ஸ்ரீ வேங்கடேச பாகவதம் -ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் அனுபவிக்கும் ஸ்ரீ திருவேங்கடம் —

ஸ்ரீ வேங்கடேச த்வாதச நாம ஸ்தோத்திரம்‌ 

வேங்கடேசோ வாஸுதேவ: வாரிஜாஸன வந்தித: 
ஸ்வாமி புஷ்கரிணீவாஸ: சங்கசக்ர கதாதர: 
பீதாம்பரதரோ தேவ: கருடாரூட ஸோபித: 
விஸ்வாத்மா விஸ்வலோகேச: விஜயோ வேங்கடேஸ்வர: 
(வாரிஜாஸன வந்தித: தாமரைமலரை ஆசனமாகக்‌ கொண்ட பிரம்மனால்‌ வணங்கப்பட்டவனே.) 
ஏதத்‌ த்வாதஸ நாமானி த்ரிஸந்த்யம்‌ ய: படேன்‌ நர: 
ஸர்வபாப வினிர்முக்தோ விஷ்ணோஸ்ஸாயுஜ்ய மாப்னுயாத்‌. 
-----------

1. பொய்கையார்‌ பாஞ்சசன்னியம்‌ (சங்கு) 
2. பூதத்தார்‌ கெளமோத$ (கதாயுதம்‌] 
3. பேயார்‌ நாந்தகம்‌ (வாள்‌) 
4-திருமழிசையார்‌ சுதர்சனம்‌ (சக்கரம்‌) 
5. சடகோபர்‌ விஷ்வக்சேனர்‌ (சேனை முதலி) 
6. மதுரகவி வைநதேயர்‌ (கருடன்‌) 
7. குலசேகரர்‌ கெளஸ்துபம்‌ (மணி) 
8. விஷ்ணுசித்தர்‌ கருடன்‌ (வாகனம்‌) 
9. ஆண்டாள்‌ பூமாதேவி (பிராட்டி) 
10. தொண்டரடிப்பொடி வைஜயந்தி (வனமாலை) 
11, திருப்பாணர்‌ ஸ்ரீ வத்ஸம்‌ (மருவு) 
12. திருமங்கை மன்னன்‌ சார்ங்கம்‌ (வில்‌).
----------
பொய்கையாழ்வார்‌ 
1. வேங்கடமே! வானோர்‌. மனச்சுடரைத்‌ தாண்டும்‌ மலை --26-
2. வேங்கடமே! வெண்சங்கம்‌ ஊதியவாய்‌ மரல்‌ உகந்த ஊர்‌, --57
3. வேங்கடமே! மேலகரர்‌ எம்மென்னும்‌ மாலது இடம்‌--36-
4. வேங்கடமே! பேரோத வண்ணர்‌ பெரிது (நின்றதுவும்‌], --39
5. வேங்கடமே! மேலசுரர்‌ கோன்‌ வீழக்‌ கண்டு உகந்தான்‌ குன்று --40-
6. வேங்கடமே! மேலொருநாள்‌ மான்மாய எய்தான்‌ வரை 

வேங்கடத்தாய்‌! நால்வேதப்‌ பண்ணகத்தாய்‌. 
விண்‌ கொடுக்கும்‌ மண்ணளந்த சீரான்‌ திருவேங்கடம்‌. 
வேங்கடமும்‌ நின்றான்‌ என்றால்‌ கெடுமாம்‌ இடர்‌. 
வேங்கடத்து மேயானும்‌ உள்ளத்தின்‌ உள்ளானென்று ஓர்‌. 
வேங்கடத்தான்‌ முன்னொரு நாள்‌ மாவாய்‌ பிளந்த மகன்‌. 
வேங்கடவனையே! வாய்திறங்கள்‌ சொல்லும்‌ வகை. 
வேங்கடத்தான்‌ விண்ணோர்‌ முடி தோயும்‌ பாதத்தான்‌. 
வேங்கடமென்று உளங்கோயில்‌ உள்ளம்‌ வைத்து உள்ளினேன்‌. 

வகையறு நுண்கேள்வி வாய்வார்கள்‌ நாளும்‌ 
புகை விளக்கும்‌ பூம்புனலும்‌ ஏந்தி - திசை திசையின்‌. 
வேதியர்கள்‌ சென்று இறைஞ்சும்‌ வேங்கடமே! வெண்சங்கம்‌ 
ஊதியவாய்‌ மால்‌ உகந்த ஊர்‌.

இப்பாசுரம்‌ ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதக்‌ காட்சிகளைக்‌  கண்முன்‌ கொண்டுவந்து நிறுத்துகிறது. 
ஆழ்வார்கள்‌ காலத்தில்‌  இவ்விதமே திருமலையில்‌ சுப்ரபாதம்‌, தோமாலை சேவை, 
அர்ச்சனை போன்றவை நடந்தன போலும்‌. 
பொய்கையாரின்‌  பாசுரத்தை ஒட்டியே ஸ்ரீ. வேங்கடேச சுப்ரபாதத்திலும்‌ ஒரு 
சுலோகம்‌ அமைந்திருக்கிறது: 

**ஏலாலவங்க கநஸார சுகந்த தீர்த்தம்‌ திவ்யம்‌ வியத்ஸரிதி ஹேமகடேஷு பூர்ணம்‌ 
தருத்வாத்ய வைதிக சிகாமணய: ப்ரஹ்ருஷ்டா: திஷ்டந்தி வேங்கடபதேர்‌ தவ சுப்ரபாதம்‌'* 
இதன்‌ தமிழாக்கம்‌: 

“ஏல முது நடு லவங்க கணசார மணங்கமழும்‌ 
சீலமிகு தெய்வீக திருதீர்த்தம்‌ தலை சுமந்து 
ஞாலமுய்ய வேதமொழி நவற்றுணர்ந்த வேதியர்கள்‌ 
கோலமிகு கோயிலுற்றார்‌, வேங்கடவா எழுந்தருள்வாய்‌! 

உலகளந்த மாயர்‌' என்பது ஏழுமலையானுக்குச்‌  சிறப்பாகப்‌ பொருந்துகிறது. 
'*தாள்‌ பரப்பி மண்தாவிய ஈசன்‌:'  என்று நம்மாழ்வார்‌ திருவேங்கடவனைப்‌ பாடியுள்ளார்‌. 
எல்லோரையும்‌ திருவடியின்‌ கீழிட்டுக்கொண்டும்‌, கானமும்‌ வானரமும்‌ ஆனவற்றுக்கும்‌ முகங்கொடுத்துக்‌ கொண்டும்‌ 
திருமலைமீது நிற்கிறபடியால்‌ திருவேங்கடமுடையானை  உலகளந்த பெருமானாகச்‌ சொல்லப்‌ பொருத்தமுண்டென்பர்‌  ஆசிரியர்கள்‌. ்‌ 

எம்பெருமான்‌ உலகமளக்க திரிவிக்ரமனாக வளர்ந்தபோது, 
அவன்‌ திருமேனிபோல்‌ அவன்‌ திருக்கைகளிலிருந்த ஆயதங்கள்‌ 
ஜந்தும்‌ தங்கள்‌ குணங்களோடு இருமேனிக்குத்‌ தகுமாறு வளர்ந்து  அழகாய்‌ விளங்கின என்றபடி, 

உலகளந்த சோர்வு தீரப்‌ பாற்கடலில்‌ . படுத்திருக்கிறான்‌. 
இளைப்பாறியதும்‌,  திருவேங்கடத்திற்கு வந்து நின்று கொண்டிருக்கிறான்‌! 

தீக்கனல்‌ பறக்கும்‌ சக்கரம்‌, வெப்பம்‌ வீசும்‌ “வெய்ய' கதை, சார்ங்கம்‌; உஷ்ணமும்‌, ஒளியும்‌ உமிழும்‌ 'வெஞ்சுடர்‌' வாள்‌; 
இவற்றிற்கும்‌ வேங்கடத்திற்கும்‌ சூடான பொருத்தமுண்டு. 
“வேம்‌”  என்றால்‌ வெப்பமான, கொளுத்துகின்ற; 
'கடம்‌' என்றால்‌ பாலை,  நீரற்ற மலைப்பிரதேசம்‌. 
*வேங்கடம்‌' என்பது மலைமீது  குளிர்ச்சியாக இருப்பினும்‌, கீழே கடும்‌ வெயில்‌ கொளுத்தும்‌ 
வறண்ட  மலைக்கூட்டங்கள்‌ன உள்ள நிலப்பகுதியில்‌  அமைந்துள்ளது. 
எனவே வேங்கடமும்‌ ஐம்படைகளைப்‌  போன்றே வெப்பம்‌ மிகுந்தது. 
அதே சமயத்தில்‌ மேகம்‌ நிறைந்த  திருமலையுச்சி, பாற்கடலைப்‌ போல்‌ குளிர்ந்திருக்கிறது! 
திருமாலின்‌ வெஞ்சுடர்‌ வாளாகிய பேயாழ்வார்‌ இந்த ஐம்படைப்‌ பாசுரத்தை, “பயிலும்‌ சுடர்‌ ஒளி மூர்த்தி'யாகிய வேங்கடநாதனுக்கு 
முற்றும்‌ பொருந்தும்‌ விதத்திலேயே அமைத்துள்ளார்‌! 
---------
பூதத்தாழ்வார்‌ 
7. வேங்கடமே! விண்ணவர் தம்‌ வாயோங்கு தொல்புகழான்‌ வந்து--25-
8. வேங்கடமே! பன்னாள்‌ பயின்றது மணிதிகழும்‌ வண்தடக்கை--40-
8. வேங்கடமே! யாம்‌ விரும்பும்‌ வெற்பு 
வேங்கடவன்‌ மலரடிக்கே செல்ல அணி வேங்கடவன்‌ பேராய்ந்து. 
திருவேங்கடம்‌ கண்டீர்‌! வான்கலந்த வண்ணன்‌ வரை. 

பேயாழ்வார்‌ 
10, வேங்கடமே! மேலொரு நாள்‌ மண்‌ கோட்டுக்‌ கொண்டான்‌ மலை. --45
11-வேங்கடமே! மேலொரு நாள்‌ மண்மதியில்‌ கொண்டுகந்தான்‌ வாழ்வு. --50-
12. வேங்கடமே! மேல்நாள்‌ விளங்கனிக்குக்‌ கன்றெறிந்தான்‌ வெற்பு.--68
13-. வேங்கடமே! மேல்நாள்‌ குழக்கன்று கொண்டு எறிந்தான்‌ --குன்று. --71
14. வேங்கடமே! மேலை இளங்குமரர்‌ கோமான்‌ இடம்‌. --78
15. வேங்கடமே! மேலொருநாள்‌ தீங்குழல்‌ வாய்வைத்தான்‌  சிலம்பு.--88-
நால்பால்‌ வேதத்தான்‌ வேங்கடத்தான்‌. 
வேங்கடம்‌ என்‌ சிந்தை அனந்தன்‌ இறைபாடியாய இவை. 
வேங்கடமும்‌ இடமாகக்‌ கொண்டார்‌ கோபாலகன்‌. 
வேங்கடத்தான்‌ உள்ளத்தின்‌ உள்ளே உளன்‌. 

திருமழிசையாழ்வார்‌. 
18-வேங்கடமே! வானோர்க்கும்‌ மண்ணோர்க்கும்‌ வைப்பு. --நான்முகன் -45
19- வேங்கடமே! நாடு வளைத்து ஆடுதுமேல்‌ நன்று. 
20. வேங்கடமே! விண்ணோர்‌ தொழுவதும்‌ மெய்ம்மையால்‌ 
21. வேங்கடமே! மெய்வினை நோய்‌ தீர்ப்பதுவும்‌. 
22. வேங்கடமே! வானவரைக்‌ காப்பான்‌ மலை.
சென்று வணங்குமினோ சேணுயர்‌ 
வேங்கடமும்‌ தாம்‌ கடவார்‌ தண்துழாயார்‌.

வேங்கடத்தான்‌ மண்ணொடுங்கத்தான்‌ ௮ளந்த மன்‌ :
.பண்டெல்லாம்‌ வேங்கடம்‌ பாற்கடல்‌ வைகுந்தம்‌.
வேங்கடம்‌ தன்‌ குடங்கை நீரேற்றான்‌ தாழ்வு.

வேங்கடம்‌ பாடும்‌ மால்கிடந்த நீள்கடல்‌ புகும்‌.

வேங்கடவனையே கண்டு வணங்கும்‌ களிறு.

வேங்கடத்து நின்றான்‌ குரைகழலே கூறுவதே நலம்‌.

28. வேங்கடத்துள்‌ நின்று குடந்தையுள்‌ கடந்த மாலும்‌  அல்லையே? 
24. வேங்கடம்‌ மாலபதமே அடைந்து நாளும்‌ உய்ம்மினோ. 
24, வெறுப்பனோ வேங்கடத்து மேயானை. 
23. அழைப்பன்‌ திருவேங்கடத்தானைக்‌ காண. 
26. வேங்கடம்‌ பாடினேன்‌ வீடாக்கி நிற்கின்றேன்‌. 
27. வேங்கடவா! என்னுள்ளம்‌ புகுந்தாய்‌ திருவேங்கடமதனைச்‌ சென்று. 
சென்று வணங்குமினோ சேணுயர்‌ வேங்கடத்தை. 
வேங்கடத்தானை கங்குல்‌ புகுந்தார்கள்‌ காப்பணிவான்‌ 
போம்‌! குமரன்‌ நிற்கும்‌ பொழில்‌ வேங்கடமலைக்கே! 
கானமும்‌ வானரமும்‌ வேடும்‌ உடை வேங்கடம்‌. 
விண்ணாள வேண்டுவார்‌ வேங்கடத்தான்‌ பால்‌ வைத்தாரே பன் மலர்கள்‌.
நம்மாழ்வார்‌ 
23. வேங்கடமே! அருமா மாயத்து எனதுயிரே! எனதுடலே! --10-7-6-

-----------

அருள்‌ மிகுத்ததொரு வடிவாய்க்‌ கச்சிதன்னில்‌ 
ஐப்பசி மாதத்‌ திருவோணத்து நாளில்‌ 
பொருள்‌ மிகுத்த மறை விளங்கப்‌ புவியோர்‌ உய்யப்‌ 
பொய்கைதனில்‌ வந்து உதித்த புனிதா! முன்னாள்‌- 
இருளதனில்‌ தண்கோவல்‌ இடைகழிச்‌ சென்று 
இருவருடன்‌ நிற்கவும்‌ மால்‌ இடை நெருக்கத்‌ 
திருவிளக்காம்‌ எனும்‌ வையந்தகளி நூறாம்‌ 
செழும்பொருளை எனக்கு அருள்‌ செய்திருந்த நீயே. (பிரபந்த சாரம்‌, 8) 

மாமயிலைப்‌ பதியதனில்‌ துலா மாதத்தில்‌ 
வரும்‌ சதயத்து அவதரித்துக்‌ கோவலூரில்‌ 
தூமுனிவர்‌ இருவருடன்‌ துலங்க நின்று 
துன்னிய பேரிருள்‌ நீங்கச்‌ சோதி தோன்ற 
சேமமுடன்‌ நெடுமாலைக்‌ காணப்‌ புக்குத்‌ 
திருக்கண்டேன்‌ என உரைத்த தேவே! உன்றன்‌- 
பாமருவு தமிழ்மாலை நூறு பாட்டும்‌ ்‌ 
பழவடியேனுக்கு அருள்செய்‌ பரம நீயே, (பிரபந்த சாரம்‌, 4)
திருக்கோவலூர்‌ இடைகழியில்‌ முதலாழ்வார்கள்‌ ஏற்றிய  ஞானத்தமிழ்‌ விளக்கின்‌ ஒளியில்‌ ஈடுபட்டு அவர்களை ஸ்ரீதேசிகன்‌ 
புகழ்ந்தருனின பாசுரமாவது: 

““பாட்டுக்குரிய பழையவர்‌ மூவரைப்‌ பண்டொருகால்‌ 
மாட்டுக்கு அருள்தருமாயன்‌ மலிந்து வருத்துதலால்‌ 
நாட்டுக்கு இருள்செக நான்மறை அந்தி நடைவிளங்க 
வீட்டுக்கு இடைகழிக்கே வெளிகாட்டும்‌ இம்மெய்விளக்கே'”,
சகல வேதங்களின்‌ சாரமானது வேதமாதா எனப்படும்‌ காயத்ரீ  மந்திரம்‌. 
அதற்கும்‌ தாயாயிருப்பது திருவெட்டெழுத்தாகிய  நாராயண மந்திரம்‌. 
அதற்கும்‌ மூலமாயிருப்பது 'ஓம்‌' என்னும்‌ பிரணவ மந்திரம்‌. 


“நான்மறை அந்தி நடை விளங்க” 
முதலாழ்வார்கள்‌ அருளிச்செய்த திருவந்தாதிகளின்‌ முதற்‌ பாசுரங்களை, காயத்ரீ,  எட்டெழுத்து, 
பிரணவ மந்திரங்களை உள்ளடக்கிபவைகளாக  . 
மேற்கூறிய  மந்திரங்கள்‌ அனைத்தும்‌ மூன்று பதங்களாகப்‌ பிரியக்‌  கூடியவையாதலால்‌, 
ஒவ்வொரு ஆழ்வார்‌ பாசுரமும்‌ ஒரு  பதத்தைக்‌ கூறுவதாக, 8ழ்க்கண்டவாறு பொருள்‌ கூறப்படும்‌: 

ஆழ்வார்‌... பொய்கையார்‌ பூதத்தார்‌ பேயார்‌ 
பாசுரம்‌ வையந்தகளி அன்பேதகளி திருக்கண்டேன்‌ 
பிரணவம்‌ ௮. உ ம 
உலகம்‌ பூ: புவ: ஸுவ: 
வேதம்‌ ர்க்‌ யசார்‌ சாம 
சாதனை ச்ரவணம்‌ மனனம்‌ சாட்க்ஷாத்காரம்‌ 
பக்திநிலை பரபக்தி பரஞானம்‌ பரமபக்தி 
திருமந்திரம்‌ ஓம்‌ நமோ நாராயணாய 
வேங்கடேச ஓம்‌ நமோ வேங்கடேசாய 

மந்திரம்‌ ்‌ 
காயத்ரீ தத்‌ ஸவிதுர்‌ பர்கோ தயோயோந:  வரேண்யம்‌ தேவஸ்ய ப்ரசோதயாத்‌ 
தீமஹி நாராயண நாராயணாய வாச்தேவாய தன்னோ  காயத்ரீ வித்மஹே தீமஹி விஷ்ணு ப்ரசோதயாத்‌ 

ஓம்‌' என்பதை தமிழில்‌ 'வோம்‌' என்று எழுதினாலும்‌  உச்சரிப்பு அநேகமாக ஒன்றே; 
“வையம்‌' என்பதை“வோம்‌”  என்பதன்‌ தரிபாகக்‌ கொள்ளலாம்‌.
ஒங்காரத்திலிருந்து பிறந்ததே வையம்‌ (உலகம்‌).
வையம்‌' என்கிற சொல்‌ வைகுந்தம்‌, வேங்கடேசன்‌  என்பவை போலவே வகாரத்தில்‌ துவங்குகிறது. 
பொய்கையார்‌  வேங்கடேச பக்தராகையால்‌ வகாரத்தை முதலிட்டுப்‌ பாடினார்‌ 

**வையம்‌' என்றால்‌ உலகம்‌, பூவுலகு என்று பொருள்‌.
ருக்‌  வேதத்திலிருந்து பூ: என்னும்‌ சப்த விசேஷம்‌ தோன்றியது என்பர்‌. 
எனவே வையந்தகளி ருக்‌ வேதம்‌, பூ: இரண்டையும்‌ குறிப்பதாகக்‌  கொள்ளலாம்‌.
ஓம்‌" என்கிற ப்ரணவம்‌ ௮, ௨, ம என்று விரியும்‌. 
வையம்‌,  வார்கடல்‌, வெய்ய கதிரோன்‌ போன்ற ஸ்தூலப்‌  பொருட்களடங்கிய சகல ஐகத்துக்கும்‌ காரணன்‌: நாராயணன்‌.
“சூட்டினேன்‌' என்பதில்‌ 'நான்‌' என்னும்‌ சொல்‌  மறைந்துள்ளது; “நான்‌ சூட்டினேன்‌' என்று கூறத்‌ தேவையில்லை.
“நான்‌” என்று கூறும்‌ மகாரப்‌ பொருளான  ஜீவாத்மா, அகாரப்‌ பொருளான நாராயணனுக்கு அடிமை என்கிற 
சேஷத்வத்தை ''சுடராழியான்‌ அடிக்கே சூட்டினேன்‌'' என்பது  கூறுகிறது. 
ப்ரணவத்திலுள்ள உகாரம்‌ ஏவகாரம்‌, தமிழில்‌ “ஏ:  என்பது போன்றது. ''நாராயணனுக்கே நான்‌ அடிமை” என்பதே 
௮, ௪, ம என்று விரியும்‌ ஓங்காரத்தின்‌ உட்பொருள்‌. இதையே 
வையந்தகளி கூறுகிறது. ஏவகாரம்‌ “அடிக்கே! என்பதில்‌ உள்ளது. 

**இடராழி நீங்குக!” என்பது வேங்கட பதத்தின்‌  பொருளை நேரடியாக விளக்குகிறது. 
வேம்‌ * கடம்‌ - வேங்கடம்‌. -வேம்‌ - எரிக்கப்படுகின்ற, நீக்கப்படுகின்ற, கடம்‌ - பாவங்கள்‌, 
இடராழி. இடராழியை நீக்குவது வேங்கடம்‌. 

'"இடராழி நீங்குக”! என்பது வேங்கட பதத்தின்‌ பொருளாக  அமைந்திருப்பதால்‌, 
சுடராழியான்‌ அடியை, திருவேங்கடவனின்‌  அடியாகக்‌ கொள்ளத்‌ தடையில்லை. 
உலகனைத்தையும்‌ தன்‌  அடிக்குள்‌ வைத்துத்‌ திருமலையில்‌ நிற்பதால்‌ திருவேங்கடவனின்‌  திருவடிக்குத்‌ தனிச்சிறப்புண்டு.
நம்மாழ்வாரும்‌ 
'“திருவேங்கடத்தானே! புகலொன்றில்லா அடியேன்‌ உன்‌ அடிக்8ழ்‌  அமர்ந்து புகுந்தேனே”" என்
ஏழுமலையானின்‌  திருவடிகளிலேயே சரணமடைகிறார்‌. 
“வேங்கடவன்‌  திருமலையை விரும்புமவன்‌ வாழியே!”', என்கிறது பொய்கையாழ்வாரின்‌ வாழித்திருநாமம்‌.
ஸ்ரவணம்‌ கீர்த்தனம்‌ விஷ்ணோ: ஸ்மரணம்‌ பாதசேவனம்‌ 
அர்ச்சனம்‌ வந்தனம்‌ தாஸ்யம்‌ ஸக்யம்‌ ஆத்மநிவேதனம்‌. 

வையந்தகளி, அன்பேதகளி என்னும்‌ முதலிரண்டு  ஆழ்வார்களின்‌ பாசுரங்கள்‌ பிரகலாதன்‌ கூறும்‌ ஒன்பதுவித பக்தி 
சாதனைகளைக்‌ குறிப்பிடுகின்றன; 
''திருக்கண்டேன்‌'' என்னும்‌  மூன்றாவது ஆழ்வாரின்‌ பாசுரம்‌ பகவானை நேரில்‌ கண்ட  பேரின்ப நிலையை விவரிக்கிறது. 

““வையந்தகளி'* பாசுரத்தில்‌ 
'“சொன்மாலை'' என்பது  விஷ்ணோ: ஸ்ரவணம்‌ (பகவானைப்‌ பற்றிக்‌ கேட்டல்‌), கீர்த்தனம்‌ 
(அவன்‌ புகழ்‌ பாடுதல்‌); ''சுடராழியான்‌ அடிக்கே சூட்டினேன்‌'' என்பது ஸ்மரணம்‌ (பகவானை சதா நினைவு கூறுதல்‌); 
“அடிக்கே” என்பது வந்தனம்‌, தாஸ்யம்‌ (அடிமையாய்‌ இருத்தல்‌), பாதஸேவனம்‌; 
சொன்மாலை சூட்டினேன்‌ என்பது அர்ச்சனம்‌ (பூஜித்தல்‌); . ்‌ 
காயத்ரீ மந்திரம்‌: 
ஓம்‌ பூர்புவஸ்ஸுவ:  தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌ 
பர்கோ தேவஸ்ய தீமஹி  தியோ யோ ந: ப்ரசோதயாத்‌. 

பூ: புவ: ஸுவ: ஆகிய மூன்று சொற்கள்‌ பூலோகம்‌, புவர்லோகம்‌, சுவர்க்கம்‌ ஆகிய மூவுலகங்கள்‌. 
ய: (யோ) - யார்‌; ந: - நம்முடைய; திய: - அறிவை; 
ப்ரசோதயாத்‌ - தூண்டுகிறாரோ; தத்‌ - அந்த; தேவஸ்ய - 
சுடருடைய; ஸவிதுர்‌ - கடவுளின்‌; வரேண்யம்‌ - மேலாண, பர்க: 
- ஒளியை; தீமஹி: - தியானிப்போமாக. 

காயத்ரீமின்‌ பொருள்‌: 
யார்‌ நம்‌ அறிவைத்‌ தூண்டுகிறாரோ, அந்த சுடர்வீசும்‌ கடவுளின்‌ மேலான ஒளியைத்‌ தியானிப்போமாக. 

பிரம்ம காயத்ரீ அல்லது சூரிய காயத்ரீ எனப்படும்‌ இதுவே 
பல்லாயிரம்‌ ஆண்டுகளாக பாரத நாட்டின்‌ தேயப்‌  பிரார்த்தனையாக இருந்து வருகிறது. 
இதற்கு ரிஷி விசுவாமித்திரர்‌; 
தேவதை, ஸவிதா (சூரியன்‌, பரமாத்மா). 
தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌: 1 

வையந்தகளியில்‌ பொய்கையாழ்வார்‌ “ஸவிதா'' என்பதை  நேரடியாகத்‌ தமிழில்‌ 'கதிரோன்‌' என்று குறிப்பிட்டுள்ளதால்‌, 
இப்பாசுரம்‌ காயத்ரீ மந்திரத்தின்‌ முதற்பதத்தை விளக்குவதாகக்‌ கொள்ளலாம்‌.
'“தேவஸ்ய ஸவிதுர்‌”! (சுடருடைய கடவுளின்‌) என காயத்ரீயில்‌ வருவதை ஆழ்வார்‌. சுடர்‌ ஆழியான்‌! எனக்‌ கூறுவதோடு ஒப்பிடலாம்‌. 
'*தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌'' என்பதே ரிக்வேதமானது. 

விஷ்ணுகாயத்ரீ: மிகவும்‌ பிரசித்தி பெற்ற காயத்ரீ மந்திரத்தையொட்டி, 
பற்பல இந்துமத தெய்வங்களுக்கும்‌ உரிய காயத்ரீ மந்திரங்கள்‌ தோன்றின. 
மஹா நாராயண உபநிஷதத்தில்‌ விஷ்ணுவிற்குத்‌ தரப்பட்டுள்ள நாராயாண காயத்ரீ இது: 
நாராயணாய வித்மஹே, வாசுதேவாய தீமஹி தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்‌” 
பொகுள்‌: நாராயணனை அறிவோமாக, அதற்காக, வாசுதேவனை தியானிப்போமாக, 
அந்த தியானத்தில்‌, விஷ்ணு நம்மைத்‌ தூண்டுவாராக. 
' நாராயணாய வித்மஹே: உலகனர்‌ நாராயணனை அறிந்து உய்வடைய வேண்டுமென்றே 
பொய்கையார்‌ 'வையந்தகளி' என்று தொடங்கி நூறு பாசுரங்கள்‌ அருளிச்‌ செய்தார்‌. 
'“சுடராழியான்‌ அடிக்கே சூட்டினேன்‌ சொன்மாலை” என்கிற அடியில்‌ 
'*நாராயணனை அறிவோமாக'' என்னும்‌ ஆழ்வாரின்‌ நோக்கம்‌ தெரிகிறது. 
வையந்தகளியின்‌ இயற்கை வர்ணனை: காயத்ரீ மந்திரம்‌ சூரியோதம்‌, உச்சி, அஸ்தமனம்‌ ஆகிய மூன்று சந்தி காலங்களிலும்‌ ஜபிக்கப்படும்‌. 
பொய்கையார்‌ வைணவத்தின்‌ விடிவெள்ளி போன்றவர்‌. 
வையந்தகளி சூரியோதயத்தை வர்ணிப்பதுபோல்‌ அமைந்துள்ளது. 
திருவேங்கடமுடையானே, * வேங்கடகிருஷ்ணன்‌, பார்த்தஸாரதி என்கிற திருநாமங்களுடன்‌ எழுந்தருளியிருக்கும்‌ திவ்விய தேசம்‌, 
சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி. 
முதலாழ்வார்கள்‌ மூவரும்‌: திருமழிசையாழ்வாருடன்‌ இங்கு வந்து எம்பெருமானை சேவித்ததாகக்‌ கூறுவர்‌. 
திருவல்லிக்கேணியில்‌ புகழ்பெற்ற மெரீனா கடற்கரையில்‌  
விடிகாலை, சூரியன்‌ உதயமாகும்‌ நேரம்‌. நம்‌ காலடியில்‌ கடல்மண்‌, வையம்‌, பூமி. சற்று நிமிர்ந்து பார்த்தால்‌ 
வார்கடல்‌, விரித்து, அலைபாயும்‌ சமுத்திரம்‌. கடல்பரப்பின்‌ எல்லை வளைந்து தென்படுகிறது. 
மெதுவாக சூரியன்‌, இளஞ்சிவப்பு நிறத்துடன்‌, கடலின்‌ மறுகோடியில்‌ எழுகிறது. 
' இந்த அற்புதமான இயற்கைக்‌ காட்சியைத்தான்‌ ஆழ்வார்‌ சிறந்த உவமையாகப்‌ பயன்படுத்தியுள்ளார்‌.

நம்‌ காலுக்கடியிலுள்ள பூமி, மண்ணாலான அகல்‌ விளக்கைப்‌  போலுள்ளது; 
அதற்கு மேலேயுள்ள கடல்‌, உருக்கிய நெய்போல்‌  இளமஞ்சள்‌ நிறத்துடன்‌ காணப்படுகிறது. 
அதற்கும்‌ மேலே, உதய  சூரியன்‌ விளக்கைப்போல்‌ ஒளி வீசுகிறது. 
இந்த இயற்கைக்‌  காட்சியில்‌ ஒன்று கவனிக்க வேண்டும்‌, திரி இல்லை!
எனவே  ““வையந்தகளி'' பாசுரத்திலும்‌ திரி இல்லை; 
ஆனால்‌ அடுத்து  பூதத்தார்‌ பாடிய ''அன்பே தகளி'' பாசுரத்தில்‌ இரி உண்டு|
எனவே 
““வையந்தகளி'' விடிகாலையில்‌ செய்யப்படும்‌ சந்தியாவந்தனம்‌ போன்றது. 

காயத்ரீ மந்திரத்தின்‌ ரிஷியான விசுவாமித்திரரே  பாலசூரியனைப்‌ போன்ற ஸ்ரீ ராமச்சந்திரனை, 
'“கெளசல்யா  சுப்ரஜா ராம, பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே'* (கோசலையின்‌ உத்தம 
புத்திரனான ராமனே! கிழக்கில்‌ சூரியன்‌ உதயமாகிவிட்டது) என்று எழுப்பியதாக வால்மீகி ராமாயணம்‌ கூறுகிறது. 
உலகிற்கு காயத்ரீயை உபதேசித்த விசுவாமித்திர ரிஷியே, ஸ்ரீ வேங்கடேச  சுப்ரபாதத்தின்‌ முதலடியையும்‌ நமக்கு வழங்கியிருக்கிறார்‌! 

தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌ அருளிச்‌ செய்த  திருப்பள்ளியெழுச்சியும்‌-- 

“கதிரவன்‌ குணதிசைச்‌ சிகரம்‌ வந்து அணைந்தான்‌ 
கன இருள்‌ அகன்றது காலையம்பொழுதாய்‌'' 
என்று சூரியோதய வர்ணனையுடன்‌ துவங்குவதும்‌ இங்கு  ஒப்பு நோக்கத்தக்கது. 

“பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே'' என்பதை ''வையந்தகளியா,  வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன்‌ விளக்காக”! என்றும்‌; 
**கெளசல்யா சுப்ரஜா ராம'' என்பதை ''செய்ய சுடராழியான்‌'"  என்றும்‌ ஆழ்வார்‌. அருளிச்‌ செய்திருப்பதாகக்‌ கொள்ளலாம்‌. 
வையந்தகளி ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதமாகி விடுகிறது!
----------------
இந்த (பொய்கையாரின்‌ வையந்தகளி] பாசுரத்தின்‌  மகிமையால்‌ அந்த இடைகழியில்‌ பளிச்சென்று ஏதோ ஒரு திரை 
விலகி எப்படியோ ஒளியும்‌ வந்து விடுகின்றது. புறத்தே கவிந்து  கிடக்கும்‌ இருளும்‌ நீங்கி விடுகின்றது. 
அதே சமயத்தில்‌  பூதத்தாழ்வாரும்‌ ஞான விளக்கொன்றை ஏற்றுகின்றார்‌. 
அன்பை  அகலாகவும்‌, பொங்கி வரும்‌ ஆர்வத்தை நெய்யாகவும்‌,  
சிந்தையைத்‌ திரியாகவும்‌ கொண்டு ஞான விளக்கை ஏற்றுகின்றார்‌ பூதத்தார்‌.
இந்த விளக்கினால்‌ அகத்தே மண்டிக்கிடந்த உள்‌  இருட்டும்‌ நீங்கி விடுகின்றது. 

உடனே அந்தப்‌ பேயாழ்வார்‌  நான்காவது ஆளைக்‌ கண்டுபிடித்து விடுகின்றார்‌. 

“அன்பே தகளி”” விளக்குபவை: ்‌ 
௮ன்பேதகளி, உகாரம்‌, நமோ (நம: பதம்‌), “பர்கோ 
தேவஸ்ய தீமஹி'' என்டுற காயத்ரீ மந்திரத்தின்‌ இரண்டாவதுபதம்‌, 
வாசுதேவாய தீமஹி என்னும்‌ பதம்‌ ஆகியவற்றை விளக்குவதாகக் கொள்ளலாம்.

அன்பே தகளியில்‌, ஆழ்வார்‌ ''நாரணற்கு'' என்று  கூறியிருப்பதை ''நாராயணனுக்கே, நாராயணனுக்கு மட்டுமே”! 
என்று பொருள்‌ கொள்ளவேண்டும்‌. 
எனவே அன்பேதகளி, உகார  பத அர்த்தத்தை விளக்குகிறது எனலாம்‌. உகாரத்தால்‌  அந்நியசேஷத்வம்‌ கழிக்கப்படுகிறது. 

லக்ஷ்மியை நாராயணன்‌ திருமார்பில்‌ தரிக்கிறான்‌. பிராட்டிக்கு  “உ என்று திருநாமம்‌. 
'*நாரணற்கு!' என்பதால்‌ பிராட்டிக்கும்‌  சேர்த்தே ஞானத்தமிழ்‌ பாடியிருக்கிறார்‌ பூதத்தார்‌

அடுத்துப்‌ பாடிய பேயாழ்வார்‌ “'திருக்கண்டேன்‌'"  (லக்ஷ்மிப்‌ பிராட்டியைக்‌ கண்டேன்‌) என்றே துவங்குவதால்‌ இது  உறுதியாகிறது. 

நம: பதம்‌: 
“ஓம்‌ நமோ நாராயணாய”, ஓம்‌ நமோ வேங்கடேசாய”  என்னும்‌ மந்திரங்களின்‌ இரண்டாவது பதம்‌. 
ம: என்றால்‌ எனது”!  என்கிற மமகாரம்‌, ஆத்மா தனக்குரியது என்னும்‌ செருக்கு. 
“ந!  என்றால்‌ '“இல்லை”"', மமகாரத்தை இல்லை என்கிறது. 
அகங்கார, மமகாரங்களே (யான்‌, , எனது என்னும்‌ செருக்கு) ஆத்மாவுக்கு  விரோதி, 

அன்பே தகளியில்‌, **நாரணற்கு ஞானத்தமிழ்‌ புரிந்த நான்‌”! 
என்று வருவதால்‌ நான்‌, எனது என்பதெல்லாம்‌ நாராயணனுக்கே அடிமை என்பது தெளிவாகிறது.
இது நம: பதார்த்தமாக உள்ளது  எனலாம்‌
நமப்பதம்‌ சப்தத்தாலும்‌, அர்த்தத்தாலும்‌ உபாயத்தை  அறிவிக்கிறது. நாராயணனே உபாயம்‌ என்பது இதன்‌ பொருள்‌. 
இது ஸ்வசேஷத்தையும்‌, பகவத்‌ சேஷத்வத்வத்துக்கு இசையாமையையும்‌ கழிக்கறது

அன்பேதகளியில்‌, ஞானச்சுடர்‌ : தேவஸ்ய, ஒளியுடைய; 
நாரணற்கு - .ஸவிது:, கடவுளின்‌; விளக்கேற்றிய - பர்‌க;, ஒளியை. 

“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக 
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி'” 
என்னும்‌ முதலிரண்டு அடிகள்‌ - தீமஹி, தியானிப்போமாக என்று 
நேரடியாகப்‌ பொருள்படுவது இன்புறத்தக்கது. 

“பர்கோ தேவஸ்ய தீமஹி'' என்பதன்‌ விளக்கமாகவே 
"அன்பே தகளி'' அமைந்திருக்கிறது என்றால்‌ மிகையாகாது. 

வாசுதேவாய தீமஹி: 
இது விஷ்ணு காயத்ரீபின்‌ இரண்டாவது பதம்‌. 
*'வாசுதேவனை தியானிப்போமாக”* என்று பொருள்‌. 
மஹாநாராயண உபநிஷத்தில்‌ வரும்‌ நாராயண காயத்ரீக்கு  உரையெழுதிய பட்டபாஸ்கரர்‌, “வாசுதேவன்‌” என்பதற்கு 
“எல்லா ஜீவராசிகளிலும்‌ அந்தர்யாமியாக வசிப்பவன்‌'” என்று பொருள்‌ கூறுகிறார்‌. 

அன்பேத்களியில்‌, பூதத்தாழ்வார்‌ தமது இதயக் குகையிலே  அந்தர்யாமியாக எழுந்தருளியிருக்கும்‌ வாசுதேவனையே 
தியானித்து, ஞானச்சுடர்‌ விளக்கேற்றினார்‌ என்க. 


பிரகலாதன்‌ விவரிக்கும்‌ பக்து சாதனைகள்‌: 
வையந்தகளியில்‌ ''சுடராழியானடிக்கே சூட்டினேன்‌''  என்றார்‌. திருவடியைப்‌ பேசியதால்‌ இது தாஸ்யம்‌ ஆயிற்று. 
அன்பேதகளியில்‌, :*நாரணற்கு'' என்றுள்ளது, திருவடி கூறப்படவில்லை. 
மற்றும்‌, அன்பு, ஆர்வம்‌, இன்புருகு சிந்தை ஆகிய சொற்கள்‌ 'ஸக்யம்‌'' (பகவானிடம்‌ நட்பு) என்னும்‌ 
நெருங்கிய உறவைக்‌ கூறுவது போலுள்ளன. 
''நன்புருக'' என்பது  ஞானமய்மான ஆத்மா பகவதனுபவத்தில்‌ உருகுவதைக்‌ குறிப்பிடுவதால்‌, இது ''ஆத்ம நிவேதனம்‌”” ஆயிற்று. 

எனவே வையந்தகளி பிரகலாதன்‌ கூறும்‌ சாதனைகளில்‌ முதல்‌ ஏழையும்‌, 
௮ன்பேதகளி கடைசி இரண்டையும்‌ பற்றிப்‌ பேசுகின்றன. 

ஞானச்சுடர்‌ விளக்கேற்றினேன்‌ நாரணற்கு: -இதற்குப்‌ ''ப்ரபந்தரக்ஷை'' உரை: 
நாரணன்‌ விஷயமான விளக்கு நாராயண சப்தத்தின்‌ பொருளான அவனது ஸ்வரூப 
ரூப குண விபவாதிகளிலெங்கும்‌ பரவுகின்றது பற்றி ''ஞானச்சுடர்‌ விளக்கு" என்றது. 
ஞானச்சுடர்‌ என்பதற்கு ப்ரஞானமென்ற  விளக்கு என்ற பொருள்‌ முன்னோர்‌ இசைந்ததன்று. 
பர ஞானம்‌  நாரணனின்‌ அனுக்ரஹத்தாலே தானே வருவதாம்‌. அதை ஏற்றுவது  வேறொருவராகார்‌. 
அதற்கு வேண்டும்‌ பரபக்தியை ஏற்றுகிறார்‌ 
எல்லார்‌ நெஞ்சிலும்‌ ஆழ்வார்‌. “*ஏற்றினேன்‌'' என்று இறந்த  காலமாக ப்ரபந்தத்தன்‌ தொடக்கத்திலேயே அருளினது 
ப்ரபந்தத்தை எம்பெருமான்‌ நன்கு முடித்தருள்வது திண்ணமெனக்‌  கண்டதனால்‌ என்க. 

பொய்கையாரின்‌ '*வையந்தகளி”' பாசுரமும்‌, பூதத்தாரின்‌  “அன்பே தகளி'' பாசுரமும்‌ 
தகளி, நெய்‌, விளக்கு ஆகியவற்றுடன்‌  பக்தர்களுக்குக்‌ கலங்கரை விளக்கம்‌ போல்‌ வழிகாட்டுகின்றன. 
இவ்விரண்டு ஒளிவீசும்‌ பாசுரங்களையும்‌ இங்கே ஒப்பு நோக்குவோம்‌. 

வையந்தகளி: அன்பேதகளி: 

1. புறவிளக்கு; சூரியனை விளக்காக்கியது--அக விளக்கு; ஆத்மாவை விளக்காக்கியது
2. புறவிருளைக்‌ களைகிறது. ௮௧ இருளை அற்றுவறைது. 
3. திரி இல்லாமலே சிந்தையையே திரியாகத்‌ விளக்கேற்றினார்‌! திரித்து விளக்கேற்றினார்‌! 
4. மறைமுகமாக -ஆழியான்‌'' என்றார்‌.பரபக்தியைக்‌ கூறுகிறது;  ''சுடர்‌ நேரடியாக '“நாரணற்கு”* -பரஞானத்தைக்‌ கூறுகிறது;
எனவே அடிக்கே! என்றார்‌. 
தமிழ்‌ பற்றிப்‌ பேசவில்லை. 
“ஞானச்சுடர்‌' என்றார்‌. 
“'ஞானத்தமிழ்‌'' என்று  தமிழ்த்தாய்‌ வாழ்த்தாகவும்‌  துவங்கினார்‌. 

பேயாழ்வாரின்‌ “திருக்கண்டேன்‌”! 
பூதத்தாழ்வார்‌. ''அன்பேதகளி'' என்று தொடங்கி நூறு பாசுரங்கள்‌ பாடி முடித்ததும்‌, 
மூன்றாவது ஆழ்வாராகிய பேயார்‌ “*“திருக்கண்டேன்‌'' என்று கம்பீரமாகத்‌ துவங்கப்‌ பாடலானார்‌: 
திருக்கண்டேன்‌ பொன்மேனி கண்டேன்‌ திகழும்‌ 
அருக்கன்‌ அணிநிறமும்‌ கண்டேன்‌ - செருக்கிளரும்‌ 
பொன்னாழி கண்டேன்‌ புரிசங்கம்‌ கைக்கண்டேன்‌ 
என்னாழி வண்ணன்பால்‌ இன்று. 
திரு - ஸ்ரீ, மஹாலட்சுமி, பெரியபிராட்டியார்‌; அருக்கன்‌ - சூரியன்‌; செரு - போர்‌; கிளரும்‌ - கிளம்பும்‌; 
ஆழி - சுதர்சனச்‌ சக்கரம்‌; புரிசங்கம்‌ - வலம்புரிச்‌: சங்கு, பாஞ்சசன்னியம்‌; 
ஆழி வண்ணன்‌ - கடல்நிறக்கடவுள்‌, விஷ்ணு. 

என்னுடைய கடல் வண்ணனான ஸ்ரீநிவாஸனிடம்‌ இன்றைய தினம்‌ பெரிய பிராட்டியாரை சேவிக்கலானேன்‌. 
பொன்னிறமான  திருமேனியைக்‌ கண்டேன்‌. பிரகாசிக்கும்‌ சூரியன்‌ போன்ற அழகிய நிறத்தையும்‌ கண்டேன்‌. 
போர்க்களத்தில்‌  சீறி யெழுந்து  செயல்படும்‌ அழகிய சுதர்சனச்‌ சக்கரத்தையும்‌ கண்டேன்‌. 
மற்ற  திருக்கையில்‌ வலம்புரிச்‌ சங்கையும்‌ சேவிக்கப்‌ பெற்றேன்‌. 

எல்லா உலகங்களும்‌ சரீரமாகக்‌ கொண்ட பெருமானைக்‌  காணும்‌ காட்சியிலே எல்லாவற்றையும்‌ கண்ட ஆழ்வார்‌ அன்பின்‌ 
மிகுதியாலே அவனுடைய பெருமைக்குக்‌ காரணமான சிலவற்றை “அது கண்டேன்‌, இது கண்டேன்‌'' என்கிறார்‌. 

பேயாழ்வார்‌ முதன்‌ முதலாகப்‌ பெரிய பிராட்டியாரின்‌ ௮ருள்‌  வடிவத்தைக்‌ காண்கின்றார்‌; 
பொன்மேனியையுடைய அன்னையாருடன்‌ கூடிய எம்பெருமானின்‌ மரகதத்‌ திருமேனி 
இப்போது பொன்மேனியாகவே காட்சியளிக்கிறது. 
மரகத மலையில்‌ உதித்து ஒளிவீசி வரும்‌ இளஞாயிறு போலத்தோன்றி 
இருவரது ஒளியையும்‌ -- பொன்‌ ஒளியும்‌, மரகத ஒளியும்‌ கலந்து 
ஒளிர்கின்ற அந்தக்‌ கலப்பு ஒளியையும்‌ -- காண்கின்றார்‌; 
'திகழும்‌  அருக்கன்‌ ௮ணிநிறமும்‌ கண்டேன்‌! என்பதால்‌ இது பெறப்படுகின்றது. 
'*இருவர்‌ சேர்த்தியால்‌ பிறந்த முதாய சோபை”! என்பது பெரியவாச்சான்‌ பிள்ளையின்‌ வியாக்கியான விளக்கம்‌. 

“திருக்கண்டேன்‌' விளக்குபவை: 
மகாரம்‌, ஸுவர்லோகம்‌, சாமவேதம்‌, காரண சீரம்‌,  சத்துவகுணம்‌, சாட்க்ஷாத்காரம்‌, ஆனந்தம்‌, ஈசுவரன்‌,  புருஷார்த்தம்‌, 
“தியோ யோ ந; ப்ரசோதயாத்‌'' என்னும்‌ காயத்ரீ  மந்திரத்தின்‌ மூன்றாவது பதம்‌, 
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்‌, 
நாராயணாய, வேங்கடேசாய. 
மகாரம்‌: 

௮, ௨, ம்‌ என்று பிரியும்‌ 'ஒம்‌' என்கிற பிரணவ மந்திரத்தின்‌ 
மூன்றாவது எழுத்து. மகாரம்‌ “மந” என்ற தாதுவிலே தோன்றியது. 
இதற்கு ஞானம்‌ என்று அர்த்தம்‌. இதனால்‌ ஆத்மா ஞானமயமானது என்றதாயிற்று. 
“மநு” என்ற தாதுவும்‌ மகாரத்துக்குக்‌ காரணம்‌. இதற்கு அறிதல்‌ என்று பொருள்‌. 
மகாரம்‌ இருபத்தைந்தாம்‌ எழுத்து. இதனால்‌ இருபத்து நான்கு  தத்வங்களான ப்ரக்ருதியைக்‌ காட்டிலும்‌, 
இருபத்தைந்தாம்‌  தத்வமான ஆத்மா வேறுபட்டவன்‌; ஆனந்தமயமானவன்‌ என்பது  பெறப்படும்‌. 

"திருக் கண்டேன்‌' பாசுரம்‌ ஜீவாத்மா (இங்கே ஆழ்வார்‌) பரம  புருஷார்த்தமாகிய பகவதனுபவத்தை நேரடியாக அறிந்து, 
ஆனந்தமடைவதாகக்‌ கூறுவதால்‌, மகாரத்தை விளக்குவதாயிற்று. 

சாமவேதம்‌, ஸுவர்லோகம்‌: 
சாமவேதத்திலிருந்து ஸ்வ: என்னும்‌ சப்த விசேஷம்‌ பிறந்தது. 
ஸுவ: என்பது சுவர்க்க லோகம்‌. 
எண்ணத்தைக்‌ கடவுள்பால்‌  செலுத்துவதே சுவர்க்க லோகமாகிறது. 
ஸ்ரீமந்நாராயணனை  தரிசிப்பதே நிலையான சொர்க்க அனுபவம்‌. 'திருக்கண்டேன்‌: இதையே விவரிக்கிறது. 
வைகுண்ட ஏகாதசியன்று பெருமாளைக்‌  காணச்‌ செல்லும்‌ வழி '*சொர்க்கவாசல்‌'” எனப்படுவதை நாம்‌  அறிவோம்‌. 

சத்துவ குணம்‌ மேலோங்கிய நிலையிலேயே ஸமாதி  நிலையை மனம்‌ அடைந்து, ஜகத்காரணனாகிய ஈசுவரனைக்‌ 
கண்டு, பரமானந்தம்‌ அடைய முடியும்‌. இதுவே பகவத்‌  சாட்க்ஷாத்காரம்‌, மோட்சம்‌ என்கிற புருஷார்த்தம்‌. 
“திருக்கண்டேன்‌'பாகரம்‌ சத்துவகுணம்‌, காரணம்‌, சாட்க்ஷாத்காரம்‌ (நேரில்‌ இறைவனைக்‌ காணுதல்‌), 
ஆனந்தம்‌, ஈசுவரன்‌, புருஷார்த்தம்‌ ஆகியவற்றின்‌ விளக்கமாகவே அமைந்திருக்கிறது 
என்பது நன்கு விளங்குகிறது. 


தியோ யோ ந: ப்ரசோதயாத்‌: 
“யார்‌ நம்முடைய அறிவைத்‌ தூண்டுகிறாரோ'' என்னும்‌  பொருளுடைய காயத்ரீ மந்திரத்தின்‌ மூன்றாவது பதம்‌. 

தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்‌: 
அந்த தியானத்தில்‌; ந: - நம்மை; விஷ்ணு, ப்ரசோதயாத்‌ -  தூண்டுவாராக
இது விஷ்ணு காயத்ரீ மந்திரத்தின்‌ மூன்றாவது பதம்‌. 

ஈசுவரனாகிய மகாவிஷ்ணு பக்தனுக்கு இரங்கி, அவனது அறிவைத்‌ தூண்டி, அருள்‌ புரிந்தால்தான்‌, 
எம்பெருமானுடைய  திருக்காட்சி கிட்டும்‌. இவ்விதமே ஆழ்வார்‌ பகவதனுபவம்‌ பெற்று 'திருக்கண்டேன்‌' பாடினார்‌ என்க. 

நாராயணாய, வேங்கடேசாய: 
“ஓம்‌ நமோ நாராயணாய,:'' “ஓம்‌ நமோ வேங்கடேசாய* என்னும்‌ மந்திரங்களின்‌ கடைப்பதம்‌. 
நாராயண - நார * அயந.  “நார! என்றால்‌ அழியாத பொருள்களின்‌ கூட்டம்‌; 
அயந -  ஆதாரம்‌. நாரங்களுக்கெல்லாம்‌ அந்தர்யாமியாய்‌ வியாபித்து  ஆதாரமாய்‌ இருப்பவன்‌ நாராயணன்‌. 
நாராயணாய என்பது  நான்காம்‌ வேற்றுமை, பிரார்த்தனைப்‌ பொருளில்‌ வந்தது. 

“ஓம்‌ நமோ நாராயணாய”' :என்னும்‌ திருமந்திரம்‌ 
**சர்வகாரணனாய்‌ சர்வரக்ஷகனான எம்பெருமானுக்கே  உரியவனான நான்‌ சர்வசேஷியான அந்நாராயணனுக்கே எல்லா 
அடிமைகளையும்‌ செய்யப்‌ பெற வேணும்‌'' என்று பொருள்படும்‌  பிரார்த்தனை. ்‌ 

“திருக்கண்டேன்‌' பாசுரம்‌ நாராயணன்‌, பக்தர்களுக்கு  எளியவனாய்‌ தன்னை வெளிப்படுத்திக்‌ காட்டுவதை விவரிக்கும்‌ 
வகையில்‌ அமைந்துள்ளதால்‌ '*'நாராயணாய”'' என்பதன்‌  விளக்கமாக, உள்ளது எனலாம்‌. 

திரு - அலர்மேல்‌ மங்கை, மகாலட்சுமி, ஸீ 
ஆழிவண்ணன்பால்‌ - கடல்வண்ணக்‌ கடவுளிடம்‌; கண்டேன்‌ என்பதால்‌ ::ஸ்ரீநிவாஸனைக்‌ கண்டேன்‌'”  
ஸ்ரீமந்நாராயணன்‌  செளலப்யனாய்‌ நமக்கெல்லாம்‌ மிக எளியவனாகக்‌ காட்டிக்  கொடுக்கும்‌ அர்ச்சை நிலையே ஸ்ரீ வேங்கடேசன்‌. 
எனவே ஸ்ரீநிவாஸ பத விளக்கமாக “*“திருக்கண்டேன்‌'' அமைந்துள்ளது. 

விஷ்ணுவின்‌ ஐவகை நிலைகள்‌: 
உலகங்களை நிர்ஹிக்கும்‌ பொருட்டு, ஸ்ரீமந்நாராயணன்‌ 
பரத்வம்‌, வியூகம்‌, விபவம்‌, அந்தர்யாமித்வம்‌, அர்ச்சாவதாரம்‌  என்று ஐவகை நிலைகளில்‌ எழுந்தருளியிருக்கிறான்‌. , 
““திருக்கண்டேன்‌'* பாசுரத்தில்‌ பேயாழ்வார்‌ ஐந்து முறை *“கண்டேன்‌'' என்று பேசியிருப்பதால்‌, 
எம்பெருமானின்‌ ஐவகை  நிலைகளையுமே கண்டிருப்பார்‌ என்றே தோன்றுகிறது. 
கீழ்ப் பாசுரங்களில்‌ ஆழ்வார்‌ எம்பெருமானின்‌ ஐவகை  நிலைகளையும்‌ பன்முறை பேசியிருப்பதும்‌ இங்கு நினைவு கூறத்தக்கது. 
திருவேங்கடத்தை மங்களாசாஸனம்‌ செய்யும்‌ ஒரு  பாசுரத்தில்‌ பேயாழ்வார்‌ எம்பெருமானின்‌ ஐந்து நிலைகளையும்‌ குறிப்பிடுகிறார்‌. 

பாற்கடலும்‌ வேங்கடமும்‌ பாம்பும்‌ பனிவிசும்பும்‌ 
நூற்கடலும்‌ நுண்ணூல தாமரைமேல்‌ - பாற்பட்‌ 
டிருந்தார்‌ மனமும்‌ இடமாகக்‌ கொண்டான்‌ 
குருந்தொசித்த கோபாலகன்‌. 

பாற்கடல்‌ - திருப்பாற்கடல்‌ - வியூக நிலை. 
வேங்கடம்‌ - அர்ச்சாவதார நிலை.  
பனிவிசும்பு - வைகுந்தம்‌ - பரத்வ நிலை, 
மனம்‌ - அந்தர்யாமித்வ நிலை. 
கோபாலகன்‌ - விபவம்‌ (அவதார நிலை). 
எனவே '“திருக்கண்டேன்‌” பாசுரமும்‌ விஷ்ணுவின்‌ ஐந்து  நிலைகளையும்‌ கூறுவதாகக்‌ 8&ழே காண்போம்‌: 

திருக்கண்டேன்‌: . 
திரு நாட்டில்‌ (வைகுந்தத்தில்‌) திருமகளுடன்‌ திருமால்‌ திரு மா மணி மண்டபத்தில்‌ எழுந்தருளியிருப்பதைக்‌ கண்டேன்‌; -பரத்வநிலை. 
பொன்மேனி கண்டேன்‌: 
பொன்‌ . ஆபரணங்களால்‌ அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ  வேங்கடாசலபதியின்‌ திருமேனியைக்‌ கண்டேன்‌; அர்ச்சாவதார நிலை. 
ஸ்ரீயின்‌ சேர்த்தியாலும்‌ பொன்மேனி எனலாம்‌. 
அருக்கன்‌ அணிநிறமும்‌ கண்டேன்‌: 
சர்வ வியாபியாகிய சூரியனின்‌ அழகிய ஏழு நிறங்களைக்‌  கண்டேன்‌; எல்லா உயிர்களிலும்‌ சூரிய நாராயணன்‌ 
வியாபித்திருக்கும்‌ அந்தர்யாமித்வ நிலை. 
பொன்னாழி கண்டேன்‌... என்னாழி வண்ணன்பால்‌ இன்று: 
ஆழி - சக்கரம்‌, கடல்‌; கடல்‌ வண்ணனைக்‌ கண்டதாகக்‌  கூறுவதால்‌, திருப்பாற்கடல்‌ நாதனைக்‌ குறிக்கிறது.
இது வியூக நிலை. 
புரிசங்கங்‌ கைக்கண்டேன்‌: 
பாஞ்சசன்னியம்‌ ஊதிய பார்த்தஸாரதியைக்‌ கண்டேன்‌. --அவதார நிலை. 

த்வய மந்திரம்‌ அல்லது மந்த்ர ரத்னம்‌: 
ஸ்ரீமந்‌ நாராயண சரணெள சரணம்‌ ப்ரபத்யே; 
ஸ்ரீமதே நாராயணாய நம:'' 
என்பதே ஸ்ரீவைஷ்ணவத்தில்‌ பிரசித்தி பெற்ற துவயமந்திரம்‌. 
இரண்டு வாக்கியங்களால்‌ ஆன துவயத்தை ஆசாரியர்கள்‌ அனைவரும்‌ ஆதரித்து, மந்த்ர ரத்னம்‌ என்று பாராட்டினர்‌, 

ஸ்ரீ என்றால்‌ திரு, மகாலட்சுமி, பெரிய பிராட்டியார்‌. எனவே  “'ஸ்ரீயுடன்‌ கூடிய நாராயணனின்‌ திருவடிகளையே சரணமாகப்‌  பற்றுகிறேன்‌; 
ஸ்ரீபுடன்‌ கூடிய நாராயணனுக்கே தொண்டு செய்ய  விரும்பி, வணங்குகிறேன்‌! என்பதே துவயத்தின்‌ பொருள்‌.
பூர்வ (முதல்‌) வாக்கியம்‌ உபாயம்‌ (வழி) எது என்பதையும்‌, உத்தர (இரண்டாவது) வாக்கியம்‌ உபேயம்‌, ப்ராப்யம்‌ (குறிக்கோள்‌) 
என்ன என்பதையும்‌ காட்டுகின்றன. 

த்வயத்தின்‌ மகிமை 
ஸ்ரீ என்னும்‌ மகாலட்சுமித்‌ தாயார்‌ அனைத்து ஜீவர்களுக்கும்‌ அன்னை, கருணையே வடிவானவள்‌, பக்தர்களுக்கு உடனே 
மனமிரங்கி, அருள்புரியும்படி, நாராயணனிடம்‌ புருஷகாரம்‌ (சிபாரிசு) செய்பவள்‌. 
பிராட்டியை முன்னிட்டுச்‌ சரசணடைவதே, சுலபமாக உய்வடைய வழி. பிராட்டியே உபாயம்‌ (வழி), பிராட்டியே உபேயம்‌ 
(குறிக்கோள்‌). எனவே இவளை 'புருஷகார பூதை' என்பர்‌. 

திருவந்தாதிகள்‌ துவய மந்திர சாரமானவை 
முதலாழ்வார்களின்‌ முதற்பாசுரங்கள்‌ 8ழ்க்கண்டவாறு துவய மந்திர சாரமானவை: 
ஆழ்வார்‌ பேயார்‌ பூதத்தார்‌ பொய்கையார்‌ 
பாசுரம்‌ திருக்கண்டேன்‌ அன்பேதகளி வையந்தகளி 
ஆழ்வார்‌ திரு நாரணற்கு அடிக்கே சூட்டினேன்‌ 
வாக்கு 
பூர்வ ஸ்ரீமந்‌ நாராயண  சரணெள சரணம்‌ 
வாக்கியம்‌ ப்ரபத்யே 
உத்தர ஸ்ரீமதே நாராயணாய நம 
வாக்கியம்‌ 

திருக்கண்டேன்‌ பாசுரத்தில்‌ வரும்‌ “திரு”, ஸ்ரீமந்‌, ஸ்ரீமதே என்பதையும்‌; 
அன்பேதகளியில்‌ வரும்‌ 'நாரணற்குஷ்‌ நாராயண, நாராயணாய என்பதையும்‌; 
வையந்தகளியில்‌ வரும்‌ 'அடிக்கே சூட்டினேன்‌' என்பது 'சரணெள (அடிகளை) சரணம்‌ ப்ரபத்யே", 
நம: என்பதையும்‌ குறிக்கும்‌ வகையில்‌ அமைந்துள்ளன. 
எனவே  மூன்று இரத்தினங்கள்‌ போன்ற இப்பாசுரங்களிலும்‌, மந்திர இரத்தினமான துவயம்‌ பரிமளிக்கறது! 

இதைத்‌ தவிர முதலாழ்வார்கள்‌ பற்பல பாசுரங்களில்‌ “திரு” என்று ஸ்ரீயுடன்‌ சேர்த்தே ஸ்ரீநிவாஸனைப்‌ பாடியிருக்கிறார்கள்‌. 
ஸ்ரீநிவாஸன்‌ துவயமந்திர வடிவினன்‌ 
திருமலைக்‌ கோயிலில்‌ பிராட்டிக்குத்‌ தனி சன்னிதி  கிடையாது.
ஸ்ரீநிவாஸனின்‌ திருமார்பிலேயே அலர்மேல்‌ மங்கைத்‌ தாயார்‌ நித்தியவாசம்‌ செய்கிறாள்‌. 
திருமலையப்பன்‌ அம்மையப்பன்‌! இதனால்தான்‌ இவனை வழிபடுபவர்களுக்கு, 
கைம்மேல்‌ பலன்‌ உடனடியாகக்‌ இடைத்துவிடுகிறது! 

ஸ்ரீதிவாஸனை 'பாலாஜி' (பாலா என்பது தாயாரின்‌ திருநாமம்‌) என்றாலே வடநாட்டில்‌ தெரியும்‌. அர்ச்சாவதார ரத்தினமான 
வேங்கடரத்தினம்‌ மந்திர ரத்தினமான துவயவடிவினன்‌ என்பதை ஆழ்வார்‌. ரத்தினங்கள்‌ மூவரும்‌ நன்கு அறிந்திருந்தனர்‌! 
ஸ்ரீநிவாஸன்‌ சிறப்பாக துவயமந்திரம்‌ பொலியும்‌ திருவடிவம்‌ கொண்டவன்‌ என்பதாலேயே முதலாழ்வார்கள்‌ விஷ்ணுவின்‌ 
அர்ச்சை நிலையில்‌ இவனுக்கே முதலிடம்‌ கொடுத்துப்‌ பாடியிருக்கிறார்கள்‌. ! 

---------------

பரபக்தி, பரஞானம்‌, பரமபக்தி: 
பொய்கையாரின்‌ ''வையந்தகளி'" என்று தொடங்கும்‌ முதல்‌  திருவந்தாதி பரபக்தியையும்‌; 
பூதத்தாரின்‌ “அன்பே தகளி” எனத்துவங்கும்‌ இரண்டாம்‌ திருவந்தாதி பரஞானத்தையும்‌; 
பேயாழ்வாரின்‌ ''திருக்கண்டேன்‌'' என்று துவங்கும்‌ மூன்றாம்‌ திருவந்தாதி பரமபக்தியையும்‌ சொல்வதாக சிலர்‌ கொள்வர்‌. 

“பரபக்தி' என்பது எம்பெருமானை நேரில்‌ காணவேண்டும்‌ என்கிற ஆவல்‌; 
அவனை நேரில்‌ காணல்‌ 'பரஞானம்‌
பின்பு மேன்மேலும்‌ இடையறாது அனுபவிக்க வேண்டும்‌ என்னும்‌ ஆவல்‌ 'பரமபக்தி', 

இவற்றை மற்றொரு விதமாகவும்‌ பண்டைய ஆசிரியர்கள்‌ விளக்குவர்‌: 
எம்பெருமானோடு கலந்தபோது ஸூகிக்கும்படியாகவும்‌,  பிரிந்தபோது துக்கிக்கும்படியாகவும்‌ இருக்கும்‌ நிலை 'பரபக்தி". 
எம்பெருமானுடைய முழுநிறைவு நேர்காட்சி “பரஞானம்‌”. 
அவனுடைய அனுபவம்‌ பெறாவிடில்‌ தீரைவிட்டுப்‌ பிரிந்த மீன்போல மூச்சு அடங்கும்படி இருத்தல்‌ 'பரமபக்தி", 


முதலாழ்வார்களும்‌, நமது நிலையும்‌ 
பரபக்தி, பரஞானம்‌, பரமபக்தி ஆகிய மூன்று நிலைகளையும்‌ 
முதலாழ்வார்கள்‌ மட்டுமின்றி திருவேங்கடமுடையானின்‌ 
பக்தர்கள்‌ அனைவருமே தகுதிக்கேற்றபடி  சிறிதளவாவது அனுபவிக்கிறார்கள்‌ எனலாம்‌! 

சம்சார வாழ்க்கையில்‌ உழன்று கொண்டிருந்தாலும்‌,  திருமலையின்‌ பெருமையையும்‌, ஏழுமலையானின்‌ 
மஹிமையையும்‌ பூர்வ ஜன்ம புண்ணியத்தால்‌ நாம்‌ கேட்கிறோம்‌. 
பூலோக வைகுந்தமாகிய திருமலைக்குச்‌ சென்று ஸ்ரீநிவாஸனை தரிசிக்க வேண்டும்‌ என்கிற ஆவல்‌ நமக்கு எழ, 
“'திருவேங்கடம்‌  அடை நெஞ்சமே!" என்று திருமங்கையாழ்வாரைப்‌ போல்‌ 
உற்சாகத்துடன்‌ கிளம்புகிறோம்‌. இது லேசான பரபக்தி! 

பிறகு திருமலைக்குச்‌ சென்று, எப்படியாவது முண்டியடித்துக்‌  கொண்டு, ஸ்ரீவேங்கடேசனை நொடிப் பொழுதாவது நேரில்‌ 
காண்கிறோம்‌. இது லேசான பரஞானம்‌! 

ஆயினும்‌ திருவேங்கடமுடையானை ஒருமுறை காண்பது  திருப்தியளிப்பதில்லை. பின்பு மேன்மேலும்‌ அவனை 
இடையறாது கண்டு அனுபவிக்க வேண்டும்‌ என்கற ஆவல்‌  எழுகிறது. இது லேசான பரமபக்தி! 

---------------

ஞானம்‌, பக்தி, சாக்ஷாத்காரம்‌ (இறைக்காட்சி) 

மூன்று திருவந்தாதிகளும்‌ முறையே ஞான, பக்தி, சாக்ஷத்காரங்களைப்‌ பற்றியவை என்று பெரியவாச்சான்‌ பிள்ளை 
அருளிச்‌ செய்திருக்கிறார்‌. 
“ஞானச்சுடர்‌' என்பதற்கு  "பரமபக்தியாகிற விளக்கு” என்றது அவருரை. 
மூன்றாம்‌ திருவந்தாதி அவதாரிகையிலும்‌--- 
*"ஞானத்தைச்‌ சொல்லுகிறது வைசந்தகளி; ஞான  விபாகமான பக்தியைச்‌ சொல்லுகிறது அன்பே தகளி. 
பக்தியாலே  சாக்ஷாத்கரித்த படி  சொல்லுகிறது இதில்‌ (திருக்கண்டேன்‌)'* என  அவர் தாமே அருளியுள்ளார்‌. 
 
இங்ஙனம்‌ ஞான, பக்தி, ஸாக்ஷாத்காரங்களை இவர்கள்‌ அருளிச்‌ செய்கிறார்கள்‌ என்றதைக்‌ கொண்டு, 
““பொய்கையாழ்வாருக்கு சாஸ்திர ஞானம்‌ மட்டுமே யுள்ளது. 
பூதத்தாழ்வாருக்கு அத்துடன்‌ பக்தியும்‌ சேர்ந்தது. 
பேயாழ்வாரே  சாசக்ஷாத்காரம்‌ செய்தவர்‌' என்ற பாகுபாடு கொள்ள வேண்டா. 
மூவரும்‌ மூன்றுமுள்ளவராயினும்‌, அம்மூன்றும்‌ முறையே வரவேண்டியவை யாகையாலே தமக்கு அம்முறையை அறிவிக்கக்‌ 
கருதி, அவரவர்‌ அடைவதாக அவற்றை அருளினார்கள்‌ என்பதே தத்துவம்‌. 

திரிவிக்ரமன்‌ திருவடியினின்று பெருகிய கங்கை மூன்றாகப்‌  பிரிந்தது போல்‌, அவன்‌ விஷயமான இவர்களின்‌ ப்ரபந்தம்‌ மூன்று 
பிரிவுற்றதென்றார்‌ ஸ்ரீதேசிகள்‌. 

இப்ரபந்தக்‌ கர்த்தாக்கள்‌ மூவராயினும்‌ பொருள்‌ ஒற்றுமை  பற்றி இம்மூன்றும்‌ ஒரு ப்ரபந்தமாகவே அமைகிறது. 
ஒரு  வ்யாகரணத்திற்குப்‌ பாணிநீ, காத்யாயனர்‌, பதஞ்சலி ஆடிய மூவரும்‌ கர்த்தாக்கள்‌ ஆனாப்போலே, 
இப்ரபந்தங்களுக்கும்‌  இம்முனிவர்‌ மூவரும்‌ கர்த்தாக்கள்‌ என்று உரையாசிரியர்‌  துள்ளார்‌. 
வேங்கடவன்தமர்‌ ஏற்றிய வேதவிளக்கு: 

முதலாழ்வார்கள்‌ ஸ்ரீநிவாஸப்‌ பிரியர்களாகையால்‌ அவர்களை 'வேங்கடவன் தமர்‌' எனலாம்‌. 
அவர்கள்‌ ஏற்றிய 
வையந்தகளி, அன்பேதகளி விளக்குகள்‌ ''நான்மறை அந்தி நடை விளங்கச்‌'' செய்வதால்‌ வேதவிளக்குகள்‌ ஆயின. - 
திருமலைக்கே வேதகிரி: என்றொரு பெயருண்டு. 
'“வேங்கட  வெற்பென விளங்கும்‌ வேதவெற்பே”' (வெற்பு - மலை) என்று  ஸ்ரீ தேசிகனும்‌ அருளிச் செய்தார்‌. 

திருவேங்கடவனையே ''உணர்வாரார்‌ உன்‌ பெருமை... வேங்கடத்தாய்‌! நால்வேதப்‌ பண்ணகத்தாய்‌!'' என்று ஸ்ரீ 
பொய்கையாரும்‌, 
“வேதத்தான்‌ வேங்கடத்தான்‌ விண்ணோர்‌ முடிதோயும்‌ பாதத்தான்‌ பாதம்‌ பயின்று'” என்று பூதத்தாரும்‌, 
பேயாரும்‌ பாடியுள்ளனர்‌. வேதகிரி என்னும்‌ ்‌ குன்றின்‌ மேலிட்ட வேத விளக்கே வேங்கடவன்‌. 

இவற்றைக்‌ கருதியே இங்கே, ''வேங்கடவன் தமர்‌ ஏத்திய  வேத விளக்கு'' என்னும்‌ தலைப்பு அமைந்தது! 

வானரம்‌ வணங்கும்‌ வேங்கடம்‌ 

சமீப காலம்வரை, திருமலை என்றாலே வேங்கடேச பக்தர்களுக்கு அங்கே குரங்குகள்‌ செய்யும்‌ அட்டகாசங்களே 
நினைவுக்கு வரும்‌! வானர சேஷ்டைகளை நினைத்தே திருப்பாணாழ்வார்‌ 'மந்திபாய்‌ வடவேங்கடமாமலை' என்று 
மங்களாசாஸனம்‌ செய்திருக்கிறார்‌ போலிருக்கிறது. 
குரங்குகள்‌  ஏழுமலையில்‌ குதித்துக்‌ களிப்பூட்டிய காலம்‌ இன்று அநேகமாக மலையேறிவிட்டது எனலாம்‌. 
குரங்குகளுக்கு பதில்‌ குடில்களே திருமலையில்‌ எங்கும்‌ தென்படுகின்றன. ' 


பிள்ளைப்பெருமாள்‌ அய்யங்கார்‌ பதினேழாவது 
நூற்றாண்டில்‌ வாழ்ந்தவர்‌. மாபெரும்‌ ரங்கநாத பக்தரான இவர்‌ 
திருவரங்கக்‌ கலம்பகம்‌, திருவரங்கத்து அந்தாதி, திருவரங்கத்து  மாலை என்கற சிறந்த நூல்களை இயற்றினார்‌. 
திருவேங்கடவன்‌  இவர்‌ கனவில்‌ தோன்றித்‌ தன்னையும்‌ பாடும்படி கட்டளையிட, 
அய்யங்கார்‌. ''அரங்களைப்‌ பாடிய வாயால்‌ குரங்கனைப்‌  பாடுவேடீனோ?'” என்று அட்சியம்‌ செய்தார்‌. 
இதனால்‌ கோபம்‌  கொண்ட ஸ்ரீநிவாஸப்‌ பெருமாள்‌, 'கண்டமாலை' என்னும்‌ கொடிய நோயை விளைவிக்க, 
அய்யங்கார்‌ வேங்கடவளைப்‌  பாடியதாக வரலாறு. 
இவர்‌ 'திவ்விய கவி: எனப்படுவர்‌; 
இவர்‌ இயற்றிய எட்டு நூல்கள்‌ 'அஷ்டப்பிரபந்தம்‌' எனப்படும்‌. 

'குரங்கன்‌' என்றே வேங்கடவனை அலட்சியம்‌ செய்த திவ்வியகவி, அதற்குப்‌ பரிகாரமாக வேங்கடத்துக்‌ குரங்குகளையே 
பாடி, வானத்தை வரம்பாக உடையது திருமலை என்று போற்றியுள்ளார்‌. அற்புதமான கவிதை, 
'கவி' என்று ஆண்‌ குரங்கிற்குத்‌ தமிழில்‌ பெயரும்‌ உண்டு; 'கபி' என்னும்‌ வடசொல்‌, 
கவி என்றாகும்‌. 

"திருவேங்கடத்து மாலை” என்னும்‌ - நூலில்‌ பிள்ளைப்‌ பெருமாள்‌ அய்யங்கார்‌ காட்டும்‌ வேங்கடக்‌ காட்சிகளைக்‌ காண்போம்‌. 


“மண்மூலம்‌ தா என்று மந்திகடுவற்குரைப்ப  விண்மூலம்‌ கேட்டேங்கும்‌ வேங்கடமே.” (25) 

மண்மூலம்‌ - கிழங்கு; விண்மூலம்‌ - மூல நட்சத்திரம்‌; மந்தி - 
பெண்குரங்கு. கடுவன்‌ - ஆண்சுரங்கு. 

திருமலையில்‌ வாழும்‌ பெண்குரங்கு, தன்‌ காதலனிடம்‌ 
““மண்மூலம்‌ தா!” என்று கேட்கிறது. அதாவது, 
*“மண்ணிலிருக்கும்‌ கிழங்கை அகழ்ந்தெடுத்து, எனக்கு உணவாகக்‌ கொடு'' என்கிறது. 
இதை “விண்மூலம்‌', வானத்திலுள்ள மூல  நட்சத்திரம்‌ கேட்டு, தன்னைத்தான்‌ மந்தி பிடித்துக்‌ கொடுக்கச்‌ 
சொல்வதாக நினைத்து, பயத்தால்‌ நடுங்குகிறது. 

திவ்விய கவியின்‌ வருணனை, திவ்வியமான வருணனை! 
மூல நட்சத்திரத்தின்‌ வரை உயர்ந்து வானளாவ நிற்கிறது  திருமலை. எனவேதான்‌ குரங்கு கேட்பது நட்சத்திரத்திற்குத்‌ 
தெளிவாகக்‌ கேட்டு விடுகிறது. 'ஆண்மூலம்‌ அரசாளும்‌” என்பர்‌, 
ஆண்‌ குரங்கு மூல நட்சத்திரத்தில்‌ அவதரித்தது போலும்‌! 
வேங்கடத்துக்‌ கடுவன்‌ நட்சத்திர நாயகர்களான தேவகணங்களும்‌ 
அஞ்சத்தக்க அசாத்திய வலிமை படைத்தது என்பதும்‌ தெரிகிறது! 

மாம்பழம்‌ போல்‌ தித்திக்கும்‌ இன்னொரு திருமலைக் காட்சியையும்‌ திவ்விய கவி உட்டியுள்ளார்‌: 

"*வாவு கவின்‌ மந்தி நுகர்‌ மாங்கனிக்குக்‌ கற்பகத்தின்‌  மேவு கவி கைநீட்டும்‌ வேங்கடமே: (42 

வாவு .- தாலிச்செல்லும்‌; கவின்‌ - அழகிய; மேவு - பொருந்திய; கவி - கபி, ஆண்குரங்கு. 

திருவேங்கடத்தில்‌ பெண்‌ குரங்கு மாமரத்தில்‌ பழுத்துத்‌ தொங்கும்‌ தேமாங்கனியைப்‌ பறித்து, தாவிச்‌ செல்கின்றது. 
இதை  தேவலோகத்தில்‌ கற்பகத்‌ தருவில்‌ உட்கார்ந்திருக்கும்‌ ஆண்குரங்கு  பார்த்துவிடுகிறது; 
தனக்குத்‌ தருமாறு அங்கேயி௫ந்து கையை நீட்டுகின்றது! 

கவி இங்கே மறைமுகமாகக்‌ கூறுவது: திருமலை, தேவலோகம்‌ வரை உயர்ந்து நிற்கிறது. 
கற்பக மரத்தின்‌  பழத்தைவிட, வேங்கடத்தில்‌ மந்தி பறித்த மாம்பழம்‌ சுவையானது, பரம போக்யமானது. 
எனவே தேவலோகத்தையும்‌ விட உயர்ந்தது பூலோக வைகுண்டமாகய திருமலை. 


“குரங்கன்‌” என்று ஏழுமலையானை இகழ்ந்தவர்‌, அவன்‌ அருளைப்‌ பெற்றதும்‌, அரங்கனை விடவும்‌ உயர்வாகப்‌ புகழ்ந்து 
பாடிவிட்டார்‌ போல்‌ தோன்றுகிறது. 'வானர வம்பன்‌” என்பது போல்‌ வேங்கடவனை நிந்தனை செய்த பிள்ளைப்பெருமாள்‌ 
அய்யங்கார்‌ [வான வரம்பன்‌' ஆகவே அவனை வந்தனையும்‌ செய்து விடுகிறார்‌! அரங்கனுக்கும்‌, வேங்கடவனுக்கும்‌ இடையே 
மூர்த்தபேதம்‌ இல்லை என்பதை நேரடியாக உணர்ந்தவர்‌ நம்‌ திவ்விய கவி, 


அய்யங்காரின்‌ இவவிய கவிதை மாந்தோப்பில்‌ இரண்டு மாங்கனிகளைப்‌ பறித்துச்‌ சுவைத்த நம்முடைய 'மனம்‌ என்னும்‌ 
மாயக்குரங்கு' அடுத்து ஆழ்வார்களின்‌ பக்திப்பூங்காவில்‌ தாவிக்‌ குதிக்கிறது! 
பக்தி ரசம்‌ சொட்டும்‌ ஞானப்பழங்கள்‌ நாலாயிரத்தின்‌ ஜன்மபூமிக்கு அல்லவா வந்துவிட்டோம்‌? 
வந்த இடத்தில்‌ வேண்டிய சரக்கிற்குப்‌ .பஞ்சமேயில்லை என்பதை அறிந்து, 
இதற்குமுன்‌ ஆடிய களைப்புத்‌ நீர, நம்‌ மனக்குரங்கு சற்றே  கண்ணயர்கிறது, 
பூதத் திருவடி என்னும்‌ கற்பக மரத்தின்‌ இளையில்‌. பளபளவென்று பொழுதும்‌ புலர்ந்து விடுகிறது. 
இனி: நம்‌  மனக்குரங்கு என்ன செய்ய வேண்டும்‌ என்பதை பூதத்தாழ்வாரே கூறுகிறார்‌. 
ஆழ்வார்‌ கூறுவதிலிருந்து நாம்‌ வந்திருக்கும்‌ இடம்‌ திருமலையே என்பதையும்‌ தெரிந்து இன்புருகு சிந்தையராகிறோம்‌! 
ஸ்ரீ பூதத்தாழ்வார்‌ 
போது' அறிந்து வானரங்கள்‌ பூஞ்சுனை புக்‌(கு) ஆங்கு அலர்ந்த 
போது” அரிந்து கொண்டு ஏத்தும்‌ போ(து) உள்ளம்‌ - போதும்‌ 
மணி வேங்‌ கடவன்‌ மலரடிக்கே செல்ல 
அணி வேங்‌ கடவன்‌ பேர்‌ ஆய்ந்து. (72) 

போது" - விடியற்காலம்‌, பொழுது; போது” - மலர்‌; அரிந்து -கொய்து; போதுள்ளம்‌ உள்ளமே போ, புறப்படு; .பேர்‌ - திருநாமம்‌. 

திருமலைக்‌ குரங்குகள்‌ பொழுது விடிந்ததை அறிந்து, சுவாமி புஷ்கரிணி, பாபநாசம்‌ அருவி, பூஞ்சுனைகள்‌ போன்ற 
தீர்த்தங்களில்‌ புகுந்து நீராடும்‌. அப்போதே நீர்நிலைகளில்‌ அன்றலர்ந்த புத்தம்புதிய பூக்களைப்‌: பறித்துக்கொண்டு ஸ்ரீ 
ஸ்ரீ வேங்கடேசனுக்கு சமர்ப்பித்துத்‌ துதி செய்யும்‌. 
என்‌ மனமென்னும்‌  மாயக்குரங்கே! நீயும்‌ புறப்படுவாய்‌. உலகத்திற்கு மணிமகுடம்‌ வைத்ததுபோல்‌ திகழும்‌ திருமலையிலுள்ள 
ஸ்ரீ வேங்கடேசனின்‌  சஹஸ்ரநாமங்களை ஓதிக்கொண்டு, ' திருவேங்கடவனுடைய 
திருவடித்‌ தாமரைகளிலே சென்று சேரும்படியாக பூக்களை  சமர்ப்பிக்கக்‌ கடவாய்‌! 

திருமலை வானரங்கள்‌ அதிகாலையில்‌ ஏழுமலையானை  வணங்க நிகழ்த்தும்‌ ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாத சேவையை ஆழ்வார்‌ 
அழகாகப்‌ பாடியுள்ளார்‌. 
ஆஞ்சநேயர்‌ அவதரித்த அஞ்சனாத்ரி ஏழுமலைகளில்‌ ஒன்று. சமீபத்தில்‌ இம்மலைமீது அனுமாருக்குப்‌ 
பெரிய சிலை வைக்கப்பட்டிருக்கிறது. எனவே அஞ்சனாத்ரி  வானரங்கள்‌ சிறிய திருவடியாகிய அனுமன்‌ அடிச்சுவட்டில்‌ 
வேங்கடராமனை வழிபடுவதில்‌ ஆச்சரியம்‌ ஒன்றுமில்லை. 
ஆழ்வார்‌ அருளியபடியே, இன்று ஸ்ரீ வேங்கடேசன்‌ சன்னிதிக்கு நேர்‌ எதிரே, கோயிலுக்கு வெளியில்‌, ஆஞ்சநேயரே 
கைகூப்பியபடி காட்சியளிக்கிறார்‌. 
அலைபாயும்‌ நம்‌ மனக்குரங்கிற்கு ஆழ்வார்‌ சிறந்த உபதேசம்‌  செய்துள்ளார்‌. திருப்பதிக்குச்‌ சென்றுதான்‌ திருவேங்கடவனை 
சேவிக்க முடியும்‌ என்பதில்லை. தாம்‌ எங்கிருந்தாலும்‌, காலையில்‌ நீராடி, சுப்ரபாதம்‌ முதலிய துதிபாடி, மானசீகமாகவே பகவான்‌ 
திருவடிகளில்‌: புஷ்பாஞ்சலி செய்து அவனை தியானிக்கலாம்‌. 
இத்தகைய மானசீக பூஜையும்‌, ஜபமுமே மிகச்  சிறந்தன என்று  சாஸ்திரங்கள்‌ அனைத்துமே கூறுகின்றன. 
அடுத்து பேயாழ்வார்‌ இரண்டு அற்புதமான திருமலை வானரக்‌ காட்சிகளைக்‌ கண்முன்‌ கொண்டு வந்து நிறுத்துகிறார்‌. 
இவையே திவ்விய கவியின்‌ மேற்கூறிய பாடல்களுக்கு முன்னோடியாக அமைந்தவை. 
இப்பொழுது பூதத்தாழ்வார்‌  என்னும்‌ மாமரத்திலிருந்து நம்முடைய மனக்குரங்கு, பாய்ந்து 
**பிடித்தாலும்‌ பிடித்தான்‌, புளியங்கொம்பாய்ப்‌ பிடித்தான்‌'' என்று 
சொல்வார்களே, அதுபோலப்‌ பேயாழ்வார்‌ என்னும்‌ ஆன்மீகப்‌ புளியம்கொம்பைப்‌ பிடித்து விடுகிறது! 

தெளிந்த சிலாதலத்தின்‌ மேல்‌ இருந்த மந்தி 
அளிந்த கடுவனையே நோக்கி - விளங்கிய
வெண்மதியம்‌ தா என்னும்‌ வேங்கடமே! மேலொரு நாள்‌ . 
மண்மதியில்‌ கொண்டு உகந்தான்‌ வாழ்வு. (58) 

தெளிந்த - பளபளப்பான; சிலாதலம்‌ - கற்பாறையின்‌ தலம்‌, இங்கே படிகப்பாறை; மந்தி '- பெண்குரங்கு; 
அளிந்த - அன்புடைய; கடுவன்‌ - ஆண்‌ குரங்கு; மதியம்‌ - சந்திரன்‌; 
மண்‌ மதியில்‌ கொண்டு - பூமியை புத்தி சாதுர்யத்தினால்‌  ஏற்றுக்கொண்டு. 

பளபளப்பான படிகப்பாறையின்‌ மீது உட்கார்ந்திருக்கும்‌ பெண்குரங்கு, தன்னிடம்‌ காதல்‌ கொண்ட ஆண்‌ குரங்கை நோக்கி 
“ஒளி வீசும்‌ வெண்மையான பூர்ணசந்திரனைத்‌ தா!'' என்று கேட்குமிடமே வேங்கடம்‌." 
முன்னொரு காலத்தில்‌, மூன்றடி  மண்ணை புத்திசாதுர்யத்துடன்‌ கேட்டு, மகாபலிச்‌ சக்கரவர்த்தியிடமிருந்து அதை இன்னும்‌ 
அதிசாமர்த்தியமாக உலகங்களையே மூன்றடியால்‌ அளந்து எடுத்துக்கொண்டு திருப்தியடைந்த உலகளந்தப்‌ பெருமாள்‌ வாழுமிடம்‌ இது! 
 
மந்திக்குச்‌ சந்திரன்‌ எதற்காகா கண்ணாடி போல்‌  பளபளப்பான வஸ்து என்றால்‌ குரங்குக்கு அதில்‌ ப்ரீதி (பிரியம்‌) 
உண்டாவது இயற்கை, 'விளங்கிய வெண்மதியம்‌' என்ற அடைமொழியின்‌ கருத்தைப்‌ பெரிய வாச்சான்பிள்ளை கூறினது - 
**சந்திரனுடைய மேற்புற மாகையினாலே களங்கமற்று  உஜ்வலமாயிருந்துள்ள சந்திரமண்டலத்தை'* என்றவாறு. 
திருமலை சந்திரமண்டலத்திற்கு மேல்‌ வளர்ந்திருப்பது என்றபடி. 
அளிந்த - ப்ரணயகலஹம்‌ (ஊடல்‌) நீங்கத்தான்‌ ஏதேனும்‌ செய்ய விரும்பியது ஆண்குரங்கு
மதியின்‌ கொண்டு - கேட்டதிலும்‌ சாதுர்யம்‌, கொண்ட வகையிலும்‌ சாதுர்யம்‌. ' 

வெண்மதியம்‌ தா: 
ஆஞ்சநேயர்‌ அஞ்சனாத்ரி என்னும்‌ திருமலையின்‌ மீது பிறந்தவுடனேயே சூரியனைப்‌ பழம்‌ என்று நினைத்து 
அதைப்பிடிக்க ஆகாயத்தில்‌ தாவினார்‌. திருமலையில்‌ பிறப்பவர்களின்‌ ஆற்றல்‌ அத்தகையது. 
“நீயும்‌ அதே மலையில்‌ பிறந்து, அதன்‌ மீதே வாழ்கிறாய்‌. அனுமனைப்போல்‌ சூரியனைப்பிடிக்கும்‌ சக்தி இல்லாவிட்டாலும்‌, 
உன்னால்‌  குறைந்தபட்சம்‌ வெகு அருகிலுள்ள சந்திரனையாவது பிடித்துத்‌ தர முடியாதா?” என்று 
ஆண்குரங்கற்கு பலப்பரீட்சை வைக்கிறது மந்தி, இதைக்கேட்ட சந்திரன்‌ நடுங்குகிறான்‌, 
'*குரங்கு: கையில்‌  கிடைத்த பூமாலைபோல நம்‌ கதியும்‌ அதோகதி ஆகிவிடுமோ?” 
என்று பயந்து. திருமலையின்‌ உயர்வும்‌, மகத்துவமும்‌ அத்தகையது! 

“வெண்‌ மதியம்‌ தா” என்னும்‌ பேயாழ்வாரின்‌ கருத்தை ' மூலமாகக்‌ கொண்டே, பிள்ளைப்பெருமாள்‌ அய்யங்காரும்‌, 
“மண்மூலம்‌ தா என்று மந்தி கடுவற்குரைப்ப 
விண்மூலம்‌ கேட்டேங்கும்‌ வேங்கடமே'' --என்று பாடினார்‌. 

திருமலையின்‌ குரங்குகளுக்கே சந்திரனையும்‌, மூலநட்சத்திரத்தையும்‌ பிடித்துத்‌ தரும்‌ ஆற்றல்‌ உண்டென்றால்‌, 
அங்கெழுந்தருளியிருக்கும்‌ வேங்கடவனுக்கு எத்தகைய சர்வசக்தி இருக்க வேண்டும்‌? 
எல்லா உலகங்களையும்‌ காலால்‌ அளந்து “மண்‌ மதியில்‌ கொண்டு உகந்தான்‌!! ஆகத்தானே அவன்‌ இருக்கமுடியும்‌? 
இவ்விதமே அற்புதமாகப்‌ , பாசுரத்தை முடித்திருக்கிறார்‌. பேயார்‌!
அனுமார்‌ ஒரே தாவலாக இலங்கையைத்‌ தாண்டியதுபோல, மந்தி, கடுவன்‌ காட்சியை 
விவரித்த ஆழ்வாரின்‌ மனம்‌ ஒரே அடியில்‌ மலையுச்சிக்குப்‌ போய்த்‌ திருவேங்கடமுடையானையே சிக்கெனப்‌ பிடித்து விடுறைது
சந்திரனையும்‌, சூரியனையும்‌ பிடித்து என்ன பயன்‌? 
இவையனைத்தையும்‌ படைத்த ஏழுமலையானின்‌ திருவடிகளைப்‌ பிடிப்பதுதானே பிறவிப்பயன்‌? 
இதை ஆழ்வார்களைப்போல்‌ செய்கிறவர்களே வாழ்வில்‌ உகப்படைவர்‌ என்பது 'உகந்தான்‌ 
வாழ்வு" என்பதிலிருந்து அறியக்கடக்கிறது. 
மண்மதியிற்‌  கொண்டுகந்தான்‌ வாழ்வு - திருமலையப்பனின்‌ திருவடி மண்ணை 
மதியிற்‌ கொண்டு உகப்பவர்களின்‌ வாழ்வே வாழ்வு. 

கண்ணாடிபோல்‌ மின்னும்‌ வெண்ணிலாவில்‌ தன்னுடைய முகத்தழகைப்‌ பார்த்துக்‌ கொள்ள விரும்பி ''வெண்மதியம்‌ தா”! 
என்று குரங்கு கேட்டதை மேற்பாசுரத்தில்‌ கண்டோம்‌. 
கண்ணாடிபோல்‌ முகம்‌ காட்டும்‌ நீர்நிலையில்‌ தன்‌ முகத்தை  ஆண்குரங்கு பார்த்தால்‌ என்ன செய்யும்‌? 
இதைக்‌ கீழ்ப் பாசுரத்தில்‌ ஆழ்வார்‌ பாடுகிறார்‌--ஸ்ரீ பேயாழ்வார்‌ 

பார்த்த கடுவன்‌ சுனைநீர்‌ நிழல்‌ கண்டு 
பேர்த்து ஓர்‌ கடுவன்‌ எனப்பேர்ந்து - கார்த்த 
களங்கனிக்குக்‌ கைநீட்டும்‌ வேங்கடமே! மேனாள்‌ 
விளங்கனிக்குக்‌ கன்று எறிந்தான்‌ வெற்பு (68) 

பேர்த்து - அப்புறப்படுத்த முயன்று; பேர்ந்து - தானே அசைந்து; கார்த்த - கரிய; களங்கனி - களாக்காய்‌, பழம்‌; 
மேனாள்‌ - மேல்‌ நாள்‌, முன்னொரு நாள்‌; விளங்கனி - விளீஈம்பழம்‌; 
கன்று - இங்கு சன்று வடிவில்‌ வந்த வத்ஸாசுரன்‌; வெற்பு - மலை. 

திருவேங்கடமலையிலுள்ள சுனைநீரில்‌ ஓர்‌ ஆண்‌ குரங்கு தன்னுடைய நிழல்‌ தெரிவதைப்‌ பார்த்து, அதைத்‌ தன்‌ எல்லையில்‌ 
புகுந்து ஆக்கிரமிக்க முயலும்‌ இன்னொரு ஆண்குரங்கு என்று நினைத்துத்‌ துரத்தியடிக்க முயல்கிறது! பயனில்லாமல்‌ போகவே 
தானே அங்கிருந்து நகர்ந்து விடுகிறது. அப்பொழுது ஓர்‌ களாப்பழம்‌ நேரிலோ, நீரில்‌ நிழலாகவோ தோன்ற அதைப்‌ 
பறிப்பதற்குக்‌ கடுவன்‌ தன்‌ கையை நீட்டுகிறது. முன்னொரு காலத்தில்‌ விளாம்பழத்தைப்‌ பறிப்பதற்காக, வத்ஸாசுரன்‌ என்கிற 
'கன்றை விட்டெறிந்த கிருஷ்ணனுடைய மலை இது. 
திருமலைச்‌ சுளைநீர்‌ பளிங்குபோல்‌ முகம்‌ காட்டுமளவிற்கு சுத்தமானது. அதில்‌ தத்ரூபமாகத்‌ தெரிந்த தன்‌ உருவத்தைப்‌ பார்த்த 
ஆண்குரங்கு பிரமித்துவிட்டது. . களங்கனியைப்‌ பறிக்கக்‌ கைநீட்டிய குரங்கை விவரித்த ஆழ்வாருக்கு உடனே, கன்று 
வடிவில்‌ தன்னைக்‌ கொல்வதற்கு வந்த வத்ஸாசுரனை எறியக்‌ கைநீட்டிய கண்ணனின்‌ நினைவு வந்து விடுறது. 
விளங்களிக்குக்‌ கன்று எறிந்தான்‌ வெற்பு: 
அசுராவேசங்கொண்டு, கோபர்களைக்‌ கொல்லக்‌ காத்திருந்த விளம்பழங்களை வீழ்த்தினான்‌; அதற்காக கன்று வடிவில்‌ வந்து 
ஒளிந்து கொண்டிருந்த வத்ஸாசுரனை, எறிதடியாக, மலைப்பிஞ்சாகப்‌ பயன்படுத்தினான்‌ கிருஷ்ணன்‌, ஒரே கல்லில்‌ 
இரண்டு மாங்காய்‌ அடிப்பதுபோல! விளங்கனியை அடித்த வேங்கடகிருஷ்ணனுக்குக்‌ களங்கனி பிரியமென்று நினைத்தே 
திருமலைக்‌ கடுவன்‌ அதைப்‌ பறிக்கக்‌ கைநீட்டியது போலும்‌! 

பேயாழ்வாரின்‌ பாசுரத்திலுள்ள சிறந்த கருத்தைக்‌ கைநீட்டிப்‌ பறித்துக்‌ கொள்கிறார்‌ திவ்விய கவி பிள்ளைப்பெருமாள்‌ 
அய்யங்கார்‌. பறித்தவா்‌-- 
“*வாவு கவின்‌ மந்தி நுகர்‌ மாங்கனிக்குக்‌ கற்பகத்தின்‌ 
மேவு கவி கைநீட்டும்‌ வேங்கடமே” --என்று தம்முடைய கவித் திறத்தையும்‌ சேர்த்தே பாடுூறார்‌. 
------------

வேடர்‌ வில்வளைக்கும்‌ வேங்கடம்‌ 
வேடர்‌ என்பவர்கள்‌ காட்டிலே வேட்டையாடியே பிழைப்பவர்கள்‌. குறவர்‌ எனப்படுபவர்கள்‌ இவர்களை விடச்‌ 
சற்று நாட்டுடன்‌ அதிகத்‌ தொடர்பு உடையவர்கள்‌ எனலாம்‌. 
குறவர்கள்‌ தினைப்பயிரிடுவது, பிரம்பு அறுத்துக்‌ கூடைகள்‌ பின்னுவது, மலையில்‌ கிடைக்கும்‌ தேன்‌, கழங்கு போன்றவற்றை 
விற்பது ஆகியவற்றைச்‌ செய்து பிழைப்பர்‌. 
வேடர்களும்‌,  குறவர்களும்‌ வேங்கடத்தில்‌ வில்‌ வளைத்த காட்சிகளை ஆழ்வார்கள்‌ பாடியிருக்கின்றனர்‌. 

மலையும்‌, மலைசார்ந்த இடமும்‌ தமிழில்‌ 'குறிஞ்சி' என வழங்கப்படும்‌. எனவே வேங்கடம்‌ குறிஞ்சி நிலத்தைச்‌ சேர்ந்தது. 
“இத்தகைய இடத்தின்‌ கருப்பொருளாகிய குறவர்‌, யானை, குரங்கு, பாம்பு போன்றவற்றை ஆழ்வார்கள்‌ குறிப்பிட்டுச்‌ 
சொல்லும்‌ அழகு அவர்களுடைய கவித்திறனைக்‌ காட்டுவதுடன்‌ நம்மையும்‌ கவிதை அநுபவத்தின்‌ கொடு முடிக்குக்‌ கொண்டு 
செலுத்துகின்றது”,  
பொய்கையாழ்வார்‌ ஒரு பாசுரத்தில்‌ வேங்கடமலையின்‌ குறவர்‌, யானை, பாம்பு ஆகியவற்றை இணைத்துப்‌ பாடுறார்‌, 
இப்பாட்டில்‌ பேசப்படும்‌ பொருட்கள்‌ யாவுமே திருமாலுடன்‌ விசேஷத்‌ தொடர்பு கொண்டவை என்பதும்‌ இதன்‌ சிறப்பு. 

ஊரும்‌ வரியரவம்‌ ஒண்குறவர்‌ மால்யானை 
பேர எறிந்த பெருமணியை - காருடைய 
மின்னென்று புற்றடையும்‌ வேங்கடமே! மேலகரர்‌ 
எம்மென்னும்‌. மாலது இடம்‌. (ஸ்ரீ பொய்கையாழ்வார்‌ -38) 

ஊரும்‌ - ஊர்ந்து செல்லும்‌; வரி - கோடு; அரவம்‌ - பாம்பு; மால்‌ யானை - பெரிய யானை; ஒண்‌ - அழகிய, சிறப்பு வாய்ந்த; 
மணி - மாணிக்கம்‌; கார்‌ - மேகம்‌; மின்‌ - மின்னல்‌; எம்மென்னும்‌ * எம்முடையது என்று கொண்டாடும்‌; மாலது - திருமாலுடைய. 

திருவேங்கடம்‌ என்னும்‌ திவ்ய தேசத்தில்‌ வாழ்வதால்‌ சிறப்புடைய குறவர்கள்‌ தங்கள்‌ இனைப்புளங்களில்‌ பட்டி மேயும்‌ 
யானையைத்‌ துரத்துவதற்காகப்‌ பரண்களில்‌ இருந்தபடியே பெரிய, பெரிய மாணிக்கக்‌ கட்டிகளை அதன்மேல்‌ வீசுகின்றனர்‌. 
அப்பொழுது அங்கு ஊர்ந்து சென்று கொண்டிருக்கும்‌ மலைப் பாம்புகள்‌ யானை மீது பொழியும்‌ மாணிக்க மழையைக்‌ காண்கின்றன; 
யானையை மேகமாகவும்‌, இரத்தினங்களை மின்னல்களாகவும்‌ எண்ணி மயங்குகின்றன. 
மின்னலுடன்‌  இடிதோன்றும்‌ என்று மிரண்டு, பாம்புகள்‌ தங்கள்‌ புற்றுக்களில்‌ புகுந்து கொள்கின்றன. 

ஒண்குறவர்‌ எறிந்த பெருமணி; 
திருமலை வேங்கடேசனிடமிருந்து எந்நேரமும்‌ மகத்தான ஆன்மீக அலைகள்‌ எழுந்து உலகெங்கும்‌ பரவுகின்றன. 
இங்கே பூசிப்பவர்‌, தியானிப்பவர்‌, வாழ்பவர்‌ அனைவருமே தங்களை யறியாமல்‌ இதனால்‌ உயர்ந்த மனநிலைகளை அடைந்து, 
ஆனந்தத்தை அனுபவிக்கின்றனர்‌. அத்தகைய ஆனந்த நிலையம்‌ இது. இத்தகைய சக்திவாய்ந்த திவ்ய தேசத்தில்‌ தொடர்ந்து 
வாழ்வதால்‌, அங்குள்ள குறவர்களும்‌ சத்துவ குணம்‌ மேலோங்கியவர்களாக ஆகி விடுகின்றனர்‌. 
விலை மதிக்க முடியாத மாணிக்கங்களும்‌, இரத்தினங்களும்‌ அவர்களுக்கு சற்றும்‌ இலட்சியமில்லை! 
யானையை அடிப்பதற்கு கற்களுக்கு பதில்‌  மாணிக்கக்‌ கட்டிகளையே உபயோகிக்கின்றனர்‌. 
சமயக் குரவர்களையும்‌ - விஞ்சிவிடுவர்‌  போலிருக்கிறதே. நம்‌ திருமலைக் குறவர்கள்‌! 
எனவே ஆழ்வார்‌ இவர்களை 'ஒண்குறவர்‌' எனகிறார்‌. ஒண்‌ - ஒளிவீசும்‌. மகா தேஜஸ்‌ வீசும்‌ குறவர்கள்‌ இவர்கள்‌. 
கிருஷ்ணன்‌. தங்களிடையே அவதரித்ததால்‌ சிறப்புற்ற ''அறிவொன்றும்‌ இல்லாத ஆய்க்குலத்து'' கோபர்களைப்‌ போன்றே, 
ஸ்ரீ வேங்கடாசலபதி  திருமலைக்‌ குறவர்களிடையே குறிஞ்சி நிலத்‌ தலைவனாக உறைவதால்‌ இவர்களும்‌ ஆழ்வாரால்‌ உயர்வாகப்‌ 
பேசப்படுகன்றனர்‌. 
“ஓண் குறவர்‌' என்பது அழகிய  குறவர்கள்‌, சிறந்த குறவர்கள்‌ என்று பொருள்படும்‌. 
“ஒண்மையாவது இவர்கள்‌ பாட்டன்‌-பூட்டனிலே ஒருத்தன்‌ பூமியிலே இறங்கினான்‌ என்றும்‌ 
பழியின்றிக்கே இருக்கை” என்பது வியாக்கியானம்‌. 
அஃதாவது, 
வழி வழியாகத்‌ திருப்பதி மலையை விட்டுக்‌ 8ழே இறங்காமல்‌ அங்கேயே பெயராது வாழும்‌ சிறப்பு அந்தக்‌ குறவர்கட்கே உரியது 
என்று கூறி ஆழ்வாரின்‌ கருத்தை விளக்குவர்‌ பெரியவாச்சான்‌ பிள்ளை. 
அக்குறவர்கள்‌ கற்களுடன்‌ மாணிக்கக்‌ கற்களையும்‌ எறிவர்‌ என்பது வெறும்‌ உயர்வு நவிற்சியன்று; 
அவர்களுடைய மதிப்பிட்டில்‌ கல்லும்‌, மாணிக்கமும்‌ ஒன்றே என்பது குறிப்பு. 

பெகுமணி: 
பெரிய மாணிக்கம்‌. குறவர்கள்‌ வீரியெறியும்‌ இது, திருவேங்கடவனுக்கும்‌ பொருந்தும்‌. கருநிறம்‌, 
விலைமதிப்பின்மை, ஒளிவீசுதல்‌, பெறுவதற்கு அருமை போன்ற தன்மைகள்‌ கொண்டதால்‌ எம்பெருமானுக்கு மாணிக்கத்தை 
உவமையாகக்‌ கூறுதல்‌ மரபு. 
'அண்ணல்‌ மாயன்‌' என்று தொடங்கும்‌ பாசுரத்தில்‌ (3-3-3) நம்மாழ்வார்‌ திருவேங்கடவனை 
“கண்ணன்‌ செங்களனிவாய்க்‌ கருமாணிக்கம்‌”* என்று குறிப்பிடுகிறார்‌. 
திருமலைக்கும்‌ 'சிந்தாமணிகிரி' என்கிற  மணியான  திருநாமமுண்டு. 
வேண்டியதைத்‌ தருபவர்‌ திருமலையாழ்வார்‌! மணிவண்ணனுக்கு ஏற்ற மணிமலை! 

மால் யானை: 
மால்‌ - இங்கு, *பெரிய' என்று பொருள்படும்‌. மற்றபடி “மால்‌' என்றால்‌ திருமால்‌. இதற்கு வ்யாமோகமே (பிரேமையே) 
வடிவானவன்‌, தன்னை ஆச்ரமித்தவர்கள்‌ (பற்றியவர்கள்‌) விஷயத்தில்‌ பெரும்‌ பித்தன்‌, பக்தவத்ஸலன்‌ என்று பொருள்‌. 
இவ்விதமே யானையும்‌ தன்னைப்‌ பற்றிய பாகன்‌ முதவியோரிடத்திலே மிகுந்த அன்பு செலுத்தும்‌; இத்துடன்‌ 
கருநிறம்‌, நெடிய உருவம்‌, காண்பவர்க்கு எப்பொழுதும்‌ களிப்பூட்டுதல்‌ போன்றவற்றால்‌ .. யானையைத்‌ திருமாலுக்கு 
உவமை கூறுவதும்‌ மரபாகிறது. எனவே ஆழ்வார்‌ மால்‌, பானை ஆகியே இரு பதங்களையுமே சேர்த்து அர்த்தபுஷ்டியாக 
“மால்யானை' என்று அழகுற அமைத்திருப்பது, கற்கக்‌ கற்க களிப்பூட்டுகின்றது! 

ஊரும்‌ வரி அரவம்‌: 
சளர்ந்து செல்லும்‌, கோடுகளை உடைய பாம்பு. இதற்கும்‌ திருமலைக்கும்‌ நிறைய சம்பந்தம்‌ உண்டு. திருமலையே 
ஆதிசேஷன்‌, அரவணை என்பர்‌. எனவே திருமலையாழ்வார்க்கு அரவகிரி, சேஷகிரி, சேஷாத்ரி என்ற திருநாமங்களுண்டு. 
சேஷாசலத்தின்‌ மீது பேருந்தில்‌ நாம்‌ ஊர்ந்து செல்லும்போது, பாதையும்‌ 'ஊரும்‌ வரி அரவம்‌' போன்றே வளைந்து, வளைந்து 
செல்கிறது! போகும்‌ வழி 'ஊரும்‌ வரி அரவம்‌' என்றால்‌, போகும்‌ ஊரும்‌ அரவ கிரி. 

காருடைய மின்‌: 
யானையைக்‌ கார்மேகமென்றும்‌, குறவர்கள்‌ அதைத்‌ துரத்த வீசிய மணியின்‌ ஒளியை மின்னலென்றும்‌ நினைத்து பயந்து 
பாம்பு புற்றை அடைகிறது. யானை, மேகம்‌, மணி ஆகிய மூன்றுமே திருமாலுக்கு உவமைகளாகக்‌ கூறப்படுபவை; 
மூன்றையும்‌ ஒரே இடத்தில்‌ ஒன்றாகக்‌ கண்டு மயங்குகிறது அரவம்‌. மயக்குபவன்‌ மாயோன்‌, திருமால்‌; அவனுக்கு 
உவமையாகக்‌ கூறப்படும்‌ பொருள்களும்‌ இவ்விதமே மயக்கும்‌ தன்மையுடைன போலும்‌! மேகங்கள்‌ எப்பொழுதும்‌ தவழ்ந்து 
கொண்டிருப்பது திருமலை; அதன்‌ மீது மேக வண்ணனாகிய வேங்கடவன்‌ நின்று கொண்டிருப்பது பொருத்தமே! 
இவனுக்கு  ஸ்ரீ ஆண்டாள்‌ மேகவிடுதூதும்‌ அருளிச்‌ செய்துள்ளாள்‌. 

மின்னலைப்‌ போல்‌ ஒளிர்பவள்‌ பொன்னிறமுடைய மகாலட்சுமி. கார்மேகத்தினிடையே மின்னல்‌ ஜொலிப்பது 
போல, பிராட்டியுடன்‌ கூடிய “அலர்மேல்‌ மங்கையுறை மார்பன்‌: திகழ்வதை, 'திருக்கண்டேன்‌, பொன்மேனி கண்டேன்‌' என்று 
பேயாழ்வார்‌ பாடியுள்ளார்‌. 
எனவே 'காருடைய மின்‌' என்பது ஸ்ரீதரன்‌, : மாதவன்‌, லட்சுமி நாராயணன்‌, ஸீதாராமன்‌, 
ராதாகிருஷ்ணன்‌, ஸ்ரீநிவாஸன்‌ போன்ற பிராட்டியுடன்‌ கூடிய  திருமாலைக்‌ குறிக்கிறது. ்‌ 

புற்றடையும்‌ வேங்கடமே! 

**காருடைய மின்‌'' என்று பயந்து திருமலையில்‌ பரம்பு மாத்திரமா புற்றை அடைந்தது? 
மின்னல்‌ போல்‌ ஒளிரும்‌  திருமகளைப்‌ பிரிந்த, கார்மேக வண்ணனாய. வைகுந்தவாசனும்‌ 
அல்லவா சேஷாசலத்தில்‌ பிரம்மதேவனால்‌ படைக்கப்பட்ட திந்திரினி (புளிய] மரத்தின்‌ 8ழிருந்த புற்றை அடைந்ததாக ஸ்ரீ 
வேங்கடேச புராணம்‌ கூறுகிறது! 

இரத்தினத்தைக்‌ கண்டு பயந்து திருமலையில்‌ பாம்பு  புற்றையடைந்தது. 
ரத்னாகரன்‌ என்கிற வேடன்‌ நாரதரிடம்‌ மந்திரம்‌ பெற்று, தன்னைச்‌ சுற்றிலும்‌ எறும்புப்‌ புற்று எழும்படி தவம்‌ 
செய்ததால்‌ *வால்மீகி' என்று பெயரடைந்ததாக வரலாறு கூறுகிறது. 
வால்மீகி முனிவருக்கு ஏதாவது கைம்மாறாக இராமபிரான்‌ செய்ய வேண்டாமா? ஒருவன்‌ செய்ததை அப்படியே 
செய்வது, முன்‌ செய்தவனுக்குப்‌ பெருமையைக்‌ கூட்டும்‌. எனவே பார்த்தார்‌ பெருமாள்‌. நாமும்‌ வால்மீகியைப்‌ போல்‌ சிறிது காலம்‌ 
புற்றுக்குள்‌ கிடப்போம்‌ என்றெண்ணிப்‌ புற்றடைந்தார்‌ வேங்கடத்தில்‌. 
எம்பெருமானைப்‌ பின்பற்றியே நாமும்‌ புற்றுக்குள்‌ எறும்புகள்‌ ஆயிரக்கணக்கில்‌ செல்வது போல, வேங்கட மலைமீது 
சளர்ந்து செல்கிறோம்‌. 

மேலசுரர்‌ எம்மென்னும்‌ மாலது இடம்‌: 
மேல - மேம்பட்டவர்களான, சுரர்‌ - தேவர்கள்‌, நித்யஸூரிகள்‌. 
இவர்களெல்லாம்‌ “ஸ்ரீநிவாஸன்‌ எங்களுடையவன்‌'' என்று  அபிமானித்துக்‌ கொண்டாடும்‌ இடமே திருமலை, 
இது போலவே  நம்மில்‌ பலரும்‌ கொண்டாடுகிறோம்‌ என்பதே கஷ்டகாலமான 
இந்தக்‌ கலியில்‌ நாம்‌ செய்யும்‌ நல்ல காரியங்களில்‌ சிறந்தது;  தவறாமல்‌ பலன்‌ தருவது; 
“மேலசுரர்‌ எம்மென்னும்‌ மாலது இடம்‌”  என்பது இன்றும்‌ உண்மை; நித்ய ஸூரிகளே திருமலையில்‌ பற்பல 
வடிவங்களையெடுத்து உலவுகின்றனர்‌ என்று பெரியோர்‌ பணிப்பர்‌. 

திருவேங்கடத்தில்‌ வாழும்‌ குறவர்‌, அரவம்‌, யானை, அதன் மேல்‌ எறியும்‌ மணி யாவும்‌ பெருமானைப் போல்‌ 
சிறப்புடையன” என்கிறார்‌ ஆழ்வார்‌. 
திருவேங்கட மலையே நித்யஸூரி ' நிர்வாஹகனான எம்பெருமான்‌ திருவுள்ளம்‌ உவந்து எழுந்தருளியிருக்கும்‌ இடம்‌ என்றார்‌. 
திவ்யதேசங்களிலுள்ள சராசரங்கள்‌ (அசையும்‌, அசையாப்‌ பொருட்கள்‌) முற்றும்‌ மெய்யன்பர்கட்கு உத்தேச்யமாய்‌ 
(உகந்தவையாய்‌) இருக்கும்‌. ஸ்ரீ குலசேகர ஆழ்வார்‌ தம்முடைய "பிரபந்தத்தலே நான்காம்‌ திருமொழியிலே 
''வேங்கடத்துக்‌ கோனேரி வாழும்‌ குருகாய்ப்‌ பிறப்பேனே'' என்று தொடங்கித்‌, 
திருமலையில்‌ பலவகைப்‌ பிறவி பிறக்க குதூஹலித்து, 
கடைசியாக “திருவேங்கடம்‌ என்னும்‌ எம்பெருமான்‌ பொன்மலைமேல்‌ ஏதேனும்‌ ஆவேனே”! என்று தலைக்கட்டுகிறார்‌. 
அதற்கேற்ப, இக் குலசேகர ஆழ்வாரைப்‌ போன்ற ஆர்வம்‌ உடைய . மஹான்‌௧ளே திருமலையில்‌ 
பாம்பாகவும்‌, -குறவராகவும்‌, யானையாகவும்‌, புற்றாகவும்‌ பிறந்திருப்பார்கள்‌ ஆகையாலே அப்பொருள்களையும்‌ 
எம்பெருமானைப்‌ போலவே உத்தேச்யமாகக்‌ கொண்ட இவ்வாழ்வார்‌ இப்பாசுரத்தாலே தம்முடைய எண்ணத்தை வெளியிடுகிறார்‌ என்க. 

திருமலை கோபர்களாகிய குறவர்கள்‌ தினைப்புனம்‌ காப்பதை பொய்கைப்‌ பிரான்‌ பாடிவிட்டார்‌ 
நாம்‌ திருவேங்கடத்தின்‌ கோபிகைகளான குறமகளிர்‌ 'பெளர்ணமி நிலவில்‌ பனிவிழும்‌ இரவில்‌' . விளையாடுவதைப்‌ பாடுவோம்‌” 
என்று அருளிச்‌ செய்கிறார்‌ ஸ்ரீ பேயாழ்வார்‌: 

குன்று ஒன்றினாய குறமகளிர்‌ கோல்‌ வளைக்கை 
சென்று விளையாடும்‌ தீங்கழைபோய்‌ - வென்று 
விளங்குமதி கோள்விடுக்கும்‌ வேங்கடமே! மேலை 
இளங்குமரர்‌ கோமான்‌ இடம்‌. (ஸ்ரீ பேயாழ்வார்‌ -72) 
குன்று : இங்கே, திருமலை; கழை - மூங்கில்‌; மதி - சந்திரன்‌; கோள்‌ - ராகு; மேலை - மேலான பரமபதத்திஜிருக்கும்‌; 
இளங்குமரர்‌ - பிராயம்‌ எப்போதும்‌ இருபத்தைந்தேயுள்ள  நித்ப ஸூரிகள்‌; கோமான்‌ - தலைவன்‌. 

திருமலையிலேயே என்றும்‌ வசிப்பவர்கள்‌ அழகிய வளைகளை யணிந்த கைகளை யுடைய குறத்திகள்‌. 
இவர்கள்‌  அழகிய மூங்கில்கள்‌ வளரும்‌ இடத்திற்குப்‌ போய்‌ விளையாட்டாக. ஏறி அவற்றை வளைப்பர்‌; 
அதனால்‌ சந்திர மண்டலம்‌ வரை ஓங்கி வளர்ந்த மூங்கில்கள்‌ அசைந்து, சந்திரனைப்‌ பீடித்திருக்கும்‌ 
ராகுவை வென்று அப்புறப்படுத்தி, அதை கரகணத்தினின்று விடுவித்து, மீண்டும்‌ முழு நிலவாக பிரகாசிக்கச்‌ செய்யும்‌. 
இத்தகைய வேங்கடமே, நித்ய யுவர்களாகவே இருக்கும்‌ நித்ய ஸூரிகளின்‌ தலைவனான ஸ்ரீவேங்கடாசலபதியின்‌ உறைவிடம்‌. 

திருமலையை விட்டு ஒரு நொடிப்பொழுதும்‌  இழிந்தாலும்‌ குலப்‌பழியாம்‌ என்று திருமலையை விடாதே அங்கே 
நித்தியவாஸம்‌ பண்ணுகின்ற குறத்திகள்‌ அவர்கள்‌ ஊஞ்சலாடுகை முதலான விளையாடல்களுக்காக ' மூங்கில்‌ மரங்களிலே 
ஏறியிருப்பதுண்டு. அப்படிப்பட்ட மூங்கில்களானவை, சந்திரனை க்ரஹிக்கின்ற ராகுவைக்‌ குத்தி அப்புறப்படுத்தி அச்சந்திரனை 
மகழ்விக்கின்றனவாம்‌. 

இப்பாட்டுக்கு மற்றும்‌ பல வகையாகப்‌ பொருள்‌ கூறுவர்‌. 
விளையாடுகின்ற. குறத்திகளின்‌ கோல்‌ வளைக்கையானது சென்று நல்ல மூங்கிற்செறிவை நீக்கி, 
சந்திரன்‌ இங்கு புகப்பெறாமையால்‌ பெற்றிருந்த இடரை நீக்கும்‌ என்றுமாம்‌. 
அன்றியே 
குறத்திகளின்‌  வளைகளின்‌ ஒளியானது சந்திர ஒளி புகுரப்பெறாத மூங்கிலிருளை 
அகற்றி, வெளிச்சமாக்்‌க, சந்திரன்‌ மருவையும்‌ போக்கும்‌ என்றுமாம்‌. 

மேலையிளங்குமரர்‌: 
நித்ய ஸூரிகள்‌, என்றும்‌ பன்னிரண்டு வயது வாய்ந்திருப்பர்‌  எனவும்‌ கூறுவர்‌. 

ஆழ்பொகுள்‌: 

சந்திர மண்டலம்‌ வரை உயர்ந்தது திருமலை என்றார்‌. 
சந்திரனின்‌ கஷ்டத்தை நீக்கு, அதைக்‌ கவ்விக்கொண்டிருந்த இராகுவை விரட்டியடித்து அபாயத்திலிருந்து திருமலை 
காக்கிறது. இதனால்‌ பக்தர்களை அபாயத்திலிருந்து விடுவித்து விளங்கச்‌ செய்வதும்‌ திருமலையே என்பது கூறப்பட்டது. 

திருமலைக்‌ குறவர்களைப்‌: பற்றிய மற்றொரு பேயாழ்வார்‌ பாசுரம்‌: , 

முடிந்த பொழுதில்‌ குறவாணர்‌ ஏனம்‌ 
படிந்து உழுசால்‌ பைந்தினைகள்‌ வித்த - தடிந்து எழுந்த 
'வேய்ங்கழை போய்‌ விண்‌ திறக்கும்‌ வேங்கடமே! மேலொருநாள்‌ 
தீங்குழல்‌ வாய்வைத்தான்‌ சிலம்பு. (89) 

முடிந்த பொழுதில்‌ - ஆயுட்காலம்‌ முடிந்த நிலையிலுள்ள; குறவாணர்‌ - குறசாதியர்‌, குறவர்‌ தலைவர்கள்‌; ஏனம்‌ - பன்றி; 
படிந்து உழு - தோண்டி உழுத; சால்‌ - கட்டியுதிர்ந்து பதமான மண்ணிலே; வித்த - விதைக்க; வேய்ங்கழை - மூங்கில்‌ தடிகள்‌; 
சிலம்பு - மலை. 
 
மரணமடையும்‌ நிலையிலுள்ள இழவர்களான குறவர்‌ தலைவர்கள்‌ திருமலையில்‌ புதிய தனை விதைகளை 
விதைக்கின்றனர்‌. எங்கே எனில்‌, காட்டுப்பன்றிகள்‌ தங்கள்‌ செருக்காலே மூங்கில்கள்‌ வேரோடு விழும்படி 
கோரைப்பற்களினால்‌ மண்ணை அகழ்ந்து உழுத நிலங்களிலே! 
இங்ஙனம்‌ அறுபட்டாலும்‌, நிலத்தின்‌ வளத்தாலும்‌, திருமலையின்‌ மஹிமையாலும்‌ மூங்கிற்‌ கழைகள்‌ மீண்டும்‌ தடித்து வளர்ந்து, 
ஆகாயத்தைப்‌ பிளந்து நிற்கின்றன வேங்கடத்தில்‌. 
முன்பொரு நாள்‌ மதுரமான புல்லாங்குழலைத்‌ தன்‌ பவளச்செவ்வாயில்‌ வைத்து ஊதிய கண்ணபிரானுடைய திருமலை இது! 

திருவேங்கடமலையில்‌ வாழும்‌ குறவர்களோடும்‌, திருவேங்கடமுடையானோடும்‌ . வாசியறத்‌ தமக்கு 
விருப்பமாயிருத்தலை விளக்குகிறார்‌ ஆழ்வார்‌. 
திருமலையின்‌ நிலவளத்தையும்‌, ஒக்கத்தையும்‌ (உயரத்தையும்‌) ஒரு சமத்காரமாகப்‌ பேசுகிறார்‌. இதில்‌. 
தேன்‌ -இரட்டுதல்‌, வேட்டையாடி மிருகங்களைப்‌ பிடித்து வருதல்‌ முதலியன குறவர்களின்‌ தொழிலாகும்‌; 
இத்தொழில்கள்‌ நல்ல வயதிலுள்ள குறவர்கட்குச்‌ செய்ய இயலுமேபன்றி, இழக்குறவர்கட்குச்‌ செய்ய இயலா. 
ஆகவே அவர்கள்‌ இருஷியினால்‌ (உழவினால்‌) ஜீவிக்கப்‌ பார்ப்பார்கள்‌; அது தன்னிலும்‌ தாங்களே உழுது பயிரிடுதலும்‌ அவர்கட்கு இயலாது. 
கலப்பை பிடித்து உழமாட்டாத 'முடிந்த பொழுதில்‌ குறவாணர்‌: ஆதலால்‌, வயதான குறவர்கள்‌ தாங்கள்‌ பூமியைப்‌ பதம்‌ செய்ய 
முடியாதவர்களானாலும்‌ பன்றிகள்‌ வேருணவுக்காகப்‌ பூமியை எங்கும்‌ தோண்டுவதால்‌- அதுவே பண்சால்‌ உழுத பூமிபோல்‌ 
பண்பட அனுகூலமாகிறது. ஆங்காங்குள்ள மூங்கில்களும்‌ வேர்‌ அறுக்கப்பட்டு விழுந்துவிடுகன்றன.
இனி அங்கு. மூங்கில்‌  வளராதென வைத்து, அவர்கள்‌ விதைக்கிறார்கள்‌. 
ஆயினும்‌ பூமியின்‌ வளத்தால்‌ அறுக்கப்பட்டு விழுந்த மூங்கில்களும்‌ வானளாவ வளர்கின்றன. இங்ஙனம்‌ ஸாரமான திருமலையே 
திருமாலின்மலை என்றபடி. 

தீங்குழல்‌: 
குறவர்களும்‌ பன்றிகளும்‌ சுயநலம்‌ கருதி மூங்கில்களை முறித்தாலும்‌ அவை வானளாவ வளர்கின்றன. அதற்கு 
வேங்கடத்தில்‌ இருத்தலே காரணம்‌. வேங்கடமுடையான்‌ வேய்ங்குழல்‌ ஊதுகின்றவனாகையால்‌ அவன்‌ திருமேனி 
ஸம்பந்தம்‌ பெற்ற புல்லாங்குழலின்‌ சு௫தியிற்‌ பிறந்த மூங்கில்களுக்கு உண்டாம்‌ நீங்கெல்லாம்‌ தானே முடிகிறது. 
ஆக எம்பெருமானை ஆச்ரயித்தாரை (பற்றியவரைச்‌) சார்ந்தார்க்கு அயலார்‌ அபகாரம்‌ செய்ய இயலாது என்றதாயிற்று. 
திருவேங்கடத்தில்‌ மூங்கில்‌ வளர்வது கரத தமாவ தாம்‌ வளர்ந்தது போலவே! 

தீங்குழல்‌ வாய் வைத்தான்‌ சிலம்பு: 
கோவர்த்தன மலையின்‌ அருகே இருந்துத்‌ தீங்குழல்‌ ஊதி கோபிகளையும்‌,. கோக்கள்‌ (பசுக்கள்‌), மிருகங்கள்‌, செடி கொடி 
மரங்கள்‌, கந்தர்வர்‌ முதலானோரான எல்லாப்‌ பிராணிகளையும்‌ தனக்கு வசமாக்கிக்‌ கொண்ட எம்பெருமான்‌ 
சதையின்‌ முடிவிலே, ஆயுள்‌ முடிவுக்குள்ளே முடிந்தபோது நாம்‌ அவனை ஆச்ரயிருக்க 
வேண்டுமென்று உபதேசித்தருளின பொருளை இப்போதும்‌ அர்ச்சையில்‌ விளக்குவது திருவேங்கடம்‌, ஆகையால்‌ அதுவே 
அவனது மலையாம்‌. 

குறவர்களும்‌, பன்றிகளும்‌ வெட்டித்தள்ளினாலும்‌, திருமலை மூங்கில்கள்‌ கிருஷ்ணனுக்குக்‌ குழல்‌ தந்த புண்ணியத்தால்‌ ஓங்கி 
வளர்கின்றன; காற்றிலே அசைந்து 'ஊய்‌, ஊய்‌' என்று ஓசை எழுப்புகின்றன. ''புல்லாங்குழல்‌ கொடுத்த மூங்கில்களே, எங்கள்‌ 
புருஷோத்தமன்‌ புகழ்‌ பாடுங்களேன்‌'' என்பது போல்‌ மதுரகீதம்‌  பாடுகின்றன! முன்பொரு நாள்‌ மதுரமாக தையைப்‌ பாடிய 
வேணுகோபாலனே திருமலையில்‌ ஸ்ரீநிவாஸனாக நிற்பதால்‌ 
அவனே இவ்விதம்‌ வேணுகானம்‌ செய்கிறானோ, என்று. நாம்‌ சற்று அசந்து விடுகிறோம்‌. 

இப்பாசுரம்‌ மூன்று அவதாரங்களை நினைவூட்டுகிறது. 
“ஏனம்‌ (பன்றி) படிந்துழுசால்‌' என்பது முன்பு ஆதிவராகப்‌ பெருமாள்‌ நிலத்தை அகழ்ந்தெடுத்ததை நினைவுறுத்துகிறது. 
இவர்‌ திருமலையில்‌ சுவாமி புஷ்கரிணி தீர்த்தக்கரையில்‌ எழுந்தருளியிருப்பதால்‌ திருமலைக்கு 'வராக கிரி! என்றொரு 
பெய்ருமுண்டு. இத்தகைய வராக க்ஷேத்திரத்தில்‌, காட்டுப்பன்றிகள்‌ தங்கள்‌ செருக்கால்‌ மூங்கில்கள்‌ சரியும்படி 
நிலத்தை உழுவது எவ்வளவு பொருத்தமாகறது!
மூங்கில்கள்‌ மீண்டும்‌ வானளாவ வளர்வது, உலகளந்த திரிவிக்கிரமனை நினைவூட்டுகிறது. 
வானையே அளப்பதுபோல்‌ உயர்ந்த மலையில்‌ நிற்பதால்‌, தருவேங்கடவனைத்‌ திரிவிக்ரமன்‌ என்பது பொருந்தும்‌ 
என்று பணிப்பர்‌ பெரியோர்‌. இதுவே இருஷ்ணாவதாரத்தில்‌ குழல்‌ ஊதியவனின்‌ மலையுமாகும்‌. 

அடுத்து, திருமழிசையாழ்வார்‌ திருமலை வேடர்களையும்‌, குறவர்களையும்‌ பாடும்‌ இரு பாசுரங்களைக்‌ காண்போம்‌.
இவர்‌  பார்க்கவ முனிவருக்கு மகனாய்‌ அவதரித்து, பிரம்பு அறுக்கும்‌ குறவர்‌ சாதியிற்‌ வளர்ந்தவர்‌ என்று கூறுவர்‌. 

வைப்பன்‌ மணிவிளக்கா மாமதியை மாலுக்கு என்று 
எப்பொழுதும்‌ கைநீட்டும்‌ யானையை - எப்பரடும்‌ 
வேடு வளைக்கக்‌ குறவர்‌ வில்லெடுக்கும்‌ ,வேங்கடமே! 
நாடு வளைத்து ஆடுதுமேல்‌ நன்று. --ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ 

வேடு - வேடர்‌; நாடு - நாட்டு மக்கள்‌; வளைத்து ஆடுதுமேல்‌ - பிரதட்சிணம்‌ செய்து வணங்குதல்‌. 
 
“சிறந்த சந்திரனைத்‌ திருவேங்கடமுடையானுக்கு மங்களதீபமாக சன்னிதியில்‌ வைப்பேனாக'' என்றெண்ணித்‌ 
திருமலை யானை அதைப்‌ பிடிப்பதற்கு எப்போதும்‌ துதிக்கையை உயரத் தூக்கியபடியே உள்ளது. 
பானையைப்‌ பிடிக்க வேடர்கள்‌ அதை நாற்புறமும்‌ சுற்றி வளைத்துக்‌ கொள்கிறார்கள்‌.
அங்குள்ள குறவர்கள்‌ யானையைக்‌ காக்க வேடர்களை எதிர்த்து (வேடர்களுடன்‌ சேர்ந்து யானையை அடிக்க, என்றும்‌ கூறுவர்‌) 
வில்லை எடுப்பர்‌. தாட்டு மக்கள்‌ அனைவரும்‌ அத்திருமலையைச்‌ சூழ்ந்து, பிரதட்சிணம்‌ செய்து வணங்குவது நன்று. 

திருமலை சந்திரமண்டலத்தை எட்டியிருக்கிறதென்று அதன்‌ ஓக்கம்‌ (உயரம்‌, பெருமை) வெளியிடப்பட்டதாம்‌.
இதனால்‌, மலைகளில்‌ சந்திரன்‌ மிக்க ஸமீபத்தில்‌ இருப்பதாகக்‌ காணும்‌ மலைப்பிராணிகள்‌ அவனைக்‌ கைக்கொள்ள விரும்பி பல 
முயற்சிகள்‌ செய்வது இயல்பு. 
யாளை சந்திரனைப்‌ பிடிக்க முயற்சி செய்வது வெளிக்குத்‌ தெரியுமேயன்றி இன்ன காரியத்திற்காக 
அதனைப்‌ பிடிக்க முயல்கிறது என்பது தெரியமாட்டாதே; 
திருமலையப்பனுக்கு நந்தாவிளக்காக வைப்பதற்குப்‌ பிடிக்க முயல்கிறதென்று ஆழ்வார்‌ எங்ஙனே அறிந்தார்‌? : என்று சிலர்‌ கேட்கக்கூடும்‌; 
திருமலையில்‌ பிறக்கப்பெற்ற பெருமையினால்‌ அவ்யானைக்கு இப்படிப்பட்ட நற்கருத்தே இருக்கத்தகும்‌ என்று 
திருவுள்ளம்‌ பற்றினர்‌ என்க. 
அன்றியும்‌ “*வாயுந்திரையுகளும்‌'* என்கிற திருவாய்மொழியிற்படியே, பிறர்‌ செய்யும்‌ காரியங்களை 
எல்லாம்‌ தாம்‌ செய்யும்‌ காரியங்கள்போல்‌ பகவத்‌ விஷய ப்ராவண்யத்தால்‌ செய்வனவாகவே கொள்வது மெய்யன்பர்களின்‌ வழக்கமாகும்‌. 
ஆழ்வார்‌ சந்திரனைப்‌ பார்க்கும்போது '“இவன்‌ திருவேங்கடமுடையானுக்கு நந்தாவிளக்காக அமையத்தகும்‌"” 
என்று தோற்றவே, இத்தோற்றமே அவ்விடத்து யானைக்கும்‌ இருந்ததாகக்‌ கொண்டு கூறுதல்‌ பொருந்தியதே. . 

இங்கு (திருமலையில்‌, எல்லாம்‌ எம்பெருமானின்‌ கைங்கர்யத்தில்‌ ஈடுபட்டவை. யானை சந்திரனைக்‌ கண்டு 
கைநீட்டுவது, அதை நந்தாவிளக்காக நம்‌ திருமாலுக்கு அமைக்கலாம்‌ என்கிற நோக்கத்தினால்‌. “இப்படி 
கைங்கர்யபரமான ' யானையை ஏன்‌ வில்லெடுத்து வருத்துகின்றனர்‌. அது நன்றோ?” என்னில்‌ - 
யானைப்பிடிக்க  வளைத்து வரும்‌ வேடரை விலக்கக்‌ குறவர்‌ வில்லெடுக்கன்றனர்‌ என்க. 
அப்போது பாகவத விரோதிகளை வெல்ல முயல்வது என்ற நன்மையாம்‌. 
அங்குள்ள வேடர்கள்‌ மட்டும்‌ அவ்வாறு நடப்பரோ என்னில்‌, அவர்கள்‌ புறம்புள்ளவரே, அங்குள்ளவரல்லர்‌ என்க. 
இனி வேடர்களும்‌, குறவர்களும்‌ யானையைப்‌ பிடிக்கின்றனர்‌ என்றே கொண்டாலும்‌, யானை சந்திரனை இந்த நோக்கத்துடன்‌ 
பார்க்கிறது என்பதை அவர்‌ அறியார்‌. யானையைப்‌ பிடித்து வசப்படுத்தினால்‌ எம்பெருமான்‌ ஸன்னிதியில்‌ கைங்கர்யத்திற்கு 
அதைப்‌ பயன்படுத்தலாம்‌ என்பது அவர்கள்‌ கருத்து எனலாம்‌. 
நித்ய விபூதியிற்போலே திருமலையிலுள்ள ஜங்கம ஸ்தாவர பூதங்கள்‌ (செடி கொடி, விலங்குகள்‌) எல்லாம்‌ திருமாலின்‌ 
விபூதியாய்‌ அவனது கைங்கர்யத்திலே ஈடுபட்டவை என்று அதன்‌ பெருமையை (இப்பாகரத்தில்‌) அனுபவித்து, (அடுத்த பாட்டில்‌) 
வேங்கடமே ஸர்வோத்க்ருஷ்டம்‌ (அனைத்திலும்‌ சிறந்த புண்ணியத்தலம்‌) என்கிறார்‌. 
: 
“விலங்குகளும்‌ கிட்டி அடிமை செய்யும்‌ திருமலையை நாட்டார்‌ சுற்றி வலம்‌ வந்து வணங்குவார்கள்‌ எனில்‌ நலமாம்‌'* என்றார்‌. 

“வெண்‌ மதியம்‌ தா!” என்று மந்தி கடுவனைக்‌ கேட்டதை பேயாழ்வார்‌, பாடினார்‌. 
இதை கஜேந்திர ஆழ்வார்‌ பரம்பரையில்‌ பிறந்த திருமலை யானை கேட்டு விட்டது. 
““பெண்‌ குரங்கின்‌ பேச்சைக்கேட்டு, ஆண்‌ குரங்கு குரங்குத்தனமாக எதையாவது செய்துவிடப்‌ போகிறதே! 
இத்தனை அழகிய முழுநிலவு குரங்கு கையில்‌ கிடைத்த பூமாலையின்‌ துர்கதியை ௮டைவதார? அதற்கு 
முன்‌ நாமே சந்திரனைப்‌ பறித்து ஸ்ரீ வேங்கடாசலபதிக்கு மணிவிளக்காய்‌ வைப்போம்‌!'” என்று திருமலை தும்பிக்கை 
ஆழ்வார்‌ அவசர அவசரமாகக்‌ கையை நீட்டுகிறார்‌. 
பெளர்ணமி இருமாலை பூஜிப்பதற்குச்‌ சிறந்த நாள்‌, "மார்கழித்‌ இங்கள்‌ மதி நிறைந்த தன்னாள்‌'' என்றே திருப்பாவை துவங்குகிறது. 
நம்மாழ்வார்‌ வைகாசி விசாகத்திலும்‌, திருமங்கையாழ்வார்‌ கார்த்திகை கார்த்திகையிலும்‌, பெளர்ணமி திதியில்‌ அவதரித்தனர்‌. 
''சரி, நம்மால்‌ ஆன பெளர்ணமி பூஜையைப்‌ பெருமாளுக்குச்‌ செய்வோம்‌!” என்று நினைத்தே 
திருமலை கஜேந்திரர்‌ சந்திரனைப்‌ பிடிக்க முயல்கிறார்‌. 

யானை துதிக்கையைத்‌ தூக்குவது வணங்குவது  போலிருக்கும்‌; துதிக்கும்‌ கையே துதிக்கை. '*மாலுக்கென்று 
எப்பொழுதும்‌ கைநீட்டும்‌ யானை' என்பதால்‌ திருமலை. யானை எப்பொழுதும்‌ துதிக்கையைத்‌ தூக்கி ஏழுமலையானை ஏத்தித்‌ 
துதித்தே நிற்கும்‌ என்பது தெரிகிறது. ஆபத்துக்‌ காலத்தில்‌ “ஆதிமூலமே” என்று அலறிய பாகவத புராணத்து கஜேந்திரனை 
விடவும்‌ பக்தியிற்‌ சிறந்தது நான்முகன்‌ திருவந்தாதி' திவ்வியப்‌ பிரபந்த யானை!
''சந்திரன்‌ திருமலைக்கு நேரே எப்பொழுது வரும்‌? வந்தவுடன்‌ 'லபக்‌'கென்று பிடித்து மணிவிளக்காய்‌  வைத்து விடுவோம்‌,'' என்று நினைத்தே, தயார்நிலையில்‌ 
எப்பொழுதும்‌ துதிக்கை தூக்கியபடியே இருக்கிறார்‌. சில யோகியர்‌ மன வலிமையை வளர்த்துக்‌ கொள்ள, பகவானை 
நினைத்தே எப்பொழுதும்‌ கைதூக்கியபடி இருப்பர்‌; சிலர்‌ எப்பொழுதும்‌ நின்றுகொண்டே இருப்பர்‌. நம்‌ திருமலை 
கஜேந்திரயோகி இத்தகையவரே. வேடர்கள்‌ தம்மைச்‌ சூழ்ந்து கொண்டது, குறவர்கள்‌ வில்லை எடுப்பது ஒன்றுமே தெரியாமல்‌ 
கருமமே கண்ணாக இருக்கிறார்‌. “கை கூப்பிய நிலையிலேயே ஆழ்வார்களும்‌, ஆசார்யர்களும்‌ எழுந்தருளியிருக்கின்றனர்‌. நமக்கு 
இருப்பதோ ஒரே ஒரு கை. நம்மால்‌ கைகூப்ப இயலாது. எனவே கைதூக்கிய  நிலையிலேயே நிற்போம்‌'' என்றிருக்கிறார்‌. 

நாடு வளைத்து ஆடுமேல்‌ தன்று: 
நாட்டிலுள்ளவர்கள்‌ திருமலையை வலம்‌ வந்து, திருவேங்கடமுடையானைக்‌ குறித்து கீதங்கள்‌ பாடியும்‌, ஆடியும்‌ 
தொழுவது நாட்டிற்கும்‌ நல்லது, வீட்டிற்கும்‌ நல்லது என்றார்‌ ஆழ்வார்‌. ஏழு மலைகளும்‌ பரந்து கிடப்பதால்‌, 
கிரிப்பிரதட்சிணெமாக வலம்‌ வருதல்‌ கருடாழ்வாருக்கே இயலும்‌. 
ஏழு மலைகளையும்‌ நடந்து ஏறுவதே வலம்‌ வருதலாகக்‌ கொள்ளலாம்‌. திருமலையைப்‌ பொறுத்தவரையில்‌, 
கிரிப்பிரவேசமே கிரிப்பிரதட்சிணம்‌. 'நாடு வளைத்து' என்று ஆழ்வார்‌. அன்று அருளியபடியே, திருமலையைச்‌ சுற்றிய 
காடுகளெல்லாம்‌ மாயமாய்‌ நிறைந்து, மக்கள்‌ வாழும்‌ நாடாக  விட்டதை இன்று காண்கிறோம்‌! திருமலையை' நாடு வளைத்து வருகிறது. ்‌ 

நன்‌ மணிவண்ணன்‌ ஊர்‌ ஆளியும்‌ கோளரியும்‌ 
பொன்மணியும்‌ முத்தமும்‌ பூமரமும்‌ - பன்மணி நீர்‌ 
ஓடு பொருது உருளும்‌ கானமும்‌ வானரமும்‌ 
வேடும்‌ உடை வேங்கடம்‌. (-ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ 47) 

ஆளி - யாளி, கோளரி - கோள்‌ -* அரி; கோள்‌ - பலம்‌, மிடுக்கு; அரி - சிங்கம்‌. 
நீரோடு என்பது “நீர்‌ ஓடு என்று இங்கு பிரித்து எழுதப்பட்டது. வேடு - வேடர்‌ இனம்‌ 
 
யாளி என்ற மிருகங்களும்‌, பலமுள்ள சிங்கங்களும்‌, பொன்னும்‌, மாணிக்கங்களும்‌, முத்துக்களும்‌, பூத்த மரங்களும்‌, 
பலவகைப்பட்ட ரத்தினங்கள்‌ அருவி நீருடன்‌ கலந்து உருண்டு விழும்‌ காடுகளும்‌, வானரங்களும்‌, வேடர்‌ இனங்களும்‌ உடையது வேங்கடம்‌
இதுவே நீலமணிவண்ணனாகிய திருமாலின்‌ நல்ல திவ்ய தேசம்‌. 

““ஸர்வேச்வரன்‌ உகப்பது திருமலை. ௮வன்‌ உறையும்‌ திவ்ய தேசத்திலுள்ள சேதன அசேதனங்களும்‌ (உயிருள்ள, உயிரற்ற 
பொருட்கள்‌) அவன்‌ விரும்புவன; அவை நித்யஸூரிகளே”' என்று அம்மலையை மண்டி அநுபவிக்கிறார்‌ ஆழ்வார்‌.  

நித்பஸூரிகளே எம்பெருமான்‌ எழுந்தருளியிருக்கும்‌ திருமலைக்கேற்ப பல உருவங்களை எடுத்துக்கொண்டு அதனைச்‌ 
சிறப்பித்து வருகின்றனர்‌. ஆகையால்‌ திருமலை பரமபதத்திற்குக்‌ குறைந்ததன்று. பரமபதத்தில்‌ யாளி, மணி, மரம்‌, வானரமென்றாற்‌ 
போன்றவைகள்‌ இருக்குமாயினும்‌ வேடர்‌, குறவர்‌ போன்றோர்‌ இடைப்பதரிது. வேடுமுடையதானபடியாலே வேங்கடத்திற்கு 
ஏற்றமுண்டு. மணிவண்ணனும்‌ லீலாவிபூதியில்‌ உள்ளாருக்கும்‌ சுலபனாயிருந்து தனது மணிவண்ணத்தன்மை, அதாவது மணி 
முன்றானையிலே முடிக்கப்பட்டு அடக்கப்படுமாப்‌ போலே எல்லோருக்கும்‌ எளிதில்‌ இடைக்கப்படுகின்றமை தெரியும்படி 
இங்கே விளங்குகிறான்‌. ஆகவே இதுவே அவனுக்கு நல்ல ஊர்‌. 
இனி நாம்‌ பரமபதத்தை எவ்வாறு நினைக்க வேண்டும்‌ எனில்‌, 
இராமன்‌ அரண்யத்திற்கு எழுந்தருவின பிறகு அயோத்தியை எவ்வாறு பாவிக்க வேண்டுமென்று இலக்குமணனுக்கு அவரது 
தாய்‌ உபதேசித்தாள்‌ என்பதை நினைக்க. 

நன்மணி: 
நல்‌ என்பதை மணியோடு சேர்ப்பதை விட ஊரோடு சேர்ப்பது நலம்‌. 
ஊர்‌: 
திருமலையைக்‌ காடென்று நினைக்கலாகாது, ஊரேயாம்‌ அது. பலவகை விவேகிகள்‌ நிறைந்த இடத்தைக்‌ 
காடென்னலாமோ?  ஆளிகள்‌, ஆள்கின்ற நித்யஸூரிகள்‌; கோளரிகள்‌, நரசிங்க மூர்த்தியைப்‌ போன்றவர்கள்‌. இப்படி எல்லாம்‌ சிறந்தவை. 

வேங்கடம்‌: 
பாபம்‌ கழிந்தாரைப்‌ பெறுவது பரமபதம்‌. பாபிகளின்‌ பாபத்தையும்‌ போக்குவது இது. 
எனவே பரமபதத்தையும்‌ விட உயர்ந்தது வேங்கடம்‌. 
“இராமன்‌ இருக்குமிடம்‌ அயோத்தி என்பதுபோல்‌ பரமபதநாதன்‌ இக்கலியுகத்தில்‌ உஈச்‌ஈமிடமான திருவேங்கூமே பரமபதம்‌. 

“வேடும்‌ உடை வேங்கடம்‌”: என்று பாசுரத்தை ஆழ்வார்‌ முடித்திருப்பதை ஒட்டியே நம்‌ தலைப்பும்‌ அமைந்தது; 
நாம்‌ இதுவரை கண்ட திருமலை வேடர்‌, குறவர்‌ காட்சிகளும்‌ முடிகிறது! 
முன்பொருநாள்‌ ஒரு வேடுவன்‌ பறவை என்று நினைத்து வில்லை வளைத்து அம்பை எய்ய, அது திருவடிகளில்‌ 
தோய்ந்ததால்‌ கிருஷ்ணாவதாரம்‌ முடிவுற்றது. 
திருவடிகளில்‌ அம்பு தோய்ந்ததால்‌ மறைந்தவன்‌ மீண்டும்‌ அர்ச்சையாகத்‌ தோன்றியதால்‌, அவனுடைய திருவடிகள்‌ தோய்ந்த மலை எது? 
வேடர்‌ வில்‌ வளைக்கும்‌ வேங்கடம்‌, கானமும்‌, வானரமும்‌, வேடும்‌ உடை வேங்கடம்‌-

----------------

வேழம்‌ வழிபடும்‌ வேங்கடம்‌ 
வேங்கடத்தை மங்களாசாஸனம்‌ செய்த முதலாழ்வார்கள்‌, 
அதன்‌ யானைக்காட்சிகளை மிக அற்புதமாக வர்ணித்துள்ளனர்‌. 
பொய்கையாழ்வார்‌ காட்டும்‌ யானைக்காட்சி இது: 

பெருவில்‌ பகழிக்‌ குறவர்‌ கைச்‌ செந்தீ 
வெருவிப்‌ புனந்‌ துறந்த வேழம்‌ இருவிசும்பில்‌ 
மீன்நீழக்‌ கண்டஞ்சும்‌ வேங்கடமே! மேலசுரர்‌ 
கோன்வீழக்‌ கண்டுகந்தான்‌ குன்று (ஸ்ரீ பொய்கையாழ்வார்‌ -40) 

பகழி - அம்பு; செந்தீ - வட்டி; புனம்‌ - கொல்லை, வயல்‌; வேழம்‌ - யானை, விசும்பு - ஆகாயம்‌; மேல்‌ - முன்னொரு 
காலத்தில்‌; அசுரர்‌ கோன்‌ - இரணியன்‌; குன்று - திருமலை; 

பெரிய வில்லையும்‌, அம்புகளையும்‌ உடைய குறவர்கள்‌, கொளுத்திய தீவட்டியையும்‌ ' கையிலேந்திக்‌ கொண்டு, 
இனைப்புனத்தில்‌ பட்டி மேயும்‌ யானையை கட்டித்‌ துரத்துகிறார்கள்‌. இதனால்‌ பயந்த யானை வயலைவிட்டு 
ஓடுகிறது. அப்பொழுது ஆகாயத்திலிருந்து அகஸ்மாத்தாக ஒரு எரிநட்சத்திரம்‌ மிகுந்த ஒளியுடன்‌ யானைக்குமுன்‌ விழுகிறது. 
இருதலைக்‌ கொள்ளி எறும்புபோல்‌, யானை செய்வதறியாது திகைத்து, அஞ்சி நிற்கிறது, திருமலையில்‌. 

இந்த வேங்கடமே, முன்னொரு காலத்தில்‌ அசுரர்‌ அரசனாகிய இரண்யகசிபுவைக்‌ கொன்று, (தன்னுடைய பக்தனாக 
பிரகலாதனைத்‌ துன்புறுத்திய விரோதி தொலைந்தான்‌) என்று மகிழ்ந்த நரசிம்ம மூர்த்தபினுடைய மலை. ்‌ 
தன்னுடைய பக்தர்களின்‌ விரோதிகளை அழித்து, அவர்களைக்‌ காக்கும்‌ பொருட்டே ஸ்ரீ வேங்கடேசப்‌ பெருமாள்‌ 
திருமலையில்‌ எழுந்தருளியிருக்கிறான்‌ என்கிறார்‌. 

தீவட்டி தடியர்களின்‌ மிரட்டலாலும்‌, எரிநட்சத்திரம்‌ தன்‌ பாதையில்‌ விழுந்ததாலும்‌, யானை பயந்தது போலவே பக்தனும்‌ 
இவ்வுலகில்‌ பலவித பிரச்சனைகளில்‌ சிக்கி கதிகலங்குவதுண்டு. 
இவ்விதமே மகாபத்தனாகிய பிரகலாதனும்‌, பாகவத விரோதியான இரணியகசிபுவினால்‌ பலவித இன்னல்களுக்கு இரையானான்‌. 
“அன்று நீ பிரகலாதனை, நரசிம்மமாக அவதரித்துக்‌ காத்தது போதாது; இன்றும்‌ பக்தர்கள்‌ 
துன்பமடையும்போது அவர்களைக்‌ காப்பது உன்‌ கடமை'' என்று ஏழுமலையானுக்கு ஆழ்வார்‌ நினைவூட்டுகிறார்‌. 

"ஞானத்‌ தமிழ்‌ புரிந்த நான்‌” என்றே பாடத்‌ தொடங்கிய இரண்டாவது ஆழ்வாராகிய தவத்திரு பூதத்தடிகள்‌,
“யானே தவஞ்செய்தேன்‌; யானே தவமுடையேன்‌; யானே பெருந்தமிழன்‌!" 
என்று மும்முறை ஒரு பாசுரத்தில்‌ மீண்டும்‌”தம்மைக்‌ குறித்து பெருமிதம்‌ கொள்கிறார்‌. 
கஜேந்திரனை முதலையின்‌ வாயிலிருந்து... விடுவித்த ஸ்ரீ வேங்கடேசனுக்கு அடிமை பூண்டு, திருமலையில்‌ 
புஷ்பகைங்கர்யம்‌ செய்தது குறித்தே விளைந்த பெருமிதம்‌ இது என்பது இதற்கு முந்தைய பாசுரத்திலிருந்து தெரிய வருகிறது. 

இதைக்கேட்ட வேங்கடேசப்‌ பெருமாள்‌ ஆழ்வாரை நோக்கு, “'நீர்‌ நல்ல பெருந்தமிழர்‌ என்பதை நாடு நகரமும்‌ நன்கறிய ஒரு கவி 
சொல்லும்‌, பார்ப்போம்‌!”” என்கிறார்‌. உடனே நம்‌ பெருந்தமிழர்‌ திருவேங்கடத்தைக்‌ குறித்து அற்புதமாக ஒரு யானைப்‌ 
பாசுரத்தைப்‌ பாடித்‌ தம்‌ கைவரிசையைக்‌ காட்டுகிறார்‌. 
“*யானே, யானே, யானே!'' என்று பெருமைப்பட்டவர்‌ ** 
யானை! என்று கீழ்க்காணும்‌ பாசுரத்தில்‌ யானையைக்‌ காட்டி நம்மை மகிழ்விக்கிறார்‌: 

பெருகு மதவேழம்‌ மாப்பிடிக்கு முன்‌ நின்‌(று) 
இருகண்‌ இனமூங்கில்‌ வாங்கி - அருகிருந்த 
தேன்‌ கலந்து நீட்டும்‌ திருவேங்கடம்‌ கண்டீர்‌ 
வான்‌ கலந்த வண்ணன்‌ வரை", (75) 

வேழம்‌ - ஆண்‌ யானை; பிடி - பெண்‌ யானை; வரை - மலை. 

பெருகுகின்ற மதநீரையுடைய ஆண்‌ யானை, தனது சிறந்த பெண்‌ யானைக்கு முன்நின்று, இரண்டே கணுக்களையுடைய 
இளம்‌ மூங்கில்‌ குருத்தைப்‌ பறித்து, அதை அருகிலிருந்த தேனடையில்‌ தோய்த்துத்‌ தேனுடன்‌ கலந்து நீட்டுகின்றது 
திருவேங்கடமலையில்‌. நீலமேக சியாமளனாகிய ஸ்ரீநிவாஸன்‌ நித்யவாசம்‌ செய்யும்‌ திருமலையல்லவா இது! 
ஏற்கனவே மதம்‌ பிடித்து, திருமலையில்‌ செருக்கித்‌ திரிகின்றது வேழம்‌. அழகான பெண்‌ யானையைக்‌ கண்டதும்‌, 
காதல்‌ ரசம்‌ வேறு அதன்‌ தலைக்கேறி விடுகிறது! உடனே பிடிக்குப்‌ பிடித்தமான இனிய உணவை அதற்குத்‌ தந்து, அதனைக்‌ கவர நினைக்கிறது. 
'*இதயத்தில்‌ இடம்‌ பிடிக்கும்‌ வழி, வயிற்றின்‌ வழியாகவே செல்கிறது"' என்கிற உண்மையை நன்கு தெரிந்து வைத்திருக்கிறது வேங்கடத்து. வேழம்‌. 
உடனே பசுமையான இளம்‌ மூங்கில்‌ குருத்தைப்‌ பிடுங்கித்‌ தேனிலே தோய்த்து, 
“குளோப்‌ ஜாமுனை' ஊட்டுவதைப்போல்‌, பேடையின்‌ வாயில்‌ ஊட்டுகிறது! முதலில்‌ தேன்‌ உணவு; அடுத்துத்‌ தேன்‌ நிலவு. 

“இலக்கிய ரசம்‌' என்னும்‌ இளம்‌ மூங்கில்‌ குருத்திலே, “பக்தி ரசம்‌” என்கற தேனைக்‌ குழைத்து நம்‌ வாயிலும்‌ ஊட்டிவிடுகிறார்‌ 
பூதத்தார்‌] ஆழ்வார்‌ நமக்குப்‌ படைக்கும்‌ ஆரா அமுது இது. 
“தேனும்‌ பாலும்‌ கன்னலும்‌ ௮முதுமாகி'' ஆராவமுதனாகிய திருவேங்கடமுடையான்‌ அன்பர்களின்‌ இதயங்களிலே தித்திப்பது 
போலவே, வேங்கடப்பிடிக்கும்‌, திருமலையாழ்வார்‌ விளைவித்த மூங்கில்‌ 'ரஸகுல்லா” தித்திக்கிறது;
நமக்கும்‌ பெருந்தமிழரின்‌ பாசுரம்‌ திருப்பதி லட்டு போல்‌ தித்திக்கிறது! 

திருமலையிலுள்ள விலங்குகளும்‌ தம்முடைய காப்பை நோக்கி வாழும்‌ பேட்டிற்கு ஆதாரம்‌ காட்டுவதால்‌, பிராட்டியோடு 
உறையும்‌ பெருமான்‌ நம்மிடம்‌ ஆதாரங்கொண்டு காப்பான்‌ என்பது ஆழ்பொருள்‌. 
எம்பெருமான்‌ பிராட்டியை உவப்பிக்கும்படியைக்‌ கூறுதல்‌ இதற்கு உள்ளுறைப்‌ பொருள்‌. 

எம்பெருமானார்‌ (ஸ்ரீ ராமானுஜர்‌) திருமலைக்கு எழுந்தருளி, த்வயத்தின்‌ பொருளைத்‌ திருமத்திரத்தோடும்‌ சரம 
ஸ்லோகத்தோடும்‌ சேர்த்து இனிமைப்படுத்தி உபந்யஸித்தருளினபோது, அனந்தாழ்வான்‌ இப்பாசுரத்தை ஸ்வாமி பரமாக நிர்வஹித்தருளினார்‌. 

திருமந்திரம்‌, துவயம்‌, சரமஸ்லோகம்‌: 
இப்பாசுரத்தில்‌, இளமூங்கில்‌ - 'ஓம்‌ நமோ நாராயணாய: என்கிற திருமந்திரம்‌. 
'ஓம்‌' என்பது பிரணவம்‌ எனப்படும்‌. ப்ர  நவம்‌ - ப்ரணவம்‌, எப்பொழுதும்‌ புதிதானது, இளமையானது என்று பொருள்‌. 
இங்கே 'இள' என்பது பிரணவத்தைக்‌ குறிக்கும்‌. 
மூங்கில்‌ கிருஷ்ணாவதாரத்தில்‌ புல்லாங்குழல்‌ கொடுத்தது; எனவே நாராயணனைக்‌ குறிக்கும்‌. 
'வேங்கடவன்‌ 'ஓம்‌ நமோ நாராயணாய என்கிற திருமந்திர வடிவினன்‌; 
இளமூங்கில்‌ குழல்‌  ஊதிய கிருஷ்ணாவதாரக்‌ கூறுடையவன்‌. தருபூலையில்‌ விளைந்த 
இளமூங்கில்‌ இங்கே வேங்கடவனையே சிறப்பாகக்‌ குறிக்கும்‌. 
திருமந்திரம்‌ வைணவர்களுக்கு இயல்பானது; எனவே இளமூங்கில்‌ "இயல்‌ தமிழ்‌" ஆகிறது! 

இருகண்‌ - துவயம்‌. 
“ஸ்ரீமந்‌ நாராயண சரணெள சரணம்‌ ப்ரபத்யே; ஸ்ரீமதே நாராயணாய , நம:' என்பதே இரண்டு அடிகளையுடைய துவய மந்திரம்‌.
எனவே இங்கு இளமூங்கிலில்‌ உள்ள இரண்டு கணுக்கள்‌ துவயத்தைக்‌ குறிக்கும்‌
ஆண்‌ யானை பெண்‌ யானைக்கு இருகண்‌ இளமூங்கில்‌' சத்துணவை அன்புடன்‌ ஊட்டுவது போலவே, துவய மந்திரத்தை வைகுந்தத்தில்‌ 
முதன்முதலாக ஸ்ரீமந்‌ நாராயணன்‌, மகாலட்சுமிப்‌ பிராட்டீயாருக்கு உபதேசித்து, ஊட்டி உவந்தான்‌. 
ஆண்‌ யானையை எம்பெருமானுக்கு உவமையாகக்‌ கூறுதல்‌ மரபு; எனவே பெண்‌ யானை பிராட்டிக்கு உவமையானது; 
உவகை ஊட்டும்‌ உவமை! 
அலர்மேல்‌ மங்கையுறை மார்பினன்‌. ஆகையாலே நம்‌ ஸ்ரீநிவாஸன்‌ துவயமந்திர வடிவினன்‌ ஆகிறான்‌. 
இருவர்‌  இணைந்து இசைத்ததால்‌, 'இருகண்‌' இசைத்தமிழே!
இருகண்‌ இளமூங்கிலின்‌ குழலோசையுடன்‌, இலக்குமி-நாராயணன்‌ இருவரும்‌ இணைந்து இசைத்த இன்னிசை விருந்தே துவயம்‌. 

தேன்‌ கலந்து - சரம ஸ்லோகத்தைக்‌ கலந்து. ““ஸர்வதர்மான்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ”' (அனைத்து தர்மங்களையும்‌ 
கைவிட்டு, என்னையே சரணடை) என்னும்‌ கீதையின்‌ சுலோகம்‌ இது. சரம ஸ்லோகம்‌, மிகவும்‌ சுலபமான இறுதி ௨பாயத்தைக்‌ 
கூறுவதால்‌ பக்தர்களுக்குத்‌ தேன்‌ போன்றது, எனவே இதைத்‌ “தேன்‌' என்றார்‌. 
'மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ (என்னையே சரணம்‌ அடை) என்பதையே வேங்கட கிருஷ்ணன்‌ தனது வலது 
திருக்கையால்‌, திருவடிகளைக்‌ காட்டி, நமக்கு உபதசித்துக்‌ கொண்டிருக்கிறான்‌. இதை நாடகமாகவே நடித்து, அபிநயமும்‌ 
பிடித்துக்‌ காட்டுவதால்‌ ஏழுமலையான்‌ சரம சுலோக ச8ரனே ஆகி, அசல்‌ பார்த்தசாரதியையும்‌ அசத்திவிடுகிறான்‌! எனவே 'தேன்‌ 
கலந்த' ஆழ்வார்‌ பாசுரம்‌ தேன்போன்ற நாடகத்தமிழ்‌ ஆகவே தித்திக்கிறது. 
திரு.மலையில்‌ ஸ்ரீராமானுஜர்‌ உபதேசம்‌: 
திருமலையில்‌ திரிந்த ஆண்‌ யானை, பேடைக்கு 'இருகண்‌ இளமூங்கில்‌ தேன்‌ கலந்து' ஊட்டியது.
அதுபோலவே, ஸ்ரீராமானுஜர்‌. திருமலையில்‌ அனந்தாழ்வான்‌ முதலிய சீடர்களுக்குத்‌ திருமந்திரம்‌, துவயம்‌, சரமஸ்லோகம்‌ ஆகிய 
மூன்றையும்‌ குழைத்துத்‌ தாயினும்‌ சாலப்‌ பரிந்து ஊட்டினார்‌ என்பதை அறிகிறோம்‌. 

பெருந்தமிழரின்‌ பெருந்தன்மை: 
திருமந்திரம்‌, துவயம்‌, சரமஸ்லோகம்‌ ஆகியவை சம்ஸ்‌கிருதத்தில்‌ அமைந்தவை. ஞானத்தமிழ்‌ புரிந்த 
பூதத்தாழ்வாரோ, 'பெருந்தமிழன்‌ யானே! யானே! யானே! என்று மும்முறை ஒரே பாசுரத்தில்‌ பெருமிதத்துடன்‌ மார்தட்டியவர்‌. 
பார்த்தார்‌ ஆழ்வார்‌. மூன்று சம்ஸ்கிருத மந்திரங்களையும்‌ முறையே 'இளமூங்கில்‌' இயல்‌ தமிழ்‌; 'இருகண்‌' இசைத்‌ தமிழ்‌; 
“தேன்‌ கலந்த நாடகத்‌ தமிழ்‌ என்று உள்ஞ்றைப்‌ பொருளாகவே வைத்துப்‌ பாடிவிட்டார்‌. மூன்று தமிழையும்‌ ஒரே பாசுரத்தில்‌ 
ஒன்றாகக்‌ குழைத்து, அலர்மேல்‌ மங்கைத்‌ தாயினும்‌ சாலப்‌ பரிந்து நமக்கு ஊட்டும்‌ இவரல்லவோ முத்தமிழ்‌ வித்தகர்‌, 
ஸர்வமந்த்ர ஸ்வதந்த்ரர்‌! ஸ்ரீராமானுஜர்‌ இருமலையில்‌ அன்று ஏீடர்களுக்கு மட்டுமே புகட்டியதை, ஆழ்வார்‌ இன்றும்‌ தமிழர்கள்‌ 
அனைவருக்கும்‌ ஊட்டிக்‌ கொண்டிருப்பதால்‌, இதைப்‌ *பெருந்தமிழரின்‌ பெருந்தன்மை' என்றோம்‌. 

வேங்கடத்தில்‌ மதவேழம்‌ மாப்பிடியோடு கூடி, தேன்‌ கலந்த இளமூங்கில்‌ ஊட்டியதைப்‌ பாடினார்‌ பூதத்தார்‌;
கூடியதைப்‌  பாடிவிட்டார்‌, நாம்‌ ஊடியதைப்‌ பாடுவோம்‌ என்று பேயாழ்வார்‌ அருளிச்‌ செய்துள்ளார்‌. 

புரிந்து மதவேழம்‌ மாப்பிடியோடு ஊடி 
திரிந்து சினத்தால்‌ பொருது - விரிந்தசீர்‌ 
வெண்கோட்டு முத்து உதிர்க்கும்‌ வேங்கடமே! மேலொருநாள்‌ 
மண்கோட்டுக்‌ கொண்டான்‌ மலை. (ஸ்ரீபேயாழ்வார்‌ -45). 

வேழம்‌ - ஆண்யானை, பிடி - பெண்யானை; புரிந்து - கூடி, கலந்து; கோடு - யானை, பன்றிகளின்‌ தந்தம்‌; 'விரிந்த சர்‌ - வீரச்ரீ நிறைந்த. 

மதம்‌ பிடித்த ஆண்‌ யானை பெண்‌ யானையுடன்‌ கூடி, பின்பு கலகம்‌ ஏற்பட்டதால்‌ ஊடி அதனைப்‌ பிரிந்து சென்றது. அதனால்‌ 
ஏற்பட்ட கோபத்திற்குப்‌ போக்குவீடாக வேழம்‌ அங்குமிங்கும்‌  திரிந்து கோபத்தினால்‌  மணிப்பாறைகளில்‌ மோதி, 
வீர ஸ்ரீயையுடைய தனது வெண்மையான தந்தங்களிலிருந்து முத்துக்களை உதிர்க்கறது. 
இந்தத்‌ திருவேங்கடமே முன்னொரு காலத்தில்‌, தன்னுடைய கோரைப்பல்லினால்‌ பூமியை அகழ்ந்தெடுத்த ஆதிவராகப்‌ பெருமாளின்‌ மலை. 
பொருது: 
போர்‌ செய்து; திருமலையிலுள்ள பளிங்குப் பாறைகளிலே யானை தன்‌ நிழலைக்‌ கண்டு, எதிர்யானையென்று பிரமித்து 
அதனோடே போர்‌ செய்கின்றதாகவும்‌ கொள்ளலாம்‌. 
திருமலையிலே ஸ்ரீ வேங்கடேச அவதாரத்திற்கு முன்பே ஆதிவராகர்‌ சுவாமி புஷ்கரணியின்‌ கரையில்‌ ததால்‌ பல 
மங்களாசாஸனம்‌ செய்கிறார்‌. 

எம்பெருமானைப்‌ பெறுவதற்கு எங்கோ போக வேண்டுமென்று நினைக்க வேண்டா. திருவேங்கடமே அவனது திருமலையாம்‌. 
மதயானைகள்‌ நிறைந்த மாமலை அது. யானை பெண்யானையோடு கலந்திருந்தபோது ஏதோ கலஹம்‌ ஏற்பட 
அதனால்‌ விட்டுப்பிரிந்து அந்தக்கோபம்‌ தாங்காது மதத்தினால்‌, செய்வது தெரியாமல்‌ மலைப்பாறைகளில்‌ தந்தங்களால்‌ குத்திப்‌ 
போர்புரிய அப்போது ச்ரேஷ்டமான அதன்‌ தந்தங்களில்‌ உண்டான முத்துக்கள்‌ 8ழே கண்டவிடத்தில்‌ சிதறி விழுகின்றன. 
இத்தகைய  வேங்கடமே முன்‌ பூமியைக்‌ இடந்தெடுத்த ஆதி வராஹமூர்த்தி பூதேவியோடு உல்லாசமாய்‌ வஸிக்கப்‌ பரமபதத்தினின்று 
கொணர்ந்த திருமலையாம்‌. 
முதலீரடிகளாலே தன்னை அண்டி சிற்சில பலன்களை அபேகூஷிப்பார்க்கு (வேண்டுவோர்க்கு) 
எம்பெருமான்‌ அதனையளித்து அதில்‌ வைராக்யம்‌ வர வழியும்‌ ஏற்படுத்துவதும்‌, 
“விரிந்தசீர்‌  - முத்துதிர்க்கும்‌' என்றதால்‌ அப்படிப்பட்டவன்‌ சேகரித்த பணத்தையும்‌ விடுவதும்‌ சொன்னதாம்‌. 
இதனால்‌ அர்த்தகாமங்களை த்யாகம்‌ செய்வித்து வினைகளைப்‌ போக்கும்‌ ௮ம்மலை என்றபடி. 

இப்படி தந்தங்களினின்று முத்து உதிர்த்து, அர்த்த காமங்களை விட்டொழிக்கின்றது வேங்கடத்து வேழம்‌. 
வேங்கடவன்‌ அதனுடைய வினைகளைப்‌ போக்கி, நற்புத்தியளிக்கிறான்‌. 
களிறு  கஜேந்திரனைப்‌ போலவே ஸ்ரீ வேங்கடேசனைக்‌ கண்டு வணங்குகிறது. இக்காட்சியை அடுத்து அருளிச்‌ செய்கிறார்‌. 

புகுமதத்தால்‌ வாய்பூசிக்‌ கீழ்தாழ்ந்து அருவி 
உகுமதத்தால்‌ கால்கழுவிக்‌ கையால்‌ - மிகுமதத்தேன்‌ 
விண்டமலர்‌ கொண்டு விறல்‌ வேங்கடவனையே 
கண்டு வணங்கும்‌ களிறு. --ஸ்ரீ பேயாழ்வார்‌ -

புகு - வாயில்‌ புகும்‌; வாய்‌ பூசி.- கொப்பளித்து; உகு - பெருகிற; மிகு. மதத்தேன்‌ - மிகுந்த மதத்தை விளைவிக்கக்கூடிய 
தேன்‌; விண்ட - மலர்ந்த; விறல்‌ - வீரம்‌, வெற்றி மிடுக்கு; களிறு -ஆண்‌ யானை. 

திருமலையிலுள்ள ஆண்‌ யானை, தன்‌ மத்தகத்தினின்றும்‌, கன்னங்களினின்றும்‌ வாயில்‌ புகும்‌ மதஜலத்தால்‌ வாய்‌ 
கொப்பளித்து, ஆசமனஞ்செய்கறது. மேலிருந்து கீழ்வரை அருவிபோல்‌ பெருகும்‌ மதநீரினால்‌ கால்களையும்‌ கழுவிச்‌ சுத்தம்‌ 
செய்துகொள்கிறது. மிகுந்த மதத்தை (களிப்பை) உண்டாக்கக்கூடிய தேன்‌ நிறைந்ததும்‌, அப்பொழுதே 
மலர்ந்ததுமான பூவைத்‌ துதிக்கையில்‌ எடுத்துக்கொண்டு, வெற்றி மிடுக்கு நிறைந்த ஸ்ரீ வேங்கடாசலபதியை, சேவித்து வணங்குகின்றது. 

பெருமானை அண்டுவதற்குத்‌ தகுதி வேண்டாமோ? எனில்‌, 
விலங்குகளும்‌ கூட அவனை எளிதில்‌ பற்றித்‌ தொண்டு செய்கின்றன என்கிறார்‌, 

திருமலையில்‌ மதயானைகள்‌ தாமரைப்‌ பூக்களைப்‌ பறித்து  அப்பன்‌ திருவடிகளில்‌ சமர்ப்பித்து வணங்குகிறபடியை ஒரு 
சமத்காரம்‌ பொலியப்‌ பேசுகிறார்‌. எம்பெருமான்‌ ஸந்நிதியில்‌ தொண்டு செய்யப்போமவர்கள்‌ வாயைக்‌ கொப்பளித்துக்‌ 
கைகால்களை சுத்தி செய்துகொண்டு, புஷ்பங்களை எடுத்துக்கொண்டு போவது வழக்கம்‌. 
இவ்வாசாரம்‌ சாஸ்த்ரவச்யர்களான மானிட சாதியர்க்கு மாத்திரமல்ல, 
இருமலையிலுள்ள அஃறிணைப்‌ பொருள்கட்கும்‌ கோல்விழுக்காட்டிலே அமைந்திருக்கின்றது என்றார்‌. 

விறல்‌ வேங்கடவன்‌: 
இங்ஙனே திருமலையிலுள்ள திர்யக்‌ ஜந்துக்களும்‌ தன்னை வணங்குமாறு ஜ்ஞாநத்தைக்‌ , கொடுக்க சக்தனான 
திருவேங்கடமுடையான்‌ என்ப. 

விறல்‌ வேங்கடவனையே -- விறல்‌ - வெற்றியுடைய; ““மோக்ஷ்பர்யந்தமான பலன்‌ அளிக்கும்‌ 
திருவேங்கடமுடையானிடம்‌ பாரமை காந்த்யம்‌ (இது ஈசுவரனையே உபாயமாகப்‌ பற்றி, ஆசாரியன்‌ சொல்படி நடக்கும்‌ 
மிகவுயர்ந்த பக்தனின்‌ நிலை) கொள்கிறது களிறு. 
திர்யக்குகளும்‌  திருவேங்கடமுடையானை ஆசாரத்துடன்‌ தொழ முயன்று வருகின்றன என்றால்‌ அவனுடைய வெற்றியை என்னவென்று சொல்வது? 
வேங்கடம்‌ வெற்றி பெறும்‌ ஸ்தானம்‌ என்று ஸ்ரீ 
தேசிகனும்‌ அருளிச்‌ செய்தார்‌. வல்வினைகள்‌ போர்புரிய அவற்றை 
மாய்க்க ப்ரயாஸப்பட்டு (பாடுபட்டு) கருணை என்ற கவசமணிந்து 
கையும்‌ வில்லுமாய்‌ வெற்றி பெறுமிடமான வேங்கடமேறி அருளினான்‌ சார்ங்கமேந்தும்‌ திருமால்‌ என்றாரே". 

“சுவாமி புஷ்கரிணிப்‌ பொய்கையிலே நீராடி, தேன்‌ சொட்டும்‌ மலரைத்‌ துதிக்கையில்‌ எடுத்துக்கொண்டு யானை 
திருவேங்கடவனை வணங்குகிறது”! என்னும்‌ இப்பாசுரம்‌ நமக்கு உடனே கஜலட்சுமியைக்‌ கண்முன்‌ கொண்டு வந்து நிறுத்துகிறது. 
இரண்டு கைகளில்‌ தாமரைப்‌ பூக்களையேந்தி, ஒரு பொய்கை நீரில்‌ விரிந்த ஆயிரம்‌ இதழ்களுடைய தாமரையின்மீது மகாலட்சுமிப்‌ 
பிராட்டி, அலர்மேல்‌ மங்கையாக நின்று கொண்டிருக்கிறாள்‌, ஸ்ரீ வேங்கடேசனைப்‌ போலவே அவளுடைய முன்‌ வலதுகரம்‌ 
அபயஹஸ்தமாக விளங்குகிறது; தங்கக்‌ கையினாலே பொற்காசுகளை பக்தர்களுக்கு அள்ளி வீசிக்‌ கொண்டிருக்கிறாள்‌ 
அன்னை! இரண்டு பக்கங்களிலும்‌ இரண்டு யானைகள்‌ உயரத்தூக்கிய துதிக்கையில்‌ தாமரையை ஏந்திக்கொண்டு, 
இலட்சுமிக்கு சமர்ப்பிக்க, நீரில்‌ வந்து கொண்டிருக்கின்றன. 
சாதாரணமாக மலர்மகள்‌ இவ்விதமே சித்தரிக்கப்படுகிறாள்‌. யானைகளின்‌ நெற்றியில்‌ மகாலட்சுமி வாசம்‌ செய்வதாகக்‌ கூறுவர்‌. 
இவ்வாறு கஜங்களால்‌ தொழப்படுவதால்‌, அலர்மேல்‌ மங்கைத்‌ தாயார்‌ 'கஜலட்சுமி' என்றும்‌ அழைக்கப்படுவாள்‌. 

திருமலை கஜேந்திரன்‌ அலர்மேல்‌ மங்கையை வணங்காமல்‌ ஸ்ரீநிவாஸனையே தொழுவது ஏன்‌? பிராட்டிக்குத்‌ திருமலையில்‌ 
கோயில்‌ இல்லை. “அகலகில்லேன்‌ இறையும்‌' என்று ஸ்ரீநிவாஸனின்‌ திருமார்பிலேயே மகாலட்சுமி வாசம்‌ செய்வதால்‌, 
அப்பன்‌ 'அலர்மேல்‌ மங்கையுறை மார்பன்‌' என்றே பிரசித்தமானான்‌. திருமலை கஜேந்திர ஆழ்வார்‌ இவ்வளவையும்‌ 
தெரிந்து, வைத்திருக்கிறார்‌! யானை புத்திசாலி அல்லவா? 

“வேழம்‌: வழிபடும்‌ வேங்கடம்‌' என்று பேயாழ்வார்‌. காட்டும்‌ இந்த கஜேந்திர ஆழ்வாரை நினைத்தே தலைப்பும்‌ இங்கே சூட்டினோம்‌. 
மனிதர்களில்‌ சிலர்‌ கடவுள்‌ இல்லை: என்று வணங்காமுடிகளாகத்‌ திரிவதைப்‌ போலவே, இருமலையிலும்‌ 
யானைகள்‌ திரிந்ததுண்டு. இவைகளின்‌ முடிவு பரிதாபகரமானது! 
இதிலூட்டும்‌ யானைக் காட்சி ஒன்றைக்‌ கண்முன்‌ கொண்டு வந்து நிறுத்தி, கீழ்ப்பாசுரத்தில்‌ நம்மை அசத்திவிடுகிறார்‌ ஆழ்வார்‌! 

களிறு முகில்குத்தக்‌.கை எடுத்து ஓடி 
"ஒளிறு மருப்பு ஒசிகை யாளி- பிளிறி 
விழக்‌ கொன்று நின்று அதிரும்‌ வேங்கடமே! மேனாள்‌ 
குழக்கன்று கொண்டு எறிந்தான்‌ குன்று (ஸ்ரீ பேயாழ்வார்‌ )

களிறு - யானை; முகில்‌ - மேகம்‌; கை - துதிக்கை; ஒளிறு ஒளிரும்‌, ஒளிவீசும்‌; மருப்பு - கொம்பு, தந்தம்‌; 
ஓசிகை - ஒடிக்கின்ற கை; பிளிறி - யானை வாய்விட்டு அலறி; அதிரும்‌ - பெருமுழக்கம்‌ செய்யும்‌; 
மேனாள்‌ - மேல்‌ நாள்‌, முன்னொரு காலம்‌; குழக்கன்று - இளம்‌ கன்று, இங்கு வத்ஸாசுரன்‌. 

திருவேங்கடமலையில்‌ யானையானது தனது துதிக்கையைத்‌ தூக்கிக்கொண்டு, வேசுமாக ஓடி, மதயானை போலெழுந்த 
மேகங்களைக்‌ குத்துகிறது. இதைக்‌ கண்ட யாளியானது அந்த யானையின்‌ ஒளிவீசும்‌ தந்தங்களைக்‌ கையினால்‌ முறிக்கிறது; 
யானையை அங்கேயே வாய்விட்டு அலறி விழும்படிக்‌ கொன்றும்‌ விடுகிறது. பிறகு யாளிஅங்கேயே நின்று கொன்டு பெருமுழக்கம்‌ செய்கிறது. 
முன்னொரு காலத்தில்‌ இளங்கன்றின்‌ வடிவெடுத்துக்‌ கொண்டு தன்னைக்‌ கொல்ல வந்த வத்ஸாசுரனை எறிதடியாகக்‌ 
கொண்டு, விளாம்பழ வடிவிலிருந்த கபித்தாசுரனின்‌ மீது எறிந்து, இரண்டு அசுரர்களையும்‌ கொன்ற: ஸ்ரீ கிருஷ்ணன்‌ நித்யவாசம்‌ 
செய்வது திருமலையாகும்‌. 

யாளி - சிங்கத்தைப்‌ போல்‌ வலிய மிருகம்‌; இதன்‌ சிற்பங்களைக்‌ கோயில்களில்‌ காணலாம்‌. இப்படி ஒரு மிருகம்‌ 
இருந்ததா, கவிஞர்களின்‌ கற்பனையா என்று தெரியவில்லை. இங்கே 'யாளி' என்பதை சிங்கம்‌ என்றும்‌ கொள்ளலாம்‌. 

“மதயானை போலெழுந்த மாமுகில்காள்‌!"! '*கரிய மாமுகற்‌ படலங்கள்‌ கடந்தவை முழங்கிடக்‌ களிறென்று”” என்றும்‌ 
சொல்லுகிறபடியே யானைக்கும்‌, மேகத்திற்கும்‌ ஒப்புமை பிரஸித்தம்‌. ஆகவே திருமலையிலுள்ள யானையானது 
மலைமுகட்டில்‌ படிந்திருந்த மேகத்தை எதிரியானதொரு 
"யானையென்று மயங்கிப்‌ பெரிய வேகத்தோடே சென்று துதிக்கையினால்‌ குத்த, இதனை ஒரு யாளி கண்டு 'இக்களிற்றுக்கு 
இவ்வளவு மதமா?! என்று சினந்து ஓடி வந்து ௮வ்‌ யானையின்‌ மேற்‌ பாய்ந்து அதன்‌ கொம்பை முறித்தெறிந்து அது வாய்விட்டு 
அலறிக்கொண்டு விழும்படியாகக்‌ கொலையுஞ்‌ செய்து, அவ்வளவிலும்‌ சீற்றம்‌ தணியாமையாலே அவ்விடத்திலேயே 
நின்று மற்றுள்ள மிருகங்களும்‌ மண்ணுண்ணும்படியாக கர்ஜிக்கின்றதாம்‌ திருமலையில்‌. 
பாசுரத்தின்‌ உட்ககுத்து: 
 “தனது அன்பர்களின்‌ விரோதிகளைப்‌ போக்கும்‌ பெருமான்‌ உறையும்‌ திருவேங்கட மலையில்‌ விலங்குகளும்‌ இதே 
இயல்புடையன”' என்கிறார்‌. 
அண்டினவரின்‌ தாபத்தைப்‌ போக்கித்‌ திருமால்‌: போல்‌ விளங்கும்‌ முகிலை மதம்‌ பிடித்த யானையானது தனக்குத்‌ 
துதிக்கை, எம்பெருமானைத்‌ துதித்துத்‌ தொழ ஏற்பட்டதென எண்ணாமே உதறித்தள்ள வாய்த்ததாக வைத்து ஓடி அதனால்‌ 
குத்தும்போது, முகில்‌ வண்ணனைப்‌ போன்ற முகிலை விரோதிக்கும்‌ அதை மருப்பொசிக்க (தந்தத்தை ஓடிக்கக்‌) 
கையோங்கி விரைந்து வந்து அது கூச்சலிட்டு விழுந்தழியும்படி கொன்று நின்று யாளியானது, விரோதிகளை வெல்லவே 
ஏற்பட்டது வேங்கடமென மீண்டும்‌ முழங்கி வரும்‌. 
௮சுரனாய்‌ வேற்றுருவம்‌ கொண்டு தீங்கிழைக்க வருமவரைக்‌ கொல்லும்‌ கண்ணனுக்கு மேக மண்டலமளாவிய இம்மலையே தகுமான 
திருப்பதி யென்றபடி. 
மேகமண்டலம்‌ அளாவியது மலையென்றார்‌. ஆச்ரித விரோதிகளைக்‌ (ஆச்ரிதர்‌ - பக்தர்‌] கொல்வது கூறப்பட்டது. 

திருமலையில்‌ திருமாலிடம்‌ பக்தி பூணாமல்‌ திரிந்த யானையை யாளி அடித்துக்‌ கொன்றதைக்‌ கண்டோம்‌. 
இது பேயாழ்வார்‌ நீட்டிய சொல்லோவியம்‌. இதையே தூக்கி சாப்பிட்டு விடும்‌ காட்சியைத்‌ திருமழிசையாழ்வார்‌ சித்தரிக்கிறார்‌! 
குருவை மிஞ்சிய சிஷ்யர்‌ போலும்‌! திருமலையில்‌ யானைகளை அப்படியே சுளையாக விழுங்கி ஏப்பம்‌ விடும்‌ பிரம்மாண்டமான 
மலைப்பாம்புகள்‌ உண்டு என்றார்‌. பயந்து விடாதீர்கள்‌. இந்நாளில்‌ அப்படி எதுவும்‌ இருப்பதாகத்‌ தெரியவில்லை! 
மனிதனே இன்று உலகிலுள்ள விலங்குகளையெல்லாம்‌ சீக்கிரம்‌ முடித்து விடுவான்‌ போலிருக்கிறது; பயப்பட வேண்டியது அவையே! 

அழைப்பன்‌ திருவேங்கடத்தானைக்‌ காண 
இழைப்பன்‌ திருக்கூடல்‌ கூட -- மழைப்பேர்‌ 
அருவி. மணிவரன்றி வந்து இழிய யானை 
வெருவி அரவு ஒடுங்கும்‌ வெற்பு --ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ 

வரன்றி வந்து இழிய - திரட்டிக்‌ கொண்டு வந்து விழ; வெருவி - பயந்து; அரவு - பாம்பு; வெற்பு - மலை. 

திருவேங்கடத்தானைக்‌ காண விரும்பி நான்‌ வாய்விட்டு அழைக்கிறேன்‌. மழைபோல்‌ பொழியும்‌ பெரிய அருவிகள்‌ 
அங்குமிங்கும்‌ கிடக்கும்‌ இரத்தினங்களைத்‌ திரட்டிக்கொண்டு வந்து திருமலையில்‌ விழுகின்றன. 
இரத்தினங்கள்‌ வீசும்‌ ஒளியை அக்னிப்பிழம்பாக நினைத்து யானைகள்‌ பயந்து ஓடுகின்றன; 
மலைப்பாம்புகள்‌ அதை மின்னல்‌ என்று நினைத்து மயங்கி புற்றுக்குள்‌ ஒடுங்கிக்‌ கொள்கின்றன. 
இத்தகைய திருமலை சென்று சேரவேண்டுமென்று விரும்பி நான்‌ 'திருக்கூடல்‌' என்றும்‌ சகுனம்‌ இழைத்துப்‌ பார்க்கிறேன்‌. . 
திருக்கூடல்‌ இழைப்பன்‌: 
கூடல்‌ இழைத்தலாவது, ஒரு பெரிய வட்டம்‌ வரைந்து, அதற்குள்‌ சுழி சுழியாக முழுவதும்‌ எழுத வேண்டும்‌. 
பிறகு அவற்றை இரண்டிரண்டாகக்‌ கூட்டி மீதமில்லாமல்‌ இருந்தால்‌ வேண்டியது நடக்கும்‌; 
இல்லாவிடில்‌ கூடாது என்று அறிவது 
பழந்தமிழர்‌ சகுனம்‌ பார்க்கும்‌ வகைகளில்‌ ஒன்று. சுழிகளை சுழிக்கும்போதே சாமர்த்தியமாக முன்கூட்டியே எண்ணிக்கையைக்‌ 
கூட்டி, இரட்டைப்‌ படையில்‌ முடியுமாறு பார்த்துக்‌ கொள்ளக்கூடாது! 
இது கூடல்‌, கூடல்‌ இழைத்தல்‌, கூடல்‌ வளைத்தல்‌, கூடற்குறி என வழங்கப்படும்‌. 

கூடலிழைத்தல்‌ பெண்டிர்க்கே உரியதென்றும்‌, இங்கு ““இழைப்பன்‌ திருக்கூடல்‌”! என்று ஆழ்வார்‌ அருளிச்‌ செய்தது 
நாயகி ஸமாதியில்‌ என்றும்‌ அழகிய மணவாளச்சீயர்‌ அருளிச்செய்வர்‌. 

பின்னடிகட்கு இரண்டு வகையாகக்‌ கருத்துரைக்கலாம்‌.... 
அருவிகளில்‌ விழுந்த ரத்னங்களைக்‌ கண்ட யானைகள்‌ ''இவை கொள்ளிவட்டம்‌'” என்று ப்ரமித்து ஓடப்புக்கவாறே 
மலைப்பாம்பின்‌ வாயிலே விழும்படியாயின எனவுமாம்‌. 
சில மலைப்பாம்புகள்‌ யானையைப்‌ பார்த்து ௮ஞ்சி ஒடுங்கி ஓடிப்போய்விடும்‌ என்றும்‌, 
பல மலைப்பாம்புகள்‌ யானையை அணுகி விழுங்கி விடுமென்றும்‌ தமிழ்‌ நூல்களால்‌ தெரிகிறது. 

“திரையன்‌ பாட்டு' என்ற ஓர்‌ பழைய நூலில்‌-- 
“கடுங்கண்‌ யானை நெடுங்கை சேர்த்தி 
திடங்கொண்டறைதல்‌ திண்ணமென்றஞ்சிப்‌ 
படங்கொள்‌ பாம்பும்‌ விடரகம்புகூஉம்‌ 
தடங்கொள்‌ உச்சித்‌ தாழ்வரையடுக்கத்து' என்றதனால்‌ மலைப்பாம்பு யானையைக்‌ கண்டு அஞ்சி ஒளிக்கும்‌ என்பது தெரிகின்றது. 

சிறிய கண்ணையுடைய யானை தனது நீண்ட துதிக்கையால்‌ பலமாக அறைந்து விடுவது நிச்சயம்‌ என்று பயந்து, படமெடுக்கும்‌ 
பாம்பு, மலைச்சரிவிலுள்ள புற்றில்‌ புகுந்து கொள்ளும்‌. 
*இடிகொள்‌ வேழத்தை எயிற்றொடும்‌ எடுத்துடன்‌ விழுங்கும்‌ 
கடியமாசுணம்‌ கற்றறிந்தவர்‌ என அடங்கிச்‌ 
சடைகொள்‌ சென்னியர்‌ தாழ்விலர்‌ தாமித்தேறப்‌ 
படிகடாமெனத்‌ தாழ்வரை கிடப்பன பாராய்‌” -என்ற கம்பராமாயணப்‌. பாட்டிலிருந்து மலைப்பாம்பு யானையை விழுங்கும்‌ எனத்‌ தெரிகிறது. 

கம்பர்‌ பாடலின்‌ கருத்து: 

இடிபோல்‌ முழங்கும்‌ யானையை தந்தத்துடன்‌ எடுத்து, உடனடியாக மலைப்பாம்பு விழுங்கிவிடும்‌. இருப்பினும்‌ அது 
சடைமுடி தரித்த முனிவர்களைக்‌ கண்டதும்‌ கற்றறிந்தவர்களைப்போல அடங்கி, அவர்கள்‌ தன்னை மிதித்து 
மலையேறுவதற்கு ஏற்றபடி, மலைச்சரிவில்‌ படிபோல்‌ படுத்துக்கொள்கிறது. 

மிகவும்‌ அற்புதமான சொல்லோவியத்தைக்‌ கவிச்சக்கரவர்த்தி தீட்டியுள்ளார்‌. முதலாழ்வார்களைப்‌ போன்ற மகான்களின்‌ 
முன்னிலையில்‌ யானையை விழுங்கும்‌ பாம்பும்‌ சாதுவாக விடுகிறது! சத்சங்கம்‌ அத்தனை மகத்துவம்‌ வாய்ந்தது. 
“'படியாய்க்‌ இடந்து உன்‌ பவளவாய்‌ காண்பேனே! என்று திருமலையில்‌ படியாகக்‌ இடந்து வேங்கடவனின்‌ பவளவாய்‌ காண விரும்பிய 
குலசேகர ஆழ்வாரைப்‌ போல, கம்பநாடரின்‌ மலைப்பாம்பு, 
முனிவர்களும்‌, அடியார்களும்‌ கிடந்து இயங்கும்‌ படியாகவே, சாஷ்டாங்கமாகத்‌ தரையில்‌ படுத்துவிடுகிறது. 

**யானையைக்‌ கண்டு மலைப்பாம்பு அஞ்சும்‌!" என்று “திரையன்‌ பாட்டுப்‌' பாடிய புலவர்‌; 
''யானையை அது .விழுங்கி விடும்‌!” என்று பாடிய கவிச்சக்கரவர்த்தி கம்பர்‌; 
இருவரையுமே  சேர்த்து விழுங்கிவிடும்‌ அளவிற்குக்‌ கவித்திறம்‌ படைத்த 
தெய்வப்புலவர்‌ நம்‌ திருமழிசைப்‌ பிரான்‌ என்பது இப்பாசுரத்திலிருந்து தெரிகிறது. எப்படி என்‌ன்‌றீர்களா? 
குறள்‌ போல்‌ அமைந்துள்ள கடைசி இரண்டு அடிகளைப்‌ பாருங்கள்‌-- 

“அருவி மணிவரன்றி வந்து இழிய யானை 
வெருவி அரவு ஒடுங்கும்‌ வெற்பு'” என்கிறார்‌. 
இங்கே ''யானை வெருவி அரவு ஒடுங்கும்‌ வெற்பு” என்பதற்கு இரண்டு விதமாகப்‌ பொருள்‌ கூறலாம்‌: 

௮] யானையைக்‌ கண்டு, (அல்லது அருவி அடித்து வரும்‌ இரத்தினத்தை மின்னல்‌ என நினைத்து] பாம்பு ஒடுங்கும்‌ 
திருமலை. இதுவே திரையன்பாட்டின்‌ கருத்து. 

ஆ] அருவி அடித்து வரும்‌ இரத்தினங்களைக்‌ கொள்ளிக்கட்டைகள்‌ என்று நினைத்து ஒடும்‌ யானை, 
மலைப்பாம்பின்‌ வாயிலே புகுந்து ஒடுங்கி, அடங்கும்‌ திருமலை. 
இதுவே கம்பன்‌ கூறிய கருத்து. ்‌ 

இப்படி இருபுலவர்களும்‌ . விரித்துக்கறிய இருவேறு கருத்துக்களை ஒரேயடியாக ஈரடிகளில்‌ ஒடுக்கி விடுகிறார்‌ திருமழிசையார்‌! 

இயற்கை என்னும்‌ இங்கரும்பை ஆராய்ந்து எடுத்து, கவித்திறன்‌ என்னும்‌ உருளையால்‌ ௮தை நெருக்கிச்‌ சாறு பிழிந்து, 
அதில்‌ பக்திரசம்‌ என்னும்‌ பனிக்கட்டியையும்‌ சேர்த்து, உலக ஆசை என்னும்‌ தாகம்‌ தணிய நமக்குத்‌ தருகின்றனர்‌ இன்கவி பாடிய 
இப்பரம கவிகள்‌! 
 
“இயற்கையை நாம்‌ காண்பது ஒரு வகை. நம்‌ மனத்தில்‌ அஃது ஒருவித சலனத்தையும்‌ ஏற்படுத்துவதில்லை. 
அது கவிஞர்களிடம்‌ பல்வேறு வித சலனங்களை ஏற்படுத்தப்‌ பல்வேறு கற்பனைக்‌ காட்சிகளைப்‌ படைக்கத்‌ தூண்டுகின்றது. 
கவிஞர்கள்‌ பக்தர்களாக இருப்பின்‌ அவர்கள்‌ பிறிதோர்‌ உலகத்தையே படைத்து விடுகின்றனர்‌; 
அதில்‌ தத்துவக்‌ கருத்துக்களையும்‌ மிளிரச்‌ செய்து விடுகின்றனர்‌. 
இவை இயற்கையைத்‌ துய்ப்பவர்கட்கு எழிலைக்‌ காட்டி மகழ்விக்கன்றன; முருகுணர்ச்சியையும்‌ தூண்டுகின்றன. 
பக்திக்கண்‌ கொண்டு நோக்குபவர்கட்கு பரவசத்தை ஏற்படுத்திப்‌ பரமனின்‌ விசுவரூப தரிசனத்தையே காட்டி விடுகின்றது. 
இத்தகைய பாசுரங்களைப்‌ படித்து அநுபவிக்கக்‌ கற்றுக்கொள்ளாவிடில்‌ நமக்கு இவ்வுலகில்‌ ஆறுதல்‌ 
அளிக்கும்‌ பொருளே இல்லை என்று ஆகிவிடும்‌'". 

------------

முதலாழ்வார்கள்‌ கண்ட திருமலை 
சித்‌, அசித்‌, ஈசுவரன்‌ என்று மூவகைப்பட்ட வைணவத்‌ தீத்துவம்‌ 'தத்துவத்‌ திரயம்‌' (திரயம்‌ - மூன்று) எனப்படும்‌. 
சித்‌ (உயிருள்ள ஜீவராசிகள்‌), அசித்‌ (ஜடப்பொருள்‌) ஆகிய இரண்டும்‌ ஈசுவரனுக்கு உடல்‌ என்பர்‌; 
இந்த உறவு 'சரீர - சரீரி பாவனை! எனப்படும்‌. அசித்தும்‌ பகவான்‌ படைப்பாதலால்‌ அதுவும்‌ வழிபாட்டிற்குரியது. 

திருமலையின்‌ நாம்‌ கண்ட வானரங்கள்‌, யானைகள்‌, வேடர்கள்‌, குறவர்கள்‌ 'சித்‌' வகையைச்‌ சேர்ந்தவர்‌. 
மலை 'அசித்‌” ஆகும்‌. வைகுந்தத்திலிருந்த கருடாசலமே கருடபகவானால்‌ ஸ்ரீமத்நாராயணன்‌ ஆணைப்படி கொண்டு வரப்பட்டு பூவுலகில்‌ 
வைக்கப்பட்டதால்‌, இருமலை கருடாசலம்‌' எனப்படும்‌. 
ஆதிசேஷனே சேஷகிரியாசு எழுந்தருளியிருப்பதாகக்‌ கூறுவர்‌, 
ஏழுமலை வெறும்‌ கல்‌ அல்ல; எம்பெருமானின்‌ சத்துவகுணமே இறுகத்‌  திருமலையானது எனலாம்‌. 
எனவே வேங்கடம்‌ 'திருமலையாழ்வார்‌' என்றே போற்றப்படும்‌. 
மிகவும்‌ பிரசித்தி பெற்ற இந்த ஆழ்வார்‌ ஏகப்பட்ட திருநாமங்களுடன்‌ எழுந்தருளியிருக்கிறார்‌. 
சிந்தாமணகிரி, 
ஞானகிரி, 
வேங்கடகிரி, 
ஸ்ரீனிவாச கிரி, 
தீர்த்தகிரி, 
சுவர்ணகிரி, 
ஸ்ரீசைலகிரி, 
ஆனந்தகிரி, 
நாராயணகிரி, 
வைகுந்தகிரி, 
வேதகிரி, 
யமகிரி, 
சிம்மகிரி, 
வராககிரி, 
நீலகிரி என்றும்‌, 
சேஷசைலம்‌, 
கருடாசலம்‌, 
வேங்கடாசலம்‌, 
சேஷாசலம்‌ என்றும்‌; 
வேங்கடாத்ரி, 
நாராயணாத்ரி, 
விருஷபாத்ரி, 
விருஷாத்ரி, 
அஞ்சநாத்ரி, 
சேஷாத்ரி, 
ஆநந்தாத்ரி, என்றும்‌ அழைக்கப்படும்‌ ஏழுமலை. 
இருப்பினும்‌ 
வேங்கடம்‌, திருமலை ஆகிய திருநாமங்களே இதற்கு சாதாரணமாக வழங்கப்படும்‌. 

“சென்று சேர்திரு வேங்கடமாமலை 
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே”” என்று நம்மாழ்வார்‌ இருமலையை மங்களாசாஸனம்‌ செய்திருக்கிறார்‌. 
திருமலையாழ்வாரை வணங்கினாலே  நம்முடைய பாவவினைகள்‌ அழிந்து விடும்‌. 
முதல்‌ நான்கு  ஆழ்வார்கள்‌. திருமலையைக்‌ குறித்துப்‌ பாடியுள்ள சில பாசுரங்களை இங்கு காண்போம்‌. 

எழுவார்‌ விடைகொள்வார்‌ ஈன்துழாயானை 
வழுவா வகை நினைந்து வைகல்‌ - தொழுவார்‌ 
வினைச்சுடரை நந்துவிக்கும்‌ வேங்கடமே! வானோர்‌ 
மனச்சுடரைத்‌ தூண்டும்‌ மலை. (-ஸ்ரீ பொய்கையாழ்வார்‌ -மு.தி. 26) 

வழுவா வகை - பிரியாமல்‌ இருக்க வகை; வைகல்‌ - இனந்தோறும்‌; நந்துவிக்கும்‌ - அணைக்கும்‌, அழிக்கும்‌; 
மனச்சுடர்‌  திருவுள்ளமாகிய விளக்கு. 

சிலர்‌ (எழுவார்‌) செல்வம்‌ வேண்டி ஏழுமலையானை வணங்குவர்‌; 
சிலர்‌ (விடை கொள்வார்‌) கைவல்யம்‌ (மோட்சம்‌) வேண்டி, அதைப்‌ பெற்றதும்‌ அவனை விட்டுப்‌ பிரிவர்‌; 
ஆயினும்‌ பக்தர்கள்‌ இனிய துழாய்‌ (துளசி) மாலைகளணிந்த ஸ்ரீவேங்கடாசலபதியை என்றும்‌ பிரியாமலிருக்க விரும்பி 
௮வனை நாள்தோறும்‌ தொழுவார்கள்‌. அவரவர்களது பாவவினைகளாகிய தீயை ௮ணைக்கக்கூடியது வேங்கடம்‌. 
நித்யஸூரிகளுடைய திருவுள்ளமாகிய விளக்கைத்‌ தூண்டி விளங்கச்‌ செய்வதும்‌ திருமலையே. 
அவதாரத்திற்குப்‌ பிற்பட்டவர்களாகய நாம்‌ தொழுது உய்யுமாறு திருமலையிலே பெருமான்‌ உறைந்துள்ளான்‌. 

கீழ்ப்பல பாசுரங்களில்‌ விபவாவதார சேஷ்டிதங்களை (செயல்களைப்‌) பேசி அநுபவித்த ஆழ்வார்‌, என்றைக்கோ கழிந்த 
அவ்வவதாரங்களின்‌ திருக்குணங்கள்‌ இன்றைக்கும்‌ நன்கு விளங்குமாறு, பின்னானார்‌ (பின்‌ தோன்றியவர்கள்‌) வணங்கும்‌ 
சோதியாக சேவை சாதித்து அருள்கின்ற அர்ச்சாவதாரங்களையும்‌ அனுபவிக்க ஆசை கொண்டு, 
'*தென்னனுயர்‌ பொருப்பும்‌ தெய்வவடமலையும்‌'' என்னும்‌ இரண்டு திருமலைகளுள்‌ 
திருவேங்கடமலையிலே திருவுள்ளஞ்சென்று அவ்விடத்தைப்‌ பேசி அனுபவிக்கிறார்‌ இப்பாட்டில்‌. 
எம்பெருமானிலுங்காட்டில்‌ எம்பெருமானோடு சம்பந்தம்‌ பெற்ற பொருள்களே பரம 
உத்தேச்யமென்று கொள்ளுகிறவர்கள்‌ ஆகையாலே, 
திருவேங்கடமுடையான்‌ வரையில்‌ போகாமல்‌, அவனுடைய சம்பந்தம்‌ பெற்றதான திருமலையோடே தின்று அனுபவிக்கிறார்‌. 

எழுவார்‌: 
இங்கு 'எங்களுக்கு ஐச்வர்யத்தைத்‌ தரவேணும்‌'” என்று பிரார்த்தித்து அது கைப்பட்டதும்‌ எம்பெருமானைவிட்டு எழுந்து 
போகிறவர்கள்‌ என்றாவது, ஐச்வர்யம்‌ வேணுமென்று மேலே மேலே பிரார்த்திக்குமவர்கள்‌ என்றாவது கொள்க. 
இவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது ஐச்வார்ய ப்ராப்திக்கு 
விரோதியான பாவங்களைத்‌ தொலைத்து ஐச்வர்ய விருப்பத்தை நிறைவேற்றுகை. 

விடைகொள்வார்‌ என்றால்‌ விட்டு நீங்குகிறவர்கள்‌ என்கை; 
ஸந்தர்ப்பம்‌ நோக்கி இங்கே கைவல்யார்த்திகளைச்‌ சொல்லுகிறது. 
அவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது ்‌ 
ஆத்மானுபவத்திற்கு விரோதியான பாவங்களைத்‌ தொலைத்துக்‌ கைவல்யாநுபவத்தை நிறைவேற்றுகை. 

ஈன்துழாயானை வழுவாவகை நினைந்து வைகல்‌ தொழுவார்‌ 
ப்ரமைகாத்துகளான பகவத்பக்தர்கள்‌; 
அவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது மாறிமாறிப்‌ பலபிறப்பும்‌ 
பிறக்கும்படியான தீவினைகளைத்‌ தொலைத்து முத்தியளிக்கை 

ஆக வேண்டுவோர்‌ வேண்டினபடியே அநிஷ்ட நிவருத்தியையும்‌ (வேண்டாததை விலக்கியும்‌) இஷ்டப்ராப்தியையும்‌ 
செய்விக்கவல்லது திருவேங்கடம்‌ என்றதாயிற்று. 

வானோர்‌ மனச்சுடரைத்‌ தூண்டும்‌ மலை: 
ஒரு நெருப்பை அணைக்கும்‌; ஒரு நெருப்பை அபிவிருத்தி செய்யும்‌ என்று சமத்காரமாக அருளிச்‌ செய்கிறார்‌. 
வானோர்‌ மனச்சுடரைத்‌ தூண்டுகையாவது - பரமபதத்திலே பரத்வகுணத்தை அனுபவித்துக்‌ கொண்டிருக்கிற நித்யஸூரிகளை, 
இங்கு. வந்து ஸெளலப்ய, ஸெளரில்யாதி குணங்களை அனுபவிக்குமாறு  உத்ஸாஹமூட்டுதலாம்‌. 

நெறியார்‌ குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து 
அறியாது இளங்கிரி என்றெண்ணி - பிரியாது 
பூங்கொடிகள்‌ வைகும்‌ பொருபுனற்‌ குன்றென்னும்‌ 
வேங்கடமே! யாம்‌ விரும்பும்‌ வெற்பு, (-ஸ்ரீ பூதத்தாழ்வார்‌ -இ.தி. 53) 

நெறி - வழி, பாதை; நெறியார்‌ - திருமலை வழியிலே இருப்பவர்கள்‌; குழற்கற்றை - சடைமுடி; இளங்கிரி - சிறியமலை; 
வைகும்‌ - படரும்‌; பொருபுனல்‌ - அலையெறியும்‌ அருவி; வெற்பு ” மலை. 

திருமலைக்குச்‌ செல்லும்‌ வழியில்‌ தவம்‌ செய்யும்‌ தவசியர்களது சடைமுடிக்கற்றைகள்‌ முன்புறம்‌ உயர்ந்தும்‌, 
பின்னே முதுகுப்புறம்‌ தாழ்ந்தும்‌ இருக்கின்றன. மனிதன்‌ என்று அறியாமல்‌, சிறிய மலை என்றெண்ணி, அவ்விடம்‌ விட்டுப்‌ 
பிரியாமல்‌ பூங்கொடிகள்‌ அவர்கள்‌ மீதே படர்கின்றன. 
அலையெறிகின்ற அருவிகளையுடைய “திருமலை” என்று புகழ்பெற்ற வேங்கடமே நாம்‌ விரும்பும்‌ மலையாகும்‌. 

திருவேங்கடமலையை ஒரு சமத்காரம்‌ பொலிய வருணிக்கிறார்‌. திருமலை யாத்திரை வருகின்ற மஹான்கள்‌ பலர்‌ 
“வெறியார்‌ தண்சோலைத்‌ திருவேங்கடமலைமேல்‌ நெறியாங்க்‌ கிடக்கும்‌ நிலையுடையேன்‌ ஆவேனே! என்று ஸ்ரீ குலசேகரப்‌ 
பெருமாள்‌ விரும்பினபடியே, திருமலை ஏறும்‌ வழியிலே மிக்க ஆதாரம்‌ வைத்து, திருமலை மேலே சென்று வாழ்வநிற்காட்டிலும்‌ 
திருமலை வழியிற்‌ கிடப்பதையே பரம உத்தேச்யமாகக்‌ கொண்டு அவ்வழியிலே' :வீற்றிருந்து எம்பெருமானைச்‌ சிந்தை செய்கின்றனர்‌. 
அப்போது மூச்சுவிடுதல்‌, உடம்பு அசைத்தல்‌ முதலியன ஒன்றுஞ்செய்யாதே, வால்மீகி ' முதலிய 
மஹரிஷிகளைப்போலே யோகநிலையில்‌ ஆழ்ந்து கிடக்கின்றனர்‌. 
அன்னவர்களது கூந்தல்‌ கற்றையானது முன்னின்று பின்‌ தாழ்ந்திருப்பதைக்‌ கண்ட பூங்கொடிகளானவை 'சில மனிதர்கள்‌ 
வீற்றிருக்கின்றார்கள்‌' என்றும்‌ அவர்களுடைய குழல்கற்றை தாழ்ந்திருக்கின்றது' என்றும்‌ தெரிந்து கொள்ளாமல்‌, “இவை 
சிறுமலைகள்‌' என்றெண்ணி அவற்றின்‌ மேலே படர்கின்றனவாம்‌. 
படர்ந்து, வால்மீகி முனிவர்மீது புற்று மூடினாற்போலே இந்த பக்தர்களின்‌ மேலும்‌ பூங்கொடிகள்‌ படர்ந்திருப்பது அற்புதமான 
ஒரு காட்சியாய்‌ அமைந்தது. இப்படிப்பட்ட காட்சிக்கு இடமான திருமலையே நாம்‌ விரும்பத்தக்க மலையாம்‌ - என்றாயிற்று. 

வெற்பென்று வேங்கடம்‌ பாடும்‌ வியன்துழாய்‌ 
கற்பென்று சூடும்‌ கருங்குழல்மேல்‌ - மற்பொன்ற 
நீண்டதோள்‌ மால்கிடந்த நீள்கடல்‌ நீராடுவான்‌ 
பூண்டநாள்‌ எல்லாம்‌ புகும்‌. (ஸ்ரீ பேயாழ்வார்‌ -மூ. தி, 69) 

வியன்துழாய்‌ - வியக்கத்தக்க துளசி; மற்பொன்ற - மல்‌ பொன்ற, மல்லர்கள்‌ அழியும்படியான; மால்‌ - திருமால்‌; நீள்கடல்‌ -திருப்பாற்கடல்‌. 

ஆழ்வார்‌ ஒரு தலைவி நிலையை அடைந்து பாடுவது முதலிய செயல்களை அவளது திருத்தாயார்‌ கூறுவதாக இச்செய்யுள்‌ 
அமைந்துள்ளது. இது தாய்ப்பாசுரம்‌ என்பர்‌. 

என்‌ மகளானவள்‌ ஏதேனும்‌ ஒரு மலையைப்‌ பற்றிய பேச்சு நேர்ந்தாலும்‌, திருவேங்கட மலையைப்‌ பற்றிப்‌ பாடுகிறாள்‌. தனது 
கற்புக்குத்‌ தகுந்ததென்று வியக்கத்தக்க துளசியைத்‌ தனது கருங்கூந்தலில்‌ சூடிக்கொள்கிறொள்‌. மல்லர்கள்‌ அழியும்படியான 
நீண்ட தோள்களையுடைய திருமால்‌ பள்ளிகொண்டுள்ள பரந்த திருப்பாற்கடலிலே நீராடுவதற்காக விடிந்த விடிவுகள்‌ தோறும்‌ புறப்படுகின்றாள்‌. 

இப்பாசரத்தில்‌ 'கற்பென்று” பாதிவ்ரத்யத்தையும்‌, 
கருங்குழல்‌” என்று பெண்ணின்‌ கூந்தலையும்‌ கூறுவதால்‌, 
'என்‌ மகள்‌' என்று ஒரு பெண்ணை எழுவாயாகக்‌ கொள்ள வேண்டும்‌. 
மற்பொன்ற: 
மல்லர்களையழித்த; கடலில்‌ புகுந்து மதுகைடபர்‌ என்னும்‌ அசுரர்களைக்‌ கொன்றதையும்‌, கிருஷ்ணாவதாரத்தில்‌ சாணூரன்‌, 
முஷ்டிகளன்‌ என்கிற மல்லர்களை அழித்ததையும்‌ கூறுகிறார்‌. 

பூண்ட நாள்‌ எல்லாம்‌: 
பூண்ட - பூட்டிய) சூரியனுடைய தேரிலே குதிரையைப்‌ பூட்டிய நாள்‌ எல்லாம்‌' என்கிறபடியே, “விடிந்த விடிவுகள்‌ 
தோறும்‌' என்று பொருள்பட்டது. 

எம்பெருமானை அனுபவித்தல்‌ பல வகைப்பட்டிருக்கும்‌: 
அவனுடைய திருநாமங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌, திருக்கல்யாண குணங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌, 
திவ்யசேஷ்டிதங்களை (அவதாரச்‌ செயல்களைச்‌) சொல்லி அனுபவித்தல்‌, வடிவழகை வருணித்து அனுபவித்தல்‌, 
அவனுகந்தருளிய திவ்ய தேசங்களின்‌ வளங்களைப்‌ பேசி அனுபவித்தல்‌, ௮ங்கே அபிமானமுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களின்‌ 
பெருமையைப்‌ பேசி அனுபவித்தல்‌ என்று இப்படிப்‌ பலவகைப்பட்டிருக்கும்‌ பகவதனுபவம்‌. 

இவ் வகைகளில்‌ பரம விலக்ஷ்ணமான மற்றொரு வகையுமுண்டு: அதாவது - தாமான தன்மையை (ஆண்மையை/ 
விட்டுப்‌ பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக்கொண்டு வேற்றுவாயாலே பேசி அனுபவித்தல்‌ (இது அந்யாபதேசம்‌ 
எனப்படும்‌). இப்படி அனுபவிக்கும்‌ இறத்தில்‌ தாய்ப்பாசுரம்‌, தோழிப்பாசுரம்‌, மகள்‌ பாசுரம்‌ என்று மூன்று வகுப்புகளுண்டு. 
இவை நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்களது அருளிச்செயல்களில்‌ (பாட்டுகளில்‌) விசேஷமாக வரும்‌. 
முதலாழ்வார்களின்‌ திருவந்தாதிகளில்‌ ஸ்திரீபாவனையினாற்‌ பேசும்‌ பாசுரம்‌ வருவதில்லை. 
ச்ருங்கார ரஸத்தின்‌ ஸம்பந்தம்‌ சிறிதுமின்றியே கேவலம்‌ சுத்த பக்திரஸமாகவே பாசுரங்கள்‌ அருளிச்செய்தவர்கள்‌ முதலாழ்வார்கள்‌. 
ஆயினும்‌ இப்பாசுரம்‌ ஒன்று தாய்வார்த்தையாகச்‌ செல்லுகிறது. பேயாழ்வாராகிய 
பெண்பிள்ளையின்‌ நிலைமையை அவளைப்‌ பெற்று வளர்த்த திருத்தாயார்‌ பேசுவதாக அமைக்கப்பட்ட பாசுரம்‌ இது. 
“என்னுடைய மகளானவள்‌'' என்ற எழுவாய்‌ இதில்‌ இல்லையாதலால்‌ கற்பித்துக்கொள்ள வேண்டும்‌. 

இப்பிரபந்தத்தில்‌ அந்யாபதேசப்‌ பாசுரம்‌ வேறொன்றும்‌ இல்லாதிருக்க இஃ்தொன்றை மாத்திரம்‌ இங்ஙனே 
தாய்ப்பாசுரமாகக்‌ கொள்ளுதல்‌ சிறவாதென்றும்‌, “என்‌ மகள்‌” என்ற எழுவாய்‌ இல்லாமையாலும்‌ இவ்வர்த்தம்‌ உசிதமன்று என்றும்‌ 
சிலர்‌ நினைக்கக்‌ கூடுமாதலால்‌ இப்பாசுரத்திற்கு வேறுவகையான நிர்வாஹமும்‌ பூர்வர்கள்‌ அருளிச்‌ செய்துள்ளனர்‌. 

எங்ஙனே எனில்‌: ''பாடும்‌, சூடும்‌, புகும்‌! என்ற வினைமுற்றுக்களை முன்னிலையில்‌ வந்தனவாகக்‌ கொண்டு, 
**உலகத்தவர்களே! நீங்கள்‌ ஏதாவதொரு மலையைப்‌ பாடவேண்டில்‌ திருவேங்கடமலையைப்‌ பாடுங்கள்‌; 
ஏதேனும்‌ ஒரு மலரைக்‌ குழலில்‌ சூடவேண்டில்‌ திருத்துழாய்‌ மலரைச்‌ சூடிக்கொள்வதே சேஷத்வத்திற்கு உரியதென்று கொண்டு 
அதனைச்‌ சூடுங்கள்‌; நீராடுவதற்குத்‌ திருப்பாற்கடலிலே சென்று புகுங்கள்‌'' என்பதாக. 

இங்கே பெரியவாச்சான்‌ பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி காண்மின்‌: '*இப்பிரகரணத்தில்‌ (பிரபந்தத்தில்‌) கீமும்‌ மேலும்‌ 
அந்யாபதேசமின்றிக்கே யிருக்க இப்பாட்டொன்றும்‌ இப்படிக்‌ கொள்ளுகிறதென்னென்று நிர்வஹிப்பர்கள்‌... 
திருமலையைப்‌ பாடுங்கோள்‌... திருத்துழாயைச்‌ சூடுங்கோள்‌... விரோதி நிரஸத சீலனானவன்‌ கிடந்த திருப்பாற்கடலிலே முழுகுங்கோள்‌'' என்று. 
திருவேங்கடத்தின்‌ புகழைப்பாடியும்‌, துளசியைப்‌ போற்றிச்‌ சூடியும்‌ வந்தால்‌, நாம்‌ திருப்பாற்கடலிலே நித்யம்‌ நீராடலாம்‌; 
நிச்சயம்‌ வைகுந்தம்‌ புகுவோம்‌ என்பது குறிப்பு ... 

வெற்பென்று வேங்கடம்‌ பாடினேன்‌ வீடாக்கி 
நிற்கின்றேன்‌ நின்று நினைக்கின்றேன்‌ - கற்கின்ற 
நூல்வலையில்‌. பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்‌ 
கால்வலையில்‌ பட்டிருந்தேன்‌ காண்‌ (ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ -நா. தி, 40), 
வீடு - மோட்சம்‌; நூல்வலை - வேதங்களாகிய வலை; நூலாட்டி - வேதமாகிய நூலில்‌ போற்றப்படும்‌ லட்சுமி; 
கேள்வனார்‌ - கணவர்‌, இங்கே திருமால்‌. 
 
மலைகளின்‌ பெயர்களைச்‌ சொல்லி வருகையில்‌, தற்செயலாக வேங்கடமலை என்றேன்‌; இதன்‌ பலனாகவே 
மோட்சம்‌ நிச்சயம்‌ என்றுணர்ந்து நிற்கின்றேன்‌... “*நாம்‌ சொன்ன சிறிய சொல்லுக்குப்‌ பெரிய பேறு கிடைத்த பாக்கியம்‌ 
எத்தகையது!” என்று நினைத்து, வியந்து, மலைத்துப்‌ போனேன்‌! 
ஓதப்படுகின்ற வேத சாஸ்திரங்களாகிய வலையில்‌ அகப்பட்டிருக்கும்‌ லக்ஷ்மீநாதனின்‌ திருவடிகளாகிய வலையில்‌ 
அகப்பட்டு நிலைத்து நிற்கின்றேன்‌. 

"மலை' என்று வருகிற பெயர்களையெல்லாம்‌ அடுக்காகச்‌ சொல்லுவோம்‌ என்று விநோதமாக முயற்சி செய்து 'பசுமலை, 
குருவிமலை' என்று பலவற்றையும்‌ சொல்லி வருகிற அடைவிலே, என்னையும்‌ அறியாமல்‌ 'திருவேங்கடமலை' என்று 
என்‌ வாயில்‌ வந்துவிட்டது; இவ்வளவையே கொண்டு எம்பெருமான்‌ என்னைத்‌ திருவேங்கடம்‌ பாடினவனாகக்‌ கணக்கு 
செய்து கொண்டான்‌ என்பது இதன்‌ கருத்து. 

நின்று நினைக்கின்றேன்‌: 
நாம்‌ புத்திபூர்வமாக ஒரு நல்ல சொல்லும்‌ சொல்லாது இருக்கவும்‌, எம்பெருமான்‌ தானே மடிமாங்காயிட்டுத்‌ திருவுள்ளம்‌ 
பற்றுகிற இது என்ன ஆச்சரியம்‌! என்று இதனையே அநுஸந்தித்து ஈடுபட்டு நின்றேன்‌ என்கை. 
கால்வலையிற்‌ பட்டிருந்தேன்‌? 
மூன்றாமடியில்‌ சாஸ்திரங்களை எம்பெருமானுக்கு வலையாகவும்‌, ஈற்றடியில்‌ அவ்வெம்பெருமான்‌ திருவடிகளைத்‌ 
தமக்கு வலையாகவும்‌ அருளிச்‌ செய்தார்‌. எம்பெருமானை சாஸ்திரங்களிலிருந்து எப்படிப்‌ பிரிக்க முடியாதோ அப்படியே 
என்னை அப்பெருமான்‌ திருவடிகளிலிருந்து பிரிக்கமுடியாது என்றவாறு. 
எம்பெருமான்‌ ஒரு வலையில்‌ அகப்பட்டான்‌, -நானொரு வலையில்‌ அகப்பட்டேன்‌ என்று சமத்காரமாகச்‌ சொல்லுகிறபடி. 

வேதங்களையும்‌, ஸ்ம்ருதி இதிகாச புராணங்களையும்‌ சம்பிரதாயமாக ஓதும்‌ முறையைப்‌ பின்பற்றி ஆராய்ந்தபோது, 
எம்பெருமானும்‌, பெரிய பிராட்டியும்‌ (லட்சுமியும்‌) இருவரும்‌ நமக்குத்‌ தெய்வம்‌ என்ற தெளிவு உண்டாயிற்று... சரணாகதரைக்‌ 
காப்பதாகக்‌ கூறி ௮வன்‌ அதுபடி நடக்கவில்லையாகில்‌ நூலாட்டி (லட்சுமி) அந்நூல்களே  * எதற்கென்று கேள்வனை 
(ஸ்ரீநிவாஸனைக்‌) கேட்பாள்‌. ்‌ 
ஏதோ வெற்பொன்றைப்‌ பாட நினைத்த போதும்‌ அவனது வேங்கடத்தைப்‌ பாடும்படியாயிற்று, அதனால்‌ அதை எனக்கு 
வீடாக்கினான்‌. அதே மோட்சத்தானம்‌. இப்படி எனக்கு வாய்த்ததற்கு யானே வியந்து அசையாது நின்று என்ன 
வாத்ஸல்யமென விசாரியா நின்றேன்‌ (ஆராய்ந்தேன்‌). இனி நிலைத்து நின்று இடையூறின்றி வேங்கடத்தையே தியானிக்கவும்‌ 
வாய்த்தது என்றபடி. 
இங்கே பாடுதல்‌, நிற்றல்‌, நினைத்தல்‌ என்று வாக்கு, காயம்‌, மனோரூப முக்கரணங்களின்‌ வியாபாரங்கள்‌ 
(செய்கைகள்‌) மொழியப்‌ பெற்றன. 

வேங்கடமே விண்ணோர்‌ தொழுவதும்‌ மெய்ம்மையால்‌ 
வேங்கடமே மெய்வினை நோய்‌ தீர்ப்பதுவும்‌ - வேங்கடமே 
தானவரை வீழத்தன்‌ ஆழிப்படைதொட்டு 
வானவரைக்‌ காப்பான்‌ மலை, (ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ -நா. தி. 48) 

மெய்ம்மையால்‌ - உண்மையான பக்தியுடனே; மெய்வினை நோய்‌ - முன்பிறவியில்‌ செய்த பாவவினைகளால்‌ உடலை வருத்தும்‌ நோய்‌; 
தானவர்‌ - அசுரர்கள்‌; ஆழிப்படை - சக்கராயுதம்‌; வானவர்‌ - தேவர்கள்‌. 

நித்யஸூரிகளால்‌ உண்மையான பக்தியூடனே தொழப்படுவது வேங்கடமே. 
பாவ வினைகளால்‌ விளைந்து உடலை வருத்தும்‌ கர்மவியாதிகளைத்‌ தீர்ப்பதும்‌ வேங்கடமே. 
அசுரர்கள்‌ அழியும்படி, சக்கராயுதத்தை ஏவி, தேவர்களைக்‌ காத்தருளும்‌ பெருமானுடைய திருமலையும்‌ வேங்கடமே. 
வேங்கடமே விண்ணோர்‌ தொழுவதும்‌: விண்ணோர்‌ வைகுந்தத்திலிருக்கும்‌ முக்தர்களும்‌, நித்யஸூரிகளும்‌. 

 “ஸதா பச்யந்தி ஸூரய:'” என்கிறபடியே நித்யஸூரிகள்‌ 
பரமபதத்திலே எம்பெருமானை இடைவிடாது அநுபவிக்கப்பெற்றாலும்‌, அங்கே பரத்வத்துக்கு உரிய மேன்மைக்‌ 
குணங்களை அநுபவிக்கலாகுமேயன்றி ஸெளலப்ய (எளிதில்‌ அணுகும்‌ தன்மை) ஸெளரில்யங்களுக்குப்‌ (வேறுபாடின்றிப்‌ 
பழகும்‌ தன்மை) பாங்கான எளிமைக்‌ குணங்களை இத்நிலத்திலே வந்து அநுபவிக்க வேண்டியிருப்பதால்‌ அந்த லோதி குணங்களை 
அநுபவிப்பதற்காகத்‌ திருமலையில்‌ வந்து தொழும்படியைக்‌ கூறுவது முதலடி. 

வேங்கடமே மெய்வினை நோய்‌ நீர்ப்பதுவும்‌: 
இது 'வேங்கடம்‌' என்பதற்கு விளக்கம்‌. வேம்‌ - பாவம்‌; கடம்‌ - எரித்தல்‌. 
தேவர்களுக்கு அசுரர்களால்‌ .நேரும்‌ துன்பங்களைத்‌ திருவாழியால்‌ (சக்கரத்தால்‌ தொலைத்துக்‌ காத்தருளும்‌ எம்பெருமான்‌,
அப்படியே நம்‌ போன்ற பக்தர்களுடைய துன்பங்களையும்‌ துடைக்கவே எழுந்தருளியிருக்கும்‌ இடம்‌ திருமலை என்பன பின்னடிகள்‌. 

“'வேங்கட அம்ருத பீஜம்‌ கடமைச்வர்யம்‌ உச்யதே'' என்றபடி வேங்கடம்‌ என்ற சொல்லுக்கு மோட்சம்‌, ஐச்வர்யம்‌ இரண்டுமான 
மலையென்ற பொருளுமுண்டு. மோட்சமென்பதற்கு ஏற்ப விண்ணோர்‌ தொழுகின்றனர்‌. 
ஐச்வர்யம்‌ என்பதற்கிணங்க வானவர்‌ வணங்குகின்றனர்‌. 
வினைகளை எரிப்பதால்‌ வேங்கடம்‌ என்ற பொருளைக்‌ கருதி அனைவரும்‌ இதனையே வணங்கி 
எல்லாத்‌ துயரங்களையும்‌ தீர்த்துக்கொள்வது கண்கூடு. 
ஆகவே எல்லாவற்றிற்கும்‌ மேலானது. இவ்வாறு வேங்கடம்‌ என்ற சொல்லின்‌ பொருளைக்‌ கருதி மூன்றுதரம்‌ வேங்கடமென்றது. 

-----------
 
முதலாழ்வார்கள்‌ கண்ட திருவேங்கடவன்‌ 

முதலாழ்வார்கள்‌ மாபெரும்‌ வேங்கடேச பக்தர்கள்‌ என்பது அவர்கள்‌ பாடிய திருவந்தாதியிகளிலிருந்து நன்கு 
வெளிப்படுகிறது. மொத்தம்‌ 300 பாசுரங்களில்‌, இவர்கள்‌ வேங்கடவனைக்‌ குறித்துப்‌ பாடியவை 39;
ஸ்ரீ ரங்கநாதனைக்‌ குறித்தவை 7; 
திருமழிசையாழ்வார்‌ சரிசமமாகவே, முறையே 15,  பாடல்களைப்‌ பாடியுள்ளார்‌; 
இந்நால்வரும்‌ வேங்கடவனைப்‌ பாடிய பாசுரங்களில்‌ சிலவற்றை இங்கு காண்போம்‌. 

உணர்வாரார்‌ உன்பெருமை? ஊழிதோறு ஊழி 
உணர்வாரார்‌ உன்‌ உருவம்‌ தன்னை? உணர்வாரார்‌? 
விண்ணகத்தாய்‌! மண்ணகத்தாய்‌! வேங்கடத்தாய்‌! நால்வேதப்‌ 
பண்ணகத்தாய்‌! நீ கிடந்தபால்‌. (ஸ்ரீ பொய்கையாழ்வார்‌ )

உணர்வாரார்‌ - உணரக்கூடியவர்‌ யார்‌? ஊழி - பிரளயம்‌, காலவெள்ளம்‌; விண்ணகம்‌ - வைகுந்தம்‌. 

வைகுண்டத்தில்‌ இருப்பவனே! மண்ணுலகில்‌ அவதரித்தவனே! வேங்கடத்தில்‌ நின்று அருள்பவனே! 
ஸ்வரப்ரதானமான நான்கு வேதங்களின்‌ பண்கள்‌ மயமானவனே! 
உன்‌ பெருமையை ழி முதல்‌ அடுத்த ஊழிவரை காலமெல்லாம்‌ ஆராய்ந்தாலும்‌ யார்‌ அறியவல்லார்‌? உனது திவ்யாத்ம 
சொரூபத்தைத்தான்‌ யார்‌ அறியவல்லார்‌? நீ திருப்பாற்கடலில்‌ பாம்பணைமேல்‌ கிடக்கும்‌ நிலையைத்தான்‌ யார்‌ அறியவல்லார்? 

“திருமாலை அறிவதே அறிவு!" என்று கீழ்ப்பாட்டில்‌ அருளிச்செய்த ஆழ்வார்‌ ௮றிவுக்கு எல்லைநிலம்‌ எம்பெருமான்‌ 
அல்லது இல்லை என்னும்படி இருந்தாலும்‌, அவன்‌ தன்மை அறிவார்தான்‌ இல்லை என்று இப்பாட்டில்‌ அருளிச்செய்கிறார்‌. 
இவ்வாறிருப்பது வஸ்துவின்‌ (திருவேங்கடவனின்‌) சுபாவமே ஒழிய, அறிவின்‌ குறைவன்று என்பதும்‌ அறியத்தக்கது. 
*'உணர்வாரார்‌?'” என்ற வினாவினால்‌ ஸர்வஜ்ஞனான உன்னாலும்‌ உன்‌ தன்மை அறியமுடியாது என்பதும்‌ காட்டப்படும்‌.
''தனக்கும்‌ தன்‌ தன்மை அறிவரியான்‌'' என்றார்‌ நம்மாழ்வாரும்‌. 

உளதென்று இறுமாவார்‌ உண்டு இல்லை என்று 
தளர்தல்‌ அதன்‌ அருகுஞ்சாரார்‌ - அளவரிய 
வேதத்தான்‌ வேங்கடத்தான்‌ விண்ணோர்‌' முடிதோயும்‌ 
பாதத்தான்‌ பாதம்‌ பயின்று. (ஸ்ரீ பூதத்தாழ்வார்‌ -இ.தி. 45) 

உளது என்று - செல்வம்‌, பகவானை வழிபடும்‌ பேறு தமக்கு உள்ளது என்று; இறுமாவார்‌ - கர்வம்‌ கொள்ளமாட்டார்‌; 
விண்ணோர்‌ - நித்யஸூரிகள்‌; பயின்று - பழக. 

அளவிட முடியாதபடி அனந்தமாயுள்ள வேதங்களால்‌ போற்றப்படும்‌ திருவேங்கடமுடையான்‌, நித்யஸூரிகளது 
தலைமுடிகள்‌ படியும்படி பணியப்பெற்ற திருவடிகளை யுடையவன்‌. ஸ்ரீவேங்கடாசலபதியினுடைய பாதங்களை 
வணங்கிப்‌ பழகிய பக்தர்கள்‌ தமக்குச்‌ செல்வமோ, அவனை வணங்கும்‌ 'பேறோ உள்ளதென்று கர்வம்‌ கொள்ளமாட்டார்கள்‌; 
அவை நேற்று இருந்து இன்று இல்லையென்னும்படி அழிந்தன” என்னும்‌ மனத்தளர்ச்சியின்‌ பக்கமே செல்லமாட்டார்கள்‌. 
வேங்கடேச பக்தர்கள்‌ தம்முடைய பணம்‌, பதவி பறிபோனாலும்‌, மனம்‌ தளர்ந்து அவனைத்‌ தொழுவதைக்‌ கைவிட 
மாட்டார்கள்‌; ''ஸ்ரீ வேங்கடேச சரணெள சரணம்‌ ப்ரபத்யே” (ஸ்ரீ வேங்கடேசனின்‌ இரண்டு திருவடிகளையும்‌ சரணடைகிறேன்‌) 
என்றே எப்பொழுதும்‌ இருப்பார்கள்‌. 
இத்தகைய ''ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி,” 'வேங்கடத்தான்‌ விண்ணோர்‌ முடிதோயும்‌ பாதத்தான்‌ 
பாதம்‌ பயின்று என்பதனால்‌ கூறப்பட்டது. 
வேங்கடத்தான்‌ பாதத்தான்‌ - ஸ்ரீ வேங்கடேச சரணெள; பாதம்‌ பயின்று - சரணம்‌ 
ப்ரபத்யே, சரணமாகப்‌ பற்றுகிறேன்‌. 
எனவே இப்பாசுரம்‌ ஸ்ரீ வேங்கடேசப்‌ பிரபத்திக்கு இலக்கணம்‌ கூறுகிறது. 

உளதென்று இறுமாவார்‌ உண்டில்லை என்று: 
இதற்கு இருவிதமாகப்‌ பொருள்‌ கூறப்படுகிறது; 
செல்வத்தைக்‌ குறித்துச்‌ செருக்கடைதல்‌; நித்யஸூரிகள்‌ முடி. தோயும்‌ 
ஸ்ரீ வேங்கடேசனின்‌ பக்தர்கள்‌ நாம்‌ என்று பெருமைப்படுதல்‌ என்று. 

பாகவதர்களின்‌ பெருமையைப்‌ பேசுகிறார்‌. 
எம்பெருமானுடைய திருவடிகளிற்‌ பழகுகின்ற பாகவதர்கள்‌ செல்வம்‌ படைத்தாலும்‌ செருக்குக்‌ கொள்ள மாட்டார்கள்‌; இருந்த 
செல்வம்‌ அழிந்து போனாலும்‌, “ஐயோ! ஏழைமை வந்துவிட்டதே!'' என்று சிறிதும்‌ தளர்ச்சியடைய மாட்டார்கள்‌. 
களிப்பும்‌ கவர்வுமற்று' என்ற பாசுரத்திற்‌ சொன்னபடி லாபநஷ்டங்களில்‌ , ஒருபடிப்பட்ட சிந்தை உடையராயிருப்பர்‌. 
““முனியார்‌ துயரங்கள்‌ முந்திலும்‌, இன்பங்கள்‌ மொய்த்திடினும்‌ கனியார்‌... எங்கள்‌ இராமாதுசனை வந்தெய்தினர்‌'' (இராமாநுச 
நூற்றந்தாதி, 17) என்ற ஸ்ரீராமாநுஜபக்தனைப்‌ போன்றிருப்பர்‌ பகவத்பக்தர்களும்‌. 

தாழ்சடையும்‌ நீள்முடியும்‌ ஒண்மழுவும்‌ சக்கரமும்‌ 
சூழவும்‌ பொன்நாணும்‌ தோன்றுமால்‌ - சூழும்‌ 
திரண்டருவி பாயும்‌ திருமலைமேல்‌ எந்தைக்கு 
இரண்டுருவும்‌ ஒன்றாய்‌ இசைந்து (ஸ்ரீ பேயாழ்வார்‌ -மூ.தி. 63) 

தாழ்சடை, ஒண்மழு, சூழ்‌ அரவு - சிவனுக்குரியவை. 
நீள்முடி, சக்கரம்‌, பொன்‌ நாண்‌ - விஷ்ணுவுக்குரியவை. 

தாழ்ந்த சடாமுடியும்‌, நீண்ட மகுடமும்‌; அழகிய மழுவாயுதமும்‌, சக்கரமும்‌; சுற்றிலும்‌ அணிந்துள்ள 
நாகாபரணமும்‌, பொன்‌ அரைநாணும்‌; நாற்புறமும்‌ அருவிகள்‌ இரண்டு பாயும்‌ திருமலைமேல்‌ எழுந்தருளியிருக்கும்‌ எந்தை ஸ்ரீ 
வேங்கடேசனுக்கு இவ்விதம்‌ சிவன்‌, விஷ்ணு ஆகிய இருவரின்‌ உருவமும்‌ ஒரே வடிவமாக அமைந்து விளங்குகிறது; என்ன ஆச்சரியம்‌! 

இப்பாசுரத்திற்கு அவரவர்கள்‌ விருப்பப்படி பலவாறாகப்‌ பொருள்‌ கூறுவர்‌. சைவர்கள்‌ சங்கர - நாராயணனைக்‌ கூறுவதாகக்‌ 
கொள்வர்‌. இதையொட்டியே சைவ - வைணவர்களுக்கிடையே திருமலை யாருடையது என்று ஒரு பிரச்னை ஏற்பட்டதாகவும்‌, 
ஸ்ரீ ராமானுஜர்‌ அது வைணவருடையதே என்று நிலைநாட்டியதாகவும்‌ வரலாறு கூறுகிறது. ஸ்ரீ ராமானுஜர்‌ ஸ்ரீ 
வேங்கடேசன்‌ சன்னிதியில்‌ பலர்‌ காண சங்கு, சக்கரமும்‌, சிவனுக்குரிய ஒண்மழுவும்‌, திரிசூலமும்‌ வைத்து, எவையேனும்‌ * 
ஒன்றை ஏற்றுப்‌ பிரச்னையை தீர்த்து வைக்கும்படி இறைவனை வேண்டி, இரவில்‌ கதவை மூடினார்‌. மறுநாள்‌ 
திருவேங்கடமுடையான்‌ சங்கு, சக்கரங்களுடன்‌ காட்சி தந்ததாகக்‌ கூறுவர்‌. 

வேங்கடவன்‌ நாகத்தை அணிந்திருப்பது வாஸ்தவமே. 
எம்பெருமானின்‌ க்ரீடத்துக்குக் கீழ்  காணப்படும்‌ நீண்ட ரேகையைச்‌ தாழ்சடையாக்‌. கொள்வது கற்பனை என்பர்‌ வைணவர்‌. 
இப்பாசுரத்தையே இடைச்செருகல்‌, பேயாழ்வார்‌ பாடியதாக இருக்க முடியாது என்றே சிலர்‌ கூறுவர்‌. 

இது எங்நனமிருப்பினும்‌ பேயாழ்வார்‌ சைவ வைணவ சமரச  நோக்கு உடையவர்‌ என்பதற்கு இப்பாசுரம்‌ சான்றாக அமைகறது. 
இருப்பினும்‌ இவர்‌ திருமாலே முழுமுதற்‌ கடவுள்‌ என்று  கொண்டு, சைவராக இருந்த திருமழிசையாரை வாதத்தில்‌ வென்று 
வைணவராக்கனவர்‌ என்பதையும்‌ நினைவுகூர வேண்டும்‌. 

இன்று அவைதீக சமயங்களின்‌ தீவிரப்‌ பிரசாரத்தினாலும்‌, மதமாற்று முயற்சிகளாலும்‌ வைதீக மதங்களான சைவத்திற்கும்‌ 
வைணவத்திற்கும்‌ இடையே முன்பொரு காலம்‌ நிலவிய பூசல்களும்‌, வாக்குவாதங்களும்‌ , மறைந்து சமரச நோக்கே 
மிகுந்திருப்பது மூழ்ச்சிக்குரிய விஷயமாகும்‌, 
ஸ்ரீ வேங்கடேஸ்வரன்‌ என்று சைவர்களாலும்‌, ஸ்ரீநிவாஸன்‌ என்று வைணவர்களாலும்‌, 'பாலாஜி' என்று சாக்தர்களாலும்‌ மற்றும்‌ 
அவைதீக சமயத்தினராலும்‌ கூட வணங்கப்படும்‌ கண்கண்ட தெய்வமாகத்‌ திருவேங்கடமுடையான்‌ திகழ்கின்றது கண்கூடு, 

சென்று வணங்குமினோ சேணுயர்‌ வேங்கடத்தை: 
நின்று வினைகெடுக்கும்‌ நீர்மையால்‌ - என்றும்‌ 
கடிக்கமல நான்முகனும்‌ கண்மூன்றத்தானும்‌ 
அடிக்கமலம்‌ இட்டேத்தும்‌ அங்கு (ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ -நா.தி. 42) 

சேண்‌ - உயர்ந்த; சேணுயர்‌ - மிகவுயர்ந்த; நீர்மை - இயல்பு, சுபாவம்‌; கடி - வாசனை மிகுந்த; கமலம்‌ - தாமரை; 
நான்முகன்‌ பிரம்மா) கண்மூன்றத்தான்‌ - முக்கண்ணன்‌, சிவன்‌. 
 
(அன்பர்களே!) மிகவும்‌ உயர்ந்த வேங்கடத்தைச்‌ சென்று வணங்குங்கள்‌! அத்திருமலை, இயல்பாகவே பாவங்களை நின்று போக்குவது. 
அங்கு பரிமளம்‌ மிக்க தாமரையில்‌ பிறந்த பிரம்மனும்‌, முக்கண்ணனாகிய சிவனும்‌, என்றும்‌ ஸ்ரீ வேங்கடாசலபதியினுடைய திருவடிகளில்‌, 
தாமரைப்‌ பூக்களை சமர்ப்பித்து, துதித்துக்கொண்டிருப்பர்‌. வேங்கடத்தை நின்று வினைகெடுக்கும்‌ நீர்மையால்‌: 

வேம்‌ - பாவங்கள்‌, வினை. கடம்‌ - எரிப்பது, கெடுக்கும்‌; “வேங்கடம்‌” என்பதற்குப்‌ பொருள்‌ கூறியிருக்கிறார்‌. 
“வெங்கொடும்‌ பாவங்களெல்லாம்‌ வெந்திடச்‌ செய்வதால்‌ 
நல்மங்கலம்‌ பொருந்துஞ்சர்‌ வேங்கடமலையானதென்று -என்கிறது ஒரு புராணச்‌ செய்யுள்‌. 

பிரம்மாதி தேவர்களே “புஷ்பமண்டபம்‌' என்றே புகழ்பெற்ற பொன்மலையில்‌ ஸ்ரீ வேங்கடேசனது திருவடிகளில்‌ புஷ்பாஞ்சலி 
செய்து, தங்கள்‌ அதிகாரத்தைப்‌ பெற்றிருக்கின்றனர்‌. நீங்களும்‌ அவ்விதமே செய்து உய்வடைவுங்கள்‌ என்று உபதேசிக்கிறார்‌. 
சமரச . நோக்குடைய பேயாழ்வாரைப் போல்‌ அல்லாது, திருமழிசையார்‌ வீரவைணவர்‌ என்பதும்‌ இதிலிருந்து தெரிகிறது. 

முதலாழ்வார்கள்‌ வாழித்‌ திருநாமங்கள்‌ (அப்பிள்ளை திருவாய்மலர்ந்தருளியது) 

அரசனுக்குப்‌ பிரஜைகள்‌ ''வாழ்க, வாழ்க!”” என்று வாழ்த்து தெரிவிப்பது போலவே, இறைவனுக்கும்‌, மெய்யடியார்களுக்கும்‌ 
வாழ்த்துக்கூறுவது மரபாகும்‌. வைணவத்தில்‌ ஆழ்வார்களுக்கும்‌, ஆசாரியர்களுக்கும்‌ இவ்விதம்‌ வாழித்‌ திருநாமங்கள்‌ கூறுவது 
வழக்கில்‌ உள்ளது. முதலாழ்வார்களைக்‌ குறித்த இந்நூல்‌ அவர்களுடைய வாழித்‌ திருநாமங்களுடன்‌ நிறைவடைகறது. 

செய்ய துலா ஓணத்தில்‌ செகத்துதித்தான்‌ வாழியே
திருக்கச்சி மாநகரம்‌ செழிக்க வந்தோன்‌ வாழியே 
வையந்தகளி நூறும்‌ வகுத்து உரைத்தான்‌ வாழியே 
வனசமலர்க்‌ கருவதனில்‌ வந்தமைந்தான்‌ வாழியே 
வெய்யகதிரோன்‌ தன்னை விளக்கிட்டான்‌ வாழியே 
வேங்கடவர்‌ திருமலையை விரும்புமவன்‌ வாழியே 
பொய்கைமுனி வடிவழகும்‌ பொற்பதமும்‌ வாழியே 
பொன்முடியும்‌ திருமுகமும்‌ பூதலத்தில்‌ வாழியே. 

அன்பேதகளி நூறும்‌ அருளினான்‌ வாழியே 
ஐப்பசியில்‌ அவிட்டத்தில்‌ அவதரித்தான்‌ வாழியே 
நன்புகழ்சேர்‌ குருக்கத்தி நாண்மலரோன்‌ வாழியே 
நல்ல திருக்கடன்மல்லை நாதனார்‌ வாழியே 
இன்புருகு சிந்தை திரியிட்ட பிரான்‌ வாழியே 
எழில்‌ ஞானச்சுடர்‌ விளக்கேற்றினான்‌ வாழியே 
பொன்புரையும்‌ திருவரங்கர்‌ புகழுரைப்போன்‌ வாழியே 
பூதத்தார்‌ தாளிணை இப்பூதலத்தில்‌ வாழியே 

திருக்கண்டேன்‌ என நூறும்‌ செப்பினான்‌ வாழியே 
சிறந்த ஐப்பசியில்‌ சதயம்‌ செனித்த வள்ளல்‌ வாழியே 
மருக்கமழும்‌ மயிலைநகர்‌ வாழ வந்தோன்‌ வாழியே 
மலர்க்கரிய நெய்தல்தனில்‌ வந்துதித்தான்‌ வாழியே 
நெருக்கிடவே இடைகழியில்‌ நின்ற செல்வன்‌ வாழியே 
நேமிசங்கன்‌ வடிவழகை நெஞ்சில்‌ வைப்போன்‌ வாழியே 
பெருக்கமுடன்‌ திருமழிசைப்பிரான்‌ தொழுவோன்‌ வாழியே 
பேயாழ்வார்‌ தாளிணையிப்‌ பெருநிலத்தில்‌ வாழியே. 

“ஸ்ரீவேங்கடேச பாகவதம்‌" என்னும்‌ இந்தப்‌ புத்தகத்திலுள்ள குற்றம்‌, குறைகளைப்‌ பொறுத்து அருளும்படி, 
திருவேங்கடமுடையானை வேண்டிக்‌ கொள்வதோடு நூல்‌ நிறைவடைகிறது;  

ஸ்ரீவேங்கடேச நத்தம்‌ 
அஞ்ஞானினா மயா தோஷான்‌ அசேஷான்‌ விஹிதான்‌ ஹரே 
ச்ஷமஸ்வத்வம்‌ க்ஷமஸ்வத்வம்‌ சேஷசைல சிகாமணே 
அறியாமையால்‌ புரி தீவினை புரியாதுளத்‌ தற நீக்கிடு! 
பொறுத்தே அருள்‌! பொறுத்தே அருள்‌! பெருமாமணி வேங்கடவா! 

--------
சுதர்சனச்‌ சக்கரம்‌, பாஞ்சசன்னியம்‌, என்கிற திருச்சங்கு, சார்ங்கம்‌  என்கிற வில்‌ ஆகிய திருமாலின்‌ முப்படைகளை 
ஆண்டாள்‌  மின்னல்‌, இடி, மழையின்‌ வேகம்‌ ஆகியவற்றுக்கு உவமைகளாகச்‌  சொல்கிறாள்‌. 
திருக்கோவலூர்‌ மழையோ, எம்பெருமானுடைய  முப்படைகளின்‌ அவதாரங்களாகிய முதலாழ்வார்கள்‌ மீதே தன்‌ 
கை வரிசையைக்‌ காட்டியது! 
பாஞ்சசன்னியப்‌ பொய்கையார்‌;  கதாயுத பூதத்தார்‌; நாந்தகப்‌ பேயார்‌ ஆூய மூவரும்‌ 
அடைமழையில்‌ சிக்கியபோது, ஆண்டாள்‌ மார்கழி. நீராடி மூழ்ந்ததைப்போல்‌ ஆனந்தப்பட்டார்களோ என்னவோ 
தெரியாது; ஆயினும்‌ மழையில்‌ ஒதுங்குவதற்கு ஒரு புகலிடம்‌ தேடி, இருளில்‌ அலைந்தனர்‌. 

தங்களுடைய உலகநிலையைப்‌ பற்றிய  நினைவேயில்லாமல்‌, ஒருவரையொருவர்‌ விசாரித்து அறிந்து 
கொண்டு, திருமால்‌ பெருமையைப்‌ பேசி ம$ழ்ந்த வண்ணம்‌  இருந்தனர்‌. இத்தகைய இறையன்பர்கள்‌-- 

“செங்கண்‌ திருமுகத்துச்‌ செல்வத்‌ திருமாலால்‌ எங்கும்‌ திருவருள்‌ பெற்று இன்புறுவர்‌' 
என்று கோதை பலசுருதியாகப்‌ பாடியுள்ளாள்‌. 
எனவே இவர்கள்‌  மத்தியில்‌ திருமாலும்‌ வந்து சேர்ந்ததில்‌ ஆச்சரியமில்லை. 

இடைகழி அவ்வளவு சிறியது! ஸ்ரீ  வேங்கடாசலபதியை சேவிக்கும்போது இங்ஙனமே பக்தர்கள்‌ 
இன்று நெருக்கமாக நிற்க நேரிடுகிறது. நெரிசலுக்குப்‌ பிறகே  தரிசனம்‌! 
முதலாழ்வார்களும்‌ எம்பெருமானை இவ்விதமே  அனுபவித்தனர்‌. 

திருமாலின்‌ நான்கு அர்ச்சை நிலைக்‌ கோலங்களைப்‌  பொய்கையாழ்வார்‌ 
''நின்றான்‌ இருந்தான்‌ கிடந்தான்‌ நடந்தானே'"  என்று பாடியுள்ளார்‌. 
திருப்பதி கோவிந்தராஜப்‌ பெருமாள்‌  மேற்கொண்டுள்ளது கிடந்த கோலம்‌; 
திருமலை ஆதிவராக மூர்த்தி இருந்த (அமர்ந்த) கோலத்தில்‌ சேவை சாதிக்கிறார்‌. 
திருமலை வேங்கடவன்‌ ஏற்றுள்ளது நின்ற நிலை. 
இம்மூன்று நிலைகளையும்‌  தொடர்ந்து இடைகழியில்‌ ஆழ்வார்களும்‌ மேற்கொள்ள நேரிட்டது அதிசயிக்கத்தக்கது! 
முதலில்‌ பொய்கையார்‌ கடந்தார்‌; 
பூதத்தார்‌ வந்ததும்‌ இருவரும்‌ இருந்தனர்‌; 
மூன்றாமவர்‌ வந்ததும்‌  மூவரும்‌ நின்றனர்‌. 
திருக்கோவலூரில்‌ திரிவிக்கிரமன்‌ உலகளந்த நிலையில்‌ இருப்பது “நடந்த கோலம்‌' எனப்படும்‌. 
பெயருக்கேற்றவாறே கோவலூரில்‌ எம்பெருமான்‌ நடந்தே வந்து  ஆழ்வார்களுக்குத்‌ தெரியாமல்‌ அவர்கள்‌ மத்தியிலே புகுந்தான்‌ 
பொய்கைப்பிரான்‌ முதல்‌ திருவந்தாதி 85-ஆவது பாசுரத்தில்‌ 
இடைகழியில்‌ புகுந்து நெருக்கிய இறைவனைப்‌ பாடியுள்ளார்‌: 

“நீயுந்‌ திருமகளும்‌ நின்றாயால்‌ குன்றெடுத்துப்‌ 
பாயும்‌ பனி மறைத்த பண்பாளா!- வாசல்‌ 
கடை கழியா, உள்புகாக்‌ காமர்பூங்‌ கோவல்‌ 
இடைகழியே பற்றியினி.'” (86)
முந்தைய பாசுரத்தில்‌ ஆழ்வார்‌ தமது திருவுள்ளத்தைக்‌ குறித்து, “பெருமானை அனுபவிக்கவில்லையே”” என்று கூற 
திருமால்‌ பிராட்டியுடன்‌ இவர்‌ இருந்த: இடைகழிக்கே வந்து நின்றான்‌. 
எம்பெருமான்‌ அலர்மேல்‌ மங்கையுறை மார்பனாகப்‌  பிராட்டியுடன்‌ நின்ற கோலத்தில்‌ வந்திருந்ததால்‌, வந்தவன்‌ 
வேங்கடவனே எனக்கொள்ளலாம்‌.
பக்தர்களுடன்‌ கலந்த மகிழ்ச்சியால்‌ திருமால்‌ இடைகழியில்‌ நின்றான்‌. 
''காமுகர்கள்‌ உகந்த விஷயத்தினுடைய கண்வட்டம்‌  விட்டுப்‌ போக மாட்டாதாப்‌ போலே”! என்பார்‌ உரையாசிரியர்‌. 

முதலாழ்வார்கள்‌ சந்தித்து, திருமாலைக்‌ கண்டு அருந்தமிழில்‌ 
அந்தாதி பாடியதை, வில்லிப்புத்தூராரின்‌ திருமகனார்‌ வரந்தருவார்‌  இங்ஙனம்‌ போற்றிப்‌ புகழ்வர்‌: 
*பாவரும்‌ தமிழால்‌ பேர்பெறு பனுவல்‌ 
பாவலர்‌ பாதிநாள்‌ இரவில்‌ 
மூவரும்‌ நெருக்கி மொழிவிளக்கு ஏற்றி 
முகுந்தனைத்‌ தொழுத நன்னாடு” 

திருக்கோவலூரை மங்களாசாஸனம்‌ செய்யும்‌ ஒரு பெரிய திருமொழிப்பாசுரம்‌ முதலாழ்வார்களைக்‌ குறிப்பிடுவதாக 
திருமங்கையாழ்வார்‌  பாடிய ''தாங்கரும்‌ போர்‌'" என்று தொடங்கும்‌ பாசுரத்திலுள்ள  சில வரிகள்‌ இவை. 

“அடியவர்க்கு ஆரமுதம்‌ ஆனான்‌ தன்னை... 
குழாவரி வண்டு இசைபாடும்‌ பாடல்‌ கேட்டு 
தீங்கரும்பு கண்வளரும்‌ கழனி சூழ்ந்த 
திருக்கோவலூர்‌ அதனுள்‌ கண்டேன்‌ நானே! (210.4) 

அடியவாககு ஆரமுதம அனான: 
அடியவர்கள்‌ என்றது முதலாழ்வார்களை. அவர்கட்கு 
“தேனும்‌ பாலும்‌ கன்னலும்‌ அமுதுமாகத்‌: தித்தித்தவன்‌  இத்தலத்து எம்பிரான்‌.  திருக்கோவலூர்‌ திங்கரும்பு: 

இங்கு தீங்கரும்பாகச்‌ சொன்னது திருக்கோவலூர்‌ திரிவிக்ரமப்‌  பெருமாளை. 
குழாவரி வண்டிசை பாடும்‌ பாடலாவது, (முதலாழ்வார்கள்‌ பாடிய மூன்று திருவந்தாதிகள்‌. 
இந்த அந்தாதி  இசை கேட்டு, திருக்கோவலூர்‌ தீங்கரும்பாகிய  திருவேங்கடமுடையான்‌ கண்ணுறங்குமாம்‌. 
முதலாழ்வார்கள்‌  பாடிய அந்தாதிகளில்‌ மிக அதிகமாகத்‌ திருவேங்கடவன்‌  திருநாமமே அடி.படுவதால்‌ 
இங்ஙனம்‌ கொள்ளத்‌ தடையில்லை. 
வண்டுகளை மூன்று ஆழ்வார்களாகக்‌ கொள்ளலாம்‌. 

ஸ்ரீ வேதாந்த தேசிகர்‌ அருளிச்‌ செய்த '“தேஹளீச ஸ்துதி  ஏழாவது சுலோகத்தில்‌ 
முதல்‌ மூன்று ஆழ்வார்களைக்‌ கரும்பு  பிழியும்‌ சர்க்கரை ஆலையின்‌ மூன்று உருளைகளாகவும்‌, 
அவர்களால்‌ நெருக்கப்பட்ட திருமாலைத்‌ தீங்கரும்பாகவும்‌, 
எம்பெருமானின்‌ செளலப்ய குணத்தைச்‌ சாறாகவும்‌ கூறப்பட்டிருக்கிறது. 
இந்த அற்புதமான உவழைக்கு மேற்கூறிய 
திருமங்கையாழ்வார்‌. பாசுரம்‌ அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும்‌ 
 
கண்ணன்‌ அடியினை எமக்குக்‌ காட்டும்‌ வெற்பு 
கடுவினையரிரு வினையும்‌ கடியும்‌ வெற்பு 
திண்ணமிது வீடென்னத்‌ திகழும்‌ வெற்பு 
தெளிந்த பெருந்தீர்த்தங்கள்‌ செறிந்த வெற்பு 
புண்ணியத்தின்‌ புகலிதெனப்‌ புகழும்‌ வெற்பு 
பொன்னுலகிற்‌ போகமெலாம்‌ புணர்க்கும்‌ வெற்பு 
விண்ணவரும்‌ மண்ணவரும்‌ விரும்பும்‌ வெற்பு 
வேங்கடவெற்பென விளங்கும்‌ வேத வெற்பே. --ஸ்ரீ வேதாந்த தேசிகர்‌ அருளிச்‌ செய்தது
----------------------------------------

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: