Archive for the ‘அமலனாதி பிரான் .’ Category

ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் பிரபந்தம் -ஸ்ரீ வடிவு அழகிய நம்பி தாஸர் அருளிச் செய்தது –

March 17, 2023

காராரும் பொழில் வஞ்சி கா வலவன் கதிர் மௌலிக்
கூராரும் சுடர் வேல் கைக் குல சேகரின் திறமும்
ஏராரும் பாகவதர் இன்னருளால் சிறுத்தை இயம்பி
சீராரும் திருப்பாண் ஆழ்வார் திறமும் செப்புவோம் –1-

மாணார்ந்த திறல் அரங்கர் மணி வண்ணனைக் கண்ட கண்கள்
காணா மற்று ஒன்றினையும் எனக் கரந்து கட்டுரைத்த
பாணாழ்வார் அனுபவத்தைப் பாட எனப் பக்தர்கள் முன்
நாணாதே ஒருப்பட்டேன் இதன் வேறு நகை யுளதோ –2-அவை அடக்கம்

மனு மகனுக்கு அயன் கொடுத்த மரகத மா மணிக்குன்றம்
எனும் அரங்கத்து அம்மானை இதயமலர் அணைக்கிடத்தி
அனுபவிக்கும் திறம் உணரில் திருமகளும் அஞ்சும் அடியேன்
பனுவலுக்கோ வெளியாவர் பாணாழ்வார் அல்லரோ –3

மனு மகன் -இஷ்வாஹு –
இவர் பெருமையைச் சொல்ல திருமகளும் அஞ்சும் படி இருக்க அடியேன் பாட்டுக்கு உட்படுவாரோ மாட்டாரோ

என்றால் பொய்யடியேனுக்கு எளிதோ மற்றவன் கீர்த்தி
நின்று ஆங்கே அது நிற்க நாயினேன் புன் சொலினும்
ஒன்றாம் அது என் எனில் உரை தோறும் திருப்பாணன்
குன்றாத திரு நாமம் வரலான் மெய் குறித்தோரே-4

திருநாமம் சொல்வதால் பெற்ற வலிமையாலே சொல்லுவேன்

திருப்பாணார் திரு அவதாரம்

ஆங்கு அவையே துணையாக அறைவேன் மெய் விண் நின்று
பூம் கமலக் கண் எம்மான் திருவருளால் புவியின் மறை
ஓங்கு திரு உறையூரில் திருக்குலத்தார் உறு தவத்தின்
பங்கு அதனால் கார்த்திகை மாதத்தில் வளர் பக்கத்தில் –5-

செய்ய நெறி உரோகிணியில் தேவர்களும் திரு மறையும்
வையக மா முனிவர்களும் மா தவரும் மகிழ்ந்து ஏத்தப்
பையத் தரவணைக் கிடந்தான் பத்தர் குழாம் பரிந்து ஓங்க
ஐயன் என ஆள வந்த திருப்பாணான் அவதரித்தான் –6-

இளமையிலேயே பாண் பெருமாள் சிறப்பு

ஈன்றாரும் அறியாதே இலை மறை காய் என மண்ணில்
தோன்றாதே வளர்ந்து அருளிச் சுருதி தொழ உலகு உய்ய
மூன்றாறு திரு வயதில் கைசிக நாரத முனிவர்
போன்றாரும் இவர்க்கு ஒவ்வார் எனும் இசையில் பொதுவின்றி –7-

சூழ் விசும்பு மதில் அமரர் தொல் உலகும் அம் புவியும்
ஆழ் கடலும் எண் கிரியும் அயன் அரனும் அசுரர்களும்
வாழும் உயிர்ச் சராசரமும் நீராள மயமாக
ஏழிசையும் பாண் பெருமாள் நம் பெருமாள் இடத்து இசைத்தார் –8-

பாணரது இசைத் தொண்டினை பலரும் போற்றுதல்

தென்னாற்றங்கரை நின்று திருப்பாணார் இவை பயில
அந்நாட்டார் திருக்குலத்தில் அவதரித்தார் இவர் யாரோ
பொன்னாட்டில் உள்ளவரோ எனப் புகலப் புண்ணியரும்
பன்னாளும் திருவரங்கத்து அம்மானைப் பணிந்து ஏத்தி –9–

அப்படியே பல காலம் அந்தரங்க சேவை பண்ணி
ஒப்பிலார் சங்கீதம் பயின்றிடு நாள் உயர்வானும்
இப்படியும் அளந்த பிரான் திரு மார்பில் இந்து அமரும்
செப்பென்னும் கன தனத்தாள் திரு மங்கை மனம் மகிழ்ந்தே –10-

பிராட்டி ஏவ அரங்கன் திருப்பாணரை அழைத்து வரச் சொல்லி வாயில் காப்போரை நியமித்தல்

திருவரங்க நகர் எம்பிரான் வடிவை செப்பும் வானில் உறை தேவரும்
மருவரும் பொருவில் வீடதாதி உலகு ஏழினும் இசை வழுத்துவோர்
ஒருவர் இங்கு அவரை ஒத்துளார்கள் பிறர் உண்டு கொல் உரை செயும் பவிப்
பெருகு காதலர் புறம்பு நிற்றல் பழுது என்று செங்கமலை பேசலும்

அண்டர் அண்டமுள் அடங்க உண்டு துயில் கொண்ட மால் அணி அரங்கனார்
புண்டரீக மலர் மங்கை கட்டுரை செய் போதில் அங்கு அவளின் நைந்து நம்
தொண்டரைக் கொணர்மின் என்று செம்பவள வாய் திறந்து இறைவர் சொல்ல அக்
கொண்டல் கோயில் திரு வாசல் காவலவர் ஏகினார் குழுவோடு ஏகியே –12-

வீதி பற்பல கடந்து சென்றவர்கள் திரு முகத்துறையை மேவி நின்று
ஆதி நாதன் அருள் அச்சு தன்னணி அரங்கன் இன்று உனை அழைத்தனன்
போதி எங்களோடும் என்று செப்பியவர் பொற் பாதங்களில் இறைஞ்சலும்
சாதியில் கடையன் என்று பாணர் அது தக்கது அன்று என வணங்கினார்

வர மறுத்த பாணரை அரங்கன் தொண்டர் குலமே தொழு குலாம் என்று சொல்லி அழைத்து வரச் சொல்லுதல்

வணங்கி நின்றவர் உரைப்ப மற்றவர்கள் மாசிலா நெறி அரண்கள் முக்
குணங்கள் தந்தவர் முன் எய்தி இம்மொழிகள் கூறுவோம் என வம் ஏகி நல்
பணங்கள் ஆயிரம் இலங்கு அநந்தன் மிசை மன்னா ஓ இனிய பத்தனார்
இணங்கு கின்றிலர் குணங்கள் எண்ணி இவண் எய்துவான் என இறைஞ்சினார் –14-

அந்த உரை சிந்தை புக ஆதி யவரோடு
முந்தை மறை நீதி குல முற்றும் வருவித்த
எந்தம் உறு தொல் குலம் இயம்பில் எமது அன்ப
வந்த குலமே குலம் வரச்சொலும் என்றார் –15–

நன்றிவை உரைத்திடுவம் நாத என நால்வர்
சென்று விரைவில் திருமுகத்துறை செறிந்தே
நின்று இசை வழுத்து நிமலர்க்கு இவை நிகழ்த்த
ஓன்று உளது கேண்மின் என மற்றவர் உரைப்பார் –16-

மின்னல் போன்று ஒளி வீசும் சரீரத்தை யுடைய விஷ்ணுவின்
பின்னை மணாளனை அடைந்து பிறிதற்றுத்
தன்னை யற விட்டு தலைவர்க்கு அது தகும் கொல்
என்னை யவரோடும் இறை எண்ணிடவும் என்றே –17-

செப்பி அடியேன் முடிவில் தீ வினை செய் நீசன்
ஒப்பரிய சோதி வளர் உத்தம தலத்தில்
எப்படி மிதிப்பது இரு கால் கொடு எனை ஆளும்
அப்பனொடு கட்டுரைமின் அன்பர் என ஆழ்வார் –18-

கூற இறை ஏவலோடே சென்றவர்கள் கோவே
மாறிடில் உமைக்கொடு செல்வோம் வலியில் என்றே
ஏறி எதிர் செல்ல அவர் ஓடி அவண் எட்டாது
ஆறு வரு காவிரியின் அக்கரையில் ஆனார் –19-

இத்திறம் அரங்கரோடு இயம்பிடுவம் என்றே
மெய்த்திறம் உணர்ந்த நெறி நால்வர்களும் மீண்டு ஆங்கு
அத்திறமும் ஆயனோடு அறைந்தனர்கள் அம்மான்
எத்திறம் இயற்றில் இவண் எய்தும் என எண்ணி –20-

அரங்கன் லோக சாரங்க முனிவரைக் கூவிப் பாணரைத் தோளில் தூக்கி வரச் சொல்லுதல்

அலகிலா மா மாயை அரங்கன் தனை அர்ச்சனை செய்யும்
உலக சார்ங்க முனியை உவந்து கூவி உத்தம போய்ப்
பலரும் காண நின் தோளில் பாணாழ்வானைப் பரிந்து ஏற்றி
நிலவும் பதியை வளம் செய்து கொணர்க என்றான் நிகர் இல்லான் –21-

மாசிலா முனிவன் மாயன் மலரடி வணங்கி ஏக
ஆசிலா அனைத்துக் கொத்தும் அவனுடன் சென்மின் என்றே
ஈசனும் அருளிச் செய்ய யாவரும் எழுந்து சென்று அத்
தேசினான் நின்று பாடும் திரு முகத்துறையை மன்னி –22-

சுற்றுற வளைந்து கொண்டு தொழுதனர் திருப்பாணாழ்வார்
உற்றவர் தாள்கள் தம்மில் உடன் பணிந்து உருக ஈசற்கு
அற்ற மா முனிவன் ஆழ்வீர் அருளிப்பாடு உமக்கு இன்று என்றான்
நற்றவம் உடைய பத்தர் நான் அது செய்யேன் என்றார் –23-

ஏடவிழ் துளபத்தாரான் எடுத்து உமைக் கொணரச் சொன்னான்
ஓடவும் ஓட்டோம் ஆழ்வீர் என்றனர் உவந்து சென்றார்
மாடு நின்றவரை நோக்கார் மற்றொரு திசையை நோக்கிக்
கூடுமோ நீசன் மாசில் குலத்தொடும் என்று கூற –24-

லோக சாரங்கர் திருப்பாணாழ்வாரைத் தோளில் தூக்கிக் கொண்டு திருவரங்கம் கோயிலினுள் செல்லுதல்

கடுப்பினில் ஆழ்வார் ஓடக் காத்துற வளைந்து நின்றார்
தடுத்தனர் ஓடல தன்னைச் சரண் என வணங்கி மண்ணில்
படுத்தனர் திருப்பாணாழ்வார் பங்கயத்து அயனும் போற்ற
எடுத்துற முனிவன் ஏந்தி இருத்தினான் திருத்தோள் தன்னில் –25-

நண்ணரும் இலங்கை வேந்தை நாளை வா என்ற அந்நாள்
கண்ணனைத் தோள் மேல் கொண்டு களித்த மாருதியை மானப்
பண்ணமர் கவி வலானைத் தாங்கிய பனவன் பெற்ற
உள் நிறை மகிழ்ச்சி ஏழேழ் உலகினில் ஒருவருக்கு உண்டோ –26–

இடி நிகர் முரசம் ஆர்ப்ப இமையவர் முனிவர் சித்தர்
கடி மலர் சிந்தி ஆர்ப்பக் காசினியோர்கள் போற்றிப்
படி மீசை இறைஞ்சி வாழ்த்தப் பக்தர்கள் குழாங்கள் ஆடும்
அடி தொறும் சேறு பாயும் ஆனந்த அருவி நீரால் –27–

அணி அரங்கத்தை முக்கால் அவ்வணம் வலம் செய் தேகப்
பணியணைக் கிடந்த மா மால் பாணர் மெய் விழிகள் நேர் முன்
கணி கணன் பின்னே போன கஞ்ச மா மலர்த்தாள் ஆதி
மணி முடி வரையும் காட்டி மாசிலா மகிழ்ச்சி ஈந்தார் –28–

பாணர் பரவிய பாட்டு

மும்மலமும் அற்ற நீதி முனி வரன் திருத்தோள் மன்னி
எம்மலமும் கடிவார் வீதி ஊடவர் ஏகும் காலை
அமலன் என்னாதி நீதி அணி அரங்கத்துள் எம்மான்
கமல பாதங்கள் வந்து என் கண்ணுள் ஓக்கின்றன என்றும் –29-

நின்ற தாள் போய தாளால் நிலம் விசும்பு அளந்து நீண்ட
வென்றி வேல் அரக்கர் துஞ்ச வெங்கணை துரந்த வேந்தன்
மன்றல் சேர் துளபத் தாரான் வளர் திரு அரையில் கண்டு
சென்றதாம் சிவந்த செம்பொன் ஆடையில் சிந்தை என்றும் –30-

மந்தி பாய் வேங்கட மலையை மன்னியும்
இந்தியம் கடிந்தவர் இதயப் போதிலும்
சிந்தியாது அடி தொழும் திருவரங்கனார்
உந்தி மேல் எனதுயிர் ஒடுங்கிற்று என்னவும் –31-

கலகமார் இலங்கையர் வேந்தன் காட்டிய
அலகிலா ஆற்றலை அறுத்த மாயனார்
உலகெலாம் உண்டு ஒடுக்கு உதர பந்தனம்
நிலவும் என்னுள்ளத்து என நெகிழ்ந்து கூறியும் –32-

தந்தை தாய் சுற்றம் உற்ற தமியனேன் உயிரும் ஆகி
முந்தை நாள் விரும்பிச் செய்து மொய்த்த வல் வினையும் தீர்த்து என்
சிந்தையே கோயில் கொண்டு திரு வரங்கத்துள் மன்னும்
எந்தையார் திரு மார்பு அன்றோ என்னை ஆட் கொண்டது என்றும் –33–

வண்டடர் இதழித் தாரோன் வல் வினை முழுதும் தீர்த்துக்
கொண்டல் வந்து அமரும் சோலைக் குளிர் புனல் அரங்கம் மன்னி
அண்டரண்டங்கள் ஆதி அணைத்துள்ள பொருளும் தண்டாது
உண்டமர் மிடறு கண்டீர் உயக்கொண்டது என்னை என்றும் –34-

கையமர் ஆழி சங்கம் கதிர் மதி இருபால் மன்னும்
மையமர் கிரி யிது என்ன வளர்வதாம் கருணைக் குன்றம்
பையர வணையுள் மன்னும் அரங்கனார் பதுமம் போன்ற
செய்ய வாய் ஐயோ இன்று என் சிந்தனை கவர்ந்தது என்றும் –35-

பரிய வாள் அவுணன் ஆகம் படி மிசை மடி மேல் இட்ட
அரிய வாள் உகிரால் கீண்ட அரி எனது அரங்கத்து அம்மான்
உரிய மா முகத்தில் நீண்டு செவ்வரி ஓடி வாடாப்
பெரிய வான் கண்கள் என்னைப் பேதைமை செய்த என்றும் –36–

பாலனாய் ஞாலம் உண்டு பங்கயச் செல்வி தன்னோடு
ஆல மரத்திலோர் சிற்றிலை அமர் அரங்கத்து அம்மான்
கோல மா மணிகள் ஆரம் குறு நகை முடிவில் சோதி
நீல மா மேனி நெஞ்சை நிறை கொண்டது ஐயோ என்றும் –37–

கொண்டல் போல் உருவத்தானைக் கோவலனாகி நெய் பால்
உண்ட செவ்வாயினானை உளம் புகுந்து உருக்குவானை
அண்டர்கள் பெருமாள் தன்னை அமுதினை அரங்கத்தானைக்
கண்ட என் கண்களால் பின் காண்கிலேன் ஒன்றை என்றும் –38-

அப்படியே திருமொழி ஓர் பத்து உரைத்து அங்கு அணி யரங்கன் திரு முற்றத்தில்
ஒப்பரிய முனி வரனோடு எய்தி அவன் திருத்தோள் நின்று உம்பர் வாழ்த்தச்
செப்பரிய பாண் பெருமாள் நம்பெருமாள் சரணம் எனச் சென்று தாழ்ந்தார்
இப்படியே இறை அருளின் செயல் இருக்கும் என்று ஒருவருக்கு இயம்பலாமே –39-

ஆழ்வார் திருவரங்கன் திருவடியில் அடங்குதல்

சரணம் எனத் திருவடிக்கீழ் சென்று இறைஞ்சும் பாண் பெருமாள் தன்னை நோக்கிக்
கரண ஒழுங்குறும் வஞ்சப் பொய்யன்புக்கு எட்டாத கமல செவ்வாய்ப்
பூரணன் எழுந்து இணை யடியை மெய்யன்பர் சென்னி மிசைப் பொருத்தப் பூட்ட
அரண் இதுவே புகலிடம் என்று அக்கமலத் திருவடியில் அடங்கினாரால் –40-

இன்ப வீடு அடைவார் தூலமாம் உடல் விட்டு எழில் திகழ் சூச்சுமம் கழற்றித்
துன்பவா தனையும் விரசையில் போக்கிச் செறிவர்கள் துகளறு பாணர்
என்பு தோல் உரோமத் தூலமும் அரங்கன் இணை யடி எய்தியது என்றால்
அன்பினால் அன்றி ஒன்றினால் உய்யும் உபாயம் என் அண்டத்தில் உளதே –41-

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடிவு அழகிய நம்பி தாஸர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அமலனாதி பிரானும் –ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதியும்–

October 10, 2021

அமலனாதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே –1–

இப் பதங்களில் அடைவே ஆழ்வார் அனுபவித்த படி-
1-மோக்ஷ பிரதத்வம் -சம்சார நிவர்த்தக காஷ்டை -அமலன்
2-ஜகத் காரணத்வ காஷ்டை-ஆதி
3-ஜகத் சரண்யத்வ காஷ்டை-ஆதி
4-சர்வ உபகாரத்வ காஷ்டை-பிரான்
5-கிருபா விசேஷத்வ காஷ்டை-அடியார்க்கு ஆட்படுத்த
6-ஸ்வாதந்தர்ய காஷ்டை-என்னை ஆட்படுத்த
7-நித்ய நிர்தோஷத்வ காஷ்டை-விமலன்
8-நித்ய ஸூரி நிர்வாஹத்வ -திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டா ஸ்வாமித்வ காஷ்டை-விண்ணவர் கோன்
9-ஸுலப்ய காஷ்டை-வேங்கடவன்
10-ஸுசீல்ய காஷ்டை-நிமலன்
11-வாத்சல்ய காஷ்டை-நின்மலன்
12-கைங்கர்ய சாதன விசேஷத்வ ப்ராப்ய காஷ்டை-நீதி வானவன்
13-சர்வ ஸ்வாமித்வ ஆஸ்ரித பக்ஷபாத காஷ்டை-அரங்கத்து அம்மான்
14-திருவடிகள் பாவானத்வ காஷ்டை-திருப் பாதம்
15-திருவடிகள் போக்யத்வ காஷ்டை- கமல பாதம்
16-அயத்ன -அநாயாசேந போக்யத்வ காஷ்டை-வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றவே

—————-

ஆசார்ய அபிமானமே உத்தாரகம் .

ஸ்ரீயப்பதியாகிய எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனிடத்தில் நாம் கொள்ளும் அடிமைத்திறம்
முதல் பருவத்தின் நிலை, பிரதமபர்வ நிலை என்றும், ஆசாரியர் திறத்தில் கொண்ட
கடைப்பருவத்தின் நிலை சரமபர்வை நிஷ்டை என்று கூறப்படும்.

இரத்தினத்தின் சிறப்பை உணர உணர, அதனைக் கொடுத்த வள்ளலிடம் மதிப்பு உயர்வது போல,
எம்பெருமானுடைய பெருமையை உணர, உணர,
அவனுக்கு நம்மை ஆளாக்கின ஆசாரியன் திறந்து மதிப்பு ஏறி, அவனுக்கு ஆட்படுதல் இயல்பு.

நிர்ஹேதுமுகமாக, எம்பெருமான், மாதவனால் மயர்வற மதினலம் அருளப்பட்ட ஆழ்வார்கள் அருளிச்செய்த
திவ்யப்பிரபந்தங்கள் எம்பெருமானுடைய புகழைக் கொண்டவைகளாக இருப்பினும்
அவற்றின் சாரமான திரண்ட பொருள் “சரமபர்வ நிஷ்டை என்பதேயாகும்.
அதாவது ஆச்சாரியர் திறத்தில் கொண்ட அடிமைத்திறமேயாகும் .
“ மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சினுள் நிறுத்தினான்”- —
தேவுமற்றறியன் என்று மதுர கவிகள் அருளிச் செய்ததும்,
நின் திருவெட்டெழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை (பெரிய திருமொழி 8.10.3) என்று
திருமங்கையாழ்வார் அருளிச்செய்ததும் இவ்விடம் நோக்கத்தக்கது.

ஆசார்ய அபிமான நிஷ்டன் பகவானை அறவே விட்டவனாக மாட்டான்.
ஆசார்யானது வழிபாட்டிலேயே, எம்பெருமானும் வழிபட்டவன் ஆகின்றான்.
இதை அறுதியிட்டே எம்பெருமானாகிய இராமானுஜரை வழிபட்டனர் முன்னோர்கள் .
இராமானுஜ நூற்றாந்தாதியின் “இருப்பிடம் வைகுந்தம் “ எனும் 106 வைத்து பாசுரம்
இதை மிக அழகாக உணர்த்துகிறது .
இத்தகைய அரிய இராமானுஜ நூற்றந்தாதி,
‘ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்’ என்ற கருத்தினை அழகாக உணர்த்துகிறது.

ஆக, எம்பெருமானாரை பற்றுவதே பிரபத்தி.
“ ராமானுஜ “ எனும் சதுரா க்ஷரியே திருமந்திரம்.
அவரது திருவடிகளிலே பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம், என்று
நடாதூரம்மாள் அருளிச் செய்தது, இவ்விடம் நோக்கத் தக்கது.
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருப்பதே நமக்கு கிட்டிய பெரும் பேறு.

மெய்யான தவம் சரணாகதி. அத்தையுடையவர் எம்பெருமானார்.
தம்மைச் சார்ந்தவர்கள் அனைவருடைய பாபங்களை பொறுத்தருளுமாறு பெருமாளிடம் சரணாகதி செய்து வரம் பெற்றுள்ளமையால்,
அத்தகைய வல்லமை அவருக்கு வந்தது. அவர் செய்த பிரபத்தியினாலேயே நாம் அனைவரும் அவர் சம்பத்தை முன்னிட்டு
பிரபன்னர்களாகி வினையினின்றும் விடுபடுகின்றோம் .
பிரபன்ன ஜனங்களாகிய நம் அனைவருக்கும் அவரே கூடஸ்தர் என்று நம்மால் அவர் போற்றப்படுகிறார்.
நம் கூடஸ்தர் நமக்கு வைத்திருக்கும் சொத்து சரணாகதி . அதுவே நமக்கு உஜ்ஜீவனம்.

எவனொருவன் புத்தி கெட்டவனாய் , காமத்தினால் பீடிக்கப்பட்டவனாய் இருப்பினும்,
“ ராமனுஜாய நமஹ என்னும் சொல்லை மட்டும் அடிக்கடி சொல்லி புகுந்தால்,
பகவானைக் சார்ந்தவர்களான யோகியர், எந்த மோஷத்தைப் பெறுவதற்காக ஒதுகின்றனரோ ,
அந்த மோக்ஷத்தை அடைகிறான்.–

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –

பூமன்னு மாது ;; பெரிய பிராட்டி.
பொருந்திய மார்பன் ;; பெரிய பெருமாள்
புகழ் மலிந்த பா ;; திருவாய்மொழி
பாமன்னு மாறன் ; வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன், நம்மாழ்வார்.
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் .’ பகவத் ராமானுஜர்.
மேற்படி ஐந்தும் பஞ்சாம்ருதம் போன்று திருவரங்கத்து அமுதனாரால்
இராமானுஜ நூற்றந்தாதியில் முதல் பாசுரமாக விளக்கப்பட்டுள்ளது .

எம்பெருமானுக்கே உரியவன் நான் என்பது தத்வ ஞானம். எனக்கெற்புடைய வழி,
சித்தோபாயமான எம்பெருமானே என்னும் உணர்வு , ஹித ஞானம்.
அத்தகைய வழியால் பெறப்படும் பேறு, அனுபவித்தற்குரிய கல்யான குணங்களையுடைய எம்பெருமானே என்று அறிந்து
உணர்வு அடையும் ஞானம் ‘புருஷார்த்தம் ஆகும்.
இவ்வாறு தத்வ, ஹித, புருஷார்த்த ஞானம் முதிர்ந்த நிலையில், இம்மூன்றும் ஆழ்வாரே என்று உணர்ந்தவர் எம்பெருமானார்.
அவர் திருவடிகளே அடையவேண்டியதே நமக்கு ப்ராப்யம் ஆகும்.

கள்ளார் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத வன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஓன்று அறியேன் எனக்குற்ற பேர் இயல்வே – 2-

பெரிய பெருமாளாம், ஸ்ரீ ரங்கநாதனுடைய பாதாரவிந்தங்களிலே சரணாகதி பண்ணுவதற்கு இட்டுப்பிறந்த மனுஷ்ய பிறவியைப் பற்றியும்,
அவன் திருவடிகளில் நெஞ்சு கொள்ளாத மனிதரை விட்டு நீங்கி, குறையலூர் பிரானாகிய திருமங்கையாழ்வாரிடம், அடிபணிந்த இராமானுஜரின்
சீல குணத்தையே தம் நெஞ்சு ஆட்கொண்டதைக் கூறுகிறார்.
அத்தகைய செயலுக்கு தம் நெஞ்சுக்கு அடிபணிந்ததாக சொல்கிறார் இரண்டாம் பாசுரத்தில்.

பேரியல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னைப் பேய்ப் பிறவிப்
பூரியரோடு உள்ள சுற்றம் புலத்திப் பொருவரும் சீர்
ஆரியன் செம்மை இராமானுசன் முனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் அடிக் கீழ் என்னைச் சேர்ததற்கே -3-

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி மருள் சுரந்த
முன்னைப் பழ வினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதை வில்லையே -4 –

எம்பெருமானைப் பற்றுதல் ஞானத்தின் முதிர்ந்த நிலை.
அவ்வளவல்லாது எம்பெருமானார் அடியார்களவும் பற்றுதல் ஞானத்தின் முதிர்ச்சிக்கு எல்லை நிலமாகும்.
அப்படியான உயர்ந்த நிலையில் தம்மை வைத்துள்ளார் எம்பெருமானார் என்று அமுதனார் வியக்கிறார் நான்காம் பாசுரத்தில்.

எனக்கு உற்ற செல்வம் இராமானுசன் என்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
தனக்குற்ற அன்பர் அவன் திரு நாமங்கள் சாற்றும் என் பா
இனக்குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல்விது என்றே -5 –

அறிவிலா மாந்தர் உலகில் காணும் செல்வத்தை யன்றி மற்றொன்றைச் செல்வமாக கொள்ளார்.
ஒருக்கால் மனக் குற்றம் சிறிது மாறி சாஸ்திரத்தின் பொருளாகிய ஸர்வேஸ்வரனைச் செல்வமாக ஏற்றுக் கொண்டாலும்,
சாஸ்திரத்தின் உட்பொருளாகிய ‘ஆசார்யனை செல்வமாக இசையவே மாட்டார்கள்.
காரணம் அவர்கள் பகவத் ப்ரசாதத்தால் மனக் குற்றம் நீங்கப்பெறாமையே.
புலமை மற்றும் போதாது. பகவானுடைய அனுக்ரஹமும் வேண்டும், சாஸ்திரத்தின் உட்பொருள் அறிவதற்கு.
அதை உணர்ந்த அமுதனார் , எனக்குற்ற செல்வம் ராமானுஜர் என்கிறார்.

இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை மதியின்மையால்
பயிலும் கவிகளில் பக்தி இல்லாத வென்பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் அவன் தன் பெரும்கீர்த்து மொழிந்திடவே – 6 –

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத் ஆழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி எல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தம் அன்றே -7-

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செம்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே
யிருத்தும் பரமன் இராமானுசன் எம் இறையவனே -8 –

முழுமை வாய்ந்த ஆசார்யர் எம்பெருமானாரே. ஆதலின் அவரே வேதத்தின் உட்பொருள்.
அவரைப்பற்றி இருத்தலே வேத மார்கம்.
மற்றவர்களையும் அங்ஙனம் பற்றி நிற்கச் செய்வதே, வேதமார்க்கத்தை பிரதிஷ்டாபனம் செய்தல்.
ஆகவே, “ஸ்ரீமத் பிரதிஷ்டாபனச்சார்யார் : என்னும் விருது எம்பெருமானாரையே சாரும்.
அத்தகைய பெருங்குணம் வாய்ந்த இராமானுஜர், தம்மை இப்புவியில் ஒரு பொருளாக ஆக்கியதையும்,
அவரையே தனக்குற்ற செல்வமாகக் கொண்டதையும் தெரிவிக்கிறார்.

இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழோதும் நல்லோர்
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே – 9-

பரபக்தியாவது பிரிவில் வருந்தும்படியான நிலையையும் கூடும் போது மகிழும்படியான நிலையையும் விளைவிப்பதான தனிப்பட்ட அன்பு.
பரஞானமானது அத்தகைய அன்பு முதிர்ந்த நிலையில் ஏற்படும் சாஷாத்காரம், நேரடியான தோற்றம்.
பரம பக்தியாவது ஷண காலமும் பிரிவை சஹிக்கமாட்டாது, அனுபவித்தே ஆகவேண்டிய முதிர்ந்த பேரன்பு.
இதுவே ஞானமேன்னும் நிறை விளக்கு என்கிறார் 9ம் பாசுரத்தில்.

மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திரு உடையார் என்றும் சீரியரே – 10-

திருக்கோவலூரில் பெரிய பிராட்டியுடன் கூட ஆயனார் எனும் எம்பெருமானைக் காட்டிக்கொடுத்த மூன்றாம் ஆழ்வார் பேயாழ்வார்.
அன்னவரது திருவடிகளை புகழும் இயல்பினரான எம்பெருமானாரிடத்தில் பக்தியுடையவர்களுடைய திருவடிகளைத்
தலைக்கு அணியாகக் கொள்ளும்படியான செல்வத்தை உடையவர்கள் யாரோ,
அவர்கள்தான் என்றைக்கும் நித்ய ஸ்ரீமான்கள் என்கிறார் அமுதனார், தனது பத்தாம் பாட்டில்..

சீரிய நான் மறைச் செம் பொருள் செம் தமிழால் அளித்த
பாரியிலும் புகழ்ப் பாண் பெருமாள் சரணாம் பதுமத்
தாரியல் சென்னி யிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம்
காரிய வண்மை என்னால் சொல்ல ஒண்ணாது இக்கடலிடத்தே – 11-

சிறப்பு வாய்ந்த நான்கு வகைப்பட்ட வேதங்கள் பரம்பொருளாகிய ஸ்வரூபம், ரூபம், குணம், விபூதி(ஐஸ்வர்யம்)
இவைகளை உள்ளபடியே விளங்க வைக்கின்றன. இதுவே வேதத்திற்கு உண்டான சீர்மை.
இதுவே சீரிய நான்மறை என்கிறார் அமுதனார்.
ஸ்வரூபம் என்பது பகவானுடைய திவ்யாத்ம தத்துவம்.
ரூபமாவது உடம்பானது.
குணமானது ஆத்ம தத்வத்தைப் பற்றி நிற்கும் ஞானம், சக்தி, கிருபை முதலிய பண்புகளும் ,
சுடருடம்பைப் பற்றி நிற்கும் அழகு, மென்மை , இளமை முதலியவைகளாகும்.
விபூதியாவது, நித்யவிபூதி என்றழைக்கப்படும் பரமபதமும், லீலாவிபூதி என்றழைக்கப்படும் இவ்வுலங்களும் இறைவனது சொத்தாகும்.
வேதத்தின் இவ்வரிய பொருளை திருப்பாணாழ்வார் “அமலனாதிபிரான் “ என்றும் பாசுரத்தில்,
அமலன், விமலன், நின்மலன்,நீதிவானவன் என்று பல சொற்களால் அருளிச் செய்ததைப் போற்றுகிறார் 11ம் பாசுரத்தில்..

இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப் போது
அடங்கும் இதயத்து இராமானுசன் அம் பொன் பாதம் என்னும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத்
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே —12-

ஆழ்வார் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்ற கீர்த்தியை யுடைய திருமழிசை ஆழ்வாரின் திருக் கமலப் பதங்களையே
பற்றியிருக்கும் எம்பெருமானரின் தாள் பற்றி இருப்பவரின் திருப்பதங்களையே பற்றி இருப்பவர்களை ‘திரு முனிவர்’ என்கிறார்.
அத்தகைய ஞானம் கொண்டவற்கே தாம் அன்பு செய்வதாக அமுதனார் கூறுகிறார்.
அதாவது, எம்பெருமானாரின் அடியவர்க்கு அடியவர்களுக்கே அவர் அன்பு செய்ய விரும்புகிறார். (12)

செய்யும் பசும் துளவத் தொழில் மாலையும் செம் தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீர் ரங்கத்
தய்யன் கழல்க்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமானுசன் சரணே கதி வேறு எனக்கே – 13-

காவேரியே விரஜையாறு. ஸ்ரீ ரங்க விமானமே ஸ்ரீ வைகுண்டம். ஸ்ரீ ரங்கநாதனே பரவாசுதேவன்.
ஆக, கண்ணனெதிரே தோன்றும் பரமபதமாகிய ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீ ரங்கநாதனுக்கு
திருத்துழாய் மாலையும், செந்தமிழ் பாக்களால் ஆன சொல் மாலையும் சமர்ப்பித்து வந்த தொண்டரடிப்பொடியாழ்வார்
திருவடிகளையே ஆச்ரயித்த ராமானுஜர் திருவடிகளே தமக்கு சரண் ஆகும் என்கிறார். (13)

கதிக்குப் பதறி வெம்கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்க தவம் செய்யும் கொள்கை ஆற்றேன் கொல்லி காவகன் சொல்
பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமானுசனைச் சொர்விலனே -14 –

ஒரு மாலையில் இடமறிந்து ரத்னங்களைப் பதிப்பது போல ,
குலசேகராழ்வார் அருளிச்செய்த பெருமாள் திருமொழியில் சொற்கள் தக்கவாறு பதிக்கப்பட்டுள்ளன.
அத்தை மனத்தில் கொண்ட எம்பெருமானார் திருவடிகளை பற்றியவரது பாதங்களை தாம் பற்றுவதால்,
கானகத்திலும், மலையிலும், கடல்களிலும் தவம் செய்ய முற்பட வேண்டிய கட்டாயம் தமக்கு இல்லை என்கிறார் அமுதனார். (14 )

சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை யொன்றும்
பாராதவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத வுள்ளத்து இராமானுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே -15 –

எம்பெருமானின் அழகை மட்டும் கண்டு, அவனது ரஷிக்கும் ஆற்றலை காணாமையால் உண்டான அச்சத்தில்
விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வார் சாதித்தது ‘பல்லாண்டு பல்லாண்டு என்று ‘. இது அஸ்தான பய சங்கை எனப்படும்.
அதாவது, பயமே ஏற்பட வேண்டாத இடத்தில், அன்பு மிகுதியால், என் பெருமானுக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று பயப்படுதல்.
பரம பதத்தில் சாமவேத கோஷ்டி சப்தத்தைக் கண்டு , ஆதிசேஷன் எம்பெருமானுக்கு ஆபத்து வந்ததோ என அஞ்சி சீறுவதுபோல.
அப்படிப்பட்ட பெரியாழ்வாரின் பதம் பணிந்த ராமானுஜரின் பாதம் பணியாத அற்ப மனிதரை சேர மாட்டேன் என்கிறார். (15)

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –

ப்ரத்யக்ஷம், அனுமானம், சப்தம் என்ற பிரமானங்களில் சப்தப் பிரமானத்தில் அடங்கியது மறை எனப்படும் வேதம்.
அத்தகைய தாழ்வொன்றுமில்லாத வேதம் பிற்காலத்தில் தாழ்வு படுத்தப்பட்டது.
பாஹ்யர்களும் , குத்ருஷ்டிகளும் கலி புருஷனுடைய கையாட்கள்.
வேதம் நித்யமன்று என்று கூறி வேதத்தை ஒப்புகிக்கொள்ளாத புற மதத்தவர்கள் . இவர்கள் பாஹ்யர்கள் எனப்படுவர்.
அவ்வாறன்றி, வேதத்தைப் ப்ரமாணமாக ஒப்புக்கொண்டு உட்புகுந்தாலும், அதன் உண்மைப் பொருளை உணராது ,
தமக்குத் தோன்றிய வகையில் விளக்கமளிக்கும் மனிதர் குத்ருஷ்டிகள் எனப்படுவர்.
இவ்விரு திறத்தாரால் மாசு படுத்தப்பட்ட வேதத்தை ‘கலியும் கெடும் கண்டு கொண்மின்’ என்பதற்கிணங்க,
மறையைத் தாழ்வு நிலையினின்று ‘ஸ்ரீ பாஷ்யம் ‘ மூலமாக மிக உயர்ந்த நிலைக்கு அளித்தருளியவர் இராமானுஜர் .
ஆண்டாளின் அன்புக்கு பாத்திரமானவர். அவள் கிருபையால் வாழ்கின்ற வள்ளல் ‘திருப்பாவை ஜீயர் என அழைக்கப்படும் இராமானுஜர் .(16)

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வெந்து எய்தினரே -17 –

வேதமனைத்தும் தன் ஒருவனையே துதிக்கும் நோக்கமுடையவைகளாய் இருத்தல் பற்றி வந்த செருக்கால்,
ஒப்பற்ற மதம் பிடித்த யானையைப் போல் தோற்றமளிக்கிறான் ,
திருக்கண்ணமங்கை என்கிற திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் பத்தராவிப் பெருமாள்.
அவன் திருமங்கையாழ்வாரின் தமிழ்ப் புலமைக்கு அடியவனாகி, ஆவணி ரோஹிணியில் பெரியவாச்சான் பிள்ளையாக அவதரித்தான் .
திருமங்கையாழ்வாரும் கார்த்திகை கார்த்திகையில் நம்பிள்ளையாக அவதரித்து திராவிட வேதத்தின் பொருளை
ஆச்சார்ய ஸ்தானத்தில் இருந்து அருளிச்செய்ததாக கூறுவர் பூர்வர்.
அத்தகைய குறையல்பிரானடிக்கீழ் அன்புடைய இராமானுஜரிடம் அடிபணிந்தவர்கள் துயரங்கள் முந்தினும் வருந்தார்.
இன்பங்கள் மொய்த்திடினினும் சந்தோஷப்பட மாட்டார்கள். அவைகள் கர்ம பலன்களாக தாமே வந்து போகின்றது என்று அமைதியாக இருப்பர்,(17)

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –

கீதை அருளிச் செய்வதற்காகவே கண்ணன் அவதரித்தது போலே , திருவாய்மொழி அருளிச் செய்வதற்காகவே அவதரித்தவர் நம்மாழ்வார் .
‘நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய், ஆக, யானே பெரியவன் என்று
நம்மாழ்வார் தன்னைப் பெரியன் என்று கூறுகிறார், பெரிய திருவந்தாதி 75ம் பாசுரத்தில்.
அத்தகைய நம்மாழ்வாரையும் தன் உள்ளத்தே ஆசார்யனாய் கொண்ட மதுர கவிகளை ‘பெரியவர்” என்று கூறுகிறார் அமுதனார்.
எம்பெருமானை தம் உள்ளத்திலே வைத்துக்கொண்டு கொள்ளுதல் எல்லா ஆழ்வார்களுக்குமுண்டான முதல் நிலையாகும்.
ஆனால் ஆசார்யனையே முதலும் இறுதியுமாக வைத்துக்கொள்ளல் மதுரகவியாருக்கே உள்ள சீர்மையாக அமைந்தபடியால்
அவரே ‘பெரியவர்’ ஆகிறார். (18)

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-

எப்படி உன் சரீரம் உன் விருப்பத்திற்கேற்ப பயன்பட்டு , தனக்கொரு பயன் கருதாது உனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறதோ ,
அதுபோல உன் ஆத்மாவை தனக்கு சரீரமாகக் கொண்டுள்ள எம்பெருமானுக்கு,
நீயும் அவன் விருப்பப்படி பயன்பட்டு, உனக்கொரு பயன் கருதாது , அந்த எம்பெருமானுக்கு மகிழ்ச்சியை ஊட்டுதல் வேண்டும்
என்கிற ‘அனன்யார்ஹசேஷத்வ’ ஞானத்தை திருவாய்மொழி உணர்த்துகிறது.
நம்மாழ்வாருக்கு ‘திருமாலிருஞ்சோலை என்கிற 98 வது திருவாய்மொழி முடிய பர பக்தியும்,
99 வது திருவாய்மொழியான ‘சூழ் விசும்பும் பணிமுகில் ‘ பரஞானமும்
100 வது திருவாய்மொழியான ‘முனியே நான்முகனே’ பரம பக்தியும் எம்பெருமான் அருளால் விளங்கியதாக பெரியோர் கூறியுள்ளனர் .
அத்தகைய அரிய திருவாய்மொழி எனும் இந்த திவ்ய அமுதத்தை உலகத்திருக்கு தெரியப்படுத்திய
இராமானுஜரே எமக்கு ஆராவமுது என்கிறார் அமுதனார். (19)

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே – -20

நாதமுனிகளுக்கு ‘கண்ணினுந் சிறுத்தாம்பு ‘காட்டியவர் , மதுரகவிகள் வம்சத்திலுதித்த பராங்குச நம்பி என்பவர்.
அத்தைக் கொண்டு ‘ஆராவமுது ‘ ஆகிய நாலாயிர திவ்ய பிரபந்தகளையும் நமக்கு காட்டியவர் ஸ்ரீமத் நாதமுனிகள்.
அதுகொண்டே அருள் கொண்ட நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகுகியவர் இராமானுஜர்.
அதுபற்றியே அவரை சீலங்கொண்ட நாதமுனிகள் என்கிறார் அமுதனார். (20)

நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- –

தான் செய்வதாக நினையாமல்,’ பகவான் என்னைக் கொண்டு தன் பணியை தன் உகப்புக்காகச் செய்து கொள்கிறான்’
என்கிற நினைப்போடு, அதாவது, அஹங்காரக் கலப்பில்லாமல் செய்து கொள்வது ‘சாத்வீகத் தியாகம்’ என்று கூறுவர்.
அத்தகைய மேன்மையான குணம் கொண்டு வாழ்ந்து காட்டியவர் யமுனைத் துறைவன் எனும் ஆளவந்தார் –
அவரை இறைவனென்று போற்றுகிறார்.
அவரைப் பற்றி பற்றிய பின்பு, நான் நீசர்கள் வாசல் நின்று
அவர்களை ‘நிதியை பொழியும் முகிலென்று’ கூறமாட்டேன் என்கிறார். (21)

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் போற்றி பணிந்தவர் ராமானுஜர்.
என்றும் அவரை போற்றி பணிந்தவர் தாள்களிலே தாம் அடிபணிவதாக அருளிச்செய்த அமுதனார் 22ம் பாசுரத்தில்.
பாணாசுரனை அழித்த கண்ணனைக் கூறுகிறார்.
அந்த மாய கண்ணனை போற்றும் ரமானுஜனை தனது வைப்பு நிதி என்கிறார்.
“நேர் சரிந்தான், கொடிக் கொழி கொண்டான்” என்றபடி பாணாசுரனை அழித்த கண்ணபிரானின் ‘பரத்வம்’ சொல்லப்படுகிறது.

வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமானுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத வுறுவினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இது அவன் மொய் புகழக்கே -23 –

எம்பெருமானார் திருவடிகளில் அந்நயப் ரயோஜனர்களாய் பக்தி பண்ணுபவர்கள்
கூரத்தாழ்வான் , முதலியாண்டான், எம்பார், பிள்ளையுறங்காவில்லிதாசர் , திருக்குருகைப்பிள்ளான் பிரான் போன்றவர்கள்.
அவர்கள், எம்பெருமானாரை ஆபத்து காலத்தில் உதவும் பொருட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ள மாநிதியைப் போல வைத்துள்ளனர் .
நல்லன்பர்கள் அங்ஙனம் மனத்தகத்தே வைத்த இராமானுஜன் என்னும் நிதியை
மகா பாபியான நான் வஞ்சித்து வைத்துக் கொள்வது இராமானுஜனுக்கு இழுக்கு உண்டாகாதோ என அமுதனார் அஞ்சுகிறார் . (23)

மொய்த்த வெம் தீ வினையால் பல்லுடல் தோறும் மூத்து அதனால்
எய்த்து ஒழிந்தேன் முன நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன்
பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து அவிய
கைத்த மெய் ஞானத்து இராமானுசன் என்னும் கார் தன்னையே – 24- –

தேன் கூட்டிலே ஈக்கள் மொய்த்துக் கொண்டிருப்பதுபோலே, ஒரு ஜீவனின் ஆத்ம தத்வத்தை புண்ய பாபங்கள் எனும்
இரு தீய வினைகள் மொய்த்துக் கொண்டுள்ளன.
அனுபவித்ததாலோ, ப்ராயசித்தத்தினாலோ தொலைந்து ஒழியாதபடியுள்ள இந்த அருவினைகள்,
உடல்தோறும் மூத்து,துன்புற்று களைத்துப் போகின்றன .
நீசச் சமயங்ளை அழித்தொழித்து, மறைகளைக் காக்க அவதரித்த எம்பெருமானாரின் திருவடி சம்பந்தம் தமக்கு கிடைக்கப் பெற்று,
தாம் தீய வினைகளினின்று உயர்ந்தமையைக் கூறுகிறார். (24)

காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுத்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – –

தாமே வந்து தன்னை ஆட்கொண்டதால், எம்பெருமானாரது சௌலப்பியமும்,
தமது தாழ்மையையும் கருதாது ஆட்கொண்டமையால் அவரது சௌசீல்யமும்,
நிர்ஹேதுகமாய் கொண்டதால் ஸ்வாமித்யமும்,
கருணை இராமானுஜ என்றதால் கருபையும் , வாத்சல்யமும் எம்பெருமானாரிடம் தோன்றுகிறது.
இக்குணங்கள் தம் அல்லலைத் தீர்த்து , தித்திக்க வைக்கின்றன என்கிறார்.
அவைகளே தமக்கு தாரகமும் , போஷகமும், போக்யமும் ஆகின என்கிறார். (25)

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- –

பிறப்பாலும், அறிவாலும், நடத்தையாலும் தனக்கு கீழ் பட்டவர்களாக பாகவதர்களை நினைப்பதும் அபசாரமாகும்.
அதுபோல, அவர்களுடைய பெருமைகளை நினையாதிருப்பதும் அபசாரமாகும்.
அதாவது அவர்கள் ஆசார்யனுக்கு சமானவர்கள் என்றும்,
தன்னிலும் , ஈஸ்வரனிலும் அதிகர் என்றும் நினையாதிருப்பதும் அபச்சாரமாக தலைக்கட்டும்
என்று ஸ்ரீ வசன பூஷணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அவ்வாறே, எம்பெருமானாரைப் பற்றுவதற்கு முன் ஒருவரிடமுள்ள குறை, அறிவினாலோ, பிறப்பினாலோ, நடத்தையினாலோ
உண்டாயிருப்பினும் அதுவே அவரது நலமாகக் கொள்ளப்படும். இவை ஒரு தடையாக இருக்க மாட்டாது.(26)

கொள்ளக் குறைவற்று இலங்கிக் கொழுந்து விட்டு ஓங்கிய உன்
வள்ளல் தனத்தினால் வல் வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளைச் சுடர் விடுமுன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று
தள்ளுற்று இரங்கும் இராமானுச என் தனி நெஞ்சமே -27-

மாசு படிந்த தமது கீழ்மையை நோக்காது, எம்பெருமானாருடைய மேன்மையான குணத்தினால், மஹா பாபியான,
அருவருக்கத் தக்க குணங்களை யுடைய தன் மனஸ்ஸிலேயும் புகுந்தார்.
இது அவரது உயர்ந்த குணத்துக்கு இழுக்கு உண்டாகாதோ என அஞ்சுகிறார் 27ம் பாட்டில்.

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவ கில்லாது என்ன வாழ்வின்று கூடியதே – -28 –

கம்சன் பால் சீற்றம் கொண்ட கண்ணனையும், நப்பின்னை பால் காதல் கொண்ட கண்ணனையும் நண்ணாதவர்கள் வஞ்சகர்களே.
கண்ணனுக்கு பரதந்திரனான நாம் , நம்மை ஸ்வதந்திரனாக நினைப்பது ஆத்ம அபஹாரம்.
அத்தகையவர்களுக்கு கிட்டமுடியாதவர் இராமானுஜர்.
பிரதம பருவம் என்கிற எம்பெருமானின் அடித் திறத்தையும் அறியாத நான் எதிர்பாராது,
சரம பர்வத்தின் எல்லை நிலமான ஆசார்யரைத் துதிக்கப் பெற்றேன்.
அத்தகைய ஆசார்யரின் குணங்களையொழிய என் வாக்கானது மற்றவரை மறந்தும் துதிக்க மாட்டாது.
இது எனக்கு நேர்ந்த ஆச்சர்யமான வாழ்வு என்கிறார். (28)

கூட்டும் விதி என்று கூடும் கொலோ தென் குருகைப் பிரான்
பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என்னாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே -29 –

திருவாய்மொழியை ஈன்று எடுத்த தாய் சடகோபன். அதனை வளர்த்து , அந்த வளர்ச்சியைக் கண்டு உய்த்தவர் இராமானுஜர்.
கண்ணனைப் பெற்றெடுத்த தேவகியை விட அவனை வளர்த்த யசோதையே இன்பம் அனைத்தும் பெற்றாள்.
அவ்வாறு திருவாய்மொழி என்னும் திராவிட வேதத்தை மறைகளைக் கொண்டு, தெளிவு படுத்திய இராமனுஜரை உள்ளபடி அறிந்திருப்பவர்கள் ,
கூரத்தாழ்வான், எம்பார், முதலியாண்டான் எழுநூறு சந்நியாசிகள், எழுபத்து நான்கு சிம்மாசனதிபதிகள்,
எண்ணற்ற ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆகியோர்.
அவர்களின் திறளான கூட்டங்களை கண்ணால் கண்டு களிக்க வேண்டும் என்கிறார். (29)

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்ணிறந்த
துன்பம் தரு நிரயம் பழ சூழில் என் தொல் உலகில்
மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே – -30 –

அனாதியான இவ்வுலகத்தில் எண்ணற்ற ஆத்மாக்களுக்கு சேஷியாக விளங்குபவன் எம்பெருமானே என்று
அருளிச் செய்த வள்ளல் எம்பெருமானார். அவர் என்னை இன்று அடிமைத்திறமாக கொண்டார்.
இனிமேல் எனக்கு இன்பத்தைத்தரும் பெரு வீடான பரமபதம் கிடைத்தால் என்ன ?
அல்லது துயரத்தைத் தரும் ஸம்ஸாரம் என்னும் நரகம் வாய்த்தால் தான் என்ன என்கிறார். (30)

ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோநிகள் தோற் உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண்டகு தோள் அண்ணல் தென்னத்தியூரர் கழல் இணைக் கீழ்
பூண்ட அன்பாளன் இராமானுசனைப் பொருந்தினமே – 31-

ஆண்டுகள் நாள் திங்களாய், பலவகைப் பிறப்பிலும், இறப்பிலும் இருந்த பிறவிகள் எண்ணிக்கை யில்லை.
இப்படிப்பட்ட நாம், இப்பிறப்பிலே எம்பெருமானாருடைய நிர்ஹேதுக க்ருபையினாலே அவரை அடைய பெற்றோம்.
அழகிய திருத்தோள்களை உடைய ஸ்வாமியாய், அழகிய திரு அத்தியூரில் எழுந்தருளியுள்ள,
பேரருளாளன், தேவாதி ராஜனின் திருவடிகளில் பக்தி செலுத்துபவருமான எம்பெருமானாரை சேர்ந்து
இப்போது நிலைக்கப் பெற்றோம், என்று களிப்புறுகிறார். (31)

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே – 32-

கலி தோஷத்தினால் துன்புற்ற இந்த ஞாலத்தியுள்ளோரை தன்னுடைய வள்ளல் தனத்தினால் அவதரித்து,
கை தூக்கி விட்டு காப்பற்றியவரும் சரணாகதி என்கிற அரிய தபஸ்ஸை அனுஷ்டிப்பவருமான எம்பெருமானாரையே சேர்பவர்களுக்கு,
தங்கள் தன்மைக் குண்டான மதிப்பும் , பொறுமையும், சாமர்த்தியமும், கீர்த்தியும், நல்ல விலக்ஷணமான அறிவும்,
பக்திச் செல்வமும் தாமாகவே வந்து அடையும். (32)

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் கை யாழி என்னும்
படையோடு நாந்தகமும் படர் தாண்டும் ஒண் சார்ங்கமும் வில்லும்
படையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமானுச முனியாயின விந் நிலத்தே -33 –

மனம் – சக்கரம், புத்தி – கதை, ஞானம் – நந்தகம், ஸாத்வீக அஹங்காரம்-வில், தாமஸ அஹங்காரம் – சங்கு.
ஆக இவைகள் எம்பெருமானுக்கு ஆயுதங்களாகவும், ஆபரணங்களாகவும் உள்ளன.
பிராட்டியினுடைய சன்னதியில் இந்த திவ்யாயுதங்கள் அழிப்பவனாகவில்லை. காப்பவைகளாகவே உள்ளன.
இவள் இல்லாதபோது ஆயுதங்கள் இராவணனை அழித்தன.
அவள் உள்ளபோது ப்ரம்மாஸ்திரமும் கூட காகத்தை அழிக்கவில்லை. காகம் காக்கப் பெற்றது.
நித்ய ஸூரிகளான இந்த பஞ்சாயுதங்கள், ராமானுஜர் ஆதிசேஷனுடைய ஸாஷாத் அவதாரம் ஆகையினாலே,
அவரது ஆவேச அவதாரமாக வந்து அவதரித்தன இப்பூவுலகில் என்கிறார் 33ம் பாட்டில்.

நிலத்தை செறுத்து உண்ணும் நீசக் கலியை நினைப்பரிய
பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை என் பெய் வினைதென்
புலத்தில் பொறித்த வப்புத்தகச் சும்மை பொறுக்கிய பின்
நலத்தைப் பெறுத்தது இராமானுசன் தன நயப் புகழே -34 –

உலகத்திலுள்ளோரை நிலை குலையச் செய்யும் நீசக் கலியை அழித்தத்தினால் எம்பெருமானார் புகழ் ப்ரகாசிக்க வில்லை.
எப்போது அவர் புகழ் பிரகாசித்தது எனில், தாம் எண்ணற்ற பாவங்களை செய்து, அவை சித்திர குப்தனால் புஸ்தங்களாக எழுதப்பட்டு,
அவைகளை ராமானுஜர் , தம்மீது, காரணமில்லாக் கருணை கொண்டு அழித்தபின்னரே, ஏற்பட்டது என்கிறார். (34)

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன்னரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த் தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -35 –

தீராத வினைகள் ஏற்பட மூன்று வழியுண்டு.
முதலாவதாக, எம்பெருமான், ஸ்ரீமன் நாராயணனைத் தவிர மற்ற தெய்வங்களைக் கொள்ளுதல்.
‘ஆதிப்பிரான் நிற்க மற்றதெய்வம் நாடுதிறே ‘ என்றபடி.
இரண்டாவது, சேவிக்கத் தகாத மனிதர்களை வேண்டி பொருள் பெற அவர்களை போற்றுதல்.
மூன்றாவது, அழியக்கூடிய சப்தாதி விஷயங்களில் ஈடுபடுதல்.
இவைகள் அருவினை எனப்படும்.
இராமானுஜனை அடைந்த என்னை இந்த அருவினைகள் என்ன செய்யும் என்று கேட்கிறார்.(35)

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

அர்ஜுனனை வ்யாஜ்யமாகக் கொண்டு பகவான் கிருஷ்ணன் பெருங்கடலிடையே ரத்தினங்கள் மறைந்து கிடப்பது போல,
வேதமாகிற சமுத்திரத்தில் மறைந்து கிடந்த விலக்ஷணமான வேதார்த்தங்களை ஆராய்ந்து கண்டு அளித்தார், ஸ்ரீமத் பகவத் கீதை மூலமாக.
இப்படி அளித்த பின்னும் உலகத்தவர் தமது அறியாமையினால் இடரின் கண் வீழ்ந்தனர் .
இவர்கள் படும் துன்பத்தை சஹியாதே, எம்பெருமானார் ‘கீதா பாஷ்யம்’ என்ற நூலின் மூலமாக
அரும் பொருளை இலகுவாக அறியும்படி அருளிச் செய்தார் (36).

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-

ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை யின்றவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா விராமானுச நின்னருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – 38-

இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் எபெருமானாருடைய நெஞ்சில் ஆழமாக புகுந்து தேங்கிக் கொண்டது.
‘ அஹம் சர்வம் கரிஷ்யாமி ‘என்று சகலவித கைங்கர்யங்களையும் பண்ணி இளைய பெருமாள் இளையாழ்வாராக அவதரித்தவரன்றோ?,
இராமானுஜர். அத்தகைய எம்பெருமானாரின் பாதாரவிந்தகளில் மனம் பொருந்தி, அன்பு கணிந்திருக்கும் மஹானுபவர்கள்
தம்மை எம்பெருமானார்க்கு ஆட்படுத்தினார்கள் என்கிறார் அமுதனார்.
ஆக, தானும் பற்றவில்லை. அவரும் சுவீகரிக்கவில்லை. உடையவருடைய சம்பந்த, சம்பந்திகளே, கொண்டு சேர்த்தார்கள்.
அப்படி இன்று நிலைப்பித்த என்னை, இத்தனை காலம் புற விஷயங்களிலே தள்ளி வைத்தது எக்காரணம் பற்றி என்று
ஆதங்கத்துடன் வினவுகிறார் பின் வரும் இரண்டு பாசுரங்களிலே.(37/38)

பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்றுளார் தரமோ
இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன்னீறிலபெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -39 –

‘தாயே தந்தையே என்றும் தாரமே கிளைமக்களே’ என்றும் இவற்றையே பெரும் பேறாக எண்ணி,
இதற்கு மேல் மேம்பட்டது வேறு ஒன்று உண்டு என்னும் தெளிவற்ற ஞானமின்றி திரிந்த நமக்கு,
அஞ்ஞானமாகிய இருளை நீக்கியவர் இராமானுஜர்.
அதுமட்டும் இன்றி தம்முடைய கணக்கற்ற கல்யாண குணங்களையே சிந்திக்கத் தக்கதான ஞானத்தையும் அருளினார்.
இவை இராமானுஜர் செய்த ஷேமங்களே என்கிறார்.(39)

சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – –

அறம் , பொருள்,வீடு, காமம், என்கிற நான்கு புருஷார்த்தங்களில்
‘ கண்ணனுக்கே ஆனது காமம்’ என்பது ராமானுஜ முனியின் சித்தாந்தம்.
காமமே முக்கிய புருஷார்த்தம் என்பது அவர் தெளிவு.
அக் காமம் தனக்கு இன்பமாயிருக்கும் என்றோ, கண்ணனுக்கு இன்பமாயிருக்கும் என்றோ, எண்ணலாகாது.
கண்ணனுக்கே இன்பமாயிருக்க வேண்டும்.
அவன் இன்புறுவதைக் காண்பதைத் தவிர, தனக்கு வேறு புருஷார்த்தம் இல்லை என்று கருதிச் செலுத்தும் காமமே பரம புருஷார்த்தம்.
எம்பெருமானாரும் பக்தி ரூபமான இந்த பகவத் காமத்தின் விஷேஷத்தை ஸ்ரீ பாஷ்ய முகேன அருளிச் செய்துள்ளார் .(40)

மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே – 41-

‘அஜாயமானோ பஹுதோ விஜாயதே’ என்கிறபடி, பிறப்பே இல்லாத எம்பெருமான்,
தேவனாக உபேந்தரனாகவும், மனிதனாக இராமனாகவும், க்ருஷ்ணனாகவும், விலங்கினமாக மீனாகவும், ஆமையாகவும், வராஹமுமாகப் பிறந்தான்.
மக்களைக் காப்பதற்கு பிராட்டியாருடன் ‘மாதவனாக’ பிறந்தும் உலகத்தார் அவனை புரிந்து கொள்ளவில்லை.
அவனையும் தம்மைப் போல ஒரு மனிதன் என்று உலகத்தவர் நினைக்கின்றனர் என்று பகவான் ஸ்ரீ மத் பகவத் கீதையில் கூறியுள்ளார்.
ஆனால் பகவத் ராமானுஜர் அவதரித்த பிறகு, ஸ்ரீ பாஷ்யம் போன்ற க்ரந்தங்களாலே தத்துவ, ஹித, புருஷார்த்தங்கள் விளங்கி,
‘ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாமாயன் ‘ நாராயணனே பரம்பொருள் என்பதை
உலகத்தார் உள்ளங்கை நெல்லிக்கனி என அறிந்து ஞானம் பெற்றனர். (41)

ஆயிழையார் கொங்கை தங்கு மக்காத லளற்ற ழுந்தி
மாயும் என்னாவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள்
நாயகன் எல்லா வுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே -42 – –

சேற்றிலே விழுந்தவர்களைக் காக்க முற்படுபவர்கள் சாமர்த்தியம் உடையவர்களாய்,
அச் சேற்றிலே பாய்ந்து அதிலே தத்தளிப்பவர்களை எடுப்பது போல
எம்பெருமானார் , நங்கையர்களின் ஸ்தனமாகிய காமச் சேற்றில் விழுந்தவர்களை தாமே வந்து எடுத்து அருளினார்.
“ போலி அழகில் மயங்கி சேற்றில் விழுந்தாயே, அழகுத் தெய்வமாகிய மாமலராள் காதலுறும் நாயகனுடைய
மெய்யழகிலன்றோ ஈடுபட வேண்டும்” என்று பிள்ளை உறங்கா வில்லி தாசரை எம்பெருமானார் திருத்தி அருளின ரன்றோ?.
அங்ஙனமே அனைத்து உலகத்தவரையும் நாராயணனுக்கு சேஷ பூதராக்கினார். (42)

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றவோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே – 43-

நாராயண நாமம் சொல்லச் சொல்ல அமுதமாக இருக்கிறது.
நம்மாழ்வார் நாமம் ஒருகால் சொன்னாலே, நாவிலே அமுதம் ஊறிக்கொண்டே இருக்கிறது என்றார் மதுரகவி ஆழ்வார்.
ஆனால் இராமானுச நாமமோ, சொல்லத் தொடங்கியவுடனே அமுதனார்க்கு நாவில் அமுதம் பாய்கிறதாம்.
அனாதி காலமாக சப்தாதி விஷங்களிலேயே போந்த உங்களுக்கு ஒரு ஹிதம் சொல்கிறேன்.
ராமானுஜ நாமம் என்கிற திருநாமத்தை சொல்லுங்கோள் .
கைங்கர்யம் சம்பத்தும் , ஸ்வரூப ஞானமும் தன்னடைவிலேயே வந்து சேரும் என்கிறார் 43ம் பாட்டில்.

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர்
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே – -44 –

இந்தப் பரந்த உலகில் புருஷார்த்தத்தை தேடி அலைபவர்க்கு இராமானுஜரின் திருநாமமே பரம புருஷார்த்தம் ஆகும் .
இதனை மனதில் கொள்ளாமல், இராமானுச திருநாமத்தின் மீது நம்பிக்கைக் கொண்டு
சொல்லாதவர்களின் தன்மையை நினைந்து வருந்துகிறார் 44ம் பாட்டில்.

பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற்
கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடிலே – 45- –

“ ராமானுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே” என்று கூரத்தாழ்வானும் எம்பெருமானாரது திருவடிகளையே உபாயமாகப் பற்றினார்.
அவரைப் பற்றி பின்பற்றி , அமுதனாரும், தனக்கு ப்ராப்யம், பிராபகம் இரண்டுமே எம்பெருமானார் திருவடிகளே என்கிறார் 45ம் பாசுரத்தில்.
சரம பர்வத்துக்குண்டான வாசி அறியாதவரக்கே பிரதம பருவம் ப்ராப்யமாகிறது.
அதாவது ஆச்சார்ய அபிமானம் உள்ளவருக்கு, எம்பெருமான் மீது அபிமானமும் இரண்டாம் பக்ஷம் என்கிறபடி.

கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே -46- –

பௌத்தம், சார்வாஹம், நையாயிகம், ஜைனம், சாங்கியம், யோகம், ஆகிய ஆறு புற சமயத்தினரும் அழியும்படி செய்ய
அவதரித்த இராமானுஜர், நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதமாகிய திருவாய்மொழியை கண்டறிந்தவர்.
‘நீசனேன், நிறைவொன்றுமிலேன்” எனும்படி நீசத்தனத்தில் நிகரற்றவனாக உள்ள நானும்,
அருள் புரிவதில் நிகரற்றவறான தேவரீரும் நிலைத்து ஏன் இணைய மாட்டோம், என்கிறார் அமுதனார்.
அவ்வாறு பகவத் விஷயத்துக்கு கூட இடமின்றி, எம்பெருமானார் அமுதனாரது சிந்தையினுள்ளே நிறைந்திருந்தார் என்றபடி. (46)

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்
தரம் செப்பும் அண்ணல் இராமானுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை உள்ளே
நிறைந்து ஒப்பற விருந்தான் எனக்காரும் நிகர் இல்லையே – 47- –

கண்ணாலே காணும்படி தன் ஈஸ்வரத்தன்மை வெளிப்பட, தானே வந்து ஸ்ரீ ரங்கத்தில் கண் வளர்ந்தருளுகிற ஸ்ரீரங்கநாதன் என்பார்
எம்பெருமானார். “ராமோ விக்ரஹவான் தர்ம:” என்றும்
க்ருஷ்ணம் தர்மம் சநாதனம்” என்றும்,
அதர்ம வழியிலே போகும் இவ்வுலகத்தாற்கு தர்மோபதேசம் செய்த ராமானுஜரை “ அறம் செப்பும் அண்ணல்” என்கிறார் அமுதனார்.
அத்தகைய பெருமை மிகு எம்பெருமானார் என் சிந்தையில் புகுந்ததினால், எனக்கு நிகர் யாருமில்லை என்று
‘ஸாத்வீக அஹங்காரம்’ தோற்ற கூறுகிறார். (47)

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – -48 —

“வானவர்க்கு ஈசன் என்றால் தேசமோ திருவேங்கடத்தானுக்கு” என்பது போல்
குற்றமற்றவரை ஏற்பத்தில் அருளுடையொருக்கு சிறப்பில்லை.
குற்றம் நிறைந்தவரை ஏற்றுக்கொள்வதில் தான் அருளுடையோருக்கு சீர்மை.
நான் நீசத்தனத்தில் நிகரற்றவன்.தேவரீர் அருள் புரிவதில் நிகரற்றவர்.
நமது நிகரற்றத் தன்மையில் நம் இருவருக்கும் ஒற்றுமை இருக்கும் போது,
நாம் ஒருவரை விட்டு ஒருவர் அகல தேவையில்லை என்று நைச்சியானந்தம் தோற்றக் கூறுகிறார்.(48)

ஆனது செம்மை யற நெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி இறந்தது வெங்கலி பூம் கமலத்
தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத்
தானத்தில் மன்னும் இராமானுசன் இத்தலத்து உதித்தே -49 –

தென்னரங்கத்தில் வயல்கள் நீரால் விளைவன அல்ல.
அவை தம்மிடத்துத் தோன்றிய தாமரை மலரிலிருந்து பெருகும் தேன் பாய விளைவனவாம்.
அத்தகைய ஸ்ரீரங்கத்தில், ‘அரசருக்கு தம்முடி போல இவருக்கு
தென்னரங்கனின் திருமுடிகள் நினைத்தபோது சூடலாம்படி சொந்தமாயின போலும்.
அவர் அவதரித்ததினால் வைதீக மார்க்கம் செழிப்புற்றது.
புல் விளைய களை அழியுமாப் போல, இவர் அவதரிக்கவும் அறு சமயங்கள் அழிந்தது என்கிறார் 49ம் பாட்டில்.

உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்றலர் நெஞ்சம் அஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம்
பதித்த வென் புன் கவிப் பாவினம் பூண்டன பாவு தொல் சீர்
எதித்தலை நாதன் இராமானுசன் தன் இணை யடியே – – 50-

அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்காய் அன்று பாரதப்போர்
முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்திப்
படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே –51 –

பார்த்தசாரதியின் திருவருளால் அவதரித்த எம்பெருமானார் தமது அடியார்களுக்கு அம்ருதமாகவே உள்ளாராம்.
அத்தகைய இராமானுஜர் தமக்காகவே அவதாரம் செய்தார் என்கிறார் 51ம் பாட்டில்.

பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப் பார் முழுதும்
போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேன் இடைத்தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
ஆர்த்தான் இவை எம் மிராமானுசன் செய்யும் அற்புதமே –52-

அதுமட்டுமன்றி, அதிமானுஷமான செயல்கள் புரிந்து, என்னை ஸ்ரீ ரங்கநாதனின் தாள் பணியச் செய்தார்.
இது இராமானுஜர் செய்யும் அற்புதமே என்கிறார். (52)

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை யாள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை இந் நானிலத்தே வந்து நாட்டினனே – -53 –

பிரதான பிரதி தந்திரம் என்பது, பிற மதத்தவரால் ஏற்கப்படாது, நம் மதத்தவரால் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்ட
முக்கிய வேதப் பொருள் எனப்படும். அது சித்,அசித் ஈஸ்வரன் என்கிற தத்வத்ரயமும், சரீர,சரீரி பாவமும் ஆகும்.
இது நற்பொருள் என்றும் அத்தைத் தெரிவித்து உலகத்தவரை தெளிவுபடுத்திய
எம்பெருமானாரை ‘என்னை ஆளவந்த கற்பகம்’ என்கிறார்.(53)

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54- –

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன. நாரணைக்காட்டிய வேதம் களிப்புற்றது.
‘ நாராயண பர ப்ரம்ஹ தத்வம் நாராயண; பர;, அந்தர் பஹீச்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித; என்னும்படி.
இப்படியான பேரெழுச்சி எழுந்ததன் காரணம் பூலோகத்தில் திரண்ட சீல குணமுடையவரான
எம்பெருமனாருடைய ஸ்வபாவத்தைப் பார்த்து, என்கிறார் அமுதனார் 54ம் பாசுரத்தில்.
சிங்கத்தைக் கனவில் கண்டாலும் சாமான்யமான மிருகங்கள் தானே நசித்தொழியும்.
அவற்றைக் கொல்வதற்கு சிங்கம் ஒரு முயற்சியும் செய்ய வேண்டா.
அதுபோல நீசச் சமயங்கள் இராமானுஜரின் இயல்பு கண்டவாறே மாண்டன.

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமானுசனைத் தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே – -55 –

‘என் அமுத்தினைக் கண்ட கண்கள்,மற்றொன்றைக் காணாவே’ என்று பாண் பெருமாள் அருளிச்செய்தபடி ,
கண்டவர் சிந்தையை கவருபவன் , கடிபொழில் தென்னரங்கன்.
‘சர்வ கந்த, சர்வ ரஸ’ எனும்படி வேதங்களாலே போற்றப்படும் அரங்கன் இருக்கும் இடம் தொண்டுக்குப் பாங்கான இடம்.
அத்தகைய அரங்கனை வேதாந்த விழுப் பொருள் என்று ஸ்ரீ பாஷ்யத்தாலே நிரூபித்து,
வேதம் களிப்புறும்படிச் செய்தவர் இராமானுஜர்.
நீர், நிலம், காடு மலை என்று வேறுபாடின்றி மேகமானது மழையைப் பொழிவது போல,
எந்த பயனையும் கருதாது உபகரித்தமையால், இராமானுஜரை ‘கொண்டல்’ என்கிறார்.
அநந்யப் ப்ரயோஜனராய், இவ்வாறு எம்பெருமானரை ஆச்ரயித்தவர்கள் குலமே நம்மை ஆளும் குலம் என்கிறார் 55ம் பாட்டில்.

கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை யடைந்த பின் என்
வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே -56-

56ம் பாட்டில் எம்பெருமானின் ஆவேச அவதாரமாகிய பரசுராம அவதாரம் கூறப்படுகிறது.
அவரைப் பற்றி போற்றிய இராமானுஜரை புனிதன் என்கிறார்.
அந்தப் புனிதனை அடைந்த பின் என் வாக்கானது வேறெதையும் பேசாது. நெஞ்சும் நினைவில் கொள்ளாது என்கிறார்.

மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கா
ளுற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமானுசனை யின் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதமையே -57-

அரங்கன் மலரடிக்கு ஆளுகையே பேறு .
திருவரங்கத்தில் அரங்கன் திருவடிவாரத்தில் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம்.
மற்ற புருஷார்த்தங்கள், புருஷார்த்தங்களாக மதிக்கத் தக்கனவல்ல என்று அரங்கனுக்கு ஆளுற்றவர் கருதுகின்றனர்.
இவர்கள் பரமபதநாதனுக்கு ஆளுகையும் பெரிய பேறாக மதிக்கிலர்.

திருவரங்கத்தில் ஈடுபட்டவர்கள், பரமபதத்தையும் விரும்ப மாட்டார்கள் என்பதனை பெரியவாச்சான் பிள்ளை
‘’ ஸ்ரீ ரங்கத்தில் உள்ளவர்கள் ‘பரமபதம் வரில் என் செய்வதென்’ என்று நடுங்குபவர்கள் போலே காணும் ,
அவ்வூரில் வர்த்திக்கின்றவர்கள் ‘ என்று ரசமாக அருளிச் செய்துள்ளார்.

பராசர பட்டர், ஒரு திருமஞ்சனத்தின் போது எம்பெருமான்,
’ பட்டரே, சீக்கிரம் பரமபதம் போக வேண்டுமே என்று அஞ்சினாயோ’ என்று வினவ,
அதற்கு பட்டர், பரமபதம் போக நான் அஞ்சவில்லை. உம்முடைய குளிர்ந்த முகமும், திருநாமத் தழும்பையும்
இழந்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன் ‘ என்றாராம்.

அதே போல, ஆளவந்தார் மகன் சொட்டை நம்பியும் ‘ ஸ்ரீ வைகுண்டத்தில் சென்றால், நம்பெருமாளுடைய குளிர்ந்த முகம்போல்,
ஸ்ரீ வைகுண்ட நாதனின் முகம் குளிர்ந்ததில்லையாகில், முறித்துக் கொண்டு இங்கு வந்துவிடுவேன்’ அன்று அருளிச் செய்துள்ளார்

அவ்வாறு ஸ்ரீ ரங்கநாதனான மாதவனின் திருவடிகளை உபாயமாகவும், உபேயமாகவும் கொள்ளுமவர், உத்தம அதிகாரி எனப்படுவர்.
தவங்களுள் சிறந்தது சரணாகதி. சரணாகதியைக் கைக் கொண்டும், தம்முடைய உபதேசத்தாலும், நூல்களாலும்
உலகினரை சரணாகதி நெறி ஒழுகச் செய்தும், சரணாகதியை நிலை நிறுத்தின எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பிறகு,
தமது பேதமை விலகியதாக அமுதனார் கூறுகிறார்.(57)

பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா வுயிரும் அக்தென்று உயிர்கள் மெய் விட்டு
ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58-

கடளவாய திசை எட்டினுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத்து இராமானுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் உயிரை
யுடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை யுற்று உணர்ந்தே – -59-

‘’அஹம் ப்ரம்மாஸ்மி, தத்வமஸி “ போன்ற சில வேத வாக்கியங்களை மட்டும் எடுத்துக் கொண்டு
அனைத்தும் பிரம்மம் என்றும் கடைசியில் அனைத்தும் ப்ரம்மத்தில் ஐக்கியமாகி விடுகின்றன என்றும்
சில குத்ருஷ்டிகளின் மாயா வாதத்தை இராமானுஜர் முறியடிக்கா விடில்,
நாராயணனே பரம்பொருள் என்று இவ்வுலகத்தார் அறியாமலே போயிருப்பர் என்கிறார் 58,59ம் பாட்டில்.

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

அர்த்த பஞ்சகத்தை உணர்ந்த மெய்ஞ்ஞானியர் கூடுமிடமெல்லாம் புக்கு நிற்கிறார் எம்பெருமானார்.
அதாவது திருவாய்மொழி பாடும் இடங்களில் எல்லாம் பரம ரசிகருமான எம்பெருமானார் தானும் இருக்கிறார்.
மேலும் திருமங்கையாழ்வ்வரைப் போல , பிராட்டியார் நித்ய வாசம் பண்ணக்கூடிய அழகிய மார்பை யுடைய
எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருப்பதிகள் தோறும் மண்டி அனுபவிக்கப் புகுபவர் எம்பெருமானார்.
அவர் எங்கள் குலக் கொழுந்து என்கிறார் 60ம் பாட்டில்.

கொழுந்து விட்டோடிப் படரும் வெங்கோள் வினையால் நிரயத்
தழுந்தி யிட்டேனை வந்தாட் கொண்ட பின்னும் அரு முனிவர்
தொழும் தவத்தோன் எம் இராமானுசன் தன புகழ் சுடர்மிக்கு
எழுந்தது அத்தால் நல்லதிசயம் கண்ட திரு நிலமே – 61- –

‘ஸ மஹாத்மா ஸு துர்லப’ என்று க்ருஷ்ண பகவான் தான் அவதரித்த விபவாதாரத்துக்குப் பின்பு
நம்மாழ்வார் அவதரிக்கையாலே, அவருடைய காட்சி தமக்கு கிடைக்காமல் போனதே
என்று நினைத்துச் சொன்னான்’ என்று பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்.
திருக்கண்ணமங்கை எம்பெருமான் கண்ணனும், பெரியவாச்சான் பிள்ளையாக அவதரித்தார் என்று சொல்வர் பெரியோர்.
நம்மாழ்வாரின் க்ருபைக்குப் பாத்திரமான நாதமுனிகளையும் , ஆளவந்தாரையும் அரு முனிகள் என்கிறார்.
அத்தகையோர் தொழுதேத்தும் இராமானுஜனை அடைந்து இவ்வுலகும் அதிசயம் கண்டது . (61)

இருந்தேன் இருவினை பாசம் கழற்றி இன்றி யானிறையும்
வருந்தேன் இனி எம் இராமானுசன் மன்னு மா மலர்த்தாள்
பொருந்தா நிலைவுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெரும் தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே – -62 –

பெருந்தேவர்கள் என்று கூறப்படும், நித்ய ஸூரிகளுக்கு இணையான, ஸ்ரீ வைஷ்ணவர்கள் கழல் பிடித்த பின்,
தமது இரு வினைகளும் கழிந்தன என்றும்
அவ்வாறு கழிந்த பின் தான் புரிய வேண்டிய செயல்கள் ஏதுமில்லாது ‘க்ருத்க்ருதயனானேன் ‘ என்கிறார்.
அதாவது பேற்றினைப் பெறுவதற்கு செய்ய வேண்டியவைகளைச் செய்து முடித்தவன் ஆனேன் என்கிறார்.
“ ஆதலின் நீ உண்மையாக என்னைப் பற்றிய அறிவிலும், காண்டலிலும் அடைதலிலும் ஐயமற்றவனாய்,
சுகமாய் இரு என்று சரணாகதி கத்யத்தில் எம்பெருமானின் திருவாக்காக இந்த க்ருத க்ருத்யதமே பேசி முடிக்கப்படுகிறது.
சரம ஸ்லோகத்தில் சரண் ஏற்ற எம்பெருமான் ‘மாசுச:(கவலைப்படாதே என்பதற்கும் இதுவே பொருளாம். (62)

பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்திப்
படியைத் தொடரும் இராமானுசா மிக்க பண்டிதனே – 63- –

பெண் யானையை, அது எதிர்வழி கொடாத நிலையிலும், பேராத பேரன்பால் அதனையே பின் தொடர்ந்து திரியும்
ஆண் யானையை போல் அடியேன் தேவரீருடைய பிரகாசிக்கும் தன்மை வாய்ந்த குணங்களைக் கொண்ட
திருவடியை பின்பற்றித் திரியும் ஸ்வபாவத்தைத் தந்தருளவேண்டும்.
‘ பகுத்தறிவு அற்றவர்கள் சப்தாதி விஷயங்களில் எத்தகைய பற்று நீங்காது உள்ளனரோ,
அத்தகைய ப்ரீதி உன்னைத் தொடர்ந்து நினைத்த வண்ணம் இருக்க வேண்டும் என்று
பிரகலாதாழ்வான் அச்சுதனிடம் வேண்டியது போல், எம்பெருமானாரிடம் வேண்டுகிறார். (63)

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே
மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே – – 64- –

அன்பு கொண்ட யானையைப் போலல்லாமல்,மதம் கொண்ட வேழமென் இராமனுசமுனி வேழம்,
பசுந்தமிழாகிற திருவாய்மொழி அனுபவத்திலுண்டான ஆனந்தம் மதநீராகிப் பாய்ந்து, வேதமேன்னும் ‘கதை’யை எடுத்துக்கொண்டு
பாஹ்யர்களையும், குத்ருஷ்டிகளையும் வாழ்வறச்செய்தார் என்று அமுதனார் 64ம் பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார் .
தெற்கே திருமாலிருஞ்சோலையில் ஒரு யானையாகவும்,
வடக்கே திருவேங்கடமுடையான் என்று ஒரு யானையும்,
கிழக்கே திருக்கண்ணபுரத்து எம்பெருமானாக ஒரு யானையும்,
மேற்கே ஒரு மதம் பிடித்த யானை சாய்ந்தாற்போலே திருவரங்கத்தில் ஒரு யானையும் ஆகிய
நான்கு யானைகளுக்கு ஒத்தாற்போல் ஐந்தாவது வேழமாக எம்பெருமானார் விளங்குகிறார் என்றபடி. (64)

வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழற்றது குற்றமெல்லாம் பத்திதா குணத்தினர்க் கந்
நாழற்றது நம்மிராமானுசன் தந்த ஞானத்திலே – – 65-

எம்பெருமானார் அருளிய ஞானத்தாலே, பூமண்டலமானது பாக்யம் பெற்றது, எவ்வாறு எனில்,
களையெடுத்தபின் பயிர் தலை நிமிர்ந்து ஓங்கி வளருமாப்போலே, இவர் அவதரித்தபின் புறச்சமய வாதியர்கள் அழிந்தனர் .
வைதீகர்கள் பூமியெங்கும் தலைநிமிர்ந்து திரிந்தனர். தத்வ சாஸ்திரங்களில் உள்ள சந்தேகங்கள் தீர்ந்து
பொய்ஞானம் அகன்று மெய்ஞானமே விளங்கியது.
குற்றங்களும் தோஷங்களும் தன்னுள் பொதிந்துள்ளவர்கள், அக்குற்றம் நீங்கியவர்கள் ஆயினர். (65)

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த விராமானுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன் தகவென்னும் சரண் கொடுத்தே -66 –

ஞானம் கனிந்து பக்தியாகி அந்த பக்தி ப்ரபத்தியான பின்னரே மாதவன் மோக்ஷம் கொடுக்கிறான்.
எம்பெருமானாரோ, தன் கிருபையை தானே வலிய சென்று அளிக்கிறார்.
பிராட்டியுடன் கூடிய எம்பெருமான் இருவராக அளிக்கும் மோஷப் பிரவாகத்தை,
எம்பெருமானார் தாம் ஒருவராகவே அளித்து உத்தாரக ஆசாரியர் ஆகிறார். (66)

சரண மடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரண மடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரண மிவை வுமக் கன்று என்று இராமானுசன் உயிர் கட்
கரணங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ் வார் உயிர்க்கே – 67- –

இந்த தேகமும் அவயவங்களும் அவனுடைய சரணார விந்தங்களைப் பற்றுவதற்காகவே அவனால் கொடுக்கப்பட்டது.
இப்படி சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்கு சாதனாமாகக் கொடுத்த கரணங்களைக் கொண்டு,
நதியைக் கடக்கக் கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அத்தைக் கடவாதே வெள்ளதோடு போவாரைப் போல் ,
இந்த கரணங்கள் உங்கள் உபயோகத்துக்காக வைக்கப்பட்டவைகளல்ல என்று உபதேசித்தவர் எம்பெருமானார்.
அத்தகைய ரஷையை அவர் செய்யா விடில் இந்த ஆத்மாவை காப்பது யார் என்கிறார்.
‘ ராமானுஜ என்கிற சாமர்த்தியம் படைத்த நான்கு அக்ஷரங்கள் இல்லாமற்போனால்,
என் போன்ற ஜந்துக்கள் எந்த நிலையை அடைவோம் என்று கூரத்தாழ்வான் சொன்னார்ப் போலே
சொல்லுகிறார் அமுதனார் 67ம் பாசுரத்தில்.

ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68- –

அரசன் சிம்மாசனத்திலிருந்து செப்புகிறாப்போலே, கண்ணன் தேர்த் தட்டிலிருந்து சொன்ன கீதையின் செம்மைப் பொருளை
இந்த உலகத்தார் அறிய மாட்டாது இடர் பட்டனர்.
எம்பெருமானார் கீதையின் சீரிய பொருளை தெள்ளத் தெளிவாக, தாம் இயற்றிய கீதா பாஷ்யத்தில் அருளிச் செய்தார்.
இந்த சீர்மையை உணர்ந்து எம்பெருமானாரை பணிந்தனர் நல்லவர்கள். அவர்களிடம் எனது ஆவியும் பணிந்தது.
ஆக எனக்கு ஒப்பாவார் யார் என்று சாத்வீக அஹங்காரத்தால் வந்த களிப்பில் கூறுகிறார். (68).

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69- –

அரங்கன் தந்தவை இந்த ஊன உடலும் சம்சாரத்தில் விழுந்து உழலுவதற்கு உறுப்பான கரணங்கள்.
ஆனால் எம்பெருமானார் தந்தவைகளோ அந்த அரங்கனின் திவ்ய சரணங்களாகும் என்று 69ம் பாசுரத்தில் கூறுகிறார்.

என்னையும் பார்த்து என்னியல்வையும் பார்த்து எண்ணில் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே யுன் பெரும் கருணை
தன்னை என் பார்ப்பர் இராமானுசா வுன்னைச் சார்ந்தவரே – 70 –

அரங்கன் தராததையும் தந்த பின்னரும், அனாதிகாலமாக தொடரும் வல்வினையால் வந்த வாசனா லாபம்,
அத்தாலே சப்தாதி விஷயங்களில் தலை தூக்கி வளரும் ருசிகள் ஆகியவையே அமுதனாரது இயல்பாகி விட்டனவாம்.
அவ்வாறிருந்தும் தம்மை ஆட்கொண்ட எம்பெருமானாரது கருணை, பெருங்கருணையாகும்.
இதை ஆராய்ந்து பார்த்தால், இராமானுஜரை ஆஸ்ரயிப்பவர்கள், குறைவாக நினைக்க மாட்டார்களோ என ஆதங்கப்படுகிறார். (70)

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும் தகையே !–71-

விஷய ப்ரவணனாகிய தாம் எங்கே, சரம சேஷியாகிய தேவரீர் எங்கே?
சபலத் தன்மை வாய்ந்த என் நெஞ்சு தேவரீர் திருவடிக்கீழ் பொருந்தியதென்றால் , அது தேவரீரின் கடாஷத்தாலன்றோ?
திருக்கோஷ்டியூரில் கேட்போரின் தன்மையை ஆராயாது, உபதேசத்தின் சீர்மையை பாராது, தம் பெருந்தன்மைக்கேற்ப,
ஆசையுடையோர்க்கெல்லாம், தாம் அரும்பாடுபட்டு பெற்ற சரம ஸ்லோக அர்த்தத்தை
அருளிச் செய்தமையினால் ‘ எம்பெருத்தகை’ என்கிறார் அமுதனார். (71)

கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறை நெறி தன்னை என்றுன்னி வுள்ளம்
நெய்த்த வன் போடிருந்தேத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே -72- –

அந்த ஓவ்தார்ய குணத்தால் தீய சமயங்கள் அழிந்தன. தூய வேத நெறிகள் நிலைநிறுத்தப்பட்டன.
தம்மையும் அந்த தூய குணங்களையுடைய பெரியோரிடம் சேர்த்து வைத்தார் என்கிறார் தமது 72ம் பாசுரத்தில்.

வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும்
தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை வுன்னும்
திண்மை யல்லால் எனக்கில்லை மற்றோர் நிலை நேர்ந்திடிலே – – 73- –

அவரே தமக்கும் உலகத்தோர்க்கும் ரஷகர் ஆகிறார். ருசி, விசுவாசம் இல்லாதவரையும் வலுவில்
ருசி, விசுவாசஸங்களை விளைவித்து, சரம உபாயத்துக்கு ஆளாக்கினார் எம்பெருமானார். (73)

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டலனைய வண்மை
ஏரார் குணத் தெம்மி ராமானுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே – -74-

நித்யமாயிருத்தல்,அபௌர்ஷமேயம், ப்ரத்யஷ ப்ரமானம், எல்லா சேதனர்களுக்கும் நல்லதும், தீயதும், உணர்த்தல்,
எம்பெருமானுடைய ஆக்ஜைக்கு உட்பட்டிருத்தல் ஆகிய மிக்க சீர்மையை உடையது வேத சாஸ்திரங்கள்.
அதை மீறுபவர்களை தனது கூராயுதத்தால் அழிப்பது எம்பெருமான்.
ஆனால் எம்பெருமானாரோ, அவ்வப்போத, தமது சிந்தையில் தோன்றும் சிறந்த யுக்திகளைக்கொண்டே,
அவர்களை சிதைக்கிறார் என்க.(74)

செய்த்தலைச் சங்கம் செழு முத்த மீனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி நம் கண் முகப்பே
மெய்த்தலைத் துன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே
மொய்த்தலைக்கும் வந்து இராமானுசா ! வென்னை முற்று நின்றே – – 75-

ஆச்சார்ய அபிமானமே உத்தாராகம்’ என்றிருப்பவர்களை மிகவும் உகக்கிறான் சர்வேஸ்வரன்.
உகப்பின் மிகுதியால், அவர்கள் திறத்து தானே மேல் விழுந்து தன் கைச் சக்கரத்து அழகும், வடிவழுகம் காட்டி,
‘உன்னை விடேன்’ என்றாலும் முக்கோலேந்திய எம்பெருமானாரின் கைத்தல அழகு , என்னை ஈடுபடச்செய்கிறது.
சஸ்திரமேந்திய, எம்பெருமானைவிட, சாஸ்திரமேந்திய உடையவரின் கைத்தலமே என்னை ஈரக்கிறதென்கிறார் 75ம் பாட்டில்

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –

கீர்த்தி மிக்க திருவேங்கடப் பொற்குன்றமும், நித்ய ஸூரிகள் சேர்ந்த இடமான ஸ்ரீ வைகுந்தமும்,
சயன திருக்கோலமுடைய திருப்பாற்கடலும் எம்பெருமானார்க்கு ப்ரீதி உள்ள இடங்களாகும்.
அவ்வாறே, அமுதனார்க்கு மிகவும் ப்ரீதி உள்ள இடம்,
எம்பருமானாரின் அழகுமிகுந்த, இணையத் திருவடிகளே என்கிறார் 76ம் பாசுரத்தில்.
‘திருபொலிந்த சேவடி என் சென்னிமேல் பொறித்தாய் ‘ என்றபடி.
எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் நின்ற, வீற்றிருந்த , சயனத் திருக்கோலங்களை கூறுகிறார்.
அவை உடையவருக்கு எவ்வளவு இன்பம் அளிக்குமோ, அவ்வளவு உடையவரது திருத்தாமரையடிகள்
அமுதனார்க்கு இன்பம் பயக்கின்றனவாம்.

ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் இப்படியனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே – 77 –

வினைகளுக்கு வேர் போன்றதான என் வாசனைகளை அறவே போகும்படி விரட்டிய பின்னும்,
உதவுவதற்கு ஏதேனும் உண்டோ என வினவுகிறார் 77ம் பாட்டில்.

கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ யிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என்னெஞ்சினில்
பொருத்தப்படாது எம்மிராமானுச! மற்றோர் பொய்ப் பொருளே – – 78- –

இப்படி எம்பெருமானார் தன்னை திருமகள் கேள்வனுக்கே ஆக்கிய பின், வேறொரு மெய்ப் பொருள்
இந்த நெஞ்சில் பொறுத்தப் படாது என்கிறார் 78ம் பாட்டில்.

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கி யாதென்று லர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்லோர் நல்லறி விழந்தே – – 79- –

ஆதிப்பிரான் நிற்க மற்றத் தெய்வம் நாடுதிறே ‘ என்றார் நம்மாழ்வார்.
பொய்மையைச் சுரக்கும் புற சமயத்தை அழித்தொழித்து, மெய்ம்மையே சுரக்கும் வேதத்தை ஒளி பெறச்செய்த
ராமானுஜர் இருக்க, நம்மை உஜ்ஜீவிக்க நல்லதொரு தெய்வம் எங்கே என்று தேடுகிறார்களே
இவ்வுலகத்தவர் என்கிறார் 79ம் பாட்டில்.

நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர் அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே – -80 – –

ராமானுஜ’ என்னும் இந்த திறமை வாய்ந்த நான்கு அக்ஷரங்கள் இல்லை யெனில், என்னைப் போன்ற ஜந்துக்கள்
எந்த நிலைமையை அடைந்திருக்கும் என்று கூரத்தாழ்வான்,
இந்த திருநாமத்தின் சீர்மையை நினைத்து அதன்பால் மஹா விஸ்வாசம் கொண்டு பேசுகிறார்.
அத்தகைய கூரத்தாழ்வான், எம்பார், முதலியாண்டான் போன்ற அடியவர்களையே
தமக்கு உரிய தெய்வமாகக் கொண்டு ‘ஒழிவில் காலமெல்லாம் வழுவிழா அடிமை” செய்வேன் என்கிறார் 80ம் பாசுரத்தில்.

சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – – 81- –

பாகவத சேஷத்வத்தின் சுவை அறியாதிருந்த எனக்கு, அந்த பாகவதற்கே உரியது
இந்த ஆத்மா என்னும் உணர்வை உண்டு பண்ணினார் , எம்பெருமானார்.
அவ்வித பாகவத சேஷத்வத்திலே ஊறி நின்றவர்க்கே அரங்கதெம்பெருமான் தன் திருவடிகளை
விட்டுப் பிரியாத நிலையை விளைவிக்கிறான்.
அவ்வித பாக்கியத்தை தமக்கு தந்தளித்த எம்பெருமானாரின் மஹத்வம் ஒப்புயர்வற்றது என்கிறார் 81ம் பாசுரத்தில்.

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது வெந்தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற வென்னை ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் என்ன புண்ணியனோ !
தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –

நல்லதை பற்றிய அறிவு தமிடம் இல்லாததால் அல்லதைப் பற்றிய அறிவே என்னிடம் இருந்தது.
அப் பேர்ப் பட்ட என் நெஞ்சிலும் சாஸ்திரத்தின் மிகச் சீரிய உட்பொருள் பதியுமாறு, சாரமாக உபதேசித்து
என்னை ஒப்பற்ற கேள்வி ஞானமுடையவனாக செய்தருளினார் எம்பெருமானார்.
உலகெங்கும் பரவிய கீர்த்தியை உடையவரும், மேகம் போன்ற வள்ளல் தன்மை உடையவருமான
என்ன தார்மீகரோ எம்பெருமானார் என்று வியக்கிறார் 82ம் பாட்டில்.

சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன் உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமானுச ! இது கண்டு கொள்ளே – – 83-

பகவானிடம் சரணாகதி பண்ணி நல் வீடாகிய பரம பதத்தை நாடும் பிரபன்னர்கள் நாட்டில் பலர் உள்ளனர்.
அடியேனோ, சரம பருவத்தின் எல்லை நிலமாகிய ஆசார்யராகிய தேவரீரைப் பற்றிக்கொண்டு,
அத்திருவடிகளே , பரமபத்தைவிட விலக்ஷணமான மோக்ஷமாக அடியேனுக்கு அமைந்துள்ளது
என்று தமக்கு பேரின்பம் விளைவிக்கும் எமாபெருமானார் திருவடிகளே மோஷப் ப்ரதாயகம்
என்று கூறுகிறார் அமுதானார் 83ம் பாட்டில்.

கண்டு கொண்டேன் எம் இராமானுசன் தன்னை காண்டலுமே
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்
றுண்டு கொண்டேன் இன்னுமுற்றனவோ தில் உலப்பில்லையே – -84 – –

கண்டேன் கமலமலர்ப் பாதம்: காண்டலுமே வின்டேயொழிந்தன வினையாயின வெல்லாம் : என்றார் நம்மாழ்வார்.
அவ்வாறே அமுதனாரும் இராமானுசனைக் கண்டு கொண்டேன்.
கண்ட மாத்திரத்திலே அவரோடே நில்லாது அவர்க்கு ஆட்பட்டாருடைய அழகிய திருவடிகளில் அடிமைப்பட்டு விட்டேன்.
எனது அனாதியான கொடிய பாபங்கள் நீங்கப் பெற்றேன். இப்படி தாஸ்யத்திலேயே அன்வயிக்கவே,
எனது அருவினைகள் அனைத்தும் தொலைந்தன .
இன்னும் நான் பெற்ற நன்மைகள் சொல்ல முடிவில்லாதது என்கிறார். . (84)

ஓதிய வேதத்தின் உட் பொருளாய் அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என வறியாது உழல்கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த விராமானுசனைத் தொழும் பெரியோர்
பாத மல்லால் என்தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே – – 85- –

“ எந்த ப்ராம்மனன் நான்கு வேதங்களையும் நெஞ்சில் தாங்கிக்கொண்டு இருப்பினும் , வாசுதேவனை அறியவில்லையோ ,
அவன் வேதச் சுவையின் பளுவினால் ஆச்ரயிக்கப்பட்ட கழுதை ஆவான். ‘குங்கமப்பூ சுமந்த கழுதை போலாவான்.
வேதத்திலும், வேதாந்தத்திலும் இந்த சரீரம் – ஆத்மா என்னும் சம்பந்தம் காட்டப்பட்டிருப்பதால்
உடல் உயிருக்கே சேஷப்பட்டிருப்பது போல் நாம் அனைவரும் நமது ஆத்மாவான இறைவனுக்கே அடிமைப்பட்டவர்கள் ஆவோம்.
இறைவன் அந்தர்யாமியாக இருந்து எல்லோரையும் நியமிக்கின்றான். அதனால் அவன் எல்லார்க்கும் ஆத்மா.
நாம் அனைவரும் அவனுக்கு அடிமைபட்டவர்கள் என்னும் அனன்யார்ஹசேஷத்வ ஞானம் அறியப் பெறாமையால்
பிறர்க்கே தொண்டுபட காரணமாயிற்று இந்தப் பேதமையை நீக்கியவர் இராமானுஜர் (85)

பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்றோடி நையேன் இனி ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் யவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே – – 86-

‘ஊருக்கே உழைத்து ஏழையானேன்’ என்று திருமங்கையாழ்வார் கூறியது போல்,
ஒன்றுக்கும் பற்றாத, அதாவது எதனுக்கும் திறமையற்ற அற்ப மனிதர்களை அண்டி அவர்களையே உறவென்று கருதி,
அலைந்து கஷ்டப்பட்டு, அவர்களைக் காணவேண்டும் என்று ஓடி இனிமேல் நிலைகுலைந்து போகமாட்டேன்.
தத்துவ, ஹித புருஷார்த்தங்களைத் தெள்ளத் தெளிவாக அறிந்து , மிக்க ப்ரேமையால் ,
தங்கள் கல்விக்கு ப்ரயோஜனம் இதுவே என்று எம்பெருமானாரை ஆச்ரயிக்கும் கூரத்தாழ்வான் போன்றவரே
என்னை ஆளும் பெரியவர் என்று அமுதனார் கூறுகிறார்.(86)

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணம் கட்கு
உரிய சொல்லென்றும் உடையவன் என்று என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி யிராமானுசன் மறை தேர்ந்து உலகில்
புரியு நன் ஞானம் பொருந்தாதவரைப் பொரும் கலியே – – 87- –

கடலில் செல்ல இயலாவிடிலும், தன் சுத்திக்காக கரை யோரத்தில் மூழ்கி எழுவாரைப் போல,
அறிவாற்றல் கொண்டு பேசமுடியாவிடினும் தங்கள் தகுதிக்கு முயன்றவரை,
எம்பெருமானாரை போற்றுபவர்கள் உள்ளனர்.
எம்பெருமானார் என்னும் ஆச்சார்யனாகிற துறையில், சத்வ குணம் தலை யெடுத்து, ஞான ஸ்நானம் செய்தவர்கள்
தூயவர்களாயிருப்பவர்கள் ஆதலாலே, அவரை கலி நலியாது.
அவ்வாறு அடையாதவர்களையே கலிதோஷம் நல்கும் என்கிறார் 87ம் பாசுரத்தில்.

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்
ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன் மறைவாதியராம்
புலி மிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே – – 88- –

மிகவும் கொடியவர்களான குத்ருஷ்டிகள் எனும் புலிகள் மிகுந்து சாதுக்களான உலகியனரை நலிந்து திரிய,
அப்புலிகளைத் தொலைக்க வல்ல உயர் மிக்க ஸிம்ஹமாய் வந்து
புவனத்தைக் காக்க முற்படுகின்றார் எம்பெருமானார் என்கிறார் 88ம் பாட்டில்.

போற்றரும் சீலத்து இராமானுச நின் புகழ் தெரிந்து
சாற்றுவனேலது தாழ்வது தீரில் உன் சீர் தனக்கோர்
எற்றமென்றே கொண்டிருக்கிலும் என் மனம் ஏத்தி யன்றி
ஆற்ற கில்லாது இதற்கென்னினைவா என்றிட்டஞ்சுவனே – – -89 – –

நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந்நீணிலத்தே
எனையாள வந்த விராமானுசனை இருங்கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே – – 90-

பெரிய பெருமாளைச் சரணடைந்து எம்பெருமானார், தம்மோடு ஏதேனும் ஒருவகையில் சம்பந்தம் உடையோர் அனைவருக்கும்
வீடு தரவேண்டி ப்ரார்த்தித்து , அத்தைப் பெற்றவராகையாலே , அவரை நினைப்போர்க்கெல்லாம் பிறவியை நீக்கும் உபகாரத்தை ,
அதாவது மோக்ஷத்தை தரவல்லவராவார்.
ஆனால் அத்தகைய எம்பெருமானரை மனம், வாக்கு, செயல் ஆகிய முக்கரணங்களில்
ஒன்றிலாவது ஈடுபடாமல் இருக்கின்றனர் மாந்தர்.
இவர்கள் ‘உய்ய ஒரே வழி,, உடையவர் திருவடி’ என்று அறியாமல், பிறப்பினால் நேரும் துன்பங்களில் அழுந்தி
துன்புறுவர்களாக உள்ளனர் என்கிறார் 90ம் பாசுரத்தில்.

மருள் சுரந்தாகம வாதியர் கூறும் அவப் பொருளாம்
இருள் சுரந் தெய்தவுலகிருள் நீங்கத் தான் ஈண்டிய சீர்
அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 —

எல்லா ஆத்மாக்களுக்கும் தலைவன் பெரிய பெருமாளே என்கிறார் 91ம் பாட்டில்.
வேதம் கூறிய உண்மைப் பொருளைக் கூறாது அவப் பொருளைக் கோரும் ஆகம வாதிகளைச் சாடுகிறார்.
நாராயணனே முதற்பெருங்கடவுள். பிரமன் ருத்ரன் முதலியோர் படைப்புக்கு உட்பட்டவர்களே.
அப்பெருங்கடவுளான, எம்பெருமானே உலகினுக்கு உபாதான காரணமாகவும்,
தானே சங்கல்பித்து மாறுதலினால் நிமித்த காரணமும் அவனே என்பது வேதத்தின் உண்மைப் பொருள்.
அவ்வாறில்லாமல் பரம் பொருளைக் கீழ்ப் படுத்தியும், கீழ்ப் பொருளை பரம் பொருளாக்கியும், கூறுவது அவப் பொருளாகும்.
இந்த உண்மைப் பொருளை உலகுக்கு உணர்த்திய எம்பெருமானார் புண்ணியனே என்கிறார்.

புண்ணிய நோன்பு புரிந்துமிலேன் அடி போற்றி செய்யும்
நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் செம்மை நூற் புலவர்க்
கெண்ணரும் கீர்த்தி இராமானுச ! இன்று நீ புகுந்ததென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே – – 92–

அர்ச்சா மூர்த்தியின் வழிபாட்டைப் பேசும் பஞ்சராத்ரம் பகவான் திருவடிகளையே உபாயமாய் பற்றும்படி புகழ்கின்றது.
அரங்கனாம் பெரிய பெருமாளும், நீட்டிய திருக்கரத்தாலே தன் திருவடிகளையே உபாயமாய் பற்றும்டி
காட்டிய வண்ணமாய் பள்ளிக் கொண்டிருப்பதாலே, வைகுந்தத்தில் எழுந்தருளியுள்ள
பரவாசுதேவனான நாராயணன், அரங்கனே என்பது எம்பெருமானாரின் சொல்லாகும்.
‘ நீசனேன் நிறைவொன்றுமிலேன் ‘என்கிறபடி நல்லதோர் விரதத்தை அனுஷ்டித்திலேன் .
கேள்வியறிவு ஞானத்தையும் பெற்றிலேன். அவ்வாறிருக்க, இராமானுஜர் தாமாகவே வந்து
அடியேனுடைய கண்ணிலுள்ளும், நெஞ்சினிலும் நிறைந்த நிர்ஹேதுக கிருபையின் காரணத்தைச்
சொல்ல வேண்டும் என்கிறார். 92ம் பாட்டில்.

கட்டப் பொருளை மறைப் பொருளென்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரானல்லனே என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி
வெட்டிக் களைந்த இராமானுசன் என்னும் மெய்த்தவனே – – -93 –

மெய்யான தவம் சரணாகதி . அத்தை யுடையவர் எம்பெருமானார்.
தம்மைச் சார்ந்தவர் அனைவருடைய பாபங்களையும் பொறுத்தருளுமாறு பெருமாளிடம் சரணாகதி செய்து
வரம் பெற்றுள்ளமையால் அத்தகைய வல்லமை அவருக்கு வந்தது.
அவர் செய்த பிரபத்தியினாலேயே நாம் அனைவரும் அவர் சம்பந்தத்தை முன்னிட்டு பிரபன்னர்களாகி வினையினுன்றும் விடுபடுகிறோம்.
பிரபன்ன ஜனங்களாகிய நம் அனைவருக்கும் அவரே கூடஸ்தர் என்று நம்மால் அவர் போற்றப் படுகிறார் .
நம் கூடஸ்தர் நமக்கு வைத்திருக்கும் சொத்து சரணாகதி. அதுவே நமக்கு உஜ்ஜீவனம்.
அவரே தமது பெருவினையை கிழங்கோடு தொலையும்படி செய்தார் என்கிறார் அமுதனார் தமது 93ம் பாட்டில்.

தவந்தரும் செல்வம் தகவும் தரும் சரியா பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாம மென்னும்
திவந்தரும் தீதிலிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் கட்கு
உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- –

அநேக கல்யாண குணங்களையுடைய எம்பெருமானார் தம்மை வந்து அடைந்தவர்களுக்கு சரணாகதி நிஷ்டையை கொடுத்தருளினார்.
அவர்கட்கு பிறப்பினால் ஏற்படும் சம்சாரத்தை உண்டாக்கும் கொடிய கர்மங்களை தூள் தூளாகும்படி செய்தார்.
அதற்கும் மேலே ‘பரந்தாமம்’ என்று சொல்லப்படுகின்ற ஸ்ரீவைகுந்த லோகத்தை கொடுத்தருளுவார்.
ஆயினும் நான் அந்த எம்பெருமானாருடைய குணங்களைத் தவிர வேறொன்றையும்
மனம் மகிழ்வுற்று விரும்பி அநுபவிக்க மாட்டேன் என்கிறார் அமுதனார்.
“ எம்பெருமானாரைப் பற்றுகையே பிரபத்தி. ‘ராமானுஜ என்கிற சதுர்ஷாரியே திருமந்திரம்.
அவர் திருவடிகளிலே பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம் .
இதுவே முடிவு கட்டின என் சித்தாந்தம்’ என்று அருளிச்செய்தாரென்றோ நடாதூரம்மாள் .
இதுவே அமுதனாரது நிலை. (94)

உண்ணின்று உயிர் களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப்பன் எம்மிராமானுசன்
மண்ணின் தலத் துதித்துய் மறை நாலும் வளர்த்தனனே – – -95 – –

அனாதி காலமாக பலப் பல பிறப்புகள் பிறந்து சம்சாரத்திலே உழல்கின்றனர் இந்த ஆத்மாக்கள்.
அவர்களை உய்விக்கும் நோக்கத்துடன், அவர்கள் மேல் கொண்ட வாத்சல்யத்தினால் எம்பெருமான்
அந்தர்யாமியாய் நின்று உற்றனவே செய்து உய்விக்கின்றான்.
நெருங்குவதற்கும் அருவருக்கத்தக்க குற்றங்கள் மலிந்த உயிருக்குள் புகுந்து ,
இவ்வளவு பரிவு வாய்தவனாக எம்பெருமான் இருக்கின்றான்.
இருப்பினும், எம்பெருமானாரோவெனின், பலவகைப்பட்ட உயிர்களுக்கெல்லாம் நேரடியாகவே வீடு அள்ளிப்பதற்காகவே ,
விண்ணகத்தினின்றும் இம்மண்ணகத்திற்கு நேரே வந்து அவதரித்தார் என்கிறார் 95ம் பாட்டில்.

வளரும் பிணி கொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலை யூன்
தளருமளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு
உளரெம் மிறைவன் இராமானுசன் தன்னை வுற்றவரே – – 96- –

நான்கு வேதங்களையும் வளரும்படி செய்தருளினார்,
சேதனர்கள் உய்வதற்கு . அனுபவித்தோ, பரிகாரம் பண்ணியோ, தீராத, தொடர்ந்து வரும், கர்மவினையினால்,
எம்பெருமானார் வழி காட்டிய ப்ரபத்தி மார்க்கத்தில் தமக்கு மஹா விசுவாசம் ஏற்படவில்லை என்கிறார் 96ம் பாட்டில்.

தன்னை வுற்றாட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை வுற்றாட் செய்ய என்னை வுற்றானின்று தன் தகவால்
தன்னை வுற்றாரன்றித் தன்மை வுற்றாரில்லை என்றறிந்து
தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே – – -97 –

அப்பேர்ப்பட்ட எனக்கு சம்சாரத்தில் தரித்து, தனியாக திரியவிடாமல் எம்பெருமானாரைச் சார்ந்த அடியவர்கள் துணையாக உள்ளார்கள்.
குழியைக்கடக்கும் கூரத்தாழ்வான் போன்றோர், தேவுமற்றறியேன் என்று சம்சாரக் குழியில் விழாது என்னைக் காக்க வல்லவர்கள் என்கிறார்.
தம்மைத்தாமே பற்றியிருக்கும் கூரத்தாழ்வான், எம்பார், முதலியாண்டான் போன்றோருடைய குணநலன்களை உலகரியச் செய்வதர்க்கு,
அவர்களை பற்றி நிற்குமாறு அடியார்களின் அடியார்களை ஆட்கொள்ளச் செய்தார் எம்பெருமானார்.
இவ்வாறு எம்பெருமானார், தம்மை, ஆழ்வானை பற்றியிருக்கச் செய்ததையும் ,
ஆழ்வானும் தமக்கு ஆசாரியன் ஆகிய சம்பவத்தையும், குறிப்பால் உணர்த்துகிறார், 97ம் பாட்டில்.

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென்றால் மனமே நையல் மேவுதற்கே – – -98 – –

“ எவனொருவன் புத்தி கெட்டவனாயும் , காமத்தால் பிடிக்கப்பட்ட பட்டவனாயும் இருந்தபோதிலும்,
“ராமானுஜாய நமஹ; எனும் சொல்லை மட்டும் அடிக்கடி சொல்லிப் புகுந்தால்,
பகவானைச் சார்ந்தவர்களான யோகியர்கள் ப்ருக்ருதி மண்டலத்துக்கு அப்பாலுள்ள., எந்த மோஷத்தைப் பெறுவதற்கு ஒதுகின்றனரோ,
அந்த மோஷத்தையே அடைகிறான்” என்று ராமானுஜாஷ்டக சுலோகத்தில் கூறப்பட்டுள்ளது.
எம்பெருமான் சர்வ ஸ்வந்திரனாததால் , நாம் சரணம் செய்தும், நம்முடைய அளப்பரிய வினைப் பயன்களால்,
நரகம் அளிப்பானோ என்று அஞ்ச வேண்டாம்.
காரணம், எம்பெருமானாரைப் பற்றியவர்கள் பேற்றுக்காக வருந்தவேண்டாம் என்கிறார் 98ம் பாசுரத்தில்.

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன்
சொற் கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே
பொற் கற்பகம் எம்மிராமானுச முனி போந்த பின்னே – – 99- –

விசாலமான இப்பூமியில், சிறந்த கற்பக வ்ருஷம் போல உதாரரான ஸ்வாமி எம்பெருமானார் அவதரித்த பின்பு
புற மதத்தவர்களான, வேதத்தை ஒத்துக்கொள்ளாத பாஹ்யர்களும், வேதங்களை பிரமானமாகக் கொண்டும்,
அதை தங்கள் மனம் போனபடி வகுத்தெடுத்துக் கொண்ட குத்ருஷ்டிகளும், அறவே மாண்டனர்.
ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யம் இவ்வித பாஹ்யர்களையும், குத்ருஷ்டிகளையும்
அடியோடு அழியச் செய்ததால் எம்பெருரமானாரை “பொன் கற்பகம்” என்கிறார். (99)

போந்ததென் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில் ஒண் சீ
ராம் தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமானுச இதுவன்றி யொன்றும்
மாந்தகில்லாது இனிமற்றொன்று காட்டி மயக்கிடலே – – 100- –

எனது மனதாகிற பொன் வண்டு தேவரீரின் திருவடிப் பூவினையே விரும்புகிறது.
அத் திருவடிகளிலுள்ள மென்மை , குளிர்ச்சி, மணம் , அழகு போன்ற கல்யாண குணங்களில் ஈடுபட்டு
அங்கேயே நித்யவாஸம் பண்ண வேண்டுமென்று தேவரீரிடம் வந்தது.
மற்றபடி வேறொன்றைக் காண்பித்து என்னை மயங்கப் பண்ணாதேயும் என்று இறைஞ்சுகிறார் 100ம் பாட்டில்.
இங்கு ‘வேறொன்று’ என்று எம்பெருமானின் திருவடியைக் கூறுகிறார்.
இது சரமபர்வ நிஷ்டையான , ஆச்சார்ய நிஷ்டையைக் குறிக்கிறது.

மயக்கு மிருவினை வில்லியிற் பூண்டு மதி மயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய வென்னைத் துயரகற்றி
உயக்கொண்டு நல்கு மிராமானுச என்ற துன்னை வுன்னி
நயக்கு மவர்க்கி திழுக்கென்பர் நல்லவ ரென்று நைந்தே – – 101- – –

எம்பெருமானாருக்கு இயல்பாக அமைந்த குணங்கள் இரண்டு.
தன்னை அண்டியவர்களின் பாபத்தைப் போக்குவதும், தன்னையே அனுபவிக்கும் போகியத்தவமுமாகும்.
இதுவரையில் தமது பாபங்களாகிய கர்ம வினைகளை எம்பெருமானார் நீக்கியத்தையே பேசி வந்த நான்,
அவரையே அனுபவிக்கக்கூடிய போக்யத்தை அதிகம் பேசாததால்,
மற்றவர்கள் அதை எனது பிசகு என்று கருதுவார்கள் என்று அஞ்சுகிறார் 101ம் பாட்டில்.

நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102- –

“நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்” “பாவமே செய்து பாவியானேன்” என்கிறபடி,
அனாதி காலமாக என்னை தொடர்ந்து வந்த வல்வினைகள் , எம்பெருமானாரை பற்றியபின் அழிந்துவிட்டது.
“ உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை “ என்கிறபடி,
தமது மெய் , நா, மனம் ஆகிய மூன்றும் எம்பெருமானாரிடத்திலேயே தங்கிவிட்டது என்கிறார்.
எல்லோரையும் மயக்கும் இந்த வள்ளல் தனமும், ஹௌதார்ய குணமும் என்னையும் என் கரணங்களையும் ஈடுபடும்படி செய்தது,
எக்காரணத்தினாலோ? என்று வினவுகிறார் 102ம் பாசுரத்தில்.

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து
விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என்தன் மெய்வினைநோய்
களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – – 103 –

சிங்கப்பெருமானது சீற்றம் அடியார்க்கு தினந்தோறும் சிந்திப்பதற்கு உரியது. அதுவே உய்யும் வழி.
தன் திறந்து அபராதங்களைப் பொறுக்கும் எம்பெருமான், தனது அடியார் திறத்து செய்யப்பட்ட அபராதங்களைப் பொறுக்காதவனாய்,
அவுணனின் ஆகம் (மார்பு) பிளந்தமை ஆகிய இந்த கீர்த்திகள் எம்பெருமானார் திருவுள்ளத்திலே ஓங்கி வளர்ந்த பயிர்களாக விளைகிறதாம்.
ஆத்திரம் தீர, நகத்தால் முடித்ததோடு நில்லாமல், பிணத்தைப் பார்த்தும் , நாமடித்துக் கோபத்தைக் காட்டுவதே
நரசிங்கனது சீற்றத்தின் எல்லை..
பெரியவாச்சான் பிள்ளை, முதல் திருவந்தாதி 65ம் பாசுர வ்யாக்யானத்தில்
‘’ சரணா கதற்கு தஞ்சமான தனமாவது ஆஸ்ரிதார்த்தமாக இரண்யனைப் பற்றப் பண்ணும் சீற்றம்” என்கிறார்.
நரம் கலந்த சிங்கமான ந்ருஸிம்ஹனே வல்வினை போக்கி தெள்ளறிவுடன் வாழ்விப்பார் என்பது ஞானம்.
அத்தகைய ஞானத்தை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தருகிறார் எம்பெருமானார் என்கிறார், அமுதனார். (103)

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

எம்பெருமானாருடைய திருமேனியழகை அனுதினமும் அனுபவிப்பதான க்ருபையை அருளிச் செய்தால்,
கொடிய நரகமாகிய ஸம்ஸாரத்திலும் தரித்திருப்பேன்.
அவ்வனுபவம் கிடைக்கப்பெறாவிடில், பரமபத்திலும் தயாரித்திருக்க மாட்டேன் என்கிறார் 104ம் பாட்டில்.
உள்ளங்கை நெல்லிக்கனியென அந்தக் கண்ணனையே காட்டித் தரிலும் தமக்கு மிகவும் பிரியமானது,
எம்பெருமானாரது திருவடிவழகும், திருமேனியில் விளங்கும் குணங்களுமேயாகும் என்கிறார்.
கருத்த மேகமானது தன்னிடமுள்ள முழுமையான நீரனைத்தையும் பொழிந்த பிறகு, வெளுத்துப் போகும் .
அவ்வாறு செழுமை வாய்ந்த மேகம் போல் இராமானுஜர் உள்ளதால் அவரை “செழுங்கொண்டல் “ என்கிறார்.

செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 –

“ஸதா பச்யந்தி சூரய; என்றபடி நித்யஸூரிகளிடையே ஸ்ரீ வைகுந்தத்தில் இன்பத்தை அளித்துக் கொண்டிருக்கும் எம்பெருமான்,
ஸம்ஸாரிகளை கைவிடாத வாத்சல்ய குணத்தாலே அங்கிருந்து வந்து இறங்கிய இடம் திருவேங்கட மாமலை.
இரண்டு குழந்தைகளுக்கிடையே கிடந்து பாலூட்டும் தாய் போலே, தரையிலும் இறங்காமல் விண்ணகத்திலும் தங்காமல்
வேங்கட மலை உச்சியில் உள்ளான்.
அவன் மேலும் உகப்படைந்து தன்னைச் சரணடையாதார் திறத்திலும் தானே வலுவாக சென்ற இடம்,திருமாலிருஞ்சோலை .
இவ்விடங்களைக் கோவில் கொண்டது போல், எபெருமானார் இதயத்தையும் கோயிலாகக் கொண்டான், எம்பெருமான்.
அந்த எம்பெருமானார் இப்போது எழுந்தருளியுள்ள இடம் தன்னுடைய இதயத்தினுள் என்கிறார் 106ம் பாட்டில்.

ஆசார்ய சம்பத்தினுடைய மகிமை, அமுதனார் கால் பாவமாட்டேன் என்று ஒதுக்கிய ஸ்ரீ வைகுந்தமும்,
ஆச்சார்யனோடும், அவனுகந்த ஈஸ்வரனோடும் தானாகவே இவரை நாடி வருகின்றன.
இதனால் ஆசார்யனைப் பற்றுகை பகவானைப் பற்றுகையினின்றும் வேறுபட்டதன்று:.
பேற்றினை எளிதில் தர வல்லது என்பது தெளிவாகின்றது.
“ ஈஸ்வனைப் பற்றுகை கையைப் பிடித்து காரியம் கொள்ளுமா போலே, ஆச்சார்யனைப் பற்றுகை
காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமாப்போலே” என்று ஸ்ரீ வசன பூஷனம் 47ம் சூர்ணிகையில்
பிள்ளைலோகாச்சார்யார் அருளிச் செய்துள்ளார்.

இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யங்கு யாட்படுத்தே – – – 107-

அடுத்த பாசுரத்தில், (107) அடியேன் செய்யும் விண்ணப்பம் ஒன்றுண்டு என்று கூறி,
வியாதிகளுக்கு இருப்பிடமான சரீரம் தோறும் பிறப்பதும், இறப்பதுமாய் எண்ணரிய துன்பங்களால் தாக்கப்பட்டு,
நாசமடையும் நிலை ஏற்பட்டாலும் தேவரீருடைய அடியவர்களுக்கே அன்புடையவனாக ,ஆட்கொண்டு,
அடியேனை அவ்வடியார்கள் திறத்திலே அடிமையாக அமையும்படி அருள் புரிய வேண்டும் என்று அமுதனார் விண்ணப்பிக்கிறார்.

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

நீர் உளது எனில் உளது மீன். மார்பு உளது எனின் உள்ளாள் , பெரிய பிராட்டி.
நாரத்தைப் (நீர்) பற்றியுள்ளன கயல் மீன்கள். நாராயணனைப் பற்றியுள்ளாள் பங்கயப்பாவை.
தென்னரங்கனுடைய திருமார்பிலே நித்யவாசம் பண்ணுகிறவளாய், சிறந்த தாமரைப்பூவிலே பிறந்த பாவையான
ஸ்ரீ ரங்க நாச்சியாரை , புருஷாகாரமாகப் போற்றுவோம் என்கிறார் அமுதனார் தமது 108ம் பாசுரத்தில்.

சரமபர்வ நிஷ்டருக்கு ப்ராப்யம் ஆச்சார்ய சரணாவிந்தம் என்பதையும்,
இவ்விடமும் பரமபதத்திலும் கூட அவரது திருவடிகள் சரணம் என்றும்
அது பிரிவின்றி நிரந்தரமாக உள்ளதாக பற்றுபவர்கள் ,
ஆச்சார்ய நிஷ்ட்டைக்கு அதிகாரிகள் என்பதையும் அமுதனார் இங்கு காட்டியுள்ளார்.

“இராமானுஜ சரணாரவிந்தம் நம் தலைமிசை மின்ன, மங்கள வாழ்க்கை பெற்று, நிரந்தரமாக வீற்றிருப்பதற்கு ,
மலர் சூடி , மங்கள வடிவினளான மலர்மகளைப் போற்றுவோம்” என்று
“ பூ மன்னு மாது “ என்று தொடங்கி “
“ கடைசியில் “பங்கய மாமலர்ப் பாவை “ என்று சொல்லி,
“சர்வம் சம்பத்யதே” என்று இராமானுஜருக்கு சரணாகதி அளித்த ஸ்ரீ ரங்கா நாச்சியரைப் போற்றிப் பொலிவு செய்து,
இந்த நூற்றாந்தாதியை தலைக் கட்டி யருளுகிறார் , திருவரங்கத்தமுதனார்.

—————

1-மோக்ஷ பிரதத்வம் -சம்சார நிவர்த்தக காஷ்டை -அமலன்

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே – 32-

அபிபவியா நின்று உள்ள கலி தோஷத்தாலே துக்கப்பட்ட பூமியை -இத்தலையிலே அர்த்தித் வாதி நிரபேஷமாக
தம்முடைய ஒவ்தார்யத்தாலே -வந்து -நிமக்நோத்தாரணம் பண்ணி -ரஷித்தவராய் -பிரபன்ன ஜன கூடஸ்தர் ஆகையாலே –
தஸ்மான் நியாச மேஷாம் தபஸா மதிரிக்த மாஹூ-தைத்ய நாரரா -என்கிறபடியே
சர்வ தபச்சுக்களிலும் மேலாய்க் கொண்டு -துர்லபமாய் இருக்கிற சரணாகதி ரூப தபஸ்ஸை உடையராய்-
எங்களுக்கு தம்மை முற்றூட்டாக தந்த-ஸ்ரீ எம்பெருமானாரை-சேரும் அவர்களுக்கு
ஸ்வரூப அனுரூபமான மதிப்பும்-
வியசன சுகங்களில் அனவ சாதா நுத்தர்ஷ-ஹேதுவான ஷமா குணமும் –
ஜிதேந்த்ரியத்வ ரூபமான பராபிபவன சாமர்த்த்யமும்-
குணவத்தாப்ரதையும்-
தத்வ ஹித புருஷார்த்தங்களை விஷயமாக வுடைத்தாய் ஆகையாலும்-கட்டளைப் பட்டு இருந்துள்ள ஜ்ஞானமும்-
தத் கார்யமான பக்தி ரூப சம்பத்தும்-
ரதிர் மதி –ஸ்ரீ குணரத்னகோசம் -17 – இத்யாதி -ஸ்லோகத்தின் படியே
ஸ்ரீ பிராட்டி கடாஷ லஷ்யமானவர்களுக்கு-அவை தானே மேல் விழும் என்றால் போலே-
இங்கும் அபேஷியாது இருக்க தானே வந்து சேரும் –
பொருந்துதல்-சேருதல்-அதாவது ஸ்வரூப அனுரூபத்வம்
தேசு-மதிப்பு–

ஸ்ரீ உடையவர் நித்ய விபூதியும் -இஹ பர லோக இன்பம் அருளுவார் –
அல் வழக்குகள் போக்கி அடியார்க்கு ஆட்படுத்த வல்லவர் அன்றோ –

—————

2-ஜகத் காரணத்வ காஷ்டை-ஆதி

————

3-ஜகத் சரண்யத்வ காஷ்டை-ஆதி

———–

4-சர்வ உபகாரத்வ காஷ்டை-பிரான்

——————

5-கிருபா விசேஷத்வ காஷ்டை-அடியார்க்கு ஆட்படுத்த

————–

6-ஸ்வாதந்தர்ய காஷ்டை-என்னை ஆட்படுத்த

—————

7-நித்ய நிர்தோஷத்வ காஷ்டை-விமலன்

——————

8-நித்ய ஸூரி நிர்வாஹத்வ -திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டா ஸ்வாமித்வ காஷ்டை-விண்ணவர் கோன்

—————

9-ஸுலப்ய காஷ்டை-வேங்கடவன்

—————-

10-ஸுசீல்ய காஷ்டை-நிமலன்

—————–

11-வாத்சல்ய காஷ்டை-நின்மலன்

——————

12-கைங்கர்ய சாதன விசேஷத்வ ப்ராப்ய காஷ்டை-நீதி வானவன்

—————-

13-சர்வ ஸ்வாமித்வ ஆஸ்ரித பக்ஷபாத காஷ்டை-அரங்கத்து அம்மான்

————-

14-திருவடிகள் பாவானத்வ காஷ்டை-திருப் பாதம்

————–

15-திருவடிகள் போக்யத்வ காஷ்டை- கமல பாதம்

—————

16-அயத்ன -அநாயாசேந போக்யத்வ காஷ்டை-வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றவே

———–

அமலன்- தனக்கு அடிமை -பொருந்திய தேசம்
விமலன் -அடியார்க்கு தன்னை
நிமலன் -நிர்ஹேதுகம் -காரேய்
நின்மலன் -தனக்கு இன்புறவே அடியார்க்கு
இதுக்கும் மேல்
மண் மிசை –நாரணர்க்கு ஆளாயினரே
புண்யம் போத -வகுள பூஷண பாஸ்கரர் போல்
பிராட்டி -லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி
காரேய் கருணை -அங்கு உடன் இருந்த ராக்ஷஸிகள் -இவரோ நம் வரை ஏறிப்பாயும்
க்ரந்தஸ்தம் மூலம் -ஆச்சார்ய பரம்பரை மூலம்

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அமலனாதிபிரான் அனுபவம் (அன்பில் ஸ்ரீ உப.வே. கோபாலாசாரியார் ஸ்வாமி அனுபவம்)

January 13, 2021

தேவரிஷியான நாரதர் வீணாபாணி. அவருடைய வீணை அவருக்கு நித்யஸஹசரீ; நித்யமாக ஸஹதர்மசரீ.
பகவத் குணங்களைப் பரவசமாகப் பாடி ஆனந்திப்பதே அவருடைய காலக்ஷேபம்; அவர் தர்மம்.
அந்தத் தர்மத்தில் ‘வல்லகீ’ என்னும் அவர் வீணை ஸஹசரீ. ஆத்மயாகம் செய்யும் ப்ரஹ்ம வித்துக்களுக்கு
‘ச்ரத்தை பத்நீ’ என்று சரணாகதியை விஸ்தாரமாக விவரிக்கும் வேதம் ஓதுகிறது.
நாரதருடைய வீணை அவருக்குப் பத்நி போல் ஸஹ தர்ம சரீ. அப்படியே நம்பாணனுக்கு அவர் யாழ் ஸஹதர்மசரீ.

ஆழ்வார்கள் ரிஷிகள், த்ரமிடவேத த்ரஷ்டாக்கள்; வேதோபப்ருஹ்மணம் செய்தார்கள்.
அந்த ரிஷிகளில் நம் பாணர் நாரதரைப் போன்ற காயக தேவ ரிஷி. பாட்டினால் பகவானை ஸாக்ஷாத்கரிப்பவர் நாரதர்.
பாட்டினால் பரமாத்மாவினிடம் லயிப்பது ஸுலபம். ‘வீணாவாதந தத்வத்தையறிந்த, ச்ருதி ஜாதிகளில் நிபுணராய்,
தாள ஞான முடையவர் அப்ராயேஸந(எளிதில்) மோக்ஷவழியை அறிவார் – அடைவார்’ என்பர்.

நம் பாணர் இப்படி ஸுலபமாய் பரமாத்மா வினிடம் லயித்துப் பரவசமாகுபவர். பாட்டினால் கண்டு வாழ்பவர் நாரதர்.
இருவரும் பாட்டினால் கண்டு வாழ்கிறவரே. பாணர் துதி பாடுவர்.
(பண–ஸ்துதௌ) (விபந்யவ) (பாணிணி தாதுபாடம்) என்று பாடும் நித்யஸூரிகளைப் போல இவர் அரங்கனைப் பாடியே போந்தார்.
இவர் வீணாபாணி. யாழ்ப் பாணி. ( தனியன் சுலோகம்) என்றபடி பாணி என்றும் திருநாமம்.
வாத்யத்தோடு பாடிய ஆழ்வார் இவரொருவரே.
வேணு கானம் பண்ணின க்ருஷ்ணன் ஒருவரே அவதாரங்களில வாத்யத்தோடு காயகர். வேதாந்தத்தையும் கீதையாகப் பாடினார்.
மற்றைய அவதாரங்களில் பாடவில்லை. வராஹரான ஞானப் பிரான் மூக்கினால் “குரு குரு” என்று சப்தித்துக் குருவானார்.
(குருபிர்கோணாரவைர் குர்குரை). அபிநவதசாவ தாரமான பத்து அவதாரங்களில் இவரொருவரே
கண்ணனைப் போல வாத்யம் வாசித்த காயகர்.
“வீணையும் கையுமாய் ஸேவிக்கிற விவர்க்குச் சேமமுடை நாரதனாரும் ஒருவகைக்கு ஒப்பாவர்” என்று பிள்ளைலோகம் ஜீயர்.

அஷ்டாங்க‌ யோக‌த்தில் ஸ‌மாதியென்னும் ல‌ய‌த்தை அடைவ‌துண்டு. அந்த‌ ஸ‌மாதியில் கிடைக்கும் த‌ர்ச‌ந‌ம்,
த‌ர்ச‌ந‌ ஸ‌மாநாகார‌மே யொழிய‌ முழு த‌ர்ச‌ந‌ம‌ல்ல‌, த‌ர்ச‌ந‌ம் போன்ற‌ மிக்க‌ தெளிவான‌ ஞான‌ம்.
பாட்டினால் வ‌ரும் ல‌ய‌மும் ப்ராயேண‌ அப்ப‌டியே. மோக்ஷ‌த்தில் அடைவ‌து உப‌ய‌ விபூதி விசிஷ்ட‌ ப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்ம‌த்தின் காட்சி
இவ‌ர் அர‌ங்க‌ன் முன் அம‌ல‌னாதி பிரான் பாடி அர‌ங்க‌ன‌ருளால் அக்காட்சியைப் பெற்று முக்த‌ரானார்.
இவ‌ர் அர‌ங்க‌ன் முன் பாடிய‌த‌ற்கு் தத் க்ஷ‌ண‌மே ப‌ர‌ம‌ புருஷார்த்த‌ முத்தியே அர‌ங்க‌ன் அளித்த‌ ப‌ரிசு.
(விச‌தே தத‌நந்த‌ர‌ம்) என்ற‌ப‌டி ப‌ர‌மாத்மாவிற்குள் நுழைந்து முக்திப் பேரின்ப‌ம் பெற்றார்.
இவ‌ர் முத‌லில் அர‌ங்க‌னைப் பாட்டாலும் யோக‌த்தாலும் ல‌யித்து் க‌ண்ட‌து த‌ர்ச‌ந‌ ஸ‌மாநாகார‌மான‌ தெளிந்த‌ ஞான‌ம்.
அந்த‌க் காட்சிக்கும், அர‌ங்க‌னை நேரில் காணும் காட்சிக்கும் பேத‌முண்டு.
அர‌ங்க‌னுடைய‌ த‌ர்ச‌ந‌ம் இவ‌ருக்கு அர‌ங்க‌ன‌ருளால் தான் கிடைத்தது என்ப‌தை ஒருவ‌ரும் ம‌றுக்க‌வொண்ணாது.
இவ‌ர் வ‌ள‌ர்ந்த‌ குல‌ம் அர‌ங்க‌ன‌ருகில் செல்ல‌க் கிடைக்கக்கூடிய‌ குல‌ம‌ல்ல‌.

(ய‌மேவைஷ‌ வ்ருணுதே தேந‌ ல‌ப்ய‌: த‌ஸ்யைஷ‌ ஆத்மா விவ்ருணுதே த‌நூம் ஸ்வாம்) என்று
க‌ட‌வ‌ல்லியும் முண்ட‌க‌மும் ஓதிவைத்த‌ன‌. இந்த‌ இர‌ண்டு உப‌நிஷ‌த்துக‌ளும் இதே ம‌ந்த்ர‌த்தை ஓதின‌.
“வேத‌ புருஷ‌ன் இதை அபேக்ஷித்தான்” என்ப‌து ஸ்ரீவ‌ச‌ன‌ பூஷ‌ண‌ம். இந்த‌ ச்ருதிக்கு ந‌ம் பாண‌நாத‌ன் நேர் நித‌ர்ச‌ந‌ம்.
அர‌ங்க‌னே இவ‌ரைக் காட்சித‌ர‌ வ‌ரித்துத் த‌ன‌த‌ருகே வ‌ருவித்துத் த‌ன் காட்சியைப் ப‌ரிபூர்ண‌மாக‌த் த‌ந்தான்.
த‌ன் ஸ்வ‌ரூப‌ விவ‌ர‌ண‌ம் செய்தான். அவ‌ன் “உவ‌ந்த‌ உள்ள‌த்த‌னாய்” இவ‌ருக்கு விவ‌ர‌ண‌ம் செய்த‌ திருமேனியை
(த‌நுவை) இவ‌ர் உல‌க‌த்திற்குத் த‌ன் பாட‌ல்க‌ளால் விவ‌ர‌ண‌ம் செய்து இன்புற்று இன்ப‌ம் ப‌ய‌ந்தார்.

(அனுபூய‌ ஹ‌ரிசயான‌ம்) (நாத‌முனிக‌ள் சாதித்த‌ பாண‌ன் த‌னிய‌ன் ச்லோக‌ம்) என்ற‌ப‌டி
தாம் அனுப‌வித்த‌ இன்ப‌த்தை உல‌க‌த்திற்குத் த‌ம் பாட‌ல்க‌ளால் சாச்வ‌த‌மாக‌ ப‌ய‌ந்தார்.
“காட்ட‌வே க‌ண்ட‌” என்ற‌ ந‌ம்பிக‌ள் பாசுர‌த்தில் “பெருமாள் அருளால் வ‌ரித்து அவ‌ராகக் காட்டின‌தால் தான் க‌ண்டார்”
என்று (ய‌மேவைஷ‌) ச்ருதியின் பொருள் ஸூசிக்க‌ப் ப‌ட்ட‌து.
“ஆதி” என்ப‌த‌ற்கு “வ‌லுவில் தாமாக‌வே முத‌லில் அழைத்தான்” என்னும் பொருளுரைக்க‌ப் ப‌ட்ட‌து. தான் முந்திக் கொண்டான்.
“த‌ம்மை விஷ‌யீக‌ரிக்கைக்கு அடியானான்”, “என் பேற்றுக்கு முற்பாடானான‌வ‌ன்” என்று பிள்ளையும் நாய‌னாரும் ப‌ணித்தார்.
“ந‌ல்ல‌தோர் அருள் த‌ன்னாலே காட்டினான் திருவ‌ர‌ங்க‌ம் உய்ப‌வ‌ர்க் குய்யும் வ‌ண்ண‌ம்”(திருமாலை) என்று
பாடிய‌ திருவ‌ர‌ங்க‌ம் காட்டும் அருள் இவ‌ர் வ‌ள‌ர்ந்த‌ குல‌த்திற்கு எட்டுவ‌த‌ல்ல‌.
அர‌ங்க‌ன் அருளி ப‌லாத்கார‌ம் செய்யாவிடில் ஸ‌ந்நிதியில் க‌ர்ப்ப‌க்ருஹ‌த்தில் ப்ர‌வேச‌ம் இவ‌ருக்கு அக்கால‌த்தில் கிடைப்ப‌து ஸாத்திய‌மோ?
ம‌நுஷ்ய‌ ய‌த்ன‌த்தில் அஸாத்ய‌மென்ப‌து நிச்ச‌ய‌ம். நந்த‌னாருக்குக் கிடைத்ததுபோல் இதுவும் கேவ‌ல‌ம் தைவ‌ ய‌த்ன‌ம்.
ப‌ர‌மாத்மா தானே த‌ன் காட்சியைத் த‌ருகிறா னென்ப‌தை அர‌ங்க‌ன் தானே வ‌ற்புறுத்தி இவ‌ரை அழைத்துத் த‌ந்து
ஸ‌ர்வ‌லோக‌ ஸாக்ஷிக‌மாய் மூத‌லிப்பித்து அருளினார். இந்த‌ ச்ருதியில் காட்டிய‌ப‌டி ப‌ர‌ம‌ புருஷ‌ன் த‌ம்மை ப்ரிய‌த‌ம‌னாக‌
வ‌ரித்துத் த‌ம் திருமேனியைக் காட்டித் த‌ந்தானென்ப‌தை “என்னைத் த‌ன் வார‌மாக்கி வைத்தான்” என்று ஸூசித்தார்
வார‌ம் = வர‌ணீய‌ வ‌ஸ்து.

“காட்ட‌வே க‌ண்ட‌” (பாண‌ன் த‌னிய‌ன்) என்று முத‌ல‌டியில் கூறிய‌து அர‌ங்க‌ன் திருமேனிக் காட்சி: அர்ச்சா விக்ர‌ஹ‌க் காட்சி.
(மூர்த்ததிராத்யா) (ஸ்ரீஸ்துதி) என்னும் ஆதிய‌ஞ்சோதியோடு அபேத‌மாய் அனுப‌வ‌ம்.
ப‌ர‌, விப‌வ‌, ஹார்த்த‌ அர்ச்சாமூர்த்திக‌ளை ஒன்றாக‌ அனுப‌வ‌ம். பெரிய‌ பெருமாள் திருமேனியிலே திரும‌லை
முத‌லாகக் கோவில் கொண்ட‌ அர்ச்சாவ‌தார‌ங்க‌ளிலும், ராம‌ க்ருஷ்ண‌ வாம‌ன‌ வ‌ட‌ப‌த்ர‌ ச‌ய‌னாதிக‌ளிலுமுள்ள‌
போக்ய‌தையெல்லாம் சேர‌ அனுப‌வித்து என்ப‌து முனிவாஹ‌ன‌ போக‌ம்.
உப‌ய‌ விபூதி விசிஷ்ட‌னாக‌ ஜ‌க‌ஜ் ஜ‌ந்மாதி கார‌ண‌மாக‌ அனுப‌வ‌ம். உப‌ய‌ லிங்கானுப‌வ‌ம்.
நிர்த்தோஷ‌ க‌ல்யாண‌ குணாக‌ர‌த்வ‌, ஆதி கார‌ண‌த்வ‌, ர‌க்ஷ‌க‌த்வாதி விசிஷ்ட‌ ப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்மமாக‌ அம‌ல‌னாதிபிரானில் அனுப‌வ‌ம்.
பாட்டுக்க‌ள் காட்சி அனுப‌வ‌த்தின் ப‌ரீவாஹ‌ம். யோக‌மென்னும் ல‌ய‌த்திற்கு ஸாத‌க‌ம். விரோதிய‌ல்ல‌.

உப‌ய‌ விபூதி விசிஷ்டாநு ப‌வ‌த்தில்
(முண்ட‌க‌ம் 2,3,9) (பித்ய‌தே ஹ்ருத‌ய‌க்ர‌ந்திச்சித்ய‌ந்தே ஸ‌ர்வ‌ ஸ‌ம்சயா: க்ஷீய‌ந்தே சாஸ்ய‌ க‌ர்மாணி த‌ஸ்மிந்த்ருஷ்டே ப‌ராவ‌ரே)
என்ற‌ப‌டிக்கும் (ய‌த்ர‌ நாந்ய‌த்ப‌ச்ய‌தி) (சாந்தோகிய‌ம் — பூமமித்யை) என்ற‌ப‌டிக்கும்,
ப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்ம‌ த‌ர்ச‌ந‌ம் கிடைத்துப் பார‌மாய‌ ப‌ழ‌வினை ப‌ற்றறுந்தது.
நான்காம் அடியில் “பாட்டினால் க‌ண்டு வாழும்” என்ற‌து, முக்தி த‌ந்த‌ருளின‌ உப‌ய‌ விபூதி விசிஷ்ட‌ ப‌ரிபூர்ண‌
ப்ர‌ஹ்ம‌ த‌ர்ச‌ன‌க் காட்சி. முத‌ல் பாதத்தில் “க‌ண்ட‌” என்ற‌து அர‌ங்க‌ன் திருமேனிக் காட்சி.

ந‌ம் பாண‌நாத‌ர் யோகி ஸார்வ‌பௌம‌ர்: பாட்டினாலும் யோக‌த்தினாலும் த‌ர்ச‌ன‌ ஸ‌மாநா கார‌ண‌மான‌ காட்சி போன்ற‌
தெளிந்த‌ அறிவாகிய‌ ஸ‌மாதியை அடிக்க‌டி ஏறுப‌வ‌ர். ப‌ல்கால் யோகாரூட‌ர்.
யோகாரோஹ‌மே இவ‌ருக்குப் பொழுது போக்காய் இருந்தது.
க‌டைசியில் இவ‌ருக்குப் பெருமாள் நிய‌ம‌ன‌த்தால் கிடைத்தது யோக்யாரோஹ‌ம் முனியேறின‌து.
யோகாரூட‌ராக‌ நெடுகிலும் இருந்து வ‌ந்த‌வ‌ர் க‌டைசியில் யோக்யாரூட‌ரானார். எந்த‌ யோகிக்கும் இந்த‌ ஏற்ற‌ மில்லை.
ந‌ம்பிக‌ளும் இதை “முனியேறி” என்று ர‌ஸ‌மாக‌ வ்ய‌ஞ்ஜ‌ன‌ம் செய்தார். யோக‌மேறுவ‌து யோகிமாத்ர‌ ஸாதார‌ண‌ம்.
ஆழ்வார்க‌ளெல்லாரும் யோகாரூட‌ர்க‌ள்: யோக‌மேறின‌வ‌ர்க‌ள்.
(ப‌ச்ய‌ந் யோகீ ப‌ர‌ம்) என்று முத‌ல் திருவாய்மொழியின் ஸ‌ங்க்ர‌ஹ‌ ச்லோக‌த்திலேயே,
தாத்ப‌ர்ய‌ ர‌த்னாவ‌ளீ ச‌ட‌கோப‌ முனியை யோகி என்ற‌து. முநித்வ‌ம் ம‌ட்டிலும் எல்லாருக்கும் ஸாதார‌ண‌ம்.
முனியேறின‌ முனி இவரொருவரே.

யோக‌ம் அஷ்டாங்க‌ம்: எட்டு அங்க‌ங்க‌ளுடைய‌து. ஆனால் எட்டாவ‌து அங்க‌மாகிய‌ ஸ‌மாதியே அங்கி.
ய‌ம ‌நிய‌மாதிக‌ளான‌ அங்க‌ங்க‌ள் ஸாத‌க‌னுடைய‌ ப்ர‌ய‌த்ன‌ங்க‌ள். திவ்ய‌ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹ‌ம் யோக‌த்திற்கு ஆல‌ம்ப‌ந‌மாகும்.
ஸால‌ம்ப‌ந‌மாகச் செய்யும் ப‌க‌வ‌த் ஸ்வ‌ரூப‌ த்யான‌த்தில் திவ்ய‌ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹ‌ம் சுபாச்ர‌ய‌மான‌ ஆல‌ம்ப‌ந‌ம்.
அந்த‌ யோகால‌ம்ப‌நத்தைப் பாண‌யோகி எட்டு அங்க‌ங்க‌ளாக‌ வ‌குத்து, அந்த‌ த்யான‌த்தை அஷ்டாங்க‌மாக‌ வ‌குத்தார்.
“பாத‌க‌ம‌ல‌ம், ந‌ல்லாடை, உந்தி, உத‌ர‌ப‌ந்த‌ம், திருமார்பு, க‌ண்ட‌ம், செவ்வாய், க‌ண்க‌ள், என்ப‌ன‌ எட்டு அங்க‌ங்க‌ள்.
முத‌ல் எட்டுப் பாட்டுக்க‌ளிலும் இந்த‌ எட்டு அங்க‌ங்க‌ளின் அநுப‌வ‌ம்.
ஒவ்வொன்றிலும் விக்ர‌ஹியின் ஸ்வ‌ரூபாநுப‌வ‌மும் க‌ல‌ந்தது. அங்க‌விசிஷ்ட‌ ஸ்வ‌ரூபாநுப‌வ‌ம்.

ஸ்வ‌ரூபாநுப‌வ‌த்தில் குண‌ க்ரியாத் ய‌நுப‌வ‌மும் சேர்ந்தது. “ந‌ல்லாடை” என்ப‌து திருத்துடை முத‌லிய‌வ‌ற்றின் ஆவ‌ர‌ண‌ம்.
( வ‌ஸ்த்ர‌ப்ராவ்ருத‌ஜாநு) ந்யாய‌த்தை நினைக்க‌ வேணும். ஜ‌ங்காஜாநு, ஊருக்க‌ளுக்கும் ந‌ல்லாடை உப‌ல‌க்ஷ‌ண‌ம்.
இப்ப‌டி ஓர் வில‌க்ஷ‌ண‌மான‌ அஷ்டாங்க‌ த்யாநாநுப‌வ‌ம் ப‌ண்ணி,
ஒன்ப‌தாம் பாசுர‌த்தில் அக‌ண்ட‌மாக‌த் திருமேனி முழுவ‌தையும் அனுப‌விக்கிறார்.
இப்ப‌டி விசித்திர‌மான‌ ஓர் அஷ்டாங்க‌ த்யான‌ முறையைக் காட்டுகிறார்.

அஷ்டாங்க‌ங்க‌ளையும் அனுப‌வித்து, அக‌ண்ட‌மான‌ திருமேனியை அனுப‌வித்து,
உப‌ய‌விபூதி விசிஷ்ட‌ ப்ர‌ஹ்ம‌த்தை அர‌ங்க‌னாகக் க‌ண்டு,
பூம‌ வித்யையில் கூறிய‌ ப‌ரிபூர்ண‌ ஸுகாநுப‌வ‌ம் வ‌ந்து மோக்ஷ‌ம் பெற்றார்.

ஆத்மாவில் ஜாதிபேத‌மில்லை. ஆத்ம‌ ஸ்வ‌ரூப‌ம் ஜ்ஞாநைகாகார‌ம்: ப்ர‌த்ய‌ஸ்த‌மித‌ பேத‌ம்.
சுத்த‌மான‌ ஞான‌ ம‌ய‌மான‌ இவ‌ர‌து ஆத்ம‌ ஸ்வ‌ரூப‌ம் அர‌ங்க‌னுக்குள் ப்ர‌வேசித்தது யுக்த‌மே.
பீஷ்ம‌ர் க‌ண்ண‌னைத் துதித்துக் கொண்டே அவ‌ருக்கு ஸ‌ம்ப‌ந்ந‌ராகும்போது
(ஜ்யோதிர் ஜ்யோதிஷி ஸ‌ம்யுத‌ம்) என்று வ‌ர்ணித்த‌ப‌டி பீஷ்ம‌ருடைய‌ ஆத்ம‌ஜ்யோதிஸ்
ஸ்ரீக்ருஷ்ண‌ ப‌ர‌மாத்மா ஜ்யோதிஸ்ஸுக்குள் புகுந்து அவிப‌க்த‌மாக‌ “இனி மீள்வ‌தென்ப‌துண்டோ!” என்று சாச்வ‌த‌மாகக் க‌ல‌ந்தது.
அவ‌ருடைய‌ திருமேனி ம‌ட்டும் நின்றுவிட்ட‌து. அத‌ற்கு அக்னி ஸ‌ம்ஸ்கார‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து.

சிசுபால‌னுடைய‌ ஆத்ம‌ ஜ்யோதிஸ்ஸும் அப்ப‌டியே க‌ண்ண‌னுக்குள் க‌ல‌ந்தது.
“சிசுபால‌னுடைய‌ தேஹ‌த்திலிருந்து ஒரு தேஜோக்னி கிள‌ம்பி, தாம‌ரைக் க‌ண்ண‌னாகிய‌ க்ருஷ்ண‌னை ந‌ம‌ஸ்க‌ரித்து,
அவ‌ருக்குள் நுழைந்த‌ அத்புதத்தை எல்லா ராஜாக்க‌ளும் க‌ண்டார்க‌ள்” என்று பார‌த‌ம்.
“எல்லோர் முன்னே சிசுபால‌ னுடைய‌ தேஹ‌த்திலிருந்து கிள‌ம்பிய‌ ஜ்யோதிஸ்ஸு வாஸுதேவ‌னுக்குள் நுழைந்தது.
த்யான‌ம் செய்துகொண்டே த‌ந்ம‌ய‌த்வ‌த்தை அடைந்தான்” என்று பாக‌வ‌த‌ம்.

அங்கும் தேஹ‌ம் க‌ண்ண‌னுக்குள் நுழைய‌வில்லை. இங்கு ந‌ம் பாண‌ர் த‌ம் திருமேனியோடு அர‌ங்க‌னுக்குள் நுழைந்து க‌ல‌ந்தார்.
பாண‌னுடைய‌ திருமேனியும் ப‌க‌வ‌த‌வ‌தார‌த் திருமேனிக‌ளைப்போல‌ அப்ராக்ருத‌மாக‌வே இருந்திருக்க‌ வேண்டும்.
சுத்த‌ ஸ‌த்வ‌ம‌ய‌மான‌ திவ்ய‌ திருமேனி சுத்த‌ ஸ‌த்வ‌ம‌ய‌த் திருமேனிக்குள் ப்ர‌வேசித்துக் க‌ல‌ந்தது.
இத‌னால் அவ‌ர் தேஹ‌மும் ப்ராக்ருத‌ம‌ல்ல‌ என்று தெளிவாக‌ ஏற்ப‌டுகிற‌து.

—————

அமல னாதிபி ரானடி யார்க்கென்னை யாட்படுத்த
விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்
நிமல னின்மல னீதிவானவ னீண்ம திளரங்கத்தம்மான் றிருக்
கமல பாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே. (1)

(1) அமலன் – தாம் தாழ்ந்த குலத்தில் வளர்ந்து பெருமாளை யணுகுவதால் பெருமாளுக்கு என்ன அவத்யம்
விளையுமோ வென்று மிகக் கவலை. நம் ஞானத் தெளிவினால் அக் கவலையை நிவர்த்திக்கிறார்.
பெருமாளுக்கு ஒன்றும் ஹேயமில்லை. எல்லாம் அவருக்கு அனுகூலமே. அவர் உபயலிங்கர். அகில ஹேய ப்ரத்யநீகர்.
அவர் ஸ்வபாவத்தாலேயே அமலர். யாதொரு மலமும் தன்னைத் தீண்ட முடியாத ஸ்வபாவமுடையவர்.
அவர் எல்லார் ஹ்ருதயத்திலும் அந்தர்யாமியாக ஓர் விக்ரஹத்தோடு வஸிப்பவர்.
(ந ததே விஜிகுப்ஸதே) அவர் எவர் நெஞ்சினுள்ளும் நெருங்கி உட்புகுந்து வஸிக்கக் கூசுவதில்லை.
இந்த அற்புதமான ஸ்வபாவத்தைத் திரும்பவும் திரும்பவும் நினைந்து பேசுவதும், தம்மால் வரக்கூடிய அவத்யத்திற்குப் பயந்தே.

“அமலன்”, “நிமலன்”, “விமலன்”, “நின்மலன்’ “அரங்கத்தமலன்” என்று இச்சிறு கிரந்தத்தில்
ஐந்து தடவை “மலமற்றவன்”, “மலம் நெருங்கக்கூடாத ஸ்வபாவ சக்தி யுடையவன்” என்கிறார்.
“வளவேழுலகில்” போல் பயந்து உடனே பரிஹரித்துக் கொள்கிறார்.
பெருமாள் திருமுன் நிற்பதே இவருக்கு ஸங்கோச மாயிருக்கிறது.
மிகவும் விரைவாகத் தம் ப்ரபந்தத்தை முடித்துவிட ஆசைப்படுகிறார்.
பெருமாள் நிர்ப்பந்தத்தை எத்தனை நாழிகை தான் இவர் ஸஹிப்பார்?
நீண்டதொரு க்ரந்தம் செய்யத் தெரியாதவரல்லர்.
ஒரே தசகம் பாடி உடனே மோக்ஷத்தைப் பெறுவதால் அகன்று போவதற்கும் போதில்லை.

2) ஆதி என்று காரணத்வத்தைத் தொடக்கத்திலேயே அனுஸந்தித்துப் பேசுகிறார்.
சில வித்யைகளில் காரணத்வத் தையும் சேர்த்து அனுஸந்திப்பதில் ருசி.
(காரணம் து தயேய:) (அதர்வ சிரஸு) என்றபடி த்யானத்திற்கு விஷயமான பொருள் ஆதி காரணமே.
ஆகிலும் காரணத்வத்தை சேர்த்தும் சேர்க்காமலும் உபாஸிக்கலாம்.
இவர் காரணத்வத்தைச் சேர்த்து உபாஸிப்பதில் ருசியுள்ளவர்.
உலகத்திற்குக் காரணமாவதில், விகாரம் அசுத்தி ஸம்பந்தம், ஸாவயவத்வம் ஜடத்வம் முதலிய பல தோஷங்கள் வரக்கூடும்.
அந்த தோஷங்கள் ஒன்றும் வருவதில்லை, ப்ரஹ்மம் காரணமாகவிருந்தும் தன் சுத்தியைக் கொஞ்சமேனும் விடுவதில்லை,
அசுத்தியென்பது தீண்டுவதேயில்லை என்று சோதக வாக்கியங்கள் நமக்குத் தெளிவிக்கின்றன.

காரணத்வத்தை “ஆதி” என்று சொல்லுவதற்கு முன்பே,
இவர் “அமலன்” என்று அசுத்தி ப்ரஸங்கத்தை வாரணம் செய்கிறார்.
ஸத்யத்வம், ஞானத்வம், அநந்தத்வம், ஆநந்தத்வம், அமலத்வம் என்னும் ஐந்து குணங்கள் ஸர்வ வித்யைகளிலும் உபாஸ்யம்.
இந்த குணங்களின் அறிவில்லாமல் ப்ரஹ்மத்தின் அறிவே சித்திக்காது.
(ஸத்யம் ஞான மனந்தம் ப்ரஹ்ம) (ஆனந்தவல்லி)
“அஸ்தூலம் அநணு அஹ்ரஸ்வம், அதீர்க்கம்” (ப்ருஹ தாரண்யகம் – அக்ஷரவித்யை),
“அசப்தமஸ்பர்சம்” (கடவல்லி), முதலிய சோதக வாக்யங்கள்
“அமலன்” என்பதால் தொடக்கத்திலேயே ஸூசிக்கப் படுகிற அழகு மிக ரஸிக்கத் தக்கது.

தைத்திரீயத்திலும் (ஸத்யம் ஞானமனந்தம் ப்ரஹ்ம) (ஆனந்தவல்லி) என்று முதலில் சோதக வாக்கியத்தைப் படித்து,
பிறகு (தஸ்மாத்வா ஏதஸ்மா தாத்மந ஆகாசஸ்ஸம்பூத: ஆகாசத்வாயு:) என்று காரண வாக்யத்தைப் படித்தது.
(ஆனந்தாதய: ப்ரதானஸ்ய) என்ற ஸூத்திரத்தில் ஆநந்தத்வம், ஸத்யத்வம், ஞானத்வம், அனந்தத்வம் என்ற
குணங்களை எல்லா வித்யாநிஷ்டரும் உபாஸித்தே தீர வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.

இங்கே “அமலன்” என்றது அந்த நாலுக்கும் உபலக்ஷணம். நிர்த்தோஷத்வம் மிகவும் முக்யம்.
ஆகையால் அதை முதலில் பேசி மற்ற நான்கையும் உபலக்ஷண முறையாக ஸூசிக்கிறார்.
இங்கே ஸூசிக்கும் ஆனந்தத்வத்தை “என் அமுதினை” என்று முடிவில் ஸ்பஷ்டமாகக் கூறுகிறார்.
ஆனந்தத்தோடு முடிக்கிறார்.
(ஏதம் ஆனந்த மயமாத்மாநம் உபஸம்க்ரம்ய) என்றபடிக்கு (யத்ர நாந்யத் பச்யதி) என்று நிரதிசய ஸுகத்தையும்
விளக்கும் பூமவித்யைப் படிக்கும் வாக்குக்கும் மனதிற்கும் எட்டாத,
அதீதமான ஆனந்த ப்ரஹ்ம ப்ராப்தியோடு முடித்துத் தாமும் பேரின்ப முடிவு பெற்றார்.

3) அமலத்வமென்பதை ஆன‌ந்தாத்ய‌திக‌ர‌ண‌த்தில் நான்கொடு ஐந்தாவ‌தாக‌ ஸூத்ர‌காரர் ஸூசித்திருப்ப‌தும‌ன்றி,
அக்ஷ‌ர‌த்ய‌தி க‌ர‌ண‌த்தில் அதை ம‌றுப‌டியும் த‌னியாக‌ வ‌ற்புறுத்துகிறார்.
அம‌ல‌த்வ‌ம் என்கிற‌ நிர்த்தோஷ‌த்வ‌ம் மிக‌வும் முக்ய‌மென்ப‌து ஸூத்ர‌காரர் திருவுள்ள‌ம்.
அது கார‌ண‌ம்ப‌ற்றி முத‌லிலேயே “அம‌ல‌ன்” என்று அனுஸ‌ந்திப்ப‌து.

4) ஆதிய‌ஞ்சோதியான‌ ப‌ர‌வாஸுதேவ‌ விக்ர‌ஹ‌மும், ம‌ற்ற‌ விப‌வ‌ (அவ‌தார‌) மூர்த்திக‌ளும்,
அந்த‌ர்யாமி மூர்த்திக‌ளும், அர்ச்சாமூர்த்திக‌ளும் ஒன்றென்றே சொல்லலாம்.
ஆதிய‌ஞ்சோதியிலிருந்து ம‌ற்ற‌வை எல்லாம் உதித்து, முடிவில் அதிலேயே ல‌யிக்கும்.
பெருமாள் உல‌க‌த்திற்கு ஆதிகார‌ண‌மாவ‌து போல், ம‌ற்ற‌ திவ்ய‌ விக்ர‌ஹ‌ங்க‌ளுக்குப் ப‌ர‌ விக்ர‌ஹ‌மான‌
ஆதிமூர்த்தி கார‌ண‌ம். “ஆதி” என்று அதையும் ஸூசிக்கிறார்.

ஆதிம‌றை யென ‌வோங்கு ம‌ர‌ங்க‌த் துள்ளே
ய‌ருளாருங் க‌ட‌லைக் க‌ண்ட‌வ‌ன் ந‌ம் பாண‌ன் (அமிருதாஸ்வாதினி) என்ப‌தையும் நினைக்க‌வேணும்.

5) “அம‌ல‌ன்” என்ப‌தால் “விஜ்ஞான‌ம்” என்றும் ஏற்ப‌ட்ட‌து.
விஜ்ஞான‌மும் ஆதியுமான‌ ப‌ர‌வாஸுதேவ‌ன் ரூப‌ங்க‌ளே ம‌ற்ற‌ வ்யூஹ‌ ரூப‌ங்க‌ளும் என்று சொல்லும்
விஜ்ஞாநாதிபாவ‌ ஸூத்ர‌த்தை “அம‌ல‌ன் ஆதி” என்று ஸூசித்து,
பாஞ்ச‌ராத்ர‌ ப்ராமாண்ய‌த்தை ஸூத்ர‌காரர் ஸ்தாபித்ததை ஸூசிக்கிறார்.
அதைக் கொண்டு அர்ச்சாதிக‌ளுக்கு திவ்ய‌ ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹ‌த் த‌ன்மையை ஸ்தாபிக்க‌ வேண்டும்.

6)(நிர்வாண‌ம‌ய‌ ஏவாய‌ம் ஆத்மாஞான‌ம‌யோ அம‌ல‌:) என்ற‌ப‌டி ஜீவ‌ ஸ்வ‌ரூப‌மும் அம‌ல‌ம்.
ப்ர‌க்ருதி ம‌ல‌த்தைப் போக்கி விட்டால், அம‌ல‌மான‌ ஜீவாத்ம ஸ்வ‌ரூப‌ அம‌ல‌மான‌ ப‌ர‌மாத்ம‌ ஸ்வ‌ரூப‌த்திற்
புகுந்து பிரியாக் க‌ல‌வி பெறுகிற‌து. ந‌ம்முடைய‌ அம‌ல‌ ஸ்வ‌ரூபாதிக‌ளையும் அனுஸ‌ந்தான‌ம் செய்ய‌ வேண்டும்.
அம‌ல‌னென்று அத‌ன் நினைவும் சேரும்.
“ஆதி” மூல‌ கார‌ண‌ப் பொருள். அத்தாவான‌ ஸ‌ம்ஹ‌ரிக்கும் பொருள்.
அம‌ல‌த்வ‌ம் இருவ‌ருக்கும் ஒருவாறு கூடுவ‌தாக‌ச் ச‌ங்கித்தாலும் ஆதி கார‌ண‌த்வ‌ம் ப‌ர‌னுக்கேயுள்ள‌து.
“அம‌ல‌ன்” என்று ம‌ட்டும் சொன்னால், ஜீவ‌னுக்கும் ஒரு விதத்தில் அது பொருந்தி விடுமென்று ச‌ங்கை வ‌ரும்.
ஆதி கார‌ண‌த்வ‌ம் ஈச்வ‌ர‌ ல‌க்ஷ‌ண‌ம். “ஆதி” என்ப‌த‌ற்கு முற்பாட‌ன் என்றும்,
“ஆதீய‌தே” – எல்லோராலும் ப‌ரிவுட‌ன் போற்ற‌ப்ப‌டும்ப‌டி ஸ்ப்ருஹ‌ணீய‌ன் என்றும் பிள்ளை அருளிய‌ ர‌ஸ‌ம்.
பிரான் – ர‌க்ஷ‌க‌ன் ஸ்திதி கார‌ண‌த்வ‌த்தைத் த‌னியே நிரூபிக்கிறார். ஸ்வாமித்வ‌த்தையும் கூறுகிறார்.

‘ அடியார்க் கென்னை யாட்படுத்த விமலன் ‘-
அடியரான லோக ஸாரங்கர் இவருக்கு ஆட்பட்டு இவரை தோளில் தூக்கிக் கொண்டு சென்றிருக்க,
அவருக்கு இவரை ஆட்படுத்தினதாகப் பாடுவது எப்படிப் பொருந்துமென்று சங்கை வரலாம்.
இவ் விஷயத்தை ஊன்றி ஆராய வேண்டும். நடந்த வ்ருத்தாந்தத்திற்கு இந்த வார்த்தை முழுவதும் ரஸமாகப்
பொருந்தும்படி பொருள் கொள்ள வேண்டும். ஸ்வாமியின் ஆஜ்ஞை தனக்கு எவ்வளவு அப்ரியமா யிருந்தாலும்,
இறாய்க்காமல் அதற்கு இணங்குவது தான் ஆட்பட்ட தாஸனுக்கு முக்ய லக்ஷணம்.
‘என் தோள் மேலேறு’ என்றால், அது தனக்கு அத்யந்தம் அப்ரியமாயினும், அந்தச் சொல்லைக் கேட்க வேண்டும்.
தன்னிஷ்டம் என்பதை அடியோடு தள்ளி ஸ்வாமி இஷ்டத்தையே நிறைவேற்ற வேண்டும்.
ராம தாஸரான பரதர் கைகேயி ‘ராஜந்’ என்று சொல்லுகையில் மிகவும் புண்பட்டார். அது அவருக்கு அருந்துதம்.
(தாஸ பூதோபவிஷ்யாமி) [‘ நான் பூர்ண ஸந்தோஷத்தோடு ராமனுக்குத் தாஸனாகப் போகிறேன் ‘] என்று
தாயாரிடம் சபதம் செய்தார் ; அப்படியே தாஸரானார். ‘ராஜ்யத்தை நீ ஆளத்தான் வேண்டும்’ என்று
இவரை ராமன் திருப்பி விடுகையில், அவருக்குத் தாஸரானபடியால் அதற்கு உடன்பட்டார்.
ராமனுக்கு ஆட்பட்ட தாஸராக இருந்ததே தான் அவர் ராஜ்யம் ஆண்டதற்குக் காரணம்.
திருப்பாணாழ்வார் ஒருக்காலும் ஸ்ரீரங்கத்தை மிதிக்கத் துணியாதவர். ஸ்ரீரங்க த்வீபத்தை மிதிக்க ஸம்மதியாதவரும்,
அம் மண்ணை மிதிக்க அஞ்சியவருமான அவர், விப்ரரான முனியின் தோளை மிதிக்க ஸம்மதிப்பரோ?
அவருக்குத் தாம் ஆட்பட்ட தாஸ ரானதால்தான், அவர் சொல்வது இவருக்குக் கடோரமாயிருந்தும், அதற்கு உடன்பட்டார் .
அவரிடத்தில் தாஸ்ய காஷ்டையைப் பற்றியது தான் அவர் அநுமதிப்படி உலகமறிய அவர் தோளிலே.
‘அரங்கம் சென்றதற்குக் காரணம். ‘உலகறிய……. உலோக சாரங்க மா முனி தோள் தனிலே வந்து’ என்பது ப்ரபந்த ஸாரம்.
அரங்கத்தில் ஸர்வ லோக ஸாக்ஷிகமாக இந்த விசித்ரக் காட்சி.

2) ப்ருகுமஹர்ஷியின் அடிபதிந்தது திருமார்பில்.
ஸ்ரீவத்ஸரான இவ்வாழ்வார் நித்யஸ்தாநத்தில் ப்ருகுவென்னுமடியார் திருவடியை இவர் தாங்கி அவ்வடி யாருக்காட்பட்டவர்.

(3) தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு அடுத்த அவதாரம் இவ்வாழ்வார்.
அரங்கனைத் தவிர ‘மற்றுமோர் தெய்வமுண்டோ ‘ என்று கேட்டவர் அரங்கன் தொண்டரே உத்தம தெய்வமென்று
துணிந்து அவர் அடிப்பொடியானார். பக்தாங்க்ரி ரேணுவுக்கு அடுத்த அவதாரமான இவர், தாமும் அடியார்க்காட்பட்டு,
தொண்டரடிப்பொடி யாகுமாசையை முதற் பாசுரம் முதலடியிலேயே காட்டுகிறார்.

(4) அடியார்க்குத் தன்னை யாட்படுத்துவதில் ருசியுள்ள அரங்கனாகிய பித்தன் வரித்து க்ருபையால்
பாகவத தாஸனாக்கினாரென்பதை நினைத்து விமலனென்று அவரைப் புகழ்கிறார்.
தனக்குத் தாஸராயிருப்பவர் பிறருக்கு ஸ்வாமியாவதை சாமாந்ய ப்ரபுக்கள் ஸஹியார்.
இவர் விலக்ஷணமான ப்ரபுவென்று ஆச்சரியப் படுகிறார்.

(5) ‘மலம்’ என்பது சம்சயம். அச்யுதனை ஸேவிப்பவர்க்கு மோக்ஷம் கிடைத்தாலும் கிடைக்கும், கிடையாமற்போனாலும் போகும்.
அச்யுதன் பக்தர்களைப் பரிசர்யை செய்வதில் இன்புறுபவர்க்கு அதில் சம்சயமே கிடையாது.
அடியார்க்கு ஆட்படுத்துவதால் தனக்கு மோக்ஷம் கிடைப்பதில் சம்சயத்தை நீக்குகிறார் என்று ஸூசகம்.

“விண்ணவர்கோன்” காண்பனவும் உரைப்பனவு மற்றொன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல்’ என்றும்,
‘கோவலனும் கோமானுமான வந்நாள் குரவை புணர் கோவியர் தம் குறிப்பே கொண்டு சேவலுடன் பிரியாத பேடை போல் சேர்ந்து ‘ என்றும்
முநி வாஹந போகப் பாசுரங்களின்படி, கண்ணனிடமே இவ்வாழ்வாருக்குக் காதல் மிகுதி.
கொண்டல் வண்ணன் கோவலனாய் வெண்ணெயுண்ட வாயன் இவருள்ளத்தைக் கவர்ந்ததால்
இவர் கண்களும் மனமும் அங்கு லயித்து, இவருக்கு பூமவித்யையிற் கூறிய மோக்ஷ லயம் கிடைத்தது.
விண்ணவர் கோனும் இவருக்குக் கோவலக் கோன் என்று அநுபவம். அண்டர் கோன் என்று முடிவிலும் ‘கோன்’ என்றே அநுபவம்.

விரையார் பொழில் வேங்கடவன் :-
(1) ஆதிமூர்த்தி வானின்றிழிந்து மத்தியில் திருமலையில் அவதரித்து, அரங்கத்தில் பள்ளிகொண்டருளினார்.
சந்தி ரஸத்தில் இவ்வாழ்வார் முழுகுகிறார்.
வாநரருக்கும் நரருக்கும் எப்படி சந்தி (சமாகமம்) நேர்ந்தது என்று பிராட்டி ஆச்சரியப்பட்டாள்.
அரங்கத்தரவணையான் கர்ப்ப க்ருஹத்தில் ஸ்வப்நத்திலும் நேரக்கூடாததான ஒரு சந்தி இவருக்கு நேர்ந்ததில் இவருக்கு விஸ்மயம்.
ஸ்வப்நத்தை விழிப்புக்கும் தூக்கத்திற்கும் நடுவிலுள்ள ஓர் சந்தி, சந்த்யம் என்பர். சந்தியில் ஏற்படுவது ‘சந்த்யம்’
ஸ்வப்நத்தில் சேராததெல்லாம் சேர்வது போல் புலப்படத் தூக்கத்தில் ப்ரஹ்மத்திற்கும் ஜீவனுக்கும் ஓர் நெருங்கிய ஸம்ச்லேஷம் (சந்தி).
மனம் அஹங்காரம் முதலியன ஜீவனைத் தொடாமல் , ப்ரஹ்மத்தினிடம் ஜீவன் தாய்மார்பில் ப்ரஜை போல்
வாத்ஸல்யத்தால் அணைக்கப்பட்டு, மெய்ம் மறந்து, ச்ரமமற்று சுகப்படும் சமயம்.

ப்ரஹ்மத்தோடு நேரும் அந்த சந்தியில் ஜாதி பேதம், துஷ்டர் ஸாது முதலிய பேதமொன்றுமில்லை.
ப்ரஹ்மத்தால் கெட்டியாய் அணைக்கப்பட்டு, மெய் மறந்திருக்கும் தூக்க சமயத்தில்
‘திருடன் திருடனல்ல;’ ‘பாபி பாபியல்ல ; சண்டாளன் சண்டாளனல்ல ‘ என்று உபநிஷத்து கூறுகிறது.
பெருமாள் தன்னைத் தருவித்துத் தனக்கு அவரோடு ஏற்படுத்திய சந்தி ரசத்தில் ஆச்சர்யப் படும் இவ்வாழ்வார்
திரும்பவும் திரும்பவும் பலவாறாக சந்தி ரசத்தில் ஈடுபடுகிறார்.
வேங்கடம் ஓர் சந்தி ஸ்தானம். ‘வானவர்கள் சந்தி செய்ய நின்றான்’ என்று அங்கு
மண்ணோரும் விண்ணோரும் வந்து ஒக்கத் தொழுது சந்தி செய்யுமிடம் ;
அரங்கன் ஆடையும் அந்தி போல் நிறம் ‘ – அந்தி ஓர் சந்தி.
“உந்தி” நடு மேனியிலிருந்து மேலும் கீழும் சந்தி செய்கிறது.
(தத்ராரூடைர்மஹதி மநுஜை: ஸ்வர்கிபிஸ் சாவ தீர்ணை: ஸத்வோமேஷாத் வ்யபகதமிதஸ் தாரதம்யாதி பேதை : என்று
ஹம்ஸ சந்தேசத்தில் வட வேங்கட மா மலையில் வானவர் இறங்கி வந்தும், மண்ணோர் ஏறி வந்தும்
சந்தி செய்து சத்வம் தலையெடுத்துத் தாரதம்ய மன்றியில் தொழுவது வர்ணிக்கப்பட்டது.

2) பெருமாள் திருவடி வாரத்தில் நிற்கையில் (தம் ப்ரம்மகந்த: ப்ரவிசதி (கௌஷீதகி உபநிஷத்து) என்றது
போல ப்ரஹ்ம பரிமளம் வீசி இவருள் புகுகிறது. இங்கே திருக்கமலபாதத்தின் அநுபவம்.
(வேலாதீதச்ருதி பரிமளம் பாதாம்போஜம் (பகவத்தியான ஸோபாநம்) என்றது போல ஸர்வ கந்தனுடைய கந்தம்
அலைத்து வீசுகிற அனுபவம் பரம பதத்திலிருந்த ப்ரஹ்மகந்தம் அவதரிக்கும் பெருமாளுடன் கூட
வேங்கடப் பொழில்களில் அமர்ந்து “கடியார் பொழிலரங்கத்தில்” அமர்ந்தது.
ஸர்வ கந்தனுடைய திருமேனியிலிருந்தும் ப்ரஹ்ம கந்தம் வீசுகிறது.
”துளபவிரையார் கமழ் நீண்முடி எம் ஐயனார் ” என்று திருமுடி வாசனை அநுபவம்.

(3)(வஹதே வாஸநாம் மௌளிபந்தே) யோகத்தில் சுபமான வாசனைகள் முக்யம்.

(4) இவருக்கு அடுத்த அவதாரமான கலியன்,
‘விரையார் திருவேங்கடவா’ என்று பாடியதும் இதையொத்தது. “வேயேய் பூம்பொழில் – சூழ்.’

நிமலன் நின்மலன்:–
திரும்பவும் திரும்பவும் தன்னுடைய சாமீப்யத்தால் என்ன மலம் வருமோ வென்கிற அச்சம் கிளம்புகிறது.
உடனுக்குடன் ஹேய ப்ரதிபடமான ஸ்வபாவத்தை அறுதியிட்டு மனதைத் தேற்றிக் கொள்ளுகிறார்-
இந்த சங்கை ‘அரங்கத்தமலன் ‘ என்று மேலும் உதித்து நிவ்ருத்திக்கப் படுவதைக் காண்கிறோம்.
‘தம்முடைய ஜந்மாதிகளால் உண்டான நிகர்ஷாநுஸந்தாநத்தாலே அகல, அது தானே பற்றாசாகத் திருவுள்ளம்
புண்பட்டு மேல் வீழ்ந்த இடத்திலும் அத்தனைக்கு அவத்யமின்றியிலே நிர்மலனாயிருக்கிற படியைக் கண்டு
அமலன் என்கிறார்’ என்று நாயனார்.

நீதி வானவன் —
விண்ணவர் கோனே நீண் மதிளரங்கத் தம்மானாக எழுந்தருளி யிருப்பதால் வானாட்டு நீதியை
இங்கும் செலுத்துகின்றான் போலும் ! எல்லாச் சேதநர்களுக்கும் ஸாம்யமே மேனாட்டு நீதி.
அந்த நீதியைத் தாழ்ந்த என் விஷயத்திலும் செலுத்தி என்னை உத்தமரோடு அத்யந்த சமமாய்
பாவிக்கிறானோ வென்று ரஸமாய் உபபத்தி செய்யப் பார்க்கிறார்.

நீண் மதிளரங்கத் தம்மான்–
அரங்கத்தின் மதிள் நீண்டது போல் அரங்கத்தம்மான் பாத கமலமும் நீண்டதே என்று ரஸம்.
அரங்கத்தில் பத்ம ஸரஸ்ஸுக்களில் பத்மங்களிருப்பது ஸஹஜம்.
இவருக்கு முந்திய தொண்டரடிப்பொடியாழ்வார் திருநாமத்தை அநுசரித்து ‘அடியார்க் கென்னை யாட்படுத்த விமலன்’
என்று முதலடியிலேயே இவர் ஈடுபட்டது போல இப்பாசுரம் கேட்டுப்போலே காணும் (இவருக்கடுத்த)
திருமங்கையாழ்வார் திருமதிள்கள் செய்தது. அழகிய வாயாலே இதருளிச் செய்த பின்பாகாதே
திருமாளிகைகளும் திருக்கோபுரங்களும் கனத்தது ‘ என்று நாயனார்.
(ரிஷீணாம் புனராத்யானாம் வாசமர்த்தாநு தோவதி) (பவபூதி உத்தரராம சரிதம்) என்பார்கள்.

திருக்கமலபாதம் வந்து –
தாய் முலையில் போல் பெருமாள் திருவடிகளில் ஸ்நேஹம் என்பர்.
சஹஜ நிரவதிக ஸ்நேகத்தால் திருவடிக்கு நீண்டு நெருங்கும் ஸ்வபாவம்.
திருவடி நீளக் காரணம் திருவுள்ளம் உவந்து நீள்வது.
சயனத்திலிருந்த திருவடிப்பூ ஸ்நேஹ பாரவச்யத்தால் நீண்டு என் கண்ணுள் வந்து நின்றது போலும்.
‘திரு’ என்று இங்கு லஷ்மியைச் சொல்லுகிறது. இது பூமிப் பிராட்டி யாருக்கும் உபலக்ஷணம்.
(லஷ்மீ பூம்யோ : கரஸரஸிஜைர்லாலிதம் ரங்கபர்த்து: பாதாம் போஜம்) (ஸோபாநம்) என்ற அநுபவம்.
தாய்மார்கள் இந்தக் கமலத்தைப் பிடித்து லாளநம்செய்து என் கண்ணினுள் ஒத்துகிறார்கள் போலும் ‘ என்று அநுபவம்-
‘பிராட்டி திருமுலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொள்ளும் திருவடிகள்’ என்று பிள்ளை.

என் கண்ணிலுள்ளன வொக்கின்றதே –
தினமும் இவர் திருக்காவிரிக் கரையிலிருந்து யோகம் செய்கையில் தர்ஸந சமாநா காரமான
பிம்ப தர்ஸந மேற்பட்டு வந்தது. ‘கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்’ (திருவாய்மொழி 1,10,2) என்றது
போல இவர் காதல் தொழுகையாகிய யோகத்தில் இவர் கண்ணுள்ளே திருவடி நின்று கொண்டிருந்தது.
பெரிய பெருமாள் திருவடிக்கமலம் இவர் கண்ணிற்கு யோக தசையிலே சேவை சாதித்துக் கொண்டிருந்தது.
யோக தசையில் சேவை சாதித்து இவர் கண்ணுள்ளே நின்றுகொண்டிருந்த திருவடிக் கமலத்தோடு இப்பொழுது
தன் கண் வரையில் நீண்டு வந்த அரங்கன் திருவடிக் கமலத்தை ஒத்துப் பார்க்கிறார்.
யோகாநுபவ உறுதியால் என் கண்ணுள்ளே நிற்கும் திருக்கமல பாதத்தோடு இப்பொழுது நேரில்
ஸாக்ஷாத்தாக சேவிக்கும் திருக்கமலபாதம் மிகவும் ஒக்கின்றதே யென்று அத்புத ரஸம்.

2) கண்ணினுள்ளே வந்து விட்டாலும் ஸாக்ஷாத் ஸ்பர்சத்தை நினைக்கவும் பச்சையாகச் சொல்லவும் மனமில்லாதவராய்,
கண்ணில் வந்து புகுந்தது போலிருக்கிறது என்று பேசுகிறார்.
இப்படியே மேலும் ‘சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே’ என்று பேசுகிறார்.
தாமாகப் பெருமாள் பாத கமலங்களைத் தீண்ட அச்சமே; அவையே வலிய என்னிடம் வந்து என்னை ஸ்பர்சிக்கின்றன;
நான் என்ன செய்வேன் ! திருமேனி அவயவங்களை எட்டு ச்லோகங்களால் அநுபவிக்கிறார்.
அஷ்டாங்க யோகக் கணக்கு. பகவத் த்யாந ஸோபாநமும் இதை அநுசரித்தது.
அங்கும் அவயவங்களின் அநுபவம் எட்டு ச்லோகங்களால் செய்யப் படுகிறது.
இங்கு, 1, 4, 5, 6, 7, 8-வது: பாசுரங்களில் அவயவங்களை தாமாக நெருங்குவதாக அநுபவமில்லை.
2-ம் பாசுரத்தில் ‘சென்றதாம் என் சிந்தனை’ என்கிறார். சிந்தனை தொடுவதால் தீட்டில்லை.
‘உந்திமேல தன்றோ அடியேனுள்ளத்தின் னுயிரே’ என்று தன் ஆத்மா தொடுவதைப் பேசுகிறார். ஆத்மாவுக்கும் தீட்டில்லை.

3) ஒன்பது பாட்டு வழியிலே அநுசந்தித்துப் பத்தாம் பாட்டிலே திருவடி தொழுதாரென்கிற ஐதிஹ்யத்தின்படியே
மாநஸ ஸாக்ஷாத்காரம் தான் கண்ணிட்டுக் கண்டாப் போலே இருக்கை.
அங்ஙனமன்றிக்கே மாநஸ ஸாக்ஷாத்காரத்தோடு சேர்ந்திருந்த தீ சஷுர் விஷயமான திருப்புகழென்றுமாம்’ என்று
இரண்டு விதமாகவும் நாயனார் அருளியது. மாநஸ ஸாக்ஷாத்கார மென்பது யோக ஸாக்ஷாத்காரம் ; தர்சன ஸமாநாகாரம்.
‘கருமணியைக் கோமளத்தைக் கண்ணாரக் கண்டு, மனத்தூணே பற்றி
நின்று வாயார வாழ்த்தும் ப்ரபந்தமாகை யாலே ‘ என்றும் அருளியுள்ளார்.

————-

துண்டவெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில்சூழ் அரங்கநகர் மேயவப்பன்
அண்டரண்ட பகிரண்டத்தொருமா நில மெழுமால்வரை முற்றும்
உண்ட கண்டங்கண்டீ ரடியேனை யுய்யக் கொண்டதே. (6)

துண்டம் — ஒரு துண்டாயிருக்கிற (கலாமாத்ரமான):
வெண் பிறையன் –வெளுத்த சந்திரனை (முடியிலே) உடையனான சிவனுடைய:
துயர்–(பிச்சை எடுத்துத் திரிந்த) பாதகத்தை:
தீர்த்த‌வ‌ன் – போக்கினவனும்:
அம் சிறைய வண்டு …. அழகிய சிறகையுடைய வண்டுகள்:
வாழ் – வாழ்தற்கிடமான
பொழில் சூழ் — சோலைகள் சூழப் பெற்ற:
அரங்கம் நகர்—திருவரங்கப் பெரு நகரிலே:
மேய .. பொருந்தியிரா நின்ற:
அப்பன் …. ஸ்வாமியுமான ஸ்ரீரங்க நாதனுடைய்.:
அண்டர் –அண்டத்துக்குட்பட்ட தேவாதி வர்க்கங்களையும்
அண்டம் … அண்டங்களையும் ப‌கிர‌ண்டம் –அண்டாவர‌ண‌ங்களையும்:
ஒரு மாநிலம் — ஒப்பற்ற மஹாப்ருதிவியையும்:
ஏழுமால் வரை …… எழு குலபர்வதங்களையும்:
முற்றும் — சொல்லிச் சொல்லாத மற்றெல்லாவ‌ற்றையும்:
உண்ட – அமுதுசெய்த‌:
கண்டம் கண்டீர் – திருக்கழுத்துக்கிடீர்:
அடியேனை — தாஸனான என்னை:
உய்யக் கொண்டது……. உஜ்ஜீவிப்பித்தது.-

துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன் :-
(1) இங்கே கண்டத்தின் அநுபவம். நீலகண்டருடைய கண்டம் உயர்ந்ததென்பர்.
ஜ‌நங்களை நாசம், செய்யவந்த கால கோடி விஷத்தைப் பாநம் செய்து உலகத்தைக் காப்பாற்றித் தம் கண்டத்திற்குள்
விஷத்தையடக்கியதால் பொன் வர்ணமாயிருந்த கண்டம் நீலமாய்க் கறுத்ததென்பர்.
அவர் பெருமைக்கும் மேற்பட்ட பெருமையைக் காட்டுகிறார். அவருக்கேற்பட்ட குரு பாதகத்தைத் தீர்த்தவரென்கிறார்.
பாதகம் விஷத்திலும் கொடியவிஷம்.

(2) காலகோடி விஷத்தையுண்டதால் நீலகண்டர் கண்டம் பெருமை பெற்றது.
அவர் கண்டத்தையும், அவரையும், உலகத்திலுள்ள ஸகல விஷங்களையும் அண்ட பஹிரண்டத்து ஒரு மாநில
மெழுமால்வரையும் முற்று முண்ட கண்டம் எத்தனை பெருமையுடயதென்று நீரே காண்பீரென்கிறார்.

3) விஷத்தால் கண்டம் நீலமாயிற்று. இவர் திருமேனி முழுவதும் ஸ்வபாவ மாகவே நீலம்.
‘முடிவில்லதோ ரெழில் நீலமேனி ஐயோ ‘ என்று மேலே பாடுகிறார்.

(4) பாரமாய என் பழவினை யறுப்பவர் மட்டுமல்ல. நீல‌ கண்டருக்கும் வினைத் துயர் தீர்த்தவரென்கிறார்.

5) அயனைப் படைத்ததோரெழில் என்று உந்தியை வர்ணித்து அயனிலும் பெரியார் என்றார்.
இங்கு துண்ட வெண் பிறையாரிலும் பெரியாரென்கிறார்.

(6) சந்த்ரன் பகவானுடைய மனத்திலுதித்தவர். பிறையைச் சூடுவதால், பகவானுடைய மனத்தில் உதிக்கும்
திருவுள்ளத்தைத் தலையால் தாங்குகிறார் என்றும் த்வநிக்கிறது. தலையில் வெண் சந்த்ரன், அக்நி வர்ணமான செஞ்சடை,
கங்கை நீர்ச்சுழல், கண்டம் நீலம், பொன்னார் திருமேனி என்றிப்படிப் பலவர்ணங்கள்.
பெருமாள். திருமேனி முழுதும் கருமேக வண்ணம், அதிலும் கேசம் மைவண்ணம்.

7) ‘ பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே, கபாலனன் மோக்கத்துக் கண்டு கொண்மிண்’
என்ற திருவாய் மொழியில் பரத்வ நிர்ணய ப்ரகரணத்தில் அநுபவம். .

அஞ்சிறையவண்டுவாழ் பொழில் சூழ் அரங்கநகர்மேய அப்பன்:-

(1) அவன் கருமைபோல் அவனைப் பாடும் வண்டுகளும் கரிய; அப்பெருமாள் பாடகரும் பெருமாள் போன்ற வண்ணத்தவர்.

(2) அரங்க நகரில் பாடும் வண்டுகள் வாழ் வண்டுகள்; வாழாட்பட்டு நின்றவை.

(3) மதுகரர் ஸந்யாஸிகள்; திருவடித்தாமரைத் தேனைப் பருகி இன்புறுமவர்;
ஞாந கர்மங்களாகிய இரண்டு சிறகுகளை உடையவர். (ஸாரங்காநாம் பதாம்புஜம்) என்று திருவவடித்தாமரைத் தேனை
யருந்தி இன்புறுவர் பக்தரென்றார் சுகப்ரஹ்மரிஷி (பாக‌வ‌த‌ம்1,11,26) ‘ ஸாரங்கம் ‘ என்று வண்டுக்குப் பெயர் ;
ஸார ப்ரஹ்மத்தைப் பாடும் பக்தருக்கும் அப் பெயரென்றார் ஸ்ரீதரஸ்வாமி. -ஸாரம் காயந்தீதி ஸாரங்கா

அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழுமால்வரை முற்று முண்ட கண்டம் –
எழுமால் வரையில் கிரீசர் வஸிக்கும் வெள்ளி மலையும் அடங்கியது. நீலகண்டருடைய கண்டத்தினும் மஹத்தான கண்டம்.

கண்டீர் – நீங்களே பாருங்கள்.

அடியேனை உய்யக் கொண்டதே–
அஹமந்நம் அஹமந்தம் அஹமந்தம்’ என்றபடி என்னை அவருண்டு அவருக்கு நான் போக்கியனாகிறேன். –

அண்டரண்ட பஹிரண்டங்களை உண்டதிலும் திருப்தி யடையாமல்,
மலைகளை (குல பர்வதங்களை) யுண்டும் திருப்தியடையாமல், அணுவாகிய என்னை ஆசை யுடன் உண்கிறான்;
நீங்களே பாருங்கள். உண்ணப்படும் வஸ்து ஜீர்ணமாகி விடும் என்பர். உண்ணப்படும் நான் அதனாலேயே உஜ்ஜீவித்து
இன்புறுகிறேனென்னும் விந்தையையும் பாருங்கள். இந்த அற்புதக் காட்சியை நீங்களே கண்கூடாகக் காணுங்கள்.

ப்ரஹ்மஹத்யா என்பது பெரும் பாதகம். ப்ராஹ்மண ஜாதி ஸாமாந்யரின் ஹத்தியையே பாதகமென்பர்.
ப்ரஹ்மாவின் தலையையே கிள்ளியெறிந்தது பெரும் பாதகம் , குருபாதகம். கிள்ளின கையிலேயே அந்தப் பாதகம் ஒட்டிக்கொண்டது.
எந்த அவயவம் பாபம் செய்ததோ அங்கே அது கெட்டி யாய் ஒட்டிக்கொண்டு விட்டது.
இதனால்,ஈச்வரனாயினும் ஒரு பாபம் செய்தால் அது கழற்ற முடியாமல் அவரிடம் ஒட்டிக் கொண்டு
அவரையே பாதிக்கும் என்று ருஜுவாகிறது. ஈச்வரன் வலிமையினும் பாபத்தின் வலிமை அதிகம்.
இந்த உண்மை ஸர்வ லோக ஸாக்ஷிகமாக இந்தச் சரித்ரத்தால் விளக்கப் பட்டது. தலையில் பிறை சூடி என்ன?
கையில் கபாலம் விடாமல் ஒட்டிக் கொண்டு விட்டதே! உலகத்திற்கெல்லாம் க்ஷேமம் செய்யும் சங்கரராயினும்,
ஈச்வரனென்று ஐச்வர்யம் பெற்றவராயினும், பாபம் செய்தால் அது விடாமல் ஒட்டிக் கொள்ளும்.
ஸர்வேச்வரன் க்ருபையால் தான் அது கழியுமென்று இந்த விருத்தாந்தம் உலகமறியக் காட்டுவது.

‘மாநுஷ ஜந்மம் பெற்றும், ஊமையும் செவிடுமில்லா மலிருந்தும், வாயிலிருந்தும், நமோ நாரணாவென்றோவாது
உரைக்கும் உரையிருந்தும், பகவந்நாமத்தைச் செவியுறக் காதிருந்தும், எவன் ஸம்ஸாரத்தைக் கடப்பதற்கு
சுலபமான வழிகளைத் தேடுகிறதில்லையோ அவன் ப்ரஹ்மஹத்யைக்காரன்’ என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது.

ப்ரஹ்மமாசைப் பட்டு ஸம்ஸாரத்தைக் கடப்பதற்கென்று கொடுத்த மநுஷ்ய ஜந்மத்தை வீணாக்குகிறவன்
ப்ரஹ்மத்தை பக்னாசமாக்கிக் கொலை செய்தவன் போலாகிறான்.
எல்லாவித ப்ரஹ்மாக்களையும் அபஹதபாப்மர்களாக்குவது ப்ரஹ்மம். மாத்ஸ்ய வசநத்தை நாயனார் உதாஹரித்தார்.
(தத்ர நாராயண : ஸ்ரீமான் மயா பிக்ஷாம் ப்ரயாசித:) என்றார் சங்கரர்.

முன் பாட்டில் திருவாரமார்பை ஸேவித்ததும், ஸ்ரீமானான நாராயணனுடைய ஸர்வேச்வரத்வத்தையும்,
எல்லையற்ற கருணையையும் இங்கே பாடுகிறார். கபாலம் ஆயிரம் துண்டமாய் உடைந்தது.
வெண்பிறைச் சந்த்ரனுக்கும் ராஜயக்ஷ்மாவான பாபரோகம் போக்கப்பட்டதையும் பிள்ளை உரைத்தார்.
‘உண்ட கண்டம் (அத்தா சராசர க்ரஹாணாத்) என்று ஸூத்ரத்தை நாயனார் உதாஹரித்தார்.
கண்டம் யாவற்றையும் உண்டு வயிற்றில் சேர்த்தது “ஆதி” என்பதும், கண்டத்திலொட்டுமென்று ரஸம்.
“ஆதி”, “அத்தா” என்று உபநிஷத் பாஷ்யம்.

——————–

ப‌ரிய‌ னாகிவ‌ந்த‌ அவுண‌ னுட‌ல்கீண்ட‌ அம‌ரர்க்
க‌ரிய‌ வாதிப்பிரான‌ர‌ங் க‌த்த‌ம‌ல‌ன் முக‌த்துக்
க‌ரிய‌ வாகிப் புடைப‌ர‌ந்து மிளிர்ந்து செவ்வ‌ரியோடி
நீண்ட‌வ‌ப்பெரிய‌ வாய‌க‌ண்க‌ளென்னைப் பேத‌மை செய்த‌ன‌வே.

பரியன் ஆகி … மிகவும் ஸ்தூலமான வடிவையுடையனாய்க் கொண்டு;
வந்த … (ப்ரஹ்லாதனை நலிய) வந்த:
அவுணன் – அஸுரனான இரணிய னுடைய :
உடல் – ச‌ரீர‌த்தை:
கீண்ட – கிழித்துப் பொக‌ட்ட‌வ‌னும்:
அமார்க்கு – பிர‌ம‌ன் முத‌லிய‌ தேவ‌ர்க‌ட்கும்,:
அரிய – அணுக‌முடியாத‌வ‌னும்:
ஆதி – ஜ‌க‌த்கார‌ண‌ பூத‌னும்:
பிரான் – ம‌ஹோப‌கார‌க‌னும்:
அர‌ங்க‌த்து – கோயிலில் எழுந்த‌ருளியிருக்கிற‌:
அம‌ல‌ன் – ப‌ர‌மபாவ‌னனுமாகிய‌ எம்பெருமானுடைய‌:
முக‌த்து – திருமுக‌ ம‌ண்ட‌ல‌த்தில்
க‌ரிய‌ ஆகி – க‌றுத்த‌ நிற‌முடைய‌வையாய்:
புடைப‌ர‌ந்து — விசால‌ங்க‌ளாய்:
மிளிர்ந்து –பிர‌காச‌முடைய‌வை யாய்:
செவ்வரி ஓடி — செவ்வரி படர்ந்திருப்பனவாய்:
நீண்ட — காதுவரை நீண்டிருப்பனவாய்:
பெரிய ஆய‌ — பெருமை பொருந்தியவையுமான‌:
அக்கண்கள்— அந்தத் திருக்கண்களானவை:
என்னை –அடியேனை:
பேதமை — உந்மத்தனாகச் செய்து விட்டன.

பரியனாகி வந்த :-
(1) திருக்கண்ணை வர்ணிக்கையில், சீற்றத்தோடு கூடிய திருமுகத்தில் அருள் மயமாய் ப்ரஹ்லாத சிசுவைக்
குளிரக் கடாக்ஷித்த ந்ருஸிம்ஹன் திருக்கண்களை அநுபவிக்கிறார்.

ந்ருஸிம்ஹாவதாரத்தில் சிங்க நாதம் செய்யும் பயங்கரமான திருமுகத்தில் மேல் பாகத்தில்
அக்நி வர்ணமாய்க் கோரமான கேசங்களாலும் புருவ நொடிப்புகளாலும், கீழ் பாகத்தில் கோரமான சிங்கப் பற்களாலும்
அண்ட கடாஹத்தைப் பிளக்கும் – சிங்கநாதத்தாலும் — சூழப்பட்ட திருக்கண்களில் தயை பூர்ணமாய்ப் பூரித்துக்
குழந்தையைக் குளிரக் கடாக்ஷித்து ஸ்நேஹ ப்ரசுரமாய்ப் பால் கொடுப்பதுபோல வாத்ஸல்யத்தை
ஆவிஷ்கரித்ததென்று தயாசதகத்தில் அநுபவம்.

‘சீற்றத் தோடருள் பெற்றவன்’ என்று இந்த அகடிதகடனாரசத்தில் ஆழ்வார் ஈடுபட்டார்.
திருக்கண்களின் அநுபவத்தோடு அவயவங்களின் அநுபவம் முடிகிறது.

(2) சேராத விரோதங்களையெல்லாம் சேர்த்து ஸந்தி செய்த அவதாரம்;
அத்புதங்களை கடிப்பித்த அவதார விசேஷம்.
இந்தளத்தில் தாமரை போலே, சீற்றம் நிரம்பிய திருமுகத்தில் தயாமயமான திருக்கண்கள் குழந்தையைக்
கடாக்ஷித்ததிலும் அகடிதகடதையுண்டோ ?
ஸந்தி ரசத்தை அநுபவிக்கும் இப் பிரபந்தத்தில் நரசிங்கனை அனுபவிக்காம லிருக்கக்கூடுமோ?
வாநர நர ஸந்தியே பிராட்டிக்கு அத்புதமாயிற்று; நரஸிம்ஹ ஸந்தி அத்யத்புதமே.

(3) ப்ரஹ்ம மென்பது நிரதிசய ப்ருஹத் என்பர். ‘என்னிலும் பரியனுண்டோ ?
நானல்லவோ நிரதிசய ப்ருஹத்தான ப்ரஹ்மம் என்று மார்பு தட்டி வந்தான் அவுணன்.
தன்னை யொத்தாரும் மிக்காரும் இல்லை யென்று அஹங்கரித்தான்.
மந்தபாக்யோக்தோ மதக்யோ ஜகதீச்வர: என்னிலும் வேறான ஒர் ஜகதீச்வர னுண்டென்று வீணே பேசுகிறாயே;
ஜகதேக ஈச்வரனான என் வயிற்றில் பிறந்தும் இப்படிப் பாக்யஹீனனானாயே’ என்றும் ப்ரஹ்லாதரிடம் பேசினவன்.

4) பகவத் த்வேஷமே பூரித்த பரிய உடல், உடல் பரியது; த்வேஷம் அதனிலும் பரியது.
(ஸுதம் மஹாபாகவதம் மஹாஸுர:)’ என்றார் சுகர் நாரத முகமாக. பரியனான அவுணன் புத்ரனும் பரியனானவன்;
ஆயின் – அவன் தெய்வத் தன்மையால் பரியன் ; சிறிய சிசுவாயினும் அத்தன்மையால் பரியன்.
(ரஹிதாஸுரோசுர:) என்றபடி அவுணத் தன்மையே இல்லாத அஸுர சிசு..

(5) (பரமேஸ்வர ஸம்ஞோஞ கிமன்யோ மய்யவஸ்திதே ) என்று பிள்ளையைக் கேட்டான்.
பரமம் மஹேச்வரம் என்று நீ புகழும் பரமேச்வரன் நானே. நானிருக்கையில் என்னிலும் வேறுளரோ?
நீ அஜ்ஞன், அநீசன்; நானே ஜ்ஞன், ஈசன்; உலகத்திற்கு ஒரு பரமேச்வரன் உண்டென்பது உண்மையே;
ஆனால் அப்பரமேச்வரன் நானே.

(6) ( க்ருத்தஸ்ய யஸ்ய கம்பந்தே த்ரயோ லோகா: ஸஹேச்வரா) ‘ எவன் சீற்றமுற்றால் ஈச்வரர்களோடு கூடிய
மூவுலகங்களும் நடுங்குமோ, அந்தப் பரமேஸ்வரனாகிய என்னுடைய கட்டளையை எந்த பலத்தைக் கொண்டு மீறினாய்?’
என்று பிள்ளையைக் கோபித்துக் கேட்டவன்;
(கம்பநாத்) என்று ஸூத்ரகாரர் காட்டிய ப்ரஹ்ம லிங்கம் தனக்கே உளது,
தானே ப்ரஹ்மம், தானே பரியன் என்று அஹங்கரித்தவன்.

(7) (ப்ருஹ வ்ருத்தௌ -பரிபீருடம் ஸர்வத) (யாசகர் நிருத்தம்) நிரதிசயமாகப் பரியனாயுளது ப்ரஹ்மம்.
ப்ரஹ்மத்தோடு போட்டி போட யார் அர்ஹர்?’ என ச்ருதி கேட்டது.
‘நானே ப்ரஹ்மத்தோடு ஸ்பர்த்திக்க அர்ஹன்’ என்று மார்பு தட்டுபவன்.

(8)’ எங்குமுளன் கண்ணன் ‘ என்று மகன் பேசினால்
‘ நானல்லவோ எங்கும் பரந்த பரியன் ‘ என்று பேசுபவன்.

(9) உடலும் அஹங்காரமும் பரியதாயின ; ஆத்மாவோ உடலுக்குள் முழுகி உள்ளிருப்பதே தெரியாமலிருந்தது.
‘ ஸர்வ லோகத்திலுமுள்ள தபஸ்ஸெல்லாம் திரண்டு ஒரு வடிவு கொண்டாற்போல அதிஸ்தூலனாய்
மஹா மேரு நடந்தாற் போலே எதிர்த்து வந்த ‘ என்று போகம். ஹிரண்யன் ‘ என்ற நாமமும், –
(ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண:) (சாந்தோக்யம் – அந்தராதித்ய பித்யை) என்ற ஹிரண்மய ப்ரஹ்ம புருஷனுக்கு எதிர்த்தட்டு.
‘மஹாமேரு என்றதனால் ஸ்வாமி அதை வ்யஞ்ஐநம் செய்கிறார்.
(ஏவம் லப்தவரோதைத்யோ பிப்ரத்தேம மயம் வபு:) (பாகவதம் -7, 4. 4-4) என்றும் சுகரும் இவன் வரம் பெற்றதும்
பொன் மேனியனானான் என்று இதைக் காட்டினார். விஷ்ணுவினிடம் தான் அவனுக்கு த்வேஷம்.
செம்பொன்னாகத் தவுணனுடல் கீண்டவன்’,

(10) (பாகவதம் 7-3-1) (ஆதிமானமப்ரதி த்வந்த்வம் மேகராஜம் வ்யதித்ஸத, ஏகமே வாத்விதீயம்) என்ற
பரஹ்மத்தைப் போல தான் அத்விதீயனாய் ஏக ராஜாவாய் இருப்பதற்காகத் தவம் செய்து வரங்கள் பெற்றான் ;.
பெற்றதும் வரம் கொடுத்தவரை மறந்தான்.

வந்த:-
(1) குழந்தை நம்முடையவன் ; தொண்டக் குலத்தில் ஸர்வோத்தமன்.
(வந்தனம் தாஸ்யம் ஸக்யமாத்ம நிவேதனம்) என்று ஆத்ம ஸ்மர்ப்பண பர்யந்தமான பக்திபர்வங்களை
தோழச் சிறுவருக்கு உபதேசித்தவன்.
(மஹீயபஸாம் பாதரஜோயிஷேகம் நிஷ்கிஞ்சனானாம் ந வ்ருணீத யாவத்)
(நிஷ்கிஞ்சநரான பெரியோர் திருவடி ரஜஸ்ஸினால் அபிஷேகத்தை விரும்பி வரிக்காதவரையில்
த்ரிவிக்ரமன் தாளிணை ஸ்பர்சம் கிடையாது) என்று உபதேசிப்பவன் ,
இச் செல்வக் குழந்தையை அம் மஹாஸுரன், அதி பலன், கத்தியை உருவிக் கொண்டு ஸிம்ஹாசனத்தில்
இருந்து குதித்தோடி வந்து தன் முஷ்டியினால் ஸ்தம்பத்தைத் தட்டினான்.
‘உன் உடலிலிருந்து உன் தலையைப் பிடுங்குகிறேன் ‘ என்று இம் மகனை ரோஷமாய் விரட்டிக் கொண்டு வந்தான்.
‘வந்த’ என்பதால் இவற்றையெல்லாம் ஸுசிப்பிக்கிறார்.

அவுணனுடல் கீண்ட :-
(1). அவனும் ஸ்வத:விஷ்ணு பார்ஷதனே. சாப விசேஷத்தால் அசுராவேசம் வந்து கொடியனானான்.
அவனுக்கு அவுண‌க்ரஹம், அசுர க்ரஹம்; மகனுக்கு க்ருஷ்ண க்ரஹம்.
(க்ருஷ்ண க்ரஹக்ருஹீதாத்மா ந வேத ஜகதீ த்ருஶாம்) நிற்கின்றதெல்லாம் நெடுமா லென்றே மகன் பார்வை.
நெடுமாலென்பவரே இல்லையென்பவன் அவுணன்.

2.ஏரகாம் கடக்ருத்யதா) (கோரைப் பாய் பின்னுபவன் கோரையைக் கிழிப்பது போல)
(ந காம் குரோத்பாடித ஹ்ருத்ஸரோருஹம்) தாமரைப் பூவைக் கிழிப்பது போல் அவுணன்
ஹ்ருதய புண்டரீகத்தைக் கிழித்தார் என்று பிள்ளை.
உலர்ந்த தாழை நாரைக் கிழிக்குமாப் போல இரண்டு கூறு செய்தவனாய் என்று போகம்.
( கிள்ளிக் களைந்தானை ‘ என்றாள் ஒரு பெண் குழந்தை.
தன் பூந்தோட்டத்திலே ஒரு பூக்கிள்ளுவது போல என்று அவ்ள் கருத்து.
ஆத்மா அச்சேத்யன். கீண்டது உடலை மட்டும்.(பித்யதே ஹ்ருதயக்ரந்தி:) என்றபடி
இங்கே ஆழ்வார் தம் ஹ்ருதயம் பிளக்க வேண்டிய ஸமயத்தையும் நினைப்பதாகும். முக்தி பெறும் அவஸரம். –

அமரர்க்கு அரிய:–
(1)(ந மே விதுஸ்ஸுரகணர் ப்ரபவம் – ந மஹர்ஷய: அஹமாதிர்ஹி தேவானாம் மஹர்ஷீணாம் ச ஸர்வச:) என்று கீதை.
எல்லோருக்கும் ஆதியான என்னைத் தேவர்களு மறியார் மஹர்ஷிகளுமறியார் ‘
‘தன்னாலே ஸ்ருஷ்டமாய் உபக்ருதமான் – தேவர்கள் தான் காரண பூதனாய் உபகாரகனாய் நிற்கிற நிலையை
அறிய மாட்டாமையாலே ப்ரஹ்லாதர் அணுகி அநுபவித்தாற் போலே அணுகவும் அனுபவிக்கவு மரியனாயிருக்கிற ‘ என்று போகம்.
‘ப்ரபாவத்தை யறியவில்லை’ என்று கீதை. ஸௌலப்ய ப்ரபாவத்தையு மறியவில்லை;
அந்த ப்ரபாவத்தை யறிந்தால் விலகமாட்டார்.; அணுகவே அணுகுவார்.

(ராமாயணம் – ஸம்க்ஷேபம்) (கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாதரோஷஸ்ய ஸம்யுகே) என்றபடி அச்சமு முறுவாரமரர்.
(க்வாஹம் ரஜ:ப்ரக்ருதி:) என்று ப்ரஹ்லாத ஸ்தோத்ர ச்லோகத்தைப் பிள்ளையும் நாயனாரும் உதாகரித்தார்கள். –
அங்கே (ரஜ, ப்ரக்ருதி:, பத்மகரப்ரக்ருதி ) என்ற ப்ராசீனப் பாடங்களைக் காண்கிறோம்.—
(ரஜ:ப்ரபவ:) என்றும் (பத்மகர: * ப்ரஸாத:) என்றும் இப்போது ஸார்வத்ரிக பாடம்.
ப்ராசீந பாடங்களில் கொஞ்சம் ரஸம் தொக்கி நிற்கின்றது.

இவ்வஸுரகுலத்தில் பிறந்த ஆஸுர ப்ரக்ருதியான நானெங்கே? உம்முடைய தயா குண மெங்கே?
என் சிரஸ்ஸில் வைக்கப்பட்ட தாமரை ஹஸ்த ப்ரஸாதம் ப்ரஹ்மாவுக்கு மில்லை; சிவனுக்குமில்லை,
(இப்பொழுது) லக்ஷ்மிக்குமில்லை.’

3) ( த்வத்வீர்ய காயன மஹாக்ருதமக்ன சித்த:): என்று பாட்டாய் பல பாடும் இன்பக்கடலினிலாழும்
ப்ரஹ்லாதாழ்வாரை நினைப்பது உசிதம். ஆழ்வார்கள் பரஸ்பர ஸஜாதீயர்.
பிறர்களுக்கு அரிய ‘ என்றதால் பத்துடையடியவர்க் கெளியவன்’ என்பது தானே ஸித்திக்கிறது.
அமரர்க்கரியனைத் தமர்கட் கெளியானை ‘ அவரை நாம் தேவரென்று அஞ்சினோமே. ”

ஆதிப் பிரான்-
(1) ஆதி –(அஹமாதிர்ஹி பூதாநாம்) என்று கீதை. ஆதி காரணப் பொருள் என்று பயந்து அகன்றார்கள்.
நாம் அணுகுவதற்கு முன்பே தானே வலுவில் முதலில் மேல் விழுந்து உள் நுழைந்து நமக்கு
ஸத்தையை உண்டாக்கும் ‘ஆதி’ என்றறியவில்லை. (பூர்வ பாஷீ ச ராகவ:)
‘என்னின் முன்னம் பாரித்துத்தான் என்னை முற்றப்பருகினான்’ என்று பாடிய ஆதிப் பிரான்
திருவருள் பெற்ற ஆழ்வாரையும், அவர் ஒன்றும் தேவில் பரத்வ நிர்ணயம் செய்த ஆதிப் பிரானையும் நினைக்கிறார்.
திவ்ய தேசத்து எம்பெருமான்களில் ஆதிப்பிரான் ‘அரங்கன்’ என்பர்.

(3) அவதார வேஷங்கள் அரங்கத்திலேற்படுவது உசிதம்.
(ரங்கதாம் யாதி ரங்கம்) அவதார நாடகங்கள் அரங்கத்திலாட்டம். எல்லா அவதார வேஷங்களுக்கும் ஆதி அரங்கம்.
தசாவதார நாடகங்களும் அரங்கத்திலாட்ட மென்று தசாவதார ஸ்தோத்ர பூமிக ச்லோகம்.
(ரங்கேதாமநி லப்தநிர்பரரஸைரத்யக்ஷிதோ பாவுகை) இவ்வாழ்வாரும் அந்த நாடகங்களைப் பார்த்து ரஸிக்கும் ஓர் பாவுகர்.

அரங்கத்து அமலன் ;–
(1) ந்ருஸிம்ஹாவதாரம் சில க்ஷண காலமே. உக்ரம் என்றும் பீஷணம் என்றும் முதலில் அநுஸந்தாநம்.
‘பயக்ருத் பயநாசம் என்னுமிடத்தில் முன்பு ‘பயக்ருத்’ என்று ஆபாதபிரதீதி.
‘பத்ரர் ‘ என்பதே ஸஹஜத்வம். – பயநாசந: ‘ – என்பது ஸாமாந்யமாக.
ந்ருஸிம்ஹன்: ம்ருத்யு ம்ருத்யுவாகிறவர். ம்ருத்யு பயத்தையும் ஹரிப்பவர்.
உக்ரரும் பீஷணருமா யிருப்பதும், ஆச்ரித விரோதி விஷயத்திலும். ஆஸ்ரிதருக்கு வரும் ம்ருத்யு பய விஷயத்திலும்,
அரங்கத்தமலனிடம் பய ப்ரஸக்தியே இல்லை. ‘ஆராத வருளமுதம் பொதிந்த கோயில்.’

(2) ப்ரஹலாதனொருவனுக்கே , ஸ்வல்ப க்ஷணங்கள் மட்டுமே என்றபடியல்லாத
ஓர் விலக்ஷண சுத்தியாகுமென்று பிள்ளைபும் நாயனாரும் பணித்த படி.

(3) (காந்தம் வக்த்ரம், சந்த்ரகாந்தானனம் ராமம்) என்றதுபோல.
‘சந்த்ரனும் தாமரையும் ஒன்றினாற்போலே யிருக்கிற திருமுகத்தில்’ என்று போகம்.-

கரியவாகி :-
(1) ‘நிகரில்லாத நீல ரத்நம் போலே இருக்கிற தாரகையின் நிறத்தாலே நீலோத்பல வர்ணங்களாய்’ என்று போகம்.
திருமேனியின் நிறத்தை யொத்தது கருவிழி யென்னும் தாரகை. சந்த்ர முகத்தில் தாரகை யென்னும்
நக்ஷத்ராநுபவம் சப்த மாத்ரத்தால் ஸ்புரிப்பது. சந்த்ரனுக்கும் – நீலோத்பலங் களுக்கும் மைத்ரீ.
பின்பு அரவிந்த மென்னும் விரோதியும் விரோதத்தை விட்டு உவமையாய்ச் சேருகிறது.

(2) ‘விடாய்த்தவர் முகத்திலே நீர் வெள்ளத்தை வெட்டி விட்டால் போலே யிருக்கை’ என்று பிள்ளை.
‘கண்ணனைக் கண்டபோதே தாபத்ரய தப்தருடைய ஸகல தாபங்களும் போம்படி குளிர்ந்திருக்கு மென்னுதல்’ என்றும்,
‘புண்டரீகம் போலே வெளுத்திருக்கிற திருக் கண்களுக்குப் பரபாகமாகும் படி இரண்டு கருவிழி யுடைத்தாய்’ என்றும் நாயனார்.

புடை பரந்து :–
(1) ‘ஆச்ரித தர்சந ப்ரீதியாக அன்றலர்ந்த தாமரைப் பூப்போலே அதி விகஸிதங்களாய்’ என்று போகம்
(2) கடலைத் தடாகமாக்கினாற்போலே இடமுடைத்தாயிருக்கை ‘ என்று பிள்ளை –
(தயாசிசிரிதாசயா ஜலதிடிம்ப டம்பஸ்ப்ருச:). என்று அபீதிஸ்தவ வர்ணநம்.
திருமேனி ஓர் குட்டிக் கடலாக அநுபவம். – திருக்கண்களே ஓர் தயாபூர்ணமான குட்டி ஸமுத்ர மென்று பிள்ளையின் கருத்து.

மிளிர்ந்து :–
[1] ஆஸந்நரானா ரெல்லார் பக்கலிலும் ஆதரம் தோன்றும் படியான உல்லாஸத்தை யுடையவையாய்’ என்று போகம்.
அதி நீசரான என் பேரிலும் விழுந்து என்னைப் பருகுவது என்பது கருத்து. (லோசநாப்யா பிபந்நிவ]
[2] க்ருபா பரிதமாயிருக்கையாலே கரையருக்கும் வழிபோக வொண்ணாதபடி திரைவீசுகை.
கண்களின் தவரையைச் சொல்லுகிறது என்று நாயனார். குட்டிக் கடல் அநுபவமும் அதில் அலைய நுபவமும் ஓடுகிறது.

செவ்வரி ஓடி. –
[1] அநந்யர் பக்கல் அநூராகத்திற்குக் கீற்றெடுக்கலாம் படியான சிவந்த வரிகளாலே –
வ்யாப்தங்களாய்’ – என்று போகம்

(2)ஸ்ரீய:பதித்வத்தாலும் – வாத்ஸல்யத்தாலும் சிவந்திருக்கை” என்று பிள்ளை .

[3] ஜிதந்தே புண்டரீகாக்ஷ) என்று ஓர் மங்களப் பாட்டு.

நீண்ட :-
(1) ஸ்வபாவ ஸித்தமான ஆயாமத்தை உடைய’ என்று போகம்.
(2)’செவியௗவும் அலையறிகை’ என்று பிள்ளை தம்மளவும் கடாக்ஷம் தந்து விஷயீகரித்த படியும்’ என்று நாயனார்.

2) முதல் பாசுரத்தில் திருக் கமலபாதம் தம் கண் வரையில் நீண்டு வந்ததை அநுபவித்தார்.
இங்கே ப்ரத்யேக அவயவங்களின் அநுபவம் திருமுகத்துத் திருக்கண்களோடு முடிகிறது.
கடாக்ஷங்கள் க்ருபா ப்ரேமைகளோடு நீண்டலைத்துத் தம்மீது – மோதுவதை அநுபவிக்கிறார்.
(தூரதக்தாபி முக்யம்) யார் வருகிறாரென்று வெகுதூரம் நீண்டு பார்த்துக் காத்திருக்கும் ஸ்வபாவம்.

அப் பெரியவாய கண்கள் :-
(1) ப்ரஹ்மத்தின் கண்கள் மிக விஸ்தாரமாகின்றன. ப்ரும்ஹத்திலும் ப்ருஹத்தானவை.
இக் கண்களின் பெருமை சொல்லிலடங்காத தென்பதை அப்பெரிய’ என்பதால் விளக்குகிறார்.

(2) ப்ரஹ்மத்தின் கண்கள் ப்ரும்ஹிதமாகின்றன. கண்கள் – க்ருபை வெள்ளத்தால் உடம்பெல்லாம்
கண்ணாகச் செய்யப் பார்க்கின்றன’ என்று பட்டர் ஸ்தவம். (ஸகலாங்கம் கில ஸர்வதோக்ஷி நேத்ரே)

என்னைப் பேதைமை செய்தனவே –
என் நீசத்தன்மயை நினைத்து நானெத்தனை ஓதுங்கப் பார்த்தும், என்னைப் பலாத்கரித்து
என் நெஞ்சையே யழித்து, என்னை மூர்ச்சிதன் போல நினைவு சக்தி முதலியனவற்றவனாக்கி விட்டன.
ஆநந்த மூர்ச்சை (ஆனந்தநேன ஜடதாமாதனோதி) – சுகவெள்ளம் விசும்பிறந் தறிவை மூழ்கச் சூழ்ந்தது.’

————

ஆலமாமரத்தி னிலைமேலோரு பாலகனாய்
ஞாலமேழுமுண்டா னரங்கத்தரவினணையான்
கோலமாமணியாரமும் முத்துத்தாமமும் முடிவில்ல தோரெழில்
நீலமேனி ஐயோ! நிறைகொண்ட தென்நெஞ்சினையே. .9.

மா – பெரிதான;
ஆலமரத்தின் – ஆலமரத்தினுடைய;
இலைமேல் – (சிறிய) இலையிலே;
ஒரு பாலகனாய் – ஒரு சிறு பிள்ளையாகி;
ஞாலம் ஏழும் உண்டான் – ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும்;
அரங்கத்து – கோயிலிலே;
அரவு இன் அணையான் – திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியின் மீது சாய்ந்தருளுபவனுமான ஸ்ரீரங்கநாதனுடைய;
கோலம் – அழகிய;
மா – சிறந்த;
மணி ஆரமும் – ரத்னங்களாற் செய்யப்பட்ட ஹாரமும்;
முத்துத் தாமமும் – முத்து வடமும் (ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திருவாபரணங்கள்);
முடிவு இல்லது – எல்லை காணமுடியாமல் அபரிதமாக விளங்கா நிற்கப் பெற்றதும்;
ஓர் எழில் –ஒப்பற்ற அழகையுடையதும்;
நீலம் – கருநெய்தல் மலர் போன்றதுமான;
மேனி – திருமேனியானது;
என் நெஞ்சினை – எனது நெஞ்சினுடைய;
நிறை – அடக்கத்தை;
கொண்டது – கொள்ளைகொண்டு போயிற்று;
ஐயோ—இதற்கென் செய்வேன் என்கிறார்.

ஆலமாமரத்தின் இலையின்மேல் ஒரு பாலகனாய்:–திருவடி முதல் திருமுகம் வரையில்
ஆபாதசூடம் அவயங்களை அனுபவித்து, அரங்கத்தமலன் முகத்துத் திருக்கண்களின் குளிர்ந்த கடாக்ஷங்களைப் பெற்று அனுபவித்தார்.
‘அமலன்’ என்று த்யானத்தைத் தொடங்கினவர் அமலனாகவே ஸுமுகமாய்க் குளிரக் கடாக்ஷிக்கப் பெற்றார்.
அமலனென்று தொடங்கிய த்யானத்திற்கு அமலன் முகத்துக் கடாக்ஷம் பலம். தத்க்ரது ந்யாயம், யதோபாஸனம் ப்ராப்தி.
அவய வர்ணனப் பாசுரங்களில் உபக்ரமப்படியே உபஸம்ஹாரம். அமலனென்று தொடங்கி அமலனென்று அவய வர்ணனையில் ஸமாப்தி.

(2)(காரணம் துத்யேய என்றபடி , காரணமாக அரங்க ப்ரும்மத்தை த்யானம் செய்கையில், காரணத்வத்தை
விஸ்தாரமாக விளக்கும் சாந்தோக்ய ஸத்வித்தையில் கூறிய ஆலமாமர த்ருஷ்டாந்தத்தை
‘ஆலமாமரத்தின்’ என்பதால் வ்யஞ்சனம் செய்கிறார்.

மஹாந்யக்ரோதாஸ்திஷ்டதி –‘இதோ இங்கே ஆலமரம் நிற்கிறதே ஆலம்பழமொன்று எடுத்து வா’ என்றார்
தகப்பனார் மகன் ச்வேதகேதுவைப் பார்த்து. அவன் கொணர்ந்ததும் அதை உடைத்து ஒரு விதையை எடுக்கச் செய்து,
அதனைக் கிழிப்பித்து, ‘உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்டார். ‘ஒன்றையும் காணேன்’ என்றான் மகன்.
‘இந்த நுண்ணிய விதையிலிருந்து இவ்வாலமரம் விரிந்தது.
இதுபோல ஸத் என்னும் ஸூக்ஷ்ம ஸூக்ஷ்மமான அணிமையிலிருந்து புவனம் விரிந்தது. அதிலேயே நிற்கிறது.
அதிலேயே மறுபடியும் லயிக்கிறது என்று தகப்பன் மகனுக்கு விளக்கினார்.
ஒன்றுமில்லை என்று சொல்லலாம்படி நுண்ணிய ப்ரஹ்மத்திடமிருந்து புவனப் பரப்பெல்லாம் விரிந்து முடிவில்
அதனுள்ளே லயித்துக் கிடக்கிறதென்று காட்டும் ஆல மாமர த்ருஷ்டாந்தத்தின் வ்யஞ்ஜனத்தால்
வடதள சிசு லீலைக்காட்சி என்ன அதிசயமென்று கைமுத்ய வ்யஞ்ஜனத்தில் கருத்து.
‘ஒரு பாலகன் அளவான உருத்தான் வேண்டுமோ என்று வ்யஞ்ஜனம்.

(3) ஆலமாமரத்தின் –
பெரிய மரத்தின் பேரில் சயனிக்கலாகாதா? அதையும் ப்ரளயம் செய்து ஒரு சிற்றிலையின் பேரில் தான் சயனிக்க வேண்டுமோ?
அகடிதகடனக் காட்சி ஸேவையில் நோக்கு. குழந்தைக்கு ஏற்ற விளையாட்டில் கருத்து.
பள்ளியாலிலை ஏழுலகும் கொள்ளும்’
‘பாரனாயேழுலகுமுண்டு பிரிவின்றி ஆலிலையன்ன வசஞ்செய்யு மண்ணலார்’
‘அடியார்ந்த வையமுண்டு ஆலினைத் துயின்றவாழியான்’

(4) மார்க்கண்டேயன் கரியே.
சிரஞ்ஜீவியாயிருந்து ப்ரளயத்தில் திருவடிகளை சிரஸால் க்ரஹித்து,
‘அன்று ப்ரளயத்தில் நான் நமஸ்கரித்தவரே இக்கண்ணன்’ என்று பாண்டவர்களிடம் ஸாக்ஷ்யத்தை அறுதியிட்டார்.
ஸோயம் தேவ: என்று ப்ரத்யபிஜ்ஞா ஸாக்ஷ்யம். ஒன்றும் தேவில்,
“புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயனவனை நக்கபிரானும் அன்றுய்யக் கொண்டது நாராயணனருளே”
என்பதை நினைப்பூட்டுகிறது.

(5) “ஆதி” என்று தொடக்கத்தில் ப்ரளய காரணத்வத்தை ஸூத்ரம்போல ஸூசித்ததை இங்கே விளக்குகிறார்.

(6) ஸ்ரீபாகவதத்தின் கடைசி ஸ்கந்தத்தில் மூன்று அத்யாயங்களால் மார்க்கண்டேயர் ப்ரளயத்தில்
பகவானுடைய பரத்வத்தை ஸாக்ஷாத் த்ரஷ்டாவாகக் கண்டு ஸாக்ஷி சொல்வது விஸ்தரித்துள்ளது.
இப்பிரபந்தமும் ஓர் ஸம்க்ஷேப பாகவதம்.
வடபத்ர புடே தோகம் சயாநம் த்வேகமத்புதம் என்று மார்க்கண்டேயர் நேரில் கண்ட ப்ரளயக் காட்சியைச் சொல்லி பாகவதம் முடிவு பெற்றது.
பகவதவதாரமான நர நாராயணர் இருவரும் மார்க்கண்டேயருக்கு ஸேவை ஸாதித்து,
அவருக்குத் தத்வோபதேசம் செய்தார்கள். அர்ஜுனன் ப்ரார்த்தித்து விச்வரூபக்காட்சி பெற்றான். அது ப்ரளயக் காட்சி அல்ல.
ஸ்திதியில் விச்வரூபக் காட்சி. ப்ரளயத்தில் விச்வம் அரூபமாய் அஸத் வ்யபதே சார்ஹமாய் பகவானுக்குள் ஒன்றியிருக்கும்.

மார்க்கண்டேயர் ப்ரளயக் காட்சியை விரும்பிப் பெற்று ஸேவித்தார்.
(ச‌யாந‌ம் ப‌ர்ண‌புட‌கேக்ர‌ஸ‌ந்த‌ம் ப்ர‌ப‌யா த‌ம‌:| மஹாம‌ர‌க‌த‌ ஸ்யாமம் ஸ்ரீம‌த் வ‌த‌ந‌ப‌ங்க‌ஜ‌ம்
ப‌த்ம‌க‌ர்பாருணாபாங்க‌ம் ஹ்ருத்ய‌ ஹாஸாவ‌ லோக‌ன‌ம்) என்று சுக‌ர் வ‌ர்ணித்த‌ மார்க்க‌ண்டேயாநுப‌வ‌ம்
இவ்வாழ்வார் நெஞ்சில் ஓடுகிற‌து.

(மஹாம‌ர‌க‌த‌ ச்யாமம்) என்று சுக‌ர் வ‌ர்ணித்ததை “முடிவில்லாதோரெழில் நீல‌மேனி ஐயோ” என்கிறார்.
மார்க்க‌ண்டேய‌ர் நெஞ்சினை நிறைகொண்ட‌ நீல‌மேனி என் நெஞ்சினை நிறைகொண்ட‌ தென்கிறார்.
ப்ர‌ளாய‌வ‌ஸ‌ர‌த்தில் சித‌சித் புவ‌ன‌மான‌ ச‌ரீர‌ம் இல்லாததுபோல‌ ல‌யித்துக் கிட‌க்கிற‌து.
ப‌க‌வானுடைய‌ திவ்ய‌ம‌ங்க‌ள‌ நீல‌மேனியான‌ ச‌ரீர‌ம் ம‌ட்டும் ஸேவை. ம‌ற்றொன்றின் காட்சியேயில்லை.
திவ்ய‌ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹாம்ருதத்தோடு கூடிய‌ அமுதொன்றே காணும் அவ‌ஸ‌ர‌ம்,
ஸ‌ம்ஸார‌ ப‌ந்தத்தின் ப்ர‌ள‌ய‌மான‌ மோக்ஷ‌ம் இவ்வாழ்வாருக்கு ஸித்திக்கும் அவ‌ஸ‌ர‌மிது.
(ஸ்ரீம‌த் வ‌த‌ந‌ப‌ங்க‌ஜ‌ம் ப‌த்ம‌க‌ர்பாருணா பாங்க‌ம் ஹ்ருத்ய‌ ஹாஸாவ‌ லோக‌ன‌ம்) என்ற‌ப‌டி

முன்பாசுர‌த்தில் திருமுக‌த்தையும் ஹ்ருத்ய‌ க‌டாக்ஷ‌ங்க‌ளையும் அனுப‌வித்தார்.
(ப்ரஹ்ருஷ்டரோமாsத்புத பாவஶங்கிதம் ப்ரஷ்டும் புரஸ்தம் ப்ரஸார பாலகம்”
“யதா புராமுஹ்யததீவ விஸ்மித:”
”தோகம் ச தத்ப்ரேம ஸுதாஸ் மிதேந நிரீக்ஷிதோ பாங்கநிரீக்ஷணேந”
“அத தம் பாலகம் வீக்ஷ்ய நேத்ராப்யாம் திஷ்டிதம் ஹ்ருதி) என்று சுக‌ வ‌ர்ண‌ந‌ ச்லோக‌ங்க‌ள்
இவ்விர‌ண்டு பாசுர‌ங்க‌ளிலும‌் ஆழ்வார் நெஞ்சில் ஓடுகின்ற‌ன‌.
“பால‌க‌னாய்” என்று சுக‌ர் ச்லோக‌ ஸ‌மார‌ண‌ம். (த‌ம‌த்புத‌ம் பால‌க‌ம்) என்ற‌ கோவ‌ல‌ன் அவ‌தார‌ ச்லோக‌த்திற்கும் ஸ்மர‌ண‌ம்.

(7) சிறு குழ‌விக்கேற்ப‌ ஒரு சிறு த‌ளிர்.
“நீரார் க‌ட‌லும் நில‌னும் முழுதுண்டு ஏராரிள‌ந்துளிர்மேல் துயிலெந்தாய்”

ஞால‌மேழும் உண்டு —
(அத்தா ச‌ராச‌ர‌ க்ர‌ஹ‌ணாத்) என்ற‌ சூத்ர‌த்தை நினைக்கிறார். ஸ‌ம்ஹ‌ரிக்க‌ப்ப‌டும் உல‌க‌ முழுவ‌தும்
ஓத‌ன‌ம், சோறு என்று ச்ருதி ஸூத்திர‌ங்க‌ள் பேசுவ‌தை அனுஸ‌ரிக்கிறார்.
இக்குழ‌ந்தைக்கு ஏழுல‌கும் செவ்வெண்ணெய் போலும்.
ஏழுல‌க‌மும் உண்ண‌ இந்த‌ச் சிசு வேஷ‌ம்தான் வேணுமோ?
ச‌ய‌ன‌த்திற்கு ஓர் ஆல‌ந்துளிர்தான் வேணுமோ?
அவ‌ன் ஆச்ச‌ர்ய‌ ஸ‌ங்க‌ல்ப‌மான‌ மாயையை யார் அறிய‌வ‌ல்லார்?

அர‌ங்க‌த்த‌ர‌வின‌ணையான் –
ஓர‌க்ஷ‌ர‌மான‌ ப்ர‌ண‌வ‌த்திற்குள் விச்வ‌மும் அட‌ங்கியுள‌தென்ப‌ர்.
ப்ர‌ண‌வ‌ விமான‌த்திற்குள்
அர‌வ‌ணையில் ப‌ள்ளி கொண்ட‌வ‌னுக்குள் விச்வ‌ம் அட‌ங்கியிருப்ப‌தில் ஐய‌மில்லை
என்ப‌தை விள‌க்க‌ வ‌ட‌ப‌த்ர‌ ச‌ய‌ன‌ சிசு வ்ருத்தாந்தத்தை எடுத்தது.

கோல‌ மா ம‌ணி ஆர‌மும் முத்துத் தாமமும் –
கௌஸ்துப‌ம் போன்ற‌ நித்ய‌ முக்த‌ரெல்லாருக்கும் ஸ்தான‌ம் திருமார்பு. இவ்வாழ்வாருக்குத் திருமார்பு நித்ய‌ஸ்தான‌ம்.
அவ‌தார‌ கார்ய‌ம் முடிகிற‌து. த‌ம் ஸ்தான‌மாகிய‌ திருமார்பில் க‌ண் போகிற‌து.
மாம‌ணி கௌஸ்துப‌ம் ஜீவாபிமானியான‌ நித்ய‌ர்.
முத்துத் தாமமென்ப‌து முக்த‌ர்க‌ளின் கோவையை நினைப்பூட்டுகிற‌து.
நித்ய‌ முக்த‌ர்க‌ள் வாழும் திருமார்பின் அனுப‌வ‌ம்.
இந்த‌ அவ‌தார‌ விக்ர‌ஹ‌த்தைவிட்டு ஸித்தி பெறும் அவ‌ஸ‌ர‌த்தில் இத‌ன் பொருத்த‌ம் ர‌ஸிக்க‌த்த‌க்க‌து.

நீல‌மேனி ஐயோ நிறைகொண்ட‌து என் நெஞ்சினையே –
பெருமாள் திருமேனியிலேயே இவ‌ருக்கு நித்ய‌வாஸ‌ம். திருமேனி இவ‌ரையும் இவ‌ர் நெஞ்சையும் உட்கொண்டு,
இவ‌ரையும் இவ‌ர் நெஞ்சையும் ப்ரும்ஹ‌ண‌ம் செய்கிற‌து. பெருமாளைப்போல‌ இவ‌ர் திவ்ய‌மேனியும் ப்ர‌ஹ்மம்.

(மூர்த‌ம் ப்ர‌ம்ம‌ ததோபி தத்ப்ரிய‌த‌ர‌ம் ரூப‌ம் ய‌தத்ய‌த்புத‌ம்) பெருமாளுக்குள்ள‌ ல‌க்ஷ‌ண‌ம் திருமேனிக்குமுண்டு.
“ப‌க‌வான் எப்ப‌டியோ , அப்ப‌டியே அவ‌ர் வ்ய‌க்தியும்” ப்ர‌ஹ்ம‌ த‌ன்மையும், ப்ர‌ஹ்ம‌ண‌த் த‌ன்மையும் அத‌ற்கும் உண்டு.
முக்த‌ராவாரை ப்ர‌ஹ்ம‌ண‌ம் செய்வ‌து திருமேனியோடு கூடிய‌ ப‌க‌வான். ஞான‌த‌ர்ம‌த்தின் பூர‌ண‌ விகாஸ‌ம்தான் ப்ர‌ஹ்ம‌ண‌ம்.

“நிறை கொண்ட‌து என் நெஞ்சினையே” என்று த‌ர்மபூத‌ ஞான‌த்தின் நிர‌திஸ‌ய‌ விகாஸ‌மான‌ பூர்ண‌தை பெறுவ‌தைப் பேசுகிறார்.
(ஸ‌ம்ப‌த்ய‌ ஆவிர்பாவ‌:) “முடிவில்லதோரெழில்”
(அத்யர்காநல தீப்யமாநஜ்யோதிரனுபவம்) யதத் பராதிவோ ஜ்யோதிர்தீப்யதே) (த்ரிபாதஸ்யாம்ருதம் திவி) என்ற
அனுபவங்கள் கிடைக்கின்றன.

‘ஐயோ’ என்பது ‘ஹாவு ஹாவு ஹாவு’ என்கிற முக்தர் ஸாமகானத்தையும் ஸூசிக்கிறது.
“நிறைகொண்டது” – என் அடக்கத்தை யழித்ததென்று, என் நெஞ்சைக் கொள்ளை கொண்டதென்று பொருளுரை.
என் நெஞ்சு நிறையப் புகுந்து தன்மயமாக்கி விட்டது. நெஞ்சை அதன் வசமாக்கி விட்டது. நிறை = நிறைவு.
முன் பாசுரங்களில் அவயவங்களின் சோபையின் அனுபவம். இங்கே ஸமுதாய சோபையின் அனுபவம்.
அகண்டத் திருமேனியின் அனுபவம். (பாதாம்போஜம்ஸ்ப்ருசதி) என்று சோபானத்தில் முடிவில் அகண்டானுபவம்.
ஸர்வாவய சோபைகளோடும் கூடின ஸமுதாய சோபையாலே பூர்ணமாய் என்று ஆழ்வார் நெஞ்சை போகம் வர்ணித்தது.

இங்கே சொல்லும் ப்ரளயம் அவாந்தர ப்ரளயம்.
‘ஓர் இலையிலே தாயும் தந்தையு மில்லாததொரு தனிக்குழவியாய்’ என்று போகம்.
கர்ணனைத் தாய் ஒரு சிறு பெட்டியில் வைத்துக் கங்கையில் மிதக்கவிட்டாள்.

“அடுக்குக் குலையாமல் மார்க்கண்டேயன் காணும்படி ஸர்வ லோகங்களையும் திருவயிற்றில் வைத்தவன்” என்று
போகம் மார்க்கண்டேயர் அனுபவம் ஆழ்வார் நெஞ்சில் உள்ளதைக் காட்டிற்று.

‘பாலகன்’ என்பதில் “க” என்னும் விகுதி சிறுமையைக் காட்டும்.
“யசோதை குழந்தையும் பெரியதென்னும்படி அத்விதீயனான பாலனாய்” என்று பிள்ளை.
சிறு ப்ரஜைகள் புரோவர்த்தி பதார்த்தங்களை எடுத்து வாயிலிடுமாப் போலே வைத்தானாய்த்து பிள்ளைத்தனம்.
ப்ரளயத்தில் தன் அகடிதகடனாதோ டொக்குமென்னை அகப்படுத்தினபடியும் என்று நாயனார்.

“மருளேயின்றி உன்னை என் நெஞ்சகத் திருத்துந் தெருளே தரும்”,
“திருமால் வந்தென்னெஞ்சு நிறையப் புகுந்தான்”,
“என்னைமுற்று முயிருண்டு” என்று பரமபதம் செல்லும் அவஸரத்தனுபவங்கள்.
“அந்நீலமேனி”, “நீலவரை” என்று திருவாய் மொழி முடிவிலனுபவம்.
“நீலக்கடல் கடைந்தாய்” என்று அந்நீலமேனி ஒளியாலே திருப்பாற்கடலே நீலக்கடலெனலாம்படி ஆயிற்று.

“அம்ருத மதன ஸமய சடுலதர மரகதமணி ச்யாமள திவ்ய மங்கள விக்ரஹ கிரணவாஹிநீ பரம்பரானுஷகத்தாலே
அவிரளோந்மீளதபிநவ குவலய ஜால பாரம்பரீ பரி மண்டிதா போகமானாற்போலே ஸர்வதோ நீலமான க்ஷீரார்ணவத்தை”
என்று ஸாக்ஷாத் ஸ்வாமி உரை. –

முத்து வடமும் (ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திருவாபரணங்கள்);
முடிவு இல்லது – எல்லை காணமுடியாமல் அபரிதமாக விளங்கா நிற்கப் பெற்றதும்;
ஓர் எழில் –ஒப்பற்ற அழகையுடையதும்;
நீலம் – கருநெய்தல் மலர் போன்றதுமான;
மேனி – திருமேனியானது;
என் நெஞ்சினை – எனது நெஞ்சினுடைய;
நிறை – அடக்கத்தை;
கொண்டது – கொள்ளைகொண்டு போயிற்று;
ஐயோ—இதற்கென் செய்வேன் என்கிறார்.

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உப.வே. கோபாலாசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அமலனாதி பிரான் -விளக்கம் –

April 6, 2020

ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் -அவதார ஸ்தலம் ஸ்ரீ திரு உறையூர்-ஸ்ரீ நிகிளாபுரி–கோழியும் கூடலும்-மங்களா சாசனம் –
முனி வாஹனர் -ஆபாத சூடம் -பாத கமலம் -நல்லாடை -உந்தி -உதர பந்தம் -திரு மார்பு -கண்டம் -செவ்வாய் –
வாட்டமில் கண்கள் –அஷ்ட அங்க அனுபவம் -பின்பு திரு மேனி அனுபவம் –
அனுபவ பரிவாஹம் – அடியேன் என்னுமது ஒழிய இப்பிரபந்தம் தலைக் கட்டுகிற அளவிலும்
தம்முடைய ஊரும் பேரும் பேச மறக்கும் படி தாம் பெற்ற அனுபவம் –

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-

திருக் கமல பாதம் அனுபவம் –
திருமகள் கூசிப் பிடிக்கும் மெல்லடி-போக்யத்வம் பாவானத்வம் -இரண்டும் உண்டே – –
ஸ்ரீ லக்ஷ்மீ பூம்யோ:கர ஸரஸிஜை: லாளிதம் – பாதோம் போஜம், —
1–அமலன் -பவித்ரம் -பவித்ராணாம் பவித்ரம்-
2–ஆதி -காரணம்
3–பிரான் –பிரான் உன் பெருமை பிறர் யார் அறிவார் -ஸ்ரீ பொய்கையாழ்வார்-
4–அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -புருஷார்த்த காஷ்டை –பகவத் கிங்கரத்வம் –
த்வத் பரிசாரக ப்ருத்த்ய ப்ருத்த்யஸ்ய –அடியார் அடியார் தமக்கடியார்-
லோக சாரங்க முனிவர் சொல்படி கேட்க வைத்த அருள் –
5–விண்ணவர் கோன்-
6–விரையார் பொழில் வேங்கடவன் –
7–நிமலன் –நிர்ஹேதுக அருள்
8–நின்மலன் –தனது பேறாக அருள் -அவ்விஞ்ஞாதா -அடியார் பிழைகள் நின் கருத்து அடையா –
9–நீதி வானவன் -இமையோர் தலைவன் -அயர்வரும் அமரர்கள் அதிபதி
10–நீள் மதிள் அரங்கத்து அம்மான் -சர்வவித பந்து

திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே —
என் கண்ணுள் நீங்கா, நெஞ்சுள்ளும் நீங்காவே-ஸ்ரீ நம்மாழ்வார்
ஸ்ரீ பாதாம்போஜம் ப்ரதிபலதி மே பாவநாதீர்க்கி காயாம்-ஸ்ரீ தேசிகன் —
மனக்கடலில் வாழ வல்ல மாய நம்பி -ஸ்ரீ பெரியாழ்வார் –

இங்கு திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே -என்று உபக்ரமம்
அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே -நிகமனம் –

அமரர் தம் கோனார்க்கு ஒழியக் கோவர்தனத்துக்கு செய்தான் -பெரிய திரு மொழி -4-2-3-
தனக்கு அடிமைப் பட்டவனை ததீய சேஷத்வத்தில் நிலை நாட்டி அருளினான் –
தனது அபிமானத்தில் ஒதுங்கின இடையர்களை ஸ்ரீ கிருஷ்ணன் அந்ய சேஷமாக்காதபடி நோக்கி
திருமலை ஆழ்வாருக்கு சேஷமாக்கினான் -இப்படி பகவான் செய்யும் சேமத்தை கூறி ஆழ்வார்கள் ஆனந்திக்கிறார்கள் –

விண்ணவர் கோன் –வேங்கடவன் ..அரங்கத் தம்மான் -1-
ஆடும் கருளக் கொடி உடையார் –நல் வேம்கட நாடர் வந்து -நாச்சியார் திருமொழி -10-5-
பரம பதத்தில் நின்றும் கோயில் ஏற வருகைக்கு என்று தங்குகிற தேசம் திருமலை
ஆடும் -பரம பதம் கலவி இருக்கையாய் இருக்க அத்தை விட்டு திருமலையிலே வந்து முகம் காட்டினார் –
ஸ்ரீ வில்லி புத்தூரில் போலே இருந்தது பயணம் –

நீண்ட தோள் சென்று அளந்தது -இரண்டாம் திருவந்தாதி -61
ஒரு காலும் எண் மதியம் கடந்து -என்று திருவடிக்கு வளர்த்தி சொல்ல –இருக்க -திரு முடிக்கு அருளியது
ப்ராப்தமான திருவடிகள் என்று தோற்ற- நீண்ட தோள் என்கிறார் பூதத் ஆழ்வாரும்-

————

உவந்த உள்ளத்தனாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2-

உவந்த உள்ளத்தனாய் —
பக்த பிரகலாதன் வம்ச மஹா பலியைக் கண்ட உகப்பு –
இந்திரனுக்கு இரந்து கொடுத்தோம் என்ற உகப்பு –
பிரஜைகளைத் தீண்டப் பெற்றோமே என்ற உகப்பு –
ஆழ்வார்கள் பாடல் பெற அளந்தோமே என்ற உகப்பு
உலகம் அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த
திருவடியால் அளந்தவன் ஸர்வேஸ்வரேஸ்வரன் என்று காட்டிக் கொடுக்கும் -உயர்த்திய -நிமிர்ந்த -திரு அபிஷேகம்
அன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்-காகுஸ்த வம்ச ஸ்ரீ பெருமாள் அன்றோ இங்கே சேவை –
ஸ்ரீ ராம பானமே அமோகம் -வில்லாண்டான் என்றது கோதண்டத்தை போதும் என்று ஆள்வதையே குறிக்கும் –
கடியார் பொழில் அரங்கத்தம்மான் –வண்டினம் முரலும் சோலை -மயிலினம் ஆலும் சோலை –
கொண்டல் மீது அணவும் சோலை -குயிலினம் கூவும் சோலை -அண்டர் கோன் அமரும் சோலை –
ஸ்ரீ பெரிய பெருமாள் -மரகதமலை—பச்சை மா மலை போல் மேனி அன்றோ –
மரகதகிரிமேல் மாணிக்கவொளி சூழ்ந்தாப்போல்-
அரைச் சிவந்த வாடையின் மேல்–திருப் பீதாம்பர அனுபவம் –
சென்றதாம் என சிந்தைனையே —-சிந்தனை -ஆழ்வாரைப் பிரிந்து வகுத்த இடத்தே சென்றதே –
என் -சாத்விக அஹங்காரம் –

நீண் முடியன் -2-
மலர் புரையும் திருவடி -திரு நெடும் தாண்டகம் -5-
திரு விக்ரமனின் திருமுடி விகாசத்தையும்-திருவடி விகாசத்தையும் அனுபவிக்கிறார்கள் –

—————-

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்-அரங்கனின் வரத்து சொல்கிறது
மண்ணோரும் விண்ணோரும் தொழும் வெற்பு —
மந்தி போலவே அவயவங்கள் தோறும் அலைபடுகிறார் ஆழ்வாரும் –
விஷயாந்தரங்களில் அலைபடுகிறோம் நாம் –
அரங்கத்து அரவின் அணையான்–அரங்கத்தம்மான் கீழ் இரண்டிலும் -இங்கு அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ இங்கு அந்தி என்றது
காலை மாலை சந்திகள் இரண்டையும் -காலை சந்தி -மயர்வற மதி நலம் -ஞான உதயம்
மாலை சாந்தி -குளிர்ந்து -தாபத்ரயம் போக்கி அருளும் –
அடியேன் உள்ளத்து இன்னுயிரே–கீழே இரண்டிலும் என் கண் -என் சிந்தனை -என்றவர் இதில் அடியேன் –
இதில் உள்ளத்து இன் உயிர் என்று ஜீவாத்மாவைச் சொல்லி –
ஆத்ம தாஸ்யம், ஹரே : ஸ்வாம்யம்-என்பதால் அடியேன் –
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரினாம் -கண்டவர் தம் மனம் வழங்கும் பெருமாள் அன்றோ

எழில் உந்தி -3-
காமனைப் பயந்த காளை -திருவாய் மொழி -10-2-8-

எழில் உந்தி -என்று இளகிப் பதிக்கை-பிரசவாந்தம ச யௌவனம் -என்கிறபடி அன்றிக்கே இருக்கை-
பிரமனை உண்டாக்கிய பின்பும் ஒளியும் அழகும் மிக்கு -யோ ப்ரஹ்மானாம் விததாதி தம ஹ தேவம – விளங்குகிறான் –
பயந்த என்று பிரசவத்தை சொல்லி–காளை -என்று யௌவனத்தை கூறினார் இறே –

மூன்றாலும் ஓங்காரம் சொல்லி -அமலன் -உவந்த -மந்தி -பாவோ நான்யத்ர கச்சதி –
அடுத்த நான்கையும் சேர்த்து – அமலன் உவந்த மந்தி ச பாதுகை -அடி சூடும் அரசு-

———————

சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன்–ஓர் -அத்விதீயம்
ஒட்டி -இன்று போய் நாளை வா என்றது ஸூசகம்
ஓத வண்ணன்-கோபமாஹாரயேத் தீவ்ரம்-கோப வசமானாலும்-ஸ்வரூபம் மாறாதே -முகில் வண்ணன் அன்றோ இங்கு
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் –முகிலைக் கண்டு தானே மயிலினம் ஆலும் -வண்டினம் முரலும் –
திரு வயிற்று உதர பந்தம் —-தேட்டரும் உதர பந்தம் –அரை ஞான்- மேகலை- ஒட்டியாணம் -அனுபவம் –
அரங்கனுக்கு தேட்டரும் திறல் தேன் அன்றோ
என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே –பந்தம் என்ற பெயர் -ஆனால் உலாவுகின்றதே –
தாமோதர ஈடுபாடு எத்திறம் என்னப் பண்ணுமே-

மதுர மா   வண்டு பாட மா மயில் ஆட -அமலனாதி பிரான் -4
வண்டு பலவிசை பாட மயிலாலு -பெரிய திருமொழி -3-9-3-
மயில் நடமாட வண்டு தான் இசை பாடிடும் -பெரிய திருமொழி -4-2-3-

——————–

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன் வாரமாக்கி வைத்தான்–கானோ மறி கடலோ வானோ கண்டிலமால்
அதுக்கும் மேல் அடியார்க்கு என்னை ஆட் படுத்தி அருளினான் –
அத்துடன் இல்லாமல் மறப்பேன் என்று
வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்–என்னுள் புகுந்தான்
கீழே –
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே -என்றவர் –
இதில்
அவனே புகுந்ததை அருளிச் செய்கிறார்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான்–கீழ் பாசுரங்கள் போலே அவனது விபவ சேஷ்டிதங்கள்
எதுவும் இல்லாத பாசுரம் –
இதில் அடியேனைப் பெற அவன் செய்த கோரா மா தவத்தையே அருளிச் செய்கிறார் –
அடியாரானார்க்கு இரங்கும் அரங்கனாய பித்தன் அன்றோ இவன் –
திரு ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–ஸ்ரீ வைஜயந்தி மாலையின் பிரபாவம் அன்றோ –
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பு அன்றோ–
ஸூபாஸ்ரய மிதுன திவ்ய மங்கள விக்ரஹம் கண்ட பிரபாவத்தை அருளிச் செய்கிறார்

மற்ற ஒன்பது பாசுரத்திலும், “கவர்ந்ததுவே”, “உலாகின்றதே”, “சென்றதுவே”, “ஒக்கின்றதே”-ன்னு பாடும் இவர்…”திரு-ஆர-மார்பு” என்பதால் “ஆட்கொண்டதே” என்று பாடுவதில் தான் எத்தனை லயிப்பு!

தத்வக்ஷஸ் ஸ்தல “நித்ய” வாஸ ரஸிகாம்-பத்மாலங்க்ருத பாணி பல்லவ யுகாம்,
பத்மாசனஸ்தாம் ஸ்ரீயம்!-வாத்ஸல்யாதி குணோஜ்வலாம்,
பகவதீம்ம்ம்ம் வந்தே ஜகன் மாதரம்!

———————–

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6-

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் -பிறையின்-துயர்–சந்திரனின் துயர்-சந்த்ர சேகரின் துயர் தீர்த்தவன்
அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்–அஞ்சிறைய மட நாராய் –இனக்குயில்காள் –
மென்னடைய அன்னங்காள்-அகன்றில்காள் -சிறு குருகே-வரி வண்டே-இளங்கிளியே -போன்ற ஆச்சார்யர்கள் –
நல்லார் வாழும் நளிர் அரங்கம் அன்றோ –
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும் உண்ட கண்டம் கண்டீர் —
ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும், –
வையம் எல்லாம் பிள்ளை வாயுள் கண்டாள்-

முற்றும் உண்ட கண்டன் -6
நீடு உலகு உண்ட திறங்கிளர்வாய -திருவாய்மொழி -6-6-3
எஞ்சாமல் வயிற்று அடக்கி -பெரிய திருமொழி -2-10-1-

சேஷ பூதனுக்கு கைங்கர்யம் தாரகமாய் இருப்பது போலே
இவற்றின் ரஷணம் இவனுக்கு தாரகமாய் இருக்கும் –
உலகு உண்ட திறங் கிளர்வாய-ரஷகத்வ ப்ரகாசகமான திரு வதரம் -வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே –
வயிற்று அடக்கி-பிரளய ஆபத்தில் உலகத்தை வாயாலே உட் கொண்டு கண்டத்தின் வழியாக திரு வயிற்றிலே வைத்து நோக்கினான் –
நிரபேஷ ரஷகத்வம் -இப்படி ஆழ்வார்கள் அனுபவிக்கிறார்கள் –

—————

கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7-

கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல் மெய்யினார் -திருமேனி அனுபவம்-திவ்ய சஷுஸ்-காட்டவே கண்டார்
துளப விரையார் கமழ் நீண் முடி–நீள்முடி-2-பாசுரம் -நாற்றத்துழாய் முடி –ஸ்ரீ ஆண்டாள் –
யெம் ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார் செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே —
ஐயோ என்னப் பண்ணுகிறதே -என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தாரே–

ஆர் – நிறைந்த; நன்றாக; அழகான;
சுரி – சுழி; துளை
ஆர் சுரி சங்கு – நன்றாக சுழிந்துள்ள சங்கு;
ஆர் சுரி சங்கு – கலை அழகு மிகுந்து விளங்கும் அழகான துளை சங்கு;
ஆழி – சக்கரம்
அனலாழி – தீ உமிழும் சக்கரம்; கண்ணை பறிக்கும் ஒளியுடன் திகழும் சக்கரம்;
வரை – மலை
மெய் – உடல்
துளபம் – துளசி
துளப விரை – துளசி மணம்.
துளப விரை ஆர் கமழ் – துளசி மணம் நிறைந்து கமழும்.
அணி – அழகு, அன்பு, இனிமை; அடுக்கு; வரிசை; ஆபரணம்
அரவு – நாகம்; (இங்கு ஆதிசேஷன்)
மிசை – மேல்; மேலிடம்
மேய்தல் – உறைதல்
செய்ய வாய் – சிவந்த வாய்

கை வண்ணம் தாமரை; வாய் கமலம் போலும்; கண்ணினையும் அரவிந்தம்; அடியும் அஃதே;

அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ!
அரங்கன் திருமேனியில் ஒரு தாமரைக் காடே பூத்து இருக்கு!
ஒரு தாமரை, இரு தாமரை அல்ல! பெரும் தாமரைக் காடு!

தாமரைக் காடு பூத்து = எம்பெருமான் திருமேனியில் மொத்தம் ஒன்பது தாமரைகள்!
* திரு விழிகள் = 2
* செவ்விதழ்கள் = 2
* முகத் தாமரை = 1
* பத்ம நாபம் (தொப்புள் கொடி) = 1
* திருவடிகள் = 2
* இதோடு கூடே…மலர்மாமகள், அலர்மேல்மங்கை அவன் மார்பில் = 1
இப்படி உடலெங்கும் தாமரைக் காடு பூத்துள்ளது!

——————-

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே ————-8–

கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப் பெரிய வாய கண்கள் -அப்பாஞ்சசனியம்– —
நிகரில்லாத நீல ரத்னம் போலே யிருக்கிற தாரகையின் நிறத்தாலே நீலோத்பலம் போன்று.-
ஸ்வாகதோதார நேத்ரம்-அப்பொழுதைத் தாமரைப்பூ –ஸரோஜஸத்ருசா–
ஜிதம் தே புண்டரீகாக்ஷ:-ஈச்வரோஹ மென்றிருப்பாரைத் தோற்பித்து
நமஸ்தே என்று திருவடிகளிலே விழப் பண்ணும்.

ஆதிப் பிரான் -8
மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–திருவாய் மொழி -5-3-1-

தான் முற் கோலி உபகரிக்குமவன் -பிரகலாதனுடைய விரோதியை முற் பாடனாய் சென்று
போக்கின உபகாரத்தை நினைத்து சொல்லுகிறார் -ஆதிப் பிரான் என்று –
நம்மோட்டை கலவிக்கு அவன் முற் பாடனாகச் செய்தே பிரிவில் ஆற்றாமைக்கு நான் பிற்பாடை யாகவோ –
ஆழ்வாருடைய ஆன்ம ஷேமத்துக்கு அவன் முற்பட்டமை -ஆதி -என்று கூறப் பட்டது –

——————————

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே ——–9-

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்–வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம் பாலம்.–அவாந்தர பிரளயம்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்–அண்டரண்ட பகிரண்டத் தொரு மாநில மெழுமால் வரை கீழே-6-பாசுரம்–
வைய மேழும் கண்டாள் பிள்ளை வாயுளே–ஒரு–அத்விதீயன்
பேயிருக்கு நெடு வெள்ளம் பெருவிசும்பின் மீதோடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக்கொண்ட –பெரிய திருமொழி -11-6–பதிகம்
முழுவதும் இதன் அனுபவம்
அகில புவந ஜந்மஸ்தேம பங்காதிலீலே —
ஆலிலை சயனம் விட்டு அரவணை துயில அன்றோ அரங்கத்துக்கு எழுந்து அருளினான்
ரக்ஷகத்வம் -காரணத்வம்-திவ்யாத்ம ஸ்வரூபம்–திவ்ய மங்கள விக்ரஹம்-மிதுன அனுபவம்

கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும்–கோல மா மணி ஆரமும் -கோல மா முத்துத் தாமமும்-முக்தாஹாரமும் –
முடிவில்லதோ ரெழில் நீல மேனி –நீள் வரை போல் மெய் –
முடிவு இல்லாதோர் எழில் நீல மேனியாலும் ஆரங்களாலும் -ஆபரணத்துக்கு அழகு கொடுக்கும் பெருமாள்-
பூஷாயுதை ரதிகதம் நிஜ காந்திஹேதோ–ஸ்ரீ தேவநாயக பஞ்சாசத் –
அதிகரண சாராவளி -தாத்பர்ய ரத்னாவளி -என்ற பெயர்களும் இதனாலேயே –
ஸர்வபூஷண பூஷார்ஹா–ஸ்ரீ திருவடி –
ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே –சிந்தை கவர்ந்ததுவே–7-பாசுரம் —
மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ ஐயோ! –கம்பர் —
ஐயோ! கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே. –திருவாய்மொழி–
ஐயோ —
பச்சையுடையுடுத்துத் தனக்குள்ளத்தையடையக் காட்டி, எனக்குள்ளத்தை யடையக் கொண்டான்–ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை —
பச்சை மா மலை போல் மேனி அன்றோ-

————————

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே— 10–

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்-உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை-செய்ய வாய் -7-பாசுரம் –
வெண் தயிர் தோய்ந்த செவ்வாய்-குலசேகரப் பெருமாள் –
தயிருண்டவாய் துடைத்த–
வைகலும் வெண்ணெய் கை கலந் துண்டான் பொய் கலவாதென் மெய் கலந்தானே
இதில் மட்டுமே ஸ்ரீ கிருஷ்ண அவதார அருளிச் செயல்
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்–அமுதன் என்று இல்லாமல் அமுது என்கிறார் -அனுபவிக்கப் பண்ணுவித்தானே
ஊர் பேருமரங்கமே-
இவனும் முகில் வண்ணன் அன்றோ -வெண்ணெய் முடை நாற்றம் இன்றும் உண்டே –
வண்ணம் -நிறத்துக்கும் வள்ளல் தன்மைக்கும் –
அநாலோசிதவிசேஷ அசேஷலோக சரண்ய-
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன்-என்று அன்றோ படுகாடு கிடக்கிறான் –
அடியேன் -என்று -3-5-6–பாசுரங்களில்
மற்றவற்றில் என் -என்று -சாத்விக அஹங்காரம்
ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது —
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னையாளுங் கொண்டு
கண்ட கண்கள்—-அமுதினைப் பருகிய என்று இல்லாமல் கண்ட கண்கள் –
முதல் பாசுரத்தில் கண்ணினுள்ளே ஒக்கின்றது -பார்த்தோம் –
கண்ட கண்கள் -வகுத்த விஷயத்தை அன்றோ கண்டது -கண் படைத்த பிரயோஜனம் பெற்றார் –
மற்றொன்றினைக் காணாவே.

கோவலனாய் வெண்ணெய் உண்ட -அமலனாதி பிரான் -10
நெய் பருக நந்தன் பெற்ற -பெரிய திருமொழி -5-5-3-

கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தான் -10
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா -திருவாய்மொழி -5-7-6-

கோவலனாய் வெண்ணெய் உண்டானைப் போலே
கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தான் –
யசோதை பிராட்டி வெண்ணெயில் பண்ணின ஸ்ரத்தையை -என் நெஞ்சிலே பண்ணி அனுபவித்தவன்
வைத்த குறி அழியாது இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே ஆய்த்து இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போனபடி –
வெண்ணெய் விழுங்கி வெறும் கலம் ஆக்கினால் போலே -உள்ளம் கவர்ந்து வெறும் உடம்பு ஆக்கினான் –
ஏனமாய -பிரளயம் கொண்ட பூமியை மகா வராகமாய் எடுத்தாய்
ஸ்ரீ கிருஷ்ணனாய் சம்சார பிரளயம் கொண்ட என்னை எடுத்தாய் –
திருப் பாண் ஆழ்வார் திரு உள்ளத்தை மணாளன் அரங்கன் கவர்ந்தான் –
இது தனக்கு திருஷ்டாந்தம் ஸ்ரீ கிருஷ்ண நவநீத சௌர்யம்
ஆழ்வார் சம்சார ஆரணவம் அமுங்கி கிடக்க பகவான் உத்தாரணம் செய்து அருளினான்
இதுக்கு திருஷ்டாந்தம் ஸ்ரீ வராஹ பூமி உத்தாரணம் -என்றது ஆயிற்று –

—————–

பாணர் ஸ்ரீவத்ஸத்தின் அம்சம் என்பர். ஸ்ரீவத்ஸ ரென்னும் நித்ய சூரி பாணராக அவதரித்தார் போலும்.
ஸ்ரீவத்ஸத்தின் ஸ்தானம் திருமார்பு.
‘அரங்கத்தம்மான் திருவார மார்பதன்றோ அடியேனை யாட்கொண்டதே’ என்று தன் நித்ய ஸ்தானமான
திருமார்பு விஷயத்தில் மட்டும் பாடுகிறார்.
ஒன்பதாம் பாட்டில் அகண்ட நீலமேனி அனுபவத்திலும்
“கோல மாமணி யாரமும் முத்துத் தாமமும்” என்று தம் நித்ய ஸ்தான மாகிய திரு மார்பின் கண் சென்றது.
“ஆட்கொள்வது” என்பது இவ்வாழ்வார் அனுபவத்தில் திருமேனியில் வஸிப்பது.
“அடியார்க்கு என்னையாட்படுத்த விமலன்” என்றவிடத்திலும் தோளில் வஹிக்கப்பட்டது ஆட்பட்டதாயிற்று.
திருமார்பில் வஹிக்கப்படுவது இவர் பெருமாளுக்கு ஆட்பட்டது.
சேஷர்களான சக்கரத்தாழ்வான் பாஞ்சஜன்யாழ்வான் முதலியவர்கள் பெருமாள் திருத்தோள்கள் முதலிய
அங்கங்களில் வஹிக்கப் படுகிறார்கள்.
சங்காழ்வானும் சக்கரத்தாழ்வானும் பெருமாள் தோள்களிலேறி அங்கிருந்தபடியே அவருக்கு ஆட்பட்டார்கள்.
அது போலவே இவரும் லோக சாரங்கமுனி தோளிலும், ஸ்ரீவத்ஸ மாகப் பெருமாள் திருமார்பிலும் ஏறி ஆட்பட்டார்.
திருமார்பு தவிர மற்ற ஓரிடத்திலும் இப்படிப் பாடவில்லை.
அடியாரான லோக சாரங்கமுனி விஷயத்திலும் முதற்பாட்டில் இவ்விதமாக ‘ஆட் படுத்த’ என்று பாடக் காண்கிறோம்.

ஸ்ரீ வத்ஸத்தைப் பற்றி பாகவதம் தசம ஸ்கந்தம் முடிவில், ப்ருகு மஹர்ஷி பொறுமை பரீக்ஷை மூலமாய்ப்
பரத்வ பரீக்ஷை செய்த கதையொன்றுண்டு.
அடியாராகிய ப்ருகு மஹர்ஷியின் அடியடையாள மென்ற ப்ரஸித்தியோடு ஸ்ரீவத்ஸம் என்ற மரு விளங்க
வேண்டுமென்று பெருமாள் அனுக்ரஹம்.
ஸ்ரீவத்ஸத்தை ஸ்ரீதேவி வத்ஸன் போல – குழந்தையைப் போல – லாளநம் செய்ததாகவும்,
அதனால் ஸ்ரீவத்ஸம் என்று திருநாமம் என்றும் ஸ்ரீசங்கராசார்யார் விஷ்ணுபாதாதி கேசாந்த ஸ்தோத்ரத்தில் பாடுகிறார்.
திருமருவும் திருமார்பில் ப்ருகுவின் பாதம் உதைத்தது.
அந்தப் பாத சிந்ஹத்தை பகவான் நித்யமாய் ஸ்ரீவத்ஸ வ்யாஜ்யத்தால் வஹிக்கிறார்.
இது பெருமாள் தன்னை அடியார்க்காட் படுத்தும் முறையைக் காட்டின வழி.
‘திருவார மார்பதன்றோ’ என்று இவ்வாழ்வாரே, திரு மருவின மார்பில் ஸ்ரீவத்ஸத்திற்கும் இடம் கொடுத்த பெருந்தன்மையி லீடுபடுகிறார்.
லோகஸாரங்க முனியின் தோளில் எழுந்தருளுகையில், இவர் திருவடிகள் அம் முனிவர் மார்பில் தானே ஸ்பர்ஸித்திருக்க வேண்டும்!
பக்தரான ப்ருகு மஹர்ஷியின் பாதம் பெருமாள் திருமார்பில் ஸ்பர்ஸித்து ஸ்ரீவத்ஸம்போல் அபிமானமேற்பட்டது போல்,
இந்த ஸ்ரீவத்ஸாம்சர் பாதம் பக்தரான லோகஸாரங்க முனிவர் மார்பில் ஸ்பர்சித்தது.

இவர் கண்ணனைப்போல ரோஹிணீ நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்.
“காண்பனவும் உரைப்பனவும் மற்றொன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய காதற் பாண்பெருமாள்” என்றபடி,
இவரும் சடகோபரைப் போல் க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமே வடிவெடுத்துதித்தது போல் இருந்தவர்.
தீவிர க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வம்” என்று “கடியகாதல்” என்பதால் ஸூசநம்.
முக்தி பலம் பெற்ற கடைசிப் பாசுரத்தில் “கொண்டல்வண்ணன் கோவலனாய் வெண்ணெ யுண்ட வாயன்” என்று பாடுகிறார்.
அந்தகாலேது மாமேவ ஸ்மரந் முக்த்வா களேபரம்| ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதிநாஸ்த்யத்ர ஸம்சய: என்பது கீதை.

இந்த ப்ரக்ருதி மண்டலத்தை விட்டுப் பரமபதம் பெற, பகவானுடைய அர்ச்சிராதிகதி ஸாமாந்யமான மார்க்கம்.
அர்ச்சி ஸு முதலிய அதிவாஹிக கணங்கள் பகவந் நியமநத்தால் வஹநம் செய்பவர்.
சிலருக்கு வேறு வேறு வழியாக வஹநமென்று அதிகரண ஸாராவளியில்– சைத்யாதீ நாம்– என்கிற ச்லோகத்தில் காட்டப் பட்டது.
சிசுபாலாதிகளுக்கும், அயோத்தி நகர் சராசரங்களுக்கும் வெவ்வேறு விதமாக மோக்ஷமடைய வழிகள் ஏற்பட்டன.
சிலருக்கு கருட வாஹனம், இவருக்கு முனி வாஹனம்.

“பாண்பெருமாள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுமின்கள்!
சீர்மறையின் செம்பொருள் செந் தமிழாலளித்த பாரியலும் புகழ்ப் பாண்பெருமாள் “ என்றபடி இவர் பாசுரங்கள்
வேதாந்த ஞானம் முழுமையும் உட்கொண்டவை.
யோகாப்யாஸம் செய்து செய்து பகவத் குணங்களைப் பரவச மாய்ப் பாடிப் பாடி இவர் தத்வ ஞானம் மேலும் மேலும் வளர்ந்தது.
“வேதநூற் பிராயம் நூறு” “பாதியு முறங்கிப் போகும்”. ஐம்பது வருஷம் ஸுஷுப்தி (தூக்கம்) என்கிற லயமாக இருக்கும் என்றார்.
இவர் பிராயம் ஐம்பதே. இவரது பிராயமான ஐம்பது வருஷமும் இவருக்கு யோகஸமாதி லயமாகவும் கான லயமாகவு மாகவே சென்றது.
நாரதருக்கு ஞானத்தையும் ஐச்வர்யத்தை யும் தம்மிடம் ஸ்நேஹ பாவத்தையும் கேசவன் தந்ததாக அவர்
அதான்மே ஞான மைச்வர்யம் ஸ்வஸ்மின் பாவம் ச கேசவ—ஸ்ரீபாகவதம் 1-5-39- என்று கூறினார்.
இத் திருப் பாணாழ்வாருடைய ஞானமும் ப்ரேம பாவமும் அளவற்றவை.

யோக‌ம் அஷ்டாங்க‌ம்: எட்டு அங்க‌ங்க‌ளுடைய‌து. ஆனால் எட்டாவ‌து அங்க‌மாகிய‌ ஸ‌மாதியே அங்கி.
ய‌ம‌நிய‌மாதிக‌ளான‌ அங்க‌ங்க‌ள் ஸாத‌க‌னுடைய‌ ப்ர‌ய‌த்ன‌ங்க‌ள். திவ்ய‌ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹ‌ம் யோக‌த்திற்கு ஆல‌ம்ப‌ந‌மாகும்.
ஸால‌ம்ப‌ந‌மாகச் செய்யும் ப‌க‌வ‌த் ஸ்வ‌ரூப‌ த்யான‌த்தில் திவ்ய‌ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹ‌ம் சுபாச்ர‌ய‌மான‌ ஆல‌ம்ப‌ந‌ம்.
அந்த‌ யோகால‌ம்ப‌நத்தைப் பாண‌யோகி எட்டு அங்க‌ங்க‌ளாக‌ வ‌குத்து, அந்த‌ த்யான‌த்தை அஷ்டாங்க‌மாக‌ வ‌குத்தார்.
“பாத‌க‌ம‌ல‌ம், ந‌ல்லாடை, உந்தி, உத‌ர‌ப‌ந்த‌ம், திருமார்பு, க‌ண்ட‌ம், செவ்வாய், க‌ண்க‌ள், என்ப‌ன‌ எட்டு அங்க‌ங்க‌ள்.
முத‌ல் எட்டுப் பாட்டுக்க‌ளிலும் இந்த‌ எட்டு அங்க‌ங்க‌ளின் அநுப‌வ‌ம். ஒவ்வொன்றிலும் விக்ர‌ஹியின்
ஸ்வ‌ரூபாநுப‌வ‌மும் க‌ல‌ந்தது.

அங்க‌ விசிஷ்ட‌ ஸ்வ‌ரூபாநுப‌வ‌ம். ஸ்வ‌ரூபாநுப‌வ‌த்தில் குண‌க்ரியாத் ய‌நுப‌வ‌மும் சேர்ந்தது.
“ந‌ல்லாடை” என்ப‌து திருத்துடை முத‌லிய‌வ‌ற்றின் ஆவ‌ர‌ண‌ம். வ‌ஸ்த்ர‌ப்ராவ்ருத‌ஜாநு- ந்யாய‌த்தை நினைக்க‌ வேணும்.
ஜ‌ங்காஜாநு, ஊருக்க‌ளுக்கும் ந‌ல்லாடை உப‌ல‌க்ஷ‌ண‌ம். இப்ப‌டி ஓர் வில‌க்ஷ‌ண‌மான‌ அஷ்டாங்க‌ த்யாநாநுப‌வ‌ம் ப‌ண்ணி,
ஒன்ப‌தாம் பாசுர‌த்தில் அக‌ண்ட‌மாக‌த் திருமேனி முழுவ‌தையும் அனுப‌விக்கிறார்.
இப்ப‌டி விசித்திர‌மான‌ ஓர் அஷ்டாங்க‌ த்யான‌ முறையைக் காட்டுகிறார்.
அஷ்டாங்க‌ங்க‌ளையும் அனுப‌வித்து, அக‌ண்ட‌மான‌ திருமேனியை அனுப‌வித்து,
உப‌ய‌விபூதி விசிஷ்ட‌ ப்ர‌ஹ்ம‌த்தை அர‌ங்க‌னாகக் க‌ண்டு,
பூம‌ வித்யையில் கூறிய‌ ப‌ரிபூர்ண‌ ஸுகாநுப‌வ‌ம் வ‌ந்து மோக்ஷ‌ம் பெற்றார்.

ஆத்மாவில் ஜாதிபேத‌மில்லை. ஆத்ம‌ ஸ்வ‌ரூப‌ம் ஜ்ஞாநைகாகார‌ம்: ப்ர‌த்ய‌ஸ்த‌மித‌ பேத‌ம். சுத்த‌மான‌ ஞான‌ ம‌ய‌மான‌
இவ‌ர‌து ஆத்ம‌ ஸ்வ‌ரூப‌ம் அர‌ங்க‌னுக்குள் ப்ர‌வேசித்தது யுக்த‌மே.
பீஷ்ம‌ர் க‌ண்ண‌னைத் துதித்துக் கொண்டே அவ‌ருக்கு ஸ‌ம்ப‌ந்ந‌ராகும் போது ஜ்யோதிர் ஜ்யோதிஷி ஸ‌ம்யுத‌ம்- என்று வ‌ர்ணித்த‌ப‌டி
பீஷ்ம‌ருடைய‌ ஆத்ம‌ஜ்யோதிஸ் ஸ்ரீக்ருஷ்ண‌ ப‌ர‌மாத்மா ஜ்யோதிஸ்ஸுக்குள் புகுந்து அவிப‌க்த‌மாக‌
“இனி மீள்வ‌தென்ப‌துண்டோ!” என்று சாச்வ‌த‌மாகக் க‌ல‌ந்தது. அவ‌ருடைய‌ திருமேனி ம‌ட்டும் நின்றுவிட்ட‌து.
அத‌ற்கு அக்னி ஸ‌ம்ஸ்கார‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌து.
சிசுபால‌னுடைய‌ ஆத்ம‌ ஜ்யோதிஸ்ஸும் அப்ப‌டியே க‌ண்ண‌னுக்குள் க‌ல‌ந்தது.
“சிசுபால‌னுடைய‌ தேஹ‌த்திலிருந்து ஒரு தேஜோக்னி கிள‌ம்பி, தாம‌ரைக் க‌ண்ண‌னாகிய‌ க்ருஷ்ண‌னை ந‌ம‌ஸ்க‌ரித்து,
அவ‌ருக்குள் நுழைந்த‌ அத்புதத்தை எல்லா ராஜாக்க‌ளும் க‌ண்டார்க‌ள்” என்று பார‌த‌ம்.
“எல்லோர் முன்னே சிசுபால‌ னுடைய‌ தேஹ‌த்திலிருந்து கிள‌ம்பிய‌ ஜ்யோதிஸ்ஸு வாஸுதேவ‌னுக்குள் நுழைந்தது.
த்யான‌ம் செய்துகொண்டே த‌ந்ம‌ய‌த்வ‌த்தை அடைந்தான்” என்று பாக‌வ‌த‌ம். அங்கும் தேஹ‌ம் க‌ண்ண‌னுக்குள் நுழைய‌வில்லை.
இங்கு ந‌ம் பாண‌ர் த‌ம் திருமேனியோடு அர‌ங்க‌னுக்குள் நுழைந்து க‌ல‌ந்தார்.
பாண‌னுடைய‌ திருமேனியும் ப‌க‌வ‌த‌வ‌தார‌த் திருமேனிக‌ளைப்போல‌ அப்ராக்ருத‌மாக‌வே இருந்திருக்க‌ வேண்டும்.
சுத்த‌ ஸ‌த்வ‌ம‌ய‌மான‌ திவ்ய‌ திருமேனி சுத்த‌ ஸ‌த்வ‌ம‌ய‌த் திருமேனிக்குள் ப்ர‌வேசித்துக் க‌ல‌ந்தது.
இத‌னால் அவ‌ர் தேஹ‌மும் ப்ராக்ருத‌ம‌ல்ல‌ என்று தெளிவாக‌ ஏற்ப‌டுகிற‌து.

காட்ட‌வே க‌ண்ட‌” (பாண‌ன் த‌னிய‌ன்) என்று முத‌ல‌டியில் கூறிய‌து அர‌ங்க‌ன் திருமேனிக் காட்சி: அர்ச்சா விக்ர‌ஹ‌க் காட்சி.
மூர்த்ததிராத்யா) (ஸ்ரீஸ்துதி) என்னும் ஆதிய‌ஞ்சோதியோடு அபேத‌மாய் அனுப‌வ‌ம்.
ப‌ர‌, விப‌வ‌, ஹார்த்த‌ அர்ச்சாமூர்த்திக‌ளை ஒன்றாக‌ அனுப‌வ‌ம்.
பெரிய‌ பெருமாள் திருமேனி யிலே திரும‌லை முத‌லாகக் கோவில் கொண்ட‌ அர்ச்சாவ‌தார‌ங்க‌ளிலும்,
ராம‌ க்ருஷ்ண‌ வாம‌ன‌ வ‌ட‌ப‌த்ர‌ ச‌ய‌னாதிக‌ளிலுமுள்ள‌ போக்ய‌தையெல்லாம் சேர‌ அனுப‌வித்து என்ப‌து முனிவாஹ‌ன‌போக‌ம்.
உப‌ய‌ விபூதி விசிஷ்ட‌னாக‌ ஜ‌க‌ஜ் ஜ‌ந்மாதி கார‌ண‌மாக‌ அனுப‌வ‌ம். உப‌ய‌ லிங்கானுப‌வ‌ம். நிர்த்தோஷ‌ க‌ல்யாண‌ குணாக‌ர‌த்வ‌,
ஆதி கார‌ண‌த்வ‌, ர‌க்ஷ‌க‌த்வாதி விசிஷ்ட‌ ப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்மமாக‌ அம‌ல‌னாதிபிரானில் அனுப‌வ‌ம்.
பாட்டுக்க‌ள் காட்சி அனுப‌வ‌த்தின் ப‌ரீவாஹ‌ம். யோக‌மென்னும் ல‌ய‌த்திற்கு ஸாத‌க‌ம். விரோதிய‌ல்ல‌.
உப‌ய‌ விபூதி விசிஷ்டாநு ப‌வ‌த்தில்
பித்ய‌தே ஹ்ருத‌ய‌க்ர‌ந்திச்சித்ய‌ந்தே ஸ‌ர்வ‌ ஸ‌ம்சயா: க்ஷீய‌ந்தே சாஸ்ய‌ க‌ர்மாணி த‌ஸ்மிந்த்ருஷ்டே ப‌ராவ‌ரே–(முண்ட‌க‌ம் 2,3,9) என்ற‌ப‌டிக்கும்
(ய‌த்ர‌ நாந்ய‌த்ப‌ச்ய‌தி) (சாந்தோகிய‌ம் — பூமமித்யை) என்ற‌ப‌டிக்கும்,
ப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்ம‌ த‌ர்ச‌ந‌ம் கிடைத்துப் பார‌மாய‌ ப‌ழ‌வினை ப‌ற்றறுந்தது.
நான்காம் அடியில் “பாட்டினால் க‌ண்டு வாழும்” என்ற‌து, முக்தி த‌ந்த‌ருளின‌ உப‌ய‌ விபூதி விசிஷ்ட‌ ப‌ரிபூர்ண‌ ப்ர‌ஹ்ம‌ த‌ர்ச‌ன‌க் காட்சி.
முத‌ல் பாதத்தில் “க‌ண்ட‌” என்ற‌து அர‌ங்க‌ன் திருமேனிக் காட்சி.

ந‌ம் பாண‌ நாத‌ர் யோகி ஸார்வ‌ பௌம‌ர்: பாட்டினாலும் யோக‌த்தினாலும் த‌ர்ச‌ன‌ ஸ‌மாநா கார‌ண‌மான‌ காட்சி போன்ற‌
தெளிந்த‌ அறிவாகிய‌ ஸ‌மாதியை அடிக்க‌டி ஏறுப‌வ‌ர். ப‌ல்கால் யோகாரூட‌ர்.
யோகாரோஹ‌மே இவ‌ருக்குப் பொழுதுபோக்காய் இருந்தது.
க‌டைசியில் இவ‌ருக்குப் பெருமாள் நிய‌ம‌ன‌த்தால் கிடைத்தது யோக்யாரோஹ‌ம் முனியேறின‌து.
யோகாரூட‌ராக‌ நெடுகிலும் இருந்து வ‌ந்த‌வ‌ர் க‌டைசியில் யோக்யாரூட‌ரானார்.
எந்த‌ யோகிக்கும் இந்த‌ ஏற்ற‌ மில்லை. ந‌ம்பிக‌ளும் இதை “முனியேறி” என்று ர‌ஸ‌மாக‌ வ்ய‌ஞ்ஜ‌ன‌ம் செய்தார்.
யோக‌மேறுவ‌து யோகிமாத்ர‌ ஸாதார‌ண‌ம். ஆழ்வார்க‌ளெல்லாரும் யோகாரூட‌ர்க‌ள்: யோக‌மேறின‌வ‌ர்க‌ள்.
ப‌ச்ய‌ந் யோகீ ப‌ர‌ம்) என்று முத‌ல் திருவாய்மொழியின் ஸ‌ங்க்ர‌ஹ‌ ச்லோக‌த்திலேயே, தாத்ப‌ர்ய‌ ர‌த்னாவ‌ளீ ச‌ட‌கோப‌ முனியை யோகி என்ற‌து.
முநித்வ‌ம் ம‌ட்டிலும் எல்லாருக்கும் ஸாதார‌ண‌ம். முனியேறின‌ முனி இவரொருவரே.

————-

சீரிய நான் மறைச் செம் பொருள் செம் தமிழால் அளித்த
பாரியிலும் புகழ்ப் பாண் பெருமாள் சரணாம் பதுமத்
தாரியல் சென்னி யிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் தம்
காரிய வண்மை என்னால் சொல்ல ஒண்ணாது இக்கடலிடத்தே ––இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்— 11- –

பாவளரும் தமிழ்மறையின் பயனே கொண்ட
பாண்பெருமாள் பாடியதோர் பாடல் பத்தில்
காவலனும் கணவனுமாய்க் கலந்து நின்ற
காரணனைக் கருத்துறநாம் கண்ட பின்பு
கோவலனும் கோமானும் ஆன வந்நாள்
குரவைபுணர் கோவியர்தம் குறிப்பே கொண்டு
சேவலுடன் பிரியாத பேடைபோற் சேர்ந்து
தீவினையோர் தனிமையெலாம் தீர்ந்தோம் நாமே.

ஆதிமறை யெனவோங்கும் அரங்கத்துள்ளே
அருளாரும் கடலைக்கண்டவன் என் பாணன்
ஓதியதோர் இருநான்கும் இரண்டுமான
ஒருபத்தும் பற்றாக உணர்ந்துரைத்தோம்
நீதியறி யாதநிலை யறிவார்க் கெல்லாம்
நிலையிதுவே என்றுநிலை நாடி நின்றோம்
வேதியர்தாம் விரித்துரைக்கும் விளைவுக் கெல்லாம்
விதையாகும் இதுவென்று விளம்பினோமே.

காண்பனவும் உரைப்பனவும் மற்றொன் றின்றிக்
கண்ணனையே கண்டுரைத்த கடியகாதல்
பாண்பெருமாள் அருள்செய்த பாடல்பத்தும்
பழமறையின் பொருளென்று பரவுகின்றோம்
வேண்பெரிய விரிதிரைநீர் வையத் துள்ளே
வேதாந்த வாரியனென் றியம்ப நின்றோம்
நாண்பெரியோ மல்லோம்நாம் நன்றும் தீதும்
நமக்குரைப்பார் உளரென்று நாடுவோமே.

பாண் பெருமாள்–நம் பாண நாதன்–நம் பாணன்–என்று அன்றோ கொண்டாடுகிறோம் –

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரான் – அருளிச் செயலில்– பாசுரங்கள் பிரவேசம் -சங்கதி –

April 8, 2019

முதல் பாசுரம் –

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை —
ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் அழகு மேல் விழுந்து தம்மை அடிமை கொண்டது என்கிறார் –

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –
முதல் பாட்டில் –
ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளின் அழகு தம்மை ஆட் கொண்டது என்கிறார் –
ஆகாசத்தின் நின்றும் சஹ்யத்திலே வர்ஷித்து
அங்கு நின்றும் காவேரி யாறாய்ப் போய் இழிந்து
கால்களாய்ப் புகுந்து போய்
நாட்டாருக்கு உப உக்தமாமா போலே
பரமபதம் ஆகிற பரம வ்யோமத்தின் நின்றும்
ஸ்ரீ திருமலையிலே வந்து இழிந்து
தெற்கு நோக்கி வந்து
பள்ளநாலியான ஸ்ரீ கோயிலிலே தேங்கி
கீழ் மேலாக கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற
மதுரவாற்றின் இடைப்புகுந்து ஓடுகிற காலை அனுபவிக்கிறார்-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -அவதாரிகை
இதில் முதல் பாட்டு -திரு மந்த்ரத்திலும் த்வயத்திலும் முமுஷுவுக்கு அவஸ்ய
அனுசந்தேயங்களான அர்த்தங்களை ஸூசிப்பிக்கிறது–

————————————-

இரண்டாம் பாசுரம் –

உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை –
முதல் பாட்டில் அவன் தொடர்ந்து வந்த படி சொன்னார்
இப்பாட்டில் தாம் மேல் விழுந்த படி சொல்லுகிறார்-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை-
அரங்கத்தம்மான் திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றனவே -என்று
திருவடிகள் தானே தம்மை விஷயீ கரித்துத் தம் திரு உள்ளத்திலே பிரகாசித்த படியைச் சொன்னார்
இப்பாட்டில் -திருவடிகளில் தொடர்ந்த திரு உள்ளம் திருப் பரியட்டதின் மேல் சேர்ந்தபடி எங்கனே என்னில் –
தான் அறிந்து சேரில் விஷயத்தின் போக்யதைக்குக் குற்றமாம்
ஆகையாலே போக்யதை அளவுபட்டதும் அல்ல
ஆசை தலை மடிந்ததும் அல்ல
கடலோதம் கிளர்ந்து அலைக்ப் புக்கால் உள்ளே கிடந்த தொரு துரும்பு கடலை அளவிட்ட வல்லவே கரை ஏறுவது –
ஒரு திரை ஒரு திரையிலே ஏற வீசும் அத்தனை இறே –

ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -அவதாரிகை –
இவன் திருவடிகளில் சிவப்புக்கு நிகரான திருப் பீதாம்பரம் தன் சிந்தைக்கு விஷயம் ஆகிறது என்கிறார் –

———————–

மூன்றாம் பாசுரம் –

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை –
திருப் பீதாம்பரத்தின் அழகு திரு நாபீ கமலத்திலே வீசிற்று –

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –
திருப் பீதாம்பரத்தின் அழகு திரு நாபீ கமலத்திலே வீசிற்று –
முதல் பாட்டில் -ஆதி -பிரான் என்று
ஜகத் காரண பூதனாய் -சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கும் என்று சொல்லக் கேட்டவர்கள் –
ப்ரஹ்ம விஷ்ணு ஸிவாத்மிகாம் -என்று மூவர் ஜகத் காரண பூதர் என்று பிரசித்தமாய் இருக்க –
இவனே ஜகத் காரண பூதன் என்று அறியும்படி என் என்ன –
சாஸ்திர முகத்தாலே நம்முடைய காரணத்வத்தை பிரகாசிப்பித்தோம் ஆகில்
அது கர்மாதீநமான ருச்யநுகூலமாக -கமுகின் நிரை போலே -அயதாவாக பிரகாசிக்கும் என்று பார்த்தருளி-
த்ரயோ தேவாஸ் துல்யாஸ் த்ரி தயமித மத்வை தமதிகம் த்ரிகா தஸ்மாத் தத்வம் பரமிதி விதர்க்கான் விகடயன்
விபோர் நாபீ பத்மோ விதி ஸிவ நிதாநம் பகவதஸ்த தன்யத் ப்ரூ பங்கீ பரவதிதி ஸித்தான்யதி ந -என்றும் –
முதலாம் திரு உருவம் மூன்று என்பார் ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர்
முதல்வா நிகரில் அலகு கார் உருவா நின்னகத்தன்றே புகரில் இலகு தாமரையின் பூ -என்றும்-சொல்லுகிறபடியே
தன் திரு நாபீ கமலத்திலே -ஜகத் காரண பூதராக பிரசித்தரான ப்ரஹ்ம ருத்ரர்களை சிருஷ்டித்துக் காட்ட
அந்த நாபீ கமலம் அம் முகத்தாலே தன்னுடைய மேன்மையையும் அழகையும் காட்டி
திருப் பீதாம்பரத்திலே துவக்கு உண்கிற என்னுடைய மனஸை தன் பக்கலில் இழுத்துக் கொள்ளா நின்றது -என்கிறார்
அனுபாவ்யத்தை எல்லை கண்டு மீளுதல்
தம்முடைய ஆதரம் மட்டமாய் மீளுதல் செய்கிறார் அல்லரே
தம்முடைய சாபல்யம் அடியாக இழுப்பு உண்கிறார் இத்தனை இறே-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம்-அவதாரிகை –
இப்படி இரண்டு பாட்டாலே
பகவத் சேஷத்வ பர்யவஸாநத்தையும் –
அந்ய சேஷத்வ நிவ்ருதியையும் அனுசந்தித்து -அநந்தரம் –
சேஷ பூதமான சேதன அசேதன வர்க்க பிரதிபாதகமான த்ருதீய அஷரம் முதலான த்ருதீய காதையாலே –
சேஷத்வ ஞான ஹீனராயும் -விச்சேதம் இல்லாத சேஷத்வ ஞானம் உடையாராயும் –
காதா சித்த சேஷத்வ ஞானம் உள்ளவர்களையும் உள்ள ஜீவர்கள் எல்லாம் தம் தாமுடைய ஞான அநுரூபமாக
பிரதிகூல அநுகூல உபய வித பிரவ்ருதிகளில் நிற்கிற நிலையை உதாஹரித்துக் கொண்டு
பகவத் அனுபவத்தில் தமக்கு இடையிலே பெற்றதொரு ப்ராவண்யத்தை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிறார்

————————————–

நான்காம் பாசுரம் –

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை –
திரு நாபீ கமலத்தோடே சேர்ந்த திரு வுதர பந்தத்தை அனுபவிக்கிறார்-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய அவதாரிகை –
திரு நாபீ கமலத்தோடே சேர்ந்த திரு வுதர பந்தத்தை அனுபவிக்கிறார்-
முதல் பாட்டில்
ஜகத் காரண பூதனானவன் -தம்முடைய அபேஷா நிரபேஷமாக தம்மை விஷயீ கரித்து -தம்முடைய திரு உள்ளத்தில்
திருவடிகள் தானே வந்து பிரகாசித்த படியை சொன்னாராய் –
நிரபேஷமாக செய்யக் கூடுமோ என்கிற அபேஷையிலே சோதாஹரணமாகச் சொல்லா நின்று கொண்டு
தம் திரு உள்ளம் திரு வரையும் திரு பீதாம்பரமுமான சேர்த்தியிலே மேல் விழுந்து நசை
பண்ணுகிற படியைச் சொன்னார் இரண்டாம் பாட்டில்
அவ் விரண்டாம் பாட்டில் சொன்ன த்ரைவிக்ர அபதானம் பிரமாண உபபத்திகளாலே
ஸ்ரீ திருவேங்கடமுடையானுக்கே சேருமதன்றோ என்கிற அபேஷையிலே ஸ்ரீ திருமலையில் நின்றும்
ஸ்ரீ திரு உலகு அளந்தருளினாரும் ஸ்ரீ பெரிய பெருமாளே -என்று கொண்டு –
முதல் பாட்டில் -ஆதி -என்று சொன்ன அவனுடைய காரணத்வத்தை –
திரு நாபீ -கமலத்திலே ப்ரஹ்மாவை உண்டாக்கி அம் முகத்தாலே வெளி இடா நின்று கொண்டு –
அந்த திரு நாபீ கமலம் தானே திருப் பீதாம்பரத்திலே துவக்கு உண்கிற தம் திரு உள்ளத்தை –
ப்ரஹ்ம உத்பாதகமான தன்மையையும் அழகையும் காட்டி தன் பக்கலிலே இழுத்துக் -கொள்ள –
அதிலே சுழி யாறு படுகிற படியை யிறே மூன்றாம் பாட்டில் சொல்லி நின்றது-

தம் திரு உள்ளம் திரு நாபீ கமலத்தில் சுழி யாறு படுகிற படியைக் கண்டு
திரு நாபீ கமலத்துக்கு ஆச்ரயமான திரு வயிறும் -இந்த திரு நாபீ கமலத்துக்கு
வெறும் ப்ரஹ்மா ஒருவனுக்கு இருப்பிடமான மேன்மையும் அழகும் அன்றோ உள்ளது –
இதுக்கு ஆச்ரயமான நம்மைப் பார்த்தால் –
த்ரிவித சித் அசித் ப்ருந்தம் துந்தா வலம்பி வலி த்ரயம் கணயதி தவைச்வர்யம் வ்யாக்யாதி ரங்கமஹே ஸிது
ப்ரணதவசதாம் ப்ரூதே தாமோத மத்வக்ர கிணஸ் ததுபய குணாவிஷ்டம் பட்டம் கிலோதர பந்தநம் –என்கிறபடியே –
பக்த முக்த நித்ய ரூபமான த்ரிவித சேதனருக்கும்
த்ரி குணாத் மகமாயும் சுத்த சத்வாதமகமாயும் -சத்வ சூன்யமுமாயும் உள்ள அசேதன வர்க்கத்துக்கும்
ஆஸ்ரயமான மேன்மையும் -ஆஸ்ரிதர்க்கு கட்டவும் அடிக்கவுமாம் படி எளியோமான சௌலப்ய நீர்மையையும் உடையோமான
ஏற்றத்தாலே பட்டம் கட்டி அன்றோ நாம் இருப்பது என்று தனக்கு திரு நாபீ கமலத்தில் உண்டான ஏற்றத்தையும் காட்டி –
திரு நாபீ கமலத்தில் ஆழங்கால் படுகிற் என் நெஞ்சை தன் பக்கலிலே வர இசிக்க –
அத் திரு வயிற்றை ஆஸ்ரயமாகப் பற்றி நிற்கிற திரு உதர பந்தநம் தன் பக்கலிலே வர ஈர்த்து மேலிட்டு நின்று
தம் திரு உள்ளத்திலே ஸ்வரை சஞ்சாரம் பண்ணுகிற படியைச் சொல்லுகிறார்–

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் அவதாரிகை –

இரண்டாம் பாட்டாலும் மூன்றாம் பாட்டாலும் ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய கர்ம அதிகாரித்வமும்
கர்ம மூல ஜந்மாதிகளும் சொல்லிற்று ஆயிற்று –
நாலாம் பாட்டாலே -ப்ரஹ்ம ருத்ராதிகள் வரம் கொடுத்து வாழ்வித்த ராவணனை நிராகரித்த வ்ருத்தாந்தத்தாலும்
தேவதாந்தரங்கள் உடைய ஷூத்ரத்வத்தையும் –
ப்ரஹ்மா ஸ்வயம் பூச் சதுராநநோ வா
ருத்ரஸ் த்ரினேத்ரஸ் த்ரிபுராந்தகோ வா
இந்த்ரோ மகேந்த்ரஸ் சூர நாயகோ வா
த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம் -இத்யாதிகள் படியே அவர்கள் உடைய அல்ப சக்தித்வதையும் அனுசந்திதுக் கொண்டு
ப்ரஹ்மாதிகளை எல்லாம் அகம்படியிலே ஏக தேசத்திலே வைத்து உய்யக் கொண்ட ஸ்ரீ மத்தையை உடைத்தான திரு வயிற்றின் உடைய
சிறுமை பெருமைகளால் உண்டான அகடிதகடநா சக்திகளுக்கு அடைய வளைந்தான் போலே யிருக்கிற உதர பந்தம்
தம்முடைய சிறிய திரு உள்ளத்துக்கு உள்ளே வெளியில் போலே
இடம் கொண்டு உலவா நின்றது -இது ஒரு ஆச்சர்யம் என்கிறார் –

கீழ் மூன்று பாட்டாலும் ப்ரதம பதார்த்தம் ப்ரதிஷ்டிதமாய் –
நாலாம் பாட்டாலே
ந நமேயம் து கஸ்ய சித் -என்ற வணங்கல் இலாக்கனைத் தலை சாய்த்து -தசேந்த்ரியா நநம் கோரம் –என்கிறபடியே
முமுஷுக்களுடைய மனசு அஹங்கார மமகார தூஷிதமாகாத படி பண்ணிக் கொடுக்கிற
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனுடைய சரித்ரத்தை முன்னிட்டு -நானும் என்னுடையது அன்று –
மற்றும் என்னுடையதாவன ஒன்றும் இல்லை -என்கிற நமஸ் ஸில் அர்த்தத்தை மறை பொருளாக
அனுசந்திகிறார் ஆகவுமாம்

————————————————

ஐந்தாம் பாசுரம் –

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய–அவதாரிகை-

எனக்கு பற்றாசான ஸ்ரீ பெரிய பிராட்டியார் இருக்கிற திரு மார்பு கிடீர் என்னை
ஸ்வரூப அநுரூபமான கைங்கர்யம் கொண்டது–என்கிறார் –

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்அருளிய–அவதாரிகை-

எனக்கு பற்றாசான ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடனே -திருவார மார்பானது என்னை ஸ்வரூப அநுரூபமான
கைங்கர்யத்தைக் கொண்டது என்கிறார் –
மூன்றாம் பாட்டிலே
திரு நாபீ கமலம் ப்ரஹ்மாவை தரித்துக் கொண்டு இருக்கிற தன் மதிப்பையும் அழகையும் காட்டி -தம்முடைய திரு உள்ளத்தை
திருப் பீதாம்பரத்தின் நின்றும் தன் பக்கலிலே இழுத்துக் கொள்ள -அங்கே அது சுழி யாறு பட்டபடி இறே சொல்லிற்று
கீழில் -பாட்டில்
இத்தைக் கண்ட திரு வயிறானது சகல சேதன அசேதனங்களையும் தானே தரித்துக் கொண்டு இருக்கிற மதிப்பையும் –
யசோதைப் பிராட்டி கட்டக் கட்டுண்ட தழும்பைக் காட்டி -தன்னுடைய சௌலப்யத்தையும் -சிற்றிடையான அழகையும் காட்டி –
அத் திரு நாபீ கமலத்தின் நின்றும் திரு உள்ளத்தைத் தன் பக்கலிலே யிசிக்க அங்குப் போக ஒட்டாதே
அப்படிக்கு பட்டம் கட்டி இருக்கிறாப் போலே இருக்கிற
திரு உதர பந்தனம் மேலிட்டு நின்று ஸ்வைர சஞ்சாரம் பண்ணுகிற படியை இறே சொல்லிற்று –
அந்த திரு வயிற்ருக்கு
ஒரு கால விசேஷத்திலே காதா சித்கமாக சகல அண்டங்களையும் வைத்ததால் உண்டான மதிப்பும் –
ஒரு கால் யசோதைப் பிராட்டி கட்ட அத்தால் வந்த சௌலப்யமும் இறே இருப்பது -அப்படி யன்றே திரு மார்பு –
ஸ்ரீ வத்ஸ ஸம்ஸ்தாந தரமநந்தேச சமாச்ரிதம் -ப்ரதாநம் –என்றும்
ஆத்மாநமஸ்ய ஜகதோ நிர்லேபம குணா மலம்
பிபர்த்தி கௌஸ்துப மணி ஸ்வரூபம் பகவான் ஹரி -என்றும் சொல்லுகிறபடியே
சர்வ காலமும் சேதன அசேதனங்களை ஸ்ரீ வத்ஸ கௌஸ்துப முகத்தாலே தரித்துக் கொண்டு இருக்கிற பெரிய மதிப்பையும் –
அவனுடைய ஸ்வரூபாதி களுக்கு நிரூபக பூதையாய் -நீர்மைக்கு எல்லை நிலமாய் இருக்கிற பெரிய பிராட்டியாருக்கு
கோயில் கட்டணமாய் இருக்கிற-ஏற்றத்தையும் உபய விபூதி நாதன் என்று இட்ட தனி மாலையை தரித்துக் கொண்டு இருக்கிற
ஆகாரத்தையும் உடைத்தாய் –
அக்கு வடமுடுத் தாமைத்தாலி பூண்ட வனந்த சயனன் -என்கிறபடியே
யசோதை பிராட்டி பூட்டின ஆபரணங்களையும் உடைத்தாய் இறே இருப்பது-

ஆகையாலே -அந்த திரு மார்பானது –
திரு வயிற்றில் காட்டில் தனக்கு உண்டான ஆதிக்யத்தையும்
சௌலப்யத்தையும் திருவாரம் உள்ளிட்ட ஆபரண சேர்த்தியால் வந்த அழகையும் உடையோம் நாம் அன்றோ –
ஆன பின்பு பேர்கலமான நமக்கு சிற்றிடை யான் தான் நிகரோ -என்று தன் இறுமாப்பைக் காட்டி –
அத் திரு உதிர பந்தனத்தின் நின்றும்
தன் பக்கலிலே யிசித்துக் கொள்ள -தம்முடைய நெஞ்சு அளவன்றிக்கே -கரணியதான
தம்மையும் ஸ்வரூப ஜ்ஞாநாதிகளை பிறப்பித்து அடிமை கொண்ட படியை சொல்லுகிறார்-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் – அவதாரிகை-

மேல் இரண்டு பாட்டில் –
ஸ்ரீ நாராயண சப்தார்தம் உள்ளீடாகப் ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடைய நிவாஸத்தால்
நிகரில்லாத திரு மார்பையும் திருக் கழுத்தையும் அனுபவிக்கிறார் –

—————————————

ஆறாம் பாசுரம் –

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6–

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை-

சர்வ லோகத்தையும் அமுது செய்து அருளின கண்டத்தின் அழகு என்னை உண்டாக்கிற்று -என்கிறார் –
திருமார்பின் அழகு திருக் கழுத்திலே ஏறிட்டது -என்னவுமாம்-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–அவதாரிகை-

சர்வ லோகத்தையும் அமுது செய்து அருளின கண்டத்தின் அழகு என்னை உண்டாக்கிற்று -என்கிறார் –
திருமார்பின் அழகு திருக் கழுத்திலே ஏறிட்டது -என்னவுமாம்-

கீழ்ப் பாட்டில் திரு மார்பானது ஹராத்ய ஆபரண சோபையையும் –
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற மேன்மையையும் காட்டி
தம்மை திரு வயிற்றின் நின்றும் வர யீர்த்துக் கொண்டு எழுதிக் கொண்டபடி யிறே சொல்லிற்று –
இதில் -அந்த திரு மார்புக்கு மேலாய் –
ரமயது ஸ மாம் கண்ட ஸ்ரீ ரங்க நே துரு தஞ்சி தக்ரமுக தருண க்ரீவாகம் புப்ர லம்பமலிம்லுச
ப்ரணய விலகல் லஷ்மீ விச்வம் பராகர கந்தளீ கநக வலய க்ரீடா சங்கராந்த ரேக இவோல்ல சன் – என்கிறபடியே
கமுகுக் கன்றின் கழுத்துப் போலே பசுகு பசுகு என்று இருப்பதாய் -ரேகாத்ரயாங்கிதமாய் –
இரண்டருகும் நெருங்கி நடுவு பெருத்து இருக்கையாலும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கிற
திருக் கழுத்தானது-
இந்த திரு மார்புக்கு உள்ளது -அலர்மேல் மங்கை யுறை மார்பா -என்கிறபடியே
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற -ஆகாரமும் திருவாரத்தாலே அலங்க்ருதமான ஆகாரமுமே யன்றோ –
இவளைப் போலே -சங்கு தங்கு முன்கை நங்கையாய் இருப்பார் அநேகம் நய்ச்சிமார் ஸாபரணமான தங்கள் கைகளால் அணைக்கை யாலே –
அவ் வாபரணங்கள் அழுத்த அவற்றாலே முத்ரிதராய் இருப்போமும் நாம் அல்லோமோ –
பிரளய ஆபத்து வர சகல அண்டங்களையும் தத் அந்தர்வர்த்திகளையும் ரஷித்தோமும் நாம் அல்லோமோ –
அதுவும் கிடக்க பாண்டவர்கள் தூது விடுகிற போது கட்டிவிட்ட மடக்கோலை இன்றும் நம் பக்கலிலே அன்றோ கிடக்கிறது –
அந்த ஹாரம் தனக்கும் தாரகம் நாம் அல்லோமோ – என்றாப் போலே
தன்னுடைய
ஆபரண சோபையையும் –
யௌவனத்தையும் –
ஆபன் நிவாரகத்வத்தையும்-காட்டி என்னை சம்சாரம் ஆகிற பிரளயத்தின் நின்றும் எடுத்து உஜ்ஜீவிப்பித்தது என்கிறார் –

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –
கீழ்ப்பாட்டில்
கைங்கர்ய அர்த்தியான தம்முடைய கைங்கர்ய விரோதிகளான நிருபாதிக ஸ்வாமித்வ அபிமான மூலங்களை எல்லாம்
நிராகரித்த படியை அருளிச் செய்தார் –
இப்பாட்டில்
ஐஸ்வர்யார்த்திகளாருடைய ஐஸ்வர்ய விரோதியான பிஷூ தசையை கழிக்கும் படியை உதாஹரிக்கிறார்-

—————————–

ஏழாம் பாசுரம் –

கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7–

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை –

திரு வதரத்திலே அகப்பட்ட படி சொல்லுகிறார் –
நீஞ்சப் புக்குத் தெப்பத்தை இழந்தேன் என்னுமா போலே-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –

திரு வதரத்திலே அகப்பட்ட படி சொல்லுகிறார் –
நீஞ்சாப் புக்குத் தெப்பத்தை இழந்தேன் என்னுமா போலே-

கீழ்ப் பாட்டில் –
முற்றும் உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டது -என்று திருக் கழுத்தானது
தன்னுடைய ஆபத் சகத்வாதிகளைக் காட்டி தம்மை எழுதிக் கொண்ட படியை இறே சொல்லிற்று –
இதுக்கு மேலான -திருப் பவள செவ்வாயானது -உலகமுண்ட பெரு வாயன் -என்கிறபடியே
ஆபத் சகத்வத்திலும் முற்பாடர் நாம் அல்லோமோ -ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாக
சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம -என்றும் –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந -என்றும் –
சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்றாப் போலே -சொல்லுகிற மெய்ம்மைப் பெரு வார்த்தைக்கு
எல்லாம் ப்ரதான கரணம் நாம் அல்லோமோ –
ஓர் ஆபரணத்தால் இடு சிவப்பன்றிக்கே ஸ்வாபாவிக சௌந்தர்யம் உடையோமும் நாம் அல்லோமோ –
கருப்பூரம் நாறுமோ -கமலப் பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
என்று தேசிகரைக் கேட்கும்படியான சௌகந்தய சாரச்யம் உள்ளிட்ட போக்யதையை
உடையோமும் நாம் அல்லோமோ -என்றாப் போலே தம்முடைய ஏற்றத்தைக் காட்டி
தம்முடைய திரு உள்ளத்தை அந்தக் கழுத்தின் நின்றும் தன் பக்கலிலே வர இசித்து துவக்க

செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் யன்றி யான் அறியேன் -என்கிறபடியே
அந்த திருப் பவளச் செவ்வாயிலே தாம் அபஹ்ருதராய் அகப்பட்ட படியைச் சொல்லுகிறார்

ஆனால் -செய்ய வாயையோ என்னைச் சிந்தை கவர்ந்தது -என்ன அமைந்து இருக்க –
கீழில் விசேஷணங்களால் செய்கிறது என் என்பது என்னில் –
கீழ் -அஞ்சாம் பாட்டில் –
பாரமாய பழ வினை பற்று அறுத்து என்னைத் தன் வாரமாக்கி வைத்தான் -என்று அநேக ஜன்மார்ஜிதமான
பாபராசியை அடைய இத்தலையில் ஒரு ஹேது இன்றிக்கே இருக்கச் செய்தே -என்னுடைய
நிகர்ஷம் பாராதே ஸவாசனமாகப் போக்கினான் என்று சொல்லி -அது கூடுமோ என்கிற அபேஷையிலே –
ஈஸ்வர அபிமாநியாய் துர்மாநியாய் ருத்ரனுடைய துயரை அவன் தண்மை
பாராதே போக்கினாப் போலே -என்னுடைய நிகர்ஷம் பாராதே பாபங்களையும் போக்கினான்
என்று ருத்ரனை த்ருஷ்டாந்தமாக சொன்னாராய் இறே கீழ்ப்பாட்டில் நின்றது –
இத்தைக் கேட்டவர்கள் இது விஷம உதாஹரணம் காணும் -அந்த ருத்ரன் -ஆகிறான்
ததாதர்சித பந்தாநௌ ஸ்ருஷ்டி சம்ஹார கார கௌ -என்கிறபடியே சம்ஹார தொழிலிலே
புருஷோத்தமனாலே நியுக்தன் ஆகையாலே அதிகாரி புருஷனுமாய் -அவனுக்கு
ப்ரஹ்ம சிரஸ் க்ருந்த நத்தாலே வந்த ஆபத்து தானும் ப்ராமாதிகமாக ஒருகால்
பிறந்தது ஆகையாலே -தன் அலங்கல் மார்பில் வாசநீர் மாத்ரத்தாலே போக்கலாம் –
நீராகிறீர் -ச்ருதிஸ் ஸ்மருதிர் மமை வாஜ்ஞா -என்கிறபடியே பகவத ஆஜ்ஞா ரூபமான
வேத வைதிக மர்யாதையை அதிக்ரமித்தவருமாய் அதுக்கு மேலே அக்ருத்ய கரண
க்ருத்ய அகரண ரூபமான பாபங்களை அநாதி காலம் கூடு பூரித்தவருமாய் அன்றோ -இருப்பது
ஆன பின்பு உம்முடைய பக்கல் ஒரு கைம் முதல் இன்றிக்கே இருக்க உம்முடைய பாபங்களை அப்படிப் போக்க போமோ
அது கிடக்க –
அந்த ருத்ரன் தானே தேவர்களுக்கு மேலாய் இருக்கையாலே ஆனை மேல்
இருந்தார் ஆனை மேல் இருந்தாருக்கு சுண்ணாம்பு இடுமோபாதி அவன் கார்யம் செய்யக் கூடும்
மனுஷ்யர்களுக்கும் கீழாய் இருக்கிற உம்முடைய பாபங்களை போக்கக் கூடுமோ –
அது கிடக்க –
ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாயா -என்கிறபடியே ப்ரஹ்மாவுக்கு ஜ்யேஷ்ட புத்ரனான படியாலே
தனக்கு பௌத்ரன் என்று இட்டு அவன் கார்யம் செய்யலாம் -அப்படி இருப்பதொரு பந்த விசேஷம் உமக்கு இல்லையே –
அதுவும் கிடக்க
அந்த ருத்ரன் தான் மூ வுலகும் பலி -திரிவோன் என்கிறபடியே திருப்பாற் கடலிலே செல்ல பின்பன்றோ அவன் துயரைப் போக்கிற்று –
நீரும் அப்படிப் போனீரோ -என்ன அதற்க்கு அடைவே உத்தரமாய் இருக்கிறது

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை-

மேல் நாலு பாட்டாலே ப்ரார்த்த நீயமான கைங்கர்யத்துக்கு ப்ரசாதகமான அநுபவம்
தம்மை இப்போது பரவசம் ஆக்கின படியைப் பேசுகிறார் –
அதில் -கையினார் -என்கிற பாட்டில் –
ஆழ்வார்களோடு பொருந்தின திருக் கையை அவலம்பநமாகக் கொண்டு திருமுடி யளவும் சென்று மீண்ட சிந்தையை
தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானுடைய கோலம் திரள் பவளக் கொளுந்துண்டம் கொல் -என்னும்படியான
திருப் பவளத்தில் அழகு தன் வசம் ஆக்கிற்று என்கிறார்

—————————————-

எட்டாம் பாசுரம் –

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8–

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை –

திருக் கண்கள் என்னை அறிவு கெடுத்தது என்கிறார்-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –

திருக் கண்கள் என்னை அறிவு கெடுத்தது என்கிறார்-கீழில் பாட்டில் –
செய்யவாய் ஐயோ என்னை சிந்தை கவர்ந்தது-என்று திருப் பவளத்திலே இவர்
அப்ஹ்ருத ஹ்ருதயர் ஆகிற படியைக் கடைக் கணித்து கொண்டு கிடக்கிற திருக் கண்கள் ஆனவை –
செய்ய வாய் ஐயோ -என்று இவர் தாமே சொன்னார் –
அப்படியே சிவப்பால் வந்த அழகு ஒன்றுமே யன்றோ அந்த திரு அதரத்துக்கு உள்ளது
சிவப்பும் கருப்பும் வெளுப்புமான பரபாகத்தால் உள்ள அழகு உடையோமாம் இருப்போமும் நாம் அல்லோமோ –
மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யஜேயம் -என்றாப் போலே சொல்லுகிற வார்த்தைகள் எல்லாம் ஜீவிக்கை யாகிறது –
ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் -என்று
ஜாயமான தசையிலே நாம் கடாஷித்த பின்பு -சாத்விகனாய் -முமுஷுவான அளவிலே அன்றோ
அது கிடக்க –
அந்த வார்த்தை தான் -ஆயுதம் எடேன் -என்று ஆயுதம் எடுத்தால் போலே அன்றிக்கே –
மெய்ம்மை பெரு வார்த்தை -என்று விச்வசித்து இருக்கலாம்படி வாத்சல்யம்
அடியாக பிறந்த வார்த்தை என்று அந்த அகவாயில் வாத்சல்யத்துக்கு பிரகாசமாய்
இருப்போமும் நாமும் அல்லோமோ –
அது கிடக்க
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ -என்றும்
அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன் -என்றும் சொல்லுகிறபடியே மேன்மைக்கு
பிரகாசமாய் இருப்போமும் நானும் அல்லோமோ –
அதுக்கு மேலே
புண்டரீகாஷா ரஷ மாம் -என்றும் –
புண்டரீகாஷா ந ஜாநே சரணம் பரம் -என்றும் சொல்லுகிறபடியே
தம்தாமுடைய ஆபன் நிவாரணத்துக்கு உபாயமாகப் பற்றுவதும் நம்மை புரஸ்கரிக்கையாலே
உபாய பாவத்தை பூரிக்கிறோமும் நாமும் அன்றோ –
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -என்று அவனுக்கு போக்யதா பிரகர்ஷம் உண்டாகிறது
நம்மோட்டை சேர்தியால் யன்றோ -என்றால் போலே தங்களுடைய ஏற்றத்தை காட்டி –
அவ்வாய் யன்றி அறியேன் -என்று இருக்கிற தம்மை –
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்து – என்னும்படி பண்ணிக் கொண்ட படியைச் சொல்லுகிறார் –
செங்கனி வாயின் திறத்தாயும் செஞ்சுடர் நீண் முடித் தாழ்ந்தாயும் சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் –
என்ற அளவும் சொன்னார் கீழ் –
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்த படி சொல்லுகிறார் இதில்-

பாரமாய பழ வினை பற்று அறுத்து -என்று தம்முடைய அஜ்ஞ்ஞாந ஆசாத் கர்மாதி நிகர்ஷம்
பாராதே -ஸ்ரீ பெரிய பெருமாள் -ஸ்ரீ பெரிய பிராட்டியார் புருஷகாரமாக -தாம் அநாதி கால்ம் அர்ஜித்த
பாபங்களை அடைய போக்கின படியை சொன்னாராய்
அது கூடுமோ என்கிற அபேஷையிலே
கூடும் என்னும் இடத்துக்கு ருத்ரனை த்ருஷ்டாந்தமாகச் சொன்னாராய் –
அநந்தரம் விஷம த்ருஷ்டாந்தம் என்று சில ஹேதுக்களை சொல்ல -அதுக்கு அடைவே உத்தரம் சொன்னார் கீழ் -பாட்டில்

இதில்
அந்த -பாரமாய -என்கிற பாட்டைப் பற்றி ஓர் அபேஷை எழும்ப அதுக்கு உத்தரமாய் இருக்கிறது –
அதாவது அநாதி கால ஆர்ஜிதமான உம்முடைய பாபங்களை அடையப் போக்கினார் என்றீர்
அது மறு கிளை எழாதபடி போய்த்தாவது –
அவித்யா சஞ்சித கர்மம் என்றும் –
அநாத்ய வித்யா சஞ்சித புண்ய பாப கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருத்தம் என்றும் -சொல்லுகிறபடியே அந்த கர்மத்துக்கு
ஹேது பூதையான அவித்யை போனால் அன்றோ அது போய்த்தாவது -அது போய்த்ததுவோ என்கிற அபேஷையில் –
அந்த அவித்யைவாது தன்னோடு அனுபந்தித்தாரை பகவத் பிரவணர் ஆக ஒட்டாதே விபரீதங்களை அனுஷ்டிப்பிக்குமது இறே –
அப்படியே தன்னோடு அனுபந்தித ஸ்ரீ பிரஹ்லாதனை பகவத் பிரவணன் ஆக ஒட்டாதே விபரீதங்களை அனுஷ்டிப்பிக்க தேடின
ஹிரண்யனை-தமோ ஹிரண்ய ரூபேண பரிணாம முபாகதம் -என்கிறபடியே தமோ குணம் ஹிரண்யன்
என்று ஒரு வடிவு கொண்டதாய் இறே -இருப்பது அப்படியே இருக்கிறவனை –
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய -என்கிறபடியே ஸ்ரீ ந்ருசிம்ஹ ரூபியாய் வந்து தன் திருக்கையில்
உகிராலே கிழித்துப் பொகட்டாப் போலே –
ஞானக் கையாலே என்னுடைய அவித்யையை கிழித்துப் பொகட்டான் என்கிறார்-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –

தன்னை ஜிதந்தே புண்டரீகாஷ -இத்யாதிகளில் படியே தோற்பித்து -திருவடிகளிலே விழப் பண்ணி
மேன்மேல் அனுபவத்தை உண்டாக்கின -தாமரைக் கண்களுக்கு தாம் அற்றுத் தீர்ந்த படியை –
ஆஸ்ரீத விரோதி நிராகரண வ்ருத்தாந்த பூர்வகமாக அநுபவிக்கிறார்-

——————————————–

ஒன்பதாம் பாசுரம் –

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை –

ஊரழி பூசல் போலே திரு மேனியின் நிறமானது எல்லாவற்றையும் கூடக் கொண்டு வந்து
என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது என்கிறார்-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்அருளிய-அவதாரிகை –

ஊரழி பூசல் போலே திரு மேனியின் நிறமானது எல்லாவற்றையும் கூடக் கொண்டு வந்து
என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது என்கிறார்-
கீழ்ப் பாட்டில் –
கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே -என்று –
ப்ரஹ்ம தண்ட ப்ரகாசாநாம் வித்யுத் சத்ருச வர்ச்சசாம் -ஸ்மரன் ராகவ பாணாநாம் விவ்யதே ராஷசேஸ்வர –என்கிறபடியே
ஸ்ரீ ராம சரம் போலே இருக்கிற அந்த கடாஷ பாதங்களாலே –
கடைக்கண் என்னும் சிறைக்கோலால் நெஞ் சூடுருவவே வுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை –என்றாப் போலே
இவர் படுகிற பாட்டைக் கண்ட திரு மேனியானது -தனிப் பூ சூடுவாரைப் போலே நம்முடைய
அவயவ சௌந்தர்யத்தை தனித் தனியே அனுபவித்தார்
இத்தனை யன்றோ -இவர் கலம்பகன் மாலை சூடுவாரைப் போலே இந்த அவயவங்களுக்கு
ஆச்ரயமான நம்மை அவற்றோடே கூட அனுபவிக்க பெற்றிலரே –
இனி மற்றை ஆழ்வார்களைப் போலே பரக்க பேசி நின்று அனுபவிக்கவும் அல்லர்
ஆன பின்பு இந்த திவ்ய அவயவங்களோடும் திவ்ய ஆபரணங்களோடும் சேர்ந்த சேர்த்தியால் வந்த அழகும்
ஸ்வாபாவிக சௌந்தர்யத்தால் வந்த அழகுமான நம்முடைய சமுதாய சோபையை
இவரை அனுபவிப்பிக்க வேணும் என்று பார்த்து –
ராஜாக்கள் உறு பூசலாய் கொலையிலே பரந்து தங்களுடைய சதுரங்க பலத்தையும் சேர்த்துக் கொண்டு
அணி அணியாகச் சிலர் மேலே ஏறுமா போலே –
இந்த திரு மேனியானது -திவ்ய அவயவங்களையும் -திவ்ய ஆபரணங்களையும்
சேர்த்துக் கொண்டு தன்னுடைய சமுதாய சோபையைக் காட்டி –
உய்விட மேழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர் கட்கும் எவ்விடம் -என்று கொண்டு மேல் விழுந்து தம்முடைய
திரு வுள்ளத்தைக் தன் பக்கலிலே இழுத்துக் கொள்ள தாம் அதிலே யகப்பட்டு நெஞ்சு இழிந்த படியைச் சொல்லுகிறார் –

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –

திவ்ய அவயவ சோபைகளிலே ஆழம் கால் பட்ட தம்முடைய நெஞ்சு வருந்தி எங்கும் வியாபித்து
சர்வ திவ்ய அவயவ சோபைகளோடும் கூடின சமுதாய சோபையாலே பூரணமாய் -நித்ய அநுபவ
ஸ்ரத்தையாலே முன் பெற்றதாய் நினைத்து இருந்த பூர்த்தியை இழந்தது என்கிறார்-

———————————

பத்தாம் -நிகம -பாசுரம் —

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10–

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை –

நிகமத்தில் -இவ்வளவும் ஜ்ஞான சாஷாத் காரம் –
மேல் லோக ஸாரங்க மஹா முனிகள் தோளில் வந்து புகுந்து விண்ணப்பம் செய்கிறார் –
ஸ்ரீ பெரிய பெருமாள் அழகைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா என்கிறார் –

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்அருளிய–அவதாரிகை –

நிகமத்தில் -இவ் வாழ்வார் இவ் வூருக்கு புறம்புள்ள தேசங்களில் உள்ளாருடைய ரஜஸ் தமஸ் ப்ரசுரராய் –
சப்தாதி விஷய ப்ரவணராய் -அது தானும் நேர்கோடு நேர் கிடையாமையாலே அர்த்தார்ஜநாதிகளிலே இழிந்து –
பெரியதோர் இடும்பை பூண்டு இருக்கிற படியையும்
இவ் வூரில் உள்ளார் பரம சாத்விகராய் நிரதிசய போக்யதராய் இருக்கிற ஸ்ரீ பெரிய பெருமாளை
தொண்டு பூண்டு அமுதம் உண்டு களித்து இருக்கிற படியையும் கண்டு –
வரம் ஹூத வஹஜ் வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்திதி -ந சௌரி சிந்தாவி முகஜநசம்வாஸ வைஸஸம் –
என்று புறம்பு உள்ளாரோடு பொருத்தம் இன்றிக்கே -இவ் வூரைப் பார்த்தால்
சர்வ புண்ய மையோ தேச -என்கிறபடியே –
பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ரம் பரம் -என்னும்
பரம பாவநரான பெரிய பெருமாள் தாமும் -சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய் -என்று
இவ் வூரோட்டை சம்பந்தத்தாலே பாவனபூதர் என்னும்படியான வைலஷண்யத்தை வுடைத்தாய் இருக்கையாலே –
நாம் இவ் வூரிலே புகுருகை இவ் வூருக்கு மாலின்யாவஹம் என்று பார்த்து –
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் என்கிறபடியே பிறருடைய நைச்யத்தாலே அங்குப் போக மாட்டாதே –
தம்முடைய நைச்யத்தாலே இங்குப் புகவும் மாட்டாதே ஆந்த ராளிகராய் –
உத்தரம் தீர மாசாத்ய கச்த ஏவ வ்யதிஷ்டத -என்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே –
அக மகிழும் தொண்டர் வாழும்படி அன்பொடு தென் திசை நோக்கிக் கொண்டு கண் வளருகிற பெரிய பெருமாளுடைய
த்ருஷடி பாதமான தென் ஆற்றங்கரையைப் பற்றி நின்றார்-

ஸ்ரீ பெரிய பெருமாளும் -ஈஸ்வரோஹமஹம் போகீ -நான்யோஸ்தி சத்ருசோ மயா -என்று தேசமாக
அஹங்கார க்ரச்தமாய் சப்தாதி விஷய ப்ரவணராய் நோவு படா நிற்க -இவர் இப்படி யாவதே
என்று மனசிலே போர உகந்து -நிமக்ந ஆப ப்ரணவ -என்கிறபடியே இவர் அளவிலே திரு உள்ளம்
பேராறு மண்டி -நிஹீநாநாம் முக்கியம் சரணமான திருவடிகளைக் கொடு வந்து இவருடைய
திரு உள்ளத்திலே -என் கண்ணினுள்ளன வொக்கின்றவே -என்று ப்ரத்யஷ சாமாநா காரமாக
ப்ரகாசிக்கும் படி வைக்க -அந்தத் திருவடிகளை அனுசந்தித்து தம்முடைய மனஸ் ஆனது ஜ்ஞாநாஸ் பதமாகையாலே –
அந்த திருவடிகளுக்கு மேலான திருப் பீதாம்பரைத்தையும் திருவரையுமான சேர்த்தியை மடி பிடித்து அனுபவித்து –
இப்படி கரணமும் நாமும் அனுபவிக்கும்படி நம்மை உண்டாக்கிற்றுத் திரு நாபீ கமலம் அன்றோ
அத்தை அனுபவித்து மேன்மைக்கும் சௌலப்யத்தையும் பட்டம் கட்டி யிருக்கிறோம் நாம் அல்லோமோ என்று
திரு வுதர பந்தனம் தன் பக்கலிலே வர விசிக்க அத்தை அனுபவித்து-

அதுக்கு மேலே இருக்கிற திரு மார்பானது தன்னுடைய ஹாரத்ய ஆபரணங்களையும்
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமான மேன்மையையும் காட்டி இசித்துக் கொள்ள
அந்தத் திரு மார்பை அனுபவித்து -அந்த பிராட்டிக்கும் ஹாரத்ய ஆபரணங்களுக்கும்
ஆஸ்ரயமான திருக் கழுத்தை அனுபவித்து –
அதுக்கு மேலே –
வாயில் -சர்வ பூதேப்யோ அபயம் ததாமி – என்றாப் போலே சொல்லா நிற்கச் செய்தே அனுபவிக்கிற நாய்ச்சிமார்க்கு அகப்பட –
வாயழகர் தம்மை யஞ்சுதம் -என்று கண்களை செம்பிளித்து அனுபவிக்கும்படி ஸ்வா பாவிக
சௌந்தர்யத்தை உடைத்தான திருவதரத்தை அனுபவித்து –
இப்படி அவயவங்களை அனுபவியா நிற்கச் செய்தே
இடையில் திவ்யாயுதங்களும் இறாய்ஞ்சிக் கொள்ள அவற்றை அனுபவித்து -அபயம் ததாமி –
என்றாப் போலே சொல்லுகிற வார்த்தைகளை மேல் எழுத்து இட்டு கொடுக்கிற குளிர்ந்த
கடாஷங்களை உடைத்தான திருக்கண்களை அனுபவித்து –
பாலும் பழமும் கண்ட சர்க்கரையுமான ரசவஸ்துக்களை சேர்த்து புஜிப்பாரைப் போலே
இந்த அவயவங்களோடு உண்டான சேர்த்தியால் வந்த அழகையும்
ஸ்வா பாவிகமான அழகையும் உடைத்தான திருமேனியின் பசும் கூட்டமான சமுதாய சோபையையும்
அனுபவித்தாராய் இறே கீழ் நின்றது –

இவருடைய இப்படிப்பட்ட மானஸ அனுபவத்தையும் -மன பூர்வகமான வாசிக அனுபவத்தையும்
கண்ட ஸ்ரீ பெரிய பெருமாள் -இப்படி குணா விஷ்டராய் அனுபவிக்கிற படியைக் கண்டு –
த்ரஷ்டவ்ய சர்வ தேஹிபி -என்கிறபடியே அவரை அழைத்துக் கொண்டு இருக்க
வேண்டும்படி அவர் அளவிலே அபி நிவிஷ்டராகையாலும் -க்ஷண அபி தே யத் விரஹோஸ்தி தஸ்சஹ –
என்கிறபடியே தம்மை ஒருகால் காண வேணும் என்னும் ஆசை உடையாரை ஷண காலமும்
பிரிந்து இருக்க மாட்டாமையாலும் அவரை அழைப்பித்துக் கொள்ள வேணும் என்று பார்த்தார்
இனி நாம் போய்க் கொடு வர வென்றால் -அசந்கேத மநாலாபம் -என்றாப் போலே சொல்லுகிற சங்கல்பத்தைக்
குலைக்க வேண்டுகையாலே அது செய்ய ஒண்ணாதாய் இருந்தது –
இனி இவர் தாமே வர வென்றால்
அதுவும் தமக்கு ஸ்வரூப ஹாநியாய் இருந்தது -ஆன பின்பு ஸ்ரீ விபீஷண ஆழ்வானை ஸ்ரீ மஹா ராஜரை யிட்டு
ஆநயைநம் -என்றாப் போலே இவரையும் ஒருவரை யிட்டு அழைப்பிக்க வேணும் என்று பார்த்தார் –

அந்த ஸ்ரீ விபீஷணன் ராஜ்யகாங்ஷியாய் இருக்கையாலே அருகு நிற்கிற ஸ்ரீ இளையபெருமாள் நிற்க
ராஜ்ய காங்ஷியாய்-ஹரிஸ்ரேஷ்டரான ஸ்ரீ மஹா ராஜரை இட்டு அழைத்துக் கொண்டாப் போலே
சென்றதாம் என சிந்தனையே –
அடியேன் உள்ளத்தின் இன்னுயிரே –
என்னுளத்துள் நின்று உலாகின்றதே –
நிறை கொண்டது என் நெஞ்சினையே -என்றாப் போலே இவை மனந பரராய் இருக்கையாலே
மனந பரராய் ஸ்ரேஷ்டராய் இருப்பார் ஒருவரை இட்டு அழைப்பித்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்து
அருகே சேவித்து இருக்கிற ஸ்ரீ லோக சாரங்க மஹா முநிகளைப் பார்த்து -ஆநயைநம் -என்று திரு உள்ளமாக

அவரும் எப்போதும் ஸ்ரீ பெரிய பெருமாளை சேவித்து இருக்கையாலே ஸ்ரீ பெரிய பெருமாள்
அபிஜன வித்யா வருத்தங்களால் பூரணராய் இருப்பாரைப் பார்த்தருளி -ஏகாந்தங்களிலே
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில் தொழுமினீர் கொடுமின் கொண்மின் -என்று
உபதேசிக்க கேட்டு இருக்கையாலும் –
நின் திருவெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும் –
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே -என்றும் –
பங்கயக் கண்ணனைப் பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறும் எம்மை யாளும் பரமரே -என்றாப் போலே
ஆழ்வார்கள் அருளிச் செய்ய கேட்டு இருக்குமவர் ஆகையாலே கடுகப் போய் அவரை
அருள் பாடிட்டுத் தாம் சிரஸா வஹித்துக் கொண்டு வர-

இவரும் ஸ்ரீ பெரிய பெருமாளுடைய கௌரவத்தைக் குலைக்க ஒண்ணாது என்று முநிவாஹநராய்
வந்து புகுந்து ஸ்ரீ பெரிய பெருமாளைத் திருவடி தொழ -ஸ்ரீ பெரிய பெருமாளும் –
ஆவிர்ப்ப பூவ பகவான் பீதாம்பாதரோ ஹரி -என்று ஸ்தோத்ர பரனான ஸ்ரீ ப்ரஹ்லாதனுக்கு
வந்து ஆவிர்ப்பவித்து அபேஷிதங்களைக் கொடுத்து -அவன் ராஜ்யாதிகளிலே போது போக்க
வல்லன் ஆகையாலே அவன் பார்த்துக் கொடு நிற்கச் செய்தே -தத்ரைவாந்தர தீயதே -என்று போக
பின்பு அந்த ராஜ்யாதிகளாலே ஸ்ரீ ப்ரஹ்லாதனும் போது போக்கி இருந்தான் இறே-

இவர் அவனைப் போல் அன்றிக்கே அநந்ய சாதநராய் அநந்ய ப்ரயோஜனராய் இருக்கையாலே
நம் விச்லேஷம் பொறுக்க வல்லவர் அல்லர் என்று பார்த்தருளி தம்முடைய ஸ்வரூபாதிகளைக் காட்ட
இவரும் ப்ரீதரான வளவிலே இவர் மானஸ அனுசந்தானம் பண்ணுகிற தசையிலே –
ஆதி -விண்ணவர் கோன் -நீதி வானவன் –அரங்கத்தம்மான் என்றும் –
உலகம் அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரைக் கவர்ந்த வெங்கணை காகுத்தன் –
என்றும் -விரையார் பொழில் சூழ் வேங்கடவன் -என்றாப் போலே தம்முடைய
பர வ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்களையும் தம் பக்கலிலே அனுசந்திக்கையாலே
இவற்றைத் தனித்தனியே அனுபவிக்க வேனும் என்கிற அபேஷை இவர்க்கு இல்லை என்கிற விடம்
ஹ்ருதயனாய்க் கொண்டு-

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறியா நிற்கச் செய்தேயும் இவரைச் சோதிக்கைக்காக
இவற்றையும் இவர்க்குத் தனித் தனியே காட்டி இவர் அனுபவிக்கும்படி பண்ணுவோம் என்று
பார்த்தருளி -அது செய்யும் இடத்துப் புருஷார்த்தமாக வேண்டுகையாலே இவருடைய
அபேஷை யறிந்து செய்ய வேணும் -இல்லை யாகில் இவர் நாம் அத்தை பிரகாசிப்பித்துக் கொள்ள
ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே -என்னும் ஸ்ரீ திரு மங்கை யாழ்வாரைப் போலே நிந்தித்தல்
ஸ்ரீ தொண்டரடிப் பொடி ஆழ்வாரைப் போலே -அச்சுவை பெறினும் வேண்டேன் -என்று காற்கடைக் கொள்ளுதல் செய்வரோ
அறிய வேணும் என்று தம் திரு உள்ளத்திலே முன்னோர் அடிக் கொண்டத்தை அறிந்து -இவர் –
கடலிலே குழப்படி உண்டாமா போலே -பூர்ணம் -என்கிறபடியே ஸ்ரீ பெரிய பெருமாள் பாடே எல்லாம் இல்லையோ –
ஆன பின்பு எனக்குப் பெரிய பெருமாளை ஒழிய வேறு ஒருவரை அனுபவிக்க ச்ரத்தை யில்லை –
எனக்கு உண்டானாலும் அவரை யநுபவித்த என் கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்கிறார் –

ஸ்ரீ வேதாந்த தேசிகர்அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –

இவ் வாழ்வார் அடியேன் என்னுமது ஒழிய இப் ப்ரபந்தம் தலைக் கட்டுகிற அளவிலும்
தம்முடைய பேருமூறும் பேச மறக்கும்படி தாம் பெற்ற அனுபவத்துக்கு ஸ்ரீ பெரிய பெருமாள் இனி ஒரு
விச்சேதம் வாராதபடி பண்ணின படியைக் கண்டு -தம்முடைய ஆத்மாவதியான
அநந்ய அநுபவ ரசத்தை முக்தனுடைய சாம கானத்தின் படியிலே பாடி அநாதி காலம்
பாஹ்ய அனுபவம் பண்ணின க்லேசம் தீர்ந்து க்ருத்தராகிறார் –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அமலனாதி பிரான் – அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —

April 6, 2019

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ————————-1-

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளைஅருளிய அவதாரிகை —

ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் அழகு மேல் விழுந்து தம்மை அடிமை கொண்டது என்கிறார் –

——————-

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய-அவதாரிகை –

முதல் பாட்டில் –
பெரிய பெருமாள் திருவடிகளின் அழகு தம்மை ஆட் கொண்டது என்கிறார் –
ஆகாசத்தின் நின்றும் சஹ்யத்திலே வர்ஷித்து
அங்கு நின்றும் காவேரி யாறாய்ப் போய் இழிந்து
கால்களாய்ப் புகுந்து போய்
நாட்டாருக்கு உப உக்தமாமா போலே
பரமபதம் ஆகிற பரம வ்யோமத்தின் நின்றும்
திருமலையிலே வந்து இழிந்து
தெற்கு நோக்கி வந்து
பள்ளநாலியான கோயிலிலே தேங்கி
கீழ் மேலாக கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் ஆகிற
மதுர வாற்றின் இடைப் புகுந்து ஓடுகிற காலை அனுபவிக்கிறார் –

——————–

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-வியாக்யானம்-

அமலன் –
சுத்தன் -என்றபடி
இவன் சுத்தனாகை -யாவது -தான் ஒருவன் சுத்தனாகை யன்று -தன்னோடு சம்பந்தித்தாரையும் சுத்தராக்க வல்ல அடிவுடைமை –
துயரறு சுடரடி இறே
பாவநஸ் சர்வ லோகானாம் த்வமேவ ரகுநந்தன -என்னுமா போலே-

அமலன் -என்கிறது
ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற தம்மை விஷயீ கரித்த பின்பு தன் பக்கல் தோஷம் தட்டாதே –
அநச் நன்ந நயோ அபிசாக ஸீத -என்கிறபடி விளங்குகிறபடி பரமாத்மா அக் கனியை உண்ணாமலேயே -பிரகாசிக்கிறது –
என் கண் பாசம் வாய்த்த பரஞ்சுடர் சோதிக்கே-

ஆதி –
ஆதியத இதி ஆதி -ஸ்ப்ருஹணீயன் -என்றபடி –
தம்மை விஷயீ கரிக்கைக்கு அடியானான் -என்று -ஆதி –என்னவுமாம் –
ஜகத் காரணத்வாதிகளைச் சொல்லவுமாம் –

ஆக இரண்டு -பதத்தாலும் -ஹேய ப்ரத்யநீகத்வமும் கல்யாண குண யோகமும் சொல்லுகிறது –

பிரான் –
இவ்வோ நிலைகளை எனக்கு அறிவித்த உபகாரகன்
பிரான் –
உபகாரத்தைச் சொல்லி -சொல்லப் பற்றாமே -எத்திறம் -என்கிறார்

அடியார்க்கு
சத்நஹாரீ ச பார்த்தவ -என்கிறபடியே -இவ் வஸ்துவின் சீர்மையாலே இது நம்மளவில் அடங்காது –
நம் அடியார்க்கு ஆம் இத்தனை -என்று அவர்களுக்காக்கினான் என்கிறார் –
அடியார் -தம் பக்கலிலே சேஷி ப்ரதாரராய் இருக்குமவர்கள் –

என்னை யாள்படுத்த விமலன் –
தன்னிடை யாட்டமும் யறியாத என்னை -தன் அடியார்க்கு சேஷ பூதன் ஆக்கின சுத்தன் -என்கிறார் –

என்னை –
ப்ரக்ருதிக்கு அடிமை செய்து போந்த என்னை –
தந்தத்தின் சீர்மை அறியாத என்னை –
தேஹாத்ம அபிமாநிகள் தீண்டாத என்னை –
நன்மைக்கு தனக்கு அவ்வருகு இல்லாதது போலே தீமைக்கு எனக்கு அவ்வருகு இல்லாத என்னை –

ஆள் படுத்த –
அவர்களோடு ஒப்பூண் உண்ண வைத்திலன்
அவர்களுக்கு சேஷம் ஆக்கினான்
பகவத் சேஷத்து அளவில் நின்றால் மீள சங்கை உண்டு –
பாகவத் சேஷத்த்ளவும் சென்றால் மீளப் போகாதே
உகப்பாலே வருமது ஆகையாலே -ஒரு ஷேத்ரம் பத்து எட்டு க்ரயம் சென்றால் மீள விரகு இல்லை –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு முதலிகள் உடைய விஷயீ காரம் பெருமாளுடைய விஷயீ காரத்துக்கு முற்பட்டாப் போலே
இவருக்கு ததீய விஷயீ காரம் முற்ப்பட்ட படி –
ஆநயை நம் ஹரிச் ரேஷ்ட -அங்கு
இங்கு லோக சாரங்க மஹா முநிகளை போய் ஆழ்வாரை அழைத்துக் கொண்டு வாரும் என்றான்-

அடியார்க்கு என்னை ஆட்படுத்த –
தான் சேஷித்வதினுடைய எல்லையில் நின்றால் போலே -சேஷத்வத்தின் எல்லையில் என்னை வைத்தான் –

விமலன் –
என் சிறுமை பாராதே ததீயர்க்கு சேஷம் ஆக்குகையால் வந்த ஔஜ்வல்யம்
எதிரிகள் தரம் பாராதே சீரியர் தாம் தாம் அளவிலே இறே கொடுப்பது-

விண்ணவர் கோன் –
ஆள் இல்லாதவன் அல்லன் கிடீர் இப்படி விஷயீ கரித்தான் –
நித்ய சூரிகள் எடுத்து கை நீட்டும் படி இருக்கிறவன் கிடீர் -கதிர் பொறுக்கி ஜீவிப்பாரை போலே
நித்ய சம்சாரியாய் இருக்கிற என்னை நித்ய முக்தரோடு ஒக்க விஷயீ கரித்தான்
இவ் ஔதார்யம் கற்றதும் அவர்களோடே கிடீர் என்றுமாம்
அஸ்மாபிஸ் துவ்யோ பவதி -விபீஷணன் நம்மோடு ஒருவனாக ஆகட்டும் -என்றார்கள் இறே
விண்ணவர் கோன்
இங்குத்தை குழாத்தை ஒழிய அங்குத்தை குழாத்தையும் காட்டிக் கொடுத்தான்
உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப்பட வேண்டியது இல்லை
கோன்
அவர்களாலும் எல்லை காண முடியாது-

விரையார் பொழில் வேங்கடவன் –
பரிமளம் நிறைந்து இருந்துள்ள சோலையை உடைய திரு வேங்கட மலையை உடையவன் –
பெரிய பெருமாளை பாடா நிற்க திருமலையிலே போவான் என் என்னில்
ஒருவனைக் கவி பாடும் போது அவனுடைய வரத்து சொல்லி இறே கவி பாடுவது –
ஸ்ரீ பரம பதத்தில் -நின்றும் ஸ்ரீ மதுரையிலே தங்கி -ஸ்ரீ திருவாய்ப்பாடிக்கு வந்தால் போலே –
ஸ்ரீ வைகுண்டத்தின் நின்றும் -ஸ்ரீ திருமலையிலே தங்கிக் காணும் ஸ்ரீ கோயிலுக்கு வந்தது –என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி
அன்றியே –
ஸ்ரீ கோயில் போக்யதை தமக்கு நிலம் அல்லாமையாலே ஸ்ரீ திருமலையிலே போய் தரிக்கப் பார்க்கிறார் -என்றுமாம் –
விரையார் –
நித்ய சூரிகளை உடையவன் ஆவதுக்கு மேல் ஓர் ஐஸ்வர்யம்-

விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் –
ஆற்றிலே அழுந்துவார் -ஆழம் காலிலே இளைப்பாறத் தேடுமா போலே அவர்களும் வந்து அடிமை செய்யும் இடம்
வேங்கடவன் –
அர்ச்சாவதாரத்துக்கு பொற் கால் பொலிய விட்ட இடம் –

நிமலன்
இத் தலையை பெறுகைக்கு பச்சை இட்டவனும் தானே
இத் தலையில் அர்த்தித்வம் இன்றிக்கே இருக்க இப்படி உபகரிக்கையால் வந்த ஔஜ்வல்யம்
இவனும் ஓர் அடி இடப் பார்த்து இராது ஒழிகை
பத்ப் யாமபிக மாச்சைவ ஸ்நேக சந்தர்சநேந ச-

நீதி -வானவன்
சேஷ சேஷித்வங்கள் முறை மாறாத நித்ய விபூதியில் உள்ளவன்
ஈச்வரோஹம் -என்று எதிரிட்டு இருக்கும் இடம் இறே இவ் விடம் –
அங்கு கலக்குவாரும் இல்லை கலங்குவாரும் இல்லை
இங்கு கலக்குவாரும் உண்டு கலங்குவாரும் உண்டு –

நீள் மதிள் அரங்கத்தம்மான் –
நீதி வானவன் -என்னா -நீள் மதிள் அரங்கத்தம்மான் –என்கிறார் –
அளப்பரிய ஆரமுதை அரங்கமேய அந்தணனை -என்னுமா போலே-நீள் மதிள்-

ரஷகத்துவதுக்கு போரும்படியான மதிளை உடைய பெரிய கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பரம சேஷி –

அம்மான் –
ஈரரசு தவிர்ந்தால் இறே சேஷித்வம் பூர்ணம் ஆவது
ஸ்ரீ திரு மலையிலே போக்யதை நிலம் இல்லாமையாலே மீளவும் ஸ்ரீ கோயிலிலே புகுகிறார்
வெள்ளத்தை கள்ளமடையாலே பள்ளத்தே விடுமா போலே
ஸ்ரீ திருவேம்கடமுடையான் வடக்குத் திருவாசலாலே வந்து புகுந்தான் அத்தனை -என்றுமாம்

திருக் கமல பாதம் –
செவ்வி குளிர்த்தி விகாசம் பரிமளம் தொடக்கமானவை ஆதித்யனைக் கண்டால் இறே தாமரை அலருவது –
இத் தாமரைக்கு ஆதித்யன் இவர் –
பிராட்டி திரு முலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொள்ளும் திருவடிகள்
இவருடைய தளிர் புரையும் திருவடிகள் இருக்கிற படி
அம்மான் திருக் கமல பாதம் –
தொடர்ந்து வருகைக்கு ப்ராப்தி –

வந்து –
த்விபாந்தரத்தில் சரக்கு சேர வேண்டினால் பாதிப் பாதி வழி யாகிலும் –
வருதல் -ஒருதலைப் பற்றுதல் செய்ய வேணும் இறே -அங்கன் இன்றியே –
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்கிறபடி
வழி வந்தானும் -தானே பற்றினானும் தானே -என்கிறது-

என் கண்ணினுள்ளன
எத்தைக் கண்ட கண்களுக்கு இவை விஷயம் ஆகின்றன
நீதி வானவன் -கமலபாதம் -என் கண்ணினுள்ளன-
சதா தர்சனம் பண்ணுகிறவர்கள் உடைய கண்ணுக்கு இலக்கானது கிடீர் என் கண்ணுக்கு இலக்கு ஆய்த்து –
வல்லதனை நாளும் விரோதம் பண்ணினேன்
போக்கற்றவாறே என் கண்ணை செம்பளித்தேன்
தொடர்ந்து வந்து செம்பளித்த கண்ணை யுறுத்து உள்ளே புகுந்து நிற்கையாலே என் கண்ணினுள்ளன-என்கிறார்
அன்றியே
தம் கண்ணாலே பார்க்கை அவத்யம் என்று கண்ணைச் செம்பளித்தார்-கண்ணினுள்ளே பிரகாசிக்கத் தொடங்கிற்று-

ஒக்கின்ற –
பிரயோஜனம் இரண்டுக்கும் ஒத்திரா –நின்றது அங்குதைக்கு சீல ஸித்தி -இங்குத்தைக்கு ஸ்வரூப ஸித்தி
ஒக்கின்ற –
ப்ரத்யஷ சாமாநகாரமாய் -இருத்தது -என்னுதல்
என் கண்ணுக்கு இலக்கான இடத்திலும் பழைய நிலை குலையாது -இருந்தது என்னுதல்
சம்சாரிகளைப் -பார்த்து உங்களுக்கும் ஒக்குமோ என்கிறார் ஆதல்
இந்த லாபம் அத் தலைக்கு ஒக்குமோ என்கிறார் ஆதல் –

அமலன் -உயர்வற உயர்நலம் உடையவன்
ஆதி –யவன்
பிரான் –மயர்வற மதி நலம் அருளினன்
அடியார்க்கு -பயிலும் சுடர் ஒளி
விண்ணவர் கோன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
வந்து -அவர் தொழுது எழு -என்றார் -இவர்க்கு அவை தானே -வந்தன-

——————————————————————————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய வியாக்யானம்-

அமலன் –
ஸ்ரீ வால்மீகி பகவான் -கோ குணவான் -என்று ப்ரச்நம் பண்ண -இஷ்வாகு வம்ஸ ப்ரபவ –
என்று சீல குணத்தை முந்துறச் சொன்னாப் போலேயும் –
ஸ்ரீ நம் ஆழ்வார் -ஆநந்த வல்லியில் ஆநந்த குணத்தை -உயர்வற உயர்நலம் உடையவன் –
என்று ப்ரதமத்திலே அநுபவித்தாப் போலேயும் –
இவரும் தம்முடைய நிஹீநதையைப் பாராதே மேல் விழுந்தபடியைக் கண்டு
அவனுடைய ஹேய ப்ரத்யநீகதையைப் முற்பட அனுபவிக்கிறார் –
தம்முடைய ஜன்மாதிகளால் உண்டான நிகர்ஷ அனுசந்தாநத்தாலே அகல –
அது தானே பற்றாசாக -திரு உள்ளம் புண்பட்டு மேல் விழுந்த இடத்திலும்
அத் தலைக்கு அவத்யம் இன்றியிலே நிர்மலனாய் இருக்கிற படியைக் கண்டு -அமலன் -என்கிறார் –
என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதி –

அமலன் –
அபஹத பாப்மத்வாதி குணங்கள் ஆத்மாவுக்கு உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஹேய சம்பந்த அவஹமாய் பகவத் ப்ரசாதத்தாலே உண்டாக வேண்டி இருக்கும் –
இவன் அங்கன் அன்றியே இருக்கும் –
அமலன் –
சுத்தன் என்றபடி -இவன் சுத்தனாகை -யாவது -தான் ஒருவன் சுத்தனாகை யன்று –
தன்னோடு சம்பந்தித்தாரையும் சுத்தராக்க வல்ல அடிவுடைமை –
துயரறு சுடரடி இறே
பாவநஸ் சர்வ லோகானாம் த்வமேவ ரகுநந்தன -என்னுமா போலே-

அமலன் –
அகில ஹேய ப்ரத்யநீகன் –
அசித் கதமான பரிணாமம் -தத் சம்ஸ்ருஷ்ட சேதன கதமான -அஞ்ஞான துக்கங்கள் –
முக்தகதமான ஜ்ஞான சங்கோச விகாசங்கள் –
நித்ய சித்தகதமான பாரதந்த்ர்யம்
இவையாகிய ஹேயங்களுக்கு ப்ரத்யநீகனாய் இருக்கும்
பாரதந்த்ர்யத்துக்கு குறை என் என்னில் –
தனக்கு அவ்வருகு ஒருவன் உளனானால் வருமதே பாரதந்த்ர்யம் -அது ஈஸ்வரனுக்கு அவத்யம் இறே –
பரதந்த்ரனுக்கு சேஷித்வம் அவத்யமா போலே
புருஷனுக்கு ஸ்தநோத் பேதமும் ஸ்திரீகளுக்கு சமச் குணம் யோகமும் காணும் அந்த மாருட்டத்தாலே வரும் அவத்யம் –
ப்ரத்யநீகனாகையாவது -உக்த அவத்யங்கள் தன்னை ஸ்பர்சியாமல் இருக்கும் அளவன்றிக்கே
புறம்புள்ள அவத்யங்களையும் அறுத்துக் கொடுக்க வல்லவனாகை
தேஜஸ் திமிரங்கள் போலே ஹேய ப்ரத்யநீகன் -என்கை –
ஆகை இறே இவனை ஒழிந்தாருக்கு அடைய இவனே சுபாஸ்ரயமாய் இருக்கிறது –

ஆதி –
இப்படி நிஹீநரான உம்மை மேல் விழுந்து அங்கீகரிக்கைக்கு அடி என் என்ன
பெற்ற பாவிக்கு விடப்போமோ -என்கிறார் –
ஆதி –
ஆதி யத இதி ஆதி -ஸ்வரூப ரூபாதிகளைக் கண்டு எல்லாரும் மேல் விழும்படி இருக்கிற தான்
இத் தலையில் நிஹீநதை பாராதே மேல் விழுந்தான் -என்கை
ஆதி யத இதி ஆதி-தன்னை அனுபவித்தால் வேறு ஒன்றில் போக ஒட்டாதபடியாய் இருக்கும் –
ஆதி –
பூர்வஜ -என்னுமாபோலே -என்னுடைய நிகர்ஷத்தைப் போக்கி தன் பக்கலில் சேர்த்துக் கொள்ளுகையாலே
என் பேற்றுக்கு முற்பாடன் ஆனவன் –
ஆதி –
அடியில் அழிந்த ஜகத்தை உண்டாக்கினாப் போலே -நான் அழித்துக் கொண்ட ஸ்வரூபத்தை
உண்டாக்கினவன் –
இத்தால் -கல்யாண குண யோகத்தை சொல்லிற்று –

ஆக இரண்டு -பதத்தாலும் -ஹேய ப்ரத்யநீகத்வமும் கல்யாண குண யோகமும் சொல்லிற்று –

பிரான் –
கீழ்ப் பண்ணின உபகாரத்தை நினைத்து -பிரான் -என்கிறது ஆதல் –
மேல் பண்ணப் புகுகிற உபகாரத்தை நினைத்து பிரான் -என்கிறது ஆதல் –
பிரான் –
என் நிகர்ஷம் பாராதே என்னை விஷயீ கரித்த உபகாரகன்-

அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் –
எனக்கு -என்றும் -பிறர்க்கு -என்றும் திரிந்த என்னை –
தனக்கும் தன் அடியார்க்கும் ஆக்கின பரிசுத்த ஸ்வபாவன்
தலையைப் பிடித்து கால் கீழே இட்டுக் கொண்டான் –
ரத்ன ஹாரீ ச பார்த்திவ என்னுமா போலே நல்லது கண்டால் -அவர்களுக்கு -என்று இறே –
ஸ்வ விஷய சேஷத்வத்தை உண்டாக்கின அளவு அன்றிக்கே
ததீய சேஷத்வ பர்யந்தமாக்கி
ததீய சேஷத்வம் நிலை நிற்கும்படி பண்ணினான்
ஆத்மாவுக்கு நிலை நின்ற வேஷம் சேஷத்வம் ஆகையாலே -அடியார்க்கு -என்கிறார்-

அடியார்க்கு –
இவர்களுக்கு -ஊரும் பேரும் தாருமாகிறது சேஷத்வம் ஆய்த்து –
சேஷத்வம் இறே இவ் வாத்மாவுக்கு பிரதம நிரூபகம்

என்னை –
தேஹாத்ம அபிமாநிகளும் தீண்டாத என்னை –
ப்ரக்ருதிக்கு அடிமை செய்து போந்த என்னை –
தந்த பதத்தின் சீர்மை யறியாத வென்னை –
நன்மைக்கு தனக்கு அவ்வருகு இல்லாதாப் போலே தீமைக்கு எனக்கு அவ்வருகு இல்லாத வென்னை

ஆட்படுத்த –
பகவத் சேஷத்து அளவில் நின்றால் மீள சங்கை உண்டு –
பாகவத் சேஷத்த்ளவும் சென்றால் மீளப் போகாதே
உகப்பாலே வருமது ஆகையாலே -ஒரு ஷேத்ரம் பத்து எட்டு க்ரயம் சென்றால் மீள விரகு இல்லை –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு முதலிகள் உடைய விஷயீகாரம் பெருமாளுடைய விஷயீ காரத்துக்கு முற்பட்டாப் போலே
இவருக்கு ததீய விஷயீ காரம் முற்ப்பட்ட படி –
ஆநயை நம் ஹரிச் ரேஷ்ட –

ஆட்படுத்த –
தான் சேஷித்வதினுடைய எல்லையில் நின்றால் போலே -சேஷத்வத்தின்
எல்லையில் என்னை வைத்தான் –

அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் –
அவர்களோடு சம புத்தி பண்ணித் தராமே -அவர்களுக்கு சேஷ பூதன் ஆக்கின பரிசுத்த ஸ்வபாவன் –
ஐஸ்வர்யார்த்திகளும் ஆத்ம ப்ராப்தி காமரும் தன்னைப் பற்றுவர்கள் இறே –
இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு அதிகாரிகள் அல்லர்களே யவர்கள்
அநந்ய பிரயோஜனர் இறே இவர்க்கு ஆவார்
தாமும் அநந்ய பிரயோஜனர் ஆகையாலே -விசேஷித்து லோக சாரங்க மஹா முனிகளை
இட்டு தம்மை விஷயீகரித்ததை சொல்லுகிறார்
தம்மை வஹித்த அளவில் தாம் சேஷ பூதர் ஆனபடி என் என்னில்
திருத் துழாய் திரு அபிஷேகத்தில் இருந்தது என்னா சேஷத்வம் குலையாதே-
மயி ப்ருத்யே ஸ்திதே தேவாநாஜ்ஞா பயது கிம்ன் ருபை -என்றாம் என்னா
அவனுடைய சேஷித்வம் குலையாதாப் போலே-

விமலன் –
என் சிறுமை பாராதே ததீயர்க்கு சேஷம் ஆக்குகையால் வந்த ஔஜ்வல்யம்
எதிரிகள் தரம் பாராதே சீரியர் தம் தாம் அளவிலே இறே கொடுப்பது-

விண்ணவர் கோன் –
நிஹீ நரான உம்மை இப்படி விஷயீகரித்தது ஆள் இல்லாமையாலேயோ என்னில் –
ஒரு த்ரிபாத் விபூதியாக தன்னை தாலாட்ட இருக்கிறவன் கிடீர் என்னை விஷயீ கரித்தான் -என்கை
இவ் ஔதார்யம் கற்றது அவர்களோடே கிடீர் என்றுமாம் –
அஸ்மாபிஸ் துவ்யோ பவதி -விபீஷணன் நம்மோடு ஒருவனாக ஆகட்டும் -என்றார்கள் இறே
விண்ணவர் கோன்
இங்குத்தை குழாத்தை ஒழிய அங்குத்தை குழாத்தையும் காட்டிக் கொடுத்தான்
உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப்பட வேண்டியது இல்லை
கோன்
அவர்களாலும் எல்லை காண முடியாது-

விரையார் பொழில் வேங்கடவன் –
பரிமளம் நிறைந்து இருந்துள்ள சோலையை உடைய திரு வேங்கட மலையை உடையவன்
சர்வ கந்த என்கிற வஸ்து வாகையாலே போலியான பரிமளம் கண்டு கால் தாழ்ந்தது இத்தனை
குஸஸ்தலே நிவஸத் -என்னுமா போலே
பரமபதத்தில் நின்றும் கோயிலிலே ஏற வருகைக்கு என்று தங்குகிற தேசம் திருமலை
பிள்ளை திரு நறையூர் அரையரை சிலர் -பெரிய பெருமாளை அனுபவிக்க இழிந்தவர்
திருவேம்கடஉடையானைப் பாடப் போவது என் என்ன –
ஆற்றிலே அமிழ்ந்துகிறவன் ஒரு காலை தரையிலே ஊன்றினால் பிழைக்கலாமோ
என்று கால் தாழ்க்குமா போலே இவரும் பெரிய பெருமாள் அழகிலே அழுந்துகிறவர் ஆகையாலே
திருமலையிலே கால் தாழ்ந்தார்-
அது மடுவாகிறது அறிகிறிலர் –
வேறு சிலர் பெரிய பெருமாளை பாடா நிற்க்க திருமலையிலே போவான் என் -என்று அவரைக் கேட்க
ஒருவனைக் கவி பாடும் போது அவனுடைய வரத்து சொல்லி இறே கவி பாடுவது –
பரம பதத்தில் -நின்றும் ஸ்ரீ மதுரையிலே தங்கி -திருவாய்ப்பாடிக்கு வந்தால் போலே –
ஸ்ரீ வைகுண்டத்தின் நின்றும் -திருமலையிலே தங்கிக் காணும் கோயிலுக்கு வந்தது –
நித்ய சூரிகளை உடையவன் ஆவதுக்கு மேல் ஓர் ஐஸ்வர்யம்

விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் –
ஆற்றிலே அழுந்துவார் -ஆழம்காலிலே இளைப்பாறத் தேடுமா போலே அவர்களும் வந்து அடிமை செய்யும் இடம்
வேங்கடவன் –
அர்ச்சாவதாரத்துக்கு பொற் கால் பொலிய விட்ட இடம் –

நிமலன்
நிர்ஹேதுகமாக விஷயீ கரித்த ஸூத்தி யோகத்தை உடையவன் –
இத்தலையை பெறுகைக்கு பச்சை இட்டவனும் தானே
இத்தலையில் அர்த்தித்வம் இன்றிக்கே இருக்க இப்படி உபகரிக்கையால் வந்த ஔஜ்வல்யம்
இவனும் ஓர் அடி இடப்பார்த்து இராது ஒழிகை
ஓர் அடி இட்டார் உண்டாகில் -பத்ப் யாமபிக மாச்சைவ ஸ்நேக சந்தர்சநேந ச –
ஆபிமுக்யம் அடியாக அங்கீகரித்து ஓர் அஞ்சலி மாத்ரமும் கூட உண்டு அறுக்க மாட்டாதான் ஒருவன்
நிமலன் –
இத்தலைக்கு உபகரித்தானாய் இருக்கை அன்றிக்கே தன் பேறாக இருக்கை-

அமலன் -என்றது இவரைத் தனக்கு ஆக்கினபடி –
விமலன்-என்றது தன் அடியார்க்கு ஆக்கினபடி –
நிமலன் -என்றது நான் பச்சை இடா நிற்க என் கார்யம் செய்தான் -என்கை
நிமலன் –
இது தன் பேறாக செய்தான் -என்கிறார் –
க்ருத க்ருத்யஸ்த தாராம -என்கிறபடியே
நின்மலன் –
தான் உபகரித்தானாய் இத்தலை -உதவிக் கைம்மாறு என்னுயிர் -என்றால் போலே
பிரத்யுபகாரம் தேடித் தடுமாறாத படி -ப்ரணஷ் டஸ்ய யதா லாப என்கிறபடியே
உடையவன் உடைமையைப் பெற்றான் ஆகில் நமக்கு என் என்று –
ஆத்ம லாபம் தன்னதாம்படி இருக்கிற ஸூத்தியை உடையவன் –

நீதி -வானவன்
இப்படி புகுர நிறுத்துகைக்கு அடி -சேஷ சேஷித்வங்கள் முறை மாறாத நித்ய விபூதி-வாசனை என்கை
ஈச்வரோஹம் -என்று எதிரிட்டு இருக்கும் இடம் இறே இவ்விடம் –
அங்கு கலக்குவாரும் இல்லை கலங்குவாரும் இல்லை
இங்கு கலக்குவாரும் உண்டு கலங்குவாரும் உண்டு –

நீள் மதிள் அரங்கத்தம்மான் –
நீதி வானவன் -என்னா -நீள் மதிள் அரங்கத்தம்மான் –என்கிறார் –
அளப்பரிய ஆரமுதை அரங்கமேய அந்தணனை -என்னுமா போலே
நீள் மதிள் அரங்கம் –
ரஷகத்துவதுக்கு போரும்படியான மதிளை உடைய பெரிய கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பரம சேஷி –
இப் பாசுரம் கேட்டுப் போலே காணும் திருமங்கை ஆழ்வார் திரு மதிள் செய்தது
அழகிய வாயாலே இது அருளிச் செய்த பின்பாகாதே திரு மாளிகைகளும் திருக் கோபுரங்களும் கனத்தது-

அம்மான் –
அங்குள்ளோரோடு ஒத்த ப்ராப்தி இங்கு உள்ளோரோடும் உண்டாகையாலே இங்கு வந்து சாய்ந்து அருளிற்று

அம்மான் –
ஈரரசு தவிர்ந்தால் இறே சேஷித்வம் பூர்ணம் ஆவது
திரு மலையிலே போக்யதை நிலம் இல்லாமையாலே மீளவும் கோயிலிலே புகுகிறார்
வெள்ளத்தை கள்ளமடையாலே பள்ளத்தே விடுமா போலே
திருவேம்கடமுடையான் வடக்குத் திருவாசலாலே வந்து புகுந்தான் அத்தனை -என்றுமாம்-

திருக் கமல பாதம் –
பெரும் காற்றிலே யிழிவார் தெப்பம் கொண்டு இழியுமா போலே -ஒரு தாமரைப் -பூவை திருஷ்டாந்தம் -ஆக்குகிறார் –
செவ்வி குளிர்த்தி நாற்றம் விகாசம் -இவை தாமரைப் பூவைப் போலே இருக்கையாலே –
ஆதித்ய சன்னதியிலே அலறும் தாமரை போலே ஆஸ்ரித சன்னதியிலே அலறும் தாமரை யாயத்து -திருவடிகள்-
பிராட்டி திருமுலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொள்ளும் திருவடிகள்
இவருடைய தளிர் புரையும் திருவடிகள் இருக்கிற படி-

அம்மான் திருக் கமல பாதம் –
என்கையாலே ப்ராப்தமுமாய் ப்ராப்யமுமாய் ஆன திருவடிகள் -என்கை
நாராயண சரணங்கள் –என்றபடி

வந்து –
என்று அவனுடைய உபாய பூர்த்தி -சொல்லுகிறது
விதிஸி வசனகாத் யைர்தத் யாது மத்யந்த தூர -மான திருவடிகள் கிடீர் என்னளவும் வந்து விஷயீ கரித்தது
த்விபாந்தரத்தில் சரக்கு சேர வேண்டினால் பாதிப் பாதி வழி யாகிலும் – வருதல் –
ஒருதலைப் பற்றுதல் செய்ய வேணும் இறே -அங்கன் இன்றியே –
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்கிறபடி
வழி வந்தானும் -தானே பற்றினானும் தானே -என்கிறது-

என் கண்ணினுள்ளன
எத்தைக் கண்ட கண்ககளுக்கு இவை விஷயம் ஆகின்றன

நீதிவானவன் -கமலபாதம் -என் கண்ணினுள்ளன-
சதா தர்சனம் பண்ணுகிறவர்கள் உடைய கண்ணுக்கு இலக்கானது கிடீர் என் கண்ணுக்கு இலக்கு ஆய்த்து –
வல்லதனை நாளும் விரோதம் பண்ணினேன்
போக்கற்றவாறே என் கண்ணை செம்பளித்தேன்
தொடர்ந்து வந்து செம்பளித்த கண்ணை யுறுத்து உள்ளே புகுந்து நிற்கையாலே என் கண்ணினுள்ளன-என்கிறார்
அன்றியே
தம் கண்ணாலே பார்க்கை அவத்யம் என்று கண்ணைச் செம்பளித்தார்
கண்ணினுள்ளே பிரகாசிக்கத் தொடங்கிற்று-

ஒக்கின்ற –
பிரயோஜனம் இரண்டுக்கும் ஒத்திரா –
நின்றது அங்குதைக்கு சீல ஸித்தி -இங்குத்தைக்கு ஸ்வரூப ஸித்தி
ஒக்கின்ற –
என் கண்ணுக்கு இலக்கான உங்களுக்கும் ஒக்கும் என்கிறார் –ஆதல்
கண்ணினுள்ளன ஒக்கின்றவே -என்று ஒரு பதமாய்
என் கண்ணினுள்ளன வானாப் போலே இரா நின்றது -என்றபடி –
ஒன்பது பாட்டு வழியிலே அனுசந்தித்து பத்தாம் பாட்டிலே திருவடி தொழுதார் என்கிற
ஐதிகத்தின் படியே மானஸ சாஷாத்காரம் தான் கண்ணிட்டுக் கண்டால் போலே இருக்கை
அங்கன் இன்றிக்கே –
மானஸ சாஷாத்காரத்தோடு சேர்ந்து இருந்ததீ -சஷூர் விஷயமான திருவடிகள் என்றுமாம் –

அமலன் -உயர்வற உயர்நலம் உடையவன்
ஆதி –யவன்
பிரான் மயர்வற மதி நலம் அருளினன்
அடியார்க்கு -பயிலும் சுடர் ஒளி
விண்ணவர் கோன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
வந்து -அவர் தொழுது எழு -என்றார் -இவர்க்கு அவை தானே -வந்தன –

——————————————————————————————————————————————————————-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -அவதாரிகை
இதில்- முதல் பாட்டு -திரு மந்த்ரத்திலும் த்வயத்திலும் முமுஷுவுக்கு அவஸ்ய அனுசந்தேயங்களான
அர்த்தங்களை ஸூசிப்பிக்கிறது-

வியாக்யானம்
அமலன் -என்கிறது மல ப்ரதிபடன் -என்றபடி -இத்தால் மோஷ ப்ரதத்வம் சொல்லிற்று ஆய்த்து –
இது பிரதானமான ரஷகத்வம் ஆகையாலே பிரியப் பேசப்படுகிறது

ஆதி –
ஏஷ கர்த்தா ந க்ரியதே -இத்யாதிகளில் படியே சர்வ ஜநதேக காரண பூதன்
இத்தால் -காரணமே சரண்யம் என்கிறபடியே முமுஷுவுக்கு சரணமாக பற்றப்படுமவன் என்று பலிதம்
இக் காரணத்வமும் மோஷ பிரதத்வமும் சத்ர சாமரங்கள் போலே சர்வ லோக
சரண்யனுக்கு விசேஷ சிஹ்னங்கள்-

பிரான் –
கருணா க்வாபி புருஷே இத்யாதிகளில் படியே சர்வ உபகாரகன்
இங்கு ஆத்மாக்கள் உடைய சத்தாதி ஸ்தாபனம் முதலாக பரிபூர்ண கைங்கர்ய ப்ரதான
பர்யந்தமாக -ப்ரத்யுபகாராதி நிரபேஷனாவனனுடைய
அநுகம்பா க்ருத்யங்கள் எல்லாம் சாமான்யேந -சொல்லப்படுகிறது
இது எல்லாம் பிரதம அஷரார்தமான ரஷண -பேதம்
இவை தம்மளவில் பர்யவசித்த படியிலே இம் மூன்று பதத்துக்கும் தாத்பர்யம்
இது மேல் பாசுரங்களிலும் காணலாம்-

அடியார்க்கு என்னை -ஆட்படுத்த -என்கிற இடத்தில் –
அடியார்-என்கிற இத்தால் -த்ருதீய அஷரத்திலே சொன்ன ஜீவ வர்க்கமும்
ஜீவனில் ஈஸ்வரனைக் காட்டில் வேறுபாடும் அந்யோந்யம் பிரிவும் -காட்டப்படுகிறது –
அடியார் -என்றால்
சர்வ சாதாரணமாக சதுர்த்தியில் சொன்ன தாதர்த்யவான்களை எல்லாம் காட்டிற்றே யாகிலும் –
இங்கு அடியார் -என்கிறது -யோ ஹ்யேநம் புருஷம் வேத தேவா அபி ந தம் விது –
என்னும்படி அபரிச்சேத்ய மகாத்யம்யரான சேஷத்வ ஞானரான ரசிகரை –
இப்படி அடியார்க்கு -என்று விசேஷ உபாதானம் பண்ணுகையாலே –
மத்யம அஷரத்தின் படியே நிருபாதிக சேஷிகள் வேறு இல்லாத -படியும்
கர்ம உபாதிக சேஷிகளோடு தமக்கு துவக்கு அற்ற படியும் சொல்லிற்று ஆயிற்று –
சர்வ சேஷி யாகையாலே சர்வத்தையும் யதேஷ்டமாக விநியோகிக்க ப்ராப்தனாய் –
நிரந்குச ஸ்வதந்த்ரன் ஆகையாலே சர்வத்தையும் யதேஷ்டமாக விநியோகிக்க சக்தனுமான சர்வேஸ்வரன் –
அநந்ய பிரயோஜனரான ஆஸ்ரீதர்க்கு சர்வமும் சேஷமாகக் கடவது -என்று
விநியோக விசேஷத்தால் சர்வருக்கும் பாகவத சேஷத்வம் நித்ய சித்தமானால்
அநந்ய பிரயோஜனரான ஆஸ்ரீதர்க்கு பகவத சேஷத்வம் ஈஸ்வரன் தன்னையும் பாகவதரையும் ஒழிந்த
அந்யரைப் பற்ற சேஷத்வம் இல்லாதபடி-வருகிறதே
இதின் பலமான -கைங்கர்யமும் இப்படி வருகிறது ஆகையாலே -என்னை அடியார்க்கே ஆட்படுதினான் -என்ற
அவதாரணமும் இங்கே விவஷிதம்
மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பரோடு உற்றிலேன் -என்று இறே இவர்களுடைய -பாசுரம்-

என்னை ஆட்படுத்த –
யூயமிந்த்ரிய கிங்கரா -என்னும்படி இந்திரிய கிங்கரனாய் வைத்து -அதுக்கு மேலே –
ஈச்வரோஹம் -என்று இருக்கக் கடவ -என்னை –
அதோஸஹமபி தே தாஸ -என்னப் பண்ணின உபகாரத்தில் காட்டிலும் -உற்றதும் உன் அடியார்க்கு -அடிமை என்னப்
பண்ணின இதுக்கு மேலே ஒரு உபகாரம் உண்டோ என்று –
இப் பரம உபகாரத்தையும் பிரித்து -பேசுகிறார்
இது நமஸில் தாத்பர்யம்-

கீழ்ச் சொன்ன க்ர்த்ருத்வாதிகளாலே -எருத்துக் கொடி யுடையான் -முதலான ஆத்மாந்தரங்களுக்கு
போலே அஜ்ஞாநாதி தோஷங்கள் இவனுக்கு உண்டாகில் இவன் முன்பு சொன்ன
சாஷான் மோஷ ப்ரதானம் பண்ண வல்லனோ -என்ன –
விமலன்
நித்ய நிர்தோஷன் -இத்தால் பத்த முக்த விலஷணன் -என்றது ஆயிற்று –

இவ்வளவு சூரிகளுக்கும் இல்லையோ என்ன –
விண்ணவர் கோன் –
பராதீன ஸூத்தி யோகத்தை உடையரான சூரிகளைக் காட்டில் வேறு பட்டவன் –
இத்தாலே ஸூரி சேவ்யமான பர ரூபமும் தோன்றுகிறது
இப்படி எட்டா நிலத்திலே இருக்கும் இருப்பு இங்கு உள்ளாருக்கு நிலம் அன்றே -என்ன

விரையார் பொழில் -வேம்கடவன்
பரிமளம் வடிவு கொண்டால் போலே இருக்கிற திருச் சோலைகளை உடைய திரு மலையிலே
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்கிறபடியே எல்லாருக்கும்
ஆஸ்ரயிக்கவும் அநுபவிக்குமாம்படி -இருள் தரும் மா ஞாலத்துள் குன்றத்து இட்ட விளக்காய் -நிற்கிறவன்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் -ஆவேனே என்னும்படி பிறந்த ஸ்தாவரங்களுடைய
ஆமோதம் அதிசயமாய் இருக்கும் –

இப்படி சர்வ சுலபன் ஆனாலும்
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே என்னும்படி -நிற்குமோ -என்ன
நிமலன்
ப்ரஹ்ம ருத்ராதிகளும் அஞ்சி அருளப்பாடு முன்னாக அணுக வேண்டும்படியான
ஐஸ்வர்யத்திலே குறும்பற்ற நம்பிக்கு கூசாதே நிரந்தர சம்ச்லேஷம் பண்ணலாம்படி
தன் ஈஸ்வர சுணை யாகிற ஆஸ்ரயண விரோதி தோஷத்தை -மறைத்து
அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி -என்கிறபடியே ஆஸ்ரீத பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு நிற்குமவன்

இப்படி சௌலப்ய சௌசீல்யங்கள் உண்டானாலும் ஆஸ்ரீத தோஷத்தைக் காணும் ஆகில்
அணுகக் கூசார்களோ –என்னில்
நின்மலன் –
அவிஜ்ஞாதா -என்றும் -என் அடியார் அது -செய்யார் என்றும் சொல்லுகிறபடியே
ஆஸ்ரீதருடைய தோஷ தர்சனம் ஆகிற சரண்ய தோஷம் இல்லாதவன்
சர்வஞஞனாய் இருக்கச் செய்தே ஆஸ்ரீத தோஷத்தை காணான் என்றது –
காணும் அதுவும் இவர்கள் உடைய தோஷத்தைக் கழிக்க உறுப்பாம் -என்றபடி –

விமலன் -என்று தொடங்கி -இவ் வஞ்சு பதங்களாலே நாராயண சப்தத்தில்
உபாயத்வ ப்ராப்யத்வங்களுக்கு உபயுக்தமான உபய லிங்கத்வமும்
உபய விபூதி நிர்வாஹகத்வமும் சொல்லிற்று ஆயிற்று
மேல் -இவன் ஸ்வரூப ப்ராப்த கைங்கர்ய ரூபமான நீதியிலே நிரதரான நித்ய ஸூரிகளுக்கு
சேவ்யனானாப் போலே நமக்கும் சேவ்யனாம் என்று –
சதுர்த்தியில் கருத்தான கைங்கர்ய பிரதி சம்பந்தித்வத்தை அனுசந்திக்கிறார்

நீதி -வானவன்
இங்கு வான் -என்கிற சப்தம் ஸூரி சஹிதமான பரம பதத்தை சொல்லுகிறது
நீதியை நடத்துவிக்கும் வானிலே வர்த்திக்குமவன் -என்னவுமாம் –
தேன வஞ்சயதே லோகன் மாயா யோகேந கேசவ -என்கிறபடியே –கலக்குவாரும்
அவசா நந்தி மாம் மூடா -என்கிறபடியே கலங்குவாரும் இல்லாத தேசம் ஆகையாலே
தாஸ்யம் ஐஸ்வர்ய யோகேன ஜ்ஞாதீ நாஞ்ச கரோம் யஹம் –என்றும்
பரம ஈஸ்வர சம்ஜ்ஞோஸ்ஜ்ஞா கிமந்யோ மய்ய வஸ்திதே -என்றும்
இங்கு பிறக்கும் ஈசேசி தவ்யத்தின் மாறாட்டம் இல்லாத பரம பதத்தில் நித்ய வாஸம்
பண்ணுகிறவன் என்றது ஆய்த்து-

இப்படி சர்வ சேவ்யனான சர்வ சேஷி -விபீடணற்கு வேறாக நல்லான் -என்கிறபடியே
தமக்கு இப்போது விசேஷித்து அனுபவிக்கலாம்படியைப் பேசுகிறார் –
நீள் மதிள் அரங்கத்தம்மான் –
அயோத்யை -என்றும் அபராஜிதை -என்றும் சொல்லுகிற கலங்கா பெரு நகரத்தின் படியைக்
கொடி யணி நெடு மதிள்களாலே -ஸூ ரஷிதமான ஸ்தல விசேஷத்தாலே காட்டி –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான -தன் படியை -செங்கோல் உடைய திருவரங்க செல்வனார் ஆன
ஆகார விசேஷத்தாலே அறிவித்துக் கொண்டு
சேஷித்வத்தின் எல்லையிலே தான் நின்றால் போலே
சேஷத்வத்தின் எல்லையில் என்னை நிறுத்தின ஸ்வ தந்திர ஸ்வாமி
அரங்கத்தம்மான் –
நீர்மைக்கும் மேன்மைக்கும் எல்லை யானவன்
இவனுடைய உபாயத்வ ப்ராப்யத்வங்களில் உறைப்பு உண்டான திருவடிகளை அனுபவிக்கிறார்
திருக் -கமலபாதம்
பாவநத்வ போக்யத்வங்களாலே சுபாஸ்ரயமான திருவடிகள் –
திருவுக்கு லீலா கமலம் போலே இருக்கிற பாதம் -என்னவுமாம்-

வந்து
வந்து என்கிற இத்தால் ஓடின தம்மை துடர்ந்த படியும்
அயத்ந லப்தங்களான படியும் -தோன்றுகிறது –

இத் திருவடிகளில் வைத்த கண் வாங்க ஒண்ணாத படியான போக்ய அதிசயத்தை
ஓர் உத்ப்ரேஷையாலே அருளிச் செய்கிறார்
என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே
தேவாதிகளில் தலைவரான ப்ரஹ்மாதிகள் அடையவும்
சனகாதிகளான யோகிகள் அடையவும்
திவ்ய சஷூஸ் ஸுக்களுக்கும் கூட தூயமாய் இருக்கக் கடவ அவை –
மனுஷ்ய மாத்ரமான என்னுடைய மாம்ஸ சஷூஸ் ஸுக்களுக்கும்
அத்ய அசன்னமாய் இரா நின்றன -என்று ஆச்சர்யப் படுகிறார் –

நீள் மதிள் அரங்கத்தம்மான் திருக்கமல பாதம் -என்று
த்வயத்தில் பூர்வ உத்தர நாராயண சப்தார்த்தையும் -சரண சப்தார்த்தையும் அனுசந்தித்த படி –

இப்பாட்டால் –
1-மோஷ -பிரதத்வத்தையும்
2-ஜகத் -காரணத்வத்தையும்
3-மற்றும் சர்வ ப்ரகார உபகாரத்வத்தையும்
4-அவற்றில் சார தமமான உபகார விசேஷத்வத்தையும்
5-நித்ய நிர்தோஷத்வத்தையும்
6-நித்ய ஸூரி நிர்வாஹத்வத்தையும்
7-நித்ய விக்ரஹவத்தையும்
8-சர்வ சுலபத்வத்தையும்
9-சௌசீல்யத்தையும்
10-வாத்சல்யத்தையும்
11-கைங்கர்ய உத்தேச்யத்வத்தையும்
12-கைங்கர்ய ஸ்தான விசேஷத்வத்தையும்
13-சர்வ ஸ்வாமித்வத்தையும்
14-திருவடிகளினுடைய பாவனத்வத்தையும் போக்யத்வத்தையும்
15அவற்றை தான் அநாயாசமாக அநந்ய த்ருஷ்டிகளாகக் கொண்டு அனுபவிக்கப் பெற்ற படியையும்-முன்னிட்டு
16-ஸ்ரீ யபதியினுடைய பராகாஷ்டாப்ராப்த குண ப்ரகர்ஷங்களை அனுசந்தித்தார்-

அவற்றில்
1-சம்சார நிவர்தக காஷ்டை யாவது -களை யற்ற கைங்கர்யத்தை கொடுக்கை –
2-காரணத்வ காஷ்டை யாவது -காரணாந்தரங்கள் எல்லாம் தான் இட்ட வழக்காய் –
தனக்காதல் -தன்னுடைய ஜ்ஞான சக்திகளுக்கு ஆதல் -ஒரு காரண சம்பாவனை இன்றிக்கே இருக்கை –
3-சரண்யத்வ காஷ்டை யாவது -தன்னை ரஷகனாக பற்றினவர்களுக்கு தன்னை ஒழிய
மற்றவரை ரஷகராகப் பற்ற வேண்டாதபடி இருக்கை
4-உபகாரத்வ காஷ்டை யாவது -ஒரு ஷூத்ர வ்யாஜத்தை அவலம்பித்து உபய விபூதி
விசிஷ்டனான தன்னை அனுபாவ்யனகக் கொடுத்தும் -அதுக்கு மேல் கொடுக்க லாவது
இல்லாமையாலே நித்யருணியாய் இருக்கை

5-க்ருபா காஷ்டை யாவது -சத்ருவினுடைய சம்பந்திகளும் கூட த்யாஜ்யர் என்ற பரிவர் முன்னே
சத்ரு தானும் இசையில் ஸ்வீகரிப்பேன் -என்று எதிர் பேசும்படியான இரக்கத்தை உடையனாய்
அவர்கள் தாங்களும் இவனை கைக் கொள்ளும்படி பண்ணுகை –
6-ஸ்வா தந்திர காஷ்டை யாவது -தன்னையும் பிறரையும் தான் நிறுத்தின நிலைகளிலே
நிறுத்தும் போது விலக்க வல்லார் இன்றிக்கே இருக்கை
7-நிர்தோஷத்வ காஷ்டை யாவது -தோஷ யுக்தங்களான பதார்த்தங்களோடு உண்டான
சம்சர்க்கத்தாலும் -பிறர்க்கு அஞ்ஞான துக்க ஹேதுக்கள் ஆனவற்றை தான் அனுஷ்டித்தாலும்
தனக்கு அஞ்ஞான துக்கங்கள் வராது இருக்கை
8-ஸ்வாமித்வ காஷ்டை யாவது -விபூதிமான்களை எல்லாம் தனக்கு விபூதியாக உடையவனாய் இருக்கை
9-சௌலப்ய காஷ்டை யாவது -அகல நினைப்பாருக்கும் அகல ஒண்ணாத படி அணுக நிற்கை

10-சௌசீல்ய காஷ்டை யாவது -தன் பக்கல் ஈச்வரத்தை சங்கிப்பாருக்கும் வெளி இடுவாருக்கும்
தானே மறு மாற்றம் சொல்லி மேலும் தன்னை தாழ விட்டு பரிமாறா நிற்கை
11-வாத்சல்ய காஷ்டை யாவது -அந்தரங்கராய் இருப்பாரும் ஆஸ்ரீத விஷயத்தில்
ஆயிரம் கோடி குற்றம் காட்டிலும் அநாதரம் பிறப்பிக்க ஒண்ணாது இருக்கை –
12-ப்ராப்யத்வ காஷ்டை யாவது -தன் விசேஷணம் ஆக அல்லது மற்று ஒரு ப்ராப்யம் இல்லாது இருக்கை
13-ஆஸ்ரீத பஷ பாதித்வ காஷ்டை யாவது -சர்வ வர்ண சமனான தான் ஆஸ்ரீத சங்கல்பத்தோடே
விரோதித்த தன் சாமான்ய சங்கல்பத்தை அசத் கல்பமாக்கி அநிதர சுலபமான ஆபிமுக்யதைப் பண்ணுகை
14-போக்யத்வ காஷ்டை யாவது -தன் ஸ்வரூபத்தை அனுசந்தித்தால் தன் விசேஷணமாக
சர்வத்தையும் அனுபவிக்குமது அதின் திவலையோடு ஒத்து இருக்கை
15-அயத்ந போக்யத்வ காஷ்டை யாவது -போகார்தமாக கரண பிரேரணமும் வேண்டாதபடி
தென்றலும் பரிமளமும் வந்தாப் போலே -வந்தது விலக்க ஒண்ணாத படி அனுபாவ்யனாய் இருக்கை
16-இவை எல்லாம் இப்பதங்களில் அடைவே ஆழ்வார் அனுபவித்த படியை அனுசந்திப்பது-

————————–

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே ——-10

——————————————————————————————

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய-அவதாரிகை –

நிகமத்தில் -இவ்வளவும் ஜ்ஞான சாஷாத் காரம் –
மேல் ஸ்ரீ லோக ஸாரங்க மஹா முனிகள் தோளில் வந்து புகுந்து விண்ணப்பம் செய்கிறார் –
ஸ்ரீ பெரிய பெருமாள் அழகைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணா என்கிறார் –

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய–வியாக்யானம்-

கொண்டல் வண்ணனை –
தாபத் த்ரயத்தாலே விடாய்த்த தம் விடாய் தீரும்படியாய் –
அத்ரௌசயாளுரில சீதள காளமேக என்கிறபடியே வர்ஷூகமான காளமேகம் போலே
இருக்கிற திரு நிறத்தை வுடையவனை –
பன்னீர்க்குப்பி போலே உள்ளுள்ளவை எல்லாம் புறம்பே நிழல் இட்டபடி-

கோவலனாய் வெண்ணெய் வுண்ட வாயன் –
இடையனாய் வெண்ணெய் உண்ட திருப் பவளத்தை உடையவனை –
சக்ரவர்த்தித் திருமகன் ஆகில் வெண்ணெய் உண்ண ஒட்டார்கள் என்று கருத்து –
கோவலன் –
ஆபிஜாத்யம் -பெருமாளுக்கு கட்டுண்பது அடி வுண்பதாகக் கிடைக்குமோ –
வெண்ணெய் வுண்ட வாயன் –
களவு கண்டு ஒளித்து வந்து கிடக்கிறவன்
ஸ்ரீ பெரிய பெருமாள் கொறுட்டை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறா நிற்கும்-

என் உள்ளம் கவர்ந்தானை-
என் நெஞ்சை அபஹரித்தவனை –
கோவலனாய் வெண்ணெய் வுண்டாப் போலே கொண்டல் வண்ணனாய் என் உள்ளம் கவர்ந்தவனை
யசோதைப் பிராட்டி வுடைய வெண்ணெயிலே பண்ணின ஸ்ரத்தையை என் நெஞ்சிலே பண்ணி புஜித்தவனை –
வைத்த குறி அழியாது இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே யாய்த்து இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போன படி-

அண்டர் கோன் –
திருவாய்ப்பாடியில் இடைக்குலத்துக்கு நிர்வாஹகன் -என்னுதல்
அண்டாந்தர வ்ர்த்திகளான ஆத்ம வர்க்கத்துக்கு நிர்வாஹகன் என்னுதல்

அணி யரங்கன் என் அமுதினை –
தேவர்களுடைய உப்புச் சாறு போல் அன்று இவருடைய அம்ருதம்
என் அமுதினை –
ப்ரஹ்மாதிகளுக்கு முதலியாய் இருக்கும்
எனக்குச் சாகாமல் காக்கும் அம்ருதமாய் இருக்கும்

கண்ட கண்கள் –
சுவை அறிந்த கண்கள் -ஸ்ரவண இந்திரிய மாத்ரம் அன்றியே விடாய் தீரக் கண்ட கண்கள்

மற்று ஒன்றினைக் காணாவே -பாவோ நான்யத்ர கச்சதி -போலே கண்களுக்கு பச்சை இட்டாலும்
வேறு ஒரு அர்ச்சாவதாரம் அவதார விசேஷம் இவற்றை இப்படி விரும்பி போக்யம் என்று கருதாது
காட்சி ஒழிய வேறு ஒரு பலம் சொல்லா விட்டது பலமும் காட்சியாகையாலே
முக்த ப்ராப்யம் என்று ஒரு தேச விசேஷத்திலே போனாலும் சதா பஸ்யந்தி -இறே

தம்மைச் சொல்லுதல் பாட்டுக்கு சங்க்யை சொல்லுதல் செய்யில்
கரை மேலே நின்ற அல்லாத ஆழ்வார்களோ பாதி யாவர் –
அஸ்தமி தான்ய பாவமாம்படி அழகிலே ஈடுபட்டுத் தம்மை மறந்தார்
நோ பஜனம் ஸ்மரன்நிதம் சரீரம் -என்கிறபடியே
முக்த ப்ராப்யமான புருஷார்த்தத்தை அனுபவித்தார் என்கையாலே எல்லாம் அவன் சொல்லேயாய் விட்டது –
இப் பாட்டில் ஸ்ரீ கிருஷ்ணனுடைய படியும் இங்கே உண்டு என்கிறார் –

————————————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–அவதாரிகை –

நிகமத்தில் –
இவ் வாழ்வார் இவ் வூருக்கு புறம்புள்ள தேசங்களில் உள்ளாருடைய ரஜஸ் தமஸ் ப்ரசுரராய் -சப்தாதி விஷய ப்ரவணராய் –
அது தானும் நேர்கோடு நேர் கிடையாமையாலே
அர்த்தார்ஜநாதிகளிலே இழிந்து -பெரியதோர் இடும்பை பூண்டு இருக்கிற படியையும்
இவ் வூரில் உள்ளார் பரம சாத்விகராய் நிரதிசய போக்யதராய் இருக்கிற ஸ்ரீ பெரிய பெருமாளை
தொண்டு பூண்டு அமுதம் உண்டு களித்து இருக்கிற படியையும் கண்டு –
வரம் ஹூத வஹஜ் வாலா பஞ்ஜராந்தர் வ்யவஸ்திதி -ந சௌரி சிந்தாவி முகஜநசம்வாஸ வைஸஸம் –
என்று புறம்பு உள்ளாரோடு பொருத்தம் இன்றிக்கே –

இவ் வூரைப் பார்த்தால்
சர்வ புண்ய மையோ தேச -என்கிறபடியே -பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ரம் பரம் -என்னும்
பரம பாவநரான பெரிய பெருமாள் தாமும் -சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய் -என்று
இவ் வூரோட்டை சம்பந்தத்தாலே பாவன பூதர் என்னும்படியான வைலஷண்யத்தை வுடைத்தாய் இருக்கையாலே –
நாம் இவ் வூரிலே புகுருகை இவ் வூருக்கு மாலின்யாவஹம் என்று பார்த்து –
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் என்கிறபடியே பிறருடைய நைச்யத்தாலே அங்குப் போக மாட்டாதே –
தம்முடைய நைச்யத்தாலே இங்குப் புகவும் மாட்டாதே
ஆந்த ராளிகராய் -உத்தரம் தீர மாசாத்ய கச்த ஏவ வ்யதிஷ்டத -என்ற ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே –
அக மகிழும் தொண்டர் வாழும்படி அன்பொடு தென் திசை நோக்கிக் கொண்டு கண் வளருகிற ஸ்ரீ பெரிய பெருமாளுடைய
த்ருஷடி பாதமான தென் ஆற்றங்கரையைப் பற்றி நின்றார்-

ஸ்ரீ பெரிய பெருமாளும் -ஈஸ்வரோஹமஹம் போகீ -நான்யோஸ்தி சத்ருசோ மயா -என்று தேசமாக
அஹங்கார க்ரஸ்தமாய் சப்தாதி விஷய ப்ரவணராய் நோவு படா நிற்க -இவர் இப்படி யாவதே என்று மனசிலே போர உகந்து –
நிமக்ந ஆப ப்ரணவ -என்கிறபடியே இவர் அளவிலே திரு உள்ளம் பேராறு மண்டி –
நிஹீநாநாம் முக்கியம் சரணமான திருவடிகளைக் கொடு வந்து இவருடைய திரு உள்ளத்திலே –
என் கண்ணினுள்ளன வொக்கின்றவே -என்று ப்ரத்யஷ சாமாநா காரமாக ப்ரகாசிக்கும் படி வைக்க –

அந்தத் திருவடிகளை அனுசந்தித்து தம்முடைய மனஸ் ஆனது
ஜ்ஞாநாஸ் பதமாகையாலே -அந்த திருவடிகளுக்கு மேலான திருப் பீதாம்பரைத்தையும்
திருவரையுமான சேர்த்தியை மடி பிடித்து அனுபவித்து –

இப்படி கரணமும் நாமும் அனுபவிக்கும்படி நம்மை உண்டாக்கிற்றுத் திரு நாபீ கமலம் அன்றோ அத்தை அனுபவித்து
மேன்மைக்கும் சௌலப்யத்தையும் பட்டம் கட்டி யிருக்கிறோம் நாம் அல்லோமோ என்று திரு வுதர பந்தனம்
தன் பக்கலிலே வர விசிக்க அத்தை அனுபவித்து-

அதுக்கு மேலே இருக்கிற திரு மார்பானது தன்னுடைய ஹாரத்ய ஆபரணங்களையும்
பெரிய பிராட்டியாருக்கு கோயில் கட்டணமான மேன்மையையும் காட்டி இசித்துக் கொள்ள அந்தத் திரு மார்பை அனுபவித்து –

அந்த பிராட்டிக்கும் ஹாரத்ய ஆபரணங்களுக்கும் ஆஸ்ரயமான திருக் கழுத்தை அனுபவித்து –

அதுக்கு மேலே -வாயில் -சர்வ பூதேப்யோ அபயம் ததாமி –
என்றாப் போலே சொல்லா நிற்கச் செய்தே அனுபவிக்கிற நாய்ச்சிமார்க்கு அகப்பட –
வாயழகர் தம்மை யஞ்சுதம் -என்று கண்களை செம்பிளித்து அனுபவிக்கும்படி ஸ்வா பாவிக
சௌந்தர்யத்தை உடைத்தான திருவதரத்தை அனுபவித்து –

இப்படி அவயவங்களை அனுபவியா நிற்கச் செய்தே
இடையில் திவ்யாயுதங்களும் இறாய்ஞ்சிக் கொள்ள அவற்றை அனுபவித்து –
அபயம் ததாமி –என்றாப் போலே சொல்லுகிற வார்த்தைகளை மேல் எழுத்து இட்டு கொடுக்கிற குளிர்ந்த
கடாஷங்களை உடைத்தான திருக்கண்களை அனுபவித்து –

பாலும் பழமும் கண்டசர்க்கரையுமான ரச வஸ்துக்களை சேர்த்து புஜிப்பாரைப் போலே
இந்த அவயவங்களோடு உண்டான சேர்த்தியால் வந்த அழகையும் ஸ்வா பாவிகமான
அழகையும் உடைத்தான திருமேனியின் பசும் கூட்டமான சமுதாய சோபையையும் அனுபவித்தாராய் இறே கீழ் நின்றது –

இவருடைய இப்படிப்பட்ட மானஸ அனுபவத்தையும் -மன பூர்வகமான வாசிக அனுபவத்தையும்
கண்ட ஸ்ரீ பெரிய பெருமாள் -இப்படி குணா விஷ்டராய் அனுபவிக்கிற படியைக் கண்டு –

த்ரஷ்டவ்ய சர்வ தேஹிபி -என்கிறபடியே அவரை அழைத்துக் கொண்டு இருக்க வேண்டும்படி
அவர் அளவிலே அபி நிவிஷ்டராகையாலும் –
க்ஷண அபி தே யத் விரஹோஸ்தி தஸ்சஹ –-என்கிறபடியே தம்மை ஒருகால் காண வேணும் என்னும் ஆசை உடையாரை
ஷண காலமும் பிரிந்து இருக்க மாட்டாமையாலும் அவரை அழைப்பித்துக் கொள்ள வேணும் என்று பார்த்தார்-

இனி நாம் போய்க் கொடு வர வென்றால் -அசந்கேத மநாலாபம் -என்றாப் போலே சொல்லுகிற சங்கல்பத்தைக்
குலைக்க வேண்டுகையாலே அது செய்ய ஒண்ணாதாய் இருந்தது –
இனி இவர் தாமே வர வென்றால் அதுவும் தமக்கு ஸ்வரூப ஹாநியாய் இருந்தது –
ஆன பின்பு ஸ்ரீ விபீஷண ஆழ்வானை ஸ்ரீ மஹா ராஜரை யிட்டு
ஆநயைநம் -என்றாப் போலே இவரையும் ஒருவரை யிட்டு அழைப்பிக்க வேணும் என்று பார்த்தார் –

அந்த ஸ்ரீ விபீஷணன் ராஜ்யகாங்ஷியாய் இருக்கையாலே அருகு நிற்கிற இளைய பெருமாள் நிற்க
ராஜ்ய காங்ஷியாய்-ஹரிச்ரேஷ்டரான ஸ்ரீ மஹா ராஜரை இட்டு அழைத்துக் கொண்டாப் போலே
சென்றதாம் என் சிந்தனையே –
அடியேன் உள்ளத்தின் இன்னுயிரே –
என்னுளத்துள் நின்று உலாகின்றதே –
நிறை கொண்டது என் நெஞ்சினையே -என்றாப் போலே
இவை மனந பரராய் இருக்கையாலே
மனந பரராய் ஸ்ரேஷ்டராய் இருப்பார் ஒருவரை இட்டு அழைப்பித்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்து
அருகே சேவித்து இருக்கிற ஸ்ரீ லோக சாரங்க மஹா முநிகளைப் பார்த்து -ஆநயைநம் -என்று திரு உள்ளமாக

அவரும் எப்போதும் பெரிய பெருமாளை சேவித்து இருக்கையாலே பெரிய பெருமாள்
அபிஜன வித்யா வ்ருத்தங்களால் பூரணராய் இருப்பாரைப் பார்த்தருளி -ஏகாந்தங்களிலே
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில் தொழுமினீர் கொடுமின் கொண்மின் -என்று உபதேசிக்க கேட்டு இருக்கையாலும் –
நின் திருவெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும் –
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை யாள்வாரே -என்றும் –
பங்கயக் கண்ணனைப் பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறும் எம்மை யாளும் பரமரே -என்றாப் போலே
ஆழ்வார்கள் அருளிச் செய்ய கேட்டு இருக்குமவர் ஆகையாலே கடுகப் போய் அவரை
அருள் பாடிட்டுத் தாம் சிரஸா வஹித்துக் கொண்டு வர-

இவரும் ஸ்ரீ பெரிய பெருமாளுடைய கௌரவத்தைக் குலைக்க ஒண்ணாது என்று முநி வாஹநராய்
வந்து புகுந்து ஸ்ரீ பெரிய பெருமாளைத் திருவடி தொழ -ஸ்ரீ பெரிய பெருமாளும் –
ஆவிர்ப்ப பூவ பகவான் பீதாம்பாதரோ ஹரி -என்று ஸ்தோத்ர பரனான ஸ்ரீ ப்ரஹ்லாதனுக்கு
வந்து ஆவிர்ப்பவித்து அபேஷிதங்களைக் கொடுத்து -அவன் ராஜ்யாதிகளிலே போது போக்க
வல்லன் ஆகையாலே அவன் பார்த்துக் கொடு நிற்கச் செய்தே -தத்ரைவாந்தர தீயதே -என்று போக
பின்பு அந்த ராஜ்யாதிகளாலே ஸ்ரீ ப்ரஹ்லாதனும் போது போக்கி இருந்தான் இறே-

இவர் அவனைப் போல் அன்றிக்கே அநந்ய சாதநராய் அநந்ய ப்ரயோஜனராய் இருக்கையாலே
நம் விச்லேஷம் பொறுக்க வல்லவர் அல்லர் என்று பார்த்தருளி தம்முடைய ஸ்வரூபாதிகளைக் காட்ட
இவரும் ப்ரீதரான வளவிலே இவர் மானஸ அனுசந்தானம் பண்ணுகிற தசையிலே –
ஆதி -விண்ணவர் கோன் -நீதி வானவன் –அரங்கத்தம்மான் என்றும் –
உலகம் அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரைக் கவர்ந்த வெங்கணை காகுத்தன் –என்றும் –
விரையார் பொழில் சூழ் வேங்கடவன் -என்றாப் போலே தம்முடைய
பர வ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்களையும் தம் பக்கலிலே அனுசந்திக்கையாலே
இவற்றைத் தனித்தனியே அனுபவிக்க வேணும் என்கிற அபேஷை இவர்க்கு இல்லை என்கிற விடம்
ஹ்ருதயனாய்க் கொண்டு-

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறியா நிற்கச் செய்தேயும் இவரைச் சோதிக்கைக்காக
இவற்றையும் இவர்க்குத் தனித்தனியே காட்டி இவர் அனுபவிக்கும்படி பண்ணுவோம் என்று பார்த்தருளி –
அது செய்யும் இடத்துப் புருஷார்த்தமாக வேண்டுகையாலே இவருடைய அபேஷை யறிந்து செய்ய வேணும் –
இல்லை யாகில் இவர் நாம் அத்தை பிரகாசிப்பித்துக் கொள்ள
ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே -என்னும் திரு மங்கை யாழ்வாரைப் போலே நிந்தித்தல்
தொண்டரடிப் பொடி ஆழ்வாரைப் போலே -அச்சுவை பெறினும் வேண்டேன் -என்று காற்கடைக் கொள்ளுதல் செய்வரோ
அறிய வேணும் என்று தம் திரு உள்ளத்திலே முன்னோர் அடிக் கொண்டத்தை அறிந்து -இவர் –
கடலிலே குழப்படி உண்டாமா போலே -பூர்ணம் -என்கிறபடியே ஸ்ரீ பெரிய பெருமாள் பாடே எல்லாம் இல்லையோ –
ஆன பின்பு எனக்குப் ஸ்ரீ பெரிய பெருமாளை ஒழிய வேறு ஒருவரை அனுபவிக்க ஸ்ரத்தை யில்லை –
எனக்கு உண்டானாலும் அவரை யநுபவித்த என் கண்கள்
மற்று ஒன்றினைக் காணாவே -என்கிறார் –

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிய–வியாக்யானம்-

கொண்டல் வண்ணனை –
கண்களுக்கு விஷயம் இருந்தபடி –
ந மாம்ஸ சஷூ ரபி வீஷதே தம் -என்றும் –
ந சஷூஷா பஸ்யதி கச்சநைநம் -என்கிற இலச்சினையை அழித்துத் தன் வடிவைக் காணும்படி
பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து சொல்லுகிறார் –
அங்கன் இன்றிக்கே
தம்முடைய பர வ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்களை இவர் அனுபவிப்பதாக திரு உள்ளத்தில்
பாரிக்கிறபடியை அனுசந்தித்து இது என்ன ஔதார்யம் என்று அந்த ஔதார்ய குணத்தை
நினைத்து -கொண்டல் வண்ணன் -என்கிறார் –
அங்கன் இன்றிக்கே –
சாம்சாரிகமான தாப த்ரயத்தாலே விடாய்த்த விடாய் தீரும்படியாக
அத்ரௌ சயாளு ரிவ சீதள காள மேக -என்கிறபடியே வர்ஷுகமான காளமேகம் போலே
இருக்கிற நிறத்தை உடையவன் -என்கிறார் ஆதல்
ஸ்ரமஹரமான வடிவை நினைத்து -கொண்டல் வண்ணன் -என்கிறார் ஆதல் –
வண்ணம் -என்று ஸ்வபாவம் ஆதல் -நிறம் ஆதல் –
நம் ஆழ்வாரும் -முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி வுய்ந்தவன் -என்றார் இறே-

கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –
அந்த மேகமானால் ஆகாசத்தே கடக்க நின்று நீரை வர்ஷித்துப் போம் இத்தனை இறே
அங்கன் இன்றிக்கே இடையரோடு இடைச்சியரோடு வாசியற ஒரு நீராகக் கலந்து
தன் வடிவு அழகை அவர்களுக்கு சர்வ ஸ்வ தாநம் பண்ணின படி –

கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –
பர அவஸ்தனாய் வந்து வெண்ணெய் யமுது செய்யில் மாளிகைச் சாந்து நாறுமே –
சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்த அவஸ்தையில் மேன்மையாலே ராஜாவாக்கிச் சிலர்
சீராட்டுகையாலே வந்து வெண்ணெய் காண ஒண்ணாதே -அதுக்காக –
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –
சக்ரவர்த்தி தன்னுடைய ராஜ ஐஸ்வர்யத்தை புஜிக்கைக்கு -எனக்கொரு பிள்ளை வேணும் -என்று
மஹதா தபஸா -என்கிறபடியே நோற்றுப் பெருமாளைப் பெற்றாப் போலே
ஸ்ரீ நந்த கோபரும் -கானாயர் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற வானாயன் –
என்கிறபடியே திருவாய்ப்பாடியிலே கவ்ய ஸம் ருத்தி யடைய பாழ் போக ஒண்ணாது என்று
இத்தை புஜிக்கைகாக நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளை யாய்த்து கிருஷ்ணன்-

வெண்ணெய் உண்ட வாயன் –
பெரிய பெருமாள் கொறுட்டை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறா நிற்கும் –
வெண்ணெய் உண்ட வாயன் —
ஆஸ்ரிதர் உடைமை யாகையாலே தத் ஸ்பர்சம் ஆகாதே என்று இன்றும் அகப்பட அந்தக் குணுங்கு
நாற்றம் வாயிலே தோன்றும்படி இறே ஸ்ரீ பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுவது –
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ -என்று சந்தேஹிக்க வேண்டாதபடி யாய்த்து
இன்றும் அகப்பட வாய் குணுங்கு நாறும்படி
வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை –
கோவலனாய் வெண்ணெய் வுண்டாப் போலே -கொண்டல் வண்ணனாய் என்னுள்ளம் கவர்ந்தானை
யசோதைப் பிராட்டி வுடைய நெஞ்சிலே பண்ணின ஸ்ரத்தையை என் நெஞ்சிலே பண்ணி புஜித்தவனை
அந்த திருவாய்ப்பாடியிலே பெண்கள் உறிகளிலே வெண்ணெயை வைத்து கள்ளக் கயிறு உருவி இட்டு வைத்துப் போவர்கள்
அந்த உறிகளின் குறி அழியாது இருக்க அந்த வெண்ணெய்களை வெறும் தரை யாக்கினாப் போலே யாய்த்து –
அரங்கம் தன்னுள் கள்வனார் நான் குறி அழியாது இருக்க என்னுடைய சிந்தையை அபஹரித்த படி-

என் உள்ளம் கவர்ந்தானை –
வைத்த குழி அழியாது இருக்க -வெண்ணெய் விழுங்கி வெறும் கலம் ஆக்கினாப் போலே
என்னுடைய சரீரம் குறி அழியாது இருக்க என்னுடைய மனஸை அபஹரித்தான் –
கலம் இருக்க வெண்ணெய் குடி போனாப் போலே யாய்த்து -இவர் உடம்பு இருக்க அகவாய் குடி போன படி –
என் உள்ளம் கவர்ந்தானை –
தைவீம் சம்பதமபிஜாதரான -பெரியவர்கள் அகப்பட தம்தாமுடைய
மனஸை இவன் பக்கலிலே வைக்க வேணும் என்று பார்த்து -அது செய்யப் போகாமல்
சஞ்சலம் ஹி மன க்ருஷ்ண -என்றாப் போலே பெரும் காற்றைத் தாம் பிடிக்கலாம் –
என் மனஸை ஒரு அளவாக்கப் போகிறதில்லை -என்னும்படி இறே மனஸ்ஸினுடைய
சஞ்சலத்வமும் திமிரும்படியான மிடுக்கும் -அப்படி -நின்றவா நில்லாத மனஸ்சை
என் பக்கல் அபேஷை இன்றிக்கே இருக்க -நானும் அறியாதபடி -அபஹரித்து தன் பக்கலிலே சேர்த்துக் கொண்டான் –

அண்டர் கோன்
இப்படி இடையரோடும் இடைச்சிகளோடும் தண்ணியரான உம்மோடும் வாசியற வந்து கலந்து
வெண்ணெயையும் மனசையும் அவன் களவு கண்டது -புறம்பு ஆள் இல்லாமையாலும் தன் குறையிலுமாவோ என்ன –
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி
அந்தூபந்தரா நிற்கச் செய்தே கிடீர் ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து அவதரித்தது என்கிறார் –
அன்றிக்கே –
அண்டர் -என்று இடையர் என்னுதல் -அண்டாந்தர்வர்த்திகள் என்னுதல்

அணி யரங்கன் –
என் நெஞ்சை அபஹரித்து -சேணுயர் வானத்திலே -போய் இருக்கை அன்றிக்கே
கண்ணிட்டு காணலாம்படி சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிறவன்
சம்சாரிகள் அறவைத்தனப் படாதபடி யாலே இறே இக்கிடை கிடக்கிறது
அணி யரங்கன் என் அமுதினை –
தேவர்கள் அம்ருதம் போலே உப்புச் சாறாய் எட்டா நிலத்திலே இருக்குமதன்று இறே இவருடைய அம்ருதம்-

அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினை –
அளப்பரிய வாரமுதை அரங்க மேய வந்தணனை -என்கிற அம்ருதம் இறே –

அமுதினைக் கண்ட கண்கள் –
இந்தக் கண்கள் இவரைக் காணாது ஒழியப் பெற்றதாகிலும் புறம்பே போகலாய்த்து –
காட்சி தான் அரை வயிற்று யாகிலும் புறம்பே போகலாய்த்து
அங்கன் இன்றிக்கே -பூர்ண அனுபவம் பண்ணின கண்கள் –

கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
அம்ருத பானம் பண்ணினாரை பாலையும் சோற்றையும் தீற்றப் போமோ –
மற்று ஒன்றினைக் காணாவே –
பாவோ நாந்யாத்ர கச்சதி -போலே இந்தப் பெரிய பெருமாள் தம்மை கேசாதி பாதாந்தமாக
அனுபவிக்க வேணும் என்று பார்த்தாலும் சக்தன் அல்லேன்
என் உள்ளம் கவர்ந்தான் -என்கையாலே சித்த அபஹாரம் பண்ணின படியைச் சொன்னார் –
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்கையாலே த்ருஷ்ட்ய அபஹாரம் பண்ணின படியைச் சொல்லுகிறார்

அல்லாதார் திரு நாமப் பாட்டுப் போலே தம்மை சொல்லிற்று இலர்
விஸஸ்மார ததாத்மாநம் -என்கிறபடியே தாம் போக ப்ரவணராய் தம்மை மறக்கையாலே –
பலம் -சதா பச்யந்தி -யாகையாகில் அது இங்கே சித்திக்கையாலே பலத்துக்கு பலம் வேணுமோ என்று சொல்லிற்று இலர்
இந்தக் கண்கள் புறம்பே சிலவற்றை காண வேண்டுவது இங்கே சில குறை வுண்டாகில் அன்றோ
இவர் பக்கல் ஔதார்யம் இல்லை என்று போகவோ –
வடிவில் பசை இல்லை என்று போகவோ –
சௌசீல்யம் இல்லை என்று போகவோ –
நெஞ்சுக்கு பிடித்து இருந்தது இல்லை என்று போகவோ –
மேன்மை இல்லை என்று போகவோ –
சௌலப்யம் இல்லை என்று போகவோ –
போக்யதை இல்லை என்று போகவோ –
அனுபவத்தில் குறை உண்டு என்று போகவோ –

—————————————————————————————

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -அவதாரிகை –

இவ் வாழ்வார் அடியேன் என்னுமது ஒழிய இப் ப்ரபந்தம் தலைக் கட்டுகிற அளவிலும்
தம்முடைய பேருமூரும் பேச மறக்கும்படி தாம் பெற்ற அனுபவத்துக்கு ஸ்ரீ பெரிய பெருமாள் இனி ஒரு
விச்சேதம் வாராதபடி பண்ணின படியைக் கண்டு -தம்முடைய ஆத்மாவதியான
அநந்ய அநுபவ ரசத்தை முக்தனுடைய சாமகானத்தின் படியிலே பாடி அநாதி காலம்
பாஹ்ய அனுபவம் பண்ணின க்லேசம் தீர்ந்து க்ருத்தராகிறார் –

ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிய முநி வாஹன போகம் -வியாக்யானம்-

கொண்டல் வண்ணனை –
கடலில் உள்ள நீரை எல்லாம் வாங்கி காவேரீ மத்யத்திலே படிந்ததொரு காளமேகம் போலே கண்டார்க்கு
ஸ்ரமஹரமான திருமேனியை உடையவனை –
அங்கன் அன்றிக்கே –
ஜங்கம ஸ்தாவரங்களை எல்லாம் உஜ்ஜீவிக்கும்படி ஜல ஸ்தல விபாகமற காருண்ய ரசத்தை
வர்ஷிப்பதொரு காளமேகத்தின் ஸ்வ பாவத்தை வுடையவனை என்னவுமாம் –

கோவலனாய் வெண்ணெய் வுண்ட வாயன் –
எட்டும் இரண்டும் அறியாத இடையரையும் இடைச்சிகளையும் ரஷிக்கையாலே தன்னுடைய சர்வ லோக ரஷகத்வம்
வெளிப்படும்படி இடையரிலே ஒரு ரூபத்தைக் கொண்டு ஆஸ்ரீதர் உகந்த த்ரவ்யம் எல்லாம்
தனக்கு உகப்பு என்னும்படி தோற்ற அவர்கள் ஈட்டிய வெண்ணெய் -சூட்டு நன் மாலை -யில் படியே
அப்ராக்ருத போகம் போலே அனுபவித்து -அத்தாலே இப்போதும் குணுங்கு நாறும்படியான திரு முகத்தை வுடையவன்-

என் உள்ளம் கவர்ந்தானை –
இடைச்சிகள் வைத்த வெண்ணெய் போலே இவருடைய திரு உள்ளம் ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு நவநீதம் ஆயிற்று –
ஜ்ஞானம் பிறந்த பின்பும் என்னது என்னும்படி அஹங்கார மமகாரங்கள் வடிம்பிடுகிற என்னுடைய மனஸை –
வடிவு அழகாலும் சௌலப்ய சௌசீல்ய வாத்சல்யாதிகளாலும் வசீகரித்து –
இனி என்னது என்ன ஒண்ணாதபடி கைக் கொண்டவனை –

அண்டர் கோன் –
இடையருக்கும் நியாம்யனாய் நின்ற எளிமை குணமாம்படி –
அண்டாதிபதியான ப்ரஹ்மா முதலாக மற்றும் அண்டாந்தர் வர்த்திகளான தேவாதிகளை எல்லாம் ஸ்வ அதீநராக்கி
வைத்து இருக்கிற ஸ்வாமித்வ ஸ்வா தந்த்ர்யாதிகளை உடையவன் –
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் என்கிறார் ஆகவுமாம் –

அணி யரங்கன் –
ஸூரிகளும் ஸ்வ தேசத்தை விட்டு இங்கே வந்து சேவிக்கும்படி ஆகர்ஷமான அழகை
உடைத்தான ஸ்தாந விசேஷத்திலே அடியேனை அநுபவ ரச பரவசம் ஆக்கினவனை-

என் அமுதினை –
பரம பதத்திலும் ஷீரார்ணவத்திலும் ஆதித்ய மண்டலாதிகளிலும் அவ்வோ நிலங்களுக்கு
நிலவரானவர் அநுபவிக்கும் படியான அம்ருதமாய் நின்றாப் போல் அன்றிக்கே
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்கிற நானும் அநுபவிக்கும் படி எனக்கு அசாதாரணமாய்
ஜரா மரணாதி ப்ரவாஹத்தை நிச்சேஷமாக கழிக்க வல்ல நிரதிசய போக்யமானவனை –
ப்ராக்ருத போக ப்ரவணரான தேவர்கள் அநேக பிரயாசத்தோடே பெற்று அநுபவிக்கும் அம்ருதம் போல் அன்றிக்கே –
அனன்ய பிரயோஜனான நான் அயத்நமாக பெற்று அநுபவிக்கும் படியான அம்ருதமானவனை என்னவுமாம்-

கண்ட கண்கள் –
என்கிற இதிலே- என் கண்கள் -என்னாமையாலே நிர்மமத்வம் தோற்றுகிறது -இப்படி
பாதித அநுவ்ருத்தி யில்லாதபடியான தத்வ ஜ்ஞானம் பிறந்து சர்வத்திலும் நிர்மமராய்
இருக்கிற இவர் முன்பு –
என் கண் –என்றும்
என் சிந்தனை -என்றும் –
அடியேன் உள்ளம் -என்றும்
என் உள்ளம் -என்றும் மமகாரம் பின் தொடர்ந்தது தோன்றப் பேசுவான் என் என்னில் –
ஸ்வதந்திர ஸ்வாமியான ஈஸ்வரன் சர்வ சேஷ பூதமான சேதன அசேதனங்களிலே
ஸ்வார்த்தமாக ஒன்றை ஒன்றுக்கு சேஷமாக அடைத்து வைத்தால் -அவன் அடைத்தபடி
அறிந்து பேசுவார்க்கு நிர்மமத்தோடே சேர்ந்த இம்மமகாரம் அநபிஜ்ஞர் மமகாரம் போலே தோஷம் ஆகாது

மற்று ஒன்றினைக் காணாவே
இதுக்கு முன்பு எல்லாம் பாஹ்ய விஷயங்களிலே ப்ரவணங்களாய் -அவற்றைக் கண்ட போது
ப்ரீதியும் காணாத போது விஷாதமுமாய் சென்று இப்போது நித்ய தரித்ரனானவன்
நிதியைக் கண்டால் போலே அநந்த குண விபூதி விசிஷ்டமாக இம் மஹா விபூதியை அநுபவிக்கப் பெற்ற கண்கள்

மற்று ஒன்றினைக் காணாவே –
ப்ராப்த விஷயத்திலே பிரதிஷ்டிதமான சங்கத்தை உடைத்தான படியாலே பரிசர்யார்த்தமாக
வந்து பார்சவ வர்த்திகளாய் நிற்கும் பத்ம யோநி முதலானாரையும் பாராது
புருஷாணாம் சஹஸ்ரேஷூ யேஷூவை ஸூத்த யோநிஷூ
அஸ்மான்ந கச்சின் மனஸா சஷூ ஷா வாப்ய பூஜயத் -என்கிறபடியே ப்ரஹ்ம புத்ரர்களாய்
யூயம் ஜிஜ்ஞா சவோ பக்தா -என்னும் அளவான ஏகதர் த்விதர் த்ரிதர் திறத்தில் ஜ்ஞாநிகளான
ஸ்வேத தீப வாசிகள் உடைய அநாதாரத்தை இங்கே அனுசந்திப்பது –
ப்ராப்ய ச்வேதம் மஹாத்வீபம் நாரதோ பகவான் ருஷி
ததர்ச தாநேவ நரான் ச்வேதாம்ச் சந்திர ப்ரபான் ஸூபான்
பூஜயாமாச சிரஸா மனஸா தைஸ் ஸூ பூஜித -என்று
ஸ்ரீ நாரத பகவான் அளவிலும் அவர்கள் பரிமாற்றம் சொல்லப்பட்டது
உவாச மதுரம் பூயோ கச்ச நாரத மாசிரம்
இமே ஹ்ய நிந்த்ரியா ஹாரா மத் பக்தாஸ் சந்த்ர வர்ச்சச
ஏகாக்ராச் சிந்தயே யுர்மாம் நைஷாம் விக்நோ பவேதிதி -என்று பகவான் அருளிச் செய்த
வார்த்தையையும் இங்கே அனுசந்திப்பது-

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐம் கருவி கண்ட வின்பம் -என்கிற
ஐஸ்வர்ய அனுபவத்திலும்
தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் -என்கிற ஆத்ம மாத்ர அநுபவ ரசத்திலும்
தமக்கு நிஸ் ப்ருஹதை பிறந்த படியிலே இங்கு தாத்பர்யம்
அங்கன் அன்றிக்கே –
பிரதானமான அனுபவத்திலே இழிந்த படியினாலே
ஸ்ரீ ய பதிக்கு பிரகாரமாக வல்லது மற்று ஒன்றையும் தாம் அநுபவியாத படியிலே தாத்பர்யம் ஆகவுமாம்
ஸ்ரீ பெரிய பெருமாள் திரு மேனியிலே ஸ்ரீ திருமலை முதலா ஸ்ரீ கோயில் கொண்ட அர்ச்சாவதாரங்களிலும்
ஸ்ரீ ராம ஸ்ரீ க்ருஷ்ண ஸ்ரீ வாமன ஸ்ரீ வட பத்ர சயநாதிகளிலும் உள்ள போக்யதை எல்லாம் சேர
அநுபவித்து இவ்வாபி ரூப்யத்திலே ஈடுபட்ட என் கண்கள் மற்றும் பர வியூஹ விபவாதிகளான
திருமேனிகளை எல்லாம் சேரக் காட்டினாலும் ஸ்தநந்தயத்துக்கு போக்யாந்தரங்கள் ருசியாதாப்
போலே -பாவோ நாந்யாத்ர கச்சதி -என்கிறபடியே அவை ஒன்றும் ருசியாது என்கிறார் ஆகவுமாம்
இது இவருடைய அநந்ய பிரயோஜனத்வ காஷ்டை யிருக்கிறபடி-

ஆதி மறை யென வோங்கு மரங்கத்துள்ளே
யருளாரும் கடலைக் கண்டவன் என் பாணன்
ஓதிய தோற இரு நான்கும் இரண்டுமான
வொரு பத்தும் பத்தாக வுணர்ந்து உரைத்தோம்
நீதி யறியாத நிலை யறிவார்க்கெல்லாம்
நிலை யிதுவே யென்று நிலை நாடி நின்றோம்
வேதியர் தாம் விரித்து உரைக்கும் விளைவுக்கு எல்லாம்
விதையாகும் இது வென்று விளம்பினோமே

காண்பனவும் உரைப்பனவும் மற்று ஓன்று இன்றி
கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல்
பாண் பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழ மறையின் பொருள் என்று பரவுகின்றோம்
வேண் பெரிய விரி திரை நீர் வையத்துள்ளே
வேதாந்த வாரியன் என்று இயம்ப நின்றோம்
நாம் பெரியோம் அல்லோம் நாம் நன்றும் தீதும்
நமக்கு உரைப்பார் உளர் என்று நாடுவோமே

இதி கவிதார்க்கி சிம்ஹ சம்யக் வ்யாநுஷ்ட சாத்விக ப்ரீத்யை
முநி மஹித ஸூக விகாதா தஸகமிதம் தேசிகோப ஜ்ஞம்
முநி வாஹந போகோயம் முக்தைச்வர்யரசோபம
க்ருபயா ரங்க நாதச்ய க்ருதார்த்தயது நஸ் ஸதா –

————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -பரியனாகி வந்த /-ஆல மா மரத்தினிலை /-கொண்டல் வண்ணனை–வியாக்யானம் –

February 2, 2019

அவதாரிகை –
தன்னை ஜிதம் தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவந -நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேச மஹா புருஷ பூர்வஜ –
இத்யாதிகளில் படியே தோற்பித்து -திருவடிகளிலே விழப் பண்ணி
மேன் மேல் அனுபவத்தை உண்டாக்கின -தாமரைக் கண்களுக்கு தாம் அற்றுத் தீர்ந்த படியை –
ஆஸ்ரீத விரோதி நிராகரண வ்ருத்தாந்த பூர்வகமாக அநுபவிக்கிறார்-

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே ————-8–

பதவுரை

பரியன் ஆகி–மிகவும் ஸ்தூலமான வடிவை யுடையனாய்க் கொண்டு
வந்த–(ப்ரஹ்லாதனை நலிய) வந்த
அவுணன்–அஸூரனான இரணியனுடைய
உடல்–சரீரத்தை
கீண்ட-கிழித்துப் பொகட்டவனும்,
அமரர்க்கு–பிரமன் முதலிய தேவர்கட்கும்
அரிய-அணுக முடியாதவனும்
ஆதி–ஜகத் காரண பூதனும்
பிரான்-மஹோபகாரகனும்
அரங்கத்து-கோயிலில் எழுந்தருளியிருக்கிற
அமலன்-பரமபாலநனுமாகிய எம்பெருமானுடைய
முகத்து–திருமுக மண்டலத்தில்
கரிய ஆகி–கறுத்த நிறமுடையவையாய்
புடை பரந்து–விசாலங்களாய்
மிளிர்ந்து–பிரகாசமுடையவையாய்
செவ்வரி ஓடி–செவ்வரி படர்ந்திருப்பனவாய்
நீண்ட–(காதுவரை) நீண்டிருப்பவனாய்
பெரிய ஆய-பெருமை பொருந்தியவையுமான
அக் கண்கள்–அந்தத் திருக்கண்களானவை
என்னை-அடியேனை
பேதைமை செய்தன–உந்மத்தனாகச் செய்துவிட்டன.

வியாக்யானம் –

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட –
சர்வ லோகத்தில் உள்ள தமஸ் எல்லாம் திரண்டு ஒரு வடிவு கொண்டாப் போலே அதி ஸ்தூலனாய் –
மஹா மேரு நடந்தாப் போலே எதிர்த்து வந்த திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும்
ஒரு வாழை மடலைக் கிழிக்குமா போலே இரண்டு கூறு செய்தவனாய்

அமரர்க்கு அரிய ஆதிப் பிரான் –
தன்னாலே ஸ்ருஷ்டருமாய் உபக்ருதருமான தேவர்கள் –
தான் காரண பூதனாய் -உபாகாரகனாய் நிற்கிற நிலை அறிய மாட்டாமையாலே அவர்களுக்கு
ப்ரஹ்லாதன் அனுபவித்தாப் போலே அணுகவும் அநுபவிக்கவும் அரியனாய் இருக்கிற

அரங்கத்தமலன் முகத்து –
ஹேய பிரசுரமான சம்சாரத்துக்கு உள்ளே கோயில் ஆழ்வார் உடன் எழுந்தருளி வந்து –
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -என்று இருப்பார்
தம்முடைய திருவடிகளை அடைந்து அடி சூடி உய்யும் படி அவர்களுடைய
ஐயப்பாடு முதலான ஹேயங்களை அறுத்துத் தோன்றும் அழகை வுடையரான பெரிய பெருமாள் உடைய
கோள் இழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் கோள் இழைத் தண் முத்தமும் தளிர்க்கும் குளிர் வான் பிறையும்
கோள் இழையா யுடைய கொழுஞ்சோதி வட்டம் கொல் -7-7 8—இத்யாதிகளால் பேசப்பட்ட
பேர் அழகை வுடைத்தே சந்திரனும் தாமரையும் ஒன்றினால் போலே இருக்கிற திரு முகத்தில்-

கரியவாகிப் புடை படர்ந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப் பெரியவாய கண்கள் –
நிகர் இல்லாத நீல ரத்னம் போலே இருக்கிற தாரைகையின் நிறத்தாலே நீலோத்பல வர்ணங்களாய் –
ஆஸ்ரீத தர்சன ப்ரீதியாலே அன்று அலர்ந்த தாமரைப் பூ போலே அதி விகசிதங்களாய் –
ஆசன்னர் எல்லாம் பக்கலிலும் ஆதரம் தோன்றும்படியான உல்லாசத்தை வுடையவையாய் –
அனந்யர் பக்கல் அநு ராகத்துக்குக் கீற்று எடுக்கலாம் படியான சிவந்த வரிகளாலே வ்யாப்தங்களாய் –
ஸ்வபாவ சித்தங்களான ஆயாம விச்தாரங்கள வுடையவான திருக் கண்கள் –

அப் பெரிய –
என்றதுக்கு இப்போது காண்கிற வளவன்றிக்கே சாஸ்திர வேத்யமாய்
அநவச் சின்னமான போக்யதா ப்ரகர்ஷத்தையும் மஹாத்ம்யத்தையும் உடைய என்று தாத்பர்யமாக்கவுமாம்

என்னைப் பேதைமை செய்தனவே –
இவ் வநுபவ ரசத்திலே அமிழ்ந்த என்னை அல்லாததொரு
ஜ்ஞான அனுஷ்டானங்களுக்கு அநர்ஹனாம் பண்ணிற்றன –

————————————–

அவதாரிகை –

அவயவ சோபைகளிலே ஆழம் கால் பட்ட தம்முடைய நெஞ்சு வருந்தி எங்கும் வியாபித்து
சர்வ அவயவ சோபைகளோடும் கூடின சமுதாய சோபையாலே பூரணமாய் –
நித்ய அநுபவ ஸ்ரத்தையாலே முன் பெற்றதாய் நினைத்து இருந்த பூர்த்தியை இழந்தது என்கிறார்-

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே ——–9-

பதவுரை

மா-பெரிதான
ஆல மரத்தின்–ஆல மரத்தினுடைய
இலை மேல்–(சிறிய) இலையிலே
ஒரு பாலகன் ஆய்-ஒரு சிறு பிள்ளையாகி
ஞாலம் ஏழும் உண்டான்–ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும்
அரங்கத்து-கோயிலிலே
அரவு இன் அணையான்-திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியின் மீது சாய்ந்தருள் பவனுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
கோலம்-அழகிய
மா–சிறந்த
மணி ஆரமும்–ரத்நங்களாற் செய்யப்பட்ட ஹாரமும்
முத்து தாமமும்–முத்து வடமும் (ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திருவாபரணங்கள்)
முடிவு இல்லது–எல்லை காண முடியாமல் அபரிமிதமாக விளங்கா நிற்கப் பெற்றதும்
ஓர் எழில்–ஒப்பற்ற அழகை யுடையதும்
நீலம்–கரு நெய்தல் மலர் போன்றதுமான
மேனி-திருமேனி யானது
எனது நெஞ்சினுடைய
நிறை–அடக்கத்தை
கொண்டது–கொள்ளை கொண்டு போயிற்று;
ஐயோ! இதற்கென் செய்வேன்? என்கிறார்.

வியாக்யானம் –

ஆல மா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் –
ஓர் அவாந்தர பிரளயத்திலே -ஆல் அன்று வேலை நீர் உள்ளதோ விண்ணதோ மண்ணதோ -என்று
அறிய அரியதாய் அநந்த சாகமாய் இருப்பதொரு வட வருஷத்திலே ஓர் இலையிலே தாயும் தந்தையும்
இல்லாத தொரு தனிக் குழவியாய்

ஞாலம் ஏழும் உண்டான் –
அடுக்குக் குலையாமல் மார்க்கண்டேயன் காணும்படி சர்வ லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்தவன் –
ய ச தேவோ மயா த்ருஷ்டா புரா பத்மய தேஷண-ச ஏஷ புருஷ வ்யாக்ர சம்பந்தீ தே ஜனார்த்தந
ஸர்வேஷா மேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ -கச்சத்வ மேநம் சரணம் சரணம் புருஷர்ஷபா —
பாண்டவர்கள் இடம் மார்க்கண்டேயன் சொன்னது
பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகு எல்லாம் மேல் ஒரு நாள் உண்டவனே-

அரங்கத்து அரவின் அணையான் –
பிரளய காலத்திலே பாலனாய்க் கொண்டு ஆலிலை மேல் கண் வளர்ந்து அருளுகிற போதோடு
சர்வ காலத்திலும் கோயில் ஆழ்வார்க்கு உள்ளே ஸூரிகளுக்கு எல்லாம் தலைவரான திருவனந்தாழ்வான் மேலே –
உலகுக்கு ஓர் தனியப்பன் -என்னும்படி தன் பிரஜைகளான ப்ரஹ்மாதிகள் ஆராதிக்க கண் வளர்ந்து அருளுகிற போதோடு
வாசியறக் காரணத்வ ரஷகத்வாதிகள் காணலாம்படியாய் இருக்கிற பெரிய பெருமாளுடைய
(பிரளய காலத்தில் இருந்தவன் என்பதால் காரணத்வமும்
உண்டவன் என்பதால் ரக்ஷகத்வமும் தேரும் )
வாசியற
ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த –
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள ஸ்வரூப ஸ்வபாவங்களுடனே பூ உலகிலும் பிறந்த

கோல மா மணி யாரமும் –
நாய்ச்சியாருக்கு கோயில் கட்டணமாய் இருக்கிற திரு மார்வுக்கு
ஒரு ரத்ன ப்ரகாரம் போலே -அபி ரூபமாய் -அதி மஹத்தாய் -மஹார்க்க ரத்னமான திருவாரமும் –

முத்துத் தாமமும் –
சந்நவீரமாயும் ஏகவாளியாயும் -த்ரி சரமாயும் -பஞ்ச சரமாயும் உள்ள திரு முத்து வடங்களும்

முடிவு இல்லாதோர் எழில் நீல மேனி –
இவை தனக்கும் அதிசயகரமாய் -அநந்தமய –
அத்விதீயமான ஆபி ரூப்யத்தை உடைத்தாய் -காளமேகம் போலே ஸ்ரமஹரமான திருமேனியும்
ஆபரணங்களுக்கு முடி இல்லாதோர் எழிலை உண்டாக்கும் படியான நீலமேனி என்னவுமாம்
குணா ஸத்ய ஞான ப்ரப்ருத்ய யூத த்வத் கத தயா சுபீ பூயம் யாதா இதி ஹி நிரணைஷ்ம ஸ்ருதி வசாத் -ஸ்ரீ கூரத்தாழ்வான்
ஞானாதி குணங்கள் உம்மை அடைந்து மங்களைத் தன்மை அடைந்தது போலே
திரு முத்து வடங்களுக்கு மேன்மையூட்டும் படியான நீல மேனி -என்றவாறு

ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே –
தனித் தனியே திவ்ய அவயவங்களை அநுபவித்த என் நெஞ்சை சமுதாய அனுபவத்தாலே
முன்புற்ற பூர்ணத்வ அபிமான கர்ப்பமான காம்பீர்யத்தை கழித்து
இப் பூர்ண அனுபவத்துக்கு விச்சேதம் வரில் செய்வது என் -என்கிற அதி சங்கையாலே
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு -என்று நித்ய சாபேஷம் ஆம்படி பண்ணிற்று

————————————————–

அவதாரிகை –

இவ் வாழ்வார் அடியேன்
என்னுமது ஒழிய இப்ப்ரபந்தம் தலைக் கட்டுகிற அளவிலும்
தம்முடைய பேருமூரும் பேச மறக்கும்படி தாம் பெற்ற அனுபவத்துக்கு பெரிய பெருமாள்
இனி ஒரு விச்சேதம் வாராதபடி பண்ணின படியைக் கண்டு –
தம்முடைய ஆத்மாவதியான அநந்ய அநுபவ ரசத்தை முக்தனுடைய சாம கானத்தின் படியிலே பாடி
அநாதி காலம் பாஹ்ய அனுபவம் பண்ணின க்லேசம் தீர்ந்து க்ருத்தராகிறார் –

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே ——-10–

பதவுரை

கொண்டல் வண்ணனை–காள மேகம்போன்ற வடிவையுடையனும்
கோவலன் ஆய் வெண்ணெய் உண்ட வாயன்–கோபால குமாரனாகப் பிறந்து வெண்ணெயமுது செய்த திருவாயை யுடையனும்
என் உள்ளம்–என்னுடைய நெஞ்சை
கவர்ந்தானை–கொள்ளை கொண்டவனும்
அண்டர் கோன்–நித்யஸூரிகட்குத் தலைவனும்
அணி அரங்கன்–(பூமண்டலத்துக்கு) அலங்காரமான திருவரங்கத்தில் கண்வளர்ந்தருள்வபனும்
என் அமுதினை–எனக்குப் பரம போக்யமான அம்ருதமாயிருப்பவனுமான அழகிய மணவாளனை
கண்ட கண்கள்–ஸேவிக்கப் பெற்ற (பரமபத நாதனையும்)
காணா–காண மாட்டா.

வியாக்யானம்-

கொண்டல் வண்ணனை –
கடலில் உள்ள நீரை எல்லாம் வாங்கி காவேரீ மத்யத்திலே படிந்ததொரு காளமேகம் போலே கண்டார்க்கு
ஸ்ரமஹரமான திருமேனியை உடையவனை –
அங்கன் அன்றிக்கே –
ஜங்கம ஸ்தாவரங்களை எல்லாம் உஜ்ஜீவிக்கும்படி ஜல ஸ்தல விபாகமற காருண்ய ரசத்தை
வர்ஷிப்பதொரு காளமேகத்தின் ஸ்வ பாவத்தை வுடையவனை என்னவுமாம் –

கோவலனாய் வெண்ணெய் வுண்ட வாயன் –
எட்டும் இரண்டும் திரு மந்த்ரமும் -சரம ஸ்லோகங்களும் — அறியாத இடையரையும் இடைச்சிகளையும்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்ச்சியர்- ரஷிக்கையாலே தன்னுடைய சர்வ லோக ரஷகத்வம்
வெளிப்படும்படி இடையரிலே ஒரு ரூபத்தைக் கொண்டு ஆஸ்ரீதர் உகந்த த்ரவ்யம் எல்லாம்
தனக்கு உகப்பு என்னும்படி தோற்ற அவர்கள் ஈட்டிய வெண்ணெய்
சீரார் கலை அல்குல் சீரடி செந்துவர் வாய் வாரார் வனமுலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு
ஏரார் இடை நோவ எத்தனையோர் போதுமாய் சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை —
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து இமியேற்று வன் கூன் கோட்டிடை ஆடினை கூற்று
அடலாயர் தம் கொம்பினுக்கே –திருவிருத்தம் -21- படியே
அப்ராக்ருத போகம் போலே அனுபவித்து -அத்தாலே இப்போதும் குணுங்கு நாறும்படியான திரு முகத்தை வுடையவன்-

என் உள்ளம் கவர்ந்தானை –
இடைச்சிகள் வைத்த வெண்ணெய்-ஸஜ்ஜனஸ்ய ஹ்ருதயம் நவநீதம் -போலே
இவருடைய திரு உள்ளம் பெரிய பெருமாளுக்கு நவநீதம் ஆயிற்று –
ஜ்ஞானம் பிறந்த பின்பும் என்னது என்னும்படி அஹங்கார மமகாரங்கள் வடிம்பிடுகிற என்னுடைய மனஸை –
வடிவு அழகாலும் சௌலப்ய சௌசீல்ய வாத்சல்யாதிகளாலும் வசீகரித்து –
இனி என்னது என்ன ஒண்ணாதபடி கைக் கொண்டவனை –

அண்டர் கோன் –
இடையருக்கும் நியாம்யனாய் நின்ற எளிமை குணமாம்படி -அண்டாதிபதியான ப்ரஹ்மா
முதலாக மற்றும் அண்டாந்தர் வர்த்திகளான தேவாதிகளை எல்லாம் ஸ்வ அதீநராக்கி
வைத்து இருக்கிற ஸ்வாமித்வ ஸ்வா தந்த்ர்யாதிகளை உடையவன் –
கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் என்கிறார் ஆகவுமாம் –
வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியான் இமையோர்க்கும் சாழலே–பெரிய திருமொழி -11-5-5-

அணி யரங்கன் –
ஸூரிகளும் ஸ்வ தேசத்தை விட்டு இங்கே வந்து சேவிக்கும்படி ஆகர்ஷமான அழகை
உடைத்தான ஸ்தாந விசேஷத்திலே அடியேனை அநுபவ ரச பரவசம் ஆக்கினவனை

என் அமுதினை –
பரம பதத்திலும் ஷீரார்ணவத்திலும் ஆதித்ய மண்டலாதிகளிலும் அவ்வோ நிலங்களுக்கு
நிலவரானவர் அநுபவிக்கும் படியான அம்ருதமாய் நின்றாப் போல் அன்றிக்கே
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்கிற நானும் அநுபவிக்கும் படி எனக்கு அசாதாரணமாய்
ஜரா மரணாதி ப்ரவாஹத்தை நிச்சேஷமாக கழிக்க வல்ல நிரதிசய போக்யமானவனை –
அன்றிக்கே-
ப்ராக்ருத போக ப்ரவணரான தேவர்கள் அநேக பிரயாசத்தோடே பெற்று அநுபவிக்கும் அம்ருதம் போல் அன்றிக்கே –
அனன்ய பிரயோஜனான நான் அயத்நமாக பெற்று அநுபவிக்கும் படியான அம்ருதமானவனை என்னவுமாம்-

கண்ட கண்கள் –
என்கிற இதிலே- என் கண்கள் -என்னாமையாலே நிர்மமத்வம் தோற்றுகிறது –
இப்படி பாதித அநுவ்ருத்தி யில்லாதபடியான தத்வ ஜ்ஞானம் பிறந்து சர்வத்திலும் நிர்மமராய்
இருக்கிற இவர் முன்பு –
என் கண் –என்றும்
என் சிந்தனை -என்றும் –
அடியேன் உள்ளம் -என்றும்
என் உள்ளம் -என்றும்
மமகாரம் பின் துடர்ந்தது தோன்றப் பேசுவான் என் என்னில் –
ஸ்வதந்திர ஸ்வாமியான ஈஸ்வரன் சர்வ சேஷ பூதமான சேதன அசேதனங்களிலே
ஸ்வார்த்தமாக ஒன்றை ஒன்றுக்கு சேஷமாக அடைத்து வைத்தால் -அவன் அடைத்தபடி
அறிந்து பேசுவார்க்கு நிர் மமத்தோடே சேர்ந்த இம் மமகாரம் அநபிஜ்ஞர் மமகாரம் போலே தோஷம் ஆகாது

மற்று ஒன்றினைக் காணாவே-
இதுக்கு முன்பு எல்லாம் பாஹ்ய விஷயங்களிலே ப்ரவணங்களாய் –
ராஜ போக விருத்தங்களான ஜூகுப்சித விஷயங்களிலே தனக்குப் பேறும் இழவுமாக-ஹர்ஷ சோகங்களாக –
அவற்றைக் கண்ட போது ப்ரீதியும் காணாத போது விஷாதமுமாய் சென்று இப்போது நித்ய தரித்ரனானவன்
நிதியைக் கண்டால் போலே அநந்த குண விபூதி விசிஷ்டமாக இம் மஹா விபூதியை அநுபவிக்கப் பெற்ற கண்கள்

மற்று ஒன்றினைக் காணாவே-
தவாம்ருதஸ் யந்தினி பாத பங்ஜே நிவேசிதாத்மா கதமன்யதிச்சதி -ஸ்திதேரவிந்த மகரந்த
நிர்ப்பரே மதுவ்ர்தோ நே ஷுரகம் ந வீக்ஷதே

மற்று ஒன்றினைக் காணாவே –
ப்ராப்த விஷயத்திலே பிரதிஷ்டிதமான சங்கத்தை உடைத்தான படியாலே பரிசர்யார்த்தமாக
வந்து பார்சவ வர்த்திகளாய் நிற்கும் பத்ம யோநி முதலானாரையும் பாராது
புருஷாணாம் சஹஸ்ரேஷூ யேஷூவை ஸூத்த யோநிஷூ
அஸ்மான்ந கச்சின் மனஸா சஷூ ஷா வாப்ய பூஜயத் -என்கிறபடியே
ப்ரஹ்ம புத்ரர்களாய்
ஸூ தப்தம் வஸ்தபோ விப்ரா பிரஸந்நே நாந்த ராத்மநா -யூயம் ஜிஜ்ஞாசவோ பக்தா கதம்
த்ர்யஷத தம் விபும் என்னும் அளவான
ஏகதர் த்விதர் த்ரிதர் திறத்தில் ஜ்ஞாநிகளான
ஸ்வேத தீப வாசிகள் உடைய அநாதாரத்தை இங்கே அனுசந்திப்பது –

ப்ராப்ய ஸ்வேதம் மஹாத்வீபம் நாரதோ பகவான் ருஷி
ததர்ச தாநேவ நரான் ச்வேதாம்ச் சந்திர ப்ரபான் ஸூபான்
பூஜயாமாச சிரஸா மனஸா தைஸ் ஸூ பூஜித -என்று ஸ்ரீ நாரத பகவான் அளவிலும்
அவர்கள் பரிமாற்றம் சொல்லப்பட்டது

உவாச மதுரம் பூயோ கச்ச நாரத மாசிரம்
இமே ஹ்ய நிந்த்ரியா ஹாரா மத் பக்தாஸ் சந்த்ர வர்ச்சச
ஏகாக்ராச் சிந்தயே யுர்மாம் நைஷாம் விக்நோ பவேதிதி -என்று பகவான் அருளிச் செய்த
வார்த்தையையும் இங்கே அனுசந்திப்பது-

நாரத பகவான் ஸ்வேத தீபம் அடைந்து -வெள்ளை நிறத்தவர் -சந்திரன் போன்ற தேஜஸ் உள்ள அப்புருஷர்களைக் கண்டு
மனசாலே பூஜித்து தலையால் வணங்க எம்பெருமான் இனிதாக -இங்கு இருந்து விரைவிலே செல் –
இவர்கள் இந்த்ரியமும் உணவும் அற்றவர்கள் –
என் அடியார்கள் சந்திரன் போல் தேஜஸ் உள்ளவர்கள் -ஒரே நினைவுடன் த்யானிப்பவர்கள்
இவர்கள் தியானத்துக்கு இடையூறு நேரக்கூடாது -என்று அருளிச் செய்தார்

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐம் கருவி கண்ட வின்பம் -என்கிற ஐஸ்வர்ய அனுபவத்திலும்
தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் -என்கிற ஆத்ம மாத்ர அநுபவ ரசத்திலும்
தமக்கு நிஸ் ப்ருஹதை பிறந்த படியிலே இங்கு தாத்பர்யம்
அங்கன் அன்றிக்கே –
பிரதானமான அனுபவத்திலே இழிந்த படியினாலே
ஸ்ரீ யபதிக்கு பிரகாரமாக வல்லது மற்று ஒன்றையும் தாம் அநுபவியாத படியிலே தாத்பர்யம் ஆகவுமாம்
பெரிய பெருமாள் திரு மேனியிலே திருமலை முதலாக் கோயில் கொண்ட அர்ச்சாவதாரங்களிலும்
ராம க்ருஷ்ண வாமன வட பத்ர சயநாதிகளிலும் உள்ள போக்யதை எல்லாம் சேர
அநுபவித்து இவ்வாபி ரூப்யத்திலே ஈடுபட்ட என் கண்கள் மற்றும் பர வியூஹ விபவாதிகளான
திருமேனிகளை எல்லாம் சேரக் காட்டினாலும் ஸ்தநந்தயத்துக்கு போக்யாந்தரங்கள் ருசியாதாப் போலே
ஸ்நேஹோ மே பரமோ ராஜன் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித –பக்திச்ச நுயதா வீர பாவோ நான்யத்ர கச்சதி -40-15–
என்கிறபடியே அவை ஒன்றும் ருசியாது என்கிறார் ஆகவுமாம்
இது இவருடைய அநந்ய பிரயோஜனத்வ காஷ்டை யிருக்கிறபடி-

ஆதி மறை யென வோங்கு மரங்கத்துள்ளே
யருளாரும் கடலைக் கண்டவன் என் பாணன்
ஓதிய தோற இரு நான்கும் இரண்டுமான
வொரு பத்தும் பத்தாக வுணர்ந்து உரைத்தோம்
நீதி யறியாத நிலை யறிவார்க்கெல்லாம்
நிலை யிதுவே யென்று நிலை நாடி நின்றோம்
வேதியர் தாம் விரித்து உரைக்கும் விளைவுக்கு எல்லாம்
விதையாகும் இது வென்று விளம்பினோமே-

வேதத்தின் முதல் அக்ஷரமாகிய பிரணவம் என்னும்படி உயர்ந்து நிற்கும் ப்ரணவாகார விமானத்துக்கு உள்ளே
கருணைக் கடலாம் அரங்கனைக் கண்டு அனுபவித்த திருப் பாண் ஆழ்வாரால் அருளப்பட்டதும்
ரஹஸ்யார்த்தங்களைப் பொதிந்து கொண்டு இருப்பதால் நித்ய அனுசந்தானமாயும் உள்ள
இப்பத்து பாசுரங்களை கதியாக அனுசந்தித்தோம்
தத்வங்களின் ஸ்வரூபம் அறிந்த போதிலும் யுக்திகள் அறியாதவர்களுக்கு
இப்பிரபந்தமே உறுதி அளிக்கும் என்பதாகக் கொண்டு
பகவத் அனுபவத்தை அடைய விரும்பினோம் -வேதாந்திகள் வியாக்யானங்களுக்கு எல்லாம்
இப்பிரபந்தமே வித்தாகும் என்று கூறினோம்

காண்பனவும் உரைப்பனவும் மற்று ஓன்று இன்றி
கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல்
பாண் பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழ மறையின் பொருள் என்று பரவுகின்றோம்
வேண் பெரிய விரி திரை நீர் வையத்துள்ளே
வேதாந்த வாரியன் என்று இயம்ப நின்றோம்
நாம் பெரியோம் அல்லோம் நாம் அன்றும் தீதும்
நமக்கு உரைப்பார் உளர் என்று நாடுவோமே-

பார்ப்பதும் பேசுவதும் வெவ்வேறு வஸ்துவாக இல்லாமல் எம்பெருமானையே கண்டு –
அவனையே பேசியவரும் -மிகுந்த பக்தி உடையவருமான திருப் பாண் ஆழ்வார் அருளிய இவை
வேத சாரம் என்று விளக்கிக் கொண்டாடுகிறோம்
அரங்கன் வேதாந்தாசார்யர் என்று புகழும்படி ஆனோம் -இருப்பினும் அஹங்காரம் கொள்ள மாட்டோம்
நமக்கு பிரிய ஹிதம் அளிக்கும் ஆச்சார்யர்கள் கிருபை உண்டு என்று விஸ்வஸித்து நிற்போம்

இதி கவிதார்க்கி சிம்ஹ சம்யக் வ்யாநுஷ்ட சாத்விக ப்ரீத்யை
முநி மஹித ஸூக விகாதா தஸகமிதம் தேசிகோப ஜ்ஞம்–
சாத்விகர் உகப்புக்காக விரித்து வியாக்யானம் அருளிச் செய்தார்

முநி வாஹந போகோயம் முக்தைச்வர்யரசோபம
க்ருபயா ரங்க நாதச்ய க்ருதார்த்தயது நஸ் ஸதா –
இத்தை அனுபவிக்கும் போகம் ப்ரஹ்மானந்த முக்த போகம் ஒக்கும் –

—————————-

திருமந்த்ரார்த்தங்கள்
அகாரம் -லுப்த சதுர்த்தி -பகவத் சேஷத்வ பர்யவசானம் -அமலன்
உகாரம் -அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி -உவந்த
மகாரம் -சேதன அசேதன கர்ம அதிகாரத்துவம் -மந்தி பாய்
நம-அஹங்கார மமகார நிவ்ருத்தி -சதுர மதிள்
நாராயண -உபாய உபேயங்களுக்குத் தேவையான -ஸுலப்ய -ஸுசீல்யம் –
நராஜ்ஜாதாநி தத்வாநி -பாரமாய் -துண்ட வெண் பிறையன்
ஆய -கைங்கர்ய அனுபவம் -பரவசம் ஆக்கியது -கையார் -பரியனாய் -ஆல மா -கொண்டல்

திருவாய் மொழிக்கு ஸங்க்ரஹம் முதல் திருவாய் மொழி -அதுக்கு ஸங்க்ரஹம் முதல் மூன்று பாசுரங்கள் –
அதுக்கு ஸங்க்ரஹம் முதல் பாசுரம் போலே இப்பிரபந்தத்துக்கு முதல் பாசுரம் ஸங்க்ரஹம்
குருகேசன் அங்கி -மற்றைய ஆழ்வார்கள் அங்கங்கள் -திரு விருத்தம் ரிக்வேத சாரம்
விஷயாந்தர பற்று அற்று அடியேன் செய்யும் விண்ணப்பம் என்று பரபக்தி நிஷ்டையில் அருளிச் செய்தது
திருவாசிரியம் யஜுர் வேத சாரம்
ஓம் இத் அக்ரே வ்யாஹரேத்–நம இதி பச்சாத் -நாராயணாயேத் யுபரிஷ்டாத்
ஓம் இத் ஏக அக்ஷரம் -நம இதி தவே அஷரே – நாராயணாயேதி பஞ்ச அக்ஷராணி
ஏதத்வை நாராயணஸ்ய அஷ்டாக்ஷரம் பதம் -யோ ஹை வை நாராயணஸ்ய அஷ்டாக்ஷரம் பதமத்யேதி –
இதி நாராயண அதர்வ சிர உபநிஷத் என்று சிலரும்
யஜுஸ் சாகையில் அந்தர்கதம் என்றும் சிலரும் சொல்வர்
பரஞான தசையில் தர்சன சாமாந காரமான அனுபவம்
இது வேண்டுதல் ஏதும் இன்றி தனிப்பெரும் நாயக மூவுலகளந்த சேவடியோயே -என்ற
அனுபவ மாத்ரம் அருளிச் செய்வதால் தெளியும் –

இப் பிரபந்தம் யஜுர் வேத சாரமாம் திருமந்த்ரார்த்தம் -எல்லா வேதங்களும் அஷ்டாக்ஷரார்தம்-விளக்குபவையே
கண்ணா நான் முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான் உண்ணா நாள் பசியாவது ஒன்றில்லை
ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும் இருக்க யசுச் சாம நாண் மலர் கொண்டு உன பாதம்
நண்ணா நாள் அவை தத்தறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே பெரியாழ்வார் -5-1-6-

இப் பிரபந்தமும் பரஞான தசையிலே அருளிச் செய்ததாய் உள்ளது

இப் ப்ரபந்தம் அதி விஸ்தரம் அதி சங்கோசம் அதி க்ருதாதிகாரத்வம் துர்க்ரஹத்வம் ( விஷயம் விளங்காமை )
துரவபோதார்த்த்வம் ( பொருள் விளங்காமை ) சம்சயாஸி ஜநகத்வம் விரஹ க்லேசம் தூத ப்ரேஷணம்
பரோபதேசம் பர மத நிரசனம் என்றாற் போலே
மற்றுள்ள அத்யாத்ம பிரபந்தங்களில்- ( வேதாத்மா நூல்கள்) உள்ளவை ஒன்றும் இன்றிக்கே
அநுபவ கநரசமாய் ( அனுபவத்தின் திரண்ட ரசம் ) இருக்கிறது –
அனுபவ ரசம் பிரபந்தம் தலைக்கட்டும் பொழுதும்
ஊரும் பேரும் மறக்கும்படி -திருவாசிரியத்தில் நம்மாழ்வாரைப் போலவே உண்டே

இப் பிரபந்தம் -திருவாசிரியம் ஒற்றுமை மேலும் –இங்கும் அங்கும் —
அரைச் சிவந்த ஆடை –செக்கர் மா முகில் உடுத்து மிக்க செஞ்சுடர் பரிதி சூடி / பீதக வாடை
உலகம் அளந்து -மூவுலகளந்த சேவடியோயே
கோல மணி யாரமும் முத்துத் தாமமும் -பூண் முதலா மேதகு பல் கலன் அணிந்து
செய்ய வாய் -வாயுவும்
பெரிய கண்கள் -கண்ணவும்
நீல மேனி -மரகதக் குன்றம் / பச்சை மேனி
முடி -நீள் முடியன்
சமுதாய சோபை நீல மேனி ஐயோ -பச்சை மேனி மிகைப் பயப்ப
அரவிந் அணை மிசை மேய -நச்சுவினைக் கவர் தலை அரவின் அமளி ஏறி
பரிசர்யார்த்தமாக பார்ச வர்த்திகள் -பத்ம யோனி -உந்தி மேல் நான்முகன் -சிவன் அயன் இந்திரன் —
தெய்வக் குழாங்கள் கை தொழக் கிடக்க
திருக் கமலபாதம் -சேவடி
ஐயோ –
முற்றும் உண்ட கண்டம் -ஞாலம் ஏழும் உண்டான் -உலகு படைத்து உண்ட எந்தை
திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன –அறை கழல் சுடர் பூந் தாமரை சூடுதற்கு அவாவு ஆருயிர்
மற்று ஒன்றினைக் காணாவே -மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினோடு நல் வீடு பெறினும் கொள்ளுவது எண்ணுமோ
அயனைப் படைத்ததோர் எழில் உந்தி -மூ உலகும் விளைத்த உந்தி
மேலே கவிழ்த்த கனக சத்ரம் போலே -மா முதல் அடிப் போது ஓன்று கவிழ்த்து
ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் -முழுவதும் அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்த

—————————-

பெரியாழ்வாரும் திருப்பாணாழ்வாரும்
கல்ப ஸூத்ர வ்யாக்யாதாவாக நின்ற போதிலும் ரிஷிகளை போலே கரையிலே நின்று சொல்லிப் போகை அன்றிக்கே
கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் -என்றபடி
பாவநா பிரகர்ஷத்தாலே யசோதாதிகள் சொல்லும் பாசுரத்தை தான் அவர்களாகப் பேசி அவதார குண சேஷ்டிதங்களை அனுபவித்தவர்
ஸூபாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹ சோபையில் திவ்ய அவயவங்கள் தோறும் தம்மை இழந்து
பேதைக் குளவி பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலங்கள் -1-2-1-
பத்து விரலும் -2-
கணைக் கால் -3-
முழந்தாள் -4-
குறங்குகள்-5-
முத்தம் -6-
நெருங்கு பவளமும் நேர் நானும் முத்தும் மருங்கும் -7-
அழகிய உந்தி -8-
பழந்தாம்பால் ஆர்த்த உதரம்-9-
குரு மா மணிப் பூந் குலாவித் திகழும் திரு மார்பு -10-
தோள்கள் -11-
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் -12-
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம் -13 –
செந்தொண்டை -14-
வாக்கும் ஞானமும் வாயும் முறுவலும் மூக்கும் -15-
கண்கள் -16-
புருவம் -17-
மகரக்குழை -18-
நெற்றி -19-
குழல்கள் -20-
திருப் பாத கேசத்தை தென் புதுவைப் பட்டன் விருப்பால் உரைத்த -21-உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவர் தாமே
சாஷாத் ஸ்ரீ ரெங்க நாதஸ்ய ஸ்வ ஸூரரான விஷ்ணு சித்தர் கருட வாஹனனை அனுபவித்து
அருளிச் செய்தது போலவே
முனி வாஹனரும் இங்கே அனுபவித்து அருளிச் செய்கிறார்

————————

திரு அவதார நஷத்தால் -கார்த்திகை -ரோஹிணி -முன்னும் திரு அவதாரத்தால் பின்னும் கலியன்
இருவர் பிரபந்தங்களும் அஷ்டாக்ஷரமே கரு –
மோக்ஷ பிரதத்வம் -ஜகத் காரணத்வம் ரக்ஷகத்வம் -அமலன் -ஆதி -பிரான் போலவே
திரு ஏழு கூற்று இருக்கையில் உந்தியில் அயனைப் படைப்பதில் –ஒரு சிலை ஒன்றி வாளியில் அட்டதையும் -அருளிச் செய்கிறார்

இவற்றை ஒப்பு நோக்குவோம் -இங்கும் அங்கும் –
ஓர் எழில் உந்தி மேலது அன்றோ –ஒரு பேர் உந்தி –
அயனைப் படைத்த -ஒரு முறை அயனை ஈன்றனை
வெங்கணை காகுத்தன் –சதுர –வெங்கணை உய்த்தவன் –இலங்கை –வாளியில் அட்டனை
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற –நிவந்த நீள் முடியன் -மூவடி நானிலம் வேண்டி ஈரடி மூவுலகு அளந்தனை
அமரர்க்கு அரிய ஆதிப்பிரான் -ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை
முற்றும் உண்ட கண்டம் -ஞாலம் ஏழும் உண்ட -ஏழு உலகு வயிற்றினில் கொண்டானை
கொண்டல் வண்ணனை -முந்நீர் வண்ண
கடியார் பொழில் -அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் –குன்றா மது மலர்ச் சோலை
அரவின் அணை மிசை மேய மாயனார் -ஆடு அரவம் அளியில் அறி துயில் அமர்ந்த பரம
திருக் கமல பாதம் வந்து -நின் அடியிணை பணிவன்
பாரமாய பழ வினை பற்று அறுத்து -வேங்கடவன் -வரும் இடர் அகல மாற்றோ வினையே

—————————-

திருப்பாணாழ்வார் பின்னடி நடக்கும் தூப்புல் புனிதன்
புகல் அறிவார் முன்னாடி பார்த்து முயலுதலால் அவர் சாயை எனப் பின்னடி பார்த்து வர்த்திப்பதே க்ருத்யம்
மாறன் துணை அடிக்கீழ் வாழ்வை உகப்பவர்
கலியன் உரை குடி கொண்ட கருத்துடையோன்
வானில் மால் கருட வாஹனனாயத் தோன்ற வாழ்த்தும் ஸ்ரீ விஷ்ணு சித்தரை வணங்குபவர்
பாணர் தாள் பரவி நிற்பவர்
பகவத் த்யான சோபனம் –தேவ நாயக பஞ்சாசத் -அச்சுத சதகம் -அச்சுய சயயம் இவற்றில் –
அரங்கன் -தேவ பெருமாள் -அயிந்தை நகர மேய அப்பன் இவர்களின்
திவ்ய அவயவ சமுதாய சோபைகளில் அனுபவித்து தம்மை இகழ்க்கிறார்

திருக் கமல பாதம் வந்து –பாதாம் போஜம் பிரதி பலதி மே பாவநா தீர்க்கி காயம் -பகவத் த்யான சோபனம்-2-
கமண கண ஜணிய ஸூரணஇ பசமிய தெல்லொக்க பாயயம் பது பதுமம் -அச்சுத சதகம்-43-

அரைச் சிவந்த ஆடை –மஹுக இடவ சோனிய படல பரிபாடலம்பர –அச்சுத சதகம்-40-
அயனைப் படைத்ததோர் எழில் உந்தி -நாலீ கேன ஸ்புரித ரஜசா வேதஸோ நிர்மிமாணா ரம்யா வர்த்தத்யுதி ஸஹ சரீ
ரெங்க நாதஸ்ய நாபி –பகவத் த்யான சோபனம்-5-/ ணாஹி ருஹம் –பம்ஹ பமரம் -அச்சுத சதகம்-39-

திரு வயிற்று -பம்ஹண்டேஹி விபரியம் –உயரம் -அச்சுத சதகம்-38-

திருவார மார்பு -ஸ்ரீ பத ந்யாச தந்யம் –சந்த்ரி கோதார ஹாரம் –மத்யம் பாஹோ -பகவத் த்யான சோபனம்-6-
ஸ்ரீ வத்ச கௌஸ்துப ரமா வனமாலிக அங்கம் பாஹு மத்யம் -தேவ நாயக பஞ்சாசத்-32-டிர வனமாலம் வச்சம் -அச்சுத சதகம்-36-

உண்ட கண்டம் –கண்டே குணீ பவதி –தேவ நாயக பஞ்சாசத்-28-

செய்ய வாய் -ஸ்மித விகசிதம் சாரு பிம்பா தரோஷ்டம்–ஆருண்ய பல்லவித பிம்பாதரம் -தேவ நாயக பஞ்சாசத்-27-

கரியவாகி –கண்கள் –ஸ்வாந்தே காடம் மம விலகதி ஸ்வாகத உதார நேத்ரம்– பகவத் த்யான சோபனம்–8-
ஸ்நிக்தா யதம் ப்ரதிமசாலி விலோசநம் -தேவ நாயக பஞ்சாசத்–24–
பதும சரிச்ச ப்பசண்ண லோயண ஜூயளம் -c–35-

எழில் நீல மேனி நெஞ்சினையே –மத்யே ரங்கம் மம ச ஹ்ருதயே வர்த்தே சாவரோத-பகவத் த்யான சோபனம்-11-
ப்ரத்யங்க பூர்ண ஸூஷமா ஸூபகம் வபுஸ்தே த்ருஷ்ட்வா த்ருசவ் ந த்ருப்யதோ மே -தேவ நாயக பஞ்சாசத்–14–
சாமம் துஜ்ஜ தணும்–ணிஹம் வ பெச்சந்தி துமம் –தேவ நாயக பஞ்சாசத்–45-

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் –பாரமாய பழ வினை/துண்ட வெண் பிறையன்/பரியனாகி வந்த–வியாக்யானம் –

February 2, 2019

அவதாரிகை-

மேல் இரண்டு பாட்டில் –
நாராயண சப்தார்தம் உள்ளீடாகப்
பெரிய பிராட்டியார் உடைய நிவாஸத்தால் நிகரில்லாத திரு மார்பையும்
திருக் கழுத்தையும் அனுபவிக்கிறார் –

பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே ————-5-

பதவுரை
பாரம் ஆய–பொறுக்கமுடியாத சுமையாயிராநின்ற
பழ வினை–அநாதியான பாபங்களின்
பற்று அறுத்து–சம்பந்தத்தைத் தொலைத்து
என்னை-(அதனால் பாபம் நீங்கப் பெற்ற) அடியேனை
தன் வாரம் ஆக்கி வைத்தான்-தன்னிடத்தில் அன்பு உடையவனாகப் பண்ணி வைத்தான் (ரங்கநாதன்);
வைத்தது அன்றி–இப்படி செய்து வைத்ததுமல்லாமல்
என்னுள் புகுந்தான்–என் ஹ்ருதயத்திலும் ப்ரவேசித்து விட்டான்
(இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுதற்கு உறுப்பாக, நான்)
கோரம் மா தவம்-உக்ரமான பெரியதொரு தபஸ்ஸை
செய்தனன் கொல்–(முற்பிறவியில்) செய்திருப்பேனோ என்னவோ?
அறியேன்-அறிகிறேனில்லை;
அரங்கத்து அம்மான்-ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு ஆரம்-பிராட்டியையும் முக்தாஹரத்தையும் உடைத்தான
மார்பு அது அன்றோ-அத்திருமார்பன்றோ
அடியேனை-தாஸனான என்னை
ஆள் கொண்டது-அடிமைப்படுத்திக் கொண்டது.

வியாக்யானம்-

பாரமாய பழ வினை பற்று அறுத்து –
கால தத்வம் உள்ளதனையும் ப்ராயாச் சித்தம் பண்ணினாலும் கழிக்க ஒண்ணாத படி
உபசிதமாய்க் கொண்டு-சேர்த்துக் கொண்டு-அநாதி காலம் நடக்கிற சம்சாரிக கர்மக லாபத்தை
(யத் ப்ரஹ்ம கல்ப நியுத அநு பவேப்ய நாஸ்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்துரிஹ க்ஷணார்த்தே)
ச வாசனமாக என்னுடன் துவக்கு அறுத்து

என்னைத் தன் வாரமாக்கி வைத்தான் –
இப்படி கர்ம பரவசனாய் இந்த்ரிய கிங்கரனாய் தாத்ருசரான இந்த்ராதிகளை எடுத்துச்
சுமந்து தனிசு தீராதே ( வட்டி மட்டும் செலுத்தும் )-பொலிசை இறுத்துத் திரிகிற என்னை –
அபஹத பாப்மாவாய் ஸ்வாமி பாவத்துக்கு எல்லை நிலமாய் ஸூரி போக்யனான
தன்னுடைய அந்தபுர ஸ்திரீகளைப் போலே அன்யர்க்கு கூறு இல்லாதபடி பண்ணி
அசாதாரண கைங்கர்ய ரசத்தை -தந்து இது மேல் ஒரு காலத்திலும் மாறாதபடி வைத்தான் –

வைத்ததன்றி என்னுள் புகுந்தான் –
அநந்யனாக்கி வைத்த வளவன்றிக்கே முன்பு பிரயோஜ நாந்தர ப்ரவணனான
என்னுடைய ஹ்ருதயத்தில் அநந்ய பிரயோஜன அநுபவ விஷயமாக்கிக் கொண்டு –
தஸ்யு பரிக்ருஹீதமான தன் படை வீட்டிலே தஸ்யுக்களை ஒட்டி புகுருமா போலே புகுந்தான் –

கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் –
அநாதி காலம் இழந்த வஸ்துவைப் பெறுகைக்கு அகர்ம வச்யனான ஈஸ்வரன் தானே –
அவதார ஷேத்ரமான அயோத்யையும் விட்டு –
ஆஸ்ரதன் இருப்பிடமான லங்கையிலும் போகாதே –
கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டிலே –
அதி கோரமாய் -அதி மஹத்தாய் இருப்பதொரு தபஸை பண்ணினானோ -அறிகிலேன்
இது அதிவாத கர்ப்பமாக உத்ப்ரேஷித்த படி( மிகைப்படுத்தி ஊஹித்த படி )-சர்வ சம்சார நிவர்தகமாய்-
அமோகமாய் இருப்பதொரு –
மோஷ யிஷ்யாமி -என்கிற சங்கல்ப ரூபமான தபசி பண்ணினான் என்று தாத்பர்யம் –

அங்கன் அன்றிக்கே –
இப் பெரிய பேறு பெறுகைக்கு அயோயனான நான் இதுக்கு அநு ரூபமாய் அமோகமாய்
இருப்பதொரு மகா தபசி பண்ணிப் பெற்றேன் அல்லேன் –
இதுக்கு –
ப்ரியமிதர ததாபி வா யத்யதா விதரசி வரதப்ரபோ த்வம் ஹி மே தத் அநு பவநமேவ யுக்தம் ஹி மே
த்வயி நிஹித பரோஸ்ஸ்மி சோஸ்ஹம் யத -என்றும் –
தவ பரோஹம் அகாரிஷி தார்மிகை சரணம் இத்யபி வாச முதைரிரம்- இதி ச சாக்ஷி கயந்நித மத்ய மாம் குரு
பரம் தவ ரங்க துரந்தர–ஆச்சார்யர்களால் நான் தேவரீருக்கு பரமாகச் சமர்ப்பிக்கப் பட்டேன் -என்றும் சொல்லுகிறபடியே –
இப்போது நானும் பிறரும் அறியலாவது எனக்கொரு தபஸ் காண்கிறிலேன் -என்று ஈஸ்வரன் உடைய
இரக்கத்தின் ப்ராதான்யத்திலே தாத் பர்யமாகவுமாம்-
(குலங்களாய ஈர் இரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் நலங்களாய நற் கலைகள் நாலிலும் நவின்றிலேன்
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின் இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம்மீசனே —90-
ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்மவேதீ ந பக்திமான் த்வத் சரணார விந்தே )

இப்படி ஷூத்ரனான என் திறத்தில் இறங்கினவன் தான் –
தேற ஒண்ணாத -திருவில்லாத் தேவரில் ஒருவன் அல்லன் –
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை யுறை மார்பன் -என்னும் -இடத்தையும் –
சேஷபூதரான தமக்கு -ஸ்ரீ தரனே கைங்கர்ய பிரதிசம்பந்தி என்னும் இடத்தையும்
திறம்பாத-மாறாத- சிந்தைக்கு சிக்கெனக் காட்டிக் கொடுக்கிறார் –

அரங்கத்தம்மான் திரு வார மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே –
சர்வருக்கும் அனுபவிக்கலாம்படி -சர்வ சஹிஷ்ணுவாய்க் கொண்டு -( அனைத்தையும் பொறுப்பவன்)-
கோயில் ஆழ்வாருக்கு உள்ளே சௌலப்ய காஷ்டையோடு விரோதியாத ஸ்வாமித்வ காஷ்டையை உடையரான
பெருமாளுடைய சேஷித்வ பூர்த்திக்கு லஷணமான திருவையும்
அழகு வெள்ளத்துக்கு அணை கோலினால் போலே இருக்கிற ஹாரத்தையும் உடைத்தான
திரு மார்வன்றோ ஸ்வா பாவிக சேஷித்வ அநுபவ ரசிகனாய்
அதுக்கு மேலே குணைர் தாஸ்ய முபாகதனுமான என்னை ஸ்வரூப அநு ரூபமான
ஸ்தோத்ராதி சேஷ வ்ருத்தியிலே மூட்டி அதுக்கு இலக்காய் நின்றது –

இப்பாட்டில்-பதங்களின் அடைவே-நாராயண சப்தத்தில் விவஷிதமான
1-அநிஷ்ட நிவர்த்தகத்வமும்
2-இஷ்ட -ப்ராபகத்வமும் –
3/4-உள்ளும் புறமும் வியாபித்து நிற்கும் படியும்
5-நித்ய -கிருபையும்
6-உபாயத்துக்கு பிரதானமான சௌலப்யமும்
7-ப்ராப்யத்துக்கு பிரதானமான ஸ்வாமித்வமும்
8-சர்வ அநு குணமான ஸ்ரீ ய பதித்வமும்
9-பூஷண அஸ்த்ர ரூபங்களாக புவனங்களை தரிக்கிற போக்ய தமமான விக்ரஹ யோகமும்
10-நார சப்தார்த்தமான தாஸ பூதன் ஸ்வரூபமும்
11-தாஸ்ய பலமாக பிரார்த்திக்கப்படும் கைங்கர்யமும்–அனுசந்தேயம்

நாராயண சப்தார்த்தம்
1-அஷ்ட நிவர்த்தகம் –பழ வினை பற்று அறுத்து
2-இஷ்ட ப்ராபகத்வம் -வாரமாக்கி வைத்தான்
3-பஹிர் வ்யாப்தி -வாரமாக்கி வைத்தான்
4-அந்தர் வ்யாப்தி -என்னுள் புகுந்தான்
5-நித்ய கிருபை -கோர மாதவம்
6-ஸுலப்யம் -செய்தனன்
7-ஸ்வாமித்வம் -அரங்கத்தம்மான்
8-ஸ்ரீ யபதித்தவம் -திரு
9-திவ்ய மங்கள விக்ரஹ யோகம் -ஆர மார்பு
10-தாஸ பூத ஸ்வரூபம் -அடியேனை
11-தாஸ்ய பல கைங்கர்யம் -ஆட்கொண்டதே

—————————–

அவதாரிகை –

கீழ்ப் பாட்டில்
கைங்கர்ய அர்த்தியான தம்முடைய கைங்கர்ய விரோதிகளான
நிருபாதிக ஸ்வாமித்வ அபிமான மூலங்களை எல்லாம் நிராகரித்த படியை -அருளிச் செய்தார் –
இப் பாட்டில்
ஐஸ்வர்யார்த்திகளாருடைய ஐஸ்வர்ய விரோதியான
பிஷூ தசையை-இஹ லோக செல்வ நசையை- கழிக்கும் படியை உதாஹரிக்கிறார்-

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —————6-

பதவுரை

துண்டம்–ஒரு துண்டாயிருக்கிற (கலா மாத்ரமான)
வெண்பிறையன்–வெளுத்த சந்திரனை (முடியிலே) உடையனான சிவனுடைய
துயர்-(பிச்சை யெடுத்துத் திரிந்த) பாதகத்தை
தீர்த்தவன்–போக்கினவனும்
அம் சிறைய வண்டு–அழகிய சிறகையுடைய வண்டுகள்
வாழ்–வாழ்தற்கிடமான
பொழில் சூழ்–சோலைகள் சூழப் பெற்ற
அரங்கம் நகர்-திருவரங்கப் பெரு நகரிலே
மேய-பொருந்தி யிரா நின்ற
அப்பன்-ஸ்வாமியுமான ஸ்ரீரங்கநாதனுடைய
அண்டர்-அண்டத்துக்குட்பட்ட தேவாதி வர்க்கங்களையும்
அண்டம்–அண்டங்களையும்
பகிரண்டம்-அண்டாவரணங்களையும்
ஒரு மா நிலம்-ஒப்பற்ற மஹா ப்ருதிவியையும்
எழு மால் வரை-ஏழு குல பர்வதங்களையும்
முற்றும்-சொல்லிச் சொல்லாத மற்றெல்லாவற்றையும்
உண்ட-அமுதுசெய்த
கண்டம் கண்டீர்-திருக்கழுத்துக்கிடீர்
அடியேனை-தாஸனான என்னை
உய்யக் கொண்டது-உஜ்ஜீவிப்பித்தது

வியாக்யானம் –

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் –
ஈஸ்வரன் என்று பேரைச் சுமந்த தனக்கும் பூரணத்வம் இல்லை என்கைக்கு ஜ்ஞாபகம் போலே
சகல மாத்ரமாய்க் கொண்டு பிரகாசிக்கிற சந்திர கலையை தரிக்கிற ருத்ரன் ப்ரஹ்மாவினுடைய புத்ரனாய் வைத்து –
பிதாவின் திறத்திலே அபராதம் பண்ணி -அத்தாலே மஹா பாதகா க்ராந்தனாய் -இப்பாதகத்தை தீர்க்க வல்லார் ஆர் -என்று
கரகலித கபாலனாய்க் கொண்டு திரிந்து -ஓர் அளவிலே கெடு மரக்கலம் கரை சேர்ந்தாப் போலே
காருணிகனான சர்வேஸ்வரனை வந்து கண்டு –
என்னெந்தாய் சாபம் தீர் -என்ன-இவனுடைய சாபத்தைத் தீர்க்க -வல்லவன் –

இத்தால்
ஈஸ்வரன் என்று பேருடைய ருத்ரன் கர்ம வைஷ்யன் என்னும் இடமும்
தன்னைத் தான் ரஷித்துக் கொள்ள மாட்டாத இவன் வேறு ஒருத்தருக்கு நிரபேஷை ரஷகனாக மாட்டான் என்னும் இடமும்
சர்வேஸ்வரனே சர்வ அநிஷ்ட நிவர்த்தகன் என்னும் இடமும் சொல்லிற்று ஆயிற்று-

அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன் –
ஆர்த்தி வுடையார் அபேஷித்தால் அவர்களுக்கு தூத க்ருத்யம் பண்ணுகைக்கும்
(தருமன் விடத் தான் தூது போனார் வந்தார் )
மாசில் மலரடிக் கீழ் அவர்களை சேர்க்கைக்கும் ஹேதுவான கதிக்கு சாதனங்களாய் –
(எம் மீசர் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக் கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே–திரு விருத்தம் -54-)
அபி ரூபங்களான சிறகுகளை உடைத்தான வண்டுகள்
அபிமத போகத்தோடே வாழுகிற திவ்ய உத்யானங்களாலே சூழப்பட்ட ஸ்ரீ ரெங்க நகரத்திலே
நித்ய வாஸம் பண்ணுகிற சேவை லோக பிதாவானவன் –

இத்தால்-
காரண பூதனாய் –
கரண களேபரங்களை கொடுத்து உபகரித்தவன் கண்ணுக்கு இலக்காய் வந்து கண் வளர்ந்து –
கரணங்கள் பட்டி புகுராதபடி காக்கிற உபகார அதிசயத்தை உதாஹரிக்கிறது -ஆகிறது –
(உடையவன் உடைமையை ரஷிக்கையும் ஸமர்த்தன் அசமர்த்தனை ரஷிக்கையும்
பிராப்தம் இறே-பிரதான பிரதிதந்தர அதிகாரம் )
ந ராஜ் ஜாதாநி தத்வான் -இத்யாதிகளின் அர்த்தமும்-இங்கே அனுசந்தேயம்

காரண அவஸ்தையில் எல்லாக் கார்யங்களையும் தன் பக்கலிலே உப சம்ஹரித்து
பின்பு ஸ்ருஷ்டிக்கும் படிக்கு உதாஹரணமாக -வெற்றிப் போர்க் கடலைரையன் விழுங்காமல்
தான் விழுங்கி உய்யக் கொண்ட உபகாரத்தைக் காட்டி –
நெற்றி மேல் கண்ணானும் நான் முகனும் – முதலாக -எம்பெருமான் உண்டு உமிழ்ந்த
எச்சில் தேவர் அல்லாதார் தாமுளரே -என்னும்
அர்த்தத்தை பேசிக் கொண்டு தம்மை இப்போது சம்சார ஆர்ணவம் விழுங்காதபடி
உய்யக் கொண்ட படியை உபாலாலிக்கிறார்-

அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே-
அண்டாந்த வர்த்திகளான தேவாதி வர்க்கங்களையும் -அண்டங்கள் தன்னையும் –
அண்ட ஆவரணங்களையும் -அண்டங்களுக்கு உள்ளே பஞ்சா சத கோடி-ஐம்பது கோடி யோஜனை பரந்த
விஸ்தீரணையான- மஹா ப்ருதிவியாலும் குல பர்வதங்களாலும் உப லஷிதங்களான சர்வ கார்யங்களையும்
எல்லாம் திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கைக்காக விழுங்கின திருக் கழுத்து கண்டீர் –
ஸ்வரூபத்தை -உணர்த்தி என்னை ஸ்வ அனுபவத்தில் உஜ்ஜீவிப்பித்தது –
அண்டாதிகளைப் பற்ற சிறியலான குல பர்வதங்களை பிறியப் பேசுகையாலே
அவ்வளவு விழுங்குகையும் ஆச்சர்யம் என்று தோன்றுகிறது-

—————————————–

அவதாரிகை-

கீழே நாலு பாட்டாலே
ப்ரார்த்த நீயமான கைங்கர்யத்துக்கு ப்ரசாதகமான அநுபவம்
தம்மை இப்போது பரவசம் ஆக்கின படியைப் பேசுகிறார் -இதில் -கையினார் -என்கிற பாட்டில் –
ஆழ்வார்களோடு பொருந்தின திருக் கையை அவலம்பநமாகக் கொண்டு
திருமுடி யளவும் சென்று மீண்ட சிந்தையை
தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானுடைய கோலம் திரள் பவளக் கொளுந்துண்டம் கொல் -7-7-3–என்னும்படியான
திருப் பவளத்தில் அழகு தன் வசம் ஆக்கிற்று என்கிறார்-

கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ————7–

பதவுரை

கையின்–திருக் கைகளில்
ஆர்-பொருந்தியிருக்கிற
சுரி சங்கு-சுரியையுடைய திருச்சங்கையும்
அனல் ஆழியர்-தீ வீசுகின்ற திருவாழியையும் உடையராய்,
நீள் வரை போல்-பெரியதொரு மலை போன்ற
மெய்யனார்-திருமேனியை யுடையராய்
துளபம் விரை ஆர்-திருத்துழாயின் பரிமளம் மிகப்பெற்று (அதனால்)
கமழ்-பரிமளியா நின்றுள்ள
நீள்முடி–உயர்ந்த திருவபிஷேகத்தை யுடையராய்
எம் ஐயனார்–எமக்கு ஸ்வாமியாய்
அணி அரங்கனார்-அழகு பொருந்திய திருவரங்கத்திற் கண் வளர்ந்தருள்பவராய்
அரவு இன் அணை மிசை மேய–திருவனந்தாழ்வானாகிற இனிய திருப்பள்ளியின் மீது பொருந்திய
மாயனார்–ஆச்சரியச் செய்கைகளை யுடையரான ஸ்ரீ ரங்கநாதருடைய
செய்ய வாய்–சிவந்த திருப்பவளமானது
என்னை-என்னுடைய
சிந்தை-நெஞ்சை
கவர்ந்தது-கொள்ளை கொண்டது;
ஐயோ–(ஆநந்தாதிசயக் குறிப்பு.)

வியாக்யானம் –

கையினார் சுரி சங்கு அனல் ஆழியர் –
திருக் கைக்கு ஆயுதமாகைக்கும் ஆபரணம் ஆகைக்கும் போரும் என்னும்படி ஆர்ந்த சந்நிவேசத்தை உடைத்தாய் –
அவலம்புரியான வடிவாலே ப்ரணவ் சந்நிவேசமாய்
சப்த ப்ரஹ்ம மயமாய் -நிரதிசய ஆநந்த ஹேதுவான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் –
தாநவ வநதா வக்னியாய்-அரக்கராம் காட்டுக்குத் தீ போன்ற -மனஸ் தத்வ அபிமானியான –
மனம் திகிரியாக -திருவாழி யாழ்வானையும் உடையராய் –
( ராம அக்நிம் ஸஹஸா தீப்தம் ந பிரவேஷ்டும் த்வம் அர்ஹஸி–37-15 -ராவணன் இடம் மாரீசன் வார்த்தை )
இத்தால் –
மந்தரத்தையும் மனசையும் அநுகூல சிந்தைக்கு அனுகுணம் ஆக்க வில்ல உப கரணங்களை உடையவர் என்றது ஆய்த்து –
(நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் -பெரியாழ்வார் -1-3–12-)
திவ்யாயுத ஆழ்வார்கள் பெரிய பெருமாள் உடைய திருக்கைகளில் ரேகையில் ஒதுங்கிக் கிடந்தது –
பெருமாள் திரு மேனியிலே தோன்றி நிற்பர்கள்-

நீள் வரை போல் மெய்யனார் –
ஸ்வரூபம் போலே சூஷ்ம த்ருஷ்டிகள் காணும் அளவன்றிக்கே
மாம்ச சஷூஸ்ஸூக்களும் காணலாம் படி மலை இலக்கான திருமேனியை வுடையவர்

துளப விரையார் கமழ் நீண் முடி எம் ஐயனார் –
சர்வாதிகத்வ ஸூசகமான திருத் துழாயின் பரிமளத்தைப் பரி பூர்ணம் ஆக்கும்படி கமழ்ந்து –
(வானோர் தலைமகனாம் –சீராயின தெய்வ நல் நோய் இது –
தெய்வத் தண் அம் துழாய்த் தாராயினும் தழையாயினும் தண் கொம்பதாயினும்
கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே –திரு விருத்தம் -53- )
விபூதி த்வய சாம்ராஜ்ய வ்யஞ்சகமான திவ்ய கிரீடத்தை வுடைய சர்வ லோக பிதாவானவர்

அணி அரங்கனார் –
பரம வ்யோம ஷீரார்ண வாதிகளைக் காட்டில் குணா திசயத்தாலே
ஆஸ்ரீதற்கு ஹ்ருத்ய தமமான படியாலே விபூதி இரண்டுக்கும் ஏக ஆபரணம் என்னலாய்
சௌலப்ய அதிசயம் உண்டாம் படியான ஸ்ரீ ரெங்க விமாநத்தை சயன ஸ்தானமாக உடையவர்
அணிமையாலே-அணு-திவ்ய மங்கள விக்ரஹத்தை சிறியதாக ஆக்கிக் கொண்டு-
அணி அரங்கனார் -என்கிறது ஆகவுமாம்

அரவின் அணை மிசை மேய மாயனார் செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே-
தம்முடைய ஜ்ஞான பலங்கள் வடிவு கொண்டால் போல
இருக்கிற திருவனந்தாழ்வான் ஆகிற ஆநுகூலதிவ்ய பர்யங்கத்தின் மேலே அளவறத்
தேங்கின அம்ருத தடாகம் போலே ஆஸ்ரீதர்கு அனுபவிக்கலாய் –
ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜா ஸ்ரீ ரெங்கேசயமாஸ்ரயே சிந்தாமணி மிவோத் வாந்தம் உத் சங்கே அநந்த போகிந
என்னும்படி அத்ய ஆச்சர்ய பூதரானவருடைய
வாலியதோர் கனி கொல் -நன்கு கனிந்த ஒப்பற்ற பழம் –என்னலாம் படி வர்ண மாதர்யாதிகளை வுடைத்தாய்
(வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே -பெரியாழ்வார் -1-2-6-)
வையம் ஏழும் உள்ளே காணலாம் படியான செய்ய வாய் என் சிந்தையைப் பறித்துக் கொண்டது

ஐயோ
என்று ஆச்சர்யத்தை யாதல்
அனுபவித்து ஆற்ற அரிதான படியை யாதல்
அநுபவ ரசத்தை யாதல் -காட்டுகிறது

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -உவந்த உள்ளத்த்னாய்/மந்தி பாய் /சதுர மா மதிள்-வியாக்யானம் –

February 2, 2019

அவதாரிகை –

இவன் திருவடிகளில் சிவப்புக்கு நிகரான திருப் பீதாம்பரம் தன் சிந்தைக்கு விஷயம் ஆகிறது என்கிறார் –

உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் .காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே ———-2–

பதவுரை

உவந்த உள்ளத்தன் ஆய்–மகிழ்ச்சியோடு கூடிய மனத்தை யுடையவனாய்க் கொண்டு
உலகம் அளந்து–மூவுலகங்களையும் அளந்து
அண்டம் உற–அண்ட கடாஹத்தளவுஞ் சென்று முட்டும்படி
நிவந்த–உயர்த்தியை அடைந்த
நீள் முடியன்–பெரிய திருமுடியை யுடையவனாய்
அன்று–முற்காலத்தில்
நேர்ந்த–எதிர்த்து வந்த
நிசரசரரை–ராக்ஷஸர்களை
கவர்ந்த–உயிர் வாங்கின
வெம் கணை–கொடிய அம்புகளை யுடைய
காகுத்தன்–இராம பிரானாய்,
கடி ஆர்–மணம் மிக்க
பொழில்–சோலைகளை யுடைய
அரங்கத்து-ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனான
அம்மான்-எம்பிரானுடைய
அரை-திருவரையில் (சாத்திய)
சிவந்த ஆடையின் மேல்-பீதாம்பரத்தின் மேல்
என சிந்தனை-என்னுடைய நினைவானது
சென்றது ஆம் பதிந்ததாம்

வியாக்யானம் –

உவந்த உள்ளத்தனாய் –
மஹா பலியால் அபஹ்ருதமான ராஜயத்தை மீட்டுத் தர வேண்டும் என்று இந்த்ராதிகள் இரக்க –
ஆர்த்தன்-அர்த்தார்த்தீ -ஜிஞ்ஞாஸூ -ஞானி நால்வருமே என்னை ஆஸ்ரயிப்பதால் உதாரர்கள் –
உதாரா சர்வ ஏவைதே -என்கிறபடி -இவர்கள் பக்கலிலே ப்ரீதமான திரு உள்ளத்தை உடையனாய்
அசுரனே யாகிலும் ப்ரஹ்லாதனோடு உண்டான குடல் துவக்கும் பாவித்து
ஆநுகூல்ய மிச்ரனான மஹா பலியை அழியச் செய்ய நினையாதே அவனுடைய ஔதார்யத்துக்கு
அநுகூலமாக தான் இரப்பாளானாக சென்று -அவன் கொடுக்க வாங்கு கையாலே
அவன் அளவிலும் அனுக்ரஹ உக்தனாய் அபேஷா நிரபேஷமாக எல்லார் தலையிலும்
தன் திருவடிகளை வைக்க விலக்காத அளவாலும் சர்வ விஷயத்திலும் உவந்த உள்ளத்தனாய்
(அலமேஷா பரித்ராதும் ராகவாத் ராக்ஷஸீ கணம் அபியாசாம வைதேஹீம் எதத்தி மம ரோஸதே -த்ரிஜடை உபதேசிக்க
ராக்ஷஸிகள் விலக்காததே பற்றாசாக அவோசத்யதி தத் தத்யம் பவேயம் சரணம் ஹி வ -என்று அருளிச் செய்தாலே பிராட்டி )

இழந்த ராஜ்யத்தை வேறு எவரிடம் கேளாமல் தன்னிடம் இந்திரன் கேட்டதால் உகப்பு
காஸ்யப அதிதிக்கு பிள்ளையாய் தானே அவதரித்து கொடுத்த வரத்தை நிறைவேற்றிய உகப்பு
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய உகப்பு
குருவின் உபதேசத்தையும் உபேக்ஷித்து மஹா பலி நீர் வார்த்த உகப்பு
மன்னு நமுசியை வானில் சுழற்றிய உகப்பு
இத்தை வியாஜ்யமாக சர்வ லோகத்தையும் திருவடியால் தீண்டிய உகப்பு

உலகம் அளந்து –
அளவு பட்டுக் கொடுத்தோம் என்று இருக்கிற அசுரன் முன்னே எல்லா லோகங்களையும்
தன் திருவடிகளாலே அளவு படுத்தி –

அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –
மேலே கவித்த கநக சத்ரம் போலே இருக்கிற ப்ரஹ்மாண்டத்திலே கிட்டும்படி
விஜ்ரும்பித்த பெரிய திரு அபிஷேகத்தை உடையவன் -அவன் தன்னைப் போலே
திரு அபிஷேகத்துக்கும் அவனோடு ஒக்க வளருகைக்கு ஈடான மஹிமாவும் உண்டு
கர்ம வச்யதை தோற்றும்படி பிறவி தொடக்கமாக சடையும் குண்டிகையும் சுமந்து திரிகிற
பரிச்சின்நேச்வரர் பார்த்து நிற்க இப்படி முடி சூடி நிற்கையாலே உபய விபூதி நிர்வாஹகத்வமும்
அபிவ்யக்தமாய் ஆகிறது இத்த்ரி விக்ரம அபதானம் சொன்ன இத்தாலே ஈஸ்வர சங்கா விஷயமான
இந்த்ராதிகள் இரப்பாளரான படியும் -குறை கொண்டு நான்முகன் -இத்யாதிகளில் படியே ப்ரஹ்மா
திருவடி விளக்கி ஆராதனானபடியும் -ருத்ரன் தீர்த்த பிரசாதம் பெற்றுப் பூதனான படியும்
சொல்லிற்று ஆயிற்று
இத்தால் முன் பாட்டில் சொன்ன இஷ்ட ப்ராபகத்வத்தையும் உதாஹரித்ததாய் -இனி –
அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும் உதாஹரிக்கிறார் –

அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணை காகுத்தன் –
தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் குடி இருக்க ஒண்ணாத படி த்ரைலோக்ய ஷோபம் பிறந்து –
தேவர்கள் சரணாகதராக ஆன அன்று -சக்கரவர்த்தி திருமகனாய் அவதரித்து தாடகா தாடகேய
விரோத கபந்த கர தூஷணாதிகளை நிராகரித்து இலங்கைக்கு பரிகையான லாவணார்ணவத்தை
பர்வதங்களாலே பண்பு செய்து கொம்பிலே தத்தித் திரியும் குரங்குப் படையைக் கொண்டு
இலங்கையை அடை மதிள் படுத்தின அன்றும்
பெருமாளுடைய பிரபாவம் அறியாதே விளக்கு விட்டில் போலே வந்து எதிர்ந்த பகல் போது
அறியாத கூட யோதிகளை எல்லாம் எனக்கு எனக்கு என்று இரையாக கைக் கொண்ட-
தீப்த பாவக சங்காசங்களான திருச் சரங்களை உடையவனாய்
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் நின்றவன் –

காகுத்தன் –
மாயாவிகளான ராஷசரும் கூட மோஹிக்கும்படி மனுஷ்ய பாவத்தை முன்னிட்டு நின்றவன்
(தீர்க்க பாஹு விசாலாக்ஷ சீர கிருஷ்ணாஜி நாம்பர -கந்தர்ப்ப ஸமரூபச்ச ராமோ தசாரதாத்மஜ -சூர்பணகா வார்த்தை )
(புத்ரவ் தசரதஸ் யாஸ்தே ஸிம்ஹ சம்ஹ ந நோ யுவா -ராமோ நாம மஹாஸ் கந்தோ வ்ருத்தாயத மஹா புஜ ஸ்யாம
ப்ருதுயஸா ஸ்ரீ மான் அ துல்ய பல விக்ரம ஹதஸ் தேந ஜனஸ் தாநே கரச்ச ஸஹ தூஷண -அகம்பனன் வார்த்தை )
(ந ச பித்ரா பரித்யக்த நா மர்யாதா கதஞ்சன -ந லுப்தோ ந ச துச் சீலோ ந ச ஷத்ரிய பாம்சன –
ந ச தர்ம குணைர் ஹீந கௌசல்யா ஆனந்த வர்த்தன-ந ச தீஷ்ணோ ஹி பூதா நாம் சர்வ பூத ஹிதே ரத
ராமோ விக்ரஹவான் தர்ம சாது ஸத்ய பராக்ரம -ராஜா ஸர்வஸ்ய லோகஸ்ய தேவாநாமிவ வாசவ
அப்ரமேயம் ஹி தத்தேஜ யஸ்ய சா ஜனகாத்மஜா -ந த்வம் சமர்த்தஸ்தாம் ஹர்தும் ராம சாபாஸ்ரயம் வ நே -மாரீசன் வார்த்தை )
(சத்ரோ ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்சணீ யஸ்ய விக்ரமை பஸ்யதோ யுத்த லுப்தோஹம் க்ருத கா புருஷஸ் த்வயா -ராவணன் வார்த்தை )

காகுத்தன் –கடியார் பொழில் அரங்கத்தம்மான்
ஸூரிகள் முதலாக ஸ்தாவர ரூபங்களைக் கொண்டு நித்ய ஆமோதராய் நிற்கிற
ஆராமங்களாலே சூழப்பட்ட கோயில் ஆழ்வாருக்குள்ளே பிரஹ்மாதிகள் ஆராதிக்க
சர்வ ஸ்வாமித்வம் தோற்றக் கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாளுடைய –

அரைச் சிவந்த வாடையின் மேல் –
படிச் சோதி யாடையொடும் பல்கலனாய் நின் பைம் பொற் கடிச் சோதி கலந்ததுவோ
என்னும்படி திகழா நின்ற திரு வரையிலே -மது கைடப ருதிர படலத்தாலே போலே
பாடலமாய் மரகத கிரி மேகலையில்-ஒட்டியாணத்தில் – பாலாதபம் பரந்தாப் போலே
இருக்கிற திருப் பீதாம்பர விஷயமாக

சென்றதாம் என் சிந்தனையே –
அநாதி காலம் அநு சித விஷயங்களில் ஓடி-அவர்கள் ஆடையிலே கட்டுண்ட என் சிந்தை
(கூடினேன் கூடி இளையவர் தம்மொடு அவர் தம் கலவியே கருதி—
வாணிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வனமுலைப் பயனே பேணினேன் )
இவன் திருவடிகளைப் பற்றி என்னாலும் மீட்க ஒண்ணாதபடி திருப் பீதாம்பரத்திலே சென்று-துவக்குண்டது
என் சிந்தனை சென்றதாம் -என்கையாலே ஆச்சர்யம் தோற்றுகிறது
சென்றது –
நாம் ப்ரேரிக்க போந்த தன்று
விஷய வைலஷண்யத்தாலே ஆக்ருஷ்டமாயிற்று –

——————————————-

அவதாரிகை –
இப்படி இரண்டு பாட்டாலே பகவத் சேஷத்வ பர்யவ ஸாநத்தையும் –
அந்ய சேஷத்வ நிவ்ருதியையும் அனுசந்தித்து –
(அடியார்க்கு என்னை ஆட்படுத்த -என்று முதல் பாசுரத்தால் ததீய சேஷத்வ பர்யந்தம் ஆக்கி அருளியதையும்
இரண்டாம் பாட்டால் உலகம் அளந்து அருளி-உலகமே அவனுக்கு சேஷம் -அயோக வியவச்சேதம் –
வேறு யாருக்கும் சேஷம் இல்லை அந்நிய யோக வியவச்சேதம் -)
அநந்தரம் –
சேஷ பூதமான சேதன அசேதன வர்க்க பிரதிபாதகமான த்ருதீய அஷரம் முதலான த்ருதீய காதையாலே –
சேஷத்வ ஞான ஹீனராயும் -விச்சேதம் இல்லாத சேஷத்வ ஞானம் உடையாராயும் –
காதா சித்த சேஷத்வ ஞானம் உள்ளவர்களையும் உள்ள ஜீவர்கள் எல்லாம் தம் தாமுடைய ஞான அநுரூபமாக
பிரதிகூல (சபலர் மந்தி பாய்) அநுகூல (வானவர்கள் )உபயவித பிரவ்ருதிகளில் நிற்கிற நிலையை உதாஹரித்துக் கொண்டு
பகவத் அனுபவத்தில் தமக்கு இடையிலே பெற்றதொரு ப்ராவண்யத்தை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிறார் –

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே ———-3–

பதவுரை

மந்தி–குரங்குகளானவை
பாய்-(ஒரு கிளையில் நின்றும் மற்றொரு கிளையில்) பாயப்பெற்ற
வடவேங்கடம் மா மலை–வடதிசையிலுள்ள திருவேங்கடமென்னும் திருமலையிலே
வானவர்கள்-நித்ய ஸூரிகள்
சந்தி செய்ய நின்றான்–பூக்களைக் கொண்டு ஆராதிக்கும்படி நிற்பவனாய்
அரங்கத்து–கோயிலிலே
அரவு இன் அணையான்-திருவனந்தாழ்வானாகிற போக்யமான படுக்கையை யுடையனான அழகிய மணவாளனுடைய
அந்தி போல் நிறத்து ஆடையும்–செவ்வானம் போன்ற நிறத்தையுடைய திருப்பீதாம்பரமும்
அதன்மேல்–அப்பீதாம்பரத்தின் மேலே
அயனை படைத்தது ஓர் எழில் உந்திமேலது அன்றோ–பிரமனைப் படைத்த ஒப்பற்ற அழகையுடைய திருநாபிக் கமலமும் ஆகிய இவற்றின் மேற்படிந்ததன்றோ
அடியேன் உள்ளத்து இன் உயிரே-என்னுடைய மனஸ்ஸிலே விளங்குகிற இனிதான ஆத்மஸ்வரூபம்.

வியாக்யானம் –

மந்திபாய் வடவேங்கட மாமலை
சபலரான சம்சாரிகளுக்கு நிதர்சனமான வானர வர்க்கம் -நாநா சாகைகளில் உள்ள
ஷூத்ர பலங்களை புஜிப்பதாக –
தே தம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி –
ஏவம் த்ரயீதர் மமநு ப்ரபந்நா கதா தம் காம காமா லபந்தே -ஸ்ரீ கீதை -9-21- -என்கிறபடியே -ஒன்றை விட்டு
ஒன்றிலே பாய்ந்து திரிகைக்கு நிலமாய் -கலி யுகத்திலே பாகவத் சம்பாவனை உடைத்ததாக
புராண சித்தம் ஆகையாலே ஆழ்வார்கள் அவதரிக்க பெற்ற –

(கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா -க்வசித் க்வசித் மஹா பாகா த்ரமிடேஷு ச பூரிச –
தாம்ப்ரபரணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ-காவேரீ ச மஹா பாகா ப்ரதீஸீ ச மஹா நதீ
தாம்ரபர்ணீ -நம்மாழ்வார் -மதுரகவி ஆழ்வார்
வைகை -பெரியாழ்வார் ஆண்டாள்
பாலாறு -முதல் ஆழ்வார் திரு மழிசைப் பிரான் ஸ்ரீ பாஷ்ய காரர்
காவேரி –தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திருப் பாண் ஆழ்வார் -திருமங்கை ஆழ்வார்
மேற்கே ஓடும் பெரியாறு -குலசேகர ஆழ்வார் )

அகஸ்ய பாஷா தேசத்துக்கு உத்தர அவதியாய் இருக்கிறது
புராண சித்தமாய் -ஈஸ்வரன் தன்னைப் போலே ஸ்வரூப ரூப குண விபூதி ப்ரபாவங்களால்
உண்டான மஹத்வத்தை உடைத்தான திருமலையிலே
(வேங்கடாத்ரி சமம் ஸ்தானம் ப்ரஹ்மாண்டே நாஸ்தி கிஞ்சன வேங்கடேச சமோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி
கடு வினையர் இரு வினையும் கடியும் வெற்பு -திண்ணம் இது வீடு என்னத் திகழும் வெற்பு —
புண்ணியத்தின் புகல் இது என புகழும் வெற்பு -பொன்னுலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு –
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு -)

வானவர்கள் சந்தி செய்ய நின்றான் –
பரம பதத்தில் கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு அதி க்ருதரான முக்தரும் நித்தியரும் தேச
உசிதமான தேஹங்களைக் கொண்டு உசிதமான கைங்கர்யத்தைப் பண்ணி இவர்கள்
ஆஸ்ரயிக்கைக்கு உத்தேச்யனாய் நின்றான் –

அரங்கத்தரவின் அணையான்
ஏற்றம் உள்ள அளவும் ஏற வேண்டும்படியான திருமலை ஆழ்வாரும் பரமபத ஸ்தாநீயம்
என்னும்படி எளிதாக கிட்டலாம்படியான கோயில் ஆழ்வாருக்கு உள்ளே –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா வடிமை செய்யும் வானவர்களுக்கு படிமாவாய்
நிச்சேஷ ஜகத் ஆதார குருவான தன்னைத் தரிக்கைக்கு ஈடான
ஞான பல ப்ரகர்ஷத்தை உடையனாய் -ஸூரபி ஸூகுமார ஸீதளமான-( மணம் மென்மை குளிர்ச்சி )-
திரு அரவு அணையிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் உடைய-
(சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் –நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புணையாம்
மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு –மூன்றாம் திருவந்தாதி -53-
ச பிப்ரச் சேகரீ பூதம் அசேஷம் ஷிதி மண்டலம் –பூ மண்டலம் முழுவதையும் கொண்டை போலே சுமக்கும் சேஷன்
பணிபத சப்தேன ஸூரபி – ஸூகுமார -சீதள – விசால -உந்நதத் வாதி ரூபா பர்யங்க குணா வ்யஜ்யந்தே-
பரிமளம் -மார்த்வம் -குளுமை -அகன்று -உயர்ந்தமை )

அந்தி போல் நிறத்தாடையும்
ஆஸ்ரீதருடைய அஞ்ஞான அந்தகாரத்தை கழிக்க வல்ல சமயக் ஞான சூர்யோதததுக்கு பூர்வ சந்த்யை போலேயும்
அவர்களுடைய தாப த்ரயங்களை – ஆத்யாத்மிக-ஆதி பவ்திக -ஆதி தைவீக-கழிக்கைக்கு-
பச்சிம ஸந்த்யை -அந்திப் பொழுது -போலேயும்
புகர்த்த நிறத்தை உடைதான -செவ்வரத்த உடை யாடையும் –
இது மேலில் அனுபாவ்யத்தை அவலம்பிக்கைக்கு அனுபூதாம்சத்தை அனுவதித்த படி –
(மேலே அனுபவிக்கப் புகும் திரு உந்தியின் அழகுக்கு ஈடாய் நிற்கும் பிரகாசமுடைய -அதற்கு கரை கட்டினால் போலே
இருக்கும் ஸுந்தர்ய பிரகர்ஷத்தாலே கீழே அரைச் சிவந்த ஆடையின் மேலே சென்றதாம் என் சிந்தனையே –
என்றத்தை அனுபாஷிக்கிறார் ) மேல் அநுபாவ்யம் ஏது -என்ன –

அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில் உந்தி –
அநுபூதமான திருப் பீதாம்பரத்துக்கு மேலாய் -இதன் நிறத்துக்கு நிகரான சிவந்த
தாமரைப் பூவை உடைத்தாய் -அதின் மேல் வ்யஷ்டி ஸ்ருஷ்டி சமயத்தில் முற்பட
அயோநிஜனான ப்ரஹ்மாவை ஸ்ருஷ்டித்த அத்விதீயமான அழகை உடைத்தான திரு வுந்தி
ப்ரஹ்மாவுடைய ஸ்ருஜ்யத்வம் சொல்ல -கைமுதிக ந்யாயத்தாலே ருத்ர இந்த்ராதிகள்
உடைய ஸ்ருஜ்யத்வம் சொல்லிற்றாம்
இத்தால் ப்ரதிபுத்தர்க்கு-சம்யக் ஞானம் பெற்றவர்க்கு- ஸ்ரீயபதி ஒழிய சரண்யாந்தரமும் ப்ராப்யாந்தர்மும் இல்லை என்றது ஆயிற்று
இங்கு ப்ரஹ்மாவை சொன்னது முமுஷுக்களை ஸ்ருஷ்டித்த உபகாரத்துக்கு உதாஹரணமுமாகிறது
(நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான் முகமாய் சங்கரனைத் தான் படைத்தான் –
ப்ரஹ்மாணம் சிதிகண்டம் ச யாச்சாந்யா தைவதாஸ் ஸ்ம்ருதா-ப்ரதிபுத்தா ந சேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் -)

மேலதன்றோ –
என்றது இந்த திரு வுந்தியையே அனுபாவ்யமாகக் கொண்டன்றோ இருக்கிறது என்னவுமாம்
இதனுடைய அனுபவம் இட்ட வழக்காய் இருக்கிறது என்னவுமாம்

அடியேன் உள்ளத்து இன்னுயிரே –
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வபாவஞ்ச சதா ச்மர -என்கிறபடியே
பரம காருணிக கடாஷத்தாலே ஸ்வபாவ தாஸ்ய ப்ரதிபோதம் உடையேனான என்னுடைய
சத்வோத்தரமான மனசிலே பிரகாசிக்கிற ஸ்வாதுதமமான என் ஆத்ம ஸ்வரூபம்
உள்ளம்-
என்று ஹிருதய பிரதேசத்தைச் சொல்லவுமாம் –
இன்னுயிர்
என்று பகவத் அனுபவத்துக்கு அநுரூபம் ஆகையாலே இனிதான ப்ராணாதிகளைச் சொல்லவுமாம் –
ஜ்ஞாநீது பரமை காந்தீ பராயத் தாத்ம ஜீவந -மச் சித்தா மத்கத ப்ராணா -இத்யாதிகளை இங்கே அனுசந்திப்பது
(ஞானீ து பரமை காந்தீ பராயத்த ஆத்ம ஜீவன -தத் சம்ச்லேஷ வியோகைக ஸூக துக்கஸ்த் தேக தீ
மச் சித்தா மத் கத பிராணா போத யந்த பரஸ்பரம் -கத யந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்த ச ரமந்தி ச -10-9–)

————————————–

அவதாரிகை –

இரண்டாம் பாட்டாலும் மூன்றாம் பாட்டாலும் ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய கர்ம அதிகாரித்வமும்
கர்ம மூல ஜந்மாதிகளும் சொல்லிற்று ஆயிற்று –
(உலகம் அளந்து -அளப்பவன் ஸ்வாமி -அளக்கப்படுபவை அவனுக்கு அடங்கி -கர்ம வஸ்யர் அர்த்தம் த்வனிக்கப்படுகிறது
அயனைப் படைத்த எழில் உந்தி -கர்மாதீனம் பிறப்பில் உழன்று இருப்பவர் என்பது சப்தார்த்தம் )
நாலாம் பாட்டாலே –
ப்ரஹ்ம ருத்ராதிகள் வரம் கொடுத்து வாழ்வித்த ராவணனை நிராகரித்த வ்ருத்தாந்தத்தாலும்
தேவதாந்தரங்கள் உடைய ஷூத்ரத்வத்தையும் –
ப்ரஹ்மா ஸ்வயம் பூச் சதுராநநோ வா
ருத்ரஸ் த்ரினேத்ரஸ் த்ரிபுராந்தகோ வா
இந்த்ரோ மகேந்த்ரஸ் சூர நாயகோ வா
த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம் -இத்யாதிகள் படியே
அவர்கள் உடைய அல்ப சக்தித்வதையும் அனுசந்திதுக் கொண்டு ப்ரஹ்மாதிகளை எல்லாம் அகம்படியிலே
ஏக தேசத்திலே வைத்து உய்யக் கொண்ட ஸ்ரீ மத்தையை உடைத்தான திரு வயிற்றின் உடைய
சிறுமை பெருமைகளால் உண்டான அகதி தகடநா சக்திகளுக்கு
அடையவளைந்தான் போலே யிருக்கிற உதர பந்தம் ( ஒட்டியாணம் )-தம்முடைய சிறிய திரு உள்ளத்துக்கு உள்ளே
வெளியில் போலே இடம் கொண்டு உலவா நின்றது -இது ஒரு ஆச்சர்யம் என்கிறார் –

கீழ் மூன்று பாட்டாலும் ப்ரதம பதார்த்தம் ப்ரதிஷ்டிதமாய் –
நாலாம் பாட்டாலே
த்விதா பஜ்யேய மப் யேவம் ந நமேயம் து கஸ்ய சித் ஏஷ மே சஹஜோ தோஷ ஸ்வபவோ துரதிக்ரம –
ந நமேயம் து கஸ்ய சித் -என்ற வணங்கல் இலாக்கனைத் தலை சாய்த்து –
தசேந்திரியா நநம் கோரம் யோ மநோ ரஜநீ சரம் விவேக சரஜாலேந சமம் நயதி யோகி நாம் –
தசேந்த்ரியா நநம் கோரம் – என்கிறபடியே
முமுஷுக்களுடைய மனசு அஹங்கார மமகார தூஷிதமாகாத படி பண்ணிக் கொடுக்கிற
சக்கரவர்த்தி திருமகனுடைய சரித்ரத்தை முன்னிட்டு –
நானும் என்னுடையது அன்று –
மற்றும் என்னுடையதாவன ஒன்றும் இல்லை -என்கிற
நமஸ்ஸில் அர்த்தத்தை மறை பொருளாக அனுசந்திகிறார் ஆகவுமாம்-

சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே—————4-

பதவுரை

சதுரம்–நாற்சதுரமாய்
மா–உயர்ந்திருக்கிற
மதிள்சூழ்–மதிள்களாலே சூழப்பட்ட
இலங்கைக்கு–லங்கா நகரத்திற்கு
இறைவன்–நாதனான இராவணனை
ஓட்டி–(முதல்நாள் யுத்தத்தில்) தோற்று ஓடும்படி செய்து
(மறுநாட்போரில்)
தலைபத்து–(அவனது) தலைபத்தும்
உதிர–(பனங்காய்போல்) உதிரும்படி
ஓர்–ஒப்பற்ற
வெம் கணை–கூர்மையான அஸ்த்ரத்தை
உய்த்தவன்–ப்ரயோகித்தவனும்
ஓதம் வண்ணன்–கடல் போன்ற (குளிர்ந்த) வடிவை யுடையவனும்
வண்டு–வண்டுகளானவை
மதுரமா–மதுரமாக
பாட–இசைபாட
(அதற்குத் தகுதியாக)
மா மயில் ஆடு–சிறந்த மயில்கள் கூத்தாடப் பெற்ற
அரங்கத்து அம்மான்–திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு வயிறு உதரபந்தம்–திருவயிற்றில். சாத்தியுள்ள ‘உதரபந்த’ மென்னும் திருவாபரணமானது
என் உள்ளத்துள் நின்று–என் நெஞ்சினுள் நிலைத்து நின்று
உலாகின்றது–உலாவுகின்றது

வியாக்யானம் –

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர-
குல பர்வதங்களை சேர்த்து இசைத்தாப் போலே -செறிவும் திண்மையும் உயர்த்தியும் உடைத்தாய்
எட்டு திக்குகளில் உள்ள திக்பலர்களுக்கும் எட்டிப் பார்க்க ஒண்ணாது இருக்கிற
மதிள்களாலே இற்ற விடம் முறிந்த விடம் இல்லாதபடி எங்கும் ஒக்க சூழப்பட்டு
ஜல துர்க்க கிரி துர்க்க வன துர்க்கங்களாலே -துர்கங்களுக்கு எல்லாம்
உபமானம் ஆம்படி பிரசித்தமான இலங்கைக்கு ஈச்வரனாய்
துர்க்க பல வர பல பு ஜ பல சைன்ய பலங்களாலே செருக்கனாய்
மால்யவான் அகம்பனன் மாரீசன் முதலான ராஷசர்களோடு
ஹனுமான் விபீஷணன் முதலான சத்வ பிரக்ருதிகளோடு வாசியற
அவகீதமாக-( வித்யாசம் இன்றி ) பேசப்பட்ட பெருமாள் பெருமையை அறிந்து வைத்தும் கண்டும்
மதி கெட்டான் படியே –
விதித ச ஹி தர்மஞ்ஞா சரணாகத வத்ஸல தேந மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சசி–21-20- என்ற
தாய் வாய் சொல்லும் கேளாதே

அராஷசமிமம் லோகம் கர்த்தாச்மி நிசிதைசரை ந சேச் சரண மப்யேஷி மாமுபாதாய மைதிலீம் –41-66–என்று
பெருமாள் அருளிச் செய்து விட்ட பரம ஹிதமான பாசுரத்தையும் அநாதரித்து -அடைகோட்டைப் பட்டவளவிலும்
பூசலுக்கு புறப்பட்டு விட்ட மகா பலரான படை முதலிகள் எல்லாரையும் படக் கொடுத்து
தான் ஏறிப் பொருதவன்று ரிபூணா மபி வத்சலரான பெருமாள் சரச் செருக்கு வாட்டி -நம்முடனே பொரும்படி
இளைப்பாறி நாளை வா -என்று விட -நாணாதே போய் மண்டோதரி முதலான பெண்டுகள்
முகத்திலே விழித்து -தன்னில் பெரிய தம்பியையும் மகனையும் படக் கொடுத்து தான் சாவேறாக
வந்து ப்ரதிஹத சர்வ அஸ்தரனான -எல்லா அஸ்திரங்களை இழந்த பின்பும்
சினம் தீராதே சேவகப் பிச்சேறி நின்ற ராவணனை
இனித் தலை யறுக்குமது ஒழிய வேறு ஒரு பரிஹாரம் இல்லை என்று திரு உள்ளம் பற்றி
ஒரு தலை விழ வேறு ஒரு தலை கிளைக்க முன்பு பண்ணின சித்ர வத ப்ரகாரம் அன்றிக்கே
ஒரு காலே பத்துத் தலையும் உதிரும்படியாக
(உத்தம அமர்த்தலம் அமைத்ததோர் எழில் தனுவின் உய்த்த கணையால் அத்திர வரக்கன்
முடி பத்தும் ஒரு கொத்தென உதிர்த்த திறலோன் )

ஒட்டி யோர் வெங்கணை வுய்த்தவன்
தானே போய் ராவணன் தலை பத்தும் கைக் கொள்ள வேணும் -என்று சினம் உடைத்தாய் –அத்விதீயமாய் இருப்பதொரு
திருச் சரத்தை -தகையதே ஓட விட்டு -இரை போந்த இலக்கு பெறுகையாலே அத் திருச் சரத்தை உய்யப் பண்ணினவன் –
(ச சரோ ராவணம் ஹத்வா ருதிரார்த்த க்ருதச்சவி க்ருதகர்மா நிப்ருத்வத் ச தூணீம் புநராவிசத்-108-20–)
சரத்தினுடைய ஆஸூகாரித்வத்தாலும்-வேகத் திறனாலும்- ராவணனுடைய தைர்யத்தாலும்
தலை பத்தும் உதிர்ந்த பின்னும் அவன் உடல் கட்டைப் பனை போலே சிறிது போது இருந்து நிற்கும்படியாய் -இருந்தது

தலை பத்து உதிர ஒட்டி –
என்றது முன்னில் பூசலில் ராவணனைத் தலை சாய்த்து –
கச்ச அநுஜாநாமி ரணார்த்தி தஸ்த்வம் பிரவிஸ்ய ராத்ரிம் சர ராஜ லங்காம் ஆஸ்வாஸ்ய நிர்யாஹி
ரதீ ச தன்வீ ததா பலம் த்ரஷ்யஸி மே ரதஸ்த-41-66- -என்று துரத்தி விட்ட படியாய்

ஓர் வெங்கணை வுய்த்தவன் –
என்றது பின்பு அவனுடைய வத அர்த்தமாக அத்விதீயமான அஸ்த்ரத்தை விட்டவன் என்னவுமாம்

ஓத வண்ணன் –
கண்டவர்களுடைய பாபத்தையும் தாபத்தையும் கழிக்க வற்றாம் சமுத்ரம் போலே ஸ்யாமளமான
திருமேனியை உடையவன் –

மதுர மா வண்டு பாட மா மயில் ஆட அரங்கத்தம்மான் –
ராவண வதம் பண்ணின வீர லஷ்மியுடனே நின்ற அழகைக் கண்டு
ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரம் பண்ண -அப்சரஸ் ஸூக்கள் மங்கள ந்ருத்தம் பணணினாப் போலே –
ஆத்மாநம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம் சோயம் யச்சே யதச்சாஹம் பகவாம்ஸ்த்த் ப்ரவீது மே -117-11-
என்கிற பெருமாளுடைய பூமிகைக்கு-மாறு வேஷத்துக்கு – அநுரூபமாக
முக்தரும் நித்தியரும் கூடி -ரூபாந்தரம் -கொண்டு வந்தார்கள் என்னலாம்படி
அதி மதுரங்களாய் -ஜஞாநாதி குண மகாத்தையும் உடையவையான வண்டுகள் காலப் பண்கள் பாட –
பாட்டுக்கு அநுகுணமாக குணாதிகங்களான நீல கண்டங்கள் ந்ருத்தம் பண்ண –
இக் கீத ந்ருத்தங்களாலே மங்களோத்தரமான கோயில் ஆழ்வாருக்கு
உள்ளே சர்வாதிபதியான படி தோற்றக் கண் வளருகிற பெரிய பெருமாள் உடைய

திரு வயிற்று உதர பந்தம் -என் உள்ளத்துள் உலாகின்றதே –
தாமோதரம் பந்த கதம் -என்கிறபடியே
பந்தகதருக்கு மோஷ ஹேதுவான தாமோதரத்வத்தை வெளி இடா நின்ற திரு வயிற்றில் –
திரு உதர பந்தம் -என்று
திரு நாமத்தை உடைத்தான திரு வாபரணம் அதி ஷூத்ரனான என்னுடைய அதி ராக தூஷிதமான ஹ்ருதயதினுள்ளே
அதுவே நிவாஸ பூமி என்னும்படி நின்று -அளவற்ற போக்யதா ப்ரகாசக வ்யாபாரங்களைப் பண்ணா நின்றது
இது திரு மந்த்ரத்திலும் திரு மேனியிலும் மத்யத்திலே வரும் அனுபவம் –

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வேதாந்த தேசிகர் முநி வாஹன போகம் -அவதாரிகை/-அமலனாதிபிரான்-வியாக்யானம் –

February 2, 2019

ஸ்ரீ பெரிய நம்பிகள் அருளிச் செய்த தனியன் –

ஆபாத சூட மநுபூய ஹரிம் சயாநாம்
மத்யே கவேரே துஹிதுர் முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட் ருதாம் நயநயோர் விஷயாந்த்ர
யோநிஸ்சிகாயா மநவை முநி வாஹநம்த –

திருமலை நம்பி அருளிச் செய்த தனியன் –

காட்டவே கண்ட பாத கமல நல்லாடை உந்தி
தேட்டரும் உதரபந்தம் திரு மார்வு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே –

———————————

வ்யாசிக் யாசத பக்த்யா விரக்த தோஷாயா வேங்கடேச கவி
முகுந்த விலோக ந முதித முநி வாஹந ஸூக்தி பங்க்தி மிமாம் –

அடியாரைக் காண விழையும் அரங்கனைக் கண்டு களிக்க ஆசைப்படுபவரும் –
ஸ்ரீ லோக சாரங்க முனிவரை வாகனமாகப் பெற்றவரும் நல் கவியுமான
திருப் பாண் ஆழ்வாருடைய இந்த திவ்ய பிரபந்தத்தை
பக்தியுடன் முக்கரணங்களையும் அடக்கி சமதமதாதி குணங்கள் நிறைந்த முகுந்தனைக் காண விழையும்
அடியார்களின் மகிழ்ச்சிக்காக ஸ்ரீ வேங்கடேச கவி வ்யாக்யானம் செய்து அருளுகிறார்

ப்ரணதிம் வேங்கடேசஸ்ய பதயோர் விததீ மஹி
யத் உக்தயோ யதீந்த்ர யுக்தி ரஹஸ்யாநாம் ரஸாயநம்

எவருடைய ஸ்ரீ ஸூக்திகள் ஸ்ரீ பாஷ்யகாரர் உபதேசித்த ரஹஸ்யங்களை அறியும் குளிகையாக
அமைகிறதோ அந்த வேங்கடேசரின் திருவடிகளை வணங்குவோம்

பாவளரும் தமிழ் மறையின் பயனே கொண்ட
பாண் பெருமாள் பாடியதோர் பாடல் பத்தில்
காவலனும் கணவனுமாய் கலந்து நின்ற
காரணனைக் கருத்துற நான் கண்ட பின்பு
கோவலனும் கோமானுமான வந்நாள்
குரவை பணர் கோவியர் தம் குறிப்பே கொண்டு
சேவலுடன் பிரியாத பெடை போற் சேர்ந்து
தீ வினையோர் தனிமை யெலாம் தீர்ந்தோம் நாமே

பாக்கள் செறிந்த தமிழ் வேதமாம் திவ்ய ப்ரபந்தங்களின் உள் பொருள்களை அடக்கியவையும்
திருப் பாண் ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட இப் பத்து பாசுரங்களால்
காப்பவனும் -நாயகனுமாக இசைந்து நிற்கும் காரணமாம் நாரணனை நாம் நன்கு அறிந்த பின்
இடையனும் அரசனுமாக திரு அவதரித்த போது அவனுடன் திருக் குரவைக் கூத்தாடிய
இடைப் பெண்கள் கருத்தையே தானும் கொண்டு
ஆண் பறவையை விட்டு அகலாத பெண் பக்ஷி போலே அவனைச் சேர்ந்து
பாபிகளுக்கான துணை அற்ற நிலையை விட்டு ஒழிந்தோம்

ஸுலப்யம் பரத்வம் இரண்டும் ஒருங்கே அமைந்த எம்பெருமானே உபாயம் -காரணந்து த்யேயயா –
குரவைக் கூத்து உதாஹரணம்
சர்வேஸ்வரனுடைய பரத்வ மாத்ரத்தை அறிந்து அகலுகையாலே நர அதமன் என்று பேர் பெற்ற பிறந்து கெட்டானில் காட்டிலும்
இடைச்சிகளைப் போலே விவேகம் இல்லையே ஆகிலும் ஸுலபயத்தை அறிந்து
அந் நலனுடை ஒருவனை நணுகுமவனே பரம ஆஸ்திகன் -அப்புள்ளார் ஸ்ரீ ஸூக்தி

நமோ ராமாநுஜார்ய ஸவ்ம்ய மூர்த்தி ஸூ ஸூநவே
யஸ்ய ப்ரஸாதான் நிர்யாதி போக ஸ்வாது தரங்கிணீ –

காரண விசேஷம் இன்னது என்று அறுதி இட அரிதாய் இருப்பதொரு பகவத் கடாஷத்தாலே
அயத்ந லப்தமான பர தத்வ -பரம ஹித -பரம புருஷார்த்த -விவேகத்தை உடையவராய் –
(தத்வ த்ரய விவேகம் உண்டாகைக்கு ஹேது எம்பெருமான் நிருபாதிக ஸூஹ்ருத கார்யம்
விளம்ப ரஹித மோக்ஷ ஹேதுக்களான ஸூஹ்ருத விசேஷங்கள் ஆர் பக்கலிலே கிடைக்கும் என்று தெரியாது –
ரஹஸ்ய த்ரயம் -அர்த்த பஞ்சக அதிகாரம் –
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -என்றும் குலங்களாய ஈர் இரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -என்றபடி
பராதீன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தியான தன் அதிகாரத்தில் அடங்கிய ஆகிஞ்சன்யத்தைக் காட்டுகிறது )

அநாதி கால பிரவ்ருதங்களான ஷூத்ர புருஷார்த்தராதிகளையும் –
ஷூத்ர புருஷ ஸ்தோத்ராதிகளையும் -ஷூத்ர புருஷார்த்த பிரவ்ருத்திகளையும்
தப்பின தம்முடைய கரண த்ரவ்யமும் இப்போது ப்ராப்தமான ஏக விஷயத்திலே –
(மநோ வாக் காயங்களின் வியாபாரங்கள் அல்ப அஸ்திரத்வாதிகளை தவிர்ந்து பகவத் விஷயத்தில் இருந்தமை )
அநந்ய பிரயோஜன அநுகூல வ்ருத்தியை உடைத்தான படியைக் கண்டு
சந்தோஷ யுக்தரான திருப்பாண் ஆழ்வார் -பின்பு பரம பதத்திலே பெரும் பேற்றை இங்கே
பெரிய பெருமாள் திருவருளாலே பெற்று –
(ஆழ்வார் தாம் தம்முடைய திரு உள்ளத்தால் அனுபவித்து -அவ்வனுபவ ஜெனிதமான நிரவதிக ப்ரீதியாலே
அவனை அனுபவித்த படியே பேசுகிறார் -திருவாராயிரப்படி வ்யாக்யானத்தை ஒட்டி சாதித்து அருளுகிறார் )

இப் பேற்றை அடி தொடங்கி –
அமலனாதி பிரான் முதலான பத்துப் பாட்டாலே அநுபவ ப்ரீவாஹமாக (உணர்ச்சிப் பெருக்காலே)அருளிச் செய்கிறார்-
இப்ப்ரபந்தம் அதி விஸ்தரம் அதி சங்கோசம் அதி க்ருதாதிகாரத்வம் துர்க்ரஹத்வம் ( விஷயம் விளங்காமை )
துரவபோதார்த்த்வம் ( பொருள் விளங்காமை ) சம்சயாஸி ஜநகத்வம் விரஹ க்லேசம் தூத ப்ரேஷணம்
பரோபதேசம் பர மத நிரசனம் என்றாற் போலே
மற்றுள்ள அத்யாத்ம பிரபந்தங்களில்- ( வேதாத்மா நூல்கள்) உள்ளவை ஒன்றும் இன்றிக்கே
அநுபவ கநரசமாய் ( அனுபவத்தின் திரண்ட ரசம் ) இருக்கிறது –
முதல் பாட்டான அமலனாதிபிரான் தொடங்கி
கொண்டல் வண்ணனை என்கிற தலைக் கட்டுப் பாட்டளவும்
இதில் முதல் பட்ட மூன்று பாட்டுக்கு முதல் அஷரம்
மூலமாகிய ஒற்றை எழுத்தின் முதல் -நடு -இறுதி யானவை-

——————————–

அவதாரிகை
இதில் முதல் பாட்டு -திரு மந்த்ரத்திலும் த்வயத்திலும் முமுஷுவுக்கு அவஸ்ய
அனுசந்தேயங்களான அர்த்தங்களை ஸூசிப்பிக்கிறது

அமலனாதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே –1–

பதவுரை

அமலன்–பரிசுத்தனாய்
ஆதி–ஜகத்காரபூதனாய்
பிரான்–உபகாரகனாய்
என்னை–(இழி குலத்தவனான) என்னை
அடியார்க்கு–(தனது) அடியவர்களான பாகவதர்களுக்கு
ஆள்படுத்த–ஆட்படுத்துகையாலே வந்த
விமலன்–சிறந்த புகரை யுடையனாய்
விண்ணவர் கோன்–நித்யஸூரிகட்குத் தலைவனாயிருந்து வைத்து
(ஆச்ரிதர்கட்காக)
விரை ஆர் பொழில்–பரிமளம் மிக்க சோலைகளையுடைய
வேங்கடவன்–திருவேங்கடமலையில் வந்து தங்குமவனாய்
நிமலன்–ஆச்ரயிப்பார்க்கு அரியனாயிருக்கையாகிற குற்றமற்று, ஆச்ரித பாரதக்திரியத்தை வெளியிட்டு நிற்குமவனாய்
நின்மலன்–அடியாருடைய குற்றத்தைக் காண்கையாகிற தோஷமில்லாத வத்ஸலனாய்
நீதி வானவன்–சேஷசேஷி முறைவழுவாதபடி நியாயமே செல்லும் நிலமான பரமபதத்துக்கு நிர்வாஹகனாய்
நீள் மதிள்–உயர்ந்த மதிள்களையுடைய
அரங்கத்து–கோயிலிலே (கண் வளர்ந்தருளுகிற)
அம்மான்–ஸ்வாமியான அழகிய மணவாளனுடைய
திருக் கமல பாதம்–திருவடித் தாமரைகளானவை
வந்து–தானே வந்து
என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே–என் கண்ணுக்குள்ளே புகுந்தன போலிரா நின்றனவே

அமலன் –
என்கிறது மல ப்ரதிபடன் -என்றபடி -இத்தால் மோஷ ப்ரதத்வம் சொல்லிற்று ஆய்த்து –
இது பிரதானமான ரஷகத்வம் ஆகையாலே பிரியப் பேசப்படுகிறது
(ஸ்வயம் பிரகாச ஸ்வரூபனான ஜீவன் கர்ம அநு ரூபமாக பிரகிருதி சம்பந்தத்தால் அழுக்கு அடைந்து இருப்பதையும்
அத்தை விலக்கும் சக்தி எம்பெருமானுக்கு மட்டுமே உள்ளத்தையும் சொல்கிறது –
எம்பெருமானின் பிரதான அசாதாரண வியாபாரம் மோக்ஷ பிரதத்வம் பேசப்படுகிறது )

ஆதி –
ஏஷ கர்த்தா ந க்ரியதே -இத்யாதிகளில் படியே சர்வ ஜநதேக காரண பூதன்
இத்தால் காரணந்து த்யேயய–காரணமே சரண்யம் என்கிறபடியே முமுஷுவுக்கு சரணமாக பற்றப்படுமவன் என்று பலிதம்
(முமுஷுவால் பற்றப்படுபவர் நாராயணன் என்றதாயிற்று )
இக் காரணத்வமும் மோஷ பிரதத்வமும் ( ராஜாவுக்கு )சத்ர சாமரங்கள் போலே சர்வ லோக
சரண்யனுக்கு விசேஷ சிஹ்னங்கள்-

பிரான் –
கருணா க்வாபி புருஷே இத்யாதிகளில் படியே சர்வ உபகாரகன்
இங்கு ஆத்மாக்கள் உடைய சத்தாதி ஸ்தாபனம் முதலாக பரிபூர்ண கைங்கர்ய ப்ரதான
பர்யந்தமாக -ப்ரத்யுபகாராதி நிரபேஷனாவனனுடைய
அநுகம்பா அக்ருத்யங்கள் எல்லாம் சாமான்யேந -சொல்லப்படுகிறது
இது எல்லாம் பிரதம அஷரார்தமான ரஷண -பேதம்
(அமலன் -ஆதி -பிரான் -என்கிற மூன்று பாதத்தால் குறிக்கப் பட்ட
மோக்ஷ பிரதத்வம் -காரணத்வம் -உபகாரகத்வம் –
ஆகியவை நம்மை ரக்ஷிக்க மேற் கொள்ளும் செயலின் வகைகளே )
இவை தம்மளவில் பர்யவசித்த படியிலே இம் மூன்று பதத்துக்கும் தாத்பர்யம்
இது மேல் பாசுரங்களிலும் காணலாம்-

அடியார்க்கு என்னை -ஆட்படுத்த -என்கிற இடத்தில் –
அடியார்-
என்கிற இத்தால் -த்ருதீய அஷரத்திலே சொன்ன ஜீவ வர்க்கமும்
(ம -வியாகரண வ்யுத்பத்தியின் படி -ஞான ஸ்வரூபம் -அறிவிப்பது -அளவுபட்டது
அஸ்மத் -வேத இலக்கணப்படி அஸ் / அத் -மறைந்து ம -ஜீவன்)
ஜீவனில் ஈஸ்வரனைக் காட்டில் வேறுபாடும்
அந்யோந்யம் பிரிவும் -காட்டப்படுகிறது –
அடியார் –
என்றால் சர்வ சாதாரணமாக சதுர்த்தியில் சொன்ன தாதர்த்யவான்களை-( தாதர்த்தம் -அதற்காகவே ) எல்லாம்
காட்டிற்றே யாகிலும் -இங்கு
அடியார் –
என்கிறது – யோ ஹ்யேநம் புருஷம் வேத தேவா அபி ந தம் விது –(பாரதம் -தர்ம புத்திரனுக்கு மார்க்கண்டேயர் உபதேசம் )
என்னும்படி அபரிச்சேத்ய மகாத்யம்யரான சேஷத்வ ஜ்ஞான ரசிகரை –
இப்படி அடியார்க்கு –
என்று விசேஷ உபாதானம் பண்ணுகையாலே -மத்யம அஷரத்தின்
படியே நிருபாதிக சேஷிகள் வேறு இல்லாதபடியும்
கர்ம உபாதிக சேஷிகளோடு தமக்கு துவக்கு அற்ற படியும் சொல்லிற்று ஆயிற்று –
(மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -பெரிய திருமொழி -8-10-3-)
சர்வ சேஷி யாகையாலே சர்வத்தையும் யதேஷ்டமாக விநியோகிக்க ப்ராப்தனாய் –
நிரந்குச ஸ்வதந்த்ரன் ஆகையாலே சர்வத்தையும் யதேஷ்டமாக விநியோகிக்க சக்தனுமான
சர்வேஸ்வரன் -அநந்ய பிரயோஜனரான ஆஸ்ரீதர்க்கு சர்வமும் சேஷமாகக் கடவது -என்று
விநியோக விசேஷத்தால் சர்வருக்கும் பாகவத சேஷத்வம் நித்ய சித்தமானால்
அநந்ய பிரயோஜனரான ஆஸ்ரீதர்க்கு பகவத சேஷத்வம் ஈஸ்வரன் தன்னையும் பாகவதரையும் ஒழிந்த
அந்யரைப் பற்ற சேஷத்வம் இல்லாதபடி-வருகிறதே
இதின் பலமான -கைங்கர்யமும் இப்படி வருகிறது ஆகையாலே –
என்னை அடியார்க்கே ஆட்படுதினான் –
என்ற அவதாரணமும் இங்கே விவஷிதம்
மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பரோடு உற்றிலேன் -என்று இறே இவர்களுடைய -பாசுரம்-
தேஷாம் ஞானி நித்ய யுக்த ஏக பக்திர் விசிஷ்யதே –கீதை -7-17-
ததீய சேஷத்வம் நிலைத்து நிற்குமே-

என்னை ஆட்படுத்த –
அத்ய ப்ரப்ருதி ஹே லோகா யூயம் யூயம் வயம் வயம் -அர்த்த காம பரா யூயம் நாராயண பரா வயம் –
வயம் து கிங்கரா விஷ்ணோ யூயமிந்த்ரிய கிங்கரா–ஸ்ரீ கீதை-16-14- -என்னும்படி
இந்திரிய கிங்கரனாய் வைத்து -அதுக்கு மேலே –ஈஸ்வரோஹம் -என்று இருக்கக் கடவ -என்னை –
தாஸ பூதா ஸ்வதஸ் சர்வே ஹ்யாத்மாந பரமாத்மந அதோஹமபி தே தாஸ இதி மத்வா நமாம்யஹம் -மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்
அதோஸஹமபி தே தாஸ -என்னப் பண்ணின உபகாரத்தில் காட்டிலும் –
(ப்ரக்ருத்யாத்ம பிரமம் -ஸ்வதந்த்ராத்மா பிரமம் -இவற்றுக்கு நிதானமான அநீஸ்வர வாத ருசி -ஆகிய
மஹா விரோதிகளை போக்கி அருளிய உபகாரங்கள் -இவற்றுக்கும் மேலே -)
உற்றதும் உன் அடியார்க்கு -அடிமை என்னப் பண்ணின இதுக்கு மேலே ஒரு உபகாரம் உண்டோ என்று –
இப் பரம உபகாரத்தையும் பிரித்துப் -பேசுகிறார்
இது நமஸில் தாத்பர்யம்
(நான் எனக்கு சேஷம் அல்லேன் -ஒன்றும் எனக்கும் சேஷமும் இல்லை -ஒன்றுக்கும் நான் சேஷியும் இல்லை –
எனக்கு ஸ்வாதந்தர்யம் இல்லை -போன்ற பல அர்த்தங்கள் உண்டே )
கீழ்ச் சொன்ன கர்த்ருத்வாதிகளாலே -எருத்துக் கொடி யுடையான் -முதலான ஆத்மாந்தரங்களுக்கு
போலே அஜ்ஞாநாதி தோஷங்கள் இவனுக்கு உண்டாகில் இவன் முன்பு சொன்ன
சாஷான் மோஷ ப்ரதானம் பண்ண வல்லனோ -என்ன –

விமலன்
நித்ய நிர்தோஷன் -இத்தால் பத்த முக்த விலஷணன் -என்றது ஆயிற்று –
இவ்வளவு சூரிகளுக்கும் இல்லையோ என்ன –

விண்ணவர் கோன் –
பராதீன ஸூத்தி யோகத்தை உடையரான சூரிகளைக் காட்டில் வேறு பட்டவன் –
இத்தாலே ஸூரி சேவ்யமான பர ரூபமும் தோன்றுகிறது
இப்படி எட்டா நிலத்திலே இருக்கும் இருப்பு இங்கு உள்ளாருக்கு நிலம் அன்றே -என்ன

விரையார் பொழில் -வேம்கடவன்
பரிமளம் வடிவு கொண்டால் போலே இருக்கிற திருச் சோலைகளை உடைய திரு மலையிலே
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்கிறபடியே எல்லாருக்கும்
ஆஸ்ரயிக்கவும் அநுபவிக்குமாம்படி -இருள் தரும் மா ஞாலத்துள் குன்றத்து இட்ட விளக்காய் -நிற்கிறவன்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் -ஆவேனே என்னும்படி பிறந்த ஸ்தாவரங்களுடைய
ஆமோதம் அதிசயமாய் இருக்கும் –
இப்படி சர்வ சுலபன் ஆனாலும்
அவ் வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே என்னும்படி -நிற்குமோ -என்ன

நிமலன்
ப்ரஹ்ம ருத்ராதிகளும் அஞ்சி அருளப்பாடு முன்னாக அணுக வேண்டும்படியான
ஐஸ்வர்யத்திலே குறும்பு அறுத்த நம்பிக்கு கூசாதே நிரந்தர சம்ச்லேஷம் பண்ணலாம்படி
(யா க்ரியா சம்ப்ரயுக்தா ஸ்யுஹு ஏகாந்த கத புத்திபி -தாஸ் சர்வா சிரஸா தேவ பக்தி க்ருஹணாதி வை ஸ்வயம் –
என்கிறபடியே-சிரஸால் ஏற்றுக் கொள்கிறான் )
தன் ஈஸ்வர சுணை யாகிற ஆஸ்ரயண விரோதி தோஷத்தை -மறைத்து
(ஆஸ்தாம் தே குணராசிவத் குண பரீவாஹாத்மநாம் ஜென்மநாம் சங்க்யா பவ்நிகேத நேஷ்வபி குடீ குஞ்ஜேஷு ரங்கேஸ்வர
அர்ச்சயஸ் சர்வ ஸஹிஷ்ணு அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி ப்ரீணீஷே ஹ்ருதயா லுபி தவ
தத சீலாஜ் ஐடீ பூயதே –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-74–)
அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி -என்கிறபடியே ஆஸ்ரீத பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு நிற்குமவன்
(பத்துடை அடியவர்க்கு எளியவன் –தேர் முன்னே தான் தாழ நின்ற)
இப்படி சௌலப்ய சௌசீல்யங்கள் உண்டானாலும் ஆஸ்ரீத தோஷத்தைக் காணும் ஆகில்
அணுகக் கூசார்களோ –என்னில்

நின்மலன் –
அவிஜ்ஞாதா -என்றும் -என் அடியார் அது -செய்யார்–பெரியாழ்வார் -4-9-2- என்றும் சொல்லுகிறபடியே
ஆஸ்ரீதருடைய தோஷ தர்சனம் ஆகிற சரண்ய தோஷம் இல்லாதவன்
சர்வஜ்ஞனாய் இருக்கச் செய்தே ஆஸ்ரீத தோஷத்தை காணான் என்றது –
காணும் அதுவும் இவர்கள் உடைய தோஷத்தைக் கழிக்க உறுப்பாம் -ஈஸ்வர நிக்ரஹமும் அநுக்ரஹ சங்கல்பமே-என்றபடி –

விமலன் -என்று தொடங்கி -இவ் வஞ்சு பதங்களாலே நாராயண சப்தத்தில்
உபாயத்வ ப்ராப்யத்வங்களுக்கு உபயுக்தமான உபய லிங்கத்வமும்
உபய விபூதி நிர்வாஹகத்வமும் சொல்லிற்று ஆயிற்று
(விமலன் -ஒருபோதும் தோஷம் இல்லாதவன்
விண்ணவர் கோன் -பராத்பரன்
வேங்கடவன் ஆஸ்ரயிக்கவும் அனுபவிக்கவும் ஸூலபன்
நிமலன் -ஆஸ்ரித பரதந்த்ரன்
நின்மலன் -ஆஸ்ரிதர் தோஷங்களை காணாதவன் –இவ்வைந்துமே நாராயண சப்தார்த்தங்கள் )

மேல் -இவன் ஸ்வரூப ப்ராப்த கைங்கர்ய ரூபமான நீதியிலே நிரதரான நித்ய ஸூரிகளுக்கு
சேவ்யனானாப் போலே நமக்கும் சேவ்யனாம் என்று
(நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனாய் -நித்ய அனுபவம் பண்ணும் அந்தமில் பேர் இன்பத்து அடியரான
நித்ய ஸூரிகளோடு ஓக்க நித்ய கைங்கர்ய த்துக்கு ஸ்வரூப யோக்யதையால் இட்டுப் பிறந்து வைத்து -)
சதுர்த்தியில் கருத்தான கைங்கர்ய பிரதி சம்பந்தித்வத்தை அனுசந்திக்கிறார்

நீதி -வானவன்
இங்கு வான் -என்கிற சப்தம் ஸூரி சஹிதமான பரம பதத்தை சொல்லுகிறது
நீதியை நடத்துவிக்கும் வானிலே வர்த்திக்குமவன்–வீற்று இருந்து செங்கோல் ஒச்சுமவன் -என்னவுமாம் –
தேன வஞ்சயதே லோகன் மாயா யோ கேந கேசவ -பாரதம் –
சஞ்சயன் கிருஷ்ணன் மஹிமையை த்ருதராஷ்ட்ரனுக்கு சொல்கிறான் -என்கிறபடியே –கலக்குவாரும்
அவஜா நந்தி மாம் மூடா மானுஷீம் தனும் ஆஸ்ரிதம் பரம் பாவ மஜா நந்த மம பூத மஹேச்வரம் –ஸ்ரீ கீதை -9-11- –
என்கிறபடியே கலங்குவாரும் இல்லாத தேசம் ஆகையாலே
தாஸ்யம் ஐஸ்வர்ய யோகேன ஜ்ஞாதீ நாஞ்ச கரோம் யஹம் –
ஈஸ்வர ஸ்வபாவம் ஆகிற ஸ்வா தந்தர்யத்தாலே ஆஸ்ரித பாரதந்தர்யம் ஏறிட்டுக் கொண்டுள்ளேன் –என்றும்
பரம ஈஸ்வர சம்ஜ்ஞோஸ்ஜ்ஞா கிமந்யோ மய்ய வஸ்திதே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-23-
ஹிரண்யகசிபு ப்ரஹ்லாதன் இடம் -நான் இங்கே இருக்க பரமேஸ்வரன் வேறே உள்ளானோ என்றது -என்றும்
(இத்தால்
பிராக்ருதாத்மா பிரம்மமும்
ஸ்வ தந்தராத்மா பிரம்மமும்
அநீஸ்வர வாத ருசியும் -சொல்லிற்று ஆயிற்று
வள வேழுலகின் முதலாய வான் இறையை அருவினையேன் கள வேழ் வெண்ணெய் தோடு உண்ட கள்வா என்பன் -1-5-1–)
இங்கு பிறக்கும் ஈசேசி தவ்யத்தின் மாறாட்டம் இல்லாத பரம பதத்தில் நித்ய வாஸம் பண்ணுகிறவன் என்றது ஆய்த்து-
இப்படி சர்வ சேவ்யனான சர்வ சேஷி -விபீடணற்கு வேறாக நல்லான் -என்கிறபடியே
தமக்கு இப்போது விசேஷித்து அனுபவிகலாம்படியைப் பேசுகிறார் –

நீள் மதிள் அரங்கத்தம்மான் –
அயோத்யை -என்றும் அபராஜிதை -என்றும் சொல்லுகிற கலங்கா பெரு நகரத்தின் படியைக்
கொடி யணி நெடு மதிள்களாலே -ஸூ ரஷிதமான ஸ்தல விசேஷத்தாலே காட்டி –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான -தன் படியை -செங்கோல் உடைய திருவரங்க செல்வனார் ஆன
ஆகார விசேஷத்தாலே அறிவித்துக் கொண்டு சேஷித்வத்தின் எல்லையிலே தான் நின்றால் போலே
(பரமபதத்தில் நின்றும் ஸ்ரீ வடமதுரையிலே தங்கி திருவாய்ப்பாடிக்கு வந்தது போலே
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் திருமலையில் தாங்கிக் காணும் கோயிலில் வந்தது -ஸ்ரீ பட்டர் )
சேஷத்வத்தின் எல்லையில் என்னை நிறுத்தின ஸ்வ தந்திர ஸ்வாமி

அரங்கத்தம்மான் –
நீர்மைக்கும் மேன்மைக்கும் எல்லை யானவன்
(அரங்கத்து -நம்மிடம் தேடி வந்த ஸுலப்யமும்-அம்மான் -பரத்வமும் )
இவனுடைய உபாயத்வ ப்ராப்யத்வங்களில் உறைப்பு உண்டான திருவடிகளை அனுபவிக்கிறார்

திருக் -கமல -பாதம்
பாவநத்வ போக்யத்வங்களாலே சுபாஸ்ரயமான திருவடிகள் –
(திரு -ஸ்ரீ ஸ்ரீ ணாதி இதி ஸ்ரீ -பிரதிபந்தங்களைப் போக்கும் பாவனத்வமும் /
கமலா -போக்யத்வமும் -ஆக இரண்டாலும் ஸூபாஸ்ரயம் )
திருவுக்கு லீலா கமலம் போலே இருக்கிற பாதம் -என்னவுமாம்-
(வடிவிணை இல்லா மலர் மகள் மற்றும் நிலா மகள் பிடிக்கும் மெல்லடி -9-2-10–)

வந்து
வந்து என்கிற இத்தால் ஓடின தம்மை துடர்ந்த படியும்
(அஜோபி சந் அவ்யயாத்மா பூதா நாம் ஈஸ்வரோபி சந் ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாமி ஆத்ம மாயையா -4-6–)
அயத்ந லப்தங்களான படியும் -தோன்றுகிறது –
இத் திருவடிகளில் வைத்த கண் வாங்க ஒண்ணாத படியான போக்ய அதிசயத்தை
ஓர் உத் ப்ரேஷையாலே அருளிச் செய்கிறார்

என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே
தேவாதிகளில் தலைவரான ப்ரஹ்மாதிகள் அடையவும்
சனகாதிகளான யோகிகள் அடையவும்
திவ்ய சஷூஸ் ஸு க்களுக்கும் கூட தூயமாய் இருக்கக் கடவ அவை –
மனுஷ்ய மாத்ரமான என்னுடைய மாம்ஸ சஷூஸ் ஸுக்களுக்கும்-(சகல மனுஷ நயன விஷயதாம் கத -ஸ்ரீ கீதா பாஷ்யம் )
அத்ய அசன்னமாய் இரா நின்றன -என்று ஆச்சர்யப் படுகிறார் –
(யோகேந நாத ஸூபம் ஆஸ்ரயம் ஆத்மவந்த ஸாலம்பநேந பரிச்சிந்த்ய ந யாந்தி த்ருப்திம் -சரணாகதி தீபிகா
கட் கண்ணாலும் கண்டு வியக்கின்றனர் )

நீள் மதிள் அரங்கத்தம்மான் திருக் கமல பாதம் -என்று
த்வயத்தில் பூர்வ உத்தர நாராயண சப்தார்த்தையும் -சரண சப்தார்த்தையும் அனுசந்தித்த படி –

இப்பாட்டால் –
மோஷ -பிரதத்வத்தையும்
ஜகத் -காரணத்வத்தையும்
மற்றும் சர்வ ப்ரகார உபகாரத்வத்தையும்
அவற்றில் சார தமமான உபகார விசேஷத்வத்தையும்
நித்ய நிர்தோஷத்வத்தையும்
நித்ய ஸூரி நிர்வாஹத்வத்தையும்
நித்ய விக்ரஹவத்தையும்
சர்வ சுலபத்வத்தையும்
சௌசீல்யத்தையும்
வாத்சல்யத்தையும்
கைங்கர்ய உத்தேச்யத்வத்தையும்
கைங்கர்ய ஸ்தான விசேஷத்வத்தையும்
சர்வ ஸ்வாமித்வத்தையும்
திருவடிகளினுடைய பாவனத்வத்தையும் போக்யத்வத்தையும்
அவற்றை தான் அநாயாசமாக அநந்ய த்ருஷ்டிகளாகக் கொண்டு அனுபவிக்கப் பெற்ற படியையும்
முன்னிட்டு ஸ்ரீய பதியினுடைய பராகாஷ்டாப்ராப்த குண ப்ரகர்ஷங்களை அனுசந்தித்தார்-

அகாரம் -அமலன் ஆதி பிரான் -ரக்ஷண பேதத்தை சொல்லி
லுப்த சதுர்த்தி மகாரம் -அடியாருக்கு
உகாரம் -அடியார்க்கே
நம -என்னை ஆட்படுத்த -இந்த சேஷத்வம் பகவத் பாகவதர்கள் அன்றி மற்ற எவர்க்கும் தனக்கும் கூட இல்லாத வரையறை கொண்டது –
நாராயண -விமலன் -விண்ணவர் கோன் -வேங்கடவன் -நிமலன் -நின்மலன் -ஈயதே அநேந -அஸ்மிந் -அஸ்மை –
ஆய -நீதி வானவன் -கைங்கரத்தை ஏற்றுக் கொள்பவன்
த்வயம் பூர்வ உத்தர நாராயண சப்தம் -அரங்கத்து அம்மான் -ஸுலப்ய பரத்வ காஷ்டை
திருக் கமல பாதம் -பாவனத்வ போக்யத்வங்கள்

அவற்றில்
1-சம்சார நிவர்தக காஷ்டை யாவது -களை யற்ற கைங்கர்யத்தை கொடுக்கை –
2-காரணத்வ காஷ்டை யாவது -காரணாந்தரங்கள் எல்லாம் தான் இட்ட வழக்காய் –
தனக்காதல் -தன்னுடைய ஜ்ஞான சக்திகளுக்கு ஆதல் -ஒரு காரண சம்பாவனை இன்றிக்கே இருக்கை –
3-சரண்யத்வ காஷ்டை யாவது -தன்னை ரஷகனாக பற்றினவர்களுக்கு தன்னை ஒழிய
மற்றவரை ரஷகராகப் பற்ற வேண்டாதபடி இருக்கை-( த்வயி ரஷதி ரஷகை கிமந்யை )
4-உபகாரத்வ காஷ்டை யாவது -ஒரு ஷூத்ர வ்யாஜத்தை அவலம்பித்து உபய விபூதி
விசிஷ்டனான தன்னை அனுபாவ்யனகக் கொடுத்தும் -அதுக்கு மேல் கொடுக்க லாவது
இல்லாமையாலே நித்யருணியாய் இருக்கை
(சர்வஞ்ஞ அபி ஹி விஸ்வேச சதா காருணிக அபி சந் சம்சார தந்த்ர வாஹித்வாத் ரக்ஷ அபேக்ஷம் பிரதீஷதே-
பக்ஷபாதம் இல்லாமல் லோகத்தை நியமிக்க ரக்ஷண அபேக்ஷை எதிர்பார்க்கிறான் –
அஞ்சலிம் யாசமாந -கை கூப்புதலை வேண்டுபவன் -ஸ்வேநைவ க்லுப்தமபதேசம வேஷமாண –
தானே உண்டாக்கிய சிறு வியாஜ்யத்தை எதிர்பார்க்கிறான்
கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாசி நம் – ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாந் நாபசர்பதி
ஐஸ்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா கஸ்மை சித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய-
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதமித்யதாம்ப த்வம் லஜ்ஜசே கதய காயம் உதார பாவ -ஸ்ரீ பட்டர் )

5-க்ருபா காஷ்டை யாவது -சத்ருவினுடைய சம்பந்திகளும் கூட த்யாஜ்யர் என்ற பரிவர் முன்னே
சத்ரு தானும் இசையில் ஸ்வீகரிப்பேன் -என்று எதிர் பேசும்படியான இரக்கத்தை உடையனாய்
அவர்கள் தாங்களும் இவனை கைக் கொள்ளும்படி பண்ணுகை –
வத்யதாம் ஏஷ தீவ்ரேண தண்டேந சசிவைஸ் ஸஹ -ராவணஸ்ய ந்ருசம் சஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண –
ஈத்ருசம் வ்யஸனம் பிராப்தம் பிராதரம் யா பரித்யஜேத் -கோ நாம பவேத் தஸ்ய யமேஷ ந பரித்யஜேத் –யுத்த -18-5-6–
6-ஸ்வா தந்திர காஷ்டை யாவது -தன்னையும் பிறரையும் தான் நிறுத்தின நிலைகளிலே
நிறுத்தும் போது விலக்க வல்லார் இன்றிக்கே இருக்கை
7-நிர்தோஷத்வ காஷ்டை யாவது -தோஷ யுக்தங்களான பதார்த்தங்களோடு உண்டான
சம்சர்க்கத்தாலும் -பிறர்க்கு அஞ்ஞான துக்க ஹேதுக்கள் ஆனவற்றை தான் அனுஷ்டித்தாலும்
தனக்கு அஞ்ஞான துக்கங்கள் வராது இருக்கை
8-ஸ்வாமித்வ காஷ்டை யாவது -விபூதிமான்களை எல்லாம் தனக்கு விபூதியாக உடையவனாய் இருக்கை

9-சௌலப்ய காஷ்டை யாவது -அகல நினைப்பாருக்கும் அகல ஒண்ணாத படி அணுக நிற்கை-( வள வேழுலகம் -அனுசந்திப்பது )
10-சௌசீல்ய காஷ்டை யாவது -தன் பக்கல் ஈச்வரத்தை சந்கிப்பாருக்கும் வெளி இடுவாருக்கும்
தானே மறு மாற்றம் சொல்லி மேலும் தன்னை தாழ விட்டு பரிமாறா நிற்கை
11-வாத்சல்ய காஷ்டை யாவது -அந்தரங்கராய் இருப்பாரும் ஆஸ்ரீத விஷயத்தில்
ஆயிரம் கோடி குற்றம் காட்டிலும் அநாதரம் பிறப்பிக்க ஒண்ணாது இருக்கை –
12-ப்ராப்யத்வ காஷ்டை யாவது -தன் விசேஷணம் ஆக அல்லது மற்று ஒரு ப்ராப்யம் இல்லாது இருக்கை
(காசீ -வ்ருக -அந்தக -சராசந -பாண-கங்கா -சம்பூதி -நாம க்ருதி -சம்வதன-ஆத்யுதந்தை-
ஸ்வ யுக்தி – அம்பரீஷ பய சாபமுகைச்ச சம்பும் த்வன் நிக்னம் ஈஷிதவதாம் இஹ க சரண்ய
இவ் விருத்தாந்தங்களை அறிந்தவர்களுக்கு உன்னைத் தவிர வேறே சரண்யர் யார் )

13-ஆஸ்ரீத பஷ பாதித்வ காஷ்டை யாவது -சர்வ வர்ண சமனான தான் ஆஸ்ரீத சங்கல்பத்தோடே
விரோதித்த தன் சாமான்ய சங்கல்பத்தை அசத் கல்பமாக்கி அநிதர சுலபமான ஆபிமுக்யதைப் பண்ணுகை
14-போக்யத்வ காஷ்டை யாவது -தன் ஸ்வரூபத்தை அனுசந்தித்தால் தன் விசேஷணமாக
சர்வத்தையும் அனுபவிக்குமது அதின் திவலையோடு ஒத்து இருக்கை
15-அயத்ந போக்யத்வ காஷ்டை யாவது -போகார்தமாக கரண பிரேரணமும் வேண்டாதபடி
தென்றலும் பரிமளமும் வந்தாப் போலே -வந்தது விலக்க ஒண்ணாத படி அனுபாவ்யனாய் இருக்கை
16-இவை எல்லாம் இப் பதங்களில் அடைவே ஆழ்வார் அனுபவித்த படியை அனுசந்திப்பது-
1-மோக்ஷ பிரதத்வம் -சம்சார நிவர்த்தக காஷ்டை -அமலன்
2-ஜகத் காரணத்வ காஷ்டை-ஆதி
3-ஜகத் சரண்யத்வ காஷ்டை-ஆதி
4-சர்வ உபகாரத்வ காஷ்டை-பிரான்
5-கிருபா விசேஷத்வ காஷ்டை-அடியார்க்கு ஆட்படுத்த
6-ஸ்வாதந்தர்ய காஷ்டை-என்னை ஆட்படுத்த
7-நித்ய நிர்தோஷத்வ காஷ்டை-விமலன்
8-நித்ய ஸூரி நிர்வாஹத்வ -திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டா ஸ்வாமித்வ காஷ்டை-விண்ணவர் கோன்
9-ஸுலப்ய காஷ்டை-வேங்கடவன்
10-ஸுசீல்ய காஷ்டை-நிமலன்
11-வாத்சல்ய காஷ்டை-நின்மலன்
12-கைங்கர்ய சாதன விசேஷத்வ ப்ராப்ய காஷ்டை-நீதி வானவன்
13-சர்வ ஸ்வாமித்வ ஆஸ்ரித பக்ஷபாத காஷ்டை-அரங்கத்து அம்மான்
14-திருவடிகள் பாவானத்வ காஷ்டை-திருப் பாதம்
15-திருவடிகள் போக்யத்வ காஷ்டை- கமல பாதம்
16-அயத்ன -அநாயாசேந போக்யத்வ காஷ்டை-வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றவே

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .