Archive for the ‘தனி ஸ்லோக வியாக்யானம்’ Category

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த – ஸ்ரீ அபய பிரதான சாரம்–சரண்ய விரத விசேஷ பிரகாசம் என்னும் எட்டாம் அதிகாரம் -/சரண்ய சரணாகத சங்கம லாபம் என்னும் ஒன்பதாவது அதிகாரம் /பிராப்தி பிரகார ப்ரபஞ்சகம் என்னும் பத்தாவது அதிகாரம் —

September 22, 2019

ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –
பிதா மஹஸ் யாபி பிதா மஹாய
ப்ராசேத–சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய
ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —

ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

———————————–

ஸ்ரீ அபய பிரதான சாரம் —
ஸ்ரீ வால்மீகி பகவானால் திருஷ்டமாய் -இருப்பதாய் —
தாத்பர்ய லிங்கங்களை எல்லாம் பரிபூர்ணமாக உடையதாய் -இருபத்தொரு சரணாகதி வேதம்
இதில் ஸ்ரீ அபய பிரதான பிரகரணம் சர்வ ரஹஸ்ய சாரங்களையும் திரள வெளியிட்ட உபநிஷத் பாகம்
ஆறு காண்டத்திலும் சரணாகதி தர்மமே அஞ்சுறு ஆணியாகக் கோக்கப்பட்டுள்ளது
சரணாகதி ரக்ஷண தர்மமே ஸ்ரீ பெருமாளுக்கு அநுபால நீயம்

இது பத்து அதிகாரங்களை உடையது –
வேத உப ப்ரும்ஹண சா பேஷரான அல்ப ஸ்ருதர் பக்கல் இரக்கத்தாலும்-
அவர்களை பற்ற வேதங்களுக்கு உண்டான பிரதாரண பயத்தை சமிப்பிக்கைக்காகவும் —
உப ப்ரும்ஹண ரூபமான இப்பிரபந்தத்தை பிரவர்த்திப்பித்தான்
இது சர்வ சரண்ய பர தத்வ விஷயமாகவும் –
ஸர்வாதிகாரமான சரணாகதி ரூப பரம ஹித விஷயமாயும் இரண்டு வகையாய் இருக்கும் –
பரம காரணமான பர தத்துவத்தை பிரதிபாதிக்கிற வேதங்களுக்கு உப ப்ரும் ஹணம் அன்றோ இது

———

சரண்ய விரத விசேஷ பிரகாசம் என்னும் எட்டாம் அதிகாரம் –

சக்ருதேவ ப்ரபந்நாயா ஸ்லோகார்த்தம் –விபீஷனோ வா ஸ்லோகார்த்தம்

சக்ருதேவ ப்ரபந்நாயா ஸ்லோகார்த்தம் —
ஸ்ருதி ஸ்ம்ருதி சதாசார ஸ்வஸ்ய ச பிரிய மாத்மந
சம்யக் சங்கல்பஜ காம தர்ம மூலமிதம் ஸ்ம்ருதம் -யாஜ்ஞ ஸ்ம்ருதி -1-7-என்று
மஹரிஷிகள் சொன்ன தர்ம பிரமாணங்கள் ஐந்தில் நாலை அருளிச் செய்து காட்டி –
பஞ்சம தர்ம பிரமாணத்தை அருளிச் செய்கிறார் –

சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்ய ததாம் ஏதத் விரதம் மம –யுத்த -106-53–

சக்ருதேவ
மற்ற உபாயத்தில் ஆவ்ருத்தி சாஸ்த்ரார்த்தம் ஆனால் போலே காணும்
பிரபத்தியில் அநா வ்ருத்தி சாஸ்த்ரார்த்தமாய் இருக்கும் படி

ஏவ -கார்த்தாலே
நைரபேஷ்யம் சொன்னபடி

ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
என்கிற இரண்டாலே கோப்த்ருத்வ வரணமும்
ஆத்ம நிக்ஷேபமும் சொன்னபடி

ப்ரபந்நாய-என்று மாசநமுமாய்
யாசதே -என்று வாஸிகமுமாய்-என்றுமாம்

த்வயத்தில் போலே அடைவே
உபாயத்தையும்
பலத்தையும் சொல்லுகிறது ஆகவுமாம்

ப்ரபந்நாய-என்று
கோபலீ வர்த்த நியாயத்தாலே ப்ரயோஜனாந்தர பரனைச் சொல்லி
தவாஸ்மீதி ச யாசதே -என்று
அநந்ய ப்ரயோஜனனைச் சொல்லுகிறது ஆகவுமாம்

சரணம் ச ப்ரபந்நா நாம் தவாஸ் மீதி ச யாசதாம்
பிரசாதம் பித்ரு ஹந்த்ரூணாம் அபி குரவந்தி சாதவ –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -106-53-என்கிற ஸ்லோகத்திலும்
இப்படியே யசோசித விவஷையைக் கண்டு கொள்வது

சதுர்விதா பஜந்தே மாம் –ஸ்ரீ கீதை -7-16- என்கிற உபாசனம் போலே
தாவ தார்த்திஸ் ததா வாஞ்சா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-73-இத்யாதி பிரமாணங்களாலே பிரபத்தியும்
சகல பல சாதகமாய் இருக்கும்

அபயம்-என்று
சங்கோசா பாவத்தால் சர்வ பயாபாவத்தையும் சொல்லுகிறது

சர்வ பூதேப்ய -என்கிற
இத்தை பஞ்சமீ என்று சிலர் வியாக்யானம் பண்ணினார்கள்

ஸ்ரீ சோமயாஜி யாண்டான் உள்ளிட்டார் சதுர்த்தீ என்று நிர்வஹித்தார்கள்

இரண்டு பக்ஷத்திலும் உள்ள குண தோஷ தத் சமாதானங்களைத் தத் தத் கிரந்தங்களில் கண்டு கொள்வது

அதில் பஞ்சமீ பஷத்தில் -ப்ரபந்நாய-என்கிற இதுக்கு -சங்கோசம் இல்லாமையால்
ப்ரபத்தியினுடைய சர்வாதிகாரம் சித்திக்கும்

சதுர்த்தீ பக்ஷத்தில் சர்வாதிகாரத்வம் கண்ட யுக்தமாம்

பஞ்சமீ யானால் கேவல ராவணாதி மாத்ரத்தைப் பற்ற அன்றி
ப்ரஹ்ம ருத்ராதிகளையும் –
நம்மையும் -பற்ற
பயம் இல்லாதபடி பண்ணுவோம் என்று அருளிச் செய்தபடியாம்

சதுர்த்தீ யானால் விபீஷணன் என்று நினைக்க வேண்டா –
ராவணன் தான் ஆகிலும் நாம் அவனுக்கு அபய பிரதானம்
பண்ணுவோம் என்றதாம்

இப்பொருள் கீழில் பிரகரணத்துக்கும்
மேலில் பிரகாரணங்களில் ஸ்லோகங்களுக்கும் சேரும்
இந்த யோஜனையில் சர்வரையும் பற்ற பயாபாவம் அர்த்த சித்தம்

நிதா நாம் சர்வ பூதா நாம் ஏக கர்ம பல ப்ரத
இதி பஸ்யந் கஸாதுல்யத் குதஸ்ஸிந் நபி பேதி ஹி
சர்வா பராத நிஷ் க்ருத்யா பிரபத்த்யா கருணா நிதிம்
ப்ரஸாதயன் ந ஹி புநச ததோபி பயம் ருச்சதி
அபாய சம்ப்லவே பூய யதார்ஹம் அநு சிஷ்யதே
பிராயஸ் சித்திரியம் ஸாத்ர யத் புந சரணம் வ்ரஜேத்–ஸ்ரீ தேசிகருடைய காரிகை ஸ்லோகம் இது

ஏதத் விரதம்
இது சர்வ பிராமண அநு மதமாய்-
தவறில் பிரத்யவாயம் வரும்படியான தர்ம்யமான சங்கல்பம் காணும்

மம —
நமக்கு சங்கல்பம் நடத்துகைக்கு விலக்கான அஞ்ஞான அசக்தைகள் ஒரு காலும் வாரா காணும் –
ஆகையால் விலக்க ஒண்ணாத இவ் விரதத்தை பரிவரான நீங்களும்
இசைந்து ரஷியுங்கள் என்று திரு உள்ளம்-

——————-

விபீஷனோ வா ஸ்லோகார்த்தம்

கீழ் ஸ்லோகத்தில் அருளிச் செய்த ப்ரபத்தியினுடைய சர்வாதிகாரத்வத்தை ப்ரக்ருதமான
ராவண விபீஷண உதாஹரணத்திலே காட்டி
இவன் விபீஷணனே யாகிலும் ராவணன் யாகிலும் நாம் இவனுக்கு அபய பிரதானம் பண்ணினோம் –
உம்மையும் முதலிகளையும் புருஷகாரமாகக் கொண்டு
நம்மை சரணாகதனானவனை அமானவத்யாயஸ்த்தரான நீரே
நம்மோடே சேர்த்து நமக்கு இந்தப் புருஷார்த்தத்தைத் தாரீர் -என்று
ஸூஹ்ருத பாரதந்தர்யம் தோற்ற அருளிச் செய்கிறார் –

விபீஷணோ வா ஸூக்ரீவ யதி வா ராவண ஸ்வயம்
ஆநயை நம் ஹரி ஸ்ரேஷட்ட தத்தமஸ்யாபயம் மயா -18-34-என்று
நீங்கள் சொல்லுகிறாப் போலே விபீஷணனாகவுமாம்
கபோதத்தின் பேறு நாமும் பெற வேண்டும் என்று இருக்கிற
நம்முடைய மநோ ரதத்தின் படியே சாஷாத் ராவணன் ஆகவுமாம்

அஸ்ய ராகவம் சரணம் கத -17-14-என்கிற
அருந்துத யுக்தியை நேர்ந்த இவனுக்கு என்றபடி

அஸ்ய -என்கிற இதில்
இவனுடைய அநு பந்திகளும் அநு ப்ரவிஷ்டர்-
அநு பந்திகளுடைய பயமும் சமித்தால் ஆயிற்று இவனுக்கு அபய பிரதானம் பண்ணிற்று ஆவது

விபீஷண அங்கீகாரத்தை இசைந்து
முதலிகள் பக்கல் தாக்ஷிண்யம் குலையாமைக்காக
இவனைச் சிறிது பரீக்ஷித்ததாக பண்ணிக் கைக் கொண்டாலோ என்று
மஹாராஜருக்குக் கருத்தாக திரு உள்ளம் பற்ற உத்தரம் அருளிச் செய்கிறார்

தத்தம் அஸ்ய அபயம் மயா
சத்ய சங்கல்பரான நாம் பாண்டே சரணாகத பரித்ராணத்தை நமக்கு விரதமாக சங்கல்பித்து வைத்தோம்
விபீஷணனும் உபாயம் அனுஷ்ட்டித்தான் –
ஆன பின்பு நாம் இவனுக்கு அபய பிரதானம் பண்ணினோம் ஆயிற்று –

இனி இவனுக்கு நம்மைப் பற்ற பரீஷை என்று ஒரு பய ஸ்த்தானத்தை உண்டாக்கி
நமக்கு விரத பங்கம் பிறப்பிக்க அழகிதோ –
தாங்களே தெளியப் புகுகிற முதலிகள் பக்கல் தாக்ஷிண்ய பங்கம் அழகிதோ-என்று
ஹரி ஸ்ரேஷ்டனாய் வானர ராஜ்யத்துக்கு முடி சூடி மஹாத்மா மநவாய் இருக்கிற நீர்
இத்தை நெஞ்சிலே உறைத்துப் பாரீர்
ஆநநை நம் என்றது கார்யத்தில் தீர்வு இருந்தபடி –

சரண்ய விரத விஷய பிரகாசம் என்னும் எட்டாம் அத்யாயம் முற்றிற்று

——————-

சரண்ய சரணாகத சங்கம லாபம் என்னும் ஒன்பதாவது அதிகாரம் –

ஸூக்ரீவ சம்மதி பூர்வக விபீஷண அங்கீகாரம் –
சரணாகத அநு பந்தி ரக்ஷணம்

ஸூக்ரீவ சம்மதி பூர்வக விபீஷண அங்கீகாரம் –

இப்படி அருளிச் செய்தவாறே முன்பு
கூழாட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினால் புகுதல் ஓட்டோம்-என்று நின்ற மஹாராஜர் தெளிந்து
தாம் பண்ணின அபராததுக்குப் பெருமாளை க்ஷமை கொண்டு -தாமே புருஷகாரமாய்
வந்து மண்ணுக்கும் மணமும் கொண்மின்
எமது இடம் புகுதென்று –இத்யாதிகளில் பிரகிரியையால்

நாங்களும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும் ஒரு வாசியற அடிமை செய்யப் பெற வேண்டும் –
நாங்களும் இவனுக்கு சஹா தாஸோஸ்மி–40–10- என்னும்படி
அடியோமாக வேணும் என்று விண்ணப்பம் செய்ய

இப்படி பிரதிபந்தகம் கழிந்து அநந்தரம் பெருமாளுக்கு
சரணாகத லாபமாகிற புருஷார்த்தம் பிறந்தபடியையும்

தத்தம் அஸ்ய அபயம் மயா -18-34-என்கையாலே
அபயம் பெற்ற சரணாகதனுக்கும் இப்படி விஸ்லேஷித்துப்
பெருமாள் பாசுரமும் இன்றிக்கே தங்களுக்கு வேறு ஒரு உபாயமும் இன்றிக்கே
சரணாகதனுடைய அபிமானத்திலே அடங்கிக் கூட வந்த நாலு ராக்ஷஸர்களும்
பெருமாள் திருவடிகளைப் பெறுகையாகிற பரம புருஷார்த்தம் பிறந்த படியையும்

பர்யங்க வித்யாதிகளில் படியே பரஸ்பர சம்ஸ்லேஷத்தால் பிறந்த
ப்ரீதி பரிவாஹமான சம்வாத விசேஷங்களையும் எல்லாம் இந்த சர்க்கத்தின் சேஷத்தாலும்
மேலில் சர்க்கத்தின் முகப்பாலுமாகச் சொல்லி
சரணாகதி வேதமான பிரபந்தத்தில் உபநிஷத் பாகமான அபய பிரதான பிரகரணத்தைத்
தலைக்காட்டுகிறான் ஸ்ரீ வால்மீகி பகவான்

அவ்விடத்தில் தாம் முற்பட நினைத்தது ஒன்றை விலக்க வல்லார் இல்லாதபடியான நிரங்குச ஸ்வா தந்திரத்தை யுடைய
பெருமாள் ஆஸ்ரித பரதந்த்ரராய் மஹாராஜரையும் முதலிகளையும் தெளிவித்து
ஆநயைநம் ஹரி ஸ்ரேஷ்ட்ட-18-34–என்று அருளிச் செய்த உறவு உடைமையிலும்
நீர்மையிலும் ஈடுபட்ட மஹாராஜர் விண்ணப்பம் செய்தபடி சொல்லுகிறான் –

ராமஸ்ய து வசஸ் ஸ்ருத்வா ஸூக்ரீவ ப்லவகேஸ்வர
ப்ரத்யபாஷத காகுத்ஸ்த்தம் ஸுஹார்த்தே நாபி சோதித –18-35–

ராமஸ்ய
சரணாகதனாய் இவர் கை விடில் எங்கேனும் புகுரிலும் அழியும்படி நிற்கிற விபீஷண ஆழ்வானையும்-
இவனை அழிக்க நினைத்த பரிவரையும் ரமிப்பித்த படியைப் பற்ற
இங்கு ராமஸ்ய -என்கிறது

து -என்கிற
இத்தால் மஹாராஜருக்குக் கலக்கமும் சீற்றமுமான முன்னில் அவஸ்தையைக் காட்டில்
தெளிவும் ப்ரீதியுமான இஃதோர் அவஸ்தா பேதம் இருந்த படியைச் சொல்லுகிறது

ஸூக்ரீவ ப்லவகேஸ்வர
சரணாகதன் பக்கல் அபசார ருசி தவிர்ந்த பின்பு அன்றோ
இவருக்குப் பேரும் பெருமையும் நிலை நின்றது

காகுத்ஸ்த்தம்
பராவஸ்தையில் திட்டமாய் பிறந்து படைத்த நீர்மை இருந்தபடி

ஸுஹார்த்தேந அபி சோதித —
இப்படி நிருத்தரான மஹாராஜர்
பெருமாளுடையவாதல்
தம்முடையவாதல்
ஸுஹார்த்தம் பேசி வைக்கப் பேசுகிறார்

கிமத்ரசித்ரம் தர்மஞ்ஞா லோக நாத ஸூகாவஹ
யத் த்வம் ஆர்யம் ப்ரபாஷேதா சத்த்வ வாந் சத்பதே ஸ்த்தித -18-36-

கிமத்ரசித்ரம்
எங்களைப் போலிகள் இப் பாசுரத்தைச் சொல்லில் அன்றோ ஆச்சர்யமாவது-
தேவரீர் இப்படி அருளிச் செய்த இடத்தில் ஆச்சர்யம் உண்டோ
ஸ்வ பாவம் என்று இருக்கும் அத்தனை அன்றோ

தர்மஞ்ஞா
பணையோடு பணை தத்தித் திரிந்த எங்களால்
தேவரீர் திரு உள்ளம் பற்றி இருக்கும் தர்மங்கள் எல்லாம் அறியப் போமோ
ஸூஷ்ம பரம துர்ஜ்ஜேய சதாம் தர்ம பிலவங்கம் -18-36-என்று
அருளிச் செய்த தேவரீருக்கு அன்றோ உண்மை தெரிவது

லோக நாத
உடைமை அழியாதபடி ரஷிக்கை உடையவனுக்கு ஏற்றம் அல்லாமையாலே-
சரணாகதனுக்கு அச்சம் தவிர்த்து ரஷித்தீர் –
எங்களை அபசாரம் தவிர்த்து ரஷித்தீர்

ஸூகாவஹ
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தேவரீருக்கு அடிமை செய்யப் பெற –
நாங்களும் அவனுக்கு அடிமை செய்யப் பெற –
இரண்டு வர்க்கத்தையும் க்ருதார்த்தர் ஆக்கினீர்

சத்த்வ வாந்
இதற்கு முன் கண்டு அறியாத சரணாகதன் பக்கல் ஒரு தலையாக
பரிவர் சொன்ன உபபத்திகளுக்கும் நிர்பந்தங்களுக்கும்
இளையாத வ்யவசாயத்தில் திண்மை இருந்த படி என்

சத்பதே ஸ்த்தித –
ப்ருஹஸ்பதி சிபி ரகு வானர கபோத வசிஷ்ட விச்வாமித்திராதிகள் முதலான சத்துக்கள் நடந்த நல்வழியான
சரணாகத பரித்ராண தர்மத்தில் தேவரீர் நின்ற நிலை ஒரு கோடி சரணாகதராலும்
கலக்க ஒண்ணாதபடியாய் இருந்தது

யத் த்வம் ஆர்யம் ப்ரபாஷேதா
தேவரீர் அருளிச் செய்த பாசுரத்தில் நிழலிலே ஒதுங்கி
புலியும் புல்வாயும் ஒரு துறையிலே நீர் உண்ணும்படியாய் இருந்தது

எனக்கு மறுக்க மாட்டாமையாலே கொண்டாடுகிறீரோ –
நீர் மானஸ அபராதமும் தவிர்க்கும்படி தெளிந்தீரோ என்ன

மம சாப்யாந்தராத் மாயம் ஸூத்தம் வேத்தி விபீஷணம்
அநுமாநாச்ச பாவாச்ச ஸர்வத ஸூபரீக்ஷித-18-37-

மம சாப்யாந்தராத்மா அயம் -ஸூத்தம் வேத்தி விபீஷணம்
ஒருத்தராலும் தெளிவிக்க ஒண்ணாத படியான கலங்கின என் நெஞ்சம்
தேவரீர் பாசுரங்களாலே தெளிந்து
சரணாகதனான விபீஷணன் ஸூத்தன் என்று அறியப் பெற்றது –

அநுமாநாச்ச
பிராணாதஸ் ச மஹா நேஷா -இத்யாதிகளில் படியே ஸ்வர ப்ரசாதிகளாலும்

பாவாச்ச
அபிப்ராய வ்யஞ்ஜகங்களான மற்றுமுள்ள ஆகாரங்களாலும் -என்றபடி –

சதாம் ஹி சந்தேக பதேஷு வஸ்துஷு பிராமண மந்த கரண ப்ரவர்த்தய -என்கிறபடியே
நம்முடைய அந்தக்கரணம் இசைந்த படியாலும் என்னவுமாம்

ஸர்வத
உள்ளும் புறமும் ஓக்க என்றபடி –
அங்கன் அன்றிக்கே ராவணனும் அல்லான்-
ராவண ப்ரேஷிதனும் அல்லான் –
ராவண அநுரக்தனும் அல்லான் -என்று
சர்வ பிரகாரத்தாலும் தெளிய அறிந்தோம் என்றுமாம்

ஸூபரீக்ஷித-
இனி சர்வ சக்திகரான உம்மாலும் எங்களைக் கலக்க ஒண்ணாது என்று தாத்பர்யம்

நாம் இனி விபீஷணனுக்கு செய்ய வேண்டுவது என் –
உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் –
இரண்டும் நீர் நியமித்தால் அல்லது நாம் செய்ய ஒண்ணாது என்று பெருமாளுக்கு
திரு உள்ளத்தில் கருத்தாகக் கொண்டு விண்ணப்பம் செய்கிறார் –

தஸ்மாத் க்ஷிப்ரம் ஸஹ அஸ்மாபி துல்யோ பவது ராகவ
விபீஷணோ மஹா ப்ராஞ்ஞா சகித்வம் சாப்யுபைது ந 18-38–

தஸ்மாத்
நிர்தோஷனான அளவன்றிக்கே எங்களிலும் பரிவன் என்று தெளிகையாலும்

யயோ சித்தேநவா சித்தம் நைப்ருதம் நைப்ருதேநவா
சமேதி பிரஞ்ஞயா பிரஞ்ஞாதயோர் மைத்ரீ ந ஜீர்யதே –உத்யோக -39-4-/8-என்னும்படி
எங்களுக்கும் இவனுக்கும் மநோ ரதாதிகள் ஒத்து இருந்தபடியாலும்

க்ஷிப்ரம்
இனி இவனை ஒழிய ஒரு க்ஷணமும் எங்களுக்குக் கைங்கர்யம் பண்ண முயலாது –
அவன் தானும் இனி ஒரு க்ஷணமும் விஸ்லேஷம் பொறுக்க மாட்டான்

ஸஹ அஸ்மாபி துல்யோ பவது
அஸ்மாபி-ஸஹ- துல்யோ பவது-இவன் எங்களோடு பிரிக்கப் படாதே நாங்கள் பெற்ற பேறும் பெற்று –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்ய திரு உள்ளமாய் அருள வேண்டும் –

இவன் இழந்த காலத்துக்கும் படி எடுத்ததுமாய் –
இப்போது காலத்திலே சோற்றை இட்டு கையைப் பிடித்தால் போலே
தகையுண்டு நிற்கிற கிலேசமும் தீர இவன் ஒருவனும் ஒரு தலையும் நாங்கள் எல்லாரும் ஒரு தலையாக
விஷயீ கரித்து அருள வேண்டும் என்று
ஏக வசனத்திற்கும் பஹு வசனத்திற்கும் தாத்பர்யம்

விபீஷணோ
தேவரீர் அவனுக்கு அபய ப்ரதானம் பண்ணின படியால் ராவணாதிகள் எல்லாம் இவனுக்கு
அஞ்சும்படி யதார்த்த நாமா ஆனான்
விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித –ஆரண்ய -17-24–என்கிற
தார்மிகத்வ ப்ரசித்தியும் தோற்றுகிறது

மஹா ப்ராஞ்ஞா
தர்மத்தில் நிலை குலையாதபடி வரம் வேண்டிக் கொண்ட தெளிவு உடையவன்

ஸீதாம் ச ராமாய நிவேத்ய தேவீம் வஸேம் ராஜந் நிஹ வீதஸோ-யுத்த –15-14-என்று
ராவணனுக்கும் கூட பரம ஹிதம்
சொல்லும்படிக்கு ஈடான ப்ரக்ருஷ்ட ஞானம் உடையவன் –

கைங்கர்யம் ஆகிற பரம புருஷார்த்தம் பெறுகைக்கு
ஸக்ருத் கர்த்தவ்யமான சாதிய உபாயத்தாலே வசீக்ருதராய்
ராமோ விக்ரஹவான் தர்ம –ஆரண்ய -37-13 –என்னும்படியாய் இருக்கும் பெருமாள் சித்த உபாயம் என்றும் –
இவர் தாமே விலக்குவாரைத் தெளிவித்து -ஏக ரசராக்கி
இரு வகைப்படாத படி பொருந்த விடுவார் -என்றும்
துணிய வல்ல மஹா விசுவாச ரூபமான ஞானத்தை உடையவன்

மஹா ப்ராஞ்ஞா
ஸூக்ரீவ சங்கிதஸ் சாஸீத் நித்யம் வீர்யேண ராகவே-என்று
எனக்குப் பிறந்த பழி இல்லாதவன் –
இன்னம் கலங்குகிற எங்களைப் போலே இவனும் அதி சங்கை பண்ணினான் ஆகில்
ராவணன் எடுத்த கைலாசத்தையும்
வாலி எறிந்த துந்துபி கங்காள கூடம் பட்டது படுத்திக் காட்ட வேண்டும் இறே தேவரீருக்கு

சகித்வம் சாப்யுபைது ந –
காசி ராஜா முதலான தரமுடைய ராஜ குமாரர்கள் பெறக் கடவ பேற்றை
காட்டுக்கு எழுந்து அருளப் பண்ணின
பரம காருணிகருடைய ப்ரஸாதத்தாலே ஸ்ரீ குகப் பெருமாளும் நாமும் பெற்றால் போலே

இவனும் தேவரீருக்குத் தோழன் என்கிற தரம் பெற்று –
ராஜஸ ஜாதியில் குடல் துவக்கால் உள்ள
வழு அறும்படி பண்ணி அருள வேணும்

நாங்கள் அடியோம் என்றால் உண்மையாகிலும் தன் நீர்மையாலே இவன் இசையான்-
எங்களுக்குத் தோழன் என்றாகிலும் தேவரீரைப் போலே இவனும் இசையும்படி
பண்ணி அருள வேணும் என்றதாகவுமாம்
ஸகா தாஸோஸ்மி -40-10-என்னுமவர் ஆகையால்
நாங்கள் அடியோமாக வேண்டும் என்று இவருக்குத் தாத்பர்யம்

அப்யுபைது
வைஸ்ரவணன் தம்பியான மேன்மையை இட்டு அநாதரியாதே
வானரங்களை அடிமை கொள்ள இவரை நினைப்பிடும்படி
பண்ணி அருள வேண்டும் என்று கருத்து –

இத்தால்
தேஹாத்ம பிரமம் முதலான அல் வழக்குகள் எல்லாம் கழித்து
பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவச் சேஷத்வத்திலே
நிலை நின்றவர் ஆகையால் மஹாராஜர் பெருமாள் திருவடிகளில் விபீஷண ஆழ்வானைச் சேர்த்துத்
தாம் அவனுக்கு அடிமை செய்ய மநோ ரதிக்கிறார்

——-

ஸூக்ரீவ சம்மதி பூர்வக விபீஷண அங்கீ காரம்

இப்படி சரணாகதனான விபீஷண ஆழ்வானுக்கு அபேக்ஷிதத்தையும் –
நிவேதயத மாம் க்ஷிப்ரம் -18-15- என்று
அவன் இரந்த படியே கடகரான தங்களுக்கு அபேக்ஷிதத்தையும் மஹா ராஜர் விண்ணப்பம் செய்ய
அதடியாக பிறந்த சரண்யன் மநோ ரத சித்தி சொல்லப்படுகிறது –

ததஸ்து ஸூக்ரீவ வசோ நிஸம்ய தத்
ஹரீஸ்வரேணாபி ஹிதம் நரேஸ்வர
விபீஷனே நாஸூ ஜகாம சங்கமம்
பதத்ரி ராஜேந யதா புரந்தர -18-39-

ததஸ்து ஸூக்ரீவ வசோ நிஸம்ய தத்
கடகருடையவும் சரணாகதனுடையவும் சித்தியில் காட்டில்
மஹாராஜர் தெளிந்து விண்ணப்பம் செய்த
பெரிய வார்த்தையைக் கேட்டு அருளினை பின்பு –
இவர்கள் காட்டித் தர நாம் இப் பேறு பெற்றோம் -என்று
பெருமாளுக்குப் பிறந்த சித்தி விசேஷத்தினுடைய ஏற்றம் இருந்தபடி –

தத
சாஸ்திரமும் தம்முடைய விரத விசேஷமும் நிற்க இப்போது தோழன்மார் வாக்கியமே சரணாகத
பரிக்ரஹத்துக்குக் காரணம் என்று கைக்கொண்டு அருளினார் என்று தாத்பர்யம் –

நரேஸ்வர
சரணாகத ரக்ஷணத்துக்கு முடி சூடின ரகு வம்சத்தில் பிறந்த பிறவி
இப்போது நிலை நின்றது என்று இருந்தார்

ஹரீஸ்வரேணா அபி ஹிதம்
விபீஷணோ சங்கமம் ஜகாம-என்று அந்வயம்

தஸ்மாத் க்ஷிப்ரம் -18-38-என்கிற ஸ்லோகத்தில்
மஹாராஜர் விண்ணப்பம் செய்த விபீஷணாதிகளுடைய
மநோ ரத சித்தி ஆநுஷங்கிக பலமாக
ஸ்ரீ விபீஷண ஆழ்வானோடே தமக்கு உண்டான சேர்த்தியைத் தம் பேறாகப் பெற்றார்

ஆஸூ
பிரதி பந்தகங்கள் எல்லாம் கழிந்தால் ஸ்வரூப ப்ராப்திக்கு விளம்பம் இல்லை இறே
இது பெருமாளுடைய த்வராதிசயம் சொன்னபடி யாகவுமாம்

பதத்ரி ராஜேந யதா புரந்தர –
தன்னில் சர்வ பிரகாரத்தாலும் பெரியனான பெரிய திருவடியோடே இந்திரன் உறவு பண்ணின போது
இந்திரனுக்குப் பேறு ஆனால் போலே
பெருமாள் சரணாகத லாபத்தை தமக்கு நிர் யத்ன ஸித்தமான
அலாப்ய லாபமாகத் திரு உள்ளம் பற்றினார் என்று தாத்பர்யம்

சரண்ய சரணாகத சங்கம லாபம் -என்னும் ஒன்பதாவது அதிகாரம் முற்றிற்று

————-

பிராப்தி பிரகார ப்ரபஞ்சகம் என்னும் பத்தாவது அதிகாரம் –

பிராப்தி பிரகார நிரூபணம்
இப்படி ஒன்றாலும் பிரதி பந்திக்க ஒண்ணாத ஒரு யுக்தி விசேஷத்தாலே யதா பிரமாணம்
சரணாகதன் கோரின கோலின பலம் சித்தித்த படியைப் பொதுவில் சொல்லி
மேல் பிராப்தி பிரகாரத்தை விவரிக்கிறான்

ராகவேணாபயே தத்தே சந்நதோ ராவணாநுஜ
விபீஷனோ மஹா ப்ராஞ்ஞா பூமிம் சமவலோகயந் -19-1-

ராகவேணாபயே தத்தே
மேன்மை கொண்டு அபய பிரதானம் பண்ண வேண்டி இருக்க
அணுக ஒண்ணாது என்கிற பயம் தீர்க்கும்படி
பரிக்ரஹித்த அவதார தசையில் நீர்மை விஞ்சி இருந்தது –

தத்தமஸ்ய அபயம் மயா -18-34-என்று தாம் அருளிச் செய்தது போதாமே
ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட்ட -என்று மஹா ராஜரையும் முன்னிலை யாக்க-
அவரும்
அஸ்மாபி துல்யோ பவது –என்று விண்ணப்பம் செய்ய –
இப்படி முதலிகளும் இசைய-
பெரிய திரு ஒலக்கத்தில் எழுந்து இருந்து –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு அருளப்பாடு -அருளுப்பாடு –என்ற பின்பு
பெருமாள் பண்ணின அபய பிரதானம் நிலை நின்றதாயிற்று என்று தோற்றுகைக்காக
இங்கே அபயே தத்தே -என்று அநு வதிக்கிறது

சந்நத
சம்யக் நத-
சரண்யனுடைய நிலையுடைமையிலும் நீர்மையிலும் மிகவும் ஈடுபட்டு –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து –
அவன் தாழ் இணைக் கீழ் வாழ்ச்சி பெற்றான் –
அருளப்பாட்டுக்கும் தூரத்திலே உசித உபசாரம் பண்ணினான் என்னவுமாம்

ராவணாநுஜ
நநாமேயம் -36-11-என்று இருக்கக் கடவ –
வணங்கலில் அரக்கன் –பெரிய திருமொழி -9-8-5-கிடந்த வயிற்றில்
கிடந்தவனுக்கு வர ப்ரபாவத்தாலே வந்த வகுத்த விஷயத்தில் வணக்கம் இது

விபீஷணோ
ஒரு வயிற்றிலே கிடக்கச் செய்தே-
விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித –ஆரண்ய -17-24-என்று
கும்பகர்ணாதிகளில் காட்டில் வேறொரு ஜாதியாகப் பேர் பெற்றவன்

மஹா ப்ராஞ்ஞா
இனித்தான் க்ஷணம் விளம்பிக்கில் பெருமாள் தரிக்க மாட்டார் என்று
தூரத்தில் இங்கிதம் கொண்டு அறிய வல்ல பேர் அறிவாளன்

பூமிம் சமவலோகயந்
பெருமாளுடைய சரணாகத வாத்சல்யத்தையும் முற்பட
வானர முதலிகள் பெற்ற பேற்றையும் கண்டு –
தான் துஷ் ப்ரக்ருதிகளான ராவணாதிகளையும் திருத்தலாமோ என்று
ஹித உபதேசார்த்தம்
ஆந்ரு சம்சயத்தாலேயும்
வாத்சல்யத்தாலேயும் –
இத்தனை காலம் கால் தாழ்ந்ததற்கு லஜ்ஜித்து தலை கவிழ்தலை இட்டான் –

முன்பு கல்லும் தடியுமாக நின்ற ஓலக்கத்தைப் பார்த்து அஞ்சி நின்றான்
இப்போது முதலிகள் எல்லாம் முக்த விஷயத்தில் ஆதி வாஹிகரைப் போலே
போற்றி
பல்லாண்டு –என்று நின்ற நிலையைக் கண்டு ச
ரண்யன் இருந்த திவ்ய தேசத்தினுடைய பிரபாவம்
இருந்தபடி என்-என்று பார்த்தான் என்னவுமாம் –

கல்லும் தடியும் பொகட்டு கையும் அஞ்சலியுமாய் எதிர் கொள்ள நிற்கிற ஓலக்கத்திலே
தண்டனிட இடம் பார்த்தான் என்னவுமாம்

இஸ் ஸ்லோகத்துக்கு
சந்நத-என்று வாக்யார்த்தம் தலைக்கட்டுகிறது

காத்ப பாத -என்று
மேலே அந்வயிக்கவுமாம் –

காத்ப பாதா வநிம் ஹ்ருஷ்டோ பக்தைர் அநு சரைஸ் ஸஹ–19-2-
தனக்கு சேஷ பூதருமாய் பரதந்த்ரருமாய் இருக்கையாலே
தன் கைகளும் கால்களும் போலே தன்னிலே சொருகி –
தனித்து ஒரு உபாய பலன்கள் இல்லாத நாலு ராக்ஷஸரோடே கூட உத்தேஸ்யமான
திருவடிகள் அளவும் செல்ல ஒண்ணாத படி
ஹர்ஷ பாரவஸ்யம் தள்ள திருவடிகளோடே பிறவித்துவக்கு உடைத்தான் பூமியிலே விழுந்தான்

பண்டு ராவண ஸ்தானத்தில் விழுந்து ஏறிட்டுக் கொண்ட ரஜஸ்ஸூக்கள் எல்லாம் போம்படி
அமாநவ கர ஸ்பர்சம் போலே
அத்யந்த சோதகமான திரு முன்பில் பூமியிலே விழுந்து
திருவடிகளை ஸ்பர்சிக்கைக்கு யோக்யனாய் பின் எழுந்திருந்து
வந்து திருவடிகளில் தலை சாய்க்க விழுந்தபடி சொல்கிறான் –

ச து ராமஸ்ய தர்மாத்மா நிப பாத விபீஷணா
பாதயோ சரணாந் வேஷீ சதுர்ப்பிஸ் ஸஹ ராஜஸை–19-2-

ச து
லீலா விபூதியில் உள்ள சிலர் –
யூயம் யூயம் வயம் வயம் -என்கிறபடி
வந்தேறிகளான பந்துக்களோடே துவக்கற்று
சம்சார சமுத்ரத்தைக் கடந்து
விஷ்ணு பதத்தைக் கிட்டினால் பிறக்கும் வேறுபாடு போல் இருந்தது

ராமஸ்ய
விபீஷண ஆழ்வானுக்குப் பஹு முக பரிபவத்தாலே பிறந்த பரிதாபம் எல்லாம்
கழியும் படி ரமணீயமாய் இருந்தது
தயரதன் பெற்ற மரகத மணித்தடம் -இறே-

தர்மாத்மா
பழைய போலிகளான தர்மங்கள் போல் அன்றிக்கே இருக்கிற
சரணாகதி தர்மம் ஒரு வடிவு கொண்டால் போலே இருந்தான் –

தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா ராமோ வசனம் அப்ரவீத்
வஸசா சாந்வயித்வை நம் லோச நாப்யாம் பிபந் நிவ
ஆக்யாஹி மம தத்தவேந ராக்ஷஸாநாம் பலாபலம்–19-3-

தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா
அநந்ய சரண்யனாய் அநந்ய ப்ரயோஜனனாவனுடைய
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வ புரஸ்காரமாக த்வயார்த்த பரமான வசனத்தைக் கேட்டு

ராமோ வசனம் அப்ரவீத்
த்விஸ் சரம் நாபி சந்தத்தே த்வி ஸ்த்தா பயதி நாஸ்ரிதாந்
த்விர்த்த தாதி ந சார்த்திப் யோ ராமோ த்விர் அநாபி பாஷதே -என்று கவி பாடினால்
இது பரமார்த்தமாய் இருக்கும் படி குணாதிசயமுடைய பெருமாள்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் கார்யத்தைப் பற்ற
இனி ஒரு வத்தவ்யம் இல்லாமையால்-

தம்முடைய அவாந்தர -அவதார -பிரயோஜனமாக –
துஷ் க்ருத விநாசத்துக்கு உப யுக்தமாக
ஆக்யாஹி மம தத்தவேந ராக்ஷஸாநாம் பலாபலம்–
என்று ராக்ஷஸ விருத்தாந்தத்தைக் கேட்டு அருளினார்

வஸசா சாந்வயித்வை நம்
நீர் இதற்கு முன்பு பட்ட சிறுமை எல்லாம் நமக்காக வன்றோ
இது எல்லாம் ஏற்கவே கோலப் பொறாத
ச அபராதரரான நாம் அன்றோ பட்டோம் என்னுமா போலே
இன் சொல்லாலே இவனை உருக்கப் பண்ணி
அருளிச் செய்தார் –

அருளிச் செய்கிற போது
லோச நாப்யாம் பிபந் நிவ
பெரு விடாய்ப் பட்டவன் தண்ணீரைக் கண்டால் ஒரு காலும் விட மாட்டாதாப் போலே
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான் -இத்யாதிகளில் படியே
அனுபவியா நின்று கொண்டு
அனவதிக அதிசய ஸுஹார்த்த அநு ராக கர்ப்பங்களான திருக் கண்களாலே
ஸ்ரீ வைகுண்ட நாதன் முக்தனைப் பார்த்து அருளுமா போலே குளிரப் பார்த்து அருளி
ஆலாம் கட்டியை விட்டு எறிந்தால் போலே அவனை
சீதீ பூதோ நிராமய -என்னும்படி
பண்ணிக் கொண்டு வார்த்தை அருளிச் செய்தார்

———

இதற்கு மேல் உள்ளது எல்லாம் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் மநோ ரதித்த கைங்கர்யத்துக்கு
உறுப்பான பாரிப்பாகக் கண்டு கொள்வது

ராகாந்தே ருத்த லங்கஸ் ஸ்யுத பணி கதநோ ( நாக பாசத்தில் இருந்து விடுபட்டு )
தூம்ரத்ருக் வஜ்ர தம்ஷ்ட்ரவ் பங்க்த்வா அகம்பம் ப்ரஹஸ்தம் தசமுக மகுடம் கும்ப கர்ணன் அதிகாயவ்
ப்ரஹ்மாஸ்த்ர சின்ன கும்பாதிக்கம் மக ராஜம் ஹத்வா இந்த்ரசத்ரும் ஜித்வா
ஸஹ பலம் த்ரிபி கஸ்ரை அவதீத் ராவணம் ராம பத்ர

———

அபதிஸ்ய வேங்கடேசம் ஸ்வ ஹஸ்த சம்சக்த தூலிகா துல்யம்
அபய பிரதான சாரம் குரு பிரசாத ஸ்வயம் வ்யலிக்த்

பொன்னை இகழ்ந்து விருகங்கள் புல்லிய புல் உகந்தால்
மன்னர் எடுப்பதப் பொன்னலதே மன்னு உலகு அனைத்தும்
தன்னை அடைந்திடத் தான் அருள் செய்யும் தனிச் சிலையோன்
பொன்னடி நாம் அடைந்தோம் புறமார் என் கொல் செய்திடிலே

மூ உலகும் தன் பிழையைத் தானே சாற்ற
முனிவர்களும் தேவர்களும் மினிந்த அந்நாள்
தாவரிதாய் எங்கும் போய்த் தளர்ந்து வீழ்ந்த
தனிக்காகம் தான் இரந்த உயிர் வழங்கிக்
காவல் இனி எமக்கு எங்கும் கடன் என்று எண்ணிக்
காண நிலை இலச்சினை யன்று இட்ட வள்ளல்
ஏவல் பயன் இரக்கம் இதுக்கு ஆறு என்று ஓதும்
எழில் உடையோர் இணை யடிக் கீழ் இருப்போம் நாமே

சக்ருதேவ ப்ரபந்நாயா -ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்
தவாஸ்மீதி ச யாசதே –உனக்கு அடிமை ஆகின்றேன் என்றற்கு
சர்வ பூதேப்ய –அருக்காதே அனைவருக்கும் அனைவராலும்
அபயம் -அஞ்சேல்
ததாமி -என்று அருள் கொடுப்பவன்
ஏதத் -இது தான்
விரதம் -ஓதும் இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இவை அறிவார் செயலுடன்
என் இசைவினாலும் நெருக்காத நீள் விரதம்
மம -எனக்கு ஓன்று என்று
நெறி யுரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே –

வேதத் திரளில் விதி யுணர்ந்தோர்கள் விரித்து உரைத்த
காதல் கதியையும் ஞானத்தையும் கருமங்களையும்
சாதிக்க வல்ல சரணாகதி தனி நின்ற நிலை
ஒதத் தொடங்கும் எழுத்தின் திறத்தில் உணர்மின்களே

இத்தால் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி என்னும்
அர்த்தத்தை வெளியிட்டு அருளுகிறார் இவற்றால்

——————-

பிராப்தி பிரகார பிரபஞ்சகம் என்னும் பத்தாவது அதிகாரம் முற்றிற்று

ஸ்ரீ அபய பிரதான சாரம் முற்றிற்று

——————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த – ஸ்ரீ அபய பிரதான சாரம் -பிரகரண தாத்பர்ய நிர்ணயம் என்னும் நாலாவது அதிகாரம் / சரண்ய சீல பிரகாசம் என்னும் ஐந்தாம் அதிகாரம் /சரண்ய வைபவம் பிரகாசம் -என்னும் ஆறாவது பிரகாரம் /பரம தர்ம நிர்ணயம் என்னும் ஏழாவது அதிகாரம் —-

September 22, 2019

ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –
பிதா மஹஸ் யாபி பிதா மஹாய
ப்ராசேத–சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய
ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —

ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

———————————–

ஸ்ரீ அபய பிரதான சாரம் —
ஸ்ரீ வால்மீகி பகவானால் திருஷ்டமாய் -இருப்பதாய் —
தாத்பர்ய லிங்கங்களை எல்லாம் பரிபூர்ணமாக உடையதாய் -இருபத்தொரு சரணாகதி வேதம்
இதில் ஸ்ரீ அபய பிரதான பிரகரணம் சர்வ ரஹஸ்ய சாரங்களையும் திரள வெளியிட்ட உபநிஷத் பாகம்
ஆறு காண்டத்திலும் சரணாகதி தர்மமே அஞ்சுறு ஆணியாகக் கோக்கப்பட்டுள்ளது
சரணாகதி ரக்ஷண தர்மமே ஸ்ரீ பெருமாளுக்கு அநுபால நீயம்

இது பத்து அதிகாரங்களை உடையது –
வேத உப ப்ரும்ஹண சா பேஷரான அல்ப ஸ்ருதர் பக்கல் இரக்கத்தாலும்-
அவர்களை பற்ற வேதங்களுக்கு உண்டான பிரதாரண பயத்தை சமிப்பிக்கைக்காகவும் —
உப ப்ரும்ஹண ரூபமான இப்பிரபந்தத்தை பிரவர்த்திப்பித்தான்

இது சர்வ சரண்ய பர தத்வ விஷயமாகவும் –
ஸர்வாதிகாரமான சரணாகதி ரூப பரம ஹித விஷயமாயும் இரண்டு வகையாய் இருக்கும் –
பரம காரணமான பர தத்துவத்தை பிரதிபாதிக்கிற வேதங்களுக்கு உப ப்ரும் ஹணம் அன்றோ இது

———————–

பிரகரண தாத்பர்ய நிர்ணயம் என்னும் நாலாவது அதிகாரம்

சரணாகத விக்ந நிராகரணம் –
ஸ்ரீ விபீஷண சரணாகதி பிரகரணத்தில்
ஆனுகூல்ய சங்கல்பாதி
அங்க பஞ்சக பூர்த்தி –
ஸ்ரீ விபீஷண பல காங்ஷித்வ விசாரம்

சரணாகத விக்ந நிராகரணம்
இப்படி சரணாகதி வேத உபநிஷத்தான இவ் வவபய பிரதான பிரகரணத்தில்

பரமாபத் கதஸ்யாபி தர்மே மம மதிர் பவேத் -உத்தர -10-31 –என்று

ப்ரஹ்மாவின் பக்கலிலே வரம் வேண்டிக் கொண்டு

தர்மிஷ்டஸ்த்வம் யதாவத்ச ததா சைதத் பவிஷ்யதி –உத்தர -10-34-என்று

வரம் பெற்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணாகதி தர்மத்தைப் பரிக்ரஹித்து அனுஷ்டிக்கையாலும் –
பின்பு ஸ்ரீ பெருமாளையும் கூட அனுஷ்டிப்பிக்கையாலும்
சரணாகதி பரம தர்மம் என்னும் இடம் சிஷ்டாசாரத்தாலே ஸ்த்தாபிதம்

இப் பிரகரணத்தில் முன்பே பல சர்க்கங்களாலே ரஜஸ் தமஸ் பிரக்ருதிகளாய் இருப்பார்க்கு
சத்வ ப்ரக்ருதிகளாய் இருப்பார் ஹிதம் சொன்னாலும்
ஸ்ரீ பகவத் விஷயத்தில்
ஆபி முக்கியம் கூடாது என்னும் இடம் சொல்லிற்று

ஸத்வ உத்தரனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணாகதனாய் வருகிற போது அவன் விஷயத்தில்
தேவதா அவதாரரான ஸ்ரீ வானர வீரர்களால் விக்னம் பிரசகதமானபடி சொல்லுகையாலே

ஸ்ரூயதே கில கோவிந்தே பக்தி முத்வ ஹதாம் ந்ருணாம்
சம்சார நியூ நதா பீதா த்ரிதசா பரிபந்தினா –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -2-25-என்கிறபடியே

ஸ்ரீ பகவத் விஷயத்தில் அபிமுகமாவாரைத் தாங்கள் குடிமக்கள் தப்பித் போகிறார்கள் என்று நினைத்து
தேவர்கள் விலக்குவார்கள் என்னும் இடமும்

இப்படி விக்னங்கள் வந்தாலும் ஸூத்த பாவராய் அநன்யராய் வந்து அடைந்தவர்களை

சங்கல்பா தேவ பகவான் தத்வதோ பாவிதாத்மநாம்
வ்ரதாந்தம் அகிலம் காலம் ஸே சயத் யம்ருதேந து -என்றும்

ப்ரவ்ருத்தி காலாதாரப்ய த்வத்மாலாபாவசா நிகம்
யத்ராவகாசோ விக்நா நாம் வித்யதே ந கதாச நே –என்றும்

ஸாத்வத பவ்ஷ் கராதி களிலே சொல்லுகிறபடியே
ஸ்ரீ பெருமாள் தாமே எல்லா விக்னங்களை சமிப்பித்து
அடிமை கொள்ளுவார் என்னும் இடம் வெளியிடப்பட்டது –

————-

ஸ்ரீ விபீஷண சரணாகதி பிரகரேண ஆனுகூல்யாதி அங்க பஞ்சக பூர்ணத்வம் –

சர்வஞ்ஞ ஸம்ஹிதாதிகளில் சொன்ன ஆனுகூல்ய சங்கல்பாதிகளும் அடங்க
இப் பிரகரணத்தில்
காணலாம் எங்கனே என்னில்

அடியிலே ராவணாதிகளுக்கும் கூட ஹித உபதேசம் பண்ணுகையாலும் –

தூதனாய்ச் சென்ற திருவடியை துஷ் ப்ரக்ருதியான ராவணன் அசக்யம் என்று அறியாதே நலிய நினைக்க-
அத்தை விலக்குகையாலும்-

பிறவி உறவையும்
பெரிய ஐஸ்வர்யத்தையும்
புத்ர தாராதிகளையும் அநா தரித்து
பிராதி கூல்ய வர்ஜனம் பண்ணுகையாலும்

ஆனு கூல்ய சங்கல்பமும்
பிராதி கூல்ய வர்ஜனமும் ஸூசிதமாயிற்று –

பெருமாள் சர்வ லோக சரண்யன் என்கிற வ்யவசாயத்தாலும்
ஆஜகாம முஹூர்த்தேன யாத்ர ராம ச லஷ்மண –யுத்த -17-1–என்கிறபடியே
அஞ்ச வேண்டும் பிரதேசத்தில்
அசங்கிதமாகத் தன் நிலமாக நினைத்து வருகையாலும் –
ரஷிஷ்ய தீதி விசுவாசம் -காட்டப்பட்டது –

ராகவம் சரணம் கத –யுத்த -17-14-என்கிற
உபாய வரண வாக்ய சாமர்த்தியத்தால் கோப்த்ருத்வ வரணம் -சொல்லிற்று –

உபாயாந்தர ஸ்த்தாந நிவேச பரமான சரண சப்தத்தால் வ்யஞ்சிதமாய்
ரஷா பர சமர்ப்பண பிரதானமான ஆத்ம நிக்ஷேபமும்
சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மநே
நிவேதயதே மாம் க்ஷிப்ரம் விபீஷணன் உபஸ்திதம் –யுத்த -18-4-என்று
அந்தரங்கராய் இருப்பாரை
முன்னிலையாகக் கொண்டு விசதமாகச் சொல்லப்பட்டது –

இவ்விடத்தில் ஸ்ரீ பெருமாளும்
ஸ்ரீ இளைய பெருமாளும்
முதலிகளும் கேட்க்கும்படி கிட்ட வந்து
பிரணாதஸ் ச மஹா நேஷ-18-14-என்கிறபடியே
கூப்பிடுகிறவன் ஆகையால்
பெருமாளுக்கு அறிவியுங்கோள்-என்கை விவஷிதம் அன்று –

சக்யம் ஆத்ம நிவேதனம் —என்றும்
கிங்கரோஸ் மீதி சாத்மாநம் தேவாயைவம் நிவேதயேத்–ஜிதந்தா -1-14-இத்யாதிகளில் படியே
நிவேதயத மாம் -என்று
என்னை சமர்ப்பியுங்கோள் என்றபடி

ராவணோ நாம துர்வ்ருத்த -17-10-என்று தொடங்கி –
ஸோஹம் ப்ருஷிதஸ் தேந தாச வச்சா வமாநித –என்றது அறுதியாக
துஷ் ப்ரக்ருதியான ராவணனுக்குத் தான்
ஹித உபதேசம் பண்ணிப் பாழுக்கு நீர் இறைத்துப் பரிபூதனான படி சொல்லுகையாலும்

ஸ்வரேண மஹதா மஹாந் -17-9-என்கிற ஆர்த்த ஸ்வரத்தாலும்

நிவேதயதே மாம் க்ஷிப்ரம் -17-15-என்கிற த்வர அதிசயத்தாலும்

பிரணாதஸ் ச மஹா நேஷு ததோஸ்ய பயமாகதம்-18-14-என்கிற
சர்வஞ்ஞனான சரண்யனுடைய வாக்யத்தாலும்
கார்ப்பண்யம் சொல்லப்பட்டது –

ஆக இப்படி
ஆனுகூல்ய சங்கல்பாதி யுக்தையாய்-
பரிபூர்ணையாய்-
ஸ்ரீ த்வயத்தில் பூர்வ கண்டத்தில் சொல்லப்படுகிற
ஸ்வ ரஷா பர சமர்ப்பணாத்மிகையான ப்ரபத்தியை
சர்வ அவஸ்தையிலும் தர்ம சாரத்தில் நிலை குலையாத ஸ்ரீ விபீஷண ஆழ்வான் அனுஷ்ட்டித்தான் –

—————-

ஸ்ரீ விபீஷண காங்ஷித்வ விசாரம்

அதற்கு அவன் பலமாகக் கோலிற்று என் என்னில் –

ஆபாத ரசிகராய் இருப்பார் லங்கா ஐஸ்வர்யம் என்று இருப்பார்கள் –

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் கருத்தை அடி ஒற்றினால்
சரண்யனான ஸ்ரீ பெருமாள் திருவடிகளில்
கைங்கர்யமே பலமாய் இருக்கும் –
அது எங்கனே என்னில் –

சரணாகதி காலம் தன்னில் –
த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ஸ் ச ராகவம் சரணம் கத -17-14-என்று
இதர விஷயங்களில் நைராஸ்யத்தைத் தான் கண்ட யுக்தி பண்ணுகையாலும்

பின்பு ஸ்ரீ பெருமாளுக்கு விண்ணப்பம் செய்கிற போதும் –
பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச
பவத்கதம் மே ராஜ்யம் ச ஜீவிதம் ச ஸூகாநி ச -19-5-என்று
இலங்கை ஐஸ்வர்யாதிகளை அடைய விட்டு
எல்லாப் புருஷார்த்தமுமாகத் தேவரீர் திருவடிகளைப் பற்றினேன் -என்று விண்ணப்பம் செய்கையாலும்
இவன் அநந்ய ப்ரயோஜனனான அதிகாரி என்னும் இடம் ஸூவ்யக்தம் –

ஆன பின்பு
ராஜ்யம் பிரார்த்தய மாநஸ்து புத்தி பூர்வம் இஹா கத -17-65-என்கிற
ஸ்ரீ திருவடி வாக்கியமும்
ந வயம் தத் குலீ நாஸ் ச ராஜ்ய காங்ஷீ ச ராக்ஷஸ -18-13-என்று
பெருமாள் அருளிச் செய்த வார்த்தையும்
ஸ்ரீ ராம பக்தியால் கலங்கின ஸ்ரீ மஹா ராஜருடைய கிளர்த்தியை அடக்குகைக்காக ஈடாக
நீதி சாஸ்திரங்களில் சொல்லும் ராஜ வ்ருத்தாந்தக் கட்டளையில் காட்டின படியாம் அத்தனை –

திருவடியும் பெருமாளும் அருளிச் செய்த பாசுரமும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தன் பாசுரமும் விரோதித்தால்
அந்தரங்க நியாயத்தாலே தன் பாசுரம் பிரபலமாகக் கடவது

அஹம் ஹத்வா தசக்ரீவம் சப்ரஹஸ்தம் ச பாந்தவம்
ராஜநம் த்வாம் கரிஷ்யாமி சத்யமேதத் ப்ரவீமி தே -19-19-என்று

ராவணனைக் கொன்று உம்மை ராஜ்யத்தில்
முடி சூட்டக் கடவோம்-என்று ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்வான்
என் என்னில் –

அதுவும் –
சரீர ஆரோக்யம் அர்த்தாம்ஸ் ச போகாம்ஸ் சைவ அநு ஷங்கி காந்
ததாதி த்யாயிநாம் நித்யம் அபவர்க்க ப்ரதோ ஹரி –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -74-43-என்று
சர்வ நிரபேஷரான ஸ்ரீ திருவடியைப் போலே அவசர உசிதமான அடிமை செய்யக் கடவேன்-என்று
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் விண்ணப்பம் செய்தது –

இவன் தார்மிகத்வத்தை வரமாக வேண்டிக் கொள்ள
ப்ரீதனான ப்ரஹ்மா அமரத்வத்தையும் கூடக் கொடுத்தால் போலே
அடிமை செய்ய வேண்டிக் கொண்ட ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு
ஸ்ரீ பெருமாளே அடிமைக்கு உறுப்பாக ஐஸ்வர்யத்தையும் கொடுத்தார் –

ஆகையால் திருவடி நிலையை முன்னிட்டு
ஸ்ரீ பரதாழ்வான் நாட்டில் உள்ளாரை நியமித்து இருந்தால் போலே
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தமாக அவதீர்ணரான ஸ்ரீ பெருமாளுடைய நியோகத்தாலே
மட்டுப்படாத ராக்ஷஸரை வழிப்படுத்தி
நடத்துகைக்காக ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராஜ்யத்தை இசைகையால்
இதுவும் ஆஞ்ஞ அநு பாலனம் ஆகையால் கைங்கர்ய கோடியிலே அந்வயித்தது –

இவர் தமக்கு இசைவு இன்றிக்கே இருக்கப்
பெருமாளுடைய அநதிலங்க நீயமான சப்த பூர்வக சாசனத்தாலே
ராஜ்யம் பண்ணினார் என்னும் இடம்
ஸ்ரீ பெருமாள் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளுகிற போது
விடை கொடுத்த பாசுரத்தாலே வெளியிடப்பட்டது –

யாவத் பிரஜா தரிஷ்யந்தி தாவத் த்வம் வை விபீஷண
ராக்ஷ சேந்த்ர மஹா வீர்ய லங்காஸ்த்த த்வம் தரிஷ்யசி
சாபிதஸ் த்வம் சகித்வேந கார்யம் தே மம சாசனம்
ப்ரஜாஸ் ஸம்ரக்ஷ தர்மேண நோத்தரம் வக்தும் அர்ஹஸி –உத்தர -108-27-/29-என்று
மிறுக்கோடே இறே ஸ்ரீ பெருமாள் இவரை இராஜ்யத்தில் இருக்க இசைவித்தது –

இப்படி இவன் அநந்ய ப்ரயோஜனாகையாலே இறே இவனுக்குத் தம்மிலும் சீரிய
ஸ்ரீ கோயில் ஆழ்வாரை எழுந்து அருளுவித்துக் கொடுத்தது –

இப்படி அன்றிக்கே
ஆபாத ப்ரதீதி பக்ஷத்தாலே இவன் ஐஸ்வர்த்தியானாலும்
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதம் சந
அபயம் சர்வம் பூதேப்யோ ததாத் ஏதத் விரதம் மம –யுத்த -18-33- என்று
பொதுவான பாசுரங்களாலே
சரண்ய அபிப்ராயத்தைப் பார்த்தால்
ப்ரபத்தியானது சாமாந்யேந மோக்ஷ பர்யந்த சகல புருஷார்த்த சாதனம்
என்னும் இடம் தெளியலாம் –

பிரகரண தாத்பர்யம் என்னும் நாலாம் அதிகாரம் முற்றிற்று –

——————

சரண்ய சீல பிரகாசம் என்னும் ஐந்தாம் அதிகாரம் –

பரத்வ ஸுலப்ய யுக்தத்வம் -சர்வ லோக சரண்யாய ஸ்லோகார்த்தம் -த்வம் ஹி ஸ்லோகார்த்தம் –
அத ராம ஸ்லோகார்த்தம் -மித்ர பாவேந ஸ்லோகார்த்தம் –

பரத்வ ஸுலப்ய யுக்தத்வம் –
இப்படித் தன் அபிமத சித்திக்காக சரணாகதனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் –
சர்வ லோக சரண்யாய —யுத்த -18-4-என்கிற அர்த்தத்தை –
ராகவாய மஹாத்மநே-என்று
ஸுலப்யத்தாலும்
பரத்வத்தாலும் சாதிக்கிறான்

த்ருணம் ஸூலபமே யாகிலும்
ஒன்றுக்கும் உறுப்பு அல்லாமையாலே அநாதரணீயம் –

ஸூ மேரு ஆதரணீயமே யாகிலும்
துர்லபம் யாகையாலே அநுப யுக்தம் –

ஆகையால்
பரத்வமும்
ஸுலப்யமும் அபேக்ஷிதம் –

——–

சர்வ லோக சரண்யாய–ஸ்லோகார்த்தம்

சர்வ லோக சரண்யாய –
உங்களுக்குத் போலே எனக்கும் ஸ்ரீ பெருமாள் பக்கலிலே கூறு உண்டு என்கிறான் –

அங்கன் அன்றிக்கே
யாவன் ஒருவனோடு ஒரு குடல் துவக்காலே நானும் கூட உங்களுக்குக்
கல்லும் தடியும் எடுக்க வேண்டும்படியாய் இருக்கிறேன் –

அப்படியே மஹா அபராதனான ராவணன் தனக்கும் கூட
ஸ்ரீ பெருமாள் சரண்யராய்க் கிடிகோள் இருப்பது –

இப்படிப் பொதுவான சரண்யன் விஷயத்தில்
ருசி இல்லாமையால் துராத்மாவான ராவணன்
தன் கூறு இழக்கிறான் அத்தனை

ராகவாய மஹாத்மனே -என்று பத த்வய
சமபி வ்யாஹாரத்தாலே
நிலை வரம்பில் பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம் -என்கிறபடியே
அவதார தசையில்
பர தசையில் காட்டிலும் அதிசயிதமான மஹாத்ம்யத்தைச் சொல்லுகிறான் –

ராகவாய
ஸ்ரீ பெருமாளுக்கு சரணாகத ரக்ஷணம் ரகு முதலாகப் போருகிற குல தர்மம் அன்றோ

மஹாத்மநே
கடலைக் கையிட்டு இறைத்து முடிய ஒண்ணாதாப் போலே விசேஷித்துச் சொல்ல முடிய
ஒண்ணாது இம் மஹாத்ம்யம்

இவ் வவதார தசையில் உண்டான நிரதிசய மஹாத்ம்யத்தைப்
பர தார தர்சன பராங்முகரான ஸ்ரீ பெருமாள் திரு முன்பே நின்று
கதஞ்சித் அஹம் ஆகத–ஆரண்ய -31-2- என்கிறபடியே
பெண்ணுடை உடுத்து உருமாறி நான் ஒருவனும் தப்பித் போந்தேன் -என்று
ராவணனுக்கு ஜனஸ்தான வ்ருத்தாந்தத்தைச் சொன்ன
அகம்பனன் வாக்யத்தாலே மகரிஷி வெளியிட்டான் –

அஸாத்ய குபிதோ ராமோ விக்ரமேண மஹா யஸா
ஆப காயா ஸூ பூர்ணாயா வேகம் பரி ஹரேச்சரை
சதா ராக்ரஹ நக்ஷத்ரம் நபஸ் சாப்யவ ஸாதயேத்
அசவ் ராமஸ்து சீதந்தீம் ஸ்ரீ மாநப் யுத்தரேத் மஹீம்
பித்வா வேலாம் சமுத்ரஸ்ய லோகாநாப் லாவயேதி மாந்
வேகம் வாபி சமுத்ரஸ்ய வாயும்வா விதமேச்சரை
ஸம்ஹ்ருத்ய வா புநர் லோகாந் விக்ரமேண மஹா யஸா
சக்தஸ் வா புருஷ வ்யாக்ர ஸ்ரஷ்டும் புநரிமா பிரஜா
ந ஹி ராமோ தசக்ரீவ சக்யோ ஜேதும் த்வயாயுதி
ரக்ஷஸாம் வாபி லோகேந ஸ்வர்க்க பாபஜநைரிவ –ஆரண்ய -31-23-/24-/25-/26-27-என்கிறபடியே
ராவண கோஷ்டியிலே அவனுக்கு ஆப்தரானவர்கள்
ப்ரஸித்தமாக்கின மஹாத்ம்யம் இது

ஸ்ரீ பெருமாளுடன் பொருது இளைத்துக் கலங்கின ராவணன்
தெளிந்து தன் தேரை மீட்டுக் கொண்டு
போன சாரதியை வெறுத்துச் சொல்லும் போதும்
சத்ரோ ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்சனீயஸ்ய விக்ரமை -106-6–என்று மேலே
இவ்வாதார மஹாத்ம்யத்தைச் சொல்லக் கடவன் இறே

இப்படி ஸ்ரீ விபீஷண ஆழ்வான் –
மஹாத்மநே-என்றும் –
ராகவாய -என்றும் சுருங்கச் சொன்ன பரத்வமும் ஸுலப்யமும்
மேலே முதலிகள் பாசுரத்தாலும் வெளியிடப்பட்டது -எங்கனே என்னில்

அஞ்ஞாதம் நாஸ்திதே கிஞ்சித் த்ரிஷு லோகேஷு ராகவ
ஆத்மாநம் பூஜயந் ராம ப்ருச்சஸ் யஸ்மாந் ஸூஹ்ருத்தயா –யுத்த -17-33-/34-என்றார்கள் –

இவ் வர்த்தம் தன்னையே
த்வம் ஹி சத்யவ்ரத ஸூரோ தார்மிகோ திருட விக்ரம
பரீஷ்ய காரீ ஸ்ம்ருதி மாந் நிஸ்ருஷ்டாத்மா ஸூஹ்ருத் ஸூ ச –என்று விவரித்தார்கள்

————–

த்வம் ஹி ஸ்லோகார்த்தம்
அத ராம ஸ்லோகார்த்தம்

த்வம் ஹி -என்கிற இத்தால்
மேலே சொல்லப்படுகிற குணங்களுக்கு எல்லாம் அதிசயவஹமான
ஸ்வரூப வை லக்ஷண்யம் சொல்லுகிறது –

பொற்றாமரைப் பூவின் பரிமளத்திற்கு அல்லாத தாமரைப் பூவின் பரிமளத்தைக் காட்டில்
ஆஸ்ரய வை லக்ஷண்யத்தாலும் அதிசயம் உண்டாய் இருக்கும் இறே

இவ்வர்த்தத்தை
குணாயத்தம் லோகே குணிஷு ஹி மதம் மங்கள பதம்
விபர் யஸ்தம் ஹஸ்தி ஷிதிதர பதே தத் த்வயி புந
குணா சத்யா ஞான ப்ரப்ருத்ய உத த்வத் கத தயா
ஸூபீ பூயம் யாதா இதி ஹி நிரணைஷ்ம ஸ்ருதிவசாத் –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் —11-என்கிற ஸ்லோகத்தில்
குணங்கள் தேவரீரை அடைந்து மங்களத் தன்மையை அடைந்தன என்று உபபாதித்தார்கள் –

சத்ய விரத-
சர்வ லோக சரண்யரான தேவரீருடைய சரணாகத ரக்ஷண விரதத்தை
ராவண பர்யந்தமாக
எவ் விஷயத்திலே விலக்கலாம்

ஸூர-
இவ் விரதத்துக்கு விரோதிகளை யதார்ஹமாகத் தேவரீர் அமோகங்களான
அம்புகளாலே யாதல்
உத்தரங்களாலே யாதல் வெல்லும் சேவகம் வேறு ஒருவருக்கு உண்டோ

தார்மிக
சரணாகத ரக்ஷணத்தில் நிலையுடையீர் தேவரீரே அன்றோ

திருட விக்ரம
ஆஸ்ரித அர்த்தமான தேவருடைய பராக்கிரமத்தை விரோதிகளால் ஆதல் ஆஸ்ரிதர் பக்கல்
குற்றம் காட்டும் பரிவரால் ஆதல் விலக்கப் போமோ

பரீஷ்ய காரீ
சர்வஞ்ஞராய் அஷ்ட அங்கையான புத்தியால் ஆராய்ந்து செய்து அருளும் காரியங்களுக்கு
அடியோங்களைக் கேட்க வேண்டுவது உண்டோ

ஸ்ம்ருதி மாந்
தேவரீர் விசிஷ்டாதிகளான ஞான விருத்தர்களுக்கு –
ராம குருக்கள் -என்று ஒரு தரம் கொடுக்கைக்காக
அவர்கள் பக்கல் கேட்டு அருளின அர்த்தங்களில் அவசரங்களில் உதவாதது உண்டோ

அன்றிக்கே
ந ஸ்ம்ரத்ய அபகாராணாம் சதமபி யாத்மவத்த்யா
கதஞ்சித் உபகாரேண க்ருதேந ஏகேந துஷ்யதி–அயோத்யா -1-11- என்னும்படி யன்றோ
தேவரீருடைய க்ருத்தஜ்ஜதை இருக்கும் படி

நிஸ்ருஷ்டாத்மா ஸூஹ்ருத் ஸூச
வரத சகலமேதத் சமஸ்ரிதார்த்தம் சகர்த்த –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -65-என்னும்படி
தேவரீருடைய
ஆத்மாத்மீயங்கள் எல்லாம் ஆஸ்ரிதரான அடியோங்கள் இட்ட வழக்காக்கி யன்றோ தேவரீர் வைப்பது –

ஆகையால் தாக்ஷிண்ய பர தந்தரரான தேவரீர் திரு உள்ளத்தால் கோரின -கோலின -காரியத்தைக்
காபேயரான எங்களையும் இசைவித்துக் கொண்டு செய்து அருளுவதற்காக அன்றோ
எங்களைக் கேட்டு அருளுகிறது -என்று இப்படி ஸ்ரீ பெருமாளைக் கொண்டாடி –

பரிவாலே கலங்கின –
அங்கத -சரப -ஜாம்பவத்-ப்ரப்ருதிகளான முதலிகள்
சில ஹேத்வ ஆபாசங்களை ஹேதுக்களாய்க் கொண்டு
ஸ்ரீ விபீஷண பரிக்ரஹத்தைக் கடுக இசையாது ஒழிய –

தத்துவ வித்தாய் சன்மந்திரியான
ஸ்ரீ திருவடி அவர்கள் சொன்ன ஹேத்வ ஆபாசங்களை எல்லாம் பிரதி ஷேபித்து ஸூபரீஷிதங்களான
நிர்த்தோஷ குணங்களாலே ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பரிக்ராஹ்யன் என்று விண்ணப்பம் செய்தான்

அவ்வளவில் ஸ்ரீ பெருமாள் சரணாகதனை நலியச் சொல்லுகிற திரளில்
இவன் பரிக்ராஹ்யன் என்று சொல்லுவாரையும் பெற்றோமே -என்று திரு உள்ளம் உகந்து

அத ராம ப்ரசன்னாத்மா ஸ்ருத்வா வாயூ ஸூ தஸ்ய ஹா
ப்ரத்ய பாஷத துர்த்தர்ஷஸ் ஸ்ருதவான் ஆத்மநி ஸ்த்திதம் –யுத்த -18-1-என்கிறபடியே
அகம்ப நீயமான ஸ்வ மதத்தை அருளிச் செய்யத் தொடங்கினார் –

ஸ்ரீ விபீஷணன் ச தோஷன்-ஆகையால் சங்க நீயன் -என்ற அங்கதாதி மதங்களும்

இவன் நிர்தோஷன் ஆகையால் பரிக்ராஹ்யன் -என்கிற ஸ்ரீ திருவடி மதத்துக்கும்
அவிருத்தமாக –
ச தோஷமே யாகிலும் சரணாகதன் என்று பேரிட்டு வந்தவன் பரிக்ராஹ்யன் -என்று
தாம் அருளிச் செய்யப் புகுகிற மதம் அவ்வோலகத்திலே சர்வ விருத்தம் ஆகையால்
இத்தை எல்லாரும் கூட அநாதரிப்பார்கள் என்று பார்த்து அருளி –

மமாபி த விவஷாஸ்தி காசித் பிரதி விபீஷணம்
ஸ்ரோதும் இச்சாமி தத் சர்வம் பவத்பி ஸ்ரேயஸி ஸ்த்திதை -18-2-என்று
நம்முடைய மதத்தை நாமும் –
நாம் முன் – சொல்ல நினையா நின்றோம் –
அதனுடைய அனுஷ்டானம் பின்பு பார்த்துக் கொள்ளுகிறோம்-
நமக்குப் பரிவரான நீங்கள் நாம் சொல்லுகிற வாக்கியத்தை ஸ்ரீ விபீஷணனுடைய சரணாகதி வாக்கியம்
பட்டது படுத்தி அநாதரியாதே கேட்டுத் தர வேணும் -என்று இரந்து அருளினார்

இப்படி முதலிகள் செவி தாழ்க்கும்படி இரந்து தம்முடைய ஸ்வ பாவம் சொல்லுவாரைப் போலே
ஸ்வ சித்தாந்தத்தை சமீஸீனமான ஹேதுவோடே சுருங்க அருளிச் செய்கிறார் –

மித்ர பாவேந ஸ்லோகார்த்தம் –

மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேதத கர்ஹிதம் -18-3-என்று

ஸ்ரீ பெருமாள் தம்முடைய சீர்மையாலே ஆஸ்ரிதனைத் தம்மோடு ஓக்கப் பார்த்து அருளி
சரணாகதன் என்று புல்லிதாகச் சொல்ல மாட்டாமல் –
மித்ர பாவேந -என்று அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெருமாளோடே துல்ய சீலையான ஸ்ரீ பிராட்டியும்
விதித ஸஹ தர்மஜ்ஞ சரணாகத வத்ஸல
தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதம் இச்சசி -ஸூந்தர -21-20- என்று
சரணாகதி சப்த விஷயத்தில் மைத்ரீ என்று அருளிச் செய்தாள் இறே

மித்ர பாவேந –
மித்ரத் வேந -இத்தால் ஆனுகூல்ய சங்கல்பாதி பூர்வகமாகப் பண்ணின
ஆத்ம ரஷா பர சமர்ப்பணம் ஸூசிதம் ஆகிறது
அங்கன் அன்றிக்கே
மித்ர பாவனையால் என்னவுமாம் –

உள்ளில்லையே யாகிலும் சரணாகதன் என்னும் பேரிட்டு வந்தாரை நாம் விட மாட்டோம் என்கிறார்

இப்படி வ்யாஜ மாத்ர சாபேஷாரான ஸ்ரீ பெருமாள் திரு உள்ளத்தை அடி ஒற்றி
பாபீய ஸோபி சரணாகதி சப்த பாஜோ நோ பேஷணம் மம தவோசித மீஸ்வரஸ்ய
த்வத் ஞான சக்தி கருணா ஸூ ஸதீஷு நைவ பாபம் பராக்ரமிது மர்ஹதி மாமகீநம் –ஸ்ரீ அதிமானுஷ ஸ்தவம் -61-என்று
பூர்வர்கள் விண்ணப்பம் செய்தார்கள் இறே

ஸம் ப்ராப்தம்
இவன் ராவண க்ராஹ க்ருஹீதனாய்க் கடலுக்கு அக் கரைக்கே நின்று
ராகவம் சரணம் கத -என்றானாகில்
நாம் அதி த்வரையோடு வைநதேய கதியாலே
அக் கரைக்கே செல்ல வேண்டி இருக்க
நாம் இருந்த இடத்தில்
பங்கோரு பரி கங்கா நிபதன நியாயத்தாலே வந்த இவனை நாம் விடும்படி என்

ஸம்ப்ராப்தம்
சம்யக் பிராப்தம் -இங்கு சம்யக்த்வமாவது
த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ஸ் ச -17-14-
பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச
பவந்தம் மே ராஜ்யம் ச ஜீவிதம் ச ஸூகாநி ச -19-5- என்கிறபடியே
ஹேய உபாதேய விபாகம் பண்ணிக் கழிக்க வேண்டுவன கழித்துக் கைக்கொள்ள வேண்டுவது கைக்கொண்டு
சரணாகதன் என்கிற யுக்தி மாத்திரமே பற்றாசாகப் பற்றி
அதி சங்கை தீர்ந்து அந்தரங்கரைப் புருஷகாரமாகக் கொண்டு முன்னிட்டு வருகை

ந த்யஜேயம்
இவன் பரித்யாஜ்யனோ -பரிக்ராஹ்யனோ -என்கிற மீமாம்சை எதற்கு உறுப்பாகிறது –
சரணாகதன் என்கிற சப்தத்தை நாம் செவிப்படுத்தின அவனை விட வல்லோமோ

கதஞ்சன
சரணாகதனுக்குக் குணங்கள் இல்லையே யாகிலும் –
தோஷங்கள் பிரசுரங்களே யாகிலும்
இவனைக் கைக்கொள்ளுகை பரிவரானவர்க்கு அபிமதம் அன்றே யாகிலும்
இவனைக் கைக் கொண்டால்
மேல் த்ருஷ்ட அதிருஷ்ட ப்ரத்யவாய சஹஸ்ரம் உண்டே யாகிலும்
ஒரு படிக்கும் நாம் இவனைக் கை விட மாட்டோம் –

இஸ் ஸ்லோகத்தில் பூர்வ அர்த்தத்தாலே –
உன்னுடையவன் -நான் உனக்கே பரம் -என்று
ஒரு கால் உறவு பண்ணுவது அடியாக ஒரு காலத்தில் இவனை
சர்வேஸ்வரன் விடான் -என்ற ஸ்ருதி வாக்ய அர்த்தம் உப ப்ரும்ஹணம் ஆயிற்று

இப்படி ஒரு படியாலும் சரணாகதனைத் தாம் விட மாட்டாத ஸ்வ பாவத்தை அருளிச் செய்து
முதலிகள் விண்ணப்பம் செய்த பரித்யாஜ்யதா ஹேதுக்களான தோஷங்களுக்கு சாத்யத்தோடு
வியாப்தி இல்லாமையால்
அவை உண்டே யாகிலும் அகிஞ்சித்காரம் என்கிற திரு உள்ளத்தால்
அவர்கள் சங்கித்த தோஷங்களுடைய ஸ்வரூப ஸத்பாவத்தை இசைகிறார் –

தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்
ஸ்யாத் –
இவ்விடத்தில் அப்யனுஜ்ஜை தோற்றுகைக்காக வாதல் –
சம்பாவனையைப் பற்ற வாதல் –
துஷ்டனையும் சரணாகத சப்த மாத்திரத்தாலே பரிக்ரஹித்தார் என்கிற மஹா குண சித்த்யர்த்தமாக
தோஷ பிரார்த்தனையைப் பற்ற வாதல் -ஸ்யாத் -என்கிறார்

தோஷ -என்கிற
சாமான்ய நிர்த்தேசத்துக்கு நீங்கள் சொன்ன தோஷங்கள் ஆகவுமாம்-
நீங்கள் சொல்லாத சாஷாத் ராவண அதிகதமான தோஷாந்தரங்கள் ஆகவுமாம் -என்று கருத்து –

இத் தோஷங்கள் எல்லாம் பரித்யாஜ்யதா ஹேதுக்களாவது சரணாகத வ்யதிரிக்த விஷயத்திலே என்று
தஸ்ய ஸ்யாத் -என்கிற
சர்வ லோக சரண்யரான ஸ்ரீ பெருமாளுக்குத் திரு உள்ளம் -ஆகையால் இறே
யதிவா ராவண ஸ்வயம் -18-35–என்றும் ராவணன் தன்னைக் குறித்தும்
நஸேச் சரணம் அப் யேஷி -41-66-என்றும் அருளிச் செய்கிறது

சதா மேதத் அகர் ஹிதம்
தேவரீர் ஆர்த்ர ஸ்வபாவர் ஆகையால் துஷ்ட பரிக்ரஹம் பண்ணினால்-
நாட்டிலே சிஷ்டை கர்ஹை பிறவாதோ-என்று முதலிகளுக்குக் கருத்தாக
அதற்கும் உத்தரம் அருளிச் செய்கிறார் –
சதா மேதத் அகர் ஹிதம் – என்று –

அகர்ஹிதம்
கர்ஹிதா தந்யத் –பூஜிதம் -என்றபடி –
நாம் சரணாகதனைத் தோஷம் பாராதே பரிக்ரஹித்தால்
வத்யனே யாகிலும் சரணாகதனை அழியக் கொடுக்கலாகாது -என்கிற ஸ்ருதி அர்த்தத்தை அறிந்து
அனுஷ்ட்டித்துப் போருகிற வசிஷ்ட பகவான் விச்வாமித்ர பகவான் உள்ளிட்ட சத்துக்கள்
நாம் பண்ணின தர்ம உபதேசம் பலித்தது என்று கொண்டாடும்படியாம் –

நீங்கள் சொல்லுகிறபடியே கேட்டு நாம் கை விட்டால் அவர்கள் நம்மை கர்ஹிக்கும் படியும் –
ஆகையால் நமக்குக் கார்யம் தப்பாமைக்கு நீதி சொல்லப் பரிவும் நிரப்பமும் உடைய நீங்கள்
வசிஷ்ட விச்வாமித்ர ப்ருஹஸ்பதி ரகு சிபி ப்ரப்ருதிகளான சத்துக்களும் நெஞ்சாறல் படாமே
நம் ஸ்வ பாவத்தையும் குலையாதே நம்மைப் பெறப் பாருங்கோள்-என்று திரு உள்ளம்

சரண்ய சீல பிரகாசநம் என்னும் ஐந்தாவது அதிகாரம் முற்றிற்று –

————-

சரண்ய வைபவம் பிரகாசம் -என்னும் ஆறாவது பிரகாரம் –

ஸ்ரீ விபீஷண விஷயே ஸ்ரீ ஸூக்ரீவ அதி சங்கா நிவரணம் –
சரண்யத்வ உபயுக்த குண பூர்ணத்வம்

ஸ்ரீ விபீஷண விஷயே ஸ்ரீ ஸூக்ரீவ அதி சங்கா நிவரணம் –
இப்படி ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்த வார்த்தையைக் கேட்டு ஸ்ரீ மஹா ராஜர்
கூட ஹ்ருதயனான ராக்ஷஸனுடைய அநு பிரவேசத்தினாலே என் விளையப் புகுகிறதோ என்று
ஸ்ரீ பெருமாள் பக்கல் பரிவாலே கலங்கி பின்பு

கோ நாம ச பவேத் தஸ்ய யமேஷ ந பரித்யஜேத்
ஈத்ருசம் வ்யஸனம் பிராப்தம் பிராதரம் ய பரித்யஜேத் -18-5-என்று
ஸ்ரீ விபீஷண தவ்ர் ஜன்யாதிகளைக் காட்டி
ஸ்ரீ பெருமாளை விலக்கப் பார்க்க –
ஸ்ரீ பெருமாள் ராஜ நீதி மரியாதையாலே உத்தரம் அருளிச் செய்தார் –

பின்னையும் ஸ்ரீ மஹா ராஜர் -ஸ்ரீ பெருமாளுடைய
ப்ரபந்ந பார தந்தர்ய காஷ்டையாலே இறே
நாம் விண்ணப்பம் செய்த வார்த்தை திரு உள்ளத்தில் படாதே இருக்கிறது -என்று புத்தி பண்ணி

ஒரு ப்ரபத்திக்கு இரண்டு பிரபத்தி பண்ணுவோம் -என்று
ஸ்ரீ இளைய பெருமாளையும் கூட்டிக் கொண்டு
திருவடிகளில் விழுந்து ஸ்ரீ பெருமாள் திரு உள்ளத்திலே தரிக்க வேணும் என்று பார்த்து –

உம்மளவில் அன்றிக்கே
உமக்குத் தோழனான என் விஷயத்திலும்
பஹிஸ் சர பிராண பூதரான ஸ்ரீ இளைய பெருமாள் விஷயத்திலும்
இவன் பிரச்சன்னனாய் நின்று நலியும் கிடீர் –
ஆகையால் இவன் வத்யன் என்று விண்ணப்பம் செய்ய –

இத்தைக் கேட்ட பின் ஸ்ரீ பெருமாள்
ஸூக்ரீ வஷ்ய து தத் வாக்யம் ராம ஸ்ருத்வா விம்ருஸ்யச —
தத ஸூபதரம் வாக்யம் உவாச ஹரி புங்கவம் -18-21-என்கிறபடியே
கலக்கம் அடியாக ஸ்ரீ மஹாராஜர் ஸ்ரீ இளைய பெருமாளையும் கூட்டிக் கொண்டு
பண்ணின சரணாகதியைக் காட்டிலும் தெளிவு அடியாக வந்த
ஸ்ரீ விபீஷணன் சரணாகதி ஒன்றுமே பிரபலம் என்று அறுதியிட்டு

ஸ்ரீ மஹா ராஜருடைய அச்சம் தெளிய வேண்டும் என்று பார்த்து அருளி –
தோழனாரே ஸ்ரீ விபீஷணன் துஷ்டன் என்றும்
அதுஷ்டன் என்றும் பண்ணுகிற விசாரம் ஏதுக்காகப் பண்ணுகிறீர்
தம் அளவில் ராக்ஷஸன் என்கிற இது ஏன் என்பது
நம் அளவிலாதல்
உம்மளவில் யாதல் –
தம்பி அளவில் யாதல் -இவன் ஒரு பாதகம் செய்கைக்கு பிரசங்கம் என்

நம்முடைய பூந்தோட்டத்தில் ஜாதி மாத்ர வானரங்களுக்கும் இவன் ஒரு குற்றம் செய்ய வல்லனோ
நாம் நினைத்த போது பிசாசங்கள் அசுரர்கள் யக்ஷர்கள் பிருத்வியில் உள்ள ராக்ஷஸர்கள் எல்லாரும்
திரண்டு வந்தாலும் ஒரு அங்குளி அக்ரத்துக்குப் பற்றுமோ –
அஞ்சலியாகிற அஸ்திரம் எடாதார்க்கு நம்மை வெல்ல விரகுண்டோ-என்று
தம்முடைய சர்வ சக்தித்வத்தை வெளியிட்டு
மஹா ராஜருடைய அச்சத்தைக் கழிக்கிறார் –

ஸூ துஷ்டோ வாப்ய துஷ்டோ வா கிமேஷ ரஜ நீசர
ஸூஷ்ம மப்யஹிதம் கர்த்தும் மமா சக்த கதமசந
பிஸாஸாந் தானவாந் யஷாந் ப்ருதிவ்யாம் யே ச ராக்ஷஸாந்
அங்குள் யக்ரேண தாந் ஹாந்யாம கிச்சன் ஹரி கணேஸ்வர யுத்த -18-22-/23-
பண்டு நாம் உமக்கு காட்டின பிரபாவத்தை வானர ராஜ்யத்திலே புக்கவாறே மறந்தீரோ

மஹாத்மநே -என்று
ஸ்ரீ விபீஷணன் நினைப்பித்ததும் நெஞ்சில் பட்டது இல்லையோ –
எதிரிகள் விரல் கவ்வும்படி காணும் -நம்முடைய யங்குள் யக்ர வியாபாரம் –
நகங்கள் இறே ஸ்ரீ பெருமாளுக்கு ஸ்ரீ நரஸிம்ஹ தசையில் பஞ்சாயுதங்கள்

சரண்யத்வ உப யுக்தமாக ஸ்ரீ பகவச் சாஸ்த்ரங்களிலும் அபியுக்தர் வாக்யங்களிலும்
ஸர்வஜ்ஜோ அபி ஹி விஸ்வேச சதா காருணிகோ அபி சந் –ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -17-8-என்றும்
த்வத் ஞான சக்தி கருணா ஸூ ச தீஷு –ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம் -61-என்றும்
சங்க்ருஹீதமான சரண்ய குண த்ரயமும் இப்பிரகரணத்தில் விவஷிதம் -எங்கனே என்னில் –

அடியிலே –
அஞ்ஞாதம் நாஸ்தி தே கிஞ்சித் –17-33-என்று
சர்வஞ்ஞத்வம் சொல்லிற்று

மத்யே
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன -18-3-என்று
பரம காருணித்தவம் சொல்லிற்று

இவ்விடத்தில்
அங்குள் யக்ரேண தாந் ஹந்யாம் இச்சன்–18-23-என்று
சர்வ சக்தித்வம் சொல்லிற்று – –

இப்படி மானுஷ பாவத்தில் நின்றும்
ராம சப்தம் ஈரரசு படாதபடி பண்ணின மஹா வீரன் என்னும் செருக்காலே
மதியாமே பேசுகிறாப் போலே
தம்முடைய ஈஸ்வரத்வ
ரக்ஷகத்வ ஞாபக
சர்வ சக்தித்வத்தாலே
சரண்யத்வ உபயுக்த சர்வ குண சம் பூர்ணதையை அருளிச் செய்து
ஸ்ரீ மஹா ராஜ ப்ரப்ருதிகளுடைய அச்சம் தீரும்படி பண்ணி அருளினார்

சரண்ய வைபவ பிரகாரம் என்னும் ஆறாவது அதிகாரம் முற்றிற்று

—————–

பரம தர்ம நிர்ணயம் என்னும் ஏழாவது அதிகாரம் —

சரணாகதியின் பரம தர்மத்வம் –
ஸ்ரூயதே ஹி ஸ்லோகார்த்தம் —
வ்யாக்ர வானர சம்வாதம் –
கண்டு காதா விவரணம் –
சரணாகத பரித்யாகே த்ருஷ்ட ப்ரத்யவாய நிரூபணம் –
அத்ருஷ்ட ப்ரத்யவாய நிரூபணம் – ஸ்வ மத பிரகாசநம்

சரணாகதியின் பரம தர்மத்வம் –
இப்படித் தம்முடைய ஸ்வ பாவத்தையும் ப்ரபாவத்தையும் வெளியிட்டு –
மேல் -இவன் துஷ்டனே யாகிலும் –
நாம் அசக்தரே யாகிலும்
பிராண பர்யந்தமாக சரணாகத சம்ரக்ஷணம் பண்ண வேண்டும் –

இதுவே பரம தர்மம் என்னும் இடத்தைக்
கபோத உபாக்யான ஸஹ க்ருத
கண்டு காதா விதி முகத்தால் அருளிச் செய்கிறார் –

———-

ஸ்ரூயதே ஹி ஸ்லோகார்த்தம்

ஸ்ரூயதே ஹி கபோதேந சத்ரு சரணமாகத
அர்ச்சி தஸ் ச யதா நியாயம் ஸ்வைஸ் ச மாம் ஸை நிமந்த்ரித –
ஸ்ரூயதே-என்கிற இத்தால்

ஸ்ருணு ராஜந் கதாம் ஏதாம் சர்வ பாப பிரணாசி நீம்
ந்ருபதே முசுகுந்தஸ்ய கதிதா பார்க்க வேண யா -இதிஹாச சமுச்சயம் -8-5-என்றும்

ய இதம் ஸ்ரூணுயான் நித்யம் படே தாக்யா ந முத்தமும்
வி முக்த சர்வ பாபேப்யோ ஸ்வர்க்க லோகம் ச கச்சதி –இதிஹாச சமுச்சயம் 8-5-128–என்றும் சொல்லுகிறபடியே

பாவநத்மத்வத்தாலே சர்வரும் ஆதரித்துக் கேட்க்கும் படி ஸூசித்தம் ஆகிறது

ஸ்ரூயதே
விப்ர கீர்ணங்களாய் அநந்தங்களான ஸ்ருதி களை சாஷாத் கரிக்க வல்லாருக்கு இதுவும்
ஒரு மூலையில் காணலாய் காணும் இருப்பது

ஸ்ரூயதே
பார்க்கவாதிகள் சொல்ல முசுகுந்தாதிகள் கேட்கலாம் அத்தனை போக்கி எத்தேனையேனும்
காருணிகராய் இருப்பாராலும் இப்படி அனுஷ்டிக்கை அசக்யம் காணும்

ஹி
அதி பிரசித்தம் ஆகையாலும்
அந்ய விருத்தம் ஆகையாலும்
இவ்விருத்தாந்தம் எங்களுக்கு முன்னே நீங்களும்
கேட்டுப் போருமது அன்றோ –
நம் பக்கல் பரிவாலே வந்த கலக்கத்தை விட்டு நீரே பிரதி சந்தானம் பண்ணிப் பாரீர்

கபோதேந
ஒரு த்ரை வர்ணிகனும் அன்று –
வர்ண மாத்திரத்தில் பிறந்தான் ஒருவனும் அன்று –
சாமான்ய தர்ம யோக்ய மனுஷ்ய ஜாதியனும் அன்று –
ஒரு திர்யக் செய்த படி இது –
இப்படி இத் தர்மம் திர்யக்குகளுக்கும் கூட ரக்ஷணீயமுமாய் இருந்தது

