‌) மூழ்குவதெதன்‌ றான பிறகு மலையானாலென்ன? அணுவானால்‌ என்ன? இரண்டும்‌ ஒரே நிலை தானே! எதிர்காலத்தைப்‌ பற்றி ஆலோசிக்க வேண்டாமா? தவத்தினால்‌ பெற்ற வரங்களை யுடைய முன்னாளில்‌ தேவர்களின்‌ செருக்கடக்கி உயர்ந்து நின்ற இரணியகூபு (கனகன்‌) தசமுகன்‌(இராவணன்‌) முதலான வார்கள்‌, நூறாயிரம்‌ ஆண்டுகள்‌ வாழ்ந்தும்‌ முடிவில்‌ இறந்த, தாம்‌ வெற்றிகொண்ட யமன்‌ கையிலேயே இக்கிக்‌ கொள்ள வில்லையா? இங்கு நீங்கள்‌ வலிமையிகுந்தோராயின்‌, அங்கு அவன்‌ (யமன்‌) வலிமைமிக்கவன்‌. எல்லா உயிர்களின்‌ ஏற்றத்‌ தாழ்வுகள்‌ அதனதன்‌ இடச்சிறப்பினால்‌ உருவாவதேதான்‌. கொடுங்கதிர்க்‌ கடவுளின்‌ மகன்‌ (சூரியன்‌ மகன்‌ யமன்‌) பட்டிணத்தில்‌ எல்லை கடந்த எம்போன்றே உங்கட்கும்‌ தண்டனை நிச்சயமாகும்‌. நீங்களும்‌, யமன்‌, மற்றதேவதைகளும்‌ குலத்தால்‌ சகோதரர்கள்‌ தான்‌, எனினும்‌ பரலோகத்தில்‌ ஒருவரை ஒருவர்‌ பீடிக்கன்றீர்‌ கள்‌. இந்த வேறுபாட்டுக்கு தமஸ்‌, சத்துவ குணங்கள்தான்‌ மூல காரணமாகும்‌, அந்த குணங்கட்கு உணவே மூலக்காரணம்‌,

வேதமந்திரங்கள்‌. மூலம்‌ வேள்வியில்‌ அழைக்கப்பட்டு புரோடாசம்‌ (வேள்வி நெய்யன்னம்‌) உண்ட புனித உணவினால்‌
தான்‌ பவித்திரர்களாகி தேவர்கள்‌ சாவதின்றி உங்களைவிட நெடுங்காலம்‌ நிலைத்திருக்கின்றனர்‌. அந்தப்‌ புனிதத்துவத்தைக்‌
கண்டல்லவா எப்போதும்‌ நான்முகக்‌ கடவுளின்‌ அம்சமாகிய அமுதகிரணன்‌ (சந்திரன்‌) கரைந்து, எல்லா ரசங்கட்கும்‌
எல்லையாய அமுதரசத்தால்‌ (தேவர்கட்கு) திருப்தியைத்‌ தரு கிறான்‌. இந்தப்பொருளை நாங்கள்‌ சொல்லக்‌ கூடாதென்றாலும்‌ வேதம்‌, முதற்‌ கலையை அக்னி (இக்கடவுள்‌) பருகுவதாகக்‌ கூறும்‌, மேலும்‌ அந்தந்தக்‌ கலைகள்‌ அந்தந்த தேவர்கட்கு
வரிசைக்கிரமமாகக்கூறும்‌, ஆதலின்‌ இதை எல்லாம்‌ ஆராய்ந்து உனக்குப்‌ பிடித்ததைச்‌ செய்க’ ”. என்று கூறவும்‌, கட கடவெளனச்‌
சிரித்து அந்த தாசரிக்கு இராட்சசன்‌ இவ்விதம்‌ கூறினான்‌.
(சந்திரனின்‌ பதினாறு கலைகளும்‌ பல்வேறு தேவர்களின்‌ உணவாகக்‌ கற்பித்தல்‌ வேத மரபாகும்‌. தூய அமுத ரசம்‌ உண்ட
தேவர்கள்‌ நூயராய்‌ நெடுநாள்‌ வாழ்வர்‌ என்று கூறி, நரமாமிசம்‌ உண்பது பரவம்‌ என்று தாசரி கூறுகிறான்‌). ்‌ Vi—31

“படிப்பினால்‌ (உபதேசங்களைக்‌ கூறிக்‌கொல்லாதே! நாங்கள்‌ படிக்காத சாஸ்திரங்களா? நாங்கள்‌ படிக்காத
வெதங்களா? அவை யெல்லால்‌ எமக்குப்‌ பிடிக்கவில்லை! நம்ப மாட்டாயா?” பிரதமாம்‌ பிபதே வஹ்னி (முதல்‌ பங்கை அக்னி
குடிக்கிறான்‌) என்ற சொல்‌ தப்பாதல்லவா?
(சந்திர கலையை ஒவ்வொரு தேவரும்‌ பருகுவர்‌ என்பதால்‌, முதல்கலை அக்னிதேவனுக்கு என்ற மந்திரம்‌ எடுத்துக்காட்டி,
தேவார்கள்‌ நிலவிளனைப்‌ பருகுவதால்‌ பிறரை அழித்து உண்டு இன்புறும்‌ கொடியர்தாம்‌ என்று பிரம்ம ராட்சசன்‌ கூறுகிறான்‌ என்பது கருத்து) 41.32

நில்‌! ஓகோ? எங்களை தேவர்கட்கு சகோதரர்கள்‌ என்றா யல்லவா? அவர்கள்‌ அமுதம்‌ குடிப்பவர்கள்‌, புனிதமற்றவை
யூண்ண மாட்டார்கள்‌ என்றாய்‌! சந்திரனின்‌ முதற்கலை அக்னி (பிற பிறரும்‌) பருகுவர்‌ என்றாய்‌! ஒரு செய்தி உன்னைக்கேட்‌
கிறேன்‌. அந்த அக்னி எல்லாம்‌ உண்பவன்‌ (சர்வபட்‌8) உலூல்‌ அவன்‌ நியாய3ம (முறையே) எங்கட்கும்‌, போதும்‌. இனி பெரிய
வர்கள்‌ ஓழுக்கப்படி நடந்துகொள்வது பாவமா?
(அக்னி தேவனுக்கு நாங்கள்‌ (ராட்சசர்‌) சகோதரர்கள்‌. அக்னி எல்லாம்‌ உண்பவன்‌. அவன்‌ ஆசாரப்படி. நாஙிகளும்‌
(நரமாமிசம்‌ உட்பட) எல்லாம்‌ சாப்பிடுவோம்‌; இது தப்பா? என்று வாதிக்கிறான்‌ பிரம்ம ராட்சசன்‌) 41-33.

திருமாலுக்கு நண்பனும்‌ வாஹனமும்‌ (தேர்‌) ஆகிய கருடன்‌. குனக்குக்‌ இடைத்த அமுதத்தை தேவர்கட்கு மீண்டும்‌ தந்துவிட்டு
பாம்புகளை உணவாக (சோறாக) வரம்பெற்றுக்‌ கொள்ள வில்லையா? அமுதமாயினும்‌ பிறவிக்கேற்ற உண்டியின்‌ சுவைக்‌ கீடாகுமா?
(கருடன்‌ தேவாமிர்தத்தை விட பாம்புதான்‌ சுவை எனக்‌ கருதியதுபோல, (பூனைக்கு எலிதான்‌ சுவை) தான்‌ நரமாமிசம்‌
சுவைப்பவன்‌ என்று கூறி நியாயப்‌ படுத்துகிறான்‌ பிரம்ம ராட்சசன்‌) VI—34

துக்கமும்‌ சோறும்‌ இன்றி படித்துக்கண்ட பயன்‌ என்ன? இந்தப்‌ படிப்பினால்‌ உண்டான வாதங்களாகிய பொய்களைக்‌
கேட்டு எவன்‌ ஏமாறுவான்‌?நீ எம்மிடம்‌ படிப்பு (சாத்திரம்‌) களைச்‌ சொல்ல ஒரு பாராட்டும்‌ கிடைக்கப்‌ போவதில்லை. “இந்த
படித்த கறி (மாமிசம்‌) புதிய சுவையாயுள்ளது. வேண்டுமட்டும்‌ கொணர்க” என்ம பாராட்டு ஒன்றுதான்‌ கிடைக்கும்‌.
(உன்‌ படிப்பைப்‌ பாராட்ட ஆள்‌ இல்லை. உன்‌ BMP சுவை யாக இருக்கும்‌ என்று பிரம்ம ராட்சசன்‌ கூறுகிறான்‌) ViI—35

என்று இவ்வாறு பிரகஸ்பதி மதம்‌ (லோசகாயதவாதம்‌) கைக்‌ கொண்டு தன்‌ சொற்களைப்‌ பரிகசிக்கும்‌ ராட்சசனின்‌ குதர்க்க
வாதங்களைக்‌ கேட்டு “இருஷ்ண கருஷ்ண’்‌ எனக்‌ காதுகளை மூடி இதற்கேற்ற பதில்களைக்‌ சொல்லி இவனைக்‌ இளறினால்குழப்பத்‌
தால்‌ இதைவிட அபத்தமான சொற்களைக்‌ கேட்க நேரும்‌/இனிச்‌ செய்யவேண்டியதைச்‌ சிந்திக்கவேண்டிய நமக்கு இதனை மறுக்க
வேண்டிய தேவையுமில்லை, என்று கருதி, மனத்தெளிவுடன்‌, அவன்‌ விருப்பத்திற்கேற்றபடி பேச விழைந்து, மனத்துள்‌ வெறுத்‌
தவாறு, இருபொருள்பட மனத்துள புத்தபகவாளை நினைத்துக்‌ கொண்டே :₹நீ சர்வக்ஞன்‌ (எல்லாம்‌ அறிந்தவன்‌) நான்‌
சாதாரண மனிதன்‌, தாழ்ந்த குலத்தினன்‌. சாத்திரங்களைக்‌ கல்லாதவன்‌. உளக்கு பதில்‌ கூற இயலுமோ? ஏதோ வாய்தவறிச்‌
சொன்ன சொற்களைப்‌ பொறுத்து அருள்‌ கூர்ந்து என்பால்‌ நம்பிக்கை வைத்து எனது வேண்டுகாளை நிறைவேற்றுவாயாக”) IV—36

ஏற்கனெவே தைத்தியர்‌ (இராக்கதரி) களில்‌ நீ பிரசித்தமானவன்‌. மேலும்‌ உனக்கு புகழ்‌ சேர்க்கவிரும்புகிறேன்‌. என்‌
உடலைத்‌ தருவதில்‌ தவறமாட்டேன்‌. முக்கியமான விரதம்‌ (நோன்பு) ஒன்றைக்‌ கடைப்பிடித்து வருகிறேன்‌. அதை நிறை
வேற்ற மாட்டாயா? ₹’சக்யம்‌ சாப்த பதீனம்‌’” (ஏழெட்டு நடந்‌ தாலே நண்பன்‌) என்ற சொல்படி நாம்‌ நண்பர்கள்‌,
அதைநினைத்தாவது என்‌ கோரிக்கையை நிறைவேற்றுக/ 1/1–37

அஃது யாதெனின்‌ — VI~38

தாசரி குறுங்குடிக்குப்‌ போதல்‌
இதற்கருகில்‌ இத்திருக்‌ குறுங்குடியில்‌ உள்ள திருமாலுக்கு தினந்தோறும்‌ விரதப்படி பாடிவருவேன்‌. அப்பகவானுச்கு
சேவை செய்துவிட்டு உனக்கு உணவாவேன்‌, இது உறுதி! உறுதி யாக இன்று திரும்பிவந்து உணவாவேல்‌ இதில்‌ தவறமாட்ேன்‌. VI—39

என்று அவன்‌ (தாசரி) சொல்ல குறுநகையுடன்‌ கன்னத்தில்‌ அடித்து “ஓ! தாசரி, நன்றாகப்‌ பழுக்க வைக்கிறாய்‌ (ஏமாற்று
கிறாய்‌) காட்டில்‌ வழிப்‌ போக்கர்களைக்‌ கொள்ளையடித்து உடம்பை வளர்த்து வைராக்யம்‌ வந்து நேற்றுத்தானே தாசரி
யானாய்‌! நீ எம்மை எளிதாசு (லேசாக) நினைத்து * கம்பி நீட்டப்‌ (தப்பித்துக்கொள்ளப்‌) பார்க்கிறாய்‌, உன்னை பாராட்டு கிறேன்‌. VI—40
கயிற்றைக்‌ கடிக்க பார்க்கிறாய்‌ என்பது மூலம்‌ பசுக்கள்‌ கட்டிய கயிற்றைக்‌ கடித்து அறுத்து தப்புதலைக்‌ குறிக்கும்‌,

எந்த நாட்டுக்‌ காரனாவது வாயிற்கு வந்த கவளத்தை உன்‌ உபதேசம்‌ கேட்டு விடுவானா? எந்த நாட்டுக்‌ காரனாவது தன்‌
சபதத்தை நிறைவேற்ற தானாக வந்து உடலைத்‌ தருவானாசீ (உயிர்‌ விடுவானா?) இனி உன்னைப்‌ போக விடுவதோ? திரும்பி
நீ வருவதோ! நடக்காதென்பது தெட்டத்‌ தெளிவு. ஏன்‌ வீண்‌ விவகாரங்களும்‌ பலப்பட பேசுவதும்‌? தாழ்ந்த குலத்தவனே / ஏன்‌
ஆலோசனைகள்‌ ஏன்‌ சவலை? IV—41

எனலும்‌ காதுகளைப்‌ பொத்திக்கொண்டு £“நாராயணா’” என்று நாமோச்‌ சாரணை செய்து அவன்‌ (தாசரி) “என்னை நம்‌
பாவிட்டால்‌ என்‌ சபதத்தை நம்புக” என்று ஆயிரமாயிரம்‌ சத்தியப்‌ பிரமாணங்கள்‌ கூறி, அதற்கும்‌ கேளாமல்‌ இருக்கவும்‌. VI—42

“இன்றே நான்‌ எவ்விதத்தேனும்‌ உன்னிடம்‌ வராவீட்‌ டால்‌! “*எவனது பார்வையினால்‌ உலகம்‌ உண்டாகுமோ! எவ
னிடம்‌ இவ்வுலகம்‌ மீண்டும்‌ அடங்குமோ அந்த இருமாலுக்கு இணையாக வேறோரு தெய்வத்தை நினைத்த பாவத்தை நான்‌
அடைவேளாகவும்‌’ £ என்று சூளுரைக்கவும்‌ கேட்டு (இராக்கதன்‌ தாசரியின்‌) கட்டுக்களை அவிழ்த்து விடவும்‌ VI—43

தாசரி திரும்பி வருதல்‌
அவன்‌ (தாசரி) தனது பாவ எச்சமும்‌ இருமாறு கட்டு நீங்கியவனாய்ச்‌ சென்று, அந்த (குறுங்குடி) தாமரைக்‌ கண்ணனாகிய
இருமாலிளை நிலம்‌ வீழ்ந்து வணங்கி, இசைக்கும்‌ வீணையுடன்‌ இன்னிசைப்‌ பாடல்களை செரக்குமாறு பாடி, பின்னர்‌ பொய்க்கு
அஞ்சியவனாக விரைந்தோடி வந்து, விரதம்‌ முடித்த மகிழ்வோடு இரரட்சசனிடம்‌;இவ்விதம்‌ கூறினான்‌. Vi—44

“இராக்கதனே! நின்‌ சிறை நீங்கிச்‌ சென்று திருமாலை வணங்கியதால்‌ முக்தி (வீடுபேறு) கிடைத்தது! இனி எந்தச்‌ சிறை
யிலும்‌ நான்‌ கட்டுப்பட மாட்டேன்‌; இனி நீ என்னை அனுப்பும்‌ போது எந்தக்‌ கால்கள்‌, எந்த வயிறு, எந்த மார்பு,2 எந்தத்தலை,
எற்தக்‌ கைகள்‌ இருந்தனவோ அதே சால்கள்‌, அதே வயிறு, அதே மார்பு, அதே தலை, அதே கைகள்‌ இருக்கின்றதை நீசரிபார்த்துக்‌
கொள்க: *
(இராக்கதன்‌ நம்பி விட்டதற்கு மோசம்‌ செய்யவில்லை. அதே உறுப்புகளுடன்‌ கொண்டுவந்து ஓப்படைத்துவிட்டேன்‌
என்று தாசரி கூறும்போது நகைச்சுவையுணர்வுடன்‌ சாவுக்கஞ்‌ சாத மனத்தெளிவும்‌ புலப்படுகிறது) VI—45

எனலும்‌, அவனது சத்தியத்தைக்‌ கண்டு கண்களில்‌ கண்ணீர்‌ உருள மகிழ்ச்சியுடன்‌ புளகமுற்றவனாக அந்தபிரம்ம ராட்சசன்‌,
நடுப்பகல்‌ கதிரவனின்‌ வெயில்‌ அவனது பெரிய வழுக்கைத்‌ தலையில்‌ பளபளக்க, தாசரியை அருகணைய ஓடிச்‌ சென்று, VI—46

அவன்‌ (இராக்சதன்‌) மலைபோல்‌ பக்தியினால்‌ வலம்வந்து, குறியைச்‌ சுற்றிலும்‌ சுற்றிச்சுழன்று விழும்‌ பாகலம்‌ எனும்நோய்‌
கொண்ட யானைபோல, தனது நெற்றி தாசரியின்‌ பாதத்தில்‌ பட, குரல்முழக்கத்தால்‌ பெருமலைகள்‌ அதிர்ந்தெதிரொலிப்பத்‌
துதித்தவாறு வீழ்ந்து வணங்கி, நீண்டபற்கள்‌ ஒதுக்கி, தான்‌பிடித்த பாதங்கள்‌ ஒவ்வொன்றாக தன்‌ தலையில்‌ வைத்துக்‌ கொண்டு VI—47

இந்த சசுல உலகலும்‌ தேவர்‌, அசுரர்‌, மன்னர்கள்‌, முனிவர்‌சுள்‌, யாவரும்‌ சொல்‌, செல்வம்‌ முதலியவற்றில்‌ சத்தியத்தை
நிலை நாட்டினரேயன்றி உன்போல உடல்‌ தருவதற்காக சத்திய விரதம்பூண்டு நிறைவேற்ற முன்வந்தார்‌ இலர்‌. நான்‌ வயது
முதிர்ந்தவன்‌, இனி, உன்போல சபதம்‌ நிறைவேற்றியவர்‌ இல்லை என்று சபதம்‌ செய்வேன்‌, 41-48

மேலும்‌, பண்ணார்ந்த இன்னிசைப்‌ பாடலாகிய கடலலை களில்‌ நீந்தும்‌ மிதவையாகிய சுரை (வீணை) யமைய, இருக்குறுங்‌
குடி நம்பியின்‌ அருளே பற்றுக்‌ கோடாகக்‌ கொண்டு, பிறவிக்‌ கடல்‌ கடந்து விட்ட உனது உறுதி, உளது ஞானம்‌, உனது சத்திய விரதம்‌, முதலியவற்றில்‌ உனக்கணையாவாரீ பிறருளரோ? 1249

(இராக்கதன்‌ இவ்வாறு) கூறுதலும்‌ அவனை,பாகவதோத்தமனாகிய அந்த தாசரி தழுவியவாறு “ஓ! இராட்சசனே/பாவமற்ற
வனே! ௨ன்‌ கடைச்கண்‌ பார்வையால்‌ பாக்கியசாலியானேனே ! என்‌ விரதம்‌ நிறைவேற்றுவித்தாய்‌/ VI—50

சபதங்கள்‌ வண்டிச்சக்கரம்‌ போல நிலையற்றவை, நம்பமுடியாது. பிராணபயத்தால்‌ இலட்சம்‌ சத்தியம்‌ செய்தாலும்‌
கிடைத்த உணவை விட்டுக்கொடுக்க உனக்குத்தான்‌ முடிந்ததுஅந்தணர்‌ குலத்துதித்தவனே! புண்ணியஜனம்‌ என ராட்சசனை
அழைப்பது உன்னால்தான்‌ பொருள்‌ படைத்ததாகியது, உன்‌மூலம்‌ உன்‌ இருகுலத்துக்கும்‌ புகழ்வாய்ந்தது.
(தீய பாம்புக்கு நல்லபாம்பு என்று பெயரீ வாய்த்தாற்போல தீயோராகிய இராக்கதருக்கு ‘“புண்யஜனர்‌”” என்று இடக்கரடக்‌
கராக ஒரு பெயர்‌ உண்டு. அதனை இராக்கதன்‌ அருள்‌ சேர்ந்த தால்‌ அது பொருள்‌ உடையதாயிற்று என்பது கருத்து) இருகுலம்‌,
அந்தணர்‌ குலம்‌, இராச்கதர்‌ குலம்‌ ஆகும்‌, இவன்‌ பிரம்ம ராட்ச சன்‌ ஆதலினால்‌ இருகுலம்‌ எனப்பட்டது. 81-51

வயிறு பெரும்பசியினின்று கபகபவென்றெரிந்தும்‌ என்‌ கடன்‌ நிறைவேற்ற வேண்டிப்‌ போகவிடுத்தனை! உங்கட்கியல்‌ பான
உணவாக இறைவனால்‌ நாங்கள்‌ (மனிதர்கள்‌) ஏற்படுத்தப்பட்‌டுள்ளோம்‌. ஆதலின்‌ (ந என்னை உண்பதால்‌) எனக்கொருபாவ
மும்‌ இல்லை சூளுரைக்கி3றன்‌. மறுக்காமல்‌ என்பால்‌ நட்புடன்‌ இருப்பாயானால்‌ என்‌ உடலை உன்‌ களைப்பு நீங்க உண்டு மூழ்‌வாயாக: ” V¥—52

இச்சொற்கள்‌ வஞ்சனையின்றி மனதாரச்‌ சொல்கிறேன்‌ . என்பதற்கு பகவானே சாட்சி! ஓ ராட்சசனே! என்‌ உடலிலுள்ள
கொழுப்புநிறைந்த புமாலினை உண்பாயாக” என்றதும்‌ அவன்‌ வருத்தத்தோடு (இரக்கமுடன்‌) கூறினான்‌. VI—53

என்ன சொன்னாய்‌? இப்படி அருளின்றிப்‌ பேசலாமா? இத்‌தனை நாளும்‌ இந்தச்‌ சோறே (நரமாமிசம்‌) இந்த வயிற்றில்‌
வைத்து, பெரும்பாவத்தை அடைந்து, உடலை வளர்த்து, எப்‌போதாயினும்‌ எப்படியாயினும்‌ ஒரு முனிவரோ, ஒரு நோன்பின
ரோவந்து என்னைக்‌ காண மாட்டாரா? அவர்‌ அருளால்‌ இந்தப்‌ பிறவி நீப்பேனாகவும்‌ என்று நினைத்துக்‌ கொண்டிருந்த என்னி
டம்‌ ஓ! புண்ணியாத்மாவே இப்படிக்‌ கூறலாமா? VI—54

தங்களைப்போன்ற பாகவதர்ர்சள்‌, எம்மைக்‌ கடைத்தேற்‌றாவிட்டால்‌ பின்‌ வேறு கதியுண்டோ? எம்மைப்‌ போன்றவர்க்கு
கதி நீங்கள்‌ தான்‌! எமது (முன்னைய) இழிபினைக்‌ கருதாமல்‌, அருள்‌ செய்வாயாக. VI—55

கோடாலியாயினும்‌, அந்தணனைக்‌ கொன்ற கொலைவாள்‌ எனினும்‌, பருசவேதியானது தஙிகமாக மாற்றும்‌. அந்த நியாயப்‌
படி தங்களை அணுகிய எங்களைப்‌ போன்றோசையும்‌ அருள்‌ செய்ய வேண்டாவோச VI—-56

எனவும்‌, உடல்‌ தருவதை வேண்டாமென்று வருந்திக்‌ கூறும்‌எளியதன்மையைக்‌ கண்டு “உன்‌ கருத்து யாவும்‌” என்‌ ஆன்மா
“வின்‌ சசடு (குற்றம்‌) நீக்குவதுதான்‌ அருளாகுமன்றி உடலைத்‌ தருகிறேன்‌ என்று கூறுவது அருளாகுமா? VI—57

சண்டாகருணனணனை விடவா கொடுஞ்செயல்‌ புரிந்தேன்‌? அவையே திருமால்‌ திருத்திச்‌ செல்வமளித்து முக்தி தரவில்லையா
இதைவிட பக்தர்கள்‌ அதிகம்‌ தர இயலுமன்றோ!/ அத்தகைய நலம்‌ எனக்குத்‌ தரக்குடாதா? உயிர்கட்கு நலம்‌ செய்வதுவே
இருமாலுக்குப்‌ பூசை செய்வதாகாதா? VI—58

எனக்கேட்ட தாசரி, அது பொருந்துவதே என்று கூறலும்‌, அந்த ராக்கதன்‌ ”நான்‌ ஒரு பிரம்மராட்சசன்‌, கும்பஜானு எனும்‌
பெயருடையவன்‌, கொடுஞ்செயல்புரிந்தவனாசு, இந்த ஆலமரத்‌தையடைந்து, வஞ்சமாக மனிதர்களைத்‌ தின்று கொண்டிருந்‌
தேன்‌. முற்பிறப்பில்‌ சோமசர்மா எனும்‌ பிராமணன்‌ ஆக இருந்‌ தேன்‌ சென்றபிறப்பில்‌ பிராமணனாக இருந்தமையால்‌ அருளுக
குரியவன்‌. ஒரு தீய செயலால்‌ இவ்விதம்‌ ஆனேன்‌. நீ திருமாலுக்‌குப்‌ பாடிய பாசுரங்களில்‌ புண்ணியப்‌ பயனை நீரோடுவார்த்துக்‌
கொடுப்பாயேயானால்‌ எனது இழிந்த பிறவி நீங்கும்‌. உனக்கு துயருற்றோரைக்‌ காத்த புண்ணியம்‌ இடைக்கும்‌. எல்லா அறக்‌
கருவியாகிய இவ்வுடலும்‌ வீடடையும்‌’*” எனலும்‌ அந்த உடல்‌ குறித்த சொற்கட்கு கலகலவெனச்‌ திரித்து அந்த தாசரி இவ்‌விதம்‌ கூறினான்‌. VI—S9

இதுபோன்ற உடல்கள்‌ மேற்பிறப்பும்‌ கீழ்ப்பிறப்புமாக எத்தனையோ எடுத்திருப்பதில்‌ இப்போதையதொன்று, இத்தகு
இழிந்த உடலுக்காக ஒரு நாளையதன்று ஒருகண நேரம்‌ பாடிய பயளைக்‌ கூடத்‌ தர இசையேன்‌! VI—60

இசைக்கதிபதியாக உடலெடுத்துப்‌ பின்‌ இரறந்துண்ணும்‌ வசைக்கதிபதியாக எத்தனை பிறப்பெடுக்கவில்லை நீயும்‌ நானும்‌;
எங்க உடலெடுத்தும்‌ சிறு புழு உடலாகியும்‌ எத்தனை பிறப்‌பெடுக்கவில்லை நீயும்‌ நானும்‌? குஞ்சர (யானை) உடலெடுத்தும்‌
கொசு உடலெடுத்தும்‌ எத்துணை பிறப்பெடுக்கவில்லை நீயும்‌ நானும்‌? அரச உடலெடுத்தும்‌ அடிமை உடலெடுத்தும்‌ எத்தனை
பிறப்பெடுக்கவில்லை நீயும்‌ நானும்‌? வேள்வியந்தணர்களாகப்‌பிறந்தோம்‌! சண்டாளர்களாகப்‌ பிறந்தோம்‌! பாம்பு, பேய்‌,
பிசாசு என்று எத்தனை பிறப்புகள்‌ எடுக்காதிருந்தோம்‌!
இருமாலடியாராகும்‌ பிறப்பு எடுக்கவில்லையேயன்றி எல்லாப்‌ பிறப்பும்‌ பிறந்ததிளைத்தோமன்றோ?
(திருமாலடியாராய்ப்‌ பிறந்ததால்‌ பிறவி நீங்கி மோட்சம்‌ பெறும்‌ வாய்ப்புளதாதலின்‌ அப்பிறப்பே சிறந்ததென்பது கருத்து) vI—61

இவ்வுடல்‌ வலைப்பெட்டியிற்‌ பெய்த நீர்‌, சிலந்தி வலையால்‌ முடிந்த மூட்டை இலவம்பஞ்சு. மரத்தில்‌ புழுத்துளைத்த எழுத்து
வெயிலில்‌ வைத்த மஞ்சள்‌, போன்றது. இதனை நம்பி புண்ணியத்தை விற்பது கற்பூரத்தை விற்று உப்பை வாஙிகினாற்‌ போலத்தான்‌.
(மீன்‌ பிடிக்கும்‌ வலைப்பெட்டியில்‌ நீர்‌ தங்காது, அதுபோல நிலையற்றது உடல்‌, சிலந்திவலை நிலையற்றது. வெயிலில்‌
மஞ்சள்‌ பிரகாடிக்காது. புழு துளைத்த எழுத்து புரியாதது எனும்‌ உவமைகள்‌ நிலையாமை, சிறப்பின்மைகளைச்‌ குழித்து வந்தன) VI~—62

என்று கூறவும்‌ இராக்கதன்‌ இவ்விதம்‌ கூறினான்‌ 1-63

சங்கதப்‌ பயனில்‌ ஓ! தாசரி! பாதியாகிலும்‌ அருள்‌ கூர்ந்து ஈவாயாக! மீன்‌ குடித்த ஒரு மடக்கு நீரால்‌ கடல்‌ குறைவு படுமா?
இருமாலைப்‌ பாடிய புண்ணியம்‌ (ஒரு சிறிதீவதால்‌) குறைவுறாது-6-64-

உடலை விடுத்து புண்ணியம்‌ கேட்டு ஏன்‌ தொந்தரவு செய்‌கிறாய்‌? என்னை வி$ூவித்தபோது உடலுக்காகசீ சூளஞூரைத்‌
தேனா? திருமாலை (வாமனனை) பாடிய பயனுக்காகச்‌ சூளுரைத்‌தேனா? பாதாளம்‌ மட்டும்‌ பாயும்படியான (கடினமான) கேள்வி
களை விடுத்து உடலைக்‌ கைக்கொள்க. கிணறு வெட்டப்‌ பூதம்‌புறப்பட்ட கதையாக நீ நினைத்த காரியம்‌ மட்டும்‌ கைகூடாது.VI—65

எனலும்‌, இராக்கதன்‌, மிக வருந்தி, காரியத்தில்‌ ஆர்வமுடன்‌ கண்ணிரை அடக்கிக்‌ கொண்டு, “அந்தோ! திருமால்‌ அடியார்கள்‌
அருளுடையவர்கள்‌ ஆக இருக்க வேண்டாமா? முன்பு தரிசளப்‌ பிரவார்த்தகராக பிரம்ம சாத்திரங்கட்கு வியாக்கியானம்‌ எழுதத்‌
திருமாலின்‌ விசிஷ்டாத்துவித சித்தாந்தத்தை நிலை நிறுத்திய ஸ்ரீராமானுஜ முனிவரரீ, நெடுநாட்‌ பணிவிடை செய்தமையால்‌
மகிழ்ந்த பெரிய நம்பி (திருக்கோட்டியூர்‌ நம்பி) எனும்‌ ஆரியர்‌, தகுதியிலார்க்குக்‌ கூற வேண்டாம்‌ என்று கூறி முறைப்படி தனக்‌
கருளிய கதையின்‌ சரமசுலோகப்‌ பொருளை இரக்கம்‌ மிக்கவராக அரங்கநாதனின்‌ தாமோதரம்‌ எனும்‌ தங்கக்‌ கோபுரத்திலேறி
நின்று, பெருங்குரலில்‌ அம்மந்திரப்‌ பொருளை அறிவிக்க, ஆசாரியர்‌ சினந்து கூறவும்‌ “தேவரீர்‌! தேவரீருடைய ஆணையை
மீறியதால்‌ நான்‌ ஒருவன்‌ மட்டுமே ரெளரவ நரகில்‌ வீழ்தல்‌ நன்றோ! பாகவதர்‌ கூட்டத்திற்கு பரமபதம்‌ காட்டுவித்தல்‌
நன்றோ என ஆராய்ந்து தாங்கள்‌ கூறியதாகவே கருதிக்‌ கூறினேன்‌’” என்று கூறி பாராட்டப்‌ பெற்றார்‌. அவர்‌ தனது
சடர்கட்கு நான்தோறும்‌ காலையில்‌ விலைபெறாமல்‌ பாலும்‌ தயிரும்‌ தந்து வேண்டிய இடையர்‌ தம்பதிகட்கு பரமபதம்‌
அருளினாச்‌. அவ்வுடையவரே முக்தி பெற்றும்‌ மற்றொருபிறப்பில்‌ அஞ்ஞானிகட்கு வீடு பேற்றின்‌ சுவை தெரியுமாறு
சுந்தர ஜாமாத்ரு (அழகிய மாப்பிள்ளை) என்ற பெயரில்‌ அர்ச்சி ராதி மார்க்கங்களைப்‌ பற்றி விளக்கினார்‌. அவரே எதிர்காலத்‌
இல்‌ யாதக௫ிரி (திரு நாராயணபுரம்‌) பகுதியில்‌ பாசன்டி (பிழ மதத்தின.) மிகுதயாகவே அவர்களை ஒழித்துக்கட்ட சடகோபர்‌
(ஆதிவண்‌ சடகோ. ஜீயர்‌) எனும்‌ பெயரில்‌ பிழந்து இடையறாதபிரசாரத்தால்‌ ஆந்‌ சர நாடு முதலிய இ.ங்களில்‌ அறிஞர்கட்கு
பகவத்‌ விஷயமாகிய வாதங்களை இரந்து கேட்டு திக்விஜயம்‌ செய்து கருடாசல குகையில (அகோ பிலத்தில்‌) நரசிங்க சுவாமியய
கபடசன்னியாசியாக வந்‌, கமண்டலமும்‌ கஷாயமும்‌ இரிதண்டி யூம்‌ அருளப்‌ பெற்று சனனியாச ஆ௫௪ரமத்தை ஏற்று பதஞ்சலி,
கணாதர்‌, அக்கபாதர்‌, பாதராயணர்‌ (வியாசர்‌) கபிலர்‌ ஜைமினி ஆ௫ூயோரின்‌ அறுவசைத்‌ தரிசனங்களின்‌ தத்துவங்களை மடத்தி
லுள்ள அந்தணருள்ளிட்ட டர்கள்‌ அனைவர்க்கும்‌ போதித்து,துறவிகட்கு எடுத்துக்காட்டாக நின்று தன்னை அடைந்த உலகி
லுள்ள மக்கள்‌ இதயமெல்லாம்‌ இருமகளும்‌ திருமாலும்‌ உறைவிட.மாகச்‌ செய்து, காமக்‌ குரோதங்களாகிய முள்ளினைத்‌ துடைத்து
பரிசுத்தமாக்கி பக்தியைப்‌ போதித்து உலகைப்‌ புனிதப்படுத்துவார்‌. மேலும்‌, ஹயக்கிரீவரை ஆராதனை செய்யும்‌ வெங்க
டேசன்‌ (வேதாந்த தே9கர்‌) எனும்‌ இன்னொரு ஞானி, திருமவின்‌ மதத்தினை விளக்கிக்‌ கூறும்‌ நூறு நூல்களை யாத்து, உஞ்ச விருத்தி செய்யும்‌ துறவியாகி தவமியற்றி தனக்கு முதிர்ந்த இலைகள்‌ தந்து அகத்திமரத்துக்கு வீடு பேரளிப்பான்‌.
இத்தசைய எதிர்கால சோதிடங்கள்‌ (ஹேஷ்யம்‌) எனது திவ்விய ஞானத்தால்‌ அறிந்திருப்பேன்‌.*
இத்தகைய முக்காலமும்‌ உணர்ந்த ஞானம்‌ இருத்தலினால்‌ இந்த உடல்‌ பாராட்டத்‌ தகுந்ததல்லவா எனலாம்‌. இது
பிறப்பால்‌ வந்ததன்று, சமம்‌, தமம்‌ முதலிய சாதனையால்‌ வந்த தன்று. குறத்தி குறி சொல்கிறாள்‌. அவள்‌ புனிதமானவளா?
ஆந்தை, காட்டுக்‌ கோழி, பல்லி, கரிச்சான்‌ குருவி, தங்கக்கண்‌ குருவி முதலிய விலங்கு பறவைகள்‌ கூட சகுனம்‌ கூறுகிறது. அவை
யெல்லாம்‌ எதிர்கால சூசனைகள்‌ செய்வதால்‌ தவசியர்‌ ஆவரோஅவற்றைப்‌ போன்றுதான்‌ எமது விஞ்ஞானமும்‌. எப்படி.
என்றால்‌ நாத்திகத்தனால்‌ (இறை நம்பிக்கையின்மையால்‌) சாத்திரங்களைக்‌ கற்றதன்றி அதன்படி. நிற்றல்‌ என்பதில்லை.
பிறரையும்‌ கற்பித்து ஒழுக்கமாக நடக்குமாறு செய்ததுமில்லை.ஆதலின்‌ அறநெறி எமக்கு வெகுதூரம்‌, ஆதலின்‌ பிறவி நீத்தல்‌
இயலாது. ஆதலின்‌ மாசற்ற புனித உடலாலன்றி மோட்சம்‌
கிடைக்காது, ஆகையினால்‌ இந்த குரூபமான உடலை நீங்க, புனிதனாவதற்கு அருள்‌ செய்வாயாக”* என்று பாதங்களில்‌
வீழ்ந்து பாடிய பாட்டில்‌ புண்ணியம்‌ கால்பங்காவது தருக என்றும்‌, அவன்‌ அதையும்‌ மறுக்கவே, **சரி! இன்று காலையில்‌
பாடிய கடைப்‌ பாட்டின்‌ பயனாவது தருக?” என்று மன்றாடிக்‌ கேட்கவே மனமிரங்கி, “அப்படியே யாகட்டும்‌’* என்று கூறி
அவன்‌ அவனை எழுமாறு செய்து, இந்த உடல்‌ கிடைத்த விதம்‌யாது என விளக்கமாகக்‌ கூறுக எனலும்‌, கேட்பாயாக என்று
அப்புலாலுண்போன்‌ (இராட்சசன்‌) துக்கத்துடன்‌ இவ்ிசம்‌கூறினான்‌;-VI—66

பமபிரம்மராடசசன்‌ கதை புராணத்திலுள்ளது. அவன்‌ கூறுவ தாகபிற்கால ராமானுஜர்‌, ஆதிவண்‌ சடகோபர்‌(அகோபில
மட முதலாம்‌ ஜீயர்‌) வேதாநத தேசிகர்‌ வரலாறு கூறுவது கால முரண்‌ ஆகும்‌. ஆதலின்‌ பிரம்ம ராட்சசன்‌ எதிர்கால ஞானம்‌
உடையவனாக கூறியதாகக்‌ கவிஞர்‌ அமைதி கூறியுள்ளார்‌.

