Archive for the ‘உபதேச ரத்ன மாலை’ Category

ஸ்ரீ உபதேச ரத்ன மாலை -ஸ்ரீ .P.B.A.ஸ்வாமிகள் வியாக்யானம் –

December 24, 2015

ஸ்ரீ சைலேச  தயா பாத்ரம் தீ பக்தியாதி குணார்ணவம்
யதீந்த்ரப் பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்-

இந்த திவ்ய பிரபந்தத்தின் அமைப்பின் அழகு நிகர் அற்றது -அமுது ஒழுகுகின்ற தமிழனில் விளம்பிய சீர்மை சொல்லப் புகில் வாயமுதம் பரக்கும்
முதல் ஆழ்வார்களின் திருவவதார நாட்களை முதலிலே அருளிச் செய்து உடனே மாதங்களின் அடைவே அருளிச் செய்கிறார் –
அதாவது முதலில் ஐப்பசி மாதத்தில் திருவவதரித்த முதல் ஆழ்வார்களை அருளிச் செய்து அதற்கு அடுத்து கார்த்திகையில்
திருவவதரித்த திருமங்கை ஆழ்வார் -திருப் பாண் ஆழ்வார் – இரண்டு ஆழ்வார்களையும்
அதற்குப் பின் மார்கழி மாசம் திருவவதரித்த தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரையும்
பின்பு தை மாசம் திருவவதரித்த திரு மழிசை ஆழ்வாரையும் மாத க்ரமமாக அருளிச் செய்கிறார்

வாசி யறிந்த வதரியில் நாரணர் மனம் கொள்
தேசுடை எந்தை மணவாள மா முனி சீர் தழைப்பச்
சி சயிலேச தயா பாத்திரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டுரைத்தார் இவ்வையம் சீருறவே –ஸ்ரீ கோயில் அண்ணன் –
————————

ஸ்ரீ கோயில் கந்தானை அண்ணன் அருளிச் செய்த தனியன் –

முன்னம் திருவாய்மொழிப் பிள்ளை தாம் உபதேசித்த நேர்
தன்னின்படியை தணவாத சொல் மணவாள மா முனி
தன்னன்புடனே செய்த யுபதேச ரத்ன மாலை தன்னைத்
தன்நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே –

முற்காலத்தில் ஸ்வ ஆசார்யரான ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை உபதேசித்து அருளின கிராமத்தை அதிக்ரமியாமல் அனுவர்த்தித்தே
பேசுமவரான ஸ்ரீ மணவாள மா முனிகள் தம்முடைய பரம கிருபையினால் செய்து அருளின ஸ்ரீ உபதேச இரத்தின மாலை என்கிற
திவ்யப் பிரபந்தத்தை தங்கள் ஹ்ருதயத்திலே -கண்ட பாடம் செய்து தரிக்கின்றவருடைய திருவடிகளே -நமக்குத் தஞ்சம் –

—————————————————————

தமக்குக் கிடைத்த உபதேச வழியின் படியே வெண்பாவில் அமைத்துப் பேசுவதாகக் கூறுதல்

எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்
வந்த வுபதேச மார்க்கத்தைச் -சிந்தை செய்து
பின்னவரும் கற்க வுபதேசமாய்ப் பேசுகின்றேன்
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து —–1-

எமக்கு ஆசிரியரான ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை என்கிற ஸ்ரீ திருமலை யாழ்வார் உடைய பரம கிருபையினால் கிடைத்த உபதேச வழியை
அனுசந்தித்து பின்பு உள்ளாறும் கற்குமாறு பொருத்தமான சீர்களை யுடைய வெண்பா வென்கிற யாப்பிலே அமைத்து
உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உபதேச ரூபமாகப் பேசுகின்றேன் —
மன்னிய சீர் -வெண்பாவுக்கு விசேஷணம் ஆக்காமல்
மன்னிய சீர்களைப் பேசுகின்றேன் -ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஆச்சார்யர்களின் திருக் குணங்களைப் பேசுகின்றேன் என்னவுமாம்

——————————————-

இப்பிரபந்தத்தை விவேகிகள் உகப்பதே போதும் என்கிறார்

கற்றார்கள் தாமுகப்பர் கல்வி தன்னுள் ஆசையுள்ளோர்
பெற்றோம் என யுகந்து பின்பு கற்றார் -மற்றோர்கள்
மாச்சர்யத்தால் இகழில் வந்தது என்னெஞ்சே யிகழ்கை
ஆச்சர்யமோ தானவர்க்கு ————–2-

மனமே கல்வி பயின்றவர்கள் இப் பிரபந்தத்தைப் பெற்று மகிழ்ந்திடுவர்கள் -கல்வியில் விருப்பம் உள்ளவர்கள் இது லபிக்கப் பெற்றோமே என்று
அகம் குழைந்து பிறகு இதை அப்யசிப்பர்கள் -கீழ்ச் சொன்ன இரண்டு வகுப்பிலும் சேராத மற்றையோர்கள் மாத்சர்யத்தினால் பகை பாராட்டி
இதனை இகழ்ந்தால் அதனால் நமக்கு உண்டாகும் சேதம் என்ன -ஒன்றும் இல்லை -அப்படிப்பட்டவர்களுக்கு நல்ல விஷயங்களை இகழ்வது
எனபது வியப்போ -அவர்கட்கு இது இயல்பே யன்றோ
ஆச்சரியமோ தானவர்க்கு -என்று பிரித்து ஆஸூர பிரக்ருதிகளுக்கு -என்றும் சொல்வர் -ஆயினும் இப்பொருள் விவஷிதம் அல்ல என்பர்

——————————————————————————-

ஆழ்வார் ஆச்சார்யர் ஸ்ரீ ஸூக்த்திகளுக்கு பல்லாண்டு –

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்  வாழி
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி -ஏழ்பாரும்
உய்ய வர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து – ———-3-

ஸ்ரீ பொய்கையாழ்வார் முதலான ஆழ்வார்கள் வாழ்ந்திடுக -அவர்கள் அருளிய திவ்ய பிரபந்தங்கள் வாழ்ந்திடுக
தாழ்வு ஒன்றும் இல்லாத மிகச் சிறந்த ஸ்ரீ எம்பெருமானார் முதலான ஆசார்யர்கள் வாழ்க
பூ மண்டலம் முழுவதும் உஜ்ஜீவிக்குமாறு அவ்வாசிரியர்கள் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகளும் விலஷணமான வேதங்களோடு கூட வாழ்க
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து -என்றது வேதங்களும் வாழ வேணும் என்று அவற்றுக்குமாக மங்களா சாசனம் செய்த படி
ஆழ்வார் ஆச்சார்யர்களின் ஸ்ரீ ஸூக்திகளுக்கு எல்லாம் வேதமே மூலமானது பற்றி அவற்றுக்கும் மங்களா சாசனம் ப்ராப்தம்
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து அவர்கள் உரைத்தவர்கள் -என்று அந்வயித்து-
வேதங்களுக்குச் சேர ஆசாரியர்கள் அருளிச் செய்தவை -என்ற பொருளும் உரைப்பர் –

————————————————————-

ஆழ்வார்களின் திரு அவதார க்ரமம் அருளுகிறார்-

பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ் மழிசை
ஐயன் அருள் மாறன் சேரலர் கோன்–துய்ய  பட்ட
நாதன்  அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன்
ஈதிவர் தோற்றத்து அடைவாம் இங்கு ——-4-

பொய்கையாழ்வார் முதல்வர் -பூதத் தாழ்வார் இரண்டாமவர் -பேயாழ்வார் மூன்றாமவர் -கீர்த்தி வாய்ந்த திரு மலிசைப் பிரான் நான்காமவர் –
அருள் மிக்க நம்மாழ்வார் ஐந்தாமவர் -குலசேகரப் பெருமாள் ஆறாமவர் -பரி சுத்தரான பெரியாழ்வார் ஏழாமவர்-தொண்டர் அடிப்பொடி யாழ்வார் எட்டாமவர் –
பரம சாத்விகரான திருப் பாண் ஆழ்வார் ஒன்பதாமவர் -விலஷணரான திருமங்கை யாழ்வார் பத்தாமவர்
இந்த வரிசைக் க்ராமமானது இவ் உலகில் இவ் வாழ்வார்களின் அவதார க்ரமமாகும்
சிலர் ஆராய்ச்சி செய்வதாகப் புகுந்து மனம் போனவாறாக கல்பிப்பர் -அதனால் ஆஸ்திகர்களின் நெஞ்சு
கலங்காமைக்காகப் பொய்யில்லாத மணவாள மா முனிகள் இங்கனே அடைவு தன்னை அமைத்து அருளுகிறார்

————————————————————————–

ஆழ்வார்கள் திருஅவதரித்த மாத நஷத்ரங்களை அருளிச் செய்கிறார்

அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள்
இந்த வுலகில் இருள் நீங்க -வந்துதித்த
மாதங்கள் நாள்கள் தம்மை மண்ணுலகோர் தாம் அறிய
ஈதென்று சொல்லுவோம் யாம்  —5-

அழகிய தமிழ்ப் பாஷையினால் திவ்யப் பிரபந்தங்களை ஆராய்ந்து அருளிச் செய்த மேலே கூறிய ஆழ்வார்கள்
இந்த இருள் தரும் மா ஞாலத்தில் அகவிருள் தொலைவதற்காக வந்து அவதரிக்கப் பெற்ற மாசங்களையும்
நஷத்ரங்களையும் தெரிந்து கொள்ளும் பொருட்டு இன்னவை என்று இனி நாம் அருளிச் செய்வோம்
இந்த முதல் ஆழ்வார்கள் இன்ன இடத்தில் அவதரித்தார்கள் எனபது காலப் பழமையால் நிச்சயிக்கப் போகாது -போன்ற வாக்கியப் பிறழ்வு விளைந்திட்டதே
இங்கனே நேராமைக்காகவே மா முனிகள் ஆழ்வார்கள் அவதரித்த மாச நஷத்ர திவ்ய தேசங்களை இப்பிரபந்தத்தில் இட்டு அருளுகிறார்

—————————————————————————————————-

முதல் ஆழ்வார்கள் திருவவதரித்த மாத நஷத்ரங்கள் அருளுகிறார் –

ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் -எப்புவியும்
பேசு புகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே   தோன்று பிறப்பால் —-6-

இவ்வாழ்வார்கள் மூவரும் விபவத்தில் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதவராய் -ஓடித் திரியும் யோகிகளாய் இருந்ததனாலும்
அர்ச்சையிலும் அப்படியே கூடியே வாழ்வதனாலும் இம் மூவருக்கும் சேர்த்தே பாசுரம் இட்டு அருளினார் ஆயிற்று
ஐப்பசி -ஐப்பிசி-பாட பேதங்கள் -தேசுடனே -அயோநிஜத்வ பிரயுக்தமான தேஜஸ் ஸூ -விவஷிதம் -சிறப்பால் ஒப்பிலவாம் -அந்வயம்

——————————————————————————————-

முதல் ஆழ்வார்கள் திருநாமம் காரணம் அருளிச் செய்கிறார்

மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல் செய்து  நாட்டை யுய்த்த -பெற்றிமையோர்
என்று முதல் ஆழ்வார்கள் என்னும் பெயர் இவர்க்கு
நின்றது உலகத்தே நிகழ்ந்து ———-7-

மற்றும் உள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்து உதித்த படியினால் முதல்வர் ஆயினர் –
நல் தமிழால் நூல் செய்ததனால் ஆழ்வார்கள் ஆயினர்
பெற்றிமை -பெருமை-பெற்றிமையோர் -பெரியோர் என்றபடி –

—————————————————————-

திருமங்கை ஆழ்வார் உடைய திருவவதார நாள் அருளிச் செய்கிறார் –

பேதை நெஞ்சே இன்றைப் பெருமை யறிந்திலையோ
ஏது பெருமை   இன்றைக்கு என்று என்னில் -ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர் கோன் மா நிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண் – ———8-

நாள் பாட்டாக சேவிக்க -சிஷ்யர்கள் பிரார்த்தித்த -இன்று -அமைத்து -நாள் பாடல்களில் அருளிச் செய்கிறார்

————————————————————————

மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கம் கூற திருவவதரித்த பெருமையை அருளிச் செய்கிறார்

மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த –  வீறுடைய
கார்த்திகையில்  கார்த்திகை  நாள் இன்று என்று காதலிப்பார்
வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து ——————–9-

வேத சதுஷ்ட்ய அங்க உப அங்கங்கள் பதினாலும் போலே இந்நாலுக்கும் இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன் மாலைகளும் -ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்திகள்
சீஷா வியாகரணம் நிருக்தம் சந்தஸ் கல்பம் ஜ்யோதிஷம் -ஆறு வேத அங்கங்கள்
மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்திரங்கள் -ஆகிற எட்டு உப அங்கங்கள்
நம்மாழ்வார் திரு உள்ளத்தைப் பின் பற்றியே மற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்து உள்ளார்கள் என்றபடி

——————————————————————————————————

திருப்பாண் ஆழ்வார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார்

கார்த்திகையில் ரோஹிணி நாள் காண்மின் இன்று காசினியீர்
வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால் –ஆத்தியர்கள்
அன்புடனே தான் அமலனாதி பிரான் கற்றதற்பின்
நன்குடனே கொண்டாடும் நாள் – ——–10-

அறிய வேண்டும் அர்த்தங்களை எல்லாம் அழகாக அமைத்து பத்தே பாசுரமாகச் சுருங்க அருளிச் செய்தவர் இவ் வாழ்வார் யாதலால்
அமலனாதி பிரான் கற்றதன் பின் -என்று சிறப்பித்து எடுத்து அருளுகிறார்
நன்குடனே கொண்டாடும் நாள் -நலமாக கொண்டாடப் பெரும் நாளாகும் இது

——————————————————————–

தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார்

மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மா நிலத்தீர்
என்னிதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் -துன்னு புகழ்
மா மறையோன் தொண்டர் அடிப் பொடி யாழ்வார் பிறப்பால்
நான்மறையோர் கொண்டாடும் நாள் ———-11-

துன்னு புகழ் -நிரம்பிய புகழை யுடையராய்
மா மறையோன் -பரம வைதிகரான
நாள் மறையோர் -விதிக்க உத்தமர்கள்
கொண்டாடும் நாள் -ஆதரிக்கும் நாளாகும் இது –

—————————————————————————

திருமழிசைப் பிரான் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார்

தையில் மகம் இன்று  தாரணியீர் ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் –துய்ய மதி
பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள் ———12-

துய்ய மதி -பரிசுத்தமான மதியைப் பெற்ற
இவ் வாழ்வார் பேயாழ்வாரை அடி பணிந்து திருந்தினவர் ஆதலால் -துய்ய மதி பெற்ற -என்று அருளிச் செய்கிறார்
சப்த ரிஷிகள் மக நஷத்ரம் சுற்றி வர்த்திப்பதாகச் சோதிடர்கள் சொல்லுவார்கள் –
அதற்கு ஏற்ப நல் தவர்கள் கொண்டாடும் நாள் -என்று அருளிச் செய்கிறார்
தரணி என்னும் வடசொல் தாரணி என்று நீட்டல் பெற்றது

—————————————————————————————-

குலசேகர ஆழ்வார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார்

மாசிப் புனர்பூசம் காண்மின் இன்று மண் உலகீர்
தேசித் திவசத்துக்கு ஏது என்னில்    -பேசுகின்றேன்
கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால்
நல்லவர்கள் கொண்டாடும் நாள் ————13-

நல்லவர்கள் -சத்துக்கள்
தேசு -தேஜஸ்
திவசம் -நாள் –

———————————————————————————–

நம்மாழ்வார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார்

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப்
பாரோர் அறியப் பகர்கின்றேன் –சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்  ———–14-

சீர்மை மிகுந்த வடமொழி வேதத்தை த்ராவிடமாகச் செய்து அருளின -யதார்த்த வாதியாய் அழகிய திரு நகருக்குத் தலைவரான
நம்மாழ்வார் திருவவதரித்த திரு நாள் அன்றோ

——————————————————————————-

நம்மாழ்வார் -அவர் திருவவதரித்த திருநாள் –அவர் திருவாக்கு -திருநகரி –
நான்குமே ஒப்பற்றவை என்று அருளிச் செய்கிறார்

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்
உண்டோ சடகோபர்க்கு    ஒப்பு ஒருவர் -உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ
ஒரு பார் தனில் ஒக்கும் ஊர் ————15-

———————————————————————————

பெரியாழ்வார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார் –

இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே
இன்றைக்கு என்னேற்றம் எனில் உரைக்கேன் -நன்றி புனை
பல்லாண்டு பாடிய நம் பட்டர் பிரான் வந்துதித்த
நல்லானியில் சோதி நாள் ————-16-

நம் பட்டர் பிரான் என்று அபிமானித்து அருளிச் செய்கிறார்
நன்றி புனை பல்லாண்டு பாடிய நம் பட்டர் பிரான் என்று அன்வயம் –

———————————————————————————–

மா நிலத்தில் முன்னம் பெரியாழ்வார் வந்துதித்த
ஆனி தன்னில் சோதி என்றால் ஆதரிக்கும் -ஞானியர்க்கு
ஒப்பு ஒருவர் இல்லை இவ் வுலகு தனில் என்று நெஞ்சே
எப்பொழுதும் சிந்தித்து இரு ————17-

நம் பெரியாழ்வார் என்று மீண்டும் அபிமானித்து அருளுகிறார்
ஆனி திரு ஸ்வாதீ நஷத்ரம் என்ற போதே கொண்டாடும் ஞானிகளான பெரியோர்களுக்கு சமமானவர்கள் யாரும் இலர்
என்றதை சதா காலமும் அனுசந்திப்பாய் என்று அறிவிலியான நெஞ்சே என்று உபதேசித்து அருளுகிறார்

———————————————————————————-

பெரியாழ்வார் என்ற திரு நாமத்துக்கு காரணம் அருளிச் செய்கிறார் –

மங்களா சாசனத்தில் மற்று உள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்து அளவு தானன்றி -பொங்கும்
பரிவாலே வில்லி புத்தூர் பட்டர் பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர் ———-18

மூத்தவரும் இல்லாத போதும் -பெரிய பிரபந்தங்கள் அருளிச் செய்யாதவர் என்றாலும் –
நம் பட்டர் பிரானுக்கு நம் பெரியாழ்வார் என்கிற விருது – -மற்ற ஆழ்வார்கள் உடைய அபி நிவேசத்தில் காட்டிலும் –
எம்பெருமானுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடித்து -இவரது விஞ்சி எழுந்த பரிவு காரணமாக –
மங்களா சாசனம் செய்து அருளி யதாலேயே –
காதாசித்கமாக இல்லாமல் இதுவே யாத்ரையாக இருந்ததே இவருக்கு –

——————————————————————————–

திருப்பல்லாண்டின் முதன்மைக்கு காரணம் அருளிச் செய்கிறார் –

கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கு எல்லாம்
ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் -வேதத்துக்கு
ஓம் என்னுமது போலே உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய்த்
தான் மங்கலம் ஆதலால் —————-19-

கோதில வாம் -அசாரம் என்று கழிக்கத் தக்க அம்சங்கள் ஒன்றும் இன்றிக்கே முழுவதும் சாரமே யான -என்றபடி –
வேதங்களுக்கு பிரணவம் முதன்மையானது போலே திவ்ய பிரபந்தங்களுக்கு எல்லாம் திருப்பல்லாண்டு முதன்மை யாயிற்று –
பிரணவமானது சகல வேதார்த்த சார நிதியாகவும் மங்கலச் சொல்லாகவும் இருக்கும்
அது போலவே திருப் பல்லாண்டும் சகல திவ்ய பிரபந்த சாரார்த்த நிதியாகவும் மங்கள மயமாகவும் இருக்கும் –
சர்வாதிகாரமான இப் பிரபந்தத்தில் ஓம் என்று பிரயோகிததனால் பிரணவம் சர்வாதிகாரம் என்று
மாமுனிகள் திரு உள்ளம் என்று உணரத் தகும்

———————————————————————

திருப்பல்லாண்டுக்கும் பெரியாழ்வாருக்கும் ஒப்பில்லாமை அருளிச் செய்கிறார்

உண்டோ திருப் பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான்
உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பு ஒருவர் -தண் தமிழ் நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் இவர் செய்கலையில்
பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார் ———-20-

பைதல் நெஞ்சே -பேதை மனமே
நீ உணர்ந்து பார் -இதை நீ விமர்சித்து அறிவாயாக
அவர் செய் கலையை -பாட பேதம் -மறக்கவும் மறுக்கவும் தக்கது -அது அனந்விதம்

———————————————————————–

ஆண்டாள் மதுரகவிகள் உடையவர் இம் மூவருடைய திருவவதார நாள்களை அருளிச் செய்ய சங்கல்பித்து அருளுகிறார்

ஆழ்வார் திரு மகளார் ஆண்டாள் மதுரகவி
வாழ்வார் எதிராசராம் இவர்கள் -வாழ்வாக
வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்
இந்த வுலகோர்க்கு உரைப்போம் யாம் -21-

வாழ்வாக -லோக உஜ்ஜீவன அர்த்தமாக –
ஆழ்வார் திருமகளார் -ஆழ்வார்கள் எல்லார்க்கும் திருமகள் -என்னவுமாம் -கீழ் அருளிச் செய்த பெரியாழ்வார் திருமகளார் -என்னவுமாம்
பொய்கையாழ்வார் போல்வார் எம்பெருமானது திருக் கல்யாண குணக் கடலில் ஆழ்ந்ததனால் ஆழ்வார்கள் என்று பெயர் பெற்றால் போலே
நம்மாழ்வார் உடைய குணக்கடலில் ஆழ்ந்ததனால் மதுரகவி ஆழ்வார் ஆனார் –
திவ்ய பிரபந்தங்கள் சேர்த்தியில் உள்ளமையால் மதுர கவி ஆழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் திரு நாள் பாட்டு அருளிச் செய்கிறார்
எம்பெருமானார் தமிழ் மறைகள் ஆயிரமும் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் -என்றபடி அருளிச் செயல்களை வளர்த்த தாய் ஆதலாலும்
அவர் விஷயமான நூற்றந்தாதிப் பிரபந்தம் திருவவதரித்தலளாலும் அவர்க்கும் திருநாள் பாட்டி இட்டு அருளுகிறார்
திருவரங்கத்தமுதனார் பிரபந்தம் பணித்தவராய் இருந்தாலும் அவர்க்கு அர்ச்சைத் திருக் கோலம் அமைந்து இலதாதளால்
நாள் பாட்டு சேவிக்க பராசக்தி இல்லை என்று விடப்பட்டது –

—————————————————————————

ஆண்டாள் உடைய திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார்

இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக
வன்றோ ஆண்டாள் அவதரித்தாள் -குன்றாத
வாழ்வாக வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்—————22-

குன்றாத வாழ்வான -நித்ய ஸ்ரீ யான
எம்பெருமான் இந்நிலத்திலே திருவவதரித்து கீதோ உபநிஷத்தை தன முகத்தாலே வெளியிட்டு அருளி உபகரித்தான்
அது வடமொழியையும் ககனமாயும் இருப்பதனால் அனைவர்க்கும் ஒருங்கே பயன்படவில்லை
இக்குறை தீரப் பெரிய பிராட்டியார் தாமே வந்து திருவவதரித்து வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் -என்று புகழ்த் தக்கதான
திவ்ய பிரபந்தத்தை எளிய தமிழ் நடையில் உபகரித்து அஸ்மாதாதிகளை உய்வித்தால் எனபது இங்கு உணரத் தக்கது –

——————————————————————————

ஆண்டாளுக்கும் திருவவதரித்த நன்னாளுக்கும் ஒப்பில்லை என்பதை அருளிச் செய்கிறார்

பெரியாழ்வார் பெண் பிளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப்பூரத்தின் சீர்மை -ஒரு நாளைக்கு
உண்டோ மனமே யுணர்ந்து பார் ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு———23-

ஆண்டாளோடு ஒத்த வ்யக்தி உண்டாகில் அன்றோ இந்நாள் உடன் ஒத்த நாளும் வேறு ஓன்று இருக்கும்
பெண் பிளை-சரியான பாடம் -பெண் பிள்ளை -வெண்டளை பிரளும்

——————————————————————————–

ஆண்டாள் உடைய பெருமையை அருளிச் செய்கிறார்

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து ————24-

அஞ்சு குடிக்கு -ஐந்து குடும்பம் –முதல் ஆழ்வார் -அயோ நிஜ குடும்பம் -என்று கொண்டு –
எம்பெருமானுக்கு எண்ண தீங்கு வருகிறதோ என்று அஞ்சுகின்ற ஆழ்வார்களின் பதின்மரின் குடிக்கு –
பின் திருவவதரித்த தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருப் பாண் ஆழ்வார் கலியன் ஆகியவரையும் கூட்டி
பிரஜா பித்ருப்ய -வேதத்தில் ஓதப்பட்டதோர் கடனும் ஆழ்வார்கட்கு ஆண்டாளால் தீர்ந்தது என்கை –
பெண்மையை ஏறிட்டுக் கொண்ட ஆழ்வார்கள் –ஆண்டாள் இயற்கையிலே பெண்ணாய்ப் பிறந்து புருஷோத்தமனை அனுபவிக்கும் திறத்தில்
சிறந்த உரிமை யுடையளானாது பற்றி -விஞ்சி நிற்கும் தன்மையளாய் -என்கிறார் –பருவம் நிரம்புவதற்கு முன்னமே-அவரைப் பிராயம் தொடங்கி-
வானிடை வாழும் அவ்வானவர்க்கு -எனபது முதலான அருளிச் செயல்களால் பிஞ்சாய்ப் பழுத்தாள் என்கிறார்

—————————————————————————–

மதுரகவி யாழ்வார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார் –

ஏரார் மதுரகவி இவ் வுலகில் வந்துதித்த
சீராரும் சித்திரையில் சித்திரை நாள் -பாருலகில்
மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துத்தித்த நாள்களிலும்
உற்றது நமக்கு என்று நெஞ்சே ஓர் ———–25-

எமக்கு உற்றது -நமக்கு மிகவும் உபாதேயமானது
ஓர் -பிரதிபத்தி பண்ணுவாயாக
உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்லுவார் பத்துப் பேர் உண்டு இறே
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடுவது -அவர்களைச் சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே –
அவர் பாசுரம் கொண்டு இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் –
ஆசார்யானே உபாயம் -அர்த்தம் அருளிச் செய்த கண்ணி நுண் சிறுத் தாம்பு -அருளிச் செய்த இவ்வேற்றம் உண்டே இவருக்கு

——————————————————————————-

மதுரகவிகள் உடைய திவ்ய பிரபந்தம் நாலாயிரத்தினுள் சேர்ந்தமை அருளிச் செய்கிறார்

வாய்த்த திரு மந்த்ரத்தின் மத்திமமாம் பதம் போல்
சீர்த்த மதுரகவி செய்கலையை -ஆர்த்த புகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல் நடுவே
சேர்வித்தார் தாற்பர்யம் தேர்ந்து ———–26-

ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள் எல்லாம் எம்பெருமான் உடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களைப் பரக்கப் பேசுவன
திருமந்தரம் த்வயம் சரம ஸ்லோஹம்-ரஹஸ்ய த்ரய பொருள்களையே விவரிப்பனவாகும்
நம பதார்த்தம் பாகவத சேஷத்வம் -காட்டுமே அத்தை கனக்கப் பேசும் கண்ணி நுண் சிறுத்தாம்பு அருளிச் செயல்களின் நடுவே
சேர்த்து அருளினார்கள் நிறைந்த புகழை உடைய நம் பூர்வாசாரியர்கள்

——————————————————————————–

எம்பெருமானார் திருவவதார திருநாள் அருளிச் செய்கிறார்

இன்று உலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள்
என்றையினும் இன்று இதனுக்கு ஏற்றம் என்தான் -என்றவர்க்குச்
சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம் பிறப்பால்
நால் திசையும் கொண்டாடும் நாள் ———27-

என்றையிலும் -மற்றும் உள்ள தினங்களைக் காட்டிலும்

————————————————————————

ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர்-ஏழ்பாரும்
உய்ய எதிராசர் உதித்து அருளும் சித்திரையில்
செய்ய திருவாதிரை ————–28-

நமக்கு வாழ்வு ஆன நாள் – நமக்கு விசேஷிதித்து உஜ்ஜீவன ஹேதுவான நாள்
ஏழ் பாரும் உய்ய -உலகம் எல்லாம் உஜ்ஜீவிக்கும் படி –
தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் -மொய்ம்பால் வளர்த்த விதத்தாய் இராமானுசன் -என்றும்
எங்கள் கதியே இராமானுச முனியே சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா -என்றும் சொல்லுகிறபடியே பெருமை மிக பொருந்தும் என்பதால் எதிராசர் உதித்து அருளும்
சித்திரையில் செய்ய திருவாதிரை -என்று அருளிச் செய்கிறார்

———————————————————————

எந்தை எதிராசர் இவ் வுலகில் எம் தமக்காக
வந்துதித்த நாள் என்னும் வாசியினால் -இந்தத்
திருவாதிரை தன்னின் சீர்மை தன்னை நெஞ்சே
ஒருவாமல் எப்பொழுதும் ஓர் ———29-

ஒருவாமல் -இடைவிடாமல்
ஓர் -சிந்தித்திரு
ஆதி சேஷனே எம்பெருமானாராக திருவவதரித்து அருளினார் -இவர் நலம் அந்தம் இல்லாதோர் நாட்டிலே
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் -இத்யாதிப்படியே எம்பெருமானுக்கு சகல வித கைங்கர்யங்களும் செய்து கொண்டு
வாழ வேண்டி இருக்க அதை விட்டுப் பல பல கஷ்டங்களுக்கும் ஆஸ்பதமான இவ்விருள் தரும் மா ஞாலத்திலே திருவவதரித்து அருளினது
நித்ய சம்சாரிகளான நம் போல்வாரைப் பிறவிக் கடலில் நின்றும் கை கொடுத்து எடுப்பதற்காகவே என்று அனுசந்தித்து
இவரது திருவவதார திருநாளைக் கொண்டாட வேணும் என்று அருளிச் செய்கிறார்

——————————————————————–

எண்ணரும் சீர் பொய்கை முன்னோர் இவ் உலகில் தோன்றிய ஊர்
வண்மை மிகு கச்சி மலை மா மயிலை –மண்ணியில் நீர்
தேங்கும் குறையலூர் சீர்க் கலியன் தோன்றிய ஊர்
ஓங்கும் உறையூர் பாணனூர்————-30-

மண்ணி யாற்றின் தீர்த்தம் தேங்கும் இடம் -திருக்குறையலூர்

———————————————————————–

தொண்டர் அடிப் பொடியார் தோன்றிய ஊர் தொல் புகழ் சேர்
மண்டங்குடி என்பர் மண்ணுலகில் -எண்டிசையும்
ஏத்தும் குலசேகரனூர் என உரைப்பர்
வாய்த்த திரு வஞ்சிக் களம் ——–31-

தொல் புகழ் -நித்தியமான புகழை உடைய

———————————————————————–
மன்னு திருமழிசை மாடத் திருக் குருகூர்
மின்னு புகழ் வில்லி புத்தூர் மேதினியில் -நன்னெறியோர்
ஏய்ந்த பத்தி சாரர் எழில் மாறன் பட்டர் பிரான்
வாய்ந்து உதித்த ஊர்கள் இவை———32-
————————————————————————-
சீராரும் வில்லிபுத்தூர் செல்வத் திருக் கோளூர்
ஏரார் பெரும் பூதூர் என்னும் இவை –பாரில்
மதி யாரும் ஆண்டாள் மதுர கவி யாழ்வார்
எதிராசர் தோன்றிய ஊர் இங்கு ———33

செல்வம் திரு கோளூர் -ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ மல்கிய திருக் கோளூர்
மதி ஆறும் -ஞானம் நிரம்பிய

அப்பிள்ளை என்னும் ஆசிரியர் இராமானுச நூற்றந்தாதித் தவிர்த்தே நாலாயிரக் கணக்கு இட்டு அருளினார்
-மா முனிகள் அதை நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் உடன் ஒக்க ஆதரிக்க வேணும் என்றும்
அத்யயன நியமம் இந்த நூற்றந்தாதிக்கும் சேர்த்துக் கொள்ளப் பட வேணும் என்றும் நியமித்து அருளினார் -என்பர்
———————————————————————–
ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம்
தாழ்வாதும் இன்றி யாவை தாம் வளர்த்தோர் -ஏழ்பாரும்
உய்ய வவர் செய் வியாக்கியைகள் உள்ளது எல்லாம்
வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து ———–34-

ஏழ் பாரும் உய்ய -உலகங்கள் எல்லாம் உஜ்ஜீவிக்குமாறு
அவர் செய்த -சரியான பாடம் -அவர்கள் செய்த -வெண்டளை பிறழும
—————————————————————————
ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் –வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ யவர் பால்
சென்று அணுகக் கூசித் திரி -35-

ஆழ்வார்கள் ஏற்றமும் அருளிச் செயல் ஏற்றமும் குறையாதபடி அவற்றை வளர்த்து அருளின ஆசார்யர்களைப் பற்றி ப்ரஸ்தாவிக்கையாலே
அப்படிப்பட்ட ஆசாரியர்களின் திரு உள்ளம் புண் படுமாறு சில த்ரமிட உபநிஷத் பாஹ்ய குத்ருஷ்டிகள் தோன்றி
ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும் தூஷித்துக் கொண்டு இருந்ததனால் அவர்களுடைய சஹவாசமும் வர்ஜநீயம் என்று அருளிச் செய்கிறார்
தாழ்வா -என்கிற பாடம் -சரியானது -தாழ்வாக -வெண்டளை பிறழும்
————————————————————–
தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்
அருளிச் செயலை அறிவார் ஆர் -அருள் பெற்ற
நாத முனி முதலாம் நம் தேசிகரை அல்லால்
பேதை மனமே யுண்டோ பேசு ——–36-

தெருள் உற்ற -யாதார்த்த ஞானிகள்
அருள் பெற்ற நாத முனி முதலாம் நம் தேசிகரை அல்லால் -ஆழ்வார் அருளை லபிக்கப் பெற்ற ஸ்ரீ மன் நாதமுனிகள் முதலாக உள்ள
நம் ஆசாரியர்களைத் தவிர –
கீழ்ப்பாட்டில் சஹாவாச யோக்யர் அல்லாதாரக் கழிக்கக் பட்ட பாவிகள் -நம் பூர்வாச்சார்யர்களின் பரம்பரையில் படிந்தவர்கள் அல்லர்
முதலாம் -சரியான பாடம் -முதலான பாடம் வெண்டளை பிறழும் -நாதமுனி முன்னான -பாட பேதம் -அது சம்ப்ரதாய பாடம் அன்று
——————————————————————–
ஓராண் வழியாய் யுபதேசித்தார் முன்னோர்
ஏரார் எதிராசர் இன்னருளால் -பாருலகில்
ஆசை யுடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் என்று
பேசி வரம்பறுத்தார் பின் ————–37-

கீழ்ப்பாட்டில் நாத முனி முதலாம் நம் தேசிகரை-என்று அருளிச் செய்தவர் -எம்பெருமானாரை விசேஷித்து எடுத்துக் கூற வேண்டி அருளிச் செய்கிறார்
ஆர்த்தி பிரபந்தத்தில் -மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தான் வாழியே -என்றபடி எம்பெருமானார்
தமிழ் மறையை வளர்த்து அருளின பிரகாரங்களில் மிக முக்கியமான தொரு பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –
பூர்வாசார்யர்கள் இவருக்கு முன்பே திவ்ய பிரபந்த வியாக்கியானங்களை இட்டருள வல்லவராய் இருந்தும் ஒருவரும் இட்டருள வில்லையே
-உபதேசித்து வந்தார்கள் அத்தனை –அப்படி உபதேசித்தும் ஸ்ரீ வைஷ்ணவர்களை ஒரு திரளாகக் கூட்டி உபதேசித்தமை இல்லையே –
ஓராண் வழியடைவாகவே உபதேசம் நிகழ்ந்து வந்தது –
எம்பெருமானார் இங்கனே வரம்பு இருக்கத் தகாது -இதனால் நம் ஸ்ரீ வைஷ்ணவ தர்சனம் சங்குசிதம் ஆகிறதே யல்லது விரிவு பெறுகின்றதில்லை
-எனவே வரம்பை அறுத்து ஆசை உடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் என்று வரம் அறுத்தார்
-இதனாலே திருவாய் மொழிக்கு வியாக்கியானங்கள் விசேஷமாக அவதரிக்க இடம் உண்டாயிற்று
-பிள்ளை லோகாசார்யர் முதலானோர் ரஹச்ய கிரந்தங்களை அருளிச் செய்து அருளிச் செயல் பொருளை வளர்த்து அருளினதற்கும்
இத்தகையே எம்பெருமானார் நியமனமே மூலம்
முன்புள்ளார் அநு வ்ருத்தி பிரசன்னாசார்யர்கள் -என்றும் -எம்பெருமானார் க்ருபா மாத்ர பிரசன்னாச்சார்யர் என்றும் நம் முதலிகள் அருளிச் செய்வார்கள்
——————————————————–
எம்பெருமானார் தரிசனம் என்றே இதுக்கு
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் -அம்புவியோர்
இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
அந்தச் செயலை அறிகைக்கா ————38-

ஸ்ரீ ராமானுஜரால் நூதனமாக நிருமிக்கப் பட்ட தர்சனம் இல்லையே
ஸ்ரீ ரெங்க நாதர் இத்தை ஸ்ரீ ராமானுஜ தர்சனம் என்று நியமித்து அருளியதற்கு காரணம் ஸ்ரீ ராமானுஜர் பல படிகளாலும்
வளர்த்து அருளியதால் -திவ்ய பிரபந்தங்களை வளர்த்து அருளினது இங்கு முக்கியமானது –
அந்த செயல் அறிகைக்காக -சுத்த பாடம் -செயலை -வெண்டளை பிறழும்
—————————————————-
பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை
தெள்ளார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை
மணவாள யோகி திருவாய்மொழியைக் காத்த
குணவாளர் என்று நெஞ்சே கூறு———-39-

தெள்ளார் -தெளிந்த ஞானம்
நெஞ்சே கூறு -மனமே இவர்களது
வியாக்யானம் இயற்றுவதும் ஒருவகை சம்ரஷணம் ஆதலால் காத்த என்னக் குறை இல்லை
——————————————————-
முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும்
அந்த வியாக்கியைகள் அன்றாகில் -அந்தோ
திருவாய் மொழிப் பொருளைத் தேர்ந்துரைக்க வல்ல
குரு ஆர் இக்கால நெஞ்சே கூறு———40-

அந்தோ -ஆனந்தக் குறிப்பு
———————————————————-
தெள்ளாரும் ஞானத் திருக் குருகைப் பிரான்
பிள்ளான் எதிராசர் பேரருளால் -உள்ளாறும்
அன்புடனே மாறன் மறைப் பொருளை யன்றுரைத்த
தின்பமிகு மாறாயிரம்————-41-
32-எழுத்துக்கு கிரந்தம் படி என்று சங்கேதம்
———————————————————-
தஞ்சீரை ஞானியர்கள் தாம் புகழும் வேதாந்தி
நஞ்சீயர் தாம் பட்டர் நல்லருளால் -எஞ்சாத
ஆர்வமுடன் மாறன் மறைப் பொருளை யாய்ந்துரைத்தது
ஏர் ஒன்பதினாயிரம் —————-42-
எஞ்சாத ஆர்வம் உடன் -குறையாத பரிபூரணமான அன்புடனே
—————————————————————
நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவி விட
பின் பெரியவாச்சான் பிள்ளை யதனால் -இன்பா
வருபத்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது
இருப்பத்து நாலாயிரம் ———–43-

ஆவரு பத்தி மாறன் -ஆனந்த ரூபமாகப் பெருகி வந்த பக்தியை யுடையரான நம்மாழ்வார் அருளிச் செய்த –
வியாக்யானங்கள் அருள்வதற்கு பல காரணங்கள் உண்டு -பின்புள்ளார் உஜ்ஜீவன அர்த்தமாக –
-ஸ்வ ஆச்சார்யர் உபன்யசித்து அருளும் அர்த்த விசேஷங்கள் பெருக்காறு போல் அன்றிக்கே அதிலே தேங்கின மடுக்கள் போலே
விளங்க வேணும் என்றும் -ஸ்வ ஆசார்யர் நியமித்து அருள -தமது புலமையை காட்டி வைக்கவும்
இங்கே நம்பிள்ளை உடைய பரம கருணா பிரயுக்தமான நியமனத்தால் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் இட்டு அருளினார்
—————————————————————–
தெள்ளியா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை
வள்ளல் வடக்குத் திரு வீதிப் பிள்ளை யிந்த
நாடறிய மாறன் மறைப் பொருளை நன்குரைத்தது
ஈடு முப்பத்தாறாயிரம் ————44-

தெள்ளியது ஆ செப்பு நெறி தன்னை -தெளிவாக அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்தி க்ரமத்தை உட்கொண்டு
நம்பிள்ளை உபன்யாசத்தைப் பகல் எல்லாம் கேட்டு இருந்து ஈடு -ஏடு படுத்தி வைத்தவர் வடக்குத் திரு வீதிப் பிள்ளை –
நம்பிள்ளை நியமனம் படியாக எழுதவில்லை -நம்பிள்ளை தாரும் என வாங்கி பிறகு பகவன் நியமனத்தாலே பிரசாரத்திற்கு அருளும்படி யாயிற்று
வள்ளல் -ஈடு ஏடு படுத்திய வள்ளல் தனம் -உலகுக்கு உயிர் போன்ற பிள்ளை லோகாசார்யர் – அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இரண்டு
திரு புத்ர ரத்னங்களையும் பெற்று உதவியது பற்றியும் வள்ளல் தன்மை உண்டே
———————————————————————–
அன்போடு அழகிய மணவாளச் சீயர்
பின்போரும் கற்றறிந்து பேசுகைக்காத்-தம் பெரிய
போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது
ஏதமில் பன்னீராயிரம் ————45-

தம் பெரிய போதம் உடன் -தமது பெரிய ஞானத்தினால் -ஆசார்ய க்ருபாதீனமான போதம் அன்றிக்கே -ஸ்வ தந்த்ரமான போதம் -என்றபடி
ஏதமில் -குற்றமற்றதான –
பிரதி பதார்த்த ரூபமான வியாக்யானம் -எளிய உரை -என்பதால் பின்போரும் அன்போடு கற்று அறிந்து பேசுகைக்காக-என்கிறார்
———————————————————–
பெரியவாச்சான் பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால் -அரிய
அருளிச் செயல் பொருளை ஆரியர்கட்கு இப்போது
அருளிச் செயல் ஆய்த்து அறிந்து————46-

தெரிய -விளக்கமாக
ஆரியர்ட்கு அறிந்து அருளிச் செயல் ஆயத்து -ஸ்வாமி களுக்கு தெரிந்து பிரவசனம் பண்ணுவதற்குப் பாங்காயிற்று
பின்புள்ளார் ஆசார்ய பீடத்தில் அமர்ந்து திவ்ய பிரபந்த ஆழ் பொருள்களை பிரவசனம் செய்ய சௌகர்யம் விளைந்தது இவர் அருளிச் செய்ததால்
——————————————————————–
நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு
எஞ்சாமை யாவைக்கும் இல்லையே -தஞ்சீரால்
வைய குருவின் தம்பி மன்னு மணவாள முநி
செய்யுமவை தாமும் சில ———-47-

நாள் இரண்டுக்கு -சில பிரபந்தங்களுக்கு என்றபடி -சங்கையில் நோக்கு அன்று
நஞ்சீயர் -திருப்பாவைக்கும் -கண்ணி நுண் சிறுத் தாம்புக்கும்
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -திருப்பாவை -கண்ணி நுண் சிறுத் தாம்பு –அமலனாதி பிரான்
மன்னு மணவாள முனி -வாதி கேசரி அழகிய மணவாள சீயர் என்றபடி -திருவிருத்தம்
பெரியாழ்வார் திருமொழிக்கு ஸ்வா பதேசம் திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்ததாக அருளிச் செய்ய வில்லையே
-அவர் திரு வம்சத்தில் வந்தவரால் அருளிச் செய்ததாக இருக்க வேண்டும்
———————————————————————–
சீரார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை எழுது
ஏரார் தமிழ் வேதத்து ஈடு தன்னைத் -தாருமென
வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
தாம் கொடுத்தார் பின்னதனைத் தான் – ———-48-

வடக்குத் திருவீதிப் பிள்ளை பட்டோலை கொண்டு நம்பிள்ளை சந்நிதியிலே கொண்டு போய் வைத்து அருளினார் –
அதை அவர் கடாஷித்து -ஆனை கோலம் செய்தால் போலே அழகியதாகவே காண்கிறது -ஆகிலும் நமது கட்டளை இன்றிக்கே எழுதினீர்-
இருக்கட்டும் என்று சொல்லி அந்த ஸ்ரீ கோசத்தை உள்ளே வைத்து அருளினார்
பெரிய பெருமாள் உடைய நியமனத்தால் அன்றி நம்பிள்ளை இந்த ஸ்ரீ கோசத்தை தந்து அருளார் என்று தெரிந்து கொண்ட
ஈ யுண்ணி மாதவப் பெருமாள் -இந்த ஈடு வியாக்யானம் உலகில் பிரசாரம் பெற வேணும் என்று ஆவல் கொண்டு பலகாலம் பெரிய பெருமாளை
வலம் செய்து வந்தார் –பெரிய பெருமாள் திரு உள்ளம் உவந்து இரங்கி நம் பிள்ளைக்கு நியமித்து அருளவே பின்பு அந்த ஸ்ரீ கோசத்தை ஈந்து அருளினார் –
————————————————————————-
ஆங்கு அவர்பால் பெற்ற சிறியாழ்வானப் பிள்ளை
தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் -பாங்குடனே
நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம்
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு —————49-

ஆங்கு அவர்பால் பெற்ற சிறியாழ்வானப் பிள்ளை தாம் – அவ்வண்ணமாக அந்த நம்பிள்ளை இடத்தில் பெற்றுக் கொண்டவரான
சிறியாழ்வான் அப்பிள்ளை என்கிற அவ்வாசிரியர் —ஈ யுண்ணி மாதவர் -என்றபடி
கொடுத்தார் தம் மகனார் தம் கையில் –தம்முடைய திருக் குமாரான பத்ம நாபப் பெருமாளுடைய திருக் கையில் அந்த ஈட்டைக் கொடுத்து அருளினார்
பாங்குடனே நாலூர் பிள்ளைக்கு கொடுத்தார் -அந்த பத்ம நாபப் பெருமாள் திரு உள்ளத்தில் இரக்கத்துடன் நாலூர் பிள்ளை என்னும் ஆசிரியர் இடம் கொடுத்து அருளினார் –
அவர் தாம் நல்ல மகனார்க்கு கொடுத்தார் -அந்த நாலூர் பிள்ளை தாம் தமது திருக் குமாரரான நாலூராச்சான் பிள்ளைக்கு அதைக் கொடுத்து அருளினார்
அவர் தாம் மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு-அந்த நாலூராச்சான் பிள்ளையே அதிசயமாக மேல் உள்ளவர்களுக்கு உபதேசித்து அருளினார் –
ஈட்டுத் தனியனில் -இரு கண்னருக்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடளித்தற்கு ஏய்ந்த மாதவர் பற்பநாபர் –என்பதையும்
வந்தே மாதவ பத்மநாப ஸூமன கோலேச தேவாதிபான் -ஸ்லோஹமும் இங்கே அனுசந்திக்க யுரியது
————————————————————————–
நம் பெருமாள் நம் ஆழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
என்பர் அவர் தம் ஏற்றத்தால் -அன்புடையோர்
சாற்று திரு நாமங்கள் தான் என்று நன்னெஞ்சே
ஏத்து அதனைச் சொல்லி நீ இன்று——-50-

ஸ்ரீ வசன பூஷணம் திவ்ய சாஸ்திரம் சீர்மையை அருளிச் செய்யத் தொடங்கி பிள்ளை லோகாசார்யருக்கு திருநாமம்
வந்த வழியைக் காட்டி அருள -நம்பிள்ளைக்கு அந்த திருநாமம் வந்த வழியைக் காட்டும் முகமாக
நம் உபபதமாக பெற்றவர்களின் கோஷ்டியை அருளிச் செய்கிறார் –
நம் -பிரேம விஷய கார்யம் -இப்படி முன்னோர்கள் இவர்களது பெருமையைக் கண்டு அதற்குத் தக்க இட்டருளின திரு நாமங்களை
உகந்து அனுசந்தித்து உஜ்ஜீவிக்க திரு உள்ளத்துக்கு அருளிச் செய்கிறார் –
———————————————————–
துன்னு புகழ்க் கந்தாடை தோழப்பர் தம்முகப்பால்
என்ன உலகாரியரோ என்று உரைக்கப் -பின்னை
உலகாரியர் என்னும் பேர் நம் பிள்ளைக்கு ஓங்கி
விலகாமல் நின்றது என்றும் மேல்————51-

கந்தாடை தோழப்பர்-நம்பிள்ளை -இது என்ன ஆச்சர்யமான குணம் என்று வியந்து நீர் என்ன லோகாசார்யாரோ என்று ஈடுபட்டு
அருளிச் செய்த விருத்தாந்தம் -இந்த குண விசேஷத்தினால் உலகத்தை எல்லாம் ஈடுபடுத்திக் கொள்ள வல்லவர் என்றபடி
——————————————————
பின்னை வடக்குத் திரு வீதிப் பிள்ளை யன்பால்
அன்ன திரு நாமத்தை யாதரித்து -மன்னு புகழ்
மைந்தர்க்குச் சாத்துகையால் வந்து பரந்தது எங்கும்
இந்தத் திரு நாமம் இங்கு ————-52-
ஆசார்ய பக்தி விசேஷத்தினால் அந்த லோகாசார்யா திரு நாமத்தை யசச்வியான தமது திருக் குமாரர்க்கு-
ஆசார்ய அனுக்ரஹ அதிசயத்தினால் தோன்றியதால் – விரும்பி நாமகரணம் இட்டபடியினால் உலகு எங்கும் பரவியதாயிற்று
————————————————————–
அன்ன புகழ் முடும்பை யண்ணல் உலகாரியன்
இன்னருளால் செய்த கலை யாவையிலும் -உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை யொன்றுக்கு இல்லை
புகழ் அல்ல இவ்வார்த்தை மெய் யிப்போது———-53-

ஸ்ரீ வசன பூஷண திவ்ய சாஸ்த்ரமானது -சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத சாரார்த்த சங்க்ரஹ வாக்ய ஜாதம் -என்கிறபடியே
அறிய வேண்டும் அர்த்தம் எல்லாம் அழகாக நிரம்பப் பெற்றதாதலால் இது நிகர் அற்றது எனபது அர்த்தவாதம் அன்று
-மெய்யுரையே -புகழ் அல மெய் -அதிசய உக்தி அன்று சத்யமானதே
——————————————————————
முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு -மின் அணியாச்
சேரச் சமைத்து அவரே ஸ்ரீ வசன பூஷணம் என்
பேர் இக்கலைக்கு இட்டார் பின் —————54-

உயிர்க்கு மின் அணியா-ஆத்மாவுக்கு அழகிய அலங்காரமாக
சேர சமைத்து -சேர்த்து அணி வகுத்து
ரத்ன பிரசுரமான பூஷணத்துக்கு ரத்ன பூஷணம் என்ற பேராமாப் போலே பூர்வாசார்யர்களுடைய வசன பிரசுரமாய்
அனுசந்தாக்களுக்கு ஔஜ்வல்ய கரமாய் இருக்கையாலே ஸ்ரீ வசன பூஷணம் என்று திருநாமம் ஆயிற்று –
முமுஷூக்கள் கண்டத்துக்கு பூஷணமாய் இருக்குமே
சீர் வசன பூடணம் என் பேர்-சரியான பாடம் -என்னும் பேர் பொருந்தாது
———————————————————————
ஆர் வசன பூஷணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார்
ஆர் அது சொல் நேரில் அனுடிப்பார் -ஓர் ஒருவர்
யுண்டாகில் அத்தனை காண் உள்ளமே எல்லார்க்கும்
அண்டாதது அன்றோ அது —————55-

அது சொல் நேரில் அனுட்டிப்பார் ஆர் -அந்த வசன பூஷன கட்டளையில் அனுஷ்டிக்க வல்லவர்களும் இலர்
இது ஒரு மீமாம்ஸா சாஸ்திரம் -அறியவும் அனுட்டிக்கவும் மிகவும் அரிது
மனுஷ்யாணாம் சஹாஸ்ரேஷூ கச்சித் யத்தி சித்தயேயததாமாபி சித்தா நாம் கச்சித் மாம் வேத்தி தத்வத –
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு அதிகாரி தரக் கூடுமே
குற்றம் செய்தவர்கள் பக்கல் பொறையும் கிருபையும் சிரிப்பும் உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும்
விஹித போகம் நிஷித்த போகம் போலே லோக விருத்தம் அன்று நரகஹேதுவும் அன்று ஆயிருக்கச் செய்தே ஸ்வரூப விருத்தமுமாய்
வேதாந்த விருத்தமுமாய் சிஷ்ட கர்ஹிதமுமாய் ப்ராப்ய பிரதி பந்தகமுமாய் இருக்கையாலே த்யாஜ்யம் -போன்றவை அனுஷ்டிக்க அரியனவே
———————————————————————-
உய்ய நினைவுடையீர் உங்களுக்குச் சொல்லுகின்றேன்
வையம் குரு முன்னம் வாய் மொழிந்த -செய்ய கலை
யாம் வசன பூஷணத்தின் ஆ ழ் பொருளைக் கற்று அதனுக்
காம் நிலையில் நில்லும் அறிந்து ———–56-

ஆழ் பொருளை கற்று உகந்து -ஆழ்ந்த பொருள்களை ஆசார்ய முகமாக அதிகரித்து உணர்ந்து
அதனுக்கு ஆம் நிலையில் நில்லும் -அவ்வறிவுக்கு ஏற்ற அனுஷ்டானத்தில் ஊன்றி இருங்கள்
உய்ய நினைவுடையீர் –ஸ்ரீ வசன பூஷன அர்த்தங்களை அறியாதார்க்கும் அனுஷ்டியாதார்க்கும் உஜ்ஜீவிக்க விரகு இல்லை என்று காட்டி அருளுகிறார்
———————————————————–
தேசிகர் பால் கேட்ட செழும் பொருளைச் சிந்தை தன்னில்
மாசறவே யூன்றி மனனம் செய்து -ஆசரிக்க
வல்லார்கள் தாம் வசன பூஷணத்தின் வான் பொருளைக்
கல்லாதது என்னோ கவர்ந்து ————57-

ஆசார்யர்கள் இடத்தில் கேட்ட சிறந்த அர்த்தங்களை நெஞ்சிலே அழுக்கற ஊற்றமாக சிந்தனை செய்து அப்படியே
அனுஷ்டிக்க வல்லவர்களான அதிகாரிகள் ஸ்ரீ வசன பூஷணத்தின் உடைய திவ்யார்த்தங்களை அபி நிவேசத்துடனே
அதிகரியாமல் இருப்பது ஏனோ -அந்தோ
மா முனிகளுக்கு உலகோர் எல்லாரும் இந்த சாஸ்த்ரத்தை அதிகரிக்க வேணும் என்கிற அபி நிவேசம் விளங்கிற்று
—————————————————————————–
சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால்
மெச்சும் வியாக்கியை தான் யுண்டாகில் –நச்சி
அதிகாரியும் நீர் வசன பூஷணத்துக்கு அற்ற
மதியுடையீர் மத்தியத்தராய் ———-58-

ஸ்ரீ வசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்துக்கும் பல பல வியாக்கியானங்கள் உண்டே -அவற்றை அதிகரிக்க வேண்டும்
-அசூயை இன்றி அதிகரிக்க வேணும் –
————————————————————————
சீர் வசன பூஷணத்தின் செம்பொருளைச் சிந்தை தன்னால்
தேறிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம்–ஆரியர்காள்
என்தனக்கு நாளும் இனிதாகா நின்றதையோ
உம்தமக்கு எவ்வின்பம் உளதாம் ——–59-

நைச்ய அனுசந்தானத்தால் மா முனிகள் -ஒ மஹா நீயர்களே -ஸ்ரீ வசன பூஷணத்தின் உடைய செவ்விய பொருள்களை நெஞ்சினால் ஆராய்ந்து
பார்க்கிலுமாம் எடுத்து உரைக்கிலுமாம் எனக்கு அப் பொழுதைக்கு அப் பொழுது என்னாராவமுதம் என்னலாம் படி உள்ளது -மிக ஆனந்தம்
-உங்களுக்கு எப்படிப்பட்ட ஆனந்தமாய் இருக்கின்றதோ –
செம் பொருளை -சரியான பாடம் -செழும் பொருளை -வெண்டளை பிறழும்
———————————————————–
தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன்-இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் ஆதலால்
நண்ணா ரவர்கள் திரு நாடு —————60-

அம்புயை -அம்புஜத்திலே பிறந்த பிராட்டி -பத்மா கமலா போன்ற திரு நாமம்
ஸ்வ தந்த்ரனை உபாயமாகத் தான் பற்றின போது இ றே இப் பிரசங்கம் தான் உள்ளது -என்கிற சூர்ணிகை முதலாக
ஈஸ்வரனைப் பற்றுகை கிடைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமோ பாதி -என்கிற
சூர்ணிகை நடுவாக -இது பிரதமம் ஸ்வ ரூபத்தைப் பல்லவிதமாக்கும்-புன்பு புஷ்பிதமாக்கும் -அநந்தரம் பல பர்யந்தமாக்கும் -எனபது ஈறாக
ஆசார்ய நிஷ்டையே சரம உபாயம் என்று மிக அற்புதமாக அருளிச் செய்யப் பட்டு இருத்தலால் அவ்வர்த்த விசேஷம் இங்கே
நிரூபிக்கப் படுகிறத-தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமா போலே ஸ்வரூப விகாசத்தைப் பண்ணும் ஈஸ்வரன்
தானே ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் அத்தை வாடப் பண்ணும் -இத்தை ஒழிய பகவத் சம்பந்தம் துர்லபம் -என்கிற ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ சூக்திகள் அனுசந்தேயம் –
——————————————————————
ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய
னான குருவை அடைந்தக்கால் -மா நிலத்தீர்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும் ————61-

ஆசார்ய பக்தி அவசியம் என்றது கீழ்ப் பாட்டில் -இதில் ஜ்ஞான அனுஷ்டான சம்பந்தனான ஆசார்யனைப் பணிந்தால் அன்றிப் பேறு பெற முடியாது என்கிறது
வண்டுகளோ வம்மின் -அஞ்சிறைய மடநாராய் -பல காலும் பஷிகளை விளிப்பார்கள்
உபாப்யாமேவ பஷாப்யாம் ஆகாசே பஷிணாம் கதி ததைவ ஜ்ஞான கர்ம்ப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம —
சேர்ப்பாரைப் பஷிகளாக்கி ஜ்ஞான கர்மங்களைச் சிறகு என்று -ஆசார்ய ஹ்ருதயம் ஸ்ரீ சூக்திகள்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் -பிராட்டியின் புருஷகாரத்தாலே மோஷம் அளிக்க வல்லவன் -ஆயினும் சதாசார்யார்களை
ஆஸ்ரயியாதார்க்கு பிராட்டியின் புருஷகாரமும் பலிக்க மாட்டாது என்று காட்டின படி
ஆசார்ய ஆஸ்ரயணம் முக்யத்தைத்தை அருளவே தானே வைகுந்தம் தரும் -என்று பிராட்டி புருஷகாரம் இன்றி
ஸ்வயமாகவே வீடு தந்து அருள்வன் என்று காட்டி அருளுகிறார்
——————————————————-
உய்ய நினைவு யுண்டாகில் உம குருக்கள் தம் பதத்தே
வையும் அன்பு தன்னை இந்த மா நிலத்தீர் -மெய்யுரைக்கேன்
பையரவில் மாயன் பரமபதம் உங்களுக்காம்
கையிலங்கு நெல்லிக் கனி ————-62-

அன்பு தன்னை -பக்தியை
ஆசார்ய பக்தர்களுக்கு பரமபதமானது கையிலங்கு நெல்லிக் கனியாம் என்றது பரமபத போகங்களை எல்லாம் இந்நிலத்திலேயே
சாஷாத் கரிக்கப் பெறலாம் என்றபடி
பொன்னுலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ-என்னும்படி பிறர்க்கும் வழங்குவதற்கு உரித்தாம் படி விதேயமாகும் -என்பதுவாம்
————————————————————-
ஆசார்யன் செய் உபகாரமானவது
தூயதாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் -தேசாந்
தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது
இருத்தல் இனி ஏது அறியோம் யாம் ——–63-

இருத்தலினில்-இருத்தலின் -பாட பேதங்கள் –
இரும்பைப் பொன்னாக்குமா போலே ஆசார்யன் செய்த மஹா உபகாரம் சிஷ்யனுடைய நெஞ்சில் நன்றாகத் தோன்றுமாகில்
வஸ்தவ்யம் ஆசார்ய சந்நிதியே-என்ற அத்யவசாயம் வேண்டுமே -ஆயினும் பிரிந்து இருப்பார் பிரபல பாபமே ஹேது என்று
வெட்டிதாகச் சொல்லக் கூசி எது யாம் அறிடோம் -என்கிறார்
—————————————————————
தன்னாரியனுக்குத் தானடிமை செய்தவன்
இந்நாடு தன்னில் இருக்கும் நாள் -அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி யாசாரியனைப்
பிரிந்து இருப்பார் ஆர் மனமே பேசு ———-64-

ஆசார்யன் பக்கலில் அர்த்தங்கள் கேட்கும் அளவே அவர்க்குக் கைங்கர்யம் பண்ண வேணும் -அர்த்தம் கேட்டுத் தலைக் கட்டினவாறே
வேறிடம் சென்று எங்கேனும் வாழலாம் என்று நினைப்பது தகுதி யன்று -ஆசார்யன் இந்த விபூதியில் எழுந்து அருளி இருக்கும் அளவும்
அனுதினமும் கைங்கர்யம் செய்தே சத்தை பெற வேணும் என்கிற சாஸ்த்ரார்தம் இதனால் காட்டி அருளுகிறார்
——————————————————————–
ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன்
நோக்குமவன் என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் ———65-

ஆசார்யரானவர் சிஷ்யனுடைய ஆத்மா ஸ்வரூபத்தை நோக்கி இருக்கக் கடவர் –
ஸ்வரூப ஜ்ஞானம் ஆகிற தேஜஸ் பொருந்திய சிஷ்யனானாவன் -அவ்வாச்சார்யர் உடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை
பக்தி உடன் பேணக் கடவன் என்கிற இந்த நுட்பமான விசேஷார்த்தத்தை ஸ்ரீ வசன பூஷணம் போன்றவற்றில் கேட்டு இருந்தாலும் கூட
ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் -சிஷ்யன் ஆசாரியனுடைய தேஹத்தை பேணக் கடவன் –
இரண்டும் இருவர்க்கும் ஸ்வரூபமாய் பகவத் கைங்கர்யமுமாய் இருக்கும்
ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி -போன்றவற்றை கேட்டும்
அவ்வழியில் நிஷ்டையோடு இருத்தல் எப்படிப் பட்டவர்களுக்கும் அருமைப் பட்டே இருக்கும் -எளிதன்று –
————————————————————————
பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்—————–66-

பின்பழகிய பெருமாள் ஜீயருக்கு இருந்த ஆசார்ய ப்ரேமம் ஒப்புயர்வற்றது -நம்பிள்ளை திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் செய்யப் பெற வேணும்
என்றே சில ஔஷதங்களை ச்வீகரித்துத் திரு மேனியைப் போஷிக்க விருப்பம் கொண்டு இருந்தவர் –
இவரைப் போலே நம்மால் இருக்க முடியாமல் போனாலும் இவருடைய நிஷ்டையைச் சிந்தனை செய்யவாவது பெற்றால்
அதுவே நாம் உஜ்ஜீவிக்கப் போதுமானது என்று காட்டி அருளுகிறார்
———————————————————————–
ஆச்சார்யர்கள் அனைவரும் முன் ஆசரித்த
ஆசாரம் தன்னை அறியாதார் -பேசுகின்ற
வார்த்தைகளைக் கேட்டு மருளாதே பூருவர்கள்
சீர்த்தி நிலை தன்னை நெஞ்சே சேர் ——–67-

நம்முடைய பூருவாசாரியர்களின் அனுஷ்டான சரணியிலேயே -செய்யாதன செய்யோம்-மேலையார் செய்வனகள் -படியே
வர்த்தித்தல் வேண்டும் என்று நியமித்து அருளுகிறார்
————————————————————
நாத்திகரும் நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகரும்
ஆத்திக நாத்திகரு மாமிவரை -ஓர்த்து நெஞ்சே
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு நடுச்
சொன்னவரை நாளும் தொடர்———68-

அஜ்ஞனனான விஷய பிரவணன் கேவல நாஸ்திகனைப் போலே -ஜ்ஞானாவானான விஷய ப்ரவனணன் ஆஸ்திக நாஸ்திகனைப் போலே
சாஸ்த்ரத்தில் ப்ராமாண்ய புத்தி இல்லாமல் தான் தோன்றியாகச் செய்து திரிகின்றவன் வெறும் நாஸ்திகன் –
சாஸ்த்ரங்களை பிரமாணமாக இசைந்து ஆஸ்திகன் என்று சொல்லத் தக்கவநாயும் அந்த சாஸ்திர வரம்பில் அடங்காமல் தோன்றினபடியே
செய்து திரிவது பற்றி நாஸ்திகனாமாயும் இருப்பவன் ஆஸ்திக நாஸ்திகன் எனப்படுவான் -ஆஸ்திகர்களே நமக்கு அநு வர்த்த நீயர்கள் -என்று அருளிச் செய்கிறார்
————————————————————————-
நல்ல மணம் உள்ள ஒன்றை நண்ணி இருப்பதற்கு
நல்ல மணம் யுண்டாம் நலமது போல் -நல்ல
குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக்
குணமதுவே யாம் சேர்த்தி கொண்டு——-69-

நயமது போல் -நலமது போல் -பாட பேதங்கள்
அனுகூல சஹவாசமும் பிரதிகூல சஹவாச நிவ்ருத்தியும் சதாசார்யா பிரசாதத்தால் வர்த்திக்கும் படி
பண்ணிக் கொண்டு போர்க் கடவன் -ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி
———————————————————————
தீய கந்தம் உள்ளது ஒன்றைச் சேர்ந்து இருப்பது ஒன்றுக்குத்
தீய கந்தம் ஏறும் திறமது போல் -தீய
குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பாருக்குக்
குணமதுவேயாம் செறிவு கொண்டு ——–70-

ஆதலால் துஷ்ட சஹவாசம் அவர் நீயம் -சத்சஹவாசமே கர்த்தவ்யம் -என்றதாயிற்று
———————————————————————-
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப்
பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே –தன்னெஞ்சில்
தோற்றினதே சொல்லி இது சுத்த யுபதேச பர
வார்த்தை என்பார் மூர்க்கராவார்——-71-

பூர்வர்கள் அருளிச் செய்தவற்றை முறை வழுவாமே சதாசார்யா சந்நிதானத்தில் கேட்டு உணர்ந்து -பின்பு அதை அப்படியே மனனம் பண்ணி
தாங்கள் அதை அப்படியே பேச வேண்டியது ப்ராப்தமாய் இருக்க அங்கனம் பேசாமல் தமது உள்ளத்திலே தோற்றின தான் தோன்றி
அர்த்தங்களையே சொல்லி இந்த அர்த்தமே சுத்த சம்ப்ரதாய உபதேச பரம்பரையாய் வரலுற்றது என்று பொய்யும் சொல்லுமவர்களே மூர்க்கர் எனத் தகுந்தவர்கள் –
திருட பூர்வச்ருதோ மூர்க்க-பூர்வேப்ய ஸ்ருதம் –பூர்வ ஸ்ருதம் -த்ருடம் பூர்வ ஸ்ருதம் யஸ்ய ச திருட பூர்வஸ்ருத்த
உக்தமாகவும் சாரமாகவும் தான் தோன்றியாக சொல்லி உலகை வஞ்சிப்பவரே மூர்க்கர் -என்று அருளிச் செய்கிறார்
————————————————————————
பூர்வாச்சார்யர்கள் போத மனுட்டானங்கள்
கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் -தேறி
இருள் தரும் மா ஞாலத்தே இன்புற்று வாழும்
தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து——–72-
———————————————————————-
இந்த யுபதேச ரத்ன மாலை தன்னைச்
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் -எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகிச்
சதிராக வாழ்ந்திடுவர் தாம் ———73-

பூர்வாசாரியர்களின் உடைய ஜ்ஞான அனுஷ்டானங்களை எடுத்துச் சொல்லுகின்ற மகான்களின் உடைய ஸ்ரீ சூக்திகளினால்
நீங்கள் தெளிவு பெற்று நல்லறிவை -நிதியாகக் கொண்டு -உபகரித்து அருளவல்ல சிறந்த ஆசாரியரை அடி பணிந்து
இவ்விருள் தரும் மா ஞாலத்திலே ஆனந்த நிர்ப்பரர்களாய் வாழுங்கோள்
நலமந்த மில்லதோர் நாடாகவே தோற்றும் -இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்
-இப்பத்தும் உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் -போலே -இதுவே தெருள் தரும் மா ஞாலமாகி விடும் என்ற திரு உள்ளம் தோன்றும் –
எம்பெருமானார் திரு உள்ளாத்திற்கு உகப்பான விஷயங்களையே தொடுத்து அருளிச் செய்த இந்த சொல் மாலையைச் சிந்தையிலே
அணிந்து கொள்ளுமவர்க்கு எம்பெருமானாருடைய பரம கிருபையே பேறாகும் என்று பலன் அருளிச் செய்து தலைக் கட்டி அருளுகிறார்
———————————————————————–
எறும்பி அப்பா அருளிச் செய்தது

மன்னுயிர்காள் இங்கே மணவாள மா முனிவன்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை -உன்னிச்
சிரத்தாலே தீண்டின் அமானவனும் நம்மைக்
கரத்தாலே தீண்டல் கடன் –

74 சிம்ஹாச நாபதிகள் -74 பாசுரங்கள் பாடி அருள மா முனிகள் திரு உள்ளம் -அவரையே தெய்வமாக கொண்ட
எறும்பி அப்பா இறுதி பாசுரம் பணித்து பெரிய பெருமாள் இடம் திருவடி பணிந்து பிரார்த்திக்க அப்படியே பகவன் நியமனம் ஆயிற்று
இந்த உடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி –விரசை தனில் குளித்து அங்கு அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று -என்றபடி
முக்தி சாம்ராஜ்ய அனுபவத்துக்கு முன்னாக அமானவ கர ஸ்பர்சம் இன்றியமையாதது ஆகும் –
அது மா முனிகளின் பக்தர்களுக்கு நேருவது கடைமையாகும் -என்றும்
அது நேருவது அவசியம் அற்றது என்றும் இருவகைப் பொருளில் அருளிச் செய்கிறார்
————————————————-
சடரிபு பாத பத்மப் ருங்கோ வரவர யோகி கதாம் ருதாந்தரங்க
அகதயதுபதேச ரத்னமாலா விவ்ருதி ஸூ தாம் ஜனதார்ய யோகிவர்யா-
———————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .
எறும்பி அப்பா திருவடிகளே சரணம் –
திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

உபதேச ரத்னமாலை –பாசுரம் -71/72/73– ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

July 28, 2014

முதல் 20 பாசுரங்கள் பிரதம பர்வ நிஷ்டர்-1-20-
அடுத்த ஒன்பதும் -சரம பர்வ நிஷ்டர் -21-29-
அடுத்த நான்கு க்ஷேத்ர மஹாத்ம்யம் –30-33
அடுத்த ஐந்து -வியாக்கியானங்கள் வியாக்யாதாக்கள் -34-38
அடுத்த பதினொன்று பாசுரங்கள் –39-49-வியாக்கியானங்கள் பிறந்த க்ரமம் -ஈடு வந்த க்ரமம் பார்த்தோம்
அடுத்த மூன்றால் 50-52- நம் திருநாமம் -பிள்ளை லோகாச்சார்யார் திரு நாமம்வந்த க்ரமம்
அடுத்த ஏழு பாசுரங்கள்-ஸ்ரீ வசன பூஷண மஹாத்ம்யம்
அடுத்த பதினொன்று பாசுரங்கள் -ஸ்ரீ வசன பூஷண சாராம்சம்
இனி மூன்றால்-71-72-73- -முன்னோர் அனுஷ்டானம் கண்டு நடந்து மோக்ஷ சாம்ராஜ்யம் பெறுவதை
அருளிச் செய்து நிகமிக்கிறார்

நாத்திகரும் -என்கிற பாட்டிலே
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு நடுச் சொன்னவரை நாளும் தொடர் -என்று
அவர்களை விட்டு பற்றும்படியை அருளிச் செய்து
நல்ல மணம் -தீய கந்தம் -என்கிற இரண்டு பாட்டாலும்
அவர்கள் சேர்த்தியால் சேருமத்தை அருளிச் செய்து

இனி மேல்
முன்னோர் -71
பூர்வாச்சார்யர்கள் -72–இரண்டு பாட்டாலும்
அனுகூல பிரதிகூலரான அவர்கள் உபதேச பேதங்களும்
அவர்களில் ஸ்வரூப நாசகரான மூர்க்கருடைய ஸ்வரூப கதனத்தையும்
ஸ்வரூப வர்த்தகராய் இருப்பவராலே யுண்டான ஸ்வரூப லாபத்தையும் சொல்லித் தலைக் கட்டுகிறது –

(விவேக பலம் வீடு பற்று த்யாஜ்ய உபேதேயங்கள் ஸூக துக்கம் –
ஒன்றையும் நாலையும் சேர்த்து கொள்ளுமா போல்
நல்ல குணம் பூர்வாச்சார்யர்கள் -பாசுரம் -தீய குணம் -முன்னவராம் பாசுரம் )

அதில் இப் பாட்டில் –
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு -என்று சொன்ன
மூர்க்கர் ஆவார் இன்னார் என்று சொல்லுகிறார் ஆதல்

அன்றிக்கே –
ஆந்தர விரோதிகளாய் இருக்கிற இவர்கள் படியையும்
தனித்து அருளிச் செய்ய வேணும் என்று திரு உள்ளம் பற்றி
அத்தையும் அருளிச் செய்கிறார் ஆதலாகவுமாம்-

முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப்
பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே –தன்னெஞ்சில்
தோற்றினதே சொல்லி இது சுத்த யுபதேச பர
வார்த்தை என்பார் மூர்க்கராவார்–71-

முக்யதி -யஹா –மயங்கி -அஞ்ஞானத்தால் மூர்க்கர் -பர்யாய சப்தங்கள் பல உண்டே –
1-மூடர் 2-அஞ்ஞர் 3-பாலகர் -பலி -அபூபங்களை உண்ணுவதே கார்யம் – 4-யதா ஜாதர் -பிறக்கும் பொழுது உள்ள ஞானமே –
தாங்களும் மயங்கி கேட்ப்பார்களையும் மயக்குபவர்கள் –
முன்னோர் இடம் கேட்டு ஓர்ந்து – ஆராய்ந்து பிறருக்கு உபதேசிக்காமல் –
சுத்த உபதேச வர வாற்று -பாட பேதம்

பிராசாம் வசாம் ஹி சகலாநி
நிஸம்ய ஸம்யக் சித்தேன
தான் அவதிதேன நிஜேந மத்வா
நைவோ பதித்ய
கதயந்தி யத் அபவாஸம்
ஸூத்தான் அந்வயயோ இதி
யே வத தேஹி மூர்க்கா

முன்னோர் மொழிந்த –
முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள் (54)-என்கிறபடியே
நமக்கு எல்லாம் பிரதமஜராய் இருக்கிற
ஸ்ரீ பெரிய முதலியார் தொடக்கமான ஆச்சார்யர்கள்
ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக அருளிச் செய்த திவ்ய ஸூக்திகளை-

மொழிந்த என்றது
மொழிந்தவை -என்றபடி

முறை -தப்பாமல் கேட்டுப் –
அப்படி ஹித ரூபமான வசனங்களை
சிஷ்ய ஆச்சார்ய க்ரமங்களிலும் –
ஸத் சம்பிரதாய க்ரமங்களிலும்-
ஒன்றும் தப்பாதபடி –
சதாச்சார்யர்கள் சந்நிதியிலே கேட்டு -என்னுதல் –

அன்றிக்கே –
முன்னோர் மொழிந்த -முறை -தப்பாமல் கேட்டு –
என்று அவர்கள் தம் தாம் ஆச்சார்ய விஷயங்களை
உத்தாரயதி சம்சாராத் தத் உபாய ப்லவே நது-என்று உத்தாரகராகவும்
குருமூர்த்தி ஸ்திதி சாஷாத் பகவான் புருஷோத்தம -என்று அவதார விசேஷமாகவும் பிரதிபத்தி பண்ணி
தங்கள் சிஷ்யர்களுக்கும் அப்படியே அருளிச் செய்து கொண்டு போரும்
க்ரமங்களிலே ஒன்றும் தப்பாதபடி கேட்டு -என்னுதல்-

(கேட்டு -சர்வஞ்ஞனான அவனும் கேட்டு ஆனந்திக்கும் ஸத் சம்ப்ரதாயம் அன்றோ நம்மது )

பின்னோர்ந்து –
ஸ்ரவண அநந்தரம்-
சாபேஷமான மனனத்தைப் பண்ணி –

தாமதனைப் பேசாதே —
உபதேச கர்த்தாக்களாய் வேண்டி இருக்கும் தாங்கள்
அப்படியே ஸ்ரவணாதி களாலே வைசத்யம் ( விளக்கமாக -விசததமமாக ) பிறந்து இருப்பதான அர்த்தங்களை
ஸ்ரோதுகாமர் ஆனவர்களுக்கு சொல்லாதே –
(கேட்பது சிந்திப்பது உபதேசிப்பது மூன்றிலும் -இவர்கள் விபரீதமாக -என்று அன்வயித்து வியாக்யானம் )

இவர்கள் உபதேசிக்கும் படி சொல்லுகிறது –
தன்னெஞ்சில் தோற்றினதே சொல்லி –
பிரமாண அநுசாரி அன்றிக்கே-
ஏதத் விபரீதமாக தங்கள் யுடைய வக்கிர ஹ்ருதய உதிதமாய் இருக்கும் அர்த்தத்தையே
வாக்காலே சொல்லி -என்னுதல் –

அன்றிக்கே
ஆச்சார்ய விஷயத்தில் ஊற்றம் அற்று
கேவலம் உபகார மாத்ரத்தையே அங்கீ கரித்து இருக்கிற தங்கள் யுடைய
சுஷ்க (சுக்கான் பரல் போல் உலர்ந்த ) ஹிருதயத்துக்கு பிரதிபாசித்தத்தையே
(ப்ரதிபாசம் -ஆபாசம் தோற்றம் ) அர்த்தம் என்று சொல்லி -என்னுதலாகவுமாம் –

இப்படி துஷ்ட ஹிருதய தூஷிதமாய் இருக்கும் அத்தையே
உக்த்ய ஆபாசத்தாலே-உபதேசித்த மாத்ரம் அன்றிக்கே –
இது சுத்த யுபதேச பர வார்த்தை என்பார் –
ஆப்திக்கு யுடலாக இந்த அர்த்தமானது சுத்தமான யுபதேச மார்க்கத்தை யுடையது என்பார்கள் –
தாங்கள் சொல்லுகிற அர்த்தம் அ சம்ப்ரதாயமாய் இருக்கச் செய்தேயும்-
அத்தை விச்வசிக்கைக்கு ஈடாக
இன்னருளால் வந்த யுபதேச மார்க்கத்தை (1)-என்னுமா போலே யாய்த்து
இவர்கள் தாங்கள் யுபதேசித்துப் போருவ்து-

இவர்கள் சர்வார்த்தங்களுக்கும் இப்படியே இறே விபரீதங்களைக் கல்ப்பிப்பது –
இவர்கள் ஆபாச உக்திகள் தான்
பயிருக்குக் களை போலவும்
ஆதித்யனுக்கு மந்தேஹர் போலவும்
பிரதிபாசித்து பிரணஷ்டமாய்ப் போமதாய் இருக்கும்
(மந்தேஹர் ராக்ஷசர் -அழிக்கவே சந்த்யா வந்தனத்தில் அர்க்கப் பிரதானம் செய்கிறோம் -இதுவே வஜ்ரமாகி அழிக்கும் )
ஆகையால் தோற்றி மாயுமது ஒழிய-நிலை நிற்பது ஓன்று அன்று என்று தோற்றுகிறது –
இது தான் தோற்றின போதே சொல்லிப் போந்தது இறே

இப்படி துர் உபதேஷ்டாக்கள் தான் ஆர் என்ன-
ஸ்வ உபதேசாதிகளாலே முடித்து விடும் மூர்க்கராவார் -என்கிறார் –
முன் பின் பாராதவர்கள் இறே மூர்க்கர் ஆவார் –
இவர்கள் தங்கள் ஸ்வரூப அனுரூபமான நாமம் இது வாய்த்து –
இப்படி துர் உபதேசம் பண்ணுவார் மூர்க்கராவார் -என்னுதல்
மூர்க்கராவார் இப்படி துர் யுபதேசம் பண்ணிப் போருமவர்கள் -என்னுதல்

(ராவணன் நாம துர்வ்ருத்தன் -ராக்ஷசனான படியால் தீய நடத்தை -போல்
ம்ருது ப்ரக்ருதியான மா முனிகளே -மூர்க்கர் என்று கடின பாஷாணம் இவர்களை
இரண்டு பாசுரங்களில் காட்டி நம்மை எச்சரித்து உபதேசித்து அருளுகிறார் )

முன்னோர் மொழிந்த -இத்யாதிக்கு
நம் ஆச்சார்யர்கள் திரு உள்ளக் கருத்தை நன்றாக அறிந்து அதுக்குத் தகுதியாய் இருந்துள்ள
உக்தி அனுஷ்டானங்களை ஆசரியாமல்
தங்கள் மனசுக்கு தோற்றினதே சொல்லும்-துஸ் ஸ்வ தந்திர பிரக்ருதிகளாய்
ஸ்வ ஆச்சார்ய விஷயத்தில் ஊற்றம் அற்று இருக்கும் கர்ப்ப நிர்பாக்யரான சுஷ்க ஹிருதயர்க்கு
நம் தர்சனத்தில் தாத்பர்யார்தமும்-
தத் அனுரூபமான அனுஷ்டானமும் தெரியாது ஆகையாலே
மேல் எழுந்த வாரியான சிகப்பு போலே
இவ்வர்த்தம் நெஞ்சிலே நிலை நில்லாது -என்று இறே
அந்திம உபாய நிஷ்டையிலே அஸ்மத் பரமாச்சார்யரும் ( பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் ) அருளிச் செய்திற்று-

(ஸ்ரீ கீதாச்சார்யனும் –28 சதுர்யுகங்களுக்கு முன்னே சொன்னதை இப்பொழுது
அர்ஜுனா உனக்குச் சொல்கிறேன் என்றானே –
கிளியையே கொண்டாடுவார்கள் -பூர்வர்கள் -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் பேசுவதால் )

—————————————————–

(நாதனுக்கு நாலாயிரம் அளித்தான் என்ற போது
ராமானுஜ நூற்றந்தாதி உபதேச ரத்ன மாலை உதிக்க வில்லையே
3776 பாசுரங்கள் -மடல் ஒவ் ஒன்றும் ஒரே பாசுரம்
உபதேச ரத்னமாலை சேவிக்கும் பொழுது திருப்பல்லாண்டு சேவிக்காமலே திருவல்லிக்கேணியில் உண்டாம்
ஆழ்வார்கள் வாழி -இதிலே உண்டே )

கீழே
தன் குருவின் தாளிணைகள்-( 60 )-என்று தொடங்கி
சரம சேஷி சரணங்களிலே சங்கம் இன்றியிலே இருக்குமவர்களுக்கு
பிரதம சேஷியான ஈஸ்வரன் ப்ராப்ய சித்தியை பண்ணான் –
ஆகையாலே அத்தை அவர்கள் பிராபியார்கள் -என்றும்

இனி
ஞான அனுஷ்டான பூர்ணனான சதாச்சார்யன் யுடைய சமாஸ்ரயணத்தாலே
ஸ்ரீ யபதியானவன் தானே ஸ்ரீ வைகுண்டத்தைத் தந்து அருளும்-(61 ) என்றும்

இப்படியான பின்பு
உஜ்ஜீவன அபேஷை உள்ளவர்கள் எல்லாரும் தங்கள் ஆச்சார்யர்கள் பாதத்தில் பக்தியைப் பண்ணுங்கோள்
கரதலாமலகம் போலே யுங்களுக்கு பரமபத பிராப்தி யுண்டாம் -(62 )என்றும்

இப்படி ஆச்சார்யன் செய்த உபகாரத்தை அனுசந்தித்தால் அவனை விஸ்லேஷிக்க விரகு இல்லை-(63 ) என்றும்

அவ்வளவும் அன்றிக்கே –
அவனுடைய அசேஷ சேஷ வ்ருத்தியிலும் அந்விதனான இவனுக்கு பிரிய பிரசங்கம் இல்லை -(64 )என்றும்

இப்படி சிஷ்ய ஆச்சார்யர்களான இருவரும் ஆத்மா தேஹங்களை ரஷித்துக் கொண்டு போரும் படியையும்-( 65 )

அதிலும் சிஷ்யனானவன் பிராப்ய தேசத்தில் விருப்பம் அற்று
அவன் திருவடிகளில் கைங்கர்யமே நிரதிசய புருஷார்த்தம் என்று ஆதரித்துப் போரும்படியையும்
அதுக்கு நிதர்சன பூதரான அனுஷ்டாதாக்களையும் –(66 )

இப்படி ஆச்சார்யர்கள் ஆதரித்துப் போரும் அனுஷ்டானத்தில் அஜ்ஞராய் இருக்குமவர்களுடைய உக்தி
பிரம ஹேதுவாய் இருக்குமதாகையாலே
தன் நிவர்த்தகமான பூர்வர்கள் யுடைய அனுஷ்டானமே ஆதரணீயம் என்னுமத்தையும்–( 67 )

இப்படி அனுகூல பிரதிகூலரான உக்தரான இவர்கள் நிரூபண முகேன பரிக்ராஹ்யர் பரித்யாஜ்யர் என்னுமத்தையும்-(68 )

இவர்கள் சஹவாசத்தால் பலிக்கும் சத் குண (69 )
அசத் குணங்களையும் (70 )
ஏவம் பூதரான பிரதிகூலர் துர் உபதேஷ்டாக்களான மூர்க்கர் என்னுமத்தையும் அருளிச் செய்து-(71 )

இதில்-( 72 )
அனுகூலரான ஆச்சார்ய பரதந்த்ரருடைய உபதேசத்தாலே-
ஆச்சார்ய அபிமானம் ஆகிற மகா பலம் சித்தித்து வாழும்படியையும்–
அருளிச் செய்யா நின்று கொண்டு
ஸ்ரீ வசன பூஷன தாத்பர்யார்த்தங்களை சங்க்ரஹித்து அருளிச் செய்கிற இவர்

அடியிலே
பின்னவரும் கற்க உபதேசமாகப் பேசுகின்றேன்-(1) -என்று உபக்ரமித்து
அந்த பரோபதேசத்தை இவ்வளவுமாக நடத்தி-
அத்தை உபசம்ஹரித்து அருளுவாராய்
உஜ்ஜீவன அபேஷை யுடையவர்களைக் குறித்து
பூர்வாச்சார்யர்கள் யுடைய ஞான அனுஷ்டான பிரதிபாதகங்களான
ஆப்த வசனத்தால் விஸ்வஸ்த்தவராய்
ஞான பிரதானாதி முகேன ரஷித்துப் போரும் பெரு மதிப்பனான ஆச்சார்யனை ஆஸ்ரயித்து
அஞ்ஞானவஹமான சம்சாரத்திலே ஆனந்தத்தை யுடையவராய்
நீங்கள் வாழுங்கோள் என்று தலைக் கட்டி அருளுகிறார் –

பூர்வாச்சார்யர்கள் போத மனுட்டானங்கள்
கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் -தேறி
இருள் தரும் மா ஞாலத்தே இன்புற்று வாழும்
தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து—72-

கொண்டு -தேறி-ஏற்றுக் கொண்டு தெளிந்து -காலுஷ்யம் போக்கி –
ஆச்சார்யர் திருவடிகளை சேர்வதே வாழ்ச்சி -தொழுகையே எழுகை போல் –
வாழும்-வாழ்வீர்களாக -அநுக்ரஹத்துடன் நிகமிக்கிறார் –
இதுவே படிக்கட்டுக்கள் -ஸ்ரவணம் -மனனம் பண்ணி விஸ்வஸித்து –
ஆச்சார்யர் அபிமானத்தில் ஒதுக்குவதே உஜ்ஜீவன ஹேது

ப்ராசம் ப்ரபோத ஆசரணே விமலே குரு நாம்
யே வியாஹரந்தி
தத் உதாஹ்ருதயா பதவ்யா
பிரஞ்ஞா நிதிம் குரு வரம் பிரதிபத்ய
மோஹாத்பதே ஜகதி
ஸம்ப்ரதி மோபிஷித்வம்

வாழுகைக்கு அடி சொல்லுகிறது –
பூர்வாச்சார்யர்கள் போத மனுட்டானங்கள் கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு -என்று
அதாவது
தத்வ யாதாம்ய வித்தமரான ஸ்ரீ மன் நாதமுனிகள் தொடக்கமாக
(தத்வம் -தத்வ யாதாத்ம்யம் -வித் -வித்தமர் -ஞான வைராக்ய ராசயே )
இவ்வருகு உள்ள பூர்வாச்சார்யர்கள் யுடைய
நிர்மலமாய் இருப்பதான யாதாம்ய ஞானம் என்ன –
தத் அனுரூபமான மறுவற்ற அவர்கள் அனுஷ்டானங்கள் என்ன-
இவற்றை ஆச்சார்ய ப்ராப்திக்கு ஹேதுவாக
ஹிதம் சொல்லுமவர்கள் யுடைய வார்த்தைகளைக் கொண்டு-

நீர் -தேறி –
சாஸ்திர ஞானம் போலே புத்தேஸ் சலன காரணமாய் இராதே-
சித்த நைர்மல்யத்தைப் பண்ணுமதாய்
ஸூகரமாய் இருப்பதொரு வார்த்தைகளைக் கொண்டு
அதாவது
கொடியைக் கொள் கொம்பிலே துவக்கும் போது சுள்ளிக் கால் வேண்டுமா போலே
ஆச்சார்ய அந்வயத்துக்கும் இது வேண்டும் என்று அறிந்து-
இத்தை ஹித ரூபமாய் கொண்டு -என்கை –

(ரிஷிகள் வசனம் வேறே வேறே இடங்களில் வேறே வேறே மாதிரி உள்ளது
வராஹ புராணத்தில் ஸாளக்கிராமம் ஸ்த்ரீகள் தொட்டால் நரகம் கிட்டும் என்றும்
ஸ்கந்த புராணத்தில் ஸத் தானவர்கள் தொடலாம் என்றும் சொல்லும்
இப்படி சித்தம் கலங்கும் படி -சலன காரணமாய் இருக்குமே
நமக்கு மேலையார் செய்வனகளே பிரமாணம் -தொட்டு திருவாராதனம் செய்யக் கூடாது
கூறுவார் -நடுவில் இங்கே பாகவத சம்பந்தமும் ஆச்சார்ய சம்பந்தத்துக்கு வேணுமே )

போதம் அனுட்டானம் -என்றது
ஞானம் அனுஷ்டானம் -என்றபடி –
போதத்தை போதம் என்கிறது –

கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் தேறி –
சாஸ்த்ரங்களை எல்லாம் வரி அடைவே கற்றாலும்
அதில் ஆஸ்திகராய் தெளிவு பிறந்து உஜ்ஜீவிக்கை அரிதாய் இருக்கும் –
அந்த சாஸ்த்ர அர்த்தங்களை அனுஷ்டிப்பாரை பின் சென்று இருக்குமவர்கள் யுடைய வார்த்தை
ருசி விஸ்வாசங்களை யுடையராய் தெளிவு பிறந்து
உஜ்ஜீவிக்கைக்கு யுடலாய் இருக்கும்

(யஸ்ய தாசாரதி ஸ்ரேஷ்டர் -அனுஷ்டானம் பார்த்து செய்வது எளிது –
சாஸ்திரம் படித்து செய்வது கடினம் -லோக ஸங்க்ரஹத்துக்காக செய்ய வேண்டும் என்று
அர்ஜுனனுக்கு கீதாச்சார்யன் உபதேசம்
மத்யம பர்வம் பாகவதர்கள்
பிரதம பர்வம் பகவான்
சரம பர்வம் ஆச்சார்யர் )

ஆகையால் உஜ்ஜீவிக்க வேணும் என்கிற நீங்கள்
அவர்கள் வார்த்தைகளைக் கேட்டு
அத ராம பிரசன்னாத்மா ஸ்ருத்வா வாயு ஸூதஸ்ய ஹா -(யுத்த 18-1 )–என்கிறபடியே

(திருவடி வார்த்தை கேட்டு மகிழ்ந்த பெருமாள் -ருஷி ஹா என்று கொண்டாடுகிறார் –
கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு தேறி என்பதுக்கு த்ருஷ்டாந்தம்
வாயு மைந்தன் -இவர்கள் பேசியதால் பிறந்த நெஞ்சின் துக்கம் போனதே –
ஸந்தோஷம் முதலில் -பின்பு காது கொண்டு கேட்டார்
இங்கும் இன்பம் உற்று வாழும் முதலில் -தேசிகனைச் சேர்ந்து அடுத்து
அருளுடை அவன் தாள் அணை விக்கும் முடித்தே -2-10-11-
ராஜகுமாரன் சிறையில் இருக்க கிரீடம் வைத்து கால் விலங்கு வெட்டுமா போல் -)

ஆஸ்ரயணதுக்கு முன்பே சத்தை யுடையராய்
அந்த சத்தா சம்ருத்திகளுக்கு உறுப்பாக சதாச்சார்ய சமாஸ்ரயணத்தை பண்ணி
தத் ஆஸ்ரயண பலத்தையும்
இங்கேயே அனுபவியுங்கோள்-

நீர் தேறி –
கலங்கின நீர் தெளியுமா போலே
அசித் சம்சர்க்கத்தாலே கலுஷ மநாக்களாய் இருக்கிற நீங்கள்
மந்த்ராக்ராயமான அவர்கள் வார்த்தை யாகிற
தேற்றாம் விரையாலே தேற்றப் பட்ட தெளிவை யுடையராய்
அந்தத் தெளிவுக்கு அனுகுணமாக
ஆச்சார்ய சமாஸ்ரயணத்தைப் பண்ணி
அத்தால் வரக் கடவ பலத்தையும் ப்ரத்யஷமாக புஜியுங்கோள்-

நீங்கள் அவர்கள் போதத்தால் தேறி-(அவர்கள் )அனுஷ்டானத்தாலே தேசிகனைச் சேருங்கோள் –
தமேவ குரும் மா ஆப்நுயாத்-என்னுமா போலே –
ஆகையால் அவர்கள் அத்யந்த பாரதந்த்ர்ய ஞானத்தையும்
அதடியாக
ஆச்சார்ய அனு வர்த்தநாதிகளையும் பண்ணிப் போந்தவர்கள் அனுஷ்டானத்தையும் கேட்டால்
மன பிரசாதம் யுண்டாய்
அதடியாக
ஆச்சார்ய சமாஸ்ரயணத்தையும் பண்ணி
தத் பிராப்தி பலத்தை லபிக்கலாமாய் இருக்குமே இவர்களுக்கு-

இனி இப்படி ஆப்த வசன அபிஞ்ஞராய்க் கொண்டு -ஆச்சார்ய சமாஸ்ரயணம் பண்ணுமவர்கள்
பெரும் பேற்றைச் சொல்லுகிறது –
தெருள் தருமா தேசிகனைச் சேர்ந்து இருள் தரும் மா ஞாலத்தே நீர் இன்புற்று வாழும் –என்று
(தேசிகன் -பகவான் -மா தேசிகன் -ஆச்சார்யர் )
அதாவது –
ஞாநாதி பரி பூரணன் ஆகையாலே
ஞான பிரதாநாதிகளைப் பண்ணி ரஷிக்கும் மஹா உபாகாரகனான ஆச்சார்யனை ஆஸ்ரயித்து –
அந்த ராஜ குல மகாத்ம்யத்தாலே அஜ்ஞாநாவஹாமுமாய்
இல்லை கண்டீர் இன்பம்-(9-1-5-) என்னும் படி
ஸூக லேச ரஹிதமான சம்சாரத்தில்
தெளி விசும்பு திரு நாடு-(9-7-5-) ஆன-
நலமந்த மில்லதோர் நாட்டில் யுண்டான –
அந்தமில் பேரின்பம் ஆகிற
நிரதிசய ஸூக ரூபமான ஆனந்தத்தை யுடையராய் வாழுங்கோள் என்கை –

(ஆளவந்தார் வியாதியைத் தான் பெற்று -மாறனேர் நம்பி தவிக்க -பெரியநம்பி பெருமாளை பிரார்த்திக்க –
வியாதி பலன் கொஞ்சம் குறை -எந்த பாவி எனது ஆச்சார்ய பிரசாதம் பெறாமல் தடுத்தார் என்று
அருளிச் செய்த வார்த்தை அனுசந்தேயம் )

நீர் வாழும்
பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறே (8-6-10 )-என்கிறபடியே
ஆச்சார்ய கைங்கர்யம் ஆகிற பெறுதற்கு அறிய பேற்றை-
அவன் இந்நாடு தன்னில் இருக்கும் நாள் செய்து -( 64 )
அந்த கைங்கர்ய ரூப சம்பத்தைப் பெற்று
அதில் ரசிகராய் வாழுங்கோள்-
சம்பத் அடியாக இறே வாழ்வது –

இருள் தரு மா ஞாலத்தே இன்பமுற்று வாழும் –
தேசாந்தரே-தேகாந்தரே வாக அன்றிக்கே-
(வையத்து வாழ்வீர்காள் போல் )
இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர் -(8-5-11)-என்னும் படி
இந்த தேசத்திலே-
இந்த தேஹத்தோடே இருந்து
ஆச்சார்ய அபிமானம் ஆகிய நிலை நின்ற சம்பத்தைப் பெற்று வாழுங்கோள் –
மோதத்வம் -என்னக் கடவது இறே-
(பின்பு அழகு பெருமாள் ஜீயர் அனுஷ்டானம் முன்பே பார்த்தோமே
நல் பாலுக்கு உய்த்தனன் நான் முகனார் பெற்ற நாட்டுளே–7-5-1-)

பின்னவரும் கற்க யுபதேசமாகப் பேசுகின்றேன்-(1) -என்கிற
இவருடைய வார்த்தையை
நீர் வாழும் -என்கிற வாழ்வோடு (-72) தலைக் காட்டிற்று –

ஆகையால்
ஆச்சார்ய சமாஸ்ரயணம் -என்றும்
வாழ்வு -என்றும்
இரண்டு இல்லை இறே –

இத்தால்
ஆசார்யஸ்ய பிரசாதேன மம சர்வே மபீப்சிதம் ப்ராப்னுயா மீதி விஸ்வாசோ
யஸ்ய அஸ்தி ச ஸூகீ பவேத் -என்கிற பிரமாண அர்த்தம் சொல்லப் பட்டது ஆய்த்து-

—————————————————-

ஸ்ரீ மத் ரெங்கம் ஜயது பரமந்தாம தேஜோ நிதாநம்
பூமா தஸ்மின் பவது குஸலீ கோபி பூமா ஸஹாய
திவ்யம் தஸ்மை திசது வைபவம் தேசிகோ தேஸிகா நாம்
காலே காலே வர வர முனி கல்பயன் மங்களாநி –ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம்-7-
மங்களகரமாக நீர் வாழும் என்று அருளிச் செய்து நிகமித்தார் –

நிகமத்தில்
சத் சம்ப்ரதாய பரம்பரா ப்ராப்தமான சகலார்த்தங்களையும்
சர்வருக்கும் உபதேசிக்கக் கடவோம் -என்று உபக்ரமித்து அப்படியே
அது அடையவும் நடந்து போந்த இப் பிரபந்தத்தை நிகமித்து அருளி
இப் பிரபந்த அந்வயம் யுடையவர்கள் யுடைய பலத்தையும்
அருளிச் செய்து தலைக் கட்டி அருளுகிறார் –

சகல பிரபந்த வ்யாவ்ருத்தமான இந்த ஸ்ரீ உபதேச ரத்ன மாலை யாகிற பிரபந்தம் தன்னை
(அத்யயன காலத்திலும் அனுசந்திக்கப்படும் வை லக்ஷண்யம்
ததீய விஷய -சரம பர்வ நிஷ்டை என்பதாலும் வை லக்ஷண்யம்
அநதி விஸ்தரமாக இருக்கும் வை லக்ஷண்யம்
உபாயாந்தர ப்ராப்யாந்த்ர விஷயங்களைச் சொல்லி விலக்க வேண்டாத வை லக்ஷண்யம் )
மனசிலே சர்வ காலமும் மனனம் பண்ணுகிறவர்கள்
நமக்கு சேஷியான( பதவுரையில் ஸ்வாமி ) ஸ்ரீ எம்பெருமானார் யுடைய
(சேஷ ராமானுஜர் தானே சேஷி ராமானுஜரான பார்த்த சாரதியும் )நிர்ஹேதுக கிருபைக்கு
சர்வ காலத்திலும் விஷயமாய் வ்யாவ்ருத்தமாக
ஸ்ரீ பகவத் அனுபவ கைங்கர்யாதிகளைப் பெற்று
ஸூகிக்கப் பெறுவார் என்கிறார் -(ஆதிகள் -பகவத் பாகவத ஆச்சார்ய )

(பிராப்யத்துக்கு பிரதம பர்வம் -ஆச்சார்ய கைங்கர்யம் –
மத்யம பர்வம் -பகவத் கைங்கர்யம் –
சரம பர்வம் -பாகவத கைங்கர்யம் -(ஸ்ரீ வசன பூஷணம் –—சூரணை -412-)
ஆச்சார்ய விஷயமான கைங்கர்யம் இல்லை –
ஆச்சார்யருக்கு ப்ரீதிக்கு விஷயமான பகவத் கைங்கர்யம் -என்றவாறு
வாழ்ந்திடுவார் -பகவத் கைங்கர்யம்-
சதிராக வாழ்ந்திடுவார் -பகவத் ப்ரீதிக்கு விஷயமான பாகவத ஆச்சார்ய கைங்கர்யங்கள் )

இந்த யுபதேச ரத்ன மாலை தன்னைச்
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் -எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகிச்
சதிராக வாழ்ந்திடுவர் தாம் –73-

சிந்தை தன்னில் நாளும்-அனவ்ரதம் -ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் –
எப்பொழுதும் இடைவிடாமல் சிந்தனைக்கு விஷயம் –
இந்த -பாசுரங்களின் வைலக்ஷண்யம்
தன்னை -பாசுர அர்த்தங்கள் -தொடையின் வை லக்ஷண்யம்
இன்னருளுக்கு-பரகத ஸ்வீகாரம் என்பதால் இன்னருள் –
சதிராக வாழ்ந்திடுவர்–வாழ்வு -சிறப்பாக வாழ்வு –

ஏதாம் -பந்தாம் -பாட பேதம் -இந்த -தொடுக்கப்பட்ட
குணைர் அனு குணைர்
அந்த உபதேச ரத்ன மாலாம் இமாம்
தததி யோஹ்ருதயேன நித்யம்
அஸ்மத் குரோவ் யதி பதே
கருணா ப்ரவாஹ பாத்ரி க்ருதா
பரம ஸம் பதம் ஆஸ்ரயந்தே

(ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ்-ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் –102-
இதி தவ கடாக்ஷணீயஸ் அஸ்மி –இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத்
தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ
நிகமத்தில் தம்மைக் கடாக்ஷித்து அருள வேண்டுவது பேர் அருளாளனும் அவர்ஜநீயம்
என்னும் இடத்தை மூதலிக்கிறார்-)

இந்த யுபதேச ரத்ன மாலை தன்னைச் –
கீழ் அடங்கலும் சிம்ஹ அவலோகன நியாயமாக கடாஷித்து –
இந்த -என்கிறார் –
முகம் அறிந்தவன் கோத்த முத்து மாலை போலே
இதுவும் ஒரு ரத்ன மாலை இருந்த படியே என்று தமக்கு ( நமக்கும் )ஆதரணீயமாய் இருக்கிற படி –

இது தான்
உபதேச அர்த்தங்களான ரத்னங்களாலே செய்யப் பட்டதாய் இருக்கை-
மாணிக்க மாலை –
(சங்க தமிழ் மாலை -என்றும் )
நவ ரத்னமாலை – என்னுமா போலே
உபதேச ரத்ன மாலை -என்று இதுவே நிரூபகமாய் இருக்கும்படி –
(மாணிக்க மாலை-சங்க தமிழ் மாலை-நவ ரத்னமாலை-இவையும் பிரபந்தகளின் திரு நாமங்கள் அன்றோ )

உபதேச ரத்ன மாலை -என்கையாலே
உபதேச பரம்பரா பிராப்தங்களாய் வந்த அர்த்த விசேஷங்கள் ஆகையாலே
தொடை யுண்டு இருப்பதாய் இருக்கை-
மாலை தான் தொடை யுண்கிறவற்றில் ஓன்று குறைந்தாலும் பேர் இழவாக இருக்கும் –
அப்படியே இதுவும்
குரு மா மணியான-(பெரியாழ்வார் 1-2-10 )புருஷ ரத்னங்களாலே கோப்புண்டதாய் இருக்கும் –
(குரு -பெரியது என்றும் ஆச்சார்யர் என்றும் உண்டே )பெரு மா உரலில் பிணிப்பு உண்டு இருந்து அங்கு
இரு மா மருதம் இறுத்த இப்பிள்ளை
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும்
திரு மார்வு இருந்தவா காணீரே சேய் இழையீர் வந்து காணீரே -(பெரியாழ்வார் 1-2-10-)

அதாவது
ஸ்ரீ நம் பெருமாள் ஸ்ரீ நம் ஆழ்வார் (50)-என்று தொடங்கி
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை அளவாக
சத் சம்ப்ரதாயத்தில் ஒன்றும் நழுவுதல் இன்றிக்கே
நன்றாக நடந்து போந்ததாய் இருக்கை –

ஸ்ரீ திருவருள் மால் -என்று தொடங்கி
ஸ்ரீ திருமலை யாழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே -என்றும்
(மா முனிகள் அருளிச் செய்த ஈட்டு தனியன் )
ஸ்ரீ லஷ்மீ நாத சமாரம்பாம் -என்று தொடங்கி
ஸ்ரீ அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் -என்றும் சொல்லக் கடவது இறே –

(திருவருள் மால் சேனை முதலி சடகோபன் நாத முனி -சீர் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார்
குரு மாலாதரர் குருகைப் பிரார்க்கு அன்பாம் எதிராசர் கோவிந்தர் கூரேச பட்டர் வேதாந்த முனி
இரு கண்ணற்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடளித்தற்கு ஏய்ந்த மாதவர் பற்பநாபர் இவர் அருளாளர்
திருவடி ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும்
திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே –மா முனிகள் அருளிய ஈட்டுத் தனியன்)

(ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் -நாத யாமுன மத்யமாம் –அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –வந்தே -குரு பரம்பராம் )

இது தான்
மாலா லஷணங்களை யுடைத்தாய் இருக்கும் என்னுமது
இவர் சேர்த்து அருளின சேர்வையிலே காணலாய் இருக்கும் இறே –
(மணம் -குணம்
செண்பக மல்லிகை இத்யாதி அஷ்ட பூக்கள் -அஹிம்சா இத்யாதி -அஷ்ட குண ஸாம்யம்
மாலைக் காட்டும் மாலை -ஆச்சார்யர் கைப்பட்ட பெருமாள் )

அதுதான்
ஆழ்வார்கள் பதின்மரையும் ஒருகையாகவும்
ஆண்டாள் மதுரகவி ஆழ்வார் எதிராசராம் இவர்களை நடு நாயகமாயும்
நாதமுனி முதலான நம் தேசிகர் -என்று தமக்கு முன்பு யுண்டான ஆச்சார்யர்கள் எல்லாரையும் ஒரு கையாகவும்
இப்படி எல்லாரையும் சேர்த்துப் பிடித்து ஒரு மாலையாம் படி செய்து அருளிற்று-

ஏவம் வித லஷணத்தை யுடைய இந்த மாலையை –
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் –
மாலையானது மார்புக்கு அலங்காரமாய்-தரிக்கப் படுமதாய் இருக்கும்
மார்வத்து மாலை -என்னக் கடவது இறே

சிந்திப்பார் –
உபதேச ரத்ன மாலை தன்னை தன் நெஞ்சு தன்னில் தரிப்பவர் -என்றும்
உபதேச ரத்ன மாலாமிமாம் தததியோஹ்ருதயேன நித்யம் -என்றும் சொல்லுகிறபடியே
இதுவும் மனசுக்கு அலங்காராய்-தரிக்கப் படுமதாய் இருக்கும் –
மார்பும் மனசும் சேர்ந்து இறே இருப்பது –

மாலை தன்னை -சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் –
இது தான்
பெரு விலையனான-மதிக்கப்படுமதான ஸ்ரீ ரத்ன மாலை யாகையாலே
இத்தை வாடா பூ மாலை போலே நாடொறும் பூண்டு இருக்கலாய் இருக்கும் –
(நாடோறும் வாடா மலர் இட்டு -அபூத உவமை )

இப்படி விலஷண ஜனஹ்ருத்மான இவ்வர்த்தம்
மநோ ஹரமாய் இருக்கையாலே
இத்தை சர்வ காலத்திலும் மனனம் பண்ணும் படியாய் இறே இருப்பது –
ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் -என்னக் கடவது இறே –

இப்படி மனனம் பண்ணுவார்க்கு ஒரு பலம் வேணுமே
அந்த பலத்தை இன்னது என்று உப பாதிக்கிறது மேல் –
எந்தை எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகிச் சதிராக வாழ்ந்திடுவர் தாம் –
அதாவது
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ – (காரேய் கருணை )-என்கிறபடியே
சர்வாத்மாக்களுக்கும் பிராப்தி சொல்லும் படியான ஆப்தியை யுடையரான
ஸ்ரீ எம்பெருமானாருடைய
அஹேதுகமான அபார காருண்யத்துக்கு பாத்திர பூதராய் வாழப் பெறுவார்கள் –

(செய்நன்றி காட்ட -ஆனந்தமாக இருப்பதால் -ஈஸ்வர விசேஷ கடாக்ஷத்துக்கு இலக்காக-
சிந்திப்பதே பரம பிரயோஜனம் )

வளர்த்த இதத் தாய் -என்னும்படி
இந்த தரிசனத்தை ஸ்ரீ எம்பெருமானார் வளர்த்து அருளினவர் ஆகையால்
தர்சன தாத்பர்யங்களை எல்லாம் பிரதிபாதிக்குமதான
இப் பிரபந்த அந்வயம் யுடையவர்களுக்கும் பல ப்ரதர் இவர் -என்கை-

இது தான் ஸ்ரீ ஆழ்வார்கள் அடியாய் இருக்கையாலே –
இதன் வாசி அறிந்து பரிபாலிப்பார் இவர் இறே-
இத்தை இவர்கள் நாளும் சிந்திக்கையாலே
அருளும் இவர் பக்கல் என்றும் உண்டாய் இருக்கிறபடி –

எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகி –
ஸ்ரீ அருளாழி யம்மான் -(1-4-5)-ஸ்ரீ ஈஸ்வரன்
(அருள் கடல் -அருளே நிரூபகமான ஆழி உடையவன் )
அருள் மறுத்த காலத்திலும்
உன் அருளின் கண் இன்றி புகல் ஒன்றும் இல்லை -(48 )-என்றும்
(பயன் இருவருக்கும் ஆனபின்பு இனி நாம் அகலும் பொருள் உண்டோ )
எதிராஜ தயாம்புராசே தஸ்மாத் அநந்ய சரணம் -(விம்சதி )-என்றும்
ஒதுங்கும் படி புகலகாய் இருக்கிற அருளுக்கு –
(இதனால் அன்றோ எம்பருமானார் என்று திருக்கோஷ்ட்டியூர் நம்பி திரு நாமம் சாதித்து அருளினார் )

என்றும் இலக்காகி –
எந்தையான முறையாலே மாறாதே இருக்கிற அவருடைய கருணா கடாஷத்துக்கு
நித்ய லஷ்ய பூதராய்-

சதிராக வாழ்ந்திடுவர் –
மாசதிரான -ஸ்ரீ பகவத் நிர்ஹேதுக கிருபையை பெற்று வாழும் அதிலும் சதிராக வாழ்ந்திடுவர்
ஆளுரியனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே -(கண்ணி நுண் )-என்று இறே
அபிமான நிஷ்டர் வார்த்தை இருப்பது –

(மா சதிர் இது பெற்று
இழும்பு -தாழ்ச்சி
சதிர் -ஸ்வ கத
மா சதிர் -பகவத் நிருஹேதுக
அத்தையும் தாண்டி அன்றோ ஆச்சார்ய அபிமானம் )

சதிராக வாழுகை யாவது –
ஸ்வ தந்த்ரனான ஸ்ரீ ஈஸ்வரனுடைய கிருபைக்கு விஷயம் ஆனவர்களைப் போலே
நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் -என்றும்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் –11-8-1–என்றும்
இடையன் எறிந்த மரமே ஒத்திராமே யடைய யருளாய் -11-8-6–என்றும்
பயாபயங்களோடே வர்த்திக்கை அன்றிக்கே
இவருடைய அபிமானத்து விஷயம் ஆனவர்கள் த்ருஷ்டாத்ருஷ்டங்கள் இரண்டிலும்
ஒரு கரைசல் அற்று
மார்விலே கை வைத்துக் கொண்டு
நிர்ப்பரோ நிரபயோஸ்மி-என்கிறபடி நிர்பரராய்
வையம் மன்னி வீற்று இருந்து -என்றபடி -வ்யாவ்ருத்தராய்
ஞாலம் புகழும் படி
இருள் தரும் மா ஞாலத்திலே இன்பம் உற்று வாழும் பேறு பெறுவார்கள் –

அதாவது
நம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமனசன் அடிப் பூ மன்னவே -(108) -என்கிறபடியே
ஸ்ரீ ஜீயராலே ஸ்ரீ ரத்ன மாலை பூட்டப் பட்டவர்கள்
ஸ்ரீ எம்பெருமானாராலே பூ முடி சூட்டப் பெற்று வாழப் பெறுவார்கள்
வாழ்வுக்கு அடியாவது முடியும் மாலையும் இறே –
அடி சூடும் அரசு -என்னுமா போலே
உன் பத யுகமாம் ஏர் கொண்ட வீடு -என்று இறே தந் நிஷ்டர் யுடைய பிராப்ய வேஷம் இருப்பது —

(முடியும் மாலையும் -தீக்ஷித்தத்தை நிறைவேற்றுவான் -அவனுக்கு சொல்வர் -ஸ்வாமித்வம் ரக்ஷகத்வம்
இவர் ஸ்வாமி ராமானுஜர் அன்றோ –
நமது முடி -அடி தாங்கும் முடி -யானால் வாழ்வு
உபதேச ரத்ன மாலை சூடும் மார்பே வாழ்வுக்கு அடி )

ஸ்ரீ மத் பாதார விந்த யுகளம் சிரஸி க்ருதம் த்யாத்வாம்ருத
சாகராந்தர் நிமக்னச் சர்வாவயவஸ் ஸூ கமாசீத்-(-கத்யம் )என்று இறே அவருடைய பிராப்யம் இருப்பது –
அதன் எல்லை நிலம் இறே இது –

ராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ-(1)-என்றும்-
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற் குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன் தனக்கு எத்தனை இன்பம் தரும்
உன் இணை மலர்த்தாள் என் தனக்கும் அது இராமானுச இவை ஈந்து இருளே -75 -என்னக் கடவது இறே –
(பாட்டுக் கேட்க்கும் இடமும் -எல்லாம் வகுத்த இடமே )

இத்தால்
எம்பெருமான் யுடைய கிருபைக்கு இலக்கு ஆனவர்கள்
உந்தன் தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும் படி (107-)என்கிறபடியே
இவர்க்கு பாதச் சாயாதிகள் போலே பரதந்த்ரர் ஆகையாலே
அவருடைய திருவடிகளான தன்னாரியனுக்கு இந்நாடு தனில் இருக்கும் நாள் -(64 )
ஆனவடிமைகள் செய்து வாழப் பெறுவார்கள் -என்றபடி –

தன்னை யுற்றாட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள் தன்னை
உற்றாட் செய்ய விராமானுசன் தன் தகவால் என்னை உற்றான் (97)–என்னக் கடவது இறே –
அல்லாத போது பிராப்ய பிராபகங்களுக்கு ஐக்யமில்லை -என்று இறே அருளிச் செய்தது –
த்வத் தாஸ தாஸ கண நா சரமாவதௌ யஸ் தத்தாஸ் சதைக ரசதா விரதா மமாஸ்து -(எதிராஜ விம்சதி -16)-என்று இறே
ஸ்ரீ ஜீயர் தாமும் பிரார்த்தித்து அருளிற்று –
இவர் தாம் -ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை மா தகவால் வாழும் மணவாள மாமுனி -இறே

அன்றிக்கே
பரம் தாமம் என்னும் திவம் தரும் (94)-என்றும்
தன்னை எய்தினர்க்கு அத் தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே -(66)-என்றும்
சொல்லுகிறபடியே –
அவர் யுடைய பிரசாதம் அடியாக
பிராப்ய பூமியான பரம பதத்திலே பகவத் அனுபவ கைங்கர்யங்களைப் பெற்று
ஸ்வரூப அனுரூபமாக வாழப் பெறுவார்கள் -என்றுமாம் –

பாவளரும் தமிழ் மாலை பண்ணிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூவளரும் திருமகளால் அருள் பெற்று பொன்னுலகில் பொலிவர் தாமே-(பெரிய திருமொழி -11-6-10-) -என்னுமா போலே

ஞானம் அனுட்டானம் என்று தொடங்கி –தானே வைகுந்தம் தரும் -என்றும்-(61)
உய்ய நினைவு யுண்டாகில் -என்று தொடங்கி–பரமபதம் உங்களுக்காம்-என்றும்-(62) இறே
ஆச்சார்ய அபிமான நிஷ்டர் யுடைய பிராப்ய வேஷத்தை நிஷ்கர்ஷித்து அருளிச் செய்ததும் –
(மதுர கவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -கண்ணி நுண்- 11)

மா மலராள் கோன் மடியில் வைத்து உகக்கும் வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே-(ஆர்த்தி பிரபந்தம் ) -என்று
தாமும் மநோ ரதித்து அருளினார் இறே –

வாழ்ந்திடுவர் தாமே –
பகவத் அபிமான நிஷ்டராய் இருக்குமவர்களில் வ்யாவ்ருத்தராய் இருக்கும் தாங்கள் –

எந்தை எதிராசர் இன்னருளுக்கு இலக்காகி என்றும் வாழ்ந்திடுவர் –
இங்கு ஒரு கால் ஸ்ரீ எம்பெருமானார் யுடைய அருளுக்கு இலக்கானவர்கள்
அங்கே நித்ய கைங்கர்ய
நிரதராய் வாழப் பெறுவார்கள் –

அருளாலே அடியேனை அபிமானித்து அருளி-(உபாயமும் உடையவர் திருவடி )
அநவரதம் அடிமை கொள்ள-(உபேயமும் உடையவர் திருவடி ) -(ஆர்த்தி பிரபந்தம் )-என்னக் கடவது இறே –

என்றும் சதிராக வாழ்ந்திடுவர் –
அத்ர பரத்ர சாபிப்படியே அங்கே போனாலும்
அவர் உகந்த விஷயம் என்று அவனை அனுபவிக்குமது ஒழிய
தங்கள் உகப்புக்கு ஈடாக அனுபவிக்கிற இன்பம்-(இளப்பம் ) இன்றிக்கே இருப்பார்கள் –
(கரிய கோலத் திரு உருக் காண்பன் )

வாழ்ந்திடுவர் –
வாழ்கையில் சம்சயம் இல்லை –
நிஸ் சமயமஸ்து தத் பக்த பரிசர்யா ரதாத்மானம் -என்னக் கடவது இறே –

என்றும் சதிராக வாழ்ந்திடுவர் –
இவர் கிருபா பலமாக
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே -என்கிறபடியே
கால தத்வம் உள்ளதனையும் ஸ்வரூப அனுரூபமான மங்களா சாசன ரூப கைங்கர்யத்திலே
அந்வயித்து வாழப் பெறுவார்கள் –

ஆளுமாளார் -என்று இருக்கிறவனுடைய தனிமையைத் தீர்க்கைக்கா வாய்த்து
ஸ்ரீ பாஷ்யகாரரும் இவரும் உபதேசிப்பது -என்று இறே அருளிச் செய்தது
ஆகையால்
திருத்தி திருமகள் கேள்வனுக்கு ஆக்குகை-இவருக்கு பணி இறே –
இது இறே சாஷாத் பலமாயிருப்பது –

ஆக
இப் பிரபந்த ஆரம்பத்திலே
எந்தை திருவாய்மொழிப் பிள்ளை இன்னருளால் -என்று
உபக்ரமித்ததற்குச் சேர
எந்தை எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகி -என்று
பல வேளையிலும்
அப்படியே அருளிச் செய்து தலைக் கட்டினார் ஆய்த்து –

(மா முனிகள் இவ்வுலகில் –73-திரு நக்ஷத்ரம் இருந்தார் என்பர் )

————————————————————

துலா ரேவதி ஸம் பூதம் வரயோகி பதாஸ்ரிதம்
சர்வ வேதாந்த ஸம் பூர்ணம் அப்பாசார்யம் அஹம் பஜே -ஸ்ரீ எறும்பு அப்பா தனியன்

ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்தது

மன்னுயிர்காள் இங்கே மணவாள மா முனிவன்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை -உன்னிச்
சிரத்தாலே தீண்டின் அமானவனும் நம்மைக்
கரத்தாலே தீண்டல் கடன் -74-

மன்னு -மா முனிகள் பொன்னடிகள் -தாஸ்ய தாஸ்யர் களிடம் நிலை பெற்று
அமானவன் -கண்டிப்பாக கடமை போல் தீண்டுவான் என்றும் தொட வேண்டாம் என்றும் கொள்ளலாம்
பெருமாள் நேராகவே கூட்டிச் செல்வார்

அங்கானுஷங்கி புருஷா
ருசிரோபா யந்து
ரத்னா விலக்ஷய பத சக்த
சரோஜா ஸூனே
தத் ஸ்ரத்தா யத்ம சிரஸா யதி ஸம்ஸ்ரியேன
ப்ராப்தஸ்த
த்ருவ மானவ பாணி சங்கம்

உத்தர தினசரியில் -மலரும் தாமரை போல் திருவடிகள் காந்தி வர்ணனை -அப்ராக்ருதம் -சேஷன் அவதாரம் –

(சட கோபன் -ராமானுஜன் -முதலி யாண்டான் போல் -பொன்னடியாம் செங்கமலப் போது –
ஸ்ரீ ரெங்கத்தில் மா முனிகளது திருவடி நிலைகளுக்கு இந்த திரு நாமம் -வானமா மலை ஜீயர்
பொது நின்ற பொன்னம் கழல் -பெரிய பெருமாளது அன்றோ –
அமானவனும்-மானவனுக்கு அதி மானுஷன் –
கடன் -வியர்த்தல் -வேண்டியது இல்லை என்றபடி -)

சடரிபு பத பத்ம ப்ருங்க
வர வகார யோகி கதாம்ருதமுத அந்தரங்க
அதகதயத்
உபதேச ரத்ன மாலை விவ்ருத்தி ஸூதாம்
ஜகத்தார்ய யோகி வர்யா

ருசி வர மூனே க்ருதிம் ப்ரதீதாம்
த்ரவிட மயிம் உபதேச ரத்ன மாலாம்
அநு சமுதிஷத் தா வலீனாம்
அநு பரிக்ருத பதாபி
அபிராமேன ராமென சமஸ்க்ருத ஸூ வியக்ருத

(ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமி 1989-முதல் கால ஷேபம் உபதேச ரத்ன மாலை -வான மா மலை மடத்தில் –
ஸதாபிஷேகம் கோவிந்த நரசிம்ஹாச்சார்யர் ஸ்வாமி வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள்
தொடக்கத்திலும் சாத்து முறைக்கும் வந்து ஆசீர்வாதம் செய்தார்களாம் )

————————————————————-

சடரிபு பாத பத்ம ப்ருங்கோ வரவர யோகி கதாம் ருதாந்தரங்க
அகதய துபதேச ரத்ன மாலா விவ்ருதி ஸூதாம் ஜனதார்ய யோகி வர்யா-

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

உபதேச ரத்னமாலை –பாசுரம் -66/67/68/69/70- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

July 27, 2014

ஆர்க்கும் அந் நேர் நிற்கை அரிதாம் -என்றீர்
இதுக்கு ஒருத்தர் தாம் இல்லையோ என்று தம் திரு உள்ளத்துக்கு கருத்தாக
அதில்
இவ் வனுஷ்டானத்துக்கு ஒருத்தர் யுண்டு என்று அவரை தர்சிப்பித்து அருளும் முகத்தால்
இவ் வனுஷ்டானத்தை ஆதரித்துப் போரு என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

கீழே
ஸ்வரூப ரஷணத்தையும்-தேக ரஷணத்தையும் பிரஸ்தாபித்து அதில்
ஆத்ம ரஷணத்துக்கு உறுப்பாக ஆசார்யத்வத்தை இட்டு வைத்து
தமக்கு ஆதரணீயமான தேக ரஷணத்துக்கு உறுப்பான சிஷ்ய ரஷணத்தில் அருமையை அருளிச் செய்கிறார் –

(ஆச்சார்ய நிஷ்டர்களை விட சிஷ்ய நிஷ்டர்களையே விளக்கும் சூரணைகள் பல எங்கும் உண்டே
ஆச்சார்ய லக்ஷணம் 12 சூரணை களும் அதில் மும் மடங்கு சிஷ்ய லக்ஷணம் ஸ்ரீ வசன பூஷணத்தில் உண்டே
சிஷ்ய லக்ஷணம் அறிவதில் அருமை உண்டே )

(முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் =
ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —
நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு
நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒருகாலம் திருமேனி பாங்கின்றியிலே கண்வளர்ந்தருளுகிற போது
தமக்கு அந்தரங்கரான ஶ்ரீவைஷ்ணவர்களை அழைத்து
‘அடியேன் இப்போது திருவடிச்சாராமல் ஆலஸ்யமும் பொறுத்து இன்னமும் இங்கே சிறிதுநாள் இருக்கும்படி
“ஏழையேதலன்”, “ஆழியெழச்சங்கும்” பெருமாள் திருவடிகளிலே விண்ணப்பம்செய்து ப்ரபத்தி பண்ணுங்கோள்’ என்ன,
அவர்கள் அப்படியே செய்து, ஜீயருக்குப் பண்டுபோலே திருமேனி பாங்காயிற்று.
இத்தை ஶ்ரீவைஷ்ணவர்கள் இவருடைய ஆசார்யரான நம்பிள்ளை ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு
‘ஜ்ஞாநவ்ருத்தருமாய் வயோவ்ருத்தருமான ஜீயர் இப்படிச் செயதார், இது இவர்ஸ்வரூபத்துக்குச் சேருமோ?’ என்று
விண்ணப்பம்செய்ய, பிள்ளையும் ‘அவருடைய அபிப்ராயம் அறிகிறிலோம்; ஸகல வேத ஶாஸ்த்ரங்களும் போவது,

பிள்ளை எங்களாழ்வானைச் சென்று இப்படி இவர் நினைவைக் கேளுங்கோள்’ என்று கேட்க,
அவரும் ஶ்ரீரங்கஶ்ரீயில் ஸங்கம் போலே காணும் என்று இருள் தருமா ஞாலமான ஸம்ஸாரத்திலே
“நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்ப கோடிஶதைரபி” என்றும்,
“யத் ப்ரஹ்ம கல்ப நியுதாநுபவேப்ய நாஶ்யம்” என்றும் சொல்லுகிறபடியே என்ன,
பிள்ளையும் அத்தைக்கேட்டருளி, ‘திருநாராயணபுரத்தரையரைச் சென்று கேளுங்கோள்’ என்ன,
அவரும் ‘தொடங்கின கைங்கர்யங்கள் தலைக்கட்டாமையாலே காணும்’ என்ன, பிள்ளையும் அத்தைக்கேட்டு,
‘ஆகிறது, அம்மங்கியம்மாளைக் கேளுங்கோள்’ என்ன,
அவரும், ‘பிள்ளை கோஷ்டியிலே இருந்து அவர் அருளிச்செய்கிற பகவத் விஷயத்தைக் கேட்கிறவர்களுக்கு
ஒரு தேஶ விஶேஷமும் ருசிக்குமோ?’ என்ன, மீளவும் பிள்ளை அத்தைக்கேட்டு, ‘அம்மங்கி பெரியமுதலியாரைக் கேளுங்கோள்’ என்ன,
“பெருமாள் சிவந்த திருமுக மண்டலமும் கஸ்தூரி திருநாமமும் பரமபதத்திலே கண்டேனில்லையாகில்
மூலையடியே முடித்துக்கொண்டு மீண்டுவருவன்’ என்றன்றோ பட்டர் அருளிச்செய்தது,
அப்படியே இவரும் பெருமாள் சிவந்த திருமுக மண்டலத்தையும் விட்டுப் போகமாட்டராக வேணும்” என்றார்.

பிள்ளை இவை எல்லாத்தையும் கேட்டருளி ஜீயர் திருமுக மண்டலத்தைப் பார்த்து சிரித்து,
‘இவை உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ?’ என்ன, ‘இவை இத்தனையுமன்று’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.
‘ஆனால் உம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்லும்’ என்ன, பிள்ளை ‘தேவர் ஸர்வஜ்ஞராகையாலே அறிந்தருளாததில்லை;
ஆனாலும் அடியேனைக்கொண்டு வெளியிட்டருளத் திருவுள்ளமாகில் விண்ணப்பம் செய்கிறேன்.
தேவரீர் மஞ்சன சாலையிலே எழுந்தருளித் திருமஞ்சனம் செய்தருளித் தூய்தாகத் திருவொற்றெலியல் சாற்றி யருளி
உலாவி யருளும் போது குருவேர்ப்பரும்பின திருமுக மண்டலத்தில் சேவையும் சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு
அடியேனுக்குப் பரமபதத்துக்குப் போக இச்சையாயிருந்ததில்லை’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.

இத்தைக் கேட்டருளிப் பிள்ளையும் முதலிகளும் ‘இந்த விபூதியிலும் இவ்வுடம்போடே ஒருவர்க்கு இவ்வைஶ்வர்யம் கூடுவதே!’
என்று மிகவும் திருவுள்ளம் உகந்தருளினார்கள் – என்று இந்த ஜீயருடைய ஆசார்ய ப்ரேமம் தமக்குண்டாக வேணுமென்று
நம்முடைய ஜீயர் தம்முடைய திருவுளத்தைக் குறித்து உபதேச ரத்தின மாலையிலே
“பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்திலன்பதுவுமற்று மிக்கவாசையினால் நம்பிள்ளைக்கான
அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்” என்றருளிச் செய்தருளினார்.)

(துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்
நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்—66-

அத்யாதராதி
நிஜ குரும் கலி வைரி தாஸர்
நித்யாம் விபூதிம் அவத்யம்
நிரந்தரம் யஹா
சிஸ்ரூஷா தேக குரு மானஸ
தஸ்ய நிஷ்டாம்
பஸ்யான் மநோ ஹர பதே முனி புங்கவஸ்ய

பின்பழகராம் பெருமாள் சீயர் –
அவர் ஆகிறார்-
ஸ்ரீ லோகாச்சார்யரான ஸ்ரீ நம் பிள்ளைக்கு அத்யந்த அபிமத விஷயமாய்
அவர் சந்நிதியிலே சகல அர்த்தங்களையும் கேட்டு
அந்த ஸ்ருதமான அர்த்தத்தின் படியே-எல்லாம் வகுத்த இடமே -என்று
தத் ஏக நிஷ்டராய் அவரை ஷண காலமும் பிரியாதே
தத் கைங்கர்ய நித்ரராய் போருகிற ஸ்ரீ பின்பழகராம் பெருமாள் சீயர் —
தாத்ருசமான அதிகார பூர்த்தியை யுடையவர் –

பெரும் திவத்தில் அன்பு அதுவும் அற்று –
(அது -ஸ்ரேஷ்டமான அந்த அதுவும் )
துளிக்கின்ற பெரிய வான் -என்றும்
எம்மா வீடு -( 2-9-)-என்றும் சொல்லுகிறபடியே
நிரதிசய ஸூக ரூபமாய் இருந்துள்ள த்ரிபாத் விபூதியாகிற
பிராப்ய தேசத்தை பிராபிக்க வேணும் என்கிற ப்ராவண்யமும் அற்று –
அதாவது –

மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமே —என்றும் (மா கம் -பெரிய திவம் இங்கு )
வானுலகம் தெளிந்தே என்று எய்துவது ( திருமங்கை )-என்றும் சொல்லுகிறபடியே
எல்லாராலும் விரும்பப் படுவதான தேசத்திலும் விருப்பம் அற்று
குரு வேர் பரம்பின திரு முக மண்டலத்தின் சேவையையும்
சுற்றிச் சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு
அடியேனுக்குப் பரம பதத்துக்குப் போக இச்சை இருந்தது இல்லை இறே-என்று
அருளிச் செய்து போருவர் -என்கை-

இப்படி அதில் ஆதரமும் மட்டமாம் படி அதிலும் இஷ்டமாய் இருப்பதான விஷயத்தைச் சொல்லுகிறது –
மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு ஆன அடிமைகள் செய் –
அதாவது
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை ஆசை யுடன் நோக்குவன்-என்கிறபடியே
அந்த தேச விசேஷத்தில் யுண்டான ஆதரத்தை எல்லாம்
தமக்கு தேசிகரான ஸ்ரீ நம்பிள்ளை விஷயத்திலே கைங்கர்யத்திலே யாய்த்து – இவர்
ஒருமடைப் படுத்திக் கொண்டு போருவ்து -என்கை –
ஆகையால் இவருக்கு ஒரு தேச விசேஷமும் ருசியாது இறே –

(அர்ச்சிராதி மார்க்கம் திருவேங்கட யாத்திரை அக்ரூர கமனம் மூன்றுமே நித்ய அனுசந்தானம் –
இவை எல்லாம் இவருக்கு ஆச்சார்ய கைங்கர்யமே யாத்ரையாய் போருமே –
அந்தாமத்து அன்பு செய்து எங்கும் பக்க நோக்கு அறியாத பைந்தாமரைக் கண்ணன்
அஸ்மாத் துல்யோ பவ தி -இதுக்கும் அவனே முன்பே அனுஷ்டித்துக் காட்டி அருளினான் அன்றோ )

(திருகோட்டியூர் நம்பி கோயிலுக்கெழுந்தருளித் திருநாள் ஸேவித்து மீண்டெழுந்தருளுகிறவரை
எம்பெருமானார் அநுவர்த்தித்து ‘அடியேனுக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல்வார்த்தை அருளிச்செய்யவேணும்’ என்று கேட்க,
நம்பியும் ஒருநாழிகைப் போது திருக் கண்களைச் செம்பளித்துக் கொண்டு நின்று, பின்பு
‘எங்கள் ஆசார்யர் ஶ்ரீஆளவந்தார் அடியோங்களுக்கு ஹிதம் அருளும் போது அகமர்ஷண ஸமயத்திலே
திருமுதுகிருக்கும்படி வல்லார் கடாரம் கவிழ்த்தாப் போலே காணும் இருப்பது;
அதுவே நமக்குத் தஞ்சமென்று விஶ்வஸித்திருப்பேன்; நீரும் மறவாமல் இத்தை நினைத்திரும்’ என்று
அருளிச்செய்தாரென்று ப்ரஸித்தமிறே. நம்பிதான் திருக்கோட்டியூரிலே தளத்தின் மேலே படிக்கதவைப் புகட்டு
ஆளவந்தாரை த்யாநித்துக்கொண்டு யமுனைத்துறைவர் என்கிற மந்த்ரத்தை
ஸதாநுஸந்தாநமாய் எழுந்தருளி இருப்பர் என்று அருளிச் செய்வர்.)

நம்பிள்ளைக்கு ஆன வடிமைகள் செய் அந்நிலையை –
தம்முடைய ஆத்ம ரஷணத்தில் அநவரதம் அவஹிதராய் –
பரமபதம் தம்முடைய சிறுமுறிப்படி செலுத்தும்படி இருப்பராய்-
(பக்கத்து திருமாளிகை அம்மையார் திருமாளிகைக்கு எழுதிக் கொடுத்த ஐ திக்யம் முன்பே பார்த்தோம்
கொற்றி அம்மை பிராட்டிக்கு -சமன் கொள் வீடு தந்த ஐ திக்யம்
திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம் –
நாகப்பழம் கொடுத்த பெண் பிள்ளை
ஸ்த்ரீகளே அறிந்த ரஹஸ்யம் -)
தமக்கு வகுத்த விஷயமாய் இருக்கிற ஸ்ரீ நம்பிள்ளைக்கு
இச்சா பிரக்ருத் யது குணைர் உபசாரைஸ் சதா உசிதை -என்கிறபடியே
தத்தத் அவஸ்த உசிதமாக சுழற்றிப் பரிமாறுகை முதலான
சகல வித கைங்கர்யங்களையும் அவர் உகக்கும்படி
செய்து கொண்டு போந்த லோக விலஷணமான நிஷ்டையை

(வைஷ்ணவனாயிருப்பானொரு ராஜா ஒரு பெருந்திரள் வருகிறத்தைக் கண்டு
‘நம்பெருமாள் திருவோலக்கம் கலைந்ததோ, நம்பிள்ளை கோஷ்டி கலைந்ததோ’ என்று கேட்டான்.
இப்படி மஹா ஸம்ருத்தியான ஶ்ரீவைஷ்ணவஶ்ரீயோடே நம்பிள்ளை வாழ்ந்தருளுகிற காலத்திலே
ஶ்ரீபாதத்திலே உடையளாயிருப்பாளொரு அம்மையாருக்குத் திருமாளிகைக்கருகே ஒருகோல் துறை(தரை) உண்டாய்,
அதிலே குடியிருக்கும் ஸப்ரஹ்மசாரியாய் இருப்பாரொரு ஶ்ரீவைஷ்ணவர், ‘பிள்ளை திருமாளிகைக்கு நெருக்கமாயிருக்கிறது,
இந்த ஒருகோல் துறையையும் ஆசார்யனுக்குக் கொடுக்கவேணும்’ என்று அந்த அம்மையாருக்குப் பலகாலும் அருளிச்செய்ய,
அவளும் ‘கோயிலிலே ஒருகோல் துறை ஆர்க்குக் கிடைக்கும், நான் திருவடி சேருந்தனையும் கொடேன்’ என்ன,
ஶ்ரீவைஷ்ணவரும் அந்தச் செய்தியைப் பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய, பிள்ளையும்
‘உனக்கொரு ஶரீரத்துக்கு ஒர் சத்திடமன்றோ வேண்டுவது? முதலிகள் எழுந்தருளியிருக்க வென்றொரு
கோல் துறையையும் நமக்குத் தாரும்’ என்று திருவுள்ளம் பற்றி யருள,
அவளும் ‘அடியேன் அப்படிச் செய்கிறேன்; தேவரீர் பரமபதத்திலே ஒருகோல்துறை அடியேனுக்குத் தந்தருளவேணும்’ என்ன,
பிள்ளையும் ‘தந்தோம்’ என்று அருளிச் செய்ய, ‘அடியேன் ஸாது, அதிலே பெண் பெண்டாட்டி, தருகிறோம் என்று
அருளிச்செய்த வார்த்தையால் போராது, எழுதி எழுத்திட்டுத்தரவேணும்’ என்ன,
பிள்ளையும் ‘இவள் இப்படிக்கு கேட்பதே’ என்று மிகவும் திருவுள்ளமுகந்து,
‘இன்ன வருஷம் இன்ன மாஸம் இத்தனையாம் தேதி இந்த அம்மையாருக்குத் திருக்கலிக்கன்றி தாஸன்
பரமபதத்திலே ஒரு கோல்துறை கொடுத்தேன்; இத்தை ஶ்ரீவைகுண்டநாதன் க்ரயம் செலுத்திக் கொண்டு கொடுத்தருளவும்’
என்று ஶாஸநம் எழுதித் தம்முடைய திருவெழுத்தும் சாத்திக் கொடுத்தருளினார்.
பின்பு அந்த அம்மையார் திருமுகத்தையும் வாங்கிக்கொண்டு தீர்த்த ப்ரஸாதங்களையும் ப்ரஸாதப்பட்டு
அன்று மற்று நாளும் பிள்ளையை ஸேவித்துக்கொண்டு ஸுகமேயிருந்து, மூன்றாம் நாள் பரமபதத்துக்குப் போனாள்.
ஆகையால் உபயவிபூதியும் ஆசார்யனிட்ட வழக்காயிருக்கு மென்று நம்முடைய ஜீயர் அருளிச் செய்தருளுவர்.)

நன்னெஞ்சே –
நல் நெஞ்சே நம் பெருமான்-(திருவட்டாறு பதிகம் )-என்றும்
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்-( 1-10-4 ) -என்றும் சொல்லுகிறபடி
அந்த சரம பர்வ நிஷ்டையை
பிரார்த்தித்துக் கொண்டு போருகிற விலஷணமான நெஞ்சே –
விலஷணர் யுடைய ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சை யுடைய நெஞ்சே –
(சாஸ்த்ர ஜன்ய ஞானம் பஹு கிலேசம் –
ஆச்சார்யர் வாழ்வும் வாக்குமே எளிதில் அனுபவித்து அனுஷ்ட்டிக்கலாம் படி இருக்குமே )

ஊனமற எப்பொழுதும் ஓர் –
அப்படியே சரம பர்வமான ஆச்சார்ய கைங்கர்ய நிஷ்டையை ப்ராபித்துக் கொண்டு
சங்கோசம் அற சர்வ காலத்திலும் அனுசந்தித்திப் போரு-
அசக்ருதாவ்ருத்தி அபேஷா கார்யம் இறே -(விருப்பமுடன் கேட்டு நினைத்து இடைவிடாமல் சிந்தித்து )

இவர் தாம்
அந்நிலையை -என்றும்
தன்னிலையை -என்றும்–பலகாலும் அபேஷித்து அருளுவார் ஆய்த்து –
அதாவது
வடுக நம்பி தன்னிலை -இறே –
(ஆர்த்தி பிரபந்தம் -வடுக நம்பி நிலை மதுரகவி நிலையை அபேஷித்து அருளுவார் )

இப்படி இருக்கிற இவருடைய ஆச்சார்ய அபிமான நிஷ்டையை
தேவு மற்று அறியேன் -என்று இருக்கும் ஸ்ரீ மான்கள் ஆன அதிகாரிகள்
ஸ்ரீ ஆழ்வார் திரு மகளார் ஸ்ரீ ஆண்டாள் -என்று தொடங்கி
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளிலே நம்முடைய ஸ்ரீ ஜீயர் என்னும் அளவாக
இத்தையும் அப்படியே
அந்திம உபாய நிஷ்ட அக்ரேசரான அஸ்மத் பரமாச்சார்யாரும் (பரவஸ்து பட்டர் பிரான் ஜீயரும் )
அருளிச் செய்தார் இறே –

சேஷித்வ
சரண்யத்வ
ப்ராப்யத்வங்கள்
மூன்றும் ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை விஷயத்தில் அனுசந்தித்து
தத் ஏக நிஷ்டராய் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ ஜீயர்
என்று ஸ்ரீ எதிராஜ விம்சதி வியாக்யான பிரவேசத்திலே
ஸ்ரீ அப்பிள்ளையும் அருளிச் செய்தார் இறே-

(ஸ்ரீ எதிராஜ விம்சதிக்கு ஸ்ரீ அப்பிள்ளை வியாக்யானம் உண்டு என்று இங்கே காட்டி அருளுகிறார் )

———————————————————-

கீழே
ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே யுடையனான குருவை அடைந்தக்கால் -என்றும்
ஆன வடிமைகள் செய்யும் நிலையை -என்றும்
(உபாயத்துக்கும் உபேயத்துக்கும் இந்த இரண்டு பாசுரங்கள் )
ஆச்சார்யனையே உபாய உபேயமாக அருளிச் செய்யா நின்றீர் –
அல்லாதார் அடைய
பகவானையே-பிராப்யனாயும் பிராபகனாயும் ஸ்வீகரியா நின்றார்கள்
இவை இரண்டிலும் வழி எது என்று தம் திரு உள்ளத்துக்குக் கருத்தாக
வாக்யத் த்வய உக்த உபாய உபேயங்கள் தான் சரம பர்வ பர்யந்தம் அல்லது இராமையாலே
அதில் தாத்பர்யம் அறியாதார் வார்த்தை அன்றோ அது –
(பூர்வ உத்தர வாக்ய த்வயத்திலேயே திருவடி ஸ்தானம் தானே ஆச்சார்யர் -சரம பர்வ-ததீய பரவந்தமாய் இருக்குமே
அறிந்து அறிந்து தேறி தேறி தாத்பர்யம் உணர வேண்டுமே )

அத்ர பரத்ர சாபிப்படியே அங்கோடு இங்கோடு வாசி அற
ஸ்ரீ ஆச்சார்யன் திருவடிகளிலே உபகார ஸ்ம்ருதி யாவதாத்மா பாவி யாகையாலே-
அங்கே போனாலும் ஸ்ரீ ஆச்சார்யன் யுடைய உகப்பே பேறாம் படி அன்றோ
அத்தலைக்கு அடிமை செய்து போருவ்து –
ஆகையாலே ஏதத் விருத்தமான வார்த்தையைக் கேட்டு நீ அஜ்ஞதை அடையாதே
அஞ்ஞான நிவர்த்தகமான பூர்வர்கள் உடைய விலஷணமான அனுஷ்டானத்தை
அநுவிதானம் பண்ணப் பார் ( பின்தொடர்ந்து அனுஷ்ட்டிக்கப் பார் )- என்கிறார் –

ஆச்சார்யர்கள் அனைவரும் முன் ஆசரித்த
ஆசாரம் தன்னை அறியாதார் -பேசுகின்ற
வார்த்தைகளைக் கேட்டு மருளாதே பூருவர்கள்
சீர்த்த நிலை தன்னை நெஞ்சே சேர் —67-

ஆசரித்த ஆசாரம்-அனுஷ்டித்த அனுஷ்டானம்

சர்வேபி பூர்வ குரவ
சமயேன யேன
தேர் யுக்தம் ஆசன ஆகலயதாம்
வாஸோ வர மானஸ்ய வா ப்ரமித்வம்
வர்த்தஸ்வ
பூர்வ தர தேசிக வர்த்த நேந

(நம்பெருமாள் தேர் என்றால் எம்பார் புனர்வசு திரு நக்ஷத்ரம் முதல் நாளே கொண்டாடுவதை பார்த்து மருளாதே
பிரதம பர்வ நிஷ்டர்களை எடுத்துக் கழிக்கிறார் எடுத்துக் கழிக்கவும் தகுதி வேண்டுமே
உன் அடியார் எல்லார் உடன் ஓக்க எண்ணாதீர் -நம்மாழ்வாரை கழித்தார் போல்
கற்பார் எல்லாம் ராம பிரானை அன்றி மற்றும் கற்பரோ -கண்ணனை கழித்தார் அன்றோ –
மருள் ஒழி நீ மட நெஞ்சே -திவ்ய தேச கைங்கர்யம் -திருவாறன் விளைக்கே அற்று தீர்ந்தாயே முன்பு –
அத்தை எடுத்து கழித்தார் போல் )

ஆச்சார்யர்கள் அனைவரும் -முன் ஆசரித்த ஆசாரம் தன்னை –
அவர்கள் தான் ஒருவர் இருவர் அன்றிக்கே –
ஸ்ரீ மதுர கவிகள் ஸ்ரீ நாத முனிகள் தொடக்கமான
ஸ்ரீ சைலேசர் அளவாக யுண்டான
நம்முடைய ஸ்ரீ ஆச்சார்யர்கள் அனைவரும் பிற்பாடரான நமக்கும் அனுஷ்டேயமாம் படி
முற்காலத்திலே
பிடித்தார் பிடித்தாரைப் பற்றி -( 6-10-11 )-என்னும்படி
பரம்பரையாகத் தம் தாம் ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே
தங்களுக்கு உபேயமாகவும்
அவன் திருவடிகளே உபாயமாகவும்
எல்லாரும் ஏக கண்டராக அருளிச் செய்து அப்படியே
ஆசார தீத் யாசார -என்று ஆசரித்துக் கொண்டு போருகிற அந்தப் பரிசுத்தமான அனுஷ்டானம் தன்னை –

(ஆழ்வார் திரு உள்ளம் ப்ராப்யம் திவ்ய தேசம் பிராப்பகம் -அவனும் -கொள்வானே
ஆச்சார்யரைப் பற்றி அவனை அடைவது -முதல் நிலை
அவனைப் பற்றி ஆச்சார்யரைப் பற்றுகிறோம் -நடு நிலை
ஆச்சார்யரே உபாயம் உபேயம் சரம நிலை )

அறியாதார் –
அவர்கள் இடத்திலே உபசன்னராய்–அந்தே வாசிகளாய் இருந்து
அப்யசித்து
கண்டு
கேட்டு–அறியாதார் —

பேசுகின்ற வார்த்தைகளைக் –
கூறும் சமயங்களை ஆறும் குலைய ( ராமானுஜ ) -என்றாப் போலே
(ஏழாம் சமயம் -அவனைப் பற்றி அவனை அடைவது)
கேவல உக்தி சாரமேயாய்-
நிரரர்த்தகமாய்-
ஆபாத ப்ரதீதமாய்-
தங்கள் துர் ஹிருதயதுக்கு தோற்றிற்று ஒன்றைச் சொல்லிலும் –
வார்த்தைகளைக் கேட்டு மருளாதே –

(வார்த்தை மட்டும் அழகு
சிறப்புடன் பூனை இறப்பில் இருந்தால் புறப்பட மாட்டாது
பரண் மேல் பூனை இருந்தால் எலி வராது -யுக்தி மாத்திரம் போல் )

அப்படி அடி அற்று இருப்பதான பிரதிபன்ன பாஷணங்களைக் கேட்டு பிரமியாதே —
அவர்கள் தான் ஆபத்தை போக்கிக் கொள்ளுகிறோம் என்று பிரமித்தும்
உத்க்ருஷ்டராக பிரமித்தும் –
போருவர்கள் – ஆகையால்
அவர்கள் வார்த்தையும் பிரமத்துக்கு உடலாய் இருக்கும் இறே –

கேட்டு அறியாதார் பேசுகின்ற வார்த்தைகள்
ஆகையாலே
அறிவு கேடான மருளை விளைவிப்பதாய் இருக்கும்
பூர்வாச்சார்யர்கள் போதம் அநுட்டானங்கள்
கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் தேறி -என்கிறபடியே
அவர்கள் தான் தெருள் கொள்ளச் சொல்லுகிறார்கள் அன்றே –
ஆகையால் அறியாதார் வார்த்தைகளைக் கேட்டு புத்தி சலனம் பிறந்து அலமாவாதே -( அலமந்து போகாதே )

பூருவர்கள் சீர்த்தி நிலை தன்னை நெஞ்சே சேர் –
அதாவது
மதுரகவி சரித அநுகாரி மஹித சாரித்ரராய் இருக்கிற பூர்வர்கள் யுடைய நிஷ்டையை
மனசே-ஸூ பிரதிஷ்டமாக அனுசந்திக்கப் பார் -என்கை-

(மதுரகவி ஆழ்வார் -வேதியர் பெரியவர் -சதுர்த்த குல 16 வயசு பிள்ளையாக
நம்மாழ்வார் திருவடிகளில் அன்றோ ஆஸ்ரயித்தார் )

அதுக்கு சீர்மை -யாவது
சீர்த்த மதுரகவி செய் கலையில் பிரதி பாதிக்கப் படுமதான சீர்மை இறே

நிலை யாவது -நிஷ்டை –
அது தான் திரு மந்த்ரத்திலே-பதத் த்ரயத்தாலும் பிரதிபாதிக்கப் படுகிற
சேஷித்வ
சரண்யத்வ
ப்ராப்யத்வங்கள்
ஆகிற ஆகாரத் த்ரயத்தையும்-பிரதம பர்வத்தளவன்றிக்கே
சரம பர்வத பர்யந்தமாக அனுசந்தித்தப் படியே
அந்த பத த்ரயார்த்த நிஷ்டையை யுடையராய் இருக்கும் இருப்பாய்த்து –

இப்படி விலஷணமாய் இருப்பதொரு நிலையை அபேஷித்து இருக்கிற நமக்கு பரிகரமான நெஞ்சே
அந்நிலையை உன்னிடத்திலே சேரும்படி பண்ணப் பார்

அன்றிக்கே
அடை நெஞ்சமே -என்னுமா போலே
அத்தைச் சென்று சேர் என்கிறார் ஆகவுமாம்-

சீரியதான அர்த்தத்தை பர்வத குஹரங்களிலே சேமித்து வைக்குமா போலே
அறியாதார் வார்த்தைகளால் அவிசால்யமாம் படி-
மலை கலங்கிலும் மனம் கலங்காது -என்னும் படியான
தம் திரு உள்ளத்திலே-அந்தச் சீர்த்த நிலையைச் சேரப் பார்க்கிறாரே இவர் தாம்

இத்தால்
ஸ்ரேஷ்ட சமாசாரமே கர்த்தவ்யம் என்றது ஆய்த்து –

———————————————————

நாம் முன் யுக யோகிகள் போல் இல்லாமல் கலி கோலாகலம் செய்யும் இடத்தில்
போகிகளாய் இருக்க -விஷப்பரீஷை இல்லாமல்
த்யாஜ்ய உபாதேயங்களை அறிந்து விட வேண்டியவற்றை விட்டு
பற்ற வேண்டியவற்றை பற்ற வேண்டிய விவேக ஞானம் வேணுமே –
மத்யம பத நிஷ்டரான அவர்களையே பின் தொடர வேண்டுமே –
முக்குணத்தில் இரண்டு அவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று -திரு ஏழு கூற்று இருக்கை –

கீழில் பாட்டில் ‘
சிஷ்டாச்சாரமே பிரமாணம் என்று அங்கீகரித்து
இப் பாட்டிலே இப்படி பிரமாணிக அநு ரூபமான அனுஷ்டானங்களை
அருளிச் செய்கிறார் –
(மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் –செய்யாதன செய்யோம் )

நாத்திகரும் நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகரும்
ஆத்திக நாத்திகரு மாமிவரை -ஓர்த்து நெஞ்சே
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு நடுச்
சொன்னவரை நாளும் தொடர்–68-

ஏ ஹ்ருதயே தான்
ஏ நாஸ்திகாக விஜஹீதீ
ஏ து மூர்த்தான் ஸ்தான ஆஸ்திக நாஸ்திக
ஏ து ஆஸ்திகாக
நயபதாது ந பரிச்சவந்தே மான
தான் அன்வஹம் பரிஷ் நுவஷ்ய
தமோ அபஹந்ருணு

ப்ராமாணிகர் ஆகையாலே தத் உபய வ்யாவ்ருத்தராய் மத்யஸ்தராய் இருக்கிறவரே
ஆச்சார்ய பரதந்த்ரனாய் இருக்கிற அதிகாரிக்கு
ஆப்தராய்
அங்கீகார யோக்யராய்
அனுவர்த்த நீயராய் இருக்கும் அனுகூலர் படியையும்
இதுக்கு அசலாய் அனங்கீகார விஷயமாய் இருக்கும் அனனுகூலர் படியையும்
அருளிச் செய்ய வேணும் என்று திரு உள்ளம் பற்றி
அது தன்னைத் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –
நாத்திகரும் -என்று தொடங்கி –

நாத்திகர் ஆகிறார்
உள்ளோடு புறம்போடு வாசி அற நாஸ்திகராய் இருக்குமவர்கள் –

ஆத்திகர் ஆகிறார்
உள்ளோடு புறம்போடு வாசி அற ஆஸ்திகராய் இருக்குமவர்கள்

(வேதம் பிரமாணம் அல்ல நாஸ்தி என்னுமவர்கள்
தேகமும் ஆத்மாவும் வேறே வேறே அறியாமல் கர்மம் அடியாக தேகம் என்று அறியாதவர்கள்
அஸ்தி என்பவர்கள் ஆஸ்திகர் )

ஆஸ்திக நாஸ்திகர் ஆகிறார்
புறம்பு ஆஸ்திகரைப் போலேயும் –
உள்ளே நாஸ்திகராய் இருக்குமவர்கள் –
(ஞானம் இருந்தும் வைராக்யம் இல்லாமல் )

அது தன்னை அஞ்ஞனான விஷய பிரவணன் கேவல நாஸ்திகனைப் போலே
ஜ்ஞானவானான விஷய பிரவணன் ஆஸ்திக நாஸ்திகனைப் போலே -(ஸ்ரீ வசன பூஷணம் சூரணை-187)-என்ற இடத்துக்கு
நாஸ்திகன் ஆகிறான் –
தர்ம அதர்ம பரலோக சேதன ஈஸ்வரர்களுக்கு பிரதிபாதகமான சாஸ்த்ரத்தை
பிரமாணம் என்று அறிகையாலே ஆஸ்திகன் -என்றும் சொல்லலாம் படி இருப்பானே
அந்த சாஸ்திர மரியாதையில் அடங்காதே தோற்றிற்று செய்து திரிகையாலே நாஸ்திக சமனாய் இருக்குமவன் –
என்று இப்படி ஸ்ரீ ஜீயர் தாமே வியாக்யானம் செய்து அருளினார் இறே-

(அஜ்ஞானான விஷய பிரவணன் கேவல நாஸ்திகனை போலே –
ஞானவானான விஷய பிரவணன் ஆஸ்திக நாஸ்திகனை போலே –ஸ்ரீ வசன பூஷணம் சூரணை-187–

ஏவம் பூத விஷய தோஷத்தை அறியாமையாலே இதிலே பிரவணனனான அவனுக்கும் –
இத்தை அறிந்து வைத்தே பிரவணனான அவனுக்கும் வாசியை அருளி செய்கிறார் மேல் –

அஞ்ஞான விஷய பிரவணன் ஆகிறான் –
விஷயங்களினுடைய தோஷ பூயஸ்தையும்- ஸ்வரூப விருத்தத்தையும் அறியாதே -அவற்றை ஆசைப் பட்டு மேல் விழுகிறவன் –
கேவல நாஸ்திகன் ஆகிறான் –
தர்ம அதர்ம பரலோக சேதன ஈஸ்வராதிகளுக்கு பிரதிபாதகமான சாஸ்த்ரத்தில் பிரமாணிய புத்தி ஒன்றும் இன்றிக்கே –
ஸ்வரை சஞ்சார பரனாய் திரிகிற சுத்த நாஸ்திகன் –
ஞானவானான விஷய பிரவணன் ஆகிறான்-
விஷயங்களினுடைய தோஷ துஷ்டத்தையும் -ஸ்வரூப விருத்தத்தையும் அறிந்து வைத்தே -அவற்றை விரும்பி மேல் விழுகிறவன் –
ஆஸ்திக நாஸ்திகன் ஆகிறான் –
தர்ம அதர்மாதி சகல பிரதிபாதகமான சாஸ்த்ரத்தை பிரமாணம் என்று இசைகையாலே –
ஆஸ்திகன் என்று -சொல்லலாம் படி இருப்பானாய்-
அந்த சாஸ்திர மரியாதையில் அடங்காதே தோற்றிற்று செய்து திரிகையாலே -நாஸ்திக சமனாய் இருக்கும் அவன் –

கேவல நாஸ்திகனைத் திருத்தலாம்
ஆஸ்திக நாஸ்திகனை ஒரு நாளும் திருந்த ஒண்ணாது –ஸ்ரீ வசன பூஷணம் -சூரணை -188-

த்ருஷ்டாந்தர பூதரான இவர்கள் இருவருக்கும் விசேஷம் எது என்ன –அருளிச் செய்கிறார் –
சாஸ்த்ர தர்மாதிகளிலே பிராமண புத்தி இல்லாத கேவல நாஸ்திகனை நியாய உபதேசத்தால் மெல்ல திருத்தாலும் –
அறிந்தும் உதாசீனனாய் மனம் போலே யதா இஷ்டம் சஞ்சரிப்பவனை கால தத்வம் உள்ளதனையும் சர்வ சக்தனாலும் திருத்த ஒண்ணாது –
அஞ்ஞான சுகம் ஆராத்யா -இசைவடைய செய்யலாம் எளிதாக -களிமண் ஈரமாக இருக்க பானை பண்ணலாமே –
தூங்குபவனை எழுப்பலாம் பாவனை பண்ணுபவனை எழுப்ப முடியாதே –
அதாவது –
சாஸ்த்ரத்தை இல்லை என்று தோற்றிற்று செய்து திரிகிறவனை-
சாஸ்திர ஆஸ்திக்யம் பிறக்கைக்கு உறுப்பான உபதேசங்களைப் பண்ணி –விதி நிஷேத வச்யனாம் படி திருத்தலாம் –
சாஸ்திர ஆஸ்திக்யம் உடையனாய் -தத் பிரதிபாத்ய பிரமேயங்களையும் அறிந்து வைத்து -பாப பயம் இன்றியே –
நாஸ்திகவத் ச்வைரம் சஞ்சரிக்கிறவனை
சொல்லி அறிவிக்க தக்கது ஒன்றும் இல்லாமையாலே -உபதேச முகத்தால் ஒரு நாளும் திருத்த ஒண்ணாது என்கை –
இத்தால் அஞ்ஞான விஷய பிரவணனை –
விஷய தோஷத்வ உபதேச முகத்தாலே விரக்தனாம் படி திருத்தலாம் –
ஞானவானான விஷய பிரவணனை –
விஷய தோஷாதிகளை வ்யக்தமாக அறிந்து வைத்தே ப்ரவர்த்திக்கிறவன் ஆகையாலே –
தத் உபதேசத்தால் ஒருநாளும் திருத்த அரிது என்றது ஆய்த்து-
அஜ்ஞ்ஞஸ் ஸூகம் ஆராத்யஸ் ஸூகதரம் ஆராத்யதே விசேஷஞ்ச –
ஜ்ஞான லவ துர் விதத்தம் பிரஹ்மாபி நரம் நரஞ்சபதி -என்னக் கடவது இறே-
ஆகையால் அவனிலும் இவன் நிக்ருஷ்ட தமன் என்று கருத்து )

நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகர் -ஆவது
ஆஸ்திகோ தர்ம சீலஸ் ச -என்னும்படி
தர்ம அதர்மாதி சகல பிரதிபாதகமான சஸ் சாஸ்த்ரத்தை பிரமாணம் என்று அறிந்து
அந்த மர்யாதையிலே நின்று-
அப்படியே அதில் உக்தமான சத் அனுஷ்டானங்களையும் அனுஷ்டித்துக் கொண்டு போருகிற
பிரமாணிகரான ஆஸ்திகர் -என்கை –
(நற்கலை -வேத ஸாஸ்த்ரங்கள் – நன்னெறி-சன்மார்க்கம் -இரண்டும் வேணுமே -ஆஸ்திகோ தர்ம சீலஸ் ச
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் )

அன்றிக்கே
அத்யாத்ம சாஸ்தரங்களான ஸ்ரீ கீதாதிகளில் ஓதப் படுகிற
உபாய அத்யாவஸ்ய ரூபமான பிரபத்தி மார்க்கத்திலே வழி பட்டு இருக்கிற ஆஸ்திகர் என்று ஆகவுமாம்

ஆஸ்திகனாய் இவ்வர்த்தத்தில் ருசி விச்வாசங்களை யுடையனாய் உஜ்ஜீவித்தல்
நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய-(முமுஷுப்படி-275- ) -என்று இறே அருளிச் செய்தது –

(ஆஸ்திகனாய் இவ் அர்த்தத்தில் ருசி விச்வாசங்கள் உடையனாய் உஜ்ஜீவித்தல் –
நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய நடுவில் நிலை இல்லை -என்று
பட்டருக்கு எம்பார் அருளி செய்த வார்த்தை-(முமுஷுப்படி-275- )

நெறி யறியாதார் -என்று தொடங்கி இறையுரை தேறாதவரும் – (ஞான சாரம் -27 )என்றார் இறே

நெறி அறியா தாரும் அறிந்தவர் பால் சென்று
செறிதல் செய்யாத் தீ மனத்தர் தாமும் -இறை யுரையைத்
தேறாதவரும் திரு மடந்தை கோன் உலகத்
தேறார் இடர் அழுந்துவார் –ஞான சாரம்–27-

நாத்திகரும் நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகரும்-
ஆகையால் ஸ்வ தந்த்ரனுக்கு அனுரூபமான
ஸ்வர்க்காதி ரூப பல தத் சாதனங்களை பிரதிபாதிக்கிற சாஸ்திரங்களிலும்
ஸ்வ அஹங்கார கர்ப்பமான
பகவத் உபாசனத்தையும்
தத் பலமான பகவத் அனுபவ கைங்கர்யங்களையும்
பிரதிபாதிக்கிற சாஸ்திரங்களிலும் பிரதி பத்தி விளையவும் கூடும்

ததேக போகமான கைங்கர்ய தத் சாதனங்களை பிரதிபாதிக்குமதான –
நற்கலை- யுண்டு பிரபத்தி சாஸ்திரம்
அதில் நன்னெறி யுண்டு -பிராப்ய பிராபக அனுஷ்டானங்கள்
அது தங்களுக்கு கை வந்து இருக்கும் படியான ஆஸ்திக்யம் பிறக்கை அரிதாய் இறே இருப்பது
(சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் )

அன்றிக்கே
நற்கலை என்று
சீர்த்த மதுரகவி செய்கலை யான கண்ணி நுண் சிறுத் தாம்பாய்
அதில் நன்னெறி -என்று
தேவு மற்று அறியேன் -என்றும்
மேவினேன் அவன் பொன்னடி -என்றும்
ஆள்புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -என்றும் சொல்லுகிறபடியே
(ஸ்வரூப ஞானம்-ஓம் -நமஸ் நாராயணாயா -ததீய பர்யந்ததுக்கு இப்பிரமாணங்கள் )
சேஷத்வாதிகளைச் சொல்லுகிற ஸ்ரீ மதுரகவிகளின் யுடைய சன்மார்க்கமான சரம பர்வ நிஷ்டை யாகவுமாம்-
இந்நிஷ்டை யுடைய பரம ஆஸ்திகர்கள் தாம் ஓர் ஒருவர் என்னும் படி அரிதாய் இறே இருப்பது –

ஆத்திக நாத்திகருமாமிவரை -ஓர்த்து –
கீழ்ச் சொன்ன நாஸ்திகாதி த்ரயருடையவும்
ஸ்வரூப ஸ்வ பாவங்களை நன்றாக ஆராய்ந்து –

நெஞ்சே-
இவர்களை விவேகித்து பற்றுகைக்கும் விடுகைக்கும் பரிகரமான நெஞ்சே
அஞ்ஞரையும்
விசேஞ்ஞரையும்
ஞான லவ துர்விதக்தரையும்
நன்றாக விவேகித்து அவர்கள் ஸ்வரூப ஸ்வ பாவங்களை அறிந்த பின்பு-

முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு
முன் சொன்ன அப்ரமாணிகரான நாஸ்திகரையும்
பின் சொன்ன பஷ பாதிகளான ஆஸ்திக நாஸ்திகரையும்-
சாஸ்திர மார்க்கத்தில் அடங்காத சஹாசிகர் என்று கை விட்டு –
அதாவது
யத் ப்ரத்யஷம் ததேவ அஸ்தி நாஸ்த் யன்யத் இதி நிச்சிதா
அர்த்த காம பரா பாப நாஸ்திகா தேக கிங்கரா -என்று தொடங்கி
விஞ்ஞான லஷணை ஸ்தான் துஸ் சமயக் வ்யசிதஸ் த்யஜேத் -என்கிறபடியே
இப்படி மூர்க்கரான இவர்கள் இருவரையும் விட்டு
விடுகை கண்டீர் விதி -(ஞான சாரம்-30- )-என்கிறபடியே
சவாசனமாக பரித்யஜித்து -என்கை-

மாடும் மனையும் கிளையும் மறை முனிவர்
தேடும் உயர் வீடும் செம் நெறியும் –பீடுடைய
எட்டு எழுத்தும் தந்தவனே என்று இராதார் உறவை
விட்டிடுகை கண்டீர் விதி –ஞான சாரம்–30-

இனி பற்றப் படுமவர்களைச் சொல்லுகிறது –
நடுச் சொன்னவரை நாளும் தொடர் -என்று –
ப்ராமாணிகர் ஆகையாலே தத் உபய வ்யாவ்ருத்தராய் –
மத்யஸ்தராய் –
இருக்கிறவரையே –
அந்த ஆஸ்திகர் வாசி அறிந்து ஆதரித்துப் போரும் நெஞ்சே
அவர்களை நித்யமாக அனுவர்த்திக்கப் பார் –
அனுவ்ரஜாம் யஹம் நித்யம் -என்கிறபடியே அவர்கள் அடியை தொடர்ந்து திரியப் பார் –

நடுச் சொன்னவரை நாளும் தொடர் –
மத்யமபதோக்தரை-
அதாவது
பிரதம பதத்தில் கழி யுண்கிற தேகாத்ம அபிமானிகளான நாஸ்திகரையும்
சரம பதத்தில் கழி யுண்கிற விஷய சபலரான ஆஸ்திக நாஸ்திகர் போல் அன்றிக்கே
மத்யம பத உக்தமான
தத் ஏக உபாயத்வத்தையும்
ததீய பார தந்த்ர்யத்தையும் யுடையராய்
அவர்களில் அத்யந்த விலஷணராய் இறே ஆஸ்திகர் படி இருப்பது என்கை –

ஆகையால்
ப்ரதிகூலர் ஆனவர்கள் யுடைய ஷண கால மாத்ரமான சஹவாசம்
சத்தையையே நசிக்குமா போலே
இவர்கள் யுடைய ஷண கால மாத்ரமான சம்ஸ்லேஷமும்
சத்தா தாரகமாய் இருக்கையாலும்
சத்தா சம்ருத்திக்கு ஹேதுவாகையாலும்-
சர்வ காலமும் அவர்களை பின் சென்று பிழைக்கப் பார்

அவர்கள் நன்னெறியை யுடையார் ஆகையாலே நீயும்
அன் நன்னெறியிலே நின்று
உஜ்ஜீவிக்கும் படி அவரை நாடொறும் உபசத்தி பண்ணு –

இத்தால்
அனுகூல சஹவாசமும்
பிரதிகூல சஹவாச நிவ்ருத்தியும் சொல்லிற்று ஆய்த்து –

(நாஸ்திக ஆஸ்திகர் என்று சொல்லாமல் ஆஸ்திகர் நாஸ்திகர் என்றது –
ஸத் சம்ப்ரதாயம்-ஸத் கார்யவாதம் -பிரபஞ்சம் -அஸ்தி என்னும் அத்தைச் சொல்லி
அத்தை இல்லை என்பார் -உண்டே –
இல்லவே இல்லை -சொல்ல முடியாதே -முயலும் உண்டு -கொம்பும் உண்டே -முயல் இடத்தில் கொம்பு இல்லை
இங்கு இல்லை இப்பொழுது இல்லை என்றாலே இருப்பதே சித்திக்கும்
எங்கும் எப்பொழுதும் உனக்குள்ளும் எனக்குள்ளும் இருக்கிறார் -பிரகலாதன்
நத்யே வாஹம் -இருந்தேன் அல்லேன் என்பது இல்லை -அஹம் ஜாதி ந ஆஸம் இதி ந –
அஸ்தி உறுதிப்படுத்த இரண்டு ந காரங்கள் -)

———————————————————

கீழில் பாட்டில் உக்தமான அனுகூல பிரதிகூல ரானவர்கள் சஹவாசத்தால் பலிக்குமத்தை
ச த்ருஷ்டாந்தமாக
இரண்டு பாட்டாலே அருளிச் செய்கிறார் –
அதில் இப்பாட்டில் அனுகூல சஹவாசத்தால் பலிக்குமத்தைச் சொல்லுகிறது –

(பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்
மரகதக் கல்லை உடைத்தால் பச்சை நிறம் எங்கும் பரவும் )

நல்ல மணம் உள்ள ஒன்றை நண்ணி இருப்பதற்கு
நல்ல மணம் யுண்டாம் நலமது போல் -நல்ல
குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக்
குணமதுவே யாம் சேர்த்தி கொண்டு—69-

(நலமது போல்–நயமது போல் பாட பேதம் _

ஆமோதவத் குஸூம ஸம்வசல நேன
யத்வத்
ஆமோதவான் பவதி கேச பரோப்ய கந்த
தத்வத் பவந்தி
ஸத்வத் குணவத் ஜன சம்பந்த
பீதா குணர் அபி ஐநா

நல்ல மணம் உள்ள ஒன்றை நண்ணி இருப்பதற்கு நல்ல மணம் யுண்டாம் நலமது போல் –
நல்ல மணமாவது
அல்லாதவற்றின் யுடைய பொல்லாத மணத்தையும் போக்கும்படியான ஸூ கந்தத்தை யுடைத்தாய் இருப்பதொன்று –
அதாவது
ஆமோ தவத் குஸூம ஸம்வசல நேன யத்வத் ஆமோதவான் பவதி கேச பரோப்யகந்த -என்கிறபடியே
ஸ்லாக்கியமான பரிமளத்தை யுடைய புஷ்பத்தை சேர்ந்து இருப்பதொரு கேச பாரத்துக்கு தன்னுடைய
ஸ்வ பாவமான சிக்கு நாற்றம் போய்
மணங்கள் நாறும் வார் குழலார் -என்னும்படி பரிமள பிராசுர்யம் யுண்டாம் ந்யாயம் போலே –

நல்ல குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக் குணமதுவே யாம் சேர்த்தி கொண்டு –
நறிய நன்மலர் -( திருவாய் 5-5-11 )-என்கிறபடியே
சேஷத்வ ஞான பரிமளத்தை யுடையராய்
ஜ்ஞான பக்த்யாதி சத் குண யுக்தராய் இருக்குமவர்கள்
தங்களுடனே சஹவாசம் பண்ணி இருப்பாருக்கு அவர்கள் யுடைய சஹவாச ரூபமான சம்பந்தம் கொண்டு
அஞ்ஞான கந்தம் இன்றிக்கே-
அந்த ஸ்லாக்கியமான குணமே சித்திக்கும் –

மணத்தையும் ஒளியையும் கொண்டு பூவையும் ரத்னத்தையும் விரும்புமா போலே
சேஷம் என்று ஆத்மாவை ஆதரிக்கிறது –(ஸ்ரீ முமுஷுப்படி-சூரணை -71)

ஒரு செய் நிரம்ப நீர் நின்றால்-என்று தொடங்கி
உறாவுதல் தீரக் கடவதாய் இருக்கும் -(ஸ்ரீ வசன பூஷணம் -சூரணை -260-)-என்று இறே அருளிச் செய்தது –

(ஒரு செய் நிரம்ப நீர் நின்றால் அசல் செய் பொசிந்து காட்டுமாப் போலே இவை இல்லாதார்க்கும்
இவர்களோட்டை சம்பந்த்தாலே வுறாவுதல் தீரக் கடவதாய் இருக்கும்–ஸ்ரீ வசன பூஷணம் -சூரணை -260-

இவர்களோட்டை ஸஹ வாசத்தால் சித்திக்கும் அது எது -என்ன அருளி செய்கிறார் –
அதாவது
ஒரு வயலிலே நிறைய நீர் நின்றால் -நீரற்று உறாவிக் கிடக்கிற அசல் வயல் –
தத் அசலாக இருப்பதாலே வந்த பொசிவாலே வாட்டம் அற்று கிடக்குமா போலே –
ஞான பக்தி வைராக்யங்கள் ஆகிய இவை இல்லாமையாலே ஸ்வரூபம் உறாவிக் கிடக்கிறவர்களும்
இவற்றால் பரி பூர்ணரான இவர்களோட்டை ஸஹவாச ரூப சம்பந்த்தாலே இவற்றிலே சிறிது அந்வயம் உண்டாய் –
இவை நேராக இல்லாமையால் -உண்டான வுறாவுதல் தீரக் கடவதாய் இருக்கும் -என்கை-
ஞானாதிகள் இல்லாத குறை தீரும் / உகந்தவன் உகந்து மடை விடவே விளைவது ஒரு நல்ல வயல் செய்யில் -நிரம்ப நிரந்தரம் நீர் நின்றால் –
உடையவன் உபேக்ஷிக்கும் அசல் செய் -உபேக்ஷை அடியாக ஞானாதிகள் பசை அற்று -உலர்ந்த சம்சாரிக்கும் அந்த ரக்ஷகனான பூர்ண கடாக்ஷத்தாலே
ஸ்ரீ வைஷ்ணவ தர்சன ஸ்பர்ச மாத்திரத்தாலே -ஞானாதி பசை இல்லா உறாவுதல் தீர –வறட்சி கெட தோன்ற பொசிந்து காட்டுமா போலே–
நெஞ்சப் பெரும் செய்யை யுடையவராக கடவதாய் இருக்கும் –மடல் எடுக்க பாரித்த திருவாய்மொழி காதல் கடல் புரைய விளைவித்த காரமர் கண்ணன் –
அனுகூலர் சஹ வாசத்தால் ஞானாதிகள் நமக்கும் உண்டாகும் -என்றவாறு -ஸஹ வாச ரூப சம்பந்தம் -தர்சனம் ஸ்பர்சம் வேண்டுமே )

ஆக இத்தால்
இவனுக்கு யுண்டான சத் குணங்களும்
சத்துக்கள் யுடைய சஹவாசத்தாலே சம்பவிக்கும் -என்றது ஆய்த்து –

ஸ்ரீ பாகவத சம்ச்லேஷம் –
ஸ்ரீ பகவத் சம்ஸ்லேஷத்தையும் பிறப்பித்து
அபாகவாத விஸ்லேஷத்தையும் பிறப்பித்து-( பிறப்பித்து )
இவனையும் கரை மரம் சேர்த்து விடும் -என்று இறே ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்திற்று –
சத் சங்காத் பவதி ஹி சாதுதாகிலா நாம் -என்னக் கடவது இறே –
(ஸத் சங்கம் நிஸ் சங்கம் -ஸத் சங்கமே விஷயாந்தர ப்ராவண்யம் கழிக்குமே )

—————————————————–

கேசவன் தமர் -இருபத்து ஏழு தலைமுறைகளுக்கும் பலித்ததே நம்மாழ்வார் மேல் கடாக்ஷித்தது –
விபீஷணன் அங்கீ கரிக்கப் பட்டதுமே கூட வந்த நால்வரும் கைக்கொள்ளப் பட்டார்கள் –
ராவணன் கூட இருந்ததே காரணமாக அனைவருக்கும் தாழ்ச்சி
வாழ்ச்சியும் தாழ்ச்சியும் ஸஹ வாசித்தாலே பலிக்குமே –

இதில்
பரி த்யஜ்யரான பிரதிகூல சஹவாசத்தாலே பலிக்குமத்தை அருளிச் செய்கிறார் –

தீய கந்தம் உள்ளது ஒன்றைச் சேர்ந்து இருப்பது ஒன்றுக்குத்
தீய கந்தம் ஏறும் திறமது போல் -தீய
குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பாருக்குக்
குணமதுவேயாம் செறிவு கொண்டு —70-

செறிவு-சம்பந்தம் –
நாற்றம் வாசனை -பொதுவாக துர் நாற்றம் நல்ல வாசனை லோகத்தில் தப்பாக
நாற்றத்துழாய் -ஸப்த பிரயோகம் உண்டே
தீய கந்தம் -மணிப்பிரவாளம் -கீழே நல்ல மணம் -ஸூத்த தமிழ்
குணம் -சமஸ்க்ருதத்தில் இருந்து வந்த தமிழ் சொல்

ஏதி பூதி கந்தம் நிலனம்
சமுபைதி வஸ்து
தத் பூதி கந்தம் அதிராத் உபஜாயதேஹி
ஏதத் க்ரமேண
ரமணீய குணோபி லோபே
நிந்தியான் குணான்
பஜதி நிந்த்ய குணாஸ்ரயேண

தீய கந்தம் உள்ளது ஒன்றைச் சேர்ந்து இருப்பது ஒன்றுக்குத் தீய கந்தம் ஏறும் திறமது போல் –
ஹேய கந்தாஸ்பதமாய் இருப்பதொரு
லசு நாதி (லசனும்-பூண்டு ) பதார்த்தத்துக்கு கிட்ட இருப்பதொரு ஸூகந்த பதார்த்தத்துக்கும்
தத் சம்சர்க்கத்தாலே அதில் யுண்டான ஸூகந்தம் போய்
ஹேய கந்தமானது நாள் தோறும் அதிலே ஏறி வரும் பிரகாரம் போல் -என்கை –

அதுதான் ஸ்வ சமீப மாத்திர சம்பந்தத்தாலே அல்லாதவற்றின் யுடைய
சத் கந்தத்தையும் சவாசனமாகப் போக்கி
தத் கந்தத்தைத் தந்து தன்படியாய் ஆக்குமதாய் இருப்பது ஓன்று இறே –
(தர்ம புத்திரர் -கர்ணன் விஷயத்தில் கண்டோமே )

தீய குணமுடையோர் தங்களுடன் கூடி இருப்பாருக்குக் குணமதுவேயாம் செறிவு கொண்டு –
அப்படியே
ஹேய குண யுக்தராய் இருக்குமவர்களுடன் சம்சர்க்கித்தவர்களுக்கும் அந்த ஹேய குணம் யுண்டாம்
அவர்கள் யுடைய பிணக்கைக் கொண்டு அபாகவாத சம்ஸ்லேஷத்தையும்
பாகவத விஸ்லேஷத்தையும் பிறப்பித்தும்
இதில் பரித்யஜ்யரான
பிரதிகூல சஹவாசத்தாலே பலிக்குமத்தை அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ பகவத் விஸ்லேஷத்தையும் பிறப்பித்து இவனையும் முடித்து விடும் -என்று இறே
இதுக்கும் ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது –

சதாம் அசேவநாத் நித்யம் அசதாம்ச நிஷேவணாத் ஷீயந்தே ச
அத நஸ்யந்தி ஜ்ஞான வைராக்ய பக்த்ய -என்னக் கடவது இறே –

ஆக இத்தால் –
அசத்துக்கள் ஆனவர்கள் சஹவாசத்தாலே
சேஷத்வாதி குணங்கள் வேரோடு போய்
அசந்நேவ-என்னும் படியாய் இறே ஆவது என்றதாயிற்று –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

உபதேச ரத்னமாலை –பாசுரம் -62/63/64/65- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

July 27, 2014

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் -வேதமே பரம சாஸ்திரம் -கேசவன் பரம தத்வம்
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜா ஜகத் குரு –நாத்ர சம்சயம் -கூரத்தாழ்வான் -சம்ஸ்க்ருதம் விசேஷத்தில்
இங்கு மா முனிகள் தமிழில் பொதுவாக மா நிலத்தீர் உம் குருக்கள் தம் பதத்தே வையும் அன்பு

ஆக
கீழே இரண்டு பாட்டிலும்-
ஆச்சார்ய சம்பந்தத்தாலும்
அசம்பந்தத்தாலும்
பலிக்குமதான லாப அலாபங்களை தர்சிப்பித்து அருளி
அர்த்த ஸ்திதி இதுவான பின்பு
உங்களுக்கு உஜ்ஜீவன இச்சை யுண்டாகில்
கீழ்ச் சொன்ன படியே த்வய (ஸ்ரீ வசன பூஷண ஸாஸ்த்ர தாத்பர்ய ) நிஷ்டராய்
ஸ்த நந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால்
அது தன் குறைவாக நினைத்து
தான் ஔஷத சேவை பண்ணி
பிரஜையினுடைய நோயைப் போக்கும் வத்சலையான தாயைப் போலே
தன்னை அழிய மாறி ரஷிக்கும் சதாசார்யா பரதந்த்ரரான
தம்தாம் ஸ்ரீ ஆச்சார்யர்கள் திருவடிகளில் நிரதிசய பிரேமத்தை பண்ணுங்கோள்
முக்த போக்யனானவன் யுடைய தேசம் உங்களுக்கு அதி ஸூலபமாகக் கிட்டும் – என்கிறார் –
(அன்னை குடிநீர் அருந்தி அழும் குழவி -இதே அர்த்தம் ஆர்த்தி பிரபந்த பாசுரம் )

உய்ய நினைவு யுண்டாகில் உம் குருக்கள் தம் பதத்தே
வையும் அன்பு தன்னை இந்த மா நிலத்தீர் -மெய் யுரைக்கேன்
பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம்
கையிலங்கு நெல்லிக் கனி —62-

மாயன் பரம பதம்-அவனே பரமபதம் -அதுவாகவே –
பையரவில்-அறி துயில் அமர்ந்த –
கையிலங்கு நெல்லிக் கனி -ப்ரத்யக்ஷமாக அனுபவிக்கலாம் – மாயன் பரமபதம் உங்களுக்காகும்
பொன்னடியாம் செங்கமல போதுகளை -உன்னி சிரத்தாலே தீண்டில் -யதீந்த்ர பிரவணர் திருவடி பலத்தாலே பெறுவோம்

உஜ்ஜீவநாய யதி
நிஷ்டீயதாம்
நிஜ குரோவ் சரணார விந்த
சத்யம் ப்ரவீணீ
மனுஷா
பணி சாயிநா
தத் திவ்யம் பரம்
கர தல ஆமல தலகம்
பவேத் வஹ

உய்ய நினைவு யுண்டாகில் –
ஸ்வ உஜ்ஜீவ நேச்சா யாதிதே-விஷ்ணு தத்வம் -என்கிறபடியே
(ஸ்வ சத்தாயாம் ஸ்ப்ருஹா யதி -ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வாபஞ்ச சதா ஸ்மர
விருப்பம் இருந்தாலே போதும் )
உஜ்ஜீவிக்க வேணும் என்கிற இச்சா மாத்ரம் யுண்டாகில்
மனஸ் சஹகாரமான சம்பத்து சம்பன்னம் ஆய்த்தாகில்
இனி அவர்களுக்கும் அருமை பெருமை என்கிற திருஷ்ட தாரித்ரிய பிரசங்கம் இல்லை-( இம்மையில் வறுமை இல்லை )
இவர்களைப் பார்த்தால் இது தான் பரம பக்தியோபாதி அரிதாய் இறே இருப்பது-
(விலக்காமை வருவது பரம பதம் பெறுவது போல் அருமை அன்றோ )

இப்படி பெறுதற்கு அரிதான இச்சையை யுடைய நாங்கள்
செய்ய வேண்டுவது என் என்ன –

உம் குருக்கள் தம் பதத்தே வையும் -அன்பு தன்னை
உம் தம் ஆச்சார்யர் திருவடிகளில்
உன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும் கூர்ந்து என்கிறபடி அதி ஸ்நேஹம் வைக்கும் படி பாருங்கோள்

உம் குருக்கள் தம் பதத்தே
சார்ந்தது என் சிந்தை -உன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும் கூர்ந்து -ராமானுஜ -71-
மனம் மொழி செய்கை மூன்றுமே -மிகவும் கூர்ந்து -அமுதனார்
வையும் அன்பு தன்னை -மிகவும் விட்டு –அன்பு லேசமும் வைத்து
அதி ஸ்நேஹம் –வையும் அன்பு தன்னை ( இவ்வளவு இறங்கி வந்து நம்மைக் கைக்கொள்ளுகிறார் )
நிதியை அடியிலே இட்டு வைக்குமா போலே -அன்பையையும் அடியிலே வைத்து
பாத மூலம் பற்றி இருப்பதே பிராப்தம் (வேர் பாத மூலம் )

உம் குருக்கள்
என் குருக்கள் அடியிலோ அன்பை வைக்கச் சொல்கிறது
உங்களுடைய அஞ்ஞானத்தை போக்கி -ஞான தீபம்–ப்ரதோ குரு
விஞ்ஞானம் ப்ரதானாதிகளை கொடுக்கும் -மஹா உதாரர் -மஹா உபகாரகர்
ஆதி சப்தம் -அறிவு கொடுத்து -வைராக்யம் விளைவித்து -தட்டித் திருத்தி -ஆனந்தம் வளர்த்து -ரக்ஷித்து -உசாத்துணையாக இருந்து
விமல சரம விக்ரஹ ஏக தேசமாய் -திருவடி –
கு அந்தகாரம் -ரு அத்தைப்போக்கி -மங்க ஒட்டு உன் மா மாயை என்று ஆழ்வார் காலைக் கட்டி
விட வைக்கும் படி அன்றோ அவனது வியாமோஹம் -இருந்தான் கண்டு கொண்டே –
பாவானத்வம் போக்யத்வம் இரண்டும் உள்ள
திருவடிகளில் பரிவராக -பதத்தே -என்பதன் அர்த்தம்
திருப்பாதம் கமலபாதம் போல்

குருகூர் நம்பி முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –
அன்பன் தன்னை அடைந்தவர்க்கு எல்லாம் அன்பன் அடிக்கு அன்பர் –
அன்புக்கு அடியில் அன்பு வையும் –
அன்பு அவர் கண்ணே வைத்து -( திருக்குறும் தாண்டகம் -18-) என்கிறபடி – பகவத் பஜனம் அரிது
‘இந்த எளிய வழியைப் பற்றுங்கோள்
(அடி -மூலம் -ஆச்சார்யர் திருவடிகளே மூலம் )

(அலகை முலை சுவைத்தாற்கு அன்பர் அடிக்கு அன்பர்
திலதம் எனத் திரிவார் தம்மை -உலகர் பழி
தூற்றில் துதியாகும் தூற்றாதவர் இவரைப்
போற்றிலது புன்மையே யாம்-ஞான சாரம் –39-)

(அல்லி மலர்ப்பாவைக்கு அன்பர் அடிக்கு அன்பர்
சொல்லும் அவிடு சுருதியாம் -நல்ல
படியாம் மனு நூற்கு அவர் சரிதை பார்வை
செடியார் வினைத் தொகைக்குத் தீ-ஞான சாரம் –40-)

(இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–திருக்குறும் தாண்டகம் -18-)

இந்த மா நிலத்தீர்
உங்கள் ஆச்சார்யர் உங்களுக்காக இங்கு வந்து அவதரித்து எதிர் சூழல் புக்கு
இந்த மஹா பிருத்வியிலே ஜனித்து -அதில் வசிக்கப் பெற்ற பாக்யம் உடையவர்களே
இருந்த ஊரில் இருக்க எத்தவம் செய்தீர்கள் -4-4-7–என்றும்
பாத தூளி படிதலால் பாக்யம் செய்ததே-4-4-6- -என்றும்
ஊரும் நாடும் உலகமும் தங்களை போலே ஆக்குமவர்கள் அன்றோ

(பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று எத்துவாரகள் உழக்கிய
பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 4-4 6-)

(குருந்தம் ஓன்று ஒசித்தானோடும் சென்று கூடி யாடி விழா செய்து
திருந்து நான் மறையோர் இராப் பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்
கரும் தட முகில் வண்ணனை கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள்
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 4-4-7-)

மானிடர்க்காய் -அவன் தாளிணை -என்கிறபடியே
உங்களை ரஷிக்கவே சர ரூபியாய் நடமாடும்
சசார வஸுதா தல
சஞ்சரிக்கும் -கோயில் ஆழ்வார் ஸ்தாவர விமானம் -இது ஜங்கம விமானம்
மாதவன் என்னும் கோயில் அமைத்து
இது எல்லாம் மத்தர்த்தம் என்று விசாரித்து
அச் சரண யுகங்களில் சங்கத்தைப் பண்ணுங்கோள் அன்பு வையுங்கோள்
எங்கும் திரிந்து அரங்கன் அம்மானுக்கே சங்கம் உண்டாக்க அன்றோ தீர்த்தகரராய் திரிந்து உள்ளார்கள் –

(தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் -ஞான சாரம்–38-)

(ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே-பெருமாள் திருமொழி –2-6-)

இந்த மா நிலத்தீர்-
அன்பு வையுங்கோள் –
எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டர் -என்னும்படி
சங்கத்தை யுண்டாக்கும் படி இறே அவர்கள் இருப்பது –

அன்றிக்கே
மா நிலத்தீர் –
என்று இருந்ததே குடியாக எல்லார்க்கும் உபதேசத்தால்
எதி கச்சின் முமுஷூஸ்யாத் -என்று ஓர் ஒருத்தர் தான் யுண்டாகாதோ
என்று சர்வாதிகாரமாக சம்போதித்து அருளுகிறார் ஆகவுமாம்-

(முதலிகள் அனைவருக்கும் விபீஷணன் கை கூப்பியது போல் இவர் அனைவருக்கும் உபதேசம் –
ஆசை வைப்பார் யாவராவது கிடைப்பாரா என்னும் நப்பாசையால் )

நீர் இப்படி உபதேசியா நின்றீர்-எங்களுக்கு அல்பமான ஆனுகூல்யத்துக்கு
அதிகமான பலம் சித்திக்கப் புகுகிறதோ -என்ன

மெய்யுரைக்கேன்-
இவ்வர்த்தத்தில் சம்சயம் இல்லை -என்னும் இடத்துக்கு நான் சத்ய பூர்வகமாகச் சொல்லுகிறேன்
சர்வ பூர்வமிதம் வச என்னுமா போலே –
இப்படி ஆப்தனான நான் சொல்லுகையாலே பல சித்தியில் கண் அழிவு இல்லை –

பொய்யிலாத ஸ்ரீ மணவாள மா முனியான இவர் இப்படி மெய்யுரைக்கேன் -என்கையாலே
அமோகமாய் இருக்கிற இவர் ப்ரத்யயம் அடியாக
எல்லாருக்கும் பேறு தப்பாது என்று துணிந்து இருக்கலாம் இறே –
(உண்மை விளம்பி -நன்மை விரும்பி -ஆப்த வாக்கியம் )

மா நிலத்தீர் மெய்யுரைக்கேன் -என்கையாலே –
ராமேணாபிப்திஜ்ஞாதம் ஹர்யஷ கண சன்னிதௌ–(ஸூ ந்தர 51) -என்று
(கரடி குரங்கு கூட்டத்தில்-மஹா பக்தர்கள் சமூகம் – பெருமாள் ப்ரதிஜ்ஜை )
அந்த மகா பரிஷத்திலே சத்ய வாக்யரான ஸ்ரீ பெருமாள் சபதம் கூறினால் போலே யாய்த்து
இவரும் இவர்கள் நடுவில் சபதம் கூறினபடி –

இனி இவர்கள் பெறப் புகுகிற பல வேஷம் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –
அது தான் பல பர்யந்தமாய் இறே இருப்பது –
பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம் கையிலங்கு நெல்லிக் கனி –
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம் -என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளுக்கு அனுபாவ்யனாய் இருக்கிறவனுடைய ஸ்ரீ வைகுண்டம்
நித்ய சம்சாரிகளாய் இருக்கிற உங்களுக்கு-
அடியிலே அன்பு யுண்டாகையாலே-
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிரவாய் நாகத் தணையான் நகர் (முதல் திருவந்தாதி -32-)-என்றது
அதி ஸூலபமாய் அமோகமாக சித்திக்கும் –

(இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிர வாய்
நாகத் தணையான் நகர் -ஸ்ரீ முதல் திருவந்தாதி-32–
அணைவரே -தேற்ற ஏகாரமும் எதிர்மறை ஏகாரமுமாம் -தன்னேற்றமும் -இரண்டு அர்த்தமும் -உண்டே
இமையாத கண் -ஞானக்கண் -இந்திரிய வசம் இல்லாதார்-நமையாமல்- வைகுந்த நகர் அணைய மாட்டார்கள்
இப்படிப்பட்டவர்களும் -பெருமாள் வர விலக்காமல் இருந்தால்-ஆகத் தணைப்பார் அணைவரே- பெறுவார்கள் -)

மா நிலத்தீர் பையரவில் மாயன் பரமபதம் உங்களுக்காம்-
அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது -( 2-8-1)-என்றும் –
தயா சஹா ஸீநமனந்த போகி நீ–(ஸ்தோத்ர ரத்னம் )என்றும் –
சேஷ போகே ஸ்ரீ யாஸ ஹா ஸீநம் -( கத்ய த்ரயம் )-என்றும்
அனந்தன் பணா மணிகள் தன்னில் ஒளி மண்டலத்தின் இடையில் (ஞான சாரம் )
வடிவாரும் மா மலராள் வலவருகும் மற்றை நில மகளும் ஆய்மகளும் இடவருகே நிற்க
நடுவாக வீற்று இருக்கும் நாரணனை (ஆர்த்தி பிரபந்தம் )-என்றும் சொல்லுகிறபடியே
பத்னீ பரிஜனாதி பரிவ்ருதனாய் இருக்கிறவனுடைய நித்ய விபூதி யானது
இருள் தருமா ஞாலத்திலே பத்தராய் இருக்கிற உங்களுக்கு
ப்ரஹ்மணஸ் சாயுஜ்யம் ச லோகதாம் ஆப்நோதி-(உபநிஷத் )என்கிறபடியே சித்திக்கும் –

(ஸ்ரீ விசிஷ்டன் குண விசிஷ்டன் விக்ரஹ விசிஷ்டனை ப்ராப்யமாக இருக்கும் அவனை அனுபவிக்காமல் –
விதியால் ப்ராபகமாக பற்றுகிறோம் சரணம் ப்ரபத்யே )

இது தான்
ஏவம் வித் பாதேன அத்யாரோஹதி (கௌஷீக உபநிஷத் )-என்கிறபடியே
பாத பீடத்திலே அடி இட்டு–ஏறி–மடியிலே இருக்கும் படியாக கல்பிக்கும்
பரம போகிகளோடே சமான போகிகளாம் படி இறே இருப்பது –
(சகல கைங்கர்யங்களையும் சென்றால் குடையாம் போலே சித்திக்கும்
பரம போகி-ஆதி சேஷன் -அனந்த போக்யம் அனுபவிக்கும் நித்யர் -சாடு )

பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம் –
ஸ்வ சம் ஸ்பர்சத்தாலே விகசித பணத்தை யுடையனாய்
சைத்ய மார்த்த்வ சௌரப்யாதிகளை பிரகிருதியாக யுடையனான
திரு வநந்த ஆழ்வானை திவ்ய சிம்ஹாசனமாக யுடையனாய்
திவ்ய மகிஷி பரிவ்ருதனாய்
அபரிச்சின்ன ஸ்வரூப ரூப குண விபூதிகளால்
ஆச்சர்ய பூதனானவனுடைய
தன்னுடைச் சோதி -என்னும்படியான பரந்தாமம் ஆனது
உஜ்ஜீவன அபேஷை யுடைய உங்களுக்கு அயத்னமாகக் கை கூடும்-
ஏவம் வித மகா பலமானது லபிக்குமதுக்கு ஒரு பலத்தை திருஷ்டாந்தமாகச் சொல்லுகிறது மேல் –
கையிலங்கு நெல்லிக் கனி -என்று
(பலம் -பிரயோஜனம் -பலம் -நெல்லிக்கனி திருஷ்டாந்தம் )

அதாவது
கையில் கனி என்னும் கண்ணனைக் காட்டித் தரிலும்-(ராமானுஜ -104) -என்றும்
(சேஷ ராமானுஜ திருமேனியில் ஈடுபட்ட நான் சேஷி ராமானுஜ -கண்ணனைக் காட்டித் தரிலும் வேண்டேன் )
வைகுந்த மா நகர் மற்றது கை யதுவே -( 4-10-11-)-என்றும்
இவர்களுக்கு கரதல ஆமலகம் போலே- (நெல்லிக் கனிக்கு வடமொழி -கரதல ஆமலகம்)
கை வசமாக சித்திருக்கும் -என்கை –
கையுறு நெல்லிக் கனியைக் காட்டி -என்னக் கடவது இறே –

கையிலங்கு நெல்லிக் கனி –
உள்ளங்கையிலே விளங்கா நிற்கிற கரு நெல்லிப் பழம் போலே கை வசமாம் –
அது கார்ய சித்தியைப் பண்ணிக் கொடுக்கும்
இது ஸ்வரூப சித்தியைப் பண்ணிக் ஒடுக்கும்

பரம பதம் –
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரய-என்கிறபடியே
நித்ய ஸூரிகளால் நித்ய அனுபாவ்யமாய் இருக்கும்படி
உங்களுக்கு சர்வ காலமும் கண்ணாரக் கண்டு அனுபவிக்கும் படியாய் இருக்கும் படி
கண்டறிதியே -(ஸ்ரீ முதல் திருவந்தாதி-85)-என்னக் கடவது இறே
அது தான் நீலாஞ்சநாத்ரி நிபம் -(வைகுண்ட ஸ்தவம் )-என்னும் படியான மைப்படி மேனி இறே –

(படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி யைந்து முள்ளடக்கிப் போதொடு நீரேந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ -ஸ்ரீ முதல் திருவந்தாதி–85-)

பையரவில் மாயன் பரம பதம் –
தன்னை ஆஸ்ரயித்தவர்களை
அசேஷ சேஷ வ்ருத்தியிலும் அந்விதராக்கி
அடிமை கொள்ளுமவனுடையதாய்
அவ் வடிமைக்கு வர்த்தகமாய் இருப்பதான பரமபதமானது –
(சென்றால் குடையாம் –நிவாஸ இத்யாதி )

உங்களுக்காம் –
உய்ய நினைவுடைய உங்களுக்காம் –
நீங்கள் இச்சிக்கவும் வேண்டா –
அவன் தானே தரவும் வேண்டா –
(ஆம் -மோக்ஷயிஷ்யாமி போல் -நானும் வேண்டா நீயும் வேண்டா தன்னடையே விட்டுப்போம் போல் இங்கும் )
நீங்கள் உங்களுக்கு வகுத்த பதத்திலே பற்று யுண்டாய் இருக்க –
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் -என்று அவர்களுக்கு கை யடைப்பாக்கிக் கொடுத்த
அந்தப் பதம் கோல் விழுக்காட்டாலே உங்களேதாயே இருக்கும் –
புங்க்தே போகாந் அந்விதித நிருபஸ் சேவைகச்ய அர்ப்பகாதி-( ந்யாஸ திலகம் ) -என்றும்
நற்றாதை சொம் புதல்வர் தம்ம தன்றோ தாய முறை தான் -( ஆர்த்தி பிரபந்தம் -)-என்றும் சொல்லக் கடவது இறே –

உங்களுக்காம் –
ஏதேனும் ஜன்ம வ்ருத்த ஞானத்தை யுடையராய் இருந்தி கோளே யாகிலும்
உஜ்ஜீவன இச்சிகளாய்-
ஆச்சார்ய விக்ரஹத்திலே விருப்பத்தை யுடையராய் இருக்கிற உங்களுக்கு
உயரத்திலே இருக்கிற மகா பலமானது அடியிலே இருக்க –
மடியிலே விழும்படி கை கண்ட பலமாய் இருக்கும் –

பரம பதம் உங்களுக்காம் –
அதில் ஒரு சந்தேஹம் இல்லை –
சித்திர்பவதி –
நிஸ் சம்சயஸ்து தத் பக்த பரிசர்யா ரதாத்மநாம் -என்றும்
வேறாக வேத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் -என்றும்
மதுர கவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் -என்றும் சொல்லக் கடவது இறே —

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–-(ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி-18)-

உய்ய நினைவு -உஜ்ஜீவனம் -உத்தாரணம் -இதுக்கு த்வரிக்கையே –
அடியார் குழாங்களைக் கூடி நித்ய கைங்கர்யம் செய்யவே த்வரிப்பது –
உய்விப்பதற்கு ஆற்றல் நம் குருக்கள் இடம்-அவர்கள் உபகாரம் செய்து –
உத்தார ஆச்சார்யர் உடையவர் இடம் சேர்த்து அருளுவார் – –
ஆகவே அன்பு வைக்க வேண்டும் இவர் இடம்
பாலர் -ஜடர் -மூடவன் -அந்தகன் -சதாசார்யரை அடைந்து நல் கதி அடைவோமே –
திருக்கையால் தீண்டப்பற்றி மரங்களும் நாள் கதி அடைந்ததை அறிவோம் –
ஸாஸ்த்ர கண்ணால் தான் பகவானைக் காண முடியும்
ஊனக் கண்ணாலே நாம் ஆச்சார்யரைக் காணலாம்
கையில் ராமானுஜனில் நீர் இருக்க அத்தைப் பருகாமல் வானை எதிர்பார்ப்பது போலே ஆகுமே
சித்தர் பவதி வா ந இதி சம்சயவா அச்யுத -நிஸ் சம்சயம் -பக்தர் கைங்கர்யம் செய்தால் –
குருவால் யார் அபிமானம் செய்யப்பட்டாலும் குருவை அபிமானித்தாலும் நியமமாக பரம புருஷார்த்தம் கிட்டும்
இரண்டிலும் ஆச்சார்ய அபிமானம் ஸ்ரேஷ்டம் –

——————————————————————————-

கீழ்
மூன்று பாட்டாலும் ஆச்சார்யன் யுடைய உத்தாரகத்வத்தை அருளிச் செய்தார் –
(தரதி -தாண்டுவித்து )
இப்பாட்டில்
அவன் பண்ணின உபகாரத்தை அருளிச் செய்கிறார் –
ஞானப் ப்ரதாநாதி உபகாரங்களாலே ரஷித்துப் போந்த அந்த ஆச்சார்யன் செய்த மகா உபகாரம் ஆனது
(சம்சார நிவர்த்தகமான திருமந்திரம் உபதேசிப்பவரே நேரே ஆச்சார்யர் )
தம் தாம் மனசிலே விசதமாகப் பிரகாசித்தது ஆகில்
இப்படி கிருதஞ்ஞனான சிஷ்யனுடைய மனஸ் தான்-
(க்ருதம் -செயல் -ஞா -ஞானம் அறிவு-கிருதஞ்ஞனான-செய் நன்றி உடையவனான )
அவன் சந்நிதிக்கு அசலான தேசாந்தரத்தில் சக்தமாய் வர்த்திக்க ஷமம் ஆகாது என்கிறார் –

ஆசார்யன் செய் உபகாரமானவது
தூயதாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் -தேசாந்
தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது
இருத்தல் இனி ஏது அறியோம் யாம் —63-

உபகாரமானவது-உபகாரமான-அது -பெருமையை நினைத்து வித்தராகிறார்
தேசாந்தரத்தில்–ஆச்சார்ய கைங்கர்யத்துக்கு-சேவைக்கு – அசலாக உள்ள தேசமே தேசாந்தரம்
இனி-வஸ்து ஸ்திதி -உண்மை இப்படி இருக்க
அறியோம் யாம்-ஆதிசேஷனான இவரே அறியார் -இத்தால் யாருமே அறியார் –
மனசில் தூயதாகப் பட்ட பின்பு யாரும் பிரிந்து இருக்க மாட்டார்கள் என்றவாறு –

உஜ்ஜீவநாயா விஹிதா
குரூனோ உபகார
சிஷ்டே சித்தே –
விமலா யதி சேதாநானாம்
தேசாந்தரே நிவசனம் ந மநோபி வ்ருஷயேத்
வாஸம் கதம் பவதேதி
வயம் ந வித்மே

ஆசார்யன் செய் உபகாரமானவது –
இவன் உஜ்ஜீவனதுக்கு உடலாக சதாச்சார்யன் செய்த சத்ருச பிரத்யுபகார ரஹிதமான
அந்த மகா உபகாரமானது –
அது
அது தான் வாசா மகோசரம் ஆகையாலே
அது -என்னும் அத்தனை –

(கல் தச்சன் -கரடு முரடு மாத்துபவன் -ஆசாரி -ஆச்சார்யன் -அவஸ்து வாக உள்ளவனை வஸ்துவாக்கி –
பிரதியுபகாரம் -ஈஸ்வர த்வயமும் சதுஷ்ட்ய விபூதிகளும் வேண்டுமே
அது -ஸப்த பிரயோகம் ஸ்ரேஷ்டம்- பயம் –
பேதை பாலகன் அது ஆகும்
அப்பாஞ்ச சன்யமும் பல்லாண்டு
தம் பேறாக -நம் குற்றம் பாராமல்-மங்களா சாசன பரராக்கிய -கடக க்ருத்யம்
திவளும் -அமுத்தினாள் பிறந்த அவள் -நின் தாள் நயந்து இருந்த -இவள் –
இரண்டாலும் பெருமையை சொன்னது போல் இங்கும் )

தூயதாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் –
ஞானப் பிரதானம் தொடங்கி மோஷ லாப பர்யந்தம் நடத்திப் போரும் உபகார பரம்பரைகளை –

உபகாரமானது –
ஆத்ம நோஹ் யதி நீசஸ்ய யோகித்யேய பதார்ஹதாம்
கிருபையை வோப கர்த்தாரம் ஆசார்யம் சமஸ்மரேத் சதா -என்றும்
(நீசரான நமக்கும் யோகிகள் பெரும் பேற்றை பரம கிருபையால் )
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
மருவித் தொழும் மனமே தந்தாய் -என்றும்
உனக்கென் செய்கேன் -என்றும்
இப்படி ஈடுபடும்படி
பெரு நல் உதவியான அந்த மகா உபகாரம் ஆனது மனசிலே நிர்மலமாக

பிரகாசித்ததாகில்
சங்கோசம் அற விசாலமாக பிரகாசித்ததாகில் –

ஆகில் –
என்கிற இத்தால் -க்ருதஞ்ஞதையில் யுண்டான அருமை தோற்றுகிறது-
கருதக்நராய் இருப்பார் ஒழிந்து
க்ருதஞ்ஞராய் இருக்குமவர்கள் தேட்டமாய் இறே இருப்பது –
(தேடிப் பிடிக்கும் படி அன்றோ இருப்பது )

இப்படி இருக்கிற இஸ் சம்சாரத்தில்
குர்வர்த்தஸ் ஸ்வாத் மன பும்ஸ க்ருதக்ஞச்ய மகாத்மான -என்கிறபடியே
கிருதஞ்ஞராய் இருப்பார் இவர் ஒருவரும் இறே உள்ளது –

தேசம் திகழும் திருவாய் மொழிப் பிள்ளை வாச மலர்த் தாள் அடைந்து வைத்து (அடைந்த வஸ்து -ஆர்த்தி பிரபந்தம்-57- )-என்றும்
(ஆ முதல்வன் என்று கடாக்ஷிக்கவே வஸ்துவானேன் -ஜெகதாசார்யர் )
திரு வாய் மொழிப் பிள்ளை தீ வினையோம் தம்மை குருவாகி வந்து உய்யக் கொண்டு -(46)-என்றும்
திருமலை யாழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை சீரருளால்
தருமதி கொண்டவர் தம்மை யுத்தாரகராக எண்ணி இரு மனமே-(21) -என்றும்
சீராரும் ஆச்சார்யனால் அன்றோ நாம் உய்ந்தது -என்றும்
கூசாமல் எப்பொழுதும் கூறு -என்றும்
இப்படி பஹூஞ்ஞராய் இருக்கிற இவருடைய கிருதஞ்ஞை இருக்கிற படி இது வாய்த்து –

இனி
இப்படி தேசிக உபகார தரிசியாய் இருக்கிற இவர்கள் யுடைய மனஸ் தான்
வஸ்தவ்ய ஸ்தலத்தை விட்டு
தேசாந்தரத்தில் சங்கத்தை யுடையது ஆகமாட்டாது -என்கிறார் –

தேசாந்தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது –
அதாவது
ஆச்சார்ய சேவைக்கு அசலான தேசாந்தரத்தில் அர்த்தாதிகளில் அபேஷையாலே யாதல் –
தேச வாசாதிகளாலே யாதல்
க்ருதஞதா பல பிரத்யுபகார சாபேஷமான மனஸ்ஸூ தான் பொருத்தம் யுடையது ஆக மாட்டாது-
(ஆச்சார்ய திரு உள்ளம் உகப்புக்காக அன்றோ அனந்தாழ்வான் திருமலைக்கு உடையவராய் விட்டுப் பிரிந்தது )

இவர்கள் இருக்க இச்சித்தாலும் இவர்கள் யுடைய மனஸ்சானது
நின்னிடையேன் அல்லேன் -என்று நீங்கி -என்கிறபடி இவர்களை விட்டு
முந்துற்ற நெஞ்சு -ஆகி
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு -(ராமானுஜ –100-)-என்னும்படி
பொருத்த முடையதாய் இருக்கிற இது
ஓர் இடத்திலும் பொருத்தம் யுடையது ஆக மாட்டாது –
( ராமம் மே அனுகதா த்ருஷ்ட்டி -தசரதன் )

ஆகையால்-
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் -(ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்திகள்-310 )-என்கிறபடி
சஹ வசிதராய் – அவன் கண் வட்டம் விடாதே வர்த்தித்துப் போருமவர்கள் யுடைய நெஞ்சு
விஸ்லேஷித்துத் தரித்து இருக்க மாட்டாது இறே-

(தன்னை மாறாடி நினைக்கையாவது – தன்னை ஆசார்யன் என்று நினைக்கை –
சிஷ்யனை மாறாடி நினைக்கை யாவது – தனக்கு சிஷ்யன் என்று நினைக்கை –
பலத்தை மாறாடி நினைகை யாவது –த்ருஷ்ட பிரயோஜனத்தையும் –சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்தையும் –
பகவத் கைங்கர்யத்தையும் –ஸஹ வாசத்தையும் –பலமாக நினைக்கை —ஸ்ரீ வசன பூஷண-சூரணை-309-)

(நினையாது இருக்க -இந் நாலு பலமும் சித்திக்கிறபடி என் என்னில் –
சேஷ பூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்ட பலம் சித்திக்கும் —
ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் –
(உன் மனசால் என் நினைந்து இருந்தாய் -பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு தானே )
ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் சித்திக்கும் –
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் –சூரணை -310-

அநாதி காலம் அஹங்கார மமகாரங்களாலே நஷ்ட ப்ராயனாய் கிடந்த தன்னை –
நிர்ஹேதுகமாக அங்கீகரித்து -அஞ்ஞாத ஞாபன முகத்தாலே -அவற்றில் ருசியை மாற்றி –
மங்களா சாசனத்துக்கு ஆளாம்படி பண்ணின மகானுபாவன் அன்றோ -என்கிற
உபகார ஸ்ம்ருதியாலே -சிஷ்யனானவன் ஷண காலமும் பிரிய ஷமன் அன்றிக்கே
கூடி நடக்கையால் அவனோடு உண்டான சஹவாசம் தன்னடையே சித்திக்கும் -என்றபடி)

அப்படிப் பட்ட திரு உள்ளக் கருத்தை யுடையவர்கள்
ஸ்ரீ தெய்வ வாரி யாண்டான் –
ஸ்ரீ நஞ்சீயர்–போல்வார்-
(ஸ்ரீ ஆளவந்தாரை பிரிந்து நோய் வாட-என்னுடைய திருவனந்த புரம் எதிரே வந்ததே -ஸ்ரீ தெய்வ வாரி யாண்டான்)

இனி
விஸ்லேஷித்து இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது என்பான் என் –
விஸ்லேஷித்து இருக்கிறவர்கள் யுண்டாய்த்து இருக்கிறதே என்ன
இருத்தல் இனி ஏது அறியோம் யாம் –
ஆச்சார்யன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து இலன் ஆகில்
ஞானாம்சம் அடைய மறைந்து அஞ்ஞானாம்சமே மேலிடும் -என்கிறபடியே
நிஷ்கிருதி இல்லாத ( பிராயச்சித்தம் இல்லாத ) பாபம்-என்னும் படியான
க்ருதக்நதையாலே அத்தை அறிய மாட்டாமல் விஸ்லேஷித்து
வீடாடி வீற்று இருக்கிற இதுக்கு ஹேது ஏதோ அறியோம்
பிரிந்து இருக்கிறவர்கள் மனசே அறியும் இத்தனை –
(என் செய் கேன் உலகத்தீரே -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் போல் இங்கு இவரும் )

இனி ஏது அறியோம் –
அர்த்த ஸ்திதி இதுவான பின்பு இதுக்கு நிதானம் இன்னது என்று
அறிந்து சொல்லுவார் ஆர் –
பர தோஷங்களில் அஜ்ஞராய் இருக்குமவர் (மா முனிகள் )ஆகையால்
இதுக்கு ஹேத்வாந்தரங்களை தாம் அருளிச் செய்ய கூசி இனி ஏது அறியோம் –என்கிறார் –

நித்யம் குரும் உபாசீத -என்கிற
சாஸ்திர வசனத்துக்கு அனுகுணமும் இன்றிக்கே
சதாச்சார்யன் கண் வட்டம் விட்டால் நித்ய சம்சாரியாயே போம் இத்தனை -என்கிற
ஆச்சார்ய வசனத்துக்கு அனுகுணமும் இன்றிக்கே
இருக்கிற இவர்கள் அனுஷ்டானம்
அறிவுடையாருக்கும் அறியப் போகாதாய் இறே இருப்பது –

அன்றிக்கே
யாம் ஏது அறியோம் –
ஆச்சார்ய பதச் சாயையிலே இருந்து-
பல்லவிதாதிகளாம் படியான ஸ்வரூப விகாசத்தை யுடையனாய் ( பல்லவம் துளிர் )
(ஆத்ம புஷ்பத்தை நிழலில் வைத்து சரீரத்தை வெய்யில் இட வேண்டுமே
மொட்டு துளிர்த்து பூத்து பழுத்து -நிலைகளை அடைய வேண்டுமே )
தத் விபரீத அனுஷ்டான யுக்தர் யுடைய ஹிருதய ஸ்திதிக்கு ஹேது இன்னது என்று அறிந்து
அத்தைச் சொல்லுவது ஓன்று தெரிகிறதில்லை -என்றபடி
நாம் அத்தை அறியோம் -என்றபடி –
ஆகையால்
இது சர்வஞ்ஞருக்கும் துர்ஞ்ஞேயமாய் இருக்கிறது ஆய்த்து –

இவ்விடத்திலே –
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளிலே ஆஸ்ரயித்து
தேசாந்தரத்திலே அகன்று போக உத்யோகித்த ஸ்ரீ வைஷ்ணவனைக் குறித்து
ஞாநாதிகராய் இருப்பார் ஒருவர்
உமக்கு ஸ்ரீ ஜீயர் திருவடிகளை அகன்று போக வேண்டிற்றே என்று வெறுக்க
எங்கே இருந்தாலும் ஸ்ரீ ஜீயர் அபிமானம் உண்டே என்று தேறி வார்த்தை சொல்ல
(முதல் திருவந்தாதி -91 -வியாக்யானத்தில் இந்த ஐதிக்யம் )
இத்தை ஸ்ரீ ஜீயர் திருவடிகளுக்கு அந்தரங்கதையாய் இருப்பாள் ஒரு சாத்விகையான அம்மையார் கேட்டு
ஸ்ரீ ஆச்சார்யர் விச்லேஷத்தில் நெஞ்சு இளையாமல் போகிறவரைப் பார்த்து
என் சொன்னாய் பிள்ளாய்
ஏனத் துருவாய் யுலகிடந்த ஊழியான் பாதம் நாளும் மருவாதார்க்கு உண்டாமோ வான் -என்கிற
பாட்டின் வ்யாக்யானத்தில் அருளிச் செய்த கதையை இவிடத்திலே அனுசந்திப்பது -என்றார் -என்று
அஸ்மத் ஆச்சார்யர் அந்திம உபாய நிஷ்டையிலே அருளிச் செய்தார் இறே –

(ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —முதல் திருவந்தாதி-91-
ஜீயர் திருவடிகளை ஆஸ்ரயித்து
இருப்பான் ஒரு வைஷ்ணவன் வர -நீ பல நாள் வரத் தவிர்ந்தாயே என்று அருளிச் செய்ய
நீர் ஒருகால் அருளிச் செய்த படியை நினைத்து இருக்க அமையாதோ என்ன –
நம்பிக்கை நிலையில் வர்த்திக்கிறதும் மாண்டு
நாடோறும் ஏனத்-துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்-நாடோறும்-மருவதார்க்கு உண்டாமோ வான் -என்கிற இப்பாட்டும்
கெடுவாய் கேட்டு அறியாயோ -என்றார் -ருசி இல்லாதார்க்கும் ஸ்ரீ வைகுண்டம் கிடைக்குமோ )

(ஆழ்வான் திருவாய் மொழி நிர்வஹிக்க புக்கால் -பிள்ளை உறங்கா வல்லி தாசர்
கண்ணும் கண்ணீருமாய் அத்தை இத்தை பிரசங்கித்து சித்தராவார் -அத்தைக் கண்டு –
கூரத் ஆழ்வானாய்-மகா பாஷ்யம் கற்று -சதுர் ஆஸ்ரமாக ஒன்றை நிர்வஹிக்கிற எங்களைப் போல் அன்றிக்கே –
பகவத் குண பிரசங்கத்திலே சிதிலராகும்படி பிறந்த உம்முடைய ஜன்மம் ஒரு ஜன்மமே -என்றானாம் –

ஆழ்வான் தான் வீராணத்திலே ஒரு பெண் பிள்ளை புக்காளாய்-மடியிலே வைத்துக் கொண்டு-இருந்து –
கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து -என்று சந்தை சொல்லுவியா-நிற்க –
அந்த பெண் பிள்ளையில் பார்த்தா அவளை அழைத்துக் கொண்டு போக -மேற் சந்தை இட மாட்டாதே மோஹித்து விழுந்தான் –
இப்படி இருக்கிறவன் இறே தன்னை-வன் நெஞ்சனாக்கி வார்த்தை சொன்னான் –

ஸ்வாமிகள் திரு மழிசை தாசராய் – நஞ்சீயரை பட்டர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரியப்பித்தராய் -அர்த்தாத் -யாத்ருசிகமாக –
அவரும் தாமாக பகலிருக்கையில் போயிருந்து – அவரும் தாமுமாக திருவாய் மொழி ஓதா நிற்க –
ஆண்டான் பின்னிட்டு சென்றானாய் -அவனைக் கண்டு-ஜீயர் எழுந்து இருக்க புக -வேண்டா -என்று
கை கவித்து கொடு வந்து -நீங்கள் கோயில் கூழைத் தனம்-அடிக்கிற படி இதுவோ -தான் -என்ன –
லௌகிகர் அன்ன பாநாதி நிமித்தமாக வ்யாபாரித்தது போலே –
உங்களுடைய யாத்ரை இதுவே யென்று வித்தரானாராம் ஆண்டான் –
திரு வாய் மொழி ஓதிற்று ஸ்ரீ பாதத்திலே யாயிற்று -என்றாராம் –
பகல் எல்லாம் பாஷ்யத்திலே அந்ய பரராய் இருப்பார் -இரவு அமுது செய்து பள்ளிக்கட்டில் எறி-அருளினால் –
சந்தை சொல்ல வாராயோ -என்று அழைப்பர் -முந்துற சந்தை சொன்னால்-புளகிதகாத்ரர் ஆவார் –
இரண்டாம் சந்தைக்கு சிதிலர் ஆவார் என்று-எங்கேனும் ஒரு கால் புக்கார் ஆகில்
நாலிரண்டு ஒவியல் கொண்டு பரிமாற்ற-வேண்டுபடியாய் ஆயிற்று கண்ணா நீர் வெள்ளமிட்ட படி –

பெருமாள் அமுது செய்யும் போது இன்னதனை கறியமுதும் நெய்யமுதும் என்று
கடக்கிட்டு அவை தன்னை அமுது செய்வதற்கு முன்னேயும் எனக்கு காட்டி அமுது
செய்தாலும் எனக்கு காட்டிக் கொடு போம் கோள்-என்றாரே –
அவர்களும் திரு உள்ளத்தில் ஓடுவது-அறியாதாராய் – அப்படியே செய்து கொடு போந்தார்களாய் –
இப்படி ஆறு மாசம் சென்ற பின் -ஒரு நாள் பார்த்து –
இத்தை ஒரு நாள் குறி அழித்திட்டு வைத்தால் ஆகாதோ -என்று அருளிச் செய்தாராம் –

கிடாம்பி ஆச்சான் ஆழ்வான் உடன் திருவாய் மொழி கேட்கிற நாளிலே ஒருநாள் ஸ்ரீ பாதத்திலே-புகும் போதிலே தாழ்த்து புக –
ஏன் நீ வேகினாயீ -என்ன -ஆழ்வான் பாடே திருவாய் மொழி கேளா நின்றேன் -என்றானே –
இன்று என்ன திருவாய்மொழி நிர்வஹித்தான் -என்று கேட்டருள -பிறந்தவாறு -என்றானாய் –
அதில் சொன்ன வார்த்தைகள் என் -என்ன -ஒரு வார்த்தையும் இல்லை -என்றானாய் -நீ கேட்ட படி என்
அவன் சொன்ன படி என்-என்ன -நிர்வஹிப்பதாக ஆரம்பித்து இயல் சொல்லி -அநந்தரம்-
ஆழ்வாருடைய-பாரவச்யத்தை அனுசந்தித்து -நெடும் போது கண்ணும் கண்ண நீருமாய் இருந்தது – இவ் ஆழ்வாரும் ஒருவரே –
இவர்க்கு ஓடுகிற பாவ வ்ருத்தி நாம் இருந்து பாசுரம் இடுகையாவது என் -இற்றைக்கு விடலாகாதோ -என்று விட்டான் -என்ன –
என்ன பரம சே தனனோ-என்று அருளிச் செய்தாராம் –
நீர் தெளிந்து இருக்கிறபோதே -உம்முடைய சித்தாந்தத்தை எங்களுக்கு அருளிச் செய்ய வேணும்-என்ன –
ஆகில் அத்தை கேட்கலாகாதோ -என்று தம்முடைய சித்தாந்தத்தை அருளிச் செய்கிறார் –
மித்ர பாவேன -என்கிற ஸ்லோகம் ராம சித்தாந்தமாய் இருக்கிறாப் போலே –
இப்பாட்டு ஆழ்வாருடைய-சித்தாந்த்தமாய் இருக்கிறது –)

————————————————

கீழ்
ஆச்சார்யன் பண்ணின உபகாரத்தை அனுசந்தித்தால்
அவனைப் பிரிய பிரசங்கம் இல்லை என்றார்
இதில்
பிராப்யமான அவன் விஷயத்தில் கைங்கர்யத்தை யுணர்ந்தாலும் பிரிய
பிரசங்கம் இல்லை என்கிறார் –

தன்னாரியனுக்குத் தானடிமை செய்தவன்
இந்நாடு தன்னில் இருக்கும் நாள் -அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி யாசாரியனைப்
பிரிந்து இருப்பார் ஆர் மனமே பேசு —64-

சிஸ்ரூஷணம் நிஜ குரு
உபதேதி வாம்
ஏனாம் ப்ரமேய தரணீம்
பிரதிபத்ய மான
ஹே வாத் யஜந்தி
நிஜ தேசிக பாத மூலம்

தன்னாரியனுக்குத் தானடிமை செய்வது –
அதாவது
தாய்க்கு சோறு இடுமா போலே தனக்கு அசாதாராண சேஷியான ஆச்சார்யனுக்கு
தத் ஏக சேஷ பூதனாய்
தத் கைங்கர்யாதிகளே தனக்கு தாரகாதிகளாய் இருக்கிற
தன்னுடைய ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யங்களை செய்து உஜ்ஜீவிப்பது –

அவன் இந்நாடு தன்னில் இருக்கும் நாள் –
அவன் இந்த விபூதியிலே எடுத்த திரு மேனியோடு
ஸ்ரீ ஈஸ்வர இச்சையாலே எழுந்து அருளி இருக்கும் நாள் ஆய்த்து இவன் அடிமை செய்யலாவது

(ப்ரக்ருதிம் அதிஷ்டாயா -சாஷாத் நாராயண தேவனே சஸ்த்ர பாணியாய் –
அவனே -ஈஸ்வர இச்சை என்பதால் கர்மாதீனம் இல்லை –
அவதாரமும் அவனைப் போல் -இருப்பதும் நம்மைத் திருத்திப் பணி கொள்ளவே )

அந்நாட்டிலே போனால்
எல்லாரும் அயர்வறும் அமரரர்கள் அதிபதி யானவனுடைய
அனுபவ கைங்கர்யங்களிலே ஆழம் கால் பட்டு குமிழ் நீருண்டு போம் இத்தனை இறே
(அம்ருத சாகரான் நிமக்னன் -ஸ்ரீ வைகுண்ட கத்யம் )
ஆகையால் இவன் பதார்த்தங்களைக் கொண்டு உபஜீவிக்க இருக்கிற
இந்நாட்டிலே எழுந்து அருளி இருக்கும் போதாய்த்து
ப்ராக்ருத பதார்த்தங்களில் கிஞ்சித்கார முகத்தாலும்
இவன் கரணங்கள் அடியாக யுண்டான சிஷ்ருதாதிகளிலும்
ஆய்த்து அவன் அடிமை கொண்டு அருளுவது –
(திவ்ய மங்கள விக்ரஹம் அங்கு வியர்க்காதே -திருவடி பிடித்து விட முடியாதே )

நெய்யமர் இன்னடிசில் நிச்சலும் பாலோடு மேவீரோ -(6-8-2 )-என்றும்
குருக்களுக்கு அனுகூலராய்-(பெரியாழ்வார் 4-4-2) -என்றும் சொல்லக் கடவது இறே –
(பிராகிருத பதார்த்தம் சமர்ப்பிக்கவும் கைங்கர்யம் செய்வதற்கும் இரண்டு பிரமாணங்கள் )
அவன் அந்நாட்டிலே எழுந்து அருளினால் இவன் இந்நாட்டிலே யாருக்கு அடிமை செய்யப் புகுகிறான்
என்னைப் போலே வாய் புகும் சோற்றைப் பறி கொடாதே -என்றார் இறே ஸ்ரீ நஞ்சீயர்-

(திருவாய் மொழி –4-3-11-ஈட்டில்
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வரே மண்ணூடேயே -ஸ்ரீ ராமானுஜர் போல் –120-ஸம்வத்சரம் இல்லாமல் –
பராசர பட்டரை பால்யத்திலே இழந்ததால் -நஞ்சீயர் -வருந்தி இருக்க
நம் பெருமாள் கவலைப்படாதீர் பிள்ளை ஒருவரைத் தருவோம் -என்று
நம்பிள்ளையைக் கொண்டு இவர் திருவடிகளில் சேர்த்து அருளினார் அன்றோ )

(பட்டர் –60-68 திரு நக்ஷத்ரம் இருந்து இருப்பதாக சொல்வர் )

(யதன்ன புருஷ பவதி பெருமாளுக்கு சாஸ்திரம் அனுபவித்த தனக்குப் பிடித்த ஓன்றை பெருமாளுக்கு
பூதங்கள் -சிந்தப்புடைத்து -செங்குருதி கொண்டு பூதங்கள் அந்தப்பலி கொடுத்து திருமாலிருஞ்சோலை –
வர்ணாஸ்ரமம் படி வாழ்ந்து ஸாஸ்த்ரம் அனுமதித்த ஒன்றை பெருமாளுக்கு சமர்ப்பிக்கலாம் –
ஆச்சார்ய பிரிய தனம் -அவருக்கு பிடித்த ஒன்றையே சமர்ப்பிக்க வேண்டுமே )

அந் நேர் அறிந்தும் அதில் ஆசை இன்றி –
அந்த நேர் பாட்டை சாஸ்திர வசனங்களாலும்
சதாச்சார்யா உபதேசங்களாலும் அறிந்து வைத்து
இப்படி அடிமைக்கு பாங்கான தேச காலங்களையும் தேசிகரையும் பெற்று இருக்கிற
நேர் பாட்டை அறிந்து வைத்து
அதிலே நேர் படலாய் இருக்க –

அதில் ஆசை இன்றி –
இப்படி வாய்த்து இருக்கிற வகுத்த விஷயமான ஆச்சார்ய கைங்கர்யத்தில்
அபி நிவேசமும் இன்றிக்கே
அதடியாக அவனைப் பிரிந்து பிழைத்து இருப்பார் ஆர் –

ப்ராவண்ய காரணமான அனுபவம் இல்லாத போது குலையும்படியான
சத்தை யுடையராய் இருக்கிற ஆச்சார்ய பர தந்த்ரரில்–
அவரை விஸ்லேஷித்து சத்தை பெற்று இருப்பார் ஆர் –

அந்நேர் அறியாமல் பிரிந்து இருப்பார் யுண்டாகில் அத்தனை போக்கி —
அத்தை அறிந்து இருப்பாரில் பிரிந்து இருப்பார் இல்லை இறே
ஈஸ்வரனைப் பிரிந்து இருப்பார் யுண்டாகிலும்
ஆச்சார்யரைப் பிரிந்து இருப்பார் அரிதாய் இறே இருப்பது

அநாதி காலம் ஈஸ்வரனையும்-ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து இருந்த இவனை
தத் சம்பந்தத்தையும்-
தத் கைங்கர்ய ருசியையும் யுண்டாக்கி
கிட்டே இருந்து எல்லா அடிமைகளும் கொண்டு அருளுமவனாய் இருக்கிற
இவனை விட்டுத் தரித்து இருப்பார் ஆர் –
அவர்களை எங்கே தேடுவது –
சைதன்யம் யுடையாரில் இப்படிப் பட்டவர்கள் இல்லை இறே –

(அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தம் காட்டித் தடை காட்டி -உம்பர்
திவம் என்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறி காட்டும்
அவன் அன்றோ வாசாரியன்–ஸப்த காதை–1-)

மனமே பேசு –
ஆச்சார்ய கைங்கர்யாதிகளால் அல்லது தரியாத மனசே–
யுண்டாகில் இத்தை ஆராய்ந்து சொல்லிக் காண்-
எதிராசா எந்நாளும் உன் தனக்கே யாட்கொள்ளு உகந்து (ஆர்த்தி பிரபந்தம்-11- )-என்று ஆதரித்து
(எந்நாளும் -யாவதாத்ம பாவி -அத்ர பரத்ர சாபி தமிழ் படுத்துகிறார் )
போருமவருடைய திரு உள்ளம் இறே –
ஆகையால் தம் திரு உள்ளம் அறிய இல்லை என்கிறார் –

இது தான்–பாத ரேகா சமர் பிரிகையாலே அவர் இடத்திலே பரிவாலே–
தம் திரு உள்ளத்திலே பரிவு – தோற்ற அருளிச் செய்து அருளினது -என்று அருளிச் செய்வர் –

(மா முனிகள் -திருவாய் மொழிப்பிள்ளை -இவர்களைச் சொன்னவாறு
பொன்னடிக்கால் ஜீயர் -வான மா மலை ஜீயர் வடநாட்டு யாத்திரை மா முனிகள் நியமனம் அடியாக சென்று பின்பு
வெகு காலம் கழித்து தான் திரும்பினாராம் -வடக்கே நிறைய சிஷ்யர்கள் இன்றும் இவராலேயே –
கூட இருந்து சரம கைங்கர்யம் செய்தவர் கோயில் அண்ணன் -கந்தாடை ஆண்டான் தான் என்பர்
இது சிஷ்யர் ஆச்சார்யர் பிரிவுக்கு த்ருஷ்டாந்தம்
பாதுகை ஸ்தானீயம் -அண்ணன் ஸ்வாமி மா முனிகளுக்கு – முதலியாண்டான் ராமானுஜர் போல்
எம்பார்-ராமானுஜர் போல் -பதச்சாயை -பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்
பாத ரேகை -பொன்னடிக்கால் ஜீயர் -சாயை கூட நிழலில் பிரியலாம் -ஆகவே ரேகையே பிரியாது )

அந்த அனந்தரத்திலே–
எந்தை எதிராசா இந்தத் தனி இருப்பில் எந்தாயம் -(எம் காயம் )தன்னை இனி நீக்கிக்
கந்தாடை அண்ணனைப் போல் கண் கரிச்சல் யுண்டாக்கி வந்தார் எனை நோக்குவாய் –
என்றும் அருளிச் செய்தாராம் –

ஆக இத்தால்
தத் பாத சேவை ஏக தாரகராய் இருக்கும் ஆச்சார்ய பரதந்தரில் தங்களுக்கு
எல்லாமாய் இருக்கிற ஆச்சார்யனை விஸ்லேஷித்து இருக்க மாட்டார்கள் என்று கருத்து-

————————————————————–

(கீழ் இரண்டும் ப்ராசங்கிகம் –
ஆச்சார்யர் சிஷ்யர் விஸ்லேஷ வியசனம் அடியாக வரும் அனர்த்தங்கள் )

கீழ் இரண்டு பாட்டாலும்
உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலும்
கைங்கர்ய அபி நிவேசத்தாலும் யுண்டான
சிஷ்யனுடைய விஸ்லேஷ ராஹித்யத்தை அருளிச் செய்து–

அதடியாக யுண்டான சஹவாசத்தை யுடையரான இருவரும்
ஸ்வ ஸ்வ கர்த்தவ்யங்களான
ஸ்வரூப
தேக
சம்ரஷணங்களை பண்ணிப் போரும்படியையும்
இவ்வர்த்தம் ஸ்ருதமானாலும்
அனுஷ்டானத்திலே அரிதாய் இருக்கும் என்னுமத்தையும்
அருளிச் செய்கிறார் இதில் –

ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன்
நோக்குமவன் என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் —-65-

தேசாரும் சிச்சனவன்-ஆச்சார்யர் திருமேனியை ப்ரீத்தி உடன் நோக்கும் தேஜஸ் உடைய சிஷ்யன்
ஆருயிரை-எம்பெருமானும் விரும்பும் படியான கௌஸ்துப ஸ்தானீயம் -ஆத்மவஸ்து –

அந்தே சதக குரு
ஆத்ம ரஷாம் சிஷ்ய
ப்ரக்ருஷ்ய குரு தாம்
குரு தேக ரஷாம்
அர்த்தம் ஸூ ஸூஷ்மம் இமாம் ஆகலயந்தி சிந்தே
துர்லபாத் அபி வர்த்தனி தத்ர நிஷ்டா

ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்-
ஆச்சார்யன் ஆகிறான்–
சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்துக்கு உடலாக ஞான பிரதானாதி முகத்தாலே
நல் வழியே நடத்திப் போருமவன் ஆகையாலே
ஸ்வாசாச்யனான சிஷ்யன் யுடைய ஸ்வரூபத்தை
ஸ்வ உபதேசாதிகளாலே சர்வ காலத்திலும் ‘அவஹிதனாய்க் கொண்டு
நிரபாயமாக ரஷித்துக் கொண்டு போருமவன் -என்கை –

தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன் நோக்குமவன் –
சிஷ்யன் ஆகிறான் –
அவனாலே ஸூ சிஷிதமான ஸ்வரூப ஔஜ்வல்ய பூர்த்தியை யுடையனாய்
ஸ்ரீ ஆச்சார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டால் போலே-
தனக்கு தாரகாதிகள் எல்லாமாய்
சரம சரீரம் ஆகையாலே ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அத்யந்த அபிமதமாய்
சர்வ மங்களாவஹமாய் இருக்கிற ஸ்ரீ ஆச்சார்யன் யுடைய திவ்ய விக்ரஹத்தை
தத் உசித கைங்கர்யங்களாலே சர்வ காலத்திலும் அவஹிதனாய்
அபி நிவேசத்துடனே இப்படியே நோக்கிக் கொண்டு போருமவன் -என்கை –

(ஞானியை விக்ரஹத்துடன் ஆராதிக்கும் -சரம விமல திரு மேனி –
திரு நாராயண புரத்தில் வீற்று இருந்த கோலத்துடன் எழுந்த அருளப் பண்ணி
வாழை மரம் தோரணம் கட்டி கோயில் பிரசாதம் -அபய ஹஸ்த பிரசாதம் சாதிப்பார்களாம்
இங்கு ஸந்யாஸ ஜீயர் அப்படி
திருமஞ்சனம் செய்து தீர்த்த பிரசாதம் சாதிப்பார்களாம்
ஸந்நிதி கதவு திறந்து மாலை -அருளப்பாடு அப்பொழுதும் உண்டாம்
உபநிஷத் சேவை உடன் தந்த பல்லக்கு
வீதியில் தட்டு அமுது செய்து
பின்னால் அடுத்த ஸ்வாமி
அவரை குழியில் எழுந்து அருளப் பண்ணி
திருமேனி பரிவட்டம் வஸ்திரம் கணையாழி உபதண்டம் இவருக்கு சாத்தி அப்பொழுது தான் இவர் ஜீயர் ஆவார்
திருவரஸில் அதே பல்லக்கில் எழுந்து அருள பண்ணி வருவார்களாம்
திருமண் ஸ்ரீ சூர்ணம் பிரிக்காமல் தீட்டு நாள்களிலும் உண்டாம் திரு நாராயண புரத்தில் )

ஆச்சார்யர் சிஷ்யன் யுடைய உயிரை நோக்குமவன்
சிஷ்யன் ஆச்சார்யன் யுடைய யுடம்பை நோக்குமவன் -என்றும்
ஆசார்யன் சிஷ்யன் யுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன்
சிஷ்யன் ஆச்சார்யன் யுடைய தேஹத்தைப் பேணக் கடவன்- (ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -333-)என்றும்
இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் பகவத் கைங்கர்யமுமாயும் இருக்கும் -(சூரணை -334-)-என்றும்
இப்படி இது இருவருக்கும் வ்யவஸ்திதமாய் இருக்கும் -என்றும்
இத்தை ஸ்ரீ ஆச்சார்யர்கள் இருவரும் அருளிச் செய்தார்கள் –

(இருவரும்-பிள்ளை லோகாச்சார்யார் -மா முனிகள் சொன்னதாக பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் இருவரும்
நாயனாரும் பெரியவாச்சான்பிள்ளையும் அருளிச் செய்தார்கள் – )

(ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி –
சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி –(ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -335)
ஆசார்யன் ஆத்ம ரஷணம் பண்ணும் இடத்தில் -அஹங்காரம் விரோதி –
சிஷ்யன் தேக ரஷணம் பண்ணும் இடத்தில் மமகாரம் விரோதி –சூரணை -336-)

ஆசையுடன் நோக்குகை யாவது –
ஆத்ருதோ பயர்ச்ச யேத் குரும் -என்றும்
குர்வீத பரமாம் பக்திம் -என்றும்
சாந்த அநஸூயா ஸ்ரத்தாவான் -என்றும் சொல்லுகிற படி
ராக பிரேரிதனாய் அவர் திரு மேனியிலே புரையற ஸ்நேஹத்துடன்
தத் தத் கால உசித கைங்கர்யங்களாலே
தத் விக்ரஹத்தை சர்வ காலங்களிலும் நோக்கிக் கொண்டு போருகை -என்றபடி
அவனும்–
ஸ்நிக்தோ ஹித பரஸ் சதா -என்னும் படி இறே இவன் இடத்தில் இருப்பது –

(சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி -திவ்ய மங்கள விக்ரஹ மங்களா சாசனம் தானே உண்டே எங்கும் )

ஆர் உயிர் –
என்கையாலே ஞான ஆனந்தங்களை வடிவாய் யுடைத்தாய் இருக்கிற ஸ்வரூபம் ஆனது
ஈஸ்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்துபத்தோபாதி ஸ்ப்ருஹணீயமாய்
அங்கண்ணன் யுண்ட என்னாருயிர் -(திருவாய் -9-6-6 )-என்னும்படி
அஹம் அன்னம் -ஆகையாலே நிரதிசய போக்யமாய்
இப்படி
ஊணும் பூணுமாய் (அன்னமும் கௌஸ்துபமும் )இருக்கும் என்னுமது தோற்றுகிறது

சீர் வடிவு –
என்கையாலே
நன்கு என் உடலம் கை விடான் -( திருவாய் 10-7-4-த்யாஜ்ய தேக வ்யாமோஹம் )-என்றும்
ஷணேபி தே யத் விரஹ அதி துஸ் சஹ -என்னும் ‘
ஈஸ்வரனுக்கு ஷண கால விஸ்லேஷமும் அசஹ்யமாம் படியான
அபிமத விஷயத்தில் யுண்டான அத்யந்த வ்யாமோஹம் தோற்றுகிறது –

என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும் –
இப்படி ஈஸ்வர ப்ரீதி ஹேதுவான தேகாத்ம ரஷண தத் பரராய் போருவர்கள்
சச் சிஷ்ய சதாச்சார்யர்கள் என்று சொல்லப் படுகிற
இந்த ஸூஷ்ம ஞானத்தை
சாஸ்திர முகத்தாலும்
சதாச்சார்ய வசனத்தாலும் ஸ்ரவித்து வைத்தும் –

ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் –
எத்தனை அதிசய ஜ்ஞானராய் இருக்குமவர்களுக்கும் அந்த அரிதான அனுஷ்டானத்த்லே
நிஷ்டை யுடையராகை துர்லபம் இறே
அது சால அருமை யுண்டு -என்றபடி –

கேட்டு வைத்தும் -ஆர்க்கும் அந் நேர் நிற்கை யரிதாம் –
செவிக்கு இனிதாய் இருக்குமவற்றைக் கேட்கலாம் அத்தனை போக்கி
அதிசயித ஞாதாக்களுக்கும் அதன் உக்த க்ரமத்தின் அனுஷ்டானத்தில்
நிஷ்டை யுடையராகை துர்லபம் இறே –

ஆகையால்
ஆச்சார்ய பிரசாதத்தாலே அயத்னமாக லபிக்குமத்தை
ஸ்வ யத்னத்தாலே லபிக்க அரிதாய் இறே இருப்பது –

(கொள்ளில் மிடியனாம் – கொடுக்கில் கள்ளனாம் –சூரணை-339-
அப்படி கொள்ளுதல் கொடுத்தல் வருவது என் என்ன –அருளிச் செய்கிறார் –
அதாவது –
சிஷ்யன் என்னது என்று இருக்கும் வஸ்துவை -சாபலத்தாலே ஸ்வீகரிக்கில் –
ஈஸ்வரன் அகில பர நிர்வாஹனாய் போருகையாலே -நமக்கு என்ன குறை உண்டு என்று இருக்கும் பூர்ணனான தான் –
தேக யாத்ரைக்கும் கூட முதலற்ற தரித்ரனாய் விடும் –
என்னது என்று புத்தி பண்ணி -ஒன்றை ஆசார்யனுக்குக் கொடுத்தால் -சரீரம் அர்த்தம் -இத்யாதிப் படியே
அடியிலே சமர்ப்பிதம் ஆகையாலே -ததீயமாய் இருக்கிற அதிலே மதீயத்வ புத்தி
பண்ணுகையாலே ஆச்சார்ய ஸ்வ அபஹாரியாய் விடும் -என்கை-

கொள் கொடை உண்டானால் சம்பந்தம் குலையும் –சூரணை -340-
இவ்வளவே அன்றி சம்பந்த ஹானியும் வரும் என்கிறார் –
அதாவது
சிஷ்ய ஆசார்யத்வம் ஆகிற சம்பந்தம் உண்டானால்-சேஷ பூதனான சிஷ்யன் -சரீரம் அர்த்தம் -இத்யாதிப் படியே
சர்வமும் அங்குற்றையது என்னும் நினைவாலே சமர்ப்பிக்கையும் –
அப்படி சமர்ப்பித்தவற்றை சேஷியான ஆசார்யன் அங்கீகரிகையும் முறையாய் இருக்க –
இவன் தன்னது என்று அபிமானித்த ஒன்றை ஆசார்யன் ஸ்வீ கரிக்கையும் –
இவன் என்னது என்று அபிமானித்த ஒன்றை ஆசார்யனுக்கு சமர்ப்பிக்கையும்-ஆகிற முறை கேடான –
கொள் கொடை -உண்டான போது-சிஷ்ய ஆசார்யத்வ ரூப சம்பந்தம் குலைந்து விடும் -என்கை-

இவன் மிடியன் ஆகையாலே கொடான்
அவன் பூரணன் ஆகையால் கொள்ளான் –சூரணை -341-
இப்படி தாரித்ர்ய -(த்ரவ்ய )அபஹாரங்கள் வருவதும் – சம்பந்தம் குலைவதும் -கொள் கொடை தான் உண்டாகில் இறே-
அது தான் அவர்கள் செய்யார்கள் என்னும் இடத்தை ச ஹேதுகமாக
அருளிச் செய்கிறார் –
அதாவது –
சிஷ்யனான இவன் சகலமும் ஆச்சார்ய ஸ்வம் -நம்மது என்று சமர்ப்பிக்கலாவது ஒன்றும் இல்லை –
என்று இருக்கும் மிடியன் ஆகையாலே –நாம் அங்குற்றைக்கு ஒன்றைக் கொடுக்கிறோம் என்று கொடான் –
ஆசார்யன் ஆனவன்- ஈஸ்வரன் -சகல பர நிர்வாஹனாய் நடத்திக் கொண்டு போருகையாலே
நமக்கு இனி என்ன குறை உண்டு என்று இருக்கும் பரி பூர்ணனாய் இருக்கையாலே -இவன்
அபிமான துஷ்டமான ஒன்றையும் அங்கீ கரியான் -என்கை-

அவனுக்கு பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –சூரணை -342-
இந்த பூர்த்தி தாரித்யங்களால் இருவருக்கும் பலித்தவற்றை அருளிச் செய்கிறார் –
அதாவது –
ஆசார்யனுக்கு இவன் அபிமான துஷ்டமானவை ஒன்றையும் கொள்ளாமைக்கு உடலான
பூர்த்தி யாலே ஆச்சார்யத்வம் ஆகிற ஸ்வரூபம் ஜீவித்தது –
சிஷ்யனான இவனுக்கு ஸ்வ கீயத்வ புத்த்யா ஒன்றையும் சமர்ப்பிக்கைக்கு
யோக்யதை இல்லாத சகலமும் -ததீயத்வ பிரதிபத்தி சித்த தாரித்யத்தாலே சிஷ்யத்வம் ஆகிய ஸ்வரூபம் ஜீவித்தது -என்கை –

ஆனால் சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் –சூரணை -343-
இனி சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் இன்னது என்று
அருளிச் செய்வதாக தத் விஷய பிரச்னத்தை அனுவதிக்கிறார் –
அதாவது –
இப்படி கொள் கொடைகளுக்கு யோக்யதை இல்லை ஆகிலும் –
உபகார ஸ்ம்ருதி உடைய சிஷ்யன் -மகோ உபகாரனான ஆசார்யனுக்கு
பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் -என்கை –

ஆசார்யன் நினைவாலே உண்டு –சூரணை -344-
அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –
அதாவது
ஸ்வரூப ஜ்ஞனான சிஷ்யன் நினைவால் ஒருக்காலும் ஒன்றும் இல்லை –
ஸ்வ கிருஷி பல சந்துஷ்டனான ஆசார்யன் நினைவாலே உண்டு -என்கை –

அதாவது- ஜ்ஞான -வ்யவசாய- ப்ரேம- சமாசாரங்கள் –சூரணை -345-
அது என்ன அருளிச் செய்கிறார் –
ஜ்ஞான வ்யவசாய ப்ரேம சமாசாரங்கள்-ஆவன –
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானமும்-
தத் அநு ரூபங்களான உபாய அத்யவசாயமும் –
உபேய ப்ரேமமும்-
இவை மூன்றுக்கும் அநு ரூபமான சம்யக் அனுஷ்டானமும் –(சம்யக் ஆச்சாரம் சமாசாரம் )
இத்தால் திருமந்த்ரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்க படுகிற ஸ்வரூப -உபாய -புருஷார்தங்களில் –
ஜ்ஞான வ்யவசாய பிரேமங்களையும் -தத் அநு ரூப அனுஷ்டானங்களையும் சொல்லுகிறது –)

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

உபதேச ரத்னமாலை –பாசுரம் -58/59/60/61- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

July 27, 2014

உய்ய நினைவுடையீர் என்று கீழே இவராலே உபதேசிக்கப் பட்டவர்கள் (56-57)
இந்த உபதேசம் பலித்தவாறே-
ஸ்ரீ வசன பூஷணத்தின் ஆழ் பொருளைக் கற்றும் -என்றும்
ஸ்ரீ வசன பூஷணத்தின் வான் பொருளைக் கல்லாதது என்னோ -என்றும்
இப்படி அதன் அர்த்தத்தை நாங்களும் அறிந்து உஜ்ஜீவிக்கும்படி
அந்வய வ்யதிரேகங்களாலே பல காலும் அருளிச் செய்யா நின்றீர் –

(நம் கண்ணன் கண் அல்லாதோர் கண்ணே -அன்வயம் வ்யதிரேகம்
முதல் ஆழ்வார்கள் அன்வயமாகவும் திருமழிசை ஆழ்வார் வியதிரேகமாகவும்
நம்மாழ்வார் இரண்டாலும் அருளிச் செய்தார்களே
அதே போல் கீழே இரண்டு பாசுரங்களும்)

நாங்கள் அதில் அர்த்த க்ரஹணம் பண்ணும் உபாயம் என் என்ன –
ஆகில் சத் சம்ப்ரதாய நிஷ்டராலே ஸ்லாகநீயமான வியாக்யானம் யுண்டாகில்
அத்தை அதிகரித்து
அம் முகத்தாலே அறியுங்கோள் என்கிறார் –

(உண்டாகில்-என்பதால் துர்லபம் -மா முனிகள் காலத்திலும் பலவும் இருந்ததாகவும்
அவை லுப்தமாகவும் இருந்தமை தோற்றும் –
நாலூர் ஆச்சான் பிள்ளையும் ஸ்ரீ வசன பூஷணத்துக்கு வியாக்யானம் செய்து அருளினார் என்பர் –
அது லுப்தம் இப்பொழுது –
இப்பொழுது ஆய் ஸ்வாமிகள் மா முனிகள் வியாக்யானங்களே உள்ளன )

அன்றிக்கே
அபேஷா நிரபேஷமான தத் அர்த்த விஷயமாக வியாக்யானம் யுண்டாகில்
அத்தையும் நிரூபண முகேன அறிந்து
ஆதரியுங்கோள் என்கிறார் ஆகவுமாம்-

சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால்
மெச்சும் வியாக்கியை தான் யுண்டாகில் –நச்சி
அதிகரியும் நீர் வசன பூஷணத்துக்கு அற்ற
மதியுடையீர் மத்தியத்தராய் –58-

அற்ற-அற்றுத் தீர்ந்த
நச்சி அதிகரியும்-விரும்பி அந்வயிக்க வேண்டும்
மத்யஸ்தர் -பேச்சுப்பார்க்கில் கள்ள பொய் நூல்களும் க்ராஹ்யம்
பிறவி பார்க்கில் அஞ்சாம் ஒத்தும் ஆறு மூன்றும் கழிப்பனவாம் –

ஸச் சம்பிரதாய ஸ்துதியா
சதத உபலால்யா
லப்யதே சேத்
வசன பூஷண வாக்ய ஸீதா
ச வ்யஞ்ஜபி ஸகல மர்த்தயா பதார்த்த ஜாதம்
மத்யஸ் யைவ தசயா நநு பாவயநீய-

சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் –
அதாவது-
ஓதி-ஓதுவித்து-ஆதியாய் வரும் அந்தணர் அறா திருவாலி –என்கிறபடியே
விச்சேதியாத சத் சம்ப்ரதாயத்திலே சம்பத்தை யுடையராய்
தம்மைப் போல-

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6-

வாக்யா லங்க்ருத வாக்யாநி வ்யாக்யாதரம் (தினசரி )-என்றும்
(வாக்யா லங்க்ருத–ஸ்ரீ வசன பூஷணம் -கால ஷேபம் செய்து அருளும்
மா முனிகளை நான் வணங்குகிறேன் )

வாக்ய சங்கதி வாக்யார்த்த தாத்பர்யாணி யதா ஸ்ருதம் வ்யாகுர்வன்னேவ பூர்வேஷாம் வர்த்தமான
பதே பதே ஸ்வ மநீஷீ கயா நைவ கல்பயன் கிஞ்சிதபி யயம் குப்தான் சர்வான்
குருதவேன கூடா நர்த்தான தீத்ருசத் -என்றும் சொல்லுகிறபடி

(வாக்ய சங்கதி -தொடர்பு
வாக்யார்த்த தாத்பர்யாணி -தாத்பர்யஅர்த்தம்
யதா ஸ்ருதம் வ்யாகுர்வன்னேவ பூர்வேஷாம் வர்த்தமான
பதே பதே -பூர்வர் நிர்வாகம்படியே
ஸ்வ மநீஷீ கயா நைவ கல்பயன் கிஞ்சிதபி யயம் குப்தான் -கொஞ்சம் கூட தானே கல்பிக்காமல்
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல்
சர்வான் குருதவேன கூடா நர்த்தான தீத்ருசத்-மறைந்து கிடந்த பொருள்களை பரம காருண்யத்தால் வெளியிட்டு அருளி )

ஸ்ரீ வசன பூஷண வியாக்யான ( விலஷணராய் ) விசஷணராய்
ஆச்சார்ய சந்நிதியிலே அநவரத ஸ்ரவணத்தை யுடையராய்
இருக்குமவர்கள் ஸ்ரவித்தக்கால் -என்கை –

(வர வர முனி சம்பு -கத்யம் பத்யம் இரண்டும் கலந்து -ராமாநுஜ சம்புவும் உண்டாம்
கேட்டக்கால் -கேட்பித்துக்கால் என்றபடி )

சச் சம்ப்ரதாய அர்த்தங்கள் எல்லாம் விசதமாகக் கை வந்து இருக்கும் படியான
மதிப்பை யுடையராய் இருக்கும் தாங்கள் கேட்டக்கால் –

மெச்சும் வியாக்கியை தான் யுண்டாகில் —
அதாவது –
ஸ்ரீ சீதா சரிதமான ஸ்ரீ ராமாயணத்தைக் கேட்ட விசேஷஞ்ஞர் எல்லாம்
அஹோ கீதஸ்ய மகாத்மியம் -என்று ஆதரித்தால் போலேயும் -(ஹஸித்தம் பாஷிதம் சைவ இத்யாதி )
செவிக்கினிய செஞ்சொல்லான ஸ்ரீ திருவாய் மொழியை-கேட்டாரார் வானவர்கள்-( 10-6-11 ) -என்றால் போலேயும்
சுத்த சம்ப்ரதாய பிரவர்தகர் ஆனவர்கள் இத்தைக் கேட்டு
இதுவும் ஒரு வியாக்யானம் இருந்த படியே என்ற ஈடுபட்டுக் கேட்குமதான வியாக்யானம் தான் யுண்டாகில் –
(வல்லர் என வல்லவர் -ஸ்ரேஷ்டர் ஸ்லாக்யிக்கும் படி )

அன்றிக்கே –
மெச்சும் வியாக்கியை தான் –
என்று மதிப்பானவர்கள் மதிக்கும் படியான வ்யாக்கியை தான் -என்னவுமாம் –

(ஈடுபாடும் மதிப்பும் வேண்டுமே -தடை இருந்தாலும் விலக்காமைக்கு ஈடுபாடும்
நச்சு அணுக மதிப்பும் -ஆக இரண்டும் வேண்டுமே )

வசன பூஷணத்துக்கு அற்ற மதியுடையீர் –
என்று ஸ்ரீ வசன பூஷணத்தில் அற்றுத் தீர்ந்த மதி யுடையீர் -என்னவுமாம் –

வசோ பூஷோ வியாக்யா ருசிர வர யோகீந்திர ரசிதா
வசோபிஸ் சர்வேஷாம் வர நிகம சாரசாஸ்
ஸூ பஹூளா கம்பீரா வாக்யார்த்தைரபி பவிதசத் சங்கதி கணை பிரசன் நாமே
ஸ்வார்த்தம் பிரகடயது தஸ்யைவ க்ருபயா (வர வர முனி காவ்யம் )-என்னக் கடவது இறே —

(வசோ பூஷோ வியாக்யா ருசிர வர யோகீந்திர -ஸ்ரீ வசன பூஷண வியாக்யாதா வான ஸ்ரீ மா முனிகள்
ரசிதா வசோபிஸ் சர்வேஷாம் வர நிகம சாரசாஸ்- அனைத்து வேதாந்த அர்த்தங்கள் சாரங்கள்
ஸூ பஹூளா கம்பீரா வாக்யார்த்தைரபி பவிதசத் சங்கதி கணை -நிறைந்த ஆழமான அர்த்தங்கள் -தொடர்பு கூட்டங்களை
பிரசன் நாமே ஸ்வார்த்தம் பிரகடயது தஸ்யைவ க்ருபயா—பரம கிருபையால் சாந்தமான மனஸ்ஸால் அர்த்தங்களை வெளிப்படுத்தட்டும் )

ஆகில் –
என்கிற எதி சப்தத்தாலே-அதனுடைய தௌர்லப்யம் தோற்றுகிறது –
அப்படி அலப்யமானது லபித்ததாகில்

நச்சி அதிகரியும் நீர் –
வசன பூஷண அதிகாரிகளாய்
உஜ்ஜீவிக்க வேணும் என்கிற இச்சை யுடைய
நீங்கள்
இத்தை விருப்பத்துடனே அதிகரியுங்கோள்-
கல்லாதது என்னோ கவர்ந்து -என்ன வேண்டாத படி யாய்த்து இப்போது இவர்க்கு –

வசன பூஷணத்துக்கு அற்ற –
ஸ்ரீ வசன பூஷணதுக்கு-மெச்சும் வ்யாக்யானமாய் இருக்கு மதானவற்றை –
(ஏற்ற என்றபடி )

மதி யுடையீர் மத்தியத்தராய் —
நச்சி அதிகரிக்கும் இடத்து-விவேக பரிகரமான மனசை யுடைய நீங்கள்
மத்யஸ்த பாவனையாலே-
அர்த்தத்தின் சீர்மையை ஆராய்ந்து பார்த்து
உங்கள் அதிகாரி பூர்த்திக்கு உடலாக அதிகரியுங்கோள் –

இத்தால்
சச் சம்ப்ரதாய சம் உக்தரான ஸ்ரீ ஆச்சார்யகளாலே ஆதரணீயமான வ்யாக்யானமே
சத் பரிக்ராஹ்யம் என்றது ஆய்த்து –

சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியை தான்-என்றது
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடங்கி
அதன் தாத்பர்யமான ஸ்ரீ வசன பூஷண அர்த்தத்தையும்
ஸ்ரீ திரு நாராயணபுரத்தில் ஆய்
ஸ்ரீ திருவாய்மொழி யாச்சார்யர் (ஆச்சான் பிள்ளையும் )
ஸ்ரீ ஆயி சிஷ்யரான ஸ்ரீ நல்லப்ப நாயன்–இவர்களை தர்சிப்பிக்கிறது –

மாறில் முடும்பை யுலகாரியன் வசனக் கலனும்
மாறன் கருத்தின் மணவாளன் வார்த்தையும்
வல்லிருக்கைச் சீறும் படி திருத் தாழ்வரைத் தாதன்
தெரிந்து எனக்குத் தேறும்படி யுரைத்தான்
திருத் தாள்கள் என் சென்னியதே -என்றும் -வசனக் கலனும்-(வசன பூஷணமும் )

ஆச்சார்ய ஹ்ருத் சம்ஜ்ஞ நிபந்தநஸ்ய வியாக்யாம் அகார்ஷீத்-என்றும் சொல்லக் கடவது இறே

ஸ்ரீ வசன பூஷண
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயங்கள் ஆகிற
ஸ்ரீ திவ்ய பிரபந்தங்களுக்கு பிரதம வியாக்யானம் செய்து அருளியவர்
ஸ்ரீ திரு நாராயணபுரத்து ஆயி இறே
அவை அடி ஒத்தி இறே மற்றை வ்யாக்யானங்கள் யுண்டானது –

அவர்களோபாதி
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே
அவர் -(ஸ்ரீ ஆய் ஸ்வாமியும் )
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடக்கமான சகல பிரபந்தங்களுக்கும்
ஸ்ரீ வசன பூஷணாதி திவ்ய ரஹஸ்யங்களுக்கும் அர்த்தம் கேட்டார் -என்று பிரசித்தம் இறே —

அதிஷ்டித சதுர் க்ராமாசார்யா தேவ பதேர் குரோ
சாஹார்த்தைர் லேபிரே யேன சர்வேச த்ராவிடாகமா-என்னக் கடவது இறே-

(தேவ பதேர் -நாலூர் ஆச்சான் பிள்ளையே தேவப் பெருமாள் )

(பூர்வர் வியாக்யானங்கள் இருந்தால் மா முனிகள் பண்ண மாட்டார் –
பெரியாழ்வார் திருமொழி -வியாக்யானத்தில் பார்த்தோம் –
ஆய் ஸ்வாமி வியாக்யானம் இருக்க -செய்தமை –
சம காலத்தவர் என்று இருக்கலாம் -இருவரும் சந்தித்தது உண்டே –
ஞான சதுர்த்திகள் மேலே -ஸூத்ரம்
இரண்டு நிர்வாகங்கள்
ஆய் ஸ்வாமி -காட்டி -பொருந்த வில்லை என்று அருளிச் செய்து -வேறே நிர்வாகம் காட்டி உள்ளார்
அவரை சந்தித்து பேசியபின்பு அவர் நியமனம் அடியாகவே செய்து இருக்கலாம்
அதே போல் ஸ்ரீ வசன பூஷணம் வியாக்யானங்களிலும் வாசி உண்டே
நடு நிலையில் இருந்து நீங்கள் பார்த்து கைக்கொள்ள வேண்டும் என்று இங்கே அதனாலே உண்டே
இனி இனி -20 பாசுரங்களில் வேறே வேறே பாசுரங்கள் ஆய் ஸ்வாமி காட்டி உள்ளார் –
மா முனிகளுக்கு விளாஞ்சோலை பிள்ளை இடம் கேட்டு திருவாய் மொழிப் பிள்ளை பெற்ற ஏற்றம் உண்டு –
வேளுக்குடி வரதாச்சார்யர் சதாபிஷேக ஸ்வாமிகள் இது பற்றி முன்பே பேசி உள்ளார்கள் –
பெரியாழ்வார் திருமொழிக்கு திருவாய் மொழிப் பிள்ளை -வியாக்யானமாக இன்று உள்ளது அவரது இல்லையாய் இருக்கலாம்
அவர் சந்ததி -இன்றும் திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமி என்றே உண்டு –
இது ஒண்ணான அவரது இல்லை என்று காஞ்சி ஸ்வாமிகள் சொல்வார்
மா முனிகளுக்கு பின் உள்ளார் செய்ததாக இருக்கலாம் )

——————————————————–

ஸ்ரீ வசன பூஷணமாம் தெய்வக் குளிகை பெற்றோம்
பாருலகைப் பொன்னுலகாப் பார்க்க வல்லோம் ( யதீந்த்ர ப்ரவண பிரபாவம் )-என்கிறபடியே
தம்முடைய பரம கிருபையாலே பரோபதேசம் பண்ணி
சத்கார சஹவாச யோக்யர் ஆனாரையும் திருத்தி –
இனி
தம் உபதேச நிரபேஷமாக திருத்தின சத் ஸதா அனுபவ யோக்யரான ஆச்சார்யர்களைப் பார்த்து
இதன் ரஸ்யதையை அவர்கள் உடன் பேசி அனுபவிக்கிறார் –

அன்றிக்கே –
தம் உபதேசம் கேட்டு திருந்தினவர்களை ஸ்ரீ ஆரியர்காள் -என்று கௌரவ்யதை தோற்ற
அருளிச் செய்கிறார் ஆகவுமாம் –
(நஞ்சீயரை பட்டர் கொண்டாடினால் போலவும்
பொலிக பொலிக பொலிக என்று தம்மால் திருந்திய ஸமூஹம் கண்டு
மங்களா சாசனம் பண்ணிய நம்மாழ்வார் போலேயும்
கண புரம் -கை தொழும் பிள்ளையை பிள்ளை என்னப் பெறு வரே —
மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே )

ஓத வல்ல பிராக்கள் நம்மை யாளுடையார்கள் பண்டே -(3-7-3-)-என்றும்
ஆரியர்காள் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார் பின் -என்றும்
அருளிச் செய்தால் போலே இவர் தாம் தம்முடைய சிஷ்ய பிரசிஷ்யர்களை
மத் குரு என்றும்
நம் இறைவர் என்றும் இறே அருளிச் செய்து போருவ்து –

சீர் வசன பூஷணத்தின் செம் பொருளைச் சிந்தை தன்னால்
தேறிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம்–ஆரியர்காள்
என் தனக்கு நாளும் இனிதாகா நின்றது ஐயோ
உம் தமக்கு எவ்வின்பம் உளதாம் —-59-

சார்த்தா ஸ்மராமி
யதி வசன பூஷணாதி
வாஸோ வதாமி
யதி வா மதுரா மமாபி
ஆர்யா கதன்னு பவதாம் மனஸ் ப்ரஸன்ன
பூம்னா த்யோகி
விஷய அதிசயவாஹஹா

சீர் வசன பூஷணத்தின் செம்பொருளைச்-
அந்யருக்கு ஆழ் பொருளாய் -அரிதாய் -இருக்குமது-
தமக்கு செம்பொருள் என்று
செவ்வியதாய் இருக்கிறபடி –

செம்பொருளைச் சிந்தை தன்னால் தேறிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம்–
நெஞ்சாலே நிரூபிக்கிலுமாம்–
வாக்காலே அனுசந்திக்கிலுமாம் இதிலொரு நிர்பந்தம் இல்லை –
ஏதேனும் ஒரு காரணத்தாலே அனுசந்திக்கப் பெறிலும்
நித்ய அபூர்வமான போக்யமாய் இருக்கும் –
(எங்கனே சொல்லினும் இன்பம் பயக்கும் )

சாரார்த்த சங்க்ரஹம் ஆகையாலே
சதா அனுவர்த்தனம் பண்ணுகிற மனசுக்கு இனிதாய் இருக்கும் –
மகா ரச வாக்ய ஜாதம் -ஆகையாலே
வாக்குக்கு இனிதாய் இருக்கும்
இவர் மனத்தாலும் வாயாலும் கவர்ந்து அனுபவிக்கிறார் –

கீழில் அவர்களை இறே (சத்கார சஹவாச யோக்யர் ஆனாரை)
கல்லுங்கோள் சொல்லுங்கோள் -என்று விதிக்க வேண்டுவது –
தமக்கு அங்கன் அன்றிக்கே
இது பள்ள மடையாய் இருக்கிறபடி –

கற்று அதனுக்காம் நிலையில் நில்லும் -என்றும்
சிந்தை தன்னால் கல்லாதது என்னோ கவர்ந்து -என்றும் சொல்லக் கடவது இறே –

ஆரியர்காள் என் தனக்கு நாளும் இனிதாகா நின்றது ஐயோ –
செஞ்சொற் கவிகாள் -என்னுமா போல
இதில் அனுபவத்துக்கு தேசிகராய் இருக்குமவர்களே -என்கிறார் –

(அண்ணிக்கும் அமுதாகும் என் நாவுக்கே –
நான் கண்ட நல்லதுவே போல் )

என் தனக்கு நாளும் இனிதாகா நின்றது –
உங்களைப் போல் பேரளவுடையன் அன்றிக்கே
அடியேன் சிறிய ஞானத்தன்-( 1-5-7 )-என்கிறபடியே
அத்யல்ப ஞானத்தை யுடையனாய் இருக்கிற எனக்கு –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே -(2-5-4)-என்கிறபடியே
தொண்டர்க்கு அமுதான-(9-4-9)
ஸ்ரீ வகுள பூஷண வாக் அம்ருதத்தின் யுடைய சாரமான ஸ்ரீ வசன பூஷணமானது
நித்ய அபூர்வமுமாய்
நிரதிசய போக்யமுமாய்
இரா நின்றது –

விதி வாய்க்கின்று காப்பாரார் ஐயோ கண்ணபிரான் -( 5-1-1 ) -என்னுமா போல
ஹர்ஷ பிரகர்ஷத்தால் யுண்டாம தொரு பாசுரம் —

ஆரியர்காள் உம் தமக்கு எவ் வின்பம் உளதாம் –
ஆர்ய போகமாய் இருக்கிற இதடியாக ததேக போகராய் இருக்கிற உங்களுக்கு
எவ்வளவு ஆனந்தம் யுண்டாம்
அங்கே யுண்டான ஆனந்தம் இவர்க்கு இதடியாக இங்கே யுன்டாகிற படி
அது தான் இன்ப மிகு விண்ணாடு இறே –

உம் தமக்கு எவ்வின்பம் உளதாம் —
எனக்கு என்னளவிலேயாய் இருக்குமா போல
உங்களுக்கும் உங்கள் அளவுகளிலேயாய் இராதோ

வைதேஹி ரமஸேகச் சித்ர கூடே மயா சகா -என்னுமா போலே
(மூவருக்கும் -ஆனந்தம் துல்யம் -ஹேதுக்கள் வேறே வேறே போல் )

சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தைக் கண்டால் போல கண்டு
அவர்களோடு அதில் அனுபவ ரஸ்யதையை அநு பாஷித்து அருளுகிறார் ஆகவுமாம் –
இது தான் எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்கும் -ஸ்ரீ திரு வாய் மொழியில் படி யாய்த்து –

இத்தால்
இதனுடைய நிரதிசய போக்யதா அதிசயத்தால் யுண்டான
வைபவம் சொல்லிற்று ஆய்த்து-

——————————————-

ஸஸ்த்ர பாணியாக அவனே ஆச்சார்யராக திரு அவதாரம்
ஆச்சார்யர் மூலம் அவனை அடைவது முதல் நிலை
ஆச்சார்யர் மூலம் ஆச்சார்யரை அடைவதே இறுதி நிலை
அத்ர பரத்ர சாபி -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதே சாரார்த்தம் –
இத்தை புரிய வைக்கவே -60-70- -ஆச்சார்ய வைபவம் சொல்லும்
ஸ்ரீ வசன பூஷண ஸாரார்த்தங்களை 11 பாசுரங்களால் ஸ்வாமி வெளியிட்டு அருளுகிறார் –
ஆக ஸ்ரீ வசன பூஷணத்துக்காகவே –18 பாசுரங்களும் அதுக்கும் முன்பாக —
மூன்று 50-52-பாசுரங்கள் பிள்ளை லோகாச்சார்யார் வைபவம்

ஆக கீழ் (ஏழு பாசுரங்களில் )
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யராலே நிர்மிதமான ரஹஸ்யங்களில்
1-ஸ்ரீ வசன பூஷணத்துக்கு யுண்டான அப்ரதிம வைபவத்தையும்-(53)
2-அதுக்கு ஸ்ரீ வசன பூஷணம் என்று திரு நாமம் ஆகைக்கு அடியையும் -(54 )
3-ஏதத் அர்த்த அபிஞ்ஞரும் அனுஷ்டாதாக்களும் ஏகைக புருஷர் என்னுமத்தையும் -(55)
4-ஏதத் அர்த்த க்ரஹண விஷயமாக பரோபதேசம் பண்ணி யருளியும்-(56)
5-இதின் அர்த்தத்தை அபி நிவேசத்துடன் அதிகரியாமைக்கு ஹேது சிந்தனையும்-(57)
6-ஏதத் விஷயமாக விலஷண பரிக்ரஹ வியாக்யானம் யுண்டாகில் அது அங்கீகாரம் என்னுமத்தையும்-(58 )
7-இது தான் ஸ்வ பர விபாகம் அற நிரதிசய போக்யமாய் இருக்கும் என்னுமத்தையும்-(59 )
தர்சிப்பித்தாராய் நின்றார் –

இனி (மேல் எல்லாம் )
ஸ்ரீ வசன பூஷணம் ஆகிற இந்த திவ்ய பிரபந்தத்திலே
வேதார்த்தம் அறுதி இடுவது (1)-என்று தொடங்கி-
அத்தாலே அது முற்பட்டது (4)-என்னும் அளவாக
பிரதிபாத்ய அர்த்தங்களுக்கு எல்லாம் பிரமாணங்களை ஒருங்க விட்டு

(வேதம் அறுதி இடுவது ஸ்ம்ருதி இதிகாச புராணங்களாலே–சூரணை-1–
ஸ்ம்ருதியாலே பூர்வ பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –
மற்றை இரண்டாலும் உத்தர பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –சூரணை-2-
இவை இரண்டிலும் வைத்து கொண்டு இதிஹாசம் பிரபலம் –சூரணை -3-
அத்தாலே அது முற் பட்டது –சூரணை -4-
அதே போல் இங்கும் முதல் 29 பாசுரங்களில் தமிழ் வேதங்களையே ப்ரமாணமாகக் கொண்டு என்றபடி )

இதிஹாச ஸ்ரேஷ்டம்-( 5 ) என்று தொடங்கி
ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே இப் பிரசங்கம் தான் உள்ளது -என்று
உக்தார்த்தை இதுக்குக் கீழ் நிகமித்து

(இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –-சூரணை -5-
ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே-
இப்ப்ரசங்கம் தான் உள்ளது –சூரணை-407-
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் உக்த அர்த்தம் )

அவர்களைச் சிரித்து இருப்பார் யுண்டு இறே
அவர் பாசுரம் கொண்டு இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் என்று -(சூரணை- 409 )
சரம பிரமேயத்துக்கு சரம பிரமாணத்தை ஒருங்க விட்டால் போலே

(சரம பிரமேயம்-ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்
சரம பிரமாணம்-கண்ணி நுண் சிறுத்தாம்பு )

இவரும்
அருளிச் செயல்களினுடையவும் ஏதத் வ்யாக்யானங்களுடையவும் -(முதல் 38 பாசுரங்கள் திவ்ய பிரபந்தம் )
தாத்பர்ய ரூபமாய் (ஸ்ரீ வசன பூஷணத்தை )
சரம பிரகரண பர்யந்தமான அந்த ஸ்ரீ வசன பூஷணத்தை கீழ் அடங்கலும்
அருளிச் செய்த அர்த்தங்களுக்கும்
மேல் அருளிச் செய்யப் புகுகிற சரம பர்வ நிஷ்டாக்ரமங்களுக்கும்
ஆப்த தமமான பிரமாணமாக (ஸ்ரீ வசன பூஷணத்தை ) அங்கீ கரித்த படியே அதில் தாத்பர்யமான
சரம பர்வ நிஷ்டாக்ரமங்களை
சரமத்திலே
இப் பாட்டுத் தொடங்கி
மேல் எல்லாம் ( 73 பாசுரங்கள் வரை )தர்சிப்பித்து அருளுகிறார் –

(சரம பர்வ நிஷ்டாக்ரமங்களை-ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதையே –
அதுவும் கடைசி சூரணை இல்லை -பிரமேயமே சரமம்
சரமத்திலே இப் பாட்டுத் தொடங்கி –பேடிகா விபாகத்தில் சரமம் இதுவே சரம ஸ்லோகம் போல் )

இதில்
முதல் பாட்டில்
தங்களுக்கு அசாதாரண சேஷியான ஸ்ரீ ஆச்சார்யன் விஷயத்தில்
அல்பமும் பக்தி இன்றிக்கே இருக்குமவர்கள்
சாதாரண சேஷியான ( எல்லாருக்கும் பொதுவான )ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்திலே பக்தியைப் பண்ணிலும்
பக்தி க்ருதனான (க்ரீதனான -விற்கவும் வாங்கவும் அமைத்துக் கொள்வானே )
அவன் தான் அவர்களுக்கு பிராப்ய லாபத்தைப் பண்ண
இச்சித்து இரான் ஆகையாலே அவர்கள் பிராப்யத்தை பிராபியார்கள் என்கிறார் –

தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன்-இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் ஆதலால்
நண்ணா ரவர்கள் திரு நாடு —60-

(அம்புயை கோன்-ஆச்சார்யர் இடம் அன்பு லேசமும்-அத்வேஷம் மாத்ரம் – இல்லையாகில்
புருஷகாரமும் துர்லபம் என்று காட்டி அருளவே இங்கு இப் பத பிரயோகம்
கமல வாஸினி -தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே உலர்த்துவான்
தண்ணீர் பசை -ஆச்சார்ய ஸம்பந்தம் -இல்லையாகில்
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –
மிதுனத்தை ப்ராப்யமாகக் காட்டி அருளுவதே ஆச்சார்யர் தானே
உளன் அலன் எனில் -ஸப்த பிரயோகம் -இல்லை எனில் போல் இல்லாமல் இங்கும் -அளிக்க வேண்டி இரான்
தான் -அளிக்க -வேண்டி இரான் -மூன்று பத பிரயோகங்களும் வியாக்யானம் உண்டே
இன்ப மிகு விண்ணாடு -திரு நாடு -இரண்டு பத பிரயோகம்
நந்த கோபன் கோயில்- உன் கோயில் -இரண்டும் திருப்பாவையில் –
நாயக ரத்னம் -ஆச்சார்யர் -பின்பு நப்பின்னை -பிராட்டி -பின்பு அவனைப் பற்றுகிறோம் )

பக்திம் விகாய
பத யோகோ நிஜ தேசிகஸ்ய
பக்தி பிரகர்ஷம் அபி யே பகவதி
தேப்ய
ரமா ஸஹஜர பரமம் பதம் யத் தாதும்
நஹி இச்சதி
நாதேபி ச தல் லபந்தே

தன் குருவின் தாள் இணைகள் தன்னில் –
மருளாம் இருளோட மத்தகத்துக்கு தந்தன் ( தன் தான் ) அருளாலே வைத்தவராய் -ஞான சாரம்
தனக்கு வகுத்த விஷயமான ஸ்ரீ ஆச்சார்யன் யுடைய அங்க்ரி யுகளம் தன்னிலே யாய்த்து –
பிரபத்தி ( பிரதிபத்தி உறுதி என்றுமாம் ) பண்ண பிராப்தம் –
அவன் தன் தாளையே யுன்னுவதே சால யுறும்( ஞான சாரம் 38 )-என்று இறே இருப்பது –
ஆகையால்
தஸ்மாத் பக்திர் குரௌ கார்ய (அந்திம உபாய நிஷ்டையில் ஆச்சார்ய லக்ஷணம் சொல்லும் இடம் )-என்கிறபடியே
(ஷத்ரிய பந்து அன்றோ பராம் கதி கண்டு கொண்டான் என்பதுக்கு மூலம் )
அவன் விஷயத்திலே அதி ஸ்நேஹத்தைப் பண்ண வேண்டி இருக்க –
அத்தைச் செய்யாதே –

(வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்று முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த வவர் –36-)

(தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் –38-)

அன்பு ஓன்று இல்லாதார்-
பக்தையக தேசமும் இல்லாதார்
அந்தாமத்து அன்பு செய்து -என்று ஈஸ்வரனும் கூட
அதி ஸ்நேஹம் பண்ணும் விஷயத்திலே யாய்த்து
இவர்கள் அபி நிவேச லேசமும் இன்றிக்கே ஒழிகிறது-

அது இன்றிக்கே ஒழிந்தால் ஆவது என் –
பகவத் பக்தி யுன்டானால் என்ன –
அன்பு தன் பால் செய்தாலும் –
ஸ்வ விஷயத்திலே பக்தி ஜனகன் ஆனவன் இடத்தில் அன்றிக்கே
(பகவத் விஷயத்தில் பக்தி உண்டாக்கியவன் அன்றோ ஆச்சார்யர் )
அன்பனான தன் விஷயத்தில்,அன்பைச் செய்தாலும் –

(இவன் அன்பன்-அவர் அன்பை ஏற்படுத்தியவர் –
தன் பால் -அவர் பாசுரம் கொண்டே தான் அறுதி இட வேண்டும் –
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -கண்ணி நுண் சிறுத்தாம்பு –-11–
ஆகவே அதே அன்பு சப்த பிரயோகம் இங்கு -காதல் அபிநிவேசம் இல்லாமல் அதே அன்பு சப்த பிரயோகம்)

பிறர்க்கு அரிய வின்னபாதகத்தி -( திருச்சந்த விருத்தம் -100) –என்றும்
அரும் பெறல் அன்பு—(திருக்குறும் தாண்டகம் 5-) என்றும் சொல்லும்படியான

(பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது
இறப்ப வைத்த ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றமா
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே -100-

இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு
அரும் பெறல் அன்பு புக்கு இட்டு அடிமை பூண்டு உய்ந்து போனேன்
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்துக்
கரும்பினின் சாறு போலேப் பருகினேற்கு இனியவாறே –திருக் குறும் தாண்டகம் –5)

பெறற்கு அரியதான பக்தியை – சரம விஷயத்தில் பக்தி அன்றிக்கே
பிரதம பர்வமான ஸ்வ விஷயத்தில் பரி பூரணமாகப் பண்ணினாலும் –
அப்படிப் பட்டவர்கள் தன் பிரசாத்துக்கு பாத்ரம் இன்றியே ஒழிகையால்

அம்புயை கோன்-இன்பமிகு விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் –
ஸ்ரீ ஆச்சார்ய விஷயீ காரம் அடியாக யுண்டான
ஸ்ரீ பிராட்டி புருஷகார பலத்தாலே
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு வானம் கொடுக்குமவனான ஸ்ரீ மாதவன் -( ராமானுஜ -68 )
ஆச்சார்ய விஷயத்திலே ஆதரம் மட்டமாய் இருக்கிறவர்களுக்கு
பிராப்ய பிரதானத்தில்( அளிக்க -பிர தானம் ) ப்ரீதி இன்றியிலே ஒழியும் –

(வேண்டி தேவர் இரக்க -தேவர்கள் பிரார்த்திக்க தானும் விரும்ன்பி –
இச்சன் ஹரி கணேஸ்வர -போல் –
அவனுக்கு விருப்பம் இருக்காது இங்கும் _

ஆதலால் நண்ணா ரவர்கள் திரு நாடு –
இப்படிக் கொடுக்குமவன் கொடாது ஒழிந்தால்
தெளி விசும்பு திரு நாடு -( 9-7-5 )ஆன பிராப்ய தேசத்தை ப்ராபியார்கள் –
ப்ராப்ய பலம்-( லாபம் ) பிராபகத்தாலே -( 93-)-என்னக் கடவது இறே –

இன்பமிகு விண்ணாடு –
அந்தமில் பேரின்பம்-(10-9-11) -என்றும்
நலமந்த மில்லதோர் நாடு- -என்றும் சொல்லுகிறபடியே
நிரதிசய ஆனந்த மயமான ஸ்ரீ வைகுண்டத்தை ஸ்வ விஷயத்தில் ஆபி முக்ய லேசமே பார்த்து
மோஷ பிரதானத்தில் தீஷித்து இருக்கும் அவன் தான் –
அவர்கள் விஷயத்தில் ஔதார்யத்தைப் பண்ண இச்சியான் –

விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் –
தான் விண்ணாட்டில்( விண்ணாட்டை விட ) சால விரும்பும் விஷயத்தில் விருப்பம் இன்றிக்கே ஒழிகையால்
பரம வ்யோம சப்த அபிதேயமான பரம பதத்தை அனுக்ரஹிக்க இச்சியான்
ஆகையால்
ஏனத்துருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான் ( முதல் திருவந்தாதி -91 )-என்கிறபடியே
அவர்களுக்கு திரு நாடு சித்திக்கை அரிதாய் இருக்கும் –
வானவர் நாட்டை நீ கண்டு கொள் ( 3-9-9-)-என்று கொடுக்கும் -உதாரனானவன்
தான் கொடுக்க இச்சியாது ஒழிந்தால்
இவர்களுக்கு பிராப்யத்தை பிராபிக்க விரகு என் –
இழந்தே போம் இத்தனை என்று மனத்து உயிர்க்கும் -இத்யாதி –

இத்தால் –
ஸ்ரீ ஆச்சார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால் (437)-என்று தொடங்கி
இத்தை ஒழிய ஸ்ரீ பகவத் சம்பந்தம் துர்லபம் (440 )-என்னும் அளவும்
அருளிச் செய்த அர்த்தம் பிரதி பாதிக்கப் பட்டது –

(ஆசார்ய சம்பந்தம் குலையாதே கிடந்தால் –ஞான பக்தி வைராக்யங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம் –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் – அவை உண்டானாலும் பிரயோஜனம் இல்லை —சூரணை -437

தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணிக் கொள்ளலாம் –
தாலி போனால் பூஷணங்கள் எல்லாம் அவத்யத்தை விளைக்கும் –
பிரயோஜனம் அல்லாமையே அன்று -அவத்யகரமும் -என்கிறார் –சூரணை -438-

தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே -நீரைப் பிரிந்தால் –
அத்தை உலர்த்துமா போலே –
ஸ்வரூப விகாசத்தை பண்ணும் ஈஸ்வரன் தானே –
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் -அத்தை வாடப் பண்ணும் —சூரணை-439-

இத்தை ஒழிய பகவத் சம்பந்தம் துர்லபம் –சூரணை -440-

இங்கன் சொல்லுகிறது என்-இவ் ஆசார்ய சம்பந்தம் குலைந்தது ஆகிலும் –
ஒழிக்க ஒழியாது -என்கிற பகவத் சம்பந்தம் உஜ்ஜீவனத்துக்கு உடல் ஆவாதோ என்ன –
அருளிச் செய்கிறார் –
அதாவது –
அநாதி சித்தமாய் இருக்க செய்தேயும் -ஆசார்யன் உணர்த்துவதற்கு முன்பு அசத் கல்பமாய் –
அவன் உணர்த்தின பின்பு இவனுக்கு கார்யகரமாகக் கடவதாய் -இருக்கும் அது –
இவ் ஆசார்யம் சம்பந்தம் குலைந்த போது-இதடியாக வந்த தானும் குலைந்து போம் ஆகையாலே –
இவ் ஆசார்ய சம்பந்த்தத்தை ஒழிய பகவத் சம்பந்தம் இவனுக்கு கிடையாது -என்கை –
ஆகையால் இது போயிற்று ஆகிலும் அது நமக்கு உஜ்ஜீவனத்துக்கு உடல் என்று இருக்க விரகு இல்லை என்று கருத்து –
ஸ்வரூப உஜ்ஜீவனம் -ஆச்சார்ய சம்பந்தம் பிரதானம் –இது ஒழிந்தால் -பகவத் சம்பந்தம் -நிலை நின்ற -யவாதாத்மபாவி துர்லபம் –
தத் சம்பந்தம் குலைந்து இருந்தால் -ஏதத் சம்பந்தம் சுலபமாம் -இது குலைந்தால் அது துர்லபம் –
சத்தா ப்ரயுக்தம் அன்றோ -பகவத் சம்பந்தம் -இங்கு சொல்வது ஆஸ்ரயண சம்பந்தம் –
சேஷி சேஷ பாவ சம்பந்தம் குலையாது –
ஆச்சார்யனால் பகவத் ஆஸ்ரயணம் -பகவானால் ஆச்சார்ய லாபம் பொது- முதல் ஐந்து படிகள் -பந்து சம்பந்தம் போகாது –
சாமான்ய சம்பந்தம் இருந்தால் ஆச்சார்ய சம்பந்தம் கிட்ட வாய்ப்பு உண்டு –
அவன் ஸுஹார்த்தத்தால் ஆச்சார்ய சம்பந்தம் -ஆச்சார்ய சம்பந்தத்தால் பகவத் ஆஸ்ரயணம்-
உஜ்ஜீவனம் -மோக்ஷ பர்யந்தம் -வஸ்து சத்தை வேறே –ஆச்சார்ய சம்பந்தம் அறிந்து உபதேசம் பெற்று தானே
ஆஸ்ரயணம் மூலம் உஜ்ஜீவனம் -லீலா விபூதி விளையாட்டு -சத்தை அடியாக –)

(தான் அளிக்க வேண்டி இரான் -மூன்று சப்தங்கள்
தான் தான் அளிக்க வேண்டும் -வேறே யாரும் கொடுக்க வல்லவர் அல்லர் –
அளிக்க தான் வேண்டும் -நாம் பிரார்த்திக்க மட்டுமே அதிகாரி -வேண்டினால் அளிப்பார் –
பயம் -சோகம் பிரபத்திக்கு அதிகாரம் -உபாயாந்தர சம்பந்தமும் உபாயத்தில் ஸ்வீ கார புத்தியும் இருந்தால்
நம் பக்கல் விசேஷ ப்ரீதியுடன் -அபிமானதுடன் -வேண்டி அளிப்பான்
தான் இச்சித்து அளிக்க வேண்டும் –
மடி பிடித்துக் கேட்க முடியாது பிரதான அர்த்தம் இல்லை -கடமைக்குச் செய்யாமல் விருப்பத்துடன் –
மேலைத் தொண்டு உகளித்து -பொரு சிறைப் புள் உகந்து ஏறுவான் –
இதுவே விசேஷ அபிமானம் -வேண்டி -பத அர்த்தம் –
பக்தி இல்லாதவனுக்கு கீதை சொல்லாதே –
சச பூஜ்யக -என் அளவிலாவது அடியார்களைப் பூஜிக்க வேண்டும் என்றானே –
ஆணை மீறினால் விசேஷ அபிமானம் வராதே –
திருமேனி திருவடி ஸ்தானம் தானே அடியவர்கள் –ஸ்வரூபத்தில் மட்டும் பக்தி வைத்து
திவ்ய மங்கள விக்ரஹத்திலும் அன்பு வைக்க வேண்டுமே – )

(ஏணி படகு த்ருஷ்டாந்தம்-ஆச்சார்யர் சம்பந்தம் பொருந்தாது -தாமரை நீர் சம்பந்தம் தான் பொருந்தும்
பகவத் சம்பந்தம் குலையும் என்றது -விசேஷ அபிமானம் குலைவதையே சொல்லிற்று
அந்தர்யாமித்வம் -வியாபகம் பொது -அது குலையாதே
சேஷ சேஷி பாவ ரூப சம்பந்தம் -உயிர்கள் எல்லாம் அரங்கனுக்கு -ஆச்சார்யரால் உணர்த்தப்பட்டது
ததீய சேஷத்வ பர்யந்தமாக ஆக வேண்டுமே அது நிலைக்க –
ஆச்சார்ய பக்தி இல்லை என்றால் தத் சேஷத்வமும் நிலை நிற்காதே –
சம்பந்தம் தெரிந்து கொண்டால் தானே மோக்ஷம் -உஜ்ஜீவனம் —
அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின் மறந்திலேன் -ஞான ஜென்மம் –
பேயாழ்வார் சம்பந்தம் அடியாக திரு மழிசை ஆழ்வாரும் இவர் அடியாக கணி கண்ணனும் பெற்றார்கள்
சத்தா ப்ரயுக்தம் மோக்ஷ ஹேது இல்லை-அறிய வேண்டுமே – -அறிந்து கொள்ள தேவை ஆச்சார்யர் வேண்டுமே –
இது குலைந்தால் -நிமித்தம் போனால்- நைமித்திகமும் போகுமே –
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -ஆழ்வார்
இவர் நண்ணாரவர்கள் திரு நாடு-என்கிறார்
ராமானுஜர் அவதரித்த பின்பு நாம் நாதர் உடையவரானோமே
ஆச்சார்ய சம்பந்தம் ஸ்திரமாக இருக்க வேண்டும் என்று அன்றோ
மா முனிகள் இப்படி வலி உறுத்தி அருளிச் செய்கிறார் )

(காஞ்சி ஸ்வாமி -இப்பாட்டில் எழுவாய் அம்புயை கோன் –
அன்பு தன் பால் செய்தாலும் -அம்புயை கோனில் அந்வயிக்கும் –
அதே போல் தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார் –
சேர்த்து -மா முனிகள் பால் அன்பு இல்லாவிட்டால் –
மா முனிகள் வாக்கால் வர அவன் பிரயோகம் இப்படி அருளினான் –
மற்றது எல்லாம் காற்றிலும் நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை –
தேவி மற்று அறியேன் குருகூர் நம்பி
மாறனை மிக்குமோர் தேவும் உளதோ –
மால் தனை என்றே நான் கொண்டேன் -என்பாராம் -அவர் திரு வாக்கால் வரும்படி சங்கல்பம்
அம்புஜ நாயகனான தேவ நாதன் -திரு வயிந்த்ர புரத்தில் உபந்யசித்தாராம் –
அம்புஜ வல்லித் தாயார் -ஹேமாப்ய நாயகி
ஓர் ஒருவர் உண்டாகில் -மா முனிகள் போல் என்று இங்கே முன்பே பார்த்தோம் )

—————————————–

ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூ க்திகளைக் கொண்டே உபதேச ரத்ன மாலையும் அருளிச் செய்கிறார் –
பூர்வாச்சார்யர்களின் உபதேச ரத்னங்களைக் கொண்டே என்றும் கொள்ளலாம்

இனி-
கேவல சதாச்சார்ய சம்பந்தத்தாலே
ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே
ஸ்ரீ வைகுண்டத்தை தந்து அருளும் என்கிறார் –
(கேவல -மட்டுமே -தப்பாக மட்டம் என்று உபயோகம்
இது ஒன்றே போதும்
ஆச்சார்ய சம்பந்தம் வந்த பின்பு ஆத்மகுணங்கள் வளர்ந்து மேலே மேலே உஜ்ஜீவனம் அடைவோம் )

இப்பாட்டுத் தான் -இப் பிரபந்ததுக்கு எல்லாம் -உயிர் பாட்டு இறே –
(கீழும் அம்புயை கோன் -இங்கும் திரு மா மகள் கொழுநன்-ஸ்ரீ சம்பந்தம்
நீயும் திரு மாலால் நெஞ்சம் கோள் பட்டாயே
பேறும் இழவும் -திருமால் -எங்கும் திருமால் அன்று இன்மை கண்டு )

ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய
னான குருவை அடைந்தக்கால் -மா நிலத்தீர்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும் –61-

அடைந்தக்கால்-துர்லபம் -திருவடி -பக்ஷிகள் -கடகர்
தானே -வேறே ஸஹ காரி வேண்டாமால் -ஸ்ரீயப்பதி தானே -தன்னாலே -இவரே ஆச்சார்யர் -நான்கு அர்த்தங்கள் –

(திரு மா மகள் கொழுநன்-தானே குருவாக இருந்து வைகுந்தம் தரும்
ஆச்சார்யர் அந்தராத்மாவும் அவனே –சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் கச்சதி -என்றும்
ஸஸ்த்ர பாணிநா -என்றுமாம்
அக்னி ஸூர்யன் சப்தமே அவனை குறிக்கும்
பவக் கடலை உறிஞ்சி -முன்னே கூட்டிச் செல்லும் -அவன் அன்றோ –
குரு -சொல்லே அவனைக் குறிக்கும் -கு அந்தகாரம் ரு தன் நிவாரஹம்-
தாமரையாள் கேள்வனையே நோக்கும் உணர்வு
ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய
னான குரு-ரஹஸ்ய த்ரயம் அறிந்து அனுஷ்ட்டித்து –
சேஷ சேஷி பாவம் அறிந்து உபாய உபேய பாவம் அறிந்து -திருமந்திரமும் சரம ஸ்லோகமும் அறிந்து –
சரணாகதி அனுஷ்டானம் செய்து -த்வய நிஷ்டர் )

ஞானம் பரம்
தத் உசித ஆசாரண்யஞ்ச யஸ்ய
தஸ்மிந் குரோவ் பரமபக்தி ஜூஷே ஜனா
பவ்மா
ஸ்வயம்
மது ரஸா விலாய பத்ம ஜாயா காந்தன்
கருணயா
நிஜ தாமம் தத்தே

ஞானம் அனுட்டானம் –
ஞானமாவது-
உபாய அத்யாவசாய ரூபமாயும்
உபேய த்வரா விஷயமாயும் -உண்டான அறிவு

(பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும்
பேற்றுக்குத் த்வரிக்கையும்
சம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிற
ப்ரஞ்ஞா அவஸ்தைகளுக்கு தோழி தாயார் மகள் என்று பெயர் -133-
உபாய விஷயத்தில் ஞானமும் உபேய விஷயத்தில் அனுஷ்டானமும் –
என் பணி எது என்னாதே அது ஆட்ச்செய்வதே )

அனுட்டானமாவது –
தத் அனுகுணமாக
அலர்மேல் மங்கை உறை மார்பா யுன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -(6-10-19)–என்றும்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நான் என்றும் -(3-3-1-)
நாயேன் வந்தடைந்தேன் நல்கி யாள் என்னைக் கொண்டு அருளே-(1-9-1-) -என்றும்
சொல்லப் படுகிற உபாய உபேய அனுஷ்டானம் -என்கை –
(உபாய அனுஷ்டானம் உபேய அனுஷ்டானம் இரண்டுக்கும் இரண்டு நம்மாழ்வார் -ஒரே பாசுரம் கலியன் )

இதுவே இறே வாக்ய த்வயத்தில் பிரதிபாதிக்கிறது –
ஆகையால் ஷட் பத நிஷ்டனான சதாச்சார்யனை இறே இங்கு
சமாஸ்ரயணீயனாக அருளிச் செய்கிறது –
(அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை )
இவனுக்காகத் தான் உபாய அனுஷ்டானம் பண்ணி
ரஷிக்க வல்ல மகா பாகவதன் ஆக வேணும் இறே –

(உடையவர் என்று நேராக அருளிச் செய்யாமல் -இவ்வாறு அருளிச் செய்கிறார்கள்
உகந்து அருளின நிலங்களில் ப்ராவண்யம் -திருவரங்கத்தை திரு உள்ளத்தில் கொண்டே
இவ்வாறு அருளிச் செய்கிறார்கள்
இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே நற்றாதை சொம்புதல்வர்
தம்மதன்றோ தாயமுறை தான் -ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம்—60-

காலத்ரயேபி கரணத்ரய நிர்மிதாதி
பாப க்ரியஸ்ய ஸரணம் ப4க3வத் ஷமைவ |
ஸா ச த்வயைவ கமலா ரமணே அர்தி2தா யத்
க்ஷேமஸ்ஸ ஏவ ஹி யதீந்த்3ர! ப4வஸ் ஆஸ்ரிதாநாம் ||-ஸ்ரீ யதிராஜ விம்சதி)

இவை-
இவை யன்றே நல்ல இவை அன்றே தீய இவை என்றிவை அறிவேனேலும் -(பெரிய திருவந்தாதி )-என்கிறபடி
சத் அசத் விவேக பரிகரமான-ஞானம் என்றத்தாலே
விடுமவற்றை விட்டு
பற்றுமவற்றைப் பற்றியும் போருகிற-
த்யாஜ்ய உபாதேய ரூபமாய் இருக்கிற அனுஷ்டானங்கள்
என்கிற இவை யாகவுமாம்-
(ஞானம் அனுஷ்டானம் ஒருமை இவை பன்மை –
ஆகவே சத் அஸத் விவேக ஞானத்தால் த்யாஜ்ய உபாதேய அனுஷ்டானங்களை இவை என்கிறார்
போதரிக்கண்ணினாய் ஞானமும் நா உடையாய் அனுஷ்டானமும் போல் )

ஆச்சார்யனுக்கு அடையாளம் –
அறிவும் அனுஷ்டானமும் -என்றும்
விலஷணர் யுடைய ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சையும் -என்று இறே
ஆச்சார்யர்கள் அருளிச் செய்தது –

ஸ்வ ஞானம்
பிராபக ஞானம்
ப்ராப்ய ஞானம்
முமுஷூபி ஞான த்ரயம் உபாதேயம் (ஏதத் அந்யத் ந கிஞ்சன)-என்னும்படி
(அர்த்த பஞ்சகத்தை சுருக்கி த்ரய ஞான ஸ்லோகம் இது
பஞ்சீ கரணத்தை த்ரயீவக் கரணம்-தேஜோ பன்னங்கள் பிருத்வி அப்பு தேஜஸ்ஸூ மூன்றையும் சுருக்கிச் சொல்வது போல்
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்திலும் பர வ்யூஹ விபவம் ஸ்பஷ்டம் –
அந்தர்யாமியை பரத்வத்திலும் அர்ச்சையை விபவத்தில் சுருக்கி -இதுவும் ஐந்தை மூன்றாக சொல்வது )

ஸ்வ ரூப அனுரூபமான உபாய உபேய விஷய ஞானம் –
இப்படி த்வ்யார்த்த பிரதிபாதகமான
ஸ்ரீ வசன பூஷணத்தின் யுடைய ஞான அனுஷ்டானங்களை —

(ஆத்ம ஸ்வரூபம் சேஷத்வம் பாரதந்தர்யம் அறியவே ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியும் ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தியும் ஏற்படுமே
இதுவே உபாய உபேய ஞானம் -இதுவே த்வயார்த்தம் -பூர்வ வாக்யமுயம் உத்தர வாக்கியமும் –
ஞானம் -ஒரே வார்த்தை -விளக்கி -த்வயத்தில் கோத்து –
ஸ்ரீ வசன பூஷண தாத்பர்யத்தோடே சேர்த்து அருளுவது அழகு )

நன்றாகவே யுடையனான குருவை –
இவற்றால் பரி பூர்ணனாய் இருப்பான் ஒரு பரம சத்வ நிஷ்டனை
ஆஸ்ரயித்தால் ஆயத்து கார்ய கரமாவது
இவற்றில் ஓன்று குறையிலும் ஆஸ்ரயிக்கும் அவனுக்கு அந்த ஆஸ்ரயண பலம் தலைக் கட்டாது
காட்டுத் தீ சூழ்ந்த விடத்து அந்தனும் பங்குவும் ( குருடனும் நொண்டியும் ) கூடி இருந்தால்
அப்ரயோஜனமாகவே இறே இருப்பது
சஷூஷ் மானுமாய் சரணவானுமாய் இருப்பான் ஒருவனாலே இறே அத்தைத் தப்பிப் பிழைக்கல் ஆவது –
ஆகையால் அனுஷ்டான ஹீனமான ஞானமும் ஞான ஹீனமான அனுஷ்டானமும் அகிஞ்சித்கரம் இறே

(கண் -ஞானம் கால் அனுஷ்டானம் -சம்சாரம் காட்டுத் தீ-ஆகவே இந்த த்ருஷ்டாந்தம்
பாவாடவி வர்ணனம் ஸ்ரீ மத் பாகவதத்தில் பெரிய அத்யாயம் உண்டே -அடவி காடு -சம்சாரம் என்னும் காடு –
சமஷ்டி ஸ்ருஷ்ட்டி -கர்மம் அடியாக இல்லையே -வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி கர்மம் அடியாகவே -இப்படி இரண்டும் போல்
நம் ஆச்சார்யர் உபகார ஆச்சார்யர் -அவர் கொண்டு போய் உத்தாரக ஆச்சார்யர் இடம் சேர்க்க
அவருக்கு ஞானம் அனுஷ்டானம் நன்றாகவே இருப்பதால் அது கார்யகரம் ஆகுமே
அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்குவார் -இல்லாதார்க்கு அன்றோ நீர் இரங்க வேண்டும் – )

ஞான ஹீனம் குரும் பிராப்ய -என்று தொடங்கி –
யதாபாரம் ந கச்சதி -என்னக் கடவது இறே –
கண்ணும் காலும் உண்டானால் இறே ஒருவனைக் கரை ஏற்றலாவது-
அந்த அநந்த க்ரஹண வசக -இத்யாதி –
(குருடன் கண் தெரிந்தவன் வசம் இருந்தால் தானே தாண்ட முடியும் )
தன்னை அக்கரை ஏற்ற வல்ல ஞானாதி பரி பூர்ணனாய் இருப்பான் ஒருவன் என்று இறே
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்ததும் –
ஆகையால் அசங்குசித ஞான அனுஷ்டானங்களை யுடையவர்களை ஆய்த்து ஆச்சார்யர்களாக ஆஸ்ரயிப்பது-

(விஷ்ணு போதம் -சர்வம் ஞானம் ப்லவம் படகு-ஸ்ரீ கீதை – -அவன் திருவடியே-ஆச்சார்யர் – அவனை அடைவிக்கும் )

குருவை அடைந்தக்கால் –
அஞ்ஞான நிவர்த்தகனாய் ஆசார பிரவர்த்தகனாய் (அனுஷ்டான பிரவர்த்தகனாய்) இருக்கிற ஆச்சார்யனை
உபாய யுபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் -என்கிறபடியே
தனக்கு பிராப்யனாயும் பிராபகனாயும் அத்யவசித்து ஆஸ்ரயித்தக்கால் —
(கு சப்த அந்தகார வாசக ரு தத் நிவாரகத்வம்
குரு -பெரிய லகு சிறிய
தமேவ -இங்கு -மாம் ஏகம் அங்கு -கீதாச்சார்யன் -ஈஸ்வரன் தானும் ஆச்சார்ய பீடம் ஆசைப்பட்டு மேற் கொண்டான் அன்றோ
அடைவது -திடமான உறுதியான விஸ்வாசத்துடன் ஆஸ்ரயப்யதே )

அடைந்தக்கால் –
நெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போல
அஞ்சினான் புகலிடம் ஆன ஆச்சார்ய அபிமானத்தை
(அசைலம் -அஞ்சினான் புகலிடம்
சம்சாரம் கண்டு அஞ்சி ஈஸ்வரனைப் பற்ற –
ஈஸ்வரன் ஸ்வா தந்தர்யம் பற்றி அஞ்சினால் ஆச்சார்யரைப் பற்ற வேண்டுமே
நிவாஸ வ்ருஷ ஸாதூ நாம் )
(ஆச்சார்ய அபிமானத்தை ஆச்சார்யருடைய ப்ரஸாதத்தாலே ) அவன் பிரசாதத்தால் பிராபிக்கப் பெற்றால் –
தங்களுக்காக சரண வரணம் பண்ணி ரஷிக்கும் அவனை தாங்கள் சரணமாக அடைந்தக்கால் –
(ஸ்வகத ஸ்வீ காரம் கூடாதே -ஆகவே அடைந்தக்கால் -பரகத ஸ்வீ காரத்தையே கொள்ள வேண்டும் )

குருவை அடைந்தக்கால் –
குருரேவ பரம் ப்ரஹ்மம்-என்றும்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -என்றும் சொல்லுகிறபடியே
குருதரனான குருவை ஆஸ்ரயித்தக்கால்-
(குருவே ப்ரஹ்மம் -ப்ரஹ்மமே குரு -இரண்டுக்கும் இரண்டு பிரமாணங்கள் )

இப்படி அலாப்ய லாபமானது லபிக்கப் பெற்றால்
அந்த ஆஸ்ரயண ராஜ குல மகாத்ம்யத்தாலே ( ப்ரபந்ந குல மஹாத்ம்யம் -அரசு இளம் குமரன் போல் )
ஸ்ரீ யபதியானவன் ஸ்வ பிராப்தியைப் பண்ணிக் கொடுக்கும் –

அடைந்தக்கால் மா நிலத்தீர் –
பசு மனுஷ்ய பக்ஷி வா ஏச வைஷ்ணவ சம்ஸ்ரயா -(சாண்டில்ய ஸ்ம்ருதி )-என்கிறபடியே
அவனுடைய அபிமானத்திலே அந்தர்பாவத்தை யுடையார் ஆனக்கால் –

மா நிலத்தீர் –
மகா பிருத்வியில் உள்ளவர்களே
ஞாலத்தார் தமக்கும் வானத்தவருக்கும் பெருமான்-(திருவாய்-3-5-8-)-என்கிறபடியே
(ஞாலத்தார்-படு கரணன் பக்கலில் தாய் அபிமானம் மிக்கு இருக்குமே -ஆகவே முதலில் இது )
அவனோடு யுண்டான அவர்ஜ நீய சம்பந்தம் யுடையவர்கள் ஆகையாலே உங்களை விட மாட்டுகிறிலன்
ஞாலத்தார் பந்த புத்தியும் -என்று இறே அருளிச் செய்தது –
(ஈஸ்வர பந்தத்தை இங்கே சொல்கிறது -சம்சார பந்தத்தை அல்ல )
இப்படி பிரதிபத்தியிலும் அதி ஸூலபமான உபாயத்தை இறே நாம் உங்களுக்கு விதிக்கிறது-

(நண்ணாதார் மெய்யிலூன் ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய அமா நித்வாதிகள் விஞ்சின
ப்ரணிபாத அபிவாதன பரிப்ப்ரஸ்ன சேவா பரர்க்கு உளம் கொள் பேசும் அளவன்று என்னும் அர்த்தத்தை
வம்மின் விரோதம் ஈனச் சொல் எவ் உயிர்க்கும் அறிய என்று அடைவு கெட அதபஸ்கர்க்கு உபதேசிக்கிறது
1-ஞாலத்தார் பந்த புத்தியும்
2-அனர்த்தமும் கண்டு ஆற்றாமையும்
3-மிக்க கிருபையும் இறே-சூரணை -203-
1-ஞாலத்தார் பந்த புத்தியும்–ஞாலத்தார் அவர்க்கும் வானத்தவர்க்கும் பெருமான்–திருவாய்-4-5-8- -என்று
நித்ய விபூதியில் உள்ளவோர்பாதி லீலா விபூதியில் உள்ளோர்க்கும் அவனுடைய சம்பந்தம் ஒத்து இருக்க –
இவர்கள் அவனை இழந்து கிடக்க ஒண்ணாது என்கிற சம்பந்த ஞானமும் )

ஆனால் நீர் சொன்னபடி அடைந்தால் ஆவது என் என்னில் –
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் –
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே-குருவாகையாலே-தத் ஆஸ்ரயணத்துக்கு
தேனைவதே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்கிறபடியே
அந்தத் திரு மா மகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் -என்கிறார் –
(தேனைவதே-அந்த ஆச்சார்யர் பலத்தால் -தானே குருவான படியால் -நாம் அடைந்தக்கால் -தானே தரும் )

திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-(10-8-1-) -என்றும்
(நின்றவன் படுத்தவன் இங்கு வந்து இருந்தான் )
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -(பெரியாழ்வார் -5-2-10-)-என்றும் சொல்லுகிறபடி
இவன் இடத்திலே -என்னுள்ளம் மாலுக்கு இடம் -என்னும் படி
விசிஷ்ட அதிஷ்டானமாக எழுந்து அருளி இருக்கையாலே அவன் தானே என்று சொல்லலாம் இறே
ஆச்சார்யனைப் பற்றுகை காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோ பாதி -என்று இறே அருளிச் செய்தது –

(விசிஷ்ட அதிஷ்டானமாக-லஷ்மீ விசிஷ்டனாக -பிராட்டி உடன் கூட நம் உள்ளத்தை இருப்பிடமாக கொண்டான் -அது போலவே
தானே குருவாக அதிஷ்டானமாக -தேர்ந்து எடுத்துக் கொள்வான் -திருவடியைப் பற்றிக் கார்யம் கொள்ளுமா பாதி தானே )

இப்படி அவிநாபாவமுமாய்-அநதிக்ரமண (பிரிக்க முடியாததாயும் -உதற முடியாத காரணத்தாலும் )
ஹேதுவாயுமாய் இருக்கிற இவ் உபாயத்தாலே
தேனார் மலர் மேல் திருமங்கை -(பெரியாழ்வார்-1-3-7 )-என்னும் படியான
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன்
அவள் சார்வான ஸ்ரீ ஆச்சார்ய அபிமான நிஷ்டருக்கு பலம் கொடுப்பது அவளுக்கு உகப்பாகையாலே

(பூ மேல் திரு -நமக்கு என்னும் சார்வு -பேயாழ்வார்
த்வயம் பிராட்டியாலே பேறு சொல்லுமே
மஹரீஷீணாம் ஸூக வாஹனம் -அணைத்துக் கொண்டது போல் )

யஸ்யா வீஷ்ய முகம் (ஸ்ரீ ஸ்தவம் -கூரத்தாழ்வான் )-என்று அவள் முக மலர்த்திக்காக
கேவலம் சமபந்தம் மாத்ரமே பற்றாசாகக் கொண்டு தானே மேலே விழுந்து
ஸ்ரீ வைகுண்டத்தைத் தந்து அருளும் –
ஸ்வயமேவ பரந்தாமா ஸ்வயம் நயதி மாதவ -என்னுமா போலே —

(அவ்வானவருக்கு மவ்வானவர் –உவ்வானவர் உடைமை என்று உரைத்தார் –
பெரிய பிராட்டியார் பரிகரம் ஆச்சார்யர் )

தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் –
தன்னோட்டை சேர்த்தியாலே
மது சம்ருதியை யுடைத்தான தாமரைப் பூவை தனக்கு வாசஸ் ஸ்தானமாக யுடையாளாய்
ஸ்ரீ என்று திரு நாமத்தை யுடையாளாய் ஸ்ரீ பெரிய பிராட்டியார்
தனக்கு வல்லபனான அவனை வசீகரித்து
ஸ்வ சம்பந்தம் அடியாக யுண்டான கடகத்வத்தை யுடைய ஸ்ரீ ஆசார்யனை ஆஸ்ரயித்தவர்களுக்கு
பல சித்தியை பண்ணுவிக்குமவள் ஆகையாலே ( கொடுக்க வைப்பவள் தானே பிராட்டி )
அவளுடைய பிரீதிக்காக தான் ஏறிட்டுக் கொண்டு
உபாய நிரபேஷனாய்-
அஹம் மோஷயிஷ்யாமி -என்கிறபடியே –
திரு மா மகள் கொழுநன் தானே –
திருமால் வைகுந்தம் -( 10-7-8 )-என்று சொல்லப் படுகிற
தன்னதான ஸ்ரீ வைகுண்ட வான் போகத்தை தந்து அருளும் —

(கொடுப்பதைக் கொடுத்தால் தானே கொடுப்பான் -லௌகிக விஷயம் போல் )

வைகுந்தம் தரும் –
வீடும் தரும் நின்று நின்றே -( திருவாய் -3-9-9 )-என்கிறபடியே இருவருமான சேர்த்தியிலே
நித்ய கைங்கர்ய நிரதனாய் வாழும் படியான பேற்றைப் பண்ணிக் கொடுத்து அருளும் –
இதில் சம்சயம் இல்லை —

இப்பாட்டுத் தான் -இப் பிரபந்ததுக்கு எல்லாம் -உயிர் பாட்டு இறே –

ஆக இத்தால் –
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்னும் அர்த்தம் சொல்லிற்று ஆய்த்து –

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

உபதேச ரத்னமாலை –பாசுரம் -53/54/55/56/57- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

July 26, 2014

இப்பிரபந்த ஆரம்பத்திலே –
தாழ்வாதுமில் குரவர்-என்றும்
அவர்கள் உரைத்தவர்கள் -(3 )-என்றும் –
ஏதத் விவரணமான-ஆழ்வார்கள் ஏற்றம் -என்கிற-( 34 ) பாட்டிலே
அவர்கள் செய்த வியாக்கியைகள் உள்ளது எல்லாம் -என்றும் அருளிச் செய்தவற்றில்

சேஷமானதான ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் உடைய வைபவத்தையும்
அவராலே அருளிச் செய்யப் பட்டதாய்
ஸ்ரீ வகுள பூஷண சாஸ்திர சாரம் -என்றும் –
சாங்காகில திராவிட சம்ஸ்க்ருத ரூப வேதவ் சாரார்த்த சங்க்ரஹம் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ திருவாய்மொழி யினுடையவும்
மற்றை அருளிச் செயலினுடையவும் அர்த்தத்தை பிரதி பாதிக்குமதாய்
பூர்வோக்தமான அருளிச் செயல்களின் வியாக்யான அர்த்தங்களையும் பொதிந்து கொண்டு இருப்பதாய்-

அது தான் ஸ்ரீ பகவத் அபிப்ராயம் என்னுமது தோற்ற
ஸ்ரீ பகவத் அவதார விசேஷமான அவராலே அருளிச் செய்யப் பட்டதுமாய்
ச க்ரமமாக த்வ்யார்த்த பிரதிபாதகமுமாய்
சரம பர்வ நிஷ்டையை முடிவாம்படி
அத்தை முடி போலே யுடையதுமாய்-அத்தாலே அ சத்ருசமாய் இருப்பதுமான
ஸ்ரீ வசன பூஷணத்தின் உடைய வைபவத்தையும் பஹூ முகமாக அருளிச் செய்வாரான இவர்

சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத
சாரார்த்த ஸங்க்ரஹ மஹா ரசா வாக்ய ஜாதம்
சர்வஜ்ஞ லோக குரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
அகுண்ட உத்கண்ட வைகுண்ட கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்–ஸ்ரீ வசன பூஷண தனியன்

புருஷகார வைபவஞ்ச சாதனசஸ்ய கௌ ரவம்
தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய சத்குரு உபசேவனம்
ஹரிதயாம் அஹேதுகீம் குரோர் உபாயதாஞ்ச யோ
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே–ஸ்ரீ வசன பூஷண தனியன்

இப்பாட்டில்-
இப்படி ஸ்ரீ லோகாச்சார்யர் என்று லோக பிரசித்தரான இவர்
லோக உஜ்ஜீவன அர்த்தமாக
தம்முடைய கிருபையாலே செய்து அருளின )அஷ்டாதச ) ரஹஸ்ய பிரபந்தங்களில் காட்டில்
ஸ்ரீ வசன பூஷணத்துக்கு யுண்டான சீர்மையை அருளிச் செய்கிறார் –

(ஏழு பாசுரங்களால் சீர்மையும் அடுத்து பத்து பாசுரங்களால் சாரமும் அருளிச் செய்கிறார் )

அன்ன புகழ் முடும்பை யண்ணல் உலகாரியன்
இன்னருளால் செய்த கலை யாவையிலும் -உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை யொன்றுக்கு இல்லை
புகழ் அல்ல இவ் வார்த்தை மெய் யிப்போது–53-

யண்ணல்-ஸ்ரேஷ்டர் -ஸ்வாமி –
கலை-ஸாஸ்த்ரங்கள்
திராவிட வேத ஸாஸ்த்ரமான திருவாய் மொழி சாரம் -ரஹஸ்ய வேத சாஸ்திரமே ஸ்ரீ வசன பூஷணம்

கோ வா பிரபந்த
இஹ லோக குரு பிரபந்த
சாத்ருச மேவ சகலேஷு
வாங் மயேஷு
தத்ராபி கிம்
வசன பூஷண துல்யம் அந்யத்
இதம் வசனம் சத்யம்
ந மித்யா

அன்ன புகழ் முடும்பை யண்ணல் உலகாரியன் –
தஸ்ய நாம மஹத்யச-என்கிறபடியே திரு நாமம் அடியாக வந்ததாய் இருப்பதான
எண்ணிறந்த யசஸை யுடையராய் –
ஸ்ரீ முடும்பை இறைவன் -என்னும் படி
ஸ்ரீ முடும்பை என்னும் மகா நகரத்துக்கு நிர்வாஹகரான ஸ்ரீ லோகாச்சார்யர் –

(ராஜ மந்திரி அருகில் முடும்பை கிராமம் உள்ளது
கந்தாடை என்றும் விஞ்சி மூரி என்ற கிராமமும் ஆந்திராவில் உள்ளதாம்
விஜய நகர சாம்ராஜ்யம் தான் புனர் நிர்மாணம்
ஹரிஹரர் புக்கர் தொடங்கி கிருஷ்ண தேவ ராயர்
நிறைய இடங்களை அந்தணர்களுக்கு கொடுத்து -இக்குடும்பத்தார் அங்கு போய் இருந்து இருக்கலாம் )

அன்றிக்கே –
ஸ்ரீ முடும்பை உலகாரியனான அண்ணல் -என்னுதல் –
ஸ்ரீ முடும்பை -குடிப்பேர்
கீழே ஸ்ரீ ஈயுண்ணி மாதவர் -என்றாப் போலே
இவரையும் – ஸ்ரீ முடும்பை உலகாரியன் -என்கிறது –
ஜ்ஞாநாதிகர் யுடைய சம்பந்தம் உள்ளது அடங்கலும் அடிக் கழஞ்சு பெற்று இருக்கும் இறே –
(சிறியாழ்வான் அப்பிள்ளையே ஈயுண்ணி மாதவர் )

உலகாரியன் -இன்னருளால் செய்த கலை யாவையிலும் –
இவர் அபேஷா நிரபேஷமாக தம்முடைய அஹேதுகமான கிருபையாலே யாய்த்து
அசேஷ திவ்ய பிரபந்தங்களையும் அருளிச் செய்தது
அண்ணலான முறையாலே இறே இவற்றை இன்னருளாலே செய்து போந்தது –
அவை தான் அநேகங்கள் ஆகையாலே-யாவை -என்னும் அத்தனை –

யாவையிலும் என்றதுக்கு
இப்படி அருளிச் செய்த அசேஷ ரஹஸ்யங்களிலும் வைத்துக் கொண்டு
ஒரு ரஹஸ்யத்துக்கும்-

உன்னில் –
நன்றாக ஆராய்ந்து நிரூபிக்கில் –

திகழ் வசன பூடணத்தின் சீர்மை யொன்றுக்கு இல்லை –
அத் யுஜ்வலமான ஸ்ரீ வசன பூஷணத்தின் உடைய கௌரவம் ஒன்றுக்கும் இல்லை –
அவை பல என்னும் காட்டில்-அவற்றில் ஓன்று தான் அர்த்த பூர்த்தியை யுடைத்தான
இதனுடைய பெருமைக்கு ஒப்பாக வல்லதோ –

அதாவது
ஆர்ஷ வசனங்களான அத்யாத்ம சாஸ்த்ரங்களில் காட்டில்
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஸ்ரீ ஆழ்வார்கள் அருளிச் செயல் மேலாய்
அத்தைக் காட்டிலும்
ஸ்ரீ ஆழ்வார்கள் அருள் பெற்று அவர்கள் அருளிச் செயலில் தாத்பர்யங்களை
வெளியிடுகிற ஸ்ரீ ஆச்சார்யர்கள் திவ்ய ஸூக்திகள் மேலாய்
அவற்றைக் காட்டிலும்
ஸ்ரீ ஆச்சார்யர்கள் அருளை யுடைய இவருடைய மந்தராக்ரயமான திவ்ய ஸூக்திகளாய் உள்ள
அசேஷ ஸ்ரீ ரஹஸ்யங்களும் மேலாய்
அவற்றில் காட்டிலும்
அதிசய அர்த்த கௌரவத்தை யுடைத்தாய் இதிஹாச ஸ்ரேஷ்ட இத்யாதிப் படியே
கீழ் உக்தமான அர்த்தங்களையும் பிரகாசிப்பித்துக் கொண்டு இருக்கையாலே
வந்த பெருமையை யுடைத்தாகையாலே
ஸ்ரீ வசன பூஷணம் ஸ்வ பிரபந்தங்கள் பர பிரபந்தங்கள் எல்லாவற்றிலும் அதிசயிதமாய் இருக்கத் தட்டில்லை –

(இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது-ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -5-)

ஆகையாலே இறே இவர் இப்படி அ சத்ருசமாக அருளிச் செய்தது –
ஸ்ரீ ஆச்சார்யர்கள் திவ்ய ஸூக்திகளில் காட்டிலும் இவர் திவ்ய பிரபந்தங்கள் அதிசயிதமாய் இருக்கிறது
இவற்றைக் கொண்டே அவற்றின் தாத்பர்யம் அறிய வேண்டுகையாலே –

புகழ் அல்ல இவ் வார்த்தை –
புகழ் வில்லை -என்னுமா போலே இப் பிரபந்தத்தை விசேஷமாக சொல்லுகிற இவ் வார்த்தை
கேவலம் அர்த்த வாதமாய் ஸ்துதி பரமாய்
இருப்பது ஓன்று அன்று –

மெய் யிப்போது-
இப்போது இதன் வைலஷண்யத்தை நிரூபித்துச் சொல்லுகிற இப் பிரபந்த விஷயமான வார்த்தை சத்தியமே –
இவர் தாம் பொய் இல்லாதவர் ஆகையாலே
மெய் இப்போது -என்று இவ் வர்த்தத்தின் உடைய ஆப்திக்கு உடலாக சத்யம் பண்ணி சாதித்து அருளுகிறார் –

ஸ்ரீ வசன பூஷணத்தின் சீர்மை ஒன்றுக்கு இல்லை என்கிற வார்த்தை
மெய் – சத்யம் சத்யம் -என்னுமா போலே –

இத்தால்
இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் பல என்னுமதுவும்
அவற்றிலும்
ஸ்ரீ வசன பூஷணம் அ சத்ருசமான வைபவத்தை யுடையது என்னுமதுவும்
த்யோதிக்கப் பட்டது –

—————————————-

ஏவம் வித வைலஷண்யத்தை யுடைய இப்பிரபந்ததுக்கு
வக்தாவானவர் தாமே
தத் அனுகுணமாக
திருநாமம் சாத்தின படியை அருளிச் செய்கிறார் –
(காரணப்பெயர் என்னலாம் படி திரு நாமம் சாத்தி அருளினார் என்றபடி )

(திரு சேர்த்தே -திரு வாராதனம் -ஸ்ரீ குண ரத்ன கோஸம் -ஸ்ரீ வசன பூஷணம்
டன் வந்தான் கதை -திருவரங்க சுத்தி மொத்தமும் களவு -திரு வேண்டாம் சொன்னதால் மொத்த திருவும் போனதே )

(ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -அளியல் நம் பையல் என்ன –
இது ஒன்றே மோக்ஷ ஏக ஹேது -ஆகவே ஏவ காரம் –
அவனது அபிமானம் மோக்ஷம் பந்தம் இரண்டுக்கும் ஹேது ஆகுமே
உலக விஷய தோஷ தர்சனம் -பகவத் விஷயத்தில் எளிதாக மூட்டும்
இங்கு பகவத் ஸ்வா தந்தர்யம் அறிந்து ஆச்சார்யரைப் பற்றுவது அடுத்த படி
அதுக்கும் மேலே ஆச்சார்யர் நம் மேல் வைக்கும் அபிமானம் –
மக்நான் -உத்தாரதே -ஏக காரணம் -ஸஸ்த்ர பாணிநா -அவனே ஆச்சர்யராக -திரு அவதாரம் -)

(ஸ்ரீ வசன பூஷணம் -மணி மகுட வியாக்கியானங்கள் மா முனிகள் அருளிச் செய்து –
இங்கு 53–59-பாசுரங்களால் அதன் மகிமையையும்
மேலே எல்லா பாசுரங்களாலும் அதன் சாரமும் அருளிச் செய்கிறார் –
அப்ரதிம வைபவம் -53-
இப்பிரபந்த திருநாமம் வந்த ஹேது –54-
அதிகாரி துர்லபம் -55-
அர்த்த கிரஹணம் பண்ண நமக்கு உபதேசம் –56-
இந்த ஸ்ரேஷ்ட அர்த்தம் அறிந்து அதிகாரி துர்லம் ஆனதுக்கு ஹேது –57-
இதுக்கு வியாக்கியானங்கள் -பிரபந்த கர்த்தாவின் திரு உள்ளத்துக்கு பொருந்துமாறு இருந்தால் ஆதரணீயம் –58-
ஸ்வ பர போக்யமாக இருக்கும் பிரபந்தம் -59-)

முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு -மின் அணியாச்
சேரச் சமைத்து அவரே ஸ்ரீ வசன பூஷணம் என்
பேர் இக்கலைக்கு இட்டார் பின் –54-

(என் என்னு -பாட பேதங்கள்
சிர் -வைபவம் உடைய
மின் அணியாச் சேரச் சமைத்து அவரே-ஸ்ரீ வசன பூஷணமாக அருளிச் செய்து அருளிய
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யாரே -தாமே
ஆத்மாவுக்கு அன்றோ இப் பூஷணம்
ரத்னம் -வைரம் போல் -பூர்வர் ஸ்ரீ ஸூக்திகள்-அதுக்கு தங்கம் போல் இவரது ஸ்ரீ ஸூக்திகள் )

பிராதாம்
பிரபத்தி பதவீம் மயதாம்
குரு நாம் ரோஹிஷ்ணுநா
வசன ரத்ன கதம்ப கேந
ஏதாம் க்ருதிம்
ஹ்ருதய
புத ஆத்ம பூஷாம் -கற்றோர் -கல்வி தனில் ஆசை உள்ளோர் –
தத்தம் வரம் வசன பூஷண நாமதேயம் –

முன்னம் குரவோர் –
பூர்வ காலத்திலே-ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யாருக்கு அவ்வருகு உண்டானவர்களாய்
நமக்கு நாதரான ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் சர்வ ஆத்மாக்களுடையவும் ஹிதத்தைக் குறித்து
அருளிச் செய்த திவ்ய ஸூக்திகள் தன்னை
மிகவும் தத் பிரசுரமாம் படி ( பிராஸுர்யம் -நிறைந்து )
இதுக்கு ஆப்த பிரமாணமாக ( பிரம-உண்மை ஞானம் -கரணம் -கருவி ) அங்கீ கரித்து யாய்த்து
இவர் இத்தை பிரபந்தீ கரித்தது -என்கை –

மொழிந்த வசனங்கள் –
ஜ்ஞாதவ்யார்த்த பிரகாசகமாக அருளிச் செய்த திவ்ய வசனங்களை –
அவர்கள் தாம் பலர் ஆகையாலே
ஆப்திக்கு உடலான அவர்கள் வசனங்களும் பலவாய் இருக்கிறபடி –

வசனங்கள் தன்னை மிகக் கொண்டு –
தர்மஜ்ஞ்ஞஸ் சமய பிரமாணம் வேதாச்ச-(மனு ஸ்ம்ருதி ) -என்கிறபடியே
அல்லாத பிரமாணங்கள் அநேகங்கள் யுண்டாய் இருக்கவும்
அதில் அனுஷ்டாதாக்களான இவர்களுடைய
மந்தராக்ரயமான திவ்ய ஸூக்திகள் ஆகையாலே
அத்தை இதுக்கு முக்ய பிரமாணமாக அங்கீ கரித்து
அந்த வசன பிரசுரமாய் இறே இத்தை அருளிச் செய்து அருளிற்று

(மூதறியும் அம்மனைமார் -மேலையால் செய்வனகள் -செய்யாதன செய்யோம்
இதுவே முக்கியம் -வேதாஸ் ச -அதுவும் பிரமாணம் என்பர் இதுக்கு இரண்டாம் பக்ஷம் )

ரத்ன பூஷணம் சமைப்பார் பல ரத்னங்களை முந்துறச் சேர்த்துக் கொண்டு சமைக்குமா போலே
இவரும் வசன பூஷணம் சமைக்கிறவர் ஆகையாலே
அர்த்தவத்தான வசனங்களை மிகவும் கொண்டு கூட்டின படி –
ஸூ வ்யாஹதானி மஹதாம் ஸூஹ்ருதாநி ததச் சத
சஞ்சின் வந் தீர ஆஸீத சீலஹாரி சிலம்யதா-( பாரதம் )–என்னக் கடவது இறே –
(களத்து நெல்லைத் திரட்டி -பிரயத்தனம் -செய்து -கண்ணும் பருத்தாக சேகரிப்பது போல் தீரர்கள் )

இப்படி இவற்றைக் கொண்டு செய்கிறது ஆர்க்கு என்னில் –
கற்றோர் தம் உயிர்க்கு –
கற்றோர்க்கு வரிசை கொடுக்கைக்காக-
அதாவது
தங்களுக்கு ஹிதைஷிகளாய் இருக்கிற ஆச்சார்யர்களுடைய சந்நிதியாலே
ஜ்ஞாதவ்ய ( அறிய வேண்டிய )சகலார்த்தங்களையும் நன்றாக கேட்டு இருக்கிறவர்கள் உடைய ஸ்வரூபத்துக்கு
நின் திரு வெட்டு எழுத்தும் கற்று -(பெரிய திருமொழி – 8-10-3-)
அறியக் கற்று வல்லார் -(திருவாய் -5-5-11 )-என்னக் கடவது இறே
(கற்றோருக்கும் கல்வி தன்னில் ஆசை உடையோர்களுக்கும்
கற்றோர்க்கு இல்லாமல் கற்றோர் தம் உயிருக்கு -ஆத்மாவுக்கு தானே இது )

மின் அணியாச்-
ஏவம் விதரான அதிகாரிகள் உடைய ஸ்வரூப ஔஜ்வல்யத்தை
யுண்டாக்கும் படியான ஒளியை யுடைய பூஷணமாக –

உயிர்க்கு மின் அணியாச் –
அநித்தியமான உடலுக்கு பூஷணம் சமைப்பார் நடுவே
இவர்
நித்தியமான உயிர்க்கு பூஷணம் சமைத்தார் இறே –

உயிர்க்கு மின் அணியாச் –
கௌஸ்துபதுக்கும்-கௌஸ்துபம் -என்னலாம் படி இருக்கை
வைகுண்ட ப்ரிய கண்ட பூஷணமாய் இறே இருப்பது-

(குரு மா மணிப் பூ திகழும் திரு மார்பு –
ஸ்ரீ வத்சம்-அசித் -மச்சம் –
ஸ்ரீ கௌஸ்துபம் -ஜீவ பிரதிநிதி
நீல நாயக்கல் -கௌஸ்துப ஸ்வஸ்தி தீபம்
ரத்னத்துக்கு ரத்னம் இப்பிரபந்தம்-ஆபரணத்துக்கு ஆபரணம் இது
புருடன் மணி வரமாக )

சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத
சாரார்த்த ஸந்க்ரஹ மஹாரசா வாக்ய ஜாதம்
சர்வஞ லோக குரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
ஆகுண்ட உத்கண்ட வைகுண்ட கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்–(ஸ்ரீ வசன பூஷணம்-தனியன்-)

மின் அணியாச் சேரச் சமைத்து அவரே –
ஔஜ்வல்ய ரூபமான ஆபரணமாய் சேரும்படி என்னுதல் –
ஸ்வரூபத்துக்கு சேரும் படி -என்னுதல் –
கீழ்ச் சொன்ன வசனங்கள் எல்லாம் அன்யோன்யம் சந்தர்ப்பமாம் படி சமைத்தவரே பேரிட்டார்

சமைக்க -என்றது –
பண்ண -என்றபடி
ஆரஞ்சமைக்க -என்று இறே இவர்கள் சாதிப் பேச்சு இருப்பது –
(இவர்கள் -பொற் கொல்லர்கள் )

சமைத்தவரே ஸ்ரீ வசன பூஷணம் என் பேர் இக்கலைக்கு இட்டார் பின் –
அதாவது –
ஆபரண நிர்மாணகர் தாமே அந்த ஆபரணத்துக்கு அனுகுணமானதோர் அபிதானத்தை கற்ப்பிக்குமா போலே
வசன சந்தர்ப்ப ரூபமான வசன பூஷணத்தை நிர்மித்த அந்த ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தாமே
ஸ்ரீ வசன பூஷணம் என்கிற இந்த அதிசயமான திரு நாமத்தை
இந்தப் பிரபந்தத்துக்கு சாத்தி அருளினார் -என்கை –

(பாடின ஆழ்வார் பாட பாட்டுடைத்தலைவனே மிதுனமாக திருவாறன்விளையில் கேட்ட ஏற்றம் திருவாய் மொழி
வால்மீகி ராமாயணம் குசலவர்கள் பாட பெருமாள் மட்டும் கேட்டு -பாட்டுடைத்தலைவி கேட்க்காமல் போனதே )

பின் –
சேரச் சமைத்த பின் -என்னுதல்-
அந்த ரஹஸ்யங்களை அருளிச் செய்த பின் -என்னுதல் –

(காட்டு அழகிய சிங்கர் சந்நிதியில் இவர் கால ஷேபம் –
தேவப்பெருமாள் நியமனம் அடியாகவே பிரபந்தம் உருவானது )

அவரே பேரிட்டார் –
பிதா புத்ரஸ்ய நாம குர்யாத் -என்கிறபடியே
தமக்கு அதிசயமான திரு நாமத்தை தமப்பனார் (வடக்குத் திருவீதிப்பிள்ளை )ஆதரித்து சாத்தினாப் போலே
இத்தை ஈன்ற தாயான தாமும் அப்படியே இதுக்கு அதிசயமான திரு நாமத்தைச் சாத்தி அருளினார் ஆய்த்து –
இந்த பிரபந்தம் மூலமாக விறே
இவருடைய ஜ்ஞான சந்தானம் அவிச்சின்னமாய் நடந்து செல்லுகிறது –

(தம் அப்பனார் -அப்பா -அப்பன் -உபகாரகன் -தகப்பன் மருவிய சொல்
பிள்ளை லோகாச்சார்யார் -என்று ஆச்சார்யர் திரு நாமமே ப்ராஸூர்யம் ஆனது போல் இவரது இந்த ப்ரபந்தமும் -)

வசன பூஷணம் என் பேர் –
ரத்ன பிரசுரமான பூஷணத்தை ரத்ன பூஷணம் என்னுமா போலே
ஆச்சார்ய வசன பிரசுரமாய்
அனுசந்தாக்களுக்கு ஒஜ்வல்ய கரமாய் இருக்கையாலே
இதுக்கு ஸ்ரீ வசன பூஷணம் என்று திரு நாமம் ஆய்த்து
என்று ஸ்ரீ ஜீயர் தாமே இதன் வியாக்யான பிரவேசத்தில் அருளிச் செய்து அருளினார் இறே –

வசன பூஷணம் என் பேர் இக் கலைக்கு இட்டார் –
இந்த -ஸ்ரீ வசன பூஷண திவ்ய சாஸ்தரத்துக்கு –
இப்படி திவ்யமாய் இருப்பதொரு திரு நாமத்தை நிர்தேசித்து அருளினார் –
முகம் அறிந்தவன் கோத்த முத்துத் தாழ் வடத்தை-
இது ஒரு கோவை இருந்தபடி என் -என்று -அதன் வாசி அறிந்தவர்கள் கொண்டாடுமா போலே
இதுவும்
வாங்மணி ஸ்ரக் க்ரைவேய பூஷாத் மகம் -என்னும்படி
வசன சந்தர்ப்பத்தை யுடைத்தாகையாலே –

இக்கலை -என்று
இவர்க்கு ஈடுபாடாய் இருக்கிறது –

(கலை இலங்கு மொழியாளர் -கலை -சாஸ்திரம் –
மொழி பாஷை அர்த்தங்கள் -செந்தமிழும் வட கலையும் திகழ்ந்த நாவர்
இதுவும் ப்ரஹ்மம் அடைய வழி காட்டி அருளுவதால் ஸாஸ்த்ரம்
மீமாம்ஸா ஸாஸ்த்ரம் -கர்ம விசாரம்
ப்ரஹ்ம விசாரம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் போல்
இது ரஹஸ்ய த்ரய ஸாஸ்த்ரம் -)

———————————————————-

புருஷகார வைபவஞ்ச சாதனச்ய கௌ ரவம்
தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய சத்குரு உபசேவனம்
ஹரிதயாம் அஹேதுகீம் குரோர் உபாயதாஞ்ச யோ
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே

கீழ்-
ஸ்ரீ வசன பூஷணம் என்று திரு நாமம் சாத்தும் படியான இதன் பெருமையை அருளிச் செய்தார் –
இதில்-
ஏதத் அர்த்த தர்சிகள் யுடையவும்-
ஏதத் பிரதிபாத்ய அனுஷ்டாதாக்கள் யுடையவும்-
அருமையை தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் —

(இது ஸ்வ சோதனைக்கே -இன்னும் ஒருவரைப் பார்த்து நீர் ஸ்ரீ வசன பூஷணம் படி
நடக்க வில்லை என்று சொன்னால் சொன்னவனே அறியாதவன் ஆகிறான் )

(த்வாபர யுகத்திலே வாஸூ தேவ சர்வம் என்று இருப்பார் ஸூ துர்லபம் –
கலியில் -அத்தையும் தாண்டி பாகவத சேஷத்வம் அறிந்து அறிந்தபடி அனுஷ்ட்டிப்பார் மஹா துர்லபம் அன்றோ
மதுரகவி நிஷ்டை ஓர் ஒருவர் தான் உண்டு -சத்ருக்ந ஆழ்வான் -வடுக நம்பி -போல்வார் – )

ஆர் வசன பூஷணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார்
ஆர் அது சொல் நேரில் அனுடிப்பார் -ஓர் ஒருவர்
யுண்டாகில் அத்தனை காண் உள்ளமே எல்லார்க்கும்
அண்டாதது அன்றோ அது –55-

த்யானந்திகே
வசன பூஷண வாரி ராசேக
சதாம் அபிதேய ரத்னம்
தே
சத் ப்ரகர்ஷ தே சஞ்சரிந்தி
யஹா கோபி சாம்பவி சேத்
விரலோகி

ஆர் வசன பூஷணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார் –
ஸ்ரீ வசன பூஷணத்தின் யுடைய அகாதமான அர்த்தத்தை அதிலே அவகாஹித்து
உள் புகுந்து உள்ளது எல்லாம் அறிவார் ஆர் –
எத்தனை அதிசயித ஜ்ஞாநராய் இருப்பார்க்கும் இத்தை ஸ்வ யத்னத்தால் அறிய வென்றால்
துர் அவஹாகமுமாய் துஸ் தரமுமாய் இறே இருப்பது –

முதலடியில் அல்லாதவற்றில் இதுக்கு யுண்டான வாசி அறிந்து இத்தைப் பாடம் பண்ணுவார் அரிதாய் இருக்கும் –
அது ஒரு படி செய்தார்கள் ஆகில் அர்த்தம் அறிகை அரிதாய் இருக்கும் –
அதுவும் பெரு வருத்ததோடு கூட மேல் எழ சிறிது அறிந்தார்களே யாகிலும்
ஆழ் பொருள் எல்லாம் அறிவார் மிகவும் தேட்டமாய் இறே இருப்பது –

ஆழ் பொருள் –
ரத்னாகாரமானது-(ஆகாரம் -இருப்பிடம் )
மலைகளும் மா மணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலைகடல் -(பெரிய திருமொழி -2-8)–என்னும்படி
ஆழ் கடலான தனக்குள்ளே மணி முக்தாதிகளான சிறிய பதார்த்தங்களைக் கொண்டு இருக்கும் –
அதுக்கு தேசிகரான முழுகுவர் இறே முழுகி எடுப்பார் –
மற்றை யார்க்கும் கரை யருகும் செல்ல ஒண்ணாதாய் இருக்கும்

அப்படியே
ஸ்ரீ வசன பூஷண வாரிராசி யான இதுவும்
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருளான
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் என்கிற அகாத அர்த்தத்தை யுடைத்தாய் இருக்கும் –

(வேதியர் -மிக்க வேதியர் -வேதியர் பொருள் -மிக்க வேதியர் பொருள் -வேதத்தின் உள் பொருள் –
மிக்க வேதத்தின் உள் பொருள் -ஆழமான அர்த்தம்
ததீய சேஷத்வ பாரதந்த்ரம் -அத்ர பரத்ர சாபி -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் –
பக்தி யோகம் தாண்டி பிரபத்தி தாண்டி தான் பற்றும் பற்றும் உத்தாரகம் அன்று என்று உணர்ந்து
ஆச்சார்யர் தாமே அபிமானித்து கைக்கொள்ளுதல்
ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு –
ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமும் வேண்டுமே -விலக்காமை வேண்டுமே -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –
இவன் நம்முடையவன் என்று -இவரே ஆண் பிள்ளை என்று ராமானுஜர் அனந்தாழ்வானை அபிமானித்தது போல்
தான் பற்றும் பற்று அக்னி ஸ்பர்சம் அகங்கார கர்ப்பமாய் இருக்குமே )

இதுவும் அறிவித்தேன் ஆழ் பொருளை -(நான்முகன் )-என்னும்படி
தேசிகர் அறிவித்தாய் ஆய்த்து அறியலாவது –
வாக்ய சங்கதிர் இத்யாதி ஸ்ருதம் விநா மகதாம் அபி அஸஹ்யாநி -என்று இறே
அறிகையில் உள்ள அருமை இருப்பது –

(கடலுக்கும் ஸ்ரீ வசன பூஷணத்துக்கும் சாம்யம் சொல்லி வருகிறார் )

அங்கும் –
செழும் கடல் அமுதினில் பிறந்த (திருவிடந்தை )-அவள் பிரயோஜனமாய் இருக்கும் –
இங்கும்
புருஷகார வைபவம் -தொடங்கி -(26 சூரணைகள் )-ஆச்சார்ய அபிமானம் -ஈறாக
ஆறு பிரகரணத்தாலும் சொல்லுகிற அர்த்தங்கள் எல்லாம் ஆழ் பொருள்களாய் இருந்ததே யாகிலும்
சரம பிரகரணத்தில்-(குரோர் உபாயதாஞ்ச யோ)
சரம உபாயத்துக்கு சேஷமாய் இறே இருப்பது –

ஆகையால் இறே –
திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும் -என்று தொடங்கி
மன்னிய இன்பமும் மா கதியும் குரு வென்னு நிலை பெறும் இன்பொருள் தன்னையும் -என்று இறே
பொருள் முடிவாக அருளிச் செய்தது-

(1-திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்-(1-22)
2-திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும் (23-114 )
3-அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும் (115-141 )
4-மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும் (142-242 )
5-ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும் (ப்ரபந்ந தினசர்யா 243-307 )
6-நாரணன் தாள் தரு நல் குரு நீதியும் (சதாசார்ய லக்ஷணம் – 308-320 )
7-சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர் தன்மையும் (ஸச் சிஷ்ய லக்ஷணம் -321-365 )
8-தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும் (நிர்ஹேதுக தயை 366-406)
9-மன்னிய இன்பமும் மா கதியும் குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும் (407-469 )
அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன் எங்கோன் ஏர் உலகாரியன்
தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்)

(ஒன்பது பிரகரணங்கள் ஆறாகும் பொழுது
முதல் அதுவே
2-3-4-5- பிரகரணங்கள் -இரண்டாவதும் மூன்றாவதும்
6-7-இரண்டும் சேர்ந்து நாலாவது ஆகும் –
8-ஐந்தாவது
9-ஆறாவது பிரகாரணம் ஆகும் )

(புருஷகார வைபவஞ்ச சாதனச்ய கௌ ரவம்
தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய சத்குரு உபசேவனம்
ஹரிதயாம் அஹேதுகீம் குரோர் உபாயதாஞ்ச யோ
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே)

(பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை ஆறு பெறுவான் முறை அவன்
கூறு குருவை பனுவல் கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான்
மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு எலாம் வசன பூடணம் அதில்
தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே )

(1-புருஷகார வைபவஞ்ச-பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை -(1-22-)
2-சாதனச்ய கௌரவம்-ஆறு -( 23-79 )
3-தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய–பெறுவான் முறை -( 80-307-)
4-சத்குரு உபசேவனம் -அவன் கூறு குருவை பனுவல் (308-365-)
5-ஹரிதயாம் அஹேதுகீம்–கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான் (366-406 )
6-குரோர் உபாயதாஞ்ச–மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு ( 409-469 )
எலாம் வசன பூடணம் அதில் தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே )

பெரு விலையனான ஆபரணத்துக்கு
நாயகக் கல் போலே யாய்த்து
ஸ்ரீ வசன பூஷணத்துக்கு
இப் பிரதேசம் -(ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்-447 )
நாயக ரத்னமாய் இருக்கும் படி
(எண்ணிக்கையில் நடுவில் உள்ள சூரணை கொள்ளாமல் விஷயத்துக்கு நாயகம்
மேம்பொருள் பாசுரம் திருமலைக்கு போல் )

இத்தனையும் அருளிச் செயலைப் பற்ற அதிஷ்டிக்கை இட்டுக் கொண்டு வந்தது
கீழ் அடங்கலும் மேல் அடங்கலும்
இதன் நிஷ்டையை ஸ்தாபிக்கிறது -என்று இறே
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்னும் இடத்துக்கு ஸ்ரீ ஜீயர் வியாக்யானம் செய்து அருளிற்று –
ஆகையால் இதுவே ஆழ் பொருளாகக் கடவது –

வேதம் ஒரு நான்கின் உட்பொருள் தந்த மெய்ப்பொருள் -என்று தொடங்கி
தீதில் சரணா கதி தந்த தன் இறைவன் தாளே அரணாகும் என்னுமது -( ஞானசாரம்-31- )-என்று இறே அருளிச் செய்தார் –

(வேதம் ஒரு நான்கினுள் பொதிந்த மெய்ப்பொருளும்
கோதில் மனு முதல் நூல் கூறுவதும் தீதில்
சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே
அரணாகும் என்னும் அது –31-ஆச்சார்யர் திருவடிகளே அரண் என்பதே மெய் பொருள் )

அன்றிக்கே
பேறு தருவிக்குமவன் தன் பெருமை -என்று தொடங்கி
நல் குருவின் வன்மையோடு எல்லாம் ஸ்ரீ வசன பூஷணம் அதில் தேறிட நமக்கு அருளுகையாலே
ஆறு பிரகரணத்தில் உக்தமான அசேஷார்த்தங்களும்
ஒரு சேதனனுடைய உஜ்ஜீவனத்துக்கு
ஓர் ஒன்றே ஜ்ஞாதவ்யமாக வேண்டுகையாலே
எல்லாம் ஆராய்ந்து அறிய வேணும் என்று ஆழ் பொருள் என்கிறார் ஆகவுமாம்-

முந்தின யோஜனையில்-
ஆழ் பொருள்கள் எல்லாம் என்கிறதுக்கு சேர-
மற்றை அர்த்தங்கள் எல்லாம் ஆஸ்ரயண விதி சேஷங்களாய் அறியப் படுமதாய் இருக்கும் –
தன்னை அறியும் போது உக்த லஷண யுக்தனான தான் என்று அறிய வேணும் –
ஆச்சார்யனை அறியும் போது ஆறு பிரகரணத்தாலும் பிரதி பாதிக்கப் படுகிற
ஷட் பத ( த்வய ) நிஷ்டனாக அறிய வேணும் –
ஆகையால் ஆழ் பொருள்கள் எல்லாம் அறிய வேணும் –

இதில் அர்த்தங்கள் எல்லாம் சாப்தமாக (மேல்) எழத் தோன்றி இருந்ததே யாகிலும்
இதுக்கு எல்லாம்-சர்வார்த்தான் விபரீதாம்ச-(ஸ்ரீ கீதை 18-32)- -என்னும் படி விபரீத அர்த்தத்தை கற்பித்து
அனர்த்தத்தை சூழ்த்துக் கொள்வார் ஒழிந்து
இதில் யதார்த்த ஞானத்தை யுடையராய்
இத்தை விஸ்வசித்து உஜ்ஜீவிப்பார் அரிதாய் இறே இருப்பது
ஆமார் அறிவுடையார் ஆவார் அரிதன்றே–(பெரிய திருவந்தாதி 37 )என்னக் கடவது இறே
ஆகையாலே அறிவார் ஆர் -என்கிறார்-

ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
நாமே யதுவுடையோம் நன்னெஞ்சே –பூ மேய
மதுகரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம்
அது கரமே அன்பால் அமை — பெரிய திருவந்தாதி-37-

(வெறிதே அருள் செய்வார் செய்வார்கட்க்கு உகந்து-சரணாகதி செய்வார்க்கு -விபரீத அர்த்தம் –
தான் அருள் செய்யும் நினைத்தவருக்கு உகந்து செய்வான் )

இனி மேல் இதன் அனுஷ்டாதாக்களின் அருமையை அறிவிக்கிறது –
ஆரது சொல் நேரில் அனுஷ்டிப்பார் –
தத் விபரீதங்களை அனுஷ்டித்துப் போருமது ஒழிய
தத் உக்த அர்த்தத்தின் படியே
நேரே நெறியே ஆசரித்து போருவார் ஆர் –
ஸ்ரீ வசன பூஷண வழியிலே வழி படுவார் யுன்டாவது அரிதாய் இறே இருப்பது –

(கற்க கசடற கற்க கற்றபின் அதுக்கு தக்க நிற்க வேண்டுமே )

அல்லாத சாஸ்த்ரங்களை அறிந்து அனுஷ்டிப்பார் யுண்டாகிலும்
இந்த திவ்ய சாஸ்திரத்தின் படியே அனுஷ்டிப்பார் அரிது இறே
ஆகையால் அருளிச் செய்தவர் தாமே அதின் படியை
ஊனமற ஆசரித்து இருக்கும் நாளை நாள் எனை நினைந்து -என்று
அந்த பரம ரஹஸ்ய பிரதிபாதகமான அர்த்தத்தின் படி அசங்குசிதமாக அனுஷ்டிக்கும் படியையும்
தத் பலமாக ஆச்சார்ய அநு ஸ்மரணத்தையும்-அருளிச் செய்தார் இறே –

இதன் ஆழ் பொருளை அறிந்தும்-அது சொல் நேரில் அனுஷ்டித்துப் போருவார்
ஸ்ரீ உலகாரியன் அருள் தப்பாமல் எய்திய தரத்தை யுடைய
ஸ்ரீ ஜீயர் தாம் ஒருவரும் இறே உள்ளது –

இனி இந்த மகா பிருத்வியிலே எல்லாம் சம்பாவிதங்களாய் இருக்க
தாத்ருசரான இவர்களைக் கிட்டாதோ என்று தம் திரு உள்ளத்துக்குக் கருத்தாக –
ஓர் ஒருவர் யுண்டாகில் அத்தனை காண் உள்ளமே — என்கிறார் –
இத்தை அறியவும்
அனுஷ்டிக்கவும்
அருமருந்து போலே ஓர் ஒரு மகாத்மாக்கள் யுண்டாகில் உண்டாம் அத்தனை காண் —

ஓர் ஒருவர் –
ஸ்ரீ பிரதி வாத பயங்கரம் அண்ணனும்
அவருக்கு
ச ப்ரஹ்மசாரிகளாய்
செந்தமிழ் சேர் ஸ்ரீ பட்டர் பிரான் ஜீயர் அன்றி
தேவு மற்று அறியாத ஸ்ரீ அழகிய மணவாள ஜீயரும் தத் பரதந்த்ரர் இறே –

(பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் -இவர் பூர்வாஸ்ரம இயற் பெயர் கோவிந்த தாசர் அப்பர்
திருக்குமாரர் – அழகிய மணவாள ஜீயர் —
இவர் திருக்குமாரர் வரதாச்சார்யர் -இவரே பிள்ளை லோகம் ஜீயர் -)

அண்ணனை எண்ணில் மற்று ஒருவரை எண்ணாது என் அணி விரலே -என்று
ஸ்ரீ வைஷ்ணவ தாசரான ஸ்ரீ அண்ணா மதிக்கும் படியான ஸ்ரீ மதுரகவி தாசர்
அண்ணன் போல்வார் ஒருவர் யுண்டாகில் யுண்டாம் அத்தனை

ச மகாத்மா ஸூ துர்லப -என்றும்-
ஸூ துர்லபா பாகவதாஹி லோகே -என்றும்-
தத்ராபி துர்லபம் மன்யே வைகுண்டே ப்ரிய தர்சனம் -என்றும் -சொல்லுகிறபடியே
பகவத் பரராய் இருப்பவர்கள் தான் தேட்டமாய் இறே இருப்பது –

இனி
அனுகூலரான ஆச்ச்சார்ய பரதந்த்ரர் அத்யந்த அபூர்வராய் இறே இருப்பது –
பகவத் பாரதந்த்ர்யத்துக்கு
ராமோ ராமோ ராம இதி -என்று ஒரு நாடாக யுண்டாய்த்து
ஆச்சார்ய பாரதந்த்ர்யதுக்கு
பரத அனுஜரான ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் ஒருவர் இறே உள்ளது

உண்ட போது ஒரு வார்த்தையும் உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்வார் பத்துப் பேர் யுண்டு இறே
அவர்களைச் சிரித்து இருப்பார் ஒருவர் யுண்டு இறே
வடுக நம்பி ஆண்டானையும் ஆழ்வானையும் இரு கரையர் என்பர் -என்று இப்படி
குரு பக்தோத்த மோத்தம -என்னும்படி குரு பக்தர் ஆகையாலே
உத்தமோத்தமராய் ஸ்ரீ மான்களான அதிகாரிகள் ஓர் ஒருவரை இறே அருளிச் செய்தது –

(உண்டபோது ஒருவார்த்தையும் –உண்ணாத போது ஒரு வார்த்தையும் –சொல்லுவார் பத்து பேர் உண்டு இறே –
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடுவது —சூரணை -408–
அவர்களை சிரித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே –
அவர் பாசுரம் கொண்டு – இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் –சூரணை -409-
வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் —சூரணை -411-)

யுண்டாகில் -என்கிற எதி சப்தத்தாலே
ஓர் ஒருத்தர் தானும் துர்லபம் என்று தோற்றுகிறது-
இப்படி அலாப்ய லாபமானது கிட்டிற்று ஆகில் அவ்வளவு காண் –

உள்ளமே –
ஸ்ரீ வசன பூஷண் பூஷிதமான மனசே –
அதில் அகாதமான அர்த்தத்தை அறிந்து
தத் உக்தமான அனுஷ்டானத்தையும் ஆசரித்துக் கொண்டு போருமவர்களை
ஆதரித்துக் கொண்டு போருவாய் நீயே அன்றோ –

என் -ஓர் ஒருத்தர்க்கு ஒழிய அது எல்லார்க்கும் இது யுண்டாகாதோ-என்ன
எல்லாருக்கும் அண்டாதது அன்றோ அது –
தாங்களும் தங்களில் வைஷ்ணவர்கள் என்று இருக்கில்
எல்லார்க்கும் அதில் கம்பீரமான அர்த்தத்தை
ஸ்வ யத்ன ரூப ஞானத்தாலே அறியவும்
தத் ப்ரதிபாத்யமான விலஷண அனுஷ்டானத்தை
ஸ்வ யத்ன ரூப சக்தியாலே அனுஷ்டிக்கவும்
அசக்யமாய் இருப்பது ஓன்று அன்றோ –

அண்டாதது -அடங்காதது –
அத்தாலும் அசக்யமானது -என்றபடி –
ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாய் இறே இருப்பது

அது –
என்று அர்த்தத்தில் துரவாஹத்வமும்
அனுஷ்டானத்தில் அசக்யத்வமும்
தோற்றி இருக்கிறது –

லோகோ சார்ய க்ருதே லோக ஹிதே வசன பூஷணே தத்வார்த்த
தர்சினோ லோகே தந் நிஷ்டாச்ச ஸூ துர்லபா-

ஜகதாச்சார்யரசிதே ஸ்ரீ மன் வசன பூஷணே தத்வஜ் ஞ்ஞாநஞ்ச
தன் நிஷ்டாம் தேஹி நாத யதீந்திர மே-என்றும் சொல்லக் கடவது இறே –

(உபதேச ரத்ன மாலை அறிய பலனும் எந்தை எதிராசன் இன்னருள் கிட்டும் –
அது கிட்டியவாறே ஸ்ரீ வசன பூஷண அர்த்தமும் அனுஷ்டானமும் கிட்டும் –
திருவாய் மொழி பெரிய திருமொழி அறியவும் எங்கள் கதியே ராமானுஜ முனியே அருள வேண்டும்

இந்த உபதேச ரத்தின மாலை தன்னை சிந்தை தனில் நாளும் சிந்திப்பார் எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகி சதிராக வாழ்ந்திடுவர் தாம் –
ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனி தன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெரும்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற
எங்கள் கதியே இராமானுச முனியே சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும் தங்கு மனம் நீ எனக்குத் தா – )

————————————————

கீழ் ஓர் ஒருவர் யுண்டாகில் அத்தனை காண் உள்ளமே -என்று
அதிகாரிகள் சங்குசிதராய் இருக்கிறபடியைக் கண்டு
சர்வரும் வசன பூஷண அதிகாரிகளாம் படி திருத்துவோம் என்று
திரு உள்ளம் பற்றி
அபி முகராய் இருக்கிறவர்கள் ஆபி முக்யமே பற்றாசாக இதில்
அர்த்த நிஷ்டை யுடையராம் படி
அவர்களைக் குறித்து -பரோபதேசம் பண்ணி அருளுகிறார் –

உய்ய நினைவுடையீர் உங்களுக்குச் சொல்லுகின்றேன்
வையம் குரு முன்னம் வாய் மொழிந்த -செய்ய கலை
யாம் வசன பூஷணத்தின் ஆழ் பொருளைக் கற்று அதனுக்
காம் நிலையில் நில்லும் அறிந்து –56-

உக்ராத் பவாப்தி குஹராத் -உக்ரமான சம்சார புதைகுழி
(சம்சார சாகரம் கோரம் அனந்த கிலேச பாஜநம்-ஜிதந்தே ஸ்தோத்ரம் )
த்ருதம் உத்தகீர்ஷா
ஜாயேதுவோ யதி ஜனார்த் உபாய ஏக
ஆலோகியதாம்
வசன பூஷண ஆத்ம நீதம்
நிஷ்டீயதாம் தத்
நியமேன
தத் யுக்த மார்க்கே

உய்ய நினைவுடையீர் –
உஜ்ஜீவிக்க வேணும் என்கிற மனசை யுடையவர்களே
மனமுடையீர் என்கிற ஸ்ரத்தையே அமையும் -என்கிறபடியே
மனஸ் சஹாகாரம் ஆகிற சம்பத்தை யுடைய நீங்கள்

(பழுதிலா ஒழுகல் ஆறு -வேதம் கற்க வேண்டும் -இதுக்கு மனம் ஒன்றுமே போதுமே
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே )

இந்த சம்பத்தின் மேலே எந்த அதிகாரத்தை ஆர்ஜித்துக் கொள்ளப் போகிறீர்கோள் –
ஈஸ்வரன் படியைப் பார்த்தாலும்
ஆபி முக்யத்துக்கு அவ்வருகே –
அந்யன் நசேச்சதி ஜனார்த்தன -என்னும் படி இறே இருப்பது –
திரு மந்த்ரத்தின் யுடைய தாத்பர்யமான இப் பிரபந்த அப்யாச அனுஷ்டானங்களுக்கும்
ஸ்ரத்தை இறே வேண்டுவது –

(வேத சாரம் – உபநிஷத் சாரதர -அநுவாக சார தம- காயத்ரியில்
முதல் ஓதுகின்ற பொருள் முடிவான சுருக்கு தானே திருமந்திரம் )

ஆகையால் இவ்வளவு ஆனுகூல்யம் யுடைய –
உங்களுக்குச் சொல்லுகின்றேன் –
உங்கள் உஜ்ஜீவனத்திலே ஊன்றி இருக்கிற நான் உங்கள் கார்யம் பலிக்கும் தனையும்
இந்தப் பரமார்த்தத்தை சொல்லா நிற்கிறேன் –
சொல்ல உபக்ரமித்தல் சொல்லி முடித்தல் செய்ய வில்லை –
நீங்கள் அதிலே நிலை நிற்கும் தனையும் நான் சொல்லுகை தவிரேன் –
(நமது உஜ்ஜீவனமே மா முனிகள் நினைவு -சொல்லுகின்றேன் வர்த்தமானம் –
சொன்னேன் என்று முடிக்க வில்லையே
இது வரை முன்னுரை தானே -இனி மேல் தானே ஸ்ரீ வசன பூஷண சாரங்கள் )

ஆகில் நீர் சொல்லப் புகுகிற அந்த ரஹஸ்யம் தான் ஏது என்னில் –
வையம் குரு முன்னம் வாய் மொழிந்த –
பூர்வாச்சார்யர்களைப் போலே அர்த்தத்தின் சீர்மையைப் பார்த்து
ரஹஸ்யமாக உபதேசித்துப் போருகை அன்றிக்கே
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தம்முடைய கரை புரண்ட கிருபையாலே பின்புள்ளாரும் உஜ்ஜீவிக்கும் படி
முற்காலத்திலே மொழி பட்டோடும் கவியமுதம் -(திருவாய் – 8-10-5 )-என்னும்படி
தம்முடைய அனுபவத்துக்கு போக்கு வீடாக அருளிச் செய்து அருளின –

செய்ய கலையாம் வசன பூஷணத்தின் ஆழ் பொருளைக் –
அனுகூலருக்கு ஸ்வார்த்த பிரகாசத்தை பண்ணிக் கொண்டு இருப்பதான ஆர்ஜ்வத்தை உடைத்தாய்
சாஸ்திர ரூபமாய் இருப்பதான ஸ்ரீ வசன பூஷணமுடைய கம்பீரமான அர்த்தத்தை –

கற்று –
சத் சம்ப்ரதாய நிஷ்டரான சதாச்சார்யர்கள் சந்நிதியிலே
அவர்கள் அப்யசிப்பிக்க
அப்யசித்து –

தத் பலமாக –
அதனுக்காம் நிலையில் நில்லும் அறிந்து –
அந்த அப்யச்தமான அர்த்தத்துக்கு அனுகுணமான நிஷ்டையிலே
அதனுடைய கௌரவத்தை அறிந்து நில்லுங்கோள்-
உங்களுக்கு உஜ்ஜீவனம் சித்திக்கும் –

ஆழ் பொருளைக் கற்று -அதனுக்காம் நிலையில்-நிற்கை யாவது –
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்கிற அகாத அர்த்தத்தை
ஸ்வாச்சார்யர்கள் சந்நிதியிலே சேவித்து ( காலஷேபம் கேட்டு-உணர்ந்து )
அதன் கௌரவத்தை அறிந்து
அதுக்கு அனுகுணமான நிஷ்டையில் நிஷ்டராய் இருக்கை -என்றபடி –

கேட்டிருக்கையாய் இருக்கும் (443)-என்றும்
கேட்டிருப்பார் -என்றும் – சொல்லக் கடவது இறே –

(ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு –
ஆசார்ய அபிமானம் ஒழிய -கதி இல்லை என்று -பிள்ளை பலகாலும் அருளி செய்ய –
கேட்டு இருக்கையாய் -இருக்கும் –சூரணை-443-)

(பூர்வர் அருளிச் செய்ய கேட்டு அதன்படி இருக்க வேண்டுமே
விஷ்ணு சித்தர் கேட்டு அதன் படி இருப்பார் )

இத்தால்
ஸ்ரீ வசன பூஷண அர்த்த நிஷ்டையே உஜ்ஜீவனம் என்றது ஆய்த்து –

(இதில் உறுதியே உஜ்ஜீவனம் –
தொழுது எழு என் மனமே
தொழுதால் எழலாம் உஜ்ஜீவனம்
தொழுவதே உஜ்ஜீவனம் -இதுவே வாழ்க்கை
பிறந்தார் உயர்ந்தே -பிறந்து உயர வேண்டாம் -உயர்ந்தே பிறந்தவர் ஆகிறார்
அதுவே போல் இதில் உறுதியான மனசே உஜ்ஜீவனம் )

——————————————-

கற்று அதனுக்காம் நிலையில் நில்லும் அறிந்து -என்று
அந்வய த்தாலே
இதில் அர்த்தத்தை ஸ்தாபித்தவர் –

கல்லாதது என்னோ கவர்ந்து -என்று
வ்யதிரேகத்தாலும்
இதில் அர்த்தத்தை ஸ்தாபித்து அருளுவாராய்
அபி முகராய் செய்கிறோம் என்று ஆறி இருந்த
கீழில் அவர்களைக் குறித்து

இவர்கள் இத்தை அபிநிவேசத்துடன் அதிகரியாமைக்கு
அடி ஒன்றும் காண்கிறிலோம் -என்று
ஸ்வ விசாரமாகப் பண்ணி
அருளுகிறார் –

தேசிகர் பால் கேட்ட செழும் பொருளைச் சிந்தை தன்னில்
மாசறவே யூன்றி மனனம் செய்து -ஆசரிக்க
வல்லார்கள் தாம் வசன பூஷணத்தின் வான் பொருளைக்
கல்லாதது என்னோ கவர்ந்து —57-

ஏ தேசிகா அதிகதானி
உபதேச ரத்னானி
ஆஸஸ்ய தே சதி
ததா ஆஸ்ரயிதம் சக்தா
தே யத்ன தகா
வசன பூஷண கூடம் அர்த்தம்
நைவ ஆஸ்ரயந்தி
பரிசீலன குதோந வித்வான்

தேசிகர் பால் கேட்ட செழும் பொருளைச் –
ஸ்வ பர ஹித பரராய் இருக்கிற தேசிகர்கள் சந்நிதியில்
ப்ரஸ்ன கால பிரதீஷராய் –
ஸ்ரவித்த ஸ்லாக்கியமான அர்த்தத்தை –

(சித்தம் சத் ஸம்ப்ரதாயே ஸ்திர தியமநகம் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
சத்வஸ்தம் சத்யவாஸம் சமய நியதயா சாது வ்ருத்த்யா ஸமேதம்
டம்பா ஸூ யாதி முக்தம் ஜித விஷயி கணம் தீர்க்க பந்தும் தயாளும்
ஸ்காலித்யே சாஸிதாரம் ஸ்வ பர ஹித பரம் தேசிகம் பூஷ்ணுரீப்சேத் -ஸ்ரீ நியாஸ விம்சதி —–1-

சத் புத்தி சாது சேவீ சமுசித சரிதஸ் தத்த்வ போதாபிலாஷீ
ஸூஸ்ருஷூஸ் த்யக்த மான ப்ரணி பதன பர ப்ரஸ்ன கால ப்ரதீஷ
சாந்தோ தாந்தோ அநஸூயு சரணமுபகத சாஸ்த்ர விசுவாஸ சாலீ
சிஷ்ய ப்ராப்த பரீஷாம் க்ருதவி தபிமதம் தத்த்வத சிக்ஷணீய -ஸ்ரீ நியாஸ விம்சதி–3-)

சிந்தை தன்னில் மாசறவே –
சம்சய விபர்யய ரூபமான மநோ மாலின்யாதிகள் ச வாசனமாகப் போம் படி –
(சம்சய விபர்யய ரூபமான ஐயம் திரிபு )

யூன்ற மனனம் செய்து –
ஸ்ருதஸ்ய அர்த்தஸ்ய யுக்தி தோநு சிந்தனம் மனனம் -என்கிறபடியே
அந்த ஸ்ருதமான அர்த்தத்தை ஹிருத் கதமாக
மாசற்றால் மனனம் -என்னும் படி மனனம் பண்ணி –

ஆசரிக்க வல்லார்கள் தாம் –
உக்தமான அனுஷ்டானத்தில் ஒன்றும் நழுவாமல் – ஆசரிக்க வல்ல சக்தியை யுடைய தாங்கள் –

வசன பூஷணத்தின் வான் பொருளைக் –
தங்கள் அனுஷ்டானதுக்கு அனுக்ரமணி போலே இருக்கிற ஸ்ரீ வசன பூஷணத்தின் யுடைய
சீரியதான அர்த்தத்தை –
கனத்த பொருளை –

கல்லாதது என்னோ கவர்ந்து –
குருவான அர்த்தத்தை குருக்கள் சந்நிதியிலே அபி நிவேசத்துடன் இவர்கள் அதிகரியாமைக்கு ஹேது என்னோ –
(குரு -பெரியது லகு சிறியது -குருக்கள் ஆச்சார்யர்கள்
ஆழமான அர்த்தத்தை ஞானத்தால் பெரிய ஆச்சார்யர்கள் )
மா நிதியம் வசன பூஷணம் யுண்டே அதின் படியை யூனமற வாசரித்து -என்னும் படி
மகா நிதி போலே இருக்கிற இத்தைப் பெற்று வைத்து
அந்தகன் -அநந்த நிதி கண்டால் போலே அபேஷையோடே அதிகரிக்க வேண்டி இருக்க —
அத்தை உபேஷித்து-
வரில் பொகடேன் கெடில் தேடேன் -என்று இருக்கிறது ஏதோ –

இவர்கள் தங்களுக்கு ஞான சக்தியாதிகள் யுண்டாய்-
இதுக்கு அர்த்த பூர்த்தியும் யுண்டாய் இருக்க –
இத்தை மேல் விழுந்து மண்டி அதிகரியாமைக்கு அடி அறிய அரிதாய் இருக்கிறது –

அறிகைக்கும் அனுஷ்டிக்கைக்கும் ஈடான ஞான சக்திகள் தங்களுக்கு இல்லை என்ன ஒண்ணாது –
அனுஷ்டேயார்த்த பிரகாசகமான இதுக்கு அர்த்த பூர்த்தி இல்லை என்ன ஒண்ணாது –
ஆயிருக்க இப்படி இருக்கிறது அபி நிவேச மாந்த்யம் இறே என்றத்தை தாம் நிரூபிக்கும் முகத்தாலே
இது யுண்டாம்படி திருத்தி அருளுகிறார் –
கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்வாத் -என்னும்படி
சாஸ்திர அனுஷ்டான யோக்கியமாய் இறே மனுஷ்ய ஜன்மம் தான் இருப்பது –

(நா வாயில் உண்டே–ஏத்தும் பொழுது உண்டே -என் நினைந்து போக்குவார் இப்போதே –
கர்த்ருத்வாதி கரணம் -ஞானம் வடிவு ஞானம் ஸ்வரூபன் -அறிவுடையவன் கர்த்தா –
செயல்படும் திறன் -சாஸ்திரம் அர்த்தவத்தாக ஆகவே –
கட்டளை இடுவதால் சாஸ்திரம் -ஸாஸனாத் -பின்பற்ற ஒருவன் இருந்தால் தானே
அது இருக்க பிரயோஜனம் -பொருள் உள்ளதாகும் –
இதுவும் திவ்ய சாஸ்திரம் -இதுக்கும் கர்த்தாவாக இருக்க வேண்டுமே -)

இத்தால்
இவ் வர்த்தம் பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இராமல்
சத் த்வரராய் சமக்ரமான இச்சையாலே சாதித்து அறிய வேணும் என்று கருத்து –
(துடிப்பால் த்வரையுடன் இருக்க வேண்டுமே
பேறு தப்பாது என்று துணிகையும் பேற்றுக்கு த்வரிக்கவும் வேணுமே
அடையும் இடம் ஸ்ரேஷ்டம் -விரோதி பாஹுல்யம் -நிரங்குச ஸ்வ தந்த்ரன் -பண்ணும் சரணாகதி எளிது –
மூன்றாலும் நம்பிக்கை விஸ்வாசம் குறையுமே
அதே போல் இங்கும் ஆபிமுக்யம் மாத்திரம் உள்ளது -அடைந்தே தீர வேண்டும் என்னும் பெரு விருப்பம்
அபிநிவேசம் வர -மாந்த்யம் குறைக்க உபதேசித்து அருளுகிறார் )

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

உபதேச ரத்னமாலை –பாசுரம் -50/51/52- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

July 26, 2014

இனி ஸ்ரீ வகுள பூஷண திவ்ய பிரபந்த வியாக்யான அநந்தரம்
அதில் தாத்பர்யமான
ஸ்ரீ வசன பூஷண அர்த்த நிஷ்டா க்ரமங்களையும் அருளிச் செய்ய வேணும் என்று
அதுக்கு அடி கோலுகிறார் –
அது எங்கனே என்னில்

கீழ் பிரஸ்துதமான ஸ்ரீ நம் பெருமாள் தொடக்கமான அவர்களுக்கு அதிசயமான
திரு நாமங்கள் வருகைக்கு ஹேதுவையும் ( 50 )
அந்தப் பிரசங்கத்திலே ஸ்ரீ நம்பிள்ளை என்று பிரஸ்துதரானவர்க்கு ஸ்ரீ லோகாச்சார்யர் என்ற
திருநாமம் வருகைக்கு ஹேதுவையும் ( 51 )
அந்த திரு நாமமானது ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யருக்கு பிராப்தமாய்
அவரடியாக எங்கும் வந்து பரந்த படியையும் (52 )
ஓர் ஒரு பாட்டாக மூன்று பாட்டாலே அருளிச் செய்கிறார் –

(லோகாச்சார்யார் பிள்ளை -நம்பிள்ளை அனுக்ரஹத்தால் இவரும் –
நம்பெருமாள் அனுக்ரஹத்தால் நாயனாரும் அவதாரங்கள் )

அதில் இப்பாட்டில்
முன்பு சொன்ன ஸ்ரீ நம் பெருமாள் தொடக்கமானவர்க்கு அதிசயமான திரு நாமங்கள் வருகைக்கு
அடி இன்னது -என்கிறார் –

(எம்பெருமான் தர்சனம் -என்று நம்பெருமாள் நாட்டி வைத்தார் முன்பே சொன்னாரே
திருவல்லிக்கேணியில் நம் கலியன் நம் பட்டர் பிரான் -போல் அருளப்பாடு உண்டே )

நம் பெருமாள் நம் ஆழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
என்பர் அவர் அவர் தம் ஏற்றத்தால் -அன்புடையோர்
சாற்று திரு நாமங்கள் தான் என்று நன்னெஞ்சே
ஏத்து அதனைச் சொல்லி நீ இன்று—50-

ஆக்யே மனா கலய
நம்பெருமாள்
அதோ நம்மாழ்வார்
இதி வியவஹ்ருதே பிரணயேன பக்த
நஞ்சீயர் இது யாபி ச
நாம க்ருத ப்ரவ்ருத்தம்
நம்பிள்ளை
இத்யாபி
சம்க்யாம்

நம் பெருமாள் –
அதாவது-
இவை எல்லாம் நமக்கு ஸ்ரீ நம் பெருமாள் பக்கலிலே காணலாம் (முமுஷுப்படி )-என்னும் படி
ஆச்சார்யர்களுக்கு அனுபாவ்யரான ஸ்ரீ நம் பெருமாள் –

(குற்றம் கண்டு வெருவாமைக்கு வாத்சல்யம் –
கார்யம் செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம் –
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீல்யம் –
கண்டு பற்றுகைக்கு சௌலப்யம் –சூரணை -138-
இவை எல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம் –சூரணை -141-
திருக் கையில் பிடித்த திவ்ய ஆயுதங்களும்
வைத்து அஞ்சேல் என்ற கையும் –
கவித்த முடியும்
முகமும் முறுவலும்
ஆசன பத்மத்திலே அழுத்தின திரு வடிகளுமாய் நிற்கிற
நிலையே நமக்கு தஞ்சம் –சூரணை -142)

நம் ஆழ்வார் –
ஸ்ரீ முகில் வண்ணன் அடி இணையை அடைந்து
அருள் சூடி உய்ந்த-( 7-2-11 ) -ஸ்ரீ நம் ஆழ்வார் –

நஞ்சீயர்-
ஸ்ரீ நம் பெருமாள் திருக் குமாரரான ஸ்ரீ பட்டராலே விஷயீ க்ருதரான ஸ்ரீ நஞ்சீயர் –
(ரெங்கராஜ கமலா பத லாலித தத்வம் -பட்டர் அன்றோ )

நம்பிள்ளை –
ஸ்ரீ நஞ்சீயராலே விசேஷ அபிமானம் பண்ணப் பெற்றவராய்
ஸ்ரீ நம் பிள்ளை கோஷ்டியோ நம் பெருமாள் கோஷ்டியோ -என்று விகல்பிக்கும் படி
அத் தலைக்கு மங்களா சாசனம் பண்ணுகைக்கு ஆள் தேடுகையால் வந்த
மகா சம்ருத்தியை யுடைய ஸ்ரீ நம்பிள்ளை –

என்பர் –
என்று சொல்வார்கள்-என்பர் அன்புடையோர் -என்று கூட்டக் கடவது-

(நம் பெருமாள் இவரே மேல் மூவரையும் அபிமானித்து சொன்னதாகவுமாம்
திரு மால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பருமான் தன்மையை யாரே அறிகிற்பார் –
முதல் சொல் லைப் பிரித்து அர்த்தம் கொள்ளுமா போல் )

அவர் தம் ஏற்றத்தால் -அன்புடையோர் சாற்று திரு நாமங்கள் தான் என்று –
அவர் அவர்கள் உடைய ஆதிக்யத்தாலே அவர்கள் இடத்திலே அதி ஸ்நேஹத்தை யுடையவர்கள்
அவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து சாத்தின திரு நாமங்கள் –

தான் என்று –
இவையும் சில அதிசயமான திரு நாமங்கள் இருந்த படி என் தான் என்று –
இன்று அதனைச் சொல்லி நீ ஏத்து -என்று மேலே அந்வயம் —

(வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளைக்கு சதங்கை அழகியார் திரு நாமம் சாத்திய ஐதிக்யம் )

அன்புடையோர் சாத்துகை யாவது –
இவை எல்லாம் நமக்கு ஸ்ரீ நம் பெருமாள் பக்கலிலே காணலாம் -என்று அருளிச் செய்தார் இறே –

(அன்புடையாரான பிள்ளை லோகாச்சார்யார் முமுஷுப்படியில் சாத்தினாரே
இவர் அன்றோ பரிவுடன் நம்பெருமாளை எழுந்து அருளப் பண்ணினவர் )

முன்பு ஒரு காலத்திலே ஒரு கலபையிலே க்ரூரராய் இருப்பார் சிலர்
ஸ்ரீ பெருமாளையும் அத் தேசத்தில் உண்டான ஸ்ரீ எம்பெருமான்களையும் கொண்டு போந்து –
கெட்டேன் -என்னும்படி -வாரி வடக்கே கொண்டு போக
(ஸ்ரீ ரெங்கத்தில் மூன்று படை எடுப்புக்கள் -1311-1323-உண்டே )
அப்பொழுது ஸ்ரீ பெருமாள் திருவடிகளுக்கு போர நல்லராய் இருக்கிற
ஸ்ரீ ராஜ கண்ட கோபாலர் என்கிற விண்ணப்பம் செய்வார் (அரையர் ஸ்வாமி )
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு -(7-2)–என்கிறபடியே ஸ்ரீ பெருமாளைப் பிரிய ஷமர் அன்றிக்கே

இது நிலம் கை துழாவிக் கொண்டு போய்
அங்கே சென்று அவனைக் கண்டு
தம்முடைய நுடங்கு கேள்வி இசை (3-4-6)-என்னலாம் படியான பண்களாலே
அவனைப் பண்படுத்த –
அவனும் அதி ப்ரீதனாய்
உமக்கு வேண்டுவது என் என்ன –
நம்முடைய ஸ்ரீ பெருமாள் இங்கே வந்தார் அவரைத் தர வேணும் -என்ன
ஆகில் கொண்டு போம் என்று பல விக்ரஹங்களையும் கொடு வந்து காட்ட –
அப்பொழுது அவர்கள் நடுவே தேடிக் காணாமல்
சிந்திக்கும் திசைக்கும் இத்யாதிப் படியே-( 7-2-) கிலேசித்து இருக்க –

அப்பொழுது அவனுடைய பெண் பிள்ளை ஸ்ரீ அழகிய மணவாள பெருமாளான இவரைத்
தம் அந்தப்புரத்திலே ஆதரித்துக் கொண்டு போரா நிற்க
அச்சேதியை அறிந்த அவன்
அவள் அறியாமல் கொண்டு வந்து இவரோ உம்முடைய பெருமாள் -என்று காட்டிக் கொடுக்கக் கண்டு

(ராமபிரியனை ராமானுஜர் மீட்டால் போல் இங்கும் –
இது நம்பெருமாளை அரையர் மீட்டது -காலத்தால் பின்னால் )

ஸ்ரீ ரெங்க நாத மம நாத (கத்யம்)-என்றும்
அரங்கமாளி என்னாளி -(திருமங்கை ஆழ்வார் )-என்றும்
என் அரங்கத்து இன்னமுதர் குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர்-(நாச்சியார் -11) -என்றும்
சொல்லுகிறபடியே ஸ்ரீ அழகிய மணவாள பெருமாளை அதி ப்ரீதியுடன்
இவர் தாம் ஸ்ரீ நம் பெருமாள் -என்று அணைத்துக் கொண்டு
அதி த்வரையுடன் ஸ்ரீ கோயில் ஏற எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு வந்தார் என்று பிரசித்தம் இறே

அப்போது அனைவரும் ஸ்ரீ பெருமாள் அன்று என்று சங்கித்ததுக்கு
ஸ்ரீ ஆயி ஆழ்வார் பிள்ளையும் -இவர் நம்முடைய பெருமாளாம் -என்று
மேல் எழுத்து இட்டு அருளினாராம்
அன்று தொடங்கி அவருக்கு அதுவே நிரூபகமாய்த்து என்று அருளிச் செய்வார்கள் –

(1371-நம்பெருமாள் -48- வருஷங்கள் பின்பு எழுந்து அருள -ஈரம் கொல்லி -வ்ருத்தர் –
கண் தெரியாதவர் -திருவாடை கந்தம்-நம்பெருமாள் பெயர் உறுதிப்படுத்தப் பட்டது-
திருவரங்க மாளிகையார் உத்சவர் இடைக்காலத்தில் –
அரையர் ஸ்ரீ சடகோபன் சாதிக்கும் நாள்கள் விசேஷம் –
திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் )

இனி ஸ்ரீ நம் ஆழ்வார் -என்ற
திரு நாமம் ஆகைக்கு அடி முற்காலத்திலே
ஸ்ரீ பெருமாள் அல்லாத ஆழ்வார்களைக் காட்டிலும்
ஸ்ரீ ஆழ்வாரை ஸ்ரீ நம் ஆழ்வார் என்று அபிமானித்து அருளி
பெரிய திரு அத்யயனத்துக்கும் அப்படியே திருமுகம் எழுதி
ஸ்ரீ திரு நகரிக்குப் போக விட்டு அருளுவர் என்றும் உண்டு இறே –

(ஆழ்வாரைக் கொண்டு வர சென்ற நாள் கார்த்திகை கார்த்திகை –
திரும்ப எழுந்த பண்ணும் வரை அத்யயன காலம் ஆனது
செங்கழு நீர் திருவாசி கொடுத்து நம்மாழ்வாரை எழுந்து அருளப் பண்ண சொல்லி
தாம் திருக்கைத்தலை சேவை அருளி உள்ளே எழுந்து அருளுவார்
ராமானுஜர் கருட மண்டபம் பக்கம் தனியாக சந்நிதி ஏற்படுத்தி நம்மாழ்வார் ப்ரதிஷ்டை செய்து அருளினார் – )

அதுவும் அன்றிக்கே –
ஒரு கால் மலை நாட்டிலே ஸ்ரீ பெருமாள் வலசையாக (தமிழ் நாட்டை பூ ப்ரதக்ஷிணம் )எழுந்து அருளின போது
மற்றும் உண்டான ஸ்ரீ திருப்பதியில் எம்பெருமான்களும் ஸ்ரீ ஆழ்வாரும் அங்கே யாத்ருச்சிகமாக சங்கதராக
அப்போது ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ ஆழ்வாரை பலரடியார் முன்பு அருளிய -( 7-10 )-என்கிறபடியே
மிகவும் கிருபை பண்ணி அருளி
நம்முடைய ஸ்ரீ ஆழ்வார் நம் அருகே வாரும் -என்று தம்முடைய திவ்ய சிம்ஹாசனத்திலே வைத்துக் கொண்டு
முத்தின் சட்டை- வட்ட மனை – முதலான வரிசைகளையும் பிரசாதித்து
தம்மையே ஒக்க அருள் செய்வார் -என்றும் அருளிச் செய்து போருவர்கள் –
(வட்ட மனை ஆழ்வார் திருநகரியில் இன்றும் சேவிக்கலாம் )
அத்தைப் பற்ற
நம் சடகோபனை பாடினாயோ -என்று
ஸ்ரீ நம்பெருமாள் விஞ்சிய ஆதாரத்தால் கேட்ப -என்றாய்த்து அவனும் ( கம்பனும் ) சொன்னது –

(823-நாதமுனி அவதாரம் -அவர் வயோதிகர் ஆனதும் கம்ப ராமாயணம் அரங்கேற்றம்
சடகோபர் அந்தாதியில் பல தடவை அருளிச் செய்கிறார் )

அதுவும் அன்றிக்கே
ஸ்ரீ பெரிய முதலியார் -மற்ற ஆழ்வார்களில் காட்டில் அங்கே விசேஷ பிரதிபத்தி பண்ணி –
த்வய புரஸ் சரமாக ஸ்ரீ திருவாய் மொழி முதலிய பிரபந்தங்களை எல்லாம் அவர் பிரசாதத்தாலே பெற்று
அந்த வ்யாவ்ருத்தி தோன்ற நம்முடைய ஸ்ரீ ஆச்சார்யர் என்னுமோபாதி-
நம்முடைய ஆழ்வார் -என்று ஆய்த்து அபிமானித்துக் கொண்டு போருவது –
அத்தைப் பற்றி இறே -ந குலபதேர் வகுளாபிராமம் (ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்தி )-என்று அருளிச் செய்தது –

இனி நம் ஆழ்வார் உடைய திருவாய் மொழியில்
அநவரத பரிசீல நத்தாலே அபிஷிக்தரான ஸ்ரீ நஞ்சீயருக்கு இந் நாமம் ஆகைக்கு அடி
(பகவத் விஷயம் காலஷேபம் நூறு தடவை சாத்திய அபிஷேகம் )
இவர் ஸ்ரீ பட்டர் திருவடிகளை ஆஸ்ரயித்த அநந்தரம்
மேல் நாட்டிலே சந்யசித்து-
அங்குண்டான பரிக்ரஹங்களை அடைய ஸ்வ வாசனமாக பரித்யஜித்து
ஸ்ரீ கோயில் ஏற வந்து ஸ்ரீ பட்டர் திருவடிகளிலே சேவித்து நிற்கக் கண்டு
போரவும் உகந்து -நம்முடைய ஜீயர் -வந்தார் -என்று
கட்டி எடுத்துக் கொண்டு உபலாலித்த அன்று தொடங்கி
வேதாந்திகளுக்கு -ஸ்ரீ நஞ்சீயர் -என்ற திரு நாமம் ஆயத்து என்கை –

இனி இவருக்கு (நஞ்சீயருக்கு ) அத்யந்த அபிமதராய்
ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய திரு வவதாரம் என்னலாம் படி
(கலிகன்றி தாசர் -கலியன் தானே நம்மாழ்வார் ஹ்ருதயம் அறிந்தவர் )
ஸ்ரீ நம் பிள்ளைக்கு இந்த திரு நாமம் வந்தபடி –
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ திரு வாய் மொழிக்கு ஒன்பதினாயிரம் கிரந்தம் சங்க்யையாக ஒரு வியாக்யானம் செய்து அருளி
அந்தப் பட்டோலையை நன்றாக எழுதிக் கொண்டு வரும்படிக்கு
தம் திருவடிகளை ஆஸ்ரயித்த ஸ்ரீ வரதராஜரான இவர் திருக் கையிலே கொடுத்தருள –
இவர் ஊர் ஏறப் போகிற போது ஆற்றிலே ஒழுகிப் போக பின்பு ஒரு அலேகத்திலே அதன்படி ஒன்றும் தப்பாதபடி
எழுதிக் கொண்டு வந்து–
(அலேக கிரந்தம் கதை காஞ்சி -மாப்பிள்ளை கோயம் க்ரந்த இயம் மயா பிடிதம் –
இயம் அபி மயா பிடிதம் -எழுதாத கிரந்தம் )

ஸ்ரீ நஞ்சீயர் சந்நிதியிலே வைக்க – அத்தை அவிழ்த்து திருக் கண் சாத்தி அருளி –
அது மிகவும் நன்றாய் இருக்கையாலே-இது ஏது என்று கேட்டு அருள
இவரும் தத் ஹேதுக்களை எல்லாம் விண்ணப்பம் செய்யக் கேட்டு
இது ஒரு புத்தி விசேஷம் இருந்த படி என் என்று மிகவும் உகந்து அருளி –
நம்முடைய பிள்ளை -ஸ்ரீ திருக் கலிகன்றி தாசர் -என்று அருளிச் செய்ய –
அன்று தொடங்கி- ஸ்ரீ நம் பிள்ளை -என்று திரு நாமமான இது லோக பிரசித்தம் இறே –

அவரவர் தம் ஏற்றத்தால் அன்புடையோர் சாற்று திரு நாமங்கள் –
இது வாய்த்து –

நன்னெஞ்சே –
இந்த திரு நாமங்களின் வாசி அறிந்து உகந்து இருக்கிற நெஞ்சே –

ஏத்து அதனைச் சொல்லி நீ இன்று –
இந்தத் திரு நாமங்களை அனுசந்திக்கைக்கு ப்ராப்த காலமான இன்று
இதன் சுவடி அறிந்த நீ
இவையும் சில திரு நாமங்கள் இருந்த படியே என்று
வாயாரச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணு –

அநாதி காலம் இத்தை அனுசந்தியாத இழவு தீர ருசி பிறந்த இன்று
பிரத்யஷே குரவ ஸ்துதயா (மந்த்ர யத்நேந கோபயத் –மந்த்ரம் மறைத்து )-என்றும்
குரோர் நாம சதா ஜபேத் (அந்திம உபாய நிஷ்டை )-என்றும்
சொல்லுவோம் அவன் நாமங்களே (ராமானுஜ -1)–என்றும்
என் மனம் ஏத்தி அன்றி ஆற்ற கில்லாது (ராமானுஜ -89)-என்றும் சொல்லுகிறபடியே
ஸ்துதி ரூபமான அனுகூல வ்ருத்தி பண்ணியே ஸ்வரூபம் பெறப் பார் –
(வக்தவ்யம் குரு பரம்பரையும் த்வயம் என்று உண்டே )

—————————————————

இனி-
இவர்களில் துர்யரான ( நாலாவதான )ஸ்ரீ நம் பிள்ளைக்கு
அதிலும் அத்யந்த விலஷணமான
ஸ்ரீ லோகாச்சார்யர் என்ற திரு நாமம் வருகைக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –

துன்னு புகழ்க் கந்தாடை தோழப்பர் தம்முகப்பால்
என்ன உலகாரியரோ என்று உரைக்கப் -பின்னை
உலகாரியர் என்னும் பேர் நம் பிள்ளைக்கு ஓங்கி
விலகாமல் நின்றது என்றும் மேல்—-51-

துன்னு புகழ்க் -பொருந்திய வைபவம்
கந்தாடை தோழப்பர் -தாசாரதி முதலியாண்டான்- –
வாதூல குல திலகர் -ராமானுஜர் பாதுகா ஸ்தானம் -திருமேனி சம்பந்தம் தன்னேற்றம் –
இவர் திருக்குமாரர்-கந்தாடை ஆண்டான்-இவரே ராமானுஜன் –
தான் உகந்த திருமேனி எழுந்து அருளப் பண்ணினவர் -தை மாதம் புஷ்ப நக்ஷத்ரம் இன்றும் விசேஷம்
இவர் குமாரர் தோழப்பர் -அபசாரம் தொடங்கி உபசாரத்தில் முடிந்ததே
ஓங்கி-விருத்தி அடைந்து
விலகாமல் -நீங்காமல் -பேர் நிலைத்து நின்றது

வாதூல வம்ச திலக
அதீத வாரணர்ய -பச்சை வாரண பெருமாள் என்றே கந்தாடை தோழப்பருக்கு திரு நாமம்
ப்ரீதியா கதாபி
கலி ஸூதான தாஸர் ஸூரே
ஆக்யாம் ஜகத் குரு பிரதிதாம் அகார்ஷித்
தஸ்மாத்
ச நியதாத தஸ்மின்

துன்னு புகழ்க் கந்தாடை தோழப்பர் –
அவர் ஆகிறார் அபிஜன வித்யா வ்ருத்தங்களால் யுண்டான யசஸ் சம்ருதியை யுடையராய்
ஸ்ரீ பச்சை வாரணப் பெருமாள் என்னும் திரு நாமத்தை யுடையராய் –
ஸ்ரீ முதலி யாண்டானுடைய திருப் பேரனாராய் –
ஸ்ரீ கந்தாடை ஆண்டானுடைய திருக் குமாரராய்-
இருப்பார் ஒருவர் இறே –
(பேட்டை -ஸ்ரீ பச்சை வாரணப் பெருமாள் கோயில்
கோயில் நிர்வாகம் -முதலியாண்டான் வம்சத்தவர் -ஆகவே இவர் கிரந்தங்கள் நிறைய இல்லை – )

ஏவம் பூதரானவர் செய்த படி சொல்லுகிறது மேல் –
தம்முகப்பால் -என்று
அதாவது
ஸ்ரீ நம் பிள்ளையினுடைய ஞான வ்ருத்தியையும் சிஷ்ய சம்பத்தையும் கண்டு
அசஹிஷ்ணுவாய் அஸூயை கொண்டாடி
(குற்றங்களைக் குணமாக கொள்வது வாத்சல்யம் -குணங்களைக் குற்றமாகக் கொள்வது அஸூயை )
அவரை ஸ்ரீ பெருமாள் திரு ஓலக்கத்திலே பரிபவித்து
பின்பு திரு மாளிகையிலே எழுந்து அருள –
அனுகூலையாய் இருக்கிற அவர் தேவிமார்
இத்தைக் கேட்டு அனுதாப ஹேதுவாய் சில வார்த்தை சொல்ல –

(ஸ்ரீ பின்பு அழகிய பெருமாள் ஜீயர் அருளிச் செய்த -ஸ்ரீ குரு பரம்பரா பிரபாவம் -ஆறாயிரப்படி–

ஒரு கால் ஸ்ரீ பிள்ளை ஸ்ரீ பகவத் விஷயம் அருளிச் செய்து கோஷ்டி கலைந்து போகா நிற்கச் செய்தே-
ஸ்ரீ வைஷ்ணவானாய் இருப்பான் ஒரு ராஜா வருகிற பெரும் திரளைக் கண்டு ஸ்ரீ நம் பெருமாள் திருலோக்கம் கலைந்ததோ –
ஸ்ரீ நம்பிள்ளை கோஷ்டி கலைந்ததோ என்று கேட்டான் என்பார்கள்
இப்படி மஹா சம்ருத்தமான ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீயோடே ஸ்ரீ நம்பிள்ளை வாழ்ந்து அருளும் காலத்தில் ஸ்ரீ முதலியாண்டான் திருப்பேரனாய்
ஸ்ரீ கந்தாடை ஆண்டான் திருக்குமாரரான ஸ்ரீ கந்தாடை தோழப்பர் ஸ்ரீ நம்பிள்ளையுடைய பெரு மதிப்பையும் வைபவத்தையும் கண்டு
அஸூ யாளுவாய் பொறுக்க மாட்டாமல் இருக்குமவர் –

ஒரு நாள் ஸ்ரீ பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ பெருமாளை சேவித்துக் கொண்டு
இருக்கும் அளவிலே ஸ்ரீ பிள்ளையும் முதலிகளுமாய் பெரும் திரளாக ஸ்ரீ பெருமாளை சேவிக்க என்று ஸ்ரீ கோயிலுக்கு உள்ளே எழுந்து அருள
ஸ்ரீ தோழப்பர் ஸ்ரீ பிள்ளையுடைய பெருமையைக் கண்டு பொறுக்க மாட்டாமல் சீறிப்
பகவத் சந்நிதியில் ஸ்ரீ நம்பிள்ளையைப் பஹு வாகப் பருஷ யுக்திகளை சொல்லி அநேகமாக நிந்திக்க –
ஸ்ரீ பிள்ளையும் அத்தைக் கேட்டு நடுங்கிக் கொண்டு ஸ்ரீ பெருமாளை சேவித்துப் புறப்பட்டு எழுந்து அருள-
இச் செய்தியை ஞானாதிகையாய் இருக்கிற ஸ்ரீ தோழப்பர் திருத் தேவிகள் கேட்டுப் பெருக்க வ்யாகுலப்பட்டுத்
திரு மாளிகைக்குள் செய்கிற கைங்கர்யங்களையும் செய்யாமல் விட்டு வெறுத்து எழுந்து அருளி இருக்க

அவ்வளவில் ஸ்ரீ தோழப்பரும் ஸ்ரீ பெருமாளை சேவித்து மீண்டு தம் திரு மாளிகையில் எழுந்து அருள –
ஸ்ரீ தேவிகளும் முன்பு போலே எதிரே புறப்பட்டு வந்து ப்ரீதியுடன் தமக்கு ஒரு கைங்கர்யமும் பண்ணாமையாலே
ஸ்ரீ தோழப்பர் தம் திருத் தேவியாரைப் பார்த்து -உன்னை நாம் அங்கீ கரித்த அன்று தொடங்கி இன்று அளவாக
நம்மைக் கண்டால் ஆச்சார்ய பிரதிபத்தி பண்ணிக் கொண்டு போந்தாய்-இன்று உதாசீனம் பண்ணி இருந்தாய் –
இதற்கு அடி என் என்று கேட்டு அருள –

திருத் தேவியாரும் ஸ்ரீ தோழப்பரைப் பார்த்து -வாரீர் ஸ்ரீ ஆழ்வாருடைய திரு அவதாரம் என்னலாம் படி ஒரு அவதார விசேஷமாய்
ஸ்ரீ பெருமாளுக்குப் பிராண பூதருமாய் இருந்துள்ள ஸ்ரீ நம்பிள்ளையை ஸ்ரீ பெருமாள் சந்நிதியில் கூசாமல் அநேகமாக பருஷ யுக்திகளைப்
பண்ணித் தூஷித்து -இப்படி செய்தோமே -என்ற அனுதாபமும் அற்று உஜ்ஜீவிக்க இருக்கிற உம்மோடு எனக்கு என்ன சம்பந்தம் உண்டு –
நீர் என்னை வெறுத்தீர் ஆகில் என்னுடைய மாதா பிதாக்கள் என்னைப் பெற்று வளர்த்து உம்முடைய கையில் காட்டித் தந்த இந்த சரீரத்தை
உமக்கு வேண்டின படி செய்து கொள்ளும் -எங்கள் ஆச்சார்யர் என் ஆத்மாவை அடியிலே அங்கீ கரித்து அருளின அன்றே நான் உஜ்ஜீவித்தேன் –
ஆன பின்பு பத்ம கோடி சதேந அபி ந ஷமாமி கதாசன -என்று பாகவத நிந்தனை பண்ணினவர்களை ஒரு காலும் ஷமிப்பது இல்லை என்று
ஸ்ரீ பெருமாள் தாமே அருளிச் செய்த திருமுகப் பாசுரம் அறிந்தும் அறியாதவர் போலே இருக்கிற உம்மோடு எனக்கு ஸஹவாசமும் கூடாது –
ஆகையால் நிலம் பிளந்தால் இழை இட ஒண்ணாதது போலவும் -கடல் உடைந்தால் கட்ட ஒண்ணாதது போலேயும்-
மலை முறிந்தால் தங்க ஒண்ணாதது போலேயும் அனுதாபம் பிறவாத பாகவத அபசாரம் தீர்த்துக் கொள்ளக் கூடாதது இறே –
ஆன பின்பு நான் என் இஷ்டத்திலே இருந்து யீடு ஏறிப் போகிறேன் என்ன

ஸ்ரீ தோழப்பரும் தேவிகள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டுச்
சற்றுப் போது திகைத்து எழுந்து அருளி இருந்து -பெரிய வித்வான் ஆகையாலும் திரு வம்ச பிரபாவத்தாலும் அஸூயையால் வந்த
திரு உள்ளத்தின் கலக்கம் தீர்ந்து தெளிந்து வந்து திருத் தேவிகளைப் பார்த்து-
நீ சொன்னது எல்லாம் ஒக்கும் -நாம் தப்பச் செய்தோம் –இனி மேல் செய்ய அடுக்குமது எது-என்ன

திருத் தேவிகளும்-ஆற்றிலே கெடுத்துக் குளத்திலே தேடாதே-கெடுத்த இடத்தே தேடிக் கொள்ளீர் -என்ன –
ஸ்ரீ தோழப்பரும் ஆவது என் -என்ன -திருத் தேவிகளும் பரம தயாளுவான ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளில் சென்று சேவித்து
அபராத ஷாமணம் பண்ணிக் கொண்டு அவர் கிருபை பண்ணி அருள யீடு ஏறீர் என்ன –

ஸ்ரீ தோழப்பரும் அவரை ஸ்ரீ பெருமாளுடைய பெரும் திரு ஓலக்கத்திலே பரிபவித்து -இப்போது அவர் சந்நிதியில் போய் நிற்க என்றால்
எனக்கு லஜ்ஜா பயங்கள் அனுவர்த்தியா நின்றது -நீ கூட வந்து ஷமிப்பிக்க வேணும் -என்ன
திருத் தேவிகளும் ஸ்ரீ தோழப்பர் சொல்லும் வார்த்தையைக் கேட்டு -அப்படியே செய்கிறேன் என்று கடுக
எழுந்து அருளி இருந்து அவரையும் கூட்டிக் கொண்டு ஸ்ரீ நம்பிள்ளை திரு மாளிகைக்கு எழுந்து அருளுவதாக புறப்பட்ட அளவிலே

ஸ்ரீ நம்பிள்ளை செய்தபடி -ஸ்ரீ கோயிலிலும் இருந்து எழுந்து அருளின பின்பு முதலிகள் எல்லாரையும் அனுப்பி அருளி
பகல் எல்லாம் அமுது செய்து அருளாமல் தம் திரு மாளிகைக்கு உள்ளே எழுந்து அருளி இருந்து சாயங்காலமான வாறே
ஆவஸயக கர்மத்தைச் செய்து அருளி ஒற்றைத் திருப்பரி யட்டத்துடனே முட்டாக்கு இட்டுக் கொண்டு தாம் ஒருவருமே எழுந்து அருளி
ஸ்ரீ கந்தாடைத் தோழப்பர் திரு மாளிகை வாசலிலே கைப்புடையிலே வந்து கண் வளர்ந்து அருள –

ஸ்ரீ தோழப்பரும் திருத் தேவிகளுமாக திரு விளக்கை ஏற்றிக் கொண்டு ஸ்ரீ பிள்ளை திருமாளிகைக்கு எழுந்து அருளுவதாகத்
திரு மாளிகை வாசலிலே புறப்பட்ட அளவிலே -திரு விளக்கு ஒளியாலே கைப்புடையிலே ஒரு வெள்ளை கிடக்கிறதைக் கண்டு-
ஸ்ரீ தோழப்பர் இங்கே யார் கிடக்கிறார் -என்று கேட்க –

ஸ்ரீ பிள்ளையும் -அடியேன் திருக் கலிகன்றி தாசர் -என்ன

அவ்வளவில் ஸ்ரீ தோழப்பர் -இது என் என்று திகைத்து -ஸ்ரீ பிள்ளையைப் பார்த்து –
நாம் மஹா தேஜஸ்வீ -நம்மை ஸ்ரீ நம்பெருமாள்
திரு ஓலக்கத்திலே பரிபவிக்கலாவது என் -என்கிற கோப அதிசயத்தாலே நம்முடைய திரு வாசலிலே வந்து
மௌர்க்யம் செய்வதாகக் கிடக்கிறீரோ என்ன –

ஸ்ரீ நம்பிள்ளையும் ஸ்ரீ தோழப்பரைக் குறித்து -அடியேன் அப்படிச் செய்ய வரவில்லை -என்ன –

ஆகில் இங்கு வந்து கிடப்பான் என்று என்று ஸ்ரீதோழப்பர் கேட்க –

ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்தபடி –
ஸ்ரீ பெரிய பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ முதலியாண்டான் திருப்பேரனான தேவரீர் திரு உள்ளம் கலங்கும்படி வர்த்தித்த மஹா பாபியான
அடியேனுக்குத் தேவரீர் திரு மாளிகை வாசல் அல்லது புகுவாசல் மாண்டு வந்து கிடக்கிறேன் -என்ன

இவரை அநு வர்த்திப்பதாகப் புறப்பட்டு வந்து நிற்கிற ஸ்ரீ தோழப்பர் ஸ்ரீ பிள்ளை கண் வளர்ந்து அருளுகிற தைன்யத்தைக் கண்டு
அவருடைய நைச்ய வார்த்தைகளையும் கேட்டு -இது ஒரு அதிகாரம் இருந்தபடி என் -என்று போர வித்தராய்
ஸ்ரீ பிள்ளையை வாரி எடுத்து அணைத்துக் கொண்டு-இத்தனை நாளும் சிறிது பேருக்கு ஆச்சார்யர் என்று இருந்தேன் –
இப்போது லோகத்துக்கு எல்லாம் நீரே ஆச்சார்யர் ஆகைக்கு ப்ராப்தர் என்று அறிந்தேன் என்று
ஸ்ரீ தோழப்பர் உகந்து -ஸ்ரீ லோகாச்சார்யார் -என்று ஸ்ரீ பிள்ளைக்குத் திரு நாமம் சாத்தி அருளித்
தம்முடைய திரு மாளிகையில் கொண்டு புக்குத் தாமும் திருத் தேவிகளுமாய் ஸ்ரீ பிள்ளையை
அநேகமாக அனுவர்த்தித்து அவர் திரு உள்ளத்தை மிகவும் உகப்பித்து தமக்கு வேண்டும் அர்த்த விசேஷங்களை
எல்லாம் கேட்டுக் கொண்டு ஸ்ரீ பிள்ளை திருவடிகளில் ப்ரவணராய் க்ருதார்த்தராய் அருளினார் –

பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் அந்திம உபாய நிஷ்டையில் இத்தை எடுத்துக் கட்டி உள்ளார் )

அப்படிச் சொன்ன அவளுடைய வார்த்தையைக் கேட்டு
பிரமாதாத் புத்தி தோ வாபி யதா அக க்ரியதே சதா
அனுதப்தஸ் து தாநேவ ஷாம யேன் நான்ய தாசம -என்கிறபடியே

(பிரமாதாத் புத்தி தோ வாபி – கவனக்குறைவாலோ தெரிந்தோ
யதா அக க்ரியதே சதா-அபசாரம் செய்தால்
அனுதப்தஸ் -அனுதாபம் பட்டு
து தாநேவ ஷாம யேன் நான்ய தாசம–அவர் இடமே ஷாமணம் வாங்கிக் கொள்ள வேண்டும் )

அஸூயையால் வந்த கலக்கம் தெளிந்து
அத்யந்தம் அனுதாபத்துடனே
கெடுத்த விடத்திலே தேடும்படி அவரை ஷாமணம் பண்ணுவதாக
சஹகாரிகள் உடனே புறப்பட்டு வர–
அவ்வளவிலே –

அஹேதோர் அபி சக்ரோதம் அர்ச்சயன் ந அச்யுத ப்ரியம் ப்ரபோத்ய
விவிதைர் யத்னை ப்ராஜ்ஞ்ஞோதித ப்ரசாதயேத்–என்கிறபடியே
தம்மை உகப்பிப்பதாகத் தம் திரு மாளிகை வாசலிலே வந்து கைப்புடையிலே கிடக்கிற ஸ்ரீ நம் பிள்ளை யுடைய
அத்யந்த நைச்யமான உக்தி வருத்திகளைக் கண்டு-கேட்டு-மிகவும் ப்ரீதராய்
இது ஒரு பரிமாற்றம் இருந்த படி என் என்று
தம்முடைய ஆதர அதிசயத்தாலே இவரைப் பார்த்து
தேவரீர் இத்தனை நாளும் சிறிது பேருக்கு ஆச்சார்யராய் இருந்தீர்
இப்போது லோகத்துக்கு எல்லாம் ஆச்சார்யராக ப்ராப்தராகா நின்றீர் -என்று –

(குற்றம் செய்பவர்கள் பக்கல் பொறை -முதலில் -பின்பு கிருபை -பாபங்கள் போகக் கூடாதே -பின்பு சிரிப்பு –
ஆத்மாவுக்கு நன்மை தானே உண்டாகும் கெடுதி இல்லையே -பின்பு உகப்பு -அடுத்து உபகார ஸ்ம்ருதி –
பாபங்களை தாமாகவே வந்து சுகப்பதாலும் – நம்மால் விண்ணப்பம் செய்யாத தோஷங்களை பிரதி நிதியாக சொன்னாரே
இப்படி ஐந்தும் வேண்டுமே -துர்லபம் -இவர்களைப் போல் )

என்ன உலகாரியரோ என்று உரைக்கப் —
என்ன லோகாச்சார்யாரோ -என்று அருளிச் செய்ய –
லோகாச்சார்ய அபிதாம் தாது கவிஜித் தாச ஸூரயே
ச்யாமே பச்சய சரணவ் கரணை ஸ்த்ரிபிர் ஆஸ்ரயே–என்றும் (ச்யாமே பச்சய பச்சை வாரணர் )

தயாயாம் தேவ ராஜச்ய தாசரத்ரார்ய சந்ததே
அபிவருத்தி கரம் வந்தே ஹரிதத் விபதேசிகம் -என்னக் கடவது இறே –
(ஹரிதத் விபதேசிகம்-பச்சை வாரணர் )

பின்னை உலகாரியர் என்னும் பேர் நம் பிள்ளைக்கு ஓங்கி விலகாமல் நின்றது என்றும் மேல் –
அப்படி அவராலே பேர் பெற்ற பின்பு ஸ்ரீ லோகாச்சார்யர் என்னும் திரு நாமம்
உச்ச்ராயத்தை ( உயர்த்தியை ) யுடைத்தாய்-
சர்வ லோகத்திலும் ஸ்ரீ நம்பிள்ளைக்கு பேராமல் நின்றது –
ஆஸ்ரயம் போந்து இருக்கையாலே பேரானது பேராமல் இருக்கிற படி –

இத்தால் ‘-
இவர் லோகாச்சார்யத்வம்
கூர குலத்திலவர்களும்
வாதூல வம்ச்யரும்
அனுவர்த்தித்து ஆஸ்ரயித்த போதே
சர்வ லோக சம் பிரதிபன்னம் என்றது ஆய்த்து –

(கூர குலத்திலவர்களும் -நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் இவர் சிஷ்யர்
ராஜ சபைக்கு போக –சத்யான் லோகான் ஜெயதி -நம்பிள்ளை அருளிச் செய்வதைக் கேட்டு
பின்பு அழகிய பெருமாள் ஜீயர் இடம் கேட்டு அறிந்தார் -அரசனுக்கு அருளிச் செய்த வ்ருத்தாந்தம்
அரசன் கொடுத்த பரிசை -நஞ்சீயருக்கு சமர்ப்பித்து தேவர் திரு வாக்கில் வந்த திவலைக்கு பரிசு என்று அடி பணிந்தார்
அழைக்கும் கரும் கடலில் -திரு விருத்தம் வியாக்யானத்தில் உள்ள ஐதிக்யம் உண்டே

ஒரு ஆச்சார்யர் நம்பிள்ளை இடத்தில் குறைய நினைத்து தாமே திரு விருத்தத்தைப் பார்த்துக் கொண்டு போக
இப்பாட்டு அளவாக ஒரு வகையாக நிர்வகித்து இது தெரியாமையாலே ஒருத்தரும் அறியாதபடி அர்த்த ராத்திரியிலே வந்து
பிள்ளையை அழைக்க இப்பாட்டினுடையவும் இவருடையவும் ஸ்வ பாவம் அறியுமவர் ஆகையால்
அழைக்கும் கருங்கடலோ என்றாராம் என்று ஆத்தான் அருளிச் செய்வர்

ரிஷி -என்னுடைய ஆஸ்ரமத்தில் பிராமணர்கள் தவிர வேறே இல்லை
ஒழிந்த ஷத்ரியனும் பிராமணனும் ஆனான்
ப்ரஹ்ம ரிஷி ஆனார் வசிஷ்டர் வாயால் சொன்னதால் விச்வாமித்ரரும் )

இப்பாட்டில் சொல்லுகிற அர்த்தமும்
இதன் கீழ் மேல் சொல்லுகிற அர்த்தங்களும்
எல்லாம் அந்திம உபாய நிஷ்டையிலே அஸ்மத் பரமாச்சார்யரான -ஸ்ரீ பெரிய பட்டர் பிரான் ஜீயர்
ஸூ ஸ்பஷ்டமாக அருளிச் செய்து அருளினார்
அதிலே கண்டு கொள்வது –

(சிலர் திருப்பேரனார் என்பர்
இவர் கார்க்கி கோத்ரம் -ஜனக குலம்
அவர் பரத்வாஜ கோத்ரம்
சிஷ்யருக்கு சிஷ்யரும் பேரன் ஸ்தானமே
கார்க்கி பாரத்வாஜம் என்றும் ஒரு கோத்ரம் உண்டாம் )

————————————————

இனி-இந்த லோகாச்சார்யர் என்னும் திரு நாமமானது
லோகம் எங்கும் வந்து பரந்தது
இன்னத்தாலே என்று –
தத் ஹேதுவை தர்சிப்பித்து அருளுகிறார் –

பின்னை வடக்குத் திரு வீதிப் பிள்ளை யன்பால்
அன்ன திரு நாமத்தை யாதரித்து -மன்னு புகழ்
மைந்தர்க்குச் சாத்துகையால் வந்து பரந்தது எங்கும்
இந்தத் திரு நாமம் இங்கு —52-

பிரமாண ப்ரமேய ரஷணம் செய்த பிரமாதா இவர் என்பதால் வந்த புகழ் உண்டே
இவருக்கு அவதரித்த போதே பெற்ற சிறப்பு உண்டே – இதுவே இயற் பெயரானதே-

தாம் கிருஷ்ண பாத
உபலாலயதி ஸூவ சம்க்யாம்
க்ருத்வா தத் அர்ஹ
நிஜஸ்ய ஸூ நோ
தேனைவ ச
ஜன ஹிதாயா புவி ப்ரவ்ருத்த
ஜகத் குரு
பிரசிதா சமந்தாத்

பின்னை வடக்குத் திரு வீதிப் பிள்ளை –
அதாவது–
ஸ்ரீ நம்பிள்ளைக்கு லோகாச்சார்யார் என்னும் திரு நாமம் நன்றாக நடந்து செல்லுகிற அக்காலத்திலே
அதி விரக்தராய் ஸ்ரீ ஆச்சார்ய கைங்கர்யமே அநவரதம் செய்து கொண்டு போருகிற
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளைக்கு தந் நியோகம் அடியாக
தத் சம்வத்சரத்திலே
ஒரு திருக் குமாரர் திரு வவதரிக்க –
அநந்தரம் ஸ்ரீ ஆச்சார்ய அபிமான நிஷ்டரான அவர் –

(இவர் விரக்தராய் இருக்க இவரது திருத்தாயார் நம்பிள்ளை இடம் பிரார்த்தித்து அதனால் புத்ர பாக்யம்
1205-திரு அவதாரம்
1323 வருஷம் பங்குனி எட்டாம் திரு உத்சவம் நடத்தி திரை சாத்தி
மூடு பல்லக்கில் எழுந்து அருளப்பண்ணி )

(பேரன் -கொச்சை பேயரன் –தாத்தா பெயரை உடையவன்
பேத்தியும் அப்படியே
தகப்பனார் லஷ்மி தாத்தாச்சாரியார் பிள்ளை ஆழ்வார் -இப்படி மாறி மாறி வருமாம்
ஆச்சாரர் திரு நாமம் வைப்பதும் வழக்கம் )

யன்பால் அன்ன திரு நாமத்தை யாதரித்து –
அன்புடையோர் சாத்தப் பட்ட தாகையாலே தாமும் அப்படியே அன்பாலே
அவர் திருவடிகளிலே ஸ்நேஹத்தாலே
அவாங் மனஸ் வைபவமான அந்தத் திரு நாமத்தை ஆதரித்து –

மன்னு புகழ் மைந்தர்க்குச் சாத்துகையால் –
திரு நாமம் சாத்துக்கைக்கு போரும்படியான பொருந்தின புகழை யுடைய
தம் குமாரருக்கு –
(அவதரிக்கும் பொழுதே ப்ரமாண ப்ரமேய ரக்ஷணம் செய்யப் போகிறார்
அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே போல் )
அதாவது
ஸ்ரீ நம்பூர் வரதர் யுடையவும்-ஸ்ரீ திரு வத்தியூர் வரதர் யுடையவும்
திரு வவதாரம் ஆகையால்
ஏற்கும் பெரும் புகழ் யுடைய-( திருவாய் -3-9-11) தம் குமாரருக்கு –
இப்படி மன்னு பெரும் புகழை யுடைய மஹாத்மாவான
மைந்தருக்கு அனுரூபமாகச் சாத்துகையாலே –
(தேவப் பெருமாளே பிள்ளை லோகாச்சார்யார் -இரண்டு ஆற்று கரையில் போய் கேளும் -அவரோ இவர் )

வந்து பரந்தது எங்கும் இந்தத் திரு நாமம் இங்கு –
இப்படி ஸ்ரீ கிருஷ்ண பாதராலே கீர்த்திக்கப் படுகையால்
தத் ஸூநுவான இவருடைய இந்தத் திரு நாமமானது –
இங்கு எங்கும் வந்து பரந்தது –
ஒரு பேர் வெள்ளம் இட்ட படி –

இவருடைய இந்த ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் என்னும் திரு நாமம் ஆனது
இந்த லோகம் அடைய ஏறிப் பாய்ந்து பரந்து பலித்தது –
(லோகாச்சார்யார் திரு நாமம் பெரு வெள்ளம் எடுத்து லோகம் முழுவதும் பாய்ந்து பலித்ததே )

கிண்ணகம் உடை பட்ட வாறே-காடு மேடுகள் எங்கும் வெள்ளம் பாய்ந்து பரக்குமா போலே
இப் பேர் வெள்ளமானது
அஞ்ஞர் ஞானிகள் விபாகம் அற எல்லாரும் அறிந்து அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும் படி
எங்கும் விஸ்தருதம் ஆய்த்து –

ஸ்ரீ ஜீயர் தாமும் –
வாழி ஸ்ரீ உலகாரியன் -என்கிற திரு நாமத்தை தாமும் பலகாலும்
அனுசந்தித்து அருளி
தமக்கு அந்தரங்கர் ஆனவர்களுக்கு உஜ்ஜீவனத்துக்கு உடலாக உபதேசித்து அருளியும்
இதில் விமுகராய் இருப்பாரையும் உட்பட
இப்படி எளிதும் இனிதுமான திரு நாமம் இருக்க
இத்தை அனுசந்தித்து உஜ்ஜீவியாமல் அனர்த்தப் பட்டுப் போவதே – என்று வெறுத்து அருளுவாராம் –

வாழி யுலகாரியன் வாழி யவன் மன்னு குலம்
வாழி முடும்பை என்னு மா நகரம் -வாழி
மனம் சூழ்ந்த பேர் இன்ப மல்கு மிகு நல்லார்
இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு

ஒத்து முடும்பை யுலகாரியன் அருள்
ஏது மறவாத வெம்பெருமான் நீதி
வழுவாச் சிறு நல்லூர் மா மறையோன் பாதம்
தொழுவார்க்கு வாரா துயர் —

முடும்பை குலத்துக்கும் இடத்துக்கும் பெயர்

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

உபதேச ரத்னமாலை –பாசுரம் -46/47/48/49- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

July 25, 2014

ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ நஞ்சீயர் என்று தொடங்கி உத்தேசித்த படி
திராவிட வேதமான திருவாய் மொழிக்கு வியாக்யானம் பண்ணினவர்களையும்
தத் கிரந்த சங்க்யைகளையும்
இவ்வளவாக தர்சிப்பித்து அருளி

இனி-தத் அங்க உபாங்களான மற்றை அருளிச் செயல்களுக்கும்
வியாக்யானம் பண்ணினார் இன்னார் என்னும் அத்தையும் அருளிச் செய்வாராய் –
அப்படியே அவை எல்லாவற்றுக்கும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
வியாக்யானம் செய்து அருளின படியையும் இதில் அருளிச் செய்கிறார் –

பெரியவாச்சான் பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால் -அரிய
அருளிச் செயல் பொருளை ஆரியர்கட்கு இப்போது
அருளிச் செயல் ஆய்த்து அறிந்து–46-

ப்ராயேண சம்யக் அபர திராவிட ஆகம
டீகா க்ருதா யத்
அபய பிரத ராஜ நாம்நா
தேனைவ
தேஷு ககநேஷு கதி
குரு நாம்
லோக உபதேச சமயேஷு
அதுனாதி ரம்யா

பெரியவாச்சான் பிள்ளை –
அவர் திருக் குமாரரான ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளையும்
ஸ்ரீ நாலூர் ஆச்சான் பிள்ளையும் யுண்டாகையாலே
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்று இவரை விசேஷிக்கிறது –

(பரந்த ரஹஸ்யம் -மாணிக்க மாலை -இரண்டும்
நாயனார் ஆச்சான் பிள்ளை இவர் குமாரர் அருளிச் செய்தவையே – காஞ்சி ஸ்வாமிகள்
இவரே -தான் என்பர் -புத்தூர் ஸ்வாமிகள் பெரியவாச்சான் பிள்ளை – )

பின்புள்ளவைக்கும் தெரிய –
ஸ்ரீ சடகோப வாங்மயமான திருவாய் மொழியை ஒழிந்த
ஸ்ரீ திருப்பல்லாண்டு தொடங்கி
ஸ்ரீ திருமடல்கள் ஈறாக யுண்டான
திவ்ய பிரபந்தங்கள் இருபத்து மூன்றுக்கும் –

(அவதார கிரமம் முதல் திருவந்தாதி -திரு நெடும் தாண்டகம் ஈறாக –
சேவா கால க்ரமம் முதல் ஆயிரம் தொடக்கம் திருப்பல்லாண்டு இயற்பா கடைசியில் திரு மடல்
அத்யயன உத்சவம் -இயற்பா கடைசியில் சேவை உண்டே
சம்ரோக்ஷன காலத்தில் தொடர்ச்சியாக சேவிக்க திருவாய் மொழி கடைசியில் -சேவை உண்டே )

தெரிய வியாக்கியைகள் செய்வால் –
தம்முடைய பர சம்ருத்ய ஏக பிரயோஜனதையால் ஸூ ஸ்பஷ்டமாம் படி
வியாக்யானம் செய்து அருளுகையாலே –

அரிய அருளிச் செயல் பொருளை –
அரிய வின்னிசை (பெரிய திருமொழி -1-2-10)-என்றும்
அறிவித்தேன் ஆழ் பொருளை (நான்முகன் -1-)-என்றும் சொல்லும் படியாய் இறே
அருளிச் செயல்களின் உடைய சப்தார்த்தங்களின் அருமை இருக்கும் படி –
(சப்த அர்த்தங்கள் சீர்மைக்கு இரண்டு பிரமாணங்கள்
அரன் இத்யாதி மேனி -அவனுக்கு சரீர பூதர் போன்ற ஆழ்ந்த பொருள்கள் -)

செஞ்சொல் கவி-( 10-7-1-)-என்றும்
செவிக்கு இனிய செஞ்சொல்-10-6-11-) -என்றும்
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை -(பெரிய திருமொழி 1-1-10 )-என்றும் –
செந்தமிழ்-( பெரிய திருமொழி -2-8-2-) -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரவண சமயமே பிடித்து நிரதிசய போக்யமாய்-
திராவிட பாஷை என்னுமத்தால் அதி ம்ருதுக்களாய்
அத ஏவ அதி ஸூலபமாய் இருந்ததே யாகிலும்
தாத்பர்ய நிர்ணயத்தில் வந்தால் -அத்யந்த துர் க்ரஹமாய் இறே இருப்பது —
இப்படி அருமை பெருமைகளை யுடைத்தான அருளிச் செயல்களின் அர்த்தமானது –

ஆரியர்கட்கு இப்போது-
ஸ்ரீ ஆச்சான் பிள்ளைக்கு இவ்வருகில் உண்டான ஆச்சார்யர்கள் எல்லாருக்கும் –

இப்போது –
இவர் வியாக்யானம் செய்து அருளின பின்பு -என்னுதல் –

அன்றிக்கே –
தமக்கு சமகாலத்தில் அவர்களாய் உள்ளவர்களுக்கு -என்னுதல் –

அப்போது -அவர் அப்படி செய்து அருளுகையாலே யாய்த்து
இப்போது- இப்படி அருளிச் செய்ய வாய்த்து –
அரியது எளிதாகும் (இரண்டாம் திருவந்தாதி )-என்னும் படி அவர் பிரசாதத்தாலே –

அருளிச் செயல் ஆய்த்து அறிந்து-
அதாவது
அதி துர்க்ரஹமான அர்த்தங்களை இவர் வியாக்யான விசேஷங்களாலே
நன்றாக அறிந்து
அத்தை-ஸ்வ அனுபவ ரூபமாகவும்
பரோபதேச ரூபமாகவும் அருளிச் செய்யும் படி யாய்த்து –
அல்லாத ஆச்சர்யர்களில் காட்டில் இது இறே இவர்க்கு வைபவம்-
(வியாக்கியான சக்ரவர்த்தி-பரம காருண்யர்
ஸ்தோத்திரங்கள் -ரஹஸ்யங்கள் -ராமாயணம் -அருளிச் செயல்கள் -ஸிம்ஹாஸனம் )

——————————————————-

இதில் ஸ்ரீ நஞ்சீயர் தொடக்கமான ஆச்சார்யர்களும்
சிறிது பிரபந்தங்களுக்கு வியாக்யானம்
செய்து அருளின படியையும் அருளிச் செய்கிறார் –

நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு
எஞ்சாமை யாவைக்கும் இல்லையே -தஞ்சீரால்
வைய குருவின் தம்பி மன்னு மணவாள முநி
செய்யுமவை தாமும் சில –47-

சேஷாஞித் திராவிட ஆகமானாம் விவ்ருத்தி
வேதாந்திபிர் க்ருத
ந புன
பிராஜ்ஜாபராத்
அவரஐ ஜகாத் குரோ
ஸும்யோ
கலி தாஸ்ய கச்சித்

நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு-
அதாவது ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளையைப் போலே
அசேஷ திவ்ய பிரபந்தங்களுக்கும் வியாக்யானம் பண்ணுகை அன்றிக்கே –
அவற்றில் நாலிரண்டு பிரபந்தங்களுக்கு ஆய்த்து அவர் முன்னே செய்து அருளிற்று -என்கை – –
(பெரியவாச்சான் பிள்ளைக்கு முன்னமே என்றபடி )

நாலிரண்டு –
என்று சங்க்யா நிர்த்தேசம் அன்று
ஒரு முழுச் சொல் இருக்கிறபடி –
அதாவது
அல்பத்திலே தாத்பர்யம் –
மேலும் -சில- என்று இறே அருளிச் செய்தது –

இவர் தாம் செய்து அருளினதாய்க் கண்டது
ஸ்ரீ திருப் பாவைக்கும்-
ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்புக்கும் – இறே உள்ளது –
பின்னையும் யுண்டாகில் கண்டு கொள்வது –
( திருப்பள்ளி எழுச்சிக்கும் பெரிய திருமொழிக்கும் உண்டு என்பர்
திருப்பாவைக்கு நஞ்சீயர் வியாக்யானம் இப்போது நம்மிடம் இல்லை –
திருப்பள்ளி எழுச்சிக்கு உண்டு –
பெரிய திருமுடி அடைவில் நஞ்சீயர் திருப்பாவைக்கு ஈராயிரப்படி உன்டு என்று உள்ளது
சரஸ்வதி பண்டாரம் -பெரிய திருமொழிக்கு -ஆறு பத்துக்கு மட்டும் இருக்கிறது –
முதல் இரண்டுக்கும் நஞ்சீயர் -மேலே வாதி கேசரி ஜீயர் அருளிச் செய்தது என்று உள்ளது
அரும் பதத்தில் நஞ்சீயர் படியில் கண்டு கொள்வது என்றும் உள்ளது – )

எஞ்சாமை யாவைக்கும் இல்லையே –
அதாவது
சங்கோசம் அற சகல திவ்ய பிரபந்தங்களுக்கும் வியாக்யானம் செய்து அருள வில்லை -என்றபடி –

இல்லையே -என்று தேற்றம் இருக்கிறபடி –
எஞ்சல் -ஒழிதலும் -சுருங்குதலும் –
எஞ்சாமை வைத்தடக்கி -(பெரிய திருமொழி- 2-10-1-)-என்னக் கடவது இறே –

தஞ்சீரால் வைய குருவின் தம்பி –
அருளிச் செயலிலே வந்தால் அல்லாத ஆச்சார்யர்கள் எல்லாரையும் காட்டிலும்
அத்யந்த அவகாஹத்தை யுடையராம் படியான தம்முடைய ஞாநாதி கல்யாண குணங்களாலே
காத்த குணவாளர் -என்னும் போலே –
தஞ்சீராலே யாய்த்து இவரும் சிலவற்றுக்கு செய்து அருளினது –
(கீழே ஐந்து திருவாய் மொழி காத்த குணவாளர் போல் ஆச்சார்ய ஹ்ருதயம் அருளி காத்தார் இவரும் அன்றோ
-critical analysis )

மன்னு பதின்மர் மறைப் பொருளில் மாறன் சீர்
துன்னு மதுர கவி சொற்பொருளும்
அன்ன நடைத் திங்கண் முக வல்லி யுரை செம்பொருளும்
தென் முடும்பை எங்கள் மணவாளர்க்கு இறை – என்னும் படி இறே இவற்றில் இவருடைய அவகாஹம் இருப்பது-
(கண்ணி நுண் சிறு தாம்பு வியாக்யானம் – திருப்பாவை ஆறாயிரப்படி )

வைய குருவின் தம்பி –
இதுக்கு எல்லாம் அடி –அவர் பின் பிறப்பு ஆய்த்து –
அதாவது ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் என்று பிரசித்தியை யுடையரானவருடைய திருத் தம்பியாரான
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -என்கை –
இவருக்கு அதிசயாவஹமான சம்பந்தம் இருக்கிறபடி –
ராஜ குமாரர் ( ராமனுஜர் என்றால் போல் )-என்றாப் போலே -இவருக்கு ஜகத் குருவராநுஜர்-என்று இறே நிரூபகம் –
தம்பி உடன் தாசரதி ஆனானும் —இத்யாதி –

(தம்பி உடன் தாசாரதி ஆனானும் -சங்க வண்ண நம்பி உடன் பின் நடந்து வந்தானும்
முடும்பை உலகாரியனும் மணவாளனும் -கண்ணன் போல் -யதீந்த்ர ப்ரவண பிரபாவம்
இனி மாம் என்று தொட்டுரைத்த சொல்லும் த்வயம் சொல்லும் பொருளும் யார் உரைப்பார் -என்று
பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்ததாகவும் உண்டே )

(மார்கழி கேட்டை -திரு அவதாரம்
தநுர் ஜ்யேஷ்டா ஸமுத்பூதம் ஸ்ரீ லோகார்ய பாத ஆஸ்ரிதம்
வந்தே வர குணா வாஸம் வர ஜாமாத்ரூ தேசிகம்
த்ராவிடாம் நாய ஹ்ருதயம் குரு பர்வ க்ரமா கதம்
ரம்ய ஜா மாத்ரு தே வேத தர்சிதம் கிருஷ்ண ஸூநு நா )

மன்னு மணவாள முநி-
இவ்வர்த்தத்தில் பொருத்தம் யுடையவராய்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள சீயர் என்று
நிலை நின்ற நிரூபகத்தை யுடையரானவர் –

இப்படி திரு நாமத்தை யுடையரான இவர்கள் இருவரும் –
செய்யுமவை தாமும் சில –
இவர்களால் செய்யப் படும் வ்யாக்யானங்கள் தாமும் சில பிரபந்தங்களுக்கு -என்றபடி –

அவை தாமும் –
என்று கீழில் அவற்றோடு சமுச்சயிக்கிறது –
ஸ்ரீ திருப்பாவைக்கும்
ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்புக்கும் -நாயனார் அருளிச் செய்தனதாயும்
ஸ்ரீ திரு விருத்தத்துக்கு ஸ்வாபதேச வியாக்யானம் ஜீயர் செய்து அருளினதாகவும் கண்டது –
(இது இன்றும் கிடைக்கிறது )
இன்னமும் இவற்றை ஒழிய யுண்டாகிலும் கண்டு கொள்வது –

(பெரிய திருமடல் வியாக்யானம் -நாயனார் அருளிச் செய்ததாக புத்தகம் உள்ளது
முகவுரையில் -நம்பிள்ளை வியாக்யானமாக தெலுங்கு பதிப்பில் உள்ளது –
புத்தூர் ஸ்வாமி இது நாயனார் அருளிச் செய்தது என்பர்
நம்பிள்ளை அருளிச் செய்யும் படி என்ற வாக்கியங்கள் உண்டு
இதனால் கொள்ள முடியாதே -ஈட்டில் இது போலே உண்டே
திரு விருத்தத்துக்கு நம்பிள்ளை வியாக்யானத்திலும் இது போல் நம்பிள்ளை அருளிச் செய்யும் படி -போல் –
இவர் சொல்ல வேறே ஒருவர் பட்டோலை கொள்ள லாமே
நாயனார் அருளிச் செய்த அமலனாதி பிரான் வியாக்யானமும் உண்டு )

(இந்த மூவரையும் தவிர
நம்பிள்ளை -திரு விருத்த வியாக்யானம் உண்டு —
இயற்பா –நான்கு திருவந்தாதிகளுக்கும் – நம்பிள்ளைப் படியும் உண்டே
கண்ணி நுண் சிறுத்தாம்புக்கும் நம்பிள்ளை வியாக்யானம் உண்டு
திரு எழு கூற்று இருக்கை இரண்டு வியாக்கியானங்கள் இருக்கின்றன –
அதில் ஒன்றும் நம்பிள்ளை அருளிச் செய்ததாக இருக்கலாம் –
இவை மா முனிகள் பின்பு கிடைத்து இருக்கலாம் -)

(தத்வ விவேகம் -பிள்ளை லோகாச்சார்யார் சமஸ்க்ருதத்தில் உண்டு –
அயோத்தியில் ராமானுஜ ஜீயர் சிங்கம்மாள்-யோகி பார்த்த சாரதி ஸ்வாமி தர்ம பத்னி இடம்
பகவத் விஷயம் காலஷேபம் செய்தவராம்
அஷ்டாதச ரஹஸ்யம் புத்தகம் -முன்னுரையில் தத்வ விவேகம் சம்ஸ்க்ருதத்தில் உள்ளது -என்ற குறிப்பு –
அத்தைப் பார்த்தே வேங்கட கிருஷ்ண ஸ்வாமி இத்தை-2005- வெளியிட்டு அருளினார் )

(நம்பிள்ளைப்படி ரஹஸ்ய த்ரயத்துக்கு சமீபத்தில் ஓலைச்சுவடி கிடைத்துள்ளதாம் –
வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமி இடம் உள்ளது –
ஆய் ஸ்வாமி ஆச்சார்ய ஹ்ருதயம் எல்லா பிரகரணங்களுக்கும் சமீபத்தில் வெளி உள்ளது )

(இந்தக் காலத்திலும் நமக்கு இப்படி
ஆகவே வியாக்கியானங்கள் சேகரித்து இருப்பதைக் கொடுத்து அருளி
பெரிய உபகாரம் மா முனிகள் அருளிச் செய்துள்ளார் )

———————————————

நாதம் பங்கஜ நேத்ர ராம யமுநாவாஸ்தவ்ய மாலாதரான்
யோகீந்த்ரம் குருகேச சந்திர ஜலதிம் கோவிந்த கூராதியௌ
பட்டார்யம் நிகமாந்த யோகி ஜகதார்சார்யௌ ச க்ருஷ்ண த்வயௌ
வந்தே மாதவ பத்மநாப ஸூமன கோசல தேவாதிபான் —ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்தது

திருவருள் மால் சேனை முதலி சடகோபன் நாத முனி -சீர் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார்
குரு மாலாதரர் குருகைப் பிரார்க்கு அன்பாம் எதிராசர் கோவிந்தர் கூரேச பட்டர் வேதாந்த முனி
இரு கண்ணற்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடளித்தற்கு ஏய்ந்த மாதவர் பற்பநாபர் இவர் அருளாளர்
திருவடி ஊன்றிய தேவப் பெருமாள் கைக் கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே –ஸ்ரீ மா முனிகள் அருளியது

(ஸ்ரீ நாத முனிகள் திருவவதாரம்–823- 917-
ஸ்ரீ பங்கஜ நேத்ரர் ஆகிறார் -சீர் உய்யக் கொண்டார் -என்னும்படியான சீர்மையை யுடையவர் –886-975-
அவர்தாம் புண்டரீகாஷர் இறே
ஸ்ரீ ராமர் ஆகிறார் -ஸ்ரீ ராம மிஸ்ரர் -அவர்தாம் மணக்கால் நம்பி-926-1006-
மாலாதரர் ஆகிறார் -குரு மாலாதரர் -என்னும்படி யான திருமாலை யாண்டான்-988-1088-
யோகீந்த்ரம் குருகேச சந்திர ஜலதிம் -அதாவது -குருகைப் பிராற்கு அன்பாம் எதிராசர்-1017-1137
ஸ்ரீ கோவிந்தர்-1021-1140 –
ஸ்ரீ கூரேசர் -1009-1127–
ஸ்ரீ பராசர பட்டர் –1122-1174
ஸ்ரீ நஞ்சீயர் என்கை –1113-1208–
ஸ்ரீ நம்பிள்ளை –105 திருநக்ஷத்ரம் 1147–1252-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –95-திருநக்ஷத்ரம் 1166–1261-
ஸ்ரீ வடக்குத் திருவீதிப்பிள்ளை–97- -திருநக்ஷத்ரம் 1167-1264-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் -1205—1323- -ஜோதிஷ்குடி -கொடிக்குளம் இன்றைக்கு –
ஸ்ரீ நம்பெருமாள் -1323-உலுகான் படையெடுப்பு -1371 மீண்டு எழுந்து அருளி –
ஸ்ரீ நாயனார்–1207–102- திருநக்ஷத்ரம்–1309-
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை-1290–1406
ஸ்ரீ மா முனிகள் -1370–1443-
ஸ்ரீ தேசிகன் 1269-1369

கம்பர் குருகைப்பிரான் திரு நாமம் அடிக்கடி சடகோபர் அந்தாதியில் குறிப்பிடுகிறார்
நம்பிள்ளை சந்நிதி அம்மா மண்டபம் போகும் வழியில் வலது பக்கம் உள்ளது –
பெரியவாச்சான் பிள்ளைக்கு -கருத்துரை மண்டபம் பக்கம் -ஆயிரம் கால் மண்டபம் தாண்டி -கோயிலுக்கு உள்ளே உள்ளது –
மாதவாச்சார்யர் -நஞ்சீயர் பூர்வாஸ்ரம திரு நாமம் –
பட்டர் பெரியபெருமாள் இடம் பிரார்த்திக்க அர்ச்சகர் முகேந ஒன்பதினாயிரம் அருளிச் செய்ய ஆஜ்ஜை
கைசிக புராணம் -நம்பாடுவான் சரித்திரம் கேட்டு பூரிப்பு -மேலை வீடு தந்தோம் -பட்டருக்கு பெரும் பரிசு –
வைத்த அஞ்சல் –இந்த சேவையுடன் அங்கே சேவை சாதிக்க வேண்டும் –
வீற்று இருந்த கோலம் இருந்தால் மூலை கிழித்து வருவேன்
ஆண்டாள் -தாயார் -நலம் அந்தமில் நாடு புகுவீர் -ஆசீர்வாதம்
நஞ்சீயர் சோகிக்க-தர்சனம் ரக்ஷிக்க பிள்ளையை பெறுவீர்
சந்நியாசி -நம்பிள்ளை வருவதை ஸூசகம்
ஸ்ரீ வேத வியாச பட்டர்- ராம பிள்ளை கொண்டு கைங்கர்யம் செய்து
வாக் விஜய பட்டர் -ஸூதர்சன பட்டர் -இவர் வம்சம் -முன்பே பார்த்தோம் –
நடுவில் திரு வீதிப்பிள்ளை பட்டர் -ஸ்ரீ ராம பிள்ளை திருக்குமாரர்
நம்பூர் -ராமர் சந்நிதி -அருகில் -நம்பூர் வராச்சார்யர் -இருப்பதை
சொப்பனம் சாதிக்க நஞ்சீயர் -ஆள் விட்டு அழைத்து –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்
பட்டர் திருவடிகளே சரணம் -எழுதிக் காட்ட
கால ஷேபம் சொல்லி -பிரதி கொடுத்து-நல்ல பிரதி எழுதச் சொல்லி -காவேரி ஆற்றை தாண்ட –
வெள்ளம் பெறுக -ஈஸ்வர ஸங்கல்பம் -ஓலை சுவடு இழந்து
ரெங்கராஜ பெருமாள் இவர் திரு ஆராதனம் பெருமாள் -நஞ்சீயர் அனுக்ரஹம் உமக்கு பூர்ணம் –
இன்னும் ஒரு ஓலைச்சுவடி எடுத்து எழுதச் சொல்ல –
கொண்டு போய் சமர்ப்பிக்க -விலக்ஷணமாக இருக்க -நடந்ததை சொல்ல –
நம்பிள்ளையோ -பட்டர் முன்பு சாதித்தத்தை நினைவு கொண்டு திரு நாமம் சாதித்தார்
ஆயர் தேவு தமது ஆராதனை பெருமாளைக் கொடுத்து
மேல் மேலும் எழுத திரு உள்ளத்தில் மநோ ரதித்து -எல்லா அர்த்தங்களையும் சாதிக்க

100 கால க்ஷேபங்கள் சாதித்தார் -குண திசை பாதம் நீட்டி -நாலு கால் மண்டபம் விஷ்வக்சேனர் அருகில்
இவர் சிஷ்யரே -பின்பழகிய பெருமாள் ஜீயர் -ஆறாயிரப்படி குரு பரம்பரை
பெரியவாச்சான் பிள்ளை
வடக்கு திரு வீதிப்பிள்ளை -ஆனி ஸ்வாதி
பிள்ளை லோகாச்சார்யார்
நாயனார்
நடுவில் திரு வீதிப்பிள்ளை பட்டர் -சர்வஞ்ஞ பட்டர் என்ற திரு நாமும் உண்டு இவருக்கு -125000 படி சாதித்தார் –
ஈயுண்ணி மாதவாச்சார்யர் -சிறியாழ்வானப் பிள்ளை -மாதவாச்சார்யர் என்ற பெயர் பெற்றார் இவர் –
இவரது திருக்குமாரர் -ஈயுண்ணி பத்ம நாபாச்சார்யர்
இவர் சிஷ்யர் நாலூர் பிள்ளை கோல வராக நாயனார் -இவர் திருக்குமாரர்
நாலூர் ஆச்சான் பிள்ளை -தேவாதிபர் என்ற திரு நாமம் இவருக்கு -இவர்
ஆய் ஸ்வாமிக்கும் -திருவாய் மொழி ஆச்சான் பிள்ளை -திருவாய் மொழி பிள்ளைக்கும் ஈடு சாதித்தார்

ஆளவந்தார் -தவ ராசன் படித்துறை கிழக்கு
அருகில் ஆதி கேசவ பெருமாள்
நம்பிள்ளை மாட திருவீதி
வடக்குத் திரு வீதிப்பிள்ளை -125000 படி கரையானுக்கு இரை ஆனது அறிந்தும் -ஈடு ஏடு படுத்தினார்
நம்பிள்ளை ஆச்சார்யர் திருவடி சேர்ந்ததும்
தூவியும் புள்ளு திருக்குமாரர் தலை ஷவரம் பண்ணி கொள்ள
நடுவில் திரு வீதிப்பிள்ளையும் தலை ஷவரம் பண்ணி கொள்ள –பிள்ளைகளும் சிஷ்யரும் இப்படி –
தாஸன் என்று உணர்ந்து -சர்வாங்க ஷவரம் பண்ணிக் கொள்ள வில்லை -ஷாமணம் வாங்கிக் கொண்டாராம்
நம்பிள்ளை ஈடு சாதிக்க -பெரிய பெருமாளே எழுந்து வந்து -திரு விளக்கு பிச்சன் -அர்ச்சா சமாதி குலைக்கக் கூடாது –
திருவேங்கடத்தான் படம் அருகில் -கீழே சேவித்து -நம்பிள்ளை கோஷ்ட்டி நினைவாக -பின்பே ப்ரதக்ஷிணம் செய்வார்கள் –

போட்டி மனப்பான்மையோ -இப்பொழுது வெளியிட எண்ணம் இல்லை
ஈயுண்ணி மாதவாச்சார்யர்
கந்தாடை தோழப்பர் சொபனம்- -தேவ பெருமாள் –
ஜகத் ரக்ஷணம் அபரோ -மா முனிகள் அவதாரத்தை -ஸூ சிப்பித்து அருளி
ராமானுஜர் வேதாந்த சாஸ்திரம் பிரவர்தனம் செய்து அருளினது போல்
இவரே தமிழ் வேதாந்த சாஸ்திரம் ப்ரவர்த்தனம் செய்வார்
என்று அருளிச் செய்ததும் வடக்குத் திரு வீதிப்பிள்ளை ஆனந்தம்
திரு மாளிகை பக்கம் அம்மையார் குடி இருப்ப -பரமபதம் -பண்டம் மாற்று –
ஓலை சுவடி -வாங்கி மூன்றாம் நாள் -பரம பதம் அடைந்தாளாம் )

———-

ஆக
கீழ் தாம் பண்ணின பிரதிஞ்ஞ அனுரூபமாக
வியாக்கியைகள் உள்ளது என்றத்தை உபபாதித்து அருளினவர் –
ஸ்ரீ நம்பிள்ளை செப்பு நெறி – என்று ப்ரஸ்துதமாய்-
சகல திவ்ய பிரபந்த வியாக்யான அர்த்தங்களையும் தனக்கு உள்ளே யுடைத்தாம் படி இருப்பதாய்-
ஏதத் ஸ்ரவணத்தாலே
எல்லாம் ஸ்ரவித்த தாம்படியான ஸ்ரேஷ்டத்தையும் யுடைத்தான-
ஸ்ரீ ஈட்டின் உடைய வரலாற்றையும் (வரவாற்றையும் ) அருளிச் செய்ய வேணும் என்று திரு உள்ளம் பற்றி
அத்தையும் இரண்டு பாட்டாலே
எல்லாரும் அறியும் படி இவர் ஸ்ரீ ஈடு அளித்ததற்கு ஏய்ந்த மாதவர் -என்று சொல்லுகிற அடைவே
அருளிச் செய்கிறார் –

(ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும் -ஏக விஞ்ஞானம் சகல விஞ்ஞானம் –
ஸ்வேதகேது -சாந்தோக்யம் ஸத்வித்யா பிரகரணம் -போல்
ஈட்டை அறியவே அருளிச் செயல்கள் அனைத்தையும் அறிந்தது ஆகுமே
நஞ்சீயர் பூர்வாஸ்ரம திரு நாமம் மாதவாச்சார்யர் சாற்றியதால் இவர் மேல் ஈடுபாடு உண்டே )

சீரார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை எழுது
ஏரார் தமிழ் வேதத்து ஈடு தன்னைத் -தாருமென
வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
தாம் கொடுத்தார் பின்னதனைத் தான் –48-

ஈட்டு ஓலைச் சுவடியைக் கொடுத்தார் -என்றபடி –
முன்பே கால ஷேபம் பண்ணி அருளினார் அன்றோ

தாம் கிருஷ்ண பாத லிகிதாம்
சடவைரி வேத வாக்யாம்
ததத்வ மஹதி மிதி கிருஷ்ண பாதாத்
ஆதாய தேசிக வர
கலி வைரி தாஸ
பிராதத்த
மாதவ குரு தயமான சேத

சீரார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை –
இவருக்கு சீர் ஆர்ந்து இருக்கை யாவது –
ஆச்சார்ய பிரசாதத்தாலே-அவர் அருளிச் செய்த அர்த்த விசேஷங்களை எல்லாம்
தெரிந்து
எழுதி
எல்லாருக்கும் உபகரிக்கும் படியான ஞாநாதி குண பூர்த்தியை யுடையராய் இருக்கை-

அன்றிக்கே –
திரு வீதிக்கு விசேஷணம் ஆம் போது
சீரார் நெடு மறுகு-( 7-9-10 ) -என்னுமா போலே
இவர் தொடக்கமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயால் பூரணமாய் இருக்கிறது -என்றுமாம் –

வடக்குத் திரு வீதிப் பிள்ளை –
ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளையும் யுண்டாகையால் அவர்களில் வ்யாவ்ருத்தி –
அவர் எழுந்து அருளி இருக்கிறதுக்கு வடக்கு திரு வீதியிலே யாய்த்து இவர் எழுந்து அருளி இருக்கிறது –
அது தான் தவ ராஜன் துறைக்கு அருகான
ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயிலுக்கு அடுத்து அணித்தாய் இருக்கும் –
இப்படி வ்யாவ்ருத்தமான ஸ்தலத்திலே யாய்த்து இப்படி வியாக்யானம் செய்து கொண்டு எழுந்து அருளி இருப்பது –
(ஈடு கேட்ட இடம் திருவரங்கன் கோயிலுக்கு உள்ளே அன்றோ )
ஆகையால் அதுவே நிரூபகம் ஆய்த்து இவர்க்கும் –
இவர் ஆச்சார்யரான ஸ்ரீ நம் பிள்ளைக்கும் -மாடத் திரு வீதிப் பிள்ளை என்றே நிரூபகம் –
கோயிலில் வாழும் வைட்டணவன்-( பெரியாழ்வார் -5-1-3)–என்னுமா போலே
இப்படி ஞான வர்த்தகமான தேசத்தை இட்டே நிரூபிக்கும் படியாக இருக்கிற இவர் –

எழுது ஏரார் தமிழ் வேதத்து ஈடு தன்னைத் -தாருமென வாங்கி –
அதாவது – ஸ்ரீ நம்பிள்ளை செப்பு நெறி தன்னை -இறே இவர் எழுதியது –
ஆகையாலே எழுதின மாத்ரத்தைக் கொண்டு ஸ்ரீ பிள்ளான் முதலாரோடு சஹ படிதர் ஆய்த்து –
இத்தால் முழுதும் நம்பிள்ளை யுடைய ஸ்ரீ ஸூக்தி இறே –

ஏரார் தமிழ் வேதத்து ஈடு தன்னை –
ஏரார்ந்த தமிழ் மறை என்கிறபடியே
விலஷணமான சப்தார்த்த சந்தர்ப்பங்களால் வந்த அழகின் மிகுதியை யுடைத்தாய்
திராவிட ரூபமான வேதத்தின் உடைய வியாக்யானத்தை –
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தான் ஆனைக் கோலம் செய்தாப் போலே அத்ய ஆகர்ஷகமாய் இறே இருப்பது –
அத்தைப் பற்ற எரார்ந்து இருக்கை ஈட்டுக்கு விசேஷணம் ஆகவுமாம் –

ஈடு தனைத் தாரும் என வாங்கி –
இப்படி அதி மநோ ஹரமாம் படியான ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரத்தையும் எழுதி
ஸ்ரீ நம்பிள்ளை சந்நிதியிலே வைக்க
அப்போது அத்தை அவிழ்த்து திருக் கண் சாத்தி
போரவும் உகந்து
ஆனாலும் நம்முடைய காலத்திலே
நம்முடைய அனுமதியும் இன்றிக்கே எழுதினீர்
இப்படி எழுதின நம்முடைய கிரந்தத்தைத் தாரும் -என்று அவர் திருக் கையில் நின்றும் வாங்கி –

முன் நம்பிள்ளை –
பூர்வ காலத்திலே முற்காலத்திலே நம்பிள்ளை
அதாவது
சிஷ்ய ஆச்சார்ய ஸூவ்யவஹார க்ரமம் நன்றாக நடந்து போருகிற அந்த க்ரமத்தை
நன்றாக நடத்திப் போருகிற
ஸ்ரீ நம்பிள்ளை –

ஈயுண்ணி மாதவர்க்குத் தாம் கொடுத்தார் பின்-
பின் – தம்முடைய சந்நிதியிலே வைத்த பின்பு –
ஈயுண்ணி மாதவர்க்குத் தாம் கொடுத்தார்-
அதாவது
ஸ்ரீ ஈ யுண்ணி என்கிற குடியிலே திரு அவதரிதவராய் தம்முடைய திருவடிகளிலே ஆஸ்ரயித்த அநந்தரம் –
ஸ்ரீ மாதவப் பெருமாள் -என்று
தமக்கு ஆச்சார்யரான ஸ்ரீ நஞ்சீயர் உடைய திரு நாமத்தைச் சாற்றப் பெற்றவராய்
தமக்கு அத்யந்த அபிமத விஷயமாய் இருக்கிற அவர்க்கு –

தாம் கொடுத்தார் பின்-
ஸ்ரீ மாதவ சிஷ்யர் -என்றும் –
சீ மாதவனடிக்கு அன்பு செய்யும் -என்றும் அத்தையே நிரூபகமாக யுடையராய்
(நெஞ்சத்து இருந்து –நிரந்தமாக நிரந்தரம் உய்க்கும் வஞ்சக் குறும்பை அறுத்தேன்
மாய வாதிகள் தாம் அஞ்சப் பிறந்தவன் ஸீ மாதவன் அடிக்கு அன்பு செய்யும் நம்பிள்ளை)
ஸ்ரீ திருவாய் மொழிக்கு முப்பத்தாறாயிரம் கிரந்த சங்க்யையாம் படி உபன்யசித்து அருளின தாம்
இவர் பேறு பெறும்படி கொடுத்தார் –
தம் தாம் ஸ்வத்தை தம் தாம் வேண்டினவர்களுக்கு விநியோக்கிகுமா போலே
இத்தை ஒருவருக்கும் பிரகாசியாதே அனுசந்தித்துக் கொண்டு போரும் -என்று
அவர் கையிலே காட்டிக் கொடுத்தார் –
ஸ்ரீ மாதவப் பெருமாளுக்கு இந்த மஹத் ஐஸ்வர்யத்தைக் காட்டிக் கொடுத்தார்-

(ஈயுண்ணி மாதவப் பெருமாள் – கார்த்திகை மாசம் பரணி நக்ஷத்ரம் – திரு அவதாரம் –
கார்த்திகே பரணீ ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
வேதாந்தத் த்வய ஸம்பந்தம் மாதவார்யம் அஹம் பஜே )

(நஞ்சீயர் மாதவ முனி –
வரதார்யா தயா பாத்ரம் ஸ்ரீ மாதவ குரும் ஆஸ்ரயே
குருகாதீச வேதாந்த சேவோன் மீலித வேதனம்
யது வச -சகலாம் சாஸ்திரம்-யத் க்ரியா வைதிக விதி –
யத் கடாஷோ ஜகத் ரக்ஷை தம் வந்தே மாதவ முனிம் )

பின் –
அவர் திரு முன்பே வைத்த அனந்தரத்திலே-

அதனைத் தான் –
அப்படி அனுமதி இன்றிக்கே எழுதின கிரந்தத்தைத் தான் –
முழுச் சொல் இருக்கிறபடி –
(ஈட்டைத் தானாகிய நம்பிள்ளை என்று பிரிக்க வேண்டாம் என்ற படி )

ஆகையால்
இப்படி சீரியதான அர்த்தத்தை சீ மாதவர் இடத்திலே மேல் எல்லாருக்கும் உதவும் படி
சேமித்து வைத்து அருளினார் ஆய்த்து –

(ஸ்ரீ நம்பிள்ளை யுடைய பிரசாதத்தாலே ஸ்ரீ சிறியாழ்வானப் பிள்ளை-என்ற திருநாமத்தை யுடையரான
ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமாள்
தமது திருக்குமாரர் ஈயுண்ணி பத்மநாப பெருமாளுக்கும்
அவர் தம் சிஷ்யர் நாலூர் பிள்ளைக்கும்
அவர் தம் திருக்குமாரர் நாலூர் ஆச்சான் பிள்ளைக்கும்
அவர் திருவாய் மொழிப்பிள்ளைக்கு ப்ரசாதித்து அருள
இப்படி ஐந்து தலைமுறையாக ஓராண் வழியாக திருவாய் மொழிப்பிள்ளை பெற்றதை மா முனிகள் பெற்று
பார் உலகில் ஆசை உடையார்க்கு எல்லாம் ஆகும்படி மா முனிகள் -ஈட்டுப் பெருக்கர் பண்ணி அருளினார் )

——————————————————-

இப்படி ஸ்ரீ நம்பிள்ளை யுடைய பிரசாதத்தாலே
ஸ்ரீ சிறியாழ்வான் அப் பிள்ளை-என்ற திருநாமத்தை யுடையரான
ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமாளுக்கு -பிராப்தமான ஸ்ரீ ஈடானது –
தம்முடைய ஆச்சார்யரான ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை அளவும்
சம்ப்ரதாயமாக நடந்து வந்த படியை அருளிச் செய்கிறார் -( மா முனிகள் )

ஆங்கு அவர்பால் பெற்ற சிறியாழ்வான் அப் பிள்ளை
தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் -பாங்குடனே
நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம்
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு —49-

ஆங்கு அவர்பால் பெற்ற -நம்பிள்ளை இடம் பெற்ற
சிறியாழ்வான் அப் பிள்ளை-இவரே ஈயுண்ணி மாதவாச்சார்யர்
தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் -ஈயுண்ணி பத்மநாபாசார்யர்
பாங்குடனே நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் -கோல வராஹ நாயனாருக்கு -இவரே -நாலூர் பிள்ளை-சதுஷ் கிராமம் –
இவருக்கு பத்ம நாபாச்சார்யார் கொடுத்தார்
நல்ல மகனார்க்கு அவர் தாம்-தேவாதிபர்-தேவ ராஜர் என்கிற நாலூர் ஆச்சான் பிள்ளைக்கு இவர் தந்தையான நாலூர் பிள்ளை கொடுத்தார்
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு-மேலோர் -திருவாய் மொழி ஆச்சான் பிள்ளை -ஆய் ஜனனாச்சார்யர் -திருவாய் மொழிப்பிள்ளை –
மூன்று வம்சத்தாரும் இன்றும் உள்ளார்கள் -இவர்களுக்கு நாலூர் ஆச்சான் பிள்ளை கொடுத்தார்

(கூர குலோத்தம தாசர் மூலம் திருவாய் மொழிப் பிள்ளையை திருத்திப் பணி கொண்டார்
1-கூர குலோத்தம தாசர்-2- திருக்கண்ணணங்குடி பிள்ளை -3-திருப்புட் குழி ஜீயர்
4-விளாஞ்சோலைப்பிள்ளை 5-நாலூர் பிள்ளை -6-மணல்பாக்கத்து நம்பி 7-கொல்லி காவல தாசர்
8-திருவாய் மொழிப்பிள்ளையின் திருத்தாயார் -9-கோட்டூரில் அண்ணர் -10-முதலி ஆண்டான் வம்சத்தவர் திருக்கோபுரத்து நாயனார்
கூட சென்றவர் -இனி நிர்வாக திறல் உள்ளவரை சம்பிரதாயத்துக்கு ஆக்க கூர குலோத்தம தாசர் இடம் ஆணை
நாலூர் ஆச்சான் பிள்ளை இடம் கால ஷேபம் -முடித்து -நம்மாழ்வாரை சேவிக்க ஆவல் தூண்ட
நம்மாழ்வார் நம்பெருமாள் கோழிக்கோட்டில் சேர்ந்து – -திருகணாம்பி -சேனை கிடாம்பி -மூன்று சேர்ந்த இடம்
படகு அசைந்து நம்மாழ்வார் கீழே -கருடன் வட்டம் இட்டு காட்டி மீட்டு
சேவைக்கு கேரளா வந்து -கடிதங்கள் பரிமாறி மீண்டு எழுந்து அருளப் பண்ணி –
சதுர் வேத மங்கலம் அமைத்தவர் திருவாய் மொழிப் பிள்ளை )

தாம் மாதவ புனர் உபாகுரு
ஆத்ம ஸூ நு
கருணாக்ய
வராக ஸூரே
ச அபி
ஸூகீய தனயஸ்யா உதார
ச அபி
அநுஜித்

ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்கு சிறு பெயர் சிறியாழ்வான் அப் பிள்ளை-
நான்கு ஊர் சேர்ந்தவை நாலூர் -பெருமாள் கோயில் பக்கம் –

ஆங்கு அவர் பால் பெற்ற சிறியாழ்வான் அப் பிள்ளை –
ஆங்கு –
அந்த திவ்ய கோஷ்டியாய் இருக்கிற அவர் திரு முன்பே
அன்றிக்கே
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை திருக் கையில் நின்றும் வாங்கின அத் தசையிலே -என்னவுமாம் –
(வாங்கிய அன்றே என்றும் மாதவ பெருமாள் நம் பெருமாள் இடம் பிரார்த்திக்க பின் பெற்றார் என்றுமாம் )

அவர் பால் பெற்ற –
அந்த கோஷ்டிக்கு நாயகமாய் அந்த ஸ்ரீ ஈட்டுக்கு பிரதான வக்தாவான ஸ்ரீ நம்பிள்ளை இடத்திலே –
நிதி பெற்றால் போலே
உறு பெரும் செல்வம் -அடியாக–(ராமானுஜ -19)- வந்த அர்த்தத்தைப் பெற்றவர் ஆய்த்து –
இவர் தாம் – ஒரு தேசமும் தேசிகரும் கோசமும் இருந்தபடி –

(தேசம் -ஆங்கு கோயில்
தேசிகர் -அவர் பால்-நம்பிள்ளை
கோசம் -ஈடு )

சிறியாழ்வான் அப் பிள்ளை -தாம் –
இவருடைய சிறு பேர் இருக்கிறபடி –
இப்படியான இந்த நிதியைப் பெற்றுடைய –

தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் –
சஞ்சிதம் காட்டுவாரைப் போலே ஸ்ரீ மாதவப் பெருமாளான தாம் –
ஸ்ரீ பத்மநாபப் பெருமாள் என்று நிரூபகமாய் இருக்கிற
தம்முடைய திருக் குமாரர் திருக் கையிலே காட்டிக் கொடுத்தார் –
அதாவது –
அவருக்கு ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரத்தையும் பிரசாதித்த பின்பு
அவர் திருக் கையிலே திரு வாராதனமாய் இருந்த ஸ்ரீ கோசத்தையும்
காட்டிக் கொடுத்தார் -என்கை-
ஆகை இறே மாதவ பத்ம நாப (ஈட்டு தனியன் )-என்றது –

(ஈயுண்ணி பத்மநாப பெருமாள் -தனியன்
ஏந அவகாஹ்ய விமலோஸ்மி ஸடாரி ஸூரேர் வாணீ கணார்த்த பரிபோத ஸூ தாபகாயாம்
ஸ்ரீ மன் முகுந்த சரணாப்ஜ மது வ்ரதாய ஸ்ரீ பத்ம நாப குரவே நம ஆஸ்ரய )

இப்படி இவர்கள் இரண்டு பேருடைய காலத்திலும் ஓராண் வழியாக உபதேசித்துக் கொண்டு
ஸ்ரீ கோசத்தையும் பிரகாசிப்பியாமல்
ஸ்ரீ கோயில் ஆழ்வாரில் திரு வாராதனமாய்ப் பேணிக் கொண்டு
ஸ்ரீ நம் பிள்ளையினுடைய நியமனத்தின் படியே நடந்து போந்தது ஆய்த்து
திருவாய் மொழியின் ஈடு தான் –

இப்படி நிதியை நோக்கிக் கொண்டு போருமா போலே
இத்தை நோக்கிக் கொண்டு போந்தது தான்
ஸ்ரீ பெருமாள் கோயிலிலே பட்டர்கள் திரு வீதியில் திரு மாளிகையில் ஆய்த்து –
(ஸ்ரீ ரெங்க ராஜ வீதி -பட்டர்கள் திரு வீதி காஞ்சிபுரம்
சம்பிரதாய ரக்ஷணம் தேவப்பெருமாள் -திருமங்கை ஆழ்வாருக்கும் -ராமானுஜருக்கும் ரக்ஷித்து
கைங்கர்யம் கொடுத்து வளர்த்து பின்பு அரங்கனுக்கு -சொத்தை விட்டு கொடுத்தவரும் இவரே – )

பாங்குடனே நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் –
அதாவது –
ஸ்ரீ பத்ம நாபப் பெருமாள் திருவடிகளிலே ஆஸ்ரயித்து
அவரை
பிரணி பாத
நமஸ்கார
பிரிய வாக்குகளாலே
குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய் -(பெரியாழ்வார் -4-4-)
அவரை மிகவும் உகக்கப் பண்ணி

இப்படி பல சாதன ஸூஸ்ருஷையை யுடையராய் இருக்கிற
ஸ்ரீ நாலூர் பிள்ளைக்கு –
ப்ரணி பாத பிரசன்னராய் இருக்கிற ஸ்ரீ பத்மநாபப் பெருமாள்
ஸ்ரீ ஈட்டை இவர் ஒருவருக்குமே ஓராண் வழியாக
முன்பு நடந்து போந்த படியே பிரசாதிப்பதாக
இவரை ஸ்ரீ பேரருளாள பெருமாள் திரு முன்பே கொண்டு புக்கு
பிரமாண புரஸ்ஸரமாய் ஸூழரவு கொண்டு சொல்ல வேணும் என்று
ஸ்ரீ சடகோபனை அர்ச்சக முகேன இவர் திரு முடியிலே ஊன்றி வைக்க –
(நின் ஆணை திரு ஆணை அழுத்தி நம்பிள்ளை ஆணை படியே வேர் ஒருவருக்கும் கொடுக்கக் கூடாது என்று )

(சதுர்க்ராமோத்பவம் ஸ்ரீ மத் ராமாவரஜ கிங்கரம்
சர்வதா த்வய சந்நிஷ்டம் கோலாஹ்வயமஹம் பஜே -என்றும்
ஸ்ரீ மத் ராமானுஜ தாஸ பாத யுக்ம முபாஸ்மஹே
சடகோபார்யா வாணீ நாமர்த்த தாத்பர்ய சித்தயே-என்று இறே இவர் விஷயத்தில் தனியன்கள் இருப்பது
ராமானுஜ தாசர் என்ற திரு நாமமும் கோல வராகர் -நாலூர் பிள்ளைக்கு உண்டாம் )

(யா பத்ம நாப குருதஸ் சடஜிந் முநீந்திர ஸ்ரீ ஸூ க்தி பாஷ்ய மதிகம்ய சம்ருத்த போத
தத் தேவராஜ குரவே ஹ்யதி சச்சதுஷ் பூர்வாசேத்த கோலவர தேசிகம் ஆஸ்ரயே தம் –
என்று இ றே இவர் சம்ப்ரதாய க்ரமம் இருப்பது-)

அவர் அதனை ஒருவருக்கும் வெளி யிடாமைக்கு ஊன்றி வைக்கிற ஆகாரத்தை
பாவஞ்ஞரான இவர் அறிந்து –
ஸ்ரீ பெருமாள் திரு முக மண்டலத்தைப் பார்த்து
தம் திரு முடியிலே வைத்த அந்த ஸ்ரீ சடகோபனை
ஸ்ரீ அருளாளர் திருவடியை ஊன்றினவர்-என்னும் படி தம் திருக் கையாலே ஊன்றி
சம்ஜ்ஞை பண்ணின அது –
சர்வஞ்ஞரான ஸ்ரீ பெருமாள் திரு உள்ளத்திலே உற்று இத்தை நீர் எல்லாருக்கும் பிரகாசிப்பியும் என்று
அர்ச்சக முகேன திவ்ய ஆஞ்ஞை இட்டு அருள
அத்தைக் கேட்ட ஸ்ரீ பத்மநாபரும் எண்ணினவாறு ஆகாமையாலே-(10-6-3)
திரு உள்ளமான படி -என்று
பின்பு உகப்புடனே பிரசாதித்து அருளினார் -என்கை –
(யஸ்ய பிரசாத கலயா –பேச முடியாதவன் பேசி -பேர் அருளாளன் -வரத ராஜன் -அவர் -நம்பூர் வரதர் நம்பிள்ளை
அஸ்மாத் துல்யோ பவதி -பெரியோர் முடிவு ச வாசனமாக முந்திய நிஷ்டையை மாறப் பண்ணுமே )

இவர் இத்தை எல்லாருக்கும் வெளியிட வேணும் என்கிற தம்முடைய
பர சம்ருத்ய ஏக பிரயோஜனதா ரூபமான திரு உள்ளக் கருத்தாலே
ஸ்ரீ பேரருளாளப் பெருமாளைக் குறித்து பிரதஷிண நமஸ்காராதிகளைப் பண்ணியும்
அ நதிக்ரமண ஹேதுவான
சரண க்ரஹணம் பண்ணியும் ஆய்த்து இவர் இப்படி அர்த்தித்தது

அவரும்
அர்த்திதார்த்த பரிதான தீஷிதர் ஆகையாலே இப்படி செய்து அருளினார் –
ஆகை இறே –
ஸூமன கோலேச தேவாதிபான் -என்று அருளிச் செய்தது –
(தீஷிதம் வீக்ஷிதம் விரத ஸம்பன்னாம் )

அப்படியே ஸ்ரீ ஜீயரை ஸ்ரீ பிள்ளையும் ஸ்ரீ அரங்கர் தம் தாளை ஊன்று வித்து இறே
ஸ்ரீ திருவாய் மொழியின் ஈட்டைப் பிரவர்த்திப்பித்தது –
சரணாப்ஜ சமர்ப்பணாத் தர்சயந்து க்ரஹாந அர்த்தான் த்ரமிடோப நிஷித்கிராம் -என்னக் கடவது இறே-

(ஸ்ரீ ஜீயரை ஸ்ரீ பிள்ளையும்-மா முனிகளுக்கு திருவாய் மொழிப்பிள்ளை
ஸ்ரீ நஞ்சீயரை ஸ்ரீ நம்பிள்ளையும் முன்னம் திரு உள்ளம் சமாதானம் படுத்தினார் )

நல்ல மகனார்க்கு அவர் தாம் –
அந்த ஸ்ரீ நாலூர் பிள்ளையும் தம்முடைய திரு உள்ளக் கருத்தின் படியே
ஸ்ரீ பெருமாள் தலைக் கட்டி அருளுகையாலே
பெற்றுப் பேரிடும்படியான அந்த உபகாரத்துக்கு -தமக்கு குமாரர் திரு வவதரித்த உடனே –
ஸ்ரீ தேவப் பெருமாள் -என்று திரு நாமம் சாத்த –
இப்படி பேர் பெற்று சகல கலா பூரணராய் வளர்ந்து போருகிற –
நல்ல மகனாரான -ஸ்ரீ நாலூர் ஆச்சான் பிள்ளைக்கு இத்தை வர்திப்பித்துக் கொண்டு போரும் என்று
ஈட்டை பிரசாதித்து அருளினார் –
அவர் சௌ மனஸ்யம் போலே யாய்த்து இவர் குணசாலி யானதும் –
(ஸூ மானஸ கோலேஸர் அவர் இவர் குணசாலி )

அன்றிக்கே –
இவர் ஸ்ரீ அருளாளர் திருவடி ஊன்றினவர் -என்றதுக்கு
இவர் -என்று ஸ்ரீ பத்ம நாபரைச் சொல்லி
அவருடைய அருளை யுடையவர் என்று ஸ்ரீ நாலூர் பிள்ளையைச் சொல்லி –
திருவடி ஊன்றினவர் என்று ஈட்டை பிரசாதிக்கும் படி ஸ்ரீ நாலூர் பிள்ளையாலே
ஸ்ரீ பேரருளாளப் பெருமாள் திருவடி ஊன்றப் பட்ட ஸ்ரீ நாலூர் ஆச்சான் பிள்ளையைச் சொல்லி –
அப்படி திருவடி ஊன்றின ஸ்ரீ தேவப் பெருமாள் கைக் கொண்டு அருளும் ஸ்ரீ திருமலை ஆழ்வார் -என்று
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளையைச் சொல்லுகிறது என்றும் அருளிச் செய்து போருவர்கள் –

(ஸூ தம் கோல வராஹச்ய குருகாதீச பூர்வஜம்
சாந்தம் சத்வ்ருத்த நிரதம் தேவராஜ மஹம் பஜே -என்றும்
நமோஸ்து தேவராஜாய – என்னும்படி இறே நாலூர் ஆச்சான் பிள்ளை வைபவம் இருப்பது )

(யதீந்த்ர ப்ரவண பிரபாவம்
திருமலை -பெயரால் கூர குலோத்தம தாஸரல் திருந்தி -திருக்கண்ணங்குடிப்பிள்ளை மேலோட்டமாக சொல்ல –
திருப்புட் குழி ஜீயர் இதன் கேட்க வர -அவர் பரமபதிக்க-இவர் பேர் அருளாரை சேவிக்க –
இவருக்கு ஸ்ரீ சடகோபனை அழுத்தி சாதித்து ஈட்டைப் ப்ரசாதிக்க ஆஜ்ஜை வந்தது – திருவாய் மொழிப் பிள்ளை ஆனார்)

இந்த யோஜனை
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு -என்கிறதுக்கு மிகவும் சேர்த்தியாய் இருக்கும் —

மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு –
என்று -அதாவது –
கீழில் அவர்களைப் போல ஓராண் வழியாக நடத்துப் போருகை அன்றிக்கே
தம்முடைய ஔதார்யத்தாலே ஸ்ரீ கோல வராஹப் பெருமாளாலே கொடுக்கப் பட்ட ஸ்ரீ தேவப் பெருமாளான தாம் –
ஸ்ரீ திருமலை ஆழ்வாரைக் கைக் கொண்டு அருளி

அவர் தொடக்கமாக
ஸ்ரீ திரு நாராயண புரத்து ஆய்- பிள்ளை இவர்களுக்கும் பிரசாதித்து அருளினார் –
ஆகை இறே மேலோர் -என்று பஹு வசனம் பிரயோஹம் பண்ணி அருளிற்று –

(ஸ்ரீ ரெங்க ராஜ வீதியில் ஈடு சாதிக்க ஆரம்பித்து –இத்தைக் கேட்டு ஆய் ஸ்வாமி –
ஸ்ரீ சானு தாசர் -மலைத் தாழ்வாரையில் கைங்கர்யம் செய்தவர் –
ஆய் -ஜநநி- ஆய் ஜனனாச்சார்யர் -வழக்கு ஆனது –
மேல் கோட்டைக்கு கூட்டிச் சென்று பூர்த்தி ஆனது – )

த்ரேதா ப்ரவர்த்ய புவி ய பிரதயாம் சகாரா -என்று அவர் தனியனிலும் யுண்டு இறே
ஸ்ரீ சைல நாத குரு மாத்ரு குருத்தமாப்யாம் ஸ்ரீ ஸூக்தி தேசிக வரேண சயஸ்த்ரிதைவம் -என்றும் சொல்லக் கடவது இறே –
(நாலூர் ஆச்சான் பிள்ளை தனியனின் மூவருக்கு கால ஷேபம் செய்தவர்
த்ரி பதக -மூன்று லோகத்திலும் ஓடும் கங்கை போலெ இதுவும் மூவர் இடம் )

(கோலாதிபாத் பிதுரவாப்ய சஹச்ர கீதேர் பாஷ்யம் ஹி பூர்வதர தேசிக வர்ய குப்தம்
த்ரேதா ப்ரவர்த்ய புவி ய ப்ரத யாஞ்சகர தம் தேவராஜ குருவர்ய மஹம் ப்ரபத்யே -என்றும்
ஸ்ரீ சைல நாத குரு மாத்குரு ரூத்த மாப்யாம் ஸ்ரீ ஸூக்தி தேசிக வரேண ஸ யஸ் த்ரி தைவம்
வ்யக்தஸ் சடாரிகிருத் பாஷ்ய ஸூ சம்ப்ரதாயோ விஸ்தாரமேதி சஹி வைஷ்ணவே புங்க வேஷூ –என்றும்
தேவாதிபாத் சமதிகம்ய சஹச்ர கீதே பாஷ்யம் நிகூடமதய ப்ரத யாஞ்சகார
குந்தீ புரோத்பவமும் சரணம் பஜே தம் ஸ்ரீ சைல முரு பக்தி பருத்தும் சடாரௌ-என்றும்
தேவாதி பாதாதி கதம் பாஷ்யம் பராங்குச ஸ்ருதே
ப்ராவர்த்தயத் யச்சேவ தம் சடஜித் ஸூக்தி தேசிகம் -என்றும்
ஸ்ரீ தேவ ராஜ குருதோ த்ரவிடாக மாந்த பாஷ்யம் ஹ்வவாப்ய புவி ய ப்ரத யாஞ்சகார
தம் யாதவாத்ரிபதி மாலய சமர்ப்பணைக நிஷ்டம் பஜேய ஜநநீ குரு மஸ்மாதார்யம்-என்றும்
சொல்லக் கடவது இறே-)

அவரே மிக்கு –
என்கையாலே-இவர்களுடைய அர்த்தித்வமும் மிகை என்னலாம் படி
தம்முடைய ஔதார்யத்தாலே
தாமே கைக் கொண்டு அருளி
அருளிச் செய்தார் என்னுமது தோற்றுகிறது –

அவ்வளவும் அன்றிக்கே –
அருளிச் செயல் அனைத்துக்கும்
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளைக்கு ஸ்ரீ நாலூர் ஆச்சான் பிள்ளை பிரசாதித்து அருளினதுக்கு
த்யோதகமாக
மாற்றுத் தாய் -என்கிற பாட்டின் வ்யாக்யானத்தில் ஸ்ரீ ஜீயர் தாமே ஸூசிப்பித்து அருளினார்
ஜீயர் தாமே அருளிச் செய்த பெரியாழ்வார் திருமொழி வ்யாக்யானத்திலும்
பல இடங்களிலும்
ஸ்ரீ நாலூர் பிள்ளை பிரசாதித்ததாக ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர் -என்று
இறே அருளிச் செய்து அருளுவது –

(மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
சீதை மணாளனைப் பாடிப் பற -3 9-4 –
மா முனிகள் வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் –
சம்ப்ரதாயத்திலும் வந்தால்-
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ பாதத்தில் கேட்ட ஸ்ரீ சிறிய ஆழ்வான் அப்பிள்ளை குமாரர் பக்கலிலே கேட்ட ஸ்ரீ நாலூர் பிள்ளை
அருளிச் செய்தது ஆகையாலே பிராபல்யம் உண்டு
அவர் தாம் ஸ்ரீ ஆச்சான் பிள்ளை திரு தமப்பனார் ஆகையாலே ஸ்ரீ பிள்ளைக்கு பரம ஆச்சார்யரும் இறே
ஆகையால் அந்த யோஜனை முற்பட எழுதி
ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்த யோஜனை பிற்பட எழுதப் பட்டது)

பிதா புத்ரர்களுக்கு ஸ்ரீ திருவாய் மொழி முகேன யுண்டான–சிஷ்ய ஆச்சார்ய சம்பந்தம்–
1-ஸ்ரீ கூரேச ஸ்ரீ பட்டார்யர் இடங்களிலும்
2-ஸ்ரீ அபய ப்ரதராஜ தத் புத்ரர்கள் இடங்களிலும்
3-ஸ்ரீ கிருஷ்ண பாத ஸ்ரீ லோகாச்சார்யர் இடங்களிலும்
4-ஸ்ரீ மாதவ ஸ்ரீ பத்மநாபர் இடங்களிலும்
5-ஸ்ரீ கோலேச ஸ்ரீ தேவாதிபர் இடங்களிலும்–தர்சிப்பிக்கலாய் இருக்கும் –

ஸ்ரீ தேவப் பெருமாள் கைக் கொண்டு அருளும் ஸ்ரீ திருமலை ஆழ்வாராலே –
ஸ்ரீ திருமலை ஆழ்வார் தீ வினையோம் தம்மை குருவாகி வந்து உய்யக் கொண்டு (ஆர்த்தி பிரபந்தம் ) -என்னும்படி
அங்கீ க்ருதரான ஸ்ரீ ஜீயரும்
ஆர்யாஸ் ஸ்ரீ சைல நாதாத் அதிகத சடஜித் ஸூக்தி பாஷ்யோ மஹிம் நா -என்றும்
ஆசிஸ்ருய தயம்பூய ஸ்ரீ சைலாதீச தேசிக அசேஷந ஸ்ருணோத் திவ்யான் பிரபந்தான் பந்த நச்சித -என்னும் படி
ஸ்ரீ திருவாய் மொழி முதலான அசேஷ திவ்ய பிரபந்த வ்யாக்யானங்களையும்
அவர் உபதேச முகத்தாலே லபித்தருளி
அநந்தரம் அவற்றை சர்வ லோக பிரசாரம் யுண்டாம் படி நடத்தி அருளினார் இறே

ஆர்யாச்ச் ஸ்ரீ சைல நாதா திகத சட ஜித் ஸூ க்தி பாஷா மஹிம் நா யோகீந்தரஸ் யாவதாரோ
அயமிதி ஸ கதிதோ யோ ரஹச்ய பிரபந்தான் வ்யாக்யாத் வா நாதரி யோகி பரவர வராத நாராயணாத் யைஸ்
ஸ்வ சிஷ்யைஸ் சாதா நீத் சம்ப்ரதாயம் வரவர முநிபம் நௌமிதம் துங்க போதம் -என்னும்படி இறே பெரிய ஜீயர் பிரபாவம் இருப்பது
பின்பும் –
யோ அவாப்ய சௌம்ய வர யோகி வரச் சடாரி ஸ்ரீ ஸூக்தி பாஷ்ய மத தத் பிரதிதம் விதேநு
தான் –பட்ட நாத முனி வான மஹாத்ரி யோகி வாதூல வமச்ய வரதார்யா முகன் பஜாமா -என்னும்படி
சௌம்ய ஜாமாத்ரு முனி வர்யர் சம்ப்ரதாயம் நடந்து போரும்படி இதுவாயிற்று-

(பட்ட நாத முநி -பட்டர் பிரான் பரவஸ்து ஜீயர்
வான மஹாத்ரி யோகி-ஸ்ரீ வான மா மலை ஜீயர்
வாதூல வம்ச்ய -கோயில் அண்ணன்
வரதார்யா முகான் -எறும்பி அப்பா )

——

கஸ்தூரி திரு நாமம் தான் சாத்திய மாலை நம்மாழ்வாருக்கு இன்றும் திருமுடி சேவை
திருவடி தொழுத பின்பு அருளுவார் -வட்ட மணை முத்துச்சட்டை முன்பு கொடுத்தது போல் –
நம்பெருமாள் வடக்கே போக -வட மேற்கு திசையில் போக –
நம்மாழ்வார் -தென் கிழக்கே -தென் மேற்கு திசையில் போக
(நவ திருப்பதி பெருமாள்களும் நம்மாழ்வார் உடன் சென்றதாகவும் சொல்வர் )
தோழப்பர் -திருமலை ஆழ்வார் இடம் சொல்ல -ராஜ புரோகிதராய் இளவரசனுக்குப் பதில் நாட்டை ஆண்டு இருந்தவர் –
செல்வ நம்பி பாண்டிய மன்னன் இடம் இருந்தது போல் இவர் இருக்க
முந்திரிப்பூ மலையில் இருந்து -மலை பள்ளத்தாக்கு –
இடைச்சேரி அருகில் இன்றும் அடுக்கு மலைத் தொடர் சென்று பார்த்து க்ருதஜ்ஜத்தை செலுத்த வேண்டும்
வகுளா பரண பட்டர் -போல் இவருக்கும் இன்றும் ஆழ்வார் திரு நகரியில் மரியாதை
கருட பக்ஷி காட்டக் கண்டார் -தோழப்பர் –
பாறை தட்டி கீழே விழுந்து ஆச்சார்யர் திருவடி சேர
அங்கேயே சம் ப்ரோக்ஷணம் செய்தார்கள்
திருகதம்ப புரம் -திருக் கணாம்பி -கூடலூர் வழியே சென்று –

1371-வைகாசி -17 -நம்பெருமாள் திரும்பி வந்த நாள்
1323-கிளம்பியது -ஜோதிஷ்குடி
1323-1325 -திருமால் இருஞ்சோலை
1325-1326–கோழிக்கோடு
1326-1328-சேனை கிடம்பை -திருக்கதம்ப புரம்
மேல்கோட்டை 28-43- மேல்கோட்டையில் 15 ஆண்டுகள்
44-70 ரெங்க மண்டபம் -26 ஆண்டுகள்
கோபண்ணாராயன் உதவியால்
செஞ்சிக்கு வந்து -பரிதாபி வருஷம் –
பிரமாணம் ரக்ஷணம் இதுக்கு நடுவில் நடக்கிறது
நம்பெருமாளை வியர்க்க சாமரம் வீசும் கைங்கர்யம் திருவாய் மொழிப்பிள்ளை திருத்தாயார் அந்தரங்க கைங்கர்யம் –
விளாஞ்சோலை பிள்ளை
கூர குலோத்தமை தாசர்
திருப்புட் குழி ஜீயர்
திருக்கண்ணங்குடி பிள்ளை

அடியேன் செய்யும் விண்ணப்பம் -திரு விருத்தம் பாட கூர குலோத்தம தாசர் -காணாமல் போக -உமிழ்ந்து
தயார் படுத்தி கொடுக்கும் பொறுப்பு -உணர்ந்து –
திருமண் காப்பு சாத்தும் சமயம் மட்டும் கால ஷேபம் -நடக்க
ஒரு நாள் விட்டு -தானே காலால் நடந்து அபசாரத்துக்கு ஷாமணம்
லௌகிக பற்று விட்டு -முழு அர்த்தங்களை கேட்க த்வரை மிக்கு -ராஜ்ய வியாபாரம் துறந்து
திருப்புல்லாணி அருகில் சிக்கிலி கிராமம் உபதேசம்
தனக்கு அந்திம காலம் வருவதை உணர்ந்து
விளாஞ்சோலை பிள்ளை இடம் ஸ்ரீ வசன பூஷணம் அர்த்தம்,
திருக்கண்ணங்குடி பிள்ளை இடம் திருவாய் மொழி அர்த்தம்
லோகாச்சார்யா கிருபா பாத்திரம் -கௌண்டின்ய கோத்ரம் – ஸமஸ்த ஆத்ம குண சாலி

ஐப்பசி திருவாதிரை அவதாரம் கூர குலோத்தம தாசர் –
துலார் த்ராயாம் ஸமுத் பன்னம் வந்தே லோகார்ய ஸம் ஸ்ரீ தம்
ஸ்ரீ சைலேச குரோர் ஞான ப்ரதம் கூர குலோத்தமம் -இவர் தனியன்

திருக்கண்ணங்குடி பிள்ளை இடம் திருவாய் மொழி அர்த்தம் கேட்டார்
தமக்கு வயசு மிக்கு -தினவு கெட உபதேசிப்பார் திருப்புட் குழி ஜீயர் என்று காட்ட அங்கே சென்றார்
இவர் வந்த அன்றே ஜீயர் பரமபதம் -12 நாள் -காஞ்சி புரம் –
நாலூர் பிள்ளையும் நாலூர் ஆச்சான் பிள்ளையும் அங்கே வர –
கோயில் திருமலை ஆழ்வார் -பாண்டிய அரசர் என்று அங்கு உள்ளோர் சொல்ல
சடாரியை ஊன்றி- தன்னுடைய விரலால் இவரும் ஊன்றி-தேவ பெருமாள் ஆணை நாலூர் பிள்ளை இடம் –
நாலூர் ஆச்சான் பிள்ளை என்னும் தேவ ராஜர் இடம் காஞ்சி புரத்திலே சொல்ல
சம்ப்ரதாயம் வளர்த்த பேர் அருளாளன் –
திரு நாராயண புரத்தில் -கால ஷேபம் தொடர்ந்து

த்ரேதா ப்ரவர்த்ய புவி ய பிரதயாம் சகாரா -என்று அவர் தனியனிலும் யுண்டு இறே
மூவருக்கு -ஈட்டை வளர்த்தார்
ஸ்ரீ சைல நாத குரு மாத்ரு குருத்தமாப்யாம் ஸ்ரீ ஸூக்தி தேசிக வரேண சயஸ் த்ரிதைவம் -என்றும்
ஸ்ரீ சைல நாதர் -திருமலை ஆழ்வார் என்ற திருவாய் மொழிப்பிள்ளை
(கொந்தகை இன்று முன்பு குந்தி நகரம் மதுரைக்கு பக்கம் உள்ளது )
குரு மாத்ரு -ஆய் -ஜநநி-ஆச்சார்யர்
குருத்தமாப்யாம் -திருவாய் மொழி ஆச்சான் பிள்ளை மூவருக்கும் –

நம்மாழ்வாரை சேவிக்க த்வரை பிறந்து -நாலூர் ஆச்சான் பிள்ளை தம்முடைய திரு ஆராதன பெருமாளை
திருவாய் மொழிப் பிள்ளைக்கு ப்ரசாதிக்க
இன ஆயர் தலைவன் – -இன்றும் அவர் திருமாளிகையில் கோயில் ஆழ்வாரில் சேவிக்கலாம் –

இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும்
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக் கொலோ?
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்?
இன வேற் கண்ணி என் மகள் உற்றனவே–5-6-6-

திருக் கணாம்பி சென்று நம்மாழ்வாரை சேவித்து இங்கு நாடு திருத்தி புனர் நிர்மாணம் செய்து அருளினார் –
நம் சடகோபர் தாசர் -என்று இன்றும் அவர் வம்சத்தார் –
பின்பு விளாஞ்சோலைப் பிள்ளை
திரு நலம் திகழ் நாராயண தாசர் இவர் திரு நாமம்
விளாம்பழ தோட்டத்தில் வாசம் செய்தவர்
இவர் வருவார் என்று சோலையிலே தென்னம் மரம் ஏறி விமானம் சேவித்துக் கொண்டு இருப்பாராம்
சிலந்தி வலை பின்னும் படி த்யானம் செய்து கொண்டு இருந்தாராம்
ஸ்ரீ வசன பூஷண அர்த்தம் –
ஸப்த காதையும் கொடுத்து அருளினார்
ஐப்பசி உத்தரட்டாதி
திருவடி துவாரம் மூலம் இவர் வந்து சேர்ந்ததை உணர்ந்து -இயல் சேவித்து -பரிவட்டம் –
திரு அத்யயனம் திருவாய் மொழிப்பிள்ளையே நடத்தி வைத்தார்

திருநக்ஷத்ரம் – ஐப்பசி உத்திரட்டாதி
திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள ஆறநூர் என்னும் கிராமத்தில் அவதரித்தவர்.
ஆசார்யன் – ஸ்ரீ பிள்ளைலோகாசார்யார்
வேறு திருநாமம் – நலந்திகழ் நாராயண தாஸர்

தனியன்
துலாஹிர்புத்ந்ய ஸம்பூதம் ஸ்ரீ லோகார்ய பதாஸ்ரிதம்
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே

ஐப்பசி உத்திரட்டாதியில் அவதரித்தவரும் பிள்ளை லோகாசார்யரின் திருவடிகளைப் பற்றியவரும்
ஸப்தகாதை அருளிச் செய்தவரும் “நலந்திகழ் நாராயண தாஸர் என்ற விளாஞ்சோலைப் பிள்ளையை வழிபடுகிறேன்.

மற்றொரு தனியன்
ஸ்ரீ லோகார்ய பதாரவிந்த மகிலம் ஸ்ருத்யர்த்த கோசாம் ஸ்ததா
கோஷ்டீஞ்சாபி ததேக லீநமநஸா ஸஞ்சிந்தயந்தம் முதா
ஸ்ரீ நாராயண தாஸமார்யமமலம் சேவே ஸதாம் ஸேவிதம்
ஸ்ரீ வாக்பூஷண கடபாவ விவ்ருதிம் யஸ்ஸப்த காதாம் வ்யதாத்

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யருடைய பாதாரவிந்தங்களில் மறைப்பொருள் அனைத்தையும் பெற்றவரும்
அவருடைய கோஷ்டியை எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்பவரும்,
ஸ்ரீ வசனபூஷணத்தின் உட்பொருள்களை ஸப்தகாதை என்ற நூலால் வெளியிட்டவரும்
ஸ்ரீ நாராயண தாஸர் என்ற திருநாமமுடையவரான உயர்ந்தவரை எப்போதும் சேவிக்கிறேன்.

ஸ்ரீ பிள்ளை உறங்காவில்லிதாஸர் ஸ்வாமி எம்பெருமானாருக்கு அந்தரங்கராய் இருந்தது போல்,
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் ஸ்வாமியினிடத்திலே, அந்தரங்க சிஷ்யராய் இருந்து
ஸகல சாஸ்திர அர்த்தங்களையும் கேட்டவர் ஸ்ரீ விளாஞ்சோலைப்பிள்ளை.

இவர் ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் திருவாய்மலர்ந்தருளிய ஸ்ரீ வசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்தில் ஊன்றினவராயும்
அதிலுள்ள அர்த்த விசேஷங்களை அனுபவிப்பதைத் தவிர வேறொன்று அறியாதவராயும் வாழ்ந்து வந்தவர்.

1370 சாதாரண ஐப்பசி திரு மூலம் மா முனிகள் அவதாரம் -ஆழ்வார் திரு நகரியில்
திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய நாயனார் -திருக்குமாரர்
1425-ஆஸ்ரம ஸ்வீ காரம் –
சிக்கில் கிடாரம் தாய் மாமன் இடம் -அம்மான் திருமாளிகை
எங்கள் மணவாள யோகி
நாள் தேவ ராசன்
நலம் திகழ் நாராயண தாசர்
கூர குலோத்த தாசர்
வாழியவே

ஈட்டையும் -ஸ்ரீ வசன பூஷண அர்த்தம் சாதித்தார் மா முனிகளுக்கு
1432- பரிதாபி ஆவணி -31 நாள் தொடக்கம் -ஆனந்த வருஷம் கீழ்மை ஆண்டில் ஆனி மூலம் சாத்துமுறை -1433-

நல்லதோர் பரிதாபி வருடம் தன்னில்
நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்
தொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர் பக்க நாலாம் நாளில்
செல்வமிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்றே
வல்லி யுரை மணவாளர் அரங்கர் நங்கண்
மணவாள மா முனிக்கு வழங்கினாரே –6–

ஆனந்த வருடத்தில் கீழ்மை ஆண்டில்
அழகான ஆனி தனில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய
பௌரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்
அழகாக மணவாளர் ஈடு சாற்ற
வானவரும் நீறிட்ட வழக்கே என்ன
மணவாள மா முனிகள் களித்திட்டாரே –7–

தேவியர்கள் இருவருடன் சீர் அரங்கேசர்
திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
தாவிதமா இந்த உலகோர்கள் வாழத்
தமிழ் மறையை வர முனிவன் வரக் கேட்டே
ஆவணி மாசம் தொடங்க நடக்கும் நாளில்
அத்தியனத் திருநாள் அரங்க நாதர்
தாவமற வீற்று இருந்து தருவாய் என்று
தாம் நோக்கி சீயர் தமக்கு அருளினாரே –8–

அருளினதே முதலாக அரங்கருக்கும்
அன்று முதல் யரும் தமிழை அமைத்துக் கொண்டு
தெருளுடைய வியாக்கியை ஐந்துடனே கூட்டித்
திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
பொருள் உரைக்கும் போது எல்லாம் பெருமாளுக்குப்
புண் சிரிப்பும் பாவனையும் மகிழ்வும் கொள்ள
அருளுடைய சடகோபர் உரைத்த வேத
மது கேட்டுச் சாற்றியது இத் தனியன் தானே –9-

நாமார் மெருஞ்சீர் கொள் மண்டபத்து நம் பெருமாள்
தாமாக வந்து தனித்து அழைத்து –நீ மாறன்
செந்தமிழின் வேதத்தின் செழும் பொருளை நாள் தோறும்
வந்துரையாய் என்னுரையால் வாய்ந்து –10-

சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தலைப்பப்
போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ விப்பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே –11-

ஆர்யாஸ் ஸ்ரீ சைல நாதாத் அதிகத சடஜித் ஸூக்தி பாஷ்யோ மஹிம் நா -என்றும்
ஆசிஸ்ருய தயம்பூய ஸ்ரீ சைலாதீச தேசிக அசேஷந ஸ்ருணோத் திவ்யான் பிரபந்தான் பந்த நச்சித -என்னும் படி
ஸ்ரீ திருவாய் மொழி முதலான அசேஷ திவ்ய பிரபந்த வ்யாக்யானங்களையும்
அவர் உபதேச முகத்தாலே லபித்தருளி
அநந்தரம் அவற்றை சர்வ லோக பிரசாரம் யுண்டாம் படி நடத்தி அருளினார் இறே

பின்பும் –
யோ அவாப்ய சௌம்ய வர யோகி வரச் சடாரி ஸ்ரீ ஸூக்தி பாஷ்ய மத தத் பிரதிதம் விதேநு
தான் –பட்ட நாத முனி வான மஹாத்ரி யோகி வாதூல வமச்ய வரதார்யா முகன் பஜாமா -என்னும்படி
சௌம்ய ஜாமாத்ரு முனி வர்யர் சம்ப்ரதாயம் நடந்து போரும்படி இதுவாயிற்று-

த்ராவிட உபநிஷத் ரத்னாவளி
த்ராவிட உபநிஷத் சாரம்
த்ராவிட உபநிஷத் சங்கதி
திருவாய் மொழி நூற்று அந்தாதி
அரும்பதங்கள் கொண்டு ஈட்டு அம்ருதம் பருகிக் கொண்டே இருப்போம்

கந்தாடை அண்ணன் திருக்குமாரர் கந்தாடை நாயன் -அரும் பதம் கிடைக்க வில்லை
ஜீயர் பேரனார் நாயனார் இவர்-கந்தாடை நாயன்- இடம் அனைத்தையும் கற்றாராம்
ஆத்தான் ஜீயர் -அடைய வளந்தான் யரும் பதம் -தொகுத்து
நாநா வியாக்கியான ஸம்மேளனம்
அனந்தாழ்வான் பிள்ளை வம்சத்தார் -ஜீயர் அரும்பதம் –

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

உபதேச ரத்னமாலை –பாசுரம் -39/40/41/42/ 43/44/45- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

July 25, 2014

இனி
ஸ்ரீ த்வயார்த்தமான ஸ்ரீ திருவாய் மொழியை
ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத் தாய் இராமானுசன் -(தனியன் )-என்னும் படி
இத்தை வர்திப்பித்துக் கொண்டு போந்தவர் ஆகையாலே
தத் பிரசாதம் அடியாகத் தத் அபிப்ராயமான அர்த்தங்களாலே
அருளிச் செயலிலே சாரமான ஸ்ரீ திருவாய் மொழியை
வியாக்யான நிர்மாண முகேன ரஷித்துப் போந்தவர்கள்
ஸ்ரீ பிள்ளான் முதலான ஸ்ரீ ஆச்சார்யர்கள் என்கிறார் —
(வேதக்கடல் -முத்து குளித்து -ஐந்து வியாக்கியானங்கள் –
நம்மாழ்வார் பிரசாதம் அடியாக ஆழ்வார் திரு உள்ளக்கருத்தை -அந்தரங்கமாக
மாறன் அடி பணிந்து உயந்த இவர் பெற்ற சீரிய அர்த்தங்களை
இவர் பிரசாதம் அடியாக இவர் திரு உள்ளக்கருத்தையே வியாக்யானம் -செய்து அருளி )

(பெரிய திருமலை நம்பி மூன்று திருக்குமாரர்கள்
1-பிள்ளை திருமலை நம்பி
2-ராமானுஜர்
3-பிள்ளான் -)

பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை
தெள்ளார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை
மணவாள யோகி திருவாய்மொழியைக் காத்த
குணவாளர் என்று நெஞ்சே கூறு—39-

(யதீந்த்ரர் காட்டிய -அகில புவன -பராசர –ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகங்கள்
பூர்வாச்சார்ய ஸூ ரஷதாம்- இதற்கு தமிழ் மொழி பெயர்ப்பே இங்கு -திருவாய்மொழியைக் காத்த குணவாளர்-
பொதுவாக ரக்ஷித்தமை அருளிச் செய்து தனியாக பின்பு போதாயனர் -என்று அங்கு –
இங்கு தனியான இவர்கள் திருநாமங்களை அருளிச் செய்து பின்பு காத்தமை அருளிச் செய்கிறார் )

சந்த்ர யதீந்த்ர ஜலதே குருகாதிபர்ய
ஸ்ரீ மாதவோ முனி
உபய கிருஷ்ண -இரு கண்ணர்
யோகீந்த்ர ஸூந்தர வரோகி
சஹஸ்ர தாதா
வியாக்யா
ஹ்ருதய தாம் அனுதினம் பஜ

பிள்ளான்–
பிள்ளான் ஆகிறார் –
ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி செய்து அருளின மகா உபகாரத்தை அனுசந்தித்து
அதில் கிருதஞ்ஞாராய் இருக்கும் ஸ்ரீ எம்பெருமானாராலே புத்திர அபிமானம் பண்ணப் பட்டு
திருக் குருகைப் பிரான் பிள்ளான் -என்ற திரு நாமம் சாத்த –
(ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பிக்கே -திருக் குருகைப் பிரான் திரு நாமம் உண்டு
நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்-நாச்சியார் திரு மொழி வியாக்யானத்தில் –
நம் திருக் குருகைப் பிரான் என்றே காட்டி அருளுகிறார் )

(ஆளவந்தார் திருப்பேரானார் திருமலை நம்பி -அவரது திருக்குமாரர் என்பார் சிலர் –
இதுக்கு பிரமாணங்கள் இல்லை
தாதாச்சார்யர் வம்சம் -தென்கலையிலும் உண்டு –
அத்தங்கி ஸ்வாமிகளும் -ஏட்டூர் சிங்கராச்சார்யர் ஸ்வாமிகளும் இந்த வம்சம்)

இப்படி ஸ்ரீ நம்பி தன் நாமமான ஏற்றத்தை யுடையராய்
அத்தாலே அல்லாதார்க்கு அவரோபாதி உத்தேச்யராய்
அவர் இடத்திலே அகில வேதாந்த தாத்பர்யங்களையும் அதிகரித்து
சகல சாஸ்திர வித்தமராய்
சம்ஸ்க்ருத திராவிட ரூபமான உபய வேதாந்தத்துக்கும்
ப்ரவர்த்தகராய் இருப்பார் ஒருவர் –

(ஐப்பசி பூராடம் நக்ஷத்ரம் அவதாரம் -விஷ்வக் சேனர் போல்
திராவிட ஆகம சாரஞ்ஞர் ராமானுஜ பாத ஆஸ்ரயம்
ஸூகீயம் குருகேசார்யம் நமாமி சிரசாம் வஹம்
ஆழ்வார் திரு நகரியில் அவதாரம்-இதனாலும் இந்த பெயர் பொருந்தும் –
திரு வெள்ளறை எங்கள் ஆழ்வான் இவர் சிஷ்யர் )

நஞ்சீயர் –
அவராகிறார் –
சர்வஞ்ஞரான ஸ்ரீ கூரத் ஆழ்வான் திருக் குமாரராய் சகல சாஸ்திர வித்தமரான ஸ்ரீ பட்டராலே
நம்முடைய ஜீயர் -என்று அபிமானிக்கப் பட்டு
அவர் சந்நிதியிலே சகல அர்த்தங்களையும் சம்சய விபர்யயம் அறக் கேட்டு
பின்பு நூறு உரு ஸ்ரீ திருவாய்மொழி நிர்வஹித்து
அத்தாலே சதாபிஷேகம் பண்ணப் பெற்றவர் ஆய்த்து –

(தந்தி யானை போல் இருந்தவரை திருத்தி வேதாந்தி ஆக்கி நஞ்சீயர்
பங்குனி உத்தரம் திரு அவதாரம்
பால்குநோத் தரபல்குந்யாம் ஜாதம் வேதாந்தி நம் முனிம்
ஸ்ரீ பராசர பட்டார்ய பாத ரேகாம் அயம் பஜே
நமோ வேதாந்த வேத்யாய ஜகன் மங்கள ஹேதவே
யஸ்ய வாக் அம்ருதா சார பூரிதம் புவன த்ரயம் )

பெரியவாச்சான் பிள்ளை –
அவர் ஆகிறார்
ஸ்ரீ ஆழ்வார் உடைய திரு வவதாரத்தோபாதியான ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளிலே ஆஸ்ரயித்து
தத் சேவைக்கு விருந்தங்களான தத் இதர புருஷார்த்தங்களை எல்லாம் சவாசனமாகப் பரித்யஜித்து
சகல அர்த்தங்களையும் அவர் சந்நிதியிலே நன்றாகக் கற்றுக் கேட்டு
அவருக்கு அத்யந்தம் அபிமதராய் இருக்குமவர் –

(ஸகல திராவிடாம் நாய சார வியாக்யான காரிணம்
ஸ்ரா வணே ரோஹிணீ ஜாதம் ஸ்ரீ கிருஷ்ண குரும் ஆஸ்ரயே
ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா
ஆவணி ரோஹிணி -சேங்கனூர்
கலிகன்றி தாசர் நம்பிள்ளை இடம் கற்றுக் கேட்டு )

தெள்ளார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை –
ஸ்ரீ திருவாய் மொழியில் அர்த்தங்களை எல்லாம் பிரகாசிக்கும் படியான மிக்க தெளிவை யுடையராய்
அத்தாலே -ச க்ருஷ்ண த்வயௌ-என்னும்படி ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளையோடு ஒரு கோவையாய்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளுக்கு அத்யந்தம் அந்தரங்கராய்
அதிகிருத பரமார்த்தராய்
அபிமான நிஷ்ட அக்ர கண்யராய் இருக்குமவர்-

(யாமுனாச்சார்யர் -யார் உடைய தகப்பனார் தெரியாமல்
தனியன் கூட இருவருக்கும் பொருந்தும் படி இரு கண்ணர்கள் இவர்கள்
பகவத் விஷய காலக்ஷேப தனியனின் இவரே காட்டி உள்ளார் )

(தவராசன் படித்துறை
மணவாள மா முனிகள் திருவரசு
கேசவ பெருமாள் கோயிலை சுற்று வடக்கு -நடுவில் திரு வீதிகள் இருந்தன
மிதுனே ஸ்வாதி ஸம்பூதம் கலி வைரி பத ஆஸ்ரிதம்
உதக் ப்ரதோளீ நிலயம் கிருஷ்ண பாதம் காம் பஜே
ஸ்ரீ கிருஷ்ண பாத சதா சிரஸா நமாமி
யத் பிரசாத ப்ரபாவ சர்வ சித்தி
ஆனி ஸ்வாதி )

மணவாள யோகி –
அவர் ஆகிறார் –
அபயப்ரத ராஜ புத்ரர் என்னும்படி ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளைக்கு குமாரரான
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை திருவடிகளை சதா சேவை ஸ்வர்யாத் -என்னும் படி பழுக்க சேவித்து
(இவருக்கும் அழகிய மணவாளர் இயல் பெயர் -அழகிய மணவாள நாயனார் -ஆச்சான் பிள்ளை என்று ஆயிற்றாம் )
தர்சன ரஹஸ்ய தாத்பர்யங்களையும் அவர் உபதேச முகத்தாலே லபித்தது
மற்றும் சகல சாஸ்திரங்களையும் அவர் சந்நிதியிலே சாங்கமாக அதிகரித்து
இதர தர்சன நிரசனத்துக்கு உறுப்பாக
ஸ்ரீ வாதி கேசரி -என்னும் படி வாக் வைகரியை யுடையராய் இருக்குமவர் –

(அவதார கிராமம் படி அருளிச் செய்கிறார் –
திருமடைப்பள்ளி கைங்கர்யம் பண்ணிக் கொண்டு இருந்தவர்
ஸ்ரீ வாதி கேசரி-வாதங்களுக்கு ஸிம்ஹம்
ஸூந்தர ஜாமாத்ரூ முனே ப்ரபத்யே சரணாம் புஜம்
சம்சார ஆர்ணவ சம் மக்ன ஐந்து சந்தான போதகம் )

ஏவம் விதராண இவர்கள்
ஸ்ரீ திருவாய்மொழியைக் காத்த -குணவாளர் என்று நெஞ்சே கூறு –
அதாவது
பிரமாண ஸ்ரேஷ்டமான ஸ்ரீ திருவாய் மொழியை அல்ப மதிகளால் அவிசால்யமாம்படி
ஸ்வ ஸ்வ வ்யாக்யானங்களாலே ஸூ ரஷிதமாக ரஷித்த மகா குணத்தை யுடையவர்கள் -என்றபடி –

(வேதம் பிபேதி -நடுங்குமாம் அல்ப மதிகளால் -கோணா மாணா கிழித்து -வியர்த்தல் ஆகுமே )

அவர்கள் தான்
ஸ்ரீ ஆறாயிரப் படி தொடங்கி
ஸ்ரீ பன்னீராயிரப் படி இறுதியாக
வியாக்யானம் பண்ணி அருளின படியை மேலே இவர் தாமே ஸூ வ்யக்தமாக அருளிச் செய்கிறார் –

(வியாக்யானம் -பஞ்ச லக்ஷணங்கள்
1-பதச்சேதம் -பதம் பிரித்து
2-பதார்த்த யுக்தி
3-விக்ரஹம்
4-வாக்ய யோஜனை
5–தாத்பர்ய கதனம் )

(நீக்கு ஏல் ஓர் எம்பாவாய்
உறங்கேல் ஓர் எம்பாவாய் -இப்படி பதச்சேதம்

வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு -ஏதோ -தாயார் இடம் அந்தரங்க வார்த்தை -இடை ஓடியா நின்றது அஷ்ட புஜங்கள்
மணி வண்ணன் வலையுளே அகப்பட்டேன் -கண்கள் வலை -கமலக் கண்ணன் என்னும் நெடும் கயிறு –
அப்பூச்சி காற்றுகின்றேன் -அரையர் அபிநயம் –
உள்ளது எல்லாம் கண்ணன் நம்மாழ்வாருக்கக் காட்டி அருள -அவர் நாதமுனிகளுக்கு காட்டி

விக்ரஹம் -வாக்கியம் பேதம் அறிந்து -தவம் புரிந்த மா முனி கொணர்ந்த கங்கை -பகீரதன் –
விசுவாமித்திரர் கங்கை கரை ஓரம் ராம லஷ்மணர்ட்களைக் கூட்டி
தான் போலும் தரணியாளன் -கோன் -பாசுர விளக்கம்

வாக்ய யோஜனை -மற்று எக்காலத்திலும் யாது ஒன்றும் வேண்டேன் -எக்காலத்திலும் மற்று யாது ஒன்றும் வேண்டேன்
சாயை போல பாட வல்லார் தாமும் அணுக்கர்களே
நம்பியை -தென் குறுங்குடி–உம்பர் வானவர்-எம்பிரானை -என் சொல்லி மறப்பேனோ –கூட்டிப் பொருள்கள்
எங்கனேயோ என்னை முனிவது
அன்னைமீர்காள் என்னை முனிவது
கண்டபின் என்னை முனைவது
உயர்வற –அவன் -துயர் அறு சுடர் ஆதி தொழுது எழு

தாத்பர்யம்
கனைத்து இளம் கற்று எறுமை -கஜேந்திர வரதன் குமுறுவது போல் –
கைம்மா துன்பம் கடிந்த பிரானே எம்மா வீட்டுத் திறமும் செப்பம் -அம்மா
ஒரு முதலை -ஆயிரம் வருஷம் -குளம்
ஐந்து முதலைகள் -ஸம்ஸார அநந்த கோர ஆர்ணவம் –
பாசுர பதிக சங்கதிகள் )

காத்த குணவாளர் என்று நெஞ்சே கூறு –
இப்படி வியாக்யான விசேஷங்களாலே ரஷித்துப் போந்த குணத்தை யுடையவர்கள் என்று
அக் குணங்களிலே வணங்கி இருக்கிற நெஞ்சே-
அக் குணங்கள் அடியாக யுண்டான அவர்கள் வைபவத்தை-
உன் ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக
யத் மனசா த்யாயதி தத் வாசா வததி -என்னும் படி சொல்லு
மனசுக்கு த்வாரமாய் இறே மற்றைக் கரணங்கள் தான் இருப்பது
அந்த உண்மையைப் பற்ற கூறு -என்கிறார் –

(வாக்கு மனஸ்ஸூ -போட்டி -மனதால் நினைப்பதே வாய் சொல்லும் -ப்ரம்மா சொல்ல -வாக்கால் சொல்லாமல் சாபம்
ஆஹுதி -பிரம்மாவுக்கு மனசால் நினைத்தே சொல்கிறோம் -வேதத்தில் இது உண்டே –
ருத்ரனுக்கு சொன்னால் கை அலம்பி கொள்வாராம் -தீட்டு போக -இந்த அனுஷ்டானம் சைவர்களுக்கு உண்டாம் -)

(ஜீயர் -சீயர் -சீரியர் -saint -seer -one who fore sees -த்ருஷ்டா ரிஷி -முக்காலமும் உணர்ந்தவர் –
one who sees -பார்ப்பான் -நன்மையை தொலை நோக்குடன் பார்க்கும் -சீயம் -ஸிம்ஹம் -ஸ்ரேஷ்டர் -அடல் ஏறு -போல் )

—————————————————–

முற்காலத்தில் அவர்கள் செய்த வ்யாக்யானங்களின் அருமையை
வ்யதிரேக முகத்தாலே
தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –
(திருத்திப் பணி கொண்ட ஆச்சார்யர்களுக்கு -முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு
அன்பையே-என்றபடி – -முயலத்தான் முடியும் )

முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும்
அந்த வியாக்கியைகள் அன்றாகில் -அந்தோ
திருவாய் மொழிப் பொருளைத் தேர்ந்துரைக்க வல்ல
குரு ஆர் இக்கால நெஞ்சே கூறு—40-

மனம் நினைக்க நினைக்க -சிந்தனைக்கு கருவி -மனம் பூர்வ வாக் உத்தர –

ஏதே சடாரி க்ருத கீத சஹஸ்ர டீகா
க்லுப்தா ந அசேத்
குருவரை
குருகேச முக்கிய
தஸ்ய பிரபந்த திலகம்
ஹந்த
பாவம் ஜாநந்தி ஹே
அத்ய
ஹ்ருதய த்வம் உதீரதா

முந்துறவே பிள்ளான் முதலானோர் செய்தருளும் –
அதாவது
ஜ்ஞாநான் யல்பீ பவிஷ்யந்தி -என்று சம்ப்ரதாயங்கள் சங்குசிதம் ஆவதற்கு முன்பே
ஏற்கவே –
முற்காலே –
ஸ்ரீ பிள்ளான் முதலாக ஸ்ரீ ஜீயர் அளவாக யுண்டான ஐந்து ஆச்சார்யர்களும் செய்து அருளும் –
(ஞானக் கலைகளுக்கு ஆதாரமான தானே பீஷ்மர் -தத்வ தர்ஸி வசனம் கேட்க உபதேசம்
பிள்ளான் தொடங்கி வாதி கேசரி மணவாள ஜீயர் வரை )

அந்த வியாக்கியைகள் –
அந்த விலஷணமான வ்யாக்யானங்கள் ஆனவைகள் –

அன்றாகில் –
அப்படி அவர்களாலே செய்யப் பெறா விடில்
அன்று -என்றது அல்லது -என்றபடி
அக்காலத்திலே-தீர்க்க தர்சிகளான அவர்களாலே வியாக்யானம் பண்ணாது ஒழியில்
இனி நாம் இருந்து என் படக் கடவோம் என்று விஷண்ணர் ஆகிறார்-

அந்தோ –
சதுரா சதுரஷரீ காம் அவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருச -என்னுமா போலே –
(நம்மைப் போல் ஜந்துக்கள் என்ன நிலையில் இருப்போம்
இந்த சதுர ராமானுஜ அக்ஷரம் கிடைத்து இருக்கா விட்டால் -ஹந்த)

திருவாய் மொழிப் பொருளைத் தேர்ந்துரைக்க வல்ல குரு ஆர் இக்கால நெஞ்சே கூறு –
ஸ்ரீ திருவாய் மொழிப் பொருளை தேர்ந்து உரைக்கும் போது
தெள்ளார் ஞானம் யுடையராக வேண்டாவோ –
இத்தை இப்போது நிரூபித்து சொல்ல வல்ல வெளிச் சிறப்பை யுடையார் ஆர் –
அவர்களை எங்கே காண்பது –
(வெளிச் சிறப்பை-ஞான தீபேண பாஸ்வத வெளிச்ச எரிப்பு )

ஏதத் காலத்தில் அவர்கள் உடைய ஞான மாந்த்யத்தையும்
திராவிட வேத சாகரம் -என்னும் படி
அளவியின்ற அந்தாதி யான இதனுடைய அர்த்த காம்பீர்யத்தையும் கண்டு
இத்தை அறிந்து
இதுக்கு அனுகுணமாக வியாக்யானம் பண்ண வல்ல சக்தியை யுடையார் ஆர் -என்கிறார் –

தேர்ந்துரைக்க வல்ல குரு ஆர் –
இவர்கள் செய்து அருளின வ்யாக்யானங்களின் சீர்மை அறிந்து-
அறியக் கற்று வல்லார் -என்னுமா போலே-
அத்தை ப்ரவர்த்திப்பித்து போருவார் தாம் ஓர் ஒருத்தர் என்னும்படி அபூர்வராய் இருக்க
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளத்தை அடி ஒற்றி
அதுக்கு அனுகுணமாக வியாக்யானம் பண்ணுவார் அரிதாய் இறே இருப்பது –
(அறிந்து -மேலே கற்று தேர்ந்து –வல்லமை -பிரசாரம் -நான்கு நிலைகள் )

உரைக்க வல்ல -என்கையாலே
சப்த அர்த்த சந்தர்ப்ப கரணத்தில் அருமை இருக்கிற படி —

உரைக்க வல்ல குரு ஆர் இக் காலம் –
அர்த்த அபஹாரம் பண்ணுகிற காலத்தில்
அர்த்த பிரகாசகரைக் கிட்டுமோ –
உண்டாகிலும் தன் கைப் பொருள் கொண்டு தப்பி ஓடும் காலம் இறே
பிறர் நன் பொருளை இறே அபஹரித்து போருகிறது –

(தேகாத்ம அபிமானம் -ஓ ஓ இது என்ன உலகு இயற்க்கை
பூர்வர்களால் ஸூ ரஷிதாம் -உள்ளவற்றை அர்த்த அபகாரம் பண்ணும் புறச்சமயிகள்
அர்த்த அபஹாரம்-சாடு -பொருள் கவரும் காலம் -அர்த்தம் -பொருள் -செல்வம் -meaning –
பாதம் -கால் -அளவீடு -அவயவம் -இரண்டு அர்த்தம் போல் )

கடலளவாய திசை எட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரும் காலத்து -என்னும்படி
குரூரமான காலத்திலே
கூரிய மெய்ஞ் ஞானத்தாலே
ஸ்ரீ திருவாய் மொழிப் பொருளை ஓர்ந்து உணர்ந்து உரைப்பார் ஒருவரைக் கிட்டுமோ –
(பக்தி பிரபாவம் திரு உள்ளத்தில் பட வேண்டுமே )

நெஞ்சே கூறு –
ஸ்ரீ பாஷ்யகாரர் காலம் தொடங்கி உண்டான ஸ்ரீ திருவாய்மொழி ஸ்ரீ ஆச்சார்யர்கள் இடங்களிலே
பவ்யமாகப் போருகிற நெஞ்சே
இவர்களைப் போலே ஏதத் அர்த்த தர்சிகளாய் போருமவர்களை
இக் காலத்திலே இன்னார் என்று ஒருவரை யாகிலும் சொல்லிக் காண்-
ஆகையால் அவர்கள் அலப்யராய் இறே இருப்பது-

—————————————————–

கீழே
ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ நஞ்சீயர் -என்று தொடங்கி
ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் -என்று அவர்கள் அருளிச் செய்த வியாக்யான
பஞ்சக சங்க்யையும் தனித் தனியே அருளிச் செய்வாராய் –

அதில் இப்பாட்டில் –
ஸ்ரீ குருகைப் பிரார்க்கு அன்பாம் ஸ்ரீ எதிராசர் -என்னும் படி
பிரபன்ன ஜன கூடஸ்தரான ஸ்ரீ எம்பெருமானார் உடைய
நிரவதிக கிருபையாலே ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் –
ஸ்ரீ திருவாய் மொழிக்குப் பண்ணி யருளின வியாக்யான சங்க்யை -ஷட் சஹஸ்ரம் -என்கிறார் –
(ஸ்ரீ விஷ்ணு புராணம் -கணக்கில் ஆறாயிரம்
படி -கிரந்தம் -புத்தகம் -நூல் –32-அக்ஷரங்கள் கொண்ட ஒரு தொகுதி –
அனுஷ்டுப் ஸ்லோகம் -32-எழுத்துக்கள் -கீதா -தனியன் ஸ்லோகங்கள் -1 படி
முமுஷுப்படி இத்யாதி -இங்கு கிரந்த அர்த்தம் – )

தெள்ளாரும் ஞானத் திருக் குருகைப் பிரான்
பிள்ளான் எதிராசர் பேரருளால் -உள்ளாரும்
அன்புடனே மாறன் மறைப் பொருளை யன்றுரைத்தது
தின்பமிகு மாறாயிரம்–41-

ஞானம் இருக்க -அதுக்கும் மேலே -யதிராசர் பேர் அருள் கிட்டி —
அதனாலே அன்பு மிக்கு -அதனாலே பிறந்த -இன்பம் மிகு ஆறாயிரம் -நான்கு நிலைகள்

நிஸ் ஸீம
நிர்மல தீயா
குருகாதிப
லப்தவா பிரசாத லகரிம் யதி புங்க வஸ்ய
ஸாஹா சஹஸ்ர விஷயா டீகா கீதா
ஷட் சஹஸ்ரீ

தெள்ளாரும் ஞானத் திருக் குருகைப் பிரான் பிள்ளான் –
ஸ்ரீ திருவாய் மொழிக்கு -பிரதம – வியாக்யானம் பண்ணுகைக்கு அனுகுணமாக
விவேக பரிபூரணமான வெளிச் சிறப்பை யுடையரான
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் –
அன்றிக்கே –
தெளிவு மிக்கு இருந்துள்ள ஞானத்தை யுடையவர் -என்னவுமாம் –

(பகுத்தறிவு -விவேக ஞானம் என்றும் -ஆர்ந்த ஞானம் என்றும் –
மணிப்பிரவாள கிரந்தமும் இது தான் பிரதமம் -இது உபநிஷத் சாரம் -அவற்றை பிரமாணமாகக் காட்டி –
ஆளவந்தார் முதலில் இத்தை உபதேசித்து -பிள்ளான் கிரந்தமாக அருளிச் செய்தார் )

எதிராசர் பேரருளால் –
உன் பெரும் கருணை தன்னை (ராமானுஜ -70 )-என்னும்படியான
ஸ்ரீ எம்பெருமானார் உடைய நிரவதிக கிருபையாலே –
இது வாய்த்து இவர் வியாக்யானம் பண்ணுகைக்கு அடி –

உள்ளாரும் அன்புடனே –
க்யாதி லாபாதிகளால் அன்றிக்கே
ஸ்ரீ திருவாய் மொழி விஷயமாக யுண்டான நிரவதிக பிரேமத்தாலே -என்னுதல்-
சேதனர் பக்கல் நிரவதிக ஸ்நேஹத்தால் -என்னுதல் –
(அன்பு -ஆழ்வார் பக்கல் க்ருதஞ்ஞதை -திருவாய் மொழியில் பக்தி- நம் இடம் இரக்கம் –
நன்றி பக்தி இரக்கம் மூன்றுக்கும் அன்பு வேண்டுமே )

மாறன் மறைப் பொருளை-
அருளினான் அவ் வரு மறையின் பொருள் -என்கிறபடியே
ஸ்ரீ ஆழ்வார் யுடையதான வேத ரூபமாய்
ஸ்வார்த்த நிர்ணயத்தில் அல்லாதார்க்கு அருமை தட்டி இருப்பதான
ஸ்ரீ திருவாய் மொழியின் அர்த்தத்தை அருளிச் செய்தது ஸ்ரீ ஆறாயிரம் ஆய்த்து –
அவாவில் அந்தாதிக்கு அனுகுணமான அன்புடனே யாய்த்து உரைத்தது —

(தைத்ரியம் தித்ரி முனிவர் வெளிப்பட்டது போல் மாறனால் வெளிவந்த மறை தானே இது )

யன்றுரைத்தது –
அதாவது –
ஸ்ரீ பாஷ்ய காரர் சந்நிதியிலே கேட்டு
மனனம் பண்ணி
அர்த்த வைசத்யம் ( விளக்கம் ) பிறந்து இருக்கிற அக்காலத்திலே ஆய்த்து
இவர் வியாக்யானம் பண்ணிற்று என்கை –

அதன் சங்க்யை எவ்வளவு என்னில் –
இன்பமிகு மாறாயிரம்-
அமர்சுவை ஆயிரம் -என்னும்படி ரச கனமாய் இருப்பதாய் (சுவை அமர்ந்து -பக்தாம்ருதம் )
அடியார்க்கு இன்ப மாரியாய் -இருக்கிற இதுக்கு
இன்பமிகு மாறாயிரம் ஆய்த்து இவர் அருளிச் செய்தது –
இதுவும் அப்படியேயாய் இருக்கை –மூலத்தைப் பற்றி வரும் ரசம் இறே-
அன்புடனே பண்ணுகையாலே இதுவும் இன்பம் மிகுந்து இறே இருப்பது

இவர் தாம் பௌராணிக புத்ரர் ஆகையாலே ஆய்த்து ஸ்ரீ புராண ரத்ன சங்க்யையிலே அருளிச் செய்தது –
(பெரிய திருமலை நம்பி திருக்குமாரர் அன்றோ
ஆச்சார்ய ஹ்ருதயம் பௌராணிகர்-ராமானுஜர் -அபிமான புத்திரர் அன்றோ )

————————————————

அதன் பின்பு ஸ்ரீ பெரிய பட்டருடைய கிருபையாலே விசேஷித்து ஸ்ரீ நஞ்சீயர்
ஸ்ரீ ஆறாயிரத்தில் காட்டிலும் அரை வாசி தடத்து இருக்கும் படி
ஸ்ரீ திருவாய் மொழிக்கு ஸ்ரீ ஒன்பதினாயிரமாக
ஒரு வியாக்யானம் செய்து அருளின படியை அருளிச் செய்கிறார் –
(மாதவாச்சார்யர் -அத்வைதியாக -வேதாந்தியாக இருந்தவர்
பட்டர் -திரு நெடும் தாண்டக ஸாஸ்த்ரம் அறிவாரா -கேட்டு இவர் -வியந்து இருக்க –
இவரே சென்று திருத்திப் பணி கொண்ட சரித்திரம் –
மேலக்கோட்டையில் இருந்து வந்து- ஆழ்வார் ஈரச் சொற்களை இப்படி ஆர்வமுடன் சொல்வாரையும்
பெற்றோமே என்று வியந்த -ஞான பூர்த்தியே சீர் –
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ்வரு மறையின் பொருள் -என்று
உபநிஷத் தேனு -இடையன் கண்ணன் -பார்த்தோ வத்ஸ- கீதாம்ருதம் வழங்க –
அவர் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
இது தான் நஞ்சீயர் அருளிச் செய்த விசேஷ அர்த்தம் – –
மற்றவர்கள் இதுவும் ஆழ்வார் பரமாக வியாக்யானம் )

தஞ்சீரை ஞானியர்கள் தாம் புகழும் வேதாந்தி
நஞ்சீயர் தாம் பட்டர் நல்லருளால் -எஞ்சாத
ஆர்வமுடன் மாறன் மறைப் பொருளை யாய்ந்துரைத்தது
ஏர் ஒன்பதினாயிரம் –42-

பிரஞ்ஞாவதாம் நிரவதி ப்ரதிமாத்ம பூமா
பட்டாரகஸ்ய தயயா
நிகமாந்த யோகி
சடஜித் நிகமம் டீகாம்
நவ சஹஸ்ரம் –

தஞ்சீரை ஞானியர்கள் தாம் புகழும்-
அதாவது
ஸ்ரீ திருவாய் மொழிக்கு வியாக்யானம் பண்ணுகைக்கு ஈடான தம்முடைய ஞானாதி குணங்களை
ஞாதாக்கள் எல்லாரும் ஸ்துதிக்கும் படியாய் இருக்குமவர் -என்னுதல் –

அன்றிக்கே –
தம்முடைய ஜகன் மங்கள ஹேதுவாய் இருக்கிற ஆச்சார்ய அனுவர்த்த நாதிகள் ஆகிற ஆத்ம குணங்களை
ஆசார்யவான் -என்னும்படி ஆசார்ய பரதந்தரராய் இருக்கிற விசேஷத்தாலே
ஞாதாக்கள் எல்லாரும் கொண்டாடும் படியான
வைபவத்தை யுடையராய் வேதாந்திகள் என்று நிரூபகமாய் இருக்கிற ஸ்ரீ நஞ்சீயர் என்னுதல் ஆகவுமாம் —
(ஜகன் மங்கள ஹேதுவாய் இருக்கிற தனியனில் இது உண்டே
நமோ வேதாந்த வேத்யாய ஜகன் மங்கள ஹேதவே
யஸ்ய வாக் அம்ருதா சார பூரிதம் புவன த்ரயம்
பூம் தோட்டம் -பெருமாள் திருமுடி சிக்கு நாறாமல் இருக்கவா புஷ்பங்கள் -பட்டர் குழந்தைகள் துவம்சம் பண்ணவே
திருத்தொடையில் திருக்கண் வளர்ந்து அருள -கண் விழித்து மீண்டும் த்வயம் அருளப் பெற்ற சீர் )

இப்போது
வேதாந்தி நஞ்சீயர் – என்கிற விசேஷணத்தாலே
ஸ்ரீ பட்டர் நெடும் தூரம் எழுந்து அருளி
திருத்துகைக்குப் போரும் பெருமையை யுடையவர் என்று தோற்றுகிறது-

நஞ்சீயர் தாம் –
இப்படி பெரு மதிப்பரான ஸ்ரீ நஞ்சீயர் தாம் –

பட்டர் நல்லருளால் –
ஸ்ரீ பட்டருடைய நிர்ஹேதுக கிருபையால் –
இவருக்கு ஸ்ரீ பட்டர் உடைய கிருபை த்ருஷ்டமாகப் பலித்தது –
ஸ்ரீ திருவாய் மொழிக்கு வியாக்யானம் பண்ணும் படியாக பலித்தது –

பட்டர் நல்லருளால் –
நல்லருள் நம்பெருமாள் -என்னுமா போலே
அங்கு திரு வாய் மொழிக்கு பிரதி பாத்யனுடைய கிருபை –
இங்கு பிரதிபாதகருடைய கிருபை —
அவனுடைய கிருபையைக் காட்டிலும் விஞ்சி இறே இவருடைய கிருபை இருப்பது –
அது ஆயிரத்துக்கு அடியாய் இருக்கும்
இது ஒன்பதினாராயிரதுக்கு அடியாய் இருக்கும் –
இது தான் ஒன்றுக்கு ஒன்பதாய் இருக்கிறபடி –
(ஆச்சார்யர் திருவடி பலத்துக்கு ஏற்றம் -ராமானுஜன் – பரத ராஜ்ஜியம்
ஒன்பது மடங்கு பெருகி ராமன் இடம் கொடுத்தது போல் )

அருளால் எஞ்சாத ஆர்வமுடன் –
அவர் நல்லருளாலே இவர்க்கு நலம் உண்டாய்த்து
நலம் அருளினான் -என்னுமா போலே (பக்தி ரூபா பன்ன ஞானமான பக்தி )
இப்படியானவர் அருளாலே ஆய்த்து இவருக்கு அசங்குசிதமான அபி நிவேசம் யுண்டாய்த்து –
எஞ்சல் -சுருங்குதல்-
ஆர்வம்-அபி நிவேசம்-

ஆர்வமுடன் மாறன் மறைப் பொருளை யாய்ந்துரைத்தது –
ஆராத காதலை யுடையவருடைய பிரபந்ததுக்குத் தகுதியாக
(5-3- பேர் அமர் காதல் -5-4-பின் நின்ற காதல் -5-5-கழிய மிக்கதொரு காதல் பெருகி )
ஆர்வம் பெருக -என்னும் படியான அபி நிவேசத்தாலே
மாறன் பணித்த தமிழ் மறை -என்னும்படி ஸ்ரீ ஆழ்வார் யுடையதாய்
திராவிட வேத ரூபமான ஸ்ரீ திருவாய் மொழியின் அர்த்தத்தை நிரூபித்து
தத் அனுகுணமாக வியாக்யானம் செய்தது எவ்வளவு என்ன –

ஏர் ஒன்பதினாயிரம் –
என்கிறார் -ஏரார்ந்த தமிழ் மறைக்கு தகுதியாய் இருக்கை –

இது ஏரார்ந்து இருக்கை யாவது
சப்த சந்தர்ப்பத்தின் உடைய சாதுர்யத்தாலும்
அர்த்த கௌரவத்தாலும் உண்டான அழகின் மிகுதியை யுடைத்தாகை –

(ஆய்ந்து உட் புகுந்து ஆழ்ந்த அர்த்த விசேஷங்கள்
ஐ வாய் அரவணை மேல் ஆழிப் பெருமானார் மெய் வாசகம் –
பொய் பேச-இவர்கள் ஸஹ வாசம் என்று வியாக்யானம் போல்வன )

இவர் தாம் வேதாந்தி நஞ்சீயர் – ஆகையாலே
வேதாந்த சாஸ்த்ரமான ஸ்ரீ பாஷ்ய சங்க்யையாலே யாய்த்து இறே
இத்தை இப்படி அருளிச் செய்தது –

(நஞ்சீயர் கொடுத்த ஏடு காவேரியில் போக சந்தை கேட்ட ஞானத்தால்
நம்பிள்ளையே எழுதிக் காட்டி அதுவே ஒன்பதாராயிரம் )

——————————————————-

அநந்தரம் –
ஸ்ரீ நம்பிள்ளை யுடைய நியோகத்தாலே ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை கீழ் அருளிச் செய்ததில்
மும்மடங்கு என்னும் படி ஸ்ரீ இருபத்து நாலாயிரமாக
ஒரு வியாக்யானம் செய்து அருளின படியை அருளிச் செய்கிறார்-

(ஸகல திராவிடாம் நாய சார வியாக்யான காரிணம்
ஸ்ரா வணே ரோஹிணீ ஜாதம் ஸ்ரீ கிருஷ்ண குரும் ஆஸ்ரயே
ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா

சதுர் விம்ச சஹஸ்ராமி -24000 ஸ்ரீ ராமாயணம்
பாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் வியாக்யானம்
தனி ஸ்லோக ஸ்ரீ ராமாயணம் வியாக்யானம் -இவர் ஈடுபாடு அறிவோம் )

நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவி விட
பின் பெரியவாச்சான் பிள்ளை யதனால் -இன்பா
வருபத்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது
இருப்பத்து நாலாயிரம் –43-

இன்பாவருபத்தி மாறன் -இன்பா -இன்பமாக-
வரு -பகவத் கடாஷத்தாலே வருகிற
பத்தி மாறன் -பக்தி உடைய மாறன்

லப்தவா கிருபா சமுசிதம்
கலி வைரி தாஸ ஸூரே
நிதேசம்
அபய பிரத ராஜர் நாம
யத் கிலிப்த
திராவிட ஆகம விவரணம்
தத் கிரந்தம்
த்ரி குணிதம் அஷ்ட சஹஸ்ரம் சங்க்யம்

நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவி விட –
சுத்த சம்ப்ரதாய ப்ரவர்த்தகராய்
காருண்ய பூர்ணம் கலிவைரி தாசம்-என்னும் படி –

(வ்ருச்சிகே க்ருத்திகா ஜாதம் கலி வைரி குரும் பஜே
வேதாந்தி முனி பாதாப்ஜ ஆஸ்ரிதம் ஸூக்தி மஹார்ணவம்
வேதாந்த வேத்ய அம்ருத வாரி ராஸேர் வேதார்த்த சார அம்ருத பூரமக்ர்யம்
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே காருண்ய பூர்ணம் வைரி தாசம் )

கேவல கிருபா மாத்ர பிரசன்ன ஆச்சார்யராய் இருக்கிற ஸ்ரீ நம் பிள்ளை –
தம்முடைய பர பிரயோஜன ஏக ப்ரதையான-
கொள்வது இலையாகிய குளிர்ந்த வருளாலே-(ஸ்ரீ வசன பூஷண தனியன் )

(பேரு தருவிக்கும் அவள் தன் பெருமை ஆறு பெறுவான் முறை அவன்
கூறு குருவை பனுவல் கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான்
மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு எலாம் வசன பூடணம் அதில்
தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே )

ஸ்ரீ திருவாய் மொழிக்கு ஒரு வியாக்யானம் பண்ணும் என்று நியமித்து அருள
அப்படியே அந்த அனுக்ரக ஏக சீலமான அவருடைய நியோகத்தை
க்ரியதா மிதி போலவும் –
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -என்றும் அது போலவும் எண்ணி –

பின் பெரியவாச்சான் பிள்ளை –
இப்படி ஆஞ்ஞாபித்து அருளின அநந்தரம்
பரவான் அஸ்மி காகுஸ்த -என்னும் படி அங்குத்தைக்கு அத்யந்த பரதந்தரான
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை –

யதனால் –
அந்த ஆச்சார்ய நியமனத்தைப் பற்றி-
இத்தால் ஸ்வ யத்னத்தாலே செய்த
ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டரையும்
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை பட்டரையும்
வ்யாவர்த்திக்கிறது –
(ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர்-125000 படி -மஹா பாரத கணக்கில் -இன்று வரை கிடைக்க வில்லை
நம்பிள்ளை கரையானுக்கு இரையாக்கினார்
முன்னோர் –முறை தப்பாதே கேட்க வேண்டும் -இது இருந்தால் கேட்க வருபவர்கள் இல்லாமலே போகுமே
(ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை பட்டர்-36000 படி ஈடு )

அதனால் –
ராக பிராப்தமாய் இருக்கும் அதுக்கு விதி யுண்டானால்
கடுக பரிக்ரஹிக்கைக்கு உடலாய் இருக்கையாலே -(ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்திகள் இவை )
பாலோடு அமுதம் என்ற ஆயிரம் -ஆன இதுக்கும்
அப்படியே ஆச்சார்ய நியமனம் உண்டாகப் பெற்றது —

அதனால் யாய்த்து –
இன்பா வருபத்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது – இருப்பத்து நாலாயிரம் –

இன்பா வருபத்தி-
ஸ்மர்த்தவ்ய விஷய ஸ்வாரஸ்யத்தாலே ஸூ ஸூகம் என்னும் படி
நிரதிசய ஸூக ரூபமாய் இருக்கிற பக்தியை
ப்ராப்தருமாய் ஆப்தருமாய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் (ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் -ஸ்ரீ கீதை )
மேன் மேல் என பெருக்காறு போலே பெருகி வாரா நிற்கிற அந்த பக்தி பலாத் காரத்தாலே
அருளிச் செய்த திராவிட வேதமான ஸ்ரீ திருவாய்மொழியின் அர்த்தத்தை
இவர் வ்யாக்யானமாக அருளிச் செய்தது

இருபத்து நாலாயிரம் – பக்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது
காதல் குருகூர்ச் சடகோபன் என்னுமா போல இது தான்
இன்பாவருபத்தி -அடியாக வந்தது ஆகையாலே பக்தாம்ருதமாய் -ஆக அவதரித்தது இறே-
(கிருஷ்ணா த்ருஷ்ணா தத்வம் அன்றோ )

இப்படி நிரதிசய போக்யமான
மாறன் மறைப் பொருளைச் சொன்னது இருபத்து நாலாயிரம்
சதுர விம்சத் சஹஸ்ராணி ஸ்லோகானாம் உக்தவான் ருஷி -என்னுமா போலே
இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயண சங்க்யை யாய்த்து இவர் இப்படி அருளிச் செய்தது –

இன்பாவருபத்தி மாறன் மறைப் பொருளை –
ஸ்ரீ ராமாயணம் என்னும் பக்தி வெள்ளத்தின் படியாய் இறே இது இருப்பது
ஆகையாலே வியாக்யானமும் தத் துல்யமாய் இருக்கை –

ஸ்ரீ ராமாயணம் -என்றும்
ஸ்ரீ திரு வாய் மொழி என்றும்
இரண்டு மகா பிரபந்தங்கள் உண்டு என்று இறே இவற்றின் உடைய சாம்யம் இருப்பது –

(அவ்யப தேசனுக்கு அநந்தரம் இருக்கிறவன் -இரண்டு மதிள்கள் இவை என்றானே )
இருபத்தி நாலு -இலக்கண பிழை -இருபத்தி மூன்றும் இருபத்து நான்கும் இப்படி –
இருபத்தொன்று போன்றவை போல் சந்தி இல்லை இவை இரண்டுக்கும் )

—————————————————————

(ஈடு இணை அற்ற -ஈடுபடுத்தும் -கவசம் -அவதரித்து –4 5 அதிகாரிகள் தாண்டி
திருவாய் மொழிப்பிள்ளைக்கு 150-200 வருஷங்கள் பின்பே நாடு அறிய வந்தது –
முன்பு ஓராண் வழி -அந்தரங்கங்களை உபதேசித்து -நம்பிள்ளை கோஷ்ட்டியோ நம்பெருமாள் கோஷ்ட்டியோ
என்னும் படி அன்றோ இவர் சாதித்தார்
இவர் செப்ப -ஏடு படுத்தினார் -பட்டோலை செய்து அருளி -ஒவ் ஒரு நாளும் பகலில் கேட்டதை இரவில் –
முடிந்தபின்பு காட்ட -இவர் அனுமதி இல்லாமல் ஆசை உடன் -ஏடு படுத்த –
நமது பாக்யம் இத்தை அழிக்காமல் பின்பு வெளிவந்தது )

அநந்தரம்
ஸ்ரீ (நம்)பிள்ளை யுடைய திவ்ய ஸூக்தி க்ரமத்தை ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை
ஜகத் பிரசித்தமாம் படி
ஸ்ரீ திருவாய் மொழிக்கு வ்யாக்யானமாக அருளிச் செய்தது
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரம் என்கிறார்

தெள்ளியா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை
வள்ளல் வடக்குத் திரு வீதிப் பிள்ளை யிந்த
நாடறிய மாறன் மறைப் பொருளை நன்குரைத்தது
ஈடு முப்பத்தாறாயிரம் –44-

ஸூக்தி
ஸூ தா கர சஹி
கலி வைரி தாஸ நாம் குரோ
சமவலம்பி
கிருஷ்ண பாத
யாம் திராவிட உபநிஷத் விவரிதம் சகாரா
ஷட் த்ரிம்சத் சத தசம்

தெள்ளியா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை –
பிரசன்ன கம்பீரமாய்–சார அசார விவேக சதுரமாய் இருந்துள்ள
ஸ்ரீ நம்பிள்ளை யுடைய திவ்ய ஸூக்தி க்ரமத்தை –

செப்பு நெறி தன்னை -என்கையாலே –
அவர் அருளிச் செய்த மார்க்கம் ஒழிய
தமக்கு ஒரு மார்க்காந்தரம் இல்லை என்று தோற்றுகிறது –
குரு பிரமாணீ க்ருத சித்த வ்ருத்தய-என்னும் படி இறே –
இவர் ஆச்சார்யரை அடி ஒற்றி நடக்கும் க்ரமம் –

வள்ளல் வடக்குத் திரு வீதிப் பிள்ளை –
சம காலத்தில் அவர்களை ஒழிய பின்பு உள்ளாறும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி
கிரந்தஸ்தமாக எழுதி ஈடு உபகரித்த ஔதார்யத்தை யுடைய ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை —

(பின்னரும் கற்க அன்றோ இவரும் உபதேச ரத்ன மாலை -ப்ரமாணத்துக்கு இவை
பின்னானார் வணங்கும் சோதி நமக்காக அன்றோ -ப்ரமேயத்துக்கு
ஈட்டை எழுதிக் கொடுத்து அருளியதால் உதாரர் ஆனார் –
யோகி பார்த்த சாரதி ஸ்வாமிகள் -1874-சரஸ்வதி பண்டாரம் trust ஏற்படுத்தி
நம்பிள்ளை சந்நிதி அயோத்யா அம்மாஞ்சி கோயில் ஏற்படுத்தப்பட்டது )

யிந்த நாடறிய –
நாடும் நகரமும் நன்கறிய -என்னுமா போலே விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி அற
ஒரு நாடாக அறிந்து ஈடு படும் படி –
(நாகரீகம் -நகரத்தார் -நாட்டுப்புறத்தான் -வழக்குச் சொற்கள் )

மாறன் மறைப் பொருளை-
ஸ்ரீ ஆழ்வார் யுடைய வேத ரூபமான ஸ்ரீ திருவாய் மொழியின் அர்த்தத்தை
மாறன் செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை (சம்பிரதாய சந்திரிகை பிரமாணம் ) -என்னக் கடவது இறே –

நாடறிய நன்குரைத்தது –
அவர் ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போல் ஆக்கும்படி ஸ்ரீ திருவாய் மொழி ஆறாம் பத்தில் பாடினால் போல்
இவரும் நாடறிய வாய்த்து ஸ்ரீ ஈடு நன்கு உரைத்தது –
அதாவது ஸூ வ்யக்தமாம் படி அருளிச் செய்தது –

ஈடு முப்பத்தாறாயிரம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தைக் காட்டிலும் பன்னீராயிரம் அதிகமாம் படி இறே
இவர் அருளிச் செய்தது –

ஈடு -என்பது -பொருள் –
ஸ்ரீ மாறன் மறைப் பொருளை ஈடும்படி-ஈடு படும்படி – இறே இவர் அருளிச் செய்தது
(இடப்படுவது ஈடு -விடப்படுவது வீடு போல்
ஈடு -கவசம் -திருவாய் மொழிக்கு கவசம் போல் ரக்ஷகம் -அபார்த்தங்கள் வராத படி )

இது தான் ஸ்ருத பிரகாசிகையில் -என்று இறே
பட்டர் பிரான் ஜீயர் அருளிச் செய்த அந்திம உபாய நிஷ்டையில் அருளிச் செய்து அருளினார் –
(எழுத்தாணி ஓலைச்சுவடி போல் தான் அடியேனுக்கும் இதன் தொடர்பு –
மா முனிகள் வக்தா -லோக கத்வ-தாள பத்ரம் போல் -)

அந்தக் கட்டளையிலே யாய்த்து அருளிச் செய்தது –
குருப்ய அர்த்தச் ஸ்ருதச் சப்தைச் தத் பிரயுக்தைச்ச யோஜித -என்கிறபடியே
இங்கும் ஸ்ருதமான அர்த்தத்தை இறே பிரகாசிப்பித்தது-

(ஸூதர்சன ஸூரி -நடாதூர் அம்மாள் 18 தடவை ஸ்ரீ பாஷ்யம் -சொல்ல கேட்டு ஸ்ரீ பாஷ்ய விளக்கம் –36000-படி இதுவும்
13 -மங்கள ஸ்லோகங்கள் உண்டே ஸூருத பிரகாசிகைக்கு -இது அதில் ஓன்று
உயர்ந்த ஆச்சார்யர் இடம் பொருள் கேட்டேன் -அவர் அருளிச் செய்த சப்தங்கள் கொண்டு தொகுத்து –
இதில் ஆசை உள்ளாருக்காக இத்தை எழுதுகிறேன் )

நம்பிள்ளை செப்பு நெறி தன்னை – இறே இவர் எழுதி அருளினார்
எழுது ஏரார் தமிழ் வேதத் தீடு தன்னை -என்று இவர் மேலே அருளிச் செய்கையாலே
இவர்க்கு லேகக அன்வய மாத்ரமே உள்ளது –

இவர் தான் ஸ்ருத பிரகாசிகைக்கு முன்னே திரு அவதரித்தானாலும் பின்புள்ளார் இதன் படியை
திருஷ்டாந்தமாக அருளிச் செய்ய குறை இல்லை –
(பின் பட்ட நாம் கண்ணன் சொன்னதை ராமன் அனுஷ்டித்துக் காட்டினார் -என்று சொல்லுமா போல் )

————————————————————-

இனி ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் தம்முடைய அதிசயமான ஞானத்தாலே
ஸ்ரீ திருவாய்மொழியின் அர்த்தத்தை யுரைத்தது ஸ்ரீ பன்னீராயிரம் என்கிறார் –
(ப்ரஹ்ம தேசம் மன்னார் கோயில் -அம்பாசமுத்திரம் அருகில் திரு அவதாரம் –
குலசேகரப்பெருமாள் திருவரசும் இங்கே தான் )

அன்போடு அழகிய மணவாளச் சீயர்
பின்போரும் கற்றறிந்து பேசுகைக்காத்-தம் பெரிய
போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது
ஏதமில் பன்னீராயிரம் —45-

போதமுடன் -ஞானத்துடன்

பஸ்யாத் அபி ஜனான்
அநுக்ரஹ தான்
ரம்யோ பயந் தரு முனி
ஸ்ப்புட வைபவ
வ்ருத்தி யதாயி
சடஜித் நிகமஸ்ய
தேயம் கிரந்தம்
த்வி ஷட் தச சத
முதம் ஆனந்தாதி

அன்போடு அழகிய மணவாளச் சீயர் –
ஸ்ரீ திருவாய் மொழியில் தமக்கு உண்டான பிரேமம் பெருக்க வாய்த்து அருளிச் செய்தது –
பாஷ்ய பக்திர் அஸூசுரத் -என்னுமா போலே

(ஸ்ரீ ரெங்கேச ராஜ்ஜயா லப்த வியாச -சங்க்யம் ஸூ தர்சனம் பாஷ்ய பக்திர் அஸூசுரத்
வேத வியாச பட்டர் புத்திரர் -வாசா விஜயந புத்திரர் – நாவால் வென்றான்
அவர் புத்திரர் -ஸூத பிரகாசர்
ஸூத பிரகாசம் எழுத தூண்டிற்று -ஆழமான அர்த்தம் –ஸ்ரீ பாஷ்ய பக்தி -ஓன்று மற்ற ஒன்றுக்கு உதவுமே
இதனால் வியாச பட்டம் பெற்றார் இவர் )

அன்றிக்கே –
அன்போடு அழகிய மணவாளச் சீயர் –
என்று -சேதனர் பக்கல் வாத்சல்யத்தாலே அருளிச் செய்தார் -என்னவுமாம்
நெறி யுள்ளி யுரைத்த கணக்கறு நலத்தனன்-( 1-3-5-) -என்னுமா போலே –

பின்போரும் கற்றறிந்து பேசுகைக்காத்-
பின்பு உள்ளாறும் இத்தைக் கொண்டே சாதிக்க வேண்டி இருக்கும் இறே –
அதுக்கு அனுகுணமாக பின்பு உள்ளாறும் இத்தை அப்யசித்து-
அதில் தாத்பர்யங்களை நன்றாக அறிந்து
பர (பத) பிரதி பாதனம் பண்ண வல்லராம் படியாக –
இத்தை ஒழிய நாலு வியாக்யானம் யுன்டானாலும்
சப்தார்த்த நிர்ணயத்துக்கு இத்தைக் கொண்டே சாதிக்க வேண்டும் இறே –

(ஸ்ரீ பதி சேதனஸ்யாக்ய ஹேதுத் வேன அநிஷ்ட ஹானி இஷ்ட பிராப்தி அர்த்த பஞ்சகம்
ஸ்ரீ பதி -முதல் இரண்டு பத்து பர ஸ்வரூபம்
சேதனஸ்யாக்ய ஸமாஸ்ரிதா -அடுத்த இரண்டு பத்து ஸ்வ ஸ்வரூபம்
ஹேதுத் வேன -அடுத்த இரண்டு பத்து-உபாய ஸ்வரூபம்
அநிஷ்ட ஹானி -அடுத்த இரண்டு பத்து-விரோதி ஸ்வரூபம்
இஷ்ட பிராப்தி-அடுத்த இரண்டு பத்து-பிராப்தி ஸ்வரூபம் -இவர் அருளிச் செய்து பர ப்ரதிபாதனம் -)

தம் பெரிய போதமுடன் –
திருவாய் மொழியை தேர்ந்து உரைக்க வல்ல தம்முடைய மகத்தான புத்தியாலே –
(மின்னின் நிலை –இறை உன்னுமின் -மற்ற வியாக்யானங்களில் இறைவன் -இவர் சிறிய பொழுது என்றும் )

மாறன் மறையின் பொருள் –
ஸ்ரீ ஆழ்வார் யுடைய திருப் பவளத்திலே அவதரிக்கையில் யுண்டான அதிசயத்தை யுடைத்தாய் –
திராவிட வேதமான ஸ்ரீ திரு வாய்மொழியின் அர்த்தத்தை

உரைத்தது –
உரையாக-பிரதிபிம்ப வ்யாக்யானமாக அருளிச் செய்தது –

ஏதமில் பன்னீராயிரம் –
ஏதமில் ஆயிரமான இதுக்கு ஏதமில் பன்னீராயிரம் ஆய்த்தது –
ஏதம் இல்லாமை -குற்றம் இல்லாமை
அதாவது
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளக் கருத்தை பின் செல்லுகை-

(தன்னுடைய கற்பனை என்று குற்றம் சொல்ல வேண்டாத படி -குறை சொல்லி தவிர்த்ததால்
பங்காக எழுந்து இருக்கா -ஜுரம் இல்லையே -இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றாக இருந்தாலும்
கொஞ்சம் குறை உண்டே இதுக்கு
இவரும் திரு விருத்த வியாக்யானம் சாதித்து உள்ளார்
பாசுர அகத்துறை கொஞ்சம் மாற்றி அருளிச் செய்துள்ளார் )

இது தான் ஸ்ரீ பிள்ளான் உடைய வ்யாக்யானத்தில் த்வி குணமாய்
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில் அர்த்தமாய்
இப்படி அடி ஒத்து இருக்க இறே அருளிச் செய்தது –
ஆகையால் அதி சங்க்ரஹமும் அதி விஸ்தரமும் இல்லை என்றபடி
ஏதத் சங்க்யைக்கு அனுகுணமான விலஷண பிரமாணம் உண்டாகில்
தத் சங்க்யையாக அருளிச் செய்தார் என்று நிர்வஹிக்கக் கடவது –

(ஸ்ரீ மத் பாகவதம் ஸ்கந்தம் கணக்கு -12- என்று பெரிய குரு பரம்பரை ப்ரபாவத்தில் காட்டி அருளுகிறார் )

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

உபதேச ரத்னமாலை –பாசுரம் -34/35/36/37/38- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

July 24, 2014

(34-39-பூர்வாச்சார்யர்கள் ஏற்றம்
39-49- வியாக்கியானங்கள் விவரணம்
50-53- நம்பிள்ளைக்கு ஏற்பட்ட லோகாச்சார்யார் திரு நாமமும் அது பிள்ளை லோகாச்சார்யருக்கு வந்தமை
53-59 -ஏழும் ஸ்ரீ வைஷ்ணவ பூஷண பிரபந்த மஹாத்மம்
60-70–ஸ்ரீ வைஷ்ணவ பூஷண சாரம்
71-73- -ராமானுஜ அனுக்ரஹம் உய்வதற்கு ஒரே வழி )

அடியிலே
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி (3)-என்றும்
அந் தமிழால் நற் கலைகள் ஆய்ந்து உரைத்த ஆழ்வார்கள் (5)-என்றும் இத்யாதிகளிலே
உபக்ரமித்து அருளின படியே
உத்தரோத்தரம் அவர்களுடைய அவதரண க்ரமங்களை பரக்க அருளிச் செய்தாராய் நின்றார் கீழ் –

இனி
தாழ்வாதும் இல் குரவர் தாம் வாழி ஏழ் பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி (3)-என்றும்
அருளிச் செய்த அம்சத்தை விஸ்தரேண பிரதிபாதித்து அருளுகிறார் மேல் எல்லாம் –
(இனி மேல் எல்லாமே ஆச்சார்ய வைபவமும் வியாக்கியானங்கள் வைபவமும் தானே )

இதில்
சகல ஜகத் உஜ்ஜீவன அர்த்தமாக அருளிச் செயல்களுக்கு ஆசார்யர்களால் அருளிச் செய்யப் பட்ட
வியாக்யான விசேஷங்கள் எல்லாம் தர்சிப்பித்து அருளுகிறோம் -என்கிறார் –
(பிரமாணங்களும் ப்ரமேயங்களும் தானே பிரமாதாவான அவனைத் தூக்கி நிறுத்திக் காட்டும் )

ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம்
தாழ்வாதும் இன்றி யவை தாம் வளர்த்தோர் -ஏழ்பாரும்
உய்ய வவர் செய் வியாக்கியைகள் உள்ளது எல்லாம்
வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து —34-

(வையம் அறிய-ந வாஸோ தரித்ர -வாக்கால் தாராளமாக விரும்பலாமே )
அவர்கள் செய் வியாக்கியைகள்
அவர் செய்த வியாக்கியைகள்-பாட பேதம்

பக்தான்
பராங்குச முகான் அபி
தத் பிரபந்தான்
தத் வைபவம் உபாலாலயதாம் குருனாம்
உஜ்ஜீவநாய
ஜெகதாம்
உதீதா ப்ரசீதாதா
டீகா கதயாமி

ஆழ்வார்கள் ஏற்றம் –
அவர்களுக்கு ஏற்றம் ஆவது -ஸ்வ யத்ன சாத்ய ஜ்ஞானரான ருஷ்யாதிகளைப் போல் அன்றிக்கே
அவனுடைய ஆகஸ்மிக கிருபையாலே
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற -மகாத்ம்யத்தை யுடையவர்களாய்
அத்தாலே
பிராப்ய சித்தியை பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இருந்து
லோக யாத்ரையிலும் கண் வைத்து இருக்கை அன்றிக்கே –
எல்லாம் கண்ணன் -(திருவாய் -6-7-1-)-என்றும்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி (6-7-3) -என்றும் –
உண்டறியாள் உறக்கம் பேணாள் (திரு நெடும் தாண்டகம் )-என்றும்
பந்தோடு கழல் மருவாள்-( பெரிய -5-5-9 ) என்றும் இத்யாதிகளிலே சொல்லுகிற படியே
ததேக தாரகாதிகளை யுடையராய்
அவனை விச்லேஷிக்கில் அரை ஷணமும் தரியாத தன்மையை யுடையராய்
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -(திருவாய் 9-3-7)-என்றும் –
வானுலகம் தெளிந்தே என்று எய்துவன் -என்றும் பேசும் படியான மநோ ரதத்தை யுடையராய் –
அத்தைப் பெறுகைக்கு தடுத்தும் வளைத்தும் பெற வேண்டும்படியான பரம பக்தியை யுடையராய் இருக்கை –
இது இறே அல்லாதாரைக் காட்டில் இவர்களுக்கு ஏற்றம்-

அருளிச் செயல் ஏற்றம் –
அதாவது
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் -(கண்ணி நுண்-8- )-என்னும்படி-
அந்த பகவத் பிரசாதம் அடியாக உண்டான திவ்ய சஷூர் மூலமாக–
அவாவில் அந்தாதி -என்னும்படி–(இவருடைய மைத்ரேயர் தானே அவா -தூண்ட பாடினார் )
பக்தி பலாத்காரத்தாலே திரு வவதரித்ததாய்

அது தானே
1-பகவத் ஏக பரமாய்–(எச்சில் வாய் இல்லாமல் )
2-விலஷணமுமாய் —(தூது மடல் பிரணய ரோஷம் அநு காரம் போல்வன இங்கே தானே )
2-போக்யமுமாய்–(பாலோடு அமுது -தொண்டர்க்கு அமுது )
4-ஸூசகமாய்–
5-ஜ்ஞாதவ்ய சகலார்த்த பிரதி பாதகமுமாய்-(ஒவ் ஒரு பாசுரமும் அர்த்த பஞ்சகம் காட்டி அருளும் )
6-ஈஸ்வர ப்ரீதி ஹேதுவுமாய்–(தென்னா தென்னா என்னப் பண்ணுமே-கேட்டு ஆரார் வானவரே )
7-சம்சார விச்சேதகமுமாய்–(அருளுடை அவன் தாள் அணைவிக்கும் முடித்தே -முடி சூட்டி விலங்கு அறுப்பது போல் )
8-சீக்ர பல பிரதமுமாய் இருக்கை –
(அஷ்ட ப்ரபாவங்கள் )
இது இறே அல்லாதவற்றில் காட்டில் இதுக்கு யுண்டான ஏற்றம் –(மாறன் சொல் வேராகவே விளையும் வீடு )

இனி
தாழ்வாதும் இன்றி யாவை தாம் வளர்க்கை-யாவது –
இப்படி விலஷணரான ஆழ்வார்கள் யுடையவும்-
விலஷண பிரமாணங்களான அருளிச் செயல்களின் யுடையவும் –
வைபவத்தை அவத்ய லேசமும் இன்றிக்கே இருப்பதொரு படித்தானத்தை வர்ப்பித்துக் கொண்டு போருகை –
அதாவது

வக்த்ரு வைலஷ்ண்யத்திலே யாதல்
பிரபந்த வைலஷண்யத்திலே யாதல் –
பிரதி பாத்ய வைலஷண்யத்திலே யாதல் –
உள்ளது ஒன்றையும் சங்கோசியாமல் ஓன்று பத்தாக்கி வர்ப்பித்துக் கொண்டு
ததேக பரராய் போருகை யாய்த்து –
அவர்கள்
தாழ்வாதுமில் குரவர்கள் -ஆகையாலே யாய்த்து இவற்றையும் தாழ்வாதும் இன்றிக்கே வளர்த்தார்கள் –
வளர்த்தார்கள் -என்று
ஏதத் வர்த்தகர் ஆனவர்கள் யுடைய பாஹூள்யம் இருக்கும் படி –

இனி அவர்கள் வளர்த்தாராய் இருக்கிறவர்கள் தாம்
ஸ்வ ஸ்வ வியாக்யான முகேன வாய்த்து இவற்றை வர்ப்பித்துக் கொண்டு போந்தது –
ஆகையாலே
ஏழ்பாரும் உய்ய வவர்கள் செய் வியாக்கியைகள் உள்ளது எல்லாம் வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து —
என்று அத்தை அருளிச் செய்கிறார் –

இத்தாலே ஏழ் பாரும் உய்கை யாவது –
இவற்றால் உய்யலாம் என்றும் –
உலகு உய்ய உம்பர்களும் கேட்டு உய்ய -(இயல் சாத்து )-என்றும் சொல்லுகிறபடியே
சர்வ லோகத்தில் உள்ளவர்களுக்கும் செவிக்கு இனிய செஞ்சொல்லைக் கேட்டு -(10-6-)
உஜ்ஜீவிக்கும் படி இறே அவற்றுக்கு மூல பிரமாணங்களான அருளிச் செயல் தான் இருப்பது –

ஊழி தொறும் ஊழி தொறும் உலகம் உய்ய
உம்பர்களும் கேட்டு உய்ய அன்பினாலே
வாழி எனும் பூதம் பேய் பொய்கை மாறன்
மழிசையர் கோன் பட்டர் பிரான் மங்கை வேந்தன்
கோழியர் கோன் தொண்டர் துகள் பாணன் கோதை
குல முனிவன் கூறிய நூல் ஓதி வீதி
வாழி என வரும் திரளை வாழ்த்துவர் தம்
மலரடி என் சென்னிக்கு மலர்ந்த பூவே –ஸ்ரீ பின்பு அழகராம் பெருமாள் ஜீயர் அருளிச் செய்த தனியன்

ஊழி தொறும் ஊழி தொறும் உலகம் உய்ய
கல்பம் தோறும் கல்பம் தோறும் ஸ்ருஷ்டமான லோகத்தில் உள்ளார் உஜ்ஜீவிக்க
படைத்தான் கவி -என்ற போதே இதுவும் யதா பூர்வ கல்பனம் ஆமோ என்று
ஆச்சார்ய ஹிருதயத்திலே அருளிச் செய்தார் இறே

அப்படியே அத்தை அடி ஒத்தி-
க்யாதி லாபாதி நிரபேஷத்வாத் யாகார யுக்தராய் இருக்கிற இவர்களும்
அதின் சீரிய அர்த்தங்களை எல்லாம் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி பரம பிரயோஜன ஏக பரதையாலே
ஏழ் பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி செய்ய மறை தன்னுடனே சேர்ந்து -என்று
அடியிலே அருளிச் செய்த படியே
ஆப்திக்கு உடலாக
வேத தாத்பர்யங்களையும் அநு விதானம் பண்ணிக் கொண்டு
அர்த்த பிரதிபாதனம் பண்ணுகையாலே-முக்ய தமமான பிரமாணமுமாய்-
அத்தாலே சர்வ லோக பரிக்ரஹத்தையும் யுடைத்தாய்
சர்வருக்கும் உஜ்ஜீவன ஹேதுமாயும் இருக்கும் –

அவர்கள் செய் வியாக்கியைகள் உள்ளது எல்லாம் – என்று
அவர்கள் தான் அநேகராய் இருக்கையாலே
வ்யாக்கியைகள் என்றதும் அப்படியேயாய் இருக்கிறது-
அது எல்லாம் மந்த மதிகளுக்கு அவிஸ்வாச ஹேதுவாய் இறே இருப்பது –
அவர்கள் செய்த வ்யாக்கியைகள் இன்னவைகள் என்கிறதை
இவர் தாமே பிள்ளான் -என்று தொடங்கி மேலே பரக்க அருளிச் செய்கிறார் –

உள்ளது எல்லாம் வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து –
அதாவது
அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்த -( 4-8-6 )–என்னுமா போலே
இவர்கள் துர்க்கதி கண்டு ஓன்று அல்லா ஒன்றிலே யாகிலும் ருசி விஸ்வாசங்கள் பிறக்கக் கூடும் என்று
அகிலார்த்தங்களையும் அகில சேதனரும் அறிந்து
உஜ்ஜீவிக்கும் படி சொல்லக் கடவோம் என்று சங்கல்பித்து அருளிச் செய்கிறார்
இவருடைய அமோக சங்கல்பம் இருக்கும் படி இது வாய்த்து —

அன்றிக்கே –
இன்னார் இன்னபடி இந்த பிரபந்தத்துக்கு வியாக்யானம் செய்து அருளினார் என்று
சம்ப்ராதாயங்கள் தான் சங்குசிதம் ஆகாமல் அவற்றை எல்லாம் அறிந்தவர்களை ஆதரித்து உஜ்ஜீவிக்கும் படி
அருளிச் செய்கிறார் ஆக்கவுமாம் –

பகர்வோம் வாய்ந்து –
என்று -அவர்கள் அருளிச் செய்த வியாக்யான விசேஷங்களை
ஆபாத ப்ரதீதியாக ( மேல் எழுந்த அளவு ) அன்றிக்கே
அதில் அர்த்தத்தில் பாவ பந்தம் அடியாக பொருத்தம் உடையாராய்த்து இவர் செய்து அருளுவது –

பண்டுவலவாரியரும் -என்று தொடங்கி பிறருக்கு காதலுடன் கற்பித்து -என்று இறே இவற்றில்
இவர்க்கு உண்டான ஆதார அதிசயம் இருப்பது-

பண்டு பல வாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடனே செய்தருளும் பல்கலைகள் தம்மைக்
கண்டது எல்லாம் எழுதி யவை கற்று இருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்
புண்டரிகை கேள்வன் உறை பொன்னுலகு தன்னில்
போக நினைவோன்றும் இன்றிப் பொருந்தி யிங்கே யிருந்தேன்
எண்டிசையும் ஏத்தும் எதிராசன் அருளாலே
எழில் விசும்பை அன்றி இப்போது என் மனம் எண்ணாதே—-28-

தன் நிஷ்டனாய் இருந்தும்
இன் நிஷ்டை இல்லாத அந்யரும்-தன் நிஷ்டராய் உஜ்ஜீவிக்கும்படி அவர்களுக்கு ஆதாரத்தோடு அப்யசித்தும்
கால ஷேபம் பண்ணினேன்-
ஸ்ரீ தாமரையாள் கேள்வன் -என்னும்படி ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன் நித்ய வாசம் பண்ணுகிற
ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைகுண்டத்திலே போக வேணும் என்கிற ஸ்மரண லேசமும் இன்றிக்கே
இவ்விபூதியிலே சக்தனாய் வசித்தேன் –

————————————————–

கீழ்
ஆழ்வார்கள் ஏற்றம்-அருளிச் செயல் ஏற்றம்-தாழ்வாதும் இன்றி யவை தாம் வளர்த்தோர் –
என்று அருளிச் செய்து –
அவர்களுக்கும்-அவர்கள் திவ்ய பிரபந்தகங்களுக்கும் அதிசய அவஹாராக வேண்டி இருக்க
அத்தைச் செய்யாதே
தங்கள் அல்ப புத்தியாலே அவமதி பண்ணுமவர்கள் அத பதிப்பார்கள் ஆகையால்
அவர்கள் பரித்யாஜ்யம் என்னுமத்தை தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் –வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ யவர் பால்
சென்று அணுகக் கூசித் திரி -35-

பக்தேஷு
வகுளா பராண
தது தது பிரபந்த நிகதே
க்ருத பக்தி மாந்த்யாத்
கோரே பதந்தி நரகம்
அத ஏவ
தாம்
சேதஸ
ந கதாசனா

ஆழ்வார்களையும் –
நிமக்னரை உயர்த்தத் தாழ இழிந்து
உயிர் அளிப்பான் என் நின்ற யோநியுமாய்ப் பிறந்தாய்-(திரு விருத்தம் -1) -என்கிறபடியே
சர்வ யோநிகளிலும் அவதரித்தவர்கள் –
யோகினஸ் சர்வ யோ நிஷூ -என்னக் கடவது இறே –
இங்கு யோனி என்று ப்ரஹ்மணாதி ஜாதிகளை எல்லா வற்றையும் நினைக்கிறது –
குலம் தாங்கு சாதிகள் நாலிலும்-(திருவாய் -3-7-9) -என்று இறே அருளிச் செய்தது –

(வம்சத்தை உத்தரிக்க கீழ்க் குலம்-யாதவ குலம் – புக்க கோபாலனைப் போலேயும்
பூமியை உத்தரிக்கக் கீழ்ப்புக்க வராஹனைப் போலேயும்
இவரும் நிமக்னரை உயர்த்த தாழ இழிந்தார்-ஆச்சார்ய ஹிருதயம்–84-)

(பெரும் புறக் கடலும் சுருதி சாகரமும் அலைந்து ஆழ்ந்து ஓடும் இடங்களில்
அயோக்யருக்கு சமைத்த மடுவும் சாய் கரகமும் மாண மேய சரமம்-ஆச்சார்ய ஹிருதயம்–24-)

அருளிச் செயல்களையும் –
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய திவ்ய சங்கல்பத்தாலே சாய் கரகம் போலே சர்வ உபஜீவ்யமாம் படி
சர்வ ஸூலபமான திராவிட பாஷையிலே
பண்ணிய தமிழ் மாலை -(2-7-13)-என்னும் படி-ஸ்ரீ ஆழ்வார்கள் முகேன திரு வவதரித்ததாய்
சர்வ ஸூலபனாய் -அர்ச்சா ரூபத்தோடு அகில திவ்ய தேசங்களிலும்
அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குணங்களோடு-அகில சேதனர்க்கும் ஆஸ்ரயணீயனாய்
எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை பிரதிபாதிக்கக் கடவதாய்
செந்தமிழ் வேதம் -என்னலாம் படியான
திராவிட வேத–தத் அங்க–உபாங்களான திவ்ய பிரபந்தங்கள் -என்கை-

தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் –வீழ்வார்கள் –
இவற்றை தாழ்வாக நினைக்கை யாவது –
ஏவம் வித மகாத்ம்ய அனபிஞ்ஞாராய்-ஜன்ம மாத்ரத்தையும்–பாஷா மாத்ரத்தையும் விசாரித்து
நிகர்ஷ்ய புத்யா எண்ணுகின்ற நீசர் -என்னும்படி -சத்ய சண்டாளரான-தாங்கள்
மானஸைர் அந்த்ய ஜாதி தாம் -என்னக் கடவது இறே
(மானஸ அபசாரம் -சண்டாளர் வாக்கால் அபசாரம் பக்ஷிகள் ஆவார் )

(இன்ப மாரியில்-நம்மாழ்வாரின் ஆராய்ச்சி-இன்பப்பாக்களில்–திருவாய் மொழியில் பாஷா ஆராய்ச்சி –ஆச்சார்ய ஹிருதயம்-75-
வீட்டு இன்பத்தில்-அர்ச்சாவதாரத்தில் திரவிய நிரூபண சமம்-அருள் மாரி -திருமங்கை ஆழ்வார் )
(நான்கு பிரகரணங்களுக்கும் உயிர் இது -ஸ்ரீ வசன பூஷணம்-194-199 -பாகவத அபசாரம் -ஜென்ம நிரூபணம்
மாத்ரு யோனி பரீஷையோடு ஒக்கும்-அத்தை த்ருடீகரிக்கவே இந்த சூர்ணிகை )

த்ரவ்ய பாஷா நிரூபணம் சமம் இன்ப மாரியில் ஆராய்ச்சியும் -என்று இறே துல்ய தோஷமாக அருளிச் செய்தது
எண்ணிக் கொண்டு-பிறர் அறிய வாய் விட்டு சொல்லுகை அன்றிக்கே
ஸ்வகதமாக மனசாலே சிந்தித்தார்கள் ஆகில்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த –என்கிறபடியே (உளம் தொட்டு ஒண் மார்வத்து அகலம் பிளந்தான் )
அது தான் மகா அனர்த்தமாய் பர்யவசிக்கும் படி யாய் இறே இருப்பது –
நினைப்பவர்கள் தாம் -அனுதாப ஹேதுவான மனசாலே-அனுதாப சூன்யமான அபராதத்தை
ஆர்ஜித்துக் கொள்ளா நிற்கும்-சாஹசிகளாய் இருக்கிற தாங்கள் —
(மானஸா அபசாரம் -மானஸா அனுதாபமே பிராயச்சித்தம் ஆகுமே –
பிள்ளைப் பிள்ளை ஆழ்வான் -கூரத்தாழ்வான் -விருத்தாந்தம் அறிவோம் )

நரகில் வீழ்வார்கள் என்று –
அவர்கள்-ந ஷமாமிக்கு லஷ்யம் ஆகையாலே-
ஷிபாமிக்கு விஷயமாய்
ரௌரவாதி நரகங்களிலே பதிவர்கள் என்று புத்தி பண்ணி –

நெஞ்சே எப்பொழுதும் –
ஆழ்வார்கள் இடங்களிலும்-அவர்கள் திவ்ய ஸூக்திகளிடங்களிலும்
அதிசயமான ப்ராவன்யத்தை உடைத்தான மனசே சர்வ காலத்திலும் நீ அவர் பால் –

சென்று அணுகக் கூசித் திரி –
நமக்கு சேஷிகள் ஆனவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கிற நீ
உஜ்ஜீவனத்துக்கு வழி பார்க்கிறவர்கள் விஷயத்திலே அபசாரத்தாலே
தங்களுக்கு அனர்த்தத்தை ஆர்ஜித்துக் கொள்ளும் அவர்கள் இடங்களிலே சென்று கிட்ட பயத்தோடு வர்த்தி –

ஸ்வரூப நாசகரோடு சஹவாசம் பண்ணுகை அனர்த்தம் ஆகையாலே அவர்களை
உபசத்தி பண்ணிக் கூசித் திரி –

ஸ்வரூப வர்த்தகரோடு சேர்ந்து போந்த நீ இவர்கள் படியை அறிந்து
தத் சஹவாசம் துஸ் சஹம் என்று தூரே வர்த்தித்துப் போர்-

(இஷ்ட சித்தி ஜைன கிரந்தம் -கூரத்தாழ்வான் கேட்டு -நுழைய கூரத்தாழ்வார்
மூன்று நாள் புழக்கடையில் இருக்க வைத்து நீராடி பின்பே உள்ளே நுழைய விட்டார்
பெரியவாச்சான் பிள்ளை திருமாலை வியாக்யானம் )

அவர்களை அறியும் படி எங்கனே என்னில் –
ததாபி விபரீதாதே புத்திர் ஆசார வர்ஜிதா -என்கிறபடியே
அவர்கள் துரனுஷ்டானத்தாலே அவர்கள் துர் புத்தியை அனுசந்தித்து
அவர்களைக் கண்டால் -சர்ப்பாக்நிகளைக் கண்டால் போலே வெருவி வர்த்தித்துப் போரு-
அவைகள் தேக நாசகங்கள் –
இவர்கள் ஸ்வரூப நாசகர் இறே-

இத்தால் –
ஆநுகூல்யஸ்ய சங்கல்ப்பத்தோ பாதி –
ப்ராதி கூல்யஸ்ய வர்ஜனமும் வேணும் -என்றது ஆய்த்து

வ்யாக்கியைகள் உள்ளது எல்லாம் வையம் அறியப் பகர்வோம் -என்று இறே அருளிச் செய்தது –

——————————————————-

பெருமாள் கருணை மழை -ஆழ்வார் மேகம் -உய்யக்கொண்டார் மணக்கால் நம்பி இரண்டு அருவிகள் –
ஆளவந்தார் காட்டாறு -ஐந்து ஆச்சார்யர்கள் கிளை நதி -ராமானுஜர் ஏரி -74 சிம்ஹாசனாதிபதிகள் மதகுகள்

கீழ்ப் பாட்டில் விலஷண பிரமாண பிரமாத்ரு வைபவ அநபிஞ்ஞர் பரித்யாஜ்யர்
என்று அருளிச் செய்த இத்தாலே
தத் வைபவ அபிஞ்ஞரே ஆதரணீயர் என்றது ஆய்த்து –
அப்படி ஆதரணீயராய் இருக்குமவர்கள் தான் ஆர் என்ன –
வேறு உண்டோ -ஸ்ரீ மன் நாதாதிகளான நம் ஆச்சார்யர்களை ஒழிய -என்கிறார் –
கீழ்ப் பாட்டில்-35- அவர்களும் இப்பாட்டில் இவர்களும் நிந்திப்பாரையும் வந்திப்பாரையும் போல்வார் –

(நம் கண்ணன் அல்லது இல்லை கண்ணே -ஆழ்வார்
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி -இவர்களையும் ரஷித்த அவனைத் தவிர ரஷிப்பார் யார் -ஆளவந்தார்
அன்பால் ஆட் செய்பவரை ஆதரித்தும் அன்பிலா மூடரை நிந்தித்தும் மொழிந்து அருளும் மாறன் -திருவாய் மொழி நூற்று அந்தாதி -25-)

(அமுநா தபந அதிசாயி பூம் நா யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி விபுதா நாம் ஹ்ருதயங்கமா விபாதி-ஸ்ரீ யதிராஜ சப்ததி-15-
தேஜோவானான ஸூ ரியனிலும்-விஞ்சிய தேஜஸை யுடைய நம் ஸ்வாமி நாயக்க ரத்னமாக அமைந்துள்ளதால்
மிகவும் பெருமை யுற்ற குரு பரம்பரையான ரத்ன ஹாரமானது மிகவும் பெருமை யுடையதாய்
தத்வ வித்துக்களான வித்வான்களுக்கு சிந்தனைக்கு இனியதாக விளங்குகிறது –)

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்
அருளிச் செயலை அறிவார் ஆர் -அருள் பெற்ற
நாத முனி முதலா நம் தேசிகரை அல்லால்
பேதை மனமே யுண்டோ பேசு —36-

மனம் பேசாது -சிந்திக்கும் -ஞானம் இல்லையே -அதன் தலையில் ஏறிட்டு அருளிச் செய்கிறார் –

பிராஜ்ஜா அக்ர தர கேசர
பக்த ப்ரபாவம் அபி
திவ்ய நிபந்தநாநி
நாதா தயா -யதி பரம் ந பாவேயு ஆர்யேய
ஹேவா விதந்தி
ஹ்ருதய தவம் இதம் ப்ரவீதா

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர் –
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவை எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே
தெருளுற்ற ஆழ்வார்கள் -என்பதே நிரூபகமாய் இருக்கிறபடி –

ஜ்ஞானானந்த மயஸ்த்வ ஆத்மா சேஷோஹி பரமாத்மன -என்னுமா போலே –
(தேகத்தை விட ஞான ஆனந்தகளால் உயர்ந்தவனையும் சேஷ பூதனாயும் உள்ளவனே ஜீவாத்மா
பகவத் சேஷத்வம் ரசம் உணர்ந்த ஆத்ம ஸ்வரூப வித் ஞானி -அடியேன் உள்ளான் -)
அவன் பிரசாதத்தாலே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பிலனவும் பழுதேயாம் உணர்வைப் பெற்று-(திருவாய் 8-8-3-)
உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து (பெரிய திருமொழி -1-1-1-)-என்றும்-
மெய்மையை மிக உணர்ந்து -(திருமாலை –38 )
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்றும்
உணர்ந்த மெய்ஞ் ஞானியர் (ராமானுஜ 60-)என்றும் –
ஜ்ஞாநினஸ் தத்வ தர்சன (ஸ்ரீ கீதை -4-) -என்றும் -சொல்லுகிறபடியே-தத்வ யாதாம்ய தர்சிகளாய்-

(அறிந்து அறிந்து தேறி தேறி –
மெய்ம்மையை மிக உணர்ந்து –
மெய் -என்கிறது ஆத்மாவை – மெய் -எனபது ஆத்மாவைக் காட்டுமோ -என்னில் –
சத்யஞ்சா ந்ர்தஞ்ச சத்ய மவபவத் -என்கிற சுருதி சாயையால் அருளிச் செய்கிறார் –
சத்ய சப்தம் அசத்திய வ்யாவர்த்தியை சொல்லுகிறது அன்று
ஆத்ம ஸ்வரூபத்தின் நித்யதையைச் சொல்லுகிறது –
மெய்ம்மை -என்று முழுச் சொல்லாய் -பிரத்யக் விஷயத்தைச் சொல்லுகிறது –
கைம்மை பொய்ம்மை -என்னுமா போலே
ஆக-மெய்ம்மை -என்று -மெய்யான தன்மை -என்றபடி –
மிக உணர்ந்து –
தேகமே ஆத்மா என்று இருக்கும் லோகாயதிகன் அளவன்றிக்கே –
தேகாதிரிக்தமாய் சுயமாய் இருக்கிஉம் ஆத்மா என்னும் மீமாம்சகன் அளவன்றிக்கே
ஜ்ஞானம் ஆகந்துகம் -என்னும் வைசெஷிகன் அளவன்றிக்கே –
ஸுவயம் பிரகாசனாய்-நித்யனாய்-ஜ்ஞான குணகனாய்-அணு வாய்-ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷமாய்
அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாக உணருகை –
அதாவது-ஆத்மாவை உள்ளபடி உணருகை –)

அத்தால் –
ஜ்ஞாநீத்வாத் மைவமேமதம் -(ஸ்ரீ கீதை 7-18)-என்றும்
அறிவார் உயிரானாய்-(6-9-8-) -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு தாரகராய் ஜ்ஞாநினாம் அக்ரேசராய் இருக்குமவர்கள் –

அல்லாதாரடைய அர்த்த காம அபிபூதராய் உன்மத்தரைப் போலே –
இருள் தரும் மா ஞாலத்திலே
மருள் கொண்டு ஓடித் திரியா நிற்க
இவர்கள்
மருளில் வண் சடகோபன் -என்னும்படி
அஞ்ஞான கந்த ரஹிதராய் –
அந்த ஜ்ஞான பலமாக ஒளிக் கொண்ட மோஷம் தேடி
வீடு பெற்றவர்களாய் இருப்பார்கள் ஆய்த்து –
ஜ்ஞாதவ்ய பஞ்சக ஞானம் விஞ்சி இறே இவர்கள் விஷயத்தில் இருப்பது –

தெருள் உற்று இருக்கை யாவது –
அதிலே ஊன்றி இருக்கை -என்றபடி –
இப்படி –
நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணி இருக்குமவர்கள் –

சீர்மை யாவது –
ஆத்ம ஞானம் கை வந்து இருக்குமவர்களில் ( ரிஷிகளில் )காட்டில்
பர்வத பரமாணுவோட்டை வாசியை யுடையவருமாய்
விலஷணமான ஜன்ம வ்ருத்த ஞானங்களை யுடையராய் இருக்கிற வைபவம் ஆய்த்து –
அதாவது
ஸ்ரீ ஆழ்வார்கள் ஏற்றம் -(34)-என்ற இடத்தில் சொன்ன பிரபாவம்
(ஆழ்வார்கள் ஏற்றம் –
அவர்களுக்கு ஏற்றம் ஆவது -ஸ்வ யத்ன சாத்ய ஜ்ஞானரான ருஷ்யாதிகளைப் போல் அன்றிக்கே
அவனுடைய ஆகஸ்மிக கிருபையாலே
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற -மகாத்ம்யத்தை யுடையவர்களாய்
அத்தாலே
பிராப்ய சித்தியை பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இருந்து
லோக யாத்ரையிலும் கண் வைத்து இருக்கை அன்றிக்கே –
எல்லாம் கண்ணன் -(திருவாய் -6-7-1-)-என்றும்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி (6-7-3) -என்றும் –
உண்டறியாள் உறக்கம் பேணாள் (திரு நெடும் தாண்டகம் )-என்றும்
பந்தோடு கழல் மருவாள்-( பெரிய -5-5-9 ) என்றும் இத்யாதிகளிலே சொல்லுகிற படியே
ததேக தாரகாதிகளை யுடையராய்
அவனை விச்லேஷிக்கில் அரை ஷணமும் தரியாத தன்மையை யுடையராய்
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -(திருவாய் 9-3-7)-என்றும் –
வானுலகம் தெளிந்தே என்று எய்துவன் -என்றும் பேசும் படியான மநோ ரதத்தை யுடையராய் –
அத்தைப் பெறுகைக்கு தடுத்தும் வளைத்தும் பெற வேண்டும்படியான பரம பக்தியை யுடையராய் இருக்கை –
இது இறே அல்லாதாரைக் காட்டில் இவர்களுக்கு ஏற்றம்-)

சீர்மை -பெருமை –
திரு மந்த்ரத்தின் உடைய சீரமைக்கு போரும்படி -என்கிற இடத்துக்கு
கௌரவம் -என்று இறே அருளிச் செய்தது –
இதுக்கு மூலம் என்று தொடங்கி
பட்ட போது எழு போது அறியாது இருந்த பிரபாவம் (93)-என்று இறே ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது –

இப்படி அவதரித்த இவர் தாம் யார் என்னும் ஆ காங்க்ஷையிலே
பேர் அளவு உடையாரும் – இவரை இன்னார் என்று அளவிடாமை –
அதிசங்கை பண்ணும் படியை அருளிச் செய்கிறார் மேல் –
அத்ரி ஜமதக்னி பங்கிதிரத வஸு நந்த ஸூனுவானுடைய யுக வர்ணக்ரம அவதாரமோ ?
வ்யாசாதிவத் ஆவேசமோ ? மூதுவர் கரை கண்டோர் சீரியரில் ஒருவரோ ?
முன்னம் நோற்ற அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ ? என்று சங்கிப்பார்கள் –92-
இப்படி இவரை ஞானிகள் ஆனவர்கள் சங்கிக்கைக்கு ஹேது என்னும் ஆ காங்ஷையிலே
இதுக்கு மூலம் இவருடைய பிரபாவம் என்கிறார் மேல் –
இதுக்கு மூலம்
1-யான் நீ என்று மறுதலித்து-
புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய் அவிவின்றி யான் பெரியன்
நீ பெரிய என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு -பெரிய திருவந்தாதி -75
2-வானத்து மண் மிசை மாறும் நிகரும் இன்றி
இனி யாவர் நிகர் அகல் வானத்தே–திருவாய்-4-5 8– -என்றும்
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடைய மால் வண்ணனை மலைக்கு நா வுடையேற்கு மாறுளதோ
விம் மண்ணின் மிசையே –திருவாய் -6-4-9–என்றும்
3-நிலையிடம் தெரியாதே
4-தெய்வத்தின் ஒரு வகைக்கு ஒப்பாக
5-இனத்தலைவன் அம்தாமத்து அன்பு செய்ய
6-சேர்ந்தமைக்கு அடையாளம் உளவாகவே
7-உகந்து உகந்து திமிர் கொண்டால் ஒத்து
8-நாட்டியல் ஒழிந்து
9-சடரை ஒட்டி
10-மதாவலிப்தர்க்கு அங்குசம் இட்டு-பராங்குசர் அன்றோ –
11-நடாவிய கூற்றமாய்
12-தீயன மருங்கு வாராமல்
13-கலியுகம் நீங்கி கிருதயுகம் பற்றி
14-பட்டு எழு போது அறியாது இருந்த பிரபாவம் இதுக்கு மூலம் –
பட்ட போது எழு போது அறியாள் விரை மட்டலர் தண் துழாய் என்னும் –திருவாய் –2-4-9-என்று
பகவத் விஷயத்திலே போக்யதா அனுசந்தானத்தாலே –
நந்தந்த்யுதித ஆதித்யே நந்தந்த்யச்தமிதே ரவவ் -அயோத்யா -105-24–என்று ஆதித்ய உதயத்திலே வந்தவாறே –
த்ரவ்யார்ஜன காலம் வந்தது என்று உகப்பர்கள்-
அவன் அஸ்தமித்தவாறே அபிமத விஷயங்களோடு ரமிக்கைக்கு காலம் வந்தது என்று உகப்பர்கள் என்றும் –
பிராதர் மூத்ர புரீஷாப்யாம் மத்யாஹ்னே ஷூத் பிபாச்ய சாயம் காமேன பாத்யந்தே ஜந்தவோ நிசி
நித்ரயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-62- மக்கள் காலையில் மூத்திரம் மலம் இவற்றாலும் – நடுப்பகலில் பசி தாகத்தாலும் –
மாலையில் காமத்தாலும் இரவில் தூக்கத்தாலும் துன்புறுத்தப் படுகின்றார்கள் )என்றும் –சொல்லுகிற படி
நாட்டாருக்கு புறம்பே
கால ஷேபத்துக்கு உடலாய் செல்லுகிற திவாராத்ரா விபாகமும் அறியாதே அகால்ய கால்யமான தேசத்தில் போலே
பகவத் அனுபவ ஏக கரராய் இருந்த பிரபாவம் –
இதுக்கு மூலம்–இப்படி இருந்த பிரபாவம்-என்று வாக்ய சம்பந்தம் –
இத்தால் கீழ் சொன்ன சங்கைக்கு காரணம் இன்னது என்று எல்லாரும் அறியும் படி அருளிச் செய்தார் ஆய்த்து —)

விண்ணுளாரிலும் சீரியர்-( பெரிய திருவந்தாதி ) -என்றும்
பேராளன் பேரோதும் பெரியோர் -(பெரிய திருமொழி -7-7-4_)–என்றும் –
மிக்க சீர்த் தொண்டர் -(பெரிய திருமொழி -11-1-9-)-என்றும் –
சொல்லுகிற படி இறே இவர்கள் சீர்மை இருப்பது –

(பராங்குச தாசர் -மதுர கவி ஆழ்வார் சிஷ்யர் -823- நாத முனிகள் திரு அவதாரம் –
5121-கலி -பிறந்து -முதல் 321-வருஷங்கள் -இருந்து -பின்பு மறைந்து –
கலியன் திரு அத்யயன உத்சவம் ஏற்பாடு பண்ணி அருளினார் அன்றோ –
பராங்குச தாசர்-3800 திரு நக்ஷத்ரம் இருந்து இவருக்கு உபதேசம் )

அன்றிக்கே –
தெருள் உற்ற ஆழ்வார்கள் சீர்மை —
என்று தெருள் உற்று இருக்கை தானே இவர்களுக்கு சீர்மை -என்னவுமாம் –
இப்படியாக இவர்கள் பிரபாவத்தை தாம் அருளிச் செய்யப் புகுகிறவர்கள் ஒழிய
அறிவார் ஆர் -என்கிறார் –
ஸ்ரீ ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர் -என்று முதலடியிலே
பிரகிருதி ஆத்மா விவேகம் பண்ண மாட்டாதவர்களோ அவர்கள்
ஜ்ஞான வைபவம் அறிந்தவர்கள் அளவும் சென்று அவர்கள் சீர்மையை அறியப் புகுகிறார்கள் –

அறிவார் ஆர் –
தேகாத்மா அபிமானிகள் தொடக்கமான பிரதி கூலர் ஆனாரோ
அனுகூலராய் இருக்கிற ஆழ்வார்கள்-வைபவத்தை அறிந்து போருவர்
ஆகையாலே -அறிவார் ஆர் -என்று அருமை தோற்ற அருளிச் செய்கிறார்-

அதுக்கு மேலே
அவர்களால் பிரணீதங்களாய் பிரபத்யர்த்த பிரதிபாதகங்களான
அருளிச் செயலை அறிவார் ஆர் –
அவர்கள் திவ்ய ஸூக்திகளான திவ்ய ( அப்ராக்ருத )பிரபந்தங்களை
பிரதிபாத்ய அர்த்த கௌரவத்தை அறிந்து பிரதிபத்தி பண்ணி அப்யசிப்பது ஆர் –
இவ்விடத்திலும் அருளிச் செயலின் சீர்மையை அறிவார் ஆர்-என்று கூட்டி நிர்வஹிப்பது –

கீழிலும் ஸ்ரீ ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயலின் ஏற்றம் ( 34 )-என்று அன்றோ அருளிச் செய்தது –
தெருள் கொள்ளச் சொன்ன ஓராயிரம்-(2-10-11 ) தொடக்க மானவற்றின் வாசி அறிந்து ஆதரிக்கும் போது
ஸ்ரீ ஆழ்வார்கள் அருள் பெற்றவர்கள் ஆக வேண்டாவோ –
தங்கள் ஸ்வாதந்த்ர்யாதிகளுக்கு அனுகுணமான ஹர்ஷ (ஆர்ஷ -ரிஷி பாட பேதம் )
வசநாதிகளை ஆதரித்துப் போருமவர்கள் -(சாத்ய -பக்தி மார்க்கம் சொல்லும் வேதாந்திகள் )

பாலோடு அமுதம் என்ற வாயிரம் -என்றும்
தொண்டர்க்கு அமுது -என்றும் –
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன்மாலை-(பெரிய திருமொழி 1-10-10-) -என்றும் சொல்லுகிறபடியே
நிரதிசய போக்யமான திவ்ய பிரபந்தங்களை
பத்தராகக் கூடும் பயிலுமின் -( 3-6-10 )
உரிய தொண்டராக்கும்-( 6-9-11 ) -என்று
இத்தை ஸ்வரூப லாபத்துக்கு உறுப்பாக அறிந்து ஆதரித்து போருவார்களோ –

அவற்றில் ஸ்ரீ ஆழ்வார்கள் பொருளையும் அறிந்து உரைக்குமவர் ஆய்த்து இவர் தாம் –
இனி இவ் வைபவ அபிஞ்ஞர் தான் ஆர் -என்கிறார் –
அருள் பெற்ற நாத முனி முதலா நம் தேசிகரை அல்லால் –
அவர்கள் ஆகிறார் –
(அருள் மாறன் -அருள் பெற்ற மாறன் -அருளை அருளிய மாறன் )
அருள் மாறன் அருளைப் பெற்ற ஸ்ரீ நாதமுனி தொடக்கமாக நடந்து செல்லுகிற ஆச்சார்ய பதஸ்தராய்
அருளிச் செயலை ஆதரித்து ப்ரவர்த்திப்பித்துக் கொண்டு போருமவர்கள் தான்
நாதம் பங்கஜ நேத்ர -என்று தொடங்கி
தேவாதிபான் -என்னும் அளவும் தர்சிப்பிக்கப் பட்ட தேசிகர்கள் –
ஸ்ரீ தேவப் பெருமாள் கைக் கொண்டு அருளும் ஸ்ரீ திருமலை ஆழ்வார் இறே நம்முடைய தேசிகர் –
இவர்களை -நம் தேசிகர் -என்கிறது –
இவர்களே நாதர் என்று இருக்கும் தம்முடைய பிரதி பத்தி விசேஷத்தாலே –

(நாதம் -பங்கஜ நேத்ர ராமர் –உய்யக்கொண்டார் -மணக்கால் நம்பி -யமுனா வாத்ஸாவ்ய -ஆளவந்தார்
மாலாதாரர் -திரு மாலை ஆண்டான் யோகீந்த்ர-இவரது அபிமான புத்ரன் – திருக் குருகைப்பிரான் பிள்ளான் –
இன்பம் மிகு ஆறாயிரம் அருளியவர் – குரு கேச சந்த்ர ஜலதீம்
கோவிந்தர் -கூராதிபன் -பட்டாரியம் -நிகமாந்த யோகி -ஜெகதாசார்யர் -க்ருஷுப தவாவ் கிருஷ்ண பாதர் இரு கண்ணர்
வந்தே மாதவ -ஈயுண்ணி மாதவாசார்யர் -பத்ம நாபர் -கோலேஸர் நாலூர் பிள்ளை -தேவராஜன் -நாலூர் ஆச்சான் பிள்ளை
தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் பதங்கள் -காஞ்சி தேவப்பெருமாள் அனுக்ரஹம்
தேவ ராஜரை சொன்னது ஆகவுமாம் -)

அருள் பெற்ற நாதமுனி –
ஆழ்வார் அருளை யாதல் –
அதுக்கடியான மன்னாருடைய அருளை யாதல் – பெற்றவர் -என்னவுமாம் –
இப்படி பகவத் பாகவதர்கள் உடைய கிருபைக்கு இலக்கானவர்கள் இறே
ஆழ்வார்களின் சீர்மையையும்
அருளிச் செயலின் சீர்மையையும் அறிந்து போருவர் –
அல்லாதார்களுக்கு இத்தை அறியத் தரமோ –
(சொட்டை குலத்தில் வந்தவர் உண்டோ -என்றதே அருள் பெற்றதும் பிரமாணம்
சம்ப்ரதாயம் காட்டும் மன்னார் -காட்டு மன்னார் )

பேதை மனமே யுண்டோ பேசு –
முக்தமான மனசே –
இப்படி விதக்தரான இவர்களை ஒழிய யுண்டோ -சொல்லிக் காண்-
இவ்வர்த்தம் இல்லையோ -என்றபடி
ஆகையால் திரு உள்ளம் அறிய ஒருவரும் இல்லை -என்கிறார்

இத்தால்
ஸ்வ யத்னத்தாலே அறிய ஒண்ணாதது-அயத்னத்தாலே அறியலாய் இருக்கும்
அருள் பெற்றவர்களுக்கு -என்றது ஆய்த்து –

—————————————————-

(உபகார ஆச்சார்யர் நம்மைக் கொண்டு போய் -உத்தார ஆச்சார்யர் ஸ்வாமி திருவடிகளில் சேர்த்து அருளி
அநு வ்ருத்தி ப்ரசன்னாச்சார்யார் -க்ருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யார் ஸ்வாமி தொடக்கம்
முன்னோர் ஓராண் வழியாய் யுபதேசித்தார்-ஷட் கரண -ஆறாம் காது -வேறே ஒருவர் கேட்க்காமல்
ஒருவருக்கே உபதேசித்தார் -மந்த்ர கௌரவத்தால் –
பின் ஏரார் எதிராசர் இன்னருளால் -பாருலகில் ஆசை யுடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் என்று
பேசி வரம்பறுத்தார் -புதிதாக வரம்பு -ஆசை ஒன்றே போதும் என்று அதிகாரி விசேஷம்
நின் கண் வேட்க்கை எழுவிப்பேன்
இசைவித்து உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான் -ஆசை வருவது எளிது இல்லையே )

இனி ஸ்ரீ மன் நாத முனிகள் தொடக்கமானாராலே அறிந்து ஆதரிக்கப் படுமதான
அருளிச் செயலில் தாத்பர்யமான பிரபத்யர்த்தமானது ஓராண் வழியாக நடந்து செல்ல
அத்தை ஸ்ரீ எம்பெருமானார்
தம்முடைய நிரவதிக கிருபையாலே பேசி வரம்பு அறுத்து வழி யாக்கி நடத்தி அருளின படியை
அருளிச் செய்கிறார் –

(அவனாலே அவனை அடைவது ஒன்றே அருளிச் செயல் தாத்பர்யம் —
கண்ணே உன்னைக் காண -ப்ராப்யமும் ப்ராபகமும் அவனே -பேற்றுக்கு உகப்பானும் அவனே )

ஓராண் வழியாய் யுபதேசித்தார் முன்னோர்
ஏரார் எதிராசர் இன்னருளால் -பாருலகில்
ஆசை யுடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் என்று
பேசி வரம்பறுத்தார் பின் –37-

ஏகைக பூருஷ
ஸூ ரஷித வம்சம் ரீத்யா
குப்தா பிரபத்தி பதவி
த்வயம் -சப்தமும் அர்த்தமும் மறைத்து ஓராண் வழியாகவே பூர்வர்கள் உபதேசம்
திரு மந்த்ரம் சரம ஸ்லோகங்களும் சப்தம் வியக்தம் அர்த்தம் அவ்யக்தம்
பூரணை -முன்னோர்
பராயா தயாளு
ஜெகதாம் ஹிதாயா
ஸீமாம் இதவ்

ஓராண் வழியாய் யுபதேசித்தார் –
பிரபத்யர்த்தம் -என்ன —
திருவாய் மொழியினுடைய அர்த்தம் -என்ன
பேதம் இல்லாமலே திருவாய் மொழியை ப்ரவர்த்திப்பாராக
பிரபத்யர்த்தத்தை முந்துற அருளிச் செய்த படி சொல்லுகிறது –
த்வயார்த்தம் தீர்க்க சரணா கதி என்றது சங்க்ரஹத்திலே -என்று இறே அருளிச் செய்தது –
த்வயத்தையும் திருவாய் மொழியையும் யாவன் ஒருவன் உபதேசிக்கிறான்
அவனுக்கு இறே ஆச்சார்ய பூர்த்தி உள்ளது என்று அருளிச் செய்வார்கள் –

(வியாக்கியைகள் உள்ளது எல்லாம் வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து–34-சொல்லி
நடுவில் ராமானுஜர் வைபவமாக 36–ப்ராசங்கிகமாக–இடைப்பெறுவரல் -அப்ரசக்த பிரசக்தமாய்–
திருவாய் மொழி பிரபத்தி சாஸ்திரம் தானே -திருவாய் மொழி வளர்த்தமை -சொல்லுவதற்கு முன்பு
பிரபத்தி அர்த்தம் சர்வருக்கு -வெளியிட்டு அருளினமையை அருளிச் செய்ய வேண்டுமே -)

ஸ்ரீ பெரிய முதலியாருக்கு -ச மந்தர ராஜ த்வய மாஹ யஸ்ய -என்று (ரஹஸ்ய )
த்வய பூர்வகமாய் இறே ஆழ்வார் திருவாய்மொழி முதலான திவ்ய பிரபந்தங்களை பிரசாதித்து அருளினதும் –
(மந்த்ர ராஜம் -திருமந்திரம் -மந்த்ர ரத்னம் -த்வயம் )

(பார்ப்பான் -தூர த்ருஷ்டிகள் -த்ரஷ்டாவே ரிஷி
சிரேஷ்டர் செட்டியார்
முதலியார்
நாயகர் -நாயக்க ஸமூஹம் )

அப்படியே உபயத்தையும் ( ரஹஸ்ய த்ரயத்தையும் -திருவாய் மொழியையும் ) வர்த்திப்பித்து
அருளுமவர் இறே ஸ்ரீ எம்பெருமானார் –
ஆகையால் இத்தை முந்துற ப்ரவர்ப்பித்து அருளினார்
த்வய அதிகாரிகளான பின்பு இறே திருவாய் மொழியை அதிகரித்துப் போருவது –

ஓராண் வழியாய் –
ஓர் ஒரு மகா புருஷர்களைக் குறித்து உபதேசித்து இறே
முன்புள்ளார் இந்த மார்க்கத்தை நடத்திப் போந்தது –

முன்னோர் –
அவர்கள் தான் ஸ்ரீ எம்பெருமானாருக்கு அவ்வருகு உண்டான
அருள் பெற்ற ஸ்ரீ நாதமுனி முதலான ஆச்சார்யர்கள் –
அவர்கள் தாம் அர்த்த கௌரவத்தை பார்த்து இறே மறைத்து உபதேசித்து ரஷித்து வந்தது –
நம்பி தாமும் சூழரவு கொண்டு இறே இவருக்கு இவ்வர்த்தத்தை உபதேசித்து அருளினார் –

ஏரார் எதிராசர் இன்னருளால் –
அப்படி அன்றிக்கே எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானார்
அர்த்தத்தின் சீர்மையைப் பாராதே இவர்கள் அனர்த்தத்தையே பார்த்து
அனுஹ்ரக ஏக சீலமான அருளாலே யாய்த்து இப்படி வெளி இட்டது —
(ஸ்ரீ நரசிம்மர் திவ்ய மங்கள விக்ரஹங்கள்–74- வீராணம் ஏரி மதகுகள் -74- சிம்ஹாசனாதிபதிகள் –74- )

ஏரார் எதிராசர் –
அதாவது
ரூபமே வாஸ்யை தன்மஹி மாநம் வ்யாசஷ்டே -என்றும்
ஏராரும் செய்ய வடிவு -(ஆர்த்தி பிரபந்தம் )-என்றும் –
சொல்லும் படியான தம்முடைய திவ்ய மங்கள விக்ரஹத்தில்
பிரகாசிக்கிற சௌந்தர்ய பூர்த்தியாலே சர்வரையும் வசீகரிக்கும் படியான ஸ்ரீ எம்பெருமானார்
சம்சாரிகள் துர்கதி கண்டு பொறுக்க மாட்டாதே –
தம்முடைய நிர்ஹேதுக கிருபையாலே யாய்த்து இப்படி உபதேசித்து அருளிற்று –
இவர் தம் ரூப குணத்தாலும்
ஆத்ம குணத்தாலும் ஆய்த்து ஜகத்தை திருத்தி ரஷித்துப் போந்தது –
(உபதேசத்தால் மட்டும் அல்லாமல் ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும்
ஆய்த்து ஜகத்தை திருத்தி ரஷித்துப் போந்தது – )

இது தான் ஆர் அதிகாரிகளாக என்னில் –
பாருலகில் ஆசை யுடையோர்க்கு எல்லாம் –
இந்த பூமியிலே இருந்ததே குடியாக-ஆசாலேசம் யுடையவர்களுக்கு எல்லாம் –

ஆசை யுடையோர் –
நிதி யுடையோர் -என்னுமா போலே-பத்துடை அடியவர்க்கு -என்னக் கடவது இறே
(பத்துடை அடியவர்க்கு எளியவன் -அத்வேஷ மாத்திரமே பற்றாசாக தன்னை எளிமைப்படுத்தி
தன்னை காட்டி அருளுபவர் அன்றோ )

பாருலகில்
ஆசை யுடையோர் தான் அரிதாய் இறே இருப்பது –
ஆகையால்-அவர்கள் யுடைய ஜன்ம வ்ருத்த ஞானங்களால் யுண்டான உத்கர்ஷ அபகர்ஷங்கள் பாராதே
ஆபிமுக்ய ஸூசகமான ருசியையே பார்த்து
நான் உங்களுக்கு சொன்ன பரமார்த்தத்தை நீங்கள் அவர்களுக்குச் சொல்லுங்கோள்-

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர்க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -( 9-1-7 )
என்னும் அவருடைய அடி பணிந்த ஆகாரத்தாலே –
பார் யுலகில் ஆசை யுடையோர்க்கு எல்லாம் -என்று அருளிச் செய்கிறது –

ஆரியர்காள்-
கார்யம் கருணம் ஆர்யேண ந கச்சின் ந ஆபராத்யதி -என்கிறபடியே
நீங்களும் கேவல கிருபையாலே உபதேசித்துப் போருங்கோள்-
தாம் இன்னருளாலே இறே பேசி வரம்பு அறுக்கிறது –
அப்படியே அவர்களையும் உபதேசிக்கும் படி அருளிச் செய்கிறார் –
(கருணை பொழியும் -செந்தண்மை பூண்டு ஒழுகும் அவர்களே ஆர்யன் )

ஆரியர்காள் –
ஆரியர்காள் என்று அப்போது தம்முடைய சந்நிதியிலே ஸ்ரீ தெற்கு ஆழ்வான் திரு முன்பே
தம் உபதேசம் பெற்று இருக்குமவர்கள் எல்லாரையும் பார்த்து
நம்மைப் போலே நீங்களும் ஆசா லேசா மாத்ரத்தையே பற்றாசாகக் கொண்டு
சர்வர்க்கும் உபதேசியுங்கோள் என்று தடை விடுகிறார் –
(தடை இடுகிறார் அல்லர் -முன்பு இருந்த வரம்பை அறுத்து தடை விடுகிறார் )

அன்றிக்கே –
ஆரியர்காள் -என்று
ஆச்சார்யா பதஸ்தராகத் தான் அபிமானித்து அருளின
ஸ்ரீ ஆழ்வான் முதலான எழுபத்து நாலு ஸ்ரீ முதலிகளை ஆகவுமாம் –

இத்தால்
ஒரு பெரு மதிப்பனான ஆச்சார்யன் உடனே (ஆச்சாரயர் இடம் ) கேட்டார் அடைய உபதேஷ்டாக்களாகவும்
ஸ்ரத்தை யுடையவர்கள் உபதேஸ்யராகவும்-கடவர்கள் என்னும் அர்த்தம் சொல்லிற்று –

ஆரியர்காள் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார் பின் –
முன்புள்ளார் இத்தை-இதந்தே நாதபஸ்காய–(ஸ்ரீ கீதை -18-67 )இத்யாதிப் படியே
(தபஸ் இல்லாதவர் -பக்தி இல்லாதவருக்கு-ஆச்சார்யருக்கு கைங்கர்யம் செய்யாதவருக்கு சொல்லாமல் )
ஒருவருக்கும் உபதேசியாதே உங்கள் அளவுகளிலே அனுசந்தித்துப் போருங்கோள் என்று மறைத்துப் போந்தார்கள் –
பின்பு இவர் பர சம்ருத்த ஏக பரதையாலே இத்தை பிரசித்தமாம் படி சொல்லுங்கோள் என்று
முக்த கண்டமாக அருளிச் செய்கிறார் –

முன்னோர் வரம்பு அறுத்தார் பின் –
முன்பு ஸ்ரீ முதலிகளாலே கட்டின வரம்பைப் பெருமாள் அடைத்து உடைத்தால் போலே
இவரும் அவர்களாலே கட்டின மரியாதையையும் அமர்யாதமாகப் பண்ணி அருளினார் –
மர்யாதா ஸ்தாபகர் இறே -இப்படிச் செய்தது –
ராமா நுஜஸ்ய கருணா வரணாலச்ய -என்னும்படியாக கிருபைக் கடல் கரை வழியப் பெருகின படி –
அதாவது
ஓரடிப்பாடாய் இருக்கிற வழிகளை பெரு வழி யாக்கி நடத்தும் ராஜாக்களைப் போலே –
(முதலிகள் -ஆச்சார்யர்கள்
வானர முதலிகள் -சேது அணையை உடைத்து தனுஷ்கோடி -புண்ய க்ஷேத்ரமாகவே இருக்கவே –
பெரிய நீரைப்படைத்து-கடைந்து -அடைந்து உடைத்து -நம்மாழ்வார் -)

ஓராண் வழியாய் —
நடந்த அடிப்பாட்டை
ஸ்ரீ எதி ராஜரான இவரும் தம்முடைய இன்னருளாலே
ஆசை யுடையோர்க்கு எல்லாம் கூறும் என்று
பெரு வழி யாக்கித் தடை யறும்படி நடத்தி அருளினார் –

ஸ்ரீ மான் ராஜ பதஞ் ச கார தயயா ராமாநுஜார்யோ முனி -என்னக் கடவது இறே
தாம் -ராமாநுஜப் பெரு வழி வெட்டி – என்னும் படி நடத்தினால் போலே ஆய்த்து இதுவும்-
இவர் தாம் ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயி (தாடீ பஞ்சகம் )-இறே –

(ஆசை உடைமை வெளிக்காட்டவே பஞ்ச சம்ஸ்காரம் -ரக்ஷை ஆக்கவுமாம் –
இதுவே ஆசையை முற்றவும் வைக்கும் )

(யோகி பார்த்த சாரதி ஐயங்கார் -சரஸ்வதி பண்டாரம் –1908-குண்டு சென்னையில் ஜெர்மனி போட எடுத்து சென்று காத்து பின்பு
-oryental library கொடுத்து ரக்ஷணம் -இயற்பா வியாக்யானம் -அதில் ஓன்று mav ஸ்வாமி –
1323-மாலிக்காபூர் -60 யானை மேல் கொள்ளை அடித்தவற்றைக் கொண்டு போனதாக சரித்திரம் –
118 -திரு நக்ஷத்ரம் பிள்ளை லோகாச்சார்யார் -நம்பெருமாள் ரக்ஷணம்- 1323–1371 நம்பெருமாள் பிரதிஷ்டை -48 வருஷம்
1370-மா முனிகள் அவதாரம் -1410 –40 திரு நக்ஷத்ரம் ஆனபின்பே திருவரங்கம் எழுந்து அருளி –
அத்தனையும் சேகரித்து மா முனிகள் இடம் கொடுத்து அருளி சேம வைப்பாக திருவாய் மொழிப்பிள்ளை
இன்னருளால் கொடுத்து அருளினார் –எனவே வியாக்கியானங்கள் தெரிவித்து அருள )

(மு -ராகவ ஐயங்கார் -சேதுபதி சமஸ்தானம் இருந்தவர் –முத்து ஸ்வாமி ஐயங்கார்-திருக்குமாரர் –
திருமங்கை ஆழ்வாருக்கு பிற்பட்டாராக நம்மாழ்வார் -அவயவி அவயவ பாவம் அறியாமல்
குரு பரம்பரை முகமாக கால ஷேபம் கேட்க வில்லையே –
காஞ்சி ஸ்வாமி கண்டனம் -ஆழ்வார் கால ஆராய்ச்சி
சரித்திர ஆராய்ச்சி –150-200-வருஷ இடைவெளி -திருமங்கை ஆழ்வாருக்கும் நாதமுனி காலத்துக்கும் -(930 )
பல்லவ ராஜா காலம் வைத்து -சொல்வார் –
நம் சம்ப்ரதாயம் -இடைப்பட்ட காலம் -பல ஆயிரம் காலம் )

(ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் –18 தடவை தண்டமும் பவித்ரமும் நீர் மட்டுமே வாரும் –
த்ரி தண்டம் மேல் உள்ள வஸ்திரம் பவித்ரம் -இதுக்காகவே தண்டமே –
கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் -கூட வர -இவர்களே தண்டம் பவித்ரம் -நம்பியே வரம்பு அறுக்கும் படி
விமானம் தெற்குப் பக்கம் நரசிம்ஹர் பிரதிஷ்டை -தெற்கு ஆழ்வான் -அஷ்டாங்க விமானம் –
நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் -12-2–நம்பி வைபவம் எம்பெருமானார் எழுந்து அருளிய பின்பே அறிந்தார்கள் –
நமஸ்காரம் பண்ணி பண்ணி போனதால் அறிந்தார்கள் –எடுத்து கை நீட்டும் கைங்கர்ய பரர்கள் –
ஆசை உடன் கேட்டவர்களுக்கு -ஏகாந்தமாக -கோபுரம் -தெற்கு ஆழ்வான் சந்நிதி –
அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்று இவர் சூழ் அரவு கொண்டு உபதேசித்த இன்னருள் –
யார் எம்பெருமான் என்று இருந்தேன் அறிந்தேன் நீரே எம்பெருமானார் –

கேட்ட அம்சத்தில் திருப்தி உண்டாயிற்றா
ஆம் என்றால் இதுக்கு மேல் இல்லை என்பதாகும் -தேவரீர் சாதிக்க -என்று
அடுத்த தடவை நீர் ஒருவர் மட்டும் வர வேண்டும் –
இன்னம் ஒரு பரம ரஹஸ்யம் உபதேசிப்பேன்
திருவடி மேல் ஆணை வாங்கி -கேட்க -கூரத்தாழ்வானுக்கு உபதேசிக்க அனுமதி
ஒரு வருஷம் சிஸ்ரூஷை கொண்டே உபதேசிக்கலாம்
ஏகம் -மாம் -என் ஒருவனையே -பற்றும் பற்றும் உபாயம் இல்லை –
திருமுடி துறை ஏகாந்தமாக நம்பி -திருப்பணி செய்வான் உறங்க -இதுவே ஏகாந்த ஸ்தலம் என்று அவனும் உறங்க –
ரஹஸ்ய பங்கம் -சொல்லாமல் -தவிர்ந்து பிற்றை நாள் -ஞானப்பிரான் அல்லால் இல்லை -பாசுர வியாக்யானத்தில் –
பற்றும் பற்றும் உபாயம் இல்லை -பரம சேதனன் உகந்து அவனே அருளினால் தானே பலம் கிட்டும் –

ஒரு மாச காலம் உபவாசம் ஆச்சார்யர் திரு மாளிகையில் இருந்தால் அது ஒரு வருஷம் கைங்கர்யம் செய்வதும் சமம் –
அவ்வளவு பரம ரஹஸ்யம்
பின்பு முதலியாண்டான் ஆறு மாத காலம் நம்பி திரு மாளிகையில் கைங்கர்யம் செய்து –
நீர் முக்குறும்பு அறுத்தீர் ஆகில் எம்பெருமானார் சாதிப்பார் –பின்பு உபதேசித்தார் –
பரந்த படியில் -உள்ள பிள்ளை லோகாச்சார்யார் ஸ்ரீ ஸூ க்திகளை -முமுஷுப்படி சரம ஸ்லோக பிரகரணம் –
மா முனிகள் இவ்வர்த்தம் கேட்க அன்றோ 128 தடவை எழுந்து அருளிற்று –இதுவே பரம பிரமாணம் நமக்கு –
திருப்பதி கிருஷ்ணமாச்சார்யார் பொருத்தி -சரம ஸ்லோக அர்த்தம் கேட்கத்தான் போனார் –
கூட இருவர் போனதால் -உபதேசிப்பேன் என்று சொன்னதால் -சரம ஸ்லோகம் அர்த்தம் தர திரு உள்ளம் இல்லாமல்
திருமந்திர அர்த்தம் முதலில் உபதேசம் –

(ஜைனர்கள் இந்த விஷ்ணு லோக மார்க்க தாயீ –
தொண்டனூரில் -12000-ஜைனர்கள் –
அவர்களும் சில விஷயங்கள் சம்ப்ரதாயம் படி –
ஒரு கல் வெட்டு -ஹரிஹர புக்கர் விஜய நகர சாம்ராஜ்யம் ஸ்தாபனம் -1530-
ஆபத்து வர -ஸ்ரீ வைஷ்ணவர்களை ரஷிக்க அரசன் -ஸ்ரவணா பககளா -சீர் திருத்தத்துக்கு உதவினார்களாம்-ஸ்ரீ வைஷ்ணவர்கள்
இந்த கல் வீட்டின் முகப்பில் இந்த தாடி பஞ்சக ஸ்லோகம் இருக்கிறது -எம்பெருமானாரை கொண்டாடும் விதமாக –
முத்தியோ சிலரது சொத்தாக இருக்க இத்தமிழ் நாடு ஈன்றது அன்றோ எதிராசரை –
பாரதிதாசனும் சொல்லும் படி அன்றோ இவர் வைபவம் )

(ஸம்ப்ரதாய அருளிச் செயல்கள் ரஹஸ்ய த்ரய அர்த்தங்கள் -உபதேசமாக மட்டும் இல்லாமல் –
க்ரந்தமாக தாமும் எழுதி -பிறரையும் எழுத வைத்து
பின்பு உள்ளாருக்கும் பயன்பட வேண்டி -க்ரந்தஸ்தம் ஆக்கி -அந்த வரம்பு அறுத்தமைக்கும் இந்த பாசுரம் –
எம்பெருமானார் தர்சனம் -பல முகமாகவே -வல்லப- நிம்பார்க்கர்- ஸ்வாமி நாராயணர்- சைதன்யர் –
ராமானந்தர்- (வான மா மலை ஜீயர் சம்பந்திகள் இவர்கள் –அயோத்யா ) -சங்கர தேவர் –
வைஷ்ணவ போஜனம் அவைஷ்ணவ போஜனம் வடக்கே
இங்கு சைவம் அசைவம் -veg -non veg
காஷ்மீர் முழுவதுமாகவே வைஷ்ணவ சம்பிரதாயமாகவே முன்பு இருந்ததாம் )

————————————————-

1-பிரபத்தி மார்க்கத்தை ப்ரவர்த்திப்பித்து அருளியும்
2-தத் ரஷண அர்த்தமாக ஸ்ரீ பாஷ்யாதிகளைப் பண்ணி அருளியும்
3-அத்தாலே நிரபாயமாக இந்த தர்சனத்தை ஸ்ரீ எம்பெருமானார் வர்த்திப்பித்தமையும்
4-சர்வரும் அறியும்படி ஸ்ரீ எம்பெருமான் அவருடைய தர்சனம் என்று அபிதானமாக்கி ஸ்தாபித்த படியையும்
அருளிச் செய்கிறார்

(அவருடைய -நம்பெருமாள் தம்முடைய தர்சனம் என்று திரு உள்ளம் பற்றி -எம்பெருமானார் தர்சனம் –
சர்வத்தையும் அவருக்கு அருளியதால் தன்னையும் அவருக்கு அருளினதும் உண்டே
ஸ்வா தந்த்ர ருசி வாசனை விட்டாலே தானே ப்ரபன்னன் ஆவான் -இல்லை என்றால் உபாசகன் -பக்தி மார்க்கம் -அதுவே அதிகம் –
செய்ய செய்ய கஷ்டங்கள் உணர்ந்து பிரபத்தி மார்க்கம் -ஆகவே ஸ்ரீ பாஷ்யம் இதுக்கு உதவுமே –
பிரபத்தி சர்வாதிகாரமாக இருந்தாலும் இந்த விச்வாஸம் வருவது துர்லபம் –
கர்ம யோகம் -ஞான யோகம் விளக்க இந்திரியங்கள் அடைக்கியவர்களுக்கே ஞான யோகம் -போல் இங்கும் –
ஸ்ரீ ராமாயணம் கதை சொல்லி மேலே உயர்த்தி அபய பிரதானம் சொல்வது போல்
ஸ்ரீ பாஷ்யம் -தொடங்கி -ஸ்ரீ கத்ய த்ரயங்களை சாதித்து அருளினார் -)

(தத்ய வசீ கரணம் தத் சரணாகதி ரேவ -அங்க பிரபதியாக ஸ்ரீ பாஷ்யம் ஓர் இடத்தில் –
கீதா பாஷ்யத்திலும் அப்படியே -பக்தி ஆரம்ப விரோதிகளைப் போக்கவே –
கத்ய த்ரயத்தில் தான் ஸ்வ தந்த்ர பிரபத்தி -அவனே உபாயம் என்கிற பிரதிபத்தியே
உபாயம் -means -வழி -சாதனம் -பலத்தைப் பெற்றுத் தருமது –
அஹம் அகிஞ்சனன் அநந்ய கதி -த்வம் ஏவ உபாய பூத மே பவ ப்ரார்த்தனா மதி சரணாகதி லக்ஷண வாக்யம்
நியாய சஞ்சாரம் logic -சரணாகதி பண்ணினாலும் பலிக்காத இடங்கள் உண்டே –
அவன் திரு உள்ளம் -கருணை ஒன்றே உபாயம் –
பரதன் குகன் கண்டா கர்ணன் ததி பாண்டன் போன்ற இடங்களில் கண்டோம்
யாகம் பலம் அபூர்வம் சர்வேஸ்வரன் -தானே அதே போல் சரணாகதியாகப் பற்றுதலும் சாதனம் இல்லை -வியாஜ்யம் மாத்திரமே இது
தேசிகன் -நியாய சித்தாஞ்சம் –சாதனம் பகவத் ப்ராப்தவ் ஸஹா ஏவ ஸ்திர மதியே சாத்திய பத்தி பிரபத்தி –
அவனாலே அவனைப் பற்றுவதே அருளிச் செயலின் சாரம் –
ஆர்த்த உப சந்தனம்-அந்தரங்கர்களை ரஷிக்கவே கத்யம் பர சந்தனம் – பிறரை ரக்ஷிக்க ஸ்ரீ பாஷ்யம் )

எம்பெருமானார் தரிசனம் என்றே இதுக்கு
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் -அம்புவியோர்
இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
அந்தச் செயலை அறிகைக்கா –38-

சம்ப்ரதாயம் -தாய ப்ரதாய சம்ப்ரதாயம் -நன்றாகக் கொடுக்கப் பட்டது
அறிந்து -நன்றி உடன் இருக்கவே
நாட்டு வித்தார் பாட பேதம்
(நாட்டி வைத்தார் -நம் பெருமாள் தானே என்றும் நாட்டு வித்தார் என்றும்
திருக் கோட்டியூர் நம்பியுடனே இத்தை வெளியிடும்படி அருளிச் செய்த ஸ்ரீ நம்பெருமாள்
தாமே தத்வாரா இத்தை ஸ்தாபித்து அருளினார் -என்னவுமாம் )

அஸ்ய உதிதாம்
பரம வைதிக தர்சனஸ்ய
ராமாநுஜார்ய ரசித உபக்ருதிம் க்ருதஜ்ஜா
ரெங்கேஸ்வர கத இதம் ரதயாம்
ராமாநுஜஸ்ய மதம் இதி அபிதானம் அஸ்ய

எம்பெருமானார் தரிசனம் என்றே இதுக்கு
ஸ்ரீ நாத ஸ்ரீ யாமுனாதிகளும் தர்சன ப்ரவர்தகராய் இருக்க
இவருடைய பர சம்ருத்தி ஏக பிரயோஜனத்தையே பார்த்து
ஸ்ரீ எம்பெருமானார் தரிசனம் -என்று ஆய்த்து
ஸ்ரீ நம் பெருமாள் நாம நிர்த்தேசம் பண்ணி ஸ்தாபித்து அருளின படி –
மர்யாதா நாமச லோகஸ்ய கர்த்தா காரயிதாசசா -என்னக் கடவது இறே –

(மரியாதை கட்டுப்பாடு -தானும் நடத்தி நடப்பித்து வைத்தும்
சாஸ்த்ரங்களால் தர்மங்களைக் காட்டி அருளியும் நடந்து காட்டியும்-
மற்றவரை தர்மங்கள் செய்ய தூண்டியும் – -மர்யாதா புருஷோத்தமன் )

அதாவது
ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி பாடே பலகால் நடந்து பெற்ற பரமார்த்தத்தை தம்மை அழிய மாறி –
பூரிதானம் ( ஸர்வஸ்ய தானம் ) பண்ணி மீண்டு எழுந்து அருளின அநந்தரம்-
நமக்காவாரை நாமே தேடிக் கொள்வோம் -என்று அதுக்கு விஷயமான இவரை –
ஸ்ரீ நம் பெருமாள் இவரை மிகவும் விசேஷ அபிதானம் பண்ணி அருளி –
இன்று தொடங்கி
ஸ்ரீ எம்பெருமானார் தர்சனம் என்னுங்கோள் என்று ஜகத்திலே பிரதிஷ்டிப்பித்து அருளினார் -என்கை-

அன்றிக்கே
நாட்டுவித்தார் -என்ற பாடமான போது
இவர் ஆஜ்ஞ்ஞாதி லங்கணம் பண்ணி
அமர்யாதமாக பிரபத்தி பிரதானம் பண்ணின பிரபாவத்தைக் கண்டு
ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பியும் அப்படியே ஸ்ரீ எம்பெருமானார் -என்ற திரு நாமம் சாத்தி –
இன்று முதல் ஸ்ரீ எம்பெருமானார் தர்சனம் என்னுங்கோள் என்று அருளிச் செய்து –
ஆதரித்துப் போருகையாலே
அந்த ஸ்ரீ நம்பியுடனே இத்தை வெளியிடும்படி அருளிச் செய்த ஸ்ரீ நம்பெருமாள்
தாமே தத்வாரா இத்தை ஸ்தாபித்து அருளினார் -என்னவுமாம் –

(ஆறாயிரப்படியில் நம்பியே எம்பெருமானார் தர்சனம் -என்று சாதித்தார் என்று இருப்பதால்
நாட்டு வித்தார் -அவர் மூலமாக நம்பெருமாள் செய்வித்தார் என்றபடி )

இவர் தாம் ஆளுமாளார் என்று இவனுடைய தனிமையைத் தீர்க்கைக்கும்
சம்சாரிகள் தனிமையை தீர்க்கைக்கும் இறே இப்படி உபதேசித்துப் போந்தது –

இப்படி ஸ்ரீ நம்பெருமாள் தர்சன ஸ்தாபனம் பண்ணுகைக்கு அடி என் என்னில் –
அம்புவியோர் இந்தத் தரிசனத்தை ஸ்ரீ எம்பெருமானார் வளர்த்த அந்தச் செயலை அறிகைக்கா -என்கிறார் –
ஸ்ரீ எம்பெருமானார் அபிதான விசேஷத்தாலே
அழகியதாய் இருக்கிற பூமியில் உண்டானவர்கள் எல்லாம்
பரம வைதிகமுமாய்
அத ஏவ நிரவத்யமுமான
இந்த தர்சனத்தை ஸ்ரீ எம்பெருமானார் வளர்த்த –
தம் உபதேச முகத்தாலே வர்திப்பித்துக் கொண்டு போந்த அந்தச் செயல் அறிகைக்கா –
அதாவது
ஜகத் உபகாரகமாகச் செய்த அந்த க்ருத்யத்தை ஜகத்தில் உண்டானவர்கள் எல்லாரும்
அறிந்து உஜ்ஜீவிக்கும் படி –
ஸ்ரீ நம் பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார் -என்கை –

இத்தால்
இவருடைய தர்சன ப்ரவர்த்தகத்வம்
பிரபத்தி சாஸ்திர முகேன-என்னுமது
பிரசித்தமாக ஸ்தாபிக்கப் பட்டது ஆய்த்து –
(ஸ்ரீ மத் வேத மார்க்க ப்ரதிஷ்டானம் இதுவே )

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .