ஸ்ரீ ஜய தேவரின் கீத கோவிந்தமும்
ஸ்ரீ நாராயண தீர்த்தரின் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணியும்
இவ்வுலகத்தினர் அனனவருக்கும் அறிவு செயல் இனவகளுக்கான திறமையை அளிப்பவரர்
இவ்வுலகில் உள்ள யோகிகள் அனனவருக்கும் தலைவர்
எல்லோராலும் அவசியம் அறியப்பட வேண்டிய
உண்னமப் பொருனள அறிந்தவர்-
இவ்வுலகமனனத்தையும் ஆட்டி னவக்கும் சிறந்த நாயகனாக இருப்பவர்-
அத்தகைய எங்கும் நினறந்த மஹா விஷ்ணுனவ உள்ளத்தால் தியானிக்கிறேன்.
பாகம்-1–பர ப்ரஹ்ம ஸ்வரூபம்
1.சச்சினாநந்த ஸ்வரூபமான பர ப்ரஹ்மத்துடன் ஒன்றாகி ஐக்யம் அடைவதான பரம பக்தி பரவஸ்யத்தையே
உபநிஷத்துக்கள் சாதனா மார்கத்தின் உச்சக்கட்டமாக விவரிக்கின்றன.
அந்த பர ப்ரஹ்ம தத்துவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது -மேலும் மற்ற ஒன்றுடன் ஒப்பிட்டுக்கூற இயலாது.
அது கால தேச வர்த்தமானத்திற்கு கட்டுப்படாத ஓன்று -எவ்வளவு முயன்றும் வேதங்களாலும் உபநிஷத்துக்களாலும் விவரிக்க
முடியாத ஓன்று-
அவனைப் ப்பற்றி விவரிக்குங்கால்,அது இப்படித்தான் இருக்கும் என்று சொல்லாமல் நேதி நேதி
(இதுவல்ல,இதுவல்ல) என்று இதர வஸ்துக்களுக்கு விலக்காகத்தான்
வர்ணிக்கப் பட்டுள்ளது-
இப்படி “ யதோ வாஸோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ” என்றபடி
மனத்திற்கும்,வாக்கிற்கும் எட்டாதது பர ப்ரஹ்ம ஸ்வரூபம்.
2.இந்த பஞ்ச பூதங்களாலான சரீரமும் ஜகத்தும் அழிவுள்ளனவ.
நான்,எனது என்ற எண்ணத்தால்-அனவகளுடன் ஓன்றுபடும் நிலைகளும், தோற்றங்களும், எண்ணங்களும்,
அவ்வாறே அனவகளுக்கெல்லாம் ஆதாரமாக,மாற்றம் இல்லாத சாக்ஷியாக ஸ்வயம் ப்ரகாசமாக விளங்குவதே
தன்னுனடய உண்னமயான ஸ்வரூபம் என்ற த்ருடமான முடிவுடன் அப்யாச அதிசயத்தினால், ஜீவன், ஸதா அவ்விதமான நினனவுடன்,
பர ப்ரஹ்மத்தோடு இரண்டறக் கலப்பதையே , மோக்ஷம் என்று சொல்லப்படுகிறது
“நாஹம் தேஹோ ந சான்யோஸ்மி ப்ரஹ்மை வாஹம் ந ஸோகபாக்
ஸச்சதானந்த ரூபோஹம் நித்ய முக்த ஸ்வபாவான்”
3.இப்படி தன்னுனடய ஜீவனானது பர ப்ரஹ்மமே என்ற ஐக்ய பாவமான பேர் உண்மையை அறிவதனால் தான்
அக்ருத்ரிம புருஷார்த்தமான மோக்ஷத்தை அனடயலாம்-
ஸ்வ விமர்ச:புருஷார்த்த :–தன்னுடய உண்னமயான இந்த ஸ்வரூபத்தை அவித்யா (மானயயினால்) மறந்து மயங்கிக் கிடக்கும் மனுஷ்யனானவன்,
அப்படி மறந்து போன ஸ்வரூபத்தை அறியப் பெறுவது தான் ஞானத்தின் முடிவு-
மேற் சொன்ன மாயை ஸத்வ, ரஜோ , தமோ எனும் முக் குணங்களின் வாயிலாக நாம ரூப
குணங்கணளாடு, ஜகத்தாகவும், ஜீவனாகவும், பரிணமிக்கிறது
4.சத்வ குணம் எனப்படுவது மற்ற குணங்களாகிற -ரஜோ ,தமோ குணங்களிலிருந்து-முற்றிலும் விடுபட்டு
சுத்தமானதாக இருக்கிறது.
வேத வ்யாசர் தன்னுனடய பல புராணங்களின் வாயிலாக, பர ப்ரஹ்மமும்,
மானயயும் சேர்ந்து ஸ்ருஷ்டி, ஸ்த்தி ஸம்ஹாரம் என்ற முத் தொழினலச் செய்ய, பல ரூபங்களை
ஏற்றுக் கொண்டு,
பல நாமங்களால் அனழக்கப்பட்டு,குணங்களிலிருந்து வேறுபட்டு,சுத்த சத்வ ஸ்வரூபத்துடன்,
அவதாரம் என்ற தொழிலை ஏற்றுக் கொள்கிறது என்று தெரியப் படுத்தி உள்ளார்,
5.ஸ்ரீமத் பாகவத்தில் ஸ்ரீகிருஷ்ேன், தேவகியின் கர்பத்தில் ஆவிர்பவிக்கும் சமயம்,தேவர்களுடன்,
ப்ரஹ்மா, மஹாவிஷ்ணுவின் அவதார தத்துவத்தையும் நோக்கத்தையும் கீழ் கண்டவாறு ஸ்துதி செய்கிறார்.
“தாமரைக் கண்ணா ! சுத்த ஸத்வ ஸ்வரூபியான தங்களிடத்தில் சமாதி நினலயில் ஸ்திரமாக னவக்கப்பட்ட மனத்தினால்,
மநோ லயம் அடையப் பெற்ற ஒரு சிலரே , நின் திருவடியாகிற மரக் கலத்தால் ,ஸம்ஸார சாகரத்தை ,பசுங்கன்றின் குளம்படி போல் எளிதில் தாண்டுகிறார்கள் ( ஸ்ரீ மத் பாகவதம்-ஸ்கந்தம் – 10 அத்யா,-2 ஸ்லோ,30)
6.மேலும் இந்த ப்ரஹ்ம ஸ்துதியில் , பகவானுனடய அவதார தத்துவத்தை விளக்குங்கால்,”எல்லா
ஜீவராசிகளிலும் அந்தர்யாமியாக,ஒளியாகப் ப்ரகாசிப்பவனே
ப்ரகிருதி வசத்தால் மனறக்கப்பட்ட
ஜீவாத்மாக்கள் அந்த ஒளியான ப்ரகாசத்தினாலேயே தங்களுனடய மநோ , வாக், காயங்களால்,
உலக அனுபவத்தை அடைகின்றன என்று அறிவதில்னல.
அந்த மாயையை உன் வசத்திலே னவத்துக் கொண்டு,
மேலும் “ஸத்வம் விஸுத்தம்” (ரஜோ ,தமோ குணங்கள் கலக்காத ) உன் சுத்த சத்வ ரூபத்தோடு,அதர்மத்தை
அழிக்க அவ்வப்போது தோற்றம் அனடகிறீர்.
அந்த அவதார தத்துவத்தையும் நாம,ரூப,குணங்கனளயும் விவரிக்க இயலாது.
அவை , ப்ரத்யக்ஷம், அனுமானம் முதலிய ப்ரமாணங்களால் அறியக் கூடியனவ அல்ல.
ஆயினும் அநந்ய பக்தி யாலும், இடை விடா முயற்சியால் அனடயப் பெற்ற சுத்த மனத்தில் நின்
அருளால், அந்தா நாம ரூப குணங்களை ஜீவர்களுக்கு அனுபவ பூர்வமாய் உணர்த்துகிறீர்கள்.
”இந்த ஸ்துதி யினால் வ்யாச பகவான்,நமக்கு பக்தி மார்கமே ஞானத்தை அளித்து மோக்ஷத்தை அளிக்க வல்லது என்று விளக்குகிறார்.
பக்தி யற்ற ஞானம்,மேல் உலகங்களில் தற்காலிகமாக, சுகத்தை யளித்து திரும்பவும் மறுபிறப்னபயும் அளிக்குமே தவிர
ஸம்ஸார ஸாகர சுழலிலிருந்து விடுவிக்காது என்று அறுதியிட்டு கூறுகிறார்..(ஸ்ரீ மத் பாகவதம் -10-2-35-37)
7.அப்படிப்பட்ட ஸச்சிதானந்தப் பரம் பொருளை விட்டகலாத கிருஷ்ேண பக்தியே ராஸ லீலையில்
கோபிகைகள் ஸ்ரீகிருஷ்ணனோடு அனுபவித்த பரமானந்தம்,
அதுவே பக்தன் பகவானுடன் அனுபவிக்கும் பரமானந்தம்.
அதுவே முக்தனுடன் சேர்ந்து முமுஷுக்கள் அனுபவிக்கும் ப்ரஹ்மானந்தம்.
8.அப்படிப் பட்ட ப்ரஹ்மானந்தத்தில் மூழ்கி திளைத்த மஹான்கள் பலருண்டு.
அவர்களில் பாகவத ஸமுதாயம்,
என்றென்றும் மறக்காமல் ஆராதித்துவரும் ஸ்ரீ ஜயதேகவியும், ஸ்ரீநாராயண தீர்த்தரும் முக்கியமானவர்கள்.
அவர்கள் அப் பரம்பொருனள அறிந்து,தான்,தனது என்ற பாவம் ஒழிந்து, அதனுடன் இரண்டறக் கலந்து பரிபூரண ஆனந்தத்தை அனுபவித்தனர்.
“ஏகம் ஸ்வாது ந புஞ்ஜீத ” என்ற கூற்றுப்படி, தான் அனுபவித்த அந்த பரமானந்தத்தை ,மற்ற பாமர மக்களும் அனுபவித்து
மோக்ஷ சாம்ராஜ்யத்தை அனடய வேண்டும் என்ற பரம கருணையால் தங்களுனடய ஆனந்த அனுபவங்கனள,
தங்களின் தெய்வீகப் பாடல்கள் வாயிலாக வெளிப்படுத்தி நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நாம் இப் பாடல்கனளப் பாடும் போதும்,மற்றவர்கள் பாடிக் கேட்கும் போதும்,நம்மை மறந்த நினைவில் ,
பரவசமாகி, ஆனந்தக் கண்ணீர் வடிப்பதும்,இதற்குத் தக்க ப்ரமாணமாகும் எனபதில் ஐயமே இல்லை ,
9.ஸ்ரீஜயதேவர்”கீதா கோவிந்தம் ”என்ற நூலையும்,ஸ்ரீ நாரா யண தீர்த்தர் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற நூலையும்,பனடத்து,
தாங்கள் ருசித்த பரமானந்த ரஸத்தை பாமர மக்களும் ருசித்து அனுபவிக்க ,ராக தாளங்களுடன் கூடிய ஜன ரஞ்சகமான பாடல்களாக அருளிச் செய்தார்கள்.
இக்கட்டுரை 3 பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.
1ம் பாகத்தில் ப்ரஹ்ம ஸ்வரூப விளக்கமும்,
2ம் பாகத்தில் நூல்களும் அதன் ஆசிரியர்களும்-என்ற தலப்பில் ஸ்ரீ ஜயதேவரின் கீதா கோவிந்தமும்
ஸ்ரீ நாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற நூல்களின் சிறப்புகளைப் பற்றியும்
3ம் பாகத்தில் ஒற்றுமையும் வேற்றுமையும் என்ற தலைப்பில் இந் நூல்களின் இடையே உள்ள ஒற்றுமையும், வேற்றுமையும் விவரிக்கப்பட்டுள்ளன.
நாமும் இப் பாடல்களின் உட்பொருள் அறிந்து, அந்த அமிர்த ரஸத்தை முடிந்த வரை பருகி அனுபவிக்க,
முதற் கண் இந் நூல்களின் காவியத் தலைவனான ஸ்ரீகிருஷ்ண பரமாத்ம ஸ்வரூபியான
வராஹ புரி ஸ்ரீதேவி பூமி தேவி ஸமேத ஸ்ரீவேங்கடேசப் பெருமாளையும்,ஸ்ரீ ஜயதேவ கவியையும்,
ஸ்ரீநாராயண தீர்த்தரையும் வணங்கி வழிபடுவோமாக.
————————-
பாகம் -2- நூல்களும் அதன் ஆசிரியர்களும்
ஸ்ரீஜயதேவரும் அவர் அருளிச் செய்த ஸ்ரீ கீத கோவிந்தமும்
1.கிபி 12வது நூற்றாண்டு ஸ்ரீஜயதேவர், ஒரிஸ்ஸா மாநிலத்தில் பூரி ஷேத்திரத்தின் அருகில் உள்ள
கெண்டுபில்வா என்றகிராமத்தில் போஜதேவர் ராதா தேவி தம்பதியினரின் மைந்தனாக அவதரித்தார்.
ஸ்ரீஜயதேவரும் அவரதுமனனவி பத்மாவதியும் பூரி ஜகன்னாதரின் பரம பக்தர்கள்.
அவர் ஸ்ரீ கீத கோவிந்தம் என்கிற தெய்விக காவ்யத்தைப் படைத்து அதனை பூரி ஜகன்னாதரின் ஸந்நிதியில் தம்பதியினர்
தினந்தோறும் பாடியும்,நடனம் ஆடியும், பக்தி பரவசத்தில் மெய்மறந்து தங்களின் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
2. காதல் எனும் சொல் தத்வரீதியில் மிக நுண்ணிய அர்த்தத்தை யுடையதாக இருக்கிறது.
ஸாதாரணமாக பொது வாழ்வில், மனித உறவுகளில், நடைமுனறயில் இது அன்பு என்று அனழக்கப்படுகிறது.
அந்த அன்பின் பரிமாணம் ஓவ்வொரு உறவுகளிலும் வேறுபடுகின்றது.
தாய்-குழந்தை , ஸ்த்ரீ-புருஷன்,நாயகி- நாயகன், கணவன்-மனைவி,பெற்றோர்-குழந்தைகள் என்ற உறவுகளில்,
அன்பின் அளவு வேறுபாட்னட நாம் உணர முடிகிறது.
இந்த அன்பு அல்லது ப்ரேமை , மனித உறவுகளைக் கடந்து, தெய்வத்திடம் காட்டப் படும் போது, அது பக்தி என்று அழைக்கப் படுகிறது.
3.ஸ்ரீ கீத கோவிந்தத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் ராதையும், மற்ற கோபிகைகளும் கொண்ட காதல்
ஸாதாராணமாக ஸ்த்ரீ-புருஷ வேறுபாட்டினால், இந்த்ரிய வசத்தால் தோன்றும் மானிடக் காதல் அல்ல.
அது தெய்வீகக் காதல்.
இத்தகைய தெய்வீகக் காதலை ராதையும் , மற்ற கோபிகைகளும் பரமாத்மாவிடம் செய்ததும்,
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அவர்களின் பேரில் கொண்ட காதலையும்
ஸ்ரீஜயதேவர் தனக்கே உரித்தான கவிநயத்துடன் சிருங்கார ரஸம் ததும்பும் பாடல்களாக தன் நூலின்
முலம் வெளிப்படுத்தி யுள்ளது இதன் தனிச் சிறப்பாகும்.
தன்னையே ராதையாகவே கற்பனை செய்து கொண்டு பரமாத்மாவுடன் சேர்ந்து அனுபவித்த
பேர் ஆனந்தத்தை , தன் பாடல்கள் வாயிலாக
வெளிப்படுத்தி யுள்ளார் என்பது பாடல்களின் பாவத்திலிருந்து, நாம், நன்கு உணர முடிகிறது..
4.காவ்யம் என்ற பெயருக்கு ஏற்ப ஸ்ரீ கீத கோவிந்தம் பண்ணிரண்டு ஸர்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இருபத்து நான்கு அஷ்டபதிகள் கொண்ட இக் காவ்யத்தில் ஒவ்வொரு அஷ்டபதியிலும் நடனத்திற்கு ஏற்றபடி எட்டெட்டு பதங்கள் உள்ளன.
இதற்கு விதி விலக்காக முதல் அஷ்டபதியிலும் மற்றும் சில அஷ்டபதிகளிலும் எட்டுக்கு மேற்பட்ட பதங்கள் உள்ளன.
இந்த அஷ்டபதிகளில் ஒவ்வொன்றிலும் கூறப்படும் கருத்துக்களுக்கு தொடர்பு உள்ளபடி 90 ஸ்லோகங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
5.முன்னுரை ஸ்லோகங்களுக்குப் பின்னர் முதல் அஷ்டபதி விஷ்ணுவின் பத்து அவதாரங்கனளயும் விவரிக்கிறது.
பின்னர் வஸந்த கால வர்ணனையும் கோபியருடன் கண்ணன் மகிழ்ந்து குலாவுவதை
ராதையிடம் அவள் தோழி வர்ணிப்பதையும் கூறப்பட்டுள்ளது.
ராதையின் பிடிவாதம் கனலந்த பின், இன்னமும் கோபப் பட்டாலும்,மீண்டும் மீண்டும் கண்ணனை நினனந்து மனம் வருந்துகிறாள்.
ராதையின் விரஹ தாபத்தை கவி மிகவும் அழகாக விவரித்துள்ள பாங்கு மிகவும் போற்றி பாராட்டப்படுகிறது,
6.கண்ணனும்,தான் ராதைக்கு மனத் துயர் அளித்ததை எண்ணி மனம் வருந்துகிறான்.
ராதையின் தோழிஅவர்களிடையே தூது சென்று அவர்களிடையே ஏற்பட்ட பிணக்கு நீங்க வழி செய்கிறாள்.
மீண்டும் ராதையும் கண்ணனும் முன் போலவே ஆனந்த மயமான கேளிக்கைகளில் ஈடுபடுவதை ,
கவி வர்ணனை செய்து இந்தக் காவ்யத்தை நிறைவு செய்துள்ளார்.
7.பதினெட்டு புராணங்களில் ஒன்றான ப்ரஹ்ம வைவர்த்த புராணம் விவரிக்கும் ராதா கிருஷ்ண
சரித்ரத்தின் அடிப்பனடயில் இந்த காவ்யம் அமைக்கப் பட்டுள்ளது.
மேலே எழுந்த வாரியாகப் பார்க்கும்
போது ச்ருங்கார ரஸமே ப்ரதானமாக வுள்ளது போலே தோன்றினாலும்,கூர்ந்து நோக்குங்கால்,
பக்தியின் உன்னத நினலக்கு நம்மை ஈர்த்துச் செல்லும் பக்தி ரஸம் நினறந்துள்ள காவ்யமாகும்.
