ஸ்ரீ திருமலை நம்பி தனியன் –
பிதா மஹஸ் யாபி பிதா மஹாய
ப்ராசேத–சாதேச பலப்ரதாய
ஸ்ரீ பாஷ்கர உத்தம தேசிகாய
ஸ்ரீ சைல பூர்ணாய நமோ நமஸ்து —
ஸ்ரீ வைதேஹீ ஸஹிதம் ஸூரத்ரும -தலே ஹைமே மஹா மண்டபே
மத்யே புஷ்ப்பக மாசநே மணி மயே வீராசநே ஸம்ஸ்திதம்
அக்ரே வாசயதி பிரபஞ்சன ஸூதே தத்வம் முனிப்ய பரம்
வ்யாக்யாந்தம் பராதிபி பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்
ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
———————————–
ஸ்ரீ அபய பிரதான சாரம் —
ஸ்ரீ வால்மீகி பகவானால் திருஷ்டமாய் -இருப்பதாய் —
தாத்பர்ய லிங்கங்களை எல்லாம் பரிபூர்ணமாக உடையதாய் -இருபத்தொரு சரணாகதி வேதம்
இதில் ஸ்ரீ அபய பிரதான பிரகரணம் சர்வ ரஹஸ்ய சாரங்களையும் திரள வெளியிட்ட உபநிஷத் பாகம்
ஆறு காண்டத்திலும் சரணாகதி தர்மமே அஞ்சுறு ஆணியாகக் கோக்கப்பட்டுள்ளது
சரணாகதி ரக்ஷண தர்மமே ஸ்ரீ பெருமாளுக்கு அநுபால நீயம்
இது பத்து அதிகாரங்களை உடையது –
வேத உப ப்ரும்ஹண சா பேஷரான அல்ப ஸ்ருதர் பக்கல் இரக்கத்தாலும்-
அவர்களை பற்ற வேதங்களுக்கு உண்டான பிரதாரண பயத்தை சமிப்பிக்கைக்காகவும் —
உப ப்ரும்ஹண ரூபமான இப்பிரபந்தத்தை பிரவர்த்திப்பித்தான்
இது சர்வ சரண்ய பர தத்வ விஷயமாகவும் –
ஸர்வாதிகாரமான சரணாகதி ரூப பரம ஹித விஷயமாயும் இரண்டு வகையாய் இருக்கும் –
பரம காரணமான பர தத்துவத்தை பிரதிபாதிக்கிற வேதங்களுக்கு உப ப்ரும் ஹணம் அன்றோ இது
———————–
பிரகரண தாத்பர்ய நிர்ணயம் என்னும் நாலாவது அதிகாரம்
சரணாகத விக்ந நிராகரணம் –
ஸ்ரீ விபீஷண சரணாகதி பிரகரணத்தில்
ஆனுகூல்ய சங்கல்பாதி
அங்க பஞ்சக பூர்த்தி –
ஸ்ரீ விபீஷண பல காங்ஷித்வ விசாரம்
சரணாகத விக்ந நிராகரணம்
இப்படி சரணாகதி வேத உபநிஷத்தான இவ் வவபய பிரதான பிரகரணத்தில்
பரமாபத் கதஸ்யாபி தர்மே மம மதிர் பவேத் -உத்தர -10-31 –என்று
ப்ரஹ்மாவின் பக்கலிலே வரம் வேண்டிக் கொண்டு
தர்மிஷ்டஸ்த்வம் யதாவத்ச ததா சைதத் பவிஷ்யதி –உத்தர -10-34-என்று
வரம் பெற்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணாகதி தர்மத்தைப் பரிக்ரஹித்து அனுஷ்டிக்கையாலும் –
பின்பு ஸ்ரீ பெருமாளையும் கூட அனுஷ்டிப்பிக்கையாலும்
சரணாகதி பரம தர்மம் என்னும் இடம் சிஷ்டாசாரத்தாலே ஸ்த்தாபிதம்
இப் பிரகரணத்தில் முன்பே பல சர்க்கங்களாலே ரஜஸ் தமஸ் பிரக்ருதிகளாய் இருப்பார்க்கு
சத்வ ப்ரக்ருதிகளாய் இருப்பார் ஹிதம் சொன்னாலும்
ஸ்ரீ பகவத் விஷயத்தில்
ஆபி முக்கியம் கூடாது என்னும் இடம் சொல்லிற்று
ஸத்வ உத்தரனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணாகதனாய் வருகிற போது அவன் விஷயத்தில்
தேவதா அவதாரரான ஸ்ரீ வானர வீரர்களால் விக்னம் பிரசகதமானபடி சொல்லுகையாலே
ஸ்ரூயதே கில கோவிந்தே பக்தி முத்வ ஹதாம் ந்ருணாம்
சம்சார நியூ நதா பீதா த்ரிதசா பரிபந்தினா –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -2-25-என்கிறபடியே
ஸ்ரீ பகவத் விஷயத்தில் அபிமுகமாவாரைத் தாங்கள் குடிமக்கள் தப்பித் போகிறார்கள் என்று நினைத்து
தேவர்கள் விலக்குவார்கள் என்னும் இடமும்
இப்படி விக்னங்கள் வந்தாலும் ஸூத்த பாவராய் அநன்யராய் வந்து அடைந்தவர்களை
சங்கல்பா தேவ பகவான் தத்வதோ பாவிதாத்மநாம்
வ்ரதாந்தம் அகிலம் காலம் ஸே சயத் யம்ருதேந து -என்றும்
ப்ரவ்ருத்தி காலாதாரப்ய த்வத்மாலாபாவசா நிகம்
யத்ராவகாசோ விக்நா நாம் வித்யதே ந கதாச நே –என்றும்
ஸாத்வத பவ்ஷ் கராதி களிலே சொல்லுகிறபடியே
ஸ்ரீ பெருமாள் தாமே எல்லா விக்னங்களை சமிப்பித்து
அடிமை கொள்ளுவார் என்னும் இடம் வெளியிடப்பட்டது –
————-
ஸ்ரீ விபீஷண சரணாகதி பிரகரேண ஆனுகூல்யாதி அங்க பஞ்சக பூர்ணத்வம் –
சர்வஞ்ஞ ஸம்ஹிதாதிகளில் சொன்ன ஆனுகூல்ய சங்கல்பாதிகளும் அடங்க
இப் பிரகரணத்தில்
காணலாம் எங்கனே என்னில்
அடியிலே ராவணாதிகளுக்கும் கூட ஹித உபதேசம் பண்ணுகையாலும் –
தூதனாய்ச் சென்ற திருவடியை துஷ் ப்ரக்ருதியான ராவணன் அசக்யம் என்று அறியாதே நலிய நினைக்க-
அத்தை விலக்குகையாலும்-
பிறவி உறவையும்
பெரிய ஐஸ்வர்யத்தையும்
புத்ர தாராதிகளையும் அநா தரித்து
பிராதி கூல்ய வர்ஜனம் பண்ணுகையாலும்
ஆனு கூல்ய சங்கல்பமும்
பிராதி கூல்ய வர்ஜனமும் ஸூசிதமாயிற்று –
பெருமாள் சர்வ லோக சரண்யன் என்கிற வ்யவசாயத்தாலும்
ஆஜகாம முஹூர்த்தேன யாத்ர ராம ச லஷ்மண –யுத்த -17-1–என்கிறபடியே
அஞ்ச வேண்டும் பிரதேசத்தில்
அசங்கிதமாகத் தன் நிலமாக நினைத்து வருகையாலும் –
ரஷிஷ்ய தீதி விசுவாசம் -காட்டப்பட்டது –
ராகவம் சரணம் கத –யுத்த -17-14-என்கிற
உபாய வரண வாக்ய சாமர்த்தியத்தால் கோப்த்ருத்வ வரணம் -சொல்லிற்று –
உபாயாந்தர ஸ்த்தாந நிவேச பரமான சரண சப்தத்தால் வ்யஞ்சிதமாய்
ரஷா பர சமர்ப்பண பிரதானமான ஆத்ம நிக்ஷேபமும்
சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மநே
நிவேதயதே மாம் க்ஷிப்ரம் விபீஷணன் உபஸ்திதம் –யுத்த -18-4-என்று
அந்தரங்கராய் இருப்பாரை
முன்னிலையாகக் கொண்டு விசதமாகச் சொல்லப்பட்டது –
இவ்விடத்தில் ஸ்ரீ பெருமாளும்
ஸ்ரீ இளைய பெருமாளும்
முதலிகளும் கேட்க்கும்படி கிட்ட வந்து
பிரணாதஸ் ச மஹா நேஷ-18-14-என்கிறபடியே
கூப்பிடுகிறவன் ஆகையால்
பெருமாளுக்கு அறிவியுங்கோள்-என்கை விவஷிதம் அன்று –
சக்யம் ஆத்ம நிவேதனம் —என்றும்
கிங்கரோஸ் மீதி சாத்மாநம் தேவாயைவம் நிவேதயேத்–ஜிதந்தா -1-14-இத்யாதிகளில் படியே
நிவேதயத மாம் -என்று
என்னை சமர்ப்பியுங்கோள் என்றபடி
ராவணோ நாம துர்வ்ருத்த -17-10-என்று தொடங்கி –
ஸோஹம் ப்ருஷிதஸ் தேந தாச வச்சா வமாநித –என்றது அறுதியாக
துஷ் ப்ரக்ருதியான ராவணனுக்குத் தான்
ஹித உபதேசம் பண்ணிப் பாழுக்கு நீர் இறைத்துப் பரிபூதனான படி சொல்லுகையாலும்
ஸ்வரேண மஹதா மஹாந் -17-9-என்கிற ஆர்த்த ஸ்வரத்தாலும்
நிவேதயதே மாம் க்ஷிப்ரம் -17-15-என்கிற த்வர அதிசயத்தாலும்
பிரணாதஸ் ச மஹா நேஷு ததோஸ்ய பயமாகதம்-18-14-என்கிற
சர்வஞ்ஞனான சரண்யனுடைய வாக்யத்தாலும்
கார்ப்பண்யம் சொல்லப்பட்டது –
ஆக இப்படி
ஆனுகூல்ய சங்கல்பாதி யுக்தையாய்-
பரிபூர்ணையாய்-
ஸ்ரீ த்வயத்தில் பூர்வ கண்டத்தில் சொல்லப்படுகிற
ஸ்வ ரஷா பர சமர்ப்பணாத்மிகையான ப்ரபத்தியை
சர்வ அவஸ்தையிலும் தர்ம சாரத்தில் நிலை குலையாத ஸ்ரீ விபீஷண ஆழ்வான் அனுஷ்ட்டித்தான் –
—————-
ஸ்ரீ விபீஷண காங்ஷித்வ விசாரம்
அதற்கு அவன் பலமாகக் கோலிற்று என் என்னில் –
ஆபாத ரசிகராய் இருப்பார் லங்கா ஐஸ்வர்யம் என்று இருப்பார்கள் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் கருத்தை அடி ஒற்றினால்
சரண்யனான ஸ்ரீ பெருமாள் திருவடிகளில்
கைங்கர்யமே பலமாய் இருக்கும் –
அது எங்கனே என்னில் –
சரணாகதி காலம் தன்னில் –
த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ஸ் ச ராகவம் சரணம் கத -17-14-என்று
இதர விஷயங்களில் நைராஸ்யத்தைத் தான் கண்ட யுக்தி பண்ணுகையாலும்
பின்பு ஸ்ரீ பெருமாளுக்கு விண்ணப்பம் செய்கிற போதும் –
பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச
பவத்கதம் மே ராஜ்யம் ச ஜீவிதம் ச ஸூகாநி ச -19-5-என்று
இலங்கை ஐஸ்வர்யாதிகளை அடைய விட்டு
எல்லாப் புருஷார்த்தமுமாகத் தேவரீர் திருவடிகளைப் பற்றினேன் -என்று விண்ணப்பம் செய்கையாலும்
இவன் அநந்ய ப்ரயோஜனனான அதிகாரி என்னும் இடம் ஸூவ்யக்தம் –
ஆன பின்பு
ராஜ்யம் பிரார்த்தய மாநஸ்து புத்தி பூர்வம் இஹா கத -17-65-என்கிற
ஸ்ரீ திருவடி வாக்கியமும்
ந வயம் தத் குலீ நாஸ் ச ராஜ்ய காங்ஷீ ச ராக்ஷஸ -18-13-என்று
பெருமாள் அருளிச் செய்த வார்த்தையும்
ஸ்ரீ ராம பக்தியால் கலங்கின ஸ்ரீ மஹா ராஜருடைய கிளர்த்தியை அடக்குகைக்காக ஈடாக
நீதி சாஸ்திரங்களில் சொல்லும் ராஜ வ்ருத்தாந்தக் கட்டளையில் காட்டின படியாம் அத்தனை –
திருவடியும் பெருமாளும் அருளிச் செய்த பாசுரமும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தன் பாசுரமும் விரோதித்தால்
அந்தரங்க நியாயத்தாலே தன் பாசுரம் பிரபலமாகக் கடவது
அஹம் ஹத்வா தசக்ரீவம் சப்ரஹஸ்தம் ச பாந்தவம்
ராஜநம் த்வாம் கரிஷ்யாமி சத்யமேதத் ப்ரவீமி தே -19-19-என்று
ராவணனைக் கொன்று உம்மை ராஜ்யத்தில்
முடி சூட்டக் கடவோம்-என்று ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்வான்
என் என்னில் –
அதுவும் –
சரீர ஆரோக்யம் அர்த்தாம்ஸ் ச போகாம்ஸ் சைவ அநு ஷங்கி காந்
ததாதி த்யாயிநாம் நித்யம் அபவர்க்க ப்ரதோ ஹரி –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -74-43-என்று
சர்வ நிரபேஷரான ஸ்ரீ திருவடியைப் போலே அவசர உசிதமான அடிமை செய்யக் கடவேன்-என்று
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் விண்ணப்பம் செய்தது –
இவன் தார்மிகத்வத்தை வரமாக வேண்டிக் கொள்ள
ப்ரீதனான ப்ரஹ்மா அமரத்வத்தையும் கூடக் கொடுத்தால் போலே
அடிமை செய்ய வேண்டிக் கொண்ட ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு
ஸ்ரீ பெருமாளே அடிமைக்கு உறுப்பாக ஐஸ்வர்யத்தையும் கொடுத்தார் –
ஆகையால் திருவடி நிலையை முன்னிட்டு
ஸ்ரீ பரதாழ்வான் நாட்டில் உள்ளாரை நியமித்து இருந்தால் போலே
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தமாக அவதீர்ணரான ஸ்ரீ பெருமாளுடைய நியோகத்தாலே
மட்டுப்படாத ராக்ஷஸரை வழிப்படுத்தி
நடத்துகைக்காக ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராஜ்யத்தை இசைகையால்
இதுவும் ஆஞ்ஞ அநு பாலனம் ஆகையால் கைங்கர்ய கோடியிலே அந்வயித்தது –
இவர் தமக்கு இசைவு இன்றிக்கே இருக்கப்
பெருமாளுடைய அநதிலங்க நீயமான சப்த பூர்வக சாசனத்தாலே
ராஜ்யம் பண்ணினார் என்னும் இடம்
ஸ்ரீ பெருமாள் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளுகிற போது
விடை கொடுத்த பாசுரத்தாலே வெளியிடப்பட்டது –
யாவத் பிரஜா தரிஷ்யந்தி தாவத் த்வம் வை விபீஷண
ராக்ஷ சேந்த்ர மஹா வீர்ய லங்காஸ்த்த த்வம் தரிஷ்யசி
சாபிதஸ் த்வம் சகித்வேந கார்யம் தே மம சாசனம்
ப்ரஜாஸ் ஸம்ரக்ஷ தர்மேண நோத்தரம் வக்தும் அர்ஹஸி –உத்தர -108-27-/29-என்று
மிறுக்கோடே இறே ஸ்ரீ பெருமாள் இவரை இராஜ்யத்தில் இருக்க இசைவித்தது –
இப்படி இவன் அநந்ய ப்ரயோஜனாகையாலே இறே இவனுக்குத் தம்மிலும் சீரிய
ஸ்ரீ கோயில் ஆழ்வாரை எழுந்து அருளுவித்துக் கொடுத்தது –
இப்படி அன்றிக்கே
ஆபாத ப்ரதீதி பக்ஷத்தாலே இவன் ஐஸ்வர்த்தியானாலும்
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதம் சந
அபயம் சர்வம் பூதேப்யோ ததாத் ஏதத் விரதம் மம –யுத்த -18-33- என்று
பொதுவான பாசுரங்களாலே
சரண்ய அபிப்ராயத்தைப் பார்த்தால்
ப்ரபத்தியானது சாமாந்யேந மோக்ஷ பர்யந்த சகல புருஷார்த்த சாதனம்
என்னும் இடம் தெளியலாம் –
பிரகரண தாத்பர்யம் என்னும் நாலாம் அதிகாரம் முற்றிற்று –
——————
சரண்ய சீல பிரகாசம் என்னும் ஐந்தாம் அதிகாரம் –
பரத்வ ஸுலப்ய யுக்தத்வம் -சர்வ லோக சரண்யாய ஸ்லோகார்த்தம் -த்வம் ஹி ஸ்லோகார்த்தம் –
அத ராம ஸ்லோகார்த்தம் -மித்ர பாவேந ஸ்லோகார்த்தம் –
பரத்வ ஸுலப்ய யுக்தத்வம் –
இப்படித் தன் அபிமத சித்திக்காக சரணாகதனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் –
சர்வ லோக சரண்யாய —யுத்த -18-4-என்கிற அர்த்தத்தை –
ராகவாய மஹாத்மநே-என்று
ஸுலப்யத்தாலும்
பரத்வத்தாலும் சாதிக்கிறான்
த்ருணம் ஸூலபமே யாகிலும்
ஒன்றுக்கும் உறுப்பு அல்லாமையாலே அநாதரணீயம் –
ஸூ மேரு ஆதரணீயமே யாகிலும்
துர்லபம் யாகையாலே அநுப யுக்தம் –
ஆகையால்
பரத்வமும்
ஸுலப்யமும் அபேக்ஷிதம் –
——–
சர்வ லோக சரண்யாய–ஸ்லோகார்த்தம்
சர்வ லோக சரண்யாய –
உங்களுக்குத் போலே எனக்கும் ஸ்ரீ பெருமாள் பக்கலிலே கூறு உண்டு என்கிறான் –
அங்கன் அன்றிக்கே
யாவன் ஒருவனோடு ஒரு குடல் துவக்காலே நானும் கூட உங்களுக்குக்
கல்லும் தடியும் எடுக்க வேண்டும்படியாய் இருக்கிறேன் –
அப்படியே மஹா அபராதனான ராவணன் தனக்கும் கூட
ஸ்ரீ பெருமாள் சரண்யராய்க் கிடிகோள் இருப்பது –
இப்படிப் பொதுவான சரண்யன் விஷயத்தில்
ருசி இல்லாமையால் துராத்மாவான ராவணன்
தன் கூறு இழக்கிறான் அத்தனை
ராகவாய மஹாத்மனே -என்று பத த்வய
சமபி வ்யாஹாரத்தாலே
நிலை வரம்பில் பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம் -என்கிறபடியே
அவதார தசையில்
பர தசையில் காட்டிலும் அதிசயிதமான மஹாத்ம்யத்தைச் சொல்லுகிறான் –
ராகவாய
ஸ்ரீ பெருமாளுக்கு சரணாகத ரக்ஷணம் ரகு முதலாகப் போருகிற குல தர்மம் அன்றோ
மஹாத்மநே
கடலைக் கையிட்டு இறைத்து முடிய ஒண்ணாதாப் போலே விசேஷித்துச் சொல்ல முடிய
ஒண்ணாது இம் மஹாத்ம்யம்
இவ் வவதார தசையில் உண்டான நிரதிசய மஹாத்ம்யத்தைப்
பர தார தர்சன பராங்முகரான ஸ்ரீ பெருமாள் திரு முன்பே நின்று
கதஞ்சித் அஹம் ஆகத–ஆரண்ய -31-2- என்கிறபடியே
பெண்ணுடை உடுத்து உருமாறி நான் ஒருவனும் தப்பித் போந்தேன் -என்று
ராவணனுக்கு ஜனஸ்தான வ்ருத்தாந்தத்தைச் சொன்ன
அகம்பனன் வாக்யத்தாலே மகரிஷி வெளியிட்டான் –
அஸாத்ய குபிதோ ராமோ விக்ரமேண மஹா யஸா
ஆப காயா ஸூ பூர்ணாயா வேகம் பரி ஹரேச்சரை
சதா ராக்ரஹ நக்ஷத்ரம் நபஸ் சாப்யவ ஸாதயேத்
அசவ் ராமஸ்து சீதந்தீம் ஸ்ரீ மாநப் யுத்தரேத் மஹீம்
பித்வா வேலாம் சமுத்ரஸ்ய லோகாநாப் லாவயேதி மாந்
வேகம் வாபி சமுத்ரஸ்ய வாயும்வா விதமேச்சரை
ஸம்ஹ்ருத்ய வா புநர் லோகாந் விக்ரமேண மஹா யஸா
சக்தஸ் வா புருஷ வ்யாக்ர ஸ்ரஷ்டும் புநரிமா பிரஜா
ந ஹி ராமோ தசக்ரீவ சக்யோ ஜேதும் த்வயாயுதி
ரக்ஷஸாம் வாபி லோகேந ஸ்வர்க்க பாபஜநைரிவ –ஆரண்ய -31-23-/24-/25-/26-27-என்கிறபடியே
ராவண கோஷ்டியிலே அவனுக்கு ஆப்தரானவர்கள்
ப்ரஸித்தமாக்கின மஹாத்ம்யம் இது
ஸ்ரீ பெருமாளுடன் பொருது இளைத்துக் கலங்கின ராவணன்
தெளிந்து தன் தேரை மீட்டுக் கொண்டு
போன சாரதியை வெறுத்துச் சொல்லும் போதும்
சத்ரோ ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்சனீயஸ்ய விக்ரமை -106-6–என்று மேலே
இவ்வாதார மஹாத்ம்யத்தைச் சொல்லக் கடவன் இறே
இப்படி ஸ்ரீ விபீஷண ஆழ்வான் –
மஹாத்மநே-என்றும் –
ராகவாய -என்றும் சுருங்கச் சொன்ன பரத்வமும் ஸுலப்யமும்
மேலே முதலிகள் பாசுரத்தாலும் வெளியிடப்பட்டது -எங்கனே என்னில்
அஞ்ஞாதம் நாஸ்திதே கிஞ்சித் த்ரிஷு லோகேஷு ராகவ
ஆத்மாநம் பூஜயந் ராம ப்ருச்சஸ் யஸ்மாந் ஸூஹ்ருத்தயா –யுத்த -17-33-/34-என்றார்கள் –
இவ் வர்த்தம் தன்னையே
த்வம் ஹி சத்யவ்ரத ஸூரோ தார்மிகோ திருட விக்ரம
பரீஷ்ய காரீ ஸ்ம்ருதி மாந் நிஸ்ருஷ்டாத்மா ஸூஹ்ருத் ஸூ ச –என்று விவரித்தார்கள்
————–
த்வம் ஹி ஸ்லோகார்த்தம்
அத ராம ஸ்லோகார்த்தம்
த்வம் ஹி -என்கிற இத்தால்
மேலே சொல்லப்படுகிற குணங்களுக்கு எல்லாம் அதிசயவஹமான
ஸ்வரூப வை லக்ஷண்யம் சொல்லுகிறது –
பொற்றாமரைப் பூவின் பரிமளத்திற்கு அல்லாத தாமரைப் பூவின் பரிமளத்தைக் காட்டில்
ஆஸ்ரய வை லக்ஷண்யத்தாலும் அதிசயம் உண்டாய் இருக்கும் இறே
இவ்வர்த்தத்தை
குணாயத்தம் லோகே குணிஷு ஹி மதம் மங்கள பதம்
விபர் யஸ்தம் ஹஸ்தி ஷிதிதர பதே தத் த்வயி புந
குணா சத்யா ஞான ப்ரப்ருத்ய உத த்வத் கத தயா
ஸூபீ பூயம் யாதா இதி ஹி நிரணைஷ்ம ஸ்ருதிவசாத் –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் —11-என்கிற ஸ்லோகத்தில்
குணங்கள் தேவரீரை அடைந்து மங்களத் தன்மையை அடைந்தன என்று உபபாதித்தார்கள் –
சத்ய விரத-
சர்வ லோக சரண்யரான தேவரீருடைய சரணாகத ரக்ஷண விரதத்தை
ராவண பர்யந்தமாக
எவ் விஷயத்திலே விலக்கலாம்
ஸூர-
இவ் விரதத்துக்கு விரோதிகளை யதார்ஹமாகத் தேவரீர் அமோகங்களான
அம்புகளாலே யாதல்
உத்தரங்களாலே யாதல் வெல்லும் சேவகம் வேறு ஒருவருக்கு உண்டோ
தார்மிக
சரணாகத ரக்ஷணத்தில் நிலையுடையீர் தேவரீரே அன்றோ
திருட விக்ரம
ஆஸ்ரித அர்த்தமான தேவருடைய பராக்கிரமத்தை விரோதிகளால் ஆதல் ஆஸ்ரிதர் பக்கல்
குற்றம் காட்டும் பரிவரால் ஆதல் விலக்கப் போமோ
பரீஷ்ய காரீ
சர்வஞ்ஞராய் அஷ்ட அங்கையான புத்தியால் ஆராய்ந்து செய்து அருளும் காரியங்களுக்கு
அடியோங்களைக் கேட்க வேண்டுவது உண்டோ
ஸ்ம்ருதி மாந்
தேவரீர் விசிஷ்டாதிகளான ஞான விருத்தர்களுக்கு –
ராம குருக்கள் -என்று ஒரு தரம் கொடுக்கைக்காக
அவர்கள் பக்கல் கேட்டு அருளின அர்த்தங்களில் அவசரங்களில் உதவாதது உண்டோ
அன்றிக்கே
ந ஸ்ம்ரத்ய அபகாராணாம் சதமபி யாத்மவத்த்யா
கதஞ்சித் உபகாரேண க்ருதேந ஏகேந துஷ்யதி–அயோத்யா -1-11- என்னும்படி யன்றோ
தேவரீருடைய க்ருத்தஜ்ஜதை இருக்கும் படி
நிஸ்ருஷ்டாத்மா ஸூஹ்ருத் ஸூச
வரத சகலமேதத் சமஸ்ரிதார்த்தம் சகர்த்த –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -65-என்னும்படி
தேவரீருடைய
ஆத்மாத்மீயங்கள் எல்லாம் ஆஸ்ரிதரான அடியோங்கள் இட்ட வழக்காக்கி யன்றோ தேவரீர் வைப்பது –
ஆகையால் தாக்ஷிண்ய பர தந்தரரான தேவரீர் திரு உள்ளத்தால் கோரின -கோலின -காரியத்தைக்
காபேயரான எங்களையும் இசைவித்துக் கொண்டு செய்து அருளுவதற்காக அன்றோ
எங்களைக் கேட்டு அருளுகிறது -என்று இப்படி ஸ்ரீ பெருமாளைக் கொண்டாடி –
பரிவாலே கலங்கின –
அங்கத -சரப -ஜாம்பவத்-ப்ரப்ருதிகளான முதலிகள்
சில ஹேத்வ ஆபாசங்களை ஹேதுக்களாய்க் கொண்டு
ஸ்ரீ விபீஷண பரிக்ரஹத்தைக் கடுக இசையாது ஒழிய –
தத்துவ வித்தாய் சன்மந்திரியான
ஸ்ரீ திருவடி அவர்கள் சொன்ன ஹேத்வ ஆபாசங்களை எல்லாம் பிரதி ஷேபித்து ஸூபரீஷிதங்களான
நிர்த்தோஷ குணங்களாலே ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பரிக்ராஹ்யன் என்று விண்ணப்பம் செய்தான்
அவ்வளவில் ஸ்ரீ பெருமாள் சரணாகதனை நலியச் சொல்லுகிற திரளில்
இவன் பரிக்ராஹ்யன் என்று சொல்லுவாரையும் பெற்றோமே -என்று திரு உள்ளம் உகந்து
அத ராம ப்ரசன்னாத்மா ஸ்ருத்வா வாயூ ஸூ தஸ்ய ஹா
ப்ரத்ய பாஷத துர்த்தர்ஷஸ் ஸ்ருதவான் ஆத்மநி ஸ்த்திதம் –யுத்த -18-1-என்கிறபடியே
அகம்ப நீயமான ஸ்வ மதத்தை அருளிச் செய்யத் தொடங்கினார் –
ஸ்ரீ விபீஷணன் ச தோஷன்-ஆகையால் சங்க நீயன் -என்ற அங்கதாதி மதங்களும்
இவன் நிர்தோஷன் ஆகையால் பரிக்ராஹ்யன் -என்கிற ஸ்ரீ திருவடி மதத்துக்கும்
அவிருத்தமாக –
ச தோஷமே யாகிலும் சரணாகதன் என்று பேரிட்டு வந்தவன் பரிக்ராஹ்யன் -என்று
தாம் அருளிச் செய்யப் புகுகிற மதம் அவ்வோலகத்திலே சர்வ விருத்தம் ஆகையால்
இத்தை எல்லாரும் கூட அநாதரிப்பார்கள் என்று பார்த்து அருளி –
மமாபி த விவஷாஸ்தி காசித் பிரதி விபீஷணம்
ஸ்ரோதும் இச்சாமி தத் சர்வம் பவத்பி ஸ்ரேயஸி ஸ்த்திதை -18-2-என்று
நம்முடைய மதத்தை நாமும் –
நாம் முன் – சொல்ல நினையா நின்றோம் –
அதனுடைய அனுஷ்டானம் பின்பு பார்த்துக் கொள்ளுகிறோம்-
நமக்குப் பரிவரான நீங்கள் நாம் சொல்லுகிற வாக்கியத்தை ஸ்ரீ விபீஷணனுடைய சரணாகதி வாக்கியம்
பட்டது படுத்தி அநாதரியாதே கேட்டுத் தர வேணும் -என்று இரந்து அருளினார்
இப்படி முதலிகள் செவி தாழ்க்கும்படி இரந்து தம்முடைய ஸ்வ பாவம் சொல்லுவாரைப் போலே
ஸ்வ சித்தாந்தத்தை சமீஸீனமான ஹேதுவோடே சுருங்க அருளிச் செய்கிறார் –
மித்ர பாவேந ஸ்லோகார்த்தம் –
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேதத கர்ஹிதம் -18-3-என்று
ஸ்ரீ பெருமாள் தம்முடைய சீர்மையாலே ஆஸ்ரிதனைத் தம்மோடு ஓக்கப் பார்த்து அருளி
சரணாகதன் என்று புல்லிதாகச் சொல்ல மாட்டாமல் –
மித்ர பாவேந -என்று அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ பெருமாளோடே துல்ய சீலையான ஸ்ரீ பிராட்டியும்
விதித ஸஹ தர்மஜ்ஞ சரணாகத வத்ஸல
தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதம் இச்சசி -ஸூந்தர -21-20- என்று
சரணாகதி சப்த விஷயத்தில் மைத்ரீ என்று அருளிச் செய்தாள் இறே
மித்ர பாவேந –
மித்ரத் வேந -இத்தால் ஆனுகூல்ய சங்கல்பாதி பூர்வகமாகப் பண்ணின
ஆத்ம ரஷா பர சமர்ப்பணம் ஸூசிதம் ஆகிறது
அங்கன் அன்றிக்கே
மித்ர பாவனையால் என்னவுமாம் –
உள்ளில்லையே யாகிலும் சரணாகதன் என்னும் பேரிட்டு வந்தாரை நாம் விட மாட்டோம் என்கிறார்
இப்படி வ்யாஜ மாத்ர சாபேஷாரான ஸ்ரீ பெருமாள் திரு உள்ளத்தை அடி ஒற்றி
பாபீய ஸோபி சரணாகதி சப்த பாஜோ நோ பேஷணம் மம தவோசித மீஸ்வரஸ்ய
த்வத் ஞான சக்தி கருணா ஸூ ஸதீஷு நைவ பாபம் பராக்ரமிது மர்ஹதி மாமகீநம் –ஸ்ரீ அதிமானுஷ ஸ்தவம் -61-என்று
பூர்வர்கள் விண்ணப்பம் செய்தார்கள் இறே
ஸம் ப்ராப்தம்
இவன் ராவண க்ராஹ க்ருஹீதனாய்க் கடலுக்கு அக் கரைக்கே நின்று
ராகவம் சரணம் கத -என்றானாகில்
நாம் அதி த்வரையோடு வைநதேய கதியாலே
அக் கரைக்கே செல்ல வேண்டி இருக்க
நாம் இருந்த இடத்தில்
பங்கோரு பரி கங்கா நிபதன நியாயத்தாலே வந்த இவனை நாம் விடும்படி என்
ஸம்ப்ராப்தம்
சம்யக் பிராப்தம் -இங்கு சம்யக்த்வமாவது
த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ஸ் ச -17-14-
பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச
பவந்தம் மே ராஜ்யம் ச ஜீவிதம் ச ஸூகாநி ச -19-5- என்கிறபடியே
ஹேய உபாதேய விபாகம் பண்ணிக் கழிக்க வேண்டுவன கழித்துக் கைக்கொள்ள வேண்டுவது கைக்கொண்டு
சரணாகதன் என்கிற யுக்தி மாத்திரமே பற்றாசாகப் பற்றி
அதி சங்கை தீர்ந்து அந்தரங்கரைப் புருஷகாரமாகக் கொண்டு முன்னிட்டு வருகை