குறிப்பு – வேதம்‌ வெங்கட்ராய சாஸ்திரி அவர்கள்‌ விளக்க வுரை நூலில்‌ இத்துடன்‌ ஆறாம்‌ அத்தியாயம்‌ முடிகிறது.

அடுத்து ஏழாம்‌ அத்தியாயம்‌ வருறங. சில பிரதிகளில்‌ இவ்விதம்‌ உள்ளனவாம்‌. வாவிள்ள ராமஸ்வாமி சாஸ்திரி விளக்கவுரை
நூலில்‌ இத்துடள்‌ முடியாமல்‌ தொடர்ந்து நூலிறுதிவரையும்‌ ஆறாம்‌ அத்தியாயம்‌ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆறாவது 65 ஏழாவது 73 பாடல்கள்‌ இருப்பதாகக்‌ கூறுவதைவிட 139 பாடல்களுடைய ஒரே அத்தியாயமாக கொள்வதே பொருத்தம்‌
என்று வாவிள்ள கூறுவது சரியாகவே தோன்றுகிறது. எனினும வேதம்‌ வெங்கட்ராய சாஸ்கிரியாரைப்‌ பின்பற்றி ஆறாவது
அத்தியாயம்‌ ஏழாவது அத்தியாயம்‌ என்றே பாகுபடுத்தி யுள்ளோம்‌.

பிரம்மதேவன்‌ இருடிய கன்றுகளையும்‌ குழந்தைகளையும்‌ போலத்தானே அவ்வவ்வுருவாகி, பசுக்களுக்கு கன்றுகளாய்‌
ஆயர்‌ மடந்தையர்க்குக்‌ குழந்தைகளாய்‌ அமைந்து இன்பம்‌ ஊட்டிய பெருமைமிக்கனே! அசுவத்தாமன்‌ விடுத்த அம்பால்‌
உத்தரையின்‌ கருவான பரீட்சித்து கருகும்‌ நிலையில்‌ இருக்க காத்த கண்ண3ேே/ சூரிய சந்திரர்கள்‌ கண்களாக உடைய
பெருமானே 71-௦7

எப்போதும்‌ புதிய புதிய காதல்‌ விளையாட்டுக்களால்‌ ஆயர்‌ குல மடந்தையர்களை இன்புறுத்தயவனே! துறவியரின்‌ மன
மாய பொய்கையில்‌ விளையாடும்‌ அன்னப்‌ பறவையாகியவனே! மணம்‌ மிக்க உருவுடையவனே. VI—68

நளன்‌ முதலான சக்கரவர்த்திகள்‌ காணிக்கை தநீத விலை மதிப்பற்ற மகுடம்‌ முதலிய அணிகளை யணிந்துள்ள வேங்கடே
சனே! ஓளி மிக்க உருவினையுடையவனே [ தேவர்களின்‌ பகைவர்‌ களை அழிப்பவனே [ சகல பிரம்மாண்டங்களின்‌ தலைவனே!
தரயவனே!/ அளப்பரிய குணநலன்களால்‌ சான்றோரை மகழ்‌ வித்துக்‌ காத்தருள்பவனே. VI—69

இஃது நைராமன (நைஜாம்‌) எனும்‌ யவன மன்னனின்‌ (முஸ்லிம்‌ அரசனின்‌) பெரிய விண்முட்டும்‌ கோட்டைகளைத்‌
தகர்க்கும்‌ பயங்கரமான யானைப்‌ படைக்கு மூன்‌ செல்லும்‌ இருஷ்ணதேவராயர்‌ எனும்‌ பெயருடைய எனது அமுக்த மால்யத
எனும்‌ காவியத்தின்‌ இனிய செய்யுள்‌ களுடைய ஆறாவது அத்தியாயம்‌. Vi—70

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஆ முக்த மால்யதா-(முத்துகளால் ஆன மாலை)- ஸ்ரீ சூடிக்‌ கொடுத்தவள்‌) ஐந்தாம்‌ அத்யாயம் -ஸ்ரீ கிருஷ்ணதேவராயன்-மொழிபெயர்ப்பாளர்‌ உரை -பன்மொழிப்‌ புலவர்‌ மு. கு. ஜகந்நாதராஜா

January 16, 2023

ஐந்தாம்‌ அத்தியாயம்‌
திருமகள்‌, நீளாதேவி (நப்பின்னை) ஜாமபவதி ஆகிய தேவியரின்மனத்தாமரையில்‌ வண்டென உறைபவனே[/களிந்த மலைபி
லிருந்து வரும்‌ யமுனை நதிபோல கருவண்ண எழில்‌ பொங்கும்‌அழகனே! எல்லையற்ற பாதங்களும்‌ தலைகளும்‌ கண்களும்‌
உடையவனே! சேடமலைபில்‌ வாழ்‌ சிங்கமே! (சேடமலை திருமலை) V-1

கேட்பரயாக/ அந்த விட்டுசித்தன்‌ (பெரியாழ்வார்‌) V-2

மாந்தளிர்கள்‌ நிறைந்த பூம்புதர்களிடையே, படுக்கை யமைத்துக்‌ காதலர்‌ மேலமரீந்து காதலுணர்வுமிக்க காரிகையார்‌
கலந்தின்புற்றுக்‌ களைத்து நெட்டுயிர்ப்பு மிகவே மீண்டும்‌ தாம்‌ மூன்போலவே (ழே) அமர்ந்து கலவிப்போரில்‌ தோற்கவே
அதைக்‌ கண்ட மன்மதன்‌ அவரை விரட்டியெறிந்த(வாள்‌ வீச்சுக்‌) காயமோ எனும்படியாக முதுகில்‌ ஒட்டிய மாத்தளிர்கள்‌
தோன்றும்‌ பூந்தோட்டத்தில்‌ ஒரு நாள்‌, * V—3

* இளவேனிற்‌ காலத்தில்‌ மாந்தளிர்கள்‌ சிந்திக்‌ கடந்த பூந்தோட்டத்தில்‌ பெண்கள்‌ காதலுணர்வுமிக்கவர்கள்‌ தாமே
ஆண்போலப்‌ பாவித்துக்‌ கலவி செய்தனர்‌ என்ற இந்த வருணனை இருஷ்ண தேவராயர்‌ ஆண்டாளின்‌ அறிமுகத்துக்கு
முன்பு வைத்துள்ளாஈ. இதில்‌ தொனியிருப்பதாக நான்‌ கருது கிறேன்‌. வேதம்‌ வேங்கட்ராய சாஸ்திரியோ, வாவிள்ள ராமசாமி
சாஸ்திரியோ இப்படி தொனி இருப்பதாக சிந்திக்கவில்லைதான்‌ எனினும்‌ பூந்‌ தோட்டத்தை வருணிக்காமல்‌ காம உணர்வு மிக்கு
காதலர்களை ஏன்‌ வருணித்தார்‌? என்பது ஆராய்வுக்குரியது.

ஒரு படைவீரன்‌ தோற்றால்‌ அந்தப்‌ படைதி தலைவனே அந்த வீரனின்‌ முதுகில்‌ அடித்து இழிவுபடுத்துவான்‌ வாள்‌ வீசித்தாக்க அவமானப்படுத்துவான்‌. என்பது மறபு. அது போலவே கலவிப்‌ போரில்‌ இந்த நங்கை தோற்று ”புருஷாயத கேளி” யிலிருந்து மீண்டும்‌ பழைய நிலைக்கு வந்ததால்‌ மன்‌
மதன்‌ தோற்றவரை வாளால்‌ வீரி காயம்‌ உண்டாக்களொன்‌. அந்த காயம்‌ தான்‌ எனுமாறு மாந்தளிர்‌ முதஇல்பட்டிருந்தது என்று கற்பனை செய்யப்பட்டுள்ளது. V—3

அசன்ற ஒரு காட்டுப்பாதையில்‌ மர நிழல்பட்டு மரகதத்‌ இண்ணையபோல்‌ தோன்றும்‌, வெண்பளிங்குத்‌ தஇண்ணையில்‌
வெண்காமரைப்‌ பொய்கைக்கருகில்‌, துளசி வனத்தில்‌, மங்கள கரமான இலட்சணங்களோடு கூடிய பதுமராகப்‌ (செம்மணி)
பாளங்கள்‌ போன்ற சேவடிகள்‌, உள்ளங்கை, இதழ்களை யுடைய ஒரு பெண்‌ குழந்தையைக்‌ கண்டான்‌. vV—4

கண்டு, வியப்புற்று, அருகணைற்து, மென்மை, மேனிஎழில்‌ சுபலட்சணங்களையும்‌, கண்ணிமைக்காது சிறிது நேரம்‌
பார்த்து, **ஆகா! குழந்தையற்ற எனச்குத்‌ திருமாலே மகளாக இக்தழந்தையைத்‌ தந்தருள்‌ கூரீந்தான்‌’ £* என்று கூறி மூழ்ந்த
வனாக, V—5

கொண்டுபோய்‌, தன்‌ இல்லக்கிழத்தியினிடம்‌ அன்போடு தந்திடவும்‌, அவளும்‌ சுரந்த தன்‌ முலைப்பாலுடன்‌ செல்லமாக
வளர்த்தாள்‌. இப்படி வளரிந்து வரும்‌ நாளில்‌ உதடுகள்‌ (வாய்த்திரை)* முன்போல விரைந்து பேச
வில்லை. கூந்தல்‌ வளைந்து நெளிந்து இயன்றன. செல்வம்‌ சேரீந்ததால்‌ அரைவிழியோடு கண்டன. முகம்‌
புருவங்கள்‌ நெரித்து, விளையாடக்‌ கற்றன. முலைகள்‌ வளர்ந்த மாரீபானது குழந்தைமையை அலட்சியப்படுத்தியது. பாதங்‌
களும்‌ கைகளும்‌ சிவந்தன. இடை வறுமைப்பட்டது. உடல்‌ பயிர்ப்பினை உற்றது. உந்தி வெறும்‌ ஆழத்தைக்‌ காட்டியது.
இவ்விதமாக நாள்தோறும்‌ முன்னைய அன்புகுறைந்து விடலாலே இஙிகிருக்கக்‌ கூடாது என்று குழந்தைமையானது அகன்றது.

(குழந்தைமை நீங்கக்‌ கோதைகுமரியானாள்‌ என்பதுகருந்து]-5-7-
* உதடுகட்கு தெலுங்கில்‌: *வாதெற்‌ எனும்‌ அழகிய சொல்‌ உண்டு, வாய்த்திரை என்பது பொருள்‌, ்‌

அவளுக்கு முதலிலிருற்து இருக்கிற மேனியின்‌ பொன்‌ வண்ணத்தினாலோ, இதழின்‌ செம்மையாலோ, முகமதியின்‌ வெண்ணில வொளியினாலோ பெயர்‌ அமையவில்லை.
(பொன்‌ மேனியள்‌, செவ்விதழினள்‌ என்றில்லாமல்‌)அவளது கருங்கூந்தலின்‌ வண்ணத்தால்‌ மாமை நிறுத்தினாள்‌ (சியாமங்கி) என்ற பெயரை அடைந்தனள்‌, உடலில்‌ தலையே பிரதான மானது எனும்‌ பழஞ்சொல்‌ சரியானதுதான்‌, தலை முடிக்‌ கூந்தல்தானே பெயரிட வைத்துள்ளது.
(வடமொழியில்‌ சியாமளா என்றால்‌ இளம்‌ பருவப்பெண்‌ என்று பொருள்‌, இச்சொல்லைக்‌ கொண்டு சியாமளா (மாமை
நிறம்‌) எனும்‌ பண்புக்கு கூற்தலைக்‌ காரணம்‌ காட்டி கற்பனை செய்யப்பட்டுள்ளது) 5-8-

(இக்‌ கோதை திருமாலை மயக்கிடற்குள்ளாள்‌ ஆதலின்‌), ஒரே சக்கர த்தனையடைய கண்ணனை, கைகலப்புப்‌ போரில்‌
வெல்வதற்காக முயலும்‌ மன்மதனுடைய உருக்குச்‌ சக்க்ரங்‌ சளோ(இரும்பு வளையஙிகள்‌) எனுமாறு. அந்‌ நங்கையின்‌ சுருண்ட கூந்தல்‌ அமைந்தது,
(மோதிரங்கள்‌ போல சுருள்‌ சுருளாகப்‌ படியும்‌ கூந்தல்‌ உருக்காலான சக்கிரங்களாக உவமை கூறப்பட்டுள்ளது) 1/9

கருப்பூரத்திலகத்தினால்‌ வெண்மை ஒளி படிந்த அவள்‌
நுதலில்‌ படிந்த கருங்கூந்தல்‌, பிரம்ம தேவன்‌ இவள்‌ எல்லாப்‌ பெண்டிர்கட்கும்‌(சீமற்தனி) மேலாக செல்வ வளத்துடன்‌
இிகழ்வாள்‌ என்று எழுதிய எழுத்துக்களின்‌ வரிசை போலத்‌ தோன்றியது.
(பிரம்மன்‌ நெற்றியில்‌ எழுதுவதாக ஐ$ூகம்‌, தலைஎழுத்து என்பர்‌. வெள்ளைக்காகிதத்தில கருப்புமையால்‌ எழுதிய
எழுத்துக்கள்‌ போல கற்பூர திலகமிட்ட நெற்றியில்‌ சுருண்ட. கூந்தல்‌ படிந்தது என்பது கருத்து) V-10

ஒப்பனை செய்யும்‌ தோழியர்‌, கோதையின்‌ முகத்தை மேல்நிமிர்த்திக்‌ கண்கட்கு மை தட்டும்போது கண்கள்‌
தோழியரின்‌ முகமாகிய நாலாம்‌ நாள்‌ சந்திரனைக்‌ கண்டது,
அதனால்‌ இவள்‌ முகஎழிலை சற்திரன்‌ கவர்ந்திட மக்கள்‌, சந்திரனின்‌ எழில்‌ தான்‌ இவள்‌ சுவர்ந்தாள்‌ என்று கூறுவர்‌.
(நாலாம்‌ நாள்‌ சந்திரனைக்‌ காணல்‌ நன்றல்ல எனும்‌ ஐதிகத்தை ஒட்டிக்‌ கற்பனை செய்யப்பட்டுள்ளது) 5-.11

கண்ணிணை(மதியிலுள்ள) கஸ்தூரிமானன வெல்ல, அப்பழி தீர்க்க வேண்டி அந்தமான்‌, மதியைத்‌ தூண்டவும்‌, சந்திரனும்‌
முகத்திற்குத்‌ தோற்று முகத்தின்‌ மணம்‌ தனக்கில்லை, ஒளி தான்‌ உண்டு எனப்பின்‌ வாங்கவும்‌’ கஸ்தூரிமான்‌ மணம்‌ தர
சந்திரனையடையவும்‌, அந்த மானின்‌ மீது பகைபூண்ட அந்த நங்கை (பகைவரின்‌ குருதியால்‌ திலகமிட்டுப்‌ பழி இர்ப்பது
போல்‌) மானின்‌ குருதியால்‌ திலகமிட்டாளேயன்றி மணம்பெறு தற்கன்று எனுமாறு பச்சைக்‌ கஸ்துரி திலகமிட்டாள்‌.
(கஸ்தூரி மானின்‌ அஸ்டகோசத்திலுள்ள சுரப்பியால்‌ கஸ்துரரிஎனும்‌ மணப்பொருள்‌ வெளிப்படும்‌. அதைத்‌ திஎகமிட
மரபு. இங்கு மான்கண்ணை வென்ற மங்கையின்‌ முகல்ம்‌ மதியையும்‌ வென்று விட்டதாம்‌. மானின்‌ மீது பழி தீர்க்கவே
திலகமிட்டாள்‌ என்பது கற்பனை)
கஸ்தூரிமான்‌ சந்திரனுக்கு மணம்‌ தந்ததாகவும்‌. அதனால்‌ பகைபூண்ட நங்கை, கஸ்தூரியின்‌ இரத்தத்தால்‌
இலகமிட்டுப்‌ பழி தீர்த்தால்‌ என்பது கருத்து) 412

கருவிழிகள்‌ கடைச்கண்களில்‌ அடிக்கடி சென்று மீண்டும்‌ விரைந்து வருவதாகி நாணோடு கூடிய அவளது பார்வைகள்‌,
மன்மதன்‌; வில்லில்‌ குறி வைத்து நாணிற்பூட்டிய கருங்குவளை மலர்களோ எனுமாறு இருந்தன . V—13

புது இளமையாகிய மதுவின்‌ மயக்கத்தால்‌ கருவிழிகள்‌ ஐடி காதுகளாகிய இணற்றில்‌ வீழ்ந்து விடுமோ என்றஞ்சிய பிரமன்‌
அதைத்‌ தடுக்க வைத்த தளைகளோ (சங்கிலி) எனுமாறு மை இட்டிய கண்ணிணையில்‌ பொருத்தி எழிலூட்டின .
(மதங்கொண்ட யானைகள்‌ இணெற்றில்விழுந்து விடாமல்‌சங்கிலியாற்‌ பிணைத்தற்‌ போல கருவிழிகள்‌ செவியாகிய
சணெற்றில்‌ விழாது தடுக்க இமையாகய சங்கிலியைப்‌ பிணைத்த தாகக்‌ கதிபனை) 5-14

(உலகில்‌ சுமங்கிலியான சகோதரியின அணிகளற்ற வெறம்‌ காதினைச்‌ சகோதரன்‌ பார்ப்பது பாவம்‌ என்பது மரபு ஆதலின்‌)
அவள்‌ காதுகள்‌ ஸ்ரீ(திரு) எனும்‌ (தெலுங்கு) எழுத்தைப்‌ போன்றிருக்கும்‌, திருமகள்‌, கூடப்பிறந்த சந்திரன்‌ ஆகிய முகம்‌
பத்தாடும்போது காதணி &மே வீழ்ந்துவிட்டதால்‌ அக்காதினளை பார்க்கக்‌ கூடாது என்று தலையைற்‌ தோளோடு சேர்த்து
மறைத்து காதணியுடைய பக்கத்தைக்‌ காட்டவே கம்மல்கள்‌ தள.தளக்க பந்தாடி மகிழ்ந்தாள்‌. V—I15

சம்பகப்பூப்‌ போன்ற நாசியை வண்டுகள்‌ முகர அஞ்சினும்‌ அவள்‌ பேசும்‌ போது வண்டுகள்‌ மொய்க்கும்‌, அவள்‌ வாயில்‌
எற்த மணம்தான்‌ இல்லை? அவளது முல்லைப்பூ போன்ற பற்களில்‌ பிரதிபலிக்கும்‌ தம்‌ உருவைக்‌ கண்டு வண்டுகள்‌ மயங்கி
மொய்த்துக்‌ கடக்கும்‌, V—I16

சங்களைப்‌ போல முன்பு பிரமன்‌ அத்‌ தாமரைக்‌ கண்ணி னாளின்‌ கழுத்திஎனப்‌ படைத்தான்‌. இளமை வந்ததும்‌ மீண்டும்‌
மென்‌ சந்தளப்‌ பூச்சென, அதன்‌ (உருவத்தோடு) வண்ணமும்‌ சேர்ந்து எழமில்பெற்றது. V—17

தாமரை இதழ்போன்ற கண்ணை உடைய அவளது சங்கேதத்தில்‌ திகழும்‌, மந்திர, மத்திய தாரம்‌ எனும்‌ மூன்று
சுரங்களில்‌ இருப்பிட எல்லைகளை வரைந்து காட்டியது போல அவள்‌ கழுத்தில்‌ வரைகள்‌ “மூன்றும்‌ திகழ்ந்தன. V—18

நங்கையின்‌ மெல்லிய தோளிணைகளாகிய தாமரைத்‌ குண்டுகள்‌, தாமரைத்‌ தண்டின்‌ திருவிளை (அழடஏளனை) சுவர்ந்து
கொண்டன. அதனால்‌ திருவிழந்த தாமரைத்தண்டு நெறிமுறிந்து
(செல்வத்தோடு கூடிய தன்‌ வாழ்க்கை நெறி கெட்டு) வறுமைப்‌
பட்டதால்‌ தன்‌ தேகயாத்திரை (உடல்‌ ஓம்பும்‌ வாழ்க்கை) நூல்‌
நூற்பதால்‌ கழித்துக்‌ கொண்டிருந்தது.
(வறுமையுற்றார்‌ நால்‌ நூற்றுப்‌ பிழைப்பர்‌. அதுயோல்‌ துரமரைத்‌ தண்டின்‌ திரு (அழகு) வினை நங்கையின்‌ தோள்கள்‌
சுவர்நீிது கொண்டதால்‌ வறுமையுற்றதாம்‌. நூல்‌ நூற்று வாழ்ந்ததாம்‌. தாமரைத்‌ தண்டினை முறித்தால்‌ நரல்‌ வரும்‌.
அதுனை நரல்‌ நூற்பதாக கற்பனை செய்யப்பட்டுள்ளது.) ‘

அநீநங்கையின்‌ கழுத்துக்குக்‌ கீழும்‌ முலையிணைக்கு மேலும்‌ அகன்று நீண்டு குறுக்காக உள்ள மார்பில்‌ இகழும்‌ மாலை
யில்‌, தோள்‌ வளையிலுள்ள மணிகள்‌ பிரதிபலித்து, மன்மதன்‌,
ரதிதேவிக்கு திருமண காலத்தில்‌ சூட்டிய நெற்றிச்‌ சுட்டியோ எனுமாறு இகழ்ந்து. V—20

அவளுக்கு இளமை உருவாகி உடலினின்றும்‌ ததும்பி வெளிப்‌ போதலும்‌, முந்தானையும்‌ வெட்சுமும்‌ அதனை உள்ளுச்‌
கனுப்பி அழுத்தவும்‌, (இளமை எனும்‌ எழிற்சாறு) முதிர்ச்சி யுறாத இளம்பாகமாதலின்‌ வெளிப்படவும்‌ இயலாது, உட்‌ புகவும்‌ இயலாது. பிதுங்கி மார்பிடத்ரல்‌ இருபுறமும்‌ அடங்கிக்‌ கிடக்கவும்‌ பின்‌ நாட்படவும்‌ வலிமையுற்று வளர்ச்சியுற்ற தெனதங்கையில்‌ நூல்கள்‌ (முலைகள்‌) ஒளிர்ந்தன.
(உடலிலிருந்து வெளிப்பட்ட இளமை எழிலும்‌ நாணமும்‌,
முந்தானைகளால்‌ உள்ளே அடக்கப்படவும்‌, உள்ளும்‌ புக இயலாது, வெளிப்படவும்‌ இயலாது. அங்கேயே பிதுங்கிக்‌
கிடந்தது போல முலைகள்‌, பருத்துச்‌ செழித்தன என்பது கருத்து) குரும்பை முலையுடன்‌ கூடவே நாணம்‌ கூடுதலும்‌,
தூவணியில்‌ மறைத்தலும்‌ எண்டு கூறப்பட்டது) 5-21-

இராமனது சாபம்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக தீர்ந்து விடவும்‌ இறுதியில்‌ இணைந்த சக்கரவாகப்‌ பறவை (அன்றில்‌) இணை போல மார்பு முழுவதையும்‌ கவர்ந்து கொண்ட முலை யிணைகள்‌ இணைந்து கொண்டன, அப்பறவைகள்‌ மூக்குப்‌ போல முலைக்‌ கண்கள்‌ இளங்கருப்புடன்‌ திகழ்ந்தன.
(இராமன்‌ சீதையின்‌ பிரிவில்‌ துயருற்மபோது சக்கிரவாசுப்‌ பறவைகள்‌ களித்தின்புறம்‌ ௪ண்டு, சினந்து பிரிவறும்படி சபித்த தாக ஒரு கதை இங்கு கூறப்பட்டுள்ளது. எத்த சாபமும்‌ இரண்‌ டாயிரம்‌ ஆண்டுகளுக்குள்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக தீர்ந்து விடும்‌ என்பது ஐதீகம்‌, அதன்படி பிரிந்து தனித்தனியாக இருந்த மூலைகள்‌, வளர்ந்து செறிந்து ஒன்று கூடின என்றும்‌ அவை oa een போன்றுள்ளன என்றும்‌ கூறப்பட்டுள்ளன 5-22-

தாம்‌ எப்படியோ அப்படியே தம்மைச்‌ சேர்ந்த முத்துச்சரத்‌ தையும்‌ அவள்‌ முலைகள்‌, இரு பக்கத்தையும்‌ இணைவித்து ஒன்றாக்கின. பெரியவர்கள்‌ தம்மைச்‌ சாரீந்தோரிக்கும்‌ தமத ஒழுக்கத்தை ஈவார்கள்‌ அன்றோ?”
(முத்து மாலையின்‌ இருவடங்களும்‌ முலைகள்‌ மேல்‌ நில்லாது முலைச்‌ சந்தின்‌ ஒன்று கூடி இணைவது இயல்பு. அதனை, எப்படி முலைகள்‌ இரண்டும்‌ ஒன்றோடொன்று செறிந்து சொண்டனவேோ அதுபோல முத்துமாலையின்‌ இரு பக்க வடங்களையும்‌ ஒன்றாக ஆக்க. சான்றோர்களைச்‌ சேர்ந்தவர்களும்‌ சான்றோர்‌ பண்பு களை அடைவார்கள்‌ என்ற கருத்தினை மெய்ப்பிப்பது போலுள்ளது என்பது கருத்து.) V—23

பிரிவின்‌ மெலிந்த பெண்டிர்‌ மீது சினந்து மன்மதன்‌ விரைந்து பொன்னுறையுடன்‌ கூடிய வாளினை எறியவும்‌, உறையின்‌ தையல்‌ அறுந்து வாள்தோன்றியது போல பொன்னெழில்‌ இடை யூடாக மயிரொழுங்கு (வளி) தோன்றியது.
(பொன்னுறை வயிறாகவும்‌, தையல்‌ பிரிந்து நடு3வ தோன்றும்‌ வாள்‌ மயிர்‌ ஒழுங்காகவும்‌ உவமிக்சப்பட்டது.) 1.24

அன்னமென்னடையாளின்‌ உயிர்ப்புக்‌ சாற்றினை அவாவி, உந்திப்புற்றிலிருந்து புறப்பட்டு வந்து முளைக்குவடுகளின்‌ கடு போந்தூரும்‌ பாம்போ எனுமாறு அவளது மயிரொழுஙிகு எழில்‌ பெற்றிலங்கியது, V—25

நங்கை நிற்கும்போது அவளது மென்தோளும்‌ இடையும்‌ உலகினர்‌ காணுமாறு மணிகள்‌ மிடைந்ததோள்‌ வளையும்‌,
மேகலையும்‌ அணிவதாலும்‌, மயிரொழுங்கு அமைந்ததாலுமே தோன்றின,
(காணரிய இடையும்‌, மென்தோாளும்‌ அணிகள்‌ அணிவதால்‌ இருப்பது புலப்பட்டது என்பது கருத்து.) V—26
உடல்நடுவிலுள்ள (வயிற்றிலுள்ள) மும்மடிப்புகன்‌ எனும்‌ தங்கத்‌ துண்டுகளை பற்றவைத்திணைக்க அதே சாதியைச்‌

சார்ற்த தங்கத்தகுடு மன்மதன்‌ வைத்தான்‌ எனுமாறு ஒட்டியாணம்‌ அவளுக்கு எழிலூட்டியது.
(பொற்கொல்லர்‌ தங்கத்தை இணைக்க த௫கத்‌.தகட்டினை பயன்படுத்துவதுபோல, மன்மதன்‌ எனும்‌ பொற்கொல்லன்‌, அவளது வயிற்று மடிப்புகள்‌ (வளி) எனும்‌ துண்டுகளை இணைக்கும்‌ தங்கத்தசடு ஆக ஒட்டியாணம்‌ இருந்தது என்பது கருத்து.) V—27

மெல்லிடையாகய கொடி, நிதம்பம்‌ (புட்டம்‌) ஆய பாரத்‌தால்‌ அறுந்துவிழக்கண்ட பிரம்ம தேவன்‌, அதை இறக்கிவிட,
தளர்வாக முடிச்சுப்‌ போட்டானோ எனுமாறு சக்கிரவாகப்‌பறவை போன்ற முலைகளையுடைய அவளது ஆழமான உந்தி
அமைந்திருந்தது,(பிரம்மனின்‌ கயிற்றுமுடிச்சுப்‌ போல உற்தி இருந்தது என்றஉவமை நீயம்‌ சிறப்புறுகிறது.) V—28

நங்சையின்‌ நிதம்பம்‌ ஏனும்‌ பெயரில்‌ ஒரு மணல்‌ இட்டு– நதிக்கரை மணல்‌ திட்டுகளிலிருந்து தப்பி வந்துவிட்டது. அந்தக்‌
கணக்கு தெரியவே பிரம்மன்‌ : மனால்‌ திட்டில்‌ அன்னத்தின்‌ அடிகளாகிய குறியை இட்டான்‌.
(ஒரு பொருள்‌ காணாவிட்டால்‌ தெரிவதற்காக, கணக்கு அறிய குறியிடுவது வழக்கம்‌, மணல்‌ திட்டு ஒன்று நங்கையின்‌
நிதம்பமாகி காணாமற்போனது. . பீரம்மன்‌ மற்ற திட்டுக்களை கணக்கிட அன்னத்தின்‌ அடியாகய 3 என்ற குறியை இட்டு
வைத்தான்‌ என்பது கருத்து) V—29

வளத்தினைத்‌ திருடிக்‌ கொண்டது. எப்படி என்றால்‌, (திருடனின்‌ உடைகளைச்‌ சோதிப்பதுபோல) மட்டை புரிச்‌
தால்‌ உள்ளே பசு வால்போன்ற (மேலே அகன்று கழே குற்கிய) தண்டும்‌, பூவினையுரித்தால்‌ உள்ள நகம்‌ போன்ற மொட்டுக்களும்‌
(பூமூகைகள்‌ திருடர்களின்‌ ஒருவகைக்‌ கருவி போலுள்ளது) ௮தன்‌ சிகப்பும்‌ (பத்மராகக்‌ கற்கள்‌ எனும்‌ நவமணிகளும்‌) இருடியதின்‌
அடையாளங்களாகத்‌ திகழ்கின்‌றன. V—30

செல்வமிக்கவர்களானாலும்‌ அவளது தொடைகளுக்கு அடிமை செய்பவர்களாசத்தான்‌
ஆவார்கள்‌. செல்வமிக்க பெண்களின்‌ அங்கையின்‌ குடையும்‌ பூரண கும்பழம்‌ ரேகைசளாக அமைந்திருப்பது அடையாளமாகும்‌.
(அடிமைகள்‌ பிரபுவுக்கு குடைபித்து, பூரண கும்பம் பிடித்து வரவேற்பது போல–௮வள்‌ எழிலுக்கு தோற்ற பிற பெண்டிர்‌
தம்‌ கரங்கள்‌ குடை, கலச ரேகைகளால்‌ அடிமையாகின்‌றன என்பது கருத்து.) 5-31

நங்கையின்‌ சணுச்சால்‌ கலம்பிலுள்ள மரகதப்‌ பச்சையின்‌’ ஒளியால்‌ பசுமை படர்ந்து மன்மதனின்‌ குடும்பத்தைச்‌ செழிப்‌
பாகப்‌ பேணும்‌ செஞ்சாலிப்‌ பொதிபோல இருந்தது,
(நெற்பொதி (கதிர்விடுமுன்‌ உள்ள கருநிலை) சணுக்காலுக்கு உவமை கூறப்பட்டது.) V—32

நங்கையின்‌, மென்மையான, சணுக்காலின்‌, இணையாக வேண்டிய நெற்பொதி, தம்முன்னே முள்ளினை திறமையுடன்‌
அடக்கி வைத்திருந்தது, பின்னர்‌ நாட்படவும்‌ அடங்காது ௮வை (முள்‌) வெளிப்படவே (நாணத்தால்‌) தலை குனிந்தன.
(முதலில்‌ நெற்பொதி இணையாக இருந்தாலும்‌ நாட்படவும்‌ முள்வெளிப்படல்‌, நிறமாற்றம்‌, ஆ௫யெவையால்‌ இணையாக
முடியவில்லை, அதனால்‌ நாணுற்று தலை சுவிழ்ந்தது. நெற்‌ குதிர்கள்‌ முற்றியதும்‌ தலை கவிழ்தலை நாணுற்றதாக பல
சவிஞர்கள்‌ கூறியுள்ளனர்‌. அறிவு நிறைந்ததும்‌ தலை நிமிரீந்த செருக்கு நீங்கி தலை கவிழ்ந்து அடக்கம்‌ ஏற்படுவதாகவும்‌
கவிஞர்கள்‌ வருணிப்பர்‌.) 3.33

“உலகிலுள்ள பொருட்களுக்கெல்லாம்‌ செல்வண்ணம்புூசும்‌ இயல்பினராகய எம்மீது இனிவேறு செம்பஞ்சுக்‌ குழம்பு
(அரத்தகம்‌) பூசுவா?னன்‌? பேதைமை யல்லவா??* என்றுஅவளது பாதங்கள்‌, முகமாகிய விரல்சளினால்‌ நகமாகபய பற்‌
களைக்‌ காட்டிச்‌ சிரிப்பது போல, நங்கை எழில்‌ மிக்‌இருந்தாள்‌.
(வெண்பற்களாகிய நகங்களிலும்‌ செம்பஞ்சுக்‌ குழம்பு பூசும்‌போது செம்மை படியுமமே எனினும்‌, வெற்றிலை போட்ட பற்‌
களோடு சிரித்தன என்று கொள்க,) V—34

நங்கையின்‌ முழங்கால்‌ ஆமை3யாடு போல இருக்கும்‌, அவளீ நடையோ பிடிநடையாகும்‌. ஆமைக்கும்‌ பிடிக்கும்‌ (பானளைக்கும்‌)
ஏற்பட்ட போராட்டம்‌ எனப்படும்‌ பழமொழி இவளால்தான்‌ ஏற்பட்டது,
(கஜகச்சப (யானை, ஆமை) கலஹ நியாயம்‌ எனும்‌ வட மொழிப்‌ பழமொழியைக்‌ கருத்துட்கொண்டு இக்கவிதை உள்ளது
யானைக்கும்‌ முதலைக்கும்‌ ஏற்பட்ட போராட்டக்கதை தான்‌ பிரசித்தம்‌ யானை, ஆமை கலகக்கதை தெரியவில்லை. V—35

மங்கையின்‌ மேனி எழிலுக்கெதிரே, புது மஞ்சள்‌ துலைக்கு வர முடியாமல்‌ (இணையாகாமல்‌) மிகுந்த மாசுற்றது. அதனால்‌
தான்‌ அதற்கு இரா, ௮ல்‌, என்பனை போன்ற இரவின்‌ பெயர்‌ களையுற்று கரைந்து இராமலே, இல்லாது போனது.
(மஞ்சள்‌ நாட்படின்‌ மேல்தோல்‌ கருவண்ணம்‌ உறும்‌, மாசுறு வதாக சுற்பனை செய்யப்பட்டது. மஞ்சளுக்கு வடமொழியில்‌
இரவீன்‌ பெயர்கள்‌ எல்லாம்‌ பரியாய பதங்களாகும்‌. ராத்ரி, நிச, தமிஸ்ர, நிஸீதினி, கூப என்பன இரவின்‌ பெயர்கள்‌.
கரைதல்‌, கெடுதல்‌, தேய்தல்‌, என்ற பொருளின்‌ அடியாக இச்சொற்கள்‌ அமைந்தன. அவளது உடல்‌ பொன்‌ வண்ணம்‌
உண்ட மஞ்சள்‌ தோற்ற கரைந்து இல்லாது போயிற்று என்பது கருத்து.) 5-36

அந்த மதிமுகத்தினள்‌, பூமி ‘தவியாசலின்‌ அவளுடைய முன்னைய தோழியரான நாகக்கள்னிகள்‌, அவளை இணை
பிரீயாதிருக்க வேண்டி, பக்கத்து வீடுகளில்‌ வைணவர்களின்‌ மகளிர்களாகப்‌ பிறந்து, மராளிகா (அன்னம்‌) ஏகாவளி (ஒற்றை
வட முத்துமாலை) மனோக்ஞா (மனதை அறிபவள்‌) ஸ்ரக்விணீ (பூமாலை யுடையவள்‌) என்ற பெயரிகளுடன்‌ தோழியராகத்‌
திகழ்ந்தனர்‌. அவர்கள்‌ பொம்மைக்‌ கல்யாணம்‌ முதலிய விளையாட்டுக்களில்‌ லட்சுமி தேவி திருமண வைபவக்‌ கதைப்‌
பாட்டுக்களைக்‌ கேட்டுக்கேட்டு, வியப்புற்று, திருமாலின்‌ திருவிளையாடல்களில்‌, ஈடுபட்டு அவனையே மணம்‌ புரிய
வேண்டுமென முன்பிறவி. வாசனையால்‌, ஆசையுற்று அவனது இரு அவதாரக்‌ கதைகளை மீண்டும்‌ மீண்டும்‌ கேட்டின்புற்று மூழ்ந்தாள்‌. 1.37

அவளது  தந்‌ைத (பெரியாழ்வார்‌) திருமால்‌ தந்த செல்வச்‌ செழிப்பு மிக்சிருந்தும்‌ தனது முன்னைய மாலை தொடுத்துச்‌
சேவகம்‌ புரிதலை விடாது ஆர்வமுடன்‌ இருந்தமையால்‌, திருமாலின்‌ திருவிளையாடல்களையும்‌, வைணவபுராணங்களை
யும்‌ வியாக்கியானம்‌ செய்து கொண்டும்‌, நுரல்கள்‌ இயற்றிக்‌கொண்டும்‌ இருப்ப, அவர்‌ கட்டிய மணமிகு செங்கழுநீர்‌,
பூக்களை யுடைய தோமாலையை, கூந்தல்‌ சீவி, மன்மதனுக்கு மயிற்பிலியால்‌ இயற்றிய முடி (கேடகம்‌) போல, கருவண்ணக்‌
காளை மாட்டின்‌ இமில்போல சிறிதே இடப்பக்கம்‌ சாய்ந்த கொண்டையினடியில்‌ விருப்புடன்‌ சேர்த்து (கூந்தலில்‌ பூமாலை
சூடி) ணெற்று நீரில்‌ (தன்னெழில்‌) கண்டு மீண்டும்‌ பூக்குடலை யில்‌ வைப்பாள்‌. V—38

அந்நகிகை (கோதை) சிறிது மஞ்சள்‌ பூசிக்குளித்து கூறை (சேலை) யுடுத்தி, முலைக்குவட்டில்‌ மணம்‌ மிகுமாறு குங்குமச்‌
சாறு பூசி, கற்பூரத்‌ இலகமிட்டு, தந்‌ைத கட்டிய பூமாலையை விருப்புடன்‌ கூநீதலில்‌ சூடி, சிறிது நேரம்‌ வைத்திருந்து, மீண்டும்‌ களைந்து வைத்துவிட்டு தோழிகளைப்‌ பார்த்து வெய்துயிர்ப்‌பாள்‌. [39

நீங்கள்‌ பாடிய திருமாலின்‌ நடவடிக்கைகளை எந்த முறையில்‌ சேர்க்க முடியும்‌? தஷ்னை நாடிய நங்கையரையே
அருள்‌ செய்யாதவன்‌, எந்தப்‌ பெண்ணைத்தான்‌ காப்பாற்றினான்‌, TV—-40

அவன்‌ தேவன்‌, (வாமனன்‌) முனிவன்‌ (பரசுராமன்‌) அரசன்‌ (ஸீராமன்‌) ஆய உடலைத்‌ தாஙிகி பெண்களை வெய்துயிர்க்கச்‌
செய்ததைவிட அதற்குமுன்‌ எடுத்த பிறவிசகளாகிய, மீன்‌, ஆமை பன்றி, சங்கமாகிய உருவிலிருந்தாலே நல்லதாயிருந்திருக்கும்‌.
(பெண்களுக்கு விரகதாபத்துயர்‌ தராத முன்னைய பிறவி களில்‌ மட்டும்‌ பிறந்திருந்தால்‌ நன்றாயிருக்கும்‌ என்பது கருத்து)-5 41

அந்த (மீன்‌, ஆமை, பன்றி, சங்க)ப்‌ பிறவிகளில்‌ பெண்கள்‌ காதலிக்க வில்லையல்லவா? நல்லதாசப்‌ போயிற்று, ஒருவேளை
காதலித்தாலும்‌ விலங்குகட்கு மனிதர்கட்டுள்ள வேட்கை இராதல்லவா? (என்‌ இராது?) தெரியாமல்‌ ஏன்‌ இப்படிச்‌ சொன்னேன்‌. IV—42

*அத்மவத்‌ சரீவபூதானி’* (தன்னைப்‌ போலவே எல்லா உயிர்களும்‌) என்பது பொய்தான்‌. மனிதப்பெண்களாவது
ஆடல்‌ பாடல்களிலும்‌, சரச சல்லாபங்களிலும்‌, கதைகளிலும்‌ கொஞ்சமாவது விரகதாபத்தை அடக்கிக்கொள்ளலாம்‌.
வாயில்லா உயிர்களுக்கு நோயும்‌ அதிகம்தான்‌.
(தன்போலவே பிற உயிர்களையும்‌ கருதுவது எப்படி? மனிதர்கள்‌ வாயிருப்பதால்‌ பேசி மகிழ்ந்து ஆற்றியிருக்க முடியும்‌.
வாயற்ற விலங்குப்‌ பிறவிகளில்‌ எப்படி விரகதாபத்தை அடக்க முடியும்‌ என்பது கருத்து ) 14-43

இவன்‌ முன்பிறவிகளில்‌, காதலித்த சன்னியரின்‌’ கமலக்‌ கண்களில்‌ நீரை வரவழைத்தும்‌, அவர்கள்‌ உடலில்‌ புளகம்‌
உருமாறம்‌ செய்த வினைப்பயனால்‌ தான்‌, பின்னர்‌, நீரில்‌ இடக்கும்‌ மீன்‌, ஆமையாகவும்‌, புளகம்‌ போன்ற மயிர்கிலிர்க்கும்‌
பன்றி, சிங்கமாகவும்‌ பிறந்தான்‌. எனினும்‌ அந்த உண்மையை மறைத்து திறமையாக இருக்கிறான்‌. ivV—44

தேவன்‌, முனிவன்‌, அரசனாகப்‌.பிறந்த பிறவிகளில்‌ இவன்‌ தாமரைக்‌ கண்ணாரைத்‌ தண்ணளியின்‌ றித்‌ தவிக்கச்‌ செய்தான்‌
என்றேனே அதனை உங்கள்‌ பாடல்களிலிருந்தே தெரிவிக்‌கிறேன்‌. IV—45

முதலில்‌ விஷ்ணுழூர்த்தியாக, இவன்‌, பிருகு முனிவரின்‌ மனைவியைக்‌ கொன்று, அந்தக்‌ கிழவன்‌ (பிருகுமுனி) தன்னைப்‌
போல மனைவியைப்‌ பிரிந்து வருந்துவாயாக எனச்‌ சாபமிட எனக்கு அதுவம்‌ தேவகாரியமாகட்டும்‌’ கூறி
வாமனனாஇ (பிரம்மச்சாரியாகி) திருமகளைப்‌ பிரிவுத்துயரில்‌ ஆழ்த்தினான்‌ அல்லவா?
(இராமாயணம்‌ உத்தர காண்டத்தில்‌ பிருகு முனிவன்‌ சாபக்‌கதை வருகிறது, பிருகு முனிவனின்‌ மனைவி அசுரர்களுக்கு அபயமளித்துக்‌ காப்பாற்றியதால்‌ அவளை, விஷ்ணு கொன்றதாகக்‌ கதை.) IV—46

பிரளயகாலச்‌ சூரியனைப்‌ போன்ற கூரிய கோடாரி (பரசு)யாகிய வீணைக்‌ தண்டினால்‌, பகைவன்‌, பகைவனின்‌ நண்பன்‌,
நண்பனின்‌ பகைவன்‌ எனும்‌ முத்திறத்துப்‌ பகைவர்களின்‌ சம்மாசனங்களாகிய (மந்திர மத்திய தாரங்கள்‌) கட்டைகளில்‌
ஏழு தடவை (ஏழு சுரங்களில்‌) வாசித்து, தன்‌ தோள்‌ வலிகாட்டிய புகம்‌ எனும்‌ வீணையை மீட்டிய போது, விழைந்து
வந்த பூமியாகிய கற்பின்‌ செல்வியைத்‌ துறந்து காசியப முனிவனின்‌ மகளாகி.ச்‌ செய்யவில்லையா?
(பரசுராமன்‌, தன்‌ தந்தையைக்‌ கொன்ற கார்த்த வீரியார்ச்‌ சுனனின்‌ மக்கள்‌ மீது வஞ்சினம்‌ பூண்டு ஏழு தடவை பூமியை
வலம்‌ வந்து, க்ஷத்திரியர்களைக்‌ கொன்று அந்தக்‌ குருதியினால்‌ சமந்த பஞ்சகம்‌, எனும்‌ மடுவை உருவாக்கி பித்ரு தர்ப்பணம்‌
செய்தான்‌. அவன்‌ உலகை வென்றும்‌, காசியபன்‌ எனும்‌ முனிவன்‌ யாசித்ததுமே அந்த உலக முழுதுமே தானம்‌ செய்து
விட்டான்‌. உலகம்‌ காசியபன்‌ மகள்‌ ஆயிற்று. ஆதலில்‌ காசினி என்று பூமிக்குப்‌ பெயர்‌ உண்டாயிற்று பரசுராமன்‌ தான்‌ வென்ற
பூமியை ஆளாமல்‌ துறந்தான்‌ என்பதால்‌ இப்பிறவியிலும்‌ இருமகள்‌ (பூமி) எனும்‌ பெண்ணுக்கு ௮ரள்‌ செய்யவில்லை என்பது கருத்து.) IV—47

தனது அழகினைச்‌ சொல்லக்‌ கேட்டு, மனமுருகி, திருமகள்‌ (ராஜ்யலட்சுமி) அழைத்துத்‌ தாமசைப்‌ படுக்கையில்‌ இன்ப
முடைய அன்போடு கூடி இணைய வரும்போது, கொடுமையாகத்‌ துறந்து சென்று அவளைப்‌ பித்துறச்‌ செய்த காகுத்தனாகய
இராமனின்‌ நடவடிக்கைகளை உள்ளத்தில்‌ ஆராய்ந்து பாருங்கள்‌.
(இராமன்‌, அரசு அகிய திருமகளைத்‌ துறந்து பட்டம்‌ ஏற்காமல்‌ காட்டுக்குச்‌ சென்று அவளை பிரிவுத்‌ துயரில்‌
ஆம்த்தினான்‌ என்பது கருத்து.) 13.48

அழூய உருவந்தாங்கி, தன்னை நாடிக்‌ காதலித்து வந்த இராவணனின்‌ தங்கை (சூர்ப்பநகை) யை, நாலுபேர்‌ நகைக்கும்‌
படியாக அவ்விதம்‌ (மூக்கரிந்த செயல்‌) செய்யாமல்‌, எற்றுக்‌ கொண்டிருந்தால்‌, சம்பந்தியாகி, அந்த இராவணனும்‌ சினந்து
சீதையைச்‌ றை வைச்கமாட்டான்‌. வீணாகப்‌ பகை மூளச்‌ செய்து தனக்கும்‌, தைக்கும்‌ இராவணனுக்கும்‌, சூர்ப்பணகைக்‌
கும்‌ கேடுண்டாக்கிக்‌ கோண்டானல்லவா?
(சூர்ப்பணகசையை ஏற்றிருந்தால்‌ இத்துணைத்‌ துன்பம்‌ வராது என்றும்‌: நயந்து வந்த பெண்ணைக்‌ கொடுமைப்படுத்து
வது நியாயமா? என்றும்‌ கேட்டிறாள்‌ கோதை! பெண்கள்‌ உணர்வறிந்த பெண்ணுக்குத்தானே இரச்கம்‌ அதிகம்‌.) IV—49

ஓவென்றலறிச்‌ செங்குருதி ஓழமுக, உதடுகள்‌ துடிக்க, முகில்‌ முழக்கம்‌ என முறையிட்டவாறு, கொடி போன்ற வாள்‌ ஏந்திய
சந்தன மரக்களை போன்ற தோள்களைத்‌ தடுக்க பாம்பு போன்ற தன்‌ கரங்களைச்‌ சுற்றிய சூர்ப்பபகையை இங்க
மொத்த அவன்‌ மூக்கரிந்து கொடுமைப்‌ படுத்தவில்லையா?
(மூக்கரிந்தது இலக்குவனே எனினும்‌ பொறுப்பாளி இராமனாதலின்‌ இராமன்‌ மேலைற்றிக்‌ கூறப்பட்டது. கோயில்‌
கட்டுதல்‌ சற்பியேயாயினும்‌ அரசன்‌ கோயில்‌ கட்டினான்‌ என்பது போல) IV—50

வேண்டாம்‌ போ என்றால்‌ போக மாட்டாளா? அவள்‌ அரக்கி என்பதால்‌ பரிகாசம்‌ செய்து அலைக்‌ கழித்தல்‌ முறையோ? பெண்‌
குலமே நாணுமாறு அவளாகவே வந்தாள்‌! அது போதாதென்று பெண்ணைக்‌ கேவலப்‌ படுத்த வேண்டுமா? V—51

தன்னைத்‌ தழுவப்‌ பெண்ணாகப்‌ பிறக்க விரும்பிய முனிவர்‌ களை, தன்‌ பாதத்துக்குள்‌ (பொண்ணாக்கும்‌) ஆற்றல்‌ இருந்தும்‌ கூட, மற்றொரு பிறவியில்‌ (கண்ணன்‌ ஆக) ஆயரீ மகளிராகப்‌ பிறக்கச்‌ செய்து இணைந்தும்‌, அக்குரூரவன்‌ தூண்டுதலால்‌, அநீநங்கையரைப்‌ பிரிந்து மதுராபுரிக்குச்‌ சென்று விடவில்லையா?
(ஆடவர்‌ பெண்மை அவாவுறும்‌ அழகன்‌ என்று கம்பனும்‌ இராமனைக்‌ குறிப்பிடுவான்‌. முனிவர்கள்‌ பரம்பொருளைப்‌ பெண்‌ கோலத்தில்‌ சுவைக்க விரும்பி ஆயர்‌ மகளிராகப்‌ பிறந்தனர்‌ என்று பாகவதக்‌ கதை கூறுகிறது.) V—52

அயோமுகி, சூர்ப்பணகை ஆகியவர்களை அரக்கியர்‌ அழகற்ற வார்கள்‌ என நயவாது தண்டித்தான்‌ என்றால்‌ பலரா.மனாக, தன்னை விட வயதில்‌ மூத்த பனைமரம்‌ போன்றுயர்ந்த ரேவதியைத்‌ தான்‌ கிழவனாக இணையவில்லையா? கண்ணன்‌ ஆகி, கூனியாகிய (குப்ஜா எனும்‌) வேலைக்காரியை விரும்பி உக்கிரசேனனிடம்‌ தான்‌ சேவகனாக, கூனலைத்‌ திருத்தி ஏற்றுக்‌ கொள்ளவில்லையா?
(அழகு, இளமை இல்லாவிட்டாலும்‌ அன்பிருந்தால்‌ ஏற்றுக்‌ கொள்வர்‌ என்றும்‌, அரக்கியர்பால்‌ அன்பின்மையால்‌ அவன்‌ அவர்களை ஏற்றுக்‌ கொள்ளவில்லை என்றும்‌ கருத்து)
(கிழவன்‌ என்பது உரிமையுடையவன்‌ என்ற பொருளிலும்‌ கொள்க.) V—53

முராரி, (கண்ணன்‌) பிருந்தாவனத்தில்‌ தன்னை எல்லோரும்‌ காதலித்திருந்தாலும்‌ சிலரைப்‌ புணர்ந்தும்‌ சிலரை விரகதாபத்‌
கால்‌ வருத்தியும்‌ ராதையிடம்‌ மட்டும்‌ ஈடுபாட்டுடன்‌ இருந்து எல்லாப்‌ பெண்டிரையும்‌ மனவருத்தம்‌ செய்யவில்லையாச்‌ VY—54

என்று, இவ்விதமாக, நாணம்‌ மிகுதியினால்‌ நிந்திப்பது போல மீண்டும்‌ மீண்டும்‌ நினைந்து திருமாலைப்‌ பற்றிப்‌ பேசவுல்‌,
தோழியர்‌ அவளது உட்கரந்துறையும்‌ காதலையுணர்ந்து
கொண்டு “இந்தத்‌ தோழி திருமாலிடம்‌ ஈடுபட்ட கன்னிக்‌ காதலுடையவளாய்‌ நாணத்தால்‌ வெளிப்படக்‌ காட்டாமல்‌, புடமிட்ட பொன்‌ போல, உள்ளம்‌ வெதும்பி, சிக்குற்று, நாள்‌ தோறும்‌ சிரித்தவாறே சங்கடப்பட்டுக்‌ கொண்டிருக்கிறாள்‌.
இந்நங்கையின்‌ தனிமை (மறைவான உணர்வுகளை) நீக்கி நம்மோடிணைந்து கலந்துறவாடச்‌ செய்து, நம்மிடம்‌ மறைக்கும்‌
மனக்‌ கருத்தினை (இங்கிதம்‌) தானே தெரிவிக்கும்படி செய்து சுவலையை நீக்காவிட்டால்‌ மோசம்‌ நேரும்‌” என்று சிரித்தவாறு குறிப்போடிவ்வாறு கூறினர்‌.V—54

எல்லோரும்‌ இப்படித்தான்‌, உயிர்த்துணைவரீகள்‌ நெடுந்‌தொலை பிரிந்திருத்தார்கள்‌ என்றால்‌, பிரிவுத்‌ துயரால்‌
வெய்துயிர்த்து குற்றங்கூறாமலிருக்க மாட்டார்கள்‌. பின்‌ அவரிகள்‌ தம்‌ வசப்படினோ, யாரையும்‌ பொருட்படுத்தாமல்‌
அவர்களோடிணைந்து இந்திரன்‌ சந்திரன்‌ என்று புகழ்வார்கள்‌ .
அதன்‌ பிறகு இணைவித்த தோழியரும்‌ பயனற்றவர்களாக நினைப்பார்கள்‌. இத்தகைய நிலை உன்‌ தலையிலும்‌ விடிந்தது போலும்‌. | V—56

எனலும்‌, இளநகை யரும்ப, வெளிக்காட்டாதடக்க, சிறிது . சினம்‌ வரவழைத்துக்‌ கொண்டு, &முதட்டைக்‌ கடித்துக்கொண்டு,
அத்தோழியரை பந்தினால்‌ மெல்ல வீசி எறிந்து, அக்கம்பக்கம்‌ பார்த்தவாறு மெதுவாகச்‌ சொன்னாள்‌. V—57

இடைவிடாத உஙிகள்‌ பாட்டு அழகாக இருந்ததினால்‌, மீண்டும்‌ பாடச்‌ சொன்னேனே யன்றி வேறல்ல. இது தவறா?
பாயசம்‌ மீண்டும்‌ கேட்டால்‌ ஏழைகளாக விடுவரே? பழி தூற்றா தர்கள்‌. அவனோடெனக்கென்ன வேலை?
(விருந்தில்‌ பாயசம்‌ மீண்டும்‌ வேண்டினால்‌ அவர்கள்‌ ஏழைகள்‌தான்‌ என்பதில்லை. செல்வந்தரும்‌ சுவைத்துக்‌ கேட்கலாம்‌ என்ற
பழமொழியைக்‌ கூறி இசைக்கு மயங்கனே?னேயன்றி இறைவனை நாடவில்லை என்றாள்‌ கோதை) ப V—58

அந்தப்‌ பேச்சை விடுங்கள்‌ என்று கோதை கூற தோழியர்‌, இவ்விதம்‌ கூறலானாரீகள்‌. :அகட்டும்‌, நீ சொல்வது உண்மை
இனிமேலேப்‌ போதாவது, இனிக்கொஞ்சநேரம்‌ கழித்தாவது, நாளையேனும்‌, நீ அவனுடைய குணங்களையோ
குற்றங்களையோ சொன்னால்‌ அப்போது சொல்லுகிறோம்்‌ஸ்ரீ உன்‌ மனம்‌ அவனிடம்‌ ஈடுபட்டிருப்பதை மழைத்து எங்களை ஏமாற்றப்‌
பார்க்கிறாயா? V—59

நீ முகத்தைத்‌ திருப்பிக்‌ சொண்டு (பிறஈறியாது) நகநுனியால்‌ துடைத்தெரிந்த கண்ணீர்த்‌ துளிகள்‌, விளக்குச்‌ சுடரில்பட்டு
௪ட௪ட என்ற ஓசை எழுப்ப நீ அழுவதைத்‌ தெரிவிக்கவும்‌, மிகுந்த வருத்தமுடன்‌ மறைவாக (உஸ்‌ என்று) வாயால்‌
நெட்டுயிர்த்தல்‌, மெல்லிய இடையின்‌ பக்கங்கள்‌ அடிக்கடி அசைவதால்‌ தெரிவிக்கவும்‌,
(நாங்கள்‌ பேச்சுக்‌ கொடுக்கும்போது) இடுக்கிட்டு தமுதழுத்த
குரலைச்‌ சரி செய்ய நீ முயலும்‌ முயற்சியே நின்‌ நிலையை வெளிப்படுத்தவும்‌,
(பெண்ணாகப்‌ பிறந்ததே தவறு என்று) பெண்பிறவியை விரகத்துயரால்‌ நிந்திக்கும்‌ உன்‌ நடவடிக்கைகளை உன்‌ துயரை
எடுத்துக்‌ காட்டவும்‌, பிரிவாற்றாது படுக்கையில்‌ புளுவதே துயிலின்மையை புலப்படுக்க, தணிவு (இறந்து விடுவோமா என்ற
மனத்துணிவு) உள்ளுக்குள்ளேயே நீ சிரித்துக்‌ கொள்வதே புலப்படுத்த, எங்கள்‌ மேல்‌ (தோழியர்பா&்‌) காரணமில்லாமல்‌
கோபித்துக்கொள்வது உன்‌ மனக்கலக்கத்தை உணர்த்த, நங்காய்‌ நீ. இரவில்‌ படும்‌ அவத்தையைக்‌ காட்டும்‌
அடையாளங்கள்‌ அல்லவா?” V—60

(ஒருதோழமி சொல்கிறாள்‌)
அ ஒரு அற்புதம்‌ உங்களுக்குத்‌ தெரியாதல்லவா? இந்தத்‌ தோழி (கோதை) பொய்கையீல்‌ குளிக்கப்போகும்போது தன்‌ முத்து
மாலையை என்னிடம்‌ ஒப்படைத்தாள்‌, நானும்‌ அவளுடன்‌ சென்று மறந்துபோய்‌ கூடவே குளிக்க நீரில்‌ இறங்கினேன்‌
(வீரகதாபத்தால்‌ முன்பே பொரிந்திருந்த முத்துமாலை) நீரில்‌ பட்டதும்‌ சுண்ணாம்பாடிவிட்டது. : அவளே௱
வற்புறுத்தி தனது நகையைத்‌ (முத்துமாலை) தருமாறு கேட்கி றாள்‌! கேட்ிறா3ளயன்றி தன்‌ நிலைமையை கிறிதும்‌ உணர்ந்த
தாகத்‌ தெரியவில்லை. v—61

எனலும்‌, மராளிகா எனும்‌ தோழி சொல்வாள்‌ “கேட்டாயா ஹரிணி/ ஒரு நாள்‌ கஸ்தூரி எடுத்துக்கொண்டு போய்‌ எனக்கு
பொட்டுவை என்று அன்புடன்‌ (கோதையை) கேட்கவும்‌ அவள்‌ பொட்டிட முனைந்தாள்‌, சுரீர்‌ என்று முகத்தில்‌ சுட்டதுபோல
அவள்‌ நெட்டுயிர்ப்புக்காற்றினால்‌ கஸ்தூரி காய்ந்துபோகவும்‌, அதை நகத்தால்‌ சுரண்டி எடுக்கவும்‌, மீண்டும்‌ வைக்கவும்‌,
காய்ந்ததைச்‌ சுரண்டவு3ம நேரம்‌ சரியாகப்‌ போய் விட்டது v—62

எனலும்‌, சிரக்வினி எனும்‌ தோழி சொன்னாள்‌… *தோழியரே/நான்‌ இவளை பூங்கொடி ஊஞ்சலில்‌ ஊக்கும்போது, இவளது முலைப்‌ பாரத்தினால்‌ பூங்கொடி அறுந்து வீழின்‌ எவ்விதம்‌ தாங்குவது என்று ஐயுற்று கைலாஇல்‌ இவளைத்‌ தூக்கிப்‌ பார்க்கவ நடுப்பகலில்‌ வாடிய தட்டைப்பொம்மை போல எளிதாக (இ3லசாக) என்‌ கைகளில்‌ இருந்தாள்‌”, v—63

என்றிவ்வாறு தன்‌ நிலைமை தோன்றும்‌ படியாகக்‌ கூறவும்‌, அவற்றைப்‌ பொருட்படுத்தாதவள்போல அவர்களிடம்‌ இவ்விதம்‌ கூறினாள்‌. V— 64

ஆற்று விக்கவும்‌, தீரீத்துவிடவும்‌ மிகுதிறமையுடைய தோழிகள்‌ போல நீங்கள்‌ ஏதேதோ பேசுகிறீர்கள்‌! என்மீது எவ்வளவே அக்கறை இருப்பது போலக்‌ காட்டுகிறீர்கள்‌ உங்களுக்கேன்‌ இந்தக்‌ கவலை எல்லாம்‌? V—65

என்று பரிகாசம்‌ செய்துகொண்டு, ம௰க்கடித்துப்‌ பேக புடமிட்டதுபோல விரகத்துயரால்‌ வெய்துயிர்த்து, அந்நங்கையர்‌ திலகம்‌, அடக்கியும்‌ அடக்க முடியாமல்‌ இரவில்‌ ஒவ்வொரு சமயம்‌ தனக்குள்‌ இவ்விதம்‌ கூறிக்கொள்வாள்‌. v—-56

புதிதாக அலர்த்த வேளை மலர்‌ போன்ற கருவண்ணமுடைய மென்மையான இடது தோளில்‌ மகர குண்டலம்‌ தொட்டுக்‌
கடக்க, இணையற்ற முகத்‌ 9ெழில்‌ எனும்‌ திருவார்ந்த இளமையை நிலைநிறுத்தும்‌ வேப்பிலையோ என புுவத்தைச்‌
காட்டியும்‌, பருவத்தலர்ந்த பந்தூகம்‌ (உச்சிதிலகம்‌*) போன்ற இதழ்கள்‌ சிந்தூர. மழை பொழிய, ஒளி பொருந்திய கண்ணிணைகளின்‌ ,
பார்வை, காதிலணிந்த குண்டலங்களின்‌ ஒளியோடிணைய, ஏழு உலகங்களிலுள்ள மகளிரையும்‌ மகிழ்விக்கும்‌ ஏழுவிதமான
(சப்தசரங்களாகய) மதகுகள்‌ மூலம்‌ அமுதம்‌: பொழிவித்திடல்‌ போல குழல்மேல்‌ விரல்களை மாற்றி மாற்று வைத்து (ஊது)
ஆய்ச்சியரை மயக்க முறச்செய்தனையோ? V—67

அந்தோ. ராதையே/ உனக்குத்‌ தகுநீிததுதானா? (முறையா) கணவரையும்‌ மாமன்மாமியரையும்‌ விடுத்து (ஏமாற்றி வந்து) முகுந்தனின்‌ வேணுகானம்‌ (குழலிசை) ஆய வீளைக்கு (விளிக்கும்‌ ஒசை) ஆட்பட்டு, மான்களின்‌ கூட்டம்‌ போல வந்து, (திராசையுற்று) விரகதாபத்தால்‌ வெந்து, பயந்து, இரவில்‌ வந்த ஆய்ச்சியர்களை வருத்தமுறச்‌ செய்து, நீ ஒருத்திம்ட்டும்‌ அவன்‌ நலம்‌ முழுமையும்‌ குத்தகைக்கு எடுத்தாற்‌ போல்‌ இன்பத்தில்‌ திளைத்தாயே/ (இது தியாயமாகுமா?) V—~68

அக்கமலக்‌ கண்ணன்‌, ஒருத்தியைத்‌ தன்‌ தோளில்‌ ஏற்றிக்‌ கொண்டு பூம்‌ புதார்க்காட்டிற்கொண்டு போகவும்‌, பிற
நங்கையர்‌ எல்லாம்‌, யமுளைக்‌ கரையில்‌, சுமையால்‌ மிகவும்‌ அழுத்திய அடிச்சுவடுகளைப்‌ பின்பற்றித்‌ தேடிச்‌ செல்வர்‌,
சென்று தேடி அங்கே எதைக்‌ காணப்போடறார்கள்‌? பெண்‌களுக்குத்‌ தன்மானம்‌ வேண்டாமோ? V—69

வீட்டை விட்டுக்‌ கனவிலும்‌ வெளியேறாத சுற்புடைய மகளிரைச்‌ கூட்டி, விடுபவளாக, அச்சத்தை நீக்கி, கண்ணனின்‌
கலவி இன்பச்‌ சுவையைக்‌ காட்டி, பிறகு, அவர்கள்‌ வீரகதாபத்‌தால்‌ உன்னுடைய மணல்‌ திட்டுகளில்‌ வருத்தத்தால்‌ புரளச்‌
செய்தனை! கொடுங்கதஇர்ச்கற்றையுடையவனின்‌ மகள்‌ அல்லவா நீ!
(கொடுங்கதிர்களையுைய சூரியனின்‌ மகள்‌ யமுனை/ யமனின்‌ சகோதரியுமாவாள்‌! ஆதலின்‌ மரபு வழிப்பட்ட
கொடுமை உனக்கும்‌ ஏற்பட்டது என்பது குறிப்பு. உள்ளச்‌
சூட்டைவிட மணல்கதிட்டுச்‌ சூடு குறைந்தது ஆதலின்‌ அதில்‌ துன்பத்தால்‌ புரண்டனர்‌ என்றும்‌ குறிப்புள்ளது) V—70

என்று தனித்துத்‌ தனக்குள்‌ சொல்லிக்கொள்ளும்‌ சொற்‌ களைக்‌ கேட்ட அருகிலிருந்த தோழியர்‌: முகத்தில்‌
சிரிப்பு ஏனும்‌ நிலவொளி கால, வெளிப்பட்டு, நங்காய்‌,!
என்னென்ன உன்‌ மனபறிந்துதானே முதன்‌ முதலிலேயே அவனைப்‌ பற்றிய பேச்சுக்களைவிட இயலாது என்று
சொன்னோம்‌ என்று நினைஷூட்டவும்‌, சிறிது தலை சுவழ்ந்தவளாக, முகம்‌ வெளுப்ப குறு நகையடக்கிக்கொண்டு, இனியும்‌
மறைக்க முடியாமற்‌ போகவே, அவர்களோடு கலந்து இவ்வாறு கூறினாள்‌. V—72,

“மலரன்ன மங்கையரே! அன்று நாம்‌ இருந்திருந்தால்‌ எப்படியிருப்போம்‌?2’* எனலும்‌ அவர்கள்‌ பதிலுக்கு அவளிடம்‌
கூறினர்‌. “நங்காய்‌ அன்று நீ இல்லாமல்‌ எங்கே போய்‌ விட்டாரய்‌2”* என்றலும்‌ வியப்புடன்‌ கோதை கூறினாள்‌, V—72

“தோழியரே! முக்காலமும்‌ உணர்ந்த முனிவர்கள்‌ போலச்‌ சொல்கிறீர்கள்‌! அத்தகைய ஞானம்‌ உங்களுக்கிருந்தால்‌
சொல்லுங்கள்‌, முதலில்‌ நான்‌ யாராக இருந்தேன்‌?“ எனவும்‌, அவர்கள்‌ மீண்டும்‌ இவ்விதப்‌ கூறலானார்கள்‌, V—73

“சம்மலர்க்‌ கண்ணினாய்‌! வானுலகப்‌ (பாரிவிதப்‌) பூவை சக்களத்தி (ருக்மணி)யிடம்‌ தந்ததைக்‌ கண்டு, பொறுக்காமல்‌,
சிறிய செய்தியைப்‌ பெரியதாக்க, சினமும்‌ பொறாமையும்‌ கொண்டு, பூவோடு போகாமல்‌ மரத்தையே கொண்டு வருமாறு
கணவனை ஏவி, மருந்தென மரமே கொண்டு வருமாறு போலகெடுவைத்துத்‌ தருவித்த அப்போதைய சத்தியயாமையல்லவா நீ்‌ *
(மருந்து கொண்டு வரச்சொல்லின்‌ மரத்தையே கொண்டு வருமாறு என்பது பழமொழி. அனுமன்‌ மருந்துக்காக
மலையையே கொணர்ந்தது போல என்பது குறிப்பு. செம்மலர்க்‌ கண்ணினாய்‌! என்பதில்‌ சனந்ததால்‌ (செம்மை படர்ந்த கண்‌
என்று குறிப்பால்‌ சத்திய பாமையே நீ என்ற கருத்தை விளக்கும்‌)V—74

திடீரென (உடனை) உதித்த ஞானம்‌ உடையவளாய்‌, வீட்டில்‌ விளக்கேற்றியதும்‌ வீட்டிலுள்ள பொருள்கள்‌ எல்லாம்‌
உடனே புலப்படுவது போல, முற்‌ பிறவியில்‌ கண்ணனோடு விளையாடிக்‌ கவித்த இனிய அனுபவங்கள்‌ அப்போது துய்த்தாற்‌
போலத்‌ தோன்றவும்‌, V—75

பரந்த கண்களில்‌ தோன்றிய கண்ணீர்‌, (கண்ணீல்‌ கட்டிய)மையோடு கலந்து, செவித்துளையில்‌ நிறைந்து, அருகிலுள்ள
கூந்தலுக்குத்‌ தாய்ப்‌ போலப்‌ பேணவும்‌ ஏலவள்ளி போன்ற தன்‌மேனியில்‌ பூ மொட்டுகள்‌ போலப்‌ புளகமுற்று, தளர்ந்த
மேனியளாய்‌, மயங்கிவிழவும்‌, தோழியர்‌ கண்டு மனம்‌ பதைத்து ஆ/ என்றலறியபடி. அன்போடு அருகணைந்தளர்‌.
(கண்ணீர்‌ கருமையினால்‌ கருங்குழலுக்கு மேலும்‌ வண்ணம்‌ பூச, தாய்போலப்‌ பேணியது என்பது குறிப்பு) 77-76

“தாமரைக்‌ கண்ணினாளின்‌ செயல்கள்‌ எந்த அளவுக்குக்‌ கொண்டு போய்‌ விட்டது பார்த்தீர்களா? அதோடு நிற்காது
இவளது முற்பிறவியைப்‌ பற்றிய செய்திகளைக்‌ கூறி நகத்‌தளவினை மலையளவாக்கி (கடுகனைமலையாக்கி) விட்டோம்‌.
என்று கூறி குவளையுமிழ்ந்த நீரோடு பனைமடல்‌ வீசிறியோடு விசிறி மென்மையான பனித்துளிகள்‌ பெய்து ஆற்றுவிக்கவும்‌,77

உணர்வு வரவும்‌, கண்‌ திறந்து, மீண்டும்‌ தாமரைக்‌ கண்‌களையுடைய கோதை, கண்ணனின்‌ திருவடிகளை ‘ நினைந்து
அசைவற்று, கண்களை மூடி, மீண்டும்‌ கண்ணீர்‌ நிறைந்து இமைகளைத்‌ தள்ளி கண்‌ திறந்து பார்த்துத்‌ தோழியரிடம்‌ கூறினாள்‌. V—78

நீங்கள்‌ யார்‌” எனலும்‌’? அழகிய நங்காய்‌, நாங்கள்‌ நாகக்கன்னியரி, முன்பே பூலோகத்திற்கு வந்தோம்‌’” என்றனர்‌
எனலும்‌ அந்‌ நங்கையரைத்‌ தழுவிக்கொண்டு ஆர்வமுடன்‌ கூறினாள்‌. V—79

“அத்தகைய முராரி (கண்ணன்‌)க்கு அப்போது காதலியாக இருந்து, பின்‌ இக்‌ கலிகாலத்தில்‌ மீண்டும்‌ பிறந்து பிரிவுத்துயரில்‌ வருந்தும்‌ இந்த உடல்‌ எதற்காக? இத்தகைய என்னை எனது தந்தை இன்னொருவனுக்குத்‌ தருவதற்கு முன்பே யோகசக்தி யால்‌ உடலை மாய்த்துக்‌ கொள்கிறேன்‌! மீண்டும்‌ கண்ணனின்‌ பாத தாமரைகளைப்‌ பற்றுவேன்‌” “, V—80

எவள்‌ காதலனைப்‌ பிரியும்‌ துயரினுக்குஞ்சி உடனே உடலைத்‌ துறப்பாளோ, அவளது மனமே தசுரயபக்தியுடைய
தாகும்‌. மற்றதெல்லாம்‌ வஞ்சக முடையதுதான்‌. 8)

என்று (கோத) கூறவும்‌, அவர்கள்‌ கூறினர்‌. “ அந்தக்‌ கண்ணன்‌ எங்கேபோய்விட்டான்‌?”” கேள்‌; இருவரங்கத்தில்தான்‌
அருக்கிறான்‌! விரைவெதற்கு? அவனே உன்‌ கணவளாவதற்கு அர்ச்சனைகள்‌ முதலியவற்றால்‌, இந்த (திருவில்லிபுத்தார்‌)
ஊரிலுள்ள ஆரி (வடபெருங்கோயிலுடையான்‌)யினைப்‌ பூசிப்பாயாக!’ * V—82

*அஞ்சேல்‌” எனவும்‌, மனம்‌ தெளிந்தாள்‌. பின்‌, அதிலிருந்து, அடிக்கடி தோழியர்‌ கூறும்‌ தெளிவுரைகளாகிய வெண்
(முத்துக்களும்‌, கவலைகளாகய ௧௫ (*லமணி)களும்‌ சுலந்து நகையணியாதக மெலிவுற்ற அவள்‌ இதயத்தில்‌ இடை இடை
மணிகோத்த பன்னசரம்போல இருந்தது.
(தெளிவுரைகள்‌ முத்துக்கள்‌, கவலை நீலமணிகளாக, இதயத்தில்‌ பிரதிபலித்தது என்பது கருத்து) V—83

காத்திருந்து எப்போதும்‌ சுண்ணுறங்கவிடாமல்‌, மன்மதண்டி சண்டைக்‌ கிழுத்தவாறிருக்க, வெண்ணிற (வளர்பிறை) கருநிற
(தேய்பிறை) இரவுகளாகிய முள்ளம்‌ பன்றியின்‌ முள்‌ வீட்டில்‌ வைத்தாற்போல மதிமுகத்திளளுக்காயிற்று,
(முள்ளம்‌ பன்றி முள்‌ வீட்டில்‌ இருந்தால்‌ கலகம்‌ வரும்‌ என்பது ஐ.கம்‌. அந்த முள்‌ கருப்பும்‌ வெளுப்பும்‌ ஆமாறு போல
வளர்பிறை தேய்பிறைகளாகய இரவுகள்‌ முள்போல குத்தவைத்து மன்மதன்‌ போரிட்டான்‌ என்பது கருத்து) -34

கதுளிர்களே ஆயுதமாக உடைய மன்மதனின்‌ அணையால்‌, காலை எனும்‌ பீரங்கி வீரன்‌, நங்கையின்‌ உறுதியாகிய பெருங்‌ கோட்டையை வீழ்த்த, நாள்‌ கோறும்‌ சினத்துடன்‌ மென்மை யான சூரியனின்‌ இளங்கதிராகய வத்தியின்‌ சுடர்பட்டு விரிந்த தாமரைக்‌ தண்டாகய இருப்புக்‌ குமா (பீரங்கி)யின்‌ துளை நின்று புறப்பட்ட கருவண்டுகளாகிய குண்டுகளைப்‌ பிரயோக௫ித்‌ தானி.
(மாலையில்‌ தாமரை மலருட்‌ புகுந்த கருவண்டுகள்‌ இகழ்‌ ஹடப்பட்டபின்‌, காலையில்‌ கதிர்பட விரிந்ததும்‌ இதழ்‌ விரிய வெளியேறியது. பீரங்கியிலிருந்து புறப்பட்ட இரும்புக்குண்டு களாக உவமிக்கப்பட்ட நயம்‌ பாராட்டற்பாலது) V—S85

