Archive for the ‘ஆச்சார்ய ஹிருதயம்’ Category

பல சதுர் விதமான அர்த்த விசேஷங்கள் —

May 30, 2023

சதுர்-விதா பஜந்தே மாம்mஜனா: ஸுக்ருதினோ (அ)ர்ஜுன
ஆர்தோ ஜிக்ஞாஸுர் அர்தார்தீ க்ஞானி ச பரதர்ஷப

பரதர்களில் சிறந்தவனே, நான்கு விதமான நல்லோர் எனக்குத் தொண்டு புரிகின்றனர்— துயருற்றோர், செல்வத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவைத் தேடுவோர் என்பவர் அவர்கள்.

————

அபிவ்ருத்தியர்த்தம் தர்மார்த்த காம மோக்ஷ சதுர் வித பல புருஷார்த்த

——–

ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை-16-

இனி மேல் சாஸ்திர பிரதி பாத்யார்த்த விசேஷங்களை சங்க்ரஹேண பிரதி பாதித்து கொண்டு
ஏவம் பூத சாஸ்திர அப்யாசம் அநேக யோக்யதா சாபேஷதையா துஷ்கரம் என்று தானே திரு உள்ளம் பற்றி
ஈத்ருசா நேக யோக்யதா நிர் அபேஷத்வேன ஸூகரமாய் சாஸ்திர தாத்பர்யமுமான திருமந்த்ரத்தை ஈஸ்வரன்
வெளி இட்டு அருளிய படியை அருளி செய்கிறார் மேல்-

கலைகளை நீர்மையினால் அருள் செய்தான் -என்று அருளிச் செய்தார்
அந்த கலைகளில் சொல்லப்படும் பொருள்கள் இன்னவை இன்னவை என்று இதில் விவரித்து
அதுக்கு மேலே அக்கலைகளை கற்பதற்கு வேண்டிய தகுதிகளை விவரித்து
அதுக்கு மேலே அத்தகுதிகள் இருந்து கற்க முயன்றாலும் -அல்ப வாழ் நாள்-பல் பிணி -சிற்று அறிவினர் ஆகையால்
அக்கலைகளைக் கற்று அறிந்து தெளிதல் அரிது என்று காட்டி அருளி
ஆகையினாலே பக்தி யுடையார் எல்லாரும் அதிகாரிகளாம் படி
எளிதான திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினமையையும்
அந்த திருமந்திரத்தின் பெருமையையும்
அது தேனும் பாலும் அமுதமுமாய் திருமால் திரு நாமம் ஆகையால் அத்தை வேதத்தின் நின்றும் எடுத்த வகையையும்
அருளிச் செய்கிறார் இதில் –

சதுர் விதமான தேக வர்ண ஆஸ்ரம அதிகாரி
பல மோஷ சாதன கதி யுக தர்ம வியூக ரூப
கிரியாதிகளை அறிவிக்கிற
பாட்டுப் பரப்புக்கு
பெரிய தீவினில்
ஒன்பதாம் கூறும்
மானிட பிறவியும்
ஆக்கை நிலையும்
ஈரிண்டில் ஒன்றும்
இளைமையும்
இசைவும் உண்டாய்
புகுவரேலும் என்கிறதுக்குள்ளே
விக்னமற
நின்றவா நில்லா பிரமாதியை கொண்டு அறக் கற்கை அரிது என்று இறே

வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியில்
முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை
தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும்
ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும் தேனும் பாலும் அமுதமாக
வெடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-

சதுர் விதம் என்கிறது மேல் சொல்லுகிற எல்லா வற்றிலும் அனுவர்த்திக்கிறது

அதாவது
1-தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர –ஆகாரேன நாலு வகை பட்ட தேகம்-
2-ப்ராஹ்மண ஷத்ரிய வைஸ்ய சூத்திர ரூபேண நாலு வகை பட்ட வர்ணம்
3-பிராமச்சரயா கார்கஸ்த்ய வானப்ரஸ்த சந்த்யா சாத்மக தயா நாலு வகைப் பட்ட ஆஸ்ரமம்
4-ஆர்த்தோ ஜிஜ்ஞாசு அர்த்தா அர்தாதீ ஜ்ஞானி-ஸ்ரீ கீதை -7–16- -என்கிற நாலு வகை பட்ட அதிகாரம்
5-தர்ம அர்த்த காம மோஷங்கள் என்கிற நாலு வகை பட்ட பலம்
6-சாலோக்ய சாமீப்ய சாருப்ய சாயுஜ்யங்கள் என்கிற நாலு வகை பட்ட மோஷம்
(சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்தா லோகம் தன்னை அகற்றுவித்து -கந்தர் கலி வெண்பா )
7-கர்ம ஞான பக்தி பிர பத்திகள் என்கிற நாலு வகை பட்ட ஸாதனம்
8-பஞ்சாக்னி வித்யோக்த பிரகாரேண வரும் கர்ப்ப கதி யாம்ய கதி தூமாதி கதி அர்ச்சிராதி கதி என்கிற நாலு வகைப் பட்ட கதி
9-கிருத த்ரேதா த்வாபர கலிகள் என்கிற நாலு வகை பட்ட யுகம்
10-த்யாயன் க்ருதே யஜந் யஜ்ஜை த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயன் யதாப்நோதி தாதாப்நோதி
கலவ் சங்கீர்த்திய கேஸவம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–12–16–என்று சொன்ன
த்யான யஜன அர்ச்சன சங்கீர்த்தனங்கள் ஆகிய நாலு வகை பட்ட யுக தர்மம்
11-வாசுதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர் ஆகிய நாலு வகை பட்ட வியூகம்
12-கிருதாதி யுகங்களில் – பாலின் நீர்மை செம் பொன் நீர்மை பாசியின் பசும் புறம் போலும் நீர்மை பொற்புடைத் தடத்து
வண்டு விண்டுலாம் நீல நீர்மை –திருச்சந்த -44- படியே சொல்லுகிற ஸீத பீத ஸ்யாம நீல தயா -நாலு வகைப் பட்ட ரூபம்
13-ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்கார மோஷ பிரதத்வங்கள் என்கிற நாலு வகை பட்ட கிரியை
ஆதி சப்தத்தாலே மற்றும் சதுர் வித மான பிரமேய விஷயங்களை சொல்லுகிறது
14-வாசுதேவாத் உத்பன்னரான கேசவ நாராயண மாதவர்கள்
-சங்கர்ஷணாத் உத்பன்னரான கோவிந்த விஷ்ணு மது சூதனர்கள்
பிரத்யும்நாத் உத்பன்னரான த்ரி விக்கிரம வாமன ஸ்ரீதரர்கள்
அனுருத்நாத் உத்பன்னரான ஹ்ருஷீகேச பத்ம நாப தாமோதரர்கள்-என்ற நாலு வகை பட்ட வியூகாந்தரம்
15-ஆமோத பிரமோத சம்மோத வைகுண்ட ரூபேண
நாலு வகைப் பட்ட வியூக ஸ்தானம் முதலானவை பலவும் உண்டு இறே
ஆக இப்படி -பல சதுர் விதமான அர்த்த விசேஷங்களை பிரகாசிப்பிக்கிற-

பாட்டுப் பரப்புக்கு
அதாவது-
பாட்டும் முறையும் படுகதையும் பல பொருளும் ஈட்டிய தீயும் இரு விசும்பும் கேட்ட மனுவும் சுருதி மறை நான்கும்
மாயன் தன் மாயையில் பட்டதற்பு–நான்முகன் -76- -என்கிற பாட்டில் சொல்லுகிற சாஸ்திர விஸ்தரத்துக்கு-

பெரிய தீவினில் –
அதாவது –
நாவலம்பெரிய தீவு -பெரியாழ்வார் -3-6-1-என்கிற போக மோஷ சாதன அனுஷ்டான பூமி ஆகையாலே
த்வீபாந்தரங்களில் உத்க்ருஷ்டமான ஜம்பூத்வீபத்தில்-

ஒன்பதாம் கூறும்
அதாவது
நவ கண்டத்திலும் வைத்து கொண்டு
வர்ஷாந்தரங்களை போலே-மற்ற கண்டங்களைப் போலே -இவ்வுலகோடு சம்பந்தப்பட்டு இருக்கிற –
ப்வ்மமான -ஸ்வர்க்கம் என்னலாம் படி போக பூமியாய் இராதே
ஸ்வர்க்க மோஷ ரூபமான பலங்களுக்கு சாதன அனுஷ்டானம் பண்ணுகைக்கு ஈடான ஸ்தலமாய்
காயந்தி தேவா கில கீத கானி தன்யாஸ்து யே பாரத பூமி பாகே
ஸ்வர்க்க அபவர்க்க ஆஸ்பத மார்க்க பூதே பவந்தி பூய புருஷாஸ் ஸூரத்வாத்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-3-24-
என்று தேவர்களும் ஸ்லாகிக்கும் படி யான நவம கண்டமான பாரத வர்ஷமும்
பாரத கண்டத்தில் பிறக்கும் பிறப்பும்-

மானிட பிறவியும்
அதாவது
துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர–ஸ்ரீ பாகவதம்-11-2-21- என்றும்
அத்ர ஜன்ம சகஸ்ராணாம் சகஸ்ரைரபி சத்தம,கதாசித் லபதே ஜந்து மனுஷ்யம் புண்ய சஞ்சயாத்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -2–3–24-
என்றும் சொல்லுகிற படியே
மானிட பிறவி அந்தோ-திருக் குறும் தாண்டகம் -8- என்று துர்லபமாக சொன்ன மனுஷ்ய ஜன்மமும்-

ஆக்கை நிலையும்-
அதாவது –
துர்லபோ மானுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷண பங்குர–ஸ்ரீ பாகவதம்-11-2-21 -என்கிற படியே
மின்னின் நிலையில மன் உயிர் ஆக்கைகள் -திருவாய் -1-2-2- -என்று அஸ்திரமாக சொன்ன
சரீரத்தின் உடைய ஸ்தர்யமும் –

ஈரிண்டில் ஒன்றும்-
அதாவது –
நிலையுள்ள சரீரத்தைப் பெறினும்
சாஸ்திர ஞான யோக்ய வர்ணங்களில்
பிரதம கண்யமாய்-குலங்களாய ஈர் இரண்டில் ஓன்று–திருச்சந்த -90- என்கிற ப்ராஹ்மண ஜன்மமும்-

இளைமையும்
அதாவது
அந்தணர் குலத்திலே பிறப்பினும்
தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரேயசே சதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-7-75- -என்கிற படியே
புத்தி கொழுந்து விட்டு அப்யசிக்கைக்கு உறுப்பான கிளர் ஒளி இளமை-திருவாய் -2-10-1- -என்கிற பால்யமும்-

இசைவும் உண்டாய்
அதாவது –
இளமைப்பருவத்தோடு இருப்பினும்
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம்-பெரிய திருவந்தாதி -26- என்கிறபடியே
எல்லாத்துக்கும் இசைவு வேண்டுகையாலே
இதில் மூழுகைக்கு உறுப்பான இச்சையும் உண்டாய்-

புகுவரேலும் என்கிறதுக்குள்ளே
அதாவது –
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவர் ஏலும்–திருமாலை -3- என்று
சதாயூர் வை புருஷ என்று வேத சாஸ்த்ரோக்தமான ஆயுஸு நூறும்
மனுஷ்யர்கள் தாங்கள் புகுந்தாகள் ஆகிலும் என்று சொல்லுகிற இந்த ஆயுசுக்குள்ளே –

விக்னமற
அதாவது
அனந்தபாரம் பஹுவேதி தவ்யம் அல்பஸ் ச காலோ பஹவஸ்ச விக்நா–உத்தர கீதை -7-10–என்றும்
ஸ்ரேயாம்சி பஹிவிக்னானி பவந்தி மஹதாமபி-என்றும் சொல்லுகிறபடியே
சாஸ்திர அப்யாசம் பண்ண வரும் விக்னங்களும் அற்று-

நின்றவா நில்லா பிரமாதியை கொண்டு அறக் கற்கை அரிது என்று இறே
அதாவது
நின்றவா நில்லா நெஞ்சு–பெரிய திருமொழி -1-1-4- என்றும்
சஞ்சலம் ஹி கிருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்-ஸ்ரீ கீதை -6-34-என்றும் சொல்லுகிற படி
ஒரு விஷயத்தில் அரை ஷணமும் நில்லாதே இவனை அடர்த்து தன் வழியே இழுக்கும்
மனசை கொண்டு அறக் கற்கை
-கலை அறக் கற்ற மாந்தர் -திருமாலை 7–என்கிறபடி சுருதி ஸ்ம்ருதாதி
சாஸ்த்ரங்களை தாத்பர்யம் கை படும் படு அதிகரிக்கை
ஆமாறு அறிவுடையார் ஆர் அவர் அரிது அன்றே-பெரிய திருவந்தாதி -37- -என்று
தாத் பர்யத்தில் உற்று நிற்கை யுக்தமாம் படி அறிவுடையார் ஆகை அரிதன்றோ
என்கிற படியே அரிது என்று திரு உள்ளம் பற்றி இறே-

அசாரம் அல்ப சாரஞ்ச சாரம் சார தரம் த்யஜேத் பஜேத் சார தாமம் சாஸ்திரம் ரத்நாகார இவாம்ருதம் –
ஸ்ரீ வைகுண்ட தீக்ஷிதீயம் -என்கிறபடியே என்று சார தமமான சாஸ்த்ரத்தை
பஜிப்பான் என்கையாலே வஹ்ய மாணத்தின் சார தமத்தை -தான் மேலே அருளிச் செய்யப் புகும்
திரு மந்திரத்தின் சீர்மையை -தர்சிப்பிக்கிறார் மேல்-

(ஆற்ற நல் வகை காட்டும் அம்மான் -வீற்று இருந்து ஏழு உலகம் அடுத்து இனி யாம் உறாமை –
சொல்லாமல் விட்டது ஆழ்வார் உளராகைக்காக -ஸ்ரீ ஈடு
நாளை வதுவை போலே சாத்மிக்க சாத்மிக்க அருள வேண்டுமே –
வேத சாரம் உபநிஷத் இத்யாதி இதில்
அசாரம் பாஹ்யம் -அல்ப சாரம் வேதம் -சாரம் உபநிஷத் –சார தரம் நாராயண அநுவாகம்
-சார தமம் -ஸ்ரீ விஷ்ணு காயத்ரி -திருமந்திரத்தின் சாரதமம் தர்சிப்பிக்கிறார்)

வேத சார உபநிஷத் என்றது
பூர்வ பாகத்தில் சாரமான வேதாந்தம் என்ற படி
அயதார்த்த பிரதி பாகம் ஆகையாலே அசாரமான பாஹ்ய
சாஸ்திரங்கள் போல் அன்றிக்கே யதா பூத வாதியாய் இருந்ததே ஆகிலும்
சேன விதி முதலாக ஜியோதிஷ்டோஹமாதிகள் ஈறாக
ஐகிக பாரலௌகிக புருஷார்த்த சாதனங்களை பிரதி பாதிக்கிற பூர்வ பாகம்
சூத்திர புருஷார்த்த தத் சாதனம் பிரதி பாதம் ஆகையாலும்
சாஸ்திர ஆஸ்திக்யம்–பிரகிருதி ஆத்மா விவேகம் ..இவற்றை பிறப்பிக்கும்
மாத்ரம் ஆகையாலும் அல்ப சாரமாய் இருக்கும்

அங்கன் இன்றிக்கே அனந்த ஸ்திர பல ப்ரஹ்ம ஸ்வரூபாதி களையும் —
தத் பிராப்தி சாதனத்தையும் –பிரதி பாதிக்கையாலே
உபநிஷத் பாகம் சாரமாய் இருக்கும்-

சார தர அநுவாகம்
அது தன்னிலும் அவ் உபநிஷத்துகளில் சொல்லுகிற
பர ப்ரஹ்ம பர தத்வ பரம் ஜோதி பரமாத்மாதி சாமான்ய வாசி சப்தங்களாலும்
விசேஷ வாசியான சம்பு சிவாதி சப்தங்களாலும்
பிரதி பாடுகிறவன் நாராயணனே என்று பகவத் பரத்வத்தை ஸூஸ் ஸ்பஷ்டமாக
பிரதி பாதிக்கிற அநந்ய பரமான நாராயண அனுவாகம் சார தரமாய் இருக்கும்-

சார தம காயத்ரியில்
அது தன்னிலும் காட்டிலும் சர்வ ஸ்மாத் பரதத்வத்துக்கு பிரதான லிங்கமான
அவனுடைய சர்வாந்தர ஆத்மவத்தை பிரகாசிப்பதாய்
அவ் வியாபகமான சகல பகவன் மந்த்ரங்களிலும் ஸ்ரேஷ்டராயிருக்கிற
வியாபக மந்திர த்ரயத்தையும் பிரதி பாதிக்கிற விஷ்ணு காயத்ரி சார தமமாய் இருக்கும்-

முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கை – இப்படி உள்ள காயத்ரியிலே
வியப்யாத்யா ஹாராதி சாபேஷமான வியாபகாந்தரங்களில்-விஷ்ணு வாஸூ தேவன் – வ்யாவிருத்தம் ஆகையாலே –
(எவற்றை வியாபிக்கிறார் -எத்தாலே வியாபிக்கிறார் என்று ஸ்பஷ்டமாக இல்லாத விஷ்ணு போல் இல்லாமல் –
வாசுதேவாயா என்பதை போலே அத்யாஹாரம் பண்ண வேண்டாதே)
நாராயணாய வித்மஹே–புருஷ ஸூக்தம்- என்று ஆதரம் தோற்ற பிரதமத்திலே ஓதப் படுகிற –
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே –
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -இரண்டாம் -39-என்கிற படியே
வேதாந்த தாத்பர்யமாய் –
ரூசோ யஷும்ஷி சாமானி ததைவா அதர்வணா நிச , சர்வம் அஷ்டாஷர ஆந்தஸ்தம்–பாஞ்சராத்ரம் –என்கிற படியே
சகல வேத ஸங்க்ரஹமுமான திரு மந்த்ரத்தை-

வேதங்களின் சாரமாய் —
தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திரு நாமம்-பெரிய திருமொழி -6-10-6-
என்னும் படி இருக்கிற இத்தை வேதத்தில் நின்றும் அவன் கிரஹிக்கிற போது
கிரஹித்த பிரகாரத்தை த்ரி பிரகாரமாக வர்ணித்து அருளிச் செய்கிறார் மேல் –

தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் சாகைகளிலும் ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும்
தேனும் பாலும் அமுதமாக வெடுத்து –
பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது-என்பதை
1-தெய்வ வண்டானவன் சாகைகளிலே தேனாக எடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது -என்றும்
2-அன்னமானவன் ஓதம் போல் கிளர் வேத நூலிலே பாலாக எடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது–என்றும்
3-அமுதம் கொண்டவன் நால் வேதக்கடலிலே அமுதாக எடுத்து பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தது–என்றும்
பிரித்து நிரல் நிறையாக பொருள் கொள்ள வேண்டும் –

தெய்வ வண்டாய் சாகைகளிலே தேனாக எடுத்து –
அதாவது
தூவி அம் புள் உடை தெய்வ வண்டு -திருவாய் -9-9-4-ஆகையாலே -ஷட் பதமானது
சாகா சஞ்சாரம் பண்ணி மதுவை எடுக்குமா போலே ,
(விபீஷணன் இடம் நம்பிக்கை ஆகிற தேன்-விதுரர் இடம் -பரதன் இடம் பாரதந்த்யம் –இத்யாதிகளை கிரஹித்து
திருமந்த்ரார்த்தம் தானே திருவாய்மொழி )
சார பூத சமஸ்தார்த்த போதக தயா-எல்லாப் பொருள்களையும் அறிவிக்கின்ற காரணத்தால்
எல்லா சாஸ்திரங்களின் ரசமாய் – சர்வ ரசமான தேன் போலே இருக்கிற
இத்தை வேத சாகைகளிலே தேனை கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும்-எடுத்து
பேர் அருளாலே சிங்காமை விரித்தான் -என்று மேலுடன் கூட்ட வேண்டும் –

அன்னமானவன் ஓதம் போல் கிளர் வேத நூலிலே பாலாக எடுத்து
அதாவது –
அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் -பெரிய திருமொழி -5-7-3-என்கிற படி
ஹம்ச ரூபியானவன் ஆகையாலே அன்னமானது நீரிலே கலந்து கிடக்கிற
பாலை விவேகித்து எடுக்குமா போலே
நானும் சொன்னேன் நமரும் உரைமின் -பெரிய திருமொழி -6-10-6-என்னும் படி இருக்கையாலே-
(ரிஷிகளும் சொன்னார்கள்-மற்றைய ஆழ்வார்களும் சொன்னார்கள் -நானும் உம்மைத் தொகை )
இன்னார் இனியார் என்னாது எல்லாரும் உட் கொள்ளும்படி -சர்வாதிகாரமான பால் போலே இருக்கிற இத்தை
ஓதம் போல் கிளர் வேத நீரனே-திருவாய் -1-8-10-பாலை கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும்-எடுத்து
பேர் அருளாலே சிங்காமை விரித்தான் -என்று மேலுடன் கூட்ட வேண்டும் —

அமுதம் கொண்டவன் நால் வேதக்கடலிலே அமுதாக எடுத்து
அதாவது –
அமுதம் கொண்ட பிரான்-பெரிய திருமொழி -6-10-3-என்கிற படியே
அசுர பய பீதராய் அமரத்வ சாபேஷரான தேவர்கள் உடைய ரஷணார்த்தமாக
விலஷண போக்யமாய் , விநாச ஹரமும் ஆகையாலே ,அமிர்தம் போல் இருக்கிற இத்தை
நால் வேத கடலிலே அமிர்தத்தை—பெரியாழ்வார் திருமொழி -நாலாம் பத்து
கிரஹிக்குமா போலே கிரஹித்த படியும் சொல்லுகிறது -எடுத்து
பேர் அருளாலே சிங்காமை விரித்தான் -என்று மேலுடன் கூட்ட வேண்டும் —

பெரு விசும்பு அருளும் பேர் அருளாலே சிங்காமை விரித்தான்
அதாவது –
ஆக
இப்படி வேத சாராமான இத்தை
ஸ்வயமேவ எடுத்து
அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் வதரி யாஸ்ரமத்து உள்ளானே- பெரிய திருமொழி -1-4-4–என்கிற படியே
நித்ய சூரிகளுக்கு போக்யமாய்
பரம ஆகாச சப்த வாச்யமான பரம பதத்தை கொடுப்பதான
நிர்ஹேதுக கிருபையால்
நர நாராயணனாய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன்–பெரிய திருமொழி -10-6-1- என்கிற படியே
ஸ்ரீ பதரிகாஸ்ரமத்திலே நர நாராயண ரூபேண அவதரித்து
தானே சிஷ்யனுமாய் ஆச்சர்யனுமாய் நின்று ஸ்வரூப சாஸ்திரம்
சங்குசிதம் ஆகாமல்-சிங்காமை -சுருங்கி விடாமல்- உபதேச அனுஷ்டாங்களாலே வித்ருதமாம் படி பண்ணிற்று-

அறக் கற்கை அரிது என்று இறே -என்றதோடு அன்வயிக்கிறது-

சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து -ஈஸ்வர கைங்கர்யத்தையும் இழந்து -இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே –
சம்சாரமாகிற பெரும் கடலிலே விழுந்து நோவு பட -சர்வேஸ்வரன் தன் கிருபையாலே
இவர்கள் தன்னை அறிந்து கரைமரம் சேரும்படி தானே சிஷ்யனுமாய் ஆச்சார்யனுமாய் நின்று திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளினான்
சிஷ்யனாய் நின்றது சிஷ்யன் இருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக –
சகல சாஸ்த்ரங்களாலும் பிறக்கும் ஞானம் ஸ்வயம் ஆர்ஜிதம் போலே
திருமந்த்ரத்தால் பிறக்கும் ஞானம் பைத்ருக தனம் போலே –முமுஷுப்படி

——————————————-

ஸ்ரீ சதுர் வேத விளக்கம் –

ஸ்ரீ ரிக் வேதத்தில் – அதாவது ஸம்ஹிதையில் – பத்தாயிரத்து சொச்சம் [10170] ரிக்குகள் (மந்திரங்கள்) உள்ளன. [1028 ஸூக்தங்கள்] .
ரிக் வேதத்தைப் பத்து மண்டலங்களாகவும், எட்டு அஷ்டகங்களாகவும் இரண்டு விதத்தில் பிரித்திருக்கிறது.
அக்னியைப் பற்றிய ஸூக்தத்தோடு ஆரம்பித்து, அக்னியைப் பற்றிய ஸூக்தத்தோடேயே அது முடிகிறது.
வேதங்களுக்குள்ளே தேவதா ஸ்தோத்ர ரூபமாயிருப்பது ரிக் வேதம்.
அதில் உபக்ரமம் (ஆரம்பம்) , உபஸம்ஹாரம் (முடிவு) இரண்டிலும் அக்னியைச் சொல்லியிருப்பதால்,
அக்னி உபாஸனைதான் (Fire worship) வேத தாத்பர்யம் என்றே கொள்கிறவர்களும் உண்டு.
அக்னி என்றால் ஆத்ம சைதன்யத்தின் பிரகாசம் (ஸத்ய தத்துவத்தைப் பற்றிய அறிவொளி) என்றால், இதுவும் சரிதான்.

‘யஜ்’ – வழிபடுவது – என்ற தாதுவிலிருந்து யஜுஸ், யக்ஞம் என்ற இரண்டும் வந்திருக்கின்றன.
‘ரிக்’ என்றாலே எப்படி ஸ்தோத்திரம் என்று அர்த்தமோ, அதே மாதிரி ‘யஜுஸ்’ என்றாலே யக்ஞ ஸம்பந்தமான
வழிபாட்டுக் காரியக்ரமத்தை விவரிப்பது என்று அர்த்தம் ஆகிறது.
இதற்கேற்றாற்போல் ரிக்வேதத்திலுள்ள ஸ்துதி ரூபமான மந்திரங்களை யக்ஞம் என்கிற காரியத்தில்
பொருத்திக் கொடுப்பதே ( practical application ) யஜுர்வேதத்தின் முக்கியமான லக்ஷ்யமாக இருக்கிறது.
ரிக்வேதத்தில் உள்ள பல மந்திரங்கள் இதிலும் கூறப்படுகின்றன. அதோடு கூட, ப்ரோஸில் (உரை நடையில்) யக்ஞம்
முதலான வேத கர்மாநுஷ்டானங்களைச் சொல்கிறது. வாயால் ஸ்தோத்திரம் செய்ய ரிக் வேதம் உபகரிக்கிறது.
காரியத்தில் வழிபாடு பண்ண யஜுர்வேதம் முக்கியமாக உபகாரம் செய்கிறது.

ஒவ்வொரு வேதத்திலும் பல சாகைகள் இருக்கிற மாதிரி மட்டும் இல்லாமல், யஜுர் வேதம் தனக்குள்ளேயே
நிரம்ப மாறுபாடுகள் உள்ள இரண்டு தனி வேதங்களாகவே பிரிந்திருக்கிறது.
இந்தப் பிரிவுகளுக்கு சுக்ல யஜுர் வேதம், கிருஷ்ண யஜுர் வேதம் என்று பெயர்.
‘சுக்லம்’ என்றால் வெளுப்பு. ‘கிருஷ்ணம்’ என்றால் கறுப்பு.
சுக்ல யஜுர் வேத ஸம்ஹிதைக்கு “வாஜஸநேயி ஸம்ஹிதா” என்றும் பெயருண்டு.
“வாஜஸநி” என்பது சூரியனுடைய பெயர். சூரியனிடமிருந்தே யாக்ஞவல்கிய ரிஷி இந்த ஸம்ஹிதையை
உபதேசிக்கப் பெற்று, லோகத்துக்குக் கொண்டு வந்ததால், இதற்கு வாஜஸநேயி ஸம்ஹிதா என்று பேர் ஏற்பட்டது.

கர்மயோகத்தை நன்றாக அமைத்துக் கொடுத்திருப்பது யஜுர் வேதத்தின் பெருமை.
தர்ச பூர்ண மாஸம், ஸோம யாகம், வாஜபேயம், ராஜஸூயம், அச்வமேதம் முதலான அநேத யக்ஞங்களைப் பற்றியும்,
பலவிதமான ஸத்ர யாகங்களைப் பற்றியும் விரிவாக நமக்குத் தெரிவிப்பது கிருஷ்ண யஜுஸில் உள்ள தைத்ரீய ஸம்ஹிதைதான்.
அதோடு கூட ரிக் வேதத்தில் இல்லாத சில உயர்ந்த ஸ்தோத்திர பூர்வமான மந்திரங்களும் இதில்தான் வருகின்றன.
உதாரணமாக, இப்போது பெரும்பாலும் வழக்கில் சொல்லப்படும் ஸ்ரீருத்ரம் யஜுர் வேதத்திலிருந்து எடுத்ததுதான்.

ஸூத்ரம் என்பது ஸித்தாந்ததத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்வது.
பாஷ்யம் என்பது அதற்கு விரிவுரை.
இந்த விரிவுரையையும் ஸாங்கோபாங்கமாக விஸ்தரித்து விளக்குவதுதான் வார்த்திகம்.

தசோபநிஷத்துக்கள் என்கிற முக்கியமான பத்து உபநிஷத்துக்களில்
முதலாவதான ‘ஈசாவாஸ்யம்’, முடிவான ‘ப்ருஹதாரண்யகம்’ இரண்டுமே சுக்ல யஜுர் வேதத்தில்
உள்ளவையே என்பதும் இந்த வேதத்துக்கு ஒரு பெருமை.

‘ஸாமம்’ என்றால் மனஸை சாந்தப்படுத்துவது, சந்தோஷப்படுத்துவது என்று அர்த்தம்.
ஸாம-தான-பேத-தண்டம் என்கிறபோது, முதலில் எதிரியைக்கூட அன்பினாலே ஸ்நேஹிதமாக்கிக்
கொள்வதற்கு ‘ஸாமம்’ என்று பெயர் இருக்கிறது. இப்படி தேவ சக்திகளையும் பரமாத்மாவையும் நமக்கு
அந்நியோந்நியமாகப் பண்ணித் தருவது ஸாம வேதம். ஒருத்தரை சந்தோஷப்படுத்த என்ன வழி?
ஸ்தோத்திரம் செய்தால் அது சந்தோஷப்படுத்துகிறது. அல்லது பாட்டு பாடினால் சந்தோஷப்படுத்துகிறது.
ஸ்தோத்திரத்தையே பாட்டாகவும் கானம் செய்து விட்டால் இரட்டிப்பு ஸந்தோஷம் உண்டாக்கும் அல்லவா?
இம்மாதிரிதான் ரிக் வேதத்தில் ஸ்துதிகளாக இருக்கப்பட்ட மந்திரங்களில் பலவற்றையே ஸாம கானமாக
ஆக்கித் தருவது ஸாம வேதம். ரிக் வேத மந்திரமேதான்.
ஆனால் ரிக்கில் முன்னே சொன்ன உதாத்தம், அநுதாத்தம் முதலான ஸ்வரங்கள் மட்டுமே இருக்க
ஸாமத்திலோ கானமாகவே அவற்றை நீட்டி நீட்டிப் பாட விதிகள் செய்திருக்கிறது.
பிற்பாடு உண்டான ஸப்த ஸ்வர ஸங்கீதத்துக்கு மூலம் ஸாம கானம்தான்.
ஸாமகானத்தினால் ஸகல தேவதைகளும் பிரீ்தி அடைந்து விடுகிறார்கள்.
யக்ஞங்களில் ஆஹூதி தருவது மட்டுமின்றி, உத்காதா என்பவர் ஸாம கானம் பண்ணுவதாலேயே
தேவதாநுக்கிரஹம் ஸித்திக்கிறது .

ஸோம யக்ஞங்கள் என்பதாக, ஸோம ரஸத்தைப் பிழிந்து ஆஹூதி கொடுத்துப் பண்ணுகிற
யக்ஞங்களுக்கு ஸாமகானம் ரொம்ப முக்கியமாகும்.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே, கீதையில் “வேதானாம் ஸாமவேதோஸ்மி” என்கிறார்:
“வேதங்களுக்குள் ஸாமவேதமாக இருக்கிறேன்” என்கிறார்.

அதர்வன் என்றால் புரோஹிதர் என்று அர்த்தம். அந்தப் பெயரிலேயே ஒரு ரிஷி இருந்தார்.
அதர்வா என்ற அந்த ரிஷியின் மூலம் பிரகாசமானது அதர்வ வேதம்.
அதிலே பலவிதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்வதற்கும், சத்ருக்களை அழிப்பதற்கும் மந்திரங்கள் இருக்கின்றன.
ப்ரோஸ், பொயட்ரி இரண்டும் கலந்து இருக்கின்றன. மற்ற வேத மந்திரங்களுக்கும் இந்த பிரயோஜனம் உண்டு.
ஆனால் மற்ற வேதங்களில் இல்லாத அநேக தேவதைகள், இன்னம் கோரமான பல வித ஆவிகள் இவற்றைக் குறித்தும்
மந்திரங்கள் அதர்வத்தில்தான் இருக்கின்றன.
மாந்திரீகம் என்று இப்போது சொல்கிற அநேக விஷயங்கள் அதர்வ வேதத்திலிருந்து வந்தவைதான்.

ரொம்ப உயர்ந்த தத்வங்களைக் கொண்ட மந்திரங்களும் அதர்வத்தில் இருக்கின்றன.
லோகத்தில் இருக்கப்பட்ட ஸ்ருஷ்டி விசித்ரத்தை எல்லாம் கொண்டாடுகிற ‘ப்ருத்வீ ஸூக்தம்’ இந்த வேதத்தில் தான் வருகிறது.

யக்ஞத்தை மேற்பார்வை இடுகிற பிரம்மாவை அதர்வ வேதத்துக்குப் பிரதிநிதியாகச் சொல்லியிருப்பது இதற்கு ஒரு பெருமை.
இதன் ஸம்ஹிதா பாகத்தின் அத்யயனம் வடக்கே ரொம்ப ரொம்பத் தேய்ந்து போய்
தெற்கே அடியோடு இல்லாமல் போய்விட்டாலும் பிரஸித்தமான பத்து உபநிஷத்துக்களுக்குள்,
‘பிரச்னம்’, ‘முண்டகம்’, ‘மாண்டூக்யம்’ என்ற மூன்று உபநிஷத்துக்கள் அதர்வ வேதத்தைச் சேர்ந்தனவாகவே உள்ளன.
முமுக்ஷுவானவன் (ஞான சாதகன்) மோக்ஷம் பெறுவதற்கு மாண்டூக்ய உபநிஷத் ஒன்றே போதும் என்று வசனம் இருக்கிறது.
அப்படிப்பட்ட உபநிஷத் அதர்வத்தைச் சேர்ந்ததாகவே இருக்கிறது.

மந்திரங்களுக்குள் மஹா மந்திரமாக விளங்கும் காயத்ரி மூன்று வேத ஸாரம் என்று கருதப்படுகிறது.
மூன்று வேதம் என்பதால் இங்கே அதர்வத்தைச் சேர்க்கவில்லை என்றாகிறது.
இதனால் அதர்வ வேதத்தை அத்யயனம் பண்ணுமுன் புனருபனயனம் (இரண்டாம் முறை பூணூல் கல்யாணம்)
பண்ணவேண்டும் என்ற அபிப்பிராயமும் இருக்கிறது.
பொதுவாக பிரம்மோபதேசத்தில் உபதேசிக்கப்படும் காயத்ரிக்கு “த்ரிபதா காயத்ரி” என்று பெயர்.
அது மூன்று பாதம் உடையதாக இருப்பதால் இப்படிப் பெயர். ஒவ்வொரு பாதமும் ஒரு வேதத்தின் ஸாரமாகும்.
அதர்வ வேதத்துக்கு வேறு காயத்ரி உண்டு. இப்போது அதர்வ வேதிகள் என்று யாரும் இல்லாதபோது,
அந்த வேதத்தை மற்ற வேதக்காரன் அத்யயனம் பண்ண வேண்டுமானால் இன்னொரு முறை உபநயனம் செய்து கொண்டு
அதர்வ காயத்ரியை உபதேசம் வாங்கிக் கொண்டு, பிறகு அந்த வேதத்தைக் கற்க வேண்டும்.
மற்ற மூன்று வேதங்களைச் சேர்ந்தவர்கள் அந்த மூன்றில் மற்ற இரண்டை அத்யயனம் பண்ண வேண்டுமானால்,
இப்படி புனருபனயனம் செய்து கொள்ள வேண்டியதில்லை.
ஏனென்றால், இந்த த்ரிவேதிகளுக்கும் பொதுவாக ஒரே காயத்ரி இருக்கிறது.

நான்கு வேத ஸம்ஹிதைகளும் சேர்ந்து 20,500 மந்திரங்கள்.

ஸாமவேத ஸம்ஹிதையில் ரிக் வேத ஸ்தோத்திரங்கள் உள்ள ‘அர்ச்சிக’ என்ற பாகமும்,
‘கானம்’ என்ற பாகமுமாக இரண்டு பிரிவுகள் உள்ளன.
கானங்களில் க்ராம கானம், அரண்ய கானம், ஊஹ கானம், ஊஹ்ய கானம் என்ற நாலுவகை உள்ளன.

———————-

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்-2-வ்யூஹ நிலை திரு நாமங்கள் -123-146-

ருத்ரோ பஹூஸிரா பப்ரூர் விஸ்வ யோநிஸ் ஸூ சிஸ் ரவா
அம்ருதஸ் சாஸ்வத ஸ்தாணுர் வரா ரோஹோ மஹாதபா –13-

சர்வகஸ் சர்வவித் பாநுர் விஷ்வக்சேநோ ஜனார்த்தன
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி –14

லோகாத்யஷஸ் ஸூராத்யஷோ தர்மாத்யஷ க்ருதாக்ருத
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்தம்ஷ்ட்ரஸ் சதுர்ப்புஜ–15

ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா சாஹிஷ்ணுர் ஜகதாதிஜ
அனகோ விஜயோ ஜேதா விச்வயோனி புனர்வஸூ –16-

———————————————————-

இங்கு தொடர்ந்து பரத்வம் விபவம் வியூஹம் ஆகியவை விரித்துக் கூறப் பட்டுள்ளது -இதுவரை பெரும்பாலும் பரத்வம் கூறப்பட்டது

கிமேகம் தைவதம் லோகே-எது உயர்ந்த ஒரே தெய்வம் -என்றும் கிம் வாபி ஏகம் பாராயணம் –எது அடையப்பட வேண்டிய ஒரே உயர்ந்த இலக்கு -என்றும் கேட்க்கப் பட்ட கேள்விகளுக்கும் அவற்றின் பதில்களும் பெரும்பாலும் இதில் முடிகின்றன

இனி ஸ்துவந்த கம் –யாரை ஆராதிப்பது -எனபது முதலாக உபாய விஷயமாக கேட்ட கேள்விகளுக்கும் பதில்களுக்கும் விஷயமாக வ்யூஹம் சொல்லப் படுகிறது –
அதில் வாஸூதேவன் என்ற திரு நாமம் பரத்வத்தில் வியாக்யானம் செய்யப்பட்டது –

அடுத்து வரும் மஹா தப என்பதன் மூலம் ஸங்கர்ஷணன் பற்றிக் கூறப்படுகிறது
இப்பொழுது சங்கர்ஷணன் விஷயம் சொல்லப் படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

ஏதே வை நிரயாஸ் தாத ஸ்தானஸ்ய பரமாத்மந –சாந்தி பர்வம்-பீஷ்மர் யுதிஷ்டரன் இடம் கூறுவது
பரமாத்மாவின் ஸ்ரீ வைகுண்டத்தை ஒப்பிடும் போது ஸ்வர்க்காதிகளும் தாழ்வான நரகம் போன்றவையே யாகும்

பர வ்யூஹ விபவ ஆத்மநா த்ரிவிதம்
பரம் ப்ரஹ் மேதி பாகவத ஸித்தாந்த -தத்ர பரம் நாம அகார்யம் கார்யாந வச்சிந்ந பூர்ண ஷாங்குண்ய மஹா ஆர்ணவோ த் கலிகை காதபத் ரீக்ருத
நிஸ் ஸீம நித்ய போக விபூதிகம் முக்தோபஸ் ருப்யம் அநவ்பாதிகம் அவஸ்தா நாம்
வ்யூஹஸ் ச
முமுஷு ஸிஸ்ருஷயா ப்ரதேய ஸ்ருஷ்டி ஸ்திதி லய
ஸாஸ்த்ர ததர்த்த தத் பலாநி
த்யாந ஆராதநே லீலா சேதீத் ருஸ
கார்ய உப பக்த விபக்த பர குண ரூப வ்யாபார ஸீகர வ்யூஹ நிர்வாஹித லீலா விபூதிகம்
முக்தி ஸாதகம் சதுர் கா அவஸ்தா நாம்

விபவஸ் ச
தச்சாய ஸூர நர திர்யக்காதி
ஸ்வ விபவ ஸஜாதீய ஐச்ச ப்ராதுர் பாவ வர்க

ததா ச ஸ்ரீ ஸாத்வதே

ஷாட் குண்ய விக்ரஹம் தேவம் பாஸ்வஜ் ஜ்வலன தேஜஸம்
ஸர்வத பாணி பாதம் தத் இத உபக்ரம்ய
பரம ஏதத் சாமாக்யாதம் ஏகம் சர்வ ஆஸ்ரயம் விபும்
ஏதத் பூர்வம் ய த்ரயம் ச அந்யத் ஞானாத்யை பேதிதம் குணை
நாநா க்ருதி ச தத் வித்தி விபவம் புக்தி முக்திதம் – சாத்துவத சம்ஹிதை
ஆறு முக்கியமான குணங்கள் உள்ளிட்ட பல குணங்களுடன் எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளது
அவன் தனது புத்தி மற்றும் தேஜஸ் மூலமாக ஒளிர்ந்தபடி உள்ளான்
அவனுக்கு எங்கும் கைகளும் கால்களும் உள்ளன
இதுவே ஒப்பில்லாத பர ரூபம் ஆகும்
இது அனைத்திலும் வியாபித்து அனைத்தையும் தாங்கிய படி உள்ளது
வ்யூஹமும் விபவமும் அர்ச்சையும் பற்றி சொல்லும்
முக்கிய விபவமும் சக்தி ஆவேச அவதாரங்களும் உண்டே

தத்ர ப்ராதுர் பாவா கேசித் ஸாஷாத் -யதா
மத்ஸ்ய கூர்மாதயா
அந்யே து ருஷ்யாதிவி ஸிஷ்ட புருஷாகிஷ்டா நேந யதா
பார்க்கவ ராம கிருஷ்ண த்வைபாயநாதயா
அபரே காலே ஸக்தி ஆவேஸேந யதா புரஞ்ஜயாதி ஷு
இதரே ச வ்யக்தி ஷு ஸ்வயமேவ அவதீர்ய
யதா அர்ச்சாவதார
இதி சதுர்த்தா

நநு ப்ரஹ்மா தயோ அபி பகவத் ப்ராதுர் பாவா கல்ப்யந்தாம் தத பேத உபதேசாத்
ததிதம் ஜடஜல்பிதம் அஸ்மதா தேஸ் த்ருணாதேஸ் ச தத் ப்ராதுர் பாவாத்வ பிரசங்காத்
அஸ்தி ஹி ஸ்ரவஸ் யாபேத வ்யபதேஸ-

சர்வம் கலு இதம் ப்ரஹ்ம -சாந்தோக்யம் -3-14-1-இவை அனைத்தும் ப்ரஹ்மமே என்கிறது

புல் முதல் நான்முகன் வரை ஸ்ருஷ்டிக்கப்பட்டவர்கள்

நியமேந தேஷாம் ப்ரஹ்மாதீ நாம் பகவத் அவதார கணநா ஸ்வ பரி கண நாத்
தேவ மநுஷ்யாதி வத் ஸ்ருஷ்டி ப்ரகரணே ஷு ஸ்ருஜ்ய தயா பரிகரண நாச்ச
ப்ரத்யுத தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேத வ்யபதேசா ப்ராதுர் பாவ ஸப்த விலக்ஷணேந
ப்ராதுர் பாவாந்தர ஸப்தேந நிர்தேஸா பகவத் விபூதி லேஸாத் பவத் வதத்
ப்ராதுர் பாவ விசேஷாதீந வ்ருதித்வாதி வ்யவஹாராஸ் ச
பகவச் சாஸ்த்ரேஷு பஹுலம் உப லப்யந்தே
அத ஏவ ஹி தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேதஸ்
தத் விபூதித்வம் ச சாஸ்திரிதம்

ஞான உபதேஷ்டா பகவான் கபிலாஷஸ்து அதோஷஜ
வித்யா பூர்த்தி சதுர் வக்த்ரோ ப்ரஹ்மா வை லோக பூஜித
தத் அம்சு பூதோ வை யஸ்ய விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண–பவ்ஷ்கர ஸம்ஹிதை
சிவந்த கண்கள் கொண்ட அதோ ஷஜன் என்னும் பகவான் அனைத்து ஞானங்களையும் போதிக்கும் ஆசானாக உள்ளான்
ஞான மயனாகவும் அனைத்து உலகங்களால் பூஜிக்கப்படுபவனாகவும் உள்ள நான்முகன் இத்தகைய பகவானின் அம்சமாக உள்ளான்
அவன் பகவானுக்கு அடங்கியவனாகியே உள்ளான்
பகவான் இடம் பெற்ற ஞானத்தை இவன் மீண்டும் அளிப்பவனாக உள்ளான்

இங்கு யஸ்ய பதம் கபிலர் இவன் அம்ச அவதாரம் என்றும்
விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண -என்று இவன் பகவானுக்கு உட்பட்டவன் என்றும் விளங்கும்

இதி ப்ராஹ்மண கபில ப்ராதுர் பாவம் ப்ரதி யஸ்யேதி ஷஷ்டயா சேஷத்வம் தத் அம்ச பூதஸ் ஸந
விஸ்வ வியஞ்ஜன லக்ஷண இதி தத் தஜ் ஞான ப்ரவர்த்த கதயா தத்தி பூதித்வம் ச வ்யஞ்ஜிதம்
அம்ச ஸப்தஸ் சைதாத்ருஸ ஸ விபூதி கஸ்ய பகவதோ விபூதி பூத ஏக தேஸே ஷு முக்யோ வியாக்யாத

அம்சோ நாநா வியபதேஸாத் இத்யத்ர–ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரம் –2-3-42-பகவானின் அம்சம் மிகவும் முதன்மையான நிலை என்பதைக் காட்டும்

ததா அனல ஸாயி ப்ராதுர் பாவம் ப்ரதீதரஸ்ய

யுகாந்தரேஷு ச சம்ஹாரம் ய கரோதி ச ஸர்வதா
சங்கர ஆக்யோ மஹா ருத்ர ப்ராதுர் பாவாந்த்ரம் ஹி தத்
தேவஸ்ய அலைசாயே வை ஸர்வாத சமஸ்தி தஸ்ய ச-
யுகங்களின் முடிவில்
சங்கரன் என்று அழைக்கப்படும் மஹா ருத்ரன் அனைத்து உலகங்களையும் அழிக்கிறான்
இவன் அனைத்துக்கும் ஆதாரமாக உள்ளவனும் அனலசாயி என்று அழைக்கப்படுபவனுமாகிய எம்பெருமான் இடம் இருந்து வெளிப்பட்டவன் ஆவான்

அத்ராந்தர ஸப்தோ பேத வசந
இஷு ஷீர குடா தீ நாம் மாதுர்யஸ் யாந்தரம் மஹத் இதி வத்

ப்ராதுர் பாவ ப்ராதுர் பாவாந்தரயோர் லக்ஷணம் ச விவிக்த முக்தம்

ப்ராதுர் பாவாஸ்து விஜ்ஜேயா ஸ்வ வியாபார வசாத்துவை
ப்ராதுர் பாவாந்தரா தத்த்வத் அம்சஸ்ய து வஸாதாபி —
ப்ராதுர் பாவம் என்பதும் ப்ராதுர் பாவாந்த்ரம் என்பதும் வேறே வேறே தானே
ப்ராதுர் பாவம் என்பது எம்பெருமான் செயல்களின் மூலம் மட்டுமே ஏற்படுவது
மற்ற அனைத்தும் -ப்ராதுர் பாவாந்தரம் -சிறிய அம்சமாகவே உள்ளவை-அவனுடைய மிகச் சிறிய பகுதி
ப்ராதுர் பாவாந்தரம் ப்ராதுர் பாவத்துக்குளே அடங்கியதே யாகும்

அத்ர ஸ்வ வியாபார வஸாத் -இதி ஸ்வ அசாதாரணத்வம்
அம்ஸஸ்ய து வஸாதபி –இதி -து ஸப்தாத் அம்ச வச ஸப்தாச்ச விஸேஷோ விபூதி பாரதந்தர்யம் ச
புநரபி தாத்ருஸ லக்ஷணம்
ஸ்வ பாவம் அஜஹச் சஸ்வதா காராந்தர மாக்ருத
யத் தத்வம் அம்ஸ ஸம் பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத் –இதி
ததா முக்ய ஒவ்பசாரிக விபாகாஸ் ச-ப்ராதுர் பாவ வாந்தரைஸ் ஸார்தம் 

ப்ராதுர் பாவாந்தரை சார்தம் ப்ராதுர் பாவை த்விஜ அகிலை
அப்யயை பிரபவாக் யைஸ்து கௌண முக்யை ஸூ ரேஸ்வரை
இது போன்று முக்கியம் ஒவ் பசாரிகம் என்ற வேறு பாடு உண்டே

ததா முமுஷு பிர் ப்ராதுர் பாவா நாம் ஆராத்யத்வம் ப்ராதுர் பாவாந்தராணாம் ஆராதன நஷேதஸ் ச

ஸ்வ பாவம் அஜஹத் சஸ்வத் ஆகாராந்தரம் ஆக்ருதே
யத் தத்வம் அம்ச ஸம்பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத்
முமுஷுக்கள் ப்ராதுபாவத்தையே உபாஸிக்க வேண்டும் -ப்ராதுர் பாவாந்தரத்தை உபாஸிக்கக் கூடாது

யதைவ க்ருததீ ஷாணாம் அதிகார ஸமர்ப்பித
அச்யுத ஆராத நாநாம் து நிஸ்ரேயஸ பதாப்தயே
ததைவ ப்ரதி ஷித்வம் ச தேவதாந்த்ர பூஜநம்
வ்யூஹாத்வா விபவ வாக் யாத்வா ருதே நான்யத் புரோதி தாம்
ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா ப்ரதிக்ஷித் வாஸ்து புஜநே
ஜ்ஞாத் வைவம் பக்தி ஸா கர்யம் ந குர்யாத் ஏவ மேவ ஹி
வ்யூஹமாகவும் விபவமாகவும் உள்ள அச்யுதனே உபாஸிக்கப் பட வேண்டும்
தேவதாந்த்ர உபாஸனை கூடாதே-

ஸ்ரீ ஸாத்வத ஸம்ஹிதாயாம்
து மஹிஷீ பூஷண பரிஜநா தேர் போம் கோப கரண தயா
பகவத் விக்ரஹாந்த பாவ கால விதி ஸிவா தேலம் லவ்பயிக ஸம்ஸார உப கரணத்வம் ச ஸ்புடீ க்ருதம்

இதி ஏதத் தேவதா சக்ரம் அங்க மந்த்ர காணாந் திதம்
விக்ரஹே தேவ தேவஸ்ய ஸம் லீ நம் அவ திஷ்டதே
வஹ்யே பவோ பவ கரண கீர்வாண கணம் உத்தமம்
நாநா விபவ மூர்த்தி நாம் யோ அவதிஷ்டதே சாஸநே
காலோபி யந்தி யந்தா ச ஸாஸ்த்ரம் நா நாங்க லக்ஷணம்
வித்யாதி பதயச்சைவ ஸமுத்ர ஸ குண சிவ
பிரஜாபதி ஸம் மூஹஸ்து இந்த்ர ச பரிவாரக
முநய ஸப்த பூர்வேந்ய க்ரஹாஸ் தாரா கணை வ்ருத்தா
ஜீ முதாச்சா அகிலா நாமா து அப்சரோ கண உத்தம
ஓவ்ஷத் யச்சைவ பசவோ யஜ்ஞா சாங்காகி ஸாஸ்து யே
வித்யா சைவ அபார வித்யா பாவச் கச்சைவ மாருத
சந்த்ரார்கைள வாரி வஸூதே இத் யுக்தம் அமலேக்ஷண
சதுர் விசதி சங்க்யம் ச பவோ பகரணம் மஹத்
பவ ஸாஷாத் ப்ரதா நஸ்து வ்யபகோ ஜட லக்ஷண
மந்த்ர மந்த்ரேஸ்வர ந்யாஸத் ஸோபி பூஜ்யத்வ மேதி ச

அத ஸ்ரீ ஜன்ம ரஹஸ்ய சதுர் முகாதி ப்ரசங்க ஸ்ரீ பவ்ஷ்கரே ப்ராதுர் பாவ விபூதி தயா அந்தர் பாவ நிபந்தநோ அநு சங்கேய
ஏவம் ச வ்யாமோஹ ஏவ த்ரி மூர்தி பண்டிதந்யாய பண்டிதம் அந்யாயாம்
ஸர்வே ஸைதத் தத்ர தத்ர ஸ்தாபயிஷ்யதே

———–

இது வரை –கிமேகம் தைவதம் லோகே -கிம்வாப்யேகம் பராயணம் -கேள்விக்கு
பரத்வ பரமான திரு நாமங்கள் சொல்லி அருளி
மேலே ஸ்துவந்த கம் -யாரைத் துதிக்க -கேள்விக்கு உத்தரம் –
மோஷத்துக்கு உபாயமான திரு நாமங்கள் –

வ்யூஹ மூர்த்திகள் -நால்வர் -வாசுதேவன் -சங்கர்ஷணன் பிரத்யும்னன் அநிருத்தன்
பர வாசுதேவன் -பூர்ணம் பகவத் குணங்கள்
சங்கர்ஷணன் -ஜ்ஞானம் பலம் பிரகாசிக்கும் – -சம்ஹாரம்
பிரத்யும்னன் -ஐஸ்வர்யம் வீர்யம் -பிரகாசிக்கும் -சிருஷ்டிக்கு
அநிருத்தன் -சக்தி தேஜஸ் பிரகாசிக்கும் -ஸ்திதி -காத்தல்-

சங்கர்ஷணன் ——–123-124——–2 திரு நாமங்கள்
பிரத்யும்னன் ———125-126———2 திரு நாமங்கள்
அநிருத்தன் ———-127-146———20 திரு நாமங்கள்

———-

139-சதுராத்மா –
நான்கு ரூபங்கள் –

இத்தம் சதுராத்மா
வாஸூ தேவ -ஸங்கர்ஷண -ப்ரத்யும்ன -அநிருத்த -இதி –வாசுதேவன் -சங்கர்ஷணன் -பிரத்யும்னன் -அநிருத்தன் –
மீண்டும் -775-நாலு விதமாக -ஜாக்ரத -ஸ்வப்ன -ஸூ ஷுப்தி -துரீயம் -ஸ்தூலம் சூஷ்மாயும் விளங்குபவன்

வாஸூதேவன் -சங்கர்ஷணன் -பிரத்யும்னன் -அநிருத்தன் -என்னும் நான்கு மூர்த்திகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களில் நான்கு வகை சக்திகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

பரவும் தன்மை யுடைய சாதுர்யமான ஆத்மாவாக இருப்பவர் -ஞானியான பிரமனைத் தோற்றுவித்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுராத்மா நம

——————-

140-சதுர்வ்யூஹ –
நான்கு வ்யூஹ மூர்த்திகளாக
மீண்டும் 773–வாசுதேவ கிருஷ்ணன் -பலராமன் பிரத்யும்னன் அநிருத்தன்

கதமேகஸ்ய சாதுராத்ம்யம் –தத்ராஹ
சதுர்வ்யூஹ
யத் யுக்த ப்ரயோஜன -ஏப்யோத்யே -ஆராத்யா -வ்யக்தயே –
ச ஸமஸ்தவ் யஸ்தேந குண ஷட்கந -தத் வ்யஞ்ஜகவ்ய அவஸ்தித
அவயவ- வர்ண-பூஷண- ப்ரஹரண -வாஹந -த்வஜாதி பிர்ஜா
கரா க்ரதாத்ய வஸ்தா சதுஷ்டய விஸிஷ்ட அபி மூர்த்திபிஸ்
சதுர்த்தா வ்யூஹத இதி

த்யானத்துக்கு-ஏற்ப -உருவம் நிறம் திரு ஆபரணங்கள் வாஹனம் த்வஜம் வேறு பட்டு
அநிருத்தன் -ஜாக்ரத விளித்து கொண்டு இருக்கும் அவஸ்தை நிலை
பிரத்யும்னன் -ஸ்வப்ன -நிலை
சங்கர்ஷணன் ஆழ்ந்த தூக்கம் ஸூ ஷுப்தி
வாசுதேவன் துரீய அவஸ்தை மூச்சும் அடங்கி இருக்கும் நிலை

மேற்சொன்ன நான்கு மூர்த்திகளில் முறையே ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி துர்ய என்னும் நான்கு நிலைகளை உடையவர் -த்யானிக்க
வேண்டும் ஸ்வரூபம் இன்னது என்று தெரிவிக்க -ஆறு கல்யாண குணங்களைப் பிரித்தும் -அந்தந்த குணங்களுக்கு பிரகாசகமாக ஏற்பட்ட
அவயவம் வர்ணம் ஆபரணம் ஆயுதம் வாஹனம் கொடி முதலானவைகளோடும் கூடிய நான்கு நிலைகளை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஜாக்ரத் -விழிப்பு நிலை / ஸ்வப்னம் கனவு நிலை /ஸூஷூப்தி-ஆழ்ந்த நிலை உறக்கம் /தூரியம்-மயக்க நிலை -நான்கும்

வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர் என்ற நான்கு வியூஹங்களை உடையவர்–ஸ்ரீ சங்கரர் –

வாஸூதேவ சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்தர்-என்னும் நான்கு வ்யூஹங்களை-அல்லது நான்கு வித ஆத்மாக்களை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுர் வ்யூஹயா நம

———————

141-சதுர்த்தம்ஷ்ட்ர-
நான்கு முன் பற்களை உடையவன் -முத்துக்கள் போலே

வ்யூஹ மூலேந பரேண ரூபேண
சதுர் தம்ஷ்ட்ர
சதுர் தம்ஷ்ட்ரத்வம் மஹா புருஷ லக்ஷணம்
யதா

சதுர்தச சம த்வந்த்வ சதுர் தம்ஷ்ட்ர சதுர் கதி –ஸூந்தர-35-19-
14-உறுப்புக்கள் -4-பற்கள் -4-நடைகள் கொண்டவன்

வ்யூஹங்களுக்கு மூலமான பர வாஸூ தேவ ரூபத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் —ஸ்ரீ பராசர பட்டர்-

சிங்கம் புலி யானை காளை நடைகள் -சிம்ம கதி வ்யாக்ர கதி கஜ கதி ரிஷப கதி
14-உறுப்புக்கள் -புருவங்கள்- நாசி துவாரம் -கண்கள்- காதுகள்- உதடுகள் -திரு மார்புகள் -கை முஷ்டிகள்-
இரண்டு பட்ட இடுப்புக்கள் -கால் முஷ்டிகள் -மணிக்கட்டுகள்- திருக்கரங்கள் -திருவடிகள் -கால்கள் –

நரசிம்ஹ அவதாரத்தில் நான்கு கோரைப் பற்களை உடையவர் -அல்லது நான்கு கொம்புகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

நான்கு கோரைப் பற்களை உடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுர் தம்ஷ்ட்ராய நம

—————–

142-சதுர் புஜ –
நான்கு திருக்கைகள் உடையவன்

ததா சதுர்புஜ-ததா ஹி பரம் ரூபம் ஆஹ 

சதுர் புஜம் உதாராங்கம் சக்ராத்யாயுத முஷ்ணம் –ஸ்ரீ விஷ்ணு புராணம்
நான்கு திருத்தோள்களோடே கம்பீரமான திவ்ய மங்கள விக்ரஹத்துடன்
திருச் சக்ரம் போன்ற திவ்ய ஆயுதங்களைத் தரித்தவன்

தமச பரமோதாதா சங்க சக்ர கதா தர –யுத்த -114-15-
அப்பால் உள்ள பரமபதத்தில் சங்கு சக்ரம் கதை போன்ற திவ்ய ஆயுதங்களை ஏந்தியபடியே உள்ளவன்

புஜைஸ் சதுர்பி சம்மதம் -மஹா பாரதம்-நான்கு புஜங்களுடன் கூடியவன்

ஈரிரண்டு மால் வரைத் தோள்
நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-

பர வாஸூ தேவ ரூபத்தில் நான்கு திருக் கைகள் உடையவர் —ஸ்ரீ பராசர பட்டர்-

நான்கு திருக் கரங்கள் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்ம அர்த்த காம மோஷங்களைத் தருபவர் -நான்கு கைகளை உடையவர் -நான்கு வேதங்களினால் உண்டாகும் ஞானத்தால்
தம்மைக் காட்டித் தருபவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சதுர் புஜாய நம
தாமரை -பரம புருஷார்த்தம்
நான்கு புருஷார்த்தங்கள் -அறம் பொருள் இன்பம் வீடு

————

139 வது திருநாமம் சதுராத்மா – பெருமான் தன்னையே வாஸீ தேவன் ப்ரத்யும்னன், ஸங்காஷணன் அநிருத்தன் என நான்காக பிரித்துக் கொண்டு இருக்கிறார். ராமாயணத்தில் பகவான் ஒருவர் தான் தன்னை ராம லஷ்மணர் பரத சத்ருக்கன் என பிரித்துக் கொண்டார் என்கிறது . பிதரம் ரோஜயா மாஸ்ய எனது வங்கும் ப்ரமாணத்தின் படி பகவான் தசரதனை தனக்கு தந்தையாக வரித்தார். ராமன் என்பது ஒரு நாமம் தானே என்றால் அவரவர் செய்வதை பொறுத்து நான்காக பிரித்துக் கொண்டு இருக்கிறார் என்றார். லக்ஷமணன் செய்வது ஒன்று. பரதனின் அவதார நோக்கமே வேற . அது போல் சத்ருக்கன் அவதார நோக்கமே வேற. அது போல் இப்போது பார்க்கும் நான்கு பேரும் தன்னை வெவ்வேறு தொழிலுக்காக பிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். அனைத்தும் ஒருவரே பண்ணலாம் என்றாலும் நாம் அனுபவிக்க ஹேதுவாய் 4 ஆக பிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவருக்கு படைப்பது பிடிக்கும், மற்றெருவருக்கு அழிப்பு தொழில் பிடிக்கும். ஆக ஆஸ்திரிகர்களின் விருப்பப்படி சேவை சாதிக்க தகுந்தார் போல் அந்தந்த ரூபத்தில் வணங்கத்தக்கவராய் தன்னை 4 ஆக பிரித்துக் கொண்டார்கள் என சாதித்தார். ராமனின் அவதார நோக்கமே லோகத்தில் தர்மம் சீர்குலைந்து போயிற்று. பெரியவர்கள் சொன்னால் சிறியவர்கள் கேட்பதில்லை என ஆயிற்று இது போல க்ருத த்ரேதா யுகத்தில் தாய் சொல்வதை மகள் கேட்பது கிடையாது . ஆச்சராயன் சொன்னால் சிஷ்யன் கேட்பது கிடையாது. இந்த மாறுபட்ட கருத்தை சரி பண்ணத்தான் இராமன் அவதரித்தார் என்றார். தந்தை சொல்மிக்க மந்தரமில்லை என தந்தை சொன்னார் என்பதற்காக காட்டிற்கு ராமன் சென்றனர். ஆதிசேஷன் அவதாரமான லக்ஷ்மணன் பகவானுக்கு கைங்கரியம் சேஷத்துவம் புரியவே இருந்தார். ஸ்வயம்புது. எனது வங்கும் ப்ரமாணப்படி நீ ஆணையிடு ராமா அதை நான்பின் தொடர்ந்து கைங்கரியம் புரிவேன். ஆக ஜீவாத்மாக்கள் அனைவரும் பரமாத்வாவின் சேஷர்கள். ஆக கைங்கர்யம் புரிவதல் லக்ஷ்மணன் நோக்காக கொண்டுள்ளார். பரதனின் அவதார நோக்கம் நிறைய கைங்கரியம் செய்வார். ஆனால் ராமனுடன் கூட செல்லவில்லை. ஆனால் ஆச்சார்யர்கள் பரதனையே லக்ஷ்மணனை விட உயர்நதவன் என கொண்டாடுகிறார்கள் . லக்ஷ்மணன புரிந்த கைங்கர்யத்திற்கு சேஷத்துவம். என்று பெயர் பரதன் ராமன் இட்ட வழக்காய் கைஙகர்யம் புரிந்ததற்கு பாரதந்திரியம் என்று பெயர். சேஷத்துவத்தை விட பாரதந்திரிய மே போற்றத் தகுந்தது . பரதனுக்கு மட்டும் நாட்டில் இருக்க விருப்பமா? ராமன் கூறினான் என்பதற்காக நாட்டில் இருந்தார். நாமும் பகவானுக்கு கைங்கரியம் பண்ணும் போது அவர் திருவுள்ளம் கோணாதபடி நடக்க வேண்டும் என அறுதியிட்டார். பகவானுக்கு கைங்கர்யம் புரிவதைவிட அவர் அடியார்களான பாகவதோத்தமர்களுக்கு அத்யந்த பார தந்திரியனாய் கைங்கர்யம் புரிவதை வெளிக்காட்டவே சத்ருக்கன் அவதாரம். ராமனின்றி இருந்த பரதன். பரதன் அன்றியிருந்த சத்குக்கனன். இதைத்தான் அடியார்க்கு அடியார்- தம் அடியார்க்கு அடியார் – தமக்கு அடியார்க்கு அடியர் – தமக்கு அடியோங்களே ஆக அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியன் என்பதையை சத்ருக்கன் நமக்கு சொல்லிக் கொடுக்கிறார். சதுராத்மா – 4 ஆக பிரிந்தார் போல் வாஸுதேவன் முழுவதுமாய் இருந்து பின் சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம் என நான்காக இருக்கிறார்

140 வது திருநாமம் – சதுர்வியூ ஹ : வியூகம் என்றால் பிரித்தல் வகுக்கிறது என அர்த்தம். துவாபரயுகம் வரை மொத்த வேதமும் ஒன்றாக இருந்தது. வேதவியாசர் பிறந்த பின் தான் மொத்த வேதத்தையும் பிரித்தார். வேதங்கள் 4 ராம லக்ஷணாதிகள் – 4 ஆக எதிலும் 4. இங்கு வாஸுதேவன் ஸங்கர்ஷணன் ப்ரத்யும்னன், அநிருத்தன் என 4 ஆக பிரித்துக் கொண்டு இருக்கிறார். ததம் ஏகஸ்ய ….என பட்டர் சாதித்தபடி எதற்காக ஒருவரே தன்னை 4 ஆக பிரித்துக் கொண்டு இருக்கிறார். த்யேய ஆராத்ய … குணஷட் கேண..6 குணங்களாய் தன்னைப் பிரித்துக் கொண்டு ஞான பலம் – சங்கர்ஷணன் ஐஸ்வர்யம் வீர்யம் – ப்ரத்யும்னன் சக்தி தேஜஸ் – அநிருத்தன் என்றும் தலா ஒவ்வொருவரும் 2 குணங்களை கொண்டுள்ளார். அப்போது அநிருத்தனுக்கு ஞானம் கிடையாதா என கேள்வி எழ எல்லோர்க்கும் எல்லா குணங்களும் உண்டு. ஆனால் அந்தந்த 2 குணங்கள் ப்ரதானமாய் மேலோங்கி இருக்கும் என சாதித்தார். திருவேங்கடமுடையான் எளிமையின் நீர்மையின் ஸ்வரூபமாய் திகழ்கிறார் என்றால் ஸ்ரீரங்கநாதனுக்கு எளிமை கிடையாது என்று அர்த்தமில்லை அவரவர்கள் செய்யும் தொழிலுக்கேற்ப முக்கியமான 2 குணங்களை எடுத்துக் கொள்கிறார். தத்வியஞ்ச விவஸ்தித… எனது வங்கும் ப்ரமாணத்தின் படி அவரவர் கையில் வைத்திருக்கும் ஆயுதம், அவரவர்கள் திருமேனி வர்ணம், அவரவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்கள், வாகனங்கள் எல்லாம் வேறாக இருக்கும். இதற்கு சான்றாய் நிறைய ஹோம குண்டங்கள் கொண்டுள்ள யாகசாலையில் நிறைய படங்கள் இருக்கும். அந்த ஒவ்வொரு படங்களிலும் இந்த 3 பேர்களின் படம் தான் வரையப்பட்டிருக்கும். சங்கம், கதை சக்கரம் என ஒவ்வொருவரும் தரித்துக் கொண்டு இருப்பர். இதை பாஞ்சராத்ர ஆகமத்தில் விவரித்து கூறப்பட்டு இருக்கிறது. முன் குறிப்பட்டது போல் கையில் பிடித்திருக்கும் ஆபரணம், திருமேனி வர்ணம் ஒவ்வொன்றும் மாறி இருக்கும். விசாக வியூக ஸ்தம்பம் என்று ஒன்று உள்ளது. இதே போல் ஸ்ரீரங்கத்திலும் ஆயிரம் கால் மண்டபம் உள்ளது. அந்த இடத்தில் நீளமாய் தூணை கட்டி வைத்துள்ளார்கள். அந்த தூணில் கீழே 4 கிளை. நடுவில் 4 கிளை மேலே 4 கிளை – 4.4-4-4 என 16 கிளைகள் இருக்கும். இதை ஒவ்வொரு கிளையாக பிரித்திருப்பதின் நோக்கம் – கீழ் களையிலிருந்து அடுத்த களைக்கு போகும் போது ஒரு தெளிவு பிறக்கும். இப்போது எல்லாம் முழித்துக் கொண்டு இருக்கோம். இந்த தசைக்கு பெயர் ஜாக்ரதா தசை. (விழித்திருக்கும் தசை) மனசு வேலை பார்க்கிறது. கண் காது போன்ற இந்த்ரியங்கள் வேலை பார்க்கிறது. இதற்கு அடுத்த தசை தூங்குவது. தூங்கி விட்டோம் என்றால் ஸ்வப்னம் காணும் நிலை . இதை யே ஸ்வப்னதசை என்கிறார்கள். மனது மட்டும் வேலை பார்க்கும். கண்காது எல்லாம் மூடிக்கொண்டு விடும். ஆனால் உள்ளே இருக்கும் உலகம் தெரிகிறது. மனது வேலை செய்கிறது. இது ௨வது தசை. ஸ்வாபதசை . 3வது தசைக்கு ஸீஸுக்தி என்று பெயர். நல்ல ஆழ் நிலை உறக்கம். மனசு, கண் காது எல்லாம் தூங்கிவிட்டது நன்றாக தூங்கின தசை .3வது .அடுத்து 4வது தசை துரியதசா. துரிய தசா என்பது மயக்க தலை இப்போது மயக்கநிலை அந்த தூரத்தில் ஒன்று உள்ளே வரப்போவது தெரியும். சுமாராகத் தெரியும். இன்னும் அருகில் வந்தால் நேற்று பார்த்தது போல் தோன்றும். அதன் பின் சற்று அருகாமையில் மேலும் வரும் போது இவர் தான் என ஊர்ஜிதமாகிறது. வந்து உட்கார்ந்தவுடன் அங்க அடையாளங்கள் தெரிந்து விட்டது. தள்ளி இருக்கும் போது சுமாராக காட்சி அளித்தது எல்லாம் கிட்டக்க அருகாமையில் வர வர தெளிவாய் தெரியும். அது போல் ப்ரஹ்மத்தை நோக்கி போக போக தெளிவு பிறக்கும். ஆக படிப்படியான எல்லா தசைகளையும் அடைந்து முடிவில் நன்றாக தூங்கிவிட்டால் நன்றாக பெருமானை ஒன்றி அனுபவிக்கிறோம். அதாவது பெருமானுடன் ஒன்றிவிடுகிறோம். இதைத்தான் விசாக வியூக ஸ்தம்பம் என அழைப்பர்

———

தசரதனின் நான்கு பிள்ளைகளை மணந்த நாலு பெண்கள்
ராமர்-சீதை
லெட்சுமணர்-ஊர்மிளை
பரதர் – மாண்டவி
சத்ருக்னன் -ஸ்ருதகீர்த்தி

வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர் நாலு
ரிஷிக்களிடம் அவைகளைப் பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார்
ருக் – பைலர்
யஜூர் – ஜைமினி
சாம – வைசம்பாயன
அதர்வண – சுமந்து

மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை கடந்து செல்ல வேண்டிய நாலு நிலைகள்
பிரம்மசர்யம் (மாணவன்)
கிருஹஸ்தன் (இல்லறத்தான்)
வானப்ரஸ்தம் (கடவுளை வணங்க கானக வாழ்வு)
சந்யாசம் (துறவு)

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
வெண்பா (4 வரிகள் உடையது),
இரண்டு வரிகளை உடையது குறள்.

பிரம்மாவின் நாலு மானச
புத்திரர்கள் யாவர்?
சநகர்
சநாதனர்
சநந்தனர்
சனத் குமாரர்

நான்கு வகைப் பூக்கள் யாவை
கோட்டுப் பூ, கொடிப் பூ,
நிலப் பூ, நீர்ப் பூ

க’ வர்க்கத்தில் துவங்கும் நாலு புண்ய சொற்களைத் தியானிப்போற்கு புனர் ஜன்மம் இல்லை
கங்கை
கோவிந்தன்
கீதா
காயத்ரி

கும்பமேளா நடைபெறும் நாலு இடங்கள்
ஹரித்வார்
அலகாபாத் (பிரயாகை திரிவேணி
த்ரிவேணி
சங்கமம்)
நாசிக்
உஜ்ஜையினி.

ரத, கஜ, துரக, பதாதி
(தேர், யானை, குதிரை,
காலாட் படைகள்)

உபநிஷத்தில் கூறப்படும் நாலு
மஹா வாக்யங்கள்
அஹம் ப்ரஹ்மாஸ்மி
தத்வம் அஸி
ப்ரஹ்ஞானம் ப்ரஹ்ம,
அயமாத்ம ப்ரஹ்ம

———————–———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில் நகருக்கு அடை மொழிகள் –தென் -நன் -அவ் -புகும் -மா -நீள் –ஆய்ச் சேரியிலே–தாயப் பதியிலே–வளம் புகழும் –தான -செழு -கடி -தொன் -பெரு -விண் -மண் -பொன்

October 4, 2022

தென் னகரிலே–திரு வல்ல வாழிலே

நன் னகரிலே–திரு விண்ணகரத்திலே

அவ் வூரிலே–தொலை வில்லி மங்கலத்திலே -இரட்டைத் திருப்பதியிலே

புகு மூரிலே –திருக் கோளூரிலே

மா நகரிலே –தென் திரு பேரெயிலிலே

நீள் நகரிலே –திரு வாறன் விளையிலே

ஆய்ச் சேரியிலே -திரு வண் பரிசாரத்திலே

தாயப் பதியிலே –திருக் கடித் தானத்திலே

வளம் புகழு மூரிலே –குட்ட நாட்டுத் திருப் புலியூரிலே

—————

மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை தென்னகரிலே நித்யம்-ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -சூரணை -165-

விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கடநா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீர்ணம் —சூரணை -167-

கடித கடக விகடநா பாந்தவம் அவ் ஊரிலே த்விகுணம் -சூரணை -168-

கை முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம்–சூரணை -169-

சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுக்கும் சௌந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும்–சூரணை -170-

ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆநந்த வ்ருத்தி நீண் நகரிலே –சூரணை-171-

ஸ்ரம மனம் சூழும் சௌகுமார்ய பிரகாசம் ஆய்ச் சேரியிலே—சூரணை-174-

சாத்ய ஹ்ருதிஸ்னாயும்-சாதனம் ஒருக்கடுக்கும்-க்ருதஜ்ஞதா கந்தம் –தாயப் பதியிலே–சூரணை -176-

அவகாஹித்தாரை அனந்யார்ஹமாக்கும் நாயக லஷணம் வளம் புகழு மூரிலே குட்டமிடும்–சூரணை -176-

—————–

மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை தென்னகரிலே நித்யம்-ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -சூரணை -165-

விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கடநா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீர்ணம் —சூரணை -167-

கடித கடக விகடநா பாந்தவம் அவ் ஊரிலே த்விகுணம் -சூரணை -168-

கை முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம்–சூரணை -169-

சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுக்கும் சௌந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும்–சூரணை -170-

ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆநந்த வ்ருத்தி நீண் நகரிலே –சூரணை-171-

ஸ்ரம மனம் சூழும் சௌகுமார்ய பிரகாசம் ஆய்ச் சேரியிலே—சூரணை-174-

சாத்ய ஹ்ருதிஸ்னாயும்-சாதனம் ஒருக்கடுக்கும்-க்ருதஜ்ஞதா கந்தம் –தாயப் பதியிலே–சூரணை -176-

அவகாஹித்தாரை அனந்யார்ஹமாக்கும் நாயக லஷணம் வளம் புகழு மூரிலே குட்டமிடும்–சூரணை -176-

———–

மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை தென்னகரிலே நித்யம்-ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -சூரணை -165-

கீழ் சொன்ன -5-8-நிரதிசய போக்யமான விஷயத்தை ( ஆராவமுதமான ) சீக்கிரமாக கிட்டு அனுபவிக்கப் பெறாமையாலே –
வைகலும் வினையேன் மெலிய -திருவாய்-5-9-1–என்று
நாள் தோறும் மெலியும் அளவிலும் –(மெலிந்த பொழுதும் விஸ்வாசம் குலையாத ஆழ்வார் )
நாமங்களுடைய நம் பெருமான் அடிமேல் சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன்-திருவாய்-5-9-11 -என்று
அவனே ரஷகன் என்று அத்யவசித்து இருக்கும் படி பண்ணும்- ( சேமம் -காவல் )

சுழலில் மலி சக்கரப்பெருமானது தொல் அருளே திருவாய்-5-9-9–என்கிற கிருபை
திரு வல்ல வாழ் சேமம் கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே –திருவாய்-5-9-11-
தொல் -தொன்மை- பழைமை ஆகையாலே -நித்தியமாய் இருக்கும் என்கை —
( திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -பழமையே தொன்மை -சேஷத்வமும் கிருபையும் தொன்மை யாகவே உண்டே )

———-

விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கடநா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீர்ணம் —சூரணை -167-

க்ரம பிராப்தி பற்றாமல் படுகிற த்வரைக்கு ஈடாகக் கடுக வந்து முகம் காட்டாமையால்- விளம்பித்து வருகையாலே –
போகு நம்பீ -திருவாய்-6-2-1-என்றும் –
கழகம் ஏறேல் நம்பீ –திருவாய்-6-2-6–என்றும் –
பிரணய ரோஷத்தால் வந்த விரோதத்தை
அழித்தாய் வுன் திரு அடியால் -திருவாய்-6-2-9–என்று
அழித்துப் பொகட்ட விருத்தங்களை கடிப்பிக்க வல்ல சாமர்த்தியம் –

நல்குரவும் செல்வமும்-திருவாய்-6-3-1- -என்று தொடங்கி –
தன்னில் சேராதவற்றைச் சேர்த்துக் கொண்டு நிற்கிற விருத்தி விபூதி யோகத்தை பிரகாசிப்பித்த –
திரு விண்ணகர் நன்னகரே-திருவாய்-6-3-2- -என்று
நன்னகரான திரு விண்ணகரத்தில்- பல்வகையும் பரந்த-திருவாய்-6-3-1- -என்கிறபடி
பரந்து இருக்கும் என்கை –( விஸ்தீர்ணம்-பல்வகையும் பரந்த )

—————

கடித கடக விகடநா பாந்தவம் அவ் ஊரிலே த்விகுணம்–சூரணை -168-

(கடிதர் -சேர்க்கப்படுபவர் /-கடகர்-சேர்ப்பவர் / விகடநா பாந்தவம் -பொருந்தாமையைச் செய்யும் உறவு முறை
பெருமாள் உடன் சேர்ந்தவரான ஆழ்வார் சேர்த்து வைத்த தாயாராதிகள் -இருவரையும் பிரிக்கும் உறவு முறை இரட்டைத் திருப்பதியில் )

அதாவது
பிரான் இருந்தமை காட்டினீர்–திருவாய்-6-5-5 -என்கிற
கடகராலே தன் பக்கல் கடிதர் ஆனார்க்கும் கடகர் ஆனார்க்கும் ,
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசையில்லை விடுமினோ-திருவாய்-6-5-1-என்னும்படி
விகடநையை பண்ணுவதான –

தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த –திருவாய் -6-5-11-என்கிற அவனுடைய பாந்தவம் –
அவ்வூர் திரு நாமம் கேட்பது சிந்தையே -திருவாய்-6-5-10–என்று
தோழி யானவள் திரு துலை வில்லி மங்கலம் என்று தான் சொல்லும் போது
பெண் பிள்ளை சொன்னால் போல் இனிதாய் இராமையாலே -அவ்வூர் -என்று
சொல்லப் பட்ட தேசத்திலே -தேவ பிரானும்-அரவிந்த லோசனுமாய் –
நின்று இருந்து உறையும் இரட்டைத் திருப்பதி ஆகையாலே இரட்டித்து இருக்கும் என்கை —
விகடநா பாந்தவம் -என்றது -விகடநா கர பாந்தவம் என்றபடி —

——————–

கை முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம்–சூரணை -169-

கை முதல் இழந்தார்
அதாவது
ஏலக் குழலி இழந்தது சங்கே–திருவாய்-6-6-1 -என்று தொடங்கி –
கற்புடை யாட்டி இழந்தது கட்டே –திருவாய்-6-6-10–என்று
பிராப்ய அலாப நிபந்தனமான ஆர்த்தியால் வந்த பாரவச்யத்தாலே –
பிராப்ய பிராபக ஆபாசங்கள் எல்லாம் தன்னடையே விட்டுக் கழிகையாலே -கைமுதல் அற்றவர்கள் –

உண்ணும்
அதாவது
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்-திருவாய்-6-7-1- -என்று
தாரக போஷக போக்யங்கள் எல்லாம் தானேயாக புஜிக்கும்-
(வாஸூ தேவ சர்வம் கண்ணன்-எல்லாம் கண்ணன் – -இது கொண்டு ஸூத்ர வாக்கியங்கள் ஒருங்க விடுவார் –
தர்சனம் பேத ஏவச–ஆறு வார்த்தைகளில் ஒன்றும் உண்டே )

நிதியின் ஆபத் சகத்வம்-
அதாவது
வைத்த மா நிதியாம் மது ஸூதனை –திருவாய்-6-7-11 -என்று
ஆபத் ரஷகமாக சேமித்து வைத்த மகா நிதி போல் இருக்கிறவனுடைய ஆபத் சஹத்வம் –

புகுமூரிலே சம்ருத்தம்–
அதாவது-
திண்ணம் என் இள மான் புகுமூர் திருக் கோளூரே-திருவாய்-6-7-1- -என்று
பிராப்ய ருசி பிறந்தார்க்கு பிரவேஷ்டமாய் இருக்கும் திருக் கோளூரிலே –
செல்வம் மல்கி யவன் கிடந்த திருக்கோளூர்க்கே- திருவாய்-6-7-4–என்று
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணமே தனக்கு நிரதிசய சம்பத்தாக நினைத்து வந்து கிடைக்கையாலே
சம்ருத்தம் என்கை ..(சம்ருத்தம் -நிறைவு)(புகுமூர் போகுமூர் ஆனதோ –பெண் பிள்ளை வார்த்தை —
நானே ரக்ஷித்துக் கொள்வான் அவனுடைய ஊணைப் பறிப்பானே )

——————

சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுக்கும் சௌந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும்–சூரணை -170-

( வேத ஒலி -விழா ஒலி= பிள்ளைகள் விளையாட்டு ஒலி மூன்றும் கோஷிக்குமே இங்கு )

சென்று சேர்வார்க்கு
அதாவது
தென் திரு பேரையில் சேர்வன் சென்றே- திருவாய்-7-3-8–என்று
க்ரம பிராப்தி பற்றாத பிரேம அதிசயத்தாலே ஹித பரர் வார்த்தை கேளாதே சென்று
பிரவேசிப்பது என்னும் படியானவர்களுக்கு –

உசாத் துணை அறுக்கும்
அதாவது
என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் -உழந்து இனி யாரைக் கொண்டு என் உசாகவோ-திருவாய்-7-3-4- -என்னும் படி
உசாத் துணையான நெஞ்சை அபஹரிக்கும் –

சௌந்தர்யம்
அதாவது
செஞ்சுடர் நீள் முடித் தாழ்ந்ததாயும் சங்கோடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு
அற்றுத் தீர்ந்தும் -திருவாய்-7-3-3-என்று சொன்னவனுடைய சௌந்தர்யம் –
( ராமம் மே அநு கதா த்ருஷ்ட்டி கடல் கொண்ட வஸ்து திரும்பாதே தசரதன் புலம்பல்
கனி வாயிலும் -முடியிலும் -திவ்ய ஆயுதங்களிலும் திருக் கண்களின் அழகிலும் -இத்யாதி —
ஆழ்வாருடைய திரு உள்ளம் தசாவதாரம் எடுத்து இவற்றை ஒவ் ஒன்றிலும் ஈடுபட -அனுபவித்ததாம்-
சர்வ வியாபகம் கொடுத்த சாம்யாபத்தி –முடியிலும் இருந்து திருவடி வரை வியாபித்து நெஞ்சு அனுபவிக்க –
நெஞ்சினார் -உயர்வு தோன்ற –
திருக்குறுங்குடி லாவண்யம் -இங்கு ஸுவ்ந்தர்யம்-நிகரில் முகில் வண்ணன் உத்சவர் திரு நாமம் இது –
மகர நெடும் குழைக் காதர்-மூலவர் இவன் அன்றோ
முக்தன் -இமான் லோகான் காமான் சஞ்சரம் -ஆழ்வார் திரு உள்ளத்துக்கு இங்கேயே அது வாய்த்ததே
அம்ருத மதனத்துக்கு அவன் பல வடிவம் கொண்டது போலே ஆழ்வார் திரு உள்ளம் இங்கு -)

மா நகரிலே கோஷிக்கும்-
அதாவது
தென் திரு பேரெயில் மா நகரே–திருவாய்-7-3-9- -என்று
மகா நகரான தென் திரு பேரையில் –
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு -திருவாய்-7-3-4–என்கிறபடியே –
அவ் விஷயத்தை அனுபவித்த ஹர்ஷ பிரகர்ஷத்தால் அங்குள்ளோர்
பாடுகிற சாம கோஷத்தாலே தெரியும் என்கிறபடி ..
( திரு உள்ளத்தில் கருட உத்சவம் இவருக்கு இங்கு கருடன் குழம்பு ஓசை இங்கு
பெரியாழ்வாரும் சமுத்திர அலை ஓசை –
இன்றும் சாம கோஷம் அங்குள்ளார் கோஷித்த பின்பே ஆழ்வார் ஆஸ்தானம் எழுந்து அருளுகிறார் -)

———–

ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆநந்த வ்ருத்தி நீண் நகரிலே –சூரணை-171-

(இன்பம் பயக்க -என்பதால் ஆனந்த வ்ருத்தி -துணைக் கேள்வியாக இங்கே தானே –
ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மஹா பாரதம் ஸ்ரீ சஹஸ்ர நாமமும் – இரண்டும் தனிக் கேள்வி தானே –
பாடியவர் வால்மீகி கேட்பித்தவர் லவகுசர் -இங்கே பாடினவரே கேட்பீக்க்கவும் –
பாட்டுக்கு தலைவி சீதா பிராட்டி கேட்க்காமல்-ருக்மிணி தேவியும் கேட்க வில்லையே அங்கு –
பாசுரத்தில் சிந்தனை என்பதையே இங்கு சித்தம் -)

ப்ரவண சித்தம்
அதாவது
தீ வினை உள்ளத்தின் சார்வல்ல வாகித் தெளி விசும்பு ஏறல் உற்றால்
திரு வாறன் விளை அதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல்
என்னும் என் சிந்தனை–திருவாய்-7-10-9–என்று –
அவித்யாதிகள் பிரத்யக் வஸ்துவான ஆத்மாவில் பற்றற போய் -தெளிவை விளைப்பதான
பரம பதத்தை ப்ராபிக்கை வந்து கிட்டினாலும் என் நெஞ்சானது -திரு வாறன் விளை யாகிற இத் தேசத்தைக் கிட்டி –
அனுகூல வ்ருத்தி பண்ணிக் கையாலே தொழக் கூடுமோ என்னா நிற்கும் என்று தன் பக்கல்
பிரவணரானவர்கள் சித்தத்தை –

பரத்வ விமுகமாக்கும்
அதாவது
சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்-திருவாய்-7-10-10- -என்று
பரம பதத்தின் பேர் சொல்லுகையும் அசஹ்யமாம் படி பரத்வத்தில் விமுகமாகப் பண்ணும் –

ஆநந்த வ்ருத்தி-
அதாவது-
இன்பம் பயக்க எழில் மாதரும் தானும் இவ் எழ உலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து –திருவாய்-7-10-1-
என்கிற ஆநந்த வ்ருத்தி –

நீண் நகரிலே-
அதாவது
திரு வாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே -திருவாய்-7-10-6–என்றும்
திருவாறன் விளை நீள் நகரத்து உறைகின்ற பிரான் -திருவாய்-7-10-7- என்றும்
நீள் நகரான திரு வாறன் விளையில் வ்யக்தம் என்ற படி –

—————-

ஸ்ரம மனம் சூழும் சௌகுமார்ய பிரகாசம் ஆய்ச் சேரியிலே—சூரணை-174-

ஸ்ரம மனம் சூழும்
அதாவது
பணியா அமரர் பணிவும் பண்பும்–திருவாய்-8-3-6–இத்யாதி படி –
பரம பிரேம யுக்தரான நித்ய சூரிகள் பரிசர்யை பண்ண பரம பதத்தில் இருக்கும் அவன் –
நிரதிசய சௌகுமாரமான திரு மேனியோடே சம்சாரிகளுடைய துக்கத்தைப் போக்குகைக்காக –
தன் வாசி அறியாத இந்த லோகத்தில் வந்து அவதரித்து –
அடியார் அல்லல் தவிர்ப்பது –திருவாய்-8-3-7-
படி தான் நீண்டு தாவுவது –திருவாய்-8-3-7-
ஆகையால் வந்த ஸ்ரமத்தை அனுசந்தித்த மனசானது -வ்யாகுலிதமாய்-பிரமிக்கும்படியான –

சௌகுமார்ய பிரகாசம்
அதாவது
ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்—திருவாய்-8-3-3-என்று
பூ யேந்தினாப் போலே இருக்கும் திரு ஆழி திரு சங்கை ஏந்துவதும் மலை சுமந்தார் போல்
வன் பாரமாக தோற்றும் படி இருக்கிறவன் சௌகுமார்ய பிரகாசம் –

ஆய்ச் சேரியிலே-
அதாவது
உடைய நங்கையார் பிறந்தகம் ஆகையாலே -ஆழ்வாருக்கு ஆய்ச் சேரியாய் இருப்பதாய் –
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்று
வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்பற்கு என் திறம் சொல்லார் -—திருவாய்-8-3-7–என்ற
திருப் பரிசாரத்தில் காணப் படும் என்கை —

(என் திரு வாழ் மார்பன் –என் திரு மகள் சேர் மார்பனே என்னும் என்னுடைய ஆவி போலவே இங்கும் –
அமர்ந்த திருக் கோலம் இங்கு மட்டுமே மலையாள திவ்ய தேசம் –
அகஸ்தியர் ஸ்ரீ ராமாயணம் சொல்ல திருவடி கேட்ட திவ்ய தேசம்-இருவரும் சேவை சாதிக்கிறார்கள் இங்கு –
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ -சிரமம் -நினைத்த ஆழ்வார் மனம் சூழ வந்தானே
ஆழியும் சங்கும் சுமப்பார்-அவன் அபிப்பிராயம் ஏந்து-ஆழ்வார் அபிப்ராயம்
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே -இது அவன் அபிப்ராயம் -அங்கு –
குலசேகராழ்வார் குதிரை பரி சஞ்சரித்த இடம் திருப்பரிசாரம் -திரு வண் பரிசாரம் இது )

——————-

சாத்ய ஹ்ருதிஸ்னாயும்-சாதனம் ஒருக்கடுக்கும்-க்ருதஜ்ஞதா கந்தம் –தாயப் பதியிலே–சூரணை -176-

(கடி -பரிமளம் -தானம் -ஸ்தானம் -வாசனை மிக்க ஸ்தானம் -எனவே கந்தம்-
கடி -கத்தி -ஸ்தானம் -ஹனுமான் கடி போலே -என்றுமாம் –
கிஞ்சித் உபகாரம் மறக்க மாட்டான் -சஹஸ்ர அபசாரங்களையும் மறப்பான் அன்றோ –
தாயப்பத்தி -பித்ரு ஆர்ஜிதம் -ஹஸ்தி மே ஹஸ்தி சைலம் –பிதா மகன் சொத்து
ஒருக்கடுத்தல் -ஒருங்க அடுத்தல் -ஆழ்வார் திரு உள்ளத்தில் நித்ய வாஸம் போலவே
திவ்ய தேசத்திலும் ஆசை கொண்டு நித்ய வாஸம் என்றவாறு-
திருமாலிருஞ்சோலை மலையே என்கிறபடியே உகந்து அருளினை நிலங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை
இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் -அங்குத்தை வாஸம் சாதனம் -இங்குத்தை வாஸம் சாத்யம்-
கல்லும் கனைகடலும் என்கிறபடி இது சித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாய் இருக்கும் –
இளம் கோயில் கை விடேல் என்று இவன் பிரார்த்திக்க வேண்டும்படியாய் இருக்கும் -ஸ்ரீ வசன பூஷணம்
கோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சகம் 8-6-5–)

அதாவது
சாத்யம் கைப் பட்டால் சாதனத்தில் இழிவார் இன்றிக்கே இருக்க –
திருக் கடித் தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான்-திருவாய்-8-6-2- -என்று
சாத்தியமான ஆழ்வார் திரு உள்ளத்திலே வாஸம் லபித்தது இருக்கச் செய்தேயும் ,
இத்தைப் பெற்றது அத் தேசத்தில் நிலையாலே அன்றோ என்று
சாதனமான திருக் கடித் தானத்தையும் அடுத்து பிடித்து வர்த்திக்கும் படியான க்ருதஜ்ஞாத பரிமளம் —
திருக் கடித்தான நகரும் தான தாயப் பதி—திருவாய்-8-6-8-என்று
தனக்கு தாயப் ப்ராப்தமான ஸ்தானமாக நினைத்து இருக்கும் திருக் கடிதானத்தில் என்கை ..
க்ருதஜ்ஞதா கந்தம் -என்றது-கடித்தானம்-என்று மணத்தை உடைத்தான ஸ்தானம் என்கையாலே ..

————–

அவகாஹித்தாரை அனந்யார்ஹமாக்கும் நாயக லஷணம் வளம் புகழு மூரிலே குட்டமிடும்–சூரணை -176-

அவகாஹித்தாரை
அதாவது
அப்பன் திருவருள் மூழ்கினள்–திருவாய்-8-9-5-என்று
தன் பிரசாதத்தாலே மருனனைய அவகாஹித்தாரை –

அனந்யார்ஹமாக்கும்-
அதாவது-
அரு மாயன் பேர் அன்றி பேச்சு இலள்–திருவாய்-8-9-1–என்றும் –
திருப் புலியூர் புகழ் அன்றி மற்று –பரவாள் இவள் நின்று இராப் பகல் -திருவாய்-8-9-9-–என்றும் –
திரு புலியூர் நின்ற மாயப் பிரான் திரு அருளாம் இவள் நேர் பட்டது -திருவாய்-8-9-10–என்னும் படி
அனந்யார்ஹம் ஆக்குமதாய் –

நாயக லஷணம்-
அதாவது-
கருமாணிக்க மலை மேல் மணித் தடம் தாமரைக் காடுகள் போல் -திருவாய்-8-9-1–என்றும் –
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல்-திருவாய்-8-9-2- -இத்யாதிகளால் சொன்ன
அவயவ சோபை ஆபரண சோபை முதலான நாயக லஷணம் ..

வளம் புகழு மூரிலே குட்டமிடும்-
அதாவது-
திருப் புலியூர் வளம் புகழும் -திருவாய்-8-9-3-என்று
இவர் கொண்டாடும் படியான ஐஸ் வர்யத்தை உடைய திருப் புலியூரிலே பூரணமாம் என்கை ..
குட்டமிடும் -என்றது -குட்ட நாடு -என்னும் அத்தை நினைத்து ..

அருள் மூழ்கினாரை – என்னாதே -அவகாஹித்தாரை -என்றது கலந்தவர்களை-
அனந்யார்ஹர் ஆக்கும் படி இருக்க வேணும் நாயக லஷணம் என்று –
உத்தம நாயக லஷணத்தை சாமான்யேன தர்சிப்பித்து –
அந்த லஷணம் ஈஸ்வரனுக்கு திருப் புலியூரிலே பூரணமாக பிரகாசிக்கும் என்று அருளிச் செய்தவர் ஆகையாலே .

————-

நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் - நாலாயி:2569/2
நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என் - நாலாயி:3199/1

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல் நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று கிடந்தானை-மூன்றாம் திருவந்தாதி -34
தான நகர்கள் தலைச்சிறந்து எங்கெங்கும் - நாலாயி:3733/1
திருமூழிக்களம் என்னும் செழு நகர்வாய் அணி முகில்காள் - நாலாயி:3850/2
கடி நகர வாசல் கதவு - நாலாயி:2269/4
நீள் நகரம் அதுவே மலர் சோலைகள் சூழ் திருவாறன்விளை - நாலாயி:3666/1 
நீள் நகரத்து உறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன் - நாலாயி:3666/2
நின்ற அணி திருவாறன்விளை என்னும் நீள் நகரம் அதுவே - நாலாயி:3665/4
வன் தாளின் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னன் ஆவான் - நாலாயி:730/1
தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை

கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர் - நாலாயி:2332/3

விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடம் மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த - நாலாயி:2343/2
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர் - நாலாயி:2721/3
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு - நாலாயி:2739/2
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும் - நாலாயி:2746/2
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும் - நாலாயி:2747/1
பூம் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும் - நாலாயி:2158/2
தான நகரும் தன தாய பதியே - நாலாயி:3733/4
தெண் திரை புனல் சூழ் திருவிண்ணகர் நல் நகரே - நாலாயி:3474/4
நண்ணு திருக் கடித்தான நகரே - நாலாயி:3732/4
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து நானும் - நாலாயி:739/3

-----------

நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் - நாலாயி:2569/2 

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
நாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92-

உன் விபூதியில் ஏக தேசத்தை அழித்து தர வேணும் என்று சொல்லா நிற்பர்கள் ஆயிற்று –

முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் –
அஞ்சினான் புகலிடமாய் -துர் வர்க்கம் அடங்கலும் புக்கு ஒதுங்கும்-இடம் ஆயிற்று –
கடலை அகழாக உடைத்தாய் இருக்கையாலே சிலராலே பிரவேசிக்க அரியதாய் இருக்கை-

கடல் சூழ்ந்த (ஜம்போத் த்வீபத்திலே )மகா த்வீபத்திலே உண்டான –
நீள் நகர் –
தேவர்கள் உடைய வர பலத்தாலே ஒரு நாளும்-அழியாதபடி -பூண் கட்டின இலங்கையிலே –

(லங்காம் ராவண பாலிதாம் -திருவடி மதித்த ஐஸ்வர்யம் )

நீள் எரி வைத்து அருளாய் –
தேவதைகள் உடைய வரத்தால் உண்டான-சக்தியையும் அழிக்க வற்றான
சராக்நியை பிரவேசிப்பிக்க வேணும் -என்பர்களே

இலங்கை  நகர் அம்பு எரி உய்த்தவர்(-4-2) -என்னக் கடவது இறே –

ஒரூரைச்  சுட்டுத் தர வேணும் என்பர்கள் –

————–

நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என் - நாலாயி:3199/1
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே! ஞாலம் கொள் வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2-
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே –
‘என்றும் நெஞ்சிலே இருந்துபோம் இத்தனையேயோ? என் பக்கலிலும் ஒரு கால் இருத்தல் ஆகாதோ?’ என்னா நின்றது;
வாக்கின் வார்த்தை இருக்கிறபடி இது. ‘மற்றை இந்திரியங்கள், பரம பதம், பாற்கடல் தொடக்கமான இடங்கள் என் படுகின்றனவோ!
என்னே பாவம்!’ என்பார், ‘நெஞ்சமே இருந்த’ எனப் பிரிநிலை ஏகாரங் கொடுத்து ஓதுகிறார்.
‘கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும், புல்லென்று ஒழிந்தனகொல்? ஏ பாவம்!’ – பெரிய திருவந். 68.-என்னுமாறு போன்று
‘பரமபதமும் அவ்விருப்பும் என்படுகின்றதோ?’ என்றபடி.
‘கலங்காப் பெருநகரத்திற் பண்ணும் ஆதரத்தை என் நெஞ்சிலே பண்ணா நின்றான்,’ என்பார், ‘நகராக’ என்கிறார்.
பரம பதத்தில் இட்டளமும் -சங்கோசம் -தீர்ந்தது இவர் நெஞ்சிலே ஆதலின், ‘நீள் நகராக’ என்கிறார்.- வைகுந்தம் நகர் நெஞ்சு நீள் நகர்
மனத்தினை இட்டளம் இல்லாத நரகமாகக் கொண்டிருந்தான் –நீள் நகராகக் கொண்டிருந்தமை-என்றபடி.
‘மனத்தினை நீள் நகராகக் கொண்டிருந்தமையை அறிந்தபடி எங்ஙனே?’ என்ன,‘இல்லையாகில், மறந்து கூப்பீடு மாறும் அன்றோ?
இப்படிக் கூப்பிடப் பண்ணின உபகாரத்தின் தன்மையை நினைத்து ‘என் தஞ்சனே!’ என்கிறார்.
சமுசாரிகளில் இப்படிக் கூப்பிடுகின்றவர் இலர் அன்றே? இவர் நெஞ்சிலே இருக்கை அன்றோ இவ்விஷயத்திற் கூப்பிடுகிறது?
—————–
தான நகர்கள் தலைச்சிறந்து எங்கெங்கும் – நாலாயி:3733/1
தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும்
வானிந்நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தனதாய்ப் பதியே–8-6-8-
நகரங்கள் பலவும் உண்டாய் இருக்கச் செய்தேயும்–என்னுடைய நெஞ்சையும் திருக் கடித் தானத்தையும்
தாயத்தால் கிடைத்த இடமாக விரும்பி-இருக்கிறான் -என்கிறார் –
ரதிங்கத -ஆசைப்பட்டு வந்ததால் ஸ்ரீ ரெங்கம் இதி –

என் நெஞ்சும் திருக் கடித் தான நகரும்
தனக்கு தாய பாகமாகக் கிடைத்த இடமாக
விரும்பி இரா நின்றான்

தாயப்பதி பரம்பரை சொத்து-இயற்கையாக-தாயாதி தாயத்தை ஆளுகிறவர்கள்-தானே வரும் –
ஹச்திசைலே–பித்ருரார்ஜிதம் -கிஞ்சித் வைராக்ய பஞ்சகம்
மலை மேல் தாய பிராப்தம் பிதாமகர் சம்பாதித்த தனம்-நான் சம்பாதிக்க வில்லை -அனுபவம் அவகாசம் இருக்காதே
ந பித்ரார்ஜிதம் -தகப்பனார் இஷ்டம் வேண்டுமே அனுபவிக்க-பைதாமகம் -தகப்பனாரும் கேட்க முடியாதே
birth right உண்டே –தாயப்பிராப்தம் இது தான்

—————

திருமூழிக்களம் என்னும் செழு நகர்வாய் அணி முகில்காள் - நாலாயி:3850/2

திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-

திரு மூழிக் களம் என்னும் –
துயர் உற்றவர்களை பாது காப்பதற்காக-வந்து நிற்கிற இடம் என்ற-பிரசித்தமான தேசம் –

செழு நகர் –
பரம பதத்தைக் காட்டிலும் உண்டான ஏற்றம் –

வாய் அணி முகில்காள்-
வளப்பம் பொருந்திய நகரத்திலே செல்லுகிற-அழகிய முகில்காள்
அன்றிக்கே
செழு நகரிலே எழுந்து அருளி இருக்கின்ற அடிகள் -என்று-
செழுநகர் வாய் -என்பதனை-அடிகளுக்கு அடை மொழி ஆக்கலுமாம்-

————–

கடி நகர வாசல் கதவு - நாலாயி:2269/4

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–இரண்டாம் திருவந்தாதி -88-

அரண் -என்று காவலாய் –
அத்தால்
ஸ்வ யத்ன சாத்தியம் அல்லாத வான் -என்றபடி
நயாமி பரமாம் கதிம் —
அநே நைவ வஹி –
அப்ரதிஷேதம் கொண்டு பெற பெற மாட்டாதே ஸ்வரூபத்தை அழித்துக் கொண்டு பேற்றை இழப்பதே –

கடி நகரம் –
கடி என்று பரிமளமாய்-போக்யதை யாகவு மாம் –
ஒளியை யுடைத்தான நகரம் என்றுமாம் –

——————

நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–
நின்ற அணி திருவாறன்விளை என்னும் நீள் நகரமது –
பிரகாசியா நிற்கச் செய்தேயும் கண்களுக்கு இலக்கு ஆகாதபடி இருக்கை அன்றிக்கே,
‘இவன் நமக்கு உளன்’ என்று அச்சந்தீரும்படி கண்களாலே கண்டு அனுபவிக்கும்படி நிற்கிற
அழகிய திருவாறன்விளையாகிற மஹா நகரத்தை.

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–7-10-6-

நீள் நகரத்து உறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன் - நாலாயி:3666/2

நீணக ரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7-

நீள் நகரம் அதுவே –
கலங்காப் பெருநகரமாய், புக்கார்க்கு ‘மீண்டு வருதல் இல்லை’ என்கிறபடியே
ஒரு நாளும் மீட்சி இல்லாதபடி எப்பொழுதும் அனுபவம் பண்ணும் பிராப்பிய தேசம் அதுவே.

மலர்ச் சோலைகள் சூழ் திருவாறன்விளை நீள் நகரத்து உறைகின்ற பிரான் –
‘அவனுக்குக்கூடப் பிராப்பிய பூமி’ என்று தோற்றும்படி இருக்குமாயிற்று.
ஸ்ரீ வைகுந்த நாதன் இத்தை பிராப்யம் என்று அன்றோ உகந்து நித்ய வாசம் செய்கிறான் –
நித்திய வசந்தமான பொழிலாலே சூழப்பட்ட திருவாறன்விளையாகிற மஹா நகரத்திலே வந்து வசிக்கின்ற உபகாரன்

————-

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று
கிடந்தானைக் கேடில் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்–மூன்றாம் திருவந்தாதி -34–

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்-நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று-கிடந்தானை-
பூமி அடங்கலும் நின்று அளந்த வருத்தத்தாலேயே திரு வெஃகாவில் கண் வளர்ந்து அருளுகிறதும் –
திரு வேளுக்கையில் இருக்கிறதும் என்று நெஞ்சே அநுஸந்தி

(நீள் நகர் என்றதே திரு வெக்கா என்று ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு உள்ளம்)

திரு வேளுக்கையிலே எழுந்து அருளி இருந்து -மஹா நகரமான திரு வெஃகாவில் சாய்ந்து அருளினவனாய் –
நித்ய ஸித்தமான கல்யாண குணங்களை யுடையனாய் முன்பு ஒரு நாளிலே விரகிலே நலியப் பார்த்த கம்சனை
முடித்துப் பொகட்டுத் தன்னை நோக்கித் தந்தவனை -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

————–

வன் தாளின் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னன் ஆவான் – நாலாயி:730/1

வன் தாள் இணை வணங்கி வள நகரம்
தொழுது ஏத்த மன்னனாவான்
நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை
நெடும் கானம் படர போகு
வென்றாள் எம்மி ராமாவோ!
உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
நன் மகனே! உன்னை நானே—- 9-1–

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே— 10-4–

தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
குல க்ரமா கதமதாய் வருகிற படை வீட்டை சந்யசித்து -இவள் சொன்னாள் என்று போகைக்கு
பிராப்தி இல்லாமையைக் காட்டுகிறது

—————–

கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர் – நாலாயி:2332/3

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா  பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து —மூன்றாம் திருவந்தாதி–—51-

அவனே-கலங்கா  பெரு நகரம் காட்டுவான் –
பரம பதம் அவனே காட்டக் காணும் அத்தனை –
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்குக் காணப் போகாது –

————

விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடம் மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த – நாலாயி:2343/2

விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை -மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு –62-

‘ஒப்பிலியப்பன் ஸந்நிதி‘ என்கிற திருவிண்ணகர், ‘யதோக்தகாரி ஸந்நிதி‘ என்கிற திருவெஃகா
திருமலை, ஆளழகிய சிங்கர் ஸந்நிதி‘ என்கிற கச்சித் திருவேளுக்கை, திருக்குடந்தை, திருவரங்கம் பெரியகோவில்,
திருக்கோட்டியூர் ஆகிய இத்திருப்பதிகளெல்லாம் எம்பெருமான் தங்குமிடங்கள் என்று
சில திருப்பதிகளைப் பேசி அநுபவித்தாராயிற்று.

ஈற்றடியில் ‘தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு‘ என்றருளிச் செய்த்தன் கருத்து –
மஹாபலி பக்கல் யாசகனாகப் போகும்போது எவ்வளவு ஸௌலப்யமும் ஸௌசீல்யமும் தோன்றிற்றோ
அவ்வளவு சீலம் இத்திருப்பதிகளிலும் தோன்றும்படி யிருக்கிறானென்பதாம்.

தாழ்வு – தாழ்ச்சிதோற்ற இருக்குமிடமென்கை.

——————

பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர் – நாலாயி:2721/3

பொன்னகரம் புக்கு –
அதில் ஸ்லாக்கியமான தேச வாசமே அமையும் என்னும் படி
இருக்கிற விடத்தே போய்ப் புக்கு –

அமரர் போற்றி செய்யப் –
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள -என்னுமா போலே அங்குள்ள தேவர்கள்
அர்த்த பரராய் சம்சாரத்திலே இருந்து
இக்காம புருஷார்த்தத்தை ஆதரித்து
அதுக்கீடாக தன்னை ஒருத்து
சாதனா அனுஷ்டானம் பண்ணி வருவான் ஒரு மகாத்மா உண்டாவதே -என்று கொண்டாட –

பொங்கொளி சேர்-
காலம் செல்லச் செல்ல ஒளி மழுங்குகை  அன்றிக்கே
புண்ய  பலம் ஆகையாலே
மிக்கு வாரா நின்றுள்ள ஒளி சேர்ந்து இருப்பதாய் –

————

பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு – நாலாயி:2739/2

பொன்னகரம்-
பொன்னுலகுக்கு ஒக்கும் காணும் திரு வயோத்யை-
அதுக்கு காரணம் ராம சம்ச்லேஷ ஏக ரசராய் இருக்கை-
அபி வ்ருஷா பரிம்லா நாஸ் சபுஷ் பாங்குர கோரகா-அயோத்யா -59-9-என்கிறபடியே
ஸ்தாவரங்களும் உட்பட    ராம குணைக தாரகமாய் இ றே இருப்பது –

பின்னே புலம்ப-
பிரியில் தரியாதே பின்னே தொடர்ந்து கூப்பிட
சுற்றம் எல்லாம் பின் தொடர -பெருமாள் திரு மொழி -8-6-

பொன்னகரம்-
பொன்னுலகுக்கு ஒக்கும் காணும் திரு வயோத்யை-
அதுக்கு காரணம் ராம சம்ச்லேஷ ஏக ரசராய் இருக்கை-
அபி வ்ருஷா பரிம்லா நாஸ் சபுஷ் பாங்குர கோரகா-அயோத்யா -59-9-என்கிறபடியே
ஸ்தாவரங்களும் உட்பட    ராம குணைக தாரகமாய் இ றே இருப்பது –

பின்னே புலம்ப-
பிரியில் தரியாதே பின்னே தொடர்ந்து கூப்பிட
சுற்றம் எல்லாம் பின் தொடர -பெருமாள் திரு மொழி -8-6-

————–

நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும் – நாலாயி:2746/2

நன்னகரம் புக்கு-
உங்களைப் போல் அன்றியே மடல் எடுப்பாரைக் கொண்டாடும் ஊர் –

நயந்து இனிது வாழ்ந்ததுவும் –
கொண்டாடி-நித்ய சம்ச்லேஷம் பண்ணி-

தனது நன்னகரம் -புக்கு-
தன்னுடைய நல்ல நகரம்-இவ் ஊருக்கு ப்ரத்யா சத்தியை யுடைய ஊர் அது –
மடல் எடுப்பாரை விலக்குவாரும் இன்றிக்கே-மடல் எடுத்து தொடர்ந்து வருவார் திரள் கண்டு உகக்கும் ஊர் –

————–

பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும் – நாலாயி:2747/1

————-

பூம் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும் – நாலாயி:2158/2

வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின்  நீள் கோவல் பொன்னகரும் நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமா மிடர் ——முதல் திருவந்தாதி —77-

இவர்களுக்கு உகந்து அருளின நிலங்கள் எல்லாம் ஒரு போகியாய் இருக்கிறபடி (இங்குள்ள இருந்த திவ்ய தேசமாகச் சொல்லாமல் -ஸ்ரீ வைகுண்டமும் இவையும் ஒரே போகி )
பொன்னகர் –தானே வந்து நோக்கின இடம் –

(என்றால் கெடும் -இந்த திவ்ய தேச வாசம் கூட வேண்டா -அவன் நம்மை அடையவே இங்கு நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் கோர மா தவம் செய்கிறான்
என்று அனுசந்தித்தாலே போதும்
இடர் என்பது எல்லாமே கெடும் என்கிறார்
நாமே சூழ்த்துக் கொண்ட ஸம்ஸாரிக துக்கங்கள் போன வழி தெரியாதபடி தாமே விட்டு ஓடிப் போகும் என்கிறார் -)

———————

தான நகரும் தன தாய பதியே – நாலாயி:3733/4

————

தெண் திரை புனல் சூழ் திருவிண்ணகர் நல் நகரே – நாலாயி:3474/4

——-

கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து நானும் – நாலாயி:739/3

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும்
சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட
கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன்
மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–

வளம் நகரை–(உன் பட்டாபிஷேகத்தின் பொருட்டு) அலங்கரிக்கப் பட்டிருக்கிற இந்நகரத்தை

———–

நண்ணு திருக் கடித்தான நகரே – நாலாயி:3732/4

----------
கங்கையின் கரை மேல் கைதொழ நின்ற கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:391/4
கலந்து இழி புனலால் புகர் படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:392/4
கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கை கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:393/4
சுமை உடை பெருமை கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:394/4
கழுவிடும் பெருமை கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:395/4
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:396/4
கற்பக மலரும் கலந்து இழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:397/4
கரை புரை வேள்வி புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:398/4
கடலினை கலங்க கடுத்து இழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:399/4
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:400/4

கடி நகர்–சிறந்த நகரமானது (எதுவென்னில்,கண்டம் என்னும் கடி நகரே
கண்டம் என்னும் கடிநகர்-வாசகத்தாலே-கடு வினை களைந்திட கிற்கும்-என்று அந்வயம் –
கங்கையில் திரு மால் கழல் இணைக் கீழே குளித்து இருந்த கணக்காமே
கங்கையில் குளித்து -திரு மால் கழல் இணைக் கீழே இருந்த கணக்காமே

1-தேசாந்தர
2-த்வீபாந்தரங்களிலே இருந்ததார்க்கும்
3-உபரிதன பாதாள லோகங்களில் இருந்ததார்க்கும்
4-நித்ய விபூதியில் இருந்து தங்கிய நா யுடையார்க்கும்
5-சேவடி செவ்வி திருக்காப்பு -என்ற இவர் தம்மைப் போலே -இவர் அபிமானத்திலே ஒதுங்க வல்லாருக்கும்
அவன் திருவடிகளின் கீழே இருந்து மங்களா ஸாஸனம் பண்ணின இவர் நேர் ப்ரயோஜனத்தில் ஒக்கும் –

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஒவ்தார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் — ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

May 28, 2022

நம் ராமானுஜ தரிசனத்தில் ப்ரஹ்மம் ச குணன் -ப்ரஹ்மம் நித்யம் அநந்தன் -விபு -தேச கால வஸ்து பரிச்சேத ராஹித்யன்
ஸகல வாஸ்து அந்தராத்மா -ஸர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி ஸர்வ -ஸ்ரீ மத் பகவத் கீதா
அவனது கல்யாண குணங்களும் அநந்தம்
நாந்தம் குணா நாம் கச்சந்தி தேநா நந்தோயம் உச்யதே -ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம்
யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித்
ஸ்வ பாவிகீ ஞான பல க்ரியா
ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப
ந ஹி தஸ்ய குணா ஸர்வே ஸர்வை முனி கணைரபி வக்தும் சக்யா வியுக்தஸ்ய சத்வாத்யை அகிலை குனை
வர்ஷாயுதை யஸ்ய குணா ந சக்யா
சதே குணா நாம் அயுதைகதேசம் என்று
ஸ்ம்ருதிகளும் பரமாத்வாய் ஸ்வா பாவிக அனவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண விசிஷ்டானாயே கூறுகின்றன

விரோதி அதிகரண நியாய உபக்ரம அதிகரண நியாயங்களைக் கொண்டு ச குண வாக்யமே பிரபலம் என்று ஸ்தாபித்துள்ளார் ஸ்ரீ பாஷ்யகாரர் –
ச குணம் -கல்யாண குண விசிஷ்டம்
நிர்குண -அபகுணம் இன்மை
இரண்டுக்கும் விரோதம் இல்லையே
ஆக இப்படி
கல்யாணை அஸ்ய யோக தத் இதர விரஹ அப்யேக வாக்ய ஸ்ருதவ் ச -என்று விஷய விபாகம் செய்து
ப்ரஹ்மம் ஸமஸ்த கல்யாண குண விசிஷ்டம் என்று ஸ்தாபித்து அருளி உள்ளார் –

ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம்ஸ் யசேஷத பகவத் ஸப்த வாஸ்யாநி விநா ஹேய குணாதிபி -ஸ்ரீ விஷ்ணு புராணம்
பகவத் கல்யாண குணங்கள்
ஸத்யங்கள்
நித்யங்கள்
மங்களங்கள்
ஸ்வா பாவிகங்கள்
அநாதி சித்தங்கள்
அநந்ய ப்ரயோஜ்யங்கள்
அநவதிக அதிசயங்கள் அஸங்க்யேயங்கள் –

———–

தோஷ உபதா அவதி சம அதி சயாந சங்க்யா
நிர்லேப மங்கல குண ஓக துகா ஷட் ஏதா
ஞான ஐஸ்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ
த்வாம் ரங்கேச பாச இவ ரத்னம் அநர்க்க யந்தி –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–உத்தர சதகம்-27-

ஹே ரங்கேச

தோஷ –குற்றம் என்ன

உபதா –உபாதி என்ன

அவதி -எல்லை என்ன

சம –சத்ருச வஸ்து என்ன

அதி சயாந –மேற்பட்ட வஸ்து என்ன

சங்க்யா–எண்ணிக்கை என்ன

நிர்லேப –ஆகிய இவற்றின் சம்பந்தம் இல்லாத

மங்கல குண ஓக –கல்யாண குணங்களின் சமூகத்தை

துகா ஷட் ஏதா ஞான ஐஸ்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ–சுரக்கின்ற இந்த ஞானம் ஐஸ்வர்யம்
சக்தி வீர்யம் பலம் தேஜஸ் என்கிற ஆறு குணங்கள்

த்வாம் -தேவரீரை

பாச இவ ரத்னம் அநர்க்க யந்தி-ரத்னத்தை ஒளிகள் பெருமைப் படுத்துவது போல் பெருமைப் படுத்துகின்றன –

கணக் கறு நலத்தனன் –
உயர்வற உயர் நலம் உடையவன் –
திருக் கல்யாண குணங்களை அனுபவிக்கக் கோலி
முந்துற அவற்றுக்கு ஊற்று வாயான இந்த ஆறு குணங்களையும் அருளிச் செய்கிறார்

ஞானம்-சர்வ காலத்திலும் உண்டான சர்வ பதார்த்த சாஷாத்காரம்

பலம் -உபய விபூதியையும் அநாயேசேந வஹிக்க வல்ல மிடுக்கு

ஐஸ்வர்யம் -அனைத்தையும் தன் குடைக் கீழ் அடக்கி ஆள வல்ல நியந்த்ருத்வம்

வீர்யம் -ஜகத் தாரண நியமங்களிலே சாரீரக கிலேசம் ஒன்றும் இன்றிக்கே இருக்கை

சக்தி -எந்த பிரதிபந்தகங்களும் முட்டுக் கட்டாதபடி எடுத்த கார்யம் தலைக் கட்ட வல்ல சாமர்த்தியம்

தேஜஸ் எதிரிகள் குடல் குழம்பும்படியான மதிப்பு –
பஹு பிரயத்தன சாத்யமானவற்றை சஹகாரி நிரபேஷனாக
அல்ப ப்ரயத்னத்தாலேயே தலைக் கட்டுகை-

இவன் சம்பந்தத்தால் குணங்களுக்குப் பெருமை என்றும்

குணங்களால் இவனுக்கு பெருமை என்றும் அருளிச் செய்வார்கள் அன்றோ-

ஞானாதி ஷட் குணங்கள் அனைத்து கல்யாண குணங்களுக்கும் பீஜம் —
ரத்தினத்துக்கு தேஜஸ் போலவே கல்யாண குணங்களும் உன்னைக் காட்டித் தருமே —

ஆக இது வரை பாஹ்ய குத்ருஷ்ட்டி நிரசன பூர்வகமாக -அநு குணமாக ச உப ப்ராஹ்மண ஸ்ருதி
பிரமாணங்களைக் காட்டி அருளி

ஸ்ரீ மானான ஸ்ரீ பெரிய பெருமாளுக்கே சித் அசித் ஆத்மகமான ஜகத்தைக் குறித்து
காரணத்வத்தையும் ஈஸ்வரத்தையும் சமர்ப்பித்து

ஸ்ரீ த்வய உத்தர காண்ட ஸ்ரீ மத் சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்

இதில் காரணத்வ நிர்வாஹத்தை காட்டி அருள திரு உள்ளம் பற்றி
நார சப்தார்த்தங்கள் ஆகையால்
நிர் துஷ்டங்களாய் –
நிருபாதிகங்களாய் –
நிரவதிகங்களாய் –
நிஸ் சமாப்யதிகங்களாய்-
நிஸ் சங்க்யங்களாய்-
மங்களமாய் இருக்கிற தயாதி குணங்களுக்கு மூலங்களாய்
பகவச் சப்தார்த்தங்களாய்-பிரசித்தங்களான
ஞானாதி ஷட் குணங்களும்
ரத்னத்தைக் காந்திகள் போலே தேவரை அலங்கரிக்கிறது -என்கிறார் –

——————–

ஸங்க்யாதும் நைவ ஸக்யந்த குணா தோஷா ச ஸார்ங்கிணா -ஆனந்த்யாத் பிரதமோ ராசி அபாவாதேவ பச்சிம –
தோஷங்களையும் குணங்களையும் என்ன இயலாதே

ஈறில வண் புகழ் நாரணன்

அவற்றில் ஒன்றான ஒவ்தார்யத்தைக் காட்டிக்கொடுத்தது வானமா மலையிலே –

ஆஸ்ரிதர்களுடையாபேஷிதங்களைத் தானே இரந்து கொடுக்கையும்
தன்னிடம் பலத்தைப் பெற்றுப் போவார்களையும் உதாரர்கள் என்கையும்
பெருமவனுடைய நைச்யத்தையும் கொடுக்கப்படும் வஸ்துவினுடைய கௌரவத்தையும் பாராதே
தாய விபாக நியாயத்தாலே பிரதியுபகார நிரபேஷமாகக் கொடுக்கையும் –
நிறைய வாரி வழங்கியபின்பும் ஒன்றுமே செய்யப் பெற்றிலோமே என்று நெஞ்சாறல் பட்டு இருக்கையும்

கன்னலே அமுதே கார்முகிலே -2-3-7-
ஒரு வகையால் வந்த போக்யம் அன்று
ஸர்வ கந்த ஸர்வ ரஸ
கொள்ள மாளா இன்ப வெள்ளம்
கார்முகில் என்று தனது பேறாக சர்வத்தையும் கொடுக்கை

உபாயமாகத் தன்னையே காட்டிக்கொடுக்கும் குணம்

————

ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -163-

இப்படி பரத்வாதிகளுக்கு அசாதாரணமான ஓர் ஓர் குணங்கள்
பிரதானயேன பிரகாசிக்கும் ஸ்தலங்களை அருளிச் செய்த அநந்தரம் –
மற்றும் உண்டான குணங்களில் -ஓர் ஓன்று -பிரதான்யேன பிரகாசிக்கும் ஸ்தலங்களை
ஸ்ரீவர மங்கை முதலாக -திரு பேர் நகர் எல்லையாக -திருவாய்மொழி அடைவிலே
அருளி செய்கிறார் மேல் —

ருசி விவசர்க்குப்
பாதமே சரணம் ஆக்கும்
ஒவ்தார்யம்
வானமா மலையிலே
கொழுந்து விடும் —

(ருசி விவசர் -ருசியினால் பரவசப்பட்டவர்கள்-ஒவ்தார்யம் தொடங்கி ஸ்வாமித்வம் வரை )

அதாவது
கீழ் சொன்ன லாவண்யத்தாலே ஒருவரும் நிவர்த்திப்பிக்க ஒண்ணாதபடி பிறந்த ருசியாலே
பரவசராய்–அநந்ய கதி யானவர்களுக்கு (பாதமே ஏவகாரம்)
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-திருவாய்-5-7-10- -என்னும்படி
திரு அடிகளையே உபாயமாகக் கொடுக்கும் –
கருளப் புட்கொடி சக்கரப்படை வான நாட -என் கார் முகில் வண்ணா-திருவாய்-5-7-3–என்கிற ஒவ்தார்ய குணம்

ஸ்ரீவர மங்கலத்து அவர் கை தொழ உறை வான மா மலை –திருவாய்-5-7-6–என்று
ஸ்ரீ வர மங்கையில் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வானமா மலை பக்கலிலே –
(ஸ்ரீ வர மங்கை–திவ்ய தேச திரு நாமம்-ஸ்ரீ வானமா மலை -அங்கு எழுந்து அருளி இருக்கும் பெருமாள் திரு நாமம் -)
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே-திருவாய்-5-7-7- -என்கிறபடி
தானே வந்து இடம் கொண்டு தன்னை உபகரிக்கும் படி கொழுந்து விட்டு வளரும் என்கை–
( ஆப்பான் திரு அழுந்தூர் அரையர் -பட்டர் -ஐதிக்யம்-வந்து அருளி -தாளம் தட்டி மேலே போகாமல் -)

(உபாயம் உபேயம் ஐக்யம்-ப்ராப்யம் பிராபகம் -சதேவ சோம்ய ஏக மேவ அத்விதீயம் -பஹுஸ்யாம் ப்ரஜாயேய–
ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் -உபாதானம் நிமித்த -அபின்ன நிமித்தம் -சகல குண விசிஷ்ட ப்ரஹ்மம் ஸஹ காரி –
பாதமே -உபபதயேச் ச–பொருந்தும் -பிள்ளான் நிர்வாகம்
பத்தும் உபாயபரம் –நான்கும் பிராபகம் தானே -எது உபாயம் என்று காட்டும் பிரகரணத்தில் –
நின் பாதமே சரணாகக் காட்டி அருளினீர் -பல நீ காட்டிக் கெடுக்காமல் நெறி காட்டி விலக்காமல் -பட்டர் நிர்வாகம் –
ஆப்பான் திரு அழுந்தூர் அரையர் -சரணை-திருவடிகளை ஆறாக தந்து ஒழிந்தாய்-
நின் பாதமே -வெளியில் எடுத்து -ப்ரதிஜ்ஜை -ஆணை -இப்படி மூன்று நிர்வாகங்கள் உண்டே -)

——————————————–

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்
உனக்கொரு கைம்மாறு நான் ஓன்று இலேன் எனது ஆவியும் உனதே –திருவாய்-5-7-10- -உயிர்ப்பாசுரம்
ஆறு என்று உபாயம்
சரண் என்று உபேயம்
உபாய உபேயங்கள் இரண்டுமே உனது திருவடிகளே யாம்படி பண்ணினாய் -பிள்ளான் நிர்வாஹம்
ப்ராப்ய ப்ராபக ஐக்யம் ஸம்ப்ரதாயிகம்
இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்
எனக்கு உபாயம் உனது திருவடிகளே யாம்படி பண்ணித்தந்தாய்
ஆறு உபாயம்
சரண் என்றும் உபாயம் -எனக்கு என்று உபாயாந்தர நிஷ்டரில் காட்டில் தமக்குள்ள வேறுபாடு –
நோற்ற நோன்பிலேன் தொடங்கி உபாயாந்தர சூன்யதையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திருவாய் மொழி

————–

அர்ச்சாவதாரம் தான் ஸாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே விஷயாந்தரங்களிலே மண்டி விமுகராயப் போரும் சேதனருக்கு
வைமுக்யத்தை மாற்றி
ருசியை விளைவிக்கக் கடவதாய்
ருசி பிறந்தால் உபாயமாய்
உபாய பரிக்ரஹம் பண்ணினால் போக்யமாய் இருக்கும் -பிள்ளை லோகாச்சார்யார் -ஸ்ரீ வசன பூஷணம்

ஆழ்வாரும்
ருசி ஜனகத்வத்தை திருக்குறுங்குடியிலே அனுபவித்து
மாதுர்யமாகிற உபேயத்வத்தைத் திருக்குடந்தையிலே அனுபவிக்கப் போகிறவராய்
உபாயத்வத்தை வானமா மலையிலே அனுபவிக்கிறார் –

ஆண்டாளும் புண்ணியன் என்று அவன் உபாயத்தைக் கூறி
முகில் வண்ணன் என்று அடியாருக்குத் தன்னை உபாயமாகக் காட்டிக்கொடுக்கும் ஒவ்தார்யத்தை அருளிச் செய்கிறார் –

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்
–திருவாய்-5-7-10- -என்று முந்துற முன்னம் அருளிச் செய்து
பின்பே
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் -5-8-11-என்று அருளிச் செய்கிறார்
இத்தால் பரகத ஸ்வீ காரம் முற்பட்டது -ஸ்வ கத ஸ்வீ காரம் பிற்பட்டது என்றதாயிற்று
திருக் கமல பாதம் வந்த பின்பு அன்றோ சென்றதாம் என சிந்தனையே –
அவனுடைய ஒவ்தார்யம் முந்துற பிரவஹிக்க பின்பே இவர்கள் பற்றுகிறார்கள்
கமலபாதம் வந்து என் கண்ணனினுள் உள்ளன -முற்பாடானாய் விஷயீ கரித்து சாதனா பாவம் சொல்லி
சென்றதாம் -என்று தன் திரு உள்ளம் மேல் விழுந்த- அதிகாரி ஸ்வரூபம் சொல்லுகிறது –


நெறி நாட்டி நீக்குதியோ -பெரிய திருவந்தாதி -நெறி காட்டுகையும் நீக்குகையும் ஒன்றே –
மத்யாஜீ மாம் நமஸ்குரு -என்ன அர்ஜுனனுக்கு சோக விஷயம் ஆயிற்றே
உபாயாந்தரங்கள் உபாயங்கள் அல்லா எண்பதுக்கும் மேலே அபாயமும் ஆகுமே –
அவன் அகற்ற நினைப்பாருக்கு உபாயாந்தர அனுஷ்டானத்திலே மூட்டி அசலாக்கி
அந்தரங்கர்களுக்குத் தன் திருவடிகளையே உபாயமாகக் காட்டுகிறான்
இந்த ஒவ் கார்ய குணம் கில்லுந்து விடுவது வானமா மலையிலே –
மோக்ஷத்துக்கு ஹேதுவாக செய்யக்கூடியது ஒன்றுமே இல்லை என்னில் ஸாஸ்த்ர விஹித கர்ம க்ரியா கலாபங்கள் அனுஷ்டிப்பது
தெருள் கொள் நான்மறை வல்லார் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்
தேறு ஞானத்தர் வேத வேள்வி யறாச் சிரீ வர மங்கல நகர்
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச் சிரீ வர மங்கல நகர்
அனுஷ்டானம் சாதகம் ஆகாதே
விது கிருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்வதோ யே தேஷாம் ராஜன் ஸர்வ யஜ்ஜா ஸமாப்த்தா –
இவ்வளவு பிறந்தவன் இவற்றை விட்டால் குற்றம் வராது
இவன் தான் இவை தன்னை நேராக விட்டிலன் -கர்மம் கைங்கர்யத்தில் புகும் -முமுஷுப்படி

உதாரனான பகவானும்
உதாரரான ஆழ்வாரும்
உதாரரான நம் பூர்வர்களும்
உதாரரான நம் வானமா மலை ஸ்வாமியும்
வாழி வாழி வாழி -என்று பல்லாண்டு பாடுவதே நம் கர்தவ்யம் –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ நவதிருப்பதி / ஸ்ரீ திவ்ய தேசங்களில் ஊர் வகைகள் —

March 5, 2022

ஸ்ரீ ஆழ்வார் திருநகரி

உபய பிரதான பிரணவமான உறை கோவிலிலே
எத் தேவும் என்னும் பரே சத்வம் பொலியும்-சூரணை -161-

அவன் மேவி உறை கோவில்-திருவாய்-4-10-2 -என்று
திருக்குருகூர் அதனுள் பரன் –திருவாய்-4-10-3–என்றும் ,
திரு குருகூர் அதனுள் ஈசன் திருவாய்-4-10-4–என்றும்-

(உயர் திண் அணை ஓன்று -நான்குமே பரத்வத்பரம் –
பரத்வே பரம் -விபவாயாம் பரம் -மோக்ஷ ப்ரத பரம்–அர்ச்சாயாம் பரத்வம் -)

——-

ஸ்ரீ திரு தொலை வில்லி மங்கலம் -இரட்டை திருப்பதி

கடித கடக விகடநா பாந்தவம் அவ் ஊரிலே த்விகுணம்–சூரணை -168-
அவ்வூர் திரு நாமம் கேட்பது சிந்தையே -திருவாய்-6-5-10–என்று
தோழி யானவள் திரு துலை வில்லி மங்கலம் என்று தான் சொல்லும் போது
பெண் பிள்ளை சொன்னால் போல் இனிதாய் இராமையாலே -அவ்வூர் -என்று
சொல்லப் பட்ட தேசத்திலே -தேவ பிரானும்-அரவிந்த லோசனுமாய் –
நின்று இருந்து உறையும் இரட்டைத் திருப்பதி ஆகையாலே இரட்டித்து இருக்கும் என்கை —
விகடநா பாந்தவம் -என்றது -விகடநா கர பாந்தவம் என்றபடி —

———

திருக்கோளூர்

கை முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம்–சூரணை -169-

புகுமூரிலே சம்ருத்தம்–
அதாவது-
திண்ணம் என் இள மான் புகுமூர் திருக் கோளூரே-திருவாய்-6-7-1- -என்று
பிராப்ய ருசி பிறந்தார்க்கு பிரவேஷ்டமாய் இருக்கும் திருக் கோளூரிலே –
செல்வம் மல்கி யவன் கிடந்த திருக்கோளூர்க்கே- திருவாய்-6-7-4–என்று
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணமே தனக்கு நிரதிசய சம்பத்தாக நினைத்து வந்து கிடைக்கையாலே
சம்ருத்தம் என்கை

————

திரு தென் திருப்பேரை

சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுக்கும் சௌந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும்-சூரணை -170-

மா நகரிலே கோஷிக்கும்-
அதாவது
தென் திரு பேரெயில் மா நகரே–திருவாய்-7-3-9- -என்று
மகா நகரான தென் திரு பேரையில் –
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு -திருவாய்-7-3-4–என்கிறபடியே –
அவ் விஷயத்தை அனுபவித்த ஹர்ஷ பிரகர்ஷத்தால் அங்குள்ளோர்
பாடுகிற சாம கோஷத்தாலே தெரியும் என்கிறபடி ..

———–

ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆநந்த வ்ருத்தி நீண் நகரிலே -சூரணை-171-

நீண் நகரிலே-
அதாவது
திரு வாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே -திருவாய்-7-10-6–என்றும்
திருவாறன் விளை நீள் நகரத்து உறைகின்ற பிரான் -திருவாய்-7-10-7- என்றும்
நீள் நகரான திரு வாறன் விளையில் வ்யக்தம் என்ற படி –

—————————–

திருக்குளந்தை மாயக்கூத்தன்

சாதரரை பரிசு அழிக்கும் சேஷ்ட்டித ஆச்சர்யம் குளத்தே கொடி விடும் –சூரணை -172-
அதாவது-
பல் வளையார் முன் பரிசு அழிந்தேன் -திருவாய்-8-2-4–என்னும்படி
ஸ்த்ரீத்வ பிரகாரமான லஜ்ஜாதியை அழிக்கும்
மாயக் கூத்தன்-திருவாய்-8-2-4-என்கிற சேஷ்டித ஆச்சர்யம் –
மாடக் கொடி மதிள் தென் குளந்தை -திருவாய்-8-2-4-என்ற திருக் குளந்தையில் இதற்கு என்று
கட்டின மாடக் கொடி முகேன பிரகாசிக்கும் என்கை–

————

திருப் புளிங்குடி திரு வரகுண மங்கை ஸ்ரீ வைகுண்டம் பாக த்வரை

போக்ய பாக த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம் — சூரணை -177-
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே -திருவாய்-9-2-4–என்கிற சந்தைக்கு முன் சொன்ன
புளிக்குடி கிடந்தது வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று-9-2-4–என்று
கிடப்பது இருப்பது நிற்பதான –
திருப் புளிங்குடி–திரு வரகுணமங்கை –திரு வைகுந்தம் -ஆகிற திருப்பதி மூன்றிலும் தெரியும் என்கை –

——————–

மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை தென்னகரிலே நித்யம்-சூரணை -165-
திரு வல்ல வாழ் சேமம் கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே –திருவாய்-5-9-11-

விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கடநா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீர்ணம் —சூரணை -167-
நன்னகரான திரு விண்ணகரத்தில்- பல்வகையும் பரந்த-திருவாய்-6-3-1-

கடித கடக விகடநா பாந்தவம் அவ் ஊரிலே த்விகுணம்–சூரணை -168-
அவ்வூர் திரு நாமம் கேட்பது சிந்தையே -திருவாய்-6-5-10–என்று
அவ்வூர் -என்று
சொல்லப் பட்ட தேசத்திலே -தேவ பிரானும்-அரவிந்த லோசனுமாய் –
நின்று இருந்து உறையும் இரட்டைத் திருப்பதி ஆகையாலே இரட்டித்து இருக்கும் என்கை

கை முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம்–சூரணை -169-
பிராப்ய ருசி பிறந்தார்க்கு பிரவேஷ்டமாய் இருக்கும் திருக் கோளூரிலே –

சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுக்கும் சௌந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும்-சூரணை -170-
மகா நகரான தென் திரு பேரையில் –

ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆநந்த வ்ருத்தி நீண் நகரிலே -சூரணை-171-
நீண் நகரிலே-
அதாவது
திரு வாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே -திருவாய்-7-10-6–என்றும்
திருவாறன் விளை நீள் நகரத்து உறைகின்ற பிரான் -திருவாய்-7-10-7- என்றும்
நீள் நகரான திரு வாறன் விளையில் வ்யக்தம் என்ற படி –

அவகாஹித்தாரை அனந்யார்ஹமாக்கும் நாயக லஷணம் வளம் புகழு மூரிலே குட்டமிடும்-சூரணை -176-
அதாவது-
திருப் புலியூர் வளம் புகழும் -திருவாய்-8-9-3-என்று
இவர் கொண்டாடும் படியான ஐஸ் வர்யத்தை உடைய திருப் புலியூரிலே பூரணமாம் என்கை

தென்னகரிலே–திரு வல்ல வாழ்
நன்னகரிலே–திரு விண்ணகரம்
அவ்வூர் -தொலைவில்லி மங்கலம் -இரட்டைத் திருப்பதி
புகுமூரிலே–திருக்கோளூர்
மகா நகர் – தென் திரு பேரையில் –
நீண் நகரிலே-திரு வாறன் விளை –
புகழுமூர் -குட்ட நாட்டுத் திருப்புலியூர்

————————————

புண்டரீகம் -செந்தாமரையா வெண் தாமரையா சங்கை வருமே
புண்டரீக மலர் அதன் மேல் புவனா எல்லாம் படைத்தவனே -பெருமாள் -8-2-

கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும் -திருவாய் -5-10-8-
செந்தாமரையே என்பது தெளிவு

தருணவ் ரூப சம்பன்னவ் ஸூ குமாரவ் மஹா பலவ் புண்டரீக விசாலாஷவ்
புண்டரீகம் சிதாம் போஜம் இறே –
ஸம் ரக்த நயநா கோரா போல் எரி விழியாய் இருக்கை இன்றிக்கே
ஸூ ப்ரஸன்ன தவளமான கண்கள் இருந்தபடி என் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தனி ஸ்லோக வியாக்யானம்

கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப் பெரியவாய கண்கள் என்பதால்
வெண் தாமரை திருக் கண்களில் செவ்வரி இருப்பதை அறியலாம்

கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அஷீணீ
புண்டரீக தளம் அமலாய தேஷண

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ கீதா சாம்யமும் ஸ்ரீ திருவாய் மொழியின் ஏற்றமும்-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்—சூரணை-189-190-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம்

February 27, 2022

சூரணை-189-

இனி மேல் இப் பிரபந்த பிரதிபாத்ய அர்த்தங்களை விஸ்த்ரேண பிரதி பாதிப்பதாக திரு உள்ளம் பற்றி ,
அதில் பிரதமத்திலே சாஷாத்க்ருத பகவத் தத்வரான இவர் -சம்சாரிகளுக்கு உஜ்ஜீவன அர்த்தம்
உபதேசம் பண்ணின இப் பிரபந்தம் –பிரதி பாத்ய அர்த்த சாம்யத்தாலே -பகவத் ப்ரணீத –
கீதோ உபநிஷத் -சமமாகச் சொல்லப் படும் என்கிறார் -மேல் –
(மேலே ஸ்ரீ கீதா சாம்யமும் இதன் ஏற்றமும் அருளிச் செய்கிறார் -மேல் ஐந்து ஸூத்ரங்களால்
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ்வருமறையின் பொருள் அருளினான் ஸ்ரீ கீதாச்சார்யர்
அவர் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
திருக்குருகூர் ஞானப்பிரான் சந்நிதியும் பிரதானம் -)

மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை
நின்மலமாக வைத்தவர்
ஞானப் பிரானை ஞானத்து வைமின் என்ற இது
தத்வ விவேக
நித்யத்வாநித்யத்வ
நியந்த்ருத்வ
சௌலப்ய
சாம்ய
அஹங்கார இந்திரிய தோஷ பல
மன பிராதான்ய
கரண நியமன
ஸூஹ்ருதி பேத
தேவாஸூர விபாக
விபூதி யோக
விஸ்வரூப தர்சன
சாங்க பக்தி பிரபத்தி த்வை வித்யாதிகளாலே
அன்றோதிய கீதா சமம் என்னும் ..

அதாவது
மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை —
எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் –முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை–திருவாய் -1-5-2-என்றும் –
எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கர்மங்களும் செய் –திருவாய் -3-10-8- -என்றும் சொல்லுகிறபடி
சர்வ காரணமாய் –அபரிசேத்யமான சங்கல்ப ரூப ஞானத்தை உடையவனாய் –
சூழ்ந்த அதனில் பெரிய சுடர் ஞான இன்பம் –திருவாய் -10-10-10-–என்கிறபடியே
பிரகிருதி புருஷ தத்வங்கள் இரண்டும் தன்னுள்ளே ஆகும் படி வியாபித்து –
தான் அபரிசேத்யமாய் – உஜ்ஜ்வலமாய் -ஞான ஆனந்த லஷணமாய் இருக்கிற –
ஸ்வரூபத்தை உடைய சர்வேஸ்வரனை –

நின்மலமாக வைத்தவர் –
எனது ஆவி உள்ளே நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து -திருவாய் -4-7-7-என்று
பரிபூர்ண ஞான ஸ்வரூபனான உன்னை என் நெஞ்சுக்குள்ளே விசத தமாக அனுபவித்து –
என்னும் படி சாஷாத் கரித்த இவ் ஆழ்வார் –.

ஞானப் பிரானை ஞானத்து வைம்மின் என்ற இது —
இரும் கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா வர்க்கும்
எரி திரை வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த –ஞானப் பிரானை
அல்லால் இல்லை நான் கண்ட நல்லது -திருவிருத்தம் -99-என்று
பிரளய ஆர்ணவ மக்னையான பூமியை -மகா வராஹமாக -உத்தரித்த -ஞான சக்திகளையும் –
ஸ்வாமித்வ பிராப்தியும் உடையவனாய் -ஸ்லோக த்வய முகத்தாலே சரமோ உபாயத்தை
வெளியிடுகையாலே -ஞான உபகாரனுமாய் இருப்பவனை – ஒழிய -சர்வருக்கும்
உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பது ஒன்றும் இல்லை –இது நான் அறுதி இட்ட விலஷணமான அர்த்தம் –
என்று பிரதம பிரபந்தத்தில் அருளிச் செய்த விஷயத்தை உபாயகமாகப் பற்றச் சொல்லுகிற அளவில் –

திரு குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைமின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே–திருவாய் -4-10-9-என்று
உஜ்ஜீவிக்க வேண்டி இருந்தீர்களாகில் –அவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசத்தை
உங்கள் மானஸ ஜ்ஞானத்துக்கு விஷயம் ஆக்குங்கோள் என்று சம்சாரிகளை
குறித்து உபதேசித்த இப் பிரபந்தம் –

தர்ம சம்ஸ்தாபன அர்த்தமாக அவதரித்து அருளின ஸ்ரீ கிருஷ்ணன் –
அஸ்தான ஸ்நேஹ காருண்யா தர்ம அதர்ம தியா குலம்
பார்த்தம் பிரபன்ன முத்திஸ்ய சாஸ்திர அவதரணம் க்ருதம்–ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –5–என்கிறபடியே –
அஸ்தானத்தே உண்டான – பந்து ஸ்நேஹ காருண்யங்களாலும் – ஸ்வ தர்மத்தில் அதர்ம புத்தியாலும் கலங்கி –
நயோத்ஸ்யாமி–ஸ்ரீ கீதை -2-6- -என்று யுத்த அநிவ்ருத்தனாய் –
யச்ஸ்ரேயஸ் ஸ்யான் நிச்சிதம ப்ரூஹி தன்மே சிஷ்யத் தேஹம்
சாதிமாம் த்வம் பிரபன்னம்–ஸ்ரீ கீதை –2 7-என்ற அர்ஜுனனைத் தெளிவித்து
யுத்தே பிரவர்த்தன் ஆக்குகைக்கு வியாஜமாக –
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய–திருவாய் -4-8-6- -என்கிறபடியே
லோகத்துக்கு உஜ்ஜீவன சாஸ்த்ரமாம் படி எல்லாப் பொருளும் விரித்த ஸ்ரீ கீதையில் –

1 ,2 ,3 தத்வ விவேக –
பிரதமத்தில் –தேக ஆத்மா அபிமான கார்யமான பந்து சிநேகத்தையும் –
வத பீதியையும் மாற்றுகைக்காக தத்வ ஞானத்தை உபதேசிக்கத் தொடங்கின அளவிலே –
நத்வே வாஹம் ஜாது நாசம் நத்வம் நேமே ஜநாதிபா –
நசைவ நபவிஷ்யாம சர்வே வயமத பரம் –ஸ்ரீ கீதை -2-12–என்று
சர்வேஸ்வரனான தன்னோபாதி சகல ஆத்மாக்களும் நித்யர் என்று அருளிச் செய்கிற வழியிலே –
ஜீவ பர பேதம்–ஜீவர்களுக்கு பரஸ்பர பேதம் -ஆகிய இவற்றை தர்சிப்பித்து –

தேஹி நோஸ்மின் யதா தேக கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹாந்தர ப்ராப்தி தீரஸ் தத்ர நமுஹ்யதி -2-13-– இத்யாதியாலே –
பிரகிருதி ஆத்மா விவேகத்தையும் சொல்லுகையாலே தத்வங்களினுடைய விவேகத்தையும் —

4 -நித்யத்வ அநித்யத்வ —
அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாஸ் சரீரிண
அநாசின அப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத -2-18-என்றும்
நஜாயதே ம்ரியதேவா கதாசித் நாயம் பூத்வா பவிதா வாநபூயஸ்
அஜோ நித்யஸ் சாஸ்வதோயம் புராணோ நஹன்யதே ஹன்யமானே சரீரே –2-20 -என்றும் ,
வாசாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாயா நவாணி க்ருஹணாதி நரோபராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணான் யன்யாமி சம்யாதி நவாணி தேஹி –2-22-இத்யாதிகளாலே
ஆத்ம நித்யத்வ தேக அநித்யங்களையும்-

5 -நியந்த்ருத்வ –
பூமிராபோ நலோ வாயு கம்மனோ புத்தி ரேவச –
அஹங்கார இதீயம் மே பின்னா பிரகிருதி ரஷ்டதா–7-4-
அபரே யமித ஸ்த்வன்யாம் பிரகிருதி வித்தி மே பராம் –
ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் -7-5-என்கிற படியே
சேதன அசேதன சரீரியாய் –
சர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதி ஜ்ஞாந மபோஹநஞ்ச -15-15-என்றும் –
ஈச்வரஸ் சர்வ பூதானாம் ஹ்ருத்தேசே ர்ஜூன திஷ்டதி
ப்ராமயன் சர்வ பூதானி யந்த்ராரூடானி மாயயா-18-61- -என்றும்
சொல்லுகிறபடி சர்வ ஜன ஹ்ருதிஸ்த்தனாய் -நின்று -சர்வ பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும்
பண்ணுவிக்கை யாகிற ஈஸ்வரனுடைய நியந்தருத்வத்தையும் —

6 -சௌலப்ய –
தஸ்யாஹம் ஸூலப பார்த்த நித்ய யுக்தஸ்ய யோகின-8-11- –என்றும்
பரித்ராணாய சாதூனாம் ,விநாசாய துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே-4-8- -என்றும்
பக்திமான்கள் நிமித்தவாகவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான அவன் சௌலப்யத்வத்தையும் ..

7 -சாம்ய –
சமோஹம் சர்வ பூதேஷு நமே த்வேஷ் யோஸ்தி நப்ரிய–9 -29-என்று
அவனுடைய ஆஸ்ரத்யநீயத்வே சர்வ சாம்யத்தையும்

8 -அஹங்கார தோஷ –
அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே-3-27 -என்று அஹங்கார தோஷத்தையும் –

9 -இந்திரிய பல–
யததோஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித
இந்திரியாணி ப்ரமாதீனி ஹரந்தி பிரசபம் மன -2-60-என்று
இந்திரிய பிராபல்யத்தையும்-

10 -மன ப்ராதன்ய –
சஞ்சலம் ஹி மன க்ருஷ்ண பிரமாதி பலவத் த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோ ரிவ ஸூ துஷ்கரம்-6-34-என்றும் –
அசம்சயம் மஹாபாஹோ மனோ துர் நிக்ரஹம் சலம்
அப்யாசேனது கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே-6-35- -என்றும்
மற்ற இந்திரியங்களில் வைத்துக் கொண்டு மனசின் உடைய பிரதான்யத்தையும் –

11 -கரண நியமன –
தானி சர்வாணி சம்யம்ய யுக்த ஆசீத மத்பர
வசே ஹி யச்யேந்த்ரியாணி தஸ்ய பிரஜ்ஞா ப்ரதிஷ்டிதா -2-61- -என்றும் –
சர்வத்வாராணி சம்யம்ய மனோ ஹ்ருதி நிருத்த்யச – 8-12- என்றும்
கரண நியமனத்தையும் —

12 -ஸூஹ்ருதி பேத –
சதுர்விதா பஜந்தே மாம் ஜனாஸ் ஸூக்ருதி நோர்ஜுன
ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூராரர்தாத்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப-7-16- -என்று
ஸூஹ்ருதிகளுடைய பேதத்தையும் –

13 -தேவாசுர விபாக –
த்வௌ பூத சர்கவ் லோகேஸ்மின் தைவ ஆஸூர ஏவச-16-6-என்றும்
தைவீ சம்பத் விமோஷாய நிபாந்தயா ஸூரி மதா 16-4–என்று
தேவாசுர விபாகத்தையும்

14 -விபூதி யோக –
ஹந்ததே கத யிஷ்யாமி விபூதி ராத மநஸ் ஸூப பிராதான்யதஸ் குரு ஸ்ரேஷ்ட
நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே –10-9-என்றும்
ஆதித்யா நாமஹம் விஷ்ணு ஜ்யோதிஷாம்
ரவிரம்சுமான்-10-21- -இத்யாதியால் விபூதி யோகத்தையும் –

15 -விஸ்வரூப தர்சன –
பஸ்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹ சர்வாம் ஸ்ததா பூத விசேஷ சங்கான்
ப்ரஹ்மாணம் ஈசம் கமலா சனஸ்தம் ருஷீம்ஸ் ச சர்வான் உரகாம்ச தீப்தான் 11-15-இத்யாதியாலே
விஸ்வரூப தர்சனத்தையும் –

16 -சாங்க பக்தி –
மன்மனா பவ மத் பக்தோ மத் யாஜி மாம் நமஸ்குரு
மாமே வைஷ்யசி யுக்த்வைவ மாத்மானம் மத்பராயணா -9-24–என்று
அங்க சஹிதையான பக்தியையும்-
(உபாய – சாதன -உபாசனை -பக்தி இது–என் விஷயமாக ஆறு தடவை சொல்கிறான் -)

17 -18 -பிரபத்தி த்வை இத்யாதி –
தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்தயா
மாமே வயே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -7-14-என்றும்
தமேவ சரணம் கச்ச சர்வ பாவேன பாரத–18-62- -என்று
அங்கத்வேனவும்
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூ ச -18-66- –
ஸ்வதந்த்ரவேனும் –
இரண்டு படியாகவும் பிரபத்து உபதேசம் பண்ணினால் போலேயும்-

(ரஹஸ்ய த்ரயத்தில் தான் ஸ்வ தந்த்ர பிரபத்தி -கீதா பாஷ்யம் வேதாந்த அர்த்தம் சொல்ல வந்ததால் –
அங்க பிரபத்தி தான் இரண்டுமே )

இவரும்
1-2 -3–ஜீவ பர பேதமும்/ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் –
பிரகிருதி -ஆத்மா விவேகம்-ஆகிற தத்வ விவேகத்தையும் —
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -8-8-2-என்கிற இடத்தில் சப்தமாகவும் -ஆர்த்தமாகவும்
ஜீவ பர பேதமும்,ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதமும் ,
( அடியேன் உத்தம புருஷன் இதனால் ஜீவ பரஸ்பர பேதம் -அடிமைத்தனம் அறிந்த அறியாத என்றும் பேதமும் உண்டே )
சென்று சென்று பரம் பரமாய்-8-8-5- -என்று
ஆத்மாவுக்கு தேக விலஷணத்தைச் சொல்லுகையாலே பிரகிருதி -ஆத்மா விவேகம்
ஆகிற தத்வ விவேகத்தையும் —

4 — நித்யத்வ -அநித்யத்வங்களையும்
மின்னின் நிலையிலே மன் உயிர் ஆக்கைகள்-1-2-2- -என்றும் –
உள்ளதும் இல்லதும் -1-2-8–என்றும்
சித் அசித் தத்வங்களின் நித்யத்வ -அநித்யத்வங்களையும்-

5–நியந்தருத்வத்தையும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து-1-1-7- -என்றும் –
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்து -1-1-19–என்றும்
சேதன அசேதன சரீரியாய்
நின்றனர்-1-1-6- -இத்யாதிப் படியே
அவற்றின் சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ஸ்வ ஆதீனம் ஆகும் படி இருக்கிறவனுடைய
நியந்தருத்வத்தையும்-

6 -அவனுடைய சௌலப்யத்தையும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–என்றும் –
பல பிறப்பாய் எளிவரும் இயல்வினன் -1-3-2- -என்றும்
ஆசா லேசம் உடையாரை பற்றவும் அவதார பிரயுக்தமாகவும் உண்டான
அவனுடைய சௌலப்யத்தையும்-

7 -சாம்யத்தையும்
பற்றிலன் ஈசன் முற்றவும் நின்றனன் –1-2-6–என்று
அவனுடைய ஆஸ்ரணியத்வே சாம்யத்தையும்-
(போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும் மாற்றே மாற்றல் இலையே நினக்கு
மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் வேற்றுமை இன்றது போற்றுநர்ப் பெறினே–பரிபாடல் -4-51/54-)

8 -அஹங்கார தோஷத்தையும்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -1-2-3–என்று
சம்சார ஹேது அதுவேயாக சொல்லுகையாலே -அஹங்கார தோஷத்தையும்-

9 -இந்திரிய பலத்தையும்
விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம் புலன்-7-1-6- -என்று
இந்திரிய பலத்தையும்-

10 -மனோ பிரதான்யத்தையும்
மனத்தை வலித்து -5-1-4-என்று
மனோ நியமத்தின் சொல்லுகையாலே மனோ பிரதான்யத்தையும்-

11 -கரண நியமனத்தையும்
உள்ளம் உரை செயல் உள்ள விம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து -1-2-8–என்று
கரண நியமனத்தையும்-( மத் பர அவன் இறை உள்ளில் ஒடுங்கு இவர் )

12 -ஸூஹ்ருதி பேதத்தையும் –
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்-4-1-1– -என்கையாலே
ஆர்த்தனான பிரஷ்டை ஐஸ்வர்ய காமன்
இறுகல் இறப்பு-4-1-10– என்னும் -என்கையாலே
ஜிஜ்ஞாசுவான கேவலன் –
குணம் கொள் நிறை புகழ் மன்னர் -4-1-8–இத்யாதியாலே
அர்த்தார்த்தியான அபூர்வ ஐஸ்வர்ய காமன்
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மின்-4-1-1- -என்கையாலே
ஜ்ஞாநியாகிற பகவத் சரணார்த்தி -என்கிற ஸூஹ்ருதி பேதத்தையும் –

13 -தேவ அசுர விபாகத்தையும்
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் –5-2-5–என்றும் ,
நண்ணா அசுரர் –நல்ல அமரர் -10-7-5–என்று
தேவ அசுர விபாகத்தையும்-

14 -விபூதி யோகத்தையும்
புகழு நல் ஒருவன் -3-4-1–என்றும் –
நல் குரவும்-6-3-1- -என்றும் –
மாயா வாமனன்-7-8-1- -என்றும் –
இவைகளில் விபூதி யோகத்தையும் –

15 -விஸ்வரூப தர்சனத்தையும் –
நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனாய் -6-9-1–என்று
விஸ்வரூப தர்சனத்தையும் –

16 -சாங்க பக்தியையும்
வணக்குடை தவ நெறி வழி நின்று புற நெறிகளை கட்டு உணக்குமின் பசையற-1-3-5-என்றும் –
மேவித் தொழுது உய்மினீர்கள் வேதப் புனித விருக்கை நாவில் கொண்டு அச்சுதன்
தன்னை ஞான விதி பிழையாமை-5-2-9-என்றும் –
மாலை நண்ணி –காலை மாலை –கமல மலர் இட்டு-தொழுது எழுமினோ -9-10-1–என்றும் -சாங்க பக்தியையும் –

17 –18 –இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே
அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து -1-3-5–என்று
அவன் அருளி செய்த பிரபத்தி ரூப ஞானத்தை சகாயமாக கொண்டு அத்தை அறிந்து என்கையாலே –
பக்தி அங்கத் வேனவும் –
மற்று ஓன்று இல்லை-9-1-7–என்றும் –
சரணமாகும் -9-10-5-என்கிற வற்றால்
ஸ்வதந்திர வேனேவும் –
இரண்டு வகையான பிரபத்தியும் உபதேசிக்கையாலே-

ஏதத் பிரதி பாத்யர்த்த சாம்யத்தைக் கொண்டு
மாயோன் அன்று ஓதிய வாக்கு–நான்முகன் –71 -என்கிற
ஸ்ரீ கீதை உடன் ஒக்க சொல்லப் படும் என்கை ..

பிரபத்தி த்வை இத்யாதிகளாலே -என்கிற இடத்தில்-ஆதி -சப்தத்தாலே –
19-அவதார ரஹச்ய வைபவம்
ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி சோர்ஜுனா–4-9-என்றார் போலே
இவை பத்தும் வல்லார் அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறை-1-3-11- -என்று
சொன்ன அவதார ரஹச்ய வைபவம் –

20-ஸ்வ ஆராதன்-
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி –
ததஹம் பக்த்வுபஹ்ருத மஸ்நாமி பிரயதாத்மன -9-26– என்றார் போலே –
பிரிவகை இன்றி நன்னீர் தூயப் புரிவதுவும் புகை பூ-1-6-1–என்று சொன்ன
அவன் ஸ்வ ஆராதத்தை முதலாக கீழ் அனுக்தங்களையும் –

21-கர்ம யோகம் தொடங்கி ஆச்சார்ய அபிமானம் பர்யந்தம் உபதேசம்
தேக ஆத்மா அபிமானிகளை க்ரமத்திலே பிராப்ய சாதனங்களின் எல்லையில் மூட்டுகையும் –
சாத்யோ உபாயங்களில் பரந்து சித்தோ உபாயத்தை மறைத்து உபதேசிக்கும் இடத்தில்
வைபவம் தோற்ற வெளி இடுகையுமான வற்றையும் நினைக்கிறது –

———————————-

சூரணை -190-

ஆக ஸ்ரீ கீதையோடு திரு வாய் மொழிக்கு உண்டான சாம்யம் சொல்லிற்று கீழ் .
அதில் இதுக்கு உண்டான ஆதிக்யத்தை பல ஹேதுக்களாலும் சொல்கிறது மேல் …
பிரதமம் வக்த்ரு வைலஷண்யத்தால் வந்த ஏற்றம் சொல்கிறது இதில் ..
(பிரபந்த உதய ஹேது வைலக்ஷண்யம் அடுத்ததில் -191-
உபக்ரம உபஸம்ஹார ப்ரக்ரியை வைலக்ஷண்யம் -192-
ப்ரதிபாத்ய அர்த்த வைலக்ஷண்யம் -193 —-கீழே-189- ப்ரதிபாத்ய அர்த்த சாம்யம் பார்த்தோம்
ப்ராமாண்ய உதகர்ஷ வைலக்ஷண்யம் -194- )

அது தத்வ உபதேசம்
இது தத்வ தர்சி வசனம்-

அதாவது
அந்த ஸ்ரீ கீதை பிரபந்தம் –
தத்வம் ஜிஜ்ஞா சமா நாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை
தத்வமேகோ மஹாயோகீ ஹரிர் நாராயண பர –பாரதம் -சாந்தி பர்வம் -347-83-என்கிறபடியே –
தத்வ பூதனான சர்வேஸ்வரன் தானே உபதேசித்தது ..(ஞானம் இச்சா ஜிஜ்ஞாஸூ )

இப் பிரபந்தம் –
தத் வித்தி ப்ரனிபாதேன பரி பிரச் நேன சேவையா
உபதேஷ்யந்தி தே ஞானம் ஞானிநஸ் தத்வ தர்சின –4-34-என்று
ஜ்ஞான உபதேசத்துக்கு ஆப்த தமராக அவன் தான் அருளிச் செய்த
தத்வ தர்சிகளில் தலைவரான ஆழ்வார் வசனம் என்கை ..

இத்தால் சொல்லிற்று ஆய்த்து ..
அஹம் க்ருதஸ்னஸ்ய ஜகத பிரபவ பிரளயஸ் ததா
மத்த பரதரம் நாந்யத் கிஞ்சி தஸ்தி தனஞ்சய –7-6-என்றும்
மா மேகம் சரணம் வ்ரஜ –18-66-என்றும்
இப்படி ஸ்வ வைபவத்தை ஸ்யமேவ அருளிச் செய்கையாலே ஸ்வ பிரசம்சை போலே
இருக்கையாலே -அது மந்த மதிகளுக்கு விஸ்வசநீயம் ஆகாது ..
(ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பி ஸ்ரீ வைஷ்ணவ நம்பியான ஐதிக்யம் )

சுத்த சத்வ ஜ்ஞானரான இவர்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -2-2-1-என்றும் –
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -5-2-7–என்றும் –
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்மினோ -9-1-10–என்று
இப்படி மத்யஸ்தமாக நின்று தத் வைபவத்தை உபதேசிக்கையாலே ,
இது மந்த மதிகளுக்கும் விஸ்வ நீயமாய் இருக்கும் என்கிற ஆதிக்யம் –

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழியும் அர்த்த பஞ்சகமும் —

December 19, 2020

ஸ்ரீயப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள்.
இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்ய ப்ரபந்தங்கள்.
இதன் ஏற்றத்தை பரமாசார்யரான ஸ்ரீ நம்பிள்ளை ஈட்டிலே
“ஆழ்வாருக்குப் பின்பு நூறாயிரம் கவிகள் போறும் உண்டாய்த்து. அவர்கள் கவிகளோடு கடலோசையோடு வாசியற
அவற்றை விட்டு இவற்றைப் பற்றி துவளுக்கைக்கு அடி, இவருடைய பக்தி அபிநிவேஶம் வழிந்து புறப்பட்ட சொல் ஆகையிறே!”
என்று கொண்டாடியருளுகிறார்.

ஸ்ரீ கம்பர் தம்முடைய ஸ்ரீ சடகோபர் அந்தாதியில் குறிக்கும் பொழுது –
அந்தமிலா மறையாயிரத்தாழ்ந்தவரும் பொருளைச்
செந்தமிழாகத் திருத்திலனேல் நிலத் தேவர்களுந்
தந்தம் விழாவும் அழகும் என்னாம்? (சடகோபர் அந்தாதி – 14)
[அழிவில்லாதனவும் அநேக ஆயிரம் சாகைகளாக உள்ளனவுமான வேதங்களின் சாரார்த்தத்தை
தமிழ்த் திவ்ய ப்ரபந்தங்களாகச் சீர்திருத்தி அருளிச் செய்யாதிருந்தாரானால் அந்தணர்களும்
அவர்கள் கொண்டாடும் உத்ஸவங்களும் எங்ஙனம் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயும் யாதாய் முடியும்] என்று குறித்தருளுகிறார்.

ஸ்ரீ ஆளவந்தார் எழுந்தருளியிருந்த காலத்தில் இவ்வாழ்வாரின் திருவாய்மொழி அனுபவத்திற்குத் தடையாக எழுந்தருளினார்
என்று கோஷ்டி கலைக்கும் பெருமாள் வந்தார் என்று செல்வர் புறப்பாடினை நிறுத்திக் கொண்டார்கள் என்றால் –
அதன் மூலம் திருவாய்மொழியின் ஏற்றம் நன்கு விளங்கும்.

“வேத சதுஷ்டய அங்கோபாங்கங்கள் பதினாலும் போலே இந்நாலுக்கும் இருந்தமிழ் நூற்புலவர் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன்மாலைகளும்” (43) என்னும் ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகை கொண்டு உணரத்தக்கது.

இவருடைய அருளிச் செயலான திருவாய்மொழிக்கு, கல்பந்தோறும் சதுர்முக ப்ரஹ்மாவிற்கு வேதத்தினைக் கொடுத்தவனான
ஸ்ரீரங்கநாதன் வேத ஸாம்யத்தைப் ப்ரஸாதித்தருளினான்.
இது தன்னை ஸ்ரீ கோயில் ஒழுகிலும்,
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த கலியன் அருள்பாடு என்னும் க்ரந்தத்திலும் காணலாம்.

இதனை த்ராவிட வேத ஸாகரம் என்றார் ஸ்ரீமந் நாதமுனிகள்.
வேதத்தின் லக்ஷணங்கள் அனைத்தும் இத்திருவாய்மொழிக்கு உண்டு என்பதை வேத நூல்,
இருந்தமிழ்நூல் (45) என்னும்
சூர்ணிகையினால் காண்பித்தருளுகிறார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.
இந்த திவ்ய ப்ரபந்தத்திற்கு வேதத்தோடுள்ள ஸாம்யமானது ஆசார்ய ஹ்ருதயத்தில்
ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரால் நன்கு நிலை நாட்டப்பட்டது குறிக்கொள்ளத் தக்கது.
இதற்கு ஸ்ரீ த்ரமிடோபநிஷத் என்றே திருநாமம்.

இத்தகைய பெருமை வாய்ந்த திருவாய்மொழியின் ப்ரமேயம் (திருவாய்மொழியினால் அறிந்து கொள்வது) அர்த்த பஞ்சகம் ஆகும்.
மொழியைக் கடக்கும் பெரும் புகழையுடையவரான ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருக்குமாரரான ஸ்ரீ பராசர பட்டர்,
ஸ்ரீ திருவாய்மொழி அறிவிக்கும் பொருளானது அர்த்த பஞ்சகமே என்பதை,

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்–என்கிற தனியனினால் அருளிச் செய்கிறார்.

ஆக (1) பரமாத்ம ஸ்வரூபம் , (2) ஜீவாத்ம ஸ்வரூபம் , (3) உபாயஸ்வரூபம், (4) விரோதி ஸ்வரூபம்,
(5) புருஷார்த்த ஸ்வரூபம் ஆகிய ஐந்து ஞானமே அர்த்த பஞ்சகம் என்பதாகும்.

இது தன்னை ஹாரீத ஸ்ம்ருதியில்
ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: |
ப்ராப்துபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா ப்ராப்திவிரோதி ச ||
வதந்தி ஸகலா வேதாஸ் ஸேதிஹாஸபுராணகா: |
முநயஶ்ச மஹாத்மநோ வேதவேதார்த்தவேதிந: || [ஹாரீத ஸ்ம்ருதி 8-141]என்ற ஶ்லோகம் தெரிவிக்கிறது.

இந்த ஶ்லோகம் முமுக்ஷுப்படியில் வ்யாக்யானம் அருளிச் செய்யுமிடத்து ஸ்ரீ பெரிய ஜீயர் காண்பித்தருளுகிறார்.
அதற்கு அரும்பதம் அருளிச் செய்த ஸ்ரீ எம்பாவய்யங்கார் ஸ்வாமி
முநயஶ்ச மஹாத்மந: என்பதற்கு
மஹாத்மாக்களான முநிகள் என்பதால் – வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா என்று கீதாசார்யன் அருளிச் செய்தபடி
இங்கு ஆழ்வார்களே குறிக்கப்படுகிறார்கள் என்று காட்டியுள்ளார் என்பதும் இங்கு குறிக்கத்தக்கது.

ஸ்ரீ பாஷ்யத்திலும் இவ்வர்த்த பஞ்சகம் சொல்லுகிறது என்று கொள்ள இடமுண்டு.
முதல் இரண்டு அத்யாயங்களான ஸமந்வயம் மற்றும் அவிரோத அத்யாயாங்களாலே
எம்பெருமானே ஜகத் காரணன் என்பதை சொல்வதினால் பர ஸ்வரூபமும்,
ஆத்மாதிகரணம் முதலானவற்றில் ஜீவாத்மாவின் ஸ்வரூபமும்,
மூன்றாவது அத்யாயத்தில் முதல் பாதமான வைராக்ய பாதத்தினால் விரோதி ஸ்வரூபமும்,
அதற்கு மேல் உபாஸநம் சொல்லுவதால் உபாய ஸ்வரூபமும்,
அதற்கு மேல் புருஷார்த்தமான ப்ரஹ்ம ப்ராப்தியையும் சொல்லுவதால் அர்த்த பஞ்சகம் சொல்லியாயிற்று.

“அறிய வேண்டும் அர்த்தம் எல்லாம் இதற்குள்ளே உண்டு; அதாவது அஞ்சர்த்தம்” என்கிறார் ஸ்ரீ பிள்ளைலோகாசார்யர்.
இதனை “ஞாதவ்ய பஞ்சக ஜ்ஞானம்” என்கிறார் ஸ்ரீ ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.
அதாவது அறிந்து கொள்ள வேண்டிய அர்த்தம் அர்த்த பஞ்சகம் என்கிறார்.
ஸப்த காதையில் இதனை “அஞ்சு பொருள்” என்கிறார்.

இனி திருவாய்மொழியில் அர்த்த பஞ்சகம் அமைந்திருக்கும் படியை பார்க்கலாம்.
திருவாய்மொழி மொத்தம் 100 பதிகங்களால் ஆனது.
அதில் இவ்வர்த்தத்தை மொத்தம் 20 பதிகங்களில் விசதமாக்கி
மற்ற 80 பதிகங்களில் இது தன்னையே பரக்க அருளிச் செய்துள்ளார் ஸ்ரீ ஆழ்வார்.
இப்பொழுது முக்கியமான 20 பதிகங்கள் (ஒவ்வொரு ஜ்ஞானத்திற்கும் 5 பதிகங்கள் ) – அவற்றைப் பார்க்கலாம்.

பர ஸ்வரூபம்:
பர ஸ்வரூபம் என்றால் ஸகல கல்யாண குணநிதியாய், அகில ஹேயப்ரத்யநீகநான (தோஷங்களுக்கு எதிர்த்தட்டான)
பராத்பரனான ஸ்ரீமந் நாராயணனுடைய ஸ்வரூபம். அதனைப் ப்ரதிபாதிக்கும் (சொல்லும்) திருவாய்மொழிகள்,

உயர்வற உயர் நலம்
திண்ணன் வீடு
அணைவதரவணை
ஒன்றுந்தேவும்

“உயர்வற யுயர் நலம் உடையவன்“ என்று தொடங்கும் 1ம் பத்து முதல் திருவாய்மொழி பரத்வத்தில்
பரத்வம் சொல்லுகிறது என்பர் ஆசார்யர்கள்.
இதில் எம்பெருமான் “தம் ஈஶ்வராணாம் பரமேஶ்வரம்” (ஶ்வேதாஶ்வரோபநிஷத் ) என்கிறபடியே
பரர்களுக்கு எல்லாம் பரனாய் ஸர்வ ஸ்மாத் பரனாய் இருக்கும் தன்மையை அருளிச் செய்கிறார்.

முதல் பாசுரம் உயர்வற வுயர் நலம்
*உயர்வற வுயர் நலம் உடையவன்* என்பதினால் கல்யாண குண யோகத்தையும்,
*அயர்வறும் அமரர்கள் அதிபதி* என்பதினால் நித்ய விபூதி யோகத்தையும்,
*சுடரடி* என்பதினால் திவ்ய விக்ரஹத்தையும் அருளிச் செய்கிறார்.
திருவடியைச் சொன்னது திருமேனிக்கு உபலக்ஷணம்.

ஸர்வாதிகமான (எல்லாவற்றைக் காட்டிலும் மேலான) பரப்ரஹ்மத்திற்கு லக்ஷணம் (அஸாதாரணமான பண்பு)
கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாயும் தோஷங்களுக்கு எதிர்த்தட்டாயும் இருக்கை.
இதுவே உபயலிங்கம் எனும் அடையாளங்கள்.
இதனை அஸங்கேய (கணக்கற்ற)
அநவதிக (அவதி – எல்லை – அநவதிக – எல்லையில்லாததான) திருக்கல்யாண குணங்களை உடையவன்
என்பதை – உயர்வறவுயர்நலம் உடையவன் என்றார்.

இரண்டாம் பாசுரம் –மனனகமலமற
எல்லாவித தாழ்வுகளுக்கும் எதிர்த் தட்டாகவும் எல்லை யில்லாத திருக் குணங்களையும் உடையவனாய் இருக்கும் எம்பெருமான் –
சேதனம் எனப்படும் அறிவுள்ள சித் மற்றும் அசேதனம் எனப்படும் அறிவில்லாத அசித் ஆகிய
இரண்டு வஸ்துக்களைக் காட்டிலும் அத்யந்த விலக்ஷணன் என அவனது மேன்மையை அருளிச் செய்கிறார்

மூன்றாம் பாசுரம் இலனது நித்ய விபூதி (விபூதி என்பது ஐஶ்வர்யத்தைக் குறிக்கும்) போலே
லீலா விபூதியும் அவனுக்கு சேஷம் – அவனுக்கு உரியது என்கிறார்

நான்காம் பாசுரம் ஆய் நின்ற அவரே
இந்த லீலா விபூதியுனுடைய ஸ்வரூபம் பரமாத்மாவிற்கு அதீனம் என்கிறார். எப்படியென்னில்,
(1) ஸ்ருஷ்டியில் இதை உண்டாக்குவது பரமாத்மா தான்,
(2) வஸ்துக்கள் வஸ்துக்களாகும்படி அநு ப்ரவேஶித்ததும் அவன் தான்,
(3) இது அழியும் பொழுது ஸூக்ஷ்மமாகத் தன்னிடம் ஒடுங்கும்படி செய்வதும் அவன் தான்.

ஐந்தாம் பாசுரம் அவரவர் -இனி ஸ்திதியும் (இருப்பு) அவனது அதீனம் என்கிறார்.
அதாவது ஸர்வர்க்கும் அந்தர்யாமியாய் நின்று ரக்ஷிப்பது எம்பெருமான் என்கிறார்.

ஆறாம் பாசுரம் நின்றனர் இருந்தனர் கிடந்தனர் இங்கு ஶப்தங்கள் பன்மையாகப் படிக்கப்பட்டுள்ளன.
அதனால் எம்பெருமானைத் தவிர்ந்த அனைத்தின் ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி அவனது அதீனம் என்பது இங்கு தெளிவு.

ஏழாம் பாசுரம்
உடல் மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகுசுருதியுள் இவையுண்டசுரனே
ஏழாம் பாட்டில் ஜகத்துக்கும் ஈஶ்வரனுக்கும் உள்ள ஶரீராத்மபாவத்தை அருளிச் செய்கிறார்.
*சுடர் மிகு சுருதியுள் உளன்” என்பதினால் வேதத்தினால் சொல்லப்படும் பரம்பொருள் எம்பெருமான் என்கிறார்.
இங்கு “* சுடர்மிகு சுருதியுள் * என்கையாலே நாராயணாநுவாகாதிகளில் சொல்லுகிற பரத்வம்
லக்ஷ்மீ ஸம்பந்தம் இவையெல்லாம் அங்கீகரித்தாகிறார் *” என்னும் ஈட்டு ஸ்ரீ ஸூக்தி அனுஸந்திக்கத்தக்கது.

எட்டாம் பாசுரம் பர பரன்
பரபரன் என்பதே உயிரான பதம்.
ஸர்வ ஸம்ஹர்த்தாவாய் (உலகில் ஸம்ஹரிக்கிறவன் என்று பெயரெடுத்தவர்களையும் மஹாப்ரளயத்தில் ஸம்ஹரிக்கிறவனாய்),
ஸர்வ ஸ்ரஷ்டாவாய் (ஸர்வத்தையும் படைப்பவனாய்)
ஸர்வாந்தர்யாமியான (அனைவருக்கும் அந்தர்யாமியான),
ஸர்வேஶ்வரனே பரபரன் என்கிறார்.

பரபரன் –
பர:பராணாம் பரம: பரமாத்மாத்ம ஸம்ஸ்தித: | ரூபவர்ணாதி நிர்தேஶ விஶேஷண விவர்ஜித: || (ஸ்ரீ விஷ்ணுபுராணம் 1-2-10)
(மேலானவற்றைக் காட்டிலும் மேலானவனும் தன்னைக் காட்டிலும் உயர்ந்தவர் இல்லாதவனும்
தனக்குத்தானே ஆதாரமாய் இருப்பனுமான பரமாத்மா ரூபம் நிறம் முதலியவை, நாமம் ஆகிய ப்ராக்ருத விஶேஷணங்கள் அற்றவன்)
என்கிறபடியே ப்ரஹ்மாதிகளுக்கும் பரனாகையாலே பராத்பரன் என்றபடி.

பத்தாம் பாசுரம் கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே
* அணோரணீயாந் மஹதோ மஹீயாந் * என்று ஶ்ருதி ஓதியபடியே பர தத்த்வமானது அணுக்களிலும் அந்தர்யாமியாய்
எங்கும் பரந்துளன் என்றருளிச் செய்தார். இதனால் அவனது வ்யாப்தியை அருளிச் செய்தாராயிற்று

பதினொன்றாம் பாட்டு. வரனவில் திறல்வலி அளிபொறையாய் நின்ற பரன்
பஞ்ச பூதங்களுக்கும் அஸாதாரணமான ஶப்தாதி குணங்களுக்கு நிர்வாஹகனாய் பரனாய் நிற்பவன் ஸர்வேஶ்வரன்

இப்படிப் பரக்க எம்பெருமானின் பரத்வத்தை பேசினார் நம்மாழ்வார் “உயர்வற உயர்நலம் உடையவன்” பதிகத்தில்.
அதிலும் அவற்றைத் தான் மயர்வற மதிநலம் அருளப்பெற்றதால் நேரே அனுபவித்துப் பின்பு அவற்றைப் பேசினார்.
அதுவும் ஶ்ருதி கொண்டே இவை அனைத்தையும் அருளிச் செய்கிறார்.
இவ்வளவு அர்த்தங்களையும் சுருக்கி ஸ்ரீமத் வரவரமுனிகள் தம்முடைய திருவாய்மொழி நூற்றந்தாதியில்

உயர்வே பரன்படியை உள்ளதெல்லாம் தான் கண்டு
மயர்வேத நேர்கொண்டுரைத்து – மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு. (திரு. நூ. 1) என்றருளினார்.

உயர்வே பரன்படியை என்பதினால் பரத்வே பரத்வமும்,
உள்ளதெல்லாம் தான் கண்டு என்பதினால் மயர்வற மதிநலம் அருளப்பெற்று ஆழ்வார் அவை அனைத்தையும் கண்டதையும்,
மயர் வேத நேர் கொண்டு உரைத்து என்பதினால் ஶ்ருதி கொண்டே இவை அனைத்தையும் அருளிச் செய்ததையும்
இப் பாசுரத்தில் அருளினார் ஆயிற்று.

———–

திண்ணன் வீடு என்னும் பதிகத்திலும் ஸ்ரீமந்நாராயணனுடைய பரத்வத்தை அருளினார் ஆழ்வார்.
முதலில் உயர்வற உயர்நலம் பதிகத்தில் ஶ்ருதியைக் கொண்டு பரத்வம் சொன்னாற்போலே,
இந்தப் பதிகத்தில் இதிஹாஸ புராணங்களைக் கொண்டு அவனது பரத்வத்தைப் ப்ரதிபாதிக்கிறார் (சொல்லுகிறார்)
இந்தப் பதிகத்தில். அப்படி அருளிச்செய்தவைகளாவன

மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய் * கோபாலகோளரி ஏறன்றியே. (2-2-2)
தேவனெம்பெருமானுக் கல்லால் * பூவும் பூசனையும் தகுமே (2-2-4)
தகுங்கோலத் தாமரைக் கண்ணனெம்மான் (2-2-5)
புள்ளூர்தி கழல் பணிந்தேத்துவரே (2-2-10)
இப்பதிகந்தன்னில் ஈட்டில் சில மேற் கோள்கள் இதிஹாஸத்தில் இருந்து காட்டப்பட்டுள்ளன.

க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாமுத்பத்திரபி சாப்யய: |
க்ருஷ்ணஸயஹி க்ருதே பூதமிதம் விச்வம்சராசரம் || (மஹாபாரதம் பீஷ்ம பர்வம்)
உலகங்களுடைய உத்பத்தியும் க்ருஷ்ணன் தான்; ப்ரளயமும் க்ருஷ்ணன் தான் என்பது ப்ரஸித்தம்.
ஜங்கம ஸ்தாவரமாயிருக்கிற ஸகலமான இந்த ப்ராணி ஸமூஹமானது க்ருஷ்ண நிமித்தமாக இருக்கிறது.

யச்ச கிஞ்சிந்மயா லோகே த்ருஷ்டம் ஸ்தாவரஜங்கமம் |
தத் பச்யமஹம் ஸர்வம் தஸ்ய குக்ஷௌ மஹாத்மந: || (மஹாபாரதம் ஆரண்யம்)
உலகத்தில் சராசராத்மகமான யாதொன்று என்னால் பார்க்கப்பட்டதோ
அவை எல்லாவற்றையும் நான் ஈச்வரனுடைய வயிற்றில் பார்த்தேன்

இதனை உட்கொண்டே ஸ்ரீமத் வரவரமுனிகள்
* திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை – நண்ணி அவதாரத்தே நன்குரைத்த * என்றருளினார்.

———-

*அணைவது அரவணை மேல்* என்பது இரண்டாம் பத்து எட்டாம் திருவாய்மொழி ஆகும்.
ஈட்டில் இதன் அவதாரிகையில் பரத்வம் சொல்லுகிறது என்பதற்கு இரண்டு யோஜனைகள் காட்டப்பட்டுள்ளன.
முதலாவது “தீர்த்தன் உலகளந்த சேவடி மேல்” என்கிற 6வது பாசுரத்தில் உள்ள
* பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை” என்பது கொண்டு இங்கு பரத்வம் பேசப்படுகிறது என்பது ஒரு நிர்வாஹம்.

இனி பராஶர பட்டர் – முதல் பாசுரமான * அணைவது அரவணை மேல் * என்பதினால் எம்பெருமான்
நித்ய சூரிகள் அனுபவிப்பது போன்று மோக்ஷம் அருளக் கூடியவன் என்று கொண்டு –
அதனால் பரத்வம் சொல்லுகிறது என்று நிச்சயித்தார்.

ஆழ்வார் இப்படி மோஷ ப்ரதத்வத்தை (மோக்ஷம் கொடுக்க வல்லவனாயிருக்கை) தனியாக அருளிச் செய்ததை
அடியொற்றியே யாமுந முனியான ஆளவந்தாரும் தம்முடைய ஸ்தோத்ர ரத்னத்தில் – “த்வாதாஶ்ரிதாநாம்” என்கிற ஶ்லோகத்தில்
மோக்ஷ ப்ரதத்வத்தையும் சேர்த்து அனுபவித்தார். இப்படி பட்டர் நிர்வாஹத்தையே முக்கியமாகக் கொண்டார்கள் நம் பூர்வர்கள்.

———–

அடுத்ததாக 4ம் பத்து கடைசி தஶகம் –
* ஒன்றுந்தேவுமுலகுமுயிரும் * என்கிற பதிகத்தால் அர்ச்சையில் பரத்வம் சொல்லுகிறது.
* ஸதேவ ஸௌம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம் * – என்று ஶ்ருதி சொன்னபடியே
ஶ்ருஷ்டிக்கு முன்பு வேறு ஒருவரும் இல்லாத நிலைமையில், அனைத்தையும் தன்னுடன் ஒட்டி வைத்துக் காப்பாற்றி,
அனு ப்ரவேஶம் பண்ணியருளி அனைவரையும் படைத்ததைக் கொண்டு இங்கு அர்ச்சையில் பரத்தவத்தை ஸாதித்தருளுகிறார்

நான்முகன் தன்னோடு தேவருலகோடுயிர் படைத்தான்- ஆதிப்பிரான்
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் – புகழாதிப்பிரான்
ஈட்டில் இந்த பதிகத்தின் ப்ரவேஶத்தில் அத்புதமாக எம்பெருமானின் பரத்வம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இங்கு ராமானுஜ பதாச்சாயரான ஸ்வாமி எம்பார் வார்த்தையாக ஒன்று ஈட்டில் காட்டப்பட்டுள்ளது –
“ஸ்ரீவைஷ்ணவர்கள் தேவதாந்தரங்களை அடுப்பிடு கல்லாக பாவிப்பர்கள்”.
ஆழ்வார் இத்திருவாய்மொழி அருளிச் செய்த பின்பு, அதை உணர்ந்ததனால் எம்பெருமானின் பரத்வத்தை அறிந்து கொண்டு –
மற்றைய தேவர்கள் அடுப்பில் வைக்கும் கல் போன்று கொள்வர்கள் என்று – அதாவது
மோக்ஷம் பராத் பரனாலேயே கொடுக்க முடியும்.
எனவே மற்றவர்களால் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஆவது ஒன்றுமில்லை என்றபடி.

———–

ஜீவாத்ம ஸ்வரூபம்:

ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லும் திருவாய்மொழிகள்

பயிலுஞ் சுடரொளி (3-7)
ஏறாளும் இறையோனும் (4-8)
கண்கள் சிவந்து (8-8)
கருமாணிக்க மலைமேல் (8-9)

ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்தில் ஆசார்ய அக்ரேஸரரான ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர்
* அஹங்காரமாகிற ஆர்ப்பைத் ஆத்மாவிற்கு அழியாத பேர் அடியான் என்றிரே * என்றருளுகிறார்.
அதாவது தேஹமே ஆத்மா, மற்றும் நான் ஸ்வதந்த்ரன் என்னும் இரு வகையான அஹங்காரம், மமகாரம் என்னும் அழுக்கு –
ஆசார்ய உபதேசத்தால் நீங்கும் போது – ஆத்மா உள்ளவரை இருக்குமது தாஸத்வம் என்பதாகும்.
ஆத்மா நித்யமாகையாலே தாஸத்வமும் நித்யம் என்பது கருத்து.
அந்த தாஸத்வமும் ஹரியின் அடியார்கள் வரை செல்லும் என்பதை * உற்றதும் உன்னடியார்க்கடிமை * என்பதாக,
அடியார்களுக்கு அடியவனாய் இருக்கும் ஆத்ம ஸ்வரூபத்தை
* பயிலுஞ் சுடரொளி * திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார். இத்திருவாய்மொழியில்

எம்மையாளும் பரமர் (3-7-1)
எம்மையாளுடை நாதரே (3-7-2)
எம்மையாளுடையார்களே(3-7-3)
சன்மசன்மாந்தரம் காப்பரே (3-7-6)
எம்தொழுகுலம் தாங்களே (3-7-8)
என்றும் அருளிச்செய்து, முடிவில் * இவைபத்து அவன் தொண்டர்மேல் முடிவு * என்றது குறிக்கொள்ளத் தக்கது.
இந்தப் பதிகத்தில் உள்ள பத்து பாசுரங்களுக்கும் விஷயம் அவன் தொண்டர்கள் என்றாராயிற்று.

———–

இனி * ஏறாளும் இறையோனும் * பதிகத்தில்,
அவனது திருவுள்ளத்திற்கு வேறுபடில் ஆத்மாவும் வேண்டா என்பது தேறிய கருத்தாகும்.
இங்கு ஆத்மாத்மீயங்கள் அவனுக்கு வேண்டா எனில் எனக்கும் வேண்டா என்றருளிச் செய்கிறார்.

ஆத்மீயம் என்றால் – ஆத்மாவுடையது என்றபடி. இதனால் தேறுவது என் என்னில் –
எம்பெருமானுக்காக என்றால் தான் ஆத்மாவும் கைக்கொள்ளத் தக்கது என்பதை எதிர்மறையாக உணர்த்தியருளுகிறார் ஆழ்வார்.

இதனை அடியொற்றியே ஸ்ரீ ஆளவந்தார் தம்முடைய ஸ்தோத்ர ரத்னத்தில் * ந தேஹம் ந ப்ராணாந் *
[ஆத்மா என்று அபிமானம் கொள்ளாம்படி இருக்கும் தேஹம், ப்ராணன், தேவர்களும் ஆசைப்படும் ஸுகம்,
பிள்ளைகள், நண்பர்கள், ஆத்மா – இவையனைத்தும் உனக்கு புறம்பாகில் ஒரு க்ஷணகாலமும் ஸகிக்கமாட்டேன்.
இதைப் பொய்யாக விண்ணப்பித்தேனாகில் – உன்னிடத்தில் மது என்னும் அரக்கன் பட்டது படுகிறேன்]
என்கிற ஶ்லோகத்தில் இவ்விஷயத்தையே அருளினார்.

இது தன்னை ஸ்ரீமத் வரவரமுனிகளும்
* ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு வேறுபடில் என்னுடைமை மிக்கவுயிர் –
தேறுங்கால் என்றனக்கும் வேண்டாவெனுமாறன்றாளை * என்றருளினார். –

இதன் தேறின அர்த்தம் – “பெரிய பிராட்டியாரை தன் திருமார்பில் கொண்ட ஈசன் திருவுள்ளவுகப்புக்கு
வேறுபட்டால் உடைமையும், ஆத்மாவும் ஆராயுங்கால் எனக்கு வேண்டியதில்லை” என்பதாகும்.

————

அடுத்து *கண்கள் சிவந்து* என்னும் பதிகத்தினால்
ஆத்ம வஸ்து எம்பெருமானுக்கு சேஷம் என்றும்,
ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறாய் (தேஹாதிகளைக் காட்டிலும் வேறாய்) ஜ்ஞாநம் ஆநந்தங்கள் இரண்டையும் கொண்டிருப்பது
என்று ஆத்ம தத்வத்தினைத் தெரிவித்தருளுகிறார்.

அதாவது * அடியேனுள்ளான் உடலுள்ளான் * என்று ஆத்ம தத்த்வத்தை தெரிவித்தருளும் பொழுது
அடியேன் என்று அது பரமாத்மாவிற்கு தாஸன் என்பதை அறிவிக்கும் முகமாக அடியேன் என்ற
சப்தத்தை உபயோகப்படுத்தியருளினார்.

இது * தாஸ பூதா ஸ்வதஸ் ஸர்வே ஆத்மாஹி பரமாத்மந:
* (இயற்கையாகவே ஆத்மாவானது பரமாத்விற்கு அடிமைப்பட்டவன் ) என்பது முதலான ப்ரமாண வசனங்கள் இங்கு விவக்ஷிதம்.

* சென்று சென்று பரம்பரமாய் * என்பதினால் தேஹம், ப்ராணன், மனஸ் ஆகியவை ஒன்றுக்கொன்று மேம்பட்டதாய்
அவைகளில் காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்) ஆத்மா என்று ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறானவன் என்று தெரிவித்தருளினார்.

* நன்றாய் ஜ்ஞாநம் கடந்ததே * – ஆத்ம ஸ்வரூபமானது ஜ்ஞாநம் மற்றும் ஆநந்தம் இவை கொண்டே அறிய வேண்டியது;
நன்றாய் ஜ்ஞாநம் என்றதால் ஆநந்தமாயிருப்பதும் – ஆநந்தமென்பது அநுகூல ஜ்ஞாநமாகையாலே அதனால் ஜ்ஞாநம் சொன்னதாயிற்று.
இதனால் ஆத்மா ஜ்ஞாந ஆநந்தங்கள் உடையவன் என்பதாயிற்று.

———

ஆத்மாவானது பகவானுக்கு அடிமைப்பட்டிருக்கும் என்பது கீழேயே சொல்லப்பட்டது.
அந்த விலக்ஷணமான ஆத்ம ஸ்வரூபம் தானும் தனக்கு என்றில்லாமல் எம்பெருமானுக்கே அநந்யார்ஹ சேஷமாயிருக்கும் (
பிறர்க்கு அர்ஹமாகாமல் அவனுக்கே சேஷமாயிருக்கும்) என்பதனை *கருமாணிக்க மலை மேல் * (8-9) என்னும்
திருவாய்மொழியில் தோழிப் பேச்சாக ஆழ்வார் அருளிச் செய்கிறார்.

இது தானும் அறிதியிடுவது
* படவரவணையான் நாமமல்லால் பரவாளிவள் *,
* திருப்புலியூர் புகழன்றிமற்று – பரவாளிவள் *
*திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே –
அன்றி மற்றோருபாயம் என் இவளந்தண்டுழாய் கமழ்தல் * இவை கொண்டு .

ஸ்ரீமத் வரவரமுனிகள் இதனை –
* திரமாக அந்நியருக்காகாது அவன்றனக்கேயாகுமுயிர் அந்நிலையையோரு நெடிதா * (திரு. நூ – 79) என்றருளிச் செய்தார் –

ஸ்ரீ க்ருஷ்ண பகவான் விஷயத்தில் ஒரு கன்னிகையின் அவஸ்தையை அடைந்து – அத்விதீயமாய் விலக்ஷணமான
ஸம்ஸ்லேஷ லக்ஷணங்களைத் தோழிப் பேச்சாலே அருளிச் செய்யப் புகுகையாலே ஸ்திரமாக ப்ராப்த ஶேஷி
(ஶேஷி – கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்பவன்; ப்ராப்த ஶேஷி – ஒரு காரணமன்றிக்கே இயல்பாக அமைந்த ஶேஷி)
சேஷமாகிற ஆத்ம ஸ்வரூபம் பிறருக்கு சேஷமாகாமல் அவனுக்கே சேஷமாகும் நிலைமையை தீர்க்கமாக ஆராயுங்கோள் –
என்பது அந்தப் பாசுரத்தின் தேறின அர்த்தம்.

———-

விரோதி ஸ்வரூபம்:

விரோதியானது – கீழ்ச்சொன்னபடி பகவானுக்கே அடிமையான ஆத்ம வஸ்து அவனைக் கிட்டி வாழ்ச்சி பெறாது
தடை செய்யுமவையாம். இந்த விரோதி வர்க்கத்தைச் சொல்லும் திருவாய்மொழிகள்

வீடுமின் முற்றவும் (1-2)
சொன்னால் விரோதம் (3-9)
ஒருநாயகமாய் (4-1)
கொண்ட பெண்டிர் (9-1)

இவற்றுள் * வீடுமின் * பதிகத்தில்
எம்பெருமானைத் தவிர மற்ற விஷயங்களின் தோஷங்களை அறிவித்து அதை விட,
நாடு நலத்தால் அடைய நன்கு உரைக்கிறார் ஆழ்வார்.

மேலும் அவற்றைப் பற்றுவதற்கு அஹங்காரம் (நான் நான் என்று நினைப்பது), மமகாரம் (என்னுடையது என்று நினைப்பது)
ஆகிய இரண்டுமே ப்ரதான காரணம் ஆதலால் அவற்றை * நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து * என
அவற்றை அடியோடு விடச் சொல்கிறார் இத்திருவாய்மொழியில்.

இங்கு
* அநாத்மந்யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யா மதி: |
அவித்யா தருஸம்பூதி பீஜமேதத் த்விதா ஸ்திதம் * (6-7-11)
என்கிற ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம் நினைக்கத்தக்கது.
[தான் அல்லாத தேஹத்தில் தான் என்கிற நினைவும், தன்னுடையதல்லாத பொருள்களில் தன்னுடையது
என்கிற நினைவும் ஸம்ஸாரத்தில் அவித்யையாகிற காம்ய கர்மங்களெனும் மரம் வளர்வதற்குறுப்பான விதைகளாகும்] .

————-

இனி ஸேவை செய்வது எம்பெருமானுக்கே என்றும் –
மற்றவர்களுக்கு ஸேவை செய்வது அஸேவ்ய ஸேவையாகும்
(செய்யத் தகாததாகும்) என்பதனை * சொன்னால் விரோதமிது * என்னும் திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார்.

* என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள் * – முதலான இப்பதிகத்தில் உள்ள பாசுரங்கள் இதனைத் தெரிவிப்பன.
இப்படி அஸேவ்ய ஸேவை செய்தால் த்ருஷ்டமும் (கண்ணால் தெரியும் பலனும்),
அத்ருஷ்டமும் (ஐஹிஹ லோக பலங்களும்) கிடைக்காது –
மாறாக அநர்த்தமே ஸித்திக்கும் என்பது இப்பதிகத்தில் அறிய வேண்டியது.

இதனை * மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே இனிதாம் * என்று மாமுனிகள் அருளிச் செய்கிறார்.
அதனையும் * ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் * என்பதால் இவ்வுலகம் அனைத்தையும்
தன் ஆட்சியின் கீழ் என்னும்படி வாழ்ந்தாலும், அது நிரந்தரமில்லை –
* பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் * என்றுரைத்தார்.
இனி ஸ்வர்க்க லோகாநுபவமோ என்னில் * க்ஷீணே புண்யேமர்த்த்யலோகம் விஶந்தி *
(புண்யம் அழிந்தவாறே அங்கிருந்து விழுகிறார்கள்) என்பதை * குடிமன்னும் இன்சுவர்க்கம் எய்தி மீள்வர்கள் * என்றார்.
இது ப்ரஹ்மலோகானுபவம் வரை உபலக்ஷணம்.
இவை போல் அஸ்திரமாக இல்லாமல் இருந்தாலும்
தன்னைத் தான் அனுபவிப்பதாகிற கைவல்யம் – * இறுகலிறப்பு * என பகவதனுபவத்தைப் பார்த்தால் தோஷமாயிருக்கும்.

————–

ஆர்க்கும் ஹிதம் தன்னையே பார்க்கும் கீர்த்தியுடைய மாறன் * கொண்ட பெண்டிர் * பதிகந் தன்னில்
சரீர ஸம்பந்தத்தினால் வரும் அனைத்தும் த்யாஜ்யம் (விட வேண்டும்) என்பதை தெளிவாக உரைத்தருளினார்.
சரீர ஸம்பந்தங்கள் அனைத்தும் கர்மமடியாக வருபவை.
* கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதுமில்லை * என்கிறார் ஆழ்வார்.
நிருபாதிக (ஒரு காரணம் பற்றி இல்லாமல்) ஸம்பந்தியான ஈஶ்வரனைப் பற்றினால் அவன்
* அடியார்க்கென்னை ஆட்படுத்தும் * என்றபடி அவனது அடியவர்களுடன் சேர்த்து விடுகிறான். அதுவே ஆத்மவிற்கு ஹிதம்.

————–

உபாய ஸ்வரூபம்:இது தெரிவிக்கும் திருவாய்மொழிகள்

நோற்ற நோன்பிலேன் (5-7)
ஆராவமுதே (5-8)
மானேய் நோக்கு நல்லீர் (5-9)
பிறந்தவாறும் (5-10)

நோற்ற நோன்பிலேன்
கைமுதலில்லாமை – பேறு பெற்றுத் தருவதற்கு – வேறு உபாயங்கள் ஒன்றும் செய்யாமை.
ஶரணாகதி அநுஷ்டிக்கும் பொழுது வேறு உபாயங்கள் ஒன்றும் நம் கைகளில் இல்லை என்றும் –
நமது தீய வ்ருத்தங்களையும் சொல்லிக் கொண்டே அநுஷ்டிக்க வேணும்,
இதனை * நோற்ற நோன்பிலேன் * என்றார்.
சரி பேற்றுக்கு என்ன உபாயம் என்னில் – * ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் * என
எம்பெருமானே உபாயம் என்றபடி.
மற்றைய உபாயங்கள் ஸாத்யோபாயங்கள் (சேதனனுடைய செயலாலே ஸாதிக்க வேண்டுபவை).
எம்பெருமானோ என்னில் ஸித்தோபாயம் (ஸித்தமாக இருக்கிறான்)

———–

ஆராவமுதே

கீழே ஆகிஞ்சன்யம் அருளிச் செய்தார்.
இங்கு எம்பெருமானை விட்டால் வேறு கதியில்லை என்பது தோன்றும்படி

* களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன் *
(எனது துன்பங்களை நீ களைந்தாலும் சரி, களையாவிட்டாலும் சரி வேறு சரணமுடையேனல்லேன்)
என அநந்ய கதித்வத்தை அருளிச் செய்கிறார். ப்ரபந்நர்களுக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாக வேண்டும்
1) ஆகிஞ்சன்யம் – எம்பெருமானைத் தவிந்தவை உபாயாந்தரங்கள் எனப்படும் – கர்ம ஜ்ஞான பக்தியோகங்கள்.
இவைகளில் கை வைக்காமல் இருக்கை ஆகிஞ்சன்யம் ஆகும்.
2) அநந்ய கதித்வம் – உன் காரியமாகிற மோக்ஷம் அளிப்பதில் நீ எப்படியிருந்தாலும், என் காரியத்தில்
நான் என்னுடைய * நம் மேல் வினை கடிவான்- எப்போதும் கை கழலா நேமியான் * என்னும் நிஷ்டை (இருப்பு) குலைய மாட்டேன்.
இப்படி அநந்யகதிவம் முன்னாக * கழல்கள் அவையே சரணாக் கொண்ட குருகூர்ச் சடகோபன் * –
கண்ணபிரானுடைய திருவடிகளையே தஞ்சமாகக் கொள்ளுகை என்பதை இந்தப் பதிகத்தால் வெளியிட்டார்.

———-

மானேய் நோக்கு நல்லீர்

* நாமங்களாயிரமுடைய நம்பெருமானடி மேல் சேமங்கொள் * என்னும்படி ஆயிரம் திருநாமங்களை யுடைய
ஸர்வேச்வரன் திருடிகளிலேயே தம்முடைய க்ஷேம பாரங்களையெல்லாம் வைக்கையும்,
அவைகளின் மேல் அத்யவஸாயம் உடையவராய் இருக்கையும்.

——

பிறந்த வாறும் வளர்ந்த வாறும்

* நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று, * , எம்பெருமான் திருக்குணங்கள்
*எனதாவியை நின்றுநின்று உருக்கியுண்கின்ற*,
*என்னையுன் செய்கை நைவிக்கும்*
*வந்தென்னெஞ்சையுருக்குங்களே* என சிதிலப் பண்ணினாலும், சரணம் புகுந்தவர்களை எம்பெருமான்
கைகொள்ள வேண்டாம் என நினைத்தாலும் அப்படி உபேக்ஷிக்க விடாதே
கைகொள்ளப்பண்ணும் இயல்வினன் திருவனந்தாழ்வான்; அவர்மீது கண் வளர்ந்து அடியார்களுக்கு உபகாரகனாயிருக்கும்
எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று இடையறாத அத்யவஸாயம் கொள்ளுகை
ஆழ்வார் இத்திருவாய்மொழியில் உபதேஸிக்கும் அர்த்தம் ஆகும்.

————–

புருஷார்த்த ஸ்வரூபம்:–இதனை நிருபித்த திருவாய்மொழிகள்

எம்மாவீட்டுத் திறமும் செப்பம் (2 – 9)
ஒழிவில் காலமெல்லாம் (3 – 1)
நெடுமாற்கடிமை (8-10)
வேய்மருதோளிணை (10 – 3)

* எம்மா வீட்டுத் திறமும் * என்கிற திருவாய்மொழி அருளும் அர்த்தம் மிகவும் சீர்மையானது.
நம் பூர்வாசார்யர்கள் மிகவும் சீர்மையான அர்த்தங்களை * எம்மா வீடு * என்றே குறிப்பிடுவர்கள்.
இனி இதில் இருக்கும் அர்த்தத்தைப் பார்க்கலாம். ஆழ்வார் அனைவருக்கும் எம்பெருமான் மோஷ ப்ரதன்
(மோக்ஷத்தை அளிக்க வல்லவன்) என்று உபதேசித்ததைப் பார்த்த எம்பெருமான் –
ஆழ்வாருக்கு மோக்ஷத்தில் ஆசையுள்ளது என்று கொண்டு, ஆழ்வாருக்கு மோக்ஷத்தைப் ப்ரஸாதிக்க திருவுள்ளமானான்.
அதைப் பார்த்த ஆழ்வார் – ” எம்பெருமானே! எனக்காகக் கொடுப்பதனால் மோக்ஷமும் புருஷார்த்தம் அன்று
என்று நிர்த்தாரணம் பண்ணியருளி, எம்பெருமானே! நீ பரமபதத்தில் என்னை வைக்கவுமாம்,
அல்லது ஸம்ஸாரமாகிற மருகாந்தாரத்திலே வைக்கவுமாம் – எனக்கு ஒன்றுமில்லை.
உனக்கு திருவுள்ளமே எனக்கு வேண்டுவது ” என்று புருஷார்த்த ஸ்வரூபத்தை அருளிச் செய்தார்.
கைங்கர்யத்தில் தனக்காகப் பண்ணுவது என்பது ஸ்வார்த்தமாகும். அதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.

———-

இந்த கைங்கர்யமும் ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் செய்ய வேண்டும் என்பதை
* ஒழிவில் காலமெல்லாம் * என்ற திருவாய்மொழியினால் உண்ர்த்துகிறார்.

* சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து* (3-3-2) அதாவது –
“எம்பெருமானுடைய ஸௌசீல்ய குணத்திலே ஈடுபட்டவர்களாய் ஸ்ரீஸேநாபதியாழ்வான் தொடக்கமான
நித்தியஸூரிகள் அனைவரும் *சென்னியோங்கு தண் * திருவேங்கடமுடையானை ஸேவிக்க விரும்பி
திவ்யபுஷ்பங்களை எடுத்துக்கொண்டு இங்கே வருகிறார்கள்;
அந்தப் புஷ்பங்களைத் திருமலையப்பனுடைய பூவார் கழல்களில் யதாக்ரமமாக ஸமர்ப்பிக்க முடியாதவர்களாய்
சீல குணத்திலே உருகி நிற்கிறார்களாதலால் அவர்களது கைகளிலிருந்து புஷ்பங்கள் அவசரமாகவே சிந்துகின்றன;”
என்பதினால் உடம்பினால் செய்யும் கைங்கர்யத்தையும்,
* தெண்ணிறைச்சுனை நீர்த்திருவேங்கடத்து * (3-3-3) என்பதினால் தெளிவையும் நிறைவையுமுடைய சுனைநீர்
பொருந்திய மனஸ்ஸு இருக்கும்படியையும் அதனால் செய்யும் கைங்கர்யத்தையும்,
* ஈசன் வானவர்க்கென்பன் * (3-3-4) என்பதினால் நித்யர்களைச் சொல்லி அவர்கள் இருக்கும்படியான
* நம இத்யேவ வாதிந* என்று அவர்கள் எம்பெருமானால் போகம் அனுபவிப்பர்களாய்
அந்த போகத்தினால் வரும் ஆனந்தமும் எங்களதன்று என்பதற்காக நம: நம: என்று உரைத்துக் கொண்டிருக்கிறார்கள்
என்பதினால் வாசிகமான கைங்கர்யத்தையும் காட்டியருளினாராயிற்று,
இதனால் அனைத்து வகையான கைங்கர்யங்களையும் செய்ய வேண்டும் என்பதை அருளிச் செய்தாராயிற்று.

இதனையும் * வேங்கடத்துறைவார்க்கு நம*
(ஸ்ரீவைகுண்ட வாஸத்தை விட்டு திருமலையிலே நித்யவாஸஞ்செய்தருளுகிற பெருமானுக்கு நம:) என்பதினால்
தன் போகத்திற்காக என்னும் புத்தி நிவ்ருத்தியும்,

* சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே * (பரமஸாம்யாபத்தி ரூபமான மோஷத்தை அளிக்கும்) என்பதினால்
அக்கைங்கர்யத்தை அளிப்பதும் திருமலையாழ்வாரே என்றதாயிற்று.

இதனால் அந்த கைங்கர்யம் தானும் * வழுவிலா அடிமையாயிருக்கும் * என்பதனை அருளிச் செய்தாராயிற்று.

————

இந்த கைங்கர்யம் தானும் எம்பெருமானோடு மட்டும் இல்லாமல்,
அவனது அடியார்கள் வரை போக வேண்டும் என்பதை * நெடுமாற்க்கடிமை * (8-10) பதிகத்தால் அருளிச் செய்தார்.
இதுவே பரம புருஷார்த்தம். அதிலும் இப்பதிகந்தன்னில் அவனது
* தனிமாத் தெய்வமான * எம்பெருமானின் அடியார்கள் திறத்தில் அடிமையாம் அளவன்றிக்கே
அவ்வடிமை நிலையில் எல்லை நிலம் என்று அனுஸந்தித்துக் காட்டுகிறார்.

*சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள் *
(ஸ்வயம் பிரயோஜநமாக கைங்கர்யத்தின் எல்லையிலே நிலை நின்ற அடியவர்களுடைய திருத்தாள்கள் வணங்கி)

* அவனடியார் நனிமாக்கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே *
(ஸ்ரீவைஷ்ணவர்களுடைய சேர்க்கையே எப்பொழுதும் வாய்க்க வேண்டும்)

* கோதில் அடியார்தம் தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே!
* (கோதற்ற அடியார்க்கு அடிமையில் முடிந்த நிலமான வாய்ப்பே அடியேனுக்கு வாய்க்க வேணும்) இங்கு குறிக்கொள்ளத் தக்கது.

————-

இறுதியாக * வேய்மருதோளிணை * பதிகத்தில் புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லப்படுகிறது.
இதனை “ பரஸம்ருத்த்யேக ப்ரயோஜனத்வத்தைச் சொன்ன ”
(அவனுடைய திருமுக மலர்த்தியே பேறாக) என்கிறார் ஸ்ரீமத் வரவரமுனிகள். இப்பதிகந்தன்னில்
* உகக்கு நல்லவரொடுமுழிதந்து உன்தன் திருவுள்ளமிடர் கெடுந்தொறும் நாங்கள்
வியக்கவின்புறுதும் எம்பெண்மையாற்றோரும் * என்கிற பாசுரம் தன்னில் இவ்வர்த்தம் சொல்லப்பட்டது.

ஆழ்வார் இப்பதிகந்தன்னில் கண்ணன் எம்பெருமான் நம்மை விட்டு பசு மேய்க்கப் போனான் என்று
இடைப் பெண்கள் பேசும் பேச்சாகப் பேசினார். க்ருஷ்ணனை என்னை விட்டுவிட்டு பசு மேய்க்கிறேன் என்று போகாதே
எனப் பல காரணங்களைச் சொன்னார். அதில் இப்பாசுரத்தின் முந்தைய பாசுரத்தில்
* நீ உகக்குநல்லவரொடும் உழிதராயே * (உனக்குப் பிடித்த ஸ்த்ரீகளுடன் இங்கேயே இரு) என்றார்.
இதனைக் கேட்ட கண்ணபிரான் “இப்படி நீங்கள் சொல்லுகிறது உண்மை தானோ? நான் போகாமைக்காகச் சொல்லுகிற
வார்த்தையே தவிர, உங்களருகே நான் வேறு சில பெண்களோடே இருந்தல் அதை நீங்கள் பொறுத்துக் கொள்வீகளோ?” என்று கேட்டான்.

அதற்கு பதில் கூறுவதாக இருந்து கொண்டு நம் ஸ்வரூபத்திற்குத் தக்க புருஷார்த்தத்தைத் தெரிவிப்பது இப்பாசுரம்;
உன்னோடு நாங்கள் இருப்பதைக் காட்டிலும், நீ உன் திருவுள்ளத்தில் உகப்பாக இருப்பவர்களோடு இரு,
அதனால் நாங்களடையும் உகப்பே எங்களுக்கு உயர்ந்தது என்கிறார் இப்பாட்டில்.
* எம் பெண்மையாற்றோம்* – உன் சந்தோஷத்திற்கு வேறாய் வரும் ஸ்த்ரீத்வம் எங்களுக்கு வேண்டோம்;
உன் சந்தோஷமே முக்கியம் எனும் ஸ்வரூபஜ்ஞானமில்லாத பெண்களின் படி எங்களுக்கில்லை என்றபடி.

———–

ஆக இதுவரையில்,
கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாய், அனைத்து தோஷங்களுக்கும் எதிர்த்தட்டாய், ஸர்வஶேஷியாய்,
அனைவரையும் ரக்ஷிக்கிறவனாய், இருக்கும் பரமாத்ம ஸ்வரூபம் (1),
தேஹம் இந்திரியம் முதலானவற்றைக் காட்டிலும் வேறாய் ஜ்ஞானானந்தங்களை லக்ஷணமாக உடையவனாய்,
பகவானுக்கே ஶேஷமாய் இருக்கும் ஜீவாத்ம ஸ்வரூபம் (2),
அஹங்கார மமகாரங்களை விளைக்கடவதாயும், ஜீவனுடைய ஸ்வரூபத்தை மறைக்கக் கடவதாய் இருக்கும் ப்ரக்ருதி ஸம்பந்தம்,
எம்பெருமானைத் தவிர மற்ற பலன்களில் ஆசை வைக்கை, எம்பெருமானைத் தவிர மற்றவர்களுக்குச் செய்யும் சேவை,
எம்பெருமானைத் தவிர மற்றவர்களை பந்துக்கள் என நினைத்தல் ஆகிற விரோதி ஸ்வரூபமும் (3),
ஜீவாத்மாவின் ஸ்வரூபத்திற்குத் தக்கதான உபாய ஸ்வரூபமும் (4),
* ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித: * என்று அவனுடைய முக மலர்த்தியே பேறான புருஷார்த்த ஸ்வருபமும் (5)
ஆகிய ஐந்தினையும் விரிவாகத் தெரிவிக்கும் திருவாய்மொழிகளைப் பார்த்தோம்.

மற்றுமுள்ள 80 பதிகங்களிலே இவ்வர்த்தமே கிடக்கிறது.

பணவாளரவணைப் பள்ளி பயில்பவர்க்கு எவ்வுயிரும்
குணபோகம் என்று குருகைக்கதிபன் உரைத்தது உய்ய தவத்தோர் தவப்பயனாய் வந்த
முடும்பை மணவாளரான ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் –
இவ்வர்த்தங்கள் அனைத்தையும் ஒரு சூர்ணிகையிலே அடக்கி அருளியுள்ளார்.

“மூன்றில் சுருக்கிய ஐந்தினையும்
உயர் திண் அணை ஒன்று
பயில் ஏறு கண் கரு
வீடு சொன்னால் ஒருக்கொண்ட
நோற்ற நாலும்
எம்மா வொழிவில் நெடுவேய் என்கிற இருபதிலே விசதமாக்கி
எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்….” (211)

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழியில் உள்ள பத்து பத்துக்களிலும், ஸ்ரீ பகவான் ஸ்ரீ ஆழ்வாருக்குக் காட்டி அருளும் குணநலன்கள் —

November 16, 2020

ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்-சூர்ணிகை –218—-

இப்படி பத்து தோறும் உள்ள அர்த்தங்களை பர உபதேசத்துக்கு உறுப்பாக ஒருங்க விட்டு –
விஸ்தரேண மேல் -யோஜிப்பதாக திரு உள்ளம் பற்றி –
பரத்வாதி குண விசிஷ்டனான ஸ்ரீ சர்வேஸ்வரன் தமக்கு பிறப்பித்த தசா விசேஷங்களை
பத்து தோறும் வெளி இடுகிறார் என்று ஸங்க்ரஹேண வாக்கியம் அருளிச் செய்கிறார் மேல் ..

பரத்வ
காரணத்வ
வ்யாபகத்வ
நியந்த்ருத்வ
காருணிகத்வ
சரண்யத்வ
சக்தத்வ
சத்ய காமத்வ
ஆபத் சகத்வ
ஆர்த்தி ஹரத்வ
விசிஷ்டன்

மயர்வை அறுக்க
தத்வ வேதன
மறப்பற்று

ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர
நிஷ்கரிஷித்து
மோஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து
புருஷார்த்த பல அந்ய ருசி ஒழிந்து
விரக்தி பல ராகம் கழிய மிக்கு
ப்ரேமே பல உபாயத்தே புகுந்து
சாதன பல உபகார கைம்மாறு இன்றி
க்ருத்ஜ்ஞதா பல ப்ரதி
க்ருதமானத்தை உணர்ந்து
ஆத்ம தர்சன பல ப்ராப்தி
மரணா வதியாகப் பெற்று

காலாசத்தி பல கதிக்கு துணை கூட்டின
தம் பேற்றை பிறர் அறிய
பத்து தோறும் வெளி இடுகிறார் ..

( ராகவாயா மஹாத்மனே ஸுலப்யம் பரத்வம் -சர்வ லோக சரண்யன் –
இங்கு பரத்வம் முதல் நான்கு பத்துக்கள்- ஸுலப்யம் ஐந்தாம் பத்து – சர்வலோக சரண்யன் ஆறாம் பத்து-
இரண்டுமே ஸ்ரீ வைஷ்ணவத்துக்கு அரண் -அவ்யபதேச மகன் வாக்கு–
அந்தராத்மா –ஆத்மாவுக்குள் இருக்கும் பரமாத்மா –ஆகாசம் கைக்குள்ளே
அந்தர அசேதனம் -ஆகாசம் வியாபகம்
அந்தர்யாமி- அடக்கி ஆளும் சக்தி -சரீரத்துக்குள் உள்ள ஆத்மா அந்தர்யாமி எப்பொழுதும் இல்லையே –
ஆத்மாவுக்குள் உள்ள பரமாத்மா தானே அந்தர்யாமி சர்வ நியாந்தா –
உள்ளே இருக்கும் சேதனன் வியாபகன் பரமாத்மாவே தான் -)

அதாவது
1-சர்வ ஸ்மாத் பரனாய்-
2-அந்த பரத்வ பிரகாசகாம் படி சர்வ காரண பூதனாய் —
3-லோகத்தில் காரிய காரணங்கள் போல் அன்றிக்கே -உபாதான காரணமும் தானே ஆகையாலே –
கார்ய பூத சமஸ்த வஸ்துக்களுக்கும் வ்யாபகனாய் –
4-அந்த வியாப்தி தானே ஆகாச வ்யாப்தி போல் அன்றிக்கே அந்தர் ஆத்மா ஆகையாலே -சர்வ நியந்தாவாய் –
5-அந்த பரத்வாதிகளைக் கண்டு வெருவ வேண்டாதபடி பரம காருணிகனாய் –
6-இப்படி க்ருபாவான் ஆகையாலே சர்வ சரண்யனாய்–
7-சரண்ய க்ருத்யமான -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -பிராப்தி கரணதுக்கு ஈடாகும் படி –சர்வ சக்தி யுக்தனாய் –
8-அந்த சக்தியாலே நித்யமாக கல்பித்த பத்நீ பரிஜனாதிகளை உடைய வான் ஆகையாலே-சத்ய காமனாய் –
9-அந்த போகங்களில் அந்ய பரனாய் இருந்து விடாதே -பிரளயாத்ய ஆபத்துகளில் உதவி –
லீலா விபூதியை ரஷிக்கையாலே -ஆபத் சகனாய் –
10-இப்படி ஆபத் சகன் ஆகையாலே சம்சார தாபத்தரான ஆஸ்ரிதர்க்கு ஆர்த்தி கரனாய் –
இப்படி பத்து பத்தாலும் பிரதிபாதகமான பத்து குணத்தோடு கூடி இருக்கிற சர்வேஸ்வரன்-

மயர்வை அறுக்க

1-தத்வ வேதன மறப்பற்று-
அதாவது-
மயர்வற மதி நலம் அருளினன் -1-1-1–என்கிறபடியே
பக்தி ரூபாபன்ன ஞான பிரதான முகேன அஜ்ஞ்ஞானத்தை ஸ வாசனமாக போக்க-
அதனால் தத் விஷய ஞானம் ஆகிற தத்வ ( பகவத் விஷய ) வேதனத்தில் –
மறப்பேனோ இனி யான் என் மணியை -1-10-10-– என்கிறபடியே -விஸ்ம்ருதி அற்று –

2-ஜ்ஞப்தி ( தத்வ வேதன – பர்யாய சொல் ) பல முக்தி தலை சேர நிஷ்கரிஷித்து-
அதாவது –
அந்த ஞான பலமான மோஷத்தை –
நின் செம்மா பாத பற்ப்பு தலை சேர்த்து -2-9-1- -என்று -ஸ்வரூப அனுரூபமாக நிஷ்கர்ஷித்து –

3-மோஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து-
அதாவது-
அந்த மோஷத்துக்கு பலமான கைங்கர்ய ரூப வ்ருத்தியை-
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1–என்று அர்தித்து –

4-புருஷார்த்த பல அந்ய ருசி ஒழிந்து-
அதாவது–
அந்த புருஷார்தத்துக்கு பலம் அந்ய ருசி நிவ்ருத்தி ஆகையாலே தத் பலமாக –
ஐம் கருவி கண்ட இன்பம் -சிற்றின்பம் ஒழிந்தேன் -4-9-10–என்று அந்ய புருஷார்தங்களில்
ருசியைத் தவிர்ந்து –

5-விரக்தி பல ராகம் கழிய மிக்கு-
அதாவது–
அந்த இதர விஷய விரக்திக்கு பலமான பகவத் விஷய ராகம் –
கழிய மிக்கதோர் காதல்-5-5-10- -என்னும் படி அதிசயித்து –

6-ப்ரேமே பல உபாயத்தே புகுந்து-
அதாவது–
அந்த நிரதிசய பிரேம பலமான விளம்ப அஷமத்வத்தால் வந்த த்வரையாலே –
அலர்மேல் மங்கை உறை மார்பா -உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10–என்று
உபாய வரணம் பண்ணி –

7-சாதன பல உபகார கைம்மாறு இன்றி-
அதாவது-
அந்த சாதன பலமான உபகாரத்துக்கு பிரத்யுபகாரமாக –
உதவி கைம்மாறு என் ஆர் உயிர் -7-9-10–என்று ஆத்ம சமர்ப்பணம் பண்ணத் தேடி –
அவ் வாத்ம வஸ்து ததீயம் என்று அறிகையாலே –
அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -எதுவும் ஓன்று இல்லை செய்வது இங்கும் அங்கும் –7-9-10-
என்று பிரத்யுபகாரம் காணாமல் தடுமாறி –

8-க்ருத்ஜ்ஞதா பல ப்ரதி க்ருத மானத்தை உணர்ந்து-
அதாவது-
அந்த க்ருதக்ஜைக்கு பலமான பிரத்யுபகாரமாக –
தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை செய்தனன்-8-1-10- -என்ற ப்ரீதியாலே கலங்கி
சமர்ப்பித்த ஆத்ம வஸ்துவை –
நின்ற ஒன்றை உணர்ந்தேன் -8-8-4–என்று தேகாதிகளில் விலஷணமாய்
அவனுக்கு பிரகார தயா சேஷமாக கொண்டு -அனந்யார்ஹமாய் இருக்கும் என்று அறிந்து –
( இந்த ப்ரகாரதயா சேஷம் என்கிற அறிவே உணர்வே பிரதியுபகாரம் இந்த உணர்வே ஆத்ம தர்சனம் )

9-ஆத்ம தர்சன பல ப்ராப்தி மரணா வதியாகப் பெற்று-
அதாவது-
ஆத்ம தர்சன பலமான -பகவத் பிராப்தியை –
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் 9-10-5–என்கிறபடி சரீர அவசானத்திலே பண்ணித் தருகிறோம் என்று
அவன் நாள் இட்டு கொடுக்கப் பெற்று –
( பக்தி உபாசனனனுக்கு கர்ம அவதி -ப்ரபன்னனனுக்கு மரண அவதி தானே
மரணாமானால் கால ஆஸக்தி பர்யாயம் )

10-காலாசத்தி பல கதிக்கு துணை கூட்டின தம் பேற்றை
அதாவது-
இப்படி பிராப்தி காலம் அணித்தானதுக்கு பலம்
அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேச விசேஷத்துக்கு ஏறப் போவதாகையாலே -அவ் வர்சிராதிகதிக்கு –
காள மேகத்தை இன்றி மற்று ஓன்று இல் அம் கதி 10-1-1–என்றும் ,
ஆத்தன் தாமரை அடி இன்றி மற்று இலம் அரணே 10-1-6–என்று பரம ஆப்தன் ஆனவன் தன்னையே
துணையாகக் கூட்டின தம்முடைய பேற்றினை

பிறர் அறிய பத்து தோறும் வெளி இடுகிறார் ..
அதாவது-
பிறர் அறிந்து வாழும் படி –அறிந்து -( உணர்ந்து வாழ வேண்டுமே -எனவே இந்த வியாக்யானம் )
முதல் பத்தே தொடங்கி பத்துப் பத்தாலும் பிரகாசிப்பித்தது அருளுகிறார் என்றபடி ..

இத்தால் பரத்வாதி குண விசிஷ்டனான ஈஸ்வரன் தமக்கு பண்ணிக் கொடுத்த பேறுகளை
பலரும் அறிந்து வாழ வேண்டும் என்று
பத்து பத்தாலும் பிரகாசிப்பிக்கிறார் என்று பத்து நிகமனத்துக்கு
வாக்யார்த்தம் சொல்லப் பட்டதாய்த்து –

ஞப்தி
முக்தி
விருத்தி
விரக்தி
பக்தி
பிரபத்தி
சக்தி
பிராப்தி
பூர்த்தி
ஆர்த்தி ஹரத்வம்
ஆகிய பத்துக்களும் பத்தின் அர்த்தம் –

—————–

ஸ்ரீ திருவாய்மொழியில் உள்ள பத்து பத்துக்களிலும், ஸ்ரீ பகவான் ஸ்ரீ ஆழ்வாருக்குக் காட்டி அருளும் குணநலன்கள் —

1-அவன் மிக உயர்ந்தவன்,
2-அவனே எல்லாவற்றுக்கும் காரணம்,
3-நீக்கமற எங்கும் நிறைந்து உள்ளான்,
4-அவனே எல்லாற்றையும் நடத்திக் கொடுக்கிறான்,
5-மிகவும் கருணை உடையவன்,
6-நம் எல்லோருக்கும் சரணாகதி அளிக்க வல்லவன்,
7-சக்தி உடையவன்,
8-நாம் விரும்பியவைகளை அடையச் செய்பவன்,
9-நம் இடர்களில் இருந்து காப்பாற்றுபவன்,
10-நம் கவலைகளை தீர்க்க வல்லவன்.

முதல் பத்து – பரத்துவம், அவன் பெரியவன், மிகவும் மேன்மையானவன்,
அவனைவிட மேன்மையானவனோ, மேன்மையான பொருளோ எதுவும் கிடையாது.
உயர்வற உயர்நலம் உடையவன் (1.1.1).

இரண்டாம் பத்து – காரணத்துவம் – இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிருள்ள, உயிரற்ற
எல்லா ஜீவராசிகளுக்கும் அவனே காரணம்.
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி (2.1.11)

மூன்றாம் பத்து – வியாபகத்துவம் – எங்கும் உளன் கண்ணன் –
பரமாத்மா எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்து உள்ளான்.
“வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுது இயன்றாய்” (3.1.5) என்றும்
“இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ கண்ணனைக் கூவுமாறே” (3.4.1) என்றும் சொல்வது .

நான்காம் பத்து – நியந்த்ருத்துவம் – அவனன்றி ஓர் அணுவும் அசையாது –
பரமாத்மாவே இந்த அண்டகடாகத்தில், அனைத்து நிகழ்வுகளையும் நிகழ்த்திவைப்பவன்.
“வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவில்சீர், ஆற்றல் மிக்கு ஆளும்” (4.5.1)

ஐந்தாம் பத்து – காருணிகத்துவம் அல்லது சௌலப்பியம் – மிகவும் எளிமையானாவான் –
அவனை அணுகுவது மிகவும் எளிது. அவனுடைய அளவற்ற கருணையினாலேயே
“பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி, மெய்யே பெற்றொழிந்தேன்” (5.1.1) என்கிறார், ஆழ்வார்.

ஆறாம் பத்து – சரண்யத்துவம் – பெருமையும், எளிமையும் ஒரே இடத்தில இருக்கிறபடியால், நாம் எல்லோரும்
சரண் அடைய மிகவும் தகுதியானவன். ஐந்தாம் பத்திலேயே, ஆழ்வார் நான்கு சரணாகதிகளை கேட்டுள்ளார். அவையாவன,
சிரீவரமங்கலநகர் அல்லது வானமாமலை (நோற்ற நோன்பு 5.7),
திருக்குடந்தை அல்லது கும்பகோணம் (ஆராவமுதே 5.8),
திருவல்லவாழ் (மானை நோக்கு 5.9),
விபவாவதாரத்து கண்ணனிடம் (பிறந்தவாறும், 5.10).

ஆனால், ஆறாம் பத்தில், திருவேங்கடமுடையானிடம், பிராட்டியை முன்னிட்டு கேட்டுக்கொண்ட சரணாகதியே பலித்தது.
“உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே” (6.10.10).

ஏழாம் பத்து – சக்தத்துவம் (சக்தி உள்ளவன்) – நம் எல்லோருக்கும் சரணாகதி கொடுத்து காப்பாற்றும் சக்தி படைத்தவன்.
இதனை பெருமாள், ஆழ்வாருக்கு “ஆழியெழ, சங்கும் வில்லும் எழ” (7.4) என்ற பதிகத்தில்,
தன்னுடைய வீர தீர பராக்கிரமங்களை காட்டுகிறார்.

எட்டாம் பத்து – சத்யகாமத்துவம் – விரும்பத்தக்க குணங்கள் எல்லாம் படைத்தவன் அவன்.
அவன் ஆசைப்பட்டு அடையவேண்டியது எதுவும் இல்லை, எல்லாவற்றையும் அடைந்தவன்.
தேவிமார்களோடு அவன் இருக்கின்றபடியாலும்,
தேவிமார்கள் அனைத்து ஜீவாத்மாக்களையும் தங்கள் குழந்தைகளாக பாவித்து நமக்காக அவனிடம் சிபாரிசு செய்வதாலும்,
அவன் நமக்கு வேண்டிய கருணையை காட்டி நாம் விரும்பியதை அடைய செய்பவன்;
“நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான்“, (8.6.1)

ஒன்பதாம் பத்து – ஆபத்சகத்துவம் – எல்லா இடர்களில் இருந்தும் நம் எல்லோரையும் காப்பாற்றும் வல்லமை பெற்றவன் ;
“காய்சின வேந்தே கதிர்முடியானே, கலிவயல் திருப்புளிங்குடியாய்
காய்சின ஆழி, சங்கு, வாள், வில், தண்டு ஏந்தி எம் இடர் கடிவானே” (9.2.6) என்று புளிங்குடி பெருமானிடம் ஆழ்வார்
சொன்னது போல், எல்லா இடங்களில் இருந்தும் காப்பாற்றுபவன் அவனே.
அதேபோல், “அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே” (9.3.3) சொன்னதிலும்
ஹரியை நோய்கள் அறுக்கும் மருந்து என்று ஞானிகள் கண்டுகொண்டனர்.

பத்தாம் பத்து – ஆர்த்திஹரத்துவம் – நம்முடைய கவலைகளை எதிர்பார்ப்புகளை, துடிப்புகளை, தீர்க்கவல்லவன்.
வழித்துணை இல்லை என்று நாம் படுகிற துக்கம் தொலையும் என்பது
“மற்று இலன் அரண் ” (10.1.7) என்ற திருமோகூர் பதிகத்தில் உள்ள பாசுரத்தின் வழியும்,
“தீரும் நோய் வினைகளெல்லாம் திண்ணநாம் அறியச் சொன்னோம்” (10.2.3) என்ற திருவனந்தபுரம் பதிகத்தில் உள்ள பாசுரத்தின் வழியும்,
“சூழ்ந்ததனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே” (10.10.10) என்று தன்னை ஆட்க்கொண்டதை சொன்னதில் இருந்தும்,
இந்த இறுதி பத்து நம் கவலைகளை தீர்க்க வல்லது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பத்திலும் பத்து வகையான குணநலன்கள்.
ஒவ்வொரு பதிகத்திலும் பல வகையான குண நலன்கள்.
1102 பாசுரங்களில் ஆயிரம் ஆயிரம் குணநலன்கள் என திருவாய்மொழி முழுவதும் அவனின் குணநலன்களே.
அந்த குண நலன்களை ஆழ்வாருக்குக் காட்டியவனும் அவனே.

இன்னொரு வகையில் பத்து பத்துகள் ஆழ்வாரிடத்தில் ஏற்பட்ட நிலையின் மாற்றங்களைக்கொண்டு,
கீழ்கண்ட வகையில் பத்து பத்துக்களையும் பார்க்கலாம் என்று நம் ஆச்சாரியார்கள் சொல்வார்கள்.

1-முதலில் தனக்கு, பரமாத்மா பற்றிய அறிவை அளித்தான் என்கிறார்.
2-அதனால் தான் அடையவேண்டியது முக்தி அல்லது மோக்ஷம் என்று உணர்கிறார்.
3-அதற்காக பெருமாளுக்கு மேலும் மேலும் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று விழைகிறார்.
4-பரமாத்மா தவிர மற்ற விஷயங்களில் உள்ள ஆசைகளை குறைக்கிறார்.
5-பெருமாளின் மேல் உள்ள பக்தியை மேலும் வளர்க்கிறார்.
6-பக்தியால் அவனை அடைவது கடினம் என்று அவன் மூலமே அவனை அடைய அவனிடம் சரணாகதி கேட்டு அதனையும் பெற்றார்.
7-அதற்கு பிரதி உபகாரமாக தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே என்று ஏங்குகிறார்.
8-ஜீவாத்மாக்கள், பெருமாளுக்கு சேவை செய்து அடிமையாக இருப்பதே உகந்தது என்பதை உணர்கிறார்.
9-ஆழ்வார் தான் எப்போது முக்தி அடைவது என்று கவலை அடைந்ததற்கு, பெருமாள் அருளியதையும்,
10-தன்னுடைய கவலைகள் நீங்கி கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை சொல்லி முடிக்கிறார்.

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் என்ற ஆச்சாரியார் எழுதிய ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் இருந்தும்,
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாளப்பெருமாள் ஜீயர் எழுதிய ஸ்ரீ த்ரவிடோபநிஷத் சங்கதி மற்றும்
வேதாந்த தேசிகர் என்ற ஆச்சாரியார் எழுதிய ஸ்ரீ த்ரவிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, என்ற இரண்டு நூல்களில் இருந்தும்
இவைகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.

1-ஞப்தி – ஞப்தி என்றால் பகவத் ஞானம். முதல் பத்து,
முதல் பதிகத்திலேயே பகவத் ஞானம் அடைந்ததை (மயர்வற மதி நலன் அருளினன் 1.1.1) என்பதாலும்,
மற்ற பதிகங்களால் அதனை மறவாமல் இருந்தார் என்பதையும் அறியலாம்.

2-முக்தி – ஞானம் அடைந்ததால், அடையவேண்டியது எது என்பதை ஆழ்வார் உணர்ந்தார்.
அடைய வேண்டியது மோக்ஷம் அல்லது முக்தி என்பதை “நின் செம்மா பாதபற்புத் தலை சேர்த்து” (2.9.1) என்பதன்
மூலம் அவர் உணர்ந்ததை, நமக்கு கூறுகிறார்.

3-விருத்தி – முக்திக்கு பலன், மேலும் மேலும் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று விழைதல்.
“ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி , வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்” என்று (3.3.1) பாசுரத்தில்
கூறுவதில் தொடங்கி, விருத்தி பற்றி அந்த பதிகம் முழுவதும் ஆழ்வார் நமக்கு உரைக்கிறார்.

4-விரக்தி – மேலும் மேலும் பகவானுக்கு கைங்கர்யம் செய்ய விரும்புவதால், மற்ற விஷயங்களில் ஈடுபாடு குறைதல்.
இதை அந்நிய ருசி ஒழிதல் என்று கொள்ளலாம். இது நாலாம் பத்து முழுவதிலும் சொல்லப்படுகிறது.
“ஒருநாயகமாய் ஓட, உலகுடன் ஆண்டவர்” (4.1.1) என்று தொடங்கும் நாலாம் பத்தில்,
மற்ற அனைத்து ஆசைகளும் ஒழிந்து விட வேண்டும் என்ற கருத்து மேலூங்குகிறது.

5-பக்தி (காதல் வளர்தல்) – மூன்றாம் பத்தில் பரமாத்மாவுக்கு செய்ய விழையும் கைங்கர்யம் விருத்தி அடைவதின் மூலமும்
நான்காம் பத்தில் மற்ற விஷயங்களில் விரக்தி அடைவதின் மூலமும்,
ஐந்தாம் பத்தில் பெருமாள் மேல் உள்ள பக்தி மேலும் மேலும் வளர்கிறது.
இது மாசறு சோதி, ஊரெல்லாம் துஞ்சி, எங்ஙனேயோ அன்னை மீர்காள், (5.3, 5.4, 5.5) என்கின்ற பதிகங்களின் வழியே
காலம் போகப் போக காதல் மிகுவது தெரிகிறது.

6-பிரபத்தி – இரண்டாம் பத்தால் முக்தி அடைவது என்று உணர்ந்த பின், பெருமாளின் மேல் உள்ள பக்தியை
அடுத்தடுத்த பத்துக்களில் வளர்த்து, அவனை அடைய வழி கண்டு கொள்வதே ஆறாம் பத்தில் ஆழ்வார் உணர்வது.
பக்தி மார்க்கத்தை விட, அவனைக் கொண்டே அவனை அடைவது என்பதே சாத்தியம் என்பதைப்
பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு திருவேங்கடமுடையானிடம் சரணாகதி
(புகலொன்றில்லா அடியேனுன் அடிக்கீழமர்ந்து புகுந்தேனே, 6.10.10) கேட்டு ப்ரார்த்திபதின் மூலம்,
ஆழ்வார் நமக்கு முக்திக்கு வழி அவன் திருவடிகளை அடைவதே என்று காட்டுகிறார்.

7-சக்தி – பெருமாள் தன்னுடைய சக்தியை, “ஆழியெழ, சங்கும் வில்லும் எழ” (7.4) என்ற பதிகத்தில் ஆழ்வாருக்குக் காட்டினார்.
தன்னையே உபாயமாக கொடுத்து சரணாகதி அருளிய பெருமாளுக்கு தான் ஏதாவது சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆழ்வார் நினைத்த போது,
‘உதவிக்கு கைம்மாறு தனது உயிர் என்று கருதிய உடனே அதுவும் அவனதே, ஆகவே கைம்மாறு ஒன்றுமேயில்லை’
என்று உணர்ந்ததே ஏழாம் பத்தின் சாராம்சம்.
இன்கவி பாடிய அப்பனுக்கு, எதுவுமொன்றுமில்லை செய்வது இங்கும் அங்குமே , 7.9.10).

8-பிராப்தி – இந்த பத்தில் பெருமாள் ஆழ்வாருக்கு ஜீவாத்மாவைப் பற்றி விளக்குகிறார்.
ஜீவாத்மஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்கிறார். பரமாத்மாவிடம் அடிமைத்தனம் செய்வதே ஜீவாதாமாவிற்கு உகந்தது என்று
“கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து“, (8.8),
கருமாணிக்க (8.9)
நெடுமாற்கு அடிமை, (8.10) என்ற பதிகங்களின் மூலம் ஆத்மா எப்படிப்பட்டது என்று பெருமாள் ஆழ்வாருக்குக் காட்டுகிறார்.

9-பூர்த்தி – ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை முழுமையாக உணர்ந்தபின், சுவாமி நம்மாழ்வார், தான் எப்போது அவனிடம் சென்று
அவனுக்கு கைங்கர்யம் செய்வது என்று மிகவும் துடித்து ஒன்பதாம் பத்தில் பாசுரங்கள் பாடினார்.
பதினான்கு வருஷம் என்று பரதனுக்கு சொன்னது,
சீதைக்கு பத்து மாதம் என்பது போல் ,
ஒரு நாள் என்று ஆயர் பெண்களுக்கு வாக்கு கொடுத்தது,
பத்து வருஷம் என்று யசோதைக்கு சொன்னது போல்,
தனக்கும் ஒரு நேரம் அல்லது காலம் கொடுக்க வேண்டும் என்று பெருமானை ஆழ்வார் கேட்டதற்கு,
“சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் ” (9.10.5) என்று
பெருமான் தனது சரண்ய முகுந்தத்தை ஆழ்வாருக்குக் காட்டினான்.

10-ஆர்த்திஹரத்துவம் – ஸ்ரீ ஆழ்வார் தன் வாழ்நாள் முடியம் போது தனக்கு வழித்துணையாக வருவதற்கு
ஸ்ரீ திருமோகூர் ஆப்தனை பற்றுகிறார் (10.1).
பின்னர் ஸ்ரீ திருமாலிரின்சோலை அழகன், “கோனே யாகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிருண்டே” (10.7.2), என்று
தன்னை முழுவதும் உண்டான் என்கிறார்.
இறுதியாக, ஸ்ரீ திருப்பேர் நகர் பெருமானை அப்பகூடத்தான் , “இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்” (10.8.6) என்று
கூறி தனது கோரிக்கையை ஸ்ரீ பெருமான் நிறைவேற்றியதை கூறுகிறார்.

இப்படியாக ஒவ்வொரு பத்திலும் ஆழ்வாருக்கு ஏற்பட்ட மாற்றங்களை அவரது பாசுரங்களை துணையாகக்கொண்டே நமக்கு காட்டியுள்ளார்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள பாசுரங்கள் ஒரு உதாரணத்திற்காக சொல்லப் பட்டவையே தவிர,
அந்தந்த பதிகங்களில், பத்துக்களில், தொடர்புள்ள கருத்துக்கள் நிறையவே காணலாம்.

———————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அருளிச் செயல்களில் வண்டு பத பிரயோகம் – /ஸ்ரீ தெய்வ வண்டோடே சேர்விக்கும் சேமமுடை நாரதர் முனி வாஹனர் தம்பிரான்மார் போல்வாரை வண்டு தும்பி என்னும்-

October 8, 2020

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி

செம்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல்
பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்பச்
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய
அங்கைகளால் வந்து அச்சோ அச்சோ ஆரத் தழுவு வாய் வந்து அச்சோ அச்சோ -1 8-2 –

செந்தாமரைப் பூவில் மதுபானம் பண்ணுகிற வண்டுகள் போலே –
சுருண்ட திருக் குழல்கள் வந்து உன் திருபவளத்தை மொய்க்கும்படியாக –

அண்டத்த அமரர் பெருமான் அழகமர் வண்டு ஒத்து இருண்ட குழல் வாராய் அக்காக்காய்
மாயவன்தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-7 – –
கார் வண்ணன் வண்டார் குழல் வார வாராய் என்ற ஆய்ச்சி சொல்-2-5-10-

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென் அரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்-2-9-11-

வண்டமர் பூம் குழலார் துகில் கைக் கொண்டு விண் தாய் மரத்தானால் இன்று முற்றும்
வேண்டவும் தாரானால் இன்று முற்றும் – 2-10 2-

———————

பூங்குவளைப் போதில் பொறி வந்து கண் படுப்ப -ஸ்ரீ திருப்பாவை -3-

பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய்-ஸ்ரீ நாச்சியார் திரு மொழி- —5-3-

————

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே–ஸ்ரீ பெருமாள் திருமொழி – 2-8-

வண்டுகள் நெருங்கி இருக்கிற செவ்வித் திருத் துழாய் மாலை சேர்ந்து -வரை போலே இருக்கிற
பெரும் திரு மார்வை உடையராய் –
மை போல் நெடு வரைவாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப -என்னக் கடவது இறே-

பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே –4-4-

இயலைக் கற்று சிஷா பலத்தாலே இசை வரும் தனைய வார்த்தை சொல்லும் போதும் பண்ணாய் இருக்கை
தாங்கள் பாடுகிற பாட்டுக்கு இசைந்து வண்டினங்களானவை பண் பாடுகிற ஸ்ரீ திரு மலையிலே-

தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவத்தேன் ஆவேனே –4-6-

தென் தென் என்று ஆளத்தி வைத்து வண்டினங்கள் பண் பாடுகிற ஸ்ரீ திருமலையிலே
அப்படிப்பட்ட பொற்குவடம் என்னும் அத்தனை -வேறு உபமானம் இல்லை –
ஸ்ரீ திருவேங்கடமுடையானுக்கு அவ்வருகு இருக்கில் இறே -ஆகையால்
அரும் தவத்தேன்-என்னக் குறை இல்லை இறே –

வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ வாண் முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
தண் தயிர் கடைந்திட்ட வண்ணம் தாமோதரா! மெய் அறிவன் நானே 6-2-

உன் குழலை விச்வசித்த வண்டுகள் என் பட்டனவோ –
உன் உடம்பில் தழும்பை மறைக்கலாமாகில் அன்றோ உன் செயல்களை மறைக்கலாவது –

வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–

வண்டினங்கள்-காமரம் -என்கிற பண்ணிலே -இசை பாடுகிற ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனவனே
ஆரேனும் பிடிக்கிலும் ஏவிலே மீட்டும் ஸ்ரீ சார்ங்கத்தை உன் நினைவிலே வரும் படி செலுத்த வல்லவனே –

———————–

வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேரு மார்ப பூமி நாதனே –ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–22-

வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே –50-

வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த-71-

————

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே–ஸ்ரீ திரு மாலை-14-

கிண்ணகத்தில் இழிவார் திரளாக இழியுமா போலே
மது வெள்ளத்தால் வண்டுகள் திரள் திரளாக வாய்த்து இழிவது –
கழுத்தே கட்டளையாக மது பானத்தைப் பண்ணி புக்க த்ரவ்யம் இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலும்
தான் வாய் விட மாட்டாமையாலும் ஆளத்தி வையா நிற்கும் ஆயத்து –
முக்தர் திரள் திரளாக பகவத் அனுபவம் பண்ணி போக்குவீடாக சாமகானம் பண்ணிக் களிக்குமா போலே
இவ் ஊரில் திர்யக்குகளும் கழித்து வர்த்திக்கும் -என்கை –

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கம் ஒன்றும் அறிய மாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே–32-

திருச் சோலையிலே மதுவைப் பானம் பண்ண இழிந்த வண்டுகள் ஆனவை
அபிநிவேசத்தாலே பரிச்சேதித்து இலிய அறியாதே இழிந்து கழுத்தே கட்டளையாகப் பருகி
புக்க மது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே ஆர்த்துக் கொள்ளா நிற்கும் –
முக்தர் பகவத் அனுபவ ஜனித்த ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக சாம கானம் பண்ணுமா போலே
ஒரு தேச விசேஷத்திலே –பகவத் அனுபவத்தாலே முக்தருக்கு பிறக்கும் விகாசம் திர்யக்குகளுக்கும்
பிறக்கும் படி யாய்த்து கோயிலின் போக்யதை இருப்பது
காயந்தி கேசித் பிரணமந்தி கேசித் நர்த்யந்தி கேசித் -என்று
மது வனத்தை அழித்த முதலிகள் ஹர்ஷத்துக்கு போக்குவீடு விட்டு
பாடுவார் ஆடுவார் ஒருவரை ஒருவர் சுமப்பார் ஒருவரை ஒருவர் பொகடுவார் ஆனார்கள் இறே-
இவர் தம்முடைய சத்தை உண்டாகைக்கு கூப்பிடுகிறார் –
இவை பிரீதிக்கு போக்கு வீடாக கூப்பிடுகின்றன –
மது பானம் பண்ண இழிந்த வண்டுகள் மதுவின் மிகுதியாலே
பிரளயத்தில் அகப்பட்ட மார்கண்டேயனைப் போலேயும்
கிண்ணகத்தில் அகப்பட்ட திருச்சோலை போலேயும் அலையா நிற்கும் யாய்த்து –

—————

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-ஸ்ரீ அமலனாதி பிரான்–6-

அழகிய சிறகை உடைத்தான வண்டுகள் வாழா நின்ற சோலை சூழ்ந்த பெரிய கோயிலிலே
கண் வளர்ந்து அருளுகிற பிதாவானவன்
வண்டுகள் அவன் பக்கல் செல்லாது –-திருச் சோலையின் போக்யதையிலே இள மணல் பாய்ந்து
கால் வாங்க மாட்டாதே நிற்கும் –
அவ் வண்டுகளைப் போலே தம்மை அனுபவித்து விடாய் கெடுத்தான் -என்கிறார் –

—————-

ஸ்ரீ பெரிய திருமொழி-

மஞ்சுலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலி கன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை-1-1-10-
வேழம் பிடியினோடு வண்டிசை சொலத் துயில் கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-3-
வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-6-

தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-9-
அறிவில்லாத வண்டுகள் -அப்புஷ்ப விகாச சோபையைப் பார்த்து நெருப்பாகவே நினைத்து பயப்படும்
நித்யமாக அச்சமும் அச்சம் கழிதலும் மாறி மாறிச் செல்லும்
அவன் சர்வ ரஷகன் என்று தெரிந்தும் பல்லாண்டு -போற்றி -என்று மங்களா சாசனம் செய்யும்
பெரியாழ்வார் போல்வார் வண்டுகள்
பயமும் பய நிவ்ருத்தியும் மாறி மாறி செல்லும் பிரபன்னர்கள் வாழும் இடம் –

வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை-1-2-10-

மது வுண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-2-
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே -என்னும்படியான எம்பெருமானை பரிபூர்ணமாக அனுபவித்து ஹர்ஷத்துக்கு போக்குவீடாக
ஏதத் சாம காயன் நாஸ்தே -ஹாவுஹாவு ஹாவு -சாமகானம் பண்ணிக் களிக்கும் முமுஷூக்கள் வாழப் பெற்ற வதரி-

நெஞ்சம் அன்பாய் ஆயிர நாமம் சொல்லி வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-3-
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே—1-3-5-
வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை-1-3-10-

பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-
வண்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய தண்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-9-

தொல் சீர் வண்டறை தார்க் கலியன் செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே—-1-7-10-

நீல மார் வண்டுண்டு வாழும் நெய்தலந்தண் கழனி ஏல நாறும் பைம் புறவில் எவ்வுள் கிடந்தானே–2-2-5-
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை வண்டு பாடும் பைம் புறவில் மங்கையர் கோன் கலியன்-2-2-10-

வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–2-10-4-

தூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே பூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே-3-6-1-
பிணியவிழும் நறு நீல மலர் கிழியப் பெடையொடும் அணி மலர் மேல் மது நுகரும் அறுகால சிறு வண்டே-3-6-2-
தாராய தண் துளவ வண்டுழுத வரை மார்பன் போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான்-3-6-6-
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயலாலி மைந்தா !என்
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ!–3-6-7-

மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் போது வண்டாடு செம்மல் புனலாளி புகுவர் கொலோ ?–3-7-4-

வண்டு பல இசை பாட மயில் ஆலு நாங்கூர் வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-3-
நாங்கூர் வைகுந்த விண்ணகர் மேல் வண்டறையும் பொழில் சூழ் மங்கையர் தம் தலைவன்-3-9-10-

மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே–4-1-1-

குல மயில் நடமாட வண்டு தான் இசை பாடிடு நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-3-

வண்டொலியும் நெடும் கணார் தம்
சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-2-

மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத் தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -4-5-4-

வண்டு உலவு பொழில் கொள் நாங்கை மன்னு மாயன் என்று என்று ஓதி
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே -4-8-3-

வரி வண்டு மிண்டித் தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-2-

எழிலார் மஞ்ஞை நடமாடப் பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே -5-1-1-
அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-6-
குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும் புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-7-

நறும் தண் தீம் தேனுண்ட வண்டு குறிஞ்சி பாடும் கூடலூரே—5-2-2-

வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே –5-4-3-

வரி வண்டார் கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே-5-6-7-

வண்டறை பொழில் திருப்பேர் வரி வரவு அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செஞ் சொலால் மொழிந்த மாலை
கொண்டிவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே—-5-9-10-

வண்டுகள் மதுபான மத்தமாய்க் கொண்டு த்வனியா நின்றுள்ள பொழிலை உடைத்தான திருப் பேரிலே வரிகளை உடையனான
திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாகக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனை கவி பாடிற்று –
இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக இவ் வனுபவத்துக்கு மேலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்-

மைய வரி வண்டு மதுவுண்டு கிளையோடு மலர் கிண்டி யதன் மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே -5-10-2-

ஸ்யாமமான நிறத்தையும் வரியையும் உடைத்தாய் இருக்கிற வண்டுகள் தன் பந்து வர்க்கத்தோடே கூட மது பானத்தைப் பண்ண
கழுத்தே கட்டளையாக மது பானம் பண்ணின படியாலே கால் வாங்கிப் போக மாட்டாமை அவ்விடத்திலே இருந்து பூக்களைக் கோதி
அதின் மேலே இருந்து நைவளம் என்கிற பண்ணைப் பாடா நின்றுள்ள பொழிலை உடைத்தான தேசம்  –

வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்–6-1-1-

செவ்விப் பூ மாலையை கையிலே கொண்டு முன்பு நாம் பண்ணி வைத்த பாபங்களை அடையப் போக்க வேணும்
என்று திருவடிகளின் மேலே

பொறியார் மஞ்ஞை பூம் பொழில் தோறும் நடமாட நறு நாண் மலர் மேல் வண்டிசை பாடும் நறையூரே —6-5-4-

மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணிமாடம் சேர்மின்களே –6-6-1-
இன வண்டாலும் உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே -6-6-2-

மென்மலர் மேல் கழியா வண்டு கள் உண்ணக் காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே-6-7-4-

பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய்
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே–6-10-3-

வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை-7-1-10-

வண்டு கிண்டும் நறைவாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ–7-2-4-
நற்போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ -7-2-8-

வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இதுகாணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே-7-4-6-

மென் தளிர் போல் அடியினானைப் பண்ணாரா வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை யம்மான் தன்னை-7-4-8-

புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்கப் பொழில்கள் தொறும் குயில் கூவ மயில்கள் ஆல
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –7-8-4-

சிறை வண்டினம் அறையும் சிறு புலியூர்ச் சல சயனத்
துறையும் மிறையடி யல்லது ஓன்று இறையும் அறியேனே–7-9-3-

கானுலா மயிலின் கணங்கள் நின்றாடக் கண முகில் முரச நின்றதிரத்
தேனுலா வரி வண்டின் இன்னிசை முரலும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே–9-1-7-

கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும் எழு போயவன் மன்னுமூர்
பொங்கு முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே —9-3-4-

நம்முடைய தலைவன் என்று சொல்லலாம் படி சம்ஸ்லேஷித்து பிரிந்தான்
மது பானம் பண்ணுகிற வண்டே சாஷியாக வந்தான்
நான் உபவாசத்தால் மெலிந்து கிடக்க அந்த வண்டு மது உண்டு களித்து-
அவன் இடமே மண்டி உள்ளதே -என்ன பாக்கியம்
ஒரு நாளும் தாமும் நோவு படாதே -பிறர் நோவும் அறியாதே உண்டு களித்து திரியும் வண்டுகள்
நமக்கு சாஷி சொல்ல மாட்டாவே
தகுந்த சாஷி இல்லாமல் கலந்த பாவியேன் -கொடியேற்கு -என்கிறார்-

இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக் குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே —–9-6-9-

———————-

அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன்
அருள் ஆழிப் புட் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
யருள் ஆழி வரி வண்டே! யாமும் என் பிழைத்தோமே–1-4-6-

ஸ்ரமஹரமாய் -வருத்தத்தை நீக்கக் கூடியதாய் அழகியதாய் இருக்கிற வண்டே.
இனி, இதற்கு ‘வடிவு சிறுத்திருக்கவும் காமபீர்யம் பெருத்திருக்கிற வண்டே’ என்றும்,
‘சுழலப் பறக்கிற வண்டே’ என்றும் பொருள் கூறலுமாம்.
இதனால், கடகருடைய -இறைவனோடு சேர்க்கின்ற ஆசாரியனுடைய ஆத்தும குணத்தைப் போன்றே,
ரூப உருவத்தின் குணமும்-உத்தேச்யம் – உட்கோள் என்கை,

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்-1-7-11-

தேனைக் குடிப்பதற்கு இழிந்த வண்டுகளானவை பெருங்கடலிலே இழிந்தாரைப் போன்று உள்ளே உள்ளே
இடங்கொண்டு குடித்தலை அன்றி,மது வற்றிக் கைவாங்க ஒண்ணாதபடி இருக்கிற திருத்துழாய் மாலையாலே
அலங்கரிக்கப் பட்ட திருமுடியை யுடையவனை.
அம் மதுவிலே படிந்த வண்டுகள் விடமாட்டாதவாறு போன்று,
பகவத் விஷயத்தை விடமாட்டாத ஆழ்வார் ஆயிற்று அருளிச் செய்தார்.

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்-2-8-11-

வெள்ளத்திலே அலைவாரைப் போலே தேன் வெள்ளத்திலே வண்டுகள் அலையா நின்றுள்ள சோலையை உடைய
திரு வழுதி வள நாட்டை உடைய ஆழ்வார் அருளிச் செய்தது –

வண்டார் தண் ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரி கின்றனவே–5-2-2-

வண்டுகள் மாறாதபடியான செவ்வித் துழாய் மாலையை யுடையனாய்,
ஸ்ரீயபதி- திருமகள் கேள்வன் ஆகையால் வந்த ஏற்றத்தையுடையனாய் இருக்கிறவனுடைய-
ஸ்ரீய:பதித்வத்திலும் ஒப்பனையிலும் தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்.

பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங் கானல் திரு வல்ல வாழ்-5-9-6-

இவற்றின் குரல் த்வனியில் -ஓசையில் வெள்ளோசையாய்க் கழியுண்பது இல்லை,
பரப்பு அடங்கலும் பாட்டாக இருக்கும். என்றது,
இயல் கற்று இசையோடு கூட்டிற்று அன்று அவற்றுக்கு, பேச்சே தொடங்கி இசை என்றபடி.
தேன் போலே இனிய பாட்டு’ என்னுமது போய், வடிவே தேனாய்
அதற்கு மேலே பாட்டும் ஆனால் மிகவும் இனியதாயிருக்குமன்றோ.
அன்றிக்கே, பாண் குரல் – இசை ரூபமான மிடற்றோசை என்னுதல்.

குழல் என யாழும் என்னக் குளிர் சோலையுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்ல வாழ்-5-9-9-

குழல் என்னவுமாய் யாழ் என்னவுமாய் இருக்கை.
நாட்டில் இனியவற்றை எல்லாம் சேரக் கேட்டால் போலே இருக்கை.
“விஷ்ணுநா ஸத்ருஸோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்ஸந:”- பால. 1-18-
வீரியத்தில் விஷ்ணுவை ஒத்தவர், பிரியமாகப் பார்க்கப்படுவதில் சந்திரனை ஒத்தவர்” என்னுமாறு -.
ஒன்றற்குப் பல பொருள்களை உவமை -போலே
ஸ்ரமஹரமான சோலையிலே குளிருக்குப் பரிஹாரமாகத் தேனைக் குடித்து. அருந்தி – குடித்து.
முக்தமாய் -இளமையோடு கூடியதாய்க் தர்ச நீயமான -காண்பதற்கு இனியதாயிருக்கின்ற வண்டுகள்,
பிரீதிக்குப் போக்கு விட்டுப் பாடா நின்றுள்ள திருவல்லவாழ்.
செருக்கருமாய் ஸுகுமாரருமாயிருப்பார், ‘மரம்’ என்று சந்தனத்தைக் கழித்துப்
புழுகு நெய்யை ஏறிட்டுக்கொண்டு திரியுமாறு போலே,
இவையும் இயலை விட்டு இசையையே பாடுகின்றன வாதலின் ‘இசை பாடும்’ என்கிறது.

வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வட பாலைத் திருவண் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே–6-1-10-

சில வண்டுகளைக் குறித்து, அவர் இத் தலையில் சத்தையும் இல்லை என்று இருப்பர்,
அவளும் உளள் என்று சொல்லுங்கோள் என்று சொல்லுகிறாள்” என்று ஆளவந்தார் அருளிச்செய்வர்.
இத் தலை இல்லையாகில் அத்தலை உண்டாகக் கூடாது;
பெண் பிறந்தார் காரியம் எல்லாம் செய்தோம்’ என்று கிருதக்கிருத்யரா யிருக்குமவர்க்கு,
ரக்ஷ்ய வர்க்கத்திலே நானும் ஒருத்தி உண்டு என்று சொல்லுங்கோள்” என்று எம்பெருமானார் அருளிச் செய்வர்.

இவற்றை வேறுகொண்டு இரக்க வேண்டுவான் என்? என்னில்,
அவற்றினும் இவை பதஸ்தம் -பல கால்களை யுடையன ஆகையாலே.
இன்னம் ஒன்று, சபைக்கு அஞ்ச வேண்டாதே வளையத்தே இருந்து வார்த்தை சொல்லவும் வல்லனவே யன்றோ
அன்றிக்கே. “தேன் உண்ணும் வண்டே போல் பங்கிகள்”-பெரியாழ்வார் திருமொழி,-1. 8 : 2. ‘- என்றும்
அவனுக்குத் தலையான திருஷ்டாந்தமாகவும் சொல்லுவது இவற்றை அன்றோ.
செந்தாமரைப் பூவில் மதுபானம் பண்ணுகிற வண்டுகள் போலே –
சுருண்ட திருக் குழல்கள் வந்து உன் திருபவளத்தை மொய்க்கும்படியாக –தலையான திருஷ்டாந்தம்-

ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குரு நாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மா நெடுந் தேர்ப் படை நீறு எழச் செற்ற பிரான்
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே–6-8-3-

பேரளவுடையார் படும் ஈடுபாட்டினைக் கண்டு, தன் குழலின் வீறு தான் அறிந்திருக்குமே.
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டு ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ
என்பான் என்? காரியம் செய்து சமைந்தால் கைக் கூலி கொடுப்பாரைப் போலே? என்னில்,
இவற்றுக்கு இவள் குழலிலே விஷயம் உண்டாக வேணுமே.
இப்போது மது மாறிச் சருகாய் அன்றோ கிடக்கிறது;
இவை மீண்டால் அன்றோ இத் தலையில் செவ்வி பிறப்பது.
அவனுக்குத் தூது போய் வந்தாரிற் காட்டிலும் இவளுக்குத் தூது போனார்க்கு உண்டான தன்னேற்றம் இருக்கிறபடி.
அங்கு மஹா ராஜருடைய மது வனம் அன்றோ அழிந்தது;
இங்கு அவன் காவற் காட்டினை உங்களுக்குத் தருகிறேன் என்கிறாள்.
அளகாடவி அன்றோ.-தலையான பரிசில் அன்றோ இது தான்.

என்றும் இவள் குழலில் மது பானம் செய்வன வண்டுகளே அல்லவோ.
தூவி அம் புள்ளுடைத் தெய்வ வண்டாதல்-திருவாய்.-9. 9 : 4.–
இவை யாதல். அவனேயோ சாம்யா பத்தி – ஒத்த தரத்தைத் தர வல்லான்,
நானும் உங்களுக்கு அவனோடு ஒத்த தன்மையைத் தருகிறேன் என்கிறாள். என்றது,
ஸோஸ்நுதே – அந்த முக்தன் பரமாத்வோடு அநுபவிக்கிறான்” என்கிறபடியே,
உங்களையும் அவனையும் ஒரு கலத்திலே ஊட்டுகிறேன் என்கிறாள் என்றபடி. தலையான ஊண் அன்றோ.
உங்கள் வரவாலே தளிர்த்திருக்கிற என்னுடைய குழலில் ஒளியை யுடைத்தாய்
ஸ்லாக்யமான மலரில் மதுவைப் பானம் செய்யீரோ?
ஊதிரோ-மதுவின் நிறைவாலே, கிண்ணகத்தில் இழிவாரைப் போலே தனித்து இழிய மாட்டாமல்
நின்று பறக்கிற படியைத் தெரிவிப்பாள் ‘ஊதிரோ’ என்கிறாள்.
உங்கள் காரியமும் பர ரக்ஷணமுமானால் -பிறரைப் பாதுகாப்பதுமானால் ஆறி இருக்கிறது என்? என்கை,
கூடிய வண்டினங்காள் –மஹா ராஜரைப் போலே படை திரட்ட வேண்டா அன்றோ உங்களுக்கு
என்னுடைய ரக்ஷணத்திலே ஒருப்பட்டு முன்பே திரண்டிருக்கப் பெற்றது அன்றோ.
இளைய பெருமாள் கிஷ்கிந்தா நகரத்தின் கோட்டை த்வாரத்திலே -வாசலிலே சென்று
குண கீர்த்தனம் செய்த பின்பன்றோ படை திரட்டிற்று.

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்–9-5-9-

மதுபான மத்தமாய் -தேனைக் குடித்து மயங்கிப் பாடுகின்ற சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து
உங்கள் த்வனி -இசை எனக்கு துஸ்ஸஹமாய் -பொறுக்க ஒண்ணாததாய் இருந்தது
நீங்கள் பாடாதே கொள்ளுங்கோள் –என்கிறாள்-

தூதுரைத்தல் செப்புமின்கள் தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும் பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே–9-7-6-

இனிய பேச்சை உடைய வண்டுகாள் –
அவன் அநாதரிக்கிலும் -விரும்பானாகிலும் உங்கள் பேச்சு இனிமையாலே
வர வேண்டும்படி அன்றோ பேச்சு இருப்பது –
பூக்களிலே இரைத்துக் கொண்டு-மது பானம் -தேனைக் குடிக்கும் பொழில்
அன்றிக்கே
மலர்கிற காலத்தில் சென்று தேனைக் குடிக்கும் சோலை என்னுதல்
உங்களுக்கு மீட்சியில் ஆகவும் வேண்டா
ததிமுகன் முதலானோர் காவலும் இல்லை
முன்பு தேனைக் குடிக்கிறவர் களோடு தேனைக் குடிக்க அமையும் –
நீங்கள் சொல்லும் அத்தனையே வேண்டுவது
உங்கள் வார்த்தை கேட்டிருக்கவும் கேட்டுக் கொண்டாடுகைக்கும் புருஷகாரம் உண்டு -என்கை-

எனக்கு ஓன்று பணியீர்காள் இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும் வண்டினங்காள் தும்பிகாள்
கனக் கொள் திண் மதிள் புடை சூழ் திரு மூழிக் களத்து உறையும்
புனக் கொள் காயா மேனிப் பூந்துழாய் முடியார்க்கே–9-7-8-

சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து அங்கு உள்ளவனுக்கு என்ன தீங்கு வருமோ -என்று
அஞ்ச வேண்டாதபடி ஸூ ரஷிதமான தேசத்திலே – காவல் உள்ள இடத்தில் அவன் இருக்கப் பெற்றோம்
இனி எனது ஆர்த்தியை -துன்பத்தை அறிவியுங்கோள் -என்கிறாள்

தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-

பெரிய திருவடியை உடைய தெய்வம் ஆகிற வண்டாலே ஆத்த -எடுக்கப் பட்ட சாரத்தை உடையதான
என்னுடைய பெண்மை யாகிற பூ -பெண்மையாம் பூ -பாட பேதமும் உண்டே –
ஏவம் -இந்த விதமாய் நலிய -நலிவு படா நின்றது –

வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து அண்ட வாணன் அமரர் பெருமானையே-9-10-3-

வண்டுகள் மதுபான மத்தமாய் -தேனை உண்டு அதனால் மயக்கம் கொண்டு
பாடா நின்றுள்ள சோலை சூழ்ந்த தேசம்
ஏதத் சாமகாயான் ஆஸ்தே-தைத்ரியம் -10–அந்த சாம வேதத்தைப் பாடிக் கொண்டு இருக்கிறார்கள் -என்றபடியே
வண்டு பாடும் சோலை -என்கிறார் –
இதனால் நிரதிசய போக்யமான -எல்லை இல்லாத இனிமை உடைய தேசம் -என்பதனை தெரிவித்த படி –

——————–

மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும்
தண்டுழாய்க் கண்ணனையே காண்க நங்கண் —ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி——8–

பிரளயம் வரும் என்று ஏற்கவே கோலி திரு வயிற்றிலே வைத்து-வெளி நாடு காண உமிழ்ந்து –
நிரதிசய போக்ய பூதனான ஸூலபனான கிருஷ்ணனையே விரும்பிக் காண வேணும் கண்

காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண்டார கலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான செம்பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை ——35–

காண வேணும் காண வேணும் என்று விரும்பி நின்றன கண்கள் ஷாம காலத்தில்
பசல்கள் சோறுசோறு -என்னுமா போலே –
வண்டுகள் மீட்கில் இறே என் இந்த்ரியங்களை மீட்கலாவது –
நமக்கு இவற்றின் கீழ் குடி இருப்பு அரிதான பின்பு இனி நாமும் அவனுடைய
ஸ்லாக்யமான திருவடிகளை வாயாரப் பாடி கையாலே தொழுவோம் –

பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல் -திரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன்
நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ———-55-

———————————

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –ஸ்ரீ –திரு விருத்தம் -30-

ஜந் த்ரவ்யா கரண பண்டித -சிறிய திரு வடி -ஸ்வத சர்வஞ்ஞன் –ஸ்ரீ கிருஷ்ண பகவான்-
தூது போக கடவத்தை உங்களை இரவா நின்றேன்-
என் தசை–உத்தியோகமும் மிகை என்று இருக்கும் அளவுக்கு அவ் அருகும் சொன்ன படி
அஞ்சலிக்கு அவ் அருகு இல்லை-என்று இருக்க இரப்பவும் செய்தேன்-

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே -49 –

வண்டுந்துழாய் -ஒப்பனையால் வந்த அழகை சொல்லுகிறது –

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55-

இத்தால் பர வியூக விபவாதிகள் எங்கும் புக்கு பகவத் குணங்களை அனுபவித்து
திரிகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அக்குணங்களில் அவஹாகித்து இருக்கிற இவர் படி
நீங்கள் அனுபவிக்கிற அவ்விஷயத்தில் தானுண்டோ -என்று தம்மை அனுபவிக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தையை -அவர்கள் பாசுரத்தாலே தாம் அனுபவிக்கிறார் –
அம்பஸ்யபாரே-புவனஸ்ய மத்யே -நாகச்யப்ருஷ்டே -என்னக் கடவது இறே –
அம்பஸ்ய -வியூகம்
புவனஸ்ய -விபவம் அர்ச்சை
நாகசா -பரம்
இவையே இங்கு மூன்று வித மலர்கள் என்று உரைக்கப்பட்டன –

——————-

ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை-152-

வண்டு தும்பிகள் என்கிறது யாரை என்று அருளிச் செய்கிறார் மேல்–

என் பெறுதி என்ன பிரமியாது உள்ளத்துளூறிய மது வ்ரதமாய் தூமது வாய்கள் கொண்டு
குழல் வாய் வகுளத்தின் சாரம் க்ரஹித்துத் தே தென வென்று ஆளம் வைத்துச் சிறு கால் எல்லியம் போது
குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக் கொள்ளப் பாடித் துன்னிட்டு நெருக்க நீக்கென்று கடந்து புகும்
தகைவறப் புக்கு வண்டு ஒத்து இருண்ட குழலிலே சங்கை அற மருவி அருளாத யாம் என்று ஓடி வந்து
வாசமே ஊதி வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்
சேமமுடை நாரதர் முனி வாஹனர் தம்பிரான்மார் போல்வாரை வண்டு தும்பி என்னும்-

அதாவது
1-என் பெறுதி என்ன பிரமியாது
கோல் தும்பீ ஏரார் மலர் எல்லாமூதி நீ என் பெறுதி–பெரிய திருமொழி -8-4-5 – என்று
நிவர்திப்பிக்க வேண்டும் படி- அப்ராக்ருத விஷயங்களை போக்கியம் என்று பிரமியாதே-
(இது ஒன்றே வண்டுகளும் தும்பிகளுக்கும் இவருக்கும் உண்டான வாசி -மேல் எல்லாம் ஒற்றுமைகள் –
( ஒன்பதோடு ஓன்று -முதல் மட்டும் -பிரமிக்காமல் -வண்டு பிரமரதம் என்பர் – -எதிர்மறை -மற்றவை எல்லாம் சாம்யம் ))

2-உள்ளத்துளூறிய மது வ்ரதமாய் –
களங்கனி வண்ணா கண்ணனே என் தன் கார் முகிலே என நினைந்திட்டு
உளம் கனிந்து இருக்கும் அடியவர் உள்ளத்துளூறிய தேனை -பெரிய திருமொழி-4-3-9-என்று
தன்னுடைய சௌந்தர்ய சீலாதிகளை நினைத்து ஹிருதயம் பக்குவமாய் இருக்கும்
சேஷ பூதருடைய ஹிருதயத்தில் ஊறிய தேனை -என்கிற பகவத் விஷயம் ஆகிற மதுவை விரும்பி –
த்வாம் ருதஸ்யந்தினி பாத பங்கஜே நிவேசிதாத்மா கதமன்யதிச்சதி –
ஸ்திதேரேவிந்தே மகரந்த நிர்ப்பரே மது வ்ரதோ நேஷூரகம் ஹி வீஷதே – ஸ்தோத்ர ரத்னம் -27-என்கிறபடி-
மற்று ஒன்றை புரிந்து பாராதே இத்தை புஜிக்கையே வ்ரதமாக உடையவராய் —

3-தூ மது வாய்கள் கொண்டு —
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டு-திருவாய்-6-8-3- -என்று
பகவத் போக்யதா அனுபவத்தாலே பரிசுத்தமான இனியதான வாயைக் கொண்டு ..

4-குழல் வாய் வகுளத்தின் சாரம் க்ரஹித்து –
என் குழல் மேல் ஒளி மா மலரூதீரோ -திருவாய் -6-8-3–என்கிறபடியே
நாள் கமழ் மகிழ் மாலை மார்பர் –4-10-11–ஆகையாலே வகுள தாரரான ஆழ்வார் உடைய
வைகுந்த மன்னாள் குழல் வாய் விரை போல் விண்டுகள் வாரும் மலருளவோ நும் வியலிடத்தே–திருவிருத்தம் –55 -என்று
பரத்வாதிகள் போக்யதையும் பரிச்சின்னம் என்னும் படியான திருக் குழலிலே வைத்த –
ஒளி மா மலரான-வகுளத்தின் சாரத்தை கிரஹித்து அவ்வழியாலே
இத் தலையில் போக்யத்தை அனுபவித்து –

5-தே தெனவென்று ஆளம் வைத்து –
வரி வண்டு தே தென வென்று இசை பாடும் –பெரிய திருமொழி -4-1-1-
யாழின் இசை வண்டு இனங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே–பெரியாழ்வார் -4-8-6–என்கிற படியே
இப்படி பகவத் பாகவத போக்யதைகளை அனுபவித்து -செருக்குக்குப் போக்கு வீடாக ஆளத்தி வைத்து-
(இத்தால் யாழில் இசை வேதத்து இயல்களை வாயாரப் பாடிக் கொண்டு இருக்கும்படியைச் சொன்னவாறு )

6-சிறு கால் எல்லியம் போது குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக் கொள்ள பாடித் —
(இத்தால் -எம்மானைச் சொல்லிப் பாடி -பண்கள் தலைக் கொள்ளப் பாடி –
வேத முதல்வனைப் பாடி -கொண்டு இருத்தலைச் சொன்னவாறு )
அறுகால் வரி வண்டுகள் ஆயிரம் நாமம் சொல்லி சிறு காலை பாடும்
தென் திருமாலிருஞ்சோலையே –பெரியாழ்வார் -4-2-8–என்றும் –
எல்லியம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி — பெரியாழ்வார்-4-8-8–என்றும்
(மல்லிகை வெண் சங்கூதும் பெரியாழ்வார்-4-8-8–மல்லிகை பூ மலர -காற்று வீச சங்கு போல இசை வருமே )
வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் -பெரிய திருமொழி -2-1-2-என்றும் –
வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் -பெருமாள் -8-4-என்றும் –
கந்தார மன் தேனிசை பாட-பெரிய திருமொழி -3-8-1 -என்றும் –
என்கிறபடியே காலோசிதமான பண்களை –
பண்கள் தலைக் கொள்ளப் பாடி-திருவாய் -3-5 2–என்கிற படி தலைமை பெறும் படி பாடி —

7-துன்னிட்டு நெருக்க நீக்கு என்று கடந்து புகும் தகைவற புக்கு –
(இத்தால் வண்டுகள் மிக நெருக்கமான இடங்களிலும் தடை இன்றி செல்லும் -தன் இனமான பொருள்களோடு நட்பு கொள்ளும் –
இறைவன் சந்நிதியில் அச்சம் சிறிதும் இன்றி நிற்கும் –
அவ்வாறே இவர்களும் நேச நிலைக்கதம் நீக்கு என்று சொல்லி -பொன்னியியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு-
அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களோடே சேர்ந்து -அஞ்ச வேண்டிய அபராதம் சிறிதும் இல்லாமையால் சங்கை இல்லாமல்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி நிற்பார்கள் -என்கிறது )
பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் துன்னிட்டு புகலரிய –பெருமாள் -4-3-என்றும் –
சுந்தரர் நெருக்க –திருப்பள்ளி எழுச்சி –7-என்றும் –
சொல்லுகிறபடியே திரு வாசலிலே சேவாபரர்கள் நிறைந்து -தலை நுழைக்க ஒண்ணாத படி நெருக்க –
நேச நிலை கதவம் நீக்கு–திருப்பாவை –16 -என்று
திரு வாசல் காப்பானை திருக் கதவு திறக்க வேணும் என்று அபேஷித்து ,
பொன்னியியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு -பெரிய திருமடல் –73-என்கிறபடி-
திருஷ்ட்டி சித்த அபஹாரம் பண்ணும் திரு வாசல் அழகிலே துவக்கு ஒண்ணாதே –
அத்தை கடந்து புக வேண்டுகையாகிற தகைவு அற –
பாடுவாரான அந்தரங்கதை யாலும் ஏகாக்ர சித்ததையாலும் போய்ப் புக்கு

8-வண்டு ஒத்த இருண்ட குழலில் சங்கை அற மருவி –
வண்டு ஒத்த இருண்ட குழல்-பெரியாழ்வார் -2-5-7-என்கிறபடியே -ஸ்வசமான விஷயம் உள்ள இடத்தில் சேர்ந்து –
நீ மருவி அஞ்சாதே நின்று–திரு நெடும் தாண்டகம் -26- என்கிறபடி நிச்சங்கமாக அவனுக்கு சமீப வர்திகளாய்–

9-அருளாத யாம் என்று ஓடி வந்து வாசமே ஊதி- –
அருளாத நீ அருளி–திருவாய் -1-4-6 -என்றும் ,
யாமிதுவோ தக்கவாறு–திருவாய் –6-8-4-என்றும் ,
இத்தலையில் ஆர்த்தியை அவனுக்கு அறிவித்து –
ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ-திருவாய் -6-8-3 -என்று
அவனோடு கூட வர இராதே முந்துறவே ஓடி வர வேண்டும் என்று அபேஷித்து விட்ட படியே –
இத்தலையில் ஆர்த்திக்கு ஈடாக அவன் வரவை அறிவிக்க விரைந்து வந்து —
தங்கள் வரவாலே -இத்தலையில் வந்த செவ்வியை அனுபவித்து –
மிக்க சீர் தொண்டர் இட்ட பூம் துளவ வாசமே வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் –பெரிய திருமொழி -11-1-9-
என்கிற படியே-அத் தலையில் தாங்கள் அனுபவித்த போக்யதையை –தங்கள்
வாக்காலே -வரவாலே இத் தலைக்கு பிரகாசிப்பியா நின்று கொண்டு ஆஸ்வசிப்பித்து-

10-வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்-இத்யாதி –
கொங்குண் வண்டே கரியாக வந்தான் -பெரிய திருமொழி -9-3-4-என்கிறபடி
சாகாக்ர சார க்ராஹியாய்-ஷட்பத நிஷ்டராய்–பஷ த்வய யோகத்தாலே –
அப்ரதிஹத கதியானவரை முன்னிட்டு அங்கீகரிக்குமவனாய் —
தூவியம் புள்ளுடை தெய்வ வண்டு -திருவாய் -9-9-4-என்று
வேதாந்த்ய வேத்யன் என்று தோற்றும் படி –
கருட வாஹனாய் – சார க்ராஹியாய் இருக்கிற சர்வேஸ்வரனுடன் சேர்விக்கும் —

சேமமுடை நாரதன் -பெரியாழ்வார் -4-9-5-என்று
ப்ரஹ்ம பாவனை ஏக நிஷ்டதையாய் ஆகிற ரஷையை உடையவனாய் –
பகவத் குண அனுபவ ஹர்ஷ பிரகர்ஷத்தாலே நிருத்த கீத பரனாய் இருக்கும் ஸ்ரீ நாரத ப்ரஹ்ம ரிஷி —
(மஹதி நாரதருடைய வீணைக்கு பெயர்-கர்ம -உபய -பாவனை இல்லாமல் ப்ரஹ்ம பாவனையில் மட்டும் இருக்கும் க்ஷேமம் )
லோக சாரங்க மகா முநிகளால் வஹிக்க படுகையாலே முனிவாஹனர் என்று நிரூபிதரான திருப் பாண் ஆழ்வார் ,
திரு வாய் மொழி இசையே தங்களுக்கு போக்யமாய் இருக்கிற தம்பிரான்மார் போல்வாரை –
( அரையர் ஸ்வாமிகளை -பாவின் இன்னிசை பாடித்திரிவனே என்று உள்ள வர்கள் என்றவாறு )
இக் குண சாம்யத்தாலே – வண்டு என்றும் தும்பி என்றும் சொல்லும் என்கை–

தும்பி ஆவது ப்ருங்க ஜாதியிலே – ஓர் அவாந்தர பேதம் —
ஆகையால் இறே -வண்டினங்காள் தும்பிகாள் -என்று ஏக ஸ்தலத்திலே இரண்டையும்
பிரிய அருளிச் செய்தது-

———————————————————-———————————————————-———————————————————-———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் / ஸ்ரீ உ வே புருஷோத்தம நாயுடு ஸ்வாமிகள் தமிழ் உரை குறிப்புக்களுடன்- சூர்ணிகை –226–

April 11, 2020

க்ருதஞ்ஞதா பல ப்ரதி க்ருதமானத்தை யுணர்ந்து -அங்கும் இங்கும் இல்லை என்று ஆறி இருக்காமல் –
செய் நன்றி பண்ண உந்தி-பிரதி க்ருதமானம் -ஆத்மாவை உணர்ந்து -தோள்களை ஆரத்தழுவி –
நியத பிரகாரம் -சரீரம் -நாமே நீர் -தன்மையை அவன் காட்ட உணர்ந்து -பிரகாரம் -அபிருத்தக் சித்தம் –
சீதா பிராட்டியை ஜனகர் சமர்ப்பித்தது போலே அஹந்தா அவளே – -அனைத்தும் அவனது சரீரம் என்று உணர்ந்து –
சமர்ப்பிக்க ஒன்றும் இல்லை என்று ஸமாஹிதரானார் –

ப்ராப்ய ப்ராபக ஆபாசகங்கள் ஒழிந்து முதல் படி
ப்ராப்யம் -திருவேங்கடம் நடுவில்
ப்ராப்யம் அவதி -திருவாறன் விளை -கீழே பார்த்தோம்
ப்ராப்யம் ஏக பரர் ஆக்குகிறார்
பயிலும் சேஷிகள் -நெடுமாற்கு அடிமை-அவர்களே போக்யம் -ததீய சேஷத்வம் -பாகவதர்கள் சேஷிகள் –
அவனுக்கே சேஷபூதன் -8-8-/-8–9-உகாரம் நமஸ் அர்த்தம்
ஆந்திர அபிப்ராயம் –பாகவத சேஷத்வம் பாரதந்தர்யம் -8-10-கொடு மா வினையேன்
அடியார் உடன் கூடும் இது அல்லாமல் பழுதே பலகாலம் போயின என்று அழுகிறார்
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
செல்வச் சிறுமீர்காள் -முதலிலே ஆண்டாள்

சத்ய காமத்வம்-எட்டாம் பத்தில்

பதிகங்கள் சங்கதி –
திருவாறன் விளை–ஆனந்தமாக பாட -தன்னைப் பார்த்து -பாஹ்ய சம்ச்லேஷம் இல்லாமல் வியசனப்பட்டார் –
ஆஸ்ரித பாரதந்த்ரம் குணத்தில் சங்கை -அசேஷ பிரகாரத்வம் -ஸ்வரூபத்திலும் சங்கை–இரண்டும் தஞ்சமாக நினைத்து இருந்தாரே –
அதி சங்கை பண்ணக் கூடாது ஆழ்வீர்-உபகார பரம்பரைகளை காட்ட – ப்ராபக பிரதான பதிகம் –8-1-ஸமாஹிதரானார் –
தனது பாக்ய குறைவு –சீதாப் பிராட்டி போலே -முகம் காட்ட வில்லை –
தமக்கு அந்ய ருசி தவிர்ந்ததை அறிவித்து -அத்தனையும் விட்டேன் -8-2-ப்ராப்ய விரோதிகளும் ப்ராபக விரோதி களும் இல்லை
-8-2-4-பெருங்குளத்துக்கு ஒரு பாசுரம் -குடபால் நின்ற மாயக் கூத்தன்–மங்களா சாசனம் –
கோல நீல நல் நெடும் குன்றம் வருவது ஓப்பான் -8-2-10–பாசுரம் வந்ததும்
பரிவர் இல்லையே கலங்கி -8-3-இதில் வருவார் செல்வார் திரு வாழ் மார்பன் –
அமர்ந்த திருக்கோலம் -ஒரே திவ்ய தேசம் மலையாள திவ்ய தேசங்களில் இது –
நீர் இருக்க சர்வரும் இருந்தது போலே என்று காட்டி அருள –
சுக்ரீவன் கலங்க வீர ஸுர்ய பராக்கிரமம் காட்டியது போலே -மஹா மதிகள் அச்சம் கெட -திருச் சிற்றாறு பதிகம் -8-4-
திகழ என் சிந்தையுள் இருந்தான் -பாசுரம் -அணைக்க முடியாமல் -மாயக்கூத்தா -ஒரு நாள் காண வாராய் -வாசத் தடாகம் போல் -8-5-
இது வரை ஆழ்வார் விடாய்–
மேலே-8-6- பெருமாளுக்கு ஆழ்வார் மேல் உள்ள விடாய் -இப்படி ஆழ்வாரை உருவாக்க எத்தனை ஜென்மங்கள் –
தண்டகாரண்ய ரிஷிகளைக் கண்டு வெட்கி பெருமாள் –
வந்து திருக் கடித்தானாம் நின்றார் -தங்குவீடாக –நாளை வதுவை மனம் -பரதனை ஆசுவாசப்படுத்தி பெருமாள் –
பாண்டவ தூதன் -விதுரர் போல்வார் ஆசுவாசப்படுத்த -குசஸ்தலம் தங்கி -வந்தது போலே
எல்லியும் காலையும் –8-6-திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் –
பேற்றுக்கு கிருஷி பண்ணினது இது வரை -பக்தி உழவன்
கிருஷி பலித்தது வேலி போட்டு பாதுகாக்க -8-7–இருத்தும் வியந்து –மூன்று தத்துக்கு பிழைத்து வந்த குழந்தையை
தாய் பார்த்துக் கொண்டே இருப்பது போலே வியந்து இருத்தும் –
கண்டு கொண்டு எனது ஏழை நெஞ்சை ஆளும் –
பிராதி கூல்யம் போக்கி –அனைத்தையும் அவனே பண்ணி -ஆழ்வார் கிடைப்பாரா தவித்தார் –
சுக்ரீவன் நாதம் இச்சதி -விபீஷணன் கிடைப்பானா -போலே –
கண்களால் பருகுமா போலே பார்த்தார் –
மெய்யே ஆஸ்ரித பாரதந்தர்யம் உடையவர் என்று தெளிந்தார் இத்தால்
இவர் அகலப் பார்க்கும் பிரகிருதி -ஆத்மாவின் வை லக்ஷண்யம் புரிய வைக்க -8-8–கண்கள் சிவந்து –
கரிய வாய் வாயும் சிவந்து -ஆழ்வாரைப் பெற்ற பின்பே சோகம் தீர்ந்து -தலை அசைய குண்டலங்கள் ஒளி வீச
அடியேன் உள்ளான் -இயத்தா ராஹித்யம்-படியே இது என்று குறைக்கலாம் படி அல்லன்-பராத்பரன் –
உணர்வில் உள்ளே இருத்தினேன் -அதுவும் அவனது இன்னருளே- பரமாத்மா ஸ்வரூபம் உணர்ந்தீரே ஆழ்வீர்
நியத பிரகாரம்–ஸ்ரீ கௌஸ்துபம் போலே அன்றோ பகவத் சரீரம் -நீர் பிரிந்து போக முடியாதே –
யானும் தானாய் ஒழிந்தானே–
இவ்வளவு நெருக்கம் இருக்க -சேஷ ரசம் அறிந்து -அடியேன் உள்ளான் -அடிமை தன்னை அனுபவிக்க
அநந்யார்ஹ சேஷத்வம் -பர்யந்தம் –வளர -தோழி பதிகம் -மண விலக்கு -குட்ட நாட்டுத் திருப்புலியூர் –இவர் நேர் பட்டாள்-
உகாரம் நமஸ் சப்தார்த்தம் -அநந்யார்ஹத்வம் சம்பந்தம் -அவனுக்கே -நான் எனக்கு உரியன் அல்லேன் -பாரதந்தர்யம் –
அதன் யாதாத்ம்யம் -ஆழ்ந்த பொருள் -ததீய சேஷத்வம் பர்யந்தம் -நெடுமாற்கு அடிமை -8-10-
பிரியா அடிமை -சயமே அடிமை தலை நின்றார் -கோதிலா அடிமை –
அம்மணி ஆழ்வான் கோசல சாம்ராஜ்யம் வந்தவருக்கு இந்த பதிகம் கால ஷேபம் பட்டர் சாதித்த ஐதிக்யம்

எட்டாம் பத்தால்-

கீழ் சொன்ன சர்வ சக்தி யோகத்தாலே நித்யமாக கல்பிதமான –
போக்ய – போக உபகரண -போக ஸ்தானங்களை உடையவன் ஆகையாலே –
சத்ய காமனான சர்வேஸ்வரன் -கீழ்
தமக்கு உண்டான வாசிகமான அடிமையையும் விஸ்வமரித்து -தன் அனுபவ அலாபத்தாலே
கலங்கி -தன்னுடைய குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கை பண்ணி –
சம்சார தோஷ அனுசந் தானத்தாலே -அஞ்சின இவரைத் தரிப்பிக்கைக்காக –
பூர்வோக்த உபகாரத்தை ஸ்மரிப்பிக்க –
அத்தாலே க்ருதஜ்ஞராய் -அதுக்கு பலமாக –
இவர் ஆத்ம சமர்ப்பணம் பண்ண –
(பேர் உதவிக் கைம்மாறா தோள்களை ஆரத்தழுவி என்னுயிரை அற விலை செய்தனன் சோதீ – 8-1-10)
அத்தாலே தான் பெறாப் பேறு பெற்றானாய்-
இவருக்கு உண்டான ஆத்ம குணங்களாலே அதி ப்ரீதனாய் –
இவர் திரு உள்ளத்திலே இருந்து நிரதிசயமாக அனுபவிப்பித்து –( 8-6-8-7-)இனி
அயோக்யர் என்று அகலாதபடி ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தைப் பிரகாசிப்பிக்க –(8-8)
அதனுடைய யாதாத்ம்யத்தை அனுசந்தித்தவர்
கீழ் தம்முடைய பிராப்ய பிராபகங்களை கேட்டு உகந்தவர்கள் –
பிராப்யம் ஒன்றும் -பிராபகம் ஒன்றுமாய் -இரு கரையர் ஆகாதபடி –
பிராப்யமாக சொன்ன விஷயம் ஒன்றிலுமே அவர்களை தத் பரர் ஆக்குகிறார் என்கிறார் ..

(உப பத்தேச ச பொருந்துகிறபடியால் ப்ராபகமான ப்ரஹ்மமே ப்ராப்யம் -வேத வியாசர் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்
இங்கு பிராப் யமான அர்ச்சா திவ்ய தேசமே பிராபகம் –
பாகவதர்களே ப்ராபகம்–அவதியையும் தாண்டி ஒன்றாக -திவ்ய தேசமே இருக்குமானால்
பாகவதர்கள் இருக்கச் சொல்ல வேணுமோ – கிம் புன நியாயம் )

——————————————-

1-தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு
என்னும்படி சக்தியாலே நித்யமாக கல்பித்த
பத்னி பரிஜனாதிகளை உடைய சத்ய காமன்
கொண்ட வாக் வ்ருத்தியையும் மறப்பிக்கும்
கலக்கமும் சங்கையும் அச்சமும் தீரத்
2-தலைச் சிறப்ப தந்தவதில் க்ருதஜ்ஞதா பல
பிரத்யு உபகாரமாக வேந்தர் தலைவன்
கன்யகா தானம் போலே ஆரத் தழுவி
அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே
அதீவ விளங்கிப் பணைத்து
3-ஜன்ம பாசம் விட்டு ஆத்வாரம் ஆளும் ஆளார்
என்று பரிந்து அனுரூபனோடே அமர்ந்து பிரிவில்
க்ருபண தசையாகத் துவரும் சீதா குணங்களாலே
ப்ரீதி வர்த்தித்து
4-தித்திக்க உள்ளே உறைந்தது கண்டு கொண்டு இருந்து
அமானுஷ போகம் ஆக்கினவன்
5-மூன்று தத்துக்குப் பிழைத்த அருவினை நோய்
மறுவலிடாமல் சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட
6-தேஹாதிகளில் பரமாய் ,நின்று நினைக்கில் லஷ்மீ துல்யமாய் –
அவர்க்கே குடிகளாம் பர தந்திர ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்
7-ஸ்வ சாதன சாத்யஸ்தர் இருகரையர் ஆகாமல்
மண்ணவரும் வானவரும் நண்ணும் அத்தையே
குறிக் கொண்மின் உள்ளத்து என்று
பிராப்ய ஏக பரர் ஆக்குகிறார்
எட்டாம் பத்தில் ..

(சத்யகாமன் -ஆத்ம லாபத்தாலே அதீவ விளங்கி -பணைத்து -ப்ரீதி வர்த்தித்து -உறைந்து -கண்டு கொண்டு இருந்து –
அமானுஷ போகம் ஆக்கினான் -அங்கனம் ஆக்கினவனாகி நோய் மறுவலிடாமல் சிறியேன் என்றதன் பெருமையைக் காட்டினேன் –
காட்டக் கண்டு அனுசந்தித்த ஆழ்வார் ஸ்வ சாதன சாத்யஸ்தர் -இருகரையராகாமல் -அவர்களை ப்ராப்ய ஏக பரராக்குகிறார் -என்றபடி-

வேந்தர் தலைவன் -ஜனக மகாராஜன் / ஜென்ம பாசம் விட்டு-முதல் – சீதா குணங்களால் -வரை
ப்ரீதி வர்த்திக்க காரணங்கள் -சீதா பிராட்டி -ஆழ்வார் சாம்யம் சொல்லிற்று இத்தால் )

————————————–

1-தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு
என்னும்படி சக்தியாலே நித்யமாக கல்பித்த
பத்னி பரிஜனாதிகளை உடைய சத்ய காமன்-
அதாவது-
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார் மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி-8-1-1- -என்றும் –
பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே யாம்–8-3-6-என்றும் –
நேர்பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன்–8-9-11-என்றும் –
நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த-8-10-11 -என்றும்
லஷ்மீ பிரப்ருதி திவ்ய மகிஷிகளுக்கு வல்லபனாய் -நித்ய ஸூரிகள் ஏவிற்றுச் செய்ய –
அவர்கள் சேஷ வ்ருத்திக்கும் -ஜ்ஞானாதிகளுக்கும் தானே விஷயமாய் –
தன்னோடு பொருந்தி பூர்ணமாய் கட்டளைப் பட்டு இருக்கிற லோக
த்ரயத்துக்கும் நிர்வாஹனாய் இருக்கும் என்னும் படி —
கீழ் சொன்ன சக்தி தன்னாலே நித்யமாக கல்பிக்க பட்ட -பத்னி பரிஜன ஸ்தான –
போக்ய போக உபகரணங்களை உடையவன் ஆகையாலே
சத்ய காமனாய் இருக்கிறவன்-

கொண்ட வாக் வ்ருத்தியையும் மறப்பிக்கும் கலக்கமும் சங்கையும் அச்சமும் தீரத்
அதாவது
உம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ள வைத்தோம் -என்று
தான் இவரைக் கொண்டு வாசிகமான அடிமையும் விஸ்மரிக்கும் படி ஆக்கின –
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி -8-1-2–என்று
தன்னைக் கண்டால் கண்டு அனுபவிக்கப் பெறாமையால் வந்த கலக்கமும் –
அவ்வளவு இன்றிக்கே –
உமர் உகந்து உகந்து -8-1-4–என்று தொடங்கி –அறிவொன்றும் சங்கிப்பன்—8-1-4-என்று
தன்னுடைய ஆஸ்ரித பாரதந்த்ரமாகிய குணத்திலும் –
இறந்ததும் நீயே -8-1-7–என்று தொடங்கி –அறிவொன்றும் சங்கிப்பன்–8-1-7-என்று
தன்னுடைய சர்வ பிரகாரித்வம் ஆகிய ஸ்வரூபத்திலும் -பண்ணிய சங்கையும் –
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல்-8-1-9–என்று
சம்சார தோஷ அனுசந்தானத்தால் வந்த அச்சமும் நிவ்ருதம் ஆகும் படியாக
( கலக்கம் -குண சங்கை -ஸ்வரூப சங்கை -அச்சம் -நான்கும் தீரும் படி )

————————————-

2-தலை சிறப்ப தந்தவதில் க்ருதஜ்ஞதா பல பிரத்யு உபகாரமாக-
அதாவது-
தாள்களை எனக்கே தலை தலை சிறப்பத் தந்த-8-1-10- -என்னும்படி-
மலரடி போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க பல அடியார் முன் அருளிய –7-10-5-
என்று பராசராதிகள் -முதல் ஆழ்வார்கள்- உண்டாய் இருக்க -தம்மைக் கொண்டு வாசிகமான அடிமையைக் கொண்ட
பூர்வோ உபகாரத்தை ஸ்மரிப்பிக்க –
(மலர் அடிப் போதுகளை பிரார்த்திக்க தாள்களை எனக்கே தலை சிறப்பத் தந்தானே )
அப்படி மிக சிறக்கும்படி உபகரித்ததில் தமக்கு உண்டான
க்ருதஜ்ஞ்தைக்கு பலம் சத்ருச பிரதுபகாரம் ஆக-

வேந்தர் தலைவன் கன்யகா தானம் போலே ஆரத் தழுவி அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே-
அதாவது
உதவிக் கைம்மாறு என் ஆர் உயிர் என்ன -உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -7-9-10–என்று
கீழ் பிரதுபகாரமாக ஆத்மாவை சமர்ப்பிக்கத் தேடி அதின் பகவதீயத் அனுசந்தானத்தாலே
நிவ்ருத்தர் ஆனபடியும் அறியாதபடி -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தால் கலங்கி –

வேந்தர் தலைவன் சனகராசன்-என்கிறபடி
ஷத்ரிய அக்ரேசனராய் -ஜ்ஞானாதிகனான ஜனக ராஜன் -மகோஸ்வரமான தனுர் பங்கம் பண்ணின
பெருமாள் ஆண் பிள்ளைத் தனைத்தை கண்ட ஹர்ஷத்தால் கலங்கி –
விஷ்ணோஸ் ஸ்ரீரீர அனபாயிநீ – ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-8-17–என்கிறபடியே -தத் அப்ருதக் சித்தையாய் –
ராகவத்வே பவத் சீதா – ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-9-144–என்று தத் அவதார அனுகூலமாக அவதரித்த பிராட்டியை –

இயம் சீதா மம ஸூதா சஹ தர்ம சரீதவ -பிரதீச்ச சைனாம் பத்ரம் தே பாணிம்
க்ருஹ்னீஷ்வ பாணிநா-பால–73-26 -என்று சமர்ப்பித்தாப் போலே-( மமகாரம் விட்டவன் மமகாரம் )
பேர் உதவிக் கைம்மாறத் தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை செய்தனன்-8-1-10–என்று
அமூர்தமாய் இருக்க செய்தே -உபகார ஸ்ம்ருதியால் வந்த ஹர்ஷத்தாலே –

தாளும் தோளுமாய் பணைத்துத் தோற்ற -பாவன பிரகர்ஷத்தாலே அணைத்துக் கொண்டு அத்ர ஆதரத்தோடு
அனந்யார்ஹமாக சமர்ப்பித்த ஆத்ம வஸ்துவைப் பெருகையாலே
அதீவ விளங்கிப் பணைத்து
அதீவ ராமச் சுசுபே –பால-77-30-என்றும்
அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய சா ஜனகத்மஜா -ஆரண்ய-37-18–என்றும்
அவளைப் பெற்று விளங்கினாப் போலே –
சோதி-8-1-10- -என்று
இவர் பேசும் படி இவர் தம்மது அல்லாத ஒன்றைத் தம்மதாகப் பிரமித்து கொடுத்தாப் போலே –
அவனும் தன்னது அல்லாத ஒன்றைப் பெற்றாப் போலே பிரமித்து அத்யுஜ்வல்லனாய் –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்-8-1-10- -என்னும்படி
சதசாகமாகப் பணைத்து-

————————————

3-ஜன்ம பாசம் விட்டு ஆத்வாரம் ஆளும் ஆளார் என்று பரிந்து அனுரூபனோடே அமர்ந்து பிரிவில்
க்ருபண தசையாகத் துவரும் சீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து-
அதாவது –
ஸ்ரீ ஜனக மகா ராஜன் திருமகள் பெருமாளைக் கைப் பிடித்த பின்பு அவர் அளவில்
பிரேமத்தால் ஜன்ம பூமியான ஸ்ரீ மிதிலையை நினையாதாப் போலே –இவரும் –
பாதம் அடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு -8-2-11-என்று
திருவடிகளைக் கிட்டுகையில் சங்கத்தாலே -புறம்புண்டான வழிய சங்கங்களை நிச் சேஷமாக விட்டு –

ஆத்வாரம் அனுவவ்ராஜ மங்களான்யா பிதத்யுஷீ -அயோத்யா-16-21-(ஆத்வாரம் -வாசல் அளவும் )-என்று
அவள் பெருமாள் உடைய வடிவழகைக் கண்டு மங்களா சாசனம் பண்ணினாப் போலே -இவரும் –
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்-8-3-3-என்று
தமக்கு பரிகைக்கு ஒரு ஆளும் ஆளுகிறிலீர்–மலை சுமந்தார் போலே திரு ஆழியையும்
திரு பாஞ்ச சந்யத்தையும் தரிப்பார் தாமாய் இரா நின்றது என்று -அவன் சௌ குமார்யத்தைக் கண்டு பரிந்து –

அவள் பெருமாளுடைய சௌர்யாதிகளை நினைத்து பயம் கெட்டு -துல்ய சீல-ஸூந்தர-16-5 -இத்யாதிப் படியே
தனக்கு அனுரூபரான இவரோடு பொருந்து அனுபவித்தாப் போலே -இவரும் –
வார் கடா வருவி–8-4-1-என்று தொடங்கி -அவன் சௌர்யாதிகளை அனுசந்தித்து -நிர்பரராய் –
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான் முகனை யமர்ந்தேனே-8-4-10 -என்று
அவனோடு பொருந்தி அனுபவித்து –

விஸ்லேஷ தசையிலே -அவள் –
ஹி மகத நலிநீவ நஷ்ட சோபா வ்யசன பரம்பர யாதி பீட்ய மானா
சஹ சர ரஹீதேவ சக்ர வாகி ஜனக சுதா க்ருபாணாம் தசாம் பிரபன்னா -ஸூந்தர-16-30-என்று
நிர்க்க்ருணரும் இரங்க வேண்டும்படியான தசையைப் பிராப்தையானாப் போலே -இவரும் –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து -8-5-2–என்று
அவனைக் காண ஆசைப்பட்டு -திக்குகள் தோறும் பார்ப்பது -கூப்பிடுவது ஆகையாலே –
கண்ணும் வாயும் நீர் பசை அறும்படி ஆகையால் –

ஜனக குல சுந்தரியின் குணங்கள் எல்லாம் இவர் பக்கலிலே காண்கையாலே –
ப்ரியாது சீதா ராமஸ்ய தாரா பித்ரு க்ருதா இதி குணாத் ரூப குணச் சாபி ப்ரீதிர்ப் பூயோப் ப்யவர்த்தத–பால -77-25-என்று
குண தர்சனத்தாலே அவள் பக்கல் ப்ரீதி வர்த்தித்தால் போலே
இவர் அளவில் ப்ரீதி வர்தித்தது —

————————————————–

4-தித்திக்க உள்ளே உறைந்தது-
அதாவது –
மனஸ்வீ தத்கதஸ் தஸ்யா நித்யம் ஹ்ருதி சமர்ப்பித -பால -77-25 -என்று
எப்பொழுதும் அவள் நெஞ்சுக்கு இனிதாம்படி -இருந்தாப் போலே –
உள்ளும் தோறும் தித்திப்பான்–8-6-3–என்றும் ,
ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் -8-6-2–என்று
அனுசந்திக்கும் தோறும் நிரதிசய போக்யனாய்க் கொண்டு
இவர் திரு உள்ளத்தில் நித்ய வாசம் பண்ணி –

கண்டு கொண்டு இருந்து அமானுஷ போகம் ஆக்கினவன்
அதாவது –
இருந்தான் கண்டு கொண்டு -8-7-2-என்று
தரித்திரன் தன லாபம் உண்டானால் பார்த்துக் கொண்டே இருக்குமா போலே
இவரைப் பெற்ற ப்ரீதியாலே -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருந்து –
சமா த்வாதச தத்ராஹம் ராகவச்ய நிவேசன
புஞ்சானா அமானுஷான் போகான் சர்வ காம சம்ருத்திநீ –ஸூ ந்தர-33-17-
(திரு அயோத்தியில் -12-வர்ஷங்கள் பெருமாளுடன் அமானுஷ போகம் அனுபவித்து அவாப்த ஸமஸ்த காமாளக இருந்தேன் )-என்று
விஸ்லேஷ தசையிலும் வ்ருத்த கீர்த்தனம் பண்ணித் தரிக்கலாம் படி -அவளை –
மானுஷம் அன்றிக்கே -திவ்யமாய் இருந்துள்ள போகங்களைப் புஜிப்பித்தாப் போலே -இவரையும் –
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேன்-8-7-2–என்றும் –
செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் அன்றி நான் அறியேன் மற்று அருளே –8-7-7-
என்று வித்தராய்ப் பேசும்படி -அப்ராக்ருத போகங்களைப் புஜிப்பித்தவன்-

——————————————

5-மூன்று தத்துக்கு பிழைத்த -அருவினை நோய் மறுவலிடாமல் – சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட
அதாவது –
அருவினை நோய் மறுவலிடாமல்-
மருள் தானீதோ—8-7-3–என்றும்
பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும் -8-7-6–என்றும்
அருள் தான் இனி யான் அறியேன் -8-7-3-என்றும்-
உகப்பு செல்லா நிற்கச் செய்தே –

மூன்று தத்துக்கு பிழைத்த — சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட
அதாவது
சிறியேனுடை சிந்தையுள் நின்று ஒழிந்தார் -என்று
தம் சிறுமையை அனுசந்தித்தவாறே –
1-வள வேழ் உலகிலே -1-5-
களவேழ் வெண்ணெய் தொட உண்ட கள்வா என்பேன் -அரு வினையேன் -என்றும் –
வணங்கினால் உன் பெருமை மாசுணாதோ-என்றும் –
அடியேன் காண்பான் அலற்றுவன் இதினால் மிக்கு ஓர் அயர்ப்பு உண்டே -என்றும்-

2-பொரு மா நீள் படையிலே –1-10-
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன் -என்றும் –

3-அம் தாமத்து அன்பிலே –2-5-
அல்லாவி உள் கலந்த -என்றும் –
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை -என்றும் –

இப்படி மூன்று இடத்தில் வந்து பரிஹ்ருதம் ஆகையாலே -மூன்று தத்துக்கு இவர் பிழைத்த
அயோக்யதா அனுசந்தான வியாதி -மறுவலிட்டு இன்னும் இவர் அகலில் செய்வது என் என்று அஞ்சி –
இனி இவர் தாம் அகலுகிறது -வந்தேறியான அசித் சம்பந்தத்தை இட்டு -இது நமக்கு அனர்ஹம் என்று இறே –
இதனிடைய யதாவஸ்தித வேஷத்தைக் கண்டால் அகல ஒண்ணாதே என்று பார்த்து –

அது மறுவல் இடாதபடியாக –சிறியேன் என்றதின் பெருமையைக் காட்ட-
அதாவது –
நமக்கு கௌஸ்துபம் போலவும்
ஸ்ரீ ஸ்தனம் போலவும்
தேஜஸ் கரமுமாய் போக்யமுமாய் இருக்கும் –
அப்ருக்து ஸித்த விசேஷணமாய்க் காணும் உம்முடைய ஆத்ம ஸ்வரூபம் இருப்பது என்று –
சிறிதாக இவர் அனுசந்தித்த ஆத்ம வஸ்துவின் வைலஷண்யத்தை –
யானும் தானாய் ஒழிந்தான்-8-8-4 -என்றும் –
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாக தித்தித்து -8-8-4–என்று தனக்கு அப்ருதக் ஸித்த பிரகாரமாகவும்
நிரதிசய போக்யமுமாகவும் அனுசந்திக்கும் படி காட்டிக் கொடுக்க

(பிரகலாதன் -திரௌபதி -கஜேந்திரன்–மூன்று தப்புதல் பகவானுக்கு
விந்த்யாவாடம் -ஸ்ரீ ரெங்க விஷ விபத்து- கிருமி கண்ட சோழ ஆபத்து -மூன்றும் எம்பெருமானுக்கு )

——————————————————-

6-தேஹாதிகளில் பரமாய் ,நின்று நினைக்கில் ஸ்ரீ மஹா லஷ்மீ துல்யமாய் –
அவர்க்கே குடிகளாம் பர தந்திர ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்
அதாவது –
சென்று சென்று பரம் பரமாய் -8-8-5–என்கிறபடியே
தேக இந்திரியங்களில் வ்யாவிருத்தமாய் -ஞான ஆனந்த மயமாய் –

நினையும் நீர்மை யதன்றி வட்கிது நின்று நினைக்கப் புக்கால் -8-9-5-என்றும் –
அருமாயன் பேச்சின்றி பேச்சு இலள் -8-9-1–என்றும் –
அன்று மற்றோர் உபாயம் என் -8-9-10–என்றும் –
யதா நிரூபணம் பண்ணில் பிராட்டியோபாதி -அனந்யார்ஹமாய் –

அவ்வளவும் அன்றிக்கே –
மாகாயம் பூக் கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழிக் கை என் அம்மான்
நீக்கமிலா அடியார் அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட் பாடே —ஊழி தொரு ஊழி வாய்க்க தமியேற்கு –8-10-10-
என்று விலஷண விக்ரக யுக்தனான சர்வேஸ்வரனை விஸ்லேஷிக்க ஷமர் அல்லாத பாகவதர்களுடைய
சேஷத்வத்தின் எல்லையில் நிற்கிறவர்கள் எனக்கு சேஷிகள்-
இரு கரையர் -அன்றிக்கே அவர்களுக்கே ச பரிகரமாக அனந்யார்ஹனாய்ச் செல்லும்
நல்ல கோட் பாடு கால தத்துவமுள்ள அனையும் எனக்கு சித்திக்க வேண்டும் என்று –
இப்படி ததீய சேஷத்வ காஷ்டை அளவும் செல்ல நிற்கும் படி பரதந்த்ரமான
ஸ்வரூபத்தை அனுசந்தித்தவர்-

(தேகாதி இந்திரியங்கள் -காட்டில் விலக்ஷணமான ஞான ஆனந்த மயம்-8-8 -திருவாய் மொழி அர்த்தம்
அதுக்கும் மேலே அநந்யார்ஹ சேஷத்வம் ஸ்வரூபம்
ஸ்ரீ மஹா லஷ்மீ துல்யம் –நினையும் நீர்மை யது அன்று –
இந்த அளவு என்ற தன்மை நினைக்கவும் முடியாதே -8-9-திருவாய் மொழி அர்த்தம்
அதுக்கும் மேலே -அத்யந்த பாரதந்தர்யம் –
அவருக்கே குடிகளாம்–ததீய சேஷத்வ பரதந்த்ர ஸ்வரூபம் -8-10-நெடுமாற்கு அடிமை திருவாய் மொழி அர்த்தம்
இனிப் பிறவி யான் வேண்டேன் என்று உபக்ரமித்தவர் ஊழி ஊழி தோறும் பிறந்து
அவர்களுக்கே குடிகளாக செல்ல பிரார்த்தனை -இதுவே நல்ல கோட்ப்பாடு )

—————————————–

7-ஸ்வ சாதன சாத்யஸ்தர் இரு கரையர் ஆகாமல்
மண்ணவரும் வானவரும் நண்ணும் அத்தையே
குறிக் கொண்மின் உள்ளத்து என்று
பிராப்யை ஏக பரர் ஆக்குகிறார்
எட்டாம் பத்தில்
அதாவது
தம்முடைய சாதன சாத்தியங்களே தங்களுக்கு என்று இருக்கிறவர்கள்-
தத் விஷயம் பிராபகமும் ததீய விஷயம் பிராப்யமுமாய் -இரு கரையர் -ஆகாதபடி-
(அவன் உபாயம் -திவ்ய தேசம் உபேயம் -என்று உபாய உபேயங்களை வெவ்வேறாகக் கொள்ளாமல் -என்றபடி-
வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் -ஸ்ரீ வசன பூஷணம் -411-)
திருக் கடித் தானத்தை ஏத்த நில்லா குறிக் கொள் மினிடரே -8-6-6–என்றும்-
கோவிந்தன் மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை மண்ணவர் தாம் தொழ –
வானவர் தாம் வந்து நண்ணு திருக் கடித் தான நகரே இடர் கெட உள்ளத்து கொள்மின்-8-6-7–என்றும்-
திருக் கடித் தானத்தை ஸ்தோத்ரம் பண்ணின அளவில் -துக்கங்கள் எல்லாம் நிலை குலைந்து போம் –
இத்தை குறிக் கொள்ளுங்கோள் –சர்வேஸ்வரனுடைய சர்வ சுலபமான திரு அடிகளை
உபய விபூதியில் உள்ளார் எல்லாரும் அனுபவிக்கும் படியான திருக் கடித் தான நகரை
உங்கள் சமஸ்த துக்கங்களும் போம்படி நெஞ்சில் கொண்டு அனுசந்தியுங்கோள் என்று
கீழில் பத்தில்- பிராப்யமாக உபதேசித்த அர்ச்சாவதார பூமியே -துக்க நிவர்தகம் என்கையாலே –
பிராப்யமான விஷயமே பிராபகம் என்று தர்சிப்பித்து -பிராப்ய விஷயம் ஒன்றிலுமே –
தத் பரர் ஆக்குகிறார் எட்டாம் பத்தில் என்கை —

(நமஸ் சப்தம் -அவனுக்கே -ஆர்த்த -அடியாருக்கு அடியார் –திவ்ய தேசமே ப்ராப்யம் –
அடியாருக்கு அடியார் சரம காஷ்டை-இதில் அந்தர் கதம்-
கிம் புந நியாயம் -திவ்ய தேசமே என்பதால் அடியார் அடியார் எல்லை வரை வருமே
உபாதானமே நிமித்தம்-ஏக மேவ அத்விதீயம் சாந்தோக்யம் -உபபத்தேச்ச–ஸ்ரீ ப்ரஹ்ம சூத்ரம்
பிராப்யமும் பிராபகமும் ஒன்றே -இங்கு
ததீய விஷயம் -திவ்ய தேசம் -8-6-திருக்கடித்தானம் -ஏத்த இடர் நில்லா என்பதால் ப்ராபகம்-மண்ணவரும் விண்ணவரும் அடையும் இடம் –
திருவாறன் விளை கீழே -ஆகவே திவ்ய தேசங்கள் எல்லாம் என்றதாயிற்று –
அதன் காஷ்டை-எல்லை நிலம் -8-10- )

( அகாராரத்தம் -8-8-பிரணவம்
நமஸ் சப்தம் -8-9-
நமஸ் அர்த்தம் -8-10-
நாராயண ஆய அர்த்தம் -9-1-/9-2-/9-3-இப்படி ஆறுக்கும் சங்கதி ஈட்டில் உண்டே )

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ செஞ்சொல் கவிகாள்–ஸ்ரீ இன் கவி பாடும் பரம கவிகள்-ஸ்ரீ பதியே பரவித் தொழும் தொண்டர்-பேசிற்றே பேசும் ஏக கண்டர்-அருளிச் செயல்களில் ஒற்றுமை —

April 3, 2020

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது—நான்முகன் திருவந்தாதி-63-

பண்டு பல வாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடனே செய்தருளும் பல்கலைகள் தம்மைக்
கண்டது எல்லாம் எழுதி யவை கற்று இருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்
புண்டரிகை கேள்வன் உறை பொன்னுலகு தன்னில்
போக நினைவோன்றும் இன்றிப் பொருந்தி யிங்கே யிருந்தேன்
எண்டிசையும் ஏத்தும் எதிராசன் அருளாலே
எழில் விசும்பை அன்றி இப்போது என் மனம் எண்ணாதே—-ஆர்த்தி பிரபந்தம்–28

———-

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்——இரண்டாம் திருவந்தாதி—11-

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் எவர் –நான்முகன் திருவந்தாதி –55-

————

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி யொன்று இல்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணினை களிக்குமாறே –திரு மாலை–17-

இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என்தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–திருக் குறும் தாண்டகம்–13–

————-

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே—–பெரிய திருமொழி–2-7-10-

பொன்னு மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடுலவு மலை புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே -5-7-10-

———————-

வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே
ஆண்டாய் யுன்னைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே –6-1-1-

அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-2-

குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிறம் அம்பது வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-3-

நிலவோடு வெயில் நில விருசுடர் உலகமும் உயிர் களும் உண்டு ஒரு கால்
கலை தரு குழவியின் உருவினையாய் அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-4-

பாரெழு கடலெழு மலை ஏழு மாயச் சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
ஆர்குழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கோர் எழுத்து ஓர் உரு வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-5-

கார்கெழு கடல்களும் மலைகளுமாய் ஏர் கெழும் உலகுமுமாகி முத
லார்களும் அறிவரும் நிலையினாய்ச் சீர் கெழு நான்மறை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-6-

உருக்கு நறு நெய் கொண்டு ஆர் அழலில் இருக்கு உறும் அந்தணர் சந்தியின் வாய்
பெருக்கமோடு அமரர்கள் அமர நல்கும் இருக்கினில் இன்னிசை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே–6-1-7-

காதல் செய்து இளையவர் கலவி தரும் வேதனை வினையது வெருவுதலாம்
ஆதலில் உனது அடியன் அணுகுவன் நான் போதலர் நெடு முடிப் புண்ணியனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே–6-1-8-

சாதலும் பிறத்தலும் என்று இவற்றை காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன்
ஓதல் செய் நான்மறையாகி யும்பராதல் செய் மூவுருவானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-9-

—————–

தானே தனக்குமவன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் –தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடருமாய விறை –-மூன்றாம் திருவந்தாதி –38-

நீயே யுலகெல்லாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தேவத் தேவ தேவனும் -நீயே
எரி சுடரும் மால்வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை –-நான்முகன் திருவந்தாதி -20-

————-

மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்காய்
மன்னு சினத்த மழம் விடைகள் ஏழு அன்று அடர்த்த மாலதிடம்
மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே –-பெரிய திருமொழி-5-1-6-

என் ஐம் புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்து அருளிப்
பொன்னங்கலைகள் மெலிவெய்தப் போன புனிதரூர் போலும்
மன்னு முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடனாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே–பெரிய திருமொழி-7-5-9-

———-

கொல்லை என்பர் கொலோ? குணம் மிக்கனள் என்பர் கொலோ?
சில்லை வாய்ப் பெண்கள் அயற் சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே––ஸ்ரீ திருவாய் மொழி-6-7-4-

மல்கு நீர்க் கண்ணொடு மைய லுற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடு மால் என்றழைத் தினிப் போய்ச்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?––ஸ்ரீ திருவாய் மொழி–6-7-7-

—————-

சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர் பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வு இலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே–-ஸ்ரீ திருவாய் மொழி-7-9-5-

ஆர்வனோ ஆழி அங்கை எம்பி ரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர் விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்
சீர் பெற இன் கவி சொன்ன திறந்துக்கே–-ஸ்ரீ திருவாய் மொழி-7-9-8-

————–

கோது இல் வண் புகழ் கொண்டு, சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்; ஊழ்வினையேன் தடம் தோளியே–-பெரிய திருமொழி-4-2-4-

மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால் எய்தினள் என் தன் மடந்தையே–-பெரிய திருமொழி-4-2-6-

————–

குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து
சடையானோடே வடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம்
குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –-பெரிய திருமொழி-5-1-7-

வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால்
படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –பெரிய திருமொழி-8-8-6-

————–

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –-பெரிய திருமொழி–3-10-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –-பெரிய திருமொழி-5-8-10-

——————–

அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணி உள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆல் இலையில் துயில் கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்க கரு முகைப் பூ சூட்ட வாராய் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-2 7-9 – –

அண்டத்து அமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளைப்
பண்டப் பழிப்புக்கள் சொல்லிப் பரிசற ஆண்டிடும் கொலோ
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவலர் பட்டம் கவித்துப்
பண்டை மணாட்டிமார் முன்னே பாது காவல் வைக்கும் கொலோ –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 3-8 7-

———–

அண்டமும் இவ் வலை கடலும் அவனிகளும் எல்லாம்
அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும்
முண்ட மது நிறைத்து அவன் கண் சாபமது நீக்கும்
முதல்வனவன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி
இலைக் கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய
வண்டு பல இசை பாட மயில் ஆலு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–-பெரிய திருமொழி-3-9-3-

அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் குலவரையும்
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்தகில் கனகம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திகழ் மண்ணித் தென் கரைமேல்
திண் திறலார் பயில்நாங்கைத் திருத் தேவனார் தொகையே –பெரிய திருமொழி-4-1-5-

—————

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் -இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர் தூயக் கை தொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன் -மூன்றாம் திருவந்தாதி–19-

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவ–-ஸ்ரீ திருவாய் மொழி -9-8-8-

——–

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்-பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து——இரண்டாம் திருவந்தாதி—12-

அவரிவர் என்று இல்லை யனங்க வேள் தாதைக்கு
எவரும் எதிரில்லை கண்டீர் –உவரிக்
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு–நான்முகன் திருவந்தாதி -56–

————

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து -இரண்டாம் திருவந்தாதி-—50-

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு –-நான்முகன் திருவந்தாதி -39-

————

அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –-ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-74-

அறிந்து அறிந்து, தேறித் தேறி, யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே–-ஸ்ரீ திருவாய் மொழி -4-7-7-

—————

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்–திருப்பாவை–24-

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை–நான்முகன் திருவந்தாதி -35-

————

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இக்காவில் இருந்து இருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்–—நாச்சியார் திருமொழி -5-10-

அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய் இரணியனதாகம் கீண்டு
வென்றவனை விண்ணுலகில் செல யுய்த்தாற்கு விருந்தாவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்திப் புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்
தென் தமிழன் வடபுலக் கோன் சோழன் சேர்ந்த திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–-பெரிய திருமொழி-6-6-5-

—————-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து
ஆயர் பூங்கொடிக்கு இனவிடை பொருதவனிடம் பொன் மலர் திகழ் வேங்கை
கொங்கு செண்பகக் கொம்பினில் குதி கொடு குரக்கினம் இரைத்தோடி
தேன் கலந்த தண் பலங்கனி நுகர் தரு திருவயிந்திரபுரமே–-பெரிய திருமொழி-3-1-5-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினில் கொண்ட பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே
ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர மா வேறித்
தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே —-பெரிய திருமொழி-5-3-9-

————

இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம்பெருமானுக்கு
அரும் பெறல் அன்பு புக்கு இட்டு அடிமை பூண்டு உய்ந்து போனேன்
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்துக்
கரும்பினின் சாறு போலேப் பருகினேற்கு இனியவாறே –-திருக் குறும் தாண்டகம்-5-

இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என்தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–திருக் குறும் தாண்டகம்-13-

————–

உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்றபேதெல்லாம்
திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே–-நாச்சியார் திரு மொழி –11-7-

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே – திரு விருத்தம்–66 –

————–

உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச்
சிரைத்திட்டான் வன்மையை பாடிப் பற
தேவகி சிங்கத்தைப் பாடிப் பற –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 3-9 3- –

உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் துடர்ந்து ஓடிச் சென்ற
உருப்பனை ஒட்டிக் கொண்டு இட்டு இறைத்திட்ட வுறைப்பன் மலை
பொருப்பிடைக் கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு
விருப்போடு பொன் வழங்கும் வியன் மால் இரும் சோலை யதே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-4 3-1 –

—————–

உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா வெண் திக்கும்
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விரலாழி
வலவன் வானோர் தம் பெருமான் மருவா வரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் சலம் சூழ்ந்து அழகாய சாள்க்கிராமம் அடை நெஞ்சே—பெரிய திருமொழி -—1-5-3-

உலவு திரைக் கடல் பள்ளி கொண்டு வந்து உன்னடியேன் மனம் புகுந்த அப்
புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகல ஒட்டேன்
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி
அலவன் கண் படுக்கும் அணியாலியம்மானே–-பெரிய திருமொழி —3-5-7-

—————-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —முதல் திருவந்தாதி—99-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——மூன்றாம் திருவந்தாதி–40-

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை–நான்முகன் திருவந்தாதி–86-

—————-

ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய
வென்று யாம் தொழ இசையும் கொல்?
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல் வரும் பெரும் பாழ் காலத்து இரும் பொருள்க்கு
எல்லாம் அரும் பெறல் தனி வித்து ஒரு தான்
ஆகி தெய்வ நான் முக கொழு முளை
ஈன்று முக் கண் ஈசனோடு தேவு பல நுதலி
மூ உலகம் விளைத்த உந்தி
மாய கடவுள் மா முதல் அடியே -ஸ்ரீ திருவாசிரியம் ––4-

ஊழி தோறு ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே! நீயும் மதுசூதன்
பாழிமையிற் பட்டு அவன் கண் பாசத்தால் நைவாயே?–-ஸ்ரீ திருவாய் மொழி-2-1-5-

ஊழி தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–-ஸ்ரீ திருவாய் மொழி–7-3-11-

———–

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூ மகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே–-ஸ்ரீ திருவாய் மொழி-3-3-2-

எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே –பெரிய திருமொழி -4-9-9-

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி
வந்து வழி வழி யாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
யந்தியம்போதில் யரி வுருவாகி யரியை யழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே –திருப்பல்லாண்டு–6-

————-

எனக்காவார் ஆரோருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் ——முதல் திருவந்தாதி–89-

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –நான்முகன் திருவந்தாதி-–51-

————–

என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு–நான்முகன் திருவந்தாதி–92-

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்––இரண்டாம் திருவந்தாதி–55-

—————-

ஏழை பேதையர் பாலகன் வந்து என் பெண் மகளை எள்கித்
தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்
ஆழியான் என்னும் ஆழம் மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
மூழை உப்பு அறியாதது என்னும் மூதுரையும் இலளே –-ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 3-7 4-

ஏழை பேதை இராப் பகல் தன
கேழ் இல் ஒண் கண்ண நீர் கொண்டாள்;கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர்! இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே–-ஸ்ரீ திருவாய் மொழி-2-4-10-

————–

ஓதி யாயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல்
ஏதும் இன்றி நின்று அருளும் நம் பெரும் தகை இருந்த நல்லிமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே -பெரிய திருமொழி–1-2-9-

ஓதி யாயிர நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள்
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்
நீதியாகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு
ஆதியாய் இருந்தாய் அணி யாலி யம்மானே–-பெரிய திருமொழி–3-5-9-

—————

கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப் பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே–-ஸ்ரீ திருவாய் மொழி–4-7-8-

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே -ஸ்ரீ திருவாய் மொழி––9-4-9-

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே –கண்ணி நுண் சிறுத் தாம்பு–1–

—————

ஆழ்வாருடைய நிரதிசய போக்யதையைச் சொல்லுகிறது -ப்ராப்ய காஷ்டையான ஆழ்வாரைப் பற்றுகிற இவர்
பிரதம அவதியான பகவத் விஷயத்திலே இழிவான் என் என்னில்
ஆழ்வாருடைய போக்யாதிசயம் தோற்றுகைக்காகவும் அவருடைய முக மலர்த்தி தோற்றுகைக்காகவும்
அவர் உகக்கும் பகவத் விஷயம் ஆகையாலும் பேசுகிறார் –

சரம அதிகாரி சேகரர் ஆகிறார் இவர் -ஆழ்வார் திருவடிகளே தாரகாதி -யாகக் கொண்டவர்
1-அவர் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராமுதம் -இவர் -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -போக்யதா பிரகர்ஷம்
2-அவர் -மலக்கு நாவுடையேற்கு என்றார் -இவர் நாவினால் நவிற்று –
3-அவர் அடிக் கீழ் அமர்ந்து –இவர் மேவினேன் அவன் பொன்னடி
4-கண்ணன் அல்லல் தெய்வம் இல்லை -தேவு மற்று
5-பாடி இளைப்பிலம் என்றார் -பாடித் திரிவேனே -ஆனந்தப் பட்டார் வாசி உண்டே
6-இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்றேன் -திரி தந்தாகிலும்
7-உரிய தொண்டர் தொண்டர் —நம்பிக்கு ஆள் உரியனே
8-தாயாய் தந்தையாய் -அன்னையாய் அத்தனாய்
9-ஆள்கின்றான் ஆழியான் -என்னை ஆண்டிடும் தன்மையான் -வெப்பம் இல்லை குளிர்ந்து அன்றோ
10-கடியனாய் கஞ்சனைக் கொன்ற பிரான் -தக்க சீர் சடகோபன்
11-யானே என் தனதே என்று இருந்தேன் -நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் –நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
12-எமர் கீழ் மேல் ஏழ் ஏழ் பிறப்பும் நம்முடிய வாழ்வு வாய்கின்றவா -மா சதிர் -இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
13-என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசன் -நின்று தன புகழ் ஏத்த அருளினான்
14-ஒட்டுமே இனி என்னை நெகிழ்க -என்றும் என்னை இகல்விலன் காண்மின் -நீங்களே பாருமின் -சங்கையே இல்லை
15-மயர்வற மதிநலம் அருளினான் -ஒண் தமிழ் சடகோபன் அருளையே
16-அருள் உடையவன் -அருள் கண்டீர் இவ் உலகத்தில் மிக்கதே -உயர்ந்த அருள் என்கிறார் இவர்
17-பே ரே ன் என்று -நெஞ்சு நிறைய புகுந்தான் –நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -கண்ணன் அங்கே திருவாய்மொழி இங்கே
18-வழு விலா அடிமை செய்ய வேண்டும் -ஆட்புக்க காதல் அடிமைப் பயன்
19-ஆராத காதல் -ஆட்புக்க காதல் -தாஸ்யம் ஸ்பஷ்டம் இங்கே தான்
20-பொருள் அல்லாத என்னை பொருள் ஆக்கி -அடிமை கொண்டான் -பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல்
21-கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ -தென் குருகூர் நம்பிக்கு அன்பன் -திருஷ்டாந்தம் இல்லை இங்கு -போட்டி இல்லை இங்கு
22-உலகம் படைத்தான் கவி -மதுர கவி -இவர்
23-உரைக்கவல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம்மூர் எல்லாம் -நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே பிரத்யஷம் -சங்கையே இல்லையே –

பிரத்யுபகாரம் செய்ய இயலாமல் குண அனுசந்தானம் செய்து -முனிவர்கள் யோகிகள் -குண நிஷ்டர் கைங்கர்ய நிஷ்டர்
1-போக்யதா பிரகர்ஷம் -முதல் பாட்டில்
2-தேக யாத்ரைக்கு தாரகம் -பாவின் இன்னிசை பாடத் திரிவனே
3-பகவத் விஷயம் உத்தேச்யம் ஆழ்வார் உகந்த விஷயம் -திரி தந்தாகிலும்
4-விஷயீ கரித்து அருளி -அன்னையாய்
5-இதர விஷய பிராவண்யம் விட்டு தம் அளவு வரும் படி சாதுர்யம் -நம்பினேன்
6-ஆழ்வார் தம்மை விஷயீ கார உறுதி -ஆறாம் -இன்று தொட்டும் எழுமையும் -ஒன்பது குளிக்கு நிற்கும் -புகழ் ஏத்த அருளினான்
7-கிருபா பிரகாசம் -சடகோபன் அருளையே
8-ஆழ்வார் கிருபை விஞ்சி -அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
9-சகல வேத ரகசியம் -ஸூ பிரதிஷ்டியாக நெஞ்சில் நிறுத்தி -மிக்க -வேதத்தின் உட் பொருள் -நிற்கப்பாடி
10-உபகாரம் பிரத்யுபகார நிரபேஷம் -முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே -பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்

—————

கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்
திண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து
வண்ணா வடியேன் இடரைக் களையாயே -பெரிய திருமொழி-–4-7-1-

கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா வடியேன் இடரைக் களையாயே––பெரிய திருமொழி-1-10-1–

——————-

கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி
தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சிலை இலங்கு மணி மாடத்துச்சி மிசைச் சூலம்
செழும் கொண்டல் அடடிரியச் சொரிந்த செழு முத்தம்
மலை இலங்கு மாளிகை மேல் மலி வெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-9-4-

கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை கதிர் முத்த வெண்ணகையாள் கரும் கண் ஆய்ச்சி
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர்
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி யாடவரை மட மொழியார் முகத்திரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே—4-4-5-

————–

கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன்
வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த
வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறானை
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே–-பெரிய திருமொழி –6-8-5-

கல்லார் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள்
எல்லா வுலகும் வணங்க விருந்த வம்மான் இலங்கைக் கோன்
வல்லாளாகம் வில்லால் முனிந்த வெந்தை விபீடணற்கு
நல்லான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே -பெரிய திருமொழி –6-10-4-

————

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப்
பற்றி எறிந்த பரமன் திருமுடி
உற்றன பேசி நீ ஓடித் திரியாதே
அற்றைக்கும் வந்து குழல் வாராய் அக்காக்காய்
ஆழியான் தன குழல் வாராய் அக்காக்காய் –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி– 2-5 5- –

கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கோலோ
கற்றன பேசி வசவு உணாதே காலிகளுய்ய மழை தடுத்த
கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்––நாச்சியார் திரு மொழி–12-8-

—————–

கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம் பொழில் காவிரித் தென்னரங்கம்
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து
உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன்
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டமே முத்தம் தா –-ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி– 3-3 2-

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே— -பெருமாள் திருமொழி-8-11-

——————-

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —-திரு விருத்தம்–8-

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்?
காண்கின்ற என் காரிகை செய் கின்றவே–-ஸ்ரீ திருவாய் மொழி-5-6-3-

————-

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரிகை ஏறி அறை இடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள் ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –-திரு விருத்தம்-19-

காரிகையாருக்கும் உனக்கும் இழுக்கு உற்று என் காதுகள் வீங்கி எரியில்
தாரியாது ஆகில் தலை நொந்திடும் என்று விட்டிட்டேன் குற்றமே அன்றே
சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காத்து பெருக்கி திரியவும் காண்டி
ஏர்விடை செற்று இளம் கன்று எறிந்திட்ட விருடீகேசா என் தன் கண்ணே –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி–2-3 10- –

————–

காரத்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே -நாச்சியார் திரு மொழி-–14-4-

கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே யென்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் -நாச்சியார் திரு மொழி-–12-6-

—————

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக் கண்
ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர் ——முதல் திருவந்தாதி–66-

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –பெரிய திருமொழி–10-7-2-

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே -நாச்சியார் திரு மொழி––9-8-

—————

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!
விரை கொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே–-ஸ்ரீ திருவாய் மொழி-4-3-7-

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–-ஸ்ரீ திருவாய் மொழி-10-6-7-

—————

குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–-ஸ்ரீ திருவாய் மொழி–7-4-11-

குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான்
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்தீர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ–-பெரிய திருமொழி-11-2-1-

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே–பெரிய திருமொழி—11-8-10-

—————————–

குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போர் ஏற்றை
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ண வணி யழுந்தூர்
நின்றானை யடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே -பெரிய திருமொழி–7-6-4-

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக்
கன்றால் விளங்காய் எறிந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே -பெரிய திருமொழி–8-6-9-

————-

குன்று எடுத்து ஆ நிரை காத்த பிரான் கோவலனாய் குழலூதி ஊதிக்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு
என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டு அறியேன் யேடி வந்து காணாய்
ஓன்று நில்லா வளை கழன்று துகில் ஏந்து இள மூளையும் என் வசம் அல்லவே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3-4-4 – –

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வந்து என்னைப் பற்றும் போது
அன்று அங்கு நீ என்னை காக்க வேண்டும் அரங்கத்து அரவிணைப் பள்ளியானே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–4 10-9 –

—————–

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ !
கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !—-பெருமாள் திருமொழி-8-3–

கொங்கு மலி கருங்குவளை கண்ணாகத் தெண் கயங்கள்
செங்கமல முகமலர்த்தும் திருக் கண்ண புரத் துறையும்
வங்கமலி தடங்கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற
செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே —-பெரிய திருமொழி—8-3-8-

————–

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —–அமலனாதி பிரான்–10-

கொண்டல் வண்ணா இங்கே போதராயே கோவில் பிள்ளாய் இங்கே போதராயே
தெண் திரை சூழ் திருப் பேர் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்ம என்று சொல்லி ஓடி அகம்புக வாய்ச்சி தானும்
கண்டு எதிரே சென்று எடுத்து கொள்ளக் கண்ண பிரான் கற்ற கல்வி தானே —ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2 9-4 – –

கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே––ஸ்ரீ திருவாய் மொழி–8-5-6-

—————-

சலங்கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு
தடங்கடலைக் கடைந்து அமுதம் கொண்டுகந்த காளை
நலங்கொண்ட கருமுகில் போல் திருமேனி அம்மான்
நாள் தோறும் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
சலங்கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி
சண்பகங்கள் மண நாறும் வண் பொழிலி னூடே
வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே––பெரிய திருமொழி-3-9-1-

சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை
நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள்
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே–-நாச்சியார் திரு மொழி – -8-6-

————-

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ் வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே–-ஸ்ரீ திருவாய் மொழி-5-2-5-

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனி வாய் இளமான் திறத்தே–-ஸ்ரீ திருவாய் மொழி–5-6-4-

————

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்–நான்முகன் திருவந்தாதி -71-

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள்
வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே–-பெரிய திருமொழி-1-10-8-

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்தே
என்னெஞ்சம் என்பாய் எனக்கு ஓன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–-பெரிய திருமொழி-2-1-8-

———-

சோத்தென நின்று தொழ விரங்கான் தொன்னலம் கொண்டு எனக்கு இன்று தாறும்
போர்ப்பதோர் பொற் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை
மூத்திடுகின்றன மற்றவன் தன் மொய்யகலம் அணையாது வாளா
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் ————பெரிய திருமொழி—-9-5-9-

சோத்தென நின்னைத் தொழுவன் வரம் தரப்
பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய் பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி––பெரிய திருமொழி–10-5-5-

—————

ஞாலம் உற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் நானிலம் சூழ்
வேலை யன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பாலின் நல்ல மென் மொழியாள் பார்த்தான் பள்ளி பாடுவாளே–பெரிய திருமொழி-4-8-6-

ஞாலம் முற்று உண்டு ஆல் இலை துயில் நாராயணனுக்கு இவள்
மாலதாகி மகிழ்ந்தனள் என்று தாயுரை செய்ததனைக்
கோலமார் பொழில் சூழ் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன
மாலை பத்தும் வல்லார்க்கு இல்லை வரு துயரே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-3 7-11 –

————–

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்–இரண்டாம் திருவந்தாதி-78-

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம் செய்த வாழியான் அன்றே -உவந்து எம்மை
காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்த
மீப்பாயும் எவ் உயிர்க்கும் நீயே–நான்முகன் திருவந்தாதி -19-

————-

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – –திரு விருத்தம் -74 –

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்
பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே!
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே–-ஸ்ரீ திருவாய் மொழி-6-9-4-

————-

தாங்கரும் சினத்து வன் தாள் தடக்கை மா மருப்பு வாங்கிப்
பூங்குருந்து ஒசித்துப் புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை
மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத்
தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -பெரிய திருமொழி -4-5-4-

தாங்கரும் போர் மாலி படப்பறவை யூர்ந்து தாரலத்தோர் குறை முடித்த தன்மையானை
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னை
கோங்கரும் புசுர புன்னை குரவர் சோலைக் குழா வரி வண்டு இசைபாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே–-பெரிய திருமொழி -2-10-4-

————–

தாராய தண் துளவ வண்டுழுத வரை மார்பன்
போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான்
தேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும்
காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ–-பெரிய திருமொழி -3-6-6-

தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -பெரிய திருமொழி –8-1-4-

———–

திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னைப் பங்கயத்தயன் அவன் அனைய
திட மொழி மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–பெரிய திருமொழி–4-3-3-

திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர்பொருள் முழுவதும் ஆய்அவை அவைதொறும்
உடல்மிசை உயிர்எனக் கரந்துஎங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவைஉண்ட சுரனே–ஸ்ரீ திருவாய் மொழி —1-1-7-

————

திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–-ஸ்ரீ திருவாய் மொழி-10-7-6-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–-ஸ்ரீ திருவாய் மொழி-10-7-8-

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே—-ஸ்ரீ திருவாய் மொழி-10-8-1-

————

தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்
தேனதனை வாய் மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி யினிதமர்ந்து பொறியிலார்ந்த
அறுகால சிறுவண்டே தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த யமரர் கோமான்
அணியழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்றோர் மாது
நின்னயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே –திரு நெடும் தாண்டகம்-26-

தேமருவு பொழில் புடை சூழ் திருக் கண்ண புரத் துறையும்
வாமனனை மறி கடல் சூழ் வயலாலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை
நா மருவி யிவை பாட வினையாய நண்ணாவே –பெரிய திருமொழி–8-3-10-

—————–

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே–-பெரிய திருமொழி-7-4-4-

தேராளும் வாளரக்கன் செல்வம் மாளத்
தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ யொல்கிப்
போராளன் ஆயிரம் தோள் வாணன் மாளப்
பொரு கடலை யரண் கடந்து புக்கு மிக்க
பாராளன் பாரிடந்து பாரையுண்டு
பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன் பேரோதும் பெண்ணை மண் மேல்
பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே –திரு நெடும் தாண்டகம்-20-

————-

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கண புரத்து என் கரு மணியே!
ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ—-பெருமாள் திருமொழி- 8-10-

தேவரையும் அசுரர்களையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
காவளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை கற்று வல்லார்
பூவளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே –பெரிய திருமொழி–11-6-10-

—————

தொண்டெல்லாம் நின்னடியே தொழுது உய்யுமா
கண்டு தான் கண்ண புரம் தொழப் போயினாள்
வண்டுலாம் கோதை என் பேதை மணி நிறம்
கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே –பெரிய திருமொழி–8-2-8-

தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு
கண்டு நான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய்
அண்டமா எண் திசைக்கும் ஆதியாய் நீதியான
பண்டமாம் பரமசோதி நின்னையே பரவுவேனே –திருக் குறும் தாண்டகம் –11-

————-

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே–ஸ்ரீ திருவாய் மொழி-6-3-3-

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள்!
சிகர மணி நெடு மாட நீடு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்றுவரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–-ஸ்ரீ திருவாய் மொழி-7-3-10-

————–

நந்தன் மதலையை காகுத்தனை நவின்று
உந்தி பறந்த ஒளி இழையார்கள் சொல்
செந்தமிழ் தென் புதுவை விட்டு சித்தன் சொல்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே –-ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 3-9 11- –

நந்தன் மதலை நிலமங்கை நற் துணைவன்
அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான்
கந்தங்கமழ் காயா வண்ணன் கதிர் முடி மேல்
கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ –பெரிய திருமொழி–8-4-9-

————

நீல தடவரை மா மணி நிகழக் கிடந்தது போல் அரவணை
வேலைத் தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய்
சோலைத் தலைக் கணமா மயில் நடமாட மழை முகில் போன்று எழுந்து எங்கும்
ஆலைப் புகை கமழும் அணி யாலி யம்மானே–-பெரிய திருமொழி–3-5-2-

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே –திரு விருத்தம்-39-

———————-

பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல பொய்கை புக்கு
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனே அச்சோ அச்சோ ஆயர் பெருமானே அச்சோ அச்சோ –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி– 1-8 3- –

பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற
வசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற –-ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி- 3-9 5-

——–

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே –-ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி- 4-9 4-

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே––நாச்சியார் திரு மொழி ––7-9-

———————–

பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு
நின் கோயில் சீய்த்துப் பல்படி கால் குடி குடி வழி வந்தாட் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தான் –ஸ்ரீ திருவாய் மொழி –9-2-1-

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே––பெரிய திருமொழி–5-7-1-

——————-

பந்தணைந்த மெல் விரலாள் பாவை தன் காரணத்தால்
வெந்திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
நந்தன் மைந்தனாக வாகும் நம்பி நம் பெருமான்
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே—பெரிய திருமொழி–2-2-4-

பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன்
அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் காண்மின்
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசை முகனே யனையவர்கள் செம்மை மிக்க
அந்தணர் தம் ஆகுதியின் புகையார் செல்வத் தணி யழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே –பெரிய திருமொழி—7-8-7-

—————

புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ––பெரிய திருமொழி-9-9-7-

புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ––பெரிய திருமொழி–9-9-7-

புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்
கள்ள அரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2-7 5- – –

—————

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்–திருப்பாவை–13-

புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்தஎன்
கள்ள மாயவனே! கரு மாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே––ஸ்ரீ திருவாய் மொழி-5-7-9-

———–

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த அரிமாச் செகுத்து அடியேனை ஆளுக
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்த் திருக் கோட்டியூரானே -பெரிய திருமொழி-–9-10-8-

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்தரிமா செகுத்து
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை
வாங்கி யுண்ட வவ்வாயன் நிற்க விவ்வாயன் வாய்
ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளைமையே -பெரிய திருமொழி–11-2-2-

————-

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த அரிமாச் செகுத்து அடியேனை ஆளுக
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்த் திருக் கோட்டியூரானே -பெரிய திருமொழி–9-10-8-

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்தரிமா செகுத்து
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை
வாங்கி யுண்ட வவ்வாயன் நிற்க விவ்வாயன் வாய்
ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளைமையே -பெரிய திருமொழி–11-2-2-

—————-

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால் நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று——முதல் திருவந்தாதி––20–

பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து
உற்றார் ஒருவரும் இன்றி உலகினில்
மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட
கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி -பெரிய திருமொழி-10-5-4-

————-

பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத் தண் கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண் கடல் ஏழும் மலை யெழ் இவ்வுலகு யெழ் உண்டு
ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே –பெரிய திருமொழி–5-6-2-

பேரானைக் குடந்தை பெருமானை இலங்கொளி சேர்
வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை
ஆராவின்னமுதைத் தென் அழுந்தையில் மன்னி நின்ற
காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே -பெரிய திருமொழி–7-6-9-

————–

மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய்யன்பர் எண்ணில்
அலகளவு கண்ட சீராழி யாய்க்க்கு அன்றிவ்
வுலகளவும் உண்டோ வுன் வாய்——முதல் திருவந்தாதி––10-

மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும்
உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு
வண்ணன் எழில் கொள்மகர குழை இவை
திண்ணம் இருந்தவா காணீரே செய் இழையீர் வந்து காணீரே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–1-2-18-

மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம்
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல்
எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–4 1-9 –

————-

மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்
உற்ற போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றமேல் ஓன்று அறியீர் அவனை அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே–திரு மாலை–9–

மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே –பெரிய திருமொழி–8-10-3-

————–

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் —இரண்டாம் திருவந்தாதி–28-

மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து –மூன்றாம் திருவந்தாதி-–3–

——————

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மதயானை யுதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே—-நாச்சியார் திரு மொழி -4-5-

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –பெரிய திருமொழி–5-8-10-

—————–

மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியில் உழைக்கும்
ஊனேர் ஆக்கை தன்னை யுதவாமை உணர்ந்து உணர்ந்து
வானே மா நிலமே வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –பெரிய திருமொழி–6-2-3-

மானேய் நோக்கு நல்லார் மதி போல் முகத்து உலவும்
ஊனேய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன்னடைந்தேன்
கோனே குறுங்குடியுள் குழகா திரு நறையூர்த்
தேனே வரு புனல் சூழ் திரு விண்ணகரானே–-பெரிய திருமொழி-6-3-3-

மானேய் நோக்கி மடவாளை மார்பிற் கொண்டாய் மாதவா!
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!
வானார் சோதி மணி வண்ணா! மது சூதா! நீ அருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே––ஸ்ரீ திருவாய் மொழி– 1-5-5-

————–

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீகேச முலை உணாயே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2 2-6 –

மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே –பெருமாள் திருமொழி-–4-6-

மின்னணைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை
வேந்தன் முடி யொருபதும் தோள் இருபதும் போய் உதிர
தன்னிகரில் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த
தடந்தோளன் மகிழ்ந்து இனிது மருவி யுறை கோயில்
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை
செங்கழு நீரொடும் இடைந்து கழனி திகழ்ந்து எங்கும்
மன்னு புகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–-பெரிய திருமொழி-3-9-5-

——–

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு
வீங்கு இருள் வாய் என் தன் வீதி யூடே
பொன் ஒத்த வாடைக்குக் கூடல் இட்டு
போகின்ற போது நான் கண்டு நின்றேன்
கண் உற்றவளை நீ கண்ணால் இட்டு
கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் ?
இன்னம் அங்கே நட நம்பி ! நீயே— 6-5-

மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் – –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–-3-10-7-

——————

மைத்தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப் பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-1-2-12-

மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை-
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டு சித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–1-4 10-

———–

வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட
அஞ்சன வண்ணனை யாய்ச்சி தாலாட்டிய
செம் சொல் மறையவர் சேர் புதுவை பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே—ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–1 3-10 –

வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு வாய்த்த
தயிர் உண்டு வெண்ணெய் அமுதுண்டு வலி மிக்க
கஞ்சன் உயிரது உண்டு இவ் உலகுண்ட காளை
கருதுமிடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி
மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து
வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் மணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே -பெரிய திருமொழி–3-10-9-

———–

வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -பெரிய திருமொழி–8-1-9-

வண்டமரும் மலர்ப்புன்னை வரி நீழல் அணி முத்தம்
தெண்திரைகள் வரத் திரட்டும் திருக் கண்ண புரத் துறையும்
எண் திசையும் எழு சுடரும் இரு நிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே -பெரிய திருமொழி-8-3-7-

வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோற்றும்பீ -பெரிய திருமொழி-8-4-10-

வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட
உண்டே விசும்பு உந்தமக்கு இல்லை துயரே -பெரிய திருமொழி–7-1-10-

————–

வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே –பெரிய திருமொழி–11-5-5-

வண்ணக் கரும் குழல் மாதர் வந்து அலர் தூற்றிடப்
பண்ணிப் பல செய்திப் பாடி எங்கும் திரியாமே
கண்ணுக்கு இனியானை கானதரிடைக் கன்றின் பின்
எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–3 2-4 –

————

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே––பெரிய திருமொழி–1-10-9-

வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் யிதுவே யமையாதோ
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா வுன்னை என்றும் மறவாமை பெற்றேனே –-பெரிய திருமொழி–8-9-5-

வந்தாய் போலே வந்தும்,என் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யாய்; இதுவே இது வாகில்,
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய்! யான் உனை எங்கு வந்து அணுகிற்பனே?––ஸ்ரீ திருவாய் மொழி–3-2-5-

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந் தாமரைக் கட் செங்கனி வாய் நாற் றோளமுதே! என துயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே—ஸ்ரீ திருவாய் மொழி–6-10-9-

————

வம்பு அவிழ் கோதை பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக் கோகு உகட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே சாது சனங்க ளிடையே?––ஸ்ரீ திருவாய் மொழி–3-5-4-

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினான் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-திருப்பள்ளி எழுச்சி—8 –

வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழு வென மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் —1-6-4-

வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக
அம்பு தன்னால் முனிந்த வழகன் இடம் என்பரால்
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நற்
செம்பொனாரும் மதிள் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே –பெரிய திருமொழி —5-4-5-

————–

வாரணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம்
நீரணிந்த குவளை வாச நிகழ் நாறும் வில்லி புத்தூர்
பாரணிந்த தொல் புகழான் பட்டார் பிரான் பாடல் வல்லார்
சீரணிந்த செங்கண் மால் மேல் சென்றசிந்தை பெறுவார் தாமே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–2 2-11 – –

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-–3-10-4-

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-–3-10-10-

வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடுஞ்சினத்து வன் தாள் ஆர்ந்த
காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கருமுகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்
ஏராரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்
சீராரு மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே——பெரிய திருமொழி—–4-4-4-

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—–பெரிய திருமொழி–4-1-8-

வாராளும் இளம் கொங்கை வண்ணம் வேறாயின வாறு எண்ணாள் எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாளிப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்
தாராளன் தண் குடந்தை நகராளன் ஐவர் க்காய் அமரில் தேர் உய்த்த
தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே –பெரிய திருமொழி-–5-5-7-

வாராளும் இளங் கொங்கை நெடும் பணைத் தோள் மடப்பாவை
சீராளும் வரை மார்பன் திருக் கண்ண புரத் துறையும்
பேராளன் ஆயிரம் பேர் ஆயிரம் வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே –பெரிய திருமொழி-–8-3-9-

—————

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சியில் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்சவஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே –பெரிய திருமொழி–7-10-8-

வெஞ்சினக் களிறும் வில்லோடு மல்லும் வெகுண்டு இருத்து அடர்த்தவன் தன்னைக்
கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானைக் கரு முகில் நிறத்தவனைச்
செஞ்சொல் நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே––பெரிய திருமொழி–4-3-7-

————

வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே—–பெரிய திருமொழி–1-4-7-

வெந்திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை உணர
செந்தொழில் வேத நாவின் முனியாகி வையம் அடி மூன்று இரந்து பெறினும்
மந்தர மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர்
அந்தரம் ஏழினூடு செல வுய்த்த பாதமது நம்மை யாளும் அரசே –பெரிய திருமொழி-–11-4-5-

———–

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த
அடித்தாமரை மலர்மேல் மங்கை மணாளன்
அடித்தாமரை யாமலர் ——மூன்றாம் திருவந்தாதி–—-96-

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின்தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால்கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும்தங்கு––பெரிய திருவந்தாதி —84-

————————–

வெள்ளை நுண் மணல் கொண்டு தெருவணிந்து
வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து
முயன்று உன்னை நோற்கின்றேன் காம தேவா
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கடல் வண்ணன் என்பதோர் பேர் எழுதி
புள்ளினை வாய் பிளந்தான் எனபது ஓர்
இலக்கினில் புக வென்னை எய்க்கிற்றியே––நாச்சியார் திரு மொழி–1-2-

வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –-நாச்சியார் திரு மொழி–2-5-

————

வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன்
உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் –ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி- 4-1-7- –

வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்––நாச்சியார் திரு மொழி-5-2-

—————

வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன்
உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே
மையின்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய்–ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி- 2 3-3 –

வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து
செய்த வெம்போர் நம்பரனைச் செழும் தண் கானல் மண நாறும்
கைதை வேலிக் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே—பெரிய திருமொழி –8-8-7-

————–

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–-மூன்றாம் திருவந்தாதி–—69-

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்—நான்முகன் திருவந்தாதி–40-

அருளிச் செயலில் சாரமான திருவாய் மொழியின் ப்ரமாண்ய அதிசயத்தை பிரகாசிப்பைகாக ,
ஆழ்வார்களுடைய ஐக கண்ட்யைத்தையும் ,அவர்களில் தலைவரான இவர் அருளிச் செய்த இப் பிரபந்ததினுடைய பிராபல்யத்தையும் ,
பிரதி பாதியா நின்று கொண்டு , ஏவம் பூதமான விதுக்குச் சேராத சாஸ்திரங்கள் பரீஷக பரித்யாஜ்யங்களாம் படியை அருளிச் செய்கிறார் ..

குரு சிஷ்ய கிரந்த விரோதங்களை
பரமதாதிகளாலே பரிஹரியாமல்
செஞ்சொல் செம்தமிழ் இன் கவி
பரவி அழைக்கும் என்று
அந்யோந்யம் கொண்டாடி
பேசிற்றே பேசும் ஏக கண்டரில்
என்னில் மிகு வென்னும் இவர் உரை
கொள் இன் மொழி கொண்டு
சாஸ்த்ரார்தங்களை நிர்ணயிக்க வேண்டுகையாலே
வலம் கொண்டு இதுக்கு சேராதவை
மநு விபரீதங்கள் போலே-(விலக்கப்படுவனவாம் )
(வலம் -பலம் -பிரபலம் என்றவாறு )

அதாவது –
ருஷிகளில் ,குரு சிஷ்யர்களான வியாச ஜைமிநிகளில் ,
(பூர்வ மீமாம்சை -கர்மகாண்ட விசாரம் -அபூர்வத்தை ஒத்துக் கொண்டு ஜைமினி -12-அத்தியாயங்கள் –
உத்தர மீமாம்சை –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூதரம் -4-அத்தியாயங்கள்
கர்ம விசாரம் பண்ணிய பின்பு – அதனாலே ப்ரஹ்ம விசாரம் –அத அதக– முதல் ஸூத்ரம் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஜாசா
அதாதோ கர்ம ஜிஜ்ஜாசா-பரமத -ஆதி என்றது -அந்நிய பரத்வங்களாலே-இரண்டாலும் – பரிஹரியாமல்-
கர்மம் செய்வதை சொன்னது இவை இரண்டாலும் )
குருவான வியாசனுடைய கிரந்தமான ,ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தோடு சிஷ்யனான ஜைமினி உடைய
கிரந்தமான கர்ம ஸூத்ரத்தோடு நிரீஸ்வர வாதாதிகளால் ,வந்த விரோதத்தை ,
சம்பத் தேரிதி , ஜைமினி–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்–1-2-32-
( பிராணா ஹூதி ஹோமங்களை அக்னி ஹோத்ர ஹோமங்களாக செய்வதற்காக உபாசகனுடைய
மார்பு முதலான உறுப்புகளை நெருப்பு களாக கூறியுள்ளது என்று ஜைமினி சொன்னார் )
அன்யார்த்தம் து ஜைமினி–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்– 1-4-18-
( வேறு பயனுக்காகவே இங்கு ஜீவனைச் சொல்லுகிறது என்று ஜைமினி சொல்கிறார்-
ஜீவனைக்காட்டிலும் ப்ரஹ்மம் வேறுபட்டது என்று காட்டவே )
பரம் ஜைமினி முக்யத்வாத்—ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்– 4-3-11-
( பர ப்ரஹ்மத்தை உபாசிக்கின்றவர்களையே ஆதி வாஹிகர்கள் அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்று ஜைமினி எண்ணுகிறார்-
ப்ரஹ்ம கமயிதி என்ற இடத்தில் உள்ள ப்ரஹ்ம சப்தம் ப்ரஹ்மத்தின் இடமே முக்கியமாக இருப்பதால் )
ப்ராஹ்மனே ஜைமினி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-4-4 -5-
( ப்ரஹ்ம சம்பந்தியான அபஹத பாப்மத்வம் முதலான குணங்களோடு முக்தன் தோன்றுகிறான் என்று
ஜைமினி சொல்லுகிறார் ) இத்யாதியான ,ப்ரஹ்ம ஸூத்தரங்களாலே
ஜைமினிக்கு ப்ரஹ்ம ஸ்வரூப தத் குண தத் உபாசன தத் பலாதிகளின் உடைய
அங்கீகாரம் உண்டு என்னும் இடமும் தோற்றுகையாலும் ,

மகா பாரதத்திலே ,ஹய சிர உபாக்யானாதிகளிலே பகவத் வியாச உபதேச லப்த
பரமாத்மா தத்வ ஞானம் உடையவனாய் சொல்லுகையாலும் ,
ஸ்ரீ வேத வியாசனும் ஜைமினியும் ஏக கண்டர்கள்..

இனி தேவதா நிராகரணம் பண்ணின இது ,ஈஸ்வர பிரநீதமாக வேதத்தை
சிலர் சொல்லுகையாலே ,அந்த பௌ ருஷேத்வம் அடியாக
விப்ரலம்பாதி தோஷங்களை கல்பித்து வேத அப்ராமண்யம் சொல்லுவது ,
வைதிக கர்மங்களை ,நிந்திப்பதாகிற பாஹ்யரை நிராகரித்து ,
வேத ப்ராமண்ய கர்மா அவச்ய ,கர்தவ்யைகளை சாதிக்கையில் உண்டான இச்சையாலே
ஸ்வ மதம் அன்றிலே இருக்க பரம பதத்தை அவலம்பித்து சொன்னான் என்றாதல் ..
அன்றிக்கே தேவதா நிராகரணத்தில் ,தாத்பர்யம் இல்லை ..

அஸ்ருத வேதாந்தருக்கு கர்மத்தில் ,அச்ரத்தையை நிவாரிக்கைக்காக ,
கர்ம பிரதாண்யம் சொல்லுகையிலே தாத்பர்யம் ஆகையாலே ,
நஹி நிந்த்யா நிந்த்யம் நிந்திதும் ந பிரவர்த்ததே
நிந்திதாத் இதரத் பிரசம்கிதம் –
(நிந்தையானது நிந்திக்கும் பொருளை நிந்திப்பதற்கு வரவில்லை -நிந்திக்கும் பொருளைக் காட்டிலும்
வேறான ஒரு பொருளைத் துதிப்பதற்காக வந்தது ) –என்கிற ந்யாயத்தாலே ,
தேவதா நிரகரணம் பண்ணின இது ,கர்ம பிரசம்சார்த்தம் ஆகையாலே
அந்ய பரம் என்றாதல் கொள்ள வேணும் என்று
இப்படி பரமத அன்ய பரத்வங்களால் பரிஹரிக்க வேண்டிற்று இறே .
( கர்மங்களை அவசியம் செய்ய வேண்டும் என்பதன் பொருட்டு ஆகையால் கடவுள் இல்லை என்று கூறின இது
வேறு ஒன்றிலே நோக்கு என்றாதல் கொள்ள வேண்டும் -என்று இப்படி பிறர் தம் மதம் மேற்கொண்டு கூறினார் –
வேறு ஒன்றினை உட்க்கொண்டு கூறினார் என்று பரிஹாரம் செய்ய வேண்டுமே )

அப்படியே
இங்கும் அந்யோந்ய வசன விரோதம் உண்டாய் ,அதுக்கு பரிகாரம் பண்ண வேண்டாத படி
செஞ்சொல் கவிகாள்–திருவாய் -10-7-1-என்றும்
செம் தமிழ் பாடுவார் தாம் வணங்கும் -பெரிய திருமொழி -2-8-2–என்றும்
இன் கவி பாடும் பரம கவிகள்-திருவாய் -7-9-6 -என்றும்
பதியே பரவித் தொழும் தொண்டர் -பெரிய திருமொழி -7–1-7-என்றும்
அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் -பெருமாள் திருமொழி -2-2–என்றும்
பரஸ்பரம் ஸ்லாகித்து கொண்டு ,

பேசிற்றே பேசல் அல்லால்–திருமாலை -22- -என்ற படியே
ஒருவர் பேசினதே எல்லாரும் பேசும் ஏக கண்டரான
ஆழ்வார்களில் வைத்து கொண்டு

என்னில் மிகு புகழார் யாவர் –பெரிய திருவந்தாதி –4-என்று சேஷிக்கு அதிசயகராகப் பெற்ற
ப்ரீதி பிரகர்ஷத்தாலே என்னில் காட்டில் மிக புகழ் உடையார் ஆர் என்னும்
சர்வாதிகரான இவருடைய -உரை கொள் இன் மொழியாளை-திருவாய் -6-5–3- -என்கிற படியே
ஸ்ரீ ராமாயணாதிகளையும் ஸ்வ வைலஷண்யத்தாலே ஜெயிக்கும் படியான
சக்திகளைக் கொண்டு வேத தத் உப ப்ரும்ஹண ரூப சாஸ்த்ரங்களில் ,சம்சயிதமான
அர்த்தங்களை நிர்ணயிக்க வேண்டும் படியாய் இருக்கும் ஆகையாலே –

வலம் கொண்ட வாயிரம்–திருவாய் -3–8-11-என்கிற படியே பிரதி பாத்ய வஸ்துவை உள்ள படியே
பிரதி பாதிக்க வல்ல சாமர்த்தியத்தை உடைத்தான இப் பிரபந்தத்துக்கு
சேராத சாஸ்திரங்கள் -மன் வர்த்த விபரீதா து யா ஸ்ம்ருதிஸ் ஸா ந சஸ்யதே –
( எந்த ஸ்ம்ருதியானது மனுவினால் சொல்லப்பட்ட பொருளுக்கு மாறுபட்டு இருக்கிறதோ அது புகழப்படுவது இல்லை )
என்று சொல்லப் பட்ட மநு விபரீதமான ஸ்ம்ருதிகள் போலே கழிக்க படும் என்கை-

—————————————————–—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்