இதில்
முதல் பாட்டில் –
ஸ்ரீ தண்டகாரண்ய வாசிகளான ஸ்ரீ ரிஷிகளும் -ஸ்ரீ பெரிய யுடையாரும் ஸ்ரீ பெருமாளைக் கண்ட அநந்தரம்
ஏஹீ பஸ்ய சரீராணி -என்று
ராஷசர்களாலும் ராவணனாலும் நலிவு பட்ட
ஸ்வ ஸ்வ தேஹங்களைக் காட்டி தங்கள் குறை தீர்த்துக் கொள்ளுவதற்கு முன்னே
அத் தலையில் சௌந்தர்யாதி சௌகுமார்யாதிகளைக் கண்டு கலங்கி
மங்களாநி ப்ரபுயுஜ்ஞாநா -என்றும்
ஆயுஷ்மன் -என்றும்
மங்களா சாசனம் பண்ணினாப் போலே –
(“ஜயத்யதிபலோ ராம: லக்ஷ்மணச்ச மஹாபல:
ராஜாஜயதி ஸுக்ரீவோ, ராகவேணா பிபாலித:”
ராமன் வன வாசத்தின் போது தண்டகாரண்ய மகரிஷிகளின் இருப்பிடம் சென்றான்.
அவனின் வரவை அறிந்த ரிஷிகள், அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட தம் சரீரங்களை காண்பித்து,
எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கேட்க விரும்பினார்கள்.
ஆனால் இராமனை கண்டதும், அவனுடைய அழகில் ஈடுபட்டு, அவனின் க்ஷேமத்தை கருதி,
அவனுக்கு மங்களாசாசனம் செய்ய தொடங்கி விட்டார்கள்.
இராமனுக்கு மங்களாசாசனம் செய்யத் தொடங்கியவர்கள், லக்ஷ்மணனுக்கும், சுக்ரீவனுக்கும் மங்களாசாசனம் செய்கிறார்கள் )
இவரும் தம்மை விஷயீ கரிக்க
விண்ணின் தலை நின்று எழுந்து அருளின ஸ்ரீ எம்பெருமானார் உடைய
அப்ராக்ருதமான திவ்ய விக்ரஹத்தில் பிரகாசிக்கிற சௌந்தர்யாதி சௌகுமார்யாதிகளைக் கண்டு கலங்கி
பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டி ஸ்வ அபேஷிதங்களை அறிவிப்பதற்கு முன்னே
அத்தலையில் குறை தீரவே -இத்தலையில் குறை தீரலாம் என்று அறுதி இட்ட படியே
மங்களா சாசனம் பண்ணுகிறார் –
இப்படி தாம் மங்களா சாசனம் பண்ண -அத்தாலே நித்ய ஸூரிகளுக்கு உண்டான ஆதர அதிசயத்தை கண்டு
அன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசன் -என்கிறபடியே
அங்குத்தைக்கு அந்யராய் பிரேம பாரவச்யத்தாலே மங்களா சாசனம் பண்ணுமவர்களுடைய
பரம்பரையில் சம்பந்தம் உடையவர்களை நித்ய ஸூரிகள் ஆதரிக்கும் படி இதுவே என்று
சூழ் விசும்பில் படியே வித்தராய்ப் பேசி அருளுகிறார் —
பல்லாண்டு பல்லாண்டு -என்று தொடங்கி
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே -என்றும்
ஜெயத்யதி பலோராமோ லஷ்மணச்ச மகா பல
ராஜா ஜயதி ஸூக்ரீவோ ராகவேணா பிபாலித-என்றும்
சம்பந்த சம்பந்திகளின் அளவும் மங்களா சாசனம் யுண்டாய் இறே இருப்பது-
வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் -வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை—-1
வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவார்-
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு -என்றும்
பொலிக பொலிக பொலிக -என்றும்-பரம வைதிகராய் இருக்குமவர்கள்
பகவத் பாகவத விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணுமா போல
இவ் விஷயத்திலும்
அன்பராய் அந்த வைதிக நிர்தேசத்தின் படியே
வாழி எதிராசன் என்று த்ரி பிரகாரமாக மங்களா சாசனம் பண்ணுமவர்களை –
வாழி என வாழ்த்துவார் –
அப்படியே வாழி -என்று மங்களா சாசனம் பண்ணுமவர்களை –
வாழி என வாழ்த்துவார் –
அப்படியே வாழி -என்று மங்களா சாசனம் பண்ணுமவர்களுடைய –
தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை –
பரஸ்பரம் சத்ருசங்களான திருவடிகளிலே –
தாழ்த்துவார் –
பக்ன அபிமானராய் வணங்கி வழிபட்டு இருப்பார் –
விண்ணோர் தலை –
நித்ய ஸூரிகளுக்கு சிரஸா வாஹ்யர் –
அன்றிக்கே
அவர்களுக்கு ஸ்ரேஷ்டர் ஆவார்கள் என்றுமாம்–
வாழி -இடைச் சொல்லும்
வாழ்க -எனச் சொல்லும்
வாழி என்கையாலே
பிரபந்த ஆரம்பத்தில் மங்களா சாசனம் யுண்டாய் இறே இருப்பது –
—————————————————————————————————————
இவர் தம்மை அங்கீ கரித்த அன்று தொடங்கி இன்றளவும் உண்டான அபராத சஹத்வாதிகளை
ஆவிஷ்கரித்த வாறே
நம்மை ஒழிய வேறு ஒருவர் இவர் குற்றங்களைப் பொறுத்து ரஷிக்க வல்லார் உண்டோ –
இனி இவருக்கு மேல் உண்டான காரியமும் நாமே செய்து அருளி தலைக் கட்ட வேணும்
என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக
பாவஞ்ஞர் ஆகையாலே அவர் கருத்து அறிந்து இப்படி அகதிகளுக்கே கதியாக இருக்கிற தேவரை ஒழிய
என்னுடைய அபராதங்களைப் பொறுத்து ரஷிக்க எத்தனை குணவான்களான
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார்க்குத் தான் முடியுமோ –
இனி
பிராப்ய ருசியையும் யுண்டாக்கி-பிராப்ய தேசத்தில் சேரும்படி பண்ணி அருள வேணும் என்கிறார்
அன்றிக்கே
அநவரதம் செய்கிற அபராதங்களை சமித்து ரஷிக்கும் போது
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார் ஆக வேண்டாவோ என்ன
அது நமக்கு அன்றி யாவர்க்கு முடியும் என்கிறார் ஆகவுமாம் –
தென்னரங்கர் தமக்காமோ தேவியர் கட்காமோ
சேனையர் கோன் முதலான ஸூரியர்கட்காமோ
மன்னிய சீர் மாறன் அருள் மாரி தமக்காமோ
மற்றுமுள்ள தேசிகர்கள் தங்களுக்காமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்
எதிராசா உனக்கன்றி யான் ஒருவர்க்கும் ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்ன யுண்டாக்கி
ஒளி விசும்பில் அடியேனை யொருப்படுத்து விரைந்தே—-26-
எதிகளுக்கு நாதரானவரே-ஸ்வதஸ் சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரனாலும் பரிகணித்து முடியாத
அடியேனுடைய அபராதங்களை ஷமிக்க-
தோஷா யத்ய பித்ஸ் யஸ்யாத்-என்றும்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் -என்றும்
பேசும்படியான ஸ்ரீ பெரிய பெருமாளுக்குத் தான் சக்யமோ –
அவருக்கும் பொறைக்கு உவாத்தாய் –
ந கச்சின் ந அபராத்யதி –என்றும்
கிமேதந நிர் தோஷ க இஹ ஜகதி -என்றும் பேசும்படியான ஸ்ரீ பெரிய பிராட்டியார் தொடக்கமான
ஸ்ரீ நாய்ச்சிமார்களுக்குத் தான் சக்யமோ –
இப்படியான இருவர்களுடையவும் சேர்த்தியில் அடிமையை ஆசைப் பட்டவர்களுக்கு அந்த கைங்கர்ய போகிபாகிகளாம்படி-
அஸ்மாத்பிஸ் துல்யோ பவதி -என்று கூட்டிக் கொள்ளும்