நங்கையின்‌ உறுதியைக்‌ கெடுக்க, அருகில்‌ நடுப்பகல்‌ என்னும்‌ மந்திரவாதி, பனி நீர்த்துளிகள்‌ சிந்தும்‌ இல்லத்தில்‌ காவித்‌ துகில்‌ போரீத்த மாலையை விதானத்தின்‌ கீழ்‌ அமர்ந்து குடயற்திர ஏற்றம்‌ ஆகிய உருட்டினான்‌,
(குடங்களைச்‌ சச்கரத்தில்‌ கட்டி ஏற்றமாக இறைக்க ஒன்று கீழே நீர்‌ மொண்டு கொண்டும்‌ ஒன்று மேலே நீரைச்‌ இந்திக்‌ கொண்டும்‌ இருக்கும்‌ வகையிலமைந்த கமலையாகும்‌. இது இன்றும்‌ வடநாட்டில்‌ கிணற்றில்‌ நீர்‌ இறைக்கப்‌ பயன்படுத்தக்‌ காணலாம்‌. இது ஜபமாலை உருட்டுவதாக உவமிச்கப்பட்டது. பிறரை அழிக்க *அபிசாரஹோமம்‌” செய்வது போல நங்கையின்‌ உறுதியைக்‌ குலைக்க, நடுப்பகல்‌ முயன்றது என்பது கருத்து)1/..-660

தாமரை கேள்வனாகிய சூரியனாகய முகமுடையதும்‌ மல்லிகை மலர்கள்‌ ஆகிய பல்லினையுடையதும்‌, குவளை மலர்ப்‌ ந்தாதாகிய மேனி வண்ணமுடையதும்‌, தேன்வண்ணத்தாரகை களாகிய கண்களையுடையதும்‌ ஆகாய மரத்தில்‌ திரியும்‌ மாலை யாகிய பெண்‌ குரங்கு குட்டிகளாகய சக்கரவாகங்களின்‌ இச்சுக்‌ குரலோடு கூடியதாக–அந்த நங்கையின்‌ கவலையா இரவு களில்‌ (கனவில்‌) தோன்றி வருத்தியது.
(கனவில்‌ குரங்கு தென்படுவது  என்பது ஐதீகம்‌ மாலையே குரங்காகக்‌ காணப்பட்டதாகச்‌ கற்பனை) 37-67

இவ்விதம்‌ காலை, நடுப்பகல்‌, மாலை ஆய வேளைகளிலும்‌ வருந்தி, அற்ற மாட்டாது. அற்நங்கை, அங்கிருக்கும்‌ திருமாலை ண்டும்‌ அடைய மனளத்துட்கறாதினாள்‌. V— 88

தாமரை முகத்தினளளாகிய கோதை, தினந்தோறும்‌ விடியற்‌ காலையில்‌ மெளனமாகக்‌ கடவுளை வணங்கி எழுந்து, தோழியர்‌
தங்கப்பாத்திரத்தில்‌ மஞ்சளும்‌, நெல்லிக்காய்‌ முதலியவையும்‌ குளித்தற்குரிய பொருட்களைத்‌ தரவும்‌, துவைத்த துகிலும்‌,
கூந்தல்‌ உலார்த்தத்‌ துணியும்‌ எடுத்துக்‌ கொண்டுபோய்‌, வீட்டருகிலுள்ள தோட்டக்கிணற்றிற்குச்‌’ சென்று இவ்விய பிரபந்தப்‌
பாடலைப்‌ பாடியவாறு குளித்தெழுந்து, மஞ்சள்‌ பூசிய எழில்‌ மேனி அசைவின்‌ ஒளி வீச்சுகள்‌, இளங்கதிர்‌ வெயிலுக்கு மாறு
கொள்ள, (போட்டிடபோட) நீண்ட கூந்தலைப்‌ பின்னுக்கு முடித்து விரைந்து ஈரம்புலர்த்தி நியமப்படியே V—89

முல்லை முகை வென்ற பல்லினளாகிய கோதை, நெற்றியில்‌ பூசணிவிதை போல திருமண்‌ (நாமக்கட்டி) திலகம்‌ நீட்டி
யானையின்‌ மத்தகத்தில்‌ சிந்தாரம்‌ போல நிதம்பங்களில்‌ செவ்‌ வண்ணப்‌ பட்டாடையுடுத்தி இருந்தாள்‌. குளிர்ந்த இரவில்‌ பூசிய
புனுகன்‌ மணத்திற்கு வண்டுகள்‌ வந்து விருந்தயர கூந்தல்‌ ஈரம்‌ மணம்‌ பரப்பிட V—90

கோயிலுக்குச்‌ சென்று, தான்‌ கட்டிய செங்கழுநீர்‌ பூமாலையும்‌, மரத்தில்‌ பழுத்த கதலிப்‌ பழக்குலையும்‌ கொண்டு
சென்று, நம்பி (பூசாரி) மக்களை விலக்கி வழி செய்யப்போந்து, திருமாலை வணங்கி வழிபட்டு, கருவறைத்‌ திண்ணையில்‌ பல்‌
வண்ணக்‌ கோலமிட்டு 4.91

காராம்பசுவின்‌ நெய்‌ பெய்த பெரிய விளக்கில்‌ சுடரேற்றி துவய மந்திரத்தை உச்சரித்தவாறு திருமார்பிற்‌ சாற்றி, அகில்‌
புகையிட்டு, சர்க்கரை, நெய்‌ கலந்த வாழைப்பழத்தை நைவேத்தியம்‌(படையல்‌) சமர்ப்பித்து. V—92
* அதுகாலையில தாமமை மலபாதாதலின செங்கமுநீர்ப்‌ பூமாலை கொண்டு சென்றாள்

நறுக்கிய பாக்கும்‌, இஞ்சித்‌ துண்டுகளும்‌, கற்பூரத்‌ தண்டுகளும்‌ கலந்த தாம்பூலம்‌ (வெற்றிலை) மிகுந்த பக்கியுடன்‌
சமர்ப்பித்து, தோழிகளுடன்‌ புறப்பட்டு V—93

நங்கை, கருப்பகிரகத்தைப்‌ பிரதட்சினம்‌ செய்து (வலம்‌ வந்து) வணங்கி தலையில்‌ சடகோபம்‌ (சடாரி) தரித்து, சரண
இர்த்தம்‌ பெற்றுக்‌ கொண்டு, பிரசாதமாகக்‌ இடைத்த பூமாலையை அணிற்து கொண்டு, இல்லத்திற்குச்‌ செல்வாள்‌. V—94

அச்சுதன்‌ (வடபெருங்கோயிலுடையான்‌) திருவடிகளைத்‌ தினந்தோறும்‌ பூசை செய்து வந்து, பிரிவாற்றாமையாலே உறுதி
யிழந்தவளாகி, அப்பெருமானின்‌ குணங்களை தமிழ்‌ மொழியில்‌ (த்ரவிடபாஷன்‌) பாடிக்‌ கொண்டிருப்பாள்‌. V—95

இளவேனில்‌ ஏற்கனவே சூடி. கொடுத்தவளின்‌ (அமுக்க மால்யத) காதல்‌ வெம்மையாகிய கதிரவனால்‌ சுட்டெரிக்கப்பட்டு வெப்‌
புற்ற தென்திசையை எனது சூடும்‌ கூடினால்‌ முழுவது?ம கரிந்துவிடுமென்று விலகிக்கொண்டானோ எனுமாறு வடதிசை
நோக்கிக்‌ கதிரவன்‌ புறப்பட்டான்‌.
(தட்சிணாயனம்‌ விட்டு உத்தராயணம்‌ நோக்கி (மகர சங்கி ராந்தியன்று) சூரியன்‌ வடக்கு முகமாகப்‌ புறப்படுதல்‌ இயல்பு) V—S6

கொடுங்கதர்களையுடைய கதிரவன்‌ அப்போது குபேரனின்‌ (வடக்குத்‌) இசைக்குத்‌ சென்றதன்‌ காரணம்‌, தெரிந்துவிட்டது.
நங்கையின்‌ தாங்கரிய வீரகதாபத்தின்‌ தீச்சுட்ட தென்இசையில்‌ இருந்ததால்‌ உண்டான தன்‌ மேனிச்‌ சூட்டினைத்‌ தணிக்க
வேண்டி, சனவுருவடைந்த தண்ணீராகிய சிவபிரானின்‌ மாம னாகிய இமயமலைச்‌ சாரலில்‌ குனிர்மையுற்று உய்வதற்காகத்‌தான்‌. V—97

மன்மதன்‌ சினற்து (விரகமுற்ற நங்கையரீமேல்‌, படை எடுத்து வரும்போது அவன்‌ கொடியில்‌ உள்ள மீன்‌ (மீன ராசி) வருவது சரிதான்‌. மேடம்‌ (ஆடு) (மேஷ ராசி) எதற்காக, வநீதது என்று கூறுவானேன்‌? தலைவனைப்‌ பிரிந்து வாடும்‌ நஙிகையரின்‌ வருத்தும்‌ தீ (அக்னி) வரும்போது அதன்‌ வாகனமும்‌ (ஆடு) வராமல்‌ இருக்குமாச்‌(உத்தராயணத்தில்‌ சூரியன்‌ மீனராசி, மேடராூிகளில்‌ சஞ்சறித்‌ தலைக்‌ குறிப்பிடப்பட்டுள்ளது) V—98

காதலரை இறுகத்‌ தழுவுதல்‌ இனிமேல்‌ அவ்வளவாக (வசந்த காலம்‌ வருவதால்‌) இராது என்று குளிர்‌ காலத்திலேயே பயந்து உதடுகளை நக்கிய நங்கையர்கள்‌ முன்‌, வசந்த பருவம்‌ விரைந்து வந்தது, குளிர்‌ தீர்ந்து முன்னைய நிலைமைகளைத்‌ துறந்தகர்‌,
ஆபத்துக்‌ சகாரலத்தில்‌ தைரியமாக இருக்க வேண்டும்‌ என்ற மூதுரை பொருத்தமேயல்லவா?
(உதடுகளை நாக்கால்‌ நக்குதல்‌ பயத்தாலும்‌ ஏற்படும்‌ குளிர்‌காலத்தில்‌ பனியால்‌ உதடுகள்‌ பிளவுறுவதாலும்‌ ஏற்படும்‌. இவ்‌
விரண்டினையும்‌ இலக்கணையாலும்‌ சிலேடையாகவும்‌ உணர்த்தப்‌ பட்டுள்ளது. நங்கையார்‌ பயந்தபடியே வசந்தகாலம்‌ வந்தாலும்‌
உறுதியோடு சமாளித்துக்‌ கொண்டனர்‌ என்பது கருத்து) 14-99

பல காயங்களை (உதடுகளில்‌) உண்டாக்கிய குளிர்காலத்தில்‌ தாம்‌ எச்சிற்படத்திய தேனையே உண்ட தேனீக்களின்‌ எச்சி
லாகிய மெழுகினை (தம்‌ உதடுகளில்‌) பூசியதால்‌ ஏற்பட்ட அவமானத்தை இந்த வசந்தம்‌ இர்த்தது என்ற நன்றிப்‌ பெருக்‌
கால்‌ அந்நங்கையர்‌ஜ இலவேனிலானுக்கு ஓய்வளிதீது தாமே பூக்கள்‌ மலர ஊக்கமூட்டும்‌ (தோகத) செயல்கள்‌ செய்தார்கள்‌.
(உதட்டுப்‌ பிளவுக்குத்‌ தேன்‌ மெழுகினைப்‌ பூசுதல்‌ மரபு. அதனால்‌ பெண்கள்‌ இழிவுற்றனராம்‌. அதைத்‌ தவிர்தசது
இளவேனில்‌. ஆதலால்‌ நன்றியுடன்‌ வசந்தனின்‌ வேலைகளில்‌தாமும்‌ பங்கு கொண்டு வேலைப்‌ பளுவைக்‌ குறைத்தனராம்‌,
உதைத்தலால்‌ அசோகு, உமிழ்தலால்‌ மகிழும்‌, டார்த்தலால்‌ மாவும்‌ தளிரித்துப்‌ பூக்கும்‌ என்பது வடமொழி இலக்கிய ட்டம்‌–5-100

ஏற்கனவே சந்திரனின்‌ பலத்தோடு (கஇிரககஇியால்‌ சந்திரபலம்‌) மலய மலையின்‌ மணம்படு இளங்காற்று எனும்‌ தேரில்‌,
ஏறிவரும்‌ மன்மதனுக்கு, கதிரவன்‌ கூட புதிதாகத்‌ துணை நின்றான்‌. பிரிந்த தலைவியரின்‌ உயிர்கவர நினைக்கும்‌ விதியின்‌
செயல்‌ நிறைவேறாமல்‌ போகுமா? 5-.10]

சூடாமணிப்‌ பாடலும்‌ இக்கருத்தைக்‌ கூறும்‌. — ஏடவிழ்‌ ம௫ழ்சுவைக்க எழிற்பாலை நண்புகூடப்‌
பாடலம்‌ நிந்திக்கத்‌ தேம்படிமுல்லை நகைக்கப்‌ புன்னை ஆட, நீள்குரா அணைக்க, அசோகுதைத்திட வாசத்தி
பாட மாப்பார்க்க வார்சண்பக நிழற்படத்‌ தளிர்க்கும்‌ சூடாமணி நிகண்டு 12-109

மலய (பொதிகைமலைச்‌) சாரலில்‌ தவக்குடியில்‌ வாழும்‌ குடமுனியினிடம்‌ பணிவிடை புரிந்து கற்றாளனோ எனுமாறு
தென்றல்‌ காற்று மெதுவாகத்‌ தவழ்ந்து பனிக்கடலைப்‌ பருகியது.
(குடமுனி (அசத்தியன்‌) கடலைக்‌ குடித்த கதை பிர௫த்தம்‌. அவனிடம்‌ கந்றுதனால்‌ குளிர்கடலைக்‌ குடித்துக்‌ குளிர்மை
யூ.ற்‌.றதென்பது கருத்து), V—102

பொதிகைச்‌ சந்தன மரத்தின்‌ பரிமளச்‌ சிறப்பினை மற்றுள்ள எல்லா மரங்கட்கும்‌ உருவாக்க வேண்டுமென்றுதான்‌ போலும்‌
மலரீவிக்கும்‌ சாக்கில்‌ மணமுண்டாக்கியது எனுமாறு அங்கு தென்றல்‌ வீசியது. ்‌ Y—103

இரவிக்கையவிழ்த்து, ஒருக்களித்துக்‌ காதலரைத்தழுவியவாறு தமது செறிமுலைகள்‌ அவர்களது மார்பில்‌ ஒற்றப்படுத்திருந்த
காதலியர்‌, சிறிது நேரம்‌ கழித்து வியர்வை படிந்ததென ஐயுற்று விடியலில்‌ இலுப்பைப்‌ பூக்களை மலரச்‌ செய்து வரும்‌ தென்றற்‌
காற்று வீசவும்‌, கொசுவலையை மேலே எடுத்துக்‌ கட்டினார்கள்‌. வெம்மை மிகவே இரும்படுப்பின்‌ கணப்பினைத்‌ தூண்டாமல்‌
விட்டு விட்டனர்‌. V—10

செங்கதிர்களையுடைய கதிரவன்‌, பனிக்கர்லம்‌ எனும்‌ இரவில்‌ மெலிந்து மறைந்து, இளவேனிற்காலமாகிய பகலின்‌
விடியலில்‌ எழுந்து, மங்கையரின்‌ கொங்கைகளிற்‌ பூச்சாக இட்ட குங்குமமாகிய செம்மையை (முன்‌ ஒப்படைத்த பொருளை
மீண்டும்‌) பெற்றுக்‌ கொண்டான்‌. இல்லாவிட்டால்‌ காலக்கணித மறியும்‌ கோழி (குயில்‌)யின்‌ குரல்‌, புலர்ந்த மகளிரின்‌ செவிகட்கு
இடியாகத்‌ தோன்றுமா?
(பனிக்காலம்‌ (ஹேமந்த சிசிரருதுக்கள்‌) இரவாகும்‌. வசந்தம்‌ பகல்‌, பசுலில்‌ எழுந்த சூரியன்‌ செம்மை ஏற்றான்‌. அது
முன்பே பெண்களின்‌ முலைக்குவட்டில்‌ பூசிய குங்குமமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது, சூரியன்‌ இரவில்‌ தன்‌ சூட்டினை
அக்னியிடம்‌ தருவான்‌. மறுநாள்‌ பெறுவான்‌ என்பது மரபு.
இங்கு அக்னிகை எனும்‌ குங்குமப்பூ அகீனியாகும்‌, அதனிடம்‌ செம்மையுளது, முலையில்‌ வெம்மையும்‌ குஙிகுமச்‌ செம்மையும்‌
இருத்தலின்‌ சூரியன்‌ ஒப்படைத்ததாகக்‌ கற்பனை செய்யப்‌ பட்டது. விடிந்ததும்‌ கோழி கூவும்‌. அதுபோல வசந்தமாகிய
விடியலில்‌ கோழி போலக்‌ காலக்‌ சுணிதமறிந்து வசந்தத்தில்‌ கூவும்‌ குயிலின்‌ குரலிசையும்‌ அமைந்தது. புலவி கொண்ட மகளிர்‌
கோழியின்‌ குரல்‌ கேட்டதும்‌ இடி முழக்கம்போல பொழுது வீணே கழிந்ததே விடிந்து விட்டதே என்று வருத்தம்‌ செய்வது போல,
குயிலின்‌ இசையும்‌ பிரிந்த தலைவியரை வருத்தமுறச்‌ செய்யும்‌.பருவஙிகளை ஒரே நாளாகக்‌ கற்பனை செய்யப்பட்டது) v—105

கஸ்‌.தூரிப்‌ பூச்சை விடுத்து சந்தனம்‌ பூசினர்‌. முலையிணை களில்‌ முத்துமாலை அணிந்தனர்‌, செருகிய சரப்பூமா லையில்‌ ஒரு நன்னாறிவேரினை ஏற்றுக்‌ கொண்டார்கள்‌.
(இளவேனிற்‌ தொடக்கமாதலின்‌ சம சீதோஷ்ணமான பொருள்களை ஏற்றனர்‌ என்பது கருத்து), V—106

பெண்‌ பாம்புகளின்‌ அமுத ரச இதழிலிருந்‌ தூறிய வாய்‌ மணத்தால்‌ இனிமையுடையதாகியும்‌, நயந்த காதலராகிய ஆண்‌ பாம்புகளின்‌ நச்சுப்‌ பற்களின்‌ வெம்மை படிந்த காரமுடியதாரஅ யும்‌ கலந்து சந்தனப்‌ பொதிகைத்‌ தென்றல்‌, புறப்பட்டு வீசுவதால்‌ மரங்களில்‌ வற்றலாகி (இலைகள்‌ உதிர்தலும்‌)யும்‌ தளிர்கள்‌ தளிர்த்தும்‌ இருகுணங்களையும்‌ கொண்டதாக இருந்தது.
(ஆண்‌ பாம்பின்‌ நச்சுக்காற்றால்‌ மரங்களில்‌ இலைகள்‌ உதிர்‌தலும்‌, பெண்‌ பாம்பின்‌ அமுதக்‌ காற்றால்‌ தளிர்கள்‌ தலிர்த்தலும்‌
ஆகிய இரு பண்புகளையும்‌ கொண்டதாகத்‌ தென்றல்‌ காற்று வீசியது). V—107

சந்தன (பொதிகை) மலையிலிருந்து திரியும்‌ மெல்லிய தென்றற்காற்று, பழுத்த மரஞ்‌ செடி கொடிகளிலிருந்து காம்‌
புதிர்ந்து வீழ்ந்த இலை (சருகு)கள்‌–தாமரைப்‌ பொகுட்டில்‌ உடையதும்‌, முறித்த மஞ்சட்‌ காம்பினுடையதுமான மஞ்சள்‌
வண்ணமுடைய தங்கச்‌ சக்கரங்கள்‌ (ஆடப்‌ பொலியும்‌ தேரில்‌ கிறு கிறு என்ற ஒலியுடன்‌ செல்வதால்‌ மன்மதனின்‌ தேர்‌ என்பது
உண்மை எனத்‌ தெரிந்தது.
(தென்றல்‌ மன்மதனின்‌ தேர்‌ என்பது சுவி மரபு, மன்மதன்‌ திருமகளின்‌ மகன்‌ அல்லவா? தங்கத்தேராகத்‌ தானே இருக்க
வேண்டும்‌. தங்கத்தேரின்‌ தங்கச்‌ சக்கிரங்களே உதிர்ந்த மஞ்சள்‌ இலைகள்‌ என்பது கற்பனை) V—108

அதன்பிறகு V—109

பூமி என்னும்‌ பிடி (பயானை)யின்‌ மேல்போரீத்திய சப்புக்‌ கம்பளமாகவும்‌, பெருங்காடு எனும்‌ நங்கையின்‌ மதுமாதம்‌
(வசந்தம்‌) எனும்‌ மதுவுண்டதால்‌ ஏற்பட்ட செம்மையாகவும்‌, கொடிகள்‌ என்னும்‌ பாம்புகளின்‌ நாக்காகவும்‌, மரங்கள்‌ எனும்‌
கருடனின்‌ இறகாசவும்‌, செய்குன்றமாகிய மேகத்தின்‌ படிந்த வாள வில்லாகவும்‌,
புதிதாக வந்த தும்பிகள்‌ எனும்‌ விருந்தாளிகளை அழைக்கும்‌ மங்கள (அட்சதை) மஞ்சளரிசியாகவும்‌, காகத்திடமிருந்து பிரிந்த
குயில்களின்‌ பிரிவுப்‌, பத்திரிக்கைகளாகவும்‌, மாலதி (சாதிமல்லிகை)யை அச்சுறுத்தும்‌ நோயான பச்சை இரத்தமும்‌, வன
தேவதைகள்‌ பூசிய குங்குமமாகவும்‌, தென்றல்‌ காற்று எனும்‌ சாணையிற்பிடித்ததால்‌ உராய்ந்து பழுத்த இலைகள்‌ எனும்‌
மேற்‌ செதில்கள்‌ உதிர்ந்து, ஒளி வீசும்‌ பதுராகம்‌ (செம்மணி) ஆகவும்‌, தளிர்கள்‌ எங்கும்‌ தளிர்த்திருந்தன . V—110

முல்லைப்‌ பூக்கள்‌ அம்பறாத்‌ தூணியில்‌ தீர்ந்துவிட்டன மன்மதனை இச்சமயத்தில்‌ வெல்லலாம்‌ எனக்‌ கருதிய
பெரியோர்கள்‌, கொடிய பலிகள்‌ தரும்‌ நாட்களான தேய்பிறைஇரவில்‌ (சிவராத்திரியில்‌ மன்மதன்‌ பகைவனான சிவனை
வணங்கியும்‌, தளிர்கள்‌ எனும்‌ பட்டாக்கத்தியால்‌ அடிக்கப்‌ பட்டார்கள்‌.
(மன்மதனுக்கு மலரம்புகளில்‌ மாசி மாதம்‌ மிகுதியும்‌ பூக்கும்‌முல்லைப்‌ பூக்கள்‌ சித்திரை மாதத்தில்‌ தீர்ந்துவிட்டதால்‌, அவன்‌
தூணியில்‌ முல்லைகள்‌ இல்லை. இதுதான்‌ சமயம்‌ என்று மன்மதனை வெல்ல பெரியோர்கள்‌ முயன்றனர்‌. மன்மதனின்‌
பகைவன்‌ சிவன்‌ ஆதலின்‌ வழிபட்டனர்‌. எனினும்‌ மன்மதன்‌ அம்புகள்‌ இல்லாவிட்டாலும்‌ தளிர்கள்‌ எனும்‌ கத்தியால்‌ அவர்‌
களை வீழ்த்தினான்‌. என்பது கருத்து) 111

பூமியில்‌ அப்போது புதிதாகப்‌ பிறந்த மன்மதன்‌ எனும்‌ குழந்தைகளுக்கு, வசந்த காலம்‌ எனும்‌ மருத்துவச்சி கொப்பூம்க்‌
கோடியறுத்த பண்ணரிவாள்‌ போன்ற புரசம்‌ பூமொட்டுகள்‌, பிரிந்திருப்பவர்களின்‌, நெஞ்சங்களையும்‌ அரிந்தன. 4.12

(பிரசவம்‌ பார்க்கும்‌ மருத்துவச்‌ வசந்த காலம்‌, புதிதாகப்‌ பிறந்த குழந்தையே மன்மதன்‌. கொப்பூழ்‌ கொடியறுத்த பண்ணிரிவாள்‌ புரசமொட்டு. புரசமொட்டு பண்ணரிவாள்‌ போல வளைந்திருக்கும்‌ கொப்பழ்‌ அறுத்ததால்‌ இரத்தம்‌ படிந்து சிவந்தாற்போல புரசம்‌ பூக்கள்‌ சிவந்திருக்கும்‌)
பிற எல்லா மலர்களும்‌ நங்கையரின்‌ கூந்தலில்‌ இருப்ப (மணமின்மையின்‌) தான்‌, மட்டும்‌ அப்படி இருக்க முடிய வில்லையே என்ற நாணத்தால்‌ வணங்கிளாற்‌ போல வளைந்‌ திருந்த, புரசமொட்டுகள்‌ எனினும்‌, காதலா்‌ (பீய்ச்சுங்‌) குழலில்‌ (புரச மலரை அரைத்துக்‌) கரைத்துத்‌ தெளித்தலால்‌ நங்கையரின்‌ கொங்கைகளில்‌ சிறிது நேரமேனும்‌ மெய்ப்பூச்சாக இருக்கும்‌ பாக்கியம்‌ இடைத்ததே என்ற பெருமிதத்தில்‌ மக௫ழ்ந்ததவோ எனுமாறு சிவந்து மலர்ந்து எழில்‌ பெற்றன.
(புரசமுூகை, நாணத்தால்‌ வளைந்தாலும்‌, வசந்தகாலத்தில்‌ (காமன்‌ பண்டிகையில்‌) செவ்வண்ண நீருக்காக புரசமலர்சளை அரைத்து நீரிற்‌ கலந்து பீய்ச்சாங்குமலால்‌ தெளிப்பார்‌, ஆதலின்‌ கொங்கையிற்‌ படிந்து, அதிக நேரம்‌ கூந்தலில்‌ இருப்பதைளி ட சிறிது நேரம்‌ கொங்கசையில்‌ இருப்பது சிறப்பெனக்‌ கருதி மகிழ்ந்து மலர்ந்தன என்பது கருத்து) V—113

தென்றல்‌ காற்றானது, சந்தனப்‌ பொதிகை மலைக்‌ காடு களின்‌ மரங்களின்‌ மணத்தில்‌ தோய்த்து, தாமிரபரணியில்‌
கிடைத்த முத்துக்களாகிய விதைகளை திறமையுடன்‌, கை விதைப்பாக விதைத்திட முளைத்தது போலும்‌, இல்லாவிட்டால்‌
இத்த (வசந்த சால) மலர்களுக்கு உருவெழிலும்‌ நன்‌ மணமும்‌, எவ்விதம்‌ கிட்டும்‌ எனுமாறு புதுமலர்கள்‌ தோன றின,
(விதைத்தல்‌ இருவகை, கைவிதைப்‌ பாக கைப்பிடியில்‌ எடுத்து எறிந்து விதைத்தல்‌ ஒருவகை. கருவியில்‌ விதைகளைப்‌
பெய்து துளை வழியாக ஒவ்வொன்றாக வீழச்‌ செய்வது ஒரு வகை. கைவிதைப்பு சிறப்பென்பர்‌, தென்றல்‌, முத்துக்களை
சந்தன மனத்தில்‌ தோய்த்து விதைத்ததாக கற்பனை செய்யப்‌ பட்டது) v—114

கொடிகளையும்‌ மரங்களையும்‌ இரட்டையராக (தம்பதியராக) இணைவிக்க, மன்மதன்‌ (அம்பினை) எய்யவும்‌. அது
துளைத்து (இப்புறமிருந்து அப்புறத்திற்கு) ஊடுருவி, பசு வண்ணமுடைய  மேற்தோல்‌ சிதைய முளைத்த அம்பின்‌ முனைகளோ
எனுமாறு மொட்டுக்கள்‌ தோன்றின. v—115

வனலட்சுமி எனும்‌ திருமகள்‌, தன்‌ வயிறரகிய நிலத்தில்‌ பிறந்த மரங்கள்‌ எனும்‌ குழந்தைகள்‌ தளிர்களால்‌ செவ்வண்ணம்‌
கொண்டிருப்ப, அவை வளரவும்‌ மொட்டுக்கள்‌ ஆகிய பற்கள்‌ முளைக்கவும்‌, இனி மாதவன்‌ (வசந்தன்‌) ஆகிய காதலனைக்‌
கலந்தின்புறலாம்‌ என மஒழ்ச்சியாற்‌ பொங்கினாள்‌.
(குழந்தைகள்‌ பிறக்கும்போது டுயல்பாக செம்மையாக இருப்பார்‌. அதுபோல தளிர்‌ வண்ணச்‌ செம்மையால்‌ மரங்கள்‌
பிறந்த குழந்தைகள்‌ போன்றன. பின குழந்தைகள்‌ வளரவும்‌ பற்கள்‌ தோன்றும்‌, அது? பால மரஙிகளில்‌ மொட்டுக்கள்‌ பற்கள்‌
போலத்‌ தோன்றின. பிரசவித்த பெண்டிர்‌, தமது குழந்தை களுக்கு பற்கள்‌ முளைத்த பிறகு மீண்டும்‌ புணர்ச்சிக்குத்‌ தகுதி பெறுகின்றனர்‌ என்பது மரபு, ஆதலின்‌ வனலம்சுமியாகிய திருமகள்‌, மரக்குழந்தைகட்கு மொட்டாகிய பற்கள்‌ வரவே இனி மாதவனைக்‌ சகுலநிதின்புறலாம்‌ என மகிழ்ந்தாள்‌ எனுமாறு
வசந்த கால எமில்‌ தோன்றியது.
குழந்தைகட்கு பற்கள்‌ முளைத்ததும்‌ கலவிக்குத்‌ தாம்‌ தகுதி யுற்றோம்‌ என பெண்டிர்‌ மகழ்ந்ததாக *காதா சப்த சதிூயிலும்‌
சில பாடல்கள்‌ உள்ளன. சுருதி, ஸ்மிருதிகளிலும்‌ கூறப்‌ பட்டுள்ளது) V–116

முதலில்‌ பூக்களை ஆர்வமுடன்‌ முன்கால்களால்‌ பற்றி மூக்கன்‌ இரு துளை (தும்பிக்கை)சகளால்‌ உறிஞ்சி, பச்சை
வாசனையடிக்க3வ விடுத்து,
பருவமலரீகளின்‌ கொத்துள்ள இடத்தை ஆராய்ந்து பூம்புதர்க்கு நிரை நிரையாகச்‌ சென்று, நுழைந்து ஒரு தும்பி,
புது மலரின்‌ முன்பே நுழைய முயன்றபோது அதனைத்‌ தள்ளி
நிலத்தில்‌ விழச்‌ செய்து, தான்‌ பூந்தேன்‌ மாந்த, இலைகளு]ர்ந்த துளையில்‌, ஊறிய பசையை (மதுவெளனமயங்கி) குடிக்க ஆசைப்‌
பட்டு, காலூன்றி கால்‌ சிக்கிக்கொள்ளவே பயந்து கூவி, எப்படிமோ, ஒரு மலர்‌ கிடைக்கவும்‌, வயிறாரக்‌ குடித்து,
அம்மலர்‌ காற்றில்‌ அசையவும்‌ தடுமாறி நிலை நிற்க,
பூந்தோட்டத்தைக்‌ காவல்‌ காக்கும்‌ கஉனியர்‌ விளையாட்டாக நகைத்தவாறு பிடிக்கவும்‌ மலரிலிருந்து கீழே விழும்‌.
(வசந்த காலப்பூக்களை நாடும்‌ ஒரு தும்பியின்‌ வருணனை இது, முதலில்‌ படிந்த பூ பக்குவமில்லாததாதலின்‌ விடுத்து, பருவமலரை நாடி, ஏற்கனவே படியும்‌ தும்பியைக்‌ கீழே ஒன்ளித்தான்‌ குடித்தது. வயிறு நிறைத்த மயக்கத்தில்‌ இருக்கும்‌ போது கன்னியர்‌ பிடித்தனர்‌) V—117

(வண்டுகளின்‌ வருணனை)
காற்று கொணர்ந்த சந்தனமலை மரப்பாம்புகளின்‌ ந்ச்சுப்‌ புகைபோலவும்‌, ௮ ) சக்கடி வீழும்‌ மன்மதனின்‌ தோர்ச்சக்கர த்தின்‌ வண்டிமை (மசகு)த்‌ துண்டுகள்‌ (கவளம்‌) போலவும்‌,
(வசந்தகாலத்தைக்‌ கண்டஞ்சி) பயந்தோடும்‌ சர (குளிர்‌) காலம்‌ (நங்கை விடுத்த (கருமை நீட்டிய) கண்ணீர்த்துளிசளோ எனுமாறும்‌,
குயிலின்‌ பஞ்சமசுத்தைப்‌ பாடற்கேற்ற சின்னஞ்சிறிய வீணை3யா எனுமாறும்‌, மழைபோன்று தேன்மமை பெய்யவும்‌ பழுத்த நாவற்கனிகளோ எனவும்‌ மமைக்காலம்‌ பாடப்பட்ட இததோளராகத்திற்‌ இசைந்து வந்த காரர்வண்ணனாகய திரு மாலின்‌ மேனி எழிலோ எனுமாறும்‌, கனவினில்‌ குறியிடம்‌ செல்லும்‌ கன்னியரின்‌ துகலினை கருவண்ணமாக்கும்‌ சித்த குளிகையோ எனுமாறும்‌ சாதிமல்லிகைப்‌ பூக்கள்‌ (பூக்காத கால மாதலின்‌) வசந்த காலத்தைப்‌ பழித்துத்‌ தூற்றிய வசைமொமி களோ எனுமாறும்‌,
நங்கையர்‌ (குளிர்காலத்தில்‌ கணப்படுப்பில்‌ வைத்த alls துண்டுகள்‌, வசந்த காலம்‌ வந்ததால்‌ இனித்‌ தேவையில்லை என்று) எறிந்ததும்‌ அக்‌ கரித்துண்டுகள்‌, வசந்தகாலமாகிய அமுத சஞ்சீவிபட்டு, மீண்டும்‌ உயிர்பெற்று தாம்‌ பிறந்த இடமாகிய மரங்களை நாடிச்‌ செல்கின்றனவோ எனுமாறும்‌ வண்டுகளின்‌ கூட்டம்‌ காட்டில்‌ அலைந்து திரிந்தன.
(இந்தோள ராகம்‌ . வசற்த காலத்‌ தொ…க்கத்தில்‌ பாடுதற்‌ குரிய பண்ணாகும்‌.
சித்த குளிகையால்‌ பிறரரியாது போகும்‌ திறன்‌ ஏற்படும்‌. களவிற்புணரக்‌ குறியிடம்‌ செல்லும்‌ கன்னியர்‌ பிறர்‌ காணா
திருக்க இரவில்‌ நீல வண்ண ஆடை அணிவர்‌. சித்த குளிகை ௧௫
நிறம்‌ ஆக இருப்பதால்‌ வண்டாக கற்பனை செய்யப்பட்டது .
புகழ்‌, வெண்மை, இகழ்கருமை என்பது கவிமறபு. சாதிமல்விகை கள்‌ சபித்தல்‌ இகம்‌ ஆதலின்‌ அவை கருமையாக உ வமிக்கப்‌
பட்டது) V—i18

இரு பிறப்பிளையுற்றும்‌ மதுசேவை விடாது சாஇதியைவிடுத்த
தேனீக்களின்‌ இசையோடு கூடிய தாலோ என்னவோ குயிலிசை யும்‌ பஞ்சமத்தையடைந்தது,
(இரு.அிறப்பு – அந்தணர்‌, பல்‌, பறவை மூன்றுக்கும்‌ துவிசர்‌ என்பதாதலின்‌, ஈண்டு வண்டு (பறவை) ஆகிய பிராமணன்‌, மது
சேவை (தேன்‌-கள்‌) யாலே சாதியை (சாதிமல்லிகைப்பூவை) விடுத்தலால்‌ பாவம்‌ செய்ததாயிற்று. அந்த வண்டோடு சேர்த
லினாலே குயில்‌ பஞ்சமத்தை (பஞ்சமம்‌ எனும்‌ சுரத்தை) அடைந்தது. பஞ்சமம்‌ என்பது பஞ்சமாபஈதகத்தை என்பதும்‌
குறிப்பிடும்‌, இவை சிலேடையாகப்‌ பொருள்பட்டன.
பிரம்ம ஹத்தி, மதுபானம்‌, இருட்டு, குருமனைவியைப்‌ புணரல்‌ இந்நான்டும்‌ மாபாதகம்‌, இத்நதுகையோரிடம்‌ சேர்வது
ஐந்தாவதாகிய பஞ்சமாபாதகம்‌ என்பது மரபு.) V—119

(மா என்ற சொல்‌, குதிரை, மாமரம்‌எனும்‌ இருபொருட்டும்‌, இச்சிலேடை. மூலம்‌ வரும்‌ கற்பனை இது.)
பூத்த மாவினை. கேடுவரும்‌ எனும்‌ ஐயத்தால்‌ மலரம்பின னுக்கு மாதவன்‌ (வ௪ந்த காலம்‌) விற்றனன்‌ அவன்‌ அதனையே
கைக்கொண்டு, பிரிந்து செல்பவர்களை வெல்லும்‌ திறமை பெற்றனன்‌. தனக்குதெய்வம்‌ அனுகூலமாகவும்‌, பிறருக்கு
மேன்மை குறையும்காலமாகவும்‌ இருந்தால்‌ கருவிகள்‌ பழுதுறினும்‌ வெற்றி பெறுவது நிச்சயம்‌ அல்லவா?
(பூத்த மா என்பது ஈண்டு நிறம்‌ வேறுபாடுற்ற குதிரை என்பது ஒரு பொருள்‌.ர்குதிரையின்‌ தோல்‌ நிறம்‌ வெளுப்புற்றால்‌
அதனால்‌ தீங்கு ஏற்படும்‌ என்பது அசுவ சாத்திரக்‌ கருத்து. பூத்த மாமரம்‌ பிரிந்தவார்கட்கு துன்பந்தருவதாகும்‌. இங்கு பூத்த
மாவாகிய குதிரையை மன்மதனுக்கு வசந்தன்‌ விற்றுவிட்டான்‌ என்றாலும்‌ மன்மதன்‌ தெய்வ அரளால்‌ அதனைக்‌ கொண்டே
வெற்றி பெற்றான்‌ என்பது கருத்து) V—120

வசந்த காலம்‌ எனும்‌ பால்‌ கறப்பவன்‌ தன்‌ ஆற்றல்‌ முழுதும்‌ காட்டி, இரவு எனும்‌ பசுவின்‌ சந்திரன்‌ எனும்‌ மடியில்‌ கறந்த
நிலவு,என்னும்‌ அமுது பரந்து, பிச்சிப்‌ (கொஜ்ஜக) பூக்களின்‌ மச ரந்தமாகிய மணம்‌ பொருந்திய நீரும்‌ கலந்து முன்னீராகப்‌
(கடலாக) பெருக்கெடுத்து இருக்கவும்‌, வண்டுகள்‌