ந த்யஜேயம்
இவன் பரித்யாஜ்யனோ -பரிக்ராஹ்யனோ -என்கிற மீமாம்சை எதற்கு உறுப்பாகிறது –
சரணாகதன் என்கிற சப்தத்தை நாம் செவிப்படுத்தின அவனை விட வல்லோமோ
கதஞ்சன
சரணாகதனுக்குக் குணங்கள் இல்லையே யாகிலும் –
தோஷங்கள் பிரசுரங்களே யாகிலும்
இவனைக் கைக்கொள்ளுகை பரிவரானவர்க்கு அபிமதம் அன்றே யாகிலும்
இவனைக் கைக் கொண்டால்
மேல் த்ருஷ்ட அதிருஷ்ட ப்ரத்யவாய சஹஸ்ரம் உண்டே யாகிலும்
ஒரு படிக்கும் நாம் இவனைக் கை விட மாட்டோம் –
இஸ் ஸ்லோகத்தில் பூர்வ அர்த்தத்தாலே –
உன்னுடையவன் -நான் உனக்கே பரம் -என்று
ஒரு கால் உறவு பண்ணுவது அடியாக ஒரு காலத்தில் இவனை
சர்வேஸ்வரன் விடான் -என்ற ஸ்ருதி வாக்ய அர்த்தம் உப ப்ரும்ஹணம் ஆயிற்று
இப்படி ஒரு படியாலும் சரணாகதனைத் தாம் விட மாட்டாத ஸ்வ பாவத்தை அருளிச் செய்து
முதலிகள் விண்ணப்பம் செய்த பரித்யாஜ்யதா ஹேதுக்களான தோஷங்களுக்கு சாத்யத்தோடு
வியாப்தி இல்லாமையால்
அவை உண்டே யாகிலும் அகிஞ்சித்காரம் என்கிற திரு உள்ளத்தால்
அவர்கள் சங்கித்த தோஷங்களுடைய ஸ்வரூப ஸத்பாவத்தை இசைகிறார் –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்
ஸ்யாத் –
இவ்விடத்தில் அப்யனுஜ்ஜை தோற்றுகைக்காக வாதல் –
சம்பாவனையைப் பற்ற வாதல் –
துஷ்டனையும் சரணாகத சப்த மாத்திரத்தாலே பரிக்ரஹித்தார் என்கிற மஹா குண சித்த்யர்த்தமாக
தோஷ பிரார்த்தனையைப் பற்ற வாதல் -ஸ்யாத் -என்கிறார்
தோஷ -என்கிற
சாமான்ய நிர்த்தேசத்துக்கு நீங்கள் சொன்ன தோஷங்கள் ஆகவுமாம்-
நீங்கள் சொல்லாத சாஷாத் ராவண அதிகதமான தோஷாந்தரங்கள் ஆகவுமாம் -என்று கருத்து –
இத் தோஷங்கள் எல்லாம் பரித்யாஜ்யதா ஹேதுக்களாவது சரணாகத வ்யதிரிக்த விஷயத்திலே என்று
தஸ்ய ஸ்யாத் -என்கிற
சர்வ லோக சரண்யரான ஸ்ரீ பெருமாளுக்குத் திரு உள்ளம் -ஆகையால் இறே
யதிவா ராவண ஸ்வயம் -18-35–என்றும் ராவணன் தன்னைக் குறித்தும்
நஸேச் சரணம் அப் யேஷி -41-66-என்றும் அருளிச் செய்கிறது
சதா மேதத் அகர் ஹிதம்
தேவரீர் ஆர்த்ர ஸ்வபாவர் ஆகையால் துஷ்ட பரிக்ரஹம் பண்ணினால்-
நாட்டிலே சிஷ்டை கர்ஹை பிறவாதோ-என்று முதலிகளுக்குக் கருத்தாக
அதற்கும் உத்தரம் அருளிச் செய்கிறார் –
சதா மேதத் அகர் ஹிதம் – என்று –
அகர்ஹிதம்
கர்ஹிதா தந்யத் –பூஜிதம் -என்றபடி –
நாம் சரணாகதனைத் தோஷம் பாராதே பரிக்ரஹித்தால்
வத்யனே யாகிலும் சரணாகதனை அழியக் கொடுக்கலாகாது -என்கிற ஸ்ருதி அர்த்தத்தை அறிந்து
அனுஷ்ட்டித்துப் போருகிற வசிஷ்ட பகவான் விச்வாமித்ர பகவான் உள்ளிட்ட சத்துக்கள்
நாம் பண்ணின தர்ம உபதேசம் பலித்தது என்று கொண்டாடும்படியாம் –
நீங்கள் சொல்லுகிறபடியே கேட்டு நாம் கை விட்டால் அவர்கள் நம்மை கர்ஹிக்கும் படியும் –
ஆகையால் நமக்குக் கார்யம் தப்பாமைக்கு நீதி சொல்லப் பரிவும் நிரப்பமும் உடைய நீங்கள்
வசிஷ்ட விச்வாமித்ர ப்ருஹஸ்பதி ரகு சிபி ப்ரப்ருதிகளான சத்துக்களும் நெஞ்சாறல் படாமே
நம் ஸ்வ பாவத்தையும் குலையாதே நம்மைப் பெறப் பாருங்கோள்-என்று திரு உள்ளம்
சரண்ய சீல பிரகாசநம் என்னும் ஐந்தாவது அதிகாரம் முற்றிற்று –
————-
சரண்ய வைபவம் பிரகாசம் -என்னும் ஆறாவது பிரகாரம் –
ஸ்ரீ விபீஷண விஷயே ஸ்ரீ ஸூக்ரீவ அதி சங்கா நிவரணம் –
சரண்யத்வ உபயுக்த குண பூர்ணத்வம்
ஸ்ரீ விபீஷண விஷயே ஸ்ரீ ஸூக்ரீவ அதி சங்கா நிவரணம் –
இப்படி ஸ்ரீ பெருமாள் அருளிச் செய்த வார்த்தையைக் கேட்டு ஸ்ரீ மஹா ராஜர்
கூட ஹ்ருதயனான ராக்ஷஸனுடைய அநு பிரவேசத்தினாலே என் விளையப் புகுகிறதோ என்று
ஸ்ரீ பெருமாள் பக்கல் பரிவாலே கலங்கி பின்பு
கோ நாம ச பவேத் தஸ்ய யமேஷ ந பரித்யஜேத்
ஈத்ருசம் வ்யஸனம் பிராப்தம் பிராதரம் ய பரித்யஜேத் -18-5-என்று
ஸ்ரீ விபீஷண தவ்ர் ஜன்யாதிகளைக் காட்டி
ஸ்ரீ பெருமாளை விலக்கப் பார்க்க –
ஸ்ரீ பெருமாள் ராஜ நீதி மரியாதையாலே உத்தரம் அருளிச் செய்தார் –
பின்னையும் ஸ்ரீ மஹா ராஜர் -ஸ்ரீ பெருமாளுடைய
ப்ரபந்ந பார தந்தர்ய காஷ்டையாலே இறே
நாம் விண்ணப்பம் செய்த வார்த்தை திரு உள்ளத்தில் படாதே இருக்கிறது -என்று புத்தி பண்ணி
ஒரு ப்ரபத்திக்கு இரண்டு பிரபத்தி பண்ணுவோம் -என்று
ஸ்ரீ இளைய பெருமாளையும் கூட்டிக் கொண்டு
திருவடிகளில் விழுந்து ஸ்ரீ பெருமாள் திரு உள்ளத்திலே தரிக்க வேணும் என்று பார்த்து –
உம்மளவில் அன்றிக்கே
உமக்குத் தோழனான என் விஷயத்திலும்
பஹிஸ் சர பிராண பூதரான ஸ்ரீ இளைய பெருமாள் விஷயத்திலும்
இவன் பிரச்சன்னனாய் நின்று நலியும் கிடீர் –
ஆகையால் இவன் வத்யன் என்று விண்ணப்பம் செய்ய –
இத்தைக் கேட்ட பின் ஸ்ரீ பெருமாள்
ஸூக்ரீ வஷ்ய து தத் வாக்யம் ராம ஸ்ருத்வா விம்ருஸ்யச —
தத ஸூபதரம் வாக்யம் உவாச ஹரி புங்கவம் -18-21-என்கிறபடியே
கலக்கம் அடியாக ஸ்ரீ மஹாராஜர் ஸ்ரீ இளைய பெருமாளையும் கூட்டிக் கொண்டு
பண்ணின சரணாகதியைக் காட்டிலும் தெளிவு அடியாக வந்த
ஸ்ரீ விபீஷணன் சரணாகதி ஒன்றுமே பிரபலம் என்று அறுதியிட்டு
ஸ்ரீ மஹா ராஜருடைய அச்சம் தெளிய வேண்டும் என்று பார்த்து அருளி –
தோழனாரே ஸ்ரீ விபீஷணன் துஷ்டன் என்றும்
அதுஷ்டன் என்றும் பண்ணுகிற விசாரம் ஏதுக்காகப் பண்ணுகிறீர்
தம் அளவில் ராக்ஷஸன் என்கிற இது ஏன் என்பது
நம் அளவிலாதல்
உம்மளவில் யாதல் –
தம்பி அளவில் யாதல் -இவன் ஒரு பாதகம் செய்கைக்கு பிரசங்கம் என்
நம்முடைய பூந்தோட்டத்தில் ஜாதி மாத்ர வானரங்களுக்கும் இவன் ஒரு குற்றம் செய்ய வல்லனோ
நாம் நினைத்த போது பிசாசங்கள் அசுரர்கள் யக்ஷர்கள் பிருத்வியில் உள்ள ராக்ஷஸர்கள் எல்லாரும்
திரண்டு வந்தாலும் ஒரு அங்குளி அக்ரத்துக்குப் பற்றுமோ –
அஞ்சலியாகிற அஸ்திரம் எடாதார்க்கு நம்மை வெல்ல விரகுண்டோ-என்று
தம்முடைய சர்வ சக்தித்வத்தை வெளியிட்டு
மஹா ராஜருடைய அச்சத்தைக் கழிக்கிறார் –
ஸூ துஷ்டோ வாப்ய துஷ்டோ வா கிமேஷ ரஜ நீசர
ஸூஷ்ம மப்யஹிதம் கர்த்தும் மமா சக்த கதமசந
பிஸாஸாந் தானவாந் யஷாந் ப்ருதிவ்யாம் யே ச ராக்ஷஸாந்
அங்குள் யக்ரேண தாந் ஹாந்யாம கிச்சன் ஹரி கணேஸ்வர யுத்த -18-22-/23-
பண்டு நாம் உமக்கு காட்டின பிரபாவத்தை வானர ராஜ்யத்திலே புக்கவாறே மறந்தீரோ
மஹாத்மநே -என்று
ஸ்ரீ விபீஷணன் நினைப்பித்ததும் நெஞ்சில் பட்டது இல்லையோ –
எதிரிகள் விரல் கவ்வும்படி காணும் -நம்முடைய யங்குள் யக்ர வியாபாரம் –
நகங்கள் இறே ஸ்ரீ பெருமாளுக்கு ஸ்ரீ நரஸிம்ஹ தசையில் பஞ்சாயுதங்கள்
சரண்யத்வ உப யுக்தமாக ஸ்ரீ பகவச் சாஸ்த்ரங்களிலும் அபியுக்தர் வாக்யங்களிலும்
ஸர்வஜ்ஜோ அபி ஹி விஸ்வேச சதா காருணிகோ அபி சந் –ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -17-8-என்றும்
த்வத் ஞான சக்தி கருணா ஸூ ச தீஷு –ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம் -61-என்றும்
சங்க்ருஹீதமான சரண்ய குண த்ரயமும் இப்பிரகரணத்தில் விவஷிதம் -எங்கனே என்னில் –
அடியிலே –
அஞ்ஞாதம் நாஸ்தி தே கிஞ்சித் –17-33-என்று
சர்வஞ்ஞத்வம் சொல்லிற்று
மத்யே
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன -18-3-என்று
பரம காருணித்தவம் சொல்லிற்று
இவ்விடத்தில்
அங்குள் யக்ரேண தாந் ஹந்யாம் இச்சன்–18-23-என்று
சர்வ சக்தித்வம் சொல்லிற்று – –
இப்படி மானுஷ பாவத்தில் நின்றும்
ராம சப்தம் ஈரரசு படாதபடி பண்ணின மஹா வீரன் என்னும் செருக்காலே
மதியாமே பேசுகிறாப் போலே
தம்முடைய ஈஸ்வரத்வ
ரக்ஷகத்வ ஞாபக
சர்வ சக்தித்வத்தாலே
சரண்யத்வ உபயுக்த சர்வ குண சம் பூர்ணதையை அருளிச் செய்து
ஸ்ரீ மஹா ராஜ ப்ரப்ருதிகளுடைய அச்சம் தீரும்படி பண்ணி அருளினார்
சரண்ய வைபவ பிரகாரம் என்னும் ஆறாவது அதிகாரம் முற்றிற்று
—————–
பரம தர்ம நிர்ணயம் என்னும் ஏழாவது அதிகாரம் —
சரணாகதியின் பரம தர்மத்வம் –
ஸ்ரூயதே ஹி ஸ்லோகார்த்தம் —
வ்யாக்ர வானர சம்வாதம் –
கண்டு காதா விவரணம் –
சரணாகத பரித்யாகே த்ருஷ்ட ப்ரத்யவாய நிரூபணம் –
அத்ருஷ்ட ப்ரத்யவாய நிரூபணம் – ஸ்வ மத பிரகாசநம்
சரணாகதியின் பரம தர்மத்வம் –
இப்படித் தம்முடைய ஸ்வ பாவத்தையும் ப்ரபாவத்தையும் வெளியிட்டு –
மேல் -இவன் துஷ்டனே யாகிலும் –
நாம் அசக்தரே யாகிலும்
பிராண பர்யந்தமாக சரணாகத சம்ரக்ஷணம் பண்ண வேண்டும் –
இதுவே பரம தர்மம் என்னும் இடத்தைக்
கபோத உபாக்யான ஸஹ க்ருத
கண்டு காதா விதி முகத்தால் அருளிச் செய்கிறார் –
———-
ஸ்ரூயதே ஹி ஸ்லோகார்த்தம்
ஸ்ரூயதே ஹி கபோதேந சத்ரு சரணமாகத
அர்ச்சி தஸ் ச யதா நியாயம் ஸ்வைஸ் ச மாம் ஸை நிமந்த்ரித –
ஸ்ரூயதே-என்கிற இத்தால்
ஸ்ருணு ராஜந் கதாம் ஏதாம் சர்வ பாப பிரணாசி நீம்
ந்ருபதே முசுகுந்தஸ்ய கதிதா பார்க்க வேண யா -இதிஹாச சமுச்சயம் -8-5-என்றும்
ய இதம் ஸ்ரூணுயான் நித்யம் படே தாக்யா ந முத்தமும்
வி முக்த சர்வ பாபேப்யோ ஸ்வர்க்க லோகம் ச கச்சதி –இதிஹாச சமுச்சயம் 8-5-128–என்றும் சொல்லுகிறபடியே
பாவநத்மத்வத்தாலே சர்வரும் ஆதரித்துக் கேட்க்கும் படி ஸூசித்தம் ஆகிறது
ஸ்ரூயதே
விப்ர கீர்ணங்களாய் அநந்தங்களான ஸ்ருதி களை சாஷாத் கரிக்க வல்லாருக்கு இதுவும்
ஒரு மூலையில் காணலாய் காணும் இருப்பது
ஸ்ரூயதே
பார்க்கவாதிகள் சொல்ல முசுகுந்தாதிகள் கேட்கலாம் அத்தனை போக்கி எத்தேனையேனும்
காருணிகராய் இருப்பாராலும் இப்படி அனுஷ்டிக்கை அசக்யம் காணும்
ஹி
அதி பிரசித்தம் ஆகையாலும்
அந்ய விருத்தம் ஆகையாலும்
இவ்விருத்தாந்தம் எங்களுக்கு முன்னே நீங்களும்
கேட்டுப் போருமது அன்றோ –
நம் பக்கல் பரிவாலே வந்த கலக்கத்தை விட்டு நீரே பிரதி சந்தானம் பண்ணிப் பாரீர்
கபோதேந
ஒரு த்ரை வர்ணிகனும் அன்று –
வர்ண மாத்திரத்தில் பிறந்தான் ஒருவனும் அன்று –
சாமான்ய தர்ம யோக்ய மனுஷ்ய ஜாதியனும் அன்று –
ஒரு திர்யக் செய்த படி இது –
இப்படி இத் தர்மம் திர்யக்குகளுக்கும் கூட ரக்ஷணீயமுமாய் இருந்தது
தாம் தர்ம ப்ரவர்த்தகரான நாம் இருந்து
சரணாகதனை வத்யன் என்பதும் –
த்யாஜ்யன் என்பதும் ஆகா நின்றோம்
கபோதேந-
ஒற்றைக் கபோதம் ஆகையால் விலக்குகைக்கு ஈடான பரிவர் இல்லாமையாலும் –
அர்த்தம் -என்று சுருதியில் ஓதுகிறபடியே ஸஹ அதிகாரத்தில் தர்மியிலே சொருகி
ச்ருணு சாவஹித காந்த யத்த வாஹ்யாம் யஹம் ஹிதம்
பிராணைர் அபி த்வயா நித்யம் சம் ரஷ்ய சரணாகத –என்று
தர்மத்தில் பிரேரிப்பிக்கிற
ஸஹ தர்ம சாரிணீ சந்நிதியாலும்
அக் கபோதம் சடக்கென சரணாகத ரக்ஷண தர்மம்
அனுஷ்ட்டிக்கப் பெற்றது இறே
சத்ரு
கபோதத்திற்கு வேடன் தானே பார்ய அபஹாரம் பண்ணின சத்ருவாய் இருக்கும் –
நமக்கு ஸ்ரீ விபீஷணன் அப்படிப்பட்ட சத்ரு இருந்த ஊரில் நின்றும் வந்தான் அத்தனை அன்றோ –
சரணமாகத-
கபோதம் இருந்த மரத்தடியில் வேடன் யாதிருச்சிகமாக வந்தான் அத்தனை
ஸோ அஞ்சலிம் சிரஸா க்ருத்வா வாக்யமாஹ வனஸ்பதிம்
சரணம் ஹி கதோஸ்ம் யத்ய தேவதாம் த்விஹ வாசி நீம் –என்று
வனஸ்பதி தேவதையைக் குறித்து சரண சப்தம் பிரயோகித்தான் ஆகிலும்
இக் கபோதத்தைக் குறித்து சரண சப்தம் பிரயோகித்திலன்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் புத்ர தாராதிகள் எல்லாம் விட்டு –
ராகவம் சரணம் கத -என்று நமக்கு கூடஸ்தனான ரகு
ரகு ராக்ஷஸ சம்வாதத்திலே சரணாகத சம்ரக்ஷணம் பண்ணின படியை நினைப்பித்துக் கொண்டு
நம்மை யதாக்ரமம் சரணாகதனானான்
அர்ச்சித ச
வேடனாகையாலே பஷி ஜாதிக்கு ப்ரக்ருதியா சத்ருவுமாய் –
விசேஷித்து தன் பார்யா அபஹர்த்தாவுமான இவன்
பட்டது படுகிறான் என்று இருப்புதல்-
அவசரத்தில் நலிய விரகு தேடுதல் பிறப்பியமாய் இருக்க
அதிதியைத் தேவனாக விதிக்கிற ஸ்ருதியின் படியே தேவர்களை ஆராதிக்கும் திறத்தில்
அக்னி முகமாக வன்றோ அர்ச்சித்தபடி
நாமும் சரணாகதனை
வாத்யதாம் ஏஷ தீவ்ரேண தண்டேந ச சிவைஸ் ஸஹ என்று
அநு பந்தி பர்யந்தமாக நன்றாக அர்ச்சியா நின்றோம்
யதா நியாயம்
சீதத்தாலும் ஷூத்தாலும் ஆர்த்தனான வேடனுக்கு அபேக்ஷிதங்களான
அக்னி ஆநய நாதிகளைப் பண்ணி
நல் விருந்து வந்தால் ஆதரிக்கும் படி தப்பாதே
அந்தர் விஷாத கந்தம் இல்லாதே அக் கபோதம் ஆதரித்த படி –
யதா நியாயம்
இன் சொல் முதலாக பிராண பர்யந்தமாக சரணாகத விஷயத்தில்
சக்தி வஞ்சநம் பண்ணாதே செய்த
பரிவு எல்லாம் அளவாய் இருக்கும் அத்தனை போக்கி மிகுதி உண்டோ
ஸ்வஸை மாம்ஸை நிமந்த்ரித
புறம்பே சில ஆகாரங்களை எடுத்துக் கொண்டு வந்து இட்டது அன்று
தன்னுடையதாக த்ரவ்யாந்தரங்களிலே சிலவற்றை இட்டு உபசரித்ததும் அன்று –
விவேகம் இல்லாதார் தானாக அபிமானித்து இருக்கக் கடவதாய்-
விவேகிகளுக்கும் ஆத்யமான தர்ம சாதனம் என்று
பேணக் கடவதான சரீரத்தின் மாம்சங்களாலே அன்றோ அவனை
உபசார பூர்வகமாக நல் விருந்தூட்டப் ப்ரவர்த்தித்தது
மாம்ஸை –
ஏக தேசங்களை பிரித்து இட்டதன்று –
கடுகப் பசி தீர வேண்டும் என்று வேடனுக்குத் தனக்குள்ள அவயவங்கள் ஒன்றும்
சேஷியாதபடி சர பங்காதி தாபஸரைத் போலே
இது ஒரு மஹா தபஸ்ஸாக நினைத்து நெருப்பிலே காணும் விழுந்தது –
இப்படி இஸ் ஸ்லோகத்தில் சொன்ன அர்த்தங்களைத் தம்முடைய அனுஷ்டானத்துக்கு
ஹேதுவாக அனுவதித்துக் கொண்டு –
அப்படியானால் நமக்கு சரணாகதி ரக்ஷணம் கைம்முக நியாய சித்தம் அன்றோ
என்று அருளிச் செய்கிறார்
சஹி தம் பிரதி ஜஹ்ரஹா பார்யா ஹர்த்தார மாகதம்
காபோதோ வாநர ஸ்ரேஷ்டட கிம் புநர் மாதவிததோ ஜெந
சஹி
அக் கபோதம் நம்மைப் போலே தர்ம அனுஷ்டானம் பண்ணக் கடவ ஜாதிகளில் ஒன்றிலே யாதல் –
சரண்ய வம்சத்தில் யாதல் பிறந்தது அன்று என்னும் இடம் பிரசித்தமாய் அன்றோ இருப்பது
தம்
தன் ஜாதியாலும் விசேஷித்துத் தன் கொடுமையாலும்
கஸ்சித ஷூத்ர சமாசார பக்ஷிணாம் கால சம்மித -என்று பஷி ஜாதிக்காக
விருத்தனாய் காபோதம் இருந்த இடத்திலே
யாதிருச்சிகமாக வந்து விழுந்ததற்கு கபோதத்தைக் குறித்து ஒரு உபாய பிரயோக ரஹிதனாய் –
விபரீத அனுஷ்டானத்திலும் நிலை குலையாதவனாய்
அனுதாப லேசமாதல்
அனுகூல வாத பிரசாங்கமாதல்
இன்றிக்கே கிடீர் அவ்வேடன் இருப்பது –
ச ஹி தம் பிரதி ஜஹ்ரஹா
தன்னை அழிய மாறி அன்றோ அவ் வேடனைக் கைக் கொண்டு ரஷித்தது
பார்யா ஹர்த்தாரம்
முன்பு சத்ரு என்று பொதுவில் அருளிச் செய்ததை அவன் விருத்தியைக் காட்டி விசேஷிக்கிறார்