தாம் தர்ம ப்ரவர்த்தகரான நாம் இருந்து
சரணாகதனை வத்யன் என்பதும் –
த்யாஜ்யன் என்பதும் ஆகா நின்றோம்

கபோதேந-
ஒற்றைக் கபோதம் ஆகையால் விலக்குகைக்கு ஈடான பரிவர் இல்லாமையாலும் –
அர்த்தம் -என்று சுருதியில் ஓதுகிறபடியே ஸஹ அதிகாரத்தில் தர்மியிலே சொருகி
ச்ருணு சாவஹித காந்த யத்த வாஹ்யாம் யஹம் ஹிதம்
பிராணைர் அபி த்வயா நித்யம் சம் ரஷ்ய சரணாகத –என்று
தர்மத்தில் பிரேரிப்பிக்கிற
ஸஹ தர்ம சாரிணீ சந்நிதியாலும்
அக் கபோதம் சடக்கென சரணாகத ரக்ஷண தர்மம்
அனுஷ்ட்டிக்கப் பெற்றது இறே

சத்ரு
கபோதத்திற்கு வேடன் தானே பார்ய அபஹாரம் பண்ணின சத்ருவாய் இருக்கும் –
நமக்கு ஸ்ரீ விபீஷணன் அப்படிப்பட்ட சத்ரு இருந்த ஊரில் நின்றும் வந்தான் அத்தனை அன்றோ –

சரணமாகத-
கபோதம் இருந்த மரத்தடியில் வேடன் யாதிருச்சிகமாக வந்தான் அத்தனை
ஸோ அஞ்சலிம் சிரஸா க்ருத்வா வாக்யமாஹ வனஸ்பதிம்
சரணம் ஹி கதோஸ்ம் யத்ய தேவதாம் த்விஹ வாசி நீம் –என்று
வனஸ்பதி தேவதையைக் குறித்து சரண சப்தம் பிரயோகித்தான் ஆகிலும்
இக் கபோதத்தைக் குறித்து சரண சப்தம் பிரயோகித்திலன்

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் புத்ர தாராதிகள் எல்லாம் விட்டு –
ராகவம் சரணம் கத -என்று நமக்கு கூடஸ்தனான ரகு
ரகு ராக்ஷஸ சம்வாதத்திலே சரணாகத சம்ரக்ஷணம் பண்ணின படியை நினைப்பித்துக் கொண்டு
நம்மை யதாக்ரமம் சரணாகதனானான்

அர்ச்சித ச
வேடனாகையாலே பஷி ஜாதிக்கு ப்ரக்ருதியா சத்ருவுமாய் –
விசேஷித்து தன் பார்யா அபஹர்த்தாவுமான இவன்
பட்டது படுகிறான் என்று இருப்புதல்-
அவசரத்தில் நலிய விரகு தேடுதல் பிறப்பியமாய் இருக்க
அதிதியைத் தேவனாக விதிக்கிற ஸ்ருதியின் படியே தேவர்களை ஆராதிக்கும் திறத்தில்
அக்னி முகமாக வன்றோ அர்ச்சித்தபடி

நாமும் சரணாகதனை
வாத்யதாம் ஏஷ தீவ்ரேண தண்டேந ச சிவைஸ் ஸஹ என்று
அநு பந்தி பர்யந்தமாக நன்றாக அர்ச்சியா நின்றோம்

யதா நியாயம்
சீதத்தாலும் ஷூத்தாலும் ஆர்த்தனான வேடனுக்கு அபேக்ஷிதங்களான
அக்னி ஆநய நாதிகளைப் பண்ணி
நல் விருந்து வந்தால் ஆதரிக்கும் படி தப்பாதே
அந்தர் விஷாத கந்தம் இல்லாதே அக் கபோதம் ஆதரித்த படி –

யதா நியாயம்
இன் சொல் முதலாக பிராண பர்யந்தமாக சரணாகத விஷயத்தில்
சக்தி வஞ்சநம் பண்ணாதே செய்த
பரிவு எல்லாம் அளவாய் இருக்கும் அத்தனை போக்கி மிகுதி உண்டோ

ஸ்வஸை மாம்ஸை நிமந்த்ரித
புறம்பே சில ஆகாரங்களை எடுத்துக் கொண்டு வந்து இட்டது அன்று
தன்னுடையதாக த்ரவ்யாந்தரங்களிலே சிலவற்றை இட்டு உபசரித்ததும் அன்று –
விவேகம் இல்லாதார் தானாக அபிமானித்து இருக்கக் கடவதாய்-
விவேகிகளுக்கும் ஆத்யமான தர்ம சாதனம் என்று
பேணக் கடவதான சரீரத்தின் மாம்சங்களாலே அன்றோ அவனை
உபசார பூர்வகமாக நல் விருந்தூட்டப் ப்ரவர்த்தித்தது

மாம்ஸை –
ஏக தேசங்களை பிரித்து இட்டதன்று –
கடுகப் பசி தீர வேண்டும் என்று வேடனுக்குத் தனக்குள்ள அவயவங்கள் ஒன்றும்
சேஷியாதபடி சர பங்காதி தாபஸரைத் போலே
இது ஒரு மஹா தபஸ்ஸாக நினைத்து நெருப்பிலே காணும் விழுந்தது –

இப்படி இஸ் ஸ்லோகத்தில் சொன்ன அர்த்தங்களைத் தம்முடைய அனுஷ்டானத்துக்கு
ஹேதுவாக அனுவதித்துக் கொண்டு –
அப்படியானால் நமக்கு சரணாகதி ரக்ஷணம் கைம்முக நியாய சித்தம் அன்றோ
என்று அருளிச் செய்கிறார்

சஹி தம் பிரதி ஜஹ்ரஹா பார்யா ஹர்த்தார மாகதம்
காபோதோ வாநர ஸ்ரேஷ்டட கிம் புநர் மாதவிததோ ஜெந

சஹி
அக் கபோதம் நம்மைப் போலே தர்ம அனுஷ்டானம் பண்ணக் கடவ ஜாதிகளில் ஒன்றிலே யாதல் –
சரண்ய வம்சத்தில் யாதல் பிறந்தது அன்று என்னும் இடம் பிரசித்தமாய் அன்றோ இருப்பது

தம்
தன் ஜாதியாலும் விசேஷித்துத் தன் கொடுமையாலும்
கஸ்சித ஷூத்ர சமாசார பக்ஷிணாம் கால சம்மித -என்று பஷி ஜாதிக்காக
விருத்தனாய் காபோதம் இருந்த இடத்திலே
யாதிருச்சிகமாக வந்து விழுந்ததற்கு கபோதத்தைக் குறித்து ஒரு உபாய பிரயோக ரஹிதனாய் –
விபரீத அனுஷ்டானத்திலும் நிலை குலையாதவனாய்
அனுதாப லேசமாதல்
அனுகூல வாத பிரசாங்கமாதல்
இன்றிக்கே கிடீர் அவ்வேடன் இருப்பது –

ச ஹி தம் பிரதி ஜஹ்ரஹா
தன்னை அழிய மாறி அன்றோ அவ் வேடனைக் கைக் கொண்டு ரஷித்தது

பார்யா ஹர்த்தாரம்
முன்பு சத்ரு என்று பொதுவில் அருளிச் செய்ததை அவன் விருத்தியைக் காட்டி விசேஷிக்கிறார்
இப்படியே ராவணன் வந்தாலும் நமக்கு கைக்கொள்ள வேண்டி யன்றோ இருப்பது என்று திரு உள்ளம்

ஆகதம்
இவன் தன்னைக் கைக் கொள்ளுக்கைக்குச் செய்த உபாய அனுஷ்டானம்
கபோதம் இருந்த மரத்தடியில் வந்த அளவே கிடீர் அல்லது
வனஸ்பதி தேவதையைக் குறித்து சரணம் என்று சொன்ன சப்தமும்
கபோதம் என்று கேட்டது இல்லை

காபோதோ
முன்பே கபோத -என்று சொல்லி இருக்க
இரு காலும் இட்டு கபோத என்றது –
சிபியினுடைய சரணாகத ரக்ஷண தர்மம் சொல்லுகிற ஸ்யேந கபோத விருத்தாந்தத்தில் போலே
கபோத வேஷம் கொண்டான் ஒரு தேவனோ ரிஷியோ என்று சங்கியாமைக்காக
இது பூர்வ கர்ம விசேஷத்தால் ஸ்ரீ கஜேந்த்ராதிகளைப் போலே திர்யக்காய் இருக்க
இப்படி தர்ம அனுஷ்டான யோக்யமாய்ப் பிறந்தது –

வாநர ஸ்ரேஷ்டட -வேறேயும்
ஒரு திர்யக் சத்ருவான வேடனை ரஷித்தபடி கேளீர்

————-

வ்யாக்ர வானர சம்வாதம்-

வாநர ஸ்ரேஷ்டட
வானர ஜாதிகளுக்கு முடி சூடின நீர் வ்யாக்ர வாமன சம்வாதம் கேட்டு அறியீரோ –
ஒரு புலி வந்து தொடரத் தான் இருந்த மரத்தடியில் வந்து ஏறின வேடனை
அந்த வ்யாக்ரம் விடச் சொல்ல
இவனை சரணாகதன் என்று வானரம் ரஷித்தது –

அப்போது மரத்தடியை விடாதே கிடக்கிற புலி
இவ் வானராம் தூங்கின அளவில் வேடனைப் பார்த்து –
உன்னை விடுகிறேன் வானரத்தைத் தள்ளித் தர வல்லையோ–என்ன

பாப புத்தியான வேடன் தன்னை ரஷித்த வானரத்தைத் தள்ளின அளவிலே –
வானரத்தைப் பிடித்து உன்னை விடுகிறேன்
தனக்கு உபகாரகனான உன்னைத் தள்ளின வேடனைத் தள்ளித் தர வில்லையோ -என்று
மனுஷ்ய மாம்ச லுப்தமான புலி சொல்ல

தர்ம வித்தான வானரம் ப்ராணாந்த்ய தசை யாகையாலே அஹ்ருதயமாக இசைந்து
புலி விட்டவாறே மரத்திலே எறி சத்ருவான வேடனைப் பின்பும் போக்கற்றுத்
தான் இருந்த மரத்தில் இருந்ததே யடியாக சரணாகதன் என்று ரஷித்தது –

நீர் வானரங்களுக்கு முடி சூடி இருந்தாலும் உங்களுக்கு ஜாதி தர்மம் என்று
பார்த்தாகிலும் கைக் கொள்ள வேண்டாவோ –

வாநர ஸ்ரேஷ்டட –
முதலிகள் கலக்கினால் தெளிவிக்க இருக்கிற நீர் கலங்கலாமோ

வாநர ஸ்ரேஷ்டட
வாலி பதத்தில் இருந்தவாறே உமக்கு சரணாகத பீடை ருசித்ததோ

வாநர ஸ்ரேஷ்டட
வானர மாத்திரம் அல்லீரோ –
ஆதித்யனுடைய புத்ரனுமாய் தர்ம அதர்மங்களை அறிந்தும் இருக்கிற நீர் –
அல்லாத வானரங்களைப் போலே காபேயம் பண்ணப் பெறுவதிரோ –

கிம் புநர் மாதவிததோ ஜெந
கபோதம் செய்தபடி கண்டால் நம் போலிகளுக்குக் கேட்க வேணுமோ –
நாம் சரணாகத ரக்ஷணத்துக்கு கொடி எடுத்த ரகு வம்சத்தில்

ஷஷ்டிர் வர்ஷ சஹஸ்ராணி லோகஸ்ய சரதா ஹிதம்
பாண்ட ரஸ்ய ஆதபத் ரஸ்யச் சாயா யாம் ஜரிதம் மயா –அயோத்யா -2-7-என்று
அறுபதினாயிரம் ஆண்டு
வெண் கொற்றக் குடை தன் நிழல் ஒழிய வேறு ஒரு நிழலில் ஒதுங்காதே லோக ரக்ஷணார்த்தமாகப்
பத்துத் திக்கிலும் தேர் நடத்தி ப்ரசித்தனான தரசரதன் மகனாய் வசிஷ்ட விச்வாமித்ர சிஷ்யனாய்
மஹா யோகியாக ப்ரயக்யாதனான ஜனகனோடு சம்பந்தம் பண்ணின நாம்

ராமோ விக்ரஹவான் தர்ம–ஆரண்ய -37-13 -என்று
உடம்பில் சிஷ்டத்தையா ப்ரஸித்தியை ஏறிட்டுக் கொண்டு

மர்யாதா நாம் ச லோகஸ்ய கர்த்தா காரயிதா ச ச -ஸூந்தர -35-11 -என்கிறபடியே
இத்தனை காலமும் நம்முடைய கை பார்த்து நாட்டார் அனுஷ்டிக்கும்படி நடந்து போந்து
இன்று சரணாகத காதம் பண்ணினால் நாடு என் படக் கடவது

மத்வித
நம்முடைய விரதம் பின் சொல்லக் கடவோம்
சாமாந் யோயம் தர்ம சேதுஸ் நாராணாம்–என்கிறபடியே
நம் போலிகள் எல்லாருக்கும் இதுவே
பொதுவாய்க் காணும் இருப்பது

மத்வித
நம் போலிகள் சரணாகதனை விடுவார்களோ –
ஹிம்ஸாபி ருசிகள் ஆகையால் அவத்யரை வதிக்க வல்ல
ராவணாதிகளுக்கு அன்றோ இப்படிக்கு ஒத்த கார்யங்கள் ருசித்து

ஜன
சரணாகதனை பரித்யஜித்தவன் என்ன
பிறப்பு பிறந்தானாகக் கடவன் –
நம் போலிகளுக்கு ஜென்ம பிரயோஜனம்
சரணாகத ரக்ஷணம் அன்றோ

சிஷ்ட அனுஷ்டானம் ப்ரமாணமே யாகிலும் ஒரு கபோதம் அனுஷ்டித்தது
என்று ஒரு பிரமாணம் உண்டோ –

இதற்க்கு விதாயகமாய் இருபத்தொரு வாக்யம் வேண்டாவோ என்கிற சங்கையிலே
கண்டு என்பான் ஒரு மகரிஷி கண்டதொரு காதையைக் கேளீர் -என்கிறார்

—————

கண்டு காதா விவரணம்

ரிஷே கண் வஸ்ய புத்ரேண கண்டுநா பரமர்ஷிணா
ச்ருணு காதாம் புரா கீதாம் தர்மிஷ்ட்டாம் சத்யவாதி நா -18-26-

கண்டு என்கிற மஹர்ஷியினுடைய
ஜென்ம பிரகார்ஷத்தை முற்படக் கேளீர்

ரிஷே கண் வஸ்ய புத்ரேண
தான் தோன்றி அன்றிக்கே -யஸ்ய ஸ்யாத் ஸ்ரோத்ரிய பிதா -என்கிறபடியே
அவனுடைய பிதாவும் சதுர்வேத அத்யாயியாய்
அதீந்த்ரிய த்ரஷ்டாவாய்க் காணும் இருப்பது -ஆனால் பறப்பதின் குட்டி தவழாது இறே

கண் வஸ்ய புத்ரேண
மஹா தபாவான கண்வ மகரிஷிக்கு சம்சார நிஸ்தாரகனாய்க் காணும் இருப்பது

கண் வஸ்ய புத்ரேண கண்டுநா
பிதாவின் பெயராலும் தன் பெயராலும் ப்ரசித்தனாய்க் காணும் இருப்பது –

கண்டுநா
அவன் பெருமையைப் பார்த்தால் –
ச சாபி பகவான் கண்டு –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-5–52-என்று
மஹரிஷிகள் கொண்டாடும்படியான பெயருடையான் ஒருவன் காணும்

ரிஷி புத்ரேண பரமர்ஷிணா
விளக்கில் கொளுத்தின பந்தம் என்னும் படி காணும்
பிரகாச பஹுளனான பிதாவிலும் காட்டில்
இவனுடைய ஞான விகாசம் இருக்கும் படி –

ச்ருணு
இத்தனை நாளும் இக்காதை உம்முடைய செவியில் படாமையால் இறே நீர் இப்படிக் கலங்குகிறது –
இத்தை அவஹிதராய்க் கேளீர்

காதாம்
இது பெரிய பொருள்களை எல்லாம் பொதிந்து கொண்டு எளிதாய்க் கேட்கலாம் படி
சுருங்கின பாசுரமாய்க் காணும் இருப்பது

புரா கீதாம்
இன்று முதலாகக் கட்டினது ஓன்று அன்று காணும் இது –
வேதம் போலே பழையதாய் இருப்பது ஓன்று

கீதாம்
கண்டுவான மகரிஷியும் இத்தை ஸ்ருஷ்ட்டித்தான் என்று இராதே கிடீர் –
ரிக்கை சாமமாகப் பாடுமாப் போலே
பண்டே உள்ளது ஒன்றை அவன் பாடினான் அத்தனை

கீதாம்
அவன் செய்தானே யாகிலும் அந்த சாம த்வனி போலே
ஸமஸ்த பாபங்களையும் போக்க வற்றாய்க் காணும் இருப்பது

தர்மிஷ்ட்டாம்
போலியான தர்மங்களை போல் அன்றிக்கே ப்ரத்யக்ஷ ஸ்ருதி ஸித்தமான பரம தர்மத்தை
விஷயமாக உடைத்தாய்க் காணும் இக்காதை இருப்பது

சத்யவாதி நா
சத்யவாத சீலனான கண்டு என்கிற மகா ரிஷி வாய் வெருவிச் சொன்னாலும் பழுதாய் இருபத்தொரு
சவ்வும் துவ்வும் கூட்டுகையும் இன்றிக்கே காணும் இருப்பது

இதில் –
பரமர்ஷிணா -என்று யதார்த்த தர்சித்தவம் சொல்லிற்று
சத்யவாதி நா-என்று யதா த்ருஷ்டார்த்த வாதித்தவம் சொல்லிற்று
தர்மிஷ்ட்டாம் -என்று உபதேசத்தினுடைய பரம ப்ரயோஜனத்வம் சொல்லிற்று

இத்தால்
ப்ரம விப்ரங்கள் அற்று சர்வ லோக ஹிதம் சொல்லுவான் ஒருவன்
என்று ஆப்தி அதிசயம் சொல்லிற்று ஆய்த்து

மேல் கண்டு காதை என்று எடுக்கிற நாலரை ஸ்லோகத்தில்
பிரதம ஸ்லோகத்தால் பூர்ண சரணாகதி இல்லையே யாகிலும்
போக்கற்ற தசையில் ஆத்ம நிக்ஷேப அபிப்ராய வ்யஞ்ஜகங்களாய்க் கொண்டு
சரணாகதியினுடைய சகல துல்யங்களான அஞ்சலி பந்தாதி மாத்ரங்களை நேர்ந்தவனையும்
அழியக் கொடுக்கலாகாது என்கிறார்

பத்தாஞ்சலி புடம் தீநம் யாசந்தம் சரணாகதம்
ந ஹன்யாத் ஆந்ரு ஸம்ஸ்யார்த்தம் அபி ஸத்ரும் பரந்தப —யுத்த -18-27-

பத்தாஞ்சலி புடம்
அஞ்சலி பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவ ப்ரஸாதி நீ -என்கிறபடியே அத்யந்த ஸ்வ தந்த்ரனையும்
கடுக இரங்கப் பண்ணும் முத்திரை அன்றோ இது

தீநம்
அஞ்சலியும் வாங் பாத மாத்ரமும் நேராதே கார்ப்பண்யம் தோற்ற நிற்கும் நிலையே அமையும் –

யாசந்தம்
கை கூப்பிற்றிலனே யாகிலும் கார்ப்பண்யம் தோற்றில்லையே அஹ்ருதயமாக இரக்கவும் அமையும் யாகிலும்

சரணாகதம்
அஞ்சலி பந்தாதிகள் மூன்றும் இல்லையே யாகிலும் ரக்ஷகன் கிடைக்குமோ என்று இருந்த இடத்தில் வந்து புகுர அமையும்
முதல் ஸ்வ ரஷா பர நிக்ஷேப ரூபையான சரணாகதியின் சகல ஸ்த்தா நீயங்களைச் சொல்லிற்றாய்
இங்கு சரணாகதம் என்று பூர்ண சரணாகதியைச் சொல்லுகிறது ஆகவுமாம்

ந ஹன்யாத்
தான் அழியச் செய்தல் -ரக்ஷிக்க சக்தனான தன் உபேஷாதிகளால் அழியக் கொடுப்புதல் செய்யப் பெறான்

இந்த சாஸ்திரம் ஐஹிகாப் யுதயார்த்தமோ-
பர லோகார்த்தமோ –
ப்ரத்யவாய பரிஹாரார்த்தமோ -என்ன
அவை நிற்க முற்பட ப்ரயோஜனாந்தரம் சொல்லுகிறது

ஆந்ரு ஸம்ஸ்யார்த்தம்
ஆந்ரு ஸம்ஸ்யம் ஆகிற மஹா குணத்தை ரஷிக்கைக்கு ஆகவுமாம் –
ந்ருஸம்ஸன் -என்று நாட்டார் சீ சீ என்னாமைக்காக வுமாம்

அபி ஸத்ரும்
நேரே சத்ரு தான் வந்து சரணாகதன் ஆனாலும் அழிய விட ஒண்ணாத படியானால்
இதற்கு முன்பு ஒரு குற்றம் காணாது இருக்க
சத்ரு இருந்த ஊரில் நின்றும் வந்தான் என்கிற இவ்வளவைக் கொண்டு
சரணாகதனை அழியக் கொடுக்கலாமோ என்று தாத்பர்யம்

பரந்தப —
சரணாகதனோடேயோ நாம் சேவகம் காட்டுவது -நேரே பொருமவனோடே அன்றோ

ந ஹந்யாந் -என்று தான் கொல்லாது ஒழியும் அளவன்றோ என்ன -அங்கன் அன்று –
சரணாகதனை வேறு ஒருவர் நலியும் போது
ஆர்த்தான் திருப்தன் என்கிற சரணாகத அவஸ்தா பேதங்களைப் பாராதே
தன் ப்ராணன்களை அழிய மாறியும் அவனை ரக்ஷிக்க வேண்டும் என்கிறார் –

ஆர்த்தோவா யதி வா திருப்த பரேஷாம் சரணாகத
அரி பிராணன் பரித்யஜ்ய ரஷிதவ்ய-18-28-

ஆர்த்தோவா யதி வா திருப்த
இப்போதே அபிமத சித்தி உண்டாக வேணும் என்று விளம்ப ஷமன் இன்றிக்கே இருக்கவுமாம் –
விளம்பித்துப் பெறலாவதொரு பலத்தைக் கோலி- கோரி -என்றேனுமாக அபிமதம் சித்தம் அன்றோ
என்று தேறி இருக்கவுமாம்

இவனுக்கு அபிமதத்தைப் பற்ற அகிஞ்சனதையாலே ஆர்த்தி உண்டு –
அங்கன் அன்றிக்கே ப்ரச்ரய பயாதி யுக்தனாய் இருக்கவுமாம் –
இவை இன்றிக்கே இருக்கவுமாம் -என்று
ஆர்த்த திருப்த விபாகம் சொல்லுவார்கள்

பரேஷாம் சரணாகத
இதற்கு முன் முகம் அறியாதார் இருந்த இடத்தே வர அமையும்

அரி
அவன் சத்ருத்வம் அடியறாதே உள்ளே கிடக்கச் செய்தே மித்ர பாவனையைப் பண்ணி வந்தாலுமாம்
பிராணன் பரித்யஜ்ய ரஷிதவ்ய
அஸ்த்ரங்களான ப்ராணன்களை விட்டு ஸ்திரமான சரணாகதி ரக்ஷண தர்மத்தைப் பற்ற வன்றோ பிராப்தம்

இவ்வர்த்தத்தை -ஆத்ம பிராணை பர ப்ராணான் யோ நர பரி ரஷதி
ச யாதி பரமம் ஸ்த்தானம் யஸ்மான் நா வர்த்ததே புந –இதிஹாச சமுச்சயம் -4-74-/75- என்றும்

பிராணைர் அபி த்வயா ராஜன் ரஷித க்ருபணே ஜன -என்றும்
ஸ்யேந கபோத உபாக்யானத்தில் சிபியைக் குறித்து இந்திரன் சொன்னான்

க்ருதாத்மநா
இப்படிச் செய்யாத போது இவன் கற்ற கல்வி எல்லாம் என் செய்வதாகக் கடவன்
விதுஷோ அதிக்ரமே தாண்ட பூயஸ்த்வம் –ஸ்ரீ கௌதம தர்ம ஸூத்த்ரம் -2-12-6-
என்னும்படியாம் அத்தனை இறே

தன்னை ரஷித்த வானரத்தைத் தள்ளின வேடனைப் போலே
ரஷிதனான சரணாகதன் பின்பு க்ருதக்நனாய்
பிரதிகூலனான போது தான் அவனுடைய சிஷாதிகளில் அதிக்ருதனாகில் அம்முகத்தாலே ரஷிக்கவும் –
அவற்றில் அதிக்ருதன் அல்லாத போது பின்பு அவன் அநு தப்தனாய் சரணாகதன் ஆனானாகில் க்ஷமிக்கவும் –
அங்கன் அல்லாத போது உபேக்ஷிக்கலான ப்ராதிகூல்யத்தை உபேக்ஷிக்கவும் –
தன்னுடைய வதாதி பர்யந்தமாக ப்ரவர்த்திக்குமாகில் சாஸ்த்ரா விரோதம் இல்லாத மர்யாதையாலே
யதா சக்தி விலக்கிக் கொள்ளவும் பிராப்தம்

மேல் இரண்டு ஸ்லோகத்தால்
சரணாகத பரித்யாகத்தில் வரும் த்ருஷ்ட அதிருஷ்ட
ப்ரத்யவாயங்களை அருளிச் செய்கிறார்

ச சேத் பயாத் வா மோஹாத் வா காமாத்வாபி ந ரக்ஷித
ஸ்வயா சக்த்யா யதா சத்யம் தத் பாபம் லோக கர்ஹிதம் -18-30–

பயாத் வா
சரணாகதனைக் கைக்கொண்டால் பிரபலமான விரோதிகள் நம்மை நலியில் செய்வது என்
என்னும் அச்சத்தால் யாதல் என்றபடி
சேந்த்ர தக்ஷக நியாயம் இங்கே கண்டு கொள்வது

மோஹாத் வா
ஈத்ருசம் வ்யஸனம் பிராப்தம் பிராதரம் ய பரித்யஜேத் -18-5-என்றால் போலே
சில யுக்த ஆபாசங்களால்
வந்த கலக்கத்தாலே யாதல் என்றபடி

காமாத் வா
சாஸ்த்ர அதி லங்கந ஹேதுவான ஸ்வச் சந்த ஸ்வ பாவத்தில் யாதல் என்றபடி –
அங்கன் இன்றிக்கே
ஹிம்ஸா ருசிகளான ராக்ஷஸரைத் போலே இவன் படுவது கண்டால் ஆகாதோ
என்கிற விபரீத ருசி யாலே யாதல் -எனினுமாம் –
அப்படியே சரணாகதனுடைய சத்ருவின் பக்கலிலே கைக்கூலியை ஆசைப்பட்டு என்னவுமாம்

அபி
பூர்வ அபகாரங்களை நினைத்து வரும் ஓவ்தா சீன்யம் முதலான
வேறு ஏதேனும் ஒரு ஹேதுவாலே யாகவுமாம்

ந ரஷித
கிணற்றின் கரையில் பிள்ளையை வங்காதாப் போலே
ரஷியாத மட்டும் கிடீர் நாம் சொல்லப் புகுகிற பாபம் –
இப்படியானால் தானே நலியும் அளவிலே என்ன விளையக் கடவது

ஸ்வயா சக்த்யா
தன் சக்தி வஞ்சநம் பண்ணாதே ரக்ஷிக்க வேண்டும் –
அங்கன் அன்றிக்கே கைக்கொள்ளவுமாம் -கை விடவுமாம் –
தனக்கு வல்லதொரு விரகால் என்று தாத்பர்யம் –
ரகு பிரப்ருதிகள் ப்ராஹ்மணாதிகளைத் தாங்கள் கைக் கொண்டு ரஷித்தார்கள்-
தேவர்களும் ரிஷிகளும் காகத்தைப் போக்கற்றது என்று ஸ்ரீ பெருமாள் கைக் கொள்ளுக்கைக்காகத்
தாங்கள் கை விட்டு ரஷித்தார்கள்

யதா சத்யம் –
லோகத்திற்குக் கண் காணிகளாகப் படைத்த ஆதித்யாதி பதினாலு சாஷிகளும் இவர்களுக்கு மேல்
கண் காணியாய் சர்வ சாஷியான சர்வேஸ்வரனும் கண்டு கொண்டு இருக்கத் தான் சக்தனாய் இருக்கச் செய்தே
சில சலங்களாலே தனக்கு சக்தி இல்லாமையைக் காட்டி –
ஸோசந்நிவ ருதந்நிவ -என்கிற கணக்கிலே கண் அழிக்கப் பெறான் –

தத் பாபம்
அந்த பாவத்தின் கொடுமையைக் கேளீர் –
இது நஹுஷ ப்ருஹஸ்பதி சம்வாதிகளிலே
அதி பிரசித்தமாய்க் காணும் இருப்பது –

இதன் கொடுமையை

சரணாகதாம் ந த்யஜேயம் இந்த்ராணீம் ச யசஸ்வினீம்
தர்மஞ்ஞாம் தர்ம சீலாம் ச ந த்யஜேயம் அநிந்திதாம்
நா கார்யம் கர்த்தும் இச்சாமி ப்ராஹ்மணஸ் சந் விசேஷத
ஸ்ருத தர்ம சத்ய சீலோ ஜாநந் தர்ம அநு சாசனம்
நாஹ மேதத் கரிஷ்யாமி கச்சத்வம் வை ஸூ ரோத்தம
அஸ்மிம்ஸ் சார்த்தே புரா கீதம் ப்ரஹ்மணா ஸ்ரூயதாமிதம்
ந சாஸ்ய பீஜம் ரோஹதி ரோஹ காலே
ந சாஸ்ய வர்ஷம் வர்ஷதி வர்ஷ காலே
பீதம் ப்ரபன்னம் பிரததாதி சத்ரவே
ந சோந்தரம் லபதே த்ராண மிச்சந்–உத்யோக பர்வம்
மோக மந்நம் விந்ததி சாப்ரசேதா ஸ்வர்க்க லோகாத்
பிரஸ்யதி பிரஷ்ட சேதா பீதம் ப்ரபன்னம் பிரததாதி சத்ரவே
சேந்த்ரா தேவா ப்ரஹரந்தஸ்ய வஜ்ரம் -12-/16-/20–என்று

இந்திர பதம் பெற்ற மதி கெட்ட
நஹுஷனாலே பிரேரிதரான தேவர்களைக் குறித்துத் தேவ ப்ரோஹிதன் சொன்னான்

அப்படியே –
ப்ராயச்சித்தேந ஸூத்த்யந்தி மஹா பாதகிநோபி யே
சரணாகத ஹந்த்ரூணாம் ஸூத்தி கவாபி ந சித்த்யதி
பூயதே ஹய மேதேந மஹா பாதகி நோபி ஹி
சரணாகத ஹந்தாரோ ந த்வேவ ரஜநீசரே –என்று

ரகு ராக்ஷஸ சம்வாதத்திலும் இவ்வர்த்தம் பிரசித்தம் –

இத்தை

லோபாத் த்வேஷாத் பயாத் வாபி யஸ் த்யஜேத் சரணாகதம்
ப்ரஹ்ம ஹத்யா சமம் தஸ்ய பாபம் ஆஹுர் மநீஷிண
சாஸ்த்ரேஷு நிஷ் க்ருதி த்ருஷ்டா மஹா பாதகி நாமபி
சரணாகத ஹந்துஸ்து ந த்ருஷ்டா நிஷ் க்ருதி க்வசித்
பிராணிநம் வத்யமாநம் து யஸ் சக்த சமுபேஷதே
ச யாதி நரகம் கோரம் இதி ப்ராஹூர் மநீஷிண–என்று

ஸ்யேந ரூபனான இந்த்ரனைக் குறித்து சிபி சக்ரவர்த்தி சொன்னான்

ப்ராணார்த்தி நமிமம் பீதம் த்விஜம் மாம் சரணாகதம்
த்யஜேயம் யதி கோ மத்த ஸ்யாந் நர பாப க்ருத் புவி
சக்தோபி ஹி ரக்ஷனே லோபாத் பயாத் வா சரணாகதம்
யஸ் த்யஜேத் புருஷோ லோகே ப்ரஹ்ம ஹத்யாம் ச விந்ததி -என்று

இதிஹாச உத்தமத்திலும் சொல்லப்பட்டது

யோ ஹி கஸ்சித் த்விஜம் ஹன்யாத் காம் ச லோகஸ்ய மாதரம்
சரணாகதம் ச யோ ஹன்யான் துல்யமேஷாம் ச பாதகம் –என்று

கபோதி தன்னைக் கட்டி இருக்கிற வேடனை
ரஷிக்கைக்காகத் தன் பர்த்தாவான கபோதத்தைக் குறித்துச் சொல்லிற்று

தத் பாபம்
சரணாகதம் பரித்யஜ்ய வேதம் விப்லாவ்யச த்விஜ
சம்வத்சரம் யவாஹார தத் பாபம் அவசேததி–என்று

மன்வாதிகள் சொல்லுகிறபடியே பிராயச்சித்தம் பண்ண அரிதாய்க் காணும் இருப்பது –

லோக கர்ஹிதம்-ததேவம் ஆகதஸ்ய அஸ்ய கபோதஸ்ய அபயரர்த்திந
கதம் அஸ்மத் வித ச தியாகம் குர்யாத் சத் அபி விகர்ஹிதம் –என்று

சிபி சொன்ன சிஷ்ட கர்ஹதை அளவே அன்று –
இது கேட்க்கிலும் பிராயச்சித்தம் பண்ண வேண்டுகையாலே நாட்டார் எல்லாரும் இவனை சீ சீ என்று
ஒரு காலும் கூட்டிக் கொள்ளார்கள்-ஆகையால் இறே

பால க்நாந் ச க்ருதக்நாந் ச விசுத்தாநாம் அபி தாமத
சரணாகத ஹந்த்ரூந்ச ஸ்த்ரீ ஹந்த்ரூந் ச ந சம வசேத் –என்றும்

சரணாகத பால ஸ்த்ரீ ஹிம்சகாந் சம்வஸேந் ந து
சீர்ண வ்ரதாநபி சத க்ருதக்ந சஹிதா நிமாந் –என்று
சரணாகத காதகனையும் –
பால காதகனையும் –
ஸ்த்ரீயையும் கொன்றவனையும் –
க்ருதக்நனையும் –
பிராயச்சித்தம் பண்ணித் தங்களுக்கு ஸூததனனாலும் ஒரு காலும் கூட்டிக் கொள்ளலாகாது என்று
மன்வாதி தர்ம சாஸ்திரங்களில் சொல்லுகிறது –

ஆன பின்பு நாம் சரணாகதனைக் கை விட்டால்
நம்மை நாடும் விச்வாமித்ராதிகளான குருக்களும் ஒரு காலும் கூட்டிக் கொள்ளார்கள் காணும் –

இப்படி த்ருஷ்ட ப்ரத்யவாயம் சொல்லிற்று –
அநந்தரம் அதிருஷ்ட ப்ரத்யவாயம் சொல்லுகிறது –

வி நஷ்ட பஸ்ய தஸ் தஸ்யா ரஷிணஸ் சரணாகதி
ஆதாய ஸூஹ்ருதம் தஸ்ய சர்வம் கச்சேத ரஷித–யுத்த-18-30–என்று
ரக்ஷிக்க வல்லனாய் இருக்க ரஷியாமையாலே அவன் காணச் செய்தே நஷ்டனான சரணாகதனுக்கு
வேறு ஒரு கிருஷி பண்ண வேண்டா —
அவன் அநாதி காலம் பண்ணின ஸூஹ்ருத்ததை எல்லாம் ச வாசனமாக
வாங்கிக் கொண்டு -அவன் புகக் கடவ புண்ணிய லோகங்களை எல்லாம் தான் கைக்கொள்ளும் –

சரணாகத பரித்யாகி யானவன் பக்கல் பிராயச்சித்தம் பண்ணுகைக்கும்
கைம்முதலான ஸூஹ்ருத லேசமும் இல்லாமையால்
பாப பிரதத்தாலே முழுக்க நரகங்களிலே விழும் அத்தனை –

ஏவம் தோஷா மஹா நத்ர ப்ரபந்நா நாம ரக்ஷனே
அஸ் வர்க்யம் சாய சஸ்யம் ச பல வீர்ய விநாசனம் –யுத்த -18-31–

உத்தர அர்த்தத்தாலே த்ருஷ்டா அதிருஷ்ட ப்ரத்யவாயங்களை சமுச்சயித்துச் சொல்கிறது
சரணாகதனுக்கு சரீரம் ஒன்றுமே அழியும் அளவு உள்ளது –
அவனை அழியக் கொடுத்தவனுக்குப் பரலோகமும்
இங்குள்ள புகழும் பல வீர்யங்களும் மற்றும் சொல்லிச் சொல்லாத குண விபூதிகளும் எல்லாம் அழியும்படியாய் இருக்கும் –

சரணாகதனுக்கு ரக்ஷை பிறந்ததாகில் இங்கே நினைத்தது ஆம் –
ரக்ஷை பிறந்தது இல்லையாகில் விட்டவனுடைய ஸூஹ்ருத்தை
எல்லாம் கைக்கொண்டு தன் நினைவு இன்றிக்கே வந்த பர லோக ஸூகம் பெறலாம் –
ஒருபடியாலும் சரணாகதனுக்குக் கார்யம் தப்புவது இல்லை –

இப்படி சரணாகதனை ரஷியாது போது வரும் த்ருஷ்டா அதிருஷ்ட தோஷம் சொல்லிற்று

மேல் ஸ்லோகத்தாலே
சரணாகத ரக்ஷணத்தில் வரும் த்ருஷ்டா அதிருஷ்ட புருஷார்த்த சித்தியை அருளிச் செய்து கொண்டு
கண்டு மகரிஷி சொன்ன அர்த்தத்தில் தமக்கு அனுஷ்ட்டித்து அல்லது நிற்க ஒண்ணாத படி
பிறந்த ருசியை அருளிச் செய்கிறார் –

கரிஷ்யாமி யதார்த்தம் து கண்டோர் வசன முத்தமம்
தர்மிஷ்டம் ச யஸஸ்யம் ச ஸ்வர்க்யம் ஸ்யாத் து பலோதயே –யுத்த -18-32–

கரிஷ்யாமி
நாம் சரணாகத ரக்ஷணம் பண்ணக் கடவோம் –
தர்ம ஸ்ருதோ வா திருஷ்டோ வா –இத்யாதிகளை அறிந்து
தர்மிஷ்டரான நீங்கள் இதற்கு விலக்காமை என்றோரு பந்து க்ருத்யம் செய்து தர வேண்டும் –

கரிஷ்யாமி
அனுஷ்டிகைக்கா வன்றோ நாம் இந்தக் காதை கற்றது

ந காதா கதிநம் சாஸ்தி –என்கிறபடியே
குலிங்க சகுனியைப் போலே வேறு ஒன்றைச் சொல்லி வேறு ஒன்றைச் செய்கைக்கு அன்றே

யதார்த்தம்
பாதகம் இல்லாமையாலும் ப்ரத்யக்ஷ ஸ்ருதி சம்வாதத்தாலும் பழுதற்ற பாசுரம்
த்ருஷ்டா அதிருஷ்ட விருத்தமான உங்கள் வார்த்தையில் காட்டில்
அவன் வார்த்தைக்குள்ள விசேஷம் இருந்தபடி கண்டீரே

து கண்டோர் வசனம்
தர்மஸ்ய தத்துவம் நிஹிதம் குஹாயம் –என்னும்படி இருந்தால்
மஹா ஜநோ யேந கதஸ் ச பந்த்தா –என்கிறபடியே
பெரியனான கண்டுவின் வழியைப் பின் செல்லுகை காணும் நமக்கு கார்யம்

உத்தமம்
உத்தம தர்ம விஷயம் -அங்கன் அன்றிக்கே
இப்பாசுரத்துக்கு மேல் உம்மாலே யாதல் –
முதலிகளாலே யாதல் –
நம்மாலே யாதல் –
ஒரு கண் அழிவு சொல்ல ஒண்ணாத படி எல்லாவற்றுக்கும் மேலான பாசுரம் காணும் இது –

இதற்கு
பீத அபய பிரதாநேந சர்வான் காமான் அவாப் நுயாத்
தீர்க்க மாயுஸ் ச லபதே ஸூகீ சைவ சதா பவேத் –என்றும் –

ஏகதஸ் க்ரதவஸ் சர்வே சமக்ர வர தக்ஷிணா
ஏகதோ பய பீதஸ்ய பிராணிந பிராண ரக்ஷணம் –என்று

சம்வர்த்தாதிகள் சொன்ன தாத் காலிக பலமும் –
விபாக காலத்தில் வரும் பலமும் கேளீர்

தர்மிஷ்டம் ச யஸஸ்யம் ச -என்று
தத்காலத்திலே சித்தித்து நிற்கும் பலம்

ஸ்வர்க்யம் ஸ்யாத் து பலோதயே –என்று
பிரதி பந்தகம் கழிந்தால் விபாக காலத்தில் வரும் பலம்

நாதோ பூயஸ் ததோ தர்ம கஸ்சித் அந்யோஸ்தி கேஸர
பிராணி நாம் பய பீதா நாம் அபயம் யத் பிரதீயதே –என்றும்
மஹாந் தர்மோ அக்ஷய பல சரணாகத பாலநே
தர்ம நிஸ்சய தத்தவஞ்ஞா ஏவமாஹுர் மநீஷிண –என்று
சிபி பிரப்ருதிகள் அறுதியிட்ட படியே சரணாகத ரக்ஷண தர்மமே
தர்மங்கள் எல்லாவற்றுக்கும் முடி சூடின தர்மம்

இது அறிந்து காருணிகருமாய் ரக்ஷண சமர்த்தருமாய் இருக்குமவர்கள் பக்கல் சரணாகதிக்குப் பல சித்தியில்
சம்சயம் இல்லை என்று திரு உள்ளம்

தீநோ த்ருப்யது வா அபராத்யது பரம் வ்யாவர்த்ததாம் வா தத
த்ராதவ்ய சரணாகதஸ் சகநத சத்பிஸ் ததா ஸ்தாப்யதே
விச்வாமித்ர கபோத வானர ரகு வ்யோமாத்வக ப்ரேயசீ
நாளீ ஜங்க ப்ருஹஸ்பதி பரப்ருதிபி நந் வேஷ கண்டா பத —

இந்த ஸ்லோகம் சங்கல்ப ஸூர்யோதத்திலும் அனுசந்திக்கப் படுகிறது –

பரம தர்ம நிர்ணயம் என்னும் ஏழாம் அதிகாரம் முற்றிற்று –

——————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த – ஸ்ரீ அபய பிரதான சாரம் – -ஸ்ரீ பிரபந்த அவதாரம் -முதல் அதிகாரம்-/பரதத்வ நிர்ணயம் என்னும் இரண்டாம் அதிகாரம்/சரணாகதி தாத்பர்ய பஞ்சகம் என்னும் மூன்றாம் அதிகாரம்–

September 20, 2019

ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –
பிதா மஹஸ் யாபி பிதா மஹாய
ப்ராசேத–சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய
ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —

ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

———————————–

ஸ்ரீ அபய பிரதான சாரம் —
ஸ்ரீ வால்மீகி பகவானால் திருஷ்டமாய் -இருப்பதாய் —
தாத்பர்ய லிங்கங்களை எல்லாம் பரிபூர்ணமாக உடையதாய் –
இருபத்தொரு சரணாகதி வேதம்

இதில் ஸ்ரீ அபய பிரதான பிரகரணம்
சர்வ ரஹஸ்ய சாரங்களையும் திரள வெளியிட்ட உபநிஷத் பாகம்
ஆறு காண்டத்திலும் சரணாகதி தர்மமே அஞ்சுறு ஆணியாகக் கோக்கப்பட்டுள்ளது
சரணாகதி ரக்ஷண தர்மமே ஸ்ரீ பெருமாளுக்கு அநுபால நீயம்

இது பத்து அதிகாரங்களை உடையது –
வேத உப ப்ரும்ஹண சா பேஷரான அல்ப ஸ்ருதர் பக்கல் இரக்கத்தாலும்-
அவர்களை பற்ற வேதங்களுக்கு உண்டான பிரதாரண பயத்தை சமிப்பிக்கைக்காகவும் —
உப ப்ரும்ஹண ரூபமான இப்பிரபந்தத்தை பிரவர்த்திப்பித்தான்

இது சர்வ சரண்ய பர தத்வ விஷயமாகவும் –
ஸர்வாதிகாரமான சரணாகதி ரூப பரம ஹித விஷயமாயும்
இரண்டு வகையாய் இருக்கும் –

பரம காரணமான பர தத்துவத்தை பிரதிபாதிக்கிற வேதங்களுக்கு உப ப்ரும் ஹணம் அன்றோ இது

சக்ருதேவ ப்ரபந்நாயா -ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்
தவாஸ்மீதி ச யாசதே –உனக்கு அடிமை ஆகின்றேன் என்றற்கு
சர்வ பூதேப்ய –அருக்காதே அனைவருக்கும் அனைவராலும்
அபயம் -அஞ்சேல்
ததாமி -என்று அருள் கொடுப்பவன்
ஏதத் -இது தான்
விரதம் -ஓதும் இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இவை அறிவார் செயலுடன்
என் இசைவினாலும் நெருக்காத நீள் விரதம்
மம -எனக்கு ஓன்று என்று
நெறி யுரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே –

வேதத் திரளில் விதி யுணர்ந்தோர்கள் விரித்து உரைத்த
காதல் கதியையும் ஞானத்தையும் கருமங்களையும்
சாதிக்க வல்ல சரணாகதி தனி நின்ற நிலை
ஒதத் தொடங்கும் எழுத்தின் திறத்தில் உணர்மின்களே

இத்தால்
கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி என்னும்
அர்த்தத்தை வெளியிட்டு அருளுகிறார் இவற்றால்

—–

முதல் அவதாரம் -பிரபந்தாவதாரம்

மங்களா சரணம் -ஸ்ரீ ராம சரம ஸ்லோக அர்த்த ஸங்க்ரஹம் –
ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தந பிரகாரம் -ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தந நோக்கம்