ஒவ்வொரு அஷ்டபதியின் முடிவிலும் கண்ணனிடம் உள்ள பக்திப் பெருக்கால் பக்தர்கள் மேன்மை அடையட்டும்
என்று வேண்டி முடிக்கிறார்.
பஜனை சம்பிரதாயத்லே கீத கோவிந்தம் பாடாத பத்ததியே இல்லை என்று கூறும்படி அவ்வளவு ப்ரஸித்தம் அடைந்துள்ள காவ்யமாகும்.
இந்தியாவில் வடநாட்டில் இக் காவ்யம்
உருவானாலும் தென் நாட்டில் மிகவும் விரும்பி பரம பக்தி யுடன் பாகவதர்களால் கையாளப்பட்டு வருகிறது .
இக் காவ்யம் ஸமஸ்கிருதத்தில் எழுதப் பட்டிருந்தாலும் அந்த பாஷை தங்களுக்கு பரிச்சியமில்லாவிடினும்
அது அமர காவ்யம் என்று உணர்ந்து அதை ராகத்துடன் கற்றறிந்து
பாகவதர்கள் பாடி பரவசமடைந்து கேடபோரையும் நெகிழ னவக்கிறார்கள்,
8.இதற்கு அடிப்படைக் காரணம் என்ன வென்றால் பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்க வேண்டும் என்ற
மனிதனுடைய ஆத்மாவின் உள்ள கிடக்கையையும்,படிப் படியாக முன்னேறி, அதில் வெற்றி காண்பதையும்,
பரமானந்தத்தை அனுபவிப்பதையும், உட்கருத்தாகக் கொண்டு இக் காவ்யம் அமைக்க பட்டதேயாகும்,
9.இக் காவ்யம் ராதா என்பவளை ஜீவாத்மாவாகவும்,ஸ்ரீகிருஷ்ணனை பரமாத்மாவாகவும் பாவித்து
அவர்களின் ஐக்யத்னே -ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியத்தை -புகழ்ந்து போற்றி, சிருங்கார ரஸம் ததும்ப எழுதப்பட்டதாகும்.
ஸ்ரீஜயதேர் பூரி ஜகன்நாதரை ராதா கிருஷ்ண ஐக்கியமாகப் பாவித்து இந்த மஹா காவ்யத்தைப் படைத்தருளினார்.
10.ஸ்ரீஜயதேவர் மாபெரும் கவியாக இந்தியா முழுவதும் கருதப்படுகிறார்.
அவருடைய சங்கீத அறிவும் சமஸ்கிருதத்தில் அவருக்கு உள்ள பாண்டித்யமும் அவருடைய அஷ்டபதிகளின் வாயிலாகத் தெள் எனத் தெரிகின்றது.
அவருடைய கவித்துவத்தைப் பாராட்டாத பண்டிதர்களே இல்லை .
சொற்களின் கோர்வை ,மற்றும் பொருள் செறிவைப் பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்,
ஸர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் இக் கவி தையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது அதைத் தொடர்ந்து ஜெர்மன்,பிரான்சு மேலும்
சில ஐரோப்ய மொழிகளில் மொழி பெயர்த்துள்ளதிலிருந்து கீத கோவிந்தம்
என்ற காவ்யம் சிறந்த இலக்கியமாக உலகம் முழுவதும் போற்றப்படுகிறது.
11.இப்போது நாம் சில முக்கிய ஸ்லோகங்கள்,அஷ்டபதிகள் அதன் பிண்ணனி ஆகியவைகளை அனுபவிக்கலாமே .
ஸ்ரீஜயதேவரின் புகழ்பாடும் தியான ஸ்லோகங்களுக்கு பின்னர், முதல் ஸர்கத்தில்
“மேகைர் மேதுர மம்பரம்“ என்று தொடங்கும் முதல் ஸ்லோகம்
“காரிருள் கவ்வுகிறது–.வானில் மேக மூட்டம் காணப்படுகிறது,குழந்தை கிருஷ்ணன் அச்சப் படுகிறான்,அவனை வீட்டில் கொண்டுபோய் சேர்”
இவ்விதம் நந்த கோபன் உத்திரவுப்படி, செல்லும் வழியில், யமுனை நதிக்கரையில் புதர்களின் இடையே
ராதாவும் மாதவனும் புரிந்த கேளிக்கைகள் ஜயமடையட்டும் என்று மங்களா சாஸனம் செய்து கவிதையைத் தொடங்குகிறார்,
12.இவ்விடம் குழந்தை என்று கண்ணன் அழைக்கப் பட்டு மேலும் ராதையோடு கேளிக்கை புரிந்தான்
என்று கூறியதிலிருந்தும் கண்ணனுனடய வயது மிகக் குனறவு என்பது ஊர்ஜிதமாகிறது.
அவன் ராஸ லீலா கேளிக்கை எல்லாம் தன் பத்து வயதிற்குள் முடித்து விட்டான் என்றும் கூறப்படுகிறது.
இதிலிருந்து ராஸலீனல ஒரு தெய்வீகக் கேளிக்கை எனறு சந்தேகமறத் தெரிகிறது.
மேலும் “பய க்ருத் பய நாசன:” என்று பயத்தை உண்டாக்குபவனும்,அப் பயத்தை அழிப்பவனும் அவனே என்றிருக்க
கண்ணன் பயப்படுகிறான் என்ற விவரிப்பு, கண்ணன் குழந்தை ரூபத்தை ஏற்றது மட்டுமல்லாது,
அக் குழந்தைக்குறிய குணங்கனளயும் வெளிப்படுத்தி யுள்ளான் என்பது தெளிவாகிறது,
13.ஸ்ரீ ஜயதேவர் முேல் அஷ்டபதியில் பகவானின் பத்து அவதாரங்களை வர்ணித்துள்ளார்.இதில் புத்த அவதாரத்தையும் சேர்த்து உள்ளார்.
மேலும் இந்த பத்து அவதாரங்கனளயும் ஸ்ரீ கிருஷ்ணன் தான் செய்தார் என்று கூறுகிறார்.
முதல் அஷ்டபதியில் ஓவ்வொரு அவதாரத்தைப் பற்றிச் சொல்லும் போதும்
“கேசவா த்ருத ” -கேசவன் தரித்தான் -என்று கூறி அந்த அந்த அவதாரத்தை வர்ணிப்பதன் முலம்
ஸ்ரீகிருஷ்ணன் பூர்ண பரமாத்மா என்று எடுத்துக் காட்டுகிறார்.
மேலும் “வேதானுத்தரதே ” என்று தொடங்கும் ஸ்லோஹம்- 5 ல் தெளிவாக வராக அவதாரம் எடுத்து,வேதத்தை மீட்டவனான
ஸ்ரீகிருஷ்ணன் பத்து அவதாரங்கனள எடுத்தான்,அவனுக்கு நமஸ்காரம்.-கிருஷ்ணாய துப்யம் நமஹ- என்று கூறுகிறார்.
14. “ஸ்ரித கமலா குச மண்டலா”என்று தொடங்கும் 2வது அஷ்டபதியில்
“தவ சரணே ப்ரண தாவயமிதி பாவய ஏ குருகுசலம் ப்ரணதேஷூ ஜய ஜய தே வ ஹரே ” என்று-உன்னைச் சரணமடைந்தோம் என்று அறிவாயாக.
சரணமடைந்த எங்களுக்கு நன்னம பயக்கச் செய் -என்று சரணா கதி மஹத்வத்தை -மார்ஜார பக்தி தத்துவத்தை -விளக்குகிறார்.
மேலும் வஸந்த கால மேக வர்ணனை மஹாகவி காளி தாஸரின் மேக தூதத்தை நினனவு கூறுகிறது
15.ஸ்ரீஜயதேவர் 10 ஸர்கம்,”வஸதி யதி கிஞ்சிதபி”என்ற19வது அஷ்டபதி எழுதிக் கொண்டிருக்கும் போது,
7வது சரணத்தில் அவர் கண்ணன் காதல் உன்மத்தம் கொண்டு ராதையிடம் பேசுவதாக உள்ள வரிகளில்,
அவர், ஸ்ரீ ஜகன்நாதரிடம் மனம் லயித்து தன்னன மறந்த நிலையில்,”கண்ணன் ராதையிடம்
காதல் உன்மத்தம் கொண்ட என் ஸிரஸ்ஸில் உன் மிருதுவான பாதத்தை வைத்து, அதை குளிரச் செய்”
என்று சொல்வது போலஂ எழுதி விட்டார்.-பின் சுய நினைவுடன் அதைப் படித்த பின் திடுக்கிட்டார்.
”என்ன அபச்சாரம் செய்து விட்டேன் பரமாத்மா கண்ணனின் தலையிலே ராதையின் பாதமா”என்று வருந்தி
அந்த வரிகனள நீக்கி வேறு விதமாக மாற்றி எழுத பல தடவை முயன்றும் முடியாமல் போயிற்று.
எழுது கோலை கீழே வைத்து விட்டு கங்கையில் நீராடச் சென்று விட்டார்.
திரும்பி வந்ததும் எழுதுவதற்காக ஓலையை எடுத்தார் -என்ன ஆச்சர்யம்!! அவர் முதலில் எழுதிய வாறே அந்த
நீக்கிய வரிகள் எழுதப் பட்டு இருந்ததைப் பார்த்து, வியந்து, தன் மனனவியிடம் விசாரிக்கும் போது, அவர்
மனனவி “நீங்கள் தானே சற்று முன் வந்து எழுதி விட்டு, சாப்பிட்டு விட்டு வெளியே சென்றீர்கள்” என்று சொன்னார்.
ஸ்ரீ ஜயதேவரும் பத்மாவதி தேவியும் அப்போது தான் உணர்ந்தார்கள்- பூரி ஸ்ரீ ஜகன்நாதரே
ஸ்ரீஜயதேவர் ரூபத்தில் வந்து அந்த வரிகனள எழுதினார் என்றும்
பத்மாவதி தேவி கையால் உணவும் அருந்திச் சென்றார் எனறும் அறிந்து ஆனந்த பாஷ்பம் பெருக மெய் மறந்தனர்.
இது ஒன்றே போதுமே “கீத கோவிந்தம் “ஒரு தெய்வீக காவ்யம்” என்பதற்கு.
பகவானால் எழுதப்பட்ட அந்த தெய்வீக வரிகனளப் பார்ப்போம்.
”ஸ்மர கரல கண்டனம் மம ஸிரஸி மண்டலம்
தேஹி பத பல்லவமுதாரம் ஜ்வலதி மயி தாருணோ
மதன கத நாருணோ ஹரது தது பாஹித
விகாரம் ப்ரியே சாருசீலே முஞ்ச மயி மானம நிதானம்”
“வஞ்சிக் குறமகள் பாதம் வருடிய மணவாளா” என்று அருண கிரிநாதர் தன்
திருப் புகழில் முருகனைப் போற்றி எழுதிய வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.
16.மேலும் இந்த அஷ்டபதி மரணத்திலிருந்து மீட்டு உயிரளிக்கும் ம்ருத சஞ்ஜீவினி மந்திரமாகவும்
பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது கீழ்கண்ட சம்பவத்திலிருந்து அறிகின்றோம்
ஒரு சமயம் பத்மாவதி தேவி கஜபதி ராஜா அரண்மனையில் மஹாராணியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அச்சமயம் ராணி வினளயாட்டாக பத்மாவதி தேவியிடம் ஸ்ரீ ஜயதேவர் ஸ்ரீ ஜகன்நாதர் ஆலயத்தில் த்யானத்தில்
இருந்த போது உயிர் நீத்தார் என்று சொல்ல,
அதனைக் கேட்ட பத்மாவதி தேவியார் துக்கம் தாங்காமல் அந்த ஷணமே தானும் உயிர் நீத்தார்.
வினளயாட்டு விபரீதாமானதைப் பார்த்த ராணி மிகவும் வருந்தினாள்.
ராஜாவும் உடனே ஸ்ரீ ஜயதேவரிடம் சென்று நடந்ததைக் கூறி வருந்தி மன்னிப்புக் கேட்டார்.
ஸ்ரீ ஜயதேவர் துளியும் கவலைப் படாது உடனே பத்மாவேி தேவியின் உடலுக்கருகில் சென்று ஸ்ரீ ஜகன்நாதரை மனதால் வேண்டி
அஷ்டபதி – 19ல் உள்ள “ப்ரியே சாருசீலே முஞ்ச மயி மானம நிதானம்” என்ற வரிகனள இசை மீட்டிப் பாடினார்.
உடனே பத்மாவதி தேவியார் தூக்கத்திலிருந்து எழுவது போல உயிர் பெற்றெழுந்து ஸ்ரீஜயதேவருடன் சேர்ந்து
இந்த அஷ்டபதியை இசை மீட்டிப் பாடி ஸ்ரீஜகன்நாதரை ஸ்துதித்தார்கள் என்று சொல்லப் படுகிறது.
17. “ரதி ஸுக ஸாரே ” எனத் தொடங்கும் – 11வது அஷ்டபதியில் விப்ரலம்ப ஸ்ருங்காரத்தை கவி வர்ணிக்கிறார்,
கிருஷ்ணன் யமுனா நதிக் கனரயில் ராதையின் வருகையை எதிர் நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறான்.
5வது சரணத்தில் கிருஷ்ண ராதையின் ஆனந்த ஆலிங்கனத்தை , கார் மேகத்தின் இடையே தோன்றும் மின்னலாகவும்,
கரு மேகங்களின் இடையே பறந்து செல்லும் நாரைக் கூட்டங்களாகவும் வர்ணித்துள்ள அழகு,கவியின் மஹா கவித்துவத்தைப் பறை சாற்றுகிறது.
18.”பச்யதி திஸி திஸி” எனத் தொடங்கும் 12வதுஅஷ்டபேியில் தன்னிடத்தே விட்டு துளியும் அகலாது, மனம் கண்ணனையே நினனத்து,
அவன் பிரிவாற்றா மையை சஹிக்க இயலாது, அவன் வரவை எதிர் நோக்கி விரஹ தாபத்தினால் வேதனை யுறும், ராதையைக் கண்ணுற்று,
தோழி, ராதையின் நிலமையைக் கண்ணனிடம் கூறுவதை விளக்கியுள்ள அழகே தனி.
19.கீத கோவிந்தத்தின் பெருமையை விளக்க மேலும் ஒரு ருசிகரமான நிகழ்ச்சி-
ஒரு இலந்தைப்பழம் விற்கும் ஒரு வயதான மூதாட்டி காட்டிற்குள் சசன்று முட்கள் அடர்ந்த மரங்களிலிருந்து
இலந்தைப் பழம் திரட்டச் சென்ற போது ,
பக்திப் பரவசத்துடன் தன் இனிமையான குரலில் கீத கோவிந்தப் பாடல்கனளப் பாடினாள்.
அந்த இசையில் மயங்கித் தன் ஆலயம் விட்டு, ஸ்ரீஜகன்நாத கிருஷ்ணர் அக் கிழவியைப் பின் தொடர்ந்தார்.
அங்குள்ள முட்கள் அவருனடய ஆடைகளைத் துண்டு துண்டாகக் கிழித்தது.
மறுநாள் அர்சகர்கள் பூட்டிக்கிடந்த கோயிலுக்குள் சென்று பார்க்கையில் ஸ்ரீஜகன்நாதரின் ஆடைகள்
முட்களால் கிழிக்கப் பட்டிருந்ததைக் கண்டு, என்ன காரணம் என்று அறிய முடியாமல் அதிர்சியுற்றனர்.
அவர்கள் கனவில் ஸ்ரீஜகன்நாதர் தோன்றி நடந்த நிகழ்சியைக் கூறினார் என்று கீத கோவிந்த்தத்தின் பெருமையைக் கூறுகின்றனர்
20.தினமும் ஸ்ரீஜகன்நாதரின் ஸன்நிதானத்தில் கீத கோவிந்தப் பாடல்கள் பக்க வாத்யங்களுடன் பாடப்பெற்று
நடன மாதர்களால் நாட்யமும் ஆடப் பட்டு பகவானுக்கு நித்ய ஸேவையாகச் சமர்பிக்கப்படுகிறது.
21 இவருனடய புகழிலும், கீத கோவிந்தத்தின் பிராபல்யத்தைக் கண்டும், பொறாமை கொண்ட மஹாராஜா கஜபதி
தானும் கீத கோவிந்தத்தின் மையக் கருத்தின் அடிப்படையில் பாடல்கனள எழுதி அப் பாடல் களையே , பாடகர்கள் சங்கீதத்துடன்
ஸ்ரீஜகன்நாதரின் ஸந்நிதியில் பாடவேண்டும் என்றும்,-கீத கோவிந்தப் பாடல்களைப் பாடக்கூடாது, என்றும் கட்டளை இட்டான்.
இருப்பினும்,ஸ்ரீ ஜயதேவர் ஸ்ரீஜகன்நாதரின் ஸந்நிதியில் பாடுவதையும்ஆடுவதையும் நிறுத்த வில்னல.
ராஜா மிகவும் கோபம் கொண்டு ஸ்ரீ ஜயதேவரிடம், எந்த வகையில் கீத கோவிந்தம் தன்கவி தையை விட உயர்ந்தது என்று வாக்குவாதம் செய்தார் .
இருவரின் பனடப்புகளில் எது சிறந்தது என்று தீர்மானிக்க இரண்டு கவிதைகளையும் , ஸ்ரீஜகன்நாதரின் திருப் பாதங்களில் னவத்து, கதவைத் தாளிட்டு, கோயிலுக்கு வெளியே சென்று விட்டனர்-சில நேரங்கள் கழித்து மறுபடி கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.என்னஆச்சர்யம்!!
ராஜாவின் கவிதை எழுதப் பட்ட ஓலை கீழே தரையில் தள்ளப்பட்டு கீத கோவிந்தமுள்ள ஓலை மட்டும் ஸ்ரீஜகன்நாதரின் பாதத்தில் காணப் பட்டது.
அதைப் பார்த்த அனைவரும் ஸ்ரீஜகன்நாதாரே கீத கோவிந்தம் தான் சிறந்தது என்று தீர்ப்பு வழங்கி விட்டார் என்று உணர்ந்து பெரும் உவகை யடை ந்தனர்.
அன்றிலிருந்து கீத கோவிந்தத்தின் பெருமை பன் மடங்காயிற்று.
மக்கள் அனைவரும் அதை தெய்வீக காவ்யம் என்று போற்றிப் புகழலானார்கள்.
22. ஆழ்ந்த கிருஷ்ண பக்தி யுடைய ஸ்ரீஜயதேவரால் விவரிக்கப்பட்ட கீத கோவிந்தத்தின் மூலம்,அறிவாளிகள், இசைக் கலையில் திறமையும்,
விஷ்ணுவின் மேன்மையை இனடவிடாது த்யானம் செய்தலும், வெவ்வேறு காவ்யங்களில் சிறப்பாக விவரிக்கப்பட்ட ஸ்ருங்கார ரஸத்துடன் கூடிய
ஸ்ரீகிருஷ்ணனுடைய ராஸ லீலை தத்வத்தை உணர்ந்து அறியவும், இவை அனைத்தையும்
ஒருங்கு இணைந்து , பெறட்டும் என்று 12வது ஸர்கம் ஸ்லோஹம் 88ல் பல ஸ்ருதியும் கூறி யுள்ளார்.
23.”ஸாத்வீ மாத்வீக” எனத் தொடங்கும் ஸ்லோகம் 90 ல்- “இனிய மது பானமே !நீ இனிமை என்று இனியும் நினனயாதே !
சர்க்கரையே நீ கடினம்! த்ராஷையே உன்னன காண எவர் விரும்புவர்,-அம்ருதமே இனி நீ உயிரற்றது!
பாலே நீ ருசியற்றது! மாம்பழமே (பயனற்றது என்று)ஓலமிடு!
அழகிய பெண்களின் சிவந்த உதடே ஸ்ருங்கார ரஸம் நினறந்த மங்களமான ஜயதேவனின் மிகச் சிறந்த சொற்கள் உள்ளவரை ,
இனிமைக்கு ஸமம் என்று கூற வினழயாதே !.”-என்று கூறி காவ்யத்தை நினறவு செய்கிறார்.
24.கீத கோவிந்த மாகிற அந்த அம்ருத ஸாகரத்தில் மூழ்கித் திளைத்து நம் அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண பக்தி மேலிட்டு,
ஸ்ரீ ஜயதேவர் போல், அந்த பர ப்ரஹ்மத்துடன் இரண்டற கலந்து ப்ரஹ்மானந்த மாகிற மோக்ஷப் ப்ராப்தி கிட்ட,
ஸ்ரீ ஜயதேவரின் திவ்ய பாத சரணங்கனளப் பற்றுவோமாக.
“ஸ்ரீகோபால விலாஸி நீவலய ஸத் ரத்நாதி முக்தாக் க்ருதி ஸ்ரீராதா பதி பாத பத்ம ஜநா நந்தாப்தி
மக்நோ (அ) நிஸம் லோகே ஸத் கவி ராஜ ராஜ இதி ய: க்யாதோ தயாம் போநிதி : தம் வந்தே
ஜயதேவ ஸத் குரு வரம் பத்மாவதீ வல்லபம்”
கோபியர்களின் வனளகளிலுள்ள சிறந்த முத்து முதலான ரத்னங்களின் வடிவம் கொண்ட ராதையின்
மணவாளனின் பாதத் தாமரையைத் தொழுது எப்போதும் ஆனந்தக் கடலில் மூழ்கிய வரும், உலகிலேயே
சிறந்த கவியரசர் எனப் பெற்றவரும்,கருணைக் கடலும், பத்மாவதியின் பதியும்,உன்னதமான குருவுமான
ஸ்ரீ ஜயதேவரை வணங்குகிறேன்.
—————
ஸ்ரீ நாராயண தீர்த்தரும் அவர் அருளிச் செய்த ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியும்–
1.ஸ்ரீநாராயண தீர்த்தர் கிபி 17ம் நூற்றாண்டில் ஆந்திர ப்ரதேசத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில்
விளத்தூர் என்ற கிராமத்தில் அவதரித்த தாகச் சொல்லப் படுகிறது.
பூர்வாஸ்ரமத்தில் அவருடைய பெயர் மாதவன் என்றும் கோவிந்த சாஸ்திரி என்றும் இருந்த தாகச் சொல்லப் படுகிறது.
அவர், தன் இளம் வயதிலேயே பகவத் பக்தியில் ஈடுபட்டு, பல ஷேத்திரங்களுக்குச் சென்று, பகவத் தரிஸனம் செய்தார் என்றும்
அவர் வேதாத்ரியைச் சேர்ந்த பெண்ணை மணந்து இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார் என்றும், கரண பரம்பரை வாயிலாகத் தெரிகிறது.
அவர் இளமையிலேயே வேத சாஸ்த்திரங்கள்,சங்கீத சாஹித்யங்களில் விற்பன்னராக இருந்தார் என்றும் தெரிகிறது.
2. ஒரு சமயம் கிருஷ்ணா நதியின் அக்கரையிலுள்ள தன் மாமனார் வாழ்ந்த வேதாத்திரி கிராமத்தை அடைய நீந்திச் செல்கையில்
நதியில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் அவரை உருட்டிச் சென்று விட்டது.
அவர் உயிருக்குப் பேர் ஆபாயம் ஏற்பட்ட சூழ் நிலையில், அவர் தான் க்ருஹஸ்த ஆஸ்ரமத்தைத் துறந்து,
ஸந்நியாச மார்கத்தைத் தழுவுகின்றேன் என்று ப்ரதிஜ்ஜையை எடுத்துக் கொண்டார்.
வெள்ளமும் வடிந்து அக்கரையிலுள்ள மாமனாரின் வீட்டை அடைந்தார் .
அவரைப் பார்த்த அவரின் மனனவி அவரிடம் ஒரு ஸந்யாசியின் காந்தி வீசுவதை உணர்ந்தார்
அவரிடம் விசாரித்த போது நடந்தவற்னற அறிந்தாள்.
பின் தன் மனனவிடம் அனுமதி பெற்று இல்லற வாழ்வைத்
துறந்து காஞ்சீபுரம் சென்று ஸ்ரீசிவராம தீர்த்தர் என்ற மஹானிடம் முறைப்படி ஸந்நியாசம் பெற்றார் என்று சொல்லப் படுகிறது.
கிருஷ்நா நதி வெள்ளம் ஸ்ரீ தீர்த்தரை ஸந்நியாசி ஆக்கியது , ஸ்ரீ கிருஷ்ண மஹா ஸாகரம் அவனர ப்ரஹ்ம ஞானி ஆக்கியது போலும்.
இது ஆதி சங்கரர், முதலை ,தன் காலை ப் பிடித்துக் கொண்டதையே வ்யாஜ்யமாகக் கொண்டு,
ஸந்நியாசம் வாங்கிக் கொண்டதை நினனவு படுத்துகிறது.
3.அதற்கு பிறகு, அவர் தன் குருவின் ஆஜ்ஜைப்படி தீர்த்த யாத்திரை மேற் கொண்டு காசி, ப்ரயாகை ,
மதுரா.பூரி போன்ற ஷேத்ரங்களுக்குச் சென்று வழிபாடு செய்தார்,
காசியில் பல வருடங்கள் தங்கி ப்ரஹ்ம உபாசனையில் ஈடுபட்டார்.
பிறகு காவேரிக் கரையிலுள்ள பல ஷேத்ரங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வரும் போது
அவருக்குத் தீராத வயிற்று வலி வந்து மிகவும் சிரமப்பட்டார்
4.இப்படியாகத் திருவையாறு வந்தடைந்தார் . அவ் வூரின் தெற்கே உள்ள நடுக் காவேரி எனும் கிராமத்தை அனடந்த போது,
அவரின் வயிற்று வலி மிக அதிகமாகி அங்குள்ள வினாயகர் கோயிலில் இரவு படுத்துறங்கினார்.
அவர் கனவில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தோன்றி “நீ காலையில் விழித்தெழும் போது முதலில் எந்த
மிருகத்தைப் பார்க்கிறாயோ ,அதைத் தொடர்ந்து செல்,உன் வயிற்று வலி நீங்கும்”என்று சொல்லி அருளினார்.
5.அது போலவே மறுநாள் காலையில் கண்விழித்த போது, ஓரு வெள்ளைப் பன்றியைக் கண்ணுற்றார்.
காலையில் கண் விழிக்கும் போது பன்றியைப் பார்ப்பது அப சகுனம் என்று மனத்தில் தோன்றினாலும்
ஸ்ரீகிருஷ்ணனின் ஆக்ஜ்ஜையை சிரமேற் கொண்டு அப் பன்றியைப் பின் பற்றிச் சென்றார்,
சுமார் 4 கி.மீ தொலைவு வரை அதனைத் தொடர்ந்து சென்றபின் மிகவும் களைப்புற்றார்.
6.அத் தருணம் ,அப் பன்றி ,அருகாமையில் உள்ள ஒரு கோயிலினுள் சென்று மனறந்தது.
அச் சமயம் ஆகாச வாணியின் குரலைக் கேட்கலுற்றார்.
”என்னைத் தேடாதே .உன்னன இங்கு வர வழைக்கவே நான் இவ்வாறு செய்தேன்”எனற குரலொலி கேட்டது.
அதைக் கேட்ட அவர் மெய் சிலிர்த்து ,ஆனந்த பரவசம் அனடந்தார்.
அந்த ஷணமே அவருனடய தீராத வயிற்று வலியும் மனறந்தது,
பூபதி ராஜ புரம் என்ற பெயர் பெற்ற அக் கிராமம், அன்று முதல் வராஹ புரி என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது.
வராஹ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்குப் பன்றி என்று பொருள்,
7.ஸ்ரீ தீர்த்தர் அந்த இடத்தின் மஹிமையை உணர்ந்து கிராம ஜனங்களின் உதவியுடன் அந்த பூமியை அகழ்ந்து பார்த்ததில்
ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தேவியை அணைத்தவாறு உள்ள ஸ்வயம்பு ஸிலா மூர்த்தியைக் கண்டெடுத்து அந்த இடத்தில்
ஒரு கோயிலை , பக்தர்களின் சஹாயத்துடன் நிர்மாணித்து, பகவானைப் ப்ரதிஷ்டை செய்து, பூஜா வழிபாடுகள் தினமும் நடக்க ஏற்பாடுகள் செய்தார்,
8.அவர் தம் வாழ் நாள் முழுவதும் அந்த புண்ணிய வராஹ ஷேத்ரத்திலேயே தங்கி உலகப் புகழ் பெற்ற
ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற பக்தி சுனவ சொட்டும் பாடல்கள் நிரம்பிய காவ்யத்தை அருளிச் செய்தார்.
அவர் ஸங்கீதத்திலும்,நடன சாஸ்த்திரத்திலும் வல்லுநராக இருந்ததால் தன் இஷ்ட தேவதையான ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் உள்ளத்தின் ஒருமைப் பாட்டை வெளிப்படுத்து வதற்காக ஸங்கீதத்தையும் நாட்யத்தையும் தன் பாடல்களில் சேர்த்துள்ளார்.
இந்த காவ்யத்தின் தனிச் சிறப்பு என்னவென்றால்,
ஸ்ரீகிருஷ்ண ஸன்நிதியில் அவர் எழுதிய அத்தனைப் பாடல்களுக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீருக்மிணி தேவியுடன் நடமாடி தன் அங்கீகாரத்தை வழங்கினார் என்றும்
அவர்களின் சலங்னக ஒலியை மட்டும் ஸ்ரீநாராயண தீர்த்தர் கேட்டார் என்றும் சொல்லப் படுகிறது.
இங்கு, குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீநாராயண பட்டத் திரியின் ஸ்ரீநாராயணீயம் முழுவதற்கும் அங்கீகாரம் வழங்கியதை நினனவு கூறுவோம்.
9.வடமொழியில் தரங்கிணி என்ற சொல், அனலகளுடன் கூடிய ஆற்னற குறிப்பதாகும்.
ஸ்ரீகிருஷ்ணனுனடய லீலைகள் ஆகிற அனலகளை 12 தரங்க பிரிவுகளுடன் கொண்டுள்ளதால்
இந்நூலுக்கு ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற பெயர் ஏற்பட்டது.
இந்த நூலில் 303 -ஸ்லோகங்கள் 153-கீதங்கள் 31 -ஸூர்ணிகைகள் அடங்கியுள்ளன.
10.ஸ்ரீநாராயண தீர்த்தர் கடினமான சொற்களைத் தவிர்த்து லலிதமான சொற்களாலேயே தன்
கத்யங்களையும், பத்யங்களையும் சுலபமாக புரிந்து கொள்ளும் வனகயில் அனமத்துள்ளார்.
ஸ்லோகங்கனளயும் ஸூர்ணிகைகளையும் கீதங்களிடையே சந்தர்பத்துக்கேற்ப அழகுபட பொருத்தி யுள்ளார்.
ஸ்லோகங்கள் 17அழகிய பல விருத்தங்களிலும்,கீதங்கள் 34 மனம் கவரும் ராகங்களிலும்,
கேட்போரை நடனம் ஆட வைக்கும் 10 தாளங்களிலும் அனமக்கப் பட்டுள்ளன.
11.இந்த நூலில் ஸ்ரீமத் பாகவதம் தஸம ஸ்கந்தம் 1 முதல் 58 வரையுள்ள அத்யாயங்களில் கூறப்பட்ட, ஸ்ரீகிருஷ்ணனின் அவதாரம்,பால லீலைகள்,
கன்றுகளை மேய்த்தல் ,கோபீ வஸ்த்ராபஹரணம்,கோவர்த்தன கிரி உத்தாரணம்,ராஸக் கிரீடை , கம்ஸன் முதலிய துஷ்டர்களை அழித்தல்,
கடலின் நடுவே துவாரகையை நிர்மாணித்து அதனுள் ப்ரவேசித்தல் ஸ்ரீ பலராம விவாஹம்,ஸ்ரீகிருஷ்ண ருக்மிணி விவாஹத்தை வர்ணிப்பதோடு அஷ்ட மஹிஷிகளுடன் விவாஹமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
12.ஒவ்வொரு தரங்கத்திலும் இன்ன இன்ன லீலைகள் அபிநயிக்கப் பட்டுள்ளன,
இந்த இந்த பாத்திரங்கள் வருகின்றனர் என்று கூறி, ஸ்லோகம்,கீதம்,ஸூர்ணிகை – இவைகளால் அந்த அந்த லீலைகளை விளக்கி யுள்ளார்,
கிருஷ்ண லீலைகனள அபிநயம் செய்தல் என்ற முனறயைத் தழுவியே இந்த நூலானது படைக்கப் பட்டுள்ளது.
ஹரி கதா கால ஷேபம் செய்யும் பாகவதர்கள் கதையின் ஆரம்பத்தில்,
ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியின் தொடக்கத்தில் உள்ள “ஹிம கிரி தனய” பத்யத்தைப் பாடுகிறார்கள்
என்பது இதன் தனிப் பெருமையை விளக்குகிறது.
13.ஸ்ரீநாராயண தீர்த்தர், வேதார்த்தங்களில் விசாரம் செய்து நிர்ணயித்தவாறு,
ஜாதி ,குணம்,கிரியை , இவைகளற்றதும்,ஆனந்தம், பிரகாசம்,சத்து (எப்போதும்,எங்கும்,எல்லாமுமாக இருப்பது) ஆகிய லக்ஷணங்களைக் கொண்ட
பரம்பொருனள எப்போதும் உள்ளத்தில் இருத்தி ஆராதித்தவர் ஆயினும் அத்தகைய நிர்குணமான பரம்பொருனள அடைவதற்கு அவன்
ராம,கிருஷ்ண வடிவங்கனள உபாஸிக்க வேண்டும்.
இந்த ச குண வழிபாட்டை நாளடைவில் தனக்கு தானே நிர் குண பரப்ப்ரஹ்ம உபாஸனனயாக மாறும்.
உதாரணமாக ஜீவன் முக்தரான ஸ்ரீ சுகப்ப்ரஹ்மம் நிர்குண பரப்ப்ரஹ்ம உபாஸனனயில் தீ விரமாக ஈடுபட்டவராயினும்,
ராஜா பரீக்ஷீத்திற்கு பாகவேத்தை – ஸ்ரீ கிருஷ்ண லீலைகனள -உபதேஸித்தார்,
ஒவ்வொரு லீலையிலும் தன் உள்ளத்திலுள்ள பரப் ப்ரஹ்மத்தை நினனவு கூறுகிறார்.
ஸ்ரீ சுகரைப் போலவே ஸ்ரீநாராயண தீர்த்தரும் அப் பரப் ப்ரஹ்மத்தை நினனவு கூர்ந்தே
பரம் பொருளின் ச குண வடிவங்கனளத் துதித்து தன் பாடல்கள் மூலம் வழிபட்டுள்ளார்.
ஸ்ரீகிருஷ்ண லீலைகளை வர்ணிக்கும் போதே மற்ற தேவதைகளையும் துதிப்பது இதன் தனிச் சிறப்பு.
14–முதலாவது தரங்கத்தில் “ஜய ஜய ஸ்வாமின்” என்ற கீதத்தில்,கணபதியையும்,
”துர்கே துர்கதி ஹாரிணீ ” என்ற ஸ்லோகத்திலும் “ஜயஜய துர்கே ” என்ற கீதத்திலும் துர்கா தேவினயயும்,
2வது தரங்கத்தில் “மங்களானி தானோது மதுஸூதன ஸதா ” என்ற கீதத்தில் கங்காதரன்,தக்ஷிணா மூர்த்தி ,
துர்கா ,ஸரஸ்வதி ,கங்கா,சிவன், ஆகிய தேவதைகளையும் துதித்துள்ளார்.
6,7ம் ேரங்கங்களில் நர ஸிம்ஹனரயும்,துதித்துள்ளார்.
முதலாம் தரங்கத்தில் “ஸர்வ ஞான க்ரியா சக்திம்” என்ற ஸ்லோகம் 5ல், மஹா விஷ்ணுனவயும்,
3ம் கீதத்தில், வராஹ புரி வேங்கடேசப் பெருமானளயும் துதித்துள்ளார்.
15.ஸ்ரீ நாராயண தீர்த்தர் கிருஷ்ண லீலைகனள வர்ணிக்கும் போது ஸ்ரீ ஜயதேவனரப் பின்பற்றாமல்,
ஸ்ரீவேத வ்யாஸர், ஸ்ரீமத் பாகவேத்தில் ஸ்ரீகிருஷ்ண லீலைகனள வர்ணித்த முறையையே பின் பற்றி யிருக்கிறார்.
முதலில் ஸ்ரீகிருஷ்ண அவதார கட்டத்தில்”தம் அத்புதம் பாலகம் அம்புஷேணம் ”(ஸ்ரீ மத் பாகவதம் -10-3-9)கருத்தை
”கல்யாணம் விதநோது” என்று தொடங்கும் முதல் தரங்கம் ஸ்லோஹம் -.27 ல் “சங்கம் சக்ரம்,கதை ,தாமரைப்பூ கதை ,வில்,
பல இரத்தினங்கள் பதித்த கிரீடம்,மகர குண்டலம்,மஞ்சள் பட்டு, கழுத்தில் கௌஸ்துப மணி ,இவற்றுடன் கூடியவரும்,
யாதவ குலத்தின் தலைவனான வஸுதேவருடையவும், தேவகியினுடையவும், குழந்தையாகத் தோன்றியவருமான கிருஷ்ணன்
எல்லாவிதமான மங்களங்களையும் அளிக்கட்டும்” என்று கூறுகிறார்.
இதில் கிருஷ்ணனுடைய ஜனனத்தைப் பற்றி கூற ஆரம்பிக்கும் போதே கல்யாணம் என்று மங்களகரமாக ஆரம்பிக்கிறார்,
நாராயண பட்டத்திரி நாராயணீ யத்தில் கிருஷ்ணனுனடய ஜனனத்தைப் பற்றி கூற ஆரம்பிக்கும் போது “ஆனந்த ரூப பகவன்” (தஸகம் 38,)என்று ஆரம்பிப்பதை நினைவு கூறுவோம்.
மேலும் நாராயணீ யம் ஆரம்பிக்கும் போதும் “ஸாந்த்ரானந்த ” என்றும்
ஆனந்த ஸ்வரூபியான பரப்ரஹ்மத்தை வர்ணிப்பதும் குறிப்பிடத்தக்கது.
16.ஸ்வாயம்புவ மனுவின் காலத்தில் ஸூதபா என்ற ப்ரஜாபதி , ப்ருச்னி என்ற மனைவியுடன் நல்ல
பிள்ளையை அனடய 12000 தேவ ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார்,
விஷ்ணு அத் தவத்தின் பலனை யளிக்க அவர்கள் முன் தோன்றினார்,
அப்பொழுது அந்த தம்பதிகள் விஷ்ணுவைப் போன்ற புத்திரனையே வரமாக வேண்டினர்.
அதனால் விஷ்ணுவும், ப்ரச்னி கர்பன் என்ற பெயருடன் பிறந்தார்.
அந்த தம்பதிகள், அதிதி -கஸ்யபராகத் தோன்றிய போது, அவர்களுக்கு உபேந்திரன்(வாமனன்)
என்ற குழந்தையாகப் பிறந்தார்.
மூன்றாவது முனறயாக, அந்த தம்பதிகள் தேவகி-வஸூ தேவராகத் தோன்றிய போது அவர்கள் செய்த புண்யத்தினால் விஷ்ணுவே அவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ண ராக அவேரித்தார். (பாக.ஸ்க.10-அத்யா. 3-ஸ்லோ . 32-45).
மேலே குறிப்பிட்ட விஷயத்தையே “தத் ப்ராக்தனை : கர்மபி: என்ற சொற் தொடரால் குறிப்பிட்டுள்ளார் (முதல் தரங்கம் ஸ்லோ .28)
17.ஸ்ரீ பாகவதத்தில் வியாசர் கிருஷ்ணர்,ராமர்,ந்ருஸிம்ஹ அவதாரங்கனளக் குறிப்பிடும் போது ஸ்ரீமன்
நாராயணன் எல்லை யற்ற கருணையினாலேயே அவதாரங்களை எடுத்தார் என்று வலியுறுத்த
ஒவ்வொரு அவதாரத்தினைக் கூறும் போதும் “அத்புத ” என்ற அடை மொழியைச் சேர்த்து இருக்கிறார்.
இவ்விஷயத்தையே ஸ்ரீ தீர்த்தர் “மங்களாலய மாமவ தேவ என்று தொடங்கும்” முதல் தரங்கம் கீதம்10-ல்
“அதி கருண வித்ருத அத்புத ரூபா” என்ற சொற் தொடரால் விளக்கியுள்ளார்.
இதையே ஸ்ரீ ஜயதேவர் முதல் அஷ்டபதியில் ஓவ்வொரு அவதாரத்தைப் பற்றி சொல்லும் போதும்
“கேஶவா த்ருத ” -கேஶவன் தரித்த -என்று கூறி அந்த அந்த அவதாரத்தை வர்ணிப்பதன்முலம் ஸ்ரீ கிருஷ்ணன் பூர்ண பரமாத்மா
என்று எடுத்துக் காட்டுகிறார்.
இவ்வாறே ஸ்ரீ தீர்த்தரும் தன் நூல் முழுவதிலும் ஸ்லோகத்திலும் சூர்ணிகைகளிலும் கீதத்திலும்
ஸ்ரீகிருஷ்ணன் பிறப்பு இறப்பு அற்றவன்,
எங்கும் நினறந்திருப்பவன் ,ப்ரஹ்மாண்டங்களைத் தாங்கி நிற்பவன்,நிலையான ஆனந்த வடிவு உடையவன்,தன்
அடியார்களைக் காப்பாற்ற மாயையால் பல அவதாரங்களைச் செய்தவன்,
அஹம் ப்ரஹ்மாஸ்மி,தத்வமஸி, என்ற மஹா வாக்யங்களால் ஏற்படும் ஞானத்தால் உணரப் பட்டவன் என்ற கருத்தை
“ஸகல நிகமாந்த ஜனிதாந்த மதி விதிதம்” என்று கூறியுள்ளார் (தரங்கம் -3,கீதம்-34ல்7வது சரணம்).
ஸ்ரீமத் பாகவதமும் இதே கருத்தை , “பெரிய நீர் தேக்கத்திலிருந்து எப்படி சிறிய கால் வாய்கள் ஆயிரம் தோன்று கின்றதோ ,
அது போலே மத்ஸ்யம் முதல் கல்கி அவதாரங்கள் அனைத்தும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடமிருந்து தோன்றியவைகளே .
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பரிபூர்ண தத்வம்–. மற்ற அவதாரங்கள் அவருடைய அம்ஸங்களே .” என்று கூறுகின்றது.(பாகவேம் ஸ்க.1-அத்யா. 3-ஸ்லோ .26- 28)
18.ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிற்குத் தந்தையாகப் போகிறார் என்ற காரணத்தால் வஸூதேவர்
பிறப்பின்போதே மங்கள வாத்யங்களை தேவர்கள் முழக்கினர் என்ற காரணத்தால் வஸூதேவருக்கு
“ஆனகதுந்துபி” என்ற பெயர் ஏற்பட்டது, (பாகவேம் ஸ்க.9-அத்யா. 24-ஸ்லோ . 29&30).
இதையே ஸ்ரீ தீர்த்தர் “அ லௌகிக மிதம் ரூபமாலோக்யானக துந்துபி:” என்று குறிப்பிடுகிறார் (முதலாவது தரங்கம் ஸ்லோ .29).
19.”பங்க்தி ” எனப்படும் சந்தஸ் (விருத்தம்) ஒரடிக்கு ஐந்து எழுத்துள்ளதாகும். அவ்விதம் ஐந்து
பொருட்கள் அடங்கிய கூட்டங்கள் சேர்ந்தே இவ்வுலகம் “பாங்க்தம்” என்று அழைக்கப் படுகிறது.
இவை உலக பாங்க்தம்,தெய்வ பாங்க்தம்,பூத பாங்க்தம்,வாயு பாங்க்தம்,இந்திரிய பாங்க்தம்,தாது பாங்க்தம் என்று ஆறு வகைப்படும்
இவ்வித ஆறு பாங்க்தங்களும் சேர்ந்தே உள்ளிலும், வெளியிலுமுள்ள உலகமாகும்.
இதை , ப்ரஹ்மமாக உபாஸிப்பவன், பரம் பொருளாகவே ஆகின்றான் என்று தைத்திரீய உபநிஷத் சிக்ஷாவல்லி,7ம் அனுவாகத்தில்
”பாங்க்தம் வா இதகும் ஸர்வம், பாங்தேனைவ பாங்க்தக்
ஸ்ப்ருணோதேதி ஓம் இதிப் ப்ரஹ்மா ஓம் இதீ தகும் ஸர்வம்”எனபதின் கருத்தையே
ஸ்ரீ தீர்த்தர் 2வது தரங்கம் ஸ்லோ .44ல் “பாங்க்த கர்ம க்ரமேண வேத்யம்” எனக் கூறுகிறார்,
20.பகவத் கீதையிலுள்ள (அத்,4ஸ்லோ 8) “பரித்ராணாய ஸாதூனாம்……ஸம்பவாமி யுகே யுகே ”.என்று
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இவ்வுலகில் தீயவர்களை யழித்து அதர்மத்தை யகற்றி பக்தர்களை ரக்ஷிக்கவும்,தர்மத்தை தழைக்கச் செய்வதற்கு, நான் இஷ்டப்படி பிறப்பு எடுக்கிறேன் என்ற கூற்றை விளக்க,
ஸ்ரீ தீர்த்தர் 2வது தரங்கம்,சூர்ணிகை 15ல் “ஸ்வ பத அநுக்ரஹ சிகீர்ஷயா ஸ்வேச்சயா ப்ராப்த கோபால விக்ரஹ:” என்ற சொல் தொடனரப் ப்ரயோகப்படுத்தி யுள்ளார்,
21.2வது தரங்கம்,சூர்ணிகை -17ல், ஸ்ரீ தீர்த்தர்,”ஆருருஷுநிவாரூடயோகி” என்ற சொல் தொடரைப் ப்ரயோகப் படுத்தி யுள்ளார்.
எல்லாம் அறிந்த கண்ணன் உயரத்தில் உள்ள உரிகளில் வைக்கப் பட்டிருக்கும் தயிர்,பால்,வெண்ணைய் முதலியவைகளை எடுப்பதற்கு
வழி தெரியாத கோப குழந்தைகளுக்கு, உபாயங்கனளக் கற்றுக் கொடுத்தான் என்பது பொருள்
.”ஆருருஷுநிவாரூடயோகி”- நிஷ்காம கர்மாக்களினால் சித்த ஸுத்தி அடைந்தவன் ஆரூட யோகி.
அதைப் பெற விரும்புபவன் ”ஆருருக்ஷு யோகி. என்று ஸாஸ்த்திரங்கள் கூறுகின்றன.முன்னவர் பின்னவருக்கு வழி காட்டுபவர்
.”ஆருருணக்ஷார் முனேர் யோகம்” என்று தோடங்கும் பகவத் கீதை அத்.6,ஸ்லோ.3 லும் இக் கருத்தே கூறப்படுகிறது.
22. வராஹ புரி புண்ய ஷேத்ரத்தில் ஸ்ரீநாராயண தீர்த்தரால் ஆரம்பிக்கப் பட்டதும்,பக்தர்களால்
இன்று வரை பக்தி ஸ்ரத்தை யுடன் நடத்தப் பட்டு வரும் உரியடி தத்வத்தை விளக்குவது இந்த இடத்தில்
பொருத்தமாக இருக்கும் என தோன்றுகிறது,
மனிதன் தன்னுள்ளேயே இருக்கும் ப்ரஹ்மத்தை
உணர்ந்து,தானும் அதுவாகவே ஆகி பேர் ஆனந்தத்தை அனுபவிக்க அக்ஞானம்(அறியாமை ) தடையாக உள்ளது.
வாழ்கையில் பல்வேறு இடர்கள் மனிதனை அவன் லக்ஷியத்தை அடைய முடியாமல் குறுக்கிடுகின்றன
இவற்னற ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத ஸேவனம் .அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம்,ஸக்யம்,ஆத்ம நிவேதனம் ஆகிற ஒன்பது வகைப்பட்ட
பக்தியில் ஈடுபடு வதால் ஏற்படும் ஞானத்தால், இடர்களைத் தகர்த்து, பகவத் அநு க்ரஹத்தாலும், ஞானிகளின் துணை கொண்டும்,
ப்ரஹ்மத்துடன் இரண்டறக் கலந்து, ப்ரஹ்மானந்தம் அடைவதையே விளக்குவது போல், உரியடி உத்ஸவம் அமைந்துள்ளது
23.மூங்கில் பெட்டியால் பின்னப்பட்ட உரியடிப் பெட்டியும் வழுக்கு மரத்தில் பூசப்பட்டிருக்கும் பசை முதலியவையும் அக்ஞானமாகும்,
பலவித மான இடையூறுகளுக்கிடையில் தடிகளால் உரியை அடித்தும்,கைளால் பிடித்து பெட்டியை உடைப்பதும்,
வழுக்கு மரத்தின் மீது பூசப்பட்ட அக்ஞானமாகிற பாச பந்தங்கனளக் கனளந்தும் படிப்படியாக மேலே ஏறுவதும்,
ஸ்ரவணம் முதலிய ஸாதனங்களால் உண்டாகிற அறிவாகும்.
வழுக்கு மரத்தின் அடியில் ஸ்திரமாக நின்று மேலே ஏறிச் செல்பவர்களுக்கு உதவுபவர்கள் ஆரூடயோகி க்கும், மேலே ஏறிச் செல்பவர்கள் ஆருருக்ஷுவிற்கும் ஸமமானவர்களே ,
இத் தத்துவமே உரியடித் தத்துவம்.– உரியிலும்,வழுக்கு மரத்தின் மேலும் தொங்கும் ப்ரஸாதத்தை பகவத் ப்ரஸாதமாக ஏற்று,பக்தர்கள் பகிர்ந்து கொள்வது, பகவத் அனுக்ரஹத்தினாலேயே , பர ப்ரஹ்ம ஞானம் கிட்டி பூர்ண ஆனந்தம் கிட்டும் என்பதைக் காட்டுகிறது.
24. 2வது தரங்கம்,சூர்ணிகை -17ல் ஸ்ரீ தீர்த்தர் “முக்ய ப்ராண இவ வாகாதீன்” என்ற சொல் தொடரை உபயோகித்து
ஸ்ரீகிருஷ்ணனே ப்ராணனுக்கு இணையாகவும் கோபர்கனள வாக்கு முதலிய புலன்களுக்கு இணையாகவும் உருவகப்படுத்தி ,
வாக்கு முதலிய புலன்கனளக் காட்டிலும் ப்ராணனே சிறந்தது என்று விளக்குகிறார்.
ப்ராணனே ஐம்புலன்களிலும் சிறந்தது என்ற விஷயமானது, ப்ரச்ந உபநிஷத் 2வது ப்ரசனம் 4வது வாக்யத்திலும்,
சாந்தோக்ய உபநிஷத்5வது அத்யாயம் 1வது கண்டத்திலும், ப்ரஹதாரண்ய உபநிஷத் 6வது அத்யாயம் 1வது கண்டத்திலும் கூறப்படுள்ளது.
வேத ஸாஸ்த்திரங்களையும்,வேதாந்தங்களையும் நன்கு கற்றறிந்த ஸ்ரீ தீர்த்தர்,
பாமர மக்களுக்கும் எளிதாக புரியக் கூடிய வனகயில் ஸகல வேதாந்த ஸாரங்களைத் தன் நூலில் இடை இடையே நன் மணிகளாகக் கோர்த்திருக்கிறார்.
25.ஸ்ரீ தீர்த்தர்,”பாஹி பாஹி ஜகன் மோஹன கிருஷ்ணா பரமானந்த ஸ்ரீ கிருஷ்ணா ” (4வது தரங்கம்- கீதம்
35) என்று குழந்தை ஸ்ரீகிருஷ்ணனின் அழகு உலகம் அனைத்தையும் மயங்கவைக்கும் அழகு என்றும்
பரமானந்த வடிவுடையவன் என்றும் கூறுகிறார்.
சாதாரணமாக ஒரு குழந்தையின் கள்ளம் கபடற்ற சிரிப்பைப் பார்த்தாலே நமக்கு இனம் தெரியாத ஆனந்தம் கிட்டுகிறது.
ஏன் என்றால் அது பூர்வ ஸத்வ குணத்துடன் இருப்பதாலேயே . அதற்கு அன்ன ப்ராசனம் ஆகும் வரை இந்த பூர்ண ஸத்வ குணம் அதனிடம் நீடிக்கிறது.
அதற்குப் பின் அதற்கு ரஜோ தமோ , குணங்களின் கலப்பு வந்து விடுகிறது.ஸத்வ குண அளவும் குறைய ஆரம்பிக்கிறது.
அப்படியிருக்க ஸுத்த சத்வ குணமே உருவெடுத்து இருக்கும் குழந்தை ஸ்ரீகிருஷ்ணனைக் காணும் போது பரமானந்தமாக இல்லாமல் எப்படி இருக்க முடியும்.-அதையே “பரமானந்த ஸ்ரீ கிருஷ்ணா ” என்கிறார்,
26.மேலும் (4வது தரங்கம்- கீதம் 35) 3வது சரணத்தில் ஸுலபமாக மாந்தர்களால் அறிய முடியாத ,
உள்ளடங்கிய மஹிமை வாய்ந்தவர் எனபதை “கூடமஹிம ஸ்ரீ கிருஷ்ணா ” என்கிறார்.
நந்த கோகுலத்தில், குழந்தை ஸ்ரீ கிருஷ்ணன் செய்யாத சாஹசங்கள் இல்லை .
பூதனை வதம், சகடாஸுர வதம்,காளிங்க நர்தனம், கோவர்தனகிரி உத்தாரணம்,போன்ற வளர்ந்த மனிதனாலேயே முடியாத பல
அதிசயிக்கும் சாஹசங்களைச் செய்தாலும்,கோபர்கள் அவனுடைய பராக்கிரமத்தை அறியவில்னல,
ஒரு குளத்தில் இருக்கும் மீன்கள் தண்ணீரில் தெரியும் பூர்ண சந்திர ப்ரதி பிம்பத்தைக் கண்டு அதன் பெருமையை அறியாமல்,
அந்த சந்திரனையும் தன்னைப் போல் ஒரு மீன் என்று எண்ணுமாம்.
அது போல கோபர்களும் ஸ்ரீ கிருஷ்ணனை தங்கனளப் போல ஒரு சாதாரண இனடயன் என்றே எண்ணினார்கள்,என்று இதைப் பற்றி ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
இந்தப் பாடலை ஸ்ரீ ஜேஸு தாஸ் அவர்கள், தன்னுனடய இனிமையான குரலில்,அர்த்த பாவத்துடன் பாடும் போது மயங்காதவர்உண்டோ .கல்லும் கனரந்து உருகுமே .
27.அத்வைத வேதாந்த ஸித்தாந்தப்படி ஆத்ம ஸ்வரூபம் ஒன்றே ப்ரகாசமாக இருக்கும் பொருள்.
அந்த ஆத்ம ஸ்வரூபத்தை தவிர்த்த அனைத்துப் ப்ரபஞ்சமே , ப்ரகாசம் அற்ற ஜடப் பொருளாகும்.
எனவே ,ஆத்ம ஸ்வரூபத்திற்கு ஆவரணம்(மனறப்பு) தேவை யில்னல.
மாயையின் வசத்தில் கட்டுப்பட்டு கோபிகள் இருந்தாலும், அவர்கள் தன்னிடம் கொண்ட அத்யந்த ப்ரேமையால் கவரப்பட்டு அவர்களை
அனுக்ரஹிக்கும் பொருட்டு, ஸ்ரீகிருஷ்ணன் நடத்திய லீலையே கோபிகா வஸ்த்ராபஹரணம்.
வஸ்திரம், ஸ்தூல தேஹத்தை மறைக்கும் ஆவரணம்(திரை ).மாயை , சூக்ஷ்ம தேகத்தையும் காரண தேகத்தையும் மறைக்கும் ஆவரணம்.
அபஹரணம் என்றால் பரிப்பது,களையும்படி செய்வது என்று பொருள்.
காத்யாயணி வ்ரதம் மேற்கொண்ட கோபிகை களின் ஸ்தூல தேஹ ஆவரணம் இந்த லீலையால் நீங்குகிறது.
உண்மையான ஆத்ம ஸ்வரூபம் ஸ்ரீகிருஷ்ணனிடமும் கோபிகைகளிடமும் ஒன்றே .
கோபிகை களுக்கு ஸ்வயம் ப்ரகாச ஸ்வரூபமான தன்னிடம், மனம்,சித்தம்(சூக்ஷ்ம தேஹம்),
மாயை யாகிற ஆவரணம் களையப்பட்டு தன்னிடம் பூர்ணமாக லயிக்கப் பெற வேண்டும் என்று
வஸ்த்ராபஹரணம் என்ற வ்யாஜத்தால் உபதேசித்த போது கோபிகைகளுக்கு மூல அக்ஞான ஆவரணம் போக்கடிக்கப் பட்டது.
மேலும், “என்னிடம் உள்ளத்தை நினலயாக இருக்கச் செய்தவர்களுக்கு மறுபடி உடலை யடைந்து சம்ஸாரத்தில் உழலுவது என்பது கிடையாது
தீயில் நன்கு வறுக்கப்பட்ட பயிறு,உளுந்து,கோதுமை போன்ற வித்துக்கள் ஒரு பொழுதும் வயலில் விதைக்கப் பெற்று முனளத்த தில்லை .
ஆகவே , நீங்கள் பிறவி யற்றவர்கள் ஆனீர்கள்”-என்று கோபிகைகளிடம் ஸ்ரீகிருஷ்ணன் கூறினார்,(பாகவதம் ஸ்க.10அத்யா 22-ஸ்லோ . 26).
வஸ்த்ராபஹரண தத்துவத்தை , ஸ்ரீதீர்த்தர் 5வது தரங்கத்தில் “ஆவரணம் மம நஹி தே தாதும் பாவய கோப வதூ ஜன ப்ருந்த ” என்ற கீதம் 45ல்
கிருஷ்ண கோபிகள் ஸம்பாஷணையின் வாயிலாகத் தெளிவு படக் கூறியுள்ளார்.
ஸ்ரீ ரமணரின் அக்ஷர மணி மாலாவில் கூறப்பட்ட வரிகளை இங்கு நினனவு கூர்வோம்
“மானங்கொண்டு உறுபவர் மானத்தை யழித்து அபிமான இல்லாது ஒளிர் அருணா சலா”-(அருணாசலர்
ஒளி வடிவானவர்-அக்னி தத்வம் )
28.மேலும்,”கோபிகைகள் நான்கு பிரிவாக உள்ளனர்,
உபநிஷத்துக்கள்,தண்டகாவனத்திலுள்ள ரிஷிகள்,நித்ய ஸித்த லோகத்தைச் சேர்ந்தவர்கள், தேவ ஸ்த்ரீகள் ஆகியவர்களே
கோகுலத்தில் கோப ஸ்த்ரீகளாக இருப்பவர்கள். மானிடப் பிறவி உள்ளவர்கள் ஒருவரும் இல்லை “எனற ப்ரஹ்ம வைவர்த்த புராண வசனக் கருத்தை
ஸ்ரீதீர்த்தரும் 5வது தரங்கத்தில் ஸ்லோ .135 ல் “ச்ருதி சிரோ வாக் கோபிகா வல்லப:”என்று கோபிகைகள் வடிவம் எடுத்த
உபநிஷத் தேவதைகளுக்கு மிகப்ரியமானவராக விளங்குபவர் என்று ஸ்ரீகிருஷ்ணரை வரணித்துள்ளார் –
29.கங்கை , கோதாவரி , யமுனை ,காவேரி,முதலிய நதிகள் கடலில் கலந்தவுடன் பெயரையும், உருவத்தையும் இழந்து
ஒரே கடலின் வடிவத்தை அடைகின்றன,-அவ்வண்ணமே முக்தி பெற்றவர்கள்
ப்ரஹ்மத்துடன் இரண்டறக் கலந்து தம் சுயத்தன்மையை இழக்கிறார்கள்.-என்று முண்டகோபநிஷத்தில் கூறிய கருத்தை
ஸ்ரீதீர்த்தர் 6வது தரங்கத்தில் சூர்ணிகை 24 ல் இங்கு கிருஷ்ண ஸமுத்ரத்தில் கோபிகைகளான நதிகள் கலந்து விி்ட்டன என்று வர்ணிக்கிறார்.
30.கண்ணனின் புல்லாங்குழலிலிருந்து எழுந்த ஒலியானது வெளி விஷயங்களில் ஈடுபாடுனடய கோபிகைகளை
கண்ணனிடம் கொண்டு போய்ச் சேரத்தது, என்று 6வது தரங்கம் ஸ்லோ 142,143 ல் ஸ்ரீதீர்த்தர் கூறுகிறார்.,
இக் கருத்து பாகவேத்திலும் (ஸ்க.10அத்யா 29-ஸ்லோ . 3-8). காணப்படுவது குறிப்பிடத் தக்கது.
மோக்ஷத்தில் விருப்பம் உள்ளவர்கள் அறம்,பொருள், இன்பம் ஆகியவை களிலிருந்து முதலில் விடுபட வேண்டும் என்பது வேதாந்தங்கள் முடிவு.
31.ஸ்ரீதீர்த்தர் “ப்ருந்தாவன மதுனா மன்யே ஸகி ப்ரஹதாரண்யமஹம்” (6வது தரங்கம் கீதம் 52)
கண்ணனுடன் சேர்ந்து இருக்கும் ப்ருந்தாவனத்தை ,
“ப்ரஹதாரண்யகம்” என்ற உபநிஷத்தாகவே கருதுகின்றேன் என்றும்,
பிருந்தாவனம், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை உளமாற நேசிப்பவர்களுனடய, பல காலமாகத் தொடர்ந்து வரும்
அக்ஞானத்தை அடியோடு அழிக்கக் கூடியது என்றும்,
ப்ரஹதாரண்யகம் முமுக்ஷுக்கள் பலருக்கு ஜீவ பரமாத்ம ஐக்ய ஞானத்தை அளிப்பதன் மூலம்
அக்ஞானத்தை அறவே அழிக்க வல்லது என்பது போல் ,இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை களையும்
ஒரு தோழி மற்ற ஓரு தோழியிடம் விளக்குவது போல் ஸ்ரீதீர்த்தர் கூறுவது அவரது சிறந்த வேதாந்த ஞானத்தை பனற சாற்றுகிறது,
32. “நிமிஷமபி யுக ஸஹஸ்ர ஸம தயா நீயம் மயா தின மாஸாயம் -” (6வது தரங்கம் கீதம் 58, 2வது சரணம்) –
கண்ணனைப் பார்க்காத க்ஷணநேரம் ஆயிரம் யுகங்களுக்கு ஸமமாகும் என்று கோபிகள்
கூறுவதாக ஸ்ரீதீர்த்தர் ,அவர்களின் பிரிவாற்றாமையை விளக்கியுள்ளார். ,
பாகவதம் ஸ்க.10அத்யா. 31-ஸ்லோ . 15ல் கோபிகா கீத த்தில் “த்ருடிர் யுகாயதே த்வாம் அபஸ்யதாம்” என்ற வரியை இப்போது நினனவு கூர்வோம்.
33.மேலும் ஸ்ரீதீர்த்தர், ‘பூயோ பூயோ யாசேஞ்ஜலினா”-என்று தொடங்கும் மிக அருமையான கீதம் 57ல்(தரங்கம்6)
அரை நிமிஷம் கூட கிருஷ்ணனைப் பார்க்காதிருக்கும் இந்தா உடல் வெறுக்கத் தக்கதாகும்.என்றும்
“காந்தம் காந்தாரமபி தவ யோகே,……காந்தாரம் க்ருஹமபிது வியோகே கருண
தருணீ மயி தவ பவது” -எனறு கண்ணன் இருக்குமிடமானால் காடும் நாடு போன்று அழகுள்ளதாகும்,
கண்ணன் இல்லையேல் வீடானாலும் அது கஷ்டங்கள் நினறந்த காடாகும் என்று ஸ்வானுபவத்தை
கூறும் அழகு கிருஷ்ண பக்தர்களை மிகவும் கவருகிறது.
மேலும் புன்னாகவராளி ராகத்தில்
அர்த்த பாவத்துடன் உனடயாளூர் அனுபவித்துப் பாடும் போது, அதைக் கேட்போர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
ராஸக்ரீனட
34.7வது தரங்கத்தில்,கோபிகைகள் ஸம்ஸாரத்தில் வெறுப்பு ஏற்பட்டு அதனிடம் இருந்து விடுதலை அடையவே
ஸ்ரீ கிருஷ்ணனிடம் புகலிடம் அனடந்தோம்,.எனக் கூறிய பின் ராஸ க்ரீனட விவரிக்கப் படுகிறது.
ஆயர்பாடியிலுள்ள மங்கையர் அநேக ஆயிரம் பிறவிகளில் செய்த தவத்தால் கோப ஸ்த்ரீ என்ற
இந்தப் பிறவியில் ஸச்சிதானந்த வடிவான ஸ்ரீ கிருஷ்ணனின் திவ்ய தர்ஸனம்
பெற்று பிறவியின் பயனை அனடந்தனர் என்று கூறுகிறார்.(7வது தரங்கம் ஸ்லோ .4) .
35.மேலும் 7வது தரங்கம், கீதம் 1 ல் “அத்வயம் கண்டிதம்” என்ற சரணத்திலிருந்து 20 வது சரணம் வரை
20 சரணங்கள் அடங்கிய கீதத்தால்-ஸாம வேதத்தைச் சார்ந்ததும் 16 பிரிவுகள் கொண்டதுமான
சாந்தோக்ய உபநிஷத்தில், உத்தாலக ருஷியால் தன் புதல்வனும் சீடனுமான, ச்வேதகேது என்ற முனிகுமாரனுக்கு,
உபதேஸிக்கப்பட்ட ஆத்ம தத்வ ஸாரத்தை ,ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ராஸ மண்டலத்தில் உள்ள கோபிகைகளுக்கு
கான ரூபமாக உபதேஸித்துள்ளதாக,ஸ்ரீதீர்த்தர் வர்ணித்துள்ளது அவரின் கவித்வத்தையும் உயர்ந்த ஆத்ம ஞானத்தையும் எடுத்துக்காட்டுகிறது,
36.மிகச்சிறந்த தத்வக்ஞானம் பெற்றவர்களுள் இணையற்றவள் என்று ஒரு கோபியைக் குறிப்பதற்காக
“ஹ்ருதய நிஹிதம் காந்தம் காசித் களிந்த ஸூதா தடே ” என்ற வரியில் காசித் என்ற பதப் ப்ரயோகம் செய்கிறார்.
கடோபநிஷத்தில், “மிகச் சிறந்த அறிவாளி ஆத்ம தத்வத்தைக் கண்டான்” என்று கூறுகையில்
“காசித்” பதம் ப்ரயோகிக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்தில் ஒருவனே ஆத்ம ஞானத்திற்காக முயற்சி செய்வான் .முயற்சிப்பவர்களுள் ஆயிரத்தில் ஒருவனே தத்துவத்தை அறிகின்றான் என்று
பகவத்கீதையிலும் “மனுஷ்யானாம் ஸஹஸ்ரேஷு……..கச்சின் மாம் வேத்தி தத்வத “(அத்.7 ஸ்லோ .3)-என்று கூறப்பட்டுள்ளது.
இங்கேயும், ஸ்ரீ கிருஷ்ந பரமாத்மா, காசித் என்ற பதப் ப்ரயோகம் செய்கிறார்.
கோபியர்கள் அத்தகைய கினடத்தற்கரிய ஆத்ம தத்வ ஞானத்தை ஸ்ரீகிருஷ்ணனுனடய அருகாமையில் இருந்த
காரணத்தாலேயே கை வரப் பெற்றனர் என்று விளக்கவே ஸ்ரீதீர்த்தர், காசித் என்ற பதப் ப்ரயோகம் செய்கிறார். (தரங்கம் 7 ஸ்லோ . 12).
37.“சத்யம் ஞானம் அனந்தம்– ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் ஸோஸ்நுதே
ஸர்வான் காமான் ஸஹ-“என்று தைத்ரிய உபநிஷத் ஆனந்த வல்லி கூறுகிறது,
ஹ்ருேயத்தில் இருக்கும் உபநிஷத் ஸாரச் சுருக்கமான” “புத்தியால் நான் ப்ரஹ்மமாகவே இருக்கிறேன்
என்று உணருபவன் பேர் ஆனந்தத்தை அடைகிறான்-பேர் ஆனந்தத்தில் முழ்கித் திளைத்த அந்த ஜீவன்
முக்தன், நானே அந்த பர ப்ரஹ்மம் என்று பாடுகிறான்” என்று தைத்ரீய உபநிஷத் ப்ருகுவல்லி
கூறுகையில் ‘ஹாவ் ஹாவ் ஹாவ்’ என்று ஆனந்தக்கூத்து ஆடுகிறான் என்றும் கூறுகிறது.
இக் கருத்தையே ஸ்ரீதீர்த்தர், தன்னையே ஒரு கோபிகையாகப் பாவித்து இந்த பரமானந்தத்தைத் தான் அனுபவித்து,
அதையே கோபியர்கள், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுடன் அனுபவித்தாக எழுதி யுள்ளார்.(தரங்கம் 7 ஸ்லோ . 12).
38.”நிரங்குச த்ருப்தித ”- என்ற சொல்லால் ஸ்ரீ கிருஷ்ந பரமாத்மாவும் நானும் ஒன்றே , வேறில்னல–அதாவது
பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே , வேறில்னல என்ற ஆத்ம ஞானத்தினால் ஏற்படும் பேர் ஆனந்தம் நிகரற்றது
என்ற மஹா வாக்யங்களின் அர்த்தத்தையே உணர்த்துகிறார் என்று சொல்லவும் வேண்டுமோ ?. (தரங்கம் 7 ஸ்லோ . 12).
39.கோபிகைகள் யமுனாநதியில் நீராடும் போது தங்களுக்கு கிருஷ்ணனைப் போலே அழகுள்ள
கணவனை அருள வேண்டும் என்று ப்ரார்த்தனை செய்தனர்.
கல்யாண சந்தர்பத்தில் ஓதும் வேத மந்திரங்கள் கூறுகின்றன-சோமோ கந்தர்வர்களே ,அக்னியே ,மற்ற தேவர்களே இந்தா விட்டு விலகிச் செல்லுங்கள்.
அவள் பூலோக சம்பிராதாயப்படி தன் கணவனின் மூலம் தாய்மை அனடய வேண்டியுள்ளது.-
இந்த மந்திரங்கள் அவளுக்கு அனுகூலமாக,சாதாரண உணர்ச்சி பூர்வமான அநுபவங்களிலிருந்து விடுவித்து,
அவளைத் தாய்மை எனும் உன்னதமான உயர்ந்த நிலையை அடையச் செய்ய ஹேதுவாக இருக்கிறது.
40. இந்த வேத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை ஸ்ரீமத் பாகவதத்தில் கோபியர்கள் நீராடப் போகு முன் அவர்கள்
மரத்தில் வைத்திருந்த வஸ்திரங்கனள அபகரித்த ஸ்ரீகிருஷ்ணனிடம் அவைகளைத் திருப்பிக்
கொடுக்குமாறு வேண்டிய அவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணன் செய்த உபதேஸமும், ஆகியவை அழகுற சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ராஸ லீலை , கோபிகாகீதம், யுகளகீதம் ஆகியவைகள் தொடர்ச்சியாக விவரிக்கப்பட்டு
அவை மூலம் கோபியர்கள் கண்ணன் பால் கொண்டிருந்த பரம ப்ரேமையையும் ,
அவர்களின் எண்ண ஓட்டங்களையும், அவர்கள் எது பொய் எது உண்னம என்று அறிந்து மனப் பக்குவம்
அடைந்து, பரமாத்மாவுடன் ஐக்யமனடந்து ஆனந்தத்தாய் அடைந்து, சிறந்த பேற்றை அடைவது
ஆகியவை அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன .
ஸ்ரீநாரத பக்தி ஸூத்ரத்தில் (19,55,57,88 ) பரம ப்ரேமையின்
லக்ஷணங்களும்,வெளிப் பாடுகளும் எத்தகையது விளக்கப்பட்டு இருப்பதையே , மேற்கண்ட ஸர்கங்கள்,
ஸ்ரீகிருஷ்ணர் கோபிகைகளுடன் நடத்திய லீலைகளின் வாயிலாக சித்தரிக்கின்றன.
41.சாதாரணமான மனித அனுபவங்களில், விழிப்பு நினலயில், மனத்தில் தோன்றும் பூரண நினறவு பெறாத எண்ணங்கள்
நினனவுகள் உருவெடுத்து,நம் உறக்க நினலயில் கனவுகளாக மாறுகிறது.
இதையே கவிதை நயத்துடன் பார்க்கும் போது நம் கனவுகளே விழிப்பு நினலயில் நினறவு பெற்ற நிகழ்வுகளாக மாறுகிறது.
இதைத்தான் .ஸ்ரீலீலா சுகர் தான் எழுதிய கிருஷ்ண கர்ணாம்ருதத்தில் (அங்கநாம் அங்கநாம் என ஆரம்பிக்கும் (2-வது ஆஸ்வாசம் ஸ்லோகம்- 35)
ராஸ லீலையை விவரிக்கும் போது,எப்படி ஒரு கனவு,விழிப்பு நினலயில் உண்மை நிகழ்வாக மாறுவதை கவி நயத்துடன் வர்ணிக்கிறார்.
இந்த நினலயில் நமது வலுப் பெற்ற ஏகாக்ர சிந்தனைகள்
பகவான் பால் இருந்தால் ,அவனருளால்,அவை நிறை வாகும் தன்மையை ராஸ க்ரீடா நிகழ்ச்சி மூலம் விவரிக்கிறார்.
இதில் கிருஷ்ணன் எப்படி தன்னை பல கிருஷ்ணன்களாக ஆக்கிக் கொண்டு கோபியர்களின் இடையே நடனம் புரிந்த நிகழ்ச்சியை அழகாக வர்ணித்துள்ளார்.
மேலும் கோபியர்கள் அனமத்த வட்டத்தின் நடுவிலும் நின்று புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு இருக்கிறான்.
அவர்களுக்கு மற்ற கோபியர்கள் மனறந்து, ஒவ்வொரு கோபியும் தான் ஒருவளே கண்ணனுடன் தனியாக
ஆடிக் கொண்டிருப்பதாகவே எண்ணி ஆனந்திக்கிறாள், அப்போது கனவும் நினனவும் ஒன்று இணைந்து,
அவர்களுக்கு தான் கனவுலகத்தில் தான் அனுபவித்த தனிப் பட்ட ஆனந்தம், நினனவு நினலயில்,ஒரு உண்மை நிகழ்வாகவே தோன்றுகிறது.
இந்த தன் உணர்வு இல்லாது ,தான்,தனது என்ற தளைகளையும் உதறித் தள்ளிவிட்டு அப்பரமாத்மாவிடம் அனன்ய பக்தி யுடன் சரணா கதி அடைவதையே ஒவ்வொரு பக்தனும்( ஜீவாத்மாவும்) விரும்புகிறான்.
இந்த விவரிக்க இயலாத , உன்னத ப்ரேம பக்தி பெருக்கு, நினைவுலகத்தையும்,கனவாக மாற்ற வல்லது என்பதை கிருஷ்ண கர்ணாம்ருதத்தில்
(விக்ரேது காமா எனத் தொடங்கும் ஸ்லோகம் 55-2வது ஆஸ்வாஸம்), லீலா சுகர் மற்ற ஓரு நிகழ்ச்சியால் வர்ணிக்கிறார்
தயிர் விற்கும் ஒரு கோபிகை ப்ருந்தா வனத்தி ல் “த யிர், தயிர்” என்று கூவிக் கொண்டு செல்லும் போது ,கிருஷ்ணனின் பாத கமலங்களில் மனத்தைச் செலுத்தி
அவனுனடய பால லீலைகளில் மனம் லயித்து, தன்னை மறந்த நிலையில், “தயிர் தயிர்” என்று கூவுவதை மறந்து
“கோவிந்தா மாதவா ,தாமோதரா “என்று தன் இனிய குரலில் கூவ ஆரம்பித்தாள்.
கனவு, நினனவுகளைத் தாண்டி,பக்திப் பரவசம் ஒருவரை எப்படி மதி மயங்கச் செய்கிறது என்பதை நன்கு உணர முடிகிறது.
தன் ஸ்வானுபவங்களை கவிகளா லேயே இப்படி நயம் பட வர்ணிக்கமுடியும்.
42.மேலும் பாகவத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கோபியர்களுடன் ராஸ க்ரீடையில் ஈடுபட்டபோது,
இவ்விதம் கோபியர்கனளக் கட்டிக் கொள்வது, கைகளால் தொடுவது, அன்பு ததும்பப் பார்பது,
அழகிய கம்பீரமான சிரிப்பு இவைகளினால் தன் நிழனலப் பார்த்து வினளயாடும் குழந்னதை போல் வினளயாடினார் என்று விவரிக்கப்பட்டுள்ளது.-
“ ரே மே ரமேஸோ வ்ரஜ ஸுந்தரீபி: யதார்பக: ஸ்வ ப்ரதி பிம்ப விப்ரம:”( பாகவதம் ஸ்க.10-அத்யா. 33-ஸ்லோ. 17)
43.நம்முனடய வேதங்கள், புராணங்களுக்கும் உபநிஷதங்களுக்கும் ஆதாரமாக உள்ளன.
புராணங்கள் காவ்யங்களும், கவிதைகளும் தோன்றுவதை ஊக்குவிக்கின்றன.
பலிபீடம் யக்ஞம்(அக்னி கார்யங்கள்) செய்வது எல்லாம் ப்ரக்ருதி ,புருஷன் என்ற இரண்டு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவையே .
நமது திருமணங்களில் தம்பதிகளின் நலன் குறித்து ஓதப்படும் வேத மந்திரங்கள் எல்லாம் தாய்மை
அடைவது,புத்திர உற்பத்தி என்ற புனிதமான நிகழ்வுகளுக்கு ஆசி வழங்குபவைகளாகவே இருக்கின்றன.
“ஆத்மாவை புத்ர நாமாஸி ப்ரஜாமனு ப்ரஜாயஸே ”-என்று விவாஹ சமயம் செய்யப்படும், சேஷ ஹோமத்தில் சொல்லப்படும் மந்திரங்கள்,
கணவன்-மனைவி, தங்களுடைய குழந்தைகளிடத்தில் மறுபிறப்பு அனடகிறார்கள் என்ற கருத்தை
ப்ரதான ஹோமத்தில்,வடு ஹோமம் செய்யப்படும்போது கீழ் கண்டவாறு மந்திரங்கள் ஓதப்படுகின்றன.
”இந்திரனே ! இந்த வதுவிற்கு பத்து பிள்ளைகள் பிறக்கும்படி அருள் செய்.கணவனை பதினோராவது புத்திரனாகப் பாவித்து அன்பை வழங்கட்டும்”
என்று ப்ரார்திக்கப்படுகிறது.
வேத மந்திரங்களால் சுத்தி கரிக்கப்பட்ட மனத்துடன் இணையும் தம்பதிகள் பெறுவது ப்ரஹ்மானந்தத்தின் சிறு ப்ரதி பலிப்பே .
இல்லற வாழ்க்கையில் தேடிச் செல்லும் மற்ற விஷயங்களால் ஏற்படும் சுகங்கள் நினலயற்றதே .
நம்மில் அந்தர்யாமியாய் இருக்கும் சுத்த ஸத்வமான பரமாத்வ ஸ்வரூபத்தை உள்நோக்கி மனனம், முதலிய ஒன்பது ஸாதனங்களால் செலுத்தும் போது
ஏற்படும் ஆனந்தம், ஸாமீப்யம்,ஸாரூப்யம்,ஸாயுஜ்யம் என்ற நான்கு நிலைகளில் அடையப்படுகிறது..
கோபிகைகள் ப்ருந்தா வனத்தில் (ஸாலோகம்) ஸ்ரீ கிருஷ்ணன் ஸமீபத்தில் (ஸாமீப்யம்) அவனுனடய ரூப,லாவண்யத்தில் ஈடுபட்டு(ஸாரூப்யம்),
ராஸ க்ரீனடயில் மனம் லயம் அனடந்து(ஸாயுஜ்யம்) ஏற்பட்ட பரம ஆனந்தமே இவை ..
வெளி நோக்கிச் செல்லும் எண்ணங்களுக்கும்,வாஸனைகளால் நினைவுகளுக்கும் அப்பாற்பட்டவை ,
இந்த அனுபவம்.ஸ்ரீநாரதரின் பக்தி ஸூத்ரம் 21ல்-எவ்விதம் கோகுலத்துக் கோபிகைகளுக்கு பக்தி இருந்ததோ
அப்படி பக்தி செய்ய வேண்டும் என்று பக்திக்கு உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது.
வேத வ்யாஸரும்,இந்த பாகவத ஸர்கத்தை சுத்த மனதுடன் பாராயணம் செய்பவர்களும்,கேட்பவர்களும் விகாரமான எண்ணங்கள், துர்வாஸனை நீங்கப்
பெற்றவர்களாக, சுத்த மநோ பாவத்தை அடைகிறார்கள் என்று பல ஸ்ருதியில் சொல்வதே இதன் மேன்மைக்கு தக்க சான்றாகும். (பாகவத ம் ஸ்க.10-அத்யா. 33-ஸ்லோ.40)
44. ராஸ க்ரீடா வர்ணனையை விவரிக்கும் போது, ராஜா பரீக்ஷித், கேள்வியாகக் கேட்பது போலும் ஸ்ரீசுகர் பதிலளிப்பது போலவும்
நமக்கு ஏற்படும் சம்சயங்கனள போக்கும் நோக்கத்துடன் ,பாகவேத்தில் கூறப்படுகிறது,
கோபியர்களின் உள்ளத்திலும் மற்றும் எல்லாப் பிராணிகளின் உள்ளத்திலும் எந்த பகவான் புத்தி சாக்ஷியாக உள்ளாரோ
அந்த பகவானே பூலோகத்திலுள்ள அனைவருக்கும் அனுக்ரஹம் செய்யவே மானிட சரீரத்தை எடுத்து பல லீலைகளைப் புரிகிறார்.
அந்த லீலைகளை சிரத்தை யுடன் கேட்ட மாத்திரத்தி லேயே மனிதன் அப் பரமாத்மாவிடம் உறுதியான பக்தி நிறைந்த வனாகிறான்.
அவன் மனத்தை வருத்தும் காமம் தன்னைப்போல் ஒழிந்து விடுகிறது என்றும் கூறுகிறார். ”( பாகவதம் ஸ்க.10- அத்யா. 33-ஸ்லோ . 27-40)
அங்கப்ரேக்ஷிேம்
45. வரஹூர் உரியடி உத்ஸவம் அன்று இரவு கடுங்காலிலிருந்து பகவான் ஸகல அலங்காரத்துடன்,தன்
மனைவி மார்களுடன் ஊர் கோலமாய் பவனி வருகிறார்,
அவருக்குப் பின் பக்தர்கள் நீராடி,ஈரமான
உடைகளுடன் பெருமாளின் திருவருள் வேண்டி, தரையில் படுத்துப் புரண்டு,அங்க ப்ரதக்ஷிணம் செய்கிறார்கள்.
அப்போது கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று உரக்க கூறிக் கொண்டு பக்தியுடன் மஞசள் பூசிய தேங்காயை கூப்பிய கைகளில் னவத்துக் கொண்டு
ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளை தொடர்ந்து பின் செல்கின்றனர் என்று ஸ்ரீ கிருஷ்ண சிக்யோத்ஸவ ப்ரபந்தம் கூறகிறது.
இந்த வழிபாட்டை ஸ்ரீதீர்த்தரே ஆரம்பித்து னவத்தார் என்று கூறப்படுகிறது-
46.இன்னும் சற்று ஆழமாகப் பார்த்தால், அங்க ப்ரதக்ஷிண வழிபாட்டை ஆரம்பித்து வைத்தவர்-பாகவத உத்தமரான ஸ்ரீஅக்ரூரே ஆவார்.
எப்படி என்று பார்ப்போம்.-கோகுலத்திலிருந்து ஸ்ரீகிருஷ்ணரை மதுரைக்கு அழைத்து வர ஸ்ரீஅக்ரூரர்,
கம்ஸனின் உத்திரவின் பேரில் புறப்பட்டு ,மாலைப் பொழுதில் சபாழுேில் கோகுலத்தை அடைந்தார்.
அங்கு இந்திரன் முதலிய திக்பாலகர்களுனடய கிரீடங்களுடன் சேர்ந்ததும் தூய்மை வாய்ந்த திருவடிப் பொடிகளை யுடையதும்,
பூதேவிக்கு மகிழ்ச்சி யளிப்பதும் தாமரை மலர், யனவ,அங்குசம் முதலிய கோடுகளுடன் கூடியதுமான, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் திருவடிச் சுவடுகனளக் கண்ணுற்றார்.-கண்ட வுடனேயே ,எல்லை யற்ற ஆனந்தம் அடைந்து உணர்ச்சி வசப்பட்டார். -கண்களில் ஆனந்தக் கண்ணீர் நினறந்தது.
”இவைகள் என் தெய்வத்தின் திருவடிகள் பட்ட பொடிகள் அல்லவா” என்று எண்ணி ,தேரிலிருந்து துள்ளிக் குதித்து கண்ணனுனடய திருவடிகள் பட்ட மண்
பொடிகள் மீது மீண்டும் மீண்டும் புரண்டார் அங்கப்ரதக்ஷிணமும் செய்தார்..,(பாக.ஸ்க.10-அத்யா. 38- ஸ்லோ . 25,26)
47.இதி “தேஷு அசேஷ்டத ” என்று திருவடிப் பொடிகள் மீது விழுந்து புரண்டார் என்கிறது ஸ்ரீமத் பாகவதம்.
இக் கருத்தை ஸ்ரீதீர்த்தர் (தரங்கம் 7 ஸ்லோ . 14)”.”புத்யாதி தத்வ பரிசிந்ஹித கோபவேஷம்,
ஸித்தானுபாவிதம் அசேஷ ஜகந் நிதானம்”என்ற சொல் தொடரால் கோபிகைகள் ,அக்ரூரர் முதலியோர் ஸ்ரீ
கிருஷ்ண பரமாத்மாவின் திருவடிச் சுவடுகளை , பத்மம் முதலிய ரேகைகளால் கண்டு பரவசமனடந்த நிலையை ,விளக்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அந்தா அங்க ப்ரதக்ஷிண வழிபாட்னட வராஹ புரியில் ஆரம்பித்து வைத்து, தான் அனடந்த ஆனந்தத்தை மற்ற பக்தர்களும் அடைய வழி செய்துள்ளார் என்றே தோன்றுகிறது,
48.இருப்பினும்,இது கோகுலம் அல்லவே ஸ்ரீகிருஷ்ண னுனடய பாத தூளிகள், இவ் வராஹ புரி மண்ணில்
இருப்பது எப்படி. பொருந்தும் என்ற வினா எழும் போது,
ஸ்ரீ கிருஷ்ணர் இந்த ஊருக்கு ஸ்ரீதீர்த்தரை வரவழைக்க பன்றியின் ரூபம் தரித்ததும்,
ஸ்ரீதீர்த்தர் பாடிய ஒவ்வொரு பாடலுக்கும் தன் சலங்கை ஒலி கேட்கச் செய்ததும் ஸ்ரீ கிருஷ்ணர் வராஹ புரியில் நித்ய வாஸம் செய்கிறார் என்பதற்கு
ப்ரமாணமாகிறது.
அவரது பாத தூளிகள் இந்த மண்ணில் நினறந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
மேலும் ஸ்ரீதீர்த்தருக்கும்,ஸ்ரீ கிருஷ்ணருக்கும் வித்யாசமே இல்லை என்பது உறுதி .
ஸ்ரீதீர்த்தர் வராஹ புரியிலேயே பலகாலம் வாழ்ந்து ஸ்ரீ கிருஷ்ணரின் பால லீலா விநாேதங்களைப் பாடிப் பாடி
அவனையே ஸதா ஸர்வ காலம் நினைந்து, நினைந்து உருகி அவனுள்ளே ஐக்யமாகி,பரம அத் வைதியான அவரே ,
ப்ரஹ்மைவ ப்ரஹ்மவித் பவதி என்பதற்கு ஏற்ப ஸ்ரீ கிருஷ்ணராக பாவித்து ஸ்ரீ கிருஷ்ண ராகவே மாறிவிட்டார் என்பதில் ஒருவித ஐயமும் இல்னல.
இதை அவரே நிரூபணமும் செய்திருக்கிறார்.-தேவர்களின் ப்ரார்த்தனை யுடன் தொடங்கும்
“பாஹிமாம் பாஹிமாம் பரம தயாளோ ” எனத் தொடங்கும் 10வது தரங்கம் கீதம்40 ல் ஈடற்ற தன் பரம பக்தியால் இப்பாடலின்
ஒவ்வொரு சரணத்திலும் ஸ்ரீவிஜய கோபாலா என்ற சொல்லை 12 தடவைகள் ப்ரயோகித்து முத்திரை சரணத்தில்
நாராயண தீர்த்த விஜய கோபாலா என்று நாராயண தீர்த்தராகவே அவரிடமிருந்து வேறு படாமல் இருப்பவரே என்று கூறியிருப்பது
ஸ்ரீதீர்த்தர், தான் ஸ்ரீ கிருஷ்ண ராகவே மாறிவிட்டதை உணர முடிகிறது.
தரங்கப் பாடல்களில், தான் வேறு தரங்கம் வேறு என்றில்லாமல் ஸ்ரீகிருஷ்ணனே ப்ரத்யக்ஷமாகக் குடி கொண்டுள்ளான் என்பது ஸத்ய வாக்காகும்.
இதை உணர்ந்து, பாட்டு,பாடுபவர் என்ற வேறுபடாத
மநோ நிலையில் ,தரங்கப் பாடல்கனளப் பாடும் போது வராஹ புரியில் நித்ய வாசம் செய்யும்,ஸ்ரீகிருஷ்ணன் ப்ரஸன்னமாகிறார் என்பதில் ஐயமே இல்லை .
அப்படி ஸ்ரீதீர்த்தர் உருவில் ஸ்ரீ கிருஷ்ணர் ஐக்யமாகி இருக்கும் போது, அம் மஹானின் பாத தாமரைகள் பட்ட வராஹ புரியில்
ஸ்ரீகிருஷ்ணனின் பாத தூளிகள் என்றென்றும் விளங்கும் என்பது ப்ரமாணம்.
49.இந்த இடத்தில் பாகவதம் முதல் ஸ்கந்தம் .அத்யா.13 ஸ்லோகம்10 நினனவுக்கு வருகிறது.
இதில் தீர்த்த யாத்ரை சென்று விரும்பிய விதுரரை வரவேற்று யுதிஷ்டிர் பேசுவதாக வருகிறது.
“பவத் விதா பாகவதாஸ் தீர்த்த பூதா : ஸ்வயம் விபோ தீர்த்து குர்வந்தி தீர்த்தானி ஸ்வாந்தஸ் ஸ்தேன கதாப்ருதா
“ஹே ப்ரபோ தங்களைப் போன்ற பகவத் பக்தர்கள், புண்ய தீர்த்த ரர்களாக இருந்து கொண்டு, தங்களது மனத்தில் உனறயும்
ஸ்ரீவாஸுதேவனால், பாபிகளின் சேர்க்கையால் மாசு படிந்த புண்ய ஸ்தலங்கனளக் கூட, மாசு நீக்கி மறுபடியும் சுத்தமாக்கி
புண்ய ஸ்தலங்களாகச் செய்து விடுகின்றனர் – என்று விதுரரைப் புகழ்கிறார்.
50.ஸ்ரீநாராயண தீர்த்தர் தன் பெயரிலேயே தீர்த்தர் என்று கொண்டு, வாழ்ந்த புண்ய ஆத்மாவாகும்.
அவர் வராஹ புரியிலேயே பல காலங்கள் வாழ்ந்து வந்ததால், புண்ய ஷேத்திரமான வராஹ புரியின்
பவித்ரம் பன்மடங்கு பெருகியுள்ளது என்று சொல்லவும் வேண்டுமா?
அப்பேர்பட்ட இந்த மஹானின் பாத சுவடுகள் பட்ட வராஹ புரி பூமி, ஒப்புயர்வற்ற புண்ய பூமியே .
அவருடைய திருவடித் தாமரைகள் பட்ட மண் பொடிகள் நினறந்த பூமியில், பக்தர்கள் அங்க ப்ரத க்ஷிணம்
செய்ய தம் பாவங்கள் தொலைந்து நற்கதி அடைவார்கள் என்பதில் ஐயமே இல்லை .
51.இத்துணை பவித்திரமான வராஹ புரி மண்ணில் பூர்வ ஜன்ம புண்யத்தால் பிறந்தவர்கள் மிகவும் பாக்யசாலிகளே .
அதுவும் ஸ்ரீ கிருஷ்ண ஸ்வரூபமான,ஸ்ரீநாராயண தீர்த்தர் காலடி பட்ட மண்ணில் விழுந்து புரள மிகவும் பாக்யம் பெற்றவர்களே
”அஹோ பாக்யம் அஹோ பாக்யம் வராஹ புரி ஜனித மஹா ஜனானாம்”.
52.வேத ,புராணங்கள்,சாஸ்த்திரங்கள்,வேதாந்தம் இவைகளில் மிகத் தேர்ச்சி யுடையவராக இருந்தது மட்டுமல்லாது
நாட்டிய ஸங்கீதக் கலைகளிலும் தேர்ச்சி மிக்கவராக இருந்தார் என்பது அவருடைய நூலிலிருந்து விளங்குகிறது.
தரங்கம் 7 ஸ்லோகம் 16ல் ராஸ லீலைகளை விவரிக்கும் போது கோபிகைகள் ப்ருந்தா வனத்தில் வாத்யங்களிலிருந்தும் னககளிலிருந்தும் தோன்றுகின்ற
த்ருவ தாளம்,மட்ய தாளம்,ரூபகம், ஜம்பா,த்ரிபுட என்ற உயர்ந்த பல தாளங்களுடனும்,
அகற்றியும், குறுக்கியும்,நீட்டியும்,வனளத்தும்,காலடிகளை வைத்தல் போன்ற அழகிய பாத வின்யாஸங்களுடன் கூடிய நாட்டியத்தை
கோபிகைகள் மிக்க ஆனந்தத்துடன் அபிநயம் செய்து கொண்டு ஸ்ரீகிருஷ்ணனை வழிபட்டதை விவரிக்கிறார்.
53. பாகவதத்தில் (பாக.ஸ்க.10-அத்யா. 33-ஸ்லோ . 10) ஒரு கோபி ஸ்ரீகிருஷ்ணனுடன் ஸ்வர ஜாதிகளை
ஒன்றக்கொன்று கலக்காமல் பாடி, ஸ்ரீகிருஷ்ணனுடைய பாராட்டுக்களைப் பெற்றாள்.
மேலும் அதே ஸ்வர ஜாதியை த்ருவ தாளம் போட்டு கானம் செய்ய ஸ்ரீகிருஷ்ணனால் வெகுமதி அளிக்கப் பட்டாள், என்றும் கூறப்பட்டுள்ளது.
இக் காட்சியையே , ஸ்ரீதீர்த்தர்,மனக் கண்ணால் பார்த்து ஆனந்தம் அடைந்து, தரங்கம் 7 கீதம்6 லிருந்து 12 வரை
நாட்டை -துருவ தாளம்,மத்யமாவதி -மட்ய தாளம்,முகாரி-ரூபக தாளம்,வராளி-ஜம்பக தாளம், மோஹனம் திரிபுட தாளம்,
ஆனந்த பைரவி-அட தாளம்,காம்போஜி- ஏக தாளம்,ஆகிய பல ராகங்களிலும்,பல தாளங்களிலும் கோபிகள் பாடி ஆடினார்கள்.என்றும் கூறுகிறார்.
ராகம்- தாளத்திற்கு ஏற்ப பாடல்களின் மூலம் ராஸ லீனல மஹத்வத்தைத் தெரியப் படுத்துதில் அவருடைய ஸங்கீத -நடன புலமை வெளிப்படுகிறது..
54.அக்ரூரருடன், ஸ்ரீகிருஷ்ணர் மதுரா நகரம் செல்லும் போது, கோபிகைகள் ,பிறிவாற்றாமையால், வெட்கத்தை விட்டு,
கோவிந்தா மாதவா தாமோதரா என்று கூக்குரலிட்டு அழுதனர் என்று ஸ்ரீவ்யாசர் விவரித்துள்ளார்.
நமக்கு வேண்டியவர்கள் பயணம் கிளம்பும் போது அழுவது அமங்கலமாகக் கருதப் படுகிறது.
ஸ்ரீவியாசர், இதை உணர்ந்தே ,கோபிகைகள் ஸுஸ்வரத்துடன் அழதனர் என்று குறிப்பிட்டுள்ளார். (பாக.ஸ்க.10-அத்யா.39-ஸ்லோ . 31)
ஸ்ரீநாராயண தீர்த்தர்,இதை நன்கு உணர்ந்து ,சந்தேகத்திற்கு துளியும் இடமளிக்காமல், தரங்கம் 9 – “விஜய கோபால தே மங்களம்” – எனத் தொடங்கும்
கீதம்32ல் , கோபிகைகள் ,ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் கல்யாண குணங்கனளப் புகழ்ந்து கூறி, மதுராவில்
அவருக்கு வெற்றியும் ,எல்லா நலன்களும் கிட்டவேண்டும்,என்று மங்களம் பாடினார்கள்,என்று மங்களகரமாக வர்ணித்துள்ளார்,
இச் சமயம், ஸ்ரீராமபிரான் தந்தையின் வாக்னக நிறை வேற்ற நாடு துறந்து காட்டுக்குச் செல்லும்போது ,தாய் கௌஸல்யா தேவீ மகனின் பிரிவைத் தாங்க
முடியா விட்டாலும், அதைப் பொருட்படுத்தாமல்,ஸ்வஸ்தி வாக்யங்கனளக் கூறிக் காப்பிட்டுஆசி
வழங்கி மங்களகரமாக ஸ்ரீராமரை வழியனுப்பினாள் என்ற வால்மீகி ராமாயண ஸ்லோகங்கள்
நினனவிற்கு வருகிறது. (வால்மீ,ராமா-.அயோத்யாகாண்டம் 25 வது ஸர்கம்)
55.உத்தவர் கோகுலம் சென்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அருளிய தத்வ உபதேஸங்களை ஸ்ரீகிருஷ்ணனை
பிரிந்து மனம் வருந்திய கோபியர்களுக்கு அளித்து-அவர்களை மனச் சமாதானம் அனடயச் செய்ததும்
அவர்களின் ப்ரேம பக்தியைக் கண்டு வியந்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் தெரிவித்ததையும்,
ஸ்ரீதீர்த்தர் தரங்கம் 11 ஸ்லோ .94 முதல் 99,கீதம் 41-44 வரை விவரிக்கும் போது கோபியர்களின் வாயிலாகத் தான்
ஸ்ரீகிருஷ்ணரிடம் கொண்டிருக்கும் அத்யந்த ப்ரேம பக்தியை வெளிப்படுத்தி யுள்ளது மெய் சிலிர்க்க வைக்கிறது,
உத்தவர், கோபியர்களின் ப்ரேம பக்தியைக் கண்டு வியந்து “எந்த கோப ஸ்திரிகளினால் செய்யப்படும் ஸ்ரீகிருஷ்ண லீலா கானமானது,
மூவுலகத்தையும் புனிதமாக்குகிறதோ அந்த கோப ஸ்திரிகளின் பாத தூளியை நான் அடிக்கடி வணங்குகிறேன்” என்று கூறியது
ஸ்ரீதீர்த்தரின் ப்ரேம பக்திக்கும் பொருந்துகிறது அல்லவா!! (பாக.ஸ்க.10-அத்யா. 47ஸ்லோ . 63)
56.ஸ்ரீதீர்த்தர் ,”கோபாலமேவ தைவதம் ” (தரங்கம் 12 கீதம் 50) என்ற கீதத்தைப் பாடும் போதே திவ்யமான
தன் கண்களால் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டும், தன் முன்னே நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கும்
ஸ்ரீகிருஷ்ணனே கண் குளிரக் கண்டு பரவசமடைந்தார் என்றும்,மேலும் ஸ்ரீதீர்த்தர் மீது உள்ள அபார
கருணையினால், தரங்கிணி நூல் முடியும் வரை , ஸ்ரீகிருஷ்ணன் திவ்ய தரிஸனம் தந்து அவரை
ஆனந்தக் கடலில் முழுகச் செய்தார் என்றும், ஸ்ரீகிருஷ்ணனின் விருப்பப்படியே ஸ்ரீருக்மிணி
விவாஹத்துடன் தரங்கிணியை முடித்தார் என்று சிறந்த பாகவதோத்தமர்கள் கூறுகின்றனர்,
இந்தப் பாடலில்” மிக்க பாக்யசாலியான தனக்கு உண்மைப் பொருளைக் காணும் திவ்ய சக்ஷூஸை (தெய்வீகப்
பார்வையை ) ஸ்ரீகிருஷ்ணன் அளித்தான்“ என்று புகழ்கிறார்.
கோபாலன் என்ற தெய்வத்தினையே வழிபடுகிறேன், வேறு ஒருவரையும் தெய்வமாகக் கருத மாட்டேன், என்றும் கூறுகிறார்.
57.ஸ்ரீதீர்த்த ர், “காங்ஷே தவ ப்ரஸாதம்” (தரங்கம் 12 கீதம் 51) என்ற கீதத்தில் தான், பல ஷேத்திரங்களில்
தங்கியிருந்த போதிலும் , தீராது தன்னைத் தொடர்ந்து வாட்டி வந்த வயிற்று வலி, வராஹ புரி பெருமாள்
ஸந்நிதியில் தான் தீர்ந்தது என்ற விவரத்தை கடைசி சரணத்தில் “வர நாராயண தீர்த்த வாரித துஸ்தரா நர்தக “ என்று தெரிவிக்கிறார்.
58.தரங்கம்12 “ப்ரஹ்ம க்ரந்திம்” என்று தொடங்கும் கீதம்58ல் ஸ்ரீதீர்த்தர், லக்னாஷ்டகம்,ஸ்ரீகிருஷ்ண
ருக்மிணி விவாஹ நிகழ்ச்சிகளை -மண மகள் மண மகனுக்கு முத்துக்களால் அபிஷேகம்
செய்வது,ப்ரஹ்ம க்ரந்தி ,லாஜ ஹோமம்,ஸ்தாலீ பாகம்,நாக பலி,ஆகிய
கல்யாண ஸம்ப்ரதாயங்களை ஆந்திரர்களின் அனுஷ்டானப்படி விவரித்துள்ளார்.
59.“மஙகளாதீனி ,மங்கள மத்யானம்,மங்களான் தானி ஸாஸ்த்ராணி வீர்யவத் புருஷ கர்த்ரு காணி
ப்ரேந்தே ”-துவக்கம் ,நடுவு,முடிவு இவற்றில் மஙகளா ஸாஸனத்துடன் கூடிய நூல்கள் இவ்வுலகில்
நீண்ட காலம் புகழுடன் விளங்குகின்றன என்ற ஆன்றோர் வசனப்படி ஸ்ரீதீர்த்தர் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியில் தொடக்கத்தில்
“ஹிம கிரி தனயா பத்யம்” என்ற வினாயக ஸ்துதியுடன் ஆரம்பித்து
நடுவில் “கல்யாணம் வித னோது” என்ற பால கிருஷ்ண ஸ்துதியையும்
“தா ⦂குர்வந்த்வபிதானி” என்ற ஸ்ரீகிருஷ்ண ருக்மிணி விவாஹத்தில் பங்கு கொண்ட நல் முத்துக்களின் ஸ்துதியை அமைத்து,
முடிவில் ஜய மங்களம் என்ற மங்கள கீதத்துடனும் முடித்து அருளிச் செய்திருக்கிறார் என்பது இந்நூலின் தனிச் சிறப்பு.
ஆன்றோர் வாக்குப்படி இந்த தெய்வீக காவ்யம் சூர்ய சந்திரர்கள் இருக்கும் வரை புகழோடு இவ்வுலகில் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை .
60.ஸ்ரீதீர்த்தர் வேதங்கள்,உபநிஷத்துக்கள்,ஸாஸ்த்திரங்கள் ,புராணங்கள் இவைகளைப் ப்ரமாணமாகக்
கொண்டு ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியை அருளிச் செய்தார்.
மேலும் ஸ்ரீதீர்த்தர், ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியை ஸ்ரீமத் பாகவேத்தை அனுஸரித்தே தஸம ஸ்கந்த கிருஷ்ண லீலைகள் ,ஸ்ரீ ருக்மிணி விவாஹ பர்யந்தம் அருளியுள்ளார்.
ஸ்ரீமத் பாகவதத்தில், ராதை என்ற கதா பாத்திரத்தைப் பற்றி ஒன்றும் குறிப்பிடாமல், மொத்தமாக கோபிகைகள் என்றே ஸ்ரீவியாஸாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்,
இருப்பினும் ஸ்ரீ தீர்த்தர் 8வது தரங்கத்ேில், கிருஷ்ண ராதை சம்பாஷணை ,பிரிவாற்றல்,பிணக்கு ஆகியவைகளை விவரித்துள்ளார்.
ஏன் இந்த மாறுபாட்னடச் செய்தார் என்று ஆராயுங்கால் கீழ்க்கண்ட இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று நினனக்கத் தோன்றுகிறது.
1.ஸ்ரீதீர்த்தர் கீத கோவிந்தத்தை இயற்றிய ஸ்ரீஜயதேவரின் அவதாரம் என்று கூறப்படுகிறது.
2. வராஹ புரி பெருமாள் யாராலும் பிரிக்க முடியாதவாறு ஆதரவாகப் பிராட்டியை அணைத்தவாறும்,
பிராட்டியும், பெருமாளை விட்டுப் பிரியாமல் அன்பு பெருக்கெடுத்து ஆரத் தழுவியுள்ளார்.
இக் காட்சியை தினமும் பார்த்தாலும்.ஓவ்வொரு தரங்கிணிப் பாடலையும், சலங்கை ஒலி ஸப்திக்கச் செய்தும்
“கோபால மேவ தைவதம் ” பாடும் போது ஸ்ரீதீர்த்தருக்கு திவ்ய திருஷ்டியைக் கொடுத்து தன் தேவியுடன் காட்சி கொடுத்தும்,-
கிருஷ்ண ராதையே – ஜீவாத்மா பரமாத்ம ஐக்கிய ருபமாக- என்று அவர் மனக் கண் முன் தோன்றிய தாலும் அவர் ராதா கிருஷ்ணனைப் பற்றி எழுதி யிருக்கலாம் என்று நினனக்கத் தோன்றுகிறது.
61.பத்ம புராணத்தில் உள்ள ஸ்ரீமத் பாகவத மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளதை நாம் சிறிது பார்க்கலாம்
சுகருனடய வாயிலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீமத் பாகவதத்தின் கதாம்ருதத்தின் பலன் அளவிட முடியாது.
கங்கை ,கயா ,காசி,புஷ்கரம்,ப்ரயாகை அளிக்கும் பலன்கள் யானவயும் இந்த பாகவத பலன்களுக்குச் சமமாகாது.என்று கூறப்பட்டுள்ளது.(அத்.3.ஸ்லோ.32)
இந்தப் பெருமையும்,புகழும் ஸ்ரீமத்பாகவதத்தை அனுஸரித்தே ஸ்ரீதீர்த்தரின் வாயிலிருந்து வெளிப்பட்ட கதாம்ருதமான ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணிக்கும் பொருந்தும் என்று சொல்லவும் வேண்டுமோ ?
62.ஸ்ரீதீர்த்தர் 12 தரங்கம்- “காமதா காமினா மேஷா”- எனத் தொடங்கும் ஸ்லோ .161ல் இந்த ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற சிறந்த பக்தி நூலை
பக்தியுடன் பாடுகிறவர்களுக்கும், கேட்பவர்களுக்கும்,அவரவர்களின் விருப்பம் போல, அறம்,பொருள்,இன்பம்,வீடு இவற்றை இந்த நூல்
அளிக்கிறது என்று பல ஸ்ருதியும் கூறிவிட்டார்.
63.ஸ்ரீதீர்த்தரின் நாமாவை உச்சரிப்ப தாலேயே நம் பாவங்கள் தொலைந்து அக்ஞான இருள் நீங்கி
ஆத்ம ஞானத்தை அடைந்து பரமானந்தத்தை அனடயலாம் என்பதில் ஒரு ஐயமே இல்லை .
ஸ்ரீநாராயண தீர்த்தரின் திருநாமத்தை ஒருமுனற கூறுவது லக்ஷம் தடவைகள் ஓங்காரத்தை ஜபிப்பதால் கிட்டும்
புண்ணி யத்தைக்காட்டிலும் அதிக புண்ணியத்தை அளிப்பதாகும்.
அவரின் திருவுருவத்தை வழிபடுவது ப்ரஹ்மா, சிவன்.நாராயணன், இவர்கனள வழிபடுவதால் கிட்டும் பலனுக்கு ஸமமான பலனைத்தரும்
என்று குரு த்யான ஸ்லோகத்தில் சொல்லப்பட்டதில் எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாகிறது.
மேலும் அவ்வரிகள் அனுபவ பூர்வமாகவே வந்ததில் என்ன சந்தேகம்.அத்தகைய மஹான் ஸ்ரீநாராயண தீர்த்தரின் திருவடித் தாமரைகளை வணங்கி
நமக்கும் தூய்மையான உள்ளத்தை யளித்து,பரமாத்ம அநுபவம் ஏற்பட்டு ஆனந்த ஸ்வரூபியான பரம் பொருளுடன் ஐக்யமாகிற மோக்ஷத்தைப் பெறுவோமாக..
————–
பாகம்-3
ஒற்றுமையும் வேற்றுமையும்
1.ஸ்ரீஜயதேவரின் கீத கோவிந்தம் சிருங்கார ரஸம் இனழந்த பக்தி ரஸம் ததும்பும் இனிமையான பாடல்களைக் கொண்டது.
ஸ்ரீநாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி பக்தி ரஸத்துடன் ஆத்ம ஞானத்தை போதிக்கும் இனிமையான தெய்வீகப் பாடல்களைக் கொண்டது.
2.இந்த இரண்டு நூல்களுக்கும் பாட்டுடைத் தலைவன் ஸ்ரீ கிருஷ்ேண பரமாத்மாவே .ஸ்ரீமத் பாகவேத்திற்கும் பாட்டுடைத் தலைவன் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே .
3.ஸ்ரீஜயதேவரின் கீத கோவிந்தம் 12 ஸர்கங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது,
ஸ்ரீநாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியும் 12 தரங்கிணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது .
ஸ்ரீமத் பாகவதமும் 12 ஸ்கந்தங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது,
4.ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் த்வாேஸாக்ஷரி மந்திரம் 12 அக்ஷரங்களைக் கொண்டது. ஒவ்வொரு
ஸ்கந்தம் ஆரம்பிக்கும் போது வியாசர், இந்த மூல மந்திரத்தை ஸ்மரித்தே தொடங்குகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
துருவ சரித்திரத்தில் ஸ்ரீநாரத மஹரிஷி, துருவனுக்கு,இந்த மூல மந்திரத்தை உபதேஸிப்பதாக ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.
( பாக.ஸ்க.4அத்யா.8-ஸ்லோ .54).மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திர அக்ஷரங்களின் எண்ணிக்கை 12
ஆனதால்,.ஸ்ரீ கிருஷ்ண பக்தர்களான ஸ்ரீஜயதேவரும், ஸ்ரீநாராயண தீர்த்தரும் ஸ்ரீமத் பாகவதத்தை அனுசரித்து தம் தம் நூல்களை 12 பாகமாக
பிரித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
5.ஸ்ரீஜயதேவர், சிருங்கார ரஸம் ப்ரதானமாக உள்ள இந்த நூலை 18புராணங்களில் ஒன்றான
ப்ரஹ்ம வைவர்த்த புராணத்தில் ராதா கிருஷ்ண சரித்திரத்தின் அடிப்படையில் படைத்தருளினார்.
ஸ்ரீநாராயண தீர்த்தர் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிேணியை ,ஸ்லோகங்கள் .சூர்ணிகைகள் ,கீதங்கள் எல்லாவற்றையும் ஸ்ரீமத் பாகவேத்தை அனுசரித்து,
தஸம ஸ்கந்தம் ருக்மிணி விவாஹம் வரையில் படைத்தருளினார்.
ஸ்ரீமத்பாகவதத்தில் ராதை என்ற கதா பாத்திரத்தைப் பற்றி ஒன்றும் குறிப்பிடாமல் மொத்தமாக கோபிகைகள் என்றே ஸ்ரீவியாஸாசாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்,
இருப்பினும் ஸ்ரீதீர்த்தர் 8வது தரங்கத்தில் கிருஷ்ண ராதை சம்பாஷணை ,பிரிவாற்றல்,பிணக்கு ஆகியவை களை விவரித்துள்ளார்.
இதுஒரு சிறிய வேறுபாடு ஆகும்.எனினும் இந்நூலின் இப்பகுதி ,ஆத்ம ஞானத்தை போதிப்பதால் சிறந்து விளங்குகிறது.
6.மேலும் ஸ்ரீநாராயண தீர்த்தர் தத்வங்கள் அடங்கிய பாகவதம் ஏகாதஸ ஸ்கந்தம் பற்றி எழுதாமல்
விட்டு விட்டரே என ஏக்கப்பட வைக்காமல்
ஸ்ரீதீர்த்தர் வேதங்கள்,உபநிஷத்துக்கள்,ஸாஸ்த்திரங்கள்
இவைகளின் ஸாரத்தை ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி யிலேயே சந்தர்பத்துக்கு ஏற்றவாறு
புகுத்தி ,
தனக்கே உரித்தான எளிய நடையில், அருளிச் செய்தார் என்பது இந்நூலின் தனிச்சிறப்பு..
7.ஸ்ரீஜயதேவர், ஸ்ரீநாராயண தீர்த்தர் இருவருமே சங்கீதம்,நாட்டிய கலைகளில் பாண்டித்யம் பெற்று
இருந்ததனால்,
எல்லாப் பாடல்களையும் பல ராகங்களிலும், தாளங்களிலும், நடனமாடக் கூடியவகையில் அனமத்து மெருகு ஊட்டியுள்ளனர்.
ஸ்ரீநாராயண தீர்த்தர் ஒருபடி மேலே போய் நாட்டிய ஜதிகளையும் அனனவரும் வியக்கும் வண்ணம் னகயாண்டிருப்பது அவரின் புலமையை நன்கு பறை சாற்றுகிறது.
8.இவ் விரண்டு நூல்களுமே ,ஆத்ம ஞானம் பெற்று பரமாத்ம ஐக்கியத்தில் ஈடுபட்டு ப்ரஹமானந்தத்தில் திளைத்த
ஸ்ரீஜயதேவர்,ஸ்ரீநாராயண தீர்த்தர் ஆகிய ப்ரஹ்ம நிஷ்டர்களால் ஸ்வானுபவத்தில் எழுதப் பெற்றதால், அவர்களின் பாடல்களில் பக்தி ரஸம் சொட்டுகிறது.
எனவே இப்பாடல்களை நாம் பாடும் போதும், மற்றவர்கள் பாடிக் கேட்கும் போதும் மெய் மறந்து பரமானந்தத்தில் திளைத்து கண்ணீர் மல்கி பரவசமாகின்றோம்.
இப்படி ப்ரேம பக்தியில் முழ்கிய உறுதியான பக்தன் தனக்குப் பிரியமான பகவன் நாம கீர்த்தனைகளைப் பாடும் போது மனமுருகி உலக விவஹாரங்களை அறவே மறந்து பித்தன் போல உரக்கச் சிரிப்பான்,சில சமயம் அழுவான்,உறக்க கூச்சலிடுவான்,பாடுவான்,ஆடுவான்
என்று நவ யோகிகளில் ஒருவரான கவியோகி, விதேஹ ராஜாவிற்கு பக்தனின் லக்ஷணத்தை தெரிவிக்கிறார்( ஸ்ரீமத் பாகவேம் .ஸ்க.11அத்யா2ஸ்லோ 40).
இம்மாதிரி, ஸ்ரீஜயதேவர், ஸ்ரீநாராயண தீர்த்தர் எழுதிய பாடல்கள், மேலே கூறியவாறு ஸ்ரேஷ்ட பக்தர்களை உருவாக்குகிறது என்று சொன்னால்
மிகையாகாது.
9.இவ் விரண்டு நூல்களுமே பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் அங்கீகரிக்கப்பட்டவைகளே .
ஸ்ரீஜயதேவர் கீத கோவிந்தம் 10 ஸர்கம்,”வஸதி யதி கிஞ்சதபி “ என்ற19வது அஷ்டபதி எழுதிக் கொண்டிருக்கும் போது,7வது சரணத்தில்
ஸ்ரீ ஜகன்நாதரே ஸ்ரீஜயதேவர் ரூபத்தில் வந்து, .”ஸ்மர கரல கண்டனம் மம ஸிரஸி மண்டலம் தேஹி பத பல்லவமுதாரம்
ஜ்வலதி மயி தாருணோ மதன கத நாருணோ ஹரது தது பாஹித விகாரம் ப்ரியே சாருஸீல முஞ்ச மயி மாமை நிதானம்”, என்ற வரிகளை எழுதினார் என்று கூறுவர். இது ஒன்றே போதுமே கீத கோவிந்தம் ஒரு தெய்வீக காவ்யம் என்பதற்கு.
10.ஸ்ரீநாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியின் ஓவ்வொரு பாடனலயும் சலங்னக ஒலி ஸப்திக்கச் செய்தும்
“கோபால மேவ தைவதம் ” பாடும் போது ஸ்ரீதீர்த்தருக்கு திவ்ய திருஷ்டியைக் கொடுத்து திவ்ய தரிஸனம் கொடுத்தும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அங்கீ கரித்தார் என்பது ஒன்றே போதுமே இந் நூல் ஒரு தெய்வீக காவ்யம் என்பதற்கு.
மேலும் கிருஷ்ண ருக்மிணி விவாஹத்துடன் முடிக்கச் சொன்னதும்,ஸ்ரீகிருஷ்ணரே என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநாராயண பட்டத்திரி அருளிய ஸ்ரீநாராயணீயமும் தரங்கிணி யைப் போலவே பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் முழுவதும் அஙகீகரிக்கப்பட்ட நூலாகும்.
11.ஸ்ரீஜயதேவர் கீத கோவிந்தத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைக் குறித்தே எல்லாப் பாடல்கனளயும்
பாடியுள்ளார். மற்ற தெய்வங்கனளப் பற்றிப் பாடவில்னல.
ஸ்ரீகிருஷ்ண லீலைகளை வர்ணிக்கும் போதே மற்ற தேவதைகளையும் துதிப்பது தரங்கத்தின் தனிச் சிறப்பு.
இந்த ச குண வழி பாடே நாளனடவில் தனக்குத் தானே நிர்குண பரப்ப்ரஹ்ம உபாஸனையாக மாறும்.
உதாரணமாக ஜீவன் முக்தரான ஸ்ரீசுகப் ப்ரஹ்மம் நிர்குண பரப் ப்ரஹ்ம உபாஸனையில் தீவிரமாக ஈடுபட்டவராயினும்,
ராஜா பரீக்ஷீத்திற்கு பாகவதத்தை – கிருஷ்ண லீலைகளை -உபதேஸித்தார்,ஒவ்வொரு லீலையிலும் தன்
உள்ளத்திலுள்ள பரப்ப்ரஹ்மத்தை நினனவு கூறுகிறார்.
ஸ்ரீ சுகரைப் போலவே ஸ்ரீநாராயண தீர்த்தரும் அப்
பரப் ப்ரஹ்மத்தை நினனவு கூர்ந்தே பரம் பொருளின் சகுண வடிவங்களைத் துதித்து தன் பாடல்கள் மூலம்வழிபட்டுள்ளார்.
ஸ்ரீ கிருஷ்ண லீலைகளை வர்ணிக்கும் போதே மற்ற தேவதைகளையும் துதிப்பது இதன் தனிச்சிறப்பு.
12.முதலாவது தரங்கத்தில் “ஜய ஜய ஸ்வாமின் “என்ற கீதத்தில்,கணபதியையும்,”
துர்கே துர்கதி ஹாரிணி ” என்ற ஸ்லோகத்திலும்“ஜய ஜய துர்கே ” என்ற கீதத்திலும் துர்கா தேவியையும்,
2வது தரங்கத்தில் “மங்களானி தனோது மதுஸூதன ஸூ தா “என்ற கீதத்தில் கங்காதரன் தக்ஷிணா மூர்த்தி ,
துர்கா ,ஸரஸ்வதி ,கங்கா,சிவன், ஆகிய தேவதைகளையும் துதித்துள்ளார்.
6,7ம் தரங்கங்களில் நரஸிம்ஹரையும் ,துதித்துள்ளார்.
முதலாம் தரங்கத்தில் “ஸர்வக்ஞானக்ரியா சக்திம்” என்ற ஸ்லோகம் 5ல் மஹா விஷ்ணுவையும்,
3ம் கீதத்தில் வராஹ புரி வேங்கடேசப் பெருமாளையும் துதித்துள்ளார்.
13.ஸ்ரீஜயதேவர்,கீத கோவிந்தத்தில் முதல் அஷ்டபதியில் பகவானின் பத்து அவதாரங்களை வர்ணித்துள்ளார்.
இதில் புத்த அவதாரத்னையும் சேர்த்து உள்ளார்.
மேலும் இந்த பத்து அவதாரங்களையும் ஸ்ரீ கிருஷ்ணன் தான் செய்தார்.என்று கூ றுகிறார்.
முதல் அஷ்டபதியில் ஓவ்வொரு அவதாரத்தைப் பற்றிச் சொல்லும் போதும் “கேசவா த்ருத ” -கேசவன் தரித்த -என்று கூறி அந்த
அந்த அவதாரத்தை வர்ணிப்பதன்முலம் ஸ்ரீ கிருஷ்ணன் பூர்ண பரமாத்மா என்று எடுத்துக் காட்டுகிறார்.
மேலும் “வேதா னுத்தரதே ” என்று தொடங்கும் ஸ்லோகம் 5 தெளிவாக வராக அவதாரம் எடுத்து வேதத்தை மீட்டவனான
ஸ்ரீ கிருஷ்ணன் பத்து அவதாரங்களை எடுத்தான் –அவனுக்கு நமஸ்காரம். -கிருஷ்ணாய துப்யம் நமஹ-.என்று கூறுகிறார்.
14.ஸ்ரீ தீர்த்தர் “அதி கருணா வித்ருதாத்புதரூபா” என்ற சொல் தொடரால் பகவானின் அவதாரங்களை விளக்கி யுள்ளார்
மேலும், தன் நூல் முழுவதிலும் ஸ்லோகத்திலும், சூர்ணிகைகளிலும் ,கீதத்திலும் ஸ்ரீகிருஷ்ணன் பிறப்பு,இறப்பு அற்றவன்,எங்கும் நிறைந்திருப்பவன்
,ப்ரஹ்மாண்டங்களைத் தாங்கி நிற்பவன்,நினலயான ஆனந்த வடிவு உடையவன் ,தன் அடியார்களைக் காப்பாற்ற மாயையால் பல அவதாரங்களைச் செய்தவன்,
அஹம் ப்ரஹ்மாஸ்மி,தத்வமஸி என்ற மஹா வாக்யங்களால் ஏற்படும் ஞானத்தால் உணரப்பட்டவன் என்ற கருத்தை
“ஸகல நிகமாந்த ஜனிதாந்த மதி விகிதம்” என்று கூறியுள்ளார்.
ஸ்ரீமத் பாகவதமும் இதே கருத்தை , “பெரிய நீர் தேக்கத்திலிருந்து எப்படி சிறிய
கால்வாய்கள் ஆயிரம் தோன்றுகின்றதோ , அது போல் மத்ஸ்யம் முதல் கல்கி அவதாரங்கள்
அனைத்தும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடமிருந்து தோன்றியவைகளே .
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பரிபூரண தத்வம். மற்ற அவதாரங்கள் அவருடைய அம்ஸங்களே .” என்று கூறுகின்றது.(பாகவதம் ஸ்க.1-அத்யா. 3-ஸ்லோ .26- 28)
15.ஸ்ரீ தீர்த்தர் தன் நூலின் துவக்கத்தில் முதல் தரங்கத்தில் “ராம கிருஷ்ண கோவிந்த ” எனத் தொடங்கும் கீதம் 6ல், ஸனகாதி யோகிகள்
“ராம கிருஷ்ண கோவிந்த ” என்று கூறிக் கொண்டு ஸ்ரீமந் நாராயணனுனடய ஸந்நிதிக்கு வந்தனர் என்றும்,
நூலின் முடிவிலும் தரங்கம் 12ல் தரு 8 ல் கிருஷ்ணனிடம், ருக்மிணிக்காக தூது சென்ற அறிவாளியான அந்தணர்
“கோவிந்த ராம,கோவிந்த ராம” என்று பகவானின் திரு நாமங்களைக் கூறிக் கொண்டு வருகிறார் என்று வர்ணித்து, கலியுகத்தில்
நாம ஸங்கீர்தனம் என்ற எளிதான வழியில் கடவுளை அனடய முடியும் என்பதால்,
மற்ற முன்று யுகங்களிலும் பிறந்தவர்கள் கலியில் பிறக்க வேண்டும், அதிலும் புண்ணிய நதிகளான காவேரி,
தாமிரபரணி ஓடும் திராவிட நாட்டில் பிறக்க வேண்டும் என்று பாகவதம்,ஸ்க-11 ,அத்யா.5 ஸ்லோ .38-
40ல் கூறப்பட்டதை நினனவு கூர்கிறார். ஆழ்வார்கள்,நாயன்மார்கள் இவர்களின் பாடல் பெற்ற
பல ஷேத்திரங்கள் உள்ள திராவிட நாட்டில்,காளிந்தி நதி பாயும் வராஹ புரி ,பூலோக வைகுண்டம் என்று பெயர் பெற்றதற்கு,இவையே சான்று.-
16.இந்த இரண்டு நூல்களுமே ஓப்பு உயர்வு அற்ற அமர காவியங்களாகும்.இரண்டும் தெய்வீக மணம் வீசும் உயர்ந்த காவியங்கள்,
இதில் எது சிறந்தது என்ற கேள்விக்கே இடமில்லை ஒருவனின் இரு கண்களில் எது சிறந்தது என்று கூற இயலாது. ஏன் எனில் இயல்பான பார்வைக்கு, மனிதனுக்கு இரு கண்களுமே முக்கியமானது.
அது போலே ஸ்ரீஜயதேவரின் கீத கோவிந்தமும், ஸ்ரீநாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியும், பாகவத சமுதாயத்தின் இரண்டு கண்கனளப் போன்றவை
இவை இல்லாத பஜனை சம்பிரதாயமே இருக்க முடியாது.
ராதா கல்யாணம், திவ்ய நாமம்.தீப ப்ரதக்ஷிணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் இவை இரண்டும் முக்ய பங்கு வஹிக்கின்றன.
நாமும் இவ் விரண்டு கிருஷ்ண ஸாகரத்தில் முழ்கித் திளைத்து பரமானந்தம் பெற அந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்ம ஸ்வரூபியான
வராஹபுரி ஸ்ரீ தேவி பூமி தேவி ஸமேத ஸ்ரீ வேங்கடேசப் பெருமானளயும்,ஸ்ரீ ஜயதேவ கவியையும்,
ஸ்ரீநாராயண தீர்த்தரையும் வணங்கி வழிபடுவோமாக.
“நவநீத சோராய நந்தாதி கோப கோ ரக்ஷிணே கோபிகா வல்லபாய,
நாரத முனீந்த் ரனுத நாமதே யாயதே நாராயண ஆனந்த தீர்த்த குரவே ”
என்று அந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கும், ஸ்ரீநாராயண தீர்த்த குருவிற்கும் மங்களம் பாடி நினறவு செய்வோம்.
————————-
இக் கட்டுரை ,திருவையாறு P.நடராஜ ஸர்மாவும், கும்ப காேணம் M.S.கோபால கிருஷ்ண ஸர்மாவும்
இணைந்து,வரஹா புரி ஸ்ரீதேவி பூமிதேவி ஸமேத வேங்கடேசப் பெருமாளிடமும்,
ஸ்ரீநாராயண தீர்த்தரிடமும் கொண்ட பக்தி மேலீட்டால் எழுதப்பட்டது.
——————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வரஹா புரி ஸ்ரீதேவி பூமிதேவி ஸமேத வேங்கடேசப் பெருமாள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்