Archive for the ‘அஷ்ட பிரபங்கள்’ Category

ஸ்ரீ ஜய தேவரின் கீத கோவிந்தமும் ஸ்ரீ நாராயண தீர்த்தரின் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணியும் —

January 20, 2023

ஸ்ரீ ஜய தேவரின் கீத கோவிந்தமும்
ஸ்ரீ நாராயண தீர்த்தரின் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணியும்

இவ்வுலகத்தினர் அனனவருக்கும் அறிவு செயல் இனவகளுக்கான திறமையை அளிப்பவரர்
இவ்வுலகில் உள்ள யோகிகள் அனனவருக்கும் தலைவர்
எல்லோராலும் அவசியம் அறியப்பட வேண்டிய
உண்னமப் பொருனள அறிந்தவர்-
இவ்வுலகமனனத்தையும் ஆட்டி னவக்கும் சிறந்த நாயகனாக இருப்பவர்-
அத்தகைய எங்கும் நினறந்த மஹா விஷ்ணுனவ உள்ளத்தால் தியானிக்கிறேன்.

பாகம்-1–பர ப்ரஹ்ம ஸ்வரூபம்

1.சச்சினாநந்த ஸ்வரூபமான பர ப்ரஹ்மத்துடன் ஒன்றாகி ஐக்யம் அடைவதான பரம பக்தி பரவஸ்யத்தையே
உபநிஷத்துக்கள் சாதனா மார்கத்தின் உச்சக்கட்டமாக விவரிக்கின்றன.
அந்த பர ப்ரஹ்ம தத்துவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது -மேலும் மற்ற ஒன்றுடன் ஒப்பிட்டுக்கூற இயலாது.
அது கால தேச வர்த்தமானத்திற்கு கட்டுப்படாத ஓன்று -எவ்வளவு முயன்றும் வேதங்களாலும் உபநிஷத்துக்களாலும் விவரிக்க
முடியாத ஓன்று-
அவனைப் ப்பற்றி விவரிக்குங்கால்,அது இப்படித்தான் இருக்கும் என்று சொல்லாமல் நேதி நேதி
(இதுவல்ல,இதுவல்ல) என்று இதர வஸ்துக்களுக்கு விலக்காகத்தான்
வர்ணிக்கப் பட்டுள்ளது-
இப்படி “ யதோ வாஸோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ” என்றபடி
மனத்திற்கும்,வாக்கிற்கும் எட்டாதது பர ப்ரஹ்ம ஸ்வரூபம்.

2.இந்த பஞ்ச பூதங்களாலான சரீரமும் ஜகத்தும் அழிவுள்ளனவ.
நான்,எனது என்ற எண்ணத்தால்-அனவகளுடன் ஓன்றுபடும் நிலைகளும், தோற்றங்களும், எண்ணங்களும்,
அவ்வாறே அனவகளுக்கெல்லாம் ஆதாரமாக,மாற்றம் இல்லாத சாக்ஷியாக ஸ்வயம் ப்ரகாசமாக விளங்குவதே
தன்னுனடய உண்னமயான ஸ்வரூபம் என்ற த்ருடமான முடிவுடன் அப்யாச அதிசயத்தினால், ஜீவன், ஸதா அவ்விதமான நினனவுடன்,
பர ப்ரஹ்மத்தோடு இரண்டறக் கலப்பதையே , மோக்ஷம் என்று சொல்லப்படுகிறது
“நாஹம் தேஹோ ந சான்யோஸ்மி ப்ரஹ்மை வாஹம் ந ஸோகபாக்
ஸச்சதானந்த ரூபோஹம் நித்ய முக்த ஸ்வபாவான்”

3.இப்படி தன்னுனடய ஜீவனானது பர ப்ரஹ்மமே என்ற ஐக்ய பாவமான பேர் உண்மையை அறிவதனால் தான்
அக்ருத்ரிம புருஷார்த்தமான மோக்ஷத்தை அனடயலாம்-
ஸ்வ விமர்ச:புருஷார்த்த :–தன்னுடய உண்னமயான இந்த ஸ்வரூபத்தை அவித்யா (மானயயினால்) மறந்து மயங்கிக் கிடக்கும் மனுஷ்யனானவன்,
அப்படி மறந்து போன ஸ்வரூபத்தை அறியப் பெறுவது தான் ஞானத்தின் முடிவு-
மேற் சொன்ன மாயை ஸத்வ, ரஜோ , தமோ எனும் முக் குணங்களின் வாயிலாக நாம ரூப
குணங்கணளாடு, ஜகத்தாகவும், ஜீவனாகவும், பரிணமிக்கிறது

4.சத்வ குணம் எனப்படுவது மற்ற குணங்களாகிற -ரஜோ ,தமோ குணங்களிலிருந்து-முற்றிலும் விடுபட்டு
சுத்தமானதாக இருக்கிறது.
வேத வ்யாசர் தன்னுனடய பல புராணங்களின் வாயிலாக, பர ப்ரஹ்மமும்,
மானயயும் சேர்ந்து ஸ்ருஷ்டி, ஸ்த்தி ஸம்ஹாரம் என்ற முத் தொழினலச் செய்ய, பல ரூபங்களை
ஏற்றுக் கொண்டு,
பல நாமங்களால் அனழக்கப்பட்டு,குணங்களிலிருந்து வேறுபட்டு,சுத்த சத்வ ஸ்வரூபத்துடன்,
அவதாரம் என்ற தொழிலை ஏற்றுக் கொள்கிறது என்று தெரியப் படுத்தி உள்ளார்,

5.ஸ்ரீமத் பாகவத்தில் ஸ்ரீகிருஷ்ேன், தேவகியின் கர்பத்தில் ஆவிர்பவிக்கும் சமயம்,தேவர்களுடன்,
ப்ரஹ்மா, மஹாவிஷ்ணுவின் அவதார தத்துவத்தையும்  நோக்கத்தையும் கீழ் கண்டவாறு ஸ்துதி செய்கிறார்.
“தாமரைக் கண்ணா ! சுத்த ஸத்வ ஸ்வரூபியான தங்களிடத்தில் சமாதி நினலயில் ஸ்திரமாக னவக்கப்பட்ட மனத்தினால்,
மநோ லயம் அடையப் பெற்ற ஒரு சிலரே , நின் திருவடியாகிற மரக் கலத்தால் ,ஸம்ஸார சாகரத்தை ,பசுங்கன்றின் குளம்படி போல் எளிதில் தாண்டுகிறார்கள் ( ஸ்ரீ மத் பாகவதம்-ஸ்கந்தம் – 10 அத்யா,-2 ஸ்லோ,30)

6.மேலும் இந்த ப்ரஹ்ம ஸ்துதியில் , பகவானுனடய அவதார தத்துவத்தை விளக்குங்கால்,”எல்லா
ஜீவராசிகளிலும் அந்தர்யாமியாக,ஒளியாகப் ப்ரகாசிப்பவனே
ப்ரகிருதி வசத்தால் மனறக்கப்பட்ட
ஜீவாத்மாக்கள் அந்த ஒளியான ப்ரகாசத்தினாலேயே தங்களுனடய மநோ , வாக், காயங்களால்,
உலக அனுபவத்தை அடைகின்றன என்று அறிவதில்னல.
அந்த மாயையை உன் வசத்திலே னவத்துக் கொண்டு,
மேலும் “ஸத்வம் விஸுத்தம்” (ரஜோ ,தமோ குணங்கள் கலக்காத ) உன் சுத்த சத்வ ரூபத்தோடு,அதர்மத்தை
அழிக்க அவ்வப்போது தோற்றம் அனடகிறீர்.
அந்த அவதார தத்துவத்தையும் நாம,ரூப,குணங்கனளயும் விவரிக்க இயலாது.
அவை , ப்ரத்யக்ஷம், அனுமானம் முதலிய ப்ரமாணங்களால் அறியக் கூடியனவ அல்ல.
ஆயினும் அநந்ய பக்தி யாலும், இடை விடா முயற்சியால் அனடயப் பெற்ற சுத்த மனத்தில் நின்
அருளால், அந்தா நாம ரூப குணங்களை ஜீவர்களுக்கு அனுபவ பூர்வமாய் உணர்த்துகிறீர்கள்.
”இந்த ஸ்துதி யினால் வ்யாச பகவான்,நமக்கு பக்தி மார்கமே ஞானத்தை அளித்து மோக்ஷத்தை அளிக்க வல்லது என்று விளக்குகிறார்.
பக்தி யற்ற ஞானம்,மேல் உலகங்களில் தற்காலிகமாக, சுகத்தை யளித்து திரும்பவும் மறுபிறப்னபயும் அளிக்குமே தவிர
ஸம்ஸார ஸாகர சுழலிலிருந்து விடுவிக்காது என்று அறுதியிட்டு கூறுகிறார்..(ஸ்ரீ மத் பாகவதம் -10-2-35-37)

7.அப்படிப்பட்ட ஸச்சிதானந்தப் பரம் பொருளை விட்டகலாத கிருஷ்ேண பக்தியே ராஸ லீலையில்
கோபிகைகள் ஸ்ரீகிருஷ்ணனோடு அனுபவித்த பரமானந்தம்,
அதுவே பக்தன் பகவானுடன் அனுபவிக்கும் பரமானந்தம்.
அதுவே முக்தனுடன் சேர்ந்து முமுஷுக்கள் அனுபவிக்கும் ப்ரஹ்மானந்தம்.

8.அப்படிப் பட்ட ப்ரஹ்மானந்தத்தில் மூழ்கி திளைத்த மஹான்கள் பலருண்டு.
அவர்களில் பாகவத ஸமுதாயம்,
என்றென்றும் மறக்காமல் ஆராதித்துவரும் ஸ்ரீ ஜயதேகவியும், ஸ்ரீநாராயண தீர்த்தரும் முக்கியமானவர்கள்.
அவர்கள் அப் பரம்பொருனள அறிந்து,தான்,தனது என்ற பாவம் ஒழிந்து, அதனுடன் இரண்டறக் கலந்து பரிபூரண ஆனந்தத்தை அனுபவித்தனர்.
“ஏகம் ஸ்வாது ந புஞ்ஜீத ” என்ற கூற்றுப்படி, தான் அனுபவித்த அந்த பரமானந்தத்தை ,மற்ற பாமர மக்களும் அனுபவித்து
மோக்ஷ சாம்ராஜ்யத்தை அனடய வேண்டும் என்ற பரம கருணையால் தங்களுனடய ஆனந்த அனுபவங்கனள,
தங்களின் தெய்வீகப் பாடல்கள் வாயிலாக வெளிப்படுத்தி நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நாம் இப் பாடல்கனளப் பாடும் போதும்,மற்றவர்கள் பாடிக் கேட்கும் போதும்,நம்மை மறந்த நினைவில் ,
பரவசமாகி, ஆனந்தக் கண்ணீர் வடிப்பதும்,இதற்குத் தக்க ப்ரமாணமாகும் எனபதில் ஐயமே இல்லை ,

9.ஸ்ரீஜயதேவர்”கீதா கோவிந்தம் ”என்ற நூலையும்,ஸ்ரீ நாரா யண தீர்த்தர் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற நூலையும்,பனடத்து,
தாங்கள் ருசித்த பரமானந்த ரஸத்தை பாமர மக்களும் ருசித்து அனுபவிக்க ,ராக தாளங்களுடன் கூடிய ஜன ரஞ்சகமான பாடல்களாக அருளிச் செய்தார்கள்.

இக்கட்டுரை 3 பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.
1ம் பாகத்தில் ப்ரஹ்ம ஸ்வரூப விளக்கமும்,
2ம் பாகத்தில் நூல்களும் அதன் ஆசிரியர்களும்-என்ற தலப்பில் ஸ்ரீ ஜயதேவரின் கீதா கோவிந்தமும்
ஸ்ரீ நாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற நூல்களின் சிறப்புகளைப் பற்றியும்
3ம் பாகத்தில் ஒற்றுமையும் வேற்றுமையும் என்ற தலைப்பில் இந் நூல்களின் இடையே உள்ள ஒற்றுமையும், வேற்றுமையும் விவரிக்கப்பட்டுள்ளன.

நாமும் இப் பாடல்களின் உட்பொருள் அறிந்து, அந்த அமிர்த ரஸத்தை முடிந்த வரை பருகி அனுபவிக்க,
முதற் கண் இந் நூல்களின் காவியத் தலைவனான ஸ்ரீகிருஷ்ண பரமாத்ம ஸ்வரூபியான
வராஹ புரி ஸ்ரீதேவி பூமி தேவி ஸமேத ஸ்ரீவேங்கடேசப் பெருமாளையும்,ஸ்ரீ ஜயதேவ கவியையும்,
ஸ்ரீநாராயண தீர்த்தரையும் வணங்கி வழிபடுவோமாக.

————————-

பாகம் -2- நூல்களும் அதன் ஆசிரியர்களும்
ஸ்ரீஜயதேவரும் அவர் அருளிச் செய்த ஸ்ரீ கீத கோவிந்தமும்
1.கிபி 12வது நூற்றாண்டு ஸ்ரீஜயதேவர், ஒரிஸ்ஸா மாநிலத்தில் பூரி ஷேத்திரத்தின் அருகில் உள்ள
கெண்டுபில்வா என்றகிராமத்தில் போஜதேவர் ராதா தேவி தம்பதியினரின் மைந்தனாக அவதரித்தார்.
ஸ்ரீஜயதேவரும் அவரதுமனனவி பத்மாவதியும் பூரி ஜகன்னாதரின் பரம பக்தர்கள்.
அவர் ஸ்ரீ கீத கோவிந்தம் என்கிற தெய்விக காவ்யத்தைப் படைத்து அதனை பூரி ஜகன்னாதரின் ஸந்நிதியில் தம்பதியினர்
தினந்தோறும் பாடியும்,நடனம் ஆடியும், பக்தி பரவசத்தில் மெய்மறந்து தங்களின் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

2. காதல் எனும் சொல் தத்வரீதியில் மிக நுண்ணிய அர்த்தத்தை யுடையதாக இருக்கிறது.
ஸாதாரணமாக பொது வாழ்வில், மனித உறவுகளில், நடைமுனறயில் இது அன்பு என்று அனழக்கப்படுகிறது.
அந்த அன்பின் பரிமாணம் ஓவ்வொரு உறவுகளிலும் வேறுபடுகின்றது.
தாய்-குழந்தை , ஸ்த்ரீ-புருஷன்,நாயகி- நாயகன், கணவன்-மனைவி,பெற்றோர்-குழந்தைகள் என்ற உறவுகளில்,
அன்பின் அளவு வேறுபாட்னட நாம் உணர முடிகிறது.
இந்த அன்பு அல்லது ப்ரேமை , மனித உறவுகளைக் கடந்து, தெய்வத்திடம் காட்டப் படும் போது, அது பக்தி என்று அழைக்கப் படுகிறது.

3.ஸ்ரீ கீத கோவிந்தத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் ராதையும், மற்ற கோபிகைகளும் கொண்ட காதல்
ஸாதாராணமாக ஸ்த்ரீ-புருஷ வேறுபாட்டினால், இந்த்ரிய வசத்தால் தோன்றும் மானிடக் காதல் அல்ல.
அது தெய்வீகக் காதல்.
இத்தகைய தெய்வீகக் காதலை ராதையும் , மற்ற கோபிகைகளும் பரமாத்மாவிடம் செய்ததும்,
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அவர்களின் பேரில் கொண்ட காதலையும்
ஸ்ரீஜயதேவர் தனக்கே உரித்தான கவிநயத்துடன் சிருங்கார ரஸம் ததும்பும் பாடல்களாக தன் நூலின்
முலம் வெளிப்படுத்தி யுள்ளது இதன் தனிச் சிறப்பாகும்.
தன்னையே ராதையாகவே கற்பனை செய்து கொண்டு பரமாத்மாவுடன் சேர்ந்து அனுபவித்த
பேர் ஆனந்தத்தை , தன் பாடல்கள் வாயிலாக
வெளிப்படுத்தி யுள்ளார் என்பது பாடல்களின் பாவத்திலிருந்து, நாம், நன்கு உணர முடிகிறது..

4.காவ்யம் என்ற பெயருக்கு ஏற்ப ஸ்ரீ கீத கோவிந்தம் பண்ணிரண்டு ஸர்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இருபத்து நான்கு அஷ்டபதிகள் கொண்ட இக் காவ்யத்தில் ஒவ்வொரு அஷ்டபதியிலும் நடனத்திற்கு ஏற்றபடி எட்டெட்டு பதங்கள் உள்ளன.
இதற்கு விதி விலக்காக முதல் அஷ்டபதியிலும் மற்றும் சில அஷ்டபதிகளிலும் எட்டுக்கு மேற்பட்ட பதங்கள் உள்ளன.
இந்த அஷ்டபதிகளில் ஒவ்வொன்றிலும் கூறப்படும் கருத்துக்களுக்கு தொடர்பு உள்ளபடி 90 ஸ்லோகங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

5.முன்னுரை ஸ்லோகங்களுக்குப் பின்னர் முதல் அஷ்டபதி விஷ்ணுவின் பத்து அவதாரங்கனளயும் விவரிக்கிறது.
பின்னர் வஸந்த கால வர்ணனையும் கோபியருடன் கண்ணன் மகிழ்ந்து குலாவுவதை
ராதையிடம் அவள் தோழி வர்ணிப்பதையும் கூறப்பட்டுள்ளது.
ராதையின் பிடிவாதம் கனலந்த பின், இன்னமும் கோபப் பட்டாலும்,மீண்டும் மீண்டும் கண்ணனை நினனந்து மனம் வருந்துகிறாள்.
ராதையின் விரஹ தாபத்தை கவி மிகவும் அழகாக விவரித்துள்ள பாங்கு மிகவும் போற்றி பாராட்டப்படுகிறது,

6.கண்ணனும்,தான் ராதைக்கு மனத் துயர் அளித்ததை எண்ணி மனம் வருந்துகிறான்.
ராதையின் தோழிஅவர்களிடையே தூது சென்று அவர்களிடையே ஏற்பட்ட பிணக்கு நீங்க வழி செய்கிறாள்.
மீண்டும் ராதையும் கண்ணனும் முன் போலவே ஆனந்த மயமான கேளிக்கைகளில் ஈடுபடுவதை ,
கவி வர்ணனை செய்து இந்தக் காவ்யத்தை நிறைவு செய்துள்ளார்.

7.பதினெட்டு புராணங்களில் ஒன்றான ப்ரஹ்ம வைவர்த்த புராணம் விவரிக்கும் ராதா கிருஷ்ண
சரித்ரத்தின் அடிப்பனடயில் இந்த காவ்யம் அமைக்கப் பட்டுள்ளது.
மேலே எழுந்த வாரியாகப் பார்க்கும்
போது ச்ருங்கார ரஸமே ப்ரதானமாக வுள்ளது போலே தோன்றினாலும்,கூர்ந்து நோக்குங்கால்,
பக்தியின் உன்னத நினலக்கு நம்மை ஈர்த்துச் செல்லும் பக்தி ரஸம் நினறந்துள்ள காவ்யமாகும்.
ஒவ்வொரு அஷ்டபதியின் முடிவிலும் கண்ணனிடம் உள்ள பக்திப் பெருக்கால் பக்தர்கள் மேன்மை அடையட்டும்
என்று வேண்டி முடிக்கிறார்.
பஜனை சம்பிரதாயத்லே கீத கோவிந்தம் பாடாத பத்ததியே இல்லை என்று கூறும்படி அவ்வளவு ப்ரஸித்தம் அடைந்துள்ள காவ்யமாகும்.
இந்தியாவில் வடநாட்டில் இக் காவ்யம்
உருவானாலும் தென் நாட்டில் மிகவும் விரும்பி பரம பக்தி யுடன் பாகவதர்களால் கையாளப்பட்டு வருகிறது .
இக் காவ்யம் ஸமஸ்கிருதத்தில் எழுதப் பட்டிருந்தாலும் அந்த பாஷை தங்களுக்கு பரிச்சியமில்லாவிடினும்
அது அமர காவ்யம் என்று உணர்ந்து அதை ராகத்துடன் கற்றறிந்து
பாகவதர்கள் பாடி பரவசமடைந்து கேடபோரையும் நெகிழ னவக்கிறார்கள்,

8.இதற்கு அடிப்படைக் காரணம் என்ன வென்றால் பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்க வேண்டும் என்ற
மனிதனுடைய ஆத்மாவின் உள்ள கிடக்கையையும்,படிப் படியாக முன்னேறி, அதில் வெற்றி காண்பதையும்,
பரமானந்தத்தை அனுபவிப்பதையும்,  உட்கருத்தாகக் கொண்டு இக் காவ்யம் அமைக்க பட்டதேயாகும்,

9.இக் காவ்யம் ராதா என்பவளை ஜீவாத்மாவாகவும்,ஸ்ரீகிருஷ்ணனை பரமாத்மாவாகவும் பாவித்து
அவர்களின் ஐக்யத்னே -ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியத்தை -புகழ்ந்து போற்றி, சிருங்கார ரஸம் ததும்ப எழுதப்பட்டதாகும்.
ஸ்ரீஜயதேர் பூரி ஜகன்நாதரை ராதா கிருஷ்ண ஐக்கியமாகப் பாவித்து இந்த மஹா காவ்யத்தைப் படைத்தருளினார்.

10.ஸ்ரீஜயதேவர் மாபெரும் கவியாக இந்தியா முழுவதும் கருதப்படுகிறார்.
அவருடைய சங்கீத அறிவும் சமஸ்கிருதத்தில் அவருக்கு உள்ள பாண்டித்யமும் அவருடைய அஷ்டபதிகளின் வாயிலாகத் தெள் எனத் தெரிகின்றது.
அவருடைய கவித்துவத்தைப் பாராட்டாத பண்டிதர்களே இல்லை .
சொற்களின் கோர்வை ,மற்றும் பொருள் செறிவைப் பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்,
ஸர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் இக் கவி தையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது அதைத் தொடர்ந்து ஜெர்மன்,பிரான்சு மேலும்
சில ஐரோப்ய மொழிகளில் மொழி பெயர்த்துள்ளதிலிருந்து கீத கோவிந்தம்
என்ற காவ்யம் சிறந்த இலக்கியமாக உலகம் முழுவதும் போற்றப்படுகிறது.

11.இப்போது நாம் சில முக்கிய ஸ்லோகங்கள்,அஷ்டபதிகள் அதன் பிண்ணனி ஆகியவைகளை அனுபவிக்கலாமே .
ஸ்ரீஜயதேவரின் புகழ்பாடும் தியான ஸ்லோகங்களுக்கு பின்னர், முதல் ஸர்கத்தில்
“மேகைர் மேதுர மம்பரம்“ என்று தொடங்கும் முதல் ஸ்லோகம்
“காரிருள் கவ்வுகிறது–.வானில் மேக மூட்டம் காணப்படுகிறது,குழந்தை கிருஷ்ணன் அச்சப் படுகிறான்,அவனை வீட்டில் கொண்டுபோய் சேர்”
இவ்விதம் நந்த கோபன் உத்திரவுப்படி, செல்லும் வழியில், யமுனை நதிக்கரையில் புதர்களின் இடையே
ராதாவும் மாதவனும் புரிந்த கேளிக்கைகள் ஜயமடையட்டும் என்று மங்களா சாஸனம் செய்து கவிதையைத் தொடங்குகிறார்,

12.இவ்விடம் குழந்தை என்று கண்ணன் அழைக்கப் பட்டு மேலும் ராதையோடு கேளிக்கை புரிந்தான்
என்று கூறியதிலிருந்தும் கண்ணனுனடய வயது மிகக் குனறவு என்பது ஊர்ஜிதமாகிறது.
அவன் ராஸ லீலா கேளிக்கை எல்லாம் தன் பத்து வயதிற்குள் முடித்து விட்டான் என்றும் கூறப்படுகிறது.
இதிலிருந்து ராஸலீனல ஒரு தெய்வீகக் கேளிக்கை எனறு சந்தேகமறத் தெரிகிறது.
மேலும் “பய க்ருத் பய நாசன:” என்று பயத்தை உண்டாக்குபவனும்,அப் பயத்தை அழிப்பவனும் அவனே என்றிருக்க
கண்ணன் பயப்படுகிறான் என்ற விவரிப்பு, கண்ணன் குழந்தை ரூபத்தை ஏற்றது மட்டுமல்லாது,
அக் குழந்தைக்குறிய குணங்கனளயும் வெளிப்படுத்தி யுள்ளான் என்பது தெளிவாகிறது,

13.ஸ்ரீ ஜயதேவர் முேல் அஷ்டபதியில் பகவானின் பத்து அவதாரங்களை வர்ணித்துள்ளார்.இதில் புத்த அவதாரத்தையும் சேர்த்து உள்ளார்.
மேலும் இந்த பத்து அவதாரங்கனளயும் ஸ்ரீ கிருஷ்ணன் தான் செய்தார் என்று கூறுகிறார்.
முதல் அஷ்டபதியில் ஓவ்வொரு அவதாரத்தைப் பற்றிச் சொல்லும் போதும்
“கேசவா த்ருத ” -கேசவன் தரித்தான் -என்று கூறி அந்த அந்த அவதாரத்தை வர்ணிப்பதன் முலம்
ஸ்ரீகிருஷ்ணன் பூர்ண பரமாத்மா என்று எடுத்துக் காட்டுகிறார்.
மேலும் “வேதானுத்தரதே ” என்று தொடங்கும் ஸ்லோஹம்- 5 ல் தெளிவாக வராக அவதாரம் எடுத்து,வேதத்தை மீட்டவனான
ஸ்ரீகிருஷ்ணன் பத்து அவதாரங்கனள எடுத்தான்,அவனுக்கு நமஸ்காரம்.-கிருஷ்ணாய துப்யம் நமஹ- என்று கூறுகிறார்.

14. “ஸ்ரித கமலா குச மண்டலா”என்று தொடங்கும் 2வது அஷ்டபதியில்
“தவ சரணே ப்ரண தாவயமிதி பாவய ஏ குருகுசலம் ப்ரணதேஷூ ஜய ஜய தே வ ஹரே ” என்று-உன்னைச் சரணமடைந்தோம் என்று அறிவாயாக.
சரணமடைந்த எங்களுக்கு நன்னம பயக்கச் செய் -என்று சரணா கதி மஹத்வத்தை -மார்ஜார பக்தி தத்துவத்தை -விளக்குகிறார்.
மேலும் வஸந்த கால மேக வர்ணனை மஹாகவி காளி தாஸரின் மேக தூதத்தை நினனவு கூறுகிறது

15.ஸ்ரீஜயதேவர் 10 ஸர்கம்,”வஸதி யதி கிஞ்சிதபி”என்ற19வது அஷ்டபதி எழுதிக் கொண்டிருக்கும் போது,
7வது சரணத்தில் அவர் கண்ணன் காதல் உன்மத்தம் கொண்டு ராதையிடம் பேசுவதாக உள்ள வரிகளில்,
அவர், ஸ்ரீ ஜகன்நாதரிடம் மனம் லயித்து தன்னன மறந்த நிலையில்,”கண்ணன் ராதையிடம்
காதல் உன்மத்தம் கொண்ட என் ஸிரஸ்ஸில் உன் மிருதுவான பாதத்தை வைத்து, அதை குளிரச் செய்”
என்று சொல்வது போலஂ எழுதி விட்டார்.-பின் சுய நினைவுடன் அதைப் படித்த பின் திடுக்கிட்டார்.
”என்ன அபச்சாரம் செய்து விட்டேன் பரமாத்மா கண்ணனின் தலையிலே ராதையின் பாதமா”என்று வருந்தி
அந்த வரிகனள நீக்கி வேறு விதமாக மாற்றி எழுத பல தடவை முயன்றும் முடியாமல் போயிற்று.
எழுது கோலை கீழே வைத்து விட்டு கங்கையில் நீராடச் சென்று விட்டார்.
திரும்பி வந்ததும் எழுதுவதற்காக ஓலையை எடுத்தார் -என்ன ஆச்சர்யம்!! அவர் முதலில் எழுதிய வாறே அந்த
நீக்கிய வரிகள் எழுதப் பட்டு இருந்ததைப் பார்த்து, வியந்து, தன் மனனவியிடம் விசாரிக்கும் போது, அவர்
மனனவி “நீங்கள் தானே சற்று முன் வந்து எழுதி விட்டு, சாப்பிட்டு விட்டு வெளியே சென்றீர்கள்” என்று சொன்னார்.
ஸ்ரீ ஜயதேவரும் பத்மாவதி தேவியும் அப்போது தான் உணர்ந்தார்கள்- பூரி ஸ்ரீ ஜகன்நாதரே
ஸ்ரீஜயதேவர் ரூபத்தில் வந்து அந்த வரிகனள எழுதினார் என்றும்
பத்மாவதி தேவி கையால் உணவும் அருந்திச் சென்றார் எனறும் அறிந்து ஆனந்த பாஷ்பம் பெருக மெய் மறந்தனர்.

இது ஒன்றே போதுமே “கீத கோவிந்தம் “ஒரு தெய்வீக காவ்யம்” என்பதற்கு.
பகவானால் எழுதப்பட்ட அந்த தெய்வீக வரிகனளப் பார்ப்போம்.
”ஸ்மர கரல கண்டனம் மம ஸிரஸி மண்டலம்
தேஹி பத பல்லவமுதாரம் ஜ்வலதி மயி தாருணோ
மதன கத நாருணோ ஹரது தது பாஹித
விகாரம் ப்ரியே சாருசீலே முஞ்ச மயி மானம நிதானம்”
“வஞ்சிக் குறமகள் பாதம் வருடிய மணவாளா” என்று அருண கிரிநாதர் தன்
திருப் புகழில் முருகனைப் போற்றி எழுதிய வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.

16.மேலும் இந்த அஷ்டபதி மரணத்திலிருந்து மீட்டு உயிரளிக்கும் ம்ருத சஞ்ஜீவினி மந்திரமாகவும்
பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது கீழ்கண்ட சம்பவத்திலிருந்து அறிகின்றோம்
ஒரு சமயம் பத்மாவதி தேவி கஜபதி ராஜா அரண்மனையில் மஹாராணியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அச்சமயம் ராணி வினளயாட்டாக பத்மாவதி தேவியிடம் ஸ்ரீ ஜயதேவர் ஸ்ரீ ஜகன்நாதர் ஆலயத்தில் த்யானத்தில்
இருந்த போது உயிர் நீத்தார் என்று சொல்ல,
அதனைக் கேட்ட பத்மாவதி தேவியார் துக்கம் தாங்காமல் அந்த ஷணமே தானும் உயிர் நீத்தார்.
வினளயாட்டு விபரீதாமானதைப் பார்த்த ராணி மிகவும் வருந்தினாள்.
ராஜாவும் உடனே ஸ்ரீ ஜயதேவரிடம் சென்று நடந்ததைக் கூறி வருந்தி மன்னிப்புக் கேட்டார்.
ஸ்ரீ ஜயதேவர் துளியும் கவலைப் படாது உடனே பத்மாவேி தேவியின் உடலுக்கருகில் சென்று ஸ்ரீ ஜகன்நாதரை மனதால் வேண்டி
அஷ்டபதி – 19ல் உள்ள “ப்ரியே சாருசீலே முஞ்ச மயி மானம நிதானம்” என்ற வரிகனள இசை மீட்டிப் பாடினார்.
உடனே பத்மாவதி தேவியார் தூக்கத்திலிருந்து எழுவது போல உயிர் பெற்றெழுந்து ஸ்ரீஜயதேவருடன் சேர்ந்து
இந்த அஷ்டபதியை இசை மீட்டிப் பாடி ஸ்ரீஜகன்நாதரை ஸ்துதித்தார்கள் என்று சொல்லப் படுகிறது.

17. “ரதி ஸுக ஸாரே ” எனத் தொடங்கும் – 11வது அஷ்டபதியில் விப்ரலம்ப ஸ்ருங்காரத்தை கவி வர்ணிக்கிறார்,
கிருஷ்ணன் யமுனா நதிக் கனரயில் ராதையின் வருகையை எதிர் நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறான்.
5வது சரணத்தில் கிருஷ்ண ராதையின் ஆனந்த ஆலிங்கனத்தை , கார் மேகத்தின் இடையே தோன்றும் மின்னலாகவும்,
கரு மேகங்களின் இடையே பறந்து செல்லும் நாரைக் கூட்டங்களாகவும் வர்ணித்துள்ள அழகு,கவியின் மஹா கவித்துவத்தைப் பறை சாற்றுகிறது.

18.”பச்யதி திஸி திஸி” எனத் தொடங்கும் 12வதுஅஷ்டபேியில் தன்னிடத்தே விட்டு துளியும் அகலாது, மனம் கண்ணனையே நினனத்து,
அவன் பிரிவாற்றா மையை சஹிக்க இயலாது, அவன் வரவை எதிர் நோக்கி விரஹ தாபத்தினால் வேதனை யுறும், ராதையைக் கண்ணுற்று,
தோழி, ராதையின் நிலமையைக் கண்ணனிடம் கூறுவதை விளக்கியுள்ள அழகே தனி.

19.கீத கோவிந்தத்தின் பெருமையை விளக்க மேலும் ஒரு ருசிகரமான நிகழ்ச்சி-
ஒரு இலந்தைப்பழம் விற்கும் ஒரு வயதான மூதாட்டி காட்டிற்குள் சசன்று முட்கள் அடர்ந்த மரங்களிலிருந்து
இலந்தைப் பழம் திரட்டச் சென்ற போது ,
பக்திப் பரவசத்துடன் தன் இனிமையான குரலில் கீத கோவிந்தப் பாடல்கனளப் பாடினாள்.
அந்த இசையில் மயங்கித் தன் ஆலயம் விட்டு, ஸ்ரீஜகன்நாத கிருஷ்ணர் அக் கிழவியைப் பின் தொடர்ந்தார்.
அங்குள்ள முட்கள் அவருனடய ஆடைகளைத் துண்டு துண்டாகக் கிழித்தது.
மறுநாள் அர்சகர்கள் பூட்டிக்கிடந்த கோயிலுக்குள் சென்று பார்க்கையில் ஸ்ரீஜகன்நாதரின் ஆடைகள்
முட்களால் கிழிக்கப் பட்டிருந்ததைக் கண்டு, என்ன காரணம் என்று அறிய முடியாமல் அதிர்சியுற்றனர்.
அவர்கள் கனவில் ஸ்ரீஜகன்நாதர் தோன்றி நடந்த நிகழ்சியைக் கூறினார் என்று கீத கோவிந்த்தத்தின் பெருமையைக் கூறுகின்றனர்

20.தினமும் ஸ்ரீஜகன்நாதரின் ஸன்நிதானத்தில் கீத கோவிந்தப் பாடல்கள் பக்க வாத்யங்களுடன் பாடப்பெற்று
நடன மாதர்களால் நாட்யமும் ஆடப் பட்டு பகவானுக்கு நித்ய ஸேவையாகச் சமர்பிக்கப்படுகிறது.

21 இவருனடய புகழிலும், கீத கோவிந்தத்தின் பிராபல்யத்தைக் கண்டும், பொறாமை கொண்ட மஹாராஜா கஜபதி
தானும் கீத கோவிந்தத்தின் மையக் கருத்தின் அடிப்படையில் பாடல்கனள எழுதி அப் பாடல் களையே , பாடகர்கள் சங்கீதத்துடன்
ஸ்ரீஜகன்நாதரின் ஸந்நிதியில் பாடவேண்டும் என்றும்,-கீத கோவிந்தப் பாடல்களைப் பாடக்கூடாது, என்றும் கட்டளை இட்டான்.
இருப்பினும்,ஸ்ரீ ஜயதேவர் ஸ்ரீஜகன்நாதரின் ஸந்நிதியில் பாடுவதையும்ஆடுவதையும் நிறுத்த வில்னல.
ராஜா மிகவும் கோபம் கொண்டு ஸ்ரீ ஜயதேவரிடம், எந்த வகையில் கீத கோவிந்தம் தன்கவி தையை விட உயர்ந்தது என்று வாக்குவாதம் செய்தார் .
இருவரின் பனடப்புகளில் எது சிறந்தது என்று தீர்மானிக்க இரண்டு கவிதைகளையும் , ஸ்ரீஜகன்நாதரின் திருப் பாதங்களில் னவத்து, கதவைத் தாளிட்டு, கோயிலுக்கு வெளியே சென்று விட்டனர்-சில நேரங்கள் கழித்து மறுபடி கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.என்னஆச்சர்யம்!!
ராஜாவின் கவிதை எழுதப் பட்ட ஓலை கீழே தரையில் தள்ளப்பட்டு கீத கோவிந்தமுள்ள ஓலை மட்டும் ஸ்ரீஜகன்நாதரின் பாதத்தில் காணப் பட்டது.
அதைப் பார்த்த அனைவரும் ஸ்ரீஜகன்நாதாரே கீத கோவிந்தம் தான் சிறந்தது என்று தீர்ப்பு வழங்கி விட்டார் என்று உணர்ந்து பெரும் உவகை யடை ந்தனர்.
அன்றிலிருந்து கீத கோவிந்தத்தின் பெருமை பன் மடங்காயிற்று.
மக்கள் அனைவரும் அதை தெய்வீக காவ்யம் என்று போற்றிப் புகழலானார்கள்.

22. ஆழ்ந்த கிருஷ்ண பக்தி யுடைய ஸ்ரீஜயதேவரால் விவரிக்கப்பட்ட கீத கோவிந்தத்தின் மூலம்,அறிவாளிகள், இசைக் கலையில் திறமையும்,
விஷ்ணுவின் மேன்மையை இனடவிடாது த்யானம் செய்தலும், வெவ்வேறு காவ்யங்களில் சிறப்பாக விவரிக்கப்பட்ட ஸ்ருங்கார ரஸத்துடன் கூடிய
ஸ்ரீகிருஷ்ணனுடைய ராஸ லீலை தத்வத்தை உணர்ந்து அறியவும், இவை அனைத்தையும்
ஒருங்கு இணைந்து , பெறட்டும் என்று 12வது ஸர்கம் ஸ்லோஹம் 88ல் பல ஸ்ருதியும் கூறி யுள்ளார்.

23.”ஸாத்வீ மாத்வீக” எனத் தொடங்கும் ஸ்லோகம் 90 ல்- “இனிய மது பானமே !நீ இனிமை என்று இனியும் நினனயாதே !
சர்க்கரையே நீ கடினம்! த்ராஷையே உன்னன காண எவர் விரும்புவர்,-அம்ருதமே இனி நீ உயிரற்றது!
பாலே நீ ருசியற்றது! மாம்பழமே (பயனற்றது என்று)ஓலமிடு!
அழகிய பெண்களின் சிவந்த உதடே ஸ்ருங்கார ரஸம் நினறந்த மங்களமான ஜயதேவனின் மிகச் சிறந்த சொற்கள் உள்ளவரை ,
இனிமைக்கு ஸமம் என்று கூற வினழயாதே !.”-என்று கூறி காவ்யத்தை நினறவு செய்கிறார்.

24.கீத கோவிந்த மாகிற அந்த அம்ருத ஸாகரத்தில் மூழ்கித் திளைத்து நம் அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண பக்தி மேலிட்டு,
ஸ்ரீ ஜயதேவர் போல், அந்த பர ப்ரஹ்மத்துடன் இரண்டற கலந்து ப்ரஹ்மானந்த மாகிற மோக்ஷப் ப்ராப்தி கிட்ட,
ஸ்ரீ ஜயதேவரின் திவ்ய பாத சரணங்கனளப் பற்றுவோமாக.

“ஸ்ரீகோபால விலாஸி நீவலய ஸத் ரத்நாதி முக்தாக் க்ருதி ஸ்ரீராதா பதி பாத பத்ம ஜநா நந்தாப்தி
மக்நோ (அ) நிஸம் லோகே ஸத் கவி ராஜ ராஜ இதி ய: க்யாதோ தயாம் போநிதி : தம் வந்தே
ஜயதேவ ஸத் குரு வரம் பத்மாவதீ வல்லபம்”

கோபியர்களின் வனளகளிலுள்ள சிறந்த முத்து முதலான ரத்னங்களின் வடிவம் கொண்ட ராதையின்
மணவாளனின் பாதத் தாமரையைத் தொழுது எப்போதும் ஆனந்தக் கடலில் மூழ்கிய வரும், உலகிலேயே
சிறந்த கவியரசர் எனப் பெற்றவரும்,கருணைக் கடலும், பத்மாவதியின் பதியும்,உன்னதமான குருவுமான
ஸ்ரீ ஜயதேவரை வணங்குகிறேன்.

—————

ஸ்ரீ நாராயண தீர்த்தரும் அவர் அருளிச் செய்த ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியும்–

1.ஸ்ரீநாராயண தீர்த்தர் கிபி 17ம் நூற்றாண்டில் ஆந்திர ப்ரதேசத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில்
விளத்தூர் என்ற கிராமத்தில் அவதரித்த தாகச் சொல்லப் படுகிறது.
பூர்வாஸ்ரமத்தில் அவருடைய பெயர் மாதவன் என்றும் கோவிந்த சாஸ்திரி என்றும் இருந்த தாகச் சொல்லப் படுகிறது.
அவர், தன் இளம் வயதிலேயே பகவத் பக்தியில் ஈடுபட்டு, பல ஷேத்திரங்களுக்குச் சென்று, பகவத் தரிஸனம் செய்தார் என்றும்
அவர் வேதாத்ரியைச் சேர்ந்த பெண்ணை மணந்து இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார் என்றும், கரண பரம்பரை வாயிலாகத் தெரிகிறது.
அவர் இளமையிலேயே வேத சாஸ்த்திரங்கள்,சங்கீத சாஹித்யங்களில் விற்பன்னராக இருந்தார் என்றும் தெரிகிறது.

2. ஒரு சமயம் கிருஷ்ணா நதியின் அக்கரையிலுள்ள தன் மாமனார் வாழ்ந்த வேதாத்திரி கிராமத்தை அடைய நீந்திச் செல்கையில்
நதியில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் அவரை உருட்டிச் சென்று விட்டது.
அவர் உயிருக்குப் பேர் ஆபாயம் ஏற்பட்ட சூழ் நிலையில், அவர் தான் க்ருஹஸ்த ஆஸ்ரமத்தைத் துறந்து,
ஸந்நியாச மார்கத்தைத் தழுவுகின்றேன் என்று ப்ரதிஜ்ஜையை எடுத்துக் கொண்டார்.
வெள்ளமும் வடிந்து அக்கரையிலுள்ள மாமனாரின் வீட்டை அடைந்தார் .
அவரைப் பார்த்த அவரின் மனனவி அவரிடம் ஒரு ஸந்யாசியின் காந்தி வீசுவதை உணர்ந்தார்
அவரிடம் விசாரித்த போது நடந்தவற்னற அறிந்தாள்.
பின் தன் மனனவிடம் அனுமதி பெற்று இல்லற வாழ்வைத்
துறந்து காஞ்சீபுரம் சென்று ஸ்ரீசிவராம தீர்த்தர் என்ற மஹானிடம் முறைப்படி ஸந்நியாசம் பெற்றார் என்று சொல்லப் படுகிறது.
கிருஷ்நா நதி வெள்ளம் ஸ்ரீ தீர்த்தரை ஸந்நியாசி ஆக்கியது , ஸ்ரீ கிருஷ்ண மஹா ஸாகரம் அவனர ப்ரஹ்ம ஞானி ஆக்கியது போலும்.
இது ஆதி சங்கரர், முதலை ,தன் காலை ப் பிடித்துக் கொண்டதையே வ்யாஜ்யமாகக் கொண்டு,
ஸந்நியாசம் வாங்கிக் கொண்டதை நினனவு படுத்துகிறது.

3.அதற்கு பிறகு, அவர் தன் குருவின் ஆஜ்ஜைப்படி தீர்த்த யாத்திரை மேற் கொண்டு காசி, ப்ரயாகை ,
மதுரா.பூரி போன்ற ஷேத்ரங்களுக்குச் சென்று வழிபாடு செய்தார்,
காசியில் பல வருடங்கள் தங்கி ப்ரஹ்ம உபாசனையில் ஈடுபட்டார்.
பிறகு காவேரிக் கரையிலுள்ள பல ஷேத்ரங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வரும் போது
அவருக்குத் தீராத வயிற்று வலி வந்து மிகவும் சிரமப்பட்டார்

4.இப்படியாகத் திருவையாறு வந்தடைந்தார் . அவ் வூரின் தெற்கே உள்ள நடுக் காவேரி எனும் கிராமத்தை அனடந்த போது,
அவரின் வயிற்று வலி மிக அதிகமாகி அங்குள்ள வினாயகர் கோயிலில் இரவு படுத்துறங்கினார்.
அவர் கனவில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தோன்றி “நீ காலையில் விழித்தெழும் போது முதலில் எந்த
மிருகத்தைப் பார்க்கிறாயோ ,அதைத் தொடர்ந்து செல்,உன் வயிற்று வலி நீங்கும்”என்று சொல்லி அருளினார்.

5.அது போலவே மறுநாள் காலையில் கண்விழித்த போது, ஓரு வெள்ளைப் பன்றியைக் கண்ணுற்றார்.
காலையில் கண் விழிக்கும் போது பன்றியைப் பார்ப்பது அப சகுனம் என்று மனத்தில் தோன்றினாலும்
ஸ்ரீகிருஷ்ணனின் ஆக்ஜ்ஜையை சிரமேற் கொண்டு அப் பன்றியைப் பின் பற்றிச் சென்றார்,
சுமார் 4 கி.மீ தொலைவு வரை அதனைத் தொடர்ந்து சென்றபின் மிகவும் களைப்புற்றார்.

6.அத் தருணம் ,அப் பன்றி ,அருகாமையில் உள்ள ஒரு கோயிலினுள் சென்று மனறந்தது.
அச் சமயம் ஆகாச வாணியின் குரலைக் கேட்கலுற்றார்.
”என்னைத் தேடாதே .உன்னன இங்கு வர வழைக்கவே நான் இவ்வாறு செய்தேன்”எனற குரலொலி கேட்டது.
அதைக் கேட்ட அவர் மெய் சிலிர்த்து ,ஆனந்த பரவசம் அனடந்தார்.
அந்த ஷணமே அவருனடய தீராத வயிற்று வலியும் மனறந்தது,
பூபதி ராஜ புரம் என்ற பெயர் பெற்ற அக் கிராமம், அன்று முதல் வராஹ புரி என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது.
வராஹ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்குப் பன்றி என்று பொருள்,

7.ஸ்ரீ தீர்த்தர் அந்த இடத்தின் மஹிமையை உணர்ந்து கிராம ஜனங்களின் உதவியுடன் அந்த பூமியை அகழ்ந்து பார்த்ததில்
ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தேவியை அணைத்தவாறு உள்ள ஸ்வயம்பு ஸிலா மூர்த்தியைக் கண்டெடுத்து அந்த இடத்தில்
ஒரு கோயிலை , பக்தர்களின் சஹாயத்துடன் நிர்மாணித்து, பகவானைப் ப்ரதிஷ்டை செய்து, பூஜா வழிபாடுகள் தினமும் நடக்க ஏற்பாடுகள் செய்தார்,

8.அவர் தம் வாழ் நாள் முழுவதும் அந்த புண்ணிய வராஹ ஷேத்ரத்திலேயே தங்கி உலகப் புகழ் பெற்ற
ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற பக்தி சுனவ சொட்டும் பாடல்கள் நிரம்பிய காவ்யத்தை அருளிச் செய்தார்.
அவர் ஸங்கீதத்திலும்,நடன சாஸ்த்திரத்திலும் வல்லுநராக இருந்ததால் தன் இஷ்ட தேவதையான ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் உள்ளத்தின் ஒருமைப் பாட்டை வெளிப்படுத்து வதற்காக ஸங்கீதத்தையும் நாட்யத்தையும் தன் பாடல்களில் சேர்த்துள்ளார்.
இந்த காவ்யத்தின் தனிச் சிறப்பு என்னவென்றால்,
ஸ்ரீகிருஷ்ண ஸன்நிதியில் அவர் எழுதிய அத்தனைப் பாடல்களுக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீருக்மிணி தேவியுடன் நடமாடி தன் அங்கீகாரத்தை வழங்கினார் என்றும்
அவர்களின் சலங்னக ஒலியை மட்டும் ஸ்ரீநாராயண தீர்த்தர் கேட்டார் என்றும் சொல்லப் படுகிறது.
இங்கு, குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீநாராயண பட்டத் திரியின் ஸ்ரீநாராயணீயம் முழுவதற்கும் அங்கீகாரம் வழங்கியதை நினனவு கூறுவோம்.

9.வடமொழியில் தரங்கிணி என்ற சொல், அனலகளுடன் கூடிய ஆற்னற குறிப்பதாகும்.
ஸ்ரீகிருஷ்ணனுனடய லீலைகள் ஆகிற அனலகளை 12 தரங்க பிரிவுகளுடன் கொண்டுள்ளதால்
இந்நூலுக்கு ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற பெயர் ஏற்பட்டது.
இந்த நூலில் 303 -ஸ்லோகங்கள் 153-கீதங்கள் 31 -ஸூர்ணிகைகள் அடங்கியுள்ளன.

10.ஸ்ரீநாராயண தீர்த்தர் கடினமான சொற்களைத் தவிர்த்து லலிதமான சொற்களாலேயே தன்
கத்யங்களையும், பத்யங்களையும் சுலபமாக புரிந்து கொள்ளும் வனகயில் அனமத்துள்ளார்.
ஸ்லோகங்கனளயும் ஸூர்ணிகைகளையும் கீதங்களிடையே சந்தர்பத்துக்கேற்ப அழகுபட பொருத்தி யுள்ளார்.
ஸ்லோகங்கள் 17அழகிய பல விருத்தங்களிலும்,கீதங்கள் 34 மனம் கவரும் ராகங்களிலும்,
கேட்போரை நடனம் ஆட வைக்கும் 10 தாளங்களிலும் அனமக்கப் பட்டுள்ளன.

11.இந்த நூலில் ஸ்ரீமத் பாகவதம் தஸம ஸ்கந்தம் 1 முதல் 58 வரையுள்ள அத்யாயங்களில் கூறப்பட்ட, ஸ்ரீகிருஷ்ணனின் அவதாரம்,பால லீலைகள்,
கன்றுகளை மேய்த்தல் ,கோபீ வஸ்த்ராபஹரணம்,கோவர்த்தன கிரி உத்தாரணம்,ராஸக் கிரீடை , கம்ஸன் முதலிய துஷ்டர்களை அழித்தல்,
கடலின் நடுவே துவாரகையை நிர்மாணித்து அதனுள் ப்ரவேசித்தல் ஸ்ரீ பலராம விவாஹம்,ஸ்ரீகிருஷ்ண ருக்மிணி விவாஹத்தை வர்ணிப்பதோடு அஷ்ட மஹிஷிகளுடன் விவாஹமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

12.ஒவ்வொரு தரங்கத்திலும் இன்ன இன்ன லீலைகள் அபிநயிக்கப் பட்டுள்ளன,
இந்த இந்த பாத்திரங்கள் வருகின்றனர் என்று கூறி, ஸ்லோகம்,கீதம்,ஸூர்ணிகை – இவைகளால் அந்த அந்த லீலைகளை விளக்கி யுள்ளார்,
கிருஷ்ண லீலைகனள அபிநயம் செய்தல் என்ற முனறயைத் தழுவியே இந்த நூலானது படைக்கப் பட்டுள்ளது.
ஹரி கதா கால ஷேபம் செய்யும் பாகவதர்கள் கதையின் ஆரம்பத்தில்,
ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியின் தொடக்கத்தில் உள்ள “ஹிம கிரி தனய” பத்யத்தைப் பாடுகிறார்கள்
என்பது இதன் தனிப் பெருமையை விளக்குகிறது.

13.ஸ்ரீநாராயண தீர்த்தர், வேதார்த்தங்களில் விசாரம் செய்து நிர்ணயித்தவாறு,
ஜாதி ,குணம்,கிரியை , இவைகளற்றதும்,ஆனந்தம், பிரகாசம்,சத்து (எப்போதும்,எங்கும்,எல்லாமுமாக இருப்பது) ஆகிய லக்ஷணங்களைக் கொண்ட
பரம்பொருனள எப்போதும் உள்ளத்தில் இருத்தி ஆராதித்தவர் ஆயினும் அத்தகைய நிர்குணமான பரம்பொருனள அடைவதற்கு அவன்
ராம,கிருஷ்ண வடிவங்கனள உபாஸிக்க வேண்டும்.
இந்த ச குண வழிபாட்டை நாளடைவில் தனக்கு தானே நிர் குண பரப்ப்ரஹ்ம உபாஸனனயாக மாறும்.
உதாரணமாக ஜீவன் முக்தரான ஸ்ரீ சுகப்ப்ரஹ்மம் நிர்குண பரப்ப்ரஹ்ம உபாஸனனயில் தீ விரமாக ஈடுபட்டவராயினும்,
ராஜா பரீக்ஷீத்திற்கு பாகவேத்தை – ஸ்ரீ கிருஷ்ண லீலைகனள -உபதேஸித்தார்,
ஒவ்வொரு லீலையிலும் தன் உள்ளத்திலுள்ள பரப் ப்ரஹ்மத்தை நினனவு கூறுகிறார்.
ஸ்ரீ சுகரைப் போலவே ஸ்ரீநாராயண தீர்த்தரும் அப் பரப் ப்ரஹ்மத்தை நினனவு கூர்ந்தே
பரம் பொருளின் ச குண வடிவங்கனளத் துதித்து தன் பாடல்கள் மூலம் வழிபட்டுள்ளார்.
ஸ்ரீகிருஷ்ண லீலைகளை வர்ணிக்கும் போதே மற்ற தேவதைகளையும் துதிப்பது இதன் தனிச் சிறப்பு.

14–முதலாவது தரங்கத்தில் “ஜய ஜய ஸ்வாமின்” என்ற கீதத்தில்,கணபதியையும்,
”துர்கே துர்கதி ஹாரிணீ ” என்ற ஸ்லோகத்திலும் “ஜயஜய துர்கே ” என்ற கீதத்திலும் துர்கா தேவினயயும்,
2வது தரங்கத்தில் “மங்களானி தானோது மதுஸூதன ஸதா ” என்ற கீதத்தில் கங்காதரன்,தக்ஷிணா மூர்த்தி ,
துர்கா ,ஸரஸ்வதி ,கங்கா,சிவன், ஆகிய தேவதைகளையும் துதித்துள்ளார்.
6,7ம் ேரங்கங்களில் நர ஸிம்ஹனரயும்,துதித்துள்ளார்.
முதலாம் தரங்கத்தில் “ஸர்வ ஞான க்ரியா சக்திம்” என்ற ஸ்லோகம் 5ல், மஹா விஷ்ணுனவயும்,
3ம் கீதத்தில், வராஹ புரி வேங்கடேசப் பெருமானளயும் துதித்துள்ளார்.

15.ஸ்ரீ நாராயண தீர்த்தர் கிருஷ்ண லீலைகனள வர்ணிக்கும் போது ஸ்ரீ ஜயதேவனரப் பின்பற்றாமல்,
ஸ்ரீவேத வ்யாஸர், ஸ்ரீமத் பாகவேத்தில் ஸ்ரீகிருஷ்ண லீலைகனள வர்ணித்த முறையையே பின் பற்றி யிருக்கிறார்.
முதலில் ஸ்ரீகிருஷ்ண அவதார கட்டத்தில்”தம் அத்புதம் பாலகம் அம்புஷேணம் ”(ஸ்ரீ மத் பாகவதம் -10-3-9)கருத்தை
”கல்யாணம் விதநோது” என்று தொடங்கும் முதல் தரங்கம் ஸ்லோஹம் -.27 ல் “சங்கம் சக்ரம்,கதை ,தாமரைப்பூ கதை ,வில்,
பல இரத்தினங்கள் பதித்த கிரீடம்,மகர குண்டலம்,மஞ்சள் பட்டு, கழுத்தில் கௌஸ்துப மணி ,இவற்றுடன் கூடியவரும்,
யாதவ குலத்தின் தலைவனான வஸுதேவருடையவும், தேவகியினுடையவும், குழந்தையாகத் தோன்றியவருமான கிருஷ்ணன்
எல்லாவிதமான மங்களங்களையும் அளிக்கட்டும்” என்று கூறுகிறார்.
இதில் கிருஷ்ணனுடைய ஜனனத்தைப் பற்றி கூற ஆரம்பிக்கும் போதே கல்யாணம் என்று மங்களகரமாக ஆரம்பிக்கிறார்,
நாராயண பட்டத்திரி நாராயணீ யத்தில் கிருஷ்ணனுனடய ஜனனத்தைப் பற்றி கூற ஆரம்பிக்கும் போது “ஆனந்த ரூப பகவன்” (தஸகம் 38,)என்று ஆரம்பிப்பதை நினைவு கூறுவோம்.
மேலும் நாராயணீ யம் ஆரம்பிக்கும் போதும் “ஸாந்த்ரானந்த ” என்றும்
ஆனந்த ஸ்வரூபியான பரப்ரஹ்மத்தை வர்ணிப்பதும் குறிப்பிடத்தக்கது.

16.ஸ்வாயம்புவ மனுவின் காலத்தில் ஸூதபா என்ற ப்ரஜாபதி , ப்ருச்னி என்ற மனைவியுடன் நல்ல
பிள்ளையை அனடய 12000 தேவ ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார்,
விஷ்ணு அத் தவத்தின் பலனை யளிக்க அவர்கள் முன் தோன்றினார்,
அப்பொழுது அந்த தம்பதிகள் விஷ்ணுவைப் போன்ற புத்திரனையே வரமாக வேண்டினர்.
அதனால் விஷ்ணுவும், ப்ரச்னி கர்பன் என்ற பெயருடன் பிறந்தார்.
அந்த தம்பதிகள், அதிதி -கஸ்யபராகத் தோன்றிய போது, அவர்களுக்கு உபேந்திரன்(வாமனன்)
என்ற குழந்தையாகப் பிறந்தார்.
மூன்றாவது முனறயாக, அந்த தம்பதிகள் தேவகி-வஸூ தேவராகத் தோன்றிய போது அவர்கள் செய்த புண்யத்தினால் விஷ்ணுவே அவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ண ராக அவேரித்தார். (பாக.ஸ்க.10-அத்யா. 3-ஸ்லோ . 32-45).
மேலே குறிப்பிட்ட விஷயத்தையே “தத் ப்ராக்தனை : கர்மபி: என்ற சொற் தொடரால் குறிப்பிட்டுள்ளார் (முதல் தரங்கம் ஸ்லோ .28)

17.ஸ்ரீ பாகவதத்தில் வியாசர் கிருஷ்ணர்,ராமர்,ந்ருஸிம்ஹ அவதாரங்கனளக் குறிப்பிடும் போது ஸ்ரீமன்
நாராயணன் எல்லை யற்ற கருணையினாலேயே அவதாரங்களை எடுத்தார் என்று வலியுறுத்த
ஒவ்வொரு அவதாரத்தினைக் கூறும் போதும் “அத்புத ” என்ற அடை மொழியைச் சேர்த்து இருக்கிறார்.
இவ்விஷயத்தையே ஸ்ரீ தீர்த்தர் “மங்களாலய மாமவ தேவ என்று தொடங்கும்” முதல் தரங்கம் கீதம்10-ல்
“அதி கருண வித்ருத அத்புத ரூபா” என்ற சொற் தொடரால் விளக்கியுள்ளார்.
இதையே ஸ்ரீ ஜயதேவர் முதல் அஷ்டபதியில் ஓவ்வொரு அவதாரத்தைப் பற்றி சொல்லும் போதும்
“கேஶவா த்ருத ” -கேஶவன் தரித்த -என்று கூறி அந்த அந்த அவதாரத்தை வர்ணிப்பதன்முலம் ஸ்ரீ கிருஷ்ணன் பூர்ண பரமாத்மா
என்று எடுத்துக் காட்டுகிறார்.
இவ்வாறே ஸ்ரீ தீர்த்தரும் தன் நூல் முழுவதிலும் ஸ்லோகத்திலும் சூர்ணிகைகளிலும் கீதத்திலும்
ஸ்ரீகிருஷ்ணன் பிறப்பு இறப்பு அற்றவன்,
எங்கும் நினறந்திருப்பவன் ,ப்ரஹ்மாண்டங்களைத் தாங்கி நிற்பவன்,நிலையான ஆனந்த வடிவு உடையவன்,தன்
அடியார்களைக் காப்பாற்ற மாயையால் பல அவதாரங்களைச் செய்தவன்,
அஹம் ப்ரஹ்மாஸ்மி,தத்வமஸி, என்ற மஹா வாக்யங்களால் ஏற்படும் ஞானத்தால் உணரப் பட்டவன் என்ற கருத்தை
“ஸகல நிகமாந்த ஜனிதாந்த மதி விதிதம்” என்று கூறியுள்ளார் (தரங்கம் -3,கீதம்-34ல்7வது சரணம்).
ஸ்ரீமத் பாகவதமும் இதே கருத்தை , “பெரிய நீர் தேக்கத்திலிருந்து எப்படி சிறிய கால் வாய்கள் ஆயிரம் தோன்று கின்றதோ ,
அது போலே மத்ஸ்யம் முதல் கல்கி அவதாரங்கள் அனைத்தும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடமிருந்து தோன்றியவைகளே .
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பரிபூர்ண தத்வம்–. மற்ற அவதாரங்கள் அவருடைய அம்ஸங்களே .” என்று கூறுகின்றது.(பாகவேம் ஸ்க.1-அத்யா. 3-ஸ்லோ .26- 28)

18.ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிற்குத் தந்தையாகப் போகிறார் என்ற காரணத்தால் வஸூதேவர்
பிறப்பின்போதே மங்கள வாத்யங்களை தேவர்கள் முழக்கினர் என்ற காரணத்தால் வஸூதேவருக்கு
“ஆனகதுந்துபி” என்ற பெயர் ஏற்பட்டது, (பாகவேம் ஸ்க.9-அத்யா. 24-ஸ்லோ . 29&30).
இதையே ஸ்ரீ தீர்த்தர் “அ லௌகிக மிதம் ரூபமாலோக்யானக துந்துபி:” என்று குறிப்பிடுகிறார் (முதலாவது தரங்கம் ஸ்லோ .29).

19.”பங்க்தி ” எனப்படும் சந்தஸ் (விருத்தம்) ஒரடிக்கு ஐந்து எழுத்துள்ளதாகும். அவ்விதம் ஐந்து
பொருட்கள் அடங்கிய கூட்டங்கள் சேர்ந்தே இவ்வுலகம் “பாங்க்தம்” என்று அழைக்கப் படுகிறது.
இவை உலக பாங்க்தம்,தெய்வ பாங்க்தம்,பூத பாங்க்தம்,வாயு பாங்க்தம்,இந்திரிய பாங்க்தம்,தாது பாங்க்தம் என்று ஆறு வகைப்படும்
இவ்வித ஆறு பாங்க்தங்களும் சேர்ந்தே உள்ளிலும், வெளியிலுமுள்ள உலகமாகும்.
இதை , ப்ரஹ்மமாக உபாஸிப்பவன், பரம் பொருளாகவே ஆகின்றான் என்று தைத்திரீய உபநிஷத் சிக்ஷாவல்லி,7ம் அனுவாகத்தில்
”பாங்க்தம் வா இதகும் ஸர்வம், பாங்தேனைவ பாங்க்தக்
ஸ்ப்ருணோதேதி ஓம் இதிப் ப்ரஹ்மா ஓம் இதீ தகும் ஸர்வம்”எனபதின் கருத்தையே
ஸ்ரீ தீர்த்தர் 2வது தரங்கம் ஸ்லோ .44ல் “பாங்க்த கர்ம க்ரமேண வேத்யம்” எனக் கூறுகிறார்,

20.பகவத் கீதையிலுள்ள (அத்,4ஸ்லோ 8) “பரித்ராணாய ஸாதூனாம்……ஸம்பவாமி யுகே யுகே ”.என்று
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இவ்வுலகில் தீயவர்களை யழித்து அதர்மத்தை யகற்றி பக்தர்களை ரக்ஷிக்கவும்,தர்மத்தை தழைக்கச் செய்வதற்கு, நான் இஷ்டப்படி பிறப்பு எடுக்கிறேன் என்ற கூற்றை விளக்க,
ஸ்ரீ தீர்த்தர் 2வது தரங்கம்,சூர்ணிகை 15ல் “ஸ்வ பத அநுக்ரஹ சிகீர்ஷயா ஸ்வேச்சயா ப்ராப்த கோபால விக்ரஹ:” என்ற சொல் தொடனரப் ப்ரயோகப்படுத்தி யுள்ளார்,

21.2வது தரங்கம்,சூர்ணிகை -17ல், ஸ்ரீ தீர்த்தர்,”ஆருருஷுநிவாரூடயோகி” என்ற சொல் தொடரைப் ப்ரயோகப் படுத்தி யுள்ளார்.
எல்லாம் அறிந்த கண்ணன் உயரத்தில் உள்ள உரிகளில் வைக்கப் பட்டிருக்கும் தயிர்,பால்,வெண்ணைய் முதலியவைகளை எடுப்பதற்கு
வழி தெரியாத கோப குழந்தைகளுக்கு, உபாயங்கனளக் கற்றுக் கொடுத்தான் என்பது பொருள்
.”ஆருருஷுநிவாரூடயோகி”- நிஷ்காம கர்மாக்களினால் சித்த ஸுத்தி அடைந்தவன் ஆரூட யோகி.
அதைப் பெற விரும்புபவன் ”ஆருருக்ஷு யோகி. என்று ஸாஸ்த்திரங்கள் கூறுகின்றன.முன்னவர் பின்னவருக்கு வழி காட்டுபவர்
.”ஆருருணக்ஷார் முனேர் யோகம்” என்று தோடங்கும் பகவத் கீதை அத்.6,ஸ்லோ.3 லும் இக் கருத்தே கூறப்படுகிறது.

22. வராஹ புரி புண்ய ஷேத்ரத்தில் ஸ்ரீநாராயண தீர்த்தரால் ஆரம்பிக்கப் பட்டதும்,பக்தர்களால்
இன்று வரை பக்தி ஸ்ரத்தை யுடன் நடத்தப் பட்டு வரும் உரியடி தத்வத்தை விளக்குவது இந்த இடத்தில்
பொருத்தமாக இருக்கும் என தோன்றுகிறது,
மனிதன் தன்னுள்ளேயே இருக்கும் ப்ரஹ்மத்தை
உணர்ந்து,தானும் அதுவாகவே ஆகி பேர் ஆனந்தத்தை அனுபவிக்க அக்ஞானம்(அறியாமை ) தடையாக உள்ளது.
வாழ்கையில் பல்வேறு இடர்கள் மனிதனை அவன் லக்ஷியத்தை அடைய முடியாமல் குறுக்கிடுகின்றன
இவற்னற ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத ஸேவனம் .அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம்,ஸக்யம்,ஆத்ம நிவேதனம் ஆகிற ஒன்பது வகைப்பட்ட
பக்தியில் ஈடுபடு வதால் ஏற்படும் ஞானத்தால், இடர்களைத் தகர்த்து, பகவத் அநு க்ரஹத்தாலும், ஞானிகளின் துணை கொண்டும்,
ப்ரஹ்மத்துடன் இரண்டறக் கலந்து, ப்ரஹ்மானந்தம் அடைவதையே விளக்குவது போல், உரியடி உத்ஸவம் அமைந்துள்ளது

23.மூங்கில் பெட்டியால் பின்னப்பட்ட உரியடிப் பெட்டியும் வழுக்கு மரத்தில் பூசப்பட்டிருக்கும் பசை முதலியவையும் அக்ஞானமாகும்,
பலவித மான இடையூறுகளுக்கிடையில் தடிகளால் உரியை அடித்தும்,கைளால் பிடித்து பெட்டியை உடைப்பதும்,
வழுக்கு மரத்தின் மீது பூசப்பட்ட அக்ஞானமாகிற பாச பந்தங்கனளக் கனளந்தும் படிப்படியாக மேலே ஏறுவதும்,
ஸ்ரவணம் முதலிய ஸாதனங்களால் உண்டாகிற அறிவாகும்.
வழுக்கு மரத்தின் அடியில் ஸ்திரமாக நின்று மேலே ஏறிச் செல்பவர்களுக்கு உதவுபவர்கள் ஆரூடயோகி க்கும், மேலே ஏறிச் செல்பவர்கள் ஆருருக்ஷுவிற்கும் ஸமமானவர்களே ,
இத் தத்துவமே உரியடித் தத்துவம்.– உரியிலும்,வழுக்கு மரத்தின் மேலும் தொங்கும் ப்ரஸாதத்தை பகவத் ப்ரஸாதமாக ஏற்று,பக்தர்கள் பகிர்ந்து கொள்வது, பகவத் அனுக்ரஹத்தினாலேயே , பர ப்ரஹ்ம ஞானம் கிட்டி பூர்ண ஆனந்தம் கிட்டும் என்பதைக் காட்டுகிறது.

24. 2வது தரங்கம்,சூர்ணிகை -17ல் ஸ்ரீ தீர்த்தர் “முக்ய ப்ராண இவ வாகாதீன்” என்ற சொல் தொடரை உபயோகித்து
ஸ்ரீகிருஷ்ணனே ப்ராணனுக்கு இணையாகவும் கோபர்கனள வாக்கு முதலிய புலன்களுக்கு இணையாகவும் உருவகப்படுத்தி ,
வாக்கு முதலிய புலன்கனளக் காட்டிலும் ப்ராணனே சிறந்தது என்று விளக்குகிறார்.
ப்ராணனே ஐம்புலன்களிலும் சிறந்தது என்ற விஷயமானது, ப்ரச்ந உபநிஷத் 2வது ப்ரசனம் 4வது வாக்யத்திலும்,
சாந்தோக்ய உபநிஷத்5வது அத்யாயம் 1வது கண்டத்திலும், ப்ரஹதாரண்ய உபநிஷத் 6வது அத்யாயம் 1வது கண்டத்திலும் கூறப்படுள்ளது.
வேத ஸாஸ்த்திரங்களையும்,வேதாந்தங்களையும் நன்கு கற்றறிந்த ஸ்ரீ தீர்த்தர்,
பாமர மக்களுக்கும் எளிதாக புரியக் கூடிய வனகயில் ஸகல வேதாந்த ஸாரங்களைத் தன் நூலில் இடை இடையே நன் மணிகளாகக் கோர்த்திருக்கிறார்.

25.ஸ்ரீ தீர்த்தர்,”பாஹி பாஹி ஜகன் மோஹன கிருஷ்ணா பரமானந்த ஸ்ரீ கிருஷ்ணா ” (4வது தரங்கம்- கீதம்
35) என்று குழந்தை ஸ்ரீகிருஷ்ணனின் அழகு உலகம் அனைத்தையும் மயங்கவைக்கும் அழகு என்றும்
பரமானந்த வடிவுடையவன் என்றும் கூறுகிறார்.
சாதாரணமாக ஒரு குழந்தையின் கள்ளம் கபடற்ற சிரிப்பைப் பார்த்தாலே நமக்கு இனம் தெரியாத ஆனந்தம் கிட்டுகிறது.
ஏன் என்றால் அது பூர்வ ஸத்வ குணத்துடன் இருப்பதாலேயே . அதற்கு அன்ன ப்ராசனம் ஆகும் வரை இந்த பூர்ண ஸத்வ குணம் அதனிடம் நீடிக்கிறது.
அதற்குப் பின் அதற்கு ரஜோ தமோ , குணங்களின் கலப்பு வந்து விடுகிறது.ஸத்வ குண அளவும் குறைய ஆரம்பிக்கிறது.
அப்படியிருக்க ஸுத்த சத்வ குணமே உருவெடுத்து இருக்கும் குழந்தை ஸ்ரீகிருஷ்ணனைக் காணும் போது பரமானந்தமாக இல்லாமல் எப்படி இருக்க முடியும்.-அதையே “பரமானந்த ஸ்ரீ கிருஷ்ணா ” என்கிறார்,

26.மேலும் (4வது தரங்கம்- கீதம் 35) 3வது சரணத்தில் ஸுலபமாக மாந்தர்களால் அறிய முடியாத ,
உள்ளடங்கிய மஹிமை வாய்ந்தவர் எனபதை “கூடமஹிம ஸ்ரீ கிருஷ்ணா ” என்கிறார்.
நந்த கோகுலத்தில், குழந்தை ஸ்ரீ கிருஷ்ணன் செய்யாத சாஹசங்கள் இல்லை .
பூதனை வதம், சகடாஸுர வதம்,காளிங்க நர்தனம், கோவர்தனகிரி உத்தாரணம்,போன்ற வளர்ந்த மனிதனாலேயே முடியாத பல
அதிசயிக்கும் சாஹசங்களைச் செய்தாலும்,கோபர்கள் அவனுடைய பராக்கிரமத்தை அறியவில்னல,
ஒரு குளத்தில் இருக்கும் மீன்கள் தண்ணீரில் தெரியும் பூர்ண சந்திர ப்ரதி பிம்பத்தைக் கண்டு அதன் பெருமையை அறியாமல்,
அந்த சந்திரனையும் தன்னைப் போல் ஒரு மீன் என்று எண்ணுமாம்.
அது போல கோபர்களும் ஸ்ரீ கிருஷ்ணனை தங்கனளப் போல ஒரு சாதாரண இனடயன் என்றே எண்ணினார்கள்,என்று இதைப் பற்றி ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
இந்தப் பாடலை ஸ்ரீ ஜேஸு தாஸ் அவர்கள், தன்னுனடய இனிமையான குரலில்,அர்த்த பாவத்துடன் பாடும் போது மயங்காதவர்உண்டோ .கல்லும் கனரந்து உருகுமே .

27.அத்வைத வேதாந்த ஸித்தாந்தப்படி ஆத்ம ஸ்வரூபம் ஒன்றே ப்ரகாசமாக இருக்கும் பொருள்.
அந்த ஆத்ம ஸ்வரூபத்தை தவிர்த்த அனைத்துப் ப்ரபஞ்சமே , ப்ரகாசம் அற்ற ஜடப் பொருளாகும்.
எனவே ,ஆத்ம ஸ்வரூபத்திற்கு ஆவரணம்(மனறப்பு) தேவை யில்னல.
மாயையின் வசத்தில் கட்டுப்பட்டு கோபிகள் இருந்தாலும், அவர்கள் தன்னிடம் கொண்ட அத்யந்த ப்ரேமையால் கவரப்பட்டு அவர்களை
அனுக்ரஹிக்கும் பொருட்டு, ஸ்ரீகிருஷ்ணன் நடத்திய லீலையே கோபிகா வஸ்த்ராபஹரணம்.
வஸ்திரம், ஸ்தூல தேஹத்தை மறைக்கும் ஆவரணம்(திரை ).மாயை , சூக்ஷ்ம தேகத்தையும் காரண தேகத்தையும் மறைக்கும் ஆவரணம்.
அபஹரணம் என்றால் பரிப்பது,களையும்படி செய்வது என்று பொருள்.
காத்யாயணி வ்ரதம் மேற்கொண்ட கோபிகை களின் ஸ்தூல தேஹ ஆவரணம் இந்த லீலையால் நீங்குகிறது.
உண்மையான ஆத்ம ஸ்வரூபம் ஸ்ரீகிருஷ்ணனிடமும் கோபிகைகளிடமும் ஒன்றே .
கோபிகை களுக்கு ஸ்வயம் ப்ரகாச ஸ்வரூபமான தன்னிடம், மனம்,சித்தம்(சூக்ஷ்ம தேஹம்),
மாயை யாகிற ஆவரணம் களையப்பட்டு தன்னிடம் பூர்ணமாக லயிக்கப் பெற வேண்டும் என்று
வஸ்த்ராபஹரணம் என்ற வ்யாஜத்தால் உபதேசித்த போது கோபிகைகளுக்கு மூல அக்ஞான ஆவரணம் போக்கடிக்கப் பட்டது.
மேலும், “என்னிடம் உள்ளத்தை நினலயாக இருக்கச் செய்தவர்களுக்கு மறுபடி உடலை யடைந்து சம்ஸாரத்தில் உழலுவது என்பது கிடையாது
தீயில் நன்கு வறுக்கப்பட்ட பயிறு,உளுந்து,கோதுமை போன்ற வித்துக்கள் ஒரு பொழுதும் வயலில் விதைக்கப் பெற்று முனளத்த தில்லை .
ஆகவே , நீங்கள் பிறவி யற்றவர்கள் ஆனீர்கள்”-என்று கோபிகைகளிடம் ஸ்ரீகிருஷ்ணன் கூறினார்,(பாகவதம் ஸ்க.10அத்யா 22-ஸ்லோ . 26).
வஸ்த்ராபஹரண தத்துவத்தை , ஸ்ரீதீர்த்தர் 5வது தரங்கத்தில் “ஆவரணம் மம நஹி தே தாதும் பாவய கோப வதூ ஜன ப்ருந்த ” என்ற கீதம் 45ல்
கிருஷ்ண கோபிகள் ஸம்பாஷணையின் வாயிலாகத் தெளிவு படக் கூறியுள்ளார்.

ஸ்ரீ ரமணரின் அக்ஷர மணி மாலாவில் கூறப்பட்ட வரிகளை இங்கு நினனவு கூர்வோம்
“மானங்கொண்டு உறுபவர் மானத்தை யழித்து அபிமான இல்லாது ஒளிர் அருணா சலா”-(அருணாசலர்
ஒளி வடிவானவர்-அக்னி தத்வம் )

28.மேலும்,”கோபிகைகள் நான்கு பிரிவாக உள்ளனர்,
உபநிஷத்துக்கள்,தண்டகாவனத்திலுள்ள ரிஷிகள்,நித்ய ஸித்த லோகத்தைச் சேர்ந்தவர்கள், தேவ ஸ்த்ரீகள் ஆகியவர்களே
கோகுலத்தில் கோப ஸ்த்ரீகளாக இருப்பவர்கள். மானிடப் பிறவி உள்ளவர்கள் ஒருவரும் இல்லை “எனற ப்ரஹ்ம வைவர்த்த புராண வசனக் கருத்தை
ஸ்ரீதீர்த்தரும் 5வது தரங்கத்தில் ஸ்லோ .135 ல் “ச்ருதி சிரோ வாக் கோபிகா வல்லப:”என்று கோபிகைகள் வடிவம் எடுத்த
உபநிஷத் தேவதைகளுக்கு மிகப்ரியமானவராக விளங்குபவர் என்று ஸ்ரீகிருஷ்ணரை வரணித்துள்ளார் –

29.கங்கை , கோதாவரி , யமுனை ,காவேரி,முதலிய நதிகள் கடலில் கலந்தவுடன் பெயரையும், உருவத்தையும் இழந்து
ஒரே கடலின் வடிவத்தை அடைகின்றன,-அவ்வண்ணமே முக்தி பெற்றவர்கள்
ப்ரஹ்மத்துடன் இரண்டறக் கலந்து தம் சுயத்தன்மையை இழக்கிறார்கள்.-என்று முண்டகோபநிஷத்தில் கூறிய கருத்தை
ஸ்ரீதீர்த்தர் 6வது தரங்கத்தில் சூர்ணிகை 24 ல் இங்கு கிருஷ்ண ஸமுத்ரத்தில் கோபிகைகளான நதிகள் கலந்து விி்ட்டன என்று வர்ணிக்கிறார்.

30.கண்ணனின் புல்லாங்குழலிலிருந்து எழுந்த ஒலியானது வெளி விஷயங்களில் ஈடுபாடுனடய கோபிகைகளை
கண்ணனிடம் கொண்டு போய்ச் சேரத்தது, என்று 6வது தரங்கம் ஸ்லோ 142,143 ல் ஸ்ரீதீர்த்தர் கூறுகிறார்.,
இக் கருத்து பாகவேத்திலும் (ஸ்க.10அத்யா 29-ஸ்லோ . 3-8). காணப்படுவது குறிப்பிடத் தக்கது.
மோக்ஷத்தில் விருப்பம் உள்ளவர்கள் அறம்,பொருள், இன்பம் ஆகியவை களிலிருந்து முதலில் விடுபட வேண்டும் என்பது வேதாந்தங்கள் முடிவு.

31.ஸ்ரீதீர்த்தர் “ப்ருந்தாவன மதுனா மன்யே ஸகி ப்ரஹதாரண்யமஹம்” (6வது தரங்கம் கீதம் 52)
கண்ணனுடன் சேர்ந்து இருக்கும் ப்ருந்தாவனத்தை ,
“ப்ரஹதாரண்யகம்” என்ற உபநிஷத்தாகவே கருதுகின்றேன் என்றும்,
பிருந்தாவனம், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை உளமாற நேசிப்பவர்களுனடய, பல காலமாகத் தொடர்ந்து வரும்
அக்ஞானத்தை அடியோடு அழிக்கக் கூடியது என்றும்,
ப்ரஹதாரண்யகம் முமுக்ஷுக்கள் பலருக்கு ஜீவ பரமாத்ம ஐக்ய ஞானத்தை அளிப்பதன் மூலம்
அக்ஞானத்தை அறவே அழிக்க வல்லது என்பது போல் ,இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை களையும்
ஒரு தோழி மற்ற ஓரு தோழியிடம் விளக்குவது போல் ஸ்ரீதீர்த்தர் கூறுவது அவரது சிறந்த வேதாந்த ஞானத்தை பனற சாற்றுகிறது,

32. “நிமிஷமபி யுக ஸஹஸ்ர ஸம தயா நீயம் மயா தின மாஸாயம் -” (6வது தரங்கம் கீதம் 58, 2வது சரணம்) –
கண்ணனைப் பார்க்காத க்ஷணநேரம் ஆயிரம் யுகங்களுக்கு ஸமமாகும் என்று கோபிகள்
கூறுவதாக ஸ்ரீதீர்த்தர் ,அவர்களின் பிரிவாற்றாமையை விளக்கியுள்ளார். ,
பாகவதம் ஸ்க.10அத்யா. 31-ஸ்லோ . 15ல் கோபிகா கீத த்தில் “த்ருடிர் யுகாயதே த்வாம் அபஸ்யதாம்” என்ற வரியை இப்போது நினனவு கூர்வோம்.

33.மேலும் ஸ்ரீதீர்த்தர், ‘பூயோ பூயோ யாசேஞ்ஜலினா”-என்று தொடங்கும் மிக அருமையான கீதம் 57ல்(தரங்கம்6)
அரை நிமிஷம் கூட கிருஷ்ணனைப் பார்க்காதிருக்கும் இந்தா உடல் வெறுக்கத் தக்கதாகும்.என்றும்
“காந்தம் காந்தாரமபி தவ யோகே,……காந்தாரம் க்ருஹமபிது வியோகே கருண
தருணீ மயி தவ பவது” -எனறு கண்ணன் இருக்குமிடமானால் காடும் நாடு போன்று அழகுள்ளதாகும்,
கண்ணன் இல்லையேல் வீடானாலும் அது கஷ்டங்கள் நினறந்த காடாகும் என்று ஸ்வானுபவத்தை
கூறும் அழகு கிருஷ்ண பக்தர்களை மிகவும் கவருகிறது.
மேலும் புன்னாகவராளி ராகத்தில்
அர்த்த பாவத்துடன் உனடயாளூர் அனுபவித்துப் பாடும் போது, அதைக் கேட்போர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.

ராஸக்ரீனட
34.7வது தரங்கத்தில்,கோபிகைகள் ஸம்ஸாரத்தில் வெறுப்பு ஏற்பட்டு அதனிடம் இருந்து விடுதலை அடையவே
ஸ்ரீ கிருஷ்ணனிடம் புகலிடம் அனடந்தோம்,.எனக் கூறிய பின் ராஸ க்ரீனட விவரிக்கப் படுகிறது.
ஆயர்பாடியிலுள்ள மங்கையர் அநேக ஆயிரம் பிறவிகளில் செய்த தவத்தால் கோப ஸ்த்ரீ என்ற
இந்தப் பிறவியில் ஸச்சிதானந்த வடிவான ஸ்ரீ கிருஷ்ணனின் திவ்ய தர்ஸனம்
பெற்று பிறவியின் பயனை அனடந்தனர் என்று கூறுகிறார்.(7வது தரங்கம் ஸ்லோ .4) .

35.மேலும் 7வது தரங்கம், கீதம் 1 ல் “அத்வயம் கண்டிதம்” என்ற சரணத்திலிருந்து 20 வது சரணம் வரை
20 சரணங்கள் அடங்கிய கீதத்தால்-ஸாம வேதத்தைச் சார்ந்ததும் 16 பிரிவுகள் கொண்டதுமான
சாந்தோக்ய உபநிஷத்தில், உத்தாலக ருஷியால் தன் புதல்வனும் சீடனுமான, ச்வேதகேது என்ற முனிகுமாரனுக்கு,
உபதேஸிக்கப்பட்ட ஆத்ம தத்வ ஸாரத்தை ,ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ராஸ மண்டலத்தில் உள்ள கோபிகைகளுக்கு
கான ரூபமாக உபதேஸித்துள்ளதாக,ஸ்ரீதீர்த்தர் வர்ணித்துள்ளது அவரின் கவித்வத்தையும் உயர்ந்த ஆத்ம ஞானத்தையும் எடுத்துக்காட்டுகிறது,

36.மிகச்சிறந்த தத்வக்ஞானம் பெற்றவர்களுள் இணையற்றவள் என்று ஒரு கோபியைக் குறிப்பதற்காக
“ஹ்ருதய நிஹிதம் காந்தம் காசித் களிந்த ஸூதா தடே ” என்ற வரியில் காசித் என்ற பதப் ப்ரயோகம் செய்கிறார்.
கடோபநிஷத்தில், “மிகச் சிறந்த அறிவாளி ஆத்ம தத்வத்தைக் கண்டான்” என்று கூறுகையில்
“காசித்” பதம் ப்ரயோகிக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்தில் ஒருவனே ஆத்ம ஞானத்திற்காக முயற்சி செய்வான் .முயற்சிப்பவர்களுள் ஆயிரத்தில் ஒருவனே தத்துவத்தை அறிகின்றான் என்று
பகவத்கீதையிலும் “மனுஷ்யானாம் ஸஹஸ்ரேஷு……..கச்சின் மாம் வேத்தி தத்வத “(அத்.7 ஸ்லோ .3)-என்று கூறப்பட்டுள்ளது.
இங்கேயும், ஸ்ரீ கிருஷ்ந பரமாத்மா, காசித் என்ற பதப் ப்ரயோகம் செய்கிறார்.
கோபியர்கள் அத்தகைய கினடத்தற்கரிய ஆத்ம தத்வ ஞானத்தை ஸ்ரீகிருஷ்ணனுனடய அருகாமையில் இருந்த
காரணத்தாலேயே கை வரப் பெற்றனர் என்று விளக்கவே ஸ்ரீதீர்த்தர், காசித் என்ற பதப் ப்ரயோகம் செய்கிறார். (தரங்கம் 7 ஸ்லோ . 12).

37.“சத்யம் ஞானம் அனந்தம்– ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் ஸோஸ்நுதே
ஸர்வான் காமான் ஸஹ-“என்று தைத்ரிய உபநிஷத் ஆனந்த வல்லி கூறுகிறது,
ஹ்ருேயத்தில் இருக்கும் உபநிஷத் ஸாரச் சுருக்கமான” “புத்தியால் நான் ப்ரஹ்மமாகவே இருக்கிறேன்
என்று உணருபவன் பேர் ஆனந்தத்தை அடைகிறான்-பேர் ஆனந்தத்தில் முழ்கித் திளைத்த அந்த ஜீவன்
முக்தன், நானே அந்த பர ப்ரஹ்மம் என்று பாடுகிறான்” என்று தைத்ரீய உபநிஷத் ப்ருகுவல்லி
கூறுகையில் ‘ஹாவ் ஹாவ் ஹாவ்’ என்று ஆனந்தக்கூத்து ஆடுகிறான் என்றும் கூறுகிறது.
இக் கருத்தையே ஸ்ரீதீர்த்தர், தன்னையே ஒரு கோபிகையாகப் பாவித்து இந்த பரமானந்தத்தைத் தான் அனுபவித்து,
அதையே கோபியர்கள், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுடன் அனுபவித்தாக எழுதி யுள்ளார்.(தரங்கம் 7 ஸ்லோ . 12).

38.”நிரங்குச த்ருப்தித ”- என்ற சொல்லால் ஸ்ரீ கிருஷ்ந பரமாத்மாவும் நானும் ஒன்றே , வேறில்னல–அதாவது
பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே , வேறில்னல என்ற ஆத்ம ஞானத்தினால் ஏற்படும் பேர் ஆனந்தம் நிகரற்றது
என்ற மஹா வாக்யங்களின் அர்த்தத்தையே உணர்த்துகிறார் என்று சொல்லவும் வேண்டுமோ ?. (தரங்கம் 7 ஸ்லோ . 12).

39.கோபிகைகள் யமுனாநதியில் நீராடும் போது தங்களுக்கு கிருஷ்ணனைப் போலே அழகுள்ள
கணவனை அருள வேண்டும் என்று ப்ரார்த்தனை செய்தனர்.
கல்யாண சந்தர்பத்தில் ஓதும் வேத மந்திரங்கள் கூறுகின்றன-சோமோ கந்தர்வர்களே ,அக்னியே ,மற்ற தேவர்களே இந்தா விட்டு விலகிச் செல்லுங்கள்.
அவள் பூலோக சம்பிராதாயப்படி தன் கணவனின் மூலம் தாய்மை அனடய வேண்டியுள்ளது.-
இந்த மந்திரங்கள் அவளுக்கு அனுகூலமாக,சாதாரண உணர்ச்சி பூர்வமான அநுபவங்களிலிருந்து விடுவித்து,
அவளைத் தாய்மை எனும் உன்னதமான உயர்ந்த நிலையை அடையச் செய்ய ஹேதுவாக இருக்கிறது.

40. இந்த வேத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை ஸ்ரீமத் பாகவதத்தில் கோபியர்கள் நீராடப் போகு முன் அவர்கள்
மரத்தில் வைத்திருந்த வஸ்திரங்கனள அபகரித்த ஸ்ரீகிருஷ்ணனிடம் அவைகளைத் திருப்பிக்
கொடுக்குமாறு வேண்டிய அவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணன் செய்த உபதேஸமும், ஆகியவை அழகுற சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ராஸ லீலை , கோபிகாகீதம், யுகளகீதம் ஆகியவைகள் தொடர்ச்சியாக விவரிக்கப்பட்டு
அவை மூலம் கோபியர்கள் கண்ணன் பால் கொண்டிருந்த பரம ப்ரேமையையும் ,
அவர்களின் எண்ண ஓட்டங்களையும், அவர்கள் எது பொய் எது உண்னம என்று அறிந்து மனப் பக்குவம்
அடைந்து, பரமாத்மாவுடன் ஐக்யமனடந்து ஆனந்தத்தாய் அடைந்து, சிறந்த பேற்றை அடைவது
ஆகியவை அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன .
ஸ்ரீநாரத பக்தி ஸூத்ரத்தில் (19,55,57,88 ) பரம ப்ரேமையின்
லக்ஷணங்களும்,வெளிப் பாடுகளும் எத்தகையது விளக்கப்பட்டு இருப்பதையே , மேற்கண்ட ஸர்கங்கள்,
ஸ்ரீகிருஷ்ணர் கோபிகைகளுடன் நடத்திய லீலைகளின் வாயிலாக சித்தரிக்கின்றன.

41.சாதாரணமான மனித அனுபவங்களில், விழிப்பு நினலயில், மனத்தில் தோன்றும் பூரண நினறவு பெறாத எண்ணங்கள்
நினனவுகள் உருவெடுத்து,நம் உறக்க நினலயில் கனவுகளாக மாறுகிறது.
இதையே கவிதை நயத்துடன் பார்க்கும் போது நம் கனவுகளே விழிப்பு நினலயில் நினறவு பெற்ற நிகழ்வுகளாக மாறுகிறது.
இதைத்தான் .ஸ்ரீலீலா சுகர் தான் எழுதிய கிருஷ்ண கர்ணாம்ருதத்தில் (அங்கநாம் அங்கநாம் என ஆரம்பிக்கும் (2-வது ஆஸ்வாசம் ஸ்லோகம்- 35)
ராஸ லீலையை விவரிக்கும் போது,எப்படி ஒரு கனவு,விழிப்பு நினலயில் உண்மை நிகழ்வாக மாறுவதை கவி நயத்துடன் வர்ணிக்கிறார்.
இந்த நினலயில் நமது வலுப் பெற்ற ஏகாக்ர சிந்தனைகள்
பகவான் பால் இருந்தால் ,அவனருளால்,அவை நிறை வாகும் தன்மையை ராஸ க்ரீடா நிகழ்ச்சி மூலம் விவரிக்கிறார்.
இதில் கிருஷ்ணன் எப்படி தன்னை பல கிருஷ்ணன்களாக ஆக்கிக் கொண்டு கோபியர்களின் இடையே நடனம் புரிந்த நிகழ்ச்சியை அழகாக வர்ணித்துள்ளார்.
மேலும் கோபியர்கள் அனமத்த வட்டத்தின் நடுவிலும் நின்று புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு இருக்கிறான்.
அவர்களுக்கு மற்ற கோபியர்கள் மனறந்து, ஒவ்வொரு கோபியும் தான் ஒருவளே கண்ணனுடன் தனியாக
ஆடிக் கொண்டிருப்பதாகவே எண்ணி ஆனந்திக்கிறாள், அப்போது கனவும் நினனவும் ஒன்று இணைந்து,
அவர்களுக்கு தான் கனவுலகத்தில் தான் அனுபவித்த தனிப் பட்ட ஆனந்தம், நினனவு நினலயில்,ஒரு உண்மை நிகழ்வாகவே தோன்றுகிறது.
இந்த தன் உணர்வு இல்லாது ,தான்,தனது என்ற தளைகளையும் உதறித் தள்ளிவிட்டு அப்பரமாத்மாவிடம் அனன்ய பக்தி யுடன் சரணா கதி அடைவதையே ஒவ்வொரு பக்தனும்( ஜீவாத்மாவும்) விரும்புகிறான்.
இந்த விவரிக்க இயலாத , உன்னத ப்ரேம பக்தி பெருக்கு, நினைவுலகத்தையும்,கனவாக மாற்ற வல்லது என்பதை கிருஷ்ண கர்ணாம்ருதத்தில்
(விக்ரேது காமா எனத் தொடங்கும் ஸ்லோகம் 55-2வது ஆஸ்வாஸம்), லீலா சுகர் மற்ற ஓரு நிகழ்ச்சியால் வர்ணிக்கிறார்
தயிர் விற்கும் ஒரு கோபிகை ப்ருந்தா வனத்தி ல் “த யிர், தயிர்” என்று கூவிக் கொண்டு செல்லும் போது ,கிருஷ்ணனின் பாத கமலங்களில் மனத்தைச் செலுத்தி
அவனுனடய பால லீலைகளில் மனம் லயித்து, தன்னை மறந்த நிலையில், “தயிர் தயிர்” என்று கூவுவதை மறந்து
“கோவிந்தா மாதவா ,தாமோதரா “என்று தன் இனிய குரலில் கூவ ஆரம்பித்தாள்.
கனவு, நினனவுகளைத் தாண்டி,பக்திப் பரவசம் ஒருவரை எப்படி மதி மயங்கச் செய்கிறது என்பதை நன்கு உணர முடிகிறது.
தன் ஸ்வானுபவங்களை கவிகளா லேயே இப்படி நயம் பட வர்ணிக்கமுடியும்.

42.மேலும் பாகவத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கோபியர்களுடன் ராஸ க்ரீடையில் ஈடுபட்டபோது,
இவ்விதம் கோபியர்கனளக் கட்டிக் கொள்வது, கைகளால் தொடுவது, அன்பு ததும்பப் பார்பது,
அழகிய கம்பீரமான சிரிப்பு இவைகளினால் தன் நிழனலப் பார்த்து வினளயாடும் குழந்னதை போல் வினளயாடினார் என்று விவரிக்கப்பட்டுள்ளது.-
“ ரே மே ரமேஸோ வ்ரஜ ஸுந்தரீபி: யதார்பக: ஸ்வ ப்ரதி பிம்ப விப்ரம:”( பாகவதம் ஸ்க.10-அத்யா. 33-ஸ்லோ. 17)

43.நம்முனடய வேதங்கள், புராணங்களுக்கும் உபநிஷதங்களுக்கும் ஆதாரமாக உள்ளன.
புராணங்கள் காவ்யங்களும், கவிதைகளும் தோன்றுவதை ஊக்குவிக்கின்றன.
பலிபீடம் யக்ஞம்(அக்னி கார்யங்கள்) செய்வது எல்லாம் ப்ரக்ருதி ,புருஷன் என்ற இரண்டு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவையே .
நமது திருமணங்களில் தம்பதிகளின் நலன் குறித்து ஓதப்படும் வேத மந்திரங்கள் எல்லாம் தாய்மை
அடைவது,புத்திர உற்பத்தி என்ற புனிதமான நிகழ்வுகளுக்கு ஆசி வழங்குபவைகளாகவே இருக்கின்றன.
“ஆத்மாவை புத்ர நாமாஸி ப்ரஜாமனு ப்ரஜாயஸே ”-என்று விவாஹ சமயம் செய்யப்படும், சேஷ ஹோமத்தில் சொல்லப்படும் மந்திரங்கள்,
கணவன்-மனைவி, தங்களுடைய குழந்தைகளிடத்தில் மறுபிறப்பு அனடகிறார்கள் என்ற கருத்தை
ப்ரதான ஹோமத்தில்,வடு ஹோமம் செய்யப்படும்போது கீழ் கண்டவாறு மந்திரங்கள் ஓதப்படுகின்றன.
”இந்திரனே ! இந்த வதுவிற்கு பத்து பிள்ளைகள் பிறக்கும்படி அருள் செய்.கணவனை பதினோராவது புத்திரனாகப் பாவித்து அன்பை வழங்கட்டும்”
என்று ப்ரார்திக்கப்படுகிறது.
வேத மந்திரங்களால் சுத்தி கரிக்கப்பட்ட மனத்துடன் இணையும் தம்பதிகள் பெறுவது ப்ரஹ்மானந்தத்தின் சிறு ப்ரதி பலிப்பே .
இல்லற வாழ்க்கையில் தேடிச் செல்லும் மற்ற விஷயங்களால் ஏற்படும் சுகங்கள் நினலயற்றதே .
நம்மில் அந்தர்யாமியாய் இருக்கும் சுத்த ஸத்வமான பரமாத்வ ஸ்வரூபத்தை உள்நோக்கி மனனம், முதலிய ஒன்பது ஸாதனங்களால் செலுத்தும் போது
ஏற்படும் ஆனந்தம், ஸாமீப்யம்,ஸாரூப்யம்,ஸாயுஜ்யம் என்ற நான்கு நிலைகளில் அடையப்படுகிறது..
கோபிகைகள் ப்ருந்தா வனத்தில் (ஸாலோகம்) ஸ்ரீ கிருஷ்ணன் ஸமீபத்தில் (ஸாமீப்யம்) அவனுனடய ரூப,லாவண்யத்தில் ஈடுபட்டு(ஸாரூப்யம்),
ராஸ க்ரீனடயில் மனம் லயம் அனடந்து(ஸாயுஜ்யம்) ஏற்பட்ட பரம ஆனந்தமே இவை ..
வெளி நோக்கிச் செல்லும் எண்ணங்களுக்கும்,வாஸனைகளால் நினைவுகளுக்கும் அப்பாற்பட்டவை ,
இந்த அனுபவம்.ஸ்ரீநாரதரின் பக்தி ஸூத்ரம் 21ல்-எவ்விதம் கோகுலத்துக் கோபிகைகளுக்கு பக்தி இருந்ததோ
அப்படி பக்தி செய்ய வேண்டும் என்று பக்திக்கு உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது.
வேத வ்யாஸரும்,இந்த பாகவத ஸர்கத்தை சுத்த மனதுடன் பாராயணம் செய்பவர்களும்,கேட்பவர்களும் விகாரமான எண்ணங்கள், துர்வாஸனை நீங்கப்
பெற்றவர்களாக, சுத்த மநோ பாவத்தை அடைகிறார்கள் என்று பல ஸ்ருதியில் சொல்வதே இதன் மேன்மைக்கு தக்க சான்றாகும். (பாகவத ம் ஸ்க.10-அத்யா. 33-ஸ்லோ.40)

44. ராஸ க்ரீடா வர்ணனையை விவரிக்கும் போது, ராஜா பரீக்ஷித், கேள்வியாகக் கேட்பது போலும் ஸ்ரீசுகர் பதிலளிப்பது போலவும்
நமக்கு ஏற்படும் சம்சயங்கனள போக்கும் நோக்கத்துடன் ,பாகவேத்தில் கூறப்படுகிறது,
கோபியர்களின் உள்ளத்திலும் மற்றும் எல்லாப் பிராணிகளின் உள்ளத்திலும் எந்த பகவான் புத்தி சாக்ஷியாக உள்ளாரோ
அந்த பகவானே பூலோகத்திலுள்ள அனைவருக்கும் அனுக்ரஹம் செய்யவே மானிட சரீரத்தை எடுத்து பல லீலைகளைப் புரிகிறார்.
அந்த லீலைகளை சிரத்தை யுடன் கேட்ட மாத்திரத்தி லேயே மனிதன் அப் பரமாத்மாவிடம் உறுதியான பக்தி நிறைந்த வனாகிறான்.
அவன் மனத்தை வருத்தும் காமம் தன்னைப்போல் ஒழிந்து விடுகிறது என்றும் கூறுகிறார். ”( பாகவதம் ஸ்க.10- அத்யா. 33-ஸ்லோ . 27-40)

அங்கப்ரேக்ஷிேம்
45. வரஹூர் உரியடி உத்ஸவம் அன்று இரவு கடுங்காலிலிருந்து பகவான் ஸகல அலங்காரத்துடன்,தன்
மனைவி மார்களுடன் ஊர் கோலமாய் பவனி வருகிறார்,
அவருக்குப் பின் பக்தர்கள் நீராடி,ஈரமான
உடைகளுடன் பெருமாளின் திருவருள் வேண்டி, தரையில் படுத்துப் புரண்டு,அங்க ப்ரதக்ஷிணம் செய்கிறார்கள்.
அப்போது கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று உரக்க கூறிக் கொண்டு பக்தியுடன் மஞசள் பூசிய தேங்காயை கூப்பிய கைகளில் னவத்துக் கொண்டு
ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளை தொடர்ந்து பின் செல்கின்றனர் என்று ஸ்ரீ கிருஷ்ண சிக்யோத்ஸவ ப்ரபந்தம் கூறகிறது.
இந்த வழிபாட்டை ஸ்ரீதீர்த்தரே ஆரம்பித்து னவத்தார் என்று கூறப்படுகிறது-

மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றால் பெருமை பெற்ற கோயில்கள் பல. இவற்றோடு அங்கு நடைபெறும் திருவிழாவாலும் பெருமையுறும் கோயில்களும் உண்டு.
 
அவ்வகையில் திருவிழாவினால் பெருமை கொள்ளும் ஊர், வரகூர். இங்கு நடைபெறும் உறியடி உற்சவம் மிகப் பிரசித்தம். இந்திய நாட்டின் எந்தக் கோயிலிலும் இதுபோன்ற உறியடி உற்சவத்தைக் காண முடியாது.
 
வரகூர், தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள சிறு கிராமம். வரகூர் மக்கள், இங்குள்ள வெங்கடேசப் பெருமாளைத் தான் தங்கள் குலதெய்வமாகக் கொண்டுள்ளனர். முடி இறக்குதல், காது குத்துதல் போன் வேண்டுதல்கள் எல்லாமே இந்தக் கோயில் தெய்வத்திற்குத்தான் என்று இன்றும் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
 
வேலை கிடைத்து வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் இவ்வூர் இளைஞர்கள், தங்கள் முதல் மாதச் சம்பளத்தை இக்கோயிலுக்கு அனுப்பி வைக்கும் வழக்கம் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
 
ஆண்டு தோறும் ஆவணியில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள், அதாவது காயத்ரி ஜபத்தன்று தொடங்கி, பத்து நாட்கள் இவ்விழா நடைபெறும். உறியடி நாளன்று காலையில் வெண்ணெய் நிரம்பிய தங்கக் குடத்தை அணைத்தபடியே வெள்ளிப் பல்லக்கில் நவநீத கிருஷ்ணனாக (நவநீதம் என்றால் வெண்ணெய் எனப்பொருள்) இக்கோயில் உற்சவமூர்த்தி வீதி உலா வருவார். பின்னால் சதுர்வேத பாராயணமும் பாகவதர்களின் நாம சங்கீர்த்தனமும் தொடரும். அன்று இரவு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உறியடி கிருஷ்ணர் அலங்காரத்துடன் புறப்படுவார்.
 
தலையில் முண்டாசும், நெற்றியில் நாமமுமாக, உடம்பில் போர்வை போர்த்திக் கொண்டு, காலில் சலங்கை கட்டிக் கொண்டு ஒரு கூட்டம் இடையர்கள் போல வேடமணிந்து பின்தொடரும். அடுத்து, பாகவதர்கள், நாராயண தீர்த்தர்  இயற்றிய கிருஷ்ண லீலா தரங்கிணி பாடல்களைப் பாடிக் கொண்டு வருவார்கள்.
 
இடையர் வேடம் அணிந்தவர்கள் உறியடி மரத்தை வந்தடைவார்கள். கோயில் வாயிலின் முன்புறத்தில் நீளமான மூன்று மூங்கில் மரங்களை ஒன்றாக இணைத்து, ஆழமாகத் தோண்டப்பட்ட ஒரு குழியில் நடுவார்கள். மரத்தின் நடுவே 10 அடி உயரத்தில் குறுக்கே ஒரு மூங்கிலைக் கட்டித் தொங்க விடுவார்கள். அதன் ஒரு முறையில் மிருதங்கம் போன்று அமைப்பில் உறி கட்டி, அதில் கண்ணனுக்கு விருப்பமான முறுக்கு, சீடை, தட்டை போன்ற தின்பண்டங்களை மண்பாண்டத்தில் வைத்துத் தொங்க விடுவார்கள். மற்றொரு நுனியில் நீண்ட கயிற்றைக் கட்டி வைத்திருப்பார்கள்.
 
போட்டியில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் உறியை எட்டிப் பிடிக்க முயலுகையில் ஊர் மக்கள் இந்தக் கயிற்றை அப்படியும் இப்படியும் ஏற்றி இறக்கி ஆட்டங் காட்டுவார்கள். (ஆட்டம் காட்டுவது என்பது இதுதானோ?) கையால் எட்டிப் பிடிக்க முடியாமல், இளைஞர்கள் தடிகொண்டு அடிப்பார்கள். அதற்கும் இடையூறு செய்வதுபோல் ஊர் மக்கள் இவர்கள் மீது தணீணரைப் பீய்ச்சும் குழலால் முகத்தில் தண்ணீரை அடித்து, பார்வையை மறைப்பார்கள். முடிவில் யாராவது ஒருவர் இதில் வெற்றி பெறுவார். பின் கைப்பற்றிய தின்பண்டங்களை அங்குள்ள பலரோடும் பங்கிட்டு உண்டு மகிழ்வர்.
 
உறியடியை அடுத்து, வழுக்குமரம் ஏறுதல். உயராமான ஒரு தேக்கு மரத்தை சில நாட்கள் தண்ணீரிலே போட்டு ஊற வைப்பார்கள். பின், புளியங்கொட்டைகளால் தயாரிக்கப்பட்ட ஒருவித பசையை இதன் மீது பூசி, காயப்போடுவார்கள். உறியடி தினத்தில் இம்மரத்தின் மீது கடுகு எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் தடவி உறியடி மரத்திற்குத் தெற்கில் நடுவார்கள். உறியடி முடிந்தவுடன் எல்லோரும் இங்கு கூடுவார்கள். ஒருவர் மீது ஒருவராகத் தோள் மீது ஏறி 10 அல்லது 12 அடி உயரம் வரை ஏறிவிடுவார்கள். பின்னர் வேட்டிகளை இம்மரத்தில் சுற்றிக் கட்டி அதன் மீது காலை வைத்து ஏற முயற்சிப்பார்கள். வேட்டியும் எண்ணெயில் தோய்ந்து வழுக்கும். இளைஞர்கள் இரண்டு மூன்று குழுக்களாகப் பிரிந்து வழுக்குமர உச்சியை அடைய முயலுவார்கள்.
 
எண்ணெய் வழுக்குவது போதாதென்று சுற்றியிருப்பவர்களும் இவர்கள் மீது தண்ணீர் அடித்து ஆரவாரம் செய்வார்கள். அப்படி இப்படி என்று 25 அடி உயரம் ஏறி, ஒரு வழியாக யாராவது ஒருவர் உச்சியை அடைந்து விடுவார். மேலே கட்டி வைத்துள்ள பண முடிப்பையும் தின்பண்டங்களையும் கைப்பற்றி வெற்றியுடன் இறங்குவார். தின்பண்டங்களை நாலாபுறமும் வீசி எல்லோரக்கும் கொடுப்பது வழக்கம். இதற்குள் பொழுது விடிந்த விடும்.
 
விடியலில் நித்திய வழிபாடுகள் முடிந்து அலங்காரம் ஆராதனை முடிந்து, உஞ்சவிருத்தி, அதன்பின் முத்துக் குத்தல், உலக்கை ஆடுதல் போன்ற சம்பிரதாயங்களுடன் ருக்மணி கல்யாணம் நடைபெறும்.
 
வரகூரில் 1868-ல் பிறந்து 1935 வரை வாழ்ந்த ஸ்ரீநாராயணகவி என்பவர் “கிருஷ்ண சிக்யோத்ஸவம்’ என்ற பெயரில் வடமொழியில் ஒரு காவியம் பாடியுள்ளார். சிக்யோத்ஸவம் என்றால் உறியடி உற்சவம் என்று பொருள். சுமதி, சுகுணன் என்ற இரண்டு கின்னரர்கள் பூலோகத்திற்கு வந்து வரகூரை அடைந்து, உறியடி உற்சவத்தைக் கண்டு மகிழ்ந்து, தமக்கிடையே உரையாடும் விதமாக இவ்விழாவைப் பற்றி இந்நூலில் வர்ணிக்கப்படுகிறது.
 
இடையர் வேடமணிவது, உறியடி அடிப்பது, வழுக்குமரம் சறுக்குவது போன்றவை எல்லாம் வெறும் கேளிக்கையல்ல. கிருஷ்ண அவதார லீலைகள். இதில் அமைந்துள்ள செய்திகள் தத்துவார்த்தமானவை. உறியடி நமது ஆசைகள்; வழுக்குமரச் சறுக்கல்கள் நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் சறுக்கல்கள்; தண்ணீர் அடித்து சறுக்க வைப்பது வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் சோதனைகள். இவையெல்லாம் நம்முடைய அஞ்ஞானங்கள். வைராக்கியத்தோடு முடிவில் உச்சியை அடைவது என்பதுதான் நாம் பெறும் ஞானம் அல்லது இறையனுபவம்.
 
உறியடி, ருக்மணி கல்யாணம், அனுமத் ஜெயந்தி என்ற மூன்றுநாள் விழா அமைப்பு முறையை உருவாக்கியவர் வரகூரில் வாழ்ந்து அங்கேயே முக்தியடைந்த நாராயண தீர்த்தரையே சாரும். அவரது கிருஷ்ண லீலா தரங்கிணியில் இவ்விழா பத்ததி (கொண்டாடும் முறை) தெளிவாக சித்திரிக்கப்பட்டுள்ளது. வரகூர் உறியடி விழாவை நேரில் கண்டு இன்புறும் அனுபவத்தை, வார்த்தைகளில் எளிதில் விவரித்துவிட முடியாது.

46.இன்னும் சற்று ஆழமாகப் பார்த்தால், அங்க ப்ரதக்ஷிண வழிபாட்டை ஆரம்பித்து வைத்தவர்-பாகவத உத்தமரான ஸ்ரீஅக்ரூரே ஆவார்.
எப்படி என்று பார்ப்போம்.-கோகுலத்திலிருந்து ஸ்ரீகிருஷ்ணரை மதுரைக்கு அழைத்து வர ஸ்ரீஅக்ரூரர்,
கம்ஸனின் உத்திரவின் பேரில் புறப்பட்டு ,மாலைப் பொழுதில் சபாழுேில் கோகுலத்தை அடைந்தார்.
அங்கு இந்திரன் முதலிய திக்பாலகர்களுனடய கிரீடங்களுடன் சேர்ந்ததும் தூய்மை வாய்ந்த திருவடிப் பொடிகளை யுடையதும்,
பூதேவிக்கு மகிழ்ச்சி யளிப்பதும் தாமரை மலர், யனவ,அங்குசம் முதலிய கோடுகளுடன் கூடியதுமான, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் திருவடிச் சுவடுகனளக் கண்ணுற்றார்.-கண்ட வுடனேயே ,எல்லை யற்ற ஆனந்தம் அடைந்து உணர்ச்சி வசப்பட்டார். -கண்களில் ஆனந்தக் கண்ணீர் நினறந்தது.
”இவைகள் என் தெய்வத்தின் திருவடிகள் பட்ட பொடிகள் அல்லவா” என்று எண்ணி ,தேரிலிருந்து துள்ளிக் குதித்து கண்ணனுனடய திருவடிகள் பட்ட மண்
பொடிகள் மீது மீண்டும் மீண்டும் புரண்டார் அங்கப்ரதக்ஷிணமும் செய்தார்..,(பாக.ஸ்க.10-அத்யா. 38- ஸ்லோ . 25,26)

47.இதி “தேஷு அசேஷ்டத ” என்று திருவடிப் பொடிகள் மீது விழுந்து புரண்டார் என்கிறது ஸ்ரீமத் பாகவதம்.
இக் கருத்தை ஸ்ரீதீர்த்தர் (தரங்கம் 7 ஸ்லோ . 14)”.”புத்யாதி தத்வ பரிசிந்ஹித கோபவேஷம்,
ஸித்தானுபாவிதம் அசேஷ ஜகந் நிதானம்”என்ற சொல் தொடரால் கோபிகைகள் ,அக்ரூரர் முதலியோர் ஸ்ரீ
கிருஷ்ண பரமாத்மாவின் திருவடிச் சுவடுகளை , பத்மம் முதலிய ரேகைகளால் கண்டு பரவசமனடந்த நிலையை ,விளக்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அந்தா அங்க ப்ரதக்ஷிண வழிபாட்னட வராஹ புரியில் ஆரம்பித்து வைத்து, தான் அனடந்த ஆனந்தத்தை மற்ற பக்தர்களும் அடைய வழி செய்துள்ளார் என்றே தோன்றுகிறது,

48.இருப்பினும்,இது கோகுலம் அல்லவே ஸ்ரீகிருஷ்ண னுனடய பாத தூளிகள், இவ் வராஹ புரி மண்ணில்
இருப்பது எப்படி. பொருந்தும் என்ற வினா எழும் போது,
ஸ்ரீ கிருஷ்ணர் இந்த ஊருக்கு ஸ்ரீதீர்த்தரை வரவழைக்க பன்றியின் ரூபம் தரித்ததும்,
ஸ்ரீதீர்த்தர் பாடிய ஒவ்வொரு பாடலுக்கும் தன் சலங்கை ஒலி கேட்கச் செய்ததும் ஸ்ரீ கிருஷ்ணர் வராஹ புரியில் நித்ய வாஸம் செய்கிறார் என்பதற்கு
ப்ரமாணமாகிறது.
அவரது பாத தூளிகள் இந்த மண்ணில் நினறந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
மேலும் ஸ்ரீதீர்த்தருக்கும்,ஸ்ரீ கிருஷ்ணருக்கும் வித்யாசமே இல்லை என்பது உறுதி .
ஸ்ரீதீர்த்தர் வராஹ புரியிலேயே பலகாலம் வாழ்ந்து ஸ்ரீ கிருஷ்ணரின் பால லீலா விநாேதங்களைப் பாடிப் பாடி
அவனையே ஸதா ஸர்வ காலம் நினைந்து, நினைந்து உருகி அவனுள்ளே ஐக்யமாகி,பரம அத் வைதியான அவரே ,
ப்ரஹ்மைவ ப்ரஹ்மவித் பவதி என்பதற்கு ஏற்ப ஸ்ரீ கிருஷ்ணராக பாவித்து ஸ்ரீ கிருஷ்ண ராகவே மாறிவிட்டார் என்பதில் ஒருவித ஐயமும் இல்னல.
இதை அவரே நிரூபணமும் செய்திருக்கிறார்.-தேவர்களின் ப்ரார்த்தனை யுடன் தொடங்கும்
“பாஹிமாம் பாஹிமாம் பரம தயாளோ ” எனத் தொடங்கும் 10வது தரங்கம் கீதம்40 ல் ஈடற்ற தன் பரம பக்தியால் இப்பாடலின்
ஒவ்வொரு சரணத்திலும் ஸ்ரீவிஜய கோபாலா என்ற சொல்லை 12 தடவைகள் ப்ரயோகித்து முத்திரை சரணத்தில்
நாராயண தீர்த்த விஜய கோபாலா என்று நாராயண தீர்த்தராகவே அவரிடமிருந்து வேறு படாமல் இருப்பவரே என்று கூறியிருப்பது
ஸ்ரீதீர்த்தர், தான் ஸ்ரீ கிருஷ்ண ராகவே மாறிவிட்டதை உணர முடிகிறது.
தரங்கப் பாடல்களில், தான் வேறு தரங்கம் வேறு என்றில்லாமல் ஸ்ரீகிருஷ்ணனே ப்ரத்யக்ஷமாகக் குடி கொண்டுள்ளான் என்பது ஸத்ய வாக்காகும்.
இதை உணர்ந்து, பாட்டு,பாடுபவர் என்ற வேறுபடாத
மநோ நிலையில் ,தரங்கப் பாடல்கனளப் பாடும் போது வராஹ புரியில் நித்ய வாசம் செய்யும்,ஸ்ரீகிருஷ்ணன் ப்ரஸன்னமாகிறார் என்பதில் ஐயமே இல்லை .
அப்படி ஸ்ரீதீர்த்தர் உருவில் ஸ்ரீ கிருஷ்ணர் ஐக்யமாகி இருக்கும் போது, அம் மஹானின் பாத தாமரைகள் பட்ட வராஹ புரியில்
ஸ்ரீகிருஷ்ணனின் பாத தூளிகள் என்றென்றும் விளங்கும் என்பது ப்ரமாணம்.

49.இந்த இடத்தில் பாகவதம் முதல் ஸ்கந்தம் .அத்யா.13 ஸ்லோகம்10 நினனவுக்கு வருகிறது.
இதில் தீர்த்த யாத்ரை சென்று விரும்பிய விதுரரை வரவேற்று யுதிஷ்டிர் பேசுவதாக வருகிறது.
“பவத் விதா பாகவதாஸ் தீர்த்த பூதா : ஸ்வயம் விபோ தீர்த்து குர்வந்தி தீர்த்தானி ஸ்வாந்தஸ் ஸ்தேன கதாப்ருதா
“ஹே ப்ரபோ தங்களைப் போன்ற பகவத் பக்தர்கள், புண்ய தீர்த்த ரர்களாக இருந்து கொண்டு, தங்களது மனத்தில் உனறயும்
ஸ்ரீவாஸுதேவனால், பாபிகளின் சேர்க்கையால் மாசு படிந்த புண்ய ஸ்தலங்கனளக் கூட, மாசு நீக்கி மறுபடியும் சுத்தமாக்கி
புண்ய ஸ்தலங்களாகச் செய்து விடுகின்றனர் – என்று விதுரரைப் புகழ்கிறார்.

50.ஸ்ரீநாராயண தீர்த்தர் தன் பெயரிலேயே தீர்த்தர் என்று கொண்டு, வாழ்ந்த புண்ய ஆத்மாவாகும்.
அவர் வராஹ புரியிலேயே பல காலங்கள் வாழ்ந்து வந்ததால், புண்ய ஷேத்திரமான வராஹ புரியின்
பவித்ரம் பன்மடங்கு பெருகியுள்ளது என்று சொல்லவும் வேண்டுமா?
அப்பேர்பட்ட இந்த மஹானின் பாத சுவடுகள் பட்ட வராஹ புரி பூமி, ஒப்புயர்வற்ற புண்ய பூமியே .
அவருடைய திருவடித் தாமரைகள் பட்ட மண் பொடிகள் நினறந்த பூமியில், பக்தர்கள் அங்க ப்ரத க்ஷிணம்
செய்ய தம் பாவங்கள் தொலைந்து நற்கதி அடைவார்கள் என்பதில் ஐயமே இல்லை .

51.இத்துணை பவித்திரமான வராஹ புரி மண்ணில் பூர்வ ஜன்ம புண்யத்தால் பிறந்தவர்கள் மிகவும் பாக்யசாலிகளே .
அதுவும் ஸ்ரீ கிருஷ்ண ஸ்வரூபமான,ஸ்ரீநாராயண தீர்த்தர் காலடி பட்ட மண்ணில் விழுந்து புரள மிகவும் பாக்யம் பெற்றவர்களே
”அஹோ பாக்யம் அஹோ பாக்யம் வராஹ புரி ஜனித மஹா ஜனானாம்”.

52.வேத ,புராணங்கள்,சாஸ்த்திரங்கள்,வேதாந்தம் இவைகளில் மிகத் தேர்ச்சி யுடையவராக இருந்தது மட்டுமல்லாது
நாட்டிய ஸங்கீதக் கலைகளிலும் தேர்ச்சி மிக்கவராக இருந்தார் என்பது அவருடைய நூலிலிருந்து விளங்குகிறது.
தரங்கம் 7 ஸ்லோகம் 16ல் ராஸ லீலைகளை விவரிக்கும் போது கோபிகைகள் ப்ருந்தா வனத்தில் வாத்யங்களிலிருந்தும் னககளிலிருந்தும் தோன்றுகின்ற
த்ருவ தாளம்,மட்ய தாளம்,ரூபகம், ஜம்பா,த்ரிபுட என்ற உயர்ந்த பல தாளங்களுடனும்,
அகற்றியும், குறுக்கியும்,நீட்டியும்,வனளத்தும்,காலடிகளை வைத்தல் போன்ற அழகிய பாத வின்யாஸங்களுடன் கூடிய நாட்டியத்தை
கோபிகைகள் மிக்க ஆனந்தத்துடன் அபிநயம் செய்து கொண்டு ஸ்ரீகிருஷ்ணனை வழிபட்டதை விவரிக்கிறார்.

53. பாகவதத்தில் (பாக.ஸ்க.10-அத்யா. 33-ஸ்லோ . 10) ஒரு கோபி ஸ்ரீகிருஷ்ணனுடன் ஸ்வர ஜாதிகளை
ஒன்றக்கொன்று கலக்காமல் பாடி, ஸ்ரீகிருஷ்ணனுடைய பாராட்டுக்களைப் பெற்றாள்.
மேலும் அதே ஸ்வர ஜாதியை த்ருவ தாளம் போட்டு கானம் செய்ய ஸ்ரீகிருஷ்ணனால் வெகுமதி அளிக்கப் பட்டாள், என்றும் கூறப்பட்டுள்ளது.
இக் காட்சியையே , ஸ்ரீதீர்த்தர்,மனக் கண்ணால் பார்த்து ஆனந்தம் அடைந்து, தரங்கம் 7 கீதம்6 லிருந்து 12 வரை
நாட்டை -துருவ தாளம்,மத்யமாவதி -மட்ய தாளம்,முகாரி-ரூபக தாளம்,வராளி-ஜம்பக தாளம், மோஹனம் திரிபுட தாளம்,
ஆனந்த பைரவி-அட தாளம்,காம்போஜி- ஏக தாளம்,ஆகிய பல ராகங்களிலும்,பல தாளங்களிலும் கோபிகள் பாடி ஆடினார்கள்.என்றும் கூறுகிறார்.
ராகம்- தாளத்திற்கு ஏற்ப பாடல்களின் மூலம் ராஸ லீனல மஹத்வத்தைத் தெரியப் படுத்துதில் அவருடைய ஸங்கீத -நடன புலமை வெளிப்படுகிறது..

54.அக்ரூரருடன், ஸ்ரீகிருஷ்ணர் மதுரா நகரம் செல்லும் போது, கோபிகைகள் ,பிறிவாற்றாமையால், வெட்கத்தை விட்டு,
கோவிந்தா மாதவா தாமோதரா என்று கூக்குரலிட்டு அழுதனர் என்று ஸ்ரீவ்யாசர் விவரித்துள்ளார்.
நமக்கு வேண்டியவர்கள் பயணம் கிளம்பும் போது அழுவது அமங்கலமாகக் கருதப் படுகிறது.
ஸ்ரீவியாசர், இதை உணர்ந்தே ,கோபிகைகள் ஸுஸ்வரத்துடன் அழதனர் என்று குறிப்பிட்டுள்ளார். (பாக.ஸ்க.10-அத்யா.39-ஸ்லோ . 31)
ஸ்ரீநாராயண தீர்த்தர்,இதை நன்கு உணர்ந்து ,சந்தேகத்திற்கு துளியும் இடமளிக்காமல், தரங்கம் 9 – “விஜய கோபால தே மங்களம்” – எனத் தொடங்கும்
கீதம்32ல் , கோபிகைகள் ,ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் கல்யாண குணங்கனளப் புகழ்ந்து கூறி, மதுராவில்
அவருக்கு வெற்றியும் ,எல்லா நலன்களும் கிட்டவேண்டும்,என்று மங்களம் பாடினார்கள்,என்று மங்களகரமாக வர்ணித்துள்ளார்,
இச் சமயம், ஸ்ரீராமபிரான் தந்தையின் வாக்னக நிறை வேற்ற நாடு துறந்து காட்டுக்குச் செல்லும்போது ,தாய் கௌஸல்யா தேவீ மகனின் பிரிவைத் தாங்க
முடியா விட்டாலும், அதைப் பொருட்படுத்தாமல்,ஸ்வஸ்தி வாக்யங்கனளக் கூறிக் காப்பிட்டுஆசி
வழங்கி மங்களகரமாக ஸ்ரீராமரை வழியனுப்பினாள் என்ற வால்மீகி ராமாயண ஸ்லோகங்கள்
நினனவிற்கு வருகிறது. (வால்மீ,ராமா-.அயோத்யாகாண்டம் 25 வது ஸர்கம்)

55.உத்தவர் கோகுலம் சென்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அருளிய தத்வ உபதேஸங்களை ஸ்ரீகிருஷ்ணனை
பிரிந்து மனம் வருந்திய கோபியர்களுக்கு அளித்து-அவர்களை மனச் சமாதானம் அனடயச் செய்ததும்
அவர்களின் ப்ரேம பக்தியைக் கண்டு வியந்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் தெரிவித்ததையும்,
ஸ்ரீதீர்த்தர் தரங்கம் 11 ஸ்லோ .94 முதல் 99,கீதம் 41-44 வரை விவரிக்கும் போது கோபியர்களின் வாயிலாகத் தான்
ஸ்ரீகிருஷ்ணரிடம் கொண்டிருக்கும் அத்யந்த ப்ரேம பக்தியை வெளிப்படுத்தி யுள்ளது மெய் சிலிர்க்க வைக்கிறது,
உத்தவர், கோபியர்களின் ப்ரேம பக்தியைக் கண்டு வியந்து “எந்த கோப ஸ்திரிகளினால் செய்யப்படும் ஸ்ரீகிருஷ்ண லீலா கானமானது,
மூவுலகத்தையும் புனிதமாக்குகிறதோ அந்த கோப ஸ்திரிகளின் பாத தூளியை நான் அடிக்கடி வணங்குகிறேன்” என்று கூறியது
ஸ்ரீதீர்த்தரின் ப்ரேம பக்திக்கும் பொருந்துகிறது அல்லவா!! (பாக.ஸ்க.10-அத்யா. 47ஸ்லோ . 63)

56.ஸ்ரீதீர்த்தர் ,”கோபாலமேவ தைவதம் ” (தரங்கம் 12 கீதம் 50) என்ற கீதத்தைப் பாடும் போதே திவ்யமான
தன் கண்களால் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டும், தன் முன்னே நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கும்
ஸ்ரீகிருஷ்ணனே கண் குளிரக் கண்டு பரவசமடைந்தார் என்றும்,மேலும் ஸ்ரீதீர்த்தர் மீது உள்ள அபார
கருணையினால், தரங்கிணி நூல் முடியும் வரை , ஸ்ரீகிருஷ்ணன் திவ்ய தரிஸனம் தந்து அவரை
ஆனந்தக் கடலில் முழுகச் செய்தார் என்றும், ஸ்ரீகிருஷ்ணனின் விருப்பப்படியே ஸ்ரீருக்மிணி
விவாஹத்துடன் தரங்கிணியை முடித்தார் என்று சிறந்த பாகவதோத்தமர்கள் கூறுகின்றனர்,
இந்தப் பாடலில்” மிக்க பாக்யசாலியான தனக்கு உண்மைப் பொருளைக் காணும் திவ்ய சக்ஷூஸை (தெய்வீகப்
பார்வையை ) ஸ்ரீகிருஷ்ணன் அளித்தான்“ என்று புகழ்கிறார்.
கோபாலன் என்ற தெய்வத்தினையே வழிபடுகிறேன், வேறு ஒருவரையும் தெய்வமாகக் கருத மாட்டேன், என்றும் கூறுகிறார்.

57.ஸ்ரீதீர்த்த ர், “காங்ஷே தவ ப்ரஸாதம்” (தரங்கம் 12 கீதம் 51) என்ற கீதத்தில் தான், பல ஷேத்திரங்களில்
தங்கியிருந்த போதிலும் , தீராது தன்னைத் தொடர்ந்து வாட்டி வந்த வயிற்று வலி, வராஹ புரி பெருமாள்
ஸந்நிதியில் தான் தீர்ந்தது என்ற விவரத்தை கடைசி சரணத்தில் “வர நாராயண தீர்த்த வாரித துஸ்தரா நர்தக “ என்று தெரிவிக்கிறார்.

58.தரங்கம்12 “ப்ரஹ்ம க்ரந்திம்” என்று தொடங்கும் கீதம்58ல் ஸ்ரீதீர்த்தர், லக்னாஷ்டகம்,ஸ்ரீகிருஷ்ண
ருக்மிணி விவாஹ நிகழ்ச்சிகளை -மண மகள் மண மகனுக்கு முத்துக்களால் அபிஷேகம்
செய்வது,ப்ரஹ்ம க்ரந்தி ,லாஜ ஹோமம்,ஸ்தாலீ பாகம்,நாக பலி,ஆகிய
கல்யாண ஸம்ப்ரதாயங்களை ஆந்திரர்களின் அனுஷ்டானப்படி விவரித்துள்ளார்.

59.“மஙகளாதீனி ,மங்கள மத்யானம்,மங்களான் தானி ஸாஸ்த்ராணி வீர்யவத் புருஷ கர்த்ரு காணி
ப்ரேந்தே ”-துவக்கம் ,நடுவு,முடிவு இவற்றில் மஙகளா ஸாஸனத்துடன் கூடிய நூல்கள் இவ்வுலகில்
நீண்ட காலம் புகழுடன் விளங்குகின்றன என்ற ஆன்றோர் வசனப்படி ஸ்ரீதீர்த்தர் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியில் தொடக்கத்தில்
“ஹிம கிரி தனயா பத்யம்” என்ற வினாயக ஸ்துதியுடன் ஆரம்பித்து
நடுவில் “கல்யாணம் வித னோது” என்ற பால கிருஷ்ண ஸ்துதியையும்
“தா ⦂குர்வந்த்வபிதானி” என்ற ஸ்ரீகிருஷ்ண ருக்மிணி விவாஹத்தில் பங்கு கொண்ட நல் முத்துக்களின் ஸ்துதியை அமைத்து,
முடிவில் ஜய மங்களம் என்ற மங்கள கீதத்துடனும் முடித்து அருளிச் செய்திருக்கிறார் என்பது இந்நூலின் தனிச் சிறப்பு.
ஆன்றோர் வாக்குப்படி இந்த தெய்வீக காவ்யம் சூர்ய சந்திரர்கள் இருக்கும் வரை புகழோடு இவ்வுலகில் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை .

60.ஸ்ரீதீர்த்தர் வேதங்கள்,உபநிஷத்துக்கள்,ஸாஸ்த்திரங்கள் ,புராணங்கள் இவைகளைப் ப்ரமாணமாகக்
கொண்டு ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியை அருளிச் செய்தார்.
மேலும் ஸ்ரீதீர்த்தர், ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியை ஸ்ரீமத் பாகவேத்தை அனுஸரித்தே தஸம ஸ்கந்த கிருஷ்ண லீலைகள் ,ஸ்ரீ ருக்மிணி விவாஹ பர்யந்தம் அருளியுள்ளார்.
ஸ்ரீமத் பாகவதத்தில், ராதை என்ற கதா பாத்திரத்தைப் பற்றி ஒன்றும் குறிப்பிடாமல், மொத்தமாக கோபிகைகள் என்றே ஸ்ரீவியாஸாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்,
இருப்பினும் ஸ்ரீ தீர்த்தர் 8வது தரங்கத்ேில், கிருஷ்ண ராதை சம்பாஷணை ,பிரிவாற்றல்,பிணக்கு ஆகியவைகளை விவரித்துள்ளார்.
ஏன் இந்த மாறுபாட்னடச் செய்தார் என்று ஆராயுங்கால் கீழ்க்கண்ட இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று நினனக்கத் தோன்றுகிறது.
1.ஸ்ரீதீர்த்தர் கீத கோவிந்தத்தை இயற்றிய ஸ்ரீஜயதேவரின் அவதாரம் என்று கூறப்படுகிறது.
2. வராஹ புரி பெருமாள் யாராலும் பிரிக்க முடியாதவாறு ஆதரவாகப் பிராட்டியை அணைத்தவாறும்,
பிராட்டியும், பெருமாளை விட்டுப் பிரியாமல் அன்பு பெருக்கெடுத்து ஆரத் தழுவியுள்ளார்.
இக் காட்சியை தினமும் பார்த்தாலும்.ஓவ்வொரு தரங்கிணிப் பாடலையும், சலங்கை ஒலி ஸப்திக்கச் செய்தும்
“கோபால மேவ தைவதம் ” பாடும் போது ஸ்ரீதீர்த்தருக்கு திவ்ய திருஷ்டியைக் கொடுத்து தன் தேவியுடன் காட்சி கொடுத்தும்,-
கிருஷ்ண ராதையே – ஜீவாத்மா பரமாத்ம ஐக்கிய ருபமாக- என்று அவர் மனக் கண் முன் தோன்றிய தாலும் அவர் ராதா கிருஷ்ணனைப் பற்றி எழுதி யிருக்கலாம் என்று நினனக்கத் தோன்றுகிறது.

61.பத்ம புராணத்தில் உள்ள ஸ்ரீமத் பாகவத மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளதை நாம் சிறிது பார்க்கலாம்
சுகருனடய வாயிலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீமத் பாகவதத்தின் கதாம்ருதத்தின் பலன் அளவிட முடியாது.
கங்கை ,கயா ,காசி,புஷ்கரம்,ப்ரயாகை அளிக்கும் பலன்கள் யானவயும் இந்த பாகவத பலன்களுக்குச் சமமாகாது.என்று கூறப்பட்டுள்ளது.(அத்.3.ஸ்லோ.32)
இந்தப் பெருமையும்,புகழும் ஸ்ரீமத்பாகவதத்தை அனுஸரித்தே ஸ்ரீதீர்த்தரின் வாயிலிருந்து வெளிப்பட்ட கதாம்ருதமான ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணிக்கும் பொருந்தும் என்று சொல்லவும் வேண்டுமோ ?

62.ஸ்ரீதீர்த்தர் 12 தரங்கம்- “காமதா காமினா மேஷா”- எனத் தொடங்கும் ஸ்லோ .161ல் இந்த ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற சிறந்த பக்தி நூலை
பக்தியுடன் பாடுகிறவர்களுக்கும், கேட்பவர்களுக்கும்,அவரவர்களின் விருப்பம் போல, அறம்,பொருள்,இன்பம்,வீடு இவற்றை இந்த நூல்
அளிக்கிறது என்று பல ஸ்ருதியும் கூறிவிட்டார்.

63.ஸ்ரீதீர்த்தரின் நாமாவை உச்சரிப்ப தாலேயே நம் பாவங்கள் தொலைந்து அக்ஞான இருள் நீங்கி
ஆத்ம ஞானத்தை அடைந்து பரமானந்தத்தை அனடயலாம் என்பதில் ஒரு ஐயமே இல்லை .
ஸ்ரீநாராயண தீர்த்தரின் திருநாமத்தை ஒருமுனற கூறுவது லக்ஷம் தடவைகள் ஓங்காரத்தை ஜபிப்பதால் கிட்டும்
புண்ணி யத்தைக்காட்டிலும் அதிக புண்ணியத்தை அளிப்பதாகும்.
அவரின் திருவுருவத்தை வழிபடுவது ப்ரஹ்மா, சிவன்.நாராயணன், இவர்கனள வழிபடுவதால் கிட்டும் பலனுக்கு ஸமமான பலனைத்தரும்
என்று குரு த்யான ஸ்லோகத்தில் சொல்லப்பட்டதில் எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாகிறது.
மேலும் அவ்வரிகள் அனுபவ பூர்வமாகவே வந்ததில் என்ன சந்தேகம்.அத்தகைய மஹான் ஸ்ரீநாராயண தீர்த்தரின் திருவடித் தாமரைகளை வணங்கி
நமக்கும் தூய்மையான உள்ளத்தை யளித்து,பரமாத்ம அநுபவம் ஏற்பட்டு ஆனந்த ஸ்வரூபியான பரம் பொருளுடன் ஐக்யமாகிற மோக்ஷத்தைப் பெறுவோமாக..

————–

பாகம்-3

ஒற்றுமையும் வேற்றுமையும்

1.ஸ்ரீஜயதேவரின் கீத கோவிந்தம் சிருங்கார ரஸம் இனழந்த பக்தி ரஸம் ததும்பும் இனிமையான பாடல்களைக் கொண்டது.
ஸ்ரீநாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி பக்தி ரஸத்துடன் ஆத்ம ஞானத்தை போதிக்கும் இனிமையான தெய்வீகப் பாடல்களைக் கொண்டது.
2.இந்த இரண்டு நூல்களுக்கும் பாட்டுடைத் தலைவன் ஸ்ரீ கிருஷ்ேண பரமாத்மாவே .ஸ்ரீமத் பாகவேத்திற்கும் பாட்டுடைத் தலைவன் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே .
3.ஸ்ரீஜயதேவரின் கீத கோவிந்தம் 12 ஸர்கங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது,
ஸ்ரீநாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியும் 12 தரங்கிணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது .
ஸ்ரீமத் பாகவதமும் 12 ஸ்கந்தங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது,

4.ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் த்வாேஸாக்ஷரி மந்திரம் 12 அக்ஷரங்களைக் கொண்டது. ஒவ்வொரு
ஸ்கந்தம் ஆரம்பிக்கும் போது வியாசர், இந்த மூல மந்திரத்தை ஸ்மரித்தே தொடங்குகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
துருவ சரித்திரத்தில் ஸ்ரீநாரத மஹரிஷி, துருவனுக்கு,இந்த மூல மந்திரத்தை உபதேஸிப்பதாக ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.
( பாக.ஸ்க.4அத்யா.8-ஸ்லோ .54).மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திர அக்ஷரங்களின் எண்ணிக்கை 12
ஆனதால்,.ஸ்ரீ கிருஷ்ண பக்தர்களான ஸ்ரீஜயதேவரும், ஸ்ரீநாராயண தீர்த்தரும் ஸ்ரீமத் பாகவதத்தை அனுசரித்து தம் தம் நூல்களை 12 பாகமாக
பிரித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

5.ஸ்ரீஜயதேவர், சிருங்கார ரஸம் ப்ரதானமாக உள்ள இந்த நூலை 18புராணங்களில் ஒன்றான
ப்ரஹ்ம வைவர்த்த புராணத்தில் ராதா கிருஷ்ண சரித்திரத்தின் அடிப்படையில் படைத்தருளினார்.
ஸ்ரீநாராயண தீர்த்தர் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிேணியை ,ஸ்லோகங்கள் .சூர்ணிகைகள் ,கீதங்கள் எல்லாவற்றையும் ஸ்ரீமத் பாகவேத்தை அனுசரித்து,
தஸம ஸ்கந்தம் ருக்மிணி விவாஹம் வரையில் படைத்தருளினார்.
ஸ்ரீமத்பாகவதத்தில் ராதை என்ற கதா பாத்திரத்தைப் பற்றி ஒன்றும் குறிப்பிடாமல் மொத்தமாக கோபிகைகள் என்றே ஸ்ரீவியாஸாசாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்,
இருப்பினும் ஸ்ரீதீர்த்தர் 8வது தரங்கத்தில் கிருஷ்ண ராதை சம்பாஷணை ,பிரிவாற்றல்,பிணக்கு ஆகியவை களை விவரித்துள்ளார்.
இதுஒரு சிறிய வேறுபாடு ஆகும்.எனினும் இந்நூலின் இப்பகுதி ,ஆத்ம ஞானத்தை போதிப்பதால் சிறந்து விளங்குகிறது.

6.மேலும் ஸ்ரீநாராயண தீர்த்தர் தத்வங்கள் அடங்கிய பாகவதம் ஏகாதஸ ஸ்கந்தம் பற்றி எழுதாமல்
விட்டு விட்டரே என ஏக்கப்பட வைக்காமல்
ஸ்ரீதீர்த்தர் வேதங்கள்,உபநிஷத்துக்கள்,ஸாஸ்த்திரங்கள்
இவைகளின் ஸாரத்தை ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி யிலேயே சந்தர்பத்துக்கு ஏற்றவாறு
புகுத்தி ,
தனக்கே உரித்தான எளிய நடையில், அருளிச் செய்தார் என்பது இந்நூலின் தனிச்சிறப்பு..

7.ஸ்ரீஜயதேவர், ஸ்ரீநாராயண தீர்த்தர் இருவருமே சங்கீதம்,நாட்டிய கலைகளில் பாண்டித்யம் பெற்று
இருந்ததனால்,
எல்லாப் பாடல்களையும் பல ராகங்களிலும், தாளங்களிலும், நடனமாடக் கூடியவகையில் அனமத்து மெருகு ஊட்டியுள்ளனர்.
ஸ்ரீநாராயண தீர்த்தர் ஒருபடி மேலே போய் நாட்டிய ஜதிகளையும் அனனவரும் வியக்கும் வண்ணம் னகயாண்டிருப்பது அவரின் புலமையை நன்கு பறை சாற்றுகிறது.

8.இவ் விரண்டு நூல்களுமே ,ஆத்ம ஞானம் பெற்று பரமாத்ம ஐக்கியத்தில் ஈடுபட்டு ப்ரஹமானந்தத்தில் திளைத்த
ஸ்ரீஜயதேவர்,ஸ்ரீநாராயண தீர்த்தர் ஆகிய ப்ரஹ்ம நிஷ்டர்களால் ஸ்வானுபவத்தில் எழுதப் பெற்றதால், அவர்களின் பாடல்களில் பக்தி ரஸம் சொட்டுகிறது.
எனவே இப்பாடல்களை நாம் பாடும் போதும், மற்றவர்கள் பாடிக் கேட்கும் போதும் மெய் மறந்து பரமானந்தத்தில் திளைத்து கண்ணீர் மல்கி பரவசமாகின்றோம்.
இப்படி ப்ரேம பக்தியில் முழ்கிய உறுதியான பக்தன் தனக்குப் பிரியமான பகவன் நாம கீர்த்தனைகளைப் பாடும் போது மனமுருகி உலக விவஹாரங்களை அறவே மறந்து பித்தன் போல உரக்கச் சிரிப்பான்,சில சமயம் அழுவான்,உறக்க கூச்சலிடுவான்,பாடுவான்,ஆடுவான்
என்று நவ யோகிகளில் ஒருவரான கவியோகி, விதேஹ ராஜாவிற்கு பக்தனின் லக்ஷணத்தை தெரிவிக்கிறார்( ஸ்ரீமத் பாகவேம் .ஸ்க.11அத்யா2ஸ்லோ 40).
இம்மாதிரி, ஸ்ரீஜயதேவர், ஸ்ரீநாராயண தீர்த்தர் எழுதிய பாடல்கள், மேலே கூறியவாறு ஸ்ரேஷ்ட பக்தர்களை உருவாக்குகிறது என்று சொன்னால்
மிகையாகாது.

9.இவ் விரண்டு நூல்களுமே பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் அங்கீகரிக்கப்பட்டவைகளே .
ஸ்ரீஜயதேவர் கீத கோவிந்தம் 10 ஸர்கம்,”வஸதி யதி கிஞ்சதபி “ என்ற19வது அஷ்டபதி எழுதிக் கொண்டிருக்கும் போது,7வது சரணத்தில்
ஸ்ரீ ஜகன்நாதரே ஸ்ரீஜயதேவர் ரூபத்தில் வந்து, .”ஸ்மர கரல கண்டனம் மம ஸிரஸி மண்டலம் தேஹி பத பல்லவமுதாரம்
ஜ்வலதி மயி தாருணோ மதன கத நாருணோ ஹரது தது பாஹித விகாரம் ப்ரியே சாருஸீல முஞ்ச மயி மாமை நிதானம்”, என்ற வரிகளை எழுதினார் என்று கூறுவர். இது ஒன்றே போதுமே கீத கோவிந்தம் ஒரு தெய்வீக காவ்யம் என்பதற்கு.

10.ஸ்ரீநாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியின் ஓவ்வொரு பாடனலயும் சலங்னக ஒலி ஸப்திக்கச் செய்தும்
“கோபால மேவ தைவதம் ” பாடும் போது ஸ்ரீதீர்த்தருக்கு திவ்ய திருஷ்டியைக் கொடுத்து திவ்ய தரிஸனம் கொடுத்தும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அங்கீ கரித்தார் என்பது ஒன்றே போதுமே இந் நூல் ஒரு தெய்வீக காவ்யம் என்பதற்கு.
மேலும் கிருஷ்ண ருக்மிணி விவாஹத்துடன் முடிக்கச் சொன்னதும்,ஸ்ரீகிருஷ்ணரே என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநாராயண பட்டத்திரி அருளிய ஸ்ரீநாராயணீயமும் தரங்கிணி யைப் போலவே பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் முழுவதும் அஙகீகரிக்கப்பட்ட நூலாகும்.

11.ஸ்ரீஜயதேவர் கீத கோவிந்தத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைக் குறித்தே எல்லாப் பாடல்கனளயும்
பாடியுள்ளார். மற்ற தெய்வங்கனளப் பற்றிப் பாடவில்னல.
ஸ்ரீகிருஷ்ண லீலைகளை வர்ணிக்கும் போதே  மற்ற தேவதைகளையும் துதிப்பது தரங்கத்தின் தனிச் சிறப்பு.
இந்த ச குண வழி பாடே நாளனடவில் தனக்குத் தானே நிர்குண பரப்ப்ரஹ்ம உபாஸனையாக மாறும்.
உதாரணமாக ஜீவன் முக்தரான ஸ்ரீசுகப் ப்ரஹ்மம் நிர்குண பரப் ப்ரஹ்ம உபாஸனையில் தீவிரமாக ஈடுபட்டவராயினும்,
ராஜா பரீக்ஷீத்திற்கு பாகவதத்தை – கிருஷ்ண லீலைகளை -உபதேஸித்தார்,ஒவ்வொரு லீலையிலும் தன்
உள்ளத்திலுள்ள பரப்ப்ரஹ்மத்தை நினனவு கூறுகிறார்.
ஸ்ரீ சுகரைப் போலவே ஸ்ரீநாராயண தீர்த்தரும் அப்
பரப் ப்ரஹ்மத்தை நினனவு கூர்ந்தே பரம் பொருளின் சகுண வடிவங்களைத் துதித்து தன் பாடல்கள் மூலம்வழிபட்டுள்ளார்.
ஸ்ரீ கிருஷ்ண லீலைகளை வர்ணிக்கும் போதே மற்ற தேவதைகளையும் துதிப்பது இதன் தனிச்சிறப்பு.

12.முதலாவது தரங்கத்தில் “ஜய ஜய ஸ்வாமின் “என்ற கீதத்தில்,கணபதியையும்,”
துர்கே துர்கதி ஹாரிணி ” என்ற ஸ்லோகத்திலும்“ஜய ஜய துர்கே ” என்ற கீதத்திலும் துர்கா தேவியையும்,
2வது தரங்கத்தில் “மங்களானி தனோது மதுஸூதன ஸூ தா “என்ற கீதத்தில் கங்காதரன் தக்ஷிணா மூர்த்தி ,
துர்கா ,ஸரஸ்வதி ,கங்கா,சிவன், ஆகிய தேவதைகளையும் துதித்துள்ளார்.
6,7ம் தரங்கங்களில் நரஸிம்ஹரையும் ,துதித்துள்ளார்.
முதலாம் தரங்கத்தில் “ஸர்வக்ஞானக்ரியா சக்திம்” என்ற ஸ்லோகம் 5ல் மஹா விஷ்ணுவையும்,
3ம் கீதத்தில் வராஹ புரி வேங்கடேசப் பெருமாளையும் துதித்துள்ளார்.

13.ஸ்ரீஜயதேவர்,கீத கோவிந்தத்தில் முதல் அஷ்டபதியில் பகவானின் பத்து அவதாரங்களை வர்ணித்துள்ளார்.
இதில் புத்த அவதாரத்னையும் சேர்த்து உள்ளார்.
மேலும் இந்த பத்து அவதாரங்களையும் ஸ்ரீ கிருஷ்ணன் தான் செய்தார்.என்று கூ றுகிறார்.
முதல் அஷ்டபதியில் ஓவ்வொரு அவதாரத்தைப் பற்றிச் சொல்லும் போதும் “கேசவா த்ருத ” -கேசவன் தரித்த -என்று கூறி அந்த
அந்த அவதாரத்தை வர்ணிப்பதன்முலம் ஸ்ரீ கிருஷ்ணன் பூர்ண பரமாத்மா என்று எடுத்துக் காட்டுகிறார்.
மேலும் “வேதா னுத்தரதே ” என்று தொடங்கும் ஸ்லோகம் 5 தெளிவாக வராக அவதாரம் எடுத்து வேதத்தை மீட்டவனான
ஸ்ரீ கிருஷ்ணன் பத்து அவதாரங்களை எடுத்தான் –அவனுக்கு நமஸ்காரம். -கிருஷ்ணாய துப்யம் நமஹ-.என்று கூறுகிறார்.

14.ஸ்ரீ தீர்த்தர் “அதி கருணா வித்ருதாத்புதரூபா” என்ற சொல் தொடரால் பகவானின் அவதாரங்களை விளக்கி யுள்ளார்
மேலும், தன் நூல் முழுவதிலும் ஸ்லோகத்திலும், சூர்ணிகைகளிலும் ,கீதத்திலும் ஸ்ரீகிருஷ்ணன் பிறப்பு,இறப்பு அற்றவன்,எங்கும் நிறைந்திருப்பவன்
,ப்ரஹ்மாண்டங்களைத் தாங்கி நிற்பவன்,நினலயான ஆனந்த வடிவு உடையவன் ,தன் அடியார்களைக் காப்பாற்ற மாயையால் பல அவதாரங்களைச் செய்தவன்,
அஹம் ப்ரஹ்மாஸ்மி,தத்வமஸி என்ற மஹா வாக்யங்களால் ஏற்படும் ஞானத்தால் உணரப்பட்டவன் என்ற கருத்தை
“ஸகல நிகமாந்த ஜனிதாந்த மதி விகிதம்” என்று கூறியுள்ளார்.
ஸ்ரீமத் பாகவதமும் இதே கருத்தை , “பெரிய நீர் தேக்கத்திலிருந்து எப்படி சிறிய
கால்வாய்கள் ஆயிரம் தோன்றுகின்றதோ , அது போல் மத்ஸ்யம் முதல் கல்கி அவதாரங்கள்
அனைத்தும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடமிருந்து தோன்றியவைகளே .
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பரிபூரண தத்வம். மற்ற அவதாரங்கள் அவருடைய அம்ஸங்களே .” என்று கூறுகின்றது.(பாகவதம் ஸ்க.1-அத்யா. 3-ஸ்லோ .26- 28)

15.ஸ்ரீ தீர்த்தர் தன் நூலின் துவக்கத்தில் முதல் தரங்கத்தில் “ராம கிருஷ்ண கோவிந்த ” எனத் தொடங்கும் கீதம் 6ல், ஸனகாதி யோகிகள்
“ராம கிருஷ்ண கோவிந்த ” என்று கூறிக் கொண்டு ஸ்ரீமந் நாராயணனுனடய ஸந்நிதிக்கு வந்தனர் என்றும்,
நூலின் முடிவிலும் தரங்கம் 12ல் தரு 8 ல் கிருஷ்ணனிடம், ருக்மிணிக்காக தூது சென்ற அறிவாளியான அந்தணர்
“கோவிந்த ராம,கோவிந்த ராம” என்று பகவானின் திரு நாமங்களைக் கூறிக் கொண்டு வருகிறார் என்று வர்ணித்து, கலியுகத்தில்
நாம ஸங்கீர்தனம் என்ற எளிதான வழியில் கடவுளை அனடய முடியும் என்பதால்,
மற்ற முன்று யுகங்களிலும் பிறந்தவர்கள் கலியில் பிறக்க வேண்டும், அதிலும் புண்ணிய நதிகளான காவேரி,
தாமிரபரணி ஓடும் திராவிட நாட்டில் பிறக்க வேண்டும் என்று பாகவதம்,ஸ்க-11 ,அத்யா.5 ஸ்லோ .38-
40ல் கூறப்பட்டதை நினனவு கூர்கிறார். ஆழ்வார்கள்,நாயன்மார்கள் இவர்களின் பாடல் பெற்ற
பல ஷேத்திரங்கள் உள்ள திராவிட நாட்டில்,காளிந்தி நதி பாயும் வராஹ புரி ,பூலோக வைகுண்டம் என்று பெயர் பெற்றதற்கு,இவையே சான்று.-

16.இந்த இரண்டு நூல்களுமே ஓப்பு உயர்வு அற்ற அமர காவியங்களாகும்.இரண்டும் தெய்வீக மணம் வீசும் உயர்ந்த காவியங்கள்,
இதில் எது சிறந்தது என்ற கேள்விக்கே இடமில்லை ஒருவனின் இரு கண்களில் எது சிறந்தது என்று கூற இயலாது. ஏன் எனில் இயல்பான பார்வைக்கு, மனிதனுக்கு இரு கண்களுமே முக்கியமானது.
அது போலே ஸ்ரீஜயதேவரின் கீத கோவிந்தமும், ஸ்ரீநாராயண தீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியும், பாகவத சமுதாயத்தின் இரண்டு கண்கனளப் போன்றவை
இவை இல்லாத பஜனை சம்பிரதாயமே இருக்க முடியாது.
ராதா கல்யாணம், திவ்ய நாமம்.தீப ப்ரதக்ஷிணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் இவை இரண்டும் முக்ய பங்கு வஹிக்கின்றன.
நாமும் இவ் விரண்டு கிருஷ்ண ஸாகரத்தில் முழ்கித் திளைத்து பரமானந்தம் பெற அந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்ம ஸ்வரூபியான
வராஹபுரி ஸ்ரீ தேவி பூமி தேவி ஸமேத ஸ்ரீ வேங்கடேசப் பெருமானளயும்,ஸ்ரீ ஜயதேவ கவியையும்,
ஸ்ரீநாராயண தீர்த்தரையும் வணங்கி வழிபடுவோமாக.

“நவநீத சோராய நந்தாதி கோப கோ ரக்ஷிணே கோபிகா வல்லபாய,
நாரத முனீந்த் ரனுத நாமதே யாயதே நாராயண ஆனந்த தீர்த்த குரவே ”
என்று அந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கும், ஸ்ரீநாராயண தீர்த்த குருவிற்கும் மங்களம் பாடி நினறவு செய்வோம்.

————————-

இக் கட்டுரை ,திருவையாறு P.நடராஜ ஸர்மாவும், கும்ப காேணம் M.S.கோபால கிருஷ்ண ஸர்மாவும்
இணைந்து,வரஹா புரி ஸ்ரீதேவி பூமிதேவி ஸமேத வேங்கடேசப் பெருமாளிடமும்,
ஸ்ரீநாராயண தீர்த்தரிடமும் கொண்ட பக்தி மேலீட்டால் எழுதப்பட்டது.

——————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வரஹா புரி ஸ்ரீதேவி பூமிதேவி ஸமேத வேங்கடேசப் பெருமாள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வர வர முனி பூர்வ தினசர்யா–ஸ்லோகம் 14- 32–ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்தது – ஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமி உரை —

May 25, 2022

பரேத்யுபஸ்சிமே யாமே யாமிந்யாஸ்ஸமுபஸ்திதே |
ப்ரபுத்ய ஸரணம் கத்வா பராம் குருபரம்பராம் || (14)

பதவுரை:-

பரேத்யு – தமக்கு எதிர்பாராமல் மாமுனிகளோடு சேர்த்தி ஏற்பட்ட மறுநாளில்,

யாமிந்யா – இரவினுடைய,

பஸ்சிமே யாமே – கடைசியான நாலாவது யாமமானது,

ஸமுபஸ்திதே ஸதி – கிட்டினவளவில், (மாமுனிகள்)

ப்ரபுத்ய – தூக்கம் விழித்து,

பராம் – உயர்ந்த,

குரு பரம்பராம் – எம்பெருமான் தொடக்கமாக தம்முடைய ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளை முடிவாகவுள்ள ஆசார்யர்களின் தொடர்ச்சியை,

ஸரணம் கத்வா – த்யானித்துச் ஸரணம் புகுந்து…

எம்பெருமானாகிய ஸித்தோபாயத்தை (ஆசார்ய பர்யந்தமாக) மோக்ஷோபாயமென்று பற்றும் அதிகாரிக்கு

ஸர்வ தர்மங்களையும் விட்டுவிடுதலை அங்கமாகக் கண்ணபிரான் கீதை சரமஸ்லோகத்தில் விதித்திருந்தபோதிலும்,

நித்ய கர்மாநுஷ்டானத்தை பகவத் கைங்கர்யரூபமாகவோ, உலகத்தாரை அநுஷ்டிக்கச் செய்வதாகிற லோகஸங்க்ரஹத்திற்காகவோ

பெரியோர்கள் செய்தே தீரவேண்டுமென்னும் ஸித்தாந்தத்தை அநுஸரித்து,

பரமகாருணிகரான மாமுனிகள் முற்கூறியபடி அபிகமனம், இஜ்யை முதலான – ஐந்து காலங்களில் செய்யத்தக்க ஐந்து கருமங்களையும் பகவத்கைங்கர்யாதிரூபமாக நாள்தோறும் அநுஷ்டித்து வருவதனாலும்,

‘குருவின் நித்யகர்மாநுஷ்டானங்களையும் ஸிஷ்யன் அநுஸந்திக்கவேண்டும்’ என்னும் ஸாஸ்த்ரத்தை உட்கொண்டும்,

ஆசார்ய பக்தியை முன்னிட்டும் இவ்வெறும்பியப்பா மாமுனிகளைப் பற்றிய திநசர்யா ப்ரபந்தத்தை அருளிச் செய்கிறார்.

ததீயாரதன காலத்தில் ஸ்ரீவைஷ்ணவ பங்க்தியைப் பாவநமாக்குவது –

பங்க்திபாவநராகிய மாமுனிகளைப் பற்றிய இந்நூலென்பது முன்பே கூறப்பட்டது நினைக்கத்தக்கது.

மேல் ஸ்லோகத்தில் ரஹஸ்யத்ரயாநுஸந்தானம் சொல்லப்படுவதனால் இக்குருப்பரம்பராநுஸந்தானம் அதற்கு அங்கமாக நினைக்கத்தக்கது;

குருபரம்பரையை த்யானம் செய்யாமல் ரஹஸ்யத்ரயாநுஸந்தானம் கூடாதாகையால் என்க.

இங்கு குருபரம்பரை என்பது –

பரமபதத்தில் ஆசார்யப்ரீதிக்காகப் பண்ணும் பகவதனுபவமாகிய மோக்ஷமொன்றையே புருஷார்த்தமாகவும்,

ஆசார்ய பர்யந்தமாக எம்பெருமான் ஒருவனையே அதற்கு உபாயமாகவும் உபதேசிக்கிற நம்முடைய ஆசார்யர்களின் பரம்பரையேயாகும். (14)

——————-

த்யாத்வா ரஹஸ்ய த்ரிதயம் தத்த்வ யாதாத்ம்ய தர்ப்பணம் |
பர வ்யூஹாதிகாந் பத்யுப்ரகாராந் ப்ரணிதாய  || (15)

பதவுரை:-

தத்த்வ யாதாத்ம்ய தர்ப்பணம் – ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மையான வடிவங்களைக் கண்ணாடிபோல் தெரிவிப்பனவாகிய,

ரஹஸ்ய த்ரிதயம் – திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் என்னும் மூன்று ரஹஸ்யங்களையும்,

த்யாத்வா – அர்த்தத்துடன் த்யாநம் செய்து,

பர வ்யூஹ ஆதிகாந் – பரம், வ்யூஹம் முதலியனவான,

பத்யு: – ஸர்வ ஜகத்பதியான ஸ்ரீமந் நாராயணனுடைய,

ப்ரகாராந் – ஐந்து நிலைகளை,

ப்ரணிதாய ச – த்யாநம் பண்ணி…

கருத்துரை:-

ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மையான வடிவங்கள் மூன்று. அவையாவன –

ஸ்ரீமந் நாராயணன் ஒருவனுக்கே அடிமையாயிருக்கை,

அப்பெருமானையே மோக்ஷோபாயமாகவுடைமை,

அவனையே போக்யமாக (அநுபவிக்கத் தக்க பொருளாக)வுடைமை என்கிற இவையாகும்.

திருமந்த்ரத்தில் உள்ள ஒம் நம: நாராயணாய என்னும் மூன்று பதங்களும் முறையே

முற்கூறிய மூன்று வடிவங்களையும் ஸ்பஷ்டமாகக் காட்டுவதனாலும்,

இதிலுள்ள நம: பதத்தினால் கூறப்பட்ட ஸித்தோபாயமான எம்பெருமானை மோக்ஷோபாயமாக அறுதியிடுதலை –

த்வயமந்த்ரத்தின் முற்பகுதியாகிய ‘ஸ்ரீமந்நாராயண சரணௌ ஸரணம் ப்ரபத்யே’ என்ற மூன்று பதங்களும் ஸ்பஷ்டமாகத் தெரிவிப்பதனாலும்,

கண்ணன் அர்ஜுனனுக்கு அருளிச்செய்த கீதாசரம ஸ்லோகத்தின் பூர்வார்த்தமான ‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ’ என்பது கண்ணபிரான் ஸ்ரீமந்நாராயணனாகிய தன்னையே மோக்ஷோபாயமாக அறுதியிடும்படி விதித்துள்ளதை ஸ்பஷ்டமாக உணர்த்துவதனாலும்

இம்மூன்று ரஹஸ்யங்களும் ஆத்மஸ்வரூபத்தைக் காட்டும் கண்ணாடிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் விரிவு ரஹஸ்யங்களில் காணத்தக்கது.

எம்பெருமானுடைய ஐந்து நிலைகளாவன

(1) பரமபதத்தில் நித்யஸூரிகளும் முக்தி பெற்றவர்களும் அனுபவித்து நிற்கும் பரத்வநிலை;

(2) ப்ரஹ்மாதிகளின் கூக்குரல் கேட்டு ஆவன செய்வதற்காகத் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் வ்யூஹநிலை;

(3) அஸுரராக்ஷஸர்களை கொன்று ஸாதுக்களைக் காப்பாற்றுவதற்காக, இவ்வுலகில் ராமக்ருஷ்ணாதி ரூபமாக அவதரிக்கும் விபவநிலை;

(4) சித்து, அசித்து எல்லாப்பொருள்களின் உள்ளும், புறமும் ஸ்வரூபத்தினால் வ்யாபித்து நிற்பதும், ஜ்ஞாநிகளுடைய ஹ்ருதய கமலங்களில் அவர்களுடைய த்யானத்திற்கு இலக்காவதற்காக திவ்யமான திருமேனியோடு நிற்பதுமாகிய அந்தர்யாமி நிலை;

(5) இந்நிலை நான்கினைப்போல துர்லபமாகாமல், அறிவும் ஆற்றலும் குறைந்த நாமிருக்கும் இடத்தில், நாமிருக்கும் காலத்தில், நம்முடைய ஊனக்கண்களுக்கும் இலக்காகும்படி கோவில்களிலும், வீடுகளிலும், நாமுகந்த சிலை செம்பு முதலியவற்றாலான பிம்பவடிவாகிய திருமேனியோடு கூடியிருக்கும் அர்ச்சை நிலை என்பனவேயாகும்.

இவையேயன்றி ஆசார்யனாகிய ஆறாவது நிலையும் ஒன்று உண்டு.

பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து (பெரியாழ்.திரு.5-2-8) என்று பீதாம்பரம் தரித்த எம்பெருமானே ப்ரஹ்மத்தை உபதேஸிக்கும் ஆசார்யனாக அவதரிப்பதனை ஆழ்வார் அருளிச்செய்வதனால் என்க.

இதனால் குருபரம்பரை முன்னாக, எம்பெருமானுடைய இவ்வாறு நிலைகளையும் மாமுனிகள்

பின்மாலையில் அநுஸந்திக்கிறாரென்பது இதனால் கூறப்பட்டதாயிற்று. (15)

——————-

ததப்ரத்யுஷஸி ஸ்நாத்வா க்ருத்வா பௌர்வாஹ்ணிகீக்ரியா: |
யதீந்த்ரசரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா || (16)

பதவுரை:-

தத: – அதற்குப்பின்பு,

ப்ரத்யுஷஸி – அருணோதயகாலத்தில்,

ஸ்நாத்வா – நீராடி,

பௌர்வாஹ்ணிகீ: – காலையில் செய்யவேண்டிய,

க்ரியா: – ஸுத்தவஸ்த்ரம் தரித்தல், ஸ்ந்த்யாவந்தனம் செய்தல் முதலிய காரியங்களை,

யதீந்த்ர சரணத்வந்த்வ ப்ரவணேந ஏவ – யதிராஜரான எம்பெருமானாருடைய திருவடியிணையில் தமக்குள்ள பரமபக்தியொன்றையே கொண்ட,

சேதஸா – மனஸ்ஸுடன்,

க்ருத்வா – செய்து.

கருத்துரை:-

ப்ரத்யுஷ: – அருணோதயகாலம். அதாவது

சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள நான்கு நாழிகைக் காலமாகும்.

இக்காலம் முன்பு கூறப்பட்ட – இரவின் நான்காவது யாமத்தின் கண் உள்ள ஏழரை நாழிகையில் முதல் மூன்றரை நாழிகை கழிந்தவுடன் பின்பு உண்டான நான்கு நாழிகைகாலமாகும்.

இந்த ஸ்லோகத்தில் கூறிய ஸ்நாநத்திற்கும், முன் ஸ்லோகத்தில் குறிக்கப்பட்ட குருபரம்பரை, எம்பெருமானுடைய ஆறுநிலைகள் ஆகிய இவற்றின் த்யானத்திற்கும் இடையில் நேரும் தேஹஸுத்தி தந்தஸுத்தி ஆகிய இவற்றையும் கொள்ளல் தகும்.

முன்பு ஆறு, ஏழு, எட்டாம் ஸ்லோகங்களில் குறிப்பிட்டபடி காஷாயங்களை உடுத்துதல், திருமண்காப்பு அணிதல், தாமரை மணிமாலை, துளஸிமணி மாலைகளை தரித்தல் ஆகியவற்றையும் இங்கு சேர்த்துக்கொள்வது உசிதம்.

ஆசார்யனையே எல்லாவுறவுமுறையாகவும் கொண்டுள்ள ஸிஷ்யர்கள், ‘

எம்பெருமானே ஆசார்யனாக அவதரிக்கிறான்’ என்ற சாஸ்த்ரத்தின்படி ஆசார்ய ரூபத்தில் உள்ள

எம்பெருமானுடைய திருமுகமலர்ச்சிக்காகவே நித்யநைமித்திக கருமங்களாகிய கைங்கர்யங்களைச் செய்ய வேண்டியிருப்பதனால்,

மாமுனிகள் அவற்றை எம்பெருமானார் திருவடிகளிலுண்டான பக்தி நிறைந்த மனஸ்ஸுடன் அநுஷ்டித்தமை இங்குக் குறிக்கப்பட்டது. (16)

—————–

அத ரங்கநிதிம் ஸம்யக் அபிகம்ய நிஜம் ப்ரபும் |
ஸ்ரீநிதாநம் ஸநைஸ் தஸ்ய ஸோதயித்வா பதத்வயம் || (17)

பதவுரை:-

அத: – காலை அநுஷ்டாநங்களை நிறைவேற்றிவிட்டுக் காவேரியிலிருந்து மடத்துக்கு எழுந்தருளிய பிறகு,

நிஜம் – தம்முடைய ஆராதனைக்கு உரியவராய்,

ப்ரபும் – ஸ்வாமியான,

ரங்கநிதிம் – (தமது மடத்தில் எழுந்தருளியுள்ள) ஸ்ரீரங்கத்துக்கு நிதி போன்ற அரங்கநகரப்பனை,

ஸம்யக் அபிகம்ய – முறைப்படி பக்தியோடு கிட்டித் தண்டன் ஸமர்ப்பித்து,

ஸ்ரீநிதாநம் – கைங்கர்யமான செல்வத்துக்கு இருப்பிடமான,

தஸ்ய பதத்வயம் – அப்பெருமானுடைய திருவடியிணையை,

சநை: – பரபரப்பில்லாமல் (ஊக்கத்தோடு)

சோதயித்வா – தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்து (திருவாராதனம் செய்து).

கருத்துரை:-

சாண்டிலஸ்ம்ருதியில், ஸ்நாநத்துக்குப் பின்பு பகவானை அபிகமனம் செய்வது (கிட்டுவது) பற்றிக் கூறப்பட்டுள்ளது.

‘பகவானை அபிகமனம் செய்யவேண்டும். (எப்படியெனில்) நன்றாக நீராடித் திருமண்காப்புகளையணிந்து,

கால்களை அலம்பி, ஆசமநம் செய்து, பொறிகளையும் மனத்தையும் அடக்கி, இரண்டந்திப்பொழுதுகளிலும்,

தினந்தோறும் முறையே காலையில் சூரியன் தோன்றும் வரையிலும், இரவில் நக்ஷத்திரங்கள் தோன்றும் வரையிலும்

மந்த்ரங்களை ஜபித்துக்கொண்டேயிருந்து

அதன் பிறகு பகவானை அபிகமனம் (திருவாராதனத்திற்காகக் கிட்டுதல்) செய்யவேண்டும்’ என்பது சாண்டில்ய ஸ்ம்ருதிவசநம்.

இங்கு ரங்கநிதியின் திருவடி ஸோதனம் கூறியது திருவாராதனம் முழுவதற்கும் உபலக்ஷணமென்று கொள்ளல்தகும்.

இங்கும் முன்புகூறிய யதீந்த்ரசரண பக்தி தொடருவதனால், தம்முடைய அரங்கநகரப்பனுக்குத் திருவாராதனம் செய்வதும்,

தம்முடைய ஆசார்யராகிய எம்பெருமானார்க்கு, அவ்வப்பன் உகந்தபெருமானாகையாலே என்று கொள்ளல் பொருந்தும்.

பரதனுடைய பக்தரான ஸத்ருக்னாழ்வான், பரதனுக்கு ஸ்வாமியாகிய ஸ்ரீராமபிரானை, பரதாழ்வானுடைய

உகப்புக்காகவே நினைத்துக் கொண்டிருந்தது போல் இது தன்னைக் கொள்க… (17)

——————-

ததஸ்தத்ஸந்நிதி ஸ்தம்பமூலபூதலபூஷணம் |
ப்ராங்முகம் ஸுகமாஸீநம் ப்ரஸாதமதுரஸ்மிதம் || (18)

பதவுரை:-

தத: – அரங்கநகரப்பனுக்குத் திருவாராதனம் செய்தபின்பு,

தத்ஸந்நிதி ஸ்தம்பமூலபூதலபூஷணம் – அப்பெருமானுடைய ஸந்நிதியிலுள்ள கம்பத்தின் கீழுள்ள இடத்திற்கு அணிசெய்யுமவராய்,

ப்ராங்முகம் – கிழக்கு முகமாக,

ஸுகம் – ஸுகமாக (மனத்தின் ஒருமைப்பாட்டிற்கு அநுகூலமாக),

ஆஸீநம் – உட்கார்ந்திருக்குமவரும்,

ப்ரஸாத மதுரஸ்மிதம் – மனத்திலுள்ள தெளிவினால் உண்டான இனிய புன்சிரிப்பையுடையவருமாய்…

கருத்துரை:-

முன் ஸ்லோகத்தில் கூறப்பட்ட பகவதாராதனத்திற்குப் பிறகு செய்ய வேண்டிய த்வயமந்த்ர ஜபத்தையும் உபலக்ஷணவகையால் கொள்க;

அதுவும் நித்யாநுஷ்டானத்தில் சேர்ந்ததாகையால். ‘முக்காலங்களிலும் பெருமாள் திருவாராதனம் செய்தபிறகு,

சோம்பலில்லாதவனாய்க்கொண்டு, ஆயிரத்தெட்டுதடவைகள் அல்லது நூற்றெட்டுத் தடவைகள்

அதுவும் இயலாவிடில் இருபத்தெட்டு தடவைகள் மந்த்ரரத்நமென்னும் த்வய மந்த்ரத்தை அர்த்தத்துடன்,

தன் ஜீவித காலமுள்ளவரையில் அநுஸந்திக்கவேண்டும் என்று பராசரர் பணித்தது காணத்தக்கது.

இப்படி மந்த்ர ஜபம் செய்யும்போதும் மாமுனிகளின் மனம் ஆசார்யரான எம்பெருமானாருடைய திருவடிகளில்

ஒன்றி நிற்குமென்பதையும் நினைவில் கொள்ளவேணும்;

மாமுனிகள் ஆசார்ய பரதந்த்ரராகையால் என்க. மாமுனிகள் திருவுள்ளத்தில் கலக்கமேதுமின்றித் தெளிவுடையவராகையால்,

அவரது திருமுகத்தில் சிரிப்பும் அழகியதாயிருக்கிறதென்றபடி. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமிறே.

நற்காரியங்களைச் செய்யும் போது கிழக்கு முகமாகவோ வடக்கு முகமாகவோ இருந்து செய்யவேணுமென்று

சாஸ்த்ரம் சொல்லுவதனால், ‘ப்ராங்முகம் ஸுகமாஸீநம்’ எனப்பட்டது. (18)

——————-

ப்ருத்யைப்ரியஹிதைகாக்ரைப்ரேமபூர்வமுபாஸிதம் |
தத்ப்ரார்த்தநாநுஸாரேண ஸம்ஸ்காராந் ஸம்விதாய மே || (19)

பதவுரை:-

ப்ரயஹித ஏகாக்ரை: – (பகவதாராதநத்திற்காக) ஆசார்யனுக்கு எப்பொருள்களில் ப்ரீதியுள்ளதோ, ஆசார்யனுக்கு வர்ண, ஆஸ்ரமங்களுக்குத் தக்கபடி எப்பொருள்கள் ஹிதமோ (நன்மை பயப்பனவோ) அப்பொருள்களை ஸம்பாதிப்பதில் ஒருமித்த மநஸ்ஸையுடைய,

ப்ருத்யை: – கோயிலண்ணன் முதலான ஸிஷ்யர்களாலே,

ப்ரேமபூர்வம் – அன்போடுகூட,

உபாஸிதம் – முற்கூறியபடி ப்ரியமாயும், ஹிதமாயுமுள்ள பகவதாராதனத்திற்கு உரிய பொருள்களைக் கொண்டுவந்து ஸமர்ப்பித்துப் ப்ரிசர்யை (அடிமை) செய்யப் பெற்றவராய்க் கொண்டு,

தத் ப்ரார்த்தநா அநுஸாரேண – அச்சிஷ்யர்களுடைய வேண்டுகோளை அநுஸரிக்க வேண்டியிருப்பதனால் (அவர்களுடைய புருஷகாரபலத்தினால்),

மே – (முன் தினத்திலேயே தம் திருவடிகளில் ஆஸ்ரயித்த) அடியேனுக்கு,

ஸம்ஸ்காராந் – தாபம், புண்ட்ரம், நாமம், மந்த்ரம், யாகம் என்ற ஐந்து ஸம்ஸ்காரங்களை,

ஸம்விதாய – நன்றாக (ஸாஸ்த்ர முறைப்படியே) ஒருகாலே செய்து…

கருத்துரை:-

முன்கூறியபடியே பெருமாள் ஸந்நிதியில் உள்ள கம்பத்தின் கீழ்ப்பகுதியில் மாமுனிகள் எழுந்தருளியிருக்கும் ஸமயத்தில்,

அந்தரங்க ஸிஷ்யர்கள் பெருமாள் திருவாராதனத்திற்கு வேண்டியதாய் ஸாஸ்த்ர விரோதமில்லாத

அரிசி, பருப்பு, பழம், பால், தயிர், கறியமுது முதலிய வஸ்துக்களை பக்தியுடன் கொண்டுவந்து எதிரில் ஸமர்ப்பித்துப்

பணிவிடை செய்ய அவற்றை அவர் அங்கீகரித்தருளினார்.

‘மாடாபத்யம் யதி: குர்யாத் விஷ்ணுதர்மாபிவ்ருத்தயே’ [யதியானவர் வைஷ்ணவமான தர்மங்களை

(பஞ்சஸம்ஸ்காரம், உபயவேதாந்த ரஹஸ்யக்ரந்த ப்ரவசநம், அவற்றில் கூறியபடி ஸிஷ்யர்களை அநுஷ்டிக்கச் செய்தல் தொடக்கமானவற்றை) மேன்மேலும் வளர்ப்பதற்காக, மடத்தின் அதிபதியாயிருத்தலை ஏற்றுக்கொள்ளக் கடவர்] என்று

பராஸரஸம்ஹிதையிலுள்ளபடியே மாமுனிகள் மடாதிபதியாக அழகியமணவாளனாலே நியமிக்கப்பட்டாராகையாலே

கோயில் கந்தாடையண்ணன் முதலிய பல மஹான்கள் அவருக்கு ஸிஷ்யர்களாகி, வைஷ்ணவ ததீயாராதனம் நடக்கும்

அம்மடத்தில் பெருமாள் திருவாராதனத்திற்கு உதவும்படி வஸ்துக்களை ஸமர்ப்பிப்பதும்

மாமுனிகள் அவற்றை அங்கீகரிப்பதும் யுக்தமேயாகுமென்க.

முற்கூறப்பட்ட ஸிஷ்யர் பெருமக்கள் மாமுனிகள் ஸந்நிதியில், புதிதாக வந்து முதல்நாள் சேர்ந்த தமக்கு

(எறும்பியப்பாவான தமக்கு) பஞ்சஸம்ஸ்காரம் செய்தருளும்படி ப்ரார்த்தித்தார்களாம்.

அவர்கள் மிகவும் வேண்டியவர்களாகையால் அவர்கள் செய்த ப்ரார்த்தனையைத் தட்டாமல் மாமுனிகள் அப்படியே செய்தாராம்.

அதனைக் குறிப்பிடுகிறார். பின்னிரண்டடிகளில்

‘ஒரு வருஷகாலம் ஆசார்யனை உபாஸிக்கவேண்டுமென்றும், அப்படியுபாஸித்த ஸிஷ்யனுக்கே ஆசார்யன் பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்யவேண்டுமென்றும் சாஸ்த்ரம் கட்டளையிடாநிற்கவும்,

மாமுனிகள் அப்பாவிற்கு வந்த மறுநாளே செய்தது குற்றத்தின் பாற்படாது;

அந்தரங்கஸிஷ்யர்களின் ப்ரார்த்தனை – அந்த சாஸ்த்ரத்தைவிட பலமுடையதாகையாலென்க.

பெருமாள் திருவாராதநம் முடிந்த பிறகு இப்பஞ்சஸம்ஸ்காரங்கள் நடைபெற்ற விஷயம்

‘ஆசார்யன் நன்னாளில் காலையில் நீராடி எம்பெருமானுக்கு முறைப்படி திருவாராதனம் செய்து,

தீர்த்தமாடி அநுஷ்டாநம் முடித்து வந்த ஸிஷ்யனை அழைத்து, அவன் கையில் கங்கணம் கட்டி முறைப்படியே

பஞ்சஸம்ஸ்காரங்களையும் செய்யக்கடவன்’ என்றுள்ள பராஸரவசநத்தோடு பொருந்தும்.

அடுத்த ஸ்லோகத்தில் அப்பா செய்யும் யாகமாக (தேவபூஜையாக) மாமுனிகளின் திருவடிகளைத் தலையில் தரித்தலும்,

அதற்கு அடுத்த ஸ்லோகத்தில் த்வய மந்த்ரோபதேஸமும், கூறப்படுகிறபடியால்

இந்த ஸ்லோகத்தில் தாபமென்கிற சங்கு, சக்கரப் பொறிகளை இரண்டு தோள்களில் ஒற்றிக்கொள்ளுதலும்,

புண்ட்ரமென்னும் பன்னிரண்டு திருமண்காப்புக்களை அணிதலும்,

ராமாநுஜதாஸன் முதலிய நாமந்தரித்தலும் ஆகிய மூன்று ஸம்ஸ்காரங்களே கொள்ளத்தக்கன.

ஸம்ஸ்காரமாவது – ஒருவனுக்கு ஸ்ரீவைஷ்ணவனாகும் தகுதிபெறுவதற்காக ஆசார்யன் செய்யும் நற்காரியம்.

ஸம்ஸ்காரம் – பண்படுத்தல் – சீர்படுத்தல். (19)

———————-

அனுகம்பா பரீவாஹைஅபிஷேசந பூர்வகம் |
திவ்யம் பதத்வயம் தத்வா தீர்க்கம் ப்ரணமதோ மம || 20

பதவுரை:-

அனுகம்பா பரீவாஹை:- பிறர் துன்பங்கண்டு பொறுக்கமாட்டாமையாகிற தயையின் பெருவெள்ளத்தினால்,

அபிஷேசந பூர்வகம் – அடியேனை (துன்பமென்னும் தாபம் தீரும்படி) முதலில் முழுக்காட்டி அப்புறமாக,

தீர்க்கம் – வெகுநேரம்,

ப்ரணமத: – பக்தியினால் தெண்டனிட்டு அப்படியே கிடக்கிற,

மம – அடியேனுக்கு,

திவ்யம் – மிகவும் உயர்ந்த,

பதத்வயம் – திருவடியிணையை,

தத்வா – தலையில் வைத்து.

கருத்துரை:-

மாமுனிகள் – தம்முடைய தாபமெல்லாம் தீரும்படி குளிரக்கடாக்ஷித்து, ஒரு தடவை தண்டம் ஸமர்ப்பித்து

பக்திப்பெருக்கினால் அப்படியே வெகுநேரம் கிடக்கிற தம்முடைய ஸிரஸ்ஸில் திருவடிகளை வைத்தருளினாரென்கிறார்.

ஒருவன் துன்பத்தால் நடுங்காநிற்க, அதுகண்டு தானும் துன்பமுற்று நடுங்குதலே அநுகம்பா என்பது.

தயையென்பது இதன்பொருள். ‘க்ருபாதயா அநுகம்பா’ என்ற அமரகோஸம் காணத்தக்கது.

‘க்ருஷ்ணனுக்குச் செய்யப்பட்ட நமஸ்காரம் ஒன்றேயாக இருந்தாலும்

அது பத்து அஸ்வமேதயாகங்கள் செய்து முடித்தாலொத்த பெருமையைப் பெறும்.

பத்துத் தடவைகள் அஸ்வமேதயாகம் செய்தவன் அதன் பயனாக ஸ்வர்க்கபோகத்தை அநுபவித்துவிட்டு

மறுபடியும் இவ்வுலகத்திற்குத் திரும்புவது நிஸ்சயம். க்ருஷ்ண நமஸ்காரம் செய்தவனோ என்றால்

பரமபதம் சென்று, மறுபடியும் இவ்வுலகில் பிறவியெடுக்க மாட்டான் (விஷ்ணுதர்மம் 4-36) என்பது இங்கு கருதத்தக்கது.

பகவானுக்குச் செய்யும் ப்ரணாமமே இப்படியானால், ஆசார்யனைக்குறித்துப் பண்ணும் ப்ரணாமத்தைத்

தனியே எடுத்துக் கூற வேண்டியதில்லை.

திவ்யம் பதத்வயம் – பகவானுடைய திருவடியிணையை விட உயர்ந்தது ஆசார்யனுடைய திருவடியிணையென்றபடி.

ஸம்ஸாரமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவான காரணமாகிய பகவத் ஸம்பந்தத்தைவிட,

மோக்ஷத்திற்கே காரணமான ஆசார்யஸம்பந்தம் உயர்ந்ததென்று கூறும் ஸ்ரீவசநபூஷணம் (433 சூர்ணிகை) ஸேவிக்கத்தக்கது. (20)

——————

ஸாக்ஷாத் பலைகலக்ஷ்யத்வ ப்ரதிபத்தி பவித்ரிதம் |
மந்த்ரரத்நம் ப்ரயச்சந்தம் வந்தே வரவரம் முநிம் || 21

பதவுரை:-

ஸாக்ஷாத்பல – த்வயமந்த்ரோபதேஸத்திற்கு முக்கிய பலனாகிய பகவந் மங்களாஸாஸநத்தில், ஏக லக்ஷ்யத்வ ப்ரபத்தி

பவித்ரிதம் – முக்கிய நோக்கமுடைமையைத் தாம் நினைப்பதனாலே பரிஸுத்தியை உடையதாகும்படியாக,

மந்த்ரரத்நம் – மந்த்ரரத்நமாகிய த்வயமந்த்ரத்தை,

ப்ரயச்சந்தம் – உபதேஸித்துக்கொண்டிருக்கிற,

வரவரம்முநிம் – அழகியமணவாளரென்னும் முனிவரை,

வந்தே – வணங்குகிறேன்.

கருத்துரை:-

மணவாளமாமுனிகள் – தாம் ஸிஷ்யர்களுக்குச் செய்யும் த்வயமந்த்ரோபதேஸத்திற்கு முக்கிய பலனாக நினைப்பது

உபதேஸம் பெற்ற ஸிஷ்யர்கள் திருந்தி பகவந் மங்களாஸாஸநம் செய்வதொன்றையே.

அப்படி அவர் நினைத்தால்தான் அவர் செய்யும் உபதேஸம் தூய்மையுடையதாகும்.

ஆகையால் அங்ஙனமே அவர் நினைத்துத் தமக்கு த்வயமந்த்ரத்தை ஸுத்தோபதேஸமாகும்படி

உபதேஸித்தாரென்று இதனால் தெரிவித்தாராயிற்று.

முற்கூறியபடி நினையாமல்,

(1) பணம், பணிவிடைகள் முதலிய உலகில் காணும் பலனையோ,

(2) ஸிஷ்யன் மோக்ஷம் பெறுதலையோ,

(3) தான் ஒரு ஸிஷ்யனைத் திருத்தி அதனால் பகவானுக்குச் செய்யும் கைங்கர்யத்தையோ,

(4) தன்னுடைய தனிமை தீரும்படி தன்னோடு ஸிஷ்யன் கூடியிருக்கையாகிற ஸஹவாஸத்தையோ பலனாக நினைத்து த்வயத்தை உபதேஸித்தால், அவ்வுபதேஸத்திற்கு தூய்மை குறையுமென்று ஸூசிப்பித்தபடி இது.

இங்கு – ஆசார்யனுக்கு இங்கிருக்கும் நாள்களில் தேஹயாத்ரைக்கு பணமோ பணிவிடையோ தேவைப்படாதா?

ஸிஷ்யன் மோக்ஷம் பெறவேண்டாமா? இங்கிருக்கும் நாள்களில் ஆசார்யன் பகவானுக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டாமா?

நல்ல ஸிஷ்யனோடு ஸஹவாஸம் ஆசார்யனுக்கு வாய்க்கவேண்டாமா? இவையெல்லாம் நல்லவையேயன்றித் தீயனவல்லவே?

இவற்றைப் பயனாகக்கருதி ஆசார்யன் செய்யும் த்வயோபதேஸம் தூய்மை குன்றப்பெறுவது எப்படி? என்று ஒரு கேள்வி எழுவது இயற்கையே.

அதற்கு – ஆசார்யன் விஷயத்தில் ஸிஷ்யனுக்கு உள்ள ஷேஷத்வம்(அடிமையாந்தன்மை) ஏதோ இயன்ற வரையில்

சிறிது தநம் ஸமர்ப்பித்துப் பணிவிடை செய்தாலன்றி நிலைபெறாதென்று நினைக்கும் ஸிஷ்யனது நினைவால் முதற்பயன் ஸித்திக்கும்.

யாராவது ஒருவன் மோக்ஷம் பெற்று நம்மிடம் வருவானா என்று நினைத்து அதற்கு உறுப்பாக ஒரு ஸிஷ்யனை

ஓராசார்யனோடு சேர்த்து த்வயோபதேஸம் பெற்றவனாக ஆக்கிய எம்பெருமானுடைய நினைவாலே ஸிஷ்யனுக்கு மோக்ஷம் ஸித்திக்கும்.

‘இவன் (நம்ஸிஷ்யன்) நல்ல உபதேஸங்களைச் செய்து பகவந்மங்களாஸாஸநத்திற்கு ஆளாம்படி ஒரு ஸிஷ்யனைத் திருத்துவது பகவான் திருவுள்ளத்திற்கு மிகவும் உகப்பாகையாலே இது பகவத் கைங்கர்யமன்றோ?’ என்று நினைத்திருக்கும் தன்னுடைய ஆசார்யன் நினைவாலே, ஆசார்யனுக்கு பகவத் கைங்கர்யம் ஸித்திக்கும்.

வெகுகாலமாக ‘யான், எனது’ என்னும் அஹங்கார மமகாரங்களாலே ஸத்தையை இழந்து கிடந்த நம்மை ஹிதோபதேஸம் செய்து பகவந்மங்களாஸாஸநத்திற்கு உரியவனாக்கிய மஹோபகாரகனை நாம் ஒரு நாளும் விட்டுப் பிரியக்கூடாதென்று நினைத்திருக்கும் ஸிஷ்யனது க்ருதஜ்ஞதையாலே (செய்ந்நன்றி மறவாமையாலே) ஸிஷ்யனோடு ஆசார்யனுக்கு ஸஹவாஸம் ஸித்திக்கும்.

ஆகையால் ஆசார்யன் தான் ஸிஷ்யனுக்கு செய்யும் த்வயோபதேஸத்தை தன்னடையே ஸித்திக்கும்

இந்நான்கினையும் பயனாக நினையாமல், பகவந்மங்களாஸாஸநமொன்றையே பயனாக நினைத்து,

ஸுத்தமாகச் செய்யவேண்டுமென்று திருவுள்ளம்பற்றி மாமுனிகள் அங்ஙனமே

தமக்கு த்வயமந்த்ரோபதேஸம் செய்தருளியதை இதனால் அறிவித்தாராயிற்று.

இம்மந்த்ரோபதேஸத்தையும் மாமுனிகள் எம்பெருமானாருடைய திருவடிகளையே த்யாநித்துக்கொண்டு செய்தாரென்று கொள்ளவேணும்;

நம்முடைய ஆசார்ய கோஷ்டியில் எம்பெருமானார் மிகச் சிறந்தவராகையால் என்க.

குருபரம்பரையை அநுஸந்தித்தே த்வயத்தை அநுஸந்திக்கவேண்டிய நிர்ப்பந்தமுள்ளபடியினால்

‘யதீந்த்ர ஸரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா’ (16) என்று முன்பு கூறப்பட்ட எம்பெருமானாரைப்பற்றிய

அநுஸந்தாநம் தொடர்ந்து வருவதனால் அது அவர்க்கு முன்னும் பின்னுமுள்ள ஸகலாசார்யபரம்பரைக்கும் உபலக்ஷணமாய் நின்று,

அதை நினைப்பூட்டுகிறதென்பது கருத்து.

ஸ்ரீவைஷ்ணவர்கள் அநுஷ்டிக்கத்தக்க அபிகமநம், உபாதாநம், இஜ்யை, ஸ்வாத்யாயம், யோகம் ஆகிய ஐந்து அம்ஸங்களில்,

எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கவேண்டிய த்ரவ்யங்களைச் சேகரித்தலாகிய உபாதாநமென்பது,

இங்கு மாமுனிகள் த்வயோபதேஸத்தின் வாயிலாக இந்நூலாசிரியராகிய அப்பாவை ஸிஷ்யராக ஏற்று,

எம்பெருமானுக்குத் தொண்டனாக ஸமர்ப்பிக்க வேண்டிய சேதநத்ரவ்யமாகச் சேகரித்தல்

ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டதனால் அநுஷ்டிக்கப்பட்டதாயிற்று.

இது முன்பே ‘ஆத்மலாபாத் பரம்கிஞ்சித்’ என்ற பதினோராவது ஸ்லோகத்தில்

ஸூசிக்கப்பட்டதென்பது நினைவில் கொள்ளத்தக்கது. (21)

——————-

ததஸ்ஸார்த்தம் விநிர்க்கத்ய ப்ருத்யைர்நித்யாநபாயிபி: |
ஸ்ரீரங்கமங்களம் த்ரஷ்டும் புருஷம் புஜகேஸயம் || 22

பதவுரை:-

தத: – த்வயத்தை உபதேஸித்த பிறகு,

ஸ்ரீரங்கமங்களம் – ஸ்ரீரங்கநகருக்கு அணிசெய்பவராய்,

புஜகேஸயம் – ஆதிஸேஷன் மேலே கண்வளர்ந்தருளுமவராய்,

புருஷம் – புருஷோத்தமராகிய பெரியபெருமாளை,

த்ரஷ்டும் – ஸேவிப்பதற்காக,

நித்ய அநபாயிபி: ப்ருத்யை: ஸார்த்தம் – ஒருகணமும் விட்டுப்பிரியாத கோயிலண்ணன் முதலிய அடியவர்களுடன் கூடி,

விநிர்க்கத்ய – தமது மடத்திலிருந்து புறப்பட்டு.

கருத்துரை:-

இயற்கையாகவே பெருமையைப் பெற்ற பொருளைக்காட்டுகிற ஸ்ரீஸப்தம் இங்கு ரங்கநகரத்திற்கு அடைமொழியாயிற்று.

ஸ்ரீயாகிற ரங்கம் – ஸ்ரீரங்கமென்றபடி. பெரியபெருமாள் பள்ளி கொண்டதனால் அரங்கத்திற்குப் பெருமை ஏற்படவில்லை.

பின்னையோவென்னில்

எல்லார்க்கும் பெருமையை உண்டாக்கும் பெரியபெருமாளும் தமக்கு ஒரு பெருமையைத் தேடிக்கொள்வதற்காகவே

வந்து சேரும்படிக்கீடாக இயற்கையான பெருமைவாய்க்கப்பெற்றது அரங்கநகரமென்பது இவ்வடைமொழிக்குக் கருத்து.

‘க்ஷீராப்தேர் மண்டலாத் பாநோர் யோகிநாம் ஹ்ருதயாதபி, ரதிம் கதோஹரிர்யத்ர தஸ்மாத் ரங்கமிதி ஸ்ம்ருதம்’

(எம்பெருமான் திருப்பாற்கடல், ஸூர்யமண்டலம், யோகிகளின் ஹ்ருதயம் ஆகியவற்றைவிட அதிகமான

ஆசையைப்பெற்ற இடமாதல் பற்றி இந்நகரம் ரங்கமென்று கருதப்பட்டது) என்ற ஸ்லோகம் இங்கு நினைக்கத்தக்கதாகும்.

இக்கருத்து எம்பெருமானுடைய நினைவைத் தழுவிக் கூறப்பட்டதாகும்.

நம்முடைய நினைவின்படி – மேல் ‘ஸ்ரீரங்கமங்களம்’ என்று ஸ்ரீரங்கநகருக்கும் அணிசெய்பவராக –

பெருமையைத் தருமவராக எம்பெருமான் கூறப்படுவதும் கண்டு அநுபவிக்கவுரியதாகும்.

இயற்கையாகவே பெருமைபெற்ற இரண்டு பொருள்களும் தம்மில் ஒன்று மற்றொன்றுக்குப்

பெருமை தருமவையாகவும் உள்ளனவென்பது உண்மையுரையாகும்.

(1) புருஷ: – புரதி இதி புருஷ: என்பது முதல் வ்யுத்பத்தி. ‘புர-அக்ரகமநே’ என்ற தாதுவடியாகப் பிறந்த புருஷ

ஸப்தத்திற்கு உலகமுண்டாவதற்கு முன்பே இருந்த எம்பெருமான் பொருளாகையால்

அப்பெருமானுக்கு உண்டான ஜகத்காரணத்வம் இந்த வ்யுத்பத்தியாலே குறிக்கப்பட்டது.

(2) புரீ ஸேதே இதி புருஷ: என்பது இரண்டாவது வ்யுத்பத்தி.

ஜீவாத்மாக்களுடைய ஸரீரத்தில் (இதயகுகையில்) தங்கியிருப்பவனென்பது இதன் பொருளாகையால்

அந்தர்யாமித்வம் இதனால் குறிக்கப்பட்டது.

(3) புரு ஸநோதி இதி புருஷ: என்பது மூன்றாவது வ்யுத்பத்தி. அதிகமாகக் கொடுப்பவனென்பது இதற்குப் பொருளாகையால்,

கேட்பவர் கேட்கும் மற்ற பொருள்களோடு தன்னோடு வாசியில்லாமல் எல்லா வபேக்ஷிதங்களையும்

தந்தருளும் ஔதார்யம் இதனால் குறிக்கப்பட்டது.

இம்மூன்று பொருள்களும் அழகியமணவாளப் பெருமாள் திறத்தில் பொருந்துமவையேயாம்.

ஆதிஸேஷன் மீது பள்ளிகொண்டிருப்பது பரம்பொருளின் லக்ஷணமென்பர் பெரியோர்.

ஸ்ரீரங்கமங்களமாய் புருஷஸப்தவாச்யனாய் புஜகஸயனனாயிருக்கிற எம்பெருமானை மணவாளமாமுனிகள் ஸேவிப்பது

எம்பெருமானாருடைய திருவுள்ளவுகப்புக்காகவேயன்றி வேறொன்றுக்காகவல்ல என்பதும் இங்கு நினைக்கத்தக்கது.

‘நித்யநபாயிபி: ப்ருத்யை:’ – ஒருக்ஷணமும் விட்டு நீங்காத ஸிஷ்யர்கள் என்றபடி. ஒருமனிதனைவிட்டு நீங்காதது

அவனுடைய நிழலேயன்றி வேறொன்றில்லையென்பர் உலகோர்.

நிழல் கூட இருளில் மனிதனைவிட்டு நீங்கும்.

மாமுனிகளின் ஸிஷ்யர்கள் அவரை இருளிலும் விட்டு நீங்காத பெருமையைப் பெற்றவர்கள் என்கிறார் அண்ணாவப்பங்கார்ஸ்வாமி.

இதனால் மாமுனிகள் விஷயத்தில் ஸிஷ்யர்கள் வைத்திருக்கும் பக்தியின் பெருமை கூறப்பட்டது. (22)

—————-

மஹதி ஸ்ரீமதி த்வாரே கோபுரம் சதுராநநம் |
ப்ரணிபத்ய ஸநைரந்தப்ரவிஸந்தம் பஜாமி தம் || 23

பதவுரை:-

ஸ்ரீமதி – ஐஸ்வர்யம் நிறைந்ததும்,

மஹதி – மிகப்பரந்ததுமான,

த்வாரே – கோவிலுக்குச் செல்லும் வழியில்,

சதுராநநம் – நான்முகனென்று சொல்லப்படுகிற,

கோபுரம் – கோபுரத்தை,

ப்ரணிபத்ய – மனமொழிமெய்களால் வணங்கி,

ஸநை: – மெல்ல (கோபுரத்தின் அழகை அநுபவித்து மகிழ்ந்திருக்கும் தம் கண்களை வருத்தப்பட்டு மெல்லத் திருப்பி)

அந்த: – கோவிலுக்குள்ளே,

ப்ரவிஸந்தம் – எழுந்தருள்கின்ற,

தம் – அந்த மணவாள மாமுனிகளை,

பஜாமி – ஸேவிக்கிறேன்.

கருத்துரை:-

ஸ்ரீமதி, மஹதி என்பன நான்முகன் கோட்டைவாசலென்று ப்ரஸித்தமான கோவில் வாசலுக்கு அடைமொழிகள்.

ப்ரஹ்மாதிகளும் இவ்வாசலில் புகுந்தமாத்திரத்தால் ஸகலைஸ்வர்யங்களையும் பெறும்படிக்கீடான

ஐஸ்வர்யம் மலிந்திருக்கப் பெற்றுள்ளமையும், ஸ்ரீரங்கநாதன் தன்னடியாரெல்லாரோடும் கூடி

இவ்வாசலில் ப்ரவேஸித்தாலும் நிரப்ப முடியாதபடி இருக்கும். இதன் விஸாலத்தன்மையும் முறையே இவற்றால் குறிக்கப்படுகின்றன.

சதுராநநம் கோபுரம் – இக்கோபுரம் நான்முகன் கோபுரமென்று வழங்கப்படுகிறது. தெண்டன்

ஸமர்ப்பிப்பதை மனத்தினால் நினைத்தும், ‘அடியேன் தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்’ என்று வாயால் சொல்லியும்,

ஸாஷ்டாங்கமாகத் தரையில் படுத்தும் தெண்டனிடுவதை ‘ப்ரணிபத்ய’ என்ற சொல் தெரிவிக்கிறது. (23)

—————–

தேவீ கோதா யதிபதிஸடத்வேஷிணௌரங்கஸ்ருங்கம்
ஸேநாநாதோ விஹக வ்ருஷபஸ்ரீநிதிஸ் ஸிந்துகந்யா |
பூமாநீளா குருஜநவ்ருதபுருஷச்சேத்யமீஷாம் அக்ரே நித்யம் வரவர முநேரங்க்ரியுக்மம் ப்ரபத்யே || 24

பதவுரை:-

தேவீ கோதா – தெய்வத்தன்மை வாய்ந்த ஆண்டாள்,

யதிபதி சடத்வேஷிணௌ – யதிராஜாரான எம்பெருமானார் சடகோபராகிய நம்மாழ்வார்,

ரங்கஸ்ருங்கம் – ஸ்ரீரங்கமென்னும் பெயர்பெற்ற கர்ப்பக்ருஹத்தினுடைய மேற்பகுதியான விமாநம்,

ஸேநாநாத: – ஸேனைமுதலியார்,

விஹகவ்ருஷப: – பக்ஷிராஜரான கருடாழ்வார்,

ஸ்ரீநிதி – ஸ்ரீமஹாலக்ஷ்மீக்கு நிதிபோன்ற ஸ்ரீரங்கநாதன்,

ஸிந்துகந்யா – திருபாற்கடலின் பெண்ணான ஸ்ரீரங்கநாச்சியார்,

பூமா நீளா குருஜந வ்ருத: – பூமிபிராட்டியாரென்ன, பெரியபிராட்டியாரென்ன, நீளாதேவியென்ன, நம்மாழ்வார் முதலிய பெரியோர்களென்ன என்றிவர்களால் சூழப்பட்ட, புருஷ:

 – பரமபதநாதன்,

இதிஅமீஷாம் அக்ரே – என்னும் இவர்கள் அனைவருடையவும் முன்னிலையில்,

வரவரமுநே: – மணவாளமாமுனிகளுடைய, அங்க்ரியுக்மம் – திருவடியிணையை,

நித்யம் – தினந்தோறும்,

ப்ரபத்யே – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.

கருத்துரை:-

மணவாளமாமுனிகள் நான்முகன் கோட்டைவாயில் வழியாக உள்ளே ப்ரதக்ஷிணமாக எழுந்தருளும் க்ரமத்தில்

ஆண்டாள், எம்பெருமானார், நம்மாழ்வார், ஸ்ரீரங்கவிமாநம், ஸேனைமுதலியார், கருடாழ்வார், ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீரங்கநாச்சியார்

இவர்களையும், பின்பு பரமபதநாதன் ஸந்நிதியில் எழுந்தருளியுள்ள் ஸ்ரீபூமிநீளைகளோடும் நம்மாழ்வார் தொடக்கமான

ஆழ்வார்களனைவரோடும் கூடிய பரமபதநாதனையும் ஸேவித்துவிட்டு எழுந்தருளும்போது,

ஒவ்வொரு ஸந்நிதி வாசலிலும் தாம் அவர்களை ஸேவியாமல் மணவாளமாமுனிகளை ஸேவிப்பதாக

எறும்பியப்பா இதனால் அருளிச் செய்கிறார். ஏன்?

அவர்களை இவர் ஸேவிப்பதில்லையோ என்றால்

அவர்களை இவர் தமக்கு ருசித்தவர்களென்று ஸேவியாமல், தம்முடைய ஆச்சார்யராகிய மணவாள மாமுனிகளுக்கு

இஷ்டமானவர்களென்ற நினைவோடே ஸேவிக்கிறாராகையால், அப்படி இவர் அவர்களை ஸேவிப்பதைப்பற்றி இங்குக் குறிப்பிடவில்லை.

எறும்பியப்பா தமக்கு ருசித்தவரென்ற காரணத்தினால் ஸேவிப்பது மாமுனிகளொருவரையேயாகும்;

இவர் ஆசார்யபரதந்த்ரராகையால் என்க.

‘எம்பெருமானை ஸேவிக்கும்போது அர்ச்சாரூபிகளாக எழுந்தருளியுள்ள அவனுடைய பரிவாரங்களையும்

பக்தர்களையும் ஆசார்யர்களையும் பரமபக்தியோடு நன்றாக ஸேவிக்கவேண்டும்’ என்கிற பரத்வாஜவசனத்தையொட்டி,

மாமுனிகள் ஸ்ரீரங்கநாதனை ஸேவிக்கும்போது ஆண்டாள் தொடக்கமான பக்தஜநங்களையும் ஸேனைமுதலியார்

தொடக்கமான பரிவாரங்களையும் நன்றாக ஸேவித்தது இதனால் கூறப்பட்டது.

ஆண்டாள் ‘அஹம் ஸிஷ்யா ச தாஸீ ச பக்தா ச புருஷோத்தம!’ (புருஷ ஸ்ரேஷ்டரே! நான் உமக்கு ஸிஷ்யையாகவும்,

அடியவளாகவும், பக்தையாகவும் இருக்கிறேன்) என்று வராஹப் பெருமாளிடம் விண்ணப்பித்த

பூமிதேவியின் அவதாரமாகையால் பக்தையாகவும், ஆழ்வார்கள் கோஷ்டியில் சேர்ந்தவளாகையால் குர்வீயாகவும் ஆவது காணத்தகும்.

ஸ்ரீபூமிநீளாதேவிகள், பெரிய பிராட்டியாராகிய ஸ்ரீரங்கநாச்சியார் இவர்கள் பத்நி வர்க்கத்தில் சேர்ந்தவர்கள்.

ஆக மணவாளமாமுனிகள் பத்நீ பரிஜந குருஜநஸஹிதரான ஸ்ரீரங்கநாதனை மங்களாசாசனம் செய்து வருவதையும்

தாம் அம்மாமுனிகளை அவர்களெதிரில் தினந்தோறும் ஸேவிப்பதையும் இதனால் கூறினாராயிற்று. (24)

——————–

மங்களாசாசனம் க்ருத்வா தத்ர தத்ர யதோசிதம் |
தாம்நஸ் தஸ்மாத்விநிஷ்க்ரம்ய ப்ரவிஸ்ய ஸ்வம் நிகேதநம் || 25

பதவுரை:-

தத்ர தத்ர – ஆண்டாள் தொடங்கி பரம்பதநாதன் முடிவான அந்தந்த அர்ச்சாவதார விஷயங்களில்,

மங்கள் ஆஸாஸநம் – (உள்ள குறைகளனைத்தும் நீங்கப்பெற்று) மேன்மேலும் எல்லையில்லாத மங்களங்கள் (நன்மைகள்) உண்டாக வேணுமென்னும் ப்ரார்த்தனையை,

யதோசிதம் – அவ்வவ்விஷயங்களில் தமக்கு உண்டான ப்ரீதிக்குத் தக்கபடி,

க்ருத்வா – செய்துவிட்டு ,

தஸ்மாத் தாம்ந – அந்த ஸந்நிதியிலிருந்து,

விநிஷ்க்ரம்ய – வருந்திப்புறப்பட்டருளி,

ஸ்வம்நிகேதநம் – தம்முடையதான மடத்திற்குள்,

ப்ரவிஸ்ய – ப்ரவேஸித்து (உட்புகுந்து)

கருத்துரை:-

மாமுனிகள் ஆண்டாள் முதலியவர்களின் ஸந்நிதிக்குச் செல்வது, அவர்களைச் சேவித்துத்

தாம் ஒரு பலனைப் பெறுவதற்காக அல்லாமல், அவர்கள்தமக்கு மங்களாஸாஸநம் செய்வதற்காகவேயாகையால்,

‘அவர்களைச் சேவித்து’ என்னாமல், அவர்களுக்கு மங்களாஸாஸனம் செய்து என்றார்.

மங்களாஸாஸநம் செய்வதும் முக்யமாக எம்பெருமானார்க்கேயாகையாலும்,

அவருடைய உகப்புக்காகவே மற்றுள்ளவர்களுக்கு மங்களாஸாஸநம் செய்வதனாலும்

மங்களாஸாஸநங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நெஞ்சில் கொண்டு, ‘

யதோசிதம்’ (அவரவர்களுக்குத் தக்கபடி) என்றருளிச்செய்தாரானார்.

‘அநக்நி: அநிகேத: ஸ்யாத்’ (ஸந்யாஸி அக்நியில் ஹோமம் செய்வதும், ஸ்திரமான வீடும் இல்லாதிருக்கக்கடவன்) என்று

ஸாஸ்த்ர விதியிருக்கச் செய்தேயும் ‘

ஸ்வம் நிகேதநம் ப்ரவிஸ்ய’ (தமது மடத்திற்கு எழுந்தருளி) என்று அவர் தமதாக ஒரு இருப்பிடத்தை இங்கே குறிப்பிட்டது

ஸ்ரீரங்கநாதன் மாமுனிகளுக்கென்னவே ஓரிடத்தை நியமித்து அதில் ஸ்திரமாக அவரை எழுந்தருளியிருக்கும்படி

ஆணையிட்டருளியதனால் குற்றத்தின் பாற்படாதென்று கருதவேண்டும்.

‘விநிஷ்க்ரம்ய’ = (ஸ்ரீரங்கநாதன் ஸந்நிதியிலிருந்து வருந்தி மிகமுயன்று புறப்பட்டு) என்றது,

அவ்வவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமையால், மடத்தில் செய்யவேண்டிய திருவாராதநம், க்ரந்த காலக்ஷேபம்

முதலிய கார்யங்களுக்காகத் திரும்பி எழுந்தருளவேண்டிய நிர்பந்தத்தைக் குறிப்பதாகக் கொள்க. (25)

—————-

அத ஸ்ரீஸைலநாதார்யநாம்நி ஸ்ரீமதி மண்டபே |
ததங்க்ரி பங்கஜத்வந்த்வச்சாயா மத்யநிவாஸிநம் || 26

பதவுரை:-

அத – மடத்துக்கு எழுந்தருளியபின்பு,

ஸ்ரீஸைலநாதார்ய நாம்நி – ஸ்ரீஸைலநாதர் (திருமலையாழ்வார்) என்னும் தம்மாசார்யராகிய திருவாய்மொழிப்பிள்ளையின் திருநாமமுடையதாய், 

ஸ்ரீமதி – மிக்க ஒளியுடையதான,

மண்டபே – மண்டபத்தில்,

தத் அங்க்ரி பங்கஜ த்வந்த்வச்சாயா மத்ய நிவாஸிநாம் – சித்ரரூபமாக எழுந்தருளியிருக்கும் அந்தத் திருவாய்மொழிப்

பிள்ளையுடைய திருவடித்தாமரையிணையின் நிழல் நடுவே எழுந்தருளியிருக்கிற,

(மாமுனிகளைத் தொழுகிறேனென்று மேல் ஸ்லோகத்தில் இதற்கு அந்வயம்)

கருத்துரை:-

தமது மடத்திலுள்ள காலக்ஷேப மண்டபத்திற்குத் ‘திருவாய்மொழிப் பிள்ளை’ என்ற தமது குருவின் திருநாமம் சாத்தி

அதில் சித்ரவுருவாக அவரை எழுந்தருளப் பண்ணினார் மாமுனிகள்.

அந்தச் சித்திரத்தின் திருவடி நிழலில் தாம் வீற்றிருக்கிறார் என்க.

‘ஸ்ரீமதி மண்டபே’ மிக்க ஒளியுடைய மண்டபத்தில். இங்கு மண்டபத்திற்குக்கூறிய ஒளியாவது –

பிள்ளைலோகாசார்யர் முதலிய பூர்வாசார்யர்களுடைய திருமாளிகையிலுள்ள ஸுத்தமான மண்ணைக் கொண்டு வந்து

சுவர் முதலியவற்றில் பூசியதனாலுண்டான ஸுத்தியேயாகும்.

மஹான்கள் எழுந்தருளியிருந்த ஸ்தாநங்களில், அவர்களின் திருவடிகள் பட்ட மண் பரிஸுத்தமன்றோ ?

அதனாலன்றோ இம்மண்டபத்திற்கு ஸுத்தியேற்படுவது.

இங்கு ‘ததங்க்ரி பங்கஜத்வந்த்வச்சாயா மத்ய நிவாஸிநாம்’ என்று ஷஷ்டி பஹுவசநாந்தமான பாடமும் காண்கிறது.

அப்பாடத்திற்கு – அத்திருவாய்மொழிப்பிள்ளையின் திருவடிச்சாயையின் நடுவில் (தம்மைப்போல்)

எழுந்தருளியிருக்கிற தமது ஸிஷ்யர்களுக்கு என்பது பொருள்.

இதற்கு மேல் ஸ்லோகத்தில் உள்ள ‘திவ்யப்ரபந்தாநாம் ஸாரம் வ்யாசக்ஷாணம் நமாமி தம்’

(திவ்யப்ரபந்தங்களின் ஸாரார்த்தங்களை உபதேஸித்துக் கொண்டிருக்கும் அம்மாமுனிகளை வணங்குகிறேன்)

என்றதனோடு அந்வயம் கொள்ளவேண்டும். (26)

————-

தத்த்வம் திவ்யப்ரபந்தாநாம் ஸாரம் ஸம்ஸாரவைரிணாம் |
ஸரஸம் ஸரஹஸ்யாநாம் வ்யாசக்ஷாணம் நமாமி தம் || 27

பதவுரை:-

ஸம்ஸார வைரிணாம் – ஸரீரஸம்பந்த ரூபமான ஸம்ஸாரத்தைப் பகைக்குமவையாய் (போக்கடிக்குமவையாய்)

ஸரஹஸ்யாநாம் – திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் ஆகிய மூன்று ரஹஸ்யங்களின் பொருள்களோடு கூடியவைகளுமான,

திவ்யப்ரபந்தாநாம் – ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்களினுடைய,

ஸாரம் – ஸம்ஸாரத்தைப் போக்கத்தக்க மிக்க பலமுடைய,

தத்த்வம் – ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மைநிலையான ‘ஆசார்யனே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும்’ என்னும் பொருளை,

ஸரஸம் – மிக்க இனிமையோடு கூடியதாக,

வ்யாசக்ஷாணம் – ஐயந்திரிபற விவரித்தருளிச்செய்கிற,

தம் – அம்மணவாளமாமுனிகளை,

நமாமி – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.

கருத்துரை:-

திவ்யப்ரபந்தங்கள் ஸரீரஸம்பந்தரூபமான ஸம்ஸாரத்தைப் போக்கடிப்பன என்ற விஷயம்

‘மாறன் விண்ணப்பம் செய்த சொல்லார் தொடையல் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்

பொல்லா வருவினை மாய வன்சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே’ (திருவிருத்தம்-100)

‘செயரில் சொல்லிசைமாலை ஆயிரத்துளிப்பத்தால் வயிரம் சேர் பிறப்பறுத்து வைகுந்தம் நண்ணுவரே’ (திருவாய் 4-8-11)

முதலிய பலஸ்ருதிப் பாசுரங்களில் காணலாகும்.

முற்கூறிய ரஹஸ்யங்களுக்கும் – எம்பெருமான் ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவான் என்பது

மேலெழுந்தவாறு தோன்றும் பொருளாகும்.

சிறிது ஆராய்ந்தவாறே, பாகவதர்களே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவர்கள் என்பது தோன்றும்.

மேலும் சற்று விமர்ஸித்தால் ஆசார்யனே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவார் என்பது புலப்படும்.

ஆக, ரஹஸ்யத்ரயத்துக்கும் முக்கிய நோக்கம் மூன்றாம் பொருளாகிய ஆசார்யனிடத்திலேயே

ஆகுமென்பது ஆசார்ய நிஷ்டையில் ஊன்றிய ஸ்ரீமதுரகவிகள் முதலிய மஹான்களின் துணிபாகும்.

இங்கு மணவாளமாமுனிகள் யதீந்த்ரப்ரவணர் – எம்பெருமானாரிடத்தில் ஊன்றியவராகையால்,

அவரையே ஸேஷியாகவும், உபாயமாகவும், ப்ராப்யமாகவும், ஸிஷ்யர்களுக்கு திவ்யப்ரபந்தங்களின்

ஸாரார்த்தமாக உபதேஸித்தாரென்பது அறியத்தக்கது.

ஆசார்யர்களில் எம்பெருமானாரே உயர்ந்தவரென்று முன்பே கூறப்பட்டது இங்கு நினைக்கத்தகும்.

ஸேஷி – தலைவன்; ப்ராப்யன் – அடையத்தகுந்தவன்; உபாயம் – நாம் தலைவனை அடைவதற்குத்தக்க கருவி.

நாம் கைங்கர்யம் செய்யத்தக்க தலைவர் ஆசார்யரேயாகையால், அதற்காக அடையத்தக்க (ப்ராப்யரான)

வேறொரு உபாயத்தைத் தேடாமல் அவ்வாச்சார்யரையே உபாயமாக பற்றவேணுமென்பது

ரஹஸ்யத்ரயத்தின் ஸாரமான பொருளாகும்.

இதையே மாமுனிகள் ஸிஷ்யர்களுக்கு உபதேஸித்ததாக இந்த ஸ்லோகத்தில் கூறினாராயினார்.

இப்படி உயர்ந்ததோர் அர்த்தத்தை உபதேஸித்த மணவாளமாமுனிகளுக்குத் தலையல்லால்

கைம்மாறில்லாமையாலே, தலையால் வணங்குதலை ‘தம் நமாமி’ – அவரை வணங்குகிறேனென்றதாகக் கொள்க. (27)

————-

ததஸ்வசரணாம்போஜ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸௌரபை: |
பாவநைரர்த்திநஸ்தீர்த்தைபாவயந்தம் பஜாமி தம் || 28

பதவுரை:-

தத: – திவ்யப்ரபந்தங்களின் ஸாரப்பொருளை உபதேஸித்த பின்பு,

ஸ்வ சரண அம்போஜ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸௌரபை: – தமது திருவடித்தாமரைகளின் ஸம்பந்தத்தினால் மிக்க நறுமணத்தையுடையதும்,

பாவநை: – மிகவும் பரிஸுத்தமானதுமாகிய,

தீர்த்தை: – ஸ்ரீபாததீர்த்தத்தினால் – ஸ்ரீபாததீர்த்தத்தை உட்கொள்ளும்படி கொடுப்பதனால்,

அர்த்திந: – ஸ்ரீபாததீர்த்தத்தைக் கொடுக்கும்படி ப்ரார்த்திக்கிற ஸிஷ்யர்களை,

பாவயந்தம் – உய்யும்படி செய்யாநின்ற,

தம் – அந்த மணவாளமாமுனிகளை,

பஜாமி – ஸேவிக்கிறேன்.

கருத்துரை:-

திவ்யப்ரபந்த ஸாரார்த்தங்களை உபதேஸித்தபிறகு, உபதேஸம் பெற்ற ஸிஷ்யர்கள் ப்ரார்த்தித்தார்களாகையால்

தம்முடைய ஸ்ரீபாததீர்த்தத்தை அவர்களுக்குத் தந்து உட்கொள்ளச்செய்து

அவர்களுக்கு ஸத்தையை உண்டாக்கினார் மாமுனிகள் – என்கிறார் இதனால்.

எம்பெருமானார் இப்போது எழுந்தருளியிராமையால், அவர் தமக்குக் கருவியாகத் தம்மை நினைத்து

தமது ஸ்ரீபாததீர்த்தத்தை ஸிஷ்யர்களுக்குக் கொடுத்தருளியதனால், இது மாமுனிகளுக்குக் குற்றமாகாது.

ஸிஷ்யர்கள் மிகவும் நிர்பந்தமாக வேண்டிக்கொண்டது இதற்கு முக்கிய காரணமாகும்.

மாமுனிகளின் திருவடிகள் தாமரை போன்றவையாகையால் அதன் ஸம்பந்தத்தினால் தீர்த்தத்திற்கு

நறுமணமும், தூய்மையும் மிக்கதாயிற்றென்க.

‘தீர்த்தை’ (தீர்த்தங்களாலே) என்ற பஹுவசநத்தினால்

ஸ்ரீபாததீர்த்தம் மூன்று தடவைகள் கொடுத்தாரென்பது ஸ்வரஸமாகத் தோன்றுகிறது.

ஸ்ரீபாததீர்த்தம் உட்கொள்ளும் ப்ரகரணத்தில் ‘த்ரி பிபேத்’ (மூன்று தடவைகள் ஸ்ரீபாததீர்த்தம் பருகக்கடவன்) என்ற

ஸ்ம்ருதி வசநம் இங்கு நினைக்கத்தக்கது.

சிலர் ஸ்ரீபாததீர்த்தத்தை இரண்டு தடவைகள் கொடுக்கிறார்கள்.

‘எல்லார்க்கும் தூய்மையளிக்குமதான பாகவத ஸ்ரீபாததீர்த்தபாநம் (பருகுதல்) ஸோமபாந ஸமமாகச் சொல்லப்பட்டுள்ளது’

என்று உசந ஸ்ம்ருதியில், ஸ்ரீபாததீர்த்தபாநத்தை – யாகத்தில் ஸோமலதா-ரஸபாந ஸமாநமாக

இரண்டு தடவை பருகத்தக்கதாகக் கூறப்பட்டிருப்பது இதற்கு ப்ரமாணமாகும்.

ஆக, இரண்டு வகையான முறைகளும் ஸாஸ்த்ர ஸம்மதமாகையால்

அவரவர்களின் ஸம்ப்ரதாயப்படி அனுஷ்டிக்கக் குறையில்லை.

பாரத்வாஜ ஸம்ஹிதையில் ஸிஷ்யன் ஆசார்யனிடம் உபதேஸம் பெறுதற்கு, ஆசார்ய ஸ்ரீபாததீர்த்தத்தை ஸ்வீகரிப்பதை

அங்கமாகக் கூறியுள்ளதனால், முன் ஸ்லோகத்தில் திவ்யப்ரபந்தஸாரார்தோபதேஸத்தை ப்ரஸ்தாவித்த பின்பு

இதில் ஸ்ரீபாததீர்த்தபாநத்தை கூறினாராயிற்று.

முன்பு உபதேஸம் செய்தருளியதற்காக அதில் ஈடுபட்டு ‘நமாமி’ என்றவர்,

இப்போது ஸ்ரீபாத தீர்த்தம் ஸாதித்ததில் மனங்கனிந்து ‘பஜாமி’ என்கிறார்;

வேறொன்றும் செய்ய இயலாமையாலும், மாமுனிகளும் வேறொன்றை எதிர்பாராத விரக்தராகையாலும் என்க. (28)

—————

ஆராத்ய ஸ்ரீநிதிம் பஸ்சாதநுயாகம் விதாய  |
ப்ரஸாதபாத்ரம் மாம் க்ருத்வா பஸ்யந்தம் பாவயாமி தம் || 29

பதவுரை:-

பஸ்சாத் – பின்பு (மாத்யாஹ்நிகாநுஷ்டாநம் நிறைவேற்றிய பின்பு),

ஸ்ரீநிதிம் – திருவுக்கும் திருவான (தம்முடைய திருவாராதனப் பெருமாளாகிய) அரங்கநகரப்பனை,

ஆராத்ய – மிக்க பக்தியுடன் ஆராதித்து,

அநுயாகம் – பகவான அமுது செய்த ப்ரஸாதத்தை ஸ்வீகரித்தலாகிய அநுயாகத்தை,

விதாய – செய்து, மாம் – இதற்கு முன்பு இந்த ப்ரஸாதத்தில் பராமுகமாக இருந்த அடியேனை,

ப்ரஸாதபாத்ரம் க்ருத்வா – தாம் அமுது செய்த ப்ரஸாதத்துக்கு இலக்காகச் செய்து (தாம் அமுது செய்து மிச்சமான ப்ரஸாதத்தை அடியேனும் ஸ்வீகரிக்கும்படி செய்து)

பஸ்யந்தம் – அடியேனைக் கடாக்ஷித்துக் கொண்டிருக்கிற

தம் – அந்த மாமுனிகளை,

பாவயாமி – ஸதா த்யாநம் செய்கிறேன்.

கருத்துரை:-

ஆராத்ய – நன்றாக பூசித்து, த்ருப்தியடையும்படி செய்து என்றபடி,

“இளவரசனையும் மதம்பிடித்த யானையையும் நம் அன்புக்கு விஷயமாய்ப் பிற தகுதிகளையும் பெற்ற விருந்தினனையும்

எங்ஙனம் (அன்புடனும் அச்சத்துடனும்) பூசிக்கிறோமோ, அங்ஙனமே பகவானையும் பூசிக்கவேண்டும்.

பதிவிரதை தனது அன்பிற்குரிய கணவனையும், தாய் முலைப்பாலுண்ணும் தன் குழந்தையையும்,

ஸிஷ்யன் தன்னாசார்யனையும், மந்திரமறிந்தவன் தான் அறிந்த மந்த்ரத்தையும்

எங்ஙனம் மிகவும் அன்புடன் ஆதரிப்பார்களோ அங்ஙனம் எம்பெருமானையும் ஆதரிக்கவேண்டும்” என்று

சாண்டில்யஸ்ம்ருதியில் கூறியபடியே அரங்கநகரப்பனை மாமுனிகள் ஆராதித்தாரென்றபடி.

அநுயாகமாவது – யாகமாகிற பகவதாரதனத்தை அநுஸரித்து (பகவதாராதனத்திற்குப் பின்பு) செய்யப்படுகிற

பகவத் ப்ரஸாத ஸ்வீகாரமாகிய போஜனமாகும்.

‘பரிசேஷனம் செய்து விட்டு ப்ராணன் அபாநன் வ்யாநன் உதாநன் ஸமானனென்னும் பெயர்களைக்

கொண்ட எம்பெருமானை உத்தேஸித்து அந்நத்தை ஐந்து ஆஹூதிகளாக வாயில் உட்கொள்ள வேணும்,

பின்பு உண்ணவேணும்’ என்று பரத்வாஜர் கூறியது நினைக்கத்தக்கதிங்கு.

சாண்டில்யரும் ‘நம்முடைய ஹ்ருதயத்தில் உள்ள எம்பெருமானை த்யாநம் செய்து, பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரித்து

ப்ராணாய ஸ்வாஹா முதலிய மந்த்ரங்களை உச்சரித்துக் கொண்டே நமது வாயில் அந்நத்தை ஹோமம் செய்யவேண்டும்.

பின்பு எம்பெருமானை நினைத்துக்கொண்டே சிறிதும் விரைவின்றிக்கே, அந்நத்தை நிந்தியாமல்

(உப்புக்குறைவு, புளிப்பதிகம் காரமேயில்லை என்றிவ்வாறாகக் குற்றங்கூறாமல்) உண்ண வேண்டும்.

ஸுத்தமானதும் நோயற்ற வாழ்வுக்கு உரியதும் அளவுபட்டதும் சுவையுடையதும் மனத்துக்குப் பிடித்ததும்

நெய்ப்பசையுள்ளதும் காண்பதற்கு இனியதும் சிறிது உஷ்ணமானதுமான அந்நம் புத்திமான்களாலே

உண்ணத்தக்கது’ என்று கூறியது கண்டு அநுபவிக்கத்தக்கது.

‘அநுயாகம் விதாய ச’ என்ற சகாரத்தினாலே (அநுயாகத்தையும் செய்து என்று உம்மையாலே)

மணவாளமாமுனிகள் தாம் அமுது செய்வதற்கு முன்பு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுது செய்வித்தமை கொள்ளத்தக்கது.

‘பெருமாளுக்கு அமுது செய்வித்த பிறகு, பெருமாள் திருப்பவளத்தின் ஸம்பந்தத்தினால் சுவை பெற்றதும்

நறுமணம் மிக்கதும் ஸுத்தமானதும் மெத்தென்றுள்ளதும் மனத்தூய்மையை உண்டாக்குமதும்

பக்தியோடு பரிமாறப்பட்டதுமான பகவத் ப்ரஸாதத்தினாலே பாகவதர்களான ஸ்ரீவைஷ்ணவர்களை

மிகவும் ஊக்கத்தோடு த்ருப்தியடையச் செய்தார்.

பிறகு தாம் அமுது செய்தார்’ என்று இவ்வெறும்பியப்பாவே தாம் அருளிய வரவரமுநி காவ்யத்தில்

குறித்துள்ளமை இங்கு கருதத்தக்கதாகும்.

மாம் – அடியேனை. அதாவது இதற்கு முன்பு மாமுனிகள் தம்மை தமது மடத்தில் அமுது செய்யும்படி நியமித்தபோது,

‘யதியின் அந்நமும் யதி அமுது செய்த பாத்ரத்திலுள்ள அந்நமும் உண்ணக்கூடாது’ என்ற

ஸாமாந்ய வசநத்தை நினைத்து துர்புத்தியாலே அமுது செய்ய மறுத்து,

இப்போது நல்லபுத்தி உண்டாகப்பெற்ற அடியேனை என்றபடி.

பஸ்யந்தம் பாவயாமி – பார்த்துக்கொண்டேயிருக்கிற மாமுனிகளை த்யானிக்கிறேன்.

முன்பு மறுத்துவிட்ட இவர் தமக்கு இப்போது ப்ரஸாதத்தை ஸ்வீகரிக்கும்படியான பெருமை ஏற்பட்டது எங்ஙனம் ?

என்று ஆஸ்சர்யத்தோடு தம்மையே பார்த்துக்கொண்டிருக்கிற மாமுனிகளை,

தம்மைத் திருத்தின பெருந்தன்மைக்காக எப்போதும் த்யாநிக்கிறேன் என்றபடி.

ஆகையால் ‘யதியின் அந்நம் உண்ணத்தக்கதன்று’ என்று ஸாஸ்த்ரம் மறுத்தது –

அவைஷ்ணவ யதியின் அந்நத்தைப் பற்றியது என்று எண்ணுதல் வேண்டும். (29)

————–

ததசேதஸ் ஸமாதாய புருஷே புஷ்கரேக்ஷணே |
உத்தம்ஸித கரத்வந்த்வம் உபவிஷ்டமுபஹ்வரே || 30

பதவுரை:-

தத: – அமுதுசெய்த பிறகு,

புஷ்கர ஈக்ஷணே – தாமரைக் கண்ணனாகிய,

புருஷே – பரம புருஷணான எம்பெருமானிடத்தில்,

சேத: – தமது மநஸ்ஸை,

ஸமாதாய – நன்றாக ஊன்றவைத்து,

உத்தம் ஸிதகரத்வந்த்வம் – ஸிரஸ்ஸின்மேல் வைக்கப்பட்ட இரண்டு கைகளை (கைகூப்புதலை) உடையதாக இருக்கும்படி,

உபஹ்வரே – தனியடத்தில்,

உபவிஷ்டம் – (பத்மாஸநமாக யோகாப்யாஸத்தில்) எழுந்தருளியிருக்கிற – மணவாளமாமுனிகளை ஸேவிக்கிறேன்

என்று 31ஆம் ஸ்லோகத்துடன் அந்வயம்.

கருத்துரை:-

அநுயாகத்திற்குப் (போஜனத்திற்குப்) பின்பு யோகம் – பரமாத்ம்த்யாநம் செய்ய வேண்டுமென்று

ஸாஸ்த்ரம் விதித்துள்ளதனால் அதைச் சொல்லுகிறார்.

யோகமானது ஆராதநம் போல் மூன்று வேளைகளிலும் செய்ய வேண்டுமென்று மேல் சொல்லப்போவது காண்க.

யோகமாவது யோகிகள் தமது ஹ்ருதயகமலத்தில் திருமேனியோடு கூடி எழுந்தருளியுள்ள எம்பெருமானை,

அசையாத மனதுடன் நன்றாக த்யாநித்தலாகும்.

‘எம்பெருமான் தேவர், மனிதர், விலங்கு, தாவரம் ஆகிய ஜீவாத்மாக்களில் வ்யாபித்திருக்கிறான்.

எல்லாவிடத்திலும் வ்யாபித்துள்ளமையால் அந்நிலையே விஷ்ணுவின் அந்தர்யாமி நிலையாகும்.

அவ்வெம்பெருமானே யோகம் செய்பவர்களின் ஹ்ருதய கமலத்திலோ என்றால்

திருமேனியோடு எழுந்தருளியிருக்கிறான்’ என்று பராஸரர் பணித்தமை காண்க.

‘யோகிகளின் ஹ்ருதயத்தில் உள்ள பரமாத்மாவும் ஸூர்யமண்டலத்திலுள்ள பரமாத்மாவும் ஒருவனே’ என்று

தைத்திரீயோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளதனாலும்,

ஸூர்யமண்டலத்திலுள்ள பரமாத்மாவுக்குப் புண்டரீகாக்ஷத்வம் (தாமரைக் கண்ணனாந் தன்மை)

சாந்தோக்யத்தில் கூறப்பட்டுள்ளதனாலும்

‘புருஷே புஷ்கரேக்ஷணே’ என்று இங்கு மாமுனிகளாகிய யோகியின் ஹ்ருதயத்திலுள்ள

பரமபுருஷனுக்குப் புண்டரீகாக்ஷத்வம் கூறப்பட்டதென்க.

புரி ஸேதே – யோகி ஸரீரத்தில் வஸிக்கிறான் என்ற வ்யுத்பத்தியினால் புருஷஸப்தம் பரமபுருஷனாகிய

விஷ்ணுவைக் குறிக்குமதாகும்.

யுஜி – ஸமாதௌ என்ற தாதுவினடியாகப் பிறந்த யோக ஸப்தம் ஸமாதியாகிற பரமாத்மத்யாநத்தைத் தெரிவிக்கிறது. (30)

————–

அப்ஜாஸநஸ்தமவதாதஸுஜாத மூர்த்திம்
ஆமீலிதாக்ஷமநுஸம்ஹித மந்த்ரரத்நம் |
ஆநம்ரமௌளிபிருபாஸிதமந்தரங்கை:
நித்யம் முநிம் வரவரம் நிப்ருதோ பஜாமி || 31

பதவுரை:-

அப்ஜாஸநஸ்தம் – பரமாதமத்யாநத்திற்காகப் பத்மாஸநத்தில் எழுந்தருளியிருப்பவரும்,

அவதாத ஸுஜாத மூர்த்திம் – பாலைத்திரட்டினாற்போல் வெளுத்து அழகியதான திருமேனியை உடையவரும்,

ஆமீலித அக்ஷம் – (கண்ணுக்கும் மனத்துக்கும் இனிய எம்பெருமான் திருமேனியைத் த்யாநம் செய்வதனாலே) சிறிதே மூடிய திருக்கண்களையுடையவரும்,

அநுஸம்ஹித மந்த்ரரத்நம் – ரஹஸ்யமாக மெல்ல உச்சரிக்கப்பட்ட மந்த்ரரத்நமாகிய த்வயத்தையுடையவரும்,

ஆநம்ர மௌளிபி: – நன்றாக வணங்கிய தலைகளை உடையவரான,

அந்தரங்கை: – மிகவும் நெருங்கிய கோயிலண்ணன் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா முதலிய ஸிஷ்யர்களாலே,

உபாஸிதம் – ஸதா ஸேவிக்கப்படுமவருமான, வரவரம் முநிம் – அழகியமணவாளமாமுநிகளை,

நிப்ருதஸ்ஸந் – ஊக்கமுடையவனாய்க் கொண்டு, 

நித்யம் பஜாமி – எப்போதும் ஸேவிக்கிறேன்.

கருத்துரை:-

‘அதிகமான காற்றில்லாததும் அழகியதும் மேடுபள்ளமில்லாததுமானதோர் இடத்தில்

முதலில் (மரத்தாலான மணையை இட்டு) அதன்மேல் தர்ப்பங்களையும், அதன்மேல் மான்தோலையும்,

அதன்மேல் வஸ்த்ரத்தையும் விரித்து பத்மாஸநத்திலுள்ளவனாய் அவயங்களை நேராக வைத்துக்கொண்டு

யோகம் செய்ய வேண்டும்’ என்று விஸ்வாமித்ரர் கூறியது காணத்தக்கது.

மூக்கின் நுனியை இருகண்களாலும் பார்த்துக்கொண்டு யோகம் செய்யவேண்டுமென்று தர்ம

ஸாஸ்த்ரங்களில் கூறியுள்ளதனையொட்டி, சிறிதே மூடிய திருக்கண்களையுடைமை மாமுனிகளுக்குக் கூறப்பட்டது.

‘ஸந்தோஷத்தினால் குளிர்ந்த கண்ணீர் பெருக்குமவனும், மயிர்க்கூச்செறியப்பெற்ற தேஹத்தையுடையவனும்,

பரமாத்மாவின் குணங்களால் ஆவேஸிக்கப்பட்டவனுமாகிய (பரமாத்மகுணங்களை த்யாநம் செய்யுமவனுமாகிய)

யோகியானவன் உடலெடுத்த அனைவராலும் ஸதா காணத்தக்கவனாகிறான் (விஷ்ணுதத்வம்) என்று

கூறுகிறபடியினால், ஸிஷ்யர்களால் ஸேவிக்கப்பட்ட மணவாளமாமுனிகளை

எப்போதும் ஸேவிக்கிறேன்’ என்று கூறினாரென்க. (31)

—————-

ததஸுபாஸ்ரயே தஸ்மிந் நிமக்நம் நிப்ருதம் மந: |
யதீந்த்ரப்ரவணம் கர்த்தும் யதமாநம் நமாமி தம் || 32

பதவுரை:-

தத: யோகமாகிற பகவத்த்யாநம் செய்தபிறகு,

தஸ்மிந் – முற்கூறிய,

ஸுபாஸ்ரயே – யோகிகளால் த்யாநிக்கப்படும் பரமபுருஷனிடத்தில்,

நிமக்நம் – மூழ்கியதாய்,

நிப்ருதம் – அசையாது நிற்கிற,

மந: – தனது மனத்தை,

யதீந்த்ரப்ரவணம் – எதிராஜரான எம்பெருமானாரிடத்தில் மிக்க பற்றுடையதாய் அசையாமல் நிற்றலையுடையதாக,

கர்த்தும் – செய்வதற்கு,

யதமாநம் – முயற்சி செய்து கொண்டிருக்கிற,

தம் – அந்த மணவாளமாமுனிகளை,

நமாமி – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.

கருத்துரை:-

இங்கு ‘யதீந்த்ரப்ரவணம் கர்த்தும்’ என்பதற்கு ‘யதீந்த்ரப்ரணமேவ கர்த்தும்’ என்பது பொருள்.

அதாவது முன்பு ‘யதீந்த்ரசரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா’ (16) என்று எம்பெருமானார் திருவடியிணையை

மனத்தினால் பக்தியோடு நினைத்துக்கொண்டே பகவதபிகமநம் முதலாக எல்லாவநுஷ்டானங்களையும்

மாமுனிகள் நிறைவேற்றிவருவதாகக் கூறியுள்ளபடியால்,

எம்பெருமானாரையும் அவருக்கு இஷ்டமான எம்பெருமானையும் நினைத்துக்கொண்டிருந்த தமது மநஸ்ஸை

‘எம்பெருமானாரையே நினைப்பதாகச் செய்வதற்கு’ என்பது கருத்தென்ற்படி.

ஸுபாஸ்ரயமென்றது – த்யாநம் செய்பவனுடைய ஹேயமான து:க்காதிகளைப் போக்குவதும்,

அவனுடைய மனத்தைத் தன்னிடம் இழுத்து நிறுத்துவதுமான எம்பெருமானுடைய திவ்யமங்களவிக்ரஹமாகும்.

இதனால் எறும்பியப்பா மாமுனிகளின் யதீந்த்ர ப்ராவண்யத்தை (சரமபர்வநிஷ்டையை) அநுஸந்தித்து

அவரை வணங்கினால், தமக்கும் சரமபர்வநிஷ்டை ஸித்திக்குமென்று கருதி

‘யதீந்த்ரப்ரவணம் கர்த்தும் யதமாநம் நமாமி தம்’ என்றருளினாராயிற்று.

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மாறன் பாப்பாவினம்-ஸ்ரீ திருக் குருகைப் பெருமாள் கவிராயர் —

April 30, 2022

ஸ்ரீ திருக் குருகைப் பெருமாள் கவிராயர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
ஸ்ரீ நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரி என்னும் ஊரில் பிறந்தவர்.
ஸ்ரீ நம்மாழ்வாரை ‘வேதம் தமிழ்ப்படுத்த மாறன்’ எனப் போற்றுவது வழக்கம்.
இந்த முறையில் இந்த மாறன் பெயரில் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் சில நூல்களை இயற்றியுள்ளார்.

மாறன் அலங்காரம் [1], (அணி)
மாறன் அகப்பொருள் [2],(பொருள்)
மாறன் பாப்பாவினம்,(யாப்பு)-என்னும் இலக்கண நூல்களும்,
திருக்குருகை மான்மியம் என்னும் இலக்கியமும் இவரால் செய்யப்பட்டவை. [3]

நம்பெருமாள் மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கியமும்
(நம்பெருமாள் என்பது திருவரங்கப் பெருமான்) இவரால் பாடப்பட்டுள்ளது. [4]

குருகைப்பிரான் என்னும் பெயர் நம்மாழ்வாரைக் குறிக்கும்.
இவரது குருகைப் பெருமாள் என்னும் பெயர் குருகைப்பிரான் என்னும் பெயரோடு தொடர்புடையது.

பாப்பாவினம் ஒரு பாட்டியல் இலக்கண நூல். இது பாக்களையும் பாவினங்களையும் பற்றிக் கூறுகிறது.
இதனாலேயே இதற்குப் பாப்பாவினம் (பா + பாவினம்) என்னும் பெயர் ஏற்பட்டது.
இதற்கு மாறன் பாப்பாவினம் என்ற பெயரும் வழங்குகிறது.
மாறனலங்காரம் (அணி),
மாறன் அகப்பொருள் (பொருள்) ஆகிய நூல்களை இயற்றிய
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரே இதனையும் இயற்றினார் என்பதே பெரும்பாலானோரின் கருத்து.
எனினும் இதனைக் காரி இரத்தின கவிராயர் என்பவர் இயற்றினார் என்ற கருத்தும் நிலவுகின்றது[1].
நூலாசிரியரின் ஏனைய இரண்டு நூல்களைப் போலவே இதுவும் வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வார் மீது பாடப்பட்டது.
இலக்கிய நூல்களை மட்டுமன்றி இலக்கண நூல்களையும் சமயப் பரப்புரைக்குப் பயன்படுத்த முடியும் என்பதற்கு,
வைணவத்தின் பெருமை கூறும் இந்நூல் சான்றாக விளங்குகிறது.

இலக்கியத்திலிருந்து எடுத்துக்காட்டுகளைக் கொடுத்து
அவற்றுக்கு இலக்கணம் கூறும் வகையில் அமைந்தது இந்நூல்.

வெண்பா,
ஆசிரியப்பா,
கலிப்பா,
வஞ்சிப்பா
என்னும் பாவகைகள் நான்கு,

வெண்பாவினம்,
ஆசிரியப்பாவினம்,
கலிப்பாவினம்,
வஞ்சிப்பாவினம் என்னும் அவற்றின் பாவினங்கள் நான்கு என்பவற்றுடன்
மருட்பாவுக்குமாக 135 எடுத்துக்காட்டுப் பாடல்கள் தரப்பட்டுள்ளன.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஐந்து பரிபாடல்களையும் சேர்த்து மொத்தம் 140 பாடல்கள் இந்நூலில் உள்ளன.
ஒவ்வொரு எடுத்துக்காட்டுப் பாடலுக்கும் பின்னர் அது பற்றிய விபரங்களைக் கொடுத்து
அவற்றின் இலக்கணத்தைக் கூறுவது இந்நூலின் சிறப்பு ஆகும்[2].

6.2 இலக்கணம்
வைணவப் புலவர்கள் இலக்கணம் எழுதித் தமிழ் இலக்கிய உலகத்தோடு இலக்கண உலகத்தையும் வளப்படுத்தியுள்ளனர்.
ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
மாறன் அலங்காரம், மாறன் அகப்பொருள், திருப்பதிக்கோவை, மாறன் பாப்பாவினம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

6.2.1 மாறன் அலங்காரம்
மாறன் அலங்காரம் செய்யுள் அணி வகை பற்றி விரித்துரைக்கின்றது.
மேற்கோள்களாகத் தம் வழிபடு தெய்வத்தோடு தொடர்புடைய செய்யுள்களைக் காட்டுவதன் மூலம்
சமயப் பணியோடு தமிழ்ப்பணியும் செய்துள்ள பாங்கை அறிய முடிகின்றது.
இந்நூலின் உரை ஆசிரியர் பேரை காரி ரத்தினக் கவிராயர்.

கைக்கு அணி ஈகை, கருத்துக்கு அணி ஞானம், சென்னிக்கு (தலை) அணி மாறன் சேவடி மேல் கொண்டு இறைஞ்சுதல்,
இனி வேறு அணி எதற்கு என நம்மாழ்வாரை வழிபடு கடவுளாகக் காட்டுகிறது, இந்நூல்.

6.2.2 மாறன் அகப்பொருள்
மாறன் அகப்பொருள் என்பது தமிழ் அகப்பொருள் இலக்கண நூல்களுள் வைணவரால் இயற்றப்பட்ட நூல்.
ஆசிரியரின் இயற்பெயர் சடையன். வழக்கப்படி மன்னர் அல்லது வள்ளல் முன்பு நூல் அரங்கேற்றம் செய்யப்படும்
இந்த முறையை மாற்றி, இந்நூல் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருப்பதி சீனிவாச அய்யர் முன்பு
கி.பி. 1522-இல் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் வழி இலக்கண நூலில் மேற்கோள் வடிவத்தில் சமயம் இடம்பெறத் தொடங்கிய முறையை அறிகின்றோம்.
எனவே சமயம் சார்ந்த ஒருவர் முன்பு அரங்கேறுவது அவசியமாகிவிட்டது என்பதைத் தெரிந்து கொள்கின்றோம்.

இந்நூலுக்கு மேற்கோள் நூல் அவர் இயற்றிய திருப்பதிக் கோவை ஆகும்.

6.2.3 மாறன் பாப்பாவினம்
பாவும், பா இனமும் பற்றிய நூல் ஆதலின் பாப்பாவினம் (பா+பாஇனம்) எனப் பெயர் பெற்றது.
இந்நூலில் உள்ள பாடல்கள் வைணவ சமயத்தின் பெருமையைப் பறை சாற்றுபவை; சமய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டவை.

இலக்கியம் மட்டுமன்றி, இலக்கணத்தின் வழியும் சமயப் பணி ஆற்ற முடியும், சமய வளர்ச்சிக்கு வித்திட முடியும்
என்பதற்குச் சான்றாக – ஆவணமாக – இந்நூலில் உள்ள 140 பாடல்கள் அமைந்துள்ளன.

6.2.4 திருப்பதிக் கோவை
திருவரங்கத்தமுதனார் பாடியுள்ள திருப்பதிக் கோவை வைணவத் திருத்தலங்களான 108 திவ்விய
தேசங்களை 40 கண்ணிகளில் தொகுத்துக் காட்டுகின்றது.

அப்பதிகளைக் ‘கண்டும், தொழுதும், வலம் செய்தும், சொல்லித் துதித்தும், முழுதும் உணர்ந்தும், ….
வேதம் உரைத்தும் வேத நிழலே சரணம் என நினைத்து வாழ்வார் பாதமே நமக்குக் கதி’ என்கிறது, இந்நூல்.

• மும்மணிக் கோவை
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் நம்மாழ்வார் மும்மணிக் கோவை இயற்றியுள்ளார்.
வேதாந்த தேசிகர் ஒரு மும்மணிக்கோவை அருளியுள்ளார்.

மாறன் என்பது பாண்டியர்பெயர்களுள் ஒன்று.
(சங்ககாலப் பாண்டிய அரசர்கள்
முடத்திருமாறன்பாண்டியன்
சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
மாறன் வழுதிகூட காரத்துத் துஞ்சிய மாறன்
வழுதிமாலைமாறன்நாயனார்
நின்றசீர் நெடுமாற நாயனார்
மாறவர்மன் என்ற பெயரில் பல பாண்டிய அரசர்கள் இருந்தனர்.)

மறன் பாப்பாவினம்-பா.குப்புசமி-உதவிப்பேராசிரியர்
தமிழ்ப்பிரிவு-தொலைதூரக் கல்வி இயக்ககம்-அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

தமிழ் இலக்கணத்தை ஐந்து பிரிவுகளாகப் பகுத்துள்ளனர். அவற்றுள் யாப்பிலக்கணமும் ஒன்று.
பிற இலக்கணம் போன்று யாப்பிலக்கண நூல் தமிழில் அவ்வளவாகத் தோன்றவில்லை
தொல்காப்பியர் செய்யுளியலில் தொடங்கிவைத்த யாப்பிலக்கணம் யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கல விருத்தி என்று
தனி இலக்கண நூல்கலாக உருவானது. பின்னர் வந்த பாட்டியல் நூல்கள் சில யாப்பிலக்கணத்தைக் கூறியுள்ளன.
அதன் பிறகு எந்த இலக்கணமும் யாப்புக்குத் தோன்றவில்லை.
நீண்ட இடைவெளிக்குப்பின் 16 ஆம் நூற்றாண்டில் மாறன் பாப்பாவினம் என்ற நூல் தோன்றியது.
இந்நூல் யாப்புக்குச் சான்றிலக்கியமாக அமைந்துள்ளது.
இதை இயற்றியவர் திருக்குருகை பெருமாள் கவிராயராவார்.
திருக்குருகை பெருமாள் என்பது நம்மாழ்வாருடைய வேறு பெயர்களுள் ஒன்று அவர் மீதுள்ள பற்றினால்
சடையன் என்ற தனது இயற்பெயரை திருக்குருகை பெருமாள் என்று மாற்றிக்கொண்டார்.

அகப்பொருளுக்குத் தஞ்சைவாணன் கோவை போன்று யாப்புக்கு ‘மாறன் பாப்பாவினம்’ அமைந்துள்ளது.
இலக்கணம் கூறாமல் அதற்கான சான்றிலக்கியங்கள் மட்டும் கோவையாகக் கூறப்பட்டுள்ளன.
யாப்பிலக்கணம் கூறும் வரிசப்படி இப்பாடல்களின் வரிசைமுறை அமைந்துள்ளன.
இந்நூலில் யாப்புக்கு மட்டுமின்றி அகம், புறம், அணியிலக்கணங்களும் சான்று பாடல்கள் ஆங்காங்கு கிடைக்கின்றன.

140 செய்யுள்களைக்கொண்டுள்ள இந்நூல் தொல்காப்பியரது செய்யுளியலை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது.
யாப்பருங்கலம் யாப்பருங்கல விருத்தி குறிப்புகளையும் ஆங்காங்கு தருகிறர் ஆசிரியர்.
பரிபாடலுக்குத் தொல்காப்பியம் மட்டுமே இலக்கணம் கூறியுள்ள நிலையில்
இந்நூலாசிரியர் பரிபாடலுக்கு 5 பாடல்கலைச் சான்றாகப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நூல் ஒரு முழுமையான வைணவ இலக்கியம்
எனவே பின் வந்த இலக்கணிகள் இந்நூல் பாடல்களையே மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர்.
இந்நூலைப் பயின்ற சைவ சமயத்தினர், சைவத்திலும் இப்படியொரு சான்றிலக்கியம் வேண்டுமென எண்ணி
குமர குருபரரின் துணை கொண்டு ‘சிதம்பரச் செய்யுட்கோவை’ என்ற நூலை உருவாக்கியுள்ளார்.
இதேபோல் தற்காலத்தில் இந்நூலை அடிப்படையாகக் கொண்டு வைணவ சமய கருத்துக்களை வெளிப்படுத்தும்
விதமாக ‘அரங்கன் செய்யுள் அமுதம்’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார் கவிஞர் சக்தி சரணன் அவர்கள்.

நூல் பொருள்
மறன் என்ற சொல் நம்மாழ்வாரைக் குறிக்கும் இந்த நூலில் திருமாலைப்பற்றியும் நம்மாழ்வாரைப்பற்றியும் பாடல்கள் அமைந்துள்ளன.
நம்மாழ்வாரைப்பற்றிய படல்கள் மிகுதியாக அமைந்துள்ளதால் இந்நூல் ‘மாறன் பாப்பாவினம்’ என்று பெயர் பெற்றுள்ளது.
முன்பு கூறியது போன்று இது யாப்பிலக்கணச் சான்றிலக்கியம் என்பதால்
நான்கு வகை பாக்களுக்கும் பாவினங்களுக்கும் சான்று கூறப்பட்டுள்ளது. இதனால் பாப்பாவினம் என்ற பெயரை வைத்துள்ளனர்.
இந்த நூலில் நம்மாழ்வாரது முதன்மைச் சீடரான மதுரகவியாழ்வாரைப் பற்றியும் இரண்டு பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
இலக்கணச் சான்றிலக்கியமாக அமைந்த இந்நூல் சிறந்த பக்தி நூலாகவும் சிறந்த இலக்கியச் சுவை மிகுந்த நூலாகவும் அமைந்துள்ளது.

இலக்கணச் சான்று
இந்த நூல் யாப்புக்குச் சான்றிலக்கியமாக இயற்றப்பட்டிருப்பினும் இதில் அமைந்துள்ள பாடல்கள்
அகத்திணைக்கும்,
புறத்திணைக்கும்,
அணியிலக்கணத்துக்கும் கூட சான்றுகளாக அமைந்துள்ளன.
இக்கூற்றினை நிறுவும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.
இனி இந்த மூன்று இலக்கணங்களுக்கும் ஒவ்வொரு சான்று பாடல்களையும்
அவை அவ்விலக்கணப்படி அமைந்துள்ள பாங்கினையும் ஆராயலாம்.

அகப் பொருள்
இந்த நூலில் வரும் 42 ஆம் பாடல் அகத்திணை களவியலில் வரும் பகற்குறி தொடர்பானதாக அமைந்துள்ளது.
துறை ‘வருத்தம் கூறி வரைவு கடாதல்’ என்பதாகும். பாடல் வருமாறு,

காமரு பல்மரம் கஞலிய பொதும்பர்
மாமரப் பணையின் மதுகரம் இழைத்த
முதிர்நறுந் தேறல் நொதுமலர் முன்னுபு
கொளத்தகு மரபின் குன்ற வான!
வரைதலின் வரையாது ஒழுகலின் இருவிரும்
மாறுபட்டு ஒழுகிய மதியினிர் ஆதலின்
திருமகிழ் மாறன் திருவருட்கு இலக்காய்
ஒழுகா மதியின் மறுகுவல் யானே.

இப்பாடல் நேரிசை ஆசிரியப்பாவுக்குச் சான்றிலக்கியமாகப் படைக்கப் பட்டுள்ளது.
இப்பாடல் அகத்திணையில் அமைந்துள்ளது. தலைவனிடம் தலைவியை மணக்கும்படி தோழி கூறுவதாக அமைந்துள்ளது.
தலைவியோடு பொருந்தாத மனம் கொண்டால் மட்டுமே திருமணத்தைத் தள்ளிப் போடமுடியும்
எனவே அத்தகு மனத்தினை ஒரு உவமை மூலம் விளக்குகிறார் கவிஞர்.
மாறனது அருளுக்கு ஆட்படாத உள்ளத்தினை எடுத்துக் காட்டுகிறார்.
உள்ளுறை உவமமும் இப்பாடலில் பயின்று வந்துள்ளது.
தேனீக்கள் தேடித் தொகுத்த தேனைப் பிறர் கவர்ந்து கொள்வது போல தலைவியை நீ மணக்காது விட்டுவிட்டால்
அவளது தாய்தந்தையர் பிறருக்குத் திருமணம் செய்யக்கூடும் என்பதை உள்ளுறை உவமையாகக் குறிப்பிடுகின்றார்.

புறப் பொருள்
இந்நூலில் வரும் 18 ஆம் பாடல் புறத்திணையில் வஞ்சித்திணையைச் சார்ந்த பாடலாகும்.
துறை மாறாயம் பெற்ற நெடுமொழி ஆகும். பாடலடிகள் வருமாறு,

நாராய ணாய நம என்றே நாவீறன்
ஓரா யிரம் என்று உரைத்த கவிப் பாவமுதம்
ஆராய் பவர்க்கடிமை ஆகினேன். வாரான் இங்கு
என்பால் ஒருநாள் யமன்.

இப்பாடல் இன்னிசை வெண்பாவுக்குச் சான்றிலக்கியமாகப் படைக்கப் பட்டுள்ளது.
இன்னிசை வெண்பா நான்கடியில் அமைந்து மூன்றாம் அடியில் தனிச்சொல் பெற்று வரவேண்டும் என்பது இலக்கணம்.
இந்த இலக்கணம் பொருந்தி இப்பாடல் அமைந்துள்ளது.
இப்பாடல் புறத்திணைக்குரிய வஞ்சித்திணைக்கும் உதாரணப்பாடலாக அமைந்துள்ளது.
இதனை ‘மாறாயம் பெற்ற நெடுமொழி’ என்ற துறையின் மூலமாக தொல்காப்பியம் விளக்குகிறது.
இதற்குத் தக்க எடுத்துக்காட்டாக இப்பாடல் அமைந்துள்ளது.
இப்பாடல் முழுமையும் திருமாலின் புகழைப் பாடக்கூடிய நெடுமொழிப் பாடலாக அமைந்து
தொல்காப்பியர் சுட்டிய புறத்துறையோடு பொருந்துமாறு அமைந்துள்ளது.

நாரயணாய நம என்று ஓராயிரம் முறை மாறன் பாடிய சொற்களை ஆராய்பவர்க்கு அடிமையானேன்
அதனால் உயிரைக் கொள்ளக்கூடிய யமன் என்னிடத்தில் ஒருநாளும் வரமாட்டான் என்பது பொருள்.

திருமாலைப் பாடிய நம்மாழ்வாரது பாடல்களுக்கே அவ்வளவு வலிமை என்றால்
திருமாலது வலிமையை உய்த்துணர முடியாது என்பதை விளக்குமாறு இப்பாடல் அமைந்துள்ளது.

இதே போன்று காஞ்சித்திணையில் அமைந்த மற்றொரு புறத்திணைப்பாடல் வருமாறு,

பெருநூல் பிறபல கற்பதின் மாறன்
ஒருநூல் கற்பது ஊதியம் உயிர்க்கே

இப்பாடல் குறள் வெண்பாவுக்கு இனமான குறள்வெண்செந்துறைக்குச் சான்றாகப் படைக்கப்பட்டுள்ளது.
குறள் வெண்பாவுக்குரிய இலக்கணம் பொருந்தி இரண்டு அடியும் நான்கு சீர்களாக வரவேண்டும் என்பது
குறள் வெண்செந்துறைக்குரிய இலக்கணமாகும். அவ்விலக்கணம் இப்பாடலில் நன்கு பொருந்தியுள்ளது.
காஞ்சித்திணையில் அமைந்த இப்பாடல் முதுமொழிக்காஞ்சி என்னும் துறையில் பொருந்துமாறு பாடப்பட்டுள்ளது.

பெரிய பெரிய நூல்கள் பலவற்றைக் கற்பதைக் காட்டிலும்
நம்மாழ்வார் அருளிய ஒருநூலைக் கற்பதே உயிருக்கு மேன்மைதருவது என்ற பொருள்பட இப்பாடல் பாடப்பட்டுள்ளது.

அணி
இந்நூலில் வரும் 25 ஆம் பாடல் அணியிலக்கணம் பொருந்திய பாடலாகும்.
சொல்பின்வரு நிலையணியில் அமைந்த அப்பாடல் வருமாறு,

மாதங்கம் மூலமெனும் வண்குருடர் மால்வரைஓர்
மாதங்கம் அஞ்ச வருபோழ்துஇம் – மாதுஅங்கம்
மாதங்குஅவ் வாகுவல யத்தணைத்து வல்விரைந்துஅம்
மாதங்கம் வெண்றான்ஓர் மன்.

இப்பாடல் இருகுறள் நேரிசைவெண்பாவுக்குச் சான்றாகப் படைக்கப்பட்டுள்ளது.
இரண்டு குறள் வெண்பாக்கள் ஒன்றன் பின் ஒன்று வருவதைப்போல இந்த யாப்பு அமைந்திருக்கும்;
இடையில் தனிச்சொல் பெற்றுவரும் என்பது யாப்பிலக்கணம் கூறும் விளக்கம்.
இந்த விளக்கத்துக்கேற்ப இப்பாடல் அமையப்பெற்றுள்ளது.
இதுமட்டுமின்றி அணியிலக்கணத்துக்குரிய எடுத்துக்காட்டாகவும் இப்பாடல் அமைந்துள்ளது.

இதில் ‘மாதங்கம்’ என்ற சொல் மீண்டும் மீண்டும் வெவ்வேறு பொருளில் வந்தமையால் இது சொல்பின்வரு நிலையணியாகும்.
இப்பாடலின் முதல் அடியில் திருமால் புகழ் பேசப்படுகிறது.
அதாவது ‘கஜேந்திரன் ஆதிமூலமே என அழைத்த குருகூரில் வாழும் திருமாலினது மலையிலே’ என்ற பொருள்பட பாடல் அமைந்துள்ளது.
அதன்பின் வரக்கூடிய அடிகளில் அகத்துறையில் வரும் பொருள் பிரிவு எனும் பகுதிக்குள் அடங்கக்கூடிய
தலைவன் தலைவியை மணக்க பொருள் ஈட்டச் செல்லும் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவு
அகப்பொருளுக்குத் தஞ்சைவாணன் கோவை போன்று யாப்பிலக்கணத்துக்கு மாறன் பாப்பவினம் என்ற இந்த நூல்
யாப்பிலக்கணச் சான்றிலக்கியமாக அமைந்துள்ளது.
இந்த நூலின் சிறப்பு இதில் இயற்றப்பட்ட பாடல்கள் ஒவ்வொன்றிலும் வைணவம் சார்ந்த கருத்துக்களும்;
திருமால், நம்மாழ்வாரது புகழும் பாடப்பட்டுள்ளமையாகும்.
பின்வந்த யாப்பு சான்றிலக்கிய நூல்களுக்கெல்லாம் முன்னோடியாக இந்த நூல் அமைந்துள்ளது.
இந்த நூலில் யாப்புக்குச் சான்றுகள் அமைந்துள்ளது மட்டுமின்றி அகப்பொருள், புறப்பொருள், அணியிலக்கணம்
போன்றவற்றுக்கும் சான்றுகள் அடங்கியுள்ளன என்பதை இக்கட்டுரைவழி அறிய முடிகிறது.

———————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக் குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறன் அலங்காரம்–நான்காவது எச்சவியலுரை–ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

————

300.மொழிந்ததைமொழிதன்மாறுபடுபொருண்மொழி
பிரிபொருட்சொற்றொடர்கவர்படுபொருண்மொழி
நிரனிரைவழுவேயதிவழுச்சொல்வழுச்
சந்திவழுவொடுசெய்யுள்வழுவென
வந்தவொன்பதுமொருவழிக்கடிவழுவே.
என்பது சூத்திரம்.

இவ்வோத் தென்னபெயர்த்தோவெனின் எஞ்சி நின்ற வழுவணி யுணர்த்தினமையான் எச்சவியலென்னும் பெயர்த்து,
ஆயினித் தலைச்சூத்திர மென்னுதலிற்றோவெனின் முன்னரோதப்பட்ட வணிபெறுஞ் செய்யுள்கட்குப்
பொருந்தாத வழுக்களு ளொருவழிக் கடியப்பட்ட வழுக்களைத் தொகுத்துணர்-ற்று.

(இ-ள்) மொழிந்ததைமொழிதன்முதலாகச் செய்யுள்வழுவீறாகச் சொல்லப்பட்டுத் தொன்றுதொட்டுவந்த
வொன்பதுஞ் செய்யுளகத்துவருமெனி லோரிடங்களிற் களையப்பட்ட வழுவா மென்றவாறு.

வழி – இடம். ஓரிடங்களிற் களையப்படுமெனவே சிலவிடங்களில் வழுவமைதியாகக் களையப்படாதென்பதூஉ மாயிற்று.
அவையெல்லாம் மேற்காட்டுதும்.

301.அவற்றுள்,
பழியறவொருபொருண்மொழிபரியாய
மொழியொடுதொடர்வதுமொழிந்ததைமொழிதல்.
(எ-ன்) வைத்தமுறையானே மொழிந்ததைமொழிதலென்னும் வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) அங்ஙனந் தொகுத்துக்கூறப்பட்ட வொன்பதுள், மொழிந்ததை மொழிதலென்னும்வழு ஒரு
பொருளைக்காட்டு நிலைமொழியப்பொருளைக் காட்டும் பரியாயமொழியொடுதொடர்வதா மென்றவாறு.

* 309-ம் சூத்திரத்திலும், நிரனிரையென இடையின ரகரவைகார ஈறான பாடங்கொண்டு நிரை – கூட்டமென வுரையெழுதப்பட்டிருக்கிறது.

உடுத்தாரகைபோன்றொளிர்மலர்ப்புன்னாகத்
தடுத்தாள்விழிகடுத்தானன்பா–நடுத்தா
னிலையென்பதாகுமிணைமேருவாகு
முலையென்பனதேமொழி. (813)
இது மொழிந்ததைமொழிதல்.

இதனுள், உடுத்தாரகைபோன்றொளிர்மலர் என்றதனா லவ்வாறாதல் காண்க.
நடு – இடை. தேம் – தேன். அஃதேற் சொற்பின்வருநிலையும் பொருட்பின்வருநிலையும் சொற்பொருட்பின்வருநிலையு
மவ்வா றல்லவோவெனின் அற்றன்று, அவற்றிற்குப் பொருள் வேறென்க. என்னையெனின்,
சொற்பின்வருநிலையென்பது மொழிந்தசொல்லே வரினும் பொருள் வேறுபடும்.
அது “மானைப் பொருகயற்கண் மானைப் புவனமட, மானைக் கமல மலர்மானை – மானை” என்பதனா லறிக.
பொருட் பின்வருநிலையென்பது மொழிந்தபொருளேமொழியினும் சொல் வேறு படப் பொரு ளொன்றாவதோ ரலங்காரம்.
அது “மாய்த்தேன் செனனம் வதைத்தேனென் வல்வினையைத், தேய்த்தேனறிவின் சிறுமையினை” என்பன.
சொற்பொருட்பின்வருநிலையென்பது சொல்லும் பொருளும் பெயர்த்து வேறுவேறாகிச் சொல்லொன்றாய் வருவது.
அது “மாதர்மாதர்கூர் வாளம ருண்கண்மா னிலத்து, மாதர் மாதர்கூர் வண்டிமிரளியதா மரைப்பூ, மாதர் மாதர்கூர்” என வரும்.

302.அதுவே,
சிறப்பினும்விரைவினுஞ்சிதைவின்றாகும்
(எ-ன்) இதுவும் முன்பெய்திய திகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) அங்ஙன மொருபொருண்மேற் பலசொல்வருதல் சிறப்பின்கண்ணும் விரைவின்கண்ணும்
வருமெனி லிலக்கணவழுவின்றா மென்றவாறு. என்னை “ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழாஅ” என்பதனா லறிக.

மீமிசைத்தாய்த்தோன்றுமழல்வெண்மதிவந்தாலிறைவா
யாமிசைப்பதொன்றுளதாயெய்யேமாற்–பூமிசைவாழ்
பொன்னங்கொடிநோய்புடைபெயர்போழ்துற்றுணர்ந்த
நின்னன்பிதுவானினைந்து. (814)

இது சிறப்பின்கண் ணொருபொருட்பன்மொழி வந்தது.
கள்ளர் கள்ளர் பாம்புபாம்பு தீத்தீத்தீ போபோபோ விரைவின்கண் இரண்டும் மூன்று மொருபொருட்கு வந்தன. என்னை?
“அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கொருசொ, லிரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்” என்பதனா லறிக.
பொருணிலை, விரைவு வெகுளி யுவகை யச்ச மவல மென்னு மைந்துபொருண்மைக்கண்ணும் வருமெனினும் இவை விரைவு.

303.பகர்ந்தமுன்மொழிப்பொருளொடுமுரண்பான்மையிற்
புகன்றிடுமதுவேமாறுபடுபொருண்மொழி.
(எ-ன்) மாறுபடுபொருண்மொழியாமாறுணர் – ற்று.

(இ-ள்) முன்னர்மொழிந்தமொழிப்பொருளொடு மதன்பின்னர் வருமொழிப்பொருள்மாறுபடுபகுதியையுடைத்தாகக் கூறுமது
மாறுபடு பொருண்மொழியா மென்றவாறு. பின்னர்வரு மொழிப்பொருளென்பது எதிர்மறையெச்சம்.

முற்றவுரைத்தமுதுவேதநுட்பமெல்லாங்
கற்றுணர்ந்துமெய்ஞ்ஞானங்கைக்கொண்டீர்–தெற்றெனவே
தத்துவங்கண்மூன்றினையுஞ்சந்தயந்தீரீரினிமே
னித்தமநித்தந்தெளியீர்நீர். (815)
இது மாறுபடுபொருண்மொழி. என்னை? இதனுள், ‘முதுவேத நுட்பமெல்லாங் கற்றுணர்ந்து மெய்ஞ்ஞானங் கைக்கொண்டீர்’ என்று கூறி,
‘தெற்றெனவே தத்துவங்கண்மூன்றினையுஞ் சந்தயந்தீரீர்’ என்றதனான் மாறுபடுபொருண்மொழியாயிற்று.
தெற்றென – தெளிய. தத்துவங்கண் மூன்றென்பன – சித் தசித் தீச்சுரம்.

304.அச்சமுங்காமமுமகமிகினுரித்தே.
(எ-ன்) இதுவு மெய்தியதிகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) அச்ச மகத்து மிகினுங் காம மகத்து மிகினு மவ்வா றுரைக்கப்படு மென்றவாறு. அகம் – உள்ளம். காமம் – விருப்பம்.

வாசமலர்மெல்லணைமேல்வைத்தாலுமண்டழல்போற்
கூசுமலர்ச்சிற்றடிக்குக்கொற்றவா–நேசமது (439)

நெஞ்சத்தடங்காதநேரிழைநின்னோடுவரிற்
கஞ்சத்தடங்காண்கடம். (816)
இது காமமிகுதியான்வந்த மாறுபடுபொருண்மொழி. அச்ச மிகுதியான்வருவனவும் வந்தவழிக் கண்டுகொள்க.

305.உரியசொற்பலபொருளொன்றினொன்றாதன
பிரிபொருட்சொற்றொடரெனும்பெயருடைத்தே.
(எ-ன்) முறையானே பிரிபொருட்சொற்றொடரெனும் வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) செய்யுளகத்துப் புலவனாற்சேர்த்தற்குரிய பலசொற்களினது பலபொருள்களு மொன்றினோடொன்று
பொருந்தாதனவாகச் சொல்லப்பட்டது பிரிபொருட்சொற்றொடரெனும் பெயரினையுடைத் தென்றவாறு.

எனவே வேறுவேறுநோக்கப் பொருளுடையனவாய்க் கூட்டிநோக்க வொருபொருளாக வுரைக்கப்படா தென்றவாறு.
இதனுள் ஒன்றென்பது சொல்லெச்சம்.

கங்கைக்குக்கன்னிநெடுங்காதங்கஞ்சமலர்
மங்கைக்குமாயோன்மணவாள–னங்கைக்கு
ளெட்டாவுறுப்புடலுள்யாதுமிலைக்காமனெனப்
பட்டானிரதிபதி. (817)
இது பிரிபொருட்சொற்றொடர். இதனுள், பலசொல்லுந் தனித் தனிநோக்கப் பொருளுடைத்தாய்க் கூட்டி
நோக்கப் பொருளன்றாதல் கண்டுகொள்க.

306.அதுவே,
கள்ளுண்மாந்தர்பித்தரிற்கடிவரையில.
(எ-ன்) இதுவும் முன்பெய்திய திகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) முன்மொழிந்த பிரிபொருட்சொற்றொடர் கள்ளுண்டு களித்தமாந்தராற் கூறுமிடத்தினும் பித்தினான்
மயங்கப்பட்டார் கூறுமிடத்தினும் வழுவென்றுநீக்கப்படா தென்றவாறு.

கள்ளிதனிற்பிறந்தகள்ளிற்கடுந்தேறல்
வள்ளிதனைப்பெற்றபுளிமாந்தேறல்–வெள்ளிமலை
பெற்றபதிவானோர்பெருமான்புரந்தபதி
புற்றரவின்பிள்ளைபுதன். (816)
இது கள்ளுண்டுமயங்கினான்மொழிந்தது. பித்தர் கூறுவனவும் வந்தவழிக் கண்டுகொள்க.
வரையிலவென்னாது கடிவரையிலவென்றதனால், பிள்ளைமையான்மொழியுங்காலு மாம்.
அஃதே லிக்குற்றங்களெல்லாஞ் செய்யுணோக்கிவருவனவாதலாற் செய்யுட் கிலக்கணங்கூறு நூலினுளன்றே யுணர்த்துவது ;
ஈண்டுரைத்தல் பிறிதெடுத்துரைத்த லென்னுங் குற்றமாமெனின்,
நன்றுசொன்னாய் ! அச்செய்யுளென்பன சட்டகம் அலங்காரமென இரண்டாம் ; அவற்றுள் அலங்காரமென்பன
அச்சட்டகத்தைப் பொலிவுசெய்வனவாமாதலாற் செய்யுட்குப் பொலிவழிவு செய்வன வீண்டு முற்கூறி யதன்
பின்ன ரொழிபிற் செய்யுட்குப் பொலிவு செய்வன செய்யுட்குவாராமற் புணர்க்கவென வீண்டுரைக்கப்பட்டதாதலாற்
பிறிதெடுத்துரைத்தலென்னுங் குற்றமாகாதென் றறிக.

307.உவர்ப்பறத்துணிந்தொருபொருள்குறித்துரைத்தசொற்
கவர்த்திருபொருட்குறல்கவர்படுபொருண்மொழி.
(எ-ன்) வைத்தமுறையானே கவர்படுபொருண்மொழியாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருபொருளைக் குற்றமறத்தெளிந் துட்கொண்டுரைத்த சொற்குப் பொருள் கவர்த்துப் பிறிதுமொருபொருளைக்
காட்டுவதாகி யிரண்டுபொருளைக் காட்டுதல் கவர்படுபொருண்மொழியென்னும் வழுவா மென்றவாறு.

பற்றற்றிடுதிடத்தாற்பற்றியதேபற்றியயன்
மற்றொன்றுதன்னைமதியாதாங்–கொற்றமிகும்
வேல்விட்டெறிந்தனையவெய்யவிழிநோக்கத்தாய்
மால்விட்டுநீங்கார்மனம் (819)
இது கவர்படுபொருண்மொழி.

இதனுள், மால்விட்டுநீங்கார்மனம் என்பது ஸ்ரீமந் நாராயணன் விட்டுநீங்காதார் மனமெனவும் பித்துவீட்டுநீங்காதார்
மனமெனவும் முதலே தெளிந்து கொண்டுரைத்த பொருளைக்காட்டுவதுடனிருபொருட்குக் கவர்த்தவாறு காண்க.
பத்தர்மேற்சொல்லுங்காற் பற்றற்றிடுதிடத்தா லென்பது அய னரன் மண் பெண் பொன் னென்னு மாசைகளைவிட்டு
நீங்கிய வுண்மைஞானத்தால் என்பதாம். பற்றியதேபற்றி என்பது அந்தரியாமியாகநின்ற அவனது
சொரூபரூபகுணவிபூதியையுட் கொண்டு அதுவே தியானமாக என்பதாம்.
அயல் மற்றொன்றுதன்னை மதியாதாம் என்பது அவைநாலுமேயன்றி வேறொன்றினையு முட்கொள்ளாதா மென்றவாறு.
பித்தர்மேற்சொல்லுங்கால், பற்றியதேபற்றி யயன் மற்றொன்றுதன்னை மதியாதாம் என்பது சான்றோர் தெருட்டத்
தெருளுறாது தான்பற்றியதே பற்றிக்கொண்டு உண்மையாக வொன்றினையும் பற்றாததாம் என நின்று கவர்த்தது காண்க.

308.வசைபொருந்தாவழிவரினதுமரபே.
(எ-ன்) மேற்சொன்ன கவர்படுபொருண்மொழி வழுவல்லவா மிட முணர்-ற்று.

(இ-ள்) அக் கவர்படுபொருண்மொழி குற்றம்பொருந்தாவிடத்துப் பொதுப்படவுரைப்பின் வழுவன்று, இலக்கணமா மென்றவாறு.

பரப்பமர்கண்ணாட்கிடும்பைபாலிக்குமென்றே
னிரப்பிடும்பையார்க்கெதிர்சென்றீயா–நிரப்பே
பெருநிரப்பென்கின்றாய்பெருமானேயெண்ணி
யிருநிதிக்குப்போவேனெனல். (820)
இதனுள் எனல் என்னும் அல்லீற்றுவியங்கோள், விதியும் விலக்குமாக நின்றும் வழுவன்றாயிற்று. என்னை?
யா னவ்வண்ணங்கூறவு நீ யதனையுட்கொள்ளாயாகிக் கூறாநின்றாய் ; நினது திருவுள்ள மதுவேயானா லிரண்டையு மனத்தா
லெண்ணித் துணிந்தென்னுடனே பொருண் மேற்செல்வேனென்று கூறாதொழிவாயாக வெனவும்,
அதுவல்லது செல்லத் துணிந்தாயெனில் எம்பெருமானே ! இறைவியோடும் நின்செலவை நீயே
சென் றியான் பொருண்மேற்செல்வேனென்று கூறுவாயாகவெனவும் இரண்டாய கவர்படுபொருண்மொழி
விதியினும் விலக்கினுங் குற்றமல்லவாயிற்று. பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – நின்செலவை நீயேகூறென்றல்.

309.முன்னரெண்ணிற்குமொழிமாற்றிக்கொளப்
பின்னரெண்ணிரல்பிறழ்வதுநிரனிரைவழு.
(எ-ன்) வைத்தமுறையே நிரனிரைவழுவாமாறுணர் – ற்று.

(இ-ள்) செய்யுளகத்து முன்னரெண்ணப்பட்ட பெயர்வினைகளான முறைக்கு மொழிமாற்றிக்கொள்ளும்படிக் கதன்
பின்னரெண்ணப் பட்டுவரும் பெயர்வினைகள் முறைபிறழவைக்கப்படுமது நிரனிரைவழுவா மென்றவாறு.
பெயர்வினையென்பது சொல்லெச்சம். நிரல் – முறை. நிரை – கூட்டம். பிறழ்தல் – தானமாறாடுதல்.

கலவமயில்சாபங்கழுநீர்குமுத
மிலவநுதல்சாயலிதழ்வா–யுலவுவிழி
நண்பாபொனங்கொடிதானண்ணுமிடநாவீறன்
பண்பார்துடரியிலோர்பால். (821)
என வரும். இதனுள், மயில் சாபங் கழுநீர் குமுதமென முதலே யெண்ணப்பட்ட பெயர்முறைக்குப் பின்னர்
இயல் நுதல் நோக்கம் வாய் என்னாது, நுதல் சாயல் வாய் நோக்க மென முறைபிறழவைத்தமையால்நிரனிரைவழுவாயிற்று.

310. உய்த்துணரிடமெனிலுரிமையுடைத்தே.
(எ-ன்) அம்முறைபிறழ்ச்சி யாமாறுணர் – ற்று.

(இ-ள்) அங்ஙனஞ் சொல்லப்பட்ட முறைபிறழ்ச்சி உய்த்துக் கொண்டுணரப்படுந்தானமாகில் வழுவன்றென்று
கொள்ளு மிலக்கண முறைமையுடைத் தென்றவாறு.

அங்ஙனஞ்சொல்லப்பட்ட முறைபிறழ்ச்சியென்பது அதிகார நோக்கத்தா லெச்சமாக விரிந்தது.

மந்தன்கதிர்மழைக்கோள்வானோர்குருமேதை
யிந்துநிலமகன்பாம்பென்பவற்றுட்–பைந்தொடியாய்
தேறுமிடைநான்குந்தெரிசுபக்கோளேனையவாய்க்
கூறியவைபாவக்கோள். (822)
என வரும். இதனுள், உய்த்துணர்ந்துகொள்ளப் பிழையாமல் வைத்தவிடமாவன : மந்தன்முதலாகப் பாம்பீறாக வடைவேயெண்ணி,
மழைக்கோள் வானோர்குரு மேதை யிந்து வென்னு மிடைப்பட்ட நான்குஞ் சுபக்கோளென்றும், மந்தன் கதிர் நிலமகன் பாம்பு
என முதலினு மீற்றினுநின்ற நான்கும் பாவக்கோளென்று முய்த்துணரவைத்தவாறு கண்டுகொள்க. பாம்பு – சாதியேகவசனம்.

311.நசைதீர்யதிவழுநாடுகிலோசை
யிசைதரநிகழாதிழுக்குவதாகும்.
(எ-ன்) முறையே யதிவழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) விரும்பப்படாத யதிவழுவென்பதனை யாராயுங்காலத்துச் செய்யுட்கமைத்த புணர்ச்சி
யிசைபொருந்துவதாய்நடவாது மரபு வழுவுவதா மென்றவாறு.

பார்க்கும்பொழுதுநிலம்பார்த்துப்பார்வையையா
நீக்கும்பொழுதுநிலம்பாரா–நோக்கு
வடைவடைவேவந்தவவற்றுண்முதனோக்கந்
தடையறயாம்வாழ்வதற்கோர்சார்பு. (823)
இதனுள், நோக்கடைவடைவேவந்தவென்புழி நோக்குவடைவடைவே வந்த வெனச் சொற்கூடா தறுத்திசைத்து வழுவாயிற்று.

312.அதுவே,
வழுவின்றாமெனல்வகையுளிக்காகும்.
(எ-ன்) மேலெய்திய திகந்து படாமற் காக்கின்றது.

(இ-ள்) அங்ஙனம் வரப்பட்ட யதிவழு வழுவில்லையென்று சொல்லப்படுவது வகையுளியாகச்
சேர்த்துக்கொள்ளுமிடத்துக் குற்றமில்லையா மென்றவாறு.

வாளிவேல்சேலாமதர்நோக்கமேருமுலை
வேளினடல்விற்போன்மிளிருநுத–லாளிநிகர்
காவலவனாற்றலதுகாய்ந்தகனிவாய்பவளம்
யாவருணர்வுட்காதிவட்கு. (824)
இதனுள் வகையுளிசேர்த்தேகொள்ளக் குற்றமின்றாயிற்று. துறை குறிவழிச்சென்றபாங்கன் றலைவனைவியத்தல்.

313.திணைமுதலாகச்செப்பியவழுவினொன்
றணைதருமாயினுமதுசொல்வழுவே.
(எ-ன்) முறையே சொல்வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) திணைமுதலாகச் சொல்லப்பட்ட சொல்வழுவேழினுள், பலவேயன்றி யொருவழுச்
செய்யுளகத்துப்பொருந்துமாயினு மது சொல் வழுவா மென்றவாறு.

அருட்குணத்துக்கூடாதென்றாய்ந்துரைத்தபின்னும்
பொருட்ககல்வலென்றேபுகன்றீர்–மருட்கைமிகுங்
கொன்னுனைவேல்போன்றவிழிக்கோதைபொருட்டாற்குறித்திங்
கென்னுனையான்சொல்வேனினி. (825)
இதனுள், புகன்றீரெனற் வுபசாரப்பன்மைக் கென்னுமையான் சொல்வே னென்னாது என்னுனையான்
சொல்வே னென்றதனாற் பால் வழுவாயிற்று.

314.மரூஉக்கட்டுரைச்சொலின்வழுவின்றதுவே.
(எ-ன்) சிறுபான்மை கடியப்படாதென்ப துணர் – ற்று.

(இ-ள்) அச்சொல்வழு மரூஉமொழியாய்வருங் கட்டுரைச் சொல்லோடுங் கூடிவருமெனின் வழுவில்லையா மென்றவாறு.

மன்றல்கமழுமலைநாட்டும்வண்டமிழ்தேர்
நன்றிபயில்பாண்டிநாட்டகத்தும்–வென்றிபயில்
சோணாட்டகத்துந்துயின்மாயனைத்துதிப்பார்
காணார்பிறவிக்கடல். (826)
இதனுள், மலையமானாடென்பது மலைநாடென்றும், பாண்டியனா டென்பது பாண்டிநாடென்றும்,
சோழனாடென்பது சோணாடென்றும் மருவா யடிப்படவந்த வழக்காற்றால்வந்து வழுவின்றாயிற்று. துறை- கடவுள்வாழ்த்து.

315.ஆற்றல்சாலெழுத்தினுளமைத்தசந்தியின்வகை
மாற்றமதுறவழுவுதல்சந்திவழுவே.
(எ-ன்) வைத்தமுறையானே சந்திவழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) பெருமையொடுகூடிய வெழுத்திலக்கணத்தினுள் விதிக்கப்பட்ட சந்திகளின்கூறுபாடு நூல்கூறிய
கூறுபாட்டான்வாராது செய்யுளகத்து வழுவுதல் சந்திவழு வென்னுங் குற்றமா மென்றவாறு.

பொய்யில்பொருண்மேற்புரிந்தினிநீபோகிலிவண்
மெய்யிலெழினலமும்வேறுபோந்–தொய்யிலுறாத்
தோள்பைங்கழையெனலாந்தொல்கவின்போகத்துயில்போம்
வாள்கண்ணிணைக்கெழுதாண்மை. (827)

இதனுள் வாள்போன்றகண்ணிணை வாட்கண்ணிணையென
“லள வேற் றுமையிற் றடவு மல்வழி, யவற்றோ டுறழ்வும் வலிவரி னாம்” என்னுஞ் சூத்திரத்தான்,
ளகாரம் டகாரமாக மெய்பிறிதாகமுடியற்பால வழி வாள்கண்ணிணையென வியல்பாய்முடிந்தமையாற் சந்திவழுவாயிற்று.

316.ஐயெனுருபுதொகினஃதியல்பாம்.
(எ-ன்) அத்திரிபு திரியாது இயல்பாமிட முணர்-ற்று.

(இ-ள்) இரண்டாம் வேற்றுமைதொக்கபுணர்ச்சியில் வல்லெழுத்து முதன்மொழிவந்துழித் திரியா தியல்பாய்முடியவும்பெறு மென்றவாறு.

அஞ்சொன்மடவாயரங்கத்தமுதமெனு
மஞ்சனையசெவ்விமழைவண்ணன்–கஞ்சமலர்த்
தாள்கண்டார்மாரன்றனக்கிலக்கானாற்றுளபத்
தோள்கண்டாரென்படார்சொல். (828)
இதனுள், தாள்கண்டார் தோள்கண்டாரென “இயற்கை மருங்கி னியற்கை தோன்றலு, மெய்பிறி தாகிடத் தியற்கை யாதலும்”
என்பதனா லியல்பாய்முடிந்தன. திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை….

317.பழுதறப்பகர்ந்தபாட்டினதியல்பு
வழுவுதல்செய்யுள்வழுவெனமொழிப.
(எ-ன்) செய்யுள்வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) அகத்தியன்முதலோர் செய்யுளியலுட் குற்றமறப்பகர்ந்த செய்யுளிலக்கணத்தோடுகூடாது வழுவும்
பகுதியாய்வருதல் செய்யுள் வழுவென்றுகூறுவர் பெரியோ ரென்றவாறு.

முல்லைவெண்ணகைமொய்குழனுமர்வாழ்
மல்லன்மால்வரைக்கெமர்வரைநல்வினையாற்
கூடலருண்மங்கையரைக்கூடிப்பிரிந்துவருந்
தாடவர்க்குவேள்போன்றணித்து. (829)

இஃது ஆசிரிய முதல்வந்து வெண்பாவாய் முடிந்தது. அவ்வாறு முடிதற் கோத்திலாமையால் வழுவாயிற்று.
பகுதி – இயற்கை. துறை – இடமணித்துக்கூறி வற்புறுத்தல்.

318.தவமுறுபவரவர்போலுணர்சாற்றலு
ணவமுறப்புனைசெயுணடைநவையிலவே.
(எ-ன்) மேற்சொல்லப்பட்ட செய்யுள்வழுச் சிறுபான்மை யொரோவிடங்களுள் வருவன வுளவாமென்று வழுவமைப்புணர்-ற்று.

(இ-ள்) தவசரிதையெய்துமிருடிகளும் அவர்போல்வாருமாகிய முற்றவுணர்ந்த மூதறிவுடைப் புலவோரா னவமாகப்
பாடப்படுவனவாஞ் செய்யுணடை யாசிரியரால் நீக்கப்படுங் குற்றமில்லையா மென்றவாறு.

நாராயணனேநமவென்றுரைப்பவர்பால்
வாராதொருநாளும்வல்வினைதான்
சாரானொருதலையாய்த்தண்டதான்சாராவாம்
பேராதமாயப்பிறப்பு. (830)
இது சவலைவெண்பாட்டு ; என்னை? இதனுள் முதலே காசு நாள் மலர் பிறப்பு என்னும் வாய்பாட்டாலிறாது
மூவசைச்சீராயிற்ற குறள்வெண்பாவா யதன்பின்னரும் பிறப்பென்னும்வாய்பாட்டாலிற்ற குறள்வெண்பாவாய்த்
தனிச்சொலின்றிமுடிந்தமையா லென வறிக. இதற்கு முன்னோர்கூறியசூத்திரம் யாதோவெனின்
“நனியிரு குறளாய் நான்கடி யுடைத்தாய்த், தனிவர லில்லது சவலைவெண் பாட்டே” என்பதென வுணர்க.
அன்றியும், “அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய், நட்டாலு நண்பல்லார் நண்பல்லர்,
கெட்டாலு மேன்மக்கண் மேன்மக்க ளேசங்கு, சுட்டாலும் வெண்மை தரும்” என்னுஞ் செய்யுளானு முணர்க.

எனவே மொழிந்ததைமொழிதன்முதலாகச் செய்யுள்வழுவீறாகச் சொல்லப்பட்ட வொன்பதும் பொதுவகையான்
வழுவெனக்கூறியவற்றைத் தனித் தனி விதிச்சூத்திரத்தா னிவ்வாறுவரின் வழுவென விதித்துச்
சிறப்புவிதியா னிவ்வாறுவரின் வழுவமைதியா மென்றவாறாயிற்று.

319.உலகிடங்காலங்கலையேநியாய
மாகமமலைவென்றாறொருவகையுள.

(எ-ன்) இதுவு மொருவகை வழுவாமா றுணர் – ற்று.

(இ-ள்) உலகமலைவு மிடமலைவுங் காலமலைவுங் கலைமலைவும் நியாயமலைவு மாகமமலைவு மென்று
கூறப்படுவனவா மொருவகைமலைவு மாறுளவா மென்றவாறு.

ஏகார மீற்றசை. மலைவென்பதனை யிறுதிவிளக்காக வெங்கு மொட்டுக. மலைவென்பது மாறுபடுதல்.
எனவே யவையு மொரு வகைவழுவாயிற்று. அஃதேல் ஒழிந்த வழுவுணர்த்துமாறெடுத்த தொகைச்சூத்திரத்து ளொருவகைப்படப்
பதினைந்தெனக்கூறாது இரு வகைத்தாகப் பிரித்துக்கூறியவா றென்னையோவெனின் முன்னரொன்பதுங் குற்றமாதல்
பெரும்பான்மையாய்ச் சிறுபான்மை யொரோவிடத்துக் குணமாதலுமுடையவென்றுரைக்கப்படும் ;
பின்னராறும் ஒருதலையாகவே குற்றமாய்ப் பொருந்துமிடத்துப் புனைந்துரைவகையா னன்புலவராற்
சிறுபான்மை மொழியப்படுமென்ப தறிவித்தற்குக்கூறியவா றெனவுணர்க.

320.ஒழுக்கநடையேயுலகமதாகும்.
(எ-ன்) வைத்தமுறையானே உலகமலைவாமா றுணர்-ற்று.

(இ-ள்) அவ்வாறனுள், பெரியோரா லெடுத்துவழங்கு மொழுக்க நடையே யுலகமென்றுகூறப்படுவதா மென்றவாறு.

எனவே உலகமென்பது மக்கண்மேலு நிலத்தின்மேலு மொழுக்கத் தின்மேலு நிற்கும் பலபொருளொரு
சொல்லாதலா னிவ்விடத் தொழுக்கத்தையேகோடற் குலகென் றெடுக்கப்பட்டது. அவ்வொழுக்க மெல்லாரும்
அறிவுறக்கிடந்தமையா னின்னதென் றெடுத்துரைக்கவேண்டுவ தில்லை.
அது மலைதலென்பது உலகத்தொழுகலாற்றோடு மாறுபட்ட வொழுக்கநிகழ்வதாகக் கூறுதல்.

பூமிநடுநின்றுபுணரியேழுந்தாவி
நேமிவரைதனினேர்நின்றமரர்–கோமகிழ்வுற்
றாண்டதுறக்கமதைப்பார்த்தவனிபோதுமென
மீண்டவனிவ்வேந்தர்க்குவேந்து. (831)
என வரும். இதனுள் ஒருதீவினுள்வேந்த னெழுதீவையு மெழுகடலையு மேழ்பூமியையுங் கடக்கப் பாய்ந்து,
சக்கரவாளகிரியி னிமிர்ந்துநின்று, தேவர்கோனாகிய விந்திரன் களித் தாண்டிருக்குந் தேவலோகத்தையெட்டிப் பார்த்துத்
தனக்குப் பூலோகமொன்றுமாண்டிருப்பதேபோதுமென மீண்டுவந்தவனாகு மிந்த வேந்தர்க்குவேந்த னென்று
மாறுபடக்கூறினமையா னுலகமலைவாயிற்று.

321. இடமதுமலைநாடியாறெனமூன்றே.
(எ-ன்) வைத்தமுறையானே இடமென்பதனை விரித்துணர்- ற்று.

(இ-ள்) இடமென வொன்றாய்நின்றவது மலையும் நாடும் யாறுமென மூன்றா மென்றவாறு.

மலையென்பன : பொதியமு மிமயமு முதலாயின. நாடென்பன : பதினெண்பாடைக்குமுரிய நிலங்கள்.
யாறென்பன : கங்கையும் பொருநையுங் காவிரியு முதலாயின. இவற்றுள் ஒன்றினுளுரியவாகச்சொன்ன பொருள்
பிறிதொன்றனுளுரியவாகச் சொல்லுதல் வழுவாம். அவை,

காரகிலும்பொன்னுங்கவின்செய்மலயத்தினிற்பெண்
ணாரமுதின்மெல்லடிகட்கையனே–பார்பரலாய்ச்
செந்தழல்பாரித்தகடஞ்செப்பினசும்பூரிமயச்
சந்தனச்சோலைத்தடமாந்தான். (832)
எனவும்,

பருவமாமழையுகுபஃறுளிதிரண்டுநீ
ரருவிபாடிமிழ்வளனமர்சிலம்பாநின்
னறைகழல்பணிந்தெழுகலிங்கத்தரசர்
திறைதருகலினத்திரள்வாம்பரிகளு
மாளுவராரியர்மராட்டர்சோனகரெமை
யாளுகவெனத்தாழ்ந்தருள்கடாக்களிற்றுட
னறக்கழிவினராயருஞ்சமத்தெதிர்ந்து
புறக்கொடைபுரிந்தோர்புரந்தநன்னகர்களுங்
கங்கையுள்வலம்புரிகான்றவெண்டரளமுந்
துங்கவண்பொருநைத்துறையுண்மாமணிகளு
மெண்ணிலாதளிப்பினுமிடைவிலையலவாற்
பெண்ணியல்பெருக்கியபேரமுதாமெனத்
திருமகளாமெனச்சிறந்தவள்
வருமுலைக்கெவனீவிலைவழங்குவதே. (833)

எனவும் வரும். இவற்றுள், இமயத்திற்குரியன பொதியிலகத்துளவாகவும் பொதியிலகத்துளவானவை
யிமயத்துளவாகவும்புணர்த்து மலையிட மலைவாயிற்று.
தண்பொருநைக்குரியன கங்கையொடுபுணர்த்துங் கங்கைக்குரியன தண்பொருநையொடுபுணர்த்து மாற்றிடமலைவாயிற்று.
மாளுவ மாரியமுதலாயினவற்றிற்குரிய கலிங்கத்தொடுபுணர்த்துங் கலிங்கத்திற்குரிய மாளுவ மாரிய
முதலியவற்றொடு புணர்த்தும் நாட்டிட மலைவாயிற்று.

322.சிறுபொழுதொடுபெரும்பொழுதெனக்கால
மறுவகைத்தாமெனவறைந்தனர்புலவர்
(எ-ன்) காலமாமாறு மதன்பகுதியு முணர்-ற்று.

(இ-ள்) காலம், சிறுபொழுதுடன் பெரும்பொழுதென இரண்டு கூறா யொரோவொன்றறுவகைத்தா மென்றுஆசிரியர்கூறினா ரென்றவாறு.

அவற்றுள், சிறுபொழுது : விடியல் உச்சி எற்பாடு மாலை யாமம் வைகறை என ஆறு. பெரும்பொழுது :
கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் வேனில் என ஆறுமாம். அவற்றொடு மலைதலாவது :
ஒன்றற்குரிய பூவும் புள்ளும் பொழுதும் தொழிலும் வேறொன்றிற்குரியவாகப் புணர்த்துரைப்பது.

உம்மையினிரந்தோர்க்கொன்றீயாதோ
ரிம்மையின்வறுமையென்பவற்றினுக்கிடமென
விரப்பவராயிலமெனவிசைத்ததற்கெதிர்
புரப்பவரிலமெனப்புகலும்வெவ்வுரையினு
நிரப்பெவனெனநிகழ்த்துதனிமித்தமதாய்க்
கரப்புரையிஃதெனக்கலுழ்ந்தகண்ணீரினைத்
தடுப்பவர்போற்றுயிலையுந்தடுத்திருகையி
னெடுத்தணைத்தினையலென்றெனையும்வற்புறுத்திப்
போர்வேலவர்தாம்போமுனங்குறித்த
கார்காலத்தினிற்கார்வருமாலையிற்
குயிற்குலங்காமாகூகூவெனுநிலை
வெயிற்குலமெனவிருள்வெருளவெண்ணிலவெழப்
புரவலர்முகம்போற்பொற்புமிக்கதுவா
யிரவலர்தாமரையேமநன்மலரே
நின்னிற்பிரியலன்பிரியினாற்றலனெனு
மன்னர்பொய்ம்மொழியினுமடங்கலுமடங்கலுஞ்
சுடுஞ்சுடுந்தொடர்ந்துமன்னுயிரை
யடுங்கொடுமையவெனுமவரறிவிலரே. (834)
என வரும். இதனுள். வேனிற்காலத்திற்குரியகுயிலைக் கார்காலத்துடன் புணர்த்தும்,
பகன்மலர்தாமரையை இரவுமலர்ந்ததாகப் புணர்த்தும், பெரும்பொழுதுஞ் சிறுபொழுதுமாகிய விரண்டுகாலமு மலைவாயிற்று.

323.பொருளுமின்பமும்புணர்பொருட்டாகியநூ
லருளுமெண்ணான்கிரட்டியகலையதுவே.
(எ-ன்) பொதுவகையாற் கலைக ளின்னதுக்குங்கருவியாய்த் தோன்றுமென்பதூஉ மவற்றது தொகையு முணர்-ற்று.

(இ-ள்) கலையென்றுசொல்லப்பட்டவது பொருளு மின்பமு மெய்துதற்கே துவாய வேதமுதலியநூல்களுட் கூறப்பட்ட வறுபத்து நாலா மென்றவாறு.

ஏகார மீற்றசை. அவற்றொடுமலைதலாவது அவ்வந்நூல்களுட் கூறியபடிகூறாது பிறழக்கூறுதல்.

நாணமில்செய்கைநாடகக்கணிகையர்
மாண்மரபினிலொருவனிதைதன்மைந்தர்க்
குற்றவெண்ணிரண்டுடனோங்கியவுருவம்
பெற்றவந்நிலைத்தண்டியம்பிடித்தனளா
யாடலும்பாடலுமமைவிலன்கொளுத்த
நீடலிலயணமொன்றினினிரப்பினளாய்ப்
படிபுரந்தருளும்பார்த்திபன்முன்னர்க்
கடியரங்கேற்றியகாலையிற்பிண்டியிற்
யிணையலுங்களையாள்பிணையலிற்பிண்டியு
மணைதரல்களையாதாடலுந்தாள
மெய்யிற்பயிலவுமேதகவுடையிசை
கையிற்பயிலவுங்காலியல்பயிலவு
நடித்தனணடத்துடனாதமுமுன்னூல்
வடித்திடுபான்மையின்மலைத்திடநடத்தின
ளாடல்சான்றோரவருடன்
பாடல்சான்றோர்பயிலவைக்களத்தே. (835)

இதனுள், ஐயாண்டிற் றண்டியம்பிடித்து ஏழாண்டியற்றிப் பன்னீராண்டினி லவையரங்கேறினாளொன்னாது
மைந்தர்க் கிந்திரியகலின முறுவதென்றுவிசாரிக்கப்பட்ட பதினாறாமாண்டிற் றண்டியம்பிடித்து
ஆடலும் பாடலு முற்றக்கல்லா வாசானுட னவை யோரயணத்தின் முற்றக்கற்றனளாய்க் கடியரங்கேறின ளெனவுங்
கூறியதன்மேல் ஒற்றை யிற்செய்த கைத்தொழி லிரட்டையிற்புகாமலு மிரட்டையிற்செய்த கைத்தொழி லொற்றையிற்புகாமலுங்
கைத்தொழில்காட்டாது மலையக் காட்டினா ளெனவும், இசையை மெய்யினு மிபலைக் கையினுந் தாளத்தைப் பாதத்தினுங் காட்டாது
மயங்க நடித்தனளெனவும், அவடானே பின்னொருநாள் நாதமும் நூல்சொன்னபடிநடத்தாது
பிறழநடத்தின ளெனவுங் கூறினமையானுங் கலைமலைவாயிற்று. கலையென்பது வித்தை.
இசையைப் பிறழநடத்தினாளென்பது நின்றநரம்பிற் கைந்தாவது கிளையாதலா னதனைப் பகையென்றும்,
ஆறாவது பகையாதலா னதனைக் கிளையென்றும், நான்காவது நட்பாதலா னதனை யிணையென்றும்
இரண்டாவதனைத் தொடுத்தல். என்னை?
“ஐந்தா நரம்பிற் பகைவிரவா தாறாகி, வந்த கிளைகொள்ள நான்காகி – முந்தை, யிணைகொண்ட யாழெழுவு
மேந்திழைதன் னாவித், துணைவன் புகழே தொடுத்து” எனத் தொண்டி எச்சவியலிற் கூறியவதனா லறிக.
அஃதேல் இந்நூலுட்கூறிய தொனிக்குத் தெண்டிகூறிய வுதாரணமே யுதாரணமாகக்காட்டியவா றென்னையெனின்
இந்நூற் கது முதனூலாயதாற் காட்டியதென வுணர்க. அவடானே பின்னொருநா ளென்பது சொல்லெச்சம்.
அஃதன்றித் தோரியமடந்தை யவளாடியவவைக்களத் தங்ஙனம் பாடினா ளெனினு மாம்.
தோரிய மடந்தையாவாள் ஆடிச்செலவைத்தவளா யங்ஙன மாடினவள்காலுக்குப் பாடினவள்.

324.அளவையினாயபல்பொருட்கமைவினைத்திற
முளமுறமதித்துரைப்பதுவேநியாயம்.
(எ-ன்) நியாயமாமாறுணர் – ற்று.

(இ-ள்) ஒரோகாரணங்களா லுலகத்துண்டாயபொருள்கட் கமைக்கப் பட்ட வினையினது கூறுபாட்டைக் காட்சி
முதலாய நால்வகையளவைகளாற் குறித்துக் கேட்டோருள்ளத்துறும்படி யுரைப்பது நியாயமா மென்றவாறு.

அவை யறுவகைப்பட்ட சமயங்களோடுங்கூடிய வுலகத்துப்பொருள் களினது தோற்றமு மழிவு மின்னவகையவென்று கூறுதல்.
அவற்றை யவரவர்கூறியவாறு கூறாது மாறுபாடாக வுரைத்தல் மலைதலேயாம். அது,

அன்றாலிலைத்துயின்றவச்சுதனையல்லாது
பொன்றாப்பொருளெப்புவியிலுள்ள–தென்றான்
றனதகத்தாயெவ்வுலகுந்தானடக்கிக்கொண்ட
புனலகத்தாய்நீந்தம்புயன். (836)
என வரும். இதனுள், ஆதிப்பிரமகற்பாந்தத்திற் சகலகடவுளருஞ் சகலான் மாக்களுமழியச் சகலான்மக்களையு மகிலாண்ட
கோடிகளையுந் திருவுதரத்தடக்கி யழிவிலாதிருந்தது ஸ்ரீ மந்நாராயணனென்று மார்க்கண்ட னுரைத்தா னெனற்பாலதனைப்
புனலகத்தாய்நீந்தும் பிரமாவுரைத்தா னென்றமையான் நியாயமலைவாயிற்று.
அச்சுதன்- அழிவிலாதான். அக்காலத்துப் புனலகத்தாய் நீந்திக் கண்டது மார்க்கண்டன். ஒழிந்தனவு மிவ்வாறே யொட்டிக்கொள்க.

325.அறம்பகர்மனுமுதலாயினவாகமம்.
(எ-ன்) ஆகமமாமாறுணர் – ற்று.

(இ-ள்) அறத்தினதுமார்க்கத்தைக்கூறாநின்ற மனுமுதலாய பதினெண் வகை யறநூலுமே யாகமமா மென்றவாறு.

அவற்றொடு மலைவாவது : இன்னா ரின்னதுசெய்த லற மென்று விதிக்கப்பட்ட விதியிற் பிறழவருவது. அது,

ஓட்டினொடும்பொன்னையொருநிலையாயுட்கோடல்
வீட்டினதின்பத்தைமிகவிரும்ப–லேட்டிருண்மென்
கூந்தலாரின்பமதுட்கொள்ளாமையில்லறத்திற்
றோய்ந்துளார்க்குண்டாஞ்சுகம். (837)
எனவரும். இதனுள், துறவறம்பூண்டார்தொழிலை யில்லறம் புரிந்தாரோடு புணர்த்தமையா னாகமமலைவாயிற்று.

326.நாவலர்நாடகவழக்கினுணயந்து
மூவிருமலைவுமொழிவதற்குரிய.
(எ-ன்) எய்திய திகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) மேற்கூறிய வாறுவகைவழுவு நாடகவழக்கத்தாற் கூறுங்கால் நாவலர்க்குரியவாகக் கொள்வதா மென்றவாறு.
நாடகவழக்கென்பது “நாடக வழக்கினு முலகியல் வழக்கினும், பாடல் சான்ற புலனெறி வழக்கம்” எனத்
தொல்காப்பியத்துரைக்கப் பட்ட மூன்றனுள்ளு முதல்வழக்கு. அஃதாவது இல்பொருளாய்ப் புகழ்ச்சியிடத்துப்
புனைந்தவுரையாய்த் தோன்றுவது. என அவ்வாறு புகழ்ச்சியிடத்து நீக்கப்படாவலங்காரமாயே வரு மென்பதாம். அவை வருமாறு :-

மேலைமலையிற்புகுதுமாதவனைநிற்றியென
மீளவருவித்துலகின்வாய்
மாலைமதியத்தினுடனோடநியமிப்பனுரு
மாறிவருவிப்பனிமையோ
ராலையநிலத்திடுவன்வேலைவலயத்தையவ
ணாகவுமமைப்பனழகார்
சோலைமலையிற்குடி கொளாதியைநிகர்த்ததொரு
சோதியைவிதிப்பனெளிதே. (838)
இதனுள், சம்பிரதமாதலி னுலகமலைவுப்பொருள்வந்தும் அலங்கார வழுவின்மையாயிற்று. இந்திரசாலமென்பது மிது.

காழகிற்பொழிலுஞ்சந்தனப்பொழிலுங்
கமழ்நறுஞ்சண்பகப்பொழிலுங்
கோழரைக்கமுகுநாளிகேரமும்பொற்
கோங்கும்வேங்கையுமலர்க்குருந்து
மாழையஞ்சுளைமுட்புறக்கனிப்பலவு
மாவுநாகமும்பணைமருதுந்
தாழையுமகிழும்வாழையுங்கரும்புந்
தனித்தனிதழைத்ததெம்மருங்கும். (839)
இது தண்பொருநையுண் மலையிரண்டிற்கும் பிறநிலங்கட்குமுரிய அகிலுஞ் சந்தனமுங் கோங்கும் வேங்கையுங் குருந்தும்
புன்னையும் வந்திட மலைவாயும் புகழ்ச்சியிடத்துப் பொருந்தின அலங்காரமாயிற்று.

காவியங்கண்ணியர்காலையின்மலர்கொய
வாவியுட்குறுகலும்வதனமண்டலத்தினை
மதியெனச்செழுந்தாமரைமலர்குவிதரப்
புதியதண்புனல்படிந்திடப்புகுமாலையி
லாடவர்முகத்தையுமருணோதயமென
வேடவிழாம்பலினத்தொடுமுகிழ்க்கும்
பாடல்சான்மருதப்பார்த்திபர்தலைவ
பொழுதுமாறுதனின்புலக்கருப்பொருட்கு
முழுதுமுண்மையதான்மொழிபலகிளைத்தெவன்
புலந்தெவன்பொதுவுணின்மார்வங்
கலந்தெவன்றீண்டலெங்காமர்மெல்லணையே. (840)
இதனுள் மாலையிற்குவியுங் கமலங் காலையிற் குவிந்ததாகவும், காலையிற் குவியும் ஆம்பல் மாலையிற்
குவிந்ததாகவுங்கூறியது காலமலை வாயினும் புனைந்துரைவகையா னலங்காரமாயிற்று.
பகுதி – பரத்தையிற் பிரிதல். துறை – பள்ளியிடத்தூடல்.

வெயினுழைந்தறியாப்பணைமரச்செறிவுள்
வெறிவரிவண்டினமிரைத்துப்
பயின்முகையவிழ்ந்துபனிற்றுதெண்ணறவைப்
பருவமாமழைப்பெயலெனவே
குயிலடங்கலுந்தாம்பொதும்பருளொளிப்பக்
குறிப்பொடும்வெளிப்படவிருந்து
மயிலடங்கலுந்தாமகவலுங்களிப்ப
வருந்தனீமதர்மழைக்கண்ணாய். (841)
இதனுள், கார்க்குரியன வேனிற்குப்புணர்த்தும் புனைந்துரை வகையா னலங்காரமாயிற்று.

செறியுமிற்றொறும்புனன்மலர்முதலியசிறப்பின்
குறியமந்திரத்தமைந்துளவுறுப்பினிற்கொடுபோழ்
தறிவிழந்தவைமுறைதடுமாறினுமவையே
நெறியவாயிறையுட்கொளநிறைக்குநன்னீரார். (842)
இது கலைமலைவாயினும் புனைந்துரைவகையா லலங்காரமாயிற்று.

வண்டுலவுந்தண்டுளபப்பெம்மானேயனைத்துயிர்க்கும்வசதியாய
வண்டரண்டபகிரண்டமகத்தடக்குமுழுமுதனீயாயிற்றென்றாற்
பண்டுலகமனைத்தையுமோரடலெயிற்றாலிடந்தளந்தபான்மையல்லா
துண்டுமிழ்ந்தபடியயல்கண்டிருந்தவராரெவணிருந்தன்றுண்டவாறே (843)
இது நியாயமலைவாயினும் புனைந்துரைவகையா லலங்காரமாயிற்று.

*இறந்தபல்செனனத்திழைத்ததீவினைநின்
றிடங்கொள்புல்லறிவினரேனுஞ்
சிறந்தவந்நகரத்தினியொருபிறவி
சிறக்கவிங்கெமக்கெனத்தியானம்
பிறந்தவணுதித்தோர்வினையுமப்பொழுதே
பிறக்கிடுமவரையென்றூத
ரறந்தவாவுலகத்திருத்துவர்நமனுக்
கழலகத்தமைப்பரக்கணத்தே. (844)
இஃது ஆகமமலைவாயினும் புனைந்துரைவகையா லலங்காரமாயிற்று.

327.ஆறெனத்தொகைவகையினில்விரித்தவற்றைத்
தேறமெய்பெறுநான்கெனத்தெரிசெய்யுளும்
பாகமோர்மூன்றும்பயில்குணம்பத்து
மாகவெண்ணான்கிரட்டியபொருளணியு
மடிமொழியெழுத்தினடுக்கினவாக
முடிவுறவகுத்தமூவகைமடக்கு
மூவினப்பாடன்முதலாமுறைமையின்
மேவினவிருபானாறன்மேலாறென
விழுமியமிறைக்கவிவிரித்தபின்னெஞ்சிய
வழுவழுவமைதியுமிவையெனவகுத்து
மொழிந்தவைம்மூன்றுடன்முற்றா
தொழிந்தவுங்கோடலொள்ளியோர்கடனே.
இச்சூத்திரம் இந்நூலுளுரைத்த விலக்கணமனைத்துந் தொகுத்திவ்வணி யிலக்கணத்திற்குப் பிறவாறு
வருவனவுளவெனினு மவற்றையுந் தழீஇக்கொள்க வெனப் புறநடையுணர்த்துகின்றது.

* இச்செய்யுள் பின்வருமாறு குருகாமான்மியத்துக் காணப்படுகிறது.

“இறந்தபல்செனனத்திழைத்ததீவினைநின்றிடங்கொள்புல்லறிவினோரெனினுஞ்
சிறந்தபேரறிவின்மேலொருசெனனஞ்செறிகவாங்கெமக்கெனத்தியானம்
பிறந்தவணுதித்தோர்வினையுமப்பொழுதேபிறக்கிடுமவரையென்றூத
ரறந்தவாவுலகத்திருத்துவர்நமனுமழலகத்தமைப்பனக்கணக்கே.”

இதன்பொழிப்பு ; செய்யுளெனத் தொகையானொன்றாயதனை வெண்பா வாசிரியமெனப் பகுத்த விருவகையினின்றுங்
கலி வஞ்சி மருட்பா பரிபாட லென்னு நான்கினொடு மாறென விரித் தவற்றைத் தெளியும்படிக்குப் பொருள்பெறும்
நான்கென்றுபகுத்த முத்தகங் குளகந் தொகை தொடர்நிலையென்னுஞ் செய்யுண்மரபும்,
வைதருப்பம் கௌடம் பாஞ்சாலமென்னு மூன்றுபாகமும், அவற்றொடும்பயில்வதான இன்பம் தெளிவு செறிவு சமனிலை
இன்னிசை உதாரம் வலி காந்தம் உய்த்தலில் பொருண்மை சமாதி யெனக்கூறப்பட்ட பத்துவகைக்குணமும்,
தன்மை முதற் பாவிகமீறாக வறுபத்துநாலென்னு மெண்ணையுடைய பொருளலங்காரமும்,
அடியினானுஞ் சொல்லினானு மெழுத்தினானு மடுக்கப்பட்டனவாகி முற்றுப்பெறவகுத்த மூன்றுவகை மடக்கலங்காரமும்,
வல்லின மெல்லின மிடையினமென்னு மூவினப்பாடன்முதலாக முறையினோடும் பொருந்திய விருபத்தாறின்மேலு மாறுகூட்டி
முப்பத்திரண்டென விழுமிதாய சித்திரக்கவிகளும் விரித்தபின்னர்க் குறையாய்நின்றனவாய வழுவும்,
வழுவமைதியு மிவையிவையென விரண்டுகூறாக்கிக்கூறிய பதினைந்தினொடு மணியிலக்கணநிரம்பாம லொழிந்தனவாய்
வருவனவுள வெனினு மவற்றையு மிவற்றினகத்தகப்படத் தழீஇக்கோடல் கற்றறிந்த வுத்தமர்கடனா மென்றவாறு.

அஃதேல் முற்கூறியனவல்லவோ மீண்டுங்கூறிற்று ; புனருத்தியாம் பிறவெனின், ஆகாது ; தொகுத்துமுடித்தலென்பது
தந்திரவுத்தியாகலா னிவ்வாறுரைக்கப்பட்டதென்றறிக. அஃதாக, “குறித்துரையெழுத்தொடு கூற்றவை செய்யுளி” னென்ற
முறையானே எழுத்து மொழி யடி யென்னா தீண்டு அடி மொழி யெழுத்தென்று முறைபிறழக்கூறியவா றென்னையெனின்
முந்துமொழிந்ததன்றலைதடுமாற்றென்னு முத்தி வகையான் அடிமடக்கென்பதும் சொன்மடக்கென்பதும் எழுத்தின்
கூட்டமென்ப தறிவித்தற்கும் ஓரெழுத்தானும் ஓரினத்தானும் வருவனவு மதன்பாற்படுமென்றற்கும் என்க.
நிரோட்டிய மோட்டியமுதலாகக் கூறப்பட்ட மிறைக்கவிகளும் நோக்கியாராயுங்காற் பெரும்பான்மையும்
எழுத்தின்பாற்படுமாயினு மவை வேறுவேறு சிறப்புப்பெயருடையவா யுலகி னுண்டாக்குகின்றனவாகலாற்
சொல்லின்முடியுமிலக்கணத்தா னவ்வாறு சொல்லப்பட்டது. சொல்லின்முடியுமிலக்கணந்தான்
யாதோவெனின் ஒப்பினாகியபெயருங் காரணமாகியபெயருங் குறித்துரைக்கப் படுதலா னவற்றினானே யுணர்ந்துகொள்க.

அஃதேல் மாலை மாற்றுஞ் சுழிகுளமும் சருப்பதோபத்திரமுங் கோமூத்திரியுமென நான்குமேயன்றே
யாண்டாசிரியனால் வடநூலு ளுரைக்கப்பட்டன.
ஒழிந்த மிறைக்கவி யீண்டுரைத்தல் மிகை படக்கூறிற்றாம்பிறவெனின், ஆகா ;
ஒழிந்தன ஒன்றினமுடித்த றன்னின முடித்தலென்னுந் தந்திரவுத்தியானுரைக்கப்பட்டது.
அல்லதூஉம், வடமொழிமுதனூலாதலாற் றனக்கொருவிகற்பம்படக் கூறுதலிலக்கணமென்பது ;
“முன்னோர்நூலின் முடிபொருங்கொத்துப், பின்னோன்வேண்டும்விகற்பங்கூறி, யழியாமரபினதுவழி நூலாகும்” என்பவாகலின்.

எச்சவியலுரை முற்றும்.

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே.
மாறனலங்காரம் முற்றும்.

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறனலங்காரத்தின் சித்திர பந்தத்தில் திரு எழுகூற்றிருக்கை–

April 30, 2022

ஸ்ரீ மாறனலங்காரத்தின் சித்திர பந்தத்தில் திரு எழுகூற்றிருக்கை–

494-499ஆம்பக்கங்களிலுள்ளது.
https://www.tamilvu.org/node/154572?linkid=118853

——–

ஒரு தனித் திகிரியி னிரு விசும்பொழுக்கத்
தொருஞான்றொரு பகலொடியா வுழப்பிற்

(இருவிசும்பொழுக்கத்து) பெருமையை யுடைய ஆகாச வீதியினிடத்து
(ஒருஞான்று…… வுழப்பின்) ஒருநாளின் கண் ணொரு கணப்பொழுது மொழிவில்லாத முயற்சியோடும்

பதமிரண்டுமிலாப்பாகுடையூர்தியின்
முந்நீர்வரைப்பினிருபால்வியப்பா
னொருபிணர்த்தடக்கையொன்றியவிருகவுண்
மும்மத நால்வாய்க் கரியுரிமுக்கட்
செம்மல்

(முந்நீர்… .. வியப்பான்) சமுத்திரத்தை யெல்லையாக வுடைய நிலத்தின்
கண் ணுயர் திணையிடத் தாண் பெண் ணென்னு மிரண்டு பாலு மதிக்கும்படிக்கு

(ஒருதனி…. யூர்தியின்) ஒன்றென்னப்பட்ட ஒப்பற்றவுருளோடு தாளிரண்டு மில்லாத பாகனையுடைய தேரின் மீதே

(ஒருபிணர்…… செம்மலின்) ஒன்றாய சற்சரைவடிவினை யுடைய பெரிய கையினையும், பெருகாது சிறுகாது
தம்மி லொத்த புழையொடு கூடிய விரண்டு கரடத்தினையும், மூன்று மதத்தினையும்,
நான்ற வாயினையு முடைய யானையை யுரிக்கு முருத்திரனைப் போலச் சிவந்து,

இருகணு மிமையாத் தேவர்க
ளொருபோழ்தகலா தொரு வழிப்பட நின்
றிருகையுங் கூப்பி முப்போதினுமிறைஞ்ச
நான்முக முதல்வனினசைஇய நல்கு
மைந்தருநீழலினறமுதனான்கினுண்

முந்தியமுப்பான்முழுநலமெதிர்கொள
விருமருங்கினுமின்னொருமருங்கரம்பைய
ரொருதிறத்திருபதநடநவின்றொழுக
மும்முரசானாமுன்றிலினிரட்டத்
தெம்முரண்முருக்கித்திசையவைநான்கினு
மைம்பொறியதனகத்தாறைந்தவித்துச்
செம்பொருணான்மறைதெற்றெனத்தேர்ந்த

முக்கோற்பகவர்முறைமுறைபிறழா
விருவினையொருங்குவென்றிறைநிலையிஃதென
வொருதலைபற்றினரிருமையுமுணர்ந்தோர்
முக்குணமவற்றுண்முற்குணனமைந்தவருட
னாலாங்கடவுள்வீற்றிருக்குநற்றிசைவரு
மிளங்கதிரகிலத்தின்னுயிரஞ்ச
வாழ்நாளறுதியில்வவ்வுதற்கமைத்த
நமன்றிசையெழுதிறனிறும்பூதென்ன
வறுகாலஞ்சிறையளிக்குலநான்குளர்

முருகவிழ்நறுந்தார்முந்நூன்மார்பத்
திருபிறப்பாளனோரிடத்தெதிருபு
லெழுகடற்புவனத்தெழுந்திறைவெளிவர
வறுசுவையினுளதிமதுரமுக்கியச்சுவை
யுறுபொருளைந்துடனுயர்தமிழ்மொழியா
யுறுபொருளைந்துடனுயர்தமிழ்மொழியா
னால்வகைப்பனுவன்மூவுலகமுமளந்தவ
னிருசெவிக்கமுதாமெனவினிதளித்த
வொருபேராண்மையினுயிர்கடாமனைத்தும்

நலங்கிளரொருதனிமுதலெனநாடிப்
பொலங்கழலிரண்டையும்புலனுறுமேதகு
முப்பொறிகளினான்முயற்சியிற்போற்றலு
நாற்பொருள்பயக்கநற்கனிவாயினைத்திறந்
தேற்புடைச்செய்யுளைந்தினுக்கிலக்கணமென
வாறறியந்தணரருமறைப்பொருளா

பிறந்திறந்துழலுமப்பெரும்பிணிதவிர்த்தருள்
ஞானபூரணககோதயநாவீற
மானபூடணகுருகாபுரிவரோதய
மறுசமயத்தவர்மத்தமால்யானையைத்
தெறுமொருசிங்கமாந்திருப்பெரும்பூதூர்

வருமெதிராசனைமனமகிழ்ந்தாண்ட
விருசரணாம்புயத்தென்னையுமொன்றா
யருள்புரிந்தாண்டதற்காதிக்காலத்
திம்மாநிலத்தென்பொருட்டாற்
கைம்மாறெவனீகைக்கொண்டதுவே.

இது 297, 298-ஆஞ் சூத்திரங்களிலும் உரையிலுங் கூறியமுறையைத் தழுவி யெழுதியது.
இதில் முதலேழுநிலங்களும் நிலந்தொறும் எண்ணேறியிறங்கி ஏழிறுதியேறிய பேரேற்றமும்,
பின்னேழுநிலங்களும் அவ்வாறு ஒன்றிறுதியிறங்கிய பேரிறக்கமுமாகக்கொள்க.
பேரிறக்கத்துள் முதனிலமட்டும் நடத்தி முடிக்கப்பெற்றிருக்கிறது.
ஏனைய நிலங்களும் நடத்திமுடிப்பதற்கு உதாரணம் வந்துழிக்காண்க.

(இருகணுமிமையாத்தேவர்கள்…… நாலாங்கடவுள் வீற்றிருக்கும் நற்றிசைவரு மிளங்கதிர்)
இரண்டுநயனமு மிமையாத வானோ ரொருகாலமும் விட்டுநீங்காது திரிவிதகரணங்களு மாத்மஞானத்துடனொரு
நெறிப்பட விரண்டுகரங்களையுங்குவித்து மூன்று பொழுதுந் தலைவணக்கஞ்செய்ய,
நான்குமுகங்களையுடைய பிரமனைப் போல விரும்பியதெல்லாங்கொடுக்கு மைந்துவிருக்கமாகிய
கற்பகாடவி நீழலிலே அறமுதலாய நாலுபொருள்களுள் முன்னேநின்ற மூன்றுபாலுந் தம்மாலாய
பெரியவின்பத்தைக் கைக்காள்வாயாகவென் றெதிர்கொண்டு நிற்ப, விரண்டுபக்கமு மின்போன்றதொரு
மருங்குலையுடைய வானவர் மகளிர் தாளமுங் கானமும் வாச்சியமு மபிநயமு மொருகூறுபாடெய்த
விரண்டுபதங்களினாலு நாடகத்தைநடித் தொழுகாநிற்ப, நாலுதிக்கிலுமுள்ள சத்துருக்கள்மாறுபாட்டைக்கெடுத்து
மூன்றுமுரசமும் நீங்காமல் முன்றிலின்கண் ணாரவாரிப்ப, செவியாதிய பொறியைந்தினுந் தங்கப்பட்ட
சத்தாதிக ளைந்தினையு மடக்கி யுண்மைப்பொருளைக்கூறு நாலுவேதத்தினையுந் தெளியவாராய்ந்த
முக்கோற்பகவராகி யெடுத்தசென னந்தோறு மிழைத்தமுறையே யடைவுதப்பாமல்வரு
நல்வினை தீவினை யென்னு மிரண்டையு மொக்கவென்று பரத்துவ சொரூபரூபகுணவிபூதி களினிலைமை
யித்தன்மைத்தென நிச்சயமாகவுட்கொண்டோ ரிம்மை மறுமை யிரண்டுந் தெளிந்தோர்
சாத்துவிக ராசத தாமதமென்னுங் குண மூன்றனுள் முற்குணங் குடிகொண்டோராகிய எதிகளுட னாற்
பெருங் கடவுளென்னும் இந்திர னொரு பராக்கற வீற்றிருக்குங் கிழக்கென்னு நல்லதிக்கினி லுதிக்கு மிளைய நாயிறு,
உலகின்கண்ணுள்ள இனியவுயிர்க ளஞ்சுவதாக அவரவர்வாழ்நாளற்ற அந்தியத்தி லுயிரை யுண்ணும்படிக்கு விதித்த
நமன்றிக்கி லெழுந்த கூறுபாடு ஆச்சரியமென்று, நினது திருமேனியிற் சுடர்ச்சோதியைக்கண் டுட்கொண் டது
விளங்கும்படிக் குத்தர கங்கையினின்றும் ஆறுதளையு மழகியசிறையையு முடைய வண்டின் சாதிநான்குங் குடையத்
தேனையொழுக்கு நறுவிதாந் தாமரைத்தாரும் முப்புரி நூலுங் கிடக்கு மார்பினையுடைய இருபிறப்பாளனாகிய
மதுரகவி, யொருதானத் தெதிர்ந்து, பேரானந்தந் தழையாநின்ற மூவரா மொருதனி முதலாகிய
ஸ்ரீமந்நாராயணனென ஞானத்தா லுட்கொண்டு, பொன்னாற் செய்த வீரக்கழலையுடைய நினது
திருவடிகளிரண்டையுங் கட்புலனுறவும் பெருமையெய்திய மனோவாக்குக்காயங்களின்முயற்சியாற் போற்றலும்,
அறமுதலிய நான்குபொருளும் பயப்பதாக நல்ல கனிபோன்ற திருப்பவளத்தினைத் திறந்து,
வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி மருட்பா வெனப் பெயர்பொருந்துதலுடைய யாப்பைந்தினுக்கு மிலக்கண மென்று சொல்வதாக,
ஆறங்கத்தையுந் தெளிந்த வந்தணர்க்குரியவா யறிதற்கரிய வா நால்வேதப்பொருளினாற் பரமபதநாதனாகிய இறை
கருடவாகனத் தேறி யெழுகடலுஞ்சூழ்ந்த பூலோகத்தில் வெளிவரும்படிக்குச் சுவை யாறனுள்ளு மதிமதுரமென்னு
முக்கியச்சுவை மிகுவதாக, ஐந்துபொருளொடுங்கூடிய தமிழ்மொழியால்,
திருவிருத்தம் திருவாசிரியம் திருவந்தாதி திருவாய்மொழி யென்னு நான்குகூறுபாடுடைய நாலுபிரபந்தங்களையு
முலகமூன்றுமளந்த வவன் றிருச்செவிகட்கு அமிர்தமென்று சொல்லும்படி யினிமையெய்தவூட்டிய வொப்பற்ற வரிய
செயலொடு முலகின்கண்ணுள்ளவுயிர்கள் யாவும் பிறந் திறந் தலம்வரு பிறப்பாகிய பெரிய
பிணியைத் தீர்த்துக் கிருபைசெய்த ஞானபூரணனே ! ஆனந்தத்திற்குப் பிறப்பிடமானவனே ! நாவீறுடையானே !
அபிமானபூஷணனே ! குருகைமாநகரிடத்துதித்த பலவரங்களு முதயமானவனே !
பரசமயிகளான மதயானைத்திரளை வெல்லும் ஒருசிங்கமான திருப்பெரும்பூதூரடிகளாகிய வெதிராசனைத்
திருவுளமகிழ்ந் தினிதாகவாண்ட இரண்டென்னுஞ் சரணதாமரையால் அறிவில்லாத என்னையும் ஒருபொருளாகக்
கருணை புரிந் தடிமைகொண்டதற் கிந்தப் பெரியநிலத்து முற்காலத் தெனது ஏதுவாக நீ கைக்கொண்ட
கைம்மா றியாதென்று சொல்லுவாயாக வென்றவாறு.

இதனுள் ஒருபகலென்றது கணப்பொழுதை ; “ஒருபகலுள்ளே யுருப்பவிர்” என்பதனா லறிக.

ஒடியா வுழப்பு-ஒழிவில்லா முயற்சி.

பாகன் பாகுடையென அன்விகுதி கெட்டது.

பிணர் – சற்சரைவடிவு.

செம்மல் – பெரியோன். இன் உவமஉருபு.

நசைஇய – விரும்பப்பட்டன.

முழுநலம் – பேரானந்தம்.

தெற்றென – தெளிய.

பிறழாது – மாறாடாது.

ஒருங்கு – ஒக்க.

ஒரு தலை – நிச்சயம்.
இருமை – இம்மை மறுமை.

முற்குணம் – சாத்துவிககுணம்.

நாலாங்கடவுள் – இந்திரன்.

அமைத்த – விதித்த.

இறும்பூது – ஆச்சரியம்.

உளர்தல் – குடைதல்.

அவிழ்த்தல் – ஒழுக்குதல்.

நலம் – ஆனந்தம்.

நாற்பொருள் – அறம் பொருள் இன்பம் வீடு.

உறுபொருளைந்துடன் என்பது
“மிக்க விறைநிலையு மெய்யா முயிர்நிலையுந், தக்க நெறியுந் தடையாகித் – தொக்கியலு,
மூழ்வினையும் வாழ்வினையும்” என்னும் பொருளைந்துடன் என்றவாறு.
பேராண்மை – அரியசெயல். பொருட்டு – ஏது. கைம்மாறு – உபகாரங்கொண்டு உபகாரஞ்செய்கை.
எவன் – யாதென்றவாறு.

முந்நீர்வரைப்பி னிருபால்வியப்பா னிருவிசும்பொழுக்கத்து ஒரு தனித்திகிரிப் பதமிரண்டுமிலாப் பாகுடை
யூர்தியின் முக்கட்செம்மலி னாலாங்கடவுள்வீற்றிருக்கு நற்றிசைவரு மிளங்கதிர், நமன்றிசையெழு திறனிறும்பூதென்ன,
விருபிறப்பாளனோரிடத்தெதிருபு முதலெனநாடிப் போற்றலுங் கனிவாயினைத்திறந் தருமறைப்பொருளா லெழுகடற்புவனத்
தெழுந்திறைவெளிவர வுறுபொருளைந்துட னுயர்தமிழ்மொழியா னால் வகைப்பனுவல் மூவுலகமுமளந்தவனிரு
செவிக் கமிர்தாமெனவினி தளித்த பேராண்மையி னுயிர்கடாம் பிறந்திறந்துழலும் பிணிதவிர்த்தருள் ஞானபூரண!
நாவீற!
குருகாபுரிவரோதய!
எதிராசனையாண்ட விருசரணாம்புயத் தென்னையு மொன்றா யருள்புரிந்தாண்டதற்
கென்பொருட்டாற் கைம்மா றெவனீ கைக்கொண்டதுவே
எனக் கூட்டுக.

பஞ்சாயுதங்களெனப்பாற்கடலான் பற்றியவைக்
கெஞ்சாதசாதிப்பேரிட்டெழுத–நெஞ்சே
கணக்காயர்புள்ளியிட்டகாலத்தேயோகம்
பிணக்காதவர்பேர்பெறும். (804)
இது மாத்திரைச்சுருக்கம்.

—————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறனலங்கார வரலாறு–ஸ்ரீ மாறனலங்காரத்தின் சித்திரபத்திரங்கள்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

ஸ்ரீ மாறனலங்கார வரலாறு

அலங்காரமென்பது செய்யுளுக்கு அழகுசெய்யும் லக்ஷணங்களைக் கூறும் சாஸ்திரம்.
இவ்வலங்கார சாஸ்திரத்தை வடமொழியாளர் மிகவும் விரும்பிக் கற்பர்.
இந்தச் சாஸ்திரத்தின்பெருமை அக்நிபுராணத்திற் பேசப்பட்டுள்ளது.
வாமநசூத்திரம், காவ்யாதர்சம், ஸரஸ்வதீகண்டா பரணம், காவ்யப்ரகாசம், அலங்காரஸர்வஸ்வம், ரஸமஞ்சரி,
ஸாஹித்ய தர்ப்பணம், ப்ரதாபருத்ரீயம், அலங்கார கௌஸ்துபம், சந்திராலோகம், குவலயானந்தம்,
சடவைரிவைபவதிவாகரம் (இது நம்மாழ்வார் விஷயமான வடமொழி மாறனலங்காரம்)
முதலிய நூற்றுக்கணக்கான வடமொழி நூல்கள் அலங்காரத்தைப் பற்றிச் சொல்பவைகள்.

தமிழில் முதன்முதல் அணியைப் பற்றித் தெரிவிக்கும் நூல் தொல்காப்பியம்.
தொல்காப்பியர் கூறுவது உவமை ஒன்றுதான்.
அவர் அகத்திணையியலில் ஏனையுவமம் உள்ளுறையுவம மிவைகளை விளக்கி உவமவியலில் உவமத்தைத்
தொழில், பயன், வடிவு, வண்ணம் எனப் பிரித்து விரித்தெழுதியிருக்கிறார்.
தொல்காப்பியர் காலத்து உவமையொன்றே அணியாகக் கருதப்பட்டது.
பிற்காலத்தார் அதிலிருந்து பல அணிகள் கற்பித்துக் கொண்டனர்.

நச்சினார்க்கினியரும் உவமமொன்றனையே அணியாகக் கருதினர்.
இவர் தம் காலத்திற் பல அணிவிகற்ப வேறுபாடுகளுடன் வெளிவந்த ஒரு அணி நூலைத்
தமது தொல்காப்பிய வுரையிற் குறைகூறுகின்றனர்.
இவர் உவமவிகற்பங்களுக்கு எடுத்துக்காட்டிய உதாரணச் செய்யுள்கள் சில,
தண்டியலங்காரவுரையில் வேற்றுமையணி, தற்குறிப்பேற்றவணி முதலியவைகளுக்குதாரணமாகக் காட்டப்பட்டிருக்கின்றன.
நிரனிறை, சமம் முதலியவற்றை உவமத்தின் விகற்பமாயே கொண்டார் நச்சினார்க்கினியர்.
இப்படி உவமமே பலவணிகளினுற்பத்திக்குங் காரணமாயிருந்தது என்பதை வடமொழியாளரும் சம்மதிக்கின்றனர்.

அப்பையதீக்ஷிதர் தாமெழுதிய சித்திரமீமாம்ஸை யென்னுங் கிரந்தத்தில் இவ்விஷயத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அச்சுலோகம் வருமாறு :-
இதன் மொழிபெயர்ப்பு,

“உவமையென்னுந்தவலருங்கூத்தி
பல்வகைக்கோலம்பாங்குறப்புனைந்து
காப்பியவரங்கிற்கவினுறத்தோன்றி
யாப்பறிபுலவரிதய நீப்பறுமகிழ்ச்சிபூப்பநடிக்குமே” என்பதாம்.

இவ்வணியிலக்கணமானது தொல்காப்பியத்திற் பொருளதிகாரத்திற் சொல்லப்பட்டிருக்கிறது.
அக்காலத்தில், தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள் என மூன்றுபாகமாகத்தான் பிரிக்கப்பட்டிருந்தது.
“எழுத்துஞ்சொல்லும் பொருளுநாடிச், செந்தமிழியற்கை சிவணியநிலத்தொடு, முந்துநூல்கண்டுமுறைப்படவெண்ணி”
என்னும் தொல்காப்பியப் பனம்பாரர் பாயிரத்தால்,
தொல்காப்பியத்திற்கு முதனூலும் இப்பாகுபாடே கொண்டிருந்ததெனத் தெரிகிறது.
இறையனாரகப் பொருளுரையை யுற்றுநோக்கும்போது, ‘யாப்பு’ , தனியுறுப்பாகக் கருதப்பட்டு,
தமிழிலக்கணம் நான்கு பிரிவாகக் கருதப்பட்டதென்று தோன்றுகிறது.
அதன்பின்புதான் ‘அணி’ தனியுறுப்பாகக்கொள்ளப்பட்டு, தமிழிலக்கணம்,
எழுத்து சொல் பொருள் யாப்பு அணியென ஐந்து பிரிவுடையதாக வகுக்கப்பட்டது.
இவ்வைந்திலக்கணமும் ஒருங்கே கூறும் நூல்கள் வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல்விளக்கம், முத்துவீரியம் என்பனவாம்.
இவை ஒவ்வொன்றிலும் அந்தந்தக் கிரமத்தில் அணியிலக்கணம் கூறப்பட்டுள்ளது.
வீரசோழிய அணிகளுக்கு முதனூல் ஆசார்யதண்டியியற்றிய வடமொழிக் காவ்யாதர்சம்.
இலக்கணவிளக்க முதலிய மற்ற இலக்கணங்களின் அணியிலக்கணங்களுக்கு முதனூல்,
தமிழ்த் தண்டியலங்காரமும் அதன் உரைகளுமாம்.

தனியாய் அணியிலக்கணமாத்திரங்கூறும் நூல்கள்
அணியியல் அல்லது அணிநூல், தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன.
இவற்றுள் அணிநூலைப் பற்றி விசாரிப்போம்.
யாப்பருங்கலவிருத்தியில் “உருவகமாதிவிரவியலீறாவரும். . . . அலங்காரமென்பது அணியியலாதலின்” என்று
கூறியிருப்பது தண்டியலங்கார அணிமுறைவைப் புக்குப் பொருத்தமில்லாததால் வேறு அணிநூலைக் குறித்ததாக வேண்டும்.

நேமிநாதவிருத்தியில்,
“புனையுறுசெய்யுட்பொருளையொருவழி, வினைநின்று விளக்கினது விளக்கெனப்படுமே”
“முதலிடைகடையென மூவகையான” என்பன அணியியல் ஆகலின் என்றுள்ளது.
இதில் இரண்டு சூத்திரத்தாற் குறித்த விளக்கணி தமிழ்த் தண்டியலங்காரத்தில்,
தீபக மென்றபெயரால் ஒரே சூத்திரத்திற் கூறப்பட்டிருக்கிறது.
ஆதலால் இவ்விருத்திகாரர் குறித்த அணியியல் என்னும் நூல் தண்டியலங்காரத்தினும் வேறாகவேண்டும்.

நச்சினார்க்கினியர் தொல்காப்பியவுரையில்
“இனி இவ்வோத்தினிற் கூறுகின்ற உவமங்களுட் சிலவற்றையும் சொல்லதிகாரத்தினுள்ளும் செய்யுளியலுள்ளுஞ்
சொல்லுகின்ற சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு மற்றவை செய்யுட்கண்ணே அணியாமென
இக்காலத்தாசிரியர் நூல்செய்தாருமுளர்” எனக்கூறி அவ்வணி நூலுக்குத் தமது சம்மதமின்மையையும் தெரிவிக்கிறார்.
இவ்வாக்கியத்திலுள்ள விஷயம் வடமொழியிலிருந்து பெயர்த்த தண்டியலங்காரத்தைக் குறிக்காது
வேறு அணிநூலையே குறித்ததாக வேண்டும்.

பரிமேலழகர் பக்ஷாந்தரமாய்க்கூறும் நுவலாநுவற்சி, ஒட்டு என்னும் பரியாயப் பெயர்கள் முறையே
வீரசோழியத்திலும் தண்டியலங்காரத்திலும் காணப்பட்டபோதிலும் அவர் தன்மதமாகக்கூறிய
பிறிதுமொழிதல் என்பது அணிநூலுட் கண்டதாகவிருந்தாலு மிருக்கலாம்.

இப்படியே வீரசோழியம், தண்டியலங்காரங்களுட் காணப்படாத சில அணிகளின் பரியாயப் பெயர் இவருரையிற் காணப்படுகின்றன.
இன்னோரன்ன காரணங்களால், தண்டியலங்காரத்தினும் வேறாய அணிநூல் அல்லது
அணியிய லென்ற நூலொன்று இருந்து விழுந்திருக்க வேண்டுமென் றேற்படுகிறது.

ஆனால், தண்டியலங்காரத்திற்கே அணியியலென்னும் பெயர் இருந்திருக்கிறது.
அணியியலென்றபெயருடன் அடியார்க்குநல்லாரும், மாறனலங்காரவுரையாசிரியரும் (மா-அ-சூத் 25-ன் கீழ்)
எடுத்துக்காட்டி யிருக்கிறமுறையே சூத்திரம் இரண்டு மொன்றும் தண்டியலங்காரத்துட் காணப்படுகின்றன.
இத் தண்டியலங்காரச் சூத்திரங்கள் அணியியலென்னும் நூலிலிருந்து முன்னோர் மொழியாக
எடுத்துத் தண்டியலங்காரத்துட் சேர்க்கப்பட்டிருக்கலாமென்று கருதுவதற்கு இடங்கொடுக்கின்றன.

இனி, ‘மாறனலங்காரம்’ என்பதைப் பற்றி விசாரிப்போம்.
மாறன் என்பது பாண்டியரைக் குறிக்கிற பழம் பொதுப்பெயர்களுள் ஒன்று ;
இங்கு ஆழ்வார்களுட்சிறந்த நம்மாழ்வாரைக் குறிக்கிறது.
இவர் பாண்டியரது அரசாட்சிக்குட்பட்ட பொருநையாற்றின் அடைகரையாகிய திருவழுதி வளநாட்டுக்குரிய சிற்றரசர்.
மாறன், காரிமாறன், சடகோபன், திருவழுதி வளநாடன், பொருநற் (தாம்ரபர்ணி) சேர்ப்பன்,
பொருநற்சங்கணித்துறைவன், மகிழ்மாலைமார்பினன் முதலான பெயர்கள்
இயல்பாயும், காரணம்பற்றியும் இவருக்கு வழங்கி வந்தனவென்று திருவாய்மொழியால் தெரிகிறது.

இவர் பிறந்தபொழுதே தொடங்கித் திருமாலினிடத்து விசேஷபக்தியுடையராய்
உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாங் தண்ணனேயென் றத்யவசித்துத்
ததேக த்யானபரராயிருந்து நான்கு வேதங்களையும்
திருவிருத்தம் திருவாசிரியம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி என்னும் நான்கு தமிழ்ப்பிரபந்தங்களாக
லோகோஜ்ஜீவநார்த்தமாக வெளியிட்டருளினர்.
இவரை அக்காலத்திலிருந்த மதுரகவி முதலான ப்ராஹ்மண சிரேஷ்டர்களும்
பிற்காலத்து வந்த நாதமுனி, யாமுநாசார்யர், ராமாநுஜர் முதலான ப்ராஹ்மண சிரேஷ்டர்களும்
ஆசார்யராக மதித்து நேரிலும் விக்ரகரூபமா யெழுந்தருளப் பண்ணியும்
ஆழ்வார்களுட் டலைமையானவராய்க்கொண்டு ஆராதித்து வந்தனர்.

வடநாட்டிலும் துளசீதாசர் முதலானோரால், பாராட்டிப் பூசிக்கப்பட்டார் இவ்வாழ்வாரெனின்,
இவரைப் பற்றி நாம் அதிகமாயெழுத வேண்டியதில்லை.
இந்நூலாசிரியர் இவ்வாழ்வாரிடத்து ஏழாட்காலும் பழிப்பிலாத் தொண்டு பூண்டு
மறந்தும் புறந்தொழாதவமிசத்துட்பிறந்த வைணவமதாபிமானமுள்ளவரான படியினாலே,
தண்டியலங்கார முதலிய நூல்கள் அரசர் முதலியவர்களைப் பற்றிக்கூறி
லௌகிக திருஷ்டாந்தங்களுடையனவாயிருப்பது கொண்டு, தா மிந்த அலங்கார நூலையியற்றி
இதை ஆழ்வார்க்குச் சமர்ப்பித்து உதாரணங்களை
ஆழ்வார் விஷயமாகவும் திவ்யதேசத்து எம்பெருமான்கள் விஷயமாகவும் வைஷ்ணவபரமாய்ச் செய்து சேர்த்தருளிக்
‘காரிதந்தருள் கலைக்கடலியற் பெயர்புனைந்து’ (மா-அலங். பா)
‘திருமகிழ்ப்பரமதேசிகன் பெயரால்’ (மா-அகப்) இந்நூலை வெளியிட்டருளினர்.
ஆகவே மகிழ்மாறன் அல்லது நம்மாழ்வாரை நாயகனாகக் கொண்ட அலங்கார சாஸ்திரமாகுமிது.

வடமொழியிலும் நம்மாழ்வார் விஷயமான ஒரு அலங்கார சாஸ்திரம் ‘சடவைரிவைபவதிவாகரம்’ என்ற பெயருடன்
குவலயாநந்தத்தை யநுசரித்ததாய் விளங்குகிறது.
கூடிய சீக்கிரம் அச்சில்வரும் இத் தமிழணி நூல், பாயிர இலக்கணத்தை முதலிற் பெற்று,
அது தவிரப் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியல் என நான்கு பகுப்புடையதாயிருக்கிறது.

இந்நூற் பொதுப்பாயிரத்துள் “வெள்ளையினகவலின் விளம்பலு மரபே” என்றபடி
இந்நூலாசிரியர் பொதுவியலைமாத்திரம் வெண்பாவா லமைத்திருக்கிறார்.
அகவலின் வெள்ளையினறைக வென்ற முந்து நூல் விதித்தமையுளவாகவும்,
விதியாது நீக்கிய கட்டளைக்கலித்துறை ஆசிரிய விருத்தமென்னும் பாவினத்தாற் பின் பிலக்கண நூல்செய்தோர்
இலக்கணங்களைக் கூறியதுபோலவும், சிலப்பதிகாரத்திற் சிலகாதைகள் பாவினங்களாற் பாடியது போலவும்
இவரும் முதலியலை வெண்பாவாலும் மற்றவற்றை நூற்பாவாலும் கூறினர்.

தண்டியலங்காரத்தில் மேற்கூறிய நான்கியலுக்கும் சேர்ந்த சூத்திரங்கள் 125 தான்.
தண்டியலங்கார உதாரணச் செய்யுள்களிலும் மாறனலங்கார உதாரணச் செய்யுள்கள் மிகவு மதிகம்.
ஆகவே தண்டியலங்காரத்தினும் மாறனலங்காரம் மிக்க விரிவுடையது.
தண்டியலங்காரம் காவ்யாதர்சத்தைப் பின்பற்றின மொழிபெயர்ப்பு.
மாறனலங்காரம், தொல்காப்பிய முதலியவற்றின் கருத்துக்களையும்,
“முதுமொழித்தண்டி முதனூலணியையும், புதுமொழிப் புலவர்புணர்த்தியலணியையும்,
தனாது நுண்ணுணர்வாற்றருபலவணியையும், மனாதுறத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும்,
சதுர்பெற விரண்டிடந்தழீஇய சார்பென”விளங்குகிறது.
ஆயினும், இது தண்டியலங்காரத்தின் வழி நூலாகும்.

இதனுரையில் வடமொழித் தண்டியாசிரியரை யபூர்வமா யோரோரிடத்தும்,
தமிழ்த் தண்டியாசிரியரை அடிக்கடி பல இடங்களிலும் சுட்டியிருக்கிறார்.
இந் நூலாசிரியர் சிலஇடங்களிற் சிலநியாயம்பற்றிச் சிறிது வேறுபடுவதுமுண்டு.
எடுத்துரைப்பிற் பெருகுமாதலால் 84ம் சூத்திரவுரை முதலிய இடங்களிற் கண்டுகொள்க.

தண்டியலங்காரத்துட்கூறிய பொருளணிகளின்றொகை 35.
இந் நூலுட்கூறிய அணிகளின்றொகை 64.
இந்நூலார், தண்டியாசிரியர்கூறிய நுட்பமென்னுமலங்காரம் பரிகரத்துளடங்குதலா லதைக் குறைத்தார்.
சொல்லிலக்கணத்திலும் பொருளியலிலும் புறத்திணையியலிலுங் கூறியுள்ளவும்
மற்ற அணிநூல்களுட் கூறப்படாதனவுமாகிய பூட்டுவில், இறைச்சிப் பொருள்கோள், பொருண்மொழியென்னும் மூன்றையும்
செய்யுட்கணி செய்தலால் அணியுட் சேர்த்துமிகுத்தார்.
வகைமுதலடுக்கு, இணையெதுகை, உபாயம், உறுசுவை, புகழ்வதினிகழ்த லென்னுமைந்தும் அழகெய்துவதா யிருத்தலின்,
இலக்கியங்கண்டதற் கிலக்கணமியம்புதலாயிவற்றையு மிகுத்தார்.
தண்டியாசிரியர் உவமவிரியுட்சேர்த்தும், ஏனையாசிரியர் வேறுவேறாகப் புணர்த்துமிருக்கிற ஐயம்,
தெரிதருதேற்றம், பொதுநீங்குவமை என்பவற்றுள் ஐயத்தையும், தெரிதருதேற்றத்தையும்,
ஏனையாசிரியர்மதமுடன்பட்டுப் பிறிதோரணியாக்கியும், பொதுநீங்குவமையைத் தண்டியாசிரியர் மதம்பற்றி யுவமையுட்புணர்த்தும்,
தன்கோட் கூறலென்னுமுத்தியானும், தன்குறியிடுதலென்னுமுத்தியானும், பின்னோன்வேண்டும் விகற்பங்கூறி முடிக்கும் வழி
நூலிலக்கணம்பற்றியும் இவ்வாறெல்லாம் முடித்தார்.
இவ்வாறு சூக்குமமாய்க் காணப்படும் வேறுபாடுகளுக்கெல்லாம் மேற்கண்டபடியே கொள்ளவேண்டும்.

தண்டியாசிரியர் ஒரே சூத்திரத்திற் பன்னிரண்டு சித்திரகவிகளுக்குப் பெயர்மாத்திரங் கூறிச்செல்ல,
இந்நூலார் முப்பத்திரண்டு சித்திரகவிகள் கூறி அவற்றுக்கு இலக்கணமுங் கூறிச்செல்கிறார்.
‘தேவா’ ‘மாதவனே’ ‘தண்மதி’ ‘சேடுறு’ என்றுதொடங்குகிற சக்கரபெந்தச் செய்யுள்களில்
‘திருமலை’, ‘தென்குருகூர்’, ‘வடமலையப்பன்’, ‘சீராமராமசெயம்’, ‘தருமமேகைதரும்’ என்பவைகளும்
இரதபெந்தத்தில் ‘நாராயணாயநம’, என்பதும் காதைகரப்பிற்
‘கொல்லான்புலாலைமறுத்தானை’ என்னுங் குறளும் அழகாயமைக்கப் பட்டுள்ளன.

தண்டியலங்காரவாசிரியர் தாமே மூலமும் உதாரணமுங் காட்டினாற் போல,
இந்நூலாசிரியர் தாமே உதாரணச் செய்யுள்களும் செய்தமைத்தாரென்று தோன்றுகிறது.
“இந்நூலாசிரியர் இவ்வுதாரணம் யாண்டுப் பெற்றாரோவெனின்” என்று உரையில்வருவது கொண்டும்
பிற ஆதாரங்கொண்டு மிவ்வாறு ஊகிக்கவேண்டியதாயிருக்கிறது.
இந்நூலிற் பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு, புறநானூறு, குறுந்தொகை, அகநானூறு, குறள், நாலடி, சிந்தாமணி,
சிலப்பதிகாரம், வெண்பாமாலை, யாப்பருங்கலம், திருவாய்மொழி முதலிய பழைய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

இந்நூலாசிரியர் செய்தருளிய திருக்குருகாமான்மியம், நம்பெருமாள் மும்மணிக்கோவை, மாறன்கிளவிமணி மாலை,
இந்நூலுரையாசிரியர் செய்தருளியதாக நினைக்கப்படுகிற மாறன் பாப்பாவினம் முதலிய வைணவ நூல்களிலிருந்தும்
அடிக்கடி மேற்கோள்கள் காட்டப்பட்டிருக்கின்றன.
திருப்பதிக்கலம்பகம் என்னும் நூலிலிருந்தும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.
அந்நூலைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை.
மற்றைய உதாரணச் செய்யுள்களெல்லாம் நம்மாழ்வார் விஷயமாகவும், திவ்யதேசத்து எம்பெருமான்கள் விஷயமாகவும்
வெண்பா முதலிய பாப்பாவினங்களிற் பெரும்பாலும் அகப்பொருட்டுறைகளமையப் பெற்றனவாய்
நூலாசிரியராற் செய்யப்பெற்றுச் சேர்க்கப்பட்டுள்ளன.
இவ்வுதாரணங்களெல்லாம் கற்பனைக் களஞ்சியமாய்ச் சொற்சுவை பொருட்சுவை நிரம்பி அழகாயிருக்கின்றன.
பெரும்பாலும் உதாரணச் செய்யுள்களுக்குத் திணையும் துறையும் கூறப்பட்டிருக்கின்றன.
சில உதாரணங்களுக்குப் பொழிப்புரையும், சிலவுதாரணங்களுக்குக் குறிப்புரையும் கூறப்பட்டுள்ளன.
நன்னூலின் ஆரம்பத்துட் கூறியிருப்பதுபோல இந்நூலிலும் ஆரம்பத்திற் பொதுப்பாயிரத்திலக்கணம்
மிக விரிவாயும் தெளிவாயுங் கூறப்பட்டிருக்கிறது.

இத் தமிழணி நூலின் பொருளடக்கத்தையும் பெருமையையும் பின்வரும் நூற்பாவானும், வெண்பாவானும் ஒருவா றறிந்துகொள்க.

ஆறெனத்தொகைவகையினில்விரித்தவற்றைத்
தேறமெய்பெறுநான்கெனத்தெரிசெய்யுளும்
பாகமோர்மூன்றும்பயில்குணம்பத்து
மாகவெண்ணான்கிரட்டியபொருளணியு
மடிமொழியெழுத்தினடுக்கினவாக
முடிவுறவகுத்தமூவகைமடக்கு
மூவினப்பாடன் முதலாமுறைமையின்
மேவினவிருபானாறன்மேலாறென
விழுமியமிறைக்கவிவிரித்தபின்னெஞ்சிய
வழுவழுவமைதியுமிவையெனவகுத்து
மொழிந்தவைம்மூன்றுடன்முற்றா
தொழிந்தவுங்கோடலொள்ளியோர்கடனே”
வாய்ந்ததிருப்பதிநூற்றெட்டினையும்வாழ்த்தியே
யாய்ந்ததமிழ்மாறனணியெனப்பேர்–தோய்ந்துளதாற்
காண்டகுசீர்மற்றோரணியுங்கவின்புணர்க்க
வேண்டுமோவீங்கிதற்குமேல்”

சுமார் நூறுவருஷங்களுக்குமுன் ‘கர்னல் மெக்கன்ஸி’ துரையவர்களால் மிக்க திரவியச் செலவு செய்து சேர்க்கப்
பெற்று இப்போது துரைத்தனத்தா ரிடமிருக்கும் சென்னை இராஜாங்கப் புத்தக சாலையில்
இந்நூலின் காகிதக் கையெழுத்துப் பிரதியொன்றிருப்பது, சில பெரியோர்களுக்குத் தெரிந்த விஷயம்.
கிரந்தமந்தணகூடம் (Tamil Museum) என்ற பெயர் வைத்துக்கொண்டு அநேக சாஸ்திரங்களை வெளியிடப்போவதாய்
முன்னுக்கு வந்த S. சாமுவேல்பிள்ளை என்பவர், சுமார் 55-வருடத்துக்குமுன்,
தா மச்சிட்ட ‘தொல்காப்பிய நன்னூல் ஐககண்ட்ய’ புஸ்தகத்தில் இந்நூலைப் பற்றிப் பிரஸ்தாபித்துள்ளார்.
மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ சூரியநாராயண சாஸ்திரியாரவர்களும்,
மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ செல்வக்கேசவராய முதலியாரவர்களும் தாங்களியற்றிய தமிழ்ப் பாஷை விஷயமான நூல்களில்
இந்நூலைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சென்னையில் வசித்த வைணவ வித்வான்களாகிய மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ இராஜகோபால பிள்ளையவர்கள் முதலியோர்
இந்நூலை அச்சிட எண்ணிப் பொருண்முட்டுப்பாட்டால் நின்றுவிட்டனர்.
முதன் முதல் வெளியான செந்தமிழ்ப் பகுதியினின்று, காலஞ்சென்ற ஸ்ரீமாந்.பாண்டித்துரைத் தேவரவர்களும்,
முன்பு செந்தமிழ்ப் பத்திராசிரியராயிருந்த ஸ்ரீ உ.வே.ரா. இராகவையங்காரவர்களும்
இந்நூலை அச்சிடுவதைச் சங்கத்தின் முதனோக்கங்களுளொன்றாகக் கொண்டிருந்தன ரென்பது தெரிகிறது.
எக் காரணங்களாலோ அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை.
இத்தகைய அரிய நூல்களை யச்சிட்டுத் தமிழகத்திற் குபகரித்து வரும் தமிழ்ச்சங்கத்தார்க்குத்
தமிழபிமானிகள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நூலாசிரியர்

பெயர்:- இவ் வரிய பெரிய நூலை இயற்றியவர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர்.
திருக்குருகைப்பெருமாள் என்றால், திருக்குருகை யென்னும் ஆழ்வார்திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் என்று பொருள்.
“திருக்குருகைப்பெருமாள் தன் திருவடிகள் வாழியே” என்பது அஷ்டகஜம் அப்பிள்ளை அருளிச்செய்த நம்மாழ்வார் விஷயமான
வாழித்திருநாமம். இந்நூலாசிரியர் நம்மாழ்வாருடைய ஆஸ்தான கவிரா யராதலால் அவருக்குத்
திருக்குருகைப்பெருமாள் கவிராயரென்று பெயராயிற்று.
இவருக்குச் ‘சடையன்’ என்னும் இயற்பெயருமுண்டு. ‘சடகோபன்’ என்பது சடையன் எனத் திரிந்ததுபோலும்.

தகப்பனார் :- இவருடைய தகப்பனார் பெயரும் ‘திருக்குருகைப் பெருமாள்கவிராயர்’ என்பதேயாம்.

ஜாதி :- வேளாளர். ‘சீரகத்தார்வணிகன்’ என்று பாயிரத்திலிருப்பதை நோக்க வேளாளரும்
ஒருவகை வைசியவகுப்பிற் சேர்ந்தவரென்பது வெளியாகின்றது.
ஆழ்வார்திருநகரிக்கோயிற் சத்தாவரண உத்ஸவங்களிற் படிக்க வேண்டிய ‘திருப்பணிமாலை’ படிப்பவருக்கு
ஏற்பட்ட சுதந்தரங்களைத் தெரிவிக்கும் கோயிற்கணக்கில் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்றிருக்கிறது.
அந்தச் சுதந்தரங்களை இப்போது வத்தராயிருப்பு ஆழ்வாரப்பபிள்ளை என்பவர் பெற்றுவருகிறது கொண்டு
இந் நூலாசிரியர் இவரின் முன்னோராயிருக்கலாமென்று சிலர் நினைக்கின்றனர்.
ஆழ்வாரப்ப பிள்ளையின்பந்துவாகிய அமிர்தகவிராயரின் வம்சத்தில் ‘திருக்குருகைப் பெருமாள்கவிராயர்’கள் சிலரிருந்திருக்கின்றனர்.
சென்னை ராஜாங்கக் கையெழுத்துப் புத்தகசாலையிலுள்ள திருவரங்கத்தந்தாதியின் பழையவுரை யெழுதி வைத்தவர்
திருக்குருகைப்பெருமாள் கவிராயர். இவர் இந்நூலாசிரியரல்லர்.
இவர் மாறன்கோவை இயற்றிய வேங்கடத்துறைவான் கவிராயர் வம்சத்தவராயிருக்க வேண்டும்.
இப் பெயரினர் ‘O.K.S.’ என்ற நவீனக்குறியால் வழங்கப்படுகிற திருநெல்வேலி ஜில்லா
வைணவ வேளாள வகுப்பைச் சேர்ந்தவரென்று தெரிகிறது.

ஊர் :- திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரி. இவற்றிற்குப் பிரமாணம் :-

“பெருநிலம்புகழ்திருக்குருகைப்பெருமாளருள்குருகூர்வருமனகன்செழுந்தேன்
மருக்கமழ்சீரகத்தார்வணிகன்புகழ்த்திருக்குருகைப்பெருமாள்கவிராயன்
அருட்குணத்துடன்வளர்சடையன்பொருட்டொடர்நவம்புணர்புலமையோனே”–(மாறனலங்காரப்பாயிரம்)

“குருகையம்பதித்திருக்குருகைப்பெருமாள்
பொருவில்பேரன்புடன்புரந்தருள்புதல்வன்
மருக்கமழ்சீரகத்தார்வணிகேசன்
திருக்குருகைப்பெருமாள்கவிராசன்
அருட்குணத்தவர்புகழ்சடையன்
பொருட்டொடர்நவம்புணர்புலமையோனே”(மாறனகப்பொருட்பாயிரம்)

“இருக்குமுதற்பனுவலினாலியற்றமிழ்தேர்நாவீறனென்னுமேன்மை
யருட்புயலைப்புகழ்புலமைத்திருக்குருகைப்பெருமாள்பேரன்புகூருந்
தருக்குலவும்பொழிற்குருகாபுரிவணிகன்சடையனிதைத்தமிழாற்சாற்றித்
திருக்குருகைப்பெருமாள்வண்கவிராசனெனப்புனைபேர்சிறந்ததொன்றே”(திருக்குருகாமான்மியப்பதிகம்)
முதலியன.

மதம் :- வைணவம்.
இவர் ‘மணவாளமாமுனி’ முதலிய தென்கலை ஆசார்யசிரேஷ்டர்களை அலங்கார நூலின் மத்தியில் வணங்கியிருப்பதாலும்,
ஸ்ரீநிவாசஜீயர் என்னும் தென்கலை ஆசார்யபுருஷரது சிஷ்யராதலாலும், தென்கலை வகுப்பைச் சேர்ந்தவர்.

ஞாநாசிரியர் :- இந் நூலாசிரியருக்குப் பஞ்சஸம்ஸ்காரமென்னும் தீக்ஷை முதலிய செய்து வைத்த ஞாநாசிரியர்
‘ஸ்ரீநிவாஸஜீயர்’ என்பது ‘சிற்குணச் சீநி வாதனின் னருளா, னற்பொருண் மூன்றையும் நலனுற வுணர்வோன்’ என்னும்
மாறனலங்காரப் பாயிரத்தாலும்,
‘சிற்குணத் திருமலைச்சீநிவாதன், பொற்புடைத் திருவடி போற்றிய புனிதன்’ என்னும் மாறனகப் பொருட்பாயிரத்தாலும் தெரிகிறது.
அன்றியும், மாறனலங்காரத்துள்ளே இவ் வாசிரியரைச் சில இடங்களில் வாழ்த்தியிருக்கிறார். அச்செய்யுள்கள் வருமாறு :-

“முத்திக்கவனேமுதற்காரணனென்றும்
பத்திவிடாதேபயிலென்றுஞ்–சத்தியமாய்ச்
செல்வத்திருப்பதிவாழ்சீநிவாதன்பகர்ந்த
சொல்வித்தகமேதுணிந்து”(காபாலிகாந்தியகுளகம், குரவன் வாழ்த்து)

“முப்புரிநூன்மார்பினான்முக்கோல்கைக்கொண்டுளான்
பொய்ப்புலனைவென்றபொறையுடையான்-மெய்ப்பொருளைச்
சேவிக்குநுண்ணுணர்வான்சீநிவாதன்றமியே
னாவிக்கருள்புரிந்தாள்வான்”(திணை : வாகை, துறை : தாபதவாகை)

இவ்வாசிரியர், ஸ்ரீமணவாளமாமுநிகளின் ஆசிரியர் திருவாய்மொழிப் பிள்ளையால் ஸ்தாபிக்கப்பெற்ற
திருநகரி உடையவர் (ராமாநுஜர்) ஸந்நிதி எம்பெருமானார் ஜீயர்மடாதீந பரம்பரையில் 8 (?)வது ஸ்வாமியாக எழுந்தருளியிருந்தவர் ;
திருப்பதி மடத்திலிருந் தெழுந்தருளியவர். (மேற்குறித்த பிரமாணங்களை நோக்குக)
இவர் திருப்பதியிலிருந் தெழுந்தருளும்போது கொண்டுவந்த, ஸ்ரீநிவாஸன் படத்திற்கு
நாளிது வரை நித்தியபூஜையும் உத்ஸவமும் நடத்திவருகிறார்கள்.
இந்த ஜீயர், தாம் வீற்றிருந்த மடத்தைச் சார்ந்த உடையவர் ஸந்நிதியை ஜீர்ணோத்தாரணஞ் செய்தாரென்பது,
பின்வரும் ஆழ்வார் திருநகரித் திருப்பணிமாலைச் செய்யுளால் விளங்கும்.

“இவர்ந்தபூதூ ரெதிராசன்கோயிலை
யுவந்தனைத்தழகுங்கண்டுலகினோங்கினான்
சிவந்தபங்கயமுகன்சீநிவாசமா
தவன்றிரிகோற்கோன்மாதவர்கிரீடமே”
சென்னை ராஜாங்கக் கையெழுத்துப் புத்தகசாலைப் புத்தக அட்டவணையில் இவர் ஸ்ரீநிவாஸாசார்யர் என்றெழுதியிருக்கிறது.
இந்த ஜீயர் சுவாமி, உபயவேதாந்த ப்ரவர்த்தகராய்த் திக்குவிஜயம் செய்து வாக்மியாயிருந்தாரென்று சொல்லப்படுகிறது.

இந்நூலாசிரியர் செய்த வேறு நூல்கள் :-
1. மாறனகப்பொருளும் அதன் உதாரணம் நூற்றெட்டுத் திருப்பதிக்கோவையும்.
2. திருக்குருகாமான்மியம்.
3. நம்பெருமாள் மும்மணிக்கோவை.
4. மாறன் கிளவிமணிமாலை முதலியன.
இவற்றில் முன்னையதைத் தவிர மற்றைய நூல்களெல்லாம் மாறனலங்காரத்தில் உதாரணமாக எடுத்துக்காட்டப் பட்டுள்ளன.*

காலம் :- இந்நூலால் இவர்காலம் இன்னதென்று தெரியாமற்போன போதிலும்,
இவர் செய்த மற்றொரு நூலாகிய திருக்குருகாமான்மியம் அரங்கேற்றிய காலம் அதிற் குறிக்கப்பட்டிருப்பதால்
அதிலிருந்து இவர்கால மின்னதென் றேற்படுகிறது. அச்செய்யுள் வருமாறு :-

அறந்திகழாண்டவையெழுநூற்றிருபான்மூன்றி
லணிகிளர்கார்த்திகைமாதமெட்டில்வாழ்வு
சிறந்திடுதிங்களினாளுத்தரத்திலேகா
தெசியின்மகரமுகூர்த்தந்திருந்தமுற்றத்
துறந்தவரெண்மகிழ்மாறர்திருமுன்னாதிச்
சுருதியுடன்மிருதியுஞ்சொற்றமிழின்வாய்மை
பிறந்தபெருங்காப்பியமுந்தெரிந்தோர்கேட்கும்
பெற்றியுடனரங்கேற்றப்பெற்றதன்றே”
இதிற் குறிப்பிட்டுள்ள வருஷம் கொல்லம் ஆண்டு. கொல்லமாண்டு 723-வது
எனவே, இப்போது 1090 நடப்பதால், 365 வருஷங்களுக்கு முன் இவர் இருந்தாரென்றேற்படுகிறது.
குருகாமான்மியத்திலிருந்து இந்நூலுக்கு உதாரணமெடுத்திருப்பதால் இந்நூல் பின்னாற்செய்யப் பெற்றதென்று வைத்துக் கொள்வோம்.
ஆகவே ஏறக்குறைய 360-வருஷங்களுக்குமுன் இந்நூலியற்றப் பெற்றதென்பது ஏற்புடையதாகும்.
ஜீயர்காலம் நிர்ணயிக்கப் புகுமிடத்தும் இக்காலவரையறை சரியாயேற்படுகிறது.
உரையாசிரியர் காலமும் இதுவேயாகும்.
இதுபற்றியேதான் ‘செந்தமிழில்’ இரண்டுமூன்றிடங்களில், உரையாசிரியராகிய இரத்திந கவிராயர் பிரஸ்தாபம்
வருமிடத்து ஸ்ரீ.உ.வே.இராகவையங்காரவர்கள் ‘350-வருஷங்களுக்குமுன்னிருந்த’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இவர்பெருமை :- இவர் பாலியத்திலேயே நிகண்டு, இலக்கணம், இராமாயணம், சங்கநூல்கள், பழையவுரைகள்
இவற்றை ஐயந்திரிபறக் கற்றுச் சிறந்த வித்வானாகிய தமது தகப்பனாரிடம் கற்று வல்லுநராய்,
மாணாக்கர்க்குப் பாடமோதியும், பழைய நூல்களைத் தேடித் தொகுத்து வைத்துக் ‘கல்விக்களஞ்சிய’மொன் றேற்படுத்தியும்,
பொருட்டொடர் நவம்புணர்புலமையோன் (மா-அக & அல) என்றபடி புதுவகையான பெருங்காப்பியம் சிறுகாப்பிய முதலான
நூல்களியற்றியும், தங்காலத்து வித்வான்களுடன் வாதஞ்செய்தும், அரசராற் சன்மானிக்கப்பெற்றும் தமிழை விருத்திசெய்து
சிறந்த வீரவைணவப் புலவராய் வீற்றிருந்தார். இவர் விஷயமாய் அபியுக்தரருளிய பின்வருஞ் செய்யுளையும் நோக்குக.

“நேற்றுப்பிறந்துவரும்பாவியானநிலாநெருப்புக்
காற்றும்படிதொங்கறந்திலனேயருங்கூடற்சங்கந்
தோற்றும்படிசொன்னசொன்னாற்பத்தொன்பதையைம்பதென்று
சாற்றுந்திருக்குருகைப்பெருமாணஞ்சடைக்குட்டியே”

———

இந்நூலுரையாசிரியர்

இந்நூலுக்குச் சிறந்த விருத்தியுரையருளிச் செய்தவர் தென்றிருப்பேரைப் பதியிற்பிறந்த காரிரத்நகவிராயர் என்பவரே.
தென்றிருப் பேரையென்னும் பாடல் பெற்ற திவ்யதேசம் ஆழ்வார்திருநகரிக்குக் கிழக்கே மூன்றுமைல் தூரத்துள்ளது.
இவர், திருக்குருகைப் பெருமாள்கவிராயர் அநேகமாணாக்கர்க்குப் பாடமோதிக்கொண்டு சிறந்த வித்வானாயிருப்பதைக்
கேள்வியுற்று அவரிடம் படிக்க ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார். அவரிடம் கல்விகற்றுச் சிறந்தவித்வானானார்.
செந்தமிழ்ப் பத்திரிகையில் இவரைக் குறிக்கநேரும்போதெல்லாம் இவர் பெயரை இரத்திநகவிராயரென்றே குறித்திருக்கிறது.
ஆனால் உற்று நோக்கும்போது இவரது இயற்பெயர் ‘காரிரத்நகவிராய’ ரென்பதென்று தெரிகிறது.
‘காரிரத்நம்’ என்பது ஆழ்வார்திருநாமம். காரிராசன் பெற்ற இரத்திநம் போன்ற புதல்வன் என்பது இதன்பொருள்.
‘காரிதந்தருள்கலைக்கடலியற்பெயர்புனைந்து’ (மா. அல) ‘காரிமாறன் சடகோபன்’ (திருவாய்)
‘காரி.. . . . . . . .ரத்நம்’ (மாறன்கோவை) முதலியவற்றையும் நோக்குக.
இவருரை மிகவுஞ்சிறந்ததோருரை. இவ்வுரையின்றேல் இந்நூலின்பெருமை வெளிப்படாது.
சங்க நூல்கள் பிற சான்றோர் நூல்கள் முதலியவற்றிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார்.
சில உதாரணச் செய்யுள்களிலுள்ள உள்ளுறையுவமம், ஏனையுவமம், இறைச்சிப் பொருள் முதலியவற்றை அழகாய் விளக்குகிறார்.
சில உதாரணச் செய்யுளுக்குக் குறிப்புரையும் சிலவற்றிற்குப் பொழிப்புரையும் கூறுகிறார்.
இவர் வேண்டுமிடங்களில் தண்டிமதம், தொல்காப்பியர் போன்ற பிற நூலாரின் கருத்து முதலியவற்றையெடுத்துக் கூறித்
தக்கசமாதானங் கூறுகிறார். உதாரணச்செய்யுள்களைச் சூத்திரப் பொருளோடு அழகாய்ப் பொருத்திக் காட்டியிருக்கிறார்.
இவர் காலம் முன்னே கூறப்பட்டது.

இவர்செய்த வேறு நூல்கள் :-
தொல்காப்பிய நுண்பொருண்மாலை,
பரிமேலழகருரை நுண்பொருண்மாலை (இது செந்தமிழில் வெளிவந்துளது),
ஆசிரியர் செய்த நம்பெருமாள் மும்மணிக்கோவைக்கு விருத்தியுரை,
மாறன்பாப்பாவினம் முதலியன.

இவருக்குக் கோயிலில் ‘வாகனமாலை’ படிப்பதற்காக அக்காலத் தரசன் சிறந்த மானியங்கள் விட்டிருந்தான்.
அவற்றை இன்னமும் இவர்சந்ததியார் அனுபவித்து வருகிறார்கள்.
இவரைப்போலவே இவர் வமிசத்தோரும் சிறந்த வித்வான்களாயும் வைணவர்களாயுமிருந்து தமிழையபி விருத்தி செய்தார்கள்.
மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ தாமோதரம் பிள்ளையவர்கள், பிரம்ம ஸ்ரீ மஹாமஹோபாத்யாய சாமிநாதையரவர்கள்,
ஸ்ரீ-உ வே.ரா.இராகவையங்காரவர்கள் முதலியோருக்கு அரும்பெறற்றமிழ் நூல்களருளிய குடும்பம் இதுவே.
இக்குடும்பத்தினர் ஏடுகளே திருக்கோவையாருரையாசிரியர் பேராசிரியரென்றும்,
அச்சிட்ட தொல்காப்பியச்செய்யுளியலுரை முதலியவை பேராசிரியரது ; நச்சினார்க்கினியரதன் றென்றும்,
பரிபாடலுரையாசிரியர் பரிமேலழகர் என்றும் அறியுமாறு அருமையான பல விஷயங்களைத் தெரிவித்தன.
இக்குடும்பத்தார் காப்பாற்றி வைத்த ஏடுகளின் பெருமை பிரம்ம ஸ்ரீ வே. சாமிநாதையரவர்கள்
ஸ்ரீ.உ.வே.ராகவையங்காரவர்கள் முதலியோருக்கே தெரியும்.
இவ்வமிசத்தவர் வைணவபரமாய் எத்துணையோ தமிழ்நூல்கள் செய்திருக்கிறார்கள். தமிழுரை செய்திருக்கிறார்கள்.
வடமலையப்ப அரசரின் ஸமஸ்தானவித்வான் சிறியகாரிரத்நகவிராயர் இவ்வம்சத்தவர்.
சாபா நுக்ரகசக்தியுடன் கவிபாடத் தகுந்த புலவர் இவ்வம்சத்தி லநேகரிருந்திருக்கின்றனர்.
குமரகுருபர சுவாமிகள் வம்சபரம்பரையோரில் ஆழ்வார் திருநகரிக்கிளையினர் அநேகர் இவ்வம்சத்தாரிடம்
பாடங்கேட்டிருக்கிறார்களென்று தெரிகிறது.
இம்மாறனலங்கார உரையாசிரியர் விஷயமான சிறப்புப் பாயிரச் செய்யுளையெடுத்துக் காட்டி இதனுடன் நிறுத்துகிறேன்.

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்நகவிராயன் பேரைவரோதயனே.

A.M. சடகோபராமாநுஜாசார்யன்
(நேஷநல்ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர்,
திருச்சிராப்பள்ளி.)
25-5-1913.

—————

மாறனலங்காரத்தின் சித்திரபத்திரங்கள்.

——-

1. நான்காரச்சக்கரபெந்தம்

வானமாதியவானவா
வானவாமனுவானவா
வானவாமனமானவா
வானமானிறமானவா.

இது, நடுவுநின்று கீழாரின்வழி யிறங்கி யிடஞ்சென்று
அடுத்த ஆரின்வழி நடுவடைந்து முதலடிமுற்றி,
மறித்தும் நடுவுநின்று அவ்வாரின்வழி திரும்பி யிடஞ்சென்று
அடுத்தஆரின்வழி நடுவுசென்று இரண்டாமடிமுற்றி,
அவ்வாறே மூன்றாமடி நான்காமடிகளுஞ்சென்று முற்றியவாறு காண்க.

———-

2. இதுவும் நான்காரச்சக்கரபெந்தம்

தேவாமோகூராதிதமகிபாமாமோக
பூவாளிஓஒபொருதலைக்க–வோவாது
துங்கமுரசாயதேதுன்பமெனும்பூமகட்கு
வெங்கனலாவானேன்விது.

இது, மேலாரின்முனைதொடங்கியிறங்கிக் கீழாரின்முனையிறுதி சென்று முதலடி முற்றி,
இடப்பக்கத்து ஆரின்முனைதொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதிசென்று தனிச்சொல்லகப்பட விரண்டாமடி முற்றி,
மறித்தும் அம்முனைநின்ற துகரந்தொடங்கி வட்டைவழியே யிடஞ்சுற்றி மூன்றாமடியும் நான்காமடியுஞ்சென்று,
தொடங்கிய துகரத்தை மறித்துங் கொண்டுமுற்றிக் குறட்டினிடமே திருமலை யென நின்றவாறு காண்க.
ஓகார அளபெடை யறிகுறியொழியநின்றது.

——————-

3. ஆறாரச்சக்கரபெந்தம்

மாதவனேதென்னரங்கேசமான்மருளாகமிகு
போதனுமன்பிற்றொழுகேசவபுரைகூர்பவமே
வாதிதமாகுதற்கிங்கேயெனாருயிர்காபொதுவே
வேதநமாநமபோதநைவார்க்குள்ளமேதகவே.

இது, இடப்பக்கத்தாரின் முனைநின்றுதொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதிமேலேறி ஓரடிமுற்றி,
அடுத்த கீழாரின்முனைநின்று மேலாரின்முனையிறுதிமேலேறி இரண்டாமடிமுற்றி,
அடுத்த வலப்பக்கத்தாரின் முனைநின்று இடப்பக்கத்தாரின்முனையிறுதிமேலேறி மூன்றாமடிமுற்றி,
முற்றிய வேகாரத்தினின்று மறித்துந் தொடங்கி வட்டை வழி யிடஞ்சுற்றிச் சென்று மறித்தும்
அவ்வேகாரத்தைக்கொண்டு நான்காமடி முற்றியவாறு காண்க.

——–

4. எட்டாரச்சக்கரபெந்தம்

தண்மதிநிகர்வதயங்கியவதனம்
பொன்னணிமுலைநிடதப்புரைவரைநிகர்
மடிசேர்தருதாமதபத்தர்க்கெட்டா
மாறன்றுடரிமலைதன்மின்போன்றொளிர்
தண்ணென்பொற்சுனைமன்னியமாமல
ரம்மடவார்மையுண்டாட்டமர்கண்ணே.

இது, இடக்குறுக்காரின்முனைதொடங்கி வலக்குறுக்காரின்முனை யிறுதிசென்று முதலடிமுற்றி,
அதனையடுத்த இடக்கீழாரின்முனை தொடங்கி அதனெதிர் மேலாரின்முனையிறுதி இரண்டாமடிமுற்றி,
அதனையடுத்த கீழாரின்முனைதொடங்கி யதனெதிர்நின்ற மேலாரின் முனையிறுதிசென்று மூன்றாமடிமுற்றி,
அதனையடுத்த வலக்கீழாரின் முனைதொடங்கி யெதிர்நின்ற மேலாரின்முனையிறுதிசென்று நான்காமடி முற்றி,
முதலடிதொடங்கிய தகரத்தினின்று வட்டைவழியே யிடஞ் சுற்றி ஐந்தாமடியாறாமடிகள் முற்றியவாறு காண்க.

இதனுள், முதலடிதொடங்கிவந்த குறட்டெழுத்துக்களை யிடஞ் சுற்றிப்படிக்க
வடமலையப்பன் என்னுந் திருநாமம்வருமாறு காண்க.

————

5. இதுவும் எட்டாரச்சக்கரபெந்தம்

சேடுறுதட்பச்சீரிமகிரிக்கைவிலின்
போர்பொருவீரபுராரிசெற்றத்தடர்த்
தின்பமது றவமரியலருணிருதனேர்
முன்புமேத்தமராரிம்பர்நம்பாலுறு
சேர்மழைபோனிறத்திருவுறைமுதல்வன்
தாரிணைத்தாளெதிர்தாளுற்றுன்னெஞ்சே

இது, இடக்குறுக்காரின் முனைநின்றுதொடங்கி அதனெதிராரின் முனையிறுதிசென்று முதலடிமுற்றி,
அடுத்தஇடக்கீழாரின்முனைநின்று அதனெதிராரின் முனையிறுதிசென் றிரண்டாமடிமுற்றி,
அடுத்தகீழாரின் முனைநின்று எதிர்த்தமேலாரின்முனையிறுதிசென்று மூன்றாமடிமுற்றி,
அடுத்த வலக்கீழாரின்முனைநின்று அதன் எதிராரின்முனையிறுதிசென்று நான்காமடி முற்றி,
முதலடிதொடங்கிய சேகாரம்தொட்டு வட்டைவழியிடஞ்சென்று எதிராரினிறுதியில் ஐந்தாமடிமுற்றி,
அதனடுத்தஅறை தொடங்கி அம்முறைசென்று முன்னடிதொடங்கிய சேகாரத்தைக் கொண்டு ஆறாமடிமுற்றியவாறு காண்க.

முதலடி தொடங்கிக் குறட்டில்விழுமெழுத்துக்களை யிடஞ்சுற்றிப் படிக்கச் சீராமராமசெயம் என்னும் ராமதோத்திரம் வருதலும்,
குறட்டினின்றும் ஐந்தாமறைகளில் இடஞ்சுற்றிப்படிக்கத்தருமமேகைதரும் என வருதலுங் காண்க.

—————-

6. பதுமபெந்தம்

மாறாமாலாலேமாறாமா
மாறாமாவேளேமாறாமா
மாறாமாகோவாமாறாமா
மாறாமாவாதேமாறாமா

இது, நடுப்பொகுட்டினின்றும் மேல் வலக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ்சென்று வலமே
அடுத்த புறவித ழகவிதழ்வழியே பொகுட்டினிழிந்து அடுத்த அகவிதழ்வழி புறவிதழ்சென்று முதலடிமுற்றி,
மறித்தும் பொகுட்டினின்றும் கீழ் வலக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ் வழி அடுத்த
கீழ்க்கோணத்துள்ள புறவித ழகவிதழ்சென்று பொகுட்டினிழிந்து கீழிடக்கோணத்துள்ள
அகவிதழ்வழி யதன்புறவிதழ்சென்று இரண்டாமடிமுற்றி,
மறித்தும் பொகுட்டினின்று கீழிடக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ்வழி இடக்கோணத்துள்ள
புறவித ழகவிதழ் சென்று பொகுட்டினிழிந்து மே லிடக்கோணத்துள்ள அகவிதழ்வழி அதன் புறவிதழ்சென்று மூன்றாமடிமுற்றி,
மறித்தும் பொகுட்டினின்று மே லிடக்கோணத் தகவிதழ் புறவிதழ்வழி மேற்கோணத்துள்ள புறவித ழகவிதழ்
சென்று பொகுட்டினிழிந்து முதலடிதொடங்கிச் சென்றகோ ணத்திகழ்களிற்சென்று நான்காமடிமுற்றியவாறு காண்க.

—————-

7. முரசபெந்தம்

போதவானதுவாதரா
மாதவாதணவாதநா
நாதவாணதவாரவா
வேதவானதுவாரகா

இது, செவ்வேவரைந்தநான்கடியுள்ளும் முதலடியு மீற்றடியும் நான்கடிகளிலும் மாறாடிக்
கோமூத்திரிபோல மடங்கிச்சென்று முற்றியும்,
இரண்டாமடி முற்சதுரத்தின்வலஞ்சென்று நான்கடியிலும் மாறாடி மூன்றாமடிமுதலெழுத்தான்முடிந்தும்,
மூன்றாமடி, பிற்சதுரத்தின் இரண்டாமடி யினிறுதியெழுத்தினின்றுதொடங்கி இடஞ்சென்று நான்கடியினுமாறாடி
மூன்றாமடியினிறுதியெழுத்தான் முடியுமாறு காண்க.
அன்றியும், இரண்டுமூன்றாமடிகள் முறையே முற்பாதி பிற்பாதிகளில் வலமிடமாகத் தம்முண் மாறாடிமுழுவதுங் காண்க.

——————

8. உபயநாகபெந்தம்

மாறன்சடகோபன்வண்குருகூர்வாழ்பொருநை
யாறனளிமேயவன்னமே–யேறுத்
தமனாமாமாசரதன்றாண்மொழிதற்பாமன்
னெமர்யாயெமையாளிறை

அறமுமறமமைந்தவன்பென்பதுவும்
பெறனன்னலமதுண்மைபேரா–துறுபாற்கோர்
மானமனமேநினைமான்மாமேகத்தந்தமே
யேனமெமையாளியை

இவ் விரண்டுபாட்டும், இரண்டுநாகங்களின் தலைநின்றுதொடங்கி
வான்முனைகளிறுதியாக இடையிடையே தத்தம்முடலினும், பிறிது பிறிதுடலினும் மாறாடி முடியுமாறு காண்க.

————

9. இரதபெந்தம்

நாராராராயநயனயணாவிண்ண்
ணாராமணாயனிலமாயவா–சீராய
நன்காநமநமநன்காநமநம
மன்காமன்றாதாய்நம.
மாயவனேவேதமதியேவயநாக
பாயவனேதேநளினபாதாபராபரா
தூயவனேகாரணாபூரணாதோணிலமா
னாயகனேசீராகநாராயணாயநம

இவற்றுள், முதற்பாட்டு, மேற்பாதியின்சிகரத்தினின்றும் இரு மருங்கிலு மிடையிலும்நாராயணாயநமவென்னும்
மந்திரம்நிற்க வலமிடமாக மடங்கியிறங்கிமுடியுமாறும், பிற்பாட்டு, கீழ்ப்பாதியின் மேற்றளத்தின்முதலறை தொடங்கி
வலமிடமாகமடங்கியிறங்கி அடியறையினின்று நடுப்பத்தியில்நாராயணாநமவென் றேழ்தளத்தும் மாறாடியேறி முடியுமாறுங் காண்க.
இதனுள் விண்ண் என்னு மொற்றளபெடை யோரெழுத்தாதலால் அறிகுறியொழிய வோரறையுள்நின்றது.

————–

10. சருப்பதோபத்திரம்

தேமாபூமாமாபூமாதே
மாதாகாவாவாகாதாமா
பூகாவாலாலாவாகாபூ
மாவாலாநீநீலாவாமா

இது, நாற்புறமும் தலைப்பாகவைத்து வரிசையாய்ப்படித்தாலும், மடக்கிப்படித்தாலும்,
நான்கடியையும் மேனின்று கீழிறக்கியும் கீழ்நின்று மேலேற்றியும் படித்தாலும்
சொரூபங்கெடாமல் மாலைமாற்றாய் முடியுமாறு காண்க.

————

11. கூடசதுர்த்தம்

நாதாமானதாதூயதாருளா
ணீதானாவாசீராமனாமனா
போதாசீமானாதரவிராமா
தாதாதாணீவாமனாசீதரா

இப்பாட்டின் நான்காமடியானது, முதன்மூன்றடியையும் கீழேகாட்டியவாறு
மேனின்றுகீழுங் கீழ்நின்று மேலுமாக லெழுதத்தோன்றிய பத்தெழுத்துவரி
மூன்றினுள் இடைவரியாய் மறைந்துகிடப்பது காண்க.

——————

12. கோமூத்திரி

மாயாமாயாநாதாமாவா
வேயாநாதாகோதாவேதா
காயாகாயாபோதாகாவா
பாயாமீதாபேதாபேதா

இது, முன்னிரண்டடி மேல்வரியாகவும், பின்னிரண்டடி கீழ்வரியாகவு மெழுதி,
அவ்வரியிரண்டையும் கோமூத்திர ரேகைவழிபடிக்க ஒன்றுவிட்டொன்று மாறாடிமுடியுமாறு காண்க.

———–

13. சுழிகுளம்

சதிதகனடனாடீ
திததிதிகாண்ஞானா
ததிதாகார்கண்ட
கதிகாகிளர்கான

இது, செவ்வேயெழுதிய நாலடிநான்குவரியுள், முதலடி முதலெழுத்தினின்றும்
சுழிரேகைவழியே இடஞ்சுற்றிப்படிக்க நாலடியு முடியுமாறு காண்க.

————–

Skip to main content
தமிழ் இணையக் கல்விக்கழகம் – TAMIL VIRTUAL ACADEMY
தேடல் படிவம்தேடல்
தேடல்…
த.இ.க. பற்றி தொடர்புக்கு
English
முகப்பு
Tamil Nadu Logo
கல்வித் திட்டங்கள்
நூலகம்
கணித்தமிழ்
ஆய்வு மற்றும் உருவாக்கம்
தகவலாற்றுப்படை
முகப்பு >TVU
TVU
முகப்பு தொடக்கம்

14. எழுகூற்றிருக்கை

494-499ஆம்பக்கங்களிலுள்ளது.

——–

ஒருதனித்திகிரியினிருவிசும்பொழுக்கத்
தொருஞான்றொருபகலொடியாவுழப்பிற்
பதமிரண்டுமிலாப்பாகுடையூர்தியின்
முந்நீர்வரைப்பினிருபால்வியப்பா
னொருபிணர்த்தடக்கையொன்றியவிருகவுண்

மும்மதநால்வாய்க்கரியுரிமுக்கட்
செம்மலினிருகணுமிமையாத்தேவர்க
ளொருபோழ்தகலாதொருவழிப்படநின்
றிருகையுங்கூப்பிமுப்போதினுமிறைஞ்ச
நான்முகமுதல்வனினசைஇயநல்கு
மைந்தருநீழலினறமுதனான்கினுண்
முந்தியமுப்பான்முழுநலமெதிர்கொள
விருமருங்கினுமின்னொருமருங்கரம்பைய
ரொருதிறத்திருபதநடநவின்றொழுக

மும்முரசானாமுன்றிலினிரட்டத்
தெம்முரண்முருக்கித்திசையவைநான்கினு
மைம்பொறியதனகத்தாறைந்தவித்துச்
செம்பொருணான்மறைதெற்றெனத்தேர்ந்த
முக்கோற்பகவர்முறைமுறைபிறழா
விருவினையொருங்குவென்றிறைநிலையிஃதென
வொருதலைபற்றினரிருமையுமுணர்ந்தோர்

முக்குணமவற்றுண்முற்குணனமைந்தவருட
னாலாங்கடவுள்வீற்றிருக்குநற்றிசைவரு
மிளங்கதிரகிலத்தின்னுயிரஞ்ச
வாழ்நாளறுதியில்வவ்வுதற்கமைத்த
நமன்றிசையெழுதிறனிறும்பூதென்ன
வறுகாலஞ்சிறையளிக்குலநான்குளர்

முருகவிழ்நறுந்தார்முந்நூன்மார்பத்
திருபிறப்பாளனோரிடத்தெதிருபு
லெழுகடற்புவனத்தெழுந்திறைவெளிவர
வறுசுவையினுளதிமதுரமுக்கியச்சுவை
னால்வகைப்பனுவன்மூவுலகமுமளந்தவ
னிருசெவிக்கமுதாமெனவினிதளித்த
வொருபேராண்மையினுயிர்கடாமனைத்தும்

நலங்கிளரொருதனிமுதலெனநாடிப்
பொலங்கழலிரண்டையும்புலனுறுமேதகு
முப்பொறிகளினான்முயற்சியிற்போற்றலு
நாற்பொருள்பயக்கநற்கனிவாயினைத்திறந்
தேற்புடைச்செய்யுளைந்தினுக்கிலக்கணமென
வாறறியந்தணரருமறைப்பொருளா

பிறந்திறந்துழலுமப்பெரும்பிணிதவிர்த்தருள்
ஞானபூரணககோதயநாவீற
மானபூடணகுருகாபுரிவரோதய
மறுசமயத்தவர்மத்தமால்யானையைத்
தெறுமொருசிங்கமாந்திருப்பெரும்பூதூர்

வருமெதிராசனைமனமகிழ்ந்தாண்ட
விருசரணாம்புயத்தென்னையுமொன்றா
யருள்புரிந்தாண்டதற்காதிக்காலத்
திம்மாநிலத்தென்பொருட்டாற்
கைம்மாறெவனீகைக்கொண்டதுவே.

இது 297, 298-ஆஞ் சூத்திரங்களிலும் உரையிலுங் கூறியமுறையைத் தழுவி யெழுதியது.
இதில் முதலேழுநிலங்களும் நிலந்தொறும் எண்ணேறியிறங்கி ஏழிறுதியேறிய பேரேற்றமும்,
பின்னேழுநிலங்களும் அவ்வாறு ஒன்றிறுதியிறங்கிய பேரிறக்கமுமாகக்கொள்க.
பேரிறக்கத்துள் முதனிலமட்டும் நடத்தி முடிக்கப்பெற்றிருக்கிறது.
ஏனைய நிலங்களும் நடத்திமுடிப்பதற்கு உதாரணம் வந்துழிக்காண்க.

——————–

15. சதுரங்கபெந்தம்

மானவனாமேவலாமாறனித்தமாமாலை
யானதவபோதனுமாயாய்ந்தகோ–மானவடி
நாதனின்மேனன்கலன்பூணென்முனநீவந்தெவனொன்
றாதயமாவன்புலமாய.

*இச்செய்யுளை இச்சதுரங்க அரங்கின் நாலுபக்கமும் மையங்களினானான்கு பதினாறறையிலும்
நடுவி னாலறையிலும் மாதவன் என்னுந் திருநாம நிற்குமாறு ஆராய்ந்து அமைத்துக்கொள்க.

————

16. கடகபெந்தம்.

கோலநிலமேலழகுகூடுநெடுவீடுறமா
மூலமெனச்சென்றுதவுமுன்னோனே–நீலமணி
வண்ணாவடமலையாமாதவாகஞ்சமலர்க்
கண்ணாசரணாகதி.

இது, முகப்பின்பூட்டுவாய்தொடங்கி வலமே இரண்டாமறை சென்று கீழறையினிறங்கி,
மறித்து மவ்வறையின்வழியே மேலறையிலேறி நடுவறையிலிறங்கி யாறாமறைவரைசென்று,
அதன்கீழறையிறங்கி மறித்தும் முன்போலவேயேறியிறங்கி ஏழாமறைநின்றும் வலமே
கூற்றியிறுதியறைசென்று முடியுமாறு காண்க.

———-

17. கடகபெந்தம் (வேறு)

நாகநகராகநிதிநாகரிகராகநிறை
யேகநகராசியிணையில்லா–தார்கணிகழ்
தென்னரங்கனாளாயசீராளராஞான
நன்னரங்கர்க்கேயடியேனான்.

இது, பூட்டுவாய்நின்று வலப்பக்க மிரண்டாமறைசென்று கீழறையினிறங்கி யவ்வழியே மேலறையிலேறியிறங்கி
வலஞ்சென்று இடை யிடையேயுள்ளகுண்டுகளாகிய நான்கறைகளிலுஞ்சென்றுமீண்டு மிறுதியறை சென்று முடியுமாறு காண்க.
இப்பாட்டிற்கு உரையெழுதப் படாமையாலும்
சுத்தபாடந்தோன்றாமையாலும் பெந்தத்திற்குப் பொருந்துமாறு இங்குச் சிறிது வேறுபடுத்தி யெழுதப்பட்டிருக்கிறது.

——————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறன் அலங்காரம்–மூன்றாவது–சொல்லணியியலுரை—பகுதி-2 -சித்திரகவி.–ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

சித்திரகவி.

270.வல்லினமெல்லினமிடையினப்பாட்டே
நிரோட்டியமோட்டியமோட்டியநிரோட்டிய
மக்கரச்சுதகமதன்வருத்தனையே
வக்கிரவுத்திவினாவுத்தரமே
சக்கரபெந்தம்பதுமபெந்த
முரசபெந்தநாகபெந்த
மிரதபெந்தமாலைமாற்றே
கரந்துறைசெய்யுட்காதைகரப்பே
பிரிந்தெதிர்செய்யுட்பிறிதுபடுபாட்டே
சருப்பதோபத்திரங்கூடசதுர்த்தங்
கோமூத்திரிசுழிகுளந்திரிபங்கி
யெழுகூற்றிருக்கையொடிருபானுறும்
பழிதீர்மடக்குடைச்சித்திரப்பாவே.
(எ-ன்) இன்னுமம்மடக்கலங்காரங்களுட்படுவனவாஞ் சில மிறைக்கவி களுணர்த்துதனுதலிற்று.
மிறைக்கவியெனினுஞ் சித்திரப்பா வெனினு மொக்கும்.

(இ-ள்) வல்லினப்பாட்டு முதலாக எழுகூற்றிருக்கையீறாகச் சொன்ன விருபத்தாறும் முன்சொல்லிப்போந்த
சொல்லொடு மெழுத்தோடுங்கூடிய குற்றமற்ற சொல்லணியினுண் மடக்கின்பாற்படுஞ் சித்திரகவியா மென்றவாறு.

இதனுட் பாட்டென்பதனை மூன்றிடத்துங்கூட்டுக. எண்ணும்மை தொக்கு எண்ணேகார மிடையிட்டு வந்தன ; என்னை?
“எண்ணேகார மிடையிட்டுக்கொளினு, மெண்ணுக்குறித்தியலுமென்மனார்புலவர்” என்பதாகலின்.
இருபானாறும் என்னு மும்மை எச்சவும்மையாதலால் மாத்திரைச்சுருக்கமும், மாத்திரைவருத்தனையும்,
ஒற்றுப்பெயர்த்தலும், திரிபதாதியும், சதுரங்கபெந்தமும், கடகபெந்தமும் என்னு மித்தன்மை யனவெல்லா முரைத்துக்கொள்க

வல்லினப்பாட்டு

271.அவற்றுள்,
வல்லினமுழு துறல்வல்லினப்பாட்டே.
(எ-ன்) வைத்தமுறையானே வல்லினப்பாட்டாமா றுணர்-ற்று.

(இ-ள்) வல்லினவெழுத்தாறும்வந்து ஒழிந்தவினமிரண்டும் வாராதேபாடுவது வல்லினப்பாட்டா மென்றவாறு.

பொற்றொடிகற்சட்டகத்தைப்போக்கிப்புறத்திறுத்த
கற்புறத்தற்காட்சிக்கதிகொடுத்த–சிற்றடிப்போ
துச்சிப்பதிக்கத்தாகூற்றச்சுறுத்தாது
கச்சிப்பதிக்கத்தாகை. (767)

இதனுள் வல்லினவெழுத்தாறும்வந்து பிறவினவெழுத்துக்கள் வாராதது கண்டுகொள்க.

(இ-ள்) திருக்கச்சிப்பதிக்குக் கத்தனே ! என்னை யமன்வந் தச்ச முறுத்தாது, நீ பொன்னினாற்செய்த
தொடியினையுடையாள்கற்படிவத்தைப் போக்கி யவளைவிட்டுப் புறமாறினகற்பு மீட்டு மவளிடத்தெய்தவும்
பண்டைச்சரீரத்தினதழகெய்தவுங்கூட்டுஞ் சாபவிமோசனத்தைக் கொடுத்த சிறிய திருவடிகளாகிய
தாமரைப்போதை யென்சென்னியிலே சூடத் தருவாயாக, அதனோடும், அஞ்சாதேயென்னும் அபயத்தமுந் தருவாயாக வென்றவாறு.

அச்சமுறுத்தாது என்பது அச்சுறுத்தாதெனத் தொகுக்கும் வழித்தொகுத்தலென்னும்விகாரத்தானின்றது ;
“குணமாலையையச்சுறுத்த” வென்பதுபோலக் கொள்க. துறை – கடவுள்வணக்கம்.

மெல்லினப்பாட்டு

272.மெல்லினமுழுதுறன்மெல்லினப்பாட்டே.
(எ-ன்) மெல்லினப்பாட்டாமாறுணர்–ற்று.

(இ-ள்) மெல்லினவெழுத்தாறும்வரப்பாடுவது மெல்லினப்பாட்டா மென்றவாறு.

மனமேநினைஞானமன்னாமைமீன
மனமேனமெங்ஙனெனினங்ஙன்–முனமானா
னேமிமான்மாமானினிநீண்மனமான
நேமிமானன்னாமநீ. (768)
இது மெல்லினமாறினாலும்வந்த மெல்லினப்பாட்டு.

(இ-ள்) மனனே ! மீனமும் அன்னமும் ஆமையும் ஏனமும் எப்படியேயிருக்குமென்னி லப்படியே முன்னந் திருவவதாரமானவன்,
பூமிதேவியாகிய மான்போலும்விழியையுடையாளுக்குந் திருமகளாகிய பெண்ணுக்கும் அவர்கள்மனமெப்படி யப்படியான
ஞானமன்னன், சக்கரத்தையுடையான், அவனது நல்ல திருநாமங்களை யிடைவிடாது நீ நினைப்பாயாக வென்றவாறு.
எனவே அந்நினைவே யான்மலாபத்தைத் தருமென்பது கருத்து. துறை – இதுவுமது.

இடையினப்பாட்டு

273.இடையினமுழுதுறலிடையினப்பாட்டே.
(எ-ன்) இடையினப்பாட்டாமாறுணர்–ற்று.

(இ-ள்) இடையினமாறும்வரத்தொடுப்ப திடையினப்பாட்டா மென்றவாறு.

வேயாலலையால்வில்வேளாலயலவரால்
யாயாலுயிர்வாழ்வார்யாவரே–யோய்விலராய்
வாழ்வாருயிர்வழியேவாழ்வாரருளாள
ராழ்வாரருளிலரேயால். (769)
இஃது இடையினமாறும்வந்தபாட்டு.

(இ-ள்) ஒழிவில்லாதவாழ்வினையுடையார், உயிரின்கண்ணே நீங்காதுவாழும் வாழ்வினையுடையார்,
கிருபையை யாட்சியாகவுடையார், அவர்யாரெனில்? ஆழ்வாரென்னுந் திருநாமத்தையுடையார்
(எமக்குத்தாரு மார்புந் தரவேணுமென்னுங்) கிருபையிலர் ; ஆனபடியாலே தோழீ ! வேய்ங்குழல்முதலாகிய
பகைகளாற் புமான்களையெய்தாது தனியிருந்தவரு ளுயிர்வாழ்வா ரொருவருமில்லை யென்றவாறு.

முன்னிலை யெஞ்சிற்று. திணை – பெண்பாற்கூற்றுக்கைக்கிளை. துறை – மெலிவொடுகூறல்.

நிரோட்டியம்

274.இதழ்குவிந்தியையா தியல்வது நிரோட்டியம்.
(எ-ன்) வைத்தமுறையானே நிரோட்டியமாமா றுணர்-ற்று.

(இ-ள்) அதரமு மதரமுங் குவியாதுங் கூடாதும் நடப்பது நிரோட்டியமா மென்றவாறு. உம்மை யிரண்டிடத்துந் தொக்கன.

நாதனரங்கநகர்நாராயணனறைசேர்
சீதநளினத்தினிற்சிறந்த–காதற்
கனிநானிலக்கிழத்திகட்கினியகாந்தித்
தனிநாயகன்றாள்சரண். (770)
இது நிரோட்டியம்.

இதனுள் நறைசேர்சீதநளினத்தினிற்சிறந்தகாதற்கனி – திருமகள். நானிலக்கிழத்தி – பூமிதேவி.
கட்கினியகாந்தி – கண்ணிற்கு விருப்பத்தைத்தரு மழகு. துறை – கடவுள்வணக்கம்.

ஓட்டியம்

275.இதழ்குவிந்தியைந்தியல்வதுவேயோட்டியம்.
(எ-ன்) வைத்தமுறையானே யோட்டியமாமா றுணர்–ற்று.

(இ-ள்) அதரமுமதரமுங் குவிந்துங் கூடியு நடப்பதுவே யோட்டியமா மென்றவாறு.

குருகுகுருகுகுருகொடுகூடு
குருகுகுருகூருளுறுகோ. (771)
இஃது இதழ்குவிந்தவோட்டியம்.

(இ-ள்) மனனே ! சங்க சங்கொடுங் குருகென்றபறவைகள் குருகுகளோடுந் திரண்டியங்குங் குருகாபுரியுட்கோவை நினை யென்றவாறு.

மூன்றாமுருபின்மே லும்மை தொக்கு விரிந்தன. ஓடு இடைநிலைத்தீபகம். கோவை என்னு மிரண்டாவது இறுதியிற் றொக்கது.
உறு என்றது நினையென்றாயிற்று. மனனேயென்னு மெழுவாயுருபு முன்னிலையெச்சமாயிற்று.
பா – குறள்வெண்பா. துறை – கடவுள்வணக்கம்.

பம்மும்பம்மும்பம்முமம்மம்மமைமாமை
பம்முமம்மமும்மேமம்பாம். (772)
இஃது இதழியைந்தவோட்டியம்.

(இ-ள்) மை பம்மும் – (வலவனே யுனதுதேரைப்பின்னிட்டு விரைந்த) மேகம்,
(இதன்முன்சென்று தேர்வரும்வழிமேல்விழி வைத்த இல்லறக்கிழத்தியிருந்த நகரின்கட்) படியும்.
பம்மும்பம்மும் – அதனால், வான்மீன்கணங்களும் மறையும் ; இருள்செய்யும் என்றபடி.
(அங்ஙன மிருள்செய்யுமிடத்து) அம்மம்ம – ஐயோ ! ஐயோ ! மாமைபம்முமம்மமும்மேமம்பாம் – அழகியமுலை பசலைதழைவதாம் என்றவாறு.

எனவே என் சத்தியவசனமென்னாமென்பது பயனிலை. அடுக்கு அவலப்பொருணிலைக்கண்வந்தன.
பகுதி – பொருள்வயிற் பிரிதல். துறை – வலவனொடுகூறல். பா – இதுவுமது.

குருகுமடுவூடுகுழுமுகுருகூரு
ளொருபெருமானோவாமையூறு–முருகொழுகு
பூமாதுவாழும்புவிமாதுமேவுமொரு
கோமானுவா*வோதுகோ. (773)
இஃ திருவகையோட்டியமும்வந்த வோட்டியம்.

இதன்பொரு ளுரையிற்கொள்க. அவன்றிருவடிகளேகதியென்பது பயனிலை.
* உவா – நிறைவு.
துறை – கடவுள்வணக்கம்.

ஓட்டியநிரோட்டியம்

276.இருமையுமொன்றினுளிருவகைத்தாயுறும்
பெருமிதமோட்டியநிரோட்டியமெனப்பெறும்.
(எ-ன்) இதுவு மவ்வோட்டியநிரோட்டியங்கட் கோர் சிறப்பு விதிகூறுகின்றது.

(இ-ள்) ஓட்டியம், நிரோட்டியமென்னு மிரண்டுதன்மையு மொரு செய்யுளகத்தா யிரண்டுகூறுபாட்டானடை பெறுதலுறும்
பெருமையுடையது ஓட்டியநீரோட்டியமெனப் பெயர்பெறு மென்றவாறு. இரண்டுகூறு பாட்டானென்னுமவை மேற்காட்டுதும்.

மதிமடவார்வேலைவேய்மாரவேள்சோலை
பதிகுயிலோடேவன்பகைகூர்–விதியுங்
குறிதோநாகூராகுறிதுளவக்கோதை
முறிகூயருளேமுற. (714)
இஃது ஓட்டியமும் நிரோட்டியமும் முறைதடுமாறாது முறையே வந்தஓட்டியநிரோட்டியம்.

இதனுள், குறிதோ – ஓரொன்று குறியதுன்பத்தைச்செய்வதோ வென்க. ஓகாரம் எதிர்மறை. முறி – தளிர்.
ஒழிந்தபொரு ளுரையிற்கொள்க. திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – துயரறிவுறுத்தல்.

வதுவையொருபோதுவழுவாதுவாழும்
புதுவைவருமாதுருவம்பூணு–முதுமைபெறு
நாதனரங்கனையேநன்றறிந்தார்க்கேயடியேன்
றாதனெனநெஞ்சேதரி. (775)
இது முன்னடியிரண்டு மோட்டியமும் பின்னடியிரண்டு நிரோட்டியமு மாகவந்தவோட்டியநிரோட்டியம்.
இவ்விரண்டுதாரணமு மிங்ஙன மிரண்டு கூறுபாட்டான்வந்த வோட்டியநிரோட்டியம். இதன் பொருளுரையிற்கொள்க.
திணை – பாடாண். துறை – சமயவணக்கம். உறுமென்ற விதப்பினானே நிரோட்டியவோட்டியமுமுள. அவை வருமாறு :-

கற்றைச்சடையார்கயிலைக்கிரிகளைந்தான்
செற்றைக்கரங்கள்சிரங்கணிறைந்–தற்றழிய
வேவேவுமெவ்வுளுறுமேமமுறுபூமாது
கோவேமுழுதுமுறுகோ. (776)
இது முதலீரடியுந் தனிச்சொல்லும் நிரோட்டியமும் பின்னிரண்டடியு மோட்டியமுமாகவந்தநிரோட்டியவோட்டியம்.
இவற்றின் வேறுபாடு களெல்லாம் வந்தவழிக் கண்டுகொள்க. துறை – கடவுள்வாழ்த்து.

அக்கரச்சுதகம்

277.ஒருபொருள்பயந்தவொருதொடர்மொழியாய்
வருவதையோரெழுத்தாய்க்குறைவகுப்பிற்
சுருங்குபுபலபொருடோன்றுவதாய
வருங்கவியக்கரச்சுதகமாகும்.
(எ-ன்) வைத்தமுறையானே யக்கரச்சுதகமாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருபொருளைத் தருவதொருதொடர்மொழியாய்த் தொன்று தொட்டுவருவதைப் புவலனா லொரோ
வெழுத்தாகக்குறைத்துக்கூறுங் கூறுபாட்டாற் றொடர்ச்சொ லீரெழுத்துப்பதமு மோரெழுத்துப்பதமு மாகச் சுருக்கமெய்திப்
பலபொருடோன்றுவதாய அரியகவி அக்கரச் சுதகமாமென்றவாறு. சுதகம் – அழிவு.

ஒளிகொண்டபுத்தூருறைகோதைதீந்தேன்
றுளிகொண்டபூந்துளபத்தோன்றலாற்கீந்த
தளிகொண்டதையணிந்ததன்றதனைப்பற்றல்
களிவண்டிமிர்தேங்கமழ்வாசிகைசிகைகை. (777)
இஃது அக்கரச்சுதகம்.

(இ-ள்) கீர்த்தியைக் கைக்கொண்ட வில்லிபுத்தூருறையுங் கோதை சூடிக்கொடுத்தா ளினிய தேன்றுளிக்குஞ் செய்கையைக்
கைக்கொண்ட பூவோடுகூடிய துளவமாலிகையையுடைய பெரியோனுக் களித்ததுவு மதனைச் சூடியதும்
அதனைப் பற்றியதும் புலவீர்காள் ! கூறுங்காலத்துத் தேனையுண்டு களித்தலையுடைய
வண்டுக ளாரவாரிக்கும் வாசிகை சிகை கையா மென்றவாறு.

வாசிகை – மாலை. சிகை – திருக்குழற்கற்றை. கை – திருக்கை. இதனு ளவ்வாறுநின்ற கூறுபாடு கண்டுகொள்க.
திணை – பாடாண். துறை – வள்ளிவாழ்த்து.

அக்கரவருத்தனை

278.ஒருதொடர்மொழியீற்றோரெழுத்தினைப்பிரித்
தொருபொருடாவைத்தோரொன்றாக
மிக்கபல்பொருடாமேல்வைப்பனவே
யக்கரவருத்தனையாகுமென்ப.
(எ-ன்) வைத்தமுறையானே யக்கரவருத்தனையாமா றுணர்ற்று.

(இ-ள்) ஒருபொருடருவதொருதொடர்மொழியீற்றின் ஓரெழுத்தினைப் பிரித்துப் பிறிதொருபொருடரவைத் ததன்மேல்
ஒரோவெழுத்தாகப் பலபொருடோன்றவைப்பது அக்கரவருத்தனை யென்றுகூறுவர் பெரியோ ரென்றவாறு.

எந்தைதிருத்தாளெழுகங்கையீறுமா
விந்தமலராட்கிசைந்தவீறினுக்கு–முந்தெழுத்துஞ்
சித்தசனன்வாண்முதலுஞ்சேயிழையாய்சேர்த்தக்கா
லத்தமெழிலோலைப்பூவாம். (778)

இஃது அக்கரவருத்தனை. அப்படி யிதனுட்சேர்க்கும்படி யெப்படி யென்னில், எம்முடைய சுவாமியாகிய
ஸ்ரீமந்நாராயணன் றிருவடிகளிலெழுந்த கங்கையென்றதொடர் மொழியீற்றினின்ற ககரவைகாரத்தைப் பிரித்துக்
கையெனக்கொண்டு, அரவிந்தமலராட்கிசைந்த வீறென்பதனைத் தகையென்றாக்கி, அதற்குமுதலெழுத்தாகிய
தகரத்தைப்பிரித்துச்சேர்த்துத் தகையென்றாக்கி, சித்தசனன்-காமன் ;
அவனுடைய வாளாகிய கேதகையென்றதிற் ககரவேகாரத்தைப் பிரித்துச்சேர்த்துக் கேதகையென்றாக்கி
அத்தம், எழில், ஓலைப்பூ என முடிக்க. வீறு – அழகு. அதனைத் தகையெனக் கூட்டினமையுங் காண்க

வக்கிரவுத்தி

279.வெளிப்படைவிளியினும்வினாவினுமெய்ம்மை
யொளித்துமற்றொன்றினையுரைப்புழிமறித்து
நிரைத்தபன்மொழிதொறுமிசைதிரிநிலைத்தா
யுரைப்பதுதானேவக்கிரவுத்தி.
(எ-ன்) வைத்தமுறையானே வக்கிரவுத்தியாமா றுணர்-ற்று.

(இ-ள்) வெளிப்படையாகவிளிக்குமிடத்தும் வினாவுமிடத்தும் முன்னின்ற பொருண்மையை மறைத்துப் பிறிதொன்றாக
வெதிர்மொழி கொடுத்தவிடத்து மீட்டுந் தெளிவிப்பனவாய்நிரைத்த தொடர்மொழி தோறும்
அம்முன்னின்றவ ரிரட்டுற விசைதிரிநிலைத்தாயுரைப்பதே வக்கிரவுத்தியா மென்றவாறு.

வெளிப்படை யீரிடத்துங் கூட்டுக. இரட்டுற – சிலேடையாக. முன்னிலையோ ரெச்சமாக விரித்துரைக்கப்பட்டது.

ஏற்றமுறுமோதிமத்தாவென்றேன்விண்ணோர்க்
கின்னமுதன்றளித்தவன்பேரென்றான்வெற்பிற்
றோற்றமுறுமெகினவாகனத்தாவென்றேன்
றொன்மறையோன்பெயரென்றான்சுரந்துவிண்ணோர்
போற்றவருமன்னவாகனத்தாவென்றேன்
புரந்தரனார்பெயரென்றான்பொன்னேயென்னே
மாற்றமுறப்பகர்ந்தமகிழ்மாறற்கென்றன்
மையலுரைத்தெவ்வாறுமருவுவேனே.
இது வக்கிரவுத்தி.

(இ-ள்) பொன்னையொப்பாய் ! நமதுவீதியி லுலாப்போந்த மகிழ்மாறரைத் தொழுத யான், ஒருதலைபற்றிய
காதலாலே யேறுதற்குண்டான வோதிமத்தையுடையவனேயென்றேன் ;
அப்பொழுது மலையை மத்தாகவுடையவ னெனும்பெய ரென்பெயரன்று, திருப்பாற் கடலைக் கடைந்து இனிய வமிர்தத்தைத்
தேவர்களுண்ணும்படிக்குக் கொடுத்த திருமால்பெய ரென்றான். மீட்டும் வெள்ளிமலைபோன்று பிரகாசிக்கு மெகினவாகனத்தாவென்றேன் ;
அப்பொழுது அதற்கு மிமவானிடத்துப்பிறந்த அன்னம்போலுநடையையுடைய வுமையை வாமபாகத்திலுடைய சிவனது
அத்த னென்னும்பெயர் பழைய மறையையுடைய பிதாமகன்பெய ரென்றான்.
மீட்டும், சுரந்துவிண்ணோர் போற்றவருமன்னவாகனத்தாவென்றேன்; அதற்குந் திரண்டு தேவர்கள்போற்று மன்னவனே !
மேகத்தையுடையவனே யென்னு மிருபெயரும் புரந்தரனதுபெய ரென்றான் ; ஆகையா லென்னே?
யான் கொண்ட மையலை யவனொடுகூறி யவன்றிருமார்பைத் தழுவுவ தெவ்வா றென்றவாறு.

பொன்னேயென்றது தோழியை. திணை – பெண்பாற்கூற்றுப் பெருந்திணை. துறை – மெலிவொடுகூறல்.

அஞ்சக்கரனோவென்றேன்சங்
கரனாமென்றான்றனியாழி
மிஞ்சத்தரித்ததிருத்தேர்வெய்
யவனோவென்றேன்வெயிலென்றான்
செஞ்சொற்பரிதிவலம்பயில்விண்
டோவென்றேன்பொற்சிலம்பென்றான்
வஞ்சர்க்கிரங்காவரங்கனுக்கென்
மாலெப்படியேமொழிவேனே. (780)
இதுவுமது.

(இ-ள்) அழகிய சக்கரத்தையுடையானோவென்றேன் ; அப்பொழுது அஞ்சக்கரங்களையுடையவ னுருத்திரனா மென்றான்.
ஒப்பற்ற திருவாழியை வலது கையிற் றரித்தவனுமாய்த் திருமகளைச் சிந்திக்கிறவனுமாய்த்
திருமகளாற் சிந்திக்கப்பட்ட விருப்பத்தையுடையானோ வென்றேன் ; அப்பொழுது மது வெயிலோனென்றான்.
மீளவுஞ் செம்மையொடுகூடிய கீர்த்தியையுடைய பரிதியை வலதுகையிற்றரித்த விண்டுவோவென்றேன்;
அதற்கும் அது பொற்சிலம்பென்றான்; ஆகையால் வஞ்சத்தையுடையோரிடத்துக் கருணைசெய்யாத்
திருவரங்கேசனுக் கியான்கொண்ட காதலை யெப்படியேகூறுவே னென்றவாறு.

துறை – இதுவுமது. முன்னது வெளிப்படைவிளியினும் பின்னது வெளிப்படைவினாவினும் அடைவே வந்தவாறு காண்க.

வினாவுத்தரம்

280.துதித்திடுமொருபொருட்டொடர்ச்சொலைப்பிரித்து
மதிப்படவினாயவகைக்கெதிர்மொழியாய்
விதிப்படவுரைப்பதுவினாவுத்தரமே.
(எ-ன்) வைத்தமுறையானே வினாவுத்தரமாமா றுணர்-ற்று.

(இ-ள்) உலகம் புகழ்வதா மொருபொருளைக் காட்டு மொரு தொடர்மொழியினைப் பிரித்துப் பிரித்த பதந்தொறு
மனத்துட்கொள ஒருவர் வெளிப்படையாகவினாய பலவேறுவகைத்தாங்கூறுபாட்டிற்கு முன்னின்றவன்
மாற்றமில்லாதமுறையொடு மெதிர்மொழியாவுரைப்பது வினாவுத்தரமா மென்றவாறு.

வண்டுளபத்தான்றுயிலும்வாழ்வேதுதெள்ளமுதம்
பண்டுகடைநாட்டறியாய்ப்பற்றியதென்–முண்டமுனி
போசனமாய்க்கொண்டதெவன்போதிலானுக்குவந்த
வாசனமதென்னரவிந்தம். (781)
இது வினாவுத்தரம்.

இதனுள், போதிலான் – பிரமன். அவனாசனமென் னரவிந்தம் என உலகந்து திப்பனவாய ஒருபொருடருமொழியை
அரவு+இந்து+அம் எனப் பிரித்து, துளபத்தான்றுயிலும்வாழ்வு அரவு, அமுதம் பண்டுகடைநாட் டறியாய்ப்பற்றியது இந்து,
முண்டமுனிபோசனமாய்க்கொண்டது அம் என முறையே நிறுத்தி, போதிலானுக் குவந்த வாசனமதென் னரவிந்தமென்னச்
செவ்வனம்விரியாது அருமை தோன்ற விரித்துக்காட்டியது காண்க.
இது வாகைத்திணையுட் புலமைவென்றி.

சக்கரபெந்தம்

281.சக்கரத்துட்டடுமாறுதறானே
சக்கரபெந்தமெனச்சாற்றினரே.
(எ-ன்) வைத்தமுறையானே சக்கரபெந்தமாமா றுணர்-ற்று.

(இ-ள்) சக்கரத்தினுள் அக்கரந் தடுமாறப் பெந்திப்பது தானே சக்கரபெந்தமெனச் சாற்றினர் பெரியோ ரென்றவாறு.
பெந்தம் – சம்பந்தம்.

282.அதுவே,
நாலிருமூன்றிருநாலெனநாட்டுஞ்
சார்பினிலார்புனைதன்மையவாகும்.
(எ-ன்) இதுவும் சக்கரத்தினது கூறுபாடுணர்-ற்று.

(இ-ள்) அக் கூறப்பட்ட சக்கரம், நரலார் ஆறார் எட்டாரெனப் புனையப்பட்ட தன்மைகளை யுடையவா மென்றவாறு.

சக்கரமென்பது தேரினதுருள். ஆர் என்பது அதனதகத்துச் செறிக்கப்பட்ட கதிர். புனைதல் – செய்தமைத்தல்.

வானமாதியவானவா
வானவாமனுவானவா
வானவாமனமானவா
வானமானிறமானவா (782)
இது நாலாரச்சக்கரம்.

இதனுள், நடுவு வா வென்னு மெழுத்து நின்று எட்டாகியும், நாலார்மேலும் நாலு னகாரம்நின்று எட்டாகியும்,
சூட்டின்மேனின்ற எழுத்துப் பன்னிரண்டினுள் நாலுதிக்கினுநின்ற மகரஆகார மிரண்டும் வகர ஆகார மிரண்டும்
ஆக நாலும் எட்டாகியுந் தடுமாறி ஆக எ-ம் 32 எழுத்தாகி, சிந்தடிநான்கான்வந்த வஞ்சிவிருத்த மமைந்தவாறு காண்க.

(இ-ள்) வானாதியாய பஞ்சபூதமானவனே! தேவர்கள்விரும்பும் மனுகுலமானவனே!
பெருமையையுடைய வாமனரூபமானவனே! விசும்பினிடத்து மேகம்போலுநிற மாக்கஞ்செய்தவா ! என்றவாறு.
எனவே யென்னைக் காப்பாயாக வென்பது கருத்து. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

தேவாமோகூராதிதமகிபாமாமோக
பூவாளிஓஒபொருதலைக்க–வோவாது
துங்கமுரசாயதேதுன்பமெனும்பூமகட்கு
வெங்கனலாவானேன்விது. (783)
இதுவும் நாலாரச்சக்கரம்.

இதனுள், நடுவு தகரநின்று அதனைச்சூழ்ந்த குறட்டின்மேல் திருமலையென்னும்பெயர் நின்று ஆர் நாலினும்
நாலுநாலாகப் பதினாறெழுத்து நின்று சூட்டினமே லிருபத்தெட்டெழுத்து நின்று
ஆக எழுத்து நாற்பத்தொன்பதும் ஐம்பத்தஞ்சாக மாறாடின.
அவை மாறாடினவகை :- நடுவு தகரம் இரண்டாகவும்,
சூட்டின்மையங்களில் முதன்மையத்தில் து மூன்றாகவும்,
ஒழிந்தமையத்தில் தே பூக மூன்றும் ஆறாகவும் மாறாடினவாறு காண்க.

(இ-ள்) தேவா – சகலதேவன்மாருக்குந் தேவனே ! மோகூரா திருமோகூரானே !
திதமகிபா – உண்மைப்பொருளானமகிபனே !
மாமோக – பெரியபிராட்டியைமோகிக்கப்பட்டவனே ! பிராட்டியால் மோகிக்கப்பட்டவனே! எனினுமாம். என்னை?
“தடுமாறு தொழிற் பெயர்க் கிரண்டு மூன்றுங், கடிவரை யிலவே பொருள்வயி னான” என்பதனா னறிக.
பூவாளி ஓஒ பொருதலைக்க – காமன் மிகவும் பாணங்களாற் பொருது அறிவினதுநிலையைக் குலைக்க அதனோடும்.
ஓவாது – ஒழிவின்றியே. துங்கமுரசாயதேதுன்பமெனும்பூமகட்கு – காமனது வெற்றிமுரசான கடலே துன்பமதெனும்
பூமடந்தைபோல்வாளுக்கு அவற்றினோடும்,
வெங்கனலாவானேன்விது – குளிர்ந்தசந்திரனும் வெம்மையைச்செய்யுந் தழலாவானே னென்றவாறு.

பூவாளி – பூவைப்பாணமாகவுடைய காமன். இதனைப் பெந்திக்குமாறு :- இடதுபக்கத்துச்சூட்டின்மையத்துத்
தேவாவென்றெடுத்து மோகவென முடித்து, வலமாக அதற்கடுத்தசூட்டின்மையத்துப் பூவாளியென் றெடுத்து
ஓவாது என்று முடித்து இறுதிநின்ற துவ்வென்பது முதலாகச் சூட்டின்வலமேறி விதுவென முடிக்க.

இதனுள், ஓஒ வென்னு மோகார வளபெடை சிறப்பின்வந்தது. என்னை?
“தெளிவினேயுஞ்சிறப்பினோவு, மளபினெடுத்தவிசையவென்ப” என்பதனா னறிக.
“இசைகெடின்…. குறியே” என்பதனால் இரண்டு மாத்திரையான ஓகாரம் செய்யுட்கண் ணோசைசிதைந்தவிடத்து
மூன்று மாத்திரையாய் நீண்ட குறிக்குத் தனக்கினமாகிய குற்றெழுத்தினொடு நின்றதல்லது இரண்டெழுத்தல்லவென்ப தறிக.
திணை – பெண்பாற் கூற்றுக் கைக்கிளை. துறை – கண்டுகைசோர்தல்.

மாதவனேதென்னரங்கேசமான்மருளாகமிகு
போதனுமன்பிற்றொழுகேசவபுரைகூர்பவமே
வாதிதமாகுதற்கிங்கேயெனாருயிர்காபொதுவே
வேதநமாநமபோதநைவார்க்குள்ளமேதகவே. (784)
இஃது ஆறாரச்சக்கரம்.

இதனுள், நடுவு கே யென்னுமெழுத்து நின்று அதனைச்சூழ்ந்த குறட்டில் ஆறக்கரம்நின்று சூட்டிற் பதினெட்டெழுத்து நின்று
குறட்டுக்குஞ் சூட்டுக்கு நடு ஆராறில் ஆர்தோறும் ஏழெழுத்துநின்று ஏழெழுத்தில் நடுவெழுத்தாறும்
தென்குருகூர் என்னும் பேராகநின்று ஆக அறை அறுபத்தேழில் எழுத் தறுபத்தேழும் ஒற்றுள்பட ஒன்பதெழுத்து
மாறாடினமுறையாலேறி எழுபத்தாறாக நேரசைக்கலித்துறை நின்றவாறு காண்க.

நடுவிற் கே மூன்றாகவும், முதற்சூட்டின்மையத்து வே மூன்றாகவும், ஒழிந்தசூட்டின்மையத்துநின்ற
மா கு பொ மே வா ஐந்தும் ஒரோவொன்று இவ்விரண்டாகவும் நின்றன. இதனைப் பெந்திக்குமாறு :-
இடதுபாகத் திரண்டாஞ்சூட்டின்மையத்து மாதவனே யென்றெடுத்து நேரே மிகு என முடித்து,
அதற்கடுத்த மூன்றாஞ்சூட்டின் மையத்துப் போதன் என எடுத்து மே யென நேரே முடித்து,
நாலாஞ் சூட்டின்மையத்து வாதிதமாகுதற்கென எடுத்து, பொதுவே என முடித்து,
முடித்த வே நாலாமடிக்கு முதலெழுத்தாகப் பின்னும் மேதகவேயென அதனின்முடிக்க.

(இ-ள்) திருமகள்காந்தனே ! அழகிய அரங்கேசனே ! மேகம் போன்ற திருமேனியனே !
பெரிய பிரமனு மவன்முதலாங் கடவுளரு மன்பினோடுந்தொழுங் கேசவனே ! சகலான்மாக்களுக்கும் பொதுநின்றவனே !
என் றுன்னைநினைந்து மிகவுங்குழைவார்க் கிதயதாமரை யகத்தோனே ; வேதமுதல்வனே ;
நின்னைக்குறித்து நமாநம என்னா நின்றேன் ; அதற்குத்தகுவதாகவென்னாருயி ரின்னும் பொல்லாங்கை விளைக்கப்பட்ட
செனனத்தை யிவ்வுலகத்தெய்தாது இன்பமெய்துதற்கு என்னைக் காப்பாயாக வென்றவாறு.

போதனும் என்னு மும்மை எச்சவும்மை. இதனுள், இரண்டாமடியீறு தொடங்கி யொழிந்தன மாட்டுறுப்பாக நிகழ்ந்தன.
துறை -கடவுள்வணக்கம்.

தண்மதிநிகர்வதயங்கியவதனம்
பொன்னணிமுலைநிடதப்புரைவரைநிகர்
மடிசேர்தருதாமதபத்தர்க்கெட்டா
மாறன்றுடரிமலைதன்மின்போன்றொளிர்
தண்ணென்பொற்சுனைமன்னியமாமல
ரம்மடவார்மையுண்டாட்டமர்கண்ணே. (785)
இஃது எட்டாரச்சக்கரம்.

இதனுள், நடுவு தகரம் நின்று சூழ்ந்தகுறட்டில் வடமலையப்பன் என்னும் பெயர் நின்று
ஆர்மேல் நாற்பத்தெட்டெழுத்தாய்ச் சூட்டின் மேன் முப்பத்திரண்டாய்நின்றவாறு காண்க.
நடுநின்ற தகரம் நாலெழுத்தாய் முதற்சூட்டின்மையந்தொடங்கிநின்ற த பொ ம மா ம் ர் டா ர் எட்டும் பதினாறாய்,
குறட்டில் வடமலையப்பன் என்னும் எட்டும் பதினாறாய், பத்தொன்பதெழுத்து மாறாடி அறை எண்பத்தொன்பதினின்ற
எண்பத்தொன்பதுக்கு நூற்றெட்டெழுத்தால் ஆறடி நிலைமண்டிலவாசிரி யப்பாவாய் முற்றியது.

இதனுள், நிடதப்புரைவரைநிகர் – நிடதமாகியவுயர்ந்தமலையை யொத்த. மலைதன் – மலைதன்னில்.
மின்போன்றொளிர் – மின்னைப் போன் றொளிராநின்ற. தண்ணென்பொற்சுனை – குளிர்ந்த பொன்னோடு கூடிய சுனை.
மன்னியமாமலர் – நிலைபெற்ற நீலோற்பலம்போல்வ.
அம் மடவார்மையுண்டாட்டமர்கண் – அழகியமடவார் மையெழுதப்பட்டுக் களிப்போடுகூடிய கண்கள். உண்டாட்டு – களிப்பு.
நண்பனே ! பத்தரல்லாத தாமதத்தினைவிரும்புவோர்க் கெட்டா மாறன் றுடரிவெற்பிடந் தன்னி லெனக் கூட்டுக.
நண்பனே யென்னு முன்னிலை எச்சம். பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.

சேடுறுதட்பச்சீரிமகிரிக்கைவிலின்
போர்பொருவீரபுராரிசெற்றத்தடர்த்
தின்பமதுறவமரியலருணிருதனேர்
முன்புமேத்தமராரிம்பர்நம்பாலுறு
சேர்மழைபோனிறத்திருவுறைமுதல்வன்
தாரிணைத்தாளெதிர்தாளுற்றுன்னெஞ்சே. (786)
இதுவும் எட்டாரச்சக்கரம்.

இதனுள், நடுவு ரி என்னு மெழுத்துநிற்க, குறட்டிற் சீராமராமசெயம்என்னும் ராமதோத்திரநின்று,
ஆர்மேற் குறட்டுடன் அஞ்சா மறையில்நின்றும் வலமாக,தருமமேகைதரும் என்னும் பழமொழி நின்று,
ஆர்மேல் நாற்பத்தெட்டெழுத்தாய்ச் சூட்டின்மேன் முப்பத்திரண்டெழுத்தாய் முதலடியின் முதலெழுத்தாகிய சே அஞ்சாமடிக்கு
முதலெழுத்தாய் ஆறாமடிக்கு நெஞ்சேயென்ன முடிந்தமொழிக்கீறாய் மூன்றெழுத்தாயவாறுங் காண்க.
இதனைப் பேந்திக்குமாறு :- தன் முன்னர்ச் சூட்டுமையத்துநின்றுஞ் சேடுறு என நோரோட்டிக் கைவிலின்
என அஞ்சாமாரின் முடித்து, வலமாக இரண்டாமார்தொடங்கி நாலாமார்வரைக்கும் லுறு என முடித்து,
மீட்டும் முதலடியிற் சே என்றவெழுத்தை யெடுத்துச் சேர்மழைதொடங்கி நெஞ்சேயெனச் சூட்டின் வலமாகச்சுற்றி முடிக்க.

(இ-ள்) நெஞ்சே – நெஞ்சமே ! சேடுறு…. விலின் – பெருமை யெய்துங் குளிர்ந்த சீர்பொருந்திய
விமவானென்னுங் கிரியைக் கைவில்லாக்கி அதனால், போர்…. அடர்த்து – திரிபுராதிகளுடன் போரைப் பொரும்
வீரத்தையுடைய புராரியென்னுஞ் சிவன் கைலையை யெடுத்தலைத்ததனாற் கோபித்து விரலையூன்றி மதுகையையழிப்ப வீடுபட்டு.
இன்பமது…. முன்பும் அவன் பாடிய பாட்டினுக்குருகி மீள வின்பமுறும்படி சமர்க்கு வேண்டு மாயுதமுதலிய வியல்பினை
யெல்லா மடர்த்த சிவன் றான்கொடுப்பவெய்திய மழைபோனிறநிருதன் சமர்க்கு நேர்பட்ட முதனாளுங்
கும்பகருணன்முதலியோர் பட்டபின்னும். எதிர்தாளுற்று – அவனெதிர்தரத் தானும் போர்க் கெதிரு முயற்சியையுற்று.
இம்பரேத்தமர் – இவ்வுலகின்கண்ணே யாவரு மேத்துந் தனதுபோரால். ஆர் – அவனதுயிரையுண்ணும்.
திருவுறை…… தாள் – திருமகள் விட்டுநீங்காத முதல்வனது தாமரைப்பூப் போன்ற இரண்டு திருவடிகளையும்.
உறுநம்பால் – மிக்க விருப்பத்தால். உன் – சேர். நினை – தியானத்தாற் கூடுவாயாக என்றவாறு.

இங்ஙனந் தியானிக்க வீடேறலா மென்பது பயன். அவனுயிரை என்பது சொல்லெச்சம்.
முன்பும் என்னும் உம்மை யெச்சமாதலாற் பின்னுமென்ப தாயிற்று. அமரால் மூன்றாவது தொக்குநின்று விரிந்தது.
ஆர் உண்ணும் என வினைத்தொகைவாய்பாடு செய்யுமென்னும் பெயரெச்சவாய்பாடாக விரிந்து
தன்னெச்சமான திருவுறைமுதல்வனென்னும் பெயர்கொண்டு முற்றியது. திணை – பாடாண். துறை – கடவுள் வணக்கம்.

பதுமபெந்தம்

283.எண்ணிரண்டிதழாய்க்கோணிருநான்கின்
கண்ணுறநடுவணப்பொகுட்டதுகாட்டிப்
பண்ணமைப்பதுவும்பதுமபெந்தம்.
(எ-ன்) வைத்தமுறையானே பதுமபெந்தமாமாறுணர்-ற்று.

(இ-ள்) ஒரு தாமரையை எட்டுக்கோணினு மிவ்விரண்டாகப் பதினாறிதழெழுதி நடுவே
யொரு பொகுட்டினையுங் காண்பதாக்கிச் செய்தமைப்பதும் பதுமபெந்தமா மென்றவாறு.
உம்மையான் மகாபதும பெந்தமு மொன்றுள.

மாறாமாலாலேமாறாமா
மாறாமாவேளேமாறாமா
மாறாமாகோவாமாறாமா
மாறாமாவாதேமாறாமா. (787)
இது பதுமபெந்தம்.

(இ-ள்) முதலடியீற்று மா – திருவன்னாள். மாறாமாலால் – நீங்காத மாலால். ஏமாறா – வருந்தும்படிக்கு.
(இரண்டாமடி) மாறாமாவேளேமாறாமாம் – மாயோன் றரப்பட்ட கரிய வேளம்பு மாற்றமாமாம்.
மூன்றாமடியில் மகரவொற்றைப்பிரித்து, ஆறாமா – ஆறுபோலவாம் ஐயோ என்றாக்கி,
(மூன்றாமடியி லிறுதியில் மா என்னும் எழுத்தைப்போட்டு) கோவாமாறா என்பதனைக் கூட்டி, கண்ணீர்தீராது
ஐயோவெனச் சேர்த்து, மூன்றாமடியினின்ற மாவை நாலாமடியின் முதன்மாவொடுங்கூட்டி,
மாமாறா என்றாக்கி, பெரிய மாறனே ; என்க.
மாவாதேமாறாமா – வண்டுகள் தேனையுண்ணவரும் தேன்றுளும்புந் தரமத்தனே யென்றவாறு.

பெரியமாறனே ! திருவன்னாள்வருந்தும்படிக்குக் கரிய வேளம்பு மாற்றமாகாநின்றன ; கண்ணீர் தீறாது ;
ஐயோ ! இனி எங்ஙனமுய்யு மென்னும் பயனிலைகூட்டி முடிக்க. மகாபதுமபெந்தம் வந்தவழிக் கண்டு கொள்க.
திணை – பெண்பாற் கைக்கிளை. துறை – கண்டுகைசோர்தல்.

இனிப் பதுமபெந்தத்தினுள் நடுவிற்பொகுட்டினின்ற மா என்ற எழுத்தொன்றும் எட்டெழுத்தாகவும்,
அதனைச்சூழ்ந்த நாற்கோணங்களினின்ற எட்டெழுத்தும் பதினாறாகவும்,
இடையிற்கோணாலினுநின்ற எழுத்தெட்டுந் திரிந்து மாறாடாதுநிற்கவும் பாடினவாறு காண்க.

முரசபெந்தம்

284.எழுதியவரிநாலினுண்முதலீறன
பழுதறமந்திரிச்செலவாய்ப்படர்ந்தய
லொழுகியுங்கீழ்மேற்றனதீற்றுற்றபின்
னறைதொறுமேனையவடைவேபாதியின்
முறைதடுமாறுதன்முரசபெந்தம்.
(எ-ன்) வைத்தமுறையானே முரசபெந்தமாமாறுணர்-ற்று.

(இ-ள்) நாலடியான்வரு மொருசெய்யுளை நாலுவரியாக வெழுதி
அவற்றுண் முதலடியுமீற்றடியுமாகியவிரண்டின்முதலடி கீழ்முன்றுவரியினும் மந்திரிச்செலவாகச் சென்று
நாலாமடியி லஞ்சாமறையி லேறி யந்தவார் மேனோக்கி மீள வப்படியே முதலடியீற்றின்முற்றியும்,
இறுதிவரியும் மந்திரிச்செலவாய் மேனோக்கி நாலாமடியுற் றஞ்சாமறையிலேறி யந்தவார் கீழ்நோக்கி
யவ்வண்ணமே யிறுதியடியீற்றின் முற்றியும்,
ஏனையிரண்டனுள் இரண்டாமடி முற்பாதியினின்றுங் கீழ் வலமாக மூன்றாமடியின்முதலே முற்றியும்,
மூன்றாமடி யிரண்டாமடிப்பிற்பாதியினின்றுழிநின்றுங் கீழிடமாக மூன்றாமடி யிறுதியின்முற்றியும்,
இரண்டடியும் முத லீறென்னும் முறைதடுமாறப் பாடுவது முரச பெந்தமா மென்றவாறு.

இங்ஙனம் மேல்வருஞ் செய்யுளை எழுதிக் கண்டுகொள்வது.

போதவானதுவாதரா
மாதவாதணவாதநா
நாதவாணதவாரவா
வேதவானதுவாரகா. (788)
இது முரசபெந்தம்.

(இ-ள்) போத – ஞானவானே ! வானதுவாதரா – வானவராதரிக்கப் பட்டவனே ! மாதவா – திருமகள்காந்தனே !
(மூன்றாமடி முதலீறாக) நா தணவாத நாத – நாவைவிட்டுநீங்காத வென் னாதனே !
வாண- உலகினைக் காக்கப்பட்டவனே! தவாரவா – அழிவில்லாத அராவையுடையவனே !
வான வேத துவாரகா – (எனப் பாடமாற்றுக) பரமபதமிடமாக நின்றும் பூமியில் வருதற்குப் பெருமையை
யுடைய வேதத்தை வாயிலாகவுடையவனே ! என்னைக் காப்பாயாக வென்றவாறு. துறை – கடவுள் வாழ்த்து.

நாகபெந்தம்

285.வரியரவிரண்டாய்வால்வயிறிரண்டாய்த்
தெரிமூலைநான்காய்ச்சிறந்துமும்மூன்றுட
னிலைபெறுமொருபானிருபானிறீஇத்
தலையிரண்டெழுத்தாய்ச்சார்தரச்சந்தியிற்
கவினுறுத்தெழுத்துக்கலந்துறுப்பாக
நவிலிருபாவேநாகபெந்தம்.
(எ-ன்) வைத்தமுறையானே நாகபெந்தமாமா றுணர்-ற்று.

(இ-ள்) வரியையுடையபாம்புக ளிரண்டாக, அவற்றிற்கு வாலிரண்டாக வயிறிரண்டாகத் தோன்றப்பட்ட
மூலைக ணான்காகச் சிறப்பெய்தி, வாலிரண்டி னிலைபெறுமெழுத் தொன்பதுடன்,
வயிறிரண்டி லெழுத்துப் பத்தாய், மூலைநான்கி லெழுத் திருபதாய்த் தலையிரண்டி லெழுத் திரண்டாய்ப் பொருந்த நிறுத்தி,
சந்திகளில் அழகுதருவனவா மெழுத்துக்க ளிரண்டிற்குங் கூடிநிற்பனவா முறுப்பாகப் புலவனாலுரைக்கப்படு
மிரண்டுபாவென்பது தானே நாகபெந்தமா மென்றவாறு.

நிறுத்தியென்பது மத்திமதீபம். மும்மூன் றொருபானிருபானென்பன நிரனிறை.
புலவனா லென்பது எச்சம். தெரிமூலை – தோன்றப்பட்ட மூலை.

மாறன்சடகோபன்வண்குருகூர்வாழ்பொருநை
யாறனளிமேயவன்னமே–யேறுத்
தமனாமாமாசரதன்றாண்மொழிதற்பாமன்
னெமர்யாயெமையாளிறை. (789)

அறமுமறமமைந்தவன்பென்பதுவும்
பெறனன்னலமதுண்மைபேரா–துறுபாற்கோர்
மானமனமேநினைமான்மாமேகத்தந்தமே
யேனமெமையாளியை. (790)
(இ-ள்) மாறனென்றுஞ் சடகோபனென்றுந் திருநாமத்தையுடையான்,
வளவிய குருகூரின்கண்வாழும் பொருநையாற்றையுடையவன்,
கிருபையோடு கூடிய அன்னத்தையேறு முத்தமன்,
நாவினால் திருமகளையுடைய பெரிய சரதனாம் மாயோன் றிருவடிகளைப்பாடும் பாவினையுடைய மன்னன்,
எம்மனோர்க்கு மாதா, எம்மையாளு மிறைவ னென்றவாறு. எனவே, யமனு மெம்மிடத்து வாரான் ;
எமக்குச் செனனமு மில்லை, சித்திப்பதும் முத்தியேயா மென்பது பயன்.

அறத்தினது பகுதியு மறத்தினாலமைவெய்திய அன்பென்று கூறப்படுவதும் நமக்குண்டாதலும்
நல்ல பேரின்பத்தையெய்துவ துண்மை யாக வது நம்மைவிட்டு நீங்கா தவற்றையுறும்பகுதிக்கு ஒப்பற்ற பெரிய மனனே !
காளமேகத்தினது அழகிய நிறமேவிய திருமாலை, ஏனமாக வடிவெடுத்தவனை,
எம்மையாளப்பட்டவனை நினைப்பாயாக வென்றவாறு.

ஆக வெண்பா விரண்டினால்
எழுத்து நூற்றொருபத்தெட்டும் அறை தொண்ணூற்றாறனுண் மாறாடி யடங்கினவாறு கண்டுகொள்க.
திணை – பாடாண். துறை – கடவுள்வணக்கம்.

இரதபெந்தம்

286.தேரெனமந்திரிச்செலவெனச்செய்யுளை
யேர்தரவடக்குவதிரதபெந்தம்
(எ-ன்) வைத்தமுறையானே இரதபெந்தமாமா றுணர்-ற்று.

(இ-ள்) சதுரங்கவறையுட் டேர்செல்வது எனவும், மந்திரி செல்வதெனவு மொருசெய்யுட்குண்டான
வெழுத்துக்களைத் தேரின தறைக்குநடுவே ஒரு திருநாமமாதல் ஒரு பழமொழியாத லழகுபெற்று நிற்க
விரதத்திலே பெந்திப்பது இரதபெந்தமா மென்றவாறு.

சதுரங்கவறையினுளென்பது சொல்லெச்சம். செய்யுளையென்பதாகு பெயர்.
அறைக்கு நடுவே திருநாமமாதல் பழமொழியாத னிற்க வென்பது ஏர்தர என்பதே ஞாபகமாக விரிந்தது.

நாராராராயநயனயணாவிண்ண்
ணாராமணாயனிலமாயவா–சீராய
நன்காநமநமநன்காநமநம
மன்காமன்றாதாய்நம. (791)
இஃது இரதபெந்தம்.

(இ-ள்) நாரார் – அன்பினையுடையார். ஆராய் அ நயன் – ஆராயப் பட்ட அந்தப் பேரின்பத்தினிடத்து.
அயணா – வியாபரிக்கப்பட்டவனே! விண் – ஆகாயமும். ஆராம் – மிகுந்த செலமும். மண் – நிலமும். ஆய் – ஆகி.
அனிலம் – காற்றும். ஆயவா – ஆனவனே ! சீராய – பொலிவினையுடைய நந்தகோபாலனே!
நன்காநமநம – நன்மையையுடையவனே ! உன்னை நமக்கரிக்கிறேன். நன்காநமநம – முன்னைப்போல வுரைக்க.
மன்காமன் – மகளி ராடவர்க் கரசனாகிய மன்மதன். தாதாய் – தந்தையே !
நம – உன்னை மீளவு மென தான்மாவைக் காத்தற்பொருட்டு நமக்கரிக்கிறே னென்றவாறு.

நார் – அன்பு. அ சுட்டு. நயன் – சுகம். அயணம் – வியாபாரம். ஆம் – செலம்.
மண்ணாய் என்பது மணாய் என இடைகுறைந்துவந்தது. ஆயவா – ஆனவனே. நன்கு – நன்மை. மன் – அரசன்.
தாதை என்னும் ஐகாரவீறு விளிக்கண் ஆயாயிற்று. நமநம நமநம என்பது இசைநிறையசைநிலை.
விண்ண் என்னு மொற்றளபெடை, வெண்பாவினது செப்பலோசைசிதைந்தவழி யோசையை நிறைத்தற்பொருட்டு வந்தது.
என்னை? “குன்றுமே லொற்றளபுங் கொள்” என்பதனா லறிக.
இதனுள் நடுவும் இருபக்கமும்நாராயணாயநமவென நின்றவாறு காண்க. துறை – கடவுள்வணக்கம்.

மாயவனேவேதமதியேவயநாக
பாயவனேதேநளினபாதாபராபரா
தூயவனேகாரணாபூரணாதோணிலமா
னாயகனேசீராகநாராயணாயநம. (792)
இதுவும் இரதபெந்தம்.

சீர் – திருமகள். தோள்நிலமான் – தோளிலிருக்கும் பூமிதேவி.
இதனுள், நடுவே நாராயணாயநமவென்னுந் திருநாமம் நின்றவாறு காண்க.

மாலைமாற்று

287.ஒருசெயுண்முதலீ றுரைக்கினுமஃதாய்
வருவதைமாலைமாற்றெனமொழிப.
(எ-ன்) வைத்தமுறையானே மாலைமாற்றாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருபாட்டையீறுமுதலாக வாசிக்கினு மப்பாட்டேயாகி வருவதனை மாலைமாற்றென்னுஞ்
சித்திரக்கவியென்றுகூறுவர் பெரியோ ரென்றவாறு.

லாமனாமானமா
பூமனாவானவா
வானவானாமபூ
மானமானாமவா (793)
இது மாலைமாற்று.

(இ-ள்) வாமனா – வாமனனேயென்று.
வானவாவானவானாம – தேவர்களால் விரும்பிச்சொல்லுவதாய பெரியதிருநாமத்தை யுடையவனே !
மான மா பூ – பெருமையையுடைய திருமகளுக்கும் பூமிதேவிக்கும். பூமானமனா – பூமானாகியமன்னனே !
மானாம – மாலாகிய திருநாமத்தை யுடையவனே! வா – என்முன்னேவந்துதோன்றுவா யென்றவாறு.

இஃ திரண்டுவிகற்பத்தான்வந்த வஞ்சித்துறை. துறை – இதுவுமது.

கரந்துறைசெய்யுள்

288.முதலொருசெய்யுண்முடித்ததனீற்றிற்
பதமதனிறுதியிற்பயிலெழுத்துத்தொடுத்
திடையிடையிட்டெதிரேறாய்முதலய
லடைதரப்பிறிதொருசெய்யுள்கரந்தங்
குறைவதுகரந்துறைசெய்யுளென்றுரைபெறும்.
(எ-ன்) வைத்தமுறையானே கரந்துறைசெய்யுளாமாறுணர்-ற்று.

(இ-ள்) முதலே யொருசெய்யுளை எழுதிமுடித்து, முடித்த விறுதிமொழியினீற்றெழுத்துத்தொடங்கி,
எதிரேறாக இடையிடையோரெழுத்தாக இடையிட்டு முதன்மொழிமுதலெழுத் தயலடைய முடிக்கப் பிறிதோர்
செய்யுளாக வதனகத்துக் கரந்துறைவது கரந்துறை செய்யுளென் றுரைக்கப்பெறு மென்றவாறு.

போர்வைவாயூராரலரளிபொருகாம
நீர்மையாழ்வாரயலணைதருமிக
வேர்தவாவாழ்தலாமயில்கைமுருகுகு
தார்தராமூதாமணிதகவுருவமும். (794)
இது கரந்துறைசெய்யுள்.

(இ-ள்) ஆரலரளி என்பதை அளியாரலரென மாற்றி, வண்டுக ளாரவாரிக்கப்பட்ட பூவாளியால் என்க.
பொருகாம – பொரவந்த காமனே ! நீர்மையாழ்வார் – நற்குணத்தையுடைய ஆழ்வார்.
மயில்கை – எமது மயில்போலுஞ்சாயலையுடையாள்கையில்.
மூதாவுருவமுமணிதக வாழ்தலாம் – பெருமையையுடையவா முருவங்களு மழகினது பெருமை யெய்த உயிர்வாழ்தலாம்படிக்கு.
ஏர்தவா முருகுகு தார்தரா – அழகு கெடாத தேனொழுகும் வகுளமாலிகையைத் தந்து.
வாயூர் – (ஊர்வாய் என மாறுக) எமதுபதியிடத்து. அயலணைதருமிக – அய லெம்மோடு மிக நட்புச்செய்யாநின்றாராதலால்.
போர்வை – உனதுபோரை யொழிவாயாக வென்றவாறு. இது மாட்டுறுப்பு. அப்படி யிதனுட் கரந்த செய்யுள் :-

முருகணிதாரார்
குருகையிலாழ்வார்
கருணையவாயார்
மருளிலராவார். என்பதாம். (37)
காதைகரப்பு

289.காதைகரப்பதுகாதைகரப்பே.
(எ-ன்) வைத்தமுறையானே காதைகரப்பாமாறுணர்-ற்று.

(இ-ள்) புலவராற்குறிக்கப்பட்ட செய்யுளுட் பிறிதொருசெய்யுட் குக்கூடுவதானவெழுத்துக்கள்புகுதாதே
தாங்குறித்த பழையசெய்யுட் கரந் தெழுத்துப் பிறக்கிக்கொள்ளலாம்படி பாடுவது
காதைகரப்பா மென்றவாறு.

கொல்யானைமூலமெனக்கூப்பிடமுன்காத்தானை
யெல்லாவுயிர்க்குமுயிரெனலாம்–புல்லாணித்
தோடார்நறுந்துளபத்தோண்மாலைக்கைதொழுதா
னாடானொருநாணமன். (795)
இது காதைகரப்பு.

இதனுட்போந்தசெய்யுள், “கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி, யெல்லா வுயிருந்தொழும்” என்பது.
இதனைப் பழம்பாட்டெனவே மேலன நவமாமென்றுணர்க. இவற்றை மாறாடுவாரு முளர்.

பிரிந்தெதிர்செய்யுள்

290.பிரிந்தெதிர்வனவேபிரிந்தெதிர்செய்யுள்.
(எ-ன்) வைத்தமுறையானே பிரிந்தெதிர்செய்யுளாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருசெய்யுள் முதலேமுடிந்தா லச்செய்யுளீற்றெழுத்துத் தொடங்கி யெதிரேறாகநடந்து
வேறோர்செய்யுளாக நிகழ்தல் பிரிந்தெதிர் செய்யுளா மென்றவாறு.

நீரநாகமா
தாரமாகமே
வாரமாகமா
ணாரணாககா. (786)
இது பிரிந்தெதிர்செய்யுள். இதனுள், பிரிந்தெதிர்செய்யுளாவது :-

காகணாரணா
மாகமாரவா
மேகமாரதா
மாகநாரநீ.
என்பதாம்.
இவற்றுள், முதலேநடந்தசெய்யுளின்பொருள் :- நீரநாக – நற்குணத்தனே ! அனந்தசயனத்தனே !
மா தாரமாக – திருமகளைப் பாரியாக. மேவாரமாக – பொருந்து மாரங்கிடக்கு மார்பனே !
மாணாரணாக – பெருமையையுடைய வேதசொரூபனே ! கா – என்னைக் காப்பாயாக வென்றவாறு.

எதிரேற்றின்பொருள்:-
மாகமாரவாம் – துறக்கத்துள்ளார்பெருக விரும்பும். நார – நற்குணத்தையுடையவனே !
மேகமாக – மேகத்தைப் போலுந் திருமேனியையுடையவனே ! மாரதா – சத்துருக்களை வெல்லு முழுத்தவீரனே !
நாரணா – நாராயணனென்னுந் திருநாமத்தனே ! நீ கண் – நினது சொருபரூபகுணவிபூதிகளை மயக்கமறவறிதற்கு
நீயே யெமக்கு ஞானக்கண்ணானதால். கா – எம்மைக் காப்பாயாக வென்றவாறு.

இவையிரண்டும் வஞ்சித்துறை. துறை – கடவுள்வாழ்த்து. அநுலோமப்பிரதிலோமமென்பது மிது.

பிறிதுபடுபாட்டு

291.பிறிதொன்றாதல்பிறிதுபடுபாட்டே.
(எ-ன்) முறையே பிறிதுபடுபாட்டாமா றுணர்-ற்-று.

(இ-ள்) பிறிதுபடுபாட்டென்பது ஒருசெய்யுளைத் தொடையு மடியும் வேறுபடவுரைத்தாலுஞ் சொல்லும் பொருளும்
வேறுபடாமற் பிறிதொருசெய்யுளாய் முடிவது என்றவாறு.

பார்மகளைத்தோயும்புயத்தாய்பதுமநறுந்
தார்மகளைநீங்காத்தகைசான்றவாகத்தா
யாரியனேயாரணத்தந்தியனேவாரி
வாரியுணாகணைமன்னா. (797)
இது பிறிதுபடுபாட்டு.

இது முதலே யொருவிகற்பத்தின்னிசைவெண்பா பின்னர்க் கலி விருத்தமாகநிகழ்ந்தவாறு காண்க.
தார் – பூ. ஆரியன் – பரமாசாரியன். வாரி – கடல். வாரி – மிகுதி.

சருப்பதோபத்திரம்

292.இருதிறத்தெழுதலுமெண்ணான்கெழுத்துடை
யொருசெய்யுளெண்ணெண்ணரங்கினுளொருங்கமைந்
தீரிருமுகத்தினுமாலைமாற்றாய்ச்
சார்தருமாறியுஞ்சருப்பதோபத்திரம்.
(எ-ன்) வைத்தமுறையானே சருப்பதோபத்திரமாமா றுணர்-ற்று.

(இ-ள்) எவ்வெட்டெழுத்தோரடியாய் நான்கடியாய்வரு மெண்ணான்கெழுத்து டையதொருசெய்யுளை
யறுபத்துநாலறையினி லிரண்டு கூறுபாட்டானெழுதவவற்றுண் முழுதுமடங்கி
நாலுமுகத்தினு முதல் முதலாகியு மீறு முதலாகியு மாலைமாற்றாகிவருமது சருப்பதோபத்திரமா மென்றவாறு.

இரண்டுகூறுபாடாவது நான்கடியும் மேனின்று கீழிழியவுங் கீழ் நின்று மேலேறவும் எழுதுவதாம்.
இது மாட்டுறுப்புப்பொருள்கோள்.

தேமாபூமாமாபூமாதே
மாதாகாவாவாகாதாமா
பூகாவாலாலாவாகாபூ
மாவாலாநீநீலாவாமா. (798)
இது சருப்பதோபத்திரம். இதனகத் தவ்வாறுநிகழ்ந்தமை கண்டு கொள்க.

(இ-ள்) தே மா பூ – தேனும் வண்டும் பொருந்திய பூவினிடத்து. மாமா – பெரிய திருமகளும்.
பூமாதேமாது – பூமிதேவியுமாகிய அழகு பொருந்தின மாதர்கள்.
ஆகாவாவாகா – (வா ஆகா வாகா எனப் பாட மாற்ற) வந்து தங்கு மார்பினையும் புயத்தினையு முடையவனே !
தாமா – துளவமாலிகையையுடையவனே !
பூகாவாலாலா – பூமியையெடுக்கப் பட்ட பிரளயத்தின்மே லாலிலையிற் றுயிலப்பட்டவனே!
பூமாவாலா – பொலிவினொடுங்கூடிய மிகுந்த பாலத்தன்மையோனே !
நீலா வாமா – நீலநிறத்தினனே ! வாமனரூபமானவனே !

மூன்றாமடியிலிறுதி வாகா நாலாமடியின் முந்தவந்த நீ என்னுமவற்றொடுங்கூட்டி,
நீ வா கா வெனச் சேர்த்து, நீ வந் தென்னைக் காப்பாயாக வென்றவாறு.

இதனுள், ஏமம் ஏம் என நின்றது. உம்மை வேற்றுமை பண்பு என்பன முதலிய தொகைகளும் ஒருமை பன்மை
மயக்க வழுவமைதியும் வந்து மாட்டுறுப்பாகப் பொருளுரைத்தவாறு காண்க.
ஆல் – பிரளயம். வா – வந்து. மாது – மாதர்கள். பூ – தாமரை. பூ – பொலிவு.

கூடசதுர்த்தம்

293.பாடலினாலாம்பதம்பொறிவரியிடைக்
கூடமுற்றதுவேகூடசதுர்த்தம்.
(எ-ன்) கூடசதுர்த்தமாமாறுணர் – ற்று.

(இ-ள்) நாலடியாய வொருசெய்யுளி னாலாம்பதம் ஏனைய மூன்று பதத்தையு மேனின்று கீழுங் கீழ்நின்று
மேலுமாக எழுதிமுடித்த வரிமூன்றி னிடைவரியின் மறைந்துநிற்பது கூடசதுர்த்தமா மென்றவாறு.

நாதாமானதாதூயதாருளா
ணீதானாவாசீராமனாமனா
போதாசீமானாதரவிராமா
தாதாதாணீவாமனாசீதரா. (799)
இது கூடசதுர்த்தம். இதனை யவ்வா றெழுதிக் கண்டுகொள்க.

(இ-ள்) நாதா மானதா – சுவாமியே ! என்மனத்திலுள்ளானே !
தூயதாருளா ணீதா னாவா – பவித்திரம்பொருந்தின தாமரையிலுள்ளாளாக, நீயாக என்னுடைய நாவிலேவந் துறைவீராக.
அதுவுமின்றி, சீராமனாமனா – சக்கரவர்த்திதிருமகனாகிய மன்னனே ! சீமான் – அழகுடையவனே!
ஆதரவிராமா – சகலரும்விரும்பு மிராமனே ! வாமனா சீதரா போதா – போதத்திலுள்ளானே !
வாமனனே ! சீதரனே ! தாதா தாணீ – உனது திருவடிகளைத் தருவாயாக வென்றவாறு.

துறை – இரண்டுங் கடவுள்வாழ்த்து.

கோமூத்திரி

294.கோமூத்திரநடைபெறல்கோமூத்திரி.
(எ-ன்) வைத்தமுறையானே கோமூத்திரியாமா றுணர்-ற்று.

(இ-ள்) நடைபெறுஞ் சேவினதுமூத்திரவொழுக்கம்போன்று நடப்பி னது கோமூத்திரியா மென்றவாறு.

அஃதாவது
ஒருசெய்யுளை இரண்டுவரியாக வெழுதி
மேலுங் கீழு மொன்றிடைவிட்டு வாசிக்கவு மச்செய்யுளாய் நடத்தல்.

மாயாமாயாநாதாமாவா
வேயாநாதாகோதாவேதா
காயாகாயாபோதாகாவா
பாயாமீதாபேதாபேதா. (800)
இது கோமூத்திரி. இதனை யவ்வாறெழுதிக் கண்டு கொள்க.

(இ-ள்) மாயாமாயா – அழியாத மாயையையுடையவனே ! நாதா – சுவாமியே ! மாவா – திருமகளையுடையவனே !
வேயாநாதா – வேய்ங்குழலிலுண்டாக்குங் கானத்தையுடையவனே ! கோதாவேதா – பசுவைக் காத்தளித்த வேதசொரூபனே !
காயாகாயா – காயாம்பூப் போலுந் திருமேனியையுடையவனே ! போதா – ஞானத்தையுடையவனே !
பேதாபேதா – பேதமும் அபேதமுமானவனே! பாயாமீதா – பரந்த பிரளயத்தின் மேலானவனே !
காவா – என்னைக் காக்க வருவாயாக வென்றவாறு. பா – கலிவிருத்தம். துறை – கடவுள்வாழ்த்து.

சுழிகுளம்

295.தெழித்தெழுநீர்குளத்தினுட்செறிந்ததைக்கொடு
சுழித்தடங்குவபோன்றடங்குதல்சுழிகுளம்.
(எ-ன்) சுழிகுளமாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஆரவாரித்தெழாநின்ற புனல் குளத்தினுட் டனதிடத் தடைந்ததியாதொன் றதனைக் கைக்கொண்டு
சுற்றி யுள்ளேயடங்குவது போலச் சுற்றிப் பாவினகத்துப் பொருளைக்கொண்டடங்குதல் சுழிகுளமா மென்றவாறு.

சதிதகனடனாடீ
திததிதிகாண்ஞானா
ததிதாகார்கண்ட
கதிகாகிளர்கான. (801)
இது சுழிகுளம். இஃ தவ்வாறாத லெழுதிக் கண்டுகொள்க.

(இ-ள்) தாளவொத்துக்குப்பொருந்தக் கூத்தாடாநின்றவனே ! உண்மையான காவற்றொழிலை யுனதாகக் கைக்கொண்டவனே !
தயிரைத் தாகித்துண்ட கண்டத்தையுடையவனே ! கிளர்ந்தகானத்தையுடையவனே !
நீயே கதி, காப்பாயாக வென்றவாறு. பா – வஞ்சித்துறை. துறை – இதுவுமது.

திரிபங்கி

296.நனியொருபாவாய்நடந்ததுதானே
தனிதனிமூன்றாஞ்சால்புறுபொருண்மையிற்
பகுப்பநிற்பதுதிரிபங்கியதாகும்.
(எ-ன்) திரிபங்கியாமா றுணர்-ற்று.

(இ-ள்) முதலே மிக்கதொருபாவாய்நடந்தவதுதானே பின்னர்க் குறைவுடைத்தாய்
மூன்றுபாலா மொழுக்கமுறும்படி பொருளினது தன்மையிற் பகுத்துக்காட்டநிற்பது திரிபங்கியென்பதா மென்றவாறு.

வாரிதிபார்மன்மதன்பூசல்பார்வெய்யமாமதிபா
ரூரலர்பாரன்னையிங்கேசல்பாருய்யுமாறிலைபார்
சோர்குழல்பார்பொன்னிறஞ்சேர்தல்பார்துய்யமான்மயல்பார்
நாரணனேதென்னரங்கேசனேதெய்வநாயகனே. (802)
இது திரிபங்கி. இதனை மூன்றாகப் பகுத்த பா வருமாறு :-

வாரிதிபார் மன்மதன்பூசல்பார் வெய்யமாமதிபார்
ஊரலர்பார் அன்னையிங்கேசல்பார் உய்யுமாறிலைபார்
சோர்குழல்பார் பொன்னிறஞ்சேர்தல்பார துய்யமான்மயல்பார்
நாரணனே. (1) தென்னரங்கேசனே. (2) தெய்வநாயகனே. (3)

எழுகூற்றிருக்கை

297.ஒன்றுமுதலாவோரேழீறாச்
சென்றவெண்ணீரேழ்நிலந்தொறுந்திரிதர
வெண்ணுவதொன்றாமெழுகூற்றிருக்கை.
(எ-ன்) இறுதிநின்ற வெழுகூற்றிருக்கையாமா றுணர்-ற்று.

(இ-ள்) செய்யுளகத்தெண்ணப்பட்ட ஒன்றென்னுமெண்ணொன்றுமுதலாக வோரேழீறாக நிகழ்ந்த
வெண்களைப் பதினாலுநிலந்தொறு மீளவெண்ணுவதொன்றாகு மெழுகூற்றிருக்கை யென்றவாறு.
செய்யுளகத்தென்பது சொல்லெச்சம்.

298.அவைதாம்,
இரதபெந்தத்தினிலிடையறையிரண்டாய்ச்
சரதமதுறநடைசார்தருபான்மையி
னொன்றுபன்னான்காயொருபன்னிரண்டாய்
நின்றயலேனவுநிலந்தொறுமுபயங்
குன்றுவதாய்த்தொகைகூடியொன்றிலிறும்.
(எ-ன்) இதுவு மதற் கோர் சிறப்புவிதி கூறுகின்றது.

(இ-ள்) அங்ஙன மெண்ணப்படு மெண்கடா மிரதத்திற் பெந்திக்கு மிடத்துமையத்திற்பத்தி யிரண்டுபத்தியாய்க் கீறி
வலமே யிடமே நடத்தலைத்தரும்பகுதியில் மையத்திலொன்று பன்னான்காகவு மதனயலிரு பத்தியி லிரண்டும்
பன்னிரண்டாகவும் ஒழிந்த மூன்றுமுதலிய வெண்ணும் பத்திதோறு மிரண்டுகுறைந் தேழென்னுந்தொகைபொருந்தி
முதலேநின்ற வொன்றில்வந்துமுடியு மென்றவாறு.

அயலென்பதனை முன்னும் பின்னுங் கூட்டுக. இரதபெந்தம் – தேரிலே எழுதிக் கூட்டுதல்.

299.இரட்டுறமொழிதலோடீறுதிரிந்தெண்
டிரட்டவும்பெறூஉந்தெரியுங்காலை.
(எ-ன்) இதுவு மவ்வெண்ணிற் கோர் ஒழிபுகூறுகின்றது. இரட்டுறல் – சிலேடை. ஈறுதிரிதல் – ஈற்றெழுத்து வேறொன்றாதல்.

ஒருதனித்திகிரியினிருவிசும்பொழுக்கத்
தொருஞான்றொருபகலொடியாவுழப்பிற்
பதமிரண்டுமிலாப்பாகுடையூர்தியின்
முந்நீர்வரைப்பினிருபால்வியப்பா
னொருபிணர்த்தடக்கையொன்றியவிருகவுண்
மும்மதநால்வாய்க்கரியுரிமுக்கட்
செம்மலினிருகணுமிமையாத்தேவர்க
ளொருபோழ்தகலாதொருவழிப்படநின்
றிருகையுங்கூப்பிமுப்போதினுமிறைஞ்ச
நான்முகமுதல்வனினசைஇயநல்கு
மைந்தருநீழலினறமுதனான்கினுண்
முந்தியமுப்பான்முழுநலமெதிர்கொள
விருமருங்கினுமின்னொருமருங்கரம்பைய
ரொருதிறத்திருபதநடநவின்றொழுக
மும்முரசானாமுன்றிலினிரட்டத்
தெம்முரண்முருக்கித்திசையவைநான்கினு
மைம்பொறியதனகத்தாறைந்தவித்துச்
செம்பொருணான்மறைதெற்றெனத்தேர்ந்த
முக்கோற்பகவர்முறைமுறைபிறழா

விருவினையொருங்குவென்றிறைநிலையிஃதென
வொருதலைபற்றினரிருமையுமுணர்ந்தோர்
முக்குணமவற்றுண்முற்குணனமைந்தவருட
னாலாங்கடவுள்வீற்றிருக்குநற்றிசைவரு
மிளங்கதிரகிலத்தின்னுயிரஞ்ச
வாழ்நாளறுதியில்வௌவுதற்கமைத்த
நமன்றிசையெழுதிறனிறும்பூதென்ன
வறுகாலஞ்சிறையளிக்குலநான்குளர்
முருகவிழ்நறுந்தார்முந்நூன்மார்பத்
திருபிறப்பாளனோரிடத்தெதிருபு
நலங்கிளரொருதனிமுதலெனநாடிப்
பொலங்கழலிரண்டையும்புலனுறுமேதகு
முப்பொறிகளினான்முயற்சியிற்போற்றலு
நாற்பொருள்பயக்கநற்கனிவாயினைத்திறந்
தேற்புடைச்செய்யுளைந்தினுக்கிலக்கணமென
வாறறியந்தணரருமறைப்பொருளா
லெழுகடற்புவனத்தெழுந்திறைவெளிவர
வறுசுவையினுளதிமதுரமுக்கியச்சுவை
யுறுபொருளைந்துடனுயர்தமிழ்மொழியா
னால்வகைப்பனுவன்மூவுலகமுமளந்தவ
னிருசெவிக்கமுதாமெனவினிதளித்த
வொருபேராண்மையினுயிர்கடாமனைத்தும்
பிறந்திறந்துழலுமப்பெரும்பிணிதவிர்த்தருள்
ஞானபூரணசுகோதயநாவீற
மானபூடணகுருகாபுரிவரோதய
மறுசமயத்தவர்மத்தமால்யானையைத்
தெறுமொருசிங்கமாந்திருப்பெரும்பூதூர்
வருமெதிராசனைமனமகிழ்ந்தாண்ட
விருசரணாம்புயத்தென்னையுமொன்றா
யருள்புரிந்தாண்டதற்காதிக்காலத்
திம்மாநிலத்தென்பொருட்டாற்
கைம்மாறெவனீகைக்கொண்டதுவே. (803)
இஃது, எழுகூற்றிருக்கை.

(இ-ள்)
(முந்நீர்… .. வியப்பான்) சமுத்திரத்தையெல்லையாக வுடையநிலத்தின்கண் ணுயர்
திணையிடத் தாண் பெண் ணென்னு மிரண்டு பாலு மதிக்கும்படிக்கு
(இருவிசும்பொழுக்கத்து) பெருமையையுடைய ஆகாசவீதியினிடத்து
(ஒருஞான்று…… வுழப்பின்) ஒருநாளின் கண் ணொருகணப்பொழுது மொழிவில்லாத முயற்சியோடும்
(ஒருதனி…. யூர்தியின்) ஒன்றென்னப்பட்ட ஒப்பற்றவுருளோடு தாளிரண்டு மில்லாதபாகனையுடைய தேரின்மீதே
(ஒருபிணர்…… செம்மலின்) ஒன்றாய சற்சரைவடிவினையுடைய பெரிய கையினையும்,
பெருகாது சிறுகாது தம்மி லொத்த புழையொடுகூடிய விரண்டு கரடத்தினையும், மூன்று மதத்தினையும்,
நான்ற வாயினையு முடைய யானையை யுரிக்கு முருத்திரனைப்போலச் சிவந்து,

(இருகணுமிமையாத்தேவர்கள்…… நாலாங்கடவுள் வீற்றிருக்கும் நற்றிசைவரு மிளங்கதிர்)
இரண்டுநயனமு மிமையாத வானோ ரொருகாலமும் விட்டுநீங்காது திரிவிதகரணங்களு மாத்மஞானத்துடனொருநெறிப்பட
விரண்டுகரங்களையுங்குவித்து மூன்று பொழுதுந் தலைவணக்கஞ்செய்ய, நான்குமுகங்களையுடைய பிரமனைப் போல
விரும்பியதெல்லாங்கொடுக்கு மைந்துவிருக்கமாகிய கற்பகாடவி நீழலிலே அறமுதலாய நாலுபொருள்களுள் முன்னேநின்ற
மூன்றுபாலுந் தம்மாலாய பெரியவின்பத்தைக் கைக்காள்வாயாகவென் றெதிர்கொண்டு நிற்ப,
விரண்டுபக்கமு மின்போன்றதொரு மருங்குலையுடைய வானவர் மகளிர் தாளமுங் கானமும் வாச்சியமு மபிநயமு
மொருகூறுபாடெய்த விரண்டுபதங்களினாலு நாடகத்தைநடித் தொழுகாநிற்ப, நாலுதிக்கிலுமுள்ள சத்துருக்கள்
மாறுபாட்டைக்கெடுத்து மூன்றுமுரசமும் நீங்காமல் முன்றிலின்கண் ணாரவாரிப்ப, செவியாதிய பொறியைந்தினுந்
தங்கப்பட்ட சத்தாதிக ளைந்தினையு மடக்கி யுண்மைப்பொருளைக்கூறு நாலுவேதத்தினையுந் தெளியவாராய்ந்த
முக்கோற்பகவராகி யெடுத்தசென னந்தோறு மிழைத்தமுறையே யடைவுதப்பாமல்வரு நல்வினை தீவினை யென்னு
மிரண்டையு மொக்கவென்று பரத்துவ சொரூபரூபகுணவிபூதி களினிலைமை யித்தன்மைத்தென
நிச்சயமாகவுட்கொண்டோ ரிம்மை மறுமை யிரண்டுந் தெளிந்தோர் சாத்துவிக ராசத தாமதமென்னுங் குண
மூன்றனுள் முற்குணங் குடிகொண்டோராகிய எதிகளுட னாற்பெருங் கடவுளென்னும் இந்திர னொரு பராக்கற
வீற்றிருக்குங் கிழக்கென்னு நல்லதிக்கினி லுதிக்கு மிளைய நாயிறு, உலகின்கண்ணுள்ள
இனியவுயிர்களஞ்சுவதாக அவரவர்வாழ்நாளற்ற அந்தியத்தி லுயிரை யுண்ணும்படிக்கு விதித்த நமன்றிக்கி லெழுந்த
கூறுபாடு ஆச்சரியமென்று, நினது திருமேனியிற் சுடர்ச்சோதியைக்கண் டுட்கொண் டதுவிளங்கும்படிக் குத்தர
கங்கையினின்றும் ஆறுதளையு மழகியசிறையையு முடைய வண்டின் சாதிநான்குங் குடையத் தேனையொழுக்கு
நறுவிதாந் தாமரைத்தாரும் முப்புரி நூலுங் கிடக்கு மார்பினையுடைய இருபிறப்பாளனாகிய மதுரகவி, யொருதானத் தெதிர்ந்து,
பேரானந்தந் தழையாநின்ற மூவரா மொருதனி முதலாகிய ஸ்ரீமந்நாராயணனென ஞானத்தா லுட்கொண்டு,
பொன்னாற் செய்த வீரக்கழலையுடைய நினது திருவடிகளிரண்டையுங் கட்புலனுறவும் பெருமையெய்திய
மனோவாக்குக்காயங்களின்முயற்சியாற் போற்றலும், அறமுதலிய நான்குபொருளும் பயப்பதாக நல்ல கனிபோன்ற
திருப்பவளத்தினைத் திறந்து, வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி மருட்பா வெனப் பெயர்
பொருந்துதலுடைய யாப்பைந்தினுக்கு மிலக்கண மென்று சொல்வதாக, ஆறங்கத்தையுந் தெளிந்த வந்தணர்க்குரியவா யறிதற்கரிய வா
நால்வேதப்பொருளினாற் பரமபதநாதனாகிய இறை கருடவாகனத் தேறி யெழுகடலுஞ்சூழ்ந்த பூலோகத்தில் வெளிவரும்படிக்குச்
சுவை யாறனுள்ளு மதிமதுரமென்னு முக்கியச்சுவை மிகுவதாக, ஐந்துபொருளொடுங்கூடிய தமிழ்மொழியால்,
திருவிருத்தம் திருவாசிரியம் திருவந்தாதி திருவாய்மொழி யென்னு நான்குகூறுபாடுடைய நாலுபிரபந்தங்களையு
முலகமூன்றுமளந்த வவன் றிருச்செவிகட்கு அமிர்தமென்று சொல்லும்படி யினிமையெய்தவூட்டிய வொப்பற்ற வரியசெயலொடு
முலகின்கண்ணுள்ளவுயிர்கள் யாவும் பிறந் திறந் தலம்வரு பிறப்பாகிய பெரியபிணியைத் தீர்த்துக் கிருபைசெய்த ஞானபூரணனே !
ஆனந்தத்திற்குப் பிறப்பிடமானவனே ! நாவீறுடையானே ! அபிமானபூஷணனே ! குருகைமாநகரிடத்துதித்த பலவரங்களு முதயமானவனே !
பரசமயிகளான மதயானைத்திரளை வெல்லும் ஒருசிங்கமான திருப்பெரும்பூதூரடிகளாகிய வெதிராசனைத் திருவுளமகிழ்ந்
தினிதாகவாண்ட இரண்டென்னுஞ் சரணதாமரையால் அறிவில்லாத என்னையும் ஒருபொருளாகக் கருணை
புரிந் தடிமைகொண்டதற் கிந்தப் பெரியநிலத்து முற்காலத் தெனது ஏதுவாக நீ கைக்கொண்ட
கைம்மா றியாதென்று சொல்லுவாயாக வென்றவாறு.

இதனுள் ஒருபகலென்றது கணப்பொழுதை ; “ஒருபகலுள்ளே யுருப்பவிர்” என்பதனா லறிக.
ஒடியா வுழப்பு-ஒழிவில்லா முயற்சி. பாகன் பாகுடையென அன்விகுதி கெட்டது. பிணர் – சற்சரைவடிவு.
செம்மல் – பெரியோன். இன் உவமஉருபு. நசைஇய – விரும்பப்பட்டன. முழுநலம் – பேரானந்தம்.
தெற்றென – தெளிய. பிறழாது – மாறாடாது. ஒருங்கு – ஒக்க. ஒரு தலை – நிச்சயம்.
இருமை – இம்மை மறுமை. முற்குணம் – சாத்துவிககுணம். நாலாங்கடவுள் – இந்திரன். அமைத்த – விதித்த.
இறும்பூது – ஆச்சரியம். உளர்தல் – குடைதல். அவிழ்த்தல் – ஒழுக்குதல். நலம் – ஆனந்தம்.
நாற்பொருள் – அறம் பொருள் இன்பம் வீடு.
உறுபொருளைந்துடன் என்பது “மிக்க விறைநிலையு மெய்யா முயிர்நிலையுந், தக்க நெறியுந் தடையாகித் –
தொக்கியலு, மூழ்வினையும் வாழ்வினையும்” என்னும் பொருளைந்துடன் என்றவாறு.
பேராண்மை – அரியசெயல். பொருட்டு – ஏது. கைம்மாறு – உபகாரங்கொண்டு உபகாரஞ்செய்கை. எவன் – யாதென்றவாறு.

முந்நீர்வரைப்பி னிருபால்வியப்பா னிருவிசும்பொழுக்கத்து ஒரு தனித்திகிரிப் பதமிரண்டுமிலாப் பாகுடையூர்தியின்
முக்கட்செம்மலி னாலாங்கடவுள்வீற்றிருக்கு நற்றிசைவரு மிளங்கதிர், நமன்றிசையெழு திறனிறும்பூதென்ன,
விருபிறப்பாளனோரிடத்தெதிருபு முதலெனநாடிப் போற்றலுங் கனிவாயினைத்திறந் தருமறைப்பொருளா லெழு
கடற்புவனத் தெழுந்திறைவெளிவர வுறுபொருளைந்துட னுயர்தமிழ்மொழியா னால் வகைப்பனுவல்
மூவுலகமுமளந்தவனிருசெவிக் கமிர்தாமெனவினி தளித்த பேராண்மையி னுயிர்கடாம் பிறந்திறந்துழலும்
பிணிதவிர்த்தருள் ஞானபூரண! நாவீற! குருகாபுரிவரோதய! எதிராசனையாண்ட விருசரணாம்புயத்
தென்னையு மொன்றா யருள்புரிந்தாண்டதற் கென்பொருட்டாற் கைம்மா றெவனீ கைக்கொண்டதுவே எனக் கூட்டுக.

பஞ்சாயுதங்களெனப்பாற்கடலான்பற்றியவைக்
கெஞ்சாதசாதிப்பேரிட்டெழுத–நெஞ்சே
கணக்காயர்புள்ளியிட்டகாலத்தேயோகம்
பிணக்காதவர்பேர்பெறும். (804)
இது மாத்திரைச்சுருக்கம்.

திலகநுதலாய்திலங்குறியென்னேவ
லலகெண்பொருட்பதத்திற்காதி–நிலவெழுத்தின்
புள்ளிபிரித்தாற்பொருணிலைமைத்தாமென்பார்
தெள்ளியநூல்கற்றோர்தெளிந்து. (805)
இது மாத்திரைப்பெருக்கம்.

இவற்றுள் (முன்னையது) * மாத்திரைச்சுருக்கமென்பது,
ஒரு பொருள் பயந்து நிற்கு மொருசொல்லாயினும் பலபொருள்பயந்து நிற்குந் தொடர்ச்
சொல்லாயினு முதலெழுத் தொருமாத்திரைகுறையப் பிறிதொரு பொருள்பயப்பதாயும் பலபொருள்
பயப்பதாயும் பாடுவது. அவ்வாறு அதனுள் வந்ததாவது : ஆயுதங்களுக்குச் சாதிப்பேர் ஏதிகள்,
அவற்றை எதிகளெனப் புள்ளியிட்டு, மாத்திரைகுறைய இருடிகள் பெயராய் எதிகளென நின்றவாறு காண்க.

மாத்திரைப்பெருக்கமாவது
முன்புபோலவருஞ்சொற்களுள் முதலெழுத் தொருமாத்திரையேறப் பிறிது பொருள் பயப்பது.
அவ்வாறு இதனுள் வந்ததாவது :- எண்ணென்பது எள்ளும், இதனைக் கருதென்னும் ஏவற்பொருளும்,
கெணிதமும் என்னும் மூன்றுபொருள்பயக்கும் பதத்தின் முதலெழுத்தாய எகரத்தை
யொருமாத்திரை பெருக்க ஏண் என்ன நிலையுடைமைப்பொருளைக் காட்டினவாறு காண்க.

*உம்மையான் விதந்தோதிய மாத்திரைச்சுருக்க முதலிய ஆறுக்கும்
இந்நூன் மூலப்பிரதியொன்றின்மட்டும் மூலசூத்திரங்கள் காணப்படுகின்றன.
அவையாவன :-

“மாத்திரைசுருங்கமறுபொருளுணர்த்துரை
மாத்திரைச்சுருக்கமெனவகுத்தனரே” (49)

“மாத்திரைபெருகமறுபொருளுணர்த்துரை
மாத்திரைப்பெருக்கமெனவகுத்தனரே” (50)

“ஒற்றினைப்பிரிக்கமற்றொருபொருளுணர்த்து
லொற்றுப்பெயர்த்தலென்றுரையுணர்த்தும்” (51)

“மூன்றெழுத்தொருமொழிமுதலீறிடையீ
றான்றபொருள்பிறவாந்திரிபதாதி” (52)

“சதுரங்கவறையிற்சதிர்பெறவமைப்பது
சதுரங்கபெந்தமென்றறைதருந்தன்மைய” (53)

“பெருவகன்றறையிற்பெந்திப்பதுவுங்
கருதுகிற்கடகபெந்தமாகும்” (54)
என்பனவாம

முந்துதனித்தன்மைமொழியையொடுபுணர்ந்திட்
டந்தமுதல்புள்ளியழிந்தக்காற்–செந்தேன்
வழிந்தமகிழ்த்தார்மாறன்வண்புலவீர்சொல்லி
யொழிந்தவற்றின்பேராயுறும். (806)
இதுவும் மாத்திரைப்பெருக்கம்.

இதனுள், தனித்தன்மையென்பது யான், அதனை என் எனத் திரித்து, அதனை யிரண்டாவதனைப் புணர்த்து,
எனையென்றாக்கிப் புள்ளியை யழிக்க ஏனையெனச் சொல்லியொழிந்தனவாயபொருளைக் காட்டினவாறு காண்க.
திணை….. துறை…..

ஓராழிவையத்து தயம்புரிந்து தினம்
பேராவிருடுணிக்கும்பெற்றியா–ரீராறு
தேசுற்றநாமஞ்சிறந்தோர்பரிதியொடு
மாசற்றெழுமாதவர். (807)
இஃது ஒற்றுப்பெயர்த்தல்.

இதனுள், மாதவர் என்றுநின்றது மகரவொற்றைப் பெயர்க்க ஆதவர் என நின்றவாறு காண்க.
முதலே நின்றமொழியின் முதலெழுத்தி லொற்றைப் பெயர்த்தலால் ஒற்றுப்பெயர்த்தலாயிற்று.
இதனுள் ஓராழி வையம் – ஒப்பற்ற சமுத்திரஞ் சூழ்ந்த பூமி எனவும், ஒற்றைவண்டி பூண்ட தேர் எனவும்,
பேராவிருடுணித்தல் – தன்னைநினைந்த அடியாரிடத்து எடுத்தசெனனந் தோறும்விட்டுநீங்காத அகவிருளையறுத்தல் எனவும்,
உலகத்தைவிட்டுநீங்காத அந்தகாரத்தையோட்டுதல் எனவும், ஈராறுநாமம் – கேசவாதி துவாதசநாமம் எனவும்,
தாதுருமுதலிய துவாதசாதித்தியநாமமெனவும், பரிதியொடும்-சக்கரத்தோடும் எனவும் விளக்கத்தோடும் எனவும்,
மாசற்று ஆசற்று எனவும் சிலேடைவாய் பாட்டான் வந்தன. திணை…… துறை…….

முந்தமாயன்பதியாய்முற்றியபேர்மூன்றெழுத்தில்
வந்தமுதலீறிசையாய்மற்றிடையீ–றந்தச்
சுதரிசனத்தான்றுணைத்தாள்சூழ்சிலம்புள்ளீடாய்
வதரிவரிதரியாமாம். (808)
இது திரிபதாதி. இதனுள் வதரியென்பது திருப்பதி.
அதனை முதலு மீறும் வரியாக்கி இடையு மீறுந் தரியாக்கி அவ்வாறாதல் கண்டு கொள்க.

எந்தையிராமற்கிமையோர்சரண்புகுத
முந்தநகரிமுதலெழுத்தில்லாநகரி
யுந்துதிரட்கிள்ளையிடையொற்றிலாக்கிள்ளைகடேர்
சிந்தமுழுதுமிழந்தான்றெசமுகனே. (809)
இஃது அக்கரச்சுதகத்தி லோர்பேதம்.

மானவனாமேவலாமாறனித்தமாமாலை
யான்தவபோதனுமாயாய்ந்தகோ–மானவடி
நாதனின்மேனன்கலன்பூணென்முனநீவந்தெவனொன்
றாதயமாவன்புலமாய. (810)
இது சதுரங்கபெந்தம். இதனுள் நாலுபக்கமும் மையங்களினானான்கு பதினாறறையிலும்
நடுவி னாலறையிலும்மாதவன் என்னுந் திருநாமம் நின்றவாறு கண்டுகொள்க.

(இ-ள்) ஒன்றாத யமா – சருவான்மாக்களோடும் பொருந்தாத நமனே ! மானவனா – மனுகுலங்காவலனாக.
மேவலாமாறன் – நங்கை யார்க்குங் காரியார்க்கும் புத்திரமோகந்தீரப் புத்திரனாம் மாறனென்னும் பிள்ளைத்திருநாமத்தையுடையவன்.
நித்தமாமாலை – அழிவில்லாத பெரிய பிராட்டியாருடன்கூடிய பெரியோனை. ஆன – தன்னிடத் தாக்கம்பெற்ற.
தவபோதனுமா – மெய்த்தவத்தினொடுங்கூடி ஞானவானுமாகி. ஆய்ந்த கோ – அவனேபரத்துவமென்றுதெளிந்த தெரிசனராசன்.
மானவடி – பெருமையையுடைய திருவடிகளை நாதனின்மேல் – எனது நாவினிடத்தும் அதற்குமேலான சிரத்தினிடத்தும்.
நன்கலன்பூண் – நல்ல ஆபரணமாகப் பூண்ட. என்முனநீவந்தெவன் – என்முன்னேவந்து நீ சாதிப்ப தெதுதான்? ஒன்றுமில்லை.
வன்புலமாய – என்னிடம் நீவருதற் கெளிய இடமன்று, வலியஇடமாகப்பட்டன ;
ஆதலா லுனக்கு வரப்போகா தென்றறிந்துகொள் என்றவாறு. மேல்-இடம்பற்றிய ஆகுபெயர்.
திணை – வாகை. துறை – அறிவன்வாகை.

கோலநிலமேலழகுகூடுநெடுவீடுறமா
மூலமெனச்சென்றுதவுமுன்னோனே–நீலமணி
வண்ணாவடமலையாமாதவாகஞ்சமலர்க்
கண்ணாசரணாகதி. (811)
இது கடகபெந்தம். நெடுவீடு – பரமபதம். திணை – பாடாண். துறை – கடவுள்வணக்கம்.

நாகநகராகநிதிநாகரிகராகநிறை
யேகநகராகியிணையில்லா–தாகநிகழ்
தென்னரங்கனாளாயசீராளராஞான
நன்னரங்கர்க்கேயடியேனான். (812)
இதுவும் கடகபெந்தம்.
ஆக மாத்திரைச்சுருக்கமுதற் கடகபெந்த மீறாகச் சித்திரகவி யாறு மடைவே காண்க.
திணை -…… துறை – சமயவணக்கம்.

சித்திரகவி முற்றும்.

சொல்லணியியலுரை முற்றும்

——-

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே.

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாறன் அலங்காரம்–மூன்றாவது–சொல்லணியியலுரை—பகுதி-1-மடக்கு –ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–

April 30, 2022

ஸ்ரீ:–மூன்றாவது–சொல்லணியியலுரை

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

————

மடக்கு

252.குறித்துரையெழுத்தின்கூட்டமுதன்மொழி
மறித்துமோர்பொருடரமடக்குதன்மடக்கே.
என்பது சூத்திரம்.

இவ்வோத் தென்னபெயர்த்தோவெனின், சொல்லானாமணிகளினியல்புணர்த்திற்றாதலாற் சொல்லணியியலென்னும் பெயர்த்து.
அஃதாக, இச்சூத்திர மென்னுதலிற்றோவெனின், பொதுவகையான் மடக்கென்னுமலங்கார முணர்-ற்று.

(இ-ள்) புலவனா லொருபொருள்குறிக்கப்பட்டுச் செய்யுளினிடத்துத் தொடரெழுத்தாற்சொல்லப்பட்ட முதன்மொழி
வருமொழியுமாய்ப் பெயர்த்துமொருபொருடருவதாகமடக்குவதூஉம் மடக்கென்னும் அலங்காரமா மென்றவாறு.

உம்மையாற் றொடரெழுத்துமொழியன்றி ஓரெழுத்தே பெயர்த்து மடக்குவதும் மடக்கேயா மென்றவாறு.
புலவன், பொருள், செய்யுள், வருமொழியென்பன சொல்லெச்சம். எழுத்தின்கூட்டமெனவே இரண்டு முதலாகிய வெல்லாவெழுத்துமெனக் கொள்க

253.அதுவே,
தொடர்பிடைவிடாதுந்தொடர்பிடைவிட்டு
மடைவினிலிருமையுமமைவனவாகியு
நடைபெறுமுப்பாற்றெனநவின்றனரே.
(எ-ன்) அம் மடக்கினதுபாகுபாடுணர்-ற்று.

(இ-ள்) அச்சொல்லப்பட்டமடக்கு, தம்மிற்றாந்தொடருத லிடைவிடாது மிடைவிட்டு முறையே யிரண்டு தன்மையும்
பொருந்துவனவாகியு மொருசெய்யுளகத்து நடக்கு மூன்றுபகுதியையுடைத்தென்று முதனூலாசிரியர் கூறின ரென்றவாறு.

எனவே இது வழி நூலென்பதுந் தமக்கு மதுவேகருத்தென்பதுங் கூறினாரெனக் கொள்க.

254.ஒன்றாதியவாவொருநான்களவுஞ்
சென்றுநடைபெறுஞ்சீர்த்ததற்கடியே.
(எ-ன்) இதுவும் அதனையே வகுத்துணர்-ற்று.

(இ-ள்) அதற்கு (அம்மடக்கிற்கு) அடிவரையறை நான்கடிச் செய்யுளுள்ளே நடக்குங்கால் ஓரடிமுதலாக
வீரடிக்கண்ணு மூன்றடிக் கண்ணு நான்கடிக்கண்ணு முன்னர்க்கூறியபடியே சென்று நடக்கு மழகினையுடைத் தென்றவாறு.

ஒருநான்களவுமென்றதனால் நான்கடிச்செய்யுளென்ப தாற்றலாற் போந்தபொருள். ஒருநான்களவுமென்னு மும்மை
முற்றும்மையெனக் கொள்க. அவற்றிற்கெல்லாஞ் செய்யுண் மேற்காட்டுதும்.

255. முதலிடைகடையேமுதலொடிடைகடை
யிடையொடுகடைமுழுதெனவெழுவகைத்தே.
(எ-ன்) இதுவு மதனையே வகுத்துணர்–ற்று.

(இ-ள்) அம்மடக்கு முதன்மடக்கும், இடைமடக்கும், கடைமடக்கும், முதலொடிடைமடக்கும், முதலொடுகடைமடக்கும்,
இடையொடுகடைமடக்கும், முற்றுமடக்கும் என முறையே எழுவகைப்படு மென்றவாறு. அம்மடக்கென்பது அதிகாரம்பற்றி விரிந்தது.

256.அவற்றுள்,
அடிமுதன்மடக்கோரைம்மூன்றாகும். (5)

257.இடைகடையவுமதனெண்ணிலைபெறுமே. (6)

258.உணர்வுறின்மடக்கிவையோரிடத்தனவே.
(எ-ன்) இவைமூன்றுசூத்திரமு மடிதொறு மோரிடத்தா மடக்கினது தானமு மெண்ணும் வரையறுத்துணர்-ற்று.

(இ-ள்) அங்ஙனங்கூறப்பட்ட வெழுவகைத்தானத்தினுள்ளும், அடிமுதன்மடக்குப் பதினைந்தாம்
இடைமடக்குங் கடைமடக்கு மென்னப்பட்ட விரண்டு மொரோவொன்று முன்னர்க்கூறிய அடிமுதன் மடக்குப்போலப்
பதினைந்து பதினைந்தென்னு மெண்ணினதுவரையறை நிலைபெறுமென்றவாறு
ஆராயுமிடத் திவைநாற்பத்தைந்து மோரிடத்து மடக்கென்பனவா மென்றவாறு.

அவையாவன முதலடிமுதன்மடக்கு, இரண்டாமடி முதன்மடக்கு, மூன்றாமடி முதன்மடக்கு,
நாலாமடி முதன்மடக்கு இவைநாலு மோரடியோரிடத்து முதன்மடக்கு
இனி, முதலிரண்டடியுமுதன்மடக்கு, முதலடியுமூன்றாமடியு முதன்மடக்கு, முதலடியுநாலாமடியுமுதன்மடக்கு,
கடையிரண்டடியு முதன்மடக்கு, இடையிரண்டடியு முதன்மடக்கு, இரண்டாமடியுமீற்றடியுமுதன்மடக்கு இவையாறுமீரடிமுதன்மடக்கு,
ஈற்றடியொழித் தேனைமூன்றடியுமுதன்மடக்கு, முதலயலடியொழித் தேனைமூன்றடியுமுதன்மடக்கு,
ஈற்றயலடியொழித் தேனைமூன்றடியு முதன்மடக்கு முதலடி யொழித்தேனைமூன்றடியுட் முதன்மடக்கு
இவைநாலு மூன்றடிமுதன்மடக்குநாலடிமுதன்முற்று மடக்குஆக விவைபதினைந்தும் அடிமுதன்மடக்கு.
இனி, அடியிடை மடக்கும், அடியிறுதிமடக்குமிவ்வண்ணமே பதினைந்து பதினைந்தாம்.
இவை நாற்பத்தைந்திற்கு முதாரண முன்னர்க்காட்டுதும்.

259.அடிதொறுமீரிடத்தனவாய்முதலொ
டிடைகடையிடைகடைகளினியன்றனவுந்
திதமுறநான்கறுபானெனச்சிவணி
யதனொடுமடக்கொருநூற்றைந்தாகும்.
(எ-ன்) அடிதொறு மீரிடத்தனவாமடக்கிற்கும், மூவிடத்தனவா மடக்கிற்குந் தானமும் வரையறையு முணர்–ற்று.

(இ-ள்) செய்யுளினடிதொறும் ஆதியொடிடை, ஆதியொடுகடை, இடையொடுகடை யென்றுசொல்லப்பட்ட
தானங்களி னீரிடத்தனவாய் நடந்தனவும், முத லிடை கடையென மூன்றிடத்து மடக்குவனவுமான
நாலுதானத்திலு முண்மையாக வறுபதென்று கூறும்படிக்குப் பொருந்தி முன்னர்க்கூறப்பட்ட வோரிடத்துமடக்கு
நாற்பத்தைந்தொடு மடக்கு நூற்றைந்தா மென்றவாறு.

இச்சூத்திரத்துண் முதலேவந்த முதலொடென்பதனை முதனிலைத் தீபகமாக்கி யிடைகடையென்னு மிரண்டினு மேற்றுக.

260.அவற்றுள்,
முதற்றொடைவிகற்பமேழொடுநான்கொடுந்
திதப்படவோரடியொழிந்தனசிவணும்.

(எ-ன்) இதுவு மத்தானங்களைத் தொடைவிகற்பங்களாற் கூறுபடுத்தி விரித்துணர்–ற்று.

(இ-ள்) அவற்றுள், (அங்ஙனங்கூறப்பட்ட வோரிடத்தனவு மீரிடத்தனவு மூவிடத்தனவுமாக மடக்குமவற்றுள்)
அடியொடு பொருந்தின முதற்றொடை விகற்பமென்னு மிணைமுதலாகிய வேழொடுங் கடையிணை, யிடையிணை,
முதற்கூழை, இரண்டாஞ்சீர் நான்காஞ்சீரொடு புணர்ந்த பின் னென்னு நான்கொடுங்கூடிப் பதினொரு
தொடைவிகற்பங்களொடுந் தெளிவுபெற வோரடியொழிந்தமடக்குகள் வருதலைப்பொருந்து மென்றவாறு.

261.இடைவிடாமடக்கிவையெனமொழிப.
(எ-ன்) இது தொடர்பிடைவிடாதுமென்றசூத்திரத்தினுள் மூன்று பாகுபடு மடக் கென்றவற்றுள், முதலேகூறியபாகுபா டுணர்-ற்று.

(இ-ள்) இங்ஙனங்கூறப்பட்ட நூற்றைந்துமே யிடைவிடாமடக் கென்றுகூறுவர் புலவரென்றவாறு.

இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு

மதியார்மதியார்வனைவேணியினான்
விதியாலிரந்ததனைமீட்ட–முதியானை
மாதவனையல்லான்மதிப்பரோபேரின்பத்
தாதரவுபூண்டவுளத்தால். (624)
இது முதலடி முதன்மடக்கு.

(இ-ள்) அறிவுடையோர், பிறையையும் ஆத்தித்தாரையுஞ்சூடின சடையையுடையான் பிரமசிரத்தையறுத்தகாரணத்தாற்
பிரமசிரத்தி லிரந்ததனைப்போக்கின முதன்மையுடையோனைப் பெரியபிராட்டிகொழுநனை யுள்ளத்தாற்றியானிப்பதன்றிப்
பரமபதத் தின்பத்தின்மே லாசை பற்றினவுள்ளத்தால் வேறொருகடவுளைத் தியானிப்பதில்லை யென்றவாறு.

வேறொருகடவுளரையென்பது சொல்லெச்சம். ஓகாரம் – எதிர்மறை. இதற்குப் புலவிர்காளென்னு
முன்னிலையெழுவாய் தோன்றாது நின்றதாக விரித்துரைக்க. மதிப்பரே யெனினுமாம். அதற்கு ஏகார மெதிர்மறை.
திணை – பாடாண். துறை – செவியறிவுறூஉகடவுள்வாழ்த்துமாம்.

அமுதமடப்பாவையாடகப்போதல்கக்
குமுதங்குமுதங்கொளுந்தீத்–தமியராய்த்
தாழ்ந்தார்தமையன்றித்தண்ணளிமால் *கள்வனிற்பொய்
சூழ்ந்தார்தமைவருத்தாதோ. (625)
இஃ திரண்டாமடி முதன்மடக்கு.

(இ-ள்) அமுதமடப்பாவை – திருமகள். ஆடகப்போது – பொற்றாமரை. அல்கல் – குவிதல்வறுமையெய்தலெனினுமாம்.
குமுதம் – ஆம்பல். குமுதங்கொளுந்தீ – மகிழ்ச்சியெய்துந்தீ. தீ – சந்திரன், தன்னைச் சுடுதலாற் றீயென்றாள்.
தமியராய்த்தாழ்ந்தார் – புமான்களை நீங்கி மெலிந்தார். பொய்சூழ்ந்தார் – பொய்சொல்லவு நினைந்தார்.
தமை வருத்தாதோ – அவர்தமை வருத்தாதோ வருத்திற்றாகில் நமது தலைவரும் வருவர். வாராமையால் வருத்தாதொழிந்த தென்றவாறு.

பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – நிலவுகண்டழுங்கல். இதற்குந் தோழீயென்பதனைத் தோன்றாதுநின்றதாக விரிக்க. ஓகாரம் வினா.

சிட்டர்பரவுந்திருமால்செழும்பொழில்சூ
1ழட்டபுயகரத்துளாயிழையார்க்–கிட்டிடைதான்
சித்திரமோசித்திரமோதெவ்வர்முரண்முருக்கு
மத்திரமோகண்ணென்பவை. (626)
இது மூன்றாமடிமுதன்மடக்கு.- இது அட்டபுயங்கமெனப்படும்.

(இ-ள்) சிட்டர் – தொண்டர். அட்டபுயகரம் – திருப்பதி. இட்டிடை – சிறியவிடை.
சித்திரமோ என்னுமிரண்டனுள், ஒன்று வெளிஒன்று பொய். பகுதி – இயற்கை. துறை – தகையணங்குறுத்தல்.

நன்காரிமாறனெனுநாவீறன்வண்குருகூர்
மன்கார்வரைமயிற்குமன்னவா–மென்கோங்
கரும்பாங்கரும்பாங்களபமுலையின்சொற்
சுரும்பாநயனத்துணை. (627)
* கள்வன் – திருக்கள்வனூர்.
இதுவுமது. பகுதி – பாங்கற்கூட்டம். துறை- பாங்கன் செவ்வி செப்பல்.

தெண்டிரைப்பார்போற்றுந்திருவெள்ளியங்குடியார்
தண்டுளபமார்பந்தழுவாநாள்–வண்டுளர்பூந்
தேனிலாய்நீண்டகுழற்சேயிழைதன்னாருயிரும்
வானிலாவானிலாவாம். (628)
இது நாலாமடிமுதன்மடக்கு.

(இ-ள்) வண்டுளர் – வண்டுகுடையும். பூந்தேனிலாய்நீண்டகுழல் – பூவிற்றே னிலைபெற்று நீண்ட குழல்.
சேயிழைதன்னாருயிரும் – சிவந்த பூணினையுடையாள்கேடில்லாவுயிரும்.
வானிலாவானிலாவாம் – விசும்பின் கண்ணுதிக்குமதியா லுடம்பின்கண் நில்லாததன்மையையுடைத்தா மென்றவாறு.

உயிரும் வானிலாவா னிலாவாம் என்பது நீருந் தன்பாலிருந்தன என்பதுபோல ஒருமையிற்பன்மை மயக்கம்.
திணை – பெருந்திணை. துறை – கண்டுகைசோர்தல். இவை நான்கும் ஓரடி முதன்மடக்கு.

நிலமனிலமன்னெடுவெளிதீநீரா
யலமனலமன்னமலன்–புலனைந்தும்
வென்றார்தொழுமால்விளங்குதிருவிண்ணகர
மென்றார்க்குமுண்டோவிடர். (629)
இது முதலிரண்டடியும் முதன்மடக்கு.

(இ-ள்) நிலமனிலமன்னெடுவெளிதீநீராய்-நிலமும் வாயுவும் நிலைபெற்ற பெரிய ஆகாயமுந் தீயு நீருமாகி.
அலமனலமன்னமலன் – நிறைவு பொருந்தின ஆனந்தமாக்கம்பெற்ற அழுக்கற்றவ னென்றவாறு.
திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்துநகரவாழ்த்துமாம்.

மாதவனின்மாதவனின்வன்றாட்டுகளணவு
போதவண்மெய்ச்சாபமதைப்போக்கினளப்–பாதமலர்ப்
பொற்போதிப்பொற்போதிப்பூதலத்திட்டஞ்சலிப்பா
ரிற்போதமிக்கவர்யார்யார். (630)
இது முதலடியும் மூன்றாமடியும் முதன்மடக்கு.

(இ-ள்) மாதவனில் – கௌதமபாரியையாகிய அகலிகை. மாதவனின் – திருமகள்காந்தனேநினது. வன்றாள்…
போக்கினள் – வலியதாளிற்பூழியைப் பரிசித்தகாலத்தக் கௌதமனாற் றனதுமேனிக் கெய்திய கற்படிவத்தைப்போக்கின ளாகையால்.
அப்பாதமலர்…………… பூதலத்திட்டு – அந்தத் திருவடித்தாமரைசெய்தபொலிவையேத்திப் பொன்போலுநிறத்தை
யுடையபூக்களை யிப்பூமியிலிருந் தத்திருவடிகளிற் சாத்தி.
அஞ்சலிப்பாரிற் போதமிக்கவர்யார்யார் – தியானித்து வணங்குவாரினும் ஞானமிகுந்தவரில்லை யென்றவாறு.

இன் – நீக்கம். அடுக்கு, துணிவின்கண்வந்தது.
மாதவனில் “மென்மைவரினேளலணனவா” மென்பதனால் லகாரந்திரிந்து னகார மாயிற்று.
மாதவன் – படர்க்கைமுன்னிலையாகிய இடமயக்கத்துவந்த அண்மைவிளி. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

மறுகுமறுகுமலைவார்சடையான்விற்போன்
றிறுகுமுலைமேற்பசலையேறு–முறுதேந்
தெகிழ்மலர்ப்பாணத்தான்செருக்கடந்தமாறன்
மகிழ்மகிழ்த்தார்வேட்டாண்மனம். (631)
இது முதலடியும் நாலாமடியும் முதன்மடக்கு.

(இ-ள்) உறுதேம் – பரிமளமிகுந்ததேன். தெகிழ்மலர்…………. மாறன் – வழியாநின்ற பூவாளிகளையுடையானாகிய
காமனதுபோரை வென்ற காரிமாறப்பிரான்.
மகிழ்……….. மனம் – சூடுதற்குவிரும்பின வகுளமாலிகையை விரும்பின விவளுடையமனமானது.
மறுகு……….. யேறும் – ஊசலாடாநிற்கும்அதுவுமன்றி, அறுகினைப்புனைந்த நீண்ட சடையான்வில்லாகிய விமவானைப்
போலத் திண்ணிதாயமுலைமேற் பசலையும் பரவாநிற்கும்ஆதலா லெங்ஙன முயிர்வாழும், யாதோசெய லென்றவாறு.
திணை – பெருந்திணை. துறை – கண்டுகைசோர்தல்.

ஆயிரம்பெற்றானொருமூன்றைந்துற்றானாதியர்க்கு
மேயமுதல்வனெனுமெய்வேதம்–பாய்திரைப்பா
லாழியானாழியானஞ்சிறைப்புட்பாகனெனுங்
கோழியான்கோழியான்கோ. (632)
இது கடையிரண்டடியும் முதன்மடக்கு.

(இ-ள்) உண்மைவேதமானது, பரந்த திரையோடுங்கூடிய பாற்கடலையுஞ் சக்கிராயுதத்தையுமுடையனாகி யழகிய
சிறையையுடைய புட்பாகனெனுந் திருவுறையூர்மாதவனைக் கோழிக்கொடியானையும், கண்ணாயிரம் பெற்றானையும்,
ஒருமூன்றுபெற்றானையும், மூன்றுமைந்தும் பெற்றானையுமாதியாகவுடையார்க்கெல்லா மந்தர்யாமியாக வுள்ளே
பொருந்திய முதல்வனென்றுகூறாநிற்கு மென்றவாறு.

மெய்வேதங்கூறுமெனக் கூட்டுக. கோ – கண். கண்ணென்பதனை யாயிரமென்பது முதலாயவற்றிற்கு முதனிலைத் தீபகமாக்கியும்,
மூன்றென்பதனை மூன்று, மூன்றுமைந்து மென்னு மிரண்டிற்கு முதனிலைத் தீபகமாக்கியும்,
மூன்று மைந்துமென வும்மை தொக்கதாக விரித்தும் உரைக்க. கோழி – உறையூர். திணை – பாடாண். துறை – கடவுள் வாழ்த்து.

சலராசிமண்மேற்றவறிழையாஞான
மிலராயிலராயினுமா–மலரா
னனத்தானனத்தானருட்குருகூர்மாற
னெனத்தானணுகாதிடர். (633)
இஃ திடையிரண்டடியும் முதன்மடக்கு.

(இ-ள்) தவறிழையாஞானம் – தீங்கினைப்பயவா வுண்மைஞானம்.
இலராயிலராயினுமா மென்பது – ஞானமில்லாதவரா யில்லின்கண்வாழ் வாரேயாயினுமாக வென்றவாறு.
உம்மை – இழிவுசிறப்பும்மை.
மலரானனத்தானனத்தா னென்பது – தாமரைமலர்போன்ற திருமுகமண்ட லத்தையுடையான் அன்னவாகனத்தையுடையா னென்றவாறு.
அருட் குருகூர்மாறனெனத்தானணுகாதிடர் என்பது அருளொடுகூடிய திருக்குருகூர்க் காரிமாறப்பிரானென் றொருக்காற்கூறின
வரிடத்துத் துன்பமென்பது சிறிதுமணுகா தென்றவாறு. எனவே யணுகுவது பேரின்ப மென்பது பயன். துறை – இதுவுமது.

மாசரதந்தன்னைவழுத்தலெனுமன்பெனக்குத்
தாசரதிதாசரதிதன்னாமந்–தேசுபெறப்
பாடார்நினைந்திடார்பல்காலிவர்க்கெளிதோ
வீடாதவீடாதன்மேல். (634)
இஃ திரண்டாமடியும் நான்காமடியும் முதன்மடக்கு.

(இ-ள்) மாசரதந்தன்னை………. தாசரதி – பரதெய்வங்களைத் துதியாது தன்னைத்துதிப்பதே ஆன்மலாபமாகிய
பெரிய சதிர்ப்பாடென்றறிந்து தன்னிடத் தன்புறுதலைப் பேதையேனாகிய எனக்குந் தரப்பட்ட சதிர்ப்பாட்டையுடையவன்.
சாசரதிதன்னாமம் – தசரதன் பிள்ளையினது திருநாமமாகிய ராம வென்பதனை தேசுபெற……….
பல்கால் – நாவும் மனதும் விளக்கமெய்தப் பலகாலுஞ்சொல்லார், சிந்திப்பதுஞ்செய்யார்.
இவர்க்கெளிதோ வீடாதவீடாதன்மேல் – இவ்வறியாமையுடைய வித்தன்மையோர்க்குச் சரீரம்விட்டகாலத் தழிவில்லாத
பரமபதத்தின்கட் சென்று பேரின்பமெய்துத லெளியதொன்றாகா தென்றவாறு.

உம்மை இழிவுசிறப்பு. ஓகார மெதிர்மறை. துறை – இதுவுமது. இவையாறு மீரடிமுதன்மடக்கு. இனி மூவடி முதன்மடக்கு வருமாறு

வேலைவேலைக்கடுவைவென்றவிழிநீர்ததும்பு
மாலைமாலைப்பணிவார்வண்குருகூர்ச்–சோலைக்
கயலேகயலேகவர்குருகேநீக்க
முயலேமென்றார்க்கேமொழி. (635)
இஃ தீற்றடியொழிந் தேனைமூன்றடியும் முதன்மடக்கு.

(இ-ள்) வேலினை, கடலுட்பிறந்த நஞ்சினை வென்றதாமென்று அவர் பாராட்டின விழிகளானவை துன்பநீர்துளிக்கும் மயக்கத்தினை,
திருமாலடிகளைவணங்குவார் வளவிய குருகாபுரியின்கட் சோலைப்பக்கத்து நீரின்கட் கயலைப்பருகாநின்றகுருகேநின்னைவிட்டுநீங்குதல்
உள்ளத்தாலும் முயலுதல்செய்யேமென்று வஞ்சமொழிகூறிப் பிரிந்தவருடன் கூறுவாயாக வென்றவாறு.
பகுதி – ஒருவழித்தணத்தல். துறை – பறவையோடு பரிவுற்றுரைத்தல்.

போதகமுன்போதகமுன்புட்பாகன்பூங்கமல
மாதகலாதெய்துமணிமார்பன்–சீத
மலர்மலர்நீர்ப்பொன்னிமதிளரங்கன்பேர்கற்
கலர்கலருள்வன்பாதகர். (636)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் முதன்மடக்கு.

(இ-ள்) போதகமுன்பு – கசேந்திரன்முற்காலத்து. ஓதகமுன் – மூலமேயென்றுகூறப்பட்டவாவியினிடத்தெதிர்ப்பட்ட.
புட்பாகன் – கலுழவாகனன். பூங்கமல……………….. மணிமார்பன் – பொலிவினையுடைய குளம்பினொடுங்கூடிய
ஆவினது கூட்டத்தைவளர்ப்பான், திருமூழிக்கள மென்னுந் திருப்பதியையுமுடையான் றீயமக்களுக் கொளிக்குங்
கள்ளத்தையுடையனா மென்றவாறு. எனவே, நன்மக்களை வெளிவந்து காப்பானென்பது பயன். துறை – கடவுள்வாழ்த்து.

பணியும்பணியும்பனிமாமதியா
மணியுமணியுமரற்கும்–பிணிசெய்
தலைதலைதீர்த்தான்சரணமல்லாதேதம்ப
மிலையிலைத்தாரீந்துபுலவீர் (639)
இது நாலடியும் முதன்முற்றுமடக்கு.

(இ-ள்) புலவிர்காள் ! பாம்பையுங் குளிர்ந்த பெரியமதியாய் மேலாக்கஞ்செய்யு மாலையையுஞ் சடைமேற்புனைந்த
சிவனாகிய பெரியோனுக்குந் துன்பத்தைச்செய் தறிவைநடுங்குவித்த பிரமசிரமானதைக் கையைவிட்டு நீங்குவித்தானாகிய
ஸ்ரீமந் நாராயணன்றிருவடிகளல்லாதே, அந்தியகாலத் தறிவுநிலைகலங்கிச்சாய்ந்து பிறவியாகியகுழியிலே
நீர் விழும்பொழுது வீழாதே நும்மைத் தாங்குந்தூண் வேறில்லையாதலா லவன்றிருவடிகளிற்
றுளபமாலிகையைச்சூட்டி வணங்குவீராக வென்றவாறு.

அரற்கு மென்னு மும்மை சிறப்பும்மை. இலைத்தார் – இலைமாலை யாதலால், துளவமாலிகையென்றாயிற்று.
புலவீர் பணியு மெனக்கூட்டுக. திணை – பாடாண். துறை – ஓம்படை ; கடவுள்வாழ்த்துமாம்.
இவை பதினைந்தும் அடிமுதன்மடக்கு.

இனி இடைமடக்கு வருமாறு :-

கயிலாயம்பொன்னுலகம்புரந்தரனும்புரந்தரனுங்
களிக்கமேனா
ளெயிலார்தென்னிலங்கையர்கோன்பஃறலைக்கோர்கணைவழங்கு
மிந்தளூரான்
மயிலாய்மைவரையணங்கேநினதுயிராமேவல்புரி
மயிலைக்காவல்
பயிலாயத்தெழுந்தருளித்துணைவிழியாலுணர்த்தியருள்
பாரிப்பாயே. (640)
இது முதலடியிடைமடக்கு.

(இ-ள்) கயிலாயம் பொன்னுலகம் புரந்தரனும் புரந்தரனுங் களிக்க என்பது வெள்ளிமலையையுந் துறக்கத்தையுந் தமதாகப்புரந்து அரனும்
புரந்தரனுங் களிப்பெய்த என்பதாம். எயிலார்………. கோன் – கோட்டையாற் பெருத்த தெற்கின் கண்ணுண்டாய
விலங்கையிலுள்ளார்க்கு அரசனாகிய விராவணன்.
பஃறலைக்கோர்……. ளூரான். பல தலைகளும் அறும்படிக் கொருவாளிதொட்ட திருவிந்தளூரான்.
மயிலாய்………. பாரிப்பாயே – மயில்களாடப்பட்ட மேகந்தவழும் மலையிலுறையுந் தெய்வமனையாய் !
நினதுயிர்போன்றவளாய் நினதேவல்விரும்புமவளாம் மயில்போலுஞ்சாயலை யுடையாளை நின்னைக்காப்பவரா யிடைவிடாத
ஆயவெள்ளத்தார் கூட்டத்தடைந்து திருக்கண்பார்வையாற் குறிப்பினுணர்த்திக் கருணையை விரிப்பாயாக வென்றவாறு.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – தோழியைக் காட்டென்றல்.

புண்டரிகப்பொகுட்டணங்கேமும்மதமாவிருமருப்பிற்
புழைக்கைநீட்டி
யொண்டிறலானொருவனைநம்மகிழ்மாறன்மகிழ்மாற
னுறந்தையோங்கற்
கொண்டலுணின்றிருபிறைநள்ளிடைவருபாம்பெனவளைத்துக்
கொண்டகாலை
மண்டமர்க்கூற்றுவன்கணிச்சியெனத்தடிந்தததனையவன்
வாகைவேலே. (641)
இஃ திரண்டாமடியிடைமடக்கு.

இதனுள், மகிழ்மாறன்மகிழ்மாறனுறந்தையோங்கல் என்பது வகுளமாலிகையையுடைய காரிமாறப்பிரான் மகிழ்ந்து
போற்றும் மாயோன்றனது திருவுறையூர்வரையிடத்தென்பதாம். ஒழிந்தனவுரையிற் கொள்க. பகுதி – நடுங்கநாட்டம். துறையு மது.

பாரெழுதும்படிக்கெழுதாமறைமொழியைத்தமிழ்மொழியாய்ப்
பகர்ந்தமாற
னீரெழுதெண்டிரைப்பொருநைத்திருநாடன்வரையணங்கி
னீர்மைகுன்றாச்
சீரெழுதியெனையெழுதிக்களபமுலைக்களபமுலைத்
தேமென்கோதை
யூரெழுதிப்பேரெழுதிக்கிழிகொடுசீறூர்மறுகே
யுலாவுவேனே. (642)
இது மூன்றாமடியிடைமடக்கு.
இதனுள், களபமுலைக்களபமுலைத்தேமென்கோதை என்பது மான் மதக்குழம்பையுடைய முலையாகிய யானையையும்,
முல்லைமாலிகையினது தேனொடுங்கூடிய குழலையுமுடையா ளென்றவாறு. பார் என்பது உலகின் கண்ணுயர்ந்தோ ரென்றவாறு.
நீர்மைகுன்றாச் சீரெழுதியென்பது பெண்ணினதிலக்கணங்குன்றாத அவயவ அவயவிகளின்பொலிவினை யெழுதி யென்றவாறு.
பகுதி – சேட்படை. துறை – மடலேறும்வகை யுரைத்தல்.

மறைபடுசொற்பொருளினைத்தெற்றெனத்தமிழ்செய்நாவீறன்
மழைதோய்செவ்வி
யுறைபடுதெள்ளறலருவித்துடரிவரையரமகளிர்க்
குவமையாவீர்
நறைபடுசந்தனப்பொழில்சூழ்புனத்திடைவந்தடைந்ததெனி
னவில்வீரொன்னார்
கறைபடுவன்பகழியொடுமன்னாகமன்னாகங்
கதிகற்றாங்கே. (643)
இது நான்காமடியிடைமடக்கு.

(இ-ள்) மறையிடத்துண்டானசொல்லின்கண் மறைந்தபொருளினைத் தெளியும்படிக்குத் தமிழ்மொழியாகச்செய்த நாவீறரது
மேகம் படிந்த பருவத்துப்பெய்யுந் துளிகளாலுண்டான தெளிந்தநீராய்வரு மருவியையுடைய துடரிவரையில்
அரமகளிர்க் குவமையாகப்பட்ட மங்கைமீர் ! முகையவிழ்ந்தபூவிற்றேன் றுளித் தாரவாரிக்குஞ் சந்தனப் பொழில்சூழ்ந்த
நுமதுபுனத்தின்கண் சத்துருக்களைக் கொலைசெய் துண்டான குருதியின்முழுகிய பகழிதைத்ததொடும்
ஒரு அரசுவா ஆக்கம்பெற்ற மலை நடைகற்றதுபோல வந்தடைந்த துண்டெனிற் கூறுவீராக வென்றவாறு.

உவமையாவீரென்றதனாலவர்கள் காந்தியை யுயர்த்திக்கூறினானாம். ஆங்கு என்ற துவமவுருபு. கதி – நடை.
பகுதி – மதியுடன்படுத்தல். துறை – வேழம்வினாதல். இவைநாலு மோரடியிடைமடக்கு.

இனி யீரடியிடைமடக்கு வருமாறு :-

அந்தரத்தாரருவியுவாவடமலைமன்வடமலைமன்
னந்தண்சாரற்
சந்தனப்பூந்துணர்மலிந்தவண்டழையவண்டழைய
தனைக்கொண்டுற்றேன்
சிந்துரவாணுதற்களபப்புளகமுலைத்துவரிதழ்வாய்ச்
செவ்வேலுண்கட்
கொந்தவிழ்பூங்குழலீர்கைக்கொள்வீர்மாரனையடிமை
கொள்வீர்மாதோ. (644)
இது முதலிரண்டடியும் இடைமடக்கு.

இதனுள், அந்தரத்தாரருவியுவாவடமலைமன்வடமலைமன் னந்தண் சாரலென்பது-விசும்பின் உச்சியினின்றுமிழிந் தாரவாரிக்கு நீரருவியும்,
யானைத்திரளும் ஆலமரத்தினையலைக்கும் நிலைபெற்ற வடவேங்கட மென்னும் மலைக்கு மன்னன்,
அவனதாம் அழகிய குளிர்ந்த மலைப்பக்கத் தின்கண் ணென்றவாறு.
பூந்துணர்மலிந்த வண்டழைய வண்டழை யதனைக்கொண்டுற்றே னென்பது – பூங்கொத்துக்கள் பரிமளத்தினாற் கூட்டமான
வண்டுகளைத் தன்னிடத்தழைக்கப்பட்ட அழகியவளப் பத்தையுடைய சந்தனத்தழையதனைக் கையுறையாகக் கைக்கொண்டு
நும்மிடத்துவந்தே னென்றவாறு. ஒழிந்தனவும் உரையிற்கொள்க. பகுதி – இதுவுமது. துறை – கருத்தறிவித்தல்.

கதியேபற்றுனர்ஞானக்கண்ணகலாக்கண்ணகலா
காயங்காண்பா
னதியேமுற்றியவரங்கத்திடைதுயிலும்புயல்வரைமே
னயந்துவாழ்நும்
பதியேதிங்குரைத்திடுமென்றனனறையீர்நறையீர்மென்
பதுமைபோல்வீர்
மதியேதிங்கினியெனவுந்தெளிகிலனேகுதற்குமொரு
வழிசொல்வீரே. (645)
இது முதலடியும் மூன்றாமடியும் இடைமடக்கு.

(இ-ள்) பேரின்பத்தையுட்கொண்டா ருள்ளக்கண்ணைவிட்டு நீங்காத இடமகன்ற பரமாகாயத்தைச் சென்றுகாணவேண்டித்
திருக்காவிரியாகிய விரண்டாறுசூழ்ந்த அரங்கத்தினடுவே கண்வளருங் காளமேகம்போன்ற திருமேனியையுடைய
அரங்கநாதன்வரையினிடத்து விருப்பத்துடன் வாழுந்தேனோடுங்கூடிய குளிர்ந்ததாமரையாளையொப்பீர் !
இவ்விடத்து நும்முடையபதி யேதென்று கூறுகவென்றனன் கூறுகின்றிலீர்,
இனிமேன் மதி யாதென்றுந் துணிகிலன் ; மீண்டுபோவதற்கொருவழியுங் காண்கின்றில னென்றவாறு
னறையீர்நறையீரென்பதனைப் பாடமாற்றி ஒற்றைப் பெயர்த்து அறையீரெனக்கூட்டுக.
இதனுள், கதியேபற்றினர்ஞானக்கண்ணகலாக் கண்ணகலாகாயமென்பனமுதலாக அரங்கத்திடைதுயிலும்
புயல்வரைமே னயந்து வாழ்நும் பதியேதிங்குரைத்திடுமென்றனனறையீ ரென்பன வீறாக நோக்கென்னும் யாப்புக்காலெனக்கொள்க ;
என்னை “மாத்திரை முதலாவடிநிலைகாறு, நோக்குதற்காரணநோக்கெனப்படுமே” என்றாராகலின்.
அஃதே லிதனுள் நோக்கிக்கொள்ளக்கிடந்தமை யாதோவெனின், பேரின்பத்தைவிரும்பினார் ஞானக்கண்ணை விட்டு
நீங்காத பரமாகாயத்தை யவர்சென்று காணவேண்டிப் பரமகிருபையால் வெளிவந் தரங்கத்திடைக் கண்வளரும்
அவன்வரையிடத்து விருப்பத்துடன்வாழுந் தாமரை யாளைப்போல்வீரென்றதனால், அவன்வரையிலிருந்தும் யான்விரும்பிய
நுமது சீறூரை யெனக் குரைக்கின்றிலீ ரென்னதறுகண்மையோ என்பது நோக்கிக்கொள்ளக்கிடந்தமையா னெனக்கொள்க.
ஏகாரமிரண்டனுள், முன்னையது பிரிநிலை. ஏனைய தீற்றசை. ஒழிந்தனவு முரையிற் கொள்க. பகுதி – இதுவுமது. துறை – பதிவினாதல்.

வயற்கழுநீர்க்கழிகவின்மாண்கொழுநனையேகொழுநனையே
மகிழ்நன்மாதர்
கயற்கருங்கண்ணெனமலராமுனங்களைகட்டெறிதிருக்காட்
கரைமால்வெற்பிற்
செயற்கரியதிருவுருவாலுயிர்கொல்லிப்பாவையராய்ச்
சிறந்தீருங்க
ளியற்பெயர்யாதெனவினவியதைமொழியுமொழியுமிகழ்
வதனைமன்னோ. (646)
இது முதலடியும் ஈற்றடியும் இடைமடக்கு.

இதனுள், கழுநீர்க்கழிகவின்மாண்கொழுநனையே கொழுநனையே மகிழ் நன்மாதர் என்பது செங்கழுநீரினது
மிக்க அழகினையுடைய மாட்சிமைப்பட்ட கொழுவியபூமுகையைத் தங்கள்புமான்களை விரும்பு நல்ல கடைசிய ரென்றவாறு.
கொழுநனையேயென்பது தேற்றேகாரம் ; பிரிநிலையுமாம்.
கொழுநனையேவிரும்பும்மாதர் கொழுவியநனை மலராமுன்னங் களைகட்டெறியென்றது இறைச்சி. என்னை?
முகையாய்நிற்பதன் மலர்ந்தா லிவை யெமது கண்ணுக் குவமையா யெமது கொழுநற்கு விருப்பத்தைக்
கொடுக்குமென்னு மாற்சரியத்தாற் களைகட்டெறிந்தா ரென்னுங் குறிப்புப் பொருட்புறத்ததாய்நிற்றலானெனக்கொள்க.
அதன்றெனில். கண்ணெனமலராமுன்னங் களைகட்டெறிந்தாரென்பது பயனில்கூற்றாம்.
சிறப்புப்பெயர் கொல்லிப்பாவையென்பது செய்தற்கரிய வுமது அழகிய வடிவினாலறிந்தேம். அறியாத இயற்பெயரை மொழியும் ;
எம்மையிகழ் வதனை யொழிவீராக வென்றவாறு. செயற்கரியதிருவுரு – எழுதுதற் கரியதிருவுரு.
பகுதி – இதுவுமது. துறை – பெயர்வினாதல்.

பூந்துளபம்புனைதிருமால்பொன்னியினுட்பொறியரவிற்
புயல்போல்வண்ணந்
தோய்ந்து துயில்பயிலரங்கேசனைத்தொழுமாறன்றுடரித்
தோகைபோல்வீர்
வாய்ந்தவனப்பல்குலுக்குத்தனக்குவடுதனக்குவடு
வகிராமுங்க
ளேந்தெழிற்கட்புலங்கொளநின்றிடையேதங்கிடையேதங்
கியம்புவீரே. (647)
இது கடையிரண்டடியும் இடைமடக்கு.

(இ-ள்) வாய்ந்தவனப்பல்குலுக்குத் தனக்குவடுதனக்குவடு வகிராமுங்கள் என்பது வனப்புவாய்ந்தவெனப் பாடமாற்றி
அழகுவாய்ந்த அல்குலுக்குந் தனமாகிய மலைதனக்கும் வடுவகிர் நிகராகியவுங்கள் என்றவாறு.
ஏந்தெழிற்கட்புலங்கொள என்பது உயர்ந்த அழகினையுடைய கட்புலனாக என்றவாறு.
இடையேதங்கிடையேதங்கியம்புவீரே என்பது இரண்டிற்குநடுவே குடியிருக்கும் மருங்கான தெது தானவ்விடத்தென்று
வினவுவேற் கிதுவென்று சொல்லுவீராக வென்றவாறு.
எனவே, எனது கண்ணிற்குப் புலப்படுவதின்றென்பது போந்தபொருள். பகுதி – இதுவுமது. துறை – இடைவினாதல்.

உரையார்ந்ததொகைப்பனுவன்முழுதுணர்ந்துமுலகியலொன்
றுணராதார்போல்
வரையாதுமறைபுரிகோமானினைவுமானினைவு
மனத்துணாடி
விரையார்நன்பசுந்துளபத்திருமாலைத்திருமாலை
வில்லிபுத்தூர்த்
திரையாடைப்புவிமகடன்கோமானைவணங்கலரிற்
றிகைக்கின்றேனே. (648)
இஃ திடையிரண்டடியு மிடைமடக்கு.

இதனுள், கோமானினைவுமானினைவுமனத்துணாடி என்பது தலைவனே ! உனதுள்ளத்துநினைவும், எனது மான் போலும்
விழியினை யுடையாண்மனத்துணினைவும் எனதுமனத்துட்குறித்து என்றவாறு.
துளபத்திருமாலைத்திருமாலை வணங்கலரிற் றிகை்கின்றேனே என்பது துளபமாகிய அழகியமாலையையுடைய
திருமகளோடுங்கூடிய மாயோனை வணங்காத் தீயமக்களைப்போல யான் மனமறுகாநின்றே னென்றவாறு.
உலகியலொன்றுணராமை-உலகநடை சிறிதுமறியாமை. மறைபுரிதல் – வரைந்துகொள்ளாது களவொழுக்கத்தை நீட்டிக்கவிரும்புதல்.
பகுதி – பகற்குறி. துறை – வருத்தங்கூறி வரைவுகடாதல்.

மீனமாதியவாயவவதாரம்புரிந்தருண்மால்விண்ணோர்போற்றும்
வானமாமலைவளர்சீவரமங்கைவரமங்கைமார்நீரென்றான்
மோனமாயிருந்ததனாற்பயனேதுவிருந்தினர்க்குமுகமன்கூறி
யீனமாகியவுறுநோய்களைகண்ணாங்களைகண்ணாங்கியற்றிலீரே. (649)
இஃ திரண்டாமடியு மீற்றடியு மிடைமடக்கு.

இதனுள், சீவரமங்கை வரமங்கைமார் நீரென்றா லென்பது சீவர மங்கையென்னுந்திருப்பதியிற் சேட்டமாகிய மங்கைப்
பருவத்து மடந்தையரையொப்பீரென் றுலகினுள்ளா ரும்மைக் கூறுவராயின் என்பதாம்.
பருவம் பெதும்பையராயினும் வியப்பினான் மங்கைப்பருவத் துள்ளாரையொப்பீ ரென்றான். மோனம் – மௌனம்.
நோய்களைகண் ணாங்களைகண்ணாங்கியற்றிலீ ரென்பது காமமாகியபிணியைக்களையுங் கருணையாங் காவலை நீர் செய்கிலீ ரென்றவாறு.
ஒழிந்தனவு முரையிற் கொள்க. பகுதி – மதியுடன்படுதல். துறை – மொழிபெறாதுவருந்தல். இவையாறு மீரடியிடைமடக்கு.

இனி மூன்றடியிடைமடக்குவருமாறு :-

இருங்கணையின்றிவணுறிவர்தனுவேட்டைதனுவேட்டை
யிசையாதெவ்வுள்
வருந்திருமால்பனிவரைமேற்காவியங்கண்காவியங்கண்
மதியுட்கொண்டோ
ரொருங்குபுகழ்வதற்கரிதாமாதினைமாதினைக்காவ
லுவந்தாளென்கை
பொருந்துவதன்றிருவருந்தம்முட்காதன்மதர்நோக்கிற்
புகல்கின்றாரே. (650)
இஃ தீற்றடியொழிந்த வேனைமூன்றடியு மிடைமடக்கு.

(இ-ள்) இவ்விடத் திப்புனத்துற்றவிவர்கையிற் பெருமையுடைய கணையு மில்லை, இவர்யாக்கையுந் தளர்ச்சியுடையது,
ஆகையா லிவர் வில்வேட்டையும் பொருந்துவதன்று ; இஃதன்றி, இந்த மாதராளைப் பெரியு தினைக்காவல்
வரும்பினாளென்கையு முண்மையன்று, இவள் நீலோற்பலம்போன்றகண்களைப் பலகாப்பியங்களையு முணர்வினாலுட்
கொண்டோரெல்லாங்கூடியும் புகழ்தற்கரிதாம் ; இருவருமொருவ ரொருவர்மேலுள்ளவுள்ளக்காதலைக் கண்களாலுரைக்கின்றனரென்றவாறு.
பகுதி – குறையுறவுணர்தல். துறை – இருவர்நினைவுமொருவழியுணர்தல்.

சுனையுணீனிறநாண்மலர்நாண்மலர்தொறுந்துணர்தெகிழ்ந்துக்க
நனையுண்மூழ்கியபலவினின்சுளையினைநாங்கைமால்வரைக்கிள்ளை
யனையபேடைவாயருத்தியினருத்தியின்புறுநிலையதுகண்டோர்
நினைகலானழுங்காற்றலையாற்றலைநினதுகண்ணுறின்மானே. (651)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் இடைமடக்கு.

(இ-ள்) சுனையுணீனிற……….. தொறும் என்பது சுனையின்கண் ணுண்டாவதாய நீலமணியினொளியு முவமைக்கு
நாணும் நீலோற்பலம் பக்குவம்வந்து மலருந்தொறும் என்றவாறு.
துணர்தெகிழ்ந்து………. கிள்ளை என்பது அகவிதழ்நிறைந்தொழுகிய தேனின்கண், கரைசார்ந்த சோலைப்புறத்து
வீசுகொம்பர்நின்று மளிந்துவீழ்ந்து நனைந்த பலவி னினியசுளையைத் திருநாங்கைமாயோன்வரையிற் சேவற்கிளியானது என்றவாறு.
அனையபேடைவாய்….. கண்டு என்பது தனதுயிரனைய பெடைவாயி லன்பினாலருத்தி யின்பமெய்து நீதியைக் கண்டு என்றவாறு.

ஓர்நினைகலான்……………… மானே என்பது ஒருவராலுநினைத்தற்கரிய பெருமையானொருவ னிரங்கு மிரக்கத்தின்
மிகுதியை நினது கண் காணி னாற்றுவாயல்லை, மான்போலுங்கண்ணினையுடையா யென்றவாறு.
ஒருவராலு மென்பதும், உயிரென்பதும், பேடையென்பதனாற் சேவலென்பதும் வருவிக்கப்பட்டன.
பகுதி – குறைநயப்பித்தல். துறை – விரவிக்கூறல்.

மாமடந்தைகுடிபுகுந்தவன்பிலுறுமன்பிலுறுமாயோன்வெற்பிற்
காமருவண்டினமேநீர்தாந்தாந்தாந்தாமெனவாழ்கமலவைப்பிற்
பூமடந்தைமுகமலர்போன்றொருகமலத்திருகுவளைபூத்தவாகத்
தாமருவிக்குமுதமும்வெண்முல்லையுமுல்லையுமுளவோசாற்றுவீரே. (652)
இஃ தீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் இடைமடக்கு.

(இ-ள்) மாமடந்தைகுடிபுகுந்த வன்பிலுறுமன்பிலுறு மாயோன் வெற்பில் என்பது பெரியபிராட்டிகுடிகொண்ட
அன்பிலென்னுந்திருப்பதியின் மிக்க அன்பிலெய்திய மாயவனதுவெற்பில்வந்த என்றவாறு.
காமருவண்டினமே………. கமலவைப்பின் என்பது அழகிய வண்டுகாள் ! நீங்கடாம் தாந்தாந்தாமென்ற பாட்டோடும்
வைகும் மருதநிலத்தின் கண்ணேயுள்ள தாமரையோடையின்கண் என்றவாறு. பூமடந்தை…………… சாற்றுவீரே என்பது
இந்தப் பூமகள் முகத்தாமரையையொப்பதா யொருதாமரையினிடத் திரண்டுகுவளை பூத்தனவாக நிலைபெற்று
மவற்றுட னொருசேதாம்பலும் முல்லையரும்பும் முல்லையாகியபண்ணுங் கண்ணிற்
கண்டனவுஞ் செவியாற்கேட்டனவு முளவாகிற் சொல்லுவீராக வென்றவாறு. பகுதி – இயற்கை. துறை – வண்டொடுநன்னய முரைத்தல்.

உருவளர்மாத்தினமகலத்துறுதிறத்திற்பயோதரங்க
ளொருங்குதோய்ந்து
பொருவருநன்பரிமளங்கூர்வனமாலைவனமாலை
பொருந்திச்செய்ய
பருதியுடன்பனிமதியுமிருபாலுமிருபாலும்
பயின்றுதோன்றுந்
திருநெடுமால்பொருவருமிவ்வடமலையும்வடமலையு
முலைச்செந்தேனே. (653)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் இடைமடக்கு.

(இ-ள்) முத்துவடங்கிடந்தசையுமுலையொடுங்கூடிய தேன்போலு மொழியினையுடையாய் !
ஒளிதழையாநின்ற பெரியபிராட்டி நாளுந் திருமார்பிற் குடிகொண்ட கூறுபாட்டால் அவளது திருமுலைச்சுவடுகளைத் தழீஇயதுடன்,
ஒப்பில்லாமணத்தைப்பெருப்பித்துக்காடாகிய வியல்பையுடைய துளபமாலையையும் பொருந்தி, செம்மையுடையநேமியாகிய
ஆதித்தனுடன் பாஞ்சசன்னியமாகிய குளிர்ந்த மதியையும் வல மிட மென்னு மிரண்டுபக்கமுந் தரித்திருக்குமுறையும்
இடைவிடாத தோற்றப்பொலிவுண்டாந் திருவொடுங்கூடிய மாயோனையொக்கும் ;
சினையோடும்வளராநின்ற மாமரத்தின்கூட்டந் தன்னிடத்துற்ற கூறுபாட்டோடுங் காளமேகங்க ளொக்கத் தவழ்தல்பொருந்தியும்
ஒப்பில்லாத நல்ல மணத்தைப்பெருக்குங் காடாகிய வியல்பையுடைய துளபமாலைபொருந்தியும்,
ஆதித்தனுடன் சந்திரனும் இரண்டுபக்கமுமிருக்குமுறையும் பொருந்தியுந் தோன்றுமிவ் வடவேங்கடமாகிய மலையு மென்றவாறு.
இதனுள் வனமாலைவனமாலை யென்பது அத்தச்சிலேடை. பருதியும் பனிமதியுமென்பது மாட்டேறில்லா வுருவகம்.
ஒழிந்தன சத்தச்சிலேடை. பகுதி – குறைநயப்பித்தல். துறை – அறியாள்போறல்.

முளைநிலாவினைநேர்நுதனேர்நுதன்முகிணகையணைமென்றோ
ளிளையளாமிவட்கேமமேமமதுறவேதிலரணிவானற்
கிளையினீண்டினர்கேளினிக்கேளினிக்கெழுதகையுறல்வேண்டிற்
களைகணானிறைகடிநகர்க்கடிநகர்காணமன்விரைவாயே. (654)
இது நான்கடியும் இடைமுற்றுமடக்கு.

(இ-ள்) இளம்பிறையை யுவமை குறிக்கப்பட்ட சிறியநுதலினையும், முல்லைமுகைபோன்ற பல்லினையும்,
அணை போன்ற மெல்லிய தோளினையும், இளமைத்தன்மையையு முடையளா மிவளுக்குப் பொன்னை யின்பமுற
வணிவான் அயலவர் மகட்பேசித் தமரொடு மெமதுமனையிடத்துக் குழுமின ராகையா லினிக் கேட்பாயாக மன்னனே !
உனது சுற்றத்தோடும் எம்மோடுண்டாகிய இந்த நட்பு மிகுதல்வேண்டினையே லுலகத் துயிர்கட்குக் காவலாகிய
இறைவனாம் மாயோன் திருக்கடிநகரிடத்துத் திருமணம் நகரிலுள்ளார்காண அயலவர்க்குமுன்னே
யிவளை வரைந்து கொள்வான் விரைவாயாக வென்றவாறு.
நேர்நுதல் – சிறுநுதல். “சிறுநுதற்பேரமர்க்கட்செய்யவா” யென்றார் பிறரும்.
பகுதி – உடன்போக்கு. துறை – மகட்பேச்சுரைத்தல். இவை 15-ம் இடைமடக்கு.

இனி அடியிறுதிமடக்கு வருமாறு :-

கூன்பிறையவெண்கோட்டிற்கொன்னாகங்கொன்னாகந்
தான்பதைத்துமூலமெனத்தாழாதுதவியமால்
வான்புகழுந்தென்னாகைமானனையீர்வண்டழையிங்
கேன்புரிந்துகொள்ளாதிருப்பதிசைப்பீரே. (655)
இது முதலடியிறுதிமடக்கு.

இதனுள், கூன்பிறைய வெண்கோட்டிற் கொன்னாகங் கொன்னாகந்தான்பதைத்தென்பது வளைந்த பிறைபோன்ற
வெண்கோட்டினாற் கொல்லும் யானை பெரியவுடம்பு நடுக்கமுற்று என்பதாம். தான் – அசை.
மூல,,,,,,,,,மால் என்பது மூலமென்றுகூறத் தாமதியாதுதவிய மாயோ னென்றவாறு. ஒழிந்தனவும் உரையிற்கொள்க.
பகுதி – சேட்படை. துறை – தழைகொண்டுசேறல்.

தோலாதநேமிமுதலைம்படையுஞ்சூழ்ந்திறைஞ்சப்
பாலாழியுட்டுயில்கூர்பன்னகத்தான்பன்னகத்தான்
மேலாமவுணனுரங்கிழித்தவிண்ணகரான
காலானதென்றலைமேல்வைத்துக்களித்தேனே. (656)
இஃ திரண்டாமடியிறுதிமடக்கு.

இதனுள், பன்னகத்தான் – பாம்பணையான். பன்னகத்தான் மேலாமவுணனுரங்கிழித்தான் என்பது பலநகங்களால்
வெற்றியான் மேம்பட்ட விரணியனுரத்தமார்பைப் பிளந்தா னென்றவாறு. ஒழிந்தனவும் உரையிற்கொள்க. துறை – கடவுள்வாழ்த்து.

சூழித்தறுகட்கடாயானைதோலாத
பாழிப்பகுவாயிடங்கரின்கைப்பட்டநா
ளாழிப்படையுடன்சென்றாளரியையாளரியைக்
காழித்திருமாலைக்கண்டுட்களித்தேனே. (657)
இது மூன்றாமடியிறுதிமடக்கு.

இதனுள், ஆளரியையாளரியை…………… களித்தேனே என்பது ஆண்ட அரியென்னுந் திருநாமத்தையுடையானை,
நரனுஞ் சிங்கமு மானானை, சீகாழியில்வாழுந் திருமாலைக் கண்களாற்கண் டுள்ளங்களித்தே னென்றவாறு.
துறை – கடவுள்வாழ்த்து.

அண்ணாந்தெழுந்ததுணைமுலையார்க்காருயிர்தங்
கண்ணாங்கொழுநரெனுங்கட்டுரைகேட்டுற்றுணர்ந்துந்
தண்ணார்வகுளத்தமிழ்மாறர்க்கன்பிலர்போன்
றெண்ணாதகன்றனராலென்சுகமேயென்சுகமே. (658)
இது நாலாமடியிறுதிமடக்கு.

இதனுள், என்சுகமேயென்சுகமே என்பது எனக்கு என்னுடைய கிளியே ! என்னமகிழ்ச்சியுள்ள தென்றவாறு.
பகுதி – பொருள்வயிற் பிரிதல். துறை – பறவையொடுபரிவுற்றுரைத்தல்.
இவை நாலும் ஓரடி யிறுதிமடக்கு. இனி ஈரடியிறுதிமடக்கு வருமாறு :-

மூன்றாயமைந்ததொழின்முன்னானைமுன்னானை
தான்றாழ்தடத்தழைத்தசங்கரியைச்சங்கரியைத்
தோன்றாதிடத்தமைத்தசூழ்ச்சியனைத்தொல்லைநா
ளீன்றானையீன்றானையென்னுளத்தேவைத்தேனே. (659)
இது முதலிரண்டடியும் இறுதிமடக்கு.

(இ-ள்) சிருட்டி திதி சங்காரமென்று தன்னாலமைக்கப்பட்ட மூன்றிற்கு மங்கங்கு முன்னாயிருக்கப்பட்டவனை,
முதலைமுன்னானயானை தா னாழ்ந்ததடத்துநின்று மூலமென்றழைத்த சங்கினையுடைய அரியென்னுந் திருநாமத்தையுடையானை,
உமையை வேறுபட்டுத்தோன்றாது தனதிடப்பாகத்தடக்கின விசாரத்தையுடைய அரனை
முற்காலத்தீன்ற பிரமனையீன்றவனை முத்தியளிக்கவல்ல பிரமமென வுட்கொண்டே னென்றவாறு.
திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

கோதறவில்வாங்கியுடக்குஞ்சரத்தாற்குஞ்சரத்தாற்
கேதமிழைத்தவிராவணியையன்றுதவ
சாதனத்தாற்கொன்றபிரான்றம்முன்னைத்தம்முன்னைப்
பாதகந்தீரப்புகழ்வார்பாதம்பணிந்தேனே. (660)
இது முதலடியும் மூன்றாமடியும் இறுதிமடக்கு.

(இ-ள்) குற்றந்தீரத் தனுவைக் கைக்கொண்டு தொடுக்கும் அம்பினால் ஐராவதப்பாகனான இந்திரனுக்கு மானபங்கத்தை
யுண்டாக்கின இந்திரசெயித்தை, முற்காலத்துத் தவசரிதையாற்கொன்ற இலக்குமண னென்னு மெனது
சுவாமிக்குத் தமையனை, யாவரேயாயினுந் தங்கள் கழிபிறப்பிற் பாவந்தீரப் புகழாநின்றார்
அவர்பாதத்தை யெனதுபிறவித் துன்பம்நீங்க வணங்கினே னென்றவாறு. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பணிதல்.

பொன்பொற்றிலங்குமலர்ப்பூவையேபூவையே
மன்பொற்றிருமேனிமாயோன்வடமலைமேன்
மின்பொற்றொடித்தடக்கைகூப்பாதவீறென்னோ
நின்பொற்றிருநுதற்குநேர்மதிக்குநேர்மதிக்கும். (661)
இது முதலடியும் ஈற்றடியும் இறுதிமடக்கு.

இதனுள், மலர்ப்பூவையேபூவையே மன்பொற்றிருமேனி என்பது தாமரையிலிருக்குந் திருமகளையொப்பாய் !
காயாம்பூவையொத்த மிக்க பொலிவினையுடைய திருமேனி என்றவாறு. நின்பொற்றிருநுதற்கு நேர்மதிக்கும் நேர்மதிக்கும் என்பது
உனது அழகியநெற்றிக் குவமை குறிக்கும் நேரிய பிறைக்கு மென்றவாறு ஒழிந்தனவு முரையிற்கொள்க.
பகுதி – நாணநாட்டம். துறை – பிறைதொழுகென்றல்.

அந்தமுதலாயமைந்தானையெம்மனோர்
பந்தமறுத்தாள்பரனைச்சுமித்திரைதன்
மைந்தனொடுங்கான்போந்தமாதவனைமாதவனை
யெந்தையையல்லாதிறையுண்டென்னாவேயென்னாவே. (662)
இது கடையிரண்டடியும் இறுதிமடக்கு.

இதனுள், மாதவனைமாதவனை என்பது திருமகள்காந்தனை, பெரிய தவசரிதையுடையானை யென்றவாறு.
எந்தையை – எம்முடைய சுவாமியை. அல்லாதிறையுண்டென்னாவேயென்னாவே என்பது அவனை யன்றி
வேறு பரப்பிரம முண்டென்றுகூறா தென்னுடையநா வென்றவாறு. ஏகார மிறுதிய தீற்றசை. துறை – கடவுள்வாழ்த்து.

தாவாதபேரின்பஞ்சார்வதற்குச்சிற்றின்பத்
தேவாமலென்னைமதனெய்யாமையெய்யாமை
மாவாதனைமறந்துவாமனனேவாமனனே
தேவாதிதேவனெனச்சந்ததமுஞ்சிந்தித்தே. (663)
இஃ திடையிரண்டடியும் இறுதிமடக்கு.

(இ-ள்) என்னைமதனெய்யாமையெய்யாமை என்பது என்னைக் காமன் சிற்றின்பத்திலேவேண்டிமூட்ட
என்மேற் பஞ்சபாணங்களை யிடைவிடாமைத் தொடுத்திடாமல் என்றவாறு.
வாமனனே………………….. வாமனனே என்பது வாமனாவதாரமாகிய நாராயணனே தேவர்க்கெல்லாம் முதலான
தேவனென அனவரதமுஞ் சிந்தித்துக் கழிந்தபிறப்பிலு மிப்பிறப்பிலு முண்டான பொல்லாத வாதனைகள்யாவும் மறந்து
என்னோ டொத்துவா என்னுடையமனனே ! என்றவாறு.
திணை – காஞ்சியைச் சார்ந்த பொதுவியல். துறை – பொருண்மொழிக்காஞ்சி. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்தெனினு மாம்.

காண்டகுபொற்பூமடந்தைநற்பாரிகண்ணன்பே
ராண்டபழம்பதியுமந்தாமமந்தாமங்
கூண்டளிபண்பாடுதுழாய்கூராழிகைவலத்தே
பூண்டதவன்சீருளத்தேபூரியார்பூரியார். (664)
இது நாலாமடியும் இரண்டாமடியும் இறுதிமடக்கு.

இதனுள், ஆண்டபழம்பதியும்………. துழாய் என்பது அவன்புரந்த தொன்மைப்பதமாவது பரமபதம்,
அழகிய மாலையாவதும் வண்டுகள் தேனையுண்டு பண்களைப்பாடும் வனமாலையாம் என்றவாறு.
அவன்சீ ருளத்தேபூரியார் பூரியார் என்பது அவனதாந் திருமேனியிற்காந்தியைத் தீயமக்கள் உள்ளத்தாற் றியானித்து
அகத்தே நிறையா ரென்றவாறு. எனவே யெப்படியீடேறுவ ரென்பது குறிப்பு. திணை – பாடாண்.
துறை – புகழார்ப்பழித்தல் ; கடவுள்வாழ்த்தெனினு மாம். இவையாறும் ஈரடி யிறுதிமடக்கு.

இனி மூன்றடியிறுதிமடக்கு வருமாறு :-

முன்னிலங்கொள்ளாதபிலமுன்பரையுமுன்பரையுந்
தன்னரனாலீந்தவரந்தாவுறவேதாவுறவே
மன்னிலங்கேசன்முதலாமைந்தரையுமைந்தரையு
மின்னுயிருண்டான்குணங்கற்றின்பம்பயின்றேனே. (665)
இஃ தீற்றடியொழித் தேனைமூன்றடியும் இறுதிமடக்கு.

(இ-ள்) மன்னிலங்கேசன்முதலா மைந்தரையு மைந்தரையும் என்பது இராவணன்முதலாய மிடுக்குள்ளாரையும்,
அவர்கள்புதல்வரையும் என்றவாறு ; முன் னிலங்கொள்ளாத பிலமுன்பரையு முன் பரையுந் தன்னரனாலீந்தவரந் தாவுற
வேதா வுறவே என்பது முன்னாளிற் பூமி யிடங்கொள்ளாத பாதாலத்தின் மூலபெலப்படையாய்வந்த வலியுடை யாரையும்
முன்னா ளுமை தனதுபுமானான சிவனாற்கொடுப்பித்த வரமும், பிறர்கொடுத்தவரமும் அழிவுறப் பிரமாவும்
பேராண்மையிருந்தபடியோ வென்று மனத்திலே விசாரிக்க என்றவாறு ;
இன்னுயிருண்டான்……………. பயின்றேனே என்பது அவர்க ளினியவுயிரையுண்ட தெசரதராமன் கலியாண
குணங்களைக் கூறிப் பேரின்பமெய்தினேன் என்றவாறு. திணை – இதுவுமது. துறை – கடவுள்வாழ்த்து.

கண்படையுண்கண்சிறிதுங்கண்ணகன்றகண்ணகன்றவ்
வொண்பொருள்செய்வார்பிரிவினுண்ணிறையுமுண்ணிறையும்
பண்புறநில்லாதினியீங்கென்செய்வேன்பாமாறன்
றண்பொருநைத்தண்டுறைவாழ்தாராவேதாராவே. (666)
இது கடையயலடி யொழிந்த வேனைமூன்றடியும் இறுதிமடக்கு.

(இ-ள்) பாமாறன்றண்பொருநை……………… தாராவே ! என்பது திருவாய்மொழியாகிய பனுவலைச்செய்த காரிமாறப்
பிரான்பொருநைத் தண்டுறையினிடத்துத் தாராவாகியபறவையே ! என்றவாறு.
கண்ணகன்ற……….. பிரிவின் என்பது இடம்விரிந்தநாட்டின்கணீங்கிச் சுத்ததிரவியத்தை யீட்டவேண்டிப் பிரிந்தார்பிரிவினால் என்றவாறு ;
உண்ணிறையுமுண்ணிறையும் பண்புறநில்லாது என்பது என துள்ளத்து ணிறைந்ததொன்றாய மகளிர்க்குச்சிறந்ததென
வுலகம் விசாரிக்கப்பட்ட எனது நிறையானதும் எனது குணத்தின்வழி நில்லாது ; அதுவேயுமன்றி என்றவாறு ;
கண்படை யுண்கண் சிறிதுந் தாரா என்பது எனது மையுண்கண்களானவை கணப்பொழுது முறங்குவதுஞ் செய்கின்றில என்றவாறு.
இனி யீங்கென்செய்வேன் என்பதுமே லிவ்விடத் தியான்செய்வது யாதுதா னென்றவாறு.
இது கொண்டு கூட்டுப்பொருள்கோள். பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – பறவை யொடுபரிவுற்றிரங்கல்.

பாழிமருப்பேனமதாய்ப்பாரிடந்தான்பாரிடந்தான்
சூழியல்புற்றாடுபுலித்தோலுடையான்றோற்றஞ்சால்
காழ்வயிரக்குன்றெடுத்தகண்டகனைக்கண்டகனை
யூழறக்கொன்றானகர்பூந்தேனிலுறையூருறையூர். (667)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் இறுதிமடக்கு.

(இ-ள்) ஏனமதாய்ப் பாரிடந்தான்-வராகமாகிப் பூமியை யுழுதெடுத்தான்;
பாரிடந்தான்…….. தோற்றஞ்சால் – பூதகணங்கள் சூழுமியல்புபொருந்தச் சுடுகாடரங்காக நடஞ்செய்யும்
புலித்தோலுடை யுடையானது
தோற்றஞ்சான்ற காழ்வயிரக்குன்றெடுத்தகண்டகனைக் கண்டகனை யூழறக்கொன்றானகர் – மிகவுந்திண்ணியகயிலையை
யெடுத்த விராவணனாகியபாதகனைச் செருக்களத்துக்கண்டு திருவுள்ளத் திரக்கத்தின் முறையின்றிக் கொன்றவனது
நகரமானது பூந்தேனிலுறையூருறையூர் கோட்டிலுங் கொடியிலு நீரிலுமுண்டாகிய பூவிற்றேன்றுளி திசைதிசை
பரக்குந் திருவுறையூரா மென்றவாறு. திணை – பாடாண். துறை – நகரவாழ்த்து கடவுள்வாழ்த்துமாம்.

ஏற்றமாம்வெள்ளோதிமத்தான்மழவிடையூர்
தோற்றமார்வெய்யபுலித்தோலுடையான்றோலுடையான்
போற்றவாழ்வுற்றவிருப்புள்ளேறுபுள்ளேறு
மாற்றலானன்பிலார்க்கன்பிலானன்பிலான். (668)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் இறுதிமடக்கு.

இதனுள், புலித்தோலுடையான் றோலுடையா னென்பது புலியினதுதோலை யுடையாகவுடையானும், ஐராவதத்தையுடையானும் என்பதாம்.
விருப்புள்ளேறுபுள்ளேறு என்பது தன்னிடத்தன் புள்ளத்து மிகும் கருடனிலேறும் என்பதாம் ;
அன்பிலார்க்கன்பிலானன்பிலான் என்பது தன்னிடத் தன்பிலாரிடத் தன்பிலாதா னவன்யாவனெனி லன்பிலென்னுந்திருப்பதியின் மாயோ னென்பதாம்.

எனவே அயனும் அரனும் இந்திரனும் பரவும்படிக்கு வாழ்வுபெற்ற கருடவாகனத்திலேறும் பெருமையையுடையான்
அவன் யாவனெனில் அன்பிலாதாரிடத் தன்பிலாதான், அன்பிலென்னுந், திருப்பதியின் மாயோன்;
அவனுக்கன்புசெய்வீராயிற் புலவீர்காள் ! நுமக்கு முத்தி பெறலாமென்பது குறிப்பு. திணை – வாகை. துறை – பொருளொடு புணர்தல்.

வாமவெங்கதிர்மண்டிலமண்டில
நாமநேமியினான்மறைநான்மறைப்
பூமன்றந்தையொண்பொற்கழற்பொற்கழற்
காமன்பாரடிப்போதென்றலைத்தலை. (669)
இது நான்கடியும் இறுதிமடக்கு.

(இ-ள்) ஆதித்தன்மண்டிலத்தை வட்டத்திருவாழியான் மறைக்கப் பட்டவன், நாலுவேதத்தையு மோதியுணர்ந்தவனாந்
தாமரைப்போதிற் பிறந்த பிரமனுக்குப் பிதா, அவனதாம் பொன்னின்வீரக் கழல்புனைந்த பொலிவினையுடைய
திருவடிகளிடத்துண்டாம் அன்புடையார் திருவடித் தாமரைப்பூவை எனதுசிரத்தின்கட்புனைந்தே னென்றவாறு.

கழற்கு என்பது ஏழாவது நான்காவதாயிற்று. மண்டிலம் ஆதித்தன்மண்டலத்திற்கும், வட்டத்திற்கும்பேர்.
திணை – இதுவுமது. துறை – பழிச்சினர்ப்பணிதல்.

இவை பதினைந்தும் அடியிறுதிமடக்கு. ஆகமடக்கு-45.
இவை நாற்பத்தைந்து மோரடியு மீரடியு மூவடியு நாலடியுமாகி யடிதோறு மோரிடத்தைமடக்கியது.

இனியடிதோறு மீரிடத்தனவா மூவகைமடக்கினுள் முதலொடிடைமடக்கு வருமாறு :-

கட்காவிகட்காவிநைவதும்வண்டிமிர்காமன்காமன்வாளிக்
குட்காநைவுறுநிறையுமுற்றுணர்ந்துமுறுதியெனக்குறுகிலீராற்
புட்காமன்வடமதுரைப்புரிகுழலீர்காமவலையுள்புக்காழ்ந்து
மட்காநின்றதற்குறுதிப்புணைமடலென்றேயுளத்தேமதிக்கின்றேனே. ()
இது முதலடி முதலொடிடைமடக்கு.

இதனுள், கட்காவிகட்காவிநைவதும் என்பது கண்ணாகியசெங்கழு நீர்களுக் கெனதாவி வருந்துவதும் என்பதாம்.
காமன் காமன்வாளிக்கு என்பது காவினிடத்து நிலைபெற்ற காமன்பஞ்சபாணங்களுக்கு என்பதாம். ஒழிந்தனவு முரையிற்கொள்க.
பகுதி – மடல். துறை – தன்றுணி வுரைத்தல்.

அலையோடுயர்பாற்கடல்கடைந்தானன்பிலனையீர்திருவயிறா
லிலையோவிலையோவிடைநினைவிங்கென்னோவென்னோவறியீர்போன்
மலையோமுலைவாணுதல்சிலையோமையுண்கருங்கட்குவளையுள்வன்
கொலையோகுடிகொண்டதுசிறிதுங்குடிகொண்டிலவோகருணையுமே. ()
இஃதிரண்டாமடி முதலொடிடைமடக்கு.

இதனுள், வயிறாலிலையோ விலையோவிடையென்பது நுமது அழகிய வயி றாலினிலையோ இடையென்னுமுறுப் புமக்கில்லையோ என்பதாம்.
நினைவிங்கென்னோ வென்னோவறியீ ரென்பது இவ்விடத்து நுமது விசாரம் யாதோ? எனது காமப்பிணியையுந் தெளிகிலீர் என்பதாம்.
ஒழிந்தனவு முரையிற்கொள்க. பகுதி -……. துறை-இடைவினாதல்.

இரவிற்குப்படருழந்திவ்விரவொழிப்பாயெனவிரங்கியிடதுபாகம்
புரவிற்குங்களிவரவன்றிரப்பொழித்ததுறிலரங்கபொருணீயன்றே
கரவெற்புக்கரவெற்புக்கவினணியான்கங்கையன்கங்கையனாமந்த
வரவெற்பன்மலரயனுமகிழ்ந்திடச்சென்றுதவியதூஉமதிக்குங்காலே. ()
இது மூன்றாமடி முதலொடிடைமடக்கு.

(இ-ள்) பிரமசிரத்திலிரந்ததற்குத் துன்பமிகுந் தவ்விரப்பினைத் தவிர்ப்பாயாக வென்று சிவன்வேண்டற்குக் கருணைகூர்ந்து,
அவனதிடப் பாகத்தை யச்சிவன்கொடுப்பத் தனதாகவாண்ட அவன் பாரியா முமைக்கும் மனத்துட்களிப்புண்டாக
முற்காலத் தவ்விரப்பைத் தவிர்த்தகருணையை விசாரிப்பாருண்டாகி லப்பரப்பிரமம் அரங்க நாதனே ! நீயேயாம் ;
அதுவுமன்றி, கைபடைத்தமலையென்பதாங் கெசேந்திரன் மூலமேயென்ன அதற்கும்,
அரவும் எலும்பும் அழகுசெய்யு மாபரணமாகப் புனைந்தான், பிரமசிரத்தைக் கையிலேந்தினான்,
கங்கை யாற்றை வேணியிற்கட்டினான், அந்தச் சேட்டமானவெள்ளிமலையானும் மலருளானாம்
பிரமனு மகிழும்படிக்குச்சென்று தவியதூஉம் விசாரிக்கிலென்றவாறு.

ஒழித்ததும் என்னு மும்மை செய்யுள்விகாரத்தாற் றொக்கது. வெற்பன் மலரயனும் என்பது
“எஞ்சுபொருட்கிளவிசெஞ் சொலாயிற், பிற்படக்கிளவார்முற்படக்கிளத்தல்” என்பதனால் வெற்பனும் என்னுஞ் சொல்
வெற்பனென வும்மையில்சொல்லாயிற்று. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

அருண்மாலைபயின்றகெழுதகையிகுளைவேண்டலிற்சென்
றறையாண்மாரன்
பொருமாலைக்கிடுகருப்புச்சிலைவளைத்தித்துயர்க்கடற்கோர்
புணையுங்காணேன்
மருண்மாலைவரும்வருமென்றிடைவேற்காயெவன்செயன்மேன்
மனனேமல்லைத்
திருமாலைத்திருமாலைக்கண்டளியாயளியாய்நின்
றிருத்தாரென்றே. (673)
இது நாலாமடி முதலொடிடைமடக்கு.

(இ-ள்) மனனே ! இருண்ட மாலை வரும்வருமென் றுண்டியு முறக்கமுந்தவிர்ந் துடம்புமுயிரு மெலியா
நின்றவெனக் குடலு முயிரு மாக்கமெய்த என்னிடத்து வைத்தகருணை யியல்பாக இடைவிடாத உரிமையையுடைய
எனதுயிர்த்தோழியானவள், திருக்கடன்மல்லை மாயோனைச் சென்றுகண்டு, நினதுதாமத்தை
விருப்புற்றமையா லென்னுயிரான பொலிவினையுடையாள் பொலிவிழப்ப அவளிடத் துண்டான மயக்கத்தை நினது
திருவுளத்தாற்கண்டு நினதுதிருமார்பிற் புனைவதாய வண்டுகள் நல்லதென்றாராயும் அழகியதிருமாலிகையைத்
திருவருள் புரிந்து தாராயென்று வேண்டிக்கோடலோடுங் கூறாள்;
அஃதறிந்து காமனானவன் ஆலையினிடத் திடும்படிக்குண்டானகரும்பைச் சிலையாக வளைத்துப்
பூப்பாணங்களையுடக்கிப் போர்செய்யாநின்றான் ; ஆதலால் இத்துன்பமாகியகடலைக் கடக்க அவன்றாமமாகிய
புணையேயன்றி வேறு புணையுங் காணேன், இனிமேல் யாதுசெய்வ தென்றவாறு.

இதனுள், திருமாலைத் திருமாலையென்பது திருவினோடுங்கூடிய மாலை, பொலிவினையுடையாண்மயக்கத்தை யென்பதாம்.
கண்டென்பதனைத் தோழி சென்றுகண்டு, திருவுளத்தாற்கண்டு என இரண்டிடத்துங் கூட்டுக.
அளியாயளியாயென்பவற்றுள் முன்னையது ஒருதொழிலினை மேற் செய்யாயென்னு மெதிர்மறையாகிய முன்னிலைவினைச்சொல்,
அத் தொழிலைச்செய்யென்ன எடுத்தலோசையாற்கூறி வேண்டிக்கோடற்கண் ணுடம்பாட்டு முன்னிலைவினைச்சொல்லாயிற்று ;
என்னை “செய்யாயென்னு முன்னிலைவினைச்சொல், செய்யென்கிளவியாகிடனுடைத்தே” என்றாராகலி னறிக.
பின்னையது வண்டுகள் நல்லதென்றாராயும் என்பதாம். திருமாலையென்பது பிறள்போற்கூறியதாம். தலைவிகூற்று.
முன்னிலை -தோழி. மனனே என்பது முன்னிலைப்புறமொழி. பொருள்கோள் -கொண்டுகூட்டு; மாட்டுறுப்பெனினுமாம்.
திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – மெலிவொடுகூறல். இவைநாலு மோரடியிடத்து முதலுமிடையு மடக்கியது.

இனி யீரடியிடத்து முதலு மிடையு மடக்குதல் வருமாறு :-

பொருந்தார்பொருந்தார்வரைமார்பிற்புதையப்புதையப்புதைவரிவில்
வருந்தாவருந்தாபதனமனதுகளிக்கக்களிக்கமிதிலைபுகுந்
திருந்தாரணியோர்புகழவளைத்திறுத்தானிமையோரிடுக்கணுறா
தருந்தாரமுதன்றருள்குடந்தையாராவமுதென்னகத்தமுதே. (674)
இது முதலிரண்டடியும் முதலொடிடைமடக்கு.

(இ-ள்) சத்துருக்களாயுள்ளார் சமர்முகத்துப் புறங்கொடாது போர்செய்யும் வெற்றிமாலைபுனைந்த வரைபோன்ற
மருமத்திற் புதையும் படிக்குக் கட்டிலம்பைத்தொடுக்கப்பட்ட நாரிவரிந்த தனுவை இந்திரியங்களில் வியாபரிக்குஞ்
சத்தாதிகளுக்குச் சற்று மீடுபடாத அரியதவத்தையுடையோனாகிய விச்சுவாமித்திரன்மனத்துட்பிரியமோங்கப்
பிராட்டி திருவுள்ளமுஞ் சனகராசன்மனதுங் களிக்க மிதிலையுட்புகுந்து பெரிய தாரணியோர் கொண்டாட வளைத்து முறித்தான்,
அவன் யாரெனில் விண்ணோர்துன்பமெய்தாமை யாராவமுதைக் கடைந்துகொடுத்த திருக்குடந்தையாராவமுதம்,
அவன் என்னுள்ளத்துக்குத் தித்திக்கு மமுதமா மென்றவாறு. துறை – கடவுள்வாழ்த்து.

உமையாளுமுமையாளும்பசுபதியுமும்பரினும்
பரின்வாழ்வெய்துஞ்
சுமையாகநிலைபெறுமீங்கிதுகிளையேலெனநந்தி
சொன்னபோது
மமையாதுன்னமையாதுன்னக்கயிலைகிளைகிளைக்கை
யரக்கனாதி
கமையாலெய்தியவரங்கள்காட்கரையாய்களைந்திலையேற்
களைகண்யாரே. (675)
இது முதலடியும் மூன்றாமடியும் முதலொடிடைமடக்கு.

(இ-ள்) உமையாளும்…… வாழ்வெய்தும் என்பது உம்மை யாட்கொள்ளும் உமையானவளுஞ் சிவனும் உச்சிமலையின்கண்
தேவர்க ளோடுங்கூடிச் செல்வமெய்தும் என்பதாம் ; சுமையாக….. போதும் என்பது அவர்களைத் தனது
சென்னியிற்கொண்டுநிற்கும் இவ்விடத் திந்த மலையை யெடாதேகொள்வாயென நந்திசொன்னகாலத்தும் என்பதாம் ;
அமையாதுன்….. அரக்கன் என்பது அவனுரைக்குமடங்காதே உன்னமரமும் மூங்கிலும் ஆச்சாவும் நெருங்கின
அந்தக் கயிலையைக் கிண்டியெடுத்த விருபதாகியகையையுடைய விராவணன் என்பதாம் ;
ஆதி….. யாரே என்பது ஆதிகாலத்து இந்திரியங்களையடக்கின பொறையாலெய்தியவரங்களைத் திருக்காட்கரையாய் !
அழித்து அவனைக் கொன்றிலையெனி லுலகுயிர்கட் கியாவர் காவ லென்றவாறு. துறை-இதுவுமது.

இமையவரையிமையவரைமகிழ்விப்பான்பொருவில்பொரு
வில்லாயேந்திச்
சமையவுடக்குபுசரந்தொட்டெயிலொருமூன்றெரிகதுவத்
தலைநாள்வென்ற
வுமையவருமதிப்பவெயிலேழுடையான்பஃறலைக்கு
முறையூராயா
டமையமைவில்லினைவளைத்தன்றேவினையேவினைநினைப்போன்
றளியார்யாரே. (676)
இது முதலடியும் நாலாமடியும் முதலொடிடைமடக்கு.

(இ-ள்) இமையவரை யிமையவரைமகிழ்விப்பா னென்பது இமவா னென்னுமலையைத் தேவர்களைக் களிப்பிக்கவேண்டி யென்பதாம் ;
பொருவில் பொருவில்லாயேந்தி என்பது ஒப்பற்ற போர்பொருதற்குரிய வில்லாகவெடுத் தென்பதாம் ;
சமையவுடக்குபு…… மதிப்ப எனப்து குறைவறவுடக்கி யம்பைத்துரந்து மூன்றுகோட்டையினும் அனல்பற்ற முன்னை
நாண் முப்புராதிகளைவென்ற வுமைபாகரும் மதிப்பதாக என்பதாம் ;
எயிலேழுடையான்…. உறையூராய் என்பது ஏழுகோட்டையோனாகிய விராவணன்பத்துத்தலைக்குந் திருவுறையூராய் ! என்பதாம் ;
ஆடமை யமைவில்லினை….. யேவினை என்பது வெற்றிபொருந்தின மூங்கில்வில்லைவளைத்து முன்னாள் அம்பினைவிட்டனை என்பதாம் ;
நினைப்போன்றளியார்யாரே என்பது ஆதலால் நின்னைப்போ லுலகுயிர்களைக் காக்குங்கருணையுடையகடவுளர் இல்லை யென்றவாறு.
துறை-இதுவுமது.

சுந்தரத்தோளிணையழகர்துணையடிசேர்மகிழ்மாறன்
றுடரிநீடுஞ்
சந்தனச்சோலையுளுறைவார்க்கிறைவாசங்கர
னுதற்கட்டழலான்மேனாள்
வெந்திறல்வெந்திறல்வேளுமிரதியிரதியுமாண்மை
விழைமென்கொங்கை
மந்தரமந்தரமிடைவிற்கரும்புருவங்கரும்புருவ
மதிக்குங்காலே. (677)
இது கடையிரண்டடியும் முதலொடிடைமடக்கு.

(இ-ள்) இறைவனே ! அழகியதிருத்தோளிணையையுடைய அழக ருபயதிருவடிகளை மனோ வாக்குக்காயங்களாற்பொருந்தின
வகுளாபரண மாறன்றுடரிமலையினிடத் தோங்கின சந்தனச்சோலையுளுறைவார் கொங்கைக் குவமை
குறிக்குங்கான் மந்தரபருவதமேயாம், இடைஆகாயமாம், கரியபுருவம் காமனுக்குவில்லாகிய கரும்பினதுருவமா மென்றவாறு.

சிவனுடைய நெற்றிக்கண்ணினுண்டாகியதழலினான் முன்னைக் காலத்து வெவ்வியவீரம் வெந்ததனோடும்
உருவமுமிழந்த காமனும் விரும்புவதா மிரதியும் ஆணாந்தன்மையையுவப்பதாங் காந்தியையுடைய கொங்கைக்கெனக் கூட்டுக.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – செவ்வி செப்பல்.

பொய்யாதபேரின்பம்வேண்டினர்கள்பேரண்டம்பூத்தவுந்திச்
செய்யாசெய்யாள்விரும்பியுறையுறையூராவெனவேதிளைப்பக்கண்டு
மெய்யாமையெய்யாமையேத்திலரஞ்சிலர்சிலரவ்வியமதண்ட
மெய்யாகமதிக்கிலரந்தோவந்தோநரகத்தேவீழ்கின்றாரே. (678)
இஃ திடையிரண்டடியும் முதலொடிடைமடக்கு.

(இ-ள்) அழிவில்லாதபேரின்பத்தைவிரும்பின அறிவுடையோர்கள், எண்ணில்பல்கோடியண்டங்களைப்பெற்ற
திருவுந்தியாகிய செறுவையுடையவனே ! திருமகள்விருப்புற்றுக்குடியிருக்குந் திருவுறை யூரையுடையவனே
யென்றொழிவில்லாதுகூறிப் பேரானந்தமெய்துவதனைக் கண்டுங் கேட்டும், விட்டுநீங்காத அறியாமையாற் சிலர்
அவன்றிருவடிகளை யேத்துகின்றிலர், அவ்வியமதண்டத்தைநினைந் தஞ்சுவதுஞ் செய்கின்றிலர்,
அதனை மெய்யென்பதுந் தெளிகின்றிலர், ஐயோ ஐயோ நரகின்கண்ணேவீழாநின்றன ரென்றவாறு.
எனவே எங்ஙன மீடேறுவ ரென்பது குறிப்பு. எய்யாமை எய்யாமையால் என மூன்றாவதுதொக்குநின்றுவிரிந்தது.
அந்தோ அந்தோ என்பது இரக்கத்தின்கட்குறிப்பு. திணை – பாடாண். துறை – வாயுறை வாழ்த்து.

கைம்மலைக்கன்றுதவியமால்காட்கரைமான்கற்புநிலை
காட்டவேண்டி
யம்மனையம்மனைவிரும்பிக்கிளைகிளைபோலயர்ந்திடவைத்
தகன்றகாலை
நம்மனையைக்காண்டொறுமெய்ந்நடுங்குதன்மேலுணர்வழிக்கு
நயந்தக்கிள்ளை
யெம்மனையெம்மனைபுக்காளினியினியபாலளிப்பா
ரெமக்காரென்றே. (679)
இது முதலயலடியொடு நாலாமடி முதலொடிடைமடக்கு.

(இ-ள்) கையையுடைய மலையென்பதாம் யானைக்கு, அது முதலை கைப்பட்டநாண் மூலமேயென்றழைப்பச்
சென்றுதவிய மாயோன் றிருக்காட்கரையின் மான்போலும் விழியினையுடையாள், நாணினுங் கற்புச் சிறந்ததென்று
நூல்சொல்லக் குடிப்பிறந்தார்கண் ணிலைபெற்றதனை யெமக்கறிவிக்கவேண்டி, அழகியமன்னனை எம்முடைய
ஆய்விரும்பிக் கிள்ளையான தெமதுகிளைபோலவருந்தும்படிக்குத் தோழிகைப்படவைத்துடன் போனகாலத் தியா னெமதுமனையினது
பொலிவழிவைக் காணுந் தோறும் மெய்ந்நடுக்குறுதன்மேலும், முன்னங்கூறிய அக்கிள்ளை, தன்னைவளர்த்த
அன்னையைக் காணவிரும்பி அவ்வையே ! எம்முடைய அன்னை யிம்மனையைவிட் டெந்த மாளிகையிலேபுகுந்தா ளென்று
மெமக்கினியபாலினை மேற்றருவார்யாவ ரென்று மென்னுணர்வை யழியாநிற்குமென்றவாறு.
பகுதி – உடன்போக்கு. துறை – நற்றாயிரங்கல். இவை யாறு மீரடி யாதியொடிடைமடக்கு.
இனி மூன்றடி முதலொடிடை மடக்கு வருமாறு :-

நூறுநூறுபோன்றாரமுமாரமு
நொய்தினின்வெதும்பாநீ
ரூறுமூறுமாமதன்படைபடைத்திட
வுபயகண்மலரந்தோ
வேறுமேறுமாபதிபதிகிளைத்திடு
மிருபதுகரத்தானைக்
கூறுசெய்கணையரங்கன்மெய்தோய்ந்திடாக்
கொம்மைவெம்முலையாட்கே. (680)
இஃ தீற்றடியொழித் தேனைமூன்றடியும் முதலொடிடைமடக்கு,

இதனுள், நூறுநூறுபோன்றாரமுமாரமு மென்பது துகள்படும், சுண்ணாம்புபோல முத்துவடமுஞ் சந்தனச்சேறு என்பதாம்.
நீரூறு மூறுமாமதன்படைபடைத்திட வுபயகண்மல ரென்பது துன்பக்கண்ணீ ரூறாநிற்கும் ;
விரணங்களைக் கரியமதனன்பூப்பாணங்களுண்டாக்கு கையா லிரண்டுகண்மலர்களினிடத்து மென்பதாம்.
ஏறு மே றுமா பதிபதி கிளைத்திடு மிருபதுகரத்தானை யென்பது இடபத்தையும் பூதத்தையும் வாகனமாகவேறும்
உமைக்குப்புமானானவன்பதியாகிய கயிலையை யெடுத்த இருபதுகையுடைய இராவணனை யென்பதாம்.
கூறு செய்கணை யரங்கன்மெய் தோய்ந்திடாக் கொம்மைவெம்முலையாட்கே யென்பது துண்டஞ்செய்த பாணத்தையுடைய
அரங்கநாதனைத் தழுவாத கொம்மைவெம்முலையாட் கென்பதாம்.
கொம்மைமுலையாட்கு, நூறும் ஆரமும் ஆரமும் ; கண்கள் நீருறும் என்று முடிக்க.
திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – கண்டுகைசோர்தல்.

மின்னுமின்னுநுண்ணிடையிடைந்தனளினிமேதகுமின்னோடு
மன்னுமன்னுமெம்மனைவயின்வயினுறத்தினையொடுதேனார்ந்தே
துன்னுகங்குலிற்றுயின்றெழுந்திறையுறைதுவரைமாநகர்க்காலை
முன்னுமுன்னுமுண்டுண்டிவணிவணிகர்முறையொடும்பதிந்தாரே. (681)
இஃதீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடிடைமடக்கு.

இதனுள், மின்னு மின்னு நுண்ணிடை யிடைந்தன ளென்பது ஒளிரும் மின்னுப்போன்ற சிறிய இடையினையுடையாள் வருந்தின ளென்பதாம்.
மேதகுமின்னோடு மன்னு மன்னு மெம்மனைவயின் வயினுறத் தினையொடு தேனார்ந் தென்பது பெருமைபொருந்தின
மின்னை யொப்பாளுடன்பொருந்திய மன்னனே! நீயும் நுமக்குரிய எம்மில்லினிடத்துக் காலம்பெறத் தினையுந் தேனு மருந்தி யென்பதாம்.
துவரை மாநகர்க் காலை முன்னு முன்னுமுண்டுண்டிவ ணிவணிகர்முறையொடும் பதிந்தா ரென்பது துவராபுரியினிடத்துக் காலையிற்செல்வாயாக ;
நுமக்குமுன்னே தினையொடுந் தேனைக்கூட்டியுண்டு இவ்விடத் திவளை யொத்த கற்புங் காந்தியும்பெற்றமுறையொடும்
புமான்களை நீங்காது தங்கினார் பலருமுண் டென்பதாம். மின்னு – உகரவிகுதி அல்வழிக்கண் மிக்கது, இயல்புகணம்வரலாலென்றறிக.
மன் அண்மைவிளி. நீ யென்னும் முன்னிலைப்பெய ரெஞ்சிநின்று விரிந்தது. ஒழிந்தனவும் உரையிற்கொள்க.
பகுதி – உடன்போக்கு. துறை – நெறிவிலக்கல். விருந்து விலக்கென்பது மிது.

தோலாததோலாதபனைநோக்குநோக்குபயசுடரைக்கூட்டி
மேலாகமூன்றுடையசிவனயன்கேட்பவுமழைப்பவிரைந்துமேனாட்
பாலாழிப்பாலாழிப்படையுடனேவந்துவந்துபடிறுதீர்நீ
யாலாலநுண்டுளைப்பற்பணியணையாயணையாயென்னனந்தையானே. (682)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடிடைமடக்கு.

இதனுள், தோலாத தோல் – சிங்கவேற்றிற்குந் தோற்றிடாத கெசேந்திரன். நோக்குநோக்கு – அழகியகண்கள் ; பார்க்குங்கண் களென்றுமாம்.
ஆதபன் – சூரியன். உபயசுடர் – ஒழிந்த இந்துவும் அக்கினியும். மேலாக மூன்றுடைய வென்பதனை ஆகமேன் மூன்றுடைய என மாறி,
சொரூபத்தின்மேல் நோக்குமூன்றாகவுடைய வெனவியைக்க.
சிவனயன் கேட்பவும் என்பது சிவனும் அயனும் கேட்கும் படிக்கும் (உம்மையால்) யாவருங் கேட்பவும் என்பதாம்.
அழைப்ப – மூலமேயென் றொருகாற் கூப்பிட. மேனாள் – பண்டு. பாலாழிப்பால் – திருப்பாற்கடலுட் கடவுள் ;
“பாலதாணையி” னென்பதா லறிக. வந்து வந்தென்பதை உவந்துவந்து என மாறுக.
படிறுதீர்நீ – இடுக்கண் டவிர்த்த நீ. ஆலால நுண்டுளைப்பற் பணியணையாய் – துளும்புநஞ்சினைக் கக்குஞ் சிறியதுளைப்பற்
பாம்பணையையுடையாய். அணையாயென் னனந்தையானே யென்பது – என்னை அனந்தபுரத்தானே ! அணைவாயாக வென்பதாம்.

(இ-ள்) பாலாழியுட்கடவுளாகிய அனந்தபுரத்து மாதவனே ! கெசேந்திரன், சிவனும் அயனுங் கேட்க மூலமே
யென்றழைப்பச் சக்கராயுதத்துடன் வந்துதவிய கருணையையுடைய நீ, யான் பலகாலும் நினது
திருமார்பைநினைந் திரங்கவு மென்னை யணையாதது என்ன தறுகண்மையோ வென்றவாறு.
பொருள்கோள் – கொண்டுகூட்டு ; மாட்டுறுப்பெனினு மாம். திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – மெலிவொடுகூறல்.

வயவாற்றவழ்சூல்வளையுயிர்த்தமணிவெண்டரளநிலவெறிக்குங்
கயவாய்க்கயவாய்க்கருமேதிகமலக்கமலக்கழிநறவுண்
டுயவாற்றுயவாற்றிடையுழக்கத்தூநீர்க்கயலேகயலேய்திவ்
வியவாவியவாமரங்கேசனெய்தானெய்தான்மதனம்பே. (683)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடிடைமடக்கு. இதனுள், வயாவென்பது வயவாயிற்று.

(இ-ள்) சூலுளைந்தவருத்தத்தோடுந் தவழுஞ் சூல்வளையீன்ற அழகிய வெண்முத்தம் நிலவுபோலச் சுடர்விடுங் கயத்தினிடத்துப்
பெரிய வாயையுடைய கரிய எருமைச்சாதி, தண்ணீரிடத்துத் தாமரையுக்க மிக்கதேனையுண் டதனாலறிவுதிரிந்து
துய்யவாற்றி னடுவேபுகுந்து கலக்கத் தூயநீரின்கரையருகே கயலுகண்டுசேரும் நல்லவாவியை யுடையவா மிரண்டாற்றினடுவே
வாழ்வுபெற்ற அரங்கநாத னென்னைத் தழுவுகின்றிலன், அதனையறிந்து காமன் றனது மலர்ப்பாணங்களைத் தொடுத்தன னென்றவாறு.
எனவே, இதற் கினிச் செயல் யாதென்பது குறிப்பு. திணையுந் துறையு மிதுவுமது.

நாதனாதனூர்விளங்கிறையெண்ணிலாவெண்ணிலாநகுபோத
வேதன்வேதனைபுரிந்திடமறைதருமறைதரும்விறன்மாயன்
பாதபாதபந்தனையுணர்ஞானமாம்பலன்பலன்றருமாபோ
லோதியோதியினுறுநர்பாற்றருவதுதருவதுமுளதாமே. (684)
இது நான்கடியும் முதலொடிடைமடக்கு.

(இ-ள்) நாத னாதனூர்விளங்கிறை யென்பது சகலதேவன் மார்க்குஞ் சுவாமியாவான், திருவாதனூரின்கண் டோற்றமெய்தின சோதி யென்பதாம்.
எண்ணிலா வெண்ணிலா நகு போத வேதன் வேதனைபுரிந்திட மறைதருமறை தரும் விறன்மாய னென்பது
அலகிறந்த வெண்ணிலாவைப்போலமிளிரும் ஞானத்தையுடைய பிரமன் றுன்புற மது கைடவரான்மறைந்த
வேதத்தை மீளவும் அன்னமாகி ஓதி அவனுக்குபதேசிக்கும் ஞானவென்றியையுடைய மாதவனாமலையிடத்தென்பதாம்.
பாதபாதபந் தனையுணர் ஞானமாம்பலன் பலன்றருமாபோ லென்பது திருவடிகளாகிய கற்பகதரு, தன்னைப்
பிரமமென்றுணரும் ஞானமாகியகனியை யுலகத்துயிர்கட்குதவு மிலாபம்போ லென்பதாம்.
ஓதி யோதியினுறுநர்பாற் றருவது தருவது முள்தாமே யென்பது எல்லாநூல்களையுங் கற்று மலைகளினிடத்திருக்கும் பெரியோரிடத்து அம்மலைகளென்பவற்றினுளுண்டாகியமரங்கள் தரு மான்மலாபங்கள் இல்லை யென்றவாறு.
மாதவனாமலை யென்பது மாட்டேறில்லா வுருவகம். திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து. ஆகமுதலொடிடைமடக்கு-15.

இனி முதலொடுகடைமடக்கு வருமாறு :-

அருங்காயமருங்காயமருந்தனங்கள்வடமேரு
வன்னவன்ன
விருங்காவித்துணைநெடுங்கட்கிணையெனலாந்துணைமென்றோட்
கிணையென்சொல்வேன்
சுருங்காவண்புகழ்த்திருமால்வடமலைமானெழில்புணர்ந்து
துறந்தாராவி
யுருங்காமெய்ந்நிறைதளர்வித்திடுமுணராதிகழ்ந்தனனென்
னுயிரைமன்னோ. (685)
இது முதலடி முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) அளவிடற்கரிய ஆகாயம் இடையாகவமராநிற்கும் ; அதன் மேன் முலையிரண்டு மிரண்டுமேருவையொத்தன ;
நிறத்தையுடைய பெருமைபொருந்தின நீலோற்பலமிரண்டும் நெடியகண்ணிணையென்று சொல்லப்படுவதாம் ;
இவையன்றி இணையாகிய மெல்லியதோள்கட் குவமை யாதென்று கூறுவேன்?
ஆகையால் இம்மானின தவயவி யவயவங்களின்காந்தி, இவளைப்புணர்ந்து நீங்கினாரான்மாவை யுருக்கி,
நிறையைத் தளர்வித்திடுமென்பதனையறியாதே மிகவு மென்னுயிரனை யானை யிகழ்ந்தன னென்றவாறு.

எனவே, இகழ்ந்தது தகாதென்பது பயன். இதனுள், உருக்கா வென்னும் வினையெச்ச எதிர்மறைவாய்பாடு,
உருங்காவென மெலிக்கும் வழிமெலிந்துநின்று, தளர்வித்திடுமென்னுந் தன்வினைகொண்டது.
மன் ஆக்கம். ஓகாரம் ஈற்றசை. பகுதி – பாங்கற்கூட்டம். துறை-பாங்கன் றலைவனையிகழ்ந்ததற் கிரங்கல்.

வயல்வாய்மென்முறுக்கவிழ்ந்ததாமரைவாய
வதனராசிக்
கயல்வாவிக்கயல்வாவித்துணையுடனேயமைவரக்கண்
டப்பாலப்பால்
வியல்வாய்தண்செறுவுழுநர்மகளிர்துணைவிழிமுகமும்
வெய்யபோதுந்
துயவாலங்கறிவரிதாங்* குறுங்கேசனெனும்பிறவித்
துயர்போமன்றே. (686)
இஃ திரண்டாமடி முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) வயலினிடத்து மெல்லியமுகையாய்ப் பிணியவிழ்ந்த தாமரைக்கண், அந்த வயல்வாய்க் களைகடியு மகளிர்முகசமூகத்துக்கயல்,
வாவியினிடத்துக் கயல்கள் பாய்ந்து இரண்டாகத்தங்க, அந்த வயற்கடுத்த அவ்விடத்து, தண்ணீர்துளும்பும்பரப்புடைய
குளிர்ந்த வயலின் கண் ணுழு மள்ளர், வயலிற் களைகடியும் முற்கூறிய மகளிர்துணைவிழியோடுகூடிய முகத்தினையும்,
கண்டார்விரும்புங் கயல்தங்கு தாமரைப் போதினையும் மயக்கத்தாற் பகுத்தறிவரியதன்மையராய் வாழுஞ் செய்கையையுடைய
குறுங்காபுரிக்கீசனேயென் றுலகத்துள்ளீர்சொல்லுமின் ; நுமது பிறப்பாயதுயர் நும்மைவிட்டு நீங்கு மென்றவாறு.
திணை – பாடாண். துறை – ஓம்படை. செவியறிவுறூஉ, வாயுறைவாழ்த்தினுஞ்சாரும்.
* குறுங்கை – திருக்குறுங்குடி.

மாந்தரிலொன்றெனலாயமனுராமனேவலிற்போய்
வாரிதாவி
யேந்தெழிற்பொன்னாழியினைச்சானகிகைக்கொடுத்தருள்பெற்
றிலங்கைமூதூர்
வேந்தனையும்வேந்தனையும்விண்ணிடைவைத்தேமீட்டும்
வேலைவேலை
பாய்ந்தெளிதிற்கண்டனன்றேவியையென்றாற்கிணையெவரே
பகருங்காலே. (687)
இது மூன்றாமடி முதலொடுகடைமடக்கு.

இதனுள், அருள்பெற் றிலங்கைமூதூர் வேந்தனையும் வேந்தனையும் விண்ணிடைவைத் தென்பது பிராட்டியருள்பெற்ற
பின்ன ரிலங்கையாகிய பெரியவூரை யெரிகொளுத்தி யது வெந்துகூடுமளவும் அந்நகர்க் கரசனாகிய இராவணனையும்
அவன்சேனாபதித்தலைவரையும் ஏழுநாள் விசும்பிலிருத்தி யென்பதாம்.
வேலைவேலைபாய்ந் தென்பது பரந்தகடலைக் கடந்தென்பதாம். கண்டனன் றேவியை யென்றாற் கிணை யெவரே
பகருங்கா லென்பது சீதையைத் தரிசித்தன னென்ற திருவடிக்கு விசாரித்துச்சொல்லுங்கா லுலகத் தொப்பா ரொருவருமில்லை யென்பதாம்.
ஒழிந்தனவு முரையிற்கொள்க. திணை-வாகையைச் சார்ந்த பொதுவியல். துறை – தூதுவென்றி.

ஓவாதகருங்கடன்மொண்டெழுபருவப்புயல்பெயலோடுபயகண்ணீர்
தூவாநின்றுறுபுணரிக்கிடைவலவாகொடிநெடுந்தேர்தூண்டுமாற்றாற்
றேவாதிதேவனெனுந்திருநெடுமால்புவிமகள்கோன்சிறந்தசெல்வ
நாவாயினாவாயினடைவதல்லாலடைவதிடனாமேநாமே. (688)
இது நாலாமடி முதலொடுகடைமடக்கு.

இதனுள், நாவாயி னாவாயினடைவதல்லா லென்பது திருநாவா யென்னுந் திருப்பதியினிடத்துக் கப்பலிற்சென்றடைவதல்லாதே யென்பதாம்.
அடைவதிடனாமேநாமேயென்பது நாமடைவ துண்மை யாமோ வென்பதாம். விரைவிற்சென்றடைவ துண்மையாகா தென்றவாறு.
ஏகார மிரண்டனுள், முதலது எதிர்மறை. ஏனைய தீற்றசை பகுதி பொருள்வயிற்பிரிதல். துறை – பாகனைவெறுத்தல்.
இவை நாலு மோரடி முதலொடுகடைமடக்கு. இனி யீரடி முதலொடுகடைமடக்கு வருமாறு :-

விண்டுவிண்டுவீழ்தரும்படிமுருகவேள்விடவேல்வேல்
வண்டுவண்டுவீழ்காவிமாவடுவுமைபூமான்மான்
அண்டராரமிர்தமர்விழிமலைமுலையவளாடக்
கண்டகாவரங்கேசர்தங்கனவரைக்கடிகாவே. (689)
இது முதலடியிரண்டும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) விண்டுவிண்டு…. விடவேல்வே லென்பது மலைபிளந்து வீழும்படி குமரனெறிதற்குப்பொருந்தின வேலு மென்பதாம்.
வண்டு வண்டுவீழ்….. பூமான்மா னென்பது அம்பும், வண்டுகள் தேனையுண்ணவிரும்பு நீலோற்பலமும், மாவடுவின்பிளவும்,
உமாபதிகரத்தின்யாகிய பெரியவூரை யெரிகொளுத்தி யது வெந்துகூடுமளவும் அந்நகர்க் கரசனாகிய
இராவணனையும் அவன்சேனாபதித்தலைவரையும் ஏழுநாள் விசும்பிலிருத்தி யென்பதாம்.
வேலைவேலைபாய்ந் தென்பது பரந்தகடலைக் கடந்தென்பதாம். கண்டனன் றேவியை யென்றாற் கிணை யெவரே
பகருங்கா லென்பது சீதையைத் தரிசித்தன னென்ற திருவடிக்கு விசாரித்துச்சொல்லுங்கா லுலகத்
தொப்பா ரொருவருமில்லை யென்பதாம். ஒழிந்தனவு முரையிற்கொள்க.
திணை-வாகையைச் சார்ந்த பொதுவியல். துறை – தூதுவென்றி.மானு மென்பதாம்.
அண்டராரமிர் தமர்விழி…….. கடிகாவே யென்பது அமிர்தும் போன்ற அமர்செய்யும்விழியையும்,
மலைபோன்ற முலையையுமுடையா ளவள் விளையாடக்கண்டகா, நண்பனே !
அரங்கேசரது மேகந்தவழும்வரையினிடத்துக் காவலையுடையசோலையென்ற றிவாயாக வென்பதாம்.
எண்ணும்மைகள் தொக்குவிரிந்தன. ஏல்வேல் – வினைத்தொகை. நண்பனே யென்னும் முன்னிலை தோன்றாதுநின்றது.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.

அண்டமண்டமுண்டகிலமுநிலையழிந்ததனாலால்
பண்டுகண்டுயிலணையுளானவன்மகன்படைபௌவ
முண்டமுண்டமாமுனிநிகர்காதிகான்முறைமுன்முன்
கண்டவில்லினைக்கண்டவில்லாக்கினனெமர்கண்ணே. (690)
இது முதலடியும் மூன்றாமடியும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) அண்டமண்டமுண்டகிலமுநிலையழிந்ததனா லென்பது அண்டத்தை மேலேயோங்கி யோடாநின்ற பிரளயம்,
எல்லாவுலகத்தையு முண்டதனாலே யென்பதாம். ஆல் பண்டு கண்டுயி லணையுளா னவன் மகன் படை பௌவ மென்பது
ஆலாகிய அமளியுள்ளான்மகனாகிய பிரமன்படைத்த உப்புக்கடலை யென்பதாம்.
உண்ட முண்டமாமுனி நிகர் காதிகான்முளைமுன் மு னென்பது உண்ட குறுமுனியையொத்த காதிசேயாம்
விச்சுவாமித்திரன் முன்னே முன்னா ளென்பதாம்.
கண்ட வில்லினைக் கண்டவில்லாக்கின னெமர்கண்ணே யென்பது அவன்கண்ட வில்லினைக் கையினாற் றுண்டப்பட்ட
வில்லாக்கின னெவ னவ னெம் போல்வார்கண்போல்வா னென்பதாம். ஒழிந்தனவு முரையிற்கொள்க.
திணை- பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

கற்றவர்கற்றவர்வியப்பான்வளைத்தவன்மூவெயின்முருக்கக்
கணையானானா
னற்றவர்தம்மகந்துறப்பதற்றவன்வெள்ளியங்கிரியை
யடியோடேந்தப்
பெற்றவளங்கெழுமதுகையிருபதுகையுடைவயிரப்
பிறங்கல்போன்ற
கொற்றவன்கொற்றவன்சிரத்தைக்குறைத்தவனூர்தமிழ்மறைசங்
கோவில்கோவில். (691)
இது முதலடியும் நான்காமடியும் முதலொடு கடைமடக்கு.

இதனுள், கற்றவர் கற்றவர்வியப்பான் வளைத்தவன் மூவெயின் முருக்கக் கணையானான் நானற்றவர்தம்மகந் துறப்பதற்றவன்
என்பது கல்லை வில்லாகத்தனுசாத்திரங்கற்றவ ராச்சரியமுற வளைத்தவன் பொன்னும் வெள்ளியும் இரும்புமான
மூன்றுகோட்டையையுமழிக்க அவனுக்குக் கணையானவன், நானென்னு மாங்காரமில்லாதாரிதயத்தை விட்டுநீங்காதவன் என்பதாம்.
கொற்றவன்கொற்ற வன்சிரத்தைக் குறைத்தவனூர் தமிழ்மறை சங் கோவில் கோவி லென்பது இலங்கைக்கரசன் வெற்றி
பொருந்தின வலியசிரத்தைக் கணையாற்குறைத்தவ னுறையும்பதி, திருவாய்மொழியாகிய தமிழினொலியுஞ் சுருதியாகிய
வடமொழியொலியுந் திருச்சங்கொலியும் ஒழிவில்லாத திருவரங்கம் பெரியகோவி லென்பதாம்.
ஒழிந்தனவு முரையிற்கொள்க. திணை – பாடாண். துறை – நகரவாழ்த்து.

குன்றலைக்குமிருபதுகைக்குன்றினைக்கொன்றுலகளித்த
குறுங்கைக்கோமான்
கன்றலைக்குங்குணிலெனச்செங்கனியுதிர்த்தோனணைகிலன்மேற்
களைகண்யாதோ
தென்றலைத்தென்றலைத்தேராய்வருமதன்விற்கரும்பாய்நாண்
டேனாய்தேனாய்
மன்றலைமன்றலைக்காவின்மலரம்பாய்வருமதிகொல்
வானில்வானில். (692)
இது கடையீரடியும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) கயிலையாகியகுன்றினை யெடுத் தசைக்கு மிருபதுகையை யுடையனாங் குன்றுபோன்ற இராவணனைப்
பாணத்தாற்கொன் றுலகத் துயிர்களைக் காத்த குறுங்கைக்கரசனாகிய கன்றைக் குறுந்தடியாகக் கொண்டு
கனியுதிர்த்த மாயோன், தன்னை விரும்பப்பட்ட என்னைத் தழுவுகின்றிலன்,
ஆதலால், தென்றிக்கிற் றென்றலானதைத் தேராகவும், கரும்பை வில்லாகவும், பூவிற்றேனையாராயப்பட்ட வண்டை நாணாகவும்,
மணத்தைப் பொருந்தின தலைப்பட்ட காவின்மலர்களை அம்பாகவுங் கொண்டு மதனன் வாராநின்றனன் ;
வானில் மதி யமனைப்போல் மேல் வரும் ; இனி இதற்கு மேற் களைகண் யாதோ அறிகிலே னென்றவாறு.
கொல்வான் – நமன். திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – மெலிவொடுவைகல்.

கோட்டுநித்திலக்குவையொடுங்குங்குமத்தொளிமீதே
பூட்டுபூட்டுவெம்முலைமலையிடைபொறாதேவீவீ
நாட்டுநாட்டுதலின்றுறீஇநாங்கைமால்வரையார்யார்
மீட்டுநீள்குழற்காட்டின்மேற்பன்மலர்வேய்ந்தாரே. (693)
இஃ திடையீரடியும் முதலொடுகடைமடக்கு.

இதனுள், கோட்டுநித்திலக்குவை யென்பது சங்கீன்ற முத்தின் றிர ளென்பதாம்.
பூட்டுபூட்டு வெம்முலைமலை யென்பது பூட்டப்பட்ட பூணையுடைத்து, விருப்பத்தைத்தரும் முலையாகியமலை யென்பதாம்.
இடைபொறாதே வீவீ யென்பது முலையாகியமலைகள், தம்மைத்தாங்கு மிடையானதற்குத் தம்மைப்பொறாதே இறுதியைக்கொடுக்கு மென்பதாம்.
நாட்டுநாட்டுதலின்றுறீஇ நாங்கைமால்வரையார்யா ரென்பது நாளையுடைத்தென்று கண்டார்குறித்தலை இக்காலத்தறிந்தும்,
திருநாங்கைமாயோன்வரையார் யார்தா மென்பதாம்.
மீட்டு நீள்குழற் காட்டின்மேற் பன்மலர்வேய்ந்தா ரென்பது அதன்மேலே மீளவும் நீண்ட குழலாகியகாட்டின்மேற்
பலமலரையும் அணிந்தவ ரென்பதாம். பூட்டு பூணையுடைத்து. வீவீ-இறுதலைக்கொடுக்கும்.
நாட்டு – நாளையுடைத்து. நாட்டுதல் – குறித்தல். பகுதி – பாங்கற்கூட்டம். துறை – மருங்கணைதல்.

படுகொலைவாளாக்கனைக்கொன்றுலகளித்தான்வடமலைபோற்
பணைத்தகொங்கை
யிடுகிடையொன்றிடுகிடையொன்றேனுமதுபொறுக்கலா
தென்றாலென்றால்
விடுகதிர்வெவ்வழல்கதுவியடிநிலந்தோயாதெழின்மெல்
லியலையானே
கொடுகொடுவன்சுரங்குறுகினன்னுதாஅலென்னிருதோட்
குன்றுங்குன்றும். (694)
இது முதலயலடியும் நாலாமடியும் முதலொடுகடைமடக்கு.

இதனுள், நன்னுதால் – நல்லநுதலையுடையவளே !
வடமலைபோற் பணைத்தகொங்கை யென்பது முலைகளிரண்டும் வடமலைவாணன்மலை போலப் பணைத்தன வென்பதாம்.
இடுகிடையொன் றிடுகிடையொன்றேனு மதுபொறுக்கலாதென்றா லென்றா லென்பது சிறுகிய இடையுமொன்றே ; சேம இடையில்லை ;
இதன்மே லினி இடப்பட்ட கிடைச்சர மெனினு மதுவும் பொறாதென்றறிந்தா லதன்மேலும் ஆதித்தனாலென்பதாம்.
விடுகதிர்வெவ்வழல்கதுவி யடி நிலந்தோயா தென்பது நீட்டப்பட்ட கிரணங்களாலுண்டான வெம்மையையுடைய
அழல் பற்றுதலால் நடப்போர்பாதங்க ணிலத்திற் றோயா தென்பதாம்.
எழின் மெல்லியலை யானேகொடு கொடுவன்சுரங் குறுகி னென்னிருதோட் குன்றுங்குன்று மென்பது
அழகிய மெல்லிய சாயலையுடையாளை யான் கொண்டுபோய்க் கொடிய வன்சுரத்தை யணுகில்
அவளது மலர் போன்ற தாள்களை என்சொல்லவேணும், எனது இருதோள்களாகிய மலைகளும் மெலிவெய்து மென்பதாம்.
ஆதலா லுடன்கொண்டுபோகக் கூடாதென்பது பயன். பகுதி – உடன்போக்கு. துறை – அருமை கூறல்.
இவை யாறு மீரடி முதலொடுகடைமடக்கு.

இனி மூன்றடி முதலொடுகடைமடக்கு வருமாறு :-

பொய்யாமைபொய்யாமையானுடனைம்புலனவித்த
பொற்பார்பொற்பார்
மொய்யாமொய்யாடரக்கர்முரணழிப்பாயெனவிரங்கி
முன்பின்முன்பின்
கையாற்கையாற்றினொடும்பொருசரந்தொட்டழித்ததனாற்
காமர்காமர்
மெய்யானதெரித்தவற்கும்பரனயோத்தியிலுதித்த
வேந்தர்வேந்தன். (695)
இது முதலடிமுதலிய மூன்றடியும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) பொய்யாமைபொய்யாமையுரனுட னைம்புலனவித்த பொற்பார் பொற்பா ரென்பது சத்திய
வசன மிடைவிடாத ஞானத்துடன் புலனைந்தையும் வென்ற பொலிவினையுடையோரா முனிவரும்,
பொன்னுலகின்கண்ணுள்ள விண்ணோரு மென்பதாம். பொற்பார் – இடத்தானான ஆகுபெயர்.
மொய்யா மொய்யாடரக்கர் முரணழிப்பாயென விரங்கி யென்பது திருப்பாற்கடலிற் றிரண்டுசென்று அமர்விளைக்கும்
அரக்கராகியபகையை யழிப்பாயாகவென்று முறையிட்டதற் கிரங்கி யென்பதாம்.
முன்பின் முன்பி னென்பது முன்னாளில் மிடுக்கினையுடைய வென்பதாம்.
கையாற் கையாற்றினொடு மென்பது கைகளாற் காவலா மொழுக்கத்தோடுமென்பதாம்.
பொருசரந்தொட்டழித்ததனா லென்பது போரையுடைய பாணத்தை யேவி யந்தப் பகையை யொழித் தவர்
துன்பத்தைக் களைந்ததனா லென்பதாம்.
காமர்காமர் மெய்யானதெரித்த வற்கும் பா னயோத்தியிலுதித்த வேந்தர்வேந்த னென்பது காமனார் அழகிய வுடலை
யெரித்த சிவனுக்கும் அயன்முதலோர்க்கும் பரனாவான்.
திருவயோத்தியில் திருவவதாரஞ்செய்த அரசர்க்கெல்லாமரசனா மிராம னென்றவாறு. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

அன்றினரன்றினராகிக்கடைதுறந்தார்களிலிலங்கை
யாளியாளி
மென்றினைமென்றினைதலைத்தீர்கிளிமொழியைப்பிரித்தவன்றன்
மெய்யின்மெய்யி
னின்றறியாமனமதனிற்குடக்கன்னன்மருமத்தி
னிரலம்பேவிக்
கொன்றையன்கொன்றையன்முதலோரிடர்களைந்தானகர்தமிழோர்
கூடல்கூடல். (696)
இஃ தீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) அன்றின ரன்றினராகிக் கடைதுறந்தார்களி லென்பது முற்காலத்து அடிமைத்தமராயினார் சாபத்தாற் சத்துருக்களாகி
வாயில்காக்குந்தொழிலைவிட்டுநீங்கினா ரிருவரு ளென்பதாம்.
இலங்கை யாளி யாளி யென்பது இலங்காபுரியையாண்டவனாஞ் சிங்கவேறு போன்றவனாகிய வென்பதாம்.
மென்றினைமென் றினைதலைத்தீர் கிளி மொழியைப் பிரித்தவன்றன்மெய்யின் மெய்யினின்றறியா மனமதனி லென்பது
மெல்லிய தினையைத்தின்று பசியால்வரும் வருத்தத்தைப் போக்கும் புனக்கிளியினது மொழிபோலு மொழியையுடைய
பிராட்டியைத் தன்னைவிட்டுநீக்கினவன் மேனியிலும், உண்மையி னிலை பெற்றறியா மனத்திலு மென்பதாம்.
குடக்கன்னன்மருமத்திலென்பது கும்பகருணன்மருமத்திலு மென்பதாம்.
நிரலம்பேவி யென்பது ஒரு தொடையிற் பல அம்பைத் தொடுத்தேவி யென்பதாம்.
கொன் றயன் கொன்றையன்முதலோ ரிடர்களைந்தானகர் தமிழோர் கூடல்கூட லென்பது அவ்விருவரையுங்கொன் றயனுஞ் சிவனும்
முதலியோபோரையுடைய பாணத்தை யேவி யந்தப் பகையை யொழித் தவர் துன்பத்தைக் களைந்ததனா லென்பதாம்.
காமர்காமர் மெய்யானதெரித்த வற்கும் பா னயோத்தியிலுதித்த வேந்தர்வேந்த னென்பது காமனார் அழகியவுடலையெரித்த
சிவனுக்கும் அயன்முதலோர்க்கும் பரனாவான். திருவயோத்தியில் திருவவதாரஞ்செய்த அரசர்க்கெல்லாமரசனா மிராம னென்றவாறு.
திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

அன்றினரன்றினராகிக்கடைதுறந்தார்களிலிலங்கை
யாளியாளி
மென்றினைமென்றினைதலைத்தீர்கிளிமொழியைப்பிரித்தவன்றன்
மெய்யின்மெய்யி
னின்றறியாமனமதனிற்குடக்கன்னன்மருமத்தி
னிரலம்பேவிக்
கொன்றையன்கொன்றையன்முதலோரிடர்களைந்தானகர்தமிழோர்
கூடல்கூடல். (696)
இஃ தீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) அன்றின ரன்றினராகிக் கடைதுறந்தார்களி லென்பது முற்காலத்து அடிமைத்தமராயினார் சாபத்தாற் சத்துருக்களாகி
வாயில்காக்குந்தொழிலைவிட்டுநீங்கினா ரிருவரு ளென்பதாம். இலங்கை யாளி யாளி யென்பது இலங்காபுரியை
யாண்டவனாஞ் சிங்கவேறு போன்றவனாகிய வென்பதாம். மென்றினைமென் றினைதலைத்தீர் கிளி மொழியைப்
பிரித்தவன்றன்மெய்யின் மெய்யினின்றறியா மனமதனி லென்பது மெல்லிய தினையைத்தின்று பசியால்வரும்
வருத்தத்தைப் போக்கும் புனக்கிளியினது மொழிபோலு மொழியையுடைய பிராட்டியைத் தன்னைவிட்டுநீக்கினவன் மேனியிலும்,
உண்மையி னிலை பெற்றறியா மனத்திலு மென்பதாம். குடக்கன்னன்மருமத்திலென்பது கும்பகருணன்மருமத்திலு மென்பதாம்.
நிரலம்பேவி யென்பது ஒரு தொடையிற் பல அம்பைத் தொடுத்தேவி யென்பதாம்.
கொன் றயன் கொன்றையன்முதலோ ரிடர்களைந்தானகர் தமிழோர் கூடல்கூட லென்பது அவ்விருவரையுங்கொன் றயனுஞ் சிவனும்
முதலியோரிடும்பையைப்போக்கினா னிருக்கு நகர் தமிழ்ச்சங்கத்தார் கூடியிருத்தலை யுடைய மதுராபுரியா மென்றவாறு.
திணை – பாடாண். துறை – நகரவாழ்த்து.

வானைநீவியவரைகளுயர்மரங்களனைத்தையும்வா
னரங்களாய
தானைதானையவாக்கொண்டமர்விளைநாள்வீடணனார்
தம்முன்றம்முன்
னானையானையினுதிவன்கோடுழுமார்பனையுயிருண்
டம்பாலம்பா
லேனையேனையர்வியப்பான்மீட்டவனல்லாற்பொருள்வே
றென்னாவென்னா (697)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) வானைநீவியவரைக ளுயர்மரங்களனைத்தையு மென்பது மேகபடலத்தைத் தைவரு மலைகளு மரங்களுமாகிய
அனைத்தையு மென்பதாம். வானரங்களாயதானை தானையவாக்கொண் டமர்விளைநாள் வீடணனார்தம்முன் றம்முன்னானை
யானையினநுதிவன்கோடுழுமார்பனை யென்பது மர்க்கடங்களாகிய படைக ளாயுதமாகக் கைக்கொண்டு
செருச் செய்யாநின்றகாலத்து வீடணனார்தம்முன்பாக அவர்தமையனானானை, அட்டகசங்களின் கூரிய வலிய
கோடுகளழுத்து மார்பானை யென்பதாம். உயிருண்டு அம்பால், அம்பாலேன் ஐ ஏனையர் வியப்பான் மீட்டவனல்லாற்
பொருள் வேறென்னா வென்னா வென்பது அம்பினா லுயிரை யுண்டபின் அழகிய நல்வினையுடையேன்சுவாமினியாகிய
சீதையைத் தன்னையொழிந்த கடவுள் ராச்சரியப்படுவான் சிறையை மீட்டுக்கொண்டு வந்தவனையல்லாதே
வேறேசிலபொருளுண்டென்று என்னுடையநா வோதா தென்றவாறு. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

மூன்றினுமூன்றினுந்தொழிலோடொன்றாமீளாநரகத்
தூடுமூடு
மான்றதுயரிழைநன்றிகொல்வினைபோன்றிடரிழைவல்
லரக்கர்தங்கோ
மான்றலைமான்றலையடைந்தவேனையர்வன்றலையுருட்டு
மாலைமாலைத்
தேன்றழைதேன்றழைதுளபத்தொடையானைத்தொழுஞ்சனனந்
தீரத்தீர. (698)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடுகடைமடக்கு.

(இ-ள்) மூன்றினு மூன்றினுந்தொழிலோடொன்றா மென்பதனை ஊன்றினுந்தொழிலோ டொன்றாம் மூன்றினு மெனப் பாடமாற்றி,
ஒன்றனைக்கொன் றதனூனைத்தின்னுந் தீயதொழிலோ டொத்தகொடுமையை யுடைய பார்ப்பார் பெண்டிர்
பசுவென்னு மிவரைச்செய்யுஞ் சொல்லொண்ணாத தொழின்மூன்றையும்பார்க்க வென்றுரைக்க.
மீளா நரகத்தூடு மூடு மான்றதுயரிழை நன்றிகொல்வினைபோன் றிடரிழை வல்லரக்கர்தங்கோமான்றலை யென்பது
ஒருகாலங்களினும் மீட்சியறநரகங் களினடுவேயிட்டு மூடுதலைச்செய்யு மிக்கதுயரையுண்டாக்குஞ் செய்ந்நன்றி கொன்ற
தீவினைபோல மூவுலகிற்குந் துன்பத்தைமிகுத்த இராக்கதர்க்கரசனா மிராவணன்றலையையு மென்பதாம்.
மான்றலையடைந்த வேனையர்வன்றலை யுருட்டும் மாலைமாலை யென்பது மயக்கத்தையடைந்த ஒழிந்த அரக்கர்
வலியதலையையுஞ் சரந்தொடுத்துருட்டும் வெற்றி யினதியல்பையுடைய திருமாலை யென்பதாம்.
தேன் றழை தேன்றழை துளபததொடையானைத் தொழுஞ் சனனந் தீரத்தீர வென்பது தேனுமிலையும் வண்டுமிகுதலு முடைய வனமாலையானை,
உலகத்துள்ளீர் நுமதுசெனனஞ் சந்தயமறத்தவிரும்படிக்கு வணங்குவீ ரென்றவாறு.
இதனுள்ளும், பலவிடங்களினும் எச்சங்களைக் கூட்டியுரைக்க. திணை – பாடாண். துறை – ஓம்படை.

இருந்தாதிருந்தாதரித்துண்ணவரிவண்
டினமேவமலர்முண்டகந்தாயதாய
மருந்தாமருந்தாமமெய்த்தாயுமெய்து
மங்கைக்குமணிமார்பளித்தாயளித்தாய்
சுரும்பாய்சுரும்பாய்மதங்கக்குகரடத்
துடனன்றுமுதலைத்தொடுப்பானையானை
வருந்தாவருந்தாவில்சக்ராயுதத்தாய்
வரமங்கையாயென்மனத்தாய்மனத்தாய். (699)
இது முதற்கண்ணுங் கடைக்கண்ணும் அடிதோறும் முற்றுமடக்கு.

(இ-ள்) பெருமையையுடைய தாதுக்களைப் பூவின்கண்ணிருந்து அன்புடனுண்ணவேண்டிப் பாட்டினையுடைய
வண்டின்கிளை பொருந்த மலர்ந்த தாமரையுந் தாயென்பதாய் இருக்கச்செய்தே, அழகிய அமிர்தமாம் பெறுதற்கரிய
வொளியையுடைய மேனித்தாயையுந் தாயாகவுடைய பெரியபிராட்டியென்னு மங்கைக்குக் கவுத்துவமணியணிந்த
திருமார்பைக் கிருபையுடைத்தாயளிக்கும் பூமானே ! சுரும்புகளாராயப்பட்ட மலையையொப்பதாய் மதத்தினைச்சொரியுங்
கரடத்துடன்கூடி முதலையினது பிடிப்பினால் மேனிநையப்பட்ட கெசேந்திரன் வருந்த அந்நா ளதனிடர் தீர்க்கச்செல்லும்
அழிவில்லாத சக்கரத்தையுடையாய் ! சீவர மங்கையென்னுந் திருப்பதியினுள்ளாய் !
என்மனத்தினுள்ளே குடிபுகுந்து நிலைபெறுவாய், பாஞ்சசன்னியத்தையுடையா யென்றவாறு.
திணை – இதுவுமது. துறை – கடவுள்வாழ்த்து.

ஆக முதலொடுகடைமடக்கு-15.
ஆக வகை யைந்தான்வந்த மடக்கு-75.

இனி இடையொடுகடைமடக்கு வருமாறு :-

தளிநறவப்பொலமலர்கூராவிரையாவிரைவரைதேத்
தாயர்தாயர்
அளியமடத்தகையசோதையிற்புவனத்தறஞ்செய்தார்
யாரேயென்ன
வொளியமைந்தமரகதக்குன்றவண்வளர்நாள்வெண்ணெயிற்கட்
டுண்டுநின்ற
வெளிமையைக்கண்கலுழ்வதைக்கேட்டிரங்குமனங்காண்பவர்க்கன்
றென்னாமன்னோ. (700)
இது முதலடி யிடையொடுகடைமடக்கு.

(இ-ள்) துளிக்குந்தேனையுடைய பொன்போன்றபூவினைத் தன்னிடத்து மிகுத்த ஆவிரையை ஆவானது அருந்தாது
நீக்கும் முல்லை நிலத்தையுடைய ஆயர்க்குத்தாயராயினார், கிருபையுடையமடத்தகையாம் அசோதையைப் போலப்
புண்ணியஞ்செய்தா ருலகத் தியாவருளரென்று சொல்லும்படிக்குப் பச்சைநிற மிகுந்த மரகதக்குன்றம்போன்ற
கண்ணபிரான் றிருவாய்ப்பாடியி லவண்மனையில்வளர்கின்றகாலத்து வெண்ணெய்கட்டுக் கட்டுண்டுநின்ற
வெளிமையையுந் திருக்கண்மலர் கண்ணீர் பனிப்பதனையுங் கேட்டவர்க் குள்ள மின்றிரங்காநின்றதென்றா லன்று
காண்பவர்க் குள்ளமென்னாம் மிகவு மென்றவாறு.

ஓ – அசை. இதனுள், தேம் – இடம் ; அது முல்லைநிலமென்பது ஆவிரைவரைதேத் தென்னுங் குறிப்பினாற்கொள்ளநின்றது.
துறை-கடவுள்வாழ்த்து.

வெங்களபமூர்தரவீதியிற்பனித்தமதத்திடைமென்
பிடியிற்செல்வார்
செங்களபந்திமிர்ந்தளறாய்ச்சேந்தனவாஞ்சேந்தனவாஞ்
சிறுவர்தேர்தே
ரங்குறமண்மகளகலத்தளங்குறுகாதுருளுருளா
வரங்கத்தாய்நீ
யெங்குளனென்றவன்முனமற்றங்குளனானதைப்புகழ்வா
ரெமையாள்வாரே. (701)
இஃ திரண்டாமடி யிடையொடுகடைமடக்கு.

(இ-ள்) கோபத்தையுடைய களியானைகளைப் பாகர் வீதியிற்கடாவ அவை கவுளினாற்சொரிந்த கரிய மதப்பெருக்கிற்
களிற்றொடுதொடுத்த பிடியிற்செல்லுமவர் மடந்தைமார் தமது முலைச்சுவட்டிற் குங்குமத்தைத் திமிர்ந்திட்டதா லக் கரிய
மதநீர் சேறுபட்டுச் சிவந்தனவாக, அச் சிவந்த சேற்றிற் செவ்வேளும்விரும்புஞ் சிறார் தமக்கேற்றமாமென விசாரித்தூருஞ்
சிறுதேரழுந்தி அவற்றின்வண்டிகள் பூமிதேவிமார்பாகிய இடத்தணுகா தச்சேற்றிற்புதைந் தோடாது நிற்குந் திருவரங்கத்தானே !
நீ நின்னை எங்குளானென்றுவினவிய இரணியனோடு மெங்குமுளானென்று புதல்வன்கூற அவ னிங்குளனோவென்றடித்ததூணத்
தங்குளனாகித் தோன்றியதைப் புகழ்வா ரெம்மையாட்கொண்ட தம்பிரான்மா ரென்றவாறு.
திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பணிதல்.

புத்தமிர்தந்தனிற்பிறந்தபொன்கொடியையகலாத
புனிதனாகி
யத்திகிரிதனிலுதித்தகைத்திகிரிப்பரன்பரனென்
பதனைநாடி
யுத்தமநான்மறைகண்மதித்தொன்றுரைதொன்றுரையணங்கே
யோதியோதி
மொய்த்துயர்வன்பரற்கடஞ்சென்றழுந்தவுணர்வதற்கிறைவர்
முயல்கின்றாரே. (702)
இது மூன்றாமடி யிடையொடுகடைமடக்கு

(இ-ள்) அணங்கே ! நமதிறைவர், புதிய அமிர்திற்பிறந்த பொன்னங்கொடிபோன்ற பெரியபிராட்டியைக் கணப்பொழுதும்
விட்டு நீங்காத பவித்திரவானாகி யத்திகிரியினிடத்துதித்த திருக்கைத் திருவாழியுடையபரனே பரப்பிரம மென்பதனைச்
சுருதிகணாலு முத்தம ஞானத்தாலறிந் துயர்த்தி யொன்றுபோலவுரைத்த பழையவுரையைப் பொற்றைகணெருங்கின
வலியபரலையுடைய சுரத்தைக்கடந்து நாட்டின் கட்சென் றாரியருடன் நாவழுந்தவோதி உண்மைதெளிவதற் கேகமுயலா நின்றா ரென்றவாறு.
இது கொண்டுகூட்டுப்பொருள்கோள். தொன்று- பழமை. ஓதி – பொற்றை. பகுதி – ஓதற்பிரிதல். துறை – நினைவுரைத்தல்.

என்புருகவுயிருருகவவற்றினொடுமீறிலா
வின்பம்பெற்ற
வன்புருகப்புணர்ந்தொருநாளகலேமென்றகல்வதுமக்
கறமேயென்னாய்
புன்பொருளைப்புறம்போக்கிநன்பொருளென்னரங்கனெனப்
புகன்றமாற
னன்பொருநைத்துறையுளிருந்திரையுளிருந்திரையுளவார்
நாராய்நாராய். (703)
இது நாலாமடி யிடையொடுகடைமடக்கு.

(இ-ள்) உடலும் உயிரும் உருக அவற்றினோடும் ஒழிவில்லாத பேரின்பத்தைப்பெற்ற வுணர்வுருகக் கலந்து,
இனி யொரு கணத்தும் நின்னிற்பிரியே னென் றுரைத்த நீர் இவளை வைத் தகல்வ துமக் கறமன் றென்று கூறிற்றிலை ;
இதரபுருடார்த்தங்களைவிடுத்து எம்பெருமானே பரமபுருடார்த்தமென்றறுதியிட்ட மாறனது நல்ல பொருநைத் துறையிற்
பெரிய திரைநடுவிருந்து இரையாயுள்ள ஆரன் முதலாயுள்ளவற்றை யுண்ணப்பட்ட நாரையே ! என்னிடத் தன்புடையையா யென்றவாறு.

என்னிடத்தென்பது சொல்லெச்சம். என்பும் அன்பும் ஆகுபெயர். இருந்திரை – பெரியதிரை.
இருந்திரை – தங்கி, இரையை. நார் – அன்பு. பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – பறவையொடு பரிவுற்றுரைத்தல்.
இவை நாலும் ஓரடி யீரிடத்துமடக்கு. இனி யீரடி யீரிடத்துமடக்கு வருமாறு :-

புக்கிலதாயமைந்ததயனகரமயனகரமெழிற்
பொன்னேபொன்னே
தக்கிலராமலைக்குறவர்குறவர்மனையெனத்தெளிந்த
தாமந்தாமந்
தொக்கமரர்தொழப்புரந்தவரங்கேசர்திருமுகம்போற்
சோதிமேய
வக்கமலந்திறந்தெவனோவரையிருளிற்றமியிவணின்
றடைந்தவாழ்வே. (704)
இது முதலீரடியும் இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) அழகிய பொன்னையொத்த திருமகளே ! உனக் கெஞ்ஞான்று மிருப்பதோ ருசிதமான இல்லாயமைந்தது
பிரமன் அகரமாயுறைந்த தாமரையே ; அயலா யொதுக்கிருந்த நகரம், பொருந்துந் தகுதி யிலராம் மலைகளுக் குறவுடையராய
குறவர்மனையென வென்னுள்ளந் தெளிந்ததாம் ; ஆகையாற் பரமபதத்தினிடத்து நித்தர் கூண்டுதொழ அதனையாண்ட
அரங்கேசர்திருமுகம்போற் சோதிமேய பிரமன் அகரமாகிய அக்கமலத்தைத் திறந் தியாதோ நடுச்சாமத்திருளிற் றமி யொருவர்
துணையின்றி யவ்விடத் தடைந்த வாழ் வென்றவாறு.

அகரம் – அந்தணரிருக்கை. அயல் நகரம் – அயலாய மனை. புக்கில் – பின் புறப்படாது புக்கிருக்கும் இல்.
உனக்கென்பது முதலாகியசொற்களைக் கூட்டி விரித்துரைக்க. பகுதி – இரவிற்குறி.
துறை நலம் பாராட்டல் ; தளர்வகன் றுரைத்த லென்பது மிது.

இட்டமணிப்பரற்சிலம்புசிலம்புதளிரேய்ந்தவிரு
தாளந்தாளம்
வட்டமுலைத்துவரிதழ்க்கோமளக்கொடியுமணமகனும்
வாணுதாஅல்போய்ச்
சிட்டர்தொழுமரங்கேசர்காவிரிகாவிரியிதன்முன்
செல்வர்செல்வர்
நட்டதிறந்திருமாதுந்திருமாலுமெனும்படித்தா
நவிலுங்காலே. (705)
இது முதலடியும் மூன்றாமடியும் இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) உள்ளிடுமணியாகிய பரலையுடைய சிலம்பு ஆரவாரிப்பனவாய், மாந்தளிர்போன்ற தாள்களையும்,
அழகியவாந் தாளம்போன்ற வட்டமுலையையும், பவளம்போன்ற இதழினையுமுடைய இளைய பொன்னங்கொடியும்,
மணக்கோலத்தையுடையகாளையும் ஒளிபொருந்தின நுதலினையுடையாய் !
தொண்டராயுள்ளார்தொழும் அரங்கநாதரது, சோலைகள் மலரை மலர்த்தப்பட்ட காவிரித்துறையின்கண் ணிதற்கு முன் செல்வர் ;
அச்செல்வத்தையுடையார் தம்முட்கொண்ட நட்பின் கூறுபாடும்,
பிராட்டியும் மாதவனு மென்று கூறப்படு முவமையுடைத்து, சொல்லுமிடத் தென்றவாறு.
எனவே, நீ போவதாற் பயனில்லை யென்ப தாயிற்று. பகுதி – உடன்போக்கு. துறை – மீளவுரைத்தல்.

குலத்தருவாழ்வாசவனம்பதிவாசவனம்பதிமென்
கோதைக்கோதைக்
கிலக்கணமாம்பதியெனிற்பொன்னலக்காவுமுலகுமா
விந்தமென்னிற்
சொலத்தகுகைத்தலநான்கினிதியமுமாதுளங்கனியுந்
துணைமென்போது
நலத்தகைக்கண்களிதரக்காண்கிலமீதோவிலமீதோ
நாட்டினாட்டின். (706)
இது முதலடியும் நாலாமடியும் இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) மனனே ! மெல்லிய மாலைசூட்டப்பட்டகுழலையுடைத்தா யிங்ஙனநின்ற இவட்கு நல்லபதி,
ஐந்தருவு மாக்கம்பெற்ற பரிமளக்காக் குடிகொண்ட இந்திரனது நல்லபதியென்று விசாரிப்பேமாகில்
அக்காவும் இவ்வுலகமும் பொன்மயமல்ல ; அஃதன்றிப் பதி தாமரையென்று விசாரிப்பேமாகில்,
இவட்கு, நூல்கள் கூறத்தகுவதாங் கரங்கள் நான்காய், அவற்றின்கண் ஐச்சுரியமும், மாதுளங்கனியும், தாமரைப்பூக்களும்
இன்பத்தைப்பெற்ற நமது அழகிய கண்கள் களிதரக் காண்கின்றிலம் ;
இவட்குச் சொன்னவையன்றி இல்ல மிவ்வுலகமோ? விசும்போ? (பரமபதமோ?) இவ்விரண்டிடத்திற் குறிக்கில் யாதோ அறிவரி தென்றவாறு.
யாதோ அறிவரிதென்பதனைப் பயனிலையெச்சமாக்கி விரித்துரைக்க.
மனனே யென்பது தோன்றா எழுவாய். இல்லமென்பதனை மத்திம தீபமாக்கிக் கூட்டுக.
ஒழிந்த அரும்பதங்களுங் குறித் துட்கொள்க. பகுதி – இயற்கை. துறை – ஐயுறல்.

மின்னியனுண்ணிடைகளபப்புளகபடாமுலைகளிணைமேருவாகுந்
தன்னிகர்மற்றில்லாதவிழிக்குவமையரங்கர்துணைத்தாமமான
பொன்னியிடத்தின்பானலின்பானல்வாயிலவம்பூவேபூவே
கன்னிதுவரிதழ்க்குவமையுவமைகுழலுரைக்கவடங்காதேகாதே. (707)
இது கடையீரடியும் இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) பூமியைப்போலப் பொறையுடையாய் ! அழியாத கற்புடையாட்கு, மின்போன்ற இயல்பையுடையது சிறிய இடை ;
மான்மதக் குழம்போடும் புளகிக்கப்பட்ட முலைகள் உபயமேருவொப்பன ; தனக்கு வேறுநிகரில்லாத கண்களொப்பன
அரங்கனுக் கிணைமாலையான காவிரியிற்றோன்றிய நீலோற்பலமே ; நல்ல மொழியானது இனிய பாலே ;
சிவந்த இதழ் இலவம்பூவே ; குழலானது உவக்குந்தன்மையையுடைய மேகமே ; காதானது உவமைகூறுதற் கடங்குவதல்ல என்றவாறு.
உவமை – கண்டார்விரும்பப்பட்ட மேகம். ஒழிந்த அரும்பதமுங் குறித்துட்கொள்க. இறுதியேகார மீற்றசை.
பகுதி – சேட்படை. துறை – தலைவன் பாங்கிக் கவயவங்கூறல்.

கிளர்பைப்பணிமேற்றுயிலரங்கர்கெழுதண்கடற்கானலிற்பான
லுளர்பொற்சுரும்பேபொருநர்முனையுள்ளாருள்ளாரென்கேள்கேள்
வளர்பைச்சடம்பேசடம்பேயின்வடிவாயதுவேவாயதுவே
தளர்வுற்றதுமன்னுயிரெவனோதான்மேலுறுமென்றறியேனே. (708)
இஃதிடையீரடியும் இடையொடுகடைமடக்கு

இதனை, கிளர்பைப்பணிமேற்றுயிலரங்கர் கெழுதண்கடற்கானலிற் பானலுளர் பொற்சுரும்பே ! வளர் பைச்சடம்பே ! கேள்,
என்கேளாகிய பொருநர் முனையுள்ளார் உள்ளார், என்சடம் பேயின்வடிவாயது, வாயதுவே தளர்வுற்றது,
மன்னுயிர் எவனோதான் மேலுறுமென்றறியேனென இங்ஙனம் பாடமாற்றி மாட்டுறுப்பென்னும் பொருள்கோள் கொள்க.

இதனுள், முனையுள்ளா ருள்ளாரென்பது பாசறையுள்ளா ரென்னை நினையா ரென்பதாம்.
பைச்சடம்பே – பசுத்த அடம்புகாள். கேள் – கொழுநரான. கேள் – கேளும். கேளுமென்பது கேளென உம்மைதொக்கது.
உள்ளா ரென்கேளென்பது “என்னீரறியாதீர்போலவிவைகூற, னின்னீர் வல்லநெடுந்தகாய்” என்பதுபோல
ஒருவரைக்கூறும் உபசாரப்பன்மைப் பாலோடு ஒருமைப்பான் மயங்கியது.
சடம் பேயின்வடிவாயது – மெய் பேயின்வடிவாயிற்று. வாயதுவே தளர்வுற்றது – வசனம் குழறியது.
ஒழிந்தனவும் உரையிற்கொள்க பகுதி – வினைவயிற்பிரிதல். துறை-….

மருள்பயில்வல்லவுணரைக்கொன்றரக்கரைக்கொன்றளித்ததல்லால்
வாழ்நாளெண்ணித்
திருவரங்கத்திடைதுயின்றவமுதமேயமுதமே.
தேத்ததேத்த
வுருவளர்வான்புனற்குதரத்துயிர்களைவைத்தளித்தநின்னை
யுவந்திடாதே
யிருணரகத்திடைவீழ்வார்வீழ்வார்மற்றொருதெய்வ
மென்னேயென்னே. (709)
இஃதிரண்டாமடியும் நாலாமடியும் இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) சிறப்புடையுயிர்கள் பெற்றயாக்கையோ டிருக்குநாள்கழிந்து, இன்னும் ஓ ரீனயாக்கையுட்புகுதுநா ளெய்தாதே
சோதிச்சொரூபமான யாக்கையுட்புக்குப் பரமபதப்பேரின்பத்தை அனுபவித்து வாழுநாள் பெறவேண்டுமென்று திருவுளத்துற்று,
அர்ச்சாவதாரமாகி, அரங்கத்தினடுவே கண்வளர்ந்த அமுதே !
முன்னாள் நீ அறியாமை யிடைவிடாத அவுணரைக் கொன்று காத்ததோடும், அரக்கரையுங்கொன் றுலகுயிர்களைக் காத்ததல்லாமலும்,
ஏகோதகப் பிரளயமிகுந்ததேயத்துட் கரசரணாதிகளிழந்த வுயிர்களை அக் கழிபெரும்புனலுள் அழியாது திருவுதரத்துள்வைத்துக்
காத்த நினது செய்ந்நன்றியறிந்து, நின்னை விரும்பாதே, இருண்டநரகத்துள்மேல் விழுவார், பிறிதொருதெய்வத்தை விரும்பாநின்றனர் ;
இஃதென்ன செய்ந்நன்றியறிதல் ! அந்தோ? என்றவாறு.

பின்னர்வந்த அமுதம் ஏகோதகம். தேத்த – மிகுந்த. தேத்து – இடத்து. அவ் – சுட்டு. வீழ்வார் – விழுவார். வீழ்வார் – விரும்புவார்.
என்னே – என்ன. என்னே – அந்தோ. திணை – பாடாண். துறை – பரவார்ப்பழித்தல். இவை யாறும் ஈரடி ஈரிடத்துமடக்கு.

மன்னுயிரைக்குறித்துளநைந்துளவத்தாதுளவத்தா
மாயாமாயா
பொன்னிநடுத்துயில்பரமாபரமாகாயத்தும்விருப்
புள்ளாய்புள்ளாய்
பன்னருமூன்றுடனமையஞ்சக்கரத்தாய்சக்கரத்தாய்
பாராய்பாராய்
நன்னிலைபெற்றெழுபூதமீற்றனவாயைவரெனை
நலியாவாறே (710)
இஃ தீற்றடியொழித் தேனைமூன்றடியும் இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) நிலைபெற்றவுயிர்களைக் காப்பதுகருதித் திருவுள்ளங் குழைவதுள்ள அத்தனே ! துளவமாலையுடையவனே !
ஒருகாலமும் அழியாத மாயவனே ! பொன்னிநடுவே துயில் பரமனே ! பரமபதத்தினும் லீலாவிபூதியினும் அன்புள்ளவனே !
கருடவாகனத்தையுடையவனே ! சொல்லிப்புகழ்தற்கரிய ஐந்தும் மூன்றுமாகிய திருவட்டாக் கரத்தையுடையவனே !
சக்கரத்தையுடையவனே ! பூமியென்பதாய் நல்ல நிலைபெற்றுத்தோன்றும் பூதமீறாகவுடையனவாம்
ஐந்து பூதவாயில்களில் ஐந்து புலன்களும் என்னை வருத்தாவண்ணம் உனது திருக்கடைக்கண்ணாற் பார்ப்பாயாக என்றவாறு.
திணை – இதுவுமது. துறை – கடவுள்வாழ்த்து.

உரங்காயுமன்னரவைமன்னரவையுவப்பவுதைத்
தாடலாட
லரங்காய்முன்னடியரங்காவடியரங்காதரித்திடவோ
ரம்பாலம்பா
லிரங்காழிவளைத்தவெயிலிலங்கையர்கோனையும்வதைசெய்
யெந்தாய்நின்னைப்
பரங்காணென்றிருந்தவிருந்தவர்தமைச்சுற்றாதியம
பாசம்பாசம். (711)
இஃ தீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) சத்துருக்கள் மிடுக்கைக்கொடுக்கும் நிலைபேறுடைய பாம்பைத் தெய்வ அரசர் விருப்பமுறத் தாளினா லுதைத்து
வெற்றியுடனாடும் அரங்காக முற்காலத் தாடும் அரங்கனே ! அடியராகிய தேவர் தேவருலகத்தினிலிருந் தன்புற்றிட
ஓரம்பினாலே, புனலலைதலுடனே ஆரவாரிக்குஞ் சமுத்திரம் வளைக்கப்பட்ட மதிலையுடைய
இலங்கையிலுள்ளார்க்கரசனாகிய இராவணனையும் வதைத்த எம்முடைய தாயே ! நின்னை, நெஞ்சமே !
இவன்காண் பரத்துவ மென்று காண்பாயாகவென்று யோகித்திருந்த பெரியதவத்தையுடையோரை இயமபாசமும்,
மண் பண் பொன் னென்ற பாசத்தளையும் வளையா தென்றவாறு. நெஞ்சேயென்பது முதலியன சொல்லெச்சம். துறை – இதுவுமது.

கெடலருமெய்த்தரணிதரணிகளழுங்கமறைந்ததுபோய்க்
கேளீர்கேளீ
ரடலருமாளியினிரைத்தாறலைப்பவருண்டிரவிவண்வை
கலுந்தேனார்ந்தே
மடலவிழ்தண்டுளபத்தானாங்கையினாங்கையினளிப்ப
வதுவையாயாய்
தொடலைநறுங்குழற்குழற்றேமொழியொடும்வைகுறுமறுகிற்
றோன்றறோன்றல். (712)
இது முதலயலடியொழித்தேனைமூன்றடியும்இடையொடுகடைமடக்கு.

(இ-ள்) கேடில்லாத மெய்ம்மையையுடைய ஆதித்தன் குடகடற் புகக் கிரணம், பூமியிலுள்ளா ரிரங்க மறைந்தது ;
எமக்குக் கேளாகுவீர் ! யாங்கூறுவதனைக் கேட்பீராக ; ஒருவராலும் அடுத்தற்கரிய சிங்கம்போன் றாரவாரித்து, வழிபறிப்பவரு முண்டு ;
ஆகையால் இரவின்கண் ணெம் மிடத்து வைகுதலோடும், தேனும் விருந்தாக அருந்தி, நாங்கள் கைப்பிடித்துத்தரக் கலியாணமு மெய்தி,
ஆராயப்பட்ட மாலையைச்சூட்டும் நறுவிதாங் குழலையும், குழலிசைபோலும் தேன்போலும் மொழியையு முடையாளோடும்
வைகறையிற் றுயிலொழிந்தெழுந்து துளபத்தானது திருநாங்கைமறுகிடத்திற் பெரியோனே ! தோன்றுவாயாக வென்றவாறு.

கேளீரென்பது இருவரையும். தோன்றலென்பது அண்மைவிளி. பொருள்கோள் – கொண்டுகூட்டு.
பகுதி – உடன்போக்கு. துறை – நெறி விலக்கிக்கூறல்.

அலம்வருசெங்கதிராழிகணிச்சியினுங்கொடிதுணராதணுகாதேநீ
நிலனிடைமன்னுயிர்பிரிக்குநடுக்கற்றாய்நடுக்கற்றாய்நின்னினின்னி
னலனுடைவானவர்துதிக்கைத்துதிக்கைமலையழைத்தவனென்னாதனாமா*
மலர்மகள்சேர்மணிமார்பன்வைகலும்வைகலுமறுகில்வண்டூர்வண்டூர். (713)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் இடையொடுகடைமடக்கு.

*இக் கடைமடக்கு. அயலடிமுதலெழுத்துள்ளும் மெய்யெழுத்து, பொருளொழியப் பிரிந்து சேர்ந்து ஆம் ஆம் என வந்ததுபோலும்.
இதனுள், நடுக்கற்றாய் நடுக்கற்றாயென்பது நடுவுநிலைமைகற்றவனே ! நடுக்கமற்றவனே ! என்பதாம்.
நடுவுநிலைகற்றவன் – சமன். நில் நில் – நிற்பாயாக, நிற்பாயாக நின்னில் – நின்னிலும்.
வானவர்து திக்கைத் துதிக்கைமலை – தேவர்களேத்துந் துதிக்கையையுடைய யானை. நாதனாம் – சுவாமியாம்.
மா மலர்மகள்சேர் மணிமார்பன் – பெரிய தாமரையாளைத் தழுவும் மார்பினையுடையான்.
வைகலும்வைகலும் – எல்லாநாளுந் தங்குதலும்.
மறுகில் வண்டூர் வண்டூ ரென்பது வீதிதோறுஞ் சங்குதவழும் திருவண்வண்டூ ரென்றவாறு.
துதிக்கைமலையழைத்தவன் என் நாதனாம் ; அவன்கையிற் சுற்றுதலையுடைய கதிராழி உன்கணிச்சியினுங் கொடிது ;
இதனை யறியாதே என்னிடத்தணுகாதே ; நமனே ! நிற்பாயாகவெனக் கூட்டுக.
எனவே, உனக் கென்னிடத்துவருதல் கூடாதென்பது கருத்து. திணை- வஞ்சி. துறை – நெடுமொழிவஞ்சி.

மாறர்குருகூர்குருகூர்வடிவேலவேல
நாறுமளகத்தளகத்துணைவீகையீகை
யாறினகலாதகலாததாமாகமாக
நீறனிலவானிலவாநினைத்தேகலேகல். (714)
இது நான்கடியும் இடையொடுகடை முற்றுமடக்கு.

(இ-ள்) காரிதரும் மாறருடைய சங்குகள் தவழப்பட்ட குருகூரினிடத்துக் கடைந்தவேலையுடையவனே !
ஏலம் பரிமளிக்கும் அளகத்தையுடையா ளுள்ளத்துட் டுன்பம், நீ பொன்னைக்கொண்டுவந்து தரும்வழியால் நீங்காது ; தக்கதல்லவாம் ;
இவள்மேனியும், ஆகாச நீறும்படிக் கிரவிலெழும் நிலவினாலே அழகழியும் ;
ஆகையால் இவற்றை நினைத் தேகலையுடைய கடங்கடந்து பொருள்செய்யப்போவதை ஒழிவாயாக வென்றவாறு.
பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – ஆற்றாமைகூறிச் செலவழுங்குவித்தல்.

இவை பதினைந்தும் இடையொடுகடைமடக்கு. இவை நாற்பத்தைந்தும் ஓரடியும் ஈரடியும் மூவடியும் நாலடியுமாக
அடிதொறும் ஈரிடத்தைமடக்கியது. ஆக மடக்கு-90.

இனி அடிதோறுமிடைவிடாது மூன்றிடத்துமடக்கு வருமாறு :-

முன்னினைமுன்னினைமிடல்வல்லிடங்கரிடங்கரிநொந்த
மூலமூல
மென்னுரைசென்றடங்காமுன்னவ்வுழியவ்விடங்கருயி
ரினையேயுண்பா
னின்னிலையிவ்வுழியுளதோவெனக்கனகனுருத்தடித்த
நெடியதூணின்
மன்னிலைபெற்றவனுயிருண்டனையரங்காநினக்கிணையார்
மதிக்குங்காலே. (715)
இது முதலடி மூன்றிடத்துமடக்கு.

இதனை மிடல்வல்லிடங்கரிடம் நொந்தமூலம், முன் நினை கரி மூல மென்னுரை சென்றடங்காமுன்ன ரவ்வுழி
அவ்விடங்கருயிரினை யுண்பான் முன்னினையெனச் சேர்க்க.

(இ-ள்) மிடுக்கையுடைய வலிய முதலையின்கையி லகப்பட்டு நொந்ததேதுவாக, முன்னொளி லுன்னைநினைத்த
யானை சொல்லிய மூலமே யென்னு முரையினொலி நினதுதிருச்செவியுட்புக் கடங்காதமுன்னம்
அக்கயத்தினிடத் தந்த முதலையினுயிரை யுண்ணவேண்டிச் சென்றனை ;
அஃதன்றியும், அரங்கனே ! நீ அந்தரியாமியாகநின்ற திங்குமுளதோ வென் றிரணியன் கோபித்தடித்த நெடிய
தூணினிடத்து மிகவுநின்று அவ்விரணியனு யிரையு முண்டனை ; ஆகையால் விசாரிக்குமிடத்து
நின்னோ டிணையான கடவுள ரில்லை யென்றவாறு. இதன்கண் அகப்பட்டென்பது சொல்லெச்சம். உரை ஆகுபெயர்.
திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

வெளியதாயமைந்ததிடைமேருவதாமுலையுயிரோவியத்தைப்பெற்ற
வளியதாயளியதாய்மலர்மாதேமாதேவராருமாரு
மொளியதாமமுதமொழிகருங்குவளைவிழியெனலாமுறையுணண்பா
வெளியதாயிருபது கைக்குன்றினைவென்றானிடபகிரியாமன்றே. (716)
இஃ திரண்டாமடி மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) நண்பனே ! உயிரோடுங்கூடிய ஓவியம்போல்வாளைப்பெற்ற கிருபையையுடைய தாய்,
வண்டு மதுவுண்ண வாராயப்பட்ட தாமரை மலரே; மாது அம்மலரிற் செய்யவளே! சந்தயமில்லை.
முலை மேரு; இடை ஆகாயம்; வானோர்யாவருமுண்ணும் அமிர்தம் மொழி ;
விழி கருங்குவளை யென்பனவாம். உறையுமிடம், இராவணனாகிய இருபது கைக்குன்றை யெளிதாகப்
போர்க்களத்துவென்ற சுந்தரத்தோளழகர் சோலைமலையா மென்றவாறு.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல் பிடங்கூறல்.

ஏதுகொண்டுமானிடர்தமைப்பாடுதலிழிபென்றெப்
போதுமாறனைப்போற்றுதற்கென்னொடின்புறுநெஞ்சே
யாதுமாதுமென்முல்லைமுல்லையினிறையாவான்வா
னீதியாய்ந்தனமாகையான்முத்திநிச்சயமன்றே. (717)
இது மூன்றாமடி மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) ஏது…….. நெஞ்சே-யாதாயினு மொரு மிகுந்த பொருளை முந்த வாங்கிக்கொண்டாயினும்,
அதன்முன்னராயினும் மனிதரைப்பாடி வாய்மையிழத்தல் இழிந்ததொழிலென்றறிந்து,
அவர்களைப் பாடா தெப்போதும் காரிமாறப்பிரானைப்போற்றுதற்கு என்னோ டொன்றாய்ப் பேரின்பமெய்தாநின்ற நெஞ்சமே !
ஆது மாது மென் முல்லை முல்லையினிறையாவான்: நாம் மேலு மாகக்கடவோம் ;
பசுக்கள் பொசிப்பாகமெல்லும் முல்லைக்கொடியையுடைய முல்லைநிலத்திற் கிறைவனாகிய கண்ணபிரானது.
வான்நீதி யாய்ந்தனமாகையால் – பரமபதத்தினதொழுக்கத்தை மாறனூல்கூற ஆராய்ந்தனமாகையால்.
முத்தி நிச்சயமன்றே – இருவழியாலும் நாம் முத்தியைப்பெறுதற்குச் சந்தயமில்லை யென்றவாறு.

ஆது மென்பது மே லாகக்கடவோமென்னும் உளப்பாட்டுத் தன்மையின்வந்த எதிர்காலமுற்றுவினைச்சொல் ;
என்னை? “ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை, ஆஅது மென்னு மவர்” என்பதனாலறிக.
திணை – வாகை. துறை – அறிவன்வாகை.

வீடாளிவீட்டினுக்குவீடாயதனைநிலையாய்விழுமிதாக்குங்
கேடாளர்கேண்மையினைப்பிரித்தெனையுந்தனதடியார்கேண்மையாக்கும்
வாடாதமகிழ்மாலைப்பெருமானைத்துணைநெஞ்சேமதித்துவிண்மே
னாடாளநாடாளரியையுநினைநினையினித்தென்னாட்டானாட்டான். (718)
இது நாலாமடி மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) பரமபதத்தினையாளுமவன் குடிகொண்டிருக்கும் ஆன்மாவாம் வீட்டினுக்கு வீடாகிய யாக்கையையும்
நிலையிற்றாகும் முக்கியமென வுட்கொள்ளும் ஞானதெரித்திரருறவினை யென்னைவிட்டுநீக்கி,
அறிவிலியாகிய வென்னையுந் தன்னடியார்க்குச் சுற்றமாக்கும் வாடாத வகுளமாலிகையையுடைய சுவாமியை,
எனக்குத் துணையாகிய நன்னெஞ்சமே! இவனே பரமாசாரியனென வுட்கொண்டு, விண்ணுக்குமேலாய பரமபதத்தினை ஆளநினை ;
அவனோடு நரனுஞ் சிங்கமுமானவனையும் நினை ; நினைத்தால் நின்பேரைத் தெற்கின்கண்ணுண்டாகிய
நாட்டினையுடைய நமன் றன்கணக்கின்கண் ணெழுதா னென்றவாறு.

நம் பேரை மனத்துட்குறியா னென்று மாம். எனவே இயமதண்டமு மில்லை, செனனமு மில்லை,
முத்தியையு மெய்தலா மென்பது பயனாம். திணை – காஞ்சி.
துறை – பொதுவியற்பாலுட் காஞ்சியைச் சார்ந்த பொருண் மொழிக்காஞ்சி.
இவைநாலு மோரடி மூவிடத்துமடக்கு.

இனியீரடி மூவிடத்துமடக்கு வருமாறு :-

தாம்பரியதாம்பரியதிரைதிரைத்தபொனங்கொடியிற்
சங்கஞ்சங்கந்
தேம்பணைத்தேம்பணைத்தெறியும்விண்ணகராய்விண்ணகராய்
செல்வாசெல்வா
யாம்புகழ்செண்பகமா றன்கொழித்ததமிழ்மறையினைக்கற்
றிறைவனீநீ
யாம்பரிசுற்றவரிதயத்தினிற்குடிகொண்டிருப்பதற்கென்
னாகத்துள்ளே. (719)
இது முதலடியும் இரண்டாமடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) பாயும் பரியையொப்பனவாம் பெரியதிரைகள், சுருட்டி யெடுத்த பொலிவினையுடைய அழகிய
கொடியினோடுஞ் சங்கமென்னு மிலக்கத்தையுடைய சங்குகளையும் பூவிற்றேன் பாயும் வயலினிடத் துகளித்தெறியுந்
திருவிண்ணகரின்கண் ணுறைபவனே ! பரதத்துவ மென்று தேவர்களாராய்ந்த வுபயவிபூதியையுமுடைய செல்வனே !
எம்மனோர் புகழ்பவனாஞ் செண்பகமாறன் வேதசாரத்தைக் கோதறத்தெள்ளி யுரைத்த திருவாய்மொழியினைக் கற்று,
நீயே பரப்பிரமமென்பதாஞ் சுபாவமுணர்ந்தவ ரிதயதாமரையிற் குடிகொண்டிருக்கச் சென்ற நீ
என்னிதயத்துள்ளுங் குடிகொண்டிருப்பதற்கு வருவாயாக வென்றவாறு.
இதனுள், பின்னர்வந்த செல்லென்பதனை வினைத்தொகையாக்கிப் பின்னர்நின்ற நீ யென்பதனோடுஞ் சென்ற நீ யெனக் கூட்டுக.
பொருள்கோள் – கொண்டுகூட்டு. திணை-பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.

முன்னைமுன்னைநாட்டுறந்தவனவனியைமுதலானான்
றன்னைவந்தடைக்கலம்புகக்கொடுத்தமெய்த்தண்காவா
னென்னையென்னையெண்ணுவதினியினியவரென்கேள்கேள்
உன்னையந்தகாமதிக்கிலன்பிறருளருனக்கன்றே. (720)
இது முதலடியும் மூன்றாமடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) முன்னைமுன்னைநாட்டுறந்தவன் – தமையனை முற்காலத்து விட்டுநீங்கின வீடணன். தன்னைவந் தடைக்கலம்புக
முதலானா னவனியைக் கொடுத்த மெய்த்தண்காவான் – தன்னிடத்துவந்து சரணாகதியென்ன
அந்த மூத்தவனான இராவணனிலங்கையை அந்த வீடணற்குச் சொன்னபடியே கொடுத்த சத்தியவசனத்தையுடைய
திருத்தண்கா வென்னுந் திருப்பதியுள்ளான். என்னை – என்னுடையசுவாமி.
இனியவரென்கேள் – அவனுக்கினிய அடியவரு மென்சுற்றம். ஆகையால், கேள் அந்தகா – அந்தகனே ! கேட்பாயாக என்னை ?
எண்ணுவதினி – என்னைக்குறித்து நீ மே லெண்ணத்தகுங் கொடுவினைகள் யாது மில்லை. உன்னை மதிக்கிலன்,
பிற ருள ருனக்கு – உன்னை நான் மனத் தச்சப்பட்டு மதிப்பது மில்லை ;
உன்கொடுவினைக்குத் திருத்தண்காவானடிய ரல்லாத பிறருண் டென்றவாறு.

அன்று – அசை. முன்னை – தமையனை. என்னை – என்சுவாமி. என்னை – யாதுமில்லை. இனி – மேல்.
முதலானான் – மூத்த இராவணன். வீடணனாகிய அவனுக்கெனக் கூட்டுக. துறந்தவன் – வினைப்பெயர்.
திணை – வஞ்சி. துறை – நெடுமொழிவஞ்சி.

முண்டகமுண்டகநெகுகோடுறுமேதிமேதிகளே
முற்றுமுற்றும்
வண்டிமிர்காவியுமேயுமரங்கத்தானருட்கிலக்கா
மகிழ்நர்வாய்மைத்
தொண்டமைபாணரைக்கன்னுவாயிலின்கட்கரிக்கலம்போற்
றோன்றநம்மிற்
கண்டனங்கண்டனம்புரைமென்மொழிநடையெங்கையாயர்தற்
காதகாத. (721)
இது முதலடியும் நாலாமடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) தாமரையைமேய்ந் துள்ளமகிழப்பட்ட கொம்பினை மிக்க வாயுதமாகவுடைய எருமைகள்,
அதன்மேலு மின்புற்று, எல்லாநாளும் வண்டுக ளாரவாரிக்கு நீலோற்பலத்தினையும் மேயுந்
திருவரங்கத்தா னருட்கிலக்காம் நம்முடைய தலைவர்க் குண்மையாகத் தொண்டுபா டமைந்த பாணரை,
இன்று கன்னவாசலிற் கரிப்பானைபோல நம் மில்லத்துவாயிலின்கட் டோன்றவுங் கண்டனம் ;
இங்ஙனங் கண்டது நமக்குத்தக்கதாயினும், தோழீ ! பாகினையும், அன்னத்தினையும்போன்ற மெல்லிய மொழியினையும்
நடையினையு முடைய எங்கையர்காணில் அந்தோ ! வருந்துதற் கேதுவரதலா லிது தகாததா மென்றவாறு.
இன்று என்பதனோடு பிறவுஞ் சொல்லெச்சங்கள் வருவித்துரைக்க. பகுதி – பரத்தையிற்பிரிதல். துறை – பாணனைப்பழித்தல்.

பத்தர்தீவினைப்பற்றறுத்தருள்பரம்பரன்மாயோ
னித்தனின்றவூர்வரைமயிற்களிநிரைத்தெழுகாந்த
ளத்தமத்தம்வமபடர்முலைமுலைமொழிநகைவேய்வேய்
முத்தமுத்தமவிலவிதழிதழ்குழன்முருகார்கார். (722)
இது கடையிரண்டடியும் மூன்றிடத்து மடக்கு.

(இ-ள்) பத்தரிடத்துப் பழையதீவினையாலடைந்த ஆசைகளைத் தீர்த்துக் கருணைசெய்யும் மேலாகிய பரமனாகிய
மாயோன் அழிவில்லா தான் அவனது நின்றவூரென்னுந்திருப்பதியைச் சார்ந்த வரையிடத்து மயில்போலுஞ் சாயலையுடையாட்கு,
தோழீஇ! வண்டுகள் கூண்டெழு தலையுடைய காந்தள்போலும் கை ; பொன்மலைபோலும் கச்சையறுக்கப் படாநின்ற முலை.
முல்லையென்னும் பண்போலும் மொழி ; வடத்தி னிரைத் தணியப்பட்ட வேய்முத்தம்போலும் நகை;
நல்ல இலவம்பூப் போலும் அதரம்; பரிமளிக்கப்பட்ட முகில்போலும் குழ லென்றவாறு.

இதனுள் அத்தமென்றது பொன்மலை ; “அத்தம்மனையகளிற்றந் நகர்” என்றார் முனிவரும். முலையென்பது இடைக்குறை ;
“முலையணிந்த முறுவலாள்” என்பதுபோலக் கொள்க. முருகார்கார் அற்புத வுவமை.
தோழீயென்னும் முன்னிலை எச்சம். பகுதி- சேட்படை. துறை – தலைவன் பாங்கிக் கவயவங்கூறல்.

கண்டனனொண்பொருளேமெய்ப்பொருளெனலுமுயிருளதாக்
கழிந்தயாக்கை
மண்டலமண்டலம்புரந்தமாவலிமாவலிமுழுது
மாற்றமாற்றங்
கொண்டறல்கொண்டறலிமையோருறவுறவேசிறைவைத்த
கொண்டல்கொண்டல்
வெண்டிரைமுத்தெறிமயிலைமடமயிற்கெப்படிபிரிவை
விளம்புவேனே. (723)
இஃ திடையிரண்டடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) பொன்னாகியநல்லபொருளே பொய்யில்லாப் பரப்பிரமமாகிய பொருளென்று வியந்துகூறலும்,
உடனே உயிருண்டாயிருக்கவும் உயிர்நீங்கப் பொலிவுநீங்கியிருக்கும் யாக்கையாக அவள்யாக்கையைக் கண்டனனென்றால்,
வட்டத்தையுடைத்தாய் அணுச்செறிந்த பூமியை யாண்ட மாவலியுடைய பெரியவலிமுழுதும் மாற்றும்படிக் கவனோடு மாற்றங்கொண்டு,
அவன்பெய்யு முதகத்தையேற்றுத் தேவர் கலியாண மெய்த மிகவும் அவனைப் பாதாளத்திற் சிறைவைத்த
காளமேகம்போலு நிறத்தையுடையானது, கீழ்காற்றானது கடலிற் றிரையெடுத்த சங்கு மிப்பியு மீன்ற முத்துக்களைத்
திரையோடுங்கூடிக் கானலிலெறியுந் திரு மயிலாபுரியில் மடப்பத்தோடுங் கூடிய மயில்போலுஞ்
சாயலையுடையாட் கென்பிரிவை, தோழீஇ! யா னெவ்வாறுரைப்ப லென்றவாறு.

இதனுள், மாவலி – அவுணன். மாவலி – பெரிய பெலம். மாற்ற- நீக்க. மாற்றங்கொண்டு – மாறுபாடுகொண்டு.
அறல்கொண்டு – உதகத்தைக் கையிலேற்று. அற லிமையோருற – தேவர்கள் கலியாண மெய்த. உற – மிகவும்.
கொண்டல் – மேகம். கொண்டல் – கீழ்காற்று. தோழீ யென்னு முன்னிலை எச்சம். பகுதி – பொருள்வயிற்பிரிதல்.
துறை – வாட்டங்கூறல்.

கவளக்கரிக்கன்றுதவியமால்கடிகைச்சிலம்பிற்கடிபொழில்வாய்த்
தவளத்தவளத்தளவமுகையாம்பலாம்பல்சமன்வாய்வாய்
துவளத்தனிநுண்ணிடையமிர்தந்துடியேய்மடந்தாய்நின்கருங்கட்
குவளைக்குவளைக்குலஞ்செறிகைக்கைக்காந்தளிற்கூட்டமதென்னென். (724)
இஃ திரண்டாமடியும் நாலாமடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) கெசேந்திரனுக் குதவிய மாயோன் றிருக்கடிகைச்சிலம்பில் விளங்கிய சோலைவாய் வெண்மை
நிறத்தோடுங்கூடிய அழகாகிய வளத்தை யுடைய முல்லைமுகைபோலப் பல்லையும், சேதாம்பல்போல வாயையும்,
அமிர்தத்தையுந் துடியையும்போல மொழியையு மிடையையு முடைய மடந்தையே !
நினது கண்ணாகிய குவளைக்கு, வளையினது கூட்டஞ் செறியுஞ் செய்கையையுடைய கையாகிய காந்தளோடுங்
கூட்ட முண்டானகிரியைக் கேது யாதென்று கூறுவாயாக வென்றவாறு.

யாதென்பது ஐயவினாவாகலால், காமனது அறுதிப்பாணமாகிய கண்ணென்னும் நீலம் என்னுயிரைக் கொல்லாமைக்
கெண்ணியோ பிறிதொன்று கருதியோ வென்றவாறு. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – நாணிக் கண்புதைக்க வருந்தல்.
இவையாறு மீரடி மூன்றிடத்துமடக்கு. இனிமூன்றடிமூவிடத்துமடக்கு வருமாறு :-

குன்றாவின்குன்றாவின்றுயர்க்குயர்நன்குடைக்குடைக்கொள்
கோமான்கோமா
னன்றாமன்னன்றாமன்னுலகமுழுதுழுதுயர்தீர்
நாதன்வார்வார்
நின்றானைநின்றானையுடன்வருகவருகவெனா
நேமிநேமி
யொன்றால்வல்லிடங்கரைக்கொன்றருள்புரிகாரரங்கனென
துள்ளத்தானே. (725)
இஃ தீற்றடியொழித் தேனைமூன்றடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) குறைதலில்லாத இனிமைகளைத்தரும் மலையைப் பசுக்களின்றுன்பத்திற் குயர்த்திய நன்மையுடைய
குடையாகக் கைக்கொள்ளுந் தலைமையையுடையோன், பூமிதேவியிடத்து நட்புடைத்தாங் கொழுநன்,
பிரமகற்பங்கூடும் அந்தியகாலத்து ஏகோதகப்பிரளயம், நிலைபெற்ற உலகமனைத்தையும் கிளைத்தெழ அதனு ளழுந்துந்
துயரத்தைத் தீர்த்துத் திருவுதரத்துள் வைத்த சுவாமி, நீண்டொழுகிய நீரின்கண்ணின்று ஆனைநின்கைச்சக்கரத்தோடும்
வருக என்னையுடையவனே யென்றழைப்பச் சென்று, வட்டத்திகிரியொன்றினான் மிடுக்கையுடைய முதலையைக் கொன்று
யானையினுயிரைக் காத் தருள்செய்த காளமேகம் போலத் திருமேனியையுடைய அரங்கன் என்னிதயத் திருப்ப னென்றவாறு.

எனவே, எனக் கியாதுகுறை? ஒருதுன்பமு மில்லை யென்பது பயனாம்.
இனிமை – காட்சிக்கினிமையும், பலமூலாதிகளைத் தருதலும்.
கோமான் – தலைமையையுடையோன். கோமான் – பூமிதேவி. நன்றாம் -நட்பாம். வார்வார் – ஒழுகும்நீர்.
நின்றானை – நினது சக்கரப்படை. அருக – உடையவனே. நேமி – வட்டம். திணை – பாடாண். துறை – கடவுள் வாழ்த்து.

வாக்கினால்வாக்கினாலாரணனாரணன்மலராண்மன்னன்மன்ன
னாக்கம்யாவையும்புகழ்செந்தமிழ்மாறன்றுடரியிலென்னன்பாநண்பா
தாக்கர்தாக்கரந்தையுறத்தாக்கணங்குமணங்குநுதித்தாரைதாரை
நோக்கினாணோக்கினாணெனையகன்றதகன்றதுளனோயுநோயும். (726)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) என்னிடத் தன்பாம் நண்பனே ! தனது திருப்பவளத்தினி லுண்டான நாலுகவிகளாலும்,
வேதாந்தத்துட்பொருளாம் நாராயணனாகிய தாமரையாள்தழுவும் நல்லமன்னன்செல்வமுழுவதும் வாழ்த்துஞ் செம்மையையுடைய
திருவாய்மொழியாகிய தமிழையுடைய காரி மாறப்பிரான் றுடரிமலையினிடத்துப் பொருவார்போர் துன்பமுறும்படி பொரும்
வீரமாகாளியுங் கண்டால் வருத்தத்தையெய்தும் வாளின் வாய்க்கூறுபோலக் கொலைபுரியுங்கண்ணோடுங்கூடிய
அழகினையுடையா ணோக்கத்தா லெனதுநிறையினது தலைமை யென்னைவிட்டுநீங்கியது ;
எனதுள்ளம் தளராநின்றது ; காமநோயும் மிகுந்த தென்றவாறு.

வாக்கு – திருப்பவளம். நாலுவாக்கு – ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரமாகிய நாற்கவி. மன் நன் – தழுவும் நல்ல.
மன்னன் – தலைவன். ஆக்கம். சொரூப ரூப குண விபூதிகள். தாக்கு – படை. அரந்தை – துன்பம். தாரை – கண்.
நோக்கு – அழகு. ஆண் – தலைமை. நுதி – ஆகுபெயர். தாக்கரந்தையுற எனப் பொருந்தாரெய்துந் துன்பம் போரின்மே லேற்றப் பட்டது.
என்னை? “வேண்டும்பனுவற்றுணிவு” என்பதுபோலக் கருத்தாமயக்கம் பகுதி – பாங்கற்கூட்டம். துறை – உற்றதுரைத்தல்.

மருணயனமருணயனம்பாலளித்தவளித்ததல்லான்மழலைவாய்வாய்
தருநகையீதருநகையீதருஞ்சோலைமலைமலைநத்தான்றனான்றன்
முருகவிழ்பூமகளுலகிற்கருணோக்குநகையுமெனுமுறைபோலென்றா
லொருதலையன்றொருதலையன்றிங்காமிக்காமிக்கையுள்ளேயுள்ளே. (727)
இஃதீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) நெஞ்சமே ! இம்மழலைமொழியையுடையாளது மருட் பார்வையோடுங்கூடிய கண்கள் அருட்பார்வையோடும்
ஆனந்தத்தை நம்மிடத்திலே தந்த கருணையையுடைத்து ;
அதுவுமன்றியே இவள் வாயிலுண்டாகிய இக் குறுநகையும் பெறுதற்கரிய மகிழ்ச்சியைத் தரா நிற்கும் ;
இவையிரண்டும், திருமாலிருஞ்சோலைமலையில்வாழ்பவனாம் போரையுடைய பாஞ்சசன்னியத்தையேந்துவான்றன்
பாரியாகிய மிகுந்த மதுவைச் சொரியுந் தாமரையாள் உலகத்துயிர்கட் குதவும் அருணோக்கும்,
திருநகையும் கொடுக்கும் பேரின்ப மெப்படியோ அப்படி யென்னும் முறையேபோ லென்றா லும்மைதொடுத் திவ்வுலகின்
கண் ணாமிவளைவிரும்பும் இவ்விருப்பம், ஒருதலையிலுள்ளதல்ல, இருதலையிலு முள்ளதென்பது நிச்சயமென்று விசாரிப்பாயாக என்றவாறு.

உள்ளே – நெஞ்சமே. உள் – விசாரிப்பாயாக. அருணயன் – அருட் பார்வையோடுங்கூடிய ஆனந்தம்.
அளித்த அளித்து – தந்த கருணையை யுடைத்து. ஈது – இதுவும். தருநகை – உண்டாய புன்முறுவல்.
அருநகை – பெறுதற்கரியமகிழ்ச்சி. அன்று – கழிபிறப்பில். இருதலையுமுள்ளதென்பது எதிர்மறைச்சொல்லெச்சம். ஏகார மீற்றசை.
பகுதி – இயற்கை. துறை – குறிப்பறிதல்.

மானனையாளிணைமென்றோளணியிழாயரங்கேசன்
மலரோன்றன்பாற்
பானலம்பானலம்புரிவோருயிருயிர்ப்பானிகல்விளையாப்
பாலன்பாலன்
பானிரையானிரைக்கடுக்கல்கவிகவிகைப்புயலரவி
னாடியாடி
தேனிறைதேனிறைத்தெழுபொன்னியுட்போதுபோதுமுகஞ்
சிவணாவேய்வேய். (728)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் மூன்றிடத்துமடக்கு.

(இ-ள்) அழகியபூணினையுடையாய் ! என்னால் விரும்பப்பட்ட மான்போலுநோக்கினையுடையா ளுபய மெல்லிய தோள்களானவை,
துளை பொருந்தா மூங்கில்போலும் ; முகம், திருவரங்கத்தீசன், பிரமனாகிய மூத்தபிள்ளையிடத்தும்,
பூலோகத்தின்பத்தைவிரும்பினோரிடத்துத் தாமரை முதலிய பூப்பாண நான்கினையுந் தொடுத்தபின்னர் நீலோற்பலமாகிய
அறுதிப்பாணத்திற் கைவைப்பதல்லால் அப்பாணத்தை விரும்பியவின்பம்பெறாது வருந்துவாருயி ருடலைவிட்டு
நீங்கும்படிக்குத் தொடுத்துப் போர்செய்தறியா மன்மதனாகிய இளையபிள்ளையிடத்தும் அன்புசெய்வான்,
கன்மாரியாற்கதறப்பட்ட பசுக்களினிடரைத்தீர்த்தற்கு மலையைக் குடையாகக்கவிக்கப்பட்ட காளமேகம்,
பாம்பினை யரங்காக நாடி யாடப்பட்டவனது (பொன்னியுட்போது தேனிறை தேனிறைத்தெழுபோது)
காவிரியுளுண்டான வண்டுகள் தங்கு மதுவை யொழுக்கியோங்குந் தாமரைப்பூப்போலு மென்றவாறு.

இது, வேய்சிவணாவேய் எனவும், பொன்னியுட்போது, தேனிறை தேனிறைத்தெழுபோது எனவும் பாடமாற்றினவாற்றாற்
கொண்டு கூட்டுப்பொருள்கோளாயிற்று. ஒழிந்த அரும்பதங்களு முரையிற் கொள்க.
என்னால்விரும்பப்பட்டவென்பது சொல்லெச்சம். பகுதி – சேட்படை. துறை – அவயவங்கூறல்.

மதுமதுகையினுணவளிமகிழ்மகிழ்முனிவரைமயில்குழல்வான்வான்
விதுவிதுவெனவொளிதருமுகமயிலயில்விழிமொழிகுயில்வாய்வா
யதுவதுவையமரைமுகைமுலைமுலைநகையறனுரைதெளிவாயாய்
முதுமுதுவருமிலவிதழிதழெனலொடுமொழிவதுவயிறாலால். (729)
இது நாலடியும் மூன்றிடத்தும் முற்றுமடக்கு.

(இ-ள்) தேனை யுரனுடனுண்ண வண்டுகள்விரும்பும் வகுள மாலிகைமுனிவன் றுடரிமலையினிடத்து
மயில்போலுஞ்சாயலையுடைய யாட்கு நண்பனே ! குழலானது விசும்பின்கண்ணுறையுங் காளமேக மென்பதாம் ;
முகமானது உதயமதியை இதுவென்று கண்டார் கூறும்படிக் கொளியைத் தருவதாம் ; விழியானது கூரிய வேலையொக்கும் ;
மொழியானது குயிலின்வாயில் மொழியதனை யொக்கும் ; முலையானது மணத்தையுடைய தாமரைமுகுளத்தையொக்கும் ;
நகையானது முல்லையரும்பையொக்கும் ; அதரமானது, அறத்தைக்கூறு நூல்களினுரையைச் சந்தயமற ஆராயுந் தலைமையை
யுடைய அறிவினான்மூத்தோர் இலவம்பூப்போலு மென்பதனோடும், வயிற்றிற் குவமைசொல்வது கொம்பரினின்றசையு மாலிலையேயா மென்றவாறு.

மதுகை – உக்ரம். வான் – மேகம். இது – சுட்டு. அயில் – கூர்மை. வாய் – வசனம். அது – சுட்டு. வதுவை – மணம். மரை – தாமரை.
முலை – முல்லை. ஆய் – ஆராய். முதுவரும், உம்மைசிறப்பு. இதழ் – பூவின்றோடு.
ஆல் – அசையப்பட்ட. முல்லை, ஆல் முதலிய ஆகுபெயர். பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.
முன்னிலை தோன்றா எழுவாய்.

ஆக வகை யேழினால் இடைவிடாமடக்கு நூற்றைந்தும் அடைவே வந்தவாறு கண்டுகொள்க.
வகையேழாவன :- அடிமுதன்மடக்கு-15. அடியிடைமடக்கு-15. அடியிறுதிமடக்கு-15.
ஆக அடிதொறும் ஓரிடத்துமடக்கு-45. முதலொடிடைமடக்கு-15. முதலொடுகடைமடக்கு-15. இடையொடுகடைமடக்கு-15.
ஆக அடிதொறு மீரிடத்துமடக்கு-45. அடிதொறு முதலிடைகடை மூன்றிடத்துமடக்கு-15.
ஆக வகையேழினால் மடக்கு நூற்றைந்தும் இடைவிடாமடக்கு.

262.ஏனையதாமுமிதனதென்பெறுமே.
(எ-ன்) ஒழிந்த இருவகைமடக்கிற்கும் தொகையுணர்-ற்று.

(இ-ள்) ஒழிந்தனவாம் இடைவிட்டுவருமடக்கும், இடைவிட்டும் விடாதும்வரு மடக்கும் ஆகிய இரண்டுங்கூறிய
இவ் விடைவிடாமடக்கே போல எழுவகையாய் ஒரோவொன்று நூற்றைந்து நூற்றைந்தாந் தொகைபெறு மென்றவாறு.

ஆக மூவகைத்தா யெழுதொடையான் மூன்றிடத்தான் மடக்கு முந்நூற்றொருபத்தைந்தா மென்பது பெற்றன.
அவையு மிம்முறையே கூறுகிற் பெருகும். அவற்றுள்ளுள்சில வருமாறு :-

வாமனன்மழவிடையினான்பாற்கடல்வழங்கு
வாமனன்புகழ்கள்வன்வைகுந்தைமாதவனாம்
வாமனன்றனையிடைவிடாதுணர்வினுள்வைப்பான்
வாமனன்னமக்கெளியதாமும்பர்வைகுந்தம். (730)
இஃ திடைவிட்டுவந்த அடிமுதன் முற்றுமடக்கு.

(இ-ள்) பறந்துபாயும் அன்னத்தையுடைய பிரமனும், இளைய இடபத்தையுடைய சிவனும்,
திருப்பாற்கடல்பெற்றுத்தரப்பட்ட அயிராவதத்தை யுடைய இந்திரனும் என்னும் மூவரும் வழுத்துங் கள்வனென்னுந்
திருநாமத்தோடும் வைகுந்தைமாதவனாகிக் குறளுருவான வன்றன்னை விட்டுநீங்காது ஞானத்தினா னினைக்கும்
படிக்குப் புலாதி களிற்போகாது என்னோடுங்கூடி வருவாயாக மனனே !
அங்ஙனம் நினைத்தாற் பெறுதற்கரியவா மெல்லாப்பதத்திற்கும் மேலாய பரமபதம் நா மெய்துதற் கெளியதா மென்றவாறு.
திணை- பாடாண். துறை – கடவுள் வணக்கம். ஓம்படையுமாம்.

வாசநாண்மலர்வண்டுகள்வாய்விடாவகையுண்டு
மூசியேழிசைவண்டுகள்களிமுகிற்குழலாளைப்
பூசன்மாமதன்வண்டுகள்பொரத்துழாய்புல்லாணி
யீசனல்கிலன்வண்டுகளிறைதுறந்தெழுமன்னோ. (731)
இஃ திடைவிட்டுவந்த இடைமுற்றுமடக்கு.

இதனுள், நாண்மலர்வண்டுகள் என்றது, பருவத்தின்மலர்ந்த பூவின் வளவிய தாதுக்கள் என்பதாம்.
பூசன்மாமதன்வண்டுகள் எ-து பஞ்சபாணங்கள் என்பதாம்.
வண்டுகளிறைதுறந்தெழும் எ-து சங்குகள் முன்கையைவிட்டு நீங்கும் என்பதாம். ஒழிந்தனவு முரையிற் கொள்க.
திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – கண்டு கைசோர்தல்.

மறைபயின்றவண்டமிழ்முனிகுருகையின்மன்காவெ
யிறைவர்பின்னர்நெஞ்சகன்றதுகன்றிடத்திரங்காவே
யறையிலிங்கிணையாமெனவுயிருணவங்காவே
யுறைபுரந்தகண்மலர்களுமொல்லையுமுறங்காவே. (732)
இஃ திடைவிட்டுவந்த கடைமுற்றுமடக்கு.

(இ-ள்) சுருதிகூறியவுரையொடும்பொருந்திய திருவாய்மொழியைப் பாடித்தந்த சீபராங்குசமுனிவன்
குருகாபுரியினிடத்து நிலைபெற்ற சோலைகளே ! நின்னிற்பிரியேனெனப் பிரிந்த தலைவர்பின்னே யென்னெஞ்சமானது,
ஈன்றணிமைப்போதில்விட்டுநீங்கின கன்றின்பின் செல்லு மீற்றாவே சொல்லுமிடத் தொப்பென்பதாக அகன்றது ;
அதனாற் றனியிருந்தவுயிரையுண்பான் றனது துளையாகிய வாயை அங்காக்கப்பட்ட ஆயர்வேய்ங்குழல் தருவதாந்
துளிகளையுடைய கண்ணாகிய குவளைகளு மெனதுவசமாகச் சிறுவரையுந் துயில்கில வென்றவாறு.
ஆதலான் மேல் யாதுசெய்வே னென்பது பயன். பகுதி – இரவிற்குறி. துறை – காமமிக்க கழிபடர்கிளவி.

தாமாலமாலமருமென்றமாலமால
நாமாலமாலநளிநீர்கடமாலமால
தேமாலமாலகரிசேர்மலர்மாலமால
மாமாலமாலமலதாளுளமாலமால. (733)
இஃ திடைவிட்டும் இடைவிடாதும்வந் திடையு மிறுதியும் நாலடியும் முற்றும் மடக்கியது.

(இ-ள்) தாமாலம் – அண்டத்தையெல்லாந் தட்டழித்துண்டு கடக்கும் மிக்க பிரளயத்தில்.
ஆல் அமரும் – ஆலமரத்தினிடத் துற்பவித்துத் தங்கும். மென்றமாலமால – மெல்லிய இலையிற் றுயிலுதலுடைய.
நாமாலமால – அச்சத்தைத் தரப்பட்ட நஞ்சம்போலுங் கருமையையுடைய.
நளிநீர்கடமால மால – செறிந்த நீராங் கடலைக் கடக்கப்பட்ட பெருமையொடுங் கூடிய மற்கடமாருதத்தையுடைய.
தேமால – தேன்றுளும்ப. மா – வண்டுகள். லகரிசேர் – அதனையுண்டு களிப்பைப்பொருந்தும்.
மலர்மால – தாமரைப்பூவிருப்பமாக. மால – பெரிய இல்லமாகவுடைய. மாமால் – திருமகள் மயங்கும்.
அமால் – அழகையுடைய மாயோன். அமலதாள் – அழுக்கற்ற திருவடிகளை. உளமால் – உள்ளத்திலேயுடையேமாகையால்.
அமால – அந்தப் புதனுக்கு, நெஞ்சமே ! யாஞ் சரி யென்றவாறு.

ஆலம் – மீமிசை. நளிநீர்கடமாலமால் – திருவடி. லகரி – ஆரியம். மால் – துயில் ; இஃதாகுபெயர்.
ஒடுக்கத்தில் அகரம் அசை. புதனுக்குச் சரியெனவே, ஞானமுடையேம் என்பதாயிற்று. திணை….. துறை…..

பொருநற்புனற்சங்கணித்துறையான்
புல்லர்களச்சங்கணித்துறையான்
வருநற்றுடரியுரிஞ்சென்றூழ்
வைகுந்தலைக்காவினுஞ்சென்றூழ்
நெருனற்றரு