Archive for the ‘கம்பராமாயணம்’ Category

ஸ்ரீ ஸூந்தர காண்ட மஹிமை -ஸ்ரீ திருவடி ஏற்றம் –ஸ்ரீ அர்த்த பஞ்சக மஹிமை– 

May 3, 2023

பஞ்ச பூதங்கள்
பஞ்ச பிராணன்
பஞ்ச ஞான இந்திரியங்கள்
பஞ்ச கர்ம இந்திரியங்கள்
பஞ்ச பூதம்
பஞ்ச மஹா யஜ்ஜ்ங்கள்
பஞ்ச வேதங்கள் பாரதம் பஞ்சமோ வேதம்
பஞ்ச நிலைகள் பரம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமி அர்ச்சா
பஞ்ச ஆயுதங்கள்
பஞ்ச -பாஞ்ச ராத்ர ஆகமம்
பஞ்ச ஸம்ஸ்காரம்
பஞ்ச கவ்யம் கோ மயம் பசும் சாணம் கோ மூத்திரம் பால் தயிர் நெய் -ஆநில் மேய ஐந்து

பஞ்ச முகம் -ஐந்தையும் கொண்டாடிய ஸ்லோகம்

விக்ராந்தஸ் த்வம் ஸமர்த்தஸ் த்வம் ப்ராஞ்ஞஸ் த்வம் வாநரோத்தம
யேநேதம் ராக்ஷஸ பதம் த்வயைகேன ப்ரதர்ஷிதம் –36-7-

விக்ராந்தஸ் த்வம் து -கருடனைப் போல் வீர்யம்
ஸமர்த்தஸ் நரசிம்மன் போல் ஸமர்த்தன்
ப்ராஞ்ஞஸ்தம் ஹயக்ரீவர் போல் ஞானவான் –
வாநரோத்தம–வானர தலைவன் -நடுவில்
யேநேதம் ராக்ஷஸ பதம் த்வயைகேன ப்ரதர்ஷிதம்–৷வலிமை வராகன் போல்

பஞ்ச முகம் -ஐந்தையும் கொண்டாடிய ஸ்லோகம்

—————-

அஞ்சைக் கேட்டால் அஞ்ச வேண்டாம்–அர்த்த பஞ்சகம்
ஐந்தாம் காண்டம் ஸூந்த்ர காண்டம் -ஐந்து விஷயம்
ஐந்திலே ஓன்று பெற்றான் -பாசுரத்தில் ஐந்து ஐந்துகள்
மேல் ஓட்டமாக ஐந்து பூதங்கள்
வாயு புத்ரன் -கடலைத்தாண்டி -ஆகாச மார்க்கம் ஆறு -பூமி பெற்ற பிராட்டி -நெருப்பை வைத்தவன் நம்மை அளித்துக் காப்பான்

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்–பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் தரும் ஆஞ்சநேயர் துதி…

– இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.

இப்பாடலில் இடம்பெறும் “அஞ்சிலே” எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும்,
ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவை.

முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவர் ஆஞ்சநேயர் என்பதனைக் குறிக்கும்.
அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி ஆஞ்சநேயர் இலங்கை சென்றார் என்று பொருள்படும்.
அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்து,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு -ஐந்தில் ஒன்றான பூமி தேவியின் மகளான சீதையை இலங்கையில் கண்டு என அர்த்தப்படுகிறது.
(ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்காக பூமியைத் தோண்டும் போது தோன்றியவள் சீதை)
கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் – இலங்கைக்கு
ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.

ராம பக்தனான ஆஞ்சநேயர் நமக்கு வேண்டியன எல்லாம் தந்து – அளித்து காப்பார் என்பதே இந்த 4 வரி துதிப் பாடலின் பொருள்.

ஆஞ்சநேயரை வழிபட்டால் பஞ்சபூதங்களையும் வழிபட்டதற்கு சமம்.
ஆஞ்சநேயரை வழிபடுவோர் அன்றாடம் பஞ்சபூதங்களையும் வழிபட்டவர்களாவர்.
அனுமனை வழிபடச் செல்லும் முன் அவர் மீதான துதி பாடலை அதன் பொருள் உணர்ந்து சொல்லி அனுமன் அருள் பெறுவோமாக!

ஆச்சார்ய பரமான அர்த்தம்
ஸம்ஸார சிறையில்
அஞ்சிலே ஓன்று பெற்றான் -பஞ்ச ஸம்ஸ்காரம் -மந்த்ர உபதேசம் பெற்று -திரு மந்திரத்தில் பிறந்து த்வயத்திலேயே வளர்ந்து த்வய ஏக நிஷ்டராக இருந்து
அன்று நான்  பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்

அஞ்சிலே ஒன்றைத் தாவி -அர்த்த பஞ்சகத்தில் ஒன்றை -விரோதி -நீர் நுமது என்றவற்றை அகற்றி

அஞ்சிலே ஓன்று ஆறாக -கர்ம ஞான பக்தி யோகம் சரணாகதி மார்க்கம்தாண்டி -ஆச்சார்ய அபிமானம்
காலைப் பிடித்து திண்ணிய கழல்

ஆர் உயிர் காக்க -ஜீவாத்மாவை

அஞ்சிலே ஓன்று அணங்கை -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை
மண்டினார் உய்யல் அல்லால் வேறே யார் உய்யலாகும்

அவனுக்கு பிராட்டி ஸ்தானம் ஜீவர்கள் எல்லாம்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் -பித்ரு லோகம் -ஸ்வர்க்க லோகம் நரக லோகம் -கைவல்யம் தாண்டி ஸ்ரீ வைகுண்டம் அடைந்து

அநுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம்

ப- நெருப்பு –புண்டர பூமி –மந்த்ரம் காற்று திருவாராதனம் நீர் -பஞ்ச பூதங்களும் இவற்றிலே உண்டே

ஐந்து முகம் நம்மாழ்வார் –
தானான -தலைவி தாய் தோழி ஆச்சார்யர்

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ் வினையும் 
வாழ்வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழின் இசை வேதத்தியல்

ஆழ்வார் திருநகரியில் இருப்பவர்களுக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த
வீணையின் இசை போன்ற திருவாய்மொழிப் பாசுரங்கள் மிகவும் உயர்ந்தவனான எம்பெருமான்
ஸ்ரீமந் நாராயணனின் தன்மையையும்,
நித்யமாக இருக்கும் ஜீவாத்மாவின் தன்மையையும்,
ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த உபாயத்தின் தன்மையையும்,
அந்த எம்பெருமானை அடைந்து அனுபவிக்கும் நிலைக்கு விரோதியாய்ச் சேர்ந்து இருக்கும் முன்னை வினைகளின் தன்மையையும்,
வாழ்வாகிற உயர்ந்த புருஷார்த்தத்தின் தன்மையும் விளக்கிக் கூறும்.

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: |
ப்ராப்துபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்திவிரோதி ச ||
வதந்தி ஸகலா வேதாஸ் ஸேதிஹாஸபுராணகா: |
முநயஶ்ச மஹாத்மநோ வேதவேதார்த்தவேதிந: || [ஹாரீத ஸ்ம்ருதி 8-141]

அறிய வேண்டும் அர்த்தம் எல்லாம் இதற்குள்ளே உண்டு; அதாவது அஞ்சர்த்தம்” என்கிறார் பிள்ளைலோகாசார்யர்.

“மூன்றில் சுருக்கிய ஐந்தினையும்
உயர் திண் அணை ஒன்று
பயில் ஏறு கண் கரு
வீடு சொன்னால் ஒருக்கொண்ட நோற்ற நாலும்
எம்மா வொழிவில் நெடுவேய் என்கிற இருபதிலே விசதமாக்கி
எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்….” (ஆச்சார்ய ஹ்ருதயம் –211)

————–

கூஜந்தம்  ராம  ராம  இதி மதுரம்  மதுராக்ஷரம் |

ஆருஹ்ய  ஹவிதா  சாகாம்  வந்தே  வால்மீகி  கோகிலம் ||
(குயில் ஒன்று கூவும்
மதுவாய்ச்  சொல்  மிழற்றிக்
கற்கண்டு  போல்  இனிதாய்
ராம  ராம  என  நித்தம்
கவிதையின்  கிளைமீது  வீற்ற
புவிபுகழ் முனி வால்மீகிப்
பதமலர்  பணிவதென் பேறே.)
வால்மீகேர்  முனி  ஸிம்ஹஸ்ய  கவிதா  வன  சாரிண: |
ச்ருண்வந்  ராமகதா  நாதம்  கோ  ந  யாதி  பராங் கதிம் ||  )
(கவிதையாம்  கானில்  திரியும்
தவமுனி  வால்மீகிச்  சீயம்
எழுப்பிடும்  ராம   நாதம்
கேட்டவர்   எவர்தான்  செல்லார்
கேடிலா  உயர்ந்த  மார்க்கம் )
ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்–
அழகான ஸூந்தர காண்டத்தில் ராமபிரான் அழகு;
அன்னை சீதா அழகு;
ஸூந்தர காண்டம் கதை அழகு;
அசோக வனம் அழகு;
வானரர்கள் அழகு;
ஸூந்தர காண்டத்தில் உள்ள சொற்கள் அழகு;
நல்ல பலனைக் கொடுக்கும் மந்திரங்கள் அழகு;
காண்டம் முழுவதும் காணப்படும் அனுமன் அழகு.
ஸூந்தர காண்டத்தில் எல்லாமே அழகு தான்
இருபெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தில் ராமாயணம் முந்திய காவியம்.
அது நமக்கு அரிய பொக்கிஷங்களான இரண்டு ரத்தினங்களை நமக்கு தந்திருக்கிறது.
ஒன்று பக்தர்களின் ரத்தினமான அனுமன்;
மற்றொன்று மந்திரங்களின் ரத்தினமான சுந்தர காண்டம்.
ராமா என்ற நாமம் ஒன்றையே சதா ஜெபிக்கும் பக்தர்களில் தலைசிறந்த ரத்தினமாகத் திகழ்பவன் அனுமன்.
ஸூந்தரன் -அஞ்சனா தேவி சூட்டிய இயல் பெயர்
அஞ்சனை மைந்தன் வாயு புத்ரன் ஹனுமான் காரணப் பெயர்கள்
இவன் பெருமையை முழுவதுமாக சொல்லி –
திருவடி நடந்தவையும் திரிசடை கனவு வரப் போவதையும் சொல்லி மொத்த ஸ்ரீ ராமாயணமும் இதில் அடங்கும்
ராமா என்னும் இனிய திருநாமத்தைச் சொன்னால் நமக்கு அனுமனின் அருள் கிடைக்கும்.
மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் கை கண்ட மருந்தாக உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்டப் பாராயணம்.
ராமனைப் பிரிந்து துன்பத்தில் துவண்ட சீதாதேவியின் துயர் துடைக்க ராமநாமத்தின் மீது கொண்ட
நம்பிக்கையால் கடலையும் தாண்டியவன் ராமபக்த அனுமன்.
அனுமனுக்கு ஸூந்தரன் என்ற பெயரும் உண்டு
ஆகவே ஸூந்தரகாண்டம் .
அனுமனின் மகிமையை நன்கு விளக்கும் அழகு கொண்டதால் ஸூந்தர காண்டம் .
சீதையும் ராமனும்  ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து அறிந்து கொள்ளும் மகிழ்ச்சியான பகுதி என்பதால் ஸூந்தரகாண்டம்.
அழகே உருவான அன்னை சீதையின் மனம் அனுமனைக் கண்டு மகிழ்ச்சி யடைவதால் ஸூந்தர காண்டம்
எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்  .
அழகென்பதே மகிழ்ச்சி தானே?
கடல் தாவுப் படலம் .  காப்புச் செய்யுளுடன் தொடங்கியது
இலங்கை நகரை  தனது விஸ்வரூப வடிவில் கண்ட அனுமன் கால்கள் ஊன்றி யெழுந்ததால்  மகேந்திரமலையில் ஏற்படும் அதிர்வுகளை,’
வன் தந்த வரி கொள் நாகம், வயங்கு அழல் உமிழும் வாய,
பொன் தந்த முழைகள் தோறும் புறத்து உராய்ப் புரண்டு பேர்வ-
நின்று, அந்தம் இல்லான் ஊன்ற-நெரிந்து கீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன் வயிறு கீறிப் பிதுங்கின குடர்கள் மான.’–என்று  வார்த்தைகளிலேயே
வீரம் தெறிக்க  கம்பன் அழகுற விளக்குவதை ரசிக்கும்பொழுதில்  …
மைநாக மலை  அனுமனிடம்  வேண்டிக் கொண்டது
‘என்னிடத்தில் தங்கி யான் செய்யும் விருந்தினை அங்கீகரிப்பாயாக’ என்று  .
அனுமன் அதற்கு  மந்தகாசசிரிப்பை உதிர்த்து விட்டு  சொல்கிறானாம் ….

வருந்தேன், அது என் துணை வானவன் வைத்த காதல்;
அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால்,
பெருந்தேன் பிழிசாலும் நின் அன்பு பிணித்த போதே,
இருந்தேன்! நுகர்ந்தேன்! இதன் மேல் இனி ஈவது என்னோ?

(வருந்தேன்,அருந்தேன்,பெருந்தேன்,இருந்தேன்! நுகர்ந்தேன்….சஹானா ராகத்தில் அமைந்த பழைய பிரபல திரைப் பாடல்  )

அன்பின்  வலிமையை அதே நேரம் தன பணியின் நோக்கத்தை  அழகாக சொல்கிறார் சொல்லின் செல்வன் அனுமன் .

 என் துணைவனான ராமன்  என் மீது   வைத்துள்ள அன்பு  என்னைக் களைப்படையச் செய்யாது
 என் ஆசை நிரப்பின் அல்லால் ..என் மனோ ரதம் நிறைவேற்றலல்லாமல்  இனி இப்பொழுது யான் யாதும் அருந்தேன் .
பெருந்தேன் பொழி சார நின் அன்பு  மிகுதியான தேனைச் சொரிகின்ற  சாரல்=பக்கங்களை (தாழ்வரைகளை)  உடைய உன் பிரியமானது என் மீது உண்டான போதே
இருந்தேன் நுகர்ந்தேன் மலையான உன் மீது தங்கி விருந்துண்டவனானேன்)

இதின் ஊங்கு –இந்த அன்பினைக் காட்டிலும்
இனி=இன்னமும் ,
ஈவது==நீ எனக்குக் கொடுக்கக் கூடியது  –
உண்டே —உண்டோ ?(இல்லை யென்கிறபடியாக)

‘ராமன் எனக்குக் கொடுத்திருக்கும் வேலையைக் கச்சிதமாக முடிக்கவேண்டும், ,
அந்த  வேலை தீர்ந்தால்தான் என்னுடைய வயிறு நிறையும்.
அதற்காக  சென்றுகொண்டிருக்கும் என்னை, உன்னுடைய அன்புதான் கட்டிப்போட்டு நிறுத்திவிட்டது.
பிழிந்த தேனைப்போல் இனிமையான உனது இந்த அன்பைவிடச் சிறந்த விருந்து உண்டா?
அந்த அன்பை ஏற்றுக்கொண்ட அந்தக் கணத்திலேயே நான் இங்கே தங்கி சாப்பிட்டு விட்டேன்  என்றாகிறதே ?”என்பதை
கம்பன் ,அனுமன் வாயிலாக சுந்தரத் தமிழில் பாடலாய்க்கொடுத்துள்ளது பாகாய் இனிக்கிறது அல்லவா?

அனுமான் ‘இந்த அன்பைவிடச் சிறந்த விருந்து உண்டா?’ என்று கூறுவது போலவே ராமரும் குகனுக்கு கூறுகிறார். ..

அரிய, தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே?
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்; எம்மனோர்க்கும்
உரியன; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ? என்றான்.

‘’சுந்தர காண்ட சுருதி உரைத்திடும்
மந்திர  சக்திமிகு  மாருதியே, -எந்திர,
சம்சார  தன்னிலே, சந்தோஷம் காண ருத்ர,
அம்சாவ  தாரா அருள்’’….

‘’அனுமந்த ராயா, அசகாய சூரா,
தினமுந்தன் பாதம் தொழுவேன், -எனையிந்த,
பாழும் மனமென்ற, ஆழியைத் தாண்டிடத்,
தோழா கொடுத்திடு தோள்’’….கிரேசி மோகன்….

பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்து – பத்தாம் திருமொழி –
‘நெறிந்த கருங்குழல் மடவாய்! நின்னடியேன் விண்ணப்பம்’ என்று ஆரம்பிக்கும் பத்து பாசுரங்களும்
சுந்தர காண்டத்தில் அனுமன் பிராட்டியினிடத்தில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு
இராமாயணம் முழுவதையும் சொல்லும் பாசுரங்கள்.
இந்தப் பத்துப் பாசுரங்களையும் எங்கள் அகத்தில் தினமும் சேவிப்போம்.
தேனான தமிழில் தித்திக்கும் பாசுரங்கள்.

—————–

ததோ ராவணநீதாயாஃ ஸீதாயாஃ ஷத்ருகர்ஷநஃ.

இயேஷ பதமந்வேஷ்டுஂ சாரணாசரிதே பதி৷৷5.1.1৷৷

ஸம்ஸார சிறையில் மீட்க்கப்புறப்படும் ஆச்சார்யர் போல்
கணையாழி பகவத் பிரசாதம்
இதில் தான் ஸூஷ்ம அர்த்தங்கள்

காலால் அளந்தவனைப் போல் வாலை உயர்த்திப் பறந்தான்

ராவணன்   காவலில் சீதாபிராட்டி இருந்த போது, சீதாபிராட்டியைத் தேடி இலங்கை வந்தார் ஹனுமார்.
அங்கு மரத்தடியில் அமர்ந்து இருந்த சீதாபிராட்டியை நோக்கினார்.
முதலில் அவளது காலில் இருந்த மெட்டியை நோக்கிப் பார்த்த பின்,
அவளது நெற்றியில் உள்ள குங்குமத்தைப் பார்த்தபோது,
அங்கு குங்குமத்திற்குப் பதில் செந்தூரம் இருந்ததைக் கண்டார்.

அம்மா நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக ஏன் செந்தூரம் உள்ளது என ஹனுமான் கேட்க,
அதற்கு சீதாபிராட்டி, ‘மைந்தா, என் அன்பான கணவரின் நினைவு மட்டும் தான்,
எப்போதும் என்னுடம் இருக்க வேண்டும் என நினைத்தே, செந்தூரத்தை இட்டுக் கொண்டேன்.
ஏன் என்றால் தூய்மையான செந்தூரத்தை,எத்தனை அழித்தாலும் அது முழுவதுமாக அழியாமல் அதன் கறையை விட்டு வைக்கும்.
அது போலத்தான் என்னிடம் இருந்து என் கணவரின் நினைவை மாற்றவே முடியாது என்பதை காட்டவே,
அதை இட்டுக் கொண்டேன் என்றாராம் சீதாபிராட்டி.
அதைக் கேட்ட ஹனுமார் புல்லரித்துப் போய், ராமரே என் நினைவில், மற்றும் நான் செய்யும் அனைத்திலும் இருக்கட்டும்
என்ற மனதோடு,ராம நாமத்தை ஜபித்தபடி தனது உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டாராம்.
அதனால் தான் ஹனுமாருக்கு செந்தூரம் இடுகிறோம்.

ஸிம்ஹிகா ராகுவின் அம்மா குடல் மாலை சாத்தி -proteen மிக்கு -ஆகவே வடை மாலை தெற்கும் -ஜாங்கிரி மலை வடக்கே யும்
ஆகவே ஹனுமான் ஸ்திதியால் ராகு கேது பீடைகளுக்கு பயப்பட வேண்டாம்
அன்பால் வந்த தடையை அன்பால் வென்று
அமரர்கள் அனுப்பிய தடையை அறிவால்
உண்மையாக வந்த தடையை உறுதியால் வென்று -மூன்றையும் கடைந்து

———————–

ஸ்ரீ திருவடியின் மஹிமை காட்டும் -ஸ்ரீ கம்பனின் கவி அமுதம் —

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இஃது இயம்புவது யாது எனில்
பொய்யில் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வமாக் கவி மாட்சி தெரிவிக்கவே

——–

ஸூரியனை விழுங்கியவன்
வாயு புத்திரன், அஞ்சனை மைந்தன் என்று போற்றப் படுகின்ற அனுமன் தன் தாயிடம் இந்தக்
காட்டில் தான் எந்தப் பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று கேட்க,
அதற்கு அஞ்சனை இந்தக் காட்டில் உள்ள சிவந்த நிறப் பழங்களை நீ உணவாகச் சாப்பிடு என்று கூறினாள் .
இதனை
“கை அஞ்சு ஆயுதம் உடைய அக் கடவுளைக் கண்டும் மெய் அஞ்சாதவன்”  என்ற பாடல் வரிகளில் அறியலாம் .

அனுமன் பிறந்த பொழுதே இளம் ஸூரியனைக் கனிந்த பழம் என்று கருதி சிறிதும் அச்சம் கொள்ளாமல்,
அதனைப் பிடிக்கச் சென்றான் என்னும் போது அனுமானின் வீரத்தை அறிய முடிகிறது
கம்பர் சிறு வயதில் இருந்தே அனுமானை வீரம் கொண்ட வலிமையானவனாகவே படைத்துக் காட்டுகிறார் –

பல வரங்களைப் பெற்றவன்
பிரம்ம தேவன், தேவர்களிடம் அஞ்சனையின் மகன் அனுமனுக்கு, பற்பல வல்லமைகளையும் ,
அரிய வரங்களையும், அளிப்பதோடு,
அனுமன் நிறைத்த உருவத்தை எடுத்து நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லும் திறமை ஏற்படவும்,
போரில் தோல்வி என்பதே கிடையாது என்றும்
இவனுடைய பாதையில் யாரும் குறுக்கிட்டு இவனைத் தடுக்க முடியாது என்றும்,
தன்னுடைய பிரம்ம தண்டத்தால் இவனுக்கு மரணம் ஏற்படாது என்றும்,
சிரஞ்சீவியாக வாழ்வான் என்று அருளி வரம் அளித்தான்.

இதனை
“ஒப்பு இறையும் பெறலரிய ஒருவன்”
“எவரினும் அதிகம் உயர்ந்தான்”
“ஊழி கடந்தீர்”
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என் இருத்தி”
என்ற பாடல் வரியில் கம்பர் எடுத்துக் காட்டுகிறார்.

மேலும் அனுமனுக்கு தண்ணீர் தீ, ஆயுதம்,
அஸ்திரம், வியாதி போன்ற வற்றாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதையும் கம்பர்,
வெப்புறு செந்தீ நீர் விளியாளும் விளியாதீர்
செப்புறு தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்”-என்ற பாடல் வரிகளின் மூலம் வெளிப் படுத்து கிறார்.

எந்த சூழலிலும் , யாராலும், அனுமனுக்கு அழிவில்லை என்பதை தனது படைப்புத் திறத்தின் மூலம் எடுத்துக் காட்டுகிறார்.

கல்வி கற்றல்
பல அரிய வரங்களைப் பெற்ற அனுமன், சூரிய பகவானிடம் இருந்து ரிக்வேதம், யஜூர் வேதம், சாமவேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்கள், அறுபத்தி நான்கு கலைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான்.

ஸூர்யனின் எதிரில் நின்று கொண்டே வேத சாஸ்திரங்களையும் அதன் ரஹஸ்யங்களையும்
உப ஸாஸ்த்ரங்களையும் அனுமன் கற்றுக் கொண்டான் இதனை
உலகு எங்கும் பேர் இருள் நீக்கும் பகலோன் முன் தேர் முன் நடந்தே
ஆரிய நூலும் தெரிவுற்றீர்  -என்ற வரிகளில் எடுத்து உரைக்கிறார் .

மதி நுட்பம் கொண்டவன் –
சீதையைத் தேடி இராமனும் இலக்குமனனும் சென்ற போது அனுமன் எதிர்படுகிறான்
அவர்களை பார்த்த கண நேரத்திலே அவர்களை நன்றாக எடை போடுகிறான்
அனுமன் அவர்களை பற்றி

தருமமும் தகவும் இவர் தனம் எனும் தகையர் இவர்
கருமமும் பிறிது ஓர் பொருள் சுருதி அன்று அது கருதின்
அரு மருந்து அனையது இடை அழிவு வந்துளது அதனை
இரு மருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள்--என தனது மதி நுட்பத்தால் உணர்ந்து விடுகிறான்

அனுமனின் ஆற்றல் மூலம் தான் சீதையைக் கண்டுபிடிக்க முடியும் என்பதையும்
அவனுக்கு நிகர் யாரும் இல்லை என்பதையும் கம்பர்
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால் என்று இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ -என்கிறார் –

பிலத்தைப் பிளந்தவன்
அனுமன் வானர வீரர்களின் பயத்தை நீக்கி ஆண் சிங்கம் போல் கைகளைத் தூக்கி பேர் உருவம் எடுத்து நிமிர்ந்தான் என்பதை கம்பர் –
நடுங்கன் மின் எனும் சொலை நவின்று நகை நாற
மடங்கலின் எழுந்து மழை ஏற அரிய வானத்து
பெருங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற
வெறும் கைகள் சுமந்து நெடு வான் உற நிமிர்ந்தான் –என்ற பாடலில் அனுமனின் ஆற்றலை வெளிப்படுத்துகிறார் –

தோள் கொடுத்தவன்
வேறு காட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும்
ஏற நீ ஐய என்னுடைத் தோளின் மேல் என்றான்-என்றும்

ஏறினான் இளம் கோளரி இமையவனாகி
கூறினார் எடுத்து ஆர்த்தது வானவர் குழுவும்
நூறு பத்துடைப் பத்தியின் நொறில் பரி பூண்ட
ஆறு தேரினும் அகன்றது அவ்வனுமன் தன் தடம் தோள் -என்று அனுமானின் தோள் திறமும் வலிமையையும் எடுத்துக் காட்டுகிறான்

சொல்லின் செல்வன்
இம்மலை இருந்து வாழும் எரி கதிர்ப் பாதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன் தேவ நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையன் ஏவ வினவிய வந்தேன் என்றான் –
ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவு என்றும்
வேற்றுமை இவனோடு இல்லையாம் என விளம்பலுற்றான்

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார் கொல் இச் சொல்லின் செல்வன்
வில் ஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ -என்று பெருமாள் பாராட்டினார் –

தெற்கு திசையில் இருந்து வரும் போதே ராமனை வணங்காமல் பிராட்டி இருக்கும் தென் திசையை வணங்கி
நிலத்தில் வீழ்ந்து சீதாப் பிராட்டியின் நிலைமையைக் -கற்புத் திண்மையை -குறிப்பால் உணர்த்தினார்
எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்
மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான் –

கண்டனன் கற்பினுக்கு அணியை கண்களால்
தென் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்
அண்டர் நாயக இனி துறத்தி ஐயரும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்

———————
அசோக வனத்தில் இருக்கும் சீதாபிராட்டி அனுமனை இராமதூதன் எனத் தெளிந்த பின் அவனிடம்
~~ அய்ய! சொல்! அனையன் மேனி எப்படித்து அறிவி || என்று கேட்கிறாள்.
இதற்கு அனுமன் இராம அழகை ~~அடி முதல் முடி ஈறாக|| அறிவுறச் சொல்லத் தொடங்கினான்.
இராம அழகு
~~படியெடுத்து உரைத்துக் காட்டும் படித்து அன்று: படிவம்,பண்பின்
முடிவுள உவமைக்கு எல்லாம் இலக்கணம் உரைக்கின் முந்தா||
என்று படி எடுக்கமுடியாத அளவிற்குப் பெருமையும், உவகைளால் எட்டமுடியாத அழகும்
கொண்டு இருப்பதாக அனுமன் கருதுகின்றான்.
இராமபிரானின் உருவ நலனைப் பின்வரும் நிலையில் அனுமன் எடுத்துக்காட்டுகின்றான்.
திருவடிகள்
சேயிதழ் தாமரை போன்றன என்றால் தாமரை மலரும் குவியும். ஆனால் திருவடிகள் மலர்ந்தே இருக்கும்.
பவழத்தை உவமை காட்டினால் பவழம் இராமபிரானின் கால்களின் சிவப்பிற்குப் பொருந்தாமல் குவளை மலர்போல பொலிவழியும்.
திருவடி விரல்கள்
இராமபிரானின் கால் விரல்களுக்குக் கற்பக மரத்தின் மொட்டுகள் ஒக்கும் என்றாலும்,
பவழத்தின் இளங்கொடி ஒக்கும் என்றாலும் அவை ஒரு புறம் அழகற்றுக் கிடக்கும்;.
ஸூரியனின் இளங்கதிர்; போன்று இராம பிரானின் கால் விரல்கள் ஒளி பெற்றுத் திகழ்ந்தன என்றால் அது சரியாகும்.
திருவடி விரல்களின் நகங்களின் அழகு
திருவடியின் விரல்களில் உள்ள நகங்கள் பிறைச் சந்திரனைப் போன்றன என்றால் திங்கள் பத்து என்ற எண்ணிக்கையில் இல்லை.
விரல்;கள் வயிரம் போன்றன என்றால் அவற்றில் திரட்சி இல்லை. எனவே விரல் நகங்களுக்கு உவமை கூற இயலாது.
திருவடிகளின் செய்கை
நிலவுலகையே அளந்து, கடந்து நிற்கும் திருவடிகள் நிலத்;தில் வந்து பொருந்தின,
காட்டில் நடந்தன என்றால் அவற்றின் எளிமை பாராட்டத்தக்கது.
இராமன் உலகினைக் கடந்து நிற்பவன் என்று ஞான நூல்கள் உரைக்கின்றன.
அவன் நில உலகில நடந்தான் என்றால் அந்த நூல்கள் சொன்ன கருத்துகள் முரண்பாடுகள் உடையதாகும்.
ஞான நூல்களால் உணரப்படாத திருவடிகளின் பெருமையை உரைத்துவிட முடியுமா?
இறையடியார்கள் இறைவின் பாதங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பர்.
இறைவன் பாதங்களை அடையும் சரணாகதி நிலையே உயிரை உய்விக்க வல்லது என்ற நிலையில்;
இங்கு அனுமன் உயிர்களுக்கு இறைவனின் பாதச் சிறப்பினை எடுத்துரைப்பதாக சுந்தரகாண்டம் படைக்கப்பெற்றுள்ளது.
கணைக்கால்
கணைக்கால் அம்பறாத் தூணியை ஒத்திருந்தது என்று சொல்லாம் என்றால் தன்னை அடைந்தவரைக் காக்கும் சிறப்புடையது இறைவனின் கால்கள்.
அக் கால்களுக்கு அழிக்கத் துணைபுரியும் அம்புகள் வைக்கும் புட்டியை உவமை காட்டுவது பொருத்தமாக இருக்காது.
தொடைகள்
இராமபிரானின் தொடைகள் கருடனின் பிடரியை, மதயானையின் துதிக்கையை ஒத்திருந்தன என்று சொன்னால் அவை நாணம் அடையும்.
அந்த அளவிற்கு அழகு வாய்ந்தனவாக தொடைகள் அமைந்திருந்தன.
திரு வுந்தி
வலப்புறமாகச் சுழித்து ஓடும் கங்கையாற்றின் நீர்ச்சுழலை ஒத்து அமைவது திருவுந்தி என்று சொன்னால் அதுவும் பொருந்தாது.
மகிழம்பூவை ஒத்தது என்று சொன்னாலும் அது பொருந்தாது.
திரு மார்பு
மரகத மலை குறுகும்படியாக அகன்ற மார்பு இராமனுடையது.
அதில் நீங்காமல் உறையும் திருமகள் பெற்ற செல்வமே உயர்ந்த செல்வம்.
இதனில் சீதாபிராட்டி இராமனின் நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கிறாள் என்ற குறிப்பும் உள்ளது.
கைத் தலங்கள்
இராமனின் கரங்கள் தாமரை போன்று காணப்படுவதால் அக்கரங்களைச் சுற்றிலும் வண்டுகள் மொய்த்துக் கொண்டே இருக்கும் பெருமை மிக்கது. அக்கரங்களுக்கு ஐராவத யானையின் துதிக்கையை உவமை காட்டினால் ஓரளவிற்குப் பொருந்தும்.
கைத்தல நகங்கள்
இராமனின் கை சூரியனைக் கண்டால் மலரும் தாமரையை அழகில் ஒத்தன.
அவை வச்சிர யாக்கை உடைய இரணியனைப் பிளந்த செயல் உண்மையானதுதானா என்று அதன் மென்மைத்தன்மை குறித்து ஐயப்படுவார்கள்
ஆனால் அவர்கள் நகங்களைப் பார்த்தால் அச்செயல்; உண்மைதான் என்று காட்டும் அளவிற்கு வலிமையைக் காட்டி நிற்கும்.
திருப் புயங்கள்
புயங்களுக்கு மலையை உவமை காட்டலாம் என்றால் பொருந்தாது.
ஏனெனில் இராமனின் தோள்கள் போல் மலைகள் திரட்சியும் ஒளியும் உடையன அல்ல.
திருமகள் மலையில் சேர்ந்திருப்பதில்லை. மலையில் வில்லின் நாண் புரளாது.
இராமனின் தோள்கள் போல மலைகள் புகழ்பெற்றன அல்ல.
திரு மிடறு
இராமனின் கழுத்துக்கு பாக்கு மரத்தையும், உப்புக்கடலில் கிடக்கின்ற சங்கையும் உவமை காட்டலாம் என்றால் அது பொருந்தாது.
திருமாலின் இடது கரத்தில் உள்ள பாஞ்சசனியம் என்ற சங்கு ஒருவழியில் உவமையாகலாம்.
திரு முகம்
இராமபிரானின் திருமுகம் சந்திரன் போன்றது என்று சொன்னால் அது தேய்வும் வளர்வும் இல்லாத நிறைத்தன்மை உடையது.
எனவே அது பொருந்தாது.
அவரின் முகத்திற்கு தாமரையை உவமை காட்டினால் கண்களுக்கு எதனைக் காட்டுவது.
திருவாய்
தாமரை மலர்போன்றது திருவாய் என்றால் தாமரை அது கேட்டு நாணும்.
பவழம் திருவாய்க்கு உவமையாகும் என்றால் அது வெண் நகை புரியாது.
இனிய சொற்களைப் பேசாது.
பற்கள்
இராமனின் பற்களுக்கு முத்து, நிலவு, அமுதம், முல்லை, மயிலிறகின் அடிக்குருத்து, புன்னைமொட்டு, அறம்
என்னும் வித்திலிருந்து கிளைத்த முளை ஆகிய யாவும் பொருந்துமா?
அறங்கள் முப்பத்திரண்டு. அதுபோன்று பற்களும் முப்பத்திரண்டு என்று குறித்திருப்பது இங்குக் கருதத்தக்கது.
திருமூக்கு
இந்திர நீலக்கல்லில் எழுந்த ஒளி, மரகதமணியின் ஒளித்திரட்சி ஆகியன இராமபிரானின் மூக்கிற்கு ஒப்புகையாகும் என்றால் அது பொருந்தாது. இந்திரகோபப்பச்சியைக் கவ்வ வரும் பச்சோந்தியும் மூக்கிற்கு உவமையாக அமையாது.
திருப்புருவங்கள்
இராமனின் புருவங்கள் கரன் முதலான அரக்கர்களைக் கண்டதும் வளைந்தன.
இதன் காரணமாக வில்லும் வளைந்தது. அரக்கர்கள் அழிந்தனர். இனி அரக்கர் குலம் அழந்தது என்ற வாழ்த்தொலி கேட்டது.
அந்த வளைந்த வில் போன்றது இராமபிரானின்; புருவங்கள்.
இங்கு இராமபிரான் அரக்கர்களை அழிக்க வருவார் என்ற செய்தியும் இணைத்துச் சீதாபிராட்டிக்கு உணர்த்தப்பட்டு
ஆறுதல் அளிப்பதாக இப்பகுதி அமைகிறது.
திருநெற்றி
எட்டாம் நாள் சந்திரன் வளர்தல், தேய்தல் இல்லாமல், நாள்தோறும் தோன்றல் மறைதல் இல்லாமல்,
இராகு என்ற கோளால் விழுங்கப்படாமல் இருந்தால், களங்கமே இல்லாமல் இருந்தால் இருளின் அழகான நிழலில்
பல காலம் இருந்தால் இராமபிரானின் நெற்றிக்கு உவமையாக அமையலாம்.
திருக்குழல்
நீண்டு, திரண்டு, பளபளப்புடன், கருத்து, நீலமணியின் நிறத்தைப்பெற்று, முறுக்குண்டு, பின்னே தாழ்ந்து,
நுனி சுருண்டு, தெய்வத்தன்மை பொருந்திய இயற்கைமனத்துடன் திகழ்ந்த இராமபிரானின் திருமுடி சடையாக மாறிவிட்டது.
இதனை மழை என்று உவகை காட்டுதல் பொருந்தாது.
நடை
அரசு ஏற்கத் துணிந்த நாளினும், ஆட்சிச் செல்வம் கிடைக்காமல் துன்பம் நிறைந்த காட்டில் வாழும் நாளிலும்
தன்தன்மை மாறாத நடையை உடையவர் இராமபிரான்.
இவரின் நடை காளையிடத்தில் உள்ளது என்று சொன்னால் மதயானை வருந்தும்.
இவ்வாறு இராமபிரானின் அழகை    அடிமுதல் முடிவரை சீதாபிராட்டியிடம் அனுமன் எடுத்துரைக்கிறான்.
மேற்கண்டவற்றில் இருந்து ஒட்டுமொத்தமாகப் பெறப்படும் செய்தி உவகைளுக்கு அப்பாற்பட்ட வடிவழகு உடையவன் இராமன்
அல்லது இறைவன் என்பதை உணரமுடிகின்றது.
மேலும் சங்கப்பாடல்களிலும், காப்பியங்களிலும் பெண்களின் அழகு கேசாதிபாதமாகச் சுட்டப்பெறும்.
பெண்களின் அழகை வருணிக்க உவமைகள் பலவற்றைப் புலவர்கள் புனைந்தேத்துவர்.
ஆனால் கம்பர் இராமன் என்ற ஆண்மகனை அழகின் உயர்நிலையில் படைக்கின்றார்.
இது மிகப்பெரிய வேறுபாடாக கருதத்தக்கது.
ஒரு ஆண்மகன் மற்றொரு ஆண்மகனின் உருவ அழகை வருணிக்கும் நிலைப்பாட்டில் கம்பரின் அழகியல் உணர்வு இங்குச் செயல்பட்டுள்ளது. அனுமனைச் சற்று மறந்து அந்த இடத்தில் கம்பனை அமரவைத்து இராம அழகைத் தரிசித்தால் அது வாசகனுக்கு இன்னும் அழகுணர்வினைக் கூட்டும். கம்பர் கொண்டுள்ள இராம பக்தியை விளக்கும். இராம அழகில் உவரு நலன் காட்டப்பெறுவதைவிட
இராமனின் வீரம், வலிமை, எளிமை, புகழ் ஆகியன எடுத்துரைக்கப்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
இதே கம்பர் அனுமன் சீதையின் அழகை இராமனிடம் கூறும்போது கையாளும் அழகுணர்வு முற்றிலும் வேறுபட்டு அமைகின்றது.
சீதையைக் கண்ட அனுமன்,  சீதாபிராட்டியின் நிலையையும் அவளின் இருப்பையும் காட்டுவதாக இருபது பாடல்களைப் படைத்துள்ளார் கம்பர். இப்பாடல்களில் சொல்லடுக்குகளையும், சொல் விளையாட்டுகளையும் கம்பர் உத்திகளாகப் பயன்படுத்தி அழகுணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இவ்வழகு வெளி;ப்பாட்டில் வருணனைகளோ, உவமைகளோ, கேசாதிபாதமோ, பாதாதி கேசமோ இடம்பெறவில்லை.
ஆனால் படிக்கும் வாசகன் இராமனின் அழகைக் கூறும் பாடல்களை விட சீதையின் அழகு கூறப்படும் பாடல்களை அதிகம் படித்து இன்புறுகின்றான். இதற்கு உரிய காரணங்கள் ஆராயப்படவேண்டியதாகும்.
சீதையின் அழகை குடும்பப் பெருமையில் இருந்து கூறத் தொடங்குகிறான் அனுமன்.
அதிலிருந்து தொடங்கி இராவணன் சிறையில் சீதாபிராட்டியைத் தான் கண்டதுவரை எடுத்துரைக்கின்றான்.
அனுமனின் இக்கருத்து வெளிப்பாட்டில் கதைக்கோப்பு இடையீடுயின்றி வளர்த்துச் செல்லப்பெற்றுள்ளது.
குடும்பப் பெருமை
சீதாபிராட்டி இராமபிரானுக்கு ஏற்ற மனைவியாகவும், தசரத மன்னனுக்கு ஏற்ற மருமகளாகவும்,
மதிலை ஜனக மன்னனின் புதல்வியாகவும் உரிமை, வாய்மை, தகைமை ஆகிய பண்புகளுக்கு இலக்கணமாக விளங்குகிறாள்.
பொறுமை
பொன் அலது இல்லை பொன்னை ஒப்ப எனப் பொறையில்; நின்றாள்
தன் அலது இல்லைத் தன்னை ஒப்பு எனத்தனக்கு வந்த
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள்
எனஅலது இல்லை என்னை ஒப்புஎன எனக்கும் ஈந்தாள் (1306)-என்ற இப் பாடலில்
சீதை பொன் போன்று பொறுமையுடன் இருந்தாள் என்ற பண்பு எடுத்துரைக்கப்படுகிறது.
இப் பாடலில் அலது, இல்லை, ஒப்பு, என ஆகிய சொற்கள் அடி தோறும் பயின்று வந்து சொல்லழகு செய்கின்றன.
குலப் பெருமை
சீதை இராமனின் குலப்பெருமைக் காத்து நிற்கிறாள். தன் குலத்தையும் சிறப்புறச் செய்தாள்.
இராவணனின் குலத்தைக் கூற்றுவனுக்குக் கொடுத்தாள். தேவர்கள் குலமும் இதனால் வாழ்ந்தது.
வானவர் குலத்தையும் வாழ வைத்தாள்.
இப்பாடலில் குலம் என்ற சொல் அடிதோறும் வந்து இனிமை கூட்டியுள்ளது.
இற்பிறப்பு, இரும்பொறை, கற்பு
வில்லை உடைய இராமபிரானே, இலங்கையில் சீதை என்ற பெண்ணைக் காணவில்லை. உயர்குடிபிறப்பு, பொறுமை, கற்பு என்ற மூன்றும் களிநடம் புரியக் கண்டேன் என்று அனுமன் கூறுவதாக கம்பர் படைக்கின்றார்.  அனுமன் பெண் என்னும் நோக்கில் சீதையைக் காணவில்லை என்பதற்கு இப்பாடல் மிக முக்கியமான சான்று. உயர்ந்த ஒழுக்க சீலர் ஒருவரைக் கண்ட காட்சியாக சீதாபிராட்டியைக் கண்டுள்ளான் அனுமன்.
கண்ணிலும் கருத்திலும் எண்ணத்திலும் இராமன்
சீதா பிராட்டியின் கண்ணிலும், கருத்திலும், சொல்லிலும், அவள் மார்பகத்திலும் இராமபிரான் இருப்பதைக் கண்டேன் என்று அனுமன் குறிக்கின்ற இப்பாடலில் உளை, நீ ஆகிய சொற்கள் திரும்பத் திரும்ப வந்துப் பாடலுக்கு அழகு சேர்க்கின்றன.
சீதையின் இருப்பிடம்
இலங்கையில் காலை, மாலை எனப் பகுத்தறிய முடியாத ஒளிமிக்கக் கற்பகச் சோலையில் தம்பி இலக்குவன் புல்கொண்டு அமைத்த பர்ணசாலையில் தவம் செய்த தவம் ஆம் தையலாக சீதை வீற்றிருந்தாள் என்று சீதை இருந்த இருப்பிடத்தை அனுமன் காட்டுகின்றான். இப்பாடலில் இடம் பெற்று தவம் செய்த தவமாம் தையல் என்ற சொல் சேர்க்கை அழகுமிக்கது.
இராவணன் பெற்ற சாபம்
சீதையை மண்ணொடும் கொண்டு போனான் இராவணன் என்று அனுமன் குறிப்பிடுகின்றான். இந்தப் பகுதி தமிழ் மரபினைப்பின்பற்றியதாகும். வடமொழியில் பற்றி இழுத்துச் செல்லப்பெற்றாள் சீதை. ஆனால் இங்கு இம்முறை மாற்றப்பெற்றுள்ளது. அதற்குத் துணையாக கம்பர் ஒரு நிகழ்வையும் இதனோடு இணைத்துச்சொல்லுகிறார். பிரம்மன் இராவணனுக்கு விரும்பாத ஒரு பெண்ணைத் தீண்டினால் எண்ணிலாத கூறுகளாய் உடல சிதறி இறப்பாய் என்று ஒரு சாபம் இட்டுள்ளார். அதனால் சீதையின் மேனியைத் தீண்டாமல் மண்ணோடும் பெயர்த்து எடுத்துக்கொண்டு இராவணன் சென்றதாக கம்பர் படைக்கின்றார். தமிழ்மரபினை காக்கும் அழகியல் இங்குச் செயல்பட்டுள்ளது.
சீதையை தீண்டாத இராவணன்
இராவணன் சீதையைத் தீண்டவில்லை என்பதற்கு பிரம்மன் படைத்த அண்டம் வெடிபடவில்லை என்பதாலும், ஆதிசேடனின் ஆயிரந் தலை பெற்ற படங்கள் கிழிந்து போகவில்லை என்பதாலும், கடல் கரையைக் கடக்கவில்லை என்பதாலும், சூரிய சந்திரர்கள் கீழேவிழவில்லை என்பதாலும் இராம பிரானே நீவீர் அறிந்து கொள்ளலாம் என்று அனுமன் இராமனிடம் கூறுகின்றான். இப்பாடலில் இலது, இல என்ற இன்மைக் குறிப்புகள் இடம்பெற்றுப் பாடலைச் சிறக்கச் செய்கின்றன.
தேவர் வியக்கும் கற்பு
சீதாபிராட்டியின் கற்பின் சிறப்பினால் தேவர்களின் தேவியரும் கற்பினால் பெருமை பெற்றனர். சிவபெருமான் இடப்பாகத்தில் இருந்த பார்வதி கற்பின் திண்மையால் சிவன் தலையில் இருக்கலானாள். திருமாலின் மார்பில் இருந்த திருமகளும் அவரின் தலைமீது இருக்கலானாள். சோகத்தாள், பாகத்தாள், மகுடத்தாள், பதுமத்தாள், ஆகத்தாள் என்ற சொற்கள் இங்கு ஒத்த ஒலிக்குறிப்பினைத் தருவதாக உள்ளது.
சீதையைத் தேடிக் கண்டறிந்த முறை
இலங்கை முழுவதும் தேடிப்பார்த்து, இராவணனின் இருக்கையிலும் தேடிப்பார்த்து,  அசோக வனத்தில் கண்ணின் நீர்க்கடலின் இடையே தேவமகள் போன்ற  சீதையைக் கண்டேன்; என்று அனுமன் சீதையைக் கண்டறிந்த செய்தியைக் குறிப்பிடுகிறான். கண்ணின் நீர்க்கடலில் கண்டேன் என்ற தொடர் அழகுமிக்கது.
அரக்கியர் நடுவே சீதாபிராட்டி
பேய் போன்ற அரக்கியர் பாதுகாவலுக்கு இடையில் இராமபிரானே உன் மேல் கொண்ட அன்பின் காரணமாக அச்சத்தைப் போக்;கி இரக்கம் என்ற பண்பு பெண் வடிவம் பெற்றால் எப்படி இருக்;குமோ அப்படி அந்தச் சிறையில்  சீதாபிராட்டி இருந்தாள். நின்பால் நேயமே அச்சம் நீக்க இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்திழை வடிவம் எய்தி தருக்கு உயர் சிறை உற்றன்ன தகையள் அத்தமியள்|| என்ற அடிகள் அழகியல் வயப்பட்டன.
இதன்பின் இராவணன் வந்து சீதாபிராட்டியைப் பணிந்தது, இரந்தது, அவள் கடுஞ்சொல் சொன்னது, பின் அரக்கியர்களைப் புத்தி கூறச் சொன்னது, அரக்கியர் உறங்கியது, பிராட்டி தற்கொலை புரிந்து கொள்ளச் சென்றது, தடுத்து அனுமன் இராம நாமம் சொன்னது போன்ற செய்திகள் விரிகின்றன.
இதன்பின் மோதிரத்தைச் சீதாபிராட்டியிடம் அனுமன் தருகின்றான். அப்போது அம்மோதிரத்தைச் சீதாபிராட்டி அணைக்க அது உருகியதாம்.  மோதிரம் பட்ட மகிழ்ச்சியால் ஏற்பட்ட குளிர்வால் அம்மோதிரம் உடன் குளிர்ந்து தன் நிலை பெற்றது என்று கம்பர் காட்டுகின்றார்.
அனுமன் சொல்லிய இப்பகுதிகளில்  சீதா பிராட்டியின் உருவ நலன் எடுத்துரைக்கப்படவில்லை. சீதாபிராட்டியின் புறஅழகினைக் கடந்து அக அழகினை அனுமன் கண்டு உரைப்பதாக இப்பாடல்கள் பாடப்பெற்றுள்ளன. மேலும் ~~கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்|| என்ற தொடர் அனுமனின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பதாக உள்ளது.
இராமனின் அழகை அடி முதல் முடி வரை உவமைகளால் அழகுபட புனைந்த கம்பரால் ஏன் சீதையின் அழகு அவ்வாறு சொல்லப்படவில்லை என்பது இங்கு எண்ணத்தக்கது. மேலும் தமிழ் இலக்கியங்களில் பெண் பாத்திரப்படைப்புகள் உருவ அழகிற்கு முக்கியத்துவம் தந்து அவற்றைப் பல பட விரித்துரைக்கும். இப்படி ஒரு வாய்ப்பு வந்தபோதும் அதனை மறுத்து சீதாபிராட்டியை ஒழுக்க சீலர் ஒருவரைப் பாராட்டும்படியாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்கான காரணம் என்ன என்று எண்ண வேண்டியுள்ளது.
அனுமன் என்ற ஆண்மகன், திருமணமாகாதவன், தொண்டன் தான் வணங்கும் தெய்வமாக விளங்கும் இராமனின் துணையைக் காணுகையில் அவன் உள்ளத்தில் ஏற்படும் மரியாதை உணர்ச்சி இங்குக் கம்பரால் வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. ஆண் மற்றொருவரின் மனைவியாக விளங்கும் பெண்ணைக் காட்சிப்படுத்துகையில் இத்தகைய மதிப்பு மிக்க தன்மை வரவேண்டும் என்று கற்போருக்குக் கம்பன் உணர்த்துகிறான். சாதாரண ஆண்மகன் பார்க்கும் சாதாரணப் பார்வையில் இருந்துக் காப்பிய மாந்தர்களை வேறுபடுத்திப் பண்பாடு மிக்க உயர் பாத்திரங்களாக படைக்கக் கம்பர் உறுதி கொண்டுள்ளார். இதைக் கற்கும் அனைவர் உள்ளத்திலும் மற்றவர் மனைவி என்றால் அவளின் அழகு தெரியாமல் அவளின் கற்புத் திறம் தெரியவேண்டும் என்று கம்பர் எண்ணியுள்ளார்.
உவமைகள் வாயிலாக இராம அழகை வெளிப்படுத்த விழைந்த கம்பன் சொல்லடுக்கு, சொல்லழகுகளைக் கொண்டு சீதையின் அழகினை விவரித்திருப்பதற்குக் கம்பருக்குள் உள்ள உயர்பண்பாடு காரணம் என்பதைச் சுந்தர காண்ட அழகுகள்; எடுத்துரைக்கின்றன. அழகு வெறும் உருவ அழகு மட்டும் சாரந்தது அல்ல என்பதை விளக்குவதாகவும் உள்ளது.
இராமன் கேட்கிறான், இராமனை வணங்குபவர்கள் கேட்கிறார்கள் என்ற எண்ணத்தில் சீதாபிராட்டியின் அழகு  மிகுந்த கவனத்துடன் கற்பினை முன்னிறுத்தி கம்பரால் எடுத்துரைக்கப்பெறுகிறது. ஆணை அழகுபட வருணித்தல், பெண்ணை அவளின் குணங்களின் வழியாக அடையாளம் காட்டுதல் என்ற நாகரீக மரபு இந்தச் சுந்தரகாண்டத்திற்குள் இடம்பெற்றுள்ளது, பிறன் மனை நயத்தல் தவறு என்ற அடிப்படை கோட்பாட்டில் சற்றும் விலாகமல் அனுமன் இங்குக் கம்பன் வாயிலாகச் செயல்பட்டுள்ளான்.
இராம அழகைக் கம்பன் பாட உவமைகள் கைகொடுத்தன. சீதை அழகைப் பாட சொற்சேர்க்கைகள் கைகொடுத்துள்ளன. கற்பவர்களுக்கு உவமை அழகைவிட சொல்லழகுகள் சுகம் தருகின்;றன என்பதை சீதாபிராட்டியின் நிலையைக் கூறும் பாடல்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதன் வாயிலாக உணரமுடிகின்றது.
கவிஞன் தன் ஒவ்வொரு பாடலையும் வாசகர் மனதில் இடம்பிடிக்க ஏற்றவகையில் அமைக்கவேண்டும் என்ற பேராவல் கொண்டுப் படைக்கின்றான். கவிச்சக்கரவர்த்தி தன் ஒவ்வொரு பாடலையும் மக்கள் மனதில் இருத்த பற்பல உத்திகளைக் கையாளுகின்றார். சீதையின் அழகினை, இராமனின் அழகினை வாசகர்கள் தமக்குள் ஏற்க இத்தகைய உத்திகளைக் கையாண்டுள்ளார்.
ஒட்டு மொத்தத்தில் அழகு என்பது மற்றவர் பார்வையில் உருவம் சார்ந்து அமைவதல்ல. மனநலன், குணநலன், ஒழுக்க நலன் சார்ந்து அமைவது. மதிப்புகளின் அடிப்படையில் அழகு வரையறுக்கத்தக்கது என்பதை சுந்தரகாண்டம் எடுத்துக் காட்டுகின்றது.
———————

“பஞ்சியொளிர் விஞ்சு  குளிர் பல்லவமனுங்கச்
செஞ்செவிய கஞ்ச நிமிர் சீரடி பெயர்ப்பான்
அஞ்சொலிள மஞ்ஞை யென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள்.’–என்ற சூர்ப்பணகையின் வருகையை வர்ணிக்கும் பாட்டு

  • வெயின் முறைக் குலத் திறையவன் முதலிய மேலோர்
    உயிர் முதற் பொருள் திறம்பினும் உரை திறம்பாதோர்
    மயில் முறைக் குலத் துரிமையை மனு முதன் மரபைச்
    செயிருறப் புலைச் சிந்தையால் என் சொனாய் தீயோய்–மந்தரை சூழ்ச்சி ‘ப் படலத்தில்–
  • இதில் ‘மயிலைப்போல முறை தவறாத குலம்’ என்று சொல்லப்படுகிறது. முறை தவறாத தன்மைக்கு மயிலை உபமானமாகச் சொன்னதின் மர்மம் என்ன? மற்ற பட்சிகளிடத்தில் இல்லாமல் மயிலுக்கு மட்டும் உள்ள எந்த சிறப்பு இதற்குப் பொருந்தும் என்பது ஒன்றும் எங்களுக்கு விளங்கவில்லை.
            • “பலாவம் பொழிலுறை ஒரு தாய் உயிர்த்த
              பலமயிற்குள் கலாபம் புனைந்த களிமயிலே மூத்ததெனக் கொள்க!’
            • அதன் பொருள் : ‘கானகத்திலே வசிக்கின்ற ஒரு தாய் வயிற்றில் பிறந்த பல மயில்களும் சேர்ந்திருக்கும்போது எந்தக் குஞ்சு முதலில் கலாபம் விரிக்கின்றதோ அது தான் மூத்த குஞ்சு என்று தீர்மானம் செய்துகொள்.’ என்பதுகாட்டிலே மயில் இயல்பாக வசிக்கும்போது ஒவ்வொரு தாய் மயிலும் அதன் குஞ்சுகளும், குஞ்சுகள் நன்றாக வளர்ந்த பிறகும் ஒரே குடும்பமாக எங்கே போனாலும் சேர்ந்தே போகும். இரை தேடுவதானாலும் அக்கம்பக்கமாகத்தான் இருக்கும். இப் படி ஒவ்வொரு மயில் குடும்பமும் தனித்தனிக் கூட்ட மாகத்தான் சஞ்சரிக்கும். அப்படி இருக்கும்போது அவைகளுக்குள் களிப்பு வந்து கலாபம் விரிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் மூத்த ஆண் குஞ்சுதான் முதலில் தோகையை விரித்து ஆடும். அதன் பிறகு தான் இளைய ஆண் குஞ்சுகள் தோகையை விரிக்கும். இப்படி முதலில் கலாபம் விரிக்கிற உரிமை மூத்த ஆண் குஞ்சுக்குத்தான் உண்டு என்பதுதான் இந்த ‘மயில் முறைக் குலத்துரிமை ‘ என்பது” என்றார்.
        • ஒரு மயிலானது தன்னுடைய எல்லாக் குஞ்சுகளுடனும் குடும்ப சகிதமாகத்தான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போகும் என்றும் அப்படித் தாய்ப் பறவையோடு குஞ்சுகளெல்லாம் சேர்ந்திருக்கிற சமயத்தில் கலாபம் விரித்து ஆடவேண்டிய சந்தர்ப்பம் வரும்போ-தெல்லாம் அந்தக் குஞ்சுகளில் மூத்த குஞ்சுதான் முதலில் கலாபம் விரிக்கும் என்றும், அதற்குப் பிறகுதான் மற்றக் குஞ்சுகளெல்லாம் கலாபம் விரிக்கும் என்றும், கண்டறியப்பட்டதாக எழுதியிருந்தது. மூத்த குஞ்சு என்பதற்கு என்ன அடையாளம் என்றால் ஒவ்வொரு குஞ்சும் முட்டையிலிருந்து வெளிவந்த உடனே அங்குள்ள ஆராய்ச்சிக்காரன் ஒவ்வொரு குஞ்சின் காலிலும் ஒவ்வொரு நிறமான வளையத்தை – மாட்டிவிட்டுப் பதிவு செய்து கொண்டான் என்ற விளக்கமும் எழுதப்பட்டிருந்தது.
      • ———————–
      • விற்பெரும் தடந்தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பின்
        நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேனல்லேன்
        இற்பிறப்பு என்பது ஒன்றும் இரும் பொறை என்பது ஒன்றும்
        கற்பு எனும் பெயரது ஒன்றும் களிநடம் புரியக்கண்டேன்.’
      • “வில்லேந்திய விசாலமான தோள்களையுடைய ராமா! பரந்த கடல் சூழ்ந்த இலங்கையின் மலையில் உனக்காகத் தவம் செய்துகொண்டிருக்கும் சீதை என்ற – ஒரு பெண் உருவத்தை நான் பார்க்கவில்லை.-ஆனால் ‘குடிப் பிறப்பு’ என்று சொல்லப்படுகிற ஒன்றும், ‘பெரும் பொறுமை’ என்ற ஒன்றும், ‘கற்பு’ என்று கருதப்படுகிற ஒன்றும், ஆகிய இந்த மூன்றும் சேர்ந்து அங்கே ஆனந்தத் தாண்டவம் ஆடுவதைத்தான் கண்டேன்,” என்றான் அனுமான். அதைக் கேட்டு ராமனுடைய திகைப்புக் குறைந்தது. போன உயிர் வந்தது போலக் களிப்பினால் பூரிக்கலானான்.
          • பண்டார வளைக்குப் போகுமுன்னால் இலங்கையிலுள்ள மலைப்பிர தேசங்களின் சிகரமாகிய ‘நூவாரா எலியா ‘ என்னும் ஊரையும் அதிலுள்ள சிறப்புகளையும் காட்டினார். அந்த வழியில் பாதைக்குப் பக்கமாக ஒரு பள்ளத்தில் இருந்த சிறு தடாகத்தைச் சுட்டிக்காட்டி இது ’சீதைத் தடாகம்’ என்றார். அந்தத் தடாகத்திலிருந்து ஒரு சிறு ஓடை அந்த மலைச்சாரலில் சல சலத்துக் கீழே ஓடிக்கொண்டிருந்தது. அதை ‘சீதை ஓடை’ என்றார். மேற்படித் தடாகத்திற்கு எதிரில் பாதைக்கு அப் பால் இருந்த மலையைக் காட்டி அங்கே தான் அசோகவனம் இருந்தது என்றும், அந்தக் குன்றின் ஓரத்திலிருந்த ஒரு குகையைக் காட்டி அதிலேதான் சீதை சிறையிருந்தது என்றும் கூறினார்.
          அதன்பின் மோட்டாரை ஓட்டினார். அதே பாதையில் தடாகத்தைவிட்டு சுமார் இரண்டு பர்லாங்கு தூரம் இறங்கி வந்தபின் அங்கே ஒரு சிறு நீர்நிலை இருந்தது. அது தான் சீதை தினந்தோறும் நீராடின துறை என்றார். அந்த நீர் நிலைக்கு அடுத்தாற்போல் ஒரு சிறு கோயில் இருந்தது. அங்கேதான் சீதை ஒவ்வொரு நாளும் ராமனைப் பூசை செய்தது என்றார்.
      • ———————
    • மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத் தாவிய
      சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்த’ அந்தப்
      பாதங்கள் விராதனைச் சாப வீடு செய்தன. விராதன் சொல்கிறான்:
    • வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தன உன்
      பாதங்கள் இவை என்னில் படிவங்கள் எப்படியோ‘உன் பாதங்கள் இப்படிப்பட்டவை என்றால், படிவங்கள் எப்படிப்பட்டவையோ’ என்று விராதன்
    • ————–
    • இராமனோ, தரையின் மேல் நிற்கிறான். அனுமனால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
    • நூறுபத்துடை நொறில் பரித்தேரின்மேல் நுன்முன்
      மாறில் பேரரக்கன் பொர நிலத்து நீ மலைதல்
      வேறுகாட்டும் ஓர் வெறுமையை; மெல்லிய எனினும்
      ஏறுநீ ஐய என்னுடைத் தோளின்மேல் –என்றான்.
    • ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்படும் தேரின்மேல் உன் முன்னால் அரக்கன் வந்து நிற்கவும், நிலத்தின் மேல் நின்றவண்ணம் நீ போர்புரிவதும் குறைவுடையதாகும். வெறுமை காட்டி நிற்பதற்கு நீ என்ன தனியனா? நாங்களில்லையா உனக்கு? என் தோள்கள் உன்னைத் தாங்கும் அளவுக்கு வலிமையோ தகுதியோ உடையன அல்லவை என்றாலும், மெல்லியவையே என்றாலும், என் தோளில் ஏறுவாய் ஐயனே!
    • —————–

மாணியாய் உலகளந்த நாள் அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்
காணியாகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்
நாணினான்; மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான்.

வாமனனாய் வந்து உலகத்தை எல்லாம் அளந்த நாளில் – இதே இராமன் – எடுத்த பேருருவத்தை அறிந்தவனான மாருதி வியப்புற்றான். திருமாலைச் சுமப்பதைத் தனக்கே தனக்கான தனி உரிமையாகக் கொண்டிருந்த கருடன் நாணம் அடைந்தான். ஆதிசேடனோ தலை நடுக்கம் கொண்டான்.

இராமனின் தெய்வத் தன்மையைக் கம்பன் தொட்டுக்காட்டும் சில இடங்களில் இது ஒன்று.

அவதாரந்தோறும் அவதாரந்தோறும் அவனை உணர்ந்தவன் அனுமன் என்றொரு குறிப்பு கிடைக்கிறது இந்தப் பாடலில்

——–

‘புராரி மற்றி யானும் காற்றின் சேய் எனப் புகன்றான் மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோ.’

மாருதி வாயுவினுடைய அம்சம் மட்டுமன்று; என்னுடைய அம்சமும்தான்’ என்று புரங்களை அழித்த புராரியான சிவபெருமான் சொன்னான்.

——–

அவ்விடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி
வெவ்விடத்தினை மறுகு தேவர் தானவர் வெருவல்
தவ்விட தனி அருளு தாழ்சடைக் கடவுள் என
இவ்விடத்து இனிது இருமின் அஞ்சல் என்று இடை உதவி….

சுக்ரீவனுடைய பதட்டத்திற்கும் அச்சத்திற்கும் அப்படியே எதிரானதொரு சித்திரம். பாற்கடலிலிருந்து ஆலகாலம் வெளிப்படவும், அதனைக் கண்டு அஞ்சி ஓடிய தேவர்களையும், அசுரர்களையும் ஒன்று போல ‘அஞ்சாதீர்’ என்று சொல்லி அதனைத் தானே உண்ட சிவபெருமானைப் போல் ‘எதற்கும் அஞ்ச வேண்டாம். நீங்கள் இங்கேயே இருங்கள். நான் போய்ப் பார்த்து வருகிறேன்’ என்று சொல்லி பிரமசரிய வேடம் புனைந்துகொண்டான்.

———–

என்பு எனக்கு உருகுகின்றது.’ என்னுள் ஊற்றெடுக்கும் அன்பு என்னை எப்படி நெகிழ்த்துகின்றது என்றால் வெறும் மனம் மட்டுமேயன்று; உடலும் நெகிழ்கின்றது. எலும்பு வரை நெகிழ்ச்சி அடைந்திருக்கிறது. ‘இவர்கின்றது அளவில் காதல்.’ அளவில்லாத நேயம் இவர்கள் மேல் எனக்குத்

தோன்றுகிறது. ‘அன்பினுக்கு அவதி இல்லை.’ என்னை ஆட்கொள்ளும் அன்பு கொஞ்ச நஞ்சமில்லை. ‘அடைவு என்கொல்?’ இதனால் என்ன நேரும்? ‘அறிதல் தேற்றேன்!’ எனக்கு விளங்கவில்லை.

———

மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி நளிர் இரும் பனிக்குத் தேம்பா
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்றேன்.

என்ன சொல்கிறான்? ‘மேகத்தைப் போல வண்ணம் உடையவனே! உன்னைப் பார்க்கின்ற எந்தப் பெண்ணுக்கும் உடனடியாக மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தாமரையைப் போன்று மலர்ந்த கண்கைள உடையவனே!’ முதலில் தொலைவிலிருந்து பார்க்கும்போது அனுமனை அசைத்தது அவனுடைய மேனி வண்ணம். அப்படிப்பட்ட வண்ணம் உடையவனே என்று அழைத்தான். திருப்தியாகவில்லை. ‘இந்தக் கண்ணு என்னை என்னமோ செய்யுதய்யா! எனக்கே இப்படி இருந்தால், யாராவது பெண் உன்னைப் பார்த்தால் அவளுக்கு என்னதான் ஆகாது? தாமரைக் கண் ஐயா உன் கண்’ என்றான். அதுவும் போதவில்லை அனுமனுக்கு. தாமரை என்றால் என்ன ஆகும்? வெயில் இருந்தால் மலர்ந்திருக்கும்; பனி பெய்தால் வாடிப் போகும். அப்போதும் வாடாத கண்ணாம். ‘நளிர் இரும் பனிக்குத் தேம்பா கஞ்சம் ஒத்து’ இந்தக் கண் தாமரை இருக்கிறதே, எந்தக் கடுமையான பனிக்கும் வாடாத தாமரை ஐயா.’ அது சரி. ஆனால் மாலை ஆனதும் கூம்பிப் போகுமே! அதுவும் இல்லையாம். ‘அலர்ந்த கண்ண!’ ‘எப்போதும் மலர்ந்திருக்கும் கண்ணை உடையவனே!’

முதல் மூன்று அடிகள் முழுவதும் இராமனைப் பற்றிய வருணனை. மூன்றாவது அடியின் கடைசியில் இருந்து, நான்காவது அடியில் தன்னைப் பற்றிய விவரம். எங்க அப்பா வாயு; எங்க அம்மா பேரு அஞ்சனை. என் பெயர் அனுமன்.’

இம்மலை இருந்து வாழும் எரிகதிர்ப் பரிதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன்; தேவ! நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையன் ஏவ, வினவிய வந்தேன் என்றான்
எம் மலைக் குலமும் தாழ இசை சுமந்து எழுந்த தோளான்.

‘அப்பா பேரு வாயு. அம்மா பேரு அஞ்சனை. என் பேரு அனுமன். இந்த மலை இருக்கிறதே, இதற்கு
மேல் சூரியனுடைய பிள்ளை ஒருத்தன் இருக்கிறான். அவனுக்கு நான் ஏவல் செய்கிறேன். வேலைக்காரன். சாமி! நீங்கள் வருவதைப் பார்த்து அவன் பயந்து போய்விட்டான். அவன் சொன்னதன் பேரில் உங்களைப் பற்றி அறிந்துகொள்ள வந்திருக்கிறேன்.’