மங்களா சரணம்
ஜெயதி ஆஸ்ரித சந்த்ராச த்வாந்த வித்வம்சந உதய
பிரபாவாந் சீதயா தேவ்யாம் பரமா வ்யோம பாஸ்கர

பிராய ப்ரபதநே பும்ஸாம் பவ்ந புந்யம் நிவாரயந்
ஹஸ்த ஸ்ரீ ரெங்க பர்த்து மாம் அவ்யத் அபயமுத்ரித

நமஸ் தஸ்மை கஸ்மை சந பவது நிஷ் கிஞ்சன ஜந
ஸ்வயம் ரஷா தீஷா சமதிக சமிந்தான யஸசே
ஸூரா தீச ஸ்வை ரக்ஷண குபித சாபாயுதா வதூ
த்ருஷத்தா துர் ஜாத ப்ரசமந பதாம் போஜ ரஜஸே

வதூ த்ருஷத்தா-கௌதம மகரிஷி பார்யை -அகல்யை -கல்லாய் இருக்க
துர் ஜாத-கெட்ட ஜென்மத்தை
நமஸ் தஸ்மை கஸ்மை சந பவது- அந்த ஸ்ரீ ராமன் பொருட்டு நமஸ்காரம் இருக்கட்டும்

சோகம் தவிர்க்கும் ஸ்ருதிப் பொருள் ஓன்று சொல்லு கின்றேன்
நாகம் தனக்கும் இராக்கத்திற்கும் நமக்கும் சரணாம்
ஆ கண்டலன் மகனாகிய ஆவலிப்பு ஏறியதோர்
காகம் பிழைத்திடக் கண் அழிவே செய்த காகுத்தனே

ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும் உனக்கு அடிமை ஆகின்றேன் என்றற்கும்
அருக்காதே அனைவருக்கும் அனைவராலும் அஞ்சேல் என்று அருள் கொடுப்பவன் இது தான் ஓதும்
இருக்காலும் எழில் முனிவர் நினைவினாலும் இவை அறிவார் செயலுடன் என் இசைவினாலும்
நெருக்காத நீள் விரதம் எனக்கு ஓன்று என்று நெறி யுரைத்தார் நிலை உணர்ந்து நிலை பெற்றோமே –

———

ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தந பிரகாரம்

பரித்ராணாய ஸாதூ நாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம சமஸ்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே –என்கிறபடியே
ஸ்ரீ சர்வேஸ்வரன் ஒரு த்ரேதா யுகத்தில் ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனாய் திரு அவதரித்த காலத்தில்
ஸ்ரீ வால்மீகி பகவான் ப்ரஹ்ம புத்திரனான ஸ்ரீ நாரத பகவான் பக்கலிலே இவ்வவதார வ்ருத்தாந்தத்தை
சங்க்ஷேபேண ஸ்ரவணம் பண்ணி
மச்சந்தா தேவ தே ப்ரஹ்மன் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ—பால-2-32–என்கிறபடியே
ஸ்ரீ ஸரஸ்வதீ வல்லபனான ப்ரஹ்மாவினுடைய ப்ரஸாதத்தாலே ப்ரவ்ருத்தமான திவ்ய ஸாரஸ்வதத்தை யுடையனுமாய்

ரஹஸ்யம் ச பிரகாசம் ச யத்வ்ருத்தம் தஸ்ய தீமத
ராமஸ்ய ஸஹ ஸுவ்மித்ரே ராக்ஷஸா நாம் ச ஸர்வஸ
வைதேஹ்யாஸ் சாபி யத் வ்ருத்தம் பிரகாசம் யதி வா ரஹ
தச்சாப்ய விதிதம் சர்வம் விதிதம் தே பவிஷ்யதி
ந தே வாகந்ருதா காவ்யே காசி தத்ர பவிஷ்யதி –என்று ப்ரஹ்மாவால் தத்த வரனுமாய்

ஹசிதம் பாஷிதம் சைவ கதிர் யா யச்ச சேஷ்டிதம்
தத் சர்வம் தர்ம வீர்யேண யதாவத் சம் ப்ரபஸ்யதி–பால-3-4-என்கிறபடியே
தர்ம வீர்ய பிரஸூ தமான திவ்ய சஷுஸ் சாலே -இவ்வவதார வ்ருத்தாந்தத்தை
பாணவ் ஆம லகம் யதா -பால-3-6-என்னும்படி நிரவசேஷமாக சாஷாத் கரித்து

தச இந்த்ரியா நநம் கோரம் யோ மநோ ரஜநீசரம்
விவேக சர ஜாலேந சமம் நயதி யோகிநாம் –என்கிறபடியே முமுஷுவுக்குப் பரம உபகாரகமான
இவ்வவதார ரஹஸ்யத்தை வெளியிட்டு லோகத்தை உஜ்ஜீவிப்பைக்காகத் தன் கருணையால் ப்ரவ்ருத்தனாய்

————-

ஸ்ரீ இராமாயண ப்ரவர்த்தந நோக்கம்

இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுபப்ரும்ஹயேத்
பிபேத் யல்பஸ்ருதாத் வேதோ மா மயம் பிரதர்ஷயிதி –என்கிற சாஸ்திரத்தை அநு சந்தித்துக் கொண்டு
வேத உப ப்ரும்ஹண சா பேஷரான அல்ப ஸ்ருதர் பக்கல் இரக்கத்தாலும் அவர்களைப் பற்ற
வேதங்களுக்கு உண்டான பிரதாரண பயத்தை சமிப்பிக்கைக்காவும்

புண்யம் வேதைஸ் ச சம்மிதம் –பால-1-97-என்கிறபடியே நாலு வேதங்களும் ஒரு தட்டிலும் தான் ஒரு தட்டிலுமாக நிற்கிற
ஸ்ரீ ராமாயணம் ஆகிற பிரபந்தத்தை அருளிச் செய்து

சிந்த யாமாச கோந் வேதத் ப்ரயுஞ்ஜீயாத் இதி பிரபு -பால-4-3-என்கிறபடியே யாரைக் கொண்டு
இந்த பிரபந்தத்தை ப்ரவர்த்திக்கக் கடவோம்-என்று சிந்தித்த சமயத்தில் குச லவர் வந்து பாதோப ஸங்க்ரஹணம் பண்ண

தவ் து மேதாவிநவ் த்ருஷ்ட்வா வேதேஷு பரி நிஷ்டிதவ் வேத உப ப்ரும்ஹணார்த்தாய தவ் அக்ராஹயத பிரபு -என்கிறபடியே
உசித அதிகாரி முகத்தால் உப ப்ரும்ஹண ரூபமான இப்பிரபந்தத்தை ப்ரவர்த்திப்பித்தான் –

ஸ்ரீ பிரபந்த அவதாரம் -முதல் அதிகாரம் முற்றிற்று –

————–

இரண்டாம் அதிகாரம் -பர தத்வ நிர்ணயம் –

பர தத்வ நிர்த்தாரணம்
இப்படி இப் பிரபந்தத்தில் பண்ணுகிற பஹு விதங்களான வேத உப ப்ரும்ஹணங்களிலே பிரதானமான
உப ப்ரும்ஹணம் ஸ்வேதாஸ் வராதிகளில் சொல்லுகிற
சர்வ சரண்ய பர தத்வ விஷயமாயும் –
ஸர்வாதிகாரமான சரணாகதி ரூப பரம ஹித விஷயமாயும்
இரண்டு வகையாய் இருக்கும்

அதில் சர்வ சரண்யமான பரதத்வத்தை நிஷ் கர்ஷிக்கும் இடத்தில் –
சர்வேஸ்வரனைப் பற்ற –
சமர் -என்றும்
ஏகர் -என்றும் –
அதிகர் -என்றும் சங்கித்தராய் இருப்பர் இருவர் உண்டு –

அவர்கள் யார் என்னில்
சர்வேஸ்வரனுடைய மகனும்
பேரனும் –

அவர்களில் பேரனான ருத்ரனின் காட்டில்
சர்வேஸ்வரன் அதிகன் என்னும் இடத்தை
ஸ்ரீ பரசுராம வாக்யத்தால் வெளியிட்டான் –

ராவண வத அனந்தரம் தேவர்கள் பெருமாளை ஸ்தோத்ரம் பண்ணுகிற போது
ப்ரஹ்மாதி சர்வ தேவர்களுடைய
கர்த்தா ஸர்வஸ்ய லோகஸ்ய ஸ்ரேஷ்ட்டோ ஞான வதாம் விபு
உபேஷஸே கதம் ஸீதாம் பதந்தீம் ஹவ்ய வாஹநே
கதம் தேவ கண ஸ்ரேஷ்ட்ட நாத்மாநம் அவ புத்த்யஸே
உபேஷஸே வா வைதேஹீம் மானுஷ பிராக்ருதோ யதா –யுத்த -120-6-/7- என்கிற வாக்யத்தாலே
பெருமாளுடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தை ஸ்தாபித்தான்

அநந்தரம் -தேவர்கள் தவிர -ப்ரஹ்மா தனித்து ஸ்தோத்ரம் பண்ணுகிற இடத்திலும்
எதிரி கையாலே விடுதீட்டான கணக்கிலே
அக்ஷரம் ப்ரஹ்ம சத்யம் த்வம் –யுத்த -120-14-என்று
சர்வ விலக்ஷணமான பர ப்ரஹ்மம் பெருமாள் என்னும் இடமும்

த்வம் த்ரயாணம் ஹி லோகா நாம் ஆதி கர்த்தா ஸ்வயம் பிரபு -120-19–என்று
ப்ரஹ்ம லக்ஷணமான ஜகத் காரணத்வத்தையும்

ஜகத் சரீரம் சர்வம் தே -120-25–என்று சர்வ சரீரத்வத்தையும்

அஹம் தே ஹ்ருதயம் ராம ஜிஹ்வா தேவீ ஸரஸ்வதீ-இத்யாதிகளாலே ஸ்ரவ்த பிரயோகத்தில் புத்ர பரமான
ஹ்ருதய சபதத்தாலே ப்ரஹ்மாவினுடைய கார்யத்வத்தையும்
மற்றும் உள்ள தேவதைகள் எல்லாம் விபூதி ஏக தேசமான படியையும்

சரண்யம் சரணம் ச த்வா மாஹு திவ்ய மஹர்ஷயா-120-18-என்று
சர்வ சரண்யத்வத்தையும் பேசினான் –

யாவன் ஒருவன் ப்ரஹ்மாவை முற்பட ஸ்ருஷ்டிக்கிறான்-என்று
ஸ்வேதாஸ்வர உபநிஷத்தில் அதீதமான அர்த்தத்தை
உத்தர ஸ்ரீ ராமாயணத்தில் ப்ரஹ்மா தன்னுடைய வாக்காலே பேசினான் –
எங்கனே என்னில்

சமயஸ்தே மஹா பாஹோ ஸ்வான் லோகான் பரி ரஷிதும்
சம் ஷிப்ய ச புரான் லோகான் மாயயா ஸ்வயமேவ ஹி
மஹார்ணவே சயாநோ அப்ஸூமாம் த்வம் பூர்வம் அஜீஜன –உத்தர -104-3 /-4 –என்று தொடங்கி

பத்மே திவ்யே அர்க்க சங்காஸே நாப்யாம் உத்பாத்ய மாம் அபி
பிரஜா பத்யம் த்வயா கர்ம சர்வம் மயி நிவேசிதம்
ஸோஹம் சந்யஸ்தபாரோ ஹி த்வாம் உபாஸே ஜகத் பதிம்
ரஷாம் விதத்ஸ்வ பூதேஷு மம தேஜஸ் கரோ பவாந்
ததஸ் த்வம் அபி துர்த் தர்ஷஸ் தஸ்மாத் பாவாத் சனாத நாத்
ரஷார்த்தம் சர்வ பூதா நாம் விஷ்ணுத்வம் உப ஜக்மிவாந்
அதித்யாம் வீர்யவாந் புத்ரோ ப்ராத்ரூணாம் ஹர்ஷ வர்த்தந
சமுத் பன்னேஷு க்ருத்யேஷு லோகஸ் யார்த்தாய கல்பஸே
சத்வம் வித்ராஸ்ய மாநாஸூ பிரஜாஸூ ஜகதோதுநா
ராவணஸ்ய சதா காங்ஷீ மானுஷேஷு மநோ அதாதா –உத்தர -104-7 /-11- என்று

சர்வேஸ்வரன் பரம காரணமான படியையும் –
தான் அவனுக்குகே காரண பூதனுமாய்ப்
பரதந்த்ரனுமாய்த்
தத் அதீன பல லாபனுமாய் இருந்த படியையும்
தங்கள் நடுவும் -ராஜ வம்சத்தில் நடுவும் -சர்வேஸ்வரன் மத்ஸ்யாதிகளுடைய மதியத்தில் போலே
ஸ்வ இச்சையால் அவதரிக்கிறார் என்னும் இடத்தையும் ப்ரஹ்மா விண்ணப்பம் செய்தான் –

தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளுகிற போதும்

ஆ கச்ச விஷ்ணோ பத்ரம் தே திஷ்ட்யா ப்ராப்தோஸி மாநத
ப்ராத்ருபி ஸஹ தேவாபை ப்ரவிசஸ்ய ஸ்வ காம் தனும்
வைஷ்ணவீம் தாம் மஹா தேஜ தச்சாகாசம் ஸநாதனம்
த்வம் ஹி லோகபதிர் தேவ ந த்வாம் கேசந ஜாநதே
ருதே மாயாம் விசாலாஷீம் தவ பூர்வ பரிக்ரஹாம்
யாமிச்சசி மஹா தேஜஸ் தாம் தநும் ப்ரவிஸஸ் வயம் –உத்தர -110 –7-/10-என்று விண்ணப்பம் செய்தான் –

இப்படிகளால் ப்ரஹ்மாதிகளுக்கும் கூட
சரண்யமாய்
பரம காரணமான பர தத்வத்தை ப்ரதிபாதிக்கிற
வேத பாகங்களுக்கு உப ப்ரும்ஹணம் பண்ணினான் –

பர தத்வ நிர்ணயம் என்னும் இரண்டாம் அதிகாரம் முற்றிற்று –

—————–

சரணாகதி தாத்பர்ய ப்ரபஞ்சம்–என்னும் மூன்றாம் அதிகாரம்

தேவதைகள் சரணாகதி —
ஸ்ரீ இளைய பெருமாள் சரணாகதி —
ஸ்ரீ பரதாழ்வான் சரணாகதி –
மகரிஷிகள் சரணாகதி –
காகாஸூரன் சரணாகதி –

காகாஸூராதி ரக்ஷணத்தில் தண்டமும் ஆஸ்ரித ஹிதார்த்தமும் –

ஸ்ரீ ஸூக்ரீவ ஸ்ரீ லஷ்மண சம்வாத தாத்பர்யம் –

ஸ்ரீ பெருமாள் சரணாகதியின் நிஷ் பலத்வ காரணம் –
சாஷாத் சத்ருவையும் காக்கும் சர்வ சக்தித்வாதிகள் –

லோக ஹிதத்தில் திவ்ய தம்பதிகளின் சாமான அபிப்ராயத்வம் –

பிராட்டியின் ராவண அநு சாசனத்தின் ச பலத்வம் –
த்ரிஜடா சரணாகதி -நாராயண தர்மம் –

வாலி வத சமர்த்தனம் -விஷய வாசமும் ரக்ஷண காரணமாகும் படி –

ஸ்ரீ ராமாயணத்தின் சரணாகதி வேதத்வ பிரகாரம் –

இப்படி சர்வ சரண்யமான பரதத்துவத்தினுடைய வசீகரண சமர்த்தமாய் –
சர்வாதிகாரமாய் –
பரம ஹிதமாய் இருக்கிற
சரணாகதி தர்மத்துக்கு விதாயகங்களான வேத பாகங்களை இப்பிரபந்தத்தில்
உபக்ரமாதிகளாலே உப ப்ரும்ஹித்தான்-
எங்கனே என்னில்

————–

தேவதைகள் சரணாகதி
அவதார ஆரம்பத்திலே முற்பட சக்கரவர்த்தியினுடைய யஜ்ஜத்திலே ஹவிர்ப்பாக கிரஹண அர்த்தமாகத் திரண்ட
தேவர்கள் ரஷக ஆகாங்ஷிகளாய்
ஆவார் ஆர் துணை -என்று நிற்கிற அளவிலே

ஏதஸ்மிந் அந்தரே விஷ்ணு உப யாதோ மஹாத்யுதி
சங்க சக்ர கதா பாணி பீத வாசா ஜகத் பதி–பால -15-16–என்கிறபடியே

சர்வ சேஷியான சர்வேஸ்வரன்
அவகாசம் பார்த்து ரக்ஷண சான்னாகத்தால் உண்டான புகர் தோன்றும்படி
ரக்ஷண உபகரணங்களோடே கூடக்
கட்டி உடுத்து வந்து தோன்ற –

சித்த கந்தர்வ யஷாஸ் ச தத த்வாம் சரணம் கத —பால-15-24–என்று தேவ ஜாதியில் உள்ளார் எல்லாரும்
இருந்ததே குடியாக சரணாகதரான படி சொன்னான்

திரிசங்கு ஸூநஸ்ஸேபாதி விருத்தாந்தங்களிலும்
விச்வாமித்ராதி வியாபார விசேஷங்களைச் சொல்லி
சரணாகதி ரக்ஷணம் பரம தர்மம் என்றும்
சமர்த்த காருணிக விஷய சரணாகதி பலவிநாபூதை என்றும் காட்டினான்

——————-

ஸ்ரீ இளைய பெருமாள் -சரணாகதி

ஸ்ரீ இளைய பெருமாள் —
ச ப்ராதுஸ் சரணவ் காடம் நிபீட்ய ராகு நந்தன
ஸீதாம் உவாசாதியசா ராகவம் ச மஹா விரதம் –அயோத்யா -31-2-என்று
உபாய பரிக்ரஹத்தைப் பண்ணி

இதற்குப் பலமாக
குருஷ்வ மாம் அநு சாரம் வை தர்ம்யம் நேஹ வித்யதே
க்ருதார்த்தோ அஹம் பவிஷ்யாமி தவ சார்த்த பிரகல்பதே
பாவம்ஸ்து ஸஹ வேதேஹ்யா கிரிசானுஷு ரம்ஸ்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதஸ்ச தே –அயோத்யா -31-24-/26-என்று

ஸ்ரீ பெருமாளும் பிராட்டியும்
சேர்ந்த சேர்த்தியிலே தாம் அடிமை செய்ய அபேக்ஷித்தார் என்று சொல்லுகையாலே
உபாய உபேய பர வாக்ய த்வய ரூபமான சரணாகதி
மந்த்ர விசேஷத்தை உப ப்ரும்ஹித்தான்

—————-

ஸ்ரீ பரதாழ்வான் சரணாகதி
முற்பாடரான தேவர்கள் பண்ணின பிரபத்திக்காக
ராவண வதத்துக்கு எழுந்து அருளுகையும்
பிற்பாடரான ஸ்ரீ பரதாழ்வான் பண்ணின பிரபத்திக்காக மீண்டு
திரு அபிஷேகம் பண்ணி ராஜ்ஜியம் பண்ணுகையும்
விருத்தமான படியால்
ஸ்ரீ பரதாழ்வானுக்கு பிரபத்தி பண்ணின போதே பரமபதம் சடக்கென தலைக் கட்டிற்றிலையே யாகிலும்

அவருக்கு கைகேயீ வரத்தால் பிரசக்தமான அவத்யம் தீர்க்கும்படி
மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் வானோர் வாழ -என்கிறபடியே
அப்போது சாஷாத் பலமான திருவடிகளுக்கு பிரதிநிதியான ஸ்ரீ சடகோபனாலே
ச பலத்தவம் சொல்லி பின்பு
பூர்வ பரதிஜ்ஞ்ஞாதமான தேவ கார்யம் தலைக் கட்டினவாறே
ஸ்ரீ புஷ்பக விமானத்தாலே
சாஷாத் பலமான திருவடிகள் ஸ்வயம் ஆகதங்களாய் அயத்ன லப்தங்களான படி சொன்னான் –

அப்படியே
புற் பா முதலாப் புல் எறும்பாதி ஓன்று இன்றியே
நற்பால அயோத்தியில் வாழ் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே -என்றும்

த்வாம் ஆம நந்தி கவய கருணாம்ருதாப்தே
ஞான க்ரியா பஜன லப்யம் அலப்ய மந்யை
ஏதேஷு கேந வரத உத்தர கோசலஸ்த்தா
பூர்வம் ச நூர்வம பஜந்த ஹி ஜந்தவஸ்த்வாம் –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -69-என்றும் பேசுகிறபடியே

ஜங்கம ஸ்தாவர விபாகமற
உபாய அதிகார பிரசங்க ரஹிதமான ஜந்துக்களை எல்லாம்
ஸ்ரீ பரதாழ்வான் பண்ணின பிரபத்தியினாலேயே
அவருடைய விஷய வாச மாத்ரமே பற்றாசாக
பல ப்ரதானம் பண்ணி அருளி

————

மஹரிஷிகள் சரணாகதி
பின்பு ரஷிக்கும் பிரகாரத்துக்குப் புறம் செயலான

தே வயம் பவதா ரஷ்யா பவத் விஷய வாசிந
நகரஸ்த்தோ வநஸ்த்தோ வா த்வம் நோ ராஜா ஜனேஸ்வர–ஆரண்ய -1-20–என்கிற

ரிஷிகள் வாக்கியத்தின் படியே
அவர்களுக்கு விரோதிகளான ராக்ஷஸரை நிராகரித்து
ரிஷிகளை ரஷித்த படி சொல்லுகையாலே

ரஷக அபேக்ஷை பண்ணும் போது வேறு ஒரு உபாயம் -உபகாரம் -பண்ண வேண்டா
அபிமான கோசாரமான விஷயத்திலே துவக்காலே
அநந்ய சரண்யதையை வெளியிட்டுக் கிடைக்க அமையும் -என்கிற
ஸ்ரீ திருக்கண்ண மங்கை ஆண்டான் படியே
கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை யுகத்தி போலும் -என்னும்
அர்த்தத்தை வெளியிட்டு அருளினான் –

——————

காகாஸூர சரணாகதி
ஆர்த்ராபராதனாய் உதிரக்கையனான காகம் ப்ரஹ்மாஸ்த்ர அபி மந்த்ரிதமான துரும்பாலே துரப்புண்டு
ப்ரஹ்மா முதலான ஓன்று ஏறி ஓன்று உயர்த்தார் வாசல்கள் எல்லாம் நுழைந்து –
என்னைக் காத்துக் கொள்ள வல்லார் உண்டோ -என்று கதறின இடத்தில்
இக்காக்கைக்கு ஒருவரும் இல்லையாயிற்று –
அவ்வளவில்

ச பித்ரா ச பரித்யக்த ஸூரைஸ் ச சமஹர்ஷிபி -என்கிறபடியே
பிரிய ஹித காரிகளான தாயும் தகப்பனும்
அவர்கள் நாட்டில் குடி இருக்கிற தேவ ஜாதிகளும்
சரணாகத ரக்ஷண தர்மத்துக்கு உபதேஷ்டாக்களான மகரிஷிகளும்
தங்கள் ஏறிட்டுக் கொண்டால்

ப்ரஹ்மா ஸ்வயம்பூ வா சதுரா நநோ வா
ருத்ரஸ் த்ரி நேத்ரஸ் த்ரி புரந்தகோ வா
இந்த்ரோ மஹேந்திர ஸூர நாயகோ வா
த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம் –ஸூந்தர –51-44-என்கிறபடியே

இக்காகத்துக்கு ரக்ஷை பிறவாது என்று இதனுடைய ஹிதத்தை நிரூபித்து ஸ்ரீ பெருமாள்
கைக்கொள்ளுக்கைக்கு ஈடாக இக்காகம்
எங்கும் போய்க் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும் வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை -என்கிறபடியே
அநந்ய கதியாய் விழ வேண்டும் என்று பார்த்து எல்லாரும் துரத்திக் கதவை அடைத்தார்கள்

அப்போது வேறு ஒரு திக்கை நோக்கினால்
ப்ரஹ்மாஸ்திரம் தொடருகிற படியையும்
ஸ்ரீ பெருமாள் எழுந்து அருளின திக்கை நோக்கின போது
கொல்ல நினைவு இன்றிக்கே செருக்கடக்க நினைத்து இருக்கிற
சர்வ லோக சரண்யன் திரு உள்ளத்தை அறிந்த ப்ரஹ்மாஸ்திரம் கால் தாழ்கிற படியையும்
கண்ட காகம்

தப்பிப் போக நினைவு உண்டாய் இருக்கச் செய்தேயும்
த்ரீந் லோகாந் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -என்கிறபடியே
போக்கற்று வந்து விழுந்தது

இப்படி விழுந்த இடத்தில்
ச தம் நிபதிதம் பூமவ் சரண்ய சரணாகதம்
வதார்ஹம் அபி காகுத்ஸத க்ருபயா பர்யபாலயத் -என்கிறபடியே

வதார்ஹன் போக்கற்றுத் தாம் இருந்த இடத்திலே
விழுந்த மாத்திரமே சரணாகதியாகக் கொண்டு
ஸ்ரீ பெருமாள் பிராணார்த்தியான இவனுக்கு பிராண பிரதானம் பண்ணி
ரஷித்தார் என்கையாலே

எத்தனையேனும் தீரக் கழிய அபராதம் பண்ணினாரையும் போக்கற்று விழுந்தால்
ஸ்ரீமச் சப்தத்திலும்
நாராயண சப்தத்திலும் சொல்லுகிறபடியே
நித்ய அநபாயினியான ஸ்ரீ பிராட்டி சந்நிதி உண்டாகையாலும் –
பரம காருணிகத்வாதி குணங்களாலும் –
ஸ்ரீ பெருமாள் ஏறிட்டுக் கொண்டு ரஷிப்பார் என்னும் பரம ரஹஸ்யத்தை வெளிட்டான் –

பிராணார்த்தியான இக் காகத்துக்கு பிராண பிரதானம் பண்ணுகையாலே
பிரபத்தி பலம் சித்தம் –

துஷ் பிரக்ருதியான இக் காகத்துக்கு சிஷையாக
ஒரு கண் அழிவால் அஸ்திரத்தை விலக்கினார் –

—————–

காகாஸூராதி ரக்ஷணத்தில் தண்டமும் ஆஸ்ரித ஹிதார்த்தமும் –

ஸ்ரீ பரசுராமன் அளவில் தொடுத்த அம்பை –
அவன் தெளிந்து த்வந்த்வ யுத்த அபேக்ஷை தவிர்ந்த அளவிலே
அவனுக்கு மநீஷித விருத்தங்களான ஸூஹ்ருதங்களிலே ஏவினார் –

சமுத்ரத்தைக் கொடுத்து தொடுத்த அம்பை
சமுத்திர அபிமான புருஷன் ச அனுதாபனாய் சரணாகதன் ஆகையால்
தவிஷுத்துக்கள் பக்கலிலே ஆஸ்ரிதருடைய பாப க்ருத்யத்தை ஏறிடும் கணக்கில்
சமுத்திர விரோதிகளான பாபிஷ்டர் பக்கலிலே ஏவினார்

காகத்தைப் பற்ற அஸ்திரத்தை பிரயோகித்த அளவிலே
போக்கறுதி ஒழிய உள்ளரு பசை இல்லாத காகம்
சரணாகதமான போது இக்காகத்துக்கு அபராதம் பண்ணுகையிலே
அபிசந்தி விராமம் இல்லாதபடியால் –
மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா -என்கிறபடியே
இனி ஓர் அபராதத்தோடே மற்றைக் கண்ணும் போம் -என்று அஞ்சி
துர் அபி சந்தியை விட்டுத் திரிகைக்காக ஒரு கண்ணை அஸ்திரத்துக்கு இலக்கு ஆக்கினார்

ஆகையால் இம்மூன்று விருத்தாந்தங்களிலும்
அஸ்திரத்துக்கு லஷ்யம் கொடுத்தபடி எல்லாம் ஆஸ்ரித ஹிதமாக என்று நிர்ணீதம்

——–

ஸ்ரீ ஸூக்ரீவ ஸ்ரீ லஷ்மண சம்வாத தாத்பர்யம் –

கார்யத்தில் அபி சந்தி உண்டாய் இருக்க
போக பிரசங்கத்தாலே அந்ய பரராய்க் கடுக ஸ்ரீ பெருமாள் எழுந்து அருளி இருந்த
இடத்தில் வாராத அளவிலே
ஸமயாதி லங்கனம் பண்ணினாராகப் பழி சுமந்த மஹா ராஜர் விஷயத்திலே
ஸ்ரீ இளைய பெருமாளுடைய சீற்றத்தைக் கண்ட சந் மந்திரியான ஸ்ரீ திருவடி

க்ருத அபராதஸ்ய ஹி தே நாந்யத் பஸ்யாம் யஹம் ஷமம்
அந்தரேண அஞ்சலிம் பத்த்வா லஷ்மணஸ்ய பிரசாதநாத் -என்று

அவ்வசரத்திலே அபராதம் பற்றாசாக
சரணாகதராய் ப்ரசாதிக்கப் பிராப்தம் என்று ஸ்ரீ மஹா ராஜருக்கு தர்ம உபதேசம் சொல்லும் கிரமத்திலே
ஹிதம் சொல்ல ஸ்ரீ மஹாராஜரும் தெளிந்து –

யதி கிஞ்சித் அதிக்ராந்தம் விச்வாசாத் பிரணயேந வா
ப்ரேஷ் யஸ்ய ஷமிதவ்யம் மே ந கஸ்சின் ந பராத்யதி –கிஷ்கிந்தா -36-11-என்று

க்ஷமை கொண்ட பிரகாரத்தைச் சொல்லுகையாலே
ஸ்ரீ பகவத் விஷயத்தில் சாபராதர் ஆனாலும்
பாகவதரை க்ஷமை கொள்ள
அம்முகத்தாலே ஸ்ரீ பெருமாள் க்ஷமித்து அருளுகையாலே
இவனும் நிராபராதனாய்க் கைங்கர்ய யோக்யனாம் என்னும் இடத்தை வெளியிட்டு அருளினான்

யச்ச சோகாபி பூதஸ்ய ஸ்ருத்வா ராமஸ்ய பாஷிதம் –
மயா த்வம் புருஷாண்யுக்த தச்ச தவம் ஷந்தும் அர்ஹஸி –கிஷ்கிந்தா -36-27-என்று

ஸ்ரீ இளைய பெருமாள்
தம்முடைய பாருஷ்ய வாக்யங்களுக்கு அடி சோக பரவசரான
ஸ்ரீ பெருமாளுடைய சீற்றத்து அளவில் பிறந்த பாசுரங்கள்
என்று தம்முடைய அபராதத்தை சோபாதிகமாக்கி

ந ச சங்குசித பந்த்தா யேந வாலீ ஹதோ கத –என்றால் போலே
மேல் எழுச்சியான ஸ்ரீ பெருமாளுடைய
பாசுரங்களுக்குக் காரணம் –
காமன் செய்தான் -மன்யு செய்தான் -என்கிற கணக்கிலே சோகமே யாயிற்று –

ஸமயே திஷ்ட்ட ஸூக்ரீவ -என்கையாலே
ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்த பாசுரங்களுக்கு -இப்படித் தாத்பர்யம் என்று காட்டி
அப்படியே சோபாதிகமான தங்கள் அபராதங்களுக்கு
ஸ்ரீ மஹா ராஜரை க்ஷமை கொண்டார் என்கையாலே

சாபராதரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் புரிந்து அனுதாபத்தாலே க்ருத ப்ராயச்சித்தரானால்
இவர்கள் விஷயத்தில்
அபராத தசையில் பண்ணின அநாத ராதிகளுக்குத் தாங்கள் எதிரே க்ஷமை கொள்ள வேண்டும்
என்னும் சாஸ்த்ரார்த்தைக் காட்டினான் –

———–

ஸ்ரீ பெருமாள் சரணாகதியின் நிஷ் பலத்வ காரணம்

இப்படி ஸ்ரீ விபீஷண வ்ருத்தாந்தத்துக்கு முன்பு சரணாகதி தர்மத்தில்
இப்பிரபந்தம் நின்ற நிலை சொன்னோம்

ஸ்ரீ விபீஷண வ்ருத்தாந்தத்துக்கு பின்பு –
சமுத்திரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி–யுத்த -19-31-என்று
தனக்கு சரணாகதி பலிக்கக் கண்ட பரம தார்மிகனுடைய வாக்யத்தாலே
அசக்தனுக்கு அபிமத சித்திக்கு சக்தனாய் ஆஸ்ரயிக்க பிராப்தம் என்னும்
இடம் சொன்னான் –

அவ்விடத்தில்
சாபமாநய ஸுவ் மித்ரே சராம்ஸ் சாஸீ விஷோபமாந்
சாகரம் சோக்ஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா -என்று
அருளிச் செய்யக் கடவ

ஸ்ரீ பெருமாள் கையம்பு மாண்டவர் இல்லாமையாலும் –
சரணமாக வரிக்கப்பட்ட ஜலாசயம்
அல்ப மதியுமாய்
அல்ப சக்தியுமாகையாலும்
சரணாகதி பலியாது ஒழியும் அத்தனை

——————

சாஷாத் சத்ருவையும் காக்கும் சர்வ சக்தித்வாதிகள்

ராவணன் தன்னைக் குறித்து ரிபூணாம் அபி வத்சலரான ஸ்ரீ பெருமாள்

அராஜ சமிமம் லோகம் கர்த்தாஸ்மி நிஸிதை சரை
நஸேச் சரணம் அப்யேஷி மாம் உபாதாய மைதலீம்–யுத்த –41-66- என்று

அருளிச் செய்த பாசுரத்தாலே
ஸ்ரீ பெருமாளுடைய சரண்யதைக்கு உறுப்பான
சர்வ சக்தித்வத்தையும்
பரம காருணிகத்வத்தையும்
ஹித ப்ரவர்த்தகத்தையும் பிரகாசிப்பித்தான்

————————–

லோக ஹிதத்தில் திவ்ய தம்பதிகளின் சமாந அபிப்ராயத்வம்

இயம் சீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ-பால -73-26-என்கிறபடியே

சரணாகத ரக்ஷண தர்மத்திலும் ஸஹ தர்ம சாரிணியான ஸ்ரீ பிராட்டியும்

மித்ர மவ்பயிகம் கர்த்தும் ராம ஸ்த்தாநம் பரீப்சதா
வதம் சா நிச்சதா கோரம் த்வய அசவ் புருஷர்ஷப
விதித சாஹி தர்மஞ்ஞ சரணாகத வத்ஸல
தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதம் இச்சசி
பிரசாத யஸ்வ த்வம் ஸைநம் சரணாகத வத்சலம்
மாம் சாஸ்மை ப்ரயதோ பூத்வா நிர்யாத யிதும் அர்ஹஸி -ஸூந்தர -21-20-/22-என்று

ராவணன் பிரதிகூலனாய் இருக்கச் செய்தேயும்
மாத்ருத்வ ப்ரயுக்தமான வாத்சல்ய அதி சயத்தாலே
அஸ்து தே என்னும் பிரகாரத்தாலே -அருளிச் செய்த
வாக்யத்தாலே இத்தம்பதிகள் லோக ஹிதத்திலே
சமாந அபிப்பிராயர் என்னும் இடத்தைக் காட்டினான் –

—————

ஸ்ரீ பிராட்டியின் ராவண அநு சாசனத்தின் ச பலத்வம்

இப்படி –
தேந மைத்ரீ பவதுதே -என்றதுவும்
ராவணனுக்கு ஸிஸூ பாலனான ஜன்மாந்தரத்திலே
அந்திம ஷணத்திலுமே யாகிலும் கார்யகரம் ஆயிற்று –

——————–

த்ரிஜடையின் சரணாகதி

சரண்ய ஸஹ தர்ம சாரிணியான ஸ்ரீ பிராட்டி விஷயத்திலே தர்ஜன பர்சனாதி
ப்ரவ்ருத்தைகளான ராக்ஷஸிகளைக் குறித்து

ததலம் க்ரூர வாக்யை வ சாந்த்வமேவாபி தீயதாம்
அபியா சாம வைதேஹீம் ஏதத்தி மம ரோஸதே
பர்த்ஸிதா மபி யா சத்வம் ராக்ஷஸ்ய கிம் விவஷயா
ராகவாத்தி பயம் கோரம் ராக்ஷஸாநாம் உபஸ்திதம்
பிரணிபாத பிரசன்னா ஹி மைதிலீ ஜனகாத்மஜா
அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத்–என்று

த்ரிஜடையும் ஸ்வ மதம் சொன்ன படியைப் பேசினான்

ஸ்ரீ பிராட்டியும் அவர்கள் இசைவு இன்றிக்கே இருக்க
சத்துவ ப்ரக்ருதியான த்ரிஜடையோடு அவர்களுக்கு உண்டான
துவக்கத்தாலே வாத்சல்ய பரவசையாய் அருளிச் செய்த வார்த்தையை
ஸ்ரீ வானர வீரர்களுக்கு அநு பாஷித்துக் காட்டுகிற ஸ்ரீ திருவடி

அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராக்ஷஸீ கணம் -என்று
த்ரிஜடை வாக்கியத்தை முடித்து

ததஸ் சா ஹ்ரீமதீ பாலா பர்த்துர் விஜய ஹர்ஷிதா
அவோ சத்யதி தத் தத்யம் பவேயம் சரணம் ஹி வ –என்று
ஸ்ரீ பிராட்டி அருளிச் செய்த
ரஷா பர ஸ்வீ கார வாக்யத்தை அநு வதித்துக் காட்டினான்

பின்பு சாபரதைகளான ராக்ஷஸிகளைப் பற்ற ஸ்ரீ ராம தூதன் சீறின விடத்து

பாபாநாம் வா ஸூபாநாம் வா வாதார்ஹாணாம் ப்லவங்கம
கார்யம் கருண மார்யேண ந கச்சின் நா பராத்யதி –இத்யாதிகளாலே

அவன் சீற்றத்தை ஆற்றி
ஸ்ரீ பிராட்டி ராக்ஷஸிகளைத் தான் ஏறிட்டுக் கொண்டு ரஷித்த படி சொன்னான் —

இவ்விருத்தாந்தத்தை அனுசந்தித்த ஸ்ரீ பட்டர்
ஸ்ரீ ராம கோஷ்டிக்கும் ஆகாத நமக்கு ஸ்ரீ பிராட்டியுடைய
க்ஷமை ஒழியத் தஞ்சம் இல்லை என்னும் இடத்தை –

மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயி ததை வார்த்ராபராதாஸ் த்வயா
ரஷந்த்யா பவநாத் மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டீ க்ருதா
காகம் தம் ச விபீஷணம் சரணம் இத்யுக்தி ஷமவ் ரஷத
சாந ஸாந்த்ர மஹா காஸ் ஸூக யது ஷாந்திஸ் தவா கஸ்மிகீ –ஸ்ரீ குணரத்னகோசம் -50–
என்று அருளிச் செய்தார் –

இப்படி ஆறு காண்டங்களிலும்
சரணாகதி தர்மமே அஞ்சுரு வாரியாகக் கோக்கப் பட்டது –

————

ஸ்ரீ நாராயண தர்மம் —

உத்தர ஸ்ரீ ராமாயணத்திலும் ராவணன் பாட்டன்மார் காலத்தில்
ஸ்ரீ விஷ்ணு அவதாரஸ்த்தனான சர்வேஸ்வரன்
சரணாகதரான தேவர்களை ரக்ஷிப்பதற்காகத் திரு உள்ளம் பற்றி –
ராஷசஸரோடு பொருத அளவிலே –

பூசலில் கெட்டு பராங்முகராய் லங்கையைக் குறித்து
பலாயனம் பண்ணுகிற ராக்ஷஸரைத் பின் தொடர்ந்து
சார்ங்கம் உதைத்த சர மழைகளாலே கொன்று சூறையாடக் கண்ட
மால்யவான் புரிந்து –

நாராயண ந ஜாநீஷே ஷாத்த்ரம் தர்மம் ஸநாதனம்
அயுத்த மநஸோ பக்நாந் அஸ்மாந் ஹம்ஸி யதேதர–உத்தர -8-3- என்று

ஓடிப்போகிற எங்களைக் கொல்லுகை ஷத்ரிய தர்ம விருத்தம் அன்றோ –
தர்மம் அறியாதார் செய்யுமத்தை
தர்மஞ்ஞனான நீ செய்யா நிற்கிறது என் -என்று ஆற்றாமையால் முறையிட

சர்வேஸ்வரன் -நாம் ஷத்ரியராகில் அன்றோ ஷத்ரியம் அனுஷ்டிப்பது –
நம்மை நாராயணன் என்று நீ சொன்னபடியே
நாம் நியந்த்ருத்வாதிகளாலே சர்வ விலக்ஷணர் ஆகையால்
நாராயண தர்மமான
சரணாகத ரக்ஷணம் அனுஷ்டிக்கிறோம் என்று அபிப்ராயம் கொண்டு

யுஷ்மத்தோ பய பீதா நாம் தேவா நாம் ஹி வை மயா பயம்
ராக்ஷஸோத் சாதனம் தத்தம் ததே ததனு பால்யதே
பிராணைரபி பிரியம் கார்யம் தேவா நாம் ஹி சதா மயா
ஸோஹம் வோ நிஹ நிஷ்யாமி ரஸாதல கதா நபி –உத்தர -8-7-/8-என்று

நாம் தேவர்களுக்குப் பண்ணின அபய பிரதானத்தாலே
பசுக்களுக்காகப் புலிகளைத் தொடர்ந்து கொல்லும் கணக்கிலே
உங்களைக் கொல்லுகிறோம்-என்று அருளிச் செய்த பாசுரத்தாலே
மற்றுமுள்ள ஷத்ரிய தர்மாதிகளிலும் காட்டில்
சரணாகத ரக்ஷண தர்மமே ஸ்ரீ பெருமாளுக்கு அநு பால நீயம் என்னும் இடத்தை ஸ்தாபித்தான் –

————-

வாலி வத சமர்த்தனம்

வாலியுடைய சோத்யத்திற்கும் இவ்வுத்தரத்தையே திரு உள்ளம் பற்றி
ஸூஷ்ம பரம துர் ஜ்ஜேய சதாம் தர்ம பிலவங்கம்–கிஷ்கிந்தா -18-15-என்று
கம்பீரமாக ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்தார்

முன்பு சாபராதரான ஸ்ரீ மஹா ராஜர்
அநு தப்தராய் சரணாகதராக
அவரை நீ நலிந்தாயாகையால்
நீ தண்ட்யனாகையாலும்-
சரணாகதாரன ஸ்ரீ மஹா ராஜரை ரஷிக்கை நமக்குத் பரமாகையாலும்
உன்னை நிராகரித்தோம் என்று தாத்பர்யம்

————-

விஷய வாசமும் ரக்ஷண காரணமாகும் படி

இப்பிரபந்தம் தலைக்கட்டுகிற இடத்திலும்
உபாய அநதிகாரிகளான ஸ்த்தாவரங்களையும் கூட

விஷயே தே மஹா ராஜ ராம வ்யஸன கர்சிதா
அபி வ்ருஷா பரிம்லாநா ச புஷ்பாங்குர கோரகா–அயோத்யா -59-8-என்னும்படி

உண்டான விஷய வாசத்தையும் –
அவஸ்த்தா விசேஷத்தையும் பற்றாசாக ரஷித்த படி பரக்கப் பேசப்பட்டது –

————–

ஸ்ரீ ராமாயணத்தின் சரணாகதி வேதத்வம்

உபக்ரம உபஸம்ஹார அவப்யாஸோ அபூர்வதா பலம்
அர்த்த வாத உபபத்தீ ச லிங்கம் தாத்பர்ய நிர்ணய –என்கிற

தாத்பர்ய லிங்கங்களை எல்லாம் பரிபூர்ணமாக உடையதாய்
ஸ்ரீ வால்மீகி பகவானாலே த்ருஷ்டமாய்
இருபத்தொரு சரணாகதி வேதம்

இதில் இவ் வபய பிரதான பிரகரணம்
சர்வ ரஹஸ்ய சாரங்களையும் திரள வெளியிட்ட உபநிஷத் பாகம்

—————————–

சரணாகதி தாத்பர்ய பஞ்சகம் என்னும் மூன்றாம் அதிகாரம் முற்றிற்று –

——————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மஹா பாரதம் த்ரௌபதி சரணாகதி ஸ்லோகம் – -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் –

February 19, 2015

அவதாரிகை
ஸ்ரீ ராமாயணத்தாலும்
ஸ்ரீ மஹா பாரதத்தாலும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தாலும்

பிராட்டியினுடையவும்-தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர -39-30-என்றும்
த்ரௌபதி யினுடையவும்–
சிந்தயந்தி யினுடையவும் –

தத் பிராப்தி மஹா துக்க விலீ நாசேஷ பாதகா -தச் சித்த விமலாஹ்லாத ஷீண புண்ய சயா ததா
சிந்தயன்தீ ஜகத் ஸூ திம் பரப்ரஹ்ம ஸ்வரூபிணம்-நிருச்ச்வசதயா முக்திம் கதான்யா கோப கன்யகா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-21/22-என்றும்
அத்யாவசாயத்தைப் பிரதி பாதிக்கையாலே இறே இவை பிரபல பிரமாணம் ஆயிற்று –

இதில் மஹா பாரத உக்தமான த்ரௌபதியினுடைய சரணாகதி நிஷ்டையை வெளியிடுகிறது இஸ் ஸ்லோகம் –
அதாவது
சர்வேஸ்வரன் ரஷிக்கைக்கு பரிகரமான அத்யவசாயத்தைச் சொல்லிற்று ஆயிற்று –

அப்படியே இறே-
ஜ்ஞாதம் மயா வசிஷ்டே ந புராகீதம் மஹாத்ம நா
மஹாத்யாபதி சம் ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவான் ஹரி -பார -சபா -90-42-என்றதும்

இவ் வத்யவசாயத்தைக் கொண்டு
பொய்ச் சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் -பெரியாழ்வார் -2-1-1- என்றபடி
சபா மத்யத்திலே துச்சாசன க்ருஷ்டயாய் –
அதினாலே பரிபூதையான தான் –
அரஷகரான பர்த்தாக்கள் முதலானவர்களை ரஷகராக கூப்பிட்ட இழவு தீர
சர்வ ரஷகன் ஆனவன் தன்னை ரஷகனாகத் துணிந்து
அவனுடைய ரஷகத்வ உபயோகியான குணங்களைச் சொல்லி சரணம் புகுகிறாள் –

