ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –
———-
நெஞ்சுக்கு ஒரு நல் வார்த்தை சொன்னால் போலே
அது இவரையும் கூடாதே முற்பட
என்னையும் கூட்டிக் கொண்டு போக வேணும் காண் -என்கிறார் –
ஆழ்வார் தம்முடைய திருவுள்ளத்தை நோக்கிப் பேசுகிறார்.
தமது நெஞ்சானது தம்மை விட்டுத் தனித்துப் போய் விட்டதாம் பகவத் விஷயாநுபவத்திற்கு;
அப்படி முற்பட்டுப் போன நெஞ்சைக் கூறி ‘என்னையுங் கூடக் கூட்டிக்கொள்’ என்கிறார்.
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப் புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-
————-
நாவீன் துடை கிளவி யுள் பொதிவோம் -என்று
வாஸ்யத்தை விளாக்கொலை கொள்ளக் கடவோம் என்ற இவர்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று
வேதங்கள் நின்ற நிலைக்கும் அவ் வருகே யானார்
மஹ்யம் நமோஸ்து கவயே -என்கிறார்
கவி சொல்லுகையாவது
விஷயத்துக்கு உள்ளதும் சொல்லி
விஷயத்துக்கு இல்லாததும் இட்டுச் சொல்லுகை இறே
உள்ளது ஒன்றும் சொல்லப் போகாத விஷயத்திலே கவி பாடப் புக்க நமக்கு நமஸ் காரம் என்னுமா போலே
முற்பட இவர் புகழ இழிவது என்
இப்பொழுது பழி என்று மீளுகிறது என் என்னில்
இரண்டும் வஸ்து வை லக்ஷண்யத்தாலே
நல்லது கண்டால் எனக்கு என்னக் கடவது
வை லக்ஷண்யத்தை அநுஸந்தியா -அவனுக்கு அதிசயத்தைப் பண்ண என்று இழிந்த தாம்
தம் சொல்லாலே நிறம் கெடும்படிப் பண்ணுகிறோம் என்று மீளுகிறார் –
“நற்பூவைப் பூவின்ற வண்ணன் புகழை நயப்படைய நாவீன் தொகை கிளவியுள் பொதிவோம்”
என்று கீழ்ப்பாட்டில்,
எம்பெருமானைத் துதித்துக் கவி பாடுவதாகத் தொடங்கின ஆழ்வார்
“இப்போது நாம் எடுத்துக் கொண்ட காரியம் என்ன?” என்று சிறிது ஆராய்ந்து பார்த்தார்;
எம்பெருமானைப் புகழ்வது என்கிற காரியத்தையா நாம் எடுத்துக்கொண்டோம்;
ஹா ஹா!’ இப்படியும் நமக்கொரு மதிக்கேடு இருக்குமோ?
எம்பெருமானைப் புகழ்வது நம்முடைய காரியமாமோ?
வேதங்களே புகழத் தொடங்கி முடியாதென்று மீண்ட விஷயத்தை ‘நாமோ புகழக் கடவோம்!
ஒருவனைப் புகழ்வதென்றால், அவனிடத்துள்ள குணங்களை யனைத்தையும் ஒன்றுவிடாமற் சொல்லித் தீர்த்து,
மேலேயும் சில குணங்களை அதிகப்படியாக இட்டுச் செல்லுவதன்றோ புகழ்வதாவது;
எம்பெருமானிடத்து அது செய்ய ஆரால் ஆகும்?
சிற்றறிவாளரான நாம் என்ன சொல்ல வல்லோம்!;
“கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து,
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே” (திருவாய்மொழி 3-1-7) என்னுமா போலே
அறிவிற் சிறந்த அரன் முதலானோர் புகழ்ந்தாலுங்கூட
அது பகவத் குணங்களுக்கு இகழ்ச்சியாய் தலைக் கட்டா நிற்க,
எமது ஊத்தை வாய் கொண்டு பேசுவது என்னாகும்!
“பகவானுடைய குணங்கள் இந்த அற்பன் பேசும்படியான அளவிலேயோ இருக்கின்றன?”
என்று பலரும் இழிவாக நினைக்க வன்றோ காரணமாகும் நாம் புகழ்வது- என்றெண்ணி
அந்த எண்ணத்தை வெளியிடா நின்று கொண்டு எம்பெருமானை நோக்கிச் சொல்லுகிறார் இதில்.
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் -இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீ வினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை —2-
——————–
இவை பிராந்தியால் அன்றிக்கே புகழ இழிந்து ஞானத்தாலே இறே
ஆனால் அடியிலே நமக்கு நிலம் அன்று -என்று மீள வேண்டாவோ என்ன
அசித் வ்யாவ்ருத்தியாலும்
அர்த்த அனுசந்தானம் பண்ண ஷமன் ஆக்கி வைக்கையாலும்
நன்று தீது என்று அறிவன்
அசித் சம்சர்க்கத்தாலும் பாரதந்தர்யத்தாலும் சாபலத்தாலும்
அனுஷ்டான ஷமன் அன்று
(அனுஷ்டான ஷமன் அன்று ஸ்துதியாமல் இருப்பத்தைச் செய்ய இயலாதவன் ஆனேன்
ஸ்வ தந்த்ரன் நீ பரதந்த்ரன் நான் அன்றோ
தேக யாத்திரை கர்மாதீனம் -ஆத்ம யாத்திரை கிருபாதீனம்
நல்லதோ கெட்டதோ எல்லாமே நீ செய்விக்கச் செய்கிறேன் என்கிறார் )
“சீறல் நீ” என்று திருவுள்ளத்தில் இரக்கமுண்டாம்படி பிரார்த்திக்க ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்-,
“ஆழ்வீர்! என்னுடைய சீற்றம் கிடக்கட்டும்; நீர் என்ன தீர்மானம் செய்து கொண்டீர்? ‘புகழ்வது தகுதி தான்’ என்று கொண்டீரா?
அல்லது புகழத் தகாது என்றே கொண்டீரா? அதை நிஷ்கர்க்ஷித்துச் சொன்னீராகில்; பிறகு பார்ப்போம்” என்றான்;
அதற்கு உத்தரமாயிருக்கிறது இப்பாட்டு. இதில் சொல்லுகிறது யாதெனில்;
எம்பெருமானே! இது யுத்தம், இது அயுக்தம் என்கிற விஷயம் அடியேனுக்குத் தெரியாமை யில்லை;
அற்ப ஞானிகள் உன்னைப் புகழ்வது அயுக்தம். புகழாதிருப்பது யுக்தம்- என்பதை அடியேன் நன்று அறிவேன். அதில் ஸம்சயமில்லை;
ஆனால், அறிந்தபடியே அநுஷ்டிக்க என்னாலாகாது. நான் அறிந்திருக்கிறபடியே அநுஷ்டிக்க வேணுமானால்,
உன்னைப் புகழ்வதை விட்டுப் புகழாமையைப் பற்ற வேணுமிறே இந்த வீடு பற்றுக்கள் என்னால் செய்யப் போகாது.
(உன்னைப் புகழாதிருக்க என்னால் முடியாது என்றபடி.)
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் -இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்க ஒண்ணாது இறையவனே
என்னால் செயற்பாலது என் —3-
—————-
நான் அணையில் (அணைந்து உன்னைப் பாடினால் )அங்குத்தைக்கு அவத் யாவஹம் –
அகலில் அங்குத்தைக்கு நிறம் உண்டாம் என்று
நீர் சொன்னதுக்கு ஸ்தானம் அறிந்திலர்
(ஸ்தானம் -நிலையாய் தியாக ஸ்வீ காரத்தினுடைய மர்மம் அறிந்திலீர் என்றபடி )
பிரயோஜகத்தில் அழகு இது –
(ப்ரயோஜகம் -மேல் எழுப் பார்த்தால் -அகலுகை நல்லது போல் தோற்றும் அத்தனை )
நீர் சொன்னபடியே மாறி நிற்க வேணும்
நீர் அகன்றீ ராகில்-
அதி க்ருத்தாதிகாரம் அவ்விஷயம் என்று நம்மை நம்புவார் இல்லை –
நீர் பற்றினீராகில்-
இவர் பற்றின விஷயம் எல்லார்க்கும் பற்றலாம் என்று நம்மைப் பற்றுகையாலே நமக்கு நிறமுண்டாம் -என்று
அருளிச் செய்ய ஹ்ருஷ்டராகிறார் –
முதற் பாட்டில், ஆழ்வார் எம்பெருமானைப் புகழத் தொடங்கி,
இரண்டாம் பாட்டில், அவனை நாமோ புகழ்வதென்று பின் வாங்கி,
மூன்றாம் பாட்டில்- புகழாதிருக்க முடியாமையைச் சொல்லி முடித்தார்.
அவனைப் புகழ்வது நமக்குத் தகாதென்று நாம் அயோக்யதையால் பின் வாங்க நினைத்தாலுங்கூட
ஏதேனுமொருபடியாலே
அவனது புகழ்களைப் பற்றி நம் வாயால் சில பாசுரங்கள் பேசியே தீர வேண்டியதாகிறதே!
ஹா ஹா! நம்முடைய பாக்கியமே பாக்கியம்;நம்மை விட பாக்கியசாலிகள் வேறு யாமுளர்?
எம்பெருமானுடைய சில திருக் குணங்கள் நம் வாயிலும் புகுந்து புறப்படும்படியான நல்ல காலம் வாய்த்ததே! என்று மகிழ்கிறார் இதில்.
என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் –என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று -4-
————
அயோக்யன் என்று அகன்று
அசந்நேவ ஸ பவதி -என்று முடியப் புக்க என்னை
சத்தை யுண்டாக்கினாய் -என்கிறார் –
(இல்லை என்று அறிந்தவன் இல்லை யாகிறான்
உளன் என்று அறிந்தவன் உளன் ஆகிறான்
விலகி இருந்தால் ஸ்வரூப நாசம் ஆகி இருக்கும்
சத்தையைக் கொடுத்து நிறுத்தி வைத்தாய் )
எம்பெருமானை நினைப்பதற்கும் துதிப்பதற்கும் நான் யோக்யதை யற்றவன் என்று
பின் வாங்கப் பார்த்த அடியேனை அந்த எண்ணம் நீங்கி ப்ரவர்த்திக்கும்படி செய்தருளிற்றே;
இப்படி மஹோபகாரம் செய்கிற மஹாநுபாவர் தேவரீர் தவிர வேறு யாருளரெனக்கு?
தாயும் தகப்பனும் ஆசாரியனுமாகிற உபகாரர்களை யாவரும் அடியேனுக்கு தேவரீரே யாயிற்று! என்று
எம்பெருமானை நோக்கி உருக்கமாகப் பேசுகிறார்.
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையர் ஆவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-5–
————
நம் பக்கலிலே ருசியைப் பிறப்பித்து
அயோக்யன் என்று அகன்ற தம்மைச் சேர விட்டோமாகில்
மேலுள்ள கார்யம் தாமே ப்ரவர்த்திக்கிறார் என்று
ஈஸ்வரன் இருந்தானாகக் கொண்டு
வெறுத்துச் சொல்கிறார்
(கீதா ஸங்க்ரஹ பாசுரம் இது
எங்கள் கையிலிலேயே எங்களைக் காட்டிக் கொடுத்தால் அதோ கதி
தன்னால் வரும் நன்மை விலைப் பால் போல் தீமையோபாதி விலக்காய் இருக்கும்
அவனால் வரும் நன்மையே முலைப் பால் ஆகும்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் –களை கண் மற்று இலேன் )
‘நம்மை விட்டுப் பின் வாங்கப் பார்த்த இவ் வாழ்வாரை நாம் உபாயமாகப் பொருந்த விட்டுக் கொண்டோம்;
இனி இவர் நம்மை நினைப்பதும் துதிப்பதும் செய்து கொண்டிருக்கப் போகிறார்; அப்படியே யிருக்கட்டும்;
அல்லும் பகலும் அழுது கதறிக் கொண்டிருக்கட்டும்;
நம்மைக் கிட்டி அநுபவிக்க விரும்பினாராகில் கருமம் ஞானம் முதலிய
ஸாதநங்களை அனுட்டித்து மெதுவாக வந்து சேரட்டும்’ என்ற எம்பெருமான் திருவுள்ளம் பற்றி யிருப்பதாகத் தெரிந்துகொண்ட
ஆழ்வார் அப் பெருமானையே நோக்கிக் கேள்வி கேட்கிறார்; –
பெருமானே! உனக்கு ஸ்வாதந்திரியம் என்கிற ஒரு குணமும்-, நிர்ஹேதுக க்ருபை என்கிற ஒரு குணமும் உண்டு;
எந்த குணத்தைச் செலுத்தி நீ காரியம் செய்ய நினைத்தாலும் செய்யக் கூடும்.
சிலரிடத்தில் ஸ்வாதந்திரியத்தைச் செலுத்திக் கைவிடப் பார்ப்பாய்;
சிலரிடத்தில் நிர்ஹேதுக கருணையைச் செலுத்தி வலு கட்டாயமாகக் கைக்கொள்ளப் பார்ப்பாய்.
இப்படி எத்தனையோ செய்துமிருக்கிறாய்.
இப்போது அடியேன் விஷயத்தில் செய்யத் திரு வுள்ளம் பற்றியிருப்பது எது?
ஸ்வாதந்திரியத்தைக் காட்டிக் கைவிடப் பார்க்கிறாயோ?
அல்லது, திருவருளைக் காட்டி அழகிய திருமேனியை ஸேவை ஸாதிப்பித்து விஷயீகரிக்கப் பார்க்கிறயோ?
எப்படி நீ செய்தாலும் அப்படிக்கு என்னைப் போன்ற ஸம்ஸாரிகள் உடன்படி வேண்டியவர்களே யன்றி உன்னை நியமிக்க வல்லார் ஆருமில்லை;
ஆனாலும் ‘இன்னது செய்ய நினைத்திருக்கிறேன்’ என்பதைச் சோதி வாய் திறந்து சொல்லி விட்டால் நெஞ்சுக்கு ஆறுதலாயிருக்கும்- என்கிறார்.
நெறி காட்டி நீக்குதியோ நின்பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என்படோம் யாம் —6-
———-
அயோக்யன் என்று அகன்ற தம்மைச் சேர விட்டான் என்று நின்றது கீழ்
சேர விட்டாலும் பர்வத பரம அணுக்களுடைய சேர்த்தி போலே இறே –
(இதுக்கு பெற்ற தாய் (5)என்ற பாட்டோடே சங்கதி
மானஸ அனுபவ மாத்ரமாயே இருந்தது -பரம அணு போல்
நானோ உன்னை அணைத்து பாஹ்ய சம்ஸ்லேஷம் -பர்வதம் போல் இது -அங்கு தானே கிட்டும் )
“கருமா முறிமேனி காட்டுதியோ?” என்றாரே கீழ்ப் பாட்டில்.
ஆழ்வீர்! இதோ என்னுடைய கரு மா முறிமேனியைப் பாரும்’ என்று எம்பெருமான் சொல்லப் போகிறானென்றும்
திருமேனி ஸேவை கிடைக்கப்போகிறதென்றும் ஆவல் கொண்டிருந்தார்;
நெஞ்சுக்கு மாத்திரம் ஸேவை ஸாதித்தபடியே யொழிய, கட் கண்ணால் காணும்படியாகவும்
கைகளாலே அணைத்துக் களிக்கும்படியாகவும் ஸேவை ஸாதிக்கப் பெறவில்லை.
அப்படிப் பெறாததனாலே தமக்குண்டான கஷ்டத்தைக் கூறுகின்றாரிதில்.
யாமே அரு வினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -பூ மேய
செம் மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த
அம்மா நின் பாதத் தருகு –7-
———
நீர் கைக்கு எட்டாதே இருக்கச் செய்தே கை புகுந்தால் போலே இரா நின்றன –
இதுக்கு அடி சொல்லீர் என்கிறார்
எம்பெருமான் நெஞ்சுக்கு மாத்திரம் விஷயமானானே யன்றி,
கண்களால் காணவாவது கைகளாவணைக்கலாவது
விஷயமாகவில்லை என்றார் கீழ்ப் பாட்டில்.
அப்படி கண்ணால் காணப் பெறாதிருக்கச் செய்தேயும்,
கண்ணால் கண்ட விஷயங்களிற்போல அன்பு அதிகரித்து வருகின்றதே, இதற்கு என்ன காரணம்?
சொல்லாய் என்று அப்பெருமானையே கேட்கிறார்.
அருகும் சுவடும் தெரி யுணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் -பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு –8-
———-
பல் பன்னிரண்டும் காட்டினாலும் பிரயோஜனம் இல்லை என்கிறது –
(என்று என்று -என்கிற மீமிசையால் பல் பன்னிரண்டு -என்கிறது )
எம்பெருமானுடைய திருமேனியை ஸேவிக்கப் பெறவேணுமென்று ஆசை கொண்ட தம்முடைய மநோரதப்படியே
அவன் ஸேவை தந்தருளாமையால் அவனிடத்தில் வீணாக அன்பு வஹிப்பதில் என்ன பயன்? என்று நினைத்த ஆழ்வார்
‘இனி நாம் எம்பெருமானை நோக்கிப் பஞ்சைப் பாட்டுகள் பாடுவது அநாவச்யகம்; “எனக்கு நீயே கதி, எனக்கு நீயே கதி” என்று
பலகாலும் சொல்லுவதில் என்ன ப்ரயோஜனம்? எவ்வளவு கதறினாலும் அந்தப் பெரியவர் நம்மை லக்ஷியம் பண்ணுகிறதில்லை;
ஆகையால், இனி நாம் அப்பெருமானை நோக்கி “நுமக்கு அடியோம்” என்று சொல்வதை நிறுத்தி விட வேண்டியது- எனக் கருதி
அக் கருத்தை இப்பாட்டில் முன்னடிகளில் வெளியிடுகிறார்.
அதற்கு மேல், இந்த உறுதியுடனே நாம் இருந்து விட முடியுமா’ என்று ஆலோசித்துப் பார்த்தார்;
க்ஷண காலமும் இப்படி யிருந்திட முடியாதென்று துணிந்து, நெஞ்சை நோக்கி
‘நெஞ்சே! அப்பெருமாள் நம்மை அநுக்ரஹித்தாலும் அநுக்ரஹிக்கட்டும், நிக்ரஹித்தாலும் நிக்ரஹிக்கட்டும்:
திருவுள்ளமானபடி செய்திடட்டும். நீ மாத்திரம் சிந்தனையை அவர் விஷயத்திலேயே செலுத்திக்கிட’ என்கிறார் பின்னடிகளில்.
நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென் மாலார்
தமக்கு அவர் தாம் சார்வரியரானால் -எமக்கினி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே
யாதானும் சிந்தித்து இரு –9-
———-
இதுக்கு மூன்று படி அருளிச் செய்வர் (நம்பிள்ளை காலக்ஷேபத்தில் )
விலக்ஷண அதிகாரம் காண்
மதிப்பர்க்கே கிடைக்கும் அத்தனை அல்லது எளியர்க்குக் கிடையாது காண்
தன்னையே பிரயோஜனம் என்று இருப்பார்க்குக் கிடையாது காண்
உபாயாந்தர பரிக்ரஹணம் பண்ணினார்க்கும் அத்தனை காண்
தன்னையே உபாயமாகப் பற்றினார்க்குக் கிடையாது காண் என்றுமாம்
(இரண்டு அயோக்ய அனுசந்தானம் –
மூன்றாவது வெறுப்பு )
எம்பெருமானைச் சிந்திப்பதற்கும் துதிப்பதற்கும் அர்ஹரல்லாத நாம் நிறக் கேடாக அவனைச் சிந்தித்தல் செய்து
‘அவன் நமக்குத் திருமேனியை ஸேவை ஸாதிப்பிக்க வில்லையே!’ என்று கை யொழிந்து கிடப்பதே நல்லதன்றோ என்று
திருவுள்ளம் பற்றின ஆழ்வார், பழைய அயோக்யதா அநு ஸந்தாநமே பண்ணுகிறார் இதில்.
இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோ
டொரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திரு மாற்கு
யாமார் வணக்கமார் ஏ பாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்–10-
—————-
அயோக்யன் என்று அகன்ற நம்மை வென்று சேர விட்டுக் கொள்ள
என்னை வென்று சேர விட்ட உனக்கு
ராவணனை வென்றதுவும் ஒரு பணியோ -என்கிறார் –
அநந்ய ப்ரயோஜநரான நம்மை உபேக்ஷிக்கின்ற எம்பெருமானுடைய சிந்தனை இனி நமக்கு ஏதுக்காக?
அவனைக் குறித்துப் பாசுரஞ் சொல்வது தான் இனி நமக்கு எதுக்கு? இனி நாம் வாயை மூடிக் கொண்டு கிடப்போம்- என்றிருக்கப் பார்த்தார் ஆழ்வார்;
எம்பெருமான் அவரை அப்படியே இருக்க வொட்டவில்லை; பாசுரம் பேசவே தூண்டி விட்டான்; இதென்ன அற்புதம்!
நாம் வாயை மூடிக் கிடப்போமென்று பார்த்தாலும் பர வசமாகவே வாய் பேசத் தொடங்குகின்றதே!
நமது முயற்சி இல்லாதிருக்கச் செய்தேயும் வாய் பேச எழும்புகிறதென்றால் இது யாருடைய செயலாக இருக்க வேணுமென்று ஆராய்ந்தார்;
”***- தோ விநா த்ருணாக்ரமபி ***- (அவ் வெம்பெருமானை யொழியத் துரும்பும் எழுந்தாடாது”) என்றிருப்பதனாலே,
அவ்வெம்பெருமானே இனி செய்விக்கிறானாக வேண்டும்;
அவன்றான் மறைந்து உறைந்திருந்து நம் வாயைக் கிளப்புகிறான் போலும் என்று நிச்சயித்து
‘இனி நாம் இவன் விஷயமாக வாய் திறப்பதில்லை’ யென்று உறுதியாக நாம் கொண்டிருந்த எண்ணத்தைப் போக்கி
வாயைக் கிளப்புகின்ற இவனுடைய ஸாமர்த்தியத்தை நாம் என்ன சொல்வோம்! என வியப்புற்று,
பண்டு இராவணமென்பானோரரக்கன் ‘நான் யார்க்கும் தலை சாய்ப்பதில்லை; நிமிர்ந்த தலையைக் குனியவே மாட்டேன்’ என்று
கொண்டு இறுமாப்புடனிருந்த நிலைமையைத் தொலைத்து அவனைப் பங்கப்படுத்தினான் இப் பெருமான் என்று
எல்லாரும் மிக்க புகழ்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே. அந்தோ! இஃதொரு புகழ்ச்சியோ இவனுக்கு?
இராவணனது உறுதியைக் காட்டிலும் வலிதான எனது உறுதியைச் சிதைத்து என்னை வாய் திறக்கப் பண்ணா நின்ற
இப்பெருமானுக்கு அது ஒரு அருந்தொழிலோ? என்று ஈடுபட்டு எம்பெருமானையே நோக்கி இதனைப் பேசுகிறார்.
நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை
வாழா வகை வலிதல் நின் வலியே -ஆழாத
பாரு நீ வானு நீ காலு நீ தீயு நீ
நீரும் நீயாய் நின்ற நீ—11-
————
கிட்டினவாறே போன நாளைக்குக் கரைகிறார்
(கீழ் எல்லாம் நெஞ்சைக் கொண்டாடி
இதில் அத்தையே நிந்திக்கிறார்
இரண்டுக்கும் அவனது வை லக்ஷண்யமே ஹேது
பேற்றுக்கும் இழவுக்கும் நெஞ்சே காரணம் அன்றோ
வாசனை -மனப் பதிவுகள் தானே காரணம்
விருத்த விபூதிகளைச் சேர்த்தால் போல் அடியேனையும் சேர்த்துக் கொண்டாரே
பெற்ற பேற்றுக்கு மகிழாமல் இழந்த பழுதாய் போன பண்டை நாளுக்கும்
அயோக்கியன் என்று அகன்ற கிலேசமும் )
கீழ் பத்தாம் பாட்டில் “திருமாற்கு யாமார் வணக்கமார் ஏ பாவம் நன் நெஞ்சே!,
நாமா மிகவுடையோம் நாழ்” என்று சொல்லி எம்பெருமானிடத்தில் நின்றும் பின் வாங்கப் பார்த்ததை நினைத்துக் கொண்டு.
அப்படியும் நமக்கொரு எண்ணம் தோற்றிற்றே! என்ன கஷ்ட காலம்!;
ஏகஸ்மிந்நப்யதி க்ராந்தே முஹூர்த்தே த்யாந வர்ஜிதே- தஸ்யுபிர் முஷிதேநேவ யுக்த மாக்ரந்திலும் க்ருணாம்”
(எம்பெருமானுடைய சிந்தனை யில்லாமல் ஒரு க்ஷண காலம் கழிந்து போனாலும், ஸர்வஸ்வத்தையும் கள்வர் கவர்ந்தால்
எப்படி முட்டிக்கொண்டழுவர்களோ அப்படி ‘பழுதே பல பகலும் போயின’ என்றும்
‘ஊமனார் கண்ட கனவிலும் பழுதாயொழிந்தன கழிந்த வந்நாள்கள்’ என்றுங் கதறியழவேண்டும்) என்று சொல்லிக் கிடக்கிறதே;
‘எம்பெருமானைச் சிந்தியாமலே யிருந்து விடுவோம்’ என்கிற ஒரு கெட்ட எண்ணம் நமக்கு உண்டாயிற்றே!
அந்த எண்ணமே நமக்கு நிலைத்திருக்குமாகில் துக்க ஸாகரத்திலே யன்றோ நாம் மூழ்கிக் கிடக்க வேண்டியதாகும்;
எம்பெருமான் றானே அருள் செய்து அந்த எண்ணத்தை ஒழிக்கவே இப்போது தேறினோம்;
அவன் அருள் செய்யா விடில் ஆழ்துயரில் அழுந்தியே போயிருப்போமே” என்றிப்படியெல்லாம் பலவாறாக வருத்தமுற்று,
‘இந்த கெட்ட எண்ணம் நமக்கு உண்டானதற்கு எது காரணம்?’ என்று பார்த்தார்;
மந ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:” என்று எல்லாவற்றுக்கும் நெஞ்சு தான் காரணமென்று சாஸ்த்ரம் சொல்லுகையாலே
நமக்கு இப்படிப்பட்ட கெட்ட எண்ணம் தோன்றினது நெஞ்சில் குற்றமேயாம் என்று நிச்சயித்து.
அந்த நெஞ்சோடே வாது செய்யத் தொடங்கினார்-
நீயன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய் என்று
அதாவது-
“திருமாற்கு யாமார் வணக்கமா! ஏபாவம்!” என்று சொல்லி அகன்று துன்பக் கடலில் நான் விழுந்தேனாம்படி
என்னைக் கொலை செய்யப் பார்த்து பாவி நீயன்றோ நெஞ்சே! என்றார்.
யத் மனஸா த்யாயதி தத் வாசா வததி-என்றும் –
மன பூர்வோ வாக்குத்தர-என்றும்
நீ இல்லாமல் வாய் சொல்லுமா-
நீராக நன்னெஞ்சே சொன்னீரே -என்ன
முந்துற்ற நெஞ்சே -என்றும் சொன்னீரே-
இயற்றுவாய் எம்மோடு நீ கூடி என்று நியமித்து-
இப்பொழுது வாய் பேசினால் தடுக்காமல் இருந்தது என்ன என்று கேட்பது என்ன-
பகவத் அனுபவ குணத்துக்கு உசாத் துணையாம்படி-
இப்படி வாத பிரதிவாதங்கள் நியமித்தேனே ஒழிய-வீண் பேச்சுக்கள் ஒழியட்டும் என்கிறார்
நெஞ்சு விநேதயமாக நின்று ஸ்வாமி என்ன நியமனம் என்ன-
உபதேசம் தரினும் நீ என்றும் காழ்த்துக் கைக் கொள்ளாய் என்ன-ஷமிக்க வேணும்
அடியேன் கர்த்தவ்யம் ஸ்பஷ்டமாக அருளிச் செய்ய வேணும் என்ன
கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு –
அயோக்யா நுசந்தானம் பண்ணாமல்-
எம்பெருமான் நம்மைத் தேடித் திரிவானாக-நாம் விமுகராய் பின் வாங்கலாமா-
அவன் திருவடிகளை வாழ்த்துவதே பிராப்யம் -காண் -என்கிறார்
நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
போ என்று சொல்லி என் போ நெஞ்சே -நீ என்றும்
காழ்ந்து உபதேசம் தரினும் கைக் கொள்ளாய் கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12-
—————-
அகல ஒட்டாயாகில்
கிட்டி அனுபவிக்கும் படி பண்ணு என்கிறார் –
(உன் மேனி சாயை காட்டு -என்கிறார் -)
கீழ்ப் பாட்டில் “கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு” என்று
திருவுள்ளத்திற்கு உபதேசித்தபடியே எம்பெருமானை வாழ்த்தத் தொடங்கினார்;
வாழ்த்துவதென்றால் விஷயத்தைக் கண்ணாலே நன்று கண்டு வாழ்த்த வேணுமே;
அப்படிக்கு அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹ ஸேவை கிடைக்கவில்லை ஆழ்வார்க்கு;
அது கிடைக்காமல் என்ன வென்று வாழ்த்துகிறதென்று தடுமாறு, எம்பெருமானை நோக்கி
‘இறைவனே! உன் வடிவழகை அடியேனுடைய கண்களுக்குக் காட்டி யருள வேணும்’ என்று பிரார்த்திக்கின்றார் இதில்.
வழக்கொடு மாறு கொள் அன்று அடியார் வேண்ட
இழக்கவும் காண்டும் இறைவ -இழப்புண்டே
எம்மாட் கொண்டாகிலும் யான் வேண்ட என் கண்கள்
தம்மாற் காட்டுன் மேனிச்சாய்–13-
————
காட்ட வேணும் என்றார் கீழ்
ஆரை என் கண்களாலே காண்கிறது என்று அகன்றும்
திரியட்டும் தம்முடைய அயோக்யதையைச் சொல்லுகிறார்
பூதனை கிட்டினவோ பாதி யிறே நான் கிட்டுகை -என்கிறார் –
(திவ்யம் ததாமி தே சஷுஸ்ஸூ பஸ்யதே -அவன் தந்த கண்ணைக் கொண்டு அன்றோ
அர்ஜுனன் விஸ்வரூபம் தரிசித்தான்
இந்திரியங்கள் பாம்பு -ஜீவன் அறிவுடையவன் இவற்றில் கை நீட்டுவது போலும்
பூதனையும் தன்னை முடிக்கவே கண்ணன் பெருமை அறியாமல் முயன்றது போல்
அவளோ கண்ணன் இடம் ஈடுபட்டு அழிய
நாமோ விஷயாந்தரங்களில் ஈடுபட்டு ஸ்வரூப நாசம் அடைகிறோம் )
கீழ்ப் பாட்டில் “காட்டு உன் மேனிச் சாய்” என்று வடிவழகைக் காட்டுமாறு பிரார்த்தித்தார்;
அப்படியே இவர்க்கு வடிவழகைச் சிறிது காட்டுவோமென்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றினான்;
அஃதறிந்த ஆழ்வார் ‘அயோக்யனாகிய நான் பரம் பொருளை அநுபவிக்கப் பார்ப்பது தகுமோ?’ என்று பழையபடியே நைச்சியம் சிந்தித்து
‘நெஞ்சே!’ பகவத் விஷயத்தை நீ அநுபவிக்கப் பார்ப்பது அதனைக் கெடுக்கிறபடி யன்றோ;
பண்டு பூதனை யென்பவள் அவ்வெம்பெருமானைக் கிட்டி அவனைக் கெடுக்கப் பார்த்ததை ஒக்குமன்றோ உனது நினைவும்;
அந்தப் பூதனையொடு உனக்கும் உறவுறை உண்டு போலும்’ என்கிறார்.
ஐந்தாம் பாட்டிலும் பூதனை விருத்தாந்தம் உண்டே–
சாயல் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
தேம் பூண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்
பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி–14-
———–
(நெஞ்சே )
உன்னுடைய பூர்வ வ்ருத்தத்தை நினைத்தால் அகல வேணும்
அவனுடைய பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்தால் கிட்டலாம் என்கிறது –
(நம்மை நினைக்க ஆபத்து -அவனை நினைக்க சம்பத்து அன்றோ )
கீழ்ப் பாட்டுக்கு எதிர்த் தடையாயிருக்கும் இப்பாட்டு; ‘
ஹேயரான நாம் பகவானை அநுபவிக்கப் பார்ப்பது பொல்லாங்கு’ என்றார் கீழ்ப்பாட்டில்;
இப்பாட்டிலோ வென்னில்;
எம்பெருமானுடைய குணங்களைப் பேசுவதனால் நமது பாவங்களெல்லாம் தொலையுமாகையால் அது செய்யலாம்;
அவனுடைய பெருமைக்கு யாதொரு குறையும் விளைய மாட்டாது என்கிறார்.
பார்த்தோர் எதிரிதா நெஞ்சே படு துயரம்
பேர்த்து ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை –ஆர்த்தோதம்
தம் மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய
செம் மேனிக் கண் வளர்வார் சீர்–15-
——-
அவஸர ப்ரதீஷனாய் இருக்கிற அளவேயோ
இத்தைப் பெறுகைக்கு அர்த்தியாய் அன்றோ நிற்கிறது என்கிறார் –
(நீல நிறத்தோடு நெடும் தகை வந்து அங்கு ஓர் ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான் -கம்பர்
அதிதி கஸ்யபர் –இந்திரனுக்காகவே பெற்றார்கள் -விஜய முஹூர்த்தம் திருவோண நக்ஷத்ரம்
இந்திரனுக்காக -ராஜ்யம் மீட்டுக் கொடுக்கவே பயோ விரதம் பண்ணி பெற்றாள் )
“சீர் ஓதப் பீடழிவாம் பேச்சில்லை” என்றாரே கீழ்ப் பாட்டில்;
அப்படியே அவனுடைய திருக் குணங்களை ஓதத் தொடங்குகிறார்;
ஸ்ரீவாமநாவதார குணத்திலீடுபட்டு அருளிச் செய்யும் பாசுரம் இது.
சீர் ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை என்றார் கீழில்-இப்பொழுது சீர் பாடத் தொடங்குகிறார் –
ஸ்ரீ வாமனாவதாரத்தில் குணத்தில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
யாசகனாக வர வேண்டுமோ-வாமனன் -குள்ள வடிவு கொண்டு வர வேண்டுமோ-
குள்ளன் என்றே திருநாமம் கொள்ள வேண்டுமோ-ஸ்ரீ ராமன் ஸ்ரீ கிருஷ்ணன் போலே
சீராகப் பிறந்து சிறப்பாக வளர்ந்தவன் அன்றோ நீ –
சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா -மார்பாரப்
புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –16-
———–
அவன் கிட்டப் புக்கால் இவர்கள் பண்ணும் வை முக்யம்
அவன் நெஞ்சில் படாது என்கிறது
(அநந்ய ப்ரயோஜனர் -அவன் முகம் காட்டாவிடிலும் வாய் திறவார்
நித்ய முக்தர்கள் எத்தனை பேர் கிட்டினார்கள் என்று கேட்க வாய் திறவாமல்
அவன் அழகையே பார்த்து சதா பஸ்யந்தி பார்த்து இருப்பர்
அடியார்களை வேண்டும் என்று அவதரித்து கிடைக்கா விட்டாலும் உகந்தே இருப்பார்
இப்படி மூன்று நிர்வாகங்கள் )
தாம் அபேஷித்த படியே அடியார்களாக அனைவரும் ஆகி விட்டால்
லீலா விபூதி ஆள் அற்று போகுமே-இத்தை நோக்குவோம் என்று உகந்து-
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தாம் வாய் திறவாதார் -சூழ்ந்து எங்கும்
வாள் வரைகள் போலரக்கன் வன் தலைகள் தாமிடிய
தாள் வரை வில்லேந்தினார் தாம்–17-
————-
உகந்தும் உகவாதும் ஸம்ஸாரிகள் பண்ணும் பரிபவத்தைக் கண்டு
தன் ரக்ஷணத்திலே நெகிழ நில்லான் என்கிறது
(அன்போடு கட்டினாலும் வெறுப்புடன்-த்வேஷத்தால் கட்டினாலும்
என்னையே தானே கட்டினார்கள் என்று உகக்குமவன்
சிசுபாலன் என்னையே தானே வைதான் என்று உகந்தால் போல்
உடையவன் உடைமையை விட மாட்டானே )
ஸம்ஸாரிகள் அலக்ஷியம் பண்ணினாலும் எம்பெருமான் திருவுள்ளம் வெறுக்க மாட்டான் என்றது கீழ்ப் பாட்டில்;
அவ்வளவேயன்று;
ஸம்ஸாரிகள் எம்பெருமானுக்கு பலவகையான துன்பங்களை உண்டு பண்ணினாலும்
அப்போதும் அவன் தன் காரியத்தைத் தான் விடுவதில்லை யென்கிற மஹா குணத்தைப் பேசுகிறாரிதில்.
தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளக
பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் -சோம்பாது இப்
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
தொல்லுருவை யார் அறிவார் சொல்லு–18–
————–
கீழ் பருவம் நிறம்புவதற்கு முன்பு செய்தபடி சொல்லிற்று
வளர்ந்த பின்பு செய்த படி சொல்லுகிறது
(60 நக்ஷத்ரம் மேல் தான் கீதோபதேசம் )
பஞ்ச பாண்டவர்கள் விஷயத்தில் கண்ணபிரான் பக்ஷபாதியாயிருந்து செய்தருளின் செயல்களை
ஆலோசித்துப் பார்த்தால், அவன் அடியவர்களுக்கு எளியவன் என்பது நன்கு வெளியாகும்.
அந்த பஞ்சபாண்டவர்களைப் போல நாமும் அப்பெருமான் மீது அன்பு வைத்து அவனை ஸேவிக்க வேணுமென்று மெய்யே ஆசைப்பட்டால்
“மெய்யர்க்கே மெய்யனாகும்” அவன் ஸேவை ஸாதித்தே தீருவன்; அவனை ஸேவிப்பதற்கு இதுவே உபாயம்.
இப்படிப்பட்ட உபாயத்தைத் தெரிந்து கொள்ளாமல் நெஞ்சே நீ ஏன் வீணாகக் கவலைப் படுகிறாய்?
இப்போதாவது நான் சொல்வதைக் குறிக்கொள்; என்கிறார்.
சொல்லில் குறை யில்லை சூதறியா நெஞ்சமே
எல்லிப் பகல் என்னாது எப்போதும் –தொல்லைக் கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
காத்தானைக் காண்டு நீ காண் –19-
———–
நான் -காண் -என்று சொன்னால் தன்னை அறிந்து நாண வேண்டாவோ என்கிறார்
சர்வ விஷயமாக அவன் தீண்டுகையாலே இதுவும் லஜ்ஜியாமல் தீண்டிற்று என்றபடி
(வள வேழ் உலகு படி விலக வேண்டாமோ நெஞ்சுக்கு லஜ்ஜை இல்லையே -என்றும்
அவனே மேல் விழுந்து நம்மைப் பற்றி திருவடிகளை நம் தலையில் வைக்க வந்த போது
நீயோ சென்று தீண்டுவது என்று ஸ்வகத ஸ்வீகாரம் உண்டோ என்றுமாம்
தன்னை -என்று
தாழ்ந்து இருக்கும் தன்னை என்றும்
பர கத ஸ்வீ காரம் பண்ணும் அவனை என்றுமாம் )
ஸ்வத ஸ்வீகாரமென்றும் பரகத ஸ்வீகாரமென்றும் சாஸ்த்ரங்களில் இரண்டு வகையான பற்றுதல்கள் சொல்லப் படும்.
எம்பெருமானை நாம் சென்று பற்றுகிற பற்று ஸ்வத ஸ்வீகார மெனப்படும்.
அவன் தானே வந்து தம்மை ஸ்வீகரித்தருள்வது பரகத ஸ்வீகாரமெனப்படும்
இவ்விரண்டுள், எம்பெருமான் தானே நம்மை வந்து ஸ்வீகரிக்கையாகிய பரதக ஸ்வீகாரமே சிறந்த தென்பது ஸந்ஸம்ப்ரநாய ஸித்தாந்தம்.
“அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம்; அவத்யகரம்; அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகம்” என்றார். பிள்ளை யுலகாசிரியரும்,
கீழ்ப் பாட்டில் ‘அவனை நாம் காண நினைத்தோமாகில் காணலாம்’ என்றருளிச் செய்த ஆழ்வார்;
‘அப்பெருமானை நாமாகக் காண நினைப்பது தகுதியன்றே, அவன் தானே வந்து நம்மை ஸ்வீகரிக்கும்படி
பார்த்திருக்கை யன்றோ ஸ்வரூப ப்ராப்தம்’ என்று தெளிந்து அந்தத் தெளிவை இப் பாட்டால் வெளியிடுகிறார்.
காணப் புகில் அறிவு கைக் கொண்ட நன்னெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில் -மாணி
யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
திருவாகம் தீண்டிற்றுச் சென்று–20-
—————
ஓர் இடத்தில் போகாதபடி நிஸ் சேஷமாக க்ரஹிக்கப் பார்த்தால்
அவகாசம் பெற்று அன்றோ க்ரஹிப்பது -என்கிறது
(இடுக்குண்ட என்றதைப் பற்ற அவதாரிகை அருளிச் செய்கிறார்
என் நெஞ்சிலே அகப்படுகையாலே புறம்பே போகத் திருவடிகளுக்கு அவகாசம் இல்லாமையால்
சம்சாரிகள் ஓர் இடத்தில் போகாதபடி நிஸ் சேஷமாக திருவடிகளை உள்ளே க்ரஹிக்கிறோம்
என்றாலும் இனிப் போகாது என்றபடி -)
(பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
இதுவும் பெரிய திருவந்தாதி பெயர் வரும்படி அருளிச் செய்த பாசுரம்
ஓங்கி உலகம் அளந்த திரிவிக்ரமன் திருவடியை நெஞ்சிலே அடக்கிக் கொண்டேனே என்கிறார் )
எம்பெருமானுடைய-உலகளந்த திருவடி-தானாகவே ஆழ்வார் திரு உள்ளத்திலே
வந்து சேர்ந்தன -என்று அருளிச் செய்கிறார்-
எதற்காக என்றால்-அங்கு வெந்நரகில் சென்று சேராமல் காப்பதற்காக –
ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப-ஒருகாலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து-
எண் மதியும் கடந்து அண்டமீது போகி-இரு விசும்பினூடு போய் எழுந்து
மேலைத் தண் மதியும் கதிரவனும் தவிர வோடித் தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை –
சிறியேனுடைச் சிந்தைக்குள்-எல்லா உலகும் அளந்த திருவடிகள் அடங்க போதுமான இடம் அன்றாகிலும்-
நெருக்குப் பட்டாலும் ஆழ்வார் திரு உள்ளத்துக்குள் இருந்திட வேண்டும் என்கிற சங்கல்பம் கொண்டு-வந்து நிற்கிறான் –
என்னுடைய உஜ்ஜீவன அர்த்தமாகவே இவ்வளவும் செய்து அருளினான் –
யஸ் த்வயா சஹ ச ச்வர்க்கோ நிர்யோ யஸ் த்வயா வினா-கூடி இருக்கை ஸ்வர்க்கம்
அவனை விட்டு பிரிந்து இருந்தால் நரகம் –
திருவடிகளை என் நெஞ்சினுள் அமைத்தான்-என்னவுமாம்
சென்று அங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு யென்னெஞ்சால் இடுக்குண்ட -அன்று அங்குப்
பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய
காருருவன் தான் நிமிர்த்த கால்–21-
———-
நம்முடைய பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள் கால் பொதும் படி-
(வெடிக்கும் படி -முள்ளுத் தைக்கையுமாம் )
தடுமாறிக் கூப்பிட்டுத் திரியும் அத்தனை இறே இன நாள் என்கிறார்
(மாலார் தானே குடி புகுந்தார் -பர கத ஸ்வீ காரம்
நாம் அடைய முற்பட்டால் வலிய வினைகளை போக்கியே அடைய வேண்டும்
அவர் நம்மை அடைய வந்ததுமே இவை தன்னடையே போகுமே )
எம்பெருமானுடைய திருவடிகள் தமது திருவுள்ளத்தில் வந்து சேர்ந்தனவாகக் கீழ்ப்பாட்டில் அருளிச் செய்தார்.
அவயவியான வ்யக்தியை விட்டு அவயவமான திருவடிகள் தனியே வந்து சேரமாட்டாவாகையால், எம்பெருமானே தமது திருவுள்ளத்தில்
வந்து சேர்ந்தமையைக் கூறினபடி யாய்த்து.
அதை இப்பாட்டில் “மாலார் குடி புகுந்தார் என் மனத்தே” என்று வ்யத்தமாக அருளிச் செய்து,
இன்று வரையில் என்னுடைய நெஞ்சினுள் துக்கங்களும் பாவங்களும் நித்ய வாஸம் பண்ணிக் கொண்டு செங்கோல் செலுத்திக் கிடந்தன;
இப்போது ,இவற்றுக்கு இங்கு இடம் கிடையாமையாலே ‘எங்கே போய்க் குடியிருக்கலா’மென்று
அவை அலைந்து திரிந்து வருந்துகின்றன என்று அருளிச் செய்கிறார்.
காலே பொதத் திரிந்து கத்துவராம் இன நாள்
மாலார் குடி புகுந்தார் என் மனத்தே -மேலால்
தருக்கும் இடம் பாட்டினொடும் வல் வினையார் தாம் வீற்று
இருக்குமிடம் காணாது இளைத்து –22-
—————
இதில் வியதிரேகத்தில் அருளிச் செய்து
அடுத்த பாட்டில் அவன் ரக்ஷிக்காமல் விடமாட்டான் என்று
அந்வய முகத்தால் அருளிச் செய்து த்ருடீ கரிக்கிறார் )
(பற்றினாலும் பற்றா விட்டாலும் அவன் ரக்ஷகன்
அவர் ரஷிக்கா விட்டாலும் நீ பற்றுதலை விடாய்
அவனைப் பற்றினால் இளைக்க மாட்டோம்
உலக விஷயங்களைப் பற்றினால் இளைப்போமே
அவனைப் பற்றாமல் இருந்தால் இளைப்போமே
உலக விஷயத்தால் பற்றாமல் இருந்தால் இளைக்க மாட்டோம்
மாதா நாராயணா பிதா நாராயணா -ஸ்வாபாவிக பந்து அந்தோ
தானே தாயும் தந்தையும் ஆவான் –
சேலேய் கண்ணியரும் –மேலாத் தாய் தந்தையரும் –மற்றும் யாவரும் அவரே
ரக்ஷிக்கா விட்டாலும் தந்தை தந்தை தானே
இத் தந்தையோ ரக்ஷிக்காமல் போக மாட்டான் )
எம்பெருமான் சில ஸமயங்களில் தனது பொருளைப் பிரகாசப்படுத்துவான்;
சில ஸமயங்களில் உதாஸீநனைப்போலே உபேக்ஷையாயிருந்திடுவன்.
அவன் எப்படி யிருந்தாலும் நம்முடைய அத்யவஸாயம் மாத்திரம் மாறக் கூடாது;
அவன் நம்மை ரக்ஷிக்கும் போதோடு ரக்ஷியாத போதோடு வாசியற அவனையே நாம் ஸகல வித பந்துவுமாகக் கருதி
விஸ்வஸித்திருக்க வேணும்- என்கிற சாஸ்த்ரார்த்தத்தைத் திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிற முகத்தாலே
அஸ்மதாதிகளுக்குத் தெரிவிக்கிறார் இதில்.
இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன்
இளைக்க நமன் தமர்கள் பற்றி -இளைப்பெய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்
தாய் தந்தை எவ்வுயிர்க்கும் தான் –23-
—————
அந்வய
வ்யதிரேகங்கள்
இரண்டாலும் அவனே ரக்ஷகன் என்கிறது
இளைக்கில் என்றது வ்யதிரேகம்
மீண்டு அமைக்க -என்று அந்வயம்
“தாய் தந்தை யெவ்வுயிர்க்குத் தான்” என்றார் கீழ்ப்பாட்டில்.
அப்படி சொல்லிவிடலாமோ? மற்றும் பல தேவதைகளும் ரக்ஷகராயிருக்கலாமேயென்று நெஞ்சு நினைக்க,
அதைக் கண்டித்து, எம்பெருமானை ரக்ஷகன் என்பதை நன்கு நிலை நாட்டிப் பேசுகிறாரிதில்.
தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஓன்று இல்லாதான்
தானே பிறர்கட்கும் தற்தோற்றல் -தானே
இளைக்கில் பார் கீழ் மேலாம் மீண்டு அமைப்பான் ஆனால்
அளக்கிற்பார் பாரின் மேலார்–24-
————
பூமியில் உள்ளாரை எல்லாம் நம்மாலே திருத்தப் போமோ
நாம் முன்னம் பகவத் விஷயத்திலே அவகாஹிக்கப் பெற்றோம் இறே -என்று ஹ்ருஷ்டராகிறார்
வழி பறிக்கும் இடத்தே தப்பிப் போனவன் கிழிச் சீரையை அவிழ்த்துப் பார்த்து
இது தப்பப் பெற்றோமே -என்று உகப்பாரைப் போலே –
கீழ்ப்பாட்டில் விரித்துரைத்தபடி எம்பெருமானே ஸர்வ ரக்ஷகனாயிருக்கவும்
இதனைப் பலர் தெரிந்து கொள்ளாமல் புறந்தொழுகின்றபடியைக் கண்ட ஆழ்வார்,
இவ் வுண்மைப் பொருளைப் பலர்க்கும் உபதேசித்துத் திருத்துவோம் என்று முயன்றார்;
“கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே” (திருமாலை 11) என்றபடி ஜாயமாந கடாக்ஷமில்லாதார் பலருளராகையால்
அவர்கள் திருந்தி வரக் கண்டிலர்;
“சொன்னால் விரோதமிது ஆகிலுஞ் சொல்லுவன் கேண்மினோ” (திருவாய்மொழி 3-9-1) என்று நாம் கெஞ்சிக் கெஞ்சி
உபதேசித்த விடத்திலும் பாழும் ஸம்ஸாரிகள் திருந்தாவிடில் நாம் என் செய்வோம்? யானைக்குக் கோமணங்கட்ட யாரால் முடியும்?
அளவில்லாமல் பரந்து கிடக்கிற இவ்வுலகத்திலுள்ளா ரெல்லாரையும் திருத்துவதென்றால் இது நம்மாலாகக்கூடிய காரியமோ?
நம்மாலானது நாம் நன்மை சொல்லலாம்; ஆனவளவு சொல்லிப் பார்த்தோம்;
பாக்கியமுள்ளவர்கள் திருந்துவார்கள்; கர்ப துர்ப்பாக்யசாலிகள் இழப்பர்கள்;
யார் எப்படி வேணுமானாலும் செய்யட்டும் என்று முன்னடிகளில்,
ஸம்ஸாரிகள் மேல் வெறுப்புத் தோற்ற அருளிச் செய்கிறார்.
இந்த இருள் தருமாஞாலத்திலே இவர்களைப் போல் தான் கெட்டுப் போகாமல்
எம்பெருமானை யடி பணிந்து வாழப் பெற்றேனென்று தம்முடைய நிலைமைக்குத் தாம் உகக்கிறார் பின்னடிகளில்
வழிப் போக்கர்களின் கைப் பொருள்களை யெல்லாம் கொள்ளை கொள்ளுங்கள்வர் நிறைந்த காட்டிலே மற்றெல்லாரும் பறி கொடுத்து நிற்க,
ஒன்றும் பறி கொடாமல் தப்பிப்போன வொருவன் “தெய்வாவாதீனமாய் நாம் தப்பப் பெற்றோமே!” என்று உகப்பது போல,
ஆழ்வாரும், எல்லாரையும் மதி கெடுக்கின்ற இவ்விருள் தருமாஞாலத்திலே
முந்துற முன்னம் நாம் தப்பிப் பிழைக்கப் பெற்றோமே’ என்று உகக்கிறாராய்ந்து.
ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத் தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் —25-
———
மாற்றினேன் என்று கர்த்ருத்வம் தோற்றச் சொன்னார்
அந்த கர்த்ருத்வமாவது
அவன் மேல் விழ –
என்னுடைய விலக்காமையே -என்கிறார் –
(கர்த்தா சாஸ்திரார்த்வாத் -ஸாஸ்த்ரம் கர்த்தாவுக்கு தானே உபதேசிக்க வேண்டும் –
நீ கர்த்தா இல்லை கீதையில் உபதேசம்
இதில் கர்த்தா என்றாலே தடுக்காமல் இருந்ததே என்கிறார்
பரத்வ சவுந்தர்ய ஸுலப்யம் மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் -காருணிகர் பகவான்
எளிமை சுருக்கம் தெளிவு மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் பெரியவாச்சான் பிள்ளை பரம காருணீகர் )
கீழ்ப் பாட்டில் “யான் வன் துன்பத்தை மாற்றினேன்” என்று துன்பங்களைத் தாம் போக்கிக் கொண்டதாக அருளிச் செய்தார்;
ஆராய்ந்து பார்த்தவாறே, “யான் வன் துன்பத்தை மாற்றினேன்” என்று சொன்னது அவ்வளவு பொருத்தமான தல்ல வென்றும்
தமக்குக் கர்த்ருத்வம் தோன்றாமல் எம்பெருமானுடைய திருவருளுக்கே கர்த்ருத்வம் தோன்றும்படி
ஸ்வரூபாநுரூபமாகப் பாசுரத்தைச் சிறிது மாறுபடுத்திச் சொல்ல வேணுமென்றும் திருவுள்ளமுண்டாகி,
கீழ்ப்பாட்டின் பின்னடிகளிற் கூறிய அர்த்தத்தையே ப்ரக்ரியா பேதத்தாலும் சப்த பேதத்தாலும் அருளிச் செய்கிறார்.
யானும் என் நெஞ்சமும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தானோர்
இருளன்ன மா மேனி எம் மிறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து —26-
————
இசைந்து ஒழிந்தோம் -என்கிற இத்தாலே –
தம் தலையிலே குறை யற்றது
அருள் என்னும் தண்டால் -என்கையாலே
பெறுவதும் அவன் பிரஸாதத்தாலே என்னும் இடம் சொல்லிற்று
இனி அவர்க்கு அநுபவத்திலே இறே அந்வயம்
ஆகையாலே அநுபவிக்கிறார்
(முன்பு இருந்த குறை -இசையாமல் இருந்தது
நெஞ்சு இசைந்து ஒழிந்த பின்பு
அருள் என்னும் தண்டாலே பிரதிபந்தகங்கள் போன பின்பு
நானும் வேண்டாம் நீயும் வேண்டா -தன்னடையே போகும் அன்றோ
ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி பின்பு அனுபவம் தன்னடையே வரும் அன்றோ )
கீழ்ப்பாட்டில் “யானுமென் னெஞ்சு மிசைந்தொழிந்தோம்” என்று ஆழ்வார் பேசின பாசுரத்தைத்
திருச் செவி சாத்தின எம்பெருமான் “இவ் விபூதியிலே இப்படிப்பட்ட வார்த்தை சொல்லுவாருமுண்டாவதே!;
த்வம் மே என்றால் அஹம் மே என்கிற இந் நிலத்திலே “யானுமென்னஞ்சுமிசைந்தொழிந்தோம்” என்று
அழகாக ஒரு பாசுரம் செவிப்படுவது அற்புதமே!” என்று கொண்டு பரமாநந்தப்பட்டான்!
அதனை ஞானக் கண்ணாலே கண்டறிந்த ஆழ்வார், எம்பெருமானே! இப்போது உனது திருவுள்ளத்தில் ஓடுகிற ஆநந்தம் பண்டு
உலகளந்த காலத்து உண்டான ஆநந்தத்தோடு ஒக்குமோ? அன்றி அவ் வானந்தத்தினும் மேற்பட்டதோ? என வினவுகின்றார் போலும்.
அடியால் படி கடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27-
————
திரு உலகு அளந்து அருளின வடிவை அநுஸந்திக்கையாலே அவனைக் காண ஆசைப் பட்டு
அது கிடையாமையாலே வெறுத்தவர்
அவன் பக்கல் குறை யுண்டோ
நம்முடைய குறை இறே என்று திருப்தராகிறார்
(திருப்தி சொல்லுகையாலே வெறுப்பு அர்த்தாத் வந்தது
நெஞ்சு என்னும் உள் கண்ணாலே உணர்ந்தால் இன்றும் காணலாம்
அது இல்லாமையாலே காணப் போகாது
ஆகையாலே அவன் பக்கல் குறை யுண்டோ
நம்மது அன்றோ குறை என்று திருப்தராகிறார் -என்றபடி )
(பர பக்தி பர ஞானம் பர பக்தி -ஞானம் தர்சனம் பிராப்தி -அறிவு காண்கை அடைகை
உள் கண்ணால் -தர்சன ஸாமானாத்கார சாஷாத் காரம்
பரம பக்தி வந்தால் மோக்ஷம்
சூழ் விசும்பு பர ஞானம்
முனியே நான் முகனே-பரம பக்தி
இன்னும் வர வில்லை
அடுத்த பாசுரத்தில் பர பக்தி வந்தமையை அருளிச் செய்கிறார் )
கீழ்ப்பாட்டில் உலகளந்த வரலாற்றைச் சிறிது ப்ரஸ்தாவம் செய்யவே.
ஓங்கி யுலகளந்த உத்தமனுடைய அந்த விலக்ஷணமான திருவுருவத்தை ஸேவிக்கப் பெறவேணு மென்று ஆழ்வார்க்கு ஆசை கிளர்ந்தது.
கிளர்ந்தாலும் பரம பக்தி தலையெடுத்தாலன்றி அவன் ஸேவை ஸாதிக்க மாட்டானாகையால், அந்தப் பரமபக்தி தலையெடுக்கும்போது
விகஸிக்கக் கூடியதான நெஞ்சென்னு முட்கண்ணுக்கு விஷயமாகக் கடவதான பரம்பொருள் நமது புறக்கண்ணாகிய
மாம்ஸ சக்ஷுஸ்ஸுக்கு இப்போது எப்படி விஷயமாகுமென்று தம்மில் தாமே ஸமாதானப்படுகிறார் போலும்.
பரம பக்தி தலை எடுத்தால் அன்றி-கீழே பிரஸ்துதமான அந்த விலஷணமான -திருமேனியை-சேவிக்க பெறாதே-
தம்மில் தாமே சமாதானப் படுத்திக் கொள்கிறார்
ந மாம்ஸ சஷூர் அபி வீஷதே தம் -என்றும்
ந சஷூஷா பஸ்யதி கச்ச நைனம் -என்றும் சொல்லுகிறபடியே-புறக் கண்ணால் காண்கைக்கு என்ன ப்ரசக்தி –
கமலக் கண்ணன் என் கண்ணில் உள்ளான்-என் கண்ணனை நான் கண்டேனே –
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்றும் –
மானஸ சாஷாத்காரமே அருளிச் செய்கிறார்-
கமலக் கண் என்று தொடங்கி கண்ணுள் நின்று இறுதி கண்டேன் என்ற பத்தும்
உட் கண்ணாலேயே -ஆச்சார்ய ஹிருதயம்-
அகக் கண் விகசிக்கப் பெற்றவர்கள் புறக் கண்ணாலும் காணப் பெறுவார் என்பர் சிலர்-
அங்கன் அன்றி-அவன் பரிஹ்ரஹித்து கொள்ளும்
திவ்ய மங்கள விக்ரஹம் மாத்ரம் பரம பக்தர்களுக்கு புலப்படுமே அன்றி-
திவ்யாத்ம ஸ்வரூபம் புறக் கண்ணுக்கு புலப்படாது என்பர் பெரியோர்-அகக் கண் கொண்டு திவ்யாத்மா ஸ்வரூபத்தை
சாஷாத் கரிக்கப் பெற்றோம் ஆகில்-புறக்கண் கொண்டு திவ்ய மங்கள விக்ரஹம் சேவிக்கப் பெறுவோம் என்பதே கருத்து –
அன்றே நம் கண் காணும் ஆழியான் காருருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் -என்றேனும்
கட் கண்ணால் காணாத வவ் வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால் காணும் உணர்ந்து –28-
———-
எல்லார்க்கும் இவ் வவஸ்தை பிறக்கை அரிது
எனக்கு இவ் வவஸ்தை பிறந்தது என்கிறார் –
எனக்கு எளியன் என்கையாலே எனக்கு இவ் வவஸ்தை என்கிறது –
எளியர் ஸ்நேஹிகள் –
(இதில் பரபக்தி-அவஸ்தை -தசை – வந்தமையை ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் )
“இன்றே நாம் காணதிருப்பதுவும்” என்று கீழ்ப்பாட்டில் ஆழ்வார் பேசின பேச்சு
எம்பெருமானது திருச் செவியில் விழுந்தவாறே “ஆழ்வாருடைய திரு வாயினாலே இப்படி சொல்லும்படி நாம் அருமைப் பட்டிருக்கலாமோ?
‘நான் காணாதிருப்பதுவும்’ என்கிற வார்த்தை சொல்ல வேண்டியவர்கள் *
உண்டியே உடையே உகந்தோடும் ஸம்ஸாரிகளே யொழிய,
*உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையுமெல்லாங் கண்ணன் என்றிருக்கிற ஆழ்வார் இவ் வார்த்தை சொல்லும்படி ஆகலாமோ?
ஆழ்வார்க்கு நாம் எளிமைப்பட்டு நம்மை அவர்க்குக் காட்டிக் கொடுக்க வேண்டாவோ” என்று திருவுள்ளங் கொண்ட எம்பெருமான்
தன்னுடைய ஸௌலப்ய குணத்தை ஆழ்வார் நெஞ்சிலே பிரகாசப்படுத்த, அதனை அநுபவித்துப் பேசுகிறாரிதில்.
உணர ஒருவர்க்கு எளியனே செவ்வே
இணரும் துழாய் அலங்கல் எந்தை -உணரத்
தனக்கு எளியர் எவ் வளவர் அவ் வளவர் ஆனால்
எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு –29-
————-
அவன் அருமையும் பெருமையும் கிடக்க கிடீர்
நம்மை நலிந்து போந்த பகவத் பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்களுக்கு
நம்முடைய பக்கல் இருப்பிடம் இல்லை என்கிறார் –
கீழ்ப்பாட்டில் “எனக்கெளிய னெம்பெருமானிங்கு” என்று எம்பெருமானுடைய ஸௌல்ப்ய குணத்தை அநுஸநதித்தார்;
அந்த குணாநுபவம் வர வர அதிகரித்துத் திருவுள்ளத்தில் தாங்க முடியாதபடி விஞ்சிற்று; விஞ்சவே,
அந்த ஆநந்தத்தினால் பாவங்களைக் குறித்துப் பேசுகின்றார். ஓ பாவங்களே! பகவத் குணாநுபவத்திற்கே என் நெஞ்சில் இடம் போரவில்லை;
அதற்கே இன்னும் இடம் கடன் வாங்க வேண்டியிருக்கிறது; அப்படியிருக்கும் போது உங்களுக்கு இங்கே இடம் ஏது?;
ஒரு மூலையில் சுருங்கிக் கொண்டு கிடக்கிறோமென்று நீங்கள் சொல்லக் கூடும்;
அப்படி வருத்தப்பட்டுக் கொண்டு இங்கு இருக்க வேண்டா; விசாலமாகக் கிடப்பதற்குரிய வேறிடந் தேடி ஓடிப்போங்கள் என்கிறார்.
இங்கு இல்லை பண்டு போல் வீற்று இருத்தல் என்னுடைய
செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் -அங்கே
மடி யடக்கி நிற்பதனில் வல் வினையார் தாம் ஈண்டு
அடி எடுப்பதன்றோ அழகு–30-
———-
ஸர்வேஸ்வரனைக் கொண்டே விரோதியையும் போக்கி
அங்குத்தைக்குக் கைங்கர்யம் பண்ணும்படியும் ஆனோம் என்கிறார் –
(சென்றால் குடையாம் இத்யாதி –நிழலும் அடி தாறுமானாலே கைங்கர்யம் தானே )
கீழ்ப்பாடடில்
“வல்வினையார் தாமீண்டடி யெடுப்பதன்றோ அழகு” என்று பாவங்களை யெல்லாம் துரத்தித் தள்ளுபடியானார்.
“நெடுநாளாகப் பாவங்களின் கீழே அமுக்குண்டிருந்த உமக்கு இன்று இப்படிப்பட்ட சக்தி எங்ஙனே உண்டாயிற்று?’ என்று யாராவது கேட்கக் கூடுமே;
அவர்களுக்கு ஸமாதாநமாம்படி இப் பாட்டு அருளிச் செய்கிறார்.
வல்வினைகளைத் துரத்தித் தள்ளுவதற்கு அழகான ஒரு உபாயமறிந்தோம்;
அஃது என்னென்னில்;
எம்பெருமானுக்குத் திருவடி நிழல் போலவும் திருவடி ரேகை போலவும் விட்டு நீங்காது அத்தாணிச் சேவகமானோம்.
ஆகவே, காரியம் கை கூடிற்று என்கிறார்.
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரிம் -என்றபடி-
திருப்பாற் கடலிலே இருந்து எழுந்து அருளி-
ஸ்ரீ கிருஷ்ணனாய் திருவவதரித்து-குடக்கூத்தாடி-அந்த விடாய் தீர மீண்டும் அங்கே போய் சயனித்து அருளி-
இளைப்பாறுகின்ற பெருமானுக்கு நிழலும் அடிதாறும் ஆனோம்
அழகும் அறிவோமாய் வல் வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடி தாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடங்கடலை மேயார் தமக்கு–31-(வல் வினையும் தீர்ப்பான் -பாட பேதம் )
———-
தாம் அடிமை செய்ய நிச்சயிக்க
நெஞ்சு ப்ரக்ருதி சம்பந்தத்தை உணர்ந்து பிற்காலியா நின்றது என்கிறார் –
(முந்துற்ற நெஞ்சே ஆரம்பம்
இங்கு விலகுவதால் குத்தலாக
நெஞ்சு மனம் போன படி -நெஞ்சுக்கும் மனமா
ஆழ்வார் நெஞ்சு இப்பேர் பட்டவனுக்கு நெருங்கவோ
ஆகவே பகவத் கைங்கர்யத்தில் இழிய மாட்டேன்
ஆழ்வாருக்கு இது தானே தீ வினை
அவனோ தாமோதனார் -மேல் விழுந்து -உயர்ந்த அபிப்ராயத்தால் -ஆர் -சப்த பிரயோகம்
நெஞ்சினார் -விலகுவதால் வெறுப்பில் ஆர் இங்கு )
கீழ்ப்பாட்டில் “நிழலுமடிதாறுமானோம்” என்று தாம் எம்பெருமானோடு ஐக்கியப் பட்டமையைப் பேசினாரே;
உடனே இவருடைய நெஞ்சானது பழையபடியே நைச்சியம் பாவித்துப் பின் வாங்கத் தொடங்கிற்று. அந்த நிலைமையைக் கண்டு ஆழ்வார்;
‘அந்தோ! என் செய்வேன் நெஞ்ச அநுகூலித்து வரும் போது எம்பெருமான் அருமைப் படுகிறான்,
எம்பெருமான் எளியனாம் போது நெஞ்சு பின் வாங்குகிறது; இந்த இழவுக்கு என்ன செய்வேன்?’ என்று அலமருகின்றார்.
பாயை விரித்து விட்டுக் கணவனை அழைத்து வரப்போனாளாம் ஒரு நாயகி; கணவனை அழைத்து வருவதற்குள்ளே பாய் சுருட்டிக் கொள்ளுமாம்;
மறுபடியும் பாயை விரிக்கப் பார்ப்பாளாம்; அந்த க்ஷணந்தன்னிலே நாயகன் ஓடிப் போவானாம்.
பாயை விரிப்பதற்கும் கணவனை யழைத்து வருவதற்குமே அவளுடைய போது சரிப்போகுமாம்.
அப்படியே ஆழ்வார்க்கு நெஞ்சை இணக்கிக் கொள்வதற்கும் எம்பெருமானை இழுத்துப் பிடிக்க நினைப்பதற்குமே போது சரிப் போகிறது போலும்.
இவர்க்கு இப்படியே அடிக்கடி சிரமம் உண்டாவது பற்றி அந்த வருத்தம் தோன்ற
“யான் செய்வதில்விட்த்திங்கியாது” என்று தீந ஸ்வரப் பாசுரம் பேசுகிறபடி காண்மின்.
தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கென்று
தாம் செய்யும் தீ வினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
யாம் செய்வது இவ் விடத்து இங்கி யாது–32-
———
அறிவுடைத்தாகில் அவனைப் பற்ற வேண்டாவோ என்கிறது –
நைச்சியம் கொண்டாடி அகலுகிற நெஞ்சுக்கு நன்மை சொல்லுகிறது போலேயிருக்கிறது இப்பாட்டு.
நெஞ்சு என்றும் ஆத்மா என்றும் பர்யாயம் போலோ கொள்ளுங்கள்.
ஜ்ஞாநாநந்த மனஸ்த்வாத்மா” என்று ஞானமும் ஆந்தமும் ஆத்மாவுக்கு ஸ்வரூபமாகச் சொல்லப்பட்டுள்ளது.
அதைப் பிடித்துக்கொண்டு அருளிச் செய்கிற பாசுரம் இது.
இந்த நெஞ்சு அசேதநப் பொருளல்ல; சேதநப் பொருள்; அதாவது அறிவையும் ஆநந்தத்தையும் உடைய பொருள்.
இது அறிவில்லாத வஸ்துவாயிருந்தால் இதைப்பற்றிக் கவலையில்லை.
எப்போது அறிவுடையதாயிற்றோ அப்போதே எம் பெருமானைப் பற்றினதாகவே ஆய்விட்டது.
“ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்கு முணர்வு” (முதல் திருவந்தாதி 67) என்கையாலே ஞானமாகில்
பகவத் விஷயத்தைப் பற்றித்தானேயிருக்கும். ஆகையாலே இந்த நெஞ்சு பகவத் விஷயத்தைக் கண்டு பின்வாங்குவது எப்படி சேரும்?
அது கிடக்கட்டும் ஞானம் போலே ஆநந்தமும் ஒரு தன்மையாக இருக்கிறது இதற்கு.
ஆநந்தமுண்டாகில் பகவத் விஷயத்தைப் பற்றாமல் எப்படி ஆநந்தம் ஸித்திக்கும்? ஸித்திக்க மாட்டாது.
ஆகவே, ஞானம் ஆநந்தம் என்கிற இரண்டு தன்மைகள் இதற்கு உள்ளபோதே இது பகவத் விஷயத்தைப் பற்றினதாகவே ஆகா நிற்க.
அந்தோ ‘அந்த பகவானை அணுக மாட்டேனென்று ஓடுகிறதே! இஃது என்ன பேதைமை! என்கிறார்.
ஆழ்வார் ஸ்வ அனுபவ ரூபத்தால் சாஸ்திர அர்த்தங்களை வெளியிட்டு அருளுகிறார்-
யாதானும் நேர்ந்து யாதானும் ஓன்று அறியில் தன் உகக்கில் என் கொலோ
யாதானும் நேர்ந்து அணுகா வாறு தான் -யாதானும்
தேறுமா செய்யா வசுரர்களை நேமியால்
பாறு பாறாக்கினான் பால்–33-
—————
ஏதேனும் நேர்ந்தாகிலும் அவனையே பற்ற வேணும் என்றார்
ஆகில் அவனைக் கிட்ட ஒண்ணாது என்கிறார் –
(முதலில் விஷயாந்தர ப்ராவண்யம் அடியாக விலகி
அடுத்து நைச்யம் பாவித்து விலகி
அடுத்து உள்ளம் சிதிலமாகி -தளர்ந்து -அனுபவிக்க முடியாமல் தளும்புகிறார்
நீலாழிச் சோதியாய் -நின் சார்ந்து நின்று -ஸுந்தர்யம்
ஆதியாய் நின் சார்ந்து நின்று -பிராப்தி
தொல் வினை எம் பால் கடியும் நீதியாய் நின் சார்ந்து நின்று -விரோதி நிரஸனம்
கால் கர்ம இந்திரியம் ஐந்தும்
கண் ஞான இந்திரியம் ஐந்தும்
நெஞ்சு -மனஸ் )
நைச்சியங்கொண்டாடி அகலப் பார்ப்பது தகாது, எப்படியாவது அவனை அணுகப் பார்ப்பதே நன்று என்று
கீழ்ப் பாட்டில் அருளிச் செய்த ஆழ்வார் தாம் அணுகி அநுபவிக்க இழிந்தார்;
திருப்பாற் கடலிலே திருமால் பள்ளி கொள்ளுந் திறத்தை அநுபவிக்கத் தொடங்கும்போதே தாம் விகாரப்படும்படியைப் பேசுகிறார் இதில்.
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -நீலாழிச்
சோதியாய் ஆதியாய் தொல் வினை எம் பால் கடியும்
நீதியாய் நின் சார்ந்து நின்று —34-
—————
இவன் செவி தாழ்த்தால் அவன் படும்படி சொல்லுகிறது–
(கேட்டேயும் -இசைந்து வந்த ஒன்றுக்கே அவன் செய்யும் அதி ப்ரவ்ருத்திகளை
இங்கு அருளிச் செய்கிறார் )
கீழ்ப்பாட்டில் “பாலாழி நீ கிடக்கும் பண்பையாம் கேட்டேயும்” என்று எம்பெருமான் விஷயமான
சரிதைகளைக் கேட்டேயும்” என்று எம்பெருமான் விஷயமான சரிதைகளைக் கேட்பதில்
தமக்கு முயற்சி உண்டானமையைக் கூறினாரே; அவ்வளவிலே எம்பெருமான்
“இவ்வாழ்வாருடைய காதலை மேன்மேலும் வளரச் செய்ய வேணும்” என்று திருவுள்ளம் பற்றி
இவருடைய நெஞ்சிலே படுகாடு கிடக்கத் தொடங்கி விட்டான்; அதைப் பேசுகிறாரிதில்
நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும்
ஒன்றுமோ வாற்றான் என் நெஞ்சு அகலான் -அன்று அம் கை
வன் புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான்
அன்புடையன் அன்றே அவன்–35-
————-
அவன் இப்படி இருக்க (35 பாசுர சுருக்கம் )
அவன் பக்கலிலே ஸம்சயத்தைப் ப்ரவேசிப்பித்துக்
கை வாங்குகை கார்யம் அன்று என்கிறது
சில சமயங்களில் எம்பெருமான் ஸுலபன் என்று தோற்றும்; சில ஸமயங்களில் அவன் துர்லபன் என்று தோற்றும்;
மற்றுஞ் சில ஸமயங்களில் ‘அவன் ஸுலபனுமல்வன், துர்லபனுமல்லன்; நடுத்தரமாயுள்ளவன்’ என்று தோற்றும்.
பின்னையும் சில ஸமயங்களில் ‘அப்பப்ப! அவன் மிக உயர்ந்தவன், மேலோர்க்கும் மேலானவன், அவனைப் பெறுதல் கூடுமோ’ என்று தோற்றம்.
ஆக இப்படியெல்லாம் பலபடியாகத் தோற்றும் தோற்றங்களைத் தொலைத்திட்டு அப்பெருமானுக்கு ஸௌலப்யமொன்றே
அஸாதரணமான வடிவு என்று தெளிந்த ஞானத்தைப் பெற்று அக்கண்ணபிரானுக்கே ஆட்பட்டுவிட்டால்
அவன் நமக்கு ஸகலவித பந்துவமாய் நின்று எல்லா நன்மைகளையும் செய்தருள்வான் என்கிறார்.
இவனாம் -என்ற இடத்தில் சந்தேக நிவ்ருதியை சொல்லி சொல்லி அருளுகிறார் -அவன் சுலபனே -திட விசுவாசம்-
அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
அவனாம் அவன் என்று இராதே -அவனாம்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலுமாம் —36-
———–
இப்படி இருக்கை புறம்பு உள்ளார்க்கு அரிது
நமக்கு உண்டாயிற்றே -என்கிறார்
(தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனாய் –அநந்யார்ஹ சேஷ பூதராக அற்றுத் தீர்ந்து இருப்பது துர்லபம்
பகவத் அனுக்ரஹத்தாலே பெறப் பெற்றோமே என்று ஹ்ருஷ்டராகிறார்
பூ மேய மதுகரம் -தேன் -மேய்ந்து கொண்டு இருக்கும் துளசி மாலை -அணிந்த
அவரை வாழ்த்துவதே கரம் -கடைமை-கரம் -உறுதியாக த்ருடமாக என்றவாறு –
வாழ்த்தாம் அது-பல்லாண்டு பாடுகை –
நெஞ்சு அசேதனம் -ஞானம் இல்லா விட்டாலும் சேதன சமாதியால் சொல்கிறார் –முந்துற்ற நெஞ்சு அன்றோ )
கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய ஸௌலப்யத்தைப் பேசினார்; அது நம் நெஞ்சுக்கு மிகவும் ரஸித்தது.
அந்த ஸௌலப்யத்தையே நெஞ்சு அநுஸந்தித்து ஆநந்தப்பட்டுக் கொண்டிருந்தது. ஆழ்வார் அந்த நெஞ்சை நோக்கி
“இப்படிப்பட்ட ஸௌலப்யம் எம்பெருமானுக்குள்ளதென்று நீ நன்கு அறிந்து கொண்டாயன்றோ;
இந்த அறிவு எல்லார்க்கும் எளிதாக உண்டாமதன்று; ஏதோ எம்பெருமானது இன்னருளாலே நமக்கு உண்டாகப் பெற்றோம்;
ஆகையாலே இனி ஒருகாலும் நைச்சியம் பாவித்துப் பின்வாங்கப் பாராதே
அப்பெருமானுடைய போக்யதையிலும் சீலத்திலும் ஈடுபட்டு அவனை வாழ்த்துவதே தகும் என்கிற
அத்யவஸாயத்தைத் திண்ணியதாகக் கொள்” என்று உபதேசிக்கிறார்.
ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
நாமே யது வுடையோம் நன்னெஞ்சே –பூ மேய
மது கரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம்
அது கரமே அன்பால் அமை —37-
————
தாம் வாழ்த்தச் சொல்ல
நெஞ்சு இறாய்க்க
அத்தை தப்பச் செய்தோம்-என்கிறார்
(பேசாமல் இருந்தால் பிழை -தப்பு
பிழை கர்மங்கள் பேசவே போகுமே
ஏசியாவது பேசுங்கோள் -இடைச்சிகள் போல் -அன்பால் ஏசினார்கள் அன்றோ
சிசுபாலனைப் போல் ஏசக்கூடாதே )
அவனுடைய குணங்களை வாழ்த்துவதே ப்ராப்தம் என்று நெஞ்சுக்கு உபதேசித்தார் கீழ்ப் பாட்டில்.
அவனுடைய ஸௌலப்பத்தை வாழ்த்துவதென்றால் அபசாரத்தில் போய் முடியுமே;
‘வெண்ணெய் திருடினான், இடைச்சி கையில் அகப்பட்டுக் கொண்டான். தாம்பினால் கட்டுண்டான், உரலோடு பிணிப்புண்டான்.
அடி யுண்டு அழுது ஏங்கினான்” என்று இப்படிப்பட்ட கதைகளைச் சொல்லி வாழ்த்துவது தானே ஸௌலப்ய குணத்தை வாழ்த்துகையாவது;
இவை பேசினால் சிசுபாலாதிகளோடு ஒப்போமன்றோ; இது நமக்குத் தகுமோ? என்று நெஞ்சு இறாய்க்க அதனை ஸமாதாகப்படுத்துகிறார் இதில்.
பரத்வம் அனுசந்திக்க -அந்த பெரியவன் எங்கே
நான் நீசன் -நைச்யம் பண்ணி விலகப் பார்க்க
சௌலப்யம் அனுசந்திக்க அபசாரம் ஆகுமே என்று இறாய்க்க
எம்பெருமான் பற்றிய பேச்சு ஏதாகிலும்
ஏத்துதலோ ஏசுதலோ ஏதாயினும் ஆயிடுக
எம்பெருமான் விஷயம் எனபது ஒன்றே போதும் பேசாய் என்கிறார்
அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே
இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத் திறங்கள்
ஏசியே யாயினும் ஈன் துழாய் மாயனையே
பேசியே போக்காய் பிழை –38-
———-
பேச என்று புக்கவாறே
போக்யமாய் நெஞ்சுக்குப் பொருந்தினவாறே
நாம் பார்த்த இடம் தப்பச் செய்தோமோ -நெஞ்சே -என்கிறார் –
தப்பச் செய்ய வில்லையே
நன்றாகவே செய்தோம் என்கிறார் –
(நெஞ்சு வியாஜ்யமாக
நாம் விலக்கப் பார்க்க கழுத்தைப் பிடித்து அவன் இடம் சேர்த்த ஆழ்வார்
சேர்ந்த பின்பு உள்ள போக்யத்தையில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
இங்கே இருந்து குணம் பாடுவதே புருஷார்த்தம்
வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ வைகுந்தம் என்று கொடுப்பது பிரானே )
“ஈன் துழாய் மாயனையே ஏசியே யாயினும் பேசியே போக்காய் பிழை” என்று
பகவத் கீர்த்தனமே பண்ணும்படி கீழ்ப்பாட்டில் நெஞ்சுக்கு உபதேசித்தார்.
“பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்குமழுக்ருடம்பும், இந்நின்ற நீர்மை யினியாமுறாமை” (திருவிருத்தம் -1) என்று
முதலடியிலே விண்ணப்பம் செய்தபடி இந்நிலம் அடித் கொதித்துப் பரமபரத்திலே விரைந்து சென்று
அங்கே நித்ய கைங்கரியம் பண்ண வேண்டியது ப்ராப்தமாயிருக்க அது செய்யத் தேடாமல் இங்கே இருந்து கொண்டு
அவனது திருக் குணங்களைப் பேசிக்கொண்டிருப்பது எதுக்கு? என்று திருவுள்ளத்தில் பட்டதாக, அதனை அநுவாதம் செய்கிறார் இப்பாட்டில் –
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை -அழைத்து ஒரு கால்
போய் யுபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே
வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு –39—
———
எம்பெருமானுடைய திவ்ய சரிதங்களைச் சொல்லிப் புகழ்வதில் ஆழ்வார் தமக்குண்டான ருசியின்
மிகுதியை வெளியிடுகிறாரிப்பாட்டில். நெஞ்சே! இப்படிப்பட்டதொரு வாய்ப்பு நமக்கு வேறொன்றில்லை;
இவ்வுலகத்திலுள்ளாரெல்லாரும் தங்கள் தங்கள் வாய் வந்தபடி கண்ட விஷயங்களையும் பாடிக்கொண்டு திரிபவர்களாயிருக்க,
நாம் மாத்திரம் அப்படியிராமே பகவானுடைய புகழ்களைப் பேசும்படியானவிது இவ்விருள் தருமாஞாலத்தில் ஸம்பவிக்கக் கூடியதோ? அல்ல;
ஆயினும் “விதிவாய்க்கின்று வாய்க்குங் கண்டீர் ” என்னுமா போலே தெய்வ யோகத்தாலே நமக்கு இப் பெரும் பாக்கியம் வாய்த்தது.
ஆனால் பகவத் குணங்களின் தூய்மையையும் நமது நாவின் எச்சில் தன்மையையும் நோக்கும் போது
‘வாக்குத் தூய்மையிலாயினாலே மாதவா வுன்னை வாய்க்கொள்ளமாட்டேன்” (பெரியாழ்வார் திருமொழி 5-1-1) என்றாற்போலே
இறாய்த்து நிற்கத் தோன்றுவதுண்டு; அப்படி நைச்சியம் பாவித்து பகவத் குணங்களைப் பேசாதிருப்பதானது சாஸ்த்ரங்களில்
ப்ரஸித்தமான நரகங்களிற் காட்டில் மிகக் கொடிய நரகமேயாம் என்று கருதவேண்டும்.
அப்படிப்பட்ட நரகத்தில் என்னை நீ தள்ளப் பாராமல் அவனுடைய சரிதைகளில் ஏதேனுமொன்றைச் சொல்லிக் கொண்டே யிருக்கப்பார்;
கஞ்சனாலேவப் பட்டுக் கண்ணபிரானைக் கொல்லக் கருதி முலையில் விஷந்தடவிக் கொண்டு பேய் வேஷத்தை மறைத்துத்
தாய் வேஷத்தோடு வந்து முலை கொடுத்த பூதனையைப் பாலுண்கிற பாவனையிலே முடித்த சரிதையைச் சொல்லிப் புகழப்பார்;
அவளுயிரை முடித்தாற்போலே நமது நைச்சியத்தையும் முடிக்க வல்லவன் அப்பெருமான் என்று கொண்டு
அவ்வரலாற்றைச் சொல்லி ஏத்தப் பார் என்று தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறபடி.
வாய்ப்போ இது ஒப்ப மற்றில்லை வா நெஞ்சே
போய்ப் போய் வெந்நரகில் பூவியேல்-தீப்பால
பேய்த்தாய் உயிர் கலாய் பாலுண்டு அவள் உயிரை
மாய்த்தானை வாழ்த்தே வலி –40-
—————
பூதநா ப்ரசங்கத்தாலே
மல்லரை நிரஸித்த படி சொல்லுகிறது –
(பூதனா சம்ஹாரம் தொடங்கி மல்லரை மாட்டியது பர்யந்தம் உண்டே
பூமி பலகாலம் -சாக்ஷியாக நிற்கும்
சத்தை பெற்றது -அவன் அன்று அழித்ததால்
பரம ஸூகுமாரமான திருக் கையால் செய்தானே -இனிமையில் ஆழங்கால் பட்டு மாய்ந்து போகாமல் உள்ளார்கள் –
என்று மூன்று நிர்வாகங்கள்)
பூதனையை முடித்த விஷயத்தைக் கீழ்ப் பாட்டில் பேசவே, அத்தோடு ஒரு கோவையான
மல்ல வத சரித்திரமும் நினைவுக்குவர, அதனை இப்பாட்டில் பேசுகிறார்.
முரட்டு மல்லர்களோடு நீ போர் செய்ய நேர்ந்த காலத்து
உனது ஸூகுமாரமான திருக் கைகளாலே அந்த மல்லர்களை நீ புடைக்கும் போது இவ்வுலகில் கண் இருந்த படுபாவி ஜனங்களெல்லாம்
“ஐயோ! நமது சரண்யனுக்கு என்ன தீங்க விளைந்திடுமோ!” என்று சிறிதும் வயிற்றெரிச்சல் படாதே கல்லாகக் கிடந்தவனே!
அந்தோ! என்று இன்று தாம் வயிற்றெரிச்சல் படுகிறார்.
வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர்
வலிய முடி யிடிய வாங்கி -வலிய நின்
பொன்னாழிக் கையால் புடைதிடுதி கீளாதே
பல் நாளும் நிற்குமிப்பார்–41-
———
ஸர்வேஸ்வரனே ஆஸ்ரயமாக வேண்டாவோ -என்கிறது –
(கீழே பூமி நிலை பெற்றது கண்ணனால்
அது மாத்ரமோ
இவன் ஒருவனே புகல் -சர்வ வித பிரகாரங்களில் ரக்ஷகன் இவனே
முன் படைத்தான் –பஹுஸ்யாம் ப்ரஜாயேய -மஹா பிரளயம் -அவாந்தர பிரளயம் இல்லை )
கீழ்ப் பாட்டில் இப் பார் என்ற இவ் வுலகத்தின் ப்ரஸ்தாவம் வரவே உலகிலுள்ள பிராணிகளின் தன்மைகளில்
ஆழ்வார்க்கு ஆராய்ச்சி சென்றது. ஸ்ரீமந்நராயணனையே ஸர்வ ஸ்வாமியென்ற கொண்டு பற்றாமல்
கண்ட தெய்வங்களின் காலிலே விழுந்து அலைந்து திரியும் ராஜஸ தாமஸப் பிராணிகள் விஞ்சி யிருக்கக் கண்டார்.
திருவுள்ளத்திலே பரிதாபம் தோன்றி, ஸ்ரீமந்நாராயணனுக்கு அடிமைப்பட்டிருக்கை தவிர
வேறொன்றும் தகுதியல்ல என்பதைக் காரணத்துடன் வெளியிடுகிறார்.
வேதங்களும் வைதிகர்களும் பல பல செயல்களை செய்து அருளினவன்-
ஸ்ரீ மன் நாராயணனே என்று சொல்ல-சர்வ பிரகாரங்களாலும் அவனே ரஷகனாய் இருக்க-
மற்று ஒருவருக்கு சேஷப்பட்டு இருக்க வழி இல்லையே –
பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன் படைத்தான் என்பரால் -பாரிடம்
ஆவானும் தானானால் ஆரிடமே மற்று ஒருவர்க்கு
ஆவான் புகவாலவை–42-
————–
பிரபல பிரதிபந்தகங்களைப் போக்குமவனைப் பற்றாதார்க்கு வரும்
மநோ துக்கங்களைப் போக்க ஒண்ணாது
ஸ்ரீமந்நாராயணனே பரதேவதை என்று கீழ்ப்பாட்டிற் சொன்னதையே மற்றொரு முகத்தாலும்
ஸ்தாபித்துக் கொண்டு அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செய்பவர்கட்கன்றி
மற்றையோர்க்குத் துன்பங்கள் நீங்க வழியில்லை யென்கிறார்.
ஸாமாந்யரான உலகர்கள் எந்தத் தெய்வங்களைப் பரதேவதை யென்று கொள்ளுகின்றார்களோ
அந்தத் தெய்வங்களும் தங்கள் தங்களுக்கு ஆபத்து நேருங் காலங்களில் ஸ்ரீமந்நாராயணனையே அடி பணிந்து
உய்ந்து போகின்றன என்பதை முன்னடிகளில் அருளிச்செய்கிறார்.
அவயம் என நினைந்து வந்த சுரர் பாலே
நவையை நளிர்விப்பான் தன்னை -கவையில்
மனத்து உயர வைத்திருந்து வாழ்த்தார்க்கு உண்டோ
மனத் துயரை மாய்க்கும் வகை–43-
———–
இதுக்கு பட்டர் ஒருபடியும்
பிள்ளை திரு நறையூர் அரையரும் ஒரு படியும்
அருளிச் செய்வர்
(பண்டைய கர்மங்களின் பலனே வாழ்த்தாது இருக்கிறோம் என்றும்
பாடாததே-வாழ்த்தாதே இருப்பதே பாபம் என்றும்
வாழ்த்தாது இருப்பார் இது வன்றே மேலைத் தாம் செய்யும் வினை -முற்கால கர்ம பலன் என்றும்
வாழ்த்தாது இருந்தால் மேல் உள்ள காலங்களில் கர்மங்களை சேர்ப்போம் என்றும்
இதனாலே பாபம் –பட்டர்
பாபத்தாலே இது -அரையர்
என்றும் இரண்டு நிர்வாகங்கள் )
இப்பாட்டுக்குப் பிள்ளைதிருநறையூரரையர் ஒரு படியாகவும்
பட்டர் ஒருபடியாகவும் நிர்வஹிப்பராம்.
அரையர் நிர்வஹித்தபடி எங்ஙனமே யென்னில்; –
வகை சேர்ந்த நல்நெஞ்சும் = எம்பெருமானுடைய ஏதோ வொரு குணத்திலும் ஏதோவொரு சரித்திரத்திலும் பொருந்தி நின்ற நல்ல மனமும்,
அந்த ஒரு குண சேஷ்டிதத்தையே பேசிப் புகழ்ந்து கொண்டிருக்கிற நாவோடு கூடின வாக்கம் அப்பெருமானுடைய
எல்லாக் குணங்களிலும் எல்லாச் சரித்திரங்களிலும் பொருந்தி மேல் விழுந்து அநுபவிக்கமாட்டா திருந்தனவேயாகிலும்,
எப்படியாவது கஷ்டப்பட்டு ஸகல குணங்களிலும் ஸகல சரித்திரங்களிலும் நெஞ்சு பொருந்தும்படி செய்து கொண்டு
ஸர்வேஸ்வரனை அநுபவித்து மங்களாசாஸநம் பண்ண வேண்டியிருக்க,
அங்ஙனே பண்ணாதிருக்கிறார்கள் ஸம்ஸாரிகள் ;
இஃது ஏன்? என்றால், முற்காலத்தில் அவர்கள் செய்த பாவமே இதற்குக் காரணம் – என்பதாக அரையர் நிர்வாஹம்.
பட்டர் நிர்வாஹமெங்ஙனே யென்னில்; –
ஆத்மாவினுடைய ஞானம் வெளியில் ப்ரஸரிப்பதற்கு வழியாக அமைந்திருக்கின்ற நெஞ்சும், எம்பெருமானைப் பேசுகைக்கு
யோக்யமான நாவோடு கூடினவாயும் ரஜோ குணமும் தமோ குணமும் மிக்க ஸ்வயமாகவே பகவத் விஷயத்திற் படிந்த வில்லையே யாகிலும்,
‘நம்மை ஈஸ்வரன் படைத்தது ஏதுக்கு? நமக்குக் கை கால் முதலிய கரண களேபரங்களைக் கொடுத்தது ஏதுக்கு?’ என்று
ஆராய்ச்சி செய்து பகவத் விஷயத்திலே பல்லாண்டு பாட இழிய வேண்டியது ப்ராப்தமாயிருந்தும் பாழும் ஸம்ஸாரிகள்
பகவத் விஷயத்தில் அடியோடு இழியாதிருக்கிறார்களே, இது வரையில் மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து ஸம்ஸாரிகளா யொழிந்தது போராதா?
இனி மேலாவது நல்ல வழி போகத் தேடலாகாதா?
மேலுள்ள காலமும் நித்ய ஸம்ஸாரிகளா யிருப்பதற்கே யன்றோ இப்படி பாபிகளாய்த் திரிகிறார்கள்! – என்பதாம்.
வகை சேர்ந்த நல் நெஞ்சம் நாவுடைய வாயும்
மிக வாய்ந்து வீழா வெனிலும்-மிக வாய்ந்து
மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பார் இது வன்றே
மேலைத் தாம் செய்த வினை–44-
————
நீர் இதில் செய்தது என் என்னில்
பிரிந்தால் வரும் அநர்த்தத்தை நினைத்து அவன் திருவடிகளை ஏத்தினேன்-என்கிறார்
(ஆழ்வாருக்கு -வினை என்றாலே பகவத் விஸ்லேஷம் தானே
தினை ஆம் சிறிது அளவும்-அதி அல்ப காலமும் )
மாறி மாறி பல பிறவிகள் எடுத்து இருந்தாலும்-
இனி மேல் பிறவாமைக்கு வழி தேடிக் கொண்டேன் என்கிறார் –
வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி
தினையாம் சிறிது அளவும் செல்ல -நினையாது
வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும்
நாயகத்தான் பொன்னடிகள் நான் –45-(வெம்மையையே -பாட பேதம் )
————-
கீழே தேஹ யாத்ரை செல்லும்படி சொல்லிற்று
இதில் ப்ராப்ய பிராப்பகங்கள் அவனே என்று நினைத்து இரு என்கிறார் –
(கீழே பொன் அடிகள் -உபாயமாகவும் ப்ராப்யமாகவும் இருக்குமே-ஸூஷ்மமாகக் கோடி காட்டினார்
இத்தை வியக்தமாக இதில்
வெந் நரகில்–கொடிய ஸம்ஸாரத்திலே- சேராமல் காப்பதற்கு நீ கதியாம்-உபாயமாகவும்
செங் கண் மால் -நீங்காத-மா கதி-பரம ப்ராப்யம்
மீளுதலாம் ஏதமிலா விண்ணுலகில் ஏகம் எண்ணும் மாறன் -தாள தாமரை பாதிக நூற்று அந்தாதி பாசுரம் )
இரண்டும் கதி
மா கதி சிறப்பு -ப்ராப்யமாகவே கொள்ள வேண்டுமே
(நாலாயிர சுருக்கமே இதுவே தானே
அவனாலே அவனை அடையுங்கோள் -இதுவே ஆழ்வார்கள் உபதேசம் நமக்கு
ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே)
உபாய உபேயங்கள் இரண்டும்-எம்பெருமான் ஒருவனே என்னும் உறுதியை
அருளிச் செய்கிறார் –
நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள் நாளும்
தேங்கோத நீருருவம் செங் கண் மால் -நீங்காத
மா கதியாம் வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதியாம் நெஞ்சே நினை –46-
—–
நீர் நம்மை ப்ராப்யமாகும் ப்ராபகமாகவும்
நம்மை ஏத்துகையே தேஹ யாத்ரையாகவுமாக இரா நின்றீர்
இதுக்கு விபரீதமாய் இருப்பான் என் சம்சாரம்-என்ன
உன் கடாக்ஷம் இல்லாதபடி இருக்கை குற்றமோ என்கிறார் –
(நாம் கேட்பதாகவும் பெருமாளே வெறுப்பில் கேட்பதாகவும் கொண்டு
உனது கடாக்ஷம் என் அளவிலே இன்று பலித்ததே
இன்றாக நாளையாக -என்றாவது பலிக்குமே )
கீழ்ப்பாட்டில் எம்பெருமானே உபாயமும் உபேயமும் என்ற உறுதியை வெளியிட்ட
ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
“ஆழ்வீர்! இப்படிப்பட்ட உறுதி உமக்கு மாத்திரமே யன்றோவுள்ளது; மற்றையோர்க்கு இல்லையே.
எல்லாரும் என்னை உபாயமாக மாத்திரம் பற்றுகிறார்களே யன்றி உபேயமாகவும் பற்றுகிறார்களில்லையே.
‘ஸம்பத்தைக் கொடு. ஸந்தனத்தைக் கொடு’ என்று சில க்ஷுத்ர புருஷார்த்தங்களை வேண்டிப் பெற்றுக் கொண்டு
ஒழிந்து போகிறார்களே யல்லது ‘நீயே எமக்கு வேணும்’ என்று என்னையே புருஷார்த்தமாக விரும்புவாரைக் கிடைக்க வில்லையே!;
உமக்காவது இதை வுறுதி நிலைத்து நிற்குமா?” என்று கேட்க;
அதற்கு உத்தரமாக அருளிச் செய்கிற பாசுரம் போலும் இது.
நினைத்து இறைஞ்சி மானிடவர் ஓன்று இரப்பர் என்றே
நினைத்திடவும் வேண்டா நீ நேரே -நினைத்து இறைஞ்ச
எவ்வளவர் எவ்விடத்தோர் மாலே அது தானும்
எவ்வளவும் உண்டோ எமக்கு –47-
———-
எமக்கு பிரபல பிரதிபந்தகம் போக்குமவனை உபாயமாக நெஞ்சிலே கொண்டு
அவனால் பெறுவதும் பரம பதம் என்று நினைத்து இருந்தோம்
இது அன்றோ இருக்கும் படி என்கிறார் –
இப்பாட்டிலும் தமது உறுதியை பேசுகிறார் –
பரமபதம் பாரித்து இருந்தோம் என்றும்-வேண்டாம் என்று இருந்தோம்
பாவோ நான் யத்ர கச்சதி –
அச்சுவை பெறினும் வேண்டேன்
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் போலேவும்-
எமக்கி யாம் விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை
அமைத்து இருந்தோம் அஃது அன்றே யாம் ஆறு அமைப் பொலிந்த
மென் தோளி காரணமா வெம்கோடு ஏறு ஏழுடனே
கொன்றானையே மனத்துக் கொண்டு –48-
———
அவனே ப்ராபகன் –என்று அறுதி இட்டாருக்கு
சரீர அவசானத்து அளவும் இருக்கும் படி சொல்லுகிறது
(இருக்கும் நாளில் உகந்து அருளினை நிலங்களில் குண அனுபவமே போது போக்காகக் கொள்ள வேண்டும்
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
இதில் அனுபவம் சொல்கிறது
யுக்த க்ருத்யம் ரஹஸ்ய த்ரய சாரத்தில் தேசிகர் )
இங்கே இருந்து குணாநுபவம் செய்து கொண்டு இருந்தாலும்
திவ்ய மங்கள விக்ரஹம் சேவிக்க ஆசை உண்டாகுமே
அத்தால் அலமாப்பு அடைகிற படியை அருளிச் செய்கிறார் –
கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத் தான் -கண்ட நாள்
காருருவம் காண்டோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார்
பேருருவம் என்று எம்மைப் பிரிந்து –49-
————–
உபமானங்களைக் கண்டு உபமேயம் என்று இருக்கும்படியான எம்மை
இவர் நோக்காது ஒழிவதே -என்று வெறுக்கிறார்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும்-திருவாய் -2-7-6- -என்னும்படியை எண்ணுகிறிலர்
அவன் கொடுத்த சரீரம் கொண்டு ருசி பிறந்த பின்பு
இவனைத் -இறைத்-தாழ்த்ததும் குற்றமாய்த் தோன்றா நின்றது
தான் பரிக்ரஹித்த சரீரம் தோறும் அவஸர ப்ரதீஷனாயத்
தம் பக்கல் முகம் பெறாதே திரிந்தது தோற்றுகிறது இல்லை
இத் தலையில் அபேக்ஷை பிறந்தால் அவனுக்கு வாராதே இருக்கை முறை அன்று போலே காணும்
பிரஜை எல்லாத் தீம்பும் செய்ததே யாகிலும் பசித்த போது சோறு இட்டிலள் யாகில்
தாய்க்குக் குற்றமாகக் கடவது இறே
(நச்சுப் பொய்கை ஆகாமல்- நாடு திருத்த- பிரபந்தம் தலைக்கட்ட- ஆழ்வாரை வைத்தான் அன்றோ
வீடு திருத்தவும் கால விளம்பம் வேண்டுமே -ஆஸ்ரிதர் இடம் எளியவன் என்பதையே பார்த்தேன்
கேசியை நிரசித்த வண்மையைப் பார்க்க வில்லையே )
எம்பெருமானுடைய திருவுருவத்திற்குப் போலியான பொருள்களைக் கண்ட போதெல்லாம் தாம்
பாவநா ப்ரகர்ஷத்தாலே அவற்றினருகே போய் அநுபவிக்கப் பாரிக்கிற படியைப் பேசினார் கீழ்ப்பாட்டில்.
அருகே சென்றவாறே அவை உபமான பதார்த்தங்களாகவே
(அதாவது- மேகமாகவும் கடலாகவும் இருளாகவும் பூவைப் பூவாகவும்)
இருக்குமே யன்றி உபமேயமான எம்பெருமானாக இருக்க மாட்டாவே;
“ஐயோ! நாம் எம்பெருமானையே ஸாக்ஷாத்தாக ஸேவிக்கப் பெற்றோமென்று களித்திருந்தோமே;
இப்படி அந்யதா ஜ்ஞாநமாகவா முடிந்து விட்டது!” என்று வருத்தமுண்டாகி,
‘எம்பெருமான் நம்மை இப்படியே வருத்தப் படுத்தி வருகிறானே யொழிய ஒரு காலும் அவன் திருவுள்ளத்தில்
இரக்கம் பிறப்பதில்லையே!; என்ன கல் நெஞ்சோ!’ என்று வெறுக்கிறார்.
பிரிந்து ஓன்று நோக்காது தம்முடைய பின்னே
திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை புரிந்து ஒரு கால்
ஆவா வென இரங்கார் அந்தோ வலிதே கொல்
மா வாய் பிளந்தார் மனம்–50-
—————–
(கீழே வலிய மனம் கொண்டவன் என்று வெறுத்து அருளிச் செய்தார் அன்றோ
அநேக காலம் ஆபி முக்யம் காட்டி விலகி நின்ற நாம் அவன் முயற்சியால் அத்வேஷம் லேசம் பிறந்து
பசித்த குழந்தைக்கு சோறு இடும் தாய் போல்
ருசி வந்த உடனே அனுக்ரஹித்து மேலே மேலே வளர்த்து உபகரிப்பவன் அன்றோ
ஸ்ரீ வித்துவக்கோடு அம்மானையே பார்த்து இருக்க அருளிச் செய்த ஸ்ரீ குலசேகரப் பெருமாள் போல் இந்த பாசுரம் )
சேஷ பூதன் சேஷி செய்த படி கண்டு இருக்கும் அத்தனை அல்லது
வெறுத்துத் தப்பச் செய்தோம்–என்கிறார்-
கீழ்ப்பாட்டில் “மாவாய் பிளந்தார் மனம்- அந்தோ! வலிதே கொல்” என்று
எம்பெருமானைக் கல் நெஞ்சனாகச் சங்கித்தார்; உடனே தம் ஸ்வரூபத்தை ஆராய்ந்து பார்த்தார்;
சேஷியான எம்பெருமான் விஷயத்திலே சேஷ பூதர். இப்படிச் சொல்லத் தகாதென்று விவேகமுற்று,
எம் பெருமான் திருவுள்ளமானபடியே செய்யக் கடவன்; அவனை நாம் நிர்ப்பந்திப்பதென்பது தகுதியன்று;
நம்முடைய இந்திரியங்களையெல்லாம் அவன் பக்கலில் ஊன்ற வைத்து அவனது திருவடித் தாமரைகளை ஸேவித்துக்
கொண்டிருப்பதேயன்றோ நமக்கு ஸ்வரூபம்” என்று அருளிச் செய்கிறார் இப் பாட்டில்.
மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை
சினமாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து -புனமேய
தண் துழாயான் அடியைத் தான் காணும் அஃது அன்றே
வண் துழாம் சீரார்கு மாண்பு –51-
———
(ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மாண்பு எது என்று பொதுவாக கீழே சொல்லி
இதில் தமக்கு திரிவிக்ரமன் கண்ணன் ஒருவரையே சேர்ந்து
பெற்ற அனுபவத்தை வெளியிட்டு அருளுகிறார்
உலகமாகத் தொட்ட அவதாரத்தையும் ஊராகத் தொட்ட அவதாரத்தையும் தாழ நின்ற ஸ்பர்சித்தவன் அன்றோ
எண்ணக் கண்ட விரல்களால் உண்ணக் கண்ட தனது ஊத்தை வாய்க்கு கவளம் போடுகிறார்களே -பெரியாழ்வார்
வாய் அவனைத் தவிர வாழ்த்தாது போல் இங்கும் )
பொதுவிலே சொன்னேன்
அது தான் எனக்கு உண்டாயிற்று -என்கிறார் –
மாண் பாவித்து அந் நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான் நம்
கண் அவா மற்று ஓன்று காணுறா சீர் பரவாது
உண்ண வாய் தானும் உறுமோ ஓன்று –52–
———–
(செங்கண் மாலே -கலங்கிய உனக்கு தெளிந்த அடியேன் சொல்ல வேண்டுமே –
இப்படிப்பட்ட உன்னை நினைந்து பரம ஆனந்தம் கொண்ட நாம் வேறே ஒன்றைப் பார்ப்பேனோ -நினைப்பேனோ )
என்னுடைய இந்திரியங்களும் உன்னை அனுபவிக்கும் படி யாயிற்று -என்ன
அவ்வளவேயோ –
இன்னும் சில யுண்டு காணும் உமக்குச் செய்யக் கடவது என்ன
எனக்குச் செய்யாதது உண்டோ -என்கிறார் –
கீழ்ப்பாட்டில், ஆழ்வார் தம்முடைய இந்திரியங்கள் எம்பெருமான் விஷயத்திலே
ஆழ்ந்தபடியைப் பேசி ‘இனிமேல் தமக்கு ஒரு குறையுமில்லை; தாம் க்ருத க்ருத்யாக ஆய்விட்டார்’ என்று தோற்றுமாறு
இருந்ததைக் கண்ட எம்பெருமான், ‘அந்தோ! ஆழ்வார் இவ்விருள் தருமா ஞாலத்தில் இருந்து கொண்டே இப்படி களிக்கிறாரே;
இவ்வநுபவம் இவர்க்கு நித்தியமாய்ச் சொல்லுமோ? ஸ்ரீவைகுண்டம் பெற்றாலன்றோ அநுபவ பூர்த்தியுள்ளது’ என்று
திருவுள்ளம் பற்றி அந்த ஸ்ரீவைகுண்டத்தையும் ஆழ்வார்க்குத் தந்தருள்பவன் போல விளங்கினான்;
அதனைக் கண்ட ஆழ்வார் “இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகாமளுமச்சுவை பெறினும் வேண்டேன்” என்றாற்போல
‘இந்த குணாநுபவத்திற்காட்டிலும் ஸ்ரீவைகுண்டமென்பது போக்யமோ? பிரானே!’ என்கிறார்.
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-
————
உம்முடைய பிரதிபந்தகம் செய்தது என் -என்ன
நானும் அறிகிறிலேன் -என்கிறார் –
கீழ்ப்பாட்டில் ‘வைகுந்தம் இனிதன்றே’ என்றுரைத்த ஆழ்வாரை நோக்கிச் சிலர்,
‘இவ்வீபூதியில் எவ்வளவுதான் குணாநுபவம் பண்ணினாலும் பிரதிபந்தகங்கள் கூடவே யிருக்கிற நிலமாதலால்
இவ்வநுபவம் நிலைநிற்கக் கூடியதன்றே; பிரதிபந்தகங்களுக்கு அஞ்சி யிருக்க வேண்டியதுதானே’ என்று சொல்ல;
பகவத் விஷயத்தில் நான் இழிந்தவறே பிரதிபந்தகங்கள் போன விடம் தெரியவில்லை என்கிறார்.
வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54-
————
(பிரதிபந்தகங்கள் போன பின்பு பலம் அனுபவிப்பதே கர்தவ்யம்
அவனே வந்து காட்டக் கண்டு விலக்காமல் அனுபவிக்கலாம் )
எம்பெருமானைத் தம் முயற்சியாலே பெற நினைப்பார்க்கு அவன் ஒரு நாளும் கிட்ட முடியாதவனேயாகிலும்,
அவன்றானே தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே என்னெஞ்சினுள்ளே வந்து புகுந்ததனனாதலால்
எனக்கு அவன் எப்போதும் ஸேவிக்க எளியவனாகவே யிராநின்றானென்கிறார்.
மருங்கோத மோதும் மணி நாகணையார்
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே
எமக்கு அவரைக் காணலாம் எப் பொழுதும் உள்ளால்
மனக் கவலை தீர்ப்பார் வரவு –55-
————
(உபாயம் அனுஷ்டிப்பவன் அவன் தானே நம்மை பெற்று
மகிழ்ந்து நம்மையும் மகிழ்விக்க
அனுபவமே நமது கர்தவ்யம்
தானும் அறியாதே ஸாஸ்திரமும் சம்மதியாதே
தானே அறிந்த ஸூஹ்ருத விசேஷம் வியாஜ்யமாக அருளுபவர் அன்றோ )
எல்லாருக்கும் அருகும் செல்ல அரியவன்
உமக்கு எளியனான படி என் -என்ன
நானும் அறியேன் -என்கிறார் –
எல்லார்க்கும் அருமைப் படுமவன் உமக்கு எளியனானது எப்படி? என்று சிலர் கேட்க;
அவனுடைய நிர்வேஹதுக க்ருபைக்கு அடி அறிய முடியாதாகையாலே, எந்த வழியாலே இந்த பாக்கியம் வந்ததென்று
என்னாலும் நிரூபிக்க முடியாது.
காரணம் எதுவானாலென்ன? வாழ்ச்சி நன்றாயிருக்கின்றதத்தனை என்கிறார்.
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–56—
———–
இவ் விருள் தரு மா ஞாலத்தில் உள்ளவரைக்கும் ப்ரதிபந்தகங்கள் மேலிட்டுக் கொண்டேயிருக்குமே!
என்று ஆழ்வாருடைய நெஞ்சு தளும்ப.
அதனை ஆழ்வார் ஸமாதானப்படுத்துகிறார் இதில்
அவ் வெம்பெருமானுடைய சக்தி எப்படிப்படட்து தெரியுமோ வுனக்கு?
ஆச்ரிதனான ஒரு ப்ரஹ்லாதனுக்குப் பக்ஷபாதியாயிருந்து
அவனுடைய ப்ரபல ப்ரதிபந்தகமாயிருந்த இரணியனைக் களைந்தொழித்தவனன்றோ அவன்;
அப்படிப்பட்டவன் நம்முடைய ப்ராப்தி ப்ரதிபந்தங்களைத் தொலைத்தருளானோ?
தொலைத்தே யருள்வன்;
நீ ஏன் வீணாகக் கவலைப்படுகிறாய் நெஞ்சே!; கவலையை விட்டொழிந்து தைரியமாய் இரு- என்றாராயிற்று.
பிரதி பந்தகங்கள் நிறைந்த இடமே என்று நெஞ்சு தளும்ப சமாதானம் படுத்துகிறார் இதில்–
கோளரியின் உருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூர் உகிரால் குடைவாய் -பெரியாழ்வார்–
வளை யுகிர் ஒளி மொய்ம்பில் மறவோனது ஆகம் மதியாது சென்று ஒரு உகிரால்
பிள எழ விட்ட குட்டமது வையம் மூடு பெரு நீரில் மும்மை பெரிதே -திரு மங்கை ஆழ்வார்
வழித் தங்கு வல் வினையை மாற்றானோ நெஞ்சே
தழீ இக் கொண்டு பேராவுணன் தன்னை சுழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றி புலால் வெள்ளம் தானுகள
வாழ்வடங்க மார்விடந்த மால் –57-
———
இனி உன்னுடைய அனுபவத்துக்கு அவிச்சேதமே வேண்டுவது -என்கிறார்
(திவி வா புவி வா மமஸ்து வாஸோ நரகே வா நரகாந்தக பிரகாமம்
அவதீரிதா சாரதார விந்தவ் சரணவ் தே மரணே அபி சிந்தயாமி –முகுந்த மாலை ஸ்லோகமும் இதே போல் உண்டே
இங்கேயே பரமபதத்தில் உள்ளார் போல் மறப்பின்னை ஆகிற பெரும் செல்வம் வேண்டும் என்கிறார் சமத்காரமாக )
கீழ்ப் பாட்டில் “அவு ணன்றன்னை மார்விடந்தமால் – வழித்தங்க வல்வினையை மாற்றானோ நெஞ்சே!”
என்று தமது நெஞ்சை நோக்கி ஆழ்வார் சொன்னதை எம்பெருமான் கேட்டருளி
‘ஆழ்வீர்! நான் * வழித்தங்கு வல்வினையை மாற்றுவது மாத்திரமோ செய்வேன், உம்மைப் பரமபதத்திலே கொண்டு சேர்ப்பதும் செய்வேன் காணும்’ என்றருளிச் செய்ய;
அது கேட்ட ஆழ்வார் ‘பிரானே! அடியேன் பரமபதத்தை விரும்புகின்றேனல்லேன்;
இதுவரை * மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்தது போலவே இன்னமும் பலபிறவிகள் பிறக்கப்பெறினும் வருத்தமில்லை;
அடியேனை இனிப் பிறவாதபடி பண்ணித் திருநாட்டிலே வைத்து
அத்தாணிச் சேவகத்திற்கு ஆளாக்கிக் கொள்ள வேணுமென்று வேண்டுகின்றேனல்லேன்;
நீ என்னை மறவாதிருக்க வேணும், உன்னை நான் மறவாதிருக்கவேணுமென்னு மித்தனையே அடியேன் விரும்புவது.
நீ என்னை மறாவதிருக்கையாவது – உன்னுடைய திவ்யாத்ம குணங்களையும் திவ்ய மங்கள் விக்ரஹ குணங்களையும்
இப்போது நானநுபவிக்குமாறு எங்ஙனே அருள் செய்திருக்கிறாயோ இப்படியே மேலுள்ள காலமும் அருளி செய்கையேயாம்;
உன்னை நான் மறவாதிருக்கையாவது- இப்போது உன்னை அநுபவிப்பது போலவே எந்நாளும்மநுபவிக்கையாம்.
ஆக இவ்வளவே அடியேன் பிரார்த்திக்கும் ஸம்பத்து – என்கிறார்.
மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-
————
(நித்யம் மறவாமை -என்று பிரார்த்தித்த மாத்திரத்தாலே –தத் அபிஷந்தி விராத மாத்ராத் –
பரமபத பிராப்தியும் -அதுக்கடியான கர்ம நிவ்ருத்திகளும் உண்டே
அத்தை இங்கே அருளிச் செய்கிறார்
அனுகூல்ய சங்கல்பம் மாத்திரத்தாலே பேறு அன்றோ
நமனும் உதகலனும் பேச கேட்கவே நரகமே ஸ்வர்க்கமாகுமே )
இவ்விருள் தருமா ஞாலத்திலே எப்படிப்பட்ட ஞானியர்களும் ப்ரக்ருதி ஸ்வபாவங்களை உதறித் தள்ளிவிட்டு
எம்பெருமானுடைய திருக்குணங்களை அநுபவித்துக் கொண்டே யிருந்தாலும்,இடையிடையே இந்நிலத்தின் காரியம் நிகழ்ந்தே தீருமிறே.
இல்லாவிடில் இருள் தருமாஞாலமென்று இவ்விபூதியின் பெயர் பொய்யாகுமே; இருள் இடையிடையே கலந்து பரிமாறுமிறே.
கீழே சில பாட்டுக்களாலே ஆச்சரியமாக பகவத்குணாநுபவஞ் செய்து வந்த ஆழ்வார்க்கு
இந்த ஸம்ஸார நிலத்திற்குரிய துன்பங்களின் ஸம்பந்தம் தோன்றத் தொடங்கிற்று;
தொடங்கவே, திருவுள்ளம் நொந்து பேசுகிறார்-;
திருப்பாற்கடலிலே அலைகள் துடைகுத்தத் திருக்கண் வளாந்தருளாநின்ற திருமாலின் திருநாமங்களை நாம்
அநுஸந்திக்க வேணுமென்று சிந்தித்த மாத்திரத்திலே யிருக்க
இன்னமும் இவ்விடத்திலேயே சுற்றுக் காலிட்டுக்கொண்டு திரிகின்றனவே,
முன்போல இன்னமும் நம்மிடத்திலேயே தங்கியிருக்கலா மென்று நினைத்திருக்கின்றனவோ? என்கிறார்.
கீழ் ஐம்பத்து நான்காம்பாட்டில் “வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ கானோவொருங்கிற்று” என்று
வல்வினைகள் போனவிடம் தெரியவில்லை யென்றருளிச்செய்த ஆழ்வார் திருவாக்கிலே மீண்டும்
“வல்வினையார் காடானுமாதானும் கைக்கொள்ளார்” என்கிற இப் பாசுரமும் வெளி வரும்படியாயிருக்கிறகிறே
இவ்விருள் தருமாஞாலத்தின் கொடுமை!.
இருள் தரும் மா ஞாலத்திலே இருள் இடை இடையே கலந்து-பரிமாறும் இறே-
பகவத் குணங்களை அனுபவித்த ஆழ்வார்-
சம்சார தண்மை தோன்றத் தொடங்க திரு உள்ளம் நொந்து பேசுகிறார் –
மாடே வரப் பெறுவாராம் என்றே வல் வினையார்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார் -ஊடே போய்
பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து –59-
————-
(ஈஸ்வரனை ஒளிந்தவர் ரக்ஷகர் அல்ல என்று ப்ரபன்ன பரித்ராணத்தில் சொன்னோம்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்
கண்ணில்லை மற்ற ஓர் கண்ணே )
வல்வினைகள் தம்மை அடர்க்க நினைக்கிறபடியைப் பேசினார் கீழ்ப்பாட்டில்;
அவை அடர்ந்தாலும் தம்முடைய அத்யவஸாயம் ஒரே உறுதியாயிருக்கும் படியைப் பேசுகிறாரிதில்.
நெஞ்சே! திருத்துழாய் மாலையை அணிந்தள்ள திருமாலின் போக்யதையில் நீ பழகினவனன்றோ?
உனக்கு நான் புதிதாக உபதேசிக்க வேண்டுவதன்றே? அந்த போக்யதையில் நீ யீடுபட்டு வேறு எந்த வஸ்துவிலும் கண் செலுத்தாமல்
அவ்வெம்பெருமானொருவனையே பின்பற்றி நிற்க வேண்டியது உன் கடமை; இந்த ஸ்வரூபம் கெடாதபடி நின்றாலும் நில்லு;
நிற்காமல் லிஷயாந்தாங்களைப்பற்றி முடிந்து போவதானாம் போ; உன்னை நான் நிர்ப்பந்திக்க மாட்டேன்;
ஆனால், நம்மை நரகத்துக்குப் போகாதபடி தடுத்துக் காத்தருளவல்ல கடவுள் அவனைத் தவிர வேறொருவன்
எங்குமில்லை யென்பதை மாத்திரம் உனக்கு உறுதியாய்ச் சொல்லுவேன்;
இதனை விஸ்வஸித்து நீ அப்பெருமானையே அநுவர்த்தித்து உஜ்ஜீவிப்பாயாகில் உகக்கிறேன்;
இல்லையாகில் தான் தோன்றியான நெஞ்சு போகிறபடி போய்த் தொலையட்டும் என்று வெறுத்திருக்கிறேன் –என்றராயிற்று.
பேர்ந்து ஓன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன் துழாய் மாயனையே என்னெஞ்சே-பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லை காண் மற்றோர் இறை–60–
———–
லோக யாத்ரையை-ஆகாசத்தைப் பார்க்கையே லோக யாத்ரை – அனுசந்திக்கப் புக்காலும்
அவனை முன்னாக அல்லது காண மாட்டாமை சொல்லுகிறது
சிறியாச்சான் –
சப்தாதி விஷயங்களில் நின்றும் நாம் மீள மாட்டாதால் போலே
ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் நின்றும் மீள மாட்டார்கள் –என்று
நம் பிள்ளைக்குப் பணித்தான்
ப்ரஹ்மாதிகளுக்குப் பரம பதத்தில் இருக்கும் இருப்பு அனுபவிக்க நிலம் அன்று
உகந்து அருளின இடங்களிலே அனுபவிக்கும் அத்தனை
(நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள் -காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்
எங்கு இருந்தாலும் உத்பலா விமானம் பார்ப்பாள் பரகால நாயகி
நாமோ அங்கே இருந்தாலும் உத்பலா விமானம் தெரியாது )
ஆழ்வார் இவ்விருள் தருமாஞாலத்தின் தன்மைகளைச் சிந்திக்கிற போது ஒன்றுந்தோன்றாமல்
ஆகாசத்தை நோக்கிக் கிடப்பண்டு;
“நலத்தால் மிக்கார் குடத்தைக் கிடந்தாய்! உன்னைக் காப்பான் நானலாப்பாய் ஆகாயத்தை நோக்கியழுவன் தோழுவனே” என்ற
திருவாய்மொழியில் அருளிச்செய்தபடியே ஆகாசத்தை நோக்க நேருவதுமுண்டு;
ஏதோவொரு காரணத்தினால் ஆகாசத்தை நோக்கினார் ஆழ்வார்; ஆகாசமடங்கலும் நக்ஷத்ர மயமாகக் காணப்பட்டது;
உலகத்தில் எந்த வஸ்துவைக் கண்டாலும் பகவத் ஸம்பந்தத்தை முன்னிட்டே அந்த வஸ்துக்கள் ஆழ்வாருடைய திருவுள்ளத்திற்கு
விஷயமாகுமே யன்றி ஸாமாந்யமான லௌகிக வஸ்துவாக விஷயமாகா தாகையாலே இந்த நக்ஷத்ரங்களிலும் பகவத் ஸம்பந்தத்தை
முன்னிட்ட உத்ப்ரேக்ஷை திருவுள்ளத்திற்படவே அந்த அத்ப்ரேக்ஷையை இந்தப் பாசுரத்தினால் வெளியிடுகிறார்.
நஷத்ரங்கள் விஷ்ணு பதம் என்னும் ஆகாசத்தில் நிரம்பி-உலகு அளந்த திருவடிகளிலே தாது நிறைந்த புஷ்பங்களை-தூவினது போலே-ஆழ்வார் திரு உலகு அளந்த விருந்தாந்ததிலே ஊறி இருந்த படி –
இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந் நாள்
மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்–61-
———–
(த்ரிவிக்ரம அனுபவம் பின்னாட்டுகிறது இதிலும் )
கீழ்ப்பாட்டில் “இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்தவந்தந்நாள்” என்று
உலகளந்த வரலாற்றைச் சிறிது பிரஸங்கிக்கவே, பின்னையும் அதனை ஒருவாறு வருணித்ததுப் பாசுரங்பேச விருப்பமுண்டாகி
ரூபகாலங்கார (உருவகவணி) ரீதியிலே அருளிச்செய்கிறார்.
ஆகாசம் குடையாக அருளிச் செய்ய பொருத்தமான வற்றை அருளிச் செய்கிறார் –
மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான் குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-
————
(அவதாரம் முடித்து ஷீராப்தி அடைந்தது போல்
மேகம் திரும்ப வந்தது போல் என்றால் லிங்க குறை வரும்
படி -சொல் அத்யாஹாரம் தருவிக்க வேண்டிய குறையும் உண்டே
ராமனின் தன்மைக்கு மேகத்தின் தன்மை உவமானம் தன்மை படி
பரன் -வாய்மைத்து அஃறிணை கூடாதே வாய்மையன் வசனம் மாறாடிக்கொள்ள வேண்டுமே
மேகம் அவன் மீண்டால் போல் என்று நம்பிள்ளை நிர்வாகம் )
முன்னோர்கள் இப்பாட்டை இரண்டு மூன்றுவகையாக அந்வயிக்கப் பார்த்தார்கள்;
தசரத சக்ரவர்த்திக்குத் திருமகனாகத் திருவவதரித்துக் தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்தடிந்து
அவதார காரியங்களைச் செவ்வனே தலைக்கட்டிக் கொண்டு மறுபடியும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்தானென்கிற
விஷயத்திற்கு ஓர் உபமானம் கூறுகின்றார் இப்பாட்டில்.
இதில் பின்னடிகளை உபமேய வாக்கியமாகவும் முன்னடிகளை உபமாக வாக்கியமாகவும் வைத்து வியாக்கியானித்தல் ஒருவகை; –
(அதாவது=) “அன்று திருச்செய்யநேமியான் தீயரக்கிமூக்கம் பரச்செவியுமீர்ந்தபரன்” என்றவளவும் உபமேய வாக்கியம்;
“பின்தூரக்குங் காற்றிழந்த ‘சூழ்கொண்டல் பேர்ந்தும் போய் வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்து”என்றவளவும் உபமான வாக்கியம்.
இதன் கருத்து யாதெனில்;- ஆழியங்கையனான பெருமான் சூர்ப்பணகாபங்கம் முதலான காரியங்களைச் செய்து முடித்து
மீண்டும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்ததானது எப்படியிருக்கின்றதென்றால்;
கடலில் மேகமானது காற்றுத் தள்ளத் தள்ள மேலே நடந்து கொண்டே சென்று, அந்தக் காற்று எங்கே ஓய்ந்து விடுகிறதோ
அங்கிருந்து (மேகம்) மேலே செல்ல முடியாமல் அந்தக் கடலிலேயே வந்து விழுந்திடுமே; அது போலே யிரா நின்றது என்றபடி.
இக்கருத்து செவ்வனே கிடைக்கும்படியான சொல் தொடைகள் மூலத்தில் உளவோ என்று ஆராய வேண்டும்.
பாட்டின் முடிவிலுள்ள பான் என்பதை உபமேயமாகக் கொண்டால் இரண்டாமடியிலுள்ள வாய்மைத்து என்ற குறிப்புவினைமுற்றை
‘வாய்மையன்’ என மாற்றிக்கொள்ள வேண்டும். ‘வாய்மைத்து’ என்றிருப்பது பரன் என்ற உயர்திணைக்குச் சேராதிறே.
ஆகையாலே இப்படி யோஜித்து வியாக்கியானிப்பதில் குறையுண்டென்று மற்றொருவகையான யோஜித்து வியாக்கியானிக்கப் பார்த்தார்கள்;
(அதாவது-) பாட்டின் முடிவிலுள்ள பரன் என்ற பதத்தோடு ‘படி’ என்கிற ஒரு பதத்தை வருவித்துக் கூட்டிக்கொண்டு
“பரன்படியானது- வாய்மைத்து’ என்று அந்வயித்தால் திணை மாறாட்டம் செய்ய அவசியமில்லையே என்று பார்த்தார்கள்.
ஆனாலும் இந்த யோஜநையில் – மூலத்திலில்லாத “படி” என்கிறவொரு சொல்லை வருவித்துக் கூட்டிக்கொள்ளுதலாகிற
அத்யாஹாரமென்பதம் ஒரு குறைதானே என்று குறையுற்றிருந்தனர்;
இவ்விரண்டு குறைகட்கும் இடமில்லாதபடி நஞ்ஜீயர் ஸந்நிதியிலே நம்பிள்ளை விண்ணப்பம் செய்த போஜநை தான் இங்க நாம் பதவுரையில் காட்டினது.
கீழ்ச்சொன்ன இரண்டு யோஜனைகளில் எம்பெருமானை உபமேயமாகவும் காளமேகத்தை அபமாநமாகவும் நிறுத்தி உரைக்க வேண்டியதாயிற்று.
இப்போது அங்ஙனம் வேண்டா. மூலத்தில் ஸ்வரஸமாக ஏற்படுகிறபடியே, “பின்துரக்கும் காற்றிழந்த சூல் கொண்டல்” என்பதே உபமேயம்.
இப்போது பாசுரத்தின் கருத்தை நெஞ்சிலே விளக்கக் கொள்ளுங்கள்:-
கொண்டல் உபமேயம்-பிரகிருதி மண்டலத்தில் இருப்பதால் இங்கே கண் வைத்தாலும் பகவத் விஷய சம்பந்தம் இட்டே பார்க்கிறார்-
அவதார தூண்டுதல் -வேண்டித் தேவர்கள் இரக்க வந்து பிறந்ததும்-துஷ்ட நிக்ரஹம் இஷ்ட பரிபாலனம் தர்ம சம்ஸ்தாபனம்-
பிரார்த்தனை ஈடேறா நிற்க-தள்ளிக் கொண்டு வந்த காற்றை இழந்த காளமேகம் போலே-சூல் கொண்ட மேகம் -பூர்ண கர்ப்பமுடைய மேகம்-
இப்படி மேகத்தை உபமேயமாக நிறுத்தியே வியாக்யானம் செய்து அருளினார்
பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய்
வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று
திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும்
பருச் செவியும் ஈர்ந்த பரன்–63-
——————
(உயர் திண் அணை ஓன்று -நான்கும் பரத்வ ஸ்வரூபம் –
பரத்வே பரத்வம் -தொடங்கி அர்ச்சா பரத்வம் ஈறாக எல்லா திசையிலும் –
மோக்ஷ பிரதத்வம் இருப்பதாலும் பரத்வம்
இதில் விபவ பரத்வம்
இங்கேயே பரத்வ ஸுலப்யாதிகள் அனுபவிக்கலாய் இருக்க பரமபதமும் வேண்டுமோ என்றபடி
மரா மரம் ஏழும் எய்த முதல்வாவோ மரம் இரண்டின் போன முதல்வாவோ -அங்கும் ராமகிருஷ்ண அவதார பரத்வம்
ஜடாயு மோக்ஷம் போன்ற சில இடங்களில் ராமனின் பரத்வம்
வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுள்ளே
அப்பூச்சி காட்டி -பரத்வம் வியக்தம் கிருஷ்ண அவதாரத்தில் )
கீழ்ப்பாட்டில் ஸ்ரீராமாவதார விஷயம் ப்ரஸ்துதமாகவே, எம்பெருமான் நம்மைத் திருத்திப்பணி
கொள்ளவேண்டி ராமக்ருஷ்ணாதிரூபத்தாலே மநுஷ்ய ஸஜாதீயனாய்ப் பிறந்து “உங்களைப் போலே நானும் ஒரு மநுஷ்யனே”
என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், மராமரமேழெய்தது, புள்ளி ஸ்வாய் கீண்டது முதலிய அருமையான
திவ்ய சேஷ்டிதங்களையும் இடையிடையே காட்டிக் கொண்டிருந்தானாதலால் அவற்றை நோக்கி
‘இவன் நம்மைப்போன்ற ஸமாந்ய மநுஷ்யனல்லன்; இவன் பராத்பரனான பரமபுருஷனேயாவன்’ என்று கொண்டு
அவன் பக்கல் பக்திபண்ண வேண்டியிருந்தும், அவஜாநந்தி மாம் மூடா: மாநுஷ்யம் தநுமாச்ரிதம்”
(நான் மநுஷ்யயோநியிற் பிறந்தேனென்று என்னை மூடர்கள் அவமதிக்கின்றார்கள்) என்று கீதையில் அப்பெருமான் தானே
சொல்லி வருந்தும்படியாக அநியாயமாய் அவமதித்துப் பாவிகளாய்க் கெட்டுப் போனார்களே ஸம்ஸாரிகள்;
அப்படி அவமதியாமல் அவனே பரமபுருஷனென்று பாவித்திருப்பர்களாகில் அவர்களைத் தேவர்களெல்லாரும்
கையெடுத்துக் கும்பிட்டிருப்பர்களன்றோ?- என்று அநுதபிக்கிறார்.
பரனாம் அவனாதல் பாவிப்பராகில்
உரனால் ஒரு மூன்று போதும் மரம் ஏழு அன்று
எய்தானைப் புள்ளின் வாய் கீண்டானையே அமரர்
கை தான் தொழாவே கலந்து–64-
—————-
(துவாதச திருநாமங்கள் வரிசையிலே இப் பாசுரம் –கேசவன் நாராயணன் மாதவன்
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு-பல்லாண்டு பாட -ஆள் செய்ய -கைங்கர்யம் செய்ய தூண்டுகிறார் )
இது முதல் மூன்று பாசுரங்களில் ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு நன்மை உபதேசித்தருளுகிறார்.
நெஞ்சே; நம்முடன் கூடவேயிருந்து நம்மைத் துன்பப்படுத்துகின்றனவாய், அநுபவித்தே ஒழிக்க வேண்டுமமையான
பாவங்களை முகஞ்சிதறப்புடைத்து, பின் பொருகாலும் நம்மருகே நாடவொட்டாமல் துரத்த வேண்டுமானால்
எம்பெருமான் விஷயத்திலே நல்ல பாசுரங்களை இடைவிடாது பேசிக்கொண்டேயிரு என்கிறார் இப்பாட்டில்.
கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–65-
————-
(விரோதியைப் போக்குபவன் அன்றோ அவன் –
விரோதிகள் இருக்கவே பாடாமல் கைங்கர்யம் செய்யாமல் இழந்தோம்
அதுக்கும் மேல் இனியவர் போக்யன்
அதுக்கும் மேலே வகுத்த ஸ்வாமி -ப்ராப்யன்
ஆக இங்கும் நாம் கைங்கர்யம் செய்தே ஆக வேண்டும் என்பதுக்கு மூன்று காரணங்கள் )
(ராமன் -திருவாழி -சேருமோ என்னில் -பரத்வம் காட்டாதவன்
தேவேந்திரன் ஐராவதம் இருக்க ரிஷிகள் இடம் போகாதவன்
ஆத்மாநாம் மானுஷம் மணியே தசாரதாத்மஜம் என்பவன் அன்றோ என்னில்
அது இயற்க்கை
எந்த ஆயுதமும் ஸூதர்சன அம்சம் தானே )
நெஞ்சே! நீ ஸாமாந்யமாக மற்றையோருடைய நெஞ்சாக இராமல் என்னுடைய நெஞ்சாக அமைந்தபடியாலும்,
நான் ஒரு வழிபோனால் நீ ஒருவழி போகையன்றியே சாலவும் எனக்கு நீ உடன்பட்டிருக்கையாலும்
உனக்கு ஒருவிசேஷார்த்தம் சொல்லுகிறேன் கேள்;
உலகத்திலே உணர வேண்டும் பொருள்கள் பலவுள்ளனவென்று பலர் நினைத்திருப்பர்களாயினும்,
நினைத்திருப்பதாவது உணரவேண்டும் பொருள் ஒன்றே; அஃதாவது பகவத்விஷயம்.
“ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்கு முணர்வு” என்று பொய்கையாழ்வாரும் அருளிச் செய்தாராகையால்
பகவத்விஷயமொன்றே நமக்கு உணரத்தக்கது; அதனையே நீ உணர்; இதனை நான் மற்றையோர்க்குச் சொன்னால் ஏசுவார்கள்;
ஆகையாலே ஒருவருக்கும் இதை நான் சொல்வதில்லை, உனக்கே சொன்னேன்- என்கிறார்.
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை -ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது–66-
———-
(அங்கு அது நன்று என்று அறிந்து -வானவர் நாடு தானே அது –
அமரர் நித்ய ஸூரிகள் நாடு தருவது மிகவும் எளிதே – –
உமக்குப் பெரு வீடு தந்தோம் என்பான் மகிழ்ந்து –
அத்தை விட்டு
கீழே இரண்டு பாசுரங்களில் சொல்மாலை சூட்ட பல ஹேதுக்களை அருளிச் செய்து
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவர் ஆகையால் அவர் துறையிலே இழிகிறார்
மங்களா சாசனத்தில் ஆழ்கிறார்
நின் புகழில் வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ வைகுந்தம் என்று கொடுக்கும் வான் )
உபய விபூதியையும் எளிதில் தந்தருளவல்ல எம்பெருமான் திருவடிகளையே வாழ்த்து நெஞ்சமே! என்கிறார்.
தேவதாங்தரங்கள் தம் தம் அடியவர்களுக்குச் சில அபேக்ஷிதங்களைத் தாக்கடவனவாகிலும் பரமபதத்தைத் தருவது
எந்த தேவதைக்கும் முடியாத காரியம்; எம் பெருமானுக்கோ அது பரம ஸுலபமானது;
ஆகையாலே, நெஞ்சமே! நீ பரமபதந் தவிர மற்றதெல்லாம் தீது என்று விட்டிட்டு,விலக்ஷணமான அப்பரமபதமொன்றையே விரும்புவாயாகிலும்,
அது எம்பெருமானுடைய திருவருளால் எளிதில் கிடைக்கக்கூடியதே; அதனைத் தருவதில் அவனுக்கு அருமையேயில்லை அவனுக்கு
இது ஒரு சரக்கேயன்று காண்;
அங்ஙனல்லாமல் பாவோ நாந்யத்ரா கச்சதி” என்று திருவடிசொன்னாற்போலலே அந்தப் பரமபதத்தையும் உபேக்ஷித்துவிட்டு
இந்த மண்ணுலகத்திலேயே நிலைபெற்று நின்று அநுபவிக்க வேணுமென்று விரும்பினாயாகிலும்
இதுவும் அவனால் எளிதில் தரக்கூடியதே; ஆகையால் ஐஹிகமோ ஆமுஷ்மிகமோ எந்த புருஷார்த்தமும்
எம்பெருமானால் நாம் எளிதில் பெக்கூடியதே; ஆன பின்பு இப்படி ஸர்வேசக்தனான
எம்பெருமானுடைய திருவடிகளையே வாழ்த்தப்பாராய்- என்றாராயிற்று.
(பரமபதாநுபவத்திலும் இஹலோக போகத்திலும் விருப்பம் வைத்திடாமல்
கண்ணன் கழிலிணை வாழ்த்துவதொன்றிலேயே நோக்காக இருக்கக்கடவை என்பது உள்ளுறை.)
அதுவோ நன்று என்று அங்கு அமருலகோ வேண்டில்
அதுவோர் பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து
மண்ணின் நின்று ஆள்வேன் எனினும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-
————
கீழ் அவனுடைய திருவடிகளை வாழ்த்துகை ஒழிய
போக மோக்ஷங்களை வேண்டா என்னும்படி தம்முடைய ஐக்யம் சொல்லுகிறது
(ஐக்யம் -உள்ளத்தில் கலந்தான் என்றபடி
அனைவர் உள்ளமும் இப்படி இருந்தாலும் உணர வேண்டுமே
அவனும் உபய விபூதியும் வேண்டாம்
உமது திரு உள்ளமே வேண்டும் என்கிறான்
பிரதான பாசுரம் இதுவே
பெரியவராக இது அன்றோ ஹேது
அவன் தம்மிடம் வந்து மன்னி பொருந்தி -தீர்த்தம் ப்ரசாதியாமல் -இருக்கையாலே
அவனுக்கும் நமக்கும் உண்டான ஐக்யம்
இப் பாட்டில் சொல்லுகிறது என்றபடி )
கீழ் மூன்று பாசுரங்களிலும் ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு ஹிதம் உபதேசித்தார்.
அந்த உபதேசத்திற்கு நெஞ்சு உடன்பட்டிருந்த தன் பலன் உடனே கைபுகுந்தபடியை
இது முதல் மூன்று பாசுரங்களாலே பேசுகிறார்.
எம்பெருமான் திவ்ய மங்கள விக்ரஹத்தோடே தமது நெஞ்சிலே புகுந்து ஸ்திரப்திஷ்டையாக இருக்கும்படியைப் பேசுகிறாரிதில்.
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–68-
———–
இவன் பண்ணின ஐக்யாந்தத்தாலே
சரீர ஆரம்பத்துக்கு அடியான பாபமும் போயிற்று என்கிறார்
(யதோ வாசோ நிவர்த்தந்தே -அவனது சீர்க்கடலையுமே அடக்கினேன் –
அவனே புகுந்து அனுபவிப்பிக்கிறானே )
இப்படி என்னுள்ளே மிகவும் அபிநிவேசத்தைப் பண்ணிக் கலந்து வாழ்கின்ற
திருமாலின் திருக் குணங்களை அநுஸந்திக்கப் பெறுகையாகிற ஏற்றமுடைய என்னை ஒருவராலும்
திரஸ்கரிக்க முடியாதென்று மகிழ்ச்சியின் கனத்தாலே மார்பு தட்டிப் பேசுகிறார் போலேயிருக்கிறது இப்பாசுரம்.
எம்பெருமான் ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருப்பதால்-உண்டான ஹர்ஷத்தால் மார்பு தட்டி பேசி அருளுகிறார் இதில்–
அகம் சிவந்த கண்ணினராய் வல்வினை யாராவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திரு மால்
சீர்க் கடலை யுள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து –69-
———-
(ரக்ஷித்தாலும் விட்டாலும் உன்னை விடேன் -என்று அநந்யார்ஹத்வம் அருளிச் செய்கிறார் இதில்
வித்துவக்கோடு அம்மான் பதிகம் போல்
எதிரிகளை அதற்கும் -தரிசன மாத்திரத்தாலே அழியச் செய்யும் திரு அபிஷேகம் –
கண்ட மாத்திரத்திலே இவனே தேவ தேவன் -மூன்று முடிக்கு உரிய பேர் அரசு –
அழகால் ஈர்க்கும் –
ராஜாதி ராஜன் ஸர்வேஷாம் என்பதைக் காட்டும் –
ஸ்வாதந்த்ர அபிமானிகளை அழிக்கும் )
வல்வினைகள் இனிமேல் என்னை அடர்க்கதில்லா என்றார் கீழ்ப்பாட்டில்.
இனி அந்த வல்வினைகள் என்னை என்ன செய்தாலும் எனக்கு வருவதொரு கெடுதியில்லையென்கிறாரிதில்.
எம்பெருமானே ஸகலவித பந்துவுமாவன் என்று உறுதியான அத்யவஸாயம் கொண்டேனான பின்பு
இனி எனக்கு என்ன ஸம்பத்து நேர்ந்தாலும் ஸந்தோஷமுமில்லை, என்ன ஆபத்து நேர்ந்தாலும் ஸங்கடமுமில்லை யென்கிறார்.
இப்படிப்பட்ட அத்யவஸாயங்கொண்ட ப்ரஹ்லாதனுக்கு இரணியனும் அவனுடைய ஏவலாளர்களும் எத்தனையோ வகையான
தீங்குகளை யிழைத்தார்களெனினும் அவன் திறத்து ஒன்றும் பயன்படவில்லையே;
பாம்புகளை விட்டுக் கடிக்க வைத்தார்கள் தீயை வளர்த்தி அதிலே தள்ளினார்கள்; மலைகளில் நின்றும் தலைகீழாக உருட்டினார்கள்;
சிங்கம் புலி யானை முதலிய கொடிய விலங்குகளைக் கொண்டு அச்சமுறுத்தினார்கள்; இன்னமும் எத்தனையோ செய்தார்கள்.
ப்ரஹ்லாதாழ்வான் ஒன்றையேனும் லக்ஷியம் பண்ணினானென்பதுண்டோ? பலபல பட்டுப் பீதாம்பரங்களையும் அணிகலன்களையும்
தந்து மகிழ்வித்து ஸ்வாதீநப்படுத்திக் கொள்ளவும் பார்த்தார்கள்; அவற்றையுந்தான் லக்ஷியம் பண்ணினானோ?
பகவத் குணங்களில் ஈடுபட்டவர்களுக்கு அதற்குப் புறம்பான லாப நஷ்டங்களொன்றும் கணிசிக்கப்பட மாட்டாவாகையாலே ஆழ்வாரும்
“யாதாகில் யாதேயினி” என்று மிடுக்குத் தோற்றமொழிகின்றார்.
சர்வவித பந்துவாக அவனை ப்ரஹ்லாதன் கொண்டது போலே அடியேனும் கொண்டேனே
இனி என் குறை எனக்கு -இல்லை எனக்கு நிகர் -என்கிறார்–
அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதே யினி–70-
————
(மாதா பிதா -என்றாலே காரணத்வம் பலிக்குமே
அடியேனுக்கு மட்டும் அன்றி ஸமஸ்த பிரபஞ்சத்துக்கும் த்ரிவித காரணமும் இவனே அன்றோ
பரத்வம் முதல் பத்து -இதுக்கு வேண்டிய மூன்றும்
காரணத்வம் இரண்டாம் பத்து –வியாபகத்வம் மூன்றாம் -நியந்த்ருத்வம் நாலாம் பத்து
நின்ற காரணம் பிரளயத்தில் இவன் ஒருவனே
தனி காரணம் ஒப்பில்லாத த்ரிவித காரணம்
அகில ஜகத் ஸ்வாமி -அஸ்மின் ஸ்வாமி
ஸ்ரீ ரெங்க நாத -மம நாத
என்று பரத்வமும் நீர்மையும் போல் இப்பாசுரம் )
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அகப்பட உடம்பு கொடுத்தான் என்கிற நீர்மையைச் சொல்லிற்று ஆகவுமாம்
அவர்களுக்கு சத்தா ஹேதுவானான் என்கிற ஐஸ்வர்யத்தைச் சொல்லுகிறது என்றுமாம் –
எம்பெருமானையே எல்லவுறவுமாகப் பற்றினேனென்றார் கீழ்ப்பாட்டில்.
இங்ஙனே பேசின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! என்னையே மாதா பிதுவாகக் கொண்டதாகக் சொன்னீரே,
என்னுடைய படிகளெல்லாம் உமக்கு நன்றாய்த் தெரியுமோ? அறிவீராகில் சிறிது சொல்லிக்காணும்’ என்ற;
பிரமனும் சிவனுங்கூட உன்னைப் பற்றி ஸ்தைப் பெற்றார்களென்னாநிற்க உன் பெருமை என்னாலே பேச முடியுமோவென்கிறார்.
ஆழ்வீர் எல்லா உறவாகவும் பற்றினீரே-என்னை பற்றி சொல்லிக் காணும் என்ன
என்னால் உனது பெருமைக்கு ஈடாக சொல்ல முடியுமோ-என்கிறார்-
இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
தனி நின்ற சார்விலா மூர்த்தி -பனி நீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின்னுந்தி முதல்–71-
———-
(சாம்யாவாதி மூவரும் சமம் என்பர்
ஏகத்துவ வாதி -ஐக்ய வாதி -உப லக்ஷணம் முறையில் இத்தையும் சொன்னதாக கொள்ள வேண்டும்
மூவருமே ப்ரஹ்மம் இல்லை நாலாவது உத்தீர்ண வாதி
பரா அஸ்ய சக்தி விவிதையா ஸ்ரூயதே –இவனது சக்தி அளவிடமுடியாதே -என்பதை
பராசக்தி வேறே ப்ரஹ்மம் என்று எல்லாம் சொல்வார்கள் உண்டே
மூவரையும் நிரஸித்து
தனது சித்தாந்தம் ஸ்தாபிக்கிறார்
உந்தித் தாமரையே இத்தைக் காட்டுமே
காரணம் வேறே கார்யம் வேறே )
(பாருருவி நீர் எரி கால் விசும்புமாகி பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற விமையவர் தம் திரு வுரு வேறு எண்ணும் போது
ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ யொன்று மா கடலுருவம் ஒத்து நின்ற
மூ வுருவம் கண்ட போது ஒன்றாம் சோதிமுகிலுருவம் எம் அடிகள் உருவம் தானே-–ஸ்ரீ திரு நெடும் தாண்டகம்–2-)
கீழில் பாட்டிலே
எல்லாருக்கும் ஆஸ்ரயணீயன் -என்று சொல்லிற்று
இதிலே
வேறு ஸமாஸ்ரயணீயராய் இருப்பாராம் சிலரும் உண்டாய் இருக்க
இவனே ஆஸ்ரயணீயன் என்று சொல்லும் படி எங்கனே என்ன
அல்லாதாருடைய மதங்களை உபஸ்த்தாபித்து தூஷித்து ஸ்வ ஸித்தாந்தத்தை அருளிச் செய்கிறார்
கீழ்ப்பாட்டில் பிரமனுடையவும் சிவனுடையவும் பேச்சு வந்தமையாலே பரத்வ விஷயமாகப்
பிறர் சொல்லுகிற வாதங்கள் நினைவுக்கு வந்து, அவற்றைத் தள்ளி ஸித்தாந்தம் அருளிச் செய்கிறாரிதில்.
முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –72-
———–
இவனே ஆஸ்ரயணீயன் என்று அறுதியிட்டால்
பின்னை அனுபவமே இறே உள்ளது
கீழ்ப்பாடில் “நிகரிலகு காருருவா” என்று விலக்ஷணமான திவ்ய மங்கள விக்ரஹத்தை அநுஸந்திக்கவே,
போலி கண்டு மேல்விழும்படியான அளவிறந்த அன்பு அத்திருமேனியிலே தமக்கு விளைந்தபடியை அருளிச்செய்கிறாரிதில்.
முதலடியின் முடிவிலுள்ள ‘பூக்கின்ற’ என்ற விசேக்ஷணம் (அடைமொழி) பூவை காயா நீலம் எல்லாவற்றிலும் அந்வயிக்கம்.
அப்போது மலர்கின்ற பூவைப்பூ, காயாம்பூ, நீலேற்பலம், கழுநீர்ப்பூ என்னுமிவற்றை நான் எப்போதெப்போது காண்கிறேனோ
அவ்வப்போதிலெல்லாம் எம்பெருமானுருவைக் கண்டதாகவே நினைத்து ஆவியும் உடலும் பூரிக்கப் பெறுகின்றேன் என்றாயிற்று.
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண் தோறும் -பாவியேன்
மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று –73-
———-
சரீர பரிக்ரஹம் பண்ணி
ருசி பிறந்த பின்பு
அபேக்ஷித்தது
காலம் எல்லாம் இரந்தாராய்த் தோற்றுகிற படி
(ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ அன்றோ )
கீழப்பாட்டிற் சொன்னபடி போலிகண்டு மேல்விழும்படியான காதலர் கிளர்ந்திருக்கச் செய்தேயும்
அப்பெருமானைக் கண்ணாலே கண்டு அநுபவிக்கப்பெறாமையாலே வருந்தி,
‘பேரருளாளனான அப்பெருமான் தன் திருமேனியை நமக்குக் காட்டுகின்றானில்லையே!’ என்று தளர்ச்சி தோற்றப் பேசுகிறார்.
ஒழிவில் காலம் எல்லாம் அழுது கதறினாலும் -இயற்கையில் அருள் நிறைந்தவர்
ஆ நிரை காத்து அருளிய பிரான் அன்றோ-இது என்ன கொடுமை –
என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -குன்று
குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி –-74-
————
(நம் பெரியவர் என்று பிராட்டியும் அவனும் அபிமானிக்கும் படி அன்றோ
நமது ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
என்னை நினைத்து தவிக்க வைத்தேனே என்று அவன் சமாதானம் செய்ய
சமாதானம் அடைந்து ஹ்ருஷ்டராய் நான் பெரியன் என்று லோக ப்ரஸித்தம்
நீ பெரியை என்பதனை யார் அறிவார் –
என்னுள்ளம் புகுந்து அன்றோ நீ சத்தை பெறுகிறாய்
என்று தாமே சொல்லிக் கொள்ளும் படி பண்ணி அருளுகிறார் )
உமக்கு என்றும் உதவிலோமாக நீர் சொல்லுவான் என்
உருக் காட்டிற்று இல்லையே என்று வெறுக்கும் படி உம்மைப் பண்ணினோமே -என்ன
அத்தை அனுசந்தித்து
என்னோடே ஒப்பார் உண்டோ என்கிறார்-
கீழ்ப்பாட்டில் “ஒன்றுமிரங்காருருக்காட்டார்” என்று வெறுத்துரைத்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்
“நீர் ஏனிப்படிவருந்துகின்றீர்; உமக்கு நாம் அருளாதிருக்கிறோமோ? உருக்காட்டாதிருக்கிறோமோ?
‘கல்லும் கனைகடலும் வைகுந்தவானாடும் புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்-வெல்ல,
நெடியான் நிறங்கரியானுள் புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்?’ (68) என்று உம்வாயாலே பேசினதும் மறந்தொழிந்ததோ?
உகந்தருளினவிடங்களெல்லாவற்றையும் விட்டிட்டு உம்முடைய நெஞ்சிலேயன்றோ நாம் நித்யஸந்நிதிபண்ணியிருக்கிறது” என்றருளிச்செய்ய,
ஆழ்வார் அது கேட்டுத் தேறி ஆநந்தத்துக்குப் போக்குவீடாக அப்பெருமானோடே போராடுகிறாரிதில்.
ப்ரஹ்மம் நீ -உபய விபூதி நாதன் -எனக்குள்ளே ஒரு மூலையில் அடங்கப் பெற்றதால் நானே ப்ரஹ்மம்-
இதனை நீயே ஆராய்ந்து பார் -என்கிறார்
புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு–75-
———–
ஸ்ரவண ஞான அனந்தர பாவியான மனனத்தைச் சொல்லுகிறது –
கீழ்ப்பாட்டிற் கூறியவடி எம்பெருமானை நெஞ்சால் அநுபவிக்கிற வளவிலேயே
நெஞ்சு பூரித்துத் தடிக்கிறபடியைப் பார்த்தால், மெய்யே பரமபதத்திற்சென்ற பரிபூர்ண ப்ரஹ்மாநுபவம் பண்ணப் பெறில்
உலகம் முழுவதையும் வியாபிக்கவல்லேனாம்படி குறைவின்றித் தடித்துவிடுவேன்போலுமென்கிறார்.
உருவற்ற நெஞ்சு தடிக்குமோ-ஸ்தூலிப்பது-ஒரு திருப் புளிய மரத்தின் பொந்தின் அடியில் இருந்து-
நெஞ்சாலே நினைக்கும் மாத்ரத்திலே-இப்படி பூரித்தோம் ஆகில்
என்னுடைய கரும பாசங்கள் தொலையும்படி-உன்னாலே கடாஷிக்கப் பெற்று
நலமந்தம் இல்லாதோர் நாட்டில் நித்யானுபவம் பண்ணப் பெற்றால்-பின்னை தடிப்பதற்கு இடம் போதாது போலும்-
ஸ்வரூபத்தால் நீ வியாபித்து இருப்பது போலே
நானும்-அப்படியே ஸ்வபாவத்தாலே வியாபித்து இருப்பேன் போலும் என்கிறார்-
உலகம் எல்லாம் பூரிக்க வல்லனாம் படி உடல் தடிக்கும் அளவு பேர் ஆனந்தம் அடைவேன் என்கிறார் இதில்
உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப் படலம்
விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால் உள்ள
உலகளவும் யானும் உளனாவன் என் கொலோ
உலகளந்த மூர்த்தி உரை –76-
————-
அறியாதே நன்று என்று பிரமித்து
வேறே சிலர் உற்றார் என்று இருக்கும் அத்தனை இறே
விமர்த்த ஸஹரான-(பாதக ஸஹர் )- பந்துக்கள் வேறே உண்டோ என்கிறது –
எம்பெருமான் திருநாமம் செவியில் விழுந்தமாத்திரத்திலே நெஞ்ச குளிரும்படியாக
இப்படி அவன்பண்ணின பேருதவியைச் சிந்தித்து “பிரானே! நீ தவிர வேறுயாரும் எனக்க உறவினரல்லர்;
ஸகலவித பந்துவும் எனக்கு நீயே காண்” என்கிறார்.
உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பெல்லாம்
நின்னன்றி மற்றிலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர்
சொல் நன்றி யாகும் துணை–77-
———-
(முதல் ஆழ்வார்கள் அயோனிஜர் -மூன்று திருவந்தாதிகள்
நான்முகன் திருவந்தாதி
பெரிய திருவந்தாதி
இந்த ஐந்தும் அர்த்த பஞ்சகம் -பரத்வாதி பஞ்சகம் சொல்ல வந்தவை என்றும் கொள்ளலாமே )
கீழ் உற்றார் இல்லை என்றது
உற்றார் உண்டாகிலும்
ஸம்ஸாரம் இனிதாகிலும்
உன் அனுபவத்தை ஒழியப் புறம்பு உண்டோ -என்கிறார் –
ஸாமாந்யமாக உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பலனை விரும்புவர்;
நல்ல துணையோடு கூடியிருத்தல் நன்று என்று சிலர் நினைப்பர்; ‘நாம் சிரஞ்ஜீவியாக வாழக் கடவோம்’ என்று சிலர் காமுறுவர்; ‘
பிள்ளைகளும் பேரன்களுமாகப் பரந்த ஸந்ததிகளுடனே வாழப் பெறுவோம்’ என்று சிலர் விரும்புவர்;
நற்குலப் பிறவியே நச்சுத் தகுந்தது’ என்று சிலர் நச்சுர்; ‘பந்துக்களோடு கூடி வாழ்தல் சிறப்பு’ என்று சிலர் கருதுவர்;
ஆகவிப்படி அவரவர்கள் விரும்பும் புருஷார்த்தங்கள் இந்த ஸம்ஸார நிலத்திலே அநர்த்தமாகப் பர்யவஸிக்குமே யன்றி இன்பமாகத் தலைக் கட்டாது;
ஒருகால் இவையெல்லாம் இன்ப மயமாகவே யிருந்தாலும் நெஞ்சே! நீ இந்த அற்ப பலன்களில் கால் தாழாது
பகவத் குணாநுபவமாகிய நல்ல காலக்ஷேபத்தையே மேற்கொள்ளக்கடவை என்று தம் திருவுள்ளத்திற்கு ஹிதமருளிச் செய்கிறார்.
துணை நாள் பெருங்கிளையும் தொல் குலமும் சுற்றத்
திணை நாளும் இன்புடைத்தா மேலும் -கணை நாணில்
ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக வுண்–78-
———-
எவ்வகையான இழிகுலத்திற் பிறந்தவர்களானாலும் எவ்வகையான கெட்ட நடத்தைகளை
யுடையவர்களானாலும் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருந்தலாகிற ஒரு குணம் உள்ளதாகில் அப்படிப்பட்டவர்களுடைய
பிறப்பு நித்ய ஸூரிகளின் திருமேனி போலே மிக்க தேஜஸ்ஸையுடையதேயாம்;
எப்படிப்பட்ட பாவங்களை அவர்கள் செய்திருந்தாலும் அவற்றுக்கு அஞ்சவேண்டியதில்லை;
சுவர்க்க லோகத்திலுள்ள தேவர்களின் பிறவியிற்காட்டிலும் அவர்களுடைய பிறவி எவ்வளவோ சீர்மை பொருந்தியதாதலால்
தேவபோனிப்பிறவியையும் இழிவாக நினைக்கவுரியது- என்று,
பகவானுக்குத் தொண்டரயிருப்பாருடைய ஜன்மமே சிறந்த ஜன்மமென்கிறார் இப்பாட்டில்.
ப்ராஹ்மணஜாதியே சிறந்ததென்று பலர் ப்ரமித்திருப்பதுண்டாகையாலே அந்த ப்ரமத்தைப் போக்கித்
தொண்டர் குலமே சிறந்த குலமென்கிறது இப்பாட்டு. பிராமண ஜாதியிற் பிறந்து வைத்தும் எம்பெருமானுக்கு அடிமைப்படாவில்
அக்குலம் சண்டாள குலததிலும் நடை கெட்டதாம்;
சண்டாள குலத்திற் பிறந்து வைத்தும் வலந்தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணற்கு ஆளென்று உள்கலந்தார்களாகில்
அவர்களே விண்ணுளாரிலுஞ் சீரியராவர்; ஆகவே ஜாதி அப்ரேயோஜகம்; பகவத் சேஷத்வமே ப்ரயோஜநம் என்றதாயிற்று.
இவ்வர்த்தம் ஸ்ரீவசந பூஷண்த்திலும் ஆசார்ய ஹ்ருதயத்திலும் நன்கு விசதமாகும்.
“தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளிவரும் ஜநிகள் போலே ப்ரஹ்மஜந்மமும் இழுக்கென்பார்க்குப் பண்டை நாளில் பிறவி
உண்ணாட்டுத்தேசிறே” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்தி இவ்விடத்தில் அது ஸந்திக்கவுரியது.
எம்பெருமானை கண் எடுத்தும் பாராத பாவிகள் உள்ள இந்த லீலா விபூதி புற நாடு
பகவத் கைங்கர்ய பரர்கள் நெருங்கி உள்ள பரமபதம் உள் நாடு-இழி பிறவியும் சேஷத்வம் இருந்தால் தேஜோ கரம்–
அணைய ஊர புனைய-அடியும் பொடியும் பட -பர்வத பவனங்களிலே-ஏதேனுமாக ஜனிக்கப் பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை
பெரு மக்களும் பெரியோரும் பரிக்ரஹித்து பிரார்த்திப்பார்கள் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி
உண்ணாட்டுத் தேசன்றே ஊழ் வினையை யஞ்சுமே
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-மண்ணாட்டில்
ஆராகி என் இழிலிற்று ஆனாலும் ஆழி யங்கைப்
பேராயற்கு ஆளாம் பிறப்பு –79-
———–
(கீழே ஐஸ்வர்யாதிகள் வேண்டாம்
இதில் கைவல்யமும் ஜரா மரண மோக்ஷம் (ஸ்ரீ கீதை -7 )கிடைத்தாலும் பொருட்டாக எண்ண மாட்டேன்
அவனை மறந்து ஒரு க்ஷணமும் தரியேன் என்கிறார் )
ஸம்ஸார நிலத்தில் உண்டாகக்கூடிய எவ்வகைத் துன்பங்களும் தொலைந்து கைவல்ய மென்கிற
ஆத்மாநுபவ மஹாநந்தம் கிடைப்பதானாலும் எம்பெருமானுடைய அநுபவமில்லாமல் அவனை மறந்தொழிந்து
அநுபவிக்கும் அநுபவமெல்லாம் துக்கமயமேயாகும்- என்கிறாரிப்பாட்டில்.
கைங்கர்யம் இல்லாத குறையால் –
பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் -மறப்பெல்லாம்
ஏதமே என்றல்லால் எண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்–80-
———-
(குண அனுபவ யோக்யதை பகல் -யோக்யதை இரவு
குண அனுபவம் ஒழியாமல் இருக்கும் படி பண்ணி அருளினான்
அஹோராத்ர புஷ் கரணி -பகல் இரா இல்லாதது உண்டே )
எம்பெருமானுடைய அநுக்ரஹம் தம் மேல் அல்லும்பகலும் அமர்ந்திருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.
எம்பெருமான் என்னுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை நன்கு ஆராய்ந்திருப்பனாகில்
என்னை ஒருபொருளாக நோக்குவதற்கே ப்ரஸந்தியில்லை; அவனுடைய திருவருளுக்கு இலக்காகமாட்டாத நீசன் அடியேன்;
அவ்வளவேயோ? குணாநுபவம் பண்ணுவதற்குத்தக்க ஸஹயமுமில்லாதவனாயிருக்கின்றேன்;
இப்படிப்பட்ட என்படிகளை எம்பெருமான் ஆராய்ந்திருப்பானாகில் என்னைக் கடாக்ஷிக்கவே மாட்டான்;
இப்படிகளை ஆராயாமல், பகலென்று மிரவென்றும் பாராமல் எக்காலும் என்னை வலிகட்டாயப்படுத்தியிழுத்துத்
தன் அநுபவத்தை எனக்குத் தந்தருளி என்னை அநுக்ரஹஞ் செய்கின்றான்- என்கிறார்.
எம்பெருமான் அனுக்ரஹம் அல்லும் பகலும் தம் மேல் விழுந்த படியை-அனுசந்தித்து ஹிருஷ்டர் ஆகிறார் –
உபேஷிக்காமல் நிர்ஹேதுக கிருபையால் செய்து அருளுவதை தெரிவிக்கிறார்–
பகலிரா வென்பதுவும் பாவியாது எம்மை
இகல் செய்து இரு பொழுது மாள்வர்-தகவாத்
தொழும் பரிவர் சீர்க்கும் துணியில ரென்றேரார்
செழும் பரவை மேயார் தெரிந்து–81-
———
வடிவைக் கரந்து வர்த்திக்கிற அம் மாய மானை
அன்று தொடர்ந்த
அருகாழியைக் கையிலே யுடைய ஸர்வேஸ்வரனை
இளைய பெருமாளும் உதவாத தசையில் ஏத்தப் பெறுவது
அறிவு கெட்டுக் கிடந்த நான் பழுதே போக்கினேன்
ஆழ்வார் இப்போது பகவத் குணாநுபவம் பண்ணப் பெற்றதுபோல கீழ்நாள்களிலும் பண்ணப்பெறவில்லையே!
என்று அனுதாபம் அதிகரிக்கப்பெற்று, “பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சியழுதேன்” என்று
பொய்கையாழ்வார் கதறினது போலத் தாமும் கதறுகின்றார்.
தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82-
————
நம்முடைய தோஷங்களை போக்குவதற்கு மங்களா சாஸனமே ஒரு வழி என்கிறார்
கீழ்க்கழிந்த காலம் போலே இனிமேல் வரும் காலமும் பாழே போகாதபடி இப்போதுள்ள
பகவத்குணநுபவம் தம்முடைய நெஞ்சுக்கு நிலைத்திருக்கும்படி ஹிதோபதேசம் பண்ணுகிறார்.
யோக்யதை இல்லாத நாம்-நெஞ்சால் நினைப்பதும்-வாயால் துதிப்பதும்-தலையால் வணங்குவதும்-அவத்யம் என்று
அயோக்யானுசந்தானம் பண்ணி பின் வாங்கும் வழக்கம் உண்டே திரு உள்ளத்துக்கு-
அதனால் ஹித உபதேசம் பண்ணி அருளுகிறார்-
அயர்ப்பாய் அயயர்ப்பாய் நெஞ்சமே சொன்னேன்
உயப்போம் நெறி யிதுவே கண்டாய் -செயற்பால
வல்லவே செய்கிறுதி நெஞ்சமே யஞ்சினேன்
மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து –83-
——–
(மனஸ்ஸூ ஒத்துழைத்தால் தானே கைகளைக் கூப்புவோம் –
தலையைத் தாழ்த்துவோம் -திருவடிகளில் பூ புனைவோம் -வாயால் ஏத்துவோம்
ஆகவே இவற்றை அதுக்கே உபகரணமாகக் கொண்டு அருளிச் செய்கிறார்
ஆழ்வாருக்கு சத்தையே இவைகள்
நமக்கும் இப்படியே இருக்க வேண்டும் என்று நெஞ்சை வியாஜ்யமாகக் கொண்டு உபதேசிக்கிறார் )
இனி எப்போதும் அயோக்யபாதையை நினைந்து பின் வாங்கலாகாதென்று
நெஞ்சுக்கு உபதேசித்தார் கீழ்ப்பாட்டில்
அப்படி பின்வாங்கி உயிர்தரித்திருக்க முடியுமாகில் அப்படியே பின்வாங்கிக்கிட என்கிறாரிப்பாட்டில்.
இத்தால்- மனமொழிமெய்களென்னும் மூன்று காணங்களும் பகவத் விஷயத்தில் ஊன்றிக் காரியம் செய்யப்பெறாவிடில்
தாம் தரித்திருக்க முடியாமையைப் பேசினாராகிறார்.
வாய் கை தலை பெற்ற பயனை அனுபவித்து-
எங்கே காண்கிறேன் நம் துழாய் அம்மான் தன்னை யான் என்று அலற்றி-சத்தை பெற்று உயிர் தரிக்கை-
வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–84-
————
பகவத் விஷயத்திலே எடுப்பும் சாய்ப்புமாய் இன்னாதாகா
இன்னாதாகா நிற்கச் செய்தே
லோக யாத்திரையை அனுசந்தித்து -மேகத்திலே கண் வைக்கை –
அங்கும் அதுவேயாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –
(ஓடிக் கொண்டே தபஸ்ஸூ பண்ணிட்றே
நின்றாலே நமக்கு த்யானம் வரவில்லையே
என்ன மாயம்
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்டி அங்கும் எடுப்பும் சாய்ப்புமாகவே உள்ளதே
இவன் ஒருவனே இன்னம் கார் வண்ணன் –
வெளுக்காமல் இருக்கவே தபஸ்ஸூ பண்ணுகிறதோ)
இடைவிடாது பகவத்குணாநுபவம் செய்பவர்கட்கும் உலகத்துப் பொருள்களிலும் கண் செல்லுமே;
சென்றாலும், பகவத்ஸம்பந்தத்தை முன்னிட்டு அப்பொருள்கள் அறியப்படுமேயன்றி லௌகிகப் பொருள்களாக
மாத்திரம் அவை அறியப்படமாட்டாவே, அப்படியே மேகங்களிலே கண்செலுத்தின ஆழ்வார்
அவற்றின் உருவத்தை எம்பெருமானுடைய திருநிறமாகவே திருவுள்ளம்பற்றி,
ஆஆ! இந்த மேகங்கள் ஆசாசமடங்கலும் திரிந்து எந்த க்ஷேத்ரத்திலே சென்று என்ன தபஸ்ஸைச் செய்து
இங்ஙனே திருமாலின் திருமேனி நிறத்தைக் கொள்ளை கொண்டனவோ! என்று வியந்து பேசுகிறார்.
மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருந்துத்தவ மா மருள் பெற்றதே -ஸ்ரீ திரு விருத்தம்–32—வைகல் பூம் கழிவாய் -6-1-
கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பிரான் உரு ஒத்தன நீலங்களே -ஸ்ரீ திரு விருத்தம்-38–சொன்னால் விரோதம் இது -3-9-
இப்பாட்டை ஒருபுடை ஒத்தனவாக இங்கு அநுஸந்திக்கத் தக்கன.
தங்கா முயற்றிய வாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத் தவம் செய்திட்டன கொல் -பொங்கோதத்
தண்ணம் பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய
கண்ணன் பால் நல் திறம் கொள் கார்–85-
———–
கார் கலந்த மேனியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ ராமாயணம்
கை கலந்த வாழியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ பாகவதம்
பார் கலந்த வல் வயிற்றான் சீர் கலந்த சொல் –இதிஹாசங்கள் புராணங்கள்
பாம்பணையான் -சீர் கலந்த சொல் -அருளிச் செயல்கள்
சீர் கலந்த சொல்–திருநாமங்கள்
உலகத்தில் எல்லாரும் பகவத் குணாநுபவம் பண்ணியே போது போக்க வேணுமென்கிறார்.
பகவத் குணங்களை அநுஸந்தித்தால் பாவங்களெல்லாம் தொலையுமென்று ஸாமாந்யமாகப் பலரும் சொல்லுவதுண்டு;
அப்படி பாவங்களைத் தொலைத்துக் கொள்வதற்காக பகவத் குணாநுபவம் செய்யாவிடில் செய்ய வேண்டா;
பகவத் குணாநுணுந்தாந முகத்தினால் பாவங்களைத் தொலைத்துக்கொள்ளா தொழியில் ஒழிக;
ஒவ்வொருவனும் போதை போக்கியாக வேண்டுமே; வேறு எந்தக் காரியஞ் செய்தால் போதுபோரும்.
பகவத் குணாநுபவத்தாலன்றி வேறொன்றாலும் போது போக்க முடியாதாகையாலே காலக்ஷே பார்த்தமாகவாது
ஒவ்வொருவனும் பகவத் குணாநுபவம் பண்ணியேயாக வேணுமென்கிறார்.
கால ஷேப அர்த்தமாக-பகவத் குணாநுபவம் பண்ணியே ஆக வேண்டும்
என்கிறார் –
கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-
————-
லோகத்தாரைக் கொண்டு கார்யம் இல்லை இறே
நீ
முன்னம் எப்போதும் இத்தையே சொல் -என்று
நெஞ்சுக்கு உபதேசிக்கிறார் –
(பயனன் றாகிலும் பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-
ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லையோ என்னில் –
க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவீம் தத்யான்ன தத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே-
பஞ்சாசத் கோடி விச்தீர்ணையான பூமியும் சத்ருசமம் அல்ல என்று இறே சாஸ்திரம் –
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது அங்கும் இங்கும் -என்கிறபடி முமுஷு திசையிலும் முக்தி திசையிலும்
இனி எத்தைச் செய்வோம் என்கிற தலை சீய்ப்போடே காலம் போக்கும் அத்தனை –
உபகாரம் அதுக்கு பிரத்யுபகாரம் தேடுகையிலே மூட்டும் -உபகார கௌரவம் -பிரத்யுபகாரம் இல்லாதபடி பண்ணும் –
அதுக்கு சத்ருச பிரத்யுபகாரமாக வேணும் –
அது உண்டாகில் இறே இவன் பண்ணலாவது-இனி எத்தைச் செய்வோம் என்கிற தலை சீய்ப்போடே காலம் போக்கும் அத்தனை –
இவன் திருத்தித் தருகையாலே ஸ்ரீ பகவத் விஷயத்துக்கு ஆத்ம சமப்பர்ணம் பண்ணலாம் –
இவன் தானே திருத்தினவற்றை இவனுக்குச் கொடுக்கை சத்ருசம் அன்றே –
ஸ்ரீ ஆச்சார்யர் திருத்தி ஸ்ரீ பகவான் இடம் கொடுக்கையாலே ஆத்மா ஆச்சார்யர் சொத்து ஆகி விட்டதே –
அதனாலே அத்தை ஸ்ரீ பகவானுக்கு சமர்ப்பிக்கலாம் -ஸ்ரீ ஆச்சார்யருக்கு முடியாதே என்றபடி )
முதற்பாட்டிலே தம்முடைய நெஞ்சை விளித்து அருளிச் செய்தது போலவே
முடிவு பாட்டையும் நெஞ்சை நோக்கியுரைத்து முடிக்கிறார்.
பகவத் குணாநுபவத்தால்தான் உலகத்தார் யாவரும் போதுபோக்க வேணுமென்று கீழ்ப்பாட்டில் சொன்னேன்;
அவர்கள் தங்கள் போதை எப்படி போக்கினாலும் போக்கிக் கொள்ளட்டும்; சூதாடியோ, சதுரங்கம் பொருதோ, களவாடியோ,
கண்ணுறங்கியோ எவ்விதமாகவேனும் போரதைப் போக்கிக் கொள்ளட்டும்; அவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை? நெஞ்சமே!
உனக்கு நான் சொல்லுவதைச் சிக்கனம் கேளாய்; இன்றைக்கோ நாளைக்கோ; இன்னும் பத்தெட்டு வருஷங்கள் கழித்தோ
மற்றுமெப்போது நான் உனக்கு உரைப்பதானாலும் இந்த ஒருசொல்லையே சொல்லுவேன்; அந்தச் சொல் யாதெனில்-
“நம்மேல்வினைகடிவான் எப்போதும் கைகழலாநேமியான் மொய்கழலே ஏத்த முயல்” என்பதே.
அடியாருடைய விரோதிகளைத் தொலைப்பதற்காகவே “உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுடரொழியும் சங்கும்,
மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால்” என்றபடி திவ்யாயுதங்களை எப்போதும் தரித்திரா நிற்கும் பெருமானுடைய
பரமபோக்கியமான திருவடிகளை ஏந்துவதற்கு உத்ஸாஹப்பட்டுக் கொண்டிருப்பதே
உனக்கு எப்போதும் காரியமாகக் கடவதென்று நெஞ்சுக்குரைத்துத் தலைகட்டினாராயிற்று.
இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-
கீழ்ப் பிரபந்தமாகிய திருவாசிரியத்திற் போலவே இப்பிரபந்தத்திலும்
தம் திருநாமிட்டுக் கவிபாடுதல், பிரபந்தாத்யயநத்திற்குப் பலன் சொல்லுதல் முதலியவற்றை விட்டருளினர்; நிர்ப்பந்தமில்லாமையாலே.
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்