மிகவும் சுருக்கமாகத்தான் சொல்கிறான் அனுமன். அதிக விவரங்கள் ஒன்றும் இல்லை. ‘சூரியனுடைய பிள்ளை’ என்ற உடனேயே இராமனுக்குப் புரிந்துவிட்டது. ஏனென்றால், அவனைத்தான் தேடிக்கொண்டு வந்திருக்கிறான் இவன். இந்த வார்த்தையக் கேட்ட இராமன் சொல்வதைக் கேளுங்கள்:

‘மாற்றம் அ·து உரைத்தலோடும்’ அனுமன் அப்படிச் சொன்னவுடன், ‘வரிசிலைக் குரிசில் மைந்தன் தேற்றம் உற்று,’ பெரிய கட்டமைந்த விலலை ஏந்திய தலைவனான இராமன் தெளிவடைந்தான். ‘இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி,’ இவனை விடவும் மேலானவன் இன்னொருவன் இருக்க முடியாது என்பதை உறுதியாக உணர்ந்தான். ‘ஆற்றலும், நிறைவும், கல்வி அமைதியும், அறிவும் என்னும் வேற்றுமை இவனோடு இல்லையாம்’ இவனிடத்திலே எது அதிகம்? அறிவாற்றல் மற்றும் செயலாற்றலா? நிறைந்த குணங்களா? நிறைந்த கல்வியினாலே ஒருவனுக்கு இயல்பாகவே ஏற்படும் அடக்கமா? அல்லது அந்தக் கல்வியால் ஏற்படும் உள்ளளி நிறைந்த ஞானமா? எது அதிகம்? ஒன்றுக்கொன்று வேறுபாடு தெரியவில்லையே! எல்லாம் சம அளவில் இருக்கிறதே!

இராமன் அனுமனைப் பற்றிச் சொல்கிறானே, ஆற்றலும் நிறைவும் கல்வி அமையதியும் அறிவும் என்னும்
வேற்றுமை இவனோடு இல்லையாம்.

சொல்லிக்கொண்டே வருகிறான். பக்கத்தில் திரும்பிப் பார்த்தால் இலக்குவன் கவனம் இன்னும் இவன் மேல் விழுந்ததா இல்லையா என்பது தெரியவில்லை. அவனுடைய பார்வை எல்லாம் சீதை எங்காவது தட்டுப்படுகிறாளா என்பதிலேயே நிலைத்திருந்தது. அவனுடைய கவனைத்தை ஈர்க்கும் விதமாகச் சொல்கிறான் இராமன். ‘இவன் படிக்காத வேதம் இருக்காது; கற்காத கலை இருக்காது. இப்படி எல்லாம் எப்படிச் சொல்றேன் என்று நினைக்கிறாயா? இவன் பேசுகிற பேச்சே சொல்கிறது. ‘சொல்லாலே தோன்றிற்று அன்றே!’ இவன் சொல்லே இவனுடைய நிறைவை ஏந்தி வெளிவருகிறது. இவன் சொல்லே இவனுக்கு சாட்சி. ‘யார்கொல் இச் சொல்லின் செல்வன்?’ பட்டமே கொடுக்கிறான் இராமன், முதல் பார்வையிலேயே. ‘ஆர்ரா இந்தச் சொல்லின் செல்வன்?’ ‘வில் ஆர் தோள் இளைய!’ ஆ ஊ என்றால் உடனே வில்லைத் தூக்கி நாண் ஒலி செய்யத் தயாராக நிற்கிற தம்பிப் பையா! ‘வீர் விரிஞ்சனோ?’ இது யார்ரா? பிரமனாக இருக்குமோ? ‘விடை வலானோ?’ இல்லாட்டி சிவனாக இருக்குமோ? (பிரமனாக இருக்குமோ, சிவனாக இருக்குமோ என்று கேட்டாலும், ‘நாராயணனாக இருக்குமோ’ என்ற கேள்வியை இராமன் எழுப்ப வைக்கவில்லை கம்பன். அங்கே உண்மையான சொல்லின் செல்வன் யார் என்பதற்கான விடை கிடைக்கிறது. சொல்லாமல் விட்டது எதுவோ அதுதான் அதிகம் சொல்லுகிறது. )

உடனே இராமனுக்கு இன்னொன்று தோன்றுகிறது. இந்தத் தம்பி சும்மா நிற்கிறானே, இவனுக்கு இன்னும் ஐயம் போகவில்லையோ என்னவோ? ஒருவேளை, இந்த அண்ணனுக்கு வேற வேலையில்லை, அந்த மானைப் பார்த்தவுடன் அப்படித்தான் அதன் பின்னாலேயே ஓடினான்; இத்தனைத் துன்பங்களையும் வரவழைத்தான். இப்போது இந்தப் பையனைப் பார்த்தவுடன் கிடந்து குதிக்கிறான்’ என்று நினைக்கிறானோ என்னவோ என்று தோன்றியது போலிருக்கிறது. இலக்குவனிடம் சொல்கிறான். ‘மாணி ஆம் படிவமன்று.’ இந்தப் பையன் உண்மையில் பையன் இல்லை. இவனுடைய பிரமச்சரிய வடிவத்தைப் பார்த்து இவனை ஒன்றும் அறியாதவன் என்று நினைத்துவிடக் கூடாது. ‘மற்று இவன் வடிவம், மைந்த, ‘ வேற என்ன வடிவம் என்று கேட்பாய் நீ. சொல்றேன்
கேள். ‘ஆணி இவ் உலகுக்கு எல்லாம் என்னலாம்.’ இவன்தான் இந்த உலகத்துக்கு எல்லாம் அச்சாணி என்று சொல்லலாம்.’ ‘ஆற்றலுக்கு ஏற்ற சேணுயர் பெருமை எல்லாம் சிக்கறத் தெளிந்தேன்.’ கொஞ்சம் கூட சந்தேகத்துக்கு இடமில்லாமல் இவனுடைய ஆற்றலையும், அதற்கேற்ற மிகப் பெரிய பெருமைகளையும் எல்லாம் தெளிவாக உணர்ந்துகொண்டேன்.

இலக்குவன் இன்னும் மாற்றம் ஏதுமின்றி நிற்கிறான். இராமனுக்குப் புன்னகை தோன்றுகிறது. ‘டேய்! இது மான் சமாச்சாரமில்லைடா! அப்பதான் நான் கொஞ்சம் விட்டுவிட்டேன். நீயே சொல்லியும் கேட்கவில்லை. இது அப்படியில்லை. நான் சரியாகத்தான் புரிந்துகொண்டிருக்கிறேன். இவனைப் பற்றி நான் சொல்வது இப்போது உனக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ‘பின்னர்க் காணுதி மெய்ம்மை’ நீயே பின்னால தெரிந்துகொள்வாய்.

மாணிஆம் படிவமன்று மற்றிவன் வடிவம் மைந்த
ஆணிஇவ் உலகுக் கெல்லாம் என்னலாம்; ஆற்றற் கேற்ற
சேண்உயர் பெருமைதன்னைச் சிக்கறத் தெளிந்தேன்; பின்னர்க்
காணுதி மெய்ம்மை என்று தம்பிக்குக் கழறி, கண்ணன்… … …

நாலு அடிக்குள் எத்தனைக் காட்சிகளைத் திணிக்க முடியும்? மிக அலட்சியமாக நுணுக்கி நுணுக்கி இழைக்கிறான் கவிஞன். அது இருக்கட்டும். அவன் என்னடா என்றால் இவனைப் பார்த்து, ‘நீல மேகம் போன்ற நிறத்தழகா, பெண்கள் மனத்துக்கெல்லாம் நேசத் துன்பத்தை உண்டாக்கக் கூடிய, பனியில் வாடாத, எப்போதும் மலர்ந்த தாமரைக் கண்ணா’ என்று கண்ணால் பார்க்கக் கூடியனவற்றைப் பார்த்து மனம் பறிகொடுத்துப் பேசுகிறான். இவன் என்னடா என்றால், கண்ணுக்குப் புலப்படாத அறிவையும், ஆற்றலையும், அகத்தையும், அகத்தின் தெளிவையும், உயர்வையும், அடக்கத்தையும் ஒரே நொடியில் அளந்து பார்த்தேன் என்கிறான். எப்படி அளந்தானாம்? ‘சொல்லினால் தோன்றிற்று அன்றே, யார்கொல் இச் சொல்லின் செல்வன்!’

அப்படி என்னதான்யா சொன்னான் அந்த அனுமன்? ‘எங்க அப்பா பேரு காத்து; எங்க அம்மா பேரு அஞ்சனை; என் பேரு அனுமன். இந்த மலை மேல சூரியனின் பிள்ளை(யான சுக்ரீவன்) இருக்கிறான். அவன் உங்களைப் பார்த்து பயந்து போய்விட்டான். நீங்க யாருன்னு கேட்டுட்டு வரச் சொன்னான். அதான் வந்திருக்கிறேன்.’ இதுல என்னய்யா அப்படி பெருசா தெரியுது அறிவு, ஆற்றல், அடக்கம் இன்ன பிற? எதுக்கு இப்படி ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறாரு இந்த இராமரு? எனக்கு ஒன்றே ஒன்றுதான் தட்டுப்படுகிறது. ‘கவ்வை இன்றாக நுங்கள் வரவு’ என்று அனுமன் சொன்னான் பாருங்கள், அதற்கான முழுப்பொருள் இப்போது விளங்கியிருக்க வேண்டும், இராமனுக்கு. ‘உங்களைப் பார்த்து பயந்துவிட்டான்’ என்று சொன்ன கணத்தில், ‘ஓகோ அதுக்குத்தான் அப்படிச் சொன்னாயா’ என்று அந்த வாக்கியத்தின் நயம் உணர்ந்திருக்கக் கூடும்.

இல்லை. இப்படி அளந்து பார்த்துவிட முடியாது இராமனை; அவன் இதயத்தை. ‘அடியனேன் உன் வேதநூல் எனத்தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன்’ என்று அனுமனே, பலகாலம் பழகியபின், வீடணன் அடைக்கலப் படலத்தின் போது சொல்லப் போகிறான். அனுமனே அறிய ஒண்ணாத வேத நூல் அன்ன திருவுளத்தின் குறிப்பை நாமா கண்டுவிடப் போகிறோம்? ஒன்றே ஒன்று தெரிகிறது. இங்கே அனுமனுடைய நிலை இனம் புரியாத அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு, அறிவு அடங்கி நிற்கும், ஆனாலும் அடங்கிய நிலையிலும் தீவிரமாக வேலை செய்துகொண்டிருக்கும் நிலை. இராமனுடைய நிலையோ, அறிவின் செயல்பாட்டைக் குறித்தே சற்றும் கவலைப்படாமல், ஒற்றைச் சொல்லால் உள்ளம் அளந்து, ஒரே பார்வையில் அன்பினுக்கு ஆட்பட்டுத் தன்னுடைய முழு மனத்தையும் ஒரேயடியாக அப்படியே கொடுத்துவிட்ட நிலை. Abundant love and unconditional acceptance. இவர்கள் இப்படி இருந்தால், நம் நிலை? இவர்களை அறிவுகொண்டு அளக்க நினைத்து முற்றிலும தோற்றுப போன நிலை. வேறு என்ன சொல்வது!

அறிவு வேலை செய்துதான் ஆகவேண்டும் என்ற நிலையைத் தாண்டிய சில கணங்கள் உண்டு. ‘அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி’ என்ற இரண்டைக் காட்டிலும் ‘அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம்’ இன்னது என்று சொல்லத் தெரியாதபடி ஆட்கொள்ளும். அப்படிப்பட்ட அன்பிலே கட்டுண்டார்கள் ஆண்டவனும், அடியவனும். ஆனாலும், அடியவன் கொஞ்சம் அதிகம் சாமர்த்தியசாலிதான். ஆண்டவனுக்கு நடிக்க ஒரு பாத்திரம் இருந்ததென்றால், அடியவனுக்கு நடக்க ஒரு பாத்திரம் இருந்தது. அடியவன் மனத்தில் இப்போது ஓடுகிற எண்ணம் என்ன, அவன் இப்போது ஆண்டவன் முன்னால் பேசுகின்ற விதம் என்ன, அமைச்சனாக அவன் ஆற்றுகின்ற செயல் என்ன? செயலுக்குக் காரணம் இருந்ததா? அவன் உள்ளக் கிடக்கை இப்போது இராமனை நோக்கி
யதா அல்லது சுக்ரீவனை நோக்கியதா?

——————–

நஅன்-ரிக்வேத வினீதஸ்ய ந அ-யஜுர்வேத சாரிணா ந அ-சாம வேத விதூஷா ஷக்யமேவம் விபாஷிதம் (மேற்படி, சுலோகம் 28)

‘ரிக் வேதத்தைப் பொருள் உணர்ந்து ஓதினாலொழிய, யஜுர் வேதத்தை மனனம் செய்திருந்தாலொழிய, சாம வேதத்தை அறிந்திருந்தாலொழிய இப்படிப் பேசுவது இயலாத ஒன்று’

————-

எவ்வழி இருந்தான் சொன்ன கவிக்குலத்து அரசன் யாங்கள்
அவ்வழி அவனைக் காணும் அருத்தியால் அணுக வந்தோம்
இவ்வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன
செவ்வழி உள்ளத்தோனைக் காட்டுதி தெரிய’ என்றான்.

ஆதரித்து அவனைக் காண்டற்கு அணுகினிர் என்னின்
தீது அவித்து அமையச் செய்த செய்தவச் செல்வம் நன்றே.

நீங்களே அவனைப் பார்க்க வந்திருக்கிறீர்களா! அப்படியானால், அவனுடைய துன்பம் கெடுமாறு அவன் செய்த தவம் மிகப் பெரியது

கொடுங்குலப் பகைஞன் ஆகிக் கொல்விய வந்த கூற்றை
நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ?

‘தன் குலத்தையே வேரறக் களைவதற்கான செயலைத் தொடங்கி, தனக்குப் பகைவனாக வந்திருக்கும் எமனைக் கண்டு (தன்னை அழிக்க எண்ணியிருப்பவனைக் கண்டு) நடுநடுங்கிக் கிடப்பவர்களுக்கு அபயம் அளிப்பதை விடவும் பெரிய அறம் ஒன்று உண்டா?’ எங்களைக் காப்பது உங்களுக்கு எளிதான செயல் அல்லவா? ‘இமைப்பு இலாதோர் தம்மையே முதல் இட்டு ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல் மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர்.’ தேவர்கள் முதற்கொண்டு இந்த அண்ட கோளத்தில் அசைகின்ற, அசையாத (சர, அசர) எல்லாவற்றையும் காக்க வல்லவர் நீங்கள். எம்மைக் காத்தல் உங்களுக்கு மிகவும் எளிய ஒன்று.

இவர்களை உற்று நோக்கியபடி நடந்து வந்தானே அப்போது,

காய் எரி கனலும் கற்கள் கள்ளுடை மலர்கள் போல்
தூய செங்கமலப் பாதம் தோய்தொறும் குழைந்து தோன்றும்’

வெய்யிலில் கிடக்கின்ற காரணத்தால் நெருப்பைப் போல் சுடுகின்ற கற்கள், இவர்கள் பாதம் பட்டதும் (இவர்களுடைய பாதத்துக்கு) தேன் நிறைந்த மலர்களைப் போல் குழைந்து போகின்றனவே’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டானல்லவா, இந்த இரண்டு தருணங்களிலும் தாளையும், தோளையும் கவனித்தான். இப்படி கவனித்ததை இங்கே சொல்லவில்லை. அடுத்த காட்சியில் சுக்ரீவனிடம் சொல்லப் போகிறான்.

சங்கு சக்கரக் குறி உள தடக் கையில் தாளில்
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங்கண் விற்கரத்து இராமன், அத் திரு நெடுமாலே.
இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும்.

அவர்களுடைய கையிலும், பாதத்திலும் சங்கு, சக்கரக் குறிகள் உள்ளன. இப்படி ஒரு இலக்கணத்தோடு வேறு யாரும் இல்லை. இருக்கவும் முடியாது. சிவந்த (தாமரை போன்ற) கண்களை உடைய இராமன் வேறு யாரும் இல்லை. அந்த நெடுமாலேதான். அறத்தை நிலை நிறுத்துவதற்காகப் பிறந்திருக்கிறான்.

ததா ச சுமஹாப்ராஞ்ஞா ஹனுமான் மாருதாத்மஜா
ஜகாம ஆதாயதெள வீரெள ஹரி ராஜாய ராகவவ்

(வா. இரா. கிஷ்கிந்த காண்டம், சர்க்கம் 4, சுலோகம்)
அதன் பிறகு மிகுந்த புத்திமானும், வாயுவின் மகனுமான அனுமன் அந்த இரண்டு இராகவர்களையும் (இராம இலக்குவர் இருவருமே இரகு குலத்தவர், ஆகவே இருவருமே இராகவர்கள்) குரங்குகளுக்கு அரசனிடத்தில் அழைத்துச் சென்றான்.

எப்படி அழைத்துச் சென்றான்?

பிக்க்ஷ¤ ரூபம் பரித்யஜ்ய வானரம் ரூபம் அஸ்திதா
ப்ரிஷ்டம் ஆரோப்ய தெள வீரெள ஜகாம கபிகுஞ்சரா.

தான் மேற்கொண்டு வந்த பிரமசரிய உருவத்தை விட்டுவிட்டு, தன்னுடைய குரங்கு உருவத்தோடு, அந்த இரண்டு வீரர்களையும் தன் முதுகிற் சுமந்தவாறு சுக்ரீவனை நோக்கிச் சென்றான் குரங்குளில் யானை போன்ற (பேருருவம் கொண்ட) அனுமன்.

கிம் அர்த்தம் த்வம் வனம் கோரம் பம்ப்பா கானன மந்திதம்?
ஆகத ஸானுஜொ துர்கம் நானா வ்யால ம்ருகாயுதம்.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 4, சுலோகம் 4)

என்ன காரணத்துக்காக பலவிதமான ஆபத்தான மிருகங்கள் உலவக் கூடியதும் பம்பைக் கரையில் இருப்பதுமான இப்படிப்பட்ட ஆபத்தான வனத்தில் உங்களுடைய தம்பியுடன் வந்திருக்கிறீர்கள்?
‘ஆபத்தான மிருகங்கள் நிறைந்ததும் பம்பைக் கரையில் உள்ளதுமான வனம். இந்த வனத்தில் உங்களுடைய தம்பியையும் கூட அழைத்துக்கொண்டு என்ன காரணத்துக்காக வந்திருக்கிறீர்கள்?

விதிதாநெள குணா வித்வான்! சுக்ரீவஸ்ய மஹாத்மனா
தமேவ சாவா மார்க்காவ சுக்ரீவம் ப்லவகேஷ்வரம்.
(மேற்படி, சர்க்கம் 3, சுலோகம் 37)

பண்டிதரே! சுக்ரீவன் என்ற அந்தப் பெருங்குணசாலியின் தன்மைகளை நாங்கள் அறிவோம். (விண்ணெங்கும்) தாவித் திரிவதான குரங்குகளின் அரசனான அவனைக் காணவே வந்திருக்கிறோம்.

யார் என விளம்புகேன் நான் எம் குலத் தலைவற்கு உம்மை,
வீர நீர் பணித்திர் என்றான் மெய்மையின் வேலி போல்வான்.

‘யார் வந்திருக்காங்கன்னு சொல்லட்டும் எங்க தலைவருக்கு? எனக்கு என்ன உத்தரவு?’ என்று கேட்டானாம், உலகத்தில் வாய்மையைக் காப்பதற்காக இட்ட வேலியைப் போன்றவனான அனுமன்.

தஸ்யஸ்ய வசதோ அரண்யே நியத்ஸ்ய மஹாத்மனா
ராவணேன ஹ்ரிதா பார்யா ஸ த்வம் ஷரணம் ஆகதா.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 6)

காட்டிலே நெறியான வாழ்க்கை மேற்கொண்டிருந்த இந்த மகாத்மாவின் மனைவியை இராவணன் கவர்ந்து சென்ற காரணத்தால், உன்னைச் சரண்புகும் பொருட்டு இங்கே வந்திருக்கிறான்.

யானும் என் குலமும் இவ் உலகும் உய்ந்தனம் எனா, மானவன் குணம் எலாம் நினையும் மதியினான்.’ நான் உய்ந்தேன்; என் குலம் உய்ந்தது; நாங்கள் மட்டுமில்லை இந்த உலகமே உய்ந்தது என்றவாறு மனிதனாகத் தோன்றிய இராமனின் நல்ல குணங்களை எல்லாம் சிந்தித்தவாறு சுக்ரீவன் இருந்த இடத்திற்குச் சென்றான்.

மேலவன் திருமகற்கு உரைசெய்தான்.’ சூரியனின் மகனான சுக்ரீவனிடத்தில் சொன்னான். என்ன சொன்னான்? ‘விரைசெய் தார் வாலி என்ற அளவிலா வலியினான் உயிர்தெறக் காலன் வந்தனன்.’ மணமிகுந்த பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்த, அளவில்லாத வலிமை உடையவனான வாலியைக் கொல்வதற்கான எமன் வந்திருக்கிறான். ‘இடர்க் கடல் கடந்தனம்.’ நாம் நம்முடைய துன்பக் கடலைக் கடந்தாகிவிட்டது.

மேலவன் திருமகற்கு உரைசெய்தான் விரைசெய்தார்
வாலிஎன்ற அளவிலா வலியினான் உயிர்தெறக்
காலன் வந்தனன் இடர்க்கடல் கடந்தனம் எனா
ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான்.

‘நான் வாழ்ந்தேன்; என் குலம் வாழ்ந்தது, இந்த உலகமே வாழ்ந்தது’ என்று எண்ணியவாறு வந்தவன் என்ன காரணத்துக்காக அவ்வாறு எண்ணினான் என்பது முதல் மூன்றடிகளில் வெளிப்பட்டது. ஏன்? வாலியின் உயிர் கவர்வதற்கு எமன் வந்துவிட்டான். ‘நான் வாழ்ந்தேன், என் குலம் வாழ்ந்தது’ என்பதோடு நிற்காமல் ‘இந்த உலகமும் வாழ்ந்தது’ என்று எண்ணிய காரணத்தால் வாலியின் தன்மை என்ன என்பதும், என்ன காரணத்துக்காக அவன் கொல்லப்படத் தகுந்தவனே என்பதும் கோடிகாட்டப்படுகின்றன.

மண்உளார் விண்உளார் மாறுளார் வேறுளார்
எண்உளார் இயல்உளார் இசைஉளார் திசைஉளார்
கண்உளார் ஆயினார்; பகைஉளார், கழிநெடும்
புண்உளார் ஆருயிர்க்கு அமுதமே போல் உளார்.

அப்பா சுக்ரீவா! பயந்து போனாயே. இவர்கள் வாலி அனுப்பியவர்களோ என்று நடுங்கினாயே. இவர்கள் நீ நினைத்ததைப் போல் இல்லை. இவர்கள் யார் தெரியுமா? இந்த மண்ணில் இருப்பவர்கள், அந்த விண்ணில் இருப்பவர்கள், இந்த இரண்டு உலகங்களுக்கும் மாறான பாதாள உலகத்தில் இருப்பவர்கள், இந்த மூன்றையும் தவிர்த்த உலகங்களில் உள்ளவர்கள், அத்தனை பேர்களின் எண்ணத்திலும், செயலிலும், கண்களிலும் உள்ளவர்கள். யாரெல்லாம் பகைவரை உடையவர்களாக இருக்கிறார்களோ, யாருக்கெல்லாம் பகைவரால் துன்பம் நேர்ந்திருக்கிறதோ, யாரெல்லாம் பகையாலே உடலும் உள்ளமும் புண்பட்டிருக்கிறார்களோ, அப்படிப்பட்டவர்களின் உயிர்களுக்குள் ஊற்றப்படும் அமுதம் போன்றவர்கள்.

சூழிமால் யானையார் தொழு கழல் தயரதன்
பாழியாலர் உலகெலாம் ஒருவழிப் படரவாழ்
ஆழியான் மைந்தர்; பேர் அறிவினார்; அழகினார்;
ஊழியார்; எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார்.

அழுகின்ற குழந்தைக்கு மிட்டாய் தருவதைப் போல் செய்தியை ஒவ்வொன்றாக எடுத்து வைக்கிறான் அனுமன். அவர்கள் யார் தெரியுமா? பெரிய பெரிய யானைப் படையை உடைய அரசர்களெல்லாம் தொழுது வணங்கியவனான சக்ரவர்த்தி, தசரதன் தெரியுமில்லையா உனக்கு? இந்த உலகம் முழுவதையும் தன் வலிமையால், தன் குடைக் கீழ் வாழும்படிச் செய்த, ஆணைச் சக்கரத்தை உடையவன் இல்லையா அந்த தசரதன்? அவனுடைய மைந்தர்கள் இவர்கள். என்னா அறிவுள்ளவங்க தெரியுமா? எவ்ளோ அழகா இருக்காங்க தெரியுமா? சரி. அத விட்டுவிடுவோம். இவர்கள் நெறிப்படி நடப்பவர்கள். அறத்தைக் கைக்கொண்டவர்கள். மிக எளிதில் உனக்கு அரசைப் பெற்றுத் தருவார்கள்.

காதிசேய் தரு நெடுங் கடவுள் வெம் படையினார்.’ விஸ்வாமித்திரர் பல தெய்வப்படைகளை இவர்களுக்குத் தந்திருக்கிறான். தவறாத சக்தி உடைய அத்திரங்கள் இவர்களிடத்தில் உண்டு

மாயையால் மதிஇலா நிருதர்கோன் மனைவியைத்
தீயகான் நெறியின் உய்த்தனன்; அவள் தேடுவார்
நீஐயா தவம் இழைத்துடைமையால், நெடு மனம்
தூயையா உடையையால் உறவினைத் துணிகுவார்.

இவ்வளவு பேராற்றல் உடையவர்கள். சரிதான். அப்படியானால் எப்படி இந்த இராமன் தன் மனைவியைத் தொலைத்தான்? ‘மாயையால் மதிஇலா நிருதர்கோன் மனைவியைத் தீயகான் நெறியின் உய்த்தனன்.’ அது வந்து, இந்த இராவணன் இருக்கானே, புத்தி கெட்ட பய, அவன் மாயத்தோற்றம் ஒன்றை உண்டாக்கினான். மாரீசனை மாயமானாக அனுப்பினான். அவர்கள் இல்லாத சமயத்தில் சீதையைத் தன்னுடைய கொடிய வஞ்சனையால் இந்தக் காட்டு வழியில் தூக்கிச் சென்றுவிட்டான். அவளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

தனக்கு உவமை தானேயன்றி இன்னொருவன் இல்லாதவனின் சரணத்தை நாடி வந்து அடைந்தான். அப்படி நடந்து வரும்போது இவர்களைப் பார்த்தவாறே வந்தானில்லையா, அந்தத் தருணத்தில் உள்ளத்தின் அடி ஆழத்தில்
உணர்கிறான் சுக்ரீவன்:

தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே
மாறி இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னோ
ஆறுகொள் சடிலத்தானும் என்று இவர்கள் ஆதி
வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா.

இவனே தேவர்களுக்கு எல்லாம் தேவன். மனிதனாக வந்து தோன்றியிருக்கிறான். சடாமுடியில் ஆற்றைத் தரித்த உருத்திரன் முதலான எல்லா தேவர்களையும், இதோ, இந்த மானுடம் வென்றுவிட்டது.

பவான் தர்ம வினீதா ச சுதபா சர்வ வத்சலா
ஆக்யாதா வாயுபுத்ரேண தத்வதோ மே பவத் குணா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 9)

தாங்கள் தர்மங்களைப் பயின்றவர்; நற்செயல்களில் நாட்டம் உடையவர்; அனைவரையும் நேசிப்பவர். (அல்லது, ‘அனைவராலும் விரும்பப்படுபவர்’.) வாயு புத்திரனான அனுமன் எனக்கு உங்களுடைய குணநலன்களின் மெய்மையைச் சொல்லியிருக்கிறான்.

ரோசதே யதி மே சக்யம் பாஹ¤ ஏஸ ப்ரசாரிதா
க்ரிஹ்யதாம் பாணினா பாணி மர்யாதா பத்யதாம் த்ருவா
(மேற்படி, சுலோகம் 11)

என்னுடன் நட்பு கொள்வது உனக்குச் சம்மதமானால், இதோ உன் முன்னால் என் கரம் நீட்டப்பட்டிருக்கிறது. (நம்முடைய) இந்தத் தொடர்பு உறுதிப்படும் விதமாக உன் கரத்தால் இதைப் பற்று.

யாங்கள் உற்ற கை அறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தோம்
ஐய! நின் தீரும் என்ன … … … … … … … … … … … …

‘செயல்களற்று நாங்கள் நிற்கும் விதத்தில் எங்களைப் பீடித்துள்ள துயரத்தை உன்னால் (உன் துணையுடன்) கடப்பதற்காக வந்துள்ளோம். இந்தத் துயர் உன்னால் தீரும்’ என்று இராமன் சொன்னான்.

முரணுடைத் தடக்கை ஓச்சி முன்னவன் பின்வந்தேனை
இருள்நிலைப் புறத்தின்காறும் உலகெங்கும் தொடர இக்குன்று
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன்; ஆர்உயிர் துறக்கல் ஆற்றேன்;
சரண் உனைப் புகுந்தேன். என்னைத் தாங்குதல் தருமம் என்றான்.

தடித் தடியான கைகளை ஓங்கியபடி எங்க அண்ணன் தம்பியாகிய என்னை இருள் நிறைந்த இந்த உலகத்தின் எல்லா இடங்களிலும் துரத்தினான். என்னைப் போட்டு அடித்தான் ஐயா. என்னைக் கொல்லத் துடிக்கிறான். ஏதோ இந்த மலைப் பிரதேசத்தில் அவன் நுழைய முடியாதபடி ஒரு சாபம் இருக்கிற காரணத்தால் இங்கே ஓடிவந்து ஒளிந்துகொண்டு உயிர் வாழ்கிறேன். ‘ஆருயிர் துறக்கல் ஆற்றேன்’. ஐயா, இப்படிப்பட்ட அச்சத்தோடு வாழ்வதை விடவும் உயிரை விட்டுடலாம்னு பாத்தேன். என்னால முடியல. சாகலாம்னாலும் முடியல. நான் என்ன பண்ணுவேன்! ஐயா, உங்களை நான் சரண் புகுந்தேன். என்னைக் காப்பாற்றுவதே உங்கள் தருமம்.’

விருந்தும் ஆகி அம் மெய்ம்மை அன்பினோடு
இருந்து நோக்கி, நொந்து, இறைவன் சிந்தியா
பொருந்து நன் மனைக்கு உரிய பூவையைப்
பிரிந்துளாய் கொலோ நீயும் பின் என்றான்.

விருந்துண்டு அமர்ந்திருந்த போது, தன் மீது பொழியப்பட்ட அன்பில் மனம் குளிர்ந்து, சுற்றிலும் (மறுமுறை) நோக்கினான். சிந்தித்தான். மனம் நொந்து சிந்தித்தான். ஏன் மனம் நொந்தான்? இங்கே பரிமாறியது முழுக்க முழுக்க ஆண்கள். சுக்ரீவனுடைய மனைவி இங்கே இருந்திருக்க வேண்டுமே! அவள் ஏன் கண்களில் தட்டுப்படவில்லை? கேள்வி உறைக்கிறது. ‘என்னப்பா சுக்ரீவா, உன் மனைவியைக் காணோமே, எங்கே அவர்கள்? இங்கே இருக்கிறார்களா? இல்லாவிட்டால் என்னைப் போல நீயும் உன் மனைவியைப் பிரிந்திருக்கிறாயா?’ என்று கேட்டான்.

என்ற வேலையில் எழுந்து மாருதி
குன்றுபோல நின்று, இருகை கூப்பினான்.
‘நின்ற நீதியாய்! நெடிது கேட்டியால்.
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு எனா.

இராமன் அப்படிக் கேட்ட உடனே குன்று எழுந்து நிற்பது போல் எழுந்தான் மாருதி. இரண்டு கைகளையும் கூப்பினான். வணக்கமாகச் சொன்னான். ‘நிலைத்த நீதியை உடையவனே! நான் உனக்குச் சொல்ல வேண்டியது ஒன்று உண்டு. கொஞ்சம் நீளமான செய்தி அது. கேட்டருள வேண்டும்.’

மற்று இனி உரைப்பது என்னே? வானிடை மண்ணில் நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன் கிளை எனது; என் காதல்
சுற்றம் உன் சுற்றம்; நீ என் இன்னுயிர்த் துணைவன் என்றான்

இன்னும் வேறு என்ன சொல்வது? என்ன சொல்லவேண்டி இருக்கிறது? ஆகாயத்தில் என்றாலும் சரி, பூமியில் என்றாலும் சரி; உன் மீது பகைகொண்டு உன்னை வருத்தியவர்கள் யாரோ, அவரெல்லாம் என்னை வருத்தியவர்கள். உனக்கு உற்றவர் – அது எப்படிப்பட்ட கெட்டவர்களாக இருந்தாலும் சரி – எனக்கும் உற்றவர். உனக்கு யாரெல்லாம் (நேசமுடைய) உறவினர்களோ, அவர்களெல்லாம் எனக்கும் உறவினர்கள்தாம். என் மீது நேசம் பாராட்டும், நான் நேசம் பாராட்டும் என் உறவெல்லாம் உன்னுடைய உறவினரே. நீ என் இன்னுயிர்த் துணைவன். என் சகோதரன்.

உருமை என்று இவற்கு உரிய தாரமாம்
அருமருந்தையும் அவன் விரும்பினான்
இருமையும் துறந்து இவன் இருந்தனன்.
கருமம் இங்கு இது, எம் கடவுள்! என்றனன்.

இதோ இந்தச் சுக்ரீவன் இருக்கிறானே, இவனுக்கு உருமை (ருமா) என்ற பெயருடைய மனைவி உண்டு. அந்தப் பெண்ணையும் வாலி அபகரித்துக்கொண்டான். அரசன் என்ற நிலையில் கொஞ்ச காலம் இருந்தவனேனும், அரசை அண்ணனிடம் திருப்பினாலும் இளவல், இளவரசன் என்ற நிலையில் இருக்கவேண்டியவன் இவன். அதையும் இழந்தான். தன் வாழ்வின் ஆதாரப் பற்றுக்கோடான தன் மனைவியையும் அண்ணனிடத்தில் பறிகொடுத்தான். இதோ, காட்டில் வசிக்கிறான். சாமி! இதுதான் நடந்தது.

ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன
ஆரம் வீங்கு தோள் தம்பிக்குத் தன் அரசு உரிமைப்
பாரம் ஈந்தவன், பரிவிலன் ஒருவன் தன் இளையோன்
தாரம் வெளவினன் என்ற சொல் தரிக்குமாறு உள்ளதோ?

கதிரவன் சிறுவன்ஆய கனக வாள் நிறத்தினானை
எதிர்உறத் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின், நீண்ட
வெதிர் பொரு தோளினாளை நாடுதல் விழுமிது என்றான்.
அதிர் கழல் வீரர் தாமும் அன்னதே அமையும் என்றார்.

ஒளிவிடும் பொன் போன்ற நிறத்தை உடையவனும் சூரியனின் புத்திரனுமான சுக்ரீவனுடைய நட்பைப் பெற்று, அவன் மூலமாகச் சீதையைத் தேடுவதே சிறந்தது என்று கபந்தன் என்ற பெயரில் சாபம் பெற்று வாழ்ந்தவனான தனு என்ற கந்தர்வன் சொன்னான். அப்படியே செய்கிறோம் என்று இருவரும் அவனுக்குச் சொன்னார்கள்.

வாலினோ மே மஹாபாக பய ஆர்தஸ்ய அபயம் குரு
கர்தும் அரஹசி காகுத்ஸ்தா பயம்மே ந பவேத் யதா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 23 பின்பாதி, 24 முன்பாதி)

‘வாலியால் துன்புறுத்தப்பட்டு, அவனை அஞ்சி வாழும் என்னுடைய இந்த அச்சத்தை மாற்று. எனக்கு அபயம் நல்கு. அவ்வாறு செய்வதே உனக்குப் பொருத்தமானதாகும்’ என்ற சுக்ரீவன் வாய்மொழிக்கு விடையாக,

உபகார பலம் மித்ரம் விதிதம் மே மஹாகபி
வாலினாம் தம் வதிஷ்யாமி தவ பார்யா அபஹாரிணம்
(மேற்படி, சுலோகம் 25 பின்பாதி, 26 முன்பாதி)

‘நட்புக் கொள்வதன் பலன் என்னவென்றால், (ஒருவருக்கொருவர்) உதவியாயிருத்தலே. வலிய வானரனே! உன் மனைவியை அபகரித்தவனான வாலியை நான் கொல்கிறேன்..’

உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி
விலகும் என்னினும் வில்லிடை வாளியின் வீட்டி
தலைமையோடு நின் தாரமும் உனக்கு இன்று தருவேன்
புலமையோய்! அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான்.

பதினான்கு உலகங்களில் வாழ்பவர்களும் ஒன்று கூடி, அவனுக்கு உதவியாக நின்று என்னைத் தடுத்தாலும், என்னுடைய வில்லில் அம்பு தொடுத்து, அவனைக் கொன்று, அரசையும் உன் மனைவியையும் ஒரு சேர உனக்கு மீட்டளிப்பேன். இன்று. இப்போது. இதே நிமிடத்தில் உனக்கு உன் அரசும், உன் மனைவியும் கிடைத்தாகிவிட்டது என்று கொள். அவன் எங்கே இருக்கிறான், அதை எனக்குக் காட்டு. அவன் இருக்கும் இடத்துக்கு என்னை அழைத்துச் செல்.

எழுந்து பேர் உவகைக் கடற் பெருந் திரை இரைப்ப
அழுந்து துன்பினுக்கு அக்கரை கண்டனன் அனையான்
விழுந்ததே இனி வாலிதன் வலி என விரும்பா
மொழிந்த வீரற்கு, ‘யாம் எண்ணுவது உண்டு’ என மொழிந்தான்.

‘வாலியை இப்போதே அழிக்கிறேன். அவன் எங்கிருக்கிறான் காட்டு’ என்று இராமன் எழுந்த அளவில் மகிழ்ச்சியாகிய கடல் பெரிய அலைகளுடன் பொங்கி எழ, இது வரை வாடிக் கொண்டிருந்த துன்பக் கடலுக்கு அக்கரை கண்ணில் தென்பட்டவனாக, ‘வாலியின் வலிமை இத்தோடு தொலைந்தது’ என்றெண்ணி ஆர்ப்பரித்து, விரும்பி நிற்கும் அனுமன் முதலான வானர வீரருக்கும், இராமனுக்கும் ‘எனக்குக் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது’ என்று சொன்னான்.

மாயாவீ நாம தேஜஸ்வீ பூர்வஜோ துந்துபே சுதா
தேன தஸ்ய மஹத் வைரரம் வாலினா ஸ்த்ரீ க்ரிதம் புரா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 9, சுலோகம் 4)

துந்துபிக்கு முன் தோன்றியவனான (அவனுடைய மூத்த சகோதரனான என்றும் பொருள் கொள்ளலாம்) மாயாவி என்றொரு அரக்கன் இருந்தான். அவனுக்கும் வாலிக்கும் ஒரு பெண் தொடர்பாகப் பகை இருந்தது.

கதம் ச தர்மம் ஜானீதே யேன ப்ராத்ரா துராத்மனா
யுத்தாய அபிநியுக்தேன பிலஸ்ய பிஹிதம் முகம்.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 55, சுலோகம் 4)

தன்னுடைய சகோதரனால் குகையின் வாயிலைக் காவல் காக்குமாறு ஆணையிடப்பட்டிருந்த இவன், எந்த அடிப்படையில் தான் செய்வது சரி என்ற முடிவுக்கு வந்து, குகையின் வாயிலைப் பாறை கொண்டு அடைத்தான்? இவன் செய்தது எந்த தர்மத்தின்பாற் பட்டது? எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தான்?

சத்யாத் பாணி க்ரிஹீதா ச க்ரிதா கர்மா மஹாயஷா
விஸ்மிரிதோ ராகவோ யேன ச கஸ்ய சுக்ரிதம் ஸ்மரெத்
(மேற்படி, சுலோகம் 5)

இப்படிப்பட்வனைத்தான் இராமன் கைப்பற்றி நட்புப் பிரதிக்ஞை செய்தான். அண்ணனுக்கு இப்படி ஒரு தீங்கிழைத்தவன் இவன் என்பதை இராமன் கூட கருத்தில் கொள்ளவில்லை அல்லவா? (சொல்லுக்குச் சொல் செய்யப்பட்ட மொழிபெயர்பன்று; கருத்து இதுதான்.)

ஏதத் அஸ்ய அசமம் வீர்யம் மயா ராம ப்ரகாஷிதம்
கதம் தம் வாலினாம் ஹன்தும் சமரே ஷக்ஸ்யசே ந்ருப
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 11, சுலோகம் 68)

என்று இராமனைக் கேட்கிறான் சுக்ரீவன். ‘வாலியின் இணையற்ற வலிமை இத்தகையது. இப்படி இருக்கும்போது, இராமா, நீ எவ்வாறு அவனைப் போரிட்டுக் கொல்வாய்?’ இந்தக் கேள்வி காதில் பட்டதுதான் தாமதம், இலக்குன் சிரித்தான். கோபச் சிரிப்பு என்று சொல்லவேண்டிய அவசியமே இல்லை. அவனுடைய சிரிப்பில் சினம் தெரிந்ததோ இல்லையோ, அவன் கேள்வியில் எரிச்சல் தெரிகிறது.

ததா ப்ருவாணம் சுக்ரீவம் ப்ரஹஸன் லக்ஷ்மணோ அப்ரவீத்.
கஸ்மின் கர்மணி நிர்வ்ரிதே ஷ்ரத்தத்ய வாலினம் வதம்?
(மேற்படி, சுலோகம் 69)

சுக்ரீவன் இவ்வாறு சொல்லவும் இலக்குவன் சிரித்தான். ‘என்ன காரியம் செய்து காட்டினால் (இராமனால்) வாலி வதம் சாத்தியம் என்று நம்புவாய்,’ என்று கேட்டான்.

என்று தானும் அவ்வழி இரும் பிலம்
சென்று முன்னவன் தேடுவேன்; அவற்
கொன்றுளான் தனைக் கொல ஒணாது எனின்
பொன்றுவேன் எனா புகுதல் மேயினான்.’

‘அண்ணன் இறந்திருக்கத்தான் முடியும். இல்லாவிட்டால் இத்தனை மாதங்கள் கழித்தும் வெளி வராமல் இருக்க மாட்டான். ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது. நானும் இந்தக் குகைக்குள்ளே போகின்றேன். என் அண்ணனுக்கு என்ன ஆயிற்று என்று பார்ப்பேன். அவனைக் கொன்றவனோடு நானும் போர் புரிவேன். என் அண்ணனையே வீழ்த்திய அவனை என்னால் வீழ்த்த முடியுமா என்பது எனக்குத் தெரியாது. நான் ஒரு வேளை வெல்லலாம். அப்படி இல்லாவிட்டால் நானும் எங்க அண்ணனோட சேந்து செத்துப் போறேன்’ என்றவாறு குகைக்கு உள்ளே செல்லத் தொடங்கினான்.

தடுத்து வல்லவர் தணிவு செய்து நோய்
கெடுத்து மேலையோர் கிளத்து நீதியால்
அடுத்த காவலும் அரிகள் ஆணையால்
கொடுத்தது உண்டு…….

அன்ன நாளில் மாயாவி அப்பிலத்து
இன்ன வாயிலூடு எய்தும் என்ன யாம்
பொன்னின் மால் வரைப் பொருப்பு ஒழித்து வேறு
உன்னு குன்றெலாம் உடன் அடுக்கினேம்

அப்போதையின் அயர்வாறிய அனுமன் அழல் விழியா
பொய்ப்போர் சில புரியேல் இனி எனவந்திடை புகுந்தான்
கைப்போதகம் என முந்தவன் கடுந்தேர் எதிர் நடந்தான்
‘இப்போர் ஒழி. இனிப்போர் உள. இவைகேள்’என இசைத்தான்.

தளர்ச்சி நீங்கப் பெற்ற அனுமன் சினத்தால் நெருப்பெரியும் விழிகளோடு, (தரைமேல் நின்றிருந்த) இலக்குவனுக்கும் (தேரேறி நின்றிருந்த) இராவணனுக்கும் இடையில் வந்து குதித்தான். யானையைப் போல இராவணன் தேருக்கு எதிரில் நடந்து வந்தபடி, ‘ஏய் எல்லாம் போதும்டா! சும்மா பொய்யாட்டம் ஆடாதே,’ என்றான். ‘போங்காட்டம் ஆடாதே’ என்று சின்னப் பசங்க சொல்ல மாட்டாங்களா, அந்த மாதிரி. ‘பொய்ப்போர் சில புரியேல்.’ ‘அது கிடக்கட்டும். இந்தப் போரை விடு; இன்னும் எத்தனையோ போர் இருக்கிறது. அப்ப காட்டு உன் வீரத்தை. இப்ப நான் சொல்வதைக் கேள்.’

என்றாலும் இன்று இழிவு உன்வயின் எய்தும் என இசையா
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான்.

‘ஆனாலும் கூட, கண்ணு, இன்னிக்கு உனக்கு ஊதிட்டாங்க.’ ‘இன்று உனக்கு எல்லா இழிவும் ஒன்றாக வந்து சேரப் போகிறது,’ என்று சொல்லிக்கொண்டே உலகளந்த திரிவிக்கிரமனைப் போல் தன் பேருருவை எடுத்தான்

பரக்கப் பல உரைத்தென் படர் கயிலைப் பெரு வரைக்கும்
அரக்குற்று எரி பொறிக்கண் திசைக் கரிக்கும் சிறிது அனுங்கா
உரக் குப்பையின் உயர்தோள் பல உடையாய் உரன் உடையாய்.

நீள நெடுக பலவாறாகச் சொல்லவே தேவையில்லை. வலிமை என்பதன் குவியல் என்று சொல்லக் கூடிய வரிசையான பல தோள்களை உடையவன் நீ!

என்தோள்வலி அதனால்எடுத்து யான்எற்றவும் இறவா
நின்றாய்எனின் நீபின்எனை நின்கைத்தல நிரையால்
குன்றேபுரை தோளாய்மிடல் கொடுகுத்துதி குத்தப்
பொன்றேன்எனின் நின்னோடெதிர் பொருகின்றிலென் என்றான்.

ராகவஸ்ய வசஹ ஷ்ருத்வா ஸம்பரிஷ்வஜ்ய பூஜ்ய ச அபிவாத்ய ச ராமாய யயெள ஸெளமித்ரி ராகவே 51

ஸ ராவணம் வராண ஹஸ்தபாஹ¤ம் ததர்ஷ பீமோத்யததீப்த சாபம் ப்ரசாதயந்தம் ஷரவ்ருஷ்டி ஜாலைஸ்தான் வானரான் பின்னவிகீர்ண தேஹான் 52

தமாலோக்ய மஹாதேஜா ஹனுமான் மாருதாத்மஜஹ நிவார்ய ஷரஜாலானி விதுத்ராவ ச ராவணம் 53
ரதம் தஸ்ய ஸமாஸாத்ய பாஹ¤முத்யம்ய தக்ஷ¢ணம் த்ராசயன் ராவணம் பீமான் ஹனுமான் வாக்யம் அப்ரவீத் 54

தேவ தானவ கந்தர்வைர்யஷைஸ்ச சஹ ராக்ஷஸைஹி அவத்யத்வம் த்வயா ப்ராப்தம் வானரேப்யஸ்த்து தே பயம் 55

ஏஷ மே தக்ஷ¢ணோ பாஹ¤ஹ¤ பஞ்சஷாகஹ சமுத்யதஹ விதமிஷ்யதி தே தேஹே பூதாத்மானம் சிரோஷிதம் 56
(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 59, சுலோகம் 51-56)

என்ன அறிவு! என்ன ஆற்றல்! என்ன கூர்த்த மதி! சுந்தர காண்டத்தில் சீதையை முதன் முதலாகப் பார்த்த போது, இவள்தான் தான் தேடி வந்திருக்கும் பெண்ணா என்று உறுதி செய்துகொள்வதற்காக எப்படியெல்லாம் கவனி க்கிறான் அனுமன்! தனிமை, அரக்கர் சூழ்ந்திருந்த தன்மை, கசங்கிய ஆடை, அழுக்கடைந்த மேனி, அழுத கண்கள் என்றிவற்றையெல்லாம் கவனித்த பின்னும் வேறு சில அடையாளங்களையும் கவனித்தான் என்று வால்மீகி சொல்கிறார்:

தாம் சமீக்ஷ்ய விசாலாக்ஷ¢ம் ராஜபுத்ரீம் அநிந்திதாம் தர்க்யாம் ஆச சீதா இதி காரணை உபபாதயன்

(வா. இரா. சுந்தர காண்டம், சருக்கம் 15, சுலோகம் 40)

தான் பார்க்கின்ற அந்தக் குற்றமற்ற (நிந்திக்கத் தக்க ஏதுமற்ற) அரச குமாரி, சீதையேதான் என்பதனை தர்க்க ரீதியாகச் சிந்தித்து, காரணங்களை ஆய்ந்துணர்ந்து அறிந்தான்.

உத்திஷ்ட நரஷார்த்தூல தீர்க்கபாஹோ! த்ருதவ்ரத கிமாத்மானம் மகாத்மானம் ஆத்மானம் நாவ புத்யதே

(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 82, சுலோகம் 43)

நீண்ட வலிய கரங்களையும், கூர்த்த மதியையும் உடைய மனித வேங்கையே! நீயே எல்லா ஆன்மாக்களுக்கும் மகான்மா என்பதை ஏன் உணர மறுக்கிறாய்?

சம்நிவார்ய பரானிகம் அப்ரவீத் தான் வநெள கசஹ

ஹனுமான் சம்நிவர்தத்வம் நஹ ஸாத்யம் இதம் பலம் த்யக்த்வா ப்ராணான் விசேஷ்டந்தோ ராமப்ரிய சிகீர்ஷவஹ

என்நிமிதம் ஹி யுத்யாமோ ஹதா சா ஜனகாத்மஜா இமம் அர்த்தம் ஹி விக்யாப்ய ராமம் சுக்ரீவமேவச

(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 82, சுலோகம் 20 (பின் அரையடி), 21, 22 )

எதிர்த்து ஆர்த்தெழுந்து கொண்டிருந்த வானரப் படையை அடக்கினான் அனுமன். ‘திரும்பிச் செல்லுங்கள். இந்த அரக்க சேனை இனிமேல் வெல்லப்பட வேண்டிய ஒன்றன்று. யாருக்காக நாம் உயிரைப் பணயம் வைத்து, பெரும் அபாயங்களை மேற்கொண்டு தீவிரமாகப் போராடினோமோ, எந்த இராமனுடைய உள்ளம் மகிழ்வதற்காக இவற்றைச் செய்தோமோ, அவனுடைய மனத்துக்கினிய ஜனகபுத்ரி கொல்லப்பட்டுவிட்டாள். இதனைப் போய் இராமனிடமும், சுக்ரீவனிடமும் தெரிவிப்போம்; அதன் பின்னர் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்வோம்.’

‘தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல், என்றும் அவண் உறைவிடம் ஆம்; ஆதலினால், அம் மலையை இறைஞ்சி ஏகி, பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய, நாகக் கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா நெடு வரையும், கடலும், காண்டிர்.

அந்தப் பொதிய மலையில் அகத்திய முனிவன் தமிழ்ச் சங்கம் வைத்திருக்கிறான். அந்த மலை என்றும் அவன் வாழ்வதற்கு உரிய இடம். ஆகையால் அந்த மலையை (தொலைவில் நின்றபடி) வணங்கிவிட்டுத் தொடர்ந்து செல்லுங்கள். பொன் துகள் நிரம்பிய பொருநை நதி வரும். அதையும் தாண்டியனால் யானைக் கன்றுகள் நி றைந்த மயேந்திர மலையை அடைவீர்கள்.

இராமன் முடி சூடும் சமயத்தில் நிகழ்கிறது இது.

இராமன் சற்று நேரத்துக்கு முன்னால்தான் சானகிக்கு ஒரு முத்து மாலையை அணிவித்திருக்கிறான். அந்த மாலையைக் கைகளால் நெருடியவண்ணம் காட்சியளிக்கிறாள் வைதேகி.

அவேக்ஷமாணா வைதேஹீ ப்ரததெள வாயுஸ¥னவே அவமுச்யாத்மனஹ கண்டாத்தாரம் ஜனகநந்தினி

அவைக்ஷத ஹரீன் ஸர்வான் பர்த்தாரம் ச முஹ¤ர்முஹ¤ஹ¤ தாமிங்திதக்னஹ ஸம்ப்ரேக்ஷ்ய பபாஷே ஜனகாத்மஜாம்

ப்ரதேஹி ஸ¤பகே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமினி அத ஸா வாயுபுத்ராய தம் ஹாரமஸிதேக்ஷணா

தேஜோ த்ருதிர்யஷோ தாக்ஷ்யம் ஸாமர்த்யம் விநயோ நயஹ பெளருஷம் விக்ரமோ புத்திர்ய யஸ்மின்னே தானி நித்யதா

(வா. இரா. யுத்த காண்டம், சர்க்கம் 128, சுலோகம் 79-82)

அனுமன் தங்களுக்கு ஆற்றிய விலை மதிப்பிட முடியாத சேவைகளை எண்ணிய ஜனக புத்ரி, தன் கணவன் தனக்கு அணிவித்த முத்துமாலையைக் கழற்றி(க் கையில் வைப்பதா)னாள். (அவ்வாறு அந்த மாலையைக் கையில் வைத்தபடி) மீண்டும் மீண்டும் கூடியிருக்கும் வானரர்களைப் பார்ப்பதும், இராமனைப் பார்ப்பதுமாக நின்றாள். இராமன் அவளைக் கூர்ந்து நோக்கினான். ஒருவரின் செயல்களைக் கொண்டு அவரின் உள்ளத்தை அளப்பதில் வல்லவனான அவன், ‘யாருக்கு இதனை அளிக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றுகிறதோ அவருக்கே சந்தோஷமாகக் கொடு,’ என்று அவளிடம் சொன்னான். கரிய விழிகளைக் கொண்ட அவள், சக்தியும், உறுதியும், புகழும், திறமையும், தகுதியும், அடக்கமும், முன்னறிவும், வீர்யமும், வீரமும், விவேகமும் யாரிடத்தில் எப்போதும் ஒன்றாக உறைந்துளவோ, அந்த வாயு புத்திரனுக்கே அந்த முத்து மாலையை அணிவித்தாள்.

கம்பன் இந்தக் காட்சியை அப்படியே சுருக்கமாகப் படம் பிடிக்கிறான், ஒரே ஒரு விருத்த அளவில்.

பூமலர்த் தவிசை நீத்து, பொன் மதில் மீதிலை பூத்த தேமொழித் திருவை ஐயன் திருவருள் முகத்து நோக்க, பா மறைக் கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கைக் கொண்டு ஏமுறக் கொடுத்தாள், அந்நாள், இடர் அறிந்து உதவினாற்கே.

தாமரைப் பூ ஆசனத்தை விட்டுவிட்டு, பொன்னால் பொதியப்பட்ட மதில்களை உடைய மிதிலை நகரத்தில் வந்து பூத்தவளான மைதிலியை இராமன் தன்னுடைய அருள் ததும்பும் முகத்தால் நோக்கினான். மறைகளுக்கு உரியவளான கலைமகள் தந்தான, பெரிய முத்துகள் கோக்கப்பட்ட மாலையைக் கையில் எடுத்து, அவள் மிக்க இன்பத்தை அடைந்தவளாகி, அந்தநாளில் தன் துன்பங்களை அறிந்து உதவிய அனுமனுக்கு அளித்தாள்.

விடை கொடுத்த படலத்தில், அனுமனுக்கு விடை கொடுக்கும் தருணத்தில் இராமனுடைய சொல்லையும் செயலையும் உத்தரகாண்டத்தில் வான்மீகி இவ்வாறு சொல்கிறார்:

ஏவம் ப்ருவாணம் ராமஸ்து ஹநூமந்தம் வராஸநாத் உத்தாய ஸஸ்வஜே ஸ்நேஹாத் வாக்யமேத துவாச ஹ

(வா. இரா. உத்தர காண்டம், சர்க்கம் 40, சுலோகம் 20 – 24)

(‘உன்பால் எனக்குள்ள பேரன்பு என்றென்றும் நிற்கட்டும். உன்பால் எனக்குள்ள விசுவாசம் எப்போதும் நிலைக்கட்டும்.

உன்மீது எனக்கள்ள பிரேமை வேறு எந்தப் பக்கத்திலும் சிதறாமல் இருக்கட்டும். தேவதைகள் எல்லாம் எனக்கு உன் காதையைச் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். நான் அதனைக் கேட்டபடியே, காற்றால் சிதறுண்ணும் மேகங்களைப் போல், (உன்னைப் பிரிந்திருக்கும்) என்னுடைய ஏக்கமெல்லாம் (உன் காதையால்) சிதறுண்டு போகட்டும்’ என்றெல்லாம் வேண்டிய அனுமனுடைய பேச்சைக் கேட்ட இராமன்,)

தன் சிறந்த ஆசனத்திலிருந்து எழுந்து வந்து, அன்புடன் அனுமனைத் தழுவினான். தழுவியவாறு இதனைச் சொன்னான் என்று (பெரியோர்) சொல்கின்றனர்.

யாரை யார் தழுவினார்கள்? இராமன், அனுமனைத் தழுவினான் என்கிறார் வால்மீகி. இந்த உத்தர காண்ட நிகழ்வை, மேற்படி ‘முத்து மாலையைத் தரும் சீதையின்’ காட்சிக்கு இரண்டு விருத்தங்களுக்கு முன்னால் அமைத்தான் கம்பன். Master stroke எந்த இடத்தில் விழுகிறது என்பதைக் கவனியுங்கள்.

மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி, ‘ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை; பைம் பூண் போர் உதவிய திண் தோளாய்! பொருந்துறப் புல்லுக!’ என்றான்.

இராமன், மாருதியை மகிழ்ச்சியோடும், அருள் நிறைந்த கண்களோடும் நோக்கினான். ‘நீ செய்திருக்கும் உதவிகளை வேறு யார் செய்திருக்க முடியும்? நீ செய்திருக்கும் உதவிகளுக்குப் பிரதியாக, ஈடாக, பதிலாக, நான் உனக்குச் செய்யக் கூடிய செயல் எதுவும் இல்லை. அழகிய ஆபரணங்களை அணிந்த, என் போரின்போது (கூட இருந்தும், என்னுடன் நின்று போரிட்டும், என்னைச் சுமந்தும்) உதவிய பெருந்தோள்களை உடையவனே, நீ என்னைத் தழுவிக்கொள்வாயாக.

இந்த, ‘நான் உனக்குச் செய்யக் கூடிய செயல் என்று எதுவுமே இல்லை,’ என்பதற்கான விளக்கத்துக்கு நாம் வான்மீகத்துக்குத்தான் போக வேண்டும். மேலே நாம் காட்டியுள்ள இருபதாம் சுலோகத்தை அடுத்து வரும் நான்கு சுலோகங்கள் இவை.

ஏவமேதத் கபிஸ்ரேஷ்ட பவிதா நாத்ர ஸம்ஷயஹ சரிஷ்யதி கதா யாவதேஷா லோகே ச மாமிகா

தாவத்தே பவிதா கீர்த்திஹி ஷரீரேங்ப்ய ஸவஸ்ததா லோகாஹி யாவத்ஸ்தாஸ்யந்தி தாவத் ஸ்தாஸ்யந்தி மே கதாஹ

ஏகைகஸ்யோபகாரஸ்ய ப்ராணான் தாஸ்யாமி தே கபே ஷேஷஸ்யேஹோபகாரணாம் பவாம் த்ரிணினோ வயம்

மதக்னே ஜீரணதாம் யாது யத் த்வயோபக்ருதம் கபே நரஹ ப்ரத்யுபகாராணாமாபத்ஸ்வாயதி பாத்ரதாம்

(வா. இரா. உத்தர காண்டம், சர்க்கம் 40, சுலோகம் 21 – 24)

வானரரில் சிறந்தவனே! நீ நினைத்தபடியே நடப்பதாக. அப்படியே நடக்கும். அதில் எந்த ஐயமும் இல்லை.

இந்த உலகில் என் காதை வழங்கிவருமளவும் உன் புகழ் நிலைத்து நிற்கும். என் காதை உலகுள்ள அளவும் இருக்கும்.

நீ எனக்குச் செய்திருக்கும் பேருதவிகளில் ஒன்றே ஒன்றுக்குப் பிரதியாக ஏதேனும் தரவேண்டுமாயின் என் உயிரைத்தான் தரவேண்டியதிருக்கும். அப்படியே தந்தாலும், நீ செய்திருக்கும் மற்ற உதவிகளுக்கு எதுவும் ஈடாகத் தரமுடியாத கடனாளியாகவே நான் இருப்பேன். எனவே, உனக்கு என் இதயம் என்றென்றும் கடனாளியாகவே இருக்கட்டும். உனக்கு நான் எதையும் திரும்பச் செய்யும் நிலை தோன்றாமலே போகட்டும். (ஏனெனில், என் உதவி யாருக்குத் தேவைப்படும்? துன்பத்தில் ஆழ்பவனுக்கு. நீயோ துன்பங்களே என்றென்றும் நெருங்க ஒண்ணாதவன். உனக்கு நான் எந்தக் காலத்தில், எப்போது, என்ன உதவியைச் செய்ய முடியும்? ஆகவே, நான் உனக்கு என்றென்றும் கடன்பட்டவனாகவே இருக்க விரும்புகிறேன்.)

இந்தப் பின்னணியில், கம்பனுடைய வாக்குக்குத் திரும்புவோம். இப்போது அனுமனை, இராமன் தழுவுகிறான் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அனுமனுடைய தராசு என்ன சொல்லும்? ‘உன் திருமேனியைத் தழுவுகின்ற பேறு ஒன்றே நான் செய்த(தாக நீ எண்ணும் – நான் அவ்வாறு எண்ணவில்லை) எல்லா உதவிகளுக்கும் ஈடாகிவிட்டதே! அதற்கும் மேலானது அல்லவா என்னை நீ பொருந்தத் தழுவியது!’ என்றல்லவா அனுமனுடைய பார்வை பேசும்? அதனால்தான், அந்தக் கடன் என்றென்றும் அப்படியே இருந்தாக வேண்டும் என்பதனால்தான், இராமன், ‘நீ என்னைத் தழுவிக்கொள்,’ என்றான். இப்போது இராமனுடைய கடன் சுமைதான் ஏறுகிறதே தவிர, அவன் எதையும் திரும்பச் செலுத்தவில்லை.

‘கொடுப்பதற்குப் பொருளும் இல்லை, செய்வதற்குச் செயலும் இல்லை,’ என்றான பிறகு, தன் மேனியைத் தீண்டுதல் அடியவனால் எப்படிக் கொள்ளப்படுமோ, அந்தக் கணக்கின்படி கூட, ‘கணக்கு நேராகிவிட்டது,’ என்று யாராலும், எப்போதும் சொல்ல முடியாத ஒரு சித்திரம். நேர்த்தி என்றால் அது கம்பன்.

‘பொன்உருக் கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதாத் தன்உருக் கொண்டு நின்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான்’

என்று இராம-அனும முதல் சந்திப்பின்போது, அனுமன் தன்னுடைய பேருருவை எடுத்து நிற்கும் காட்சியைப் பற்றிச் சொல்லும்போது குறிப்பான் கம்பன். ‘பொன் மலையாகிய மேரு மலை, தன்னுடைய தோளுக்குக் கூட உவமையாகச் சொல்லப்படப் போதுமாயிராத அளவுடைய தன் பேருருவை எடுத்து நின்றான், தருமத்தின் தனிமையைத் தீர்ப்பதற்காக வந்தவனான அனுமன்.’

‘தருமத்தின் தனிமை தீர்ப்பான்,’ என்ற தொடரைப் பாருங்கள். பின்பற்றுவதற்கு யாருமே இல்லாமல், தன்னந் தனியே, கேட்பாரின்றி, நாடுவாரின்றிக் கிடந்ததான தருமம் தனிமையில் வாட விடாமல், அதனைப் பின்பற்றுவார் பல்கிப் பெருகுவதற்காகத் தோன்றியவனான அனுமன். என்ன பொருத்தமான சொற்கள்!

அயோத்தியின் அரியணையைத் தாங்கியவன் அனுமன். ‘அரியணை அனுமன் தாங்க,’ என்றுதான் இராமன் திருமுடி சூடும் காட்சியைச் சொல்லும் விருத்தம் தொடங்குகிறது. இராமன் திருமஞ்சனமாட ‘நான்கு கடல்களிலிருந்தும், ஏழு வகையான நதிகளிலிருந்தும்’ நீர் கொண்டு வந்தவன் அனுமன். ‘என்னை நீ தழுவுக,’ என்று இராமன் சொன்னதும், தன் நாயகன் தனக்குச் செய்கின்ற சிறப்பின் பெருமையை நன்குணர்ந்தவனான அனுமன் என்ன செய்தான்?

என்றலும், வணங்கி நாணி, வாய் புதைத்து, இலங்கு தானை முன் தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி, பொன் திணி வயிரப் பைம் பூண் ஆரமும், புனை மென் தூசும், வன் திறல் கயமும், மாவும், வழங்கினன், வயங்கு சீரான்.

இராமன் அவ்வாறு சொன்னது, வணங்கினான். வெட்கப்பட்டான். கை கொண்டு வாயை மூடியபடி, அவ்வளவு பெரிய சேனைக்கு முன்னால், பணிவோடு, தலை கவிழந்து நின்ற ஆற்றல் மிக்கவனை தலையோடு கால் முற்றும் நோக்கி, அவனுக்கு அணிகலன்களையும், ஆடைகளையும், யானைகளையும், குதிரைகளையும் வழங்கினான். (பதில் உதவியாக அன்று. பரிவின் காரணமாக.)

தன்னைத் தழுவுமாறு இராமன், தன்னைச் சொன்னதே அனுமனுக்குப் பேருவகையைத் தந்தது. ஏனெனில்,

உதவி வரைத்தன்று உதவி. உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.

ஒருவருக்குச் செய்யும் உதவியின் அளவு, மதிப்பு, செய்யப்பட்ட செயலின் அளவையோ, கொடுக்கப்பட்ட தொகையின் அளவையோ வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை. யாருக்கு அது செய்யப்பட்டதோ, அவருடை மன நிறைவின் அளவுதான் அந்த உதவியின் அளவைத் தீர்மானிக்கிறது.

அனுமன் தோன்றுகிற முதற் காட்சியிலிருந்து, கடைசிக் காட்சி வரை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் தோன்றுவதையும், ஒவ்வொன்றும் தோன்றத் தோன்ற வெகு எளிதாக ஒவ்வொன்றையும் அனுமன் தீர்த்து வைப்பதையும் கண்டோம். தன்னுடைய ஆற்றல் தன் தலைவனால் போற்றப்பட்ட சமயம் ஒவ்வொன்றிலும் அவன் நாணம் கொண்டு நிற்பதையே காண்கிறோம்.

 ————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அகலிகை–‘நெஞ்சினால் பிழைப்பிலாள்’: – கம்ப வாரிதி இலங்கை.ஜெயராஜ்-

April 10, 2023

லகம் தழுவிய இராமகாதை என்னும் விரிந்த கடலுள்,
கம்பனால் அமைக்கப்பட்ட அற்புதப் பாத்திரங்கள் எனும் அரிய முத்துக்கள்,
பலப்பலவாய் சிதறிக் கிடக்கின்றன.
அம் முத்துக்களுள் சில பெரியவை, சில சிறியவை.
பெரியதான முத்துக்கள் நம்மைக் கவர்வது இயற்கையே.
அபூர்வமாய் சில சிறிய முத்துக்கள்,
பெரிய முத்துக்களை விட நம் மனதைக் கவர்ந்து விடுகின்றன.
அங்ஙனம், கம்பனால் அழகுற அமைக்கப்பட்டு,
நம் மனங் கவர்ந்து நிற்கும் ஒரு சிறிய முத்தாய்,
அகலிகை பாத்திரம் அமைந்து விடுகிறது.
♠♠♠♠♠
தமிழிலக்கியப் பரப்பில் அகலிகைக் காதை, பல புலவர்களாலும் பண்டு தொட்டுப் பயிலப்பட்டு வருகின்றது.
பலராலும் கையாளப்பட்ட அக் காதையை, மூல நூலான வான்மீகத்தின் வழி நின்று,
கம்பனும் தன் காவியத்துட் புகுத்துகிறான்.
இராம காதையின் விரிந்த பரப்பில், அகலிகைப் பாத்திரத்தின் அகலம் மிகச் சிறியது.
புருஷோத்தமனாக இராமனைக் காட்டும் புலவனின் நோக்கத்திற்கு, துணை செய்து நிற்பதோடு,
அகலிகைப்பாத்திரத்தின் தேவை, கம்பகாவியத்தைப் பொறுத்தவரை முடிந்து போகிறது.

அது தவிர,
கதைப் போக்கிலோ காவிய ஓட்டத்திலோ, இப் பாத்திரத்தின் பாதிப்பு, இல்லையென்றே சொல்லும்படியானது.
அகலிகையோடு தொடர்புடைய இரண்டு பாத்திரங்கள், இராமகாதையில் வந்து போகின்றன.
அகலிகையின் கணவரான, கௌதம முனிவர் எனும் பாத்திரம்,
ஜனகரின் குலகுருவாய்த் திகழும், அகலிகையின் புதல்வரான,
சதானந்த முனிவர் எனும் பாத்திரம் என்பவையே அவ்விரண்டு பாத்திரங்களுமாம்.
அகலிகைக் காதை மட்டுமன்றி, அதனோடு தொடர்புடைய மற்றைய இரு பாத்திரங்களுங்கூட,
பால காண்டத்தோடு நிறைவுறுகின்றன.

இவ் அகலிகையின் கதை, இருபத்தெட்டுப் பாடல்களில் அமைக்கப்பட்டு, அகலிகைப் படலமாய்,
கம்பராமாயணப் பாலகாண்டத்தில் இடம்பெறுகிறது.

