பஞ்ச பூதங்கள்
பஞ்ச பிராணன்
பஞ்ச ஞான இந்திரியங்கள்
பஞ்ச கர்ம இந்திரியங்கள்
பஞ்ச பூதம்
பஞ்ச மஹா யஜ்ஜ்ங்கள்
பஞ்ச வேதங்கள் பாரதம் பஞ்சமோ வேதம்
பஞ்ச நிலைகள் பரம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமி அர்ச்சா
பஞ்ச ஆயுதங்கள்
பஞ்ச -பாஞ்ச ராத்ர ஆகமம்
பஞ்ச ஸம்ஸ்காரம்
பஞ்ச கவ்யம் கோ மயம் பசும் சாணம் கோ மூத்திரம் பால் தயிர் நெய் -ஆநில் மேய ஐந்து
பஞ்ச முகம் -ஐந்தையும் கொண்டாடிய ஸ்லோகம்
விக்ராந்தஸ் த்வம் ஸமர்த்தஸ் த்வம் ப்ராஞ்ஞஸ் த்வம் வாநரோத்தம
யேநேதம் ராக்ஷஸ பதம் த்வயைகேன ப்ரதர்ஷிதம் –36-7-
விக்ராந்தஸ் த்வம் து -கருடனைப் போல் வீர்யம்
ஸமர்த்தஸ் நரசிம்மன் போல் ஸமர்த்தன்
ப்ராஞ்ஞஸ்தம் ஹயக்ரீவர் போல் ஞானவான் –
வாநரோத்தம–வானர தலைவன் -நடுவில்
யேநேதம் ராக்ஷஸ பதம் த்வயைகேன ப்ரதர்ஷிதம்–৷வலிமை வராகன் போல்
பஞ்ச முகம் -ஐந்தையும் கொண்டாடிய ஸ்லோகம்
—————-
அஞ்சைக் கேட்டால் அஞ்ச வேண்டாம்–அர்த்த பஞ்சகம்
ஐந்தாம் காண்டம் ஸூந்த்ர காண்டம் -ஐந்து விஷயம்
ஐந்திலே ஓன்று பெற்றான் -பாசுரத்தில் ஐந்து ஐந்துகள்
மேல் ஓட்டமாக ஐந்து பூதங்கள்
வாயு புத்ரன் -கடலைத்தாண்டி -ஆகாச மார்க்கம் ஆறு -பூமி பெற்ற பிராட்டி -நெருப்பை வைத்தவன் நம்மை அளித்துக் காப்பான்
அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்–பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் தரும் ஆஞ்சநேயர் துதி…
– இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.
இப்பாடலில் இடம்பெறும் “அஞ்சிலே” எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும்,
ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவை.
முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவர் ஆஞ்சநேயர் என்பதனைக் குறிக்கும்.
அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி ஆஞ்சநேயர் இலங்கை சென்றார் என்று பொருள்படும்.
அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்து,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு -ஐந்தில் ஒன்றான பூமி தேவியின் மகளான சீதையை இலங்கையில் கண்டு என அர்த்தப்படுகிறது.
(ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்காக பூமியைத் தோண்டும் போது தோன்றியவள் சீதை)
கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் – இலங்கைக்கு
ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.
ராம பக்தனான ஆஞ்சநேயர் நமக்கு வேண்டியன எல்லாம் தந்து – அளித்து காப்பார் என்பதே இந்த 4 வரி துதிப் பாடலின் பொருள்.
ஆஞ்சநேயரை வழிபட்டால் பஞ்சபூதங்களையும் வழிபட்டதற்கு சமம்.
ஆஞ்சநேயரை வழிபடுவோர் அன்றாடம் பஞ்சபூதங்களையும் வழிபட்டவர்களாவர்.
அனுமனை வழிபடச் செல்லும் முன் அவர் மீதான துதி பாடலை அதன் பொருள் உணர்ந்து சொல்லி அனுமன் அருள் பெறுவோமாக!
ஆச்சார்ய பரமான அர்த்தம்
ஸம்ஸார சிறையில்
அஞ்சிலே ஓன்று பெற்றான் -பஞ்ச ஸம்ஸ்காரம் -மந்த்ர உபதேசம் பெற்று -திரு மந்திரத்தில் பிறந்து த்வயத்திலேயே வளர்ந்து த்வய ஏக நிஷ்டராக இருந்து
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
அஞ்சிலே ஒன்றைத் தாவி -அர்த்த பஞ்சகத்தில் ஒன்றை -விரோதி -நீர் நுமது என்றவற்றை அகற்றி
அஞ்சிலே ஓன்று ஆறாக -கர்ம ஞான பக்தி யோகம் சரணாகதி மார்க்கம்தாண்டி -ஆச்சார்ய அபிமானம்
காலைப் பிடித்து திண்ணிய கழல்
ஆர் உயிர் காக்க -ஜீவாத்மாவை
அஞ்சிலே ஓன்று அணங்கை -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை
மண்டினார் உய்யல் அல்லால் வேறே யார் உய்யலாகும்
அவனுக்கு பிராட்டி ஸ்தானம் ஜீவர்கள் எல்லாம்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் -பித்ரு லோகம் -ஸ்வர்க்க லோகம் நரக லோகம் -கைவல்யம் தாண்டி ஸ்ரீ வைகுண்டம் அடைந்து
அநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம்
ப- நெருப்பு –புண்டர பூமி –மந்த்ரம் காற்று திருவாராதனம் நீர் -பஞ்ச பூதங்களும் இவற்றிலே உண்டே
ஐந்து முகம் நம்மாழ்வார் –
தானான -தலைவி தாய் தோழி ஆச்சார்யர்
மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ் வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழின் இசை வேதத்தியல்
ஆழ்வார் திருநகரியில் இருப்பவர்களுக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த
வீணையின் இசை போன்ற திருவாய்மொழிப் பாசுரங்கள் மிகவும் உயர்ந்தவனான எம்பெருமான்
ஸ்ரீமந் நாராயணனின் தன்மையையும்,
நித்யமாக இருக்கும் ஜீவாத்மாவின் தன்மையையும்,
ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த உபாயத்தின் தன்மையையும்,
அந்த எம்பெருமானை அடைந்து அனுபவிக்கும் நிலைக்கு விரோதியாய்ச் சேர்ந்து இருக்கும் முன்னை வினைகளின் தன்மையையும்,
வாழ்வாகிற உயர்ந்த புருஷார்த்தத்தின் தன்மையும் விளக்கிக் கூறும்.
ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: |
ப்ராப்துபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்திவிரோதி ச ||
வதந்தி ஸகலா வேதாஸ் ஸேதிஹாஸபுராணகா: |
முநயஶ்ச மஹாத்மநோ வேதவேதார்த்தவேதிந: || [ஹாரீத ஸ்ம்ருதி 8-141]
அறிய வேண்டும் அர்த்தம் எல்லாம் இதற்குள்ளே உண்டு; அதாவது அஞ்சர்த்தம்” என்கிறார் பிள்ளைலோகாசார்யர்.
“மூன்றில் சுருக்கிய ஐந்தினையும்
உயர் திண் அணை ஒன்று
பயில் ஏறு கண் கரு
வீடு சொன்னால் ஒருக்கொண்ட நோற்ற நாலும்
எம்மா வொழிவில் நெடுவேய் என்கிற இருபதிலே விசதமாக்கி
எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்….” (ஆச்சார்ய ஹ்ருதயம் –211)
————–
கூஜந்தம் ராம ராம இதி மதுரம் மதுராக்ஷரம் |
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்–
அன்னை சீதா அழகு;
ஸூந்தர காண்டம் கதை அழகு;
அசோக வனம் அழகு;
வானரர்கள் அழகு;
ஸூந்தர காண்டத்தில் உள்ள சொற்கள் அழகு;
நல்ல பலனைக் கொடுக்கும் மந்திரங்கள் அழகு;
காண்டம் முழுவதும் காணப்படும் அனுமன் அழகு.
ஸூந்தர காண்டத்தில் எல்லாமே அழகு தான்
அது நமக்கு அரிய பொக்கிஷங்களான இரண்டு ரத்தினங்களை நமக்கு தந்திருக்கிறது.
ஒன்று பக்தர்களின் ரத்தினமான அனுமன்;
மற்றொன்று மந்திரங்களின் ரத்தினமான சுந்தர காண்டம்.
அஞ்சனை மைந்தன் வாயு புத்ரன் ஹனுமான் காரணப் பெயர்கள்
இவன் பெருமையை முழுவதுமாக சொல்லி –
திருவடி நடந்தவையும் திரிசடை கனவு வரப் போவதையும் சொல்லி மொத்த ஸ்ரீ ராமாயணமும் இதில் அடங்கும்
மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் கை கண்ட மருந்தாக உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்டப் பாராயணம்.
ராமனைப் பிரிந்து துன்பத்தில் துவண்ட சீதாதேவியின் துயர் துடைக்க ராமநாமத்தின் மீது கொண்ட
நம்பிக்கையால் கடலையும் தாண்டியவன் ராமபக்த அனுமன்.
ஆகவே ஸூந்தரகாண்டம் .
அனுமனின் மகிமையை நன்கு விளக்கும் அழகு கொண்டதால் ஸூந்தர காண்டம் .
சீதையும் ராமனும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து அறிந்து கொள்ளும் மகிழ்ச்சியான பகுதி என்பதால் ஸூந்தரகாண்டம்.
அழகே உருவான அன்னை சீதையின் மனம் அனுமனைக் கண்டு மகிழ்ச்சி யடைவதால் ஸூந்தர காண்டம்
எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் .
அழகென்பதே மகிழ்ச்சி தானே?
பொன் தந்த முழைகள் தோறும் புறத்து உராய்ப் புரண்டு பேர்வ-
நின்று, அந்தம் இல்லான் ஊன்ற-நெரிந்து கீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன் வயிறு கீறிப் பிதுங்கின குடர்கள் மான.’–என்று வார்த்தைகளிலேயே
வீரம் தெறிக்க கம்பன் அழகுற விளக்குவதை ரசிக்கும்பொழுதில் …
‘என்னிடத்தில் தங்கி யான் செய்யும் விருந்தினை அங்கீகரிப்பாயாக’ என்று .
அனுமன் அதற்கு மந்தகாசசிரிப்பை உதிர்த்து விட்டு சொல்கிறானாம் ….
வருந்தேன், அது என் துணை வானவன் வைத்த காதல்;
அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால்,
பெருந்தேன் பிழிசாலும் நின் அன்பு பிணித்த போதே,
இருந்தேன்! நுகர்ந்தேன்! இதன் மேல் இனி ஈவது என்னோ?
(வருந்தேன்,அருந்தேன்,பெருந்தேன்,இருந்தேன்! நுகர்ந்தேன்….சஹானா ராகத்தில் அமைந்த பழைய பிரபல திரைப் பாடல் )
அன்பின் வலிமையை அதே நேரம் தன பணியின் நோக்கத்தை அழகாக சொல்கிறார் சொல்லின் செல்வன் அனுமன் .
இதின் ஊங்கு –இந்த அன்பினைக் காட்டிலும்
இனி=இன்னமும் ,
ஈவது==நீ எனக்குக் கொடுக்கக் கூடியது –
உண்டே —உண்டோ ?(இல்லை யென்கிறபடியாக)
‘ராமன் எனக்குக் கொடுத்திருக்கும் வேலையைக் கச்சிதமாக முடிக்கவேண்டும், ,
அந்த வேலை தீர்ந்தால்தான் என்னுடைய வயிறு நிறையும்.
அதற்காக சென்றுகொண்டிருக்கும் என்னை, உன்னுடைய அன்புதான் கட்டிப்போட்டு நிறுத்திவிட்டது.
பிழிந்த தேனைப்போல் இனிமையான உனது இந்த அன்பைவிடச் சிறந்த விருந்து உண்டா?
அந்த அன்பை ஏற்றுக்கொண்ட அந்தக் கணத்திலேயே நான் இங்கே தங்கி சாப்பிட்டு விட்டேன் என்றாகிறதே ?”என்பதை
கம்பன் ,அனுமன் வாயிலாக சுந்தரத் தமிழில் பாடலாய்க்கொடுத்துள்ளது பாகாய் இனிக்கிறது அல்லவா?
அனுமான் ‘இந்த அன்பைவிடச் சிறந்த விருந்து உண்டா?’ என்று கூறுவது போலவே ராமரும் குகனுக்கு கூறுகிறார். ..
தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே?
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்; எம்மனோர்க்கும்
உரியன; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ? என்றான்.
‘’சுந்தர காண்ட சுருதி உரைத்திடும்
மந்திர சக்திமிகு மாருதியே, -எந்திர,
சம்சார தன்னிலே, சந்தோஷம் காண ருத்ர,
அம்சாவ தாரா அருள்’’….
‘’அனுமந்த ராயா, அசகாய சூரா,
தினமுந்தன் பாதம் தொழுவேன், -எனையிந்த,
பாழும் மனமென்ற, ஆழியைத் தாண்டிடத்,
தோழா கொடுத்திடு தோள்’’….கிரேசி மோகன்….
‘நெறிந்த கருங்குழல் மடவாய்! நின்னடியேன் விண்ணப்பம்’ என்று ஆரம்பிக்கும் பத்து பாசுரங்களும்
சுந்தர காண்டத்தில் அனுமன் பிராட்டியினிடத்தில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு
இராமாயணம் முழுவதையும் சொல்லும் பாசுரங்கள்.
இந்தப் பத்துப் பாசுரங்களையும் எங்கள் அகத்தில் தினமும் சேவிப்போம்.
தேனான தமிழில் தித்திக்கும் பாசுரங்கள்.
—————–
ததோ ராவணநீதாயாஃ ஸீதாயாஃ ஷத்ருகர்ஷநஃ.
இயேஷ பதமந்வேஷ்டுஂ சாரணாசரிதே பதி৷৷5.1.1৷৷
ஸம்ஸார சிறையில் மீட்க்கப்புறப்படும் ஆச்சார்யர் போல்
கணையாழி பகவத் பிரசாதம்
இதில் தான் ஸூஷ்ம அர்த்தங்கள்
காலால் அளந்தவனைப் போல் வாலை உயர்த்திப் பறந்தான்
ராவணன் காவலில் சீதாபிராட்டி இருந்த போது, சீதாபிராட்டியைத் தேடி இலங்கை வந்தார் ஹனுமார்.
அங்கு மரத்தடியில் அமர்ந்து இருந்த சீதாபிராட்டியை நோக்கினார்.
முதலில் அவளது காலில் இருந்த மெட்டியை நோக்கிப் பார்த்த பின்,
அவளது நெற்றியில் உள்ள குங்குமத்தைப் பார்த்தபோது,
அங்கு குங்குமத்திற்குப் பதில் செந்தூரம் இருந்ததைக் கண்டார்.
அம்மா நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக ஏன் செந்தூரம் உள்ளது என ஹனுமான் கேட்க,
அதற்கு சீதாபிராட்டி, ‘மைந்தா, என் அன்பான கணவரின் நினைவு மட்டும் தான்,
எப்போதும் என்னுடம் இருக்க வேண்டும் என நினைத்தே, செந்தூரத்தை இட்டுக் கொண்டேன்.
ஏன் என்றால் தூய்மையான செந்தூரத்தை,எத்தனை அழித்தாலும் அது முழுவதுமாக அழியாமல் அதன் கறையை விட்டு வைக்கும்.
அது போலத்தான் என்னிடம் இருந்து என் கணவரின் நினைவை மாற்றவே முடியாது என்பதை காட்டவே,
அதை இட்டுக் கொண்டேன் என்றாராம் சீதாபிராட்டி.
அதைக் கேட்ட ஹனுமார் புல்லரித்துப் போய், ராமரே என் நினைவில், மற்றும் நான் செய்யும் அனைத்திலும் இருக்கட்டும்
என்ற மனதோடு,ராம நாமத்தை ஜபித்தபடி தனது உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டாராம்.
அதனால் தான் ஹனுமாருக்கு செந்தூரம் இடுகிறோம்.
ஸிம்ஹிகா ராகுவின் அம்மா குடல் மாலை சாத்தி -proteen மிக்கு -ஆகவே வடை மாலை தெற்கும் -ஜாங்கிரி மலை வடக்கே யும்
ஆகவே ஹனுமான் ஸ்திதியால் ராகு கேது பீடைகளுக்கு பயப்பட வேண்டாம்
அன்பால் வந்த தடையை அன்பால் வென்று
அமரர்கள் அனுப்பிய தடையை அறிவால்
உண்மையாக வந்த தடையை உறுதியால் வென்று -மூன்றையும் கடைந்து
———————–
ஸ்ரீ திருவடியின் மஹிமை காட்டும் -ஸ்ரீ கம்பனின் கவி அமுதம் —
வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இஃது இயம்புவது யாது எனில்
பொய்யில் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வமாக் கவி மாட்சி தெரிவிக்கவே
——–
ஸூரியனை விழுங்கியவன்
வாயு புத்திரன், அஞ்சனை மைந்தன் என்று போற்றப் படுகின்ற அனுமன் தன் தாயிடம் இந்தக்
காட்டில் தான் எந்தப் பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று கேட்க,
அதற்கு அஞ்சனை இந்தக் காட்டில் உள்ள சிவந்த நிறப் பழங்களை நீ உணவாகச் சாப்பிடு என்று கூறினாள் .
இதனை
“கை அஞ்சு ஆயுதம் உடைய அக் கடவுளைக் கண்டும் மெய் அஞ்சாதவன்” என்ற பாடல் வரிகளில் அறியலாம் .
அனுமன் பிறந்த பொழுதே இளம் ஸூரியனைக் கனிந்த பழம் என்று கருதி சிறிதும் அச்சம் கொள்ளாமல்,
அதனைப் பிடிக்கச் சென்றான் என்னும் போது அனுமானின் வீரத்தை அறிய முடிகிறது
கம்பர் சிறு வயதில் இருந்தே அனுமானை வீரம் கொண்ட வலிமையானவனாகவே படைத்துக் காட்டுகிறார் –
பல வரங்களைப் பெற்றவன்
பிரம்ம தேவன், தேவர்களிடம் அஞ்சனையின் மகன் அனுமனுக்கு, பற்பல வல்லமைகளையும் ,
அரிய வரங்களையும், அளிப்பதோடு,
அனுமன் நிறைத்த உருவத்தை எடுத்து நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லும் திறமை ஏற்படவும்,
போரில் தோல்வி என்பதே கிடையாது என்றும்
இவனுடைய பாதையில் யாரும் குறுக்கிட்டு இவனைத் தடுக்க முடியாது என்றும்,
தன்னுடைய பிரம்ம தண்டத்தால் இவனுக்கு மரணம் ஏற்படாது என்றும்,
சிரஞ்சீவியாக வாழ்வான் என்று அருளி வரம் அளித்தான்.
இதனை
“ஒப்பு இறையும் பெறலரிய ஒருவன்”
“எவரினும் அதிகம் உயர்ந்தான்”
“ஊழி கடந்தீர்”
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என் இருத்தி”
என்ற பாடல் வரியில் கம்பர் எடுத்துக் காட்டுகிறார்.
மேலும் அனுமனுக்கு தண்ணீர் தீ, ஆயுதம்,
அஸ்திரம், வியாதி போன்ற வற்றாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதையும் கம்பர்,
“வெப்புறு செந்தீ நீர் விளியாளும் விளியாதீர்
செப்புறு தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்”-என்ற பாடல் வரிகளின் மூலம் வெளிப் படுத்து கிறார்.
எந்த சூழலிலும் , யாராலும், அனுமனுக்கு அழிவில்லை என்பதை தனது படைப்புத் திறத்தின் மூலம் எடுத்துக் காட்டுகிறார்.
கல்வி கற்றல்
பல அரிய வரங்களைப் பெற்ற அனுமன், சூரிய பகவானிடம் இருந்து ரிக்வேதம், யஜூர் வேதம், சாமவேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்கள், அறுபத்தி நான்கு கலைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான்.
ஸூர்யனின் எதிரில் நின்று கொண்டே வேத சாஸ்திரங்களையும் அதன் ரஹஸ்யங்களையும்
உப ஸாஸ்த்ரங்களையும் அனுமன் கற்றுக் கொண்டான் இதனை
உலகு எங்கும் பேர் இருள் நீக்கும் பகலோன் முன் தேர் முன் நடந்தே
ஆரிய நூலும் தெரிவுற்றீர் -என்ற வரிகளில் எடுத்து உரைக்கிறார் .
மதி நுட்பம் கொண்டவன் –
சீதையைத் தேடி இராமனும் இலக்குமனனும் சென்ற போது அனுமன் எதிர்படுகிறான்
அவர்களை பார்த்த கண நேரத்திலே அவர்களை நன்றாக எடை போடுகிறான்
அனுமன் அவர்களை பற்றி
தருமமும் தகவும் இவர் தனம் எனும் தகையர் இவர்
கருமமும் பிறிது ஓர் பொருள் சுருதி அன்று அது கருதின்
அரு மருந்து அனையது இடை அழிவு வந்துளது அதனை
இரு மருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள்--என தனது மதி நுட்பத்தால் உணர்ந்து விடுகிறான்
அனுமனின் ஆற்றல் மூலம் தான் சீதையைக் கண்டுபிடிக்க முடியும் என்பதையும்
அவனுக்கு நிகர் யாரும் இல்லை என்பதையும் கம்பர்
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால் என்று இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ -என்கிறார் –
பிலத்தைப் பிளந்தவன்
அனுமன் வானர வீரர்களின் பயத்தை நீக்கி ஆண் சிங்கம் போல் கைகளைத் தூக்கி பேர் உருவம் எடுத்து நிமிர்ந்தான் என்பதை கம்பர் –
நடுங்கன் மின் எனும் சொலை நவின்று நகை நாற
மடங்கலின் எழுந்து மழை ஏற அரிய வானத்து
பெருங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற
வெறும் கைகள் சுமந்து நெடு வான் உற நிமிர்ந்தான் –என்ற பாடலில் அனுமனின் ஆற்றலை வெளிப்படுத்துகிறார் –
தோள் கொடுத்தவன்
வேறு காட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும்
ஏற நீ ஐய என்னுடைத் தோளின் மேல் என்றான்-என்றும்
ஏறினான் இளம் கோளரி இமையவனாகி
கூறினார் எடுத்து ஆர்த்தது வானவர் குழுவும்
நூறு பத்துடைப் பத்தியின் நொறில் பரி பூண்ட
ஆறு தேரினும் அகன்றது அவ்வனுமன் தன் தடம் தோள் -என்று அனுமானின் தோள் திறமும் வலிமையையும் எடுத்துக் காட்டுகிறான்
சொல்லின் செல்வன்
இம்மலை இருந்து வாழும் எரி கதிர்ப் பாதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன் தேவ நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையன் ஏவ வினவிய வந்தேன் என்றான் –
ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவு என்றும்
வேற்றுமை இவனோடு இல்லையாம் என விளம்பலுற்றான்
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார் கொல் இச் சொல்லின் செல்வன்
வில் ஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ -என்று பெருமாள் பாராட்டினார் –
தெற்கு திசையில் இருந்து வரும் போதே ராமனை வணங்காமல் பிராட்டி இருக்கும் தென் திசையை வணங்கி
நிலத்தில் வீழ்ந்து சீதாப் பிராட்டியின் நிலைமையைக் -கற்புத் திண்மையை -குறிப்பால் உணர்த்தினார்
எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்
மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான் –
கண்டனன் கற்பினுக்கு அணியை கண்களால்
தென் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்
அண்டர் நாயக இனி துறத்தி ஐயரும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்
~~படியெடுத்து உரைத்துக் காட்டும் படித்து அன்று: படிவம்,பண்பின்
முடிவுள உவமைக்கு எல்லாம் இலக்கணம் உரைக்கின் முந்தா||
என்று படி எடுக்கமுடியாத அளவிற்குப் பெருமையும், உவகைளால் எட்டமுடியாத அழகும்
சேயிதழ் தாமரை போன்றன என்றால் தாமரை மலரும் குவியும். ஆனால் திருவடிகள் மலர்ந்தே இருக்கும்.
இராமபிரானின் கால் விரல்களுக்குக் கற்பக மரத்தின் மொட்டுகள் ஒக்கும் என்றாலும்,
திருவடியின் விரல்களில் உள்ள நகங்கள் பிறைச் சந்திரனைப் போன்றன என்றால் திங்கள் பத்து என்ற எண்ணிக்கையில் இல்லை.
நிலவுலகையே அளந்து, கடந்து நிற்கும் திருவடிகள் நிலத்;தில் வந்து பொருந்தின,
கணைக்கால் அம்பறாத் தூணியை ஒத்திருந்தது என்று சொல்லாம் என்றால் தன்னை அடைந்தவரைக் காக்கும் சிறப்புடையது இறைவனின் கால்கள்.
இராமபிரானின் தொடைகள் கருடனின் பிடரியை, மதயானையின் துதிக்கையை ஒத்திருந்தன என்று சொன்னால் அவை நாணம் அடையும்.
வலப்புறமாகச் சுழித்து ஓடும் கங்கையாற்றின் நீர்ச்சுழலை ஒத்து அமைவது திருவுந்தி என்று சொன்னால் அதுவும் பொருந்தாது.
மரகத மலை குறுகும்படியாக அகன்ற மார்பு இராமனுடையது.
இராமனின் கரங்கள் தாமரை போன்று காணப்படுவதால் அக்கரங்களைச் சுற்றிலும் வண்டுகள் மொய்த்துக் கொண்டே இருக்கும் பெருமை மிக்கது. அக்கரங்களுக்கு ஐராவத யானையின் துதிக்கையை உவமை காட்டினால் ஓரளவிற்குப் பொருந்தும்.
இராமனின் கை சூரியனைக் கண்டால் மலரும் தாமரையை அழகில் ஒத்தன.
புயங்களுக்கு மலையை உவமை காட்டலாம் என்றால் பொருந்தாது.
இராமனின் கழுத்துக்கு பாக்கு மரத்தையும், உப்புக்கடலில் கிடக்கின்ற சங்கையும் உவமை காட்டலாம் என்றால் அது பொருந்தாது.
இராமபிரானின் திருமுகம் சந்திரன் போன்றது என்று சொன்னால் அது தேய்வும் வளர்வும் இல்லாத நிறைத்தன்மை உடையது.
தாமரை மலர்போன்றது திருவாய் என்றால் தாமரை அது கேட்டு நாணும்.
இராமனின் பற்களுக்கு முத்து, நிலவு, அமுதம், முல்லை, மயிலிறகின் அடிக்குருத்து, புன்னைமொட்டு, அறம்
இந்திர நீலக்கல்லில் எழுந்த ஒளி, மரகதமணியின் ஒளித்திரட்சி ஆகியன இராமபிரானின் மூக்கிற்கு ஒப்புகையாகும் என்றால் அது பொருந்தாது. இந்திரகோபப்பச்சியைக் கவ்வ வரும் பச்சோந்தியும் மூக்கிற்கு உவமையாக அமையாது.
இராமனின் புருவங்கள் கரன் முதலான அரக்கர்களைக் கண்டதும் வளைந்தன.
எட்டாம் நாள் சந்திரன் வளர்தல், தேய்தல் இல்லாமல், நாள்தோறும் தோன்றல் மறைதல் இல்லாமல்,
நீண்டு, திரண்டு, பளபளப்புடன், கருத்து, நீலமணியின் நிறத்தைப்பெற்று, முறுக்குண்டு, பின்னே தாழ்ந்து,
அரசு ஏற்கத் துணிந்த நாளினும், ஆட்சிச் செல்வம் கிடைக்காமல் துன்பம் நிறைந்த காட்டில் வாழும் நாளிலும்
சீதாபிராட்டி இராமபிரானுக்கு ஏற்ற மனைவியாகவும், தசரத மன்னனுக்கு ஏற்ற மருமகளாகவும்,
பொன் அலது இல்லை பொன்னை ஒப்ப எனப் பொறையில்; நின்றாள்
தன் அலது இல்லைத் தன்னை ஒப்பு எனத்தனக்கு வந்த
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள்
எனஅலது இல்லை என்னை ஒப்புஎன எனக்கும் ஈந்தாள் (1306)-என்ற இப் பாடலில்
சீதை இராமனின் குலப்பெருமைக் காத்து நிற்கிறாள். தன் குலத்தையும் சிறப்புறச் செய்தாள்.
வில்லை உடைய இராமபிரானே, இலங்கையில் சீதை என்ற பெண்ணைக் காணவில்லை. உயர்குடிபிறப்பு, பொறுமை, கற்பு என்ற மூன்றும் களிநடம் புரியக் கண்டேன் என்று அனுமன் கூறுவதாக கம்பர் படைக்கின்றார். அனுமன் பெண் என்னும் நோக்கில் சீதையைக் காணவில்லை என்பதற்கு இப்பாடல் மிக முக்கியமான சான்று. உயர்ந்த ஒழுக்க சீலர் ஒருவரைக் கண்ட காட்சியாக சீதாபிராட்டியைக் கண்டுள்ளான் அனுமன்.
சீதா பிராட்டியின் கண்ணிலும், கருத்திலும், சொல்லிலும், அவள் மார்பகத்திலும் இராமபிரான் இருப்பதைக் கண்டேன் என்று அனுமன் குறிக்கின்ற இப்பாடலில் உளை, நீ ஆகிய சொற்கள் திரும்பத் திரும்ப வந்துப் பாடலுக்கு அழகு சேர்க்கின்றன.
இலங்கையில் காலை, மாலை எனப் பகுத்தறிய முடியாத ஒளிமிக்கக் கற்பகச் சோலையில் தம்பி இலக்குவன் புல்கொண்டு அமைத்த பர்ணசாலையில் தவம் செய்த தவம் ஆம் தையலாக சீதை வீற்றிருந்தாள் என்று சீதை இருந்த இருப்பிடத்தை அனுமன் காட்டுகின்றான். இப்பாடலில் இடம் பெற்று தவம் செய்த தவமாம் தையல் என்ற சொல் சேர்க்கை அழகுமிக்கது.
சீதையை மண்ணொடும் கொண்டு போனான் இராவணன் என்று அனுமன் குறிப்பிடுகின்றான். இந்தப் பகுதி தமிழ் மரபினைப்பின்பற்றியதாகும். வடமொழியில் பற்றி இழுத்துச் செல்லப்பெற்றாள் சீதை. ஆனால் இங்கு இம்முறை மாற்றப்பெற்றுள்ளது. அதற்குத் துணையாக கம்பர் ஒரு நிகழ்வையும் இதனோடு இணைத்துச்சொல்லுகிறார். பிரம்மன் இராவணனுக்கு விரும்பாத ஒரு பெண்ணைத் தீண்டினால் எண்ணிலாத கூறுகளாய் உடல சிதறி இறப்பாய் என்று ஒரு சாபம் இட்டுள்ளார். அதனால் சீதையின் மேனியைத் தீண்டாமல் மண்ணோடும் பெயர்த்து எடுத்துக்கொண்டு இராவணன் சென்றதாக கம்பர் படைக்கின்றார். தமிழ்மரபினை காக்கும் அழகியல் இங்குச் செயல்பட்டுள்ளது.
இராவணன் சீதையைத் தீண்டவில்லை என்பதற்கு பிரம்மன் படைத்த அண்டம் வெடிபடவில்லை என்பதாலும், ஆதிசேடனின் ஆயிரந் தலை பெற்ற படங்கள் கிழிந்து போகவில்லை என்பதாலும், கடல் கரையைக் கடக்கவில்லை என்பதாலும், சூரிய சந்திரர்கள் கீழேவிழவில்லை என்பதாலும் இராம பிரானே நீவீர் அறிந்து கொள்ளலாம் என்று அனுமன் இராமனிடம் கூறுகின்றான். இப்பாடலில் இலது, இல என்ற இன்மைக் குறிப்புகள் இடம்பெற்றுப் பாடலைச் சிறக்கச் செய்கின்றன.
சீதாபிராட்டியின் கற்பின் சிறப்பினால் தேவர்களின் தேவியரும் கற்பினால் பெருமை பெற்றனர். சிவபெருமான் இடப்பாகத்தில் இருந்த பார்வதி கற்பின் திண்மையால் சிவன் தலையில் இருக்கலானாள். திருமாலின் மார்பில் இருந்த திருமகளும் அவரின் தலைமீது இருக்கலானாள். சோகத்தாள், பாகத்தாள், மகுடத்தாள், பதுமத்தாள், ஆகத்தாள் என்ற சொற்கள் இங்கு ஒத்த ஒலிக்குறிப்பினைத் தருவதாக உள்ளது.
இலங்கை முழுவதும் தேடிப்பார்த்து, இராவணனின் இருக்கையிலும் தேடிப்பார்த்து, அசோக வனத்தில் கண்ணின் நீர்க்கடலின் இடையே தேவமகள் போன்ற சீதையைக் கண்டேன்; என்று அனுமன் சீதையைக் கண்டறிந்த செய்தியைக் குறிப்பிடுகிறான். கண்ணின் நீர்க்கடலில் கண்டேன் என்ற தொடர் அழகுமிக்கது.
பேய் போன்ற அரக்கியர் பாதுகாவலுக்கு இடையில் இராமபிரானே உன் மேல் கொண்ட அன்பின் காரணமாக அச்சத்தைப் போக்;கி இரக்கம் என்ற பண்பு பெண் வடிவம் பெற்றால் எப்படி இருக்;குமோ அப்படி அந்தச் சிறையில் சீதாபிராட்டி இருந்தாள். நின்பால் நேயமே அச்சம் நீக்க இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்திழை வடிவம் எய்தி தருக்கு உயர் சிறை உற்றன்ன தகையள் அத்தமியள்|| என்ற அடிகள் அழகியல் வயப்பட்டன.
“பஞ்சியொளிர் விஞ்சு குளிர் பல்லவமனுங்கச்
செஞ்செவிய கஞ்ச நிமிர் சீரடி பெயர்ப்பான்
அஞ்சொலிள மஞ்ஞை யென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள்.’–என்ற சூர்ப்பணகையின் வருகையை வர்ணிக்கும் பாட்டு
- வெயின் முறைக் குலத் திறையவன் முதலிய மேலோர்
உயிர் முதற் பொருள் திறம்பினும் உரை திறம்பாதோர்
மயில் முறைக் குலத் துரிமையை மனு முதன் மரபைச்
செயிருறப் புலைச் சிந்தையால் என் சொனாய் தீயோய்–மந்தரை சூழ்ச்சி ‘ப் படலத்தில்– - இதில் ‘மயிலைப்போல முறை தவறாத குலம்’ என்று சொல்லப்படுகிறது. முறை தவறாத தன்மைக்கு மயிலை உபமானமாகச் சொன்னதின் மர்மம் என்ன? மற்ற பட்சிகளிடத்தில் இல்லாமல் மயிலுக்கு மட்டும் உள்ள எந்த சிறப்பு இதற்குப் பொருந்தும் என்பது ஒன்றும் எங்களுக்கு விளங்கவில்லை.
-
-
-
-
- “பலாவம் பொழிலுறை ஒரு தாய் உயிர்த்த
பலமயிற்குள் கலாபம் புனைந்த களிமயிலே மூத்ததெனக் கொள்க!’ - அதன் பொருள் : ‘கானகத்திலே வசிக்கின்ற ஒரு தாய் வயிற்றில் பிறந்த பல மயில்களும் சேர்ந்திருக்கும்போது எந்தக் குஞ்சு முதலில் கலாபம் விரிக்கின்றதோ அது தான் மூத்த குஞ்சு என்று தீர்மானம் செய்துகொள்.’ என்பதுகாட்டிலே மயில் இயல்பாக வசிக்கும்போது ஒவ்வொரு தாய் மயிலும் அதன் குஞ்சுகளும், குஞ்சுகள் நன்றாக வளர்ந்த பிறகும் ஒரே குடும்பமாக எங்கே போனாலும் சேர்ந்தே போகும். இரை தேடுவதானாலும் அக்கம்பக்கமாகத்தான் இருக்கும். இப் படி ஒவ்வொரு மயில் குடும்பமும் தனித்தனிக் கூட்ட மாகத்தான் சஞ்சரிக்கும். அப்படி இருக்கும்போது அவைகளுக்குள் களிப்பு வந்து கலாபம் விரிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் மூத்த ஆண் குஞ்சுதான் முதலில் தோகையை விரித்து ஆடும். அதன் பிறகு தான் இளைய ஆண் குஞ்சுகள் தோகையை விரிக்கும். இப்படி முதலில் கலாபம் விரிக்கிற உரிமை மூத்த ஆண் குஞ்சுக்குத்தான் உண்டு என்பதுதான் இந்த ‘மயில் முறைக் குலத்துரிமை ‘ என்பது” என்றார்.
- “பலாவம் பொழிலுறை ஒரு தாய் உயிர்த்த
-
-
-
- ஒரு மயிலானது தன்னுடைய எல்லாக் குஞ்சுகளுடனும் குடும்ப சகிதமாகத்தான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போகும் என்றும் அப்படித் தாய்ப் பறவையோடு குஞ்சுகளெல்லாம் சேர்ந்திருக்கிற சமயத்தில் கலாபம் விரித்து ஆடவேண்டிய சந்தர்ப்பம் வரும்போ-தெல்லாம் அந்தக் குஞ்சுகளில் மூத்த குஞ்சுதான் முதலில் கலாபம் விரிக்கும் என்றும், அதற்குப் பிறகுதான் மற்றக் குஞ்சுகளெல்லாம் கலாபம் விரிக்கும் என்றும், கண்டறியப்பட்டதாக எழுதியிருந்தது. மூத்த குஞ்சு என்பதற்கு என்ன அடையாளம் என்றால் ஒவ்வொரு குஞ்சும் முட்டையிலிருந்து வெளிவந்த உடனே அங்குள்ள ஆராய்ச்சிக்காரன் ஒவ்வொரு குஞ்சின் காலிலும் ஒவ்வொரு நிறமான வளையத்தை – மாட்டிவிட்டுப் பதிவு செய்து கொண்டான் என்ற விளக்கமும் எழுதப்பட்டிருந்தது.
- ———————–
- ‘விற்பெரும் தடந்தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பின்
நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேனல்லேன்
இற்பிறப்பு என்பது ஒன்றும் இரும் பொறை என்பது ஒன்றும்
கற்பு எனும் பெயரது ஒன்றும் களிநடம் புரியக்கண்டேன்.’ - “வில்லேந்திய விசாலமான தோள்களையுடைய ராமா! பரந்த கடல் சூழ்ந்த இலங்கையின் மலையில் உனக்காகத் தவம் செய்துகொண்டிருக்கும் சீதை என்ற – ஒரு பெண் உருவத்தை நான் பார்க்கவில்லை.-ஆனால் ‘குடிப் பிறப்பு’ என்று சொல்லப்படுகிற ஒன்றும், ‘பெரும் பொறுமை’ என்ற ஒன்றும், ‘கற்பு’ என்று கருதப்படுகிற ஒன்றும், ஆகிய இந்த மூன்றும் சேர்ந்து அங்கே ஆனந்தத் தாண்டவம் ஆடுவதைத்தான் கண்டேன்,” என்றான் அனுமான். அதைக் கேட்டு ராமனுடைய திகைப்புக் குறைந்தது. போன உயிர் வந்தது போலக் களிப்பினால் பூரிக்கலானான்.
-
- பண்டார வளைக்குப் போகுமுன்னால் இலங்கையிலுள்ள மலைப்பிர தேசங்களின் சிகரமாகிய ‘நூவாரா எலியா ‘ என்னும் ஊரையும் அதிலுள்ள சிறப்புகளையும் காட்டினார். அந்த வழியில் பாதைக்குப் பக்கமாக ஒரு பள்ளத்தில் இருந்த சிறு தடாகத்தைச் சுட்டிக்காட்டி இது ’சீதைத் தடாகம்’ என்றார். அந்தத் தடாகத்திலிருந்து ஒரு சிறு ஓடை அந்த மலைச்சாரலில் சல சலத்துக் கீழே ஓடிக்கொண்டிருந்தது. அதை ‘சீதை ஓடை’ என்றார். மேற்படித் தடாகத்திற்கு எதிரில் பாதைக்கு அப் பால் இருந்த மலையைக் காட்டி அங்கே தான் அசோகவனம் இருந்தது என்றும், அந்தக் குன்றின் ஓரத்திலிருந்த ஒரு குகையைக் காட்டி அதிலேதான் சீதை சிறையிருந்தது என்றும் கூறினார்.
- அதன்பின் மோட்டாரை ஓட்டினார். அதே பாதையில் தடாகத்தைவிட்டு சுமார் இரண்டு பர்லாங்கு தூரம் இறங்கி வந்தபின் அங்கே ஒரு சிறு நீர்நிலை இருந்தது. அது தான் சீதை தினந்தோறும் நீராடின துறை என்றார். அந்த நீர் நிலைக்கு அடுத்தாற்போல் ஒரு சிறு கோயில் இருந்தது. அங்கேதான் சீதை ஒவ்வொரு நாளும் ராமனைப் பூசை செய்தது என்றார்.
-
- ———————
-
- மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத் தாவிய
சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்த’ அந்தப்
பாதங்கள் விராதனைச் சாப வீடு செய்தன. விராதன் சொல்கிறான்: - வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னில் படிவங்கள் எப்படியோ‘உன் பாதங்கள் இப்படிப்பட்டவை என்றால், படிவங்கள் எப்படிப்பட்டவையோ’ என்று விராதன் - ————–
- இராமனோ, தரையின் மேல் நிற்கிறான். அனுமனால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
- நூறுபத்துடை நொறில் பரித்தேரின்மேல் நுன்முன்
மாறில் பேரரக்கன் பொர நிலத்து நீ மலைதல்
வேறுகாட்டும் ஓர் வெறுமையை; மெல்லிய எனினும்
ஏறுநீ ஐய என்னுடைத் தோளின்மேல் –என்றான். - ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்படும் தேரின்மேல் உன் முன்னால் அரக்கன் வந்து நிற்கவும், நிலத்தின் மேல் நின்றவண்ணம் நீ போர்புரிவதும் குறைவுடையதாகும். வெறுமை காட்டி நிற்பதற்கு நீ என்ன தனியனா? நாங்களில்லையா உனக்கு? என் தோள்கள் உன்னைத் தாங்கும் அளவுக்கு வலிமையோ தகுதியோ உடையன அல்லவை என்றாலும், மெல்லியவையே என்றாலும், என் தோளில் ஏறுவாய் ஐயனே!
- —————–
-
மாணியாய் உலகளந்த நாள் அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்
காணியாகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்
நாணினான்; மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான்.
வாமனனாய் வந்து உலகத்தை எல்லாம் அளந்த நாளில் – இதே இராமன் – எடுத்த பேருருவத்தை அறிந்தவனான மாருதி வியப்புற்றான். திருமாலைச் சுமப்பதைத் தனக்கே தனக்கான தனி உரிமையாகக் கொண்டிருந்த கருடன் நாணம் அடைந்தான். ஆதிசேடனோ தலை நடுக்கம் கொண்டான்.
இராமனின் தெய்வத் தன்மையைக் கம்பன் தொட்டுக்காட்டும் சில இடங்களில் இது ஒன்று.
அவதாரந்தோறும் அவதாரந்தோறும் அவனை உணர்ந்தவன் அனுமன் என்றொரு குறிப்பு கிடைக்கிறது இந்தப் பாடலில்
——–
‘புராரி மற்றி யானும் காற்றின் சேய் எனப் புகன்றான் மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோ.’
மாருதி வாயுவினுடைய அம்சம் மட்டுமன்று; என்னுடைய அம்சமும்தான்’ என்று புரங்களை அழித்த புராரியான சிவபெருமான் சொன்னான்.
——–
அவ்விடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி
வெவ்விடத்தினை மறுகு தேவர் தானவர் வெருவல்
தவ்விட தனி அருளு தாழ்சடைக் கடவுள் என
இவ்விடத்து இனிது இருமின் அஞ்சல் என்று இடை உதவி….
சுக்ரீவனுடைய பதட்டத்திற்கும் அச்சத்திற்கும் அப்படியே எதிரானதொரு சித்திரம். பாற்கடலிலிருந்து ஆலகாலம் வெளிப்படவும், அதனைக் கண்டு அஞ்சி ஓடிய தேவர்களையும், அசுரர்களையும் ஒன்று போல ‘அஞ்சாதீர்’ என்று சொல்லி அதனைத் தானே உண்ட சிவபெருமானைப் போல் ‘எதற்கும் அஞ்ச வேண்டாம். நீங்கள் இங்கேயே இருங்கள். நான் போய்ப் பார்த்து வருகிறேன்’ என்று சொல்லி பிரமசரிய வேடம் புனைந்துகொண்டான்.
———–
‘என்பு எனக்கு உருகுகின்றது.’ என்னுள் ஊற்றெடுக்கும் அன்பு என்னை எப்படி நெகிழ்த்துகின்றது என்றால் வெறும் மனம் மட்டுமேயன்று; உடலும் நெகிழ்கின்றது. எலும்பு வரை நெகிழ்ச்சி அடைந்திருக்கிறது. ‘இவர்கின்றது அளவில் காதல்.’ அளவில்லாத நேயம் இவர்கள் மேல் எனக்குத்
தோன்றுகிறது. ‘அன்பினுக்கு அவதி இல்லை.’ என்னை ஆட்கொள்ளும் அன்பு கொஞ்ச நஞ்சமில்லை. ‘அடைவு என்கொல்?’ இதனால் என்ன நேரும்? ‘அறிதல் தேற்றேன்!’ எனக்கு விளங்கவில்லை.
———
மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி நளிர் இரும் பனிக்குத் தேம்பா
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்றேன்.
என்ன சொல்கிறான்? ‘மேகத்தைப் போல வண்ணம் உடையவனே! உன்னைப் பார்க்கின்ற எந்தப் பெண்ணுக்கும் உடனடியாக மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தாமரையைப் போன்று மலர்ந்த கண்கைள உடையவனே!’ முதலில் தொலைவிலிருந்து பார்க்கும்போது அனுமனை அசைத்தது அவனுடைய மேனி வண்ணம். அப்படிப்பட்ட வண்ணம் உடையவனே என்று அழைத்தான். திருப்தியாகவில்லை. ‘இந்தக் கண்ணு என்னை என்னமோ செய்யுதய்யா! எனக்கே இப்படி இருந்தால், யாராவது பெண் உன்னைப் பார்த்தால் அவளுக்கு என்னதான் ஆகாது? தாமரைக் கண் ஐயா உன் கண்’ என்றான். அதுவும் போதவில்லை அனுமனுக்கு. தாமரை என்றால் என்ன ஆகும்? வெயில் இருந்தால் மலர்ந்திருக்கும்; பனி பெய்தால் வாடிப் போகும். அப்போதும் வாடாத கண்ணாம். ‘நளிர் இரும் பனிக்குத் தேம்பா கஞ்சம் ஒத்து’ இந்தக் கண் தாமரை இருக்கிறதே, எந்தக் கடுமையான பனிக்கும் வாடாத தாமரை ஐயா.’ அது சரி. ஆனால் மாலை ஆனதும் கூம்பிப் போகுமே! அதுவும் இல்லையாம். ‘அலர்ந்த கண்ண!’ ‘எப்போதும் மலர்ந்திருக்கும் கண்ணை உடையவனே!’
முதல் மூன்று அடிகள் முழுவதும் இராமனைப் பற்றிய வருணனை. மூன்றாவது அடியின் கடைசியில் இருந்து, நான்காவது அடியில் தன்னைப் பற்றிய விவரம். எங்க அப்பா வாயு; எங்க அம்மா பேரு அஞ்சனை. என் பெயர் அனுமன்.’
இம்மலை இருந்து வாழும் எரிகதிர்ப் பரிதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன்; தேவ! நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையன் ஏவ, வினவிய வந்தேன் என்றான்
எம் மலைக் குலமும் தாழ இசை சுமந்து எழுந்த தோளான்.
‘அப்பா பேரு வாயு. அம்மா பேரு அஞ்சனை. என் பேரு அனுமன். இந்த மலை இருக்கிறதே, இதற்கு
மேல் சூரியனுடைய பிள்ளை ஒருத்தன் இருக்கிறான். அவனுக்கு நான் ஏவல் செய்கிறேன். வேலைக்காரன். சாமி! நீங்கள் வருவதைப் பார்த்து அவன் பயந்து போய்விட்டான். அவன் சொன்னதன் பேரில் உங்களைப் பற்றி அறிந்துகொள்ள வந்திருக்கிறேன்.’
மிகவும் சுருக்கமாகத்தான் சொல்கிறான் அனுமன். அதிக விவரங்கள் ஒன்றும் இல்லை. ‘சூரியனுடைய பிள்ளை’ என்ற உடனேயே இராமனுக்குப் புரிந்துவிட்டது. ஏனென்றால், அவனைத்தான் தேடிக்கொண்டு வந்திருக்கிறான் இவன். இந்த வார்த்தையக் கேட்ட இராமன் சொல்வதைக் கேளுங்கள்:
‘மாற்றம் அ·து உரைத்தலோடும்’ அனுமன் அப்படிச் சொன்னவுடன், ‘வரிசிலைக் குரிசில் மைந்தன் தேற்றம் உற்று,’ பெரிய கட்டமைந்த விலலை ஏந்திய தலைவனான இராமன் தெளிவடைந்தான். ‘இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி,’ இவனை விடவும் மேலானவன் இன்னொருவன் இருக்க முடியாது என்பதை உறுதியாக உணர்ந்தான். ‘ஆற்றலும், நிறைவும், கல்வி அமைதியும், அறிவும் என்னும் வேற்றுமை இவனோடு இல்லையாம்’ இவனிடத்திலே எது அதிகம்? அறிவாற்றல் மற்றும் செயலாற்றலா? நிறைந்த குணங்களா? நிறைந்த கல்வியினாலே ஒருவனுக்கு இயல்பாகவே ஏற்படும் அடக்கமா? அல்லது அந்தக் கல்வியால் ஏற்படும் உள்ளளி நிறைந்த ஞானமா? எது அதிகம்? ஒன்றுக்கொன்று வேறுபாடு தெரியவில்லையே! எல்லாம் சம அளவில் இருக்கிறதே!
இராமன் அனுமனைப் பற்றிச் சொல்கிறானே, ஆற்றலும் நிறைவும் கல்வி அமையதியும் அறிவும் என்னும்
வேற்றுமை இவனோடு இல்லையாம்.
சொல்லிக்கொண்டே வருகிறான். பக்கத்தில் திரும்பிப் பார்த்தால் இலக்குவன் கவனம் இன்னும் இவன் மேல் விழுந்ததா இல்லையா என்பது தெரியவில்லை. அவனுடைய பார்வை எல்லாம் சீதை எங்காவது தட்டுப்படுகிறாளா என்பதிலேயே நிலைத்திருந்தது. அவனுடைய கவனைத்தை ஈர்க்கும் விதமாகச் சொல்கிறான் இராமன். ‘இவன் படிக்காத வேதம் இருக்காது; கற்காத கலை இருக்காது. இப்படி எல்லாம் எப்படிச் சொல்றேன் என்று நினைக்கிறாயா? இவன் பேசுகிற பேச்சே சொல்கிறது. ‘சொல்லாலே தோன்றிற்று அன்றே!’ இவன் சொல்லே இவனுடைய நிறைவை ஏந்தி வெளிவருகிறது. இவன் சொல்லே இவனுக்கு சாட்சி. ‘யார்கொல் இச் சொல்லின் செல்வன்?’ பட்டமே கொடுக்கிறான் இராமன், முதல் பார்வையிலேயே. ‘ஆர்ரா இந்தச் சொல்லின் செல்வன்?’ ‘வில் ஆர் தோள் இளைய!’ ஆ ஊ என்றால் உடனே வில்லைத் தூக்கி நாண் ஒலி செய்யத் தயாராக நிற்கிற தம்பிப் பையா! ‘வீர் விரிஞ்சனோ?’ இது யார்ரா? பிரமனாக இருக்குமோ? ‘விடை வலானோ?’ இல்லாட்டி சிவனாக இருக்குமோ? (பிரமனாக இருக்குமோ, சிவனாக இருக்குமோ என்று கேட்டாலும், ‘நாராயணனாக இருக்குமோ’ என்ற கேள்வியை இராமன் எழுப்ப வைக்கவில்லை கம்பன். அங்கே உண்மையான சொல்லின் செல்வன் யார் என்பதற்கான விடை கிடைக்கிறது. சொல்லாமல் விட்டது எதுவோ அதுதான் அதிகம் சொல்லுகிறது. )
உடனே இராமனுக்கு இன்னொன்று தோன்றுகிறது. இந்தத் தம்பி சும்மா நிற்கிறானே, இவனுக்கு இன்னும் ஐயம் போகவில்லையோ என்னவோ? ஒருவேளை, இந்த அண்ணனுக்கு வேற வேலையில்லை, அந்த மானைப் பார்த்தவுடன் அப்படித்தான் அதன் பின்னாலேயே ஓடினான்; இத்தனைத் துன்பங்களையும் வரவழைத்தான். இப்போது இந்தப் பையனைப் பார்த்தவுடன் கிடந்து குதிக்கிறான்’ என்று நினைக்கிறானோ என்னவோ என்று தோன்றியது போலிருக்கிறது. இலக்குவனிடம் சொல்கிறான். ‘மாணி ஆம் படிவமன்று.’ இந்தப் பையன் உண்மையில் பையன் இல்லை. இவனுடைய பிரமச்சரிய வடிவத்தைப் பார்த்து இவனை ஒன்றும் அறியாதவன் என்று நினைத்துவிடக் கூடாது. ‘மற்று இவன் வடிவம், மைந்த, ‘ வேற என்ன வடிவம் என்று கேட்பாய் நீ. சொல்றேன்
கேள். ‘ஆணி இவ் உலகுக்கு எல்லாம் என்னலாம்.’ இவன்தான் இந்த உலகத்துக்கு எல்லாம் அச்சாணி என்று சொல்லலாம்.’ ‘ஆற்றலுக்கு ஏற்ற சேணுயர் பெருமை எல்லாம் சிக்கறத் தெளிந்தேன்.’ கொஞ்சம் கூட சந்தேகத்துக்கு இடமில்லாமல் இவனுடைய ஆற்றலையும், அதற்கேற்ற மிகப் பெரிய பெருமைகளையும் எல்லாம் தெளிவாக உணர்ந்துகொண்டேன்.
இலக்குவன் இன்னும் மாற்றம் ஏதுமின்றி நிற்கிறான். இராமனுக்குப் புன்னகை தோன்றுகிறது. ‘டேய்! இது மான் சமாச்சாரமில்லைடா! அப்பதான் நான் கொஞ்சம் விட்டுவிட்டேன். நீயே சொல்லியும் கேட்கவில்லை. இது அப்படியில்லை. நான் சரியாகத்தான் புரிந்துகொண்டிருக்கிறேன். இவனைப் பற்றி நான் சொல்வது இப்போது உனக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ‘பின்னர்க் காணுதி மெய்ம்மை’ நீயே பின்னால தெரிந்துகொள்வாய்.
மாணிஆம் படிவமன்று மற்றிவன் வடிவம் மைந்த
ஆணிஇவ் உலகுக் கெல்லாம் என்னலாம்; ஆற்றற் கேற்ற
சேண்உயர் பெருமைதன்னைச் சிக்கறத் தெளிந்தேன்; பின்னர்க்
காணுதி மெய்ம்மை என்று தம்பிக்குக் கழறி, கண்ணன்… … …
நாலு அடிக்குள் எத்தனைக் காட்சிகளைத் திணிக்க முடியும்? மிக அலட்சியமாக நுணுக்கி நுணுக்கி இழைக்கிறான் கவிஞன். அது இருக்கட்டும். அவன் என்னடா என்றால் இவனைப் பார்த்து, ‘நீல மேகம் போன்ற நிறத்தழகா, பெண்கள் மனத்துக்கெல்லாம் நேசத் துன்பத்தை உண்டாக்கக் கூடிய, பனியில் வாடாத, எப்போதும் மலர்ந்த தாமரைக் கண்ணா’ என்று கண்ணால் பார்க்கக் கூடியனவற்றைப் பார்த்து மனம் பறிகொடுத்துப் பேசுகிறான். இவன் என்னடா என்றால், கண்ணுக்குப் புலப்படாத அறிவையும், ஆற்றலையும், அகத்தையும், அகத்தின் தெளிவையும், உயர்வையும், அடக்கத்தையும் ஒரே நொடியில் அளந்து பார்த்தேன் என்கிறான். எப்படி அளந்தானாம்? ‘சொல்லினால் தோன்றிற்று அன்றே, யார்கொல் இச் சொல்லின் செல்வன்!’
அப்படி என்னதான்யா சொன்னான் அந்த அனுமன்? ‘எங்க அப்பா பேரு காத்து; எங்க அம்மா பேரு அஞ்சனை; என் பேரு அனுமன். இந்த மலை மேல சூரியனின் பிள்ளை(யான சுக்ரீவன்) இருக்கிறான். அவன் உங்களைப் பார்த்து பயந்து போய்விட்டான். நீங்க யாருன்னு கேட்டுட்டு வரச் சொன்னான். அதான் வந்திருக்கிறேன்.’ இதுல என்னய்யா அப்படி பெருசா தெரியுது அறிவு, ஆற்றல், அடக்கம் இன்ன பிற? எதுக்கு இப்படி ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறாரு இந்த இராமரு? எனக்கு ஒன்றே ஒன்றுதான் தட்டுப்படுகிறது. ‘கவ்வை இன்றாக நுங்கள் வரவு’ என்று அனுமன் சொன்னான் பாருங்கள், அதற்கான முழுப்பொருள் இப்போது விளங்கியிருக்க வேண்டும், இராமனுக்கு. ‘உங்களைப் பார்த்து பயந்துவிட்டான்’ என்று சொன்ன கணத்தில், ‘ஓகோ அதுக்குத்தான் அப்படிச் சொன்னாயா’ என்று அந்த வாக்கியத்தின் நயம் உணர்ந்திருக்கக் கூடும்.
இல்லை. இப்படி அளந்து பார்த்துவிட முடியாது இராமனை; அவன் இதயத்தை. ‘அடியனேன் உன் வேதநூல் எனத்தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன்’ என்று அனுமனே, பலகாலம் பழகியபின், வீடணன் அடைக்கலப் படலத்தின் போது சொல்லப் போகிறான். அனுமனே அறிய ஒண்ணாத வேத நூல் அன்ன திருவுளத்தின் குறிப்பை நாமா கண்டுவிடப் போகிறோம்? ஒன்றே ஒன்று தெரிகிறது. இங்கே அனுமனுடைய நிலை இனம் புரியாத அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு, அறிவு அடங்கி நிற்கும், ஆனாலும் அடங்கிய நிலையிலும் தீவிரமாக வேலை செய்துகொண்டிருக்கும் நிலை. இராமனுடைய நிலையோ, அறிவின் செயல்பாட்டைக் குறித்தே சற்றும் கவலைப்படாமல், ஒற்றைச் சொல்லால் உள்ளம் அளந்து, ஒரே பார்வையில் அன்பினுக்கு ஆட்பட்டுத் தன்னுடைய முழு மனத்தையும் ஒரேயடியாக அப்படியே கொடுத்துவிட்ட நிலை. Abundant love and unconditional acceptance. இவர்கள் இப்படி இருந்தால், நம் நிலை? இவர்களை அறிவுகொண்டு அளக்க நினைத்து முற்றிலும தோற்றுப போன நிலை. வேறு என்ன சொல்வது!
அறிவு வேலை செய்துதான் ஆகவேண்டும் என்ற நிலையைத் தாண்டிய சில கணங்கள் உண்டு. ‘அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி’ என்ற இரண்டைக் காட்டிலும் ‘அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம்’ இன்னது என்று சொல்லத் தெரியாதபடி ஆட்கொள்ளும். அப்படிப்பட்ட அன்பிலே கட்டுண்டார்கள் ஆண்டவனும், அடியவனும். ஆனாலும், அடியவன் கொஞ்சம் அதிகம் சாமர்த்தியசாலிதான். ஆண்டவனுக்கு நடிக்க ஒரு பாத்திரம் இருந்ததென்றால், அடியவனுக்கு நடக்க ஒரு பாத்திரம் இருந்தது. அடியவன் மனத்தில் இப்போது ஓடுகிற எண்ணம் என்ன, அவன் இப்போது ஆண்டவன் முன்னால் பேசுகின்ற விதம் என்ன, அமைச்சனாக அவன் ஆற்றுகின்ற செயல் என்ன? செயலுக்குக் காரணம் இருந்ததா? அவன் உள்ளக் கிடக்கை இப்போது இராமனை நோக்கி
யதா அல்லது சுக்ரீவனை நோக்கியதா?
——————–
நஅன்-ரிக்வேத வினீதஸ்ய ந அ-யஜுர்வேத சாரிணா ந அ-சாம வேத விதூஷா ஷக்யமேவம் விபாஷிதம் (மேற்படி, சுலோகம் 28)
‘ரிக் வேதத்தைப் பொருள் உணர்ந்து ஓதினாலொழிய, யஜுர் வேதத்தை மனனம் செய்திருந்தாலொழிய, சாம வேதத்தை அறிந்திருந்தாலொழிய இப்படிப் பேசுவது இயலாத ஒன்று’
————-
எவ்வழி இருந்தான் சொன்ன கவிக்குலத்து அரசன் யாங்கள்
அவ்வழி அவனைக் காணும் அருத்தியால் அணுக வந்தோம்
இவ்வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன
செவ்வழி உள்ளத்தோனைக் காட்டுதி தெரிய’ என்றான்.
ஆதரித்து அவனைக் காண்டற்கு அணுகினிர் என்னின்
தீது அவித்து அமையச் செய்த செய்தவச் செல்வம் நன்றே.
நீங்களே அவனைப் பார்க்க வந்திருக்கிறீர்களா! அப்படியானால், அவனுடைய துன்பம் கெடுமாறு அவன் செய்த தவம் மிகப் பெரியது
கொடுங்குலப் பகைஞன் ஆகிக் கொல்விய வந்த கூற்றை
நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ?
‘தன் குலத்தையே வேரறக் களைவதற்கான செயலைத் தொடங்கி, தனக்குப் பகைவனாக வந்திருக்கும் எமனைக் கண்டு (தன்னை அழிக்க எண்ணியிருப்பவனைக் கண்டு) நடுநடுங்கிக் கிடப்பவர்களுக்கு அபயம் அளிப்பதை விடவும் பெரிய அறம் ஒன்று உண்டா?’ எங்களைக் காப்பது உங்களுக்கு எளிதான செயல் அல்லவா? ‘இமைப்பு இலாதோர் தம்மையே முதல் இட்டு ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல் மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர்.’ தேவர்கள் முதற்கொண்டு இந்த அண்ட கோளத்தில் அசைகின்ற, அசையாத (சர, அசர) எல்லாவற்றையும் காக்க வல்லவர் நீங்கள். எம்மைக் காத்தல் உங்களுக்கு மிகவும் எளிய ஒன்று.
இவர்களை உற்று நோக்கியபடி நடந்து வந்தானே அப்போது,
‘காய் எரி கனலும் கற்கள் கள்ளுடை மலர்கள் போல்
தூய செங்கமலப் பாதம் தோய்தொறும் குழைந்து தோன்றும்’
வெய்யிலில் கிடக்கின்ற காரணத்தால் நெருப்பைப் போல் சுடுகின்ற கற்கள், இவர்கள் பாதம் பட்டதும் (இவர்களுடைய பாதத்துக்கு) தேன் நிறைந்த மலர்களைப் போல் குழைந்து போகின்றனவே’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டானல்லவா, இந்த இரண்டு தருணங்களிலும் தாளையும், தோளையும் கவனித்தான். இப்படி கவனித்ததை இங்கே சொல்லவில்லை. அடுத்த காட்சியில் சுக்ரீவனிடம் சொல்லப் போகிறான்.
சங்கு சக்கரக் குறி உள தடக் கையில் தாளில்
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங்கண் விற்கரத்து இராமன், அத் திரு நெடுமாலே.
இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும்.
அவர்களுடைய கையிலும், பாதத்திலும் சங்கு, சக்கரக் குறிகள் உள்ளன. இப்படி ஒரு இலக்கணத்தோடு வேறு யாரும் இல்லை. இருக்கவும் முடியாது. சிவந்த (தாமரை போன்ற) கண்களை உடைய இராமன் வேறு யாரும் இல்லை. அந்த நெடுமாலேதான். அறத்தை நிலை நிறுத்துவதற்காகப் பிறந்திருக்கிறான்.
ததா ச சுமஹாப்ராஞ்ஞா ஹனுமான் மாருதாத்மஜா
ஜகாம ஆதாயதெள வீரெள ஹரி ராஜாய ராகவவ்
(வா. இரா. கிஷ்கிந்த காண்டம், சர்க்கம் 4, சுலோகம்)
அதன் பிறகு மிகுந்த புத்திமானும், வாயுவின் மகனுமான அனுமன் அந்த இரண்டு இராகவர்களையும் (இராம இலக்குவர் இருவருமே இரகு குலத்தவர், ஆகவே இருவருமே இராகவர்கள்) குரங்குகளுக்கு அரசனிடத்தில் அழைத்துச் சென்றான்.
எப்படி அழைத்துச் சென்றான்?
பிக்க்ஷ¤ ரூபம் பரித்யஜ்ய வானரம் ரூபம் அஸ்திதா
ப்ரிஷ்டம் ஆரோப்ய தெள வீரெள ஜகாம கபிகுஞ்சரா.
தான் மேற்கொண்டு வந்த பிரமசரிய உருவத்தை விட்டுவிட்டு, தன்னுடைய குரங்கு உருவத்தோடு, அந்த இரண்டு வீரர்களையும் தன் முதுகிற் சுமந்தவாறு சுக்ரீவனை நோக்கிச் சென்றான் குரங்குளில் யானை போன்ற (பேருருவம் கொண்ட) அனுமன்.
கிம் அர்த்தம் த்வம் வனம் கோரம் பம்ப்பா கானன மந்திதம்?
ஆகத ஸானுஜொ துர்கம் நானா வ்யால ம்ருகாயுதம்.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 4, சுலோகம் 4)
என்ன காரணத்துக்காக பலவிதமான ஆபத்தான மிருகங்கள் உலவக் கூடியதும் பம்பைக் கரையில் இருப்பதுமான இப்படிப்பட்ட ஆபத்தான வனத்தில் உங்களுடைய தம்பியுடன் வந்திருக்கிறீர்கள்?
‘ஆபத்தான மிருகங்கள் நிறைந்ததும் பம்பைக் கரையில் உள்ளதுமான வனம். இந்த வனத்தில் உங்களுடைய தம்பியையும் கூட அழைத்துக்கொண்டு என்ன காரணத்துக்காக வந்திருக்கிறீர்கள்?
விதிதாநெள குணா வித்வான்! சுக்ரீவஸ்ய மஹாத்மனா
தமேவ சாவா மார்க்காவ சுக்ரீவம் ப்லவகேஷ்வரம்.
(மேற்படி, சர்க்கம் 3, சுலோகம் 37)
பண்டிதரே! சுக்ரீவன் என்ற அந்தப் பெருங்குணசாலியின் தன்மைகளை நாங்கள் அறிவோம். (விண்ணெங்கும்) தாவித் திரிவதான குரங்குகளின் அரசனான அவனைக் காணவே வந்திருக்கிறோம்.
யார் என விளம்புகேன் நான் எம் குலத் தலைவற்கு உம்மை,
வீர நீர் பணித்திர் என்றான் மெய்மையின் வேலி போல்வான்.
‘யார் வந்திருக்காங்கன்னு சொல்லட்டும் எங்க தலைவருக்கு? எனக்கு என்ன உத்தரவு?’ என்று கேட்டானாம், உலகத்தில் வாய்மையைக் காப்பதற்காக இட்ட வேலியைப் போன்றவனான அனுமன்.
தஸ்யஸ்ய வசதோ அரண்யே நியத்ஸ்ய மஹாத்மனா
ராவணேன ஹ்ரிதா பார்யா ஸ த்வம் ஷரணம் ஆகதா.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 6)
காட்டிலே நெறியான வாழ்க்கை மேற்கொண்டிருந்த இந்த மகாத்மாவின் மனைவியை இராவணன் கவர்ந்து சென்ற காரணத்தால், உன்னைச் சரண்புகும் பொருட்டு இங்கே வந்திருக்கிறான்.
‘யானும் என் குலமும் இவ் உலகும் உய்ந்தனம் எனா, மானவன் குணம் எலாம் நினையும் மதியினான்.’ நான் உய்ந்தேன்; என் குலம் உய்ந்தது; நாங்கள் மட்டுமில்லை இந்த உலகமே உய்ந்தது என்றவாறு மனிதனாகத் தோன்றிய இராமனின் நல்ல குணங்களை எல்லாம் சிந்தித்தவாறு சுக்ரீவன் இருந்த இடத்திற்குச் சென்றான்.
மேலவன் திருமகற்கு உரைசெய்தான்.’ சூரியனின் மகனான சுக்ரீவனிடத்தில் சொன்னான். என்ன சொன்னான்? ‘விரைசெய் தார் வாலி என்ற அளவிலா வலியினான் உயிர்தெறக் காலன் வந்தனன்.’ மணமிகுந்த பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்த, அளவில்லாத வலிமை உடையவனான வாலியைக் கொல்வதற்கான எமன் வந்திருக்கிறான். ‘இடர்க் கடல் கடந்தனம்.’ நாம் நம்முடைய துன்பக் கடலைக் கடந்தாகிவிட்டது.
மேலவன் திருமகற்கு உரைசெய்தான் விரைசெய்தார்
வாலிஎன்ற அளவிலா வலியினான் உயிர்தெறக்
காலன் வந்தனன் இடர்க்கடல் கடந்தனம் எனா
ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான்.
‘நான் வாழ்ந்தேன்; என் குலம் வாழ்ந்தது, இந்த உலகமே வாழ்ந்தது’ என்று எண்ணியவாறு வந்தவன் என்ன காரணத்துக்காக அவ்வாறு எண்ணினான் என்பது முதல் மூன்றடிகளில் வெளிப்பட்டது. ஏன்? வாலியின் உயிர் கவர்வதற்கு எமன் வந்துவிட்டான். ‘நான் வாழ்ந்தேன், என் குலம் வாழ்ந்தது’ என்பதோடு நிற்காமல் ‘இந்த உலகமும் வாழ்ந்தது’ என்று எண்ணிய காரணத்தால் வாலியின் தன்மை என்ன என்பதும், என்ன காரணத்துக்காக அவன் கொல்லப்படத் தகுந்தவனே என்பதும் கோடிகாட்டப்படுகின்றன.
மண்உளார் விண்உளார் மாறுளார் வேறுளார்
எண்உளார் இயல்உளார் இசைஉளார் திசைஉளார்
கண்உளார் ஆயினார்; பகைஉளார், கழிநெடும்
புண்உளார் ஆருயிர்க்கு அமுதமே போல் உளார்.
அப்பா சுக்ரீவா! பயந்து போனாயே. இவர்கள் வாலி அனுப்பியவர்களோ என்று நடுங்கினாயே. இவர்கள் நீ நினைத்ததைப் போல் இல்லை. இவர்கள் யார் தெரியுமா? இந்த மண்ணில் இருப்பவர்கள், அந்த விண்ணில் இருப்பவர்கள், இந்த இரண்டு உலகங்களுக்கும் மாறான பாதாள உலகத்தில் இருப்பவர்கள், இந்த மூன்றையும் தவிர்த்த உலகங்களில் உள்ளவர்கள், அத்தனை பேர்களின் எண்ணத்திலும், செயலிலும், கண்களிலும் உள்ளவர்கள். யாரெல்லாம் பகைவரை உடையவர்களாக இருக்கிறார்களோ, யாருக்கெல்லாம் பகைவரால் துன்பம் நேர்ந்திருக்கிறதோ, யாரெல்லாம் பகையாலே உடலும் உள்ளமும் புண்பட்டிருக்கிறார்களோ, அப்படிப்பட்டவர்களின் உயிர்களுக்குள் ஊற்றப்படும் அமுதம் போன்றவர்கள்.
சூழிமால் யானையார் தொழு கழல் தயரதன்
பாழியாலர் உலகெலாம் ஒருவழிப் படரவாழ்
ஆழியான் மைந்தர்; பேர் அறிவினார்; அழகினார்;
ஊழியார்; எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார்.
அழுகின்ற குழந்தைக்கு மிட்டாய் தருவதைப் போல் செய்தியை ஒவ்வொன்றாக எடுத்து வைக்கிறான் அனுமன். அவர்கள் யார் தெரியுமா? பெரிய பெரிய யானைப் படையை உடைய அரசர்களெல்லாம் தொழுது வணங்கியவனான சக்ரவர்த்தி, தசரதன் தெரியுமில்லையா உனக்கு? இந்த உலகம் முழுவதையும் தன் வலிமையால், தன் குடைக் கீழ் வாழும்படிச் செய்த, ஆணைச் சக்கரத்தை உடையவன் இல்லையா அந்த தசரதன்? அவனுடைய மைந்தர்கள் இவர்கள். என்னா அறிவுள்ளவங்க தெரியுமா? எவ்ளோ அழகா இருக்காங்க தெரியுமா? சரி. அத விட்டுவிடுவோம். இவர்கள் நெறிப்படி நடப்பவர்கள். அறத்தைக் கைக்கொண்டவர்கள். மிக எளிதில் உனக்கு அரசைப் பெற்றுத் தருவார்கள்.
காதிசேய் தரு நெடுங் கடவுள் வெம் படையினார்.’ விஸ்வாமித்திரர் பல தெய்வப்படைகளை இவர்களுக்குத் தந்திருக்கிறான். தவறாத சக்தி உடைய அத்திரங்கள் இவர்களிடத்தில் உண்டு
மாயையால் மதிஇலா நிருதர்கோன் மனைவியைத்
தீயகான் நெறியின் உய்த்தனன்; அவள் தேடுவார்
நீஐயா தவம் இழைத்துடைமையால், நெடு மனம்
தூயையா உடையையால் உறவினைத் துணிகுவார்.
இவ்வளவு பேராற்றல் உடையவர்கள். சரிதான். அப்படியானால் எப்படி இந்த இராமன் தன் மனைவியைத் தொலைத்தான்? ‘மாயையால் மதிஇலா நிருதர்கோன் மனைவியைத் தீயகான் நெறியின் உய்த்தனன்.’ அது வந்து, இந்த இராவணன் இருக்கானே, புத்தி கெட்ட பய, அவன் மாயத்தோற்றம் ஒன்றை உண்டாக்கினான். மாரீசனை மாயமானாக அனுப்பினான். அவர்கள் இல்லாத சமயத்தில் சீதையைத் தன்னுடைய கொடிய வஞ்சனையால் இந்தக் காட்டு வழியில் தூக்கிச் சென்றுவிட்டான். அவளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.
தனக்கு உவமை தானேயன்றி இன்னொருவன் இல்லாதவனின் சரணத்தை நாடி வந்து அடைந்தான். அப்படி நடந்து வரும்போது இவர்களைப் பார்த்தவாறே வந்தானில்லையா, அந்தத் தருணத்தில் உள்ளத்தின் அடி ஆழத்தில்
உணர்கிறான் சுக்ரீவன்:
தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே
மாறி இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னோ
ஆறுகொள் சடிலத்தானும் என்று இவர்கள் ஆதி
வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா.
இவனே தேவர்களுக்கு எல்லாம் தேவன். மனிதனாக வந்து தோன்றியிருக்கிறான். சடாமுடியில் ஆற்றைத் தரித்த உருத்திரன் முதலான எல்லா தேவர்களையும், இதோ, இந்த மானுடம் வென்றுவிட்டது.
பவான் தர்ம வினீதா ச சுதபா சர்வ வத்சலா
ஆக்யாதா வாயுபுத்ரேண தத்வதோ மே பவத் குணா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 9)
தாங்கள் தர்மங்களைப் பயின்றவர்; நற்செயல்களில் நாட்டம் உடையவர்; அனைவரையும் நேசிப்பவர். (அல்லது, ‘அனைவராலும் விரும்பப்படுபவர்’.) வாயு புத்திரனான அனுமன் எனக்கு உங்களுடைய குணநலன்களின் மெய்மையைச் சொல்லியிருக்கிறான்.
ரோசதே யதி மே சக்யம் பாஹ¤ ஏஸ ப்ரசாரிதா
க்ரிஹ்யதாம் பாணினா பாணி மர்யாதா பத்யதாம் த்ருவா
(மேற்படி, சுலோகம் 11)
என்னுடன் நட்பு கொள்வது உனக்குச் சம்மதமானால், இதோ உன் முன்னால் என் கரம் நீட்டப்பட்டிருக்கிறது. (நம்முடைய) இந்தத் தொடர்பு உறுதிப்படும் விதமாக உன் கரத்தால் இதைப் பற்று.
யாங்கள் உற்ற கை அறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தோம்
ஐய! நின் தீரும் என்ன … … … … … … … … … … … …
‘செயல்களற்று நாங்கள் நிற்கும் விதத்தில் எங்களைப் பீடித்துள்ள துயரத்தை உன்னால் (உன் துணையுடன்) கடப்பதற்காக வந்துள்ளோம். இந்தத் துயர் உன்னால் தீரும்’ என்று இராமன் சொன்னான்.
முரணுடைத் தடக்கை ஓச்சி முன்னவன் பின்வந்தேனை
இருள்நிலைப் புறத்தின்காறும் உலகெங்கும் தொடர இக்குன்று
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன்; ஆர்உயிர் துறக்கல் ஆற்றேன்;
சரண் உனைப் புகுந்தேன். என்னைத் தாங்குதல் தருமம் என்றான்.
தடித் தடியான கைகளை ஓங்கியபடி எங்க அண்ணன் தம்பியாகிய என்னை இருள் நிறைந்த இந்த உலகத்தின் எல்லா இடங்களிலும் துரத்தினான். என்னைப் போட்டு அடித்தான் ஐயா. என்னைக் கொல்லத் துடிக்கிறான். ஏதோ இந்த மலைப் பிரதேசத்தில் அவன் நுழைய முடியாதபடி ஒரு சாபம் இருக்கிற காரணத்தால் இங்கே ஓடிவந்து ஒளிந்துகொண்டு உயிர் வாழ்கிறேன். ‘ஆருயிர் துறக்கல் ஆற்றேன்’. ஐயா, இப்படிப்பட்ட அச்சத்தோடு வாழ்வதை விடவும் உயிரை விட்டுடலாம்னு பாத்தேன். என்னால முடியல. சாகலாம்னாலும் முடியல. நான் என்ன பண்ணுவேன்! ஐயா, உங்களை நான் சரண் புகுந்தேன். என்னைக் காப்பாற்றுவதே உங்கள் தருமம்.’
விருந்தும் ஆகி அம் மெய்ம்மை அன்பினோடு
இருந்து நோக்கி, நொந்து, இறைவன் சிந்தியா
பொருந்து நன் மனைக்கு உரிய பூவையைப்
பிரிந்துளாய் கொலோ நீயும் பின் என்றான்.
விருந்துண்டு அமர்ந்திருந்த போது, தன் மீது பொழியப்பட்ட அன்பில் மனம் குளிர்ந்து, சுற்றிலும் (மறுமுறை) நோக்கினான். சிந்தித்தான். மனம் நொந்து சிந்தித்தான். ஏன் மனம் நொந்தான்? இங்கே பரிமாறியது முழுக்க முழுக்க ஆண்கள். சுக்ரீவனுடைய மனைவி இங்கே இருந்திருக்க வேண்டுமே! அவள் ஏன் கண்களில் தட்டுப்படவில்லை? கேள்வி உறைக்கிறது. ‘என்னப்பா சுக்ரீவா, உன் மனைவியைக் காணோமே, எங்கே அவர்கள்? இங்கே இருக்கிறார்களா? இல்லாவிட்டால் என்னைப் போல நீயும் உன் மனைவியைப் பிரிந்திருக்கிறாயா?’ என்று கேட்டான்.
என்ற வேலையில் எழுந்து மாருதி
குன்றுபோல நின்று, இருகை கூப்பினான்.
‘நின்ற நீதியாய்! நெடிது கேட்டியால்.
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு எனா.
இராமன் அப்படிக் கேட்ட உடனே குன்று எழுந்து நிற்பது போல் எழுந்தான் மாருதி. இரண்டு கைகளையும் கூப்பினான். வணக்கமாகச் சொன்னான். ‘நிலைத்த நீதியை உடையவனே! நான் உனக்குச் சொல்ல வேண்டியது ஒன்று உண்டு. கொஞ்சம் நீளமான செய்தி அது. கேட்டருள வேண்டும்.’
மற்று இனி உரைப்பது என்னே? வானிடை மண்ணில் நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன் கிளை எனது; என் காதல்
சுற்றம் உன் சுற்றம்; நீ என் இன்னுயிர்த் துணைவன் என்றான்
இன்னும் வேறு என்ன சொல்வது? என்ன சொல்லவேண்டி இருக்கிறது? ஆகாயத்தில் என்றாலும் சரி, பூமியில் என்றாலும் சரி; உன் மீது பகைகொண்டு உன்னை வருத்தியவர்கள் யாரோ, அவரெல்லாம் என்னை வருத்தியவர்கள். உனக்கு உற்றவர் – அது எப்படிப்பட்ட கெட்டவர்களாக இருந்தாலும் சரி – எனக்கும் உற்றவர். உனக்கு யாரெல்லாம் (நேசமுடைய) உறவினர்களோ, அவர்களெல்லாம் எனக்கும் உறவினர்கள்தாம். என் மீது நேசம் பாராட்டும், நான் நேசம் பாராட்டும் என் உறவெல்லாம் உன்னுடைய உறவினரே. நீ என் இன்னுயிர்த் துணைவன். என் சகோதரன்.
உருமை என்று இவற்கு உரிய தாரமாம்
அருமருந்தையும் அவன் விரும்பினான்
இருமையும் துறந்து இவன் இருந்தனன்.
கருமம் இங்கு இது, எம் கடவுள்! என்றனன்.
இதோ இந்தச் சுக்ரீவன் இருக்கிறானே, இவனுக்கு உருமை (ருமா) என்ற பெயருடைய மனைவி உண்டு. அந்தப் பெண்ணையும் வாலி அபகரித்துக்கொண்டான். அரசன் என்ற நிலையில் கொஞ்ச காலம் இருந்தவனேனும், அரசை அண்ணனிடம் திருப்பினாலும் இளவல், இளவரசன் என்ற நிலையில் இருக்கவேண்டியவன் இவன். அதையும் இழந்தான். தன் வாழ்வின் ஆதாரப் பற்றுக்கோடான தன் மனைவியையும் அண்ணனிடத்தில் பறிகொடுத்தான். இதோ, காட்டில் வசிக்கிறான். சாமி! இதுதான் நடந்தது.
ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன
ஆரம் வீங்கு தோள் தம்பிக்குத் தன் அரசு உரிமைப்
பாரம் ஈந்தவன், பரிவிலன் ஒருவன் தன் இளையோன்
தாரம் வெளவினன் என்ற சொல் தரிக்குமாறு உள்ளதோ?
கதிரவன் சிறுவன்ஆய கனக வாள் நிறத்தினானை
எதிர்உறத் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின், நீண்ட
வெதிர் பொரு தோளினாளை நாடுதல் விழுமிது என்றான்.
அதிர் கழல் வீரர் தாமும் அன்னதே அமையும் என்றார்.
ஒளிவிடும் பொன் போன்ற நிறத்தை உடையவனும் சூரியனின் புத்திரனுமான சுக்ரீவனுடைய நட்பைப் பெற்று, அவன் மூலமாகச் சீதையைத் தேடுவதே சிறந்தது என்று கபந்தன் என்ற பெயரில் சாபம் பெற்று வாழ்ந்தவனான தனு என்ற கந்தர்வன் சொன்னான். அப்படியே செய்கிறோம் என்று இருவரும் அவனுக்குச் சொன்னார்கள்.
வாலினோ மே மஹாபாக பய ஆர்தஸ்ய அபயம் குரு
கர்தும் அரஹசி காகுத்ஸ்தா பயம்மே ந பவேத் யதா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 23 பின்பாதி, 24 முன்பாதி)
‘வாலியால் துன்புறுத்தப்பட்டு, அவனை அஞ்சி வாழும் என்னுடைய இந்த அச்சத்தை மாற்று. எனக்கு அபயம் நல்கு. அவ்வாறு செய்வதே உனக்குப் பொருத்தமானதாகும்’ என்ற சுக்ரீவன் வாய்மொழிக்கு விடையாக,
உபகார பலம் மித்ரம் விதிதம் மே மஹாகபி
வாலினாம் தம் வதிஷ்யாமி தவ பார்யா அபஹாரிணம்
(மேற்படி, சுலோகம் 25 பின்பாதி, 26 முன்பாதி)
‘நட்புக் கொள்வதன் பலன் என்னவென்றால், (ஒருவருக்கொருவர்) உதவியாயிருத்தலே. வலிய வானரனே! உன் மனைவியை அபகரித்தவனான வாலியை நான் கொல்கிறேன்..’
உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி
விலகும் என்னினும் வில்லிடை வாளியின் வீட்டி
தலைமையோடு நின் தாரமும் உனக்கு இன்று தருவேன்
புலமையோய்! அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான்.
பதினான்கு உலகங்களில் வாழ்பவர்களும் ஒன்று கூடி, அவனுக்கு உதவியாக நின்று என்னைத் தடுத்தாலும், என்னுடைய வில்லில் அம்பு தொடுத்து, அவனைக் கொன்று, அரசையும் உன் மனைவியையும் ஒரு சேர உனக்கு மீட்டளிப்பேன். இன்று. இப்போது. இதே நிமிடத்தில் உனக்கு உன் அரசும், உன் மனைவியும் கிடைத்தாகிவிட்டது என்று கொள். அவன் எங்கே இருக்கிறான், அதை எனக்குக் காட்டு. அவன் இருக்கும் இடத்துக்கு என்னை அழைத்துச் செல்.
எழுந்து பேர் உவகைக் கடற் பெருந் திரை இரைப்ப
அழுந்து துன்பினுக்கு அக்கரை கண்டனன் அனையான்
விழுந்ததே இனி வாலிதன் வலி என விரும்பா
மொழிந்த வீரற்கு, ‘யாம் எண்ணுவது உண்டு’ என மொழிந்தான்.
‘வாலியை இப்போதே அழிக்கிறேன். அவன் எங்கிருக்கிறான் காட்டு’ என்று இராமன் எழுந்த அளவில் மகிழ்ச்சியாகிய கடல் பெரிய அலைகளுடன் பொங்கி எழ, இது வரை வாடிக் கொண்டிருந்த துன்பக் கடலுக்கு அக்கரை கண்ணில் தென்பட்டவனாக, ‘வாலியின் வலிமை இத்தோடு தொலைந்தது’ என்றெண்ணி ஆர்ப்பரித்து, விரும்பி நிற்கும் அனுமன் முதலான வானர வீரருக்கும், இராமனுக்கும் ‘எனக்குக் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது’ என்று சொன்னான்.
மாயாவீ நாம தேஜஸ்வீ பூர்வஜோ துந்துபே சுதா
தேன தஸ்ய மஹத் வைரரம் வாலினா ஸ்த்ரீ க்ரிதம் புரா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 9, சுலோகம் 4)
துந்துபிக்கு முன் தோன்றியவனான (அவனுடைய மூத்த சகோதரனான என்றும் பொருள் கொள்ளலாம்) மாயாவி என்றொரு அரக்கன் இருந்தான். அவனுக்கும் வாலிக்கும் ஒரு பெண் தொடர்பாகப் பகை இருந்தது.
கதம் ச தர்மம் ஜானீதே யேன ப்ராத்ரா துராத்மனா
யுத்தாய அபிநியுக்தேன பிலஸ்ய பிஹிதம் முகம்.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 55, சுலோகம் 4)
தன்னுடைய சகோதரனால் குகையின் வாயிலைக் காவல் காக்குமாறு ஆணையிடப்பட்டிருந்த இவன், எந்த அடிப்படையில் தான் செய்வது சரி என்ற முடிவுக்கு வந்து, குகையின் வாயிலைப் பாறை கொண்டு அடைத்தான்? இவன் செய்தது எந்த தர்மத்தின்பாற் பட்டது? எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தான்?
சத்யாத் பாணி க்ரிஹீதா ச க்ரிதா கர்மா மஹாயஷா
விஸ்மிரிதோ ராகவோ யேன ச கஸ்ய சுக்ரிதம் ஸ்மரெத்
(மேற்படி, சுலோகம் 5)
இப்படிப்பட்வனைத்தான் இராமன் கைப்பற்றி நட்புப் பிரதிக்ஞை செய்தான். அண்ணனுக்கு இப்படி ஒரு தீங்கிழைத்தவன் இவன் என்பதை இராமன் கூட கருத்தில் கொள்ளவில்லை அல்லவா? (சொல்லுக்குச் சொல் செய்யப்பட்ட மொழிபெயர்பன்று; கருத்து இதுதான்.)
ஏதத் அஸ்ய அசமம் வீர்யம் மயா ராம ப்ரகாஷிதம்
கதம் தம் வாலினாம் ஹன்தும் சமரே ஷக்ஸ்யசே ந்ருப
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 11, சுலோகம் 68)
என்று இராமனைக் கேட்கிறான் சுக்ரீவன். ‘வாலியின் இணையற்ற வலிமை இத்தகையது. இப்படி இருக்கும்போது, இராமா, நீ எவ்வாறு அவனைப் போரிட்டுக் கொல்வாய்?’ இந்தக் கேள்வி காதில் பட்டதுதான் தாமதம், இலக்குன் சிரித்தான். கோபச் சிரிப்பு என்று சொல்லவேண்டிய அவசியமே இல்லை. அவனுடைய சிரிப்பில் சினம் தெரிந்ததோ இல்லையோ, அவன் கேள்வியில் எரிச்சல் தெரிகிறது.
ததா ப்ருவாணம் சுக்ரீவம் ப்ரஹஸன் லக்ஷ்மணோ அப்ரவீத்.
கஸ்மின் கர்மணி நிர்வ்ரிதே ஷ்ரத்தத்ய வாலினம் வதம்?
(மேற்படி, சுலோகம் 69)
சுக்ரீவன் இவ்வாறு சொல்லவும் இலக்குவன் சிரித்தான். ‘என்ன காரியம் செய்து காட்டினால் (இராமனால்) வாலி வதம் சாத்தியம் என்று நம்புவாய்,’ என்று கேட்டான்.
என்று தானும் அவ்வழி இரும் பிலம்
சென்று முன்னவன் தேடுவேன்; அவற்
கொன்றுளான் தனைக் கொல ஒணாது எனின்
பொன்றுவேன் எனா புகுதல் மேயினான்.’
‘அண்ணன் இறந்திருக்கத்தான் முடியும். இல்லாவிட்டால் இத்தனை மாதங்கள் கழித்தும் வெளி வராமல் இருக்க மாட்டான். ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது. நானும் இந்தக் குகைக்குள்ளே போகின்றேன். என் அண்ணனுக்கு என்ன ஆயிற்று என்று பார்ப்பேன். அவனைக் கொன்றவனோடு நானும் போர் புரிவேன். என் அண்ணனையே வீழ்த்திய அவனை என்னால் வீழ்த்த முடியுமா என்பது எனக்குத் தெரியாது. நான் ஒரு வேளை வெல்லலாம். அப்படி இல்லாவிட்டால் நானும் எங்க அண்ணனோட சேந்து செத்துப் போறேன்’ என்றவாறு குகைக்கு உள்ளே செல்லத் தொடங்கினான்.
தடுத்து வல்லவர் தணிவு செய்து நோய்
கெடுத்து மேலையோர் கிளத்து நீதியால்
அடுத்த காவலும் அரிகள் ஆணையால்
கொடுத்தது உண்டு…….
அன்ன நாளில் மாயாவி அப்பிலத்து
இன்ன வாயிலூடு எய்தும் என்ன யாம்
பொன்னின் மால் வரைப் பொருப்பு ஒழித்து வேறு
உன்னு குன்றெலாம் உடன் அடுக்கினேம்
அப்போதையின் அயர்வாறிய அனுமன் அழல் விழியா
பொய்ப்போர் சில புரியேல் இனி எனவந்திடை புகுந்தான்
கைப்போதகம் என முந்தவன் கடுந்தேர் எதிர் நடந்தான்
‘இப்போர் ஒழி. இனிப்போர் உள. இவைகேள்’என இசைத்தான்.
தளர்ச்சி நீங்கப் பெற்ற அனுமன் சினத்தால் நெருப்பெரியும் விழிகளோடு, (தரைமேல் நின்றிருந்த) இலக்குவனுக்கும் (தேரேறி நின்றிருந்த) இராவணனுக்கும் இடையில் வந்து குதித்தான். யானையைப் போல இராவணன் தேருக்கு எதிரில் நடந்து வந்தபடி, ‘ஏய் எல்லாம் போதும்டா! சும்மா பொய்யாட்டம் ஆடாதே,’ என்றான். ‘போங்காட்டம் ஆடாதே’ என்று சின்னப் பசங்க சொல்ல மாட்டாங்களா, அந்த மாதிரி. ‘பொய்ப்போர் சில புரியேல்.’ ‘அது கிடக்கட்டும். இந்தப் போரை விடு; இன்னும் எத்தனையோ போர் இருக்கிறது. அப்ப காட்டு உன் வீரத்தை. இப்ப நான் சொல்வதைக் கேள்.’
என்றாலும் இன்று இழிவு உன்வயின் எய்தும் என இசையா
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான்.
‘ஆனாலும் கூட, கண்ணு, இன்னிக்கு உனக்கு ஊதிட்டாங்க.’ ‘இன்று உனக்கு எல்லா இழிவும் ஒன்றாக வந்து சேரப் போகிறது,’ என்று சொல்லிக்கொண்டே உலகளந்த திரிவிக்கிரமனைப் போல் தன் பேருருவை எடுத்தான்
பரக்கப் பல உரைத்தென் படர் கயிலைப் பெரு வரைக்கும்
அரக்குற்று எரி பொறிக்கண் திசைக் கரிக்கும் சிறிது அனுங்கா
உரக் குப்பையின் உயர்தோள் பல உடையாய் உரன் உடையாய்.
நீள நெடுக பலவாறாகச் சொல்லவே தேவையில்லை. வலிமை என்பதன் குவியல் என்று சொல்லக் கூடிய வரிசையான பல தோள்களை உடையவன் நீ!
என்தோள்வலி அதனால்எடுத்து யான்எற்றவும் இறவா
நின்றாய்எனின் நீபின்எனை நின்கைத்தல நிரையால்
குன்றேபுரை தோளாய்மிடல் கொடுகுத்துதி குத்தப்
பொன்றேன்எனின் நின்னோடெதிர் பொருகின்றிலென் என்றான்.
ராகவஸ்ய வசஹ ஷ்ருத்வா ஸம்பரிஷ்வஜ்ய பூஜ்ய ச அபிவாத்ய ச ராமாய யயெள ஸெளமித்ரி ராகவே 51
ஸ ராவணம் வராண ஹஸ்தபாஹ¤ம் ததர்ஷ பீமோத்யததீப்த சாபம் ப்ரசாதயந்தம் ஷரவ்ருஷ்டி ஜாலைஸ்தான் வானரான் பின்னவிகீர்ண தேஹான் 52
தமாலோக்ய மஹாதேஜா ஹனுமான் மாருதாத்மஜஹ நிவார்ய ஷரஜாலானி விதுத்ராவ ச ராவணம் 53
ரதம் தஸ்ய ஸமாஸாத்ய பாஹ¤முத்யம்ய தக்ஷ¢ணம் த்ராசயன் ராவணம் பீமான் ஹனுமான் வாக்யம் அப்ரவீத் 54
தேவ தானவ கந்தர்வைர்யஷைஸ்ச சஹ ராக்ஷஸைஹி அவத்யத்வம் த்வயா ப்ராப்தம் வானரேப்யஸ்த்து தே பயம் 55
ஏஷ மே தக்ஷ¢ணோ பாஹ¤ஹ¤ பஞ்சஷாகஹ சமுத்யதஹ விதமிஷ்யதி தே தேஹே பூதாத்மானம் சிரோஷிதம் 56
(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 59, சுலோகம் 51-56)
என்ன அறிவு! என்ன ஆற்றல்! என்ன கூர்த்த மதி! சுந்தர காண்டத்தில் சீதையை முதன் முதலாகப் பார்த்த போது, இவள்தான் தான் தேடி வந்திருக்கும் பெண்ணா என்று உறுதி செய்துகொள்வதற்காக எப்படியெல்லாம் கவனி க்கிறான் அனுமன்! தனிமை, அரக்கர் சூழ்ந்திருந்த தன்மை, கசங்கிய ஆடை, அழுக்கடைந்த மேனி, அழுத கண்கள் என்றிவற்றையெல்லாம் கவனித்த பின்னும் வேறு சில அடையாளங்களையும் கவனித்தான் என்று வால்மீகி சொல்கிறார்:
தாம் சமீக்ஷ்ய விசாலாக்ஷ¢ம் ராஜபுத்ரீம் அநிந்திதாம் தர்க்யாம் ஆச சீதா இதி காரணை உபபாதயன்
(வா. இரா. சுந்தர காண்டம், சருக்கம் 15, சுலோகம் 40)
தான் பார்க்கின்ற அந்தக் குற்றமற்ற (நிந்திக்கத் தக்க ஏதுமற்ற) அரச குமாரி, சீதையேதான் என்பதனை தர்க்க ரீதியாகச் சிந்தித்து, காரணங்களை ஆய்ந்துணர்ந்து அறிந்தான்.
உத்திஷ்ட நரஷார்த்தூல தீர்க்கபாஹோ! த்ருதவ்ரத கிமாத்மானம் மகாத்மானம் ஆத்மானம் நாவ புத்யதே
(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 82, சுலோகம் 43)
நீண்ட வலிய கரங்களையும், கூர்த்த மதியையும் உடைய மனித வேங்கையே! நீயே எல்லா ஆன்மாக்களுக்கும் மகான்மா என்பதை ஏன் உணர மறுக்கிறாய்?
சம்நிவார்ய பரானிகம் அப்ரவீத் தான் வநெள கசஹ
ஹனுமான் சம்நிவர்தத்வம் நஹ ஸாத்யம் இதம் பலம் த்யக்த்வா ப்ராணான் விசேஷ்டந்தோ ராமப்ரிய சிகீர்ஷவஹ
என்நிமிதம் ஹி யுத்யாமோ ஹதா சா ஜனகாத்மஜா இமம் அர்த்தம் ஹி விக்யாப்ய ராமம் சுக்ரீவமேவச
(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 82, சுலோகம் 20 (பின் அரையடி), 21, 22 )
எதிர்த்து ஆர்த்தெழுந்து கொண்டிருந்த வானரப் படையை அடக்கினான் அனுமன். ‘திரும்பிச் செல்லுங்கள். இந்த அரக்க சேனை இனிமேல் வெல்லப்பட வேண்டிய ஒன்றன்று. யாருக்காக நாம் உயிரைப் பணயம் வைத்து, பெரும் அபாயங்களை மேற்கொண்டு தீவிரமாகப் போராடினோமோ, எந்த இராமனுடைய உள்ளம் மகிழ்வதற்காக இவற்றைச் செய்தோமோ, அவனுடைய மனத்துக்கினிய ஜனகபுத்ரி கொல்லப்பட்டுவிட்டாள். இதனைப் போய் இராமனிடமும், சுக்ரீவனிடமும் தெரிவிப்போம்; அதன் பின்னர் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்வோம்.’
‘தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல், என்றும் அவண் உறைவிடம் ஆம்; ஆதலினால், அம் மலையை இறைஞ்சி ஏகி, பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய, நாகக் கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா நெடு வரையும், கடலும், காண்டிர்.
அந்தப் பொதிய மலையில் அகத்திய முனிவன் தமிழ்ச் சங்கம் வைத்திருக்கிறான். அந்த மலை என்றும் அவன் வாழ்வதற்கு உரிய இடம். ஆகையால் அந்த மலையை (தொலைவில் நின்றபடி) வணங்கிவிட்டுத் தொடர்ந்து செல்லுங்கள். பொன் துகள் நிரம்பிய பொருநை நதி வரும். அதையும் தாண்டியனால் யானைக் கன்றுகள் நி றைந்த மயேந்திர மலையை அடைவீர்கள்.
இராமன் முடி சூடும் சமயத்தில் நிகழ்கிறது இது.
இராமன் சற்று நேரத்துக்கு முன்னால்தான் சானகிக்கு ஒரு முத்து மாலையை அணிவித்திருக்கிறான். அந்த மாலையைக் கைகளால் நெருடியவண்ணம் காட்சியளிக்கிறாள் வைதேகி.
அவேக்ஷமாணா வைதேஹீ ப்ரததெள வாயுஸ¥னவே அவமுச்யாத்மனஹ கண்டாத்தாரம் ஜனகநந்தினி
அவைக்ஷத ஹரீன் ஸர்வான் பர்த்தாரம் ச முஹ¤ர்முஹ¤ஹ¤ தாமிங்திதக்னஹ ஸம்ப்ரேக்ஷ்ய பபாஷே ஜனகாத்மஜாம்
ப்ரதேஹி ஸ¤பகே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமினி அத ஸா வாயுபுத்ராய தம் ஹாரமஸிதேக்ஷணா
தேஜோ த்ருதிர்யஷோ தாக்ஷ்யம் ஸாமர்த்யம் விநயோ நயஹ பெளருஷம் விக்ரமோ புத்திர்ய யஸ்மின்னே தானி நித்யதா
(வா. இரா. யுத்த காண்டம், சர்க்கம் 128, சுலோகம் 79-82)
அனுமன் தங்களுக்கு ஆற்றிய விலை மதிப்பிட முடியாத சேவைகளை எண்ணிய ஜனக புத்ரி, தன் கணவன் தனக்கு அணிவித்த முத்துமாலையைக் கழற்றி(க் கையில் வைப்பதா)னாள். (அவ்வாறு அந்த மாலையைக் கையில் வைத்தபடி) மீண்டும் மீண்டும் கூடியிருக்கும் வானரர்களைப் பார்ப்பதும், இராமனைப் பார்ப்பதுமாக நின்றாள். இராமன் அவளைக் கூர்ந்து நோக்கினான். ஒருவரின் செயல்களைக் கொண்டு அவரின் உள்ளத்தை அளப்பதில் வல்லவனான அவன், ‘யாருக்கு இதனை அளிக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றுகிறதோ அவருக்கே சந்தோஷமாகக் கொடு,’ என்று அவளிடம் சொன்னான். கரிய விழிகளைக் கொண்ட அவள், சக்தியும், உறுதியும், புகழும், திறமையும், தகுதியும், அடக்கமும், முன்னறிவும், வீர்யமும், வீரமும், விவேகமும் யாரிடத்தில் எப்போதும் ஒன்றாக உறைந்துளவோ, அந்த வாயு புத்திரனுக்கே அந்த முத்து மாலையை அணிவித்தாள்.
கம்பன் இந்தக் காட்சியை அப்படியே சுருக்கமாகப் படம் பிடிக்கிறான், ஒரே ஒரு விருத்த அளவில்.
பூமலர்த் தவிசை நீத்து, பொன் மதில் மீதிலை பூத்த தேமொழித் திருவை ஐயன் திருவருள் முகத்து நோக்க, பா மறைக் கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கைக் கொண்டு ஏமுறக் கொடுத்தாள், அந்நாள், இடர் அறிந்து உதவினாற்கே.
தாமரைப் பூ ஆசனத்தை விட்டுவிட்டு, பொன்னால் பொதியப்பட்ட மதில்களை உடைய மிதிலை நகரத்தில் வந்து பூத்தவளான மைதிலியை இராமன் தன்னுடைய அருள் ததும்பும் முகத்தால் நோக்கினான். மறைகளுக்கு உரியவளான கலைமகள் தந்தான, பெரிய முத்துகள் கோக்கப்பட்ட மாலையைக் கையில் எடுத்து, அவள் மிக்க இன்பத்தை அடைந்தவளாகி, அந்தநாளில் தன் துன்பங்களை அறிந்து உதவிய அனுமனுக்கு அளித்தாள்.
விடை கொடுத்த படலத்தில், அனுமனுக்கு விடை கொடுக்கும் தருணத்தில் இராமனுடைய சொல்லையும் செயலையும் உத்தரகாண்டத்தில் வான்மீகி இவ்வாறு சொல்கிறார்:
ஏவம் ப்ருவாணம் ராமஸ்து ஹநூமந்தம் வராஸநாத் உத்தாய ஸஸ்வஜே ஸ்நேஹாத் வாக்யமேத துவாச ஹ
(வா. இரா. உத்தர காண்டம், சர்க்கம் 40, சுலோகம் 20 – 24)
(‘உன்பால் எனக்குள்ள பேரன்பு என்றென்றும் நிற்கட்டும். உன்பால் எனக்குள்ள விசுவாசம் எப்போதும் நிலைக்கட்டும்.
உன்மீது எனக்கள்ள பிரேமை வேறு எந்தப் பக்கத்திலும் சிதறாமல் இருக்கட்டும். தேவதைகள் எல்லாம் எனக்கு உன் காதையைச் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். நான் அதனைக் கேட்டபடியே, காற்றால் சிதறுண்ணும் மேகங்களைப் போல், (உன்னைப் பிரிந்திருக்கும்) என்னுடைய ஏக்கமெல்லாம் (உன் காதையால்) சிதறுண்டு போகட்டும்’ என்றெல்லாம் வேண்டிய அனுமனுடைய பேச்சைக் கேட்ட இராமன்,)
தன் சிறந்த ஆசனத்திலிருந்து எழுந்து வந்து, அன்புடன் அனுமனைத் தழுவினான். தழுவியவாறு இதனைச் சொன்னான் என்று (பெரியோர்) சொல்கின்றனர்.
யாரை யார் தழுவினார்கள்? இராமன், அனுமனைத் தழுவினான் என்கிறார் வால்மீகி. இந்த உத்தர காண்ட நிகழ்வை, மேற்படி ‘முத்து மாலையைத் தரும் சீதையின்’ காட்சிக்கு இரண்டு விருத்தங்களுக்கு முன்னால் அமைத்தான் கம்பன். Master stroke எந்த இடத்தில் விழுகிறது என்பதைக் கவனியுங்கள்.
மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி, ‘ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை; பைம் பூண் போர் உதவிய திண் தோளாய்! பொருந்துறப் புல்லுக!’ என்றான்.
இராமன், மாருதியை மகிழ்ச்சியோடும், அருள் நிறைந்த கண்களோடும் நோக்கினான். ‘நீ செய்திருக்கும் உதவிகளை வேறு யார் செய்திருக்க முடியும்? நீ செய்திருக்கும் உதவிகளுக்குப் பிரதியாக, ஈடாக, பதிலாக, நான் உனக்குச் செய்யக் கூடிய செயல் எதுவும் இல்லை. அழகிய ஆபரணங்களை அணிந்த, என் போரின்போது (கூட இருந்தும், என்னுடன் நின்று போரிட்டும், என்னைச் சுமந்தும்) உதவிய பெருந்தோள்களை உடையவனே, நீ என்னைத் தழுவிக்கொள்வாயாக.
இந்த, ‘நான் உனக்குச் செய்யக் கூடிய செயல் என்று எதுவுமே இல்லை,’ என்பதற்கான விளக்கத்துக்கு நாம் வான்மீகத்துக்குத்தான் போக வேண்டும். மேலே நாம் காட்டியுள்ள இருபதாம் சுலோகத்தை அடுத்து வரும் நான்கு சுலோகங்கள் இவை.
ஏவமேதத் கபிஸ்ரேஷ்ட பவிதா நாத்ர ஸம்ஷயஹ சரிஷ்யதி கதா யாவதேஷா லோகே ச மாமிகா
தாவத்தே பவிதா கீர்த்திஹி ஷரீரேங்ப்ய ஸவஸ்ததா லோகாஹி யாவத்ஸ்தாஸ்யந்தி தாவத் ஸ்தாஸ்யந்தி மே கதாஹ
ஏகைகஸ்யோபகாரஸ்ய ப்ராணான் தாஸ்யாமி தே கபே ஷேஷஸ்யேஹோபகாரணாம் பவாம் த்ரிணினோ வயம்
மதக்னே ஜீரணதாம் யாது யத் த்வயோபக்ருதம் கபே நரஹ ப்ரத்யுபகாராணாமாபத்ஸ்வாயதி பாத்ரதாம்
(வா. இரா. உத்தர காண்டம், சர்க்கம் 40, சுலோகம் 21 – 24)
வானரரில் சிறந்தவனே! நீ நினைத்தபடியே நடப்பதாக. அப்படியே நடக்கும். அதில் எந்த ஐயமும் இல்லை.
இந்த உலகில் என் காதை வழங்கிவருமளவும் உன் புகழ் நிலைத்து நிற்கும். என் காதை உலகுள்ள அளவும் இருக்கும்.
நீ எனக்குச் செய்திருக்கும் பேருதவிகளில் ஒன்றே ஒன்றுக்குப் பிரதியாக ஏதேனும் தரவேண்டுமாயின் என் உயிரைத்தான் தரவேண்டியதிருக்கும். அப்படியே தந்தாலும், நீ செய்திருக்கும் மற்ற உதவிகளுக்கு எதுவும் ஈடாகத் தரமுடியாத கடனாளியாகவே நான் இருப்பேன். எனவே, உனக்கு என் இதயம் என்றென்றும் கடனாளியாகவே இருக்கட்டும். உனக்கு நான் எதையும் திரும்பச் செய்யும் நிலை தோன்றாமலே போகட்டும். (ஏனெனில், என் உதவி யாருக்குத் தேவைப்படும்? துன்பத்தில் ஆழ்பவனுக்கு. நீயோ துன்பங்களே என்றென்றும் நெருங்க ஒண்ணாதவன். உனக்கு நான் எந்தக் காலத்தில், எப்போது, என்ன உதவியைச் செய்ய முடியும்? ஆகவே, நான் உனக்கு என்றென்றும் கடன்பட்டவனாகவே இருக்க விரும்புகிறேன்.)
இந்தப் பின்னணியில், கம்பனுடைய வாக்குக்குத் திரும்புவோம். இப்போது அனுமனை, இராமன் தழுவுகிறான் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அனுமனுடைய தராசு என்ன சொல்லும்? ‘உன் திருமேனியைத் தழுவுகின்ற பேறு ஒன்றே நான் செய்த(தாக நீ எண்ணும் – நான் அவ்வாறு எண்ணவில்லை) எல்லா உதவிகளுக்கும் ஈடாகிவிட்டதே! அதற்கும் மேலானது அல்லவா என்னை நீ பொருந்தத் தழுவியது!’ என்றல்லவா அனுமனுடைய பார்வை பேசும்? அதனால்தான், அந்தக் கடன் என்றென்றும் அப்படியே இருந்தாக வேண்டும் என்பதனால்தான், இராமன், ‘நீ என்னைத் தழுவிக்கொள்,’ என்றான். இப்போது இராமனுடைய கடன் சுமைதான் ஏறுகிறதே தவிர, அவன் எதையும் திரும்பச் செலுத்தவில்லை.
‘கொடுப்பதற்குப் பொருளும் இல்லை, செய்வதற்குச் செயலும் இல்லை,’ என்றான பிறகு, தன் மேனியைத் தீண்டுதல் அடியவனால் எப்படிக் கொள்ளப்படுமோ, அந்தக் கணக்கின்படி கூட, ‘கணக்கு நேராகிவிட்டது,’ என்று யாராலும், எப்போதும் சொல்ல முடியாத ஒரு சித்திரம். நேர்த்தி என்றால் அது கம்பன்.
‘பொன்உருக் கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதாத் தன்உருக் கொண்டு நின்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான்’
என்று இராம-அனும முதல் சந்திப்பின்போது, அனுமன் தன்னுடைய பேருருவை எடுத்து நிற்கும் காட்சியைப் பற்றிச் சொல்லும்போது குறிப்பான் கம்பன். ‘பொன் மலையாகிய மேரு மலை, தன்னுடைய தோளுக்குக் கூட உவமையாகச் சொல்லப்படப் போதுமாயிராத அளவுடைய தன் பேருருவை எடுத்து நின்றான், தருமத்தின் தனிமையைத் தீர்ப்பதற்காக வந்தவனான அனுமன்.’
‘தருமத்தின் தனிமை தீர்ப்பான்,’ என்ற தொடரைப் பாருங்கள். பின்பற்றுவதற்கு யாருமே இல்லாமல், தன்னந் தனியே, கேட்பாரின்றி, நாடுவாரின்றிக் கிடந்ததான தருமம் தனிமையில் வாட விடாமல், அதனைப் பின்பற்றுவார் பல்கிப் பெருகுவதற்காகத் தோன்றியவனான அனுமன். என்ன பொருத்தமான சொற்கள்!
அயோத்தியின் அரியணையைத் தாங்கியவன் அனுமன். ‘அரியணை அனுமன் தாங்க,’ என்றுதான் இராமன் திருமுடி சூடும் காட்சியைச் சொல்லும் விருத்தம் தொடங்குகிறது. இராமன் திருமஞ்சனமாட ‘நான்கு கடல்களிலிருந்தும், ஏழு வகையான நதிகளிலிருந்தும்’ நீர் கொண்டு வந்தவன் அனுமன். ‘என்னை நீ தழுவுக,’ என்று இராமன் சொன்னதும், தன் நாயகன் தனக்குச் செய்கின்ற சிறப்பின் பெருமையை நன்குணர்ந்தவனான அனுமன் என்ன செய்தான்?
என்றலும், வணங்கி நாணி, வாய் புதைத்து, இலங்கு தானை முன் தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி, பொன் திணி வயிரப் பைம் பூண் ஆரமும், புனை மென் தூசும், வன் திறல் கயமும், மாவும், வழங்கினன், வயங்கு சீரான்.
இராமன் அவ்வாறு சொன்னது, வணங்கினான். வெட்கப்பட்டான். கை கொண்டு வாயை மூடியபடி, அவ்வளவு பெரிய சேனைக்கு முன்னால், பணிவோடு, தலை கவிழந்து நின்ற ஆற்றல் மிக்கவனை தலையோடு கால் முற்றும் நோக்கி, அவனுக்கு அணிகலன்களையும், ஆடைகளையும், யானைகளையும், குதிரைகளையும் வழங்கினான். (பதில் உதவியாக அன்று. பரிவின் காரணமாக.)
தன்னைத் தழுவுமாறு இராமன், தன்னைச் சொன்னதே அனுமனுக்குப் பேருவகையைத் தந்தது. ஏனெனில்,
உதவி வரைத்தன்று உதவி. உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.
ஒருவருக்குச் செய்யும் உதவியின் அளவு, மதிப்பு, செய்யப்பட்ட செயலின் அளவையோ, கொடுக்கப்பட்ட தொகையின் அளவையோ வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை. யாருக்கு அது செய்யப்பட்டதோ, அவருடை மன நிறைவின் அளவுதான் அந்த உதவியின் அளவைத் தீர்மானிக்கிறது.
அனுமன் தோன்றுகிற முதற் காட்சியிலிருந்து, கடைசிக் காட்சி வரை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் தோன்றுவதையும், ஒவ்வொன்றும் தோன்றத் தோன்ற வெகு எளிதாக ஒவ்வொன்றையும் அனுமன் தீர்த்து வைப்பதையும் கண்டோம். தன்னுடைய ஆற்றல் தன் தலைவனால் போற்றப்பட்ட சமயம் ஒவ்வொன்றிலும் அவன் நாணம் கொண்டு நிற்பதையே காண்கிறோம்.
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-