———–

த்ரௌபதி சரணாகதி ஸ்லோகம் –

சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத
கோவிந்த புண்டரீகாஷா ரஷமாம் சரணா கதாம் –ஸ்ரீ மஹா பாரதம் -சபா பர்வம் -9- அத்யாயம் -43  –

சங்க சக்ர கதா பாணே  –
கைப்படியில்லாதனையோ நான் கை கூப்பிற்று –

த்வாரகா நிலய-
ஓர் இருப்பிடம் இல்லாதானையோ நான் நேர்ந்தது –

அச்யுத –
தன்னை அடைந்தாரை நழுவ விடுமவனையோ நான் அடைந்தது –
ந ச்யவந்தே யஸ்மாதி த்யச்யுத –

கோவிந்த-
தன் ஆ ஸ்ரீ தரை நோவு பட  விட்டிருக்குமவனையோ நான் ஆஸ்ரயதித்தது-
காவ விந்தந்த்யேனம்-கா விந்ததி –

புண்டரீகாஷ-
கண்ணில்லாதவனையோ நான் காலைக் காட்டிற்று –
கண் இரக்கம் –

ரஷமாம் –
ருசி இல்லாதேயோ நான் சரணம் புகுந்தது –

சரணா கதாம் –
ஆகையாலே பல சித்தியில் கண்ணழிவு வர ஹேது இல்லை என்று துணிகிறாள் –

1-சங்க சக்ர கதா பாணே –
நீ ஆயுத பாணியாய் இருக்க -நான் அம்பரத்தைப் பறி கொடுத்தேன் –

2-சங்க சக்ர கதா பாணே —
சுவர் விடும் ஐம்படை அங்கியுள் அமர்ந்தனை -திரு எழு கூற்றிருக்கை -என்கிறபடியே –
நீ சதா பஞ்சாயுதங்களைத் தரித்து இருக்கிறது சரணாகத  ரஷணத்துக்கு அன்றோ –

சகல ஆபன் நிவ்ருத்திக்கும் ஹேது உன் கை தானே –
ஸூதர்சனம் சிந்தித்த மாத்ரமாஸூ -தச்யாக்ர ஹச்தம் ஸ்வயம் ஆருரோஹா -பார -பீஷ்ம -59-58-என்று

நீ கை வந்த சக்கரத்தென் கண்ணனாய் -திருவாய் -5-4-8- இருக்க
காப்பாரார் இவ்விடத்து -திருவாய் -5-4-6/7-என்று
நான் கை விரிப்பது என் –

நான் கை விட்டு இருக்க நீ கைக் கொண்டு இருப்பதற்கு பிரயோஜனம் வேண்டாவோ
பஞ்சாயுதங்களையும் தரிக்கிறது பரிபவத்தில் நொந்தாரை ரஷிக்க அன்றோ

3- சங்க சக்ர கதா பாணே –
நான் கை விட்ட படியே -அவன் படை தொட்டான்
அங்கனம் தொட்ட படி இறே

மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்-தொழும் காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே -திருவாய் -3-1-9-

அப்படியே கூராராழி  வெண் சங்கேந்தி -திருவாய் -6-9-1-வந்தருளி தனக்கு முகம் காட்ட வேணும் என்று கருத்து

பின்பு இவளுக்காக இறே –
ச பாஞ்ச ஜன்ய அச்யுத வக்த்ரவாயு நா -பார -த்ரோ -73-58-என்றும்

ச கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயா நி வ்யதாரயத்-ஸ்ரீ கீதை -1-19-என்றும்

கழல் மன்னர் கலங்கச் சங்கம்  வாய் வைத்ததும் -பெரிய திரு -6-7-8- என்றும்

ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப -பெருயால்வார் -1-4-8- என்று  செய்து அருளியதும்

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இருநிலத்து அவித்ததும் -திருவாய் -3-2-3-என்றபடி

4- சங்க சக்ர கதா பாணே-
அருளார்  திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கோர் பெண்பால்
பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ தெருளோம் அரவணையீர்-திரு விருத்தம் -33-

5- சங்க சக்ர கதா பாணே –
துளிக்கின்ற வான் இந்நிலம் சுடராழி சங்கேந்தி அளிக்கின்ற மாயப்பிரான் -திருவாய் -2-3-10- என்றபடி
இருக்கிற உனக்கு அபலையை ரஷிக்கை பணியோ-
நான் அழகுக்கு இட்ட வலை போல் ஆயிற்றே நீ இட்ட பத்திரம் –

இனி அவன் நிலை கலங்கி வரும்படி அவன் நிலையைச் சொல்லிக் கூப்பிடுகிறாள்

1-த்வாரகா நிலயாச்யுத-
நீ -வண்டுவராபதி மன்னாய் -திருவாய் -5-3-6-
நழு வதல் இன்றிக்கே நாட்டாளாய் நிற்க
நான் பிடித்தார்க்கு எல்லாம் பெண்டிர் ஆகவோ –

2-த்வாரகா நிலயாச்யுத-
பரமபத நிலையனையோ நான் கூப்பிடுகிறது
சாது பரித்ராணம் பண்ண வந்த இடத்தே யன்றோ

அயர்வறும் அமரர்களுக்கு முகம் கொடுத்த இடம் அன்றே நான் அர்த்தித்தது
அபலைகளுக்கு முகம் கொடுத்த இடம் அன்றோ –

பல்லாயிரம் பெறும் தேவிமாரோடு பௌவம் எறிதுவரை எல்லாரும் சூழச் சிங்கா சணத்திலே -பெரியாழ்வார் -4-1-6- இருக்கும் இடம் அன்றோ –

ஏகஸ்மி னநேவ கோவிந்த காலே தாஸாம் மஹா முனே
ஜக்ராஹவிதிவத்  பாணீன் ப்ருதக்கே ஹீஷூ தர்மத் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-31-17-

ஆஸ்ரிதையான ஒருத்தியை உபேஷித்தால் அபிமதர்களானவர்கள் பலர் முகம் உமக்குப் போக வேண்டாவோ –

3- த்வாரகா நிலயாச்யுத –
நீயும் என்னைப் போலே நிலை இழந்து இருக்கிறாயோ –
அவர் ஒருநிலை நின்றது என்பரேல்-
திரைபொரு கடல்சூழ் திண் மதிள் துவரை வேந்து தன்மைத்துனன் மார்க்காய்
அரசினையவிய அரசினையருளும் அரி புருடோத்தமன் -பெரியாழ்வார் -4-7-8-என்கிறபடியே
அரசினை யவிய அரசினை அருளும் ஆழியான் ஆயிற்றே –

4-த்வாரகா நிக்லயாச்யுத
ஆராய்ச்சியைத் தவிர்ந்த அதர்மமான சபை போல் ஆயிற்றே உன் தர்ம சபையும்

5- அச்யுத –
என்று அவனை அல்லாதாரை என்றும் தன்னை நழுவாமல் நோக்கும்படியான பெயரைச் சொல்லுகிறாள்
அச்சுதன் இறே அடியவர் வினை கெடுப்பான்
அச்யுதாஹம் தவாச்மி-என்கிறாள்

மித்ர பாவத்திலே -ந த்யஜேயம்-யுத்த -18-3- என்கிற நீ
சரணாகதியான என்னை சத்ருக்கள் நலியும்படி காட்டிக் கொடுத்து இருப்பதே –

அவசன்னையாய் அநாதையாய் இருக்கிற என்னை நெகிழுகையே ப்ராப்தாமோ
நீயும் உன் ஸ்வ பாவத்தில் நெகிழில் அன்றோ என்னுடை நெகிழ வேண்டுவது

6-சங்க சக்ர கதா பாணே த்வ்ரகா  நிலயாச்யுத –
தமசா பரமோ தாதா சங்க சக்ர கதாதர -யுத்த -114-15-என்றாள் ஒருத்தி -மண்டோதரி —
இவளும் இப்படியே பேசுகிறாள்

ஜாதோ அஸி தேவ தேவேச சங்க சக்ர கதாதர -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-1- என்னக் கடவது இறே –

பிராகார சர்வ வ்ருஷ்ணீ நாம் -பார -சபா -36-12-என்று இருக்கும் நீ
இவர்களுக்கு கடலை அரண் செய்து கொடுத்து சத்ருக்கள் கையில் காட்டிக் கொடாமல்
காக்கும் இயல்வினனாய் இருக்கிற உனக்கு சத்ருக்கள் கையிலே அகப்படுவது என் செய்வது என்

பின்பு -ரதம் ச்தாபாய மே அச்யுத -ஸ்ரீ கீதை -1-21- என்னும்படி இறே இவளுக்காக சாரதியாய் வ்யவஸ்திதன் ஆனதும்
நீ கை கழலா நேமியானாய் இருக்க
என் மொய் குழல்கள் இரண்டும் விழும்படி யாவதே என்று
பொற் சக்கரத் தரியினை யச்ச்தனைப் பற்றுகிறாள் –

1-கோவிந்த-
இனி அரை குலையத் தலை குலைய அலமாக்கும்படியான முடி சூடின பேரைச் சொல்லிக் கூப்பிட்டு முறையிடுகிறாள்
கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசி நாம் –
ருணம் பிரவ்ருத்தமிவ மே ஹ்ருதயான் நாப சர்ப்பத்தி -பார -உத் -47-39-என்று
அவன் திரு உள்ளம் புண்படும்படி உயர்நிலையிலே ஒன்றைச் சொல்லிற்று –

2- கோவிந்த –
நீ கோவித்த அபிஷேகம் பண்ணி கோப்தாவாய் இருக்க
இவ்விடம் அராஜகமாய் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி இருப்பது என் –
இவளுக்கு புடவை சுரக்கும் திரு நாமம் இருக்கும் படி

3- கோவிந்த –
நீ ஆஸ்ரீத ரஷணத்தில் தீஷித்து இருக்க
க்ருஷ்ணாஸ்ரய-பார த்ரோண -183-24-என்று இருக்கிற என்னை
கிருபை பண்ணாது ஒழிவது என்

நாராயணா என்று உன் சிறு பெயரையோ நான் சொல்லிற்று
நாமைதத்தவ கோவிந்த நாம த்வத் தஸ் சதாதிகம் -என்று
உன்னிலும் அதிகமான உன் பேரை அன்றோ நான் சொல்லிற்று
சக்ருத் சம்ருதோ அபி கோவிந்த ந்ருணாம் ஜன்மசதை க்ருதம்-பாபராசிம் தஹத்யா ஸூ தூலராசி மிவா நல -என்று
சகல ப்ரவ்ருத்தி பண்ண வற்றானது உன் திரு நாமம் அன்றோ –

4- கோவிந்த –
நான் குழல் பேணாமல் இருக்க –
நீ குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக் கோவிந்தன் -பெரியாழ்வார் -3-6-11-என்றபடி
கோவிந்தனாய் மயிர் பேணி இருப்பதென் –

5- கோவிந்த
நீ முடி சூடிவித்திருக்க நான் –
சாஹம் கேசக்ரகாம் ப்ராப்தா த்வயி ஜீவத்யபி பிரபோ -பார உத் 81-24-என்னும்படி யாவது என்
என்று சொல்லி –
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து -நாச் -8-3- என்றபடி
குண ஜ்ஞானத்தாலே நிர்ப்பரை யானாள்-
பின்பு இறே மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்ததும்

6- கோவிந்த –
ஜகத்திதார்த்தமாக -வந்து அவதரித்தவன் அல்லையோ –

7- த்வாரகா நிலய கோவிந்த –
துவாராபதிக் காவலன் கன்று மேய்த்து விளையாடும் கோவலனை -நாச் -4-8-கூறுகிறாள்

8- கோவிந்த –
கோவிந்தன் -பசு மேய்த்தவன் -என்றபடி
கோமளவான் கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும் -திருவாய் -4-4-5-
நீ பசு மேய்க்கக் கற்ற வத்தனை யல்லவோ
பரிபவத்தில் ரஷிப்பது உனக்குப் பணியாய் இருப்பது என்

9- கோவிந்த –
என்னுடைய ரஷணத்துக்கு மலை எடுக்க வேணுமோ
கண்ணாலே நோக்க அமையாதோ
கோவிந்தம் கோபதிம் தேவம் சந்ததம் சரணம் வ்ரஜ -என்கிறது
இவள் அனுஷ்டானத்தை பின் செல்லும்படியாய் இறே இருப்பது

விதயச்ச வைதிகா த்வதீய கம்பீர மநோ நு சாரிண-ஸ்தோத்ர ரத் -20-

1- புண்டரீகாஷ-
பாஞ்சால்யா பத்மா பத்ராஷ்யா –
நான் கமலக் கண் முத்தம் சோரா இருக்க
கிமர்த்தம் நேத்ராப்யாம் –சுந்தர 33-4-என்கிறபடியே
உன் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காது ஒழிவது என்

2- புண்டரீகாஷ-
என்னுடைய ஆபத்துக்கு
அவலோக நாத –நே ந போயோ பாலயாச்யுத -ஸ்ரீ விஷ்ணு பிராணம் -1-20-16-
நம் அன்றோ அபேஷிதம்-

3- கோவிந்த புண்டரீகாஷ
க்ருஷ்ணம் கமல பத்ராஷம் -என்னக் கடவது இறே-
சம்ப்ரமைஸ் துஷ்ய கோவிந்த ஏதன்ன பரமம் தனம் -அந்யதா
ஹி விசேஷணே கஸ்த்வா மர்ச்சிதும் அர்ஹதி -பார -உத் -91-44
என்ற அனந்தரம்
பீஷ்மத் ரோண அதிக்ரம்யா மாஞ்சைவ மது ஸூ தன –கிமர்த்தம் புண்டரீகாஷ புக்தம் வ்ருஷள போஜனம் -என்றான் துரியோதனன் இறே –

4-புண்டரீகாஷ
நான் கண் கலங்கி இருக்க நீ கண் வளர்த்தியோடே இருப்பது என்-

5-புண்டரீகாஷ –
நீ கண் யுடையவனாய் இருக்க நான் கண்டார் கண் பார்வைக்கு இலக்காய்க் கண் கலங்குவது என் –

6- புண்டரீகாஷ –
நான் கண் சிவந்து இருக்க
நீ உன் முகத்தன கண்கள் அல்லவே -நாச் -2-5-இருப்பது என் –

7-புண்டரீகாஷ –
அவன் கண் செம்பளித்து இருந்தான்
பின்பு கண்ணாலே அலர விழித்ததும் இவளைக் குளிர நோக்கிற்றும் –
க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா ப்ருது லோசன –
மோஷயித்வா தநும் ப்ராப்த கிருஷ்ண ச்வஸ்தா நமுத்தமம் -பார மௌசல-9-34-இத்யாதி
அனுகூல ரஷண்த்துக்கும் பிரதிகூல நிரசனத்துக்கும் பரிகரம் ஒன்றே யாயிற்று –

8- புண்டரீகாஷ –
தாமரைக் கண்ணாவோ தனியேன் தனியாளாவோ -திருவாய் -7-6-1- என்கிறாள்

9-புண்டரீகாஷ -அச்யுத –
தாமரைக் கண்ணா அச்யுதா -என்கிறாள்

10- அச்யுத புண்டரீகாஷ –
வீவிலின்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் வீவில் சீரன் மலர்க் கண்ணன் -திருவாய் -4-5-3–என்கிறாள் –

11- புண்டரீகாஷா –
கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ-சாந்தோக்யம் -1-7- என்கிற
சுருதி அர்த்தம் இவளுக்குக் கையாளாய் இருக்கும் படி  –

12-புண்டரீகாஷ-
ஜிதந்தே புண்டரீகாஷ -ஜிதந்தே -என்று
இவள் முக்த அனுபாவ்யமான கண்களிலே ஜிதையாய் இருக்கும்படி

13-புண்டரீகாஷ –
ச  ஏஷ ப்ருது தீர்க்காஷா சம்பந்தி தே ஜனார்த்தன -பார -வன -192-51-என்று
இவள் பேசினபடி கேட்டுக் கொண்டு இருக்குமே –
வழி பறிக்கும் தசையிலே தாய் முகத்திலே விழிக்க ஆசைப்படுவாரைப் போலே
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணனைக் காண வாயிற்று இவள் ஆசைப்படுகிறது

14-சங்க சக்ர கதா பாணே புண்டரீகாஷ –
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண்ணன் என்றே தளரும் -திருவாய் -7-2-1- என்கிறாள் –

15- புண்டரீகாஷ சங்க சக்ர கதா பாணே-
பங்கயக் கண்ணன் என்கோ —சங்கு சக்கரத்தான் என்கோ -திருவாய்  -3-4-3-என்கிறாள்

16-புண்டரீகாஷ –
பாஹி மாம் புண்டரீகாஷ ந ஜாநே சரணம் பரம் -ஜிதந்தே -8-என்கிறாள்

ரஷமாம் —
1-ரஷ அபேஷை யுடைய என்னை –
2- அநாதையான என்னை –
3-அபலையான என்னை –
4-ஆ ஸ்ரீ தையான -பலமற்ற -என்னை
4-அநந்ய சரணையான என்னை

ரஷமாம் –
ரஷிக்கை யாவது
விரோதியைப் போக்குகையும் –
அபேஷிதங்களைக் கொடுக்கையும் –

அலமன்னு மடல்  சுரி சங்கம் எடுத்து அடலாழியினால் அணியாருருவின்
புலமன்னு வடம்புனை கொங்கையினாள் பொறை தீர முனாள் அடுவாள் அமரில்
பல மன்னர் படச் சுடர் ஆழியினைப் பகலோன் மறையப் பணி கொண்டு அணி சேர்
நிலா மன்னனுமாய் உலகாண்டவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே –பெரிய திரு -2-4-3-

1-சரணாகதாம்-
சரணம் அடைந்த இவளுக்காக இறே-பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்ததும் –
இவளுக்கு வஸ்த்ர வர்த்தநமும்
சத்ரு சம்ஹாரமும் அபேஷிதம்

ரஷாபேஷாம் ப்ரதீஷதே -என்று
தொழுது மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னுமிது மிகையாதலின் -திருவாய் -9-3-9-என்றபடி –
அத்தலைக்கு மிகையாய் இறே இருப்பதும்

2-சரணாகதாம் –
சத்ருவாகிலும் விட ஒண்ணாதே ரஷிக்க வேண்டும்படியான சரணாகதி தர்மத்தை அனுஷ்டித்தேன்

தஸ்மாதபி வைத்தியம் பிரபன்னம் ந பிரதிப்ரயச்சந்தி -என்றும்

சரணாகத அரி ப்ரானான் பரித்யஜ்ய ரஷிதவ்ய -யுத்த -18-28-என்றும் சொல்லக் கடவது இறே

காதுகனான வேடன் விஷயத்திலே திர்யக்கான பட்ஷி தன்னை அழிய மாறி ரஷித்தபடி கண்டால் –
சரணாகத வத்சலனான -சுந்தர -21-21-நீ
சரணாகதையான என் விஷயத்தில் என்ன செய்ய வேண்டும்
இவன் இப்படியே நாதிஸ் வஸ்த மநா -என்று இழவோடே எழுந்து அருளிற்றும்

3-சரணாகதாம் –
ஆண் பிறந்தார்க்கு எல்லாம் அடைக்கலமாய் இருக்க பெண் பிறந்தார் அடைக்கலம் புகுந்தால்
அஞ்சேல் என்னாது இருப்பது என்-
மாஸூசா -என்று ஒரு வார்த்தை அன்றோ அருளிச் செய்ய வேண்டுவது –

சங்க  சக்ர கதா பாணே –சரணாகதாம் –
1-நீ ரஷண பரிகரங்களை யுடையனாவது –
2-ஆசன்னன் ஆவது –
3-ஆ ஸ்ரீ தரை நழுவ விடாடதவனாவது –
4-ஆ ஸ்ரீதரஷணத்திலேதீஷித்து இருக்குமவனது
5-கண் யுடையவனாவது
6-நான் ரஷக அபேஷை யுடையவளாய் சரணம் புகுவது
ஆகையாலே ரஷிக்கக் குறை என் –

சங்க சக்ர கதா பாணே -என்கையாலே –
ஜ்ஞான சக்த்யாதி யோகத்தைச் சொல்லி

த்வாரகா நிலய அச்யுத கோவிந்த புண்டரீகாஷ -என்கையாலே
வாத்சல்ய சௌசீல்ய சௌலப்யாதி குணங்களைச் சொல்லி

ரஷமாம் -என்கையாலே
அகிஞ்சன அதிகாரி என்னும் இடம் சொல்லி

சரணாகதம் -என்கையாலே
உபாய அத்யவசாயம் சொல்லித் தலைக் கட்டுகிறது –

இத்தால்
லஜ்ஜா புரச் சரமாக இதர உபாய த்யாகம் சொல்லி
சித்த உபாய ச்வீகாரம் பண்ணுகை அதிகாரி க்ருத்யம்-என்றது ஆயிற்று –

—————————————————————————————–

ஹா கிருஷ்ண த்வாரகா வாஸின் க்வாசி யாதவ நந்தன
இமாமவஸ்தாம் சம் ப்ராப்தாம  நாதாம் கிம் உபேஷஸே
கோவிந்த த்வாரகா வாஸின் கிருஷ்ண கோபீ ஜன ப்ரிய
கௌரவை பரி பூதாம் மாம் கிம் ந ஜாநாசி கேசவ
ஹே நாத  ஹே ரமா நாத வ்ரஜ நாதார்த்தி நாசன
கௌரவார்ணவ மக்நாம்  மஹா யோகின் விச்வாத்மன் விஸ்வ பாவன
பிரபன்னான் பாஹி கோவிந்த குரு மத்யே அவசீததீம் -பார -சபா -90-44/45/46/47-

மனக் குறை வெளியிட்டு பற்பல திரு நாமங்களை அனுசந்திக்கிறாள் –

வன வாசத்தின் போது ஸ்ரீ கண்ணபிரான் பாண்டவர்களைப் பார்க்க இரண்டு தடவை வருகிறான் –
அதில் முதல் தடவை வந்த போது
நைவ மே பதய சந்தி நபுத்ரா ந பாந்தவா  ந ப்ராதரோ ந ச பிதா நைவ த்வம் மது சூ தன —
யே மாம் விப்ரக்ருதாம் ஷூத்ரைரு பேஷத்வம் விசோகவத்-ந ச மே சாம்யதே துக்கம் கர்ணோ யத்  ப்ராஹசத் ததா -பார -ஆர -12-128/129–
யாரும் இல்லை -சரணாகதி பலன் கிட்ட வில்லை என்கிறாள்

உபாய அபாய சம்யோக நிஷ்டயா ஹீயதே அனயா-அபாய சம்ப்லவே சத்ய ப்ராயச்சித்திம் சமாசரேத்-
ப்ராயச்சித்திரியம் சாஸ்திர யத் புன சரணம் வ்ரஜேத்-உபாயாநாம் உபாயத்வ சவீ காரேப் ஏவ மேவ ஹி-ஸ்ரீ லஷ்மி தந்த -17-92/93/94-

மீண்டும் சத்தியபாமை பிராட்டி யோடு எழுந்து அருளி –
மார்கண்டேய பகவானையும் தர்ம உபதேசம் -செய்யத் தூண்ட -அவரும்

சர்வேஷாமேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ
கச்ச த்வமேநம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -பார ஆர -192-56–என்ன

ஏவமுக்தாச்ச  தே பார்த்தா யமௌ ச பிருஷர்ஷபௌ-
த்ரௌபத்யா சாஹிதா சர்வே நமச்சக்ருர் ஜனார்த்தனம் -பார -ஆர -192-57- என்று சரணம் அடைய

ச சைதான் புருஷவ்யாக்ர சாம்நா பரம வல்குநா
சாந்த வயாமாச மாநார்ஹோ மன்யமாநோ யதா விதி -பார -ஆர -192-58-என்று

திரு நாம சங்கீர்தனத்தால் தடை பட்ட சரணாகதி பிராயச் சித்தம் செய்யப் பட்டதும்  தடை நீங்க –
சாஸ்திர விதியை நினைத்து சமாதானம் அடைந்தான்
இத்தையே பெரியவாச்சான் பிள்ளை பல கால் பின்பு பின்பு என்று அருளிச் செய்கிறார்-

இவளுக்கு புடவை சுரந்தது திரு நாமம் இறே-

நம் பேர் தன கார்யம் செய்தது இத்தனை போக்கி
நாம் இவளுக்கு ஒன்றும் செய்திலோம் இ றே -என்று இருந்தான் -ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள்-

முமுஷூப்படி -அவன் தூரஸ்தன்  ஆனாலும் இது கிட்டி நின்று உதவும்
ஸ்ரீ வசன பூஷணம் -திரௌபதிக்கு பலம் வஸ்த்ரம் -த்ரௌபதி  வஸ்த்ரார்த்தமாக பிரபத்தி பண்ணுகையாலே -மா முனிகள்
உபாய புத்தி யுடன்  திரு நாம சங்கீர்த்தனம் கூடாது இறே
ஸ்ரீ கண்ணபிரான் விளம்பித்து மீதி பலன்களை அளித்தது ஸ்ரீ கீதா சாஸ்திர அவதரணம்  முதலியவற்றைக் கருதியே
திரௌபதிக்கு வந்து கழிந்த உபாயாந்தர சம்பந்தம் ஏற்பட்டது என்றே கொள்ள வேண்டும் –

திரு நாமம் சொல்லுவதும் பிரபத்தியும் ஒன்றாக பூர்வர்கள் கருத வில்லை
பெரிய திருவந்தாதி -53 வ்யாக்யானத்தில் –
தன் பேர் சொன்னவளுக்கு திரு உள்ளத்திலே தனிசு பற்றது இருக்குமா போலே -என்று
பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்கிறார் –

கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸி நம் -பார -உத் -47-39-
த்ரௌபதி சரணம் செய்ததுக்கும் புடவை சுரந்ததுக்கும் இடையில் உள்ள சில கணங்களிலே
ஆபத்தால் கலங்கி அவனிலும் விஞ்சிய கோவிந்த நாமமாவது நம் மானத்தைக் காப்பாற்றாதா என்னும் நினைவுடன் –
உபாய புத்தியால் -உச்சரித்து விட்டாள்
இதுவே எம்பெருமான் திரு உள்ளத்தில் புண் பட காரணம்
இந்த உபாயாந்தர   சம்சர்க்கம் பரம ஆபத்தினால் விளைந்தது ஒன்றே –
அதனால் தோஷமாக கொள்ள வில்லை-

வாச்ய பிரபாவம் போல் அன்று வாசக பிரபாவம் -உத்க்ருஷ்டம் சொல்ல வந்தது
புஷ்ப பிரபாவம் போல் அன்று பரிமள பிரபாவம்
பிஷக்கின் பிரபாவம் போல் அன்று பேஷஜத்தின் பிரபாவம் போலே –

குளிர்ந்து சேர்த்து ஏலமிட்ட தண்ணீரை விடாயர்க்கு வார்க்காதே நிரபேஷர்க்கு வார்க்குமா போலே
புண்டரீகாஷா -இக்கடாஷம் கொண்டு நித்ய ஸூரிகளை நோக்க இருக்கிறாயா -என்று எல்லாம் சொன்னாளே –
பின்பே  கலங்கினாள்-
நாராயண சப்தார்த்தத்தில் ஏக தேசத்துக்கு கோவிந்த சப்தார்த்தத்துக்கு -செய்த படி கண்டால்
இதன் பிரபாவம் கிம்பு நர்ந்யாய சித்தம் இறே -மா முனிகள் திரு மந்திர பிரபாபம் சாதிக்கிறார்

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ சீதா ஸ்ரீ ராம ஜெயம் .-ஸ்ரீ ருக்மிணி ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி சமேத ஸ்ரீ வராஹ நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

February 18, 2015

அவதாரிகை –
அனுபாவ்ய வஸ்து  லாபத்துக்கு நிரபாய உபாயமான
1-ஆஸ்ரயண காலத்தையும் –
2-ஆஸ்ரயண அதிகாரியையும்
3-ஆஸ்ரயண பிரகாரத்தையும்
4-ஆஸ்ரயணீய வ்யக்தி விசேஷத்தையும்
5-ஆஸ்ரயண பலத்தையும் -சொல்லுகிறது இந்த ஸ்லோக த்வயம் –

ஸ்திதே மனஸி ஸூஸ்வதே சரீரே சதி யோ நர
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் –

ஸ்திதே மனஸி-மனம் கலக்கம் இன்றி நிலை நிற்கையில்
ஸூஸ்வதே சரீரே சதி -உடம்பு நோயற்று நன்று இருக்கையில்
தாது சாம்யே ஸ்திதே-சதி -வாதம் பித்தம் ஸ்லேஷ்மம் என்னும் மூன்று தாதுக்களும் ஓரளவாய் இருக்கையில்
யோ நர -எந்த மனிதன்
விஸ்வ ரூபஞ்ச  அஜம்-உலகை உடம்பாக உடையவனும் -பிறப்பு முதலான விகாரங்கள் இல்லாதவனுமான
மாம்  ஸ்மர்த்தா -என்னை நினைக்கிறானோ
தத் -பிற் காலத்தில்
காஷ்ட பாஷாண சந்நிபம்-கட்டையோடும் கல்லோடும் ஒத்தவனாய்  –
ம்ரியமாணம்-மரணம் அடையா நிற்கிற
தம் மத் பக்தம்-அந்த என் பக்தனை
அஹம் ஸ்மராமி  -நான் நினைக்கிறேன்
நயாமி பரமாம் கதிம் -உயர்ந்த பதவியை அழைத்துச் செல்கிறேன் –

ஸ்திதே மனஸி ஸூஸ்வதே சரீரே சதி தாது சாம்யே ஸ்திதே-என்று -ஆஸ்ரயண காலத்தை -சொல்லுகிறது

யோ நர -என்று -ஆஸ்ரயண அதிகாரியைச் சொல்லுகிறது

ஸ்மர்த்தா -என்று -ஆஸ்ரயண பிரகாரத்தைச் சொல்லுகிறது –

விஸ்வ ரூபஞ்ச மா மஜம்-என்று -ஆஸ்ரயணீய வ்யக்தி விசேஷத்தைச் சொல்லுகிறது

ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்-
அஹம் ஸ்மராமி மத்பக்தம்  நயாமி பரமாம் கதிம் -என்று -ஆஸ்ரயண பலத்தைச் சொல்லுகிறது –

——-

ஸ்திதே மனஸி-மனஸி ஸ்திதே -மனம் நிலை நிற்கையில் –
மனஸ்ஸானது எது –
அதுக்கு அவ ஸ்தானம்   ஆவது எது என்னில் –

மனஸ் ஆனது
அநாதி கால பாப  வாசனை யாகிற மஹா வாதத்தாலே -புயல் காற்றாலே -ப்ரேரிதமாய்-
தனக்கு ஆவாஸ பூமியான ஹிருதய குகையிலே ஷண காலம் தங்கப் பெறாதே
கண்ட விஷயங்களிலே மண்டி –
திறந்து கிடக்கும் வாசல் தோறும் புகுந்து புறப்படும் நாய் போலே
நினைத்த இடம் எல்லாம் புக்குத் திரியாமல்  நிர்விஷயமாகை –

ஆக
இதில் மனஸ் ஸி னுடைய விஷய அதீனமான
அந்ய பரத்தை தவிர்ந்தபடி சொல்லுகிறது-

அநந்தரம்
சரீரா லஸ்ய நிபந்தனமான -வியாதி காரணமாக –
மனஸ் ஸி னுடைய அந்ய  பரதா சாந்திக்கு ஹேது  சொல்லுகிறது –

ஸூஸ்வதே சரீரே சதி -சரீரே ஸூஸ்வஸதே சதி -சரீரம் நல்ல ஆரோக்யத்துடன் இருக்கையில் -என்று
சரீரம் ஸ்வஸ்தமாய் அழகிதான அளவிலே  வ்யாதீநாமாகரமாய் இறே சரீரம் இருப்பது
அந்த வியாதிகளில் ஓன்று தலை  எடுத்ததாகில்
தஜ் ஜநிதமான துக்க அநு பாவத்திலே உப ஷீணம் ஆகையாலே
பகவத் விஷயத்துக்கு யோக்யம் ஆக மாட்டாது இறே நெஞ்சு
ஆகையாலே சரீரா லஸ்ய நிவ்ருத்தி மனஸ் ஸ்வாஸ் யத்துக்கு ஹேது —

அந்த சரீரா லஸ்ய நிவ்ருத்திக்கு ஹேது சொல்லுகிறது –
தாது சாமே ஸ்திதே -என்று

தாதுக்கள் ஆவன –
வாத பித்த ஸ்லேஷ்மங்கள் -அந்த தாதுக்களுக்கு சாம்யம் உண்டாகையாவது –
ஒன்றுக்கு ஓன்று ந்யூ நாதிரேகம் அற்று ஒத்திருக்கை –

அந்த தாதுக்களினுடைய ந்யூ நாதி ரேகங்கள் வியாதி ஹேது
மூன்றினுடைய ப்ரகொபம் மரணம் இறே

ஆகையால் அந்த வியாதி ஹேதுக்கள் தன்னில் ஒத்தவாறே
அவற்றினுடைய நிம் நோன்னதத்தாலே வரும் வியாதி உண்டாகாது –
வியாதி உண்டாகாமையாலே சரீரம் ஸ்வஸ்தமாம்
சரீரஸ்வாஸ்த்யத்தாலே மனஸ் ஸ்வாஸ்த்யம் பிறக்கும் –
பின்பு மனஸ்ஸூ ஸ்மரண ஷமமாம் –

ஆக
கீழ் இத்தனையாலும் ஸ்மரணா காந்தமான கால விசேஷத்தைச்  சொல்லிற்று –

———

அநந்தரம்-
ஸ்மரணாதி  காரியைச் சொல்லுகிறது –
யோ நர -என்று

நர சப்தம் -ம நுஷ்ய வாஸீ
இதிலே தேவதைகளையும் உப லஷிக்கிறது

இத்தால்
பகவத் சமாஸ்ரயணத்துக்குக் கரண பாடவமே அபேஷிதம் என்றதாயிற்று
வஷ்யமாணமான ஸ்மரணத்துக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் அப்ரயோஜகங்கள் –
ஏதேனும் ஜன்மம் ஆகவுமாம்-
வ்ருத்த மாகவுமாம் —
கரண பாடவமும்
ருசியுமே வேண்டுவது-

ஸ்மர்த்தா-
ஸ்மரணம் ஆவது ஒரு ஜ்ஞான விசேஷம் –

மேல் –
விஸ்வ ரூபம் -என்று சேஷித்வத்தையும்
நயாமி -என்று உபாயத்வத்தையும்
பரமாம் கதிம் -என்று உபேயத்வத்தையும் சொல்லுகையாலே
இம் மூன்றும் இந்த ஸ்மரணத்துக்கு விஷயமாகக் கடவது
ஆக இத்தால் ஆஸ்ரயண பிரகாரம் சொல்லிற்று ஆயிற்று –

———-

அநந்தரம்
ஆஸ்ரயணீய வஸ்துவைச் சொல்லுகிறது -விஸ்வ ரூபம் -என்கிற பதம் –
விஸ்வத்தையும் தனக்கு ரூபமாக உடையவன் விஸ்வ ரூபி யாகிறான்
இவன் விஸ்வ சரீரியாய் இருக்குமாகில்

உபய கதமான தோஷமும் ஸ்பர்சியாதோ-என்னச் சொல்லுகிறது -அஜம்-
ஜனன மரணாதி ஸூந்யம்-
இந்த ஜனனம் சரீர தர்மமான ஷட் பாவ விகாரங்களுக்கும்
ஆத்ம தர்மமான அஜ்ஞான துக்காதி களுக்கும் உப லஷணம்-

ச-
இச் சேதனனுடைய ஹிதாஹித ஜ்ஞான விசேஷத்தையும்
ஜ்ஞான அநு குணமாக கார்யம் தலைக் கட்டுகைக்கு ஈடான சக்தியையும் தயையும் கணிசிக்கிறது –

மாம் –
என்னை என்றபடி
அசாதாரண விக்ரஹத்தை அஸ்ம தாதிகள் கண்ணுக்கு விஷயமாக்கிக் கொண்டு நிற்கிற சௌலப்யத்தையும்
மானமிலாப் பன்றி என்று அத்யந்த நிஹீனமான வராஹ ஜன்மத்திலே
அத்யாபி நிவிஷ்டனாம்படியான சௌசீல்யாதி அதிசயத்தையும் மூதலித்துக் காட்டின படி –

———

அநந்தரம் -தத -இத்யாதி ஸ்லோகத்தாலே –
ஆஸ்ரயித்தவனுக்கு ஈஸ்வரன் உண்டாக்கும் பிரயோஜன விசேஷத்தைச் சொல்லுகிறது

தத -பின்பு என்றபடி –
இத்தால் ஸ்ம்ருதி யினுடைய நைரந்தர்யத்தைக் கழிக்கிறது-

தம் –
ஸ்மர்த்தா -என்கிறபடியே –
என்னையே உபாய உபேயமாக அத்யவசித்த அதிகாரியை –

இவனுக்கு பலம் கொடுப்பது எப்போதோ என்னில் -ம்ரியமாணம் –
மரண உன்முகமான சமயத்திலே
து சப்தம் -சாதகனில் காட்டில் இவ்வதிகாரிக்கு வஷ்யமாணமான விசேஷத்தை த்யோதிப்பிக்கிறது

அந்த விசேஷம் என் என்னில்
காஷ்ட பாஷான சந்நிபம் –
ஜ்ஞான சம்சர்க்க ஸூ ந்யமான காஷ்ட பாஷாணங்களோடு ஒத்து இருக்க அமையும் –
சாஸ்திரம் அந்திம ஸ்ம்ருதி கொண்டு உஜ்ஜீவிக்க வேணும் என்று சொல்லா நிற்க
அந்திம ஸ்ம்ருதி ஒழிய உஜ்ஜீவிப்பிக்கக் கடவன் என்கை  சாஸ்திர விருத்தம் அன்றோ என்னில்

அதுவும் அப்படியே –
இந்த அம்சம் என்னது -என்கிறார் -அஹம் ஸ்மராமி -என்று
அபேஷித ஸ்மரணத்துக்குக் கர்த்தா நானே
க்ருஷ்யம்சம் கர்ஷகனுக்கு அன்றோ

ஸ்மார்த்தா –
இவன் ஒரு கால் ஸ்மரித்தான் ஆகில் -அநவரத பாவனை பண்ணக் கடவன்-

நீ இப்படி மேல் விழுந்து நினைக்கைக்கு இவன் பக்கல் தன்னேற்றம் என் என்னில் -மத்பக்தம் –
எனக்கு நல்லவன் அன்றோ
மத் பக்தம் -என்று ப்ரபன்ன அதிகாரியைச் சொல்லுகிறது –

ஆக என் பக்கலிலே அநந்ய பிரயோஜன பக்தியை உடையவன் ஆகையாலே
அவன் காஷ்ட பாஷாண சந்நிபனே யாகிலும் நான் ஸ்மரிப்பன்-

இங்குச் சொல்லுகிற ஸ்மரணம் ஆவது –
இவன் தன கார்யத்தில் கை வாங்கி நம் பக்கலிலே தன சர்வ பாரங்களையும் சந்யசித்தான்
ஆன பின்பு இவன் கார்யம் அடைய நமக்கே பரம்
இவன் இன்னம் ஒரு கால் உத் க்ராந்தி க்லேசம் அனுபவித்தல்
யமன் முகத்திலே விழித்தல் கர்ப்ப குஹையிலே கிடத்தல் செய்யாதே
இவன் நித்ய கைங்கர்யம் பண்ணி நித்ய ஆனந்தியாக வேணும் என்கிற சங்கல்பம் –

நயாமி பரமாம் கதிம் -என்றது –
பரம ப்ராப்ய பிரகாரத்தைச் சொல்லுகிறது –

பரமாம் கதிம் நயாமி –
பரமையான கதியைக் கொண்டு ஸ்வீகரிப்பிக்கக் கடவன்

கதியாவது –
கம்யத் இதி கதி -என்கிற வ்யுத்பத்தியிலே யாய் -ப்ராப்யத்தைச் சொல்லுகிறது

அதில் -பரம கதி யாவது –
அதுக்கு அவ்வருகு இல்லாத ப்ராப்யம் –
அதாவது -பரம புருஷார்த்த லஷண மோஷம் –

நாட்டில் புருஷார்த்தமாக வேண்டுவது –
தர்மார்த்த காம மோஷம் -இவை புருஷார்த்தமாகக் காட்டாமையாலே அத்தை வ்யாவர்த்தித்து –
ஸ்வயம் புருஷார்த்தமாய் -ஸ்வ ரசமாய் -நிரதிசயமான பகவத் கைங்கர்யமான பரம ப்ராப்யத்தைச் சொல்லுகிறது –

நயாமி –
அந்தப் ப்ராப்யத்தைப் ப்ராபிக்கும் இடத்தில்-
ஆதி வாஹிகர்கள் கையிலே காட்டிக் கொடேன் –
அத்த வாளத் தலையாலே முட்டாக்கு இட்டு நானே கொண்டு போகக் கடவேன் –
லங்கா ஜன பதத்தில் இருந்த பிராட்டியைப் புஷ்பத்தின் மேலே தானே எடுத்து வைத்துக் கொண்டு
போனால் போலே காணும் இவ் வாத்மாவைக் கொண்டு போம்படியும் –

—————————————————————————

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .-ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி சமேத ஸ்ரீ வராஹ நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது-ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதி-உத்தர சதகம் -19 ஸ்லோகம் —

February 18, 2015

அவதாரிகை –
சர்வேஸ்வரன் அனுமான பிரமாண சித்தன் என்று சொல்லுகிற வாதி பஷ ப்ரதி ஷேபத்தைப் பண்ணிக் கொண்டு
ச பரிகரமான க்ருத்ஸ்ந வேதமே இவ் விஷயத்தில் பிரமாணம் என்றும்
பூர்வ உத்தர பாகங்கள் இரண்டிலும் அவனே பிரதிபாத்யன் என்றும் சொல்லி
இவ் வர்த்தத்தில் ஸ்ரீ கீதோக்தமான பகவத் வசனத்தையும் மூதலிக்கிறார்–

ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதிர் உப குருதே ஸேதிஹாசை புராணை
ந்யாயை  சார்த்தம் தவ தர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக
ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ
வேத்யோ வேதைஸ்ச சர்வைர் அஹமிதி பகவன் ஸ்வேன ஸ வியாச கர்த்த -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -உத்தர சதகம் -19 ஸ்லோகம் –

ஆதௌ -முதலிலே -மற்று ஒரு பிரமாணத்தை எதிர்பாராமல் தானாகவே –
வேதா -வேதங்களானவை-
பிரமாணம்-உண்மை அறிவை யுண்டாக்கும் பிரமாணம் ஆகின்றன –
ஸ்ம்ருதி -மநு முதலானோர் இயற்றிய ஸ்ம்ருதி சமூஹம்
ஸேதி ஹாசை புராணை-இதிஹாசங்களோடு கூடிய புராணங்க ளோடும்
ந்யாயை  சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்ஸா நியாயங்களோடும் கூட
உப குருதே-வேதங்களுக்கு பொருள் காணும் விஷயத்தில் உதவுகிறது –
பூர்வ பாக -வேதத்தில் கர்ம காண்டம் என்கிற முற்பகுதி
தவதர்ச்சா விதி முபரி -தேவரீருடைய திரு வாராதன முறையைச் சொல்லும் வழியில்
பரிஷீயதே -தலைக் கட்டுகிறது-
ஊர்த்வோ பாகஸ்-ப்ரஹ்ம காண்டம் எனப்படும் பிற்பகுதி யாகிய உபநிஷத் பாகம்
த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாப நைஸ்-தேவரீருடைய ஸேஷ்டிதங்கள்-குணங்கள் -செல்வங்கள் ஆகிய இவற்றை விளங்கத் தெரிவிப்பதாலே –
த்வத் பதாப்தௌ -தேவரீருடைய திருவடிகளை அடைவதில்
பரிஷீயதே -தலைக் கட்டுகின்றது –
பகவன்-எம்பெருமானே
சர்வை ஸ வேதை -பூர்வ உத்தர பாக ரூபமான எல்லா வேதங்களாலும்
அஹம் -நானே
வேத்ய இதி -அறியப் படுபவன் -என்று
ஸ்வேந -தேவரீர் தாமே
வியாச கர்த்த -ஸ -அருளிச் செய்தும் வைத்தீர் அன்றோ –

அதில் முற்பட வேத ப்ராமாண்யம் உண்டாகில் இறே
இவ் விஷயத்தில் பிரமாணம் ஆவது -என்னில் –
அது முற்பட முன்னம் ஸூ த்ருட பிரமாணம் -என்கிறார் –

ஆதௌ –
பகவத் ஸ்வரூப விபவாராத நாதிகளை அகல இட்டுப் பேசி
வாக்ய தர்க்கங்களாலே உப பாதிக்கக் கொண்டு
இது உபபாதித்த படி அழகிது -பிரமாணமாகப் பெற்றிலோம் -என்று இழவு பட வேண்டாதபடி
க்ருத்ஸ்ந வேதமும் முற்பட ஸூத்ருட பிரமாணம் -என்கிறார் –

பிரமாணம்-
சம்யக்கான பிரமிதிக்கு சாதனம் இறே பிரமாணம் ஆவது-
அசம்யக்த்வ ஹேது ப்ரம விப்ர லம்பாதி காரண தோஷமும்
நேதம் இத்யாதி- பாதகட்ரத்யமும் இறே  –
காரணா நபேஷமுமாய் அது தான் அபௌருஷேயமும் ஆகையாலே
காரண தோஷ பாதக பிரத்யயங்கள் இல்லை என்று இட்டு பிரமாணமாகக் கடவது –

இப்படி பிரமாணம் ஆகிறது –
இப் பிரமாணயத்துக்கு ஆலம்பன வ்யக்திகள் தான் எது -சஷூராதி கரணங்களோ -என்னில் –

வேதா  –
காச திமிராதி தோஷ சம்பாவனையும் உடைத்தாய் -அநித்யங்களுமான அவை அன்றியே
வாசா விரூப நித்யயா-என்றும்
அநாதி நிதநா ஹ்யேஷா வாகுத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா -என்றும் சொல்லுகிறபடியே
அநாதி நித்தா விச்சின்ன சம்பிரதாயமாய் –
நித்ய நிர்த்தோஷமாய்-
ப்ரம  விபர லம்பாதி தோஷ கந்த ரஹீதமான  வேதங்கள் –

வேதா –
வேத்யதி-என்கிற வ்யுத்பத்தியாலே
ச விபூதிகனான பகவானுக்கு பிரதிபாதக தயா பிரமாணம் ஆகிறது –
வேதயதி -என்ற இது பிறரை அறிவிக்கை யாவது ஏன்
யோ புத்த்யதே ஸ பரான் போதயாதி -என்று தான் அறிந்தால் பின்பு அல்லவோ பிறரை அறிவிப்பது

நேதி நேதி -என்றும்
க இத்தா வேத -என்றும்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும்
யதோ ந வேத மனஸா சஹை நம நுப்ரவிசந்தி -என்றும் சொல்லுகிறபடியே
தான் அகப்பட நெஞ்சாலும் கூட அறிய மாட்டிற்று இல்லை என்று சொல்லச் செய்தே
பிறரை அறிவிக்கும் படி என் என்னில்

ஒன்றை அறிகை யாவது -வஸ்து இருந்தபடியே அறிகை இறே -இங்கும்
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -என்றும்
ப்ருஹதி ப்ரும்ஹயதி தஸ்மா துச்யதே பரம் ப்ரஹ்ம -என்றும் –
ஸ்வரூ பேண குணைச்ச யத்ரா நவதி காதிசயம் -என்றும்
தவா நந்த குணஸ் யாபி -என்றும்
ஆநந்த்யாத் ப்ரதமோ ராசி -என்றும்
அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண  குணா கண -என்றும் சொல்லுகிறபடியே
வஸ்து ஸ்வரூப குணங்களால் அபரிச்சின்னம் ஆகையாலே

அபரிச்சின்னம்  என்று அறிகை இறே
அபரிச் சின்னத்தைப்  பரிச்சின்னம் என்று அறிகை யாகிறது நீலத்தைப் பீதம்-மஞ்சள் – என்கிற மாத்ரம் இறே –
அபரிச்சின்ன வஸ்துவை அபரிச்சின்னம் என்று அறிகையால் ஸ்வ ஜ்ஞானத்துக்கும் குறை இல்லை –
வேத புருஷன் தானே -வேதாஹா மேதம் புருஷம் -என்று இவ் வஸ்துவை நான் அறிவேன் -என்றாய்
அறிந்தபடி என் -என்னில்
மஹாந்தம் -என்று அபரிச்சிண்ணன் என்று அறிந்தேன் என்றான் இறே

வைதிக அக்ரேசரும்-அஹம் வேத்மி மஹாத்மானம் -பால -19-14–என்றும்
யேஸ வேத விதோ விப்ராயே சாத்யாத்மா விதோ ஜ நா -தே வதந்தி மஹாத்மானம் -பார -ஆர -71-123- என்றார்கள் இறே

இவற்றை உப ப்ரும்ஹித்த பக்தர்களும் –
அறிந்தன வேதம் அரும் பொருள் நூல்கள் -திருவாய் -9-3-3- என்றாய் -அறிந்தபடி என் என்ன
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல் -திருவாய் -9-3-3- என்றார்கள் இ றே

நிஷேத வாக்யங்கள் தன்னிலும் –
நேதி நேதி -என்றும் –
அப்ராப்ய மனஸா சஹ -என்றும்
மனுஷ்யாநந்தம் தொடங்கி-ப்ரஹ்மா நந்தத்து அளவும் ஒன்றுக்கு ஓன்று மேல் அவதியைப்
பேசிக் கொடு போந்து மேல் ஓர் அவதி காணாமையாலே
இவ்வளவு என்கிற இயத்தா ராஹித்யத்தைப் பற்றச் சொன்ன இத்தனை போக்கி –
நேராக தத் விஜ்ஞானம் இல்லை என்றது அன்றே

இப்படித் தான் அறிந்து பிறரையும் அறிவிக்கிறது தான் ஓன்று இரண்டோ என்னில்
வேதா –
ரூசோ யஜூம்ஷி சாமா நி ததை வாதர்வணா நி ஸ -என்கிறபடியே
ருக் ய்ஜூஸ் சாம அதர்வாத்மகமான சதுர் வித கோடியிலும் அடைப்புண்டு
அநந்தா வை வேதா -என்கிறபடியே
காணவ மாத் யந்தி நாதி பேதத்தாலே அசங்க்யாதமாய் இருக்கும் –

யே சேமே தபசி ஸ்திதா -என்னுமா போலே
சாஷிகள் அத்தனையும் சொல்ல பிரமாண தார்ட்யத்துக்கும் உறுப்பு என்று இருக்கிறார் –
ஏக சந்திக்தே காரே வஸ்து நி -என்று ஒருத்தன் உபபாதகன் ஆன போது இறே –
ஜ்ஞாநாத சந்நிக்ருஷ்டே அர்த்தே விஜ்ஞானம் -என்றும்
அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவத் -என்றும் சொல்லுகிறபடியே
பிரமாணாந்தர விஷயமான பகவத் விஷயத்தில் பிரமிதி ஜனகமாம் போது
கார்யார்த்தத்தோடு பரி நிஷ்பன்ன வஸ்துவோடு வாசி அற போத ஜன சக்தமான வேதமே யாகக் கடவது

வ்யாப்தியை உப ஜீவிக்கிற அனுமானத்தை இட்டு சாதிக்கும் போது
வ்யாப்தி சித்தமாய்
திருஷ்டாந்த   கதமான கமவச்யத்வாதிகள் ஈஸ்வரனுக்கு பிர சந்கிப்பதும் செய்யும்
இவனுக்கு சஜாதீயமாய் இருக்கும் திருஷ்டாந்தம் உண்டாகையில்
ந தத் சமச்சாப்யாதி கச்ச த்ருச்யதே -என்றும்
ந த்வத் சமோ அச்த்யப்யாதி க குதோ அன்யோ லோகத் த்ரயே  அப்ய பிரதிமப்ரபாவ -என்றும்
நாஸ்தி நாராயண சமோ ந பூதோ ந பவிஷ்யதி -என்றும்
சமாப்யதிக நிஷேதம் பண்ணுகிற பிரமாணங்களுக்கு நைரர் த்தத்யமும் பிரசங்கிக்கும்
ஆகையால் -இவ்விஷயத்தில் பிரமாணம் ஆம் போது வேதமே யாகக் கடவது
வேதம் தான் நிர பேஷமாக ப்ரஹ்மணி பிரமாணமாய் இருக்கிற படியால் உக்த தோஷங்கள் வாராது –

ஆனால் வேதோ அகிலோ தர்ம மூலம் ஸ்ம்ருதி சீலே ச தத் விதாம் -என்றும் –
சுருதி ஸ்ம்ருதி சதாசார -என்றும்
ப்ருதகுபாத்தமாய் -சஹபடிதமான ஸ்ம்ருதி யாதி   க்ருத்யம் என்ன –
வேதத்தாலே சரிதார்த்தம் ஆகில் ஸ்ம்ருதி யாதிகளுக்கு க்ருத கரத்வாதிகளாலே ஆநர்த்தச்யமும் –
இவை தான் சமுச்சித்ய பிரமாணம் ஆகிறது ஆகில்
கேவல வேதத்தின் யுடைய பிரமாண்யத்துக்கு வைகல்யமும் –
மூலமான வேதத்தின் யுடைய உப ஜீவ்யத்வ ஹானியும் வாராதோ என்னில் –

ஸ்ம்ருதி ருபகுருதே ஸேதி ஹாசை புராணை–இத்யாதி –
தர்மே ப்ரமீயமாணே து வேதேந கரணாத்மாநா -இதி கர்த்தவ்ய தாபகம் மீமாம்ஸா பூர யிஷ்யதி-என்று
பிரதிபாத்யர்த்தத்தில் பிரமிதி ஜனகமாம் போது-வேதமே கரணமாய் இருக்கச் செய்தே
பரி நிஷ்பன்னமான கரணத்துக்கு இது கர்த்த்வ்யதா ரூபேண உபகாரகம் ஆகையாலே குறை இல்லை –

இதுக்கு உபகாரமாம் இடத்தில் ஸ்ம்ருதிகள் என்ன -இதிஹாச புராணங்கள் என்ன -ந்யாயம் என்ன –
இவற்றில் அந்ய தமத்தாலே அமையாதோ -இவை எல்லாம் என் என்னில் –

இவற்றுக்குத் தனித் தனியே க்ருத்ய பேதம் யுண்டாகையாலே புநர் உக்தங்கள் அன்று –
அதில் ஸ்ம்ருதி களினால் வேதத்தில் பூர்வ பாகார்த்த விசதீகரண்மும்
இதிஹாச புராணங்களினால் உத்தர பாகார்த்த விசதீகரணமும் பண்ணப் படுகிறது –

அதில் இதிஹாசம்-சௌலப்ய ஏக பரம் –
புராணம் -பரத்வ ஏக பரம் –
நியாயை என்று சீஷா கல்ப வியாகரண நிருக்தச் சந்தஸ் ஜ்யோதிஷங்கள் ஆகிற ஷட் அங்கங்கள் என்ன
மீமாம்சைகள் என்ன இவற்றுக்கும் உப லஷண மே இருக்கிறது

இந்த ஷட் அங்கங்களும் நியாய மீமாம்சைகளும் –
வாக்யார்த்த விசாரம் என்ன –
வாக்யாங்கமான பத வர்ண ஸ்வ ராதி நிர்ணயம் என்ன –
இவற்றில் விநி யுக்தம் ஆகையாலே உபய பாகத்துக்கும் சாதாரணமாய் இருக்கிறது –

ஆக இத்தால்
புராண நியாய மீமாம்ஸா தர்ம சாஸ்திர அங்கமிச்ரிதா –வேதா ஸ்தா நாநி  வித்யா நாம் தர்மஸ்ய ச சதுர்தச -என்றும்
அங்காநி வேதாஸ் சத்வாரோ மீமாம்ஸா நியாய விஸ்தர -புராணம் தர்ம சாஸ்திரம் ச வித்யா ஹ்யதாஸ் சதுர்தச -என்றும்
சீஷாயாம் வர்ண சிஷா பத சமதி கமோ வ்யாக்ரியா நிர்வ சொப்யாம் சந்தஸ் சந்தஸ் சிதௌ ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யௌதிஷம் ரங்க நாத
கல்ப அனுஷ்டானம் உக்தம் ஹ்புசிதகமிதயோர் நியாய மீமாம்சையோ ச்யாதர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதி ஷூ தத் அனுகாஸ் த்வாம் விசின்வந்தி வேதா – என்றும் சொல்லுகிறபடியே
அங்காதி சஹிதமான வேதமே பிரமாணம் என்று சொல்லுகிறது
வேதத்தின் யுடைய ப்ராதான்யத்தையும் இதரங்களினுடைய அப்ரதான்யத்தையும் பற்றி இறே-

ஸேதிஹாசை  நியாயைஸ் சார்த்தம் ஸ்ம்ருதி ருபகுருதே -என்று
பிபெத் யல்ப ஸ்ருதாத் வேதோ மாமயம் பிரதரிஷ்யதி -இதிஹாச புராணாப்யாம் வேதம் சமுப்ப்ரும்ஹயேத்-என்கிறபடியே
அசங்க்யாதமான க்ருத்ஸ்ந வேதத்தையும் -வேதாந்தத்தையும்  கபளீகரிக்கைக்கு ஈடான
அளவில்லாத மந்தமதிகள் நம்மை நலியில் செய்வது என் என்று
பயப்படுகிற வேதங்களுக்கு உப ப்ரும்ஹண முகத்தாலே பய நிவ்ருத்தியைப் பண்ணி உபகரிக்கிறது -என்றாகவுமாம் –

ஸ்மிருதி சப்தார்த்தம் தான் –
ஸ்மர்யதே -என்கிற வ்யுத்பத்தியாலே
ஆச்சார்ய முகத்தில் நின்றும் அதிகதமான வேதார்த்தத்தை  அந்த வாசனையாலே நினைத்து பிரபந்தீ கரிக்கை –

இதிஹாசம் ஆவது –
யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்கிறபடி
கூடஸ்தனாய் இருப்பான் ஒரு ஆச்சார்யன் ஒரு சிஷ்யனுக்கு உபதேசித்து
அவ்வளவிலே தலை சாய்ந்து போகை அன்றியிலே
இதிஹாசே ஸ்ரூயதே-என்றும்
தைச் சோக்தம் புருகுத்சாய பூபுஜே நர்ம தாதடே -சாரச்வதாய தேநாபி மம சாரச்வதேந ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-9-என்றும்
விவஸ்மான் மநவே ப்ராஹ்ம நுரிஷ்வாகவே அப்ரவீத் –ஏவம் பரம் பராப்ராப்தம்  -ஸ்ரீ கீதை -4-1/2- என்றும் சொல்லுகிறபடியே
அந்த வேதார்த்தத்தை குரு பரம்பரைகளாலே அவிச்சின்ன சம்பிரதாயமாம் படி வர்திப்பிக்கை –

புராணம் ஆவது –
புராபி நவ -என்றாய்
அநாதியான வேத சித்தார்த்தத்தை நூதனமாக பிரபந்தீ கரிக்கை –

ந்யாயம் ஆவது
பூர்வபஷ சித்தாந்த யுக்திகளாலே அபார்த்தங்களை ஆராய்ந்து நிஷ்கர்ஷித்துக் கொடுக்கை –

ஆக இப்படி
சாங்கமாயும் சசிரஸ்கமாயும் உள்ள க்ருத்ஸ்ந வேதமும் ப்ரஹ்ம பிரதிபாதகம் ஆகையாலே
பிரமாணம் என்றே சொல்லுகிறது –

அது செய்யும்படி என் –
அக்நயே பதிக்ருதே புரோடாசம் அஷ்டாகபாலம்  நிர்வபேத்-என்றும்
வாயவ்யம் ச்வேதமாலபேத பூதிகாம -என்றும்
ஐந்தரம் சாரும் நிர்வபேத் ப ஸூகாம -என்றும் இத்யாதிகளாலே
அக்னி இந்த்ராதி தேவதாந்தரங்களையும்
தத் உபசானங்களையும் அன்றோ பிரதி பாதிக்கிறதாகத் தோற்றுகிறது-என்னில் –

த்வதர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக —
அவ்விடத்தில் உன்னையே பிரதிபாதிக்கிறது -என்கிறார் –

காகஸ்ய கார்ஷ்ண்யாத் சபள பிரசாத -என்று
அக்னி இந்த்ராதி தேவதா விசேஷங்களை பிரதிபாதியா நிற்க
நம்மை பிரதிபாதிக்கை யாவது-என் என்னில்

இஷ்டா பூர்த்தம்  பஹூதா ஜாதம் ஜாயமா நம் விஸ்வம் பிபர்த்தி புவநஸய நாபி -என்றும்
யத் கரோஷி யத் அஸ் நாஸி யஜ் ஜூஹோஷி ததாஸி யத் -யத் தபஸ் யஸி கௌந்தேய தத் குருஷ்வ மதர்ப்பணம் -ஸ்ரீ கீதை -9-26-என்றும்
யே யஜந்தி பித்ரூன் தேவான் ப்ராஹ்மணான் சஹூதாச நான் -சர்வ பூதாந்த ராத்மானம் விஷ்ணு மேவ யஜந்தி தே -என்றும்
அஹம் ஹி சர்வ யஜ்ஞானாம் போக்தா ச ப்ரபுரேவ ச -ஸ்ரீ கீதை -9-24- என்றும்
ச ப்ரஹ்மா ச சிவ சேந்திர ஸோ அஷர பரம ஸ்வராட் -என்றும்
ஏநமேகே வதந்த்யக்நிம் மனுமந்யே பிரஜாபதிம் இந்திர மன்யே பரே பிராணம் அபரே ப்ரஹ்ம சாஸ்வதம் -என்றும்
பிரமாண கணங்கள் உபபாதிக்கிற படியே
சமாக்யைக்கு பாதகமான சுருதி லிங்க ப்ரகரணாதியான பிரபல பிரமாணத்தாலே-
தத் தத் பிரதேச அநுகுணமான  அவயவ சக்தியாலே யாதல்
அபர்யவசாநவ்ருத்தியாலே யாதல்
அவ்வவோ சப்தங்கள் தேவருக்கே வாசகம் ஆகையால்
அவ் வாக்யங்களும் தேவருடைய சமாராதன பிரகாரத்தைச் சொல்லிற்றாகக் கடவது –

த்வதர்ச்சாவிதிமுபரி –
உம்முடைய ஆராதன விதியிலே –
யஜ்ஞேன தா நேந தபஸா அநாசகேந -என்றும்
வர்ணாச்ரமா சாரவதா புருஷேண பர புமான் -விஷ்ணுராராத்யதே பந்தா நான்ய-என்றும் சொல்லுகிற
தேவருடைய சமாராத நத்தைச் சொல்லுகிறது
நம்முடைய அர்ச்சனமாகில் சொல்லுகிறது –

நம்முடைய ஸ்வரூப விஷயமாகச் சொல்லத் தட்டு என் -என்னில்
அர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக —
நேராக சப்தாதி விஷயங்களிலே ப்ரவணரான சம்சாரி சேதனரை இதோ விமுகராக்கி நல் வழியே போக்குகைக்கு
தானே பண்ணுகையாலே அதிலே உப ஷீண மாயாயிற்று பூர்வ பாகம் இருப்பது
ஆகையாலே ஸ்வரூப பிரதி பாதனத்துக்கு அவசரம் இல்லை யாயிற்று –

ஏதேனுமாக சம்சாரிகளுடைய ஹித ப்ரவ்ருத்தி யாகில்
இதுக்கு க்ருத்யம்-
ப்ராப்ய ஸ்வரூபத்தையும் –
ப்ராப்தி பிராபக ஸ்வரூபத்தையும் –
ப்ராப்த்ரு ஸ்வரூபத்தையும் –
விரோதி ஸ்வரூபத்தையும்
பல ஸ்வரூபத்தையும்
முதல் தன்னிலே அறிவிக்கத் தட்டென்-என்னில் அது ஒண்ணாது –

முதல் பழுவிலே தவறி யெலாம் பழுவிலே அடி வைக்கப் போகாது இறே
ஸ்தன்ய பாநாதிகளிலே பரக்க வாசனை பண்ணிப் போருகிறவனை சடக்கென -அவை ஹேயம் இப்போதே
அனர்த்தகரமான சரீரத்தை  விட்டு மோஷத்தைப் பெறு-என்று சொன்னால்
அப சர்ப்பேத சௌகதா ப்ரஸ்தாவ கந்தத-ஸ்ரீ பாஷ்யம் -என்கிறபடியே
இவன் முகம் கெட்டுக் கழியும் ஆகையாலே

அவன் உகந்த சம்சாரி பலங்களிலே இழிந்து
அவனுக்குப் போக விரோதியான சத்ருக்களை போக்குகைக்கு ச்யேன விதியை உபதேசித்து
அது பலித்து -அந்த வாக்யத்திலே விசுவாசம் பிறந்தவாறே
போக உபகரணமான திவ்ய சம்பத்திக்கு உடலாக வ்ருஷ்டைர்த்தமாகக் காரீரியை விதித்து
அது பலித்து தத் விதாயக வாக்யத்திலே விஸ்வாசம் பிறந்தவாறே
ஐஹிக ஸூகத்தைக் காட்டிலும் ஆமுஷ்மிக ஸூகம் நன்று என்கைக்காக ஸ்வர்க்க சாதனமான
ஜ்யோதிஷ்டோமாதிகளை விதித்து -அது பலித்து
தத் உபபாத வாக்யங்களிலே விஸ்வாசம் பிறந்து -இவ்வளவும் புகுர நின்று வ்யுத்பன்னபத பதார்த்தனாய் விவேகியான அவனுக்கு

அந்தவதே வாஸ்ய தத் பவதி -என்றும்
ந ஹ்யத்ருவை ப்ராப்யதே -என்றும் –
ப்லவா ஹ்யேதே அத்ருடா யஜ்ஞ ரூபா -என்றும்
பரீஷ்ய லோகன் கர்மசிதான் ப்ராஹ்மாணோ நிர்வேதமாயாத் -என்றும்
ஸ்வர்க்கே அபிபாத பீ தஸ்ய ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி -என்றும்
ஆப்ரஹம புவ நாலலோகோ  புநரா வர்த்தி ந -என்றும்
ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தா நஸய பரமாத்மன -என்றும் உபதேசித்து –

இந்த பிரமாண கண அனுசந்தானம் பண்ணி நிர்விண்ணன் ஆனவனுக்கு
மோஷ சாஸ்த்ரத்திலே அதிகாரம் ஆகையாலே மெல்ல இவனை இதிலே மூட்டுகைக்காக
முற்படக் கர்ம பாகமே உத்தேஸ்யமாகக் கடவது –

அழகியது -பூர்வ பாகமானது இவனுடைய சத் கர்மத்துக்கு உரிய
நித்ய நைமித்திக காம்ய ரூபமான விஹித கர்மங்களை உபதேசித்ததாகில்
உத்தர பாகத்துக்கு க்ருத்யம்   என் என்னில்

ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரிஜ்ஞாப நைஸ் த்வத் பதாப்தௌ-
கஷாய பக்தி கர்மாணி ஜ்ஞானம் து பரமா கதி -என்றும்
கஷாயே கர்மபி பாகவே ததோ ஜ்ஞானம் ப்ரவர்த்ததே -என்றும்
அவித்யயா மருத்யும்
தபோ ஜ்ஞான சமாதிபி நராணாம் ஷீண  பாபாநாம் கிருஷ்ணே  பக்தி பிரஜாயதே -என்றும் சொல்லுகிறபடியே
பூர்வ பாக உதிதமான கர்ம அனுஷ்டானத்தாலே ம்ருதிதாக ஷயனானவனுக்கு
பகவத் ப்ராப்தி சாத நதயா அனந்தர பிராப்தமான
ப்ரஹ்ம ஸ்வரூப குண விபவ சேஷ்டாதி ஜ்ஞாபநம் பண்ணுவிக்கிறது

இக் கர்மம் தன்னை-அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -என்றும்
வ்ருத்தாத் கர்மாதி கமாதநந்தரம் ததேவ ஹீதொர் ப்ரஹ்ம ஜ்ஞாதவ்ய மித்யுக்தம் பவதி -என்றும்
அபியுக்தர்கள் பேசினார்கள் இறே-

ஊர்த்வோ பாக –
ஸ்ருதி சிரஸி விதீப்தே -என்கிறபடியே
சத்வாரமாக பகவத் ப்ரதிபாத நம் பண்ணுகிற பூர்வ பாகத்தில் காட்டில்
அவ்யஹித பகவத் ப்ரதிபாதநம் பண்ணுகையாலே
இவ்வாசத்தியைப் பற்ற எல்லாத்துக்கும் மேலான பாகம் -என்கிறார் –

இப் பாகத்தில் பிரதிபாதிக்கிற அர்த்தம் தான் ஏது என்னில் –
த்வதீஹா குண விபவ பரிஜ்ஞாபநை –
ஈத்ருசமான அர்த்தங்கள் -என்கிறார் –

த்வதீஹா குண விபவ பரிஜ்ஞாப நை —
ஒருவனை ஒருவன் பேசுகையாவது-அவனுடைய தொழில்களையும் -குணங்களையும் -பெருமைகளையும் பேசுகை இறே
ஆகையாலே இங்கும் -திவ்ய அபதானங்களையும் -கல்யாண குணங்களையும் -உபய விபூதி யோகத்தையும் பேசுகிறது –

த்வதீஹா –
ஜகத் ரஷண உபயோகியாக
பஹூச்யாம் -என்கிற சங்கல்ப வியாபாரம் தொடக்கமான
அந்தப் ப்ரவேச நியமன வியாபாரங்களையும்
ஹிரண்ய ராவண சிசுபாலாதி வத-தௌத்ய சாரத் யாதிகளான
பரத்வ ஸூசகமாயும்
சௌலப்ய ஸூசகமாயும் இருக்கிற திவ்ய அபதானங்களையும் சொல்லுகிறது –

சேஷ்டா தஸ்யா ப்ரேமே யஸ்ய வ்யாபின் யவ்யாஹதாத்மிகா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-72-என்றும்
க்ரீடா ஹரேரிதம் சர்வம் ஷரமித்யுபா தார்யதாம் -பார -சாந்தி -205-58- என்றும்
க்ரீடா ஜகத் பதேஸ் தஸ்ய சந்தத சம் ப்ரவர்த்ததே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-22-18- என்றும்
ரிஷிகள் பேசா நின்றார்கள் இறே –

இப்படி அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிற இவன் இவ் வ்யாபார பரம்பரைகளைப் பண்ணுகைக்கு அடியென் -என்னில்
குண –
குணங்கள் -இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே என்கிறது –
யஸ் சர்வஜ்ஞ சர்வவித் -முண்டக -2-2-7-இத்யாதிகளின் படியே
ச்ருஷ்ட் யுப யோகியான சர்வஜ்ஞத் வாதிகள் என்ன
ஸ்வரூப கதமான ஜ்ஞானந்தாதிகள் என்ன
விக்ரஹ கதமான சௌந்தர்ய சௌகுமார்யாதிகள்  என்ன
பரத்வ ஸூசகமான சௌர்யாதிகள் என்ன –
சௌலப்ய ஸூ சகமான சௌசீல்யாதிகள் என்ன
ஆக இந்த நிரவதிக குணங்களைப் பேசுகிறது –

இப்படி அபரிமித சேஷ்டிதனுமாய்-
அபரிமித குண கனுமான இவனுக்குத் தனக்கு வ்யாவ்ருத்தமாய் இருப்பதொரு
இருப்பிடமாதல் –
ஒரு போகமாதல்
பரிகரமாதல் இல்லையோ -என்னில்

விபவ –
சர்வஸ்ய வசீ சர்வசஸ்யேசான-என்றும்
பதிம் விஸ்வஸ்ய -என்றும்
பிரதான ஷேத்ரஜ்ஞ பதிர் குணேச -என்றும்
ஹிரண்மயே பரெ லோகே விரசம் ப்ரஹ்ம நிஷ்கலம் -என்றும்
ஷரம் பிரதானம் அம்ருதாஷரம் ஹர ஷராத்மா நாவி சதே தேவ ஏக -என்றும்
திவி திஷ்டத் ஏக-என்றும்
தே நேதம் பூர்ணம் புருஷேண சர்வம் -என்றும்
திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்றும் சொல்லுகிறபடியே
நித்ய விபூதி என்ன –
லீலோபகரணமான போக பூமி என்ன
ஆக
உபய விபூதியையும் உடையன் -என்கிறது-

குண சேஷ்டாதிகளும் பகவத் கதமாகில் இவ் வேதம் செய்கிறது என் என்னில் –
பரி ஜ்ஞாபநை-நன்கு அறிவிப்பதன் மூலம் –
அவற்றை உள்ளபடி அறிவிக்கிறது –

பரி -என்று பர ரீஷா பூர்வக ஜ்ஞாப நமாய்-
யுக்தி தர்க்கங்களோடு கூட நிஸ் சந்தேஹமாக அறிவிப்பிக்கிறது -என்றாகவுமாம் –
அன்றியிலே
பரிஜ்ஞாபநம் ஆகிறது –
விடு ஏடு எடுத்துப் பார்த்தல் –
ஸ்வ புத்தியாலே அர்த்த நிரீஷணம் பண்ணுதல் செய்கை அன்றிக்கே
ஆச்சார்யார்த்தி வித்யா விதிதா சாதிஷ்டம் ப்ராபத் -என்று
ஆச்சார்ய உபதேச முகத்தாலே கஹனமான ஸ்வ அர்த்தங்களை அறிவிப்பிக்கிறது என்றாகவுமாம்

இவை அறிவிக்கிற  இத்தால் பிரயோஜனம் என் என்னில்
த்வத் பதாப்தௌ-
ஷேத்ரஜ்ஞஸ் யேஸ்வரஜ் ஞாநாத்  விசுத்தி பரமா மதா-என்றும்
ப்ரஹ்ம விதாப்நோதி பரம் -என்றும் சொல்லுகிறபடியே
இந்த ஜ்ஞானம் கைம் முதலாக பரம ப்ராப்யனானவன் திருவடிகளைப் பெறுகை-

ஜ்ஞானத்தாலே பகவல் லாபம் என்கையில் பிரமாணம் என் -என்னில் –
தஸ்ய தீரா பரி ஜாநந்தி யோநிம் மரீசிநாம் பதமிச்சந்தி -என்றும் –
விஷ்ணோ கர்மாணி பஸ்யத -என்றும் –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி -என்றும் –
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத-த்யக்த்வா தேஹம் புநர் ஜன்ம நைதி மாமேதி – என்றும் –
பகவத் பத ஜ்ஞானத்தாலே பகவத் ப்ராப்தி -என்றும்
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி குதச்சந-என்றும்
ஆத்மா நாம நுவித்ய வ்ரஜந்த்யே தாம்ச்ச சத்யான் காமான் தேஷாம் சர்வேஷூ லோகேஷூ காமசரோ பவதி -என்றும்
இக்குண ஜ்ஞானத்தாலே பகவத் பிராப்தி என்றும்-

யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் ஸோ அஸ்நுதே சர்வான் காமான் -என்றும்
சர்வஸ்ய   வஸிநம் தேவம் சர்வஸ் யாயதநம் ஹரிம் -ராஜா நாம் சர்வ பூதாநாம் தம் வை ஜ்ஞாத்வா விமுச்யதே -என்றும்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -என்றும்
உபய விபூதி யோக ஜ்ஞானத்தாலே பகவத் ப்ராப்தி என்றும்
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் தானே சொல்லுகையாலே
இந்த ஈஹா குண விபவ ஜ்ஞானத்தாலே தத் பத ப்ராப்திக்குக் குறை இல்லை –

அத்ரேஸ்யமக் ராஹ்யம் -என்றும்
ந சஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா நான்யைர் தேவை -என்றும்
நமோ நமோ வாங் மனசாதி பூமயே -என்றும் சொல்லுகிறபடியே
சூத்ரா உபகர்ணர்களான எங்களுக்கு வாங் மனசாகோசர வைபவனாய் இருக்கிற உன்னைப் பெறும் போது-
மனசா து வி ஸூ ததே ந -என்றும்
ஹ்ருதா மநிஷா  மநசாபி க்லுப்த-என்றும் –
பக்த்யா த்வ நன்யயா சகா -என்றும்சொல்லுகிறபடியே
சவிபூதிகனான தேவருடைய ஜ்ஞானம் ஒழிய வேறு கைம்முதல் உண்டோ –

த்வதாப்தௌ -எஎன்னா தே –
த்வத் பதாப்தௌ -என்கிறது
விசேஷித்து ஸ்வரூப அநு குணமாகத் திருவடிகளே ப்ராப்யம் -என்கைக்காக –
ஆத்யாத்மிகாதி தாப த்ரயத்தாலே தப்தரானவர்களுக்கு
தத் விஷ்ணோ பரமம் பதம் -என்று பரமபத பிராப்தியைச் சொல்லிற்றாக வுமாம் –

ஆக
இப்படியால் -ஊர்த்வ பாகமானது
த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ பரிஷீயதே -என்று சொல்லிற்று ஆகிறது

ஈஹா குண விபவ பரி ஜ்ஞாபநை -என்கிற இடத்தில்
உபாசனம் கண்டிலோமே -என்னில்
உபாசனம் ஆகிறது
த்வத் ஈஹா குண விபவங்களின் உடைய அவிச்சின்ன அநு சந்தானம் ஆகையாலே
அத்தை அறிந்த போதே உபாசனமும் சொல்லிற்றே விட்டது –

ஆக -இத்தால்-
நதா ஸ்ம சர்வ வசசாம் பிரதிஷ்டா யத்ர சாஸ்வதீ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-14-23- -என்றும் –
வேதே ராமாயனே புணயே பாராதே பரதர்ஷப -ஆதௌ மத்யே ததாந்தே ச விஷ்ணு சர்வத்ர கீயதே -என்றும்
விஷ்ணு நாம ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-4-40- என்றும்சொல்லுகிறபடியே
சகல வேத வேதாந்தங்களில் அவனே பிரதிபாத்யன் -என்று சொல்லிற்று –

இவ்வர்த்தத்தை –
வேதைஸ்ச சர்வைர் அஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை-15-15-
என்று திருத் தேர் தட்டிலே சர்வ லோக சாஷிகமாகச் சொன்னவனை இட்டே இசைவிக்கிறார் –
வேத்யோ வேதைர்ச சர்வைர் அஹ மிதி பகவன் ஸ்வேந ச வ்யாசகர்த்த –

சர்வைர் வேதை –
அதீயமானமாயும் -விபர கீர்ணமாயும் உள்ள க்ருத்ஸ்ந வேதத்துக்கும் அவனே பிரதிபாத்யன் -என்கிறார்

அஹமிதி –
சர்வ அந்தர்யாமியாய் –
சர்வ சமாராத்யனாய்
சர்வ பலப்ரதானவன் -என்கிறார்

ப்ராஹ்மணோ யஜேத-என்றும்
ஷத்ரியே யஜேத -என்றும்
ஷத்ரியாதி சப்தங்கள் தஜ்ஜாதி விசிஷ்ட  பிண்டத்வாரா ஆத்ம பர்யந்தம் ஆகிறாப் போலே
அக்னி இந்த்ராதி சப்தங்களும் தத் அதிஷ்டான ஜீவ த்வாரா அநு பிரவேசத்தாலே நம் மளவிலே பர்வசிக்கக் கடவது -என்கிறார்

வேத்ய
வாசக சப்தமானது வாச்யமான அர்த்த பர்யவசாயியாய் அல்லது நில்லாமையாலே
வசசாம் வாச்யமுத்தமம் -என்றும்
அர்த்தோ விஷ்ணு -என்றும்-சொல்லப்படுகிற
நாமே க்ருத்ஸ்ந வேத பிரதிபாத்யன் என்று பகவத் வசனம்

பகவன் –
ஜ்ஞானாதி குணங்களால் பரி பூரணன் ஆகையாலே
போக்கடி சொல்லுகையும் உனக்கே பரம் -என்கிறார்

ஸ்வேந ச  வ்யாசகர்த்த –
மத்யஸ்தரான வைதிகர் சொன்ன அளவேயோ
எதிரி முன்பே நீ தானே சொல்லிற்று இல்லையோ -என்கிறார்

————-

ஆதவ் வேதா பிரமாணம் ஸ்ம்ருதி உப குருதே ச இதிஹாஸை புராணை
ந்யாயை சார்த்தம் த்வத் அர்ச்சா விதம் உபரி பரி ஷீயதே பூர்வ பாக
ஊர்த்வ பாக த்வத் ஈஹா குண விபவ பரி ஞாபநை த்வத் பத ஆப்தவ்
வேத்ய வேதை ச சர்வை அஹம் இதி பகவந் ஸ்வேந ச வ்யாஸ கர்த்த –19-

ஆதௌ -முதலிலே -மற்று ஒரு பிரமாணத்தை எதிர்பாராமல் தானாகவே –

வேதா -வேதங்களானவை-

பிரமாணம்-உண்மை அறிவை யுண்டாக்கும் பிரமாணம் ஆகின்றன –

ஸ்ம்ருதி -மநு முதலானோர் இயற்றிய ஸ்ம்ருதி சமூஹம்

ஸ இதிஹாசை புராணை-இதிஹாசங்களோடு கூடிய புராணங்க ளோடும்

ந்யாயை  சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்ஸா நியாயங்களோடும் கூட

உப குருதே-வேதங்களுக்கு பொருள் காணும் விஷயத்தில் உதவுகிறது –

பூர்வ பாக -வேதத்தில் கர்ம காண்டம் என்கிற முற்பகுதி

த்வத் அர்ச்சா விதி முபரி -தேவரீருடைய திரு வாராதன முறையைச் சொல்லும் வழியில்

பரிஷீயதே -தலைக் கட்டுகிறது-

ஊர்த்வோ பாகஸ்-ப்ரஹ்ம காண்டம் எனப்படும் பிற்பகுதி யாகிய உபநிஷத் பாகம்

த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாப நைஸ்-தேவரீருடைய ஸேஷ்டிதங்கள்-குணங்கள் -செல்வங்கள்
ஆகிய இவற்றை விளங்கத் தெரிவிப்பதாலே –

த்வத் பதாப்தௌ -தேவரீருடைய திருவடிகளை அடைவதில்

பரிஷீயதே -தலைக் கட்டுகின்றது –

பகவன்-எம்பெருமானே

சர்வை ஸ வேதை -பூர்வ உத்தர பாக ரூபமான எல்லா வேதங்களாலும்
அஹம் -நானே
வேத்ய இதி -அறியப் படுபவன் -என்று
ஸ்வேந -தேவரீர் தாமே
வியாச கர்த்த -ஸ -அருளிச் செய்தும் வைத்தீர் அன்றோ –

ஹே பகவந்
ஆதவ் வேதா-வேதங்கள் முதலிலே வேறு ஒரு பிரமாணத்தை அபேஷியாமல் ஸ்வயமாகவே
பிரமாணம்-பிரமாணம் ஆகின்றதே

ஸ்ம்ருதி –மந் வாதி ஸ்ம்ருதி யானது –
மனு அத்ரி விஷ்ணு ஹாரீதர் யாஜ்ஜ்வல்க்யர் போன்ற மஹரிஷிகளால் இயற்றப்பட்ட தர்ம சாஸ்திரங்கள் –
ச இதிஹாஸை புராணை-இதிஹாசங்களோடு புராணங்களோடும்
ந்யாயை சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்சைகளோடே

உப குருதேத்வத்-அந்த வேதங்களுக்கு அர்த்த விவரணம் பண்ணுகை யாகிற உபகாரத்தை
பண்ணுகை யாகிற உபகாரத்தை செய்கின்றன

அந்த வேதத்தில்
பூர்வ பாக-பூர்வ பாகமான கர்ம காண்டம்
அர்ச்சா விதம் உபரி -தேவரீருடைய திருவாராதனம் பண்ணும் முறையைச் சொல்லும் வகையாலே
வாயு இந்திரன் வருணன் அக்னி இவர்கள் யாவரும் ப்ரஹ்ம சரீர பூதர்களே
பரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது

ஊர்த்வ பாக –ப்ரஹ்ம காண்டம் ஆகிற உபநிஷத் பாகமோ என்னில்
த்வத் ஈஹா குண விபவ பரிஞாபநை–தேவரீருடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் ஆகியவற்றைத்
தெளிய விளங்க தெரிவிப்பதனால்

த்வத் பத ஆப்தவ்-தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில்
பரி ஷீயதே -தலைக் கட்டுகின்றது

வேதைஸ் ச சர்வை-கர்ம ப்ரஹ்ம காண்ட ரூபமான சகல வேதங்களும்
வேத்ய அஹம் இதி–நானே அறியக் கூடுவேன் என்று
ஸ்வேந ச வ்யாஸ கர்த்த–தேவரீர் தாமே சோதி வாய் திறந்து அருளிச் செய்ததும் உண்டுஜ் அன்றோ –

வேதங்கள் மூல பிரமாணம்–வேறு ஒன்றை அபேஷியாமல் ஸ்வத பிரமாணம் —
அதுகளுக்கு இதிஹாச புராண நியாய மீமாம்சைகளோடு கூடி ஸ்ம்ருதி உபகாரிகை ஆகிறது –

கர்ம ப்ரதிபாதிதமான பூர்வ பாகம்- ஸ்ம்ருதி விசேஷ பூர்வ மீமாம்சைகளோடே ஆராதன வீதியில் பர்யவசிக்கும்

உத்தர பாகமான உபநிஷத் இதிஹாச புராண ப்ரஹ்ம மீமாம்சைகளோடே கூடி ஸ்வரூப ரூப குண சேஷ்டிதைகளைத்
தெரியப்படுத்தி தேவரீர் திருவடிகளில் சேர்க்கையில் பக்தியில் பர்யவசிக்கிறது-

இவ்வர்த்தத்தை தேவரீரே ஸ்ரீ கீதையில் வெளியிட்டு அருளினீர்-

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ
மத்த: ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹநம் ச
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ
வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–15-15-

ஸர்வஸ்ய ஹ்ருதி அஹம் ஸந்நிவிஷ்ட:-எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்
ச மத்த:-மேலும் என்னிடம் இருந்து தான்,
ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச-நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன,
ஸர்வை: வேதை: ச வேத்ய: அஹம் ஏவ – எல்லா வேதங்களிலும் அறியப்படும் பொருள் நான்,
வேதாந்த க்ருத் வேத வித் ச அஹம் ஏவ-வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

————————————————————————————-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ  பராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .-ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கண்ணபுர நாயகி சமேத ஸ்ரீ சௌரி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ விஷ்ணு புராணம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது-பராசரம் முநிவரம்-1 அம்சம் -1அத்யாயம் -1 ஸ்லோகம் –

February 17, 2015

அவதாரிகை –
ஸ்ரோதாக்களுக்கு இப்பிரபந்தம் ஆப்த தமம் என்று
இதிலே புபுத்சை பிறக்கைக்காக
விலஷணனான ஆச்சார்யன் பக்கலிலே
புபுத்ஸூவாய்
அபி ஜாதனான சிஷ்யன் அவசரத்திலே பிரச்னம் பண்ணின படியைச் சொல்லுகிறது –

பராசரம் முநிவரம் க்ருத பௌர்வர்ண ஹிகக்ரியம்
மைத்ரேய பரிபப்ரச்ச ப்ரணி பத்யாபி வாத்ய ச –1 அம்சம் -1அத்யாயம் -1 ஸ்லோகம் –

பராசரம் முநிவரம் க்ருத பௌர்வர்ண ஹிகக்ரியம்   –
முனிவர் தலைவராய் -காலைக் கடன்களை முடித்தவராய் யுள்ள ஸ்ரீ பராசர மகரிஷியை

மைத்ரேய -ப்ரணிபத் யாபிவாத்ய ச –பரிபப்ரச்ச-
ஸ்ரீ மைத்திரேயர் என்னும்  ரிஷி வணங்கி -அபிவாதனம் செய்து -நன்றாகக் கேட்டார் –

1-பராசரம்-
சஹோவாச வியாச பாராசர்ய -தை ஆர -1-9-என்று
வேதாச்சார்யனான ஸ்ரீ வேத வியாச பகவானுக்கு இவனோட்டை சம்பந்தத்தாலே
ஆப்தி சொல்ல வேண்டும்படி ஸ்ருதியிலே ஆப்தனாக சித்தனானவனை
2- பராசரம் –
வைதிக பஷத்துக்கு சத்ருக்களான பாஹ்ய குத்ருஷ்டிகளை
பிரமாண தர்க்கங்கள் ஆகிற சரங்களாலே ஹிம்சியா நின்றான் என்றாகவுமாம் –
அதவா –
3- பராசரம் –
ஆந்தர சத்ருக்களான ராகத் வேஷாதிகளை சம தமாதிகளாலே ஹிம்சியா நின்றான் என்றாகவுமாம்-

முநிவரம் –
பரமாத்ம விஷயத்தில்  மனன சீலர் ஆனவர்களில் உத்க்ருஷ்டனானவனை
இத்தால் ஜ்ஞான சம்ருத்தி சொல்லுகிறது –

1-க்ருத பௌர்வர்ண ஹிகக்ரியம்   -என்று
இவ் உபாசனத்துக்கு அங்கமாக சாஸ்திர சோதிதமாய் ஜ்ஞான பூர்வகமான அனுஷ்டானமும் –
அனுஷ்டிதமான சமயத்திலே -2-1-க்ருத பௌர்வர்ண ஹிகக்ரியம்  -என்கையாலே
சத்வோத்தர காலத்திலே என்கை –

இத்தாலே
வசிஷ்டன் அந்ய பரனாய் இருக்க த்ரி சங்கு சென்று கேட்டால் போலே அன்றிக்கே
ஆச்சார்யன் அநந்ய பரனாய் இருக்கிற சமயத்திலே கேட்டான் -என்கை –

பரபஷ பிரதிஷேபம் பண்ணுகிற போது அவசரம் அன்று
உபாசன காலமும் அவசரம் அன்று
ததங்கமான அனுஷ்டான சமயமும் அவசரம் அன்று
ஆகையாலே க்ருத க்ருத்யனாய்த் தன்னுடைய ஜ்ஞானத்துக்கு வீடு தேட்டமான அவசரத்தே கேட்டான் என்கை –

3-மைத்ரேய –
யாஜ்ஞ வல்க்ய பகவானை  இடங்களிலே பிரச்னம் பண்ணிப் போரும் ப்ரஹ்ம விதுஷியான மைத்ரி ஸூதனாகையாலே –
அவசரத்திலே பிரச்னம் பண்ணுகை தன்னைத் தோன்றி வந்ததன்று –
தன்னுடைய பிறப்பால் வந்தது -என்கை –
அன்றியிலே
கேகய மித்ரயு பிரளய -பாணிநி ஸூத்ரம் -7-3-2- என்றபடி
இய என்னும் பதம் -நிஷ் பன்னமாகக் கிடக்கிறதாகவுமாம்   –
மித்ரயு -என்பவரின் பிள்ளை என்றும் கொள்ளலாம்-

1-பரிபப்ரச்ச-
ஒரு வார்த்தை சொல்லுகை அபேஷிதமான போது கண்ணுக்கு எட்டாதபடி பின்னே இருக்கவும் கடவது அன்று
கண் படும்படி பார்ச்வத்திலே இருக்கை சிஷ்யனுக்கு பிராப்தம்
அந்த ஸ்தானத்திலே நின்று கேட்டான் -என்கை –
2- பரிபப்ரச்ச –
நினைத்த அர்த்தத்திலே ஆச்சார்யன் உதாரனாம்படி பாடே அத்தைக் கேட்கை-
அதாகிறது
யன்மயம் ச ஜகத் ப்ரஹ்மன்-யதைஸ் சைதச்  சராசரம்
லீ ந மாஸீத் யதா யத்ர லயமேஷ்யதி யத்ர ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-1-5-என்று
சாமான்யத்தில் பிரச்னமாய்
விஷ்ணோ சகாஸாத் உத்பூதம் -ஜகத் தத்ரைவ ச ஸ்திதம்
ஸ்திதி சம்யம கர்த்தா அசௌ ஜகதோ அஸ்ய ஜகச்ச ஸ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-1-31-என்று
விசேஷத்திலே உத்தரமாம்படி கேட்டான் -என்கை –
பரிபப்ரச்ச –
அன்றியிலே பரி -என்கிறது சாகல்யா வசனமாய்
ஜ்ஞா தவ்யங்களை யடையக் கேட்டான் என்றாக வுமாம் –

ப்ரணிபத்ய-
பதனம் ஆகிறது -சர்வ அவயவங்களும் தரையிலே பொருந்த விழுகை –
நிபதநமாகிறது -ஆந்தரமான அபிமானமும் பக்னமாய் விழுகை
ப்ரணி பதநாமிகிறது -இது தானே விஹிதம் என்று இருக்கை அன்றிக்கே ப்ரீதி பூர்வகமாக இருக்கை –

அபிவாத்ய –
ஸ்வ நாமத்தை ஆவிஷ்கரித்துக் கொண்டு பாதோப சங்க்ரஹனம் பண்ணுகை –

ச —
ஆச்சார்யன் பக்கல் அனுஷ்டிக்கக் கடவ விநயங்களை சமுச்சயிக்கிறது –

———

பூர்வ அவஸ்தையில் இரங்கும்படி ப்ரணி பத்யாபி வாத்ய ஸ -ஸ்ரீ விஷ்ணு -1-1-1- என்று அநு வர்த்திக்க வேணும்
உத்தர அவஸ்தையில் க்ருதஜ்ஞனாகையாலே
த்வத்தோ ஹி வேதாத்யய நமதீ தமகிலம் – ஸ்ரீ விஷ்ணுபுராணம் -1-1-2-என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -திருவாய் -2-7-8-என்றும் அனுவர்த்திக்க பிராப்தம்

————–

ஏறிய பித்தினோடு* எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும்,*
நீறு செவ்வே இடக் காணில்* நெடுமால் அடியார்’ என்று ஓடும்,*
நாறு துழாய் மலர் காணில்* நாரணன் கண்ணி ஈது என்னும்,*
தேறியும் தேறாதும் மாயோன்* திறத்தனளே இத் திருவே.

ஏறிய பித்தினொடு – மிகுந்த மயக்கத்ததோடே கூடியிருக்கச்செய்தே (வேதாந்த வித்துக்கள் சொல்லுமாபோலே)
எல்லா உலகு – ஸகல லோகங்களும்
கண்ணன் படைப்பு என்னும் – க்ருஷ்ணனுடைய ஸ்ருஷ்டி என்று கூறுகிறாள்;
நீறு செவ்வே இட காணில் – பஸ்மத்தை மேல்நோக்கி இடக்கண்டாளாகில்
நெடுமால் அடியார் என்று ஓடும் – ஸர்வேச்வரனுடைய அடியார் என்று கொண்டு (அவர்களைத் தொடர்ந்து) ஓடுகிறாள்;

“என் பெண்கொடி யேறிய பித்தே” என்று கீழ்ப்பாட்டில் தலைக் கட்டிற்று.
உலகில் பித்துக் கொள்ளிகளாயிருக்கு மவர்கள் வாயில் வந்தபடி எதையேனும் தப்புந்தவறுமாய்ப் பேசுவதுண்டே;
அப்படி இவள் ஏதேனும் பேசுகின்றாளோ என்ன;

பித்து ஏறின நிலைமையிலும் பகவத் விஷயத்தில் தெளிவு சிறிதும் மாறிற்றில்லை யென்கிறாள்.
பராசர மஹர்ஷி முதலானார் தெளிந்திருந்து என்ன வார்த்தை சொல்லுவார்களோ
அந்தவார்த்தை இவள் சொல்லுகின்றாள் காண்மின்.

பராசரம் முநிவரம் க்ருதபெளர்வாஹ்நிகக்ரியம்இ மைததேய்: பரிபப்ரச்ச ப்ரணிபத்யாபிவாத்ய ச” என்கிறபடியே
வணங்கி வழிபட்டுக் கேள்விகேட்ட மைத்ரேய பகவானுக்கு, நற்றெளிவு கொண்டிருந்த பராசரபகவான்
விஷ்ணோஸ் ஸகாசாத் உத்பூதம் ஜகத் தத்ரைவ ச ஸ்திகம்.
ஸ்திதி ஸம்யமகர்த்தாஸென ஜகதோஸ்ய ஜகச்ச ஸ:.” என்று உபதேசித்த
அரும் பெரும் பொருளை இவள் பித்துக் கொண்டிருக்கிற நிலையிலே அவவீலையாக எடுத்துரைக்கின்றாளாயிற்று.

நன்குவேதமோதிய அந்தணன் பித்தேறினாலும் வேத வாக்கியங்களையே சொல்லித் திரியுமாபோலே
இவளும் வாஸநாபலத்தாலே பகவத் விஷயமல்லது பேசாளென்கை.

நீறு செவ்வேயிடக்காணில் நெடுமாலடியாரென்றோடும் = திருமாலடியார்களுக்கு பஸ்மதாரணம் சாஸ்த்ர நிஷித்தம்
என்னுமிடம் ஆழவாரறியாததன்று;
அப்படியிருக்க இங்கு அருளிச்செய்வதற்குக் கருத்தென்னென்னில்;
“தாவ்யம் ஏதேனுமாகிலும் ஊர்த்த்வமாக இடக் காணில் நெடுமாலடியாரென்றோடும்.” என்பது ஆறாயிரப்படி யருளிச்செயல்.
இதனை அடியொற்றியே மற்ற வியாக்கியானங்களு முள்ளன.
பஸ்மதாரணம் பண்ணினவர்களேயாயினும் அந்த பஸ்மத்தைக் குறுக்கே பூசாதே நெடுக இட்டால்
‘ஊர்த்த்வபுண்ட்ரதாரிகளிவர்கள்’ என்று அவ்வளவுக்காக ப்ரதிபத்தி பண்ணுமென்றபடி.

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கண்ணபுர நாயகி சமேத ஸ்ரீ சௌரி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ஹரி வம்சம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது-ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத ந -ஸ்ரீ ஹரி வம்சம் -113 அத்யாயம் -62 ஸ்லோகம் –

February 17, 2015

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத ந
நாக பர்யங்கமுத் ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –ஸ்ரீ ஹரி வம்சம் -113 அத்யாயம் -62 ஸ்லோகம் –

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத ந-ஸ்ரீ தேவியோடு பிரியாதவனாய் -திருப் பாற் கடலிலேபள்ளி கொள்பவனான -இந்த நாராயணன்
நாக பர்யங்கமுத் ஸ்ருஜ்ய -சேஷ சயனத்தை விட்டு
ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஸ்ரீ மதுரை நகரம் குறித்து எழுந்து அருளினான் —

அவதாரிகை –
போக்தா போக்கியம் ப்ரேரிதாரம்-ச்வே-1-12- என்கிறபடியே
சேதனனாய் இருப்பான் ஒருத்தனுக்குச் சித்  அசித் ஈஸ்வர தத்வ த்ரய ஜ்ஞானம் யுண்டாக வேணும் –
அதில் அசித்து -அஜாமேகாம் லோஹித ஸூ க்ல கிருஷ்ணாம் பஹ்வீம் பிரஜாம் ஜனயந்தீம் சரூபாம் -ச்வே -4-5- என்கிறபடியே
பகவத் ஸ்வரூபத்தை மறைக்கைக்கு பஹூ வித வர்ணையான திரச்கரிணி போலே இருக்கக் கடவதாய்-
விபரீத ஜ்ஞான ஜனகமாய் -ஷட் வித விகாராஸ் பதமாய் -சத்த பரிணாமியாய்-சத்த ஷணஷாண ஸ்வபாவமாய் -சர்வேஸ்வரனுக்கு லீலா உப கரணமாய்  இருக்கும் –
சித் வஸ்துவைப்   பார்த்தால் தேக இந்த்ரியாதி வி லஷணமாய்-ஜ்ஞா நானந்த ஸ்வரூபமாய் -ஜ்ஞான குணகமாய்-பகவத் சேஷ பூதமாய் -ஸ்ரீ கௌஸ்துபாதிகளோ பாதி சர்வேஸ்வரனுக்கு ஸ்ப்ருஹணீ யமாய் இருக்கும் –
ஈஸ்வரனைப் பார்த்தால் இவை இரண்டையும் வியாபித்து இருப்பவனாய்-இவற்றுக்கு ஆதார பூதனாய்-இவை இரண்டையும் சரீரவத் பரதந்த்ரமாக யுடையவனாய் இருக்கும் –
இப்படி த்யாஜ்யதையாலும் -உபாதேயதையாலும் -ஜ்ஞாதவ்யமான தத்வ த்ரயத்திலே அபியோகம் இன்றிக்கே
பகவத அபசார பாகவத அபசார அசஹ்ய அபசாரங்களிலே கை வளர்ந்து போருகிற சேதனரைப் பார்த்தால்
பார லௌகிக பல சித்தி ஹேதுவாக -பதிம் விச்வச்ய -என்கிற லோக உத்தீர்ணனை ஆஸ்ரயியாதே லோகாயத மத அநு சாரிகளையும்
ச்யாதிஸ்தி ச்யான் நாஸ்தி -இத்யாதிகளால் ச்யா ஸ்திதி -ச்யான் நாஸ்தி -ச்யா தஸ்தி ச நாஸ்தி ச –ச்யா தச்தீதி வக்தவ்யம்-ச்யா நாச்தீதி வக்தவ்யம் –
ச்யா தஸ்தி ச நாஸ்தி தி சேதி வக்தவ்யம் -சர்வதா வக்தவ்யம் -என்று சொல்லுகிறபடியே சப்த பங்க வாதிகளாய் -பகவத் ஆஸ்ரயணத்துக்கு அர்ஹராகாதே ஆர்ஹதராயும்  -கதிமிச்சே ஜ்ஜநார்த்தநாத் -ப்ரஹ்மாண்ட புராணம் -என்கிறபடியே சர்வேஸ்வர சமாஸ்ரயணத்தாலே ஸூ கதராக ப்ராப்தமாய் இருக்க
ஸூ கதமத -புத்த – மத அநு சாரிகளாயும்
பகவத் சமாஸ்ரயணத்தாலே சங்க்யா வான்களாக ப்ராப்தமாய் இருக்க – சாங்க்யா வஷ்டம்பம்  பண்ணி -எண்ணிக்கை அற்ற -ஜன்மத்திலே அசங்க்யாதராயும்
நாராயனபரா வயம் -என்கிறபடியே பகவத் யோகராக ப்ராப்தமாய் இருக்க சமயக் ஜ்ஞான வியுக்த யோக நிஷ்டராயும்
பகவத் ஜ்ஞான விசேஷதத் பரராக ப்ராப்தமாய் இருக்க வைசேஷிக மத அநு சாரிகளாயும்
புண்டரீகாஷா சமாஸ்ரயணத்தாலே மாயா நிஸ்தரணம் பண்ண ப்ராப்தமாய் இருக்க மாயாவாத நிரதராயும்
ஆக இப்படி இடுகுபடுகிற சேதனரைக் கண்டு ஈஸ்வரன் தயமாநம நாவாய்க் கொண்டு
மாநம் ப்ரதீபமிவ காருணிகோததாதி -என்று வேதார்த்தத்தை பிரகாசிப்பித்த அளவிலும் ஐஹிக புருஷார்த்தத்தைக் கோரி –
பத்ரம்  கர்ணேபி ச்ருணு யாம தேவா –தை ஆர -1- சாந்தி பாடம் -தேவர்களே பத்திரமான வற்றைக் கேட்க வேணும்
ஸ்ருணுயாம்-என்ற போதே சித்தம் அன்றோ -கர்ணேபி-என்ன வேணுமோ –
பத்ரச் ஸ்ரவணத்தோ பாதி -மங்கலமான வார்த்தைகளை -கரண பாடவமும் விதேயம் என்கைக்காக –கர்ணேபி-என்றது கர்ணை-என்றபடி
1-தேவா என்கிற தேவ சப்தம் க்ரீட அர்த்தத்திலே யாய் -உங்களுடைய பத்ர ரூபமான விநோதத்தைக் கேட்க வேணும் -2-தேவா பத்ரம் ஸ்ருணுயாம் -விஜிகீஷார்த்தத் திலேயே –
தேவர்களே விஜிகீஷா ரூபமான உங்களுடைய நன்மையைக் கேட்க வேணும்
3- தேவா பத்ரம் ஸ்ருணுயாம் -தீவு வ்யவஹார -வார்த்தை பொருளில் -உங்களுடைய இனியதான வார்த்தையைக் கேட்க வேணும் –
4-தேவா பத்ரம் ஸ்ருணுயாம்-தீவுத் யுதி ஒளி பொருளில் -உங்களுடைய இழி யுன்டாய்ப் போருகிற வார்த்தையைக் கேட்க வேணும்
5-தேவா பத்ரம் ஸ்ருணுயாம்-தீவு கதி -உங்களுடைய கதி யுண்டான வார்த்தையைக் கேட்க வேணும் பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம தேவா பத்ரம் பச்யேம -என்று பத்ரச் ஸ்ரவண மாத்ரமே போராது-பத்ர தர்சனமும் பண்ண வேணும்
பத்ரம் பச்யேமா ஷபிர்யா ஜத்ரா-ஆஷாபி பத்ரம் பச்யேம -இங்கே பச்யேம என்ற போதே சித்தம் அன்றோ
அஷபி-என்கைக்கு அடி என் என்னில்  -தர்சனத்தோ பாதி தர்சன கரண பாடவமும் வேணும் என்றபடி
அன்றிக்கே -கர்ணேபி -அஷேபி -என்று ஸ்வ பாவாக்யாந மாக வுமாம் –
அஷபி -பத்ரம் பச்யேம -ச்ரோத்ர இந்த்ரியத்துக்கு இறை இட்டவோபாதி சஷூர் இந்த்ரியத்துக்கும் ஆனந்தம் உண்டாம்படி வி லஷண வஸ்துவைத் தர்சிப்போமாக வேணும்
யஜத்ரா -யஜநாத் த்ராயந்த இதி யஜத்ரா -என்றாய் யஜன நிமித்தமாக ரஷிக்கிற வர்களே -என்றபடி -அதாவது
கால காலங்களிலே வர்ஷத்தை உண்டாக்கி அத்தாலே சஸ்ய வ்ருத்தியையும் யுண்டாக்கி
அதடியாக யஜ்ஞ பதார்த்த சாமக்ரியையும் உண்டாக்கிக் கொடுக்கையாலே யஜத்ரா -என்கிறது இதுவும் தேவ சப்தம் போலே சம்போதனமாய் இருக்கிறது –
ஸ்திரை  ரங்கைஸ் துஷ்டு வாம்ச-
பச்ர ஸ்ரவணத்துக்கும் பச்ர தர்சனத்துக்கும் அநு ரூபமாம்படியான ஸ்தோத்ரம் பண்ண வேணும்
ஸ்தோத்ரம் பண்ணும் பொது ஸ்திரமான அங்கங்களோடு கூட வேணும்
ஸ்திரை  ரங்கைஸ் துஷ்டு வாம்ச-
ஸ்திரமான அங்கங்களோடு உப லஷிதனாய்க் கொண்டு மேலே மேலே ஸ்தோத்ரம் பண்ண வேணும்
க்ரியாசமபிஹாரே யங்-ஆய்-யங்-லு  கந்தம் ஆகையாலே ச்தோத்ரத்தின் யுடைய மிகுதியைக் காட்டுகிறது –
தநூபிர் வ்யசேம தேவஹிதம் யதாயு -இப்படியே ஸ்தோத்ரம் பண்ணுகைக்குஈடாக தேவ ஹிதமான ஆயுஸ் ஸூ யாதொன்று அத்தை சரீரத்தோடு பிரவேசிப்போமாக வேணும்
தநூபிர் வ்யசேம தேவ ஹிதம் யதாயு -க்ரிமி கீடாதிகளுடைய ஆயுஸ் சாக ஒண்ணாது
திர்யக் யோநிகளுடைய ஆயுஸ் சாக ஒணாது
சதாயுர்வை புருஷ -என்கிற புருஷ ஆயுஸ் சாக ஒண்ணாது
ஒரு வத்சரம் தினமாகக் கொண்டு தேவர்களுடைய ஆயுஸ் ஸூ யாதொன்று உண்டு அத்தை சரீரத்தோடு பிரவேசிப்போமாக வேணும்
விசேம என்னாமல்  வ்ய சேம -என்று சாந்தசமாகையாலே அடாகமம் பண்ணிக் கிடக்கிறது –
ஆக -இத்தால் -பத்ரச் ஸ்ரவனமும் -பத்ர தர்சனமும் -தத் அநு ரூபமான ச்தோத்ரமும் -அதுக்கு ஈடான ஆயுர்தர்க்யமும்
பிரதிபாதித்தாயிற்று -அங்கன் அன்றியிலே -உதோ தவஸ்மை தன்வம் விசஸ்ரே -என்று கொண்டு ஸ்ருதியினுடைய தாத்பர்யம் அறிந்தவனுக்கு தினுடைய அர்த்த யோகமான சமயத்திலே பரம புருஷார்த்த அந்வயியாக வேணும் -எங்கனே என்னில் –
பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம் தேவா –
இங்கு தேவ சப்தம் -தேவமிவாசார்யம் உபாசீத -என்கிறபடியே ஆச்சார்யா சப்தத்துக்கு உப லஷணம்-
தேவா -என்கிற பாஹூள்யத்தாலே-குருஷூ பஹூ வசனம் -என்கிற ந்யாயம் தோற்றுகிறது-
ஸ்ரீ பராசர ப்ரஹ்ம ரிஷி பக்கலிலே ஸ்ரீ மைத்ரேய பகவான் கேட்குமா போலே ஆச்சார்யன் பக்கலிலே பரமார்த்தம் கேட்க வேணும் -என்கிறதுக்கும் உப லஷணம் –
பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம்-பத்ரம்  ஸ்ருணுயாம்-ச்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -என்றும்
கர்ணாப்யாம் பூரி விஸ்ருவம் -என்றும் -யத்கதா சரவணம் ஹரே -என்றும்
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றும் கேட்பாரோ -திருவாய் -7-5-3-என்று சொல்லுகிறபடியே
பகவத் விஷயத்தைக் கேட்கைக்கு உப லஷணமாய் இருக்கிறது பத்ர சப்தம்
ஸ்ருணுயாம் என்று பிரார்த்தனா ரூபம் ஆகையாலே அதிகாரியினுடைய பிரார்த்தனா விசிஷ்டத்வமும் உப லஷிதம் –
இப்படி ஆச்சார்யன் பக்கலிலே பரமார்த்த ஸ்ரவனமும் அநு பாவ்யமான பகவத் விக்ரஹ தர்சனமும் பண்ண வேணும் என்பதுக்கு உப லஷணம் -பத்ரம் பச்யேம் அஷபிர் யஜத்ரா -என்று –
இங்கு பத்ர சப்தத்தாலே -சதைக ரூப ரூபாய -என்றும் -ந பூத சங்க  சம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மன -என்றும்
ரூபௌதார்ய குனைபும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-என்றும்
தத்ரு ஸூர் விச்மிதாகாரா ராமஸ்ய வன வாசி ந -என்றும் சாஷான் மன்மத மன்மத -என்றும்
பகவத் அனுபவ ரூபம் இ றே கண்ணுக்கு இலக்காகுவது
யஜத்ரா -யஜன நிமித்தமாக ரஷணம் தோற்றுகிறது –
யோ அஹம் அஸ்மி ச சந்யஜே-என்றும் -ச ச்வத்வர உதீரித -என்றும் சொல்லுகிறபடியே
தாஸ்ய அநு சந்தான அநு ரூபமான ஹவி பிரதானமும் அத்தாலே வரக் கடவதான ந்யாசமும்
ஏவம் பூதமான நியாச வித்யா பிரதானத்தால் விபரீத ஜ்ஞானர்க்கும் பிரகடமாம்படி ரஷித்துப் போருகை தோற்றுகையாலே இதுவும் ஆச்சார்யா சப்தத்துக்கு உப லஷணமாய்ப் போருகிறது
ஸ்திரி ரங்கைஸ் துஷ்டுவாம்சாஸ் தநூபிர் வ்ய சேம தேவ ஹிதம் யுதாயு –
ச்ரத்தையா தேவோ தேவத்வம் அஸ்நுதே -என்ற ஸ்ரீ யபதிக்கு உள்ள அளவும் பிரதி ஷண வி நாசியான தேஹம் போல் அன்றியே
அப்ராக்ருத விக்ரஹமாய் தோற்றும்படி ஸ்திரமாய் இருக்கிற அங்கங்களோடு கூடி இருக்கிற சரீரத்தோடு
ஹா வுஹா வுஹா வு -ஏதத் சாம காயன் நாஸ்தே -என்று-

ஸ்ருதி தாத்பர்ய பர்யாலோசனம் பண்ண மாட்டாத சேதனரை உத்தீர்ணர் ஆக்குகைக்காக தான் அவதீர்ணனான அவ்வவ தாரங்களில்
மத்ஸ்ய அவதாரத்தைப் பார்த்தால் -பஹூ ஜீவனனாய் இருக்கச் செய்தேயும் -அதிக ஆயுஸ் -நீரில் வாழ்ந்து -கரையிலே ஷணம் நேரமும் வாழ முடியாத –
கூர்ம அவதாரத்தைப் பார்த்தால் -ஜகத்துக்கு ஆதார பூதனாய் இருக்கச் செய்தேயும் ஒருபுறம் சொல்லவே இருக்கும் –
ஸ்ரீ வராஹ அவதாரத்தைப் பார்த்தால் -ஆச்ரயண சௌகர்யம் தோற்றி இருக்கச் செய்தேயும் கோத்ரொத் பேகம் -கோத்திரக் கலப்பு -மலைகளை பிளத்தல் -பண்ணி இருக்கும்
ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தைப் பார்த்தால் இதிகாசம் அடியாகப் பற்றுவார்க்க்கு அநிர்ப்பரணம் -பொறுப்பு இல்லாமை -அகார வாச்யனான பகவானின் பொறுப்பு -தோன்றும் படி இருக்கும்
ஸ்ரீ வாமன அவதாரத்தைப் பார்த்தால் தான் சிறியனாய் இருக்கச் செய்தேயும் ஜகத்தை அடையத் தன அடிக்கீழ் ஆக்கா நிற்கும்
பரசுராம அவதாரத்தைப் பார்த்தால் ப்ராஹ்மன உத்தமனாய் இருக்கச் செய்தேயும் புண்ய ஜன ஹாநி பண்ணா நிற்கும்
ஸ்ரீ ராம அவதாரத்தைப் பார்த்தால் த்ருஷ்ட்வா வை தர்ம சாரிண மங்களாநி பிரயுஜ்ஞானா பிரத்யக்ருஹ்ணன் த்ருடவ்ரதா-ஆரண்ய -1-12- என்றபடி
புண்ய ஜன சேவை உண்டாய் இருக்கச் செய்தேயும் புண்ய ஜன ஹாநி -அரக்கர்கள் அழிவை -பண்ணா நிற்கும்
கிருஷ்ண அவதாரத்தைப் பார்த்தால் -ரூபமே தச்ச சதுர புஜம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-13-என்னும்படி
அவதார தசையிலும் ஆ ஸ்ரீ த சம்ரஷனத்தில் கை வாசி தோற்றி இருக்கும் –
நான்கு வித புருஷார்த்தங்களையும் அளிப்பவன் இ றே
அர்ஜுன ப்ரப்ருதிகளைக் கண்டால் தன் மேன்மை தோற்றாதபடி  தௌத்ய சாரத்யங்களைப் பண்ணா நிற்கும் –
ஆழ்வார்களும் ஈடுபடுவதும் இவ்வவதாரத்திலே இ றே
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் -திருவாய் -1-3-1- என்றும்
கோவலனாய் வென்னைய் யுண்ட வாயன் -அமலனாதி -10- என்றும்
திரு மதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே -திருப்பல்லாண்டு -10 என்றும்
கோவிந்தற்க்கோர் குற்றேவல்  இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய் செய்யும் தவம் தான் என்-நாச் -13-9- -என்றும்
துவராடை யுடுத்து ஒரு செண்டு சிலுப்பிக் கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டுச் சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர் -பெரிய திருமொழி -10-8-2- என்றும்
வார் மணல் குன்றில் புலர நின்ற வாசுதேவா உன் வரவு பார்த்தே -பெருமாள் திரு -6-1- என்றும்
இப்புடைகளிலே ஆழ்வார்களும் இவ்வதாரத்தையே ஆதரித்துக் கொண்டு போந்தார்கள்
ஏவம் பூதனான கிருஷ்ணனுடைய
சகல ஜகத் காரணத்வத்தையும்
சர்வாதிகத்வத்தையும்
சமுத்திர சாயித்வத்தையும்
சகல மநுஜ நயன சார்த்த ஜீவாதுவாம்படி  மதுரா புரீ சங்கதத்வத்தையும்
பிரதிபாதிக்கிறது -இஸ் ஸ்லோகத்தாலே-

ஆனால் ஜகத் காரணமுமாய் சர்வாதிகமுமானால் அதீந்த்ரியமாய் அன்றோ இருப்பது என்னில்
1- அவனுடைய சௌலப்யாதிசயம் தோற்றும்படி– ஏஷ -என்கிறார் –
2- ஏஷ -அனுமாநாக மார்த்தா பத்த்யாதிகளான பிரமாணம் வேண்டாதபடி ப்ரத்யஷ சித்தமாய் நிற்கிற ஆகாரம் தோற்றுகிறது –
3-ஏஷ-அங்கன் அன்றியே -ஆசன் நாவதாரதம் ஆகையாலே சொல்லும் எளிமையை காற்றிற்று ஆகவு மாம் –
4-ஏஷ -அங்கன் அன்றியே -உளன் சுடர் மிகு ஸ்ருதியுள் -திருவாய் -1-1-7- என்று ஸ்ருதி சித்தனாய் இருக்கச் செய்தேயும் மானச விஷயமாகையாலே சொல்லிற்று ஆகவு மாம் –

இப்படி  சங்குசித வ்ருத்தியாய்இருப்பான் ஒருவனோ என்னில்
1- நாராயண –
அந்தர் பஹிச்ச தத்சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித –என்று சர்வ வ்யாபகனாய் இருப்பான் ஒருவன் –
2- நாராயண –
ரூப குண விபூத்யாதிகள் அடைய ஏக தேசத்திலே ஒதுங்கும்படி ஸ்வரூப மஹத்தையை உடையனாய் இருப்பான் ஒருவன் –
3- நாராயண –
சகல ஜகத்தும் சம்ஹ்ருதமான சமயத்திலும் தம்முடைய சத்பாவம் தப்பாதபடி இருப்பான் ஒருவன் –
ஏகோ ஹவை நாராயண ஆசீந்த  ப்ரஹ்மா நேசாந நேமே த்யாப்ருதி வீ -மஹா உபநிஷத் -என்றும்
ஆபூத சம்ப்லவே    ப்ராப்தே நஷ்டே ஸ்தாவர ஜங்கமே-ஏகஸ் திஷ்டதி விசவாத்மா ஸ து நாராயண பிரபு -பாரதம் -சாந்தி -210-24- என்றும் சொல்லுகையாலே –
4- ஆனால் கார்யாம்சம் அடையக் குலைந்து காரணமான தான் ஒருத்தனும் நிற்கும் அத்தனையோ என்னில் -நாராயண – –
நராஜ்ஜாதா நி தத்த்வா நி -பார ஆநு-186-7-என்கிறபடியே தத் உத்பாதகனாய் இருப்பான் ஒருத்தன் –
5- நாராயண -அங்கன் அன்றியிலே -மேல் ஷீரார்ணவ நிகேத ந -என்று சொல்லுகையாலே அப்புக்களைத் தனக்கு இருப்பிடமாக உடையன் -என்றாக வுமாம் –
தா யதாஸ் யாய நம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத-மனு -1-10-என்கையாலே –
6- நாராயண -அங்கன் அன்றியே -சகலர்க்கும் அவர் ஜநீயமாம் படி உடலும் உயிரும் போலே அந்தர்பூதமான சம்பந்த விசேஷத்தை உடையனாய் இருப்பான் ஒருத்தன் என்றாக வுமாம் –
7- நாராயண -அங்கன் அன்றியே -அந்தர் வ்யாப்தி பஹிர் வ்யாப்தி பேதத்தாலே ஜகத்துக்கு ஆதார பூதனுமாய் நியந்தாவுமாய் இருப்பான் ஒருத்தன் –
8- நாராயண -மாதா பிதா ப்ராதா –ஸூபால -இத்யாதி பேதத்தாலே சர்வவித பந்துத்வமும்
ஆச்ரயண  உன்முகனான அதிகாரிக்கு அநுரூபமாம் படி வாத்சல்யமும் -ஸ்வாமித்வமும்-சௌசீல்யமும்-சௌலப்யமும்-ஜ்ஞான சக்த்யாதி யோகமும்
இக்குண விசேஷங்கள் அளவிலே விமுகரையும் ஆ பக்தராக்கும் என்னும் இடம் தோற்றுகிறது –

ஆனால் இதில் தோற்றுகிற காரணத்வம்-ந ஸன் ந சாச்ச்சிவ ஏவ கேவல -என்றும் பதிரேகா ஆ சீத்-என்றும் சொல்லுகிறபடியே
ஹிரன்ய கர்ப்ப சிவாதி சாதாரணம் அன்றோ என்னில்
1-ஸ்ரீ மான் -சர்வாதிகன் -என்கிறது -ஸ்ரீ மான் என்கிற இத்தாலே ஆஸ்ரய ணீ யதையும் போக்யதையும் தோற்றுகிறது-
2- ஸ்ரீ மான் -இதில் மதுப்பு நித்ய யோகார்த்தித்திலே யாய் -இத்தால் பூவும் மணமும் போலே அவி நா பாவம் தோற்றுகிறது –
ஸ்ரீ -எல்லாராலும் ஆஸ்ரயிக்க பட்டு இருப்பாள் ஒருத்தியாய் உத்தர உத்தர தரமான அதிசயங்கள் எல்லாம் தன்னுடைய கடாஷ அதீநமாம் படி இருப்பாள் ஒருத்தியுமாய்
யஸ்ய சா ஜனகாத்மஜா -ஆரண்ய -37-18-என்கிறபடியே ஈச்வரனிலும் கால் வாசி ஏற்றம் உடையவளாய் இருப்பாள் ஒருத்தி
3- ஆனால் இப்படிக்கொத்த இவளால் வந்த அதிசயமோ அத்தலைக்கு என்றால் -ஸ்ரீ மான் -இவளும்
இறையும் அகலகில்லேன் -என்று அலர்மேல் மங்கை திரு மார்பில் சுவடு அறிந்த பின்பு பிறந்தகமான தாமரையும் நெருஞ்சி முள் என்னும்படி ஸ்ப்ருஹாஸ் பதனாய்
திருவுக்குத் திருவாகிய செல்வா -என்றும்
ஸ்ரீய ஸ்ரீ யம்என்றும் சொல்லுகிறபடியே இவள் தானும் மேல் விழும்படி ச்வதஸ் சித்த போக்யதையை உடையவனாய் –
இவள் தர்மமாய் தான் தர்மியாய் இருப்பான் ஒருத்தன் –
4- ஸ்ரீ மான் -இச் சேர்த்தியைப் பிரியக் கண்டார் யுண்டாகில் ராவணனும் சூர்பணகையும் பட்டதுபடுவார்கள்
ஆக இந்த இரண்டு பதத்தாலும் ஆச்ரயண அதிகாரிக்கு அநு சந்தேயமான –சரணத்வமும் -ஸ்ரீ யபதித்வமும் -பிரதிபாதித்தா யிற்று
இத்தைப் பற்ற இ றே ஆழ்வார்களும் -திருவில்லாத தேவரைத் தேறேல்மின்-நான்முகன் -53-என்றும் திரு நின்ற பக்கம் -நான்முகன் -62-என்றும் பிரதிபாதித்தது -மகிஷ்யந்தரங்கள் உண்டாய் இருக்கச் செய்தேயும் தஸ்ய சாஸ்யாம் ப்ரதிஷ்டிதம் -என்று இவள்-அளவிலே நெஞ்சுண்டாய்ப் போருவான் ஒருத்தன் –

அது எங்கே கண்டோம் என்றால் –
1- ஷீரார்ணவ நிகேதந -இவள் பிறந்தகத்தை விடாதே போதே கண்டது இ றே
2- ஷீரார்ணவ நிகேதந -பாற் கடலில் சாய்ந்த பயோதரம் -நீருண்ட மேகம் -போலே இருப்பான் ஒருத்தன் –
3- ஷீரார்ணவ நிகேத ந -அங்கன் அன்றியே -பெரும் புறக்கடல் -பெரிய திருமொழி -7-10-1-என்றும்
சமஸ்த கல்யாண குணாம் ருதோதி-ஸ்தோத்ர ரத்னம்  -18- என்றும் சொல்லுகிறபடியே
கடலிலே கடல் சாய்ந்தால் போலே இருக்கிறவர் என்னவுமாம் –
4- ஷீரார்ணவ நிகேதந -கீழ்ச் சொன்ன நாராயண த்வம் இங்கே புற வெள்ளம் இட்டுக் கிடக்கிறது-

ஆனால் வ்யூஹ விசேஷமானால் சனகாதிகளுக்கு ஊக விஷயமாய் -சர்வ ஜன சமாஸ்ரயத்வம் இல்லையோ -என்னில் –
1-நாக பர்யங்கமுத்ஸ் ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
அநேக சிரஸ் கமான இடத்தை விட்டு -பலர் ஆட்சி செய்யும் இடம் விட்டு -திருவனந்த ஆழ்வான் உடைய பல தலைகளை விட்டு –
திகழும் மதுரைப் பதிக் கொற்றவன் -நாச் -4-6-என்று ஏகாதபத்ரம் நடத்துகிற இடத்தேற வந்தான் –
2- நாக பர்யங்கமுத்ஸ் ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
ஆசி விஷம் உள்ள இடத்தை விட்டு மதுரோத்தரமான இடத்தேறப் போந்தான் –
3- நாக பர்யங்கமுத்ஸ் ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
சாகரத்தை விட்டு நாகரனாம்படி வந்து புகுந்தான் –

கிடை அழகு ஒழிய அநு பாவ்யமான நடை அழகு இல்லையோ என்னில்
1-ஆகத-கனத்து இருந்த களிறு -என்றும் -தறி யாரந்த களிறு -பெரிய திரு -2-10-6- என்றும் சொல்லுகிறபடியே
கண்டவர்களுடைய நயன சாபல்யம் பசேளிமாமாம் படி
-மத்த மாதங்க கல்பனாம்படி பிசகி நடந்தான் –
2- ஆகத -வருகிற போதே மதுரா விலாஸி நீ சார்த்தத்துக்குத் தன வடிவழகை தூளிதாநம் பண்ணிக் கொண்டு வந்தான்
3- ஆகத -தன் நடை அழகாலே சம்சார பதவீம் வ்ரஜன்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-19- என்கிற ஜங்கா லதையைக் குலைத்துக் கொண்டு வந்தான்-

இப்படி வருகிறது தான் பரமபதத்திலேயோ திருப் பாற் கடலிலேயோ என்னில்
1- மதுராம் புரீம் -மதுரா நாம நகரீ புண்யாபாப ஹரி ஸூபா -என்கிறபடியே அவன் தன்னைப் போலே தேசமும் அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் பண்ணிக் கொடுக்கிறது மண் வாசியிலே தோற்றும் இ றே-
2- மதுரா புரீம் -தேவா நாம் பூரயோத்யா என்கிற தேசம் போலே துஷ்ப்ராயையாய் இருக்கை அன்றிக்கே
சத்ரு மித்ர உதாசீனரான  கோடித்ரயத்துக்கும் ஆச்ரயமான தேசம் இ றே
3- மதுராம் புரீம் ஆகாதோ ஹி- ஹி சப்தம் பிரசித்தியிலேயாய்-மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் -திருவாய் -9-1-10-என்கிற பிரசித்தியைக் காட்டுகிறது –
4-ஷீரார்ணவ நிகேதந நாக பர்யங்கமுத்ஸ் ருஜ்ய  மதுராம் புரீம் -ஆகாதோ ஹி –
ஜடா பிரகிருதி சம்சர்க்கத்தை விட்ட பின்பு நாகரிகமான ஆகாரம் நடையிலே தோற்றுகிறது இ றே
5-நாராயண மதுராம் புரீம் -ஆகாதோ ஹி -சர்வ காரண பூதனாய்  தான் கார்யைகதேசத்திலே ஒதுங்கி வந்தான் –
6- ஸ்ரீ மான் மதுராம் புரீம் -ஆகாதோ ஹி -ஏக தார வ்ரதனானவன் -ஸூ ப்ரபாதா ச ரஜ நீ மதுரா வாச யோஷிதாம் பச்யந்த யச்யுத வக்த்ராப்சம் யாஸாம் நேத்ராளி பங்க்த்ய-ஸ்ரீ விஷ்ணு புராணாம் 5-18-24-என்கிறபடியே
படை வீடேறிப் பத்ன்யந்தர பரிக்ரஹம் பன்னுவாரைப் போலே வந்தான் –
7-அங்கன் அன்றியே -அதிசயித லஷ்மி யுடையவன் ஒரு படை வீடு சாபேஷனாய் வந்தான் –

8-நாக பர்யங்கமுத்ஸ் ருஜ்ய  மதுராம் புரீம் -ஆகாதோ ஹி –
புஜங்க சய்யையை விட்டவன் புஜங்க சமர்த்தம் உள்ள -காமினிகள் நெருக்கம் -உள்ள இடத்திலே வந்தான் –

ஆக இந்த ஸ்லோகத்தாலே-
வாக்ய த்வயம் போலே உபாயத்வேநவும் உபேயத்வநவும் ஆஸ்ரய ணீ யனாய்
ஒரு தேச விசேஷத்திலே செல்ல வேண்டாத படி தங்கு பயணமாக வந்து
அங்கு செல்ல மாட்டாத பங்குகளுக்கு -நொண்டிகளுக்கு
கங்கா பதநம் போலே ஆ ஸ்ரீ தர் இருந்த தேசத்திலே தான் வந்து
தன வடிவு அழகாலும்
நடை அழகாலும்
அஜ்ஞரானவர்களையும் வசீகரித்துச் சரிதார்த்தராம்படி பண்ணிற்று ஆயிற்று –
அங்கன் அன்றியே
பண்டு இவரைக் கண்டு அறிவது யெவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால் -பெரிய திரு -8-1-9 என்று ஏதச் சப்தார்த்தையும்
புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே -பெருமாள் திருமொழி -8-2-என்றும்
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே -பெருமாள் திரு -8-10- என்றும் உத்பாதகத்வத்தாலே நாராயண சப்தார்த்தையும் –
அணி யுருவில் திருமாலை -பெரிய திருமொழி -8-9-2- என்று ஸ்ரீ மச் சப்தார்த்தையும்
கடல் கிடந்த பெருமானை -பெரிய திரு மொழி-8-9-2- என்று ஷீரார்ணவ நிகேதந சப்தார்த்தையும்
வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம்இடவகை கொள்வது -பெரிய திருமொழி -8-2-6- என்று ஆகத சப்தார்த்தையும்
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரம் -பெரிய திருமொழி -8-10-5- என்றும்
கற்றார் சேர் கண்ணபுரம் -பெரிய திருமொழி -8-10-5- என்றும் மதுரா புரீ சப்தார்த்தையும்
பிரதிபாதிக்கையாலே ஆபாத சூடம் கிருஷ்ண புரீ நாயகனான சௌரி ராஜ வைபாவத்தையே பிரதிபாதித்த தாயிற்று –

————————————————————————————————————————————————————————————-

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .-ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கண்ணபுர நாயகி சமேத ஸ்ரீ சௌரி ராஜ பெருமாள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ விஷ்ணு புராணம் – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்தது-ததோ தத்ருஸூ ராயாந்தம் விகாஸி முகபங்கஜம்-5-அம்சம் -13 அத்யாயம் -43- ஸ்லோகம்-

February 16, 2015

ததோ தத்ருஸூ  ராயாந்தம் விகாஸி முக பங்கஜம்
கோப்யஸ் த்ரை லோக்ய கோப்தாரம்  க்ருஷ்ண மக்லிஷ்ட சேஷ்டிதம்–5-அம்சம் -13 அத்யாயம் -43- ஸ்லோகம் –

ததோ -கண்ணனைத் தேடிக் காணாமல் திரும்பின பிறகு
தத்ருஸூ -கண்டனர்
ஆயாந்தம் -வருகின்றவனாய்
விகாஸி முக பங்கஜம் -மலர்ந்த முகத் தாமரையை யுடையவனாய்
கோப்யஸ்-கோபிகள்
த்ரைலோக்ய கோப்தாரம் -மூன்று உலகங்களுக்கும் ரஷகனாய்
க்ருஷ்ணம் -கண்ணனை
அக்லிஷ்ட சேஷ்டிதம்– குற்றம் அற்ற செயலை யுடையவனான –

ததோ –
இவ்விடத்தில் கிருஷ்ணன் போனான் என்று நெடும் தூரம் எல்லாம் சென்று

ப்ரவிஷ்ட காநநம் க்ருஷ்ண பதமத்ர ந லஷ்யதே நிவர்தத்வம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-11- என்றும்

நிவ்ருத்தாஸ் தாஸ்ததோ கோப்யோ நிராச க்ருஷ்ண தர்சனே- ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-42- என்றும்

நிராசைகளான கோபி ஜனங்கள் மீண்ட அநந்தரம்-
இப்படி முடிய நிராசைகளாய் காணப் பெறாதே விட்டார்களோ -என்னில்-

தத்ருஸூ –
நெடும் போது காணப் பெறாத உறாவுதல் தீரக் கண்டு கொண்டார்கள் –

இவர்கள் கண்டு கொண்டது அவர் இருந்த இடத்திலே சென்றோ -என்னில்

ஆயாந்தம் –
பெண்களை நெடும் போது யுண்டு நாம் அலைச்சல் படுத்துகிறது –
அவர்கள் இத்தனை போது என் படுகிறார்களோ என்னும் த்வரை தோற்ற

சக்ய பசித்த க்ருஷ்ணச்ய முக மத்யருணே   ஷணம்
கஜ யுத்த க்ருதாயாச  ஸ்வேதாம்பு கணி காஞ்சிதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -4-5-20-என்னும்படியே

குரு வேர் பரம்பித்த முகமும்
குலைந்த பரியட்டமுமாய்க் கொண்டு வாரா நின்றான் –

வருகிற இடம் தன்னில் முகத்திலே ஒரு விஷாதம் தோற்ற வந்தானோ என்னில் –

விகாஸி முக பங்கஜம் –
இவர்களைக் கண்ட அநந்தரம்-இத்தனை போது உங்களை அம்பலமாக பண்ணினோம் இறே-
நம்மைத் தேடிக் காண மாட்டிற்று இலைகோள்-
இத்தனையே உங்கள் சக்தி –
என்று தன் வெற்றியும் அவர்களுடைய தோல்வியும் தோற்றும்படி
முறுவல் செய்து கொண்டு வந்தான் ஆயிற்று –

இப்படி அவன் வந்த இடத்தில் அவர்கள் செய்தது என் –
தங்களை அவன் பண்ணின தீயறத்திலே முகத்தை மாற வைத்து
ப்ரணய கலஹம் பண்ணி இருந்தார்களோ என்னில் –

கோப்யஸ் –
பிரகல்பவ நிதைகள் அன்றிக்கே எட்டும் இரண்டும் அறியாத இடைப் பெண்கள் ஆகையாலே

காசிதா லோக்ய கோவிந்த மாயாந்த மதிஹர்ஷிதா -க்ருஷ்ண க்ருஷ்ணேதி பஹூ ஸ
ப்ராஹ நான்யது தீறையத் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-44-என்றும்

தச்யைவ ரூபம் த்யா யந்தீ-ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-13-46- என்றும் –

நேத்ர ப்ருங்காப்யாம் பௌ தன்முக பங்கஜம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-45- என்றும்

அவன் தூரத்திலே தோற்றும் காட்டில் அறிந்து கொண்டு மேல் விழுந்தார்கள் –

அதுக்கடி என் என்னில் –
த்ரைலோக்யகோப்தாரம்-
ரஷ்ய வர்க்கம் கூடு பூரித்துக் கிடக்கிற இத் த்ரை லோக்யத்திலே இந்த நாலிரண்டு பேரை ரஷித்தால் என் –
தவறில் -தவிரில் -என் -அவனுடைய ரஷகத்வத்துக்கு பங்கம் வரப் புகுர நின்றதோ –
இனி -ஸ்வ தந்த்ரநோடே ப்ரணய ரோஷம் கொண்டாடில் மூட்டவிழ்ந்து விடுமத்தனை
என்று மேல் விழுந்தார்கள் –

ஸ்வ தந்த்ரனாகில்-தான் இருந்த இடத்தே உவர்கள் அடைய வந்து விழும்படி இருக்க –
இருந்த இடத்தில் இராதே வருவது என் என்னில்

க்ருஷ்ணம் –
அவர்களுடைய ஸ்பர்சத்தையும்-
அவர்களுடைய தாழ்ந்த உக்திகளையும் ஒழியச் செல்லாமை யுடையவனாகையாலே –
இப்படி தங்களை ஒழியச் செல்லாமை யுடையனான பின்பு –
அவன் தானே வந்து கால் காட்டும் படி இராது ஒழிவான் என் என்னில்

அக்லிஷ்ட சேஷ்டிதம்–
உபகார ஸ்ம்ருதியாலே-அதாகிறது –
இனிச் சிறிது போது தாழ்க்குமாகில் அடியே தொடங்கி-
பஹூஸ்யாம் -சாந்தோக்யம் -6-2-3-என்று சங்கல்ப்பித்து
ஸ்திரீ சிருஷ்டி பண்ண வேண்டும்படியாய் விடும் இறே
அப்படிச் செய்யாதே ஓர் அளவில் மறைந்தானாய் பிசகாதபடி ரஷித்த உபகாரத்துக்காக –

————————————————————————————-

இரண்டாவது வியாக்யானம் –

ததோ –
பகவத் விஷயத்தை விஸ்லேஷித்தால்
அரை ஷணமும் செல்லாத படியான விடாய் பிறந்த அநந்தரம் –

ததோ –
ஸ்வ யத்னத்தாலே அவனைத் தேடிக் காண மாட்டாதே இயங்கி
அவன் தலையிலே சுமையைத் தள்ளின அநந்தரம்
இப்படிச் செய்த பின்பு
தேஹாந்தரே
தேசாந்தரே
காலாந்தரே காணப் பெற்றதி  என்றால்

ததோ தத்ருஸ-
சுமை தள்ளின அனந்தரமே பேற்றிலே தோள் மாறினார்கள்  –
கண் படைத்த பிரயோஜனம் பெற்றார்கள்

யஸ்ஸ ராமம் ந பஸயேத் –ஸ நிந்தித-அயோத்ய -17-11-என்று இறே
காணப் பெறாத போது இருப்பது –

ந சந்த்ருசே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பஸ்யதி கஸ்ஸ நை நம் -தை நா -1-10- என்றும்

ந சஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா  நான்யைர் தேவை -முண்ட -3-1-8- என்றும்