இப்படியே ராவணன் வந்தாலும் நமக்கு கைக்கொள்ள வேண்டி யன்றோ இருப்பது என்று திரு உள்ளம்
ஆகதம்
இவன் தன்னைக் கைக் கொள்ளுக்கைக்குச் செய்த உபாய அனுஷ்டானம்
கபோதம் இருந்த மரத்தடியில் வந்த அளவே கிடீர் அல்லது
வனஸ்பதி தேவதையைக் குறித்து சரணம் என்று சொன்ன சப்தமும்
கபோதம் என்று கேட்டது இல்லை
காபோதோ
முன்பே கபோத -என்று சொல்லி இருக்க
இரு காலும் இட்டு கபோத என்றது –
சிபியினுடைய சரணாகத ரக்ஷண தர்மம் சொல்லுகிற ஸ்யேந கபோத விருத்தாந்தத்தில் போலே
கபோத வேஷம் கொண்டான் ஒரு தேவனோ ரிஷியோ என்று சங்கியாமைக்காக
இது பூர்வ கர்ம விசேஷத்தால் ஸ்ரீ கஜேந்த்ராதிகளைப் போலே திர்யக்காய் இருக்க
இப்படி தர்ம அனுஷ்டான யோக்யமாய்ப் பிறந்தது –
வாநர ஸ்ரேஷ்டட -வேறேயும்
ஒரு திர்யக் சத்ருவான வேடனை ரஷித்தபடி கேளீர்
————-
வ்யாக்ர வானர சம்வாதம்-
வாநர ஸ்ரேஷ்டட
வானர ஜாதிகளுக்கு முடி சூடின நீர் வ்யாக்ர வாமன சம்வாதம் கேட்டு அறியீரோ –
ஒரு புலி வந்து தொடரத் தான் இருந்த மரத்தடியில் வந்து ஏறின வேடனை
அந்த வ்யாக்ரம் விடச் சொல்ல
இவனை சரணாகதன் என்று வானரம் ரஷித்தது –
அப்போது மரத்தடியை விடாதே கிடக்கிற புலி
இவ் வானராம் தூங்கின அளவில் வேடனைப் பார்த்து –
உன்னை விடுகிறேன் வானரத்தைத் தள்ளித் தர வல்லையோ–என்ன
பாப புத்தியான வேடன் தன்னை ரஷித்த வானரத்தைத் தள்ளின அளவிலே –
வானரத்தைப் பிடித்து உன்னை விடுகிறேன்
தனக்கு உபகாரகனான உன்னைத் தள்ளின வேடனைத் தள்ளித் தர வில்லையோ -என்று
மனுஷ்ய மாம்ச லுப்தமான புலி சொல்ல
தர்ம வித்தான வானரம் ப்ராணாந்த்ய தசை யாகையாலே அஹ்ருதயமாக இசைந்து
புலி விட்டவாறே மரத்திலே எறி சத்ருவான வேடனைப் பின்பும் போக்கற்றுத்
தான் இருந்த மரத்தில் இருந்ததே யடியாக சரணாகதன் என்று ரஷித்தது –
நீர் வானரங்களுக்கு முடி சூடி இருந்தாலும் உங்களுக்கு ஜாதி தர்மம் என்று
பார்த்தாகிலும் கைக் கொள்ள வேண்டாவோ –
வாநர ஸ்ரேஷ்டட –
முதலிகள் கலக்கினால் தெளிவிக்க இருக்கிற நீர் கலங்கலாமோ
வாநர ஸ்ரேஷ்டட
வாலி பதத்தில் இருந்தவாறே உமக்கு சரணாகத பீடை ருசித்ததோ
வாநர ஸ்ரேஷ்டட
வானர மாத்திரம் அல்லீரோ –
ஆதித்யனுடைய புத்ரனுமாய் தர்ம அதர்மங்களை அறிந்தும் இருக்கிற நீர் –
அல்லாத வானரங்களைப் போலே காபேயம் பண்ணப் பெறுவதிரோ –
கிம் புநர் மாதவிததோ ஜெந
கபோதம் செய்தபடி கண்டால் நம் போலிகளுக்குக் கேட்க வேணுமோ –
நாம் சரணாகத ரக்ஷணத்துக்கு கொடி எடுத்த ரகு வம்சத்தில்
ஷஷ்டிர் வர்ஷ சஹஸ்ராணி லோகஸ்ய சரதா ஹிதம்
பாண்ட ரஸ்ய ஆதபத் ரஸ்யச் சாயா யாம் ஜரிதம் மயா –அயோத்யா -2-7-என்று
அறுபதினாயிரம் ஆண்டு
வெண் கொற்றக் குடை தன் நிழல் ஒழிய வேறு ஒரு நிழலில் ஒதுங்காதே லோக ரக்ஷணார்த்தமாகப்
பத்துத் திக்கிலும் தேர் நடத்தி ப்ரசித்தனான தரசரதன் மகனாய் வசிஷ்ட விச்வாமித்ர சிஷ்யனாய்
மஹா யோகியாக ப்ரயக்யாதனான ஜனகனோடு சம்பந்தம் பண்ணின நாம்
ராமோ விக்ரஹவான் தர்ம–ஆரண்ய -37-13 -என்று
உடம்பில் சிஷ்டத்தையா ப்ரஸித்தியை ஏறிட்டுக் கொண்டு
மர்யாதா நாம் ச லோகஸ்ய கர்த்தா காரயிதா ச ச -ஸூந்தர -35-11 -என்கிறபடியே
இத்தனை காலமும் நம்முடைய கை பார்த்து நாட்டார் அனுஷ்டிக்கும்படி நடந்து போந்து
இன்று சரணாகத காதம் பண்ணினால் நாடு என் படக் கடவது
மத்வித
நம்முடைய விரதம் பின் சொல்லக் கடவோம்
சாமாந் யோயம் தர்ம சேதுஸ் நாராணாம்–என்கிறபடியே
நம் போலிகள் எல்லாருக்கும் இதுவே
பொதுவாய்க் காணும் இருப்பது
மத்வித
நம் போலிகள் சரணாகதனை விடுவார்களோ –
ஹிம்ஸாபி ருசிகள் ஆகையால் அவத்யரை வதிக்க வல்ல
ராவணாதிகளுக்கு அன்றோ இப்படிக்கு ஒத்த கார்யங்கள் ருசித்து
ஜன
சரணாகதனை பரித்யஜித்தவன் என்ன
பிறப்பு பிறந்தானாகக் கடவன் –
நம் போலிகளுக்கு ஜென்ம பிரயோஜனம்
சரணாகத ரக்ஷணம் அன்றோ
சிஷ்ட அனுஷ்டானம் ப்ரமாணமே யாகிலும் ஒரு கபோதம் அனுஷ்டித்தது
என்று ஒரு பிரமாணம் உண்டோ –
இதற்க்கு விதாயகமாய் இருபத்தொரு வாக்யம் வேண்டாவோ என்கிற சங்கையிலே
கண்டு என்பான் ஒரு மகரிஷி கண்டதொரு காதையைக் கேளீர் -என்கிறார்
—————
கண்டு காதா விவரணம்
ரிஷே கண் வஸ்ய புத்ரேண கண்டுநா பரமர்ஷிணா
ச்ருணு காதாம் புரா கீதாம் தர்மிஷ்ட்டாம் சத்யவாதி நா -18-26-
கண்டு என்கிற மஹர்ஷியினுடைய
ஜென்ம பிரகார்ஷத்தை முற்படக் கேளீர்
ரிஷே கண் வஸ்ய புத்ரேண
தான் தோன்றி அன்றிக்கே -யஸ்ய ஸ்யாத் ஸ்ரோத்ரிய பிதா -என்கிறபடியே
அவனுடைய பிதாவும் சதுர்வேத அத்யாயியாய்
அதீந்த்ரிய த்ரஷ்டாவாய்க் காணும் இருப்பது -ஆனால் பறப்பதின் குட்டி தவழாது இறே
கண் வஸ்ய புத்ரேண
மஹா தபாவான கண்வ மகரிஷிக்கு சம்சார நிஸ்தாரகனாய்க் காணும் இருப்பது
கண் வஸ்ய புத்ரேண கண்டுநா
பிதாவின் பெயராலும் தன் பெயராலும் ப்ரசித்தனாய்க் காணும் இருப்பது –
கண்டுநா
அவன் பெருமையைப் பார்த்தால் –
ச சாபி பகவான் கண்டு –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-5–52-என்று
மஹரிஷிகள் கொண்டாடும்படியான பெயருடையான் ஒருவன் காணும்
ரிஷி புத்ரேண பரமர்ஷிணா
விளக்கில் கொளுத்தின பந்தம் என்னும் படி காணும்
பிரகாச பஹுளனான பிதாவிலும் காட்டில்
இவனுடைய ஞான விகாசம் இருக்கும் படி –
ச்ருணு
இத்தனை நாளும் இக்காதை உம்முடைய செவியில் படாமையால் இறே நீர் இப்படிக் கலங்குகிறது –
இத்தை அவஹிதராய்க் கேளீர்
காதாம்
இது பெரிய பொருள்களை எல்லாம் பொதிந்து கொண்டு எளிதாய்க் கேட்கலாம் படி
சுருங்கின பாசுரமாய்க் காணும் இருப்பது
புரா கீதாம்
இன்று முதலாகக் கட்டினது ஓன்று அன்று காணும் இது –
வேதம் போலே பழையதாய் இருப்பது ஓன்று
கீதாம்
கண்டுவான மகரிஷியும் இத்தை ஸ்ருஷ்ட்டித்தான் என்று இராதே கிடீர் –
ரிக்கை சாமமாகப் பாடுமாப் போலே
பண்டே உள்ளது ஒன்றை அவன் பாடினான் அத்தனை
கீதாம்
அவன் செய்தானே யாகிலும் அந்த சாம த்வனி போலே
ஸமஸ்த பாபங்களையும் போக்க வற்றாய்க் காணும் இருப்பது
தர்மிஷ்ட்டாம்
போலியான தர்மங்களை போல் அன்றிக்கே ப்ரத்யக்ஷ ஸ்ருதி ஸித்தமான பரம தர்மத்தை
விஷயமாக உடைத்தாய்க் காணும் இக்காதை இருப்பது
சத்யவாதி நா
சத்யவாத சீலனான கண்டு என்கிற மகா ரிஷி வாய் வெருவிச் சொன்னாலும் பழுதாய் இருபத்தொரு
சவ்வும் துவ்வும் கூட்டுகையும் இன்றிக்கே காணும் இருப்பது
இதில் –
பரமர்ஷிணா -என்று யதார்த்த தர்சித்தவம் சொல்லிற்று
சத்யவாதி நா-என்று யதா த்ருஷ்டார்த்த வாதித்தவம் சொல்லிற்று
தர்மிஷ்ட்டாம் -என்று உபதேசத்தினுடைய பரம ப்ரயோஜனத்வம் சொல்லிற்று
இத்தால்
ப்ரம விப்ரங்கள் அற்று சர்வ லோக ஹிதம் சொல்லுவான் ஒருவன்
என்று ஆப்தி அதிசயம் சொல்லிற்று ஆய்த்து
மேல் கண்டு காதை என்று எடுக்கிற நாலரை ஸ்லோகத்தில்
பிரதம ஸ்லோகத்தால் பூர்ண சரணாகதி இல்லையே யாகிலும்
போக்கற்ற தசையில் ஆத்ம நிக்ஷேப அபிப்ராய வ்யஞ்ஜகங்களாய்க் கொண்டு
சரணாகதியினுடைய சகல துல்யங்களான அஞ்சலி பந்தாதி மாத்ரங்களை நேர்ந்தவனையும்
அழியக் கொடுக்கலாகாது என்கிறார்
பத்தாஞ்சலி புடம் தீநம் யாசந்தம் சரணாகதம்
ந ஹன்யாத் ஆந்ரு ஸம்ஸ்யார்த்தம் அபி ஸத்ரும் பரந்தப —யுத்த -18-27-
பத்தாஞ்சலி புடம்
அஞ்சலி பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவ ப்ரஸாதி நீ -என்கிறபடியே அத்யந்த ஸ்வ தந்த்ரனையும்
கடுக இரங்கப் பண்ணும் முத்திரை அன்றோ இது
தீநம்
அஞ்சலியும் வாங் பாத மாத்ரமும் நேராதே கார்ப்பண்யம் தோற்ற நிற்கும் நிலையே அமையும் –
யாசந்தம்
கை கூப்பிற்றிலனே யாகிலும் கார்ப்பண்யம் தோற்றில்லையே அஹ்ருதயமாக இரக்கவும் அமையும் யாகிலும்
சரணாகதம்
அஞ்சலி பந்தாதிகள் மூன்றும் இல்லையே யாகிலும் ரக்ஷகன் கிடைக்குமோ என்று இருந்த இடத்தில் வந்து புகுர அமையும்
முதல் ஸ்வ ரஷா பர நிக்ஷேப ரூபையான சரணாகதியின் சகல ஸ்த்தா நீயங்களைச் சொல்லிற்றாய்
இங்கு சரணாகதம் என்று பூர்ண சரணாகதியைச் சொல்லுகிறது ஆகவுமாம்
ந ஹன்யாத்
தான் அழியச் செய்தல் -ரக்ஷிக்க சக்தனான தன் உபேஷாதிகளால் அழியக் கொடுப்புதல் செய்யப் பெறான்
இந்த சாஸ்திரம் ஐஹிகாப் யுதயார்த்தமோ-
பர லோகார்த்தமோ –
ப்ரத்யவாய பரிஹாரார்த்தமோ -என்ன
அவை நிற்க முற்பட ப்ரயோஜனாந்தரம் சொல்லுகிறது
ஆந்ரு ஸம்ஸ்யார்த்தம்
ஆந்ரு ஸம்ஸ்யம் ஆகிற மஹா குணத்தை ரஷிக்கைக்கு ஆகவுமாம் –
ந்ருஸம்ஸன் -என்று நாட்டார் சீ சீ என்னாமைக்காக வுமாம்
அபி ஸத்ரும்
நேரே சத்ரு தான் வந்து சரணாகதன் ஆனாலும் அழிய விட ஒண்ணாத படியானால்
இதற்கு முன்பு ஒரு குற்றம் காணாது இருக்க
சத்ரு இருந்த ஊரில் நின்றும் வந்தான் என்கிற இவ்வளவைக் கொண்டு
சரணாகதனை அழியக் கொடுக்கலாமோ என்று தாத்பர்யம்
பரந்தப —
சரணாகதனோடேயோ நாம் சேவகம் காட்டுவது -நேரே பொருமவனோடே அன்றோ
ந ஹந்யாந் -என்று தான் கொல்லாது ஒழியும் அளவன்றோ என்ன -அங்கன் அன்று –
சரணாகதனை வேறு ஒருவர் நலியும் போது
ஆர்த்தான் திருப்தன் என்கிற சரணாகத அவஸ்தா பேதங்களைப் பாராதே
தன் ப்ராணன்களை அழிய மாறியும் அவனை ரக்ஷிக்க வேண்டும் என்கிறார் –
ஆர்த்தோவா யதி வா திருப்த பரேஷாம் சரணாகத
அரி பிராணன் பரித்யஜ்ய ரஷிதவ்ய-18-28-
ஆர்த்தோவா யதி வா திருப்த
இப்போதே அபிமத சித்தி உண்டாக வேணும் என்று விளம்ப ஷமன் இன்றிக்கே இருக்கவுமாம் –
விளம்பித்துப் பெறலாவதொரு பலத்தைக் கோலி- கோரி -என்றேனுமாக அபிமதம் சித்தம் அன்றோ
என்று தேறி இருக்கவுமாம்
இவனுக்கு அபிமதத்தைப் பற்ற அகிஞ்சனதையாலே ஆர்த்தி உண்டு –
அங்கன் அன்றிக்கே ப்ரச்ரய பயாதி யுக்தனாய் இருக்கவுமாம் –
இவை இன்றிக்கே இருக்கவுமாம் -என்று
ஆர்த்த திருப்த விபாகம் சொல்லுவார்கள்
பரேஷாம் சரணாகத
இதற்கு முன் முகம் அறியாதார் இருந்த இடத்தே வர அமையும்
அரி
அவன் சத்ருத்வம் அடியறாதே உள்ளே கிடக்கச் செய்தே மித்ர பாவனையைப் பண்ணி வந்தாலுமாம்
பிராணன் பரித்யஜ்ய ரஷிதவ்ய
அஸ்த்ரங்களான ப்ராணன்களை விட்டு ஸ்திரமான சரணாகதி ரக்ஷண தர்மத்தைப் பற்ற வன்றோ பிராப்தம்
இவ்வர்த்தத்தை -ஆத்ம பிராணை பர ப்ராணான் யோ நர பரி ரஷதி
ச யாதி பரமம் ஸ்த்தானம் யஸ்மான் நா வர்த்ததே புந –இதிஹாச சமுச்சயம் -4-74-/75- என்றும்
பிராணைர் அபி த்வயா ராஜன் ரஷித க்ருபணே ஜன -என்றும்
ஸ்யேந கபோத உபாக்யானத்தில் சிபியைக் குறித்து இந்திரன் சொன்னான்
க்ருதாத்மநா
இப்படிச் செய்யாத போது இவன் கற்ற கல்வி எல்லாம் என் செய்வதாகக் கடவன்
விதுஷோ அதிக்ரமே தாண்ட பூயஸ்த்வம் –ஸ்ரீ கௌதம தர்ம ஸூத்த்ரம் -2-12-6-
என்னும்படியாம் அத்தனை இறே
தன்னை ரஷித்த வானரத்தைத் தள்ளின வேடனைப் போலே
ரஷிதனான சரணாகதன் பின்பு க்ருதக்நனாய்
பிரதிகூலனான போது தான் அவனுடைய சிஷாதிகளில் அதிக்ருதனாகில் அம்முகத்தாலே ரஷிக்கவும் –
அவற்றில் அதிக்ருதன் அல்லாத போது பின்பு அவன் அநு தப்தனாய் சரணாகதன் ஆனானாகில் க்ஷமிக்கவும் –
அங்கன் அல்லாத போது உபேக்ஷிக்கலான ப்ராதிகூல்யத்தை உபேக்ஷிக்கவும் –
தன்னுடைய வதாதி பர்யந்தமாக ப்ரவர்த்திக்குமாகில் சாஸ்த்ரா விரோதம் இல்லாத மர்யாதையாலே
யதா சக்தி விலக்கிக் கொள்ளவும் பிராப்தம்
மேல் இரண்டு ஸ்லோகத்தால்
சரணாகத பரித்யாகத்தில் வரும் த்ருஷ்ட அதிருஷ்ட
ப்ரத்யவாயங்களை அருளிச் செய்கிறார்
ச சேத் பயாத் வா மோஹாத் வா காமாத்வாபி ந ரக்ஷித
ஸ்வயா சக்த்யா யதா சத்யம் தத் பாபம் லோக கர்ஹிதம் -18-30–
பயாத் வா
சரணாகதனைக் கைக்கொண்டால் பிரபலமான விரோதிகள் நம்மை நலியில் செய்வது என்
என்னும் அச்சத்தால் யாதல் என்றபடி
சேந்த்ர தக்ஷக நியாயம் இங்கே கண்டு கொள்வது
மோஹாத் வா
ஈத்ருசம் வ்யஸனம் பிராப்தம் பிராதரம் ய பரித்யஜேத் -18-5-என்றால் போலே
சில யுக்த ஆபாசங்களால்
வந்த கலக்கத்தாலே யாதல் என்றபடி
காமாத் வா
சாஸ்த்ர அதி லங்கந ஹேதுவான ஸ்வச் சந்த ஸ்வ பாவத்தில் யாதல் என்றபடி –
அங்கன் இன்றிக்கே
ஹிம்ஸா ருசிகளான ராக்ஷஸரைத் போலே இவன் படுவது கண்டால் ஆகாதோ
என்கிற விபரீத ருசி யாலே யாதல் -எனினுமாம் –
அப்படியே சரணாகதனுடைய சத்ருவின் பக்கலிலே கைக்கூலியை ஆசைப்பட்டு என்னவுமாம்
அபி
பூர்வ அபகாரங்களை நினைத்து வரும் ஓவ்தா சீன்யம் முதலான
வேறு ஏதேனும் ஒரு ஹேதுவாலே யாகவுமாம்
ந ரஷித
கிணற்றின் கரையில் பிள்ளையை வங்காதாப் போலே
ரஷியாத மட்டும் கிடீர் நாம் சொல்லப் புகுகிற பாபம் –
இப்படியானால் தானே நலியும் அளவிலே என்ன விளையக் கடவது
ஸ்வயா சக்த்யா
தன் சக்தி வஞ்சநம் பண்ணாதே ரக்ஷிக்க வேண்டும் –
அங்கன் அன்றிக்கே கைக்கொள்ளவுமாம் -கை விடவுமாம் –
தனக்கு வல்லதொரு விரகால் என்று தாத்பர்யம் –
ரகு பிரப்ருதிகள் ப்ராஹ்மணாதிகளைத் தாங்கள் கைக் கொண்டு ரஷித்தார்கள்-
தேவர்களும் ரிஷிகளும் காகத்தைப் போக்கற்றது என்று ஸ்ரீ பெருமாள் கைக் கொள்ளுக்கைக்காகத்
தாங்கள் கை விட்டு ரஷித்தார்கள்
யதா சத்யம் –
லோகத்திற்குக் கண் காணிகளாகப் படைத்த ஆதித்யாதி பதினாலு சாஷிகளும் இவர்களுக்கு மேல்
கண் காணியாய் சர்வ சாஷியான சர்வேஸ்வரனும் கண்டு கொண்டு இருக்கத் தான் சக்தனாய் இருக்கச் செய்தே
சில சலங்களாலே தனக்கு சக்தி இல்லாமையைக் காட்டி –
ஸோசந்நிவ ருதந்நிவ -என்கிற கணக்கிலே கண் அழிக்கப் பெறான் –
தத் பாபம்
அந்த பாவத்தின் கொடுமையைக் கேளீர் –
இது நஹுஷ ப்ருஹஸ்பதி சம்வாதிகளிலே
அதி பிரசித்தமாய்க் காணும் இருப்பது –
இதன் கொடுமையை
சரணாகதாம் ந த்யஜேயம் இந்த்ராணீம் ச யசஸ்வினீம்
தர்மஞ்ஞாம் தர்ம சீலாம் ச ந த்யஜேயம் அநிந்திதாம்
நா கார்யம் கர்த்தும் இச்சாமி ப்ராஹ்மணஸ் சந் விசேஷத
ஸ்ருத தர்ம சத்ய சீலோ ஜாநந் தர்ம அநு சாசனம்
நாஹ மேதத் கரிஷ்யாமி கச்சத்வம் வை ஸூ ரோத்தம
அஸ்மிம்ஸ் சார்த்தே புரா கீதம் ப்ரஹ்மணா ஸ்ரூயதாமிதம்
ந சாஸ்ய பீஜம் ரோஹதி ரோஹ காலே
ந சாஸ்ய வர்ஷம் வர்ஷதி வர்ஷ காலே
பீதம் ப்ரபன்னம் பிரததாதி சத்ரவே
ந சோந்தரம் லபதே த்ராண மிச்சந்–உத்யோக பர்வம்
மோக மந்நம் விந்ததி சாப்ரசேதா ஸ்வர்க்க லோகாத்
பிரஸ்யதி பிரஷ்ட சேதா பீதம் ப்ரபன்னம் பிரததாதி சத்ரவே
சேந்த்ரா தேவா ப்ரஹரந்தஸ்ய வஜ்ரம் -12-/16-/20–என்று
இந்திர பதம் பெற்ற மதி கெட்ட
நஹுஷனாலே பிரேரிதரான தேவர்களைக் குறித்துத் தேவ ப்ரோஹிதன் சொன்னான்
அப்படியே –
ப்ராயச்சித்தேந ஸூத்த்யந்தி மஹா பாதகிநோபி யே
சரணாகத ஹந்த்ரூணாம் ஸூத்தி கவாபி ந சித்த்யதி
பூயதே ஹய மேதேந மஹா பாதகி நோபி ஹி
சரணாகத ஹந்தாரோ ந த்வேவ ரஜநீசரே –என்று
ரகு ராக்ஷஸ சம்வாதத்திலும் இவ்வர்த்தம் பிரசித்தம் –
இத்தை
லோபாத் த்வேஷாத் பயாத் வாபி யஸ் த்யஜேத் சரணாகதம்
ப்ரஹ்ம ஹத்யா சமம் தஸ்ய பாபம் ஆஹுர் மநீஷிண
சாஸ்த்ரேஷு நிஷ் க்ருதி த்ருஷ்டா மஹா பாதகி நாமபி
சரணாகத ஹந்துஸ்து ந த்ருஷ்டா நிஷ் க்ருதி க்வசித்
பிராணிநம் வத்யமாநம் து யஸ் சக்த சமுபேஷதே
ச யாதி நரகம் கோரம் இதி ப்ராஹூர் மநீஷிண–என்று
ஸ்யேந ரூபனான இந்த்ரனைக் குறித்து சிபி சக்ரவர்த்தி சொன்னான்
ப்ராணார்த்தி நமிமம் பீதம் த்விஜம் மாம் சரணாகதம்
த்யஜேயம் யதி கோ மத்த ஸ்யாந் நர பாப க்ருத் புவி
சக்தோபி ஹி ரக்ஷனே லோபாத் பயாத் வா சரணாகதம்
யஸ் த்யஜேத் புருஷோ லோகே ப்ரஹ்ம ஹத்யாம் ச விந்ததி -என்று
இதிஹாச உத்தமத்திலும் சொல்லப்பட்டது
யோ ஹி கஸ்சித் த்விஜம் ஹன்யாத் காம் ச லோகஸ்ய மாதரம்
சரணாகதம் ச யோ ஹன்யான் துல்யமேஷாம் ச பாதகம் –என்று
கபோதி தன்னைக் கட்டி இருக்கிற வேடனை
ரஷிக்கைக்காகத் தன் பர்த்தாவான கபோதத்தைக் குறித்துச் சொல்லிற்று
தத் பாபம்
சரணாகதம் பரித்யஜ்ய வேதம் விப்லாவ்யச த்விஜ
சம்வத்சரம் யவாஹார தத் பாபம் அவசேததி–என்று
மன்வாதிகள் சொல்லுகிறபடியே பிராயச்சித்தம் பண்ண அரிதாய்க் காணும் இருப்பது –
லோக கர்ஹிதம்-ததேவம் ஆகதஸ்ய அஸ்ய கபோதஸ்ய அபயரர்த்திந
கதம் அஸ்மத் வித ச தியாகம் குர்யாத் சத் அபி விகர்ஹிதம் –என்று
சிபி சொன்ன சிஷ்ட கர்ஹதை அளவே அன்று –
இது கேட்க்கிலும் பிராயச்சித்தம் பண்ண வேண்டுகையாலே நாட்டார் எல்லாரும் இவனை சீ சீ என்று
ஒரு காலும் கூட்டிக் கொள்ளார்கள்-ஆகையால் இறே
பால க்நாந் ச க்ருதக்நாந் ச விசுத்தாநாம் அபி தாமத
சரணாகத ஹந்த்ரூந்ச ஸ்த்ரீ ஹந்த்ரூந் ச ந சம வசேத் –என்றும்
சரணாகத பால ஸ்த்ரீ ஹிம்சகாந் சம்வஸேந் ந து
சீர்ண வ்ரதாநபி சத க்ருதக்ந சஹிதா நிமாந் –என்று
சரணாகத காதகனையும் –
பால காதகனையும் –
ஸ்த்ரீயையும் கொன்றவனையும் –
க்ருதக்நனையும் –
பிராயச்சித்தம் பண்ணித் தங்களுக்கு ஸூததனனாலும் ஒரு காலும் கூட்டிக் கொள்ளலாகாது என்று
மன்வாதி தர்ம சாஸ்திரங்களில் சொல்லுகிறது –
ஆன பின்பு நாம் சரணாகதனைக் கை விட்டால்
நம்மை நாடும் விச்வாமித்ராதிகளான குருக்களும் ஒரு காலும் கூட்டிக் கொள்ளார்கள் காணும் –
இப்படி த்ருஷ்ட ப்ரத்யவாயம் சொல்லிற்று –
அநந்தரம் அதிருஷ்ட ப்ரத்யவாயம் சொல்லுகிறது –
வி நஷ்ட பஸ்ய தஸ் தஸ்யா ரஷிணஸ் சரணாகதி
ஆதாய ஸூஹ்ருதம் தஸ்ய சர்வம் கச்சேத ரஷித–யுத்த-18-30–என்று
ரக்ஷிக்க வல்லனாய் இருக்க ரஷியாமையாலே அவன் காணச் செய்தே நஷ்டனான சரணாகதனுக்கு
வேறு ஒரு கிருஷி பண்ண வேண்டா —
அவன் அநாதி காலம் பண்ணின ஸூஹ்ருத்ததை எல்லாம் ச வாசனமாக
வாங்கிக் கொண்டு -அவன் புகக் கடவ புண்ணிய லோகங்களை எல்லாம் தான் கைக்கொள்ளும் –
சரணாகத பரித்யாகி யானவன் பக்கல் பிராயச்சித்தம் பண்ணுகைக்கும்
கைம்முதலான ஸூஹ்ருத லேசமும் இல்லாமையால்
பாப பிரதத்தாலே முழுக்க நரகங்களிலே விழும் அத்தனை –
ஏவம் தோஷா மஹா நத்ர ப்ரபந்நா நாம ரக்ஷனே
அஸ் வர்க்யம் சாய சஸ்யம் ச பல வீர்ய விநாசனம் –யுத்த -18-31–
உத்தர அர்த்தத்தாலே த்ருஷ்டா அதிருஷ்ட ப்ரத்யவாயங்களை சமுச்சயித்துச் சொல்கிறது
சரணாகதனுக்கு சரீரம் ஒன்றுமே அழியும் அளவு உள்ளது –
அவனை அழியக் கொடுத்தவனுக்குப் பரலோகமும்
இங்குள்ள புகழும் பல வீர்யங்களும் மற்றும் சொல்லிச் சொல்லாத குண விபூதிகளும் எல்லாம் அழியும்படியாய் இருக்கும் –
சரணாகதனுக்கு ரக்ஷை பிறந்ததாகில் இங்கே நினைத்தது ஆம் –
ரக்ஷை பிறந்தது இல்லையாகில் விட்டவனுடைய ஸூஹ்ருத்தை
எல்லாம் கைக்கொண்டு தன் நினைவு இன்றிக்கே வந்த பர லோக ஸூகம் பெறலாம் –
ஒருபடியாலும் சரணாகதனுக்குக் கார்யம் தப்புவது இல்லை –
இப்படி சரணாகதனை ரஷியாது போது வரும் த்ருஷ்டா அதிருஷ்ட தோஷம் சொல்லிற்று
மேல் ஸ்லோகத்தாலே
சரணாகத ரக்ஷணத்தில் வரும் த்ருஷ்டா அதிருஷ்ட புருஷார்த்த சித்தியை அருளிச் செய்து கொண்டு
கண்டு மகரிஷி சொன்ன அர்த்தத்தில் தமக்கு அனுஷ்ட்டித்து அல்லது நிற்க ஒண்ணாத படி
பிறந்த ருசியை அருளிச் செய்கிறார் –
கரிஷ்யாமி யதார்த்தம் து கண்டோர் வசன முத்தமம்
தர்மிஷ்டம் ச யஸஸ்யம் ச ஸ்வர்க்யம் ஸ்யாத் து பலோதயே –யுத்த -18-32–
கரிஷ்யாமி
நாம் சரணாகத ரக்ஷணம் பண்ணக் கடவோம் –
தர்ம ஸ்ருதோ வா திருஷ்டோ வா –இத்யாதிகளை அறிந்து
தர்மிஷ்டரான நீங்கள் இதற்கு விலக்காமை என்றோரு பந்து க்ருத்யம் செய்து தர வேண்டும் –
கரிஷ்யாமி
அனுஷ்டிகைக்கா வன்றோ நாம் இந்தக் காதை கற்றது
ந காதா கதிநம் சாஸ்தி –என்கிறபடியே
குலிங்க சகுனியைப் போலே வேறு ஒன்றைச் சொல்லி வேறு ஒன்றைச் செய்கைக்கு அன்றே
யதார்த்தம்
பாதகம் இல்லாமையாலும் ப்ரத்யக்ஷ ஸ்ருதி சம்வாதத்தாலும் பழுதற்ற பாசுரம்
த்ருஷ்டா அதிருஷ்ட விருத்தமான உங்கள் வார்த்தையில் காட்டில்
அவன் வார்த்தைக்குள்ள விசேஷம் இருந்தபடி கண்டீரே
து கண்டோர் வசனம்
தர்மஸ்ய தத்துவம் நிஹிதம் குஹாயம் –என்னும்படி இருந்தால்
மஹா ஜநோ யேந கதஸ் ச பந்த்தா –என்கிறபடியே
பெரியனான கண்டுவின் வழியைப் பின் செல்லுகை காணும் நமக்கு கார்யம்
உத்தமம்
உத்தம தர்ம விஷயம் -அங்கன் அன்றிக்கே
இப்பாசுரத்துக்கு மேல் உம்மாலே யாதல் –
முதலிகளாலே யாதல் –
நம்மாலே யாதல் –
ஒரு கண் அழிவு சொல்ல ஒண்ணாத படி எல்லாவற்றுக்கும் மேலான பாசுரம் காணும் இது –
இதற்கு
பீத அபய பிரதாநேந சர்வான் காமான் அவாப் நுயாத்
தீர்க்க மாயுஸ் ச லபதே ஸூகீ சைவ சதா பவேத் –என்றும் –
ஏகதஸ் க்ரதவஸ் சர்வே சமக்ர வர தக்ஷிணா
ஏகதோ பய பீதஸ்ய பிராணிந பிராண ரக்ஷணம் –என்று
சம்வர்த்தாதிகள் சொன்ன தாத் காலிக பலமும் –
விபாக காலத்தில் வரும் பலமும் கேளீர்
தர்மிஷ்டம் ச யஸஸ்யம் ச -என்று
தத்காலத்திலே சித்தித்து நிற்கும் பலம்
ஸ்வர்க்யம் ஸ்யாத் து பலோதயே –என்று
பிரதி பந்தகம் கழிந்தால் விபாக காலத்தில் வரும் பலம்
நாதோ பூயஸ் ததோ தர்ம கஸ்சித் அந்யோஸ்தி கேஸர
பிராணி நாம் பய பீதா நாம் அபயம் யத் பிரதீயதே –என்றும்
மஹாந் தர்மோ அக்ஷய பல சரணாகத பாலநே
தர்ம நிஸ்சய தத்தவஞ்ஞா ஏவமாஹுர் மநீஷிண –என்று
சிபி பிரப்ருதிகள் அறுதியிட்ட படியே சரணாகத ரக்ஷண தர்மமே
தர்மங்கள் எல்லாவற்றுக்கும் முடி சூடின தர்மம்
இது அறிந்து காருணிகருமாய் ரக்ஷண சமர்த்தருமாய் இருக்குமவர்கள் பக்கல் சரணாகதிக்குப் பல சித்தியில்
சம்சயம் இல்லை என்று திரு உள்ளம்
தீநோ த்ருப்யது வா அபராத்யது பரம் வ்யாவர்த்ததாம் வா தத
த்ராதவ்ய சரணாகதஸ் சகநத சத்பிஸ் ததா ஸ்தாப்யதே
விச்வாமித்ர கபோத வானர ரகு வ்யோமாத்வக ப்ரேயசீ
நாளீ ஜங்க ப்ருஹஸ்பதி பரப்ருதிபி நந் வேஷ கண்டா பத —
இந்த ஸ்லோகம் சங்கல்ப ஸூர்யோதத்திலும் அனுசந்திக்கப் படுகிறது –
பரம தர்ம நிர்ணயம் என்னும் ஏழாம் அதிகாரம் முற்றிற்று –
——————————————-
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —
—————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –