Archive for the ‘சிறிய திரு மடல்’ Category

ஸ்ரீ சிறிய திருமடல் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த தனியன் வியாக்யானம் –

August 13, 2018

ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்த தனியன் ..

முள்ளிச் செழு மலரோர் தாரான் முளை மதியம்
கொள்ளிக்கு என் உள்ளம் கொதியாமே – வள்ளல்
திரு வாளன் சீர்க் கலியன் கார்க் கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல் —

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வ்யாக்யானம் —

முள்ளிச் செழு மலரோர் இத்யாதி—
சப்தாதி விஷயங்களின் சன்னதியிலே -மனஸ்ஸூ பரிதபியாமல்
பகவத் பிராவண்யத்துக்கு அநு குணமாக –
திரு மடல் என்கிற திவ்ய பிரபந்தத்தை உபகரித்து அருளுவதே என்று
ஆழ்வார் திருவடிகளில் பிரேமம் வுடையாருடைய ஈடுபாடாய் இருக்கிறது-
அன்றிக்கே
ஸ்வ விஸ்லேஷத்தில் சாம்சாரிக விஷயங்களிலே – மனஸ்ஸூ பரி தபியாதபடி
ஸ்வ பிரசாதத்தை பிரசாதியாமல் -தாம் மடல் எடுக்க உபக்ரமித்த பாசுரமான
மடலையே தந்து விட்டார் என்றாகவுமாம்

முள்ளிச் செழு மலரோர் தாரான் –நமக்கு அசாதாரணமாய் அத்விதீயமாய் இருக்கிற –
முள்ளிப் பூவை தாராக உடையவர் என்னுதல் -வகுள தாரான் என்னுமாப் போல
அன்றிக்கே –
மலரோ -என்று பாடமான போது ,
நம் அபேக்ஷிதமான முள்ளிச் செழு மலர் மாலையையோ தருகிலர் என்று ஆகவுமாம் –
மலர் -என்றது மாலைக்கு உப லக்ஷணம் –
எதுக்காக தார் தர வேணும் என்றால் –

முளை மதியம் கொள்ளிக்கு என் உள்ளம் கொதியாமே – –-
முளைத்து எழுந்த திங்கள் – விரஹிகளாய் இருப்பார்க்கு தாப ஹேது இறே
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் -பெரிய திருமொழி -2-7-3- என்றார் இறே –
இவரும் நாட்டாருக்கும் அப்படியே –
சந்திர காந்த கராயதே என்று சந்தர மண்டலம் காந்த -ஸூர்ய மண்டலமாய் இருக்கை
சீதை பிரிந்த பொழுது அனைத்தும் அழகு அற்றவை ஆனது போல –
முளை மதி அங்கு கொள்ளி என்னுதல் –
முளை மதியம் ஆகிற கொள்ளி என்னுதல் –
அம் கொள்ளி –
அழகிய கொள்ளி என்னுதல் –
இது பஞ்ச விஷயத்துக்கு உப லக்ஷணம்
மல்லிகை கமழ் தென்றல் ஈறுமாலோ
வண் குறிஞ்சி இசை தவிருமாலோ- என்றும் –
வாடை தண் வாடை வெவ் வாடையாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ
மென் மலர் பள்ளி வெம் பள்ளியாலோ -என்றும் — இறே
விஸ்லேஷத்தில் விஷயங்களின் பாதக துவாரங்கள் இருப்பது –
அது தான் விஷய அநு குணமாய் இருப்பது
ஆகையால் குளிர்ந்த சந்திரனை கொள்ளி போல கண்டு என் ஹ்ருதயம் பரிதபியாதே -ஆழ்வார் பண்ணின உபகாரமே —

வள்ளல் திரு வாளன் சீர்க் கலியன் –-வள்ளல் -பரம உதாரர் ..
திரு வாளன் –
பகவத் பிரத்யா சத்தி ஆகிற ஐஸ்வர்யத்தை உடையவர் ..
வள்ளல் திரு வாளன் –
இவன் ஒவ்தார்யம் பண்ணுகைக்கு உடலான ஐஸ்வர்யம் ..
சீர்க் கலியன் –
பகவத் பக்த்தாதி குணங்களை உடையவர் ..
கார் கலியை வெட்டி –
கலிகன்றி ஆகையாலே -அஞ்ஞானவஹமான கலியைக் கடிந்து ..கலி தோஷம் இறே காம பரவசர் ஆகிறது ..
அப்படி அப்ராப்த விஷயங்களில் , காமம் வராதபடி ..
மருவாளன் தந்தான் மடல் –
திருக் கையிலே மருவி இருக்கிற வாளை உடையவர் ..
பகவத் காமத்துக்கு அநு குணமான திரு மடல் என்கிற திவ்ய பிரபந்தத்தை உபகரித்து அருளினார் ..
மருவாளன் –
பகவத் அனுபவத்தில் உண்டான போக்யதை வடிவில் தொடை கொள்ளலாம் படியானவர் ..
இவள் அம் தண் துழாய் கமழ்தல்.
மரு -பரிமளம் .
மருவு -மருவுதலாய் ..எம்பெருமானை கிட்டுகையை ஸ்வபாவமாக உடையவர் என்றுமாம் ..
அன்றிக்கே
சேதனரைக் கிட்டி ஆளுகிறவர் என்றுமாம் .

ஆகையால் -சேதனரை -தம் படி ஆக்க வேண்டி மடலை உபகரித்து அருளினார் –
மாலையைத் தாராதே மடலை தந்து விட்டார் என்றாகவுமாம் ..

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

சிறிய திருமடல் -திவ்யார்த்த தீபிகை சாரம் –

December 5, 2016

ஸ்ரீ மன் நாத முனிகள் வகுத்து அருளினை அடைவில் மூன்றாவது ஆயிரமான இயற்பாவில் ஒன்பதாவது திவ்ய பிரபந்தம் -சிறிய திருமடல்
திருக் குறும் தாண்டகத்திலே அனுபவித்த அனுபவம் பழைய அபி நிவேசத்தைக் கிளப்பிப் பெரிய ஆர்த்தியை யுண்டாக்கவே
நின்னடியிணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையோ என்று ஆர்த்தராய் சரணம் புகுந்தார் திரு எழு கூற்று இருக்கையில்
சமுத்திர ராஜனை சரணம் அடைந்தும் கால்ஷியம் செய்து கிடைக்க -சீறிச் சிவந்த கண்ணினராய் –
சாகரம் சோக்ஷயிஷ்யாமி சாபமானாய ஸுமித்ரே பத்ப்யாம் யந்து ப்லவாங்கமா -போலே
அவன் ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் உகந்து அருளினை தேசங்களையும் அழிக்கப் புகுகிறார் –
மடலூர்வன் -என்று சொல்லி அச்சம் உறுத்தி -மாசறு சோதீ -தோழீ உலகு தோறு அலர் தூற்றி ஆம் கோணைகள் செய்து குதிரியாய் மடலூர்துமே –
யாம் மடம் இன்றி தெருவு தோறு அயல் தையலார் நா மடங்கப் பழி தூற்றி நாடும் இரைக்கவே-
யாம் மடலூர்ந்தும் எம் ஆழி யங்கைப் பிரானுடைத் தூ மடல் தண்ணம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் -அச்சமூட்டி -பெற்றார்கள் -மடலூர வில்லை
ஆசையை யாராலும் வரம்பு அறுக்க முடியாதே -அரசர் ஆணைக்கு கடப்படுமோ -வேலி யடைத்தால் நிற்குமோ வேட்க்கை
ஞானம் கனிந்த நலம் -விவேக விரஹத்தால் வரும் பிரவ்ருத்தி விசேஷங்கள் எல்லாம் ஆதரித்திக்க தக்கனவே
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் –மடலூர்வதும் இவனது உபாய கிருஷி பலம் –
அவனது முக மலர்த்திக்கு உறுப்பாக பண்ணும் பிரவ்ருத்திகளில் இதுவும் அந்தரகதம்-
இலக்கணப்படி ஒரே பாசுரம் -கலி வெண்பா -ஒரே எதுகை யாக அமைந்தும் ஈற்றடி முச்சீராக முடிந்தும் –
தேசிகன் -40-பாடல்களாகவும் சிறிய திரு மடலையும் -78-பாடல்களாக பெரிய திருமடலையும்
-ராமானுஜ நூற்றந்தாதி சேர்த்து நாலாயிரம் வரவும்
அப்புள்ளார் -ராமானுஜ நூற்றந்தாதி சேர்க்காமல் வர -77 .5 -பாடல்களாக சிறிய திருமடலையும் —
-148 .5 -பாடல்களாகவும் -பிரித்து அருளிச் செய்துள்ளார்கள் –
155–அடிகள் கொண்ட பிரபந்தம் இது-
———————————————————————–

தனியன் -பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்தது –

முள்ளிச் செழு மலரோர் தாரான் முளை மதியம்
கொள்ளிக் கென்னுள்ளம் கொதியாமே –வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல் –

விரஹ தாப ஹரமான பிரபந்தம் -என்றவாறு -போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் -மேவு தண் மதியம் வெம் மதியமாலோ —
முளை மதியம் -மல்லிகை கமல் தென்றல் அனைத்துக்கும் உப லக்ஷணம்
இந்த பிரபந்தத்தை ஒரு கால் அனுசந்தித்தவாறே அரை குலைய தலை குலைய ஓடி வந்து முகம் காட்டி
நம் விரஹ தாபம் தவிர்த்து அணைத்து அருள்வான் என்றவாறு
கலியனுக்கு முள்ளிப்பூ மாலை -ஜாதிக்கு ஏற்ற மாலை -இன்றும் திரு நகரியில் முள்ளிச் செழு மலர்த் தார் வடிவமான-ஸ்வர்ண திவ்ய ஆபரணம் சேவிக்கலாம்
-தாமரை என்னும் பொருளதான முளரி என்பதே முள்ளி என மருவி -தாமரை மாலையை அணிந்தவர் என்றும் சொல்வர்
மலரோ தாரான் –மலரோர் தாரான் –மலரான தாரான் -பாட பேதங்கள் –

————————————————–

ஸ்ரீ பூமிப்பிராட்டி உத்தம ஸ்த்ரீகள் லக்ஷணம் -நுனியில் கறுத்த இரண்டு கொங்கைகள் -திருமாலிருஞ்சோலை திருவேங்கடம் –
கடல் தன்னையே வஸ்திரமாக கொண்டு –ஸூ ர்யனைச் சுட்டியாக கொண்டு -மணிகளைக் கொழித்து வரும் நதிகளை ஹாரம் பூண்ட மார்பிலே கொண்டு
நீர் கொண்டு எழுந்த கார் மேகங்களை கூந்தலாகக் கொண்டு ஆவரண ஜலத்தை கட்டும் காவலுமாக கொண்டு இருக்க
இதில் வாழும் மனுஷர்கள் -தர்மம் அர்த்தம் காமம் மூன்றுமே புருஷார்த்தம் என்றாலும் காமமே பிரதானம்-மற்றவை இத்தை பெற்றார் எளிதில் அடைவார் என்றபடி
மோக்ஷம் பரோக்ஷ புருஷார்த்தம் இருப்பதாக சொல்ல மாட்டார்கள் -என்று நீங்கள் அறிய -அத்தை சொல்பவர்கள் விவேகம் அற்ற கூற்றை பார்ப்போம்
ஸூ ர்ய மண்டலத்தை பிளந்து கொண்டு அதனூடு போவதாம்-அந்த ஸூ ர்யன் ஒற்றைச் சக்கர தேரில் இருப்பானாம்
-அத்தேருக்கு ஏழு குதிரைகள் பூட்டி இருக்குமாம் -அக்குதிரைகள் மேக மண்டலத்தில் சஞ்சரிக்குமாம் –
நம்மால் கண் கூசும் படி காணவே ஒண்ணாத அத்தை பிளந்து போவதாக சொல்வது பொருந்துமோ
அப்படிப் போவார்க்கு மீள வைகுந்தம் கிட்டுமாம் -அதிலே ஆராவமுதம் அனுபவிக்கப்படுமாம் –
அப்படியே இருந்தாலும் இருட்டறையில் விளக்குபோலே சகல குணங்களும் விளங்கும் அர்ச்சாவதாரம் இருக்க
-உண்டோ இல்லையோ -சங்கை -உள்ள அத்தை பற்றுவது கையில் உள்ள முயலை விட்டு பறந்து போகும் காக்கை பின் போவது போன்றது அன்றோ
இது வரையிலே தாமான தன்மையில் அருளி மேலே குடக் கூத்தில் ஈடுபட்டு அனுபவிக்கப் பெறாத இடைச்சி பாவத்தில் அருளுகிறார்
முற்றும் நாயகி பாவனை -என்பதே பூர்வர்கள் நிர்வாகம் –
—————————————-

நான் சம்சார வாழ்வில் பெண்கள் போலே தலை முடியை எடுத்துக் கட்டி கச்சு அணிந்து கொண்டு -அரையிலே மேகலையை தரித்து
கண்ணிலே மையிட்டு அலங்கரித்து பந்தடித்து விளையாடிக் கொண்டு இருக்க -தாமரைக்கு கண்ணன் என்ற பேர் கொண்டவன்
அனைவரும் மகிழ பறை அறைந்து கொண்டு இக் கூத்துக்குத் தப்பி பிழைக்க வல்லார் உண்டோ என்று சொல்லிக் கொண்டு
குடக் கூத்தாடா நிற்க -பெண்டிர் என்னையும் அழைக்க போராத காலத்தால் நானும் சடக்கென எழுந்து அங்கே சென்றேன் –
சென்றதும் மேனி நிறம் இழந்தேன் -கை வளைகள் கழன்றன -அறிவு அழிந்தது -ஹித ப்ரியங்கள் கேட்க முடியாமல் ஒழிந்தேன்
சரீரம் ஒழியாமல் பேதைமை மிகுத்து இருக்க என் தாய் ஸ்ரீ பாகவத ஸ்ரீ பாத தூளி இட்டு செங்குறிஞ்சி மாலையை யுடைய
சாஸ்தாவுக்கு அஞ்சலியும் செய்தாலும் மீள வில்லை -பழங்கதை பேசும் பாட்டிமார்கள் குறத்தியை கேட்டு குறி கேட்கலாமே என்ன
ஒரு குறத்தி தானாகவே வர -தைவாவிஷடையாகி-சிறு முறத்தில் நெற்களை எடுத்து குறி பார்த்து சொன்னதாகச் செல்கிறது மேலே –

காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை
சீரார் சுடர்ச் சுட்டிச் செங்கலுழிப் பேராற்று -பேரார மார்வில்
பெரு மா மழைக் கூந்தல் -நீரார வேலி நிலமங்கை என்னும்
இப் பாரோர் சொல்லப் பட்ட மூன்றன்றே
அம் மூன்றும் ஆராயில் தானே -அறம் பொருள் இன்பம் என்று –

தான் வை வர்ணியம் அடைந்து வருந்த பூமிப பிராட்டி சந்நிவேசம் இப்படி இருப்பதே –ஆறு விசேஷணங்கள்
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் என்னும் இவையே முலையா வடிவமைத்த –பெரிய திருமடல்
-நாயகன் விரும்பிப் படுகாடு கிடக்கும் இடம் -முதல் விசேஷணம்
சமுத்ராம்பரா -கடலே வஸ்திரம் -இரண்டாவது விசேஷணம்
நெற்றிச் சுட்டி ஸ்தானத்தில் ஸூ ர்யன் -மூன்றாவது விசேஷணம்
மார்பின் ஸ்தானத்தில் பெரிய ஆறுகளும் -அதில் அணியும் ரத்னமயமான ஆபரணங்ககள் ஸ்தானத்தில்
அதில் கலங்கிய செந்நீர்ப் பெருக்கும்-நான்காவது விசேஷணம்
நீர் கொண்டு எழுந்த காளமேகம் -கூந்தல் -என்றும் ஐந்தாவது -விசேஷணம்
-ஆவரண ஜலம் சூழ்ந்த கட்டுக் காப்பு -ஆறாவது விசேஷணம் -நீர் ஆரம் வேலி -ஆவரணம் –

ஆரார் இவற்றினிடை அதனை எய்துவார் –
சீரார் இரு கலையும் எய்துவர் –
ஆரானும்உண்டு என்பார் எனபது தான் அதுவும் ஒராமை யன்றே –
அது ஒராமை ஆம் ஆறு உரைக்கேன் -கேள் ஆமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழித் தேரார் –
நிறை கதிரோன் -மண்டலத்தைக் கீண்டு புக்கு –
ஆராவமுதம் அங்கு எய்தி -அதில் நின்றும் வாராது ஒழிவது ஓன்று உண்டே -அது நிற்க
-ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே –

ஆரார் இவற்றினிடை -இம்மூன்று புருஷார்த்தங்களுக்குள்
அதனை எய்துவார் -தமக்கு உத்தேசியமான காம புருஷார்த்தைச் சுட்டிக் காண்பிக்கிறார்
சீரார் இரு கலையும் எய்துவர் –காமமே -சாத்தியம் -அறமும் பொருளும் சாதனம் என்றபடி
காமமே பிரதானம் -அதின் கலா மாத்திரமே இவை -ஏக தேசம் என்றபடி -பகவத் விஷய காமமே வேதாந்த சித்தம் –
மேலே நஹி நிந்தா நியாயம் -நீள் விசும்பு அருளும் -இறந்தால் தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின் –என்பவர் அன்றோ
-அர்ச்சாவதார ப்ராவண்யத்தை சிறப்பித்துச் சொல்வதில் நோக்கு இங்கு இவருக்கு
அன்வாருஹ்ய வாதம் -தமக்கு அபிமதம் இல்லாத பொருளை ஒரு கார்யார்த்தமாக ஏற்றுக் கொண்டு சொல்லுகை —
ஓராமை –ஆராய்ச்சி இல்லாமை / கேளாமே –கேளுங்கோள் என்றபடி –

ஏரார் இள முலையீர் –என் தனக்கு உற்றது காண் –
காரார் குழல் எடுத்துக் கட்டி -கதிர் முலையை -வாரார வீக்கி -மணி மேகலை திருத்தி –
ஆராயில் வேற்கண் –
அஞ்சனத்தின் நீர் அணிந்து –
சீரார் செழும் பந்து -கொண்டு அடியா நின்றேன் நான் –
நீரார் கமலம் போல் செங்கண் மால் -என்று ஒருவன் –
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க –
-சீரார் குடம் இரண்டு -ஏந்தி -செழும் தெருவே –
ஆராரெனச் சொல்லி -ஆடுமது கண்டு
எராரிள முலையார் என்னையரும் எல்லாரும் –
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல் வினையால் –
காரார் மணி நிறமும் கை வளையும் காணேன் நான் –
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் –

எனது அலங்காரம் கண்டு ஈடுபட்டு அவன் மடல் எடுக்க வேண்டி இருக்க நான் அன்றோ மடல் எடுக்க நேர்ந்தது –
ஆராயில் வேற்கண் –அயில் -கூர்மை
சீரார் செழும் பந்து -கொண்டு அடியா நின்றேன் நான் –பிராகிருத பதார்த்தங்களிலே மண்டிப் போது போக்கு கொண்டு இருந்த –
அஜாமேகாம் லோஹித சுக்ல கிருஷ்ணம் -செந்நூல் வெண்ணூல் கருநூல்களாலே கடாபி பட்டு கீழ் விழுவது மேல் எழுவது சுழன்றும் போகும்
அந்நிய பரையாய்க் கிடந்த என்னை வீதியார வருகின்ற விமலன் தன்னை காண வாராய் என்றதும் வல் வினையால் போனேன்
இங்கு வல் வினை என்றது பகவத் பக்தியால் என்றவாறு
சென்ற க்ஷணத்தில் நிறம் இழந்தேன் வளையல்கள் கழலப் பெற்றேன்

அறிவழிந்து –
தீரா வுடம்போடுபேதுறுவேன்கண்டிரங்கி
ஏரார் கிளிக் கிளவி-எம்மனைதான் வந்து என்னை –
சீரார் செழும் புழுதிக் காப்பிட்டு –
செங்குறிஞ்சித் தாரார் நறு மாலைச் சாத்தற்கு
தான் பின்னும் நேராதன ஓன்று நேர்ந்தாள்
அதனாலும் தீராது என் சிந்தை நோய்
தீராது என் பேதுறவு வாராது மாமை
அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூதறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொல்லப்படும் கட்டுப் படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவான் என்றார்

சீரார் செழும் புழுதிக் காப்பிட்டு –ஸ்ரீ பாகவத ஸ்ரீ பாத தூளி யைக் கொண்டு ரக்ஷை இட்டு
மாயன் தமர் அடி நீறு கொண்டு அணிய முயலில் மாற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே–தவள பொடி கொண்டு நீர் இட்டுடுமின் தணியுமே
செங்குறிஞ்சித் தாரார் நறு மாலைச் சாத்தற்கு-சாஸ்தா என்னும் தேவதாந்தரத்துக்கு –சாத்திக் கொள்கிறவன் அர்த்தம் இல்லை -சாஸ்தா -என்றவாறு
தான் பின்னும் நேராதன ஓன்று நேர்ந்தாள்-இது காணும் செய்து அறியாத அஞ்சலியையும் செய்து -மறந்தும் புறம் தொழா மாந்தர் –
வகுத்த விஷயத்தில் ஒரு அஞ்சலி பண்ணினால்-அது சாதனத்தில் அந்வயிக்கில் செய்வது என் -என்று இருக்கக் கடவ
தான் திருத் துழாய் பரிமாறாத ஒரு தேவதைக்கு ஒரு அஞ்சலியும் அகப்படப் பண்ணினாள் காணும் –
மூதறியும் அம்மனைமார் சொல்லுவார் –
இந்திரன் படிகள் இருக்கும் படி என் என்று ஒருத்தி ஒருத்தியைக் கேட்க 98–இந்த்ராதிகளை சேவித்தேன் -இந்திரன் படி கேட்க்கிறாய் –
வேணுமாகில் சொல்லுகிறேன் என்றாள் இ றே-அப்படியே பழையராய் நோய்களும் அறிந்து நோய்க்கு நிதானமும் அறிந்து
பரிகாரமும் பண்ணுவித்துப் போரும் மூதறிவாட்டிகள் சொல்லுகிறார்கள் –
பாரோர் சொல்லப்படும் கட்டுப் படுத்திரேல் –கட்டுப் படுத்துதலாவது குறி கேட்பது

அது கேட்டு-காரார் குழல் கொண்டைகட்டுவிச்சி கட்டேறி
சீரார் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர் விதிரா மெய் சிலிரா
அங்கு ஆரலங்கல் ஆனமையால் ஆய்ந்து கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள்
பேர்த்தேயும் -காரார் திருமேனி காட்டினாள் –
கையதுவும் சீரார் வலம் புரியே என்றாள்
திருத் துழாய்த் தாரார் நறு மாலை கட்டுரைத்தாள் -கட்டுரையா

கட்டேறி--தெய்வ ஆவேசம் கொண்டு –
சுளகு -முறம் -பதரையும் மணியையும் பிரித்து புதரை நீக்கி -மணியே -மணி மாணிக்கமே -மதுசூதா
-நன் மணியாகிய எம்பெருமானை பிரகாசிப்பதால் சீரார் சுளகு –
கடல் வண்ணர் இது செய்தார் என்று நேராக சொல்லக் கூடிய விஷயம் இல்லையே –
மொய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்ற என்றபடி -வேர்வை அடைந்தாள் -உடல் நடுங்கினாள் மயிர்க்கூச்சு எறிந்தாள்
பேர் ஆயிரம் உடையான் என்றாள்–ஆயிரம் திருநாமங்களை யுடைய எம்பெருமானே இந்நோய் செய்தவன் என்று எண்ணினாள்
பேர்த்தேயும் -காரார் திருமேனி காட்டினாள் -அதற்கு மேலே திரு மேனியைப் படி எடுத்துக் காட்டினாள்
கையதுவும் சீரார் வலம் புரியே என்றாள்–திருத் துழாய்த் தாரார் நறு மாலை கட்டுரைத்தாள் –விரை குழவு நறும் துளவம்
மெய்ந்நின்று கமழும்-அதுக்கும் மேலே அபிநயித்துக் காட்டினாள் –
கையதுவும் சீரார் வலம் புரியே என்றாள்-திருச் சக்கரத்துக்கும் உப லக்ஷணம் -தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி
மேலும் தாளிணை மேலும் புனைந்த-தண்ணம் துழாய் யுடை எம்மான் -என்று அபிநயித்துக் காட்டினாள்
கட்டுரையா -ஆக இவ்வளவும் அங்க சேஷ்டிதங்களாலே காட்டிய பின்பு வாய் விட்டுச் சொன்னதாவது
ஸூஸ் பஷ்டமாக நீங்கள் தெரிந்து கொள்ளுமாறு மேலே சொல்லாத தொடங்குகிறாள் –
கீழே என்றாள் கட்டுரைத்தாள் – என்றது ஸ்வகதமாக சொன்னவை –
எறியா-வேரா -விதிர் விதிரா-சிலிரா-மோவா –வினை எச்சங்கள்
எறிந்து-வேர்த்து -விதிர் விதிர்த்து -சிலிர்த்து -மோந்து என்றபடி
கட்டுரையா -இதுவும் வினை எச்சம் -உரையா -உரைத்து என்றபடி –

நும் மகளை நோய் செய்தான் ஆரானும் அல்லன்
அறிந்தேன் அவனை நான்
கூரார் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகேனோ –
ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது காண் –
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –
மற்று ஆராலே கல்மாரி காத்தது தான்
ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது -அவன் காண்மின்
ஊராநிரை மேய்த்து உலகம் எல்லாம் உண்டும் உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய்-ஆங்கு ஒரு நாள் ஆய்ப்பாடி
சீரார் கலையல்குல் சீரடி செந்துவர் வாய்
வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு
ஏரார் இடை நோவ எத்தனையோர் போதுமாய்
சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேரார் நுதல் மடவாள் வேரோர் கலத்திட்டு
நாரார் உறி ஏற்றி நன்கமைய வைத்ததனை
போரார் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம்
ஒராதவன் போல் உறங்கிஅறிவுற்று
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த
மோரார் குடமுருட்டிமுன் கிடந்த தானத்தே
ஒராதவன் போல் கிடந்தானை கண்டவளும்
வராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து
இங்கு ஆரார் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீராம் இது செய்தீ தென்று ஓர் நெடும் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியாய் சிக்கென ஆர்த்தடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் –

1-எம்பெருமான் உலகு அளந்தது / 2-இலங்கையை பாழ் படுத்தி -/ 3-கோவர்த்தன மலை எடுத்து கல் மழை காத்து
/ 4-கடல் கடைந்து /5-பசு மேய்த்து / 6-உலகம் உண்டு உமிழ்ந்து –
-இவ்வளவும் பரத்வம் காட்டி -ஆராத தன்மையனாய் -ரஷ்ய வர்க்கத்தை எல்லாம் ரஷித்தாலும்-
தான் ஒன்றும் செய்யா தானாய் இருக்கிற படி
7-வெண்ணெய் களவு கண்டு கட்டுப்பட்டு /8- காளியன் நிரசனம்/ 9-சூர்ப்பணகை அங்க பங்கம் /
10-கரன் இராவணன் நிரசனம்  / 11- இரணியன் நிரசனம் / 12-கஜேந்திர ஆழ்வான் ரக்ஷணம் —

சீரார் கலையல்குல் சீரடி செந்துவர் வாய்-வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு-யசோதை பிராட்டி பெயரைச் சொல்லாமல்
விசேஷணங்களை மட்டும் இட்டு அருளிச் செய்தது -ஞாலத்துப் புத்ரனைப் பெற்றார் நங்கை மீர் நானே மாற்று ஆரும் இல்லை -என்றும்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவரைப் பெற்ற வயிறு உடையாள் -என்று விலக்ஷணம் ஆனவள் என்பதால் –
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி-ஆழ வமிக்கு முகக்கினும் ஆழ் கடல் நீர் நாழி முகவாது நானாழி -என்னும் அறிவில்லா சிறு பிள்ளைத் தனம் –
கோயில் சாந்தைக் குடத்தின் விளிம்பில் கண்டாள் கொலோ -என்று ரஸோக்தியாக பட்டர் நஞ்சீயர் இடம் அருளிச் செய்தாராம் –
நெடும் கயிற்றால் -விபரீத லக்ஷணை-பெரு மேன்மை -திரு மேனி தீண்டப் பெற்றதால் -நீண்ட கயிற்றை துண்டு துண்டாக வெட்டி விடுவானாம்
ஊரார்கள் எல்லாரும் காண-பரிபவத்தை காண -என்பது அல்ல -அவதார பிரயோஜனம் அறிந்து -யசோதை பிராட்டிக்கு
இது தெரியும் போலும் -கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் அன்றோ
தீரா வெகுளியாய்-இது வெறும் அபிநயம் –அஞ்ச யுரைப்பாள் யசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -கோபம் மெய்யே உண்டாக மாட்டாது இ றே
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் -உரலோடு கட்டுண்டதுக்கும் தாம்பால் அடித்ததற்கு இல்லை -வெண்ணெயையும் பெண்களையும்
களவு காண ஒட்டாமல் போயிற்றே என்றே ஆரா வயிற்று -வெண்ணெய் குழந்தைக்கு -ஜீரணம் ஆகாது என்றுமாம் –

அன்றியும்
நீரார் நெடும் கயத்தை சென்று அலைக்க நின்று உரப்பி
ஓராயிரம் பண வெங்கோ வியல் நாகத்தை
வாராய் எனக்கென்று மற்றதன் மத்தகத்து
சீரார் திருவடியால் பாய்ந்தான்