யத்ததத்ரேஸ் யமக்ராஹ்யம் -முண்ட -1-1-6- என்றும்

அ நிர்தேச்ய மரூபஞ்ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-66-என்றும்

கட்கிலி -திருவாய் -7-2-3- என்றும்-
நிஷேதிக்கிறது ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு இறே

தஸ்யைஷ ஆத்மா  விவ்ருணுதே தா நூம் ஸ்வாம்-கட -1-2-23- என்றும் –

மநஸா து வி ஸூத்தேந -ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தரம் -275-2- என்றும் –

யத் பூதயோ நிம் பரிபச்யந்தி தீரா -முண்ட -1-1-6- என்றும்

தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய -ருக் அஷ்டகம் -1-2-7/சாம -3-18-2-4–என்றும்

காண்பன் அவன் கண்களாலே -திருவாய் -1-9-9- என்றும்

அவனாலே அவனைக் காணும் போது காணலாம் இறே –

இப்படி காண்கிற இடத்திலே
தேஹா வஸாநத்திலே அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேஷத்திலே போயோ என்னில்

ஆயாந்தம் –
எதிர் சூழல் புக்கு -திருவாய் -2-7-6-
கிருஷி பண்ணித் திரிகிறவனை

இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் -திருவாய் -8-5-11-என்கிறபடியே
அவ்விடத்திலே காணப் பெற்றார்கள் –

ஆயாந்தம் -என்கிற வர்த்தமான நிர்த்தேசம் என் என்னில் –
வருகின்றவனைக் கண்டார்கள் -என்று
யுகபன் மோஷம் உண்டாகில் இறே எதிர் சூழல் மாறுவது
இஸ் சம்சாரமாக அவன் கிருபையாக எதிர் சூழல் மாறாது இறே –

நம்மைக் கொடு வந்து ஸூ லபனாக்கிக் காட்சி கொடுத்தோம் ஆகில்
இத்தால் வரும் ப்ரீத் அப்ரீதிகள் தங்களுக்கு அன்றோ என்று 
நிர்விகாரனாய் இருந்தானோ என்னில்

விகாஸி முக பங்கஜம் –
விஜ்வர-என்றும் –
ப்ரமுமோத ஹ -பால -1-85- என்றும் –
ஆஸ்ரீத கார்யம் தலைக் கட்டினது தன் பேறாக உகந்து 
அவ்வுகப்பு தன் முகத்திலே நிழல் எழும்பும்படி இருந்தான் காண் –

நின்றவர்கள் தான் –
திவ்யஜ்ஞா நோபபன் நாஸ்தே -ஆரன் -1-10/ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-37-9-என்றும்

அஹம் வேத்மி மஹாத்மா நம்  ராமம் சத்யபராக்ரமம் வசிஷ்டோ அபி
மகா தேஜா யே சேமே தபஸி ஸ்திதா -பால -19-14- என்றும்

வேதாஹா மேதம் புருஷம் மஹாந்தம் -புருஷ ஸூக்தம் -என்றும்
பேசப்படுகிற வேதங்கள் ஆதல் –
வைதிக புருஷர்கள் ஆதலோ என்னில்

கோப்யஸ் –
கோக்களையும் கவ்யங்களையும் பரதேவதையாக நினைத்து இருக்குமவர்கள் ஆயிற்று
இவர்கள் அதிகாரிகளாக இப்படி ஸூலபனாகைக்கு அடி என் என்னில்

கோப்ய-
தங்கள் வருத்தத்தாலே முயற்சியாலே -அவனைக் காண இருந்து –
அவனாலே அவனைக் காணப் பெறுவது என்று அறுதி இட்டு
பின்னையும் ப்ராப்ய ருசி இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமையாலே

க்ருஷ்ணோ அஹமேஷ லலிதம் வ்ரஜாமி -ஸ்ரீ விஷ்ணு புரா -5-13-26- என்றும் –

துஷ்ட காளிய திஷ்டாத்ர-ஸ்ரீ விஷ்ணு புரா -5-13-27- என்றும்

அவனுடைய கதி பாஷித சேஷ்டிதங்களைக் கொண்டு காலயாபநம் பண்ணின இது பற்றாசாக –

கோப்ய தத்ருச-
சதா பச்யந்தி ஸூரா -ருக் அஷ்டகம் -1-2-7/சாம -3-18-2-4- என்று
இமை கொட்டி விழிப்பதும் கூட
பகவத் அனுபவ விரோதி என்று நிமேஷோன் மேஷங்களைத் தவிர்ந்து
நித்ய ஸூரிகள் பெரும் பேற்றை இறே-

ஆ மருவின நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -திருவாய் -10-3-1- என்று
இவன் பசு மேக்கப் போனான் –
ஒரு பகலாகிலும் பிழைக்கும் என்று இருக்கும் இவர்கள் பெறுகிறது –

ப்ராப்ய வஸ்துவைப் பேசும் இடமடைய –
காரணம் து த்யேய-அதர்வசிகை -என்றும்

சர்வஸ்ய வசீ சர்வஸ்யேசான-ப்ருஹ -6-4-22- என்றும்

ஷயந்த மஸ்ய ரஜச பராகே -ருக் அஷ்ட -5-1-25/சாம -உத்தர -17-2-7-2- என்றும்

வைகுண்டே து பரே லோகே -சைவ புராணம் -என்றும்

திவி திஷ்ட த்யேக-முண்டக 1-1-7- என்றும்

திவ்யோ தேவ ஏகோ நாராயண -ஸூ பால -என்றும்

பேசப்படுகிறவன் கிடீர்
இடையர்க்கும் இடைச்சிக்கும் இலக்கானவன் –

இங்கே சந்நிஹிதன் என்றால்
இது வஸ்த்வந்தர ஸூசகமாய்த் தோற்றாதோ-என்னில்

த்ரை லோக்ய கோப்தாரம் –
இப்படி பரத்வத்தில் எல்லையிலே நிற்கிறவன் கிடீர்
இவனுடைய பரத்வத்தைப் பார்க்கக் கீழே சொன்ன சௌலப்யம் கூடாத படி யாய் இருந்ததீ-என்ன

க்ருஷ்ணம் –
பாரே புராதன கிராம் பார்ச்வே சாகோஷ யோஷிதாம் -என்று வேதங்களுக்கு
நேதி நேதி -ப்ருஹ -4-3-6–என்றும்
யதோ வாசோ நிவர்த்தந்தே -தை ஆ -9-1-என்றும்
அவிஜ்ஞாதம் விஜா நதாம்- கேந -2-3- என்றும் -எட்டாத படியாய் இருக்கும் –

இடையருக்கும் இடைச்சிகளுக்கும் கால் மேல் கால் ஏறிடலாம் படி இருக்கும்
ப்ராப்ய வஸ்துவுக்கு லஷணம் பரத்வ  சௌலப்யங்கள் இரண்டும் இறே –

அத்யந்த துர்லபமான வஸ்து இப்படி ஸூலபமாகக் கூடுமோ என்னில்
அக்லிஷ்ட சேஷ்டிதம்-
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே -சவே -6-8- என்றும்

சர்வ சக்திஸ்து பகவான் –ஸ்ரீ விஷ்வக்சேந சம்ஹிதை -என்றும்

ஏவம்விதமான அகடிதகடநா சாமர்த்தியத்தை உடையவன் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .-
ஸ்ரீ ருக்மிணி சத்யபாமா சமேத கிருஷ்ணன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ இராமாயண – -தனி ஸ்லோக- வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது-சர்வ லோகேஸ்வர-யுத்த -114-17 /பாபாநாம் வா ஸூபாநாம் வா -116-44 /ஸ்நேஹோ மே பரமோ ராஜன் -உத்தர -40-16–

February 16, 2015

வ்யக்தமேஷ மஹோ யோகீ பரமாத்மா ஸநாதந
அநாதி மத்யநித நோ மஹத பரமோ மஹான்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர
ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ ரஜய்ய சாஸ்வதோ த்ருவ
மா நுஷம் வபுராஸ்தாய விஷ்ணு சத்யபராக்கிரம
சர்வை பரிவ்ருதோ தேவைர் வா நரத்வமுபாகதை
சர்வ லோகேஸ்வர சாஷால் லோகாநாம் ஹிதகாம்யயா
சராஷஸ பரீவாரம் ஹதவரம் ஸ்த்வாம் மஹாத்யுதி–யுத்த -114-14/15/16/17–

—————————————————————————————————————————————————————-

அவதாரிகை –
இப்படி பரிவார மனிதரும் தாமும் பிறந்தது ஏதுக்காக-என்னில் –
மனிசர்க்கா நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச் செய்து இருக்கைக்காக -திருவாய் -7-5-2-என்கிறது –

1-சர்வ லோகேஸ்வர சாஷால் லோகா நாம் ஹிதகாம்யயா-
இத்தை உடையராகையாலும் -உடைமையை இவன் நலிந்த படியாலும் -லோக ஹிதமாக கொன்றார் –
2- சர்வ லோகேஸ்வர –
பதிம் விச்வச்ய -என்றும் -சர்வச்ய வசீ சர்வஸ்யேசாந-ப்ருஹ -6-4-22-என்றும்
பொழில் ஏழும்காவல் பூண்ட புகழ் ஆனாய் -திரு நெடு -10-என்றும் சொல்லுகிறபடியே
ஒரு ஊருக்கு அன்று -ஒரு நாட்டுக்கு அன்று -ஒரு மண்டலத்துக்கு அன்று -ப்ரஹ்மாண்ட பரிந்த ஜகஜ் ஜென்மாதி காரணம் ஆனவன் –
3- சர்வ லோகேஸ்வர –
சதுஸ் சமுத்திர முத்ரிதமான பூ மண்டலத்துக்கு மாத்ரம் அன்றியிலே
பூர்ப் புவஸ் ஸூவர் மஹர் ஜனஸ் தப சத்யம் -நாராயண வல்லி -என்கிற லோகங்களோடு
ஹிரண்மயே பரே லோகே -முண்டக -2-2-10- என்கிற லோகத்தோடு வாசியற எல்லா வுலகுமுடைய எம்பெருமான் -என்கிறது –
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாத்யாபத் விமோசன மஹிஷ்ட பல ப்ரதாநை -ஸ்தோத்ர ரத்னம் -13- என்று
ப்ரஹ்மாதிகளைப் போலே ஒருவன் காலிலே குனிந்து அவன் ஆபத்துக்களைப் போக்கி அவன் அபீஷ்டங்களைக் கொடுக்க  வந்த பதமோ -என்னில்
4-சாஷாத் சர்வ லோகேஸ்வர –
ய ஈசே அஸ்யஜகதோ நித்யமேவ நான்யோ  ஹேதுர் வித்யத ஈசநாய-ஸ்வே -6-17- என்றும் –
ஸ்வா பாவி காநவதிகாதி சயே சித்ருத்வம் -ஸ்தோத்ர ரத்னம் -10- என்றும்
ஒரு காரண ஜன்யம் அன்றிக்கே அவ்யவ ஹிதமாக ச்வதஸ் சித்தமான  சர்வாதிபத்யம் உடையவன் –
5- சாஷாத் சர்வ லோகேஸ்வர –
ஒருவன் காணிப் பற்றிலே பலர் குடியேறி அகம் எடுத்திருந்து இன்னாரகம் -என்று ஆண்டு  போந்தார்களே யாகிலும்
ஸ்வா ம்யம் காணிக்காரனதாய் இருக்குமா போலே அவ்வவ  லோகங்களை இந்த்ராதிகள்
ஆண்டு போந்தார்களே யாகிலும் அவ்யவஹிதமான ச்வத ஸ்வா ம்யம் எம்பெருமானுக்காய் இருக்கை-
6- சர்வ லோகேஸ்வர சாஷாத் –
தம்முடைய ஈஸ்வர பாவத்திலே நின்று
ந சந்த்ருசே திஷ்டதி ரூபம் அஸ்ய ந சஷூஷா பஸ்யதி கஸ்ஸ நை நம் -என்றும்
கட்கிலீ -திருவாய் -7-2-3- என்றும்-
ஒருவருக்கும் தோற்றாதபடி நிற்கை அன்றிக்கே
நந்தாமி பஸ்ய ந்நபி தர்சநே பவாமி த்ருஷ்ட்வா ச புநர் யுவேவ -அயோத்ய -12-104- என்றும்
ஸோ மமிவோத் யந்தம் த்ருஷ்ட்வா வை தர்ம சாரிண-ஆரண்ய -1-11-என்றும்
ராகவஸ்ஸ மயா த்ருஷ்ட -சுந்தர -27-12-என்றும்
ராஜாக்களோடு -ருஷிகளோடு -ராஷசிகளோடு -வாசி அறக் கண்ணிட்டுக் காணலாம் படி நின்று -என்றுமாம் –
-அன்றியிலே -7- சாஷாத் -என்று -சாஷாத் பூத்வா ஹதவான் -என்று அந்தர்யாமி போலே கண்ணுக்குத் தோற்றாதபடி நிற்கை அன்றிக்கே
பௌமரோடு திவ்யரோடு  வாசி அறக் காட்சி கண்டு நின்று
நாத தாநம் சரான் கோரான் ந முஞ்சந்தம் சரோத்தமான் -ஆரண்ய -25-39- என்றும்
தொடுத்ததும் விட்டதும் தெரியாதே ஓர் அம்பிலே பல அம்புகள் புறப்பட்டால் போலே
வளைந்த வில்லும் தாரளமான அம்பும் இருக்கும் படி என்-என்று கைவாரம் கொள்ளும்படியாக-எதிரிகளும் அஞ்சலி பண்ணும்படியே- பிரத்யஷராயே நின்றார் -என்றுமாம்
இப்படி சர்வ லோகங்களுக்கும் ரஷகர் ஆனால் -ச ராஷச பரீவாரம் ஹதவாம்ஸ் த்வாம் -என்று
ஒரு ஜாதியாக நிர்வாஹகனோடு  கிழங்கு எடுப்பப் பெறுமோ -என்னில்
1- லோகாநாம் ஹிதகாம்யயா-
ஸ்வா ர்த்தமாக நலிந்தவர் அல்லர் -பரஹிதமாகச் செய்தார் அத்தனை –
பரித்ராணாய சாது நாம் வி நாசாய ச துஷ்க்ருதாம் -ஸ்ரீ கீதை -4-8- என்று பயிர் செய்வான் ஒருத்தன் களை பறிக்குமா போலே சிஷ்ட பரிபால நார்த்தம் அசிஷ்ட நிக்ரஹம் பண்ணுகை பிராப்தம்  இ றே-
2- சர்வ  லோகேஸ்வர லோகா நாம் ஹித காம்யா த்வாம் ஹதவான் –
எல்லா யுலகுமுடைய எம்பெருமானாய்   இருந்தார் அவர்  –
ப்ரவ்ருத்தம் லோக கண்டகம் -பால -15-20- என்று அவருடைய நாட்டை நலியும் அரக்கனாய் இருந்தாய் நீ –
ஆகையாலே யதா பாராத தண்டா நாம் -ரகுவம்சம் -1-6- என்று குற்றம் செய்கையாலே பொடிந்தார் அத்தனை -என்றுமாம் –
3- சர்வ லோகேஸ்வர –
ஈஸ்வரத்வம் ஆவது -ஈசதே தேவ ஏக -ஸ்வே-1-10- என்றும்
சாஸ்தா ராஜா துராத்மா நாம் -என்றும்
சாஸ்தா விஷ்ணுர சேஷச்ய-என்றும் நியந்த்ருத்வம் இ றே –
அந்த ஸ்வா பாவிக நியந்த்ருத்வம் நிலை நிற்கைக்காகச் செய்தார் என்றுமாம் –
4- சர்வ லோகேஸ்வர ஹித காம்யயா-
ராஜா நாம் சர்வ பூதா நாம் -என்றும்
ராஜா த்வசாச நாத்பாபம் ததவாப் நோதி கில்பிஷம் -என்றும்
ராஜா தண்ட்யாம்ச் சைவாப்ய தண்ட யன் -அயசோ மஹதா நோதி நிரயஞ்சைவ கச்சதி -என்று
குற்றம் செய்தவர்களை தண்டியாத போது பாபம் வரும் –
அது வாராமைக்கு ஸ்வ ஹிதத்துக்காகச் செய்தார் என்றாக வுமாம் –
5- சர்வ லோகேஸ்வர லோகா நாம் ஹித காம்யயா -என்று
தமக்கு ரஷணீயமான லோகத்தில் உள்ளார் -பரிபாலய நோ ராஜன் வத்யமா நான் நிசாசரை -ஆரண்ய -6-19- என்றும்
ராஷசைர் வத்யமா நா நாம் பஹூ நாம் பஹூ தா வ நே -ஆரண்ய 6-16- என்றும்
முறை பட்டவர்களுடைய ரஷண அர்த்தமாக என்றாக வுமாம் –
6- சர்வ லோகேஸ்வர தவ ஹித காம்யயா த்வாம் ஹதவான் -என்றாய் –
தேவா நாம் தா நவா நாஞ்ச சாமான்ய மதி தைவதம் -ஜிதந்தே -2- என்றும்
பொது நின்ற பொன்னம் கழல் மூன்றாம் திரு -88- என்றும்
அநு கூலரோடு பிரதிகூலரோடு வாசியற
ச்வத சர்வே ஹ்யாத்மா ந -என்று சம்பந்த விசிஷ்டர் ஆகையால் ரஷிக்க வேணும் என்று –
ராஜபிர் த்ருத தண்டாஸ்து க்ருத்வா பாபா நி மா நவா நிர்மலா ஸ்வர்க்க மா யந்தி -கிஷ்கிந்தா -18-4- என்று
உன்னைத் தண்டித்து ஸூ பனாக்கி -பரிசுத்தனாக்கி -உன்னைக் கைக் கொள்ளுகைக்க்குச் செய்தார் ஆகவுமாம்
7- ஹித காம்யயா –
அவர்களுடைய நன்மைக்கு உறுப்பாக வேணும் என்று
8- லோகா நாம் ஹித காம்யயா –
ஜகதாம் உபகாராய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-72- என்றும்
சகலமேதத் சம் ஸ்ரீ தாரத்த சகர்த்த -ஸ்ரீ வராத ராஜ  ஸ்தவம் -63- என்றும்
உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய்  பிறந்தான் -திரு விருத்தம் -1- என்றும்
இவருடைய வியாபாரம் ஆகில் பரார்த்தமாய் இ றே இருப்பது –
இப்படி   பரார்த்தமாகச் செய்த ஹிதம் தான் ஏது என்னில் –
1-ஸ ராஷச பரீவாரம் ஹத வாம்ஸ் த்வாம் —
பாதகனான உன்னையும் உனக்குத் துணையான பரிகாரத்தையும் கொன்றார் –
2- ஸ  ராஷச பரீவாரம் –
பொல்லா வரக்கரைக் கிள்ளிக் களைந்தானை -என்கிறபடியே நிதான ஜ்ஞனான பிஷக்கு தோஷம் உள்ள இடத்திலே குட்டமிட்டுச் சிகித்சிக்குமா போலே
நல்லவரக்கர் இருக்க துஷ்ட ராஷசரையே நலிந்தார் –
3- ஸ ராஷச பரீவாரம் –
தனித்தால் இத்தனை பாதகனாகான் இ றே
இப்படி கருத் துணையாக்கி இ றே இப்படி கை விஞ்சிற்று
3- ஸ ராஷச பரீவாரம் –
பாதகன் ஆனவன்றும் கூட்டாய் -பாத்தின் ஆனவன்றும் கூட்டாய் ஆயிற்று –
4- ஸ ராஷச பரீவாரம் –
சர்ப்ப ஜாதிரியம் க்ரூரா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-71-என்றும்
அலம்பா  வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரைக் குலம் பாழ் படுத்து -பெரியாழ்வார் -4-2-1-என்றும்
ச்வத ப்ரயுக்த பாதகத்வம் உடைய ஜாதி யாகையாலே நிரவேஷம் ஆக்கினார்
5- ஸ ராஷச பரீவாரம் –
இவன் பட்டான் என்றால் நம் அரசனைக் கொன்றார் என்று பறை கொட்டி முழக்கிப் பின்பு ஒருத்தன் புறப்படாமே
கீழ்  உலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே  ஆழி விடுத்து  அவருடைய கரு அளித்த அழிப்பன்-பெரியாழ்வார் -4-8-6- என்று
அசுரர்களை அற முடித்த படி –
இப்பரிகரத்து அளவில்  விட்டாரோ என்னில் –
1- த்வாம் –
இதுக்கு எல்லாம் அதிஷ்டாதாவாய் இன்னபடி நலியுங்கோள்-என்று வகை இட்டுக் கொடுத்துப் பகைத் தொடனாய் இருக்கிற உன்னை –
2- த்வாம் –
ஆததாயி நாமா யாந்தம் ஹன்யாதே வாவிசாரயன்-ஸ்ரீ விஷ்ணு ஸ்ம்ருதி -5-185—188-என்று தார அபஹாரம் பண்ணி வத்யனான உன்னை –
3- த்வாம் –
தார மாதரம் அன்றிக்கே ராஜ தாரமாய் ராஜத்ரோகியான உன்னை –
4- த்வாம் –
தம்மள வன்றியிலேஅநரண்ய வதத்தாலே குல விரோதியான உன்னை
5- த்வாம் –
அநு ஜ பார்யா அபஹாரம் பண்ணின வாலி பட்டபடி கண்டும் ஆக்ரஜ பார்யா அபஹாரம் பண்ணி விடாதே இருந்த உன்னை
6- த்வாம் –
விபீஷணஸ்து தர்மாத்மா -என்று -பரம தார்மிகனான விபீஷணன் ஹிதம் சொன்னால்
ப்ருச்ச பாலம்பி புத்தி சாலி நம் -என்றும்
யதச்ய கத நாயா சைர் யோஜிதோ அஸி மயா குரோ  தத் ஷமயதாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-8-11- என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -திருவாய் -2-7-8- என்றும்
அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன -அடியேன் அறிந்தேனே -திருவாய் -2-3-2- என்றும்
பிரத்யஷத்தில் குரு ஸ்தோத்ரமும் -சரீர அர்த்த ப்ராணாதி நிவேதனமும்  பண்ண ப்ராப்தமாய் இருக்க
அப்ரவீத்  பருஷம்  வாக்கியம்  -16-1- என்றும்
தாச வச்சாவமா நித -17-14- என்றும் பரிபவ பரம்பரைகளைப் பண்ணி
குருத்ரோஹியாய் பந்து பரித்யாகம் பண்ணின உன்னை –
7- த்வாம் –
இந்த்ராதி சங்கர பர்யந்தமாக  தேவதைகளைச் சிறை வைத்தும் -அழித்தும் -உதைத்தும் -தேவதாத் ரோஹாம் பண்ணிப் பல பாக்கான உன்னை –
8-த்வாம் –
மருத்தாதிகள் உடைய யாக பங்கம் பண்ணின உன்னை –
9- த்வாம் –
யஜ்ஞ்  சத்ரு என்று -இது விருது போராய் -பலமச்யாப்ய தர்மஸ்ய ஷிப்ரமேவ பிரபத்ச்யசே-யுத்த -51-30-என்று
அதர்மம் பிடரியைப் பிடித்துக் கொண்டு நிற்கிற உன்னை –
10-த்வாம் –
மாரீச மால்யவத் கும்பகர்ண விபீஷணாதி பந்து வாக்யங்களைக் கேளாதே விபரீதமே செய்த உன்னை –
11- த்வாம் –
தேவதா திருப்தி பண்ணுகிறேன் என்று உன் தலையை அறுக்கைக்கு வழி இட்டுக் கொடுத்த உன்னை –
இவனைச் செய்தது என் என்னில் –
1- ஹதவான் –
கண்ணோட்டம் அறக் கொன்று விட்டார் –
2- ஹதவான் –
யாத்ருசம் குருதே கர்ம தாத்ருசம் பலம் அஸ்நுதே -என்று யதோபா சனம் பலமாய் -பிறரை ஹிம்சித்தால் போலே தானும் ஹிம்சிதன் ஆனான் –
3- ஹதவான் –
ஸ்வர்க்க ஆரோஹண சாதனமான யுத்த யஜ்ஞத்திலே ஸ்வ ஆலம்பனம் பண்ணினார்
4-ஹதவான் –
ஹந ஹிம்சா -இத்யோ-இ றே-அந்தர் பாவ  ணி ச்சாய் ஸ்வர்க்க நரகங்களை கமிப்பித்தார் -என்றாக வுமாம் –
இப்படி விரோதியைப் போக்கிச் செய்தது என் -என்னில் –
1- மஹாத்யுதி –
வடிவில் புகரிலே தொடை கொள்ளலாம் படி இருந்தார்
2- மஹாத்யுதி –
நடுவுண்டான ராஜ்ய பிரம்சவநவாசா திகளால் பிறந்த செருப்பு தீர்ந்து இப்போது லோக கண்டகனான நீ பட்டவாறே பெரிய தேஜச்வியாய் இருந்தார் –
3- மஹாத் யுதி-
அபிஷிச்ய ச லங்கா யா ராஷச  சேந்த்ரம் விபீஷணம் க்ருதக்ருத்யஸ் ததா ராம -பால -1-85-என்று
ஆ ஸ்ரீத கார்யம் செய்யப் பெறுகையாலே வந்த தீப்தி யாகவுமாம் –
4-ஹதவான் மஹாத்யுதி –
ராவணனைக் கொன்றது ஆயுதத்தை இட்டு என்று இருந்தோம் -அங்கன் அன்றிக்கே
நிர்த ஹேதபி காகுத்ச்த  கருத்த சவீவ்ரேண சஷூஷா-சுந்தர -30-14- என்று பிரதாபத்தை இட்டு சுட்டு விட்டார் இத்தனையாய் இருந்தது –
5-மஹாத் யுதி –
தமேவ பாந்தம் அநு பாதி சர்வம் தஸ்ய பாஸாசர்வமிதம் விபாதி -கடக்க -2-5-15-என்று
நீ புகர் கொள்ளுகைக்குப் பற்றின ஷூத்ர தேவதைகள் அடையக் கரிக் கொள்ளியாம்படி நிரவதிக தேஜோ ரூபரானவர் –
6- மஹாத் யுதி –
மஹாத் யுதி என்றும் தேஜசாம் ராசி மூர்ஜிதம் -என்றும் ஒண் சுடர்க் கற்றை -திருவாய் -1-7-4- என்றும்
தேஜ பதார்த்தங்களை அடையத் திரளப் பிடித்து ஒராக்கை இட்டால் போலே இருந்தார் –
1- ஏஷ த்வாம் ஹதவான் –
என்று மூலியான அநு மானத்தை இட்டு மூலமான பிரத்யஷத்தை பாதிக்க ஒண்ணாதே இருந்தது
மனுஷ்ய ரான இவரே ராஷசனான உன்னைக் கொன்றார் –
2- மஹா யோகீ த்வாம் ஹதவான் –
சௌர்ய வீர்ய தைர்யஸ் தைர்ய சாதுர்ய மாதுர்யாதி சமஸ்த கல்யாண குணங்களை யுடைய  இவர்
அமர்யாத ஷூத்ரஸ்  சாலமதிர் அசூயாப்ரசவபூ கருதக்நோ துர்மா நீ ஸ்மர பரவசோ வஞ்சநபர நருசம்ச பாபிஷ்ட -ஸ்தோத்ர ரத் -62-
என்று சொல்லுகிற சமஸ்த ஹேய குண பூர்ணனான உன்னைக் கொன்றார் –
3- பரமாத்மா த்வாம் ஹதவான் –
எல்லாருக்கும் மேலாய் -நியாமகராய் இருக்கிறவர் -எல்லாருக்கும் கீழாய் நியாம்யனான உன்னைக் கொன்றார் –
4- மஹத பரம்ஸ் த்வாம் ஹத்வான் –
மஹதாத்ய சித்  வி லஷணரானவர்-அசித் சம்ஸ்ருஷ்டனான உன்னைக் கொன்றார்
5- ஹதவான் சநாதநஸ் த்வாம் –
எப்போதும் உளராய் இருக்கிறவர் காலைக்க தேச வர்த்தியான உன்னைக் கொன்றார் –
6-அநாதி  மத்திய நிதநஸ் த்வாம் ஹத்வான் –
முதலும் நடுவும் முடிவும் இல்லாத இவர் ஜன்மமும் ஆயிரவதியும் யுடைய உன்னைக் கொன்றார் –
7- மஹான் த்வாம் ஹத்வான் –
மஹானான இவர் ஏஷோ அணு ராதமா -என்கிற உன்னை சரீரவியுக்தனாம் படி பண்ணினார் –
8-தம்ஸ பரம்ஸ் த்வாம் ஹதவான் –
அப்ராக்ருதராய் இருக்கிற இவர் ப்ராக்ருதனான உன்னைக் கொன்றார் –
9-தாதா த்வாம் ஹதவான் –
ஜகத் தாரகராய் இருக்கிற இவர் தார்யங்களில் ஏக தேசனான உன்னைக் கொன்றார்
10- சங்க சக்ர கதா  தரஸ் த்வாம் ஹத்வான் –
திவ்ய ஆயுத தாரரான இவர் ஷூத்ர ஆயுத தரனான உன்னைக் கொன்றார் –
11-ஸ்ரீ வத்ஸ வஷாஸ் த்வாம் ஹதவான் –
பரத்வ சின்ஹங்களை  உடையவர் அபரத்வ சின்ஹங்களை யுடைய உன்னைக் கொன்றார்
12- நித்ய ஸ்ரீ த்வாம் ஹதவான் –
நித்ய அநபாயிநியான ஸ்ரீரியை யுடையவர் ஆகமா பாயிநியான ஸ்ரீ யை யுடைய உன்னைக் கொன்றார் –
13- அஜய்யஸ் த்வாம் ஹதவான் –
அபராஜிதரானவர் தன் பக்கல் பராஜயமேயான உன்னைக் கொன்றார் –
14- சாசவதஸ் த்வாம் ஹதவான் –
போது செய்யாதவர் போது செய்கிற உன்னைக் கொன்றார் –
15- த்ருவஸ் த்வாம் ஹதவான் –
ஸ்திர ஸ்வ பாவராய் இருக்கிறவர் அஸ்திரனான உன்னைக் கொன்றார் –
16- மா நுஷம் வபுராஸ் தாய த்வாம் ஹதவான் –
மா நுஷ்யம் உடையவர் மா நுஷ்யம் இல்லாத உன்னைக் கொன்றார் –
17- விஷ்ணுஸ் த்வாம் ஹதவான் –
வ்யாபகரானவர் வ்யாப்யைகதேசனான   உன்னைக் கொன்றார் –
18- சத்யா பராக்ரமஸ் த்வாம் ஹதவான் –
உண்மையான வாக்ய சேஷ்டைகளை யுடையவர் அசத்திய வாக்ய சேஷ்டனான உன்னைக் கொன்றார் –
19-சர்வை பரிவ்ருதோ தேவைஸ் த்வாம் ஹத்வான் –
வி லஷணராலே சூழப் பட்டவர் ஹேயராலே சூழப் பட்ட உன்னைக் கொன்றார்
20-வாநரத்வம் உபாகதை பரிவ்ருதஸ் த்வாம் ஹதவான் –
ராஷசனாய் பிரபலனான உன்னை ஷூத்ர மிருகங்களை கொண்டு கொன்றார் –
21- சர்வ லோகேஸ்வரஸ் த்வாம் ஹதவான் –
சர்வ நிர்வாஹகராய் இருக்கிறவர் ஏகதேச நிர்வாஹகனான உன்னைக் கொன்றார் –
22-சாஷாத் த்வாம் கொன்றார் –
நேரே தனக்கு ஒரு குற்றம் செய்யாமையாலே வாலியை மறைந்து நின்று கொன்றவர்
அது தீரக் கழியத் தனக்குக் குற்றம் செய்த படியாலே நேர் கொடு நேர் நின்று உன்னைக் கொன்றார் –
23- லோகா நாம் ஹித காம்யயா த்வாம் ஹதவான் –
லோக ஹிதத்துக்காக அஹிதனான உன்னைக் கொன்றார்
24- மஹாத் யுதிஸ்  த்வாம் ஹதவான் –
பெரிய தேஜஸ் சை யுடையவர் தேஜோ ஹீனனான உன்னைக் கொன்றார் –
எதிரியைப் பெருப்பித்து அவனைக் கொன்றான் என்றால் அல்லவோ நாயகனுக்குப் பெருமை யாவது
பெருமாள் பெருமையும் ராவணனுடைய அபகர்ஷமும் சொல்லப் பெறுமோ என்னில்
இவ்விடத்தில் நாயகனுடைய உத்கர்ஷ அபகர்ஷங்களில் தாத்பர்யம் இல்லை
மா நுஷாணாமவிஷயே சரத காம ரூபிண வி நாசஸ்தவ ராமேண சம்யுகே நோபாபாத் யதே -114-7-என்று
பெருமாளை சிறியராகவும்-ராவணனை பெரியனாகவும் பிரமித்து பெருமாளால் இவனுக்கு வதம் கூடாது என்று நினைத்திருந்து
அவரை யுக்திகளால் தெளிந்து -பெருமாள் பெரியவர்   ராவணன் ஓர் ஆபாசன் என்று அறுதி இடுகிறாள் ஆகையாலே ஓர் அநு பாபத்தி இல்லை –
ஆக இஸ் சதுஸ் ஸ்லோகியால் சொல்லிற்று ஆயிற்று –
இவளுடைய முன் செய்வினை வெளிப்பட்டு
ஸ தவம் மா நுஷ   மாத்ரேண ராமேன யுத்தி நிர்ஜித  ந ஹ்ய பத்ர பசே ராஜன்  கிமிதம்   ராஷசர்ஷப -என்று
ராவணனை உத்கர்ஷித்துப் பெருமாளை உபாலம்பித்து
சாபராதையான மந்தோதரி
அநு தப்தையாய் –
அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டைகளைத் தெளிந்து பேசி
ஸ்தோத்ர முகத்தாலே பிராயஸ் சித்தம் பண்ணிப் பூதையாகிறாள் –

————————————————————————————————————————————————————————————–

பாபாநாம் வா ஸூபாநாம் வா வதார்ஹாணாம் பிலவங்கம
கார்யம் கருண கார்யேண ந கச்சின் நாபராத்யதி –116-44-

பாபாநாம் வா ஸூபாநாம் வா -பாபிகள்  விஷயத்திலும் புண்ணியவான்கள் விஷயத்திலும்
வதார்ஹாணாம் -கொல்லத் தக்கவர் விஷயத்திலும்
பிலவங்கம-வானரனே
கார்யம் கருண கார்யேண-நல்லோனாலே கருணை யானது செய்யத் தக்கது
ந கச்சின் நாபராத்யதி-எவனும்  குற்றம் செய்ய வில்லை எனபது இல்லையே –

அவதாரிகை –
ராவணனும் பட்டுப் பெருமாளும் விஜயிகளானார்என்று பெரிய பிரியத்தைப் பிராட்டிக்குத் திருவடி விண்ணப்பம் செய்ய
பிராட்டியும் ப்ரீதி பிரகர்ஷத்தாலே விம்மல் பொருமலாய் ஸ்தப்தையாய் இருக்க
இவனும் விக்கலுக்கு வெம்மாற்றம் போலே
கிந்நு சிந்தயசே தேவி கிம் தவம் மாம் நாபி பாஷசே -116-16- என்று
பெரிய பிரியத்தை விண்ணப்பம் செய்த எனக்கு ஒரு மறு மாற்றம் சொல்லாதே தேவர் எழுந்து அருளி இருக்கிற இருப்பு என் தான் -என்று திருவடி விண்ணப்பம் செய்ய
பிராட்டியும் உனக்கு சத்ருசமாகத் தரலாவது ஓன்று இல்லாமை காண்நான் பேசாது இருந்தது என்ன
இவனும் இவ்வளவில் நம் அபேஷிதத்தை விண்ணப்பம் செய்து கொள்வோம் என்று பார்த்து
தேவரை சுற்று முற்றும் நலிந்த ராஷசிகள் ஆகிறார்-க்ரூரைகளாய் தத் அநு குண பாவைகளாய் ஆயிற்று –
ராவணனுக்கு முன்னே கொல்ல வேண்டுவது இப்பெண் பிள்ளைகளை யாயிற்று –
அவனும் இவர்களோபாதி கேடன் அல்லன் –
இவர்கள் இப்போது பாம்பு படம் அடங்கினால் போலே இருக்கிறார்கள் அத்தனை ஆயிற்று
இவர்களை பஹூ பிரகாரமாக ஹிம்சிக்கப் பாரா நின்றேன் –
முஷ்டிபி பாணிபிஸ் சைவ -116-33- என்று கையாலே குத்தியும் காலாலே துகைத்தும் நகங்களாலே சேதித்தும் பற்களாலே கடித்தும் துடித்தும்
சின்னம் பின்னம் சரைர் தக்தம் -94-22-என்று பெருமாள் திருச் சரங்கள் செய்தது எல்லாம் நானே பண்ணப் பாரா நின்றேன்
முன்பு வந்த போது இடம் இல்லாமல் விட்டுப் போனேன் இத்தனை
இப்போது எனக்கு எல்லா பிரத்யுபகாரங்களும் பண்ணி அருளிற்று ஆகலாம் -இத்தனையும் திரு உள்ளமாக வேணும் -என்ன -பாபா நாம் வா -என்று அருளிச் செய்கிறாள் –

பாபாநாம் வா ஸூபாநாம் வா –
இவர்கள் நீ நினைத்து இருக்கிறபடியே பாபைகள் ஆக வுமாம் –
நான் நினைத்து இருக்கிறபடியே ஸூபைகள் ஆக வுமாம் –
அது தானே யன்றே உத்தேச்யம் –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-என்றால் போலே அழுக்கு உடையவன் அன்றோ குளிக்க ப்ராப்தி யுடையான்
அவர்கள் பாபைகள் ஆகில் அன்றோ நாம் முகம் கொடுக்க வேண்டுவது
சுபைகள் ஆகில் உன் வால் வேணுமோ –அவர்கள் புண்யங்களே கை கொடுக்குமே –
கை முதல் இல்லார்தார்க்கு அன்றோ கை முதலாக வேண்டுவது -என்றாள்-

வதார்ஹாணாம்
தண்ட்யனை தண்டிக்கவும் அல்லாதாரைத் தவிரவும் சொல்லுகிற தர்ம சாஸ்திரம் தேவரீரைத் தோற்றி கிழுத்துப்  பொகடக் கடவதோ -என்கிறாள் –

ப்லவங்கம்-
பின்னையும் அவன் புத்தி திரிய விடாமையாலே -ஹரி ஹரி -என்கிறாள் –
அன்றிக்கே -ப்லவங்கம் -என்று
நச்சினத்தை நச்சும் ஜாதி யானமை கண்டோம் -என்கிறாள் –
வசிஷ்ட ப்ரப்ருதிகள் மந்த்ரிக்கும் படியான இஷ்வாகு வம்சத்தில் பிறந்தாய் அல்லை –
யோகிகளாய் ஜனக குலத்திலே பிறந்தாய் அல்லை –
காட்டிலே பணை யோடு பணை தாவித் திரிகிற ஜாதியிலே இ றே பிறந்தது –
அங்கன் ஒத்தாருக்கு சரணாகதியோட்டையது தெரியாது -என்கிறாள் –
வா நரோத்தம -16-18-என்றவள் தானே இ றே ப்லவங்கம் -என்றாள்
ராஜாக்க்களுமாய் மூலையடியெ நடக்க யுரியருமாய் இருக்கிற பெருமாளும் எங்கள் முன் இத்தனை கோபித்து அறியார்
நீ வா நர ஜாதியாய் இருந்து வைத்து இங்கனே கோபிக்கக் கடவையோ –

கார்யம் கருண கார்யேண –
இவர்கள் புண்ய பாபம் கிடக்க இப்போது ஓடுகிற தய நீய தசையைப் பாராய் –
இவர்களுக்கு ஒரு ரஷகன் அல்லையே
இப்போது இவ்வளவிலே நாம் இரங்க வேணும் காண் –
ஆர்யேண-நல்லோனாலே –
இவை எல்லாம் இப்போது நான்  கற்பிக்க வேண்டும்படி யாவதே உனக்கு –
ஆர்யேண-
ஐந்த்ரவ்யாகரண  பண்டிதன் என்கிறது பொய்யோ –
அவையும் எல்லாம் கற்றுக் கேட்டு இருக்கச் செய்தேயும் இப்போது ராம கோஷ்டியில் பரிசயமான படி யாகாதே
அந்த கோஷ்டியில் பரிசயம் பழக்கம் இ றே நீ இங்கனே சொல்ல வல்லை யாயிற்று
நான் பிரிந்த பின்பு அக் கோஷ்டி இங்கனே நீர்த்தது ஆகாதே -நீர் விடப் பட்ட பால் போலே -என்று கருத்து –
ந கச்சின் நாபராத்யதி -குற்றம் செய்யாதவன் ஒருத்தனும் இல்லை –
சம்சாரத்தில் குற்றம் இல்லாதார் யார் –
திரை நீக்கிக் கடலாடப் போமோ
நல குதிரையாக பாவித்து இருக்கிற பெருமாள் தான் குற்றவாளர் அல்லரோ
நான் தான் குற்றப்பட்டவள் அல்லேனோ-
பெருமாள் குற்றவாளர் ஆனபடி என் என்னில்  -தாம் காடேறப் போனார் -அவர் பின்னே மடலூருவாரைப் போலே இளைய பெருமாளும் போந்தார்
தம்மோடு ஏகாந்த போகம் பண்ணக் கடவதாக இலையகலப் படுத்திக் கொண்டு நானும் போந்தேன்-
என்னைப் பிரிந்து பத்து மாசம் இருந்தார்
நான் வராவிட்டால் தன்னதோரம்பு இயங்க மாட்டாமை இல்லை இ றே
இவ்வழி இத்தனை நாள் பிரிந்து இருக்க வல்லரான போதுபெருமாள் பக்கலிலே யல்லவே குற்றம்
பார தந்த்ர்யத்துக்கு அநுகுணமாக பேசாது இராதே அது தன்னைச் சொன்ன என் பக்கலில் அன்றோ குற்றம்
இந் நாயகன் சொன்ன கார்யம் செய்த அடியாரை தண்டிக்கப் பார்த்த அன்று பெருமாள் அருளிச் செய்த கார்யம் செய்யப் போந்த உன்னை முற்பட தண்டித்து கொண்டு அன்றோ
ராவணன் சொன்ன கார்யம் செய்த இவர்களை தண்டிப்பது
ஆகையால் நீ அல்லையோ குற்றவாளன்
எல்லாப் படியாலும் பெருமாள் ஒரு விஷயத்தை முனிந்த அன்று ஆற விடுகைக்கு நான் உண்டு
நானும் அவர் வழி யோடு போக வேண்டி இருந்த அன்று எனக்கு நீ யுண்டு -என்று இருந்தேன்
நீயும் இங்கனே யானால் அபராதம் செய்வார்க்குப் புகலாவார் உண்டோ -என்கிறாள் –

அஜ்ஞாத நிக்ரஹ -கோபம் என்பதையே அறியாதவள் -நம் போல்வாருக்கு தஞ்சம் ஆவது பெருமாள் உடைய சரம ஸ்லோகம் அன்று
பிராட்டி யுடைய இந்த சரம ஸ்லோகமே நமக்கு தஞ்சமாகக் கடவது –

மாதர் மைதிலி  ராஷசீஸ் த்வயி ததை வார்த்ராபராதாஸ் த்வயா
ரஷந்த்யா பவநாத்மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா
காகம் தம் ச விபீஷணம் சரணமித் யுக்தி ஷமௌ ரஷத
ஸா ந சாந்திர மஹாக ஸ ஸூ காது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ-ஸ்ரீ குணரத்ன கோசம் -50-

————————————————————————————————————————————————————————————–

ஸ்நேஹோ  மே பரமோ ராஜன் த்வயி நித்யம் ப்ரத்திஷ்டித
பக்திஸ்ஸ நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி –உத்தர -40-16-

ஸ்நேஹோ  மே பரமோ ராஜன் -ராஜன் -மே-  பரம ஸ்நேக -அரசரே எனக்கு மிகச் சிறந்த அன்பானது
த்வயி நித்யம் ப்ரத்திஷ்டித-தேவரீர் இடத்திலே எப்போதும் நிலை நிற்கிறது
பக்திஸ்ஸ நியதா -பக்தியும் நித்தியமாய் இரா நின்றது
வீர பாவோ நாந்யத்ர கச்சதி -சூரனே என் நினைவு  வேறு ஒரு இடத்தில் செல்கின்றது இல்லை –
ஸ்நேஹோ  மே பரமோ-
எந்தன் அளவன்றால் யானுடைய அன்பு -இரண்டாம்  நூற்ற -100–உன்னிடம் எனக்கு உள்ள அன்பு என்னிலும் பெரிது என்கிறார்-
ராஜன் த்வயி –
இது தானும் என்னால் வந்தது அன்றி –அதுவும் அவனது இன்னருளே -திருவாய் -8-8-3-
நித்யம் ப்ரத்திஷ்டித-
இன்று அன்றாகில் மற்று ஒரு போதுகொடு போகிறோம் என்ன -அங்கன் செய்யுமது  அன்று
தர்மியைப் பற்றி வருகிறது ஆகையாலே -நின்னலால் இலேன் கான் -பெரிய திரு -7-7-4-என்னுமாப் போலே –
பக்திஸ்ஸ நியதா-
ஸ் நேஹமாவது என் -பக்தியாவது என் -என்னில்
பெருமாளை ஒழியச் செல்லாமை பிறந்து -வ்யதிரேகத்தில் முடிந்த சக்ரவர்த்தி நிலை ஸ் நேஹம் –
பக்தியாவது -நில் என்ன -குருஷ்வ -அயோத்யா -31-32-என்னும்படியாய் முறை அறிந்து பற்றின இளைய பெருமாள் நிலை –
வீர –
தன்னைத் தோற்ப்பித்த துறை –
உம்முடைய வீரம் கொண்டு புறம்பே வென்றீர் என்று இங்கு வெல்ல முடியாது
தானும் வீரன் ஆகையாலே தோற்ப்பித்த துறையைப் பிடித்து பேசுகிறான் –

பாவோ நான்யத்ர  கச்சதி –
என்னை மீட்டீர் ஆகிலும் என்னுடைய நெஞ்சை மீட்கப் போகாது
அன்யத்ர -என்கிறது -மற்றானும் உண்டு என்பார் -சிறிய திருமடல் -5-என்றும்
அச்சுவை பெறினும் வேண்டேன் -திருமாலை -2- என்னுமா போலே
கொடு போக நினைத்த தேசத்தின் பேரும் கூட அசஹ்யமாய் இருக்கிறது-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்