இவ் இருபத்தெட்டுப் பாடல்களுள்,
ஆறு பாடல்கள் தனித்த வர்ணனைகளாய் அமைவன.

பதினைந்து பாடல்கள் இராம காவியத்தோடு அக் கதை இயையுமாற்றைக் கூறுவன.

சர்ச்சைக்குரியதான அகலிகையின் வரலாறு, விசுவாமித்திர முனிவனின் கூற்றாய்,
ஏழே பாடல்களில் கம்பனாற் சொல்லப்படுகிறது.
அவ்வேழு பாடல்களிற் கம்பன் செய்யும் நுட்பங்களை ஆராயுமுன்,
கம்பகாவியத்தில் அகலிகைப்படலம் கூறும், நிகழ்வுகளின் சுருக்கத்தை முதலிற் காண்பாம்.
♠♠♠♠♠
முதலில், இலக்கியப் பரிச்சயம் குறைந்த இளைஞர்க்காய், அகலிகையின் கதைச் சுருக்கம் ஒரு சில வரிகளில்.

கௌதம முனிவரின் மனைவியான அகலிகை,அழகிற் சிறந்தவள்.
அவள் அழகு உலகெங்கும் பேசப்படுகின்றது.-தேவேந்திரன் அவள் அழகு கண்டு மயங்குகிறான்.
பிறனில் விழையும் அறமற்ற பெருவிருப்பு உந்த, அகலிகையை அனுபவிக்கத் திட்டமிடுகிறான்.

ஒருநாள் அதிகாலை விடிவதன் முன், கௌதம முனிவர், நித்திய கருமங்கள் நிறைவேற்ற,
நீர் நிலை நோக்கிச் செல்கிறார்.
முனிவரில்லா அச் சூழ் நிலையைப் பயன் படுத்தி, கௌதமரின் வடிவம் கொண்டு,
ஆச்சிரமத்தினுள் நுழைகிறான் இந்திரன்.
வந்தது கணவனே என நினைந்து, இந்திரனின் வஞ்சனைக்குப் பலியாகி, தன்னை இழக்கிறாள் அகலிகை.

நீர்நிலை சென்ற கௌதமர் நிகழ்ந்தது உணர்ந்து, ஆத்திரத்துடன் ஆச்சிரமம் திரும்புகிறார்.
முனிவரின் வருகை யுணர்ந்து, இந்திரன் பூனையாய் மாறி ஓட, அவனைச் சபித்து,
கலங்கி நிற்கும் அகலிகையையும், கல்லாகச் சாபமிடுகிறார் அவர்.

அகலிகை வருந்தி வேண்ட,
‘தசரத குமாரனான இராமன் கழற் துகள் பட, மீண்டும்  பெண்ணாவாய்!’ என,
சாப விமோசனம் உரைத்துக் கௌதமர் செல்கிறார்.

பின்னாளில்,
வேள்வி காக்க விசுவாமித்திரரோடு இராமன் காடேகிறான்.
யாகம் முடிந்து, மிதிலை செல்லும் வழியில், அவன் கழற்துகள் பட்டு, கல்லாய்க் கிடந்த அகலிகை,
சாபம் நீங்கிப் பெண்ணாகின்றாள்.

பின், அகலிகையைக் கௌதமரிடம் சேர்ப்பித்து, விசுவாமித்திரரும், இராம  இலக்குவரும் மிதிலை சேர்கின்றனர்.
இதுவே, கம்பன் தரும் அகலிகைக் காதையின் சுருக்கம்.
♠♠♠♠♠
மேற்சொன்ன அகலிகைக் காதையை, கம்பன், பின்னோக்கும் உத்தியால் உரைக்கத் தலைப்படுகிறான்.
தசரதனிடம், இராம லட்சுமணர்களை வேள்வி காக்க வேண்டிப் பெற்று, காடேகிறார் விசுவாமித்திரர்.
வழியில் இராமனால் தாடகை வதம் நிகழ்த்தப் படுகிறது.
பின், இராம லட்சுமணர்கள் அரக்கர்களை அழித்து முனிவரின் வேள்வி காத்து வெல்கின்றனர்.
அதன் பின், இராமலட்சுமணர்களை அழைத்துக் கொண்டு, ஜனகனின் வேள்வி காணப்புறப்படுகிறார் விசுவாமித்திரர்.

இவ்விடத்திலேயே, கம்பனின் அகலிகைப்படலம் ஆரம்பிக்கிறது.
சோனை நதிக்கரையிற் தங்கி, கங்கையைக் கண்டு மிதிலைநாடு சேரும் இவர்கள்,
மிதிலை நகரின் மதிற்புறத்தே, ஒளிரும் கல்லொன்றைக் காண்கின்றனர்.
அக்கல்லின்மேல் இராமன் கழற்துகள்பட, அது பெண்ணாகிறது.
ஆச்சரியமுற்ற இராமன், யாரிவள்? என விசுவாமித்திரரை வினவுகிறான்.
இவ்விடத்தில், அகலிகையின் வரலாறு,விசுவாமித்திரரால் விரித்துரைக்கப்படுகிறது.

அகலிகையை இந்திரன் விரும்பியமை ஒரு பாடலிலும்,
இந்திரன் கௌதம முனிவரின் வேடத்தில் வந்த செய்தி ஒருபாடலிலும்,
இந்திரனால் அகலிகை மாசுபடும் செய்தி ஒரு பாடலிலும்,
கௌதம முனிவர்வர, இந்திரன் பூனையாய் ஓடும் செய்தி ஒரு பாடலிலும்,
இந்திரற்கான கௌதமரின் சாபம் ஒரு பாடலிலும்,
அகலிகைக்கான கௌதமரின் சாபம் ஒரு பாடலிலும்,
அகலிகைக்கு முனிவர் சொன்ன சாப விமோசனம் ஒரு பாடலிலுமாக,
மொத்தம் ஏழு பாடல்களில்,
அகலிகை வரலாறு கம்பனால் உரைக்கப்படுகிறது.

இதன்பின், சாபவிமோசனம் பெற்ற அகலிகையை அழைத்துச் சென்று, கௌதம முனிவரிடம் விசுவாமித்திரர் ஒப்படைக்க,
இராமன் கௌதமரை வணங்கி, முனிவரோடு மிதிலை செல்கிறான் என்பதோடு,
கம்பனின் அகலிகைப் படலம் முற்றுப் பெறுகிறது.
♠♠♠♠♠
நம் பழைய மரபுப்புலவர்களால் மட்டுமன்றி, நவீன இலக்கியக் கர்த்தாக்களாலுங்கூட,
அகலிகைக் கதை அழகுறக் கையாளப்பட்டுள்ளது.
பலபுலவர்களாலும் பயிலப்பட்ட அவ் அகலிகைக் காதை, அப்புலவர்களின் மனப்போக்கிற்கேற்ப,
விதவிதமாய் மாற்றியுரைக்கப்பட்டது.
இந்திரனை, அகலிகையின் முன்னைக் காதலனாய் உரைப்பர் ஒருவர்.
இந்திரனின் அழகு கண்டு அவன்பால் விருப்புற்று, அகலிகை, அவனை அணைந்ததாய் உரைப்பார் மற்றொருவர்.
இருளில் வந்தது யாரென்று தெரியாமலே, அகலிகை தன்னையிழந்ததாய் உரைப்பார் வேறொருவர்.
இங்ஙனம், அகலிகைக் கதை பலவிதமாய்ப் பேசப்பட்டிருக்கிறது.
இராமகாவியத்தின் அறநிலை வழுவாமல்,தனக்கென ஒரு தனிப்பாணி அமைத்து,
கம்பன் இக்கதையை அற்புதமாய்க் கையாள்கிறான்.
அவ்வற்புதம் காண்பாம்.
♠♠♠♠♠
கம்பனில் வரும் அகலிகை, தெரிந்தே கற்பிழந்தாளா? ஏமாற்றப்பட்டாளா?
கம்ப காவியத்தினூடு அகலிகையைக் கற்போர் மனதில், இக்கேள்வி விஸ்வரூபம் எடுக்கிறது.
வந்தது இந்திரன் எனத் தெரிந்தே, அகலிகை கற்பிழந்தாள் என, ஒருசாரார் வாதிடுகின்றனர்.
அங்ஙனமன்றி,
அவள் தன்னையறியாமலே தவறிழைத்தாள் என, அடித்துப் பேசுகின்றனர் வேறு சில அறிஞர்கள்.
இவ்விருதிறத்தாரும், முரண்பட்ட தம் வாதத்திற்கு, கம்பன் கவிதையினையே சான்றாய்க் காட்டுவது,
வியப்புத்தருகிறது.
முரண்பட்ட இவ்விருதிறத்தார்க்கும், கம்பன் கவி சான்றாவது எங்ஙனம்?
ஆராய்வது அவசியமாகிறது.
மாறுபட்ட அவ்விருதிறத்தாரினதும், வாதங்களை முதலில் ஆராய்வோம்.
♠♠♠♠♠
அகலிகை தெரிந்தே கற்பிழந்தாள் என, வாதிடுவோரில் ஒரு சாரார்,
கம்ப காவியத்துட் புகாமல்,தம் அறியாமையே சான்றாக, அழுக்குகளை இரசிக்கும் தம் ஆழ்மன விருப்பினை வெளிப்படுத்தி,
கற்பனையான ஒரு வாதத்தினை முன்வைக்கின்றனர்.
அவ்வாதம் ஆராயப்படவேண்டிய ஒன்றன்று.
ஆயினும், இளையோர் மனதில் அவர்கருத்து பதியாதிருக்க, அவர்தம் வாதத்தையும் ஆராய்தல்கூட அவசியமாகிறது.
கற்பனையான அவர்தம் வாதம் தான் என்ன? காண்பாம்.

ண்மை ஒன்றைக் காண,
மூன்று பிரமாணங்களை நம் ஆன்றோர் ஏற்றுக் கொள்வர்.
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்,
அறிவுக் கருவிகளால் நேரே காண்பது அவற்றுள் ஒன்று. இது ‘காட்சிப் பிரமாணம்’ எனப்படும்.
தெரிந்தவை கொண்டு, தெரியாதவற்றை ஊகித்து அறிதல் மற்றொன்று.
இது ‘அநுமானப்பிரமாணம்’ எனப்படும்.
உயர்ந்தோர் கருத்தை ஏற்று, ஒன்றை ஒத்துக்கொள்வது இன்னொன்று.
இது ‘ஆகமப் பிரமாணம்’ எனப்படும்.
இவையே ஆன்றோர் ஏற்றுக் கொள்ளும் பிரமாணங்களாம்.
🌾  🌾  🌾
அகலிகை கற்புள்ளவள் என, வாதிடுவோர்தம் மேற் சொன்ன இரண்டு வாதங்களும்,
அநுமானப் பிரமாணத்தினை ஆதாரமாய்க் கொண்டு அமைந்தவை.
வாத நிலையில் அநுமானப் பிரமாணத்தினை, காட்சிப் பிரமாணத்தால் உறுதி செய்தாலன்றி,
ஒப்புதல் முடியாது.
எனவே, மேற்சொன்ன இருவாதங்களும், அகலிகையை, நல்லவளாய் உறுதி செய்ய முடியாது,
நலிவுற்று நிற்கின்றன.
🌾  🌾  🌾
இனி,
அகலிகையை நல்லவளாய் வாதிடுவோர்,
ஆகமப்பிரமாணம் ஒன்றினை எடுத்துக் காட்டி, அகலிகை நல்லவள் என உரைக்கின்றனர்.
அவ்வாகமப் பிரமாணம், விசுவாமித்திரர்; கூற்றாய் வெளிவருகிறது.
இராமனின் காற் துகள்பட்டு சாபவிமோசனமுற்ற அகலிகையை,
கௌதம முனிவரிடம் அழைத்துச் செல்கிறார் விசுவாமித்திரர்.
அவளைக் கௌதமரிடம் ஒப்புவித்து,
‘மனத்தினாற் பிழை செய்யாத இவளை ஏற்றுக்கொள்’ என, உரைக்கிறார் அவர்.
அச்செய்தியைச் சொல்லும் பாடல் இது.

‘அஞ்சன வண்ணத்தான் தன் அடித்துகள் கதுவா முன்னம்,
வஞ்சி போல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பிலாளை நீ அழைத்திடுக! என்ன,
கஞ்சமா மலரோன் அன்ன முனிவனும், கருத்துட் கொண்டான்.’

இப்பாடலில் அகலிகையை, ‘நெஞ்சினால் பிழைப்பிலாள்’ என, விசுவாமித்திரர் கூறுகின்றார்.
பிரம்ம ரிஷியாகிய விசுவாமித்திரர், நிதானத்துடன் உரைக்கும் இக்கூற்று,
ஆகமப்பிரமாணமாய்க் கொள்ளத் தக்கதேயாம்.
‘நெஞ்சினாற் பிழைப்பிலாள்’ என, விசுவாமித்திரரைச் சொல்ல வைத்ததன்மூலம்,
அகலிகையை இந்திரன் வஞ்சித்தே கெடுத்தான் என்பதையும்,
தான் தவறுவது தெரியாமல், உடலளவில் மாத்திரமே அகலிகை கெட்டுப்போனாள் என்பதையும்,
அதனாற்றான் அவளுக்கு இராமனால் சாபவிமோசனம் கிட்டியது என்பதையும்,
கம்பன் நமக்கு உணர்த்துகிறான் என உறுதிபட இவர்கள் உரைப்பர்.
அகலிகையை நல்லவளாய்க் காட்ட முயலும் இவ்வாதம், வலிமையானதாகவே தோன்றுகிறது.
🌾  🌾  🌾
அகலிகை,
தெரிந்தே தவறிழைத்தாள் என உரைப்போர், மேற்சென்ன வாதத்தினை ஏற்க முடியாதென்பர்.
தம்மறுப்புக்கு ஆதாரமாய், கவிக்கூற்றாய் அமையும் கம்பனின் பாடலொன்றை,
அவர்கள் எடுத்துக் காட்டுவர்.
அவர்தம் வாதத்தை வலிமையாக்கும், அக்கம்பன் கவியைக் காண்பாம்.
🌾  🌾  🌾
கௌதம முனிவர் வேடத்தில் வந்த இந்திரன், அகலிகையைத் தன் விருப்புக்கு ஆளாக்க,
அவளும் அவனாசைக்கு உடன்படுகிறாள்.
இந்நிலையில், நீர் நிலைக்குச் சென்ற கௌதமன், சூழ்நிலையின் மாற்றத்தை உணர்ந்து,
தான் ஏமாற்றப்பட்டதறிந்து விரைந்து திரும்புகிறான்.
மேற்செய்திகள் கம்பனால் சொல்லப்படும் பாடல் இது.

‘புக்கு, அவளோடும், காமப் புதுமண மதுவின் தேறல்
ஒக்க உண்டிருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்தபின்னும்,
‘தக்கது அன்று|’ என்னஓராள்; தாழ்ந்தனள் இருப்ப, தாழா
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும், முடுகி வந்தான்.’

🌾  🌾  🌾
மாறு வேடத்தில் வந்த இந்திரன், அகலிகையை அனுபவிக்கும் செய்தியை,
இப்பாடலில் முதல் ஒன்றரை வரிகள் சொல்கின்றன.
புக்கு, அவளோடும், காமப் புதுமண மதுவின் தேறல் ஒக்க உண்டு இருத்தலோடும்|,
இந்திரன், அகலிகையைச் சேர்ந்து,தன் நீண்டநாட் காமவேட்கையைத் தீர்க்க முனைகிறான்.
எல்லையற்ற இன்பநாட்டம் கொண்ட அவ் இந்திரன், தேவமாதரிடம் பெறாத புதிய இன்பத்தை,
அகலிகையிடம் காண்கிறான் எனும் கருத்தை, இவ் ஒன்றரை வரிகளும் நமக்கு உணர்த்துகின்றன.
இது, இப்பாடலூடு தெரியும் இந்திரனின் மனநிலை.
🌾  🌾  🌾
இனி, நாம் அகலிகையின் மனநிலையைக் காண்போம்.
கம்பன் பாடல் அவள் மனநிலையைத் தெளிவுபடப் பேசுகிறது.
‘உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும், ‘தக்கது அன்று|’ என்ன ஓராள்; தாழ்ந்தனள் இருப்ப,
தன்னைச் சேர்பவன் இந்திரன் என அகலிகை உணர்ந்தாள் என்றும்,
உணர்ந்த பின்பும் அது தக்கதான செயலல்ல என அறிந்து, அச்செயலை அவள் விலக்கினாளல்லளென்றும்,
இந்திரனின் விருப்புக்கு ஆட்பட்டுத் தாழ்ந்தனள் என்றும், இவ்வடிகளிற் தெளிவுபடச் செய்தி சொல்லப்படுகிறது.
இவையே இப்பாடல் தரும் செய்திகளாம்.
🌾  🌾  🌾
இப்பாடலை ஆதாரம் காட்டியே,தெரிந்தே அகலிகை கற்பிழந்தாள் என, உறுதிபட இப்புலவர்கள் வாதம் செய்வர்.
இவ்வாதமும் ஏற்கத் தக்க ஒன்றாகவே படுகிறது.
🌾  🌾  🌾
மேற்சொன்ன கம்பனின் கூற்றினால், அகலிகை தெரிந்தே கற்பிழந்தவள் என்பது உறுதிப்படுமேல்,
‘நெஞ்சினால் பிழைப்பிலாள்’ என, இவளை எங்ஙனம் விசுவாமித்திரர் உரைத்தல் கூடும்?
கேள்வி பிறக்கிறது.
ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கும்,இவ்விரண்டு பாடல்களால், அகலிகை, தெரிந்து தவறினளா?
தெரியாது தவறினளா? எனும், கேள்விக்கு விடைகாணமுடியாமல், திகைத்து நிற்கிறது இலக்கிய உலகம்.
🌾  🌾  🌾
அறிவுச் சோம்பல் கொண்ட சில இலக்கியவாதிகள், கம்பனின் முரண்பட்ட இவ்விரு கூற்றுக்களையும்,
ஆராய்ந்து முடிவுகாண முயலாமல், வழமையான தம்பாணியில் இவ்விருபாடல்களில் ஒன்று,
பிற் சேர்க்கை என உரைத்துத் தப்ப முயல்கின்றனர்.
இன்று வரை வெளிவந்த எந்த இராமாயணப் பதிப்பிலும், இவ்விருபாடல்களில் எந்தவொன்றும்,
பிற்சேர்க்கையாய் ஒதுக்கப்படவில்லை.
கம்பகாவியத்திற்கு உரைசெய்த அறிஞர் பலரும், முரண்பாடான இப்பகுதிக்கு விடைகாணாது விட்டது,
இப்பகுதி பற்றிய சர்ச்சைகள் மேலும் வளரத் துணையாயிற்று.
முரண்பட்ட இவ்விருகூற்றுக்கள் கொண்டு மோதி நிற்பார்க்கு, கம்பன் தரும்விடைதான் என்ன?
கம்பசூத்திரத்துள் நுழைந்து தேடின் பதில் கிடைக்காமலா விடும்?
முயல்வோம்.
🌾  🌾  🌾
‘நெஞ்சினால் பிழைப்பிலாள்’ என,விசுவாமித்திரர் சொல்லும் கூற்று,
வேறுகருத்துக்கு இடமின்றி, தெளிவுபடச் சொல்லப்பட்டிருப்பதால்,
அப்பாடலுள் நுழைந்து தேடும் அவசியமற்றுப் போகிறது.
அங்ஙனமாயின்,
அகலிகையின் நடத்தையைக் குறைகூறும் பாடல்வரிகளுக்குள்,
அவள் ‘நெஞ்சினால் பிழைப்பிலாள்’ எனும் முனிவர் கூற்றுக்காம்,
ஆதாரம் ஏதும் அகப்படுகிறதா என ஆராய்தல் அவசியமாகிறது.
அகலிகை,மனதால் குற்றம் இழைக்கவில்லை என்பதற்கான ஆதாரத்தினை,
அவள் நடத்தையைக் கூறும் பாடல் வரிகளுக்குள் காண்போமாகில்,
இம்முரண்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
🌾  🌾  🌾
இவ்வெண்ணத்தோடு, அகலிகை தவறிழைத்ததாய்க் கூறும் அப்பாடலுள்,
மீண்டும் புகுந்து தேட நம் நெஞ்சம் விழைகிறது.
அதனால் மீண்டும் ஒருதரம் அப்பாடலைக் காணப் புகுகிறோம்.

தீது இலா உதவி செய்த சேவடிக் கரிய செம்மல்.
கோது இலாக் குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு.
மாதவன் அருள் உண்டாக வழிபடு:படர் உறாதே.
போது நீ. அன்னை!’’ என்ன. பொன் அடி வணங்கிப் போனாள்.

அருந் தவன் உறையுள் தன்னை அனையவர் அணுகலோடும்.
விருந்தினர் தம்மைக் காணா. மெய்ம்முனி. வியந்த நெஞ்சன்.
பரிந்து எதிர்கொண்டு புக்கு. கடன் முறை பழுதுறாமல்
புரிந்தபின். காதி செம்மல் புனித மா தவனை நோக்கி.*

அஞ்சன வண்ணத்தான்தன் அடித் துகள் கதுவாமுன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும். கருத்துள் கொண்டான்.*

குணங்களால் உயர்ந்த வள்ளல் கோதமன் கமலத்தாள்கள்
வணங்கினன். வலம்கொண்டு ஏத்தி மாசு அறு கற்பின் மிக்க
அணங்கினை அவன்கை ஈந்து. ஆண்டு அருந்தவனோடும். வாச
மணம் கிளர் சோலை நீங்கி. மணி மதில் கிடக்கை கண்டார்.*

இராமன் பாதத்துளி பட்டு கல்லுருவாய் இருந்த அகலிகை பெண் உரு பெற்றாள்.
இராமன், விஸ்வாமித்திரன், கௌதமன், லக்ஷ்மணன், அகலிகை என ஐந்து பேரும் நிற்கும் இடம்.
இராமன் அகலிகையை வணங்கி, உன் கணவனோடு சேர்ந்து வாழ் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்புகிறான்.
முடிவாக விஸ்வாமித்திரன் இந்த படலத்தை முடிக்கிறான்…

“இவள் மனத்தால் பிழை ஏதும் செய்யாதவள். இவளை நீ ஏற்றுக் கொள்ளவேண்டும்” என்று கௌதமனிடம் விஸ்வாமித்திரன் சொல்கிறான்.
அதை கௌதமனும் ஏற்றுக் கொள்கிறான் என்பதோடு அகலிகை கதை முடிவுக்கு வருகிறது.

அஞ்சன வண்ணத்தான்தன் அடித் துகள் கதுவா முன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும். கருத்துள் கொண்டான்.*

அஞ்சன = அஞ்சனம் என்றால் மை. மை போன்ற

வண்ணத்தான்தன் = வண்ணம் கொண்ட இராமனின்

அடித் துகள் = திருவடி துகள்

கதுவாமுன்னம்.= படுவதற்கு முன் (அது ஏன் என்று தெரியவில்லை)

வஞ்சிபோல் = வஞ்சிக் கொடி போன்ற

இடையாள் = இடையை உள்ள அகலிகை

முன்னை வண்ணத்தள் = முன்பு இருந்ததை போன்ற வண்ணத்துடன்

ஆகிநின்றாள்; = மாறி நின்றாள்

நெஞ்சினால் பிழைப்பு இலாளை = மனதால் தவறு செய்யாதவளை

நீ அழைத்திடுக!’ என்ன. = நீ (கௌதமனாகிய நீ) அவளை ஏற்றுக் கொள் என்று கூறினான்

கஞ்ச மா மலரோன் அன்ன = தாமரை மலரில் உள்ள பிரமனை போன்ற

முனிவனும்.= கௌதமனும்

கருத்துள் கொண்டான் = மனத்தில் கொண்டான்

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவடியின் மஹிமை காட்டும் -ஸ்ரீ கம்பனின் கவி அமுதம் —

February 21, 2023

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இஃது இயம்புவது யாது எனில்
பொய்யில் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வமாக் கவி மாட்சி தெரிவிக்கவே

——–

சூரியனை விழுங்கியவன்
வாயு புத்திரன், அஞ்சனை மைந்தன் என்று போற்றப் படுகின்ற அனுமன் தன் தாயிடம் இந்தக்
காட்டில் தான் எந்தப் பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று கேட்க,
அதற்கு அஞ்சனை இந்தக் காட்டில் உள்ள சிவந்த நிறப் பழங்களை நீ உணவாகச் சாப்பிடு என்று கூறினாள் .
இதனை
“கை அஞ்சு ஆயுதம் உடைய அக் கடவுளைக் கண்டும் மெய் அஞ்சாதவன்”  என்ற பாடல் வரிகளில் அறியலாம் .

அனுமன் பிறந்த பொழுதே இளஞ்சூரியனைக் கனிந்த பழம் என்று கருதி சிறிதும் அச்சம் கொள்ளாமல்,
அதனைப் பிடிக்கச் சென்றான் என்னும் போது அனுமானின் வீரத்தை அறிய முடிகிறது
கம்பர் சிறு வயதில் இருந்தே அனுமானை வீரம் கொண்ட வலிமையானவனாகவே படைத்துக் காட்டுகிறார் –

பல வரங்களைப் பெற்றவன்
பிரம்ம தேவன், தேவர்களிடம் அஞ்சனையின் மகன் அனுமனுக்கு, பற்பல வல்லமைகளையும் ,
அரிய வரங்களையும், அளிப்பதோடு,
அனுமன் நிறைத்த உருவத்தை எடுத்து நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லும் திறமை ஏற்படவும்,
போரில் தோல்வி என்பதே கிடையாது என்றும்
இவனுடைய பாதையில் யாரும் குறுக்கிட்டு இவனைத் தடுக்க முடியாது என்றும்,
தன்னுடைய பிரம்ம தண்டத்தால் இவனுக்கு மரணம் ஏற்படாது என்றும்,
சிரஞ்சீவியாக வாழ்வான் என்று அருளி வரம் அளித்தான்.

இதனை
“ஒப்பு இறையும் பெறலரிய ஒருவன்”
“எவரினும் அதிகம் உயர்ந்தான்”
“ஊழி கடந்தீர்”
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என் இருத்தி”
என்ற பாடல் வரியில் கம்பர் எடுத்துக் காட்டுகிறார்.

மேலும் அனுமனுக்கு தண்ணீர் தீ, ஆயுதம்,
அஸ்திரம், வியாதி போன்ற வற்றாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதையும் கம்பர்,
வெப்புறு செந்தீ நீர் விளியாளும் விளியாதீர்
செப்புறு தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்”-என்ற பாடல் வரிகளின் மூலம் வெளிப் படுத்து கிறார்.

எந்த சூழலிலும் , யாராலும், அனுமனுக்கு அழிவில்லை என்பதை தனது படைப்புத் திறத்தின் மூலம் எடுத்துக் காட்டுகிறார்.

கல்வி கற்றல்
பல அரிய வரங்களைப் பெற்ற அனுமன், சூரிய பகவானிடம் இருந்து ரிக்வேதம், யஜூர் வேதம், சாமவேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்கள், அறுபத்தி நான்கு கலைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான்.

ஸூர்யனின் எதிரில் நின்று கொண்டே வேத சாஸ்திரங்களையும் அதன் ரஹஸ்யங்களையும்
உப ஸாஸ்த்ரங்களையும் அனுமன் கற்றுக் கொண்டான் இதனை
உலகு எங்கும் பேர் இருள் நீக்கும் பகலோன் முன் தேர் முன் நடந்தே
ஆரிய நூலும் தெரிவுற்றீர்  -என்ற வரிகளில் எடுத்து உரைக்கிறார் .

மதி நுட்பம் கொண்டவன் –
சீதையைத் தேடி இராமனும் இலக்குமனனும் சென்ற போது அனுமன் எதிர்படுகிறான்
அவர்களை பார்த்த கண நேரத்திலே அவர்களை நன்றாக எடை போடுகிறான்
அனுமன் அவர்களை பற்றி

தருமமும் தகவும் இவர் தனம் எனும் தகையர் இவர்
கருமமும் பிறிது ஓர் பொருள் சுருதி அன்று அது கருதின்
அரு மருந்து அனையது இடை அழிவு வந்துளது அதனை
இரு மருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள்--என தனது மதி நுட்பத்தால் உணர்ந்து விடுகிறான்

அனுமனின் ஆற்றல் மூலம் தான் சீதையைக் கண்டுபிடிக்க முடியும் என்பதையும்
அவனுக்கு நிகர் யாரும் இல்லை என்பதையும் கம்பர்
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால் என்று இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ -என்கிறார் –

பிலத்தைப் பிளந்தவன்
அனுமன் வானர வீரர்களின் பயத்தை நீக்கி ஆண் சிங்கம் போல் கைகளைத் தூக்கி பேர் உருவம் எடுத்து நிமிர்ந்தான் என்பதை கம்பர் –
நடுங்கன் மின் எனும் சொலை நவின்று நகை நாற
மடங்கலின் எழுந்து மழை ஏற அரிய வானத்து
பெருங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற
வெறும் கைகள் சுமந்து நெடு வான் உற நிமிர்ந்தான் –என்ற பாடலில் அனுமனின் ஆற்றலை வெளிப்படுத்துகிறார் –

தோள் கொடுத்தவன்
வேறு காட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும்
ஏற நீ ஐய என்னுடைத் தோளின் மேல் என்றான்-என்றும்

ஏறினான் இளம் கோளரி இமையவனாகி
கூறினார் எடுத்து ஆர்த்தது வானவர் குழுவும்
நூறு பத்துடைப் பத்தியின் நொறில் பரி பூண்ட
ஆறு தேரினும் அகன்றது அவ்வனுமன் தன் தடம் தோள் -என்று அனுமானின் தோள் திறமும் வலிமையையும் எடுத்துக் காட்டுகிறான்

சொல்லின் செல்வன்
இம்மலை இருந்து வாழும் எரி கதிர்ப் பாதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன் தேவ நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையன் ஏவ வினவிய வந்தேன் என்றான் –
ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவு என்றும்
வேற்றுமை இவனோடு இல்லையாம் என விளம்பலுற்றான்

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார் கொல் இச் சொல்லின் செல்வன்
வில் ஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ -என்று பெருமாள் பாராட்டினார் –

தெற்கு திசையில் இருந்து வரும் போதே ராமனை வணங்காமல் பிராட்டி இருக்கும் தென் திசையை வணங்கி
நிலத்தில் வீழ்ந்து சீதாப் பிராட்டியின் நிலைமையைக் -கற்புத் திண்மையை -குறிப்பால் உணர்த்தினார்
எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்
மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான் –

கண்டனன் கற்பினுக்கு அணியை கண்களால்
தென் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்
அண்டர் நாயக இனி துறத்தி ஐயரும்
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்

———————
அசோக வனத்தில் இருக்கும் சீதாபிராட்டி அனுமனை இராமதூதன் எனத் தெளிந்த பின் அவனிடம்
~~ அய்ய! சொல்! அனையன் மேனி எப்படித்து அறிவி || என்று கேட்கிறாள்.
இதற்கு அனுமன் இராம அழகை ~~அடி முதல் முடி ஈறாக|| அறிவுறச் சொல்லத் தொடங்கினான்.
இராம அழகு
~~படியெடுத்து உரைத்துக் காட்டும் படித்து அன்று: படிவம்,பண்பின்
முடிவுள உவமைக்கு எல்லாம் இலக்கணம் உரைக்கின் முந்தா||
என்று படி எடுக்கமுடியாத அளவிற்குப் பெருமையும், உவகைளால் எட்டமுடியாத அழகும்
கொண்டு இருப்பதாக அனுமன் கருதுகின்றான்.
இராமபிரானின் உருவ நலனைப் பின்வரும் நிலையில் அனுமன் எடுத்துக்காட்டுகின்றான்.
திருவடிகள்
சேயிதழ் தாமரை போன்றன என்றால் தாமரை மலரும் குவியும். ஆனால் திருவடிகள் மலர்ந்தே இருக்கும்.
பவழத்தை உவமை காட்டினால் பவழம் இராமபிரானின் கால்களின் சிவப்பிற்குப் பொருந்தாமல் குவளை மலர்போல பொலிவழியும்.
திருவடி விரல்கள்
இராமபிரானின் கால் விரல்களுக்குக் கற்பக மரத்தின் மொட்டுகள் ஒக்கும் என்றாலும்,
பவழத்தின் இளங்கொடி ஒக்கும் என்றாலும் அவை ஒரு புறம் அழகற்றுக் கிடக்கும்;.
சூரியனின் இளங்கதிர்; போன்று இராம பிரானின் கால் விரல்கள் ஒளி பெற்றுத் திகழ்ந்தன என்றால் அது சரியாகும்.
திருவடி விரல்களின் நகங்களின் அழகு
திருவடியின் விரல்களில் உள்ள நகங்கள் பிறைச் சந்திரனைப் போன்றன என்றால் திங்கள் பத்து என்ற எண்ணிக்கையில் இல்லை.
விரல்;கள் வயிரம் போன்றன என்றால் அவற்றில் திரட்சி இல்லை. எனவே விரல் நகங்களுக்கு உவமை கூற இயலாது.
திருவடிகளின் செய்கை
நிலவுலகையே அளந்து, கடந்து நிற்கும் திருவடிகள் நிலத்;தில் வந்து பொருந்தின,
காட்டில் நடந்தன என்றால் அவற்றின் எளிமை பாராட்டத்தக்கது.
இராமன் உலகினைக் கடந்து நிற்பவன் என்று ஞான நூல்கள் உரைக்கின்றன.
அவன் நில உலகில நடந்தான் என்றால் அந்த நூல்கள் சொன்ன கருத்துகள் முரண்பாடுகள் உடையதாகும்.
ஞான நூல்களால் உணரப்படாத திருவடிகளின் பெருமையை உரைத்துவிட முடியுமா?
இறையடியார்கள் இறைவின் பாதங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பர்.
இறைவன் பாதங்களை அடையும் சரணாகதி நிலையே உயிரை உய்விக்க வல்லது என்ற நிலையில்;
இங்கு அனுமன் உயிர்களுக்கு இறைவனின் பாதச் சிறப்பினை எடுத்துரைப்பதாக சுந்தரகாண்டம் படைக்கப்பெற்றுள்ளது.
கணைக்கால்
கணைக்கால் அம்பறாத் தூணியை ஒத்திருந்தது என்று சொல்லாம் என்றால் தன்னை அடைந்தவரைக் காக்கும் சிறப்புடையது இறைவனின் கால்கள். அக் கால்களுக்கு அழிக்கத் துணைபுரியும் அம்புகள் வைக்கும் புட்டியை உவமை காட்டுவது பொருத்தமாக இருக்காது.
தொடைகள்
இராமபிரானின் தொடைகள் கருடனின் பிடரியை, மதயானையின் துதிக்கையை ஒத்திருந்தன என்று சொன்னால் அவை நாணம் அடையும்.
அந்த அளவிற்கு அழகு வாய்ந்தனவாக தொடைகள் அமைந்திருந்தன.
திரு வுந்தி
வலப்புறமாகச் சுழித்து ஓடும் கங்கையாற்றின் நீர்ச்சுழலை ஒத்து அமைவது திருவுந்தி என்று சொன்னால் அதுவும் பொருந்தாது.
மகிழம்பூவை ஒத்தது என்று சொன்னாலும் அது பொருந்தாது.
திரு மார்பு
மரகத மலை குறுகும்படியாக அகன்ற மார்பு இராமனுடையது.
அதில் நீங்காமல் உறையும் திருமகள் பெற்ற செல்வமே உயர்ந்த செல்வம்.
இதனில் சீதாபிராட்டி இராமனின் நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கிறாள் என்ற குறிப்பும் உள்ளது.
கைத் தலங்கள்
இராமனின் கரங்கள் தாமரை போன்று காணப்படுவதால் அக்கரங்களைச் சுற்றிலும் வண்டுகள் மொய்த்துக் கொண்டே இருக்கும் பெருமை மிக்கது. அக்கரங்களுக்கு ஐராவத யானையின் துதிக்கையை உவமை காட்டினால் ஓரளவிற்குப் பொருந்தும்.
கைத்தல நகங்கள்
இராமனின் கை சூரியனைக் கண்டால் மலரும் தாமரையை அழகில் ஒத்தன.
அவை வச்சிர யாக்கை உடைய இரணியனைப் பிளந்த செயல் உண்மையானதுதானா என்று அதன் மென்மைத்தன்மை குறித்து ஐயப்படுவார்கள்
ஆனால் அவர்கள் நகங்களைப் பார்த்தால் அச்செயல்; உண்மைதான் என்று காட்டும் அளவிற்கு வலிமையைக் காட்டி நிற்கும்.
திருப் புயங்கள்
புயங்களுக்கு மலையை உவமை காட்டலாம் என்றால் பொருந்தாது.
ஏனெனில் இராமனின் தோள்கள் போல் மலைகள் திரட்சியும் ஒளியும் உடையன அல்ல.
திருமகள் மலையில் சேர்ந்திருப்பதில்லை. மலையில் வில்லின் நாண் புரளாது.
இராமனின் தோள்கள் போல மலைகள் புகழ்பெற்றன அல்ல.
திரு மிடறு
இராமனின் கழுத்துக்கு பாக்கு மரத்தையும், உப்புக்கடலில் கிடக்கின்ற சங்கையும் உவமை காட்டலாம் என்றால் அது பொருந்தாது.
திருமாலின் இடது கரத்தில் உள்ள பாஞ்சசனியம் என்ற சங்கு ஒருவழியில் உவமையாகலாம்.
திரு முகம்
இராமபிரானின் திருமுகம் சந்திரன் போன்றது என்று சொன்னால் அது தேய்வும் வளர்வும் இல்லாத நிறைத்தன்மை உடையது.
எனவே அது பொருந்தாது.
அவரின் முகத்திற்கு தாமரையை உவமை காட்டினால் கண்களுக்கு எதனைக் காட்டுவது.
திருவாய்
தாமரை மலர்போன்றது திருவாய் என்றால் தாமரை அது கேட்டு நாணும்.
பவழம் திருவாய்க்கு உவமையாகும் என்றால் அது வெண்ணகை புரியாது.
இனிய சொற்களைப் பேசாது.
பற்கள்
இராமனின் பற்களுக்கு முத்து, நிலவு, அமுதம், முல்லை, மயிலிறகின் அடிக்குருத்து, புன்னைமொட்டு, அறம்
என்னும் வித்திலிருந்து கிளைத்த முளை ஆகிய யாவும் பொருந்துமா?
அறங்கள் முப்பத்திரண்டு. அதுபோன்று பற்களும் முப்பத்திரண்டு என்று குறித்திருப்பது இங்குக் கருதத்தக்கது.
திருமூக்கு
இந்திர நீலக்கல்லில் எழுந்த ஒளி, மரகதமணியின் ஒளித்திரட்சி ஆகியன இராமபிரானின் மூக்கிற்கு ஒப்புகையாகும் என்றால் அது பொருந்தாது. இந்திரகோபப்பச்சியைக் கவ்வ வரும் பச்சோந்தியும் மூக்கிற்கு உவமையாக அமையாது.
திருப்புருவங்கள்
இராமனின் புருவங்கள் கரன் முதலான அரக்கர்களைக் கண்டதும் வளைந்தன.
இதன் காரணமாக வில்லும் வளைந்தது. அரக்கர்கள் அழிந்தனர். இனி அரக்கர் குலம் அழந்தது என்ற வாழ்த்தொலி கேட்டது.
அந்த வளைந்த வில் போன்றது இராமபிரானின்; புருவங்கள்.
இங்கு இராமபிரான் அரக்கர்களை அழிக்க வருவார் என்ற செய்தியும் இணைத்துச் சீதாபிராட்டிக்கு உணர்த்தப்பட்டு
ஆறுதல் அளிப்பதாக இப்பகுதி அமைகிறது.
திருநெற்றி
எட்டாம் நாள் சந்திரன் வளர்தல், தேய்தல் இல்லாமல், நாள்தோறும் தோன்றல் மறைதல் இல்லாமல்,
இராகு என்ற கோளால் விழுங்கப்படாமல் இருந்தால், களங்கமே இல்லாமல் இருந்தால் இருளின் அழகான நிழலில்
பல காலம் இருந்தால் இராமபிரானின் நெற்றிக்கு உவமையாக அமையலாம்.
திருக்குழல்
நீண்டு, திரண்டு, பளபளப்புடன், கருத்து, நீலமணியின் நிறத்தைப்பெற்று, முறுக்குண்டு, பின்னே தாழ்ந்து,
நுனி சுருண்டு, தெய்வத்தன்மை பொருந்திய இயற்கைமனத்துடன் திகழ்ந்த இராமபிரானின் திருமுடி சடையாக மாறிவிட்டது.
இதனை மழை என்று உவகை காட்டுதல் பொருந்தாது.
நடை
அரசு ஏற்கத் துணிந்த நாளினும், ஆட்சிச் செல்வம் கிடைக்காமல் துன்பம் நிறைந்த காட்டில் வாழும் நாளிலும்
தன்தன்மை மாறாத நடையை உடையவர் இராமபிரான்.
இவரின் நடை காளையிடத்தில் உள்ளது என்று சொன்னால் மதயானை வருந்தும்.
இவ்வாறு இராமபிரானின் அழகை    அடிமுதல் முடிவரை சீதாபிராட்டியிடம் அனுமன் எடுத்துரைக்கிறான்.
மேற்கண்டவற்றில் இருந்து ஒட்டுமொத்தமாகப் பெறப்படும் செய்தி உவகைளுக்கு அப்பாற்பட்ட வடிவழகு உடையவன் இராமன்
அல்லது இறைவன் என்பதை உணரமுடிகின்றது.
மேலும் சங்கப்பாடல்களிலும், காப்பியங்களிலும் பெண்களின் அழகு கேசாதிபாதமாகச் சுட்டப்பெறும்.
பெண்களின் அழகை வருணிக்க உவமைகள் பலவற்றைப் புலவர்கள் புனைந்தேத்துவர்.
ஆனால் கம்பர் இராமன் என்ற ஆண்மகனை அழகின் உயர்நிலையில் படைக்கின்றார்.
இது மிகப்பெரிய வேறுபாடாக கருதத்தக்கது.
ஒரு ஆண்மகன் மற்றொரு ஆண்மகனின் உருவ அழகை வருணிக்கும் நிலைப்பாட்டில் கம்பரின் அழகியல் உணர்வு இங்குச் செயல்பட்டுள்ளது. அனுமனைச் சற்று மறந்து அந்த இடத்தில் கம்பனை அமரவைத்து இராம அழகைத் தரிசித்தால் அது வாசகனுக்கு இன்னும் அழகுணர்வினைக் கூட்டும். கம்பர் கொண்டுள்ள இராம பக்தியை விளக்கும். இராம அழகில் உவரு நலன் காட்டப்பெறுவதைவிட
இராமனின் வீரம், வலிமை, எளிமை, புகழ் ஆகியன எடுத்துரைக்கப்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
இதே கம்பர் அனுமன் சீதையின் அழகை இராமனிடம் கூறும்போது கையாளும் அழகுணர்வு முற்றிலும் வேறுபட்டு அமைகின்றது.
சீதையைக் கண்ட அனுமன்,  சீதாபிராட்டியின் நிலையையும் அவளின் இருப்பையும் காட்டுவதாக இருபது பாடல்களைப் படைத்துள்ளார் கம்பர். இப்பாடல்களில் சொல்லடுக்குகளையும், சொல் விளையாட்டுகளையும் கம்பர் உத்திகளாகப் பயன்படுத்தி அழகுணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இவ்வழகு வெளி;ப்பாட்டில் வருணனைகளோ, உவமைகளோ, கேசாதிபாதமோ, பாதாதி கேசமோ இடம்பெறவில்லை.
ஆனால் படிக்கும் வாசகன் இராமனின் அழகைக் கூறும் பாடல்களை விட சீதையின் அழகு கூறப்படும் பாடல்களை அதிகம் படித்து இன்புறுகின்றான். இதற்கு உரிய காரணங்கள் ஆராயப்படவேண்டியதாகும்.
சீதையின் அழகை குடும்பப் பெருமையில் இருந்து கூறத் தொடங்குகிறான் அனுமன்.
அதிலிருந்து தொடங்கி இராவணன் சிறையில் சீதாபிராட்டியைத் தான் கண்டதுவரை எடுத்துரைக்கின்றான்.
அனுமனின் இக்கருத்து வெளிப்பாட்டில் கதைக்கோப்பு இடையீடுயின்றி வளர்த்துச் செல்லப்பெற்றுள்ளது.
குடும்பப் பெருமை
சீதாபிராட்டி இராமபிரானுக்கு ஏற்ற மனைவியாகவும், தசரத மன்னனுக்கு ஏற்ற மருமகளாகவும்,
மதிலை ஜனக மன்னனின் புதல்வியாகவும் உரிமை, வாய்மை, தகைமை ஆகிய பண்புகளுக்கு இலக்கணமாக விளங்குகிறாள்.
பொறுமை
பொன் அலது இல்லை பொன்னை ஒப்ப எனப் பொறையில்; நின்றாள்
தன் அலது இல்லைத் தன்னை ஒப்பு எனத்தனக்கு வந்த
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள்
எனஅலது இல்லை என்னை ஒப்புஎன எனக்கும் ஈந்தாள் (1306)-என்ற இப் பாடலில்
சீதை பொன் போன்று பொறுமையுடன் இருந்தாள் என்ற பண்பு எடுத்துரைக்கப்படுகிறது.
இப் பாடலில் அலது, இல்லை, ஒப்பு, என ஆகிய சொற்கள் அடி தோறும் பயின்று வந்து சொல்லழகு செய்கின்றன.
குலப்பெருமை
சீதை இராமனின் குலப்பெருமைக் காத்து நிற்கிறாள். தன் குலத்தையும் சிறப்புறச் செய்தாள்.
இராவணனின் குலத்தைக் கூற்றுவனுக்குக் கொடுத்தாள். தேவர்கள் குலமும் இதனால் வாழ்ந்தது.
வானவர் குலத்தையும் வாழ வைத்தாள்.
இப்பாடலில் குலம் என்ற சொல் அடிதோறும் வந்து இனிமை கூட்டியுள்ளது.
இற்பிறப்பு, இரும்பொறை, கற்பு
வில்லை உடைய இராமபிரானே, இலங்கையில் சீதை என்ற பெண்ணைக் காணவில்லை. உயர்குடிபிறப்பு, பொறுமை, கற்பு என்ற மூன்றும் களிநடம் புரியக் கண்டேன் என்று அனுமன் கூறுவதாக கம்பர் படைக்கின்றார்.  அனுமன் பெண் என்னும் நோக்கில் சீதையைக் காணவில்லை என்பதற்கு இப்பாடல் மிக முக்கியமான சான்று. உயர்ந்த ஒழுக்க சீலர் ஒருவரைக் கண்ட காட்சியாக சீதாபிராட்டியைக் கண்டுள்ளான் அனுமன்.
கண்ணிலும் கருத்திலும் எண்ணத்திலும் இராமன்
சீதா பிராட்டியின் கண்ணிலும், கருத்திலும், சொல்லிலும், அவள் மார்பகத்திலும் இராமபிரான் இருப்பதைக் கண்டேன் என்று அனுமன் குறிக்கின்ற இப்பாடலில் உளை, நீ ஆகிய சொற்கள் திரும்பத் திரும்ப வந்துப் பாடலுக்கு அழகு சேர்க்கின்றன.
சீதையின் இருப்பிடம்
இலங்கையில் காலை, மாலை எனப் பகுத்தறிய முடியாத ஒளிமிக்கக் கற்பகச் சோலையில் தம்பி இலக்குவன் புல்கொண்டு அமைத்த பர்ணசாலையில் தவம் செய்த தவம் ஆம் தையலாக சீதை வீற்றிருந்தாள் என்று சீதை இருந்த இருப்பிடத்தை அனுமன் காட்டுகின்றான். இப்பாடலில் இடம் பெற்று தவம் செய்த தவமாம் தையல் என்ற சொல் சேர்க்கை அழகுமிக்கது.
இராவணன் பெற்ற சாபம்
சீதையை மண்ணொடும் கொண்டு போனான் இராவணன் என்று அனுமன் குறிப்பிடுகின்றான். இந்தப் பகுதி தமிழ் மரபினைப்பின்பற்றியதாகும். வடமொழியில் பற்றி இழுத்துச் செல்லப்பெற்றாள் சீதை. ஆனால் இங்கு இம்முறை மாற்றப்பெற்றுள்ளது. அதற்குத் துணையாக கம்பர் ஒரு நிகழ்வையும் இதனோடு இணைத்துச்சொல்லுகிறார். பிரம்மன் இராவணனுக்கு விரும்பாத ஒரு பெண்ணைத் தீண்டினால் எண்ணிலாத கூறுகளாய் உடல சிதறி இறப்பாய் என்று ஒரு சாபம் இட்டுள்ளார். அதனால் சீதையின் மேனியைத் தீண்டாமல் மண்ணோடும் பெயர்த்து எடுத்துக்கொண்டு இராவணன் சென்றதாக கம்பர் படைக்கின்றார். தமிழ்மரபினை காக்கும் அழகியல் இங்குச் செயல்பட்டுள்ளது.
சீதையை தீண்டாத இராவணன்
இராவணன் சீதையைத் தீண்டவில்லை என்பதற்கு பிரம்மன் படைத்த அண்டம் வெடிபடவில்லை என்பதாலும், ஆதிசேடனின் ஆயிரந் தலை பெற்ற படங்கள் கிழிந்து போகவில்லை என்பதாலும், கடல் கரையைக் கடக்கவில்லை என்பதாலும், சூரிய சந்திரர்கள் கீழேவிழவில்லை என்பதாலும் இராம பிரானே நீவீர் அறிந்து கொள்ளலாம் என்று அனுமன் இராமனிடம் கூறுகின்றான். இப்பாடலில் இலது, இல என்ற இன்மைக் குறிப்புகள் இடம்பெற்றுப் பாடலைச் சிறக்கச் செய்கின்றன.
தேவர் வியக்கும் கற்பு
சீதாபிராட்டியின் கற்பின் சிறப்பினால் தேவர்களின் தேவியரும் கற்பினால் பெருமை பெற்றனர். சிவபெருமான் இடப்பாகத்தில் இருந்த பார்வதி கற்பின் திண்மையால் சிவன் தலையில் இருக்கலானாள். திருமாலின் மார்பில் இருந்த திருமகளும் அவரின் தலைமீது இருக்கலானாள். சோகத்தாள், பாகத்தாள், மகுடத்தாள், பதுமத்தாள், ஆகத்தாள் என்ற சொற்கள் இங்கு ஒத்த ஒலிக்குறிப்பினைத் தருவதாக உள்ளது.
சீதையைத் தேடிக் கண்டறிந்த முறை
இலங்கை முழுவதும் தேடிப்பார்த்து, இராவணனின் இருக்கையிலும் தேடிப்பார்த்து,  அசோக வனத்தில் கண்ணின் நீர்க்கடலின் இடையே தேவமகள் போன்ற  சீதையைக் கண்டேன்; என்று அனுமன் சீதையைக் கண்டறிந்த செய்தியைக் குறிப்பிடுகிறான். கண்ணின் நீர்க்கடலில் கண்டேன் என்ற தொடர் அழகுமிக்கது.
அரக்கியர் நடுவே சீதாபிராட்டி
பேய் போன்ற அரக்கியர் பாதுகாவலுக்கு இடையில் இராமபிரானே உன் மேல் கொண்ட அன்பின் காரணமாக அச்சத்தைப் போக்;கி இரக்கம் என்ற பண்பு பெண் வடிவம் பெற்றால் எப்படி இருக்;குமோ அப்படி அந்தச் சிறையில்  சீதாபிராட்டி இருந்தாள். நின்பால் நேயமே அச்சம் நீக்க இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்திழை வடிவம் எய்தி தருக்கு உயர் சிறை உற்றன்ன தகையள் அத்தமியள்|| என்ற அடிகள் அழகியல் வயப்பட்டன.
இதன்பின் இராவணன் வந்து சீதாபிராட்டியைப் பணிந்தது, இரந்தது, அவள் கடுஞ்சொல் சொன்னது, பின் அரக்கியர்களைப் புத்தி கூறச் சொன்னது, அரக்கியர் உறங்கியது, பிராட்டி தற்கொலை புரிந்து கொள்ளச் சென்றது, தடுத்து அனுமன் இராம நாமம் சொன்னது போன்ற செய்திகள் விரிகின்றன.
இதன்பின் மோதிரத்தைச் சீதாபிராட்டியிடம் அனுமன் தருகின்றான். அப்போது அம்மோதிரத்தைச் சீதாபிராட்டி அணைக்க அது உருகியதாம்.  மோதிரம் பட்ட மகிழ்ச்சியால் ஏற்பட்ட குளிர்வால் அம்மோதிரம் உடன் குளிர்ந்து தன் நிலை பெற்றது என்று கம்பர் காட்டுகின்றார்.
அனுமன் சொல்லிய இப்பகுதிகளில்  சீதா பிராட்டியின் உருவ நலன் எடுத்துரைக்கப்படவில்லை. சீதாபிராட்டியின் புறஅழகினைக் கடந்து அக அழகினை அனுமன் கண்டு உரைப்பதாக இப்பாடல்கள் பாடப்பெற்றுள்ளன. மேலும் ~~கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்|| என்ற தொடர் அனுமனின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பதாக உள்ளது.
இராமனின் அழகை அடி முதல் முடி வரை உவமைகளால் அழகுபட புனைந்த கம்பரால் ஏன் சீதையின் அழகு அவ்வாறு சொல்லப்படவில்லை என்பது இங்கு எண்ணத்தக்கது. மேலும் தமிழ் இலக்கியங்களில் பெண் பாத்திரப்படைப்புகள் உருவ அழகிற்கு முக்கியத்துவம் தந்து அவற்றைப் பல பட விரித்துரைக்கும். இப்படி ஒரு வாய்ப்பு வந்தபோதும் அதனை மறுத்து சீதாபிராட்டியை ஒழுக்க சீலர் ஒருவரைப் பாராட்டும்படியாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்கான காரணம் என்ன என்று எண்ண வேண்டியுள்ளது.
அனுமன் என்ற ஆண்மகன், திருமணமாகாதவன், தொண்டன் தான் வணங்கும் தெய்வமாக விளங்கும் இராமனின் துணையைக் காணுகையில் அவன் உள்ளத்தில் ஏற்படும் மரியாதை உணர்ச்சி இங்குக் கம்பரால் வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. ஆண் மற்றொருவரின் மனைவியாக விளங்கும் பெண்ணைக் காட்சிப்படுத்துகையில் இத்தகைய மதிப்பு மிக்க தன்மை வரவேண்டும் என்று கற்போருக்குக் கம்பன் உணர்த்துகிறான். சாதாரண ஆண்மகன் பார்க்கும் சாதாரணப் பார்வையில் இருந்துக் காப்பிய மாந்தர்களை வேறுபடுத்திப் பண்பாடு மிக்க உயர் பாத்திரங்களாக படைக்கக் கம்பர் உறுதி கொண்டுள்ளார். இதைக் கற்கும் அனைவர் உள்ளத்திலும் மற்றவர் மனைவி என்றால் அவளின் அழகு தெரியாமல் அவளின் கற்புத் திறம் தெரியவேண்டும் என்று கம்பர் எண்ணியுள்ளார்.
உவமைகள் வாயிலாக இராம அழகை வெளிப்படுத்த விழைந்த கம்பன் சொல்லடுக்கு, சொல்லழகுகளைக் கொண்டு சீதையின் அழகினை விவரித்திருப்பதற்குக் கம்பருக்குள் உள்ள உயர்பண்பாடு காரணம் என்பதைச் சுந்தர காண்ட அழகுகள்; எடுத்துரைக்கின்றன. அழகு வெறும் உருவ அழகு மட்டும் சாரந்தது அல்ல என்பதை விளக்குவதாகவும் உள்ளது.
இராமன் கேட்கிறான், இராமனை வணங்குபவர்கள் கேட்கிறார்கள் என்ற எண்ணத்தில் சீதாபிராட்டியின் அழகு  மிகுந்த கவனத்துடன் கற்பினை முன்னிறுத்தி கம்பரால் எடுத்துரைக்கப்பெறுகிறது. ஆணை அழகுபட வருணித்தல், பெண்ணை அவளின் குணங்களின் வழியாக அடையாளம் காட்டுதல் என்ற நாகரீக மரபு இந்தச் சுந்தரகாண்டத்திற்குள் இடம்பெற்றுள்ளது, பிறன் மனை நயத்தல் தவறு என்ற அடிப்படை கோட்பாட்டில் சற்றும் விலாகமல் அனுமன் இங்குக் கம்பன் வாயிலாகச் செயல்பட்டுள்ளான்.
இராம அழகைக் கம்பன் பாட உவமைகள் கைகொடுத்தன. சீதை அழகைப் பாட சொற்சேர்க்கைகள் கைகொடுத்துள்ளன. கற்பவர்களுக்கு உவமை அழகைவிட சொல்லழகுகள் சுகம் தருகின்;றன என்பதை சீதாபிராட்டியின் நிலையைக் கூறும் பாடல்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதன் வாயிலாக உணரமுடிகின்றது.
கவிஞன் தன் ஒவ்வொரு பாடலையும் வாசகர் மனதில் இடம்பிடிக்க ஏற்றவகையில் அமைக்கவேண்டும் என்ற பேராவல் கொண்டுப் படைக்கின்றான். கவிச்சக்கரவர்த்தி தன் ஒவ்வொரு பாடலையும் மக்கள் மனதில் இருத்த பற்பல உத்திகளைக் கையாளுகின்றார். சீதையின் அழகினை, இராமனின் அழகினை வாசகர்கள் தமக்குள் ஏற்க இத்தகைய உத்திகளைக் கையாண்டுள்ளார்.
ஒட்டு மொத்தத்தில் அழகு என்பது மற்றவர் பார்வையில் உருவம் சார்ந்து அமைவதல்ல. மனநலன், குணநலன், ஒழுக்க நலன் சார்ந்து அமைவது. மதிப்புகளின் அடிப்படையில் அழகு வரையறுக்கத்தக்கது என்பதை சுந்தரகாண்டம் எடுத்துக் காட்டுகின்றது.
———————

“பஞ்சியொளிர் விஞ்சு  குளிர் பல்லவமனுங்கச்
செஞ்செவிய கஞ்ச நிமிர் சீரடி பெயர்ப்பான்
அஞ்சொலிள மஞ்ஞை யென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள்.’–என்ற சூர்ப்பணகையின் வருகையை வர்ணிக்கும் பாட்டு

  • வெயின் முறைக் குலத் திறையவன் முதலிய மேலோர்
    உயிர் முதற் பொருள் திறம்பினும் உரை திறம்பாதோர்
    மயில் முறைக் குலத் துரிமையை மனு முதன் மரபைச்
    செயிருறப் புலைச் சிந்தையால் என் சொனாய் தீயோய்–மந்தரை சூழ்ச்சி ‘ப் படலத்தில்–
  • இதில் ‘மயிலைப்போல முறை தவறாத குலம்’ என்று சொல்லப்படுகிறது. முறை தவறாத தன்மைக்கு மயிலை உபமானமாகச் சொன்னதின் மர்மம் என்ன? மற்ற பட்சிகளிடத்தில் இல்லாமல் மயிலுக்கு மட்டும் உள்ள எந்த சிறப்பு இதற்குப் பொருந்தும் என்பது ஒன்றும் எங்களுக்கு விளங்கவில்லை.
            • “பலாவம் பொழிலுறை ஒரு தாய் உயிர்த்த
              பலமயிற்குள் கலாபம் புனைந்த களிமயிலே மூத்ததெனக் கொள்க!’
            • அதன் பொருள் : ‘கானகத்திலே வசிக்கின்ற ஒரு தாய் வயிற்றில் பிறந்த பல மயில்களும் சேர்ந்திருக்கும்போது எந்தக் குஞ்சு முதலில் கலாபம் விரிக்கின்றதோ அது தான் மூத்த குஞ்சு என்று தீர்மானம் செய்துகொள்.’ என்பதுகாட்டிலே மயில் இயல்பாக வசிக்கும்போது ஒவ்வொரு தாய் மயிலும் அதன் குஞ்சுகளும், குஞ்சுகள் நன்றாக வளர்ந்த பிறகும் ஒரே குடும்பமாக எங்கே போனாலும் சேர்ந்தே போகும். இரை தேடுவதானாலும் அக்கம்பக்கமாகத்தான் இருக்கும். இப் படி ஒவ்வொரு மயில் குடும்பமும் தனித்தனிக் கூட்ட மாகத்தான் சஞ்சரிக்கும். அப்படி இருக்கும்போது அவைகளுக்குள் களிப்பு வந்து கலாபம் விரிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் மூத்த ஆண் குஞ்சுதான் முதலில் தோகையை விரித்து ஆடும். அதன் பிறகு தான் இளைய ஆண் குஞ்சுகள் தோகையை விரிக்கும். இப்படி முதலில் கலாபம் விரிக்கிற உரிமை மூத்த ஆண் குஞ்சுக்குத்தான் உண்டு என்பதுதான் இந்த ‘மயில் முறைக் குலத்துரிமை ‘ என்பது” என்றார்.
        • ஒரு மயிலானது தன்னுடைய எல்லாக் குஞ்சுகளுடனும் குடும்ப சகிதமாகத்தான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போகும் என்றும் அப்படித் தாய்ப் பறவையோடு குஞ்சுகளெல்லாம் சேர்ந்திருக்கிற சமயத்தில் கலாபம் விரித்து ஆடவேண்டிய சந்தர்ப்பம் வரும்போ-தெல்லாம் அந்தக் குஞ்சுகளில் மூத்த குஞ்சுதான் முதலில் கலாபம் விரிக்கும் என்றும், அதற்குப் பிறகுதான் மற்றக் குஞ்சுகளெல்லாம் கலாபம் விரிக்கும் என்றும், கண்டறியப்பட்டதாக எழுதியிருந்தது. மூத்த குஞ்சு என்பதற்கு என்ன அடையாளம் என்றால் ஒவ்வொரு குஞ்சும் முட்டையிலிருந்து வெளிவந்த உடனே அங்குள்ள ஆராய்ச்சிக்காரன் ஒவ்வொரு குஞ்சின் காலிலும் ஒவ்வொரு நிறமான வளையத்தை – மாட்டிவிட்டுப் பதிவு செய்து கொண்டான் என்ற விளக்கமும் எழுதப்பட்டிருந்தது.
      • ———————–
      • விற்பெரும் தடந்தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பின்
        நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேனல்லேன்
        இற்பிறப்பு என்பது ஒன்றும் இரும் பொறை என்பது ஒன்றும்
        கற்பு எனும் பெயரது ஒன்றும் களிநடம் புரியக்கண்டேன்.’
      • “வில்லேந்திய விசாலமான தோள்களையுடைய ராமா! பரந்த கடல் சூழ்ந்த இலங்கையின் மலையில் உனக்காகத் தவம் செய்துகொண்டிருக்கும் சீதை என்ற – ஒரு பெண் உருவத்தை நான் பார்க்கவில்லை.-ஆனால் ‘குடிப் பிறப்பு’ என்று சொல்லப்படுகிற ஒன்றும், ‘பெரும் பொறுமை’ என்ற ஒன்றும், ‘கற்பு’ என்று கருதப்படுகிற ஒன்றும், ஆகிய இந்த மூன்றும் சேர்ந்து அங்கே ஆனந்தத் தாண்டவம் ஆடுவதைத்தான் கண்டேன்,” என்றான் அனுமான். அதைக் கேட்டு ராமனுடைய திகைப்புக் குறைந்தது. போன உயிர் வந்தது போலக் களிப்பினால் பூரிக்கலானான்.
          • பண்டார வளைக்குப் போகுமுன்னால் இலங்கையிலுள்ள மலைப்பிர தேசங்களின் சிகரமாகிய ‘நூவாரா எலியா ‘ என்னும் ஊரையும் அதிலுள்ள சிறப்புகளையும் காட்டினார். அந்த வழியில் பாதைக்குப் பக்கமாக ஒரு பள்ளத்தில் இருந்த சிறு தடாகத்தைச் சுட்டிக்காட்டி இது ’சீதைத் தடாகம்’ என்றார். அந்தத் தடாகத்திலிருந்து ஒரு சிறு ஓடை அந்த மலைச்சாரலில் சல சலத்துக் கீழே ஓடிக்கொண்டிருந்தது. அதை ‘சீதை ஓடை’ என்றார். மேற்படித் தடாகத்திற்கு எதிரில் பாதைக்கு அப் பால் இருந்த மலையைக் காட்டி அங்கே தான் அசோகவனம் இருந்தது என்றும், அந்தக் குன்றின் ஓரத்திலிருந்த ஒரு குகையைக் காட்டி அதிலேதான் சீதை சிறையிருந்தது என்றும் கூறினார்.
          அதன்பின் மோட்டாரை ஓட்டினார். அதே பாதையில் தடாகத்தைவிட்டு சுமார் இரண்டு பர்லாங்கு தூரம் இறங்கி வந்தபின் அங்கே ஒரு சிறு நீர்நிலை இருந்தது. அது தான் சீதை தினந்தோறும் நீராடின துறை என்றார். அந்த நீர் நிலைக்கு அடுத்தாற்போல் ஒரு சிறு கோயில் இருந்தது. அங்கேதான் சீதை ஒவ்வொரு நாளும் ராமனைப் பூசை செய்தது என்றார்.
      • ———————
    • மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத் தாவிய
      சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்த’ அந்தப்
      பாதங்கள் விராதனைச் சாப வீடு செய்தன. விராதன் சொல்கிறான்:
    • வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தன உன்
      பாதங்கள் இவை என்னில் படிவங்கள் எப்படியோ‘உன் பாதங்கள் இப்படிப்பட்டவை என்றால், படிவங்கள் எப்படிப்பட்டவையோ’ என்று விராதன்
    • ————–
    • இராமனோ, தரையின் மேல் நிற்கிறான். அனுமனால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
    • நூறுபத்துடை நொறில் பரித்தேரின்மேல் நுன்முன்
      மாறில் பேரரக்கன் பொர நிலத்து நீ மலைதல்
      வேறுகாட்டும் ஓர் வெறுமையை; மெல்லிய எனினும்
      ஏறுநீ ஐய என்னுடைத் தோளின்மேல் –என்றான்.
    • ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்படும் தேரின்மேல் உன் முன்னால் அரக்கன் வந்து நிற்கவும், நிலத்தின் மேல் நின்றவண்ணம் நீ போர்புரிவதும் குறைவுடையதாகும். வெறுமை காட்டி நிற்பதற்கு நீ என்ன தனியனா? நாங்களில்லையா உனக்கு? என் தோள்கள் உன்னைத் தாங்கும் அளவுக்கு வலிமையோ தகுதியோ உடையன அல்லவை என்றாலும், மெல்லியவையே என்றாலும், என் தோளில் ஏறுவாய் ஐயனே!
    • —————–

மாணியாய் உலகளந்த நாள் அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்
காணியாகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்
நாணினான்; மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான்.

வாமனனாய் வந்து உலகத்தை எல்லாம் அளந்த நாளில் – இதே இராமன் – எடுத்த பேருருவத்தை அறிந்தவனான மாருதி வியப்புற்றான். திருமாலைச் சுமப்பதைத் தனக்கே தனக்கான தனி உரிமையாகக் கொண்டிருந்த கருடன் நாணம் அடைந்தான். ஆதிசேடனோ தலை நடுக்கம் கொண்டான்.

இராமனின் தெய்வத் தன்மையைக் கம்பன் தொட்டுக்காட்டும் சில இடங்களில் இது ஒன்று.

அவதாரந்தோறும் அவதாரந்தோறும் அவனை உணர்ந்தவன் அனுமன் என்றொரு குறிப்பு கிடைக்கிறது இந்தப் பாடலில்

——–

‘புராரி மற்றி யானும் காற்றின் சேய் எனப் புகன்றான் மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோ.’

மாருதி வாயுவினுடைய அம்சம் மட்டுமன்று; என்னுடைய அம்சமும்தான்’ என்று புரங்களை அழித்த புராரியான சிவபெருமான் சொன்னான்.

——–

அவ்விடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி
வெவ்விடத்தினை மறுகு தேவர் தானவர் வெருவல்
தவ்விட தனி அருளு தாழ்சடைக் கடவுள் என
இவ்விடத்து இனிது இருமின் அஞ்சல் என்று இடை உதவி….

சுக்ரீவனுடைய பதட்டத்திற்கும் அச்சத்திற்கும் அப்படியே எதிரானதொரு சித்திரம். பாற்கடலிலிருந்து ஆலகாலம் வெளிப்படவும், அதனைக் கண்டு அஞ்சி ஓடிய தேவர்களையும், அசுரர்களையும் ஒன்று போல ‘அஞ்சாதீர்’ என்று சொல்லி அதனைத் தானே உண்ட சிவபெருமானைப் போல் ‘எதற்கும் அஞ்ச வேண்டாம். நீங்கள் இங்கேயே இருங்கள். நான் போய்ப் பார்த்து வருகிறேன்’ என்று சொல்லி பிரமசரிய வேடம் புனைந்துகொண்டான்.

———–

என்பு எனக்கு உருகுகின்றது.’ என்னுள் ஊற்றெடுக்கும் அன்பு என்னை எப்படி நெகிழ்த்துகின்றது என்றால் வெறும் மனம் மட்டுமேயன்று; உடலும் நெகிழ்கின்றது. எலும்பு வரை நெகிழ்ச்சி அடைந்திருக்கிறது. ‘இவர்கின்றது அளவில் காதல்.’ அளவில்லாத நேயம் இவர்கள் மேல் எனக்குத்

தோன்றுகிறது. ‘அன்பினுக்கு அவதி இல்லை.’ என்னை ஆட்கொள்ளும் அன்பு கொஞ்ச நஞ்சமில்லை. ‘அடைவு என்கொல்?’ இதனால் என்ன நேரும்? ‘அறிதல் தேற்றேன்!’ எனக்கு விளங்கவில்லை.

———

மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி நளிர் இரும் பனிக்குத் தேம்பா
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்றேன்.

என்ன சொல்கிறான்? ‘மேகத்தைப் போல வண்ணம் உடையவனே! உன்னைப் பார்க்கின்ற எந்தப் பெண்ணுக்கும் உடனடியாக மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தாமரையைப் போன்று மலர்ந்த கண்கைள உடையவனே!’ முதலில் தொலைவிலிருந்து பார்க்கும்போது அனுமனை அசைத்தது அவனுடைய மேனி வண்ணம். அப்படிப்பட்ட வண்ணம் உடையவனே என்று அழைத்தான். திருப்தியாகவில்லை. ‘இந்தக் கண்ணு என்னை என்னமோ செய்யுதய்யா! எனக்கே இப்படி இருந்தால், யாராவது பெண் உன்னைப் பார்த்தால் அவளுக்கு என்னதான் ஆகாது? தாமரைக் கண் ஐயா உன் கண்’ என்றான். அதுவும் போதவில்லை அனுமனுக்கு. தாமரை என்றால் என்ன ஆகும்? வெயில் இருந்தால் மலர்ந்திருக்கும்; பனி பெய்தால் வாடிப் போகும். அப்போதும் வாடாத கண்ணாம். ‘நளிர் இரும் பனிக்குத் தேம்பா கஞ்சம் ஒத்து’ இந்தக் கண் தாமரை இருக்கிறதே, எந்தக் கடுமையான பனிக்கும் வாடாத தாமரை ஐயா.’ அது சரி. ஆனால் மாலை ஆனதும் கூம்பிப் போகுமே! அதுவும் இல்லையாம். ‘அலர்ந்த கண்ண!’ ‘எப்போதும் மலர்ந்திருக்கும் கண்ணை உடையவனே!’

முதல் மூன்று அடிகள் முழுவதும் இராமனைப் பற்றிய வருணனை. மூன்றாவது அடியின் கடைசியில் இருந்து, நான்காவது அடியில் தன்னைப் பற்றிய விவரம். எங்க அப்பா வாயு; எங்க அம்மா பேரு அஞ்சனை. என் பெயர் அனுமன்.’

இம்மலை இருந்து வாழும் எரிகதிர்ப் பரிதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன்; தேவ! நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையன் ஏவ, வினவிய வந்தேன் என்றான்
எம் மலைக் குலமும் தாழ இசை சுமந்து எழுந்த தோளான்.

‘அப்பா பேரு வாயு. அம்மா பேரு அஞ்சனை. என் பேரு அனுமன். இந்த மலை இருக்கிறதே, இதற்கு
மேல் சூரியனுடைய பிள்ளை ஒருத்தன் இருக்கிறான். அவனுக்கு நான் ஏவல் செய்கிறேன். வேலைக்காரன். சாமி! நீங்கள் வருவதைப் பார்த்து அவன் பயந்து போய்விட்டான். அவன் சொன்னதன் பேரில் உங்களைப் பற்றி அறிந்துகொள்ள வந்திருக்கிறேன்.’

மிகவும் சுருக்கமாகத்தான் சொல்கிறான் அனுமன். அதிக விவரங்கள் ஒன்றும் இல்லை. ‘சூரியனுடைய பிள்ளை’ என்ற உடனேயே இராமனுக்குப் புரிந்துவிட்டது. ஏனென்றால், அவனைத்தான் தேடிக்கொண்டு வந்திருக்கிறான் இவன். இந்த வார்த்தையக் கேட்ட இராமன் சொல்வதைக் கேளுங்கள்:

‘மாற்றம் அ·து உரைத்தலோடும்’ அனுமன் அப்படிச் சொன்னவுடன், ‘வரிசிலைக் குரிசில் மைந்தன் தேற்றம் உற்று,’ பெரிய கட்டமைந்த விலலை ஏந்திய தலைவனான இராமன் தெளிவடைந்தான். ‘இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி,’ இவனை விடவும் மேலானவன் இன்னொருவன் இருக்க முடியாது என்பதை உறுதியாக உணர்ந்தான். ‘ஆற்றலும், நிறைவும், கல்வி அமைதியும், அறிவும் என்னும் வேற்றுமை இவனோடு இல்லையாம்’ இவனிடத்திலே எது அதிகம்? அறிவாற்றல் மற்றும் செயலாற்றலா? நிறைந்த குணங்களா? நிறைந்த கல்வியினாலே ஒருவனுக்கு இயல்பாகவே ஏற்படும் அடக்கமா? அல்லது அந்தக் கல்வியால் ஏற்படும் உள்ளளி நிறைந்த ஞானமா? எது அதிகம்? ஒன்றுக்கொன்று வேறுபாடு தெரியவில்லையே! எல்லாம் சம அளவில் இருக்கிறதே!

இராமன் அனுமனைப் பற்றிச் சொல்கிறானே, ஆற்றலும் நிறைவும் கல்வி அமையதியும் அறிவும் என்னும்
வேற்றுமை இவனோடு இல்லையாம்.

சொல்லிக்கொண்டே வருகிறான். பக்கத்தில் திரும்பிப் பார்த்தால் இலக்குவன் கவனம் இன்னும் இவன் மேல் விழுந்ததா இல்லையா என்பது தெரியவில்லை. அவனுடைய பார்வை எல்லாம் சீதை எங்காவது தட்டுப்படுகிறாளா என்பதிலேயே நிலைத்திருந்தது. அவனுடைய கவனைத்தை ஈர்க்கும் விதமாகச் சொல்கிறான் இராமன். ‘இவன் படிக்காத வேதம் இருக்காது; கற்காத கலை இருக்காது. இப்படி எல்லாம் எப்படிச் சொல்றேன் என்று நினைக்கிறாயா? இவன் பேசுகிற பேச்சே சொல்கிறது. ‘சொல்லாலே தோன்றிற்று அன்றே!’ இவன் சொல்லே இவனுடைய நிறைவை ஏந்தி வெளிவருகிறது. இவன் சொல்லே இவனுக்கு சாட்சி. ‘யார்கொல் இச் சொல்லின் செல்வன்?’ பட்டமே கொடுக்கிறான் இராமன், முதல் பார்வையிலேயே. ‘ஆர்ரா இந்தச் சொல்லின் செல்வன்?’ ‘வில் ஆர் தோள் இளைய!’ ஆ ஊ என்றால் உடனே வில்லைத் தூக்கி நாண் ஒலி செய்யத் தயாராக நிற்கிற தம்பிப் பையா! ‘வீர் விரிஞ்சனோ?’ இது யார்ரா? பிரமனாக இருக்குமோ? ‘விடை வலானோ?’ இல்லாட்டி சிவனாக இருக்குமோ? (பிரமனாக இருக்குமோ, சிவனாக இருக்குமோ என்று கேட்டாலும், ‘நாராயணனாக இருக்குமோ’ என்ற கேள்வியை இராமன் எழுப்ப வைக்கவில்லை கம்பன். அங்கே உண்மையான சொல்லின் செல்வன் யார் என்பதற்கான விடை கிடைக்கிறது. சொல்லாமல் விட்டது எதுவோ அதுதான் அதிகம் சொல்லுகிறது. )

உடனே இராமனுக்கு இன்னொன்று தோன்றுகிறது. இந்தத் தம்பி சும்மா நிற்கிறானே, இவனுக்கு இன்னும் ஐயம் போகவில்லையோ என்னவோ? ஒருவேளை, இந்த அண்ணனுக்கு வேற வேலையில்லை, அந்த மானைப் பார்த்தவுடன் அப்படித்தான் அதன் பின்னாலேயே ஓடினான்; இத்தனைத் துன்பங்களையும் வரவழைத்தான். இப்போது இந்தப் பையனைப் பார்த்தவுடன் கிடந்து குதிக்கிறான்’ என்று நினைக்கிறானோ என்னவோ என்று தோன்றியது போலிருக்கிறது. இலக்குவனிடம் சொல்கிறான். ‘மாணி ஆம் படிவமன்று.’ இந்தப் பையன் உண்மையில் பையன் இல்லை. இவனுடைய பிரமச்சரிய வடிவத்தைப் பார்த்து இவனை ஒன்றும் அறியாதவன் என்று நினைத்துவிடக் கூடாது. ‘மற்று இவன் வடிவம், மைந்த, ‘ வேற என்ன வடிவம் என்று கேட்பாய் நீ. சொல்றேன்
கேள். ‘ஆணி இவ் உலகுக்கு எல்லாம் என்னலாம்.’ இவன்தான் இந்த உலகத்துக்கு எல்லாம் அச்சாணி என்று சொல்லலாம்.’ ‘ஆற்றலுக்கு ஏற்ற சேணுயர் பெருமை எல்லாம் சிக்கறத் தெளிந்தேன்.’ கொஞ்சம் கூட சந்தேகத்துக்கு இடமில்லாமல் இவனுடைய ஆற்றலையும், அதற்கேற்ற மிகப் பெரிய பெருமைகளையும் எல்லாம் தெளிவாக உணர்ந்துகொண்டேன்.

இலக்குவன் இன்னும் மாற்றம் ஏதுமின்றி நிற்கிறான். இராமனுக்குப் புன்னகை தோன்றுகிறது. ‘டேய்! இது மான் சமாச்சாரமில்லைடா! அப்பதான் நான் கொஞ்சம் விட்டுவிட்டேன். நீயே சொல்லியும் கேட்கவில்லை. இது அப்படியில்லை. நான் சரியாகத்தான் புரிந்துகொண்டிருக்கிறேன். இவனைப் பற்றி நான் சொல்வது இப்போது உனக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ‘பின்னர்க் காணுதி மெய்ம்மை’ நீயே பின்னால தெரிந்துகொள்வாய்.

மாணிஆம் படிவமன்று மற்றிவன் வடிவம் மைந்த
ஆணிஇவ் உலகுக் கெல்லாம் என்னலாம்; ஆற்றற் கேற்ற
சேண்உயர் பெருமைதன்னைச் சிக்கறத் தெளிந்தேன்; பின்னர்க்
காணுதி மெய்ம்மை என்று தம்பிக்குக் கழறி, கண்ணன்… … …

நாலு அடிக்குள் எத்தனைக் காட்சிகளைத் திணிக்க முடியும்? மிக அலட்சியமாக நுணுக்கி நுணுக்கி இழைக்கிறான் கவிஞன். அது இருக்கட்டும். அவன் என்னடா என்றால் இவனைப் பார்த்து, ‘நீல மேகம் போன்ற நிறத்தழகா, பெண்கள் மனத்துக்கெல்லாம் நேசத் துன்பத்தை உண்டாக்கக் கூடிய, பனியில் வாடாத, எப்போதும் மலர்ந்த தாமரைக் கண்ணா’ என்று கண்ணால் பார்க்கக் கூடியனவற்றைப் பார்த்து மனம் பறிகொடுத்துப் பேசுகிறான். இவன் என்னடா என்றால், கண்ணுக்குப் புலப்படாத அறிவையும், ஆற்றலையும், அகத்தையும், அகத்தின் தெளிவையும், உயர்வையும், அடக்கத்தையும் ஒரே நொடியில் அளந்து பார்த்தேன் என்கிறான். எப்படி அளந்தானாம்? ‘சொல்லினால் தோன்றிற்று அன்றே, யார்கொல் இச் சொல்லின் செல்வன்!’

அப்படி என்னதான்யா சொன்னான் அந்த அனுமன்? ‘எங்க அப்பா பேரு காத்து; எங்க அம்மா பேரு அஞ்சனை; என் பேரு அனுமன். இந்த மலை மேல சூரியனின் பிள்ளை(யான சுக்ரீவன்) இருக்கிறான். அவன் உங்களைப் பார்த்து பயந்து போய்விட்டான். நீங்க யாருன்னு கேட்டுட்டு வரச் சொன்னான். அதான் வந்திருக்கிறேன்.’ இதுல என்னய்யா அப்படி பெருசா தெரியுது அறிவு, ஆற்றல், அடக்கம் இன்ன பிற? எதுக்கு இப்படி ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறாரு இந்த இராமரு? எனக்கு ஒன்றே ஒன்றுதான் தட்டுப்படுகிறது. ‘கவ்வை இன்றாக நுங்கள் வரவு’ என்று அனுமன் சொன்னான் பாருங்கள், அதற்கான முழுப்பொருள் இப்போது விளங்கியிருக்க வேண்டும், இராமனுக்கு. ‘உங்களைப் பார்த்து பயந்துவிட்டான்’ என்று சொன்ன கணத்தில், ‘ஓகோ அதுக்குத்தான் அப்படிச் சொன்னாயா’ என்று அந்த வாக்கியத்தின் நயம் உணர்ந்திருக்கக் கூடும்.

இல்லை. இப்படி அளந்து பார்த்துவிட முடியாது இராமனை; அவன் இதயத்தை. ‘அடியனேன் உன் வேதநூல் எனத்தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன்’ என்று அனுமனே, பலகாலம் பழகியபின், வீடணன் அடைக்கலப் படலத்தின் போது சொல்லப் போகிறான். அனுமனே அறிய ஒண்ணாத வேத நூல் அன்ன திருவுளத்தின் குறிப்பை நாமா கண்டுவிடப் போகிறோம்? ஒன்றே ஒன்று தெரிகிறது. இங்கே அனுமனுடைய நிலை இனம் புரியாத அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு, அறிவு அடங்கி நிற்கும், ஆனாலும் அடங்கிய நிலையிலும் தீவிரமாக வேலை செய்துகொண்டிருக்கும் நிலை. இராமனுடைய நிலையோ, அறிவின் செயல்பாட்டைக் குறித்தே சற்றும் கவலைப்படாமல், ஒற்றைச் சொல்லால் உள்ளம் அளந்து, ஒரே பார்வையில் அன்பினுக்கு ஆட்பட்டுத் தன்னுடைய முழு மனத்தையும் ஒரேயடியாக அப்படியே கொடுத்துவிட்ட நிலை. Abundant love and unconditional acceptance. இவர்கள் இப்படி இருந்தால், நம் நிலை? இவர்களை அறிவுகொண்டு அளக்க நினைத்து முற்றிலும தோற்றுப போன நிலை. வேறு என்ன சொல்வது!

அறிவு வேலை செய்துதான் ஆகவேண்டும் என்ற நிலையைத் தாண்டிய சில கணங்கள் உண்டு. ‘அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி’ என்ற இரண்டைக் காட்டிலும் ‘அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம்’ இன்னது என்று சொல்லத் தெரியாதபடி ஆட்கொள்ளும். அப்படிப்பட்ட அன்பிலே கட்டுண்டார்கள் ஆண்டவனும், அடியவனும். ஆனாலும், அடியவன் கொஞ்சம் அதிகம் சாமர்த்தியசாலிதான். ஆண்டவனுக்கு நடிக்க ஒரு பாத்திரம் இருந்ததென்றால், அடியவனுக்கு நடக்க ஒரு பாத்திரம் இருந்தது. அடியவன் மனத்தில் இப்போது ஓடுகிற எண்ணம் என்ன, அவன் இப்போது ஆண்டவன் முன்னால் பேசுகின்ற விதம் என்ன, அமைச்சனாக அவன் ஆற்றுகின்ற செயல் என்ன? செயலுக்குக் காரணம் இருந்ததா? அவன் உள்ளக் கிடக்கை இப்போது இராமனை நோக்கி
யதா அல்லது சுக்ரீவனை நோக்கியதா?

——————–

நஅன்-ரிக்வேத வினீதஸ்ய ந அ-யஜுர்வேத சாரிணா ந அ-சாம வேத விதூஷா ஷக்யமேவம் விபாஷிதம் (மேற்படி, சுலோகம் 28)

‘ரிக் வேதத்தைப் பொருள் உணர்ந்து ஓதினாலொழிய, யஜுர் வேதத்தை மனனம் செய்திருந்தாலொழிய, சாம வேதத்தை அறிந்திருந்தாலொழிய இப்படிப் பேசுவது இயலாத ஒன்று’

————-

எவ்வழி இருந்தான் சொன்ன கவிக்குலத்து அரசன் யாங்கள்
அவ்வழி அவனைக் காணும் அருத்தியால் அணுக வந்தோம்
இவ்வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன
செவ்வழி உள்ளத்தோனைக் காட்டுதி தெரிய’ என்றான்.

ஆதரித்து அவனைக் காண்டற்கு அணுகினிர் என்னின்
தீது அவித்து அமையச் செய்த செய்தவச் செல்வம் நன்றே.

நீங்களே அவனைப் பார்க்க வந்திருக்கிறீர்களா! அப்படியானால், அவனுடைய துன்பம் கெடுமாறு அவன் செய்த தவம் மிகப் பெரியது

கொடுங்குலப் பகைஞன் ஆகிக் கொல்விய வந்த கூற்றை
நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ?

‘தன் குலத்தையே வேரறக் களைவதற்கான செயலைத் தொடங்கி, தனக்குப் பகைவனாக வந்திருக்கும் எமனைக் கண்டு (தன்னை அழிக்க எண்ணியிருப்பவனைக் கண்டு) நடுநடுங்கிக் கிடப்பவர்களுக்கு அபயம் அளிப்பதை விடவும் பெரிய அறம் ஒன்று உண்டா?’ எங்களைக் காப்பது உங்களுக்கு எளிதான செயல் அல்லவா? ‘இமைப்பு இலாதோர் தம்மையே முதல் இட்டு ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல் மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர்.’ தேவர்கள் முதற்கொண்டு இந்த அண்ட கோளத்தில் அசைகின்ற, அசையாத (சர, அசர) எல்லாவற்றையும் காக்க வல்லவர் நீங்கள். எம்மைக் காத்தல் உங்களுக்கு மிகவும் எளிய ஒன்று.

இவர்களை உற்று நோக்கியபடி நடந்து வந்தானே அப்போது,

காய் எரி கனலும் கற்கள் கள்ளுடை மலர்கள் போல்
தூய செங்கமலப் பாதம் தோய்தொறும் குழைந்து தோன்றும்’

வெய்யிலில் கிடக்கின்ற காரணத்தால் நெருப்பைப் போல் சுடுகின்ற கற்கள், இவர்கள் பாதம் பட்டதும் (இவர்களுடைய பாதத்துக்கு) தேன் நிறைந்த மலர்களைப் போல் குழைந்து போகின்றனவே’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டானல்லவா, இந்த இரண்டு தருணங்களிலும் தாளையும், தோளையும் கவனித்தான். இப்படி கவனித்ததை இங்கே சொல்லவில்லை. அடுத்த காட்சியில் சுக்ரீவனிடம் சொல்லப் போகிறான்.

சங்கு சக்கரக் குறி உள தடக் கையில் தாளில்
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங்கண் விற்கரத்து இராமன், அத் திரு நெடுமாலே.
இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும்.

அவர்களுடைய கையிலும், பாதத்திலும் சங்கு, சக்கரக் குறிகள் உள்ளன. இப்படி ஒரு இலக்கணத்தோடு வேறு யாரும் இல்லை. இருக்கவும் முடியாது. சிவந்த (தாமரை போன்ற) கண்களை உடைய இராமன் வேறு யாரும் இல்லை. அந்த நெடுமாலேதான். அறத்தை நிலை நிறுத்துவதற்காகப் பிறந்திருக்கிறான்.

ததா ச சுமஹாப்ராஞ்ஞா ஹனுமான் மாருதாத்மஜா
ஜகாம ஆதாயதெள வீரெள ஹரி ராஜாய ராகவவ்

(வா. இரா. கிஷ்கிந்த காண்டம், சர்க்கம் 4, சுலோகம்)
அதன் பிறகு மிகுந்த புத்திமானும், வாயுவின் மகனுமான அனுமன் அந்த இரண்டு இராகவர்களையும் (இராம இலக்குவர் இருவருமே இரகு குலத்தவர், ஆகவே இருவருமே இராகவர்கள்) குரங்குகளுக்கு அரசனிடத்தில் அழைத்துச் சென்றான்.

எப்படி அழைத்துச் சென்றான்?

பிக்க்ஷ¤ ரூபம் பரித்யஜ்ய வானரம் ரூபம் அஸ்திதா
ப்ரிஷ்டம் ஆரோப்ய தெள வீரெள ஜகாம கபிகுஞ்சரா.

தான் மேற்கொண்டு வந்த பிரமசரிய உருவத்தை விட்டுவிட்டு, தன்னுடைய குரங்கு உருவத்தோடு, அந்த இரண்டு வீரர்களையும் தன் முதுகிற் சுமந்தவாறு சுக்ரீவனை நோக்கிச் சென்றான் குரங்குளில் யானை போன்ற (பேருருவம் கொண்ட) அனுமன்.

கிம் அர்த்தம் த்வம் வனம் கோரம் பம்ப்பா கானன மந்திதம்?
ஆகத ஸானுஜொ துர்கம் நானா வ்யால ம்ருகாயுதம்.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 4, சுலோகம் 4)

என்ன காரணத்துக்காக பலவிதமான ஆபத்தான மிருகங்கள் உலவக் கூடியதும் பம்பைக் கரையில் இருப்பதுமான இப்படிப்பட்ட ஆபத்தான வனத்தில் உங்களுடைய தம்பியுடன் வந்திருக்கிறீர்கள்?
‘ஆபத்தான மிருகங்கள் நிறைந்ததும் பம்பைக் கரையில் உள்ளதுமான வனம். இந்த வனத்தில் உங்களுடைய தம்பியையும் கூட அழைத்துக்கொண்டு என்ன காரணத்துக்காக வந்திருக்கிறீர்கள்?

விதிதாநெள குணா வித்வான்! சுக்ரீவஸ்ய மஹாத்மனா
தமேவ சாவா மார்க்காவ சுக்ரீவம் ப்லவகேஷ்வரம்.
(மேற்படி, சர்க்கம் 3, சுலோகம் 37)

பண்டிதரே! சுக்ரீவன் என்ற அந்தப் பெருங்குணசாலியின் தன்மைகளை நாங்கள் அறிவோம். (விண்ணெங்கும்) தாவித் திரிவதான குரங்குகளின் அரசனான அவனைக் காணவே வந்திருக்கிறோம்.

யார் என விளம்புகேன் நான் எம் குலத் தலைவற்கு உம்மை,
வீர நீர் பணித்திர் என்றான் மெய்மையின் வேலி போல்வான்.

‘யார் வந்திருக்காங்கன்னு சொல்லட்டும் எங்க தலைவருக்கு? எனக்கு என்ன உத்தரவு?’ என்று கேட்டானாம், உலகத்தில் வாய்மையைக் காப்பதற்காக இட்ட வேலியைப் போன்றவனான அனுமன்.

தஸ்யஸ்ய வசதோ அரண்யே நியத்ஸ்ய மஹாத்மனா
ராவணேன ஹ்ரிதா பார்யா ஸ த்வம் ஷரணம் ஆகதா.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 6)

காட்டிலே நெறியான வாழ்க்கை மேற்கொண்டிருந்த இந்த மகாத்மாவின் மனைவியை இராவணன் கவர்ந்து சென்ற காரணத்தால், உன்னைச் சரண்புகும் பொருட்டு இங்கே வந்திருக்கிறான்.

யானும் என் குலமும் இவ் உலகும் உய்ந்தனம் எனா, மானவன் குணம் எலாம் நினையும் மதியினான்.’ நான் உய்ந்தேன்; என் குலம் உய்ந்தது; நாங்கள் மட்டுமில்லை இந்த உலகமே உய்ந்தது என்றவாறு மனிதனாகத் தோன்றிய இராமனின் நல்ல குணங்களை எல்லாம் சிந்தித்தவாறு சுக்ரீவன் இருந்த இடத்திற்குச் சென்றான்.

மேலவன் திருமகற்கு உரைசெய்தான்.’ சூரியனின் மகனான சுக்ரீவனிடத்தில் சொன்னான். என்ன சொன்னான்? ‘விரைசெய் தார் வாலி என்ற அளவிலா வலியினான் உயிர்தெறக் காலன் வந்தனன்.’ மணமிகுந்த பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்த, அளவில்லாத வலிமை உடையவனான வாலியைக் கொல்வதற்கான எமன் வந்திருக்கிறான். ‘இடர்க் கடல் கடந்தனம்.’ நாம் நம்முடைய துன்பக் கடலைக் கடந்தாகிவிட்டது.

மேலவன் திருமகற்கு உரைசெய்தான் விரைசெய்தார்
வாலிஎன்ற அளவிலா வலியினான் உயிர்தெறக்
காலன் வந்தனன் இடர்க்கடல் கடந்தனம் எனா
ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான்.

‘நான் வாழ்ந்தேன்; என் குலம் வாழ்ந்தது, இந்த உலகமே வாழ்ந்தது’ என்று எண்ணியவாறு வந்தவன் என்ன காரணத்துக்காக அவ்வாறு எண்ணினான் என்பது முதல் மூன்றடிகளில் வெளிப்பட்டது. ஏன்? வாலியின் உயிர் கவர்வதற்கு எமன் வந்துவிட்டான். ‘நான் வாழ்ந்தேன், என் குலம் வாழ்ந்தது’ என்பதோடு நிற்காமல் ‘இந்த உலகமும் வாழ்ந்தது’ என்று எண்ணிய காரணத்தால் வாலியின் தன்மை என்ன என்பதும், என்ன காரணத்துக்காக அவன் கொல்லப்படத் தகுந்தவனே என்பதும் கோடிகாட்டப்படுகின்றன.

மண்உளார் விண்உளார் மாறுளார் வேறுளார்
எண்உளார் இயல்உளார் இசைஉளார் திசைஉளார்
கண்உளார் ஆயினார்; பகைஉளார், கழிநெடும்
புண்உளார் ஆருயிர்க்கு அமுதமே போல் உளார்.

அப்பா சுக்ரீவா! பயந்து போனாயே. இவர்கள் வாலி அனுப்பியவர்களோ என்று நடுங்கினாயே. இவர்கள் நீ நினைத்ததைப் போல் இல்லை. இவர்கள் யார் தெரியுமா? இந்த மண்ணில் இருப்பவர்கள், அந்த விண்ணில் இருப்பவர்கள், இந்த இரண்டு உலகங்களுக்கும் மாறான பாதாள உலகத்தில் இருப்பவர்கள், இந்த மூன்றையும் தவிர்த்த உலகங்களில் உள்ளவர்கள், அத்தனை பேர்களின் எண்ணத்திலும், செயலிலும், கண்களிலும் உள்ளவர்கள். யாரெல்லாம் பகைவரை உடையவர்களாக இருக்கிறார்களோ, யாருக்கெல்லாம் பகைவரால் துன்பம் நேர்ந்திருக்கிறதோ, யாரெல்லாம் பகையாலே உடலும் உள்ளமும் புண்பட்டிருக்கிறார்களோ, அப்படிப்பட்டவர்களின் உயிர்களுக்குள் ஊற்றப்படும் அமுதம் போன்றவர்கள்.

சூழிமால் யானையார் தொழு கழல் தயரதன்
பாழியாலர் உலகெலாம் ஒருவழிப் படரவாழ்
ஆழியான் மைந்தர்; பேர் அறிவினார்; அழகினார்;
ஊழியார்; எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார்.

அழுகின்ற குழந்தைக்கு மிட்டாய் தருவதைப் போல் செய்தியை ஒவ்வொன்றாக எடுத்து வைக்கிறான் அனுமன். அவர்கள் யார் தெரியுமா? பெரிய பெரிய யானைப் படையை உடைய அரசர்களெல்லாம் தொழுது வணங்கியவனான சக்ரவர்த்தி, தசரதன் தெரியுமில்லையா உனக்கு? இந்த உலகம் முழுவதையும் தன் வலிமையால், தன் குடைக் கீழ் வாழும்படிச் செய்த, ஆணைச் சக்கரத்தை உடையவன் இல்லையா அந்த தசரதன்? அவனுடைய மைந்தர்கள் இவர்கள். என்னா அறிவுள்ளவங்க தெரியுமா? எவ்ளோ அழகா இருக்காங்க தெரியுமா? சரி. அத விட்டுவிடுவோம். இவர்கள் நெறிப்படி நடப்பவர்கள். அறத்தைக் கைக்கொண்டவர்கள். மிக எளிதில் உனக்கு அரசைப் பெற்றுத் தருவார்கள்.

காதிசேய் தரு நெடுங் கடவுள் வெம் படையினார்.’ விஸ்வாமித்திரர் பல தெய்வப்படைகளை இவர்களுக்குத் தந்திருக்கிறான். தவறாத சக்தி உடைய அத்திரங்கள் இவர்களிடத்தில் உண்டு

மாயையால் மதிஇலா நிருதர்கோன் மனைவியைத்
தீயகான் நெறியின் உய்த்தனன்; அவள் தேடுவார்
நீஐயா தவம் இழைத்துடைமையால், நெடு மனம்
தூயையா உடையையால் உறவினைத் துணிகுவார்.

இவ்வளவு பேராற்றல் உடையவர்கள். சரிதான். அப்படியானால் எப்படி இந்த இராமன் தன் மனைவியைத் தொலைத்தான்? ‘மாயையால் மதிஇலா நிருதர்கோன் மனைவியைத் தீயகான் நெறியின் உய்த்தனன்.’ அது வந்து, இந்த இராவணன் இருக்கானே, புத்தி கெட்ட பய, அவன் மாயத்தோற்றம் ஒன்றை உண்டாக்கினான். மாரீசனை மாயமானாக அனுப்பினான். அவர்கள் இல்லாத சமயத்தில் சீதையைத் தன்னுடைய கொடிய வஞ்சனையால் இந்தக் காட்டு வழியில் தூக்கிச் சென்றுவிட்டான். அவளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

தனக்கு உவமை தானேயன்றி இன்னொருவன் இல்லாதவனின் சரணத்தை நாடி வந்து அடைந்தான். அப்படி நடந்து வரும்போது இவர்களைப் பார்த்தவாறே வந்தானில்லையா, அந்தத் தருணத்தில் உள்ளத்தின் அடி ஆழத்தில்
உணர்கிறான் சுக்ரீவன்:

தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே
மாறி இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னோ
ஆறுகொள் சடிலத்தானும் என்று இவர்கள் ஆதி
வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா.

இவனே தேவர்களுக்கு எல்லாம் தேவன். மனிதனாக வந்து தோன்றியிருக்கிறான். சடாமுடியில் ஆற்றைத் தரித்த உருத்திரன் முதலான எல்லா தேவர்களையும், இதோ, இந்த மானுடம் வென்றுவிட்டது.

பவான் தர்ம வினீதா ச சுதபா சர்வ வத்சலா
ஆக்யாதா வாயுபுத்ரேண தத்வதோ மே பவத் குணா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 9)

தாங்கள் தர்மங்களைப் பயின்றவர்; நற்செயல்களில் நாட்டம் உடையவர்; அனைவரையும் நேசிப்பவர். (அல்லது, ‘அனைவராலும் விரும்பப்படுபவர்’.) வாயு புத்திரனான அனுமன் எனக்கு உங்களுடைய குணநலன்களின் மெய்மையைச் சொல்லியிருக்கிறான்.

ரோசதே யதி மே சக்யம் பாஹ¤ ஏஸ ப்ரசாரிதா
க்ரிஹ்யதாம் பாணினா பாணி மர்யாதா பத்யதாம் த்ருவா
(மேற்படி, சுலோகம் 11)

என்னுடன் நட்பு கொள்வது உனக்குச் சம்மதமானால், இதோ உன் முன்னால் என் கரம் நீட்டப்பட்டிருக்கிறது. (நம்முடைய) இந்தத் தொடர்பு உறுதிப்படும் விதமாக உன் கரத்தால் இதைப் பற்று.

யாங்கள் உற்ற கை அறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தோம்
ஐய! நின் தீரும் என்ன … … … … … … … … … … … …

‘செயல்களற்று நாங்கள் நிற்கும் விதத்தில் எங்களைப் பீடித்துள்ள துயரத்தை உன்னால் (உன் துணையுடன்) கடப்பதற்காக வந்துள்ளோம். இந்தத் துயர் உன்னால் தீரும்’ என்று இராமன் சொன்னான்.

முரணுடைத் தடக்கை ஓச்சி முன்னவன் பின்வந்தேனை
இருள்நிலைப் புறத்தின்காறும் உலகெங்கும் தொடர இக்குன்று
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன்; ஆர்உயிர் துறக்கல் ஆற்றேன்;
சரண் உனைப் புகுந்தேன். என்னைத் தாங்குதல் தருமம் என்றான்.

தடித் தடியான கைகளை ஓங்கியபடி எங்க அண்ணன் தம்பியாகிய என்னை இருள் நிறைந்த இந்த உலகத்தின் எல்லா இடங்களிலும் துரத்தினான். என்னைப் போட்டு அடித்தான் ஐயா. என்னைக் கொல்லத் துடிக்கிறான். ஏதோ இந்த மலைப் பிரதேசத்தில் அவன் நுழைய முடியாதபடி ஒரு சாபம் இருக்கிற காரணத்தால் இங்கே ஓடிவந்து ஒளிந்துகொண்டு உயிர் வாழ்கிறேன். ‘ஆருயிர் துறக்கல் ஆற்றேன்’. ஐயா, இப்படிப்பட்ட அச்சத்தோடு வாழ்வதை விடவும் உயிரை விட்டுடலாம்னு பாத்தேன். என்னால முடியல. சாகலாம்னாலும் முடியல. நான் என்ன பண்ணுவேன்! ஐயா, உங்களை நான் சரண் புகுந்தேன். என்னைக் காப்பாற்றுவதே உங்கள் தருமம்.’

விருந்தும் ஆகி அம் மெய்ம்மை அன்பினோடு
இருந்து நோக்கி, நொந்து, இறைவன் சிந்தியா
பொருந்து நன் மனைக்கு உரிய பூவையைப்
பிரிந்துளாய் கொலோ நீயும் பின் என்றான்.

விருந்துண்டு அமர்ந்திருந்த போது, தன் மீது பொழியப்பட்ட அன்பில் மனம் குளிர்ந்து, சுற்றிலும் (மறுமுறை) நோக்கினான். சிந்தித்தான். மனம் நொந்து சிந்தித்தான். ஏன் மனம் நொந்தான்? இங்கே பரிமாறியது முழுக்க முழுக்க ஆண்கள். சுக்ரீவனுடைய மனைவி இங்கே இருந்திருக்க வேண்டுமே! அவள் ஏன் கண்களில் தட்டுப்படவில்லை? கேள்வி உறைக்கிறது. ‘என்னப்பா சுக்ரீவா, உன் மனைவியைக் காணோமே, எங்கே அவர்கள்? இங்கே இருக்கிறார்களா? இல்லாவிட்டால் என்னைப் போல நீயும் உன் மனைவியைப் பிரிந்திருக்கிறாயா?’ என்று கேட்டான்.

என்ற வேலையில் எழுந்து மாருதி
குன்றுபோல நின்று, இருகை கூப்பினான்.
‘நின்ற நீதியாய்! நெடிது கேட்டியால்.
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு எனா.

இராமன் அப்படிக் கேட்ட உடனே குன்று எழுந்து நிற்பது போல் எழுந்தான் மாருதி. இரண்டு கைகளையும் கூப்பினான். வணக்கமாகச் சொன்னான். ‘நிலைத்த நீதியை உடையவனே! நான் உனக்குச் சொல்ல வேண்டியது ஒன்று உண்டு. கொஞ்சம் நீளமான செய்தி அது. கேட்டருள வேண்டும்.’

மற்று இனி உரைப்பது என்னே? வானிடை மண்ணில் நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன் கிளை எனது; என் காதல்
சுற்றம் உன் சுற்றம்; நீ என் இன்னுயிர்த் துணைவன் என்றான்

இன்னும் வேறு என்ன சொல்வது? என்ன சொல்லவேண்டி இருக்கிறது? ஆகாயத்தில் என்றாலும் சரி, பூமியில் என்றாலும் சரி; உன் மீது பகைகொண்டு உன்னை வருத்தியவர்கள் யாரோ, அவரெல்லாம் என்னை வருத்தியவர்கள். உனக்கு உற்றவர் – அது எப்படிப்பட்ட கெட்டவர்களாக இருந்தாலும் சரி – எனக்கும் உற்றவர். உனக்கு யாரெல்லாம் (நேசமுடைய) உறவினர்களோ, அவர்களெல்லாம் எனக்கும் உறவினர்கள்தாம். என் மீது நேசம் பாராட்டும், நான் நேசம் பாராட்டும் என் உறவெல்லாம் உன்னுடைய உறவினரே. நீ என் இன்னுயிர்த் துணைவன். என் சகோதரன்.

உருமை என்று இவற்கு உரிய தாரமாம்
அருமருந்தையும் அவன் விரும்பினான்
இருமையும் துறந்து இவன் இருந்தனன்.
கருமம் இங்கு இது, எம் கடவுள்! என்றனன்.

இதோ இந்தச் சுக்ரீவன் இருக்கிறானே, இவனுக்கு உருமை (ருமா) என்ற பெயருடைய மனைவி உண்டு. அந்தப் பெண்ணையும் வாலி அபகரித்துக்கொண்டான். அரசன் என்ற நிலையில் கொஞ்ச காலம் இருந்தவனேனும், அரசை அண்ணனிடம் திருப்பினாலும் இளவல், இளவரசன் என்ற நிலையில் இருக்கவேண்டியவன் இவன். அதையும் இழந்தான். தன் வாழ்வின் ஆதாரப் பற்றுக்கோடான தன் மனைவியையும் அண்ணனிடத்தில் பறிகொடுத்தான். இதோ, காட்டில் வசிக்கிறான். சாமி! இதுதான் நடந்தது.

ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன
ஆரம் வீங்கு தோள் தம்பிக்குத் தன் அரசு உரிமைப்
பாரம் ஈந்தவன், பரிவிலன் ஒருவன் தன் இளையோன்
தாரம் வெளவினன் என்ற சொல் தரிக்குமாறு உள்ளதோ?

கதிரவன் சிறுவன்ஆய கனக வாள் நிறத்தினானை
எதிர்உறத் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின், நீண்ட
வெதிர் பொரு தோளினாளை நாடுதல் விழுமிது என்றான்.
அதிர் கழல் வீரர் தாமும் அன்னதே அமையும் என்றார்.

ஒளிவிடும் பொன் போன்ற நிறத்தை உடையவனும் சூரியனின் புத்திரனுமான சுக்ரீவனுடைய நட்பைப் பெற்று, அவன் மூலமாகச் சீதையைத் தேடுவதே சிறந்தது என்று கபந்தன் என்ற பெயரில் சாபம் பெற்று வாழ்ந்தவனான தனு என்ற கந்தர்வன் சொன்னான். அப்படியே செய்கிறோம் என்று இருவரும் அவனுக்குச் சொன்னார்கள்.

வாலினோ மே மஹாபாக பய ஆர்தஸ்ய அபயம் குரு
கர்தும் அரஹசி காகுத்ஸ்தா பயம்மே ந பவேத் யதா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 5, சுலோகம் 23 பின்பாதி, 24 முன்பாதி)

‘வாலியால் துன்புறுத்தப்பட்டு, அவனை அஞ்சி வாழும் என்னுடைய இந்த அச்சத்தை மாற்று. எனக்கு அபயம் நல்கு. அவ்வாறு செய்வதே உனக்குப் பொருத்தமானதாகும்’ என்ற சுக்ரீவன் வாய்மொழிக்கு விடையாக,

உபகார பலம் மித்ரம் விதிதம் மே மஹாகபி
வாலினாம் தம் வதிஷ்யாமி தவ பார்யா அபஹாரிணம்
(மேற்படி, சுலோகம் 25 பின்பாதி, 26 முன்பாதி)

‘நட்புக் கொள்வதன் பலன் என்னவென்றால், (ஒருவருக்கொருவர்) உதவியாயிருத்தலே. வலிய வானரனே! உன் மனைவியை அபகரித்தவனான வாலியை நான் கொல்கிறேன்..’

உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி
விலகும் என்னினும் வில்லிடை வாளியின் வீட்டி
தலைமையோடு நின் தாரமும் உனக்கு இன்று தருவேன்
புலமையோய்! அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான்.

பதினான்கு உலகங்களில் வாழ்பவர்களும் ஒன்று கூடி, அவனுக்கு உதவியாக நின்று என்னைத் தடுத்தாலும், என்னுடைய வில்லில் அம்பு தொடுத்து, அவனைக் கொன்று, அரசையும் உன் மனைவியையும் ஒரு சேர உனக்கு மீட்டளிப்பேன். இன்று. இப்போது. இதே நிமிடத்தில் உனக்கு உன் அரசும், உன் மனைவியும் கிடைத்தாகிவிட்டது என்று கொள். அவன் எங்கே இருக்கிறான், அதை எனக்குக் காட்டு. அவன் இருக்கும் இடத்துக்கு என்னை அழைத்துச் செல்.

எழுந்து பேர் உவகைக் கடற் பெருந் திரை இரைப்ப
அழுந்து துன்பினுக்கு அக்கரை கண்டனன் அனையான்
விழுந்ததே இனி வாலிதன் வலி என விரும்பா
மொழிந்த வீரற்கு, ‘யாம் எண்ணுவது உண்டு’ என மொழிந்தான்.

‘வாலியை இப்போதே அழிக்கிறேன். அவன் எங்கிருக்கிறான் காட்டு’ என்று இராமன் எழுந்த அளவில் மகிழ்ச்சியாகிய கடல் பெரிய அலைகளுடன் பொங்கி எழ, இது வரை வாடிக் கொண்டிருந்த துன்பக் கடலுக்கு அக்கரை கண்ணில் தென்பட்டவனாக, ‘வாலியின் வலிமை இத்தோடு தொலைந்தது’ என்றெண்ணி ஆர்ப்பரித்து, விரும்பி நிற்கும் அனுமன் முதலான வானர வீரருக்கும், இராமனுக்கும் ‘எனக்குக் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது’ என்று சொன்னான்.

மாயாவீ நாம தேஜஸ்வீ பூர்வஜோ துந்துபே சுதா
தேன தஸ்ய மஹத் வைரரம் வாலினா ஸ்த்ரீ க்ரிதம் புரா
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 9, சுலோகம் 4)

துந்துபிக்கு முன் தோன்றியவனான (அவனுடைய மூத்த சகோதரனான என்றும் பொருள் கொள்ளலாம்) மாயாவி என்றொரு அரக்கன் இருந்தான். அவனுக்கும் வாலிக்கும் ஒரு பெண் தொடர்பாகப் பகை இருந்தது.

கதம் ச தர்மம் ஜானீதே யேன ப்ராத்ரா துராத்மனா
யுத்தாய அபிநியுக்தேன பிலஸ்ய பிஹிதம் முகம்.
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 55, சுலோகம் 4)

தன்னுடைய சகோதரனால் குகையின் வாயிலைக் காவல் காக்குமாறு ஆணையிடப்பட்டிருந்த இவன், எந்த அடிப்படையில் தான் செய்வது சரி என்ற முடிவுக்கு வந்து, குகையின் வாயிலைப் பாறை கொண்டு அடைத்தான்? இவன் செய்தது எந்த தர்மத்தின்பாற் பட்டது? எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வந்தான்?

சத்யாத் பாணி க்ரிஹீதா ச க்ரிதா கர்மா மஹாயஷா
விஸ்மிரிதோ ராகவோ யேன ச கஸ்ய சுக்ரிதம் ஸ்மரெத்
(மேற்படி, சுலோகம் 5)

இப்படிப்பட்வனைத்தான் இராமன் கைப்பற்றி நட்புப் பிரதிக்ஞை செய்தான். அண்ணனுக்கு இப்படி ஒரு தீங்கிழைத்தவன் இவன் என்பதை இராமன் கூட கருத்தில் கொள்ளவில்லை அல்லவா? (சொல்லுக்குச் சொல் செய்யப்பட்ட மொழிபெயர்பன்று; கருத்து இதுதான்.)

ஏதத் அஸ்ய அசமம் வீர்யம் மயா ராம ப்ரகாஷிதம்
கதம் தம் வாலினாம் ஹன்தும் சமரே ஷக்ஸ்யசே ந்ருப
(வா. இரா. கிஷ்கிந்தா காண்டம், சர்க்கம் 11, சுலோகம் 68)

என்று இராமனைக் கேட்கிறான் சுக்ரீவன். ‘வாலியின் இணையற்ற வலிமை இத்தகையது. இப்படி இருக்கும்போது, இராமா, நீ எவ்வாறு அவனைப் போரிட்டுக் கொல்வாய்?’ இந்தக் கேள்வி காதில் பட்டதுதான் தாமதம், இலக்குன் சிரித்தான். கோபச் சிரிப்பு என்று சொல்லவேண்டிய அவசியமே இல்லை. அவனுடைய சிரிப்பில் சினம் தெரிந்ததோ இல்லையோ, அவன் கேள்வியில் எரிச்சல் தெரிகிறது.

ததா ப்ருவாணம் சுக்ரீவம் ப்ரஹஸன் லக்ஷ்மணோ அப்ரவீத்.
கஸ்மின் கர்மணி நிர்வ்ரிதே ஷ்ரத்தத்ய வாலினம் வதம்?
(மேற்படி, சுலோகம் 69)

சுக்ரீவன் இவ்வாறு சொல்லவும் இலக்குவன் சிரித்தான். ‘என்ன காரியம் செய்து காட்டினால் (இராமனால்) வாலி வதம் சாத்தியம் என்று நம்புவாய்,’ என்று கேட்டான்.

என்று தானும் அவ்வழி இரும் பிலம்
சென்று முன்னவன் தேடுவேன்; அவற்
கொன்றுளான் தனைக் கொல ஒணாது எனின்
பொன்றுவேன் எனா புகுதல் மேயினான்.’

‘அண்ணன் இறந்திருக்கத்தான் முடியும். இல்லாவிட்டால் இத்தனை மாதங்கள் கழித்தும் வெளி வராமல் இருக்க மாட்டான். ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது. நானும் இந்தக் குகைக்குள்ளே போகின்றேன். என் அண்ணனுக்கு என்ன ஆயிற்று என்று பார்ப்பேன். அவனைக் கொன்றவனோடு நானும் போர் புரிவேன். என் அண்ணனையே வீழ்த்திய அவனை என்னால் வீழ்த்த முடியுமா என்பது எனக்குத் தெரியாது. நான் ஒரு வேளை வெல்லலாம். அப்படி இல்லாவிட்டால் நானும் எங்க அண்ணனோட சேந்து செத்துப் போறேன்’ என்றவாறு குகைக்கு உள்ளே செல்லத் தொடங்கினான்.

தடுத்து வல்லவர் தணிவு செய்து நோய்
கெடுத்து மேலையோர் கிளத்து நீதியால்
அடுத்த காவலும் அரிகள் ஆணையால்
கொடுத்தது உண்டு…….

அன்ன நாளில் மாயாவி அப்பிலத்து
இன்ன வாயிலூடு எய்தும் என்ன யாம்
பொன்னின் மால் வரைப் பொருப்பு ஒழித்து வேறு
உன்னு குன்றெலாம் உடன் அடுக்கினேம்

அப்போதையின் அயர்வாறிய அனுமன் அழல் விழியா
பொய்ப்போர் சில புரியேல் இனி எனவந்திடை புகுந்தான்
கைப்போதகம் என முந்தவன் கடுந்தேர் எதிர் நடந்தான்
‘இப்போர் ஒழி. இனிப்போர் உள. இவைகேள்’என இசைத்தான்.

தளர்ச்சி நீங்கப் பெற்ற அனுமன் சினத்தால் நெருப்பெரியும் விழிகளோடு, (தரைமேல் நின்றிருந்த) இலக்குவனுக்கும் (தேரேறி நின்றிருந்த) இராவணனுக்கும் இடையில் வந்து குதித்தான். யானையைப் போல இராவணன் தேருக்கு எதிரில் நடந்து வந்தபடி, ‘ஏய் எல்லாம் போதும்டா! சும்மா பொய்யாட்டம் ஆடாதே,’ என்றான். ‘போங்காட்டம் ஆடாதே’ என்று சின்னப் பசங்க சொல்ல மாட்டாங்களா, அந்த மாதிரி. ‘பொய்ப்போர் சில புரியேல்.’ ‘அது கிடக்கட்டும். இந்தப் போரை விடு; இன்னும் எத்தனையோ போர் இருக்கிறது. அப்ப காட்டு உன் வீரத்தை. இப்ப நான் சொல்வதைக் கேள்.’

என்றாலும் இன்று இழிவு உன்வயின் எய்தும் என இசையா
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான்.

‘ஆனாலும் கூட, கண்ணு, இன்னிக்கு உனக்கு ஊதிட்டாங்க.’ ‘இன்று உனக்கு எல்லா இழிவும் ஒன்றாக வந்து சேரப் போகிறது,’ என்று சொல்லிக்கொண்டே உலகளந்த திரிவிக்கிரமனைப் போல் தன் பேருருவை எடுத்தான்

பரக்கப் பல உரைத்தென் படர் கயிலைப் பெரு வரைக்கும்
அரக்குற்று எரி பொறிக்கண் திசைக் கரிக்கும் சிறிது அனுங்கா
உரக் குப்பையின் உயர்தோள் பல உடையாய் உரன் உடையாய்.

நீள நெடுக பலவாறாகச் சொல்லவே தேவையில்லை. வலிமை என்பதன் குவியல் என்று சொல்லக் கூடிய வரிசையான பல தோள்களை உடையவன் நீ!

என்தோள்வலி அதனால்எடுத்து யான்எற்றவும் இறவா
நின்றாய்எனின் நீபின்எனை நின்கைத்தல நிரையால்
குன்றேபுரை தோளாய்மிடல் கொடுகுத்துதி குத்தப்
பொன்றேன்எனின் நின்னோடெதிர் பொருகின்றிலென் என்றான்.

ராகவஸ்ய வசஹ ஷ்ருத்வா ஸம்பரிஷ்வஜ்ய பூஜ்ய ச அபிவாத்ய ச ராமாய யயெள ஸெளமித்ரி ராகவே 51

ஸ ராவணம் வராண ஹஸ்தபாஹ¤ம் ததர்ஷ பீமோத்யததீப்த சாபம் ப்ரசாதயந்தம் ஷரவ்ருஷ்டி ஜாலைஸ்தான் வானரான் பின்னவிகீர்ண தேஹான் 52

தமாலோக்ய மஹாதேஜா ஹனுமான் மாருதாத்மஜஹ நிவார்ய ஷரஜாலானி விதுத்ராவ ச ராவணம் 53
ரதம் தஸ்ய ஸமாஸாத்ய பாஹ¤முத்யம்ய தக்ஷ¢ணம் த்ராசயன் ராவணம் பீமான் ஹனுமான் வாக்யம் அப்ரவீத் 54

தேவ தானவ கந்தர்வைர்யஷைஸ்ச சஹ ராக்ஷஸைஹி அவத்யத்வம் த்வயா ப்ராப்தம் வானரேப்யஸ்த்து தே பயம் 55

ஏஷ மே தக்ஷ¢ணோ பாஹ¤ஹ¤ பஞ்சஷாகஹ சமுத்யதஹ விதமிஷ்யதி தே தேஹே பூதாத்மானம் சிரோஷிதம் 56
(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 59, சுலோகம் 51-56)

என்ன அறிவு! என்ன ஆற்றல்! என்ன கூர்த்த மதி! சுந்தர காண்டத்தில் சீதையை முதன் முதலாகப் பார்த்த போது, இவள்தான் தான் தேடி வந்திருக்கும் பெண்ணா என்று உறுதி செய்துகொள்வதற்காக எப்படியெல்லாம் கவனி க்கிறான் அனுமன்! தனிமை, அரக்கர் சூழ்ந்திருந்த தன்மை, கசங்கிய ஆடை, அழுக்கடைந்த மேனி, அழுத கண்கள் என்றிவற்றையெல்லாம் கவனித்த பின்னும் வேறு சில அடையாளங்களையும் கவனித்தான் என்று வால்மீகி சொல்கிறார்:

தாம் சமீக்ஷ்ய விசாலாக்ஷ¢ம் ராஜபுத்ரீம் அநிந்திதாம் தர்க்யாம் ஆச சீதா இதி காரணை உபபாதயன்

(வா. இரா. சுந்தர காண்டம், சருக்கம் 15, சுலோகம் 40)

தான் பார்க்கின்ற அந்தக் குற்றமற்ற (நிந்திக்கத் தக்க ஏதுமற்ற) அரச குமாரி, சீதையேதான் என்பதனை தர்க்க ரீதியாகச் சிந்தித்து, காரணங்களை ஆய்ந்துணர்ந்து அறிந்தான்.

உத்திஷ்ட நரஷார்த்தூல தீர்க்கபாஹோ! த்ருதவ்ரத கிமாத்மானம் மகாத்மானம் ஆத்மானம் நாவ புத்யதே

(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 82, சுலோகம் 43)

நீண்ட வலிய கரங்களையும், கூர்த்த மதியையும் உடைய மனித வேங்கையே! நீயே எல்லா ஆன்மாக்களுக்கும் மகான்மா என்பதை ஏன் உணர மறுக்கிறாய்?

சம்நிவார்ய பரானிகம் அப்ரவீத் தான் வநெள கசஹ

ஹனுமான் சம்நிவர்தத்வம் நஹ ஸாத்யம் இதம் பலம் த்யக்த்வா ப்ராணான் விசேஷ்டந்தோ ராமப்ரிய சிகீர்ஷவஹ

என்நிமிதம் ஹி யுத்யாமோ ஹதா சா ஜனகாத்மஜா இமம் அர்த்தம் ஹி விக்யாப்ய ராமம் சுக்ரீவமேவச

(வா. இரா. யுத்த காண்டம், சருக்கம் 82, சுலோகம் 20 (பின் அரையடி), 21, 22 )

எதிர்த்து ஆர்த்தெழுந்து கொண்டிருந்த வானரப் படையை அடக்கினான் அனுமன். ‘திரும்பிச் செல்லுங்கள். இந்த அரக்க சேனை இனிமேல் வெல்லப்பட வேண்டிய ஒன்றன்று. யாருக்காக நாம் உயிரைப் பணயம் வைத்து, பெரும் அபாயங்களை மேற்கொண்டு தீவிரமாகப் போராடினோமோ, எந்த இராமனுடைய உள்ளம் மகிழ்வதற்காக இவற்றைச் செய்தோமோ, அவனுடைய மனத்துக்கினிய ஜனகபுத்ரி கொல்லப்பட்டுவிட்டாள். இதனைப் போய் இராமனிடமும், சுக்ரீவனிடமும் தெரிவிப்போம்; அதன் பின்னர் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்வோம்.’

‘தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல், என்றும் அவண் உறைவிடம் ஆம்; ஆதலினால், அம் மலையை இறைஞ்சி ஏகி, பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய, நாகக் கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா நெடு வரையும், கடலும், காண்டிர்.

அந்தப் பொதிய மலையில் அகத்திய முனிவன் தமிழ்ச் சங்கம் வைத்திருக்கிறான். அந்த மலை என்றும் அவன் வாழ்வதற்கு உரிய இடம். ஆகையால் அந்த மலையை (தொலைவில் நின்றபடி) வணங்கிவிட்டுத் தொடர்ந்து செல்லுங்கள். பொன் துகள் நிரம்பிய பொருநை நதி வரும். அதையும் தாண்டியனால் யானைக் கன்றுகள் நி றைந்த மயேந்திர மலையை அடைவீர்கள்.

இராமன் முடி சூடும் சமயத்தில் நிகழ்கிறது இது.

இராமன் சற்று நேரத்துக்கு முன்னால்தான் சானகிக்கு ஒரு முத்து மாலையை அணிவித்திருக்கிறான். அந்த மாலையைக் கைகளால் நெருடியவண்ணம் காட்சியளிக்கிறாள் வைதேகி.

அவேக்ஷமாணா வைதேஹீ ப்ரததெள வாயுஸ¥னவே அவமுச்யாத்மனஹ கண்டாத்தாரம் ஜனகநந்தினி

அவைக்ஷத ஹரீன் ஸர்வான் பர்த்தாரம் ச முஹ¤ர்முஹ¤ஹ¤ தாமிங்திதக்னஹ ஸம்ப்ரேக்ஷ்ய பபாஷே ஜனகாத்மஜாம்

ப்ரதேஹி ஸ¤பகே ஹாரம் யஸ்ய துஷ்டாஸி பாமினி அத ஸா வாயுபுத்ராய தம் ஹாரமஸிதேக்ஷணா

தேஜோ த்ருதிர்யஷோ தாக்ஷ்யம் ஸாமர்த்யம் விநயோ நயஹ பெளருஷம் விக்ரமோ புத்திர்ய யஸ்மின்னே தானி நித்யதா

(வா. இரா. யுத்த காண்டம், சர்க்கம் 128, சுலோகம் 79-82)

அனுமன் தங்களுக்கு ஆற்றிய விலை மதிப்பிட முடியாத சேவைகளை எண்ணிய ஜனக புத்ரி, தன் கணவன் தனக்கு அணிவித்த முத்துமாலையைக் கழற்றி(க் கையில் வைப்பதா)னாள். (அவ்வாறு அந்த மாலையைக் கையில் வைத்தபடி) மீண்டும் மீண்டும் கூடியிருக்கும் வானரர்களைப் பார்ப்பதும், இராமனைப் பார்ப்பதுமாக நின்றாள். இராமன் அவளைக் கூர்ந்து நோக்கினான். ஒருவரின் செயல்களைக் கொண்டு அவரின் உள்ளத்தை அளப்பதில் வல்லவனான அவன், ‘யாருக்கு இதனை அளிக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றுகிறதோ அவருக்கே சந்தோஷமாகக் கொடு,’ என்று அவளிடம் சொன்னான். கரிய விழிகளைக் கொண்ட அவள், சக்தியும், உறுதியும், புகழும், திறமையும், தகுதியும், அடக்கமும், முன்னறிவும், வீர்யமும், வீரமும், விவேகமும் யாரிடத்தில் எப்போதும் ஒன்றாக உறைந்துளவோ, அந்த வாயு புத்திரனுக்கே அந்த முத்து மாலையை அணிவித்தாள்.

கம்பன் இந்தக் காட்சியை அப்படியே சுருக்கமாகப் படம் பிடிக்கிறான், ஒரே ஒரு விருத்த அளவில்.

பூமலர்த் தவிசை நீத்து, பொன் மதில் மீதிலை பூத்த தேமொழித் திருவை ஐயன் திருவருள் முகத்து நோக்க, பா மறைக் கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கைக் கொண்டு ஏமுறக் கொடுத்தாள், அந்நாள், இடர் அறிந்து உதவினாற்கே.

தாமரைப் பூ ஆசனத்தை விட்டுவிட்டு, பொன்னால் பொதியப்பட்ட மதில்களை உடைய மிதிலை நகரத்தில் வந்து பூத்தவளான மைதிலியை இராமன் தன்னுடைய அருள் ததும்பும் முகத்தால் நோக்கினான். மறைகளுக்கு உரியவளான கலைமகள் தந்தான, பெரிய முத்துகள் கோக்கப்பட்ட மாலையைக் கையில் எடுத்து, அவள் மிக்க இன்பத்தை அடைந்தவளாகி, அந்தநாளில் தன் துன்பங்களை அறிந்து உதவிய அனுமனுக்கு அளித்தாள்.

விடை கொடுத்த படலத்தில், அனுமனுக்கு விடை கொடுக்கும் தருணத்தில் இராமனுடைய சொல்லையும் செயலையும் உத்தரகாண்டத்தில் வான்மீகி இவ்வாறு சொல்கிறார்:

ஏவம் ப்ருவாணம் ராமஸ்து ஹநூமந்தம் வராஸநாத் உத்தாய ஸஸ்வஜே ஸ்நேஹாத் வாக்யமேத துவாச ஹ

(வா. இரா. உத்தர காண்டம், சர்க்கம் 40, சுலோகம் 20 – 24)

(‘உன்பால் எனக்குள்ள பேரன்பு என்றென்றும் நிற்கட்டும். உன்பால் எனக்குள்ள விசுவாசம் எப்போதும் நிலைக்கட்டும்.

உன்மீது எனக்கள்ள பிரேமை வேறு எந்தப் பக்கத்திலும் சிதறாமல் இருக்கட்டும். தேவதைகள் எல்லாம் எனக்கு உன் காதையைச் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். நான் அதனைக் கேட்டபடியே, காற்றால் சிதறுண்ணும் மேகங்களைப் போல், (உன்னைப் பிரிந்திருக்கும்) என்னுடைய ஏக்கமெல்லாம் (உன் காதையால்) சிதறுண்டு போகட்டும்’ என்றெல்லாம் வேண்டிய அனுமனுடைய பேச்சைக் கேட்ட இராமன்,)

தன் சிறந்த ஆசனத்திலிருந்து எழுந்து வந்து, அன்புடன் அனுமனைத் தழுவினான். தழுவியவாறு இதனைச் சொன்னான் என்று (பெரியோர்) சொல்கின்றனர்.

யாரை யார் தழுவினார்கள்? இராமன், அனுமனைத் தழுவினான் என்கிறார் வால்மீகி. இந்த உத்தர காண்ட நிகழ்வை, மேற்படி ‘முத்து மாலையைத் தரும் சீதையின்’ காட்சிக்கு இரண்டு விருத்தங்களுக்கு முன்னால் அமைத்தான் கம்பன். Master stroke எந்த இடத்தில் விழுகிறது என்பதைக் கவனியுங்கள்.

மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி, ‘ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை; பைம் பூண் போர் உதவிய திண் தோளாய்! பொருந்துறப் புல்லுக!’ என்றான்.

இராமன், மாருதியை மகிழ்ச்சியோடும், அருள் நிறைந்த கண்களோடும் நோக்கினான். ‘நீ செய்திருக்கும் உதவிகளை வேறு யார் செய்திருக்க முடியும்? நீ செய்திருக்கும் உதவிகளுக்குப் பிரதியாக, ஈடாக, பதிலாக, நான் உனக்குச் செய்யக் கூடிய செயல் எதுவும் இல்லை. அழகிய ஆபரணங்களை அணிந்த, என் போரின்போது (கூட இருந்தும், என்னுடன் நின்று போரிட்டும், என்னைச் சுமந்தும்) உதவிய பெருந்தோள்களை உடையவனே, நீ என்னைத் தழுவிக்கொள்வாயாக.

இந்த, ‘நான் உனக்குச் செய்யக் கூடிய செயல் என்று எதுவுமே இல்லை,’ என்பதற்கான விளக்கத்துக்கு நாம் வான்மீகத்துக்குத்தான் போக வேண்டும். மேலே நாம் காட்டியுள்ள இருபதாம் சுலோகத்தை அடுத்து வரும் நான்கு சுலோகங்கள் இவை.

ஏவமேதத் கபிஸ்ரேஷ்ட பவிதா நாத்ர ஸம்ஷயஹ சரிஷ்யதி கதா யாவதேஷா லோகே ச மாமிகா

தாவத்தே பவிதா கீர்த்திஹி ஷரீரேங்ப்ய ஸவஸ்ததா லோகாஹி யாவத்ஸ்தாஸ்யந்தி தாவத் ஸ்தாஸ்யந்தி மே கதாஹ

ஏகைகஸ்யோபகாரஸ்ய ப்ராணான் தாஸ்யாமி தே கபே ஷேஷஸ்யேஹோபகாரணாம் பவாம் த்ரிணினோ வயம்

மதக்னே ஜீரணதாம் யாது யத் த்வயோபக்ருதம் கபே நரஹ ப்ரத்யுபகாராணாமாபத்ஸ்வாயதி பாத்ரதாம்

(வா. இரா. உத்தர காண்டம், சர்க்கம் 40, சுலோகம் 21 – 24)

வானரரில் சிறந்தவனே! நீ நினைத்தபடியே நடப்பதாக. அப்படியே நடக்கும். அதில் எந்த ஐயமும் இல்லை.

இந்த உலகில் என் காதை வழங்கிவருமளவும் உன் புகழ் நிலைத்து நிற்கும். என் காதை உலகுள்ள அளவும் இருக்கும்.

நீ எனக்குச் செய்திருக்கும் பேருதவிகளில் ஒன்றே ஒன்றுக்குப் பிரதியாக ஏதேனும் தரவேண்டுமாயின் என் உயிரைத்தான் தரவேண்டியதிருக்கும். அப்படியே தந்தாலும், நீ செய்திருக்கும் மற்ற உதவிகளுக்கு எதுவும் ஈடாகத் தரமுடியாத கடனாளியாகவே நான் இருப்பேன். எனவே, உனக்கு என் இதயம் என்றென்றும் கடனாளியாகவே இருக்கட்டும். உனக்கு நான் எதையும் திரும்பச் செய்யும் நிலை தோன்றாமலே போகட்டும். (ஏனெனில், என் உதவி யாருக்குத் தேவைப்படும்? துன்பத்தில் ஆழ்பவனுக்கு. நீயோ துன்பங்களே என்றென்றும் நெருங்க ஒண்ணாதவன். உனக்கு நான் எந்தக் காலத்தில், எப்போது, என்ன உதவியைச் செய்ய முடியும்? ஆகவே, நான் உனக்கு என்றென்றும் கடன்பட்டவனாகவே இருக்க விரும்புகிறேன்.)

இந்தப் பின்னணியில், கம்பனுடைய வாக்குக்குத் திரும்புவோம். இப்போது அனுமனை, இராமன் தழுவுகிறான் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அனுமனுடைய தராசு என்ன சொல்லும்? ‘உன் திருமேனியைத் தழுவுகின்ற பேறு ஒன்றே நான் செய்த(தாக நீ எண்ணும் – நான் அவ்வாறு எண்ணவில்லை) எல்லா உதவிகளுக்கும் ஈடாகிவிட்டதே! அதற்கும் மேலானது அல்லவா என்னை நீ பொருந்தத் தழுவியது!’ என்றல்லவா அனுமனுடைய பார்வை பேசும்? அதனால்தான், அந்தக் கடன் என்றென்றும் அப்படியே இருந்தாக வேண்டும் என்பதனால்தான், இராமன், ‘நீ என்னைத் தழுவிக்கொள்,’ என்றான். இப்போது இராமனுடைய கடன் சுமைதான் ஏறுகிறதே தவிர, அவன் எதையும் திரும்பச் செலுத்தவில்லை.

‘கொடுப்பதற்குப் பொருளும் இல்லை, செய்வதற்குச் செயலும் இல்லை,’ என்றான பிறகு, தன் மேனியைத் தீண்டுதல் அடியவனால் எப்படிக் கொள்ளப்படுமோ, அந்தக் கணக்கின்படி கூட, ‘கணக்கு நேராகிவிட்டது,’ என்று யாராலும், எப்போதும் சொல்ல முடியாத ஒரு சித்திரம். நேர்த்தி என்றால் அது கம்பன்.

‘பொன்உருக் கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதாத் தன்உருக் கொண்டு நின்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான்’

என்று இராம-அனும முதல் சந்திப்பின்போது, அனுமன் தன்னுடைய பேருருவை எடுத்து நிற்கும் காட்சியைப் பற்றிச் சொல்லும்போது குறிப்பான் கம்பன். ‘பொன் மலையாகிய மேரு மலை, தன்னுடைய தோளுக்குக் கூட உவமையாகச் சொல்லப்படப் போதுமாயிராத அளவுடைய தன் பேருருவை எடுத்து நின்றான், தருமத்தின் தனிமையைத் தீர்ப்பதற்காக வந்தவனான அனுமன்.’

‘தருமத்தின் தனிமை தீர்ப்பான்,’ என்ற தொடரைப் பாருங்கள். பின்பற்றுவதற்கு யாருமே இல்லாமல், தன்னந் தனியே, கேட்பாரின்றி, நாடுவாரின்றிக் கிடந்ததான தருமம் தனிமையில் வாட விடாமல், அதனைப் பின்பற்றுவார் பல்கிப் பெருகுவதற்காகத் தோன்றியவனான அனுமன். என்ன பொருத்தமான சொற்கள்!

அயோத்தியின் அரியணையைத் தாங்கியவன் அனுமன். ‘அரியணை அனுமன் தாங்க,’ என்றுதான் இராமன் திருமுடி சூடும் காட்சியைச் சொல்லும் விருத்தம் தொடங்குகிறது. இராமன் திருமஞ்சனமாட ‘நான்கு கடல்களிலிருந்தும், ஏழு வகையான நதிகளிலிருந்தும்’ நீர் கொண்டு வந்தவன் அனுமன். ‘என்னை நீ தழுவுக,’ என்று இராமன் சொன்னதும், தன் நாயகன் தனக்குச் செய்கின்ற சிறப்பின் பெருமையை நன்குணர்ந்தவனான அனுமன் என்ன செய்தான்?

என்றலும், வணங்கி நாணி, வாய் புதைத்து, இலங்கு தானை முன் தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி, பொன் திணி வயிரப் பைம் பூண் ஆரமும், புனை மென் தூசும், வன் திறல் கயமும், மாவும், வழங்கினன், வயங்கு சீரான்.

இராமன் அவ்வாறு சொன்னது, வணங்கினான். வெட்கப்பட்டான். கை கொண்டு வாயை மூடியபடி, அவ்வளவு பெரிய சேனைக்கு முன்னால், பணிவோடு, தலை கவிழந்து நின்ற ஆற்றல் மிக்கவனை தலையோடு கால் முற்றும் நோக்கி, அவனுக்கு அணிகலன்களையும், ஆடைகளையும், யானைகளையும், குதிரைகளையும் வழங்கினான். (பதில் உதவியாக அன்று. பரிவின் காரணமாக.)

தன்னைத் தழுவுமாறு இராமன், தன்னைச் சொன்னதே அனுமனுக்குப் பேருவகையைத் தந்தது. ஏனெனில்,

உதவி வரைத்தன்று உதவி. உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.

ஒருவருக்குச் செய்யும் உதவியின் அளவு, மதிப்பு, செய்யப்பட்ட செயலின் அளவையோ, கொடுக்கப்பட்ட தொகையின் அளவையோ வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை. யாருக்கு அது செய்யப்பட்டதோ, அவருடை மன நிறைவின் அளவுதான் அந்த உதவியின் அளவைத் தீர்மானிக்கிறது.

அனுமன் தோன்றுகிற முதற் காட்சியிலிருந்து, கடைசிக் காட்சி வரை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் தோன்றுவதையும், ஒவ்வொன்றும் தோன்றத் தோன்ற வெகு எளிதாக ஒவ்வொன்றையும் அனுமன் தீர்த்து வைப்பதையும் கண்டோம். தன்னுடைய ஆற்றல் தன் தலைவனால் போற்றப்பட்ட சமயம் ஒவ்வொன்றிலும் அவன் நாணம்கொண்டு நிற்பதையே காண்கிறோம்.

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ சடகோபர் அந்தாதி -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

January 15, 2023

இராமன் திருக்கதையில் கம்ப நாடன் கவிதை போல் கற்றோர்க்கு இதயம் களியாதே
இராம காதையைச் சொல்லுதற்குக் காப்பாக இருப்பது குருகை நாதன் குரை கழலே
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ –
நம் சடகோபனைப் பாடினாயோ என்று திரு அரங்கன் திரு ஆணையைத் தலை மேல் கொண்டு ஆழ்வார் நூற்று அந்தாதி என்னும்படி சடகோபர் அந்தாதி –
பக்தியே ஸ்ருங்காரமாக அகத்துறை பாடல்களும் இதில் உண்டே
ஆழ்வார் திரு நகரியில் -இராப்பத்து இறுதி நாளில் -ஆழ்வாரும் பொலிந்து நின்ற பிரானும் திருச்செவி சாத்தி அருளுகிறார் –

ஸ்ரீ இராமாயணம் இயற்றிய ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் எழுதிய ஒன்பது நூல்களுள் ஸ்ரீ சடகோபர் அந்தாதியும் ஒன்றாகும்.
சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார்.
இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்.
இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.
இவரது வேறு நூல்கள் ஸ்ரீ ஏரெழுபது, ஸ்ரீ சரசுவதி அந்தாதி, ஸ்ரீ திருக்கை வழக்கம் முதலியவை.

—————

நம்மாழ்வாருக்கு பல திரு நாமங்கள் உண்டே
சடகோபன்
மாறன்
காரி மாறன்
பராங்குசன்
வகுளாபரணன்
குருகைப் பிரான்
குருகூர் நம்பி
குரு கூரான்
திருவாய் மொழிப் பெருமாள்
பொருநல் துறைவன்
குமரித் துறைவன்
பவ ரோக பண்டிதன்
முனி வேந்து
பர ப்ரஹ்ம யோகி
நாவலர் பெருமான்
ஞான தேசிகர்
ஞானப்பிரான்
தொண்டர் பிரான்
நா வீறர்
திரு நா வீறுடைய பிரான்
உதய பாஸ்கரர்
வகுள பூஷண பாஸ்கரர்
ஞானத் தமிழுக்கு அரசு
ஞானத் தமிழ் கடல்
மெய்ஞ்ஞான கவி
தெய்வ ஞானச் செம்மல்
நாவலர் பெருமான்
பாவலர் பெருமான்
வினவாதுணர்ந்த விரகர்
குழந்தை முனி
ஸ்ரீ வைஷ்ணவ குல பதி
ப்ரபந்ந ஜன கூடஸ்தர்

—————-

இரணியன்  வதைப்படலத்தில்
நசை திறந்திலங்கப்பொங்க -என்று தொடங்கும் பாசுரத்தை ஆரம்பித்தது
திசை திறந்து அண்டம் கீறிச் சிரித்தது செங்கட் சீயம் -என்று பாடும் பொழுது
கோயில் வடக்கு வாசலில் உள் கோபுரத்தில் ஸ்ரீ மன் நாதமுனிகளுக்கு எதிரே இருக்கும்
செங்கல் சுண்ணாம்பினால் அமைந்து இருந்த நரஸிம்ஹ திரு உருவம் உயிர் பெற்று தலையை அசைத்ததாம்
இப்பொழு-இவரே மேட்டு அழகிய சிங்கர் -பிரதிஷ்டை செய்யப் பெற்று ஆராதிக்கப் படுகிறார்
இத்தைக் கண்ட ஸ்ரீ மன் நாதமுனிகள் கம்பநாற்றத்தாழ்வானுக்கு தீர்த்த பரிவட்டம் பிரசாய்த்திப்பித்து அருள
திருக் கோயிலுக்குள் கூட்டிச் செல்ல-நம்பெருமாள் அர்ச்சகர் மேல் ஆவேசித்து -நம் சடகோபனைப் பாடினாயோ -என்று கேட்டதால்
அன்று இரவே பாடின பின்பே அரங்கனைச் சேவிக்கச் சென்றாராம் –

—————————————–

சிறப்புப் பாயிரம்

தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
நாவில் சிறந்த மாறற்குத் தக்க நன் நாவலவன்
பூவில் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.

தெய்வங்களில் சிறந்தவன் ஸ்ரீ திருமால்!
அவனுக்குத் தக்க தெய்வீகமான கவிஞன் பலவிதமான பா வகைகளை ஸ்ரீ திருவாய்மொழியில்
சிறப்பாக அமைத்த பண்டிதனான ஸ்ரீ நம்மாழ்வாரே!
நா வண்மையில் சிறந்த அந்த ஸ்ரீ மாறன் சடகோபன் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தக்க நா வண்மை கொண்டவன்
தாமரைப் பூவில் வாழ்வான்-அமர்ந்த பிரமனை ஒத்த ஸ்ரீ கம்ப நாட்டாழ்வானே!-பாகவத நிஷ்டையால் மதுரகவி ஆழ்வாருக்கு ஒப்பு என்றுமாம்

அகத் துறையிலும் புறத் துறையிலும் பாடி புலமைக்கு வெள்ளிக் கம்பம் நாட்டியவன்-

மால் -பெருமை கறுமை வ்யாமோஹம்-

மாலே மணி வண்ணா
மால் என்னை மால் செய்தான்
திருமாலே கட்டுரையே
கவி -க்ராந்த தர்சீ

திரு -அழகு
வாய் மொழி -வினைத்தொகை -வாய்க்கிற -வாய்த்த -வாய்க்கும் -முக்காலத்துக்கும் எம்பருமானுக்குப் பொருத்தமான
வாய்மை -கடைக் குறைவாய் உண்மையான -ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை யதாவாக பேசும் மொழி

யஸ்ய ஸர்வே ஸமாரம்பா காம ஸங்கல்ப வர்ஜிதா-
ஜ்ஞாநாக்நி தக்த கர்மாணம் தமாஹு பண்டிதம் புதா—৷৷4.19৷

எவனுக்கு எல்லாக் கர்மங்களையும் பற்றிய முயற்சிகளும் பலன்களில் பற்று அற்றவையாக இருக்கின்றனவோ –
அறிவாளியான அவனையே ஞானம் ஆகிய நெருப்பால் எரிக்கப்பட்ட வினைகளை உடையவனாக தத்வம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்

—————-

ஆரணத்தின் சிரமீது உறை சோதியை ஆந்தமிழால்
பாரணம் செய்தவனைக் குருக்ஷரனைப் பற்பல வா
நாரணனாம் என ஏத்திக் தொழக் கவி நல்கு கொடைக்
காரணனைக் கம்பனை நினைவாம் உள் களிப்புறவே.

பாரணம் -பாரணா பாராயணம் -உணவு திருப்தி படித்தல்
நெறி வாசல் தானேயாய் நின்றானை -பற்றற்றானைப் பற்றி
அவன் அருளாலேயே அவனை அடக்கி தம் வசம் ஆக்கிக் கொண்டார் ஆழ்வார் -பராங்குசன் அன்றோ

————–

‘நம் சட கோபனைப் பாடினையோ?’ என்று நம் பெருமாள்
விஞ்சிய ஆதரத்தால் கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த
செஞ்சொல் அந்தாதி கலித்துறை நூறும் தெரியும் வண்ணம்
நெஞ்சு அடியேற்கு அருள் வேதம் தமிழ் செய்த நின்மலனே.

——————–

நாதன் அரங்கன் நயந்துரை என்ன நல் கம்பன் உன் தன்
பாதம் பரவி பைந்தமிழ் நூறும் பரிவுடனே
ஓதும் படி யெனக்கு உள்ளத்தனை யருள் ஓதரிய
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருளே இது என் விண்ணப்பமே.

————–

தற்சிறப்புப் பாசுரம்

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன் அடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே.

————–

நூல்

வேதத்தின் முன் செல்க மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக் கடல் எங்கள் தென் குரு கூர்ப் புனிதன் கவி ஓர்
பாதத்தின் முன் செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே. 1-

உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் -என்று ஸ்வரூபத்தை முழுவதுமே பர் அடியிலே காட்டி அருளினார் அன்றோ

————

சுடர் இரண்டே பண்டு மூன்றாயின துகள் தீர்ந்துலகத்து
இடர் இரண்டாய் வரும் பேர் இருள் சீப்பன எம் பிறப்பை
அடர் இரண்டாம் மலர்த் தாள் உடையான் குருகைக் கரசன்
படர் இருங் கீர்த்திப் பிரான் திருவாய் மொழிப் பாவொடுமே. 2-

ஸூர்ய சந்திர சுடர் போல் களங்கம் இல்லாத திருவாய் மொழிச் சுடர் ஸர்வருக்கும் உப ஜீவியம்
அவையோ ஒன்றை அலற்றும் மற்ற ஒன்றை மொட்டுவிக்கும்
பண்டு இரு சுடர் என்றது –
ராம திவாகரனான வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விலக்காயும்
அச்யுத பானுவாக இருந்த ஆயர் தம் குல விலக்காயும் என்றுமாம்

ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு-போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி-விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே–ஆச்சார்ய ஹ்ருதயம் -சூரணை -83-

———

பா வொடுக்கும் நுண் இசை ஒடுக்கும் பலவும் பறையும்
நா வொடுக்கும் நல் அறி வொடுக்கும் மற்றும் நாட்டப் பட்ட
தே வொடுக்கும் பர வாதச் செரு ஒடுக்கும் குருகூர்ப்
பூ வொடுக்கும் அமுதத் திரு வாயிரம் போந்தனவே. 3-

நாட்டப்பட்டதை தேவு -செரு -இரண்டுக்கும் கொண்டு -அவர்கள் பரன் திறம் அன்றி மற்று இல்லை என்றும்
ஈஸ்வரோஹம் என்று இருப்பார் கர்வங்களையும் ஒடுக்கு நாட்டப் பட்டதே –
ஒடுக்கும் என்றது அடக்கும் என்றும் கண்டித்து அகற்றும் என்றுமாம்

———

தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தரும நிறை
கனமாம் சிலர்க்கு அதற்கு ஆரணமாஞ் சிலர்க்கு ஆரணத்தின்
இனமாம் சிலர்க்கு அதற்கு எல்லையுமாம் தொல்லை ஏர் வகுள
வன மாலை எம்பெருமான் குருகூர் மன்னன் வாய் மொழியே. 4-

தரும நிறை கனமாம்-தர்மங்கள் எல்லாம் நிறைந்த கூட்டமாகும்
ஆரணம் -வேதம்
ஆரண இனம் -வேத சாகை
அதற்கு எல்லை -வேதாந்தம் -உப நிஷத்

வைஸ்யருக்கு தனம் -ப்ராஹ்மணர்க்கு தவம் -ஷத்ரிய சூத்ரருக்கு தர்மம்

வனமாலை -ஆறு ருதுக்களிலும் மலரும் எல்லாப் பூக்களையும் கொண்டு அமைத்து மூலம் கால் வரை தொங்கும்
ஆஜானு வம்பினி மாலா ஸர்வ ருது ஷு சரம உஜ்வலா
மத்யே ஸ்தூல கதம்பாட்யா வனமாலேதி கீர்திதா -இவ்விதமானது ஸ்ரீ வைகுண்டத்தில் தானே உள்ளது

இத்தையே கம்பர் கும்பகர்ணன் வதைப்படலத்தில் -103 பாசுரத்தில் –
என்னலும் இருது வெல்லாம் ஏகின யாவும் தத்தம்
பன்னமரும் பருவம் செய்யாயோகி போற் பற்று விட்ட
பின்னரும் உலகம் எல்லாம் பிணி முதற் பாசம் வீசித்
துன்னமே தவத்தின் எய்தும் துறக்கம் போல் தோன்றிற்று அன்றே-

———–

மொழி பல ஆயின செப்பம் பிறந்தது முத்தி யெய்தும்
வழி பல வாய விட்டொன்றா அது வழுவா நரகக்
குழி பல ஆயின பாழ் பட்டது குளிர் நீர்ப் பொருநை
சுழி பல வாய் ஒழுகுங் குருகூர் எந்தை தோன்றலினே. 5-

குளிர் என்றது தன்னிடம் அமிழ்ந்தோருடைய உடலுக்கும் உயிருக்கும் உள்ள வெப்பங்களைப் போக்கி
உள்ளும் புறமும் குற்றமற்றவராக ஆக்கியதைக் குறிக்கும்
திருச் சங்கணித் துறையில் நீராடுவது அருள் ஒழுகும் தாமரைச் செங்கண்ணான் குணக்கடலிலே ஆடுவதே யாகும்

———–

தோன்றா உபநிடதப் பொருள் தோன்றல் உற்றார் தமக்கும்
சான்றாம் இவை என்ற போது மற்றென் பல காலும் தம்மின்
மூன்றா யினவும் நினைந்து ஆரணத்தின் மும்மைத் தமிழை
ஈன்றான் குருகைப் பிரான் எம்பிரான் தன் இசைக் கவியே. 6-

த்ரயீ -ருக் யஜுஸ் சாமம் -என்று மூன்றுமாம் –
பேத அபேத கடக ஸ்ருதிகள் என்று மூன்றுமாம்
இயல் இசை நாடகம்
தத்வ ஹித புருஷார்த்தம்
கர்ம ஞான பக்திகள்
ஸ்வரூபம் உபாயம் புருஷார்த்தம்
சித் அசித் ஈஸ்வரன் -தத்வ த்ரயங்களையும்
ரஹஸ்ய த்ரயங்களையும்

———–

கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான் சட கோபன் குமரி கொண்கன்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே. 7-

நிலத்தேவர் காதுக்குள் புகுந்து -உள்ளத்துள் நின்று நாவிலே தித்திக்கும் அன்றோ-

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் என்றபடி –

———

தித்திக்கும் மூலத் தெளி யமுதே யுண்டு தெய்வ மென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம் பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய் குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே. 8-

அத்தி கற்பு -கண்ணன் பால் காமம் -என்ற கற்பு நெறிக்கு மூலம் ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகளே -என்றவாறு –

———-

ஆயிரம் மா மறைக்கும் அலங்காரம் அருந் தமிழ்க்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்கு எல்லாம்
தாய் இரு நாற் றிசைக்குத் தனித் தீபந் தண்ணங் குருகூர்ச்
சேயிரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே. 9–

பனுவல் -ஆகமம் -கல்வி -கேள்வி -நூல் -என்கிற பொருளில் வந்தது
கிழக்கே மேற்கே சந்த்ர ஸூ ர்யர்கள் -வடக்கே துருவ மண்டலம் -தனித்தனி தீபம்
திருவாய் மொழி தீபமோ எண் திசையும் எல்லாக் காலத்திலும் வீசும் அன்றோ
ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரம் -நான்கு வித கவிகள்-இரு மா மரபுகள் -கர்ம ஞான மார்க்கங்கள் –

———

செய் ஓடு அருவிக் குருகைப் பிரான் திரு மாலை நங்கள்
கை ஓர் கனி எனக் காட்டித் தந்தான் கழற்கே கமலம்
பொய்யோம் அவன் புகழ் ஏத்திப் பிதற்றிப் பித்தாய்ந் திரியோம்
ஐயோ அறிதும் என்றே உபகாரத்தின் ஆற்றலையே. 10–

செய் ஓடு அருவி-உருவகமாய் -ஞானிகள் மனமாகிய விளை நிலங்களில் ஆழ்வார் சொல் பெருக்கு எடுத்து
ஓடிப் பாய்ந்து திருமால் பக்தி என்னும் பயிர் முளைத்து ஓங்குகிறது என்றவாறு
விதையாகி நற்றமிழை வித்தி என் உள்ளத்தே நீ விளைத்தாய்
திருமால் இத் தகையவர் என்று கையில் கனி என நிற்கும்படி யாயிற்றே

———-

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை யரு மா மறைகள்
வேற்றில் பொதிந்த பொருள் களெல்லாம் விழுமாக் கமலம்
சேற்றில் பொதிய வீழ்க்கும் குரு கூரர் செஞ் சொற் பதிகம்
நூற்றில் பொதிந்த பொருளொரு ஒரு கூறு நுவல்கிலவே. 11-

ஆற்றில் பொதிந்த மணலின் தெகை-அநந்தாவை வேதா
வேற்றில் -வேரில் -என்பதன் விகாரம் -பல சாகைகள் கொண்ட வேதங்களின்
மூலப்பொருள்கள் அனைத்தையும் திரட்டி விட்டான் என்றுமாம் –
விழுமாக் கமலம்-ஸஹஸ்ர பத்ரம் கமலம் -ஆழ்ந்த நீரிடையே உண்டாகும்
எறி நீரில் எழு நாள கந்த மலர் –மாரீசன் வதைப் படலம் -53-பாயிரம்

———

இயல் இடம் கூறல்

இலவே இதழுளவே முல்லை யுள்ளி யம்பும் மொழியும்
சிலவே அவை செழுந் தேனொக்குமே தமிழ்ச் செஞ் சொற்களால்
பல வேதமும் மொழிந்தான் குரு கூர்ப் பதுமத்து இரண்டு
சல வேல்களும் உளவே யது காண் என் தனி யுயிரே. 12-

ஆழ்வார் இடம் ஞானக் காதல் கொண்ட தலை மகனாகிய பாகவதர் பித்தால் பிதற்றி அவர் திரு வுருவத்தைத்
தன் உயிர்க்கு அடைவிடம் என்று அகத்துறையில் பேசும் படி போகத்தில் ஈடுபட்டு நிற்கும் நிலையைச் சொன்னபடி –

———

உயிர் உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினு ள்ள
செயிர் உருக் கொண்ட நம் தீங்கு உருக்கும் திருடித் திருடித்
தயிர் உருக்கும் நெய்யொடு உண்டான் அடிச் சட கோபன் சந்தோடு
அயிர் உருக்கும் பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே. 13-

இந்திரிய பொறி வாயிலாய் உயிர் இன்ப துன்பங்களை அடைவதையும்
அறிவு வாயிலாய் உடல் உணர்ச்சி யுறுவதும் சொல்லப் பட்டது –
திருவாய் மொழி தாபாத் த்ரயங்களையும் போக்கி வேரைக் களைவதால் நோய் முதலியவை தானே அற்றுப் போம்
செயிர் -நோய் -ஊனம் -குற்றம் கோபம் துன்பம் சினம் போன்ற மற்ற பொருள்களும் பொருந்தும்

———

அந்தம் இலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளை
செந் தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகுங் குருகூர் வந்த பண்ணவனே. 14-

நிலத்தேவர் பூ ஸூரர் -அர்ச்சா திருமேனி என்றுமாம்
பந்தம் -தொடர்பு -வெளிச்சம் -உறவு
விழா -விழுந்து -பொங்கி வழிந்து -குறையாமல் தவறாமல் பாசுரங்கள் தோறும் ஓடும்
பண்ணவன் -முனிவன் குரு ஆசிரியன் தேவன் கடவும் போன்ற பொருள்கள் உண்டே –
திருவாய் மொழி இல்லாமல் இருந்தால் உத்ஸவாதிகள் சோபை இழந்து இருக்குமே –

———

பண்ணப் படுவனவும் உளவோ மறை யென்று பல்லோர்
எண்ணப் படச் சொல் திகழச் செய்தான் இயலோடு இசையின்
வண்ணப் படைக்கும் தனித் தலை வேந்தன் மலர் உகுத்த
சுண்ணப் படர் படப்பைக் குருகூர் வந்த சொல் கடலே. 15–

வண்ண -ராகம் -குணம் -வடிவு -செயல் விதம் அழகு -போன்ற பொருள்கள்
எண்ணம் -ஆலோசனை கிலேசம் விசாரம் கவலை மதிப்பு நினைத்தால் போன்ற பொருள்கள்

———-

கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்
குடலைக் கலக்கும் குளிர் சங்கினான் குறையா மறையின்
திடலைக் கலக்கித் திருவாய் மொழி எனும் தேனைத் தந்தான்
நடலைப் பிறப்பு அறுத்து என்னையும் ஆட் கொண்ட நாயகனே. 16–

நடலை -நடுக்கம் -கபடம் -பொய் -வஞ்சனை -வருத்தம்
களித்தல் –மதத்தல் -செருக்குதல் -மயக்குதல்
திடல் -மலை -மேடு

————

நாய் போல் பிறர் கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்
பேய் போல் திரியும் பிறவி யினேனைப் பிறவி யெனும்
நோய் போம் மருந்தென்னும் நுன் திரு வாய்மொழி நோக்குவித்துத்
தாய் போல் உதவி செய்தாய்க்கு அடியேன் பண்டென் சாதித்ததே. 17-

பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர்ச் சோறும் உண்டற்கு வேண்டி நீ யோடித் திரியாதே –பெரியாழ்வார்
திருவாய் மொழியைக் கற்கவே பிறப்பு இறப்பு என்னும் நோய் தன்னடையே போயிற்றே-

———-

சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத் திருக்கை
சேதிக்குமே ஒன்று சிந்திக்குமே யதனைத் தெரியப்
போதிக்குமே எங்கும் ஓங்கிப் பொது நிற்கும் மெய்யைப் பொய்யைச்
சோதிக்குமே உங்கள் வேதம் எங்கோன் தமிழ்ச் சொல் எனவே. 18–

திருக்கை -திருகி நிற்கும் தன்மை -நிலை -கோணல் –சேதித்தல் -போக்குதல் -கோணலை நிமிர்த்தல் –
முதல் பாசுரமே அகாரம் உகாரம் மகாரம் சேர்த்து ப்ரணவார்த்தம் காட்டி அருளினார் அன்றோ

நீ யாதி பரம்பரமும் நின்னவே யுலகங்கள்
ஆயாத சமயமும் நின்னடியவே அயலில்லை -கம்பர் விராத ஸ்துதியில்

————-

சொல் என்கெனோ முழு வேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்
நெல் என்கெனோ உண்ணும் நீர் என்கெனோ மறை நேர் நிறுக்கும்
கல் என்கெனோ முதிர் ஞானக் கனி யென்கெனோ புகல
வல் என்கெனோ குரு கூர் எம் பிரான் சொன்ன மாலையையே. 19-

கல் படிக்கற்கள் என்றபடி
ஞான முதிர் கனி -ரிஷிகள் மனங்களில் பூத்து -எடுத்துக் காய்த்த ஞானம் ஆழ்வார் திரு உள்ளத்தில்
பதிந்த பின் முதிர்ந்து பழுத்து இனிமை யுடைய கனியாயிற்று

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் –விதையாக
நல் தமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகக் கலந்து -நான்முகன் -81-

நல் தமிழ் -முதிர விளைந்த விதைக்கு வைத்த தமிழ் –
ஆழ்வார் திரு உள்ளத்தில் ஞானம் முதிர்ந்து கனியாகி
முளைத்துப் பயன் தரும் விதைகளாகிய அருளிச் செயல் பாசுரங்களைச் சொரிந்தன -என்கிறார்
———–

மாறன் திருவருளின் வந்து அடையாதாரை நொந்து அடைந்தவர் பெரும் பேற்றை அகத்துறைப் படுத்தி இனி பேசுகிறார்

செல யுணர்த்திச் செவிலியைத் தேற்றுதல்

மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்
பாலைக் கடம் பகலே கடந்து ஏகிப் பணை மருதத்து
ஆலைக் கரும்பின் நரேல் என்னும் ஓசையை அஞ்சி யம் பொன்
சாலைக் கிளி உறங்காத் திரு நாட்டிடம் சார்வார்களே. 20-

பாலைத் திணை என்னும் அகத்துறை
மாறனை வாழ்த்தி வழி படாதார் தேக யாத்திரை உடலுக்கும் உயிருக்கும் யாதொரு ஆறுதலும் இன்பமும் இன்றி நடக்கும் வாழ்வே –
ஆழ்வாரை அறிந்த தலைவனும் தலைவியும் திருக்குருகூர் சென்று சேர்ந்து இருப்பது திண்ணம் என்று செவிலித்தாய் தாயாருக்குச் சொல்வது

————

பாங்கி நெறி அருமை கூறித் தலை மகனை வரவு விலக்குதல் –

சாரல் குறிஞ்சி தழுவும் பொழில் தளிர் மெல்லடித் தண்
மூரல் குறிஞ்சி நகை முகம் நோக்கற்கு நீ முடுகும்
சூரல் குறிஞ்சி நெறி நினை தோறும் துணுக்கு எனுமால்
வாரல் குருகைப் பிரான் திரு ஆணை மலை யவனே. 21-

குறிஞ்சி திணை -அகத்துறை
இதர ஸம்ப்ரதாயத்தார்கள் செல்லும் மார்க்கம் தீய வழி என்று அவர்களையும் நல் வழிப் படுத்தி
அடுத்த பாசுரத்தில் ஆழ்வார் திருவடிகளை சேர்ந்து உஜ்ஜீவியுங்கோள் என்று உபதேசிக்கிறார் –

திருவாணை நின்னாணை போல் திருக் குருகைப் பிரான் மீது ஆணை என்கிறார்-

———–

மலை யாரமும் கடல் ஆரமும் பன் மா மணி குயின்ற
விலை யாரமும் விரவுந் திரு நாடனை வேலை சுட்ட
சிலையார் அமுதின் அடி சட கோபனைச் சென்று இறைஞ்சும்
தலையார் எவர் அவரே எம்மை ஆளும் தபோதனரே. 22–

பூமா தேவியின் திரு மார்பு போல் பாண்டிய நாடு சந்தனம் முத்து மாலை மணி மாலைகள் நிறைந்தது
மலை யாரம் கடல் யாரம் இத்யாதிகளால் குறிஞ்சி மருதம் நெய்தல் முல்லை நிலங்கள்

விசேஷ வளப்பங்கள் உடைய நாடாய் இருக்கும் என்று குறிப்பு —
சிலையார் அமுதின் அடி சட கோபனை-வில்லார் அமுது ராம நாம அடிகளான அமுதம் என்றுமாம்

தலையார் -பாகவத நிஷ்டர்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
இந்த பாகவத நிஷ்டையால் வரும் பயனைப் பெற நூலில் நிஷ்டராக வேண்டும் என்கிறார் அடுத்த பாசுரத்தில்

————

போந்து ஏறுக என்று இமையோர் புகலினும் பூந்தொழுவின்
வேந்து ஏறு அடர்த்தவன் வீடே பெறினும் எழில் குருகூர்
நாம் தேறிய வறிவன் திரு வாய்மொழி நாளும் நல்கும்
தீந் தேறலுண்டுழலும் சித்தியே வந்து சித்திக்குமே. 23-

ஏறு ஏழு அடர்த்த கண்ணனின் திருநாடும் வேண்டேன்
கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயனை விட
திருவாய் மொழி பாவின் இன்னிசை பாதித்த திரிவதே வேண்டும் என்கிறார் –

———–

சித்தர்க்கும் வேதச் சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறை துறந்தோர் கட்கும் தொண்டு செய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்குமே யன்றி பண்டு சென்ற
முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித் தொகையே. 24–

ஸாம காயந் நாஸ்தே -சாமவேதத்துக்கு நிகரான திருவாய் மொழி பாடும் இன்பம்
அந்தமில் பேர் இன்பம் இங்கேயே கிடைக்கப் பெற்றதாகும் என்கிறார்-

———–

தொகை உளவாய பணுவற் கெல்லாம் துறை தோறும் தொட்டால்
பகை யுளவாம் மற்றும் பற்றுளவாம் பழ நான் மறையின்
வகை யுள வாகிய வாதுளவாம் வந்த வந்திடத்தே
மிகை யுளவாம் குருகூர் எம்பிரான் தன் விழுத் தமிழ்க்கே. 25-

திருமாலே தத்வம்
சரணாகதியை ஹிதம்
கைங்கர்யமே புருஷார்த்தம்
அர்த்த பஞ்சக ஞானம் தெளிவாக அருளும் திருவாய் மொழி -வேத வாதுக்கள் -குறைகள் -ஒன்றுமே இல்லையே –

———–

விழுப்பார் இனி எம்மை யார் பிறவித் துயர் மெய் உற வந்து
அழுப்பாது ஒழிமின் அரு வினைகாள் உம்மை அப்புறத்தே
இழுப்பான் ஒருவன் வந்தின்று நின்றான் இள நாகு சங்கம்
கொழுப்பாய் மருதம் சுலாம் குருகூர் எம் குலக் கொழுந்தே 26-

ஆழ்வாரை ஆஸ்ரயித்த எங்களுக்கு புண்ய பப வல் வினைகாள்
உங்களுக்கு எம்மிடம் கார்யம் கார்யம் இல்லை -இனி எமக்கு ஏது பிறவித் துயர்-

————

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு தோழி இரங்குதல்

கொழுந்தோடு இலையும் முகையு மெல்லாம் கொய்யும் கொய்ம் மகிழ்க் கீழ்
விழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள் விறல் மாறனென்றால்
அழும் தோள் தளரும் மனமுருகும் குருகூர் அறையில்
எழுந்து ஓடவுங் கருத் துண்டு கெட்டேன் இவ் இளங் கொடிக்கே. 27–

விறல் -பெருமை -வலி -வீரம்
அழும் தளரும் உருகும்-அஃறிணையில் குறிப்பது -இவள் மயங்கி ஜடமாய் இருந்தாலும்
மெய்ப்பாட்டாலேயே வரும் மாறுதல்கள் –

————

கொடி எடுத்துக் கொண்டு நின்றேன் இனிக் கொடுங் கூற்றினுக்கோ
அடி எடுத்துக் கொண்டென் பால் வரலாகுங்கொல் ஆரணத்தின்
படி எடுத்துக் கொண்ட மாறன் என்றால் பதுமக் கரங்கள்
முடி எடுத்துக் கொண்ட அந்தணர் தாள் என் முடி எனவே. 28–

மாறன் அடியார்களின் விஜய த்வஜத்தைத் தூக்கிக் கொண்டு -பக்த தாஸ்ய நிஷ்டையைப் பறை சாற்றிய பின்பு
எமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லையே

———–

என் முடியா தெனக்கி யாதே அரியது இராவணன் தன்
பொன் முடியால் கடல் தூர்த்த வில்லான் பொருநைந் துறைவன்
தன் முடியால் அவன் தாள் இணைக் கீழ் எப் பொருளும் தழீஇச்
சொல் முடியால் அமுதக் கவி ஆயிரம் சூட்டினனே. 29–

தன் முடியால் அவன் தாளிணைக்கீழ் -நின்னில் சிறந்த நின் சேவடி இணை -பரிபாடல்
திருச் சங்கணித்துறை க்கு அதிபதியாய் தனது திருவாய் மொழியாகிய ஓடத்தில் ஏறும்
உயிர்களை எல்லாம் கடத்தி விடுவார் என்பது திண்ணம் அன்றோ

———–

சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி
நாட்டில் பிறந்தவர்க்கு ஆளும் செய்தே னென்னை நல் வினையாம்
காட்டில் புகுத விட்டு உய்யக் கொள் மாறன் கழல் பற்றிப் போய்
வீட்டில் புகுதற்கும் உண்டே குறை மறை மெய் எனிலே. 30–

பாரதந்தர்ய ஞான சித்தியை -காட்டில் புகுத விட்டு -என்று மாறன் செயலாக -உய்யக் கொள்ள அவன் ஸங்கல்பித்தான் –
நல்வினையாம் காட்டில் புகுத விட்டான் -காரண கார்யங்கள் உபாயமும் உபாயமும் அவரே
ரக்ஷண ஸங்கல்ப ஞான ஸூர்ய உதயத்தால் ஸாத்விக அஹங்காரத்தால்
இனி எனக்கு செய்ய வேண்டுவது இல்லையே–பாகவத நிஷ்டையே சரம அவதி அன்றோ –

————

மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறு படுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறு வினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக் கரசன் புலமை
செய் மெய்யன் தனக்கே தனித் தாளன்பு செய்த பின்னே. 31-

தனித் தாள் -ஒப்பற்ற ஸஹாயாந்தர நிரபேஷ திருவடி இணைகள்
ஐயன் -ஆர்யன் வடமொழி திரிபு -மேம்பட்டவன்
புற மத நிராசனமும் ஸ்வ மத ஸ்தாபனமும் செய்து அருளி -ப்ரபந்ந ஜன கூடஸ்தர் –

————-

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரி யல்ல மாட்டா மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி யல்லவேல் பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் இவ் வுயிர்களுக்கே. 32–

திருவாய் மொழியின் அனுசந்தானத்தால் பெற்ற உணர்வும் அறிவும் எத்தகையது என்பதை விளக்குகிறார்

————-

உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே. 33–

முக்குறும்பு -காமம் வெகுளி மயக்கம் உயர் குடிப்பிறப்பு கல்வி சீலம் தனம் இவற்றால் வரும் கர்வம்
திருவாய் மொழி ஒருவர் சொல்ல-அத்தைக் கேட்டவர்களும் முக்குறும்பு அறுப்பார்களே
ரோம கர்ஷணம் நேத்ராம்பு பதனம் -தானாகே வருமே

————–

அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழை சேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தெண்டர்கட்கோ சுடர் தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே. 34–

மற வாதியர் முதல் மகரக்குழையான் வரை-சந்தித்தது என்று நிரசித்ததையும் பொருந்தியதையும் -காட்டும்

———-

சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே. 35–

சந்திப்பதம்-ஸமஸ்த பதம் – -தொடர் மொழி -வெவ்வேறு இடங்களில் பொருத்தி
பல பொருள்கள் தரும் படி பங்க்தி -அபூர்வ பொருள்கள் வருமே-

இவற்றை அனுபவிக்க ததீய பர்யந்தம் சேஷத்வம் வேண்டுமே
இவருக்கு மதுரகவி ப்ரக்ருதிகளே தேவர் ஆவார்

————

பாங்கி வெறி விலக்கிச் செவிலியருக்கு அறத்தொடு நிற்றல்

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் புகுந்தார் எவர் என்று
அவரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று இறைவர்
மூவரையோ குரு கூரரையோ சொல்லும் முந்துறவே. 36–

கம்பர் காதல் ஆழ்வார் மேல் என்றும்
மும்மூர்த்திகள் இடமும் அவர்களில் மேம்பட்ட ராமன் இடமும் இல்லாத காதல் என்றும்
அறியாத கட்டுவிச்சி பாசுரம்-

————-

துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே. 37–

அற ஆ அவை சொல்லவே சுரக்கும் -தர்ம ரூபமாகிய பசுக்களைப் போல்
ஐஹிக ஆமுஷ்மிக மோக்ஷ பயன்களை எல்லாம் பொழியும் –

————-

மடலூரத் துணிந்த தலை மகளின் வழி ஒழுகித் தோழி இரங்குதல் –

கை தலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ சென்று அவ்வூர் அறிய
வைதலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக் கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே. 38–

ஏடு -பனை ஓலை -பெண் நிலை எய்தி மடலூர ஒருப்படுகிறார்
கை தலைப் பெய்தல் -குருவை நினைத்து சொல்லி தலையில் கை கூப்பிய கை யுடையராகை

———–

பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே. 39–

தபஸ்விகளின் கண் -ஞான த்ருஷ்ட்டி -மனம் -முக்காலமும் அறிதல் –
கண்ணும் மனமும் செவியும் கூறியதால் மெய்யும் நாக்கும் பொறிகளும் தவம் செய்தனை
அனைத்து தவங்கள் பலமே திருவாய் மொழி

———-

காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடை நாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை யிரண்டா யமைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம் மூர்த்தியையே. 40–

ஆலிலை அன்ன வசம் செய்து வித்தாக பல அவதாரங்கள்
ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹமும் அதே போல் வித்து -ஞான மூர்த்தியே கொடியில் விளைந்த பலம் -என்கிறார்
திருவாய் மொழி பாசுரங்களே ஓடிய கொழுந்து -அதன் பர்யவசாயம் அர்ச்சிராதி கதியை விளக்கும்
சூழ் விசும்பணி முகில் முனியே நான்முகனே நிகமன தசகங்கள்
குணம் கடந்த மூலம் -விரஜைக்கு அப்பால் உள்ள ஸ்ரீ வைகுண்ட ஆதி மூர்த்தி என்றும்
முக் குணங்கள் கடந்த திருமந்திரம் என்றுமாம்-

———–

மூர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம் மறைப் பொருளே. 41–

பார்த்தற்கு -என்று உலகோர் காண என்றும் அர்ஜுனனுக்கும் என்றுமாம்
நாராயணனை வியாசரும் ஆழ்வாரும் முழுவதுமாகவே கண்டார்கள்
ப்ரஹ்ம ஸூ த்ரம் ஸ்ரீ பகவத் கீதை இவற்றுக்கு புற மதஸ்தர்கள் வாதம்
பூர்வ பக்ஷங்களைக் காட்டி அவற்றைப் போக்கி முடிவாக ஸ்வ சித்தாந்தம் பண்ண ஸ்ரீ பாஷ்யகாரர் வேண்டிற்று
நின்ற வார்த்தை -என்று யாராலும் அசைக்க முடியாமல் ஸ்திரமான பிரமாணங்கள்
எவ்வித சங்கைகள் இல்லாமல் நாதமுனிகளுக்கு அருளி இவர் இசை அமைத்து நமக்கு அருளினார்
ப்ரஹ்ம குணக்கடலில் ஏழு உலகத்தாருக்கு குடைந்து ஆடி மகிழ்ந்து பைசுத்தமாக்கும் தீர்த்தங்கள் ஆயிரம் அன்றோ
ஸ்ரீ ரெங்கநாதன் வளம் மிகு தமிழ் மறை மொழிந்து உயர் பதின்மர் ஆடும் குணக்கடல் அன்றோ

———–

பொருள் வயிற் பிரியும் தலைவனுக்குத் தோழி தலைவியின் ஆற்றாமை கூறுதல்

பொருளைச் சுவை யென்று போவ தெங்கே குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே. 42–

———

மருங்கு அணைதல் –

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகை வஞ்சி
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே. 43–

கொங்கை -பக்தி
மதுரகவி ப்ரக்ருதிகளின் ஆழ்வார் மேல் உள்ள பக்தி முதிர்ந்து அவர்கள் உகந்து ஈடுபட்டுச் செய்யும்
பல கைங்கர்யங்களை வைராக்ய ஸம்ருத்தி பூர்வகமாக செய்யும் அவர்கள் சீல குணங்களில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
-என்றது அனைத்தையும் அர்ப்பணம் செய்து அடியாருக்கு என்றே முயன்று நிற்றல்
பந்து அடித்தல் -விரைந்து பல பல தொண்டுகள் முயன்று ஆற்றுதல்

———

கன வாயினவும் துரியமும் ஆயவையும் கடந்து
மன வாசகங்களை வீசிய மாறனை மா மறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ் வினையைத் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே. 44–

சின வாரணம் -மத யானை
துரீயம் -சமாதி நிலை -யான் அறியும் சுடராகி நிற்றல் -ஆத்ம ஸ்வரூபம் கண்டு மனமும் சொல்லும் செயல் இழந்து நிற்கை
நினைக்கவும் சொல்லவும் வேறே பொருள் இல்லை என்பதையே மன வாசகங்களை வீசின நிலை என்கிறார்
அதையும் கடந்த நிலையில் வேதப் பொருள்கள் எல்லாமே தாமாகவே தோன்றுதலை வேத சாஷாத்காரம் அடைந்தார் ஆழ்வார்
ஸர்வ வேத வித்தானார் –

———–

சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத்
தாரார் முடியாயிரம் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே. 45–

ஆயிரம் -எண்ணிறந்த -அநந்தாவை வேதா –
ஆழ்வார் அருளிச் செய்து காட்டிய பகவத் ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களும் அநந்தம் அன்றோ –

————

தோழி இரங்கல் –

அரிவளை பொன் மகிழ் ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறை செறுத்து
வரி வளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே. 46–

முத்துக்களும் அன்னங்களும் தங்கள் முட்டைகள் கலந்து எவை என்று அறிய முடியாமல் சண்டை இட
சங்கின் தலைவனான வலம்புரி வந்து தீர்க்க -ஆழ்வார் தாம் அணிந்த மகிழம் பூவைத் தந்து என் துயரம் தீர்க்கிறார் அல்லை –
இச்சிப்பி ஆயிரமே சூழ்ந்தது இடம் பூரி என்று கூறும்-ஒப்பில் சங்கு ஆயிரம் சூழுறும் வலம் புரி என்று ஓதும் –நிகண்டு –
ஆயிரம் சிப்பிகளில் ஓன்று இடம் புரியாகும்-ஆயிரம் இடம் புரிகளில் ஓன்று வலம் புரி யாகும் –
சிப்பி உலகோர் -அன்னம் ஆச்சார்யர்
வெறும் ஜடங்களை உங்கள் தாய் தந்தையருக்கு கொடுத்து உதவி
ஞான கர்ப்பம் முதிர்ந்து வரும் அதிகாரிகளை ஆழ்வாருக்குப் பாத்யம் என்கிறார்

————

தலைவி கடலை நோக்கித் தேர் வழி தூரல் என்றல் –

புரை துடைத்துப் பெரும் பொய்யும் துடைத்துப் பிறர் புகலும்
உரை துடைத் தங்குள்ள வூச றுடைத் தெம் முறு பிறவித்
துரை துடைத் தாட் கொண்ட தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை
கடை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால் சுவடே. 47–

காற் சுவடு -பாகவத சன்மார்க்க வாழ்க்கை நெறி -பூர்வை பூர்வதாம் க்ருதம் –
பொருனைக்கரை -வேத ஸாஸ்த்ர விஹித ஆஞ்ஞா
கடல் -ஆஸ்ரிதர் பக்திக் கடலும் ஆழ்வார் கிருபைக் கடலும்

—————

செவிலித்தாய் நல் தாய்க்கு இருவர் காதலும் உரைத்தல் –

சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து சங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க் கொலை யானை நங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே. 48–

ஆசைக்களிறு -மத களிறு ஐந்திணையும் சேரி திரியாமல் செந்நி றீ இ -இவை அடியாக
பவரும் பிறப்பு சூழலைத் தொலைக்க வல்லது ஆழ்வார் கிருபை
இரண்டு சுவடு -ஸஞ்சித ஆகாமி -ஸம்ஸாரத்தில் கட்டி வைக்கும் கயிறுகள்
சங்கக் குவடு இறக் குத்திய -சங்கப்புலவர்களை வென்று ஆட் கொண்டாரே
கதவு மனம் என்றும் காணலாம் என்றும் குத்தையும் வினையாவி தீர்த்தேன் -நான்முகன் -91-

————-

இருளாய்ப் பரந்த உலகங்ககளை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே. 49–

பொருளைக் காட்டும் இரவி போல் பரனைக் காட்டும் ஆழ்வார் அனைவருக்கும் பொதுவாக நிற்பவர் –
புற சமய மாய இருளை போக்கி அருளும் பராங்குசன் மறுமை யுண்டாக்கும் மயக்கம் தீர்த்து அருளுபவர்

————

அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது செய்தாரை யில்லா
நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணா தென்னை வீடு பெறுத்தினையே. 50–

குருகூர் நிலத்தை என்றது திருக்குருகூரையும் ஆழ்வார் வகுத்த நெறியையும் –
ஆழ்வார் இடம் அநந்யார்ஹமாய் இருப்பதே கற்பு -அறிவாளிகளின் கொள் கொம்பு
ஆழ்வார் திருவடி இணைகளையே பிடித்து அருளிச் செயல்களில் மண்டி மற்ற வற்றை திரஸ்கரித்தலே அறிவின் ஸ்ரேஷ்டம்

————–

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே பிறர் பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினை கொடுப் போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏற விட்டான்
குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து ஆண்ட குருகை மன்னே. 51–

காமம் வெகுளி மயக்கம் -முக் குறும்புகள்
முப்பகை -மனம் மொழி செய்கை களால் அற நெறி நழுவும் நிலை
குலம் கல்வி செல்வம் பற்றிய கர்வமும் முக் குறும்பு -முப்பகை
மன் -ஆழ்வாரே உபய விபூதி நாதன் -இங்கு தானே ஈர் அரசு பட்டு இருக்கும்
எறும்பு போன்ற நீசனான அடியேனை ஆட் கொண்டு உயர் நிலை அளித்து அருளினார் –

———–

குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே. 52–

திருக் குருகூர் வாசிகளுக்கு -அருகில் உள்ளோருக்கும் கூர் வினைகள் அடியோடு அறுபட்டுப் போவது அருமை அல்லவே

———–

தலைவன் பிரிந்த நிலையில் ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்

அன்றாத அன்றிலையும் அன்று வித்து என்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் பிழைக் கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ் வினையை
வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே. 53–

ஆஸ்ரித்தவர்களுக்கு பழ வினை முழுதும் தொலைக்க வல்ல –
பிரிவாற்றைமை தணிக்க வல்ல -வகுள மாலை அளிப்பானா என்று ஏங்குகிறாள்

———

வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும் செந் தமிழ்ப் புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே எறி நீர்ப் பொருநை
ஆறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே. 54–

வித்யா கர்வத்தை யுடையோர்க்கு பயங்கரராயும் –
ப்ரயோஜனாந்தர பற்று அற்றவர்களுக்கு இணைத்து தன்னுடன் பற்று உண்டாக்கி அருளி
ஸம்ஸாரிகளுக்கு பெற அரும் செல்வமாக ஆழ்வார் உள்ளார் என்கிறார்

————

பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே புலமைக் கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ உயற் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் பெருந் தண் குருகூர்
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. 55–

ஆணிப்பொன் போல் நீரே ஸ்ரேஷ்டர்
உமது தேஜஸ்ஸில் சிறிய பிரதிபலிப்பே மற்றவர் தேஜஸ் என்கிறார்-

———-

மகட் பாற் காஞ்சி -நின் மகளை எனக்குத் தருக என்ற அரசனிடம் மாறுபடுவது

மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய் வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீ வினையைத்
துணித்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப் பொருளைப்
பணித்தான் பணி யன்றெனில் கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே. 56–

மணித்தார் -முத்து மாலை அணிந்த பாண்டியன் ஆணையும் செல்லாமல்
மோக்ஷ ப்ராப்த்தியே பரம புருஷார்த்தம் என்று இருக்கும் -ஸூத்தாந்த ஸித்தாந்திகள் –
அந்தப்புர கிங்கரர்களான -அடியார் பக்கலிலே ஆழ்வார் ஆணையே செல்லும் என்கிறார் –

———–

பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின்
பூவைப் பொரு கடல் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை யல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ மற்றை நாவலரே. 57–

ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு ஆழ்வார் திருவாய் மொழி பால் அன்றோ –
இன் கனி -கற்பகப்பூ அம்ருதம் வேதப்பொருள் சுரக்கும் காம தேனு அருளிய என் கோ திருக்குருகூர் மன்னன் பற்றிய
இந்த சடகோபர் அந்தாதியும் திருமடல் தனிப் பாடல்களுமே கம்பருடைய சரம அருளிச் செயல் என்பர் –

————-

நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூர்ப் புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் எங்கும் போய்க் கெழுமிக்
கூவலந் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே. 58–

உலகோர் உஜ்ஜீன அர்த்தமாக அருளிச் செய்த ஆழ்வார் அருளிச் செயல்கள் ஏற்றம் -என்று என்றும் நீடித்து
நின்று உலகோரை ரஷித்து அருளும் –
மன் புகழ் பெருமை நும் கண் மரபினோர் புகழ்கள் எல்லாம் உன் புகழ் ஆக்கிக் கொண்டாய்
உயர் குணத்து உரவத் தோளாய் -குக்கப்படலாம் -36-போல் இதுவும் –

————

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார் குமரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே. 59–

உபய விபூதி நாதனே அனைத்தும் ஆழ்வாருக்கு ஆக்கி அருளினான்
இங்கும் அங்கும் அவருக்கே ஆட் செய்வேனாக அடியேனை ஆழ்வாரே ஆக்கி அருள வேண்டும்-

————–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தே னதன்றித்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் தண் குருகூர்
நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் இனி நாட் குறித்துக்
கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே. 60–

இறப்பு என்னும் பயத்தை விட்டாய் இராமன் என்பானைப் பற்றி -கும்ப கர்ணன் வதைப்படலாம் -132-
ஆழ்வார் திருவடிகள் அடியேன் தலை மேல் பதிந்து மாறன் திரு நாமமே ஜபித்த பின்பு யம படர் அடியேனை அணுகுவாரோ

————

தலைவனைப் பிரிந்த தலைவி தென்றலுக்கு வருந்தி இரங்குதல் –

கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே. 61–

தென்றலை மன்மதனுடைய தேர் என்பர்-

————-

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே. 62–

தென் தலை ஆழ்வார் அருளிச் செயல் தென் திசை தோன்றிய உபநிஷத் அன்றோ
மன் தலை -உபநிஷத்துக்கள்
இவற்றை அத்யயனம் செய்தவர்களே எம் ப்ரார்கள்
அவர்களையே நாவால் பாட புகழ் பாட நான் கடமைப்பட்டுள்ளேன் -என்கிறார்

————-

உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே. 63–

தெய்விகக்கவி -தோண்ட தோண்ட ஆழ்ந்த புது அர்த்தங்கள் ஸ்புரிக்கும் -ஊற்று தரும் இனிய நீர் போல்
கல்வி -கல் தோண்ட -வி தொழில் பெயர் விகுதி

————

சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே. 64–

குருகூர் வளம்-ஆழ்வார் என்றும் அவர் அருளிச்செயல்கள் என்றும் படுமின் -ஆழ்ந்து அனுபவியுங்கோள்
இந்த வளம் நினைத்தாலே திரு அஷ்ட ஐஸ்வர்யம் பொங்கும் -இரு வினை அகலும் -மேன்மை எல்லாம் கிட்டும்

————-

பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே. 65–

ஆன்மாவைக் குவளை என்கிறார் -சாம்சாரிக தசை மாயையில் ரமிக்கும்
உலக இன்பம் சந்த்ர வெளிச்சத்தில் குவளை மலரும் –
ஆழ்வாராகிய வண்டு பகவத் குணமாகிய தேனை உண்டு அருளிச் செயல்கள் பாடி சுழன்று வர இறக்கை காற்று வெளிச்சத்தால்
குவிந்து இருக்கும் குவளை மெதுவாக நெகிழ்ந்து உணர்வு ஏற்பட்டு உஜ்ஜீவனம் அடைகிறது
ஆச்சார்யர் கீழ் போல் முன்னோர் மொழிந்த முறையில் உபதேசம்
பூ கொய்யும் பெண் போல் உபதேசங்களை அறிந்து உபதேசிப்பர்
ஹம்சம் போல் சாரங்களை உபதேசிப்பர்
வண்டு போல் அமுதம் உண்டு பாடி அனுபவித்து -அதில் விமுகரானவர்களையும் திருத்தி பணி கொள்வர்
இப்படி நான்கு விதம்

————-

விஸ்லேஷத்தில் மாலைப் பொழுதுக்கும் இருளுக்கும் தலைவியின் ஆற்றாத துயர் கண்டு தோழி இரங்கல்

விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே. 66–

—————

உடன் போக்கில் தலைவன் தலைவிக்குத் தன் நகர் அணிமை கூறல் –

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே. 67–

சரவாதம் பாலை நிலம் -தடம் பணை -சோலை சூழ்ந்த வூர்
மருதம் தாண்டி விட்டோம்
ஓர் அம்பு போய் விழும் தூரத்தில் நாம் உள்ளோம் பைய நட

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —திரு விருத்தம் -26-பாசுரம் போல் இங்கு

————-

பிரிவாற்றாது வருந்தும் தலைவி கார் கண்டு கலங்குதல் –

தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே. 68–

விரஹ தானத்தால் மேகக்கூட்டம் இவளுக்கு விஷங்கள் பருத்து உயர்ந்து வானில் பரவியது போல் உள்ளதே
அஷ்ட நாகங்கள் -வாசுகி -அநந்தன் -தக்ஷன் -சங்க பாலன் -குளிகன் -பதுமன் -மஹா பதுமன் -கார்க்கோடன் –
இவர்கள் காஸ்யப கத்ரு மக்கள்
ஆழ்வார் சூடிக்களைந்த வகுள மாலையே இவள் வெப்பம் தணிக்கும் –

—————-

பொருள் வயில் பிரிந்து சென்று மீளும் தலைமகன் முகிலொடு கூறல் –

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே. 69–

தலைவியின் மோகத்தை காலம் தாழ்த்தாது தணியுங்கோள் என்று மேகத்துக்கு கட்டளை

————

மதங்கு -மதங்கம் — மதங்கியார் -மண்டலம் சுற்றுதல் –

தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே. 70–

மதங்கம் -நாட்டியக்கலை -அக நிகழ்ச்சியை புற உறுப்புக்களால் வெளியிடுதல்
கூடு பாணி யின் இசையோடு முழவொடும் கூட்டித் தோடு சீர் அடி விழி மனம் கை கொடு சேர்த்தி ஆடல் -கம்பர்
இதன் அங்கங்கள் ஒன்பது
சுருதி பாட்டு தாளம் காலடி விழி மனம் கை சீர் தோடு -என்பன
சீர் -பிடிகளின் அமைப்பு -தோடு -அவர்களை வரிசைப்படுத்தி ஆடும் முறை
இங்கு மதங்கி ஆழ்வார் அருளுக்குப் பாத்ரமான பாகவதர்
அவர் அழகு ஞான சம்ஸ்காரம் -ஆட்டம் -அனுஷ்டானம்
இவற்றைக் கண்டால் அகல ஒண்ணாது – மயங்கி ஈடுபடுவோம் –

————-

பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே. 71–

பதிகம் அதிகம் -இரண்டிலும் ஓசை நயம் பற்றி க -யாவாகத் திரிந்தன
ஓங்கு ஒளி உள்ளிருட்டைப் போக்கி ஆத்ம ஞானத்தையே சொல்லும்
அந்தமில் ஒளி -மோக்ஷம்
பூசுரர்க்கே பிரிநிலை ஏவகாரம் 

————-

பூட்சி கண்டீர் பொய்ச் சமயப் புலவர்க்குப் போக்கு வல்வாய்
வாட்சி கண்டீர் மற்றை மாயத்து அருகர்க்கு மன் உயிர் கட்கு
ஆட்சி கண்டீர் தொண்டர்க்கு ஆனந்த வாரி கண்டீர் அறிவைக்
காட்சி கண்டீர் பரவும் குருகூர் வந்த கற்பகமே. 72–

கண்டீர் -அடி தோறும் உறுதிப்பாட்டை வலியுறுத்தும்
கற்பகச் சோலை நம் ஆழ்வார் –
மித்யா வாதிகளுக்கு வாய்ப்பூட்டு போடுபவர்
மாயாவாதிகளான அருகருக்கு வெட்டரிவாள்
திவ்ய ஸ்வ மத அநுசாரி தொண்டர்களுக்கு கூடஸ்தர் -ஆள் படுத்தி அருளுபவர்
இவை எல்லாம் கண்டு அறிந்தீர்கள் அன்றோ

————

கற்றும் செவி யுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே
முற்றும் உகப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்து கொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம் நிதம் மாறனெம்மை
விற்றும் விலை கொள்ளவும் உரியான் கவி வெள்ளத்தையே. 73–

மாறன் அருளிச் செயல் வெள்ளப் பெருக்கே அஷ்டாங்க யோக சித்தி பெற வைக்கும்
1-நாள் தோறும் காதாரக் கேட்போம்
2-பருகிக் களிப்போம் -சுவைப்போம்
3-உள்ளத்தில் முற்றச் செய்வோம்
4-முழுவதும் விழும்படி கொட்டு விழுவித்து மகிழ்வோம்
5-அந்த வெள்ளத்தில் விழுந்து முழுகி விளையாடிக் களிப்போம்
6-அதை முகந்து மேலே கொட்டிக்கொண்டு வேறே எத்தாலும் பாதிக்கப்படாமல் இருப்போம்
7- அந்த வெள்ளத்திலே நீந்தி விளையாடிக் களிப்போம்
8- அவனுக்கே அற்றுத் தீர்ந்து ஆட் செய்து களிப்போம்
இது விசேஷ அஷ்டாங்க யோகமோ
மாறன் எம்மை வாங்கவும் விற்கவும் பெறுவர் என்று பறை சாற்றுவோம் –

————–

தலைவியின் கண் அழகு கண்டு வியந்த தலைவன் கூறுதல்

வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண் மதி மேல்
கள்ளம் பரந்தனவோ முயல் நீக்கிக் கவிக் கரசன்
தெள்ளம் பரந்த வயல் குருகூர்க் கொம்பின் செம் முகத்தே
முள்ளம் பரந்தனவோ கண்களோ ஒன்றும் ஓர்கிலமே. 74–

முகம் கமலம் -கண் இணைகள் அதில் நீர் நிலைகள்
வதனம் மைதீர் கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள்
அன்றி சந்திரன் குறை யாகிய முயல் நீங்கி பூர்ண சந்திரன் இவள் முகத்தில் கள்ளமாகப் பரந்ததுவோ
அன்றி என் கள்ள மனம் தான் கறுப்பான கண்களாக இடம் கொண்டதோ -யான் அறியேன் –

————–

ஓரும் தகைமைக்கு உரியாரும் ஓங்கிய ஞானியரும்
சாரும் தனித் தலைவன் சட கோபன் தடம் பதிக்கே
வாரும் உமக்கொரு உறுதி சொன்னேன் மயக்கமெல்லாம்
தீரும் திருக்கு அறும் சிந்தை செவ்வே நிற்கும் தீங்கு அறுமே. 75–

க்ஷேத்ர வாசமே உறுதி பயக்கும் உபாயமாகும்
ஆழ்வார் கடாக்ஷம் பெற பாக்யம் செய்து இருக்க வேண்டுமே
பெற்றால் தப்பான மயக்கங்கள் எல்லாம் தீரும் -கோணல் புத்தி போம் -கண் கூடாக தீவினைகள் போம்

————–

அறு வகையாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்
உறு வகையால் சொன்ன ஓட்டம் எல்லாம் ஒழுவித் தொருங்கே
பெறு வகை ஆறெனச் செய்த பிரான் குருகூர்ப் பிறந்த
சிறு வகையார் அவரைத் தொழுதோம் எம்மைத் தீண்டுகவே. 76–

அறு வகை சமயங்கள்
சவ்ரம் -வை நாயிகம் -சுப்ரமண்யம் -ஆக் நேயம் -வைஷ்ணவம் -பாசுபதம்
இவைகள் முறையே சூர்யன் -விநாயகர் -சுப்ரமணியன் -அக்னி -விஷ்ணு -சிவன் -அதி தெய்வங்கள்
சங்கர பாஸ்கர யாதவ பாட்ட பிரபாகர் தங்கள் மதம் என்றும் உண்டே
பொருவரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளீர்
இருவினையும் யுடையார் போல் அருந்தவறின்றி யற்றுவார்
திரு உறையும் மணி மார்பன் யுனக்கு என்னை செயற் பால
ஒரு வினையும் மறியார் போல் உறங்குதியால் உறங்காதாய்
ஆழ்வாரைச் சேர்ந்த நம்மை ஷூத்ர மார்க்கத்தில் நடப்பவர் தீண்டுவாரோ

———-

தீண்டித் திருவடியைப் பற்றிக் கொண்டு சிந்தித்ததையே
வேண்டிக் கொளப் பெற்றிலேன் வினையேன் இவ் வெறும் பிறவி
ஆண்டில் பிறந்த அக் காலத்திலே அன்பனாய் அணி நீர்ப்
பாண்டித் தமிழ்த் திரு நாட்டுருக் காட்டிய பாவகற்கே. 77–

ஆழ்வார் திவ்ய மங்கள திரு யருவோடே வாழ்ந்த காலத்தில் நான் பற்றிக் கொள்ளாத பிறவியோடே இருந்து கெட்டேனே –
அப்போதே அந்தத் திருவடிகளைப் பற்றி -அதையே சிந்தித்து உய்ந்து போகாமல் கெட்டேனே
அவர் பாவனப் படுத்தி என்னைத் தீ மனம் கெடுத்து -பாவகன் -அக்னி -தூய்மைப்படுத்துவன் –
மருவித் தொழும் மனமும் தந்து அருளி இருப்பாரே-

———–

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே. 78–

ஆழ்வார் 11 அவதாரம் -தானே தன்னைப் பாடிக் கொண்டார்
அவனைப் போலவே அநுகாரம் -கடல் ஞாலம் செய் தேனும் யானே என்னும் -உண்டே –

———–

குற்றேவலும் செய்தும் மெய் கண்டு கை கொண்டு கும்பிட்டன்பு
பெற்றேன் என் போல் எவர் பேறு பெற்றார் பின்னையே பிறந்து
வெற்றேவலின் நின்ற பொய்யன்பர் தாங்களும் மெய் யுணர்ந்தார்
எற்றே குருகைப் பிரான் எம் பிரான் தன் இயலிசைக்கே. 79–

அருளிச் செயல்களை அறியாமல் அலகிடுதல் மெழுகிடுதல் கோலமிடுதல் செய்வார்களும்
அதிகார சம்பத்தி உண்டாகி மெய்யுணர்வு பெற்று உஜ்ஜீவனம் அடைவார்கள் அன்றோ
அதே போல் அடியேனும் ஆனேன் என்கிறார்

———–

தலை மகளைத் தலை மகன் கண்ணுற்று இஃது ஒரு வியப்பு என்றால் –
ஒரு தலைக் காமம்-கைக்கிளைத் திணையின் முதலான காட்சி என்னும் துறை இது

இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை யிப் பிறவி
மயலைத் துடைத்த பிரான் குருகூர் மதியைக் கொணர்ந்து
முயலைத் துடைத்துத் தனுவைப் பதித்து முத்தங்குயிற்றிக்
கயலைக் கிடத்திக் கொள் சாளரத்தூடு கதவிட்டதே.–80–

கைக்கிளை அகத்துறை
திருக்குருகூரில் அவதரித்த சந்திரனே இவர் -களங்கம் அற்ற பூர்ண சந்திரன்
அப்ராக்ருதமான தெய்விக நிலை

————

இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே. 81–

திருக்குருகூர் வளம் பேசும் பாசுரம்
மனம் புத்தி செயல் எல்லாவற்றிலும் இரும்பு போல் வழிய நெஞ்சினாரையும் உருக வைக்கும் அருளிச் செயல்கள்

————

குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–

குணம் குலம் ஒழுக்கம் செல்வம் அனைத்தையும் அருளும் ஆழ்வார் அருளிச் செயல்கள்
ஆழ்வார் அருளிச் செயல் அனுபவமே வேண்டும் என்று இருப்பாரே நாடிச் சென்று ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்போம்

————-

தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென் நாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே. 83–

என்னைப் பிறப்பு அறுத்தான் -அவன் கீர்த்தியையே பாட வைத்து என் நா தழும்பு ஏறச் செய்தான்
மனம் மொழி செயல்கள் வேறே எங்கும் பட்டி மேயாதபடி தனக்கேயாம்படி நல் அருள் செய்தான்
குன்ற மாடத் திருக்குருகூர் நம்பி என்றும் என்னை இகழ்விலன் காண்மினே –

———–

நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்

பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே. 84–

தாமிரபரணி நீர் ஆழ்வார் அருள் கரை கடந்து அலை வீசி ஸகல தாபங்களையும் குளிரச் செய்யுமே –
திருக்குருகூர் பெயர் கேட்ட மாத்ரத்திலே கண்கள் நீர் சொரிந்து உள்ளமும் உடலும் உருகுமே
மகிழ மலரை-மரத்தையே – சூடிக் கொள்ளப் பாரிக்கிறாள்

————-

தலைவனை நோக்கித் தோழி தலை மகளை உடன் கொண்டு போகச் சொல்லுதல் –

கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற்கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே. 85–

பாகவத நிஷ்டையில் ஆழ்ந்த -கொண்ட பெண்டிர் உடன் இல் வாழ்க்கையும் மெய்யுணர்வைத் தரும் –
அது ஆழ்வார் திருவடி பலத்தால் உண்டாகும்
நீரின் நிறை என்பதை ஒழுக்கத்தின் நிறை -கற்புடைமை -இரட்டுற மொழிதலாகும்
இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நிறை துணை
ஆழ்வார் திருவடி சம்பந்திகள் கைங்கர்ய ஸ்ரீ யில் ஈடுபடுத்தி உய்யச் செய்யும்
ஆழ்வார் அடியார்களான தேன் கிடைத்து அந்தமில் பேர் இன்ப பெரு வீட்டு இன்பமும் பெறப் பெறுவீர்

———–

கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே. 86–

குணம் -ஆழ்வார் அடியார்களின் -ஸ்வரூப ரூப சேஷ்டிதங்களுக்கும் உப லக்ஷணம்
நாட்டம் -ஆழ்வார் ஆச்சார்யர்கள் தனியன்கள் வாழித் திரு நாமங்கள் சொல்லி ஆனந்த அனுபவ பரிவாஹம்
ஆழ்வாரை அனுபவிக்கும் கூட்டங்களில் அனுபவ கண்ணீர் பெருகி ஓடக்கண்ட இந்த பேறு வீட்டின்பத்தையும் உறுதி செய்யுமே

————–

பகல் குறியில் தலைமகனுடன் தலை மகளைச் சேர்த்து வைத்த தோழி
பின்பு தலைவன் சிறைப்புறமாக அவன் செவிப்படுமாறு தினையோடே வெறுத்து வரைவு கடாதல்

விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் காப் புனமே. 87–

தென் பாலை வழி -யமபுரத்துக்குச் செல்லும் கொடிய வழி
இங்குள்ள தினைப்புனமே எங்கள் வினைகளை அகற்ற வல்லதாய் இருக்குமே-

———–

தலைவன் வரும் புனல் கண்டு வருந்துதல் –

புனல் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே. 88–

முற்றிய விளைவை உடையவர் கொண்டு போனார்கள் -வெறும் கட்டையாக நீ அழிய வேண்டியது தான்
ஆழ்வார் திருவடி சம்பந்தத்தாலும் அருளிச் செயல்களின் உணர்வினாலும் வினை விளைவுகள் எல்லாமே அறுபட்டுப் போய் உடல் அழிந்து ஆத்மா உஜ்ஜீவனம் அடைவதைக் காட்டும்
புனம் பாழ் படுத்து என்று மறு பிறப்பு இல்லை என்றது
மனம் பாழ் படுத்தது என்றது உலக நினைவுக்கு சற்றும் இடம் இன்றிக்கே நெஞ்சு நிறையப் புகுந்தான்

திருமால் இருஞ்சோலை என்றேன் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் போலவே –
இங்கு பூனம் என்றது வினை விளையும் இடமான உடலைச் சொன்னவாறு
ஏவினார் கலியார் நலிக என் தன் மேல் எங்கனே வாழுமாறு
ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா -பெரிய திருமொழி -1-6-8-
நின்றான் குன்று -அசலம் -உறுதியைச் சொன்னவாறு
எவ்வளவு தடைகள் இருந்தாலும் சலியாமல் கரை ஏற்றியே தீருவான்
கதிரும் இல்லாமல் என் தலைவியும் இல்லாமல் நீ பாழாகி விட்டாய் தினைப்புனமே -இனி நீ வாழ மாட்டாய் –

———-

பிரிவு ஆற்றாத தலைவி அன்றிலின் குரல் கேட்டு அயர்தல்–

தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே. 89–

தினை -மிகச் சிறிய -பனை -மிகப் பெரிய
கூவி என்னை நலியும் அன்றில் பறவைகளுக்கு இடம் கொடுக்கும் பனை அன்றோ
அன்றில் -பனை -மகிழ மலர் -இவை எல்லாம் காம உத்தீபனம் அன்றோ

————

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே. 90–

ஆழ்வார் திரு நாமம் -சடகோபன் -ஸக்ருத் உச்சாரணம் -ஒன்றே வினைகளைப் பாற்றி
முக் குறும்புகளையும் அறுத்து தாபத்த்ரயங்களையும் போக்கி அருளும்
சங்கீர்த்திய நாராயண ஸப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் ஸூ கினோ பவந்து –
மீண்டும் தீ வினைகள் புகா வண்ணம் அருளும்
காலே பொதத் திரிந்து கத்துவராம் இன நாள் மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -பெரிய திருவந்தாதி -22-
வினைகாள் உமக்கு இனி வேறு இடம் தேட வேண்டும் -பிள்ளை அந்தாதி –

————

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு பாங்கி இரங்குதல்

பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே. 91–

————-

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே. 92–

கைங்கர்ய ரூபமாகவே கர்மங்களை செய்யவே பிறவி சக்கரம் ஒழியும் என்கிறார்

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-

————–

இருளுக்கு ஆற்றாத தலைவியைக் குறித்துத் தோழி இரங்குதல் –

அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. 93–

கரும்பு போல் இனியது என்னாமல்
ஆழ்வார் அருளிச் செயல்கள் போல் கரும்பு இனியது என்கிறார்

————-

அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே. 94–

—————

தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. 95–

அருளிச் செய்சல்களைக் காத்தாலே கேட்பதுவும் -நாவால் பாடுவதும் -பொருள் அறிந்து இயங்கவதும் விட
வேறே சிறந்த தபஸ் உண்டோ

————

தலைவன் தலைவியின் நோக்கினாலாய வருத்தம் கூறுதல்

உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே. 96–

திருமாலுக்கு அடிமை
பரத்வத்தில் விஷ்வக் செனறாக
இங்கு நம்மாழ்வாராக
ஆஸ்ரிதர்களுக்கு பரமாச்சார்யராக
திருச்செங்கண் -இத்தையே பெயராக திருச் செங்கணித்துறை
இங்கு துள்ளும் கயல்களும்  தன் பால் ஆதரம் வைக்கும் கமலச் செங்கண் அழகு அன்றோ

———–

பிரிவு ஆற்றாது வருந்தும் தலைவி இரங்கல் –

தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே. 97–

புலி புண்டரீகம் தாமரை லஷித லஷணம்

————

இதுவும் அது

வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு கட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே. 98–

———–

எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே. 99–

திருவாய் மொழி அனுசந்தானம் என்னுள் நிறைந்து உள்ளதால் பிரமன் என்னை மீண்டும் படைக்க வல்லன் அல்லன் என்கிறார்

—————-

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள்விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள். 100–

மனை பெரும் செல்வம் வாழ்வு பசு பத்னி சுதன் ஆலயம் -சர்வமும் ஆழ்வாரே
மாதா பிதா யுவதியை தனய விபூதி -எல்லாம் எனக்கும் எனது சந்ததியாருக்கும் ஆழ்வாரே -ஆளவந்தார்

——–

மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே

மன்றே புகழும் மாறனை
மன்றே புகழும் மதுர கவிப் பெருமாள்
மன்றே புகழும் தென் தமிழ் தொடையில் ஒன்றே பதிகம்
மன்றே புகழும் பதிகம் யுரைத்தவன் பொன்னடி
மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல்
மாறனை முன் சென்றே மதுர கவிப் பெருமாள் –சாஷாத்தாக அனுபவிக்கப் பெற்றார் -முன் சென்று –
அவர் பொன்னடி உற்று நின்ற திரு வழுந்தூர் வள்ளல்
இவர் இடம் செய்த பிரபத்தி பலனாகவே உதித்த இப்பிரபந்தம் என்றபடி

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -/ ஸ்ரீ ஒட்டக் கூத்தர்–ஸ்ரீ உத்தர காண்டம்-

February 7, 2021

கம்பர் ஆறுகாண்டத்தைப் படைத்தார். அதன் பின் நிகழும் நிகழ்வுகளை ஒட்டக் கூத்தர் பதினேழு படலங்களில் நிறைவு செய்துள்ளார்.
இவ்விரண்டும் இணைந்த நிலையில், இராமனின் மாண்புகள் நிறைவுறுகின்றன.
ஒரு காப்பியத்தோடு இன்னொரு காப்பியம் ஒன்றி இணைந்த நிலையில் தண்டியாரின் காப்பிய இலக்கணம் நிறைவுறுகிறது.
ஆதலால் இவ்விரு நூல்களை இரட்டை இராமாயணக் காப்பியங்கள் எனலாம்.

ஸ்ரீ சீதை மீண்டும் வனவாசம் சென்றது மிகவும் விவாதிக்கப்பட்ட ஒரு வரலாறாகும்.
முதலில் ஒட்டக்கூத்தரின் சொற்களில் காண்போம்:

வாளணி விசயன் பத்திரன் தந்தவக்கிரன்
காளியன் முதலோர் சொற் பரிகாசக் கதைகள் கேட்டினிது கொண்டாடி (பாடல் 724 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

ஆங்கவரிவ்வாறு உரைத்திடக் கேட்ட அரசர் கோன் அவர்களை நோக்கி
நாங்கள் இந்நகரில் நாட்டினில் பிறக்கும் நன்மையுந் தீமையுங் கேட்டுத்
தீங்கவை அகற்றிச் சிறந்தன செய்ததும் செய்யும் இவ்விரண்டும் நீர் கேட்ட
நீங்கள் ஒன்றுக்கும் கூசலீர் என்ன நின் பல கேட்டி என்றுரைப்பார் (பாடல் 729 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

மன்னவன் ராமன் மானபங்கத்தை மனத்தினால் நினைக்கிலன் வானோர்க்
கின்னல் செய்தொழுகும் இராவணன் கொடுபோய் இடைவிடாது ஈராறு திங்கள்
நன்கெடு நகரில் தனிச்சிறை வைத்த தையலைத் தாரமாய்க் கொண்டு
பின்னையும் வாழ்க்கை பேரிழுக்கு என்று பேசுவர் பெரு நிலத்தோர் (பாடல் 728 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

ஓதநீர் வேலையுலகு உளோர் இல்லது உளது எனில் உள்ளது ஆம் உள்ளது
யாதொரு பொருளை இல்லையென்று உரைக்கில் இல்லையாம் ஈது உலகியற்கை
ஆதலால் அவளை அருந்தவத்தோர்கள் ஆசிரமத்து அயல் விடுத்தும்
ஈது நான் துணிந்த காரியம் இனி வேறு எண்ணுவதொரு பொருளில்லை (பாடல் 732 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

ராமனின் நம்பிக்கைக்குரிய படை வீரரான விசயன், தந்தவக்கிரன், காளியன் ஆகியோர் கூறிய
நாட்டு நடப்பு பற்றிய சுவையான நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழ்ந்த ராமன்
”நீங்கள் நல்லதும் கெட்டதுமானவற்றைப் பார்த்துச் சொல்லுவதில் தள்ள வேண்டியவற்றைத் தள்ளி மீதியைச் சொன்னீர்கள்.
நடப்பு எதுவோ அதைக் கூசாமற் கூறுவீராக” என்றான்.

பிறகு அவர்கள் “ராமன் மானக்கேட்டான ஒரு விஷயத்தை நினைக்கவும் மாட்டார்.
வானவர்களுக்குத் தீங்கிழைத்த ராவணனின் சிறையில் பன்னிரண்டு மாதம் இருந்தவளை
மனைவியாக வாழ்க்கை நடத்துவது பேரிழுக்கே” என மக்கள் பேசுகின்றனர் என்றார்கள்.

கடலால் சூழப்பட்ட உலகில் வாழும் மக்கள் மனதில் என்ன இருக்கிறதோ அதுவே உண்மை.
அவர்கள் இது இல்லை என்று கூறினால் இருக்காது என்று பொருள். இதுவே உலக இயற்கை.
எனவே அவளைத் தவம் புரியும் முனிவர்களது ஆசிரமத்துக்கு அருகே விடுவோம்.
இதுவே என் தீர்க்கமான முடிவு. இதில் மாற்றமில்லை.

இதைத் தொடர்ந்து லட்சுமணன் வால்மீகி ஆசிரமம் அருகே சீதையை விடும் போது கூறுகிறான்.

நன்னெறி நகரும் நாடும் கடந்து போய் அடவி நன்னித்
தன்னுயிர் தன்னை விட்டுத் தடம் புகழ் கொண்ட ஐயன்
இன்னுயிர்த் தோழனாய் வெழில் கொள் வான்மீகி வைகும்
பங்கை சாலையின் பாற் பாவையை விடுதி என்றான்

என்றவனியம்ப அண்ணல் ஏவலை மறுக்க அஞ்சி
இன்றுனைக் கொன்று போந்தேன் என்றிவை இளையோன் சொல்ல
கன்றிய கனலினூடு காய்ந்த நாராசம் சீதை
தன் துணைச் செவியில் ஏறத் தரணியில் தளர்ந்து வீழ்ந்தாள் (பாடல் 752, 753 உத்தர காண்டம், ஒட்டக் கூத்தர் படைப்பு)

நன்னெறியில் வாழும் நாட்டின் மன்னரான தசரதன் நகர் நாடும் தாண்டிப் புகழ் பெற்றவர்.
அவது உயிர்த் தோழரான வால்மீகியின் ஆசிரமத்திற்கு அருகே அவளை விடுக என்றான்.

அண்ணல் ராமனின் ஏவலை மறுக்க அஞ்சி இன்று உன்னைக் கொண்டு வந்தேன் என்று
லட்சுமணன் கூறியது பழுக்கக் காய்ச்சிய இரும்பு செவியில் நுழைந்தது போல மனத் துயருற்றுத் தரையில் வீழ்ந்தாள்.

வால்மீகி ராமாயணத்தில்
பௌராபவாதஹ சுமஹா(ம்) ஸ்த்தா ஜன்பதஸ்ய ச
வர்த்ததே மயி பீபத்ஸா மே மர்மாணி க்ருந்ததி (பாடல் 3, ஸர்க்கம் 45 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

தற்சமயம் பொது மக்களிடையே என்னைப் பற்றியும் சீதையைப் பற்றியும் மிகவும் தவறான அபிப்ராயம் பரவி உள்ளது.
என் மீது அவர்கள் வெறுப்புற்றிருக்கிறார்கள். அவர்களது வெறுப்பு என் இதயத்தைப் பிளக்கிறது.

அப்யஹம் ஜீவிதம் ஜஹா(ன்) யுஷ்மான் வா புஷர்விபாஹா
அபவாத பயாத் பீதஹ கிம் புனர்ஜங்காத்மஜம் (பாடல் 14, ஸர்க்கம் 45 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

(ராமன் தன் சகோதரர்களைப் பார்த்துச் சொல்வது) மனிதருள் உயர்ந்த என் உறவுகளே !
மக்களின் நிந்தனைக்கு அஞ்சி என் உயிரையும் உங்களையும் கூடத் தியாகம் செய்யத் தயார்.
சீதையைத் தியாகம் செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல.

கங்கா வாஸ்து பரே பாரே வால்மீகேஸ்து மவாத்மனஹ
ஆஷ்ரமோ திவ்யாஸ்ன்ஷஸ்தம்ஸாதிரமார்ஷிதஹ
தத்ரைதாம் விஜனே தேஷே விஸ்ருஜ்ய ரகுநந்தன
சீக்ரமாகச்ச சௌமித்ரே குருஷ்ய வசனம் மம
தஸ்மாத் த்வாம் க்ச்ச சௌமித்ரே நாத்ர கார்யோ விசாரணா
அப்ரீதர்ஹி பரா மஹ்யம் த்வயைதத் ப்ரதிவாரிதே–(பாடல் 17,18,19,20 ஸர்க்கம் 45 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

பொருள்: கங்கையின் அந்தக் கரையில் மகாத்மா வால்மீகி முனிவரின் திவ்ய ஆசிரமம் உள்ளது.
நீ சீதையை அந்த ஆசிரமத்தின் அருகில் விட்டு விடு. சீதை விஷயத்தில் நீ வேறு எந்த விஷயத்தையும் என்னிடம் கூறாதே

எனவே லட்சுமணா ! நீ இப்போது போ. இவ்விஷயத்தில் எதையும் யோசிக்காதே.
நீ எனது இந்த முடிவில் தடை ஏற்படுத்தினால் எனக்கு மிகவும் கஷ்டம்.

ஸாத்வம் த்யத்வா நிருபதினா நிர்தோஷா மம சன்னிதௌ
பௌராபவாத்பீதேன க்ராஹாம் தேவி ந தேஅன்யதா
அஷ்ரமாந்தேஹு ச் மயா த்ய்க்த்வ்யா த்வம் பவிஷ்யஸி
ராக்ஞஹ ஷாஸ்ன்மாதாய ததைவ சில தௌர்வாதம் (பாடல் 13,14 ஸர்க்கம் 47 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

நீங்கள் என் முன்னே குற்றமற்றவராய் நிரூபித்துள்ளீர்கள். இருந்தாலும் மக்களின் அபவாத்திற்குப் பயந்து
மகாராஜா தங்களைத் துறந்து விட்டார். நான் அவரின் ஆணையாகவும் அதுவே தங்களின் விருப்பம் என்றும்
நினைத்துத் தங்களை ஆசிரமத்துக்கு அருகே விட்டு விடுவேன்.

லக்ஷ்மணஸ்ய வசஹ ஸ்ருத்வா தாருணம் ஜனகாத்மஜா
பரம் விவிதமாகம்ய வைதேஹி நிப பாத ஹ (பாடல் 1, ஸர்க்கம் 48 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

லட்சுமணனின் இந்தக் கடுமையான் சொற்களைக் கேட்ட சனகன் மகள் சீதை மனமுடைந்தாள்.
மூர்ச்சையுற்று தரையில் விழுந்தாள்.
மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி என்பதே ராமனின் தீர்க்கமான முடிவாயிருந்தது.
இதன் மூலம் மக்களுக்கு வழிகாட்டுவதை, மறுமலர்ச்சியை மாற்றங்களை முன்னெடுத்துச் செல்வதை
மக்கள் பின்பற்றும் ஆன்மீகவாதிகளிடம் சிந்தனையாளர்களிடமிருந்தே மன்னன் எதிர்பார்க்கிறான். இது ராமனின் தரப்பு.

பிறகு வால்மீகி என்னும் முனிவரின் பராமரிப்பில் மகன்களை வளர்த்து அம்மகன்கள் அசுவமேத யாகத்தின் போது
வந்த குதிரையைப் கைப்பற்றி சித்தப்பாக்களுடன் சண்டையிட இறுதியில்
அப்பாவை நோக்கி அம்பு எய்யும் முன் சீதை வந்து தடுக்கிறாள்.
மறுபடி அயோத்தி வந்த அவளைத் தன் தூய்மையை நிரூபிக்கும் படி ராமன் ஆணையிட பூமித்தாயின் மடியில் ஐக்கியமாகிறாள்.

ஒட்டக்கூத்தரின் பாடல்களில் :

வால்மீகி முனிவரை நோக்கி ராமன் கூறுவான்:
முனிவ நீ அறுளிய மொழியை வானவர்
அனைவரும் யானும் முன்னறிவம் ஆயினும்
கனைகடல் உலகு உளோர் காணல் வேண்டும் என்று
இனையன இராகவன் எடுத்து இயம்பினான் (பாடல் 1257 உத்தர காண்டம் ஒட்டக் கூத்தர் படைப்பு)

‘முனிவரே ! தாங்கள் கூறுவதை நானும் வானோரும் ஏற்கனவே நன்கு அறிவோம்.
ஆயினும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகிலுள்ள மக்கள் சீதையின் கற்பின் சிறப்பை அறிய வேண்டும்.

விசைப் பாசத்தை அறுத்த முனி வேள்வி காத்து மிதிலை புகுந்து
எனக்கா ஈசன் வில்லிறுத்து அன்று எனக்கைப் பிடித்த எழிலாரும்
புனக்காயம் பூ நிறத்தானையன்று ம்ற்றொரு பூ மனலான்
மனத்தால் வாக்கால் நினையேனேல் வழிதா எனக்கு மண்மகளே–(பாடல் 1264 உத்தர காண்டம் ஒட்டக் கூத்தர் படைப்பு)

பாசம் நீக்கிய பற்றற்ற விசுவாமித்திரரின் வேள்வியைக் காத்துப் பிறகு வில்லை ஒடித்து என்னைக் கைப் பிடித்த
ராமனை அன்றி வேறு ஒரு மன்னனை நான் மனதாலோ வாக்காலோ நினையாதும் சொல்லாதும்
இருந்தது உண்மை என்றால் மண்மகளே எனக்குப் பிளந்து வழி விடு.

சேணுலாவிய தலமடந்தை சீதை தன்
பூணுலாவிய புலம் பொருந்தப் புல்லுறுஇ
வாள் நிலாவிய கதிர் வழங்கல் செல்கலாக்
கீணிலைப் படலமும் கிழியப் போயினாள்

நகைகளால் அலங்கரிக்கப்பட்ட சீதையின் தோள்களைப் பற்றி தேவ லோகத்திலிருந்து வந்தவளான
பூமாதேவி சூரியனின் ஒளிகூட நுழைய முடியாத பூமியைப் பிளந்து உள்ளே சென்று மறைந்தாள்.

வால்மீகி ராமாயணத்தில்
ஷீவஹ ப்ரபாதே து ஷபர்த் மைதிலி ஜனகாத்மஜா
கரோது பரிஷன் மத்யே ஷோதனர்த்தே மமைவ ச (பாடல் 6 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

நாளை காலை மிதிலை மன்னரின் மகள் நிறைந்த சபையில் வந்து எனது களங்கத்தைப் போக்கும் சபதம் செய்வாராக.

யனன தத் சத்யமுக்தம் மே வேம்தி ராமாத் பரம் ந ச
ததா மே மாதவி தேவி விவ்ரம் தாதுர்மஹதி (பாடல் 16 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

தஸ்மின்ஸ்து தரணி தேவி பாஹூப்யாம் க்ருஹ்ய மைதிலீம்
ஸ்வாகதேனாபி நந்த்யைநாமாசனே கோபவேஷயத் (பாடல் 19 ஸர்க்கம் 95 உத்தர காண்டம் வால்மீகி ராமாயணம்)

சிம்மாசனத்துடன் பூமாதேவி அழகிய வடிவுடன் வந்தாள். அவள் மிதிலாகுமாரி சீதையைத் தனது இரு கரங்களால்
எடுத்து மடியில் வைத்து வரவேற்கும் விதமாக அவளை வணங்கி சிம்மாசனத்தின் மீது அமர்த்தினாள்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஒட்டக் கூத்தர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஒப்பாய்வு – பால காண்டம்-முனைவர் ஸ்ரீ அ.அ. மணவாளன், பேராசிரியர்–

January 10, 2021

ஒப்பாய்வு பெறும் பால காண்டப் பகுதிகள்

கீழ்வரும் பொருட்கூறுகளின் அடிப்படையில் பால காண்டங்களைப் பற்றிய இவ் ஒப்பியலாய்வு நிகழ்த்தப் பெறுகிறது.

காண்ட அமைப்பு, காப்பிய நோக்கம், காப்பியத் தொடக்கம், நாட்டு
நகர வருணனைகள், இராமனின் பிறப்பு, தாடகை வதம், அகலிகை
சாப நீக்கம், சீதையின் பிறப்பும் திருமணமும், பரசுராமர் எதிர்ப்பு.

காண்ட அமைப்பு

பால காண்டம் 77 சருக்கங்கள், 2355 சுலோகங்கள். முதல் நான்கு
சருக்கங்கள் (220 சுலோகங்கள்) பதிகம் போல அமைந்தது. வான்மீகி
நாரதரைக் கண்டு இராமர் வரலாறு அறிதல், பிரம்ம தேவர்
வான்மீகியின் இராமாயண முயற்சியை ஆசீர்வதித்தல், வான்மீகி
நிட்டையில் அமர்ந்து இராமாயண வரலாறு முழுவதையும்
ஞானக்கண்ணால் கண்டு உணர்ந்து காவியத்தை இயற்றி முடித்தல், குச
லவர்கள் இருவரும் அக்காவியத்தை இனிமையாகப் பாடுவது கேட்டு
இராமபிரான் அவர்களைத் தம் அவைக்கு அழைத்து
அக்காவியத்தைப் பாடுமாறு வேண்ட அவ்விருவரும் பாடத்
தொடங்குதல் ஆகிய செய்திகளைத் தருகின்றன. ஏறக் குறையப்
பாயிரம் போன்ற பணியினை இச் சருக்கங்கள் செய்கின்றன. ஐந்தாம்
சருக்கம் தொடங்கி எழுபத்தேழாம் சருக்கம் முடிய 76 சருக்கங்களா
யமைத்து 2135 சுலோகங்களை உடையதாக வான்மீகியின்
பாலகாண்டம் விளங்குகிறது.
கம்பராமாயணம், சென்னைக் கம்பன் கழகப் பதிப்பின்படி,
பாலகாண்டம் பாயிரம் தவிர்த்து 23 படலங்களையும் 1312
விருத்தங்களையும் உடையதாக விளங்குகிறது. வை. மு. கோ.,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஆழ்வார் திருநகரி, கலாட்சேத்ரா
போன்ற பதிப்புகள் படல எண்ணிக்கையிலும், பாடல்
எண்ணிக்கையிலும், படலப் பெயர்களிலும் வேறுபடுவதைக் காணலாம்.

தெலுகு இராமாயணங்களான ரங்க நாத ராமாயணம், பாஸ்கர
ராமாயணம், மொல்ல ராமாயணம் மூன்றிலும் காண்ட உட்பிரிவுகள்
இல்லை. குமார வான்மீகியின் தொரவெ இராமாயணம்
காண்டந்தோறும் சந்தி என்னும் உட்பிரிவை உடையதாக
விளங்குகிறது. மலையாள இராமாயணங்களில் காண்டப் பிரிவுகள்
உண்டு.

துளசி இராமாயணத்தின் பாலகாண்டம் 361 ஈரடிப் பாக்களையும்
(தோகா) ஒவ்வொரு ஈரடிப் பாவிற்குப் பின்னர் நான்கு நான்கு
நாலடிப் பாக்களையும் (சௌபாயி) உடையதாக விளங்குகிறது. சிற்சில
இடங்களில் ஒரே எண்ணின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட ஈரடிப்
பாக்களும் (29. அ. ஆ. இ), நான்கிற்கும் மேற்பட்ட நாலடிப்
பாக்களும் (327), சில இடங்களில் நாலடிப் பாவிற்கும் ஈரடிப்
பாவிற்கும் இடையில் இயைபுத்தொடை அமைந்த நாலடிச் சந்தப்
பாடல்களும் 326), விரவிக் காணப்படுகின்றன. காண்டப் பிரிவு தவிர,
படலம், சருக்கம் போன்ற உட்பிரிவுகள் உடையதாகத் துளசியின்
காப்பியம் அமையவில்லை.

பல்வேறு இராமாயண நூல்களை நோக்குமிடத்து வான்மீகத்தைப்
பின்பற்றிய இராமாயணங்கள் எல்லாம் காண்டப் பிரிவுகளில் வான்மீகி
இராமாயணத்தை ஒத்து அமைகின்றன என்றும், காண்டத்தின்
உட்பிரிவுகளைப் பொறுத்தவரையில் தத்தம் இலக்கிய மரபிற்கேற்பப்
படலம், சருக்கம், சந்தி போன்ற உட்பிரிவுகளைக் கொண்டு
அமைகின்றன என்றும், சில உட்பிரிவுகளே இல்லாமல் பாடல்
எண்களை மட்டும் கொண்டு அமைந்துள்ளன என்றும் அறிகிறோம்.

துளசி இராமாயணத்தின் அமைப்பைப் பொறுத்த வரையில், 361
ஈரடிப் பாடல்களையும் அவற்றிற்குரிய நாலடிப் பாடல்களையும்
உடையதாகக் காணுகிறோம். பாலகாண்டத்தின் முதல் 43 ஈரடிப்
பாடல்களை வாழ்த்து, அவையடக்கம் ஆகியவற்றைக் கொண்ட
பாயிரப் பகுதியாக விளங்குகிறது. சிவன், சக்தி இருவரின் விவாதம்,
தக்கன் வேள்வி அழிவு, சிவன் – சக்தி திருமணம், மன்மதன் அழிவு,
இராமனின் அவதாரத்திற்குரிய காரணங்கள்,
நாரதன் வரவு – மனு, சதரூபன் ஆகியோர் தவமும் வரமும்,
பிரதாப பானுவின் வரலாறு, இராவணனின் பிறப்பும், தவமும், வரமும்,
கொடுமையும், பூமி தேவியின் முறையீடு, திருமால் அவதாரம் எடுக்க
இசைதல் எனப் பல செய்திகள் 44 முதல் 187 வரையிலான
ஈரடிப்பாக்களில் பேசப்படுகின்றன. 188 முதல் 361 வரையிலான
எஞ்சியுள்ள (காண்டத்தில்பாதிக்கும் குறைவான) 174 ஈரடியில்
இராமனின் பிறப்பு முதலான பாலகாண்டச் செய்திகள்
பேசப்படுகின்றன. இடைக்காலன் புராணங்களின் செல்வாக்கையும்,
பிற்கால வழிபாட்டு, பிரச்சார பக்தி இயக்கத்தின் தாக்கத்தையும் துளசி
ராமாயணம் தெற்றென விளக்குகிறது,

பால காண்டத்தைப் பொறுத்த வரையில், வான்மீகி கம்பன், துளசி,
பாஸ்கரர், நரஹரி ஆகிய கவிஞர்கள் தம் காண்டப் பொருளை
எவ்வாறு அமைத்து உள்ளனர் என்பதை அடுத்த பக்கத்தில் உள்ள
அட்டவணை விளக்குகிறது.

காப்பிய நோக்கம்

குறிக்கோள் மனிதன் ஒருவனைப் படைத்துக் காட்டுவதை வான்மீகி
இராமாயணம் நோக்காக உடையது.

பாகவத புராணம், நரசிம்ம புராணம், அத்யாத்ம ராமாயணம்,
அற்புத ராமாயணம், வசிஷ்ட ராமாயணம் ஆகியன இராமனைத்
திருமாலின் அவதாரமாகக் கருதி அவன் தீயவர்களை அடக்கி
நல்லவர்களைக் காப்பதற்காக மேற்கொண்ட அவதாரச் செயல்களை
விளக்கி, ஆன்மீக உணர்வுகளை ஊட்டுவதை நோக்கமாகக்
கொண்டுள்ளன. மானுடக் காப்பியம் என்னும் நிலையில் இருந்து
விலகிப் புராணப் பாங்கு உடையனவாக இவை இயற்றப் பெற்றுள்ளன.

தசரத ஜாதகம், தசரத கதனம் என்னும் பௌத்த நூல்களும்,
விமலசூரியின் பௌம சரிதம், இரவிசேனரின் பத்மபுராணம்,
குணபத்ரனின் உத்தரபுராணம், கன்னட பம்ப ராமாயணம் ஆகிய
சமண நூல்களும் தத்தம் சமயப் பேருண்மைகளைக்
கடைப்பிடித்தொழுகும் குறிக்கோள் பாத்திரமாக இராமனைப்
படைத்துக் காட்டுகின்றன. பாடு பொருளில் வான்மீகியின் மூலக்
கதையிலிருந்தும், பாகவத புராணம் முதலான வடமொழி இராமாயணக்
கதைகளிலிருந்தும் இவை பெரிதும் வேறுபடுகின்றன. காப்பிய
மாந்தர்களின் பெயர்களை மட்டும் மாற்றாமல், காப்பிய நோக்கம்,
கதை நிகழ்ச்சிகள், காப்பிய மாந்தர்களின் தோற்றம், காப்பிய

வால்மீகி -77 -சர்க்கம் -2355 ஸ்லோகங்கள் –
கம்பர் -21 படலங்கள் -1312-பாடல்கள்

தெலுகு மொழியின் முதல் இராமாயணக் காப்பியமாகிய ரங்கநாத
இராமாயணம் நீண்ட வாழ்த்துப் பகுதியைக் கொண்டுள்ளது. சரஸ்வதி,
கணபதி முதலான பல கடவுளர்களையும் வான்மீகி முனிவரையும் தம்
காப்பிய வெற்றிக்காக வணங்கும் பாங்கு காணப்பெறுகிறது.
இதனையடுத்துத் தோன்றிய பாஸ்கர இராமாயணமும் மொல்ல
இராமாயணமும் இவ்வாறே பன்முக வாழ்த்தை உடையனவாக இயற்றப்
பெற்றுள்ளன. கன்னட முதல் இராமாயணக் காப்பியமாகிய
பம்பராமயணததில் அருகக் கடவுள் வணக்கம் காப்பிய நிறைவுக்கு
ஆசிவேண்டும் பான்மையில் அமைந்துள்ளது. இதனையடுத்துத்
தோன்றிய குமாரவான்மீகியின் தொரவெ இராமாயணத்தின் முதற்
சந்தி (படலம்) முழுவதும் பன்முகக் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளது.
பெருவழக்காக வழங்கும் மலையாள இராமாயனங்களில் இராம
பணிக்கரின் கன்னச இராமாயனமும், எழுத்தச்சனின் அத்யாத்ம ராமா

யணமும் குறிப்பிடத்தக்கவை. இவை இரண்டுமே பிரம்மா, கணபதி,
சரஸ்வதி, சிவன் முதலான கடவுளர்களையும், வான்மீகி முதலான
முனிவர்களையும், பிராமணர், குருமார், ஆசிரியர் போன்ற
சான்றோர்களையும் வணங்கித் துதிக்கும் நீண்ட வாழ்த்துப்
பகுதிகளைக் கொண்டுள்ளன. துளசிதாசர் தம் வாழ்த்துப் பகுதியில்
வாணி, விநாயகர், பவானி, சங்கரன், தம் ஆசிரியர், வான்மீகி,
அனுமன், சீதை, இராமன் ஆகியோர்க்கு வணக்கம் செலுத்துகிறார்.
தாம் இராமாயணத்தை இயற்றிய காரணத்தைக் கூறிய பிறகு மீண்டும்
கணேசர், விஷ்ணு, சிவன், தம் ஆசிரியர், அந்தணர், துறவியர்,
சான்றோர் ஆகியோரை வணங்குகிறார். சான்றோர்க்கு மட்டுமன்றித்
தீயோர்க்கும் வாழ்த்தில் இடம் தந்தவர் காப்பிய உலகில் துளசிதாசர்
ஒருவர்தான் போலும். பிறர் துன்பம் கண்டு மகிழ்ந்தும், பிறர்
ஆக்கம் கண்டு பொறாது பொருமி வருந்தியும் பிறர்க்கு கேடு
சூழ்வதில் இன்பம் காணும் தீயோரைத் தம் இரு கையெடுத்து
வணங்குவதாகக் கூறுகிறார். எனவேதான், கடவுளர், அரக்கர்,
பாம்புகள், பறவைகள், கந்தர்வர், கின்னரர், பேய்க்கணம் எனப்
பல்வேறுபட்டவர்களையும் துளசிதாசர் வாழ்த்துகிறார்.

மேற்கண்ட காப்பியங்களின் வாழ்த்துப் பகுதிகளைத் தொகுத்து
நோக்குமிடத்துக் கீழ்க்காணும் செய்திகள் புலனாகின்றன.

ஆதிகாவிய கவிஞராகிய வான்மீகி இராமனின் சரிதத்தைக்
கூறப்புகுந்தாரே தவிர, கடவுள் வாழ்த்தாக எந்தக் இறைவனையும்
வணங்கவில்லை. தலைமுறைகள் பலவாக மாறி வந்தபோது வான்மீகி
இராமாயணத்தை ஓதியவர்கள் தத்தம் மரபுக்கேற்பப் பல
தெய்வங்களை வணங்கும் வாழ்த்துச் சுலோகங்களை எழுதி
வைத்துள்ளமையைப் பிற்கால ஏடுகள் காட்டுகின்றன. எனினும், அவை
நூலுள் இடம் பெறாமல் முற்சேர்க்கையாகக் காணப்படுகின்றன.
வடபுல, தென்புலமாகிய இருவழக்கு (Northern Recension and
Southern Recensuion) ஏடுகளிலும் இத்தன்மை கணப்படுகிறது.

கம்பன் காப்பியத்தில் முதற் பாடலில் பரம்பொருள் வணக்கம்
சொல்லப்படுகிறது. பிற காண்ட முகப்புகளில் காணப்பெறும்
பாடல்களுள் மூன்று பரம்பொருளையும், இரண்டு இராமனையும்
வாழ்த்துவனவாக உள்ளன. அதனாலும், ஏற்புடைக் கடவுளாதலாலும்
கம்பனின் கடவுள் வாழ்த்தைத் திருமால் வாழ்த்தாகக் கொள்வோரும்
உளர். பாடலைப் பொறுத்தவரை பொதுவில் பரம்பொருளின்
தன்மையைப் பகர்வதாக மட்டுமே தோன்றுகிறது. சேக்கிழாரின்
பாயிரத்தில் வரும் வாழ்த்தை நோக்கினால்இவ்வேறுபாடு இனிது புலனாகும். பக்தி இயக்கத்தின் பண்பாட்டு
விளைச்சலாக இடைக்கால இலக்கியங்கள் தமிழில் பெருகிய காலத்தே
தலைமுறை மாற மாறக் கம்பனைக் கற்றவர்களும்
பெயர்த்தெழுதியவர்களும் தத்தம் அநுபவம், ஆர்வம், சார்பு
போன்றவற்றின் விளைவாக நம்மாழ்வார், கலைமகள், அயன், அரன்,
விநாயகர் போன்ற பிற கடவுளர் பற்றியும், இராமன், சீதை, அனுமன்
போன்ற இராமாயணப் பாத்திரங்கள் பற்றியும் வாழ்த்துப் பாடல்களைக்
கம்பன் கவியெனவே தோன்றுமாறு யாத்து நூலின் பாயிரப் பகுதியிலே
சேர்த்திருக்கலாம் எனவும் தோன்றுகிறது. இவற்றைக் கம்பன் கழகப்
பதிப்பு மிகைப்பாடல்களாகக் காட்டுகிறது.

தெலுகு இராமாயணங்கள் கி. பி. 13ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்த்
தோன்றியவை. ஒப்பாய்வுக்கு மேற்கொள்ளப்பெற்ற மூன்று இராமாயண
நூல்களும் கோதாவரி, கிருஷ்ணாவின் சமவெளிப் பகுதகளில்
இயற்றப்பெற்றவை. தமிழ்ச் சோழ அரச குடும்பத்தோடு பல
நூற்றாண்டுகளாகப் பல வழிகளில் தொடர்புடையவை இப்பகுதிகள்
என்பது நினைவிற் கொள்ளத்தக்கது. பக்தி இலக்கிய மரபு
இப்பகுதிகளின் வழியாக வடபுல இலக்கியங்கட்கு எட்டியது. எனவே,
சைவ, வைணவ, புராண மரபுகளுக்கு உட்பட்ட பல்வேறு
கடவுளர்களின் வாழ்த்தைத் தெலுகு இராமாயணக் கவிஞர்களே
இயற்றியுள்ளனர். ஆதலின் நூலின் பகுதியாகவ இவை
அமைந்துள்ளன எனக் கொள்ள நேர்கிறது.

விமலசூரியின் பௌம சரிதமாகிய ஜைன ராமாயணத்தைப்
பின்பற்றி எழுந்த கன்னட பம்ப ராமாயணம் அருகக் கடவுள்
வாழ்த்தை மட்டும் பெற்றுள்ளது. பிற கடவுளர் வாழ்த்து காணப்
பெறவில்லை. இதற்கு மிகவும் பிற்பட்டுத் தோன்றியது தொரவெ
இராமாயணம். பக்தி இலக்கியப் பண்பாடு மேல்தட்டு மக்களோடு
அமையாமல் சாதாரண, கல்வியறிவு முழுமைபெறும் வாய்ப்பற்ற
பொதுமக்களிடையே சமயச் சொற்பொழிவுகள் கூட்டு வழிபாடு
(பஜனை) என்னும் வடிவில் பரவியிருந்த காலத்தே இது தோன்றியது.
எனவே, இதன் வாழ்த்துப் பகுதியில் மும்மூர்த்திகள், தேவகணங்கள்,
விநாயகர், சரஸ்வதி முதலாய தெய்வங்கள், வான்மீகி முதலான
முந்தைய கவிஞர்கள், சான்றோர்கள், சமயத் தலைவர்கள் எனப்பல
வேறுபட்ட தலைமைகளைத் தொழும் பன்முக வாழ்த்தினைத்
தொரவெ இராமாயணத்தில் காண்கிறோம்.

மலையாள இராமாயணங்களும் இதே காலகட்டத்திற்கு
உரியவையாதலின் மேற்காட்டியவாறே பன்முக வாழ்த்தினைக்
கொண்டுள்ளன.

—————————-

தசரத ஜாதகம், தசரத கதனம் என்னும் பௌத்த
இராமாயணங்களும், விமல சூரியின் பௌம சரிதம், சங்கதாசரின்
வாசுதேவ ஹிண்டி, இரவிசேனரின் பத்ம புராணம் ஆகிய ஜைன
ராமாயணங்களும் வான்மீகியைப் பின்பற்றி எழுதப்பெற்றன அல்ல.
கதையின் அடிச்சட்டகம் வான்மீகியின் காப்பியத்தோடு
ஒத்திருப்பினும், அவதாரக் கோட்பாட்டை இவை ஏற்காமல், இராமனை
ஒரு குறிக்கோள் மனிதனாகத் தத்தம் மதக்கோட்பாட்டிற்கேற்ப
படைத்துக் காட்டுகின்றன. கதைகள், பாத்திரப் பெயர்கள், பாத்திரப்
பிறப்புகள், போர்முடிபுகள் எனப் பல கூறுகளில் இவை
வான்மீகத்திலிருந்து பெரிதும் மாறுபட்ட பாடுபொருளை
உடையனவாய் விளங்குகின்றன.

———-

மொல்ல ராமாயண ஆசிரியராகிய அம்மையார்,
‘இராமர் எனக்குக் கூறியவாறே நான் இந்த இராமாயணத்தைப் பாடியுள்ளேன். எனவே, இம்மை மறுமைப்
பயன்களை அடையும் சாதனமாகிய இப்புண்ணிய சரிதத்தில்
காணப்படும் குறைகளைக் கவிஞர் பெருமக்கள் எண்ணிப்
பார்க்கலாகாது’ என்று கூறும் பகுதி அவையடக்கமாக அமைகிறது.

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.-

ஸ்ரீ கம்ப ராமாயணத்தில் முக்கிய பாடல்களின் தொகுப்பு–

January 10, 2021

ஸ்ரீ கடவுள் வாழ்த்து –

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. -1)

(உளஆக்கல் – படைத்தல்; பெறுத்தல் – காப்பாற்றுதல்; அலகு இலா – அளவில்லாத)
எல்லா உலகங்களையம் தானே தனது சங்கல்பத்தால் படைப்பதையும், நிலைத்திருக்குமாறு காப்பதையும்,
அழிப்பதையும், என்றும் முடிவுறாத அளவில்லாத அழகிய விளையாட்டாக உடையவர்.
அவரே தலைவர். அப்படிப்பட்ட பரமனையே நாங்கள் சரணடைகிறோம்.

—-

காவியம் பிறந்த களம்-

நடையில் நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்ததே. (2)-

(பேர் – புகழ்மிக்க; தொடை – செய்யுள்; தோம் அறு – குற்றமற்ற; மாக்கதை – மகத்தான கதை)
நல்வழியில் நின்று உயர்ந்த நாயகனின் தோற்றமாக நிகழ்ந்தது புகழ்மிக்க இராமாவதாரம்.
அந்த மகத்தான கதையைக் கூறும் செய்யுள்கள் நிறைந்த குற்றமற்ற சிறந்த இந்தக் காவியம்,
வள்ளல் சடையனின் திருவெண்ணெய் நல்லூரில் இயற்றப்பட்டது
(காவியம் முழுவதும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தனது பெயரை எங்கும் கூறவில்லை.
தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலின் பெயரை மட்டுமே தொடக்கத்திலும் வெகுசில இடங்களிலும் கூறுகிறார்).

———-

கோசல நாட்டு வளம்-

வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்,
தீம் கவி, செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்;
ஆங்கு, அவன் புகழ்ந்த நாட்டை, அன்பு எனும் நறவம் மாந்தி,
மூங்கையான் பேசல் உற்றான் என்ன, யான் மொழியல் உற்றேன். (3)-

(வாங்க அரும் – எடுக்க முடியாத; பாதம் – அடிகள்; வகுத்த – இயற்றிய; தீம் கவி – அமுதமயமான கவி;
நறவம் – மது; மாந்தி – பருகி; மூங்கையான் – ஊமை; மொழியல் – பேசுதல்)
ஒரு சொல்லைக் கூட எடுத்து விட முடியாதபடி, நான்கு அடிகள் கொண்ட (இருபத்து நான்காயிரம்) சுலோகங்களால்
இராமாயணத்தை இயற்றினான் வான்மீகி முனிவன். தேவர்களும் தம் செவிகளே வாயாகப் பருகும்படி
இனிமையான அமுதமயமான கவிதைகளைச் செய்தான். தனது ஆதி காவியத்தில் அந்த முனிவன்
புகழ்ந்துரைத்த (கோசல) நாட்டை, அன்பு என்னும் மதுவைப் பருகி,
ஊமையே பேசத் தொடங்கி விட்டான் என்றது போல நான் பேசலானேன்.

———-

திருமால் தேவர்களுக்கு வரம் தருதல்-

‘மசரதம் அனையவர் வரமும் வாழ்வும், ஓர்
நிசரத கணைகளால் நீறு செய்ய, யாம்
கசரத துரகம் ஆள் கடல் கொள் காவலன்
தசரதன் மதலையாய் வருதும் தாரணி. (4)-

(மசரதம் – கானல் நீர்; நிசரத – குறிதவறாத; நீறு செய்ய – சாம்பலாக்க;
கச ரத துரகம் – யானை தேர் குதிரை; மதலை – மகன்; தாரணி – உலகம்).
“கானல் நீரைப் போன்ற அரக்கர்களுடைய வரங்களின் பலத்தையும் வாழ்வையும், குறிதவறாத அம்புகளால்
சாம்பலாக்கி அழிப்பதற்காக, யானை தேர் குதிரை காலாள் என்னும் கடல் போன்ற நான்கு சேனைகளையுடைய
வேந்தன் தசரதனுக்கு மகனாக, நானே உலகத்தில் வந்து அவதரிக்கிறேன்”.

———–

கோசலை இராமனைப் பெறுதல்-

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்
கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்
திரு உறப் பயந்தனள் திறம் கொள் கோசலை. (5)-

(ஒருபகல் – ஒரு காலத்தில்; உதரத்துள் – வயிற்றில்; அருமறை – வேதம்;
உணர்வு அரும் – தெரிந்து கொள்ள இயலாத; அஞ்சனம் – மை;
திருஉற – மங்கலம் நிறைந்திட, பயந்தனள் – பெற்றாள்)
ஒரு காலத்திலே, பிரளயத்தின்போது, எல்லா உலகங்களையும் தனது வயிற்றிலே அடக்கியவன்,
அரிய வேதங்களாலும் தெரிந்து கொள்ள இயலாதவன் அந்தப் பரம்பொருள். மை போன்றும்,
கருமேகம் போன்றும் அழகுடைய சோதி வடிவாய்த் திகழ்பவன். அவனை, உலகம் எங்கும் மங்கலம் நிறைந்திட,
தெய்வத்திறம் கொண்ட கோசலை தன் வயிற்றில் பெற்றெடுத்தாள்.

———

இராம லக்குமணர் வேள்வி காத்தல்-

எண்ணுதற்கு ஆக்க அரிது; இரண்டு மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற இமையில் காத்தனர். (6)-

நினைத்துப் பார்ப்பதற்கும் செய்வதற்கும் மிக அரிய செயல் இது! விசுவாமித்திர முனிவர் தேவர்களின்
பொருட்டுச் செய்த வேள்வியை, நல்லாட்சி செய்து காக்கும் மன்னனான தசரதனுடைய மைந்தர்களான
இராம இலக்குவர்கள், கண்விழியைக் காக்கும் இமைபோல, ஆறு நாட்கள் வரை காப்பாற்றினர்.

———–

விசுவாமித்திரன் இராமனைப் புகழ்தல்

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்றோர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மைவண்ணத்து அரக்கி போரில், மழைவண்ணத்து அண்ணலே! உன்
கைவண்ணம் அங்கு கண்டேன்; கால்வண்ணம் இங்கு கண்டேன். (7)-

(உய்வண்ணம் – உய்யும் வழி; மழை – மேகம்; அண்ணல் – இராமன்)
“இவ்வாறு அகலிகையின் வரலாறு முற்காலத்தில் நிகழ்ந்தது. இனிமேல் (நீ அவதரித்த பின்பு)
இந்த உலகத்து உயிர்களெல்லாம், கடைத்தேறும் வழியே அல்லாமல், அதற்கு மாறாக,
துன்பத்தின் வழியை அடைதல் கூடுமோ? மேகம் போன்ற கரிய திருமேனியுடைய இராமனே!
அங்கு வனத்தில் மை போன்று கரிய நிறம் கொண்ட தாடகை என்னும் அரக்கியோடு செய்த போரில்,
உன் கைவண்ணம் (வில்லினது ஆற்றல்) பார்த்தேன். இங்கு, கால்வண்ணம்
(அகலிகைக்கு சாபவிமோசனம் அருளிய திருவடியின் பெருமையை) பார்க்கிறேன்”.

—————

இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொள்ளுதல்-

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். (8)

(நலத்தினாள் – அழகுடையவள்; இனையள் – இவ்வாறு; நின்றுழி – நின்றபொழுது)
மனத்தால் எண்ணுவதற்கும் அரிய அழகுடைய சீதை, இவ்வாறு (கன்னிமாடத்தில்) நின்றபொழுது,
ஒருவர் கண்களோடு மற்றொருவர் கண்கள் கவர்ந்து பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று உண்ணவும்,
இருவரது சிந்தையும் நிலையழிந்து போய், ஒன்றுடன் ஒன்று கூடின.
இராமன் சீதையைப் பார்த்தான். அவளும் இராமனைப் பார்த்தாள்.

—————

இராமன் கையில் சிவ தனுசு என்னும் பெரிய வில் உடைதல்-

தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில்
மடுத்ததும், நாண் நுதி வைத்ததும், நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார். (9)-

(தாளில் – பாதத்தில்; மடுத்ததும் – மிதித்ததையும்; நுதி – முனை; நோக்கார் – பார்க்கவில்லை;
கடுப்பினில் – வேகத்தால்; அறிந்திலர் – அறியவில்லை; இற்றது – முறிந்தது)
சபையோர் யாவரும் கண் கொட்டுவதைக் கூட தவிர்த்து, இமைக்காதபடி, நிகழ்வதைப் பார்த்து நின்றனர்.
இராமன் தன் திருவடியால் அந்த வில்லின் முனையை மிதித்ததையும், அதை வளைத்து மற்ற முனையில்
நாண் ஏற்றியதையும், அந்தச் செயல் நிகழ்ந்த வேகத்தால் அவர்களால் காண முடியவில்லை.
மனத்தாலும் இன்னது தான் நிகழ்ந்தது என்று அவர்களால் அறிய முடியவில்லை.
இராமன் தன் கையால் வில்லை எடுத்ததைக் கண்டார்கள்.
அடுத்த கணம் அந்த வில் முறிந்து விழுந்த பேரொலியைக் கேட்டார்கள்!

————-

இராமன் சீதை மணக்கோலம்-

மன்றலின் வந்து மணத் தவிசு ஏறி
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார். (10)

(மன்றல் – நல்வாசம்; தவிசு – ஆசனம்; வென்றி – வெற்றி; ஆர்வத்து – அன்புகொண்ட; எய்தி – நெருக்கமாக)
நறுமணப் பொருள்களின் நல்வாசத்தோடு வந்து, திருமணத்துக்குரிய ஆசனங்களில் ஏறி, பெருமைக் குணங்களை
உடைய வெற்றிவீரனான இராமனும், அவன்மீது பேரன்பு கொண்டவளாய், அவனுக்கு இனிய துணையாக ஆகவுள்ள
அன்னம் போன்ற சீதையும் நெருக்கமாக வீற்றிருந்தார்கள். ஒன்றோடு ஒன்று இணைந்த போகத்தையும்
(பேரின்ப வாழ்வு) யோகத்தையும் (யோக நெறி) போல இருந்தார்கள்.

————-

அயோத்தியா காண்டம்
இராமன் முடிசூடுவான் என்று கேட்ட மக்களின் மகிழ்ச்சி-

‘பாவமும் அருந் துயரும் வேர் பறியும்’ என்பார்;
‘பூவலயம் இன்று தனி அன்று; பொது’ என்பார்;
‘தேவர் பகை உள்ளன இவ் வள்ளல் தெறும்’ என்பார்;
‘ஏவல் செயும் மன்னர் தவம் யாவது கொல்?’ என்பார். (11)

(பூவலயம் – பூமி; தெறும் – அழிப்பான்; யாவது கொல் – எப்படிப் பட்டதோ)
இவன் ஆட்சி செய்தால் தீவினைகளும் பெரிய துன்பங்களும் வேரோடு அழியும் என்பார் சிலர்.
இனிமேல் இந்தப் பூமி சிலருக்கு மட்டுமே தனியுரிமை அல்ல, எல்லார்க்கும் பொதுவானதாகும் என்பார் சிலர்
(இராமன் ஆளும்போது தாங்களே ஆளுவதாகக் கருதினர்). தேவர்களுக்குப் பகையான அரக்கர் கூட்டங்களை
வள்ளல் இராமன் அழிப்பான் என்பார் சிலர். இவனுக்குப் பணிபுரியும் அரசர்கள் அந்த பாக்கியத்தைப் பெற
எப்பேர்ப்பட்ட தவம் செய்தார்களோ என்பார் சிலர்.

——————–

கைகேயி ‘மன்னன் ஆணை இது’ என்று கூறுதல்-

‘ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்,
தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அரும் தவம் மேற்கொண்டு
பூழி வெங்கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி
ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன்’ என்றாள். (12)-

(ஆழி – கடல்; தாழ் இருஞ்சடைகள் – தொங்குகின்ற பெரிய சடைகள்; பூழி – புழுதி;
வெங்கானம் – கொடிய கானகம்; நண்ணி – சென்று)
கடல் சூழ்ந்த இந்த உலகம் முழுவதையும் பரதனே முடிசூடி ஆட்சி செய்வான். நீ நாட்டை விட்டுப் போய்,
சடாமுடி தாங்கி, செய்வதற்கரிய தவத்தை ஏற்று, புழுதி நிறைந்த கொடிய காட்டை அடைந்து,
புண்ணியத் தீர்த்தங்களில் நீராடி, பதினான்கு ஆண்டுகள் கழித்த பின்பு திரும்பி வரவேண்டும்
என்று அரசன் கூறினான் – இவ்வாறு கைகேயி சொன்னாள்.

————–

கைகேயி சொற்கேட்ட இராமன் நிலை-

இப்பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கில்
ஒப்பதே முன்பு பின்பு; அவ்வாசகம் உணரக் கேட்ட
அப்பொழுது, அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா! (13)

(எம்மனோரால் – எம்மைப் போன்றவர்களால்; செவ்வி – அழகு)
இப்பொழுது எம்மைப் போன்றவர்களால் சொல்லுவதற்கு எளிதோ? யாரும் சொல்லித் தீராத நற்குணங்களையுடைய
இராமனுடைய திருமுகத்தின் அழகைப் பார்த்தால், அது கைகேயி சொன்னதைக் கேட்பதற்கு முன்பும்,
கேட்ட பின்பும் ஒன்று போலவே, செந்தாமரை போலவே இருந்தது.
ஆனால், அந்தச் சொற்களைத் தெரியும்படி கேட்ட அந்த சமயத்தில், மலர்ந்த செந்தாமரையை வென்று விட்டது!

——————-

சீற்றம் கொண்ட இலக்குவனுக்கு இராமன் உரைத்தது-

‘நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான். (14)

(நறும்புனல் – நல்ல நீர்; அற்றே – அது போல; பதி – தலைவன், தந்தை; பயந்து – பெற்று;
புரந்தாள் – வளர்த்தாள்; மைந்த – மகனே; வெகுண்டது – கோபித்தது)
மகனே! என்றும் நீரோடும் நதியில் ஒரு சில காலங்களில் நல்ல நீர் இல்லாமல் வற்றிப் போவது,
அந்த நதியின் குற்றம் அன்று. அது போல, (என்னை வனவாசம் போகச் சொன்னது) நம் தந்தையின் குற்றம் அன்று.
(அப்படி வரம் வாங்கியது) நம்மைப் பெற்றுக் காப்பாற்றி வளர்த்த கைகேயியின் அறிவின் குற்றம் அன்று.
அவள் மகன் பரதனது குற்றமும் அன்று. இது விதியால் (நமது ஊழ்வினையால்) விளைந்த குற்றம்.
இந்தச் செயலுக்கு இவர்களை எல்லாம் காரணமாக்கி நீ கோபித்தது ஏன்?’ என்றான் (அன்பு மிகுதியால், தம்பியை மகனே என்றது).

————-

சீதை நானும் உடன் வருவேன் எனல்-

‘பரிவு இகந்த மனத்து ஒரு பற்றிலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு நின்
பிரிவினும் சுடுமோ பெருங்காடு?’ என்றாள். (15)

(இகந்த – இல்லாத; ஒருவுகின்றனை – விட்டுச்செல்கிறாய்; ஊழி – பிரளயம்; அருக்கன் – சூரியன்;
யாண்டையது – எங்குள்ளது; ஈண்டு – இங்கு)
பரிவில்லாத மனத்துடன், ஒரு சிறு பற்று கூட இல்லாமல், என்னை விட்டுவிட்டுச் செல்வேன் என்கிறாய்.
பிரளய காலத்துச் சூரியன் போல எரியும் இடம் எங்குள்ளது?
(காட்டிலே வெப்பம் இப்படி இருக்கும் என்று இராமன் முன்பு கூறியதைச் சுட்டுகிறாள்).
உன் பிரிவைக் காட்டிலும் அந்தப் பெரிய காடு சுடுமோ? என்றாள்.

—————

இராமன் காடு செல்வது கேட்ட மாந்தர் நிலை-

கிள்ளையொடு பூவை அழுத; கிளர் மாடத்து
உள் உறையும் பூசை அழுத; உரு அறியாப்
பிள்ளை அழுத; பெரியோரை என் சொல்ல?
வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால். (16)

(கிள்ளை – கிளி; பூவை – நாகணவாய்; பூசை – பூனை; மாற்றத்தால் – சொல்லால்)
இராமன் வனவாசம் செல்வான் என்று சொல்லிய சொல்லால், கிளியும், நாகணவாய்ப் பறவையும் (மைனா) அழுதன.
மாளிகையின் மாடங்களுக்கு உள்ளே இருந்த வீட்டுப் பூனைகள் அழுதன. வடிவத்தைப் பார்த்து அறிய மாட்டாத
சிறு குழந்தைகள் கூட அழுதன. பெரியோர்கள் அழுததைப் பற்றி என்னவென்று சொல்வது?

——————-

இராமன், சீதை, இலக்குவன் மூவரும் வனத்துக்குள் போதல்-

தையல் தன் கற்பும், தன் தகவும், தம்பியும்,
மை அறு கருணையும், உணர்வும், வாய்மையும்,
செய்ய தன் வில்லுமே சேமம் ஆகக் கொண்டு,
ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே. (17)

(தையல் – பெண், சீதை; தகவு – மேன்மை; மை – குற்றம்; உணர்வு – ஞானம்; செய்ய – நிமிர்ந்த;
சேமம் – பாதுகாப்பு; அல்லின் நாப்பண் – நள்ளிரவில்)
சீதையின் கற்பும், தனது மேன்மைப் பண்பும், தம்பியாகிய இலக்குவனும், குற்றமற்ற கருணையும்,
ஞானமும், சத்தியமும், நிமிர்ந்த தனது வில்லும் ஆகிய இவற்றையே பாதுகாவலாகக் கொண்டு
நள்ளிரவில் அந்தக் காட்டு வழியிலே ஐயன் இராமன் சென்றான்.

—————–

குகனின் ஓடத்தில் ஏறி கங்கையைக் கடத்தல்-

‘விடு, நனி கடிது’ என்றான்; மெய் உயிர் அனையானும்,
முடுகினன் நெடு நாவாய், முரி திரை நெடு நீர்வாய்;
கடிதினின், மட அன்னக் கதிஅது செல, நின்றார்
இடர் உற, மறையோரும் எரி உறு மெழுகு ஆனார். (18)

(கடிது – வேகமாக; முடுகினன் – செலுத்தினான்; நாவாய் – ஓடம்; முரி திரை – அலையடிக்கின்ற; நீர்வாய் – நீரோட்டத்தில்)
‘வேகமாக விடு’ என்று இராமன் கூற, அவனிடத்து உடம்பும் உயிரும் போன்ற நட்பை உடைய குகன்,
அலையடிக்கின்ற நீண்ட நீரோட்டத்தில் பெரிய ஓடத்தை விரைந்து செலுத்தினான். அந்த ஓடம் இளம் அன்னப்பறவை
நீரில் நீந்துவது போலச் சென்றது. கரையிலே நின்றவர்கள் பெரும் துன்பமடைந்தார்கள்.
மறையவர்கள் நெருப்பில் பட்ட மெழுகைப் போல மனம் உருகி இரங்கினார்கள்.

———————-

இராமன் வனம் சென்றது அறிந்த தசரதன் உடனே உயிர்விடுதல்-

நாயகன் பின்னும் தன் தேர்ப் பாகனை நோக்கி, ‘நம்பி
சேயனோ? அணியனோ? ‘என்று உரைத்தலும், தேர் வலானும்,
‘வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும்
போயினன் ‘என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான். (19)

(தேர்ப்பாகன் – தேரோட்டி; நம்பி – இராமன்; சேயனோ – தொலைவில் உள்ளானோ; அணியனோ – அருகில் உள்ளானோ;
தேர் வலான் – சாரதி; வேய் – மூங்கில்; கானம் – கானகம்; மிதிலைப் பொன்- மைதிலி, சீதை; போழ்தத்தே – பொழுதிலே)
தசரதன் மீண்டும் தன் தேர்ப்பாகனாகிய சுமந்திரனைப் பார்த்து, “இராமன் தொலைவில் உள்ளானா அண்மையில் உள்ளானா?”
என்று கேட்டான். “இராமன் இலக்குவனும் மைதிலியும் உடன்வர மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்துள்ள காட்டுக்கு போய்விட்டான்”
என்று அவன் கூறிய அப்பொழுதே தசரதன் உயிர் நீத்தான்.

————–

பரதன் படையுடன் வருவதைத் தொலைவில் கண்டு குகன் உரைத்த வீர உரைகள்-

அஞ்சன வண்ணன், என் ஆருயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசெய்திய மன்னரும் வந்தாரே !
செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், நாய்க்குகன் என்று எனை ஓதாரோ? (20)

(அஞ்சனம் – மை; செஞ்சரம் – சிவந்த அம்பு; உஞ்சு – உய்ந்து, தப்பித்து)
மை போலும் கரிய திருமேனி அழகன், என் ஆருயிர் நாயகன் இராமன் அரசு ஆளாதபடி, சூழ்ச்சியால் அந்த
அரசாட்சியைக் கைப்பற்றி அடைந்த மன்னர் பரதர் இதோ வருகிறார்! தீ உமிழும் எனது சிவந்த அம்புகள்
இவர்கள் மேல் செல்லாமல் போய்விடுமோ? இவர்கள் (என் அம்புக்குத் தப்பிப்) பிழைத்து
(இராமன் இருக்கும் இடத்துக்குப்) போய்விட்டால் ‘நாய்க்குகன்’ என்று உலகத்தவர்கள்
என்னைப் பற்றி சொல்லாமல் இருப்பார்களா?

———————-

பரதனின் தவக் கோலம் கண்டு குகன் மனம் உருகுதல்-

வற்கலையின் உடையானை, மாசடைந்த மெய்யானை,
நற் கலை இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை,
கல் கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்;
வில் கையினின்று இடை வீழ, விம்முற்று, நின்று ஒழிந்தான். (21)

(வற்கலை – மரவுரி; மெய்யானை – உடல் கொண்டவனை; மதி – சந்திரன்)
(அருகில் வர வர), மரவுரி ஆடையை உடுத்தி, புழுதி படிந்த உடம்புடன், நல்ல கலைகளில்லாத சந்திரன்
போல ஒளியிழந்த முகத்துடன், கல்லையும் கனியச் செய்யுமளவு துயரத்துடன் கூடிய பரதனை குகன் பார்த்தான்.
கையிலிருந்த வில் தானே சோர்ந்து கீழே விழ, துன்பத்தால் கலக்கமுற்று ஒரு செயலும் இன்றி நின்றவாறே இருந்தான்.

——————–

பரதன் இராமன் திருவடிகளை முடிமேல் சூடிச் செல்லுதல்-

அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்,
முடித்தலம் இவை என, முறையின் சூடினான்;
படித்தலத்து இறைஞ்சினன், பரதன் போயினான் –
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான். (22)

(அடித்தலம் – பாதுகை; முடித்தலம் – திருமுடி, கிரீடம்; படித்தலத்து – மண்ணில்; பொடித்தலம் – புழுதி;
பொலம்கொள் – பொன்மயமான)
இராமனின் இரண்டு பாதுகைகளையும், அழுத கண்களோடு, எனக்குத் திருமுடிகள் இவையே என்று பரதன்
முறையாகத் தலைமேல் சூடிக்கொண்டான். பின்னர், புழுதி படிந்து விளங்குகிற பொன்மயமான
திருமேனியுடைய பரதன், மண்ணில் விழுந்து வணங்கி, மீண்டும் (அயோத்திக்குச்) சென்றான்.

——————

சாப விமோசனம் பெற்ற விராதன் என்ற அரக்கன் இராமனைத் துதித்தல்-

ஆரணிய காண்டம்

தாய் தன்னை அறியாத கன்று இல்லை; தன் கன்றை
ஆயும் அறியும்; உலகின் தாய் ஆகின், ஐய!
நீ அறிதி எப்பொருளும்; அவை உன்னை நிலை அறியா;
மாயை இது என்கொலோ? வாராதே வர வல்லாய். (23)

(அடியார்க்கு) வருதற்கு அரியவர் போலிருந்து மிக எளியவர்போல் வரும் வல்லமை உடையவனே!
தன் தாயைத் தெரிந்து கொள்ளாத கன்று இல்லை. அதுபோல் தாயும் தன் கன்றை அறிந்து கொள்ளும்.
ஐயா! எல்லா உலகங்களுக்கும் தாய் ஆனதால் எல்லாப் பொருள்களையும் நீ அறிகிறாய்.
ஆனால் அப்பொருள்கள் உன் தன்மையை அறிவதில்லை. இது என்ன மாயமோ?

————–

தண்டகாரண்யத்து முனிவர்கள் அரக்கரால் ஏற்படும் அல்லலைச் சொல்லுதல்-

‘உருளுடை நேமியால் உலகை ஓம்பிய
பொருளுடை மன்னவன் புதல்வ! போக்கிலா
இருளுடை வைகலெம்; இரவி தோன்றினாய்;
அருளுடை வீர! நின் அபயம் யாம்’ என்றார். (24)

(உருளுடை – சுற்றிச் செல்லும்; நேமி – சக்கரம்; வைகல் – நாட்கள்)
எங்கும் சுற்றிச் செல்லும் ஆணைச் சக்கரத்தால் உலகம் முழுவதையும் காத்த தசரதனின் புதல்வனே,
நீக்கமுடியாத துன்பமாம் இருள் கொண்ட நாட்களை உடையவர்களாயிருக்கிறோம்.
கதிரவன் போல நீ வந்து எழுந்தருளினாய். அருளுடைய வீரனே, உனக்கு நாங்கள் அடைக்கலம் என்று (அம்முனிவர்கள்) கூறினர்.

————————–

இராமன் முனிவர்களுக்கு அபயம் அளித்துக் கூறுதல்-

‘ஆவுக்கு ஆயினும் அந்தணர்க்கு ஆயினும்,
யாவர்க்கு ஆயினும் எளியவர்க்கு ஆயினும்,
சாவப் பெற்றவரே, தகை வான் உறை
தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார். (25)

(ஆ – பசு; தகை வான் – பெருமை மிக்க விண்ணுலகம்)
“பசுக்களைக் காப்பதற்கானாலும், தவம் உடைய அந்தணர்களைக் காப்பதற்கானாலும், ஏழைகளைக் காப்பதற்கானாலும்,
எவர்களைக் காப்பதற்கானாலும், உதவி செய்து, அதனால் இறக்கப் பெற்றவர்களே விண்ணுலகில் வாழும்
தேவர்களும் தொழுது வணங்கக் கூடிய தேவர்களாவர்”.

—————

அகத்திய முனிவரை சந்தித்து ஆசி பெறுதல்-

நின்றவனை, வந்த நெடியோன் அடி பணிந்தான்;
அன்று, அவனும் அன்பொடு தழீஇ, அழுத கண்ணால்,
‘நன்று வரவு’ என்று, பல நல் உரை பகர்ந்தான்-
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான். (26)

(நெடியோன் – திருமாலாகிய இராமன்; தழீஇ – தழுவிக் கொண்டு; பகர்ந்தான் – கூறினான்; இயம்பி – கூறி; இசை – புகழ்)
அங்ஙனம் நின்ற அகத்தியரை, அங்கே வந்த இராமன் அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினான்.
அப்பொழுது, எக்காலத்தும் உள்ளதாகிய இனிய தமிழின் இலக்கணங்களைக் கூறிப் புகழ் பெற்ற அகத்திய முனிவரும்,
இன்பக் கண்ணீர் விட்டவராய் அன்பினால் தழுவிக் கொண்டு, ‘நல்வரவு’ என்று பல நல்லுரைகளை இனிதாகச் சொன்னார்.

—————–

மூக்கை இழந்த சூர்ப்பணகை கரனிடம் புலம்புதல்-

‘கண்டு நோக்கரும் காரிகையாள் தனைக்
கொண்டு போவன் இலங்கையர் கோக்கு எனா
விண்டு மேல் விழுந்தேனை, வெகுண்டு அவர்
துண்டம் ஆக்கினர் மூக்கு‘ எனச் சொல்லினாள். (27)

(காரிகையாள் – பெண்; கோக்கு – அரசனுக்கு; விண்டு – பாய்ந்து)

எங்கும் காண இயலாத அழகுடைய அப்பெண்ணை (சீதையை), இலங்கையில் வாழும் அரக்கர்க்கு
அரசனான இராவணனுக்காக எடுத்துக் கொண்டு போவேன் என்று சொல்லி, அவள் மேல் பாயக் கிளம்பிய என்னை,
அந்த இராமலக்குவர்கள் சினந்து, என் மூக்கை அறுத்தார்கள் என்று கூறினாள்.

—————

மாரீசன் இராவணனுக்கு புத்திமதி கூறுதல்-

நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார், நடை அல்லா
வாரம் கொண்டார், மற்று ஒருவற்காய் மனை வாழும்
தாரம் கொண்டார் என்று இவர் தம்மைத் தருமம் தான்
ஈரும் கண்டாய்! கண்டகர் உய்ந்தார் எவர்? ஐயா! (28)

(நாரம் – அன்பு; வாரம் – வரி; தாரம் – மனைவி; ஈரும் – அழிக்கும்; கண்டகர் – கொடியவர்)
“தம் மீது அன்பு பூண்டவர்களின் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டவர்கள், நீதி நெறிக்குப் பொருந்தாத
வரிப் பொருளைக் குடிமக்களை வருத்திப் பெற்றவர்கள், பிறர் ஒருவருக்கு உரிமையாய் அவர் இல்லத்திலே வாழும்
மனைவியை வசப்படுத்திக் கொண்டவர்கள் எனப்படும் இவர்களை தருமமே சின்னா பின்னமாக்கி அழித்து விடும்
என்று நீ அறிவாய். ஐயா, கொடியவர்கள் எவர் தப்பிப் பிழைத்துள்ளார்?’

——————–

இராமனும் சீதையும் மாயமானைப் பார்த்தல்-

நோக்கிய மானை நோக்கி, நுதி உடை மதியின் ஒன்றும்
தூக்கிலன், ‘நன்று இது ‘என்றான்; அதன் பொருள் சொல்லல் ஆகும்;
சேக்கையின் அரவு நீங்கிப் பிறந்தது, தேவர் செய்த
பாக்கியம் உடைமை அன்றோ! அன்னது பழுது போமோ? (29)-

(நுதி – கூர்மை; தூக்கிலன் – சீர்தூக்கிப் பார்க்கவில்லை; சேக்கையின் அரவு – பாம்புப் படுக்கை)
எதிரில் விழித்து நின்ற மாயமானைக் கண்டபின், இராமன் கூரிய அறிவின் துணை கொண்டு எதனையும்
சீர்தூக்கிப் பார்க்கவில்லை. “மான் மிக அழகியது” என்று தானும் கூறினான். அதன் பொருளைச் சொல்லவும் ஆகுமோ?
அரவணைத் துயிலில் இருந்து நீங்கி மண்ணுலகில் வந்து பிறந்தது தேவர்கள் ஆற்றிய புண்ணியம் அல்லவா?
அப் புண்ணியம் வீணாகிப் போகுமோ?

————-

இராமன் அம்பினால் மாய மாரீசன் கதறி வீழ்ந்து மடிதல்-

நெட்டு இலைச் சரம் வஞ்சனை நெஞ்சு உறப்
பட்டது; அப்பொழுதே பகு வாயினால்
அட்ட திக்கினும் அப்புறமும் புக
விட்டு அழைத்து ஒரு குன்று என வீழ்ந்தனன். (30)-

நெடிய இலை வடிவம் கொண்ட இராமனின் அம்பு வஞ்சகம் நிரம்பிய (மாரீசன்) நெஞ்சில் சென்று தாக்கியது.
அந்தக் கணமே, பிளவுபட்ட வாயினால் எட்டுத் திசைகளிலும் அதற்கு அப்பாலும் (சீதா லட்சுமணா என்று) கூவி
மலை விழுவது போல (தன் இயற்கை வடிவம் கொண்டு) வீழ்ந்தான்.

————

சீதையைத் தேடிவரும் இராமலக்குவரிடம் வீழ்ந்து கிடக்கும் ஜடாயு கூறுதல்-

“வடுக்கண், வார் கூந்தலாளை, இராவணன் மண்ணினோடும்
எடுத்தனன் ஏகுவானை, எதிர்ந்து, எனது ஆற்றல் கொண்டு
தடுத்தனென், ஆவது எல்லாம்; தவத்து, அரன் தந்த வாளால்
படுத்தனன்; இங்கு வீழ்ந்தேன்; இது இன்று பட்டது ‘‘ என்றான். (31)-

(வார் – நீண்ட; ஏகுவானை – செல்பவனை; அரன் – சிவபெருமான்; படுத்தனன் – வெட்டி வீழ்த்தினான்)
“மாவடுப் பிளந்தது போன்ற அழகிய கண்களையும், நீண்ட கூந்தலையும் உடைய சீதையை இராவணன் நிலத்தோடு
எடுத்துக் கொண்டு செல்லும் போது, அவனை எதிர்த்து, எனது ஆற்றலின் துணை கொண்டு,
ஆன மட்டும் தடுக்க முனைந்து போர் செய்தேன். இறுதியில் அவன் தவ வலிமை கருதிச் சிவபெருமான்
அவனுக்கு அளித்திருந்த வாளினால் என்னை வெட்டி வீழ்த்தினான். இங்கே விழுந்து விட்டேன்.
இன்று இவ்வாறு நிகழ்ந்தது” என்று (சடாயு) கூறினான்.

—————

இராமன் நீர்க்கடன் செய்ய, ஜடாயு மோட்சம் அடைதல்-

மீட்டு இனி உரைப்பது என்னே? விரிஞ்சனே முதல மேல், கீழ்,
காட்டிய உயிர்கள் எல்லாம் அருந்தின களித்த போலாம்;
பூட்டிய கைகளால், அப் புள்ளினுக்கு அரசைக் கொள்க என்று,
ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே! (32)–

(மீட்டு – இனிமேல்; விரிஞ்சனே – பிரம்மனே; பூட்டிய – இணைத்த; புள்ளினுக்கு அரசு – பறவைகளின் அரசனாகிய ஜடாயு;
ஊட்டிய – உண்ணக் கொடுத்த; ஐயன் – திருமால்)
இனிமேல் வேறு என்ன சொல்ல வேண்டும்? பிரமனை முதலாகக் கொண்டு உயர்ந்தவை தாழ்ந்தவை என்று
எடுத்துக் காட்டப் பட்ட எல்லா உயிரினங்களும் (இராமன் சடாயுவுக்குக் கொடுத்த நீர்க்கடனை) அருந்தி மகிழ்ந்தவை போலாயின.
அந்தப் பறவைகளுக்கு அரசனாகிய ஜடாயுவைக் கருதி ‘ஏற்றுக் கொள்க’ என்று கூறி, தன் கைகளை இணைத்து
இராமன் சமர்ப்பித்த அந்த நல்ல நீர், அனைத்து உயிர்களுக்கும் இறைவனாகிய திருமால் (தானே) உட்கொண்ட நீரைப் போன்றதாயிற்று.

——————

இராமனால் வதைபெற்று சாப விமோசனம் அடைந்த கபந்தன் துதி செய்தல்-

ஈன்றவனோ எப்பொருளும்? எல்லைதீர் நல் அறத்தின்
சான்றவனோ? தேவர் தவத்தின் தனிப்பயனோ?
மூன்று கவடாய் முளைத்து எழுந்த மூலமோ?
தோன்றி, அருவினையேன் சாபத் துயர் துடைத்தாய்! (33)-

(சான்றவனோ – சாட்சியோ; கவடு – கிளை, பிரிவு)
எல்லாப் பொருள்களையும் படைத்தவன் நீதானோ? முடிவில்லாத நல்ல அறத்துக்குச் சாட்சியாக இருப்பவன் நீதானோ?
தேவர்கள் மேற்கொண்ட தவத்தின் ஒப்பற்ற பயனாக இருப்பவன் நீதானோ? (பிரமன், திருமால், சிவன் என்ற)
மூன்று பிரிவாகக் கிளைத்து எழுந்த மூலப் பரம்பொருள் நீதானோ? நான் இருக்குமிடத்துக்கே நின் எளிமையால்
வந்து காட்சியளித்து, போக்குதற்கு அரிய வினையுடைய என் சாபத்தின் துன்பத்தைத் தீர்த்து விட்டாய்.

————

கிட்கிந்தா காண்டம்-
அனுமன் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளல்-

‘மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி, நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன். (34)-

(மஞ்சு – மேகம், நளிர் இரும் – குளிர்மிக்க; தேம்பா – வாடாத; கஞ்சம் – தாமரை; செய்ய – சிவந்த)
“நீலமேகம் போலத் திரண்டு அமைந்த அழகிய மேனியனே! காணும் பெண்கள் யாவர்க்கும் நஞ்சு என்று
சொல்லத் தக்கதாகி, குளிர்மிக்க பனியிலும் வாடாத தாமரை மலர்கள் போன்று சிவந்த கண்களை உடையவனே!
நான் வாயுதேவனுக்கு அஞ்சனா தேவியின் வயிற்றில் பிறந்தேன். என் பெயர் அனுமன்”.

————-

இராமனைக் கண்டு சுக்கிரீவன் வியத்தல்-

தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே,
மாறி, இப் பிறப்பில் வந்தார் மானுடர் ஆகி மன்னோ;
ஆறுகொள் சடிலத்தானும், அயனும் என்று இவர்கள் ஆதி
வேறு உள குழுவை எல்லாம், மானுடம் வென்றது ‘என்றே. (35)

(ஆறு – கங்கை; சடிலத்தான் – சடைமுடியன்; அயன் – பிரமன்)
“தேவர்களுக்கு எல்லாம் கடவுளாகிய தேவதேவனே, (திருமாலே) தம் உருவம் மாறி, இந்தப் பிறவியை எடுத்து,
மானிடர் ஆகி வந்திருக்கிறார். அதனால், கங்கையைச் சடையில் கொண்ட சிவபிரானும், பிரமனும் என்று
இவர்கள் முதலாக வெவ்வேறாக உள்ள தேவர் கூட்டத்தையெல்லாம் மனித குலம் வென்றுவிட்டது அல்லவா?” என்று தெளிந்தான்.

—————–

சுக்கீரவன் வாலியால் தனக்கு நேர்ந்த துன்பம் கூறி சரண் புகுதல்-

‘முரண் உடைத் தடக்கை ஓச்சி, முன்னவன், பின் வந்தேனை,
இருள் நிலைப் புறத்தின் காறும், உலகு எங்கும் தொடர, இக் குன்று
அரண் உடைத்தாக உய்ந்தேன்; ஆர் உயிர் துறக்கலாற்றேன்,
சரண் உனைப் புகுந்தேன்; என்னைத் தாங்குதல் தருமம் ‘என்றான். (36)-

(முரண் உடை – வலிமையுடைய; தடக்கை – பெரிய கை; ஓச்சி – ஓங்கி; காறும் – வரையிலும்;
அரண் – பாதுகாப்பு; உய்ந்தேன் – பிழைத்தேன்)
வலிமையுடைய பெரிய கையை ஓங்கிக் கொண்டு, என் அண்ணன் வாலி, அவனது உடன்பிறந்த தம்பியாகிய
என்னை இருட்டுக்கு இருப்பிடமாகிய இவ்வுலகத்திற்கு அப்புறம் வரையிலும், உலகெங்கும் பின்தொடர்ந்து துரத்த,
இம்மலையையே பாதுகாப்பாகக் கொண்டு உயிர் பிழைத்தேன். உயிரை விடுவதற்கும் முடியாதவனாகிய நான்,
உன்னைச் சரணடைந்தேன். என்னைக் காப்பாற்றுதல் உனக்குரிய தருமம் என்றான்.

——————

இராமன் சுக்கிரீவனிடம் நட்புப் பூண்டு அபயம் அளித்தல்-

‘மற்று, இனி உரைப்பது என்னே? வானிடை மண்ணில் உன்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும், உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன் கிளை எனது; என் காதல்
சுற்றம், உன் சுற்றம்; நீ என் இன் உயிர்த் துணைவன் ‘என்றான். (37)

(செற்றவர் – வருத்தியவர்; கிளை – உறவு, சுற்றம்)
சுக்கிரீவனே! மேலும் இனிச் சொல்ல என்ன இருக்கிறது? விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உன்னை வருத்தியவர்
என்னை வருத்தியவராவர். தீயவராகவே இருந்தாலும் உன்னோடு நட்புக் கொண்டவர்கள் எனக்கும் நண்பராவர்.
உன் உறவினர் எனது உறவினராவர். என் அன்புள்ள சுற்றத்தினர் உனக்கும் சுற்றத்தினராவர்.
நீ எனது இனிய உயிர் போன்ற நண்பன்’ என்றான்.

—————–

வாலி தன் மீது பட்ட அம்பில் இராம நாமத்தைப் பார்த்தல்-

மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, ‘இராமன் ‘என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களின் தெரியக் கண்டான். (38)

(மும்மை சால் – மூன்றாகப் பொருந்திய; தமர்க்கு – தம்மவர்களுக்கு; நல்கும் – அளிக்கும்;
பதத்தை – சொல்லை; இம்மை – இப்பிறவி; செம்மை – சிறப்பு)
மூன்று என்னும் தொகை பொருந்திய உலகங்கள் யாவற்றிற்கும் (வானம், பூமி, பாதாளம்) ஆதாரமாக உள்ள மந்திரத்தை,
தன்னை வழிபடும் அடியார்களுக்கு முழுவதுமாகத் தன்னையே அளிக்கும் ஒப்பற்ற சிறப்பு மிக்க சொல்லை,
இந்தப் பிறவியிலேயே எழுவகைப் பிறப்புக்களாகிய நோய் வராமல் தடுக்கும் மருந்தை,
இராமன் என்ற சிறப்புப் பொருந்திய திருநாமத்தை தன் கண்களினால் (அந்த அம்பில்) தெளிவாகப் பார்த்தான்.

——————-

வாலி இராமன் மீது குற்றம் சாட்டுதல்-

‘வீரம் அன்று; விதி அன்று; மெய்ம்மையின்
வாரம் அன்று; நின் மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று; பகை அன்று; பண்பு ஒழிந்து
ஈரம் அன்று இது; என் செய்தவாறு நீ? (39)-

இராமா! (நீ செய்த இச்செயல்) வீரம் அன்று. விதிமுறைக்கு ஒத்ததும் அன்று. உண்மையைச் சார்ந்ததும் அன்று.
உனக்கு உரிய இப்பூமிக்கு என் உடல், சுமையும் அன்று. உனக்கு நான் பகைவனும் அல்லன். (அங்ஙனமிருக்க),
நீ உன் பெருமைக் குணம் நீங்கப் பெற்று இரக்கம் இல்லாமல் இச்செயலைச் செய்தது எதற்காக?

——————

இராமன் வாலிக்கு விடையிறுத்து அறநெறியின் தன்மை கூறுதல்-

‘இனையது ஆதலின் எக்குலத்து யாவர்க்கும்
வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்;
அனைய தன்மை அறிந்தும் அழித்தனை
மனையின் மாட்சி ‘என்றான் மனு நீதியான். (40)-

(இனையது – இத்தன்மையது; வினையினால் – செயல்களால்; அனைய – அப்படிப்பட்ட)
“(நான் இதுவரை கூறியபடி) உண்மை இத்தன்மையது ஆதலால், எந்தக் குலத்தில் பிறந்தவராயினும்,
அவர்கள் எல்லோர்க்கும், மேன்மையும் கீழ்மையும் அவரவர் செய்யும் செயல்களாலேயே வரும்.
(வானர குலத்தில் பிறந்திருந்தாலும், உனது பெரும் அறிவால்) அதை நீ நன்கு உணர்ந்திருந்தும்,
பிறன் மனைவியின் கற்பு மாண்பினை அழித்தாய்” என்று உரைத்தான், மனு நீதியில் தவறாதவனாகிய இராமன்.

—————

பிழையுணர்ந்த வாலி இராமாவதார தத்துவத்தை சுக்கிரீவனுக்கு உணர்த்துதல்-

‘மறைகளும், முனிவர் யாரும், மலர் மிசை அயனும், மற்றைத்
துறைகளின் முடிவும், சொல்லும் துணிபொருள், தனி வில் தாங்கி,
அறை கழல் இராமன் ஆகி, அற நெறி நிறுத்த வந்தது;
இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி; எண்ணம் மிக்கோய்! (41)

(துறைகளின் – சாத்திரங்களின்; அறைகழல் – ஒலிக்கின்ற கழல் [கழல் என்பது ஆடவர் காலில் அணிவது];
இறை – சிறிதும்; சங்கை – சந்தேகம்)

வேதங்களும், எல்லா முனிவர்களும், தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனும், மற்ற சாத்திரங்களின் முடிபுகளும்
தேர்ந்து சொல்லுகின்ற பரம்பொருள், (பகைவரைத்) தண்டிக்கும் வில்லை ஏந்திக் கொண்டு, ஒலிக்கின்ற கழலணிந்த இராமனாக,
உலகில் அறநெறியை நிலை நிறுத்துவதற்காக அவதரித்துள்ளது. ஆலோசனையில் சிறந்தவனே!
இந்த உண்மையை ஒரு சிறிதும் சந்தேகம் இல்லாமல் மனத்தில் கொள்வாய்.

————-

அங்கதனை இராமன் ஏற்றுக் கொள்ள வாலி பரமபதம் அடைதல்-

தன் அடி தாழ்தலோடும் தாமரைத் தடங்கணானும்,
பொன் உடை வாளை நீட்டி, ‘நீ இது பொறுத்தி ‘என்றான்;
என்னலும், உலகம் ஏழும் ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான். (42)

(தாழ்தலோடும் – வணங்கியதும்)
(அங்கதன்) தன் திருவடிகளில் விழுந்து வணங்கிய அளவில் தாமரைக் கண்ணனாகிய இராமன்
(அவனை அடைக்கலமாகக் கொண்டதற்கு அறிகுறியாக) தனது அழகிய உடைவாளை நீட்டி,
‘நீ இதனை ஏற்றுக் கொள்வாய்’ எனப் பணித்தான்; ஏழுலகங்களும் இராமனைத் துதித்தன.
வாலி தனது பூத உடலை விட்டு, இறந்து, வானுலகிற்கும் அப்பாற்பட்டதான உயர்ந்த மோட்சத்தை அடைந்தான்.

—————

சுந்தர காண்டம்-கடவுள் வாழ்த்து-

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப்பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால்? அவர், என்பர் – கைவில் ஏந்தி,
இலங்கையில் பொருதார்; அன்றே, மறைகளுக்கு இறுதி யாவார்! (43)

(அலங்கல் – மாலை; அரவு – பாம்பு; விகாரப்பாட்டின் – வேறுபாடுகளின்; வீக்கம் – தோற்றம்; பொருதார் – போர் செய்தார்)
பூ மாலையில் (காணும்போது மதிமயக்கத்தால் உண்டாகும்) பொய்ப் பாம்பின் தோற்றம் மறைவது போல,
ஒன்றோடொன்று ஊடுருவிக் கலந்த ஐந்து பூதங்களும் வேறு வேறு விதமாக அமைந்த பிரபஞ்சத்தின் பன்மைத் தோற்றம்
எவரைத் தரிசித்தால் மறைந்து போகுமோ, அவரன்றோ கையில் வில்லேந்தி இலங்கையில் போர் செய்தார் ! – என்று
வேதத்தின் எல்லை நிலமாக இருக்கின்ற ஞானிகள் கூறுவர் (உயர்ந்த ஞான நிலையில், வேறுவேறாகத் தோன்றும்
பிரபஞ்சத்தின் மாயைத் தோற்றம் மறைந்து பிரம்மம் ஒன்றே சத்தியம் என்னும் உணர்வு ஏற்படும்.
இந்த வேதாந்த தத்துவக் கருத்தையே இப்பாடலில் கம்பர் அழகுறக் கூறுகிறார்).

———–

அசோகவனத்தில் சீதையின் நிலை-

வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள்;
கல் மருங்கு எழுந்து, என்றும் ஓர் துளிவரக் காணா
நல்மருந்து போல், நலன் அற உணங்கிய நங்கை
மென் மருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்தாள். (44)

(மருங்குல் – இடை; வாள் அரக்கியர் – கொடிய அரக்கியர்கள்; மருங்கு – பக்கத்திலே; உணங்கிய – வாடிய)
பருத்த இடையை உடைய கொடிய அரக்கியர்கள் துன்புறுத்த, சீதை அசோக வனத்தில் இருந்தாள்.
கற்பாறைக்குப் பக்கத்திலே தோன்றி வளர்ந்து, எக்காலத்திலும் ஒரு நீர்த்துளி கூட வருவதை அறியாத
உயர்ந்த மூலிகையைப் போல, உடலும் உள்ளமும் அற்றுப்போக வாடிய பிராட்டி, மெல்லிய இடையைப் போல,
மற்றைய அங்கங்களும் இளைத்து விடும்படி துயருற்று இருந்தாள்.

————

தன்னை ஏற்குமாறு மன்றாடிய இராவணனிடம் சீதை துரும்பை முன்வைத்துக் கடிந்து பேசுதல்-

மல்லொடு திரள்தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம்
‘கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம் கற்பின்மேல் கண்டது உண்டோ?
இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல, வெய்ய
சொல்; இது தெரியக் கேட்டி! துரும்பு! ‘எனக் கனன்று சொன்னாள். (45)

(மல் அடு – மல்லர்களை அழிக்கும்; இல் – நற்குடிப் பிறப்பு; ஏய்வன – ஏற்றவை; வெய்ய – கொடுமையான; கேட்டி – கேள்)
மல்லர்களை அழிக்கும் திரண்ட தோள்களையுடைய வஞ்சகனான இராவணனின் உள்ளம் வேறுபாடு
அடையும்படி சீதை சினந்து பேசினாள் – “ஏ துரும்பே! கல்போன்று உறுதிகொண்ட மகளிர் மனம்,
கற்பைவிடச் சிறந்ததாக வேறு ஒன்றை மதித்தது உண்டா? (உன்னுடைய பசப்பு வார்த்தைகள்)
நற்குடிப் பெண்களுக்கு (நினைப்பதற்கும்) ஏற்க முடியாத கொடுஞ்சொற்கள் ஆகும். உள்ளம் உணர இவ்வார்த்தைகளைக் கேள்”.

————–

இராமன் தூதனாக வந்து ஆறுதல் தந்த அனுமனை சீதை வாழ்த்துதல்-

‘மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூதாய்ச்
செம்மையால் உயிர் தந்தாய்க்குச் செயல் என்னால் எளியது உண்டே?
அம்மை ஆய் அப்பன் ஆய அத்தனே! அருளின் வாழ்வே!
இம்மையே மறுமை தானும் நல்கினை இசையோடு ‘என்றாள். (46)

(மும்மை – மூன்று; அத்தனே – தெய்வமே; நல்கினை – கொடுத்தாய்; இசையோடு – புகழோடு)
மூன்று உலகங்களையும் படைத்த முன்னோன் ஆகிய பிரம்மதேவனுக்கும் தந்தையாகிய இராமபிரானின் தூதுவனாய் வந்து,
நிறைவு பெற்ற பண்பினாலே எனக்கு உயிரை வழங்கினாய். (சிறையிலிருக்கும்) என்னால் உனக்குச் செய்வதற்கு
எளிமையான உதவியும் உள்ளதா? அம்மையும் அப்பனும் தெய்வமும் போன்றவனே! அருளுக்கு வாழ்வைத் தருபவனே!
நீ இப் பிறப்பிலேயே மறுமை வாழ்வையும் புகழுடன் வழங்கினாய் என்று பிராட்டி கூறினாள்.

————–

கடலைக் கடந்து வந்தது எப்படி என்று வியப்புடன் கேட்ட சீதைக்கு அனுமன் கூறிய பணிவு மொழி

அண்ணல் பெரியோன், அடி வணங்கி, அறிய உரைப்பான்: ‘அருந்ததியே!
வண்ணக் கடலின் இடைக் கிடந்த மணலின் பலரால், வானரத்தின்
எண்ணற்கு அரிய படைத்தலைவர், இராமற்கு அடியார்; யான் அவர்தம்
பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன்; ஏவக்கடவ பணிசெய்வேன் (47)-

(வண்ணக் கடல் – அழகிய கடல்; பண்ணைக்கு ஒருவன் – வேலைக்காரர் கூட்டத்தில் ஒருவன்)
பெரியோனாகிய அனுமன், சீதைப் பிராட்டியின் திருவடிகளிலே வணங்கிக் கூறினான் –
“அருந்ததி போன்ற பெருமையுடைய அன்னையே! அளவிட முடியாத வானரப்படைத் தலைவர்கள் இராமபிரானின் அடியார்கள்.
அவர்கள் இந்த அழகிய கடலிலே கிடக்கின்ற மணலினும் பலராவர். அவர்களுடைய கூட்டத்துக்கு ஒரு வேலைக்காரன்
என்ற அளவில் நான் இங்கு வந்தேன். ஏவும் பணியையும் கூவும் பணியையும் செய்யும் ஒரு சாதாரணத் தொண்டன் நான்”.

—————–

சீதை அனுமனிடம் கூறியது-

அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன். (48)-

(அல்லல் – துன்பம்; மாக்கள் – விலங்குகள்; ஆற்றற்கு – ஆற்றலுக்கு; மாசு – களங்கம்; வீசினேன் – விலக்கினேன்)
(இந்த நகரமே எலும்பு மலையாகப் போகும்) துன்பம் விலங்கு போன்ற அரக்கர்கள் வாழும் இலங்கையுடன் நின்று விடுமா?
(அறத்தின்) வரம்பைக் கடந்து போகும் எல்லா உலகங்களையும், என்னுடைய சொல்லினாலேயே சுட்டெரித்து விடுவேன்.
அவ்வாறு செய்வது தூயவனாகிய இராமனின் வில்லினுடைய வலிமைக்கு களங்கம் உண்டாக்கும் என்று
கருதியே அப்படிச் செய்யாமல் இருக்கிறேன்.

————-

சீதை இராமனுக்குத் தெரிவிக்குமாறு அனுமனிடம் கூறியது-

வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்
‘இந்த இப் பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் ‘என்ற செவ் வரம்
தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்! (49)

(வைகல்வாய் – உடன் உறையும் காலத்தில்; வார்த்தை – செய்தி; சாற்றுவாய் – சொல்லுவாய்)
(மிதிலைக்கு) வந்து என்னைக் கைப்பிடித்து மணம் செய்து உடன் உறைகின்ற காலத்தில், இந்தப் பிறவியில்
இரண்டாவது பெண்ணை மனத்தாலும் தீ்ண்ட மாட்டேன் என்ற செம்மையான வரத்தை உறுதிமொழியாகத்
தந்த செய்தியை இராமன் திருச்செவியில் சொல்வாயாக.

————–

சீதையைப் பிரிந்து இராமன் படும் துயரத்தை அனுமன் கூறுதல்-

மத்துறு தயிர் என வந்து சென்று, இடை
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்து, நின் பிரிவினில் பிறந்த வேதனை,
எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ? (50)

(தத்துறும் – தத்தளிக்கும்; தள்ளுறும் – வீழ்த்தும்; எண்ணும் ஈட்டவோ – அளவிடும் தன்மை உள்ளனவோ)
மத்தால் கடையப்படும் தயிர் போல, உடலுக்குள் வந்தும் வெளியே சென்றும் தத்தளிக்கிறது அவனது உயிர்.
அந்த உயிருடனே, ஐந்து புலன்களையும் வீழ்த்துகின்ற பித்து நிலையும், நின் பிரிவாலே தோன்றிய
வேதனையும் எவ்வளவு? அதை அளவிட்டுச் சொல்ல முடியுமோ?

————–

சீதை அடையாளமாகத் தனது சூடாமணியைத் தருதல்-

‘சூடையின் மணி கண்மணி ஒப்பது தொல்நாள்
ஆடையின்கண் இருந்தது பேர் அடையாளம்
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை! நல்லோய்!
கோடி! ‘என்று கொடுத்தனள் மெய்ப்புகழ் கொண்டாள். (51)

(சூடையின் மணி – சூடாமணி, நெற்றிச்சுட்டி; தொல்நாள் – நீண்ட நாட்களாக; நல்கினை – வழங்கினாய்;
நல்லோய் – சிறந்தவனே; கோடி – எடுத்துக் கொள்)
“சிறந்தவனே! கடல் தாண்டி நாடி வந்து, (போவதற்கிருந்த) என் இன்னுயிரை வழங்கினாய்.
என் கண்மணி போன்ற இந்தச் சூடாமணி, நீண்ட நாட்களாக என்னுடைய ஆடையில் பொதிந்து வைக்கப் பெற்றது.
எனது அன்பின் பேரடையாளமாக இதை இராமனுக்கு எடுத்துச் செல்வாய்” என்று கூறி உண்மையான
புகழைக் கொண்ட சீதை சூடாமணியை அனுமனிடம் வழங்கினாள்.

———–

அனுமன் வாலில் தீமூட்ட, இலங்கை முழுவதும் தீப்பற்றி எறிதல்-

நீல் நிற நிருதர், யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க,
பால் வரு பசியன், அன்பான் மாருதி வாலைப் பற்றி,
ஆலம் உண்டவன், அன்று ஊட்ட, உலகு எலாம் அழிவின் உண்ணும்,
காலமே என்ன, மன்னோ கனலியும் கடிதின் உண்டான். (52)

(நீல்நிற – கருநிற; நிருதர் – அரக்கர்; யாண்டும் – எங்கும்; பால்வரு பசியன் – மிகுந்த பசியுடையவன்;
ஆலம் – நஞ்சு; கனலி – அக்கினி; கடிதின் – வேகமாக)
கருநிறத்து அரக்கர்கள் நெய் சொரிந்து செய்யும் யாகங்களை எங்கும் செய்ய விடாமல் நீக்கி விட்டதனால்,
அக்கினி தேவன் மிக்க பசி உடையவனாக இருந்தான். அன்று, மாருதியின் வாலை அன்புடன் தனக்கு
ஆதாரமாகப் பற்றிக் கொண்டு, நஞ்சை உண்ட சிவபெருமானின் ஏவலால், ஊழி (பிரளயம்) முடிவில்
உலகம் முழுவதையும் எரிக்கின்ற காலத்தைப் போல, இலங்கை நகரை விரைவாக உண்டு எரித்து அழித்தான்.

—————

திரும்பி வந்த அனுமன் இராமனிடம் கண்டேன் சீதையை என்று கூறுதல்-

‘கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்’ என்று, அனுமன் பன்னுவான்; (53)

(அணி – ஆபரணம்; தெண் திரை – தெளிந்த, சுருண்ட; அண்டர் – தேவர்கள்; துறத்தி – நீக்கிவிடு;
பண்டு உள- முன்புள்ள; பன்னுவான் – கூறுவான்)
“கண்டேன்! கற்பிற்கு ஒரு ஆபரணம் போன்ற சீதையை, தெளிந்த சுருண்ட அலைகளுடன் கூடிய
கடல் சூழ்ந்த இலங்கை என்ற தென்திசை நகரத்தில்,
என் கண்களாலேயே கண்டேன். தேவர்களின் நாயகனே! இனிமேல், உனது சந்தேகத்தையும்,
இதுவரை பட்ட துன்பங்களையும் நீக்கிவிடு” என்று அனுமன் மேலும் விரித்துக் கூறலானான்.

——————

இராமனின் கணையாழி கண்டு சீதை உயிர்பெற்று வந்ததை அனுமன் கூறுதல்

‘அறிவுறத் தெரியச் சொன்ன, பேர் அடையாளம் யாவும்,
செறிவுற நோக்கி, நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை
முறிவு அற எண்ணி, வண்ண மோதிரம் காட்ட, கண்டாள்;
இறுதியின் உயிர்தந்து ஈயும் மருந்து ஒத்தது, அனையது – எந்தாய் ! (54)

(திருக்கம் – மாறுபாடு; இன்மை – இல்லாமை; முறிவு அற – குழப்பமின்றி)
“எம் தலைவனே! பிராட்டி அறியும்படி அடியேன் தெளிவாகச் சொன்ன
அடையாளங்களை எல்லாம் பொருத்தமாகப் பார்த்து, அடியேன் மனத்தில் குழப்பம் ஏதும் இல்லை என்பதை
நன்றாக யோசித்து, அழகிய (உனது) மோதிரத்தை நான் காட்ட, பார்த்தாள். அந்த மோதிரம், முடிவுக் காலத்திலும்
உயிர் போகாதபடி நிலை நிறுத்திக் காக்கின்ற சஞ்சீவினி என்ற மருந்தைப் போன்று அவளுக்கு
ஆறுதலும் நம்பிக்கையும் அளித்தது” என்று அனுமன் கூறினான்.

———–

யுத்த காண்டம்-

சரணடைந்த வீடணனை ஏற்றுக் கொள்வதே அறம் என இராமன் கூறுதல்

இடைந்தவர்க்கு, “அபயம் யாம் “ என்று இரந்தவர்க்கு, எறிநீர் வேலை
கடைந்தவர்க்கு, ஆகி, ஆலம் உண்டவற் கண்டிலீரோ?
உடைந்தவர்க்கு உதவான் ஆயின், உள்ளது ஒன்று ஈயான் ஆயின்,
அடைந்தவர்க்கு அருளான் ஆயின், அறம் என் ஆம்? ஆண்மை என் ஆம்? (55)

(இடைந்தவர்க்கு – ஓடி வந்தவர்க்கு; இரந்தவர்க்கு – கெஞ்சியவர்க்கு; எறீநீர் வேலை – அலைபாயும் கடல்;
ஆலம் – நஞ்சு; கண்டிலீரோ – கண்டதில்லையா; ஈயான் – தரமாட்டான்)

அலைபாயும் பாற் கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சுக்கு அஞ்சி ஓடி வந்தவர்களும், நாங்கள் உனக்கு
அடைக்கலம் என்று கெஞ்சியவர்களும் ஆன தேவாசுரர்களுக்காக, அந்த நஞ்சைத் தான் உண்டு,
அவர்களைக் காத்த சிவபிரானை நீங்கள் கண்டதில்லையா? தோல்வியால் சிதைந்து உடைந்தவர்களுக்கு
உதவவில்லை என்றால், தன்னிடம் உள்ள பொருளைக் கேட்டு வந்தவர்களுக்குத் தரவில்லை என்றால்,
அடைக்கலம் என்று வந்தவர்களுக்குக் கருணை காட்டி அருள் செய்யவில்லை என்றால்,
அறத்தால் என்ன பயன்? ஆண்மையால் என்ன பயன்?

————

வீடணனோடு சேர்த்து தனக்கு ஏழு சகோதரர்கள் என இராமன் கூறுதல்-

‘குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின், குன்று சூழ்வான்
மகனொடும், அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை.’ (56)

(ஆனேம் – ஆனோம்; எம்முழை – எம்மிடத்தில்; அகன் அமர் காதல் – நெஞ்சம் நிறைந்த அன்பு; நுந்தை – உனது தந்தை)
குகனுடன் சேர்த்து நாங்கள் ஐந்து பேர் சகோதரர்கள் ஆனோம். இது முன்பு நிகழ்ந்தது. அதன் பின்னர்,
மேருமலையைச் சுற்றிவரும் சூரியனது மகனான சுக்கிரீவனுடன் சகோதரர் ஆறுபேர் ஆனோம்.
உள்ளத்திலே நிறைந்த அன்பு கொண்டு எங்களிடம் வந்த விபீஷணா, உன்னுடன் சேர்த்து சகோதரர்கள் ஏழுபேர் ஆயினோம்.
எவரும் புகுதற்கரிய கானக வாழ்க்கையை எனக்குத் தந்து, உனது தந்தை தசரதன் புதல்வர்களால் நிறைவு பெற்றுவிட்டான்!

————-

வானரர்கள் கடலில் சேது (அணை) கட்டுதல்-

மலை சுமந்து வருவன வானரம்,
நிலையில் நின்றன, செல்ல நிலம் பெறா –
அலை நெடுங் கடல் அன்றியும், ஆண்டுத் தம்
தலையின்மேலும் ஒர் சேது தருவ போன்ம். (57)

(நிலம் பெறா – இடமில்லாததால்; தருவ – அமைத்தது; போன்ம் – போல)
அணை கட்டுவதற்காக மலைகளைச் சுமந்து கொண்டு வரும் வானரங்கள், (வானரக் கூட்டத்தின் மிகுதியினால்)
செல்லுதற்கு அங்கு இடம் இல்லாமையால் மலைகளைச் சுமந்து கொண்டு அசையாமல் நின்ற தோற்றம்,
அலைகள் வீசும் பெரிய கடலில் மட்டுமல்லாது, தங்கள் தலைகளின் மீதும் ஒரு சேது அமைத்தது போலக் காணப் பட்டது.

—————

போருக்கு முன் இராமனின் தூதனாகச் சென்ற அங்கதன் இராவணனிடம் கூறுதல்-

‘பூத நாயகன், நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன், அப் பூமேல்
சீதை நாயகன், வேறு உள்ள தெய்வ நாயகன், நீ செப்பும்
வேத நாயகன், மேல் நின்ற விதிக்கு நாயகன் தான் விட்ட
தூதன் யான்; பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன் ‘என்றான். (58)

“(என் தலைவனாகிய இராமபிரான்) ஐம்பூதங்களுக்கும் தலைவன். (அந்த ஐம்பூதங்களுக்குள், நீ வாழ்கிற)
கடல் சூழ்ந்த இம் மண்ணுலகிற்கும் தலைவன். அழகிய தாமரை மலர்மேல் வாழும் சீதையின் நாயகன்.
வேறே உள்ள தெய்வங்களுக்கும் அவன் நாயகன். நீ ஓதும் அந்த வேதங்களுக்கும் அவனே தலைவன்.
இனிமேல் நீ பட உள்ள விதியின் விளைவுகட்கும் அவனே தான் தலைவன்.
இத்தகையவன் உனக்கு அனுப்பியுள்ள தூதன் நான். அவன் உன்னிடம் உரைக்கச் சொன்னதைக்
கூறிவிட்டுப் போக இங்கே வந்தேன்” என்றான்.

—————

முதற்போரில் அனைத்தையும் இழந்து நின்ற இராவணனை இராமன் விடுவித்தல்-

‘ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா ‘என நல்கினன் – நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். (59)

(மாருதம் – பெருங்காற்று; பூளை – பூளைப்பூ; கமுகு – பாக்கு மரம்)
அரக்கரை ஆள்கின்ற ஐயா, உனக்குத் துணையாக அமைந்த படைகள் அனைத்தும் பெருங்காற்றால் தாக்கப்பட்ட
பூளைப் பூக்களைப் போல சிதைந்து போனதைக் கண்டாய். இன்று போய்ப் போருக்கு நாளை வா என்று
(இராவணனுக்கு) அருள் புரிந்து விடுத்தான் – (யார் என்னில்) மிகவும் இளைய கமுக மரத்தின்மீது
வாளை மீன்கள் தாவிப் பாயும் (நிலம், நீர்வளம் மிக்க) கோசல நாட்டுக்கு உரிய வள்ளலாகிய இராமபிரான்.

—————-

கும்பகர்ணன் சாகும் தறுவாயில் இராமனை வேண்டுதல்-

நீதியால் வந்ததொரு நெடுந்தரும நெறியல்லால்
சாதியால் வந்த சிறு நெறி அறியான், என் தம்பி;
ஆதியாய்! உனை அடைந்தான்; அரசர் உருக்கொண்டு அமைந்த
வேதியா! இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன். (60)

“நீதிமுறைப்படி வந்த சிறந்த தரும நெறி அல்லாது, சாதிப் பிறப்பினால் உண்டான சிறு நெறியை
அறியாதவன் என் தம்பி விபீஷணன். அதனால் தான் உன்னை அடைக்கலமாக அடைந்தான்.
முழு முதலே! உலகில் அரசர் வடிவு கொண்டு வந்தவனே! வேதங்களால் புகழப் படுகின்றவனே!
மீண்டும் அவனை உனக்கு அடைக்கலப் பொருளாகக் கொண்டு நீ காக்க வேண்டும் என்று நான் வேண்டுகின்றேன்”.

————–

கருடனின் வருகையால் நாக பாசத்திலிருந்து இராம லக்குமணர் விடுபட்டவுடன், கருடன் இராமனைத் துதித்தல்-

சொல் ஒன்று உரைத்தி; பொருள் ஆதி; தூய மறையும் துறந்து, திரிவாய்;
வில் ஒன்று எடுத்தி; சரம் ஒன்று எடுத்தி; மிளிர் சங்கம் அங்கை உடையாய்;
கொல் என்று உரைத்தி; கொலையுண்டு நிற்றி; கொடியாய்! உன் மாயை அறியேன்;
அல் என்று நிற்றி; பகல் ஆதி – ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? (61)-

(உரைத்தி – சொல்லப் படுகிறாய்; ஆதி – ஆகிறாய்; துறந்து – கடந்து; சரம் – அம்பு; சங்கம் – சங்கு;
அங்கை – அழகிய கை; நிற்றி – நிற்கிறாய். அல் – இருள், இரவு; அதிரேக மாயை – மிகுந்த மாயை)

(நாதவடிவான) சொற்களாகவும், அவற்றின் பொருளாகவும் நீயே இருக்கின்றாய். தூய்மையான வேதங்களையும்
கடந்து விளங்குகிறாய். (அறத்தை நிலை நிறுத்துதற்காக) வில்லையும் அம்பையும் எடுத்திருக்கிறாய்.
அழகிய கைகளில் ஒளி பொருந்திய சங்கை (பாஞ்சசன்னியம்) ஏந்தியவனும் நீயே. (தீயவர்க்குப் பகைவனாய் இருந்து)
கொல்லுக என்று சொல்லுகிறாய். (நீயே பகைவராய் இருந்து) கொல்லப்பட்டுக் கிடக்கிறாய்.
(இவ்வாறு) கொடிய முரண்கள் கொண்ட பரம்பொருளே! உனது மாயச் செயல்களை எவ்வகையிலும்
என்னால் அறிய முடியவில்லை. இரவாகவும், பகலாகவும் நீயே தோன்றுகின்றாய்.
மிகுந்த இந்த மாயச் செயலை யார் தான் அறிவார்கள்?

———–

வானில் மருத்து மலையை எடுத்துச் செல்லும் அனுமனை சிவனும் பார்வதியும் வாழ்த்துதல்-

‘என், இவன் எழுந்த தன்மை? ‘ என்று, உலகு ஈன்றாள் கேட்ப
‘மன்னவன் இராமன் தூதன் மருந்தின் மேல் வந்தான்; வஞ்சர்
தென் நகர் இலங்கைத் தீமை தீர்வது திண்ணம்; சேர்ந்து,
நல் நுதல்! நாமும் வெம்போர் காணுதும், நாளை ‘என்றான். (62)

“இவன் வான்வழி எழுந்து செல்வதற்கு யாது காரணம்?” என்று உலகத்தை ஈன்ற உமையவள் கேட்க,
“மன்னவன் இராமனின் தூதனாகிய அனுமன் இவன். மருந்தைக் கொண்டு போக வந்திருக்கின்றான்.
தென் இலங்கையின் வஞ்சக அரக்கரால் உளதாகிய தீமை இனித் தீர்வது திண்ணம். அழகிய நெற்றியுடையவளே!
நாளை நாமும் (தேவர்களுடன் சேர்ந்து வானிலிருந்து) கொடிய போரைக் காண்போம்” என்று (சிவபிரான்) கூறினான்.

——————

இறுதிப் போரில் இராமன் அம்பினால் இராவணன் வீழ்ந்து மடிதல்-

முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும், முதல்வன் முன்நாள்,
‘எக்கோடி யாராலும் வெலப்படாய் ‘ எனக்கொடுத்த வரமும், ஏனைத்
திக்கோடும் உலகு அனைத்தும் செருக் கடந்த புய வலியும், தின்று, மார்பில்
புக்கு ஓடி உயிர்பருகி, புறம் போயிற்று, இராகவன்தன் புனித வாளி. (63)-

(எக்கோடி – எந்த வரிசையிலும்; திக்கோடும் – திசைகளோடும்; புயவலி – தோள் ஆற்றல்;
புக்கு – புகுந்து; புறம் – வெளியே; வாளி – அம்பு)
(இராவணனுடைய) மூன்று கோடி ஆயுளையும், முயன்று பெற்றிருந்த பெரிய தவப் பயனையும்,
பிரமன் முற்காலத்தில் ‘(முப்பத்து முக்கோடி தேவர்களில்) எந்த வரிசையைச் சேர்ந்தோர் ஆனாலும்
அவர்களால் நீ வெல்லப்பட மாட்டாய்’ என்று தந்த வரத்தையும், மற்றும் திசைகளையும், உலகங்கள்
எவற்றையும் போரால் வென்ற தோள் ஆற்றலையும் உண்டு விட்டு, (இராவணனுடைய) மார்பில் நுழைந்து,
உடல் எங்கும் சுழன்று ஓடி, உயிரைப் பருகிவிட்டு வெளியே சென்றது இராகவன் செலுத்திய
புனிதம் நிறைந்த அம்பு (பிரம்மாத்திரம்)!

———–

சிறையிலிருந்து மீண்டு வரும் சீதையை இராமன் காணுதல்-

கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,
பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை
தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை,
அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான். (64)

(காப்பினை – வாழ்விடத்தை; பொற்பு – அழகு; போலியை – போன்றவளை; அற்பின் – அன்பினால்)
கற்பு என்னும் குணநலத்துக்கு அரசாகவும், பெண்மைக் குணங்களுக்கு வாழ்விடமாகவும்,
அழகிற்கு அழகாகவும் விளங்குகின்றவளை, (தனது மற்றும் தன் நாயகனது) புகழை இவ்வுலகில் வாழும்படி
நிலை நிறுத்திய தேவியை, தனி நாயகனாகிய தன்னைப் பிரிந்து உயிர்களுக்கு நல்லருள் செய்யும்
தருமம் போன்ற சீதையை, அந்தத் தலைவனாகிய இராமனும், அன்பினால் நன்றாகப் பார்த்தான்.

———-

தீக்குளித்து வந்த சீதையை வானில் தோன்றி தேவர்களும் தசரதனும் வாழ்த்துதல்

“பொன்னைத் தீயிடைப் பெய்தல் அப்பொன்னுடைத் தூய்மை
தன்னைக் காட்டுதற்கு” என்பது மனக்கொளல் தகுதி;
உன்னைக் காட்டினன், ‘கற்பினுக்கு அரசி‘ என்று, “உலகில்
பின்னைக் காட்டுவது அரியது“ என்று எண்ணி இப்பெரியோன். (65)

பொன்னை நெருப்பில் போடுவது பொன்னைச் சொக்கத் தங்கம் என உலகிற்குக் காண்பிப்பதற்காகத் தான்
என்று மனத்தில் நினைத்தலே தகுதி. (அதுபோல) குணங்களால் உயர்ந்த இந்த இராமன்,
உலகத்தில் (இச்சமயம் தவறினால்) பிறகு தெளிவித்தல் இயலாது என்று கருதியே
உன்னை ‘கற்பிற் சிறந்தவள்’ என்று (இந் நிகழ்ச்சியால்) தெளிவித்தான்.

—————

அயோத்தியில் இராமன் திருமுடி சூடிய காட்சி (பட்டாபிஷேகம்)

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச,
விரைசெறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மௌலி. (66)

அரியணையை அனுமன் காத்து நிற்க, அங்கதன் உடை வாளை ஏந்தி நிற்க,
பரதன் வெண் கொற்றக் குடையைப் பரதன் பிடித்து நிற்க, இலக்குவன் சத்துருக்கன் இருவரும் கவரி வீச,
மணம் கமழும் கூந்தலை உடைய சீதை பெருமிதமாய் விளங்க, சடையனின் கால் வழியின் முன்னோராக
உள்ளோர் எடுத்துக் கொடுக்கப் பெற்றுக் கொண்டு, வசிட்ட முனிவனே மகுடத்தை சூட்டினான்.
(தன்னை ஆதரித்த திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலை, நன்றி மறவாமல்,
ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறை பத்து இடங்களில் கம்பர் குறிப்பிடுகின்றார். அதில் முக்கியமானது இது).

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ இராமகாதை நுவலப்படும் பிற நூல்கள்

January 9, 2021

ஸ்ரீ இராமகாதை நுவலப்படும் பிற சமஸ்கிருத நூல்கள்

1.ஸ்ரீ மகாபாரதம் : (நான்கிடங்களில்)

ஆரணிய பருவம் 147:28-38; 252-275
துரோண பருவம் 59:1-31
சாந்தி பருவம் 22;51-62
ஏறக்குறைய 700 பாடல்களில் இராமகாதை குறிக்கப்படுகிறது.

2.ஸ்ரீ புராணங்கள் : (முதன்மையானவை)

1. விஷ்ணு புராணம் (கி.பி. 4) ( IV, 4,5)
2. பிரும்மானந்த புராணம் (கி.பி. 4) (2. 21)
3. வாயு புராணம் (கி.பி. 5) ( II.26) விஷ்ணு புராணம் போன்றது.
4. பாகவத புராணம் (கி.பி. 6) (IX 10-11) இங்குதான் சீதை
திருமகளின்அவதாரம் என்னும் செய்தி முதலில் கூறப்படுகிறது.
5. கூர்ம புராணம் (கி.பி. 7) (.19: 1; II 34)
6. அக்கினி புராணம் (கி.பி. 8-9) (.5-12) வான்மீகியின் சுருக்கம்
7. நாரதர் புராணம் (கி.பி. 10) (1. 79; II.75) வான்மீகியின் சுருக்கம்.
8. பிரம்ம புராணம் – அரிவம்சத்தின் சுருக்கம்.
9. கருட புராணம் (கி.பி. 10) பெரும்பான்மையும் பிற்கால
இடைச்செருகல்கள்
10. ஸ்கந்த புராணம் (கி.பி. 8க்குப் பின்) (II : 30) சிற்சில செய்திகள்
11. பத்ம புராணம் (கி.பி. 12-15) (116 படலம், உத்தர 24, 43,44)

1. தர்மோத்ர புராணம் (கி.பி. 7)
2. நரசிம்ம புராணம் (கி.பி. 4-5) (இயல் 47-52)
3. தேவி பாகவதம் (கி.பி. 10-11) ( III 28-30)
4. பிரகதர்ம, சௌரபுராணம் (கி.பி. 950-1050) (இயல் : 30)

இவையெல்லாம் தத்தம் சமயக் கருத்துக்களை விளக்க இராம காதையைப் பயன்படுத்துகின்றன.

மேற்கண்ட புராணங்கள் தவிர வான்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சில முழு
ஸ்ரீ இராமாயண நூல்களும் வடமொழியில் காணப்படுகின்றன.

1. யோக வசிஷ்ட (அ) வசிஷ்ட இராமாயணம் (கி.பி. 8 (அ) 12)
2. அத்யாத்ம இராமாயணம் (கி.பி. 13 இராமசர்மர்)
3. அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்டது)
4. ஆனந்த இராமாயணம் (கி.பி. 15) வால்மீகி பெயரால் வழங்குகிறது.

இவையேயன்றி இன்னும் பல்வேறு சிறுசிறு ஸ்ரீ இராமாயண நூல்கள் வடமொழியில் கி. பி 19ஆம் நூற்றாண்டு
வரையில் தோன்றியுள்ளன.-
ஸ்ரீ காளிதாசரின் ஸ்ரீ இரகுவம்சம் முதலான பல இலக்கியங்கள் ஸ்ரீ இராமசரிதையைப்
பாடுபொருளாகப் பேசுவதையும் காண்கிறோம்.
இவற்றுள் பெரும்புகழ் வாய்ந்தன:

1. காளிதாசர் : இரகுவம்சம் (கி. பி. 4)
2. பிரவர்சேனர் : இராவணவகோ (அ) சேதுபந்தா
(கி. பி. 550-600)
3. பட்டி : இராவணவதா (கி. பி. 500-650)
4. குமாரதாசர் : ஜானகி ஹரணா (கி. பி. 8)
5. அபிநந்தர் : இராமசரிதை (கி. பி. 9)
6. க்ஷேமேந்திரர் : (a)இராமயண மஞ்சரி (கி. பி. 11).
: (b)தசாவதார சரிதை
7. சாகல்ய மல்லர் : உதார ராகவர் (கி. பி. 12)
8. சகர கவி : ஜானகி பரிணயம் (கி. பி. 17)
9. அத்வைத கவி : இராமலிங்காம்ருதம் (கி. பி. 17)
10. மோகனஸ்வாமி : இராம ரகசியம் (அ) இராம சரிதை (கி. பி. 1608)

ஸ்ரீ இராமகாதை நாடக வடிவிலும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை
பல நூல்களாக வெளி வந்துள்ளன.
பாசர், பவபூதி, ஜெயதேவர் முதலான நாடகாசிரியர்கள் இதில் அடங்குவர்.

பௌத்த இராமாயணங்கள்

1. தசரத ஜாதகம் (பாலி, கி. மு. 5)
2. அனமகம் ஜாதகம் (பாலி, கி. மு. 5)
3. தசரத கதனம் (பாலி, கி. மு. 5)

ஜைன இராமாயணங்கள்

1. விமல சூரி : பௌம சரிதம் (பிராக்ருதம், கி. பி. 4)
2. சங்க தாசர் : வாசுதேவ ஹிண்டி (பிராக்ருதம், கி. பி. 5)
3. இரவி சேனர் : பத்ம புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 6)
4. குணபத்ரர் : உத்தர புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 10)
5. சுயம்பு தேவர் : பௌம சரிதம் (அபப்பிரம்சம், கி. பி. 9)
6. சீலங்கர் : சௌபன்ன மகா புருஷ சரிதம்
(பிராக்ருதம், கி. பி.868)
7. பத்ரேசுவரர் : ககாவலி (பிராக்ருதம், கி. பி. 11)

தமிழ்
கம்பன் : கம்பராமாயணம் (கி. பி. 9)

தெலுகு
1. கோன புத்தா ரெட்டி : ரங்கநாத ராமாயணம் (கி. பி. 13)
2. பாஸ்கரன் மற்றும் மூவர் : பாஸ்கர ராமாயணம் (கி. பி. 13)
3. ஆதுகூரி மொல்ல : மொல்ல ராமாயணம் (கி. பி. 15)

கன்னடம்
1. அபிநவ பம்பா என்னும் -நாக சந்திரர் : பம்ப ராமாயணம் (கி. பி. 11)
2. குமார வான்மீகி என்னும- நரகரி : தொரவெ ராமாயணம் (கி. பி. 16)

மலையாளம்
1. கன்னச இராம பணிக்கர் : கன்னச ராமாயணம் (கி. பி. 14)
2. துஞ்சத்த எழுத்தச்சன் : அத்யாத்ம ராமாயணம் (கி. பி. 16)

இந்தி
1. கோஸ்வாமி துளசிதாஸ் : துளசி ராமாயணம் (கி. பி. 1574)
2. கேசவ தாஸ் : இராம சந்திரிகா (கி. பி. 16)

அசாமி
மாதவ் கந்தவி : அசாமி ராமாயணம் (கி. பி. 14)

வங்காளம்
கிருத்திவாசன் : வங்காள ராமாயணம் (கி. பி. 15)

ஒரியா
பலராமதாஸ் : ஒரியா ராமயணம் (கி. பி. 16)

மராத்தி
ஏக நாதர் : பாவார்த ராமாயணம் (கி. பி. 16)

நாட்டுப்புற இலக்கியங்கள்
தமிழ், மைதிலி, போஜ்புரி, வ்ரஜ், இந்தி, மற்றும் சில வடநாட்டு
மக்களிலக்கியப் பாடல்கள்.

——————–

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் தவிர; சமஸ்கிருதத்திலேயே அதை அடியொற்றி காலப் போக்கில் மேலும்
பல ராமாயணங்கள் உருவாயின. அவை முறையே…

அத்யாத்ம ராமாயணம்
வசிஷ்ட ராமாயணம் (யோக வசிஸ்டா)
லகு யோக வசிஸ்டா
ஆனந்த ராமாயணம்
அகஸ்திய ராமாயணம்
அத்புத ராமாயணம்

ஸ்ரீ மகாபாரதத்தில் வன பர்வத்தில் ‘ராமோக்யான பர்வ’ எனும் பெயரிலும்
ஸ்ரீ பாகவத புராணத்தில் ‘9 வது ஸ்கந்தத்திலும்’ ராம கதை இடம்பெறுகிறது.
இவை தவிர ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும், அக்னி புராணத்திலும் கூட
ஸ்ரீ ராமகதையைப் பற்றி சுருக்கமாக விவரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஸ்ரீ துளசிதாசரின் ராமசரிதமானஸ். இது எழுதப்பட்ட காலம் 16 ஆம் நூற்றாண்டு.
மராத்தியில் 16 ஆம் நூற்றாண்டில் பவர்த்த ராமாயண எனும் பெயரில் மற்றொரு ராமாயணத்தை ஏக்நாத் இயற்றினார்
அஸ்ஸாமில் 15 ஆம் நூற்றாண்டில் மாதவ கந்தலி என்பவர் இயற்றிய கதா ராமாயணம் அல்லது
v கோதா ராமாயணம் எனும் ராமகதை புழக்கத்தில் இருக்கிறது.
வங்காளத்தில் 15 ஆம் நூற்றாண்டில் கிரித்திபாஸ் என்பவரால் இயற்றப்பட்ட
கிரித்திவாசி ராமாயணம் புழக்கத்தில் இருக்கிறது.
ஒதிஷாவில், ஒரிய தண்டி ராமாயணம் அல்லது ஜகமோகன் ராமாயணம் என்ற பெயரில் பலராம்தாஸ் என்பவர்
இயற்றிய ஸ்ரீ ராமாயணக் கதை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து புழக்கத்தில் இருக்கிறது.

ஆந்திராவில் புத்தா ரெட்டி என்பவரால் இயற்றப்பட்ட ஸ்ரீரங்கநாத ராமாயணமு மற்றும்
கவிஞர் மொல்ல என்பவரால் இயற்றப்பட்ட மொல்ல ராமாயணமு எனும் இரண்டு விதமான
v ராமாயணங்கள் புழக்கத்தில் உள்ளன.
கர்நாடகத்தில் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குமுதெண்டு ராமாயணம்
(ஜைன பின்புலம் கொண்டு எழுதப்பட்ட ராமாயணம்) 16 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட
குமரா வால்மீகி தொரவ ராமாயணம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டிலேயே நாகசந்திரா என்பவரால் இயற்றப்பட்ட
ராமசந்திர சரித புராணா எனும் முன்று விதமான ராமாயணங்கள் புழங்கி வருகின்றன.
தவிரவும்–கன்னடத்தில் முத்தண்ணா எனும் லக்‌ஷ்மிநாராயணா 1895 ல் இயற்றிய உரைநடை இலக்கியமான
அல்புத ராமாயணமும் 1898 ல் வெளிவந்த ராமஸ்வதேமும் பிரசித்தி பெற்றவை.

தமிழ்நாட்டில் ஸ்ரீ வால்மீகி ராமாயணத்திற்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்மிக்க ஸ்ரீ ராம கதையாக
கருதப்படுவது 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் ஸ்ரீ கம்பர் இயற்றிய ‘ஸ்ரீ கம்பராமாயணம்’.
கேரளாவில் 16 ஆம் நூற்றாண்டில் துஞ்சத்து எழுத்தச்சன் இயற்றிய ‘அத்யாத்ம ராமாயண கிளிப்பாட்டு
மிகப் பிரபலமான ராமகதையாகக் கருதப்படுகிறது.

நேபாளத்தில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பானு பக்த ஆச்சார்யா என்பவர் இயற்றிய
பானுபக்த ராமாயணமும், 20 ஆம் நூற்றாண்டில் சித்திதாஸ் மஹஜூ இயற்றிய சித்தி ராமாயணமும் பிரசித்தி பெற்றவை.
கோவாவில் 15 ஆம் நூற்றாண்டில் கர்தலிபுரா எனுமிடத்தில் வாழ்ந்த கிருஷ்ணதாச ஷாமா என்பவரால்
கொங்கணியில் இயற்றப்பட்ட ராமாயணமு எனும் ராமகதையின் கைப்பிரதிகள்
போர்ச்சுகலில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உருது மொழியில் 17 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போத்தி ராமாயணம் பிரபலமானது.

இவை தவிர, சம்பு ராமாயணம், ஆனந்த ராமாயணம், மந்தர ராமாயணம், கிர்தர் ராமாயணம், ஸ்ரீராமாயண மங்கேரி,
ஸ்ரீரங்கநாத் ராமாயணம், பாஸ்கர ராமாயணம், சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கால் இயற்றப்பட்ட
கோவிந்த ராமாயணம் மற்றும் ராதே சியாம் ராமாயணம் எனும் ராமாயணங்களும் கூட இந்தியாவில் அந்தந்த
பிரதேசத்து மக்களால் நன்கு அறியப்பட்ட ராமாயணங்களாகத் திகழ்கின்றன.

கம்போடியாவில் ரீம்கர்
தாய்லாந்தில் ராமாகீய்ன்
லாவோஸில் பிர லாக் பிர லாம்
பர்மாவில் யம ஸாட்டாவ்
மலேசியாவில் ஹிகாயத் செரி ராமா
இந்தோனேசியா மற்றும் ஜாவாவில் காகவின் ராமாயணம்.
பிலிப்பைன்ஸில் ராஜா மகாந்திரி என்ற பெயரிலும் ராமாயணக் கதை சொல்லப்படுகிறது.
இரானில் ’தாஸ்தன் இ ராம் ஓ சீதா (Dastan-e-Ram O Sita)
ஸ்ரீலங்காவில் ஜானகிஹரன் (Janakiharan)
ஜப்பானில் ராமேயன்னா அல்லது ராமன்ஸோ (Ramaenna or Ramaensho)
சீனா, திபெத் யுன்னான் (தென்மேற்கு சீனா) வில் Langka Sip Hor (thai lu language)

———-

கெமர் மொழியில் உள்ள ரீம்கெர்,
தாய் மொழியில் உள்ள ராமகியென்,
லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம்,
மலாய் மொழியின் இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவியவை ஆகும்.

——–

இராமாயணம் என்னும் பெயர் இராமன், அயனம் என்னும் சொற்களின் கூட்டாகும்.
அயனம் என்னும் சொல் சமசுக்கிருதத்தில் பயணம் என்னும் பொருளுடையது.
இதனால், இராமாயணம் என்பது இராமனின் பயணம் என்னும் பொருள் குறிக்கிறது.

இலங்கையின் மையப் பகுதியில், நுவரெலியா என்னும் நகருக்கு அண்மையில் உள்ள
சீதா எலிய என அழைக்கப்படும் இடமே சீதையைச் சிறைவைத்த அசோகவனம் என்கின்றனர்.

——–

ஸ்ரீ இராமகீர்த்தி அல்லது தாய்லாந்து இராமாயணம் (இராமாக்கியென், Ramakien,) என்பது
தாய்லாந்து நாட்டின் தேசிய காப்பியம் ஆகும். இது வால்மீகி இராமாயணத்தை மூலமாகக் கொண்டது.
இதன் தொலைந்து போன மூலப்பகுதிகள் 1767ஆம் ஆண்டு நடந்த ஆயுத்தியாவின் அழிவில்
சிதைந்து போன பின்னர், 1797ஆம் ஆண்டு தாய்லாந்து மன்னனான முதலாம் இராமாவின் இதனை எழுதினார்.
இக்காப்பியத்தின் மூலம் தாய்லாந்தில் கொன் என வழங்கப்படும் முகமூடி நாடகத்திற்காக இயற்றப்பட்டது எனவும் கூறுவர்.
இரண்டாம் இராமாவின் ஆட்சியில், அந்நாட்டவர்களின் கலை, இலக்கியம் என அனைத்திலும் வேரூன்றியது.

இக்காப்பியத்தின் மூலம் ஸ்ரீ வால்மீகி ராமாயணமாக இருந்த போதிலும் இதன் நடைத்தன்மை, போர் வர்ணனை,
ஆடைகள், இதில் கூறப்படும் நில அமைப்புகள், இயற்கை காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவை
தாய்லாந்து பண்பாட்டுக்கு ஏற்ப மீளுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

பொருளடக்கம்
பாத்திர அமைப்பு தொகு
இதன் பாத்திர அமைப்புகள் வால்மீகி ராமாயணத்துடன் ஒத்து வந்த போதிலும்
இதன் பாத்திர பெயர்கள் தாய் மொழிக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுளது.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கம்ப ராமாயணம்-முன்னுரை ஸ்ரீ பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன்–

January 9, 2021

ஸ்ரீ பால காண்டம் கடவுள் வாழ்த்துக்கள்–

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.–1-

——–

பாலகாண்டம் பாயிரம் என்ற பொதுத்தன்மையுடைய பகுதி போக,
ஆற்றுப்படலத்தில் தொடங்கிப் பரசுராமப்படலம் ஈறாக 23 படலங்களாக வகுக்கப்பெற்றுள்ளது.

ஆற்றுப் படலம், நாட்டுப் படலம், நகரப் படலம், அரசியற் படலம் என்பன ஒரு தொகுதி.

இதனை அடுத்துத் திரு அவதாரப் படலம், கையடைப் படலம், தாடகை வதைப் படலம்,
வேள்விப் படலம், அகலிகைப் படலம், மிதிலைக் காட்சிப் படலம் என்பன ஒரு தொகுதி.

இறுதியாக எதிர்கொள் படலம், கோலங்காண் படலம், கடிமணப் படலம், பரசுராமப் படலம் என்பன ஒரு தொகுதி.

இப்படி மூன்று தொகுதிகளாகப் பிரித்த பின்னர் எஞ்சுவன நான்காவதாக உள்ள தொகுதியாகும்.
அது சந்திர சயிலப் படலம், வரைக்காட்சிப் படலம், பூக்கொய் படலம், நீர் விளையாட்டுப் படலம்,
உண்டாட்டுப் படலம் ஆகியன.

———

சோழ சாம்ராஜ்யம் நானூறு ஆண்டுகள் வாழ்ந்து ஒருவாறு மடிகின்ற காலத்தில் தோன்றியவர்
(12ஆம் நூற்றாண்டின் கடைப் பகுதி) சேக்கிழார் ஆவார்.

ஆக, சோழ சாம்ராஜ்யத்தின் தொடக்கத்தில் கம்பனும், அதன் வீழ்ச்சியில் சேக்கிழாரும்
இரண்டு பெருங்காப்பியங்களை ஆக்கித் தந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கடவுள் இங்கு வந்து பிறந்தான் என்று கூறாமல், கடவுளே இங்குப் பிறக்க விரும்பினான் என்று கூறும்
வகையில் நாட்டு, நகரச் சிறப்பை ஒப்பற்றதாக ஆக்கிக் காட்டுகிறான்.

பிறந்தான், வளர்ந்தான், வசிட்டனிடத்திலே கல்வி கற்றான். அப்படிக் கல்வி கற்கும்போதே அவன்
மேட்டுக்குடி மகனாக – அரச மகனாக வாழவில்லை என்பதையும் பொதுமக்களோடு நெருங்கிய
தொடர்பு உள்ளவனாக வாழ்ந்தான் என்பதையும் ஒரு பாடலில் வைத்துக் காட்டுகிறான்.
தெருவில் வருகின்றவர்களையெல்லாம் சந்தித்து
‘எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர் தரு கருணையின் முக மலர் ஒளிரா
எது வினை இடர் இலை இனிது நும் மனையும்
மதி தரு குமரரும் வலியர் கொல்’ எனவே (கம்பன், 311) உசாவுவான்.
இப் பாடலில் பொதுமக்களோடு எப்படி இரண்டறக் கலந்து பழகுகிறான் என்பதைக் கவிச்சக்ரவர்த்தி
வைத்துக் காட்டுவது ஏனைய இலக்கியங்களில் காணாத புதுமையாகும்.

———-

பால காண்டம் 77 சருக்கங்கள், 2355 சுலோகங்கள்-

வான்மீகி நாரதரைப் பார்த்துக் கேட்கும் அறியா வினா சிந்திக்கத்தக்கது.
இந்த உலகத்தில் இப்போது இருப்பவர்களில் நற்பண்புகளை உடையவனாக இருப்பவன் எவன்?
வீரியமுடையவனாகவும்,அறங்களை அறிந்தவானாகவும், நன்றியுள்ளவனாகவும், எப்போதும் உண்மையே பேசுபவனாகவும்,
விரதத்தில் உறுதியுடையவனாகவும் இருப்பவன் எவன்? (1. 1-2)
நல்லொழுக்கமும், எல்லா உயிர்களிடத்தும் அன்புள்ளமும்,பல்கலை அறிவும், பல்வகையாற்றலும் எப்போதும் அன்பொழுகும்
இன்முகமும் உரையவன் எவன்? (1. 1-3)
தைரியமுடையவனும், கோபத்தைத் தன்வசப்படுத்தினவனும் ஒளியுமிழும், உடலையுடையவனும்,அழுக்காறு அற்றவனும், போரில்
உருத்தெழுந்தபோது தேவர்களாலும் அஞ்சத் தக்கவனும் எவன்? (1.1-4)
இதனை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில்,இத்தகைய ஒருவனை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை
என்னுள்ளே அடங்காது மிகுந்து எழுகிறது. இத்தகைய மானுடனை அறியும் தகுதி தங்களுக்கே உண்டென அறிவேன். (1. 1-5)

வான்மீகியின் ஆசையின் ஆழத்தை உணர்ந்த நாரதர் பெரிதும் மகிழ்ந்து,“முனிவரே உம்மாலே கூறப்பட்ட நற்குணங்கள்
ஒருவரிடத்தேயே கிடைப்பதற்கரியன. ஆலோசிக்குமிடத்து, இக்குவாகு மரபில் தோன்றி ஸ்ரீராமர் என்று மக்களால் அழைக்கப்பட்டவர் தான்
இவ் எல்லாப் பண்புகளையும் ஒருங்கே உடையவர்” என்று கூறி இராம காதையைச் சுருங்க உரைக்கிறார்.
வான்மீகி தாம் கற்பித்துக் கொண்ட நற்பண்புகளும், நல்லொழுக்கங்களும் உடைய மானுடனாக
இராமன் என்னும் பெயருடைய அரசன் ஒருவன் இருப்பது அறிந்து, அவன் வாழ்க்கைக் கூறுகளை நாரதர் கூறக்கேட்டு
அவற்றை அடிப்படையாகக் கொண்டு தம் காப்பியத்தை இயற்றினார்.
மானுட வாழ்க்கையில் வான்மீகி காண விரும்பிய குறிக்கோட் பண்புகள்,
அவற்றைத் தாங்கிய ஒருவனை அறிந்து கொள்ளவேண்டும் என்னும் வான்மீகியின் ஆழமான ஆசை
இந்த இருவகை அம்சங்களும் கம்பன் காப்பியத்தில் இடையறாது இழையோடக் காண்கிறோம்.

கம்ப ராமாயணத்தில் அவையடக்கமாக ஆறு பாடல்கள் அமைந்துள்ளன.

———–

நான்கு பிள்ளைகளைப் பெற்றான் தசரதன் என்றாலும் இராமனைத் தவிர, ஏனைய மூன்று பிள்ளைகளை அவன்
நினைவில் கொண்டிருப்பதாகவே தெரியவில்லை. பால காண்டத்திலேயே இந்தக் குறிப்பை வைத்துக் காட்டுகிறான் கம்பன்.
பிள்ளைகளைக் கேட்க வந்த விஸ்வாமித்திரன்.

“நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி” (324)
என்றுதான் கூறினானே தவிர, ‘இராமன்’ என்று பெயரிட்டுச் சொல்லவில்லை.
‘கரிய செம்மல்’என்றால் பரதனும் கரிய செம்மல்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.அப்படியிருக்க ‘கரிய செம்மல்’என்று
விஸ்வாமித்திரன் கூறியவுடன், இராமனைத் தான் தசரதன் நினைத்தானே தவிர, பரதனைப் பற்றி நினைத்ததாகவே தெரியவில்லை.

“மைந்தனை அலாது உயிர் வேறு இலாத மன்னன்” (1514) என்று அயோத்தியா காண்டத்தில் கம்பன் இதனை நினைவூட்டுவான்.
“போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான்”(1898) என்று கம்பன் முடிப்பான்.
இராமன் கானம் போய்விட்டான் என்று சொன்னவுடனேயே தசரதனுடைய ஆவி பிரிந்துவிட்டது என்று பேசுகிறான்.
வசிட்டனை நோக்கி,
“சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன் மன்னனே ஆவான் வரும்
அப் பரதன் தனையும் மகன் என்று உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு” (1654)
என்று தசரதன் கூறிவிட்ட காரணத்தால் இறுதியாக நீர்க்கடன் செய்வதற்குக்கூட, பரதனுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
தசரதனுக்கு நீர்க்கடன் செய்ய பரதனுக்கு வாய்ப்பில்லை என்றுகூறுவதைக் காட்டிலும்,
பரதன் கையினால் நீர்க்கடன் பெறுகின்ற வாய்ப்பை தசரதன் இழந்துவிட்டான் என்று கூறுவது முற்றிலும் பொருத்தமாகும்.

பாக்கியம் புரிந்திலாப் பரதன்தன்னை பண்டு
ஆக்கிய பொலங் கழல் அரசன், ஆணையால்
தேக்கு உயர் கல் அதர் கடிது சேணிடைப்
போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால்” (1465)

‘ஏன் பரதனைப் பாட்டன் வீட்டிற்கு அனுப்பினான் தசரதன் என்பது எனக்கு இப்போது புரிந்துவிட்டது.
இராமனுடைய பட்டாபிஷேகம் பற்றிப் பேசுகின்ற நேரத்தில் பரதன் இங்கிருந்தால் அது பிரச்சனைக்கு இடமாகும்
என்று கருதித்தான் கேகய நாட்டிற்கு அனுப்பினான் என்று சூழ்ச்சிக்காரியாகிய கூனி பேசுகிறாள்.

“அரசரில் பிறந்து,பின் அரசரில் வளர்ந்து அரசரில் புகுந்து, பேர் அரசி” (1467)யாக இருக்கின்ற கைகேயியின்
மனத்தைக் கேவலம் ஒரு பணிப் பெண் மாற்றிவிட்டாள் என்றுசொல்வதை, கம்பனும்கூட ஏற்றுக்கொள்வதாகத்
தெரியவில்லை. ‘மந்தரை துணைக் காரணமாக இருந்தாள்
“அரக்கர் பாவமும்,அல்லவர் இயற்றிய அறமும் துரக்க, நல் அருள் துறந்தனள் தூ மொழி மடமான்.”(1484)என்பதாக

ஆக கைகேயியின் மனம் திரிந்தது என்றால் அது கேவலம் கூனியினுடைய சூழ்ச்சியால் அன்று. அரக்கருடைய பாவமும்,
அல்லவர்களுடைய தவமும் சேர்ந்து கைகேயியின் மனத்தை மாற்றின என்று சொல்லுகின்ற முறையில்
கைகேயினுடைய பாத்திரப் படைப்பை மிக உயர்த்தி விடுகின்றான் கம்பநாடன்.

இராமன் எப்படி ஸ்திரிப்ரக்ஞனாக அமைக்கப் படுகின்றானோ அதுபோல் ஒரு ஸ்திதப்ரக்ஞ மனோ நிலையுடையவளாகக்
கைகேயியும் படைக்கப் பட்டிருக்கின்றாளோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
நன்மை எது, தீமை எது என்பதை நன்கு அறிந்துகொண்டாள் கைகேயி.
இந்த மாபெரும் தியாகத்தில் தன்னைச் சூடமாக ஆக்கி எரித்துக் கொண்டு கணவனைக் காப்பாற்றுகின்றாள்
என்று நினைக்கத் தோன்றுகிறது.
“அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல்
இன்றுகாறும் என் இதயத்தினிடை நின்றது. என்னைக்கொன்று
நீங்கலது. இப்பொழுது அகன்றது உன் குலப்பூண்
மன்றல் ஆகம் ஆம் காந்தமா மணி இன்று வாங்க” (10068) என்று சொல்லி, ‘நீ வரத்தைக் கேள்’ என்று சொல்லுகின்றான்.
அப்போது இராமன் கேட்கின்றவரம் வியப்பை உண்டாக்குவதாக அமைகின்றது.
‘ஐயா,”தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும், மகனும் தாயும் தம்பியும் ஆம் வரம் தருக” (10079) என்று கேட்கின்றான்.
தெய்வத்தைப் போல, தன்னுடைய நலத்தைக் கருதாமல், பிறருக்காகவே மாபெரும் காரியத்தைச் செய்தவள்
கைகேயி என்பதை இராகவன் உணர்ந்த காரணத்தால் தான் “என் தெய்வம்”-என்று பேசுகின்றான்.

மூல நூலில் அமைந்துள்ள முறையை விட்டுவிட்டுப் புதிய முறையில் கன்யாசுல்கத்தை ஓரளவு மறைத்து, அதே
நேரத்தில் கைகேயியை ஒரு மாபெரும் தியாகியாக, ஸ்த்தப்ரக்ஞையாக, கடமையை நிறைவேற்றுவதற்காகப்
பழி பாவங்களை ஏற்றுக் கொள்ளுகின்ற ஒரு பாத்திரமாக அமைத்து விடுகின்றான் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன்.

கன்யா சுல்க நிகழ்ச்சியைத் தசரதன், கைகேயி என்ற இருவர் மட்டும் அறிந்ததோடு அல்லாமல் இராகவனும் அறிந்திருந்தான்
என்பதைச் சந்தர்ப்பம் வரும் போது அவன் கூற்றாகவே வைத்துப் பேச வைக்கின்றான்
கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன். மூல நூலாகிய வால்மீகத்தில் இந்நிகழ்ச்சி இராமனும் பரதனும் காட்டில் சந்திக்கின்ற காலத்தில்
பரதனிடம் இராமனே கூறுவதாக அமைந்துள்ளது.
பரதன் கூட அதை ஓரளவு அறிந்திருந்தான் என்பதையும் அந்தப் பாடலின் மூலமே தெரிவிக்கின்றான்.

வரன் நில் உந்தை சொல் மரபினால் உடைத் தரணி நின்னது என்று இயைந்த தன்மையால்
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால் அரசு நின்னதே ஆள்க (கம்பன் 2485) என அந்தப் பாடலில் சொல்கிறான்
இராகவன். ‘நீ பிறந்து விட்டதனாலே இந்த ராஜ்யம் உன்னுடையது ஆகிறது’ என்று இராகவன் பேசுகிறான் என்றால் என்ன பொருள்.?
கன்யா சுல்கக் கதையை வேறு முகமாக, வேறு விதமாக இங்கே புகுத்துகிறான் கவிச்சக்கரவர்த்தி.
அதை நன்கு அறிந்திருந்தவனாகிய இராகவன் பேசுகின்றான்.
“பரதா, நீ பிறவாமல் இருந்திருந்தால் இந்த ராஜ்யம் எனக்கு உரியதாக இருந்திருக்கலாம்.ஆனால், கைகேயியின் வயிற்றில்
நீ பிறந்துவிட்ட காரணத்தால் இந்தப் பூமி உனக்குச் சொந்தமாகஆகிவிட்டது. அதனை நீயே ஆள்வாயக’
என்று இராகவன் கூறியதாக மிக அற்புதமான முறையில் அந்தக் கதையை மறுபடியும் நினைவூட்டுகிறான் கவிச்சக்கரவர்த்தி

இராகவன் சொன்னதை ஏற்றுக்கொள்கிறான் பரதன். அது தான் ஆச்சரியம்.
முன்னர் வந்து உதித்து உலகம் மூன்றிலும் நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார் என்னது ஆகில் யான்
இன்று தந்தனென் மன்ன! போந்து நீ மகுடம் சூடு (2486). இராகவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு,
“நான் அரசன்தான். இப்போது நான் ஆணையிடுகின்றேன். நீ போய் ராஜ்யத்தை ஆள்வாயாக” என்று பரதன் கூறும்போது
இராமன், பரதன் ஆகிய இருவருமே இந்தக் கன்யா சுல்கக் கதையை ஏற்றுக்கொண்டு அதற்கு வழி செய்கின்றார்கள்
என்பதை அறிய முடிகின்றது.

எனவே,கைகேயி கூறிய கடுஞ்சொற்கள் எல்லாம் மேலோட்டமாகப் பார்ப்பதற்குக் கடுஞ்சொல்லாக அமைந்தனவே தவிர,
உண்மையில் அவை மாபெரும் தியாகத்தை அடிப்படையாகக் கொண்ட ‘தூமொழிகள்’ என்பதை
“தூ மொழி மடமான்” (1484) என்ற சொல்லின் மூலம் பெற வைத்துவிடுகின்றான்.

————

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன்னருள் சுரந்து,
‘மாழை மான் மடநோக்கி உன் தோழி; உம்பி எம்பி’ என்று ஒழிந்திலை உகந்து,
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி, என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட,
ஆழி வண்ண! நின் அடியினை அடைந்தேன் அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே! (நாலாயிரம் 1418)
என்ற ஆழ்வாரின் பாசுரத்தை மனத்தில் வைத்துக்கொண்டு, பிராட்டியை குகனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறான் இராகவன் என்ற
ஒரு நிகழ்ச்சியை உண்டாக்கி, படகிலே சென்ற போது சீதையைக் காட்டி
‘இவர் உன் கொழுந்தி’, எனவும், இலக்குவனைக் காட்டி ‘இவன் உன்தம்பி,’ எனவும் இராமன் அறிமுகம் செய்து
வைப்பதாக ஒரு நிகழ்ச்சியைக் கம்பன் படைக்கிறான்.
“இளவல் உன் இளையான் இந் நன்னுதலவள் நின் கேள்” (1994) என்பதாக பிராட்டியை அறிமுகம் செய்து
இந்த நிகழ்ச்சியைப் பின்னர் கேள்விப்பட்டவனாகிய பரதனும் கூட,
“இன் துணைவன் இராகவனுக்கு; இலக்குவற்கும்,இளையவற்கும், எனக்கும் மூத்தான்” (2367) என்று
குகனைக் கோசலைக்கு அறிமுகம்

தன்னுடைய எல்லையில் நின்று தான் உண்ணுகின்றதை இறைவனுக்குப் படைப்பது போல
அவன் கையிலே கொண்டு வருகின்றான்.
“தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திருவுளம்?” (1966) என்று பேசுகின்றான் குகன்.
‘நான் கொண்டு வந்திருக்கிறேன். உன்னுடைய விருப்பம் எதுவோ அதன் படி செய்வாயாக’ என்று
அந்த உரிமையை இராகவனுக்கே கொடுக்கிறான்.ஏனையோர் அதனைப் பார்த்து முகம் சுளிக்கிறார்கள்.
இராகவனைப் பொறுத்த மட்டில் அதைமுழு அன்பின் வடிவாக வந்ததாக ஏற்றுக் கொள்கிறான்.
சர்க்கரையால் செய்யப்பட்ட மிளகாய் எப்படி உறைக்காமல் இனிக்குமோ அதுபோல
“நீ கொண்டு வந்த இந்தத் தேனும் மீனும் அன்பு என்ற ஒன்றினாலே முற்றிலும் சமைக்கப்பட்டுவிட்டது.” ஆகவே,
“பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்” (1967)
யாக குண்டத்தில் சொரியப்படுகின்ற அவிஸ் மிக உயர்ந்ததாகும் என்று இராகவன் பேசும் போது
குகனுடைய அன்பை பரிபூரணமாக அறிந்து ஏற்றுக் கொண்டவனாகிறான்.

தன்னைக் காண வருகின்ற பரதனைத் தூரத்தில் இருந்து பார்த்த போது, பரதன் அணிந்திருக்கிறதவக் கோலத்தையும்,
அவன் முகத்தில் தேங்கியிருக்கின்ற துக்கத்தையும் பார்த்த போதே

“நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான், அயல். நின்றான் தம்பியையும் ஒக்கின்றான்” (2332)
“எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு” (2332) என்று பேசுகின்றான்.
“ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா!”(2337)

———-

ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா! முன் உவந்து உறையும்
அப்பு உறையுள் துறந்து, அடியேன்,அருந்த தவத்தால் அணுகுதலால்,
இப்பிறவிக் கடல் கடந்தேன்; இனிப் பிறவேன்; இருவினையும்
துப்பு உறழும் நீர்த்த சுடர்த் திருவடியால், துடைத்தாய் நீ.” (2576) என்ற பாடலால் விராதன் விளக்குகிறான்.

எவ்வித நெறிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் இழிபிறவி எய்தினும் இறைவனின் இணையடிகளை மறவாத மனம் ஒன்று
மாத்திரம் இருப்பின் அவர்கட்கும் வீடுபேறு உண்டு என்பது இந்நாட்டின் பழைய கொள்கை ஆகும்.
தமிழர் கண்ட பக்தி மார்க்கத்திற்கு எடுத்துக்காட்டுகளாகக் குகனையும், விராதனையும் கவிஞன் எடுத்துக் கூறுகிறான்-

இந்திரன் வேண்டுகிற அதே நேரத்தில் சரபங்கனுடைய ஆசிரமத்தின் வெளியே இராம இலக்குவர்கள் நிற்கின்றனர்.
அதனைத் தன் ஞானத்தால் உணர்ந்து சரபங்கன் “எனக்கு வரவேண்டிய வீடுபேற்றை அளிப்பவன் வெளியே நிற்கின்றான்.
நீ தர வேண்டிய பதங்கள் எனக்குத் தேவையில்லை” என்று பேசுகிறான். அதே நேரத்தில், வீடுபேற்றின்
இலக்கணத்தைக் கீழ்வரும் பாடலில் அற்புதமாக எடுத்து விளக்குகிறான்.

“சில காலை இலா, நிலையோ திரியா,
குறுகா, நெடுகா, குணம் வேறுபடா,
உறு கால கிளர் பூதம் எலாம் உகினும்
மறுகா, நெறி எய்துவென்; – வான் உடையாய்;” (2606)
சரபங்கன் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்த இந்திரன் இராமனை இன்னான் என்று அறிந்துகொண்டு 2610 முதல் 2617 வரை உள்ள எட்டுப்
பாடல்களில் பரம்பொருளின் தன்மையைப் பேசுகிறான். ஆயிரம் யாகங்கள் செய்து இந்திரப் பெரும் பதத்தில் இருக்கும் அவனும்
விராதனைப் போலவே முரண்பாட்டில் முழுமுதலைக் காண்கிறான். அவ்வெட்டுப் பாடல்களுள் ஈடு இணையற்று விளங்குவது.

“மேவாதவர் இல்லை, மேவினரும் இல்லை; வெளியோடு இருள் இல்லை, மேல் கீழும் இல்லை;
மூவாதமை இல்லை, மூத்தமையும் இல்லை; முதல் இடையோடு ஈறு இல்லை, முன்னொடு பின் இல்லை;
தேவா! இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால், சிலை ஏந்தி வந்து, எம்மைச் சேவடிகள் நோவ,
காவாது ஒழியின், பழி பெரிதோ? அன்றே; கருங் கடலில் கண்வளராய்! கைம்மாறும் உண்டோ?” (2614) என்ற பாடலாகும்.

இவ்விரு படலங்களிலும் நம்மை வியக்க வைக்கும் செய்தியும் உண்டு. அரக்க வடிவிலிருந்து திருவடி சம்பந்தம் பெற்ற விராதன் வீடுபேற்றை
அடைகிறான். முழு ஞானியாகிய சரபங்கனோ வீடு பேற்றின் இலக்கணத்தை மிக அற்புதமாக 2606 ஆம் பாடலில் கூறி இந்திர பதத்தையும் பிரம
லோகத்தையும் உதறி விட்டு இராமனைத் தரிசித்து வீடுபேற்றை அடைகிறான்.
இவர்கள் இருவரை மட்டுமல்லாமல் இந்திரனும் இராமனைத் தரிசிக்கிறான். இவர்களைப் போலவே அவனும் இறை இலக்கணத்தைப் பேசுகிறான்
என்றாலும், தான் பெற்ற இந்திரப் பதத்தை உதறிவிட்டு வீடு பேற்றை அடைய அவன் விரும்பவில்லை.

கவிச்சக்கரவர்த்தி கம்பநாடன் இந்த இரண்டு படலங்களில் உபநிடதங்களைச் சாறாக பிழிந்து இந்நாட்டுக் கடவுட் கொள்கையையும்
அதனுடன் குழைத்து ஏறத்தாழ 24 பாடல்களில் தந்துவிடுகிறான்.
அம்மட்டோடு இல்லாமல் குற்றமே குணமா வாழ்ந்த விராதன், மாபெரும் ஞானியின் வாழ்க்கை வாழ்ந்த சரபங்கன் ஆகிய இருவரும்
வீடுபேற்றைப் பெரிதென மதித்துப் பெறுதலையும், தேவர்கோன் ஆகிய இந்திரன் இவர்களோடு ஒப்பிடுகையில்
சிறியவனாக ஆகிவிடுதலையும் குறிப்பால் உணர்த்துகிறான்.

“…. யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும்அல்ல; நின்பால்
அருளும், அன்பும், அறனும், மூன்றும்- உருள் இணர்க் கடம்பின் ஒளி தாரோயே! (பரிபாடல் 5 77-80)

அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னைத் துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம்
இன்னும் இன்னும் அவை ஆகுக- தொன்முதிர் மரபின் நின் புகழினும் பலவே! (பரிபாடல் 14 29-32)

செரு வேல் தானைச் செல்வ! நின் அடி உறை,உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்குப்,
பிரியாது இருக்க-எம் சுற்றமொடு உடனே! (பரிபாடல் 18 54-56)

பரிபாடலில் காணப்படும் இவ்வரிகளில் இத்தமிழரின் பக்தி வழியில் பொன், பொருள், போகம், இந்திரப் பெரும்பதம்
ஆகிய எவற்றுக்கும் இடமில்லை என்பது நன்கு வெளிப்படும். இக் கொள்கைகள் நாளாவட்டத்தில் வளர்ந்து,

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரகம் யான் வேண்டேன்” (நாலா. 678)

“கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் (நாலா. 681)

“வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம் கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்” (நாலா. 683)

மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும் மைத்து ஆய’ (5884)

——–

கிட்கிந்தைப் படலம் பம்பை வாவிப் படலத்தில் தொடங்கி மயேந்திரப் படலம் முடியப் பதினாறு படலங்களைக் கொண்டுள்ளது

அவ் இடத்து, இராமன், நீ அழைத்து, வாலி ஆனது ஓர்
வெவ் விடத்தின் வந்துபோர் விளைக்கும் ஏல்வை, வேறு நின்று
எவ்விடத் துணிந்து அமைந்தது; என் கருத்து இது’ என்றான்;
தெவ் அடக்கும் வென்றியானும், ‘நன்று இது’ என்று சிந்தியா. (3944)

இப்பாடலில், இரண்டு, மூன்றாம் அடிகளில் வரும் ‘வேறுநின்று ஏ விடத் துணிந்தது என் கருத்து இது’ என்ற பகுதி
வாலி வதையின் அடித்தளத்தை நன்கு விளக்கப் பயன்படும்.
சுக்கிரீவனைப் பார்த்து, ‘வாலியை வலியச் சென்று போருக்கு அழைப்பாயாக’ என்று கூறுகின்ற அதே நேரத்தில், தான்
எவ்வாறு போர் செய்து வாலியைக் கொல்ல வேண்டும் என்ற திட்டத்தையும் (Strategy) இராமன் வகுத்துக் கொண்டான்.
‘மறைந்து நின்று தான் அம்பு எய்யப் போகிறேன் (ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு) நான் கண்ட முடிபாகும் இது’ வென்று பேசுகிறான்.
‘வேறு, நின்று’ என்ற சொற்கள் மறைவாக நின்று என்பதையும்
‘ஏ (அம்பை) விடத் துணிந்தது’ (எய்ய முடிவு செய்து விட்டேன்) என்ற சொற்கள் நீண்ட சிந்தனைக்குப் பிறகு
இராகவன் கொண்ட முடிவு என்பதையும் காட்டும்.
இவ்வழியைத் தவிர வேறு வழியில் வாலியைக் கொல்ல இயலாது. வாலி இறந்தால் ஒழிய இராவண வதம் தடையின்றி
நடைபெற இயலாது. எனவே, இம்முடிவுக்கு இராகவன் வருகிறான்.

வாலியோ இராமனுடைய வரலாற்றை மிக நன்றாக அறிந்திருந்தான். இராகவனுடைய பண்புநலன்களைத்
துல்லியமாக எடை போட்டு அறிந்திருந்தான் என்பதை (3965 முதல் 3969 வரை) ஐந்து பாடல்களில் விரிவாகக் கூறுகிறான்.
அம்பைநிறுத்தி ஓரளவு வெளியே இழுத்து அதில் பொறிக்கப்பட்ட
‘செம்மைசேர்நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்’. ‘கண்களில் கண்டான்’
கண்ணுற்றான் வாலி, நீலக் கார்முகில் கமலம் பூத்து
மண் உற்று, வரிவில் ஏந்தி, வருவதே போலும் (4016)
ஸ்பரிஸ தீட்சை,நயன தீட்சை, திருவடி தீட்சை என்று பலவகை உபதேசம்
ஏவுகூர் வாளியால் எய்து, நாய் அடியனேன்
ஆவி போம் வேலைவாய், அறிவு தந்து அருளினாய் (4063) என்று கூறுகிறான்.
மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ! –(4063)
மறைகளும் முனிவர் யாரும், மலர்மிசை அயனும், மற்றைத்
துறைகளின் முடிவும், சொல்லும் துணி பொருள், துணி வில் தூக்கி,
அறைகழல் இராமன் ஆகி, அறநெறி நிறுத்த வந்தது;
இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி; எண்ணம் மிக்கோய். (4073)
ஒவிய உருவ! நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்,
பூ இயல் நறவம் மாந்தி, புந்தி வேறு உற்றபோழ்தில்,
தீவினை இயற்றுமேனும், எம்பிமேல் சீறி, என்மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான். (4068)
தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும், செய்கை (4020-4)

இராமகாதை முழுவதிலும் இலக்குவன், பரதன், கவந்தன், சவரி, வாலி, அனுமன், வீடணன், சரபங்கன் ஆகிய அனைவரும்
இராமனை யாரென்று அறிந்திருந்ததாகக் கவிஞன் பாடுகிறான்.

அனுமன். இவன் ‘கல்லாத கலையும் வேதக் கடலுமே இல்லை’ (3768) என்றும்
‘உலகுக்கெல்லாம் ஆணி’ (3769) என்றும்,
‘நாட்படா மறைகளாலும், நவைபடா ஞானத்தாலும், கோட்படாப் பதமே ஐய! குரக்கு உருக் கொண்டது’ (3783) என்றும்
இராமனால் வருணிக்கப்படும் பாத்திரம் ஆவான்.
கோட்படாப்பதம் என்று இராமபிரானால் வருணிக்கப்படுதலின் இப்பாத்திரம் யான், எனது என்று செருக்கறுத்த பாத்திரமேயாவான்.

சிந்தனைக்கு உரிய பொருள் ஒன்றை இழந்து தேடுகின்றனர் (3756) –
தருமத்தின் வடிவான இவர்கள் அருமருந்தனைய ஒன்றை இழந்து தேடுகின்றனர் (3757)-
சினத்தை வென்றவர்கள் – கருணையில் கடல் அணையர் – இதமான பண்பு உடையவர்கள் இவர் –
இந்திரன் அஞ்சும் வலிமையுடையவர் மன்மதனையும் வெல்லும் அழகுடையவர் (3758) –
புலி முதலிய கொடிய விலங்குகளும் மயில் முதலிய பறவைகளும் இவர்கள்மாட்டு அன்பு செய்து உருகுகின்றன -(3760 – 61)
நெருப்பைக் கக்கும் கற்கள் இவர்கள் பாதம் பட்டவுடன் மலர்கள் போன்று மென்மை அடைகின்றன. (3762) என்றெல்லாம் கணிக்கிறான்.
துன்பினைத் துடைத்து, மாயத் தொல்வினை தன்னை நீக்கி,
தென்புலத்து அன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ தாம்?
என்பு எனக்கு உருகுகின்றது; இவர்கின்றது அளவு இல் காதல்;
அன்பினுக்கு அவதி இல்லை; அடைவு என்கொல்? அறிதல் தேற்றேன்-(3763)

‘சங்குசக்கரக் குறி உள, தடக்கையில் , தாளில்;
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை;
செங் கண் விற்கரத்து இராமன், அத் திரு நெடுமாலே; இங்குஉதித்தனன், (3859)

தொண்டன் பரம்பொருளையும் பரம்பொருள் தொண்டனையும் இனங்கண்டுகொள்கிற மாபெரும் நிகழ்ச்சி,

சுந்தர காண்டம்,கடல் தாவு படலத்தில் தொடங்கித் திருவடி தொழுத படலத்தில் முடிகின்றது
‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்’ (10) – பிறவியாகிய ஆழியைக் கடப்பவர் இறைவன் அடி சேர்வர்-
பிறவிக் கடலைத் தாண்டினால் கிடைப்பது திருவடி என்ற கருத்து இங்கே புதைந்துள்ளமை அறி்யப்பெற வேண்டும்.
மயேந்திர மலையில் அனுமன் முதலியோர் ஒன்று கூடிய பொழுது இராம நாமத்தின் மகிமையைச் சம்பாதி கூறினான்.
‘எல்லீரும்அவ் இராம நாமமே சொல்லீர்;சொல்ல, எனக்கு ஓர் சோர்வு இலா நல் ஈரப் பயன் நண்ணும்’ (4695) என்று சம்பாதி கூறவும்.

‘அரவணைத்துயிலின் நீங்கிய தேவனே அவன்; இவள் கமலச் செல்வியே’ (5134)
பிராட்டியிடம் அவன் கண்டிராத ஓர் அழகைத் தொண்டனாகிய அனுமன் காணுகிறான்.
‘தவம் செய்த தவமாம் தையலின் அழகை இராகவன் “காண நோற்றிலன் கமலக் கண்களால்” (5141) என்று அனுமனே பேசுகிறான்.

அனுமன் பிராட்டியின் உயிரைக் காத்தான். இப் பேருபகாரத்தை நினைந்து அவனுக்கு நன்றி பாராட்டும் முறையில் அந்தத் தாய்,
“உயிர் தந்தாய் உத்தம” (5297) என்றும்
“அம்மை ஆய், அப்பன் ஆய அத்தனே அருளின் வாழ்வே” (5298) என்றும்
“பாழிய பணைத் தோள் வீர துணையிலேன் பரிவு தீர்த்த வாழிய வள்ளலே” (5299) என்றும் நன்றி பாராட்டிவிட்டு,
தாய் மகனை ஆசீர்வதிக்கும் முறையில்,
“உலகம் ஏழும் ஏழும் வீவுற்ற ஞான்றும், இன்று என இருத்தி” (5299) என்று ஆசி வழங்கினாள்.

“அடியேன் தோள்மிசை கடிது ஏறு”(5354)

“அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ?
எல்லை நீத்தஉலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன் (5362) என்று வீறு தோன்றப் பேசுகிறாள்.

“திருமாலோ,இந்திரனோ, சிவபெருமானோ, நான்முகனோ, ஆதிசேடனோ, இவர்களுள் யார் நீ (5874)
எமனோ, முருகனோ, திக் பாலகரோ யார் நீ (5975)
வேள்வியில் வந்த பூதமோ, நான்முகன் அனுப்பிய தெய்வமோ (5876) யார் நீ?” என்ற வினாக்களை இராவணன்
தொடுப்பதிலிருந்து இராவணண் எந்த அளவுக்கு மாறியுள்ளான் என்பதை அறிய முடிகிறது.
புன்தொழில் குரங்கு என்று எண்ணி நகையாடினவனைக் கிங்கிரர் முதல் அக்ககுமாரன்வரை அழிந்தோர் பட்டியல்
மனமாற்றம் கொள்ளச் செய்தது உண்மை தான்.

இத்தனைவினாக்களுக்கும் விடை கூற வல்ல அனுமன் தான் யார் என்பதை (5878 – 5885) எட்டுப் பாடல்களில் விடை கூறுகிறான்
கடவுள் என்ற தமிழ்ச் சொல்லேகூடத் தம்முள் முரண்பாட்டைக் கொண்டதாகும்.
“கட” என்ற பகுதி வாக்கு. மனோலயம் கடந்தது என்பதைக் குறிக்கும்.
“உள்” என்ற விகுதி இவை அனைத்தின் உள்ளேயும் ஊடுருவி நிற்கும் என்பதைக் குறிக்கும்.
எட்டுப் பாடல்களில் சொல்லிய பாடல்கள் உபநிடத வாக்கியங்கள்போல் மிகச் சுருக்கமாக அமைந்துள்ளன.
இதை விரிவாகப் பாடவே இரணியன் வதைப் படலத்தைத் தானே புதிதாகச் சேர்த்துக் கொண்டான்-
இங்கு அனுமன், இராவணன் என்ற இருவரிடையே உள்ள உரையாடல்.
அங்கு இரணியன், பிரகலாதன் என்ற இருவரிடையே உள்ள உரையாடல்.

இப் பாடல்கள் இரண்டு வகையில் மெய்ப் பொருளை உணர்த்துகின்றன.
உபநிடதம் நேதி என்று சொல்வது போல,
‘இவனில்லை, இவனில்லை’ என்று எதிர்மறை முகத்தாலும், ‘இவன் தான்’ என்று உடன்பாட்டு முகத்தாலும்
நிறுவ முயல்கிறான் கம்பன். மூலப்பொருளின் இயல்பை எதிர்மறை முகத்தால் கூறப் போகும் அனுமன் கீழ்வருமாறு கூறுகிறான்:

தேவரும் பிறரும் அல்லன்; திசைக் களிறு அல்லன்; திக்கின்
காவலர் அல்லன்; ஈசன் கைலை அம் கிரியும் அல்லன்;
மூவரும் அல்லன்; மற்றை முனிவரும் அல்லன்;— (5881)
அனுமன், “சொல்லிய அனைவரும் அல்லன் அப் புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலேன்” (5878) என்று குறிப்பிடுகிறான்.
உடன்பாட்டு முகமாக அமைந்திருத்தல் காண்டற்குரியன.

அனையவன் யார் ? என,அறிதியாதியேல்,
முனைவரும், அமரரும்,மூவர் தேவரும்,
எனையவர் எனையவர் யாவர், யாவையும்,
நினைவு அரும் இரு வினை முடிக்க, நின்றுளோன் (5879)

காரணம் கேட்டி ஆயின், கடை இலா மறையின் கண்ணும்
ஆரணம் காட்ட மாட்டா,அறிவினுக்கு அறிவும், அன்னோன்;
போர் அணங்கு இடங்கர்கவ்வ, பொது நின்று “முதலே” என்ற
வாரணம் காக்க வந்தான் அமரரைக் காக்க வந்தான் (5883)
‘இறப்ப உயர்ந்ததாகிய இப் பொருள் சாதாரண விலங்காகிய யானை ஒன்று தன் காலை முதலை
கவ்விக் கொண்ட பொழுது ‘ஆதிமூலமே’ என்று அழைக்கவும் ஓடோடி வந்தது’என்று கூறி முடிக்கிறான்.

மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய
காலமும் கணக்கும் நீத்த காரணன் – கை வில் ஏந்தி
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான் (5883)

அறம் தலை நிறுத்தி,வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித்
திறம் தெரிந்து,உலகம் பூணச் செந் நெறி செலுத்தி, தீயோர்
இறந்து உக நூறி,தக்கோர் இடர் துடைத்து, ஏக, ஈண்டுப்
பிறந்தனன் தன் பொன்- பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் (5885)

அஞ்சலை அரக்க ! பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே
வெஞ்சின வாலி மீளான்; வாலும் போய் விளிந்தது அன்றே
‘அஞ்சனமேனியான் தன் அடுகணை ஒன்றால் மாழ்கி, துஞ்சினன்(5888)

எய்தினன் அனுமனும்; எய்தி, ஏந்தல் தன்
மொய் கழல் தொழுகிலன்; முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன், கையினன்,
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி, வாழ்த்தினான் (6028)

இராமன் திருவடிகளைத் தொழ வில்லை என்று பாடலின் இரண்டாவது அடி குறிக்கிறது. இராமன் எதிரே நின்றும்
அவன் திருவடிகளை ஒருவன் தொழ வில்லை என்றால் அது தவறன்றோ என்று நினைக்கத் தோன்றும்.
அந்த நினைப்புத் தேவை யில்லை
புருஷகார பூதை’ என்று போற்றிச்சொல்லப்படும் தாயின் திருவடிகளை அனுமன் வணங்கினான்.எனவே,
இராமன் திருவடிகளை வணங்காததால் பிழை ஒன்றும் இல்லை என்ற விளக்கத்தைத் தருகிறான் கவிஞன்.

மூல நூலாகிய வான்மீகத்தில் சீதையை இராவணன் எடுத்துச் சென்ற முறை வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது.
அது தமிழ் மரபுக்கு ஒத்து வராது என்பதால் பர்ணசாலையோடு எடுத்துச் சென்றான் என்று கம்பன் மாற்றி விட்டான்
இராகவன், அனுமன் வாய் திறந்து பேசாமல் இருக்கும்பொழுது (1) வண்டு உறை ஓதியும் (சீதை) நன்றாக உள்ளாள்.
(2) இவன் அவளை உறுதியாகப்பார்த்துவிட்டான். (3) அவள் கற்பும் நன்று என்றமூன்று செய்திகளைக்
குறிப்பில் குறிப்பு உணரும் இராகவன் புரிந்து கொண்டான்.

அமைதி அடைந்து அசைபோடு்ம் மனநிலையிலுள்ள இராமனுக்கு 6031 முதல் 6051 வரை உள்ள இருபது பாடல்களில் அங்கு நிகழ்ந்தவற்றை
விரிவாகக் கூறுகிறான்

“சோலை அங்கு அதனி்ல் உம்பி புல்லினால் தொடுத்த தூய சாலையில் இருந்தாள் (6037),
“மண்ணொடும் கொண்டு போனான் – வான் உயர் கற்பினாள் தன் புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான்” (6036),
தீண்டிலன் என்னும் செய்கை…. வாய்மையால் உணர்தி மன்னோ” (6039).
அனுமன் பிராட்டியின் கூற்றாக வைத்து இராமன் சற்றும் தாமதியாமல் போருக்கு எழ வேண்டுமென்ற கருத்தைப்
புரிந்து கொள்ளுமாறு அவன் கூறும் இருபது பாடல்களில் 20-ஆவது பாடலில் கூறுகின்றான், அனுமன்.
“தி்ங்கள் ஒன்றுஇருப்பென் இன்னே; திரு உளம் தீர்ந்த பின்னை,
மங்குவென் உயிரோடு”என்று, உன் மலரடி சென்னி வைத்தாள்–(6051)

சிறையிருந்தாள் ஏற்றம் கூறியது சுந்தர காண்டம் என்பர். அந்த ஏற்றத்தைப் பிறர் அறியச் செய்தவன் யார்?
அனுமன் இல்லையானால், சிறை இருந்தாள் ஏற்றத்தைப் பரம் பொருளைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்க முடியாது.
எனவே, அனுமன் பெருமையைக் கூற வந்த கவிஞன்,
செவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன் –(4966) என்று கூறுவது வெற்றுரை யன்று.
சுந்தர காண்டத்தை முடித்த பிறகு கம்பன் பாடலைச் சற்று மாற்றிச் செவிக்குத் தேன் எனச் சீதையின் புகழைத் திருத்தும்
கவிக்கு நாயகன் என்று சொல்லலாம் போல் இருக்கிறது. சிறை யிருந்தாள் ஏற்றத்தைக் கூறுவதா?
அவ் ஏற்றத்தை நாம் அறியுமாறு செய்த அனுமனைப் புகழ்வதா? தெரியவில்லை. ஆனால் ஒன்று கூறலாம் போல் தோன்றுகிறது.
பரம் பொருளின் துணையாகிய பிராட்டி சிறையிருந்ததிலோ, இராவணன் கொட்டத்தை அடக்கித் தன்னைப்
பன்முறை வீழ்ந்து வணங்குமாறு செய்ததோ வியப்பிற்குரிய தன்று.காரணம்,
அவள் பரம்பொருளின் ஒரு கூறு. தன் பெருமை தான் அறியாப் பரம் பொருளின், பிராட்டியின் பெருமையை எடுத்துக் கூற
ஒரு தொண்டன் வேண்டும்.கல்வி, கேள்வி, ஞானம், எடுத்துச் சொல்லும் ஆற்றல் (சொல்வன்மை) – இவற்றை முற்றிலுமாகப் பெற்ற
ஒருவனே, இராகவன், பிராட்டி இருவர் புகழினையும் திருத்த முடியும்.
திருத்துதல் என்ற சொல்லுக்குப் பக்குவமாகத் தயாரித்து வைப்பது என்பது பொருளாகும்.
“சமையலுக்குக் காய்கறிகளைத் திருத்தியாய் விட்டதா?” என்று இன்றும் வழங்கும் சொற்றொடர் இப்பொருளை விளக்கும்-

கவிஞன் தரும் அடைமொழி வைரம் பதித்த பொன் போல் அப்பாத்திரத்தை விளக்கப் பயன்படுகிறது.
கல்லாத கலையும்வேதக் கடலுமே இல்லை (3768)
வன் திறல்மாருதி (3928)
வன் துணை வயிரத் திண் தோள் மாருதி (4328)
கூற்றும் உட்கவாழ்வா(ன்) (4806)
அரி உருவான ஆண்தகை (5871)
நூற் பெருங்கடல் நுனித்துணர் கேள்வியான் (5040)
செறி பெருங்கேள்வியான் (6447)
நேர் இலாஅறிவன் (6447)
நவை படா ஞானமே,கோட் படாப் பதமே (குரக்கு உரு) (3783)
தருமத்தின் தனிமை தீர்ப்பான் (3181)
அறத்துக்கு ஆங்கொரு துணை யென நின்ற அனுமன் (5803)
செவ்வழி உள்ளத்தான் (3764)
கோது இல்சிந்தை அனுமன் (4294)
அழுங்கா மனத்து அண்ணல் (4791)
நீதி வல்லோன்(4478)
பழி இல்லான்(4923)
மெய்ம்மை தொடர்ந்தோன் (5422)
தொண்டு’என்ற ஒரு சொல்லின் முழு வடிவு ஆக அனுமன் படைக்கப்படுகிறான். தொண்டனிடத்து அகப்பட்டுக்கொள்ளும்
பரம் பொருள் கூட அவனை விட்டு நீங்காதவனாகிறான்.
உலக இலக்கியங்களில் தொண்டு என்ற ஒரு பண்புக்கு இத்தகைய ஒரு மா பெரும் வடிவம் கொடுத்த
கவிஞர்கள் கம்பன் தவிர யாரும் இலர் என்பது கண் கூடு.

——–

கம்பனுடைய இராமகாதைப் பாடல்கள் மிகைப் பாடல்களை நீக்கிப் பார்த்தால்
மொத்தம் உள்ளது, சென்னைக் கம்பன் கழகம் பதிப்பின்படி 10368 ஆகும்.
இதில் முதல் ஐந்து காண்டங்களின் பாடல் தொகை 6058 ஆகும்.
யுத்த காண்டம் மட்டும் 4310 ஆகும் என்றாலும், ஆரண்ய காண்டத்தில் வரும் கரன்வதை 192 பாடல்களும்,
சுந்தர காண்டத்தில் வரும் கிங்கரர்வதை முதல் பாசப் படலம் முடிய உள்ள பாடல்கள் 316 ஆகும்.
இவற்றையும் யுத்த காண்ட எண்ணிக்கையோடு சேர்த்தால், போர் பற்றிக் கூறும் பாடல்கள் மொத்தம்
4310+192+316=4818 பாடல்கள் ஆகும்.

யுத்த காண்டத்தில் கடல் காண் படலம் முதல், விடை கொடுத்த படலம் ஈறாக,39 படலங்கள் உள்ளன.
முடி சூட்டு படலம், விடை கொடுத்த படலம் போக எஞ்சிய 37ம்
போரும், போர்த் தொடர்புடைய செய்திகளும் கொண்டவை ஆகும்-

அங்கதனைத் தூது அனுப்ப வேண்டும் என்று இராமன் சொன்னபொழுது வலுவான காரணங்கள் பலவற்றைக் காட்டி,
அச்செயல் கூடாது என இலக்குவன் மறுக்கிறான். சிறந்தது போரே என்றான் இலக்குவன்;
சேவகன் முறுவல் செய்து விடை கூறுகிறான்:
“அயர்திதிலென்; முடிவும் அஃதே; ஆயினும், அறிஞர் ஆய்ந்த
நயத்துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் நன்றோ?
புயத்துறை வலியரேனும், பொறையொடும் பொருந்தி வாழ்தல்
சயத்துறை; அறனும் அஃதே’ என்று இவை சமையச் சொன்னான்” -(6981)-

வடக்கு வாயிலின் வழியே நின்ற இலக்குவன் நாணொலி செய்தான்.
‘ஒரு மனிதன் இப்படி நாண் ஒலி செய்ய முடியுமா?’ என்று வியக்கிறான் இராவணன்.
வீரன் தம்பி கூற்றின் வெம்புருவம் அன்னசிலை நெடுங்குரலும் கேளா,
ஏற்றினன் மகுடம், இவன் ‘என்னே இவன் ! ஒரு மனிசன்’ என்னா–(7159)
இலக்குவன் நாணொலி கேட்டுத் தன் மகுடத்தையே ஒரு முறை தூக்கி வைத்துக் கொண்டான் போலும்.
இது இலக்குவனுக்குச் செய்த வீர வணக்கம் போலும்.
இந்திரசித்தனைக் கொல்வது மிக முக்கியமானது என்றாலும், அதற்காக நான்முகன் படையை ஏவி உலகுக்கு
ஊறு விளைவிக்க இலக்குவன் விரும்பவில்லை என்பதை இந்திர சித்தனே ஒப்புக் கொள்கிறான்.
இதுவே அறப்போர் எனப்படும். இத்துணை நுணுக்கங்களுடன் போரைப் பற்றி 9ம் நூற்றாண்டிலேயே பாடிய
கவிஞன் தீர்க்கதரிசி என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

திவ்வியப் பிரபந்தம், உபநிடதங்கள் என்பவற்றில் துளையமாடியவன் கம்பன்,
பிரபந்தங்கள் வளர்த்த பக்தி நெறிக்கு இடம் தராமல், இறைவன், உயிர்கள்,உலகம் என்ற மூன்றையும் வேறுபடுத்திக்
காணாமல், பிரம்மம் ஒன்று தவிர ஏனைய அனைத்தும் மித்தை என்று கூறும் அத்வைதம் தமிழர்களை ஓரளவு
கவரலாயிற்று. அந்த உபநிடதங்களை வைத்துக்கொண்டே, பக்தி இயக்கத்திற்கு வழிகாண முற்பட்டான் கம்பநாடன்.
‘இது சரியா?’ என்ற வினா எழலாம். முக்கியமான பத்து உபநிடதங்களை வைத்துக் கொண்டு தான் பிரம்மம் ஒன்றே
உண்மை என்று பேசுகிறார் சங்கரர்.
அதே உபநிடதங்களை வைத்துக் கொண்டு தான் முப் பொருள் பற்றிப் பேசுகிறார் இராமானுஜர்.
எனவே, ஒன்றுக்கொன்று மாறுபட்ட கொள்கைகளை நிறுவ அதே உபநிடதங்களைப் பயன்படுத்தலாம் என்பது தெளிவாகிறது.
இந்த நுணுக்கத்தைத்தான் கம்பன் பயன்படுத்துகிறான்.

தான் சொல்லும் இக் கருத்துக்கள், உபநிடதங்களில் காணப்படுபவையே என்பதை,
“அளவையான் அளப்ப அரிது; அறிவின் அப் புறத்து உளவை ஆய் உபநிடதங்கள் ஓதுவ (இர.வதை 62)
என்ற அடிகள் மூலம் கவிஞனே பேசுகிறான்.

இரணியன் வதைப் படலத்தில் உள்ள 74,75,76, ஆம் பாடல்கள் சாந்தோக்கியம், முண்டகம் ஆகிய உபநிடதங்களின் சாரமாக –
ஏறத்தாழ அதே உவமைகளை எடுத்துப் பேசுவனவாக அமைந்துள்ளன.
“காலமும் கருவியும்” என்று தொடங்கும் பாடல் “ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான்” என்று முடிகிறது
இந்த அடி சாந்தோக்கிய உபநிடதத்தில் ஆறாவது அத்தியாயத்தின் பன்னிரண்டாவது கண்டத்தில் உள்ள 1,2,3 பாடல்களின் பிழிவாகும்.

முண்டக உபநிடதத்தின் மூன்றாவது முண்டகத்தின்,இரண்டாவது கண்டத்தில் உள்ள எட்டாவது பாடலில் வரும்
கடல், ஆறு நீர் என்பவற்றை எடுத்துக்கொண்டு ஒரு சிறிது மாற்றிக் கம்பன், இப்படலத்தின் 77 வது பாடலில்
“வேலையும் திரையும் போல் வேறுபாடு இலான்” என்று பாடுகிறான்.
76வது பாடலில் உள்ள “தூமமும் கனலும் போல் தொடர்ந்த தோற்றத்தான்” என்ற கருத்து முண்டக உபநிடதத்திலும்,
கீதையிலும் சில மாறுபாடுகளுடன் பேசப்படுகிறது.

நாராயணன், எங்கும் யாவற்றிலும் நிறைந்து உள்ள விராட் ஸ்வரூபத்தின் ஒரு பகுதியே ஆகும்.
அதுவே முழுப்பொருள் என்று நினைத்து விடாதே. அவன் இல்லை என்று பேசும் நீயும்,உன்னை அவ்வாறு
பேசச் செய்யும் உன்னுள் இருப்பவனும் அந்த நாராயணனின் ஒரு பகுதியே ஆகும் என்று சொல்லவந்த பிரகலாதன்,
‘நீ சொன்ன சொல்லிலும் உளன்’ என்று கூறுவது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.
இல்லை என்ற சொல்லிலும், இன்மைப் பொருள் தரும் சொல்லிலும் அவனே உள்ளான் என்ற கருத்து ஆழ்ந்து
சிந்திக்கத் தக்கது. “உளன் எனில் உளன் அவன்” (திவ்வியப்பிரபந்தம் – 2683) என்று தொடங்கும்
நம்மாழ்வார் பாடலின் 2வது அடி ‘இலன் எனின் இலன் அவன்’ எனும் இதே கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம்.

இரணியனுக்கு ஈடு சொல்ல முடியாத ஆணவம் தலை தூக்கி நின்றது என்பதைக் கம்பன் எடுத்துக் காட்டுகிறான்.
இத்தகைய ஓர் ஆணவம் அவனிடை வளர்வதற்கு அவனுடைய கல்வியும் ஒரு காரணமாகும்.
வேதங்களை நன்கு கற்றதனால் இந்த ஆணவம் தலைக்கேறியது. அதன் பயனாக, ‘அனைத்தும் அவன்’
என்ற நினைவு போக, ‘அனைத்தும் நான்’ என்ற அகங்காரம் வலுவடைந்தது.
அவன் கற்ற அதே வேதங்களைக் கற்ற பிரகலாதனுக்கு,’அனைத்தும் அவனே’ என்ற உறுதிப்பாடு வலுப் பெற்றது.
அறிவின் அடித்தளத்தில் பக்தி இருந்தால் ‘அனைத்தும் அவன்’ என்ற எண்ணம் தோன்றுகிறது. பிரகலாதன் நிலை இதுவாகும்.
எனவே, அத்வைதமும், உபநிடதங்களும் பக்தி இயக்கத்தை அழுத்திவிட்டு மேலே வர முயன்ற 9ம் நூற்றாண்டில்,
தமிழர்கள் கண்ட பக்தி இயக்கத்திற்குத் தலைமை இடம் தருவதற்காகவே இரணியன் வதைப் படலத்தைக் கவிஞன்
பொருத்தினான் என்பதனை அறியலாம்.
வான்மீகம் உட்பட எந்த இராமாயணத்திலும் காணப்படாத இப் பகுதியைக் கவிஞன் புகுத்துவதற்கு இதுவே
காரணமாக இருந்தது போலும்.
இவ்வாறு கொள்ளாமல்,தேரழுந்தூரில் உள்ள திருமால் கோவிலில் காணப் பெறும் ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமியே
கம்பன் இதனைப் பாடக் காரணமாயிற்று என்று கூறுவோரும் உளர்.
திவ்வியப் பிரபந்தத்தில் முக் குளித்த கம்பனுக்கு, ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமியே அவதாரம், பிரகலாதன் கதை என்பவை மிக
நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.

கரு நிறத்தோர் பால் வெளித்து வைகுதல் அரிது’ என, அவர்
உருமேவி, ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான்.(4970)
என்று பாடுவதால், வீடணனைப் பொறுத்தவரை, இலங்கையில் வாழ்ந்தாலும், இராவணன் தம்பியாக இருந்தாலும் அவன் வாழ்க்கை
முற்றிலும் மாறுபட்டதாகவே இருந்தது என்பதைக் குறிக்கிறான்.
வெண்ணிறமுடைய தருமம் தன் உண்மையான வடிவுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதால் கரு நிறம் பூண்டு வாழ்ந்தது என்று பேசுவதன்
மூலம் வீடணனுடைய உண்மைச் சொரூபத்தைக் கவிஞன் நமக்குக் காட்டுகிறான்.
நிந்தனை நறவமும், நெறி இல் ஊன்களும்
தந்தன கண்டிலேன், தரும தானமும்
வந்தனை நீதியும், பிறவும், மாண்பு அமைந்து
அந்தணர் மனை எனப் பொலிந்ததாம் அரோ (6461)
அந்தணர் இல்லம் எனப் பொலிகின்ற ஒரு வீட்டில், ஒளிந்து வாழ்கின்ற தருமமாக வீடணன் இருக்கின்றான் என்பதனை அறிய முடிகின்றது.

இலங்கை வாழ்க்கையோடு ஒட்டாத வாழ்க்கை வாழ்கின்ற வீடணன் காட்டில் உறைகின்ற தவசிகளைப் போல வாழ்ந்து வருகிறான்.
இங்ஙனம் வாழ்கின்ற ஒருவன் கொழு கொம்பு கிடைக்காமல் காற்றில் அலைப்புண்டு தள்ளாடும் கொடி போன்றவன் ஆவான்.
அக் கொடிக்குப் பக்கத்தில் ஒரு கொழு கொம்பு கிடைக்கும் பொழுது ‘அது எத்தகைய மரம், அதைப் பற்றிப் படருவது
நலமோ’ என்று கொடி சிந்திப்பதில்லை.
அதே போல ஒளிந்து வாழ்கின்ற இந்தத் தருமம் சந்தர்ப்பம் வந்தபொழுது இருந்த இடத்தை விட்டுப் பெயர்ந்து விடுகிறது.
அதுவும் அவனாகப் பெயர வில்லை.
“விழிஎதிர் நிற்றியேல் விளிதி” (6372) என்று இராவணன் கூறிய பிறகே வீடணன் இலங்கை விட்டுப் புறப்பட்டான்.
புறப்பட்டு வானிடை நின்று, மறுபடியும் அண்ணனுக்கு ஓர் இறுதி எச்சரிக்கை செய்துவிட்டு,
‘என் பிழை பொறுத்தி’ (6376) என்று கூறிவிட்டுப் பெயர்கிறான்.

தீயனே ஆயினும் இராவணன் பால் அன்பு கொண்ட வீடணன் அந்த இராவணன்’
இந்திரப் பெரும்பதம் இழக்கின்றான்’ (6143) என்றும்,
‘புத்திரர்,குருக்கள், பொருஇல் கேண்மையர், மித்திரர்,
அடைந்துளோர், மெலியர், வன்மையோர் இத்தனை பேரையும் (6375) அழிக்கத் துணிந்தான் என்றும்
நினைந்து எல்லையற்ற வருத்தம் அடைகிறான்

விளைவினை அறியும் மேன்மை வீடணன், என்றும் வீயா
அளவு அறு பெருமைச்செல்வம் அளித்தனை ஆயின், ஐய!
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர,
இளையவற் கவித்த மோலி என்னையும் கவித்தி’ என்றான்–(6506)–
திருவடி தீட்சை செய்யப் பெற்ற வீடணன் புதுப் பிறவி எடுத்து விட்டான்

கும்பகர்ணன் தொடக்கத்திலேயே “நான்முகன் மரபில் வந்தவனாகிய நீ
தீயினை விரும்பி மடியில் கட்டிக்கொண்டாய். இதன் விளைவு என்னவாகும் என்று சிந்திக்கவில்லை (6118)
மற்றொருவன் வீட்டில் வாழும் தவக் கோலம் கொண்ட பெண் மணியைக் கண்டு,ஒரு சிறிதும் இரக்கம் காட்டாமல்
நீதி நூல்கள் கூறுபவற்றை மறந்து சிறையில் அடைத்தாயோ, எந்த வினாடி இச் செயலைச் செய்தாயோ, அந்த வினாடியே
அரக்கர் புகழ் மாயத் தொடங்கி விட்டது.

மனிதர்,விலங்கு பெண் எவரேனும் ஒருவர் கூட அவனைக் கொல்ல முடியும் என்பதை விளக்கமாக எடுத்துக் காட்டி,
இப்பொழுது அந்த மூன்றுமே ஒன்றாகச் சேர்ந்துள்ளது என்பதையும் கூறுகிறான்.
மனிதரின் பிரதிநிதியாக இராமனும், விலங்கின் பிரதிநிதியாக அனுமனும், பெண்ணின் பிரதிநிதியாகச் சீதையும்
இப்பொழுது ஒன்றாகச் சேர்ந்து அவனை எதிர்ப்பதால் இறுதி நிச்சயம் என்று எடுத்துக் காட்டுகிறான்.
உயிரச்சம் கொண்டவனுக்கு மேலும் அச்சத்தை விளைவிக்கவே இம் முறையைக் கையாளுகின்றான் வீடணன்

சாரமற்ற தன் வாழ்க்கைக்கு மரணமே சிறந்த பரிசு, அதுவும் இராமன் போன்ற ஒருவன் கையால்
இறப்பது புகழுடைய செயலே என்கிறான் கும்பன்.
போர்க்களத்தில் வீடணனைச் சந்தித்த கும்பன், “புலையுறு மரணமெய்தல் எனக்கு அது புகழதேயால்” எனக் கூறிவிடுகிறான்.
அண்ணன் பொருட்டாகத் தன் அழிவை இரு கரம் நீட்டி வரவேற்கத் துணிந்து விட்டான்

இந்திரசித்தன், இலக்குவன் ஆற்றலை மனம் திறந்து பாராட்டுகிறான்.
அந்நரன்; அல்லன் ஆகின், நாரணன் அனையன்;அன்றேல்,
பின், அரன், பிரமன் என்பார்ப் பேசுக; பிறந்து வாழும்
மன்னர் நம்பதியின் வந்து, வரிசிலை பிடித்த கல்வி
இந்நரன்தன்னோடு ஒப்பார் யார் உளர், ஒருவர்?’ என்றான்.–8121-

போர்க்களத்தில் உண்மையில் இராமன் யார் என்பதை இராவணன் அறிய முடிகிறது.
“சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்: திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய்வரம் எல்லாம் அடுகன்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?’ என்றான். –9837-

“யாரேனும் தான் ஆகுக! யான் என் தனி ஆண்மை
பேரேன்; நின்றே வென்றி முடிப்பென்; புகழ் பெற்றேன்;
நேரே செல்லும் கொல்லும் எனில் தான் நிமிர்வென்றி,
வேரே நிற்கும்; மீள்கிலேன்’ என்னா, விடலுற்றான்.-9838–ஆணவத்தின் சொரூபமாகக் காட்சி அளிக்கின்றான்.

———-

திருமுடிசூட்டு படலத்தில் முடிசூட்டலைக் கூறும் கவிஞன் பாடியுள்ள அரியணை அனுமன் தாங்க என்ற பாடல்
அனைவரும் அறிந்த ஒன்றாகும். இப்பாடலின் தனிச் சிறப்பு என்னவென்றால்,
முடிசூட்டப்பட்டவன் பெயரைக் குறிக்காமலேயே ‘வசிட்டனே புனைந்தான், மௌலி’ என்று முடிக்கிறான் கவிஞன்.
முடிசூட்டப்பட்டவனைச் சுற்றி நிற்பவர்கள் வரிசையாகக் கூறப் பெறுகிறார்கள்.
அரியணை அனுமன் தாங்கினான்; பரதன் வெண்குடை கவித்தான்; இருவரும் (இலக்குவ, சத்ருக்கனர்) கவரி
வீசினர். அங்கதன் உடைவாள் ஏந்தினான்; இவர்களுக்கு இப்பணி வழங்கப்பட்டதன் நுணுக்கத்தைக் காண்டல் வேண்டும்.
அகங்கார, மமகாரங்கள் அறவே செற்று இராம பக்தி சாம்ராஜ்ஜியத்தில் மூழ்கித் தங்களையே இழந்தவர்கள் அனுமன், பரதன் என்ற
இருவருமாவர். அதிலும் பக்தியோடு தொண்டும் கலந்த முழுவடிவம் அனுமன். அவன் அரியணைத் தாங்கினான் என்றால்
இராமன் ஆட்சி என்பது தொண்டு என்ற அடித்தளத்தின் மேல் அமைந்துள்ளது என்று அறிய முடியும்.
தன்னலமற்ற பக்தியில் திளைத்தாலும் ஆயிரம் இராமர்கட்குச் சமமானவன் என்று மற்று ஓர் அன்பே வடிவான குகனால்
சான்றிதழ் தரப்பெற்றவன் பரதன் என்றாலும் தலைவன் பணி தலை நின்றவனாய் பதினான்கு ஆண்டுகள் ஆட்சி புரிவது
தன் கடமை என்று அறிந்தவுடன் விருப்பு, வெறுப்பற்ற சமநிலையில் நின்று ஆட்சி புரிந்தவன்
ஆதலால், அன்போடு கூடிய கடமை உணர்ச்சிக்கு பரதன் எடுத்துக்காட்டாவான். எனவே அவன் குடை கவிக்கிறான்
என்றால், இராமராஜ்ஜியம் தொண்டு என்ற அஸ்திவாரத்தில் மேலும் விருப்பு வெறுப்பற்ற கடமை என்ற குடையின் கீழும்
அமைந்திருத்தலைக் கவிஞன் உருவகமாகப் பேசுகிறான்.
இவை இரண்டிற்கும் அடுத்தபடியாக அன்போடு கலந்த தொண்டின் வடிவமாகிய இலக்குவன் ஒருபுறம் கவரி வீசுகிறான்.
அன்பின் வடிவான சத்ருக்கனன் மற்றொரு பக்கம் கவரி வீசுகிறான்.
எனவே இராமன் என்ற அறத்தின் மூர்த்தி மேலும்,கீழும்,பக்கங்களிலும் அன்பு, கடமை,தொண்டு என்பவற்றால்
சூழப்பட்டுள்ள ஓர் உருவகத்தை இந்த ஒரு பாடலில் கவிஞன் தந்து விடுகிறான்

———

இராகவன் அனுமனை நோக்கி,
“மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி,
‘ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த
பேர் உதவிக்கு யான் செய் செயல்பிறிது இல்லை:பைம்பூண்
போர் உதவிய திண்தோளாய்! பொருந்துறப் புல்லுக!’என்றான்.(10351)
இப்பாடலில் உள்ள புதுமையையும், நுணுக்கத்தையும் சிந்திக்க வேண்டும்.
தழுவினவர் ஆளுமை மிக்கவர் என்றும் தழுவப்பட்டவர் ஒருபடி குறைந்தவர் என்றும் கருதுவது இயல்பு.
இராமன் அனுமனைத் தழுவி யிருந்தால் மிகச் சிறப்புடைய செயல் மரபுக்கு ஒத்ததாகும்.
ஆனால், “அனுமனே! நீ என்னைப் பொருந்துறப்புல்லுக!” என்று பேசுகிறான் கோசல நாடுடை வள்ளல்.
தொண்டின் பரிணாமமாக விளங்கும் அனுமனைப் பார்த்து, நீ என்னைப் புல்லுக என்று இராகவன் கூறும்பொழுது,
தன்னைவிடத் தன் நாமத்தையே ஜெபிக்கும் அகங்கார, மமகாரங்களற்ற தொண்டனாகிய அனுமனை ஒருபடி உயர்த்தி விடுகிறான்.
இராகவன் பரம்பொருள் ஆதலின், தொண்டனை, பக்தனை என்னைப் புல்லுக என்று சொல்லும் பொழுது
ஒரு தொண்டனின் பிடியில் பரம்பொருள் அகப்பட்டுக் கொள்ளுகிறான். குறியீட்டு முறையில் சொல்வதானால்,
பக்தனின் இருதயத்துக்குள்,பரம்பொருள் புகுந்துவிட்டான் என்பதையே இது குறிக்கிறது.

—————————————————————-—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண நூல்கள்–

January 8, 2021

ஸ்ரீ இராமாயண நூல்கள்

ஸ்ரீ வான்மீகியின் காப்பியம் எழுந்த பின்னர் வடமொழி முதலான இருபதுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில்
ஸ்ரீ இராமாயணம் காப்பிய வடிவம் பெற்று வழங்கி வருகிறது-

சமஸ்கிருதம்
1.ஸ்ரீ வான்மீகி இராமாயணம்

ஸ்ரீ இராமகாதை நுவலப்படும் பிற சமஸ்கிருத நூல்கள்
1.ஸ்ரீ மகாபாரதம் : (நான்கிடங்களில்)
ஆரணிய பருவம் 147:28-38; 252-275
துரோண பருவம் 59:1-31
சாந்தி பருவம் 22;51-62
ஏறக்குறைய 700 பாடல்களில் இராமகாதை குறிக்கப்படுகிறது.

2. புராணங்கள் : (முதன்மையானவை)
1.ஸ்ரீ விஷ்ணு புராணம் (கி.பி. 4) ( IV, 4,5)
2.ஸ்ரீ பிரும்மானந்த புராணம் (கி.பி. 4) (2. 21)
3.ஸ்ரீ வாயு புராணம் (கி.பி. 5) ( II.26) விஷ்ணு புராணம் போன்றது.
4.ஸ்ரீ பாகவத புராணம் (கி.பி. 6) (IX 10-11) இங்கு தான் சீதை திருமகளின் அவதாரம் என்னும் செய்தி முதலில் கூறப்படுகிறது.
5.ஸ்ரீ கூர்ம புராணம் (கி.பி. 7) (.19: 1; II 34)
6.ஸ்ரீ அக்கினி புராணம் (கி.பி. 8-9) (.5-12) வான்மீகியின் சுருக்கம்
7.ஸ்ரீ நாரதர் புராணம் (கி.பி. 10) (1. 79; II.75) வான்மீகியின் சுருக்கம்.
8.ஸ்ரீ பிரம்ம புராணம் – அரிவம்சத்தின் சுருக்கம்.
9.ஸ்ரீ கருட புராணம் (கி.பி. 10) பெரும்பான்மையும் பிற்கால இடைச்செருகல்கள்
10.ஸ்ரீ ஸ்கந்த புராணம் (கி.பி. 8க்குப் பின்) (II : 30) சிற்சில செய்திகள்
11.ஸ்ரீ பத்ம புராணம் (கி.பி. 12-15) (116 படலம், உத்தர 24, 43,44)

சிறியன
1.ஸ்ரீ தர்மோத்ர புராணம் (கி.பி. 7)
2.ஸ்ரீ நரசிம்ம புராணம் (கி.பி. 4-5) (இயல் 47-52)
3.ஸ்ரீ தேவி பாகவதம் (கி.பி. 10-11) ( III 28-30)
4.ஸ்ரீ பிரகதர்ம, சௌரபுராணம் (கி.பி. 950-1050) (இயல் : 30)

மேற்கண்ட புராணங்கள் தவிர வான்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சில
முழு ஸ்ரீ இராமாயண நூல்களும் வடமொழியில் காணப் படுகின்றன.
1.ஸ்ரீ யோக வசிஷ்ட (அ) வசிஷ்ட இராமாயணம் (கி.பி. 8 (அ) 12)
2.ஸ்ரீ அத்யாத்ம இராமாயணம் (கி.பி. 13 இராமசர்மர்)
3.ஸ்ரீ அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்டது)
4.ஸ்ரீ ஆனந்த இராமாயணம் (கி.பி. 15) வால்மீகி பெயரால் வழங்குகிறது.

இவையேயன்றி இன்னும் பல்வேறு சிறுசிறு ஸ்ரீ இராமாயண நூல்கள்
வடமொழியில் கி. பி 19ஆம் நூற்றாண்டு வரையில் தோன்றியுள்ளன.
இவற்றுள் பெரும்புகழ் வாய்ந்தன:
1.ஸ்ரீ காளிதாசர் : ஸ்ரீ இரகுவம்சம் (கி. பி. 4)
2.ஸ்ரீ பிரவர்சேனர் : ஸ்ரீ இராவணவகோ (அ) சேதுபந்தா (கி. பி. 550-600)
3.ஸ்ரீ பட்டி : ஸ்ரீ இராவணவதா (கி. பி. 500-650)
4.ஸ்ரீ குமாரதாசர் : ஸ்ரீ ஜானகி ஹரணா (கி. பி. 8)
5.ஸ்ரீ அபிநந்தர் : ஸ்ரீ இராமசரிதை (கி. பி. 9)
6.ஸ்ரீ க்ஷேமேந்திரர் : (a)ஸ்ரீ இராமயண மஞ்சரி (கி. பி. 11).: (b)ஸ்ரீ தசாவதார சரிதை
7.ஸ்ரீ சாகல்ய மல்லர் : ஸ்ரீ உதார ராகவர் (கி. பி. 12)
8.ஸ்ரீ சகர கவி : ஸ்ரீ ஜானகி பரிணயம் (கி. பி. 17)
9.ஸ்ரீ அத்வைத கவி : ஸ்ரீ இராமலிங்காம்ருதம் (கி. பி. 17)
10.ஸ்ரீ மோகனஸ்வாமி : ஸ்ரீ இராம ரகசியம் (அ)ஸ்ரீ இராம சரிதை)(கி. பி. 1608)

ஸ்ரீ இராமகாதை நாடக வடிவிலும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை
பல நூல்களாக வெளி வந்துள்ளன. ஸ்ரீ பாசர், ஸ்ரீ பவபூதி, ஸ்ரீ ஜெயதேவர் முதலான நாடகாசிரியர்கள் இதில் அடங்குவர்.

பௌத்த இராமாயணங்கள்
1. தசரத ஜாதகம் (பாலி, கி. மு. 5)
2. அனமகம் ஜாதகம் (பாலி, கி. மு. 5)
3. தசரத கதனம் (பாலி, கி. மு. 5)

ஜைன இராமாயணங்கள்
1. விமல சூரி : பௌம சரிதம் (பிராக்ருதம், கி. பி. 4)
2. சங்க தாசர் : வாசுதேவ ஹிண்டி (பிராக்ருதம், கி. பி. 5)
3. இரவி சேனர் : பத்ம புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 6)
4. குணபத்ரர் : உத்தர புராணம் (சமஸ்கிருதம், கி. பி. 10)
5. சுயம்பு தேவர் : பௌம சரிதம் (அபப்பிரம்சம், கி. பி. 9)
6. சீலங்கர் : சௌபன்ன மகா புருஷ சரிதம் (பிராக்ருதம், கி. பி.868)
7. பத்ரேசுவரர் : ககாவலி (பிராக்ருதம், கி. பி. 11)

தமிழ்
ஸ்ரீ கம்பன் : ஸ்ரீ கம்பராமாயணம் (கி. பி. 9)

தெலுகு
1.ஸ்ரீ கோன புத்தா ரெட்டி : ஸ்ரீ ரங்கநாத ராமாயணம் (கி. பி. 13)
2.ஸ்ரீ பாஸ்கரன் மற்றும் மூவர் : ஸ்ரீ பாஸ்கர ராமாயணம் (கி. பி. 13)
3.ஸ்ரீ ஆதுகூரி மொல்ல : ஸ்ரீ மொல்ல ராமாயணம் (கி. பி. 15)

கன்னடம்
1. ஸ்ரீ அபிநவ பம்பா என்னும் ஸ்ரீ நாக சந்திரர் : ஸ்ரீ பம்ப ராமாயணம் (கி. பி. 11)
2. ஸ்ரீ குமார வான்மீகி என்னும் ஸ்ரீ நரகரி : தொரவெ ராமாயணம் (கி. பி. 16)

மலையாளம்
1. ஸ்ரீ கன்னச இராம பணிக்கர் : ஸ்ரீ கன்னச ராமாயணம் (கி. பி. 14)
2. ஸ்ரீ துஞ்சத்த எழுத்தச்சன் : ஸ்ரீ அத்யாத்ம ராமாயணம் (கி. பி. 16)

இந்தி
1.ஸ்ரீ கோஸ்வாமி துளசிதாஸ் : ஸ்ரீ துளசி ராமாயணம் (கி. பி. 1574)
2.ஸ்ரீ கேசவ தாஸ் : ஸ்ரீ இராம சந்திரிகா (கி. பி. 16)

அசாமி
ஸ்ரீ மாதவ் கந்தவி : ஸ்ரீ அசாமி ராமாயணம் (கி. பி. 14)

வங்காளம்
ஸ்ரீ கிருத்திவாசன் : ஸ்ரீ வங்காள ராமாயணம் (கி. பி. 15)

ஒரியா
ஸ்ரீ பலராமதாஸ் : ஸ்ரீ ஒரியா ராமயணம் (கி. பி. 16)

மராத்தி
ஸ்ரீ ஏக நாதர் :ஸ்ரீ பாவார்த ராமாயணம் (கி. பி. 16)

நாட்டுப்புற இலக்கியங்கள்
தமிழ், மைதிலி, போஜ்புரி, வ்ரஜ், இந்தி, மற்றும் சில வடநாட்டு மக்களிலக்கியப் பாடல்கள்.

———-

தெலுகு இராமாயணங்களான ரங்க நாத ராமாயணம், பாஸ்கர ராமாயணம், மொல்ல ராமாயணம்
மூன்றிலும் காண்ட உட்பிரிவுகள் இல்லை.
குமார வான்மீகியின் தொரவெ இராமாயணம் காண்டந்தோறும் சந்தி என்னும் உட்பிரிவை உடையதாக விளங்குகிறது.
மலையாள இராமாயணங்களில் காண்டப் பிரிவுகள் உண்டு.
துளசி இராமாயணத்தில் காண்டப் பிரிவு தவிர, படலம், சருக்கம் போன்ற உட்பிரிவுகள் உடையதாகத் துளசியின்
காப்பியம் அமையவில்லை.

தெலுகு மொழியின் முதல் பெண் காப்பியக் கவிஞராகிய ஆதுகூரி மொல்ல, மறுமைப் பயனாகிய முக்தியை அடையும் நோக்குடன்
மொல்ல இராமாயணத்தைப் படைத்ததாகக் கூறுகிறார். மேலும், இவர் தாமே இக்காப்பியத்தைப் படைக்க முனையவில்லை என்றும்,
ஸ்ரீராமரே தம் கதையைக் கூறி எழுதுமாறு கட்டளையிடத் தாம் எழுதியதாகவும் கூறுகிறார்.

—————————————————————-—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-