ஸ்ரீ பெரிய கோயில் நம்பி என்ற இவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தத்தைத் திருச்செவி சாத்தி அருளி-அமுதன் என்ற திருநாமமும் பிரசாதித்து அருள ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் ஆனார்
அந்தாதி -அந்தத்தையே ஆதியாகக் கொண்டது -அந்த ஆதி -எழுத்து அசை சீர் அடி -ஏதாவது அந்தமும் ஆதியும் -பொருள் அந்தாதியும் உண்டே
ப்ரபந்ந சாவித்ரி காயத்ரி என்று பூர்வர்கள் கொண்டாடுவார்கள்
சரம திவ்ய பிரபந்தம் -கைங்கர்யத்தில் களை அறுப்பதான இயற்பாவில் சேர்த்தார்கள்
மூன்று சாற்றுப் பாசுரங்கள் கொண்டு வீறு பெற்று இருக்கும் திவ்ய பிரபந்தம் இது
———-
ஸ்ரீ வேதப்பிரான் பட்டர் அருளிச் செய்த தனியன் –
முன்னை வினை அகல மூங்கில் குடி யமுதன்
பொன்னம் கழல் கமலப் போது இரண்டும் -என்னுடைய
சென்னிக்கு அணியாகச் சேர்த்தினேன் தென் புலத்தார்க்கு
என்னுக் கடவுடையேன் யான்
தெற்குத் திக்கில் உள்ள யம கிங்கர்கட்க்கு ஏதுக்காகப் பிராப்தி யுடையேன் -என் அருகில் வர ப்ரஸக்தியே இல்லையே –
என்னுக்கு கடவுடையேன் -என்னுக் கடவுடையேன் -கடைக்குறை -கடவு -பிராப்தி -உரிமை
———-
நயம் தரு பேர் இன்பம் எல்லாம் பழுது என்று நண்ணினர் பால்
சயம் தரு கீர்த்தி ராமானுஜ முனி தாளிணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்து அமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சே
நயம் தரு பேர் இன்பம் எல்லாம் -விஷயங்களால் தரப்படும் சிற்றின்பங்கள் யாவும்
பிரமித்து இருப்பார் கருத்தால் பேர் இன்பம் என்கிறார்
நாணாமை நள்ளேன் நயம்-63- -முதல் திருவந்தாதி என்ற இடத்திலும் நயம் -விஷயாந்தரங்கள்
தோளவனை யல்லால் தொழா என் செவி யிரண்டும்
கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் -நா நாளும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம் ——-63-நயம்–சப்தாதி விஷயங்களை
நாணாமை நள்ளேன் நயம் —–ஆசைப்படுவதான-சப் தாதிகளை லஜ்ஜியாதே கிட்டேன் –-ஹாஸ்யமான விஷயம் என்றுமாம் –
பழுது என்று நண்ணினர் பால் -வியர்த்தங்கள் என்று அவற்றை விட்டு ஒழிந்து தம்மை ஆஸ்ரயித்தவர்கள் விஷயத்தில்
சயம் தரு கீர்த்தி -ஸம்ஸார ஜயத்தைப் பண்ணிக் கொடுக்கும் புகழுடையரான
ராமானுஜ முனி தாளிணை மேல் -எம்பெருமானார் திருவடி இணைகள் விஷயமாக
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்து அமுது ஓங்கும் அன்பால் -சிறந்த குணசாலியான அமுதனார் கொழுந்து விட்டு ஓங்கிய பக்தியினால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சே -அருளிச் செய்த இப்பிரபந்தம் அத்யயனம் செய்ய சம்மதித்து இருக்கக் கடவை
நெஞ்சுடைய அனுகூல்யம் பெறப் பாரிக்கிறார்
ஆயிழையார் கொங்கை தங்கும் அக்காதல் அளற்ற அழுந்தி மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று -அமுதனாரும்
மதந கதநைர் ந க்லிஸ்யந்தே யதீஸ்வர ஸம்ஸ்ரயா -தேசிகன்
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாஸ்ரிதாநாம் -மா முனிகள்
பழுதின்றி நண்ணினம்பால் -என்றும்
பழுதின்றி நண்ணி நன் பால் -என்றும் பாடபேதங்கள்
சயம் -ஜயம் -நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே -போல் மீசை முறுக்கிச் சொல்லப் பண்ணுகை
முதல் சீர் நான்கும் வெண்டளை பிழையாக் கடை ஒரு சீரும் விளங்காயாகி நேர் பதினாறே நிறை பதினேழு -என்று ஓதினர் கலைத் துறைக்கு ஓர் அடிக்கு எழுத்தே –
முதல் நான்கும் ஈர் அசைச் சீர்கள் –
பெரும்பாலும் ஏகார ஈற்றும் சிறு கால் ஓ கார ஈற்று
இப்பிரபந்தத்தில் ஏகார ஈற்று
திருவிருத்தத்தில் -கோலப் பகல் களிறு ஓன்று கற்புய்ய-40 பாசுரம் ஒன்றே ஓ கார ஈற்று-
சொல் தொடர் நிலை அந்தாதி-
————–
சொல்லின் தொகை கொண்டு உனதடிப் போதுக்குத் தொண்டு செய்யும்
நல் அன்பார் ஏத்தும் உன் நாமம் எல்லாம் என் தன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறு சமயம்
வெல்லும் பரம இராமானுசா இது என் விண்ணப்பமே
கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே வந்து அருளின ஸ்வாமி
தேவரீருடைய திருவடிவாரத்தில் சீலமில்லாச் சிறியேன்
செய்யும் விண்ணப்பம் ஈது ஒன்றே
தங்கள் அன்பர் ஆரத் தமது சொல் வலத்தால் தலைத்தலைச் சிறந்து பூசிப்ப -திருநாம சங்கீர்த்தனம் பண்ணுவார்கள் அன்றோ –
அத்திரு நாமங்கள் இடைவிடாது என் நாவிலே திகழும்படி அனுக்ரஹித்து அருள வேணும் –
இது ஒன்றே யாய்த்து அடியேனுடைய பிரார்த்தனை –
தொகை -ஸங்க்யை -நூற்று எட்டு பாசுரங்கள் பாட வேணும் என்கிற ஸங்கல்பம்
எங்கள் கதியே ராமானுஜ முனியே சங்கை கெடுத்தாண்ட தவராசா
பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும்
தங்கும் மனம் எனக்குத் தா -போல் இதுவும்
———-
மற்ற ஒரு தனியன் மேல் நாட்டில் அனுசந்திக்கப் படுகிறது-
இனி என் குறை நமக்கு எம்பெருமானார் திரு நாமத்தால்
முனி தந்த நூற்று எட்டுச் சாவித்ரி என்னும் நுண் பொருளைக்
கலி தந்த செஞ்சொற் கலித்துறை யந்தாதி பாடித் தந்தான்
புனிதன் திருவரங்கத்து அமுதாகிய புண்ணியனே
ஸர்வேஸ்வரன் ஸங்கல்ப பூர்வகமாக உலகத்தைப் படைத்து சதுர்முக ப்ரஹ்மாவுக்கு சாவித்ரியை உபதேசித்தான்
இந்த அமுதனார் அந்த சாவித்ரியின் சாரார்த்தத்தை எடுத்து இராமானுசன் என்னும் திரு நாமத்துடன் இணக்கிக் கட்டளை கலித்துறையிலே வைத்து
தனது அனுபவ பரிவாஹ ரூபமாக இந்த நூற்றந்தாதியை நமக்கு உபகரித்து அருளினார்
இனி நமக்கு ஐஹிக ஆமுஷ்மிகங்களிலே ஒரு குறையும் இல்லையே
திருப்பெயரால் -என்ற பாடம் வெண்டளைக்குச் சேரும் –
————
ஸகல சாஸ்த்ரங்களுக்கும் ஸங்க்ரஹம் திரு அஷ்டாக்ஷரம்
அதனுடைய பரம தாத்பர்யமாயும்
ஆழ்வார்களின் அருளிச் செயல்களின் ஸாரார்த்தமாயும்
பூர்வாச்சார்யர்கள் உபதேச பரம்பரையாலே ப்ராப்தமாயும்
சேதனர்கள் அனைவருக்கும் இன்றியமையாத ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களின் நிஷ்க்ருஷ்ட வேஷமாயும்
பரம ரஹஸ்யமாயும் இறே
இருப்பது சரம பர்வ நிஷ்டை
அஃது இருக்கும்படியை திருவரங்கத்து அமுதனாருக்கு எம்பெருமானார் தனது நிர்ஹேதுக கிருபையினாலேயே
கூரத்தாழ்வான் திருவடிகளில் தம்மை ஆஸ்ரயிப்பித்து அருளி -அவர் முகமாக உபதேசித்து அருளினார்
அந்த உபதேச ப்ராப்தமான சீரிய பொருளை அனவ்ரதம் பாவனை பண்ணி எம்பெருமானார் திருவடிகளை
சேவித்துக் கொண்டு போந்த அமுதனார்
அவருடைய திருக்கல்யாண குணங்களைத் தம்முடைய பக்திப் பெரும் காதலுக்குப் போக்குவீடாகப் பேசி
அனுபவித்துத் தீர வேண்டிய அவஸ்தை பிறந்து சரம பர்வ நிஷ்டையே சீரியது என்னும் பரம அர்த்தத்தை
சேதனர்களுக்கு உணர்த்த வேணும் என்னும் கிருபா மூலகமான திரு உள்ளத்தாலும்
எம்பெருமானாருடைய திவ்ய குண சேஷ்டிதாதிகளை ப்ரேமத்துக்குத் தகுதியான பாசுரங்களாலே பேசி
மதுரகவி நிஷ்டையை உபதேசிக்கும் முகத்தால் ஆச்சார்ய அபிமான நிஷ்டர்களுக்கு அறிந்து கொள்ளத் தக்க அர்த்தங்களை
எல்லாம் இந்த திவ்ய பிரபந்த முகத்தால் அருளிச் செய்கிறார்
————
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந் துய்ந் தவன் பல் கலையோர்
தாம் மன்ன வந்த இராம னுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.–1-
பதவுரை
நெஞ்சே! |
–
|
ஓ மனமே! |
பூ மன்னு மாது |
–
|
தாமரைப் பூவில் பொருத்த முடையளாயிருந்த பிராட்டி |
பொருந்திய மார்பன் |
–
|
(அப் பூவை விட்டு வந்து) பொருந்துகைக்குறுப்பான போக்யதையை யுடைய திருமார்பை யுடையனான பெருமானுடைய |
புகழ் மலிந்த பா |
–
|
திருக் கல்யான குணங்கள் நிறைந்த தமிழ்ப் பாசுரங்களிலே |
மன்னு மாறன் |
–
|
ஊற்றமுடையவரான நம்மாழ்வாருடைய |
அடி |
–
|
திருவடிகளை |
பணிந்து |
–
|
ஆச்ரயித்து |
உய்ந்தவன் |
–
|
உஜ்ஜீவித்தவரும் |
பல் கலையோர் தாம் மன்ன வந்த |
–
|
ஓதின மஹான்கள் நிலை பெறும்படி (இவ் வுலகில்) வந்தவதரித்த வருமான |
இராமாநுசன் |
–
|
எம்பெருமானுடைய |
சரணாரவிந்தம் |
–
|
திருவடித் தாமரைகளை |
நாம் மன்னி வாழ |
–
|
நாம் ஆச்ரயித்து வாழ்வதற்குறுப்பாக |
அவன் நாமங்களே |
–
|
அவ் வெம்பெருமானாரது திருநாமங்களையே |
சொல்லுவோம் |
–
|
ஸங்கீர்த்தநம் பண்ணுவோம் |
தாமரை மலரிற் பிறந்த பெரிய பிராட்டியார் அப்பூவைவிட்டு “அகலகில்லேன் இறையும்” என்று வந்து மிக்க விருப்பத்துடன் வஸிக்கப் பெற்ற திருமார்பை யுடையனான திருமாலினது திவ்ய குணசேஷ்டிதங்களை நிறைத்துக்கொண்டிருக்கிற திருவாய்மொழி முதலான திவ்ய ப்ரபந்தங்களை அருளிச் செய்த நம்மாழ்வாருடைய திருவடிகளைதொழுது ஸத்தை பெற்றவாயும்,
பலபல சாஸ்த்ரங்களைக்கற்றும் உஜ்ஜீவநோபாயத்தில் த்ருடாத்யவஸாயமின்றியே ஸம்சய விபர்யயங்கள் கொண்டு தடுமாறு கின்றவர்களை ஒரு நிச்சயஜ்ஞானத்திலே நிலை நிறுத்தி வாழ்விக்கவந் ரதவதரித்தவராயுமிருக்கிற
எம்பெருமானாருடைய திருவடிகளை நாம் ஆச்ரயித்து உஜ்ஜீவிக்குமாறு அவருடைய திருநாமங்களை வாயாரப் பேசுவோமென்று தமது திருவுள்ளத்தை நோக்கிச் சொல்லுகிறாராயிற்று.
பல் கலையோர் தாம் மன்ன = நாநா சாஸ்த்ரங்களைக் கற்று வல்லவர்களான ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலிய மஹான்கள் ப்ரதிஷ்டிதராகைக்காக என்றுமாம்.
எம்பெருமானாருடைய சரணாரவிந்த ப்ராப்திக்கும் ஸாதநம் அவருடைய திருநாம ஸங்கீர்த்தநமேயாம் என்பது இப்பாசுரத்தின் கருத்து
பூ -மங்கள சொல் முதலில்
திருச்சந்த விருத்தத்தில் ஸப்த சக்தியால் மங்களம் -அர்த்தத்தில் பூமி அங்கு
ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யத்தையே பெரிய வைபவமாக அத்யவசித்து இருப்பார் என்பதால் மாறன் அடி பணிந்து உய்ந்தவன் என்கிறார்
ஸ்ரீ மாதவ அங்க்ரி ஜலஜத்வய நித்ய ஸேவா ப்ரேமா விலாஸய பராங்குச பாத பக்தம் –மா முனிகள்
பா மன்னு மாறன்
ஆழ்வார் தாமும் -பாவின் இன்னிசை -அருளிச் செயல்களின் இனிமையைக் கண்டு ஊற்றம் உடையராய் –
தன் சீர் யான் கற்று மொழி பட்டோடும் கவி யமுத நுகர்ச்சி யுறுமோ முழுவதுமே -என்றும்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன் -என்றும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -என்றும்
தாமே அருளிச் செய்தார் இறே
மாறன் -லோக வியாபாரத்துக்கு மாறாக இருந்தவர்
வலிய வினைகட்க்கு மாறாக இருந்தவர்
————-
கள்ளார் பொழில் தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக் கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலமல்லால்
உள்ளாதென் னெஞ்சு ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே.-2-
பதவுரை
கள் ஆர் பொழில் தென் அரங்கன் |
–
|
தேன் நிறைந்த சோலைகளை யுடைய தென் திருவரங்கத்திலே பள்ளி கொள்ளும் பெருமானுடைய |
கமலம் பாதங்கள் |
–
|
தாமரை போன்ற திருவடிகளை |
நெஞ்சில் கொள்ளா |
–
|
தமது நெஞ்சிலே வையாத |
மனிசரை நீங்கி |
–
|
மனிதர்களை விட்டொழித்து, |
குறையல் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பன் |
–
|
திருமங்கை மன்னனுடைய திருவடிகளிலே என்றும் விட்டு நீங்காத பக்தியை யுடையரான |
இராமாநுசன் |
–
|
எம்பெருமானாருடைய |
மிக்க சீலம் அல்லால் |
–
|
சிறந்த சீல குணத்தைத் தவிர |
ஒன்று |
–
|
வேறொன்றையும் |
என் நெஞ்சு உள்ளாது |
–
|
எனது நெஞ்சானது நினைக்க மாட்டாது; |
(இவ்வாறாக)
|
எனக்கு உற்ற பேர் இயல்வு |
–
|
எனக்கு ஸித்தித்ததொரு சிறந்த ஸ்வபாவத்திற்கு |
ஒன்று அறியேன் |
–
|
ஒரு காரணத்தையும் அறிகின்றிலேன். |
ஸ்ரீ ரங்கநாதனுடைய திருவடித் தாமரைகளை நெஞ்சாலும் நினையாத பாவிகளொடு நெடுங்காலம் பழகிக் கிடந்த என் நெஞ்சானது இன்று அப் பாவிகளோடு உறவை ஒழித்து விட்டு, திருமங்கையாழ்வாருடைய திருவடிகளையே அநவரதம் இறைஞ்சுமவரான எம்பெருமானாருடைய சிறந்த சீலகுணமொன்றையே சிந்தியா நின்றது;
இப்படிப்பட்டதொரு பெருந் தன்மை எனக்கு நேர்ந்ததற்குக் காரணம் அவ்வெம்பெருமானாருடைய நிர்ஹேதுக க்ருபா கடாக்ஷமே யொழிய வேறொன்றுண்டாக நானறிகின்றிலேன் என்றவாறு.
நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்கள் என்ற உடனே ஆழ்வார் திரு உள்ளம் ராமாநுசருடைய சீல குணத்தில் ஆழ்ந்தது பற்றி விஸ்மயப் படுகிறார்
இப்படிப்பட்ட பெரும் தன்மைக்குக் காரணம் அவரது நிர்ஹேதுக கிருபா கடாக்ஷமே
மண்ணியில் நீர் தேங்கும் குறையலூர் சீர்க் கலியன் தோன்றிய வூர்–உபதேச ரத்ன மாலை
குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் என்கிற விசேஷம் வீறு பெறும்படி திருவாலி திரு நகரியில்
திருமங்கை மன்னன் பாதார விந்த பீடத்தின் கீழ் எம்பெருமானார் திருக்கோலம் ஏறி அருளப்பட்டு இருப்பது ஸேவிக்கத் தக்கது –
சீலம் -மஹான் மந்தமதி -நீசனான தம்மோடு புரையறக் கலந்த சீர்மை –
இது எனக்கு ஸித்தித்த பெரிய விரகு -பேர் இயல்வு
ஓன்று -கீழும் மேலும் அந்வயிக்கும்
மிக்க சீலம் அல்லால் ஓன்று உள்ளாது என்றும்
எனக்குற்ற பேர் இயல்வு ஓன்று அறியேன் -என்றும் கொள்ளலாம்-
—————-
பேரியல் நெஞ்சே! அடி பணிந் தேனுன்னைப் பேய்ப் பிறவிப்
பூரிய ரோடுள்ள சுற்றம் புலத்திப் பொரு வருஞ்சீர்
ஆரியன் செம்மை இராமா னுசமுனிக் கன்பு செய்யும்
சீரிய பேறுடை யார் அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே.–3-
பதவுரை
பேர்இயல் நெஞ்சே! |
–
|
மிகவும் கம்பீரமான மனமே! |
உன்னை அடிபணிந்தேன் |
–
|
உன்னை வணங்குகின்றேன்; (எதற்காக என்னில்; |
பேய் பிறவி |
–
|
ஆஸுரப் பிறப்பை யுடையவர்களான |
பூரியரோடு உள்ள சுற்றம் |
–
|
நீசர்களோடு (எனக்கு) இருந்த உறவை |
புலர்த்தி |
–
|
போக்கடித்து |
பொருவு அரு சீர் |
–
|
ஒப்பற்ற குணங்களை யுடையவரும் |
ஆரியன் |
–
|
சிறந்த அநுஷ்டாக முடையவரும் |
செம்மை |
–
|
(ஆச்ரிதரோடு) ருஜூவாகப் பரீமாறுந்தன்மை வாய்ந்தவருமான |
இராமாநுச முனிக்கு |
–
|
எம்பெருமானார் திறத்தில் அன்பு செய்யும் சீரிய பேறு |
உடையார் |
–
|
பக்தி பண்ணுவதையே பரம புருஷார்க்தமாக வுடையவர்களான கூரத்தாழ்வான் போல்வாருடைய |
அடிக் கீழ் |
–
|
திருவடிகளின் கீழே |
என்னை |
–
|
(பரம நீசனாயிருந்த) என்னை |
சேர்த்ததற்கே |
–
|
கொண்டு சேர்த்த மஹோபகாரத்திற் காகவே (உன்னை அடி பணிந்தேன்) |
பரம நீசர்களோடு எனக்கிருந்த ஸம்ஸர்க்கத்தைப் போக்கடித்து, ஒப்பற்ற குணசாலியான எம் பெருமானாருடைய
திருவடிகளின் ப்ராவண்யமாகிற பரம புருஷார்த்தத்தைப் பெற்றுள்ள ஆழ்வான் போல்வாருடைய திருவடிகளின் கீழே
என்னைக் கொண்டு சேர்த்த நெஞ்சே!
இப் பெரு நன்றி புரிந்த உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?
“தலை யல்லால் கைம்மாறிலேனே” என்றாற் போல உன்னைத் தலையால் வணங்குவது தவிர
வேறோரு கைம்மாறு நான் செய்யகில்லேன் என்றாராயிற்று.
பூரியர் -இழி பிறப்பாளர்.
புலர்த்துதல் – உலாச்செய்தல்; அதாவது போக்கடித்தல்;
பொருவு – ஒப்பு.
இராமாநுசனடிக் கன்புசெய்யுஞ் சீரிய பேறுடையார்” என்றவிடத்து -ராமாநுஜ பக்தர்களெல்லாரையும் விவக்ஷிக்கிறார். என்றலும்,
கூரத்தாழ்வானை விசேஷித்துக் கருதுகின்றா ரென்றலும் ஒக்கும்.
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ -நெஞ்சு உடன்பட்டதுக்கு நமஸ்கரிக்கிறார்
ஆரியன் -கர்தவ்யம் ஆசரன் காமம் அகர்தவ்யம் அநா சரன் திஷ்டாதி ப்ரக்ருதா சாரே சது ஆர்ய இதி ஸ்ம்ருத
செம்மை -ஆர்ஜவம் -ருஜு -கௌடில்யத்துக்கு எதிர்மறை -உள்ளத்தை உள்ளபடி சொல்லுகையும் செய்கையும்
ஆஸீத் தசராதோ நாம ராஜா -இத்யாதி பெருமாள் சூர்பணைக்கும் நேராக உத்தரம் சொன்னது போல் –
————-
என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழ வினை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமுமென்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கேதும் சிதைவில்லையே.–4-
பதவுரை
ஊழி முதல்வனையே |
–
|
காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் காரண பூதனான எம் பெருமானையே |
பன்ன |
–
|
(எல்லாரும் விவேகித்து) அநுஸந்திக்கும்படி |
பணித்த |
–
|
(ஸ்ரீபாஷ்ய முகத்தாலே) அருளிச் செய்த |
பரன் இராமாநுசன் |
–
|
ஸர்வோத்க்ருஷ்டரான எம்பெருமானார் |
புவியில் |
–
|
இந்தப் பூமியிலே |
என்னை ஒரு பொருள் ஆக்கி |
–
|
(அபதார்த்தமாய்க் கிடந்த) என்னை ஒரு பதார்த்தமாக்கி |
மருள் சுரந்த முன்னை பழை வினை வேர் அறுத்து |
–
|
அஜ்ஞான மூலகங்களாய் மிகவும் அநாதிகளான (எனது) பாவங்களை வேரறநீக்கி |
பாதமும் |
–
|
தமது திருவடிகளையும் |
என் சென்னி |
–
|
எனது தலையிலே |
தரிக்க வைத்தான் |
–
|
நான் உகந்து தரிக்கும் படியாக வைத்தருளினார்; (இவ்வளவு மஹா ப்ரஸாதம் பெற்றோனான பின்பு) |
எனக்கு |
–
|
அடியேனுக்கு |
ஏதும் சிதைவு இல்லை |
–
|
எவ்விதமான ஹாநியும் இனி உண்டாக வழியில்லை. |
எம்பெருமானாருடைய நிர்ஹேதுக விஷயீகாரத்திற்கு ஆளான நான் இனி ஒருநாளும் எவ்விதமான ஹாநியையும் அடைமாட்டேன் என்கிறார், பதார்த்த கோடியில் சேராமல் துச்சனாயிருந்த எனது கருமங்களை யெல்லாம் வேரற நீக்கி, தமது பாதார விந்தங்களையும் என் தலைமேலே வைத்தருளினார் எம்பெருமானார்; இப்பேறு பெற்ற எனக்கு இனி ஒரு குறையுமில்லை என்றாராயிற்று.
மருள் சுரந்த – அஜ்ஞாந்த்தாலே செய்யப்பட்ட என்கை; மருளாலே சுரக்கப்பட்ட என்றவாறு.
(ஊழி முதல்வனையே பன்னப் பணித்த) ஊழி முதல்வனான எம்பெருமானையே பரவும்படி அமுதனாராகிய தம்மைச் செய்தருளின – என்று அர்த்தமல்ல; பகவத் விமுகரா யிருந்தவர்களை யெல்லாம் உபதேசாதி முகத்தாலே பகவத் ப்ரவணராம்படி செய்தருளினவர் என்று பொதுப் படையாகச் சொன்னபடி. ஊழி முதல்வன் – பிரளய காலத்தில் முழு முதற் கடவுளாயிருந்தவன் என்றுமாம்.
பரன் என்று பரம புருஷனான எம்பெருமானையே சொல்லி
அவனுடைய திருவடிகளையும் எனது சென்னியில் தரிக்க வைத்தான் என்றதாகவுமாம்
பரன் பாதம் என சென்னித் தரிக்க வைத்தான் –என்றும் பாட பேதம்
————–
எனக்குற்ற செல்வம் இராமானுச னென்று இசைய கில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக் குற்றம் காண கில்லார், பத்தி ஏய்ந்த இயல்வி தென்றே.–5-
பதவுரை
எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று |
–
|
‘நமக்கு ப்ராப்தமான ஸம்பத்து எம்மெருமானாரே’ என்று |
இசைய கில்லா |
–
|
அத்யவஸாயங் கொண்டிருக்க மாட்டாத |
மனக் குற்றம் மாந்தர் |
–
|
துஷ்ட ஹ்ருதயர்களான மனிசர் |
பழிக்கில் |
–
|
(இந்நூலைப்) பழிப்பவர்களானால் |
புகழ் |
–
|
(அன்னவர்களுடைய பழிப்பே இதற்குப்) புகழாய் விடும்; |
அவன் |
–
|
அவ்வெம்பெருமானாருடைய |
மன்னிய சீர் தனக்கு |
–
|
நித்ய ஸித்தமான கல்யாண குணங்களுக்கு |
உற்ற |
–
|
தகுதியான |
அன்பர் |
–
|
தகுதியான அன்பை யுடையவர்களான மஹான்கள் |
பத்தி ஏய்ந்த இயல் விது என்று |
–
|
இந்நூலானது பக்தியோடு கூடின ப்ரவ்ருத்தியை யுடையதென்று (திருவுள்ளம் பற்றி) |
அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா இனம் குற்றம் காணகில்லார் |
–
|
அவ்விராமாநுசனுடைய திரு நாமங்களைக் சொல்லுகின்ற என்னுடைய (இந்தப்) பாசுர மாலைகளிலுள்ள குற்றங்களைக் காண மாட்டார்கள். |
உலகத்தில் ஓரு பிரபந்தம் பிறந்தால் அதனைத் தூஷிப்பார் பலரும், பூஷிப்பார் சிலரும் ஏற்படுவது வழக்கம். உண்மையில் தோஷங்கள் இல்லாதிருந்தாலும் எதையாவது சொல்லித் தூஷித்தே தீருவர்கள்; குற்றங் குறைகள் இருந்துவிட்டால் தூஷகர்களின் உத்ஸாஹம் கேட்கவே வேண்டியதில்லை. அறிவிலியான நான் இயற்றும் இந்நூலில் தோஷங்கள் தான் மிகையாக இருக்கக் கூடும்; அவற்றைக் கண்டு சிலர் நிந்திப்பர்களாகில், அன்னவருடைய தூஷணம் நமக்கு பூஷணமேயா மித்தனை என்கிறார்.
‘பிறருடைய பழிப்பு நமக்கு அப்ரயோஜகம்’ என்று சொல்ல வேண்டியிருக்க, அவர்களுடைய பழிப்புத் தானே நமக்குப் புகழாம் என்கைக்குக் கருத்தென்? அவர்களது பழிப்பு இவர்க்கு எப்படி புகழாய் விடும்? என்று சிலர் சங்கிக்கக்கூடும். அவர்கள் தெளியுமாறு சொல்லுகிறோம்;-
அமுதனாராம் ஒருவர்; அவர் இராமாநுச நுர்ற்றந்தாதி என்றொரு பிரபந்தம் பாடினாராம்; அதில் ஒவ்வொருபாட்டிலும் இராமாநூசன் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டு கிடக்கிறார். தவிரவும் சாஸ்திரங்களில் புருஷார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ள ஐச்வர்யம் முதலானவற்றை இகழ்ந்துரைக்கிறார்; ஸகல புருஷார்த்தங்களும் தமக்கு உடையவர் தானாம்; எம்பெருமானைக் கூட அவர் கண்ணெடுத்துப் பார்க்கமாட்டாராம். என்றிவை போல்வன சிலவார்த்தைகளைச் சொல்லிப் பழிப்பார்கள்.
வாஸ்தவத்தில் இவையெல்லாம் குணமேயாதலால் குணகீர்த்தநத்தில் சேர்ந்து புகழ்ச்சியேயாய் முடியக் குறையில்லையென்க.
எம்பெருமானைப் பழித்த சிசுபாலாதிகளும் பர்யாயேண குண கீர்த்தநம் பண்ணினார்களாக வன்றோ உய்ந்து போனது.
அலகை முலை சுவைத்தாற்கு அன்பர் அடிக்கு அன்பர் திலதம் எனத் திரிவார் தம்மை -உலகர் பழி தூற்றில் ஸ்துதி யாகும் -அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான் பற்றி உரலிடை யாப்பும் உண்டான் -என்று
பாவிகள் ஏசுவது எல்லாமே அன்புடையாருக்குக் குண கீர்த்தனமே அன்றோ –
ஊரார் கவ்வை எரு விட்டு –
உத்தம அதிகாரிகளுடைய அத்யவசாயம் எல்லாம் சாமான்ய ஞானிகளுக்கு இகழ்ச்சிக்கு உறுப்பாகுமே
—————
இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன் கவிகளன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமா னுசனை,மதியின்மையால்
பயிலும் கவிகளில் பத்தியில் லாதவென் பாவிநெஞ்சால்
முயல்கின்றனன் அவன் றன் பெருங் கீர்த்தி மொழிந்திடவே.–6-
பதவுரை
ஈன் கவிகள் |
–
|
விலக்ஷணரான கவிகள் |
அன் பால் |
–
|
ப்ரீதியினாலே |
இயலும் பொருளும் |
–
|
சப்தமும் அர்த்தமும் |
இசைய |
–
|
நன்கு பொருந்தும் படியாக |
தொடுத்து |
–
|
கவனம் பண்ணி பாடல்களிலே |
பக்தி இல்லாத |
–
|
பக்தியற்றதான |
என் பாவி நெஞ்சால் |
–
|
என்னுடைய பாபிஷ்டமான நெஞ்சினாலே |
அவன் தன் |
–
|
அவ்வெம்பெருமானாருடைய |
மயல் |
–
|
வ்யாமோஹம் தலையெடுத்து |
வாழ்த்தும் இராமானாசனை பயிலும் |
–
|
துதிக்கும்படி நின்ற எம்பெருமானாருடைய வருணிக்கின்ற |
பெரு கீர்த்தி |
–
|
அளவற்றகீர்த்திகளை |
மொழிந்திட |
–
|
பேசுவதாக |
மதி இன்மையால் முயல்கின்றன |
–
|
புத்தி யில்லாமையினாலே ப்ரவர்த்திக்கின்றேன். |
“பக்தியேய்ந்த வியல்விதென்றே” என்று கீழ்ப்பாட்டிற் சொன்னவிவர், அப்படிப்பட்ட பக்தி தமக்கு உண்டோவென்று பார்த்தார், ‘
அந்தோ! நாமோ அவ்வெம்பெரு மானாரைத் துதிக்க இழிந்தது! என்று தம்மைத் தாமே வெறுத்துக் கொள்ளுகிறார் இதில் –
இன் கவி பாடும் பரம கவிகளான சில மஹான்கள் சொல்லின்பமும் பொருளின்பமும் நன்கு பொருந்துமாறு கவி பண்ணி ஆந்தரமான அன்பினாலே வ்யாமோஹித்து இராமாநுசனை வாழ்த்தா நிற்பர்கள்;
அன்னவர்களுடைய பக்தி பரீவாஹ ரூபமான கவிகளில் ஆதரமற்ற எனது பாவி நெஞ்சால் அவ்விராமாநுசனுடைய பெருப் பெருத்த புகழ்களை யெல்லாம் பேசுவதாக நான் முயல்கின்றேனே! இஃது என்ன புத்தி கெட்ட தன்மை! என்று வெறுத்துக் கொள்ளுகிறார்.
கவிகள் வாழ்த்தும் இராமானுஜனை -கவிகளால் மங்களா ஸாஸனம் பண்ணப்படுகிற என்றபடி
மயல் -மையல் -வியாமோஹம் -அறிவு கேடு
மங்களா சாசனம் பண்ணும் போது அறிவு கேடு வேணும் இறே
அறிவு உள்ளபடி கிடந்ததாகில் -வாழி -பல்லாண்டு -ஜய விஜயீ பவ -இத்யாதி சப்தங்கள் வெளிவர ஒண்ணாதே
மதியின்மையால் -நான்காம் அடியில் அந்வயிக்கக் கடவது –
—————
மொழியைக் கடக்கும் பெரும் புகழான், வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி யல்லா
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே.
பதவுரை
மொழியை கடக்கும் |
–
|
வாய் கொண்டு வருணிக்க முடியாதபடி வாசா மகோசரமான |
பெரு புகழான் |
–
|
பெரிய புகழை யுடையவரும் |
முக் குறும்பு ஆம் வஞ்சக் குழியை கடக்கும் |
–
|
கல்விக் செருக்கு, செல்வச் செருக்கு குலச் செருக்கு என்னும் மூவகைக் குறும்புகளாகிற படு குழியைக் கடந்திருப்பவரும் |
நம் |
–
|
நமக்கு நாதருமான |
கூரத்து ஆழ்வான் |
–
|
கூரத்தாழ்வானாடைய |
சரண் |
–
|
திருவடிகளை |
கூடிய பின் |
–
|
நான் ஆச்ரயித்த பின்பு |
பழியை கடத்தும் |
–
|
ஸர்வபாப நிவர்த்தகரான |
இராமாநுசன் |
–
|
எம்பெருமானாருடைய |
புகழ் பாடி |
–
|
நற் குணங்களைப் பாடி |
அல்லா வழியை கடத்தல் |
–
|
ஸ்வரூபத்திற்குச் சேராத தீய வழிகளைத் தப்பிப் பிழைக்கையான |
எனக்கு |
–
|
அடியேனுக்கு |
இனி |
–
|
இனி மேலுள்ள கால மெல்லாம் |
யாதும் வருத்தம் அன்று |
–
|
ஈஷத்தும் ப்ரயாஸ ஸாத்யமன்று; (எளிதேயாம்) |
எம்பெருமானாருடையத் துதிப்பதற்குத் தாம் யோக்யதையற்றவர் என்று பின்வாங்கப் பார்த்த அமுதனார், தமக்குள்ள ஆழ்வான் திருவடி ஸம்பந்தத்தை நினைத்து இஃது வாய்கொண்டு வருணிக்க முடியாத பெரும் புகழ் படைத்தவரும், கல்வி, செல்வம், குலம் என்ற மூன்றுவகை ஸம்பத்தும் புஷ்கலமாயிருந்தும் அவற்றால் இறைவும் அஸங்கார மடையாதவருமான கூரத்தாழ்வானாடைய சரணாரவிந்தங்களை ஆச்ரயித்து க்ருத க்ருத்யனான வெனக்கு எம்பெருமானாருடைய திருக் குணங்களைப் பாடுதலும் அதுவே காரணமான அர்ச்சிராதிகதி யொழிந்த மற்ற கதிகளிற் போகாதபடி அவ்வழியே போதலும் மிகவுமெளிதேயாம் என்றாராயிற்று.
குலம் ரூபம் வயோ வித்யா தனம் -ஐந்தும் இருந்தாலும் இவை மூன்று அஹங்காரங்களும் கொடியவை அன்றோ
நம் பூருவாசாரியர்கள் எல்லாருமே சிறந்த புகழுடையராயினாம் ஆழ்வானாடைய புகழ் அத்யந்த விலக்ஷணமென்பது ப்ரஸித்தமான விஷயம்;.
நம் தர்சந்ததுக்கு மஹாத்ரோஹியான நாலூரானாக்குக் கொடிய நரகங்களைக் கொடுக்க வேணுமென்று பகவத் ஸந்தியிலே ப்ரார்த்திக்க வேண்டி யிருக்க, பேரருளாளன் திருமுன்பே வரதராஜஸ்தவத்தை விண்ணப்பம் செய்து கண் தெரியும்படி வரம் வேண்டிக் கொள்ளீர் என்ற வரம் வேண்டிக் கொள்ளும்படி விசாலமான திருவுள்ளம்பெற்ற ஆழ்வானாடைய புகழை நாம் என்சொல்வோம்!
“மொழியைக் கடக்கும் பெரும் புகழான்” என்றுசொல்வது தவிர வேறு வாசக மில்லை காணும்.
வாசா மகோசர மஹா குண தேசிக அக்ர்ய கூர நாதர் அன்றோ
(வஞ்ச முக்குறும் பாமித்யாதி) கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு, குலச் செருக்கு என்ற இம்மூன்று அஹங்காரங்கள் மிகக்கொடியவை; இவற்றைக் கடத்தல் ஆர்க்கும் அரிது;
இவற்றைக் கடந்தவர் என்னும் ஏற்றம் ஆழ்வானொருவர்க்கே அஸாதாரண மென்பதாக எம்பெருமானார் காலத்திலேயே ப்ரஸித்தமாயிற்று.
திருவாய் மொழியில் “பலரடியார் முன்பருளிய பாம்பணையப்பன்” என்றவிடத்து ஈடு முப்பத்தாறாயிரத்தில் ஆழ்வான் விஷயமான அருளிச் செய்யப்பட்ட தொரு ஐதிஹ்யம் குறிக் கொள்ளத்தகும்.
மற்றும் பல இதிஹாஸங்களும் பன்னி யுரைக்குங்காற் பாரதமாம்.
————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –