Archive for the ‘ஆர்த்தி பிரபந்தம்’ Category

ஸ்ரீ மா முனிகளின் ஆர்த்தி-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவணம் காட்டி அருளும் – தனி பாசுரங்கள் —

March 28, 2022

இதில்
முதல் பாட்டில் –
ஸ்ரீ தண்டகாரண்ய வாசிகளான ஸ்ரீ ரிஷிகளும் -ஸ்ரீ பெரிய யுடையாரும் ஸ்ரீ பெருமாளைக் கண்ட அநந்தரம்
ஏஹீ பஸ்ய சரீராணி -என்று
ராஷசர்களாலும் ராவணனாலும் நலிவு பட்ட
ஸ்வ ஸ்வ தேஹங்களைக் காட்டி தங்கள் குறை தீர்த்துக் கொள்ளுவதற்கு முன்னே
அத் தலையில் சௌந்தர்யாதி சௌகுமார்யாதிகளைக் கண்டு கலங்கி
மங்களாநி ப்ரபுயுஜ்ஞாநா -என்றும்
ஆயுஷ்மன் -என்றும்
மங்களா சாசனம் பண்ணினாப் போலே –

(“ஜயத்யதிபலோ ராம: லக்ஷ்மணச்ச மஹாபல:
ராஜாஜயதி ஸுக்ரீவோ, ராகவேணா பிபாலித:”

ராமன் வன வாசத்தின் போது தண்டகாரண்ய மகரிஷிகளின் இருப்பிடம் சென்றான்.
அவனின் வரவை அறிந்த ரிஷிகள், அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட தம் சரீரங்களை காண்பித்து,
எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கேட்க விரும்பினார்கள்.
ஆனால் இராமனை கண்டதும், அவனுடைய அழகில் ஈடுபட்டு, அவனின் க்ஷேமத்தை கருதி,
அவனுக்கு மங்களாசாசனம் செய்ய தொடங்கி விட்டார்கள்.
இராமனுக்கு மங்களாசாசனம் செய்யத் தொடங்கியவர்கள், லக்ஷ்மணனுக்கும், சுக்ரீவனுக்கும் மங்களாசாசனம் செய்கிறார்கள் )

இவரும் தம்மை விஷயீ கரிக்க
விண்ணின் தலை நின்று எழுந்து அருளின ஸ்ரீ எம்பெருமானார் உடைய
அப்ராக்ருதமான திவ்ய விக்ரஹத்தில் பிரகாசிக்கிற சௌந்தர்யாதி சௌகுமார்யாதிகளைக் கண்டு கலங்கி
பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டி ஸ்வ அபேஷிதங்களை அறிவிப்பதற்கு முன்னே
அத்தலையில் குறை தீரவே -இத்தலையில் குறை தீரலாம் என்று அறுதி இட்ட படியே
மங்களா சாசனம் பண்ணுகிறார் –

இப்படி தாம் மங்களா சாசனம் பண்ண -அத்தாலே நித்ய ஸூரிகளுக்கு உண்டான ஆதர அதிசயத்தை கண்டு
அன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசன் -என்கிறபடியே
அங்குத்தைக்கு அந்யராய் பிரேம பாரவச்யத்தாலே மங்களா சாசனம் பண்ணுமவர்களுடைய
பரம்பரையில் சம்பந்தம் உடையவர்களை நித்ய ஸூரிகள் ஆதரிக்கும் படி இதுவே என்று
சூழ் விசும்பில் படியே வித்தராய்ப் பேசி அருளுகிறார் —

பல்லாண்டு பல்லாண்டு -என்று தொடங்கி
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே -என்றும்

ஜெயத்யதி பலோராமோ லஷ்மணச்ச மகா பல
ராஜா ஜயதி ஸூக்ரீவோ ராகவேணா பிபாலித-என்றும்
சம்பந்த சம்பந்திகளின் அளவும் மங்களா சாசனம் யுண்டாய் இறே இருப்பது-

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் -வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை—-1

வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவார்-
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு -என்றும்
பொலிக பொலிக பொலிக -என்றும்-பரம வைதிகராய் இருக்குமவர்கள்
பகவத் பாகவத விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணுமா போல
இவ் விஷயத்திலும்
அன்பராய் அந்த வைதிக நிர்தேசத்தின் படியே
வாழி எதிராசன் என்று த்ரி பிரகாரமாக மங்களா சாசனம் பண்ணுமவர்களை –

வாழி என வாழ்த்துவார் –
அப்படியே வாழி -என்று மங்களா சாசனம் பண்ணுமவர்களை –

வாழி என வாழ்த்துவார் –
அப்படியே வாழி -என்று மங்களா சாசனம் பண்ணுமவர்களுடைய –

தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை –
பரஸ்பரம் சத்ருசங்களான திருவடிகளிலே –

தாழ்த்துவார் –
பக்ன அபிமானராய் வணங்கி வழிபட்டு இருப்பார் –

விண்ணோர் தலை –
நித்ய ஸூரிகளுக்கு சிரஸா வாஹ்யர் –
அன்றிக்கே
அவர்களுக்கு ஸ்ரேஷ்டர் ஆவார்கள் என்றுமாம்–

வாழி -இடைச் சொல்லும்
வாழ்க -எனச் சொல்லும்
வாழி என்கையாலே
பிரபந்த ஆரம்பத்தில் மங்களா சாசனம் யுண்டாய் இறே இருப்பது –

—————————————————————————————————————

இவர் தம்மை அங்கீ கரித்த அன்று தொடங்கி இன்றளவும் உண்டான அபராத சஹத்வாதிகளை
ஆவிஷ்கரித்த வாறே
நம்மை ஒழிய வேறு ஒருவர் இவர் குற்றங்களைப் பொறுத்து ரஷிக்க வல்லார் உண்டோ –
இனி இவருக்கு மேல் உண்டான காரியமும் நாமே செய்து அருளி தலைக் கட்ட வேணும்
என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக

பாவஞ்ஞர் ஆகையாலே அவர் கருத்து அறிந்து இப்படி அகதிகளுக்கே கதியாக இருக்கிற தேவரை ஒழிய
என்னுடைய அபராதங்களைப் பொறுத்து ரஷிக்க எத்தனை குணவான்களான
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார்க்குத் தான் முடியுமோ –

இனி
பிராப்ய ருசியையும் யுண்டாக்கி-பிராப்ய தேசத்தில் சேரும்படி பண்ணி அருள வேணும் என்கிறார்
அன்றிக்கே
அநவரதம் செய்கிற அபராதங்களை சமித்து ரஷிக்கும் போது
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார் ஆக வேண்டாவோ என்ன
அது நமக்கு அன்றி யாவர்க்கு முடியும் என்கிறார் ஆகவுமாம் –

தென்னரங்கர் தமக்காமோ தேவியர் கட்காமோ
சேனையர் கோன் முதலான ஸூரியர்கட்காமோ
மன்னிய சீர் மாறன் அருள் மாரி தமக்காமோ
மற்றுமுள்ள தேசிகர்கள் தங்களுக்காமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்
எதிராசா உனக்கன்றி யான் ஒருவர்க்கும் ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்ன யுண்டாக்கி
ஒளி விசும்பில் அடியேனை யொருப்படுத்து விரைந்தே—-26-

எதிகளுக்கு நாதரானவரே-ஸ்வதஸ் சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரனாலும் பரிகணித்து முடியாத
அடியேனுடைய அபராதங்களை ஷமிக்க-
தோஷா யத்ய பித்ஸ் யஸ்யாத்-என்றும்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் -என்றும்
பேசும்படியான ஸ்ரீ பெரிய பெருமாளுக்குத் தான் சக்யமோ –

அவருக்கும் பொறைக்கு உவாத்தாய் –
ந கச்சின் ந அபராத்யதி –என்றும்
கிமேதந நிர் தோஷ க இஹ ஜகதி -என்றும் பேசும்படியான ஸ்ரீ பெரிய பிராட்டியார் தொடக்கமான
ஸ்ரீ நாய்ச்சிமார்களுக்குத் தான் சக்யமோ –

இப்படியான இருவர்களுடையவும் சேர்த்தியில் அடிமையை ஆசைப் பட்டவர்களுக்கு அந்த கைங்கர்ய போகிபாகிகளாம்படி-
அஸ்மாத்பிஸ் துல்யோ பவதி -என்று கூட்டிக் கொள்ளும்
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் தொடக்கமான ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்குத் தான் சக்யமோ

இவர்கள் தான்-
ஸ்ரீ விஷ்வக் சேன சம்ஹிதை-ஸ்ரீ விஹகேந்திர சம்ஹிதைகளிலே பிரபத்தி மார்க்க பிரதர்சகர் இறே-
நித்தியமாய் பொருந்தி இருப்பதான ஆஸ்ரித விஷய வாத்சல்யாதி குண உக்தராய்
அத்தை அனுஷ்டான சேஷமாம் படி
பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்ளும் ஸ்ரீ நம் ஆழ்வார்
இவரோபாதி சேதன விஷயத்தில் கிருபையை வர்ஷிக்கிற ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் இவர்களுக்கு தான் சக்யமோ

மற்றும் ஆழ்வார்கள் கிருபைக்கு விஷயமாய் க்ருபாமாத்ரா பிரசன்னாச்சார்யர் களாய் இருக்கிற
ஸ்ரீ நாத ஸ்ரீ யாமுனாதிகள் ஆகிற அவர்கள் தொடக்கமாக இவ்வருகு உள்ள ஸ்ரீ ஆச்சார்யர்களுக்குத் தான் சக்யமோ

அபராத சஹாரான தேவர்க்கு ஒழிய
கீழ் உக்தரான எத்தனை அதிசய தயாவான்கள் ஆனாருக்குத் தான் இத்தைச் செய்து தலைக் கட்டப் போமோ

அது ஒருவருக்கும் அசக்யம் ஆகையாலே
நிகரின்ற நின்ற என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை -என்கிறபடியே
தயைக சிந்துவாய்-சர்வ அபராத சஹராய் இருக்கிற தேவர்க்கு ஒழிய
அபராதநாமாலயனான நான் காகத்தைப் போலே வேறு ஒரு கோஷ்டிக்கு ஆள் ஆகேன் –

உபாய தசையில் ரஷித்தவோபாதி–உபேய தசையிலும் தேவர் கிருபையாலே
பிராப்ய ருசியையும் விளைத்து –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -என்றும்
தெளி விசும்பு -என்றும்–சொல்லப் படுகிற பிராப்ய தேசத்தில் அடியேனை
அங்குற்றேன் அல்லேன் -என்னும்படி
ஆந்தராளிகன் ஆக விட்டு வைக்காமல் சீக்கிரமாக ஒருதலைப்பித்து அருள வேணும்
ஒரு கோடியிலே சேர்க்க வேணும் என்றபடி –

உனக்கு அன்றி என்ற இத்தை–கீழும் மேலும் கூட்டி நிர்வஹிப்பது –

ஒரு வேளையில் -ஷிபாமி – ந ஷமாமி -என்னும் நிரங்குச ஸ்வ தந்த்ரனுக்கும்
ஷமா லஷ்மீ பிருங்கீ சகல கரணோன்மாத நமது -என்றும்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் -என்றும் பேசும்படி உன்மஸ்தகமான போகத்தாலே
மதித்து ஸ்தப்தைகளாய் இருக்கும் அவர்களுக்கும்
அச் சேர்த்தியிலே கைங்கர்ய நித்ய நிரதராய் அஸ்தான சிநேக ரஷா வ்யசநிகளாய்
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழுமவர்களாய் இருக்குமவர்களுக்கும்
அச் சேர்த்தியை அனுபவிக்க ஆசைப்பட்டு

சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்-என்றும்
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து -என்றும்
உன்னைக் காண்டும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து -என்றும்
பக்தி பாரவச்யத்தால் ஆழம் கால் பட்டு இருக்குமவர்களுக்கும்
மற்றும் கருதக்ருதயராய் ஆக்கை விடும் பொழுதையும்
மாக வைகுந்தம் காண்கையையும்
மநோ ரதிக்கிற முமுஷூக்களுக்கும்
சர்வ அபராத அனர்த்தம் கண்டு பரோபதேசம் பண்ணுகை கூடாது இறே –

தம்மை அழிய மாறியும்-சம்சாரிகள் துர்க்கதி கண்டு அவர் பின் படரும் குணனாய்
அவர்கள் அவியதையைப் பாராமல் சர்வதா பரோபதேசம் பண்ணியும்
அத்தாலே
ஆளுமாளார் -என்கிறவனுடைய தனிமை தீரும்படி மங்களா சாசன பரரை யுண்டாக்கி
பர சம்ருத்தியே பேறாம்படி நடத்திக் கொண்டு போருவர் ஒருவர் ஆகையாலே
இவர்க்கே யாய்த்து இது கூடுவது –
அது திருத்தலாவதே -என்று கை விட்டத்தை இறே கைக் கொண்டு திருத்தி
ஸ்ரீ திருமகள் கேள்வனுக்கு ஆக்கி அருளிற்று –

ஆகை இறே இவரும் இப்படி அருளிச் செய்தது –

மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே இராமானுசன் செய்யும் சேமங்கள் மற்று உள்ளார் தரமோ
என்று இறே ஸ்ரீ அமுதனாரும் அருளிச் செய்தது –

பரம்ந்தத் கரீயாம்சம் -இத்யாதி –

———————————————————————–

அனுதாபாதிகள் யுண்டாகவே
ஸ்ரீ எம்பெருமானாருக்காக ஸ்ரீ பெரிய பெருமாள் –
ஸ்ரீ மான் சமாரூட பதங்க ராஜ -என்கிறபடி எழுந்து அருளி அபிமானித்து அருளும்
பேற்றின் கௌரவத்தை அனுசந்தித்து அருளுகிறார் –

கனக கிரி மேல் கரிய முகில் போல்
வினதை சிறுவன் மேற்கொண்டு -தனுவிடும்போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என் பால்
வாரா முன்னிற்பர் மகிழ்ந்து —52-

தனு -சரீரம்

காஞ்சனஸ்ய கிரேஸ் ஸ்ருங்கே ஸ கடித்தோ யதோ யதா -என்றும்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வர்ண மயமான மகா மேருவின் மேலே
பெரும் பவ்யம் மண்டி யுண்ட பெரு வயிற்ற கரு முகிலானது கினியப் படிந்து இருக்குமா போலே
பரபாக ரசா வஹமாம் படி-

விந்தை சிறுவன் என்னும்படியான ஸ்ரீ பெரிய திருவடி மேல் கொண்டு
தேக பாத சமயத்தில் தாய் முகம் காட்டுமா போல்
சௌந்தர் யாதிகளால் பூரணரான பெரிய பெருமாள்-ஸ்ரீ எம்பெருமானார்க்காக
நான் இருந்த இடத்தே வந்து ஹர்ஷ யுக்தராய் முன்னிற்பர் –
(தேவ பிரான் கரிய கோலத் திரு உருக் காண்பன் என்றார் போல் )

இத்தால்-
எனக்கு அபேஷிதமான முகமும் முறுவலும் காட்டி அனுபவிப்பித்து அருளுவர் –
என்பது நிச்சயம் -என்று கருத்து –

—————————————

இனி
நம் பேற்றுக்கு நாம் தவரிக்க வேணுமோ – ஸ்ரீ பெரிய பெருமாள்
ஸ்ரீ எம்பெருமானார்க்கு பண்ணி அருளிய பேறுகள் எல்லாம் அவர் திருவடிகளிலே சம்பந்தம் உடைய நமக்கு
தாயப் பிராப்தமாய் இருப்பது ஓன்று அன்றோ
என்று அத்தைத் தாம் பெற்றதாக திரு உள்ளத்தோடு கூடி ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே நற்றாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ தாய முறை தான் —60-

த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹாசதைவம் வக்தா யாவச் சரீரபாதம் அத்ரைவ ஸ்ரீ ரெங்கே ஸூ கம் அஸ்வ -என்று
அருளிச் செய்து -அநந்தரம் –
நித்ய கிங்கரோ பவிஷ்யசி மாதே பூதத்ர சம்சய
இதி மயை வஹ் யுக்தம்
அத ஸ்தவம் தத்வதோமத் ஜ்ஞான தர்சன பிராப்தி ஷூ நிஸ் சம்யச் ஸூ க மாஸ்வ-என்னும் அளவாக

தேக பாதம் தொடங்கி
கைங்கர்ய பர்யந்தம் உண்டான பேறுகள் எல்லாம்
நாமே தலைக் கட்டித் தருகிறோம் என்று
ஸ்ரீ பெரிய பெருமாள் நமக்கு ஜனகரான ஸ்ரீ எம்பெருமானாருக்கு வழங்கி அருளின வரத்தை நிரூபிக்கில்
அவர்க்கு அவர்ஜ நீயரான நம்மது அன்றோ –

அது எப்படி என்னில்
நிருபாதிக பிதாவானவன் ஸ்வம்-தாய பிராப்தியாலே புத்திரன் தனக்கேயாய் அன்றோ இருப்பது
ஆகையால் நம் பிராப்திக்கு நாமே யத்தனிக்க வேண்டா எல்லாம் சித்தமாய் அன்றோ இருக்கிறது
இனி அவர் இடத்தில் ந்யஸ்த பரராய் இருக்கும் அத்தனையே வேண்டுவது-

ஆக
இத்தால் உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் ஸ்ரீ பெரிய பெருமாளாலே பெற்று ஸ்ரீ உடையவராய்
அத்தாலே ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயியாய்-பிரபன்ன ஜன கூடஸ்தராய்
இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே-
ருசி காரயமாக ஸ்ரீ யதீந்திர பிரவணரான ஸ்ரீ ஜீயர் பண்ணி அருளின
பிராப்ய பிரார்த்தனை

அவர் அபிமான அந்தர்பூதர் எல்லாருக்குமாய் அத்தாலே ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தைப் பெற்று
நித்ய விபூதியிலே நிரந்தர பகவத் அனுபவ கைங்கர்ய நிரதராய் வாழப் பெறுவார்கள்
என்ற அர்த்தம் சொல்லித் தலைக் கட்டிற்று ஆயிற்று –

ஸ்ரீ எதிராசா ஸ்ரீ எதிராசா என்று சம்போதிக்கிறது
எல்லாம் தமக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி யுன்டாகையாலும்
யதஸ் ஸூத்த சத்வா -என்கிறபடி
ஸ்ரீ எதிகளுக்கு நாதர் ஆகையாலும் அத்தை அடிக்கடி ஆதரித்து அருளிச் செய்கிறார் —

——————————————————————

ஸ்ரீ மா முனிகளின் ஆர்த்தி-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவணம் காட்டி அருளும் – தனி பாசுரங்கள் —

எம்பெருமானார் தம் பிரான் என்னுமவரை
நம்பெருமாள் தாம் உகந்து நாள் தோறும் -தம் பரமாய்
ஏறிட்டுக் கொண்டு அளிப்பர் என்னுமவர் தம்மை
வேறிட்டுத் தாம் கைவிடார் -1-

பொல்லான் இவன் என்று போதிடென்று நம் குரவர்
எல்லாரும் என்னை இகழ்ந்தாரோ -நல்லார்கள்
வாழ்வான வைகுண்ட வான் சபையில் வண் கூரத்
தாழ்வான் இருந்திலனோ அங்கு –2-

ஆரியர்காள் ஆழ்வீர் காள் அங்குள்ள முக்தர்காள்
ஸூரியர் காள் தேவியர் காள் சொல்லீரோ நாரணற்கு
எங்கள் அடியான இவனும் ஈடேற வேணும் என்று
உங்கள் அடியாரும் உளர் –3-

தென்னரங்கர் தேவியே ஸ்ரீ ரேங்கர் நாயகியே
மன்னுயிர்கட்க்கு எல்லாம் மாதாவே -என்னை யினி
இவ் வுலகம் தன்னில் இருந்து நலுங்காமல்
அவ்வுலகில் வாங்கி அருள் –4-

ஸ்ரீ ரெங்க நாயகியே தென்னரங்கன் தேவியே
நாரங்கட்க்கு எல்லாம் நல் தாயே -மாருதிக்கு
வந்த விடாய் தன்னை ஒரு வாசகத்தால் போக்கின நீ
எண்ணிட தீராதது என் –5-

இந்த உடம்போடு இனி இறுக்கப் போகாதது தான்
செங்கமலத் தாள்கள் தன்னைத் தந்து அருள் நீ அந்தோ
மையார் கண்ணி மணவாளா தென்னரங்கா
வையாமல் இருப்பாயே இங்கு –6-

இந்த உடம்போடு இரு வினையால் இவ்வளவும்
உந்தனடி சேராது உழன்றேனே -அந்தோ
அரங்கா இரங்காய் எதிராசர்க்காக
இரங்காய் பிரானே இனி –7-

——————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -பாசுரம் -45-60–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 21, 2014

கீழ்
மா காந்த நாரணர் வைகும் வகை -என்று வ்யாப்தியை பிரஸ்தாபித்து
இப்படி சர்வ வ்யாபகனான அவனோடு அநாதியாய் வருகிற சம்பந்தம் யுண்டாய் இருக்க
அத்தை அறியாதே
கீழ் சொன்ன மோஹாந்தரிலே-அந்ய தமராய் இருந்த நான்
ஆச்சார்ய சம்பந்தத்தால் அன்றோ உஜ்ஜீவித்தது என்று
ஸூவ லாபத்தை எப்போதும் அனுசந்தித்துப் போரு என்று
தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

நாராயணன் திருமால் நாரம் நாம் என்னுமுறை
யாராயில் நெஞ்சே யநாதி யன்றோ -சீராரும்
ஆச்சார்யனாலே அன்றோ நாம் உய்ந்தது என்றோ
கூசாமல் எப்பொழுதும் கூறு—45-

திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் -என்கிறபடியே
அவன் ஸ்ரீ யபதி நாராயணன்
நாம் -நாரம் -என்கிற-இந்த அநாதய அயன சம்பந்தம் நிரூபிக்கில்
மனசே-இன்றாக யுண்டானது அன்றே-அநாதியாக வருகிறது அன்றோ –இப்படியாய் இருக்க
நெடும் காலம் சம்பந்த ஞானம் அன்றிக்கே அசித் பிராயமாய் இழந்து அன்றோ கிடந்தது

இப்போது
தத் சம்பந்தத்தை யுணர்த்தின-ஜ்ஞாநாதி குண பரி பூரணராய் இருக்கிற
ஸ்ரீ ஆச்சார்யனாலே அன்றோ நாம் உஜ்ஜீவித்தது என்று –
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் -என்கிறபடியே
லஜ்ஜை அபிமானங்களை விட்டு சர்வ காலமும் பிரசித்தமாக அனுசந்தித்துக் கொண்டு போரு –

இறையும் உயிரும் -இத்யாதி
ஆத்ம நோஹ்யதி நீசச்ய-

—————————————–

கீழ் ஸ்ரீ ஆச்சார்யனாலே அன்றோ நாம் உய்ந்தது -என்கிற
இத்தை விசேஷ நிஷ்டமாக்கி அருளிச் செய்கிறார் –

திருவாய் மொழிப் பிள்ளை தீ வினையோம் தம்மைக்
குருவாகி வந்து உய்யக் கொண்டு -பொருவில்
மதிதான் அளித்து அருளும் வாழ்வு அன்றோ நெஞ்சே
எதிராசர்க்கு ஆளானோம் யாம்—46-

பொருவில் -உபமான ரஹிதமான-

தொண்டர்க்கு அமுது உண்ண சொன்ன மாலையான ஸ்ரீ திருவாய் மொழி -என்றபடி
பூஸூரரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யமாக திரு வவதரித்த ஸ்ரீ திருவாய்மொழியில்
அவகாஹித்து -அதில்
சப்த ரசம்
அர்த்த ரசம்
பாவ ரசம்
என்கிற இவற்றை அனுபவித்து-தத் ஏக நிஷ்டராய்
தத் வ்யதிரிக்த சாஸ்த்ரங்களை த்ருணவத் பிரதிபத்தி பண்ணி

ஸ்ரீ திரு வாய் மொழி யோட்டை சம்பந்தத்தையே நிரூபகமாய் யுடைய ராய்
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே சர்வ வித கைங்கர்யமே அநவரதம் செய்து கொண்டு போரா நிற்கிற
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை
(சடகோபர் தாசர் என்றே இன்றும் அருளப்பாடு உண்டே இவர் வம்சத்தாருக்கு )

ஒப்பிலா தீ வினையேனை உய்யக் கொண்டு -என்கிறபடியே
க்ரூர கர்மாக்களாய் இருக்கிற நம்மை
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே குருவாகி -என்றபடி
ஸ்ரீ ஆச்சார்யராய் திரு வவதரித்து-
நாம் இருந்த இடம் தேடி வந்து உஜ்ஜீவிக்கும்படி அங்கீ கரித்து

சாஸ்திர ஜ்ஞாநாதிகள் போல் அன்றிக்கே
உபமான ரஹிதமான ஸ்ரீ திரு மந்தரத்தால் பிறக்குமதான ஜ்ஞானத்தை யுபகரித்து அருளும் சம்பத் அன்றோ
மனசே-பிராப்த சேஷியான ஸ்ரீ எம்பெருமானார்க்கு அடிமையானோம் -நாம் –

பத த்ரய அர்த்த நிஷ்டை தான்-ததீய பர்யந்தமாய் அல்லாது இராது-என்று கருத்து –

————————————————

ஸ்ரீ எதிராசர்க்கு ஆளானோம் யாம் -என்ற ப்ரீதி யுத்ததியாலே
கீழே
மா கந்த நாரணானார் -என்றும்
நாராயணன் திருமால் -என்றும் ப்ரஸ்துதமான ஸ்ரீ நாராயண சப்தத்தோடு விகல்பிக்கும் படியாக
அதில்
சதுரையாய் இருப்பதான ஸ்ரீ ராமானுஜ -என்கிற திரு நாம வைபவத்தை வெளி இட வேண்டி அத்தை
வ்யதிரேக முகத்தாலே வெளி இட்டு அருளுகிறார் –

இராமானுசாய நம என்று இரவும் பகலும் சிந்தித்து
இரா மானுசர்கள் இருப்பிடம் தன்னில் இறைப் பொழுதும்
இரா மானுசர் அவர்க்கு எல்லா வடிமையும் செய்ய வெண்ணி
இரா மானுசர் தம்மை மானுசராக என் கொல் எண்ணுவதே—–47-

நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் -என்கிறபடியே
ஸ்ரீ ராமானுஜாய நம -என்று திவா ராத்திரி விபாகம் அற அனுசந்திக்க பிராப்தமாய் இருக்க
அத்தைச் செய்யாது இருக்கிற
பசு சமரான மனுஷ்யர்கள் வர்த்திக்கிற ஸ்தலம் தன்னிலே ஷண காலமும் துஸ் சஹமாய் வர்த்தியாது இருக்கிற
ஸ்ரீ ஆழ்வான் போல்வாராய்

சாஸ்திர வச்யரான மனுஷ்ய ஜன்மாக்களுக்கு
எத் தொழும்பும் சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் -என்கிறபடியும்
சர்வ வித கைங்கர்யங்களையும் செய்ய எண்ணி இருக்க பிராப்தமாய் இருக்க
அத்தைச் செய்யாதே இருக்கிற க்ருதக்ன மனுஷ்யர்தங்களை
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேன் -என்கிறபடியே
பசு சமரான அவர்களை மனுஷ்யராக எப்படி எண்ணுவது
பஸூபிஸ் சமான -என்னும் இத்தனை –

——————————————————————-

கீழ்
எல்லா அடிமையும் செய்ய எண்ணி
ஸ்ரீ இராமானுசாயா -என்கிற பிரசங்கத்திலே
தம்முடைய வாகாதி கரணங்களை இப்படியே அவர்கள் விஷயத்தில் அனந்யார்ஹமாம்படி
ஸ்ரீ பெரிய பெருமாள் பண்ணி யருளின படியை
ப்ரீதியாலே பேசி அருளுகிறார் –

எண்ணாது என் நெஞ்சம் இசையாது என் நா இறைஞ்சாது சென்னி
கண்ணானவை யொன்றும் காணலுறா கலியார் நலிய
ஒண்ணாத வண்ணம் உலகு அளித்தோன் எதிராசன் அடி
நண்ணாதவரை யரங்கேசர் செய்த நலம் நமக்கே–48-

கலியார் நலிய ஒண்ணாத வண்ணம் -கலியில் உள்ளார் நலியாத படியும் –
கலி புருஷன் நலியாத படியும்
நலம் -சம்பத்து
இங்கே தேக சம்பத்தி இறே-

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் -என்கிறபடியே
கலியானது-தன்னுடைய க்ரௌர்யத்தினாலே பாதியாதபடி லோகத்தை ரஷித்தவராய்
பேறு ஒன்றும் மற்று இல்லை -என்கிறபடியே
பிராப்ய பிராபகங்களான எம்பெருமானார் திருவடிகளைக் கிட்டி ஆஸ்ரியாதவர்களை

நையும் மனம் உன் குணங்களை எண்ணி -இத்யாதியாலும்
நித்யம் யதீந்திர -இத்யாதியாலும் சொல்லுகிறபடியே
தத் விஷயத்திலே பிரவணமான என்னுடைய மனஸ்ஸூ தொடக்கமான கரணங்கள் ஆனவைகள்
ஸ்மரித்தல்
ஸ்துதித்தல்
பஜித்தல்
தர்சித்தல்
ஆகிற ஸ்வ ஸ்வ கார்யங்களை செய்யாது –

சிந்தையினோடு கரணங்களைத் தந்த ஸ்ரீ ரெங்க ராஜரான ஸ்ரீ பெரிய பெருமாள்
அவை அந்ய சேஷம் ஆகாமல் நமக்குச் செய்த நன்மை இவை யாய்த்து –

இசையாது நா –மன பூர்வோ வாகுத்தர -என்கிறபடியே
அதுக்கு அனந்தர பாவிதான நாவுடைய வாயானது
நாவியிலா லிசை மாலைகள் ஏத்தி -என்கிறபடியே
ஸ்துதி ரூபமான சப்த சந்தர்ப்பங்களைப் பண்ண மாட்டாது –

இறைஞ்சாது சென்னி –
ப்ரணமாமி மூர்த்த்னா -என்னுமவருடைய -சென்னி இறே

கண்ணானவை ஒன்றும் காணலுறா –
கண் கருதிடும் காண
ஸ்ரீ மாதவாங்கரி -என்னும்படியான திருஷ்டிகள்-ஏக தேசமும் தர்சிக்க ஆசைப் படாது –

காணல் உறுகின்றேன் -(நான்முகன்-41 )-என்கிற இடத்துக்கு
காண ஆசைப் படுகிறேன் என்று இறே அருளிச் செய்தது –

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -(நான்முகன் -41)-

காணல் உறுகின்றேன் – – இப்படி இவர் திரு மலையைக் காண ஆசைப் பட்டவாறே –
அவன் தான் திரு மலையில் சம்பத்துக் கிடக்க
வந்து இவர் திரு உள்ளத்திலே புகுந்து அருளினான் –
திருமலையில் சம்பத்தைக் காண ஆசைப்படா நிற்க என் மநோ ரதத்தை விசதம் ஆக்கினார் -என்கிறார் –

கலியார் -என்கிறது
ஏவினார் கலியார் -என்கிறபடியே-பாதகத்வித்தின் உறைப்பை பற்ற வாய்த்து –

———————————————-

எதிராசன் அடி நண்ணாதவரை எண்ணாது -இத்யாதியாலே
தமக்கு சம்சாரிகள் இடத்தில் யுண்டான வைமுக்யத்தை தர்சிப்பித்து மீள
அவர்கள் அனர்த்தத்தைக் கண்டு ஆற்ற மாட்டாதே
அவர்களுக்கு மோஷ உபாயமாக
ஸ்ரீ எம்பெருமானார் உடைய ஆஸ்ரயணாதிகளை விதிக்கிறார் –

நந்தா நரகத்து அழுந்தாமை வேண்டிடில் நா நிலத்தீர்
எந்தாதையான எதிராசனை நண்ணும் என்றுமவன்
அந்தாதி தன்னை யனுசந்திக்குமவன் தொண்டருடன்
சிந்தாகுலம் கெடச் சேர்ந்திரு முத்தி பின் சித்திக்குமே–49-

நந்தா நரகத்து அழுந்தா வகை -என்றும்
நரகத்திடை நணுகா வகை -என்றும் சொல்லுகிறபடியே
ஒரு கால் அனுபவித்து முடியாததாய்
மற்றை நரகம் -என்னும்படி
சம்சாரம் ஆகிற நரகத்தில் மக்னர் ஆகாமை அபேஷிதம் ஆகில்

நாலு வகைப் பட்ட பூமியில் உண்டான வர்களே –
எனக்கு ஜனகரான ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயிங்கோள்-
சர்வ காலத்திலும் மோஷைக ஹேதுவாய் இருக்கிற அவர் திரு நாமத்தை
பாட்டுக்கள் தோறும் பிரதிபாதிப்பதாய்-
அதேவ பிரபன்ன ஜன காயத்ரியாய்-
இருக்கிற அவர் விஷயமான ஸ்ரீ நூற்றந்தாதி தன்னை அனுசந்தியுங்கோள்-

உன் தொண்டர்களுக்கே -என்னும்படி
அவர் திருவடிகளிலே சபலராய் தொண்டு பட்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடன்
தத் இதர சஹவாசத்தால் யுண்டான மநோ துக்கம் எல்லாம் கெட
ஒரு நீராகப் பொருந்தி இருங்கோள்
ஆன பின்பு முக்தி யானது சம்சயம் அற்று சித்திக்கும் –

இத்தால்
இவருடைய ஆஸ்ரயணாதிகளுக்கு தானே
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தியைப் பண்ணும்-என்று கருத்து –

—————————————————————-

அவர்கள் ஆஸ்ரயிக்கிறோம் என்று ஆறி இருக்க மீளவும் அவர்களைக் குறித்து
ஏன் காலத்தை வ்யர்த்தமே போக்குகிறீர்கள்
அவர் திரு நாமத்தை ஸ்மரிக்க அதி துர்பலமான பலம் சித்திக்கும் என்கிறார் –

அவத்தே அருமந்த காலத்தைப் போக்கி யறி வின்மையால் இப்
பவத்தே யுழல்கின்ற பாவியர்கள் பல காலம் நின்று
தவத்தே முயல்பவர் தங்களுக்கும் எய்த ஒண்ணாத வந்தத்
திவத்தே யும்மை வைக்கும் சிந்தியும் நீ எதிராசர் என்றே—50

யத்னம் -அல்பம் -பலம் -அதிகம் –

திரு நாமம் அனுசந்திக்கைக்கு யோக்யமாய் இருப்பதான
ஸ்லாக்கியமான காலத்தை வ்யரத்தமே போக்கி
அஜ்ஞ்ஞானத்தாலே சம்சாரத்திலே பரிப்ரமிக்கிற பாபிகளாய் உள்ளவர்களே

சர்வ காலத்திலும் ஒருபடிப் பட நின்று தபஸ்சிலே உத்சாஹிக்குமவர்களாய் இருக்கும் அவர்களுக்கும்
பிராபிக்கப் போகாமல் இருப்பதாய்

தத்ஷரே பரமேவ்யோமான் -என்று சொல்லுகிற ஸ்ருதி பிரசித்தியை உடைத்தாய் இருப்பதான
அந்த ஸ்ரீ பரம பதத்திலே
நித்ய சம்சாரிகளான உங்களை ஏற்றி நித்யர் உடன் ஒரு கோவை யாக்கி வைக்கும்
அதுக்கு உடலாக கீழ்ச் சொன்னவைகள் தான் நேர்த்தி என்னலாம் படி
அதிலும் எளிதாய் இருப்பதான ஸ்ரீ எம்பெருமானார் திரு நாமத்தை
ஸ்ரீ எதிராசன் என்று நீங்கள் மனசிலே சிந்தியுங்கோள்

நேர்த்தி அல்பமாய்-பலம் அதிகமாய்-இருக்கும்
நேர்த்தி -யத்னம் –

—————————————————–

இனி
சம்சாரிகள் இழவைத் தான் சொல்ல வேணுமோ –
உம்முடைய நிலை இருந்தபடி என் என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக
அவர்களோபாதி அநாதி காலம் எல்லாம் வ்யர்த்தமே போய் இருக்க
அதன் இழவு இன்றிக்கே இருக்கிற எனக்கு தேவர் உடைய கிருபை யுண்டான பின்பு
தத் அலாபக் க்லேசம் யுன்டாய்த்து என்று ஸ்வ லாபத்தைப் பேசி அருளுகிறார்
இழவு -அலாப க்லேசம் –

என்றும் உளன் ஈசன் உயிரும் அன்றே உண்டு இக்காலம் எல்லாம்
அன்று அளவாகப் பழுதே கழிந்தது இருவினையால்
என்று இழவு இன்றி இருக்கும் என்நெஞ்சம் இரவு பகல்
நின்று தபிக்கும் எதிராசா நீ அருள் செய்த பின்னே –51-

தவிக்கும் -தபிக்கும் -பாட பேதங்கள் –

நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை அன்றி இலை-என்கிறபடியே
ஒழிக்க ஒழியாத-அவிநாபாவ -நித்தியமான சம்பந்தம் உண்டாகையாலே
நியந்தாவான ஈஸ்வரன் என்று தொடங்கி சித்தனாய் இருக்கும் –
அப்படியே ஈசிதவ்யனான ஆத்மாவும்-
ப்ருதக் சித்த விசேஷணம் ஆகையாலே அன்றே உண்டாய் இருக்கும்

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -நான்முகன் திருவந்தாதி-7-

அகதியான எனக்கு நீ போக்கி கதி இல்லை
அப்படியே சர்வ பிரகார பரி பூர்ணனான உன்னுடைய க்ருபைக்கு வேறு சிலரை விஷயமாக உடையை எல்லை –
என்றும் ஒக்க இவ்வாத்மா உன் அருளுக்கே விஷயமாய் உன் கடாஷம் ஒழியில்
என் சத்தை இல்லையானபடி-மெய்யாய் இருக்கிறபடி கண்டாயே
அப்படியே-நீயும் என்னாலே உளையாய் என்னை ஒழிய இல்லை யாகிறாய்

இப்படி அன்று தொடங்கி
தேவர் விஷயீ காரம் பெற்ற இன்றளவாக யுண்டான என்னுடைய பிரபல கர்மத்தாலே-
சேஷி சேஷ சம்பந்த ஜ்ஞான கார்யமான கைங்கர்யத்துக்கு
அடைத்த இந்த அநாதி காலம் எல்லாம் வ்யர்த்தமே போயிற்று என்று
இழந்த காலத்துக்கு அனுதபியாமல் இருந்த என்னுடைய மனசானது
தேவர் விசேஷ கடாஷம் அருளிய பின்பு
திவா ராத்ர விபாகம் அற இதிலே ஒருப்பட்டு நின்று பரிதபியா நிற்கும் –

இது என்ன ஸ்வபாவம்
ஒரு கிருபா பிரபால்யம் இருந்தபடியே-

இருவினை –
பெரிய வினைகள் என்றும் –
புண்ய பாபங்கள் என்றும் ஆகவுமாம்-

———————————————————

அனுதாபாதிகள் யுண்டாகவே
ஸ்ரீ எம்பெருமானாருக்காக ஸ்ரீ பெரிய பெருமாள் –
ஸ்ரீ மான் சமாரூட பதங்க ராஜ -என்கிறபடி எழுந்து அருளி அபிமானித்து அருளும்
பேற்றின் கௌரவத்தை அனுசந்தித்து அருளுகிறார் –

கனக கிரி மேல் கரிய முகில் போல்
வினதை சிறுவன் மேற்கொண்டு -தனுவிடும்போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என் பால்
வாரா முன்னிற்பர் மகிழ்ந்து —52-

தனு -சரீரம்

காஞ்சனஸ்ய கிரேஸ் ஸ்ருங்கே ஸ கடித்தோ யதோ யதா -என்றும்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வர்ண மயமான மகா மேருவின் மேலே
பெரும் பவ்யம் மண்டி யுண்ட பெரு வயிற்ற கரு முகிலானது கினியப் படிந்து இருக்குமா போலே
பரபாக ரசா வஹமாம் படி-

விந்தை சிறுவன் என்னும்படியான ஸ்ரீ பெரிய திருவடி மேல் கொண்டு
தேக பாத சமயத்தில் தாய் முகம் காட்டுமா போல்
சௌந்தர் யாதிகளால் பூரணரான பெரிய பெருமாள்-ஸ்ரீ எம்பெருமானார்க்காக
நான் இருந்த இடத்தே வந்து ஹர்ஷ யுக்தராய் முன்னிற்பர் –
(தேவ பிரான் கரிய கோலத் திரு உருக் காண்பன் என்றார் போல் )

இத்தால்-
எனக்கு அபேஷிதமான முகமும் முறுவலும் காட்டி அனுபவிப்பித்து அருளுவர் –
என்பது நிச்சயம் -என்று கருத்து –

—————————————

இப்படி ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ பெரிய திருவடி மேல் கொண்டு வந்து திரு முக பிரதானம்
பண்ணும்படியை அனுசந்தித்து
அதுக்கு இடைச் சுவராய் பாபஸ்பத தேகத்துடன் துஸ் சஹமான துக்கங்களை அனுபவித்து இருக்க முடியாது
ஆகையால் ஹித பிரவர்த்தகரான தேவர் சகல துக்காஸ்பதமான சம்சாரத்தில் நின்றும்
அடியேனை சீக்கிரமாக உத்தரிப்பித்து அருள வேணும் -என்கிறார்

இதத்தாலே தென்னரங்கர் செய்கிறது என்று அறிந்தே
இருந்தாலும் தற்கால வேதனையின் கனத்தால்
பதைத்து ஆவோ வென்னும் இந்தப் பாவ வுடம்புடனே
பல நோவும் அனுபவித்து இப் பவத்து இருக்கப் போமோ
மதத்தாலே வல்வினையின் வழி யுழன்று திரிந்த
வல்வினையேன் தன்னை யுனக்கு ஆளாக்கிக் கொண்ட
இதத் தாயும் தந்தையுமாம் எதிராசா என்னை
இனிக் கடுக இப் பவத்தின் நின்றும் எடுத்தருளே –53-

ஆரப் பெரும் துயரே செய்திடினும் -இத்யாதிப்படியே
ஹித புத்யா பெரிய பெருமாள் க்ருபா பலமாக
துக்கங்களை அனுபவிப்பித்து அருளுகிறார் என்று அறிந்தே இருந்தாலும்
அந்த அந்த காலத்தில் யுண்டான வேதனையின் மிகுதியாலே துடித்து
அந்த துஸ் சஹதையால் யுண்டான விஷாதத்தாலே துக்க ஸூசகமான சப்தங்களை சொல்லும்
இந்த பாப சரீரத்தோடு பஹூ துக்கங்களை அனுபவித்து
துக்கா வஹமான இந்த சம்சாரத்தில் இருக்க சக்யமோ –

பாவியேன் செய்து பாவியேன் -என்கிறபடியே தேக மதத்தாலே பிரபல கர்மத்தின் மார்கத்தாலே
அதுவே யாத்ரையாய் வர்த்தித்த மகா பாபியான என்னை
சத்துக்களுக்கு ஆஸ்ரயணீயராய் இருக்கிற தேவர்க்கு
அடிமை யாக்கிக் கொண்டு அருளின ஹிதத்தை நடத்தவும்
மாதாவும் பிதாவுமாய் இருக்கிற தேவர் சம்பந்தத்தை அறிந்த பின்பு
அடியேனை சீக்கிரமாக இந்த சம்சாரத்தில் நின்றும்
மாந்தாரய -என்னும்படி எடுத்துக் கரை ஏற்றி அருள வேணும் –

அவர்ஜ நீய சம்பந்தம் அடியாக இறே உத்தரிப்பித்து அருளுவர்-என்று கருத்து –

———————————————————

இப்படி இவர் அபேஷித்த படியே
ஸ்ரீ எம்பெருமானாரும் இவர் அபேஷிதம் எல்லாம் செய்வாராக எண்ணி இருக்க
இவருக்கு அது பற்றாமல்-ஒரு பகல் ஆயிரம் ஊழியாய் மீளவும் அவர் தம்மைப் பார்த்து
சர்வவித பந்துவாய் இருக்கிற தேவர்
நான் இந்த தேஹத்தோடே இருந்து துக்கப் படாமல்
என்று தான் நலமந்தம் இல்லாதோர் நாட்டிலே சேரும்படி ஏற்றி அருளுவது என்கிறார் –

இன்னும் எத்தனை நாள் இவ் வுடம்புடனே
இருந்து நோவு படக் கடவேனையோ
என்னை இதினின்றும் விடுவித்து நீர்
என்று தான் திரு நாட்டில் ஏற்றுவீர்
அன்னையும் அத்தனும் அல்லாத சுற்றமும்
ஆகி என்னை அளித்து அருள் நாதனே
என்னிதத்தை இராப்பகல் இன்றியே
ஏகம் எண்ணும் எதிராச வள்ளலே—–54-

வள்ளல் -பிரத்யுபகார ரஹிதமாக யுபகரிக்கும் உதாரர்-

அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் -என்கிறபடியே
பிரிய ஹிதங்களைப் பண்ணுகிற மாதா பிதாக்களும்
மற்றும் அனுக்தமான அசேஷ பந்துக்களும் எல்லாமுமாய்-என்னை ரஷித்து அருளுகிற நாதனே –
என் மனம் ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே -என்கிறபடியே
என்னுடைய ஹிதத்தை திவா ராத்திரி விபாகம் அற ஒருபடி சிந்திக்கிற பரம உதாரராய்
எதிகளுக்கு நாதர் ஆனவரே

உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ -என்கிறபடியே
தேவர்க்கு சேஷ பூதன் ஆன பின்பு
இன்னம் எத்தனை காலம் இந்த தேஹத்திலே இருந்து வேதனை படக் கடவேன்
ஐயோ-அடியேனை பந்தமான இந்த தேகத்தில் நின்றும் முக்தனாம்படி பண்ணி
என்று தான் திரு நாட்டின் உள்ளே ஏற்றி அருளுவுதீர் –
அந்நாளும் ஒரு நாள் ஆமோ

——————————————

செய்த அம்சத்தில் ‘க்ருதஞ்ஞதையும் செய்ய வேண்டிய அம்சத்தில் அபேஷிதையும்
அதிகாரிக்கு வேண்டுவது ஒன்றாகையாலே
அந்த கிருதஞ்ஞதா ஸூசகமாக ஸ்ரீ எம்பெருமானார் யுடைய பிரசாதத்தாலே
தாம் பெற்ற பேறுகளை அனுசந்தித்து -வித்தராய் – அருளுகிறார் –

தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை யுணவாகப் பெற்றோம்
மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுதுபோக்காகப் பெற்றோம்
பின்னை ஓன்று தனில் நெஞ்சு போராமை பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே–55-

உள்ளுதல் -விசாரித்தல் –

தர்சநீயமான ஸ்ரீ கோயிலிலே –
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆள் கொள்வாராய்-
அன்போடு தென் திசை நோக்கிப் பள்ளி கொண்டு அருளுகிற
ஸ்ரீ பெரிய பெருமாள் நிர்ஹேதுக கிருபைக்கு லஷ்யமாகப் பெற்றோம் –

தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கத் திருப்பதி -என்றும் –
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -என்றும்
தலையரங்கம் -என்றும்
சொல்லுகிறபடியே -அகில திவ்ய தேச பிரதானமான
ஸ்ரீ திருவரங்கத் திருப்பதியே நித்ய வாசஸ் ஸ்தானமாகப் பெற்றோம் –

பரபக்தியாதி கல்யாண குணங்கள் பொருந்தி இருக்கிற ஸ்ரீ ஆழ்வாருடைய
தொண்டர்க்கு அமுதான வகுள பூஷண வாக் அம்ருதத்தையே அன்னமாகப் புஜிக்கப் பெற்றோம்-

தேவு மற்று அறியேன் -என்கையாலே அவர்களை சிரித்து இருப்பார் -என்னும்படியான
ஸ்ரீ மதுர கவிகளுடைய திவ்ய ஸூக்திப்படியே
யதீந்திர மேவ நிரந்தரம் சிஷே வேதை வதம்பரம் -என்றும்
உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா மன்னு புகழ் சேர் வடுக நம்பி தன்னிலைமை -என்றும்
நாமும் நம்முடையாரும் பேசும் படியான சரம பர்வ நிஷ்டையே நிஷ்டையாகப் பெற்றோம் –

தத் பிரதிபாதகங்களான நம்முடைய பூர்வாச்சார்யர்கள் உடைய திவ்ய ஸூக்திகளான
ரஹஸ்யங்களை-நெஞ்சு தன்னால் தேறலுமாம் –என்னும்படி
மேல் எழ அன்றிக்கே ஆந்தரமாக அனுசந்திக்கப் பெற்றோம்

அதில் ஆதர அதிசயத்தை உடைய நமக்கு மற்று ஒன்றில் பொழுது போக்காமல்
முழுதும் அவற்றையே கால ஷேபமாகப் பெற்றோம் –
இப்படியான அநந்தரம் தத் இதர கிரந்தங்களில் ஒன்றிலும்-மனஸ்ஸூ சலியாமல்
இதிலியே பிரதிஷ்டிதமாம் படி இருக்கப் பெற்றோம்

இது எல்லாம் ஒரு தட்டும் -தான் ஒரு தட்டுமாய் இருக்குமதாய்
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து இருக்கையும் -என்னும்படி அரிதாய் இருப்பதான
பர உச்சாராயம் கண்டால் அசஹிஷ்ணுதை இல்லாத மஹாத்மத்தையும் லபிததோமே-

இது ஒரு மகா லாபம் இருந்தபடியே —

—————————————-

ஸ்ரீ மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம் -என்று
தம்முடைய நிலையை வெளி இடா நின்று கொண்டு
அதுக்கு அனுரூபமாக அவர் திருவடிகளிலே கைங்கர்யத்தை அபேஷிககிறார்-

உன் தன் அபிமானமே உத்தாரகம் என்று
சிந்தை தெளிந்து இருக்கச் செய்த நீ -அந்தோ
எதிராசா நோய்களால் என்னை நலக்காமல்
சதிராக நின் திருத் தாள் தா –56

எதிகளுக்கு நாதர் ஆனவரே -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்னும்படி
தேவருடைய அபிமானமே இவ்வாத்மாவுக்கு உத்தாரகம் என்று
தெளிவுற்ற சிந்தையர் -என்னும்படி-மன பிரசாதம் யுண்டாய்
தன் நிஷ்டராய் இருக்கும்படி பண்ணி -உபகரித்து அருளின தேவர்

ஐயோ
வேதனைகளால் அடியேனை நலக்கேடு பண்ணாமல்
நேமாம் பிரக்ருதிம் ஸ்தூல சூஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய -என்றபடி சாமர்த்தியமாக
உன் பாத யுகமாமேர் கொண்ட வீடு -என்கிறபடியே தேவர் திருவடிகளையே பிரசாதித்து அருள வேணும் –

—————————————————

இப்படி நீர் சொல்லுகிற நிர்பந்தங்கள் எல்லாம் கேட்டு நாம் உம கார்யம் செய்கைக்கு
எந்த சம்பந்த பிராபல்யம் கொண்டு தொடருகிறீர்-என்ன
ஸ்ரீ பிள்ளை திருவடிகளை ஆஸ்ரயித்த ராஜ குல மகாத்ம்யத்தாலே ஒரு வஸ்து என்று அபிமானித்து
அடியேனுடைய அபராதம் பாராத தேவர்
யதீஸ்வர ஸ்ருணு ஸ்ரீ மன் கிருபயா பரயா தவ -என்கிறபடியே
அடியேனுடைய முக்த ஜல்பிதத்தை செவி தாழ்த்து கேட்டு அருள வேணும் என்கிறார் –

தேசிகர்கள் போற்றும் திருவாய் மொழிப் பிள்ளை
வாச மலர்த்தாள் அடைந்த வத்து வென்று -நேசத்தால்
என் பிழைகள் காணா எதிராசா அடியேன்
புன்பகர்வைக் கேளும் பொறுத்து—57-

தேசிக குல கூடஸ்தரான ஸ்ரீ ஆழ்வார் உடைய அசேஷ வ்ருத்தியிலும் அந்விதராய்
அதுவே யாத்ரையாகச் செய்து கொண்டு போருகையாலே
செந்தமிழ் வேத திருமலை ஆழ்வார் வாழி-என்று ஸ்ரீ ஆச்சார்யர்களாலே மங்களா சாசனம் பண்ணும் படியான
மகாத்ம்யத்தை உடையரான ஸ்ரீ பிள்ளை யுடைய சௌகந்த்ய சௌகுமார்ய யுக்தமான
திருவடிகளை ஆஸ்ரயித்து

சேஷத்வ ஆஸ்ரயமான வஸ்து என்கிற ஸ்நேஹத்தால்-அடியேனுடைய அபராதங்களை தர்சியாதே
அதில் அவிஞ்ஞாதா வாய் இருக்கிற தேவர் அடியேனுடைய தோஷ யுக்தமான
முக்த ஜல்பிதத்தை சீறாமல் சஹித்து நின்று சாதாரமாக திருச் செவி சாத்தி அருள வேணும் –

———————————————————–

ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை வாச மலர்த்தாள் அடைந்தது – என்கிற மாத்ரமேயோ
அவராலே லப்த ஞானனான எனக்கு-த்வத் சம்பந்த ஞானம் இல்லையோ -என்கிறார்-

எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்
உன் தன உறவை உணர்த்திய பின் -இந்த யுயிர்க்கு
எல்லா வுறவும் நீ என்றே எதிராசா
நில்லாதது வுண்டோ என் நெஞ்சு —-58-

ஸ்ரீ திருமந்தரம் மாதாவும் பிதா ஸ்ரீ ஆச்சார்யனும் என்று அருளிச் செய்வார்கள் -என்கிறபடியே
எனக்கு ஜனகரான ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை தம்முடைய நிர்ஹேதுக கிருபையாலே
தேவர் திருவடிகளிலே சர்வ வித பந்துத்வத்தையும்-அஜ்ஞ்ஞாதஞாபனம் பண்ணி ரஷித்து அருளின
அநந்ரம்
இப்படி யுண்டான சம்பத்தத்தை அறிந்த இவ்வாத்மாவுக்கு மாத்ரா பிரதிபாத்யமான நவ வித சம்பந்தமும்
தேவர் என்று அத்யவசித்து அதில் நிலை நில்லாதே இருக்குமது உண்டோ -என்னுடைய மனஸ்ஸூ –

தந்தை நல் தாய் தாரம் தனயர் பெரும் செல்வம் என் தனக்கு நீயே -என்றும்
அல்லாச் சுற்றமுமாகி -என்றும் அன்றோ இருப்பது-

————————————–

இப்படி தேவர் திருவடிகளிலே சம்பந்த ஞானத்தை உடைய எனக்கு
ஹித பரரான ஸ்ரீ பெரிய பெருமாள்
ஸ்ரீ பெரிய திருவடியை மேற்கொண்டு வந்து
முக தர்சனம் யுண்டாக்கி
தாமே மார்க்க சிந்தை பண்ணி
தேக விமோசனம் பண்ணும் கால அவதியை
அருளிச் செய்ய வேணும் என்கிறார் –

எந்தை திருவரங்கர் ஏரார் கருடன் மேல்
வந்து முகம் காட்டி வழி நடத்த -சிந்தை செய்து இப்
பொல்லா வுடம்பு தனைப் போக்குவது எந்நாள் கொலோ
சொல்லாய் எதிராசா சூழ்ந்து —–59-

எனக்குத் தந்தையும் தாயும் ஆவாராய் ஸ்ரீ கோயிலை இட்டு நிரூபிக்கும் படியான ஸ்ரீ பெரிய பெருமாள்
அஞ்சிறைப் புள் பாகரான ஆகாரம் தோன்ற
சௌந்தர் யாதிகளால் மிக்கு இருக்கிற ஸ்ரீ பெரிய திருவடி மேல்
கொண்டு எழுந்து அருளி

சரீர வியோக சமயத்திலே
எனக்கு அபேஷிதமான கஸ்தூரி திரு நாமத்தையும்
நல் கதிர் முத்தம் வெண்ணகை செவ்வாய் -என்று முறுவலை யுடைத்தான
ஒளி மதி சேர் திரு முகத்தையும் காட்டி அனுபவிப்பித்து

அரங்கத்து உறையும் இன் துணைவனான தான் அர்ச்சிராதி மார்க்கத்திலே கொண்டு போய்-
நயாமி -யில் படியே வழி நடத்த மனனம் பண்ணி –
உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே-என்னும்படியே
அதுக்கு அந்தர பாவியாக வந்த ஹேயமான தேஹம் தன்னை தேவர்க்காகப் போக்கி அருளுவது எந்நாள்
அத்தை நான் தேறி இருக்கும்படி விசாரித்து அருளிச் செய்து அருளுவீர்

பூர்ணே சதுர்தசே வர்ஷே -என்று நாள் அவதி இட்டு
பின்பு
ஆருரோ ஹரதம் ஹ்ருஷ்ட -என்று ஹ்ருஷ்ட யுக்தராய் இருந்தால் போலே
அது கொண்டு நான் ஹ்ருஷ்டனாக இருக்கலாய்த்து

அன்றிக்கே
சூழ்ந்து -என்கிறது-
ஸ்ரீ பெரிய பெருமாள் அவா அறச் சூழ்ந்தபடி யாகவுமாம்–

சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து -என்னும் இடத்துக்கு
விசாரித்து -என்று இறே வியாக்யானம் பண்ணி அருளினார்கள்-

—————————————

இனி
நம் பேற்றுக்கு நாம் தவரிக்க வேணுமோ – ஸ்ரீ பெரிய பெருமாள்
ஸ்ரீ எம்பெருமானார்க்கு பண்ணி அருளிய பேறுகள் எல்லாம் அவர் திருவடிகளிலே சம்பந்தம் உடைய நமக்கு
தாயப் பிராப்தமாய் இருப்பது ஓன்று அன்றோ
என்று அத்தைத் தாம் பெற்றதாக திரு உள்ளத்தோடு கூடி ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே நற்றாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ தாய முறை தான் —60-

த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹாசதைவம் வக்தா யாவச் சரீரபாதம் அத்ரைவ ஸ்ரீ ரெங்கே ஸூ கம் அஸ்வ -என்று
அருளிச் செய்து -அநந்தரம் –
நித்ய கிங்கரோ பவிஷ்யசி மாதே பூதத்ர சம்சய
இதி மயை வஹ் யுக்தம்
அத ஸ்தவம் தத்வதோமத் ஜ்ஞான தர்சன பிராப்தி ஷூ நிஸ் சம்யச் ஸூ க மாஸ்வ-என்னும் அளவாக

தேக பாதம் தொடங்கி
கைங்கர்ய பர்யந்தம் உண்டான பேறுகள் எல்லாம்
நாமே தலைக் கட்டித் தருகிறோம் என்று
ஸ்ரீ பெரிய பெருமாள் நமக்கு ஜனகரான ஸ்ரீ எம்பெருமானாருக்கு வழங்கி அருளின வரத்தை நிரூபிக்கில்
அவர்க்கு அவர்ஜ நீயரான நம்மது அன்றோ –

அது எப்படி என்னில்
நிருபாதிக பிதாவானவன் ஸ்வம்-தாய பிராப்தியாலே புத்திரன் தனக்கேயாய் அன்றோ இருப்பது
ஆகையால் நம் பிராப்திக்கு நாமே யத்தனிக்க வேண்டா எல்லாம் சித்தமாய் அன்றோ இருக்கிறது
இனி அவர் இடத்தில் ந்யஸ்த பரராய் இருக்கும் அத்தனையே வேண்டுவது-

ஆக
இத்தால் உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் ஸ்ரீ பெரிய பெருமாளாலே பெற்று ஸ்ரீ உடையவராய்
அத்தாலே ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயியாய்-பிரபன்ன ஜன கூடஸ்தராய்
இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே-
ருசி காரயமாக ஸ்ரீ யதீந்திர பிரவணரான ஸ்ரீ ஜீயர் பண்ணி அருளின
பிராப்ய பிரார்த்தனை

அவர் அபிமான அந்தர்பூதர் எல்லாருக்குமாய் அத்தாலே ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தைப் பெற்று
நித்ய விபூதியிலே நிரந்தர பகவத் அனுபவ கைங்கர்ய நிரதராய் வாழப் பெறுவார்கள்
என்ற அர்த்தம் சொல்லித் தலைக் கட்டிற்று ஆயிற்று –

ஸ்ரீ எதிராசா ஸ்ரீ எதிராசா என்று சம்போதிக்கிறது
எல்லாம் தமக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி யுன்டாகையாலும்
யதஸ் ஸூத்த சத்வா -என்கிறபடி
ஸ்ரீ எதிகளுக்கு நாதர் ஆகையாலும் அத்தை அடிக்கடி ஆதரித்து அருளிச் செய்கிறார் —

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆர்த்தி பிரபந்தம் -பாசுரம் -33-44-பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 20, 2014

அவதாரிகை –

கீழே
ப்ராசங்கிகமாய் வந்த மங்களா சாசனத்திலே -மண்டி அனுபவித்து
ப்ரா சாங்கிகம் பரி சமாப்ய பிரகிருதம் அனுசரதி -என்கிறபடியே
மீளவும் பிரக்ருதத்திலே இறங்கி

சர்வ லோகத்தில் உண்டான சர்வ துரிதங்களும் போம்படி திரு வவதரித்து ரஷித்து அருளினால் போலே
அடியேனுடைய அஞ்ஞானத்தைப் போக்கி அடிமை கொண்ட ஸ்வாமி யானவரே

அடியேனுடைய பிரகிருதி சம்பந்த நிபந்தமாய் யுண்டான தேக ஸ்திதி
தத் விமோசன காலாதி நியமங்களை எல்லாம் அறிந்து அருளும் சர்வஜ்ஞ்ஞரான தேவர்
அஜ்ஞ்ஞனான அடியேனை விலஷணமான தேசத்தில் ஆரோஹிப்பித்து அருள
திரு உள்ளமாகில் விஸ்மரித்து இருக்கிறதுக்கு ஹேது ஏது-என்று
அவர் தம்மையே கேட்கிறார்-

இன்னம் எத்தனை காலம் இந்த வுடம்புடன் யான் இருப்பேன்
இன்னபொழுது உடம்பு விடும் இன்னபடி யது தான்
இன்ன விடத்தே எதுவும் என்னும் இவை எல்லாம்
எதிராசா நீ யறிதி யான் இவை யொன்று அறியேன்
என்னை இனி இவ் உடம்பை விடுவித்து உன்னருளால்
ஏராரும் வைகுந்தத்து ஏற்ற நினைவுண்டேல்
பின்னை விரையாமல் மறந்து இருக்கிறது என் பேசாய்
பேதைமை தீர்த்து எனை யடிமை கொண்ட பெருமானே –33

பேதைமை தீர்த்து-த்வத் சம்பந்த ஜ்ஞான சூன்யத்தை யாகிற மௌக்ர்யத்தைப் போக்கி

சேஷ பூதனான அடியேனை-வினையேனை உனக்கு அடிமை அறக் கொண்டாய் -என்கிறபடியே
சேஷத்வ அனுகுணமான தாஸ்யத்தை கொண்டு அருளின ஸ்வாமி யானவரே
இன்னம் எத்தனை காலாவதி இந்த ஹேயமான தேஹத்தோடே-இதில் பொருத்தம் அற்று இருக்கிற நான் இருப்பேன்
இன்ன காலத்தில் தேஹம் முக்தமாம்-இன்ன பிரகாரத்தில் இந்த தேக விமோசனம் இந்த ஸ்தலத்திலே
என்று சொல்லப் படுகிற இவை எல்லாம்-எதிகளுக்கு நாதரானவரே சர்வஜ்ஞ்ஞரான தேவர் அறிந்து அருள்வீர்
அஜ்ஞ்ஞனான நான் இவற்றில் ஏக தேசமும் அறியேன்-

ஆன பின்பு இத் தேகத்தோடு பொருத்தம் அற்று இருக்கிற என்னை
இனி தேவர் கிருபையாலே-இச் சரீரத்தை விடுவித்து
திவ்ய அலங்கார பரிபூரணமான பரம பதத்தில் ஏற்றத் திரு உள்ளம் உண்டாகில்
அநந்தரம்
விண்ணுலகம் தருவானே விரைகின்றான் -என்கிறபடியே
த்வரியாமல்-நிருத்யோகராய்-விஸ்மரித்து எழுந்து அருளி இருக்கிறதற்கு ஹேது ஏது
அத்தை அருளிச் செய்து அருளீர் –

தேவர்க்கு கிருபை யுண்டாய் இருக்க-விளம்ப ஹேதுவான சாதனம் இத்தலையில் இல்லையே இருக்க
கால விளம்பம் கார்யம் என் என்று கருத்து –

அமர்ந்து இருக்கிறது என் பேசாய் -என்றும் பாட பேதம்

நினைவுண்டேல் என்று
சித்தவத் கரிக்கறதாகவுமாம்-

—————————————————————

நமக்கு கிருபை யுண்டானாலும்-எத்தனை தயவான்களையும் நிர்க்ருணராம் படி பண்ணுவதான
உம்முடைய பிரபல பிரதி பந்தகங்கள் கிடந்தே என்று ஸ்ரீ எம்பெருமானார்க்கு நினைவாக

சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி -என்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரன் தேவர்க்கு விதேயன் அன்றோ –
ஆகையாலே த்வத் அனந்யனான நான் பாப பலன்களை புஜியாமல் முக்தனாம் படி பண்ண வேணும் -என்கிறார் –

முன்னை வினை பின்னை வினை பிராரத்தம் என்று
மூன்று வகையான வினைத்தொகை யனைத்தும் யானே
என்னை யடைந்தோர் தமக்குக் கழிப்பன் என்னும் அரங்கர்
எதிராசா நீ இட்ட வழக்கன்றோ சொல்லாய்
உன்னை யல்லது அறியாத யான் இந்த வுடம்போடு
உழன்று வினைப்பயன் புசிக்க வேண்டுவது ஓன்று உண்டோ
என்னுடைய விரு வினையை இறைப் பொழுதின் மாற்றி
ஏராரும் வைகுந்தத்து ஏற்றி விடாய் நீயே —–34-

பூர்வாகம் உத்தராகஞ்ச சமாரப்தமகம்ததா -என்கிறபடியே
பூர்வாகம் உத்தராகம் ஆரப்தம் -என்று சொல்லப் படுகிற வர்க்கத் த்ரயமானபாப சமூஹங்கள்
ஆன எல்லாவற்றையும்-மாம் ஏகம் சரணம் வ்ரஜ -சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று
சஹாயாந்தர நிரபேஷனாய்க் கொண்டு –

சர்வஜ்ஞத்வ சர்வசக்த்வ விசிஷ்டனான நானே
வாத்சல்யாதி குண விசிஷ்டனான என்னை-அநந்ய சரணராய் சரண வரணம் பண்ணின பிரபன்னர் ஆனவர்கள்
தங்களுக்கு அப்படிப் பட்ட அகில பாபங்களையும் சவாசனமாக போக்குவன் என்று அருளிச் செய்த
செம்மை யுடைய திருவரங்கரான ஸ்ரீபெரிய பெருமாள் –

எதிகளுக்கு நாதர் ஆனவரே -வச்யஸ் சதாபவதிதே -என்கிறபடியே த்வத் அதீனர் அன்றோ –
இவ்வர்த்தம் யதார்த்தம் என்னுமது தேவர் தாம் அருளிச் செய்யல் ஆகாதோ
இப்படி ஈஸ்வர வசீகாரத்தை உடைய தேவரை ஒழிய
வேறு ஒரு ரஷகாந்தரம் அறியாதே-அநந்ய கதியாய் இருக்கிற நான்
இந்த தேஹத்தோடே பொருந்தி அதுவே யாத்ரையாக இருந்து
தத் கார்யமான பாப பலங்களை புஜிக்க வேணும் என்ற ஒரு நிர்பந்தம் உண்டோ

பாபங்களுக்கும் எனக்கும் என்ன சேர்த்தி உண்டு-
இப்படியான பின்பு என்னாலே அனுபாவ்யமாய் இருக்கிற பிரபல கர்மங்களை
கடிவார் தீய வினைகள் நொடியாரும் அளவைக் கண் -என்கிறபடியே
ஷண காலத்திலே சவாசனமாகப் போக்கி நான் தரைக்கிடை கிடவாமல் ஏர்கொள் ஸ்ரீ வைகுந்த மா நகரத்திலே
த்வத் ஏக பரமாய் அற்ற பின்பு ஏற்றிவிட்டு அருளீர் –

ஏர் -அழகு
ஆர்தல் -மிகுதி-

——————————————-

அடியேனுடைய சகல பிரதிபந்தகங்களைப் போக்கி ரஷித்து அருளுகையில் யத்னம் பண்ணி அருளுகிற தேவர்
கிருபையாலே நித்ய கைங்கர்யம் கொண்டு அருள சங்கல்ப்பித்து இருக்க
அத்தையும் அதிகரித்துப் -அதிகிரமித்து -போவதான என்னுடைய
ருசி விரோதியாய் இருக்கிற இந்த்ரிய வியாபார வஸ்யதைக்கு அடியான பாபங்களைப் போக்கி
த்வத் ஏகம் அநாவாம் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

அருளாலே அடியேனை யபிமாநித்து அருளி
அநவரதம் அடிமை கொள்ள நினைத்து நீ இருக்க
மருளாலே புலன் போக வாஞ்சை செயும் என் தன்
வல் வினையை மாற்றி யுன் பால் மனம் வைக்கப் பண்ணாய்
தெருளாரும் கூரத் தாழ்வானும் அவர் செல்வத்
திரு மகனார் தாமும் அருளிச் செய்த தீமைத்
திரளானது இத்தனையும் சேரவுள வென்னைத்
திருத்தி யுயக் கொள்ளும் வகை தேரும் எதிராசா—-35-

கூர நாத பட்டாக்ய தேசிக வரோக்த சமஸ்த நைச்யம் அத்யாப்ய சங்குசிதமேவ -என்கிறபடியே
ஜ்ஞான பரிபூர்ணரான ஸ்ரீ கூரத் ஆழ்வானும்
அவர் திரு வயிற்றிலே அவதரிக்கும் படியான ஸ்ரீயை உடையராய் அது அடியாக ஸ்ரீ ரெங்கராஜ கமலா பதலாளி தத்வம் –
என்னும்படி ஸ்ரீ மத் குமாரரான ஸ்ரீ பெரிய பட்டர் தாமும்
ஸ்வ ஸ்வ நைச்யங்களை – புத்வாசநோச -என்றும் -அதிகிராமன் நாஜ்ஞ்ஞம்-என்றும்
இத்யாதியாலே அருளிச் செய்த பாப சமூஹங்கள் ஆனவை ஓன்று ஒழியாமல் எல்லாம் சேர யுண்டான என்னை

செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் -என்னும்படி
திருத்தி உஜ்ஜீவிக்கப் பண்ணி கொண்டு அருளும் பிரகாரம் சிந்தித்து அருளுமவரே –
தேவருடைய கேவல கிருபையாலே
அடியேனை அங்குற்றைக்கு அனன்யார்ஹனாய் ஆகும்படி அபிமானித்து அருளி
நிரந்தரம் நித்ய கைங்கர்யம் கொண்டு அருள தேவர் திரு உள்ளம் பற்றி இருக்க
அத்தை அறிய ஒட்டாத அஜ்ஞ்ஞானத்தாலே-சப்தாதி போக ருசிர் அந்வஹமே ததேஹா -என்கிறபடியே

இந்தரிய பரிச்சின்னங்களான விஷய போகங்களில் வாஞ்சையைப் பண்ணும்
என்னுடைய வ நிவர்த்யமான பிரபல கர்மங்களை அதில் நின்றும் முகம் மாறப் பண்ணி
தன் பால் மனம் வைக்கத் திருத்தி -என்கிறபடியே
பிராப்த சேஷியானதேவர் விஷயத்தில் மனசை வைக்கும்படி பண்ணி அருள வேணும்
யதான்வயமாக யோஜிக்கவுமாம் –

———————————————————–

மருளாலே புலன் போக வாஞ்சை செயும் என் தன் வல் வினையை மாற்றி -என்ற பின்பு
அவை நடை யாடக் காண்கையாலே
அத்யந்த ஹேயமாய் இருக்கிற விஷய அனுபவ சுக வாஞ்சையானது
அடியேனுடைய மனசை பலாத்காரத்தோடே தான் மேலிடா நின்றது
அதுக்கு ஹேது வாசன கர்மங்கள் இன்னது என்று அறியேன் -என்கிறார்

வாசனையில் ஊற்றோமோ மாளாத வல்வினையோ
ஏது என்று அறியேன் எதிராசா -தீதாகும்
ஐம்புலனில் ஆசை அடியேன் மனம் தன்னை
வன்புடனே தான் அடரும் வந்து—36-

இவ் வாத்மாவுக்கு அத்யந்தம் பொல்லாங்கு தானாய் இருக்கிற ஐங்கருவி கண்ட இன்பம் -என்னும்படி
இந்த்ரிய பரிச்சின்னமான விஷய ஸூகங்களில் அபேஷை–ஹரந்தி பிரசபம் மன -என்கிறபடியே
தேவர் திருவடிகளைப் பற்றி இருக்கிற அடியேனுடைய மனசை மேல் விழுந்து வந்து பலாத்காரத்தோடே
விஷயங்களில் மூட்டுவதாக தான் மேலிடா நின்றது –

இந்த ருசிக்கு ஹேது
துர்வாசநாத் ரடிமதஸ் ஸூ க மிந்த்ரியோத்தமம் ஹாதும் நமே மதிறலாம் வரதாதிராஜா -என்கிறபடி
அநாதி பாப வாசனையிலே பற்றி இருக்கிற தார்ட்ய்யமோ –

அன்றிக்கே
மதியிலேன் வல்வினையே மாளாதோ -என்னும்படி
அதுக்கும் அடியாக அனுபவ விநாச்யம் ஆதல் பிராயச் சித்த விநாச்யம் ஆதல்

அன்றிக்கே
இருப்பதான என்னுடைய பிரபல கர்மமோ-இது ஏது என்று அறிகிறிலேன்-

இதுக்கு நிதானம் ஏது என்று அறிந்து-அத்தை தேவரே நிவர்ப்பித்து அருள வேணும் என்று கருத்து –
அடருகை -மேலிடுகை-

அருளாலே
வாசனை
என்கிற இரண்டு பாட்டாலும் ஐம்புலன் என்று விஷயங்களைச் சொல்லுகிறது –

—————————————————————–

நீர் இந்த்ரியங்கள் உடைய தோஷத்தை அனுசந்தித்து பதறுகிறீர்
நாம் தாமும் அவற்றின் கையில் காட்டிக் கொடோம் காணும்
இப்படி அஞ்சுகிற யும்மை சம்சாரத்திலே வைக்கிறது
ஆர்த்தி -அதிகார பூர்த்திக்கு என்னுமது முக்கியம் -என்கிறபடி

இத்தாலே நிறம் பெறுவதான ஆர்த்தி அதிகாரம் பிறக்கும் தனையும் காணும் ஆகையால்
அது பிறந்த பின்பு உம்முடைய அபேஷீதத்தை செய்து தலைக் கட்டுகிறோம் காணும் என்று
ஸ்ரீ எம்பெருமானார்க்கு கருத்தாக

இவ்வளவாக இல்லாத அதிகாரம் இனி மேல் என்ன உண்டாகப் போகிறது
இந்த அதிகார சம்பத்தியும் உண்டாக்கி அபேஷித சம்விதானத்துக்கு விரோதியான பாப சமூஹத்தை சேதித்து
பிராப்ய தேசத்தை பிராப்பியாததுக்கு ஹேது ஏது என்கிறது-

இன்றளவும் இல்லாத வதிகாரம் மேலும் எனக்கு
என்று உளதாம் சொல்லாய் எதிராசா -குன்றா
வினைத் தொடரை வெட்டி விட்டு மேலை வைகுந்தத்
தெனைக் கடுக வேற்றாதது என் —37-

இன்று திருநாடும் எனக்கு அருள எண்ணுகின்றாய் -என்னும்படியான இன்றளவும் இல்லாத அதிகாரம்
இனிமேல் என்று உண்டாவதாம் – இப்போது உண்டாகாததோ இனி மேல் உண்டாகிறது
இத்தை தேவர் அருளிச் செய்ய வேணும்
இப்படி ருசி விரோதியாய்-ஒன்றாலும் நசியாமை இருப்பதான
தொன் மா வல்வினைத் தொடர் -என்னும்படியான
பாப அனுபந்தத்தை சேதித்துப் பொகட்டு-
மேலை வைகுந்தத்து இருத்தும் -என்கிறபடி

சர்வோத்தரமான தேசத்திலே-அதிலே அபேஷை உடைய அடியேனை
அஜ்ஞ்ஞாநாவஹாமான சம்சாரத்திலே நின்றும்-சீக்ரமாக ஆரோபியாததற்கு ஹேது ஏது –
என்னாலே எல்லாம் அசக்யமாய்-தேவராலே எல்லாம் சக்யமாய் இருந்த பின்பு
தாழ்கைக்கு ஒரு ஹேதவாந்தரம் இல்லை என்று கருத்து-

——————————————————-

இன்று அளவும் இல்லாத அதிகாரம் -என்றத்தை
தார்கிக லௌகிக சப்த நியாயத்தாலே-தர்சிப்பியா நின்று கொண்டு
தத்தேது பூர்வமாக அத்தை அருளிச் செய்கிறார் –

அஞ்சில் அறியாதார் ஐம்பதிலும் தாம் அறியார்
என் சொல் எனக்கோ எதிராசா -நெஞ்சம்
உன்ன தாள் ஒழிந்த வற்றியே யுகக்க இன்றும்
அனுதாபம் அற்று இருக்கையால் —38-

எதிகளுக்கு நாதர் ஆனவரே
தீ மனம் -என்னும்படி சூத்திர விஷயங்களிலே மண்டி இருக்கிற மனசானது
யாதானும் பற்றி நீங்கும் -என்கிறபடியே

பிராப்த சேஷியான தேவருடைய நிரதிசய போக்யமான திருவடிகளை ஒழிந்த
அப்ராப்த விஷயங்களையே பற்றி அனுமோதிக்க
இப்படி அப்ராப்த மான விஷயத்தை விரும்புவதே என்று அனுதபிவிக்க வேண்டும்படியான
தசையை பிராப்தமாய் இருக்கிற இன்றும்-அனுதாப சூன்யமாய் இருக்கையாலே
தஸ்மாத் பால்யே விவேகாத்மா -என்கிறபடியே

விவேக அங்குர யோக்யமான பஞ்ச வர்ஷத்தில் அஜ்ஞ்ஞரானவர்கள்
தத் பரிணாம தசையான ஐம்பது வயசிலும் விவேக சூன்யதையாலே
அஜ்ஞ்ஞர் ஆவார்கள் என்று சொல்லுகிற இந்த லௌகிக சப்தம் எனக்கே அம்சமாயிற்றோ-

ஆகையால்
ஸ்வ ஹிதத்தில் அஜ்ஞ்ஞனான எனக்கு சர்வஜ்ஞ்ஞரான தேவர்
ஒரு போக்கடி கண்டு அருள வேணும் என்று கருத்து –

நெஞ்சமும் தான் ஒழிந்தவற்றையே உகக்கும் -என்று பாடமான போது
அஞ்சில் அறியாதாரை ஐம்பதிலும் அறியாதார் என் சொல் எனக்கோ
எதிராசா
இன்று அனுதாபம் அற்று இருக்கையாலே நெஞ்சமும் தான் ஒழிந்தவற்றையே யுகக்கும் -என்றும்
இப்படி யோஜிக்கக் கடவது –

————————————

நீர் –
உன் தாள் ஒழிந்தவற்றையே உகக்கும் -என்று அவர்க்கு அந்யமாய்
அப்ராப்தங்களாய் இருக்குமவற்றையே பற்றினால்
விரசமாய் இருக்கிற யும்மை அவர் எப்படி அங்கீ கரிக்கப் புகுகிறார் என்று
பார்ஸ்வச்தர்க்கு அபிப்பிராயமாக ஆஸ்ரயண தசையில் குண ஹீநனாய்
அத்தாலே விரசனாய் இருக்கிற என்னுடைய தோஷத்தை போக்யமாக விரும்பி
அங்கீ கரித்து அருளின ஸ்ரீ எம்பெருமானார்
என்னை உபேஷித்து அருளார்
என்றுமத்தை ஸ் நிதர்சனமாக -அருளிச் செய்கிறார் —

வேம்பு கறியாக விரும்பினார் கைத்தது என்று
தாம் பொகடாதே புசிக்கும் தன்மை போல் -தீம்பன் இவன்
என்று நினைத்து என்னை இகழாரே எதிராசர்
அன்று அறிந்து அங்கீ கரிக்கையால்—-39-

வேம்பும் கறியாகுமேன்று–என்கிறபடியே
சரசமாம் அவற்றை உபேஷித்து அத்யந்தம் கைப்பை யுடைத்தாய்
விரசமாய் இருப்பதான வேப்பிலை தொடக்கமாய் உள்ள தத் சம்பந்த பதார்த்தங்களை
சோற்றுக்கு உபதம்சமாக ஆதரித்து புஜிக்குமவர்கள்
அது விரசமாய் கைத்தது என்று அத்தை விரும்பிப் புஜிக்கும் தாங்கள் உபேஷியாதே புஜிக்கும் ஸ்வ பாவம் போலே
அங்கீ கார சமயத்திலே தோஷ யுக்தன் என்று அறிந்து அத்தைப் போக்யமாகக் கொண்டு
அங்கீ கரித்து அருளுகையாலே
ஸ்ரீ எம்பெருமானார்
இப்போது அவன் இவன் தோஷ யுக்தன் என்று உபேஷித்து அருளார் –

நத்யஜேயம் -என்னும்படி
இது ஓர் அங்கீகார த்ராட்யம் இருந்த படி என் என்று கருத்து-

————————————————————

உம்முடைய தோஷம் பாராதே அங்கீ கரித்தோம் ஆகில்
மேல் உள்ளதும் நாமே க்ரமத்திலே செய்கிறோம் என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக
த்வத் அனுபவ யோக்யமான காலத்தை எல்லாம் வ்யர்த்தமே போக்கி அதுக்கு அசலான சம்சாரத்தில் இல்லாமல்
அனுபவத்துக்கு பாங்கான தேசத்தில் சேர்த்து அதுக்கு இடைச் சுவர் தள்ளிப் பொகட வேணும் என்கிறார்-

அவத்தே பொழுதை யடியேன் கழித்து இப்
பவத்தே இருக்குமது பண்போ -திவத்தே யான்
சேரும் வகை யருளாய் சீரார் எதிராசா
போரும் இனி இவ் வுடம்பைப் போக்கு–40-

தேவர் உடைய அனுபவ கைங்கர்யங்களுக்கு அடைத்த விலஷணமான காலம் எல்லாம்
அதுக்கு இட்டுப் பிறந்த அடியேன்
அப்படிப் பட்ட அந்த பொழுதைப் பழுதே போக்கி-விரோதியாய் இருக்கிற சம்சாரத்திலே பொருந்தி இருக்கிறது
தேவர் கிருபா ஸ்வ பாவத்துக்குப் போருமோ
ஆகையால்-கைங்கர்ய வர்த்தகமாய் பரம்தாமம் என்னும் திவம் -என்னும்படியான
தேசத்திலே அபேஷை யுடைய நான்
கெடு மரக்கலங்கரை சேர்ந்தால் போல் சேரும் பிரகாரம் இரங்கி அருள வேணும்
சமஸ்த கல்யாண குண பரி பூரணராய் எதிகளுக்கு நாதர் ஆனவரே
சம்சாரத்தில் சிறையிருப்பு போரும் –
இனி பகவத் ஸ்வரூப திரோதா நகரியாய் விபரீத ஜ்ஞ்ஞாந ஜனனியாய்
ஆத்மாவோடு பொருந்தி இருக்கிற இந்த தேஹத்தை போக்கி அருள வேணும்-இதுவே புருஷார்த்தம் –

பண்பு -ஸ்வ பாவம்
அடியேன் இப்பவத்தோடே இருக்குமது பண்போ -என்று
கீழோடு கூட்டவுமாம் –

——————————————–

ஆனாலும் உம்முடைய தோஷ பூயஸ்வத்தைப் பாராதே அரும் தேவைகளைச் செய்யும்படி
சொல்லக் கூடும் இத்தனையோ-என்னில் –
அசத்ருச அபராதனான அடியேனுடைய பிரகிருதி சம்பந்த நிபந்தமாக வரும்
அபராதங்கள் எல்லாம் பொறுத்து ரஷிக்குமவரான பின்பு
சகல ஜீவ லோக உஜ்ஜீவன அர்த்தமாக திரு வவதரித்த தேவர்
அதி சபலனான எனக்கு தயை பண்ணி ரஷிக்க வேணும் என்கிறார் –

எனைப் போல் பிழை செய்வார் இவ்வுலகில் வுண்டோ
உனைப் போல் பொறுக்க வல்லார் யுண்டோ -அனைத்துலகும்
வாழப் பிறந்த எதிராச மா முனிவா
ஏழைக்கு இரங்காய் இனி –41-

நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு -என்கிறபடியே-
அபராதம் பண்ணுமவர்களில் வைத்துக் கொண்டு
மாத்ருசா அபராதக்ருத்துக்களாய் இருக்குமவர்கள் இந்த லோகம் எல்லாம் தேடித் பார்த்தாலும் கிட்டுமோ
அருளுக்கும் அக்தே புகல் -என்கிறபடியே
அபராத சஹரில் வைத்துக் கொண்டு தேவரைப் போலே சஹிக்க வல்லார்-உபய விபூதியிலுமுண்டோ –
சகல ஜீவ லோகமும் உஜ்ஜீவித்து வாழும்படியாக திரு வவதரித்து அருளி
அவர்கள் ரஷணத்தில் மனனம் பண்ணி அருளுகிற ஸ்ரீ எம்பெருமானாரே இப்படிக் கை கழிந்த பின்பு
பற்றினத்தை விடாதே சபலனாய் இருக்கிற எனக்கு தயை பண்ணி அருள வேணும் –
ததஹம் த்வத்ரு தேனநா தவான் இத்யாதி –

———————————————–

இப்படி
ஆகிஞ்சன்ய-அநந்ய கதித்வங்களை ஆவிஷ் கரிக்கும் அதிகாரிகளைப் பெற்றோமே
என்று உகந்து எதிராச மா முனியான ஸ்ரீ எம்பெருமானார்
இவருக்கு-இனிப் பெற வேண்டும் பேறுகளை மனனம் பண்ணுவது
இவருடைய பிரேம ஸ்வபாவத்தைக் கடாஷித்துக் கொண்டு இருப்பதாக நிற்க –
அது பற்றாமல்
அவருக்கும் ரஷித்து அல்லாது நிற்க ஒண்ணாத படி –
உண்ணிலாவியில்-என்றபடி இந்த்ரிய பயக்ரோசமான பாசுரத்தாலே
தம்முடைய அநந்ய கதித்வத்தை முன்னிட்டுக் கூப்பிடுகிறார் –

ஐம்புலன்கள் மேலிட்டு அரும் பொழுது அடியேன்
உன் பதங்கள் தம்மை நினைந்து ஓலமிட்டால்-பின்பவை தாம்
என்னை யடராமல் இரங்காய் எதிராசா
உன்னை யல்லாதார் எனக்கு உண்டோ—42-

நாராயானா ஒ மணி வண்ணா என்று ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஓலமிட்டால் போலே
உன் பதங்கள் –நினைத்து ஓலமிட்டால்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்-என்று மனசாலே ஸ்மரித்து வாக்காலே பெரு மிடறு செய்து கூப்பிட்டால்

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறி -இத்யாதிப் படியே
பஞ்ச இந்த்ரியங்களும் ஆக்கிரமித்து ஸ்வ கிங்கரனாம்படி ஸ்வ ஸ்வ விஷயங்களை காட்டு காட்டு என்று
தொடர்ந்து பாதிக்கும் தசையிலே
தேவர்க்கு சேஷ பூதனான அடியேன் ஸ்ரீ கஜேந்த ஆழ்வான் மடுவின் கரையிலே
க்ராஹா ஆகர்ஷதே ஜலே -என்று
முழு வலி முதலை நீருக்கு உள்ளே இழுத்துக் கொண்டு நலியும் போது
சிந்தயத்தரிம் என்று சிந்தித்து-நாராயணா ஒ -என்று ஓலமிட்டால் போலே
சகல ஆபன் நிவாரணமான தேவர் திருவடிகளை ஸ்மரித்து -ராமானுஜா ஒ என்று கூப்பிட்டால்

அநந்தரம்
அப்படி பாதங்கள் ஆனவை அடியேனை மேவிவிடாமல் தயை பண்ணி அருள வேண்டும்
எதிகளுக்கு நாதரானவரே தேவரை ஒழிய எனக்கு ரஷகர் ஆவார் யார்
இனி வேறுண்டோ
வேறு ரஷகாந்தகர் இல்லை யாகையாலே தேவரே ரஷித்து அருள வேணும் என்று கருத்து –

உன் பதங்கள் –நினைத்து ஓலமிட்டால்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்-என்று மனசாலே ஸ்மரித்து
வாக்காலே பெரு மிடறு செய்து கூப்பிட்டால்-என்னவுமாம் –

———————————————

இரங்காய் எதிராசா -என்று அவரை வெறுக்கிறது என் –
பிராப்ய பூமியில் பிராவண்யமும்-த்யாஜ்ய பூமியில் ஜூஹுப்ஸ்யையும்
அதிகாரிக்கு அவசியம் அபேஷையாய் இருந்தது –
அவை இரண்டும் இல்லாத நமக்கு
அசத்ருசமமான தேசத்தை அவர் எப்படி தந்து அருளுவர் என்று அதில் நின்றும் நிரசராகிறார் –

இந்த உலகில் பொருந்தாமை ஏதும் இல்லை
அந்த உலகில் போக ஆசை இல்லை -இந்த நமக்கு
எப்படியே தான் தருவர் எந்தை எதிராசர்
ஒப்பில் திரு நாடு உகந்து —43-

கொடு வுலகம் காட்டேல் -என்னும்படியான
இந்த த்யாஜ்ய பூமியில் அடிக் கொதிப்பு அல்பமும் இல்லை –
வான் உலகம் தெளிந்தே என்று எய்வது -என்னும்படியான
அந்த பிராப்ய பூமியை பிராபிக்க வேணும் என்கிற பிராவண்யமும் இல்லை –
இப்படி அபேஷிதங்களாய் இருக்கிற இரண்டிலும் அந்வயம் அற்று இருக்கிற நமக்கு
ஜனகரான ஸ்ரீ எம்பெருமானார் அசத்ருச வைபவத்தை யுதைத்தான
தெளி விசும்பு திரு நாடு -என்கிற திரு நாட்டை உகப்புடன் எப்படித் தான் உபகரித்து அருளுவர் –

————————————————————–

இந்த வுலகில் பொருந்தாமை ஏதும் இல்லை
அந்த வுலகில் போகை ஆசை இல்லை -என்று அனுசந்தித்தவர்
நம் அளவில் இதுவே இருந்தது –
இனி லௌகிகர் அளவு என் என்றவர்கள் இடத்திலே கண் வைக்க
அவர்கள் படி சாலத் தண்ணியதாய் இருந்தவாறே
இப்படி இருப்பது
இவர்கள் பாபங்களைச் செய்யும் பிரகாரம் என்றதுக்கு நொந்து அருளிச் செய்கிறார் –

மா காந்த நாரணர் வைகும் வகை அறிந்தோருக்கு
ஏகாந்தம் இல்லை இருள் இல்லை –மோகாந்தர்
இவ்விடம் ஏகாந்தம் இருள் என்று பயமற்று இருந்து
செய்வர் கடாம் பாவத்திறம்—44-

இதில்
செல்வ நாரணன் -என்கிறபடியே
ஸ்ரீயகாந்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் நாராயணத்வ பிரயுக்த சம்பந்தம் அடியாக
சமஸ்த சேதன அசேதனங்களிலும் அந்தர் பஹிர் வியாபித்து இருக்கிறபிரகாரத்தை அறிந்த
ஜ்ஞாதாக்களுக்கு

நாராயண பரோஜ்யோதி என்றும்
அவன் என் இருள் தான் அற வீற்று இருந்தான் -என்றும்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்றும்-சொல்லுகிறபடியே
எங்கும் உளனாய்-எங்கும் வெளிச் செறிப்பாய் இருக்கையாலே
நிஷித்த பிரவ்ருதிகளுக்கு தேட்டமான இருளும் ஏகாந்தமும் அற்று இருக்கையாலே
அவர்களுக்கு ஒருமை பட்டு வருத்தம் உற்று இருக்கிற ஏகாந்தமும் இல்லை –
தர்சன யோக்யமும் அன்றிக்கே-ஆவரணாகரமாய் ஆவரித்து இருக்கிற அந்தகாரமும் இல்லை
ஹ்ருதி நாராயணம் பஸ்யன் நாப்ய கச்சத் ரஹஸ் சதா
யஸ் ஸ்வ தார ரதௌ சாபி கோவிந்தம் தா முபாஸ்மஹே –

இவர்கள் படி அன்றிக்கே
மோஹாந்த தமஸா வருதா -என்னும்படி மோஹாந்தராய்
முன்னாடி தோற்றாதே இருக்குமவர்கள்
அந்தர் பஹிஸ் சகல வஸ்து ஷூ சந்தமீச மந்த புரஸ் ஸ்தித மிவாஹா மவீ ஷமாண -என்கிறபடியே

நிரவதிக தேஜோ மயனான ஸ்ரீ சர்வேஸ்வரன் எங்கும் வியாபித்து இருக்கும் பிரகாரத்தை
நெஞ்சு என்னும் உட் கண்ணாலே காண மாட்டாதே
இவ்விடம் ஒருவரும் இல்லாத ஏகாந்தம்
இவ்விடம் தேஜ பிரகாரம் இல்லாத இருள்-என்று நிர்பயராய் இருந்து –
தச்யர்ந்திகேதவம் வ்ரஜினம் கரோஷி -என்கிறபடியே
பாப சமூஹங்களை அஜ்ஞ்ஞாரான தாங்கள் செய்யா நிற்பார்கள் –

இவர்கள் படி இது வாவதே -என்று கருத்து –

வைகல் -சொல்லலும் -இருத்தலும்
திறம் -சமூஹம்
இப்பாட்டுக்கு அடி உக்த்ய அனுஷ்டங்களாய் இருக்கும்-

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆர்த்தி பிரபந்தம் -பாசுரம் -29-32-பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 20, 2014

இனி
தம்முடைய பிராப்தி விரோதி நிரசன சீலரான ஸ்ரீ எம்பெருமானார்
ஸ்ரீ பாஷ்யாதிகளான ஸ்ரீ ஸூக்திகளாலே பாஹ்ய குத்ருஷ்டி நிரசனம் பண்ணி அருளின
விஜய பரம்பரைகளைச் சொல்லி அத்தால் யுண்டான வீர ஸ்ரீக்கு மங்களா சாசனம்
பண்ணி அருளுகிறார் –

சாறுவாக மதம் நீறு செய்து சமணச் செடிக் கனல் கொளுத்தியே
சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியர் கிரி முறித்திட
மாறு செய்திடு கணாத வாதியர்கள் வாய் தகர்த்து அறமிகுத்து மேல்
வந்த பாசுபதர் சிந்தியோடும் வகை வாது செய்த எதிராசனார்
கூறுமா குரு மதத்தோடு ஓங்கிய குமாரிலன் மதமவற்றின் மேல்
கொடிய தர்க்க சரம் விட்ட பின் குறுகி மாயவாதியரை வென்றிட
மீறி வாதில் வரு பாற்கரன் மத விலக்கடிக் கொடி எறிந்து போய்
மிக்க யாதவ மதத்தை மாய்த்த பெரு வீரர் நாளும் மிக வாழியே—-29–

பிரத்யஷம் ஏகம் சார்வாக
குருமதம் -பிரபாக மதம்
குமாரிலன் மதம்-பர்ட்டமதம்

ப்ரத்யஷம் ஏகம் சார்வாக -என்கிற சார்வாக மதத்தை ஸ்வ ஸூ க்திகளாகிற அக்னி ஜ்வாலையாலே
பச்ம சாத்தாம் படி பண்ணி –
சமணர் ஆகிற செடிக்கு அப்படியே அக்னி ப்ரேஷேபத்தை பண்ணி
சாக்யர் ஆகிற சமுத்திரத்தை ஸ்வ ஸூக்தி கிரணங்களாலே சோஷிப்பித்து

அதிகமாய் இருப்பதான சாங்க்ய கிரியை வாக் வஜ்ரத்தாலே சேதித்திட்டு
பிரதிகோடிகளாய் வாதம் பண்ணுகிற காணாத வாதிகளுடைய வாக்கை ஸ்வ வாக்காலே பக்நமாம் படி பண்ணி –

மிகவும் உத்ததரராய் மேல் வந்த பாசுபதர் பாணாசுர யுத்தத்திலே ருத்ரன் சபரிகரமாய் ஓடினால் போலே
தத் பக்தர்களான இவர்களும் சீறு பாறாக சிதறி யோடும் பிரகாரமாக வாதம் பண்ணி அருளினவராய்
ஏதேனும் ஒன்றை ஜல்ப்பியா நிற்பதாய் பெருத்து இருப்பதான
பிரபாகர மதத்தோடு-யுச்சாரமாய் இருப்பதான பாட்டமதம் என்கிற அவற்றின் மேலே
க்ரூரமாய் இருப்பதான தர்க்க சரத்தை பிரயோகித்த பின்பு

எங்கும் பரந்து இருக்கையாலே
மயிகள் இருந்த இடத்தில் சென்று கிட்டி-வாதில் வென்றான் நம் இராமானுசன் என்கிறபடியே அவர்களை ஜெயித்திட்டு
மிகைத்து வாதத்திலே வருகிற பாஸ்கரன் உடைய மதமாகிற அம்மதத்தை ஒருவரும் நடவாதபடி நிரோதித்து
கழிய மிக்கு இருந்த யாதவ மதத்தை மாண்டு போம்படி பண்ணின
ஸ்ரீ எம்பெருமானார் உடைய
இதர தர்சன நிரசனத்தாலே வந்த மகா வீரம்நாள் தோறும் அபி விருத்தமாய் வாழ வேணும் –

கொடி எறிந்து போய் -என்று
அவ்வளவிலே நில்லாதே கை கழிந்து இருக்கிற பாரிப்பே யாகவுமாம்-

வந்த வாதியர் -என்றும் பாட பேதம் சொல்வர் –

—————————————————–

இனி
இதர நிரசனம் பண்ணி அருளின ஸ்ரமம் தீர ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ திருவாய் மொழி
முதலான பகவத் விஷயங்களை வ்யாக்யாநித்துக் கொண்டு எழுந்து அருளிய இருப்பு தமக்கு
ஆகர்ஷகமாய் இருக்கையாலே ஸ்ரீ பாதாதி கேசமாக அனுபவித்து இவை எல்லாம் தனித் தனியே
நித்யமாகச் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார் –

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முந்நூல் வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி
தூ முறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திரு நாமம் அணிந்த எழில் வாழி
இனி திருப் போடு எழில் ஞான முத்தரை வாழியே–30-

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
கல்யாண குணங்களாலே பரிபூரணமான ஸ்ரீ எம்பெருமானார் உடைய பரம போக்யமாய்
நமக்கு சிரோ பூஷணமாய் இருக்கிற திருவடித் தாமரைகள் நித்ய மங்களமாய் இருக்க வேணும்

திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி –
கடிப் பிரதேசத்திலே தரித்த ஆதித்யனை பரிவேஷித்தால் போலே மிக்க சிவப்பை யுடைத்தான
காஷாய வஸ்திரம் நித்ய மங்களமாய் இருக்க வேணும் –

ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி –
அழகால் நிறைந்த சிவந்து இருப்பதான திவ்ய மங்கள விக்ரஹம் சர்வ காலத்திலும்
நித்ய மங்களமாய் இருக்க வேணும் –

இலங்கிய முந்நூல் வாழி –
வைதிகோத்தமர் என்னுமத்தை நிறம் பெறுதுமதாய்
சந்த்யா ராக ரஞ்சிதமான மேகத்திலே மின் கொடி படார்ந்தால் போலே
திரு மார்பிலே பிரகாசிக்கிற ப்ரஹ்ம சூத்ரம் நித்ய மங்களமாக செல்ல வேணும் –

இணைத் தோள்கள் வாழி –
பொற் கற்பகத்தின் சாகைகளாய் அதற்கு மேலே மோஷ பிரதான தீஷிதங்களாய்
சம்சார சாகரத்திலே மூழ்கி நோவு படுகிறவர்களை உத்தரிக்கிற சக்தியை யுடைத்தாய்
இப்படிக் கொடுக்கவும் எடுக்கவும் மாம் படியான குணத்தாலே பணைத்து நெடிதாய் இருப்பனவாய்
அதுக்கு மேலே வகுள துளசீ நளி நாஷ மாலா அலங்க்ருதமாய் இருக்கிற
பாஹு யுகங்கள் ஆனவை நித்ய மங்களமாய் இருக்க வேணும்

சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி –
அனுபாவ்யமாய்-பகவத் சாஷாத் காரத்தாலும்-ஆஸ்ரித தர்சனத்தில் ஹர்ஷத்தாலும்
அநாஸ்ரிதர் தர்சனத்தில் அநாயசத்தாலும்-அசங்குசிதமாய் -நிர்மலமாய் சோபாவஹமாய்
இருக்கிற திரு முக ஜ்யோதிஸ் ஆனது நித்ய மங்களமாய்ச் செல்ல வேணும் –

தூ முறுவல் வாழி
ஆஸ்ரித ரஷணத்தால் உண்டான ஆனந்தத்தாலும்-பகவத் அனுபவ பிரகர்ஷத்தால் உண்டான ஆனந்தத்தாலும்
பூ அலர்ந்தால் போலே பரிதியைப் பிரகாசிக்கிற
பரிசுத்தமான சிறு நகையும் நித்ய மங்களமாக செல்ல வேணும் –

துணை மலர்க் கண்கள் வாழி –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீயையும் தாம் திருத்த திருத்தின ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யையும் எப்போதும் கண்டு களிக்குமதாய்
காருண்ய அம்ருத பிரசரண சீலமாய்
ஆஸ்ரிதரை அமலங்களாக விழிக்கும் என்னும்படி கடாஷிக்கிற
த்வந்த்வ அரவிந்த சுந்தரமான திருக் கண்கள் அழகு மாறாமல் நித்யமாக இருக்க வேணும்

ஈராறு திரு நாமம் அணிந்த எழில் வாழி
கீழ்ச் சொன்ன எல்லா வற்றையும் நிறம் பெருத்துவனவாய்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீக்கு வர்த்தகமாய் இருப்பதாய்
பொன் மலையின் பரிசரம் எங்கும் வெண் தாமரை பரப்பு மாறப் பூத்தால் போலே
சிவந்த திருமேனியில் வெள்ளியதான த்வாதச ஊர்த்த்வ புண்ட்ரத்தால் யுண்டான
சௌந்தர்யம் நித்ய மங்களமாக செல்ல வேணும் –

இனி திருப்போடு எழில் ஞான முத்தரை வாழியே
பத்மாஸ்தனராய் எழுந்து அருளி இருக்கிற இருப்போடு உபய வேதார்த்த பிரகாசகமாய் இருக்கிற
பரதத்வ போத முத்தரை யானது நித்ய மங்களமாய் இருக்க வேணும் –

—–

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி-வாழியே-
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யமான ஸ்வரூப ரூப குணங்களோடு வாசி அற எல்லாவற்றாலும் பரி பூரணராய்
எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானாருடைய
அமரர் சென்னிப் பூ -என்னுமா போலே

இராமானுசன் அடிப் பூ என்று சொல்லப் படுமதாய்-அத ஏவ பரம போக்யமாய்
நமக்கு சிரோ பூஷணமாய் இருக்கிற திருவடிப் போதுகள்
போது செய்யாமல் ஏவம் வித ஆகாரத்தோடு நித்தியமாய் செல்ல வேணும் —

திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி –
அதுக்கு மேலே ஆறு பிரகாரத்தாலே-பரி சுத்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு தத் சாம்யம் யுண்டாகையாலே –
சீதா காஷாய வாசி நீ-என்னும்படி -பாரதந்த்ர்ய அனந்யார்ஹத்வ ஸூசகமாய்
திருவரை பூத்தால் போலே திருவரைக்கு அலங்காராவஹமாய்
ஆதித்யனைப் பரிவேஷித்தால் போலே திருவரையில் சூழச் சாற்றி
மிக்க சிவப்பை உடைத்தான திருப் பரி வட்டமும் நித்யமாய்ச் செல்ல வேணும்

ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி –
அதுக்கு மேலே ஆஸ்ரிதர்க்கு ஸூ பாஸ்ரயமாய் சௌந்தர் யாதிகளாலே மிக்கு
புஷ்பஹாச ஸூ குமாரமாய்
ரூபமே வாஸ்யை தன மஹிமான மா சஷ்டே-என்கிறபடியே
பரமாத்மராகம் புறம்பு ஒசிந்தால் போலே சிவந்து இருப்பதான திவ்ய மங்கள விக்ரஹமும்
சர்வ காலத்திலும் -நித்யம் நித்யா க்ருதிதரம் -என்னும்படி நித்ய மங்கள மாகச் செல்ல வேணும் –

இலங்கிய முந்நூல் வாழி –
அதுக்கு மேலே வைதிக உத்தமர் என்னுமத்தை நிறம் பெறுத்துமதாய்
சந்த்யா ராக ரஞ்சிதமான மேகத்திலே மின் கொடி படர்ந்தால் போலே
திருமார்பிலே பிரகாசிக்குமதாய்
ப்ரஹ்ம ஸூத்ர வ்யாக்ருத்வத் யோதகமாய் இருப்பதான
ப்ரஹ்ம ஸூத்ரப் புகரோடே நித்தியமாய் இருக்க வேணும் –

இணைத் தோள்கள் வாழி –
அதுக்கு அநந்தரம்-இரண்டு இடத்திலும் அளவாய்
பாஹூக் சாயா மவஷ்டப்தோ யஸ்ய லோகோ மகாத்மான -என்கிறபடியே
சர்வருக்கும் விஸ்ராந்த சாகியான-பொற் கற்பகத்தின் யுடைய சாகைகளாய்

அத ஏவ
மோஷ பிரதான தீஷிதங்களாய்-விசேஷித்து நிமக்ன உத்தரண சக்தியை யுடைத்தாய்
இப்படி கொடுக்கவும் எடுக்கவும் மாம்படியான குணத்தாலே-பணைத்து-நெடிதாய் இருப்பவனவைகளாய்
தோளார் சுடர்த் திகிரி சங்குடைச் சுந்தரன் -ஞான சாரம் -என்னும்படி
தோர்மூலோல்லாஸி சக்ராம்பு ஜங்களை யுடைத்தாய்
ஆகர்ஷகமான ஆழ்வார்களாலே அங்கிதமாய் இருப்பவனவைகளாய்

அதுக்கு மேலே
வகுள துளசீ நளி நாஷ மாலா அலங்க்ருதமாய் இருக்கிற யுகள பாஹூக்கள் ஆனவை
உக்தமான குணங்களோடு நித்யமாக செல்ல வேணும்-

சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி –
அதுக்கு மேலே ப்ரஹ்ம வித சௌம்யதே முகம்பாதி -என்றும்
முகச் சோதி மலர்ந்ததுவோ -என்றும் சொல்லுகிறபடி அனுபாவ்யமாய்
பகவத் சாஷாத் காரத்தாலும்-ஆஸ்ரித தர்சனத்தில் ஹர்ஷத்தாலும்-அநாஸ்ரித்த தர்சனத்தில், அநாயசத்தாலும்
அசங்குசிதமாய்-நிர்மலமாய்-சோபாவஹமாய் இருக்கிற முக ஜ்யோதிஸ் ஸூம் நித்தியமாய் செல்ல வேணும்-

தூ முறுவல் வாழி –
அதுக்கு மேலே-ஸ விலாச ஸ்மிதாதாரம் பிப்ராணம் முக பங்கஜம் -என்னும்படி ஒரு திரு முகமாய் சேர்ந்து
அந்த முக பத்மத்தினுடைய விகாசம் என்னும்படியாய்-
நின் பன்னிலா முத்தம் தவழ கதிர் முறுவல் செய்து -என்கிறபடியே
ஆஸ்ரித ரஷணத்தால் யுண்டான ஆனந்தத்தாலும்
பகவத் அனுபவ பிரகர்ஷ த்தால் யுண்டான ஆனந்தத்தாலும்
பூ அலர்ந்தால் போலே பரிதியைப் பிரகாசிப்பிக்கிற
சாருஹாசத்தால் யுண்டான சந்த்ரிகையைப் பிரவஹிக்கிற ஸூ ஸ்மிதமும் இப்படியே
என்றும் உளதாய் இருக்க வேணும் –

துணை மலர்க் கண்கள் வாழி –
அதுக்கு மேலே ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யையும்-தாம் திருத்த திருத்தின ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யையும்
எப்போதும் கண்டு களிக்குமதாய்-கருணாம்ருத ப்ரசரண சீலமாய்
ஆஸ்ரிதரை அமலங்களாக விழிக்கும் என்னும்படி கடாஷிக்கிற த்வந்த அரவிந்த சுந்தரமான திருக் கண்கள்
செவ்வி மாறாமல் நித்யமாகச் செல்ல வேணும் —

ஈராறு திரு நாமம் அணிந்த எழில் வாழி –
கீழே உக்தங்களான இவை எல்லா வற்றையும் நிறம் பெறுத்துமவையாய்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ க்கு வர்த்தகமாய் இருப்பதாய்-பொன் மலையின் பரிசரம் எங்கும்
வெண் தாமரை பரப்பு மாறப் பூத்தால் போலே சிவந்த திரு மேனியில் வெள்ளியதாய்
ஊர்த்த்வ தாஸ்ரயண ஸூசித சக்தியை யுடைத்தான -த்வாதச ஊர்த்த்வ புண்டர தாரணத்தால் யுண்டான
சௌந்தர்யம் நித்யமாக செல்ல வேணும்-

இனி திருப் போடு எழில் ஞான முத்தரை –
கீழே உக்தமான எல்லாவற்றுக்கும் அதிஷ்டையாய் இருந்த அந்த அதிஷ்டான சக்தியாலே
குத்ருஷ்டிகளாகிற குறும்பர் அறும் படியாகவும்
ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாயும்-கேவல பகவத் இச்சையாலே
வையம் மன்னி வீற்று இருந்து -என்னும்படி வ்யாவருத்தி தோற்ற
ஹம்ச சமூஹமத்யே ராஜ ஹம்சமானது சாசமாக இருக்குமா போலே
பரம ஹம்சரான தாமும்-சம்சேவிதா -இத்யாதிப் படியே ஸ்ரீ ராமாநுஜார்ய வசகராய்
ஸ்ரீ இராமானுஜனைத் தொழும் பெரியோராய் இருக்கிற முதலிகள் எல்லாரும் சேவித்து இருக்க
இவர்கள் நடுவே

பத்மாசன உபவிஷ்டம் பாத த்வபோத முத்ரம் -என்னும்படி
பத்மாசனராய் எழுந்து அருளி இருக்கிற இருப்போடு உபய வேதாந்தார்த்த பிரகாசகமாய்
உன்நித்ர பத்ம ஸூபகமாய் இருக்கிற ஜ்ஞான முத்தரை யானது காதாசித்கம் அன்றிக்கே
சதா தர்சன யோக்யதாம் படி வாழக் கடவதாக வேணும்
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த -என்னக் கடவது இறே –

தேராருதுய்ய செய்ய முகச் சோதி -என்றும் பாடம் சொல்லுவர்
தோராத –

ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் -என்னுமா போலே
சீராரும் -என்கிறத்தை திருவடிகளுக்கு விசேஷணம் ஆக்கவுமாம்

ஸ்ரீ எதிராசர் உடைய திருவடிகள் ஆகையாலே
பார்த்திவவய யஜ்ஞாஞான் விதமாய் இறே இருப்பது-

————————————————————————-

அசக்ருதாவ்ருத்தி அபேஷா கார்யம் ஆகையாலே மீளவும் ஆதர அதிசயத்தாலே
பாஹ்ய குத்ருஷ்டி நிரசனம் பண்ணி அருளினமைக்கும்
மற்றும் லோக உபகாரகங்களாக செய்து அருளினவை எல்லாவற்றுக்கும்
மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார்

கீழ் பாட்டு விக்ரஹ பரம்
இப் பாட்டு ஸ்வரூப பரம் –

அறு சமயச் செடி யதனை யடி யறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிட்டிகளை யறத் துரந்தான் வாழியே
செறு கலியை சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே
மாறனுரை செய்த தமிழ் மறை வளர்ந்தான் வாழியே
அறம் மிகு நற் பெறும் பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடி இணைகள் வாழியே —31-

சாக்யோ லூக்யா ஷபாத ஷபணக் கபில பதஞ்சலி மத் அனுசாரிண-என்கிறபடியே
பாஹ்ய ஷண் மாதங்கள் ஆகிற மூடிக் கிடக்கிற செடிகளை மூலச் சேதனம்
பண்ணி அருளினவர் நித்யமாக எழுந்து அருள வேணும் –

மேலிட்டு வரும் குத்ருஷ்டிகளை –
நான்மறையும் நிற்க குறும்பு செய் நீசரும் மாண்டனர் -என்கிறபடியே –
சவாசனமாகத் துரத்தி அருளினவர் நித்யமாக வாழ்ந்து அருள வேணும் –

அறு சமயம் போந்தது போன்றி இறந்தது வெங்கலி -என்கிறபடியே
இவை எல்லாத்துக்கும் ஹேதுவாய் லோகம் எங்கும் காடமாய் மூடி வருகிற கலியை
அல்பாவ சேஷமும் இல்லாதபடி முடித்து விட்டவர் வாழ்ந்து அருள வேணும்

அநந்தரம்
ஸ்ரீ மன் ஸ்ரீ ரெங்க ஸ்ரீயம் அனுபத்ரவா அனுதினம் சம்வர்த்தயா-என்கிறபடியே
ஸ்ரீ பெரிய பெருமாள் யுடைய திருச் செல்வம் எல்லாம் கட்டளைப் படும்படி பண்ணி அருளினவர் வாழ்ந்து அருள வேணும்

அதுக்கு மேலே
பிரமாணத்தில் வந்தால்
வேதத்தில் விப்ரபத்தி போக்கின அளவன்றிக்கே
வேதாந்த அர்த்தம் எல்லாம் ஸ்ரீ பாஷ்ய ரூபேண அருளிச் செய்தவர் வாழ்ந்து அருள வேணும்

அதுக்கு மேலே
ஸ்ரீ ஆழ்வாரால் அருளிச் செய்யப் பட்ட ஸ்ரீ திருவாய் மொழியை வளர்த்த இதத் தாய் -என்னும்படி
வர்ப்பித்து அருளினவர் வாழ்ந்து அருள வேணும்
அதன் தாத்பர்ய மான சரணாகதி தர்மம் ஜகத்திலே வர்த்திக்க
விலஷணமான ஸ்ரீ பெரும் பூதிரிலே திரு வவதரிதவர் வாழ்ந்து அருள வேணும்
சௌந்தர் யாதிகளாலே பூரணமாய் இருக்கிற ஸ்ரீ எம்பெருமானாருடைய
சர்வ சரண்யமான சரண யுகங்கள் நித்யமாக வாழ வேணும்

அழகாருகை -அடி இணைகளுக்கு விசேஷணம் ஆன போது
இரண்டு தாமரைப் பூவை நிறைத்து வைத்தால் போல் இருக்கிற சேர்த்தி அழகையும்
ஸ்வத உண்டான சௌந்தர்யத்தையும் சொல்லுகிறது ஆகவுமாம் –

அற மிகு நல் பெரும் பூதூர் -என்றும் பாடம் சொல்வார்
அப்போது -ஸ்ரீ இராமானுசன் மிக்க புண்ணியன் -என்கிற
தர்மத்தை அதிகமாக உடைத்து என்னவுமாம்
வாழி -எனபது மங்கள சொல்

——————————————————

கீழ்
நற் பெரும் பூதூர் அவதரித்தார் என்று பிரஸ்துதமான திரு வவதார திரு நஷத்ர வைபவத்தை
ப்ரீதியாலே பேசி அனுபவித்து அருளுகிறார்-

சங்கர பாஸ்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடு நாள்
வெங்கலி யிங்கினி வீறு நமக்கில்லை என்று மிகத் தளர் நாள்
மேதினி நஞ்சுமை யாறு மெனத் துயர் விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மானிய தென்னரங்கா புரி மா மலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும் பூதூர்
சீமான் இளையாழ்வார் வந்து அருளிய நாள் திருவாதிரை நாளே –32-

இதுவும் ஒரு நாளே
ஸ்ரீ மன் ஆவிர்பூத் பூமௌ ராமானுஜ திவாகர —

விசேஷணத்தை இல்லை செய்வாரும்-விசேஷ்யத்தை இல்லை செய்வாருமாய்
இப்படி விபாகத் த்வய குத்ருஷ்டிகளாய்க் கொண்டு
வேதார்த்தா பலாபம் பண்ணுகிறவர்கள் ஆகையாலே
வைதிக தர்மம் தலை சாயும்படி வந்து கிட்டி இருக்கிற வாதியர்களான
சங்கராதிகள் உடைய மதம் நாசத்தை அடையும் என்று
நாலுவகைப் பட்ட வேதமானது அர்த்த பௌஷ்கல்யத்தை யுடைத்தாய் அபிவிருத்தமாம் திவசம் –

கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று சொல்லுகிறபடியே
குரூரமான கலியானது இவ் விடத்திலே
இனி நமக்கு சம்சார ராஜ்ஜியம் பண்ண சகயம் அன்று என்று
மிகவும் நிலை குலைந்து இருக்கப் பண்ண வற்றான திரு நஷத்ரம் –
கலியும் கலி கார்யமான குத்ருஷ்டிகளும் போகையாலே-
விஸ்வம் பரா புண்ய வதீ -என்றும்

தவம் தாரணி பெற்றது -என்றும் சொல்லுகிறபடியே
பூமியானது தம் தலை சுமை கழியும் என்று துக்கத்தை விட்டு பிரகாசியா நிற்கிற திரு நஷத்ரம்
இனி பூமியில் உண்டான அர்ச்சா ஸ்தலங்களை ஆதரிக்குமவர்கள் ஆகையாலே
ஸ்ரீ திருமங்கைக்கு நிர்வாஹகரான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்
பராங்குச அபிதேயரான ஸ்ரீ நம் ஆழ்வார்
முதலானவர்களுடைய சம்ருத்தி அங்குரிக்கும் திரு நஷத்ரம்-

அதுக்கு மேலே ஸ்ரீ பெருமாள் நித்ய வாசம் பண்ணுகிற கோயில்
அருவி செய்யா நிற்கும் மா மலை -என்று சொல்லப் படுவதான ஸ்ரீ பெரிய திருமலை
மற்றும் உண்டான திவ்ய தேசங்களும்
ஸ்வ ஸ்வ சம்ருதியை அடைவுதோம் என்று ஹர்ஷிக்கும் திரு நஷத்ரம் –

இதுக்கு எல்லாம் அடியாக -அங்கயல் பாய் வயல் -என்னுமா போலே
சிவந்து அழகிய கயல்களை உடைத்தான வாவிகளாலே சூழப் பட்டு இருக்கிற
விளை வயல்களினாலே நித்யமாக யுண்டான நகர் அலங்காரங்களை யுடைத்தான
ஸ்ரீ பெரும் பூதூரை திரு வவதார ஸ்தலமாக யுடைய ஸ்ரீ மானாய்
ஸ்ரீ இளைய ஆழ்வார் என்கிற நிரூபகத்தை உடையரான
எம்பெருமானார் திரு வவதரித்து அருளின திவசம் திருவாதிரை திரு நஷத்ரம் –

இதுவும் ஒரு நாளே
ஸ்ரீ மான் ஆவிர் பூத் பூதௌ ராமானுஜ திவாகர -என்னக் கடவது இறே

தென்னரங்கா புரி மா மலை மற்றும் உவந்திடு நாள் -என்கிறதுக்கு
தத்ரஸ்தரான ஜீவேஸ்வரர்கள் ஹர்ஷிப்பார்கள் என்றபடி
மன்றல் -பொருந்துதலும்-நிலைப்பாடும்
ஆறுதல் -சமித்தல்
உன் நாமம் எல்லாம் எந்தன் நாவின் உள்ளே அல்லும் பகலும் அமரும்படி நல்க என்கிறபடியே
இவருக்கு தத் வாசகமான திரு நாமங்கள் தான் அனுபாவ்யமாய் இருக்கையாலே

ஸ்ரீ எதிராசன் என்றும்
ஸ்ரீ இராமானுசன் என்றும்
ஸ்ரீ எம்பெருமானார் என்றும்
ஸ்ரீ இளையாழ்வார் என்றும்–அனுசந்தித்து அருளினார்-

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -பாசுரம் -20-28–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 20, 2014

இவர் இப்படி
நல்லார்கள் தம் தனயர் நீசர்க்கு ஆட் செய்ய சகிப்பரோ -என்றவாறே
நல்லார் பரவும் ராமானுசனான -ஸ்ரீ எம்பெருமானார் இவர் இங்கனே சொல்லப் பெறுமோ என்று
அத்தை சஹியாமல்
நல்லார்கள் நண்ணும் திரு நாட்டிலே நல்ல அமரரோடே ஒரு கோவையாக்கி
அவர்கள் அனுபவ கைங்கர்யத்தை இவருக்கு உண்டாக்க வேணும் என்கிற
அபிசந்தியை (திரு உள்ளத்தை ) யுடையராய் இருக்கிற ஆகாரத்தைக் கண்டு

இனி
பேறு தப்பாது -என்று அத்யவசித்து
அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேச விசேஷத்திலே ஏறப் போய்
பரமாத்ம சத்கார பர்யந்த்மான பல பரம்பரைகளை எண்ணி
அத்தை தாம் பெற்றதாக ஹ்ருஷ்டர் ஆகிறார் –
(ஆழ்வாரது சூழ் விசும்பு திருவாய் மொழி போல் பர ஞான தசையில் அருளிச் செய்கிறார் )

போம் வழியைத் தரும் என்னும் இன்பம் எல்லாம்
புசித்து வழி போய் அமுத விரசை யாற்றில்
நாம் மூழ்கி மலமற்றுத் தெளி விசும்பை
நண்ணி நலம் திகழ் மேனி தன்னைப் பெற்று
தாம் அமரர் வந்து எதிர் கொண்டு அலங்கரித்துச்
சத் கரிப்ப மா மணி மண்டபத்துச் சென்று
மா மலராள் கோன் மடியில் வைத்து உகக்கும்
வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே—-20-

இதில் அபேஷை யுடைய நமக்கு அருள் கொடையாக பிரசாதித்து அருளும் சம்பத்தே –
போம் வழியைத் தரும் -என்கிற ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திப்படியே
போய் புகுகிற தேச விசேஷத்தில்-

சத்காரம் எல்லாம் ஒரு சிறாங்காய் என்னும்படி
அபரிச்சேத்யமான மார்க்க சத்கார ஸூகத்தை எல்லாம் அனுபவித்து

கள்வன் கொல் ஸ்ரீ பிராட்டியைப் போலே-
அவன் முன்னே வழி நடத்த பின்னே போய்
விரஜ அம்ருதாகாரம் மாம் பிராப்ய மகா நதீம் -என்கிறபடியே
அம்ருத வாஹினியாய்-விரஜை என்னும் பேரை யுடைய சன்னதியிலே
தாப த்ரய துக்கங்கள் எல்லாம் தீர-நாம் அவஹாகித்து

அநந்தரம்
ஸ்வரூபத்துக்கு திரோதாயகமான பிராக்ருதங்களான மலங்கள் எல்லாம் கழிந்து
தெளி விசும்பு திரு நாடு என்கிற பிராப்ய தேசத்தைக் கிட்டி
ஸ்வரூப ரூப குணங்கள் எல்லாம் பிரகாசிக்கும்படி
ஸூத்த சத்வமான அப்ராக்ருத விக்ரஹத்தை லபித்து

பஹூ மந்தவ்யரான நித்ய ஸூரிகள் தாங்கள் பிரத்புக்தராய்
ப்ரஹ்ம அலங்காராதி களாலே அலங்கரித்து சத்கரிக்க-அவர்கள் உடனே கூட
திவ்ய மா மணி மண்டபத்திலே சென்று ஸ்ரீ யபதியான ஸ்ரீ வைகுண்ட நாதன்

அங்கே பரதம் ஆரோப்யம் உதித பரிஷஸ்வஜே -என்கிறபடியே
மடியிலே வைத்து-உச்சி முகர்ந்து உகந்து அணைக்கும் சம்பத்தை
எதிராசரான ஸ்ரீ எம்பெருமானார்

இதிலே அபேஷை யுடைய நமக்கு அருள் கொடையாக பிரசாதித்து அருளும் சம்பத்தே
இது ஒரு பேறு இருந்தபடியே-

————————————————–

எத்தனையேனும் அதிசய ஜ்ஞானராய் இருப்பார்க்கும் அப்ராப்யமாய் இருக்கும் பேற்றை
நீர் பெற்றதாக பேசா நின்றீர்
அது நமக்கு ஸூலபமாய் இருந்ததோ என்று தம் திரு உள்ளக் கருத்தாக

நம்முடைய ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளை
நிர்ஹேதுகமாக வுபகரித்து அருளின ஜ்ஞானத்தைக் கொண்டு
அவனுடைய அபிமானமே உத்தாரகம் என்று நீ அத்யவசித்து இரு –

பெறுதற்கு அரிய பேற்றை ஸ்ரீ எம்பெருமானாரே பண்ணி அருளுவர் –
ஆகையால் இது விஷயமாக –
நிர்ப் பயோ நிர்ப் பரோச்மி -என்று இருக்கும் நமக்கு என்ன பயம் என்கிறார் –

திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை சீர் அருளால்
தரு மதி கொண்டு அவர் தம்மை யுத்தாரகராக வெண்ணி
யிரு மனமே அவர்க்காய் எதிராசர் எம்மைக் கடுகப்
பரம பதம் தன்னில் ஏற்றுவர் என்ன பயம் நமக்கே —21

ஸ்ரீ திருமலை ஆழ்வார் என்று நிரூபகத்தை யுடையவராய்
பின்பு ஸ்ரீ திருவாய்மொழியில் அவகாஹநத்தாலே
ததேக நிரூபணீயராய் இருக்கிற ஸ்ரீ பிள்ளை தம்முடைய நிர்ஹேதுக கிருபையாலே பிரசாதித்து அருளும்

பொருவில் மதி -என்னும்படியான தத் விஷய ஞானத்தை சாதனமாகக் கொண்டு
அந்த ஜ்ஞான பலமாக இப்படி மகோ உபகாரகராய் இருக்கிற
அந்த ஸ்ரீ பிள்ளையை-
உத்தாரயதி சம்சாராத்தது பாயப்லேவே நது-என்கிறபடியே
சம்சாரத்தில் நின்றும் உத்தரிப்பிக்குமவராக-மனசே அத்யவசித்து இரு

இப்படி-நம் ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளைக்காக எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானார்
தாமே
ஸ்வ ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்று இருக்கிற நம்மை ஏன்று கொண்டு
சீக்ரமாக ஏற்ற அரும் ஸ்ரீ வைகுந்தம் -ஏன்று
துஷ் பிராபகமாய் சொல்லப்படுகிற பரம பதத்திலே ஏற்றி அருளுவர்
மனமே நையல் மேவுதற்கே -என்கிறபடி
ஏதத் விஷயமாக நமக்கு என்ன பயம் ஒரு பயமும் வேண்டா –

மார்பிலே கை வைத்து உறங்கும் அத்தனை அன்றோ -என்ற கருத்து
அசிந்த்யஸ்த்வா பூமௌ-இத்யாதி
ப்ரபத்ய த்வாமத்ய -இத்யாதி-

—————————————————————-

என்ன பயம் நமக்கே -என்று நிர்பயரான இவர்
இதில்
அஸ்மத் குரு தாயாய தயதீந்தி ராங்கி க்ரியான்வய -என்கிறபடியே
ஸ்ரீ பிள்ளை யுடைய நிர்ஹேதுக கிருபையாலே ஸ்ரீ எம்பெருமானாருடைய அபிமான நாவா ரூடனாய்
சம்சார சாகரத்தைக் கடந்து ஸ்ரீ யபதியுடைய ஸ்ரீ பாத கூலத்தை பிராபிப்பேன் -என்று நிச்சயிக்கிறார் –

தீதற்ற ஞான திருவாய்மொழிப் பிள்ளை சீர் அருளால்
ஏதத்தை மாற்றும் எதிராசர் தமபிமானம் என்னும்
போதத்தை ஏறிப் பவமாம் புணரி தனைக் கடந்து
கோதற்ற மாதவன் பாதக் கரையைக் குறுகுவனே –22

ஸ்ரீ விஷ்ணு போதம் போன்ற ஸ்ரீ வைஷ்ணவ கப்பல் ஏறி – விண்ணோர் பிரானார் மாசற்ற மலரடிக் கீழ் –
துயர் அறு சுடர் அடி -அகில ஹேய பரத்ய நீக-நிரவதிக தேஜோ ரூபமாய்-பரம பிராப்யம் –
தத் ஞானம் அஞ்ஞானம் அதோன்ய துக்கம் -என்றும்
வித்யான்ய அசிலபநை புணம்-என்றும் சொல்லுகிறபடியே-
பகவத் அந்ய பரமாம் குற்றம் அன்றிக்கே

தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்கிறபடியே
ஸ்ரீ யபதி விஷயமாக யுடைத்தாய்
அது தான் ததீய பர்யந்தமாக இருக்கிற ஞானத்தை யுடையராய்
அதுக்கு மேலே
வறை முருகலான ஆர்ஷ வசனங்களை த்ருணவக்கரித்து-
ஸ்ரீ திருமால் அவன் கவியான ஸ்ரீ திருவாய் மொழியில்
அவகஹா நத்தை யுடையவர் ஆகையாலே அத்தை இட்டு நிரூபிக்கும்படியான ஆதிக்யத்தை யுடையரான
ஸ்ரீ பிள்ளையினுடைய நிர்ஹேதுக கிருபையினாலே

காமாதி தோஷ ஹரராய்-எதிகளுக்கு நாதராய் இருக்கும் ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய அபிமான ரூபமாய் இருப்பதாய்
இதம் ஹி வைஷ்ணவம் போதம் சமய தாஸ்தே பவார்ணவே-என்கிறபடியே
நிர் அபாயமான விஷ்ணு போதம் போன்ற ஸ்ரீ வைஷ்ணவ போதத்தை ஆரோஹித்து
சம்சார சாகரம் கோரம் -என்று சொல்லப்படுமதான சம்சாரம் ஆகிற சமுத்ரத்தைக் கடந்து –

விண்ணோர் பிரானார் மாசற்ற மலரடிக் கீழ் – துயர் அறு சுடர் அடி –
அகில ஹேய பரத்ய நீக-நிரவதிக தேஜோ ரூபமாய்
வேறு ஒரு பிரப்யாந்தரத்தை அபேஷிக்கும்படியான கோது இன்றிக்கே
ஸ்ரீ யபதியினுடைய திருவடிகள் ஆகிற தீரத்தை கிட்டப் பெறுவன்-இது நிச்சயம் –

ஸ்ரீ பிராட்டி கடாஷத்துக்கு விஷயமான பின்பு ஸ்ரீ திருவடி
ராமஸ்ய லோக த்ரய நாயகஸ்ய ஸ்ரீ பாத கூலம் மனஸா ஜகாம-என்று அடைந்ததாக அத்யவசித்தான் இறே-
மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்டாய் மாதவா -என்று தொடங்கி
உன் தேனே மலரும் திருப் பாதம் வினையேன் சேருமாறு நீ அருளாய் -என்று அர்த்திக்க வேண்டிற்று இறே

கோதற்ற மாதவன் -என்று கோது அறுகையாவது அவனுக்கு விசேஷணம் ஆன போது
ஸ்ரீ பிராட்டியோடு கூடி இருக்கையாலே-திருவில்லாத கோது அற்றவன் என்னவுமாம்
ஸ்ரீ யபதி இறே நித்ய பிராப்யன் ஆவான் –

———————————————————-

கீழே இரண்டு பாட்டாலும்
ஸ்வ ஆச்சார்யகளான–பரம ஆச்சார்யகளான ஸ்ரீ பிள்ளை யுடையவும் ஸ்ரீ எம்பெருமானார் யுடையவும்
அபிமானத்தாலே பேறு தப்பாது என்று நிச்சயித்து
இப்படி நிச்சிதமான பின்பு
வடிவுடை மாதவன் -என்னும்படி
புதுக் கணிப்போடு சபரிகரனாய் -திவ்ய ஆஸ்தான மண்டபத்திலே
திவ்ய சிம்ஹாசனத்திலே திவ்ய மகிஷி பரிவ்ருதனாய் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மன் நாராயணான
ஸ்ரீ வைகுண்ட நாதனை கடுக அனுபவிக்கும்படி – எனக்கு நாதரான தேவர் பண்ணி யருள வேணும் – என்கிறார் –

அடியார்கள் குழாங்கள் அழகு ஓலக்கம் இருக்க
ஆனந்த மயமான மா மணி மண்டபத்து
படியாதுமில் படுக்கையாய் இருக்கும் அனந்தன்
பணா மணிகள் தம்மின் ஒலி மண்டலத்தின் இடையில்
வடிவாரும் மா மலராள் வலவருகும் மற்றை
மண் மகளும் ஆய்மகளும் இடவருகும் இருக்க
நடுவாக வீற்று இருக்கும் நாரணனைக் கடுக
நான் அனுபவிக்கும் வகை நல்கு எனக்கு எதிராசா —23

மூன்று மின் கொடிகளோடு கூடி தாமரை பூத்ததொரு காளமேகம் போலே —

அடியேனுக்கு ஸ்வாமியாய்-எதிகளுக்கு நாதர் ஆனவரே
அடியார்கள் குழாங்கள் -என்றும்
மா மணி மண்டபத்து அந்தமில் பேரின்பத்து அடியவர் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ அனந்த
ஸ்ரீ கருட
ஸ்ரீ விஷ்வக்சேன
பிரமுகரான நித்ய வர்க்கமும்
ஸ்ரீ பராங்குச
ஸ்ரீ பரகால
ஸ்ரீ யதிவராதிகள்
தொடக்கமான முக்த வர்க்கமும்

மணி முத்தாதிகளை நிறைத்தால் போலே அழகு ஓலக்கமாக வரிசை அடைவே சேவித்து இருக்கிற
ஆனந்த மயாய மண்டபாத் நாயநம-என்கிறபடியே நிரஸ்த அதிசய ஆனந்த ஜனகமான
திரு மா மணி மண்டபத்திலே-அசேஷ சேஷ வ்ருத்திகளுக்கும்
சைத்ய மார்த்வாதிகளுக்கும் உபமானம் அன்றியிலே இருப்பதான திவ்ய பர்யங்கம் ஆகிற

ஆயிரம் பைந்தலைய அனந்தன் -என்றும்
சிறப்புடைய பணங்கள் மிசைச் செழும் மணிகள் விட்டு எரிக்கும் -என்றும்
தெய்வச் சுடர் நடுவுள் -என்றும் சொல்லுபடியான பணா மண்டலங்களின் ஜோதிர் மண்டலத்தின் நடுவே-

வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கை -என்றும்
வடிக் கோல வாள் நெடும் கண் மா மலராள் -என்றும் சொல்லுகிறபடியே
சௌந்தர்யத்தாலே மிக்கு சௌகுமார்யத்தை இட்டு நிரூபிக்கும் படியான ஸ்ரீ பெரிய பிராட்டியார் வலவட்டத்திலும்-
ஏவம் பூதைகளாய்
அவளுக்கு நிழல் போல்வனரான மற்றை ஸ்ரீ நாய்ச்சிமார் இடவட்டத்திலும் சேவித்து இருக்க

இவர்களுக்கு நடுவே
மூன்று மின் கொடிகளோடு கூடி தாமரைப் பூத்த தொரு காளமேகம்
வெள்ளி மலைக்கு இனியப் படிந்து இருக்குமா போலே
வீற்று இருந்து ஏழ் உலகம் தனிக் கோல் செல்ல எழுந்து அருளி இருக்கிற வாழ் புகழ் நாரணனான
ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கால விளம்பம் இன்றிக்கே கடுக நான் அனுபவிக்கும் பிரகாரம்
இவன் இத்தைப் பெற்றிடுவான் என்று ஸ ஸ்நேஹமாக உபகரித்து அருள வேணும் –

என் எதிராச நல்கு -என்று
இவ்விடத்தில் சம்போதிக்கவுமாம் –
அடியிலே ஆகவுமாம்-

————————————————————————

இதில் –
தேக விமோசகம் தொடங்கி-பலத்தின் எல்லையான
தேசிகரோடு ஒரு கோவையாய் இருக்கும் அளவாய் இருக்கிற
பேற்றை அபேஷித்து அருளுகிறார் –

இந்த வுடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ்வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா–23-

அடியேனுக்கு ஸ்வாமியாய் -எதிகளுக்கு நாதரானவரே –
இம் மாய வாக்கை -என்னுமா போலே அத்யந்தம் ஹேய சமுதமாய் இருக்கிற இந்த ஸ்தூல சரீரத்தை
உபேஷையோடே மங்க ஒட்டு -என்று த்யஜித்து –

மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன் நடுவுள் அன்ன தோர் இல்லியினூடு போய் -என்கிறபடியே
அவன் மண்டலத்தைக் கீண்டு அவ்வருகே போய்
மற்றும் ஆதிவாஹிக புருஷர்களாய் யுன்டானவர்கள் லோகங்கள் எல்லாம் கடந்து

இமையோர் வாழ தனி முட்டை கோட்டையாய்
கோடி யோஜனமான வளப்பத்தை யுதைத்தான அண்ட கபாலத்தை பேதித்து-அத்தை ஒரு படி கழித்து
மத்யே யுண்டான தசோத்தரமான ஆவரண சப்தத்தையும் கடந்து
அவ்வருகே போய்

முடிவில் பெரும் பாழான மூல பிரக்ருதியையும் கடந்து அத்யந்த ரமணீயமாய் இருப்பதொரு விரஜை என்று
பிரசித்தமான அந்நதியிலே ஸ்நானம் பண்ணி-அவ்விடத்தில் அவமானவன் கர ஸ்பர்சத்தாலே
ஒளிக் கொண்ட சோதியுமாய்-என்கிறபடியே
பஞ்ச உபநிஷண் மயமாகையாலே நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய விக்ரஹத்தை பெற்று
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள -என்கிறபடியே ஸ்ரீ நித்ய சூரிகள் பிரத்யுக்தராய்
ப்ரஹ்ம அலங்காராதி களாலே அலங்கரித்து ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டு வழி நடத்திப் போய்

ஸ்ரீ வைகுண்டம் ஆகிற திவ்ய நகரத்தை பிரவேசித்து பெரும் தெருவாலே உள்ளே போய்
ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்தைக் கிட்டி சென்று
அடியார்கள் குழாங்கள் உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
மத் தேவதை பரிஜனைஸ் தவ சங்கிஷீய-என்கிறபடியே நமக்கு ஸ்வாமிகளாய் ஸ்ரீ யபதியுடைய திருவடிகளிலே
ந்யஸ்த பரராய் அதுவே நிரூபகமாய் இருக்கிற சூரி சங்கங்கள் உடன் கூடுகிற அந்த திவசமானது
குறுக்கும் வகை யுண்டு கொலோ -என்கிறபடியே அத்தை அபேஷிக்கிற எனக்கு
அது சமீபமாம் பிரகாரம் உபகரித்து அருள வேணும்

இவ்விடத்தில் நல்கல் -கொடுத்தல் –

———————————————————-

நீரோ உம்முடைய அபராதம் பாராமல் கனத்த அப் பேற்றை அபேஷியா நின்றீர் –
அதுக்கு நாம் செய்வது என் என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக
அடியேனை அங்கீ கரித்த அன்று தொடங்கி இன்றளவும் வர அடியேனுடைய அபராதங்களையும் பொறுத்து
உபேஷியாதே மோஷத்தையும் கொடுப்பாராக எண்ணி இருக்கிற தேவர் கால விளம்பம் பண்ணாமல்
அத்தைச் செய்து அருள வேணும் என்கிறார்-

என்று நிர்ஹேதுகமாக வென்னை யபிமாநித்து
யானும் அறிந்து உனக்கேயாய் இருக்கும் வகை செய்தாய்
அன்று முதல் இன்று அளவும் அநவரதம் பிழையே
அடுத்து அடுத்துச் செய்து அனுதவிப்பது இனிச் செய்யேன்
என்று உன்னை வந்து இரப்பதாம் என் கொடுமை கண்டும்
இகழாதே இரவு பகல் அடிமை கொண்டு போந்தாய்
இன்று திருநாடும் எனக்கு அருள வெண்ணுகின்றாய்
இனிக் கடுகச் செய்து அருள வேண்டும் எதிராசா –25–

எதிகளுக்கு நாதரான தேவரீர் இவ்வாத்மாவை என்று நிர்ஹேதுகமாக இவன் நம்முடையவன் என்று அபிமானித்து அருளி –
அடியேனும் அந்த அபிமான விசேஷத்தை அறிந்து தேவர்க்கே அனன்யார்ஹமாம் படி செய்து அருளிற்று
அப்படியே அபிமானித்து அருளின அன்று தொடங்கி தேவரீர் திருவடிகளை பிராபிக்க இருக்கிற இன்றளவும்
நிரந்தரம் அபராதமே இடைவிடாமல் செய்து
இப்படி அக்ருதயமானவற்றிச் செய்தோம் என்று அனுதவிப்பது –

இனி இப்படிப் பட்ட அபராதங்களைச் செய்யேன் என்று தேவரை அர்த்திப்பதாகிய
என்னுடைய க்ரூர கர்மம் கண்டு உபேஷியாமல்
இங்கும் திவா ராத்திரி விபாகம் அற தேவரீர் திருவடிகளில் கைங்கர்யம் கொண்டு அருளினீர்
அவ்வளவும் அன்றிக்கே
இன்று சத்துக்களுக்கு கந்தவ்ய பூமியான ஸ்ரீ திரு நாட்டையும் யோக்யதை இல்லாத எனக்கு
பிரசாதிப்பதாக இச்சித்து அருளா நிற்கிறீர்
இப்படி செய்ய வேண்டியற்ற பின்பு காலக் கழிவு செய்யாமல் கடுக செய்து அருள வேணும்-

————————————————–

இவர் தம்மை அங்கீ கரித்த அன்று தொடங்கி இன்றளவும் உண்டான அபராத சஹத்வாதிகளை
ஆவிஷ்கரித்த வாறே
நம்மை ஒழிய வேறு ஒருவர் இவர் குற்றங்களைப் பொறுத்து ரஷிக்க வல்லார் உண்டோ –
இனி இவருக்கு மேல் உண்டான காரியமும் நாமே செய்து அருளி தலைக் கட்ட வேணும்
என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக

பாவஞ்ஞர் ஆகையாலே அவர் கருத்து அறிந்து இப்படி அகதிகளுக்கே கதியாக இருக்கிற தேவரை ஒழிய
என்னுடைய அபராதங்களைப் பொறுத்து ரஷிக்க எத்தனை குணவான்களான
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார்க்குத் தான் முடியுமோ –

இனி
பிராப்ய ருசியையும் யுண்டாக்கி-பிராப்ய தேசத்தில் சேரும்படி பண்ணி அருள வேணும் என்கிறார்
அன்றிக்கே
அநவரதம் செய்கிற அபராதங்களை சமித்து ரஷிக்கும் போது
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார் ஆக வேண்டாவோ என்ன
அது நமக்கு அன்றி யாவர்க்கு முடியும் என்கிறார் ஆகவுமாம் –

தென்னரங்கர் தமக்காமோ தேவியர் கட்காமோ
சேனையர் கோன் முதலான ஸூரியர்கட்காமோ
மன்னிய சீர் மாறன் அருள் மாரி தமக்காமோ
மற்றுமுள்ள தேசிகர்கள் தங்களுக்காமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்
எதிராசா உனக்கன்றி யான் ஒருவர்க்கும் ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்ன யுண்டாக்கி
ஒளி விசும்பில் அடியேனை யொருப்படுத்து விரைந்தே—-26-

எதிகளுக்கு நாதரானவரே-ஸ்வதஸ் சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரனாலும் பரிகணித்து முடியாத
அடியேனுடைய அபராதங்களை ஷமிக்க-
தோஷா யத்ய பித்ஸ் யஸ்யாத்-என்றும்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் -என்றும்
பேசும்படியான ஸ்ரீ பெரிய பெருமாளுக்குத் தான் சக்யமோ –

அவருக்கும் பொறைக்கு உவாத்தாய் –
ந கச்சின் ந அபராத்யதி –என்றும்
கிமேதந நிர் தோஷ க இஹ ஜகதி -என்றும் பேசும்படியான ஸ்ரீ பெரிய பிராட்டியார் தொடக்கமான
ஸ்ரீ நாய்ச்சிமார்களுக்குத் தான் சக்யமோ –

இப்படியான இருவர்களுடையவும் சேர்த்தியில் அடிமையை ஆசைப் பட்டவர்களுக்கு அந்த கைங்கர்ய போகிபாகிகளாம்படி-
அஸ்மாத்பிஸ் துல்யோ பவதி -என்று கூட்டிக் கொள்ளும்
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் தொடக்கமான ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்குத் தான் சக்யமோ

இவர்கள் தான்-
ஸ்ரீ விஷ்வக் சேன சம்ஹிதை-ஸ்ரீ விஹகேந்திர சம்ஹிதைகளிலே பிரபத்தி மார்க்க பிரதர்சகர் இறே-
நித்தியமாய் பொருந்தி இருப்பதான ஆஸ்ரித விஷய வாத்சல்யாதி குண உக்தராய்
அத்தை அனுஷ்டான சேஷமாம் படி
பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்ளும் ஸ்ரீ நம் ஆழ்வார்
இவரோபாதி சேதன விஷயத்தில் கிருபையை வர்ஷிக்கிற ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் இவர்களுக்கு தான் சக்யமோ

மற்றும் ஆழ்வார்கள் கிருபைக்கு விஷயமாய் க்ருபாமாத்ரா பிரசன்னாச்சார்யர் களாய் இருக்கிற
ஸ்ரீ நாத ஸ்ரீ யாமுனாதிகள் ஆகிற அவர்கள் தொடக்கமாக இவ்வருகு உள்ள ஸ்ரீ ஆச்சார்யர்களுக்குத் தான் சக்யமோ

அபராத சஹாரான தேவர்க்கு ஒழிய
கீழ் உக்தரான எத்தனை அதிசய தயாவான்கள் ஆனாருக்குத் தான் இத்தைச் செய்து தலைக் கட்டப் போமோ

அது ஒருவருக்கும் அசக்யம் ஆகையாலே
நிகரின்ற நின்ற என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை -என்கிறபடியே
தயைக சிந்துவாய்-சர்வ அபராத சஹராய் இருக்கிற தேவர்க்கு ஒழிய
அபராதநாமாலயனான நான் காகத்தைப் போலே வேறு ஒரு கோஷ்டிக்கு ஆள் ஆகேன் –

உபாய தசையில் ரஷித்தவோபாதி–உபேய தசையிலும் தேவர் கிருபையாலே
பிராப்ய ருசியையும் விளைத்து –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -என்றும்
தெளி விசும்பு -என்றும்–சொல்லப் படுகிற பிராப்ய தேசத்தில் அடியேனை
அங்குற்றேன் அல்லேன் -என்னும்படி
ஆந்தராளிகன் ஆக விட்டு வைக்காமல் சீக்கிரமாக ஒருதலைப்பித்து அருள வேணும்
ஒரு கோடியிலே சேர்க்க வேணும் என்றபடி –

உனக்கு அன்றி என்ற இத்தை–கீழும் மேலும் கூட்டி நிர்வஹிப்பது –

ஒரு வேளையில் -ஷிபாமி – ந ஷமாமி -என்னும் நிரங்குச ஸ்வ தந்த்ரனுக்கும்
ஷமா லஷ்மீ பிருங்கீ சகல கரணோன்மாத நமது -என்றும்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் -என்றும் பேசும்படி உன்மஸ்தகமான போகத்தாலே
மதித்து ஸ்தப்தைகளாய் இருக்கும் அவர்களுக்கும்
அச் சேர்த்தியிலே கைங்கர்ய நித்ய நிரதராய் அஸ்தான சிநேக ரஷா வ்யசநிகளாய்
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழுமவர்களாய் இருக்குமவர்களுக்கும்
அச் சேர்த்தியை அனுபவிக்க ஆசைப்பட்டு

சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்-என்றும்
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து -என்றும்
உன்னைக் காண்டும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து -என்றும்
பக்தி பாரவச்யத்தால் ஆழம் கால் பட்டு இருக்குமவர்களுக்கும்
மற்றும் கருதக்ருதயராய் ஆக்கை விடும் பொழுதையும்
மாக வைகுந்தம் காண்கையையும்
மநோ ரதிக்கிற முமுஷூக்களுக்கும்
சர்வ அபராத அனர்த்தம் கண்டு பரோபதேசம் பண்ணுகை கூடாது இறே –

தம்மை அழிய மாறியும்-சம்சாரிகள் துர்க்கதி கண்டு அவர் பின் படரும் குணனாய்
அவர்கள் அவியதையைப் பாராமல் சர்வதா பரோபதேசம் பண்ணியும்
அத்தாலே
ஆளுமாளார் -என்கிறவனுடைய தனிமை தீரும்படி மங்களா சாசன பரரை யுண்டாக்கி
பர சம்ருத்தியே பேறாம்படி நடத்திக் கொண்டு போருவர் ஒருவர் ஆகையாலே
இவர்க்கே யாய்த்து இது கூடுவது –
அது திருத்தலாவதே -என்று கை விட்டத்தை இறே கைக் கொண்டு திருத்தி
ஸ்ரீ திருமகள் கேள்வனுக்கு ஆக்கி அருளிற்று –

ஆகை இறே இவரும் இப்படி அருளிச் செய்தது –

மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே இராமானுசன் செய்யும் சேமங்கள் மற்று உள்ளார் தரமோ
என்று இறே ஸ்ரீ அமுதனாரும் அருளிச் செய்தது –

பரம்ந்தத் கரீயாம்சம் -இத்யாதி –

———————————————————————–

இவர்
ஒளி விசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே -என்ற அநந்தரம் -அவரும்
வானே தருவான் எனக்காய் –என்னும்படி
மோஷ பிரதானத்திலே சத்வராய் இருக்கிற படியை சாஷாத் கரித்து
இனி த்யாஜ்யமான இவ் விபூதியில் உண்டானது அடங்கலும்-அனுபாதேயமாய்
பிராப்யமான அவ் விவிபூதியில் உண்டானது அடங்கலும் உபாதேயமாய் அற்ற பின்பு
அவற்றின் விஸ்மரண அனுஸ்மரணங்களான க்ருத்ய அக்ருத்யங்களை
தமக்கு விதேயமான திரு உள்ளத்தைக் குறித்து விதித்து அருளுகிறார் –

இவ்வுலகில் இனி ஒன்றும் எண்ணாதே நெஞ்சே
இரவு பகல் எதிராசர் எமக்கு இனி மேல் அருளும்
அவ்வுலகை யலர்மகள் கோன் அங்கு இருக்கும் இருப்பை
அடியார்கள் குழாங்கள் அதனை அவர்கள் அனுபவத்தை
இவ்வுயிரும் அதுக்கு இட்டுப் பிறந்து இழந்து கிடந்தது
என்னுமத்தை என்றும் அதுக்கிடைச் சுவராய்க் கிடக்கும்
வெவ்வினையால் வந்த வுடல் விடும் பொழுதை விட்டால்
விளையும் இன்பம் தன்னை முற்றும் விடாமல் இருந்து எண்ணே—27-

பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான மனசே –
அத தேக அவதாநேச த்யக்த சர்வ இதர ச்ப்ருஹ-என்கிறபடியே இந்த கொடு வுலகில் ஹேயமாய் இருப்பதான
பிரகிருதி பிராக்ருதங்கள் எல்லாம் த்யாஜ்யம் என்று நேரே அறிந்த பின்பு
அல்ப அஸ்த்ரத்வாதி தோஷ துஷ்டமான அவற்றில் ஏக தேசமும் அங்கீகார போக்யமாக விசாரியாதே

ஸ்ரீ எம்பெருமானார்
நமக்கு பிராப்ய ருசியையும் உண்டாக்கி அருளி
இனி மேல் அருளகொடையாக அருளும் வானுலகமான அந்த லோகத்தையும்
அந்த லோகம் எல்லாம் நிறம் பெறும் படி

எழில் மலர் மாதரும் தானும் இவ் ஏழ் உலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து -என்கிறபடியே
புஷ்பத்தில் பரிமளம் வடிவு கொண்டால் போலே இருக்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு
வல்லபனான வ்யாவ்ருத்தி தோற்ற அங்கே
திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்து அருளி இருக்கும் இருப்பையும் –

அச் சேர்த்தியில் அடிமை செய்கிற அடியார்கள் குழாங்கள் -என்கிற பிராப்யமானவவர்கள் சமூஹம் தன்னையும்
அவர்கள் ஹர்ஷத்துக்கு போக்குவிட்டு அனுபவிக்கும் அனுபவத்தையும்
இவ்வாத்மாவும் அதுக்கு பிராப்யனாய் வைத்து அத்தை இழந்து கிடந்தது என்கிறவற்றையும்
அத்யாபி அந்த அனுபவத்துக்கு பிரதிபந்தகமாய் கிடக்கும்-பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -என்கிறபடியே
க்ரூர கர்மத்தால் யுண்டான தேக விமோசனமாம் காலத்தையும்
தேக விமோசன அநந்தரம் பலிக்கும் நிரதிசய ஆனந்தத்தையும்-இப்படி உக்தங்களாய்
ஸ்வரூப அனுரூபங்களாய் உள்ளவை எல்லாவற்றையும் -திவா ராத்திரி விபாகம் அற
இடைவிடாமல் ஒருப்பட்டு இருந்து சிந்தித்துப் போரு-

அன்றிக்கே
உக்தங்களான அவற்றில் ஒன்றும் விடாமல் ஒருப் பட்டு இருந்து சிந்தித்து – என்னவுமாம் –

இவ்வுலகினில் இனி ஒன்றும் எண்ணாதே -என்ற இதுக்கு
மருள் ஒழி நீ -என்று சொல்லுகிற
அந்திம தசா விரோதியான அர்ச்சாவதார பிராவண்யம் ஆகவுமாம்-

————————————————

செய்தது எல்லாம் செய்தும் இது நெடும் காலம் இல்லாத பிராப்ய ருசி இப்போது
ஸ்ரீ எம்பெருமானார் உடைய கிருபையாலே உண்டாயிற்று என்று
அந்த லாபத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

பண்டு பல வாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடனே செய்தருளும் பல்கலைகள் தம்மைக்
கண்டது எல்லாம் எழுதி யவை கற்று இருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்
புண்டரிகை கேள்வன் உறை பொன்னுலகு தன்னில்
போக நினைவோன்றும் இன்றிப் பொருந்தி யிங்கே யிருந்தேன்
எண்டிசையும் ஏத்தும் எதிராசன் அருளாலே
எழில் விசும்பை அன்றி இப்போது என் மனம் எண்ணாதே—-28

நல்லடிக் காலமான பூர்வ காலத்திலே ஆத்ம உஜ்ஜீவன தத் பரராய் இருக்கிற ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் அனைவரும்
ஏக கண்டமாய் இந்த பூ லோகத்தில் உண்டான சமஸ்த சேதனரும் உஜ்ஜீவிக்க
இவர்கள் இடத்தில் ஸ ஸ்நேஹமாக செய்து அருளும் பல பிரபந்தங்கள் தன்னை
தெரித்து எழுதி -வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது -ஸ்ரீ நான் முகன் -63–
இத்யாதிப் படியே–ஆதார அதிசயத்தாலே

தேடி-கண்டவைகள் எல்லா வற்றையும் லிகித்து-அத்தை ஆச்சார்யா முகத்தாலே அப்யசித்து
தன் நிஷ்டனாய் இருந்தும்
இன் நிஷ்டை இல்லாத அந்யரும்-தன் நிஷ்டராய் உஜ்ஜீவிக்கும்படி அவர்களுக்கு ஆதாரத்தோடு அப்யசித்தும்
கால ஷேபம் பண்ணினேன்-

ஸ்ரீ தாமரையாள் கேள்வன் -என்னும்படி ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன் நித்ய வாசம் பண்ணுகிற
ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைகுண்டத்திலே போக வேணும் என்கிற ஸ்மரண லேசமும் இன்றிக்கே
இவ்விபூதியிலே சக்தனாய் வசித்தேன் –

திசை அனைத்தும் ஏறும் குணன் ஆகையாலே அஷ்ட திக்குகளில் உண்டானவர்களும்
தன் வைபவத்தை சொல்லி ஸ்தோத்ரம் பண்ணும்படியான ஸ்ரீ எம்பெருமானார் உடைய கிருபையாலே
விலஷணமான பரம ஆகாசத்தையே ஒழிய இப்போது என்னுடைய மனசானது ஸ்மரியாது –

இது ஒரு கிருபா விசேஷம் இருந்தபடி என் –என்று கருத்து –
இவ்விடத்தில் ஏகாரம் தேற்றத்தில் –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -பாசுரம் -13-19–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 19, 2014

தாம் நிர்பந்தித்த படிகள் எல்லாம் கொண்டருளும்படி ஸூலபரான ஸ்ரீ எம்பெருமானார் யுடைய
சௌந்தர்யாதிகளிலே தோற்றுத்
தாம் மங்களா சாசனம் பண்ணி

அவ்வளவில் நில்லாதே
சம்பந்த சம்பந்திகள் அளவும் சென்று அத்தாலே பெற்ற பேற்றை
அந்ய பரோக்தியாலே அருளிச் செய்கிறார் –

எதிராசன் வாழி எதிராசன் வாழி
எதிராசன் வாழி என்று என்று ஏத்திச் -சதிராக
வாழ்வார்கள் தாளிணைக் கீழ் வாழ்வார்கள் பெற்றிடுவர்
ஆழ்வார்கள் தங்கள் அருள்—13-

அவர் தாம் திருப் பல்லாண்டு முகேன
பஹூ பிரகாரமாக பகவத் விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணுவது எல்லாம்
தாம் இவ்விஷயத்திலே
எதிராசன் வாழி -என்று தொடங்கி
அத்தையே பலகாலும் சொல்லி-ஸ்துதித்து

அடியேன் சதிர்த்தேன் இன்றே -என்னுபடி சரம பர்வத்தில் நிஷ்டராய்
அத்தாலே
சாமர்த்தியமாக வாழுமவர்களுடைய திருவடிகளின் கீழே
தாய் நிழலிலே ஒதுங்குமா போலே ஒதுங்கி
நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி -என்னும்படி
அதுவே வாழ்வாக வாழுமவர்கள்

மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்களாய்-
அத்தாலே
அருள் கொண்டாடும் அடியவராய்-
அதிலும்
எல்லையில் அடிமைத் திறத்தினில் என்றும் மேவும் மனத்தராய்-
இருக்கிற ஆழ்வார்கள் பதின்மருடைய அருளையும் பத்தும் பத்தாக பெற்று விடுவார்கள்-
தசமாம் தயோன-(ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் -ஸ்ரீ பட்டர் பிரார்த்தித்த படி ) -என்னக் கடவது இறே

இத்தால்
இவர்களுக்கு சரம அவதி தாஸ்யம் நிலை நிற்கும்படி கடாஷிப்பார்கள் -என்றபடி

முதல் பாட்டிலே
மங்களா சாசன பரருடைய சம்பந்த சம்பந்திகளை
அயர்வறும் அமரர்கள் ஆதரிப்பார் என்றார்

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் -வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை—-1-

இதில்
அவர்களை மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆதரிக்கும் படியை
அருளிச் செய்கிறார் –

—————————————

தேசம் திகழும் -என்கிற பாட்டோடு இதுக்கு சங்கதி
நடுவில் பாட்டு -பிராசங்கிகம் –

உம்முடைய ஆச்சார்யர் நம் பக்கல் ஆஸ்ரயிப்பித்த அந்த ஆஸ்ரயணமே
உம்முடைய பேற்றுக்கு சாதனமாக சொல்லா நின்றீர்
அந்த ஆஸ்ரயண பலம் போருமோ –
ஏதேனும் பேற்றுக்கு உடலான அதிகார சம்பத்து உம் பக்கலிலே வேண்டாவோ என்று
மீளவும் ஸ்ரீ எம்பெருமானார்க்குத் திரு உள்ளக் கருத்தாக

அதுக்கு ஈடான அதிகாரம் யுண்டாகில் தேவரை அபேஷிக்க வேணுமோ –
அப்படிப் பட்ட யோக்யதை இல்லார்க்கு அன்றோ தேவரை அபேஷிக்க வேண்டுவது
ஆகையால் அதிகார ஸூந்யரான அகதிகளை தேவரீர் ரஷியா விடில்
வேறு புகல் உண்டோ என்கிறார் –

அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ
அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ -எதிராசா
நீ இரங்க வேண்டுவது நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம் —14-

தண் அம் துழாமே பொரு நீர் திருவரங்கா அருளாய் -(திரு விருத்தம் )-என்றத்தை
அர்த்தித்தவர்களுக்கு-
அருள் சூடி உய்ந்தவன் -(7-2-11 )-என்னும்படி
தாத்ருச அதிகாரம் உண்டானவர்களுக்கு அன்றோ
ஸ்ரீ பெரிய பெருமாள் இரங்கி அருளுவது

அப்படிப் பட்ட அதிகாரம் இல்லாத மாத்ருசர்க்கு அன்றோ எதிகளுக்கு நாதரானவரே
தேவரீர் இரங்கி ரஷித்து அருள வேண்டுவது

அகதிகளுக்கே கதியாக இருக்கிற ஈத்ருச ஸ்வ பாவரான தேவரும்
அதிகார சம்பத்தை உடையவர்களுக்கே கிருபை பண்ணி ரஷிக்கில்
அநாதிகாரிகளாய் இருக்கிற அஸ்மதாதிகள்
எந்த யோக்யதையை உப பாதித்து கொண்டு உஜ்ஜீவிக்கப் புகுகிறோம்
அநாதி காலத்தோபாதி இழந்தே போம் அத்தனை அன்றோ-

—————————————————–

ஸ்ரீ இராமானுசன் மிக்க புண்ணியன் -என்னும்படி பரம தார்மிகராய் இருக்கிற அவரை
அடுத்து அடுத்து பழி இடா நின்றோம்
நாம் அவர் திருவடிகளை ஸ ஸ்நேஹமாக அனுசந்தித்தால்
அவர் தாமே எல்லாம் செய்து அருளுவார் ஆகையாலே
தத் விஷய ஸ்நேஹம் தான் யுண்டோ என்று ஆனவளவும் பார்த்து
அது தமக்கு அத்யாபி இல்லை என்று விஷண்ணர் ஆகிறார்-

எம்பெருமானார் திருவடிகளே சரணம்
என்பதுவே நா யுரைக்கும் இத்தால் என் -அன்பு அவர் பால்
இப்போது அளவும் யான் ஒன்றும் காண்கின்றிலேன்
எப்போது யுன்டாவது இனி—–15-

ஸ்ரீ பிள்ளை கொல்லி காவல் தாசருக்கு ஸ்வரூப உஜ்ஜீவனமாயும்
ஸ்ரீ சோமாசி ஆண்டானுக்கு நித்ய பிராப்யமுமாய் இருக்கிற
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று சொல்லப் படுகிற இந்த வாசகத்தையே
அஹ்ருதயமாக என் நாவானது சொல்லா நிற்கும் –

இப்படி நிஸ் ஸ்நேஹியாக திருநாமம் சொல்லுகிற இத்தால்
சார்ந்தது என் சிந்தை உன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும் கூர்ந்தது -என்கிறபடியே
விஷய அனுகுணமாக என்னுடைய ஸ்நேஹமானது
அவர் விஷயத்திலே சரம தசா பன்னமான இக்காலத்து அளவும்
பிரேம லேசமும் அற்று இருக்கிற நான் காண்கின்றிலேன் –
இனி இப்போது இல்லாது எப்போது யுண்டாகப் போகிறது –

(இந்த ப்ரபந்தமே மா முனிகள் சரம தசையில் சரம ப்ரபந்தமாக அருளிச் செய்தார் என்பர் )

இத்தால் என் என்று –
நிஸ் ஸ்நேஹியாய்த் திரு நாமம் சொல்லுகிற இத்தால்
என்ன பிரயோஜனம் -என்னவுமாம்

அடியிலே
ஸ்ரீ இராமானுசாய நம -என்று
உத்தர வாக்ய தாத்பர்யத்தையும்
இதில்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே சரணம் -என்று
பூர்வ வாக்கியம் தாத்பர்யத்தையும்
வெளியிட்டு அருளுகிறார் –
(ஸ்ரீ ராமானுஜ த்வயமே சரம பர்வ நிஷ்டர்க்கு ஸதா வக்த்தவ்யம்
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -மதுர கவி ஆழ்வார் -அனுபவ தசையில் )

———————————————————-

நம் பக்கல் ஆனுகூல்யமான பிரேம லேசமும் இல்லாவிடில்
பிராதிகூல்ய நிவ்ருத்தி தான் யுண்டோ -என்ன

அதுவும் இல்லை
அப்படிப்பட்ட அஜஞனான அடியேனுடைய தோஷத்தை போக்யமாகக் கொண்டு
அருளுகிற தேவரீர் திருவடிகளை என்று தான் பிராபிப்பேன் – என்கிறார் –

ஆகாதது ஈது என்று அறிந்தும் பிறர்க்கு உரைத்தும்
ஆகாததே செய்வனாதலால் மோகாந்தன்
என்று நினைத்து என்னை இகழேல் எதிராசா
என்று உன்னடி சேர்வன் யான் —16

மோகாந்தன் – மோஹத்தால் அந்தகன்-மயக்கத்தால் குருடன்

ஆகாதது ஈது என்று அறிந்தும்
சாதுக்களால் பரித்யஜிக்கப் படுவதான த்யாஜ்யம் இன்னது என்று தெளிய அறிந்தும்

பிறர்க்கு உரைத்தும் ஆகாததே செய்வனாதலால்
இப்படி அறிந்த அளவு அன்றிக்கே பரோபதேசம் பண்ணியும்
அந்த நிஷித்த கர்மம் தன்னையே நித்ய அனுஷ்டானமாக நடத்தா நிற்பன் –
இப்படி
சொல்லுவது ஓன்று செய்வது ஓன்று ஆகையாலே

மோகாந்தன் என்று நினைத்து என்னை இகழேல் எதிராசா
மோஹாந்தகன் என்று திரு உள்ளம் பற்றி
உபேஷியாமல் ரஷித்து அருளுகிறவரே

இனி இஸ் சாதன அனுஷ்டானம் பண்ணின நான்
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் -என்கிறபடியே
என்று தான் தேவர் திருவடிகளை அடையக் கடவேன்
இனி இழந்தே போம் அத்தனை அன்றோ

அன்றிக்கே
இப்படி மோஹாந்தனாய் முன்னடி தோன்றாதே இருக்கிற
அடியேனுக்குத் தளப்பம் தீரும்படி
சர்வஞ்ஞரான தேவரீர்
ஒரு நாள் அவதி இட்டு தந்து அருள வேணும் என்கிறார் ஆகவுமாம்-

——————————————–

கீழ்
நாள் அவதி இட்டு தந்து அருள வேணும் -என்று அபேஷித்த இவருக்கு
அப்படியே–மரணமானால் -என்று சரீர வியோக சமயத்திலே
பரம் தாமம் என்கிற திவம் தருகிறோம் -என்று
ஸ்ரீ எம்பெருமனார்க்கு கருத்தாக எண்ணி இப்படித் தருகிறோம் என்கிற தேவரீர்
கடுகச் செய்து அருளாமல் தாழ்க்கைக்கு ஹேது எது என்கிறார் –

பொல்லாங்கு அனைத்தும் பொதிந்து கொண்டு நன்மையில் ஓன்று
இல்லா எனக்கும் எதிராசா -நல்லார்கள்
நண்ணும் திருநாட்டை நான் தருவன் என்று நீ
தண் என்று இருக்கிறது என் தான் –17-

நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்றும்
அக்ருத ஸூக்ருதக–( வரதராஜ ஸ்தவம் ) இத்யாதிப் படியே அநாத்ம குண பரி பூர்ணனாய்
ஆத்ம குண லேச கந்த ரஹிதனாய்
அத்யந்த நிக்ருஷ்டனாய் இருக்கும் எனக்கும்

பிராப்யம் அர்ச்சி பதா சத்பிஸ் தத் விஷ்ணோ பரமம் பதம் -என்று
சத்துக்களால் பிராபிக்குமதாய் இருக்கும் திருநாட்டை
நம்மோடு யுண்டான சம்பந்தம் அடியாக
நாமே தருகிறோம் என்று அருளிச் செய்த தேவரீர்

இப்போது தாழ்த்து இருக்கைக்கு ஹேது தான் என்ன –
வேறு சிலர் ரஷகர் யுண்டோ-
தானே சாதன அனுஷ்டானம் பண்ணி வருகிறான் என்றோ –
எத்தாலே தான் தாழ்க்கிறது-

அநந்ய கதியாய் அகிஞ்சனனாய் இருக்கும் அடியேனுக்கு
சீக்ரமாக பிராப்ய தேசத்தை பிராபித்து அருள வேணும் -என்று கருத்து-

—————————————————————-

இவருடைய அபேஷிதத்தை அவரும் செய்வாராக-அனுமதி பண்ணி இருக்க
அவன் அருள் பெரும் அளவு ஆவி நில்லாது -என்கிறபடியே
க்ராம ப்ராப்தி பற்றாமல் ஊரெல்லாம் துஞ்சியில் அவஸ்தையை பிராப்தராய்
என்னுடைய சம்சாரம் ஆகிற விடியா வெம் நரகமான காள ராத்ரிக்கு என்று
ஒரு நல் விடிவு பிறக்கும் என்று ஸ்ரீ ராமானுஜ திவாகரான அவர் தம்மையே கேட்கிறார் –

என்று விடிவது எனக்கு எந்தாய் எதிராசா
ஒன்றும் அறிகின்றிலேன் உரையாய் -குன்றாமல்
இப்படியே இந்த வுயிர்க்கு என்றும் இருளே விளைக்கும்
இப் பவமாம் நீண்ட இரவு –18-

எனக்கு ஜனகராய்-எதிகளுக்கு நாதரானவரே
தன்னுடைய ஆகாரத்தில் சற்றும் குறைதல் இன்றிக்கே
ஏவம் வித ரூபேண இந்த ஆத்மாவுக்கு
சர்வ காலத்திலும் ஞானோதய லேசமும் இன்றிக்கே
அஜ்ஞ்ஞான அந்தகாரத்தையே விளைப்பதான
பவ துர்தினம் -என்னும்படி-சம்சாரம் ஆகிற பெரிய நீள் இரவானது
அவிவிவேகக அநந்த திக்முகே (ஸ்தோத்ர ரத்னம் )-இத்யாதிப் படியே
பதச் கலிதனாய்-வழி திகைத்து-அலமருகின்ற எனக்கு
எந்த காலம் ஸ்வ தர்சன யோக்யமான ஸூ ப்ரபாதம் யுண்டாகுவது

அஜ்ஞ்ஞான திமிராந்தனான நான் –
ஏதத் விஷயமான பிரதிகிரியை ஒன்றும் அறிகிறிலேன்-

நிகில குமதி மாயா ஸர்வரீ பால ஸூர்ய–(யதிராஜ சப்ததி )என்னும்படி சர்வஜ்ஞ்ஞரான தேவர்
ஸூ ப்ரபாதாத்ய ரஜநீ -என்னும்படி-
இதுக்கு ஒரு விடிவு கண்டு அருளிச் செய்ய வேணும் –

குன்றுதல் -குறைதல்
பவம் -சம்சாரம் –

——————————————————————-

கீழ்
சம்சாரம் ஆகிற காள ராத்ரிக்கு அவதி கண்டு அருளிச் செய்ய வேணும் -என்றார் –
இதில் தத் கார்யமான தேக கிங்கிரிதை முதலான நிஹீன வியாபாரமும்
தேவர்க்கு அவத்யாஹமம் அன்றோ என்கிறார் –

அல்லும் பகலும் யான் ஆக்கை வழி உழன்று
செல்லுமது என் தேசுக்கு தீங்கு அன்றோ -நல்லார்கள்
தம் தனயர் நீசர்க்கு ஆட் செய்ய சகிப்பரோ
எந்தை எதிராசா இசை —19-

உன் நாமம் எல்லாம் என் தன நாவினுள்ளே அல்லும் பகலும் அமரும் படி நல்கு -என்கிறபடியே
தேவரீர் உடைய திருநாம சங்கீர்த்த நாதி அனுபவ கைங்கர்யங்களுக்கு யோக்யமான காலம் எல்லாம்
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் -என்கிறபடியே
தேக கிங்கரனாய்-அதுவே யாத்ரையாய்த் திரிகிறது –
உனக்குப் பணி செய்து இருக்கும்-(பெரியாழ்வார் ) இத்யாதிப் படியே
தேவர்க்கு தேஜோ ஹானி அன்றோ

அது எப்படி எனில்
ப்ரஹ்ம வித அக்ரேசராய் இருக்கிற சத்துக்கள் தங்கள் புத்ராதிகளை
அத்யந்த நிஹீநரான நீசருக்கு நிஹீன வ்ருத்திகள் செய்ய ஷமிப்பரோ –

இசை –
எனக்கு ஜனகராய் எதிகளுக்கு நாதரானவரே
இத்தை தேவரீர் தாமே சம்மதித்து அருளீர் –

ஆகையால் அத்தைத் தவிர்த்து இவ் வாத்மாவுக்கு சேஷியான தேவரே
அநவரதம் அடிமை கொண்டு அருள வேணும் என்று கருத்து –

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -பாசுரம் 5-12–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 19, 2014

கீழ்
உணர்ந்து பார் -என்கிற சம்பந்தம் தான் ஏது
நீர் அவர்ஜநீயர் ஆகைக்கு ஹேது ஏது என்று அவருக்குக் கருத்தாக
அத்தை நிதர்சன முகத்தாலே வெளியிடா நின்று கொண்டு
தேவர்க்கு அவர்ஜநீயன் – என்கிறார்-

தன் புதல்வன் கூடாமல் தான் புசிக்கும் போகத்தால்
இன்புறுமோ தந்தைக்கு எதிராசா -உன் புதல்வன்
அன்றோ யான் உரையாய் யாதலால் உன் போகம்
நன்றோ எனை ஒழிந்த நாள் —-5-

உறுதல் -கிட்டுதல்

அப்படி இராததாகையால் அடியேனையும் அருளிப் பாடிட்டு
அழைத்துக் கொண்டு அருள வேணும் -என்கிறார்

தன் பிரிய புத்ரனானவன் சங்கதன் ஆகாமல் தேசாந்தரஸ்தனாய் இருக்க
அவனை ஒழிய தானே ஏகனாய் புஜிக்கும் ஐஸ்வர்யாதி போகத்தாலே
அந்த பிதாவானவன் அப்படி புஜிக்கும் அந்த போகத்தாலே ஸூகத்தை அடையுமோ

எதிகளுக்கு நாதரானவரே
அப்படியே அடியேனும் –
கரீயான் ப்ரஹ்ம தாபிதா -என்னும்படியான
தேவர்க்கும் அவர்ஜநீயனான புத்திரன் அன்றோ –
இதில் சந்தேஹம் இல்லை என்பதை தேவரீரே அருளிச் செய்து அருளீர்

இப்படி சம்பந்தம் அவர்ஜநீயம் ஆகையாலே
கட்டெழில் வானவர் போகம் -என்கிற தேவரீர் உடைய போகம்
அடியேனை ஒழிந்த திவசம் ச ரசமாய் இருந்ததோ –

அப்படி இராது ஆகையாலே
அடியேனையும் அருளப் பாடிட்டு அழைத்துக் கொண்டு அருள வேணும் –
யத் விநா பாரதம் த்வாஞ்ச சௌமித்ரே புஜ்யதே ஸூகம் -என்னக் கடவது இறே

———————————————–

உன் போகம் நன்றோ எனை ஒழிந்த நாள் என்று நம் பேரிலே பழி இடா நின்றீர் –
கால க்ரமத்திலே அதுக்கீடான பாகம் விளைந்தவாறே
அப்படியே செய்கிறோம் என்று திரு உள்ளக் கருத்தாக

அது அனுகூலர்க்கு அன்றோ அப்படியாம்
பிரதிகூலனான எனக்கு
அரை ஷணம் தாழ்க்கிலும் பிராதிகூல்யமே கை விஞ்சி வரும்
ஆகையால் ஹேய குண வர்த்தகமான தேஹத்தை
தத் பூர்வமே போக்கும்படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

வேம்பு முற்றக் கைப்பு மிகுவது போல் வெவ் வினையேன்
தீம்பு முற்றும் தேகம் முற்றிச் செல்லும் கால் –ஆம் பரிசால்
ஏற்கவே சிந்தித்து எதிராசா விவ் வுடலைத்
தீர்க்கவே யான வழி செய்—6-

ஆம் பரிசால் -ஸ்வரூப சத்தை  யுண்டாம் பிரகாரத்திலே

ச ரசமான கரும்பாகில் இறே-நாள் தோறும் முற்ற முற்ற ரசம் ஏறி வருவது
வி ரசமான வேம்பு முற்ற முற்ற நாள் தோறும்
அந்த விரசமான கைப்பே விஞ்சி வருமா போலே
என்னுடைய தேஹமானது கால க்ரமத்திலே பக்வம் ஆகும் காட்டில்
க்ரூர கர்மாவாய் இருக்கிற என்னுடைய ஹேய குணமே அதிகமாம்

ஆகையால்
இது ஸ்வரூப சத்தை யுண்டாம் பிரகாரத்தில் முற்கோலிச் சிந்தித்து –
எதிகளுக்கு நாதரானவரே
இந்த ஹேய சமுதாயமான தேஹத்தை முடிக்கைக்கேயான உபாயம் செய்து அருள வேணும் –
வழி -உபாயம்
எதிராசா -என்று அடியிலே சம்போதிக்கவுமாம் –

——————————————————-

உம்முடைய தோஷத்தை ஏற்கவே முற்கோலி நாம் போக்குகைக்கு பிராப்தி ஏது –
நீர் தான் ஸ்வ கார்யத்தில் அஜ்ஞராய் அசக்தராய் இருந்தீரோ என்ன

ஸ்த நந்த்ய பிரஜை தன் கார்யத்துக்கு வேண்டுமவை தானே செய்து கொள்ளில் அன்றோ
தேவர்க்கு நித்ய ஸ்தநந்த்யமான அடியேனும்
ஸ்வ காரியத்துக்கு ஷமனாய் செய்து கொள்வது -என்கிறார்-

அன்னை குடி நீர் அருந்தி முலை யுண் குழவி
தன்னுடைய நோயைத் தவிராளோ–என்னே
எனக்கா எதிராசா வெல்லா நீ செய்தால்
உனக்கு அது தாழ்வோ வுரை—7

பிரஜையினிடத்தில் அத்யந்த வாத்சல்ய யுக்தையான மாதாவானவள்
ஔஷத சேவைக்கும் ஷமம் அன்றிக்கே
அத்யந்தம் சைசவ யுக்தமாய்-ஸ்வ போஷ்யமாய்
இருக்கிற ஸ்தநந்த்ய பிரஜைக்கும் ஏதேனும் ஒரு அனுக்கம் உண்டானால்
இது நம் குறையாலே வந்தது என்று தான் குடி நீர் முதலான
ஔஷத சேவை பண்ணி அதனுடைய அனுக்கத்தைத் தவிர்க்குமே –

அப்படியே மாத்ரு வத்சலரான தேவர்க்கு நித்ய ஸ்தநந்த்யனாய் இருக்கும் அடியேனுக்காக
எதிகளுக்கு நாதரானவரே
அடியேனால் அனுஷ்டேய அம்ஸமாய் இருப்பனவைகள்
எல்லாத்தையும் அனுஷ்டித்து ரஷித்தால் தேவர்க்கு அவத்யம் அன்றே –
தேஜஸ் கரமாய் இருப்பது ஓன்று அன்றோ –

இவ் வர்த்தத்தை அஜ்ஞனான என்னைக் கொண்டு பேசுவிக்க வேணுமோ
சர்வஞ்ஞரான தேவர் அருளிச் செய்யல் ஆகாதோ
இது என்ன ஆச்சர்யம்

அருந்துதல் -உண்டல் –

ஆச்சார்ய அபிமானம் ஆவது
இவை ஒன்றுக்கும் சக்தி இன்றிக்கே இருப்பான் ஒருவனைக் குறித்து
இவனுடைய இழவையும்
இவனைப் பெற்றால் ஈஸ்வரனுக்கு யுண்டாகும் பிரீதியையும் அனுசந்தித்து
ஸ்த நந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால் தன் குறையாக நினைத்துத் தான்
ஔஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே

இவனுக்காகத் தான் உபாய அனுஷ்டானம் பண்ணி
ரஷிக்க வல்ல பரம தயாளுவான-மகா பாகவத அபிமானத்திலே ஒதுங்கி
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -என்று சொல்லுகிறபடியே
சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவன் இட்ட வழக்கு ஆக்குகை-என்னும் அளவாக
அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை யாய்த்து
இவர் இப்படி அருளிச் செய்தது

—————————————————–

கீழ்
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு ஷமம் அன்றிக்கே இருக்கிற ஸ்த நந்த்ய பிரஜையை
மாதா ரஷிக்குமா போலே
உம்மையும் ரஷிக்க வேணும் என்று -பிராப்தி சொல்லா நின்றீர் –

பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு ஷமராய்
சத் கர்மங்களின் உடைய நிவ்ருத்தியிலும்
அசத் கர்மங்களின் உடைய பிரவ்ருத்தியிலும் நிரதராய்
ஸ்வ -விநாசத்தை-விளைத்துக் கொள்ளுகிற உம்மை நம்மால் ரஷிக்கப் போமோ -என்று
ஸ்ரீ எம்பெருமானார்க்கு திரு உள்ளமாக கருதி

அப்படியானாலும் அடியேனைக் காத்து ரஷியாது போது தேவர்க்கே அவத்யமாம் -என்னுமத்தை
ஸ நிதர்சனமாக அருளிச் செய்கிறார் –

தன் குழவி வான் கிணற்றைச் சார்ந்து இருக்கக் கண்டு இருந்தாள்
என்பதன்றோ அன்னை பழி ஏற்கின்றாள் -நன்கு உணரில்
என்னாலே என்னாகும் எதிராசா
உன்னாலே யாம் உறவையோர் —–8-

அஞ்சு வயசுக்கு உட்பட்ட பிரஜையினுடைய துர் மரணம் எல்லாம்
மாதாவினுடைய அந்தவநத்தாலே வந்ததாக அவளுக்கு சாஸ்திரம் விதிக்கையாலே
அப்படி வாராமல் கண்ணில் வெண்ணெய் இட்டு நோக்க வேணும் இறே மாதாவுக்கு –
ஆகையாலே தன்னுடைய முக்த பிரஜையானது தனக்கு நாச கரம் என்று அறியாமல்
தன் அளவன்றிக்கே
ஆழத்தாலும் அகத்தாலும் பெருத்து இருப்பதான கிணற்றை ஆசன்னமாக இருக்கக் கண்டு
அத்தை பிரதிஷேதியாமல் உபேஷித்து இருந்தாள் என்கிற மாத்ரம் கொண்டு அன்றோ
அந்த மாதாவானவள் அபவாதம் பிராப்தை யாகா நின்றாள் –

அப்படியே -நன்றாக நிரூபிக்கில்
பாபங்கள் ஆகிற படு குழியை கிட்டி நின்ற என்னாலே
ஸ்வ விநாசத்தை விளைத்துக் கொள்ளப் பார்த்தேனே யாகிலும்
அத்தை நிஷேதித்து ரஷிக்க வேணும்படி
எதிகளுக்கு நாதரான தேவராலே யுண்டாம் சம்பந்தத்தை திரு உள்ளம் பற்ற வேணும் –

இத்தால்
சம்பந்தம் அடியாக சர்வ தசையிலும் ரஷிக்க வேணும் -என்று கருத்து –
இதத்தாய் இராமானுசன் -என்கிற திவ்ய ஸூக்தியையும்
பிரஜையை கிணற்றின் கரையில் நின்றும் வாங்காது ஒழிந்தால்
தாயே தள்ளினாள் என்னக் கடவது – இறே -என்கிற திவ்ய ஸூக்தியும்-ஆயத்து இதுக்காகும் –

—————————————————–

நோற்றேன் பல் பிறவி -என்கிறபடியே
நீர் நும்முடைய துஷ் கர்மத்தாலே
இஜ் ஜன்மமே அன்றிக்கே இன்னம் பல ஜன்மமும் எடுக்க வேண்டும்படியாய்
இப்படி கை கழிந்து இருக்கிற யுமக்கு
ஸ்ரீ எம்பெருமானாராலே செய்து தலைக் கட்டலாவதே -என்று பார்ஸ்வஸ்தருக்கு கருத்தாக

அப்படி யானாலும்
அடியேனுக்காக இன்னமும் அவதரித்து ரஷித்து அருளுவர் என்கிறார் –

கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ்
வாபத்தை நீக்கும் அந்த வன்னை போல் -பாபத்தால்
யான் பிறப்பனேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை யுய்ப்பதா —9-

கிணற்றில் விழுந்த பின்பு அன்றிக்கே சற்றும் தாழாமல் நின்று
பேதைக் குழவி -என்னும்படியான முக்த பிரஜை யுடனே கூடக் குதித்து எடுத்து
அதின் அநவதாநத்தாலே வந்த ஆபத்தைப் போக்கி ரஷிக்கும்
ஸ்நேஹ புக்தையான அந்த மாதாவைப் போலே

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –என்கிறபடியே
ஏதச் சரீர அவசா நத்திலே மோஷமாம் படியான பிரபத்தி வைபவத்தையும் அழித்து
நான் பண்ணின பாபத்தாலே இன்னமும் சில
ஜன்மங்களை எடுக்கும் படி ஆனேனே ஆகிலும்

இனி இப்படி கை கழிந்த பின்பு
எனக்கு ஜனகராய்
எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானார்
நான் பிறந்த ஜென்மத்துக்கு ஈடாக தாமும் என்னை உத்தரிப்பதாக
எதிர் சூழல் புக்கு அவதரித்து அருளுவார் –

ஆகையால் அதில் எனக்கு ஒரு நிர்பந்தமும் இல்லை —
உடைமைக்கு ஒரு முழுக்கு
உடையவனுக்கு உடமை பெறும் தனையும்
முழுக்க வேண்டி இறே இருப்பது –

————————————

எம்பெருமானார் திருவடிகளை அகன்று அந்ய மனஸ்தராய் இருக்கையாலே
அன்றோ ஜென்மத்துக்கு அடியான கர்மம் புகுகிறது
இனி அந்தப் பிரசங்கம் இல்லாதபடி அவர் திருவடிகளை பொருந்தி வாழ்
என்று திரு உள்ளத்தை குறித்து அருளுகிறார்-

பூ மகள் கோன் தென்னரங்கர் பூம் கழற்குப் பாதுகமாய்
தாம் மகிழும் செல்வச் சடகோபர் -தே மலர்தாட்கு
ஏய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமானுசனை
வாய்ந்து எனது நெஞ்சமே வாழ் ——10-

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -இத்யாதிப் படியே
புஷ்பத்திலே பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபரான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய நிரதிசய போக்யமான
பூவார் கழல்களுக்கு –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் -என்று ஸ்ரீ சடகோபனாய்-

இப்படி முகில் வண்ணன் அடியை அடைந்து – அத்தாலே
உற்றேன் உகந்து பணி செய்து -என்னும்படி
தாம் ஹர்ஷிக்கும் சாத்விக ஜன சம்பத்தான ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய வகுளாபிராமமாய்
மனுஸ்பந்தியான புஷ்பம் என்றலாம் படி
நிரதிசய போக்யமாய் இருக்கிற திருவடிகளுக்கு ஸ்வரூப பிராப்தமாய் இருக்கையாலே அனுரூபமாய்
மேவினேன் அவன் பொன்னடி -என்னும்படி பொருந்தி
அத்யந்த அபிமதமான திருவடி நிலைகளாய்
என்னுடைய ஸ்வரூப சத்திக்கு காரண பூதராய்
ஸ்ரீ இராமானுஜன் என்று நிரூபகத்தை யுடையரான ஸ்ரீ எம்பெருமானாரை
இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி நெஞ்சே வாழ -என்கிறபடி
எனக்கு பவ்யமான மனசே
அநந்ய பிரயோஜனதையாலே பாத ரேகை போலே கிட்டி இந்த சம்பத்தை பெற்று வாழ் –

இத்தால்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யத்துக்கு எல்லை நிலம் இவர் ஆகையாலே
அவர் திருவடி நிலைகளுக்கும்
ஸ்ரீ யதீந்திர பிரவணர் என்று நிரூபக மாக வேணும் இறே-

செல்வச் சடகோபர் -என்கிறதுக்கு
தனம் மதீயம் தவ பாத பங்கஜம் -என்கிற செல்வத்தை பெற்றவர் ஆகவுமாம் –

ஏய்கை-பொருந்துகை
வாய்கை -கீட்டுகை-

—————————————-

நிழலும் அடிதாறும் ஆனோம் -என்றும்
மேவினேன் அவன் பொன்னடி -என்றும்
ஸ்ரீ ராமானுஜ பதச்சாயா என்றும் பேசும்படி அத்யந்த பரதந்த்ரராய் வாழும் அவர்கள்
பேற்றைப் பெற வேணும் என்று அபேஷியா நின்றீர் –
அது நமக்கு அத்யந்தம் அந்தரங்கரான ஸ்ரீ வடுக நம்பி போல்வாருக்கு அன்றோ சித்திப்பது
என்று திரு உள்ளக் கருத்தாக

அப்படியே த்வத்தந்ய தேவரான ஸ்ரீ வடுக நம்பி நிஷ்டையை அடியேனுக்கும் உண்டாக்கி
யாவதாத்மபாவி அடிமை கொண்டு அருள வேணும் என்கிறார் –

உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா
மன்னு புகழ் சேர் வடுக நம்பி –தன்னிலையை
என் தனக்கு நீ தந்து எதிராசா எந்நாளும்
உன் தனக்கே ஆட்கொள்ளு உகந்து—-11-

எதிகளுக்கு நாதர் ஆனவரே –
தேவரை ஒழிய-தேவர்க்கு தேஸ்யரான ஸ்ரீ பெரிய பெருமாளையும்
த்வத் அனுபவ கைங்கர்யாதிகளுக்கு நித்ய சத்ருவாகக் கருதி
தேவரை ஒழிய வேறு ஒரு பர தேவதையும் அறியாது இருப்பாராய்
அத்தாலே ஸ்வரூப அனுரூபமான யசஸ்சை பிராப்தராய்-இரு கரையர் அன்றிக்கே
பெரு மதிப்பராய் இருக்கிற ஸ்ரீ வடுக நம்பி
தம்முடைய சரம பர்வ நிஷ்டையை அதிலே அபேஷை யுடைய அடியேனுக்கு பிரசாதித்து அருளி
எனக்கே ஆட் செய் எக் காலத்தும் -என்கிறபடியே
தேவர்க்கே ரசவஹமாம்படி
சர்வ காலத்திலும் உகப்போடே அடிமை கொண்டு அருள வேணும்
அங்கே போகிலும் அவர் உகந்த அடிமையேயாக வேணும் என்று கருத்து –

மன்னு நிலை சேர் வடுக நம்பி என்று பாடமான போது
பொருந்தி இருக்கிற சரம பர்வ நிஷ்டை ஆகவுமாம் –

———————————————–

நீர் சொல்லுகிற அரும் தேவைகள் எல்லாம் நாம் செய்கைக்கு அடியான உறவு உண்டோ
என்று அவருக்குக் கருத்தாக உண்டு என்று
ஸ்ரீ பிள்ளை திருவடிகளிலே சம்பந்தம் பெற்ற பிரகாரத்தை பிரகாசிப்பித்தது அருளுகிறார்-

தேசம் திகழும் திருவாய் மொழிப் பிள்ளை
மாசில் திருமலை ஆழ்வார் என்னை -நேசத்தால்
எப்படியே எண்ணி நின்பால் சேர்த்தார் எதிராசர்
அப்படியே நீ செய்து அருள் ——12-

ஸ்ரீ ஆழ்வார் யுடையவும்-அவர் அடி பணிந்து உய்ந்த தேவருடையவும்
அசேஷ சேஷ வ்ருத்தியிலும் அந்விதராய்
ஜ்ஞான பக்தி விரக்தியாதி களாலும் பூரணராய்

அத்தாலே
திருவுடை மன்னரில் தேசுடையார் -என்று பேசும்படியான
பெருமையை யுடையவர் ஆகையாலே
திக் தேசங்களில் எல்லாம் பிரகாசிக்கும் படியான பிரபாவத்தை யுடையராய்
ஸ்ரீ திருவாய் மொழியோட்டை சம்பந்தத்தையே தமக்கு நிரூபகமாக யுடையராய்
தம்மிடத்திலே ஆச்சார்யத்வத்தை ஏறிட்டு கொள்ளுகை முதலான
க்ரூர நிஷிதமான மாசு இன்றிக்கே இருப்பராய் இருக்கிற

ஸ்ரீ சைல நாதன்
தம்முடைய தயா பாத்ரமான என்னை
கருணா பரிணாம ரூப ஸ்நேஹத்தாலே
இவன் எப்படி யானால் ஜீவிக்கும் என்று விசாரித்து
பிராப்த சேஷியான தேவர் திருவடிகளிலே சேர்த்து அருளினார்

அப்படியே தேவரும் திரு உள்ளம் பற்றி உஜ்ஜீவிப்பித்து அருள வேணும் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -தனியன் /அவதாரிகை – /பாசுரம் 1-4–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 19, 2014

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் அருளிச் செய்த தனியன் –

தேன் பயிலும் தாரான் எதிராசன் சேவடி மேல்
தன் பரம பத்தி தலை யெடுத்து மாந்தர்க்கு
உணவாக ஆர்த்தியுடன் ஒண் தமிழ்கள் செய்தான்
மணவாள மா முனிவன் வந்து

—————————————————-

வம்பவிழ் தார் வண்மை மணவாள மா முனிகள்
அம் புவியில் கால் பொருந்தா வார்த்தியினால் -உம்பர் தொழும்
விண்ணுலகில் செல்ல விரைந்து எதிராசன் பதங்கள்
நண்ணி யுரைத்தார் நமக்கு

———————————————————-

ஆர்த்தி தான் சம்சாரத்தில் அடிக் கொதிப்பாலும்–
பிராப்த விஷய அனுபவ அலாபத்தாலும்
பிறக்குமதாய் இறே இருப்பது –

அவை இரண்டும் ஆயத்து –
முந்நீர் ஞாலத்திலும்
அறுக்கும் வினையிலும்–ஆழ்வார் அருளிச் செய்தது –

அத்தைப் பற்றி இறே
வம்பவிழும் தாரான் -என்றும்
தேன் பயிலும் தாரான் -என்றும்–தனியன்களும் உண்டாயிற்று

—————–

லோகாச்சார்ய முநிம் வந்தே தீசமாதி குணார்ணவம்
தம் சடாரி குரோ ச சிஷ்ய மார்த்தி வ்யாக்யாம் கரோதிய

ஆர்த்தி வ்யாக்யாம் வர வர முனே ரார்த்த பந்தோர் மநோஞ்ஞாம்
லோகாச்சார்யோ முநி ரக்ருத சல்லோக மாஹ்லாத
ஆச்சார்யாணாம் சடரி புக்ரு தேரர்த்த நிர்வாஹ சக்தௌ
ப்ராசாம் பச்சாத்புவி ஸூ மதயோயாம் வதந்தி பிரகல்பம்

காந்தோ பயந்தருயமி நோ ஜகதார்யா யோகீ
வ்யாக்யாத் க்ருபா ரச நிதி கருதி மார்த்த்ய பிக்யாம்
யம்பூதலே நிகைய சீர்ஷே வயதோ வதந்தி
காந்தோ பயந்தரு யமி நோ வதாரம் த்வீதீயம்

———————————————————-

அவதாரிகை –

ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் திருமால் அடியார்கள் என்று ததேக நிரூபணீயரான தன் அடியார்க்கு
ஸ்வ பிராப்தியைப் பண்ணிக் கொடுப்பது
பிராப்ய ருசியைப் பிறப்பித்து அருளிய பின்பு ஆயிற்று —

அந்த பிராப்ய ருசி தான்
பரபக்தி பரஞான பரம பக்தி ரூபாயாய் இறே பரிணமிப்பது –
அப்படிப் பட்ட பக்தியை இறே ஆழ்வாருக்கு திரு மேனியோடு உண்டாக்கி அங்கீ கரித்தது –

அத்தைப் பற்ற
மயர்வற மதி நலம் அருளினான் -என்றும்
அவா அற்று வீடு பெற்ற -என்றும் அருளிச் செய்தார் –

அது தான் இவர் சம்பந்தம் அடியாக
எல்லாருக்கும் பிராப்திக்கு முன்னே சித்திக்கும் படியாய் இருக்கும்

தத் சித்யர்த்தமாக
பகவன் பக்தி மபிப்ரயச்சமே -என்றும்
பர பக்தி உக்தம் மாம் குருஷ்வ -என்றும் இறே ஆச்சார்யர்கள் அர்த்தித்து அருளிற்று –

அப்படி ஸ்வ அபி லஷிதத்தை அர்த்தித்து பெற்று க்ருதார்த்தராய்
கரை கண்டோர் -என்று முக்தராய் சொல்லப்படுகிற
ஸ்ரீ பராங்குச ஸ்ரீ பரகாலாதிகளோடு ஒரு கோவையாக எழுந்து அருளி இருப்பாராய்
பின்பும் ருசி உடையோர்க்கு எல்லாம் ஆஸ்ரயணீயர் ஆகைக்காக
ஸ்வ அவதார ஸ்தலாதிகளிலும் அர்ச்சா ரூபியாய் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே
தம்முடைய ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளை எப்படி என்னை அங்குத்தைக்கு அனந்யார்ஹராம்படி
அறவிலை செய்து கொடுத்து–
தத் விஷய ப்ராவண்யத்தையும் ஜனிப்பித்து அருளினாரோ

தாமும் அப்படியே நிரவதிக வ்யாமோஹத்தை யுடையராய்
ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -என்னுமா போலே
ஸ்ரீ யதீந்திர பிரவணர்-என்று-
ததேக நிரூபணீயராம் படியான ஸ்ரீ ஜீயரும்

பாலே போல் சீரில் பழித்து ஒழிந்தேன் -என்றும்
நையும் மனமும் உன் குணங்களை உன்னி -என்றும்
அவருடைய கல்யாண குணங்களிலே பரிபக்குவ ஸ்வ பாவராய்–
அத்தாலே பிராப்த சேஷியாய்
சரம பர்வமான ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளை

மெய் கொள் காண வேணும் -என்கிற அபி நிவேச அதிசயத்தால் மெய் வெளுத்து
தத் கார்யமான பிராப்தி தசையை பிராப்தராய்
இப்படி கரை புரண்ட ஆற்றாமையை யுடையராய் இருக்கிற தாம்
ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தாலே
தமக்குப் பிறந்த பரம் பக்தி தசையைப் பேசி அனுபவித்து அருளுகிற முகத்தாலே
சரம பர்வ நிஷ்டராய் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே
பிராவண்யத்தை யுடையராய் இருக்கும் சரம அதிகாரிகள் எல்லாருக்கும் அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி
இப் பிரபந்த முகேன அவற்றை வெளி இட்டு அருளுகிறார்

பக்தி எல்லாம் தங்கியது என்ன -என்னும்படி இறே இவருக்கு
ஸ்ரீ எதிராசன் சேவடி மேல் தான் பரம பத்தி தலை எடுத்தது

பரமாபத மாபன்ன -என்னும்படியும்
முடிந்த அவா -என்னும்படியும்-சொல்லும் படியான பரம பக்தியை பிராப்தராய்
அந்த தசையைப் பேசின பாசுரம் ஆகையாலே
ஆர்த்தி -என்று இதுக்கு நிரூபக திரு நாமமே இருப்பது

ஆர்த்தி தான் சம்சாரத்தில் அடிக் கொதிப்பாலும்–
பிராப்த விஷய அனுபவ அலாபத்தாலும்
பிறக்குமதாய் இறே இருப்பது –

அவை இரண்டும் ஆயத்து –
முந்நீர் ஞாலத்திலும்
அறுக்கும் வினையிலும்–ஆழ்வார் அருளிச் செய்தது –

அத்தைப் பற்றி இறே
வம்பவிழும் தாரான் -என்றும்
தேன் பயிலும் தாரான் -என்றும்–தனியன்களும் உண்டாயிற்று

அப்படியே இவர்க்கும் ஆகார த்வயம் நடவா நின்றதே யாகிலும்
அதில் அனுபவ அலாபத்தால் உண்டான ஆர்த்தி இறே பிரசுர்யேண் இப் பிரபந்தத்தில் நடந்து செல்கிறது –

இவர் தாம்
சம காலத்தில் போல் ஸ்ரீ ஆழ்வான் முதலான அனைத்து முதலிகளோடே
தழுவி முழுசி பரிமாறி
ராமா நுஜபோஜ த்வந்த்வ கைங்கர்யத்திலே அன்வயித்து வாழ வேணும் என்று மநோ ரதித்தவர்க்கு
அது மானச அனுபவ மாத்ரமாய்
அதீத காலம் ஆகையாலே பிரத்யஷ யோக்கியம் அன்றிக்கே ஒழிகையாலும்

இனி
இவர் தேச விசேஷத்திலே நித்ய கைங்கர்ய நிரதராய் இருக்கிற படியை அனுசந்தித்து
அவர் விஷயத்திலே தாமும் அப்படியே வழு விலா அடிமை செய்து வாழ வேணும் என்று
அவர் திருவடிகளிலே இத்தை பிரார்த்தித்து அருளுகிறார் –

ஆகை இறே –
வடுக நம்பி தன்னிலையை என் தனக்கு நீ தந்து எதிராசா
எந்நாளும் உந்தனக்கே ஆட்கொள்ளு உகந்து -என்று அருளிச் செய்து அருளிற்று –

அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்ற
ஸ்ரீ இளைய பெருமாள் நிலை ஸ்ரீ எம்பெருமானாரது
சத்ருக்னோ நித்ய சத்ருகன -என்று
பேசும்படியான அவர் நிலை யாய்த்து இவரது

இனி –
ஆ முதல்வன் -என்னும்படி
அவதார விசேஷமாய் இருந்துள்ள வ்யக்தி விசேஷங்கள்
ஸ்ரீ முகில் வண்ணன் அடியை அடைந்து உய்ந்த ஸ்ரீ ஆழ்வாரும்
அந்த ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்த ஸ்ரீ எம்பெருமானாரும்
அவர் திருவடிகளிலே அநந்ய சரண்யரான ஸ்ரீ ஜீயருமாய் -இறே உள்ளது-

இப்படி இவர்களோடு ஒரு கோவையான வைபவத்தை யுடைய இவர்
ஸ்ரீ ஆழ்வாருடையவும் ஸ்ரீ உடையவருடையவும் வைபவத்தை
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி யாலும்
ஸ்ரீ உபதேச ரத்ன மாலையாலும்
ஸ்ரீ யதிராஜ விம்சதியாலும் -அருளிச் செய்து-

அதிலும் தம் அபி நிவேசம் எல்லாம் தோற்ற –
பராங்குச பாத பத்தாம் -என்றும்
சடகோபன் தேன் மலர் தாட்கே ஏய்ந்து இனிய பாதகமாம் எந்தை இராமானுசன் -என்றும்
முடிந்த நிலமாகச் சொல்லப்படுகிற சரம பர்வமே சரமாவதி என்று
இச் சரம அர்த்தத்தை
சரம காலத்தில்
சரம பிரபந்த ரூபேண இதிலே யாய்த்து வெளி இட்டு அருளிற்று –

அதில்
ஸ்ரீ யதிராஜ விம்சதி
ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்த்னா -என்று தொடங்கி
தஸ்மாத் அநந்ய சரணோ பவ தீதிமத்வா -என்று தலைக் கட்டுகையாலே
பிராபக பரமாய் இருக்கும் –

இங்கு -வாழி எதிராசா -என்று தொடங்கி
இந்த அரங்கத்து இனிது இரு நீ -என்று தலைக் கட்டுகையாலே
இது பிராப்ய பரமாய் இருக்கும்

பிராப்ய த்வர அனுசந்தான பரமாய் இருக்கும் உத்தர வாக்கியம்
அதில் தாத்பர்யமாய் இருக்கும் இது –
பிராப்யத்தில் முடிந்த நிலம் இறே ததீய கைங்கர்யம்

இனி அந்த கைங்கர்ய வேஷத்தை
ஸ்வரூப அனுரூபமாக நிஷ்கர்ஷித்து அறிய வேண்டும் அத்தனை இறே உள்ளது

இவருக்கு இப்பிரபந்தத்தில் ஓடுகிற தசை தான் அநேக பாவ வ்ருத்திகளை யுடைத்தாய்
இது தான் ஒரு சந்தஸ்சில் அடங்காமல்-பல சந்தஸ் ஸூக்களிலும்
அவற்றை அருளிச் செய்கிறார் –

—————————————————–

இதில்
முதல் பாட்டில் –
ஸ்ரீ தண்டகாரண்ய வாசிகளான ஸ்ரீ ரிஷிகளும் -ஸ்ரீ பெரிய யுடையாரும் ஸ்ரீ பெருமாளைக் கண்ட அநந்தரம்
ஏஹீ பஸ்ய சரீராணி -என்று
ராஷசர்களாலும் ராவணனாலும் நலிவு பட்ட
ஸ்வ ஸ்வ தேஹங்களைக் காட்டி தங்கள் குறை தீர்த்துக் கொள்ளுவதற்கு முன்னே
அத் தலையில் சௌந்தர்யாதி சௌகுமார்யாதிகளைக் கண்டு கலங்கி
மங்களாநி ப்ரபுயுஜ்ஞாநா -என்றும்
ஆயுஷ்மன் -என்றும்
மங்களா சாசனம் பண்ணினாப் போலே –

(“ஜயத்யதிபலோ ராம: லக்ஷ்மணச்ச மஹாபல:
ராஜாஜயதி ஸுக்ரீவோ, ராகவேணா பிபாலித:”

ராமன் வன வாசத்தின் போது தண்டகாரண்ய மகரிஷிகளின் இருப்பிடம் சென்றான்.
அவனின் வரவை அறிந்த ரிஷிகள், அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட தம் சரீரங்களை காண்பித்து,
எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கேட்க விரும்பினார்கள்.
ஆனால் இராமனை கண்டதும், அவனுடைய அழகில் ஈடுபட்டு, அவனின் க்ஷேமத்தை கருதி,
அவனுக்கு மங்களாசாசனம் செய்ய தொடங்கி விட்டார்கள்.
இராமனுக்கு மங்களாசாசனம் செய்யத் தொடங்கியவர்கள், லக்ஷ்மணனுக்கும், சுக்ரீவனுக்கும் மங்களாசாசனம் செய்கிறார்கள் )

இவரும் தம்மை விஷயீ கரிக்க
விண்ணின் தலை நின்று எழுந்து அருளின ஸ்ரீ எம்பெருமானார் உடைய
அப்ராக்ருதமான திவ்ய விக்ரஹத்தில் பிரகாசிக்கிற சௌந்தர்யாதி சௌகுமார்யாதிகளைக் கண்டு கலங்கி
பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டி ஸ்வ அபேஷிதங்களை அறிவிப்பதற்கு முன்னே
அத்தலையில் குறை தீரவே -இத்தலையில் குறை தீரலாம் என்று அறுதி இட்ட படியே
மங்களா சாசனம் பண்ணுகிறார் –

இப்படி தாம் மங்களா சாசனம் பண்ண -அத்தாலே நித்ய ஸூரிகளுக்கு உண்டான ஆதர அதிசயத்தை கண்டு
அன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசன் -என்கிறபடியே
அங்குத்தைக்கு அந்யராய் பிரேம பாரவச்யத்தாலே மங்களா சாசனம் பண்ணுமவர்களுடைய
பரம்பரையில் சம்பந்தம் உடையவர்களை நித்ய ஸூரிகள் ஆதரிக்கும் படி இதுவே என்று
சூழ் விசும்பில் படியே வித்தராய்ப் பேசி அருளுகிறார் —

பல்லாண்டு பல்லாண்டு -என்று தொடங்கி
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே -என்றும்

ஜெயத்யதி பலோராமோ லஷ்மணச்ச மகா பல
ராஜா ஜயதி ஸூக்ரீவோ ராகவேணா பிபாலித-என்றும்
சம்பந்த சம்பந்திகளின் அளவும் மங்களா சாசனம் யுண்டாய் இறே இருப்பது-

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் -வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை—-1

வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவார்-
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு -என்றும்
பொலிக பொலிக பொலிக -என்றும்-பரம வைதிகராய் இருக்குமவர்கள்
பகவத் பாகவத விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணுமா போல
இவ் விஷயத்திலும்
அன்பராய் அந்த வைதிக நிர்தேசத்தின் படியே
வாழி எதிராசன் என்று த்ரி பிரகாரமாக மங்களா சாசனம் பண்ணுமவர்களை –

வாழி என வாழ்த்துவார் –
அப்படியே வாழி -என்று மங்களா சாசனம் பண்ணுமவர்களை –

வாழி என வாழ்த்துவார் –
அப்படியே வாழி -என்று மங்களா சாசனம் பண்ணுமவர்களுடைய –

தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை –
பரஸ்பரம் சத்ருசங்களான திருவடிகளிலே –

தாழ்த்துவார் –
பக்ன அபிமானராய் வணங்கி வழிபட்டு இருப்பார் –

விண்ணோர் தலை –
நித்ய ஸூரிகளுக்கு சிரஸா வாஹ்யர் –
அன்றிக்கே
அவர்களுக்கு ஸ்ரேஷ்டர் ஆவார்கள் என்றுமாம்–

வாழி -இடைச் சொல்லும்
வாழ்க -எனச் சொல்லும்
வாழி என்கையாலே
பிரபந்த ஆரம்பத்தில் மங்களா சாசனம் யுண்டாய் இறே இருப்பது –

——————————————————

அவதாரிகை –

அடியிலே–தொழுது எழு மனனே -என்று அனுசந்தித்த ஸ்ரீ ஆழ்வார்
பஜன ஆலம்பனமான திரு நாமத்தை
இரண்டாம் திருவாய் மொழியிலே – வண் புகழ் நாரணன் -என்று வெளியிட்டால் போலே

இவரும்-இப்பாட்டில் அத்தோடு விகல்பிக்கலாம்படியான
ஸ்ரீ இராமானுசன் -என்கிற திரு நாமத்தை வெளி இடா நின்று கொண்டு

கீழில் பாட்டில்-
அந்வய முகத்தாலே சாதித்த அர்த்தத்தை
இதில் வ்யதிரேக முகத்தாலே வெளியிட்டு அருளி
இம் முகத்தாலும்
ஸ்ரீ எம்பெருமானார் வைபவத்தை
எல்லை நிலத்து அளவும் பேசி அனுபவித்து அருளுகிறார் —

இராமானுசாய நம வென்று சிந்தித்து
இரா மானுசரோடு இறைப் போழ்து -இரா மாறு
சிந்திப்பார் தாளிணையில் சேர்ந்திருப்பார் தாளிணையை
வந்திப்பார் விண்ணோர்கள் வாழ்வு—2-

இராமானுஜாய நம என்று
சர்வ காலத்திலும்-இம் மந்த்ரத்தை மனனம் பண்ணி இருக்கை பிராப்தமாய் இருக்க

இப்படி சதா ஜப்யமான இத்தைச் செய்யாதே
நித்ய ஜீவனத்தை இட்டு சத்தை அன்றிக்கே அசத்துக்களாய்
பஸூ ப்ராயரான மனுஷ்யர்கள் ப்ரதிகூலர் ஆகையாலே
அவர்களுடைய சஹ வாசமும் துஸ் சஹமுமாய்
அவர்களுடன் ஷண காலமும் வசியாத பிரகாரம் சிந்தித்து இருக்கும்
அனுகூலர் ஆனவர்களுடைய திருவடிகளே
தங்களுக்கு அபாஸ்ரயமாக ஆஸ்ரயித்து இருக்குமவர்களுடைய திருவடிகளில்
ஸ்துத்ய அபிவாதனம் பண்ணுமவர்கள்
அரும் பேறு வானத்தவர்க்கு -என்னும்படியே
நித்ய ஸூரிகளுக்கு நித்ய சம்பத் ஆவார்கள்-

——————————————-

அவதாரிகை –

கீழ் இரண்டு பாட்டாலும்
வாழி -என்றும்
நம -என்றும்
அத்தலையில் அதிசயங்களை உப பாதித்துக் கொண்டு

இனி
இப்பாட்டு தொடங்கி –
மேல் எல்லாம் ஸ்வ அபேஷிதங்களை விண்ணப்பம் செய்கிறார் –

இதில்
அடியேனுக்கு சர்வவித பந்துவும்–தேவரீராய் இருக்க
ஏதன் நிஷ்டைக்கு விரோதியான இத் தேஹத்தை சேதித்து அருளாததற்கு ஹேது ஏது-என்கிறார்-

தந்தை நல் தாய் தாரம் தனயர் பெரும் செல்வம்
என் தனக்கு நீயே எதிராசா -இந்த நிலைக்கு
ஏராத இவ் வுடலை இன்றே அறுத்தருள
பாராதது என்னோ பகர்—-3-

எதிகளுக்கு நாதரானவரே
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே -என்றும்
த்வமேவ மாதாச -இத்யாதி யாலும் -சொல்லுகிறபடியே
ஹித பரனான பிதாவும்
பிரிய பரையான மாதாவும்
போக்யையான ஸ்திரீயும்
நிரய நிஸ்தாகரான புத்ரரும்
மற்றும் சகலவித புருஷார்த்த சாதனமான மஹத் ஐஸ்வர்யமும்
எல்லாம்
தேவர்க்கு ஸ்ரீ யபதியான பெரிய பெருமாளே ஆகிறாப் போலே –
மாதா பிதா யுவதயா -இத்யாதிப் படியே அடியேனுக்கு இவை எல்லாம் தேவரீரே –

வஸ்து ஸ்திதி இதுவாய் இருக்க
இந் நிஷ்டைக்கு அனுரூபம் இன்றியே விரோதியாய் இருக்கிற இந்த தேஹத்தை
காலாந்தரே கழிக்கிறோம் என்னாமல்
விபரீத அஞ்ஞான ஜனகம் ஆகையாலே இத்தைக் கழிக்க வேணும் என்று அபேஷிக்கிற
இந்த திவசத்திலே தானே சேதித்து அருள திரு உள்ளத்தாலே போக்கடி காணாது
இருக்கிறதுக்கு ஹேது ஏது
அத்தை சர்வஞ்ஞரான தேவரே அருளிச் செய்ய வேணும்
அது வருத்தமாய் இருந்ததோ அதுக்கும் ஒருகால் சிந்தனை செய்யும் அத்தனை அன்றோ உள்ளது –

நல் -என்கிற இத்தை எல்லாத்திலும் கூட்டிக் கொள்ளவுமாம்

—————————————-

அவதாரிகை –

கீழே விரோதியாக அருளிச் செய்த தேஹம் தன்னையே
ஆத்மாவுக்கு சிறைக் கூடமாக அனுசந்தித்து –
தத் விமோசகரும் அவரே என்று அவர் பக்கலிலே அத்தை பிராரத்து அருளுகிறார் –

இந்த உடல் சிறை விட்டு எப்பொழுது யான் ஏகி
அந்தமில் பேரின்பத்துக்கு ஆளாகுவேன்-அந்தோ
இரங்காய் எதிராசா என்னை இனி உய்க்கை
பரம் காண் உனக்கு உணர்ந்து பார் –4

இதம் சரீரம் என்னும்படி பராகர்த்தமாய்
இந்த உடல் சிறை -என்று ஆத்மாவுக்கு காரா க்ருஹம் போலே
பந்தகமாய் இருக்கிற தேக பந்தம் முக்தமாய்
எப்போது தான் அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு ஒரு கோவையாய்
நிரதிசய ஆனந்த ஜனகமானவர்கள் பரிஷத் அந்தர் பாவத்தை யுடையனாய்
சம்சார வெக்காயம் தட்டாதபடியாகக் கடவேன் –

ஐயோ –
எதிகளுக்கு நாதரான நீர்
அகதிகளுக்கும் இரங்கி அருள வேண்டாவோ

ஸ்ரீ ஈஸ்வரனும் கூட -ஷிபாமி -என்று கை விட்டவரை
சிறையான அடியேனை
இனி உஜ்ஜீவிப்பித்து ரஷிக்கை
பல்லுயிர்க்கும் வீடளிப்பான் அவதரித்த தேவர்க்கே பரம் காணும்
இவ்வர்த்தத்தை திரு உள்ளம் பற்றிப் பார்த்து அருளீர் –

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்