தென் னகரிலே–திரு வல்ல வாழிலே
நன் னகரிலே–திரு விண்ணகரத்திலே
அவ் வூரிலே–தொலை வில்லி மங்கலத்திலே -இரட்டைத் திருப்பதியிலே
புகு மூரிலே –திருக் கோளூரிலே
மா நகரிலே –தென் திரு பேரெயிலிலே
நீள் நகரிலே –திரு வாறன் விளையிலே
ஆய்ச் சேரியிலே -திரு வண் பரிசாரத்திலே
தாயப் பதியிலே –திருக் கடித் தானத்திலே
வளம் புகழு மூரிலே –குட்ட நாட்டுத் திருப் புலியூரிலே
—————
மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை தென்னகரிலே நித்யம்-ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -சூரணை -165-
விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கடநா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீர்ணம் —சூரணை -167-
கடித கடக விகடநா பாந்தவம் அவ் ஊரிலே த்விகுணம் -சூரணை -168-
கை முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம்–சூரணை -169-
சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுக்கும் சௌந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும்–சூரணை -170-
ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆநந்த வ்ருத்தி நீண் நகரிலே –சூரணை-171-
ஸ்ரம மனம் சூழும் சௌகுமார்ய பிரகாசம் ஆய்ச் சேரியிலே—சூரணை-174-
சாத்ய ஹ்ருதிஸ்னாயும்-சாதனம் ஒருக்கடுக்கும்-க்ருதஜ்ஞதா கந்தம் –தாயப் பதியிலே–சூரணை -176-
அவகாஹித்தாரை அனந்யார்ஹமாக்கும் நாயக லஷணம் வளம் புகழு மூரிலே குட்டமிடும்–சூரணை -176-
—————–
மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை தென்னகரிலே நித்யம்-ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -சூரணை -165-
விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கடநா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீர்ணம் —சூரணை -167-
கடித கடக விகடநா பாந்தவம் அவ் ஊரிலே த்விகுணம் -சூரணை -168-
கை முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம்–சூரணை -169-
சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுக்கும் சௌந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும்–சூரணை -170-
ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆநந்த வ்ருத்தி நீண் நகரிலே –சூரணை-171-
ஸ்ரம மனம் சூழும் சௌகுமார்ய பிரகாசம் ஆய்ச் சேரியிலே—சூரணை-174-
சாத்ய ஹ்ருதிஸ்னாயும்-சாதனம் ஒருக்கடுக்கும்-க்ருதஜ்ஞதா கந்தம் –தாயப் பதியிலே–சூரணை -176-
அவகாஹித்தாரை அனந்யார்ஹமாக்கும் நாயக லஷணம் வளம் புகழு மூரிலே குட்டமிடும்–சூரணை -176-
———–
மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை தென்னகரிலே நித்யம்-ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -சூரணை -165-
கீழ் சொன்ன -5-8-நிரதிசய போக்யமான விஷயத்தை ( ஆராவமுதமான ) சீக்கிரமாக கிட்டு அனுபவிக்கப் பெறாமையாலே –
வைகலும் வினையேன் மெலிய -திருவாய்-5-9-1–என்று
நாள் தோறும் மெலியும் அளவிலும் –(மெலிந்த பொழுதும் விஸ்வாசம் குலையாத ஆழ்வார் )
நாமங்களுடைய நம் பெருமான் அடிமேல் சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன்-திருவாய்-5-9-11 -என்று
அவனே ரஷகன் என்று அத்யவசித்து இருக்கும் படி பண்ணும்- ( சேமம் -காவல் )
சுழலில் மலி சக்கரப்பெருமானது தொல் அருளே திருவாய்-5-9-9–என்கிற கிருபை
திரு வல்ல வாழ் சேமம் கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே –திருவாய்-5-9-11-
தொல் -தொன்மை- பழைமை ஆகையாலே -நித்தியமாய் இருக்கும் என்கை —
( திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -பழமையே தொன்மை -சேஷத்வமும் கிருபையும் தொன்மை யாகவே உண்டே )
———-
விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கடநா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீர்ணம் —சூரணை -167-
க்ரம பிராப்தி பற்றாமல் படுகிற த்வரைக்கு ஈடாகக் கடுக வந்து முகம் காட்டாமையால்- விளம்பித்து வருகையாலே –
போகு நம்பீ -திருவாய்-6-2-1-என்றும் –
கழகம் ஏறேல் நம்பீ –திருவாய்-6-2-6–என்றும் –
பிரணய ரோஷத்தால் வந்த விரோதத்தை
அழித்தாய் வுன் திரு அடியால் -திருவாய்-6-2-9–என்று
அழித்துப் பொகட்ட விருத்தங்களை கடிப்பிக்க வல்ல சாமர்த்தியம் –
நல்குரவும் செல்வமும்-திருவாய்-6-3-1- -என்று தொடங்கி –
தன்னில் சேராதவற்றைச் சேர்த்துக் கொண்டு நிற்கிற விருத்தி விபூதி யோகத்தை பிரகாசிப்பித்த –
திரு விண்ணகர் நன்னகரே-திருவாய்-6-3-2- -என்று
நன்னகரான திரு விண்ணகரத்தில்- பல்வகையும் பரந்த-திருவாய்-6-3-1- -என்கிறபடி
பரந்து இருக்கும் என்கை –( விஸ்தீர்ணம்-பல்வகையும் பரந்த )
—————
கடித கடக விகடநா பாந்தவம் அவ் ஊரிலே த்விகுணம்–சூரணை -168-
(கடிதர் -சேர்க்கப்படுபவர் /-கடகர்-சேர்ப்பவர் / விகடநா பாந்தவம் -பொருந்தாமையைச் செய்யும் உறவு முறை
பெருமாள் உடன் சேர்ந்தவரான ஆழ்வார் சேர்த்து வைத்த தாயாராதிகள் -இருவரையும் பிரிக்கும் உறவு முறை இரட்டைத் திருப்பதியில் )
அதாவது
பிரான் இருந்தமை காட்டினீர்–திருவாய்-6-5-5 -என்கிற
கடகராலே தன் பக்கல் கடிதர் ஆனார்க்கும் கடகர் ஆனார்க்கும் ,
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசையில்லை விடுமினோ-திருவாய்-6-5-1-என்னும்படி
விகடநையை பண்ணுவதான –
தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த –திருவாய் -6-5-11-என்கிற அவனுடைய பாந்தவம் –
அவ்வூர் திரு நாமம் கேட்பது சிந்தையே -திருவாய்-6-5-10–என்று
தோழி யானவள் திரு துலை வில்லி மங்கலம் என்று தான் சொல்லும் போது
பெண் பிள்ளை சொன்னால் போல் இனிதாய் இராமையாலே -அவ்வூர் -என்று
சொல்லப் பட்ட தேசத்திலே -தேவ பிரானும்-அரவிந்த லோசனுமாய் –
நின்று இருந்து உறையும் இரட்டைத் திருப்பதி ஆகையாலே இரட்டித்து இருக்கும் என்கை —
விகடநா பாந்தவம் -என்றது -விகடநா கர பாந்தவம் என்றபடி —
——————–
கை முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம்–சூரணை -169-
கை முதல் இழந்தார்
அதாவது
ஏலக் குழலி இழந்தது சங்கே–திருவாய்-6-6-1 -என்று தொடங்கி –
கற்புடை யாட்டி இழந்தது கட்டே –திருவாய்-6-6-10–என்று
பிராப்ய அலாப நிபந்தனமான ஆர்த்தியால் வந்த பாரவச்யத்தாலே –
பிராப்ய பிராபக ஆபாசங்கள் எல்லாம் தன்னடையே விட்டுக் கழிகையாலே -கைமுதல் அற்றவர்கள் –
உண்ணும்
அதாவது
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்-திருவாய்-6-7-1- -என்று
தாரக போஷக போக்யங்கள் எல்லாம் தானேயாக புஜிக்கும்-
(வாஸூ தேவ சர்வம் கண்ணன்-எல்லாம் கண்ணன் – -இது கொண்டு ஸூத்ர வாக்கியங்கள் ஒருங்க விடுவார் –
தர்சனம் பேத ஏவச–ஆறு வார்த்தைகளில் ஒன்றும் உண்டே )
நிதியின் ஆபத் சகத்வம்-
அதாவது
வைத்த மா நிதியாம் மது ஸூதனை –திருவாய்-6-7-11 -என்று
ஆபத் ரஷகமாக சேமித்து வைத்த மகா நிதி போல் இருக்கிறவனுடைய ஆபத் சஹத்வம் –
புகுமூரிலே சம்ருத்தம்–
அதாவது-
திண்ணம் என் இள மான் புகுமூர் திருக் கோளூரே-திருவாய்-6-7-1- -என்று
பிராப்ய ருசி பிறந்தார்க்கு பிரவேஷ்டமாய் இருக்கும் திருக் கோளூரிலே –
செல்வம் மல்கி யவன் கிடந்த திருக்கோளூர்க்கே- திருவாய்-6-7-4–என்று
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணமே தனக்கு நிரதிசய சம்பத்தாக நினைத்து வந்து கிடைக்கையாலே
சம்ருத்தம் என்கை ..(சம்ருத்தம் -நிறைவு)(புகுமூர் போகுமூர் ஆனதோ –பெண் பிள்ளை வார்த்தை —
நானே ரக்ஷித்துக் கொள்வான் அவனுடைய ஊணைப் பறிப்பானே )
——————
சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுக்கும் சௌந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும்–சூரணை -170-
( வேத ஒலி -விழா ஒலி= பிள்ளைகள் விளையாட்டு ஒலி மூன்றும் கோஷிக்குமே இங்கு )
சென்று சேர்வார்க்கு
அதாவது
தென் திரு பேரையில் சேர்வன் சென்றே- திருவாய்-7-3-8–என்று
க்ரம பிராப்தி பற்றாத பிரேம அதிசயத்தாலே ஹித பரர் வார்த்தை கேளாதே சென்று
பிரவேசிப்பது என்னும் படியானவர்களுக்கு –
உசாத் துணை அறுக்கும்
அதாவது
என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் -உழந்து இனி யாரைக் கொண்டு என் உசாகவோ-திருவாய்-7-3-4- -என்னும் படி
உசாத் துணையான நெஞ்சை அபஹரிக்கும் –
சௌந்தர்யம்
அதாவது
செஞ்சுடர் நீள் முடித் தாழ்ந்ததாயும் சங்கோடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு
அற்றுத் தீர்ந்தும் -திருவாய்-7-3-3-என்று சொன்னவனுடைய சௌந்தர்யம் –
( ராமம் மே அநு கதா த்ருஷ்ட்டி கடல் கொண்ட வஸ்து திரும்பாதே தசரதன் புலம்பல்
கனி வாயிலும் -முடியிலும் -திவ்ய ஆயுதங்களிலும் திருக் கண்களின் அழகிலும் -இத்யாதி —
ஆழ்வாருடைய திரு உள்ளம் தசாவதாரம் எடுத்து இவற்றை ஒவ் ஒன்றிலும் ஈடுபட -அனுபவித்ததாம்-
சர்வ வியாபகம் கொடுத்த சாம்யாபத்தி –முடியிலும் இருந்து திருவடி வரை வியாபித்து நெஞ்சு அனுபவிக்க –
நெஞ்சினார் -உயர்வு தோன்ற –
திருக்குறுங்குடி லாவண்யம் -இங்கு ஸுவ்ந்தர்யம்-நிகரில் முகில் வண்ணன் உத்சவர் திரு நாமம் இது –
மகர நெடும் குழைக் காதர்-மூலவர் இவன் அன்றோ
முக்தன் -இமான் லோகான் காமான் சஞ்சரம் -ஆழ்வார் திரு உள்ளத்துக்கு இங்கேயே அது வாய்த்ததே
அம்ருத மதனத்துக்கு அவன் பல வடிவம் கொண்டது போலே ஆழ்வார் திரு உள்ளம் இங்கு -)
மா நகரிலே கோஷிக்கும்-
அதாவது
தென் திரு பேரெயில் மா நகரே–திருவாய்-7-3-9- -என்று
மகா நகரான தென் திரு பேரையில் –
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு -திருவாய்-7-3-4–என்கிறபடியே –
அவ் விஷயத்தை அனுபவித்த ஹர்ஷ பிரகர்ஷத்தால் அங்குள்ளோர்
பாடுகிற சாம கோஷத்தாலே தெரியும் என்கிறபடி ..
( திரு உள்ளத்தில் கருட உத்சவம் இவருக்கு இங்கு கருடன் குழம்பு ஓசை இங்கு
பெரியாழ்வாரும் சமுத்திர அலை ஓசை –
இன்றும் சாம கோஷம் அங்குள்ளார் கோஷித்த பின்பே ஆழ்வார் ஆஸ்தானம் எழுந்து அருளுகிறார் -)
———–
ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆநந்த வ்ருத்தி நீண் நகரிலே –சூரணை-171-
(இன்பம் பயக்க -என்பதால் ஆனந்த வ்ருத்தி -துணைக் கேள்வியாக இங்கே தானே –
ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மஹா பாரதம் ஸ்ரீ சஹஸ்ர நாமமும் – இரண்டும் தனிக் கேள்வி தானே –
பாடியவர் வால்மீகி கேட்பித்தவர் லவகுசர் -இங்கே பாடினவரே கேட்பீக்க்கவும் –
பாட்டுக்கு தலைவி சீதா பிராட்டி கேட்க்காமல்-ருக்மிணி தேவியும் கேட்க வில்லையே அங்கு –
பாசுரத்தில் சிந்தனை என்பதையே இங்கு சித்தம் -)
ப்ரவண சித்தம்
அதாவது
தீ வினை உள்ளத்தின் சார்வல்ல வாகித் தெளி விசும்பு ஏறல் உற்றால்
திரு வாறன் விளை அதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல்
என்னும் என் சிந்தனை–திருவாய்-7-10-9–என்று –
அவித்யாதிகள் பிரத்யக் வஸ்துவான ஆத்மாவில் பற்றற போய் -தெளிவை விளைப்பதான
பரம பதத்தை ப்ராபிக்கை வந்து கிட்டினாலும் என் நெஞ்சானது -திரு வாறன் விளை யாகிற இத் தேசத்தைக் கிட்டி –
அனுகூல வ்ருத்தி பண்ணிக் கையாலே தொழக் கூடுமோ என்னா நிற்கும் என்று தன் பக்கல்
பிரவணரானவர்கள் சித்தத்தை –
பரத்வ விமுகமாக்கும்
அதாவது
சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்-திருவாய்-7-10-10- -என்று
பரம பதத்தின் பேர் சொல்லுகையும் அசஹ்யமாம் படி பரத்வத்தில் விமுகமாகப் பண்ணும் –
ஆநந்த வ்ருத்தி-
அதாவது-
இன்பம் பயக்க எழில் மாதரும் தானும் இவ் எழ உலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து –திருவாய்-7-10-1-
என்கிற ஆநந்த வ்ருத்தி –
நீண் நகரிலே-
அதாவது
திரு வாறன் விளை என்னும் நீள் நகரம் அதுவே -திருவாய்-7-10-6–என்றும்
திருவாறன் விளை நீள் நகரத்து உறைகின்ற பிரான் -திருவாய்-7-10-7- என்றும்
நீள் நகரான திரு வாறன் விளையில் வ்யக்தம் என்ற படி –
—————-
ஸ்ரம மனம் சூழும் சௌகுமார்ய பிரகாசம் ஆய்ச் சேரியிலே—சூரணை-174-
ஸ்ரம மனம் சூழும்
அதாவது
பணியா அமரர் பணிவும் பண்பும்–திருவாய்-8-3-6–இத்யாதி படி –
பரம பிரேம யுக்தரான நித்ய சூரிகள் பரிசர்யை பண்ண பரம பதத்தில் இருக்கும் அவன் –
நிரதிசய சௌகுமாரமான திரு மேனியோடே சம்சாரிகளுடைய துக்கத்தைப் போக்குகைக்காக –
தன் வாசி அறியாத இந்த லோகத்தில் வந்து அவதரித்து –
அடியார் அல்லல் தவிர்ப்பது –திருவாய்-8-3-7-
படி தான் நீண்டு தாவுவது –திருவாய்-8-3-7-
ஆகையால் வந்த ஸ்ரமத்தை அனுசந்தித்த மனசானது -வ்யாகுலிதமாய்-பிரமிக்கும்படியான –
சௌகுமார்ய பிரகாசம்
அதாவது
ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்—திருவாய்-8-3-3-என்று
பூ யேந்தினாப் போலே இருக்கும் திரு ஆழி திரு சங்கை ஏந்துவதும் மலை சுமந்தார் போல்
வன் பாரமாக தோற்றும் படி இருக்கிறவன் சௌகுமார்ய பிரகாசம் –
ஆய்ச் சேரியிலே-
அதாவது
உடைய நங்கையார் பிறந்தகம் ஆகையாலே -ஆழ்வாருக்கு ஆய்ச் சேரியாய் இருப்பதாய் –
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்று
வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்பற்கு என் திறம் சொல்லார் -—திருவாய்-8-3-7–என்ற
திருப் பரிசாரத்தில் காணப் படும் என்கை —
(என் திரு வாழ் மார்பன் –என் திரு மகள் சேர் மார்பனே என்னும் என்னுடைய ஆவி போலவே இங்கும் –
அமர்ந்த திருக் கோலம் இங்கு மட்டுமே மலையாள திவ்ய தேசம் –
அகஸ்தியர் ஸ்ரீ ராமாயணம் சொல்ல திருவடி கேட்ட திவ்ய தேசம்-இருவரும் சேவை சாதிக்கிறார்கள் இங்கு –
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ -சிரமம் -நினைத்த ஆழ்வார் மனம் சூழ வந்தானே
ஆழியும் சங்கும் சுமப்பார்-அவன் அபிப்பிராயம் ஏந்து-ஆழ்வார் அபிப்ராயம்
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே -இது அவன் அபிப்ராயம் -அங்கு –
குலசேகராழ்வார் குதிரை பரி சஞ்சரித்த இடம் திருப்பரிசாரம் -திரு வண் பரிசாரம் இது )
——————-
சாத்ய ஹ்ருதிஸ்னாயும்-சாதனம் ஒருக்கடுக்கும்-க்ருதஜ்ஞதா கந்தம் –தாயப் பதியிலே–சூரணை -176-
(கடி -பரிமளம் -தானம் -ஸ்தானம் -வாசனை மிக்க ஸ்தானம் -எனவே கந்தம்-
கடி -கத்தி -ஸ்தானம் -ஹனுமான் கடி போலே -என்றுமாம் –
கிஞ்சித் உபகாரம் மறக்க மாட்டான் -சஹஸ்ர அபசாரங்களையும் மறப்பான் அன்றோ –
தாயப்பத்தி -பித்ரு ஆர்ஜிதம் -ஹஸ்தி மே ஹஸ்தி சைலம் –பிதா மகன் சொத்து
ஒருக்கடுத்தல் -ஒருங்க அடுத்தல் -ஆழ்வார் திரு உள்ளத்தில் நித்ய வாஸம் போலவே
திவ்ய தேசத்திலும் ஆசை கொண்டு நித்ய வாஸம் என்றவாறு-
திருமாலிருஞ்சோலை மலையே என்கிறபடியே உகந்து அருளினை நிலங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை
இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் -அங்குத்தை வாஸம் சாதனம் -இங்குத்தை வாஸம் சாத்யம்-
கல்லும் கனைகடலும் என்கிறபடி இது சித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாய் இருக்கும் –
இளம் கோயில் கை விடேல் என்று இவன் பிரார்த்திக்க வேண்டும்படியாய் இருக்கும் -ஸ்ரீ வசன பூஷணம்
கோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சகம் 8-6-5–)
அதாவது
சாத்யம் கைப் பட்டால் சாதனத்தில் இழிவார் இன்றிக்கே இருக்க –
திருக் கடித் தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான்-திருவாய்-8-6-2- -என்று
சாத்தியமான ஆழ்வார் திரு உள்ளத்திலே வாஸம் லபித்தது இருக்கச் செய்தேயும் ,
இத்தைப் பெற்றது அத் தேசத்தில் நிலையாலே அன்றோ என்று
சாதனமான திருக் கடித் தானத்தையும் அடுத்து பிடித்து வர்த்திக்கும் படியான க்ருதஜ்ஞாத பரிமளம் —
திருக் கடித்தான நகரும் தான தாயப் பதி—திருவாய்-8-6-8-என்று
தனக்கு தாயப் ப்ராப்தமான ஸ்தானமாக நினைத்து இருக்கும் திருக் கடிதானத்தில் என்கை ..
க்ருதஜ்ஞதா கந்தம் -என்றது-கடித்தானம்-என்று மணத்தை உடைத்தான ஸ்தானம் என்கையாலே ..
————–
அவகாஹித்தாரை அனந்யார்ஹமாக்கும் நாயக லஷணம் வளம் புகழு மூரிலே குட்டமிடும்–சூரணை -176-
அவகாஹித்தாரை
அதாவது
அப்பன் திருவருள் மூழ்கினள்–திருவாய்-8-9-5-என்று
தன் பிரசாதத்தாலே மருனனைய அவகாஹித்தாரை –
அனந்யார்ஹமாக்கும்-
அதாவது-
அரு மாயன் பேர் அன்றி பேச்சு இலள்–திருவாய்-8-9-1–என்றும் –
திருப் புலியூர் புகழ் அன்றி மற்று –பரவாள் இவள் நின்று இராப் பகல் -திருவாய்-8-9-9-–என்றும் –
திரு புலியூர் நின்ற மாயப் பிரான் திரு அருளாம் இவள் நேர் பட்டது -திருவாய்-8-9-10–என்னும் படி
அனந்யார்ஹம் ஆக்குமதாய் –
நாயக லஷணம்-
அதாவது-
கருமாணிக்க மலை மேல் மணித் தடம் தாமரைக் காடுகள் போல் -திருவாய்-8-9-1–என்றும் –
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல்-திருவாய்-8-9-2- -இத்யாதிகளால் சொன்ன
அவயவ சோபை ஆபரண சோபை முதலான நாயக லஷணம் ..
வளம் புகழு மூரிலே குட்டமிடும்-
அதாவது-
திருப் புலியூர் வளம் புகழும் -திருவாய்-8-9-3-என்று
இவர் கொண்டாடும் படியான ஐஸ் வர்யத்தை உடைய திருப் புலியூரிலே பூரணமாம் என்கை ..
குட்டமிடும் -என்றது -குட்ட நாடு -என்னும் அத்தை நினைத்து ..
அருள் மூழ்கினாரை – என்னாதே -அவகாஹித்தாரை -என்றது கலந்தவர்களை-
அனந்யார்ஹர் ஆக்கும் படி இருக்க வேணும் நாயக லஷணம் என்று –
உத்தம நாயக லஷணத்தை சாமான்யேன தர்சிப்பித்து –
அந்த லஷணம் ஈஸ்வரனுக்கு திருப் புலியூரிலே பூரணமாக பிரகாசிக்கும் என்று அருளிச் செய்தவர் ஆகையாலே .
————-
நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் - நாலாயி:2569/2
நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என் - நாலாயி:3199/1
அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல் நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று கிடந்தானை-மூன்றாம் திருவந்தாதி -34
தான நகர்கள் தலைச்சிறந்து எங்கெங்கும் - நாலாயி:3733/1
திருமூழிக்களம் என்னும் செழு நகர்வாய் அணி முகில்காள் - நாலாயி:3850/2
கடி நகர வாசல் கதவு - நாலாயி:2269/4
நீள் நகரம் அதுவே மலர் சோலைகள் சூழ் திருவாறன்விளை - நாலாயி:3666/1
நீள் நகரத்து உறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன் - நாலாயி:3666/2
நின்ற அணி திருவாறன்விளை என்னும் நீள் நகரம் அதுவே - நாலாயி:3665/4
வன் தாளின் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னன் ஆவான் - நாலாயி:730/1
தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர் - நாலாயி:2332/3
விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடம் மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த - நாலாயி:2343/2
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர் - நாலாயி:2721/3
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு - நாலாயி:2739/2
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும் - நாலாயி:2746/2
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும் - நாலாயி:2747/1
பூம் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும் - நாலாயி:2158/2
தான நகரும் தன தாய பதியே - நாலாயி:3733/4
தெண் திரை புனல் சூழ் திருவிண்ணகர் நல் நகரே - நாலாயி:3474/4
நண்ணு திருக் கடித்தான நகரே - நாலாயி:3732/4
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து நானும் - நாலாயி:739/3
-----------
நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் - நாலாயி:2569/2
பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
நாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92-
உன் விபூதியில் ஏக தேசத்தை அழித்து தர வேணும் என்று சொல்லா நிற்பர்கள் ஆயிற்று –
முந்நீர பெரும் பதிவாய் நீள் நகர் –
அஞ்சினான் புகலிடமாய் -துர் வர்க்கம் அடங்கலும் புக்கு ஒதுங்கும்-இடம் ஆயிற்று –
கடலை அகழாக உடைத்தாய் இருக்கையாலே சிலராலே பிரவேசிக்க அரியதாய் இருக்கை-
கடல் சூழ்ந்த (ஜம்போத் த்வீபத்திலே )மகா த்வீபத்திலே உண்டான –
நீள் நகர் –
தேவர்கள் உடைய வர பலத்தாலே ஒரு நாளும்-அழியாதபடி -பூண் கட்டின இலங்கையிலே –
(லங்காம் ராவண பாலிதாம் -திருவடி மதித்த ஐஸ்வர்யம் )
நீள் எரி வைத்து அருளாய் –
தேவதைகள் உடைய வரத்தால் உண்டான-சக்தியையும் அழிக்க வற்றான
சராக்நியை பிரவேசிப்பிக்க வேணும் -என்பர்களே
இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர்(-4-2) -என்னக் கடவது இறே –
ஒரூரைச் சுட்டுத் தர வேணும் என்பர்கள் –
————–
நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என் - நாலாயி:3199/1
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே! ஞாலம் கொள் வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2-
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே –
‘என்றும் நெஞ்சிலே இருந்துபோம் இத்தனையேயோ? என் பக்கலிலும் ஒரு கால் இருத்தல் ஆகாதோ?’ என்னா நின்றது;
வாக்கின் வார்த்தை இருக்கிறபடி இது. ‘மற்றை இந்திரியங்கள், பரம பதம், பாற்கடல் தொடக்கமான இடங்கள் என் படுகின்றனவோ!
என்னே பாவம்!’ என்பார், ‘நெஞ்சமே இருந்த’ எனப் பிரிநிலை ஏகாரங் கொடுத்து ஓதுகிறார்.
‘கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும், புல்லென்று ஒழிந்தனகொல்? ஏ பாவம்!’ – பெரிய திருவந். 68.-என்னுமாறு போன்று
‘பரமபதமும் அவ்விருப்பும் என்படுகின்றதோ?’ என்றபடி.
‘கலங்காப் பெருநகரத்திற் பண்ணும் ஆதரத்தை என் நெஞ்சிலே பண்ணா நின்றான்,’ என்பார், ‘நகராக’ என்கிறார்.
பரம பதத்தில் இட்டளமும் -சங்கோசம் -தீர்ந்தது இவர் நெஞ்சிலே ஆதலின், ‘நீள் நகராக’ என்கிறார்.- வைகுந்தம் நகர் நெஞ்சு நீள் நகர்
மனத்தினை இட்டளம் இல்லாத நரகமாகக் கொண்டிருந்தான் –நீள் நகராகக் கொண்டிருந்தமை-என்றபடி.
‘மனத்தினை நீள் நகராகக் கொண்டிருந்தமையை அறிந்தபடி எங்ஙனே?’ என்ன,‘இல்லையாகில், மறந்து கூப்பீடு மாறும் அன்றோ?
இப்படிக் கூப்பிடப் பண்ணின உபகாரத்தின் தன்மையை நினைத்து ‘என் தஞ்சனே!’ என்கிறார்.
சமுசாரிகளில் இப்படிக் கூப்பிடுகின்றவர் இலர் அன்றே? இவர் நெஞ்சிலே இருக்கை அன்றோ இவ்விஷயத்திற் கூப்பிடுகிறது?
—————–
தான நகர்கள் தலைச்சிறந்து எங்கெங்கும் – நாலாயி:3733/1
தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும்
வானிந்நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தனதாய்ப் பதியே–8-6-8-
நகரங்கள் பலவும் உண்டாய் இருக்கச் செய்தேயும்–என்னுடைய நெஞ்சையும் திருக் கடித் தானத்தையும்
தாயத்தால் கிடைத்த இடமாக விரும்பி-இருக்கிறான் -என்கிறார் –
ரதிங்கத -ஆசைப்பட்டு வந்ததால் ஸ்ரீ ரெங்கம் இதி –
என் நெஞ்சும் திருக் கடித் தான நகரும்
தனக்கு தாய பாகமாகக் கிடைத்த இடமாக
விரும்பி இரா நின்றான்
தாயப்பதி பரம்பரை சொத்து-இயற்கையாக-தாயாதி தாயத்தை ஆளுகிறவர்கள்-தானே வரும் –
ஹச்திசைலே–பித்ருரார்ஜிதம் -கிஞ்சித் வைராக்ய பஞ்சகம்
மலை மேல் தாய பிராப்தம் பிதாமகர் சம்பாதித்த தனம்-நான் சம்பாதிக்க வில்லை -அனுபவம் அவகாசம் இருக்காதே
ந பித்ரார்ஜிதம் -தகப்பனார் இஷ்டம் வேண்டுமே அனுபவிக்க-பைதாமகம் -தகப்பனாரும் கேட்க முடியாதே
birth right உண்டே –தாயப்பிராப்தம் இது தான்
—————
திருமூழிக்களம் என்னும் செழு நகர்வாய் அணி முகில்காள் - நாலாயி:3850/2
திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-
திரு மூழிக் களம் என்னும் –
துயர் உற்றவர்களை பாது காப்பதற்காக-வந்து நிற்கிற இடம் என்ற-பிரசித்தமான தேசம் –
செழு நகர் –
பரம பதத்தைக் காட்டிலும் உண்டான ஏற்றம் –
வாய் அணி முகில்காள்-
வளப்பம் பொருந்திய நகரத்திலே செல்லுகிற-அழகிய முகில்காள்
அன்றிக்கே
செழு நகரிலே எழுந்து அருளி இருக்கின்ற அடிகள் -என்று-
செழுநகர் வாய் -என்பதனை-அடிகளுக்கு அடை மொழி ஆக்கலுமாம்-
————–
கடி நகர வாசல் கதவு - நாலாயி:2269/4
திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–இரண்டாம் திருவந்தாதி -88-
அரண் -என்று காவலாய் –
அத்தால்
ஸ்வ யத்ன சாத்தியம் அல்லாத வான் -என்றபடி
நயாமி பரமாம் கதிம் —
அநே நைவ வஹி –
அப்ரதிஷேதம் கொண்டு பெற பெற மாட்டாதே ஸ்வரூபத்தை அழித்துக் கொண்டு பேற்றை இழப்பதே –
கடி நகரம் –
கடி என்று பரிமளமாய்-போக்யதை யாகவு மாம் –
ஒளியை யுடைத்தான நகரம் என்றுமாம் –
——————
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–
நின்ற அணி திருவாறன்விளை என்னும் நீள் நகரமது –
பிரகாசியா நிற்கச் செய்தேயும் கண்களுக்கு இலக்கு ஆகாதபடி இருக்கை அன்றிக்கே,
‘இவன் நமக்கு உளன்’ என்று அச்சந்தீரும்படி கண்களாலே கண்டு அனுபவிக்கும்படி நிற்கிற
அழகிய திருவாறன்விளையாகிற மஹா நகரத்தை.
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–7-10-6-
நீள் நகரத்து உறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன் - நாலாயி:3666/2
நீணக ரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7-
நீள் நகரம் அதுவே –
கலங்காப் பெருநகரமாய், புக்கார்க்கு ‘மீண்டு வருதல் இல்லை’ என்கிறபடியே
ஒரு நாளும் மீட்சி இல்லாதபடி எப்பொழுதும் அனுபவம் பண்ணும் பிராப்பிய தேசம் அதுவே.
மலர்ச் சோலைகள் சூழ் திருவாறன்விளை நீள் நகரத்து உறைகின்ற பிரான் –
‘அவனுக்குக்கூடப் பிராப்பிய பூமி’ என்று தோற்றும்படி இருக்குமாயிற்று.
ஸ்ரீ வைகுந்த நாதன் இத்தை பிராப்யம் என்று அன்றோ உகந்து நித்ய வாசம் செய்கிறான் –
நித்திய வசந்தமான பொழிலாலே சூழப்பட்ட திருவாறன்விளையாகிற மஹா நகரத்திலே வந்து வசிக்கின்ற உபகாரன்
————-
அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று
கிடந்தானைக் கேடில் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண்–மூன்றாம் திருவந்தாதி -34–
அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்-நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் -அன்று-கிடந்தானை-
பூமி அடங்கலும் நின்று அளந்த வருத்தத்தாலேயே திரு வெஃகாவில் கண் வளர்ந்து அருளுகிறதும் –
திரு வேளுக்கையில் இருக்கிறதும் என்று நெஞ்சே அநுஸந்தி
(நீள் நகர் என்றதே திரு வெக்கா என்று ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு உள்ளம்)
திரு வேளுக்கையிலே எழுந்து அருளி இருந்து -மஹா நகரமான திரு வெஃகாவில் சாய்ந்து அருளினவனாய் –
நித்ய ஸித்தமான கல்யாண குணங்களை யுடையனாய் முன்பு ஒரு நாளிலே விரகிலே நலியப் பார்த்த கம்சனை
முடித்துப் பொகட்டுத் தன்னை நோக்கித் தந்தவனை -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை
————–
வன் தாளின் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னன் ஆவான் – நாலாயி:730/1
வன் தாள் இணை வணங்கி வள நகரம்
தொழுது ஏத்த மன்னனாவான்
நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை
நெடும் கானம் படர போகு
வென்றாள் எம்மி ராமாவோ!
உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
நன் மகனே! உன்னை நானே—- 9-1–
தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே— 10-4–
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
குல க்ரமா கதமதாய் வருகிற படை வீட்டை சந்யசித்து -இவள் சொன்னாள் என்று போகைக்கு
பிராப்தி இல்லாமையைக் காட்டுகிறது
—————–
கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர் – நாலாயி:2332/3
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து —மூன்றாம் திருவந்தாதி–—51-
அவனே-கலங்கா பெரு நகரம் காட்டுவான் –
பரம பதம் அவனே காட்டக் காணும் அத்தனை –
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்குக் காணப் போகாது –
————
விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடம் மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த – நாலாயி:2343/2
விண்ணகரம் வெக்கா விரி திரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை -மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு –62-
‘ஒப்பிலியப்பன் ஸந்நிதி‘ என்கிற திருவிண்ணகர், ‘யதோக்தகாரி ஸந்நிதி‘ என்கிற திருவெஃகா
திருமலை, ஆளழகிய சிங்கர் ஸந்நிதி‘ என்கிற கச்சித் திருவேளுக்கை, திருக்குடந்தை, திருவரங்கம் பெரியகோவில்,
திருக்கோட்டியூர் ஆகிய இத்திருப்பதிகளெல்லாம் எம்பெருமான் தங்குமிடங்கள் என்று
சில திருப்பதிகளைப் பேசி அநுபவித்தாராயிற்று.
ஈற்றடியில் ‘தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு‘ என்றருளிச் செய்த்தன் கருத்து –
மஹாபலி பக்கல் யாசகனாகப் போகும்போது எவ்வளவு ஸௌலப்யமும் ஸௌசீல்யமும் தோன்றிற்றோ
அவ்வளவு சீலம் இத்திருப்பதிகளிலும் தோன்றும்படி யிருக்கிறானென்பதாம்.
தாழ்வு – தாழ்ச்சிதோற்ற இருக்குமிடமென்கை.
——————
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர் – நாலாயி:2721/3
பொன்னகரம் புக்கு –
அதில் ஸ்லாக்கியமான தேச வாசமே அமையும் என்னும் படி
இருக்கிற விடத்தே போய்ப் புக்கு –
அமரர் போற்றி செய்யப் –
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள -என்னுமா போலே அங்குள்ள தேவர்கள்
அர்த்த பரராய் சம்சாரத்திலே இருந்து
இக்காம புருஷார்த்தத்தை ஆதரித்து
அதுக்கீடாக தன்னை ஒருத்து
சாதனா அனுஷ்டானம் பண்ணி வருவான் ஒரு மகாத்மா உண்டாவதே -என்று கொண்டாட –
பொங்கொளி சேர்-
காலம் செல்லச் செல்ல ஒளி மழுங்குகை அன்றிக்கே
புண்ய பலம் ஆகையாலே
மிக்கு வாரா நின்றுள்ள ஒளி சேர்ந்து இருப்பதாய் –
————
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு – நாலாயி:2739/2
பொன்னகரம்-
பொன்னுலகுக்கு ஒக்கும் காணும் திரு வயோத்யை-
அதுக்கு காரணம் ராம சம்ச்லேஷ ஏக ரசராய் இருக்கை-
அபி வ்ருஷா பரிம்லா நாஸ் சபுஷ் பாங்குர கோரகா-அயோத்யா -59-9-என்கிறபடியே
ஸ்தாவரங்களும் உட்பட ராம குணைக தாரகமாய் இ றே இருப்பது –
பின்னே புலம்ப-
பிரியில் தரியாதே பின்னே தொடர்ந்து கூப்பிட
சுற்றம் எல்லாம் பின் தொடர -பெருமாள் திரு மொழி -8-6-
பொன்னகரம்-
பொன்னுலகுக்கு ஒக்கும் காணும் திரு வயோத்யை-
அதுக்கு காரணம் ராம சம்ச்லேஷ ஏக ரசராய் இருக்கை-
அபி வ்ருஷா பரிம்லா நாஸ் சபுஷ் பாங்குர கோரகா-அயோத்யா -59-9-என்கிறபடியே
ஸ்தாவரங்களும் உட்பட ராம குணைக தாரகமாய் இ றே இருப்பது –
பின்னே புலம்ப-
பிரியில் தரியாதே பின்னே தொடர்ந்து கூப்பிட
சுற்றம் எல்லாம் பின் தொடர -பெருமாள் திரு மொழி -8-6-
————–
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும் – நாலாயி:2746/2
நன்னகரம் புக்கு-
உங்களைப் போல் அன்றியே மடல் எடுப்பாரைக் கொண்டாடும் ஊர் –
நயந்து இனிது வாழ்ந்ததுவும் –
கொண்டாடி-நித்ய சம்ச்லேஷம் பண்ணி-
தனது நன்னகரம் -புக்கு-
தன்னுடைய நல்ல நகரம்-இவ் ஊருக்கு ப்ரத்யா சத்தியை யுடைய ஊர் அது –
மடல் எடுப்பாரை விலக்குவாரும் இன்றிக்கே-மடல் எடுத்து தொடர்ந்து வருவார் திரள் கண்டு உகக்கும் ஊர் –
————–
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும் – நாலாயி:2747/1
————-
பூம் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும் – நாலாயி:2158/2
வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமா மிடர் ——முதல் திருவந்தாதி —77-
இவர்களுக்கு உகந்து அருளின நிலங்கள் எல்லாம் ஒரு போகியாய் இருக்கிறபடி (இங்குள்ள இருந்த திவ்ய தேசமாகச் சொல்லாமல் -ஸ்ரீ வைகுண்டமும் இவையும் ஒரே போகி )
பொன்னகர் –தானே வந்து நோக்கின இடம் –
(என்றால் கெடும் -இந்த திவ்ய தேச வாசம் கூட வேண்டா -அவன் நம்மை அடையவே இங்கு நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் கோர மா தவம் செய்கிறான்
என்று அனுசந்தித்தாலே போதும்
இடர் என்பது எல்லாமே கெடும் என்கிறார்
நாமே சூழ்த்துக் கொண்ட ஸம்ஸாரிக துக்கங்கள் போன வழி தெரியாதபடி தாமே விட்டு ஓடிப் போகும் என்கிறார் -)
———————
தான நகரும் தன தாய பதியே – நாலாயி:3733/4
————
தெண் திரை புனல் சூழ் திருவிண்ணகர் நல் நகரே – நாலாயி:3474/4
——-
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து நானும் – நாலாயி:739/3
தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும்
சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட
கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன்
மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–
வளம் நகரை–(உன் பட்டாபிஷேகத்தின் பொருட்டு) அலங்கரிக்கப் பட்டிருக்கிற இந்நகரத்தை
———–
நண்ணு திருக் கடித்தான நகரே – நாலாயி:3732/4
----------
கங்கையின் கரை மேல் கைதொழ நின்ற கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:391/4
கலந்து இழி புனலால் புகர் படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:392/4
கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கை கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:393/4
சுமை உடை பெருமை கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:394/4
கழுவிடும் பெருமை கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:395/4
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:396/4
கற்பக மலரும் கலந்து இழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:397/4
கரை புரை வேள்வி புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:398/4
கடலினை கலங்க கடுத்து இழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:399/4
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே - நாலாயி:400/4
கடி நகர்–சிறந்த நகரமானது (எதுவென்னில்,கண்டம் என்னும் கடி நகரே
கண்டம் என்னும் கடிநகர்-வாசகத்தாலே-கடு வினை களைந்திட கிற்கும்-என்று அந்வயம் –
கங்கையில் திரு மால் கழல் இணைக் கீழே குளித்து இருந்த கணக்காமே
கங்கையில் குளித்து -திரு மால் கழல் இணைக் கீழே இருந்த கணக்காமே
1-தேசாந்தர
2-த்வீபாந்தரங்களிலே இருந்ததார்க்கும்
3-உபரிதன பாதாள லோகங்களில் இருந்ததார்க்கும்
4-நித்ய விபூதியில் இருந்து தங்கிய நா யுடையார்க்கும்
5-சேவடி செவ்வி திருக்காப்பு -என்ற இவர் தம்மைப் போலே -இவர் அபிமானத்திலே ஒதுங்க வல்லாருக்கும்
அவன் திருவடிகளின் கீழே இருந்து மங்களா ஸாஸனம் பண்ணின இவர் நேர் ப்ரயோஜனத்தில் ஒக்கும் –
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-