அலைக்க நின்று உரப்பி-நாலு பக்கங்களிலும் கரைக்கு மேலே நீர் வழியும் படி கலக்கி -என்றபடி
ஓராயிரம் பண வெங்கோ வியல் நாகத்தை-காளியின் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து -பெரியாழ்வார்
பயங்கரத்தின் மிகுதியால் இங்கு ஆயிரம் -அதிசய யுக்தி -கல்ப பேதத்தாலும் என்றுமாம் –
வெங்கோ வியல் –கொடுமையே ஸ்வபாவமாகக் கொண்ட பிரபு யமன் -என்றவாறு
மற்றதன் மத்தகத்து–மற்று அதன் -மஸ்தகம் –
சீரார் திருவடியால் பாய்ந்தான்-மேலைத்த தலை மறையோர்களுக்கு சென்னிக்கு அணியாக வேண்டிய-திருவடி இவனுக்கு வாய்த்ததே -வயிறு எரிந்து அருளிச் செய்கிறார்

தன் சீதைக்கு நேராவன் என்று ஓர் நிசாசரி தான்வந்தாளை
கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெந்நரகம்
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர்வாய்
வாரார் வனமுலையாள் வைதேவி காரணமா
ஏரார் தடம் தோளி ராவணனை ஈரைந்து
சீரார் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்-

சூர்பணாகாவைச் செவியோடு மூக்கு அவளார்க்க அரிந்தானைப் பாடிப் பற அயோத்தியைக்கு அரசனைப் பாடிப் பற -பெரியாழ்வார்
மலை போல் உருவ தோர் இராக்கத்தி மூக்கு அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவன் -கலியன்
ராமஸ்ய தாஷினோ பாஹூ —
அவட்கு மூத்தோனை–கரனை-என்றவாறு -ஸூ மாலி அரக்கன் உடைய மகள் –இராவணன் தாய் கேகேசி யுடைய தங்கை
-இராவணன் தந்தை விஸ்வரன் முனியை கொழுநனாக அடைந்தவள் –இராவணனுக்கு சிறிய தாய் கும்பீ நசி யுடைய குமாரன்
– இராவணனுக்கு தம்பி கரன் என்றவாறு –
இராவணன் கும்ப கர்ணனுக்கு பின் விபீஷணனுக்கு முன் பிறந்தவள் சூர்ப்பணகை-ஜனஸ்தான அரக்கர் தலைவன் கரன் –
கரன் அறுபது லக்ஷம் படை வீரர்கள் உடனும் -சேனைத் தலைவர் பதினால்வரோடும்-தூஷணன் த்ரி சிரஸ் -முக்கிய சேனாதிபதிகளோடும் புறப்பட்டு
அகம்பனன்-அரிவாளால் சொல்லி தடுத்தும் கெடுக்காமல் -வர பெருமாள் இளைய பெருமாளை சீதா பிராட்டிக்கு காவல் வைத்து தானே நிரசித்த வரலாறு
வெந்நரகம்-சேரா வகையே சிலை குனித்தான் -கண்ட காட்சியில் எல்லா நன்றாக வேதனையும் இங்கேயே அனுபவித்தான்
-குடல் மறுக்கும் படி இங்கேயே பட்டானே -நஞ்சீயர் இத்தை பட்டர் அருளிச் செய்வார் என்று கேட்டு விஸ்மயப் பட்டார் என்பார் -முந்திய ஆஸ்ரமத்தில்
சிலை குனித்தான்–கொன்றான் என்ற படி -மங்கள வழக்கு

போரார் நெடு வேலோன் பொன் பெயரோன் ஆகத்தை
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு குடல் மாலை
சீரார் திரு மார்வின் மேற்கட்டிசெங்குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி யுருவாய் அன்றியும்
பேர் வாமனாகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டிச் சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை-

பேர் வாமனன் ஆகிய காலத்து -வெண்டளை பிறழும் –வாமனாகிய -என்பதே சரியான பாடம் –
சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனாகாக் கால் பேராளா-பெரிய திருவந்தாதி பாசுரம் போலெ
பேர் வாமன் -வாமனர்களுக்குள் பெருமை பெற்றவன் -மிகச் சிறிய வாமனன் என்றதாயிற்று
சலத்தினால் -கிரித்திரிமத்தினால்-கபடத்தால் என்றபடி –

ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
காரார் வரை நட்டு நாகம் கயிறாக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்
தாரார்ந்த மார்வன்

கடல் கடைந்த போது தோளும் தோள் மாலையாக இருக்கும் இருப்பில் ஆழங்கால் பட்டு -தேவர்கள் -திவ்ய அலங்காரத்தில் கண் வைக்காமல் –
கவிழ்ந்து உப்புச் சாறு வருவது எப்போதோ என்று கவிழ்ந்து பார்த்து இருந்தார்கள் –

தடமால் வரை போலும்
போரானை பொய்கை வாய் கோட்பாட்டு நின்று
நீரார் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால்
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு
தீராத சீற்றத்தாலே சென்று இரண்டு கூறாக
ஈராஅதனை இடர் கடிந்தான் எம்பெருமான்–

இந்த்ரத்யும்னன் -அரசன் -அகஸ்தியர் சாபத்தால் -கஜேந்திரன் –ஹூ ஹூ கந்தர்வன் -தேவலன் முனி சாபத்தால் முதலை –
போரானை -யுத்த உன்முகனாய் திரிகிறான் அல்லன்-செருக்கால் மலைகளோடு பொருது திரிகிற படி
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்
வாராய் –பதக முதலை வாய்ப்பட்ட களிறு கதறி கை கூப்பி என் கண்ணா கண்ணா –இதற்கு மா முனிகள் வியாக்யானம்
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்
வாராய் -என்று கூப்பிட்டானாக அருளிச் செய்தார் திரு மங்கை ஆழ்வார் -இவர் கண்ணா கண்ணா என்று கூப்பிட்டானாக அருளிச் செய்கிறார்
மூலேதி முக்தபத மாலபதி த்வி பேந்த்ரே-என்று கொண்டு மூலமே என்று கூப்பிட்டானாக பவ்ராணிகர் சொன்னார்கள்
இவை தன்னில் சேரும்படி என் என்னில் மூலம் என்கிற இடத்தில் அசாதாரண விக்ரஹ விசிஷ்டன் ஆகிற ஆகாரத்தை நினைத்து கூப்பிட்டானாகையாலே
அதற்கு பர்யாய சப்தங்களை இட்டு ஆழ்வார்கள் அருளிச் செய்தார்கள் ஆகையால் எல்லாம் தன்னில் சேரக் குறை இல்லை –
என் ஆர் இடரை நீக்காய்-நாஹம் களே பரஸ்ய யாஸ்ய த்ராணார்த்தம் மது ஸூ தனா-கரஸ்த கமலான் ஏவ பாதயோர் அர்ப்பித்தும் ஹரே –
தாமரைப் பூக்களை திருவடிகளில் ஏற்றுக் கொண்டே இடரைக் களைந்தான் என்றபடி –

பேர் ஆயிரம் உடையான் பேய்ப்பெண்டிர் நும் மகளை
தீரா நோய் செய்தான் என வுரைத்தாள்-

சர்வேஸ்வரன் அடியாக வந்த நோய் அன்றோ -நித்தியமாக செல்ல வேண்டும் என்பதால் தீரா நோய் என்கிறாள் –
கட்டுவிச்சி பேச்சு முற்றிற்று -மேல் பரகால நாயகியின் நிர்வேதம் –

சிக்கென மற்று
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போரார் வேல் கண்ணீர் அவனாகில் பூம் துழாய் தாராது ஒழியுமே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள்-

தாய்மார் இத்தை திடமாக தெரிந்து கொண்டு -புவனி எல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே
தாஸ பூதையான இவளுக்கு -தம் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் -இனி என்ன கவலை என்று
விசாரம் அற்று -போரார் வேல் கண்ணீர்-என்று அசல் பெண்டிர்களைப் பார்த்து சம்போதிக்கிறாள் –

நான் அவனை
காரார் திருமேனி கண்டதுவே காரணமா
பேராபிதற்றா திரி தருவான் பின்னையும்
ஈராப் புகுதலும் இவ்வுடலைதண் வாடை
சோரா மறுக்கும் வகை யறியேன்சூழ் குழலார்
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்குவாளா விருந்து ஒழிந்தேன்

ஆனால் நான் கவலை தீர பெற்றிலேன் -சகல தாபங்களையும் தீர்க்கும் அவன் திரு மேனியைக் கண்டா அன்றுமுதலாக அன்றோ
நிலை குலைந்து பிதற்றி -மேலே வாடைக்கு காற்றும் சித்ரவதை பண்ணா நின்றது –அன்றே மடலூராமல்-லோக அபவாதத்துக்கு அஞ்சி இது வரை வீணாக காலம் கழித்தேனே-

வாராய் மட நெஞ்சே வந்து மணி வண்ணன்
சீரார் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் -தரும் -என்று இரண்டத்தில் ஒன்ற்றதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டுஅது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
காரார் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது வல்வினையேன்
ஊரார் உகப்பதே யாயினேன்-

சக்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்தது என்று மகிழ்ந்து போன என் நெஞ்சம் -கடல் புக்கது திரும்பாது என்று-அறியாமல் கடல் வண்ணனுக்கு தூது அனுப்பி தனியேன் ஆனேனே -அந்த கடல் வண்ணனே சிந்தா விஷயம் ஆனான் என்றபடி –
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்-சத்ருக்களுக்கு தெரியாமல் —ஒன்றாதார் -மனம் பொருந்தாதார்
-அவன் வாராமல் இருக்க அவனை தூஷிப்பார்களே -அவனது தயா வாத்சல்யாதி குணங்களை அழிப்பார்களே என்று
ஆராயுமேலும் பணி கேட்டுஅது அன்று எனிலும்–உன்னைக் கண்ட போதே அவள் என் பட்டாள்-அவள் உளாளோ -அவ்வாஸ்ரயம் நமக்கு இன்னம் கிடைக்குமோ –
என்று திரு உள்ளம் ஆனானேயாகிலும் -அன்றிக்கே துஷ்யந்தனைப் போலே-அங்கணம் ஒப்பாள் ஒருத்தியை அறிகிறிலோம்-என்றான் ஆகிலும்
ஊரார் உகப்பதே யாயினேன்–சாதனம் இல்லாமல் பலம் கிட்டாது என்பர் ஊரார் -சாதன அனுஷ்டானம் கால் கட்டு
-அவனாலே தான் பேறு-என்று சொல்லிக் கொண்டு இருந்த நானே
மடலூரும் படி நேர்ந்த படியால் எனது அத்யவசாயம் குலைந்து ஊரார் கொள்கையே பலித்ததே
-மடலூர்வேன் என்ற போதே சித்த உபாய நிஷ்டை குலைந்ததாம் இ றே-

மற்று எனக்கு இங்கு
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் யுருகும் என்னாவிநெடும் கண்கள்
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன்
பேராயினவே பிதற்றுவன் பின்னையும்
காரார் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார் –

உசாவ யாருமே இல்லையே -உண்டியே உடையே உகந்தோடும் இம்மண்டலத்துக்கும் -உண்ணும் சோறு –எல்லாம் கண்ணன் -என்று
இருக்கும் எனக்கும் என்ன சேர்த்தி யுண்டு -நெஞ்சமும் இழந்த பின்பு உசாத் துணை யாவார் உண்டோ
ஆத்மவஸ்துவும் சிதிலமாகா நிற்க -உறக்கமும் இல்லாமல் -முகம் காட்டி உதாவாதவனை மறக்காமல் வாய் மட்டும் அவன் திரு நாமங்களை வெருவா நிற்கிறதே
ஸ்வரூப ஹானியை நினைந்து ஆறி இருக்கும் ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் போலே ஆறி இருக்க வல்லேன் அல்லேன் –
காரார்ந்த திருமேனியை காண ஆசை கரை புரண்டு இருக்க எவ்வாறு ஆறி இருப்பேன் –

அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வாரார் வனமுலை வாசவத்தை என்று
ஆரானும் சொல்லப் படுவாள் அவளும்பெரும் தெருவே
தாரார் தடம் தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே மற்று எனக்கு இங்கு
ஆரானும் கற்பிப்பார் நாயகரே –

ஸூ பந்து மஹா கவியால் புகழப் பட்ட வாஸவதத்தை-அர்வாசீனம் என்கிற நூலில் கற்பிக்கப் பட்ட கதா நாயகி –
இவள் சாபத்தால் கல்லாகி தன காதலன் கந்தர்ப்ப கேதுவின் கர ஸ்பர்சத்தால் சாபம் நீங்கி பெண் உறுப்பு பெற்று கலந்து மகிழ்ந்தாள் –
இவளை அல்ல பரகால நாயகி காட்டுகிறாள் -இவள் தோழிமார் பெரும் திரளை கடுக விட்டு விலங்கிட்டு இருக்கும் வத்ஸ ராஜன் பின்னே போனாள்
திரௌபதி ஸ்வயம் வரத்தில் வந்த அரசர்களில் -வத்ஸாராஜச மதிமான் -இவனையே -தாரார் தடம் தோள் தளைக் காலன்-என்கிறாள்
அரும் பதத்தில் -வாசவத்தையான ராஜ புத்ரி வத்ஸாராஜன் என்பான் உடன் சங்கதையாக -அவனை ராஜா சிறையில் வைக்க
அவனைக் கூட்டிக் கொண்டு அவன் பின்னே போனாள் –
ஆரானும் கற்பிப்பார் நாயகரே -எனக்கு எதிர்த்தட்டாக வார்த்தை சொல்லி என்னை சிஷிப்பார் எனக்கு நியாமகர் அல்லர்
மேலே தன் உறுதியை வெளிப்படையாக அருளிச் செய்கிறாள் –

நான் அவனை-
காரார் திருமேனி காணும் அளவும் போய்
சீரார் திருவேங்கடமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெக்காவே
பேராலி தண் கால் நறையூர் திருப் புலியூர்
ஆராமம் சூழ்ந்த வரங்கம் கண மங்கை
காரார் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர்
காரார் குடந்தை கடிகை கடல் மலை
ஏரார் பொழில் சூழ் இட வெந்தை நீர் மலை
சீராரும் மால் இரும் சோலை திரு மோகூர்
பாரோர் புகழும் வதரி வட மதுரை
ஊராய வெல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓரானை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள் விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண்ணரும் சீர்ப்
பேராயிரமும் பிதற்றி பெரும் தெருவே
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வாரார் பூம் பெண்ணை மடல்-

காரார்ந்த திரு மேனியைக் கண்டு களிக்கப் பெரும் அளவும் அவன் குணங்கள் கொண்டாடி இருக்கும் தேசம் எங்கும் நுழைந்து
விரஹம் தின்ற என் வடிவைக் காட்டி அவன் குணங்களை அளித்து வழி எல்லா வழி யாகிலும் அவனைப் பெறக் கடவேன் என்கிறாள்
பேரா மருது இறுத்தான்-அஸூராவேசத்தாலே ஸ்திரமாக நின்ற யாமளார்ஜுனங்களை -தான் பேருந்து -தளர் நடை இட்டு மருந்துகளை இறுத்தானே
ஒருங்கொத்த இணை மருதம் உன்னிய வந்தவரை –பொய்ம்மாய மருதான வசுரரை
எண்ணரும் சீர்ப்-பேராயிரமும் பிதற்றி –குண கதனம் பண்ணுகைக்கு சகஸ்ர நாமம் போலே குண ஹானிக்கும் ஒரு சகஸ்ர நாமம் பண்ணுகிறேன்
நாட்டாரும் நகரத்தாரும் நன்கு அறிய நெடு வீதி ஏறிப் புறப்பட்டு -அவர்கள் இகழ்ந்தார்களே யாகிலும் மடலூர்வேன் –
வாரார் பூம் பெண்ணை மடல்–பெண்ணை பனை மரத்துக்கு பெயர் -என் கையிலே சிறந்த ப்ரஹ்மாஸ்திரம் இருக்கிறபடி பாருங்கோள்-
இனி எனக்கு என்ன குறை -என் கார்யம் கை புகுந்ததேயாம் – என்று பரிக்ரஹித்த சாதனத்தின் உறைப்பைக் காட்டின படி –

—————————————————-

திரு கம்ப நாட்டு ஆழ்வார் அருளிச் செய்த தனிப் பாடல்-

ஊராது ஒழியேன் உலகு அறிய ஒண் நுதலீர்
சீரார் முலைத் தடங்கள் சேரளவும் –பாரெல்லாம்
அன்று ஓங்கி நின்று அளந்தான் நின்ற திரு நறையூர்
மன்று ஓங்க வஊர்வன் மடல்-

——————————————————–

மேல் பெரிய திருமடலில் மடலூரும் திருப்பதியை சொல்லும் இடத்து இறுதியாக நறையூரை அருளிச் செய்து
இரும் பொழில் சூழ் மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல் -என்று தொடங்கி
திரு நறையூரில் தளர்ச்சி உண்டானதாக அருளிச் செய்த படியாலும்
பொன்னுலகில் வானவரும் பூ மகளும் போற்றி செய்யும் நல் நுதலீர் நம்பி நறையூரார் மன்னுலகில்
என்னிலைமை கண்டும் இரங்காரே யாமாகில் மன்னு மடலூர்வன் வந்து -பெரிய திருமடல் தனியன் -படியாலும்
திரு நறையூர் பிரதான லஷ்ய ஸ்தலம் என்றதாயிற்று

—————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அருளிச் செயலில் அமுத விருந்து –

June 2, 2015

ஒது வாய்மையும் உவனியப்பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன் -5-8-7-

முற்பட த்வயத்தை கேட்டு -இதிஹாச புராணங்களையும் அதிகரித்து -பரபஷ
பிரதிசேஷபத்துக்கு உடலாக நியாய மீமாம்சைகளும் அதிகரித்து போது போக்கும்
அருளிச் செயலிலேயாம் நம்பிள்ளை போலே -பெரிய வாச்சான் பிள்ளை வ்யாக்யான ஸ்ரீ ஸூக்திகள் –

—————————–

தொழுது முப்போதும் –பார்க்கடல் வண்ணனுக்கே -பார் சூழ்ந்த கடல் போலே இருக்கும் வடிவு
பாற் கடலும் வேம்கடமும் –

—————————–

கழல்களுக்கு கமலம் உவமை அநேகம்
இரண்டு ஞாயிறு உவமை -கதிரவன் உவமை எங்கே
சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதி திருப்பதம் எல்லையில் சீர் இள
ஞாயிறு இரண்டு போலே என்னுள்ளவா -திருவாய்மொழி -8-5-5-

———————-

திருவாய்மொழி -1-10-11-தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே -ஈடு ஸ்ரீ ஸூக்தி
இதுக்கு பலமாக கைங்கர்யத்தை இது தானே தரும் –

———————————-

காரார் புரவி ஏழ் –பூண்ட தொன்று உண்டே -சிறிய திருமடல்
கோஹிதத் வேத யத்ய முஷ்மின் லோகே அஸ்தி வா ந வேதி -வேதம் கோஷிப்பதையே
ஆழ்வார் அருளிச் செய்து இருக்கிறார் –

————————————-

திருப்பணி -கைங்கர்யம்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு விலா அடிமை செய்ய -நம் ஆழ்வார்
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திரு அருளும் கொண்டு
நின் கோயில் சீய்த்து பல் படி கால் குடி குடி வழி வந்து ஆட் செய்யும் தொண்டர் -நம் ஆழ்வார்
எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி வந்து வழி வழி ஆட்
செய்கின்றோம் -பெரியாழ்வார்
எந்தாதை தாதை அப்பால் எழுவர் பழ வடிமை வந்தார் -திருமங்கை ஆழ்வார்
தக்க சீர் சடகோபன் என் நம்பிக்கு ஆட் புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -மதுரகவி ஆழ்வார்-

——————————–

கூட்டும் விதி என்று கூடும்  கொலோ தென் குருகைப்பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் உணர்ந்தோர் ஈட்டங்கள் தன்னை என்
நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே -அமுதனார்
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -வல் வினையை
கானும் மலையும் புகக் கடிவான் -தானோர் இருளன்ன மா மேனி எம் இறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து -நம் ஆழ்வார்

————————————

அப்பன் கோயில் -நம் ஆழ்வார் திருவவதார ஸ்தலம் –
வைகாசி எட்டாம் திருநாள் எழுந்து அருளுகிறார்
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த என் அப்பனே –
தமியனேன் பெரிய அப்பனே
பெரிய அப்பனை பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை
முனிவர்க்கு உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கோர் தனி அப்பன் தன்னை
என்று எட்டு தடவை மங்களா சாசனம் செய்து அருளுகிறார்

————————————

திருவாசிரிய அனுபவம்
முதல் பாட்டில் திரு மேனி வைலஷண்யத்தில் ஈடுபடுகிறார் –
இரண்டாம் பாட்டில் – எம்பெருமான் திருவடிகளை சூட வேண்டும் -பகவத் விஷயத்தில் ஆசை
மேலிட்டு இருப்பதே ஸ்வரூபம் என்று நினைக்கிறார் –
மூன்றாம் பாட்டில் -அடியார்களுக்கு ஆட் பட்டு இருக்கும் வாய்ப்புக்கு பாரிக்கிறார்
நான்காம் பாட்டில் -இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களைப் போலே பகவானுக்கு பல்லாண்டு
பாடுவதே பொழுது போக்காக பெற வேண்டும் என்று விரும்புகிறார் –
ஐந்தாம் பாட்டில் -உவந்த உள்ளத்தனாய் உலகளந்த வரலாற்றை நினைந்து உகக்குகிறார்
ஆறாம் பாட்டில் -இப்படிப்பட்ட பராத் பரனை விட்டு சூத்திர தேவதைகளை உலகோர்
வணங்கி பாழாகிறார்களே என்று வருந்தி கதறுகிறார்
நிகமத்தில் – அவனுக்கு என்று இருக்கும் தமது மன உறுதியை அனுசந்தித்து உகக்குகிறார் –
பகவத் ஸ்தாபனத்திலே நோக்கு இந்த பிரபந்தத்துக்கு

———————————

அவனே அவனே அவனும்
மா முனிகள் -திருக் கோலம்
திருவகிந்திர புரத்திலும்
திருவல்லிக் கேணியிலும்
18 குடை

———————-

நாத முனி -பெரியாழ்வார் -தனியன் -நாத முனிகள் சாதித்த தனியன்
கண்ணி நுண் சிறு தாம்பு –
திருப்பல்லாண்டு
திருவாய்மொழி
மூன்று திவ்ய பிரபந்தங்களுக்கும் சாதித்து அருளினார் –

உபதேச ரத்ன மாலை 5 பாசுரம் 5 சம்ப்ரதாய அர்த்தம்

திருப்பல்லாண்டு தனி பிரபந்தம் என்று காட்டி அருள –

—————————-

இடையன் –
ப்ரஹ்ம ருத்ரன் நடுவில் அவதரித்து
தேவகி வயிற்றின் இடையில்
பல ராமன் யோக மாயா நடுவில்
கோபிகள் இடையில்
இடையனாக
சம்சாரிகள் இடையில்
மாலாகாரர் அக்ரூரராதிகள்  இடையில் கம்சன் சிசுபாலாதிகள் இடையில்
இரவு பகல் இடைப் பொழுதில்

—————————————–

பூமா வித்யா -சாந்தோக்ய உபநிஷத் சொல்லும் வித்யை
நாரதர் சனத் குமாரர் இடம் -இருவரும் ப்ரஹ்ம புத்ரர்கள் -ஆத்ம ஜ்ஞானம் உபதேசிக்க கேட்டுக் கொள்ள
வேத சப்தங்களையே ப்ரஹ்மமாக உபாசனம் செய்ய சொல்ல
மேலே உண்டா –
நாமம் சொல்ல வாக்கு வேண்டும்
மனஸ் உதவ வேண்டும் வாக்கு பேச உபாசனம்
மேலே மேலே பிராணன் –
பிராணன் ஜீவன் ஒன்றாக சஞ்சரிக்கும் -ஜீவாத்மா தான் பெரியவன் உபாசனம் பண்ண சொல்ல –
காரணம் து -உபாசனம்
யஸ்ய நானயத்த –சகா பூமி
அந்ய பச்யதி
அந்ய
வேறு ஒன்றை கேட்க பேச அறிய மாட்டானோ அது தான் பூமா –
அல்பம் மற்றவை
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -உண்டே
பூமா ப்ரஹ்ம ஸூதரம் -விபுல ஸூக வாசி
சம்பிரதாச அதி உபதேசாத் -மூன்று பத சேர்க்கை
சம்பிரசாதா -ஜீவாத்மா
அதி -கொத்தமல்லி போலே -அவ்யய சப்தம் -அதிகமாக சொல்லி இருப்பதால்
அடுத்த ஸூத்ரம் அழகாக -தர்ம உப பயேக
ச காரம் முந்திய ஸூத்ரம் காட்டும் –
ஸ்வாபாவிக அமிர்தத்வம்
பூமா அளவில்லா சுகமான பர ப்ரஹ்மமே உபாசிக்க தக்கது –
ஜீவாத்மாவுக்கு அப்படி இல்லை
அனந்யார ஆதாரத்வம் அவனுக்கு மட்டுமே
அனைவரையும் தாங்குவதால்
சூசூரத்வம்
பிரத்யகாத்மா -பிராணன் –
சுந்தர பாஹூ அழகனையே சொல்லும் -கூரத் ஆழ்வான்

தகர வித்யை –
தகரம் ஸ்துதி -தகரம் புண்டரீஹம் -உபாசிதவ்யம் –
பட்டணம் -சரீரம் ப்ரஹ்ம புரம்
பட்டினம் காப்பு -நோய்காள் இங்கே இடம் இல்லை
நவ த்வார -ஒன்பது வாசல் தானுடைக் குரம்பை
களேபரம் -சரீரம்
ஹிருதய தாமரை பவனம் தகராகாசம் த்யானம் மனனம் உபாசனம்
மகா பூத ஆகாசமா ஜீவாத்மாவா பரமாத்மாவா –
தகர உத்தரேப்யா-ஸூ தரம் பின்னால் வரும் உத்தர வாக்ய கத
அபஹதபாப்மா –சத்ய சங்கல்ப 8 குணங்கள்
எண் குணத்தான் தாளை வணங்காதவர்கள் -வள்ளுவர்

—————————

கஞ்சனை குஞ்சி பிடித்து
மேலே வைக்கைப் பொறுக்க மாட்டான் கண்ணன்
உறி மேல் உள்ள வெண்ணெய் எடுப்பது போலே
சிற்றாயன் –

பைகொள் பாம்பேறி உறை பரனே-பரத்வ லஷணம்

தழுவி நின்ற காதல்-4-7-11

கமலக் கண்ணன் என்று தொடங்கி கண்ணுள் நின்று இறுதி கண்டேன் என்ற
பத்தும் உட் கண்ணாலேயாய் -நாயனார்

அநந்த குண சாகரம் -குணக் கடல்–குணங்களுக்கு கடல் போன்றவன் என்னாமல்  
குணங்களை கடலாக கொண்டு அந்த கடலை உடையவன்–பஹூ வ்ரீஹி சமானம் அர்த்தம்–
சீர்க்கடலை உள் பொதிந்த சிந்தனையேன்-பெரிய திருவந்தாதி -69  
பூண்ட நாள் சீர்க் உட்கடலை உட்கொண்டு -ஆச்சார்யா ஹிருதயம் -3-6-  
காதல் கடல் புரைய விளைத்த   அகாத பகவத் பக்தி சிந்தவே

————————————————————————————————————————————————

மதுர கவி சொல்
தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காக பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாக பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம் –இதுவே மா முனிகளுக்கு உண்ணும் சோறு
மதுர கவி சொல் படியே நிலையாகப் பெற்றோம்
மதுர கவி சொல் =கண்ணி நுண் சிறு தாம்பு
வாய்த்த திரு மந்த்ரத்தின் மத்திமாம் பதம் போலே சீர்த்த மதுரகவி செய் கலை
மற்றோர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்று எல்லாம் பேசிலும் நின் திரு வெட்டு எழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -பெரிய திருமொழி -8-10-3-

ஆசார்ய அபிமானமே உத்தாரகம்
மாம் ஏகம் -சுலபனாய் தேரோட்டியாய் நிற்கும் என்னை –
சுலபனாய் ஆசார்யனாய் இந்த அத்யந்த சாஸ்த்ரத்தை -சிஷ்யனாய் பிரபன்னனாய்
கேட்கும் உனக்கு சொல்லும் என்னை –

தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே

உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்லுவார்
பத்து பேர் உண்டு இறே -அவர்களை சிரித்திருப்பார் ஒருவர் உண்டு இறே -அவர் பாசுரம் கொண்டு
இவ் வர்த்தம் அறுதி இடக் கடவோம் –
அதனால் இவர்  சீர்த்த மதுர கவி ஆகிறார் –
திருத்திப் பணி கொள்வான் -ஆழ்வார் உடைய சேஷித்வத்தை சொல்லி –
மேவினேன் அவன் பொன்னடி -தேவு மற்று அறியேன் -அவரின் சரண்யத்வத்தையும் –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் –பாவின் இன்னிசை பாடித் திரிவனே –
போக்யத்வ ப்ராப்யத்வங்களையும் காட்டினார் –
பிரதம பர்வநிலை -பகவத் சேஷத்வம்
மத்யம பர்வ நிலை -ஸ்ரீ வைஷ்ணவர்கள் சேஷத்வம் -அவர்கள் காட்ட
சரம பர்வ நிலை -மதுர கவி ஆழ்வார் காட்டிய தத்வ ஹித புருஷார்த்தங்கள் நமக்கும் ஆக வேண்டுமே
மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே –
வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் -போலே சொல்லை அறிந்து நம்புவார்கள் இடமே வைகுந்தமே

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

சிறிய திருமடல்–69-காரார் திருமேனி காணும் அளவும் போய் -77 வாரார் பூம் பெண்ணை மடல் – -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 28, 2013

காரார் திருமேனி காணும் அளவும் போய்
சீரார் திருவேங்கடமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெக்காவே
பேராலி தண் கால் நறையூர் திருப் புலியூர்
ஆராமம் சூழ்ந்த வரங்கம் கண மங்கை
காரார் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர்
காரார் குடந்தை கடிகை கடல் மலை
ஏரார் பொழில் சூழ் இட வெந்தை நீர் மலை
சீராரும் மால் இரும் சோலை திரு மோகூர்
பாரோர் புகழும் வதரி வட மதுரை
ஊராய வெல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓரானை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள் விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண்ணரும் சீர்ப்
பேராயிரமும் பிதற்றி பெரும் தெருவே
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வாரார் பூம் பெண்ணை மடல்-

————————————————————————–

காரார் திருமேனி காணும் அளவும் போய் –
காரார் திருமேனி கண்டதுவே காரணமாக வி றே
அடியிலே இப்படிப் பட்டது –
இத்துணிவு எவ்வளவும் சொல்லக் கடவது ஏன் என்னில்
காரார் திருமேனி கண்டதுவே காரணமாகப் பிறந்த துணிவு
காரார் திருமேனி காணும் அளவும் செல்லக் கடவது இ றே –
இவளுடைய உத்தியோகத்தைக் கண்ட தோழி
அவனோடு சம்ச்லேஷிக்கக் கடவை -என்ன
பண்டும் கண்ட மாத்ரத்திலே யாயிற்று இப்பாடு பட்டது
இப்போதும் கண்டுவிடும் அத்தனை

நீ காணும்படி என் என்னில்
சீரார் திருவேங்கடமே –
அவன் குணங்களை கொண்டாடி இருக்கும் தேசம் எங்கும் புக்கு
என் வடிவைக் காட்டி அவன் குணத்தை அழித்துப் பெறக் கடவேன் –

சீரார் திருவேங்கடமே –
நித்ய சூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற
நிலையாய் யுள்ள ஏற்றம் உண்டு இ றே திருமலைக்கு –
அங்கே சென்று என் வடிவைக் காட்டி
அவன் உபய விபூதிக்கும் ஆளாகாத படி பண்ணுகிறேன்–

பேரகமே
மதிளும் இன்றியே
ஆற்றங்கரையிலே
திருப் பேரிலே வழிப் போவாரும் தன்னைக் காணும்படி
திறந்த வாசலாத் தன்னை சர்வ ஸ்தானம் பண்ணிக் கிடக்கிறான் -என்று பிரசித்தம் இ றே
அங்கே சென்று என் வடிவைக் காட்டி -அவன் சர்வ ஸ்தானம் பண்ணுகிறபடி பாருங்கோள் -என்கிறேன்

பேரா மருது இறுத்தான் வெள்ளறையே-
பேரா மருது -என்றது அசூராவேசத்தாலே பேராதே நின்றது -என்னுதல்
தளர் நடையிட மருது இறுத்தான் என்னுதல்
ஸ்தாவரங்களிலும் அகப்பட அசூராவேசம் உண்டாய் இரா நின்றது –
அசூராவேசம் இல்லாதபடி பரிவர் உள்ள திரு வெள்ளறையிலே
நின்றானாய் இருக்கிறான் இ றே –
அங்கே சென்று என் வடிவைக் காட்டி
பரிவையான எனக்கு முகம் தந்தபடி பாருங்கோள் -என்கிறேன் –

வெக்காவே –
ஆசரித்தான் போ -என்ன படுக்கை சுருட்டிக் கொண்டு அவன் பின்னே போய்
கிட -என்ன கால்கடை தலை மாடாகக் கிடந்தானாக
ஆசரித்தான் சொன்னபடி செய்தான் -என்று பிரசித்தம் இ றே
நான் சொன்னபடி செய்தானாக வில்லையே -என்று என் வடிவைக் காட்டுகிறேன்-

பேராலி
பிறந்த ஊருமாய்த் திருப்பதியுமாய்
எனக்குத் தன்னை முற்றூட்டாக்குகிறான் என்று இ றே நாட்டில் பிரசித்தி
அங்கே சென்று எனக்கு முற்றூட்டாக இவன் உடம்பு கொடுத்தபடி என் உடம்பில் பாருங்கோள் என்று காட்டுகிறேன்
ஏன் தான் இவள் திருவாலியிலே யன்றோ இருக்கிறது
திருவாலியிலே சென்று பழி இடுவேன் என்னுமது கூடாதே -என்னில்
அதுவும் அசத் கல்பமாய்க் கிடக்கிறது காணும் இவளுக்கு

தண் கால் –
குளிர்ந்த காற்றுப் போலே ஆஸ்ரிதர் உடைய ஸ்ரமம் தீர
உதவும் ஸ்வபாவன் என்று இ றே –தண் கால் -என்று பேராயிற்று –
அங்கே சென்று என் ஸ்ரமம் தீர உதவின படி பாருங்கோள் என்று என் வடிவைக் காட்டுகிறேன் –

நறையூர்-
தன ஸ்வ தந்த்ர்யம் எல்லாம் செல்லாமே பிராட்டி ஸ்வ தந்த்ர்யமேயாக எண்ணி
அவளுக்கு பவ்யனாய் இருக்கிறான் என்று பிரசித்தம் இ றே –
அங்கே சென்று இவன் பிராட்டிக்கு பவ்யனான படி என் வடிவில் பார்த்துக் கொள்ளுங்கோள் என்கிறேன் –

திருப் புலியூர்-
மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க வீங்கு இளம் தாள் கமுகு இ றே –
அவன் நின்ற ஊரில் ஸ்தாவரங்களும் உட்பட பரஸ்பரம் மிதுனமாய் சேர்ந்து வர்த்திக்கும் என்று இ றே பிரசித்தி
அங்கே சென்று என்னோடு சேர்ந்தபடி பாருங்கோள் என்கிறேன்-

ஆராமம் சூழ்ந்த வரங்கம்-
உகந்து அருளின தேசங்கள் எல்லாம் பகல் இருக்கையாய்
ஆஸ்ரித ரஷணததுக்கு ஏகாந்த ஸ்தலம் என்று
கோயிலிலே நித்ய வாஸம் பண்ணுகிறானாய் இருக்கிறது –
வன்பெரு வானகம் உய்ய -இத்யாதியில் சொல்லுகிறபடியே
அங்கே சென்று என் வடிவைக் காட்டி என்னுடைய ரஷணம்
பண்ணின படி பாருங்கோள் என்கிறேன்-

கண மங்கை –
கண்கள் ஆரளவும் நின்று கண்டு கொண்டேன் -என்று நான் சொன்னேன் இ றே-
அங்கன் சொன்னது அவனைப் பேணினேன் இத்தனை –
நான் கண்ணாரக் கண்டேனோ இல்லையோ என்று என் வடிவைக் காட்டுகிறேன் –

காரார் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம் –
பரம பதத்தை விட்டுக் குறைவாளர்க்கு முகம் கொடுக்கத் திரு விண்ணகரிலே வந்தான்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தனதாள் நிழல் – என்று பிரசித்தம் இ றே –
குறைவாட்டியாய் இருக்கிற எனக்கு முகம் தந்தானோ இல்லையோ -என்று என் வடிவைக் காட்டுகிறேன் –

சீரார் கணபுரம்-
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ-என்று
நான் தனக்கு அனன்யார்ஹை யாகத் தாலி கட்டி இருக்க
அங்கே சென்று
என்னைத் தனக்குப் புறம்பாக்கின படி பாருங்கோள்-என்று
என் வடிவைக் காட்டுகிறேன் –

சேறை –
மண் சேர முலை யுண்ட மாமதலாய் -என்று தாய் முலைக்கும் வேற்று முலைக்கும் வாசி அறியாத முக்தன் என்று பிரசித்தம் இ றே –
அங்கே சென்று என் வடிவையும் முலையையும் காட்டி என்னை ஸ்பர்சித்தானோ இல்லையோ -என்கிறேன் –

திருவழுந்தூர்
திருவாய்ப்பாடியிலே ஆஸ்ரிதர் கர ஸ்பர்சம் பட்ட த்ரவ்யத்தால் அல்லது
தனக்கு செல்லாது என்னும் இடம் பிரகாசிக்க நிற்கிற இடம் இ றே –
அங்கே சென்று ஆஸ்ரித ச்பர்சமே இவனுக்கு தாரகமாய் இருக்கிறபடி பார்க்கலாகாதோ -என்று-என் வடிவைக் காட்டுகிறேன் –

காரார் குடந்தை –
ஸ்ரமஹரமான திருக் குடந்தையிலே -குடந்தை எம் கோவலன் -என்று ஆஸ்ரித பவ்யனான கிருஷ்ணன் வந்து கண் வளர்ந்து அருளுகிறான் என்று பிரசித்தம் இ றே –
அங்கே சென்று என் வடிவைக் காட்டி -இவன் ஆஸ்ரித பவ்யனோ அபவ்யனோ -என்னும் இடம் சாதிக்கிறேன்-

கடிகை –
கடிகைத் தடம் குன்றின் மிசை இருந்த அக்காராக் கனி -என்று பிரசித்தம் இ றே –
அங்கே சென்று தன்னுடைய ரச்யதை ஆர்க்குக் கண்டது -என்கிறேன் –

கடல் மலை –
திருக் கடல் மல்லையில் திரு வனந்த ஆழ்வானையும் விட்டு
ஆஸ்ரிதனுக்காக தரைக்கிடை கிடக்கிறானாய் இ றே கிடக்கிறது –
அங்கே சென்று -இவனோ நானோ தரைக்கிடை கிடக்கிறார் -என்று என் வடிவைக் காட்டுகிறேன்

ஏரார் பொழில் சூழ் இட வெந்தை –
ஜாதி உசிதமான செருக்குப் போக்குவீடாகச் சோலைகளை யுடைத்தான திருவிட வெந்தையிலே
ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் தனக்கு உண்டான வ்யாமோஹம்
பார் வண்ண மட மங்கை பத்தர் -என்னும்படி வடிவிலே தோற்ற நிற்கிறான் இ றே –
அந்தபுர பரிகரமான என்னைப் படுத்தின பாட்டைக் காட்டி
அவளுக்கு வ்யாமுக்தனான படி இதுவோ என்று
தன் வ்யாமோஹத்தை எல்லாம் நிலை நிறுத்துகிறேன் –

நீர் மலை –
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் -என்னும்படி அடக்கம் குடி போனார்க்கு
கிலேசம் தீரும்படி ஒதுங்க நிழலாய் இருக்கும் திரு நீர் மலை என்று இ றே பிரசித்தி –
அடக்கம் குடி போன எனக்கு அத் தேசத்திலே புக ஒண்ணாத படி இருக்கிறபடியை
என் வடிவில் பாருங்கோள் என்கிறேன் –

சீராரும் மால் இரும் சோலை-
ஆர்யர்கள் இகழ்ந்த தெற்குத் திக்கிலே அங்குத்தை ஸ்தாவரன்களோடும் தன்னோடும்
வாசி அற நின்று ம்லேச்சர் அகப்பட முகம் கொடுக்கும் நீர்மையை யுடையனாய் இருக்கிறான் இ றே –
அங்கே சென்று என் வடிவைக் காட்டி எனக்கு முகம்கொடுக்கும்படி எல்லாம் நிலை நிறுத்துகிறேன் –

திரு மோகூர்-
திரு மோகூர் ஆத்தன் -என்று
ஆஸ்ரிதரோடு அவிபாக ரசம் அனுபவிக்கிரானாய் இ றே இருக்கிறது

பாரோர் புகழும் வதரி –
என் பேற்றுக்குத் தானோ நானோ தபஸ்ஸூ பண்ணினார் ஆர் -என்று
என் வடிவைக் காட்டுகிறேன்

வட மதுரை –
சித்தாஸ்ரமமாய் ஸ்ரீ வாமனன் எழுந்து அருளி இருந்து தபஸ்ஸூ பண்ணி –
லவண வதம் பண்ணி ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் படை வீடு செய்து இருந்து ராஜ்யம் பண்ணி –
சர்வேஸ்வரன் தான் வந்து திருவவதரித்து
இப்படியாலே பகவத் சம்பந்தம் மாறாத தேசம் இ றே – ஸ்ரீ மதுரை –
நான் தோற்றி அத்தையும் கை விட்ட படி பாருங்கோள் -என்கிறேன்-

ஊராய வெல்லாம் ஒழியாமே –
ஓர் இடத்தே யிருந்து இரண்டு ஒரு கால் சொல்லி விடுகிறோனோ –
சொல்லிச் சொல்லாத ஊர் எல்லாம் புகக் கடவேன் –
வேனுமாகில் என் பின்னே வந்து பட்டோலை எழுதிக் கொள்ளுங்கோள்-

நான் –
அவன் புக்கவிடம் புக்கு அவனை அளிக்கக் கடவ நான்

அவனை –
என்னையும் இப்பாடு படுத்தி அர்ச்சக பராதீனன் என்று
காஹளம் பிடித்து இருக்கிறவனை –

இனி அறும் இடத்தை எல்லாம் சொல்லி அற வேணும் இ றே –
ஓரானை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள் விடுத்த சீரானை –
ஆனையான ஏக ஜாதித்வம் பொருந்தி இருக்கச் செய்தே –
ஓர் ஆனையைக் கொல்லுகை யாவது என் –
ஓர் ஆனையை ரஷிக்கை யாவது என் –
இதிலே கண்டது இ றே இவன் ஒரு முலை பாலும் ஒரு முலை சீயுமாய்ப் போரும் பஷ பாதி என்னும் இடம் —

சீரானை –
இப்படி பொரி புறம் தடவி ரசிக்கிற குணங்களை யுடையவனை
வெளியிட வி றே புகுகிறேன் –

செங்கண் நெடியானை –
அகவாயில் வாத்சல்யத்துக்கு எல்லாம் ப்ரகாசகமான திருக் கண்களைக் கொண்டு
எனக்கு எட்டாதே இருக்கிறவனை –
சேர்த்துக் குளிர்ந்த தண்ணீரை விடாயர்க்கு எட்டாமல் வைப்பாரைப் போலே

தேன் துழாய்த் தாரானை –
ஆசைப் பட்டாரை பிரிந்து தனி இருக்க அமையும் காணும்
மார்பில் மாலை மது ஸ்யந்தியாகைக்கு –

தாமரை போல் கண்ணானை –
ஆசைப் பட்டாரைப் பிரிந்த அன்று முதல் நாள் தோறும் செவ்வி பிறக்கும்
திருக் கண்களை யுடையவனை –

எண்ணரும் சீர்ப் பேராயிரமும் பிதற்றி
குணகதனம் பண்ணுகைக்கு ஒரு ஸ்ரீ சஹச்ர நாமம் உண்டு இ றே
அப்படி குண ஹாநிக்கும் ஒரு ஸ்ரீ சஹச்ர நாமம் பண்ணுகிறேன் -நீ சொல்லப் படுகிற சஹச்ர நாமம் தன்னைச் சொல்லிக் காணாய் -என்ன
நால்வர் இவருக்குச் சொல்லி விடுவேனோ ஒரு மூலையில் இருந்து –
இல்லையாகில் என் செய்வாய் என்ன

பெரும் தெருவே
நடுத் திரு வீதியிலே புறப்படக் கடவேன் -என்கிறாள் –

ஊரார் இகழிலும்-
ஊரார் இகழ்ந்து இடப் பட்டாளே-என்று அவளை ஊரார்
கொண்டாடினால் போலே
என்னையும் தலையாலே சுமப்பார்கள் -சுமவாதே இகழ்ந்தார்களே யாகிலும் –
ஊராது ஒழியேன் நான் –
இவர்கள் கொண்டாடாதே பழி சொன்னார்களே யாகிலும்
நான் மடலூருகை தவிரேன்

வாரார் பூம் பெண்ணை மடல் –
கையிலே பிரஹ்மாஸ்திரம் இருக்கச் செய்தே
எதிரிகள் கையிலே எளிவரவு படுவாரைப் போலே
என் கையிலே மடல் இருக்க
அபிமதம் கிடையாது இருக்க வேணுமோ -எனக்கு

வாரார் பூம் பெண்ணை மடல் –
ஒழுகு நீண்டு தர்சநீயமான பனை மடல் இருக்கிறபடி
கண்டு அறிதியே
பிரஹ்மாஸ்திரம் இருக்கிற படி கண்டு அறிதியே –

————————————————————————–

திரு கம்ப நாட்டு ஆழ்வார் அருளிச் செய்த தனிப் பாடல்-

ஊராது ஒழியேன் உலகு அறிய ஒண் நுதலீர்
சீரார் முலைத் தடங்கள் சேரளவும் –பாரெல்லாம்
அன்று ஓங்கி நின்று அளந்தான் நின்ற திரு நறையூர்
மன்று ஓங்க வஊர்வன் மடல்-

—————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

சிறிய திருமடல்– 43-போரார் நெடு வேலோன் பொன் பெயரோன் ஆகத்தை -68-நான் அவனை நான் அவனை -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 28, 2013

போரார் நெடு வேலோன் பொன் பெயரோன் ஆகத்தை
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு குடல் மாலை
சீரார் திரு மார்வின் மேற்கட்டிசெங்குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி யுருவாய் அன்றியும்
பேர் வாமனாகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டிச் சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
காரார் வரை நட்டு நாகம் கயிறாக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்
தாரார்ந்த மார்வன் தடமால் வரை போலும்
போரானை பொய்கை வாய் கோட்பாட்டு நின்று
நீரார் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால்
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு
தீராத சீற்றத்தாலே சென்று இரண்டு கூறாக
ஈராஅதனை இடர் கடிந்தான் எம்பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய்ப்பெண்டிர்நும் மகளை
தீரா நோய் செய்தான் என வுரைத்தாள்சிக்கென மற்று
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போரார் வேல் கண்ணீர் அவனாகில் பூம் துழாய் தாராது ஒழியுமே மற்று
ஆரானும் அல்லனே என்றுஒழிந்தாள் நான் அவனை
காரார் திருமேனி கண்டதுவே காரணமா
பேராபிதற்றா திரி தருவான் பின்னையும்
ஈராப் புகுதலும் இவ்வுடலைதண் வாடை
சோரா மறுக்கும் வகை யறியேன்சூழ் குழலார்
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்குவாளா விருந்து ஒழிந்தேன்
வாராய் மட நெஞ்சே வந்து மணி வண்ணன்
சீரார் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் -தரும் -என்று இரண்டத்தில் ஒன்ற்றதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டுஅது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
காரார் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது வல்வினையேன்
ஊரார் உகப்பதே யாயினேன்
ஊரார் வார்த்தை மற்று எனக்கு இங்கு
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் யுருகும் என்னாவிநெடும் கண்கள்
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன்
பேராயினவே பிதற்றுவன் பின்னையும்
காரார் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார் அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வாரார் வனமுலை வாசவத்தை என்று
ஆரானும் சொல்லப் படுவாள் அவளும்பெரும் தெருவே
தாரார் தடம் தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே மற்று எனக்கு இங்கு
ஆரானும் கற்பிப்பார் நாயகரே நான் அவனை

————————————————————————–

போரார் நெடு வேலோன் இத்யாதி
பிராட்டிக்காக அம்பு ஏற்றபடி சொல்லிற்று கீழ் –
அப்படி க்ரமம் செய்ய ஒண்ணாத படி ஆஸ்ரிதர் உடைய பிரதிஜ்ஞா சம காலத்திலே தோற்ற வேண்டி –
அதுக்கு உதவத் தோற்றின இரண்டு வடிவை ஒன்றாகத் தைத்துக் கொண்டு புறப்பட்டு
அவன் விரோதியைப் போக்கின படி சொல்லுகிறது மேல் –

போரார் –
எதிரிகள் சரீரங்களிலே வ்யாபரித்துத் திரியும் அத்தனை போக்கி
ஓர் இடத்திலே இருக்க அவசரம் இல்லை –
நிணமும் சதையும் குடலும் சூழ்ந்து
கழுகும் பருந்தும் பேயும் சேவிக்கத் திரியும் அத்தனை போலே காணும்

நெடு வேல் –
அவஷ்டப்ய மஹத் தனு -என்னுமா போலே
இவனால் அடக்கி யாள ஒண்ணாதாய் இருந்த படி –

வேலோன் –
பட்டுக் கிடக்கும் போதும் பிடித்த வேல் விடாதே
இதுவே தனக்கு நிரூபகமாய் இருக்கும் -என்கை –

பொன் பெயரோன்
ஹிரண்யன் என்று இ றே பெயர்

ஆகத்தை
திரு வுகிருக்கு இரை போரும்படி
காட்டில் பன்றிகளை ஊட்டி வளர்போபாரைப் போலே
ப்ரஹ்மாதிகள் வரங்களாலே பூண் கட்டின மார்வு இ றே –

கூரார்ந்த வள்ளுகிரால் –
கூர்மை மிக்குச் செறிந்த உகிர் –
பிராட்டிமரோடே பரிமாறும் போது அவர்களும் கூசும்படியான சௌகுமார்யத்தையும்
சத்ருக்களோடே பரிமாறும் போது அவர்களை அழியச் செய்ய வேண்டும் திண்மையை யுடையனாய் இருக்குமா போலே
இவற்றுக்கும் இரண்டு புடை உண்டு போலே காணும்

கீண்டு –
நரசிம்ஹத்தின் தோற்றரவிலே சீற்றத்தைக் கண்டு பையல் உடம்பு வெதும்பி
பொசுக்கின பன்றி போலே பதம் செய்ய அநாயாசேன கிழித்த படி –

குடல் மாலை சீரார் திரு மார்வின் மேற்கட்டி –
சீற்றத்தின் மிகுதியாலே குடலைப் பறித்துத் திரு மார்பிலே கட்டிக் கொண்டான் ஆயிற்று
அதாவது -விஜய ஸ்ரீ விளங்குகிற திரு மார்விலே அதுக்கு மாலை இட்ட படி –
பிராட்டி இருக்கிற திரு மார்விலே காணும் காட்டிற்று
அநாஸ்ரித விஷயத்தில் இத்தனை சீற்றம் இவனுக்கு இல்லை யாகில் அவள் அணையாள் இ றே –

செங்குருதி சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி-
ரக்த வெள்ளம் கொழிக்கும் படி கிழித்து
அவனைப் பிராட்டிமாரோடே கலக்கைக்கு அலங்கரித்த திருத் தோளின் மேலே
சீற்றத்தின் மிகுதியாலே எடுத்து அறைந்து கொண்டான் ஆயிற்று

செங்குருதி சோராக் கிடந்தானை –கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு குடல்மாலை சீரார் திரு மார்வின் மேல்கட்டி –குங்குமத் தோள் கொட்டி ஆரா வெழுந்தான் – என்று அந்வயம்

ஆர்ப்பதும் செய்தான் -கிளருவதும் செய்தான் –

ஆரா எழுந்தான் அரி யுருவாய் –
அவாக்ய அநாதர-என்று எதிர்த் தலை இல்லாமையாலே வார்த்தை சொல்லான் என்று
பிரசித்தனாய் இருக்கிறவன்
ஆஸ்ரித விரோதியைப் போக்கப் பெற்றோம் -என்னும் ஹர்ஷத்தாலே ஆர்த்துக் கொண்டான் –

அன்றியும் -இத்யாதி –
இப்படி அழியச் செய்ய வேண்டும் பராதி கூல்யமே அன்றியே –
ஆனுகூல்ய லவம் உடையவனாய் இருக்கும் இ றே மஹா பலி
அதாவது -ஔதார்ய குணம் எனபது ஓன்று உடையவன் ஆகையால் அவனைச் சடக்கென அழியச் செய்ய ஒண்ணாமை யாலும்
தேவர்களுக்காக அவனை அழியச் செய்ய வேண்டுகையாலும் –
அவன் கொடுக்க உகப்பன் -என்னுமத்தை நினைத்துத்
தன்னை இரபபாளன் ஆக்கி அவன் பக்கலிலே சென்று நீர் ஏற்று பூமியை வாங்கி இந்த்ரனுக்குக் கொடுத்தபடி சொல்லுகிறது –

அன்றியும் பேர் வாமனாகிய காலத்து –
நாட்டில் வாமனர்கள் எல்லாம் வளர்ந்து அருளின இடம் என்னலாம் படி
சிறுத்து இருக்கும் என்னுதல் –
வடிவே யன்றியே பெரும் வாமனனாகிய காலம் –

மூவடி மண் தாராய் –
மஹா பலி எனக்கு மூவடி மண் தர வேணும் -என்றான்
அவனும் -தருகிறோம் -என்றான் –
அங்ஙகனாக ஒண்ணாது தாராய் -என்றான் –
வளைப்பாரைப் போலே

எனக்கு என்று
ஒன்றையும் எனக்கு எண்ணாதவன் காணும் -எனக்கு -என்றான் –பரார்த்தம் ஆகையாலே
வேண்டிச் சலத்தினால் நீர் ஏற்று உலகுஎல்லாம் நின்றளந்தான் மாவலியை –
வேண்டிக் கையிலே நீர் விழுந்தவாறே சிறுகாலைக் காட்டிப்
பெரிய காலாலே லோகம் அடைய அளந்து கொண்டான் –

மாவலியை மூவடி மண் தாராய் எனக்கென்று
வேண்டிச் சலத்தினால் நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் -என்று அந்வயம்

ஆராத போரில் இத்யாதி –
தேவர்களும் அசுரர்க்களுமாய்க் கடலைக் கடையப் புக்கு
மாட்டாதே –
தான் கடலைக் கடிந்தபடி சொல்லுகிறது –

ஆராத போரில்
இவர்களுக்கு ஆராதே இருக்கும் -என்னுதல்
தனக்கு யாராதே இருக்கும் என்னுதல் –

அசுரர்களும் தானுமாய்
தேவர்களும் அசுரர்க்களுமாய் என்ன வேண்டி இருக்க
எதிர்த் தலையான அசுரர்களைச் சொல்லி
பின்னைத் தன்னைச் சொல்லுவான் என்னில் –
ஆனுகூல்ய இலவம் உடையார் -தான் -என்னும் சொல்லுக்கு உள்ளே அடங்குகையாலே தன்னைச் சொல்லிற்று —

காரார் வரை நட்டு –
மந்த்ரத்தில் படிந்த மேகம் அலசாதபடி கொடு வந்து நாட்டின நொய்ப்பம் இருந்தபடி –

நாகம் கயிறாக –
சேதனன் இ றே –
மலையிலே சுற்றிக் கடையா நின்றால் தனக்கு அது வ்யசநமாய் இராதே –
இவன் கர ஸ்பர்சத்தால் வந்த சுகத்துக்கு அந்த வ்யாபாரத்தாலே போக்கு விட்டிலன் ஆகில்
அவனால் இது உண்டு அறுக்க ஒண்ணாத படி இருக்கும் இ றே –

பேராமல் தாங்கிக் கடைந்தான் –
கீழே உடையாமே மேல் கொந்தளியாமே பக்கத்தில் சாயாமே கடைந்தபடி –

திருத் துழாய் தாரார்ந்த மார்வன் –
கடலைக் கடைகிற போது தோளும் தோள் மாலையுமாய் நின்று கடைந்த படி –

தடமால் வரை -இத்யாதி-
பிரயோஜநாந்த பரர் கார்யம் செய்த படி சொல்லிற்று கீழ் –
அநந்ய பிரயோஜனான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் முதலையின் கையிலே அகப்பட
அவன் அகப்பட்ட மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து விழுந்து
அவன் விரோதியைப் போக்கி அவன் அபிமதம் செய்து கொடுத்தபடி சொல்லுகிறது மேல் –

தடமால் வரை போலும்
தடம் -என்றும் மால் என்றும் சொல்லுகையாலே
பருத்து உயர்ந்த மலை போல் இருக்கிறவன்
இப்பெருமை சொல்லுகிறது இங்கு என் என்னில்
பெரியது நோவு பட்டால் ஆற்ற மாட்டாது என்கைக்காக –

போரானை –
யுத்த உன்முகனாய் திரிகிறான் அன்று இ றே
செருக்காலே மலைகளோடு பொருது திரிகிறபடி –

பொய்கை வாய் –
வெளி நிலம் ஆகில் எதிரிகளைத் துணிக்கும் இ றே –
தன்னிலம் அல்லாத நீர் நிலத்திலே –

கோட்பாட்டு –
சத்ருவான முதலையின் கையிலே அகப்பட்டு

நின்று
அவன் நீருக்கு இழுக்க
இவன் கரைக்கு இழுக்க
சில நாள் எல்லாம் சென்று முதலையின் வ்யாபாரமேயாய்
தன் வியாபாரம் அற்று நின்றபடி –

நீரார் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால் –
செவ்வி மாறாத தாமரைப் பூவைப் பிடித்த கையத்தனையும் ஒழிய
நீரிலே அழுந்தினவன் ஆயிற்று

நாராயணா ஒ
சர்வ ஸ்வாமி யானவனே -என்றபடி

மணி வண்ணா –
விடாய்த்தார்க்குத் தண்ணீர் வார்க்குமவன் அன்றோ நீ -என்கை

நாகணையாய் –
உன்னுடம்பை ஆசைப்பட்டாருக்குக் கொடுக்குமவன் அல்லையோ நீ -என்றான்

வாராய்
என்னுடைய ஆர்த்தி தீரும்படி அழகிய வடிவைப் பாரித்துக் கொண்டு
இங்கனே எழுந்து அருள வேணும் –

என் ஆர் இடரை நீக்காய்
இப்போது இவன் ஆர் இடர் -என்கிறது –
துக்க நிவ்ருத்தியை பண்ணாய் -என்கிறான் அல்லன் –
இப்பூ செவ்வி மாறும் காட்டில் திருவடிகளிலே இடுவித்துக் கொள்ளை என்றபடி –

என
என்று இப்பாசுரத்தாலே இவன் சொல்ல

என வெகுண்டு
சர்வேஸ்வரன் இவ்வார்த்தை செவிப்பட்டவாறே கோபித்து அருளினான் –

தீராத சீற்றத்தாலே
முதலையின் கையிலே அகப்படக் கொடுத்து
அகப்பட்டவன் நோவு பட்டத்துக்குப் பின்பு
அவனை ரஷித்து என் செய்தோம் ஆனோம் –என்று இன்னும் தீராதே கிடக்கிறது இ றே -சீற்றத்தால் சென்று
வகானத்தின் மேல் அன்று போலே காணும் சென்றது –
கோபத்தின் மேலே காணும்
கோபம் வழி காட்டச் சென்றான் இத்தனை –
தான் அறிந்து சென்றான் அன்று காணும் –

இரண்டு கூறாக ஈரா –
ஆனைக்கும் நோவு வாராமல்
முதலையை இரு பிளவாம்படி திரு ஆழியாலே பிளந்து அருளின படி –

அதனை இடர் கடிந்தான் –
அப்படி நோவு பட்டு இருக்கிற ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை
அம்முதலை பிடித்த ஸ்ரீ பாதத்தை தன் திருக் கைகளாலே ஒத்துவது –
திருப் பவளத்தாலே ஊதுவது –
திருப் பரிவட்டத் தலையாலே ஒத்துவது -ஆனான் –

எம்பெருமான் –
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு அன்றிக்கே
இவள் தான் பெற்றாளாம் படி தோற்ற
இக்கட்டுவிச்சி -என் நாயகனே -என்கிறாள் –

பேர் ஆயிரம் உடையான் –
இப்படி ஆஸ்ரித ரஷணத்துக்குகாகச் செய்த அபதானங்களுக்கு வாசகமான
திரு நாமங்கள் எண்ணிறந்தவற்றை உடையவன் –
ஆஸ்ரிதர் இவ்விஷயத்தில் இழிகைக்கு பல துறை யுண்டால் போலே
அவர்கள் அனுசந்திக்கைக்கும் பல திரு நாமங்களை உடையவன் –

பேய்ப்பெண்டிர் –
சர்வேஸ்வரன் அடியாக வந்தது இந்நோய் -என்றாலும்
தேவதாந்திர ஸ்பர்சம் உண்டு -என்று
அதிசங்கை பண்ணுகிற அறிவு கேடிகள் இ றே நீங்கள் –

நும் மகளை –
உங்கள் வயிற்றிலே பிறந்தவனை
உங்கள் வயிற்றில் பிறந்தவள் பர தேவதைக்கு நோவு படும் இத்தனை யல்லது அவர தேவதைகளுக்கு நோவு படுமோ –

தீரா நோய் செய்தான் என வுரைத்தாள்-
இந்நோய் தீரும்படி என் என்று விசாரிக்கிறவர்களுக்கு இ றே
தீரா நோய் செய்தான் -என்கிறது –
இவளுக்கு சர்வேஸ்வரன் அடியாக வந்த நோயாகிறது தீரில் செய்வது என் -என்று
அவர்கள் பயப்படுகிறார்களாக கருதி –தீரா நோய் -என்கிறாள் காணும் –
இப்போது தீரா நோய் -என்கிறது பக்தியை இ றே –
யாவதாத்மா பாவியான நோய் இ றே
ப்ராப்தி தசையிலும் அனுவர்த்திக்கும் இ றே-

என வுரைத்தாள் –
தென்றலும் சிறு துளியும் பட்டால் போலே இருக்கிறது காணும் தனக்கு இனிதான படி

உரைத்தாள்-
என்றும் இந்நோய் கொண்டால் ஆகாதோ இவள் புகுந்து இப்படி பரிஹாரம் சொல்லப் பெறில்

கட்டுவிச்சி அப்படிச் சொன்னாள் ஆகில் உங்கள் தாய்மார் செய்தது என் என்னச் சொல்லுகிறாள் மேல் –
சிக்கென மற்று ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
இந்நோவு பேராயிரம் உடையான் அடியாக வந்தது -என்று சொன்னாள் கட்டுவிச்சி
என்னைப் பெற்ற தாயாரும் -தேவதாந்திர ஸ்பர்சம் இல்லை இ றே -என்று பலகாலும் கேட்டு –

போரார் வேல் கண்ணீர் அவனாகில் பூம் துழாய் தாராது ஒழியுமே-
பெண் பிள்ளைகள் பதறுகிற பதற்றத்தை கண்டு
நோவுக்கு நிதானம் சர்வேஸ்வரன் ஆனபின்பு
நீங்கள் இப்படி பதற வேணுமோ
புவனி எல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே -என்னுமா போலே
அவனாகையும் நம்முடைய அபேஷிதம் செய்யான் என்கையும்
அக்னி நா சிஞ்சேத் -போலே அசங்கதம் அன்றோ –
ராமோ த்வீர் நாபி பாஷதே -இத்வத்
தன்னடிச்சி யல்லளே –
அபேஷிதம் ஆனவை தானாகச் செய்யாது ஒழிந்தாலும்
காலைக் கட்டியாகிலும் செய்வித்துக் கொள்ள ப்ராப்தி இல்லையோ -என்று
இப்படி தொளிமார்க்குச் சொல்லி

மற்று ஆரானும் அல்லனே என்று-
தேவதாந்த்ரமான நாய் தீண்டிற்று இல்லை இ றே -என்று தானே தெளிந்து நிர்ப்பரை யானாள் –
எம்பெருமானோடே சம்பந்தம் உடைய இவளுக்கு நான் கரைய வேணுமோ என்று
தளப்பம் அற்றாள்-என்று அவள் செய்தது என் -என்னில்

ஒழிந்தாள் –
ஒழிந்தாள்

நான்
என் பந்தாடலில் அவனைக் கையும் மடலுமாகக் காணக் கடவதாக உத்யோகித்துப் புறப்பட்டு
அவன் குடக் கூத்திலே தோற்ற -நான் –

அவனை
தன் வடிவு அழகைக் காட்டி என்னை அனன்யார்ஹை ஆக்கினவனை –

காரார் திருமேனி கண்டதுவே காரணமா –
அவனுடைய ஸ்ரமஹரமான திரு மேனியைக் கண்டதுவே ஹேதுவாக
ரிஷிகளையும் ஆழ்வார்களையும் போலே யாயிற்று திருத் தாயாரும் இவளும் –
அவன் ஸ்வரூப ரூப குணா ஜ்ஞானம் ஆயிற்று ரிஷிகளுக்கு
திவ்ய விக்ரஹ த்திலும் விக்ரஹ குணத்திலும் ஆயிற்று ஆழ்வார்களுக்கு –
குணா ஜ்ஞானத்தில் அகப்பட்டார்க்கு ஆற்றலாம் இ றே –
வடிவு அழகிலே அகப்பட்டார்க்கு ஆற்ற ஒண்ணாது இ றே
அப்படி குணா ஜ்ஞானம் உடையவள் ஆயிற்று திருத் தாயார் —
ஆகையாலே தரித்து இருந்தாள் –
அவ் வடிவு அழகிலே அகப்பட்டார்களுக்கு பெற்று அல்லது தரிக்க ஒண்ணாது இ றே –

பேரா
ஆண் பெண் ஆனபடி

பிதற்றா
பெண் ஆன தன்மையை தானும் இழந்த படி –

திரி தருவான் பின்னையும் -நசிக்க வி றே கண்டது –
அப்படிச் செய்யாதே யாதநா சரீரம் போலே பின்னையும் திரிந்தேன் –

ஈராப் புகுதலும்
புகுந்து ஈருகிறது இல்லை
ஈர்ந்து கொண்டு புகுரா நின்றது –

இவ்வுடலை –
பண்டே தொட்டார் மேலே தோஷமாம்படி விரஹ க்ருசமான உடலை என்னுதல் –
பிரிவுக்குச் சிளையாத உடம்பு என்னுதல் –

தண் வாடை
நஞ்சூட்டின ஆயுதம் போலே குளிர்த்தியை யுடைத்தான வாடை

சோரா மறுக்கும்
சோரவும் பண்ணா நின்றது
மறுக்கவும் பண்ணா நின்றது

வகை யறியேன் –
திரள சோரப் பண்ணா நின்றது என்று சொல்லும் இத்தனை ஒழிய செய்கிற வகைகள் பேச்சுக்கு நிலம் அல்ல –

சூழ் குழலார் –
வாடை உடம்பிலே பட்டாலும்
மயிர் முடியும் அழகும் கலையாதே இருக்குமவர்கள்

ஆரானும்
என் செயல் பொல்லாது என்று இருக்கக் கடவார் இல்லை –
எங்கேனும் சிலவர் -என்கை –
அவ்யுத் பன்னருமாய் அவிப தேச்யருமாய் இருப்பார் சிலர் என்கை

ஏசுவர் என்னும் அதன் பழியை
அவர்கள் அலர் தூற்ற -அத்தால் வரும் பழியை
இவள் ஆற்றாமைக்கு அவன் உதவின படி பொல்லாது -என்னுதல் –
அவன் பிரிந்தால் இவள் ஆறி இராதே இங்கனே படுகிறது என் என்னுதல் -செய்வார்கள் இ றே –

வாராமல் காப்பதற்கு –
அவன் ஸ்வரூபத்துக்கும்\நம் ஸ்வரூபத்துக்கும் நிறக்கேடு வாராமைக்கு

வாளா விருந்து ஒழிந்தேன் –
குனியக் குறுணி பற்றுகிற காலத்திலே இரண்டு மருங்கும் மனிசர் காண
மடலைக் கொண்டு புறப்படப் பெறாதே அருமந்த காலத்தைப் பாழே போக்கினேன்-

வாராய்
எழுந்திராய்

மட நெஞ்சே
இப்போது பவ்யமான நெஞ்சே -என்கிறது அன்று
அறிவு மாண்டு கிடக்கிற நெஞ்சே -என்றபடி –
அவனை நோக்கி எல்லாம் உண்டாயிற்றே -எழுந்திராய்

வந்து
சென்று என்றபடி
வரவு செலவைக் காட்டும் இ றே –
அவன் பக்கலிலே சென்று

மணி வண்ணன் –
தன்னைப் பிரிந்தார் மடல் எடுக்கும்படி பண்ண வல்ல வடிவு படைத்தவனே

சீரார் திருத் துழாய் மாலை நமக்கு அருளி –
அநந்ய பிரயோஜனர் இட்ட மாலை –
மிக்க சீர்த் தொண்டர் –
பிரயோஜனாந்த பரர் இட்டதாகில் அவர்கள் நெஞ்சில் அபி சந்தியால் சுருள் சுறுள் நாறும் என்கை –

நமக்கு அருளி –
பிரணயித்வம் போயிற்றே நம் ஆற்றாமைக்கு உதவாத போதே
இனி கிருபை பண்ணில் உண்டு இத்தனை இ றே –

தாரான் -தரும் -என்று இரண்டத்தில் ஒன்ற்றதனை –
தரிலுமாம் -தாராது ஒழியிலுமாம் –
இரண்டில் ஓன்று அமையும் நமக்கு –
அதாவது
தந்தான் ஆகில் அத்தாலே தரிக்கிறோம்
இல்லையாகில் முடிந்து பிழைக்கிறோம்

ஆரானும் ஒண்ணாதார் கேளாமே சொன்னக்கால் –
அவன் குணத்தை அழிக்க இருப்பாரும் உண்டு
அவர்கள் கேளாமே செவியிலே அவனுக்குச் சொல்லு –
அவனை அழித்து இவள் மடல் மடல் எடுத்துப் புக்க படி –அவனை யுகவாதார் கேளாமே -என்கிறாள் இ றே –

ஆராயுமேலும் பணி கேட்டு
உன்னைக் கண்ட போதே -அவள் என் பட்டாள்-அவள் உள்ளே
அவ்வாஸ்ரயம் இன்னும் நமக்குக் கிடைக்குமோ -என்று
திரு வுள்ளம் ஆனானே யாகிலும்

அது அன்று எனிலும் –
அங்கன் அன்றியே துஷ்யந்தனைப் போலே -நாம் அங்கனைக்கு ஒப்பாள் ஒருத்தியை அறியோமே -என்றான் ஆகிலும்

போராது ஒழியாதே-
அறிந்திலேன் என்றான் என்றால்
அவன் திரு வுள்ளத்துக்கு ஏற அறிவித்து மறு மாற்றம் கொண்டு போர  வேணும் என்று நில்லாதே

போந்திடு நீ
என் ஆற்றாமை கண்டும் மற்றவனைப் போல் அன்றியே
நீ போந்திடு –

போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
நான் தானே கிடீர் இந்நெஞ்சு தன்னை அங்கே தங்கப் பண்ணினேன் –
அதாவது என் என்னில் –
பெருங்குடி புதுக்குடி மகனை -பழைய பையலைப் போலே வரம்பிலும் வாய்க்காலிலும் சூடு பொகடாதே கொள் –
என்னுமதுவே யடியாக
அவ்விடங்கள் ஆகாதே களவுக்கு ஸ்தானம் என்று செய்யா நிற்கும் –
போராது ஒழியாதே போந்திடு நீ -என்றேன் நான்
அவ்விஷயத்தைக் கண்டால் போராது ஒழிய வாகாதே அடுப்பது என்று அது அங்கே நின்றது –

காரார் கடல் வண்ணன் –பின் போன நெஞ்சமும் வாராதே –என்னை மறந்தது
என் ஆற்றாமை கண்டு கண்ணும் கண்ணநீருமாய்ப் போன நெஞ்சு
அவனைக் கண்டவாறே அவன் வடிவு அழகிலே துவக்குண்டு என்னை மறந்தது-கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும் வாராதே என்னை மறந்தது
ராமம் மே அனுகதா த்ருஷ்டி -இத்யாதி வத்

வல்வினையேன் –
என்நெஞ்சம் எனக்கு உதவாதபடியான
மகா பாபத்தைப் பண்ணினேன் –

ஊரார் உகப்பதே யாயினேன் –
தங்கள் அபிமத சித்தி சாதன அனுஷ்டானத்தாலே என்று இருக்குமவர்களைப் போலே
என் அபிமதத்துக்கும் நான் உத்சாஹிக்கும் படி யானேன் –

ஊரார் வார்த்தை –
அவனாலே பேறு என்று இருந்த இவள் கண்டாயே உண்டபடி
இவளைப் போலே உண்ணும் அத்தனை அவன் கை பார்த்து இருந்தவர்கள் -என்பார்களே -அவர்கள் –

இப்படி ஆற்றாமை மிக்கால் உசாவி தரிக்க வேண்டாவோ -என்னில்
மற்று எனக்கு இங்கு ஆராய்வார் இல்லை –
என்நெஞ்சம் எனக்கு உதவாது இருக்க
வேறு நமக்கு இங்கு உசாத் துணை உண்டோ –
மற்று இல்லை -என்கையாலே இன்னமும் அவனே வந்து ஆராயில் ஆராயும் அத்தனை -என்கை-
அவ்வருள் அல்லன அருளும் அல்ல -என்றும்
வையகத்துய்ப் பல்லார் அருளும் பழுது -என்றும் இறே இவர்கள் தாங்கள் அறுதி இட்டு இருப்பதும் –அழல்வாய் மெழுகு போல் நீராய் யுருகும் என்னாவி –
நெஞ்சு உதாவாது என்னலாமோ
நெஞ்சைப் பிடித்து தரித்து இருக்க வேண்டாவோ -என்னில்
அக்னி சகாசத்தில் மெழுகு போலே இற்றுப் போகா நின்றது -என்னுடைய ஆத்மவஸ்து –

நெடும் கண்கள் ஊரார் உறங்கிலும் தான் உறங்கா –
இப்படி ஆற்றாமை விளைந்ததாகில்
நித்ரையால் அத்தைப் போக்கினாலோ என்னில்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் -என்கிறபடியே
எல்லாரும் உறங்கிலும் என் கண்கள் உறங்குகிறது இல்லை

நெடும் கண்கள்
கண் பரப்பு எல்லாம் தலைச் சுமை யாயிற்று
அஸி தேஷணை இ றே –

ஊரார் உறங்கிலும் தான் உறங்கா –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்று இவள் பிறந்த ஊரிலே உறங்கி அறிவாரும் இல்லை இ றே –
இப்படி இருக்க அவர்கள் உறங்கிலும் என் கண்கள் உறங்கா என்கிறார் –

உத்தமன்
உறக்கம் அறும்படி தன் தாழ்ச்சியைக் காட்டி அகப்படுத்தின மேன்மையை யுடையவன் –

பேராயினவே பிதற்றுவன் –
இப்படி அபிமத காலத்தில் உதவாது ஒழிந்தால்
அவனை நினையாது இருக்க இ றே அடுப்பது
அது மாட்டாதே
அவன் திரு நாமங்களை அடைவு கெடச் சொல்லா நிற்பன்

பின்னையும்
அதுக்கு மேலேயும் சில ஹிதம் சொல்ல

காரார் கடல் போலும் காமத்தர் ஆயினார் ஆரே பொல்லாமை அறிவார் –
இங்கன் சொல்லலாமோ –
பத்து மாசம் ஆறி இருந்திலளோ ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள்
அப்படி இரா விடில் போல்லாதாகாதோ -என்னில்
பேர் ஆழமான கடல் போலே ஆசை கரை புரண்டு போரா நிற்க –
பொல்லாங்கு சொல்லுவார்கள் -என்று ஆறி இருக்கப் போமோ –
ஆறி இருந்தவர்களுக்கு ஆசை அளவு பட்டதாம் இத்தனை இ றே –
ஸ்வரூப ஜ்ஞானத்தாலே ஆற்றலாமோ அவ்வடிவைக் காண வேணும் என்னும் ஆசை கரை புரண்டு இருப்பார்க்கு
ஸ்வரூப ஜ்ஞானத்தால் ஆற்றினார் உண்டாகில் அவர் ஆசை மட்டமாம் இத்தனை இ றே –

அது நிற்க
இது நீ துணிந்தமை இத்தனை -என்ன வேண்டா
இதுக்கு சிஷ்டா சாரமும் உண்டு -என்கை
பழையருமாய் விலஷணருமாய் இருப்பார் அநுஷ்டித்தார்கள் என்கை

ஆரானும் ஆதானும் அல்லள்
சைதன்யம் குறைந்தவளும் அல்லள்
அசித் கல்பையும் அல்லள் –

அவள் காணீர் –
அவளைக் கேளுங்கோள்

வாரார் வனமுலை
தன்னால் தரித்துத் தாங்க ஒண்ணாத முலை என்று பருவம் மிக்கு இருக்கிறபடி சொல்லுகிறது –
காந்தன் தாங்குதல்
அது பெறாத போது-வாராலே தரித்தல் -செய்யும் இத்தனை –

வாசவத்தை என்று ஆரானும் சொல்லப் படுவாள் –
பிரசித்தை அன்றோ –
விலஷணர் எல்லாம் கொண்டாடப் பட்டவள் அன்றோ –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் ஓலக்கத்திலும் குறைவற்ற
ஒருத்தி என்று கொண்டாடப் படுமவள் அன்றோ

அவளும் –
இத்துணிவு துணிந்தேன் நானே அல்லேன்
அவளும் துணிந்தாள் -என்கை –
தன் பேராயம் எல்லாம் ஒழிய
உங்களை இசைவிக்கைகாக இத்தனை வார்த்தை சொன்னேன் நான்
தோழிமார் உடைய பெரிய திரளைக் கடுக விட்டு நின்றாள் இத்தனை அன்றோ –
நெருப்பில் காலிட ஒண்ணாதால் போலே தோழிமார் திரளில் கால் பொருந்திற்றோ அவளுக்கு –

பெரும் தெருவே
தோழிமாரை விட்டு ஒரு மூலையிலே இருந்தாளோ
பெரும் தெருவே யன்றோ போனது -என்கை –

தாரார் தடம் தோள் தளைக் காலன் பின் போனாள்-
விலங்கு இட்டு இருக்கிற வத்சராயன் பின்னே போகிற இவள்
தோளும் தோள் மாலையும் கண்டு
அவனை ஆசைப் பட்டுப் போனாள் போலே அன்றோ போனது –

ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே –
அப்படி அவன் பின்னே போனவளை ஊரார் கொண்டாடின வித்தனை யல்லது பழி சொன்னார் உண்டோ –

மற்று எனக்கு இங்கு ஆரானும் கற்பிப்பார் நாயகரே
இத் துணிவுக்கு புறம்பான வார்த்தை சொல்லிக் கற்பிப்பார் எனக்கு நாயகர் அல்லர்
பயிலும் திரு வுடையார் யாவரேலும் அவர் கண்டீர் பயிலும் பிறப்பிடை தோறு எம்மை யாளும் பரமரே -என்று இருக்கும் நிலை தவிர்ந்தேன்
இத்துணிவுக்கு உடன்பட்டார் எனக்கு நாயகர்
க்ரம ப்ராப்தி பொறுக்க வேணும் -என்று இருப்பார் எனக்கு நாயகர் அல்லர் –
அன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லில் என்

நான் –
இத் துணிவுக்குப் புறம்பானர் எல்லாரையும் விட்டு இருக்கிற நான்

அவனை
ஸ்வ வ்யதிரிக்தர் எல்லாரையும் விடுவித்தவனை-

நான் அவனை
பந்தடிக்க என்று புறப்பட்ட நான்
குடக் கூத்தாடப் புறப்பட்டவனை -என்றுமாம்
வழி பறிக்கப் புறப்பட்டு
வழி பறி யுண்டேன்-என்றபடி –

————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

சிறிய திருமடல்– 28-ஆராத தன்மையனாய் – 42-செற்று உகந்த செங்கண் மால் -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 27, 2013

ஆராத தன்மையனாய் ஆங்கு ஒரு நாள் ஆய்ப்பாடி
சீரார் கலையல்குல் சீரடி செந்துவர் வாய்
வாரார் வனமுலையாள்  மத்தாரப் பற்றிக் கொண்டு
ஏரார் இடை நோவ எத்தனையோர் போதுமாய்
சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேரார் நுதல் மடவாள் வேரோர் கலத்திட்டு
நாரார் உறி ஏற்றி நன்கமைய வைத்ததனை
போரார் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம்
ஒராதவன் போல் உறங்கிஅறிவுற்று
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த
மோரார் குடமுருட்டிமுன் கிடந்த தானத்தே
ஒராதவன் போல் கிடந்தானை கண்டவளும்
வராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து
இங்கு ஆரார் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீராம் இது செய்தீ தென்று ஓர் நெடும் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியாய் சிக்கென ஆர்த்தடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்
நீரார் நெடும் கயத்தை சென்று அலைக்க நின்று உரப்பி
ஓராயிரம் பண வெங்கோ வியல் நாகத்தை
வாராய் எனக்கென்று மற்றதன் மத்தகத்து
சீரார் திருவடியால் பாய்ந்தான்
தன் சீதைக்கு நேராவன் என்று ஓர் நிசாசரி தான்வந்தாளை
கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெந்நரகம்
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர்வாய்
வாரார் வனமுலையாள் வைதேவி காரணமா
ஏரார் தடம் தோளி ராவணனை ஈரைந்து
சீரார் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்-

————————————————————————–

ஆராத தன்மையனாய்
நோவு படுவிகோளும் நீங்களேயாய் –
வந்து அறிவிப்புதி கோளும் நீங்களே யாம்படி பிற்
பாடரானோம் என்பதாய்க் கொண்டு
லஜ்ஜை நம்மால் பொறுக்க ஒண்ணாது -என்றான் இ றே –
அப்படியே –ஆராத தன்மையனாய் –

ஆங்கு –
ரஷணம் இல்லாத தேசத்தில் பிறக்கும் பரிமாற்றம்

ஒரு நாள் –
காலக்ருத பரிணாமம் உள்ள தேசத்திலே பிறந்த படி கேட்கலாகாதோ-

ஆய்ப்பாடி –
பரம பதம் போலே காணும் திரு வாய்ப்பாடியும்
அவர்களுக்கு ஜன்ம வ்ருத்தம் இலாதாப் போலே
இவர்களுக்கும் ஜன்ம வ்ருத்தம் இல்லாத படி –

சீரார் கலையல்குல்
யசோதைப் பிராட்டி சாத்தின பரியட்டத்துக்கு சம்பத்து எங்கனே வந்தது என்னில் –
பிள்ளை சீறாமைக்காக-அழுக்குக் கழித்து ஒப்பித்து இருக்கும் –
இவனுடைய பற்று மஞ்சளும் கண்ணும் மையுமாய் இருக்கும் அலங்காரம் –

அல்குலுக்கு சீர்மை யாவது –
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும் – என்கிறபடியே கிருஷ்ணனை எடுத்து ஒசிந்த இடை –
முற்காலத்திலே பெரிய திரு நாள் சேவித்த முதலிகள்
திருநாள் சேவித்த இரட்டை -என்று
மேலைத் திருநாள் வரும் அளவும் அவ்விரட்டையை
மடித்துக் கொடியிலே இட்டு வைத்துப் பார்த்துப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள் –

சீரடி –
மடியிலே இருந்து இவன் தீம்பு செய்தால் தள்ளும் இ றே இழிய
தள்ளினால் இவன் கட்டிக் கொள்ளும் கால் –
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி -என்னக் கடவது இ றே

செந்துவர் வாய்
காலைக் கட்டிக் கொண்டவாறே இவள் உதறுமே-
உதற உதற இவன் கட்டிக் கொள்ளும் இ றே
கட்டிக் கொண்ட வாறே ஸ்மிதம் பண்ணும் வாய்

வாரார் வனமுலையாள் –
ஸ்மிதம் பண்ணின வாறே
கோபம் மாறினால் என்று முலையிலே அபேஷை பண்ணும் இ றே
பசல்கள் அலையாமைக்கு ஔஷதம் இட்டு வைப்பாரைப் போலே கச்சை இட்டு ஆர்த்து வைக்கும் இ றே –
வல்லையாகில் விடுத்துக் கொள்ளு காண் -என்னும் முலை –

மத்தாரப் பற்றிக் கொண்டு –
இவனோடு அலை பொருது காலம் போக்க ஒண்ணாதே –
கார்ஹச்த்ய தர்மம் அனுஷ்டிக வேணும் இ றே –
கார்ஹச்த்ய தர்மம் இவள் தானே அனுஷ்டிக்கும் படி அளவு பட்டு இருக்குமோ என்னில் –
இவன் அமுது செய்யும் த்ரவ்யமான படியாலே தானே கை தொட்டுக் கடைய வேண்டி இருக்கும் –
ஜாத் யுசித தர்மம் ஆகையாலும் தானே செய்ய வேண்டி இருக்கும் –
ஐஸ்வர்யம் உண்டு என்றால் சந்த்யா வந்தநாதிகளுக்கு ஆளிடுவார் இல்லை இ றே –

மத்தாரப் பற்றிக் கொண்டு –
தயிர்த் தாழி யிலே மத்தை நாட்டி
இரண்டு இழுப்பு இழுத்த வாறே இளைத்து
சௌகுமார்யத்தாலே தன்னாலே கடைய ஒண்ணாமே
பிடித்துக் கொண்டு நிற்கும் நிலை –

ஏரார் இடை நோவ –
இவள் இடைக்கு அழகு
கிருஷ்ணன் எப்போதும் இருக்கும் இடை -என்று இ றே –

எத்தனையோர் போதுமாய் –
கிழக்கு வெளுத்தவாறே தயிர் கடைய என்று புக்கு
அஸ்தமித்தாலும் தலைக் கட்டாது காணும் இவள் சௌகுமார்யம்

சீரார் தயிர் கடைந்து –
தயிருக்குச் சீர்மை என் என்னில்
கடைவதற்கு முன்னே இவன் எச்சில் பட்டு
கடைகிற போது இவன் எச்சில் பட்டு
கடைந்து சமைந்தால் இவன் எச்சில் படுமது இ றே –

வெண்ணெய் திரண்டதனை –
கடைந்த தாகில் -வெண்ணெய் திரண்டதனை -என்ன வேணுமோ ஆயிருகச் செய்தே
திரண்டதனை -என்னும் போது –
தைவ  யோகத்தாலே இவன் நினைவைப் பார்த்துத் தானே திரண்டது போலே
ஈட்டிய வெண்ணெய் உண்டான் இ றே இவன் தானே-

வேரார் நுதல் மடவாள்
கடலைக் கடைய -என்று உபக்ரமித்து
தேவர்கள் இளைத்து இருந்தால் போலே காணும் இவள் ஆயாசத்தாலே வேர்த்த நெற்றியும் தானுமாய் இருந்தபடி –
சொல்லிச் சொல்லாத ஆத்ம குணங்களால் குறைவற்று இருக்கிறபடி –

வேரோர் கலத்திட்டு –
வெண்ணெய் பரிமாறும் கலத்திலே இட்டு வைக்கில்
நாற்றமே குறியாக அறியும் என்று
த்ரவ்யாந்த்ரம் பரிமாறும் கலத்திலே இட்டு வைத்தாள் காணும்

நாரார் உறி ஏற்றி –
விரலை நுழைக்க ஒண்ணாத உறி இ றே –

ஏற்றி –
முகவணைக்கல் எற்றுவாரைப் போலே
அருமைப்பட்டு ஏற்றின படி

நன்கமைய வைத்ததனை
வெண்ணெயை வைத்து
கள்ளக் கயிற்றை உருவிச் சேமப்பட வைத்த படி –
அழகியதாகச் சேமப்பட வைத்தால் இ றே -என்று ஷேபிக்கிறாள் கட்டுவிச்சி –

போரார் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம் –
எங்கேனும் வைக்கிற போது இவன் காண்கிறான் என்று
பறகு பறகு என்று இவள் பார்க்கும்படி

போந்தனையும் –
இவனுக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழியாய் இருக்கிறபடி –
வெண்ணெயில் சாபலம் இல்லாமல் கிடக்கிறான் அல்லன் –
களவின் மிகுதியாலே ஆறக் கிடக்கிற படி –

பொய்யுறக்கம்-
அவன் உறங்கினான் என்று இ றே இவள் இருப்பது –
யோக நித்தரை போலே

ஒராதவன் போல் உறங்கி
இவனுக்கு வேறு ஒரு நினைவு இல்லை -உறக்கமோ -என்று தோன்றக் கிடந்தபடி –

அறிவுற்று –
சில அசித் பதார்த்தங்களுக்கு அறிவு குடி புகுந்தால் போலே இருக்க
உறங்கி உணர்ந்தானாக இருந்தபடி –
அவள் போனவாறே உறங்கி உணர்வார் உணருமா போலே உணர்ந்த படி –
நடுவே வந்து அவள் புகுந்தாலே யாகிலும்
உறங்கினவன் உணர்ந்தான் -என்று அவளுக்கு தோற்ற கிடந்தான் என்றபடி –
அறிவு குடி புகுந்து மூரி நிமிர்வது கொட்டாவி கொள்வதாய் யுணர்ந்த படி –

தாரார் தடம் தோள்கள்
மாலையோடே கூட வெண்ணெய் குடத்தில் கையை விட்டான் –

தாரார் தடம் தோள்கள்
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் –

உள்ளளவும் கை நீட்டி –
வெண்ணெயில் அழக கையிட்ட தனையும் வயிறு நிறையும்
என்று இருக்கிறான் காணும் மௌக்த்யத்தின் மிகுதியாலே
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டினான் -என்று இவள் அறிந்தபடி எங்கனே -என்று ஜீயர் பட்டரைக் கேட்க
கோயில் சாந்தைக் குடத்தின் விளிம்பிலே கண்டால் போலே காணும் -என்றார் –

ஆராத வெண்ணெய் –
முன்பு அமுது செய்த வெண்ணெய் பின்பு அமுது செய்யும் வெண்ணெய்க்கு கண்டீரமாய்க் காணும் இருப்பது –

விழுங்கி –
வெண்ணெயை நிஸ் சேஷமாக அமுது செய்து –

அருகிருந்த மோரார் குடமுருட்டி –
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை இட்டு இ றே போவது –
பாகவதர் அருகே கழனிமிண்டரி இருந்தால் அசஹ்யமாய் இருக்குமா போலே
வெண்ணெய் குடத்தருகே மோர்க் குடம் இருந்தது இவனுக்கு அசஹ்யமாய்
இருக்கையாலே உருட்டினபடி –
பட்டர் -ஆழ்வார்கள் திரு மண்டபத்திலே இருந்து திருமடல் அருளிச் செய்யா நிற்கச் செய்தே
இவ்விடத்தே ப்ராஹ்மனர் தனத்தை எல்லாம் பாழே போக்கினான் -என்று அருளிச் செய்தார் –

முன் கிடந்த தானத்தே –
களவு கண்டான் என்று சொல்லிலும்
படுக்கையோடேயோ எழுந்து இருந்து களவு கண்டது -என்னும்படி
கால் போட்ட விடத்தே கால் போட்டுக் கை போட்ட விடத்தே கை போட்டுக் கிடந்த படி –

ஒராதவன் போல் கிடந்தானை –
வெண்ணெய் பிரசங்கம் இவன் நினைவிலும் இல்லையீ -என்னும்படி
இவ்வர்த்தம் முதலிலே அறியாதானாய்க் கிடந்தபடி –
தான் உருட்டின மோர் படுக்கையிலே வந்து தொங்கச் செய்தேயும் அறியாதவனாய்க் கிடந்தபடி –

கண்டவளும் –
இவனைப் பெற்றவள் இ றே அவளும்
இவன் கிடந்த கிடையிலே இவனையே சங்கித்தாள் –

வராத் தான் வைத்தது காணாள்-
வந்ததும் வாராததுமாக உறியிலே கையை யிட்டாள்-
யாதொரு படி வைத்தாள் – அக்குறிப் படியே கண்டிலள் –

வயிறு அடித்து –
வெண்ணெய் இழந்தேன் -என்று வயிறு அடிக்கிறாள் அன்று இ றே
இது இவனுக்கு சஹியாது ஒழிகிறதோ -என்னும் வயிறு எரித்தலே யாதல்
இன்று வெண்ணெய் ஆகிறது -நாளை பெண்கள் ஆகிறது -இது என்னாய் முடிகிறதோ -என்றாதல்

இங்கு ஆரார் புகுதுவார்-
இலங்கை போலே வெண்ணெயை அரண் செய்து வைத்தபடி

ஐயர் இவர் அல்லால் –
முதலியாரே இ றே இது செய்வார்

நீராம் இது செய்தீ தென்று
உம்முடைய கை வழியே போனவித்தனை இ றே வெண்ணெய்
வேறு சிலர் உண்டோ -என்று
கையைப் பிடித்து உறங்குகிறவனைத் தூக்கி எடுத்து

ஓர் நெடும் கயிற்றால் –
வெண்ணெய் களவு காண்பானாகவும்
தான் இவனை அடிப்பாளாகவும்
முன்பே கயிறு தேடி வைத்து இலள் இ றே
கைக்கு எட்டிற்று ஒரு கயிற்றாலே

நெடும் கயிற்றால்
வியாக்யானம் பன்னுமவர்கள் -கண்ணிக்  குறும் கயிறு -என்றார்கள் இ றே
நெடுமை விபரீத லஷணை –
அன்றியே
இவன் திருமேனி யோட்டை ஸ்பர்சத்தாலே –நெடும் கயிறு -என்றாள் ஆதல் –
திருமேனி நீ தீண்டப் பெற்று மாலும் கரும் கடலே என் நோற்றாய் –என்னக் கடவது இ றே –

ஊரார்கள் எல்லாரும் காண –
வெண்ணெய் களவு கொடுத்தாரும்
பெண் களவு கொடுத்தாரும் காண
எல்லாரும் காண மடல் எடுக்க இருந்தாள் இவள்
நான் அது உபதேசிக்க இருந்தேன்
எங்களை ஒழிய அடைய சர்வ சவதாநத்தே அகப்பட்டது காணும்
அதாவது -காணலுமாய்த் தவிரலுமாய் இருக்கும் மனிச்சர் காணும் கண்டது
காணும் அளவும் மடல் எடுத்து அல்லது தரிக்க மாட்டாத நாங்கள் காணப் பெற்றிலோம் –

உரலோடே-
இவன் இருந்த இடத்தே உரலை உருட்டாதே
உரல் இருந்த விடத்தே இவனை இழுத்துக் கொண்டு போனாள் –

தீரா வெகுளியாய் –
இவன் பக்கல் பிரேமத்துக்கு அவதி உண்டாகில் இ றே
சீற்றத்துக்கு அவதி யுண்டாவது –

சிக்கென ஆர்த்தடிப்ப
சிக்கெனக் கட்டுவதும் செய்தாள்
சிக்கென அடிப்பதும் செய்தாள்

ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் –
இவன் செய்தது என் என்னில்
பெரிய திரு நாளிலே சிறைப் பட்டு இருப்பாரைப் போலே
வெண்ணெயும் பெண்களும் ஆழ மோழையாய்ச் செல்லுகிற அமளியிலே நாம் புகுந்து இருப்பதே -என்று இருந்தான் –

ஆற்றாதான் –
ஆற்ற மாட்டாதே இருந்தான் –
என்னிய வென்னில்
எங்கே வெண்ணெயை ஒளிக்கிறார்கள்
எங்கே பெண்ணை ஒளிக்கிறார்கள் -என்று

அன்றியும்
அதற்கு மேலே பிறந்ததோர் அபாயம் கேட்கலாகாதோ-
ச்நேகினியான யசோதைப் பிராட்டி கையாலே கட்டுண்டு அடியுண்ட அடி படி இ றே கீழேச் சொல்லிற்று

பிரதி கூலனான காளியனாலே கட்டுண்டு படி சொல்கிறது மேல்
நியாமிகையுமாய் ச்நேகினியுமான அவள் கையாலே கட்டுண்டது பாடு ஆற்றலாம் இ றே -காளியன் செய்த செயலைக் கேளீர் –

நீரார் நெடும் கயத்தை –
இட்டமான பசுக்களை மறித்து நீரூட்டி
தனக்கு ஒதுங்க நிழலாய் இருக்கிற பசுக்களுக்கு –
பசு மேய்க்கிற வ்யாஜத்தாலே அவ்வழியே பெண்களை அழைப்பது
அவற்றை மணல் குன்றுகளிலே விட்டுப் பெண்களும் தானுமாய் க்ரீடிப்பது –
இவற்றுக்கு ஹேதுவாகையாலே பசுக்கள் இவனுக்கு ஒதுங்க நிழல் -என்றபடி –
அப்படிப்பட்ட பசுக்களுக்கு நீரூட்ட வேண்டும் ஜல ஸம்ருத்தியை உடைய பொய்கையை
தூஷித்தான் ஆயிற்று காளியன் –
தன் ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு குறைவற வேண்டும் ஜல ஸம்ருத்தி காளியனாலே தூஷிதம் ஆயிற்று –

சென்று அலைக்க நின்று உரப்பி –
தன்னேராயிரம் பிள்ளைகளும் தானுமாய் பொய்கையைக்
காலாலே உலக்குவது கல்லை விட்டு எறிவதாய் ஆர்த்துக் கொள்வதானான் –
நால் வாயும் கரைக்கு மேலே நீர் வழியும் படி நின்று உரப்பினான் ஆயிற்று –
இலங்கையை அடை மதிள் படுத்தி ராஷசர் தாங்களே புறப்படும்படி பண்ணினால் போலே –
இதுக்கு முன் பண்ணின மௌக்த்யமே போந்திருக்க
அதுக்கு மேலே பண்ணின மௌக்த்யத்தைக் கேட்கலாகாதோ –

ஓராயிரம் பண வெங்கோ வியல் நாகத்தை –
காளியன் அன்று கிடீர்
பையல் ம்ருத்யு கிடீர்

ஓராயிரம் பணம் –
நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து -என்னச் செய்தே
ஆயிரம் -என்கிறது என் என்னில்
முக்தனான அவன் மேலே காளியன் வந்தான் என்னும் காட்டில்
இவளுக்கு ஆயிரமாய்த் தோற்றின படி –

வெங்கோ வியல் நாகத்தை
இந்த யமனுக்கு வெம்மையை ஊட்டினான் கிடீர்

வெங்கோ இயல் –
வெவ்வியான் ஒரு யமனுடைய ஸ்வபாவத்தை உடைய நாகத்தை –

வாராய் எனக்கென்று –
முதலிகள் இலங்கையை எனக்கு எனக்கு என்றால் போலே கிடீர்
தன்னேராயிரம் பிள்ளைகளும் காளியனை -எனக்கு எனக்கு -என்று நின்றபடி –
அவர்கள் நடுவே எனக்கு வாராய் என்றான் –

மற்றதன் மத்தகத்து –
அக்காளியன் பணத்திலே

சீரார் திருவடியால் பாய்ந்தான் –
பிராட்டி திரு முலைத் தடங்களில் வைத்துக் கொள்ளும்
கூச வேண்டும்படி இருக்கிற திருவடிகளைக் கொண்டு
விஷத்ருஷ்டியான பணத்திலே பாய்ந்தான்
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை நிலை மகள் பிடிக்கும் மெல்லடி இ றே –

தன் சீதைக்கு நேராவன் -இத்யாதி
பிராட்டியோடு சாம்யை -சத்ருசை -யாவன் என்று வந்த சூர்ப்பணகை விரூபை யாக்கி விட
அவள் போய் கரன் காலிலே விழ
சபரிகரனாய் வந்த கரனை நிரசித்த படியைச் சொல்லுகிறது –

தன் சீதை –
ராகவோமர்ஹதி வைதேஹீம் –
தனக்கு உயரம் சொல்லிலும் அவளைச் சொல்லித் தன்னைச் சொல்ல வேண்டும்படி இருக்கும்
பிராட்டிக்குக் காணும் சத்ருசையாவேன் என்று வந்தது –

நேராவன் என்று
சர்வ லஷணத்தாலும்-விலஷணை யான பிராட்டிக்கு
விரூபையாய் இருக்கிற தான் காணும் ஒப்பாவன் என்று வந்தாள் –

ஓர் நிசாசரி –
பெற்ற தாயோடு சீறு பாறு என்று வந்தவள் என்று
பிணம் தின்னி என்கிறாள் -காணும் இவள் –

தான் –
பெருமாளுக்கு மேலான பிராட்டிக்குப்
பெருமாளோடும் ஒவ்வாத தான் காணும் ஒப்பாவான் என்று வந்தாள் –

தன் சீதைக்கு நேராவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை –

த்ரை லோக்ய ராஜ்யம் சகலம் சீதாயா நாப்நுயாத் கலாம் -என்று
பெருமாள் தாமும் தம் விபூதியும் ஒரு தட்டுக்கும் கூட போராது இருக்கக் காணும்
தான் நேராவன் என்று வந்தது –

வந்தாளை
பெருமாள் பாடே வந்தவாறே
நான் ஏக தார வ்ரதனாய் இருப்பன் –
அக்ருத விவாஹராய் இருக்கிற இளைய பெருமாள் பாடே போ -என்ன
அங்கே  சென்றவாறே அவர் -நான் தாசனாய் இருப்பன்
எனக்கு நீ கடவை யானால் நீயும் தாசியாய் அன்வயிக்கும் அத்தனை அன்றோ
பெருமாள் பாடே சென்றால் அன்றோ
உனக்குப் பட்டம் கட்டி ஏக சிம்ஹாசனத்திலே இருக்கலாவது -என்ன
அங்கே போவது இங்கே வருவதாய்த் திரிந்தவாறே
இவள் அன்றோ இது எல்லாம் ஒட்டாது ஒழிகிறாள் -என்று
பிராட்டி யுடைய பாடே வந்து
உன்னைத் தின்னும் இத்தனை -என்று விழ

கூரார்ந்த வாளால் -இத்யாதி
தம்முடைய கையாலே இ றே தண்டிப்பது
ராமஸ்ய தஷிணோ பா ஹூ
-தம்முடைய தோளாய் இருக்கிற இளைய பெருமாளை இடுவித்து தண்டிப்பித்தார்-

கூரார்ந்த வாளால் –
கூர்மை மிக்கு இருக்கிற வாளாலே
முரட்டு உடம்பிலே வ்யாபரியா நின்றால் ரக்த ஸ்பர்சம் இல்லாதபடி
வ்யாபரிக்கலாம் வாள்

கொடி மூக்கும் காது இரண்டும் ஈரா விடுத்து –
பிராட்டியோடு ஒப்பாக்கி
அங்க விசேஷங்களைப் பேணி வர
அவற்றைப் போக்கி விட்டார்

ஈரா விடுத்து –
வாளின் கூர்மை சொல்லுகைக்காக –கூரார்ந்த வாள் -என்றது அங்கு
ஈர்ந்தது என்கையாலே ஈருகைக்கு அரிதான உடம்பின் திண்மை சொல்லிற்று இங்கு

ஈரா விடுத்து –
பிறந்தகத்தில் நின்றும் புக்ககத்திற்கு வந்தாள் போல் அன்றியே
புக்ககத்தில் நின்றும் பிறந்த கத்திற்கு போம் போது ஓர் ஆதிக்யம் பண்ணி விட வேணும் இ றே –
பெருமாளை ஆசைப் படச் செய்தேயும் பிராட்டி பக்கல் அபராதம் பண்ணுகையால்விரூபை யானாள் இ றே
ஆகையாலே இவ் விஷயத்தில் ஆசை உண்டானாலும் ததீயர் பக்கலிலே அபராதம் உண்டானால் பலிக்கும் பலம்
சூர்பணகை பலம் என்கை-
இவள் ஆசைப் பட்ட விஷயம் இ றே சிந்த யந்தியும் ஆசைப் பட்டது
இப்படி அபராதம் இல்லாமையாலே அவள் பெற்றுப் போனாள் இ றே

விடுத்து
தருனௌ ரூபா சம்பன்னௌ-என்று கரன் காலிலே விழும்படி பண்ணி –

அவட்கு மூத்தோனை –
அனுகூலரானார் பக்கல் சம்பந்தி சம்பந்திகள் அளவும் ராகம் பலிக்குமா போலே காணும்
பிரதிகூலரானார் பக்கல் சம்பந்தி சம்பந்திகள் அளவும் த்வேஷம் பலிக்கும் படி

வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் –
வளைந்த வில்லும் கையுமாய் முஷ்டியிலே நின்ற பெருமாளைக் கண்ட கரன் மேலே போய்
ஒரு நரக அனுபவம் பண்ண வேண்டா -என்னும்படி
வயிறு எரித்தலோடே எல்லா அனுபவமும் இங்கே அனுபவிக்கும்படி பண்ணினான் –
பூர்வ ஆஸ்ரமத்திலே நஞ்சீயர் எழுந்து அருளி இருக்கச் செய்தே திருமடல் அருளிச் செய்கிற போது
பட்டர் இவ்விடத்துக்கு இவ்வார்த்தை அருளிச் செய்தார் -என்று சொல்ல
இவ்வார்த்தையை அருளிச் செய்தவரைக் காண வேணும் -என்று காணும்
பட்டர் ஸ்ரீ பாதத்தில் நஞ்சீயர் ஆஸ்ரயித்தது –

செந்துவர்வாய் இத்யாதி –
கரவதத்தின் அன்று -போய்ச் சொல்லுகைக்கு ஆள் இல்லாதபடி அகம்பனன் ஒருவன் தப்பிப் பெண் உடை யுடுத்துப் போய்
ராவணனுக்கு பிறந்த வ்ருத்தாந்தத்தை அறிவிக்க
அவன் மாரீசனையும் கூட்டிக் கொண்டு வந்து
பிராட்டியையும் பெருமாளையும் கடலுக்கு அக்கரையும் இக்கரையுமாக
உடலையையும் உயிரையும் பிரித்தால் போல் பிரிக்க
அதுவே ஹேதுவாக ராவணனை நிரசித்த படி சொல்கிறது மேல் –

செந்துவர்வாய் –
ஜகத் ஸ சைலம் பரிவர்த்தயாமி –
நாட்டுக்குத் தண்ணீர்ப் பந்தல் போலே ரஷகராகக் கண்ட பெருமாள்
நாட்டை அழிப்பன்-எண்ணப் பண்ணின முறுவல் இ றே –
புரேவ மே சாருத தீம நிந்திதாம்
மானைக் கண்ட போது -பெருமாளே இம்மானைப் பிடித்துத் தர வேணும் -என்ற இரப்போடே கூடின
முறுவலோடே கூட காட்டார்கள் ஆகில்
லோகத்தை எல்லாம் கூட்டிக் குலையாக அறுத்துப் போக விடுவன் -என்றார் இ றே-

வாரார் வனமுலையாள் –
மலராள் தனத்துள்ளான் -என்று பெருமாள் கிடக்குமிடம் இ றே –

வைதேவி –
விதேஹ ஸூ தாம் -என்று பெருமாள் வாய் புலற்றும் குடிப் பிறப்பு இ றே

காரணமா
அவள் ஹேதுவாக

ஏரார் தடம் தோளி ராவணனை
ஒன்றுக்கும் விக்ருதனாகாத திருவடியும்
அஹோ ரூப மஹோ தைர்யம் -என்று விக்ருதனாம்படி வடிவு படைத்தவன் இ றே ராவணன் –

ஈரைந்து சீரார் சிரம் அறுத்து –
பத்துத் தலையையும் ஒரு காலே ஆறாதே ஐஐந்தாக அறுத்து லீலை கொண்டாடின படி –

சீரார் சிரம் அறுத்து –
அறுப்புண்டு விழுகிற தலைகளும்
ரஞ்ஜ நீயச்ய விக்ரமை -என்று பெருமாள் வீரப் பாட்டைக் கண்டு சிரித்துக் கொண்டு விழுகிறபடி.
அறுப்புண்டு விழுந்த தலைகளைக் கழுகும் பருந்தும் இசிக்கக் கண்டு நிற்கிற தலைகள் -நாம் முற்பாடராகப் பெற்றிலோம் -என்று ஆசைப்படுகிற படி

செற்று –
வந்தவனை ஓர் அம்பாலே கொல்லாதே
சதுரங்க பலத்தை கொன்று குதிரைகளைக் கொன்று சாரதியைக் கொன்று
தேரை அழித்துக் கொடியை யறுத்து தலையைச் சிரைத்துத் தோள்களைத் துணித்துத்
தலைகளை அறுத்து இவற்றை எல்லாம் கொண்டு அவன் நெஞ்சாறல் படும்படி பண்ணி பின்னை அவனைக் கொன்றபடி –

உகந்த செங்கண் மால் –
உகந்த
ருஷிகளுக்குக் களை அறுக்கப் பெற்றோம்
-என்றும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தலையிலே அபிஷேகம் பண்ணப் பெற்றோம் -என்றும் உகந்த

செங்கண் மால் –
ஆஸ்ரித விரோதிகளைப் போக்கி அவர்களுக்கு உகப்பாகப் பெற்றோம் -என்று
வ்யாமோஹமும் வாத்சல்யமும் திருக் கண்ணிலே தோற்றின படி-

————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

சிறிய திருமடல்-11- நீரார் கமலம் போல் செங்கண் மால் — 28-ஆராத தன்மையனாய் – -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 27, 2013

நீரார் கமலம் போல் செங்கண் மால் -என்று ஒருவன் –
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க –
-சீரார் குடம் இரண்டு -ஏந்தி -செழும் தெருவே –
ஆராரெனச் சொல்லி -ஆடுமது கண்டு
எராரிள முலையார் என்னையரும் எல்லாரும் –
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல் வினையால் –
காரார் மணி நிறமும் கை வளையும் காணேன் நான் –
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் -அறிவழிந்து –
தீரா வுடம்போடுபேதுறுவேன்கண்டிரங்கி
ஏரார் கிளிக் கிளவி-எம்மனைதான் வந்து என்னை –
சீரார் செழும் புழுதிக் காப்பிட்டு –
செங்குறிஞ்சித் தாரார் நறு மாலைச் சாத்தற்கு
தான் பின்னும் நேராதன ஓன்று நேர்ந்தாள்
அதனாலும் தீராது என் சிந்தை நோய்
தீராது என் பேதுறவு வாராது மாமை
மற்று ஆங்கே ஆரானும் மூதறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொல்லப்படும் கட்டுப் படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவான் என்றார் அது கேட்டு

காரார் குழல் கொண்டைகட்டுவிச்சி கட்டேறி
சீரார் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர் விதிரா மெய் சிலிரா
அங்கு ஆரலங்கல் ஆனமையால் ஆய்ந்து கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள்
பேர்த்தேயும் -காரார் திருமேனி காட்டினாள் –
கையதுவும் சீரார் வலம் புரியே என்றாள்
திருத் துழாய்த் தாரார் நறு மாலை கட்டுரைத்தாள் -கட்டுரையா –
நும் மகளை நோய் செய்தான் ஆரானும் அல்லன்
அறிந்தேன் அவனை நான்
கூரார் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகேனோ –
ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது காண் –
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –
மற்று ஆராலே கல்மாரி காத்தது தான்
ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது -அவன் காண்மின்
ஊராநிரை மேய்த்து உலகம் எல்லாம் உண்டும் உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய்-

————————————————————————–

நீரார் கமலம் -இத்யாதி –
என் உத்தியோகம் ஒன்றும் அன்று என்னும்படி
அவன் உத்தியோகம் இருந்தபடி-

நீரார் கமலம் போல் செங்கண் மால் –
ஒரு தடாகம் பரப்பு மாறத் தாமரைப் பூத்தால் போலே திருக் கண்கள் –
ஒரு தடாகத்தை ஒரு தாமரையே கண் செறியிட அலர்ந்தால் போலே ஆயிற்று
வடிவடையக் கண்ணாய் இருந்தபடி –
கமலம் போல் செங்கண் -என்கையாலே
குளிர்த்தி மென்மை நாற்றம் விகாசம் எல்லாம் சொல்லுகிறது –

என்று ஒருவன் –
ஒருவன் என்னும் ஆபாத ப்ரதீதி அமையும் கிடீர் –
இப்படிப் பட்டான் என்று உள்ளபடி எல்லாம் பரிச்சேதிக்க
போச்சுதில்லை என்றபடி –
சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் –
என் கையாலே அடையாளம் சொல்லா நிற்க அறிந்திலேன் என்னும் போது
உள்ளபடி எல்லாம் பரிச்சேதிக்கப் போச்சுதில்லை -என்றபடி –

பாரோர்கள் எல்லாம் மகிழ
சிறியார் பெரியார் விலஷணர் அவிலஷணர் -என்னாதபடி
இருந்ததே குடியாக ப்ரியப்ப்படும்படி வந்து தோன்றினான் –
பாரோர்கள் எல்லாம் என்கையாலே மத்யமரையும் கூட்டிக் கொண்டு பிரியப்படும் படி வந்து தோன்றினான் -என்கை

பறை கறங்க –
கொல்லும் ஆனைக்குத் தலைப் பறையடிப்பாரைப் போலே
பறை யடிக்க வந்து தோன்றினான் –

-சீரார் குடம் –
பதார்த்தங்களுக்குச் சீர்மையாவது –
அவனோடு ஏதேனும் ஒரு ஸ்பர்சம் உண்டாகை இ றே –
சீரார் குடம் -என்று தன்னுடைய நோயாசை இருக்கிறபடி –

இரண்டு –
ஒரு பந்தைப் பொகடுவிக்க எடுத்தது இரண்டு குடம் இ றே –

ஏந்தி –
வியாபாரியா நிற்கச் செய்தே -ஏந்தி என்னும் போது
ஆகாசத்திலே நிற்கிறாப் போலே நிற்கையும்-
கையிலும் அப்படியே பொருந்தி இருக்கிறாப் போலே மாறி மாறி வருகிற சடக்கு இருக்கிறபடி –

செழும் தெருவே –
அகல நீலங்களாலே குறைவற்ற தெரு –
வீதியார வருவான்-என்று வடிவைப் பாரித்துக் கொண்டு வந்த தெரு வி றே –

ஆராரெனச் சொல்லி –
காரிகையார் நிறை காப்பவர் யார் -என்னுமா போலே
என்னுடைய உத்தியோகம் இருந்தபடி கண்டது இ றே –
ஸ்த்ரீத்வ அபிமானம் உடையவர்களே உங்கள் ஸ்த்ரீத்வத்தைக் காக்க வல்லார் காத்துக் கொள்ளுங்கோள் –
என்பாரைப் போலே வந்து தோன்றினான் -என்கை –

ஆடுமது கண்டு
அக்குடக் கூத்தாடுகிற படியைக் கண்டு

எராரிள முலையார் –
அக்குடக் கூத்தாடுகிற படியைக் கண்டு -குறி யழியாத முலை படைத்தவர்கள்

என்னையரும் எல்லாரும் –
விலக்கக் கண்ட தாய்மாரும் மற்றும் உள்ளாறும்

வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல் வினையால் –
ஹிதம் சொல்லுவாரோடு
பிரியம் சொல்லுவாரோடு
வாசி அற எல்லாரும் ஒக்க -கெடுவாய் கெட்டாய் இ றே
வந்து கொள்ளாய் -என்று அழைத்தார்கள் –
கண்ணை அங்கே வைத்து வாயாலேவாராயோ -என்கிறார்கள் –

சென்றேன் என் வல்வினையால் –
கௌரவ்யர் சொன்னபடி செய்ய வேணும் இ றே –என்று சென்றேன் –

என் வல்வினையால் –
என்னுடைய மகா பாபத்தாலே
வல்வினை என்கிறது இப்போது பக்தியை இ றே –
உத்தேச்ய விரோதி பாபமாம் இத்தனை இ றே –

காரார் மணி நிறமும் கை வளையும் காணேன் நான் –
அவனோடு கலந்து பெற்ற நிறமும்
அத்தாலே தரித்த வளைகளும்-கண்டிலேன் –
தன் நிறத்தை தான் காரார் மணி நிறம் -என்பான் என் என்னில்
நீல மணி போலே ஒரு வடிவு இருக்கும் படியே -என்று அவன் வாய்ப் புலத்தக் கேட்ட வாசனையாலே
காரார் மணி நிறம் -என்று ஸ்லாக்கிகிறாள்-

நான் -காணேன் –
எதிர்த்தலையை இக்காட்சி காணக் கடவ நான்
அத்தலை இத்தலையாய் நான் காணேன்
ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் -என்று
எப்போதும் அவன் விரும்பிக் கொள்வது இவை இ றே –

ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் –
பிரியம் சொல்லுவாரும்
ஹிதம் சொல்லுவாரும்
சொல்லும் வார்த்தைகளை கொள்ளேன் –
அதாவது -பிரிவாற்றாமைக்கு ஆஸ்வாச ஹேதுவாக
வ்ருத்த கீர்த்தனம் பண்ணி தரிக்க கடவது இ றே –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் ஏகாஷி ஏக கரணிகளுக்கு அகப்பட்ட அன்று
பன்னிரண்டாண்டு நானும் பெருமாளும் எங்கள் மாமனார் மாளிகையிலே ரசித்தோம் காணுங்கோள் -என்று
தன் ஆற்றாமையாலே ராஷசிகளுக்குச் சொல்லி தரித்தாள் இ றே –
அப்படி நான் சொல்ல மாட்டா விட்டால் பந்துக்கள் சொல்லிற்று கேட்கலாம் இ றே
அதுவும் மாற்றிற்று இலேன் –

அதுக்கு நிபந்தனம் என் என்னில் –
அறிவழிந்து –
கேட்கைக்கு பரிகரம் இல்லாமையாலே

தீரா வுடம்போடு
இப்படி ஆற்றாமை மிக்கால் -அச்சேத்யம் அதாஹ்யம் -என்னும்
ஆத்மவஸ்துவைப் போலே ஆக வேணுமோ அழியக் கடவதான உடம்பு –

பேதுறுவேன்  கண்டிரங்கி
இப்படி ஆற்றாமையாலே அறிவு கெட்டுக் கிடக்கிற என்னைக் கண்டு இரங்கி –
ஆஸ்ரயித்தில் இரக்கம் குடி புகுராமல் வார்த்தை சொல்ல வி றே இவள் கற்றது –
அவளும் ஸ்ராவ்யமாக வார்த்தை சொல்லக் கற்றாள் காணும்
என் தசா விபாகம் இருந்தபடி –

ஏரார் கிளிக் கிளவி-
கிளியின் பேச்சு -பேய்ப்பாட்டு என்னும் படி -காணும் இவள் பேச்சின் இனிமை –

எம்மனை
இதுக்கு நிபந்தனம் என் என்னில் -பெற்றதாகையாலே –
அதாவது -அதி மாத்திர ப்ராவண்யம் ஆகாது -என்று நிஷேதிக்கும் அதுக்கு மேற்பட
என் சத்தையை அழிய விடாள் இ றே-

தான் வந்து என்னை –
என் ஆற்றாமை கண்ட படியாலே தானே வந்து –

சீரார் செழும் புழுதிக் காப்பிட்டு –
மாயன் தமரடி நீறு கொண்டு அணி முயலில் மற்று இல்லை கண்டீர் இவ் வணங்குக்கு-என்று
இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவ சந்தானம் ஆகையாலே
தான் பாத ரேணுவை வாங்கி ரஷையாக இட்டாள் –

செங்குறிஞ்சி –
என் ஆற்றாமைக் கண்ட கலகத்தாலே தான் பாத ரேணுவை எனக்கு இட்ட அளவில் பர்யவசியாமல்
தேவதாந்த்ரங்கள் என்றால் அருவருக்கும் குடியாய் இருந்து வைத்து
தேவதாந்தரங்களின் காலிலே விழும்படி ஆயிற்றுக் காணும் –

செங்குறிஞ்சித் தாரார் நறு மாலைச் சாத்தற்கு –
ஒரு திருத் துழாய் பரிமாறாத தேவதையாக வேணுமோ பின்னை –

தான் பின்னும் நேராதன ஓன்று நேர்ந்தாள் –
தான் வகுத்த விஷயத்திலே ஓர் அஞ்சலி பண்ணினால் -அது சாதனத்தில் அன்வயிக்கில் செய்வது என் -என்று
இருக்கக் கடவதான -ஓர் அஞ்சலியும் அகப்படப் பண்ணினாள் போலே காணும்

அதனாலும் தீராது என் சிந்தை நோய் –
பண்டே மிக்கு வருகிற நோவு தேவதாந்தர ஸ்பர்சத்தால் அற மிக்கது –

தீராது என் பேதுறவு –
அறிவு குடி புகுந்தது இல்லை –

வாராது மாமை –
நிறம் வரும் என்கைக்கு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே
நிறம் வந்ததில்லை -என்றாள் இ றே –
என் ஆற்றாமை கண்டால் நிறம் தானே வர வேணும் -என்று இருக்கிறாள் காணும்

மற்று ஆங்கே யாரானும் மூதறியும் அம்மனைமார்
சொல்லுவார் –
தங்களை அழியாது இருக்கச் செய்தே மூதறிவாட்டிகள் ஆனவர்கள் சொல்லுகிறார்கள்

மூதறியும் அம்மனைமார் சொல்லுவார் –
இந்த்ரன் படிகள் இருக்கும்படி என் -என்று ஒருத்தி ஒருத்தியை கேட்க
தொண்ணூற்று எட்டு இந்த்ராதிகளை சேவித்தேன்
இந்த்ரன் படி கேட்கிறாய்
வேணுமாகில் சொல்கிறேன் -என்றாள் இ றே
அப்படியே பழையராய் நோய்களையும் அறிந்து நோய்க்கு நிதானமும் அறிந்து பரிஹாரமும் பண்ணுவித்து போரும்
மூதறி வாட்டிகள் சொல்லுகிறார்கள் –

தான் பின்னும் நேராதன ஓன்று நேர்ந்தாள்
தான் வகுத்த விஷயத்திலே ஓர் அஞ்சலி பண்ணினால்
அதுசாதனத்தில் அன்வயிக்கில் செய்வது என் -என்று
இருக்கக் கடவதான -ஓர் அஞ்சலியும் அகப்படப் பண்ணினாள் போலே காணும்

பாரோர் சொலப்படும் கட்டுப் படுத்திரேல்-
பூமியில் அறிவாரும் அறியாதாரும் ஒக்க
கட்டுப் படுத்தக்கால் நோய்க்கு நிதானம் தெரியும் -என்று சொல்லா நிற்பர்கள் -.
அத்தைச் செய்யுங்கோள் என்ன –

அதுக்கு பிரயோஜனம் என் என்னில்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார்
பெண்களைத் தீம்பு செய்து முகம் காட்டாதே இருக்கும்
கிருஷ்ணனே யாகிலும் வெளிப்படும் -என்கிறார்கள் –

அது கேட்டு –
கட்டுப் படுத்துங்கோள் -என்றார்கள் மூதறி வாட்டிகள் –
இவர்களும் கட்டுப் படுப்பாராக இசைந்தார்கள் –
அவ்வளவிலே தன்னை அழியாது இருக்கச் செய்தே
இவர்கள் இசைவைக் கேட்டுத் தானே வந்து புகுந்தாள் கட்டுவிச்சி .
பகவத் விஷயங்களைக் கேட்கைக்கு ருசி உண்டு என்று அறியும் இத்தனை இ றே வேண்டுவது –
ஆசார்யர்கள் தாங்களே வந்து சொல்லுவார்கள் இ றே –
முன்புத்தை ஆசார்யர்கள் பகவத் விஷயம் போது நாலிரண்டு
பேருக்கு ஆயிற்று சொல்லுவது –
அது தானும் அவர்கள் படி அறிந்தால் சொல்லுவது –
அங்கன் அன்றிக்கே -ருசி உடையார் -என்று தோற்றின அளவிலே சொல்லுவர் எம்பெருமானார் –
அப்படிக் காணும் இக்கட்டு விச்சியும்

காரார் குழல் கொண்டை-
கட்டுப் படுத்தினவள் சொல்லும் வார்த்தையிலும் காட்டில்
இவள் மயிர் முடியே இவளுக்கு போக்யமாய் இருக்கிறபடி .
ஆசார்யர்கள் உடைய ஆத்ம குணங்களிலும் காட்டில்
தேக குணமே உத்தேச்யமாய் இருக்கிறபடி –

கட்டுவிச்சி கட்டேறி
தேவா விஷ்டை யானாள் –
அதாவது -கொட்டாவி கொள்ளாதே மூரி நிமிராதே செய்தபடி –

சீரார் சுளகில்
சுளகுக்கு சீர்மை யாவது -பதர் அறுத்து
மணியும் மணியாக்கிப் பதரும் பதராக்குமது இ றே –
இச் சுளகும் -தேவதாந்த்ரங்கள் ஆகிற கூளத்தையும்
பதரையும் அறுத்து
மணியே மணி மாணிக்கமே -என்கிற மணியைக் காட்டப் புகுகிறாள் இ றே –
ஆகையால் -சீரார் சுளகு –

சில நெல் பிடித்து எறியா-
அவையும் சில நெல்லே -என்கிறாள் –

வேரா விதிர் விதிரா மெய் சிலிரா –
பகவத் விஷயம் சொல்லப் புக்குத் தான் உடை குலை பட்டபடி
மெய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப -என்னக் கடவது இ றே –
முனே வஷ்யாம் யஹம் புத்த்வா
ஜ்ஞாது மேவம் விதம் நரம் -என்று பிரச்னம் பண்ணின ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு ஸ்ரீ நாரத பகவான் -ஆனவாறே சொல்லுகிறேன் -என்றான் –
அதுக்கு கருத்து என் என்னில் –
அந்ய பரராய் பிரகிருதி ஸ்தனானவாறேசொல்லுகிறேன் என்றான் இ றே –
பதார்த்தங்களை உள்ளபடி அறிந்து இருக்கிறவன் இனி பிரகிருதி ஸ் தனானவாறே சொல்லுகிறேன் -என்றது –
ப்ரச்ன ரூபத்தாலே ராம குணங்களை ஸ்மரித்து
நெஞ்சை உடை குலையைப் பண்ணினான் ஆயிற்று –
தெளிந்து நான் பிரகிருதி ஸ்தனானவாறே சொல்லுகிறேன் -என்றானாம் இத்தனை இ றே –நினைதொறும் சொல்லும்தொரும் நெஞ்சு இடிந்து உகும் –என்னுமா போலே
கண்டு வணங்கினார்க்கு -இத்யாதி
காமன் உடல் கொண்ட தவத்தாற்கு
தன்னையும் அபிமத விஷயத்தையும் சேர்த்ததுவே குற்றமாக காமனை தஹித்த அக்நி வர்ணன் ஆனவன் இ றே ருத்ரன் –
அவனுக்கு -உமை உணர்த்த -இத்யாதி
ப்ரச்ன ரூபத்தாலே இப்படிப் பட்ட திரு நாமங்களை உடையவன் ஆர் -என்று உமை கேட்க
சிஷ்யாசார்ய க்ரமம் அறியாத தான்
தென்றலும் சிறு துளியும் பட்டால் போலே அவன் அவளைத் திரு நாமங்களைச் சொல்ல விட்டுத் தான் கேட்டு இருந்தான் ஆயிற்று –
அங்கு ஆரலங்கல் ஆனமையால் ஆய்ந்து –
கேடடுக் குறி யழியாதே இருந்தானோ என்னில்
முடி யுண்ட மாலை போலே ஒசிந்து இருந்தான்
திரு நாம பிரசங்கத்தாலே வன்னெஞ்சனான ருத்ரன் பட்டபடி கண்டால்
கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல்-
சாஷாத் கரித்தார் என்படுகிறார்களோ –

கை மோவா
பாவனா பிரகர்ஷத்தாலே –விரை குழுவு நறும் துளவம் மெய் நின்று கமழும் –என்கிறபடியே
கை திருத் துழாய் நாறும் இ றே

பேர் ஆயிரம் உடையான் என்றாள் –
நாமம் பலவுமுடைய நம்பி இ றே இப்படி பண்ணினாலும்

பேர் ஆயிரம் உடையான் என்றாள் –
ஓன்று தோற்றிற்று
இரண்டு தோற்றிற்று
நாலு தோற்றிற்று
பத்து தோற்றிற்று
நூறு தோற்றிற்று
ஆயிரம் பேர் தோன்றா நின்றதீ -என்றாள் –

பேர்த்தேயும் -காரார் திருமேனி காட்டினாள் –
அவனது காளமேகம் போன்ற திரு மேனியை உவமையாக காட்டினாள் –
ஸ்ரமஹரமான மேகத்தைக் காட்டி வடிவைக் காட்டினாள் –
காரார் திரு மேனி கண்டதுவே காரணமாக வி றே இவள் தான் இப்படிப் பட்டது-

கையதுவும் சீரார் வலம் புரியே என்றாள் –
ஒரு கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை உடையவள் -என்றாள் –
உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம்
உண்ணும்படி சொல்லில் அவன் வாயாலே ஊட்ட உண்பது
கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே –
அவன் வடிவைக் கடைக் கணித்துக் கொண்டு திருக்கையிலே யாயிற்று இடம் வலம் கொள்வது –
பிரசாதாத்தை சூடிக் கைப் புடையிலே கிடப்பாரைப் போலே
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார்
இவன் பெண்களுக்குத் துறையாய் இருக்கும்
ஸ்ரீ மதுரையிலும் திருவாய்ப்பாடியிலும் உள்ள பெண்கள் கை எடுத்துக் கூப்பிடா நின்றார்கள் –
பண் பல செய்கின்றாய் –
பகவத் விஷயத்திலே ப்ரத்யா சன்னர் செய்வதும் செய்கிறிலை -அவர்கள் தனியே அனுபவியார்கள் இ றே
பாஞ்ச சன்னியமே
நீ வந்து சேர்ந்த விடத்துக்குத் தகாது உன் குணம்
உன் பிறப்புக்குச் சேரும் அத்தனை
பாஞ்ச ஜன்யம் இ றே –

திருத் துழாய்த் தாரார் நறு மாலை கட்டுரைத்தாள் –
உபய விபூதி நாதனாக இட்ட தனி மாலையைச் சொன்னாள் –
தாமத் துளப நீண் முடி மாயன் தனக்கு இ றே இவள் மடல் எடுக்கிறது –

கீழ்ச் சொன்னவை யடைய ஸ்வகதமாக சொன்னாள் –
கட்டுரையாக –
அவற்றைத் தன்னிலே சொன்ன அநந்தரம் –
நீர் ஏதம் அஞ்சினேன் –
நீங்கள் ஏதேனும் சில வென்று பயப்படாதே கொள்ளுங்கோள்-
தேவதாந்திர ஸ்பர்சம் இல்லை –
நீங்கள் அஞ்சாதே கொள்ளுங்கோள் -என்கிறாள்

நும் மகளை நோய் செய்தான் ஆரானும் அல்லன் –
இவள் நோய் படும் காட்டில் உங்களையும் மறக்க வேணுமோ
உங்கள் வயிற்றில் பிறந்தாரை அவர தேவதைகளால் நோவப் பார்க்க ஒண்ணுமோ

ஆரானும் அல்லன் –
நாய் தீண்டிற்று இல்லை –

அறிந்தேன் அவனை நான்
ஸ்வ யத்னத்தாலே காணப் புக்கு –யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்ட வேதம் போல் அன்றியே
அவன் காட்டின வெளிச் செறிப்பாலே அவனைக் கண்ட நான் அறிந்தேன் –

கூரார் வேல் கண்ணீர் –
அறிந்தாள் ஆகில் இவள் ஆர் என்று தலைக் கட்ட புகுகிறாள் என்று சொல்லி
எல்லாரும் ஒக்க தன்னை கூர்க்க பார்த்துக் கொண்டு நின்றவர்களை சம்போதிக்கிறாள் -உமக்கு அறியக் கூறுகேனோ
இவளுடைய நோய்க்கு தேவதாந்தரங்களின் காலிலே விழும்படி கலங்கி இருக்கும்
நீங்களும் கூட அறியும்படி வார்த்தை சொல்லவோ –

ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது காண் –
பூமிப் பரப்பைத் தன கால் கீழே இட்டுக் கொண்டவர் ஆர் –
ஆரால் -என்கையாலே
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் -என்றாள்
அவன் -என்ன வேண்டும் பிரசித்தியை உபஜீவித்து நின்று சொல்லுகிறாள்

இவ்வையம் –
மண்ணை யிருந்து துழாவி வாமனன் மண்ணிது வென்னும்
பூமிப் பரப்பை அடைய துழாவி யிருந்து அவன் அடிச் சுவடு மோந்தவரைப் போலே சொல்லும் –
விச்வாமித்ர மகரிஷி யாகம் காக்க பெருமாள் எழுந்து அருளுகிற போது –
ருஷியே இங்கே தோற்றுகிற ஆஸ்ரமம் ஏது-என்று கேட்டு அருள
ஸ்ரீ வாமனன் எழுந்து அருளி இருந்து தபஸ் ஸூ பண்ணின சித்தாஸ்ரமம்
அவன் எழுந்து அருளி இருந்து போன இடம் -என்று நான் இம் மண்ணை மோந்து கொண்டு கிடப்பன் -என்றான் இ றே
அப்படியே இவ்வையம் என்று அடிச் சுவடு தோன்றுகிறபடி –

ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது தான்
இத்தால் -புவனி எல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே -என்னுமா போலே
தன்னுடைமையை இரந்து பெறுமவன் அன்றோ –
இவளை விட்டு வைக்குமோ -என்றபடி –
மண்ணை இரந்து அளந்து கொள்ளுமவன்
பெண்ணை நோவுபட விட்டு வைக்குமோ –என்றபடி –

ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –
வரபல புஜ பலங்களாலே மிக்க இலங்கை யாராலே துகளாயிற்று –

ஆரால் –
தங்கள் தரம் அறியாதே -வரத்தைக் கொடுத்து
அவனாலே குடி இருப்பு இழந்து கழுத்தும் கப்படமுமாய்க் கூப்பிட்டுத் திரிந்த ப்ரஹ்மாதிகளாலேயோ –
புதுக்கும் பிடாகையாலே செய்வது அறியாதே செய்தபடி –
இத்தால் –
ஒருத்திக்காக -உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து
இப்படி அரியன செய்து கைக் கொள்ளுமவன் இவளை நோவு பட்டு இருக்க விடான் -என்றபடி –

மற்று ஆராலே கல்மாரி காத்தது தான் –
பசிக் கோபத்தாலே இந்த்ரன் வர்ஷிக்க -அவ்வர்ஷம் நோக்கப் பட்டது ஆராலே
அவ்வர்ஷத்திலே அகப்பட்ட இடையராலும் பசுக்கலாலுமோ –
இத்தால் தன்னால் வந்த நலிவும் தானே பரிஹரிக்கும் என்றபடி –

ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது –
அப்ரமேயோ மஹோததி –
ஒருவராலும் பரிச்சே திக்க ஒண்ணாத படி பேர் ஆழத்தை யுடைத்தாய் இருக்கிற சமுத்ரத்தைக் கடைந்து –
கடைந்து கலக்குறுத்து உடலுள் புகுந்து நிற்றூற லறுத்தவர் -என்கிறபடியே
அதில் நற் சீவனான அம்ருதத்தைக் கொண்டவர் ஆர் –
கடலைக் கடைய வெந்தற்று உபக்ரமித்துக் கை வாங்கி இனி தேவர்களாலும் அசுரர்களாலும் அன்று இ றே
அன்று தேவரசுரர் வாங்க -இத்யாதியிறே
தேவர்களும் அசுரர்களும் கை வாங்கின பின்பி றே கடலைக் கடையப் புக்கது –
இத்தால் பல வடிவைக் கொண்டு உடம்பு நோவ பிரயோஜனாந்தர பரர்க்கும் அகப்படக் கார்யம் செய்யுமவன்
அமுதில் வரும் பெண்ணமுதைநோவு பட வைக்குமோ -என்றபடி
விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுது உண்டவன் இ றே –

அவன் காண்மின் –
இவ் வவபதானங்கள் எல்லாம் செய்தவனுக்கு உங்கள் நோவு படும் இத்தனை யல்லது
வேறு தேவதாந்தரங்களுக்கு நோவு படுமோ –

ஊராநிரை மேய்த்து –
தங்களுக்கு பசுக்கள் அளவு பட்டு ஊராநிரை மேய்க்கிறான் அன்று இ றே –
உங்கள் தம் ஆநிரை எல்லாம் வந்து புகுதரும் போது-என்று கண் எச்சிலாம் படி இ றே இவர்கள் கோ சம்ருத்தி இருப்பது –
அப்படி இருக்கச் செய்தேயும்
கோ ரஷணத்தில் அன்வயித்தவன் ஆகையாலே ஊராநிரை மேய்க்கும் –
ஒருவன் ஒரு ரஷணத்திலே உத்யுக்தனானால் ரஷ்ய வர்க்கம் பெற்றதில் பர்யாப்தனாகான் இ றே
அப்படியே ஊராநிரையை எல்லாம் மேய்க்கும் –

உலகம் எல்லாம் உண்டும் உமிழ்ந்தும்
பிரளயத்தில் அகப்பட்ட லோகங்களை எல்லாம் திரு வயிற்றிலே நோவு படாமே வைத்து
அங்கே நெருக்கு ஒண்ணாத படி வெளி நாடு காண உமிழ்ந்து
ஊராநிரை மேய்த்து உலகம் எல்லாம் உண்டும் உமிழ்ந்தும்
என்று
ஊராநிரை மேய்த்தத்தோடு உலகம் எல்லாம் உண்டு உமிழ்ந்ததோடு வாசி இன்றியே இருக்கிறது காணும் இவருக்கு

ஆராத தன்மையனாய் –
ரஷ்ய வர்க்கத்தை எல்லாம் ரஷித்தாலும்
தான் ஒன்றும் செய்யாதானாய் இருக்கிறபடி –
அதாவது –
தன்னை விஸ்வசித்து உடன் கிடந்தவனை மடி தடவினவன் நெஞ்சாறல் படுமா போலே யாயிற்று
ரஷ்ய வர்க்கத்தை நோவு படக் கொடுத்து நோக்குகையாவது என்னென்புது-என்று அவன் புண் பட்டு இருக்கும் படி
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ருஷிகள் ராஷசராலே நோவு பட்ட சரீரங்களை
ஏஹி பஸ்ய சரீராணி – என்று காட்டி அந்யாயப்பட-
ஒரு ரஷகன் உளன் -என்று சொல்லிப் பட்ட நிவால் வந்த லஜ்ஜை இ றே உங்களுக்கு
கர்ப்ப பூதச்த போதனா – என்று உங்கள் கையிலே உங்களை ரஷித்துக் கொள்ளும் கைம்முதல் உண்டாய் இருக்கச் செய்தே
கர்ப்ப பூதரைப் போலே உங்களுடைய ரஷணத்துக்கு நீங்கள் கடவிகோள் அன்றியிலே இருக்கிற
உங்களுக்கு வந்த லஜ்ஜை சஹிக்கலாம் –
நோவு படுவிகோளும் நீங்களேயாய் –
வந்து அறிவிப்புதி கோளும் நீங்களே யாம்படி பிற்
பாடரானோம் என்பதாய்க் கொண்டு
லஜ்ஜை நம்மால் பொறுக்க ஒண்ணாது -என்றான் இ றே –
அப்படியே -ஆராத தன்மையனாய் –

———————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

 

சிறிய திருமடல்-தனியன் -பிரவேசம் – 1-காரார் வரைக் கொங்கை –10-சீரார் செழும் பந்து அடியா நின்றேன் – -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 26, 2013

தனியன் -பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்தது –

முள்ளிச் செழு மலரோர் தாரான் முளை மதியம்
கொள்ளிக் கென்னுள்ளம் கொதியாமே –வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல் –

மருவாளன்-கையில் பொருந்திய வாளை உடையராய்
திருவாளன் -பகவத் கைங்கர்ய செல்வம் உடையராய்
முளை மதி அம் கொள்ளிக்கு -உதிக்கிற சந்திரன் ஆகிற அழகிய நெருப்புக்கு

————————————————————————–
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –
சப்தாதி விஷயங்களின் சந்நிதியிலே
மனஸ்ஸூ பரிதபியாமல் –
பகவத் ப்ராவண்யத்துக்கு அனுகுணமாக
திருமடல் -என்கிற திவ்ய பிரபந்தத்தை உபகரித்து அருளுவதே
என்று ஆழ்வார் திருவடிகளில் ப்ரேமம் உடையாருடைய ஈடுபாடாய் இருக்கிறது-

அன்றிக்கே –
ஸ்வ விச்லேஷத்தில் சாம்சாரிக விஷயங்களிலே மனஸ் ஸூ பரிதபியாதபடி
ஸ்வ பிரசாதத்தை பிரசாதியாமல் தாம் மடல் எடுக்க உபக்ரமித்த
பாசுரமான மடலையே தந்து விட்டார் -என்று ஆகவுமாம் –

முள்ளிச் செழு மலரோர் தாரான் –
தமக்கு அசாதாராணமாய்-
அத்விதீயமாய் -இருக்கிற முள்ளிப் பூவைத் தாராக வுடையவர் -என்னுதல்-
வகுளத்தாரான்-என்னுமா போலே –
அன்றிக்கே
மலரோ -என்ற பாடமான போது –
நம் அபேஷிதமான முள்ளிச் செழு மலர் மாலையையோ தருகிறிலர்-என்றாகவுமாம் –
மலர்-என்றது மாலைக்கு உப லஷணம்-

எதுக்கு தார் -தர வேணும் என்னில் –
முளை மதியம் கொள்ளிக்கு என்னுள்ளம் கொதியாமே –
முளைத்து எழுந்துள்ள திங்கள் விரஹிகளாய்  இருப்பார்க்கு தாப ஹேது இறே-
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் -என்றார் இறே இவரும்-
நாட்டாருக்கும் அப்படியே -சந்த்ரஸ் சண்டே கராயதே என்று சந்திர மண்டலம் சண்ட மண்டலமாய் இருக்கை-
-தான்யே வாரமணீ யாநி–முளை மதி அங்கொள்ளி -என்னுதல்
முளைமதியமாகிற கொள்ளி -என்னுதல் –
அங்கொள்ளி –அழகிய கொள்ளி -என்னுதல் –
இது பஞ்ச விஷயத்துக்கு உப லஷணம் –
மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ வண் குறிஞ்சி இசை தவிருமாலோ -என்றும்
வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ –
மேவு தண் மதியம் வெம்மதியாலோ
மென் மலர்ப்பள்ளி வெம்பள்ளி யாலோ -என்றும் இறே
விச்லேஷத்தில் விஷயங்களின் பாதகத்வாகாரங்கள் இருப்பது –
அது தான் விஷய அநுகுணமாய் இறே இருப்பது –
ஆகையால் குளிர்ந்த சந்தரன் கொள்ளி போலே கண்டு என் ஹ்ருதயம் பரிதபியாதே –
ஆழ்வார் பண்ணின உபகாரமே

வள்ளல் திருவாளன் சீர்க்கலியன் –
வள்ளல் -பரமோதாரர் –
திருவாளன் -பகவத் ப்ரத்யா சத்தி யாகிற ஐஸ்வர்யத்தை வுடையவர் –
வள்ளல் திருவாளன் –
இவர் ஔதார்யம் பண்ணுகைக்கு உடலான ஐஸ்வர்யம் –
சீர்க்கலியன் –
பகவத் பக்த்யாதி குணங்களை வுடையவர் –

கார்க்கலியை வெட்டி
கலிகன்றி -யாகையாலே அஜ்ஞ்ஞான வஹமான கலியைக் கடிந்து –
கலி தோஷம் இறே காம பரவசர் ஆகிறது –
அப்படி அப்ராப்த விஷயத்தில் காமம் வாராதபடி –

மருவாளன் தந்த மடல் –
திருக்கையில் மருவி இருக்கிற வாளை வுடையவர்
பகவத் காமத்துக்கு அனுகுணமான திரு மடல் என்கிற திவ்ய பிரபந்தத்தை உபகரித்து அருளினார் –
மருவாளன் –
பகவத் அனுபவத்தில் உண்டான போக்யதை வடிவில் தொடை கொள்ளலாம் படியானவர்
இவள் -அம் துழாய் மாலை கமழ்தல் –
மரு-பரிமளம்
மருவு -மருவுதலாய்-எம்பெருமானை கிட்டுக்கையே ஸ்வபாவமாக உடையவர் -என்றுமாம் –
அன்றிக்கே –
சேதனரைக் கிட்டி ஆளுகிறவர் -என்றுமாம் –
ஆகையால் சேதனரைத் தம் படியாக்க  வேண்டி மடலை உபகரித்து அருளினார்
மாலையைத் தாராதே
மடலைத் தந்து விட்டார் -என்றாகவுமாம் –

————————————————————————–

பிரவேசம் –
கீழ் அனுபவித்தது ஜ்ஞான அனுபவம் ஆகையாலே
பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்து -அது கிடையாமையாலே
திருக் குடந்தையிலே சரணம் புக்கார் -திரு வெழு கூற்று இருக்கையிலே –

இப்படி சரணம் புக்க அளவிலும் நினைவு பூரியாமையாலே
இதுக்கு ஹேது என் என்னில் –
எம்பெருமான் தான் அஜ்ஞ்க்ன அசக்தன் அப்ராப்தனாய்த் தாழ்க்கிறது அன்று –
இத்தலையில் கர்த்தவ்ய சேஷம் உண்டாய்த் தாழ்க்கிறது அன்று –
இனி விளம்ப ஹேது இரண்டு தலைக்கும் இன்றிக்கே இருக்கச் செய்தே
இனித் தாழ்க்கிறது கூடல் செய்ய நினையாமையாலே —
ஆனபின்பு -இத்தலையை அழித்தாகிலும் முகம் காட்டுவித்துக் கொள்ளுவோம் -என்கிற
த்வரையின் மிகுதியை
கிருஷ்ண அவதாரத்தில் குடக் கூத்திலே அகப்பட்டு அவனைக் கிடையாமையாலே மடல் எடுக்கத் துணிந்தாள் ஒரு
பிராட்டி யுடைய பாசுரத்தாலே ஸ்வ தசையை ஆவிஷ்கரிக்கிறார் –
மடலாவது –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபிஜன லஷணாம் -என்கிறபடியே
இருவரும் ஒத்த பருவத்தராய்
பும்ஸ்தவத்துக்கு ஏகாந்தமான அறிவு நிறைவு ஓர்ப்பு கடைப்பிடி என்கிற குணங்களாலே அவனும் பூர்ணனாய்
ஸ்த்ரீத்வத்துக்கு ஏகாந்தமான நாண் மடம் அச்சம் பயிர்ப்பு என்கிற குணங்களால் இவளும் பூரணையாய் –
இப்படி இருவரும் குறைவற்றவர்களாய் இருக்க –
தோழிமாறும் தானுமாக உத்யானத்திலே பூக் கொய்ய வென்று புறப்பட
அவனும் வேட்டைக்கு என்று புறப்பட்டுச் சோலையிலே புகுர –
தைவ யோகத்தாலே கூடினதாகையாலே
உயிர் தோழியும் கூட அந்ய பரையானவளவிலே
யாத்ருச்சிகமாக இருவருக்கும் திருஷ்டி பந்தம் பிறந்து அதுவே அடியாக சம்ச்லேஷம் பிரவ்ருத்தமாக
உன்மச்த கரசமமாக கலந்த கலவியாகையாலே
நற்கேட்டிலே இரண்டு தலைக்கும் அழிவு வரும் -என்று
இத்தை முடிய நடத்தக் கடவதாகக்ப் பார்த்த
தைவம் தானே பிரிக்க –
இவருடைய பந்துக்களும்
புனை யிழை களணிவுமாடையுடையும்
புதுக் கணிப்பும் நினையும் நீர்மையதன்று -என்னும்படி இருவர் வடிவிலேயும் வேறுபாடு கண்டு இருவரையும் காவல் செய்ய
அதுவே அடியாக இவர்கள் ஆற்றாமை சதா சாகமாகப் பணைக்க
எதிர்த் தலையைக் கிடையாமையாலே மற்றைத் தலை செய்யும்  சாஹச ப்ரவ்ருத்தி யாயிற்று மடலாவது –

இவர்கள் மடல் எடுக்கிறதுக்கு பிரயோஜனம் என் என்னில்
இவ் வுபக்ரமத்தைக் கண்டு இவருடைய பந்துக்களும் கூட்டுதல் –
அன்றியே ராஜாக்கள் கூட்டுதல்
அன்றியே இருவர் பந்துக்களும் இருவரையும் கை விட
அலக்குப் போர் போலே -ஒருவர்க்கு ஒருவர் தஞ்சமாய்க் கூடிப் போதல் –
அலக்கு போர் -வீரர்கள் தங்கள் ஆயுதங்களை ஆதாரமாக்கி நிறுத்தி வைக்கும் ஆயுத குவியல் –
அன்றிக்கே -மடல் எடுத்து எதிர் தலையை பெறாமையாலே இத்தலை முடிந்தது -என்னும்
ஏற்றத்தைப் பெற்றுப் போதல்
இவை பிரயோஜனமாக –

வள வேழ் உலகில் தங்கள் அயோக்யதையை அனுசந்தித்து அகலும் ஸ்வ பாவரான இவர்கள்
இஸ் சாஹச பிரவ்ருத்தியில் இறங்குவான் -என் என்னில்
மடல் எடுத்து அத்தலையை அழிக்கப் புகுகிறார்கள் அல்லர்களே
ஊர்வன் மடல் -என்று -சாபமாநய சௌமித்ரே -என்று வில்லைக் காட்டி வேலையை அச்சம் உறுத்தினால் போலே
அச்சம் உறுத்தி முகம் காட்டுவித்துக் கொள்ளுகிற வர்கள் ஆகையாலே
தங்கள் துணிவைச் சொல்லவே அவன் வரும் என்று சொல்லுகிறார்கள்
அத்தனை அல்லது மடல் எடுக்கிறார்கள் அன்று இறே-
அயோக்யர் என்று அகன்றதும் -விலஷண வஸ்து என்று அனுசந்தித்தவாறே –
குணாதிக்யமும் வைலஷண்யமும் அனுசந்தித்த படியால் இறே இவர்கள்
ஆற்ற மாட்டாதே வழி யல்லா வழி போயாகிலும் பெற வேணும் என்று மேல் விழுகிறது–

இவர்களுக்கும் ஒரு ஸ்வ பாவம் உண்டு –
தங்களை அனுசந்தித்த போது அயோக்யர் என்று அகலுவர்கள் –
அவனை அனுசந்தித்த போது தங்களையும் பாராதே மேல் விழுவார்கள் –
அத்தலையை அனுசந்திக்கச் செய்தே இத்தலை தோன்றாது இறே -அத்தாலே மேல் விழுகிறார்கள் –

ஆனால் அவர்கள் பிராட்டிமார் பேச்சைப் பேசுவான் என் என்னில்
ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தாலும்
அநந்யார்ஹ சேஷத்வாதிகளாலும்
அந்வயத்தில் தரிக்கையாலும்
வ்யதிரேகத்தில் தரியாமையாலும்
ஜ்ஞானம் விசதமானால் இவ்வாத்ம வஸ்துவும் பிராட்டிமாரோடே ஒக்குமாகையாலும்
இவர்களும் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்கள் ஆகையாலே
பிராட்டி பேச்சாலே பேசுகிறார்கள்-

கடலன்ன காமத்தராகிலும் மாதர் மடலூரார் மற்றை யார் மேல் -என்று ஸ்திரீகள்
புருஷர்கள் மேல் மடலூரக் கடவதல்ல என்று லஷணம் காட்டிக் கிடக்கச் செய்தே
இப் பிராட்டி மடலூருவான் என் என்னில்
ஆசை ஒருதலைக்கேயாய்-ஒரு தலை லஷணப் படியே ஆசையை மர்யாதையிலே நடத்தலாமாகில் அது செய்யலாவது –
ஆசை மிக்கார் மடலூரும் அத்தனை -என்னும் ஆர்ய மர்யாதையாலே மடலூர உபக்ரமிக்கிறார்கள்

பின்னைத் தமிழர் செய்ததுக்கு ஹ்ருதயம் என் என்னில்
ராஜாஜ்ஞ்ஞையிலே ஆசையை வரம்பு கட்டப் பார்த்ததுக்கு ஹ்ருதயம் ஏது என்று அறிந்தது இல்லை-

மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் -அறிவுடையாராகில் அனுஷ்டிக்கக் கடவதல்ல -என்று
அவர்கள் நிஷேதித்த காமத்தை அனுஷ்டிக்கிறார்களோ என்னில்
அப்படி நிஷேதித்த காமம் அல்ல –
நிதித்யாசி தவ்ய-என்று வேதாந்த்திலே விதிக்கிற பகவத் பக்தியை -காமம் -என்கிறது –
ஆகையாலே விஹிதமான வ்ருத்தி-பக்தியைக் காமம் -என்கிறது –
மடல் எடுக்கையாவது -தன்னுடைய ஸ்த்ரீத்வத்துக்கும் அவனுடைய புருஷோத்தமத்வத்துக்கும் சேருவது ஓன்று அன்று –
அவன் தானே வரக் காண்கை காண் ஸ்த்ரீத்வம் ஆவது -என்று விலக்குகிறவர்களைக் குறித்து –
மநோஹாரி சேஷ்டிதங்களிலே அகப்பட்டு அபஹ்ருத சிந்தை யானேன் –
அவன் தானே வருகிறான் -அவனுக்கு நிறக்கேடு விளைக்க ஒண்ணாது -என்கிற இதுவும் செய்தற்றது –

இனி மடல் எடுத்து அவனைப் பெற்று அல்லது தரியேன் -என்கிற தன் துணிவை –
விலக்குகிற பந்துக்களுக்கு சொல்லுகிறாள் –
மடல் எடுக்கப் புக்கவள் விளம்பிக்கறதுக்கு ஹேது என் என்னில் –
ஹேதுக்களாலே பந்துக்களை இசைவிக்கைக்காகவும்
குணாதிக வஸ்துவைக் கடுக அழிக்கல் ஆகாது என்றும்
வருகைக்கு அவகாச பிரதானம் பண்ணுகைக்காவும்
விளம்பிக்கிறாள் —

————————————————————————–

காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை
சீரார் சுடர்ச் சுட்டிச் செங்கலுழிப் பேராற்று -பேரார மார்வில்
பெரு மா மழைக் கூந்தல் -நீரார வேலி நிலமங்கை என்னும்
இப் பாரோர் சொல்லப் பட்ட மூன்றன்றே
அம் மூன்றும் ஆராயில் தானே -அறம் பொருள் இன்பம் என்று
ஆரார் இவற்றினிடை அதனை எய்துவார் –
சீரார் இரு கலையும் எய்துவர் –
ஆரானும்உண்டு என்பார் எனபது தான் அதுவும் ஒராமை யன்றே –
அது ஒராமை ஆம் ஆறு உரைக்கேன் -கேள் ஆமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழித் தேரார் –
நிறை கதிரோன் -மண்டலத்தைக் கீண்டு புக்கு –
ஆராவமுதம் அங்கு எய்தி -அதில் நின்றும் வாராது ஒழிவது  ஓன்று உண்டே –
அது நிற்க –
ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே –
ஏரார் இள முலையீர் –
என் தனக்கு உற்றது காண் –
காரார் குழல் எடுத்துக் கட்டி -கதிர் முலையை -வாரார வீக்கி -மணி மேகலை திருத்தி –
ஆராயில் வேற்கண் –
அஞ்சனத்தின் நீர் அணிந்து –
சீரார் செழும் பந்து -கொண்டு அடியா நின்றேன் நான் –

————————————————————————–

காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை –

தாய்மார் தோழிமார் எல்லாரும் இத் துணிவு ஆகாது காண் என்று விலக்கா நிற்கச் செய்தே –
விலக்காதாள் ஒருத்தியைப் பெறுவதே -என்று கொண்டாடுவாரைப் போலே
புருஷார்த்தங்கள் சொல்ல வேண்டுகையாலே –
அவர் பரிக்ரஹித்த சேதனரைச் சொல்ல வேண்டி –
அவர்கள் வர்த்திக்கிற பூமியைச் சொல்லப் புக்கு –
அவ்வழி யாலே அதுக்கு அபிமானிநியான
ஸ்ரீ பூமிப் பிராட்டியை வர்ணிக்கிறாள் –

காரார் வரைக் கொங்கை –
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு முலையாக மலைகளைச் சொன்னபடி –
காரார் வரை-என்கையாலே -செறிந்து மேகம் படிந்த மலை -என்று மலைக்கு உயரம் சொல்லிற்று –
மேகம் படிந்த மலை என்கையாலே முலைக் கண் கறுத்து இருந்தால் போலே இருக்கும் என்கை –
மலைகளை முலையாக்கிச் சொல்லிற்றாகில் -எம்மலைகளைச் சொல்லிற்று என்னில்
திருமலைகள் இரண்டையும் முலையாகச் சொல்லிற்று என்னும் இடம் சொல்லிற்று
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் – என்னும் இவையே முலையா -என்று பெரிய திரு மடலிலே சொல்லிற்று-
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு முலை சொல்லுகிறதாகில் உயர்ந்த மேரு ப்ரப்ருதிகளைச் சொல்லாதே
இவற்றைச் சொல்லுவான் என் என்னில்
முலையாவது காந்தன் படுகாடு கிடக்கும் இடம் இறே –
அப்படியே எப்போதும் ஒக்க பகவத் சந்நிதி உள்ள தேசம் ஆகையாலே திரு மலைகளைச் சொல்லிற்று –

வரைக் கொங்கை
முலைக்கு காடிந்யம் ஸ்வ பாவமாய் இருக்கும் இறே –அதுவும் சொல்கிறது –

கண்ணார் கடலுடைக்கை –
கண்ணார் கடல் என்கையாலே -தர்சநீயமான கடல் -என்னுதல் –
இடமுடைத்தான கடல் -என்னுதல் –
இடமுடைத்தாகை யாவது என் என்னில் –
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்குள் கொடுக்கும் கொய்சகமும் வைத்து உடுக்கலாம் படி பரப்பை வுடைத்தாய் இருக்கை –

கடலுடுக்கை –
திரு மேனியின் சௌகுமார்யத்துக்கு ஈடாக
உறுத்தாமே குளிர்ந்து இருக்கும் -என்கை –

சீரார் சுடர்ச் சுட்டிச் செங்கலுழிப் பேராற்று -பேரார மார்வில்

சீரார் சுடர் சுட்டி –
அழகிய சுடரை உடைய ஆதித்யன் இவளுக்கு திலகம் என்கை –
அணி மிகு தாமரைக் கை ஆபரணமாகக் கடவ
தலைக்குத் தான் ஆபரணமாகப் பெருகையாலே வந்த சீர்மையாகவுமாம் –

செங்கலுழிப் பேராற்று -பேரார மார்வில்
சஹ்யத்திலே வர்ஷிக்கச் சிவந்த கலக்கத்தை உடைத்தாகையாலும்
மலையில் உண்டான பொன் முதலான ரத்னங்களை உடைத்தாகையாலும்
பூமி எங்கும் பரவிக் கொண்டு வருகையாலும்
விளங்கி -கலங்கில் கிடக்கிற ஆறாகிற
ஹாரம் கிடக்கிற மார்பை வுடையவள்

பெரு மா மழைக் கூந்தல் -நீரார வேலி நிலமங்கை என்னும்
பெரு -பெருத்து – –
கறுத்த–மழை மேகங்கள்
நீர் கொண்டு எழுந்த காளமேகத் திரளே-இவளுக்கு மயிர் முடி –
அதாகிறது –
இந்திர தனுஸ்ஸூம் -மின்னும் கலம்பகன் சூடினால் போலே இருக்கையாலே
மேகத்தை மயிர் முடி என்கிறது –
காந்தனுக்கு தர்சநீயமாய் இருக்கையும்
ஒருகால் குலைத்து நுழுந்த விடாய் ஆறும்படியாய் இருக்கையும்-

நீரார வேலி –
ஆவரண ஜலமே இவளுக்குக் காப்பு -என்னுதல் –
மரியாதை என்னுதல்
குளிர்த்தியை வுடைத்தான சந்தனத்தோ பாதியாய்
நாமத்தை உடைய கற்பே இவள் உயரத்துக்கு எல்லை என்கை –

நில மங்கை என்னும் இப்பார் –
பூமியைப் சொல்லப் புக்கு அதுக்கு பிரகாரியான ஸ்ரீ பூமிப் பிராட்டி யளவும் சொன்ன படி

இப் பாரோர் சொல்லப் பட்ட மூன்றன்றே
சிறியார் பெரியார் என்னாதே
விலஷணர் அவிலஷணர் -என்னாதே
பூமியில் உண்டான சேதனர் பரிக்ரஹித்த புருஷார்த்தம் மூன்று அன்றோ -என்கை –

அன்றே-என்றபடியாலே
மோஷம் என்று ஒரு புருஷார்த்தம் உண்டு அன்று என்னும் இடம் சொல்லுகிறது –

அம் மூன்றும் ஆராயில் தானே –
இவற்றை ஆராயப் புகில் –
தம்முடைய திரு உள்ளத்தில் கிடக்கிற காமமே புருஷார்த்தம் -என்றாதல்

அறம் பொருள் இன்பம் என்று –
கீழே புருஷார்த்தத்தை மூன்று என்று சொல்லச் செய்தே
இங்கு எடுத்ததுக்கு பிரயோஜனம் என் என்னில்
மோஷம் இதின் உள்ளே ஓன்று என்று சொல்லுவார் உண்டாகிலும் என்று
அவர்களுக்கு இடமறச் சொல்லுகிறாள் –

ஆரார் இவற்றினிடை அதனை எய்துவார் –
நடுவனது எய்த இரு தலையும் எய்தும் -என்று தமிழர் சொல்லுகிறபடியே சொல்லுகிறார் அன்று-
இவை மூன்றிலும் வைத்துக் கொண்டு-
அதனை எய்துவார் என்று -தமக்கு உத்தேச்யமான காமத்தை எய்துவார் -என்றபடி –
ஆரார் இவற்றின் இடை எய்துவார் -என்கையாலே
பயிலும் திருவுடையார் யவரேலும் -என்னுமா போலே
இப் புருஷார்த்தத்தை லபிப்பார்
ஜன்ம வ்ருத்தங்களால் குறைவுடையவரே யாகிலும்
அவர்களும் சிலவரே -என்கிறார்-
சீரார் இரு கலையும் எய்துவர் –
இத்தை லபிக்கும் சம்பத்தை வுடையவர்கள் இதுக்கு கலா மாத்ரமான
தர்ம அர்த்தங்கள் இரண்டையும் லபித்தாராகக் கடவர்
சாத்தியத்தை லபித்தவர்கள் -சாதனத்தையும் அனுஷ்டித்தாராக கடவது இறே
இவற்றுக்கு சீர்மை யாவது -இதுக்கு சாதனம் ஆகையாலே
ஒரூருக்கு போகவென்று ஒருவன் மனோரதித்தால்
அவ் ஊரிலே அவனைக் கண்டால் நடுவு பட்ட வழியும் வந்தானாகக் கடவது இறே

ஆரானும்
அறிவில் குறைந்த யாரோ சிலர்

உண்டு என்பார் எனபது தான் அதுவும் ஒராமை யன்றே –
சிக்கென மற்று -உண்டு என்பார்
நிலையான மோஷம் என்று மற்று ஒரு புருஷார்த்தம் இருப்பதாகச் சொல்லுவார்கள் –
அல்ப அஸ்தரம் என்று இப் புருஷார்த்தங்களை தூஷித்து
ஆனந்தா வஹமாய் -அந்தமில் பேரின்பமாய்
நிலை நின்ற புருஷார்த்தம் உண்டு என்பார்கள் –
இப்படி காண ஒண்ணாதே
அவர்கள் வசஸ் சமுத்ரத்திலே கேட்டுப் போம் இத்தனை என்கை –
ஆரானும்-என்கையாலே -அவ்யப தேச்யருமாய் அவ்யுத்பன்னருமாய் சிலர் -என்கை

எனபது தான் அதுவும்
அவர்கள் அப்படி சொல்லுகிறதும்

உலகத்தார் சொல்லும் சொல் –
உலகத்தவர்களாலே சொல்லப்படுகிற சொல்லையும் செயலையும்
லோக பரிக்ரஹத்தை அவர்கள் ஆராயாமல் சொல்லுகிறார்களாம் அத்தனை
அது ஓன்று அல்ல -என்கை
அவர்கள் அறியாமல் சொன்னாராம்படி என் என்னில்

ஒராமை அன்றே
ஆராயாமல் சொல்லுவது ஓன்று அன்றோ –

அது ஒராமை ஆம் ஆறு உரைக்கேன் –
அச் சொல் ஆராய்ச்சி அற்றது என்னும் இடத்தை -உங்கட்குத் தெரியச் சொல்லுகிறேன்
அவர்கள் அறியாமல் சொன்னார்கள் என்னும் இடம் என் உக்தி மாத்ரத்தாலே
அவர்கள் பிரமாண பிரமேயம் இரண்டையும் அழிக்கிறேன் –
நீங்கள் செய்ய வேண்டியது செவி தாழ்த்துத் தரும் இத்தனை –

கேள் ஆமே
அதனை நீங்கள் காது கொடுத்துக் கேட்கக் கூடுமே -கேளுங்கோள்

கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி –
மேக மண்டலத்தில் செல்லுவதும் ஏழு குதிரைகள் பூட்டப் பெற்றதும்
ஒற்றைச் சக்கரத்தை வுடையதுமான –
அது தான் உங்களுக்கு ஏற்க உண்டே என்று தோற்றிற்றோ
மேக பதத்திலே குதிரை சஞ்சரிக்கை யாவது என்
புரவி -இரண்டு அல்ல நாலு அல்ல ஆறு அல்ல -எட்டு அல்ல ஏழு குதிரை பூண்கை யாவது என் –

தனி ஆழித் தேரார் –
பிள்ளாய் -இரண்டாதல் நாலாதல் அன்றிக்கே
தனிச் சக்கரமாம் –
பிள்ளாய் -ஆகாசத்திலே ஒருவன் தேர் நடக்கை யாவதென் –

நிறை கதிரோன் –
ஒரு விளக்கின் சந்நிதியில் விழிக்க மாட்டாத அதி சூத்திரன்
உஷ்ண கிரணங்களால் பூர்ணனாய் இருக்கிற ஆதித்யனைச் சென்று கிட்டுகை
யாவதென் –

மண்டலத்தைக் கீண்டு புக்கு –
ஒருவனை இங்கே உபாசித்து
அவனுடைய ராஜகுலத்தாலே -ஆதித்ய மண்டலத்தின் நடுவே போகிறானாம் இறே
அங்கே ஏறப் போனால் அவ்வழிப் போக்குத் தான் இங்குப் போலே
இரண்டருகும் பணை யாக நடவே போகிறானோ தான் -என்கை –

ஆராவமுதம் அங்கு எய்தி –
திரு நறையூர் இங்கே
திருவாய்ப்பாடி இங்கே இருக்க
ஆராவமுதம் அங்கே யாவது என் -என்கை –

அங்கு எய்தி –
பனைமடலும் திரு நறையூரும் இங்கேயே இருக்கச் செய்தே
அங்கு ஏத்திக் கொண்டு ஏத்திப் பெறுவது -என்கை –

அதில் நின்றும் வாராது ஒழிவது  ஓன்று உண்டே –
போனால் பின்னை புனராவ்ருத்தி இல்லையாம் –
தன்னிச்சை யின்றிக்கே இருக்கச் செய்தே
தன் கர்மத்தால் நரகத்தை அனுபவித்தவனும் மீளா நின்றான்
இச்சையால் சுக அனுபவம் பண்ணப் புக்கவன் மீளானாம்-

ஓன்று உண்டே
இப்படிப் பட்டதொரு புருஷார்த்தம் உண்டு என்று தோற்றி
இரா நின்றதோ உங்களுக்கு -என்கை –

அது நிற்க –
அதுதான் உண்டாக -இல்லையாக -பிணக்கு என் -என்கை –
ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே –
ஸ்தல சஞ்சாரியை விட்டு சாகா சஞ்சாரியைப் பற்றுவதே –
ஸூ சங்கதமுமாய் உபயோக யோக்யமுமாய் இருக்கிற வஸ்து கைப்பட இருக்க
இத்தை உபேஷித்து
கைப்படாதே இருப்பதுமாய் -கைப்படுவது ஓன்று என்று தெரியாது இருப்பதுமாய் –
கைப்பட்டாலும் உபயோக யோக்யமும் இன்றிக்கே இருக்கிற வஸ்துவுக்கு வில் எடுத்துத் திரிவதே –
இது ஒரு சேதன க்ருத்யமோ -என்கிறார் –

ஏரார் இள முலையீர் –
நீங்கள் வடிவு படைத்தது -வடிவு அழகாலே பிரயோஜனம் இங்கே
கொள்ளுகைக்கு அன்றோ -என்று கருத்து –
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் –என்னக் கடவது இறே –
இஸ் சரீரத்தைக் கொண்டு அவதாரங்களிலும்
உகந்து அருளின நிலங்களிலும் அடிமை செய்யாதே
தேசாந்தரே-
காலாந்தரே – –
தேகாந்தரே –
பெரும் பேறு ஆகிறது என் என்புது என்கை –

என் தனக்கு உற்றது காண் –
இது எல்லாம் கிடக்க –
நான் மாறுபாடு உருவப் பட்டதொன்று கேளுங்கோள் என்கிறார் –

காரர் குழல் -இத்யாதி
என் உத்தியோகம் எதிர்த் தலையைக் கையும் மடலுமாகக் காணப் போரும் கிடீர்

காரார் குழல் எடுத்துக் கட்டி –
நீல மணி போலே நெய்த்து இருண்டு ஸ்ரமஹரமான குழலை எடுத்துக் கட்டி –
மயிர்ச் செறிவாலும் பருவத்தாலும் ரூபத்தாலும் எடுத்துக் கட்ட அரிதாய் இருந்தபடி

எடுத்துக் கட்டி –
அலையப் புறப்பட்டேன் ஆகில்
அவனை விலங்கிடலாம்-என்கை –

கதிர் முலையை –
யௌவனப் புகரால் மிக்க முலையை –

வாரார வீக்கி –
வார் சபலமாம் படி வீக்கி -என்னுதல்
வாராலே ஆரக் கட்டி -என்னுதல்
கொல்லும் யானைக்கு முகபடாம் இட்டால் போலே –
இக்கச்சுக் கிடந்தது இல்லையாகில் அவனைப் பிச்சேற்றலாம் கிடீர் -என்கிறாள் –

மணி மேகலை திருத்தி –
மணிமயமான மேகல ஆபரணத்தை அமைத்து
அதாவது
பிராட்டி யமுனையில் தெப்பம் ஏற ஒருப்பட்டால் போலே
அவனுக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணின படி –

ஆராயில் வேற்கண் –
அழகும் கூர்மையும் ஆர்ந்த கண் –

அஞ்சனத்தின் நீர் அணிந்து –
அழகுக்கு இடுகிறது அன்று இ றே –
மங்களார்த்த மாக அஞ்சனம் இட்டு –

அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீர் அணிந்து –
கடைந்த பாத்திரத்திலே நெய் இட்டால் போலே –

காரார் குழல் எடுத்து –
குழல் எடுத்துக் கட்டிற்று இலேனாகில்
எதிர்தலையைக் கையும் மடலுமாகக் காணலாம் கிடீர் -என்கை
கதிர் முலையை வாரார வீக்கி
கொல்லும் யானைக்கு முகபடாமிட்டால் போலே
முலையின் அழகைக் கச்சாலே மறைத்திலேன் ஆகில்
நான் பட்டது அவன் படும் கிடீர் -என்கை –
மணி மேகலை திருத்தி –
பரியட்டத்தைப் பேணாதே புறப்பட்டேனாகில்
என் அவஸ்தை அவனுக்குப் பிறக்கும் கிடீர் -என்கை –
ஆராயில் வேர் கண் அஞ்சனத்தின் நீர் அணிந்து –
பெரு வெள்ளத்திலே வாய்த்தலை படல் இட்டால் போலே
கண்ணின் அழகை அஞ்சனத்தினாலே மறைத்திலேன் ஆகில்
கண்ணுக்கு இலக்கை அவனுக்குத் தப்ப ஒண்ணாது கிடீர் -என்றதாயிற்று –

சீரார் செழும் பந்து –
ஆரேனுக்கு சம்பத்து  உண்டாவதும் இவளுடைய ஸ்பர்சம் கொண்டு இறே
பந்தார் விரலி-என்று இவள் கைவிடாது இருக்கும் பந்து இறே –
சம்பத்துக்கு குறை இல்லை இறே

செழும் பந்து –
அழகிய பந்து –

கொண்டு அடியா நின்றேன் நான் –
அன்யார்த்தம் கிடீர்
என்னுடைய வியாபாரம் என்கை-

————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

 

அருளி செயல் அரங்கம் -சிறிய திரு மடல் -சாரம் ..

December 10, 2011
வாழி பரகாலன் –
ஆழ்வார்கள் சித்தாந்தம்-அவனை பற்றியே சிந்தனையே நல்ல நாள்கள் .
நம் பிள்ளை திரு ஓலக்கத்திலே செய்ய பெற்ற பாக்கியம்-
பயிற்று வைத்த மட கிளி போல்
திரு மால் அடியார்கள் நிறைந்த –
மால் வியாமோகம் உடையவன்-பிராட்டியார் உடனும் நம் போல்வார் இடமும்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்
கண்=ரஷகன்
கண்ணாவான்-வின்னோர்க்கும் மன்னோர்க்கும்  -நிர்வாககன்
மாலை கண் என்று இருப்பார்க்கு -விஷயாந்தாரங்களில் -மாலை கண் தோற்றாது இறே-ஈடு
சஷூர் இந்திரியம்  -இழந்து மாலை கண் வியாதி –
வாசவதத்தை -பக்தராஜன்-மடல்- நடந்து வெற்றி -கண்டார்கள் ..
த்வரை-கொண்டு பெண் உடை உடுத்தி -அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் நாம் யார்
நைச்ய பாவனை –
நல்லை நன் தோழி –சிறு மானிடரவர் -நாம் செய்வது என் -பூமிபிராட்டியும் அருள
நாகணை மிசை -பராத்பரன் -சர்வேஸ்வர ஈஸ்வர ஈஸ்வரன்-செல்வர்-உபய விபூதி நாதன் –
சதுர முக -தானாக -தோழி/தாய்/மகள் -உபாயம் பலம் த்வரை –
வேகம்-ஆற்றாமை உந்த -என்று நான் காண்பேன் –
பெரிய திருமொழியில் கோடிட்டு காட்டினார் திரு புல்லாணி பாசுரம் மடல் இடுவதாக –
புல்லாணி கை தொழுதேன் வர காணேனே –
காற்றையும் கழியையும் -நெஞ்சம் கோள் பட்டாயே -கட்டி அழுதது போல்
பனம் தோப்பு வழியே வர -மடல் எடுக்க -மட்டை-உண்டே
அன்றில் பறவை குடி புக-பாதகம் காமுகருக்கு –
தார்மிகராய் இருப்பார்-தண்ணீர் பந்தல் வைத்து -பகல் கொள்ளை காரன் -தீவட்டி –
பறிப்பது போல் -அன்றில் பறவை தொனி -இருந்ததாம் –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் –
கண்ணனுக்கே ஆம் அது காமம்
பகவத் விஷய சிந்தனை மனனம் -பராம் காஷ்ட்டை
சாகரம் சோஷ இஷ்யாமி-பெருமாள்-சமுத்திர ராஜன் -கோபம் ஏற் இட்டு -கொண்டானே பெருமாள் –
அது போல் பரகால நாயகி பயப்படுதுகிறாள்
இது ஒரு அபிநயம்-பிரக்ரியை –
ரகஸ்யம் சில -பிரகாசக்கிக்க வேண்டியது சதஸ்யம் –
செவி தாழ்ந்தார்க்கு எல்லாம் -உபதேசித்து போந்தார் உடையவர் .
மானஸ அனுபவம் மட்டும் போதாது -உன்னை கட்டி பிடித்து அணைத்து –
பூமி-காரார் வரை கொங்கை-புருஷார்த்த த்ரயம்-சொல்லி –
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று –
நில மங்கை-பூமி பிராட்டி நினைத்து –
பெரிய திரு அந்தாதி -அர்த்தம் பொதிந்து
இரண்டு எதற்கு-ஓன்று விபவ வைபவம் வர்ணித்து -சிறிய திரு மடல் –
அர்ச்சா அவதாரம்-பெரிய திரு மடல் –
சம்ச்லேஷ ரசம் ஜனித சுகம் பெறாமையால் வெறுத்து -அருளுகிறார் ..
ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே-போக்யத்வம் சௌலப்யம் அர்ச்சை தானே –
மடல் எடுக்கும் பொழுதும் லோகத்தாருக்கு உபதேசம்
ருசி ஜனகத்வம் அர்ச்சையில் பரி பூர்ணம் .
தாயார்-இவளும் தண் அம் துழாய் கமழ்தல் –
நம் தெருவே குடக் கூத்து ஆடிவருகிறானே பார்க்க வா கூப்பிட -பார்த்ததும்
மோகம் அதிகரிக்க -குறி சொல்ல –
இந்திரனை தெரியுமா -பழைய கதை சொல்ல -அனுபவம் வாய்ந்த அன்னைமார்
கட்டு விச்சி -நினைத்த உடன் வர -ஆசார்யன் -ஸ்தானம் —

முழம் கால் தகர -மூக்கிலே கட்டுவது போல் தேவதாந்தர சம்பந்தம்
சொல்லும் கட்டு விச்சி இல்லை
யார் மருந்து இனி யாவர் ஆகுவார்
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா
முறம்-சீர்மை மணி மாணிக்கம் காட்டி கொடுத்ததால் –
ஜாடை காட்டி -அடுத்து –
பேர் ஆயிரம் உடையான் -அவனுடைய திவ்ய செஷடிதங்கள் பல உண்டே –
அதற்க்கு ஏற்ற படி-சீல பேர் வீர பேர் -தேவோ நாம சகஸ்ரவான் –
சதா பரகுணா நிஷ்ட்டை-கண்ண நீர் சுரந்து –ஆக்லாத சீத நேத்ராம்புக்கு –
உலகம் அளந்து -ஆநிரை மேய்த்து -இலங்கை பொடி பொடி ஆக்கினவன் –
அவன்கிட்டே வர வில்லையே –
பால திவ்ய லீலை-தாமோரத்வம்-அனுபவிக்கிறார் –
யசோதை -செல்வத்தில் விஞ்சி இருந்தாலும் ஆளை  விட்டு சந்தி செய்வார் உண்டோ-
யசோதை தானே கடைய -குல வழக்கம் –
உதஸ்மித் -மோர் -உதகேன ஸ்வதென-நீர் மோர் -மோர் குடம் உருட்டி-
காளிய நர்த்தன /கஜேந்திர மோஷம் விஷயம்
நாராயணா மணி வண்ணா நாகணையா -தொழும் காதல் மத களிறு –
எம்பார் வார்த்தை-மூன்று கண்டம்-திரௌபதி கஜேந்த்திரன் பிரகலாதன்-தப்பினான்
திவ்ய தேசங்கள் பேரை சொல்லி -சீரார் திரு வேம்கடமே -ஆரம்பித்து
தீர்த்த புஷ்ப சுப்ரபாதம் கைங்கர்யம்-ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ ஜீயர்கள் கைங்கர்யம் உள்ள சீர்மை –
வேம் =பாப சமூகம் கடம்=எரிக்கும் –
கிருஷ்ண குணம் இங்கே நடை மாடிக் கொண்டு இருக்கும் பொழுது அன்வயிக்க தேவர்களே வர வேண்டாமா
திரு கோவலூர் -அடுத்து -நெருக்கு உகந்த பெருமாள்-கருப்பஞ்சாறு –
மிதுனமே உத்தேயம்  -ஆங்கு அரும்பி கண்ணீர் -அன்பு அடியவர் முதல் ஆழ்வார்கள்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -வண்டினம் முரலும் சோலை-
ஆசை உண்டு பண்ணும் -திவ்ய தேசம்-அவனுக்கும் நமக்கும் –
விஸ்ரமிக்கும் திவ்ய தேசம்–பத்ரி வரை 28 திவ்ய தேசம் அருளி –
சீரார் தயிர் -சீர்மை கடைவதற்கு முன்னே இவன் எச்சில் பட்டு
கடைக்கும் பொது இவன் எச்சில் பட்டு
கிம் பூதம்-வாய் அமுதம்
கடைந்து சமைந்தால் இவன் எச்சில் படுமதே சீர்மை –
தோள்கள் உள்ளவும் கை நீட்டி –
பட்டர் நஞ்சீயர் -அறிந்த படி எங்கனே
கோவில் சாந்தை விளிம்பில் கண்டாள் போல்
வெண்ணெய் விழுங்கி -மோரார் குடம் உருட்டி-
ஆத்மா வஸ்து கொண்டு தேகம் விட்டு
சீரார் கலை அல்குல்- வஸ்த்ரதுக்கு சீர்மை-இவன் புழுதி அலைந்த பொன் மேனி சம்பந்தத்தால்
இவனுடைய பத்து மஞ்சளும் –
முற் காலத்தில் பெரிய திரு நாள் சேவித்த முதலிகள் மேலை திரு நாள் வரும்
அளவும் அவ் இரட்டையை மடித்து கொடியில் இட்டு பார்த்து
முகில் வண்ணன்-கண்டு அருள-வட்டில்-அமுது வைத்து –
ஈந்த பத்து -இவை பத்தும் -பிரித்தது போல் –

மட நெஞ்சை தூது விடுகிறாள் பரகால நாயகி
தருவானா இல்லையா தாரார் துழாய் மாலை
-சென்ற நெஞ்சு திரும்ப வில்லையே ..
இந்திரன் படிகள் படி- 98 இந்திரன் படி சொல்லும் பெரியவர் வார்த்தைகள்
முன்புத்தை ஆசார்யர்கள் நால் இரண்டு பேருக்கு மட்டும் சொல்ல
எம்பெருமானார் ருசி உடையார் எல்லாருக்கும் அருளுவார் .
கர தூஷணர் -விருத்தாந்தம் பட்டர் அழகாக அருளி நஞ்சீயர் மனசை கொள்ளை கொண்டார்
திரு மங்கை ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ சிறிய திரு மடல்-சீரார் திரு வேங்கடமே – -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 16, 2011

 

காரார் திருமேனி காணும் அளவும் போய்
சீரார் திரு வேங்கடமே திருகோவலூரே——–69
மதில் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெக்காவே
பேராலி தண் கால் நறையூர் திரு புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கண மங்கை
காரார் மணி நிற கண்ணனூர் விண்ணகரம்
சீரார் கண புரம் சேறை திரு அழுந்தூர்
காரார் குடந்தை கடிகை கடல் மலை
ஏரார் பொழில் சூழ் இட எந்தை நீர் மலை
சீராரும் மால் இரும் சோலை திரு மோகூர்
பாரோர் புகழும் வதரி வட மதுரை
ஊராய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓரானை கொம்பு ஒசித்து ஓர் யானை கோள் விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அரும் சீர்
பேர் ஆயிரமும் பிதற்றி பெரும் தெருவே
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்–77
வாரார் பூம் பெண்ணை மடல்

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் –திரு புல்லாணி-பாசுரம்-பிரயோஜனமாக முக்தி  கேட்க கூடாது -மார்பிலே கை வைத்து உறங்க பிராப்தி–காம சாம தேவன் காலில் விழுந்தாள் ஆண்டாள்–அடைய படுவது புருஷோத்தமன் என்பதால் வழி அல்லா வழி -ஞானம் தெளிந்து முதிர்ந்து பக்தி-பர பக்தி பர ஞானம்   பரம பக்தி  மூன்று நிலைகளும் கடந்து -இவை அடி களைஞ்சு பெரும்–வல் வினையேன்-கிருஷ்ண பக்தியே- பாபம் ஆசை பட்டதை அடைய வைக்கும் தடங்கல் தானே–நோய் தீர கூடாது  என்றே அன்னை மார் விரும்ப–மின்னு மா மழை தவழும் மேக வண்ணன்- பெரும் தெய்வம் பண்ணிய நோய்-தீரா நோய்-இங்கும் அங்கும் பக்தி சாத்யம் தான்-சாதனம் இல்லையே–பகவத் சரித்ரம் சொல்ல சொல்ல-அடையாளம் மாதரம் சொன்னதும்- மூர்ச்சை தெளிந்து எழுந்தாள் பர கால நாயகி–கற்ப்பிப்பார் நாயகரே -பிரி நிலை ஏ காரம் நாயகர் இல்லை–காணும் அளவும் போய் என்று –25 திவ்ய தேசம் நெஞ்சை கூட்டி கொண்டு போகிறார்–மன குதிரை ஓட-ஆடல் மா குதிரையில் முன்பு திக் விஜயம் போன இடங்கள் எல்லாம் நினைவு கொண்டு –ஊர் ஆய எல்லாம் -சொல்ல விட்ட இடங்களுக்கும் -பக்தி பாரவச்யத்தால்–அடியார்களுக்கு சொத்து போல-ஆர்த்தி பூர்த்தி தலை எடுக்க–சீரார் திருவேங்கடமே திரு கோவலூர் -என் வடிவை காட்டி-பிரிந்து இளைத்து பசலை நோய் கொண்ட மேனி காட்டி-பிரத்யட்ஷம் -குணம் அழித்து பெற கடவேன்–

நித்யருக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க  சேவை தரும்–கண்ணாவான் மண்ணோர்  விண்ணோர்க்கும்   -வானவர்கள் சந்தி செய்ய நின்றன்-வானவர் வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும் திரு வேம்கடம்–தண் அறிவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வெற்பு  காடு  வானரம் வேடர் –உபய விபூதி நாதன் -ஒழித்து ஏக விபூதி நாதன் ஆக்குவேன்–10 புராணம் -வராக ஷேத்ரம்–சப்த கிரி-சேஷாத்ரி –கலவ் வேங்கடம்–என்னை ரட்சிக்க வில்லை-ஆஸ்ரிதர் மூவர் இருந்த-நெருக்கு உகந்த – திரு கோவலூர்-பூம்  கோவலூர்  தொழுதும் போ நெஞ்சே- வலது திரு வடி மேல்தூக்கி -திரு விக்ரமன்  மிருகுண்டு மகரிஷிக்கு  பிள்ளை மார்கண்டேயர் –அந்த மகரிஷி வேண்டிய படி -புலவர் நெருக்கு உகந்த பெருமாள்-வாசல் கடை கழியா உட் புகா -வையம் தகளியா -தொடங்கி-அன்பே தகளியா -ஞான சுடர் விளக்கு ஏற்ற- திரு கண்டேன் என்று கண்ட மூவர்  முதல் ஆழ்வார்களையும் நெருக்கி-பூம் கோவலூர் -வண்டுகள்-இடை கலி ஆயன்-தேகளீசன்–பல் சக்கரம் போல மூவரும்-கரும்பு ஆயன் -ரசம் மூன்று திரு அந்தாதிகளும்–மண்ணை முகந்து கொண்டு இன்றும் நிற்கிறார்–அவர் கூத்தாடி போன இடத்தில் ஆழ்வார் கலங்கி- ஆஸ்ரிதர் மூன்று பேர் நின்ற மண்–இரண்டு மூவர்- -இடை களி யே கற்ப கிரகமாக கொண்டு இருக்கிறானே -பொற் கால் இட்ட ஆழ்வார் —நினைந்து கொண்டே இருக்கிறான் –மூத்த பிள்ளைக்கும் கடை குட்டிக்கும்-இவர் தான் கடைசி ஆழ்வார்- உள்ள வித்யாசம் காட்டுவேன்–பட்ஷ பாதி–ஆச்ரிதை என்னை கை விட்ட படி பாரும் -பஞ்ச கிருஷ்ண ஷேத்ரம்-திரு வேம்கடம்-திரு விக்ரமன்- தாள் பரப்பி மண் தாவிய ஈசன் இவன் –

ஊரகம்-மதில் சூழ்ந்த -நான்கு திவ்ய தேசம்-நீரகத்தாய் –கார்வானது உள்ளாய்- கல் எடுத்து கல் மாரி கத்தாய் -வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தாய் என்றும் காமரு பூம்  கச்சி –ஆதி சேஷனுக்கு பால் பாயாசம் சமர்ப்பிப்பார்கள்–மதிள் கச்சி ஊரகமே  -ரட்ஷனத்துக்கு-சீர்மை உள்ள பெருமாளுக்கு ஏற்ற படி- எல்லாருக்கும் தீண்டிய பெருமாள்- உலகு அளந்த பெருமாள்–கதா புன -மதியம் மூர்தனம் அலங்கரிஷ்யதே –என் தலை விடு பட்டு போனதே-என் வடிவை கண்டு என்னை தீண்டிய படி-சருகாய் உலர்ந்த திரு மேனி காட்டி–இடது திரு கையால் இரண்டு காட்டி வலது திரு கையால் ஒன்றை காட்டி-ஈர் அடியாள் அளந்து கொண்ட முக்கியம்-பேரகமே- அப்ப கூடத்தான்-திரு பேர் நகர்-ஆழ்வார் பாடிய கடைசி திவ்ய தேசம்– பேரென் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான்–ஆரா வயிற்றோன்  –பிடித்தேன் பிறவி  கெடுத்தேன் –சாரேன் மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்ப்பதோர் மாயையை– இரவில்  ஸ்வாமி அனுசந்தானம் பண்ணி திரும்ப -ஐதீகம்–

அப்பால ரெங்க நாதன்–திரு மால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான் –அயோதியை சித்ரா கூடம் ஜடாயு-திரு மால் இரும் சோலை திரு பேர் நகர் ஆழ்வார்-திறந்த வாசலாக-ஆற்றுக்கு நடுவில்- மதிள் இன்றி–யாரும் வந்து சேவிக்கலாம் படி– அங்கு மதிள் தாண்டி வந்தவர்களுக்கு தான் சேவை- இருந்தும் தனக்கும் சேவை இல்லையே–சர்வ ஸ்தானம் பண்ணி கொண்டு இருக்கிறான்–வடிவை காட்டி–பேரா மருது இறுத்தான்–அசுர வேஷம்-அசையாமல்- கண்ணன் அசைந்து தளர் நடை இட்டு மருது இறுத்தான்-ச்தாவரங்களும் அசுர வேஷம்- திரு வெள்ளறையே-புண்டரீகாட்ஷன் பங்கய வல்லி தாயார்-காப்பு இட்டார் ரட்ஷை–பரிவர்களாய் இருந்து காப்பு இட்டார்–அழகனே காப்பிட வாராய்-பொங்கும் பரிவு–ஸ்வேத கிரி- சிபி சக்கரவர்த்தி-வெள்ளை பன்றி-துரத்தி-பாலால் திரு மஞ்சனம்-3700 பேரை கொண்டு குடிவைத்தான்-பூம் கிணற்றில் எழுந்து அருளிய நாச்சியார்–மருத மரமும் சேவை பெற்றது பரிவரும் சேவை பெற்றார்-நான் இழந்தேன்–திரு வெக்கா–ஊரகம் பக்கம்- மன குதிரை–ஆஸ்ரிதன் போ கிட சொல்ல போய் கிடந்தவன்-சொன்ன வண்ணம் செய்த பெருமாள்–திரு வெக்கனை–பரி முக வேள்வி அஸ்வமேத யாகம்-சரஸ்வதி இன்றி-யக்ஜா குண்டம் -வேக வதி-ஆணை போல திருவெக்கா அஷ்ட பூஜை பெருமாள்– தீப பிரகாசர்– வேளுக்கை ஆள் அரி– தேவ பெருமாள்- சத்யா வராத செஷத்ரம் –காண் தகு தோள் அண்ணல்- – முதலில் -பிரம சொன்ன வண்ணம் செய்த பெருமாள்-இப் பொழுது  மாற்றி பள்ளி  கிடக்கிறார்–திரு மழிசை கனி கண்டன்-பை நாக பாயை சுருட்டி கொள்–மூவரும் நடக்க கனி கண்டன் திரு மழிசை பெருமாள் ம காரம்  உ காரம்   அ காரம் நேர் மாறி ஓர் இரவு இருக்கை– தை மாசம் மகம் இன்றும் ஓர் இருக்கை உத்சவம் நடக்கும் —

என்னை படுத்திய பாடு–பேர் ஆலி -திரு ஆலி-தன் பிறந்த ஊர் எனக்கு தன்னை முற்றூட்டாக கொடுத்தவன் என்ற பேச்சு –உடம்பு கொடுத்த படி பாருங்கோ–சென்று பழி இடுவேன் -அங்கு தானே இருக்கிறாள்-அனைத்தும் கிடைக்கா விடில் இருந்தாலும்  இல்லாதது போல—கதாந வகம்-பரதன் சத்ருக்னன் லஷ்மணன் என்று உடன் கூட போகிறோமோ ராமன் -சொன்னது போல-இருந்தாலும் இல்லை போல தான்–திரு தண்   கால்—திரு தண்  காவில்-காற்று சோலை-தீப பிரகாசர்-கால்-காற்று குளிர்ந்த காற்று போல சிரமம் தீர்க்க-என் சிரமம் தீர உதவின படி-வெம் கால் எனக்கு மட்டும்–நறையூர் -வஞ்சுளா வல்லி தாயார்-மேதாவி- நீளா தேவி–மடல் நறையூர் நம்பிக்கே தான்-பிராட்டிக்கு பவ்யன் என்று பிரசித்தம்–நாச்சியார் திரு மாளிகை-ஆண்டாள்-பூ தேவி பிரதானம்–திரு வெள்ளறை ஸ்ரீ தேவி –

பள்ளி கமலம் இடை பட்ட-நல்லி -பெண் வண்டு–அலவன் -ஆண் நண்டு—நல்லி ஊடும் நறையூரே–ஊர் வாசம்-தாயாருக்கு பிரதானம்-ஐதீகம்-என் வடிவில் பிராட்டிக்கு பவ்யன் எப்படி /திரு புலியூர்-குட்ட நாடு- மாய பிரான்-அன்றி மற்று உபாயம்–இவள் நேர் பட்டதே–தோழி திரு கல்யாணம் ஆனவள் போல இருக்கிறதே-திரு துழாய் மணம் வீசிகிறதே -சிபிஐ சக்ரவர்த்தி பிள்ளை சப்த ரிஷிக்கு தானம்-பின் வாசல் வழியாக கொடுக்க ரிஷிக்கு கோபம்-சரண் புலி ரூபத்தால் i வந்து அளிக்க-திரு புலியூர் பெயர்-கமுகு மரங்களும் -ஸ்தாவரங்களும் மிதுனத்தில் இருக்கும்–ஆராமம் சூழ்ந்த அரங்கம்–நடுவில் இதை சொல்லி –ஆராமம்- தோட்டம் மட்டும் இல்லை-கீழேசொன்ன 10  திவ்ய தேசம் மேல் சொல்ல போகும் 14  திவ்ய தேசங்களும் ஆராமம்–வேர் பற்று–உகந்து அருளின தேசங்கள் எல்லாம் பகல் இருக்கையாய்- வேட்டை ஆட போகும் இடம்-ஆஸ்ரித ரட்ஷனம் ஏகாந்த -பெரு வானகம் உய்ய  அமரர் உய்ய–அன்புடன் தென் திசை நோக்கி பள்ளி கொண்டு அருளும் திரு அரங்கம்

 பகல் இருக்கை-வேட்டை ஆட -இருக்கும் மண்டபங்கள்–கோவிலில் நித்ய வாசகம்–அன்புடன் தென் திசை-பிரத்யட்ஷம் பிரணாகாரம்–ஒரே திவ்ய தேசம் 50 பாசுரங்கள் அருளினாரே–வானகம் உய்ய்கிரதாம் மண் உய்கிரதாம்–௭-௩-தென் திரு பேரை- வேட்டை ஆட போனவன் பின் பராங்குச நாயகியும் போக–பூ கொய்ய இவள் போக–ஆராமம் -சூழ்ந்த அரங்கம்-பகல் இருக்கை- போனால் பிடிக்கலாம்-திரு கண்ண மங்கை-பெரும் புற கடல்–திரு பாற் கடல்–௩௩ முக் கோடி -திரு கல்யாணம் நடுக்க -தேனிகள்- ஆறு மாசம்- உத்தராயணம்-பத்தர் ஆவி– பக்த வட்சல்யன்–  கண்களால்  ஆரவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன்-அங்கன் சொன்ன என்னை- விசாரிக்க வில்லை- வடிவை காட்டி காணாமையை–பக்தர் ஆவியை பறிக்கிறார்–ஞானி எனக்கு ஆவி என்றார்-கீதை–கீழ் படியே இல்லை–எனக்கு ஆவி இவன் இல்லையே- என் ஆவியை பறித்தார்–நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் பொருள் தானே–ஆவணி ரோகினி பெரிய வாச்சான் பிள்ளை கார்த்திகை கார்த்திகை -கலி கன்றி தாசர்-நம் பிள்ளை–திரு விண்ணகரகம் -காரார் -நீல மேகம் மணி நிறம்-ஆஸ்ரித ரட்ஷனத்துக்கு வந்தவர்-குறைவாளர்களுக்கு முகம் கொடுக்க -என் அப்பன்-பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன்-6-2 ஊடல் பதிகம்-சேர  மாட்டேன் என்ற ஆழ்வாரை சேர்த்து நல் குரவும் செல்வமும் நரகும் சுவர்குமாய் -சேர்த்த -பங்குனி ஏகாதசி-திரு வோணம்  மார்கண்டேயர் திரு குமாரி பிராட்டியை திரு கல்யாணம்- அரும்பினை அலரை-யுவ குமாரர்–தன ஒப்பார் இல் அப்பன்–என் அப்பன்–தன் தாள் தர வந்தவன் எனக்கு தர வில்லையே–சீரார் கண்ண புரம்–புக்ககம் போல–அனந்யார்கயாய் தாலி கட்டி இருக்க-கண்ண புரம் ஓன்று உடையார்க்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ–என்னை புறம் ஆக்கி விட்டதை அறிவிக்க போகிறேன்–சரண்ய முகுந்தத்வம்-உத்பளாக விமானம்-கீழை வீடு–விபீஷணனுக்கு  திரு கை தல சேவை-அமாவாசை– சேரை -தண்  சேறை -பஞ்ச சார ஷேத்ரம்- பஞ்ச நாயகி- பெருமாள் திரு கையில்  பத்மம் உண்டு திரு கையில்– சார புஷ்கரணி –நதிகள் கூடி-சேவிக்க யாரை-போட்டி கங்கை காவேரி- பிரம கங்கை- தவம் இருக்க சாம்யம் பெற்றாள் கங்கையில் புனிதம் ஆகிய காவேரி அரங்கத்தில் அவன் வந்த பின் கிட்டும்–துலா காவேரி-குழந்தையாக சேவை சாதிக்க-சார நாத பெருமாள்-கண் சோர வெங்குருதி-என் தலை மேல்-தாய் முலைக்கும் பூதனைக்கும் -வெண் தழல் கூந்தல்-மண் சேர முலை உண்டான்-தாய் முலை பால் அமுது இருக்க -மா முதலை- பெரிய குழந்தை- மிக சிறிய குழந்தை-என் வடிவையும் முலையையும் காட்டி-தீண்டாமல் போனதை காட்டுவேன்– தேர் அழுந்தூர் ஆ மருவி அப்பன்- கருடன்  -பிரகலாதன் கருடன் கூட–உபரி சரவசு-மார்கண்டேயர்/ப்ருகு/பூமி பிராட்டி காவேரி/நிறைய கோவிலில்/ பிரம கன்றுகளை அபரித்து போக தேடி கொண்டு வந்தார்-ரத மக்ன -உபரி சரவஸ்- மத்யம் பண்ண போக தேவர்-ரிஷி- மாவினால் பண்ணியபசு -தேவர் நிஜ பசு-இவர் தேவர் பக்கம் சொல்ல- ரிஷி கோபத்தால் அழுந்த-தேவாதி ராஜன்-40 பாசுரம்-திருவுக்கும் திரு வாகிய செல்வா  -அணி அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மான்- கை பட்ட வெண்ணெய் வேண்டும் என்று சொன்னவன்– தனக்கு -மாடு கன்று குட்டி இருக்கும்- தேவாதி ராஜன்- புஷ்கரணி தாண்டும் பொழுது கால் சக்தி குறைத்து ஆ மருவி அப்பனாக சேவை–என்னை தொட வில்லையே–காரார் குடந்தை- ஸ்ரமகரமான-மேக கூட்டங்கள் கூடி–குடந்தை  என் கோவலன் -குடி அடியாருக்கே –ஆஸ்ரித பவ்யன் கண் வளருகிறான் -திரு மழிசை ஆழ்வார் – நடந்த கால்கள் நொந்தவோ-கிடந்தவாறு எழுந்து இரு பேசு வாழி கேசனே ஆரா அமுத ஆழ்வார் திரு மழிசை பிரான்

கிடந்த நாள்கள் கிடந்தாய்–எத்தனை நாள் கள் கிடப்பாய்-கிடந்தவாறே பேச எழுந்து இருந்து பேச சொல்ல -நடுவாக- உத்தான உத்யோக சயனம்–நான் இழந்தேனே–கோமள வல்லி தாயாருக்கு தானா-பாதாள ஸ்ரீனிவாசர்–போர் தாமரை குளம்-தபஸ்- தாயார் -மகர சங்கராந்தி- திரு கல்யாணம்-ஆரா அமுதே -எனக்கு அமுதன் ஆவது என்றோ– திரு கடிகை மிக்கானை -அக்கார கனியை- வேத விமலர் விழுங்கும்  அக்கார கனி– தக்கான் குளம்-பிராவன்யத்துக்கு தக்க- சப்த ரிஷிகளுகுக் தபஸ்–வீர ஆஞ்சநேயர்- கடிகை ஒரு நாழிகை யில் சேவை-சக்கரை பழம்–இல்லை- சக்கரை விதைத்து மரம் உண்டாக்கி பழுத்த பழம்–அபூத உவமை –இனிமை யாருக்கு என்று கேட்க்க போகிறேன்–புஜிக்க நான் ஒருத்தி தான்–கடல் மலை- தல சயனம்-பக்தனுக்கே என்றே புண்டரீகாஷா ரிஷி–படுக்கை துறந்து -ஆஸ்ரிதருக்கு தரை கிடை கிடக்கிறானே- இவனோ நானோ தரை கிடை கிடக்கிறோம் -பட்டு உடுக்கும் பாவை பேணாள்–ஏரார் பொழில் சூழ் இட எந்தை–சோலை யுடை-வராக -காட்டு பன்றிக்கு ஏற்ற செருக்கு கொண்டு- வியாமோகம்- பாற் வண்ணர் மட மங்கை பத்தர் பித்தர்–ஸ்ரீ தேவிக்கு திரு மார்பு மட்டும் கொடுத்து -கீழ் புக்கு கரந்தும் உமிழ்ந்தும்-அளந்தும் -எடுத்தும்- மால் செய்த மால் -ரகசியம்- பூமி பிராட்டிக்கு அந்தரங்கை நான் -பிள்ளை வேட்டகம் ஆசை பட்டும் பெண் புக்ககம் ஆசை பட்டு இருக்கும் –படுத்தின பாட்டை காட்டி-நீர் மலை– எளியவன் நீர்மை நீர் வண்ணன் நீர்மலைக்கே போவேன்–அடிக்கலாம் கொடுப்பவன் -தோயாத்ரி-நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் இடம் மா மலை ஆவது நீர் மலையே –அடக்கம் குடி போன எனக்கு-அடைய வெட்க்கம் விட்டு துணிவு-சீராரும்  மால் இரும் சோலை-தெற்கு ஊர் என்று -ஆரியர்கள் இகழ்ந்த தெற்கு திக்கு-

ச்தாவரங்கள் குறவர்கள் கூட கலக்கும் -உன் பொன் அடி வாழ்க என்று  இன குறவர்–ஆஸ்ரித வியாமோகம் வடிவு கொண்டவர்–திரு மோகூர்-வழி துணை பெருமாள்–ஆப்தன்-காளமேகத்தை அன்றி மற்று ஒன்றும் கதியே–எனக்கு இல்லை -மனசு வாக்கு காயம்- அபிபாக ரசம்-பிரியாமல் சேர்ந்து அனுபவம்–விரோதியாய் இருக்கிறாரே–பாரோர் புகழும் பதரி வட மதுரை–வடக்கே–மனோ ரதம் இங்கு ஓடி வர-

வதரி வணங்குதுமே நர நாராயணனாய் சிஷ்யன் இருக்கும் இருப்பை காட்ட- திரு மந்த்ரம் கொண்டு வாடி னேன் வாடி நான் கண்டு கொண்டேன் நமரும் உரை மின் சொன்னேன் -இங்கும் இழந்தேன்- என் பேற்றுக்கு நானோ நீயோ தபஸ் பண்ணினாய்- நாரணி பெற நாராயணன் தபஸ் பண்ணிய இடம் /வட மதுரை-ஒருத்தி மகனாய்-வாமனன்– சத்ருணன்-இலவணன் தானை வானில் ஏத்தி-12 வருஷம் ஆண்டான்- கண்ணன் -கண்ணன் கேசவன் நம்பி பிறந்த -பகவத் சம்பந்தம் மாறாத –இவள் வந்ததும்-காலை வைத்ததும்-கண்ணனை காணோம்–ஊராய எல்லாம் காணும் அளவும்–ஒழியாமே நான் அவனை–சொல்லி சொல்லி விடாத -பட்டோலை கொண்டு கொள்ளுங்கோ–அவன் புக்க இடம் புக்கு அழிக்க கடவன்–அரசாக பராதீனன்–மீண்டும் கஜேந்திர மோட்ஷம் சொல்லி விபவம் அழிக்க போவதை கோடி காட்டி-பெரியமடலில் சொல்ல போகிறார்/ ஓர் யானை கொம்பு ஒசித்து வேறு ஒரு யானை ரட்ஷித்தானே -செம் கண் நெடியானை- தேன் துழாய் தாரான்- சேர்ந்து இருக்கும் பொழுது -தாரான்-கொடுக்க மாட்டாமல்–தாமரை கண்ணன்- எண்ணரும் பேர் ஆயிரமும் பிதற்றி–தோஷங்களுக்கு அரங்கம் ஏற்ற போகிறேன்–விச்வம் விஷ்ணு வஷட்காரர் இல்லை-புதிய ஆயிர நாமங்கள்–அறுக்க வேண்டிய இடங்களையும் அறுத்து–கவலமால் யானை கொன்று-ஆணை காத்து ஆணை கொன்று- என்னை விட்டார் வேற ஆழ்வாரை- உன்னை அன்றோ களை கணா கருதுமாறே-ஒரு முலையில் பாலும் பெரு முலையில் சீயும்- -அப குணம்- பொறி தடவி- வேப்பம் காயை வெள்ளம் போட்டு மூடி–செங்கண்  அடியானை- அகத்தின் அழகை காட்டும்- எட்டா கனி–அனுபவிக்க ஒட்டாமல்–ஆசை பட்டாரை பிரிந்து இருக்கும் பொழுது தனியாக -தேன் கொட்டுவது கண்ணீர் உகுக்குவது போல –தாமரை போல் கண்ணானை நித்யம் செவ்வி பிறக்கும் -வந்தால் மூடி கொண்டு பிரிந்தால் நாள் தோறும் செவ்வி–குண  ஹானிக்கும் சகஸ்ர நாமம்–பயப் படுத்து கிறார்–ஊராரர்  பழித்தாலும் -நீண்டு அழகிய பனை மடலை கொண்டு—

பெரும் தெருவே- ராஜ வீதியில்-எங்கும்–வாசவதத்தை கொண்டாடினது போல–நாச்சியார் புறப்பாடு கொண்டு சேவிப்பார்கள் திரு மடலை–கொண்டா விடில் நிறைய பாடுவேன்–இகழ்ந்தால் -நான் மடல் ஊருகை தவிரேன்–கூப்பின கைக்குள் மடல் பிடித்து கொண்டுசேவை-ப்ரக்மாச்த்ரம் போல–விடவே வேண்டாம்–வாரார் பூம் பெண்ணை மடல்-கொண்டாடுகிறார் இதை–

 

ஊராது ஒழியேன் உலகு அறிய ஒண் நுதலீர்
சீரார் முலை தடங்கள் சேர் அளவும் பார் எல்லாம்
அன்று ஓங்கி நின்று அளந்தான் நின்ற திரு நறையூர்
மன்று ஓங்க ஊர்வன் மடல்-இது ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வான் அருளியது என்பார்

ஒளி பொருந்திய நெற்றி கொண்டவர்களே -அழகிய முலை தடங்கள் அணையும் வரை–தாவி அளந்த திரு விக்ரமன்-திரு நறையூரில் நின்ற பெருமாள் பேரில் மடல் எடுப்பேன் —

————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்