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் தொடக்கமான ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்குத் தான் சக்யமோ
இவர்கள் தான்-
ஸ்ரீ விஷ்வக் சேன சம்ஹிதை-ஸ்ரீ விஹகேந்திர சம்ஹிதைகளிலே பிரபத்தி மார்க்க பிரதர்சகர் இறே-
நித்தியமாய் பொருந்தி இருப்பதான ஆஸ்ரித விஷய வாத்சல்யாதி குண உக்தராய்
அத்தை அனுஷ்டான சேஷமாம் படி
பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்ளும் ஸ்ரீ நம் ஆழ்வார்
இவரோபாதி சேதன விஷயத்தில் கிருபையை வர்ஷிக்கிற ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் இவர்களுக்கு தான் சக்யமோ
மற்றும் ஆழ்வார்கள் கிருபைக்கு விஷயமாய் க்ருபாமாத்ரா பிரசன்னாச்சார்யர் களாய் இருக்கிற
ஸ்ரீ நாத ஸ்ரீ யாமுனாதிகள் ஆகிற அவர்கள் தொடக்கமாக இவ்வருகு உள்ள ஸ்ரீ ஆச்சார்யர்களுக்குத் தான் சக்யமோ
அபராத சஹாரான தேவர்க்கு ஒழிய
கீழ் உக்தரான எத்தனை அதிசய தயாவான்கள் ஆனாருக்குத் தான் இத்தைச் செய்து தலைக் கட்டப் போமோ
அது ஒருவருக்கும் அசக்யம் ஆகையாலே
நிகரின்ற நின்ற என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை -என்கிறபடியே
தயைக சிந்துவாய்-சர்வ அபராத சஹராய் இருக்கிற தேவர்க்கு ஒழிய
அபராதநாமாலயனான நான் காகத்தைப் போலே வேறு ஒரு கோஷ்டிக்கு ஆள் ஆகேன் –
உபாய தசையில் ரஷித்தவோபாதி–உபேய தசையிலும் தேவர் கிருபையாலே
பிராப்ய ருசியையும் விளைத்து –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -என்றும்
தெளி விசும்பு -என்றும்–சொல்லப் படுகிற பிராப்ய தேசத்தில் அடியேனை
அங்குற்றேன் அல்லேன் -என்னும்படி
ஆந்தராளிகன் ஆக விட்டு வைக்காமல் சீக்கிரமாக ஒருதலைப்பித்து அருள வேணும்
ஒரு கோடியிலே சேர்க்க வேணும் என்றபடி –
உனக்கு அன்றி என்ற இத்தை–கீழும் மேலும் கூட்டி நிர்வஹிப்பது –
ஒரு வேளையில் -ஷிபாமி – ந ஷமாமி -என்னும் நிரங்குச ஸ்வ தந்த்ரனுக்கும்
ஷமா லஷ்மீ பிருங்கீ சகல கரணோன்மாத நமது -என்றும்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் -என்றும் பேசும்படி உன்மஸ்தகமான போகத்தாலே
மதித்து ஸ்தப்தைகளாய் இருக்கும் அவர்களுக்கும்
அச் சேர்த்தியிலே கைங்கர்ய நித்ய நிரதராய் அஸ்தான சிநேக ரஷா வ்யசநிகளாய்
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழுமவர்களாய் இருக்குமவர்களுக்கும்
அச் சேர்த்தியை அனுபவிக்க ஆசைப்பட்டு
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்-என்றும்
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து -என்றும்
உன்னைக் காண்டும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து -என்றும்
பக்தி பாரவச்யத்தால் ஆழம் கால் பட்டு இருக்குமவர்களுக்கும்
மற்றும் கருதக்ருதயராய் ஆக்கை விடும் பொழுதையும்
மாக வைகுந்தம் காண்கையையும்
மநோ ரதிக்கிற முமுஷூக்களுக்கும்
சர்வ அபராத அனர்த்தம் கண்டு பரோபதேசம் பண்ணுகை கூடாது இறே –
தம்மை அழிய மாறியும்-சம்சாரிகள் துர்க்கதி கண்டு அவர் பின் படரும் குணனாய்
அவர்கள் அவியதையைப் பாராமல் சர்வதா பரோபதேசம் பண்ணியும்
அத்தாலே
ஆளுமாளார் -என்கிறவனுடைய தனிமை தீரும்படி மங்களா சாசன பரரை யுண்டாக்கி
பர சம்ருத்தியே பேறாம்படி நடத்திக் கொண்டு போருவர் ஒருவர் ஆகையாலே
இவர்க்கே யாய்த்து இது கூடுவது –
அது திருத்தலாவதே -என்று கை விட்டத்தை இறே கைக் கொண்டு திருத்தி
ஸ்ரீ திருமகள் கேள்வனுக்கு ஆக்கி அருளிற்று –
ஆகை இறே இவரும் இப்படி அருளிச் செய்தது –
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே இராமானுசன் செய்யும் சேமங்கள் மற்று உள்ளார் தரமோ
என்று இறே ஸ்ரீ அமுதனாரும் அருளிச் செய்தது –
பரம்ந்தத் கரீயாம்சம் -இத்யாதி –
———————————————————————–
அனுதாபாதிகள் யுண்டாகவே
ஸ்ரீ எம்பெருமானாருக்காக ஸ்ரீ பெரிய பெருமாள் –
ஸ்ரீ மான் சமாரூட பதங்க ராஜ -என்கிறபடி எழுந்து அருளி அபிமானித்து அருளும்
பேற்றின் கௌரவத்தை அனுசந்தித்து அருளுகிறார் –
கனக கிரி மேல் கரிய முகில் போல்
வினதை சிறுவன் மேற்கொண்டு -தனுவிடும்போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என் பால்
வாரா முன்னிற்பர் மகிழ்ந்து —52-
தனு -சரீரம்
காஞ்சனஸ்ய கிரேஸ் ஸ்ருங்கே ஸ கடித்தோ யதோ யதா -என்றும்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வர்ண மயமான மகா மேருவின் மேலே
பெரும் பவ்யம் மண்டி யுண்ட பெரு வயிற்ற கரு முகிலானது கினியப் படிந்து இருக்குமா போலே
பரபாக ரசா வஹமாம் படி-
விந்தை சிறுவன் என்னும்படியான ஸ்ரீ பெரிய திருவடி மேல் கொண்டு
தேக பாத சமயத்தில் தாய் முகம் காட்டுமா போல்
சௌந்தர் யாதிகளால் பூரணரான பெரிய பெருமாள்-ஸ்ரீ எம்பெருமானார்க்காக
நான் இருந்த இடத்தே வந்து ஹர்ஷ யுக்தராய் முன்னிற்பர் –
(தேவ பிரான் கரிய கோலத் திரு உருக் காண்பன் என்றார் போல் )
இத்தால்-
எனக்கு அபேஷிதமான முகமும் முறுவலும் காட்டி அனுபவிப்பித்து அருளுவர் –
என்பது நிச்சயம் -என்று கருத்து –
—————————————
இனி
நம் பேற்றுக்கு நாம் தவரிக்க வேணுமோ – ஸ்ரீ பெரிய பெருமாள்
ஸ்ரீ எம்பெருமானார்க்கு பண்ணி அருளிய பேறுகள் எல்லாம் அவர் திருவடிகளிலே சம்பந்தம் உடைய நமக்கு
தாயப் பிராப்தமாய் இருப்பது ஓன்று அன்றோ
என்று அத்தைத் தாம் பெற்றதாக திரு உள்ளத்தோடு கூடி ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –
இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே நற்றாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ தாய முறை தான் —60-
த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹாசதைவம் வக்தா யாவச் சரீரபாதம் அத்ரைவ ஸ்ரீ ரெங்கே ஸூ கம் அஸ்வ -என்று
அருளிச் செய்து -அநந்தரம் –
நித்ய கிங்கரோ பவிஷ்யசி மாதே பூதத்ர சம்சய
இதி மயை வஹ் யுக்தம்
அத ஸ்தவம் தத்வதோமத் ஜ்ஞான தர்சன பிராப்தி ஷூ நிஸ் சம்யச் ஸூ க மாஸ்வ-என்னும் அளவாக
தேக பாதம் தொடங்கி
கைங்கர்ய பர்யந்தம் உண்டான பேறுகள் எல்லாம்
நாமே தலைக் கட்டித் தருகிறோம் என்று
ஸ்ரீ பெரிய பெருமாள் நமக்கு ஜனகரான ஸ்ரீ எம்பெருமானாருக்கு வழங்கி அருளின வரத்தை நிரூபிக்கில்
அவர்க்கு அவர்ஜ நீயரான நம்மது அன்றோ –
அது எப்படி என்னில்
நிருபாதிக பிதாவானவன் ஸ்வம்-தாய பிராப்தியாலே புத்திரன் தனக்கேயாய் அன்றோ இருப்பது
ஆகையால் நம் பிராப்திக்கு நாமே யத்தனிக்க வேண்டா எல்லாம் சித்தமாய் அன்றோ இருக்கிறது
இனி அவர் இடத்தில் ந்யஸ்த பரராய் இருக்கும் அத்தனையே வேண்டுவது-
ஆக
இத்தால் உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் ஸ்ரீ பெரிய பெருமாளாலே பெற்று ஸ்ரீ உடையவராய்
அத்தாலே ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயியாய்-பிரபன்ன ஜன கூடஸ்தராய்
இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே-
ருசி காரயமாக ஸ்ரீ யதீந்திர பிரவணரான ஸ்ரீ ஜீயர் பண்ணி அருளின
பிராப்ய பிரார்த்தனை
அவர் அபிமான அந்தர்பூதர் எல்லாருக்குமாய் அத்தாலே ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தைப் பெற்று
நித்ய விபூதியிலே நிரந்தர பகவத் அனுபவ கைங்கர்ய நிரதராய் வாழப் பெறுவார்கள்
என்ற அர்த்தம் சொல்லித் தலைக் கட்டிற்று ஆயிற்று –
ஸ்ரீ எதிராசா ஸ்ரீ எதிராசா என்று சம்போதிக்கிறது
எல்லாம் தமக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி யுன்டாகையாலும்
யதஸ் ஸூத்த சத்வா -என்கிறபடி
ஸ்ரீ எதிகளுக்கு நாதர் ஆகையாலும் அத்தை அடிக்கடி ஆதரித்து அருளிச் செய்கிறார் —
——————————————————————
ஸ்ரீ மா முனிகளின் ஆர்த்தி-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவணம் காட்டி அருளும் – தனி பாசுரங்கள் —
எம்பெருமானார் தம் பிரான் என்னுமவரை
நம்பெருமாள் தாம் உகந்து நாள் தோறும் -தம் பரமாய்
ஏறிட்டுக் கொண்டு அளிப்பர் என்னுமவர் தம்மை
வேறிட்டுத் தாம் கைவிடார் -1-
பொல்லான் இவன் என்று போதிடென்று நம் குரவர்
எல்லாரும் என்னை இகழ்ந்தாரோ -நல்லார்கள்
வாழ்வான வைகுண்ட வான் சபையில் வண் கூரத்
தாழ்வான் இருந்திலனோ அங்கு –2-
ஆரியர்காள் ஆழ்வீர் காள் அங்குள்ள முக்தர்காள்
ஸூரியர் காள் தேவியர் காள் சொல்லீரோ நாரணற்கு
எங்கள் அடியான இவனும் ஈடேற வேணும் என்று
உங்கள் அடியாரும் உளர் –3-
தென்னரங்கர் தேவியே ஸ்ரீ ரேங்கர் நாயகியே
மன்னுயிர்கட்க்கு எல்லாம் மாதாவே -என்னை யினி
இவ் வுலகம் தன்னில் இருந்து நலுங்காமல்
அவ்வுலகில் வாங்கி அருள் –4-
ஸ்ரீ ரெங்க நாயகியே தென்னரங்கன் தேவியே
நாரங்கட்க்கு எல்லாம் நல் தாயே -மாருதிக்கு
வந்த விடாய் தன்னை ஒரு வாசகத்தால் போக்கின நீ
எண்ணிட தீராதது என் –5-
இந்த உடம்போடு இனி இறுக்கப் போகாதது தான்
செங்கமலத் தாள்கள் தன்னைத் தந்து அருள் நீ அந்தோ
மையார் கண்ணி மணவாளா தென்னரங்கா
வையாமல் இருப்பாயே இங்கு –6-
இந்த உடம்போடு இரு வினையால் இவ்வளவும்
உந்தனடி சேராது உழன்றேனே -அந்தோ
அரங்கா இரங்காய் எதிராசர்க்காக
இரங்காய் பிரானே இனி –7-
——————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-