Archive for February, 2023

ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ திருவாய் மொழி-தசக த்வந்த்வ- ஏக கண்ட்யம் —

February 28, 2023

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரமும் ஸ்ரீ  திருவாய் மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

वेदापहारिणं दैत्यं मीनरुपी निराकरोत। तदर्थहारिणस्सर्वान् व्यासरुपि महेश्वरः॥

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.

அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தர மீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.

இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் *  (65) என்று காட்டியருளினார்

ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார். ஸ்வாமி வேதாந்தவாசிரியர் தம்முடைய திரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் இதனை *ஆதௌ ஶாரீரகார்த்தக்ரமமிஹ விஶதம் விம்ஶதிர் வக்தி ஸாக்ரா * ( 5 ) என்கிற ஶ்லோகத்தில் காட்டியருளினார்.

ஶாரீரகத்தின் அர்த்தங்களாவன் முறையே அத்யாய-பாத முறைப்படி விஶதமாக முதல் இருபது (20) பாசுரங்களாலே சொல்லப்பட்டன என்று காட்டியருளினார்.

இதனையே விரிவாக எப்படி அந்த 20 பாசுரங்கள் காட்டுகின்றன என்பதனை ஸ்ரீபாஷ்ய த்ரமிடாகமாத்ய தசக த்வந்த்வ ஐககண்ட்யத்தில் வாதிகேஸரி மடத்தினை அலங்கரித்தருளின ஜீயர் ஸ்வாமி விசதமாகக் காட்டியருளியுள்ளார்.

இவையனைத்துக்கும் மூலம் ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள். அவர் தாமும் வீடுமின் ப்ரவேசத்தில் * .. தத்வபரமாயும், உபாஸநபரமாயுமிறே மோக்ஷ ஶாஸ்த்ரம்தான் இருப்பது; அதில் தத்வபரமாகச் சொல்ல வேண்டுவதெல்லாம் சொல்லிற்று கீழில் (உயர்வற பதிகத்தில்) திருவாய்மொழியில். உபாஸநபரமாகச் சொல்ல வேண்டுவமவற்றுக்கெல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத்திருவாய்மொழி. * என்றருளிசெய்துள்ளது நோக்கத்தக்கது.

—————————-

ஸ்ரீ பாஷ்ய த்ராவிடாக மாத்யதசக த்வந்த்வ ஐக கண்ட்யம்–
ஸ்ரீ ஈட்டில் இரண்டாம் திருவாய் மொழி பிரவேசத்திலே அருளிச் செய்த பிரதம சங்கதி கிரந்தத்திற்கு விவரணம் –

முதல் திருவாய் மொழியும் இரண்டாம் திருவாய் மொழியும் அத்யாய சதுஷ்டயாத்மக சாரீரக மீமாம்ஸா சாஸ்த்ர சமாநார்த்தகமாய் இருக்கும் –
சாரீரகார்த்தம் தான் ப்ரஹ்ம காரணத்வமும் -ததபாத்யத்வமும் -முமுஷு உபாஸ்யத்வமும் -முக்த ப்ராப்யத்வமும் –
காரணத்வமபாத்யத்வம் உபாயத்வம் உபேயதா -என்னக் கடவது இறே-
இவ்விரண்டு திருவாய் மொழியும் வேதாந்த சாஸ்த்ர சமாநார்த்தம் என்னும் இடத்தை நம்பிள்ளை ஈட்டிலே-வீடுமின் முற்றின ப்ரவேசத்திலே –
தத்வ பரமாயும் உபாசன பரமாயும் இறே மோக்ஷ சாஸ்திரம் தான் இருப்பது –
அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய் மொழியிலே –உபாசன பரமாகச் சொல்ல வேண்டுமவற்றுக்கு எல்லாம்
சங்கரஹமாய் இருக்கிறது இத்திருவாய் மொழி என்று அருளிச் செய்தார் –
இத்தையும் கொண்டு வேதாந்தாசார்யரும் த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியிலே
ஆதவ் சாரீரகாரத்த க்ரமமிஹ விசதம் விம்சதிர் வக்தி சாக்ரா -என்று அருளிச் செய்தார் –

இன்னமும் –புரா ஸூத்ரைர் வ்யாசம் சுருதி சத சிரோர்த்தம் க்ரதிதவான் விவவ்ரே தம் ஸ்ராவ்யம் வகுளதர தாமேத்ய ச புநர் உபாவேதவ் க்ரந்தவ் கடயிதுமலம் யுக்தி பிரசவ்
புநர் ஜஜ்ஜே ராமாவரஜ இதி ச ப்ரஹ்ம முகுர-என்று சாமானையென சாரீரகத்துக்கும் திருவாய் மொழிக்கும் உண்டான ஐகமத்யத்தை ஆச்சான் பிள்ளையும் அருளிச் செய்தார் –
ஆகையால் இரண்டு திருவாய் மொழியும் பூர்வ உத்தர த்விகாத்மகமான சாரீரக சாஸ்த்ர சமா நார்த்தம் என்று கொள்ள வேணும் –
இஸ் ஸம்ப்ரதாயார்த்தத்தை பாட்டுக்கள் உபபத்தியுடனே ஏறிட்டு பிரகாசிப்பிக்கிறோம் –

முதல் திருவாய் மொழி பூர்வ த்விகத்தோடு சேரும்படியைத் தெரிவிக்கிறோம் -அது எங்கனே என்னில்-
முதல் பாட்டு -நாலடியும் சதுஸ் ஸூத்ர்யர்த்தமாகவும்
மனனகம் -என்கிற இரண்டாம் பாட்டு -ஈஷத்ய-ஆனந்தமய -அந்தராதித்ய அதிகரண அர்த்தமாகவும்
இலனது -என்கிற மூன்றாம் பாட்டு ஆகாச பிராண ஜ்யோதி இந்த்ர பிராணாதி கரண அர்த்தமாகவும்
நாமவன் -அவரவர் -நின்றனர் -என்கிற நாலாம் பாட்டு தொடங்கி மூன்று பாட்டும் த்ரிபாத் யர்த்தமாகவும்
ஆக -ஆறு பாட்டும் பிரதம அத்யாய அர்த்தமாய் –

திட விசும்பு என்கிற ஏழாம் பாட்டு த்வதீய லக்ஷண பிரதம பாதார்த்தமாகவும்
சுரரறி -உளன் எனில் -என்கிற எட்டாம் பாட்டும் ஒன்பதாம் பாட்டும் தர்க்க பாதார்த்தமாகவும்
பரந்த தண் -என்கிற பத்தாம் பாட்டும் நிகமன பாட்டும் வியத்பாத துரீய பாதார்த்தமாகவும்
ஆக -ஏழாம் பாட்டு தொடங்கி நிகமத்து அளவும் த்விதீயாத்ய யர்த்தமாய்
இத்திருவாய் மொழி பூர்வ த்விகார்த்தமாகக் காணலாம் –

அதில் முதல் பாட்டில் -உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் -என்கிற சந்தை பிரதம அதிகரண சமாநார்த்தம் -அது எங்கனே என்னில்
பிரபாகர் மதரீத்யா சப்தத்துக்கு கார்யார்த்தத்திலே போதகதவை சக்தியாகையாலும்
பரிநிஷ்பந்ந வஸ்துவில் சப்தத்துக்கு போதகதவை சக்தி இல்லாமையாலும் வேதாந்தங்கள் பரிரிஷ்பந்நமான ப்ரஹ்மத்திலே பிரமாணம் ஆக மாட்டாது –
பிரமாணம் அல்லாமையாலே சாங்க அத்யயனம் பண்ணினவனுக்கும் அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதி வர மாட்டாது –
அக்ஷய்யம் ஹ வை சாதுர்மாஸ்யயாஜி நஸ் ஸூக்ருதம் பவதி–இத்யாதி வாக்கியங்களில் சாதுர்மாஸ்யாதி கர்மங்களுக்கும் அக்ஷயமான பலம் ஸ்ருதம் ஆகையாலும்
கர்ம அல்ப அஸ்திர பலத்தவ நிர்ணயம் ஸித்தியாது-ஆகையால் கர்மணாம் அல்ப அஸ்திர பலவத்வ நிர்ணய ஸஹித அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதி ரூப
விசிஷ்ட ஹேது சித்தியாமையாலே வேதாந்த ஆரம்பம் கடியாது என்கிற பூர்வ பக்ஷத்திலே-
அம்பா தாத மாதுலாதி சப்தங்களில் சித்த ரூபமான மாதா பித்ராத் யர்த்தங்களில் பிரதம வ்யுத்பத்தி காண்கையாலும்-அது கார்ய ரூப அர்த்தத்தில் என்கிற நிர்பந்தம் இல்லாமையாலும் வேதாந்தங்களுக்கு பரி நிஷ்பந்ந போதனா சாமர்த்தியம் யுண்டாய் அதுகள் பிரமாணம் ஆகையால் அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதி ரூப விசேஷயாம்சம் லபிக்கும்-
கர்ம விசாரம் பண்ணினவனுக்கு ஆவ்ருத்தி விதாநாதிகளாலே கர்மங்களுக்கு சாதிசய பலத்தவம் அவகதம் ஆகையாலும்
அக்ஷய்யத்தவ கீர்த்தனம் சிரகால ஸ்தாயித்வ அபிப்ராயமாக வாயுஸ் சாந்தரிக்ஷஞ்சை ததம்ருதம்-என்கிற இடத்தில் அம்ருதத்வம் போலே நிர்வஹிக்க வேண்டுகையாலும்
கர்மாணாம் அல்ப அஸ்திர பலத்வ நிர்ணய ரூப விசேஷணாம்சம் சித்திக்கும் –

இப்படி விசிஷ்ட ஹேது லபிக்கையாலே சாஸ்த்ரா ஆரம்பம் கடிக்கும் என்று இறே பிரதம அதிகரணர்த்தம்-

இனி உயர்வற யுயர் நலமுடையவன் என்று அநவதிக ஆனந்த ஸ்திர பல ரூப குண விபூதி மத்தையைச் சொல்லி –
யவன் -என்று இவ்வர்த்தத்துக்கு -ஆனந்தோ ப்ரஹ்ம -இத்யாதி -சுருதி பிராமண ப்ரஸித்தியையும் காட்டுகையாலே சித்த வஸ்துவான பர ப்ரஹ்ம
வேதாந்த வேத்யம் என்று சித்திக்கையால் இச்சந்தை விசேஷயாம்சமான அனந்த ஸ்திர பல ஆபாத ப்ரதீதியை ஸூசிப்பிக்கிறது –

உயர்வற -என்கிற இது ப்ரஹ்மாதிகளுடைய கர்ம அதீன உச்சராயம் பகவத் உச்சராய அபேக்ஷயா இல்லை என்னும்படி இருக்கும் என்று
சொல்லுகையாலே கர்மங்களினுடைய அல்ப அஸ்திர பலத்வ நிர்ணயத்தை ஸூசிப்பிக்கிறது –

ஆக –உயர்வற உயர்நலம் யுடையவன் யவன் -என்கிற அளவிலே விசிஷ்ட ஹேதுவை ஸூசிப்பிக்கையாலே –
சாரீரக ஆரம்ப சமர்த்தந பர பிரதம ஸூத்ரார்த்தம் இச்சந்தை என்னக் குறையில்லை –

கிஞ்ச-ப்ரஹ்ம சப்த ப்ரவ்ருத்தி நிமித்தமான நிரதிசய ப்ருஹத்த்வத்தை -உயர்வற உயர்நலம் யுடையவன் -என்று முக்த கண்டமாக அருளிச் செய்து –
அவன் துயரறு சுடரடி தொழுது ஏழு -என்று அவன் திருவடிகளைத் தொழுது உஜ்ஜீவி என்று ஜிஜ்ஞாசா பல நிர்ணய கார்ய யுக்தி முகேந
ஜிஜ்ஞாச சப்தார்த்தத்தை ஸூசிப்பிக்கையாலும் இச்சந்தை பிரதம அதிகரணர்த்தம் –

இப்பாட்டுத் தான் வாக்யைக வாக்கியமாக ஓர் அன்வயத்தையும் வாக்ய த்ரயமாக ஓர் அன்வயத்தையும் உடைத்தாகையாலே
வாக்ய த்ரய பக்ஷத்தில் இவ்வர்த்தம் ஸ்வ ரசமாய் சித்திக்கும் –

மயர்வற மதிநலம் அருளினன் யவன் -என்கிற இது ஜென்மாதிகாண ப்ரமேயமானபடி எங்கனே என்னில்-
ப்ரஹ்ம வித்தையில் வேதாந்தம் பிரமாணம் ஆனாலும் லக்ஷணம் ப்ரஹ்மத்துக்குக் கிடையாமையாலே ப்ரஹ்ம பிரதிபத்தி வர மாட்டாது -அது எங்கனே என்னில் –

யாதோ வா விமானி -இத்யாதி வாக்யம் ஜென்ம காரணத்வாதிகளை லக்ஷணமாக அறிவிப்பிக்க மாட்டாது –

ஜென்ம காரணத்வாதிகளை விசேஷணம் என்கிறீரோ உப லக்ஷணம் என்கிறீரோ –

விசேஷண பேத ப்ரயுக்த விசேஷ்ய பேதம் பிரசங்கிக்கையாலே விசேஷணம் என்னக் கூடாது –
உப லக்ஷய உப லக்ஷண வ்யதிரிக்த உப லஷ்ய கத ஞாதாம்சம் கிடையாமையாலே உப லக்ஷணம் என்னவும் கூடாது -என்று பூர்வ பக்ஷம் ப்ராப்தமாகும் அளவில்
அநேக விசேஷண விசிஷ்ட விசேஷ ஐக்யஸ்ய-தேவதத்த ஸ்யாமோ யுவா லோஹிதாஷ-இத்யாதி ஷூ தர்சநாத் –

கண்டோ முண்ட பூர்ண ஸ்ருங்கோ கவ்-இத்யாதிஷூ
கண்டத்வ முண்டத்வாதி விருத்த விசேஷணா நாமேவ விசேஷ்ய பேதகத்வ தர்சநாத் ஜென்மாதி காரணத்வாதே கால பேதேந ப்ரஹ்மணி அவிருத்த த்வாச்ச விசேஷணத்வம் உபபன்னம்-

உபலக்ஷண உப லஷ்ய வ்யதிரிக்த உப லஷ்ய கத ப்ரஹ்மத்வாதியான த்ருதீயாகாரம் லபிக்கையாலே உபலக்ஷணத்வமும் கூடும் –

இப்படி ஜென்ம காரணத்வாதிகள் ப்ரஹ்ம லக்ஷணம் ஆகையாலேலக்ஷணங்களால் ப்ரஹ்ம பிரதிபத்தி வருகையால் ப்ரஹ்ம விசாரம் கடிக்கும் என்று இறே ஜென்மாதிகரண ப்ரமேயம் –

இனி இவ்விடத்தில் -மயர்வற மதிநலம் அருளினன் எவன்-என்று அஞ்ஞான அந்யதா ஞான விபரீத ஞான ரூபமான மயர்வு போம்படி பக்தி ரூபாபன்ன ஞானத்தை அருளினன் என்று சொல்லுகையாலே அனுக்ராஹத்வம் த்யேயத்வ வ்யாப்தமாய் -காரணம் து த்யேய-என்கிறபடியே த்யேயத்வம் காரணத்வ அபேக்ஷகமாய் இருக்கையாலே
தத் அஷேபக த்யேயத்வ அஷேபகமான அனுக்ராஹ கத்வ ரூப தர்மகதந முகேந ஜென்ம காரணத்வ ரூப ப்ரஹ்ம லக்ஷணத்தை ஸூசிப்பிக்கையாலே
ஜென்மாதிகரண பிரமேயம் இச்சந்தை –

கிஞ்ச -மயர்வற என்று அஞ்ஞான நிவ்ருத்தியைச் சொல்லுகையாலே அவித்யா நிவ்ருத்தி ரேவ ஹி மோக்ஷ -என்கிற முக்தி காரகத்வம் கண்டா யுக்தமாய் இருக்கிறது –

அந்த மோக்ஷம் தான் ஜகத் உத்பவஸ்தி ப்ரணாச சம்சார விமோச நாதய-என்று உத்பவஸ்திதி ப்ரணாசங்களைப் போலே சம்சார விமோசனத்தையும்
ப்ரஹ்ம கார்யமாக அபியுக்தர் அருளிச் செய்கையாலே ப்ரஹ்ம கார்யம் இறே-அது தானும் ஜென்ம காரணத்வாதிகளைப் போலே ப்ரஹ்ம லக்ஷணம் –
யத் பிரயந்த்யபி சம்விசந்தி என்கிற ஸ்ருதியிலே யத் அபி சம்விசந்தி என்று ஜகத் பிரளய காரணத்வத்தையும் சம்சார விமோசன காரணத்வத்தையும் சொல்லிற்று இறே –

ஸ்ருத பிரகாசிகையிலே பட்டரும் அப்படியே வியாக்யானம் செய்து அருளினார் –

ஆனால் ஜென்ம காரணத்வம் ஸ்திதி காரணத்வம் ஜகாத் சம்ஹார காரணத்வம் இவை இத்தனையும் விட்டு மோக்ஷ காரணத்வ மாத்ரத்தையே அருளிச் செய்வான் என் என்னில்
ஜென்ம காரணத்வாதிகள் சமுதிதமே ப்ரஹ்ம லக்ஷணம் என்கிற நிர்பந்தம் இல்லை -ஏகைகமும் லக்ஷணமாம் என்கிற அர்த்தத்தை ஸூசிப்பிக்கைக்காக –
மோக்ஷ காரணத்வ மாத்ரத்தை அருளிச் செய்தார் –

ஆனால் ஜென்ம காரணத்வாதிகளில் அந்நிய தமத்தை அருளிச் செய்தாலும் இந்த பிரயோஜனம் ஸித்திக்குமே-
விசேஷித்து மோக்ஷ காரணத்வத்தை அருளிச் செய்வான் என் என்னில்

வேதாந்த சாஸ்திரத்துக்கு பிரயோஜனம் மோக்ஷம் ஆகையாலும் தமக்கு எம்பெருமான்
மோக்ஷத்தை தந்து அருளுகையாலும் மோக்ஷ காரணத்வத்தை அருளிச் செய்தார் –
ப்ரஹ்மத்தினுடைய ஸ்ருஷ்ட்டி காரணத்வாதிகள் ஏகைகமே சித்த அசித் வ்யாவருத்தமாய் இறே இருப்பது -ஸூத்ர பாஷ்யங்களில் ஜென்ம காரணத்தவாதிகளை
சமுதிதமாகச் சொல்லுகைக்கு பிரயோஜனம் ஜிஜ்ஞாஸ்ய ப்ரஹ்மத்தினுடைய நிரதிசய ப்ருஹத்த்வ சித்தி என்று
ஸ்ருத பிரகாசிகையிலே ஸ்பஷ்டமாக பட்டர் அருளிச் செய்ததை கண்டு கொள்வது –

ஆகையால் மயர்வற என்று சம்சார விமோசன காரணத்வத்தை முக்த கண்டமாக அறிவிப்பிக்கிற இச்சந்தை ஜென்மாதி கரண சமாநார்த்தம் என்னக் குறையில்லை –

ஆக எல்லாவற்றாலும் மயர்வற மதி நலம் அருளினான் என்கிற இரண்டாம் அடி ஜென்மாதி கரண ப்ரமேயம்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் -என்கிற மூன்றாம் அடி சாஸ்த்ர யோநித்வாதி கரண அர்த்தமானபடி எங்கனே என்னில்-
வேதாந்தங்களை ஸித்தமான ப்ரஹ்ம வஸ்துவில் போதகத்வ சக்தியுண்டாய் -ஜென்ம காரணத்வாதிகள் ப்ரஹ்ம லக்ஷணமாய் ப்ரஹ்ம பிரதிபத்தி லபித்தாலும் வேதாந்த ஆரம்பம் கடியாது –

சாஸ்த்ர ரூப பிரமாணம் -பிரமாணாந்தரா பிராப்தமுமாய் -பிரமாணாந்தரா விரோதமுமாய் இன்றிக்கே இருக்கிற அர்த்தத்தில் போதகமாய் இருக்கும் –

இனி ப்ரஹ்மத்தினுடைய நிமித்தத்வ அம்சம் -ஷித்யாதிகம் சகர்த்ருகம் காரயத்வாத் கடவத்-என்கிற அனுமானத்தாலே சித்திக்கும் –

உபாதான அம்சம் -நிமித்த பூதனான குலாலாதிகளில் உபாதாளத்வம் காணாமையாலே ப்ரத்யஷாதி பிராமண விருத்தமாகையாலே சாதக பாதக பிராமண விரஹிதமல்லாமையாலே
ப்ரஹ்ம கரணத்வத்தை வேதாந்தங்கள் போதிக்க மாட்டாமையாலே தத் விசாரம் அநாரம்பணீயம் என்கிற பூர்வ பக்ஷத்தில் -அனுமானத்தாலே
ப்ரஹ்மத்தினுடைய நிமித்த காரணத்வத்தை சாதிக்கும் அளவில் லோக த்ருஷ்ட குலாலாதி ஷேத்ரஞ்ஞ சஜாதீயனாய் சித்தப்பன் ஒழிய
விவஷிதனான ஈஸ்வரன் சித்தியாமையாலே அனுமானத்தாலே ஈசுவரனுடைய நிமித்தத்வ அம்சத்தை சாதிக்க ஒண்ணாமையாலே -அனுமானம் சாதிக்க மாட்டாது –

அபரிமித சக்திகனான நிமித்த ஈஸ்வரனுக்கே லோகா பரித்ருஷ்டமான உபாதானத்வ அம்சமும் ப்ரமாணாந்தர பாதிதம் அல்லாமையாலே உபாதானத்வ அம்சத்தில் ப்ரமாணாந்தரம் பாதகமாக மாட்டாது –

ஆகையால் சாதக பாதக பிராமண விரஹிதமான ப்ரஹ்ம காரணத்வத்தில் வேதாந்தமே பிரமாணமாக வேண்டுகையாலே தத் விசாரம் ஆரம்பணீயம் என்று இறே சாஸ்த்ர யோநித்யதி கரண ப்ரமேயம் –
இனி அயர்வறும் அமரர்கள் அதிபதியவன் -என்று பகவத் விஸ்ம்ருதி யற்ற நித்ய ஸூரி சேஷித்வத்தை அருளிச் செய்தார் –
ஸூரி சேவ்யம் தான் பிரமாணாந்தர பிராப்தமும் அன்று -பிரமாணாந்தர விருத்தமும் அன்று –

இப்படி சாதக பாதக பிராமண விரஹிதமான ஸூரி சேவ்யத்வத்தை அருளிச் செய்கையாலே -தத் சாமான்யாதி தரேஷூ ததாத்வம் -என்கிற நியாயமாக ஸர்வஞ்ஞத்வாதி குண விஸிஷ்ட ப்ரஹ்மத்தினுடைய ஜகத் காரணத்வத்துக்கும்
வேதாந்தமே பிரமாணம் ஆகவேண்டும் என்று அறிவிப்பித்து அருளினாராம் அத்தனை –
ஆகையால் அப்ராப்தமும் அவிருத்தார்த்தமும் சாஸ்திரம் என்கிற அர்த்தத்தைக் காட்டுகிற இச்சந்தை சாஸ்த்ர யோந் அதிகரண பிரமேயம் என்னத் தட்டில்லை-
மிஞ்ச -அதிபதி -என்கிறவிடத்தில் -பதி என்கிற இத்தாலே பாலன கர்த்ருத்வ ரூப நிமித்தத்வத்தை அருளிச் செய்து –

அதிக பதி அதிபதி -என்று-அந்தப் பதி சப்த வாச்யனான நிமித்த பூதனுடைய ஆதிக்யத்தை அருளிச் செய்தார் –

அந்த ஆதிக்யம் தானும் லோக சித்த நிமித்த பூதரான குலாலாதி வைலக்ஷண்யம் –
தத் வை லக்ஷண்யம் தானும் -ஜகத் உபாதாநத்வம் முதலானவை -இப்படி நிமித்த உபாதான ஐக்யத்தை -அதிபதி -என்று அருளிச் செய்கையாலே
ப்ரமணாந்தாரா ப்ராப்த ப்ரமணாந்தாரா விருத்தார்த்தக சாஸ்த்ர ப்ராமாண்யத்தை இச்சந்தை ஸூசிப்பிக்கிறது –
ஆகை இவை எல்லா வற்றாலும் இது சாஸ்த்ர யோந்யதி கரண ப்ரமேயம் –

துயரறு சுடரடி தொழுது ஏழு என்கிற நாலாமடி சமன்வய அதிகரண சமா நார்த்தமான படி எங்கனே என்னில்
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பரமாய் இருக்கிற அர்த்தார்த்தீ ராஜ குலம் கச்சேத்–மந்தாக்நிர் நாம்பு பிபேத் –ஸ்வர்க்காமோ யஜத–ந களஞ்சம் பஷயேத்-இத்யாதி வாக்யங்களுக்கே ப்ரயோஜன பர்யவசாயித்வம் உண்டு -சித்த வஸ்து போதக வாக்யங்களுக்கு அது இல்லை -ஆகையால் ஸித்தமான ப்ரஹ்ம ப்ரதிபாதக வாக்யங்களுக்கு ப்ரயோஜன பர்யவசானம் இல்லாமையாலே வேதாந்த சாஸ்திரம் அநாரம்பணீயம் என்று பூர்வ பக்ஷம் ப்ராப்தமாம் அளவிலே

நிதி போலே ப்ரஹ்மமே ஸ்வயம் பிரயோஜன ரூபம் –
தத் ப்ரதிபாதக வேதாந்த வாக்யங்களே சாஷாத் பிரயோஜன பர்யவாசிகள் –

இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹார சாதன போதனத்வாரா ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பர வாக்யங்களுக்கு
ப்ரயோஜன பர்யவசாயித்வம் ஒழிய நேரே ப்ரயோஜன பர்யவசாயித்வம் இல்லை –

ஆகையால் அநந்த கல்யாண குண பரிபூரணமான ப்ரஹ்மமே ப்ரயோஜனமாய்
தத் ப்ரதிபாதிதமான சாஸ்திரம் பிரதானமாய் சித்திக்கையாலே சித்த ப்ரஹ்ம ப்ரதிபாதிதமான சாஸ்திரம் ஆரம்ப நீலம் என்று இறே சமன்வயதி கரணத்தின் பொருள் –

இனி துயரறு சுடரடி தொழுது ஏழு -என்று துக்க நிவர்த்தகமாய் விகேஸ்வர தேஜோ ரூபமான திருவடிகளில் கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவி என்று அருளிச் செய்தார் –
அத்தாலே பொன்னடி -பெரிய திருமொழி -5–8–9-/ பெரியாழ்வார் -3–2–8-என்று சொல்லுகிற திருவடிகளே ப்ரயோஜனமாய் தத் பரிச்ரயையே புருஷார்த்தமாக பிரார்த்தித்து விலக்ஷணமான ப்ரஹ்மமே பரம பிரயோஜனம் என்று அறிவிப்பிக்கையாலே ப்ரஹ்மத்தினுடைய சாஷாத் ப்ரயோஜனத்வத்தை சாதித்து சாஸ்திரம் ஆரம்ப ணீயம் என்று சொல்லுகிற சமன்வயதி கரண அர்த்தம் இச்சந்தை –

ஆகையால் முதல் பாட்டு ஸ்வரூபமாக சாஸ்த்ர ஆரம்ப சமர்த்தந பாரமான சதுஸ் ஸூத்ர் யர்த்தமாக சதாசார்ய பிரசாத லாபத்தை வேதாந்த த்வய சிரவணம்
யுடையவர்களுக்குக் கைக் கொள்ளக் குறையில்லை —

பக்தாம்ருதாத் யகாதாயாஸ் சதுஸ் ஸூத்ர் யேக கண்டதா
நிரூபித்த வேத மௌலி த்வய நிஷ்ட சதாம் முதே-

இதி பிரதமாகாதா சதுஸ் ஸூத்ர் யைக கண்ட்யம்-முதல் பாட்டு சதுஸ் ஸூத்ர்யர்த்தம் என்னும் இடம் உபபாதிக்கப் பட்டது –

முதல் பாட்டு சதுஸ் ஸூத்ர்யர்த்தம் என்னும் இடம் உபபாதிக்கப் பட்ட பின்பு மேல் இரண்டு பாட்டுக்கள் -ஈஷதேர் நா சப்தம் என்று தொடங்கி
பாத சேஷ சமாநார்த்தமாய் இருக்கும் படி உபபாதிக்கப் படுகிறது –
இப் பாத சேஷம் தானும் சாஷாத் காரண வாக்ய நிரூபண பரமான பிரதம பேடிகை அதிகரண பஞ்சகாத்மகமாய் த்விதீய பேடிகை அதிகரண த்வயாத்மகமாய் இருக்கும் –

பிரதம பேடிகையும்

சாமான்ய சப்தங்களுக்குப் பரமாத்ம ரூப விசேஷ பர்யவசாயித்வ ப்ரதிபாதகமாய் ஒரு பேடிகையும்

அர்த்தாந்தர ப்ரசித்தங்களான ஆகாச பிராணாதி விசேஷ சப்தங்கள் உட்படப் பரமாத்ம ரூப விசேஷ பரவசாயி என்று ஒரு பேடிகையும்

என்று இப்படி அவாந்தர பேடிகா த்வய யுக்தமாய் இருக்கும் –

இதில் –மனனகம் என்கிற இரண்டாம் பாட்டு காரண வாக்ய நிரூபண பரமாயுள்ள பிரதம பேடிகையில் சாமான்ய சப்தங்கள்
பரமாத்ம ரூப விசேஷ விசேஷ பர்யவசாயிகள் என்கிற ஈஷத்யாநந்த மயாந்த ராதித்யாதி கரண ரூப அவாந்தர பிரதம பேடிகா சங்க தார்த்தமாய் இருக்கும்

இலனது -என்கிற மூன்றாம் பாட்டு பிரதம பேடிகையில் அவாந்தர ரூபமான ஆகாச பிராணாதி கரண ரூப அவாந்தர த்விதீய பேடிகையோடும் காரணத்வ
சமவ்யாப்தமான தர்மகதந முகேந காரண வாக்ய நிரூபண பரமாயுள்ள ஜ்யோதிரிந்த்ர பிராணாதி கரண ரூபமான பிரதான த்விதீய பேடிகையோடும் சமாநார்த்தமாய் இருக்கும் –

மனனகம் -என்கிற பாட்டு -ஈஷத்ய ஆனந்தமய அந்தராதித்ய அதிகரண ப்ரமேயமான படி என் என்னில்-
இம்மூன்று அதிகாரங்களில் ஈஷாத்யதி கரணத்தில் —
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் -இத்யாதி வாக்கியத்தில் ஜகத் காரணதயா ப்ரதிபன்னமான ஸச் சப்த வாஸ்ய வஸ்து பிரதானமாக வேணும் –
இதம் சப்த வாஸ்யமான சத்வ ரஜஸ் தமோமய ஜகத்துக்கு தத் யுக்தமான பிரதானம் காரணமாம் ஒழிய சத்வ ரஜஸ் தமோ விதுரமான ப்ரஹ்மம் காரணமாக மாட்டாது –
இன்னமும் அனுமான ஆகார வாக்ய வேத்யதயா ஆனுமானிக பிரதானம் இவ்வாக்கியத்தில் காரணமாய்த் தொற்றுகிறது என்று பூர்வ பக்ஷம் வருமளவில்
ஜகத் சர்க்க உபயுக்த முக்யேஷணம் பிரதானத்துக்கு கூடாமையாலும் சர்வஞ்ஞமான ப்ரஹ்மத்துக்கு உள்ளது ஒன்றாகையாலும்
சித்த அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் ஜகத் காரணம் ஆகையால் சரீரபூத சித் அசித்வாரா சத்வ ரஜஸ் தமோமய அந்வயம் கூடுகையாலே
ஜகத் சாலக்ஷண்யம் ப்ரஹ்மத்துக்கும் உண்டாகையாலும் அனுமான அன்வயங்களில் பிரதானமான ஹேத்வவயம் அனுபாத்தம் ஆகையாலே இவ்வாக்கியத்துக்கு அனுமான ஆகாரத்வம் அசித்தமாகையாலும் ஸச் சப்த வாஸ்யமான காரணம் பிரதானம் அன்று –
பரமாத்மா வென்று சித்தாந்தித்து ப்ரஹ்மத்தினுடைய அசித் வ்யாவ்ருத்தி ப்ரதிபாதிக்கப் பட்டது –

ஆனந்த மய அதிகரணத்தில் ப்ரஹ்மம் அசித் வ்யாவ்ருத்தமே யாகிலும் ஜீவா வ்யாவ்ருத்தமாக மாட்டாது –
தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத் அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய -என்கிறவிடத்தில் ஆனந்தமய சப்த வாச்யன் ஜீவனாகையாலே
அவன் ஜீவனாகைக்கு அடி -தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா -என்று சரீர சம்பந்த ஸ்ரவணமும் –

அநேந ஜீவேநாஸ் ஆத்மந அநு ப்ரவிஸ்ய-என்று சாமாநாதி கரண்யத்தாலே ஜீவ ப்ரஹ்மணோர் ஐக்யமும் –

ஆகையால் ஜகத் காரணதயா நிரதிஷ்டனான ஆனந்தமயன் ஜீவனே என்று பூர்வபக்ஷம் ப்ராப்தமாம் அளவில் –
சத குணிதோத்தர க்ரமேண அப் யஸ்யமாந ஆனந்தம் ஸூகலவ பாகியாய் அபரிமித கர்மவஸ்யனான ஜீவனுக்கு கடியாமையாலும் பரமாத்வுக்கே அது உள்ளது ஒன்றாகையாலும்

சாரீரன் என்கிறது ஜகத் சரீரம் என்கிறதாய் கர்மக்ருத சரீரத்வம் இல்லாமையாலும்

சாமாநாதி கரண்ய நிரதேசத்தாலே சரீராத்மா பாவ நிபந்தமான ஐக்யத்தைச் சொல்லுகிறது ஒழிய ஸ்வரூப ஐக்யத்தைச் சொல்லாமையாலே ஜீவ ப்ரஹ்ம பேதம் சித்திக்கையாலும்

ஜகத் காரண பூதனான ஆனந்த மயன் பக்த முக்த அவஸ்த்தை ஜீவன் அன்று -தத் விலஷணனான பரமாத்மா என்று சித்தாந்திக்கப் பட்டது –

அந்தராதித்ய அதிகரணத்திலே -கேவல ஜீவன் ஜகத் காரணமாக மாட்டானேயாகிலும்
உபசித புண்ய விசேஷர்களான ஆதித்யாதி சேதனர்களில் ஒருவன் ஜகத் காரணமாகலாம் -அது எங்கனே என்னில் –
ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ த்ருச்யதே ஹிரண்யஸ் மஸ்ரு-இத்யாதி சாந்தோக்ய வாக்யத்திலே
கர சரணாதி ரூப சரீர சம்பந்தம் காரண வஸ்துவுக்கு ப்ரதிபாதிதமாய் இருக்கையாலும்
அது உள்ளது கர்மக்ருத சாரீர சம்பந்தமுடைய ஜீவனுக்கே யாகையாலும் விலக்ஷண ஜீவனே ஜகத் காரணம் என்று பூர்வபக்ஷம் வரும் அளவில் –
சர்வேப்ய பாப்மப்ய உதித-என்று அபஹத பாப்மத்வம் ஸ்ருதம் ஆகையாலும்-பரமாத்மாவுக்கும் சுருதி ஸ்ம்ருதி ப்ரஸித்தமாய் அப்ராக்ருதமாய் இருந்துள்ள
திவ்ய மங்கள விக்ரஹங்கள் உண்டாகையாலும் விலக்ஷண விக்ரஹ யுக்தனாய் இவ்வாக்கியத்தில் ப்ரதிபாதிக்கப் பட்டவன்
உபசித புண்ய விசேஷனான ஜீவன் அல்லன்-தத் விலக்ஷணனான பரமாத்மா வென்று சித்தாந்திக்கிக்கப் பட்டது –

இனி பொறியுணர்வு அவையிலன் -என்று ஐந்த்ரியக ப்ரத்யக்ஷ விஷயமான அச்சித்தின் படி யல்லன் என்கையாலே இச்சந்தை அசித் வ்யாவ்ருத்தமான
ப்ரஹ்ம ஸ்வரூபத்தை சாதிக்கிற ஈஷாத் யதிகரணார்த்தம் என்று அறியலாம் –

மனனாக மலமற மலர்மிசை எழுதரு மனன் உணர்வு அளவிலன்-என்று மநோ நிஷ்டமான அவித்யாதிகள் யோகாப்யாஸ பலத்தாலே கழியக் கழிய
மேல் நோக்கி அபிவ்ருத்தமாய் வருகிற மானஸ ஞானத்துக்கு விஷயமான ஆத்மாவின் படியல்லன்-என்கையாலே ஸூத்ய அஸூத்ய யுபய அவஸ்த
ஜீவ வ்யாவ்ருத்தியை ப்ரஹ்மத்துக்கு அறிவிப்பிக்கிற ஆனந்த மய அதிகரண சமா நார்த்தம் இச்சந்தை என்னும் இடம் ஸ்பஷ்டமாக அறியலாம் –

உணர் முழு நலம் -என்று கட்டடங்க ஞானத்தவ ஆஸ்ரயனாயும் ஆனந்த ஆஸ்ரயனாயும் இருப்பான் என்று அருளிச் செய்கையாலே
காரண வஸ்துவுக்கு அசேதன பிராதான்னா வ்யாவர்த்தகமான ஜகத் சர்க்கே க்ஷணாதி தர்மத்தையும்
ஜீவ வ்யாவர்த்தகமான நிரதிசய ஆனந்த அப்யாஸத்தையும் ஸூசிப்பித்து அருளினார் –

ஆகையாலே -ஈஷதே-அப்யாசாத்-என்கிற ஹேத்வம்சம் இச்சந்தையாலே ஸூசிதம்-

எதிர் நிகழ் கழிவினும் இனனிலன் மிகுநரையிலன் -என்று கால த்ரயத்திலும் தன்னோடு ஒப்பாரையும் மிக்காரையும் உடையன் அல்லன் என்றும்
நிஸ்ஸமாப்யதிகன் என்றும் அருளிச் செய்கையாலே

புண்டரீகாக்ஷத்வ அபஹத பாப்மத்வாதி தர்ம யோகத்தால் நிஸ்சமாப்யதிகனான ஆதித்ய மண்டல அந்தரவர்த்தியான
புருஷன் விலக்ஷண ஜீவன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்தித்த அந்தராதிகரணார்த்தம் இச்சந்தையிலே ஸூசிதம் –

ஆனால் ஈஷத் யதிகரண ப்ரமேயமான அசித் வ்யாவ்ருத்தியை முந்துற அருளிச் செய்யாதே ஆனந்த மயாதிகாரண ப்ரமேயமான
ஜீவா வ்யாவ்ருத்தியை முந்துற அருளிச் செய்கைக்கு அடி என் என்னில் –

பிரதான ஜீவா வ்யாவ்ருத்திகளில் பிரதான வ்யாவ்ருத்தி ஸூஷ்ம புத்திகளுக்கு எளிதாய்
அறியப்படும் ஆகையால் அவர்களுக்கு அறிக்கைக்கு அரிதான ஜீவா வ்யாவ்ருத்தியை முந்துற அருளிச் செய்தார் –

ஆனால் ஸூத்ர காரர் பிரதான வ்யாவ்ருத்தியை முந்துறச் சொல்லுவான் என் என்னில்

அசித் வ்யாவ்ருத்தியையும் அறிய மாட்டாத எளியரானவர்களுக்கு முந்துற தத் வ்யாவ்ருத்தியைக் காட்டி அவ்வளவு தெளிவு பிறந்தவனுக்கு அநந்தரம் அதிலும் ஸூஷ்மாமா சேதன வ்யாவ்ருத்தியைக் காட்டினார் –
ஆகையால் ஆழ்வார் அருளிச் செய்கைக்கு ஒரு க்ரமமும் ஸூத்ரகாரருக்கு மற்றப்படி ஒரு க்ரமமும் விவஷிதம் ஆகையால் இவ்விரண்டுக்கும் விரோதம் இல்லை –

ஆனால் அசித் வ்யாவ்ருத்தி ஸ்புடமாய் இருந்ததாகில் பொறி யுணர்வு அவையிலன் -என்று ஆழ்வார் அசித் வ்யாவ்ருத்தியை அருளிச் செய்வான் என் என்னில்
த்ருஷ்டாந்த ரூபேண அருளிச் செய்தாராம் அத்தனை –
ஆகையால் இறே பிள்ளை -அசேதன வ்யாவிருத்தியோ பாதியும் சேதன வ்யாவ்ருத்தி என்கைக்காக பொறி  யுணர்வு அவையிலன் -என்று அருளிச் செய்தார் என்று த்ருஷ்டாந்த பரமாக வ்யாக்யானம் செய்து அருளினார் –
ஆகையால் மனனகம் என்கிற பாட்டும் இவ்வதிகரண த்வயமும் ஏககண்டம் என்னும் இடம் சித்தம் –

இலனது உடையனிது என்கிற மூன்றாம் பாட்டு ஆகாசாதிகரணம் தொடங்கி அதிகரண சதுஷ்டய சமாநார்த்தம் என்னுமிடத்தை தெளிய அறிவிக்கிறோம் –
ஆகாசாதிகரணத்தில்-சர்வாணி ஹவா இமானி பூதாநி ஆகாசா தேவ ஸமுத்பத்யந்தே -இத்யாதி சாந்தோக்ய வாக்கியத்தில் ஆகாச சப்தமாய்த் தோற்றுகிற
ஜகத் காரண வஸ்து பிரசித்த ஆகாசமேயாக வேணும் –

ஆகாச சப்தம் பிரசித்த ஆகாசத்தில் ரூடமாகையாலும் பரமாத்மாவினிடத்தில் ஆகாச சப்த வாச்யத்வம் அப்ரஸித்தமாகையாலும் -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்-சர்வ சப்தத்தால் சொல்லப் படுகிற சேதன அசேதன க்ருத்ஸ்ன பிரபஞ்ச காரணத்வம் என்ன -பாராயணம் என்று சொல்லப்படுகிற ப்ராப்யத்வ ப்ராபகங்கள் என்ன – இவை இத்தனையும் பிரசித்த ஆகாசத்துக்கு கூடாமையாலும் பரமாத்மாவுக்கே இது உள்ளது ஓன்று ஆகையால் ஆகாசதே ஆகாசயதி-என்கிற வ்யுத்பத்தியாலே ஆகாச சப்தம் பரமாத்மாவினிடத்திலும் கூடுகையாலும் ஆகாச சப்த வாஸ்யம் பிரசித்த ஆகாசம் அன்று பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

பிராணாதிகரணத்திலே-சர்வாணி ஹவா இமானி பூதாநி பிராணமேவாபி சம்விசந்தி -இத்யாதி வாக்கியத்தில் பிராண சப்த வாஸ்யமான
ஜகத் காரண வஸ்து பிரசித்த பிராணனாக வேணும் -சர்வ வஸ்துவும் பிராணாதி நஸ்திதிகமாககே காண்கையாலே-என்று பூர்வபக்ஷம் வரும் அளவில் –
சிலாகாஷ்டாத்ய சேதனங்களிலும் சேதன ஸ்வரூபத்திலும் பிராணாதி நஸ்திதிகத்வம் கூடாமையாலே சர்வ ஜகத் காரணத்தையா நிர்திஷ்டமான பிராணன்
பிரசித்த பிராணன் அல்லன் -பரமாத்மா என்று சித்தாந்திக்கப் பட்டது –

ஜ்யோதிர் அதிகரணத்தில் -அத யதத பரோதிவோ ஜ்யோதிர் தீப்யதே -என்கிற சாந்தோக்ய வாக்கியத்தில் ஜ்யோதிஸ் சப்த வாஸ்யம் பிரசித்தமான ஜ்யோதிஸ்ஸாக வேணும்
ஸ்வ வாக்கியத்தில் பரமாத்மா வ்யாப்த லிங்க விசேஷம் காணாமையாலும் கௌஷேய ஜ்யோதிர் ஐக்ய உபதேசத்தாலும்-என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
சர்வ பூதங்களும் த்யுசம்பந்தியான ஜ்யோதிஸ் ஸூக்குப் பாதமாக வ்யபதேசிக்கையாலும் -கௌஷேய ஜ்யோதிர் ஐக்ய உபதேசம் பளார்த்தமாக தாதாத்மகத்வ
அநுசந்தான விதி பரமாகையாலும் நிரதிசய தீப்தி யுக்தமான ஜ்யோதிஸ் சப்த வாஸ்யம் பிரசித்த ஜ்யோதிஸ் ஸூ அன்று பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

இந்த்ர பிராணாதிகரணத்தில் –பிரானோஸ்மி பிரஞ்ஞாத்மா தம் மாமாயுரம் ருதமித்யுபாஸ்வ-இத்யாதி வாக்கியங்களில் ஹித தமோபாசன கர்மதயா நிர்திஷ்டனான இந்திரன் ஜீவனாக வேணும் –

இந்த்ர பதம் ஜீவ விசேஷத்திலே ரூடமாகையாலும் மாம் உபாஸ்வ என்று ஸ்வ ஆத்ம உபாசனத்தை அம்ருதத்வ பிராப்தி சாதனமாக
உபதேசிக்கையாலும் -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில் –
ச ஏஷ பிராண ஏவ பிரஞ்ஞாத்மா ஆனந்த அஜரோ அம்ருத -என்று இந்த்ர பிராண சப்த நிர்திஷ்டன் இடத்தில்
ஆனந்த அஜர அம்ருத சப்த சாமா நாதி கரண்யம் அந்வயிக்க வேண்டுகையாலும் –
மாம் உபாஸ்வ என்று ஸ்வ சரீரக பரமாத்மா உபாசனத்தை விதித்தது ஒழிய கேவல ஜீவ உபாசனை விதி இல்லாமையாலும் ஹித தம உபாசன கர்மத்தயா
நிர்திஷ்டனான சேதனன் இந்திரன் அல்லன் – ஜகத்காரண பூதனான பரமாத்மா என்று நிர்ணயிக்கப் பட்டது –

இனி இலனது உடையனது என நினைவரியவன் -என்று தூரஸ்தமாய் இருப்பது ஒன்றைக் காட்டி
அத்தை உடையன் அல்லன் -சன்னிஹிதமாய் இருப்பது ஒன்றைக் காட்டி இத்தை யுடையவன் என்று நினைக்கவும் கூட அரியன் என்று சொல்லி –
நிலனிடை விசும்பிடை உருவினன் -என்று பூமி அந்தரிஷாதி சர்வ தேச வர்த்திகளான சர்வ சேதன அசேதனங்களையும் உடையவன் என்று அருளிச் செய்கையாலே
சர்வாணி ஹவா இமானி பூதாநி ஆகாசா தேவ ஸமுத்பத்யந்தே ஆகாசம் ப்ரத்யஸ்தம் யந்தி –என்றும்
சர்வாணி ஹவா இமானி பூதாநி பிராணமேவாபி சம்விசந்தி -என்றும்
பாதோஸ்ய சர்வா பூதாநி -இத்யாதி வாக்கியங்களில் உள்ள பிரசித்த ஆகாச பிராண ஜ்யோதிஸ் ஸூக்களுக்கு கடியாதபடியான
நிகில சேதன அசேதன காரணத்வ பிரகாரித்தவாதிகளை இவரும் வெளியிட்டு அருளினார் –

உருவினன் அருவினன் -என்று சித் அசித்துக்களுக்கு சேஷி என்று அர்த்தம் ஒழிய பிரபஞ்ச காரகத்வம் அர்த்தம் அன்றே என்னில்-
கார்யத்வமும் தத் சேஷத்வ பிரகாரமாகையாலே சேஷத்வ கதனத்தாலே ஜகத்துக்கும் ப்ரஹ்ம கார்யத்வம் சித்திக்கும் என்று உபஸர்ஜனத்வ ரூப சேஷத்வத்தை அருளிச் செய்தார் –
ஆனால் கார்ய காரண பாவேந சொல்லாமல் சம்பந்த சாமான்யாவ லம்பனம் பண்ணுவான் என் என்னில்
பாதோஸ்ய சர்வா பூதாநி -என்று ஜ்யோதிரதிகரண யுக்தமான ஜகாத் சேஷித்வமும் சங்க்ருஹீதமாக வேணும் என்னும் கருத்தாலே அருளிச் செய்தார் –

ஆகையால் இவ்வதிகரண த்ரயத்துக்கும் இச்சந்தைக்கும் சமா நார்த்தவம் சித்தம்

அஅந் நலனுடை ஒருவனை -என்று அந்த ஆனந்த குணத்தையுடைய அத்விதீயன் என்கையாலே ச ஏஷ பிராண ஏவ பிரஞ்ஞாத்மா ஆனந்த அஜரோ அம்ருத -என்று இந்த்ர பிராண சப்த நிர்திஷ்டனுக்கு ஆனந்த அஜர அம்ருத சப்த சாமா நாதி கரண்யத்தாலே பரமாத்மாவை சாதித்த அர்த்தம் இச்சந்தையிலே ஸூசிதமாகையாலே இச்சந்தை இந்த்ர பிராணாதிகரண அர்த்தம் ஆகலாம் –

கிஞ்ச–நணுகினம் நாமே -நாம் பிராபிக்கப் பெற்றோம் என்று உபாசன பலமான ப்ராப்யத்வ கதந முகேந பரமாத்மாவினுடைய உபாஸ்யத்வத்தை ஸூசிப்பிக்கையாலே –
தம்மாமாயுர அம்ருதம் இத்யுபாஸ்வ-என்கிற இந்த்ர பிராண சப்த வாச்யனுக்குப் பரமாத்மத்வ சாதகமான உபாஸ்யத்வ ப்ரதிபாதக வாக்ய சமா நார்த்தகம்
இச்சந்தை என்று அறியலாம் -இப்படி மூன்று பாட்டும் அந்நாலதி கரணமும் ஏககண்டம் என்னும் இடம் சித்தம் –

ஆம்னாய மௌளி யுகளீ விஹாராணாம் சதாம் முதே நிரூபிதாஸ் அத்ய பாதஸ்ய காதாத்ரய சாமார்த்ததா —

இதி ஆத்யபாதகா தாத்ராயைக கண்ட்யம்-

நாலாம் பாட்டு தொடங்கி மேல் மூன்று பாட்டுக்களுக்கும் த்ரிபாதிக்கும் ஐகார்த்யம் உபபாதிக்கப் படுகிறது –
அதில் முதலிலே த்வதீய பாதமும் நாலாம் பாட்டும் ஏக கண்டமான படியை உபபாதிக்கப் படுகிறது –
த்வதீய பாதத்துக்குப் பொருளான ஜகத் சரீரத்வத்தை இப்பாட்டிலும் ஆழ்வார் அருளிச் செய்கையாலே ஐகார்த்யம் உண்டு –
த்வதீய பதார்த்தம் ஜகத் சரீரகத்வம் என்னும் இடத்தை -த்வதீயே ஜகத் சரீரகத்வம் என்று ஸ்ருத பிரகாசிகையிலும் –
ஸ்ரஷ்டா தேஹி ஸ்வ நிஷ்டோ நிரவாதி மஹிமா -என்று பிரதம அத்யாய பாத சதுஷ்ட்யத்துக்கும் அடைவே பொருள் சொல்லும் இடத்தில்
த்வதீய பாதத்தின் பொருளை தேஹீ என்று சாராவளியிலும் ஸ்ரீ மத் ஸூதர்சன பட்டரும் ஸ்ரீ மத் வேங்கட நாதரும் அருளிச் செய்தார்கள் –

இனி த்வதீய பாத பிரதம அதிகரணத்திலே –
சர்வம் கல்விதம் பிரம்மா தஜ்ஜலாநிதி சாந்த உபாஸீத -என்கிற சாண்டில்ய வித்யா வாக்கியத்தில் உபதிஷ்டமான
ப்ரஹ்மம் ஜீவனாக வேணும் –

நிர்துஷ்டனான பரமாத்மாவுக்கு ஹேயாகரமான சித்த அசித் ரூபா சர்வ பாவம் கூடாமையாலும் தேவ மனுஷ்யாதி ரூபேண
கர்மக்ருதமாக ஜீவனுக்கு சர்வாத்ம பாவம் கூடுகையாலும் -என்று பூர்வபக்ஷம் வருமளவில் -சர்வ வேதாந்த பிரசித்தமான சர்வ ஜகத் காரணத்வத்தை உபதேசிக்கையாலும் –
தஜ்ஜத்வ தல்லத்வ ததன்வங்களாலே ப்ரஹ்மத்துக்கே தாதாம்யம் உபபன்னம் ஆகையால் -தேவ மனுஷ்யாதி பாவேந ஜீவனுக்குத் தாதாம்யம் உண்டானாலும் அவனுக்கு ஜகத் காரணத்வம் கூடாமையாலும்

ப்ரஹ்ம சப்த வாச்யன் ஜீவன் அல்லன்-சர்வ ஜகத் சரீரதயா சர்வ சப்த வாச்யனான பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

த்வதீய அதி கரணத்திலே —
ஸ்ய ப்ரஹ்ம ச ஷத்ரஞ்ச உபே பவத ஓதந –ம்ருத்யுர் யஸ்ய உபசேசனம்-இத்யாதி கடவல்லீ வாக்கியத்தில் ஓதந உபசேசன ஸூ சிதனான அத்தா ஜீவனாக வேணும் –
போக்த்ருத்வம் கர்ம நிமித்தம் ஆகையாலும்-ஜீவனுக்கே அது உள்ளது ஒன்றாகையாலும் என்று பூர்வபக்ஷம் வருமளவில் -சராசர ரூப க்ருத்ஸ்ன ஜகதத்ருத்வம் ஜகத் சம்ஹார கர்த்ருத்வம் ஒழிய கர்ம நிமித்த போக்த்ருத்வம் அல்லாமையாலும்

தாதருச சம்ஹார கர்த்ருத்வம் பரமாத்மா தர்மமாகையாலும்
இவ்வாக்கிய ப்ரதிபாத்யன் ஜீவன் அல்லன் –பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

த்ருதீய அதிகரணத்தில்–
ய ஏஷோ அந்தரஷிணி புருஷ த்ருஸ்யதே-என்கிற சாந்தோக்யத்தில் அக்ஷய ஆதாரதயா நிர்திஷ்டனான புருஷன் ப்ரதிபிம்ப ஜீவா தேவதா விசேஷங்களில் அந்நிய தமனாக வேணும் –
ப்ரஸித்தவ நிர்தேசத்தாலும்-த்ருஸ்யதே -இதய ப்ரோஷ அபிதானத்தாலும் பிரதிபிம்பம் ஆகலாம் –
ஜீவனுக்குச் சஷூஸ்சிலே விசேஷ ஸந்நிதானம் உண்டாகையாலே ஜீவன் தான் ஆகலாம் – ரஸ்மிபி ரேஷோ அஸ்மின் ப்ரதிஷ்டித என்கிற ஸ்ருதி பிரசித்தியாலே
சஷூஸ் ப்ரதிஷ்டித தேவதா விசேஷம் தானாகலாம் என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏதத் அம்ருதம் அபயமேதத் ப்ரஹமேத்யாசஷதே -இத்யாதி வாக்யத்தால் ப்ரதிபன்னமான கல்யாண குணங்கள் பரமாத்மாவுக்கே யுள்ளது ஒன்றாகையாலும்
யஸ் சஷூஷி திஷ்டன் -இத்யாதி ஸ்ருதி பிரசித்தமான சஷூர் வர்த்தித்வத்தை -ஏஷோ அஷிணி என்று பிரசித்தவந் நிர்தேசிக்கையாலும் –
த்ருஸ்யதே இத்ய அபரோக்ஷ அபிதானம் யோகி த்ருஸ்யத்வ அபிப்பிராயம் ஆகையாலும் ப்ரதிபிம்பாதிகளுக்கு நியமேந சஷூர் வர்த்தித்தவம் இல்லாமையாலும்
அஷி புருஷன் ப்ரதிபிம்பத்திகளில் அந்நிய தமன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

சதுர்த்த அதிகரணத்தில்
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ப்ருதிவ்யா அந்தரோயம் ப்ருதிவீ சரீரம் -இத்யாதி வாஜசநேயக வாக்ய ச்ருதனான அந்தர்யாமி ஜீவனாக வேணும் –
வாக்ய சேஷத்திலே கரணாயத்த ஞானம் அந்தர்யாமிக்கு ச்ருதமாகையாலே -என்று பூர்வபக்ஷம் வருமளவில்
ஒருவனே சர்வ லோக சர்வ பூத சர்வ தேவாதிகளையும் நியமிக்கிறார் என்கிற இது பரமாத்மா அசாதாரண தர்மமாகையாலும் -த்ரஷ்டா ஸ்ரோதா என்று ரூபாதி சாஷாத்காரத்தைச் சொல்லுகிறது ஒழிய கரணாயத்த ஞானவத்தைச் சொன்னது அல்லாமையாலும் அந்தர்யாமி ஜீவன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

ஐந்தாம் அதிகரணத்தில் –
யத்த தத் ரேஸ்யமக்ராஹ்யம் -இத்யாதி வாக்யத்திலும் -அஷராத் பரத பர-என்கிற வாக்யத்திலும் ப்ரதிபன்னமான அத்ருஸ்யத்வாதி குணகமும் அஷராத் பரத பரனும் பிரகிருதி புருஷர்கள் ஆகவேனும் -அசேதன ப்ருதிவ்யாதிகதமான த்ருஸ்யத்வாதி ப்ரதிஷேதம் தத் சஜாதீய பிரதானத்தில் உசிதம் ஆகையாலும்
அதில் காட்டில் பரத்வம் ஜீவனுக்கு உசிதம் ஆகையாலும் -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -இத்யாதி வாக்கியங்களில் அத்ருஸ்யத்வாதி குணக வஸ்துவுக்கு சர்வஞ்ஞத்வாதி குணங்கள் ஸ்ருதமாகையாலும்
அதில் காட்டில் பரத்வம் ஜீவனுக்கு கடியாமையாலும் இவ்விரண்டு வாக்யத்திலும் ப்ரக்ருதி புருஷர்கள் ப்ரதிபாத்யர் அல்லர் பரமாத்மாவே ப்ரதிபாத்யன் என்று சித்தாந்திக்கப் பட்டது –

ஷஷ்ட்டி அதிகரணத்தில் —
ஆத்மா நமேவேமம் வைச்வா நரம் யேஷி -இத்யாதி வாக்கியத்தில் ச்ருதனான வைச்வா நரன் பரமாத்மா என்று நிர்ணயிக்க ஒண்ணாது –
வைச்வா நர சப்தத்தை ஜாடராக்னி என்ன பூத த்ருதீயம் என்ன தேவதா விசேஷம் என்ன இவைகளில் பரமாத்மாவிலும் வேதம் பிரயோகிக்கையாலே என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
கோ ந ஆத்மா கிம் ப்ரஹ்ம -என்று உபக்ரமத்திலே சர்வாத்ம பூத பர ப்ரஹ்ம ஜிஜ்ஞாசயா உபசன்னரான ஓவ்ப மன்யவாதி முமுஷூக்களைக் குறித்து உபதேசிக்கப் படுகையாலும்
பரமாத்ம தர்மமான த்யுப்ரப்ருதி ப்ருதிவ்யந்த ஜகச் சரீரத்வம் ஸ்ருதம் ஆகையாலும் ஜாடராக்னியாதிகளில்
இஸ் சப்த பிரயோகம் உண்டானாலும் இவ்விடத்தில் வைச்வா நரன் பரமாத்மாவே என்று நிர்ணயிக்கப் பட்டது –

இப்பாத அர்த்தமான ஜகச் சரீரத்வம் பிரதம அதிகரணத்திலே -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -என்கிற விஷய வாக்யத்திலே காணலாம் –

த்வதீய அதிகரணத்தில் -குஹாம் ப்ரவிஷ்டவ் -இத்யாதி ஸூத்ர விஷயமான -தம் துர்தர்சம் கூடமநு ப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம் இத்யாதி வாக்யத்திலே ஸுபரியைப் போலே ஜகத்து ஞானா திஷ்டித சரீரம் அன்று -ஸ்வரூபத்தாலே சர்வ சரீரங்களிலே ஹ்ருதய குஹ ப்ரவிஷ்டனான பரமாத்மாவுக்கு சரீரம் என்று சொல்லப் பட்டது –

த்ருதீய அதிகரணத்தில் -ய ஏஷோ அஷிணி புருஷ த்ருஸ்யதே -என்கிற விஷய வாக்யத்திலே இந்திரியங்களுக்கும் பரமாத்மா சரீரத்வம் சொல்லப் பட்டது –

சதுர்த்த அதிகரணத்தில் -கேவலம் இந்த்ரியங்களே அல்ல ப்ரத்யேகம் சர்வ தத்துவங்களும் பரமாத்மா சரீரம் என்று சொல்லப் பட்டது

பஞ்சம அதிகரணத்தில் சர்வ தத்துவங்களும் சமுதாய ரூபத்தாலும் ப்ரஹ்ம சரீரம் என்று ரூபோபந் யாசாத் -என்கிற ஸூத்ரத்திலே சொல்லப் பட்டது

ஷஷ்ட்டி அதிகரணத்தில் ஜகச் சரீரத்வம் முமுஷூ உபாஸ்யம் என்று பிரபஞ்சிதம் –

இப்படி ஷட் அதிகரணியான இப்பாதத்தில் சொல்லப்பட்ட ஜகச் சரீரத்வத்தை ஆழ்வாரும்
நாம் அவன் இவன் யுவன் அவள் இவள் அவள் எவள் தாம் அவர் இவர் உவர் அது விது வுது எது வீமவை இவை யுவை
அவை நலம் தீங்கவை ஆமவையாயவை ஆய் நின்ற அவரே -என்று -தம்தாமாயும்-அஸந்நிஹிதனாயும்-சந்நிஹிதனாயும்-அதூர-விப்ர க்ருஷ்டனாயும் இருந்துள்ள புருஷன் என்ன –
தூர வர்த்திநியாயும்-சந்நிஹிதையாயும்-அதூர-விப்ர க்ருஷ்டையாயும் -வினவப் படுகிறவளாயும் இருந்துள்ள ஸ்த்ரீ ஜாதி என்ன –
பஹுமந்தவ்யரில்-அவர் என்றும் இவர் என்றும் உவர் என்றும் சொல்லப் போடுகிறவர்கள் என்ன அது இது உத்து எது என்று நபும்சக லிங்க நிர்திஷ்டமான வஸ்துக்கள் என்ன –
நச்வர பதார்த்தங்கள் என்ன -நல்லதாயும் தீயதாயும் இருந்துள்ள வஸ்துக்கள் என்ன இவை இத்தனையுமாய்
காலத்ரய வர்த்தியான பதார்த்தங்களுமாய் இருக்கிற பூர்வோக்தரானவர் -என்று சாமாநாதி கரண்யத்தாலே
ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் யுண்டான சரீராத்ம பாவத்தை அருளிச் செய்கையாலே இப்பாட்டுக்கு த்விதீய பாதத்தோடு ஐக கண்ட்யம் உண்டு என்னும் இடம் ஸூ ஸ்பஷ்டம் –
————-
அவரவர் தமதமது -என்கிற ஐந்தாம் பாட்டுக்கு த்ருதீய பதைகார்த்யம் உண்டான படி என் என்னில்
த்ருதீய பாதத்தில் ப்ரதிபாத்யமான சர்வாத்மத்வ பிரகாரத்தை இதிலும் அருளிச் செய்கையாலே ஐகார்த்யம் யுண்டு –

இப்பாதார்த்தம் சர்வாத்மத்வ பிரகாரம் என்னும் இடத்தை –த்ருதீயே சர்வாத்மத்வ பிரகார -என்று ஸ்ருத பிரகாசிகையிலே பட்டர் அருளிச் செய்தார் –

இப்பாதத்தில் பிரதம அதிகரணத்திலே —
யஸ்மின் த்யவ் ப்ருத்வீ ச அந்தரிக்ஷ மோதம் மனாஸ் சக பிராணைஸ் ச சர்வை -இத்யாதி அதர்வணிக வாக்கியத்தில் ஸ்ருதனான த்யுப்வாத்யாயதநன் ஜீவனாக வேணும்
மன பிராண சம்பந்த நாட்ய ஆதாரத்வ பஹுதா ஜாயமானத்வாதிகளாலே -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
அம்ருத ஹேதுத்வ ஆத்மத்வ சர்வஞ்ஞத்வாதி தர்ம வாசக பரமாத்மா அசாதாரண சப்தங்களாலே நிர்தேசிக்கையாலும்
சர்வ ஆதாரனுக்கு மன பிராண நாட்ய ஆதாரத்வம் கூடுகையாலும்
ஜச்சமான பஹுதா ஜாயமானத்வம் இவனுக்கும் உண்டாகையாலும் த்யுதிவாத்யாயதனன் ஜீவன் அல்லன் பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

த்விதீய அதிகரணத்தில் –
யத்ர நான்யத் பஸ்யதி நான்யச் ஸ்ருனோதி நான்யத் விஜானாதி ச பூமா -என்கிற சாந்தோக்ய வாக்கியத்தில் ஸ்ருதனான பூம குண விசிஷ்டன் ஜீவனாக வேணும்
தரதி சோகமாத்மவித் -என்று ஆத்ம ஜிஜ்ஞாசயா உபசன்னனான முமுஷூவுக்கு பிராண ஸஹ சாரித்த்வ நிபந்த நேந பிராண சப்த நிரதிஷ்டனான ஜீவனிடத்தில் ஆத்ம உபதேசம் ஸமாப்த்தமாகையாலும்
அந்த ஜீவனுடைய முக்த அவஸ்தையில் ஆனந்த வைப்புலயத்தை பூமா சப்தத்தால் நிர்தேசிக்கையாலும் -என்று பூர்வ பக்ஷம் வரும் அளவில்
யஸ் சத்யே நாதிவததி -என்கிற வாக்கியத்தில் சத்யா சப்தத்தாலே ஸ்ருதனான பரமாத்மாவினிடத்தில் ஆத்ம உபதேசம் ஸமாப்த்தம் ஒழிய
பிராண சப்த வாஸ்ய ஜீவ உபதேசத்தில் ஸமாப்த்தம் இல்லாமையாலும் -பரமாத்மாவினுடைய ஆனந்த வைபுல்யத்தை பூம சப்தத்தால் சொல்லுகையாலும்
பூம குண விசிஷ்டன் ஜீவன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

த்ருதீய அதிகரணத்தில் —
ஏதத் வை ததஷரம் கார்க்கி ப்ராஹ்மணா அபிவதந்தி –இத்யாதி வாஜசநேய வாக்கியத்தில் ச்ருதமான அக்ஷரம் பிரதான ஜீவர்களாக வேணும்
அஷராத் தமஸி லீயதே –இத்யாதி ஸ்ருதிகளிலே பிரதான ஜீவர்களிலும் அக்ஷர சப்த பிரயோகம் காண்கையாலே-என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
த்ரை கால்ய வர்த்தி விகார ஜாதாத ஆதார பூத ஆகாச சப்த வாஸ்ய பிரதான ஆதாரத்வத்தாலும்
பிரசாசன ஸ்ரவணத்தாலும் அக்ஷர சப்த நிர்திஷ்டம் பிரதானமும் அன்று ஜீவனும் அன்று பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

சதுர்த்த அதிகரணத்தில் –
பரம் புருஷன் அபித்யாயீத-என்று தொடங்கி -புரிசயம் புருஷம் ஈஷதே-என்கிற வாக்கியத்தில் த்யாய ஈஷதி கர்மதயா நிரதிஷ்டனான பரம புருஷன் சதுர்முகனாக வேணும் –
மனுஷ்ய லோகத்துக்கும் அந்தரிக்ஷத லோகத்துக்கும் உபரிதனமான ப்ரஹ்ம லோகத்தில் -ஈஷணீ யத்வாதி லிங்கத்தாலே என்று பூர்வ பக்ஷம் வரும் அளவில்
யத்தச்சாந்தம் அஜ்ரமம் அம்ருதம் அபயம் –இத்யாதி வாக்கியத்தில் சாந்தத்வ அஜரத்வ அம்ருதத்வாதி தர்மங்கள் ச்ருதமாகையாலும்
சர்வ பாப நிர்முக்தனான முக்தனுக்கு ப்ராப்யதயா யுக்தமான ப்ரஹ்ம லோகம் சதுர்முக ஸ்தானம் இல்லாமையாலும்
யத்தத் கவயோ வேத யந்தே-என்று கவி சப்த வாஸ்யரான நித்ய ஸூரி களாலே துருஸ்யமான வைஷ்ணவ பதத்தை ப்ரஹ்ம லோக சப்தத்தாலே நிர்தேசிக்கையாலும்
தத்ரயனானவன் சதுர்முகன் அல்லன் பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

பஞ்சம அதிகரணத்தில் –
தஹரோ அஸ்மின் அந்தர ஆகாச -இத்யாதி சாந்தோக்ய வாக்ய ஸ்ருதமான ஹ்ருதய புண்டரீக மத்திய வர்த்தி தகர ஆகாசம் பூத ஆகாசமாதல் ஜீவன் ஆதலாக வேணும்
பூத ஆகாசத்தில் ஆகாச சப்த பிரசித்தி பிராஸுர்யத்தாலே பூத ஆகாசம் ஆகலாம் -பிரஜாபதி வாக்கியத்தில் ஜீவனுக்கும் அபஹத பாப்மாத்வாதிகள் ஸ்ருதமாகையாலும்
ப்ரகாசாதி யோகத்தால் ஆகாச சப்தம் ஜீவன் இடத்தில் கூடுகையாலும் ஜீவன் தான் ஆகலாம் என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
அபஹத பாப்மாத்வாதிகள் பூத ஆகாசத்துக்கு கடியாமையாலும் -பிரஜாபதி வாக்கியத்தில் ஸ்ருதமான பரமாத்ம சம்பத்தி லப்த அபஹத பாப்மத்வாதிகள் ஜீவனுக்கு உண்டானாலும்
தஹர வாக்ய யுக்த அதிரோஹித நித்ய சித்த அபஹத பாப்மத்வாதி வைசிஷ்ட்யம் ஜீவனுக்கு கூடாமையாலும்
பரமாத்மாவினிடத்திலும் ஆகாச சப்த பிரயோகம் சுருதியந்தர சித்தமாகையாலும் தஹர ஆகாசம் பிரசித்த ஆகாசமும் அன்று -ஜீவனும் அன்று பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

ஷஷ்ட அதிகரணத்தில் –
அங்குஷ்ட மாத்ர புருஷோ மத்திய ஆத்மநி திஷ்டதி -இத்யாதி கடவல்லீ வாக்கியத்தில் ஸ்ருதனான அங்குஷ்ட பிரமித்தான் ஜீவனாக வேணும் –
அங்குஷ்ட ப்ரமிதத்வம் ஜீவனுக்கு சுருதியந்தர சித்தமாகையாலே என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
பூத பவ்ய ஈஸா நத்வம் ஜீவனுக்கு அநு பன்னம் ஆகையாலும்-பரமாத்மாவுக்கே உள்ளது ஓன்று ஆகையாலும் அங்குஷ்ட பிரமிதன்
ஜீவன் அல்லன் -பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது

சப்தம அஷ்டம நவம அதிகரணங்களில் –
ப்ரஹ்ம வித்யையிலே அதிகார அநதிகார விசாரம் ப்ராசங்கிகமாக ப்ரவ்ருத்தம் ஆயிற்று –

தசம அதிகரணத்தில் –
ஆகாசோ ஹவை நாம ரூபயோர் நிர்வஹிதா -இத்யாதி சாந்தோக்ய வாக்கியத்தில் ஸ்ருதனான ஆகாச சப்த வாச்யன் முக்தாத்மாவாக வேணும்
அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம்-இத்யாத்ய அனந்தர வாக்யத்திலே முக்தன் ப்ரக்ருதன் ஆகையாலும்
முக்தனுக்கும் பூர்வ அவஸ்தையில் கர்மக்ருதமாக நாம ரூப நிர்வாஹம் கூடுகையாலும் -என்று பூர்வபக்ஷம் வரும் அளவில்
சகல ஜெகன் நிர்மாண துரந்தரனான பரமாத்மாவுக்கே நாம ரூப நிர்வோ ட்ருத்வம் ஸ்ருதி சத சமதிகதம் ஆகையாலும்
ப்ரஹ்ம லோக சப்த வாச்யனான பரமாத்மாவும் அனந்தர ப்ராக்ருதன் ஆகையாலும் ஆகாச சப்த நிரதிஷ்டன் முக்தன் அல்லன் பரமாத்மாவே என்று சித்தாந்திக்கப் பட்டது –

சர்வாத்மத்வ பிரகாரத்தில் ஹேய அஸ்ப்ருஷ்டத்துவம் பிரதம அதிகரண யுக்தம் –
த்வதீய அதிகரணத்தில் நிரதிசய ஆனந்த யோகம் சொல்லப்பட்டது -இதுவும் சர்வாத்மத்வ பிரகாரம் இறே-
த்ருதீய அதிகரணத்தில் பிரசாசித்ருத்வம் பிரபஞ்சிதம் -இது சர்வாத்மத்வ பிரகாரம் என்னும் இடம் ஸ்புடம் இறே –
சதுர்த்த அதிகரணத்தில் முக்த ப்ராப்யத்வம் நிரூபிதம்-இதுவும் சர்வம் ஹா பஸ்ய பஸ்யதி–இத்யாதி படியே
சர்வ சரீரியான ப்ரஹ்மமே முக்த ப்ராப்யமாகையாலே சர்வாத்மத்வ பிரகாரம் என்னகே குறையில்லை –
பஞ்சம அதிகரணத்தில் நிரதிசய பாக்ய குணத்வம் நிரூபிதம் -இதுவும் அபஹத்தை பாப்மாத்வாதி குணவத்தம் ஆகையால் சர்வாத்மத்வ பிரகாரம் என்னலாம் –
ஷஷ்ட அதிகரணத்திலே மாதாவைப் போலே அந்தரவர்த்தியான எம்பெருமானுக்கு ஜூகுப்சை இல்லாமையும் பிதாவைப் போலே சிஷகத்வேந பய ஹேதுத்வமும் சொல்லிற்று –
இதுவும் அந்தர்யாமித்வ பிரகாரம் என்னுமிடம் சித்தம் –
அதிகார அநாதிகார விசாராத்மக அதிகரண த்ரயமும் ப்ராசங்கிகம் ஆகையால் இதில் சர்வாத்மத்வ பிரகார ப்ரதிபாதனம் பண்ண வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை –
சரம அதிகரணத்தில் ஸூ ஷூப்த்யாதி சர்வ அவஸ்தைகளிலும் பரமாத்மா சம்பந்தம் ப்ரோக்தம் -இதுவும் சர்வாத்ம பிரகாரம் என்னுமிடம் ஸ்பஷ்டம் இறே –

இப்படி த்ருதீய பாதத்தால் நிரூபிதமான சர்வாத்மத்வ பிரகாரத்தை –
அவரவர் தமதமது அறிவகை வகை அவரவர் இறையவர் என அடி யடைவர்கள் -அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே-
தத்தத் அதிகாரிகள் தந்தாமுடைய ருசி பேதத்தாலே ராஜசராயும் தாமஸராயும் மிஸ்ர ஸத்வராயும் இருந்துள்ள தேவதைகளை ஆஸ்ரயிப்பார்கள் –
அந்தந்த தேவதைகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு அத்தேவதைகள் தத் தத் பல பிரதானத்தில் குறையுடையர் அல்லர் –
அதுக்கு அடி சர்வ சரீரியான சர்வேஸ்வரன் தத் தத் தேவதைகளுக்கு அந்தர்யாமியாய் ஆஸ்ரயித்த மனுஷ்யர்க்கு
தத் தத் பலம் பெறும்படி இருக்கையாலே என்று ஆழ்வாரும் அருளிச் செய்தார் –

அதில் பாதார்த்தமான சர்வாத்மத்வ பிரகாரத்தில் -பிரதம அதிகரண ப்ரமேயமான
ஹேய அஸ்ப்ருஷ்டத்வ ரூபா பிரகாரத்தை இறையவர் என்கிற பதத்தாலே பிரகாசிப்பித்து அருளினார் -அது எங்கனே என்னில்
இறையவர் என்று ஈஸ்வரத்வம் சொல்லுகையாலே சகல ஹேய அஸ்ப்ருஷ்டன் என்று சித்திக்கும் –
த்வதீய அதிகரண ப்ரமேயமான
நிரதிசய ஆனந்தயோகம் சேஷித்வ வாசியான அந்தப்பதத்தாலே தானே ஸூசிதம் -சர்வ சேஷிக்கு இ றே நிரதிசய ஆனந்தத்வம் உள்ளது -ஆகையால் இறே ஆனந்த வல்லியிலே
தஸ்யேயம் ப்ருதிவீ சர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத் -இத்யாராப்ய வித்த பூர்ணையான சர்வ பிருத்வியுமுடையனாய் இருக்கையை மனுஷ்ய ஆனந்தமாகச் சொல்லிற்று –
இனி சர்வத்தையும் உடையவன் என்று சொல்லவே சர்வ சேஷித்வ ப்ரயுக்த நிரதிசய ஆனந்த யோகமும் தன்னடையே வரும் –
த்ருதீய அதிகரண பிரமேயமான பிரசாசித்ருத்வமும்
நியந்த்ரு ரூப சேஷிவாசி யாகையாலே அப்பத்தத்தாலே தானே ஸூசிதம் -இன்னமும் -அவரவர் விதிவழி யடைய நின்றனர் -என்று
தேவதை அந்தர்யாமித்வ கதந முகத்தாலும் பிரசாசிச்ருத்வம் யுக்தமாகலாம் –
சதுர்த்த அதிகரண ப்ரமேயமான முக்த ப்ராப்யத்வமும் –
இறையவர் -என்று -இன்நானுக்கு இறையவர் என்று விசேஷியாதே சாமாந்யேன சர்வ சேஷி என்று சொல்லுகையாலே –
இப்பத்தத்தாலே சொல்லப் பட்டது என்று அறியலாம் -ஆகையால் இறே ப்ராப்ய பாரமான உத்தர வாக்கியத்தில் நாராயண பதத்துக்கு
சேஷித்வத்திலே நோக்கு என்று முன்புள்ள முதலிகள் வ்யாக்யானம் செய்து அருளிற்று –
இந்த இறையவர் என்கிற பதம் சாமாந்யேன சர்வ சேஷித்வ வாசி என்னும் இடத்தை கலிவைரி தேசிகர் -பொதுவில் இறையவர் என்கிறார் –
அவர்களோடு அவர்கள் ஆஸ்ரயிக்கிற தேவதைகளோடு தம்மோடு வாசியற எல்லார்க்கும் ஓக்க இறையவர் ஆகையால் -என்று பகவத் விஷயத்திலே வெளியிட்டு அருளினார் –
பஞ்சம அதிகரண ப்ரமேயமான நிரதிசய போக்ய குணத்வமும்
தேவதை அந்தர்யாமித்வ கதனத்தாலே ஸூசிதம் -அது எங்கனே என்னில் -யாவாந் வா அயம் ஆகாசா -என்றும் -உப்பிய அஸ்மின் த்யாவா ப்ருதிவீ –
உபாவக் நிஸ்ச வாயுஸ் ச ஸூர்யா சந்த்ரம சாவுபவ் வித்யுந் நக்ஷத்ராணி -என்கிற வாக்யத்திலே
பிரக்ருத தஹர ஆகாசத்தை -அஸ்மின் -என்று பராமர்சித்து அந்த பிரம்மா உபாசனம் பண்ணுகிறவனுக்கு இஹ லோக லப்யமாயும் பரலோக லப்யமாயும்
மநோரத மாத்ர வர்த்தியாயும் இருந்துள்ள சர்வ போக்ய ஜாதமும் இந்த தஹர ஆகாசத்தில் உண்டாய் இருக்கும் என்று சொல்லிற்று –
இவ்விரண்டு வாக்யத்திலும் பூர்வ வாக்கியத்தில் சொன்ன அக்னி வாயு ஸூர்ய சந்த்ர ப்ரப்ருதி சர்வ ஆதாரத்வ ரூபமான சர்வ சரீரத்வத்தை –
இறையவர் அவரவர் விதி வழி யடைய நின்றனர் -என்று அருளிச் செய்கையாலே
தத் வ்யவஹிதாநந்தர த்விதீய வாக்கியத்தில் சொன்ன சர்வ ஆதார வஸ்துவினுடைய நிரதிசய போக்யத்வம் இச்சந்தையிலே ஸூசிதமாகலாம் –
ஷஷ்ட்டி அதிகரண யுக்தமான மாத்ருத்வத் ஜூகுப்சா ராஹித்யமும் பித்ருவத் சிக்ஷகத்வேந பய ஹேதுத்வமும்
அந்தர்யாமித்வ கதனத்தாலே தானே சித்திக்கும் -கிஞ்ச -தேவதாந்த்ர ஸமாச்ரயணம் பண்ணின அதி ஹீநரையும் விட மாட்டாதே ஜூகுப்ஸை யற்று
தத் தத் தேவதா முகேந ரஷிப்பான் என்று இச்சந்தையால் அருளிச் செய்கையாலும் ஷஷ்ட்டி அதிகரண பிரமேயம் இது என்று அறியலாம் –
அதிகார அநதிகார விசாராத்மகமான சப்தம அஷ்டம நவம அதிகரண ப்ரமேயமும் –
அவரவர் தமதமது -இத்யாதியாலே அதிகாரி வைவித்ய கதனத்தாலே ஸூசிதம் –
தசம அதிகாரண ப்ரமேயமான ஸூஷூப்த் யாதி சர்வ அவஸ்தாஸூ அப்ரஹாணமும்
ஸ்வேந ரூபேண நின்று ரசிக்கும் அளவன்றிக்கே தேவதாந்த்ர முகேநவும் ரஷித்து அருளும் என்கிற இப்பாட்டாலே ஸூசிதமாகலாம் –
இப்படி த்ருதீய பதார்த்தமான சர்வாத்மத்வ பிரகாரத்தை
இப்பாட்டாலே வெளியிட்டு அருளுகையாலே இப்பாட்டுக்கும் த்ருதீய பாதத்துக்கு ஐகமத்யம் சித்தம்
———————————
சதுர்த்த பாதத்துக்கும் -நின்றனர் இருந்தனர் -என்கிற ஆறாம் பாட்டுக்கும் ஐகமத்யம் உண்டாம்படி எங்கனே என்னில்
சர்வ வஸ்துவும் ப்ரஹ்ம கார்யமுமாய் -ப்ரஹ்ம சரீரமுமாய் -ப்ரஹ்ம ஆத்மகமுமாய் இருக்கையாலே
தத் கார்யமும் அன்றிக்கே தத் சரீரமும் அன்றிக்கே தத் ஆத்மகமும் அன்றிக்கே இருக்கிற வஸ்து இல்லை என்று
அப்ரஹ்மாத்மக வஸ்து நிஷேதம் இப்பாத ப்ரதிபாத்யர்த்தமாய் இருக்கும் –

இவ்வர்த்தத்தையே இப்பாட்டில் அருளிச் செய்கையாலே ஐகார்த்யம் யுண்டு -இப்பாதார்த்தம் இது என்னும் இடத்தை
அதத் கார்ய -அதச் சரீர -அததாத்மக வஸ்த்வ சம்பவ ப்ரதிபாத்யதே -என்று ஸ்ருதி பிரகாசிகையிலே பட்டர் அருளிச் செய்தார் –
இத்தை முகாந்தரேண-நிரவதி மஹிமா -என்று சாரா வழியிலே வேதாந்தாசார்யர் அருளிச் செய்தார் –

இதில் பிரதம அதிகரணத்திலே
ஜகத்தினுடைய அதததீ நத்வம் -தததீ நத்வாதர்த்த வத் -என்கிற ஸூத்ரத்திலே ப்ரஹ்மாத்மகத்வம் ஜகத்துக்கு சாதிக்கையாலே நிரஸ்தமாயிற்று –
த்வதீய அதிகரணத்தில் –
அஜாமேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் -இத்யாதி ஸ்வதாஸ்வதர மந்திரத்தில் ஜகத்தினுடைய அப்ரஹ்ம கார்யத்வம் தோற்றுகிறது என்று சங்கித்து
தைத்ரீயத்தில் -அஜா மேகாம் -இத்யாதி வாக்ய அநுகுண்யேந ப்ரஹ்ம கார்யத்வத்தை சாதித்து அதத்கார்யத்வத்தை நிரசித்தார் –
த்ருதீய அதிகரணத்தில் –
யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா -இத்யாதி வாக்கியங்களில் சொல்லுகிற படியே சாங்க்ய ப்ரக்ரியையாலே ஜகத்து அப்ரஹ்மாத்மகம் என்று சங்கித்து
ப்ரஹ்மாத் மகத்வத்தை ஜகத்துக்கு சாதித்து அததாத் மகத்வத்தை நிரசித்தார் –
தமேவம் மந்ய ஆத்மாநம் -என்று இ றே அந்தப் பிரகரணத்திலே வாக்யம்-
சதுர்த்த அதிகரணத்தில் -சதவ்யா க்ருதாதி சப்தத்தால் பிரதிபன்னமான வஸ்துவுக்கு அத தாத் மகத்வத்தை சங்கித்து அதுவும் ப்ரஹ்மாத்மகம் என்று பரிஹரித்து ஜகத்தினுடைய அத தாத் மகத்வத்தை நிரசித்தார்
பஞ்சம ஷஷ்ட அதிகரணங்களில்
விசேஷித்து சேதனன் அத தாத்மகன் என்று சங்கித்து ப்ரஹ்மாதிமகத்வத்தை சாதித்து ஜீவனுடைய அத தாத் மகத்வத்தை நிரசித்தார் –
சப்தம அதிகரணத்திலே சேஸ்வர சாங்க்ய யுக்தமான ஜகத்தினுடைய அப்ரஹ்மாத் மகத்வத்தை சங்கித்து ப்ரஹ்ம உபாதாநத்வ சமர்த்தந முகேந
ப்ரஹ்மாதி மகத்வத்தை சமர்த்தித்து அப்ரஹ்மாத் மகத்வத்தை நிரசித்தார் –
அஷ்டம அதிகரணத்தில்
சமர்த்தித்த அர்த்தத்துக்கு சார்வத்ரிகத்வம் சொல்லப் பட்டது –

இப்படி ஸூத்ரகாரர் ஜகத்தினுடைய ப்ரஹ்ம அதீ நத்வ ப்ரஹ்ம கார்யத்வ ப்ரஹ்ம ஆத்மதத்வ பிரசாதந முகேந
அதாத் அதீந்ய -அதத் காரயத்வாதி நிராசனம் பண்ணி -ப்ரஹ்ம காரணத்வ ஸ்திரீ கரணம் பண்ணின அர்த்தத்தை ஆழ்வார் –
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் என்றும் ஓர் இயல்வினர் என நினைவரியவர் –
என்றும் ஓர் இயல்வொடு நின்ற வெந்திடரே-என்று
நிற்றலை யுடையவர் -இருத்தலை யுடையவர் -கிடைத்தலை யுடையவர் -திரிதலை யுடையவர்கள் இவை இல்லாதவர்கள் என்று சொல்லப் படுகிற
ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி மத் வஸ்துக்களையும் ஸ்வ அதீனமாக உடையவராய் என்றும் ஒரு படிப்பு பட்ட ஸ்வ பாவத்தை யுடையவர் என்று
நினைக்கவும் கூட அரியராய் இப்படி துர்ஜ்ஜேயராய் இருக்கும் இருப்பு என்றும் ஒருபடிப் பட்ட ஸ்வ பாவமாக யுடையராய் இருக்கிற என்னுடைய ஸ்வாமியாய்
த்ருட பிரமாணமாக வேதைக சமதிகம்யரானவரே -என்று
பிறவிருத்தி நிவ்ருத்தி மத் சர்வ வஸ்துக்களினுடையவும் ப்ரஹ்ம அதீனத்தவ ப்ரஹ்ம காரியத்த வாதிகளை சாமாநாதி கரண்யேந அருளிச் செய்கையாலே
இப்பாட்டுக்கும் சதுர்த்த பாதத்துக்கு ஐக மத்யம் ஸ்புடம் –
இங்கே எந்திடரே-என்று சாமாநாதி கரண ஸித்தமான பிராமண-தார்ட் யத்தோடே பிரதம அத்யாய அர்த்தத்தை நிகாமித்தார் ஆயிற்று –
இப்படி முதல் ஆறு பாட்டுக்கும் பிரதம அத்யாயத்துக்கும் ஐகமத்யம் வேதாந்தத்வயா சம்ப்ரதாயம் யுடையவர்களுக்கு திக் பிரதர்சனம் பண்ணப் பட்டது
அநேக உபபத்திகளை உபபாதிக்கும் அளவில் கிரந்தம் விஸ்திருமாம் என்று ஸங்க்ரஹேண உபபாதிதம் ஆயிற்று –

சாரீரக அத்யாயேந காதா ஷட்க சாமார்த்ததா
யதிராண் மத நிஷ்டாநாம் திங்மாத்ரம் தர்சிதா முதே-

இதி சாரீரக அத்யாத்யாய பிரதம காதா ஷட்கைக கண்ட்யம்-

———————————–

த்வதீய அத்யாய பிரதம பாதத்துக்கும் –ஏழாம் பாட்டுக்கும் ஐக மத்யம் உண்டாம் படி எங்கனே என்னில்
பிரதம பாதார்த்தமான பரோத்பாவித தோஷ பரிஹாரத்தை இப்பாட்டில் சொல்லுகையாலே ஐகமத்யம் உண்டு –
பரோத்பாவித தோஷ பரிஹாரம் இப்பாதார்தம் என்னும் இடத்தை -தத்ர பரை ருத்பாவி தாஸ்ச தோஷா பரிஹ்ருதா -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் தாமே அருளிச் செய்தார் –

இப்பாதம் தான் தச அதிகரணாத்மகமாய் இருக்கும் -இப்பத்து அதிகரணங்களிலும் பிரதம அதிகாரணம் தொடங்கி அடைவே –
1-சாங்க்ய ஸ்ம்ருதி விரோதத்தாலும் –
2–சதுர்முக வக்த்ருகமான யோக ஸ்ம்ருதி விரோதத்தாலும் –
3–கார்ய காரணங்களான ஜகாத் ப்ரஹ்மங்களுக்கு ம்ருத் கடாதிகளைப் போலெ சா லக்ஷண்யம் இல்லாமையாலும் –
4–அநேக தந்த்ர யுக்தமான பரமாணு ஜகத் காரணத்வ நிரூபணத்துக்கு ப்ராபல்யம் சொல்ல வேண்டுகையாலும் –
5–சித் அசித் ரூப கார்யகதமான பரிணாமித்வ-ஸூகித்வ -துக்கித்வாதி தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு பிரசங்கிக்கையாலும் –
6–கார்ய உபாதானங்களுக்கு நையாயிக மதரீத்யா பேதம் சொல்ல வேண்டுகையாலே நிமித்த உபாதான ஐக்யம் கூடாமையாலும் –
7–ஜீவன் ஸ்வ அபின்நனாகில் ஹிதா கரணாதி தோஷம் பிரசங்கிக்கையாலும் –
8–லோகத்தில் தத் தத் கார்ய ஜனக சக்தி யுக்தனுக்கும் உபகரண அபேக்ஷை காண்கையாலே சர்வ சக்தி யுக்தமான பர ப்ரஹ்மமும் உபகரணம் இல்லாத போது காரணமாக மாட்டாமையாலும் –
9–ப்ரஹ்மம் கார்யமாகப் பரிணமிக்கும் போது நிரவயமான க்ருத்ஸ்ந ப்ரஹ்மமும் கார்யமாய் பிரசங்கிக்கையாலும்
10–பரிபூர்ண ப்ரஹ்மத்துக்கு -ஸ்ருஷ்டியாலே பிரயோஜனம் இல்லாமையாலும்
ஜகத் காரணத்வம் கூடாது என்று பூர்வ பக்ஷம் -ப்ராப்தமாம் அளவில் –

1–வேத விருத்த சாங்க்ய ஸ்ம்ருதி விரோதம் பாதகம் இல்லாமையாலும்
2–யோக ஸ்ம்ருதியும் விலஷணனான சதுர்முக வக்த்ருகமாகிலும் வேத விருத்ததயா பிரமாணம் இல்லாமையாலும் –
3—கோமய வ்ருஸ்ஸிகாதி விலக்ஷண வஸ்துக்களுக்கும் கார்ய காரண பாவம் காண்கையாலே ச லக்ஷண நியமம் இல்லாமையாலும் –
4–அநேந மத நிரூபித பரமாணு காரணத்வம் கேவல தர்க்க மூலமாகையாலே வேத ப்ரதிபாத்ய ப்ரஹ்ம காரணத்வத்துக்கு பாதகம் இல்லாமையாலும் –
5–பிரளய காலத்தில் ஸூஷ்ம சித்த அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் காரணமாய் ஸ்தூல சித்த அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் காரியமாய் இருக்கையாலே
சித்த அசித் ரூப கார்யகத தோஷங்கள் விசேஷ்யமான ப்ரஹ்மத்தில் பிரசங்கியாமையாலும்
6—கார்ய உபபாதன ஐக்யம் சுருதி சத சமதிகதமாகையாலும்-
7–ப்ரஹ்மத்துக்கும் ஜீவனுக்கும் விஸிஷ்ட ஐக்யம் ஒழிய ஸ்வரூப ஐக்யம் இல்லாமையால் ஹிதா கரணாதி தோஷம் பிரசங்கியாமையாலும் –
8–ஷீராதிகளில் உபகரண நிரபேஷமாக தத் யாதி பாவேந பரிணாமம் காண்கையாலே பர ப்ரஹ்மத்துக்கு உபகரண நைரபேஷ்யேண காரணத்வம் கூடுகையாலும்
9—ஸ்ருதி சித்த அர்த்தத்திலே லௌகிக பிராமண ஸித்தார்த்த சாம்யம் பிரசங்கியாமையாலும்
10–பரிபூரணமான ஜகத் ஸ்ருஷ்ட்டி கேவல லீலார்த்தமாக கூடுகையாலும்
ப்ரஹ்ம காரண வாதத்தில் பரோத்பாவித தோஷங்கள் பிரசரிக்காமையாலே ஜகத்துக்கு ப்ரஹ்மம் காரணம் ஆகலாம் என்று சித்தாந்திக்கப் பட்டது –

இப்பாதத்தில் பத்து அதிகரணத்திலும் சொன்ன பரோத்பாவித தோஷங்களையும் தந்நிரசனத்தையும்-
சாங்க்ய ஸ்ம்ருதயா விரோதாத் விதிமத விஹதே கார்ய வைரூப்யதோ அஸ்மின் நேகார்த்தே அநேக தந்த்ரோதித விஹதிதயா தேஹ போகா வியுக்த்யா –
கார்ய உபாதான பேதாத் ஸ்வஹித விஹிதிதி காரகஸ்தோம ஹாநே க்ருத்ஸ் நாம் சாத்யூஹ பாதாத் க்ருதி விபலதயா வ்யர்த்திதம் ப்ரத்யவித்யத் –என்கிற
ஸ்ரக்தரையாலே சாராவளியிலே வேதாந்தச்சார்யார் ஸங்க்ரஹித்து அருளினார் –

இப்பாத அர்த்தமான பரோத் பாவித தோஷ பரிகாரத்தை –
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை படர் பொருள் முழுவதுமாய் அவையவை தொறும் உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே -என்று த்ருடமான ஆகாசம் தேஜஸ் ஸூ வாயு ஜாலம் பிருத்வி தொடக்கமாய் விஸ்திருதமாய் இருந்துள்ள ஸமஸ்த பதார்த்தங்களும் காரணமாய் -அந்த வஸ்துக்கள் எல்லாவற்றிலும் சரீரங்கள் தோறும் ஆத்மா பிரவேசித்து இருக்குமா போலே அந்த ப்ரவிஸ்ய நியந்தாவாய் –
அவைகளால் தர்சிக்கப் படாதவனுமாய் -சர்வ பதார்த்தங்களில் பிரத்யேக ப்ரத்யேகம் பரிபூர்ண வர்த்தியாய்-அபவ்ருஷேயத்வ நித்ய நிர்தோஷத்வாதி குணங்களால் உஜ்ஜ்வல்யத்தை யுடைய வேதைக சமதி கம்யனாய் சராசராத்மக க்ருத்ஸ்ன பிரபஞ்ச ஸம்ஹாரியான தேவன் -என்று ஆழ்வாரும் அருளிச் செய்தார் –

இதில் பிரதம த்விதீய சதுர்த்த அதிகரண யுக்தமான
சாங்க்ய யோக ஸ்ம்ருதயாத் அநு ரோதம் பண்ணி பிரம்மா காரணத்வத்தைச் சலிப்பிக்க ஒண்ணாது என்கிற அர்த்தத்தை
சுடர் மிகு சுருதியுள் உளன் -அப்ருஷேயத்வாதி உஜ்ஜவல்யாதிக்யத்தை யுடைய வேத ப்ரதிபாத்யன் -என்கிற இச்சந்தையாலே வெளியிட்டு அருளினார் –

த்ருதீய அதிகரண சா லாஷ்ண்ய நியமா பாவமும் –
திட விசும்பு எரி வளி- என்று தொடங்கி-விலக்ஷணமான ஆகாச வாயு வாதிகளுக்கும்
ப்ரஹ்ம காரணத்வம் ப்ரதிபாதிதம் ஆகையால் சித்திக்கிறது -கிஞ்ச -திட விசும்பு என்று காரணத்தவத்தால் வந்த தார்டயத்தை ஆகாசத்துக்கு அருளிச் செய்தார் –
ஆகாசாத் வாயு -என்று வாயு வாதி காரணத்வம் ஆகாசத்துக்குச் சொல்லப் பட்டது –
சாங்க்யாதிகளும்-ஆகாச வாயுக்களுக்கு சாரூப்பியம் இன்றிக்கே ஒழிந்தாலும் கார்ய காரண பாவத்தை அங்கீ கரித்தார்கள் –

அப்படியே ஜகத்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் ச லக்ஷணம் இல்லாவிடிலும் கார்ய காரண பாவம் கூடும் என்று ஸூ சிப்பித்து அருளினார் -திட விசும்பு -என்கிற இச்சந்தையாலே –

ஆனால் ஸ்ரீ பாஷ்யகாரர் சா லக்ஷண்ய நியமாபாவத்துக்கு கோமய வ்ருஸ்ஸிகாதி திருஷ்டாந்தத்தை அருளிச் செய்வான் என் என்னில்
த்ருஸ்யதே என்கிற சவ்த்ரபாதம் சாஸ்த்ர ப்ரத்யக்ஷ சித்தார்த்தங்களுக்குப் பொதுவாய் இருக்கிறது –

தர்சநாத் ஸ்ம்ருத்ஸ் ச -என்றும் -த்ருஷ்ட ஸ்ம்ருதிப்யாம் -இத்யாதி ஸூத்ரங்களில் தர்சன த்ருஷ்ட சப்தங்கள் சுருதி பரமாகக் காண்கையாலே
த்ருஸ்யதே என்கிற இப்பதான் சுருதி சித்தார்த்தத்தைக் காட்டுகிறது –
அதிகரணாந்தரே —
உப சம்ஹார தர்சனான் நேதி சேந்ந ஷீரவத்தி –என்றும் -தேவாதிவதபி லோகெ -என்கிற ஸூத்ர த்வயத்தாலே லௌகிகமான
ஷீரத்வத்தையும் வைதிகரான தேவர்களையும் ப்ரஹ்மத்துக்கு சாமக்ரீ நைரபேஷயேண காரணத்வம் கூடும் என்னும் இடத்தை த்ருஷ்டாந்தமாக ஸூத்ரகாரர் உதாஹரித்தார் –
லௌகிக த்ருஷ்டாந்தத்தில் வைதிக த்ருஷ்டாந்தம் மிகவும் அலௌகிகமான ப்ரஹ்ம விஷயத்தில் பரிக்ராஹ்யம் என்னும் இடத்தை –
தேவாதீநாம் வேதாவகத சக்தீ நாம் த்ருஷ்டாந்த தயா உபாதா நாம் ப்ரஹ்மணோ வேதாவகத ஸக்தேஸ் ஸூக க்ரஹணாயேதி பிரதிபத்தவ்யம் -என்று ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தார்
இப்படி லோக வேத சித்தங்களில் த்ருஷ்டாந்த கதநம் காண்கையாலே -திட விசும்பு -என்கிற இச் சந்தைக்கு கார்ய காரண சா லக்ஷண்ய நியமாபாவ ஸூசகத்வம் சித்தம்

பஞ்சம அதிகரண யுக்தமான சித் அசித் ரூப ஜகத்கத தோஷம் ப்ரஹ்மத்தில் பிரசங்கியாது என்கிற அர்த்தமும் –
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -என்கிற சந்தையிலே சரீரங்களில் ஜீவாத்மாவைப் போலே சகல பாதாரத்திலும் வியாபித்து
அந்யைர த்ருஸ்யனாய் இருப்பன் என்று ஸ்புடமாகச் சொல்லப் பட்டது –

ஷஷ்டி அதிகரண யுக்தமான கார்ய உபாதான ஐக்யம் –
திட விசும்பு எரி வளி நீர் நிலமிவை மிசை படர் பொருள் முழுவதுமாய் -என்று ஜகத் ப்ரஹ்மணோஸ் சாமாநாதி காரண்ய கதநத்தாலே அதி ஸ்புடமாக அறியலாம் –

சப்தம அதிகரண யுக்தமான ஹிதா கரண -அஹித கரணாதி தோஷ பிரசங்க பரிஹாரமும் –
உடல் மிசை உயிர் எனக் கரந்து -என்று ஜீவ ஈஸ்வரர்களுக்கு சரீராத்ம பாவேந பேதத்தைச் சொல்லுகையாலே ஸ்புடமாக அறியலாம் –

அஷ்டம அதிகரண ப்ரமேயமான சாமக்ரீ நைர பேஷ்யமான ப்ரஹ்ம காரணத்வம் கூடும் என்கிற இதுவும்
இவை யுண்ட சுரனே -என்கிற இடத்தால் ஸூசிதம் –அது எங்கனே என்னில் -சூரன் -என்று ஆச்சர்ய சக்தி யோகம் சொல்லப்பட்டது –
சுரருக்கு இறே காரகா பேஷை இன்றிக்கே சங்கல்ப மாத்திரத்தாலே ஸ்ருஷ்ட்டி கூடுவது –
யதா தேவா தய ஸ்வே லோகே சங்கல்ப மாத்ரேண ஸ்வ அபேக்ஷிதாநி ஸ்ருஜந்தி ததா அசவ் புருஷோத்தம க்ருத்ஸ்னம் ஜகத் சங்கல்ப மாத்ரேண ஸ்ருஜதி -என்று இறே
ஸ்ரீ பாஷ்ய காரர் தேவாதி வதபி லோகே -என்கிற ஸூத்ர வ்யாக்யாநத்திலே அருளிச் செய்தது –
ஆக -சுரர் -என்கிற இப் பதத்தாலே சாமக்ரீ நைரபேஷ்யேண காரணத்வ ப்ரசாதனம் பண்ணின அஷ்டம அதிகாரண ப்ரமேய ஸூசகம் சித்தம் –

எங்கும் பரந்து –சுடர் மிகு சுருதியுள் உளன் -என்கிற இவ்வளவாலே நவம அதிகரண யுக்தமான
யதா சுருதி அ லௌகிக அர்த்த ஸ்வீகாரம் பண்ண வேணும் -என்கிற அர்த்தம் சொல்லப் பட்டது -இவையுண்டா சுரனே -என்கிற இச்சந்தையாலே
பரிபூர்ணனுக்கும் லீலா ரஸா நிஷ்பாதந அர்த்தமாக ஜகத் ஸ்ருஷ்டியாதிகள் கூடும் என்கிற அர்த்தத்தையும் அருளிச் செய்தார் -அது எங்கனே என்னில்

அமரா நிர்ஜரா தேவாஸ் த்ரிதசா விபுதாஸ் ஸூ ரா -என்று ஸூரா சப்தத்துக்கு தேவ சப்தம் பர்யாயமாக நாம அநு சாணம் இருக்கையாலே ஸூரன்-என்றால் தேவன் என்று சொல்லிற்றாம் –

தேவ சப்தத்துக்கு -தீவு கிரீடா விஜிகீஷா வ்யவஹார த்யுதி ஸ்துதி மோத மத ஸ்வப்ந காந்தி கதிஷூ -என்று தாது பாடம் உண்டாகையாலே
க்ரீடாவத்தவமும் தேவ சப்தார்த்தம் என்னும் இடம் சம்பிரதிபன்னம்-ஆகையால் இறே வேத புருஷன் ஜகத் சம்ஹாராதிகள்
கேவல லீலா ரூபம் என்கிற கருத்தால் ஸூபால உபநிஷத்தில் -தம பரே தேவ ஏகி பவதி -என்று காரண வஸ்துவில் தேவ சப்த பிரயோகம் பண்ணினான் –

ஆகையால் இச்சந்தை பரிபூர்ணனுக்கு லீலா ரூபேண ஜகத் ஸ்ருஷ்டியாதிகள் கூடும் என்று சொல்லுகிற தசம அதிகரண அர்த்தம் என்னக் குறையில்லை –
இப்படி த்வதீய லக்ஷண பிரதம பாதத்துக்கு ஏழாம் பாட்டுக்கும் ஐகமத்யம் உண்டு என்னும் இடம் சித்தம்
————————–
தர்க்க பாதத்துக்கும் அஷ்டம நவம காதைகளுக்கும் ஐகமத்யம் யுண்டாம்படி எங்கனே என்னில் –
தர்க்க பாதத்தில் பரபஷ ப்ரதிஷேபம் பண்ணப் படுகிறது –ஸ்வ பஷ ரக்ஷணாய பரபஷா பிரதி ஷிப்யந்தே -என்று இறே இப் பாத அர்த்தத்தை ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தது
ஆகையால் பரபஷ ப்ரதிஷேப பரமான இவ் விரண்டு பாட்டுக்கும் தர்க்க பாதத்தோடு ஐக கண்ட்யம் உண்டு –

அதிகரண அஷ்டகாத்மகமாய் இருக்கிற இப் பாதத்தில்
பிரதம அதிகரணம் தொடங்கி -க்ரமமாக அப்ரஹ்மாத்மக பிரதான காரண வாதிகளான சாங்க்யர்களுடைய
மத ப்ரக்ரியையையும் பரம அணு காரண வாதிகளான வைபாஷிகருடைய மத ரீதியையும்
புத்த மதஸ்தர்களில் வைத்துக் கொண்டு பாஹ்யார்த்தா ஸ்தித்வ வாதிகளான வைபாஷிக சவ்த்ராந்திகர்களுடைய ஜகத்தினுடைய
க்ஷணிகத்தவ வாதத்தையும் ஞான மாத்ரா ஸ்திதவ வாதியான யோகாசாரனுடைய ஞானாகார வ்யதிரிக்தமான அர்த்தாகாராபாவ ப்ரதிபாதனத்தையும்
மாத்யமிகனுடைய சர்வ ஸூந்யா உபபாதன பங்கியையும் -ஜைனர்களுடைய அநைகாந்திகத்வ ப்ரதிபாதன பிரகாரத்தையும்
பாஸூபதர்களுடைய வேத விருத்தச்சார தத்வ உபபாதனத்தையும் பல படிகளாலே நிரசித்து பஞ்சம வேத பாராதாதி ப்ராசஸ்தமாய்
பரம புருஷ பிரணீதமாய் இருந்துள்ள ஸ்ரீ பாஞ்ச ராத்ரத்தினுடைய நிராங்குச ப்ராமாண்யத்தையும் ஸூத்ரகாரர் சாதித்தார்

இப்பாத அர்த்தத்தை –
பாதே அஸ்மின் காபிலஸ்தை கணபு கபி மதைர் புத்த வைபாஷிகாத் யைர் யோகாசாராபிதா நைஸ் ஸூகத மத ரஹஸ் ஸூந்யா வாத ப்ரசக்தை அர்ஹத்சித் தாந்த பக்தை பஸூபதி சமயஸ்தாயிபிஸ் சாவரோதம் ஷிப்த்வா அதோ பஞ்ச ராத்ரம் சுருதி பதமவதத் பஞ்சமாம் நாய தர்சீ -என்று ஸ்ரீ சாராவளியிலே ஸ்ரீ வேதாந்தாசார்யர் அருளிச் செய்தார் –

இம்மதங்களில் சாங்க்ய வைசேஷிக பாஸூ பதர்கள்-
கபிலாகம அநுமாந பாஸூபாத சாஸ்திரங்களை வேதங்கள் அநுக் ராஹாகங்கள்-என்று அப்ரதானம் ஆகிலும் வேதத்தையும் அங்கீ கரித்தார்கள் –
தத் வ்யதிரிக்த மதஸ்தர்கள் வேதத்தை உபஸர்ஜன ப்ரமாணமாகவும் அங்கீ கரியாதே வேத அப்ராமாண்ய ப்ரசாதன பூர்வகமாக ஸ்வ மத உபாதானம் பண்ணுவார்கள் –

இப்படி இரண்டு வர்க்கமாய் இருந்துள்ள பாஹ்ய மாதங்களில் பிரதம வர்க்கத்தை நிரசித்தமையை எட்டாம் பாட்டாலே ஸூசிப் பிக்கிறார் –

த்வதீய வர்க்கத்தை நிரசித்தமையை ஒன்பதாம் பாட்டாலே ஸூசிப் பித்து அருளுகிறார் –

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாயாவை முழுதுண்ட பரபரன் புறம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கு அறிவு இயந்து
அரன் அயன் என உலகு அளித்து அமைத்து உளனே -என்று ப்ரஹ்மாதி களாலும் அறிய ஒண்ணாத ஸ்வபாவத்தை யுடைய மூல ப்ரக்ருதி தொடக்கமான
சகல ஜகத்துக்கும் வரிஷ்ட காரணமாய் –அவற்றை எல்லாம் சம்ஹரித்து அருளின பராத்பரனான ஈஸ்வரன் ருத்ரன் அந்தர்யாமியாய்க் கொண்டு
திரிபுரத்தை சம்ஹரித்து ஜகத் சம்ஹாரமும் பண்ணுகிறான் -சதுர்முக அந்தர்யாமியாய்க் கொண்டு இவ்வருகு உள்ள ஜகத்தையும் ஸ்ருஷ்டித்து
தேவர்களுக்கு ஞான பிரதானத்தையும் பண்ணுகிறான் -என்று இப்பாட்டாலே
ஜகத்தினுடைய ப்ரஹ்மாத் மகத்துவத்தையும் ஷேத்ரஞ்ஞர்களான ப்ரஹ்ம ருத்ரர்களுடைய
ஸ்ருஷ்ட்ருத்வ ஸம்ஹ்ருத் வாதிகள் பகவத் அதீனம் என்கிற அர்த்தத்தையும் அருளிச் செய்கையாலே அப்ரஹ்மாத்மக பிரதான காரண வாதியான சாங்க்ய மத ப்ரக்ரியையும்
ருத்ர பாரம்யா உப பாதகம் பண்ணுகிற பாஸூபத ப்ரக்ரியையும் பரம அணு காரண விதியையும் நிரசித்து அருளினமை ஸூசிதம் –

அது எங்கனே என்னில்
சாங்க்ய யுக்தமான அப்ரஹ்மாத்மக பிரதான நிரசனம் –சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாய் -என்று –
பிரகிருதி மஹத் அஹங்காராதி தத்துவங்களுக்கும் பரமாத்தவே காரணம்-என்று அருளிச் செய்கையாலே ஸூசிதம் –

அவை முழுதுண்ட பரபரன்-என்று சர்வ ஜகத் ஸம்ஹாரி என்கையாலே சாணக்யா மாதத்தில் ஈஸ்வரனை
அங்கீகரியா விடில் கேவல பிரதானம் ஸ்வ தந்திரமாய்ப் பரிணமிக்கும் போது ஸ்வர்க்க வ்யதிரேகேண ப்ரதிஸர்க்க அவஸ்தை இன்றிக்கே ஒழிய
வேணும் என்று உபபாதனம் பண்ணுகிற -வ்யதிரேகாந அவஸ்தி தேஸ்சாந பேக்ஷத்வாத்-என்கிற ஸூத்ரா யுக்த தூஷணம் ஸூசிதம் –

நிரவயவமான பரம அணுக்களுக்கு ஜகத் காரகத்வம் கூடாது என்கிற நையாயிக தூஷணமும்
ப்ரக்ருதி மஹத் அஹங்காராதிகளுக்கும் ஈஸ்வரனே வரிஷ்ட காரணம் என்று அருளிச் செய்த இச்சந்தையாலே தானே ஸூசிதம் –

பாஸூபத யுக்தமான ருத்ர பாரம்ய ப்ரதிஷேதமும்-ருத்ரனுடைய சம்ஹர்த்ருத்வ திரிபுர தஹநாதிகளும்-அரன் எனப் புரமொரு மூன்று எரித்து உலகு அழித்து உளன் -என்று
பகவத் அந்தர்யாமித்வ க்ருதமாக அருளிச் செய்கையாலே வ்யக்தமாகச் சொல்லப் பட்டது -ஸூத்ரகாரர் பண்ணின ருத்ர பாரம்ய நிஷேததக்கும் உப லக்ஷணம் என்னும் கருத்தாலே
சதுர்முகனுடைய ஸ்ரஷ்ட்ருத்வ ஞான ப்ரதத்வாதிகளும்பகவத் அனுபிரவேச க்ருதம் என்று ஆழ்வார் சதுர்முக பாரம்யத்தையும் நிஷேதித்தார் –
ஸூத்ரகாரர் சதுர்முக பாரம்ய நிஷேதம் பண்ணாமைக்கு அடி மஹா மல்ல நிராசன ந்யாயேன ருத்ர பாரம்ய நிஷேதம் பண்ணவே
சதுர்முக பாரம்ய நிஷேதமும் தன்னடையே வரும் என்று கருத்து -ஆழ்வார் மந்த விஷ ந்யாயேன சதுர்முக பாரம்யத்தையும் எடுத்து நிஷேதித்தார் –
———————————–
இனி இரண்டாம் வர்க்கத்தை
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள் உளன் என இலன் என இவை குணமுடைமையில் உளன்
இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே -என்று ஈஸ்வரனுடைய இல்லாமையை சாதிக்கிற நீ உளன் என்கிற சொல்லாலே சாதித்தாயாகில் உண்மையே சித்திக்குமது ஒழிய
உன்னுடைய மதமான இல்லாமை சித்தியாது –

உளன் அலன் என்கிற சொல்லாலே இல்லாமையை சாதித்தாயாகில் லோகத்தில் இல்லை என்கிற சொல்லுக்கு ஸ்தூல அவஸ்தை போய் ஸூஷ்ம அவஸ்தா பன்னமாய்
இருக்கின்றமை அர்த்தமாம் ஒழிய உன்னபிமதமான ஸூந்யத்வம் சித்தியாது –

இப்படி உண்மையும் இன்மையும் ஆகிற குண த்வய யுக்தமாக ஸ்வ பக்ஷ பர பக்ஷ ரீத்யா
சித்திக்கையாலே அஸ்தித்வ நாஸ்தித்வ ரூப குண விசிஷ்டமாக பர ப்ரஹ்மம் சித்திக்கும்

இப்படி அநபிமதமான அர்த்தம் அங்கீ கரிக்க வேண்டுகையாலே அனந்த குண விபூதிமானாகவும் எம்பெருமானையும் அங்கீ கரிக்கலாம் என்று நிரசித்து அருளினார் –

அதில் இந்த மதங்களில்
புத்த மதத்தில் ஜகத் க்ஷணிக வாதிகளான வைபாஷிக மதஸ்தர்கள் -பார்த்திப ஆப்ய தைஜஸ வாயவீய பரம அணுக்கள்
பிருதிவி அப் தேஜோ வாயு ரூபேண சம்ஹதங்களாகும் -அதில் நின்றும் சரீர இந்த்ரிய விஷய சங்காதங்கள் உண்டாம் -அதிலே
சரீர அந்தர்வர்த்தியாய் க்ராஹகாபிமாநா ரூடமான விஞ்ஞான ஸந்தானமே ஆத்மா வென்று பேர் பெற்றுக் கிடக்கிறது என்று உபபாதித்த அர்த்தத்தை
சமுதாய உபய ஹேதுகே அபி தத பிராப்தி -என்கிற ஸூத்ரத்திலே யாதொரு பரம அணு ஹேதுக ப்ருதிவ்யாதி பூத சமுதாயம் யுண்டு
யாதொரு ப்ருதிவ்யாதி ஹேதுக பூத இந்திரியாதி ரூப சமுதாயம் யுண்டு இவ்விரண்டு சமுதாயத்தின் நின்றும் ஜகத் ஆத்மக சமுதாய உத்பத்தி கூடாது
பரம அணுக்களும் ப்ருதிவ்யாதி பூதங்களும் க்ஷணிகம் என்று அங்கீ கரிக்கையாலே ஷணத்வம் சிகளான பரம அணுக்களும் பூதங்களும் எப்போதான் சம்ஹதங்களாகப் போகிறது –
எப்போதான் ஞான விஷயீ பூதங்களாய் ஹாந உபாதா நாதி வ்யவஹாராஸ் பதமாகப் போகிறது என்று இத்யாதி யுக்தியாதிகளாலே சாரீரகத்தில் சொன்ன க்ஷணிகத்தவ வாத நிரசன க்ரமத்தை-ஆழ்வாரும் அஸ்தி நாஸ்த்ய உபய வ்யவஹார தசையிலும் ஸ்தூல ஸ்ஷ்ம உபய அவஸ்தா விசிஷ்டமாக வஸ்துவினுடைய ஸ்திரத்தவ ப்ரதிபாதகமாய் இருக்கிற
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள் -என்கிற இச்சந்தையாலே ஸூசிப்பித்து அருளினார் –

பிரதி சங்க்யா அபிரதி சங்க்யா நிரோத அப்ராப்திர விச்சேதாத் -என்கிற ஸூத்ர ஸ்ரீ பாஷ்யத்திலே
சத உத்பத்தி விநாசவ் நாம அவஸ்தாந்தராபத்திரேவ அவஸ்தாயோகி து த்ரவ்யமேகமேவ ஸ்திரமிதி காரணாத நந்யத்வம் கார்யஸ்யோப பாத யத்யபி ரஸ்மாபி –
தத் அந்நயத்வம் இத்யத்ர ப்ரதிபாதிநம் நிர்வாணஸ்ய தீபஸ்ய நிரன்வய விநாச தர்சநாத் அந்யத்ர அபி விநாசோ நிரன்வய அநுமீயத இதி சேந்ந –
கட சரவாதவ் ம்ருதாதி த்ரவ்ய அநு வ்ருத்தியுபா லப்தயா சதோ த்ரவ்யஸ்ய அவஸ்தாந்தரா பத்திரேவ விநாச இதி நிஸ்சிதே சாதி ப்ரதீபாதவ்
ஸூஷ்மத சாபத்த்யாப் யநுபலம் போப்பத்தேஸ் தத்ராபிய வஸ்தாந்தரா பத்தி கல்ப நஸ்யைவ யுக்தத்வாத் -என்று
உளன் எனில் உளன் -என்கிற இப்பாட்டுப்பாத்தியை உட்க்கொண்டு வ்யாக்யானம் செய்தமை ஸ்பஷ்டமாய் இருக்கையாலே இவ்வதிகரண பிரமேயம் இதிலே உண்டு என்னும் இடம் சித்தம் –

இனி சவ்ராந்திக மாதத்தில் ஞான உத்பத்தி காலத்திலேயே அர்த்தம் இல்லாமையால் ஞான விஷயத்வம் இல்லை என்ன ஒண்ணாது
ஞான விஷயத்துவமாவது -ஞான உத்பத்தி ஹேதுத்வம் இறே-ஆனால் சஷூராதிகளுக்கும் ஞான விஷயத்வம் வாராதோ என்னில் ஸ்வாகார சமர்ப்பணேன ஞான ஹேதுவுக்கே
ஞான விஷயத்வம் ஆகையாலே வாராது -அர்த்தமானது ஞானத்திலே ஸ்வாகாரத்தை சமர்ப்பித்து நஷ்டமாய்ப் போனாலும் ஞானகதமான நீலாத்யாகாரத்தாலே அநு மிக்கப் படும் –
ஆகையால் அர்த்த க்ருதமே ஞான வைச்சித்ர்யம் என்று உபபாதித்த பிரமேயத்திலே தர்மி நஷ்டமானால் தத் தர்மங்களுக்கு அந்யத்ர ஸங்க்ரமணம் கண்டது இல்லை –
அப்படியே அர்த்தம் நஷ்டமாய் தத் ஆகாரம் ஞானத்திலே ஸங்க்ரமிக்கிறது என்ன ஒண்ணாமையாலே ஞானத்தாலே அர்த்தம் அநு மிக்கப் படுகிறது என்ன ஒண்ணாது
என்று சாரீரிகத்திலே சொன்ன தூஷணமும்
அவனுருவம் இவ்வுருவுகள் என்று ஐந்த்ரியிகத்வத்தை விஷயங்களுக்கு அருளிச் செய்கையாலே விஷயங்கள் அநு மேயங்கள் என்று புலிக்கையாலே ஸூசிதமாயிற்று –

யோகாசார மதஸ்தர்கள் -விஞ்ஞான மாத்திரமே யுள்ளது -அர்த்தத்வம் இல்லை -அர்த்தத்துக்கும் வ்யவஹார யோக்யத்வம் ஞான ப்ரகாசாயத்தம் என்று கொள்ள வேணும் –
அந்யதா ஸ்வ பர வேத்யங்களுக்கு அதிசயம் அற்றுப் போம் -பிரகாசமான ஞானத்துக்கு நிராகாரத்துக்கு பிரகாசம் கூடாமையாலே சா காரத்வம் அங்கீ கரிக்க வேணும் –
இனி தோற்றுகிற ஆகாரம் என்று ஞானத்தினுடையது ஒழிய அர்த்தத்தினுடையது அன்று -இந்த ஆகாரத்துக்கு பஹிரவபாசம் பிரமக்ருதம் -இத்யாதி யுக்திகளாலே
அர்த்த ஸூந்யத்வ உபபாதனம் பண்ணினத்தை
ஞாதாவுக்கு விஷய வ்யவஹார ஹேதுவான ஞானத்தவம் முதலிலே நிர்விஷயமாகில் இல்லையாயே விடும் -இத்யாதி யுக்திகளாலே சாரீரகத்திலே நிரசித்தமையை –
அவனுருவம் -அவனருவம்- பரந்தே ஒழிவிலன்-என்கிற சந்தைகளாலே அர்த்த தத்வ அங்கீகார முகேன ஸூ சிப்பித்து அருளினார் –

இன்னமும் -நா பாவ உப லப்தே -என்கிற ஸூத்ரத்தில் -அர்த்த தத்வம் இன்றிக்கே ஒழிந்தால் தத் வ்யவஹார யோக்யதா பாதந ஸ்வபாவமான ஞான தத்துவமும் சித்தியாது
என்று சொன்ன யுக்தியும் – உருவம் -என்கிற பாதத்தால் சித்திக்கிறது -அது எங்கனே என்னில் -உருவம் -என்கிற சப்தம் -ஸ்தூல பதார்த்த வாசி என்னும் இடம் சம்பிரதிபன்னம்
ஐந்த்ரியிகத்தவம் உள்ளதுக்கு இறே ஸ்தூலத்வம் உள்ளது -இந்த ஐந்த்ரியிகத்வ ப்ரதிபாதனத்தாலே -அது ஒழிந்தால் தத் வ்யவஹார யோக்யதா பாவந
ஸ்வபாவமான ஞானத்தவம் இல்லாதே ஒழியும் என்கிற யுக்தியை ஸூசிப்பிக்கையாலே அது சித்திக்கிறது –
மாத்யமிக பஷ நிரஸா க்ரமம் இப்பாட்டு என்னும் இடம் சர்வ ஸம்ப்ரதிபன்னம் ஆகையாலே அதி ஸ்புடமாய் இருக்கும் –
ஜைன மதஸ்தர்கள் சொல்லுகிற ஜகத் அநைகாந்திகதவை நிராசமும் சத்தாயாகிலும் அசத்தாயாகிலும் இருக்கும் ஒழிய சத் அசத்தாய் இராது என்று –
உளன் எனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவனருவம் இவ்வருவுகள் -என்கிற பாட்டுப் பாதியாலே அருளிச் செய்கையாலே ஸூசிதம் –

ஆனால் பிள்ளை -சர்வ ஸூந்யவாதியை நிரசிக்கிறார் இப்பாட்டாலே என்றும் -ஸர்வதா அநு பபத்தே என்கிற ஸூத்ர பாஷ்யம் இப்பாட்டை யுட் கொண்டு ப்ரவ்ருத்தமாயிற்று என்றும்
மாத்யமிக மத மாத்ர நிராச பரமாக வ்யாக்யானம் செய்து அருளுகையாலே இது அவருக்கு அநபிமதம் அன்றோ என்னில்-இப்பாட்டில் பாதங்களில் மாத்யமிக நிராசனம்
நேரே தோற்றுகையாலே தாமத நிராச பரமாக யோஜித்து அருளினார்
வீடுமின் முற்றவும் ப்ரவேசத்திலே -முதல் திருவாய்மொழி பூர்வத்விக அர்த்தம் -என்று அவர் தாமே அருளிச் செய்கையாலே இந்த பிரதம தசகத்திலே தத் ஸூசநம் ஆவஸ்யகம்
காதாந்தரத்திலே வைபாஷிகாதி மத நிராசம் அநவசரக்ரஸ்தமாய் இருக்கும்

இப்பாட்டில் பாதங்களும் பூர்வ யுக்த ப்ரக்ரியை யாலே வைபாஷிகாதி மத நிராச ஸூ சகங்கள் என்னும் இடம் ஸ்வரசதா ஸம்ப்ரதிபன்னம்
வைபாஷிக மத நிராச ஸூத்ர பாஷ்யமும் இப்பாட்டில் சந்தைகளை உட் கொண்டு ப்ரவ்ருத்தம் என்னும் இடம்
பூர்வமேவ உபபாதிதம் ஆகையால் பிள்ளைக்கும் இது அபிமதமாகக் குறையில்லை –

பாஞ்ச ராத்ர ப்ராமாண்ய சமர்த்தந சாரீரக அம்சம் ப்ராசங்கிகம் ஆகையாலும்-வேத பாஞ்சராத்ரங்களுக்கு அபவ் ருஷேயத்வ நித்ய நிர்துஷ்டத்வ பரம புருஷ வக்த்ருகத்வங்கள்
நிரங்குச ப்ராமாண்ய ஹேதுக்களாய் இரண்டுக்கும் பாத்தாலே வந்த பேதம் ஒழிய பாஞ்சராத்ரத்துக்கும் வேத துல்ய ப்ராமாண்யத்தில் தட்டில்லாமை யாலே –
சுடர் மிகு ஸ்ருதியுள் உளன் -என்று அபவ் ருஷேயத்வாதி உஜ்ஜ்வல்யவத் வேத ப்ராமாண்ய ப்ரதிபாதனத்தாலே தந் ந்யாயேந
பாஞ்சராத்ர ப்ராமாண்யம் சித்திக்கும் என்கிற கருத்தாலும் ஆழ்வார் உபேக்ஷித்து அருளினார்

ஸூத்ரகாரர் தந்த்ர சாமான்ய ப்ரயுக்தமான ம்ருது ப்ரபஞ்சர்களுக்கு உள்ள காலுஷ்ய சாந்த்யர்த்தமாக வேத துல்ய ப்ராமாண்யம் ஸித்தமாய் இருக்கச் செய்தேயும்
தத் ப்ராமாண்ய சமர்த்தனம் பண்ணினார் -ஆக அஷ்டம நவம காதைகளுக்கும் தர்க்க பாதத்துக்கு ம் ஐகமத்யம் சித்தம் –

பத்தாம் பாட்டுக்கும் நிகமனப் பாட்டுக்கும் த்ருதீய துரீய பாதங்களுக்கு ஐகமத்யம் உண்டாம்படி எங்கனே என்னில் –
ஜகத்தினுடைய ப்ரஹ்ம கார்யதா சோதந பிரகாரத்தை இப்பாட்டுக்களாலே அருளிச் செய்கையாலே ஐக்யம் உண்டு –

வியத்பாத பிரதம அதிகரணத்திலே –
சாந்தோக்யத்தில் வியதுத்பத்த்ய ஸ்ரவணத்தாலே வியத்து ப்ரஹ்ம கார்யம் அன்று என்று சங்கித்து
தைத்ரீயத்தில் வியதுத் பத்தி ஸ்ருதமாகையாலும் சாந்தோக்யத்திலும் சர்வ சாகா ப்ரத்யய ந்யாயேந வியதுத் பத்தி வருகையாலும் வியத்து ப்ரஹ்ம கார்யம் என்று நிர்ணயித்தார் –

த்வதீய அதிகரணத்தில் –
அனந்தர பூர்வ காரணமான கேவல ஆகாசாதிகளில் நின்றும் அவ்யவிஹித அனந்தர வாயுவாதிகள் உத்பன்னம் ஆகிறது என்று சங்கித்து
ஆகாசாதி சரீரக பரமாத்மாவின் இடத்தில் நின்றும் வாயுவாதி உத்பத்தி ஒழிய கேவல பூர்வ தத்துவத்தில் நின்றும் வாயவாதி யுத்பத்தி இல்லை என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
தோயேந ஜீவான் வ்யஸஸர்ஜ -இத்யாதி ஸ்ருதிகளாலே ஜீவனுக்கும் உத்பத்தி யுண்டு என்று சங்கித்து
ந ஜாயதே ம்ரியதே-இத்யாதி ஸ்ருதிகளாலே நித்யத்வம் ஸ்ருதமாகையாலும் உத்பத்தி சுருதி ஞான சங்கோச விகாசத்தைச் சொல்லுகிறது ஒழிய
ஸ்வரூப அநித்யத்தைச் சொல்லாமையாலும் -ஜீவனுக்கு உத்பத்தியில்லை என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில் —
ப்ராசங்கிகமாக– யோ விஞ்ஞாநே திஷ்டன் -இத்யாதி ஸ்ருதிகளாலே ஆத்மா கேவல ஞான ஸ்வரூபன் என்று சங்கித்து –
விஞ்ஞா தாரம் இத்யாதி ஸ்ருதிகள் ஜீவனை ஞாதா வென்று ப்ரதிபாதிக்கையாலும் ஸ்வரூபத்தை ஞானம் என்கிறது ஸ்வயம் பிரகாச த்ரவ்யத்வ ப்ரயுக்தமாய்
ஞாத்ருத்வத்துக்கு பாதகம் இல்லாமையாலும் ஆத்மா ஞாதாவே என்று பரிஹரித்தார் –

பஞ்சம அதிகரணத்தில் –
ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் -ஹந்தா சேத் -இத்யாதி ஸ்ருதிகளாலே நிஷித்தமாகையாலே ஸ்வரூபம் அன்று என்று சங்கித்து
ஸ்வர்க்க மோஷாதி பல சாதன போதக சாஸ்த்ர ப்ரயோஜன சித்த்யர்த்தமாக கர்த்ருத்வம் அங்கீ கரிக்க வேண்டுகையாலும்
கர்த்ருத்வ நிஷேத சுருதி சாம்சாரிக கிரியைகள் சத்வ ரஜஸ் தமோ குண சம்சர்க்க க்ருதங்கள்-ஸ்வரூப ப்ரயுக்தங்கள் அன்று என்று
சொல்ல வந்தது ஆகையாலும் கர்த்ருத்வம் ஸ்வரூபம் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட்டி அதிகரணத்தில் –
பூர்வ அதிகரண சித்த கர்த்ருத்வம் பராதீனம் என்று நிர்ணயித்தார்

சப்தம அதிகரணத்தில் –
ஜீவன் ப்ரஹ்மத்தோடு அத்யந்த பின்னனும் அன்று –ப்ராந்தப் ப்ரஹ்மமே ஜீவனாய் நிற்கிறதும் அன்று -சத்யோ பாத்யவச் சின்ன ப்ரஹ்மமே ஜீவனாய் இருக்கிறதும் அன்று –
வஸ்துதோ ப்ரஹ்ம அபின்னமாய் ப்ரஹ்மாம்சம் ஆகையாலே அத்யந்த பேதம் இன்றிக்கே இருக்கிறான் ஜீவன் என்று ஜீவ ஸ்வரூபத்தை நிர்ணயித்தார் –

துரீய பாத பிரதம அதிகரணத்தில் –
ஜீவ உபகாரணங்களான இந்திரியங்களுக்கு பிரளய கால அவஸ்தாந பிரதி பாதந ஸ்ருதியாலே சித்தம் என்று சங்கித்து –
அந்த சுருதி சர்வஞ்ஞனான ஜகத் kaarana ப்ரஹ்மத்தை ப்ரதிபாதிக்கிறது ஒழிய இந்திரியங்களை சொன்னது அல்லாமையாலும்
சுருதியந்தரத்தில் இந்திரிய உத்பத்தி கண்ட யுக்தமாகையாலும் நித்யத்வம் கூடாது என்று பரிஹரித்தார் –
த்வதீய அதிகரணத்தில் –
ப்ராசங்கிக்கமாக இந்த்ரியங்களினுடைய சங்க்யா நிர்ணயம் பண்ணினார் –
த்ருதீய அதிகரணத்தில் –
இந்திரியங்கள் விபுக்களாக சுருதி பிரபன்னங்கள் என்று சங்கித்து உத்க்ரந்தி ஸ்ரவணத்தாலே-விபுக்கள் அல்ல அணு பரிமாணங்கள் என்று நிர்ணயித்தார் –
சதுர்த்த அதிகரணத்தில் –
ப்ராசங்கிகமாகவே முக்கிய பிராணன் கேவல வாயு மாத்ரமும் உசுவாச நிச்வாசாதி கிரியையும் அன்று -வாயுவே அவஸ்தாந்த்ர பன்னமாய்
பிராணன் என்று பேர் பெற்றுக் கிடக்கிறது என்று நிர்ணயித்தார் –
பஞ்சம அதிகரணத்தில்
உதக்ரந்யாதி ஸ்ரவணத்தாலே பிராணனுக்கும் விபுத்வம் கூடாது -அணுத்துவமே முக்கிய பிராண பரிமாணம் என்று நிர்ணயித்தார் –
ஷஷ்ட்டி அதிகரணத்தில் –
ஜீவனுக்கும் அக்னியாதி தேவதைகளுக்கும் இந்த்ரியாத் யதிஷ்டானம் ஸ்வா தந்தர்யேண உண்டு என்று சங்கித்து
பரமாத்மா அதீன அதிஷ்டானமே அவர்களுக்கு உள்ளது என்று நிர்ணயித்தார் –
சப்தம அதிகரணத்தில்
பிராணசப்த நிர்திஷ்டங்கள் எல்லாம் இந்திரியங்கள் என்று சங்கித்து ஸ்ரேஷ்ட பிராண வ்யதிரிக்த ப்ராணன்கள் இந்திரியங்கள் என்று நிர்ணயித்தார்
அஷ்டம அதிகரணத்தில் –
பிரபஞ்ச வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி ஹிரண்ய கர்ப்ப கர்த்ருகமாக வேணும் என்று சங்கித்து அதுவும் தச்சரீரக பரமாத்ம கர்த்ருகம் என்று நிர்ணயித்தார் –

இப்படி பாத த்வயத்தாலே நிர்ணயித்த அர்த்தத்தை
பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன் பரந்த வண்டம் இது என நில விசும்பு ஒழிவறக் கரந்த சில இடம்தோறும் இடம் திகழ் பொருள்தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்டா கரனே -என்று -விஸ்திருதமாய் சைத்திய ஸ்வபாவமான சமுத்திர ஜல பரமாணுக்கள் தோறும் பரிசமாப்ய வர்த்தியாய்
விஸ்திருதமான அண்டம் என்னும்படியாய் பூமியாகாச விபாகம் இன்றிக்கே அத்யல்ப சரீரங்களிலும் அந்த அந்த சரீரங்களில் ஸ்வயம் ப்ரகாசத்வேந மிளிர்ந்து கொண்டு
இரா நின்றுள்ள ஆத்ம வஸ்துக்களிலும் அந்யைர த்ருஷ்யனாய் சர்வ பதார்த்தங்களில் ப்ரத்யேகம் பரிசமாப்ய வர்த்தியாய்
இந்த ஜகத்தை ஸ்வோதரஸ்தம் ஆக்கிக் கொண்டு இருக்கிறான் த்ருட பிராமண வேதைக சமதி கம்யனே -என்றும் –
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல் நிர நிறை யாயிரத்து இவை பத்தும் வீடே
என்று -த்ருடமான ஆகாச தேஜோ வாயு ஜல ப்ருத்வீ கதமான வரிஷ்ட சப்த தாஹ கத்வ கமன சாமர்த்திய சைத்திய ஷமா ரூப ஜெகதாகாரனாய் இருக்கிற
சர்வ ஸ்மாத் பிறனுடைய திருவடிகளில் ஆழ்வார் அருளிச் செய்த சப்தார்த்த புஷ்கல்யத்தை யுடைய ஆயிரத்தில் வைத்துக் கொண்டு இத்திருவாய் மொழி மோக்ஷ ப்ரதம்-என்றும்
ஆழ்வார் இதில் ஒன்றரைப் பாட்டாலே ஜகத்தினுடைய ப்ரஹ்ம கார்யதா சோதந பிரகாரத்தை வெளியிட்டு அருளி மேல் பாட்டுப் பாதியாலே –
வீடுமின் முற்றத்தாலே வெளியிடப்படுகிற உத்தர தவிகார்த்தமான பரதவ ஞானத்தினுடைய மோக்ஷ சாதனத்வத்தையும் உப ஷேபித்து அருளுகிறார் ஆதல் –
பூர்வ த்விக ப்ரதிபாத்யமான பரத்வ விஷயம் இத்திருவாய் மொழி என்று பிரதிபத் யார்த்தத்தை புத்தி சவ்கர்ய அர்த்தமாக ஸங்க்ரஹேண அருளிச் செய்கிறார் ஆதல் –

இனி வியத்பாத பிரதம அதிகரண நிர்ணீதாகா சோத்பத்தி –
நில விசும்பு ஒழிவறஎன்று பிருதிவ்யாதிகள் போலே ஆகாசமும் ப்ரஹ்ம கார்யம் என்று அருளிச் செய்கையாலே சித்திக்கிறது –
இன்னமும் -ஆகாசஸ் ஸம்பூத என்கிற தைத்த்ரீய ஸ்ருதியிலே ஆகாச உத்பத்தி சொல்லி இருக்கையாலே
சாந்தோக்யத்திலும் வியதுத்பத்தி சர்வ சாகா ப்ரத்யய ந்யாயத்தாலே வரும் என்கிற அர்த்தமும்
பூமி ஆகாசம் என்கிற விசேஷம் இன்றிக்கே பூமி போலே ஆகாசமும் ப்ரஹ்ம கார்யம் என்று சொல்லுகிற இச்சந்தையாலே ஸூசிதமாகிறது –
அது எங்கனே என்னில்-ஆகாச உத்பத்தி கதனத்தாலே தைத்ரீய ஸ்ருத்யர்த்தம் தோற்றி அம்முகேந வியதுத் உத்பத்திய வசன சுருதி நிர்வாகமும் தோற்றுகையாலே ஸூசிதம் –

ஆக இவை எல்லாவற்றாலும் இச்சந்தை பிரதம அதிகரணார்த்தம் என்னக் குறையில்லை –

த்விதீய அதிகரண யுக்தமான
அனந்தர பூர்வ காரணமான கேவல ஆகாசாதிகளில் நின்றும் அவ்யஹித அனந்தர வாயுவாதிகள் உத்பன்னம் ஆகமாட்டாது என்று நிர்ணயித்த அர்த்தமும்
சர்வ தத்துவங்களுக்கும் ப்ரஹ்ம கார்யத்வ ப்ரதிபாதனம் பண்ணுகிற -பரந்த தண் பரவையுள் -என்று தொடங்கி முழுக்க இப்பாட்டாலே அறிவிப்பித்தமை அதி ஸ்புடமாய் இருக்கிறது –

த்ருதீய அதிகரண யுக்தமான ஜீவ உத்பத்தி நிஷேதமும் –
இடம் திகழ் பொருள்தொறும் -என்கிற இச்சந்தையாலே ஸூசிதம் -அது எங்கனே என்னில் -இடம் திகழ் -என்று ஆத்ம தத்துவத்துக்கு வ்யாபகத்வம் சொல்லுகையாலே
வியாப்பிய பதார்த்தங்களினாலே நசிப்பிக்கப் படாது என்று சித்திக்கும் -இவ்வர்த்தத்தைப் பரமபுருஷன் தானே –
அவிநாசிது தத் வித்தி யேந ஸர்வமிதம் தத்தம் -விநாசமவ்ய யஸ்யாஸ்ய ந கஸ்ச்சித் கர்த்துமர்ஹதி-என்று வெளியிட்டு அருளினான் –
இந்த ஸ்லோகத்தை –ஆத்ம நஸ்த்வ விநாசித்வம் கதமித்ய த்ராஹ– அவிநாசிது-இதி–தத் ஆத்ம தத்வம் அவிநாசீதி வித்தி –
யேந -ஆத்ம தத்வேந சேதநேந தத் வ்யதிரிக்தமித்தம் அசேதன தத்வம் சர்வம் தத்தம் வ்யாப்தம் -வ்யாபகத் வேந நிரதிசய ஸூஷ்மதவாத்
ஆத்மநோ விநாசா நர்ஹஸ்ய தத் வ்யதிரிக்தோ ந கஸ்ச்சித் பதார்த்தோ விநாசம் கர்த்துமர்ஹதி -தத் வ்யாப்யதயா தஸ்மாத் ஸ்தூலத்வாத்
நாஸகம் ஹி சஸ்த்ர ஜலாக்னி வாய்வாதிகம் நாஸ்யம் வ்யாப்ய சிதிலீ கரோதி முத் கராதயோ அபி ஹி வேக வத் சம்யோகேந
வாயுமுத்பாத்ய தத் த்வாரேண நாசாயந்தி அத ஆத்ம தத்வம் அவிநாசி -என்று ஸ்ரீ பாஷ்யகாரரும் வ்யாக்யானம் செய்து அருளினார் –
இப்படி ஜீவனுடைய வ்யாபகத்வ கதனத்தாலே ஜீவனுடைய நித்யத்வம் சித்திக்கையால் த்ருதீய அதிகரண ப்ரமேயம் இச்சந்தை என்னக் குறையில்லை –
சதுர்த்த அதிகரண நிர்ணீதமான ஜீவனுடைய ஞாத்ருத்வமும் –
திகழ் பொருள் தொறும்-என்கிற சந்தையாலே தானே ஸூசிதம் ஆகலாம் -அது எங்கனே என்னில் -திகழ் பொருள் -என்கிற இதுக்கு -ஞானத்தவ ஆஸ்ரயமான வஸ்து என்று
இறே அர்த்தம் -இனி சாஷாத் பரம்பரவ் தாஸீந்யேந ஞானத்தவ ஆஸ்ரயம் என்னும் போது-ஞாத்ருத்வம் ஸ்வரூபம் என்று சித்திக்கும் –
ஆனால் ஞாதா என்று அருளிச் செய்யாதே திகழ் பொருள் -என்று ஞான த்ரவ்யம் என்று அருளிச் செய்கைக்கு அடி என் என்னில்
ஞாதா என்றால் ஞான குணகத்வ மாத்ரம் தோற்றும் ஒழிய ஞான ஸ்வரூபத்வம் தோற்றாமையாலே -உபயமும் தோற்றுகைக்காக இங்கனே அருளிச் செய்தாராம் அத்தனை –
ஞான பதத்துக்கு உபய பரத்வம் உண்டு என்னும் இடம் ஜென்மாதி கரணத்தில்-சத்யம் ஞானம் -என்கிற சுருதி வ்யாக்யான ஸ்ருத பிரகாசிகையிலே
ஸூதீக்களுக்கு ஸூ வ்யக்தமாக அறியலாம் -ஞாதா என்ற போதே கர்த்தா போக்தா என்னும் இடம் சித்தம்
தத்வ த்ரயம் -29-என்று ஜகத் குருவான பிள்ளை அருளிச் செய்த க்ரமத்திலே ஞாத்ருத்வ கதனத்தாலே கர்த்ருத்வமும் ஸூசிதம் ஆகையால்
ஜீவ கர்த்ருத்வ ப்ரசாதனம் பண்ணின பஞ்சம அதிகரண பிரமேயமும் –
திகழ் பொருள் தொறும் -என்கிற இச்சந்தையாலே ஸூசிதமாகிறது
ஷஷ்ட்டி அதிகரண யுக்தமான ஜீவனுடைய பகவத் அதீன கர்த்ருத்வ ப்ரசாதனமும்
திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் -என்று ஜீவனுடைய பர அதீன உபயுக்த -அந்த பிரவேச உப லஷிதா நியமன கதனத்தாலே ஸூசிதமாகிறது –
ஜீவனுடைய கர்த்ருத்வம் பர அதீனம் ஆகிறது -பரமாத்மாவினுடைய அந்த ப்ரவிஸ்ய நியமனத்தாலே என்று ஹ்ருதீ கரித்து
பராத்து தச் ஸ்ருதே -என்கிற ஸூத்ரத்தத்தில் உள்ள சுருதி பதத்துக்கு அந்த ப்ரவிஷ்டா இத்யாதி ஸ்ருதிகளை ஸ்ரீ பாஷ்யகாரர் விஷயமாக உதாஹரித்து அருளினார் –

சப்தம அதிகரண யுக்தமான
ஜீவ வஸ்து ப்ரஹ்ம விசேஷண த்வேந ப்ரஹ்ம பின்னமுமாய் ஸ்வ நிஷ்டம் இன்றிக்கே ஒழிகையாலே அத்யந்த பின்னமும் அன்றிக்கே இருக்கும் என்கிற பொருள்
இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் என்று வ்யாப்ய வியாபக பாவ ரூப சரீராத்மா பாவ ப்ரதிபாதநத்தினாலே ஸ்புடமாக அறியலாம்-
துரீய பாத த்ருதீய சதுர்த்த பஞ்சம ஷஷ்ட சப்த அதிகரணங்களில் இந்திரிய சங்க்யாதி நிரூபணம் ப்ரசக்த அநு பிரசக்தமாகையாலே அத்தை உபேக்ஷித்து
அவசிஷ்ட பிரதம அஷ்டம அதிகரண நிரூபிதார்த்தங்களை வெளியிட்டு அருளுகிறார் –

பிரதம அதிகரணத்தில் –
இந்த்ரியங்களுடைய நித்யத்வம் இந்திரியங்களுக்கு பிரளய கால அவஸ்தாந ப்ரதிபாதந ஸ்ருதியாலே என்று சங்கித்து அந்த சுருதி பரமாத்மாவினுடைய
பிரளய கால அவஸ்தையைச் சொல்ல வந்தது ஒழிய இந்த்ரியங்களுடைய நித்யத்வத்தைச் சொல்ல வந்தது அன்று -என்று நிர்ணயித்த அர்த்தம் –
பரமாத்மாவினுடைய பிரளய கால ஸ்திதியை ப்ரதிபாதிக்கிற -இவையுண்ட கரனே –என்கிற சந்தையாலே சொல்லப்பட்டது என்று அறியலாம் –

அஷ்டம அதிகரணத்தில் –
வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி கர்த்தா சதுர்முகன் அல்லன்-சமஷ்டி ஸ்ருஷ்ட்டி கர்த்தாவான பரமாத்மாவே என்று நிர்ணயித்த அர்த்தமும் –
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற பரன்-என்று வ்யஷ்டி சமஷ்டி ஸாதாரணயேந
சர்வ ஜகாத்தும் பிரம்மா கார்யம் என்கிற இச்சந்தையாலே அதி ஸ்புடமாக அறியலாம்

ஆனால் இச்சந்தைகளில் அநு ப்ரவேச கதனத்தாலும் சாமாநாதி கரண்ய நிர்தேசத்தாலும் சரீராத்மா பாவம் தோற்றும் ஒழிய கார்ய காரண பாவம்
தோற்றாமையால் இச்சந்தைகள் வியதாதிகளினுடைய ப்ரஹ்ம கார்யதா பிரகார சோதந பர அதிகரணங்களுக்கு ஸங்க்ராஹங்கள் ஆனபடி எங்கனே என்னில்-
அநேந ஜீவேந ஆத்மநா அநு பிரவிஸ்ய -என்றும் -தத் ஸ்ருஷ்வா ததேவ அநு ப்ராவிஸத்-இத்யாதி ஸ்ருதிகளில் அநு பிரவேச பூர்வகமாக ஸ்ருஷ்ட்டி உக்தையாகையாலே
கேவல ஸ்ருஷ்ட்டி ப்ரதிபாதந ஸ்தலங்களில் அநு பிரவேசமும் கேவல அநு பிரவேச ப்ரதிபாதன ஸ்தலங்களில் ஸ்ருஷ்டியும் சர்வ சாகா ப்ரத்யய நியாயத்தாலே
விவஷிதம் என்று ஸ்ரீ பாஷ்யாதிகளில் நீர்ணீதம் ஆகையாலே அநு பிரவேச உக்தயா ஸ்ருஷ்டியும் சித்தம் என்று இச்சந்தைகள் ஸங்க்ராஹகங்கள் ஆகலாம் –
ஆகையாலே பத்தாம் பாட்டுக்கும் நிகமன பாட்டுக்கும் த்வதீய லேசான த்ருதீய துரிய பாதங்களோடே ஐகமத்யம் உண்டு என்னும் இடம் சித்தம் –

இப்படி பூர்வ த்விக ப்ரதிபாத்யமான ப்ரஹ்ம காரணத்வ –அபாத்யத்வங்களை –
ஆழ்வாரும் முதல் திருவாய் மொழியாலே வெளியிட்டு அருளினமை வேதாந்த த்வய சம்ப்ரதாயம் யுடையவர்க்குத் தெளியலாம் படி திங்மாத்ரேண தர்சித்தம் ஆயிற்று –

—————————–

சாரீரக உத்தர த்விகத்துக்கும் வீடுமின் முற்றத்துக்கும் ஐகமதியம் உண்டாம் படி எங்கனே என்னில்
உத்தர த்விக்கத்தில் ப்ரதிபாத்யமான சாதன தத் பலங்களை இத்திருவாய் மொழியிலும் பர உபதேச முகேந வெளியிட்டு அருளுகையாலே ஐகமத்யம் உண்டு –
ஆனால் நம்பிள்ளை இத்திருவாய் மொழி த்ருதீய அத்யாய ப்ரதிபாத்யமான உபாசன பரம் என்று அருளிச் செய்தாரே ஒழிய -த்ருதீய துர்ய அத்யாய ப்ரதிபாத்யமான
உபாய உபேய பரம் என்று அருளிச் செய்யாது ஒழிவான் என் என்னில் -உபாசன சப்தம் பலத்துக்கும் பர தரிசன அர்த்தம் என்று அருளிச் செய்தார் –
யத்வா-இந்த உபாசன சப்தம் லக்ஷணையாலே ஞான சாமான்யத்தைச் சொல்லுகிறது – மோக்ஷ சாதநீ பூத உபாயமும் பல ரூப ப்ரஹ்ம அனுபவமும்
ஞான அவஸ்தா விசேஷம் ஆகையாலே இரண்டையும் இச்சப்தத்தாலே ஸங்க்ரஹித்து அருளினார் என்றும் காணலாம் –
இவ்விரண்டும் ஞான அவஸ்தா விசேஷம் என்னும் இடத்தை ரஹஸ்யத்ரய ஸாரத்திலே-இவர்களுக்கு கர்த்தவ்யமான உபாயமாவது -ஒரு ஞான விகாச விசேஷம் -இத்தாலே
சாத்யமாய் பிராப்தி ரூபமான உபேயமாவதும் ஒரு ஞான விகாச விசேஷம் -இவற்றில் உபாயமாகிற ஞான விகாச விசேஷம் -கரண சாபேஷமாய் -சாஸ்த்ர விஹிதமுமாய் –
ஸத்யத்வாதிகளான ஸ்வரூப நிரூபிக்க தர்மங்களோடே கூடின அவ்வோ வித்யா விசேஷ பிரதிநியத குணாதிகளினாலே நித்ய ப்ரஹ்ம விஷயமுமாய் இருக்கும் –
உபேயமாகிற ஞான விகாச விஷயம் கரண நிரபேஷமுமாய்-ஸ்வபாவ பிராப்தமுமாய் குண விபூதியாதிகள் எல்லாவற்றாலும் பரிபூர்ண ப்ரஹ்ம விஷயமுமாய் இருக்கும் –
என்று உபாய விபாக அதிகாரத்தில் ஸ்ரீ வேதாந்தாசார்யர் அருளிச் செய்தார் –

அதவா -வீடு செய்ம்மினே -என்று தொடங்கி-திண் கழல் சென்றே -என்னும் அளவும் மோக்ஷ உபாயத்தை பாட்டுக்கள் தோறும் வாக்யார்த்த தயா பிரதானமாகவும்
ததங்க தத் பலங்களை பதார்த்த தயா அப்ரதானமாகவும் ஆழ்வாரும் அருளிச் செய்கையாலே -ஸ்வர்க்க காமோ யஜேத-என்கிற விதத்தில் ஸ்வர்க்க சாதனம்
வாக்யார்த்த தயா பிரதானமாய் சுவர்க்கம் பதார்த்த தயா அப்ரதானமாய் இருக்கிறதைப் பற்ற இவ்வாக்கியத்தை ஜ்யோதிஷ்டோம ரூப சாதன பரம் என்று
அபியுக்தர்கள் வ்யவஹாரிக்கும் க்ரமத்திலே ஸ்ரீ நம்பிள்ளையும் வ்யவஹாரித்து அருளினார் –
ஆகையாலே பல ப்ரதிபாதனம் உபஸர்ஜனதயா ஆழ்வார் அருளிச் செய்தமை நம்பிள்ளைக்கும் விவஷிதமாகையாலே உபாசன பரம் வீடுமின் முற்றவும் -என்கிற
ஸ்ரீ ஸூக்தி யோடு உபாய உபேய ப்ரதிபாதக சாரீரக உத்தர த்விக சமா நார்த்தம் இத்திருவாய் மொழி என்கிற பிரமேயத்துக்கு விரோதம் இல்லை –

இதில் முதல் பாட்டு -த்ருதீய லக்ஷண பிரதம பாதார்த்தமாகவும்
இரண்டாம் பாட்டும் மூன்றாம் பாட்டும் -த்வதீய பாதார்த்தமாகவும்
நாலாம் பாட்டு தொடங்கி மேல் நாலு பாட்டுக்களும் குண உப சம்ஹார பாதார்த்தமாகவும்
எட்டாம் பாட்டு அங்க பாதார்த்தமாகவும்
இப்படி முதல் எட்டு பாட்டுக்களும் த்ருதீய அத்யாயர்த்தமாகவும்
ஒன்பதாம் பாட்டும் பத்தாம் பாட்டும் சதுர்த்த அத்யாய பாத சதுஷ்ட்ய அர்த்தமாகவும்
இப்படி பத்து பாட்டுக்களும் உத்தர த்விக அர்த்தமாய் இருக்கும் –
நிகமப் பாட்டு இத்திருவாய் மொழியில் ப்ரதிபாதித்தமான பகவத் அபிகம்யத்வ ப்ராப்யத்வ அனுப்பந்தி ஸுலப்யாதி குணங்களுக்கு ஸங்க்ரஹமாய் இருக்கும் –

இதில் வைராக்ய பாத பிரதம அதிகரணத்தில் –
ஜீவன் ஸூக்ருத கர்மா பல அனுபவார்த்தம் தேஹாத் தேஹாந்த்ர பிரவேசம் பண்ணும் போது அவ்விடங்களில் தேஹாரம்பக பூத ஸூஷ்மங்கள் லபிக்கையாலே
பூர்வ தேஹஸ்த பூத ஸூஷ்ம சம்பரிஷ்வக்தனாய் போக வேண்டினமை இல்லையென்று சங்கித்து பஞ்சாக்கினி வித்யோக்த ப்ரக்ரியையாலே
பூர்வ தேஹஸ்த பூத ஸூஷ்ம சம்பரிஷ்வக்தனாய் தேஹாத் தேஹாந்தர பிரவேசம் பண்ணுகிறான் என்று நிர்ணயித்தார் –
இந்த அதிகரணத்தில் காதா சித்கமாயாகிலும் பூத ஸூஷ்ம பரிஷ்வங்கம் இன்றிக்கே நிர்த்துக்கனாய் இருக்கைக்கும் அவகாசம் இல்லை என்று
வைராக்ய ஜனன அர்த்தமாக யாவன் மோக்ஷம் ப்ரக்ருதி சம்பந்தம் அவர்ஜனீயம் என்று நிஷ்க்ருஷ்டமாயிற்று –
கிஞ்ச -பாக்தம் வா அனாத்மா வித்த்வாத்-என்கிற ஸூத் ரத்தாலே தேவ ப்ருத்ய பாவத்தை அவலம்பித்து தத் ப்ரயுக்த கிலேச கரம்பிதமாய் இருக்கிற
ஸ்வர்க்க போக அனுபவத்தினுடைய ஷயிஷ்ணுத்வம் சாதிசயத்வமும் ஆவிஷ்க்ருதம்-
த்விதீய அதிகரணத்தில் –
ஸ்வர்க்க அனுபவ அனந்தரம் ஜீவனானவன் க்ருத்ஸ்ன கர்மபலமும் புக்தமாகையாலே கர்ம சம்பந்தம் அற்றே இழிகிறான் என்று சங்கித்து –
ரமணீய சரணர்கள் ரமணீய யோனியை அடைவர்கள் -கபூய சரணர்கள் குத்ஸித யோனியை அடைவார்கள் என்று சுருதி சொல்லுகையாலே
கர்ம சம்பந்தம் உடையனாயே இழிகிறான் என்று நிர்ணயித்தார் -இதிலும் ஸூஷ்ம தேஹத்துக்கும் காரணதயா சகல சம்சார நிதான கர்ம சம்பந்தம்
முக்தி பர்யந்தம் அனுவ்ருத்தமாய் இருக்கிறது என்று சம்சார தோஷம் யுக்தமாயிற்று –
த்ருதீய அதிகரணத்தில் –
அநிஷ்ட அதிகாரிகளான பாப கர்மாக்களுக்கும் சந்த்ர பிராப்தி உண்டு என்று சங்கித்து இஷ்டா பூர்த்தாதி சத்கர்ம ரஹிதர்களுக்கு
பித்ருயான மார்க்கத்தாலே கைமணம் இல்லாமையால் சந்த்ர பிராப்தி இல்லை என்று நிர்ணயித்தார் -இதிலும் -க்ராமம் கச்சன் வ்ருஷ மூலான் யுபசர்ப்பதி-என்ற
நியாயத்தாலே யாகிலும் ஸ்வர்க்க பிராப்தி இல்லை -யமசத நத்திலேயும் ரவ்ரவாதி நரகங்களிலும் மிகவும் யாதநாநுபவமும் கீடாதி ஜென்ம பிராப்தியும் யுண்டு
என்று சம்சார தோஷம் வ்யக்தமாகக் கீர்த்திதமாயிற்று –
சதுர்த்த அதிகரணத்தில் –
சுருதி ஸித்தமான ஆகாசாதி பாவம் ஜீவனுக்கு தேவ மனுஷ்யாதி பாவம் போலே தச் சரீரத்வ ரூபம் என்று சங்கித்து
ஆகாசாதி ப்ராப்தியிலே ஸூக துக்க அனுபவம் இல்லாமையால் தத் சாம்யா பத்தி ஒழிய தச் சரீரத்வம் இல்லை என்று நிர்ணயித்தார் –
இதிலும் ஸ்வர்க்க அவரோஹணம் பண்ணுமவர்களுக்கு ஆகாசாதி பாவ ஸ்ரவணத்தாலே தத் அபிமானி தேவதைகளை போலே ஆகாசாதி சரீரத்வ ப்ரயுக்தமான
சில திவ்ய போகங்கள் உண்டு என்கிற சங்கா நிவ்ருத்தி யர்த்தமாக ஆகாசாதி சம்ச்லேஷ மாத்திரமே யுள்ளது என்று சொல்லுகையாலே தோஷ கீர்த்தனம் ஸ்புடம் –
பஞ்சம அதிகரணத்தில் –
ஆகாச வாயு தூமா பிரமேக வர்ஷா பிராப்தி யுண்டாம் போது அவ்வோ இடங்களிலே அதி சீக்கிரமாக ஜீவனுக்கு கைமணம் உண்டு என்கிற நியமம் இல்லை –
தத் தேது இல்லாமையாலே என்று சங்கித்து உத்தர த்ர வ்ரீஹ்யாதி ப்ராப்தியிலே -அதோ வை துர் நிஷ் ப்ரபதரம் -என்று விசேஷித்து க்ருச்ச்ரா நிஷ் க்ரமணம்
சொல்லுகையாலே ஆகாசாதி ப்ராப்தியிலே அசிர நிஷ் க்ரமணமே உள்ளது என்று நிர்ணயித்தார் –
இதிலும் ஆகாசாத் யவஸ்தாந விளம்ப நியம நிரசன வ்யாஜேந வ்ரீஹ் யாதிகளில் ஸூக போகம் அற்று அசிராவஸ்தாந ரூப தோஷம் த்ருடமாயிற்று –
ஷஷ்ட்டி அதிகரணத்தில் –
ஸ்வர்க்க அவரோஹணம் பண்ணுகிற ஜீவர்கள் வ்ரீஹ்யாதி சரீரதயா ஜனிக்கிறார்கள் என்று சங்கித்து வ்ரீஹ்யாதி ஜென்ம ஹேது பூத கர்ம விசேஷம்
அஸ்ருதமாகையாலே அந்நிய ஜீவ அதிஷ்டித வ்ரீஹ்யாதிகளில் சம்ச்லேஷ மாத்திரமே யுள்ளது என்று நிர்ணயித்தார் –
இதிலும் வ்ரீஹ் யாதி பாவேந ஜனனம் என்னும் போது தல்லவந பயந்த மாத்திரமே துக்கம் யுக்தமாம் -அங்கன் அன்றிக்கே சம்ச்லேஷ மாத்திரம் என்று நிர்ணயித்த இத்தாலே
சோஷன குஸூலா வஸ்தாபந அவஹநந பலீ கரண பாக்க பஷணாதி தசைகளிலும் அனுவ்ருத்தி சித்திக்கையாலும் பஷண விஷயம் அன்றிக்கே இருக்கிற
வ்ரீஹ் யாதிகளிலும் பரிணாம பரம்பரையா சம்ச்லேஷம் சித்திக்கையாலும் தோஷ கீர்த்தனம் அதி ஸ்புடம் –

இப்படி சாரீரகத்தில் ஷட் அதிகரணியான இப்பாதத்தாலே பகவத் ஆஸ்ரயண உபயுக்த வைராக்ய சித்த்யர்த்தமாக நிரூபித்த அர்த்தத்தை -ஆழ்வார் –
வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர் வீடுடையானிடை வீடு செய்ம்மினே -என்று ஐஹிக ஆமுஷ்மிக சகல விஷயங்களையும் அதி ஹேயம் என்று
அத்யவசித்து அதில் போக்யதா புத்தியை விடுங்கோள்-
இப்படி விட்டுப் பரமபத நிலயனான சர்வேஸ்வரன் விஷயத்தில் ஆத்ம சமர்ப்பணம் பண்ணுங்கோள் -என்று பரப்பற்று ஸூக்ரஹமாகவும் ஸூ வ்யக்தமாகவும்
மந்த மதிகளுக்கும் தெளியலாம்படி ஒரு சொல்லாலே அருளிச் செய்தார் –
இனி ஸூத்ரகாரர் பரக்கத் சொன்னத்தை இவர் ஒரு சொல்லாலே அருளிச் செய்வான் என் என்னில்-ஏ பாவம் பரமே -என்கிறபடி
நிரந்தர பகவத் அனுபவம் பண்ணுகிற இவருக்குப் பறக்க சம்சார தோஷ கீர்த்தனமும் அஸஹ்யமாய்த் தோற்றுகையாலும்
நல்குரவும் செல்வமும் என்கிற திருவாய் மொழிப்படி சர்வ பதார்த்தங்களும் ப்ரஹ்மாத்மகதயா போக்யமாய்த் தோற்றச் செய்தேயும் சம்சாரிகள் பக்கல் கிருபையால்
அவர்கள் பாக அனுகுணமாகத் தமக்குத் தோற்றாத தோஷத்தையும் சொல்ல வந்தவராகையாலும் -முற்றவும் விடுமின் -என்று அக்ராமயமாக
பஹ்வதி கரண சித்தார்த்தையும் சாதுர்யத்தாலே அருளிச் செய்ய வந்தவராகையாலும் இப்படி ஒரு சொல்லாலே வெளியிட்டு அருளினார் –
ஆனால் இப்பாத அர்த்தமான வைராக்ய மாத்ரத்தை விதிக்க வேணும் ஒழிய பாதாந்த்ர அர்த்தமான உபாய ஸ்வீகாரத்தை விதிப்பான் என் என்னில்
பக்தி உபாயத்துக்கு விஷய வைராக்கியமும் பிரபத்தி யுபாயத்துக்கு உபாயாந்தர வைராக்கியமும் அங்கம் இறே –
இதுக்கு உள்ள அங்க அங்கி பாவத்தை வீடு செய்து -என்று ல்யப்பாலே அருளிச் செய்தார் –
ஆகையால் இப்பாட்டுக்கும் இப்பாதத்துக்கும் ஐகமத்யம் சித்தம் –

த்விதீய பாத பிரதம அதிகரணத்தில் –
ஸ்வப்ந ஸ்ருஷ்ட்டி பிரகரணத்தில் ஜீவன் ஸந்நிஹிதன் ஆகையாலே-தத் ஸ்ருஷ்ட்டி ஜீவ கர்த்ருகை என்று சங்கித்து சம்சார தசையில் ஸ்ரஷ்ட்ருத்வ உபயுக்த
சத்யசங்கல்பாதிகள் கர்ம திரோஹித்த ஸ்வரூபனான ஜீவனுக்கு கூடாமையாலே ஸ்வப்ந ஸ்ருஷ்ட்டி ஜீவ கர்த்ருகை என்று பரமாத்மா கர்த்ருகை என்று நிர்ணயித்தார்
த்வதீய அதிகரணத்தில் –
நாடிகள் என்ன புரீதத் பிரதேசம் என்ன ப்ரஹ்மம் என்ன இவை மூன்றும் நைரபேஷ்யேண ஸூஷூப்தி ஸ்தானத்வேண ஸ்ருதமாகையாலே தத் ஸ்தானத்வம்
விகல்பேந வருகிறது என்று சங்கித்து பிராசாத கட்வா பர்யங்கங்கள் போலே கார்ய பேதேந சமுச்சயமே கூடும்படியாய் இருக்க
பாஷிக பாத கர்ப்ப விகற்பம் அயுக்தமாகையாலே சமுச்சயமே யுக்தம் என்று நிர்ணயித்தார் –
த்ருதீய அதிகரணத்தில்
ஸூப்தனே ப்ரபோத காலத்திலே உத்திதனாகிறான் என்ன ஒண்ணாது -ஸூஷூப்தனுக்கு சர்வோபாதி விநிர்மோக பூர்வக ப்ரஹ்ம ஸம்பத்தி வருகையாலே-
என்று சங்கித்து ஸூஷூப் திக்கு முன்னே ஆரப்தமான கர்மம் உத்திதனாலே சமாபனம் பண்ணப் படுக்கையாலும் ஸோ அஹம் என்று
ஸூப்தனே உத்திதன் என்று ப்ரத்யபிஜ்ஜை வருகையாலும் — இத்யாதி உக்திகளாலே ஸூப்தனுக்கே உத்திதத்வம் சமர்த்தித்தார் –
சதுர்த்த அதிகரணத்தில்
மூர்ச்சை சர்வ இந்திரிய பிராண வ்யாபாரோ பரதி தசையாய் இருக்கையாலே மரணம் என்று சங்கித்து ஆகார வைரூப்யத்தாலே
ஸூஷ்ம பிராணா ஸ்தித்வம் அவகதம் ஆகையாலே மரணாய அர்த்த ஸம்பத்தி -மூர்ச்சை என்று நிர்ணயித்தார் –
பஞ்சம அதிகரணத்தில்
ஜீவனுக்குப் போலே பரமாத்மாவுக்கு ஜாகராதி சர்வ அவஸ்தைகளிலும் அவஸ்தானம் யுக்தமாகையாலே தத் ப்ரயுக்த தோஷங்கள் சம்பவிக்கும் என்று சங்கித்து
சர்வ அவஸ்தா வஸ்திதமான ப்ரஹ்மத்துக்கு அகில ஹேய ப்ரத்ய நீகத்வ கல்யாணை கதா நத்வமாகிற உபய லிங்கம் சுருதி சமதி கதமாகையாலே
தத் ப்ரயுக்த தோஷங்கள் சம்பவியாது என்று நிர்ணயித்தார் –
ஷஷ்ட்டி அதிகரணத்தில்
அசித் வஸ்து ரூபேண பரிணதம் ப்ரஹ்மம் தானாக வேணும் -அன்றிக்கே -ப்ரஹ்மத்திலும் அசித் வஸ்துவிலும் ஏக ஜாதி யோகத்தாலே ஐக ஜாதிக வாஸ்து தானாக வேணும் –
பின்ன அபின்னத்வ உபய வ்யபதேசம் கூட வேண்டுகையாலே என்று சங்கித்து அம்சோ நாநா வ்யபதேசாத்-என்கிற அதிகரண ந்யாயேந
ஜீவனுக்குப் போலே சரீராத்மா பாவம் யுண்டாய் பாத்தாலே பின்ன அபின்னத்வ வ்யபதேசம் கூடுகையாலே அசித் வஸ்து பிரம்மா சரீரம் என்று நிர்ணயித்தார் –
சப்தம அதிகரணத்தில்
ஜகஜ் ஜென்மாதி காரண தயா த்ருஷ்ட பர ப்ரஹ்ம வஸ்துவிலும் பர வஸ்து சேதூந்மான சம்பந்த பேத வ்யபதேசங்களாலே உண்டு என்று
சங்கித்து காரண வஸ்துவில் காட்டில் வஸ்வந்தரத்துக்குப் பரத்வம்
யஸ்மாத் பரம் நா பரமஸ்தி கிஞ்சித் -இத்யாதி சுருதி நிஷித்தம் ஆகையால் சேது த்வயபதேசம் சர்வ லோகா அசங்கர்ய ஹேதுத்வ ப்ரயுக்தமாகையாலும்
அபரிச்சின்ன வஸ்துவுக்கு உன்மான வ்யபதேசம் உபாசன அர்த்தமாகையாலும் சம்பந்த வ்யபதேசம் தனக்கே ப்ராப்யத்வ ப்ராபகத்வ ப்ரயுக்தமாகையாலும்
ததோ யதுத்தர தரம் -என்கிற ஸ்ருதிக்கு பேத வ்யபதேசம் அர்த்தம் இல்லாமையாலும் ஜகாத் காரண வஸ்துவிலும் பர வஸ்து இல்லை என்று நிர்ணயித்தார் –
சரம அஷ்டம அதிகரணத்தில் –
யாக தான ஹோம உபாசனாதி வைதிக கர்மங்கள் ஷணத்வம்ஸிகள் ஆகிலும் தஜ் ஜன்யா பூர்வ த்வாரா போக அபவர்க்க ரூப சர்வ பல சாதனங்கள் என்று சங்கித்து
கர்தவ்யதயா அவகதயா கோபாசனாதிகளுக்கும் பலப்ரதன் பரம புருஷனே என்று சுருதி ஸ்ம்ருதி சித்தமாகையாலே பரம புருஷனே பல ப்ரதன் என்று நிர்ணயித்தார்
இப்பாதத்தில் முந்துற அதிகரண சதுஷ்டயத்தாலே-
ஏதத் தேஹ மாத்ர அநுபத்த ஸ்வப்ன பதார்த்த கர்த்ருத்வ ஸூஷூப்தி ஸ்தாநாதி நிரூபண முகேந பிரதம பாத நிரூபித்த இஹா முத்ர சஞ்சார
தச அநு வ்ருத்த தோஷ வ்யதிரிக்த தோஷங்கள் வைராக்ய சித்த்யர்த்தம் யுக்தமாயிற்று –
உத்தர அதிகாரண சதுஷ்டயத்திலும் –
பரமாத்மரக்தி ஜனன அர்த்தம் பகவத் கல்யாண குணங்கள் ப்ரதிபாதிதமாயிற்று-ஆனால் கல்யாண குண ப்ரதிபாதகமான இப்பாதத்தில்
நிரூபிக்க வேண்டிய தோஷங்கள் சங்கதமானபடி எங்கனே என்னில்-தோஷ கீர்த்தன பரமான இவ்வதிகரண சதுஷ்டயமும் பூர்வபாதம் போலே
நிஷ்க்ருஷ்ட தோஷ ப்ரதிபாதன பரம் அன்றிக்கே கல்யாண குண ப்ரதிபாதகமும் ஆகையால் இப்பாதத்தில் சங்கதமாயிற்று
ஆகையால் இறே அதிகரண சாராவளியிலே –
பூர்வபாதம் நிஷ்க்ருஷ்ட தோஷ ப்ரதிபாதன பரமாகவும் இப்பாதம் கல்யாண குண ப்ரதிபாதன பரமாகவும்
பாதே த்வர்த்தாஷ் ஷடஸ்மிந் வபுரிஹ விஜஹத் பூத ஸூஷ்மைஸ் சஹேயாத் புக்த ஸ்வர்க்க அவரோஹ அப்யநுசய சஹிதோ மாத்ரயா பின்ன மார்க்க
சந்த்ர ப்ராப்த்யாதி ந ஸ்யாந் நிரயபத ஜூஷாமம் பராதவ் சத்ருக்த்வம் தஸ்மாச் சீகே ராவரோஹ பரவபுஷி சிரம் வ்ரீஹாய் பூர்வே அபி யோக -என்றும் –
பாதே ஸ்வப்ன அர்த்த ஹேதுஸ் ததயமிஹ ஸூஷூப்த்யாத் ருதிஸ் ஸூப்த கோப்தா முக்தே போதாதிகர்த்தா த்வநக ஸூய குணோஸ் சித்பி ரம்சீ சதேஹ
பாரம்யஸ்யைக சீமா சகல பலத இத்ச்யுயதே பக்தி பூம்நே சத்யே ஹ்யேவம் குணா தாவத பர பஜநே ரூப பேதாதி சிந்த்யம் -என்றும்
இரண்டு ஸ்ரக்தரையாலே ஸ்ரீ வேதாந்தாச்சார்யார் வகுத்து அருளிச் செய்தார் –

இனி இரண்டாம் பாட்டு பூர்வ அதிகரண சதுஷ்டய சமாநார்த்தமாயும் மூன்றாம் பாட்டு உத்தர அதிகரண சதுஷ்டய சமாநார்த்தமாயும்இருக்கும் –
இதில் பூர்வ அதிகரண சதுஷ்டய நிரூபித வர்த்தமான தேஹ மாத்ர அநு பத்த ஸ்வப்னாத் யவஸ்தா அநு வ்ருத்த தோஷங்களை ஆழ்வாரும்
மின்னின நிலையில மன்னுயிர் ஆக்கைகள் என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே -என்று மின்னொடு ஒத்த ஸ்வபாவத்தையும் யுடையது அல்ல -ஆத்மவஸ்து
பரிக்ரஹிக்கிற சரீரங்கள் என்கிற இடத்தில் நீங்களே அல்பம் சிந்தியுங்கோள்-என்று
ஸ்வப்ன கல்ப தடிச் சஞ்சலமாய் இருந்துள்ள வர்த்தமான தேஹ தோஷ கீர்த்தன முகேந ஸூசிப்பித்து அருளினார் –
சரீராதி பதார்த்தங்களுக்கும்-ஸ்வப்நாத்ய அநு பூத பதார்த்தங்களுக்கும் ப்ரமக்ருத வைலக்ஷண்யம் ஒழிய நிரூபகர்க்கு வைலக்ஷண்யம் தோற்றாது இறே –
இன்னமும் ஸ்வப்ன பதார்த்த கர்த்ருத்வம் ஜீவனுக்கு கூடாமைக்கு ஹேது -ஸத்யஸங்கல்பத்வ திரோதானம் -அதுக்கும் ஹேது பரமாத்மா நிக்ரஹம் –
அது தானும் தேஹத்தோடே சம்பந்திப்பித்து விட்டுத் திரோதானத்தைப் பண்ணும் -ஆகையால் ஸ்வப்ன கர்த்ருத்வம் ஜீவனுக்கு கூடாது என்கிற
பிரதம அதிகரண அர்த்தம் -மன்னுயிர் ஆக்கைகள் -என்று ஸத்யஸங்கல்பத்வ திரோதி ஹேது பூத தேஹ சம்பந்த ப்ரதிபாதனத்தாலே விசேஷித்து ஸூசிதமாயிற்று –
சதுர்த்த அதிகரண யுக்தமான ஸூப்தஸ்யைவ உத்திதத்வ நிரூபண முகேந நித்யத்வ சாதனமும் -மன்னுயிர் -என்கிற சந்தைக்கு நித்தியமான ஆத்மவஸ்து -என்று
வ்யாக்யாதாக்கள் ஒருபடி வ்யாக்யானம் பண்ணி இருக்கையாலே இச்சந்தையாலே யுக்தமாயிற்று –
இவ்வதிகரண சதுஷ்டயத்துக்கும் பகவன் மஹிம ப்ரதிபாதகத்வ ஆகாரமும் உண்டாகையாலே
அவ்வம்சத்தையும் நியந்த்ருத்வ ரூப மஹிமவாசியான இறை என்கிற பதத்தாலே ஸூசிப் பித்து அருளினார் –
முன்புள்ள முதலிகள் அனைவரும் இறை உன்னுமின் என்கிற சந்தைக்கு அல்பம் விசாரியுங்கோள் என்று அர்த்தம் விட்டார்களே யாகிலும் உரையில்
ஜீயர் ஸ்வாமியை மனனம் பண்ணுங்கோள் என்று ஒரு பொருள் இடுகையாலே
முன்புள்ள முதலிகளுக்கு அவிருத்த அர்த்தாந்தர கதனம் அபிமதம் என்னும் இடம் ஸம்ப்ரதிபன்னம்-
இனி இப்பதத்துக்கு ஸ்வாமித்வ நியந்த்ருத்வங்கள் இரண்டும் அர்த்தம் என்னும் இடம் வ்யுத்பத்தி சித்தமாகையாலே இப்படியும் ஓர் அர்த்தம் சொல்லத் தட்டில்லை-
இனி உத்தர அதிகரண சதுஷ்டயர்த்தத்தையும் –
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து இறை சேர்மினே உயிர்க்கு அதன் நேர் நிறையில்லை-என்று நீங்கள் என்றும் உங்களது என்றும் சொல்லுகிற அஹங்கார மமகாரங்களை
சவாசனமாகப் போக்கி ஈஸ்வரனை ஆஸ்ரயிங்கோள் -ஆத்மாவுக்கு இத்தோடு ஒத்த அதிசயம் இல்லை என்று வெளியிட்டு அருளினார் -அது எங்கனே என்னில்
பஞ்சம அதிகரண யுக்தமான
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதா நத்வ ரூப உபய லிங்கத்தை -இறை என்று சித் அசித் வ்யாவ்ருத்த ஈஸ்வர ப்ரதிபாதனத்தாலே ஸூசிப் பித்து அருளினார் –
பரமாத்மாவினுடைய சித் அசித் வ்யாவ்ருத்தி உபய லிங்கத்தாலே இறே -ஈஸ்வரனுக்கே இறே உபய லிங்கத்தவம் உள்ளது –
ஷஷ்ட்டி அதிகரண யுக்தமான –
அசித் த்ரவ்யம் ப்ரஹ்ம பரிணாமம் அன்று — ப்ரஹ்ம சஜாதீய த்ரவ்யமும் அன்று –ஜீவனைப் போலே ப்ரஹ்ம பிரகாரம் என்கிற அர்த்தமும்
நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை -என்கிற அளவாலே ஸூசிதம் -எங்கனே என்னில்
ப்ரக்ருதி சம்சாரக்க க்ருத அஹங்கார மமகாரங்களினுடைய த்யாஜ்யத்வ உக்தியாலே ப்ரக்ருதியும் த்யாஜ்யம் என்றதாய் பாத்தாலே அசித் த்ரவ்யம்
உபாதியமான ப்ரஹ்ம பரிணாமம் அன்று ப்ரஹ்ம சஜாதீயமும் அன்று என்கிற அம்சம் ஸூசிதமாகையாலும்
சித் அசித் நியந்த்ருத்வ வாசியான இறை என்கிற பதத்தாலே அசித்துக்கும் நியாம்யத்வ ரூப சரீரத்வ அபர பர்யாய அம்சத்வமே யுள்ளது என்கிற அர்த்தமும் ஸூசிதமாகையாலும்
ஷஷ்ட்டி அதிகரண யுக்தமான அசித் த்ரவ்ய ஸ்வரூப நிரூபணமும் ஸூசிதமாயிற்று –
சப்தம அதிகரண யுக்தமான
ஜகத் காரண வஸ்து உத்தீர்ண தத்வ ஸத்பாவ நிஷேத நிர்ணயமும் –இறை சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லை -என்று
ஜகத் காரண பூத ஈஸ்வர ஸமாச்ரயண உத்கர்ஷ ப்ரதிபாதனத்தாலே ஆஸ்ரணீய ஜகத் காரண வஸ்துவினுடைய நிஸ் சமாப்யதிகத்வம் யுக்தமாய்
பாத்தாலே தத்வாந்தர நிஷேதம் பலிக்கையாலே ஸூசிதம் –
கிஞ்ச-இறை -என்கிற பதம் ஈசான சப்த பர்யாயம் என்னும் இடம் ஸம்ப்ரதிபன்னம் -ஜகத் காரண வஸ்து உத்தீர்ணத்வேந சங்க்யமான தத்வ வாசக சப்தத்தை
ஜகத் காரண வாஸ்துவில் இறை என்று இவர் நிர்தேசிக்கையாலே தத் உத்தீர்ண வஸ்து நிஷேதமும் ஸூசிதமாகலாம்
அஷ்டம அதிகரண யுக்தமான
தேவதா ஆராதன ரூப யாக தான ஹோம உபாஸநாதிகளுக்கு பகவத் பிரசாத த்வாரா பலசாதனத்வம் ஒழிய அபூர்வத்வாரா பலசாதனம் இல்லை என்கிற அர்த்தமும்
இறை சேர்மினே -என்று பகவத் ஆராதனை ரூபமான ஆஸ்ரயணத்தை விதிக்கையாலே ஆராத்யனுடைய ப்ரீதியே பலப்ரதம் –
மற்றொரு அபூர்வாதிகள் பலப்ரதம் அன்று என்று சித்திக்கையாலே ஸூசிதமாகலாம்-
ஆகையால் த்ருதீய லக்ஷண த்வதீய பாதத்துக்கும் த்விதீய த்விதீய த்ருதீய காதைகளுக்கும் ஐகமத்யம் சித்தம் –

குண உபஸம்ஹார பாதத்துக்கும் சதுர்த்த பஞ்சம ஷஷ்ட சப்தம காதைகளுக்கும் ஐகமத்யம் யுண்டாம்படி எங்கனே என்னில்
இப்பாதத்தில் நிரூபித்த உப சம்ஹார அநுப சம்ஹாரங்களை இவர் இப்பாட்டுக்களாலே ஸூசிப்பிக்கையாலே ஐகமத்யம் உண்டு –
இப்பாத பிரதம அதிகரணத்தில்
அநேக சாகாதீத வைச்வாநர வித்யாதிகள் சோதநாத்யா விசேஷத்தாலே ஏகம் என்று சாகாந்த்ர அதிகரண நியாயத்தை
வஹ்ய மாணார்த்த உபயுக்தமாக வித்யையிலும் காட்டினார் –
த்விதீய அதிகரணத்தில்
சாந்தோக்ய வாஜச நேயங்களில் சிறுத்தையான உத்கீதா வித்யையில் பிராண த்ருஷ்ட்யுபாஸ்தி சோதணாத்ய விசேஷத்தாலே ஏகம் என்று சங்கித்து ஒரு ஸ்தலத்தில்
உத்கீத அவயவமான ப்ரணவத்தில் ப்ராணதிருஷ்டியும் ஸ்தலாந்தரத்தில் க்ருத்ஸ்ன உத்கீதத்தில் பிராணாதிருஷ்டியுமாய் இருக்கையாலே
ரூப பேதாத் வித்யா பேதம் என்று நிர்ணயித்தார் –
த்ருதீய அதிகரணத்தில்
வாஜச நேய சாந்தோக்யங்களிலும் கௌஷீதகீ ப்ராஹ்மணத்திலும் ச்ருதமான பிராண உபாசனம் ரூப பேதத்தாலே பின்னமாக வேணும் –
சாந்தோக்ய வாஜச நேயங்களில் ஜ்யைஷ்ட்ய ஸ்ரைஷ்ட்ய குணகமான பிராணனுக்கு வாகாதி கத வசிஷ்டாத்வாதி குண சம்பந்தித்தவம் ச்ருதமாகையாலும்
கௌஷீதகீ ப்ராஹ்மணத்தில் அது ஸ்ருதம் இல்லாமையாலும் என்று சங்கித்து கௌஷீதகியில் ச்ருதமான ப்ராணனுடைய ஜ்யைஷ்ட்ய ஸ்ரைஷ்ட்யங்கள்
வாகாதி கத வசிஷ்டத்வாதி குண அனுசந்தானத்துக்கும் ஸூசகமாகையாலே அதிலும் வாகாதி கத வசிஷ்டத்வாதி குண சம்பந்தம்
ப்ராணனுக்கு சித்திக்கையாலே ரூப ஐக்யம் என்று நிர்ணயித்தார் –
சதுர்த்த அதிகரணத்தில் –
சத்யத்வ ஞானத்தவாதி குணங்கள் பிரகரணாந்தர அதீதங்கள் ஆகையாலே சர்வவித்யையிலும் அநுப சம்ஹார்யங்கள்-என்று சங்கித்து
ப்ரஹ்ம ஸ்வரூபம் போலே சத்யத்வ ஞானத்தவாதி குணங்கள் பிரகரணாந்தர அதீதங்கள் ஆகிலும் சர்வ வித்ய அநுயாயிகள் என்று நிர்ணயித்தார் –
பஞ்சம அதிகரணத்தில் –
சாந்தோக்ய வாஜச நேயங்களில் ச்ருதமான பிராண வித்யையில் ஸ்ம்ருதியாசார ப்ராப்தா சமனத்தில் காட்டிலும் வித்ய அங்கதயா ஆசமனாந்தரம்
விதிக்கப்படுகிறது என்று சங்கித்து ஆசமநீயாப்புக்களில் பிராண வாசஸ்த்வ அநு சந்தானம் அங்கதயா விதிக்கப் படுகிறது ஒழிய
ஆசமனாந்தர விதாந பரம் அன்று என்று நிர்ணயித்தார் –
ஷஷ்டா அதிகரணத்தில் –
வாஜச நேய அக்னி ரஹஸ்யத்திலும் ப்ருஹதாரண்யத்திலும் ஸ்ருதையான சாண்டில்ய வித்யை ஒரு ஸ்தலத்தில் ஸத்யஸங்கல்பம் ஸ்ருதமாய்
ஸ்தலாந்தரத்தில் வசித்வாதிகள் ஸ்ருதமாகையாலே ரூபா பேதாத் பின்னை என்று சங்கித்து வசித்வாதிகள் ஸத்யஸங்கல்பத்வ விச்சித்தியாய்
ரூபா பேதம் அல்லாமையாலே வித்யைக்யம் என்று நிர்ணயித்தார் –
சப்தம அதிகரணத்தில் –
ஆதித்ய மண்டலத்திலும் அஷியிலும் ச்ருதமான ஸத்யஸப்த வாஸ்ய ப்ரஹ்மத்தினுடைய வ்யாஹ்ருதி சரீரத்வ உபாசனம் துல்யமாகையாலே
அஹம்-ஆஹா -என்கிற ரஹஸ்ய நாமங்களும் இரண்டு ஸ்தலத்திலும் அநியமேந அணிவித்தனர் ஆகின்றன என்று சங்கித்து
அஷ்ய ஆதித்ய ஸ்தான சம்பந்தித்வாகர பேதத்தால் ரூபம் பின்னமாய் வித்யை பேதிக்கையாலே இரண்டு நாமங்களும் வித்யாத்வய நியதங்கள் என்று நிர்ணயித்தார் –
அஷ்டம அதிகரணத்தில்-
தைத்ரீயத்தில் அநாரப்ய அதீதங்களான சம்ப்ருதி த்யுவ்யாப்த்யாதி குணங்கள் சர்வ வித்யைகளிலும் உப சம்ஹார்யங்கள் என்று சங்கித்து
அல்ப ஸ்தான கோசாரங்களான வித்யைகளில் த்யுவ்யாப்த்யாதி குணங்கள் உபசம்ஹரித்தும் அஸக்யங்கள் ஆகையாலே அல்ப ஸ்தான விஷயங்களான
தஹராதி வித்யைகளில் அநுப சம்ஹார்யங்கள் என்று நிர்ணயித்தார் –
நவம அதிகரணத்தில் –
தைத்திரீயத்திலும் சாந்தோக்யத்திலும் ஸ்ருதையான புருஷ வித்யை சம்ஞ்ஞ ஐக்யத்தாலே ஏகை என்று சங்கித்து
ஸ்வதந்த்ர யஜமான பத்ந்யாதி கல்பன பிரகார பேத ப்ரயுக்த ரூப பேதத்தாலும் சதாயுஷ்ட்வ மோக்ஷ பிராப்தி ரூப பல பேதத்தாலும் பின்னை என்று நிர்ணயித்தார்-
தசம அதிகரணத்தில் –
உபநிஷத் ஆரம்பத்திலே அதீதங்களான -சன்னோ மித்ரா -இத்யாதி மந்திரங்களும் ப்ரவரக்யாதி கர்மங்களும் வித்யா சந்நிதி சமாம்நாநத்தாலே
வித்யா அங்கங்கள் என்று சங்கித்து -அர்த்த சாமர்த்தத்தாலே அபிசாராத்யயநாதிகளில் விநியுக்தங்கள் ஆகையாலே வித்யா அங்கங்கள் என்று நிர்ணயித்தார் –
ஏகாதச அதிகரணத்தில் –
புண்ய பாபங்களினுடைய ஹானி சிந்தனமும் உபாயந சிந்தனமும் வித்யா அங்கத்வேந அந்வயிக்கும் போது விகல்பேந அந்வயிக்க வேணும் என்று சங்கித்து –
ஹானி உபாயங்கள் இரண்டும் ஏக விஷயங்கள் ஆகையாலே சமுச்சயிக்க வேணும் என்று நிர்ணயித்தார்
துவாதச அதிகரணத்தில் –
சிந்த நீயமான ஸூக்ருத துஷ்க்ருத ஹானி உபாய நங்கள் தேஹ வியாக காலத்தில் நியமேந வருகிறது என்று சங்கித்து
தேஹ வியோகாந்தர அநு பாவ்ய ஸூக துக்கங்கள் இல்லாமையாலே தேஹ வியோக காலத்திலேயே நியமேந வருகிறது என்று நிர்ணயித்தார் –
த்ரயோதச அதிகரணத்தில் –
எந்த உபாசன சந்நிதானத்திலே அர்ச்சிராதிகதி ஸ்ருதையாய் இருக்கிறதோ தன்நிஷ்டனுக்கே அர்ச்சிராதி மார்க்கம் நியதம் என்று சங்கித்து –
சர்வ உபாசன நிஷ்டர்களுக்கும் அர்ச்சிராதி மார்க்கம் சாதாரண தயா ஸ்ருதி விஹிதம் ஆகையாலே சார்வார்க்கும் நியதம் என்று நிர்ணயித்தார் –
சதுர்த்தச அதிகரணத்தில் –
பிரபஞ்ச ப்ரத்யநீகதா ரூபங்களான அஸ்தூலத் வாதி தர்மங்கள் வித்யாந்தர ரூப பூத குணங்களுக்கு வித்யாந்தர ரூபத்வே பிரமாணம் இல்லாமையாலும்
ஆனந்தத்தவாதிகளைப் போலே ஸ்வரூப நிரூபகங்கள் இல்லாமையாலும் சர்வ வித்யா அநுயாயி ரூபம் அன்று -அக்ஷர வித்யா ரூப மாத்ரமாக வேணும் என்று சங்கித்து
ஆனந்தத்தவாதிகள் போலே சித்த அசிதாத்மகா பிரபஞ்ச தர்மபூத ஸ்தூலாத்வாதி விபரீதமான அஸ்தூலத் வாதிகளும்
ஸ்வரூப நிரூபனம் ஆகையாலே சர்வ வித்யா அநு யாயிகள் என்று நிர்ணயித்தார் –
பஞ்ச தச அதிகரணத்தில் –
உஷஸ்திக ஹோள ப்ரஸ்ன பிரதி வசனங்களில் பிராணநாதி ஹேதுத்வ அசனா யாத்யதீதத்வ ரூப உபாஸ்ய ஆகார பேதத்தாலே வித்யா பேதம் என்று சங்கித்து
உபய ப்ரஸ்னத்துக்கும் பரமாத்ம விஷயத்தில் பேதம் இல்லாமையாலும் பிரதி வசன த்வயகதமான ஆகார த்வயமும் பரமாத்மாவினிடத்தில் உபபன்னம் ஆகையாலும்
வித்யா பேதம் இல்லை என்று நிர்ணயித்தார் –
ஷோடச அதிகரணத்தில் –
சாந்தோக்ய வாஜச நேயங்களில் ஸ்ருதமான தஹர வித்யை அபஹத பாப்மத்வ வசித்வாத் யுபாஸ்யாகார பேதத்தாலே பின்னை என்று சங்கித்து
வசித்வாதி குணங்கள் ஸத்யஸங்கல்ப த்வாந்தர்கதமாகையாலே உபாஸ்ய ஆகார பேதம் இல்லாமையாலே வித்யை அபின்னை என்று நிர்ணயித்தார் –
சப்த தச அதிகரணத்தில் –
உத்கீதாத் யுபாஸ்யங்கள் கர்மாங்க பூதோத் கீதாத் யாஸ்ரயங்கள் ஆகையாலே கர்மங்களிலே நியமேந உபஸம்ஹார்யங்கள் என்று சங்கித்து
கோதோஹ நாதிகளைப் போலே காம்யங்கள் ஆகையாலே நியமேந அனுப சம்ஹாரயங்கள் என்று நிர்ணயித்தார் –
அஷ்டாதச அதிகரணத்தில் –
தஹர வித்யையில் குண சிந்த நத்திலே குணி சிந்தனா வ்ருத்தி வேண்டா -குணி சிந்தனம் ஸ்ருதம் ஆகையாலே என்று சங்கித்து
குணார்த்தமும் பிரதான ந்யாயேந குண்யா வ்ருத்தி யுண்டு என்று நிர்ணயித்தார் –
ஏகோந விம்ச அதிகரணத்தில் –
நாராயண அணுவாகம் பூர்வ ஸ்ருத தகர வித்யா உபாஸ்ய விசேஷ நிர்த்தாரகம் என்று சங்கித்து
பிரகரணாத் பலவத்தான லிங்க பூயஸ் த்வத்தாலே சர்வ வித்யா உபாஸ்ய விசேஷ நிர்த்தாராம் என்று நிர்ணயித்தார் –
விம்ச அதிகரணத்தில் –
மனஸ் சிதாதிகளான சாம்பாதி காக்நிகள் க்ரியாமயக்ரது ப்ரக்ருதமாகையாலே தத் அந்வயிகளாய் கிரியாமயங்கள் என்று சங்கித்து
வித்யா மயக்ரதுவும் ப்ராக்ருதமாகையாலே வித்யாமயக்ர த்வன்வயித்வேந வித்யா மயங்கள் என்று நிர்ணயித்தார் –
ஏக விம்ச அதிகரணத்தில் –
பரவித்யைகளிலும் உபாஸ்ய கோட்யநு ப்ரவிஷ்டமான ஜீவ ஸ்வரூபத்தில் ஞாத்ருத்வ கர்த்ருத்வ அம்சம் உபாஸ்ய ஆகாரம் என்று சங்கித்து
ப்ராப்ய தசையிலுள்ளவை எல்லாம் அநு சந்தேயம் ஆகையாலே அபஹத பாப்மத்வாதிகளும் உபாஸ்ய ஆகாரம் என்று நிர்ணயித்தார் –
த்வா விம்ச அதிகரணத்தில் –
உத்கீதாத் யுபாசனங்கள் ஸ்வர பேதத்தாலே உத்கீதாதிகள் ப்ரதிவேதம் பின்னங்களாய் இருக்கையாலே வ்யவஸ்திதங்கள் என்று சங்கித்து
பின்ன ஸ்வர வத்துக்களான சர்வ உத்கீதங்களும் -உத்கீதம் உபாஸீத -என்கிற இடத்தில் சாமான்யாத உபாசன விஷயங்களாகச் சொல்லப் படுக்கையாலே
உபாசனங்களுக்கு வ்யவஸ்தை இன்றிக்கே சர்வ உத்கீதா சம்பந்தம் உண்டு என்று நிர்ணயித்தார் –
த்ரயோ விம்ச அதிகரணத்தில் –
வைச்வா நர உபாசனத்தில் ஸ்வர்லோகாதித்ய வாயு வாகாச பிருதிவி அவயவனான வைஸ்வாநரன் உபாஸ்யதயா ச்ருதனாய் இருக்கிறான் –
அவ்விடத்தில் ஒவ்பமந்யா வாதிகளைக் குறித்து கேகயன் ஸ்வர்லோகாதிகளில் ஏகை கத்தையே உபாஸ்யமாகச் சொல்லுகையாலே வ்யஸ்தமே உபாஸ்யம் என்றும்
ஸமஸ்த உபாசனத்துக்கும் சர்வாத்ம வர்த்தியான ப்ரஹ்ம அநு பவத்தைப் பலமாகச் சொல்லுகையாலே ஸமஸ்த வ்யஸ்தங்கள் இரண்டும் தான் உபாஸ்யங்கள் என்றும் சங்கித்து
உபக்ரம உபஸம்ஹாரங்களில் ஸமஸ்த உபாசனத்தை விதிக்கையாலும் வ்யஸ்த உபாசனத்தில் தத் விதிக்குத் தாத்பர்யம் இல்லாமையாலும் சமஸ்தமே உபாஸ்யம் என்று நிர்ணயித்தார் –
சதுர்விம்ச அதிகரணத்தில் –
தஹர சாண்டில்யாதி வித்யைகளுக்கு பேதம் இல்லை -உபாஸ்ய ப்ரஹ்மமும் தத் பிராப்தி பலமும் ஏக ரூபம் ஆகையாலே என்று சங்கித்து
ஜகத் ஏக காரணத்வா அபஹத பாப்மத்வாத் யநு பந்த பேதங்களாலே வித்யை நாநா என்று நிர்ணயித்தார் –
பஞ்ச விம்ச அதிகரணத்தில் –
அக்னி ஹோத்ர தர்ச பூர்ணமா சாதிகள் ஸ்வர்க்க ஏகைக பலங்களாய் இருந்தாலும் தத் பூயஸ்த்தவ அபேக்ஷை யுள்ள புருஷன் இடத்தில் சமுச்சயம் உண்டாய் இருக்கிறாப் போலே
ப்ரஹ்ம அனுபவ பூயஸ்த அபேக்ஷை யுள்ள புருஷர் இடத்திலே ப்ரஹ்ம வித்யைகளுக்கு சமுச்சயம் கூடும் என்று சங்கித்து
ப்ரஹ்ம அனுபவித்திலே தாரதம்யம் இல்லாமையாலே தாரதம்யம் யுடைய ஸ்வர்க்க சாதனா பூத ஜ்யோதிஷ்டோம நியாயம்
இங்கே ப்ரசரியாமையாலே சமுச்சயம் கூடாது என்று பரிஹரித்தார் –
ஷட் விம்ச அதிகரணத்தில் –
சப்த தச அதிகரணத்தில் நிரூபித்த உத்கீதாத் யுபாசனங்களினுடைய காம்யதயா அநியதிக்கு அடியான பல சாதனத்வத்தை நிரூபித்தார் –

இப்படி ஷட் விம்சத்யதி கரணாத்மகமான இப்பாதத்தில்
1-த்விதீய த்ருதீய பஞ்சம சப்ததச விம்ச ஷட் விம்ச அதிகரணங்களிலே சங்கதி விசேஷத்தாலே ஷூத்ர உபாசனங்களை நிரூபித்தார் –
2-அவசிஷ்ட அதிகரண விம்சதியிலும் ப்ரஹ்ம உபாசன பிரகாரத்தை நிரூபித்தார் -இதிலும் தர்மி ஸ்வரூபம் போலே ஸ்வரூப நிரூபகங்களான
ஞானத்தவ ஆனந்த் வாதிகளும் பிரபஞ்ச ப்ரத்யநீ கதா ரூபமான அஸ்தூலத்வாதி குணங்களும் சர்வ வித்யா அநு யாயிகள் என்று சதுர்த்தத சதுர்த்த சாதி கரணங்களில் நிர்ணயித்தார் –
3-ஏகோந விம்சத்தில் லிங்க பூயஸ்த்வத்தாலே நாராயண அனுவாக ப்ரதிபாத்யனான தேவதா விசேஷமே தத் தத் வித்யா பிரதி நியதி குண விசிஷ்டானாய்க் கொண்டு
சர்வ வித்யா வேத்யனாகிறான் என்று நிர்ணயித்தார் –
4-அவசிஷ்ட சப்த ராசாத்தி கரணங்களிலும் குண உப சம்ஹார அனுப சம்ஹார பலக வித்யா பேதங்களை நிரூபித்தார் –
இப்படி நாலுவகையாக ஸூத்ரகாரர் நிரூபித்த அர்த்தத்தை ஆழ்வாரும் -நாலாம் பாட்டுத் தொடங்கி மேல் நாலு பாட்டாலே வெளியிட்டு அருளுகிறார் –
இந்நாலு பாட்டிலே நாலாம் பாட்டாலே தர்மி ஸ்வரூபம் போலே ஸ்வரூப நிரூபக தர்மம் சர்வ வித்யா அநு யாயி என்கிற அம்சத்தை வெளியிடுகிறார் –
அஞ்சாம் பாட்டாலே ஷூத்ர உபாசன ஸ்வரூப நிரூபண அம்சத்தை ஸூசிப் பிக்கிறார் –
ஆறாம் பாட்டாலே வித்யா பேத அபேத நிரூபண அம்சத்தை ஸூசிப் பிக்கிறார் –
ஏழாம் பாட்டாலே தேவதா விசேஷ நிர்த்தாரான பாரமான அம்சத்தை ஸூசிப் பிக்கிறார் -அது எங்கனே என்னில்-

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே -என்று அசித்தின் படியும் சித்தின் படியும் அல்ல அவன் ஸ்வரூபம் –
அபரிச்சின்ன ஆனந்த ரூபமாய் இருக்கும் அத்தை விஷய சங்கம் அற்று ஆஸ்ரயி -என்று ஆனந்தவல்லியிலும் ஆதர்வணிகத்திலும் யுக்தமான
ஆனந்தத்தவா ஸ்தூலத்வாதி தர்மங்களை தத் ப்ரகரணா சந்நிஹிதமான ந்யாஸ வித்யையிலும் வித்யா ஆகாரமாக அருளிச் செய்கையாலே
ஸ்வரூப நிரூபக தர்மங்கள் சர்வ வித்யா அநு யாயிகள் என்கிற அர்த்த பிரகாசம் இப்பாட்டு என்னும் இடம் அதி ஸ்புடமாய் இருக்கிறது –

ஸூத்ர உபாசன ஸ்வரூப நிரூபண அம்சம் –
அற்றது பற்றெனில் உற்றது வீடுயிர் செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே-என்று இதர விஷய சங்கம் அற்றது என்றால் ஆத்மா மோக்ஷ உன்முகமாய் இருக்கும் –
அத்யல்ப ஆனந்த ரூபமான ஆத்ம அனுபவ ரூப மோக்ஷத்தை ஹேயம் என்று அத்யவசித்து நிரதிசய புருஷார்த்த லாபத்தாலே புருஷாந்தர ருசி அற்று
நிலை யுண்டாக வேண்டில் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிங்கோள்-என்று ஆத்ம உபாசன பலமான ஆத்ம அனுபவத்தை த்யாஜ்யமாக அருளிச் செய்கையாலே ஆத்ம உபாசன
உபலஷித்தமாய் அப்ரஹ்ம உபாசனமாய் இருந்துள்ள உத்கீதாத் யுபாசனங்களுடைய ஸ்வரூப பலங்களும் த்யாஜ்யத்வேந யுக்தமாகையாலே ஸூசிதமாயிற்று –
அப்ரஹ்ம உபாசனங்களும் ஸ்ரீ கீதா பாஷ்யாதி யுக்த ரீதியா ப்ரஹ்ம உபாசன நிர்வ்ருத்த யுபயுக்த தேஹ தாரண த்வாரா மோக்ஷ பழத்தில் அந்தரபாவிக்கையாலே
உபாதியம் என்று அறிய வேண்டுகையாலும் ஸ்வாதந்தர்யேண தூஷகர்மம் போலே த்யாஜ்யமாகையாலே அனுபாதேயம் என்று அறிய வேண்டுகையாலும்
ஸூத்ராகாரர் இப்பாதத்தில் நிரூபித்தார்
ஆழ்வாரும் இப்பாட்டால் அப்ரஹ்ம உபாசனங்கள் ஸ்வாதந்தர்யேண பரித்யாஜ்யங்கள் என்னும் இடத்தை ஸூசிப் பித்து அருளினார்
இறை பற்று -என்று ஆஸ்ரயண விதானத்தாலே உபாசன நிர்வர்த்த கதயா உபாதேயம் என்னும் இடத்தை ஸூசிப் பித்து அருளினார் –

பரவித்யா பேத அபேத நிரூபணம் –
பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே-என்று சங்கை காஸ்ரயனாய் ஈஸ்வரனுமான எம்பெருமான்
ஆஸ்ரயணீயத்வே சர்வசமனாகிறான் -நீயும் தத் விஷய சங்காதிக்யத்தை யுடையனாய் அவனுடைய எல்லாக் கைங்கர்யத்திலேயும் அன்வயி -என்று
ந்யாஸ வித்யா வித்யாகாரமான வாத்சல்ய ஸுசீல்ய ஸுலப்யங்களையும் ஸ்வாமித்வத்தையும் சங்க ஸ்வ பாவந் என்கிற பற்றிலன் -என்கிற பதத்தாலும் –
ஸ்வாமித்வ வாசியான -ஈசன் -என்கிற பதத்தாலும் அருளிச் செய்கையாலே ந்யாஸ வித்யை வித்யாந்தரத்தில் காட்டில் பின்னை என்கிற அர்த்தம் ஸூசிதமாய்
மற்றும் உள்ள தஹர சாண்டில்ய உபகோஸல வித்யாதிகளிலும் இந்த ந்யாயத்தாலே பேதம் யுண்டு என்று ஸூசிதமாகையாலும்
தைத்ரீய ஸ்வேதாஸ்வதராத்ய நேகோபநிஷச் ஸ்ருதையான ந்யாஸ வித்யை ரூப ஐக்யத்தால் ஏகை என்று சித்திக்கையால் மற்றும் உள்ள வித்யைகளிலும்
ரூப ஐக்யம் உண்டானால் வித்யை ஐக்யமே உள்ளது என்று பலிக்கையாலும் ஸூசிதமாயிற்று –
அவன் முற்றில் அடங்கே -என்று சர்வ கைங்கர்யத்தையும் தாம் விதித்த ந்யாஸ வித்யைக்குப் பலமாக அருளிச் செய்கையாலே
வித்யாந்தர ஸாத்ய பலா அவிசிஷ்ட பலத்வாத் விகல்ப-என்கிற விகல்ப அதிகரணார்த்தம் யுக்தமாகிறது –
ஸூத்ராகாரர் அனந்த சாகா ஸ்ருத்தங்களான அநேக வித்யைகளில் பேத அபேத நிரூபணம் பண்ண வேண்டி இருக்கப் பண்ணாது ஒழிந்தது நியாய பிரதர்சன
த்ருஷ்டியாலேயாமா போலே இவரும் ந்யாஸ வித்யைக்கு வித்யாந்தரத்தில் காட்டில் பேதத்தையும் தன்னில் பேதம் இல்லாமையையும் அருளிச் செய்து
ஏதந் ந்யாயேந வித்யாந்தரங்களிலும் பேத அபேதம் தன்னடையே சித்திக்கும் என்று திங்மாத்ர பிரதர்சனம் பண்ணினார் –
மயர்வற மதிநலம் அருள பெற்ற இவ்வாழ்வாருக்கு அநிதர லப்யமாய் ஒரு சாதுர்யம் யுண்டு -வேதாச்சார்யரான பாதராயணர் வேதார்த்தங்களை விசாரித்து
அடைவே தாமும் ஸூசிப் பித்துக் கொண்டு வருகிற இடங்களில் அவர் விஸ்தரித்த இடங்களிலே தாம் ஸங்க்ரஹித்து அருளுகையும் –
அவர் ஸங்க்ரஹித்த இடங்களில் ஈஷத் விஸ்தரிக்கையும் -அது எங்கனே என்னில்
ஸ்வர்க்க ஆரோஹ அவரோஹ மாத்ரு பித்ரு கர்ப்ப அந்வய ரௌரவாதி நன்றாக அனுபவ வாதிகளான சம்சார தோஷங்களை ஸூத்ராகாரர் பரக்கச் சொன்னத்தை –
வீடுமின் முற்றவும் -என்று ப்ரயோஜகத்திலே அக்ராம்யமாக அருளிச் செய்கையாலும்
பாஸூபாதாதிகரணத்தில் பஸூபத்தி பாரம்ய நிஷேதம் பண்ணினத்தை உப லக்ஷணம் ஆக்கி -புரமொரு மூன்று எரித்து அமரர்க்கு அறிவு இயந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளன் -என்று பஸூபத்தி ஹிரண்ய கர்ப்பர்களுடைய பாரம்யத்தை நிஷேதிக்கையாலும்
ஸூத்ராகாரர் விஸ்தரித்த அர்த்தத்தை ஸங்க்ரஹிக்கையும் தத் சங்கரஹீத அர்த்தத்தை விஸ்தரிக்கையும் இவருக்கு நியாமாய் இருக்கும் –
இதுக்கு அடி இவருக்கும் அவருக்கும் உள்ள ஐகமத்யம் –

சர்வ வித்யா வேத்யன் ஸ்ரீ மன் நாராயணாய தேவதா விசேஷம் என்று நிர்ணயித்த அர்த்தம் –
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக யுள்ளே -என்று கார்த்ஸ்ந்யேந நன்றான விபூதி விஸ்தாரத்தைக் கண்டு
அவை எல்லாம் சர்வேஸ்வரனுடைய கட்டடங்க நன்றான சம்பத்து என்று அத்யவசித்து நீயும் தத் ஐஸ்வர்ய அந்தர்பூதனாய் அடங்கு -என்று
ப்ரஹ்ம ருத்ர இந்திராதி ஸமஸ்த விலக்ஷண புருஷர்களும் பகவத் விபூதியாகவும் எம்பெருமான் விபூதிமானாகவும் இருக்கையாலே
வித்யாந்தரங்களிலே ஸ்ருதமான சம்பு சிவாதி சப்தங்கள் அபர்யவசான வ்ருத்த்யா நாராயண பர்யந்தமாக -ச ப்ரஹ்மா இத்யாதி வாக்கியத்தில் சொன்ன
அர்த்தம் ஸூசிதமாய் இத்தாலி சர்வ வித்யைகளிலும் நாராயண ரூப தேவதா விசேஷம் உபாஸ்யமாய் சொல்லிற்றாய் இருக்கையாலே ஸூசிதமாயிற்று –

இப்படி நாலு பாட்டுக்கும் குண உப சம்ஹார பாதத்துக்கும் ஐகமத்யம் கண்டு கொள்வது –

எட்டாம் பாட்டு அங்க பாதார்த்தமாகவும்
இப்படி முதல் எட்டு பாட்டுக்களும் த்ருதீய அத்யாயர்த்தமாகவும்
ஒன்பதாம் பாட்டும் பத்தாம் பாட்டும் வதுர்த்த அத்யாய பாத சதுஷ்ட்ய அர்த்தமாகவும்
இப்படி பத்து பாட்டுக்களும் உத்தர த்விக அர்த்தமாய் இருக்கும் –
நிகமப் பாட்டு இத்திருவாய் மொழியில் ப்ரதிபாதித்தமான பகவத் அபிகம்யத்வ ப்ராப்யத்வ அனுப்பந்தி ஸுலப்யாதி குணங்களுக்கு ஸங்க்ரஹமாய் இருக்கும் –

————————

எட்டாம் பாட்டுக்கும் அங்க பாதத்துக்கு ஐகமத்யம் உண்டான படி –
இப்பாத பிரதம அதிகரணத்தில்
வித்யை கர்ம கர்த்ரு பூதாத்ம ஞான ரூபதயா கர்மாங்கம்-கர்ம மோக்ஷ சாதனம் என்று சங்கித்து

கர்த்ரு பூதாத்மா ஞானம் கர்மாங்கமே ஆகிலும் தத் விலக்ஷண பரமாத்மா ஞான ரூப வித்யை கர்ம அங்கம் இல்லாமையாலும்

யஞ்ஞ தாநாதி கர்மங்கள் வித்யா அங்கதயா ஸ்ருதி சித்தமாகையாலும் வித்யை கர்ம அங்கம் அன்று –
கர்மமே வித்ய அங்கமாகையால் வித்யை மோக்ஷ சாதனம் என்று நிர்ணயித்தார் –

த்விதீய அதிகரணத்தில்
கர்ம அங்க உத்கீதாதிகளில் ரசதமத்வாதி ப்ரதிபாதக வாக்கியங்கள் ஜூஹ்வாதிகளை ப்ருத்வீத்வாதிநா ஸ்துதிக்கும் கணக்கிலே உத்கீத ஸ்துதி பரங்கள் என்று சங்கித்து –
ஜூஹ்வாதி விதி போலே உத்கீதாதி விதி சந்நிஹிதம் இல்லாமையாலும் –

உத்கீதாதி களுக்கு ரசதமத் வாதிகள் பிரமணாந்தரா ப்ராப்தங்கள் ஆகையாலும்
ஸ்துதி பரங்கள் அன்று –ரசதமத்வாதி த்ருஷ்ட்டி விதாயங்கள் என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
வேதாந்தங்களில் ஸ்ருதமான ஆக்யாநங்கள் பாரிப்லவே விநி யுக்தங்கள் என்று சங்கித்து –

சில ஆக்யா நங்களை பாரிப் லவத்திலே விசேஷிக்கையாலே
வேதாந்த சித்த ஆக்யானங்கள் வித்யா விசேஷ ப்ரதிபாதநார்த்தங்கள் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில்
க்ருஹிவ்யதிரிக்தாஸ்ரமிகளில் யஜ்ஞ தாநாதிகள் இல்லாமையாலே தத் அங்க வித்யா அனுஷ்டானம் அவர்களுக்கு கூடாது என்று சங்கித்து
யஜ்ஞ தாநாதி ரூப அங்கங்கள் இல்லா விடிலும் தத் தத் ஆஸ்ரம உசித கர்மங்கள் அங்கமாய் தத் ஸாத்ய வித்யை கூடும் என்று நிர்ணயித்தார் –

பஞ்சம அதிகரணத்தில்
க்ருஹிகளுக்கும் யஞ்ஞாதி நிரபேஷமாகவே வித்யா அனுஷ்டானம் என்று சங்கித்து –

யஞ்ஞாத் யங்கத்வம் ஸ்ருதி சித்தமாகையாலே யஞ்ஞாத் அபேக்ஷம் வித்யா அனுஷ்டானம் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட அதிகரணத்தில் –
க்ருஹி களுக்கு கரண வியாபார ரூபமான கர்ம அனுஷ்டானமும் தத் உபரதி ரூபமான சமதாதிகளும் விருத்தமாகையாலே
அவர்களுக்கு சமதாதிகள் வித்யா அங்கதயா அனுபாதேயங்கள் என்று சங்கித்து –

நிஷித்த விஷய நிவ்ருத்தி ரூபமான ஸமதாதிகளுக்கும் விகித விஷய ப்ரவ்ருத்தி ரூபமான கர்மங்களுக்கும் விரோதம் இல்லாமையாலே

சமதாதிகள் வித்யா அங்கதயா உபாதேயங்கள் என்று நிர்ணயித்தார் –

சப்தம அதிகரணத்தில் –
பிராண வித்யா நிஷ்டனுக்கு ஸர்வதா சர்வாந் நாநுமதி என்று சங்கித்து

சர்வாந்நாநுமதி ப்ராணாத்ய யாபத்தியிலே ஒழிய ஸர்வதா கூடாது என்று நிர்ணயித்தார் –

அஷ்டம அதிகரணத்தில் –
வித்யா அங்கங்களான கர்மங்கள் கேவல ஆஸ்ரம அங்கங்கள் அன்று -நித்ய அநித்ய சம்யோக விரோதம் பிரசங்கிக்கையாலே -என்று சங்கித்து –
ஏக விநியோகத்தாலே உபய அங்கத்வம் உண்டாகில் நித்ய அநித்ய சம்யோக விரோதம் பிரசங்கிக்கும் –

இவ்விடத்தில் விநியோக ப்ருதக்த்வேந ஜீவனாதிகார காமனாதிகாரம் போலே விரோதம் இல்லாமையாலே கேவல ஆஸ்ரம அங்கமும் என்று நிர்ணயித்தார் –

நவம அதிகரணத்தில்
அநாஸ்ரமிகளான விதுராதிகளுக்கு ஆஸ்ரம தர்மேதி கர்த்த வ்யதாகமான ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று சங்கித்து
அநாஸ்ரமிகளான ரைக்வ பீஷ்மாதிகளுக்கும் ப்ரஹ்ம வித்யா அனுஷ்டானம் காண்கையாலும் விதுராதிகளுக்கு தானாதிகளான
வித்யா சாதனங்களாக சில கர்மங்கள் உண்டாகையாலும் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரமுண்டு என்று நிர்ணயித்தார் –

தசம அதிகரணத்தில் –நைஷ்டிக வைகானச பரிவ்ராஜ காத்ய ஆஸ்ரம ப்ரஷ்டர்களுக்கும் விதுராதி ந்யாயேந ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு என்று சங்கித்து
ஆஸ்ரம தர்ம பஹிஷ்க்ருதர்களுக்கு பிராயச் சித்தா பாவ ஸ்ரவணத்தாலும் சிஷ்டப் பஹிஷ்காரத்தாலும் ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்று நிர்ணயித்தார் –

ஏகாதச அதிகரணத்தில்
உத்கீதாத் யுபாசனம் வீர்ய வத்தரத்வ பல காமனான யஜமானனாலே தஹராத் யுபாசனம் போலே அநுஷ்டேயம் என்று சங்கித்து
கோதோஹநாதி களைப் போலே இந்த உபாசனம் கர்ம அங்க ஆச்ரயமாகையாலே கர்மங்களை போலே ருத்விக் கர்த்ருகம் என்று நிர்ணயித்தார்

துவாதச அதிகரணத்தில்
பால்யங்க பாண்டி த்யஞ்ச நிர்வித்யாத முநி -என்கிற இடத்தில் முநி சப்த யுக்தமான மௌனம் மனன ரூபம் ஆகையாலே

மந்தவ்ய என்கிற இடத்தில் போலே மனனம் அநு வதிக்கப் படுகிறது என்று சங்கித்து

ஸ்ரவண ப்ரதிஷ்டார்த்தமான மனனம் ப்ராப்தமானாலும் ஸூபாஸ்ரய சமசீலந ரூப மனனம் பிராப்தம் இல்லாமையால்
ஏவம் வித மனனம் வித்யா சஹகாரித்வேந விதிக்கப் படுகிறது என்று நிர்ணயித்தார் –

த்ரயோதச அதிகரணத்தில்
பால்யேந திஷ்டா சேத்-என்கிற இடத்திலும் உபாசகனுக்கு விதிக்கப் படுகிற பால கர்மம் காமசாராதிகள் ஆகையால் அவைகளும் வித்யா மஹாத்ம்யத்தாலே உபாதேயம் என்றுnசங்கித்து –

துஸ்சரிதம் வித்யோத்பத்தி விரோதி த்வேந ஸ்ருதமாகையாலும் பாண்டித்ய ப்ரயுக்த ஸ்வ மஹாத்ம்யா அநா விஷ்கரணம்
பால்ய சப்தார்த்தம் ஆகையாலும் கர்மசாராதிகள் அனுபாதேயம் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்தச அதிகரணத்தில்
அநாமுஷ்மிக பல உபாசனங்கள் ஸ்வ சாதனா பூத கர்ம அனுஷ்டான அனந்தரம் நியதி உத்பன்னங்கள் ஆகின்றன வென்று சங்கித்து

பிரதிபந்தகம் உண்டாகில் -விளம்பேந உத்பன்னங்கள் ஆகின்றன பிரதிபந்தகம் இல்லையாகில் அவிளம்பேந உத்பன்னங்கள் ஆகின்றன என்று நிர்ணயித்தார் –

பஞ்ச தச அதிகரணத்தில்
ப்ரஹ்ம வித்யைகள் மஹாதிசய சாலிகளாகையாலே ஸ்வ சாதநீ பூத கர்ம அனுஷ்டான அனந்தரம் நியம உத்பன்னங்கள் ஆகின்றன என்று சங்கித்து அவைகளுக்கும் ப்ரஹ்ம விதபஸாராதி களான அதி க்ரூரமான பிரதிபந்தகங்கள் சம்பாவிதங்கள் ஆகையாலே அநியமேந உத்பன்னங்கள் ஆகின்றன என்று நிர்ணயித்தார் –

இதில் த்விதீய –த்ருதீய ஏகாதச அதிகாரணங்கள் ப்ராசங்கிகங்கள்–அவசிஷ்ட துவாதச அதிகாரணந்த்தில் –பத்து அதிகாரணத்தாலே
வித்யையே மோக்ஷ சாதனம் என்றும் -தத் ஆஸ்ரம உசிதமான கர்மங்களே தத் தத் ஆஸ்ரமிகளுடைய வித்யைகளுக்கு நியதி அங்கங்கள் என்றும்
அநாஸ்ரமிகளான விதுராதிகளுக்கு தபோ தாநாதிகளான கர்மங்கள் வித்யா அங்கங்கள் என்றும் –சமதாதிகள் வித்யா அங்கங்கள் என்றும் –
சம விசேஷ ரூபமான துஷ்ட அன்ன பரிஹாரமும் வித்யா அங்கம் என்றும் –வித்யா அங்கங்களுக்கே ஆஸ்ரம அங்கத்துவம் உண்டு என்றும்
ஆஸ்ரம ப்ரஷ்டர்களுக்குக் கேவல தபோ தாநாதிகள் வித்யா அங்கம் இல்லாமையால் வித்யையில் அன்வயம் இல்லை என்றும் –
ஸூபாஸ்ரய சமசீலந ரூபமான மனனம் என்ன பாண்டித்யா அநாவிஷ்கரண ரூபமான பால்யம் என்ன இவைகள் அங்கம் என்றும் அங்கங்களை நிரூபித்து –
அவசிஷ்ட சதுர்த்தச பஞ்ச தச அதிகரணங்களால் பிரதிபந்தகம் அற்ற தசையில் அங்கங்களால் அங்கியான உபாசன நிஷ்பத்தி என்று நிர்ணயித்தார் –

இப்படி நிரூபித்த அர்த்தத்தில் ப்ராசங்கிகமான அதிகரண த்ரயத்தையும் உபேக்ஷித்து அவசிஷ்ட துவாதச அதிகரண அர்த்தத்தை
உள்ளம் உரை செயல் உள்ள யிம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே–என்று மனனாதி ஹேதுவான மனஸ்ஸூம்
ஸ்துத்யாதி ஹேதுவான வாக்கும் -பிரணாமாதி கரணமான கார்யமுமாய் இருந்துள்ள இம்மூன்றையும் இவற்றினுடைய ஸ்ருஷ்ட்டி பிரயோஜனத்தையும் நிரூபித்து
இதர விஷய அன்வயத்தை தவிர்த்து ஸ்வாமியான ப்ராப்த விஷயத்திலே ஒதுக்கு -என்று அங்க ஸ்வரூபத்தையும்
அங்கங்களாலே அங்கி சித்தி தசையையும் அருளிச் செய்து இப்பாட்டாலே வெளியிட்டு அருளினார் -அது எங்கனே என்னில் –

வித்யையே மோக்ஷ சாதனம் என்று பிரதம அதிகரணத்தில் நிரூபித்த அர்த்தம் -இறை யுள்ளில் ஒடுங்கே-என்று அவன் விஷயத்தில் ந்யஸ்த பரனாய் இரு என்று சித்த உபாய சுவீகார ரூபமான ஞான விசேஷத்தையே தஞ்சமாக அருளிச் செய்கையாலே யுக்தமாயிற்று –

சதுர்த்த பஞ்சம நவம அதிகரணங்களில்
வானப்ரஸ்த பரிவ்ராஜகர்களுக்கு தத் தத் ஆஸ்ரம உசிதமான கர்மங்கள் வித்யா அங்கங்கள் என்றும் க்ருஹிகளுக்கு ஸ்வ ஆஸ்ரம உசிதமான யஞ்ஞாதிகள் அங்கம் என்றும்
விதுராதிகளுக்கு தாநாதிகம் வித்யா அங்கம் என்றும் -நிர்ணயித்த அர்த்தம் -அகிஞ்சனான ந்யாஸ வித்யா நிஷ்டனுக்கு ப்ரயோஜனாந்தர சாதனாந்தர வைமுக்யத்தை –
உள்ளம் உரை செயல் உள்ள யிம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து -என்று அங்கமாக விதிக்கையாலே தன முகேந தத் தத் அதிகார அநு குண அங்க அனுஷ்டானத்தாலே வித்யா நிஷ்பத்தி வரும் என்று சொல்லிற்றாய் அத்தாலே ஸூசிதமாயிற்று –

ஷஷ்ட்டி அதிகரணத்தில்
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபங்களான கர்ம சமாதிகளுக்கு விஹித நிஷித்த பேதேந விரோதம் இல்லை என்று நிர்ணயித்த அர்த்தமும் –
உள்ளம் உரை செயல் -இத்யாதியாலே பிரதிகூல விஷய நிவ்ருத்தியையும் அனுகூல விஷய ப்ரவ்ருத்தியையும் விதிக்கையாலே வ்யக்தமாக ஸூசிதம் –

மநோ வாக் காயங்களை அனுஷிதா விஷயங்களில் நின்றும் மீட்க வேணும் என்று விதிக்கிற இச்சந்தையாலே தானே
சப்தமாதி கரண யுக்தமான நிஷித்த பாஷாணம் பரிஹார்யம் என்கிற அர்த்தமும் ஸூசிதமாயிற்று –

அஷ்டம அதிகரணத்தில்
ஒரு தர்மத்துக்கே வித்யா அங்கத்தவமும் ஆஸ்ரம அங்கத்தவமும் கூடும் என்று நிரூபித்த அர்த்தம் -இதர விஷயங்களில் உள்ள
மநோ வாக் வ்ருத்திகளையே பகவத் விஷயத்திலும் ஒடுக்கச் சொல்லி விதிக்கையாலே ஸூசிதமாகலாம்-

தசம அதிகரணத்தில்
ஆஸ்ரம ப்ரஷ்டர்களுக்கு வித்யா அதிகாரம் இல்லை என்று நிரூபித்த அர்த்தம் –உள்ளம் உரை செயல் உள்ள யிம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து -என்று
நிஷித்த விஷயங்களை அவஸ்ய பரிஹரணீயன்கள் என்று தத் க்ரூர்யம் யுக்தமாய் அத்தாலே ஸூசிதம் –

துவாதச அதிகரணத்தில்
நிர்ணீதமான ஸூபாஸ்ரய சம்சீல நத்தினுடைய கர்த்தவ்யத்வமும்-இதர விஷய நிஷ்டமான
மநோ விருத்தியை பகவத் விஷயம் ஆக்கச் சொல்லி விதிக்கையாலே ஸூசிதம் என்று காணலாம் –

த்ரயோதச அதிகரணத்தில் –
காமசாரம் பால்ய சப்தார்த்தம் அன்று -ஸ்வ மஹாத்ம்யா நாவிஷ்கரணமே பால்ய சப்தார்த்தம் என்று நிரூபித்த அர்த்தமும் கை வந்த படி செய்ய ஒண்ணாது
என்று நிஷித்த நிவ்ருத்தியை ப்ரதிபாதிக்கிற இச்சந்தையாலே ஸூசிதமாகலாம் –

சதுர்தச பஞ்ச தசங்களில் நிரூபித்தமான அங்க நிஷ்பத்த்ய நந்தரமே பிரதிபந்தகம் உண்டாகில் அங்கி நிஷ்பன்னமாக மாட்டாது –
பிரதிபந்தகம் அற்றால் அங்கி நிஷ்பன்னமாம்-என்கிற அர்த்தமும் -நிஷித்த விஷய நிஷ்ட மநோ வாக் வ்ருத்தி ரூப பிரதிபந்தகம் அற்றே
பகவத் ஆஸ்ரயணம் பண்ண வேணும் என்று சொல்லுகையாலே ஸூசிதம் –

ஆக இப்படி எட்டாம் பாட்டுக்கும் அங்க பாதத்துக்கு ஐகமத்யம் யுண்டு என்று ஸூஷ்ம தர்சிகளுக்கு ஸூக்ரகமாக அறியலாம் படி ஸங்க்ரஹேண உபபாதிதம் ஆயிற்று –

———————-

இனி மேல் சதுர்த்த அத்யாயத்துக்கும் மேல் இரண்டு பாட்டுக்கும் ஐகமத்யம் உண்டான படி –
இதில் ஒன்பதாம் பாட்டு பிரதம த்விதீய பாதார்த்தமாகவும்
பத்தாம் பாட்டு த்ருதீய சதுர்த்த பாதார்த்தமாகவும் இருக்கும் –

இதில் பிரதம பாத பிரதம அதிகரணத்தில்
மோக்ஷ சாதநீ பூத ஞானம் சக்ருதா வ்ருத்தம் என்று சங்கித்து நிரந்தர த்யான ரூபமான ஞானமே மோக்ஷ சாதனம் என்று
ஸ்ருதி சித்தமாகையால் அஸக்ருத் கர்த்தவ்யம் என்று நிர்ணயித்தார் –

த்விதீய அதிகரணத்தில்
ஆத்மேத்யேவோபாஸீத-இதி வாக்ய விசேஷ பிரதிபன்னமான உபாசன விசேஷத்திலே அந்யத்வேண ப்ரஹ்மம் உபாஸ்யம் என்று சங்கித்து
அவ்விடத்திலும் ஆத்மத்வேந உபாஸ்யம் என்று நிர்ணயித்தார்

த்ருதீய அதிகரணத்தில்
மநோ ப்ரஹமேத் யுபாஸீத -இத்யாதி ப்ரதிகோபாசனங்களில் ப்ரஹ்ம உபாசனத்தவ சமயத்தாலே உபாசித்துராத்மத்வேந ப்ரஹ்மம் உபாஸ்யம் என்று சங்கித்து
அந்த உபாசனங்களில் ப்ரதீகமான மந ப்ரப்ருதிகள் உபாஸ்யமாகையாலும் ப்ரஹ்மம் உபாஸ்யம் இல்லாமையாலும்
இவ்விடங்களில் ஆத்மத்வேந ப்ரஹ்மம் உபாஸ்யம் அன்று என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில்
பல சாதனத்வேந உத்க்ருஷ்டமான உத்கீதாதி த்ருஷ்ட்டி ஆதித்யாதிகள் என்று சங்கித்து ஆதித்யாதிகளே பல ப்ரததயா உத்க்ருஷ்டங்கள் ஆகையாலே
உத்கீதாதிகளிலே ஆதித்யாதி த்ருஷ்டியே உள்ளது என்று நிர்ணயித்தார் –

பஞ்சம அதிகரணத்தில்
உபாசனை அனுஷ்டானம் ஆஸீ நத்வ சாயா நத்வ ஸ்திதி கமணாத்ய வஸ்தைகளிலும் விசேஷா பாவாத் உபபன்னம் என்று சங்கித்து
சயா நாத்ய வஸ்தைகளில் ஏகாக்ரத்வ சம்பவம் அனுபன்னம் ஆகையால் ஆஸீநத்வ அவஸ்தையில் ஒன்றிலுமே கடிக்கும் ஒன்றாகையாலும்
தத் அவஸ்தையிலேயே உபாசன அனுஷ்டானம் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட அதிகரணத்தில்
பூர்வம் நிர்ணீத உபாசனம் ஏகாஹ மாத்ர சம்பாத்தியம் என்று சங்கித்து –
ச கல்வேவம் வர்த்தயன் யாவதாயுஷம் -என்கிற ஸ்ருதியின் படியே –ஆப்ரயாணம் அனுவர்த்த நீயம் என்று நிர்ணயித்தார் –

சப்தம அதிகரணத்தில்
வித்யா பலத்வேந ச்ருதங்களான பூர்வ உத்தராகங்களினுடைய அஸ்லேஷ விநாசங்கள் -ந புக்தம் -இத்யாதி வசன விரோதத்தாலே
வித்யா ப்ரஸம்ஸார்த்தங்கள் என்று சங்கித்து -அஸ்லேஷா விநாசங்கள் வித்யா பலத்வேந சுருதி பிரதிபண்னங்கள் ஆகையாலும்-
ந புக்தம் -இத்யாதி வசனங்கள் பல ஜனன சக்தி த்ரடிம ப்ரதிபாதன பரங்கள் ஆகையாலும் ப்ரஸம்ஸார்த்தங்கள் என்று நிர்ணயித்தார் –

அஷ்டம அதிகரணத்தில்
ஸூக்ருதம் சாஸ்த்ர சித்தமாகையாலே வித்யா விரோதி அன்று என்று சங்கித்து ஸூக்ருதமும் அதிகாரி பேதேந வித்யா விரோதி என்று நிர்ணயித்தார் –

நவம அதிகரணத்தில்
சர்வ பூர்வாகங்களும் வித்யா மஹாத்ம்யத்தாலே வினாசயங்கள் என்று சங்கித்து அநாரப்த கார்யங்களுக்கே அது உள்ளது என்று என்று நிர்ணயித்தார்-

தசம அதிகரணத்தில்
அக்னி ஹோத்ராதி நித்ய நைமித்திக வர்ணாஸ்ரம தர்மங்களும் தத் பலன்களும் அஸ்லேஷோக்த்யா அனுஷ்டானம் அப்ராப்தம் என்று சங்கித்து
வித்யா உத்பாதகங்களான ஸ்வ வர்ணாஸ்ரம உச்சித கர்மங்களுக்கு பாலாஸ்லேஷம் இல்லாமையால் அனுஷ்டானம் பிராப்தம் என்று நிர்ணயித்தார் –

ஏகாதச அதிகரணத்தில்
பிராரப்த கர்ம விநாசம் வித்யா யோனி சரீராவஸாநத்திலே நியமேந வருகிறது என்று சங்கித்து தச் சரீர அவசானத்திலே யாகிலும்
சரீராந்தர அவசானத்திலே யாகிலும் அநியமேந வரும் என்று நிர்ணயித்தார் –

த்வதீய பாத -பிரதம அதிகரணத்தில்
வாங்மனசி சம்பத்யதே -என்று வாக்குக்கு மனஸ் சம்பத்தியை ப்ரதிபாதிக்கிற சுருதி வாக்கு மனா உபாதாநகம் அல்லாமையாலே மனசிலே
வாக் ஸ்வரூப சம்பத்தியைச் சொல்லுகிறது அன்று -வாக் வ்ருத்தி மநோதீநை யாகையாலே தத் வ்ருத்தி சம்பத்தியைச் சொல்லுகிறது என்று சங்கித்து –
மனசிலே வாக் ஸ்வரூப சம்பத்தில் ப்ரதிபாதனமானாலே ஸம்பத்தி சுருதி ஸ்வாரஸ்யம் சித்திக்கையாலும்

வாக்குக்கு மனஸ் ஸூ உபாதானம் அல்லாமையாலே லயம் கூடாதே இருந்தாலும் மனஸோடு வாக் சம்யோகத்தைச் சொல்ல வந்தது ஆகையாலும் மனசிலே வாக் ஸ்வரூப சம்பத்தியை ப்ரதிபாதிக்கிறது என்று நிர்ணயித்தார் –

த்வதீய அதிகரணத்தில்
மன ப்ராணே-என்கிற இடத்தில் அன்ன ப்ராக்ருதமாகச் சொல்லப் படுகிற மனஸூக்கு அன்ன ப்ரக்ருதிக பூதாப் ப்ரக்ருதிகமான பிராணன் காரணமாக் கூடுகையாலே பரம்பரையா ஸ்வ காரணே லயரூப சம்பத்தியைச் சொல்லுகிறது என்று சங்கித்து
மன ப்ராணன்கள் அகங்கார ஆகாச விகாரங்கள் ஆகையாலும் அந்நாப் விகாரங்கள் இல்லாமையாலும் பரம்பரையா காரண லய ஸம்பத்தி ப்ரதிபதன பரம் அன்று –பூர்வ உக்தரீத்யா சம்யோக மாத்ரத்தைச் சொல்லுகிறது என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில் –
பிராணாஸ் தேஜஸி -என்கிற இடத்தில் கேவல தேஜஸ்ஸிலே பிராண ஸம்பத்தி என்று சங்கித்து ஜீவனோடே கூட தேஜஸ்ஸிலே பிராண ஸம்பத்தி என்று நிர்ணயித்தார் –

சதுர்த்தி அதிகரணத்தில் –
தேஜஸ் சப்த மாத்ர ஸ்ரவணத்தாலே ஜீவ சம்யுக்த ப்ராணனுக்கு கேவல தேஜஸ் ஸம்பத்தி என்று சங்கித்து தேஜ உபலஷித சர்வ பூதங்களிலும் ஸம்பத்தி என்று நிர்ணயித்தார்-

பஞ்சம அதிகரணத்தில்
ப்ரஹ்ம நிஷ்டனுக்கு அத்ரைவ அம்ருதத்வ வசனத்தாலே உதக்ராந்தி இல்லாமையால் அப்ரஹ்ம நிஷ்டனுக்கே உதக்ராந்தி என்று சங்கித்து

ப்ரஹ்ம நிஷ்டனுக்கும் நாடீ விசேஷத்தாலே உதக்ரமணம் சுருதி சித்தமாகையாலே அவனுக்கும் அது உண்டு என்று நிர்ணயித்தார் –

ஷஷ்டா அதிகரணத்தில்
ஜீவ பரிஷ்வக்தங்களான பூத ஸூஷ்மங்களில் ஸூக துக்க உபபோக ரூப கார்யம் காணாமையாலே அவற்றுக்குப் பரமாத்மா ஸம்பத்தி இல்லையென்று சங்கித்து
ஸூஷூப்தி பிரளய தசைகளில் போலே பரமாத்மா சம்பத்தியால் ஸூக துக்க உபபோக ஆயாச விஸ்ரம ரூப கார்யம் உதக்ரமண தசையிலும் உண்டாகையாலே
தேஜ பரஸ்யாம் தேவதாயாம் -என்று சுருதி ப்ரதிபன்னமான ஜீவ சம்யுக்த பூத ஸூஷ்மங்களுக்கு உள்ள பரமாத்மா சம்பத்தியை இல்லை செய்ய ஒண்ணாது என்று நிர்ணயித்தார் –

சப்தம அதிகரணத்தில்
பூர்வ யுக்தமான பரமாத்மா ஸம்பத்தி காரணா பத்தி ரூபை என்று சங்கித்து
வாங்மனசி சம்பத்யதே -என்கிற இடத்தில் சம்பத்யதே -என்கிற பதம் சம்சாரக்க விசேஷ வாசியாகையாலும்

அநு ஷக்தமான அந்தப் பதத்துக்கு அபிதான வை ரூப்யத்தில் பிரமாணம் இல்லாமையாலும் சம்சர்க்க விசேஷாபத்தியைச் சொல்லுகிறது என்று நிர்ணயித்தார் –

அஷ்டம அதிகரணத்தில்
ஸதாதிகையான மூர்த்தன்ய நாடியாலே நிஷ் க்ரமணம் என்கிற நியமம் இல்லை -தோன்றிற்று ஒரு நாடியாலே நிஷ் க்ரமணம் உள்ளது என்று சங்கித்து
தயோர்த்வ மாயன்னம்ருதத்வமேதி -என்று மூர்த்தன்ய நாடியாலே நிஷ் க்ரமணம் என்று சுருதி சொல்லுகையாலே நியமேந மூர்த்தன்ய நாடியாலே நிஷ் க்ரமணம் என்று நிர்ணயித்தார் –

நவம அதிகரணத்தில்
உதக்ரமண அனந்தரம் ரஸ்ம்யநு சாரேண கத்தி என்கிற நியமம் இல்லை -நிசிம்ருதனான ப்ரஹ்ம நிஷ்டனுக்கு அது கிடையாமையாலே என்று சங்கித்து
நிசியிலும் ரஸ்மி சம்பவ ப்ரதிபாதக சுருதி இருக்கையாலே நிசிம்ருதனாகிலும் ப்ரஹ்ம நிஷ்டனுக்கு ரஸ்ம்யநு சாரேண கமனம் நியதம் என்று நிர்ணயித்தார் –

தசம அதிகரணத்தில்
நிசா மரணம் சாஸ்த்ர கர்ஹிதம் ஆகையால் அப்போது ம்ருதனுக்கு ப்ரஹ்ம பிராப்தி இல்லை என்று சங்கித்து

கர்ம சம்பந்தம் யாவது தேஹ பாவியாகையாலே கர்ம விநாச அனந்தரம் சம்சாரம் கூடாமையாலும்

நிசா மரண க்ரஹை அவித்வத் விஷயை யாகையாலும்

நிசா ம்ருதனுக்கும் ப்ரஹ்ம பிராப்தி உண்டு என்று நிர்ணயித்தார் –

ஏகாதச அதிகரணத்தில்
தஷிணாயன ம்ருதனுக்கு சந்த்ர பிராப்தி ஸ்ரவணத்தாலும்-சந்த்ர பிராப்தி யுடையவர்களுக்குப் புநரா வ்ருத்தி ஸ்ருதை யாகையாலும் அக்காலத்தில்
ம்ருதர்களுக்கு ப்ரஹ்ம பிராப்தி இல்லை என்று சங்கித்து

பித்ருயாண பதத்தால் சந்த்ர பிராப்தி உடையவர்களுக்கே புநரா வ்ருத்தி ஒழிய சந்த்ர பிராப்தி
உடையவர்களுக்கு எல்லாம் புநரா வ்ருத்தி உண்டு என்கிற நியமம் இல்லாமையால் ப்ரஹ்ம பிராப்தி யுண்டு என்று நிர்ணயித்தார் –

இதில் பிரதம பாதத்தில்
முதல் அதிகரண ஷட்கத்தாலே உபாசன ஸ்வரூப சோதனத்தைப் பண்ணி

ஏழாம் அதிகரணம் தொடங்கிnமேல் உள்ள அதிகரண பஞ்சகத்தாலே -ஏதத் தேஹ சம்பந்த தசையில் யுள்ள வித்யா பலத்தை நிரூபித்தார்

த்வதீய பாதத்தில் –
உத்க்ராந்தி நிரூபணம் பண்ணினார்

இப்படி பாத த்வயத்தாலே நிரூபித்த அர்த்தத்தை –
ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம் விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே-என்று ஸ்வாமியானவன் இடத்திலே அப்ருதக் சித்த பிரகாரதயா அந்தர்பவிக்கவே
ஆத்மாவினுடைய அஞ்ஞானாதி ஸ்வபாவ சங்கோசமும் தத் தேதுவான அவித்யாதிகளும் எல்லாம் விட்டுக் கழியும் –
பின்னையும் ஆரப்த சரீர விசேஷத்தினுடைய முடிவைப் பார்த்து அத்தை விடும் பொழுது எண்ண வேணும் -என்று ஆழ்வாரும் வெளியிட்டு அருளினார் –

அது எங்கனே என்னில்
ஸ்வாமியானவன் இடத்திலே அப்ருதக் சித்த பிரகார தயா அந்தர்பவித்து பஜிக்கவே என்று சொல்லுகிற –ஒடுங்க அவன் கண் -என்கிற முதல் அடியாலே
பிரதம பாத அதிகரண ஷட்க நிரூபிதமான உபாசன ஸ்வரூப சாதனம் பண்ணின அம்சம் ஸூசிதமாயிற்று –
ஒடுங்கே -என்கிற அம்சத்தை உரையில் பஜன பரமாகவும் யோஜித்தமை ஸ்பஷ்டமாய் இருக்கும் –

ஈடு சதுர் விம்சதி சஹஸ்ரம் முதலான வியாக்யானங்களிலும் –
பஜநம் எளிதானாலும் -என்றும் –

பஜனமாவது தான் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு கொடுக்கை -என்றும் யுக்தமாகையாலே

இச்சந்தை பஜன பரமாகவே முன்புள்ள முதலிகளும் வ்யாக்யானம் பண்ணினமை ஸித்தமாய் இருக்கும்

வீடுமின் முற்றவும் -பிரபத்தி பரம் -பத்துடையடியவர் -பக்தி பரம் என்கிற வ்யவஸ்தைக்கு இது விருத்தம் அன்றோ என்னில்
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு முன்புள்ள முதலிகள் இப்படி நிர்வகித்தார்களே யாகிலும் ஸ்ரீ பாஷ்யகாரருக்கு இவ்வருகுள்ள முதலிகள் இரண்டும் பக்தி பரம் என்று
நிர்வஹிக்கையாலும் வ்யாக்யாதாக்கள் அனைவரும் பஜன பரம் என்று தோற்றும்படியே வ்யாக்யானம் பண்ணுகையாலும் விரோதம் இல்லை –

ஆனால் வீடுமின் முற்றவும் -பக்தி பரமாயும் இச்சந்தை பஜன பிரகார ப்ரதிபாதன பரமாயும் இருந்ததே யாகிலும் ஸாத்ய பக்தி ப்ரதிபாதன பரம்
இத்திருவாய் மொழி என்று வீடுமின் முற்றவும் ப்ரவேசத்திலே க்ரந்தக்காரர் தாமே நிர்ணயம் பண்ணுகையாலே இச்சந்தை
சாதன பக்தி பிரகார ப்ரதிபாதன பர அதிகரண ஷட்க அர்த்த ஸூசகமான படி எங்கனே என்னில் –
நாதமுனி ப்ரப்ருதிகளான நம் பூர்வாச்சார்யர்கள் அனுஷ்டித்த ஸாத்ய பக்திக்கும் உபாசகன் அனுஷ்டிக்கிற சாதன பக்திக்கும் சாதனத்வ புத்தி ராஹித்ய சாஹித்யங்களால்
வந்த பேதம் ஒழிய ஸ்வரூப வைலக்ஷண்யம் இல்லாமையாலும் யம நியம பிராணா யாமாதிகள் என்ன-கீர்த்தன யஜன நமஸ்காராதிகள் என்ன –
ஸூ சிதேசா வஸ்தாபித சேலா ஜின குசோத்தர ரூப ஆசனம் என்ன -ஏகாக்ர சித்ததா வஸ்தானம் என்ன -இவை முதலான அனுஷ்டானமும்
இரண்டுக்கும் ஒத்து இருக்கையாலும் இச்சந்தை ஸாத்ய பஜனத்தைச் சொன்னாலும் சாதன பஜன பிரகார ஸூசகத்வம் யுண்டாகத் தட்டில்லை-

இனி ஏழாம் அதிகரணம் தொடங்கி மேலுள்ள அதிகரண பஞ்சகத்தாலே நிரூபித்த ஏதத் தேஹ சம்பந்த தசையில் யுள்ள வித்யா பலாம்சமும்
ஒடுங்கலும் எல்லாம் விடும் -ஆகந்துகங்களாய் ஸ்வரூப ப்ரயுக்தம் அன்றிக்கே இருக்கிற அவித்யா கர்ம வாசனா ருசி ப்ரக்ருதி சம்பந்தங்கள் எல்லாம் விட்டுப் போம் -என்று
வித்யா பலமான சகல விரோதி நிவ்ருத்தியை ப்ரதிபாதிக்கிற இச்சந்தையாலே ப்ரகாசிதம் என்னும் இடம் ஸ்புடமாக அறியலாம் –

சரீர விஸ்லேஷ தசையை எண்ணுங்கோள்-என்று விதிக்கிற –ஆக்கை விடும் பொழுது எண்ணே -என்கிற சந்தையாலே உத்க்ராந்தி பாதார்த்தம் கார்த்ஸ்ந்யேந ஸூசிதமாயிற்று –

இதில் பிரதம அதிகாரணம் தொடங்கி அஷ்டம அதிகரண பர்யந்தம் நிரூபித்த
சர்வ இந்திரிய பூத ஸம்பத்தி ரூப உதக்ரண அம்சம் -ஆக்கை விடும் -என்கிற அளவால் யுக்தமாயிற்று –

நவம அதிகரணம் தொடங்கி மேல் மூன்று அதிகரணத்தால் பிராரப்த கர்ம அவசான காலமே மோக்ஷ காலம் என்று நிர்ணயித்த அம்சமும்
க்ருதக்ருத்யனான அதிகாரிக்கு சரீர விஸ்லேஷ காலத்தை விசேஷம் இன்றிக்கே எப்போது வருகிறதோ என்று சிந்தி -என்கிற
விடும் பொழுது எண்ணே -என்கிற அளவால் ஸூசிதமாயிற்று –

இப்படி ஒன்பதாம் பாட்டுக்கும் சதுர்த்த அத்யாய பிரதம த்விதீய பாதங்களுக்கும் ஐகமத்யம் உண்டு என்னும் இடத்தை உபபாதித்தோம் –

——————————-

இனிமேல் த்ருதீய துரீய பாதங்களுக்கு பத்தாம் பாட்டுக்கும் ஐகமத்யம் உண்டாம்படியை -தெரிவிக்கிறோம் –
த்ருதீய பாத பிரதம அதிகரணத்தில்
ப்ரஹ்ம பிராப்தியில் அர்ச்சிராதி மார்க்கமும் -பின்னையும் சில மார்க்காந்தரங்களும் நைரபேஷ்யேண சாந்தோக்ய வாஜசநே யாதிகளிலே ச்ருதங்களாகையாலே -மார்க்கங்கள் விகல்பேந வருகிறது என்று சங்கித்து –

சர்வ அவஸ்தலங்களிலும் அர்ச்சிராதி பூதங்களான ஆதித்யாதி புருஷர்கள் வழி நடத்துகிறவர்களாகக் காண்கையாலே
அர்ச்சிராதி மார்க்கமே ப்ரத்யபிஞ்ஞாதம் ஆகையால் மார்க்கம் ஏகம் என்று சித்திக்கையாலும்

அத்தால் அந்நியத்ர உக்தங்களுக்கு அந்நியத்ர உபஸம்ஹாரம் ப்ரமாணிகம் ஆகையாலும்

அர்ச்சிராதி மார்க்க ஏணைவ முக்தஸ்ய ப்ரஹ்ம ப்ராப்யர்த்த கமனம் என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
பாட க்ரமத்தாலே வருண இந்திர ப்ரஜாபதிகளுக்கு வாயு வனந்தரம் நிவேசம் யுக்தம் என்று சங்கித்து பாட க்ரம அபேக்ஷயா அர்த்த க்ரமம் பலிஷ்டமாகையாலே மேகோதா வர்த்தித்தவ ரூப சம்பந்தத்தால் வித்யுத் உபரி வர்ண இந்த்ராதிகளுக்கு நிவேசம் யுக்தம் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில்
அர்ச்சிராதிகள் மார்க்க சிஹ்னங்கள் என்று சங்கித்து கமயித்ருத்வம் ச்ருதமாகையாலே அர்ச்சிராதிகள் ஆதி வாஹிக புருஷர்கள் என்று நிர்ணயித்தார்-

பஞ்சம அதிகரணத்தில்
ப்ரஹ்ம உபாசகனுக்குப் பரிபூர்ண ப்ரஹ்ம ப்ராப்த்யர்த்தம் தேசாந்தர கமனம் அநபேஷிதம் ஆகையால் ப்ரஹ்ம உபாசகர்களுக்கு அர்ச்சிராதி மார்க்கம் இல்லை –ப்ரதீக உபாசகர்களுக்கே அர்ச்சிராதி மார்க்கம் உள்ளது என்று சங்கித்து
தேச விசேஷ அவச்சின்ன ப்ரஹ்ம பிராப்தி யுடையவனுக்கே அவித்யா நிவ்ருத்தி சுருதையாகையாலே

நிஷ்க்ருஷ்ட ப்ரஹ்ம சரீர ஜீவ உபாசகர்களுக்கும்
ஜீவ சரீர ப்ரஹ்ம உபாசகர்களுக்குமே அர்ச்சிராதி மார்க்கம் உள்ளது என்று நிர்ணயித்தார் –

முக்த ஐஸ்வர்ய பிரகார சிந்தனம் பண்ணுகிற துரீய பாத பிரதம அதிகரணத்தில்
ப்ரஹ்ம ஸம்பத்தி யுடையவனுக்கு ஸ்வரூபம் நித்யாவிர்பூதமாய் இருக்கையால் அதுக்கு ஆவிர்பாவம் சொல்ல ஒண்ணாது –
அபூர்வமாய் இருபத்தொரு ஆகார நிஷ்பத்தியே உள்ளது என்று சங்கித்து -அபஹத பாப்மத்வாதி குணக ஆத்ம ஸ்வரூபம் அவித்யா திரோஹிதமாகையால்
தந் நிவ்ருத்தயா எப்போதும் உள்ள ஆத்ம ஸ்வரூப ஆவிர்பாவமே உள்ளது என்று நிர்ணயித்தார் –

த்விதீய அதிகரணத்தில்
முக்தன் ப்ரஹ்ம அனுபவ தசையில் ப்ரஹ்மத்தை விபக்தமாக அனுபவிக்கிறான் என்ன வேணும் -சுருதி சதங்களாலே தத் திசையிலும் பேதம் காண்கையாலே -என்று சங்கித்து -பிரகார பிரகாரி பேதத்தால் வந்த பேதத்தை சுருதி சதங்கள் சொல்ல வந்தது ஒழிய –

தத்வம்ஸயாதி சுருதி சித்த விஸிஷ்ட ஐக்யத்தை பாதிக்க வந்தது அல்லாமையாலே
தத் பிரகார தயா அவிபக்தமாயே அனுபவிக்கிறான் என்று நிர்ணயித்தார் –

த்ருதீய அதிகரணத்தில்
முக்தனுக்கு அபஹத பாப்மாத்வாதி குணவத்த்வந்தான் ஞானத்வந்தான் ஸ்வரூபம் என்று மத பேதத்தாலே சங்கித்து
உபயமும் சுருதி சித்தமாகையால் உபயமும் ஸ்வரூபம் என்று நிர்ணயித்தார் –

சதுர்த்த அதிகரணத்தில் –
முக்தனுக்கு ஸ்ருதையான ஞாத்யாதி ப்ராப்தியில் ப்ரயத்தனாந்தர சாபேஷதை உண்டு என்று சங்கித்து
ஈஸ்வரனைப் போலே பிரயத்தன நிரபேஷமாகவே-ஞாத்யாதி பிராப்தி யுள்ளது என்று நிர்ணயித்தார் –

பஞ்சம அதிகரணத்தில்
கர்ம சம்பந்தம் இல்லாமையால் முக்தன் அசரீரனாய் இருப்பன் என்றும் -கர்ம சம்பந்தம் இல்லாவிடிலும் கேவல இச்சையா சரீரனாயே இருப்பன் என்றும் சங்கித்து –
சங்கல்பம் யுண்டாகில் ச சரீரனாய் இருக்கிறான் -அது இல்லையாகில் அசரீரனாய் இருக்கிறான் என்று நிர்ணயித்தார் –

ஷஷ்ட அதிகரணத்தில்
பரம சாம்யா பத்தி ஸ்ருதியாலே ஜகத் ஈஸ்வரத்வமும் முக்தனுக்கு யுண்டு என்று சங்கித்து -அது உள்ளது ஜகத் காரண பூத ப்ரஹ்ம மாத்ரத்துக்கே யாகையாலே-போக மாத்ர ஸாம்யமே உள்ளது என்று நிர்ணயித்தார் –

சரம ஸூத்ரம் -அதிகரண அந்தரமான பக்ஷத்தில் சப்தம அதிகரணமான அதில் –
ஸ்வதந்த்ரனான ஈஸ்வரன் கதாசித் புநரா வ்ருத்தியையும் பண்ணக் கூடும் என்று சங்கித்து –

அநா வ்ருத்தி சுருதி சித்த மாகையாலும் ஸத்யஸங்கல்பனான ஈஸ்வரன்
ஸ்வ சங்கல்ப விருத்தமாகப் புநரா வ்ருத்தியைப் பண்ணாமையாலும் புநரா வ்ருத்தி வாராது என்று நிர்ணயித்தார் –

இப்படி இவ்விரண்டு பாதத்தாலேயும் நிஷ்கர்ஷித்த
அர்ச்சிராதி மார்க்கம் தொடங்கி பரம வ்யோம பிரவேசாநந்தரபாவி ப்ரஹ்ம அனுபவ பர்யந்தமாய் யுள்ள பலத்தை -ஆழ்வாரும் –
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் தின் கழல் சேரே  -என்று ஆனந்த வழியில் சொல்லுகிற கணக்கிலே
எண்ணுக்கு அவ்வருகே பெருகி இருப்பதாய்

அந்த ப்ரஹ்ம ஆனந்தத்தோடு சமானமான ஆனந்தாதி குணத்தை யுடைய அகாமஹத ஸ்ரோத்ரிய சப்த வாஸ்யமாய்
ஆவீர்பூத ஸ்வ ரூபமான விலக்ஷண ஆத்மவர்க்கம் என்ன –

அஸங்க்யேயமாய் அபரிச்சின்னமான கல்யாண குணங்கள் என்ன -இவற்றை யுடையவனாகையாலே
நாராயண சப்த வாச்யனான ஸ்வாமியினுடைய ஆஸ்ரிதரைக் கைவிடாதபடி ஸ்திரமான திருவடிகளை ஆஸ்ரயி -என்று வெளியிட்டு அருளினார் –

இதில் நலம் என்று ஈஸ்வரனோடு ஒத்த ஆனந்தத்தை யுடையனாக முக்தனைச் சொல்லுகையாலே

சர்வ ஸத்காரத்தால் வந்த ஈஸ்வர ஆனந்த சாம்யம் யுக்தமாய் –
அத்தாலே அர்ச்சிராதி புருஷ சதிகார ப்ரயுக்த ஆனந்தமும் சொல்லிற்றாக லபிக்கையாலே இச்சந்தையாலே அர்ச்சிராதி பாதார்த்தமும் ஸூசிதமாகலாம்

சரம பாத பிரதம அதிகரணத்தில்
ஸ்வரூப ஆவிர்பாவமே முக்த தசையில் உள்ளது என்று நிர்ணயித்த அர்த்தம் –

ஆவிர்பூத அபஹத பாப்மாத்வாதி குணக ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டுகிற
ஒண் பொருள் -என்கிற சந்தையாலே ஸ்புடமாக ஸூசிதமாயிற்று-

நாரணன் -என்கிற சப்தம் -சர்வ காலத்திலும் சேதன ஈஸ்வரர்களுக்குள்ள அப்ருதக் சித்த சம்பந்தத்தைக் காட்டுகையாலே
முக்த தசையில் அவிபாகேந ப்ரஹ்ம அனுபவமே உள்ளது என்று நிர்ணயித்த த்வதீய அதிகரண அர்த்தம் ஸூசிதமாயிற்று –

ஒண் பொருள் -என்கிற இடத்தில் ஆத்ம வஸ்துவுக்கு ஒண்மையாவது

அசங்கோசாத் அபஹத பாப்மத்வாதிகளும் ஞான ஸ்வரூபத்வமும் ஆகையால் உபயம் ஸ்வரூபம்
என்கிற த்ருதீய அதிகரண அர்த்தம் இச்சந்தையாலே ஸூசிதம்

இது உரையில் சப்தார்த்த நிர்வாஹ பிரகாரத்தில் கண்டு கொள்வது –

ஈடு முதலான வ்யாக்யானங்களில் -நலத்து ஒண் பொருள் -என்கிற பாதங்களுக்கு ஞானாதி குணகத்வமும் ஞான ஸ்வரூபமும் அர்த்தம் என்று வ்யாக்யானம்
பண்ணுகையாலே இப்பத த்வயத்தாலும் உபயமும் ஸ்வரூபம் என்கிற அதிகாரண அர்த்தம் சொல்லப் பட்டது என்று ஸ்புடமாக அறியலாம் –

ஒண்மைக்கு அபஹத பாப்மாத்வாதி குண அஷ்டக அந்தரகதமான ஸத்யஸங்கல்பத்வம் அர்த்தமாகையாலே
சங்கல்பாதேவ ஞாத்யாதி பிராப்தி என்கிற சதுர்த்த அதிகரண அர்த்தம் இச்சந்தையாலே ஸூசிதம் –

ஒண் பொருள் –என்கிற சப்தத்தாலே அபஹத பாப்மாத்வாத் யந்தரகதமான சத்யகாமத்வம் யுக்தமாயிற்று –
சத்யகாமத்துவமாவது -இச்சை யுண்டாகில் அவ்ப்ரதிஹதமாய் இருக்கை-

இப்படி சத்யகாமாத்வ உக்த்யா ஐச்சமாக சரீரத்வ அசரீரத்வங்கள் முக்தனுக்கு கூடும் என்கிற பஞ்சம அதிகாரண அர்த்தமும் –
ஒண் பொருள் –என்கிற சந்தையாலே தானே ஸூசிதமாகலாம் –

ஷஷ்ட அதிகரண நிரூபிதமான ஜகத் வியாபாரம் இன்றிக்கே போக மாத்ர ஸாம்யமே உள்ளது -என்கிற அர்த்தம் –

அந்த ப்ரஹ்ம ஆனந்தத்தோடு ஒத்த ஆனந்தத்தை உடையவன் என்று ஆனந்த மாத்ர சாம்யத்தைக் காட்டுகிற –அந்நலம்-என்கிற பதத்தால் ஸூசிதம் –

சரம ஸூத்ரம் அதிகாரணாந்தரம் என்கிற பக்ஷத்தில் ஆஸ்ரிதரை ஒரு நாளும்  விடாத திண்மையை யுடைய திருவடிகள் என்று சொல்லுகிற –
திண் கழல் -என்கிற பதத்தாலே -ஈஸ்வர ஸ்வா தந்தர்ய சங்கீத புநரா வ்ருத்தியை
ஸத்ய ஸங்கல்ப காருண்யாதி குணவதீஸ்வர ஸ்வ பாவத்தாலே இவ்வதிகரண அர்த்தம் ஸூசிதம்

இப்படி பத்தாம் பாட்டுக்கும் இப்பாத த்வயத்துக்கும் ஐகமத்யம் உண்டு என்னும் இடம் சித்தம் –

——————————————–

இனி நிகமத்தில்
சேர்த் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல் சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த இப்பத்தே -என்று தடாகங்கள் சேர்ந்த திரு நகரிக்கு நிர்வாஹகரான
ஆழ்வார் அருளிச் செய்த பகவத் அபிகம்யத்வ ப்ராப்யத்வ உபயோகங்களான கல்யாண குணங்களால் தொடுக்கப் பட்டு இருந்துள்ள
ஆயிரம் திருவாய் மொழியிலும் வைத்துக் கொண்டு இப்பத்தை நிரூபியுங்கோள் -என்று
உத்தர த்விக ப்ரதிபாத்யமான பகவத் அபிகம்யத்வ ப்ராப்யத்வ ப்ரதிபாதனம் இத் திருவாய் மொழி என்று தலைக்கட்டி அருளினார் –

ஈட்டிலே உபாஸக அனுக்ரஹத்தாலே உபாஸ்யனுடைய கல்யாண குணங்களைத் தொடுத்த என்று இறே-
சீர்த் தொடை -என்கிற சந்தைக்கு வ்யாக்யானம் செய்து அருளினது –

இப்படி வீடுமின் முற்றத்துக்கு உத்தர த்விகத்துக்கும் ஐகமத்யம் யுண்டு என்னும் இடம் சித்தம்

ஆக அத்யாய சதுஷ்ட்யாத்மகமாய் –
ஷோடச பாதாத்மகமாய் –
ஷாட் பஞ்சாசததிகசத அதிகரணாத் மகமாய்
இருந்துள்ள சாரீகாதாத்மகமாய் இருந்துள்ள பிரதம த்விதீய தசகங்களுக்கும் –
கலிவைரி நிகமாந்த தேசிக ப்ரப்ருதிகளான பூர்வாச்சார்யர்களுடைய ப்ரதிஞ்ஞா வாக்கியங்களின் படியே ஐகமத்யம் அநதி ஸங்க்ரஹ விஸ்தரேண உபபாதிதம் ஆயிற்று –
இனி பத்துடை அடியவர் -தொடங்கி -முனியே நான்முகன் அளவும் -இவ்விரண்டு திருவாய் மொழிக்கும் விவரணம் என்னும் இடம் ஸூதீக்களுக்கு ஸூவ்யக்தமாக அறியலாம்

—————————————————————————-——————————-

பாரம்பரீ பவபயோ நிதி பாத்ர பாத்ர சிஷ்டேதரேஷ்வ ஸூலபம் மம தேசிகா நாம்
தே யாத தயா நிதி ரமாசக பாத யுக்ம ருக்மாதி பாவந வி ஸூத்த ஸமஸ்த போதம்
ஜெயது வகுளதாரீ தேசிகோ தேசிகா நாம் ஜெயது யதி வரார்யோ மாயி மத்தேப சிம்ஹா
ஜெயது கலி ஜீதார்யோ வ்யாஸ சம்ஜ்ஜோ விபஸித் ஜெயது ஜெயது நித்யம் வேங்கடாசார்ய யுக்மம்
இதி-ஸ்ரீ மத் வாதூல குல திலகயோ காஞ்சீயதீசஜநீ பூமி க்ருதாவதாரயோ
ஸ்ரீ மத் வேங்கட தேசிகயோ அஹேதுக க்ருபாலப்தோபய வேதாந்த ஹ்ருதயேந ஸ்ரீ காஞ்சீ வர வர யோகிநா
ஸ்ரீ ராமாநுஜா தாஸேந விலிகிதம் சாரீரக த்ரமிடோபநிஷதைக கண்ட்யம் –

———————–

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்போருவர் – உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ
ஒரு பார் தனில் ஒக்கு மூர்!

ஸ்ரீநகர்யாம் மஹாபுர்யாம் தாம்ரபர்ணி உத்தரே தடே
ஸ்ரீ திந்த்ரிணீ மூலதாம்நே ஶடகோபாய மங்களம்

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி – ஓர் அறிமுகம்–ஸ்ரீ ஸுதர்சன ராமானுஜ தாஸன்–

February 27, 2023

ஸ்ரீமந் நாத முநிகள் நம்மாழ்வாரைப் பற்றி இந்த ஸ்லோகத்தை அருளியுள்ளார்:

யத்கோ ஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய|| “

யாவருடைய ஆயிரம் கிரணங்கள் (ஆயிரம் திருவாய்மொழி பாசுரங்கள்) மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறதோ,
யாவருடைய திருமேனியில் நாராயணன் தன்னுடைய சங்குடனும் சக்கரத்துடனும் விளங்குகிறானோ,
யாவருடைய வசிப்பிடத்தின் பெருமையை சாஸ்த்ரங்கள் கூறுவதால் நன்கு படித்தவர்களால் வணங்கப்படுகிறதோ,
வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த நம்மாழ்வாராகிற சூரியனை நான் வணங்குகிறேன்-

“த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மய வபு: த்ருத சங்க சக்ர: “

இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படுவது, அழகாக அலங்கரிக்கப்பட்ட நாராயணன் சங்க சக்கரங்களை தரித்துக் கொண்டு
ஸவித்ர மண்டலத்தில் எழுந்தருளியுள்ளான். அவனே எப்பொழுதும் த்யானிக்கத் தகுந்தவன்.
நாதமுநிகள் இங்கே நம்மாழ்வாரை எம்பெருமான் ஆனந்தத்துடன் எழுன்தருளியிருக்கும் ஸவித்ரு மண்டலமாகவும் சூரியனாகவும் சொல்கிறார்.
ஆழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை ஆயிரம் கிரணங்களாக விளாக்குகிறார்.
ஆழ்வார் தன்னுடைய ஒளியால் (பாசுரங்களால்) மதுரகவி ஆழ்வாரை வடக்கிலிருந்து ஈர்த்து திருக்குருகூருக்கு வரவழைத்தார்.
ஸவித்ரு மண்டலத்திலிருந்து வரும் கிரணங்களுக்கு ஸாவித்ரம் என்று பெயர் –
ஆதலால் திருவாய்மொழிக்கு இங்கே ஸாவித்ரம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது

“ஆதித்ய ராம திவாகர அச்யுத பாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதிற் கமல மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கரோதயத்திலே”–ஆசார்ய ஹிருதய சூத்ரம் இங்கு கவனிக்கத்தக்கது:

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும், பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ, அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

ஶ்ரியப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்ய ப்ரபந்தங்கள்.

இதனை ஸ்ரீமத் வரவரமுனிகள் * அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார்.

இங்கு ஸ்ரீ பிள்ளைலோகஞ்சீயர் ஸ்வாமி வ்யாக்யானம் * செந்தமிழான செம்மை உடைத்தாகையாலே ஸர்வ ஸுலபமாய் ச்லாக்யமான த்ராவிட பாஷையாலே ஆய்த்து ஸர்வ வேதாந்த ஸாரங்களை ஸங்க்ரஹித்து இவர்கள் பண்ணிய தமிழ் என்னும்படி பண்ணியருளிற்று.

* மேலும் * செந்திறத்ததமிழோசை வடசொல்லாகி * என்று முதலாக எடுக்கலாம்படியிறே இதன் வைபவம் இருப்பது.

அதாவது நற்கலைகள் என்று தோஷமேயில்லாததான வேதமாய், அது தானும் முக்குணத்தின் வசப்பட்டவர்களுக்கு அந்தந்த குணங்களுக்குத் தக்க சொல்லுமதாய் இருக்கும். அதன் ஸாரபாகத்தைச் செந்தமிழால் அளித்தவர்கள் ஆழ்வார்கள்.

இவர்களை * கோது இலவாம் ஆழ்வார்கள் * என்று கொண்டாடுகிறார் பெரிய ஜீயர்.

கோதிலவாம் என்பதனை இரண்டு விதமாக அந்வயித்து (சேர்த்து), அருளிச் செயல்களுக்கும், ஆழ்வார்களுக்கும் விசேஷணம் காட்டியருளியுள்ளார் பிள்ளைலோகஞ்சீயர்.

(1) கோதிலவாம் கலைகள் என்று கொண்டபோது, ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் கோது அற்றவைகள் என்று அருளினாராயிற்று,

இங்கு கோதாவது (கோது – குற்றம்) கண்டவர்களையும் தோத்திரம் பண்ணுகை. இதனை * அழுக்குடம்பு எச்சில் வாய் * என்று இகழ்ந்தார் கலிகன்றி.

அருளிச் செயல்கள் அனைத்தும், இந்த தோஷ கந்தமின்றியே இருக்கும் (தோஷமன்றி இருத்தல் அன்றிக்கே அதன் வாசனையும் கூட இல்லாதவாறு இருக்கை).

இதனை ஆசார்ய ஹ்ருதயத்திலே * ராமாயணம் நாராயண கதை என்று தொடங்கி * என்கிற சூர்ணிகையிலே விவரித்தருளினார் ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

ஆகவேயிறே இது தன்னை * தீதிலந்தாதி * (8-2-11) என்றார் ஆழ்வாரும்.

(2) இனி * கோதிலவாம்* என்பதை ஆழ்வார்களிடத்து அந்வயிக்கும் பொழுது, ஜீவாத்மாவின் அத்யந்த பாரதந்த்ரயத்திற்குச் சேராத உபாயங்களில் கை வைக்காத ஏற்றம் பெற்ற ஆழ்வார்கள் என்றபடி.

120188497.0p9mnWFF

நம்மாழ்வார் வைபவம்

இவ்வாழ்வார்களில் தலைவர் நம்மாழ்வார். இவரே ஆழ்வார் கோஷ்டியிலும், ஆசார்யர்கள் கோஷ்டியிலும் அக்ரேஸரர் ( முன்னே இருப்பவர்). * ப்ரபன்ன ஜன கூடஸ்த்தர் * என்று இவருக்குத் திருநாமம். ப்ரபன்னர்களான ஜனங்களுக்கு மூலபுதர் என்றபடி. இவரை வைத்துத் தான் ப்ரபத்தி மார்க்கம் நன்றாகப் பரவும்படிச் செய்தான் பகவான்.

தேஹமே ஆத்மா * என்று கொண்டு * உண்டியே உடையே உகந்து ஓடும் * ஸம்ஸாரிகளுக்கும், தேஹம் வேறு ஆத்மா வேறு என்கிற ஜ்ஞானம் உள்ள மஹரிஷிகளுக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும். அப்படிப்பட்ட மஹரிஷிகளுக்கும் ஆழ்வாருக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் இருக்கும். இவ்வாழ்வாரே ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்ய நிலையை (உள்ளதை உள்ளபடி உணரும் உண்மையான நிலை) அறிந்து அதனை தமது அருளிச் செயலில் அருளியும் அனுஷ்டித்தும் காட்டினார்.  இப்படிப்பட்ட ஆழ்வாரின் அருமையினையும், அவர் போன்ற அதிகார்கள் கிடைப்பது அரிது என்பது தோற்றவும், கண்ணன் கீதையில் * வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸு துர்லப: * என்று கண்ணீரோடு அருளினான்.

ஈட்டில் முதல் ச்ரியப்பதிப்படியில், ஆழ்வார் ப்ரபாவம் சொல்லுமிடத்து நம்பிள்ளையின் ஸ்ரீஸுக்திகள்.

இப்படியிருக்கிற சிதசிதீஶ்வரர்கள் ஸ்வரூபஸ்வபாவங்களை அறியக்கடவார் ஒருவருமில்லை. இவற்றையுள்ளபடி அறிவாரில் தலைவராயிற்று இவ்வாழ்வார். இவர்க்கு ஒப்புச் சொல்லலாவார் ஸம்ஸாரிகளிலுமில்லை நித்யஸூரிகளிலும் இல்லை. தம்படி தாமுமறியார், ஸம்ஸாரிகளுமறியார்கள் ஸர்வேஶ்வரனும் அறியான். * ஆழ்வார் ப்ரபாவம் அருளிச் செய்யுமிடம் இது!

பகவான் இவ்வாழ்வாரை விசேஷ கடாக்ஷம் பண்ணியருளியதால் தத்வங்களை விசதமாக அறிந்தார் நம்மாழ்வார். இனி மற்றைய ஆழ்வார்களும் இதே போன்றுதான் அருளப்பட்டார்கள் என்பதனால்,  அவர்களிடம் இருந்து வ்யாவ்ருத்தி தோற்ற இவரது சீர்மையை அருளிச்செய்கிறார் அடுத்த வரியினால்.

அப்படிப்பட்ட ஆழ்வார்கள் அனைவருக்கும் இவர் தலைவர் என்றபடி!

பூதம் ஸரஸ்ச்ச * என்கிற தனியனாது அருளிச்செயல் ஸேவிக்கும் காலங்களில் முன்னே ஓதப்பட்டு வரப்படுகிறது. இதன் ஸாராம்ஸமாவது => ஏனைய ஆழ்வார்களும் எம்பெருமானாரும் நம்மாழ்வாருக்கு அவயவ பூதர்கள் என்பதாகும்.

தம்படி தாமுமறியார் => ஏதேனும் ஒரு ஸாதனைத்தை அனுஷ்டித்து வைத்து அதனால் பலிக்கப் பெற்றது இல்லாமையினாலே தம்முடைய பெருமையினைத் தாமும் அறியார் ! எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபையினால் ஆயிற்று இவ்வாழ்வார்க்கு வந்த நன்மைகள் யாவும்.

ஸம்ஸாரிகளுமறியார்கள் => இவரைப் போன்று ஒரு வ்யக்தி ஸம்ஸாரத்தில் காணமாட்டாமையினாலே ஸம்ஸாரிகளும் இவரது ப்ரபாவத்தினை அறியார்கள்

ஸர்வேஶ்வரனும் அறியான் => தன்னுடைய க்ருஷிபலங்களும் திருக்குணங்களும் இவரிடத்தில் பலித்தது போல் வேறொருவரிடம் பலிக்காமையினாலே எம்பெருமானும் அறியான்.

ஸம்ஸாரிகளைக் காட்டில் ஆழ்வார் பெருமை படைத்தவர் என்று ஒப்புக் கொண்டாலும், நித்யஸூரிகளைக் காட்டிலும் வ்யாவ்ருத்தர் என்று சொல்லலாமோ என்னில் – * விண்ணுளாரிலும் சீரியர் * என்று ஆழ்வார் வ்யாவ்ருத்தரே !

யாவர்நிகர் அகல்வானத்தே (4-5-8) => எம்பெருமானைக் கவிபாட வல்ல எனக்குப் பரமபதத்தில் ஸூரிகளும் நிகரல்லர் , என்று ஆழ்வாரும் தம்மைப் ப்ரஸ்தாவிக்கும்படியாயிற்று இவரது புகழ்.

வேதம் தமிழ் செய்த மாறன்

ஸ்ரீ நம்மாழ்வாருக்கு * வேதம் தமிழ் செய்த மாறன் * என்றே திருநாமம். அவரது வாழித் திருநாமத்தில் * வேதத்தைச் செந்தமிழால் விரித்து உரைத்தான் வாழியே * என்றே ஓதிவரப்படுகின்றது.

ஸ்ரீமத் வரவரமுனிகள் தம்முடைய உபதேசரத்தினமாலையினில் ஆழ்வாரை * வேதம் தமிழ் செய்த மாறன் * என்று கொண்டாடுகிறார்.

அதாவது தன்னை அதிகரிக்கைக்கு (கற்கைக்கு) அநேகமான அதிகாரங்களை உடைத்தாய் இருத்தல்,

த்ரைகுண்ய விஷயமாயிருத்தல் (முக்குணத்தின் வசப்பட்டவர்களுக்காயிருத்தல்)

அன்றிக்கே, ஸர்வரும் அதிகரிக்கும்படியாகவும், உத்தரபாகத்தின் அர்த்தத்தை மாத்திரம் ப்ரதிபாதிக்கும்படியாய் இருப்பது ஆயிற்று இவ்வாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி.

இப்படி அருளிச்செய்யுமிடத்து இவரது ஆப்ததமத்வம் தோற்ற * மெய்யன் * என்றார் ஸ்ரீமத்வரவரமுனிகள். ஆப்தர் என்றால் * यथार्थद्रष्टुत्वेसति यथार्थवक्त्रुत्वम् – आप्तत्वम् * – அதாவது தான் உள்ளதை உள்ளபடி அறிந்து கொண்டு அது தன்னையே பிறர்க்கும் உபதேஸித்துப் போருபவர்கள். இவர்களில் தலைவரன்றோ ஆழ்வார் !

இதனை அமுதனாரும் * எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை * என்றருளினார்.

எய்தற்கு அரிய மறைகள் – அடைவதற்கு அரிதாய் உள்ள மறைகள். தன்னுள்ளே கொண்டுள்ள அர்த்தங்களை மறைப்பதினால் மறை ஆயிற்று.

இதன் அர்த்தங்களை அறிவதற்கு ந்யாய ஸஞ்சாரம் பண்ணும் மஹரிஷிகளே அர்ஹர்கள். மற்றையோர்களுக்கு அது கைகூடாது என்றபடி.

இதனை அதிகரிக்கவும் ஸ்ம்ருதி இதிஹாஸம் புராணம், மீமாம்ஸா இவற்றின் உதவி வேண்டும்.

வேதார்த்தம் அறுதியிடுவது ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களாலே * (2) என்கிற ஸ்ரீ வசன பூஷண ஸூத்ரமும் அதற்கு மாமுனிகள் வ்யாக்யானமும் இதனை விவரிக்கின்றன. மேலும் * அநந்தா வை வேதா: * என்று வேதங்களை முழுவதுமாக அதிகரிப்பதும் இயலாத காரியம்.

ஆயிரம் இன்தமிழால் – இனி ஸ்ரீசடகோப வாங்மயமான திருவாய்மொழி எய்தற்கரியதாய் இல்லாதல் சொல்லப்பட்டது.

ஆயிரம் – என்பதினால் திருவாய்மொழியின் அளவுபட்டமையும்,

இன்தமிழால் – என்பதினால் அனைவரும் அதிகரிக்கலாம்படியும், அதுவும் இன்தமிழாகையினாலே எய்தற்கு எளியதாய் இருக்கிறது.

யச் ச்ருதே: உத்தரம் பாகம் சக்ரே த்ராவிட பாஷயா * [ யாவரொரு நம்மாழ்வார் வேதத்தின் உத்தர பாகத்தை த்ராவிட பாஷையினால் அருளிச் செய்தாரோ ] என்று பராங்குசாஷ்டகம்.

ஆழ்வார் தமரே கேசவன் தமராகி தேஜஸ் மிக்கு -எழும் பிறப்புக்களிலும் -தாஸ்ய பூதராக இருப்பார்கள்

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு
ஆறு என்று நெஞ்சே அணை—17-

இதில்-கீழ் மேல் உண்டானவர்கள் எல்லாரும் தம்முடைய சம்பந்தத்தாலே ஸ்ரீ பகவத் தாஸ்ய லாபத்தை லபித்தார்கள் என்று
ஹ்ருஷ்டராய்ப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
கீழ்-தம் அளவில் உண்டான உகப்பு தம் ஒருவர் அளவிலும் சுவறி விடுகை அன்றிக்கே தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்-விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினர் -என்கிற
விரோதி நிவ்ருத்தி அளவன்றிக்கே-பலத்தாலும் வெள்ளமிட்டு-அலை எறிகிற படியைக் கண்டு –
மமாப்யேஷ யதாதவ -என்னும்படி ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே என்று வித்தராய்
தம்மை இப்படி சபரிகரமாக விஷயீ கரிக்கைக்கு அடியான-அவன் குண சேஷ்டிதங்களை
திருத் த்வாதச நாம முகத்தாலே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிற
கேசவன் தமரில் -அர்த்தத்தை-கேசவனால் எந்தமார்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும் தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -எம்பிரான் எம்மான் நாராயணனாலே-
எமர் -கீழ் மேல் ஏழ் பிறப்பும் -கேசவன் தமர் -ஆனார்கள்-மாசரிது பெற்று – அத்தாலே -நம்முடைய வாழ்வு வாய்க்கின்ற வா –
என்றத்தை நினைக்கிறது –

கேசவனால் எந்தமர்கள் –
ஜகத் காரண பூதனாய்-விரோதி நிரசனம் பண்ணுமவனாய் – பிரசஸ்த கேசவனான அவனாலே
மதீயர் தேசு அடைந்தார் என்று தேஜஸ் சைப் பிராபித்தார்கள் என்று – ஸ்ரீ கேசவன் தமராகை இறே இவர்களுக்கு தேஜஸ்
தாஸ்யம் இறே ஆத்மாவுக்கு தேஜஸ் கரமாவது –
அத்தை தம்மோட்டை சம்பந்தத்தாலே கீழ் மேல் உண்டான சம்பந்தி பரம்பரையில் உள்ளவர்கள் எல்லாரும் லபித்தார்கள் என்று
அந்த யுபகார கௌரவத்தாலே-அவன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய் ஸ்ரீ வைஷ்ணத்வ சிஹ்னமாய்
கேசவன்
நாரணன்
மாதவன்
கோவிந்தன்
விட்டு
மது சூதனன்
திரி விக்ரமன்
வாமனன்
சிரீதரன்
இருடீகேசன்
பற்ப நாபன்
தாமோதரன் – என்கிற திரு த்வாதச திரு நாமங்களை பேசி அனுபவித்து ஹ்ருஷ்டராய் அத்தை இப்படி நன்றாக அருளிச் செய்த –
சிறப்பு -நன்று –

வீசு புகழ் மாறன்-
சம்பந்த சம்பந்திகள் அளவும் ஸ்ரீ வைஷ்ணத்வம் ஏறிப் பாயும் படியான வைபவத்தால் வந்த பிரசுரமான யசஸ்சை உடைய
ஸ்ரீ ஆழ்வார் உடைய-

மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று –
புஷ்பம் போன்ற திருவடிகளே நித்தியமான ஆத்மாக்களுக்கு எல்லாம் உஜ்ஜீவிக்கைக்கு உசித உபாயம் என்று –

நெஞ்சே அணை-
அவர்களிலே ஒருவனாய்-அம்சம் பெறும்படியான எனக்கு உபகரணமாய் சௌமனஸ்யம் உள்ள மனசே
பிரஸூன சமமான திருவடிகளை நீயும் சமாஸ்ரயணம் பண்ணு–

நாராயணனாலே -என்று –
அவனுடைய ஸ்வீகாரமே நிரபேஷ உபாயம் என்றதின் அனுவாதமான கேசவனால் என்கிற இப் பதத்திலே -தத் விவரணமாக
மாதவன் என்றதே கொண்டு -என்றும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் மேவும் தன் மயமாக்கினான் -என்றும்
என்னைக் கொண்டு -என்றும்
தன் பேறு ஆனமைக்கு -விட்டிலங்கு செஞ்சோதி -என்றும்
அம்மான் திரிவிக்ரமனை எனக்கே அருள் செய்ய –எனக்கு என்ன –விதி சூழ்ந்தது -என்றும்
தொழும் மனமே தந்தாய் -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
உன்னை என்னுள் வைத்தேன் என் இருடீகேசனே -என்றும்
ஏற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்றும்
தாமோதரனை -என்றும்-அருளிச் செய்த சந்தைகளும் அனுசந்தேயங்கள்-

மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு-
மதுரகவி ப்ரக்ருதிகள் என்றுமாம்
மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுஜர் உத்தாரகர் என்கிறார் ஆயிற்று என்றுமாம்

———————————

அருளிச் செயல் வைலக்ஷண்யம்

இங்ஙனம் ஏற்றம் பெற்ற ஆழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியானது அதிவிலக்ஷணமாயிருக்கும். இதனை * ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம் * என்று ஸுசிப்பித்தருளினார் ஸ்ரீமத் வரவரமுனிகள்.

அதாவது எம்பெருமானுடைய மயர்வற மதிநலம் ஆகிய அருள் கொண்டு அன்றோ ஆயிரம் இன்தமிழ் பாடினது.

இப்படி இருக்கும் இன்தமிழும் பகவதேகபரமாய், போக்யமுமாய், ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய், ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய், ஸம்ஸார விச்சேதமுமாய், சீக்ர பலப்ரதமுமாய் இருக்கை. இவையனைத்தும் பிள்ளைலோகஞ்சீயர் காட்டியருளிய விசேஷணங்கள்.

பகவதேகபரமாய் – எம்பெருமானை மட்டுமே ப்ரதிபாதிக்கக் கூடியதாய். ஸ்ரீ ராமாயணம், மஹாபாரதம் ஆகியவை எம்பெருமானுடைய வைபவங்களை ப்ரதிபாதிக்க என்று தொடங்கி மற்றையவர்களைப் பற்றி பேசுவது போலன்றிக்கே, * மாற்றங்களாய்ந்து கொண்டு * (6-8-11) என்று சொற்களை ஆராய்ந்தெடுத்து வேறு ப்ரஸ்தாவம் அன்றிக்கே எம்பெருமானையே விஷயமாகக் கொண்டது திருவாய்மொழி.

போக்யமுமாய் – ஸ்ரீமந்நாதமுனிகள் திருவாய்மொழிக்கு தனியன் இட்டருளும்பொழுது, முதலில் * பக்தாம்ருதம் * என்கிறார்.

அதாவது திருவாய்மொழியை பக்தர்களுக்கு அம்ருதம் போன்றது என்கிறார். இதனால் இத்திருவாய்மொழியின் போக்யத்வம் நன்கு புலப்படும்.

பூஸுரர்களாகிற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமானது தொண்டர்க்கமுதம்.  * தொண்டர்க்கமுதன்ன சொல்மாலைகள் *.

இங்கு ஸ்ரீ உ.வே. காஞ்சி ஸ்வாமியின் திவ்யார்த்த தீபிகை. ” இவ்வுலகில் கவிபாடினவர்கள் மற்றும்பலருமுண்டாகிலும், இப்படி “தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்” என்று பெருங்களிச்சியாகப் பேசினவர் பிறராருமிலர்.

தம்முடைய திருவாய்மொழி திருப்புளியாழ்வாரடியிலே சுவறிப் போகாமல் காருள்ளளவும் கடல்நிருள்ளளவும் வேதமுள்ளளவும் தேவகீதனுள்ளளவும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதமாய்ப் பரமபோக்யமாய் விளங்கப்போகிறதென்பதை ஆழ்வார்கண்டறிந்து அருளிச்செய்தது அதிசயிக்கத்தக்கது.

திருவாய்மொழிக்குத் தனியனிடத்தொடங்கின ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கும்போதே பக்தாம்ருதம் என்றருளிச்செய்தது இந்தப் பாசுரத்தையுட்கொண்டேயாம்.

பாலேய்தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரம் முதலிலேயே (1–5–11) என்று அருளிச்செய்திருந்தாலும் தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் என்கிற இப்பாசுரம் இணையற்றது.

” இது இவ்வுலகில் உள்ளார்க்கும் மட்டுமன்றி வானவர்களான நித்ய ஸூரிகளுக்கும் பரம போக்யமாய் இருக்கும்.

இதனை ஆழ்வார் * கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே * என்றவிடத்தில் அருளினார்.

இத்திருவாய்மொழியினைக் கேட்டால் நித்யஸூரிகள் திருப்தி பெறமாட்டார்கள். மீளவும் சொல்ல வேண்டும் என்று சொல்லுவர்கள் என்றபடி.

ஜ்ஞாதவ்ய ஸகலார்த்த ப்ரதிபாதகமுமாய் – இதனால் அர்த்த பஞ்சகம் சொல்லப்பட்டது. * அறிய வேண்டும் அர்த்தமெல்லாம் இதற்குள்ளே உண்டு – அதாவது அஞ்சர்த்தம் * என்கிற முமுக்ஷுப்படி ஸூர்ணிகைகள் இங்கு நினைக்கத்தக்கன. மொழியைக் கடக்கும் பெரும் புகழையுடையவரான கூரத்தாழ்வானின் திருக்குமாரரான ஸ்ரீ பராசர பட்டர், திருவாய்மொழி அறிவிக்கும் பொருளானது அர்த்த பஞ்சகமே என்பதை,

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்–என்கிற தனியனினால் அருளிச்செய்கிறார்.

அதாவது மிக்க இறைநிலை என்பதினால் பரமாத்ம ஸ்வரூபமும், மெய்யாம் உயிர்நிலை என்பதினால் ஜீவாத்ம ஸ்வரூபமும், தக்க நெறி என்பதினால் உபாயஸ்வரூபமும், தடையாகித் தொக்கியலும் ஊழ்வினை என்பதினால் விரோதி ஸ்வரூபமும், வாழ்வினை என்பதினால் புருஷார்த்த ஸ்வரூபமும் அருளிச் செய்தாராயிற்று.

ஈச்வர ப்ரீதிஹேதுவுமாய் – இத்திருவாய்மொழியினை கேட்டதால் எம்பெருமான் தானே தனக்கு ப்ரீதி உள்ளடங்காமல் போக்கு வீடாகத் தென்னா தென்னா என்று ஆனந்திக்கிறான் என்பதனை ஆழ்வார் தாமும் * தென்னா வென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே * என்றருளினார்.

ஸம்ஸார விச்சேதமுமாய் – அளவு காண இயலாத ஸம்ஸாரத்தையும் * ஸம்ஸாரம் ஸாகரம் கோரம் * என்றிருப்பதையும் வற்றச் செய்வதாய் இருப்பது திருவாய்மொழி. * ஆயிரத்துள் இப்பத்து அருளுடையவன்தாள் அணைவிக்கும் முடித்தே.* (2-10-11) என்றாறிரே ஆழ்வார். ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களில் இப்பத்துப் பாசுரங்களே பாவங்களை ஒழித்து, எம்பெருமான் திருவடிகளில் சேர்ப்பிக்கும் என்றபடி.

பகவத் விஷயம்

இன்றளவும் திருவாய்மொழி காலக்ஷேபத்தை * பகவத் விஷயம்* என்றே வ்யவஹரிப்பர்கள் பூர்வர்கள். இதனாலே இதன் ஏற்றம் தெரிந்து கொள்ளலாம். அனைத்து ஶாஸ்த்ரங்களுமே எம்பெருமானை ப்ரதிபாதிக்கின்றன என்பது நமது ஸித்தாந்தத்தில் ஒப்புக் கொண்ட விஷயம். உபப்ருஹ்மணங்களான இதிஹாஸ புராணங்கள் இருக்கட்டும். பூர்வ மீமாம்ஸா ஶாஸ்த்ரமும் கூட எம்பெருமானுக்கு ஆராத்ய விஷயத்தைச் சொல்வதால் அதுவே விஷயம் என்பது நோக்கத்தக்கது.

இதனை ஸ்ரீவசன பூஷண வ்யாக்யானத்தில் ஸ்ரீமத்வரவரமுனிகள் *….. பூர்வோத்தர மீமாம்ஸைகளில் * அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா * என்றும் * அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா * என்றுமிறே உபக்ரமித்தது. ஆகையாலே பாகத்வயத்துக்கும் ப்ரதிபாத்யம் ஆராதநரூபமான கர்மமும், ஆராத்யவஸ்துவான ப்ரஹ்மமுமிறே…. *. விஷயம் இங்ஙனம் இருக்க திருவாய்மொழி காலக்ஷேபத்தை மாத்திரம் பகவத் விஷயம் என்று குறிப்பிடுவான் என் என்னில், திருவாய்மொழியில் உள்ள  பகவதேகபரத்வம். இது கீழேயே நன்கு விளக்கப்பட்டது.

இங்கு எம்பெருமான் தானும் திருவாய்மொழியில் மகிழ்ந்து உறைகிறான் என்பதனை ஸ்ரீபராசரபட்டர் தம்முடைய ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலே

வடதலதேவகீ ஜடரவேதஶிர: கமலாஸ்தந ஶடகோபவாக்வபுஷி ரங்கக்ருஹே சயிதம்
வரதமுதாரதீர்க்கபுஜலோசநஸம்ஹநநம் புருஷமுபாஸிஷீய பரமம் ப்ரணதார்த்திஹரம் || ( பூர்வ சதகம் – 78)

என்ற ஸ்லோகத்தினால் அருளிச்செய்தார். எம்பெருமான் மகிழ்ந்து உறையும் இடங்களைக் குறிப்பிட்டு வருகையிலே ஆலிலை, தேவகீ பிராட்டியின் திருவயிறு, முதலானவற்றோடு ஆழ்வார் அருளிச்செயலான திருவாய்மொழியிலும் எம்பெருமான் ஆதரத்தோடு உறைகிறான் என்பது இதனால் கிடைக்கப்பெற்ற அர்த்தமாகும்.!

நாகணைமிசை நம்பிரான் சரணே சரண்

வேதாந்தத்திலே விதிக்கப்பட்ட உபாயங்கள் பக்தியும் ப்ரபத்தியும் ஆகும். அதில் இவ்வாழ்வார் அனுஷ்டித்தும், உபதேசித்தும் வைப்பது பகவானே உபாயம் என்பதாகும். இதனை ஆழ்வார் அனுஷ்டித்துக் காட்டிய இடங்கள்

  • நோற்ற நோன்பிலேன் (5-7-1) (பலமாகக் கைகூடுவதற்கு கர்ம யோகங்களை அநுஷ்டித்தேன் அல்லேன்.)
  • ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் (5-7-10) (என் ப்ராப்திக்கு வழியாக உன் திருவடிகளையே உபாயமாகத் தந்துவிட்டாய்)
  • கழல்களவையே சரணாகக் கொண்ட (5-8-11) (க்ருஷ்ணனுடைய திருவடிகளையே தனக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட சடகோபன்)
  • நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் (5-10-11) (திருவநந்தாழ்வான் மேல் திருக்கணவளர்ந்தருளிய ஸ்வாமியானவன் திருவடிகளே நமக்கு உபாயம்.)

அர்ச்சாவதாரம்

 மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள் தன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவனான பேயாழ்வார்,

அர்ச்சாவதாரத்தைப் பற்றுகையே சுலபமானதும், நாம் உய்வதற்கும் வழியாகும் என்பதனை,

பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து
நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா – விருப்புடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து.

என்கிற பாசுரத்தினால் நமக்கு உணர்த்தினார். அதாவது மலைமேல் ஒற்றைக்கால் விரலால் நின்றுகொண்டும், மழைகாலத்தில் நீர்நிலைகளிலே மூழ்கிக்கிடந்தும், பஞ்சாக்நி நடுவில் நின்றுகொண்டும் இப்படிப்பட்ட உடலை வருத்தித் தவம்புரிவது பாவங்கள் தொலைந்து நற்கதி அடையவேண்டும் என்பதனாலே. அவ்வாறு வருந்தவேண்டா! திருவெஃகாவில் உள்ள ஸ்வாமியின் திருவடிகளிலே அந்நயப்ரயோஜநராய்ப் புஷ்பங்களைப் ஸமர்ப்பித்து ஆச்ரயித்தால் தீவினைகளெல்லாம் தன்னடையே ஓடிப்போய்விடுமே.

(ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்
கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1-)

(இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-)

(ஸ்வ யத்னத்தால் காண்பாருக்கு காணப் போகாது –என்கிறது –
சரணம் சொல்லி நிரந்தரம் கைங்கர்யம் செய்தாலே போகுமே
கோர மா தவம் செய்தான் அவன் அன்றோ நம்மைப்பெற
இங்கும் நீர் தவம் செய்ய வேண்டா)

(அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8–)

(வெறிதே யருள் செய்வர் –நிர்ஹேதுகமாக திருவருள் செய்வர் –யமே வைஷ வ்ருணுதே -கடவல்லி உபநிஷத் -2-என்கிறபடியே
தான் அங்கீகரிக்க நினைத்தார்க்கு)

(சும்மெனாதே கை விட்டு ஓடிப்போகுமே
நாம் ஆராய்ந்து கை தொழுதால் என்றும்
தீ வினைகள் ஆய்ந்து விலகிப்போகுமே)

சர்வேஸ்வரன் சம்சாரத்திலே புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நின்றான்
நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா -என்கிறார் –

உடம்பை ஒறுத்து -துஷ்கரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா —
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும்
தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –

(தொழுதால்-ஆல் –அநந்யார்ஹமாக கை தொழுவது துர்லபம் -என்பதைக் காட்டியவாறு)

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்–
பனி நாள் மலைகளில் (நின்றும் பனி நாளில்  )பொய்கைளிலே புக்குக் குளித்து

ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா–
கோடை நாள் பஞ்சாக்கினி மத்யஸ்தனாய் நிற்கவும் வேண்டா –

(வேண்டா என்று முன்னிலையாகச் சொல்வதே போதுமே
நீர் வேண்டா என்று குறிப்பிட்டுச் சொல்வான் என்னில்
நம்மைப் பெறவே அவன் கோர மா தவம் செய்கின்றான் என்பதை காட்டவே -)

(தஸ்மாத் நியாஸமே உத்க்ருஷ்ட தபஸ் ஸூ)

(மூன்று தத்வங்கள் மூன்று காலங்கள் அப்பிள்ளை
இங்கு இரண்டு
பொருப்பிடை ஐந்து நெருப்பிடை கோடைக்காலம் ஆச்சார்ய ஹ்ருதயம்)

விருப்புடைய-வெக்காவே சேர்ந்தானை–
விரும்பப் படுவதான திரு வெஃகாவிலே சேர்ந்தவனை –

(அனைவருக்கும் விருப்பு -உகந்து அவனுக்கும் -ஆழ்வாராதிகளுக்கும் -ஆச்சார்யர்களுக்கும் -நமக்கும்)

(புருஷகாரத்துக்கு திவ்ய தேசம் இருக்கும் என்றவாறு)

மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்-அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-
அநந்ய பிரயோஜனனாய் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆய்ந்து அனுசந்தித்து கை தொழுதால் –
அசேதனமான கொடிய பாபங்கள் தானே தன்னை ஆஸ்ரயிக்க நிற்க வற்றோ –
தீ வினைகள் தானே ஆராய்ந்து நமக்கு நிலம் அன்று என்று போகாவோ என்றுமாம் –

வ்ருஷ்டி பிரதீஷாஸ் சாலய-என்னும் நியாயத்தாலே
சும்மானாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடியே –

(மழைக்கு பயிர்கள் காத்து இருக்க ஞானம் உண்டோ-அதே போல் தீ வினைகளுக்கு ஞானம் இல்லை
சேதன சமாதியில் சொல்கிறார்)

எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே
நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -5- 4-3 –

உடம்பை ஒறுத்து -துஷ்கரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா —
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும்
தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –

(கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய்! என்னும்* காமரு பூங் கச்சி ஊரகத்தாய்! என்னும்* 
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய்! என்னும்* வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே! என்னும்*
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய்! என்னும்* மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா! என்னும்* 
சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே!    )

பனி காலத்தில் மலைகளில் நடுவே நின்றும் –
குளிர் காலத்திலே பொய்கைகளிலே புக்கு நீரிலே முழுக்கிக் கிடந்தும்
உஷ்ண காலத்தில் பஞ்சாக்கினி நடுவே நின்று வெந்து விழுந்தும் –
இப்படி குரூரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து நீங்கள் துக்கப்பட வேண்டா –

(மாற்றி செய்தால் உகந்தே செய்வோமே)

அவனோடு அல்லாதாரோடு வாசியற சர்வரும் ஒரு மிடறாக விரும்பும் படியான திரு வெஃகாவில்
தன்னைப் பேணாதே நம்மை ரஷிக்கைக்காக வந்து கண் வளர்ந்து அருளினவனை
பிரயோஜனாந்தர பரதையாகிற பொய் கலசாதே
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு பூக்களை அக்ரமமாகப் பணிமாறி
கையாலே அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்ததால்
துஷ் கர்மங்கள் அடங்கலும் நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் அன்று என்று அனுசந்தித்துத் தானே விட்டுப் போகாவோ

சும்மெனாதே கை விட்டோடி என்னுமா போலே
சேதன சமாதியாலே சொல்லுகிறது —

அன்றியே
மெய்ம்மலர் தூவி -ஆய்ந்து -அவன் குணங்களை அனுசந்தித்து -கை தொழுதால்
தீ வினைகள் அக்காவே என்னவுமாம்

மென்மலர் என்ற பாடமாகில்
மிருதுவான மலரை -என்றதாகிறது –

(புண்யம் பாபம் -அவனுக்கு பிரியமும் சீற்றமுமே தானே
அஞ்சலி பரமாம் முத்திரை -அம் ஜலதி -அஞ்சலி)

(கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே –11-7-6-)

(தூயோமாய் வந்து -அநந்ய ப்ரயோஜனராய் -மடி தடவாத சோறுக்கு விதுரரையும்,
சுறு நாறாத பூவுக்கு ஸ்ரீ மாலாகாரரையும்,
சுண்ணாம்பு படாத சாந்திற்குக் கூனியையும் பிள்ளைலோகாச்சார்யார் உதாரணமாகக் கூறுகிறார்.)

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு——6-

————-

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஶரதாத்மஜே |
வேத: ப்ராசதேஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||

இது ஸ்காந்த புராணத்தில் உள்ள வசனம். வேதத்தினால் அறியப்படுபவன் எம்பெருமான். *சுடர் மிகு சுருதியுள் உளன்* என்று இதனை அருளினார்

நம்மாழ்வார். * ஶ்ருதி ஸிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே * என்றார் எம்பெருமானார். அப்படி வேதத்தினால் அறியப்படுபவனான எம்பெருமான் தசரதனுக்குக் குமாரனாக திருவவதரித்த போது, வேதமும் வால்மீகி முனிவரிடம் இருந்து ஸ்ரீராமாயணமாகத் தோன்றிற்று.

இதனை * வேத வேத்ய ந்யாயம் * என்று உரைப்பர்கள் பூர்வர்கள்.

இந்த ந்யாயத்தாலே நோக்கினால், திருவாய்மொழி முதலான அருளிச்செயல்களுக்கு நோக்கு அர்ச்சாவதாரம் என்னலாம்படியிருக்கும்.

நித்ய முக்தர்களுக்கு அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு இருக்கும் நிலை பரமபதம்.

க்ஷீராப்தியில் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அபயம் கொடுத்துக் கொண்டு இருப்பவன் எம்பெருமான்.

ராமக்ருஷ்ணாதி அவதாரங்களோ குறிப்பிட்ட தேசகாலத்தவர்களுக்காய் இருக்கும்.

தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே * என்று ஆச்ரிதர்கள் விரும்பிய திருமேனியையே தனக்குத் திருமேனியாகக் கொண்டு ஸர்வஸுலபனாய் இருக்கும் அர்ச்சாவதார எம்பெருமானை ப்ரதிபாதிப்பது, ஸுலபமான ஆழ்வாருடைய திருவாய்மொழியே.

இதனுடைய ஸுலபத்வமும் கீழேயே சொல்லப்பட்டது.

thirucherai-nammazhwar-thiruvadi-thozhal-2013-27

ஆழ்வார் பிறருக்கு உபதேசிப்பதும் அர்ச்சாவதார எம்பெருமானைப் பற்றவே! இது *செய்ய தாமரைக்கண்ணனாய் * பதிகந்தன்னில் ஸுஸ்பஷ்டம். இதனை ஸ்ரீமத்வரவரமுனிகள் தம்முடைய திருவாய்மொழி நூற்றந்தாதியில்

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றி வவற்றுள் – எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று (26)

என்று ஸங்க்ரஹித்தார்.  இவ்விபூதியிலேயே கிட்டி ஆச்ரயிக்கும்படி ஸ்ரீ அர்ச்சாவதாரம் எளிது! கண்ணுக்குத் தோற்றும்படி நிற்கை அர்ச்சையிலேயிறே! ஆழ்வார் திருவுள்ளமான * நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீள் கடல் வண்ணன் * என்றத்தைப் ப்ரதிபாதிக்கும்படி. இத்திருவாய்மொழி ப்ரவேசத்தில் பரமாசார்யரான ஸ்ரீநம்பிள்ளையின் ஸ்ரீஸூக்திகள். * ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களினுடையவும் ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளடைய ஸ்வாதீநமாம்படி இருக்கிறவன், தன்னுடைய ஸ்வரூபஸ்தித்யாதிகள் ஆஶ்ரித அதீனமாம்படியாய் அவர்களுக்கு க்ருஹக்ஷேத்ராதிகளோபாதி கூறுகொள்ளலாம்படி நின்ற நிலையிறே * …. * இவன் ஏதேனும் ஒரு த்ரவ்யத்தையிட்டால் அத்தைத் திருவாய்ப்பாடியில் யசோதாதிகள் வெண்ணெயோபாதி விரும்பக்கடவனாய், இப்படித் தன்னை அமைத்துக் கொண்டு நிற்கிற இடமிறே அர்ச்சாவதாரமாவது. *

இதில் ஸ்ரீ அர்ச்சாவதார பர்யந்தமான சௌலப்யத்தை சம்சாரிகளைக் குறித்து
உபதேசிக்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தாமே விழுவாரைத் தடி கொண்டு அடிக்கை அன்றோ நாமும் கை விடுகை -என்று
தம்மாலே பொடியப் பட்டார் நாட்டார் இழவு பொறுக்க மாட்டாத கிருபா அதிசயத்தாலே
மீண்டும் அவனுடைய சௌலப்யத்தை உபதேசிக்கைக்காக ஸ்ரீ பர ஸ்ரீ வ்யூஹ ஸ்ரீ விபவங்களை
அடைவே அருளிச் செய்து கொண்டு சென்று-நீங்கள் உகந்த படியே உகந்து எழுந்து அருளப் பண்ண
அத்தை அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடு ஒக்க விரும்பும் சீலாதி அதிசயத்தாலே
உங்களோடு புரையறக் கலந்து சர்வ அபேஷிதங்களையும் குறைவற உபகரிக்கும் ஸ்ரீ அர்ச்சாவதாரத்தில் ஆஸ்ரயிங்கோள்
என்கிற செய்ய தாமரைக் கண்ணனில் தாத்பர்யத்தை அருளிச் செய்கிறார் செய்ய பரத்துவமாய் -இத்யாதியாலே -என்கை-

செய்ய பரத்துவமாய்ச் –
பர பரானாம் பரம -என்று இதர விலஷணமான அழகிய ஸ்ரீ பரத்வமாய் –

சீரார் வியூகமாய் –
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந-என்னும்படி இறே ஸ்ரீ வ்யூஹம் இருப்பது

சீர் –
என்று குணம் ஆதல்-ஐஸ்வர்யம் ஆதல் –

துய்ய விபவமாய்த் –
பிரத்யஷ அனுபவ யோக்யமான தூய்மையை யுடைய ஸ்ரீ விபவமாய் –
செய்ய தாமரைக் கண்ணன் -என்றும்
அமரர் குல முதல் -என்றும்
தடம் கடல் கிடந்தான் -என்றும்
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில் கொண்ட அண்ணல் -என்றும்
தயரதற்கு மகன் தன்னை -என்றும்
குரவை கோத்த குழகனை -மணி வண்ணனை குடக் கூத்தனை என்றும்-இறே பரத்வாதிகளை அருளிச் செய்தது

தோன்றி வற்றுள் –
இப்படி
தேச
கால
அதிகாரி–நியமங்களை யுடைத்தாய் பிரமாணங்களாலேயாய் பிரத்யஷிக்கலாம் படியாய்
இருக்கிற இவற்றில் வைத்துக் கொண்டு –

எய்துமவர்க்கு இந்நிலத்தில் –
இவ் விபூதியில் கிட்டி ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு –

அர்ச்சாவதாரம் எளிது என்றான் –
ஸூலபத்தாலே ஸ்ரீ அர்ச்சாவதாரம் சமாஸ்ரயணத்துக்கு சஷூர் விஷயமுமாய்
நித்ய சந்நிதியும் யுண்டாகையாலே அதி ஸூலபம் என்கிறார் –
நெஞ்சினால் நினைப்பான் எவனாகும் நீள் கடல் வண்ணன் -என்றத்தை நினைக்கிறது –
எளிவரும் இணைவனாம் -என்றவை ஸ்ரீ பரத்வமாம் படி அவனாகும் சௌலப்ய காஷ்டையை காட்டி -என்றார் இறே
எளிவரும் இயல்பினான் -இணைவனாம் -அவருக்குள் இரண்டும் ஸ்ரீ பரத்வமாம் படி -அவனாகும் சௌலப்யம் காஷ்டை -ஆச்சார்ய ஹிருதயம்
ஸ்ரீ மத்ய அயதனே விஷ்ணோஸ் சிஸ்யே நரவராத்மஜா -என்றும் –
நாரயாணம் உபாகமத் -என்றும்
ஸ்ரீ விபவத்தாலே அர்ச்சயமான ஏற்றம் உண்டாய் இறே இருப்பது -ஸ்ரீ பெருமாள் அர்ச்சித்த ஸ்ரீ பெரிய பெருமாள்-ஏற்றம் –
அவரையே கடாக்ஷித்ததால் வந்த திருக்கண்களின் ஏற்றத்தால் -விசாலாட்சி

இப்படி அர்ச்சாவதார வைபவத்தை அருளிச் செய்தவர் தாம் இன்னார் -என்கிறார் –
பன்னு தமிழ் மாறன் பயின்று-
அதாவது-சேதனரோடு செறிந்து ஆராயப் படுமதான த்ரவிடத்தை நிரூபகமாக யுடையரான ஸ்ரீ ஆழ்வார் –
பண்ணிய தமிழ் -என்னும்படி பிரமாண சரமத்தை வெளி இட்டால் போலே
பிரமேய சரமமான அர்ச்சாவதாரம் எளிது என்று வெளி இட்டு அருளினார் -என்கை-

—————–

வ்யாக்யானங்கள்

ஆழ்வார் அருளிச் செயல்களுக்கு அவதரித்த வ்யாக்யானங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவைகள். ஸ்ரீ அபயப்ரதராஜர் எனப்படும் ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளையே அனைத்து திவ்யப்ப்ரபந்தங்களுக்கும் வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.

* மன்னு மணவாளமுனி செய்யுமவை தாமும் சில * என்று மாமுனிகள் குறிப்பிடும்படி ஸ்வாமி பிள்ளை லோகாசார்யருக்குத் திருத்தம்பியாரான ஸ்ரீ அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் சில அருளிச் செயல்களுக்கு வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.

இவ்வ்யாக்யானங்கள் திவ்ய ப்ரபந்தங்களின் ஆழ்ந்த பொருள்களையும் அவற்றை அருளிச் செய்த ஆழ்வார்களின் திருவுள்ளத்தை ப்ரதிபாதிப்பதாயும் இருக்கும்.

இதனை ஸ்ரீமத்வரவரமுனிகள் தம்முடைய உபதேச இரத்தினமாலையிலே * பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான் பிள்ளை தெள்ளார் வடக்குத் திருவீதிப்பிள்ளை மணவாளயோகி திருவாய்மொழியைக் காத்த குணவாளரென்று நெஞ்சே கூறு * என்ற பாசுரத்திலே அருளிச்செய்தார்.

—————————

திருவாய்மொழியைக் காத்த * என்றருளினார். இத்தால் ப்ரமாண ஶ்ரேஷ்டமான திருவாய்மொழிக்கு அபார்த்தங்கள் வாராமல் காத்தருளிய குணவாளர்கள் இவர்கள் என்று திருவுள்ளம் பற்றியருளினாராயிற்று.

இத்திருவாய்மொழிக்கு மட்டும் 5 வ்யாக்யானங்கள் அருளிச் செய்யப்பட்டுள்ளன. இதிலிருந்தே இதன் ஏற்றம் விளங்கும்.

இன்பமிகும் ஆறாயிரம் * என்று முதல் வ்யாக்யானம் ஸ்ரீவிஷ்ணுபுராண ஸங்கையையிலே (எண்ணிக்கையிலே) * தெள்ளாரும் ஞானத் திருக்குருகைப்பிரான் பிள்ளானாலே * அருளிச் செய்யப்பட்டது.

ஏர் ஒன்பதினாயிரம் * என்று * வேதாந்தி நஞ்சீயரால் * திருவாய்மொழிக்கு அதன் அர்த்த கௌரவம் தோற்ற அருளிச்செய்யப்பட்டது. ஸ்ரீ பாஷ்ய ஸங்க்யையிலே இருக்கும் இதன் எண்ணிக்கை. * மாயவாதியர் தான் அஞ்சப் பிறந்தவன் சீமாதவனான * வேதாந்தியன்றோ இவர்!

இன்பா வரு பத்தி மாறன் * – இன்பமாக வருகிற கடாக்ஷத்தாலே வந்த பக்தியையுடைய மாறனின் மறைப்பொருளச் * இருபத்திநாலாயிரமாகச் * சொன்னவர் பெரியவாச்சான் பிள்ளை. இவர் தாமும் ஸ்ரீராமாயணத்தில் ஈடுபட்டிருப்பார் என்பது ஸுப்ரஸித்தம். அதனாலேயே * ராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் * என்ற சாயையிலே பாசுரம் அமைத்தார் ஸ்ரீமத்வரவரமுனிகள்.

ஶ்ருதப்ரகாஶிகா ஸங்க்யையிலே * வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை * யினாலே ஏடுபடுத்தப்பட்டது * ஈடு முப்பதாறாயிரம் *. இதுவும் கேட்ட அர்த்தத்தை ப்ரகாஶப்படுத்தப்பட்டது தான்! இது தானும் * இந்த நாடறிய * என்று ஸர்வரும் கொண்டாடும்படி * தெள்ளியதா நம்பிள்ளை * யினால் அருளிச்செய்யப்பட்டது.

அடுத்தது * பன்னீராயிரமாக * அழகிய மணவாளச் சீயரால் அருளிச் செய்யப்பட்டது. * இத்தை யொழிய நாலு வ்யாக்யாநம் உண்டானாலும் ஶப்தார்த்த நிர்ணயத்துக்கு இத்தை கொண்டே ஸாதிக்கவேண்டுமிறே * என்று இதன் ஏற்றம் ஸ்ரீ பிள்ளைலோகஞ்சீயரால் அருளப்பட்டது. * த்ரமிடோபநிஷத் ஸங்கதியும் * இவராலேயே அருளிச்செய்ய்யப்பட்டது.

எப்படி வேதஶிரோபாகமான உபநிஷத்துக்களுக்கு வ்யாஸ பகவானால் ஸூத்ரங்களாக அர்த்தம் நிர்ணயிக்கப் பட்டதோ அதே போன்று ஸ்வாமி அழகிய மணவாள்ப் பெருமாள் நாயனாரால் * ஆசார்ய ஹ்ருதயத்தில் * திருவாய்மொழியின் அர்த்தங்கள் ஸூத்ர ரூபங்களாக நிச்சயிக்கப்பட்டுள்ளன.

ஸ்வாமி வேதாந்தாசார்யரால் * த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியும் த்ரமிடோபநிஷத் ஸாரமும் * ஶ்லோக ரூபங்களாக திருவாய்மொழியின் அர்த்தங்களைப் ப்ரதிபாதிப்பதாக அனுக்ரஹிக்கப்பட்டன.

ஸ்ரீமத் வரவரமுனிகளால் * திருவாய்மொழி நூற்றந்தாதி * ஒவ்வொரு பத்துப் பாசுரங்களுக்கும் ஸாரமாக இன்பம் பயக்கும்படி * சொல்லும் பொருளுமாகத் * தொகுத்துரைக்கப்பட்டுள்ளது.

இத்தனை வ்யாக்யானங்கள் மற்றும் பூர்வர்கள் க்ருதியினாலேயே இத்திருவாய்மொழியின் ஏற்றம் நன்கு விளங்கும்.

பெண் பேச்சு

91009763.m2ijMhV6.Parangusa_nayaki_thirukkolam

திருவாய்மொழியில் ஆழ்வார் தம்முடைய பேச்சாக மட்டும் இன்றி * பெண் பேச்சு * ஆகக் கூறியுள்ளதும் பாசுரங்கள் உள.

வடமொழி மறையான வேதத்தின் ப்ரதம ப்ரவர்த்தகனான ப்ரஹ்மாவிற்கு நான்குமுகங்கள். * யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் .. * என்று ஸ்ருஷ்டியில் எம்பெருமான் முதலில் பிரமனுக்கே வேதத்தை ஓதிவைத்தருளினான்.

கல்பந்தோறும் மாறாமல் வரும் திருவாய்மொழியினை நம்மாழ்வாரைக் கொண்டு ப்ரவர்ப்பித்து அருளினான்.

இவருக்கும் நான்கு முகங்கள் என்னலாம்படி இருக்கும்!

  1. தாமான தன்மையில் பாடியருள்வது.
  2. தலைவிப் பேச்சாகப் பாடியருள்வது.
  3. தோழி முகத்தினால் பாடியருள்வது.
  4. அன்னை முகத்தினால் பாடியருள்வது

இப்படி பெண்பேச்சு ப்ரேம தஶையிலே என்பதை * ஜ்ஞானத்தில் தம் பேச்சு; ப்ரேமத்தில் பெண்பேச்சு * (118) என்கிற ஆசார்ய ஹ்ருதய ஸூத்ரத்தில் காட்டப்பட்டுள்ளது.

இவர் இப்படிப் பெண்கள் நிலைமை அடைவதன் காரணமானது எம்பெருமானின் * அப்ராக்ருத விக்ரஹமே * ஆகும்.

அதுவே இவருடைய ஆண்தன்மையை அழித்து பெண்கள் பாவனையினை ஏறிட்டுக் கொள்ளும்படி செய்யும். பெருமாளைக் குறித்து

ஆடவரும் பெண்மையினை அவாவுறும் தோளினாய் * என்றார் கம்பநாட்டாழ்வார். பெருமாளை ஸேவித்த மாத்ரத்தில் ஆடவர்களும் கூட ஸ்த்ரீத்வத்தை ஆசைப்பட்டார்களாம்!

அதே போன்று இவ்வாழ்வார் ஈடுபட்ட திருமேனியானது * குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர் உரு * (5-5-10) என்றன்றோ இருப்பது.

திரள் திரளாக நித்தியசூரிகள் கைகோத்துக்கொண்டு இழியும்படி – சோதி வெள்ளத்தினுள்ளே எழுவது ஓர் உரு-* தேஜஸாம் ராஶிம் ஊர்ஜிதம் * (ஸ்ரீ விஷ்ணு புராணம்) [ பகவான் தேவர்களுக்கு ஸேவை கொடுத்த போது, அந்த ப்ரஹ்மாதி தேவர்கள், திருச்சங்கு திருவாழி கதை முதலான திவ்யாயுதங்களை தரித்திருப்பவனும், இதுவரை காணப்படாத ரூபஸந்நிவேஶத்துடனும் தேஜஸ்ஸுக்களுடைய (ஒளிக்கற்றைகளின்) ஸமூஹமாயிருக்கிற அந்த விஷ்ணுவைக் கண்டார்கள் ]என்கிறபடியே, தேஜஸ்ஸின் நடுவே ஊகிக்கப்படுவதாயன்றோ வடிவு இருப்பது.

இந்த ஸ்த்ரீத்வமும் வந்தேறியா? (இயல்பாக இல்லாததா?) என்னில், அது வந்தேறியன்று. எம்பெருமான் ஒருவனே புருஷோத்தமன். ஏனைய ஜீவாத்மாக்கள் அனைவருமே பெண்கள் தான்! இதனை விஶதமாக * வித்யை தாயாகப் பெற்று * (121) என்கிற ஆசார்ய ஹ்ருத்ய சூர்ணிகையினாலே. தாய்ப் பேச்சாக, தோழிப் பேச்சாகப் பேசுவது எதனால் எனில்,

தோழி – நாயகன் மற்றும் நாயகிகளை சேர்ப்பவள் – ஆழ்வாருக்கு ஸம்பந்த ஜ்ஞானம் தலையெடுக்கும் அவஸ்தையிலே தோழிப் பாசுரம்.

தாய் – நாயகி படிகடந்து செல்லக் கூடாது என்று உரைப்பள் ஆகையினால் – ஆழ்வாருக்கு உபாய அத்யவஸாயம் (எம்பெருமான் தன்னை வந்து ரக்ஷிப்பன்) தலையெடுக்கும் அவஸ்தையிலே தாய்ப் பாசுரம்.

நாயகி – நாயகனோடு கூடி இருக்க ஆசைப்படுபவள் ஆதலின் – ஆழ்வாருக்கு எம்பெருமானை கிட்டி அனுபவித்தல்லது தரியாமை (இதனை ப்ராப்யத்வரை என்பர் ஆசார்யர்கள்) தலையெடுக்கும் அவஸ்தையிலே தலைவி பாசுரம்

இம்மூன்று அவஸ்தைகளும் முறையே திருமந்த்ரத்தில் உள்ள பதத்ரயங்களின் ப்ரதிபாத்ய விஷயம் – ஆசார்யமுகேந அதிகரிக்க வேண்டுவது. இவை அனைத்தும் * ஸம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி * (133) * ஸகி வெறிவிலக்கி * (134) என்கிற இரண்டு ஆசார்ய ஹ்ருத்ய ஸூர்ணிகைகளில் நன்கு விளக்கப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

உபதேசப் பத்து

திருவாய்மொழி ஒவ்வொரு 100 பாசுரங்களிலும் 10 பாசுரங்கள் பிறர்க்கு உபதேசம் பண்ணும் திருவாய்மொழிகளாக ஆயிற்று. அதாவது ஒவ்வொரு பத்திலும் ஒரு திருவாய்மொழி முழுமையும் உபதேச பரமாக ஆயிற்று. இதனை ஆசார்ய ஹ்ருதயத்தில் * பாட்டுக்குக் க்ரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேஸப்பத்து * (216) என்ற ஸுர்ணிகையில் அருளினார்.  அவையாவன

  1. முதல் பத்தில் * வீடுமுன் முற்றவும் * (1-2) [பகவத் பக்தியைப் பண்ணி ஆச்ரயிங்கோள் என்று உபதேசம்]
  2. இரண்டாம் பத்தில் * கிளர் ஒளி இளமை *  (2-10) [எம்மா வீட்டில் நிஷ்கர்ஷித்த புருஷார்த்தத்தைப் பெறும் பொருட்டுத் திருமாலிருஞ்சோலையை ஆச்ரயிக்கும்படி பிறர்க்கு உபதேசித்தல் ]
  3. மூன்றாம் பத்தில் * சொன்னால் விரோதம் * (3-8) [மன்னா மனிசரைப் பாடாமல் பரமனைப் பாடித் துதிக்கும்படி புலவர்க்கு உபதேசித்தல் ]
  4. நான்காம் பத்தில் * ஒன்றும் தேவும் * (4-10) [ ஸ்ரீமந்நாராயணனே பரதேவதையாகையால் மற்ற தெய்வங்களை விட்டு அவனையே பற்றுங்கள் என்று உபதேசித்தல் ]
  5. ஐந்தாம் பத்தில் * பொலிக பொலிக * (5-2) [ஸ்ரீவைஷண்வர்கள் திரளைக்கண்டு வாழ்த்தி, அல்லாதாரை உபதேசித்துத் திருத்துதல்]
  6. ஆறாம் பத்தில் *நல்குரவும் செல்வமும் * (6-3) [ ப்ரணயகலஹத்தில் முரண்பட்ட தம்மை வசீகரித்தவன் விருத்த விபூதி ஐச்வர்யம் , அதாவது முரண்பட்டது அனைத்தையும் செல்வமாகக் கொண்டு திருவிண்ணகரில் உறைபவன் – அவனது * கழல்களன்றி மற்றோர்களைகணிலம் * * வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும்வன்சரணே  ]
  7. ஏழாம் பத்தில் * இன்பம் பயக்க * (7-10) [ இன்பக்கவி பாடுவித்த ஸ்ரீமந்நாராயணனை – உள்ளித் தொழுமின் தொண்டீர் – தீவினை உள்ளத்தின் சார்வல்லவே என்று உபதேசம் ]
  8. எட்டாம் பத்தில் * எல்லியும் காலையும் * (8-6) [ ஆழ்வாரது பெருவிடாய் தீரக் கலக்கக் கருதி திருக்கடித்தானத்தில் இருக்கும் எம்பெருமானை ஏத்த நில்லா குறிக்கொண்மின் இடரே என உபதேசம்.]
  9. ஒன்பதாம் பத்தில் * மாலை நண்ணி * (9-10) [ நீர் விரும்பியவை யாவும் உமது இவ்வுடம்பு முடியும் பொழுது தருவேன் என்று ஆழ்வார்க்கு எம்பெருமான் அருள, அவர் உவந்து, திருக்கண்ணபுரத்திலே சென்று அவனைச் சேருமாறு பிறர்க்கு உபதேசித்தல் ]
  10. பத்தாம் பத்தில் * கண்ணன் கழலிணை * (10-5) [ ஆழ்வார் எம்பெருமானிடத்து பக்தியுடையார் செய்ய வேண்டிய செயல்களையெல்லாம் சுருங்கச்சொல்லி, பரோபதேசத்தை நிறைவுபடுத்தல் ]

இந்த உபதேசப் பத்தும் அந்த நூறு பாசுரங்களுக்கு, பாட்டுக்கு க்ரியா பதம் போல ப்ரதானம் என்று. இந்த உபதேசமும் அந்த நூறு பாசுரங்களின் தாத்பர்யத்தை ஒட்டியும் இருக்கும்.

தூது

இத்திருவாய்மொழியில் எம்பெருமானைக் குறித்துத் தூது விடும் பதிகங்கள் 4. அவற்றில் தூது விடுவதற்குப் பக்ஷிகள் அனுப்பப்பட்டிருந்தாலும், ஸ்வாபதேஶத்தால் அவை ஆசார்யர்களையே குறிக்கும். இவ்விஷயம் ஆசார்ய ஹ்ருதயத்தில் மூன்றாம் ப்ரகரணத்தில் ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டுள்ளது.

இந்த தூது பதிகங்களின் தாத்பர்யத்தினையும் * தம்பிழையும் சிறந்த செல்வமும் படைத்த பரப்பும் தமரோட்டை வாஸமும் மறப்பித்த க்ஷமாதீக்ஷாஸாரஸ்ய ஸௌந்தர்யங்களை உணர்த்தும் வ்யூஹ விபவ பரத்வத்வ்ய அர்ச்சைகள் தூது நாலுக்கும் விஷயம் * (156) என்கிற ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகையில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி தூது விடப்படும் பதிகங்கள் அஞ்சிறைய மடநாராய் (1-4), வைகல் பூங்கழிவாய் (6-1), பொன்னுலகாளீரோ (6-8) எங்கானலகங்கழிவாய் (9- ) ஆகும். இவற்றுள்

  1. அஞ்சிறைய மட நாராய் – *கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் * என்று வ்யூஹ நிலையில், *என் பிழைத்தால் திருவடியின் தகவினுக்கு * என்று அபராதங்களைப் பொறுக்கும் தன்மை பற்றாசாகத் தூது;
  2. வைகல் பூங்கழிவாய் – *மாறில் போரரக்கன் மதிள் நீறெழச் செற்று உகந்த * என்று விபவத்தில், *புணர்த்த பூந்தண்துழாய் முடி * என்று ஆர்த்தர்களை ரக்ஷிக்க வேண்டும் என்று தீக்ஷையுடைமையைப் பற்றாசாகக் கொண்டு தூது;
  3. பொன்னுலகு ஆளீரோ – * வானவர் கோனைக் கண்டு * என்று பரத்வத்திலும், * எங்குச் சென்றாகிலும் கண்டு * என்று அந்தர்யாமித்வத்திலும் தூது;
  4. எங்கானலகங்கழிவாய் – * திருமூழிக்களத்தார்க்கு * என்று அர்ச்சாவதாரத்திலே தூது

ஒவ்வொரு பத்திலும் வெளியிடப்படும் திருக்குணங்கள்

எம்பெருமானது திருக்குணங்களை விசதமாகக் காண்பிப்பது திருவாய்மொழியிறே! அமுதனார் முதல் பாசுரந்தன்னிலேயே * புகழ் மலிந்த பா மன்னு மாறன் * என்றாரிறே! * உயர்நலமுடையவன் * (1-1-1), * ஈறிலவண்புகழ் * (1-2-10) என்று உபக்ரமித்து (ஆரம்பித்து), * உலப்பில் கீர்த்தி * (6-101) என்று மத்யத்திலும் (நடுவிலும்) *சுடர்ஞான இன்பம் * (10-10-10) என்று முடிவிலும் திருக்குணங்களே அருளிச் செய்யப்பட்டிருக்கை காணத்தக்கது. * சீர்த்தொடை ஆயிரமிறே * திருவாய்மொழி

எம்பெருமானுடைய தசாவதாரம் போன்று 10 பத்துக்கள் கொண்டதான திருவாய்மொழியில் ஒவ்வொரு பத்திலும் ஒரு திருக்குணம் ப்ராதான்யேன இருக்கும். அவையாவன

  1. முதல் பத்தில் – பரத்வம்
  2. இரண்டாம் பத்தில் – காரணத்வம்
  3. மூன்றாம் பத்தில் – வ்யாபகத்வம்
  4. நான்காம் பத்தில் – நியந்த்ருத்வம்
  5. ஐந்தாம் பத்தில் – காருணிகத்வம்
  6. ஆறாம் பத்தில் – சரண்யத்வம்
  7. ஏழாம் பத்தில் – சக்தத்வம்
  8. எட்டாம் பத்தில் – ஸத்யகாமத்வம்
  9. ஒன்பதாம் பத்தில் – ஆபத்ஸகத்வம்
  10. பத்தாம் பத்தில்  – ஆர்த்திஹரத்வம்

திருமந்த்ர ப்ரதிபாதனம் திருவாய்மொழி

திருமந்த்ரமாவது மந்த்ர ராஜன் என்று அழைக்கப்படுவதாகும். முமுக்ஷுக்களுக்கு அறிய வேண்டிய ரஹஸ்யங்களிலே வைத்து முதலாவதாக இருப்பதாகும்.

இதில் உள்ள * பதத்ரயமும் – ஆத்ம பரமாத்ம ஸம்பந்தத்தையும், தத்ஸம்பந்தவிரோதியான ஸ்வஸ்வாதந்த்ரயத்தினுடைய நிவ்ருத்தியையும், தத்ஸாபல்யஹேதுபூதமான கிஞ்சித்காரத்தையும் ப்ரதிபாதிக்கிறது. *, என்று ஸ்வாமி பிள்ளைலோகாசார்யரால் பரந்தபடியில் அருளிச் செய்யப்பட்டது.

ஆதலால் திருமந்த்ரத்தால் அறியப்படுவது அர்த்த பஞ்சகம் ஆகும்.

திருவாய்மொழியினால் அறியப்படுவதும் அர்த்தபஞ்சகமாகும். இப்படி ப்ரதிபாத்ய விஷயங்கள் இரண்டினுக்கும் ஒன்றாய் இருக்கும்.

இன்னமும் * கண்கள் சிவந்து * (8-8) பதிகத்தில் முதலிரண்டு திருவாய்மொழிகள் வழியாக எம்பெருமானின் ப்ரஸ்தாவமாக அகாரார்த்தமும், பின்பு ஜீவ ஸ்வரூபம் சொல்லும் முகத்தாலே மகாரார்த்தமும், * கருமாணிக்க மலைமேல் * (8-9) பதிகந்தன்னில் * அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் * இத்யாதிப் பாசுரங்களால் உகாரார்த்தமும், * நெடுமாற்கடிமை செய்வேன்போல் * (8-10) பதிகத்தால் பாகவத சேஷத்வம் அறிவிக்கும் ப்ரகாரமாக நமப்பதார்த்தமும், * கொண்ட பெண்டிர் * (9-1) பதிகத்தால் எம்பெருமானை ஒழிந்தவர்கள் ஆபாஸ பந்துக்கள் என்று நாராயணார்த்தமும், * பண்டை நாளாலே * (9-2) பதிகத்தால் கைங்கர்ய ப்ரார்த்தனையான வ்ய்க்த சதுர்த்தியுமாக திருமந்த்ரம் ப்ரதிபாதிக்கப்பட்டது என்னவுமாம்.

த்வயார்த்த ப்ரதிபாதனம் திருவாய்மொழி

திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்படும் விஷயம் த்வயம் என்னலாம்படியும் இருக்கும். இதனை ஸ்வாமி அழகியமணவாளப்பெருமாள் நாயனார் – * த்வயார்த்தம் தீர்க்க ஶரணாகதி என்றது ஸார ஸங்க்ரஹத்திலே * என்று அருளிச் செய்தார். பகவானாகிய ஸர்வேஶ்வரன் தன்னுடைய கருணையினாலே சேதனர்க்கு ரஹஸ்யத்ரயங்களையும் ப்ரகாஶிப்பித்து அருளினான். அதன் அர்த்தங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு 18 ரஹஸ்யங்களாக அருளிச் செய்தார் ஸ்ரீ லோகதேஶிகன். அவற்றில் * ஸார ஸங்க்ரஹம் * என்பது ஒரு ரஹஸ்யம். அதனில் திருவாய்மொழியில் த்வயார்த்தம் சொல்லப்படுகிறது என அழகாகக் காட்டியருளியுள்ளார்.

  • ஶ்ரிய:பதித்வம்
  • நாராயணத்வம்
  • ஸ்ரீமானான நாராயணனுடைய ஸர்வலோக ஶரண்யமான அவனுடைய சரணாரவிந்தயுகளத்வம்
  • அதினுடைய ப்ராபகத்வம்
  • சேதனனுடைய பற்றுதல்
  • லக்ஷ்மீவல்லபனுடைய கைங்கர்ய ப்ரதாநார்த்த நித்ய ஸம்பந்தத்வம்
  • ஸர்வேஶ்வரனுடைய நிரதிஶய போக்யத்வம்
  • ஸர்வஸ்வாமித்வம்
  • நித்யகைங்கர்யத்வம்
  • கைங்கர்ய ப்ரதிபந்தகங்கள் களைதலும்

ஆகிய இப்பத்து விஷயங்களே திருவாய்மொழிக்கும் த்வயத்திற்க்கும் நோக்கு!

ஶ்ரிய:பதித்வம் தெரிவிக்கப்பட்டது, * மலர்மகள் விரும்பும் அரும்பெறல் நம் அடிகள் * (1-3-1) – தாமரை மலரிலே பிறந்து அதனையே இருப்பிமடாக உடைய பிராட்டி அதனைவிட்டு ‘அகலகில்லேனிறையுமென்று அவர்மேன்மங்கை யுறைமார்பா” என்கிறபடியே திருமார்பை விரும்பி விடாதேயிருக்கப் பெற்ற பெருமான்; * மலராள் மைந்தன் *(1-5-9) திருமகள் கொழுநன்; * திருமகனார் தனிகேள்வன் * (1-6-9) தருமத்தினுடைய பரமப்ரயோஜனமே ஒரு வடிவு கொண்டாப்போலே யிருக்கிற பெரிய பிராட்டியார்க்குத் தனிக்கேள்வன் ; * திருவின்மணாளன் * (1-9-1) பெரியபிராட்டியார்க்கு மணவாளனுமான பெருமாள்; * பூமகளார் தனி கேள்வன் * (1-9-4) பெரிய பிராட்டியார்க்கு ஒப்பற்ற நாதனுமான எம்பெருமான்; * மலராள்மணவாளனை * (1-10-4) திருமகள் நாதனுமான எம்பெருமானை ஆகிய பாசுரங்களால்.

நாராயணத்வம் தெரிவிக்கப்பட்டது * எம்பெருமான்நாரணற்கு * (2-1-7) எனக்கு ஸ்வாமியான நாராயணனுக்கு; * எம்பிரானெம்மான்நாராயணனாலே * (2-7-1) வடிவழகாலே என்னையும் தோற்பித்து விஷயீகரித்த மஹோபகாரனாயுமிருக்கின்ற நாராயணனாலே ; * நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன் * (2-7-2) எல்லா உலகங்களுக்கும் ஸ்வாமியும் ஆகிய பாசுரங்களால்

எம்பெருமானுடைய ஸர்வலோக ஶரண்யமான திருவடித்தாமரைகள் சொல்லப்பட்டது * நாண்மலராமடித்தாமரை * (3-3-9); * அங்கதிர் அடியன் * (3-4-3) அழகையும் ஒளியையுமுடைய திருவடிகளையுடையவன்; * அன்றுதேர்கடவிய பெருமான்கனைகழல் * (3-6-9) அர்ஜுநனுக்குத் தேர் செலுத்திய பெருமானாயுமிருக்கின்ற க்ருஷ்ணனுடைய திருவடிகளை; * சீர் அடியானே * (3-8-1) சிறப்புள்ள திருவடிகளையுடையவனே ஆகிய பாசுரங்களால்

அதினுடைய ப்ராபகத்வம் சொல்லப்பட்டது * இலங்கைநகர் அம்பெரியுய்த்தவர் * (4-2-8) இலங்காபுரியில் அம்புகளில் இருந்து கிளம்பும் அக்னியை செலுத்தின இராமபிரானுடைய; * வல்வினை தீர்க்கும் கண்ணனை * (4-4-11) ஸகல பாபங்களையும் போக்குமியல்வினனான க்ருஷ்ணனை ; * வெய்ய நோய்கள் முழுதும் வியன்ஞாலத்து வீயவே. * (4-5-2) கொடிய க்லேசங்கள் அனைத்தும் நசிக்கும்படியாக; * மேவி நின்று தொழுவார் வினைபோக * (4-5-4) நெஞ்சு பொருந்தியிருந்து அனுபவிப்பாருடைய பாபங்கள் யாவும் நசிக்கும்படி; * வேட்கையெல்லாம் விடுத்தெனையுன் * (4-9-9) விஷயாந்தர விருப்பங்களெல்லாவற்றையும் கழித்து ஆகிய பாசுரங்களால்

சேதனனுடைய பற்றுதல் சொல்லப்பட்டது * தமியேனுனக்கு அருளாய் * (5-7-2) இப்படித் தனிப்பட்டிருக்கிற என் விஷயத்திலே அருள்புரியவேணும்; * ஆறெனக்குநின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் * (5-7-10); * உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறைவேண்டேன் * (5-8-3) “என்னான் செய்கேன்” என்பதனால் ‘நான் என்ன செய்வது?’ என்று கேட்கிறால்லர்; என்னாலே ஒன்றும் செய்ய முடியாதே என்று கையை விரித்துச் சொல்லுகிறபடி ; * கழல்கள் அவையே சரணாக் கொண்ட * (5-8-11) திருவடிகளையே சரணமாகப்பற்றின; * நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் * (5-9-11) சேஷசாயியான எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று ஆகிய பாசுரங்களால்

லக்ஷ்மீவல்லபனுடைய கைங்கர்ய ப்ரதாநார்த்த நித்ய ஸம்பந்தத்வம் சொல்லப்பட்டது * திருமாமகளிருந்தாம் மலிந்திருந்து * (6-5-8) * அடிமை செய்வார் திருமாலுக்கே * (6-5-11) * ஒசிந்த வொண்மலராள்கொழுநன் * (6-7-8) * என்திருமார்வற்கு * (6-8-10); * கோலத் திருமாமகளோடு * (6-9-3) ஆகிய பாசுரங்களால்

ஸர்வேஶ்வரனுடைய நிரதிஶய போக்யத்வம் சொல்லப்பட்டது * கன்னலே அமுதே * (7-1-2) பரமபோக்யனே!; * கொடியேன் பருகின்னமுதே * (7-1-7) பாவியேனான நானும் பருகும் படியான இன்னமுதமே!; * அலைகடல் கடைந்தவாரமுதே * (7-2-5) அலையெறிகின்றகடலைக் கடைந்த ஆராவமுதமே!; * திரு மாலின்சீர், இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ * (7-9-9) பொருத்தமான ஸாமர்த்தியத்தையுடைய திருமாலின் குணங்களை இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் கூட்டிக்கொண்டு அநுபவித்தாலும் ஆரமாட்டேன் ஆகிய பாசுரங்களால்

ஸர்வஸ்வாமித்வம் ப்ரதிபாதிக்கப்பட்டது – * அடியனேன் பெரியவம்மான் * (8-1-3) * விண்ணவர்கோன் நங்கள்கோன் * (8-2-2) * அமர்ந்த நாதனை * (8-4-10) * மூவுலகாளி * (8-9-5) ஆகிய பாசுரங்களால்

நித்யகைங்கர்யத்வம் ப்ரதிபாதிக்கப்பட்டது  * பண்டைநாளாலே நின் திருவருளும் * (9-2-1) * குற்றேவல் செய்து * (9-2-2) * கொடுவினையேனும் பிடிக்க * (9-2-3) * ஆட்கொள்வானொத்து * ( 9-6-7) * அடிமைப்பணி செய்யப் புகுந்தேன் * (9-8-4) ஆகிய பாசுரங்களால்

கைங்கர்ய ப்ரதிபந்தகங்கள் களைதல் ப்ரதிபாதிக்கப்பட்டது   * துயர் கெடுங்கடிது * (10-1-7) * எழுமையும் ஏதஞ்சாரா * (10-2-2) * அந்தி தொழுஞ் சொல்லுப் பெற்றேன் * (10-8-7)  ஆகிய பாசுரங்களால்

ப்ரபந்தைகார்த்யம்

திருவாய்மொழி ஆயிரத்திற்கும் ப்ரமேயமாக * அவித்யா நிவர்த்தக * (234) என்கிற சூர்ணிகையில் ஆசார்ய ஹ்ருதய கர்த்தாவான ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் ஸங்க்ரஹிக்கும் அர்த்தமாவது – ஸம்ஸாரத்திற்குக் காரணமான அஜ்ஞானத்தைப் போக்குவிப்பதான ஜ்ஞானத்தை (* மயர்வற மதிநலம் அருளினன் * ) அருளிய பகவானது நிர்ஹேதுகமான அநுக்ரஹத்தாலே (*அவாவற்று வீடு பெற்ற * ) ஸம்ஸாரம் அகல எம்பெருமானின் கைங்கர்ய ரூபமான மோக்ஷம் லாபம் என்பதாகும்.

எந்த எம்பெருமானுடைய ப்ரஸாதத்தினால் ஜ்ஞானம் கிடைக்கிறதோ, அதே ப்ரஸாதமே மோக்ஷம் தனையும் அருளவல்லது – அது நிர்ஹேதுகம் என்றபடி

 

101183670_10157361177655893_5294547382829056000_o

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொரு நாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்போருவர் – உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ
ஒரு பார் தனில் ஒக்கு மூர்!

ஸ்ரீநகர்யாம் மஹாபுர்யாம் தாம்ரபர்ணி உத்தரே தடே
ஸ்ரீ திந்த்ரிணீ மூலதாம்நே ஶடகோபாய மங்களம்

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பிரசித்தமான பிரமாணங்கள் –

February 26, 2023

ஸ்ரீமந் நாத முநிகள் நம்மாழ்வாரைப் பற்றி இந்த ஸ்லோகத்தை அருளியுள்ளார்:

யத்கோ ஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய|| “

யாவருடைய ஆயிரம் கிரணங்கள் (ஆயிரம் திருவாய்மொழி பாசுரங்கள்) மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறதோ,
யாவருடைய திருமேனியில் நாராயணன் தன்னுடைய சங்குடனும் சக்கரத்துடனும் விளங்குகிறானோ,
யாவருடைய வசிப்பிடத்தின் பெருமையை சாஸ்த்ரங்கள் கூறுவதால் நன்கு படித்தவர்களால் வணங்கப்படுகிறதோ,
வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த நம்மாழ்வாராகிற சூரியனை நான் வணங்குகிறேன்-

“த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மய வபு: த்ருத சங்க சக்ர: “

இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படுவது, அழகாக அலங்கரிக்கப்பட்ட நாராயணன் சங்க சக்கரங்களை தரித்துக் கொண்டு
ஸவித்ர மண்டலத்தில் எழுந்தருளியுள்ளான். அவனே எப்பொழுதும் த்யானிக்கத் தகுந்தவன்.
நாதமுநிகள் இங்கே நம்மாழ்வாரை எம்பெருமான் ஆனந்தத்துடன் எழுன்தருளியிருக்கும் ஸவித்ரு மண்டலமாகவும் சூரியனாகவும் சொல்கிறார்.
ஆழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை ஆயிரம் கிரணங்களாக விளாக்குகிறார்.
ஆழ்வார் தன்னுடைய ஒளியால் (பாசுரங்களால்) மதுரகவி ஆழ்வாரை வடக்கிலிருந்து ஈர்த்து திருக்குருகூருக்கு வரவழைத்தார்.
ஸவித்ரு மண்டலத்திலிருந்து வரும் கிரணங்களுக்கு ஸாவித்ரம் என்று பெயர் –
ஆதலால் திருவாய்மொழிக்கு இங்கே ஸாவித்ரம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது

“ஆதித்ய ராம திவாகர அச்யுத பாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதிற் கமல மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கரோதயத்திலே”–ஆசார்ய ஹிருதய சூத்ரம் இங்கு கவனிக்கத்தக்கது:

————–

வ்ருஷார்த்தம் அஷ்டவ் ப்ரயதேத மாசான் நிஸார்த்த மர்த்தம் திவசம் யதேத வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந
பரத்ர ஹேதோர் இஹ ஜந்மனா ச —
எட்டு மாதங்கள் உழைத்து மழைக்காலம் நான்கு மாதங்கள் நிம்மதியாகவும்
பகலில் உழைத்து இரவில் நிம்மதியாகவும்
இளமையில் உழைத்து முதுமையில் நிம்மதியாகவும் இருப்பது போலே
அவ்வுலக நிம்மதிக்கு இஹ லோகத்தில் பிரயத்தனம் செய்ய வேண்டுமே

————–

யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று
திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும்

——-

தஸ்மை ராமானுஜார்யாய நம பரமயோகிநே
யஸ்ஸ்ருதிஸ்ம்ருதி ஸுத்ராநாம் அந்தர்ஜ்வர அஸீஸமது

ஸ்ரீமாதாவ்ங்க்ரி ஜலஜத்வய நித்யசேவா
ப்ரேமா விலாசய பராங்குச பாதபக்தம்
காமாதி தோஷகரம் ஆத்ம பதாஸ்ருதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா – (யதிராஜவிம்சதி – ஸ்ரீமணவாள மாமுனிகள்)

இதிகாச புராணாப்யாம் வேதம் செளபப்ரம்மயேது
விபேத்யல்பத் ஸ்ருதாத் வேதஹா மாமயம் ப்ரதரிஷ்யதி-

பாராசர்ய வசஸ்ஸுதாம் உபநிஷத் துக்தாத்பி மத்யோத்ருதாம்
சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி
பூர்வாச்சார்ய ஸுரக்ஸிதாம் பகுமதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாந்து நிஜாச்ஷரைஹி சுமனசஹா பெளமாஃப் பிமவ்துன்வகம்

வியாசம் வஷிஷ்ட நப்தாரம் சக்தே பெளத்ரம கல்மஸம்
பராசராத்மஜம் வந்தே சுகதாந்த தபோநிதிம்

சம்யங் ஞாய கலாபேந மகதா பாரதேநச
உபப்ரம்மித வேதாய நமோ வியாசாய விஷ்ணவே

எதிகாஸ்தீத தன்யத்ர எந்நேகாஸ்தீ நதக்கொஸிது தர்மேச அர்த்தேச காமேச மோக்ஷ்சேச பரத ரிஷப,

அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி

ஸ்வஸ்திஹஸ்திகிரி மஸ்தசேகரஹா சந்ததோது மயிசந்ததம் பரிஹி
நிஸ்சவாப்யதிக மப்யதத்தயந்தேவம் ஒளபநிஷதீ சரஸ்வதீ
ஸ்ரீநிதிம் நிதிமபார மர்த்தினாம் அர்த்திதார்த்த பரிதான தீக்ஷ்சிதம்
சர்வபூத ஸுர்தம் தயாநிதிம் தேவராஜ மதிராஜ மாஸ்ரயே

ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்‌ஷாத்திரிசிம்மாசலவ்
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா அயோத்தியா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி

ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருச்சபுதமுச்சதே எதிராஜோ ஜகத்குருஹு
நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா

———————-

வேதம் -வேதயதி -தர்ம அதர்மங்களை அறிவிக்கின்றதால் வேதம்
ப்ரத்யக்ஷ அநுமித்யா வா யஸ்து உபாயோ ந வித்யதே
ஏநம் விதந்தி வேதோ தஸ்மாத் வேதஸ்ய வேத தா

—–

ஸம்யக் ந்யாய கலாபேன மஹதா பாரதேன ச
உபப்ருஹ்ம்ஹித வேதாய நமோ வ்யாஸாய விஷ்ணவே ||

இது ஶ்ருதப்ரகாஶிகையில் ஸ்வாமி ஸுதர்சன ஸூரியினால் அனுக்ரஹிக்கப்பட்ட ஶ்லோகமாகும்.
நன்றாகச் செய்யப்பட்ட ந்யாய கலாபத்தினாலும் (ப்ரஹ்ம மீமாம்ஸையினாலும்),
பெரியதான (அல்லது) வைபவத்தையுடையதான பாரத்தினாலும், யாவர் விஷ்ணுவினுடைய ஆவேசாவதாரமான
வேதவ்யாஸ பகவான், வேதத்திற்க்கு உபப்ருஹ்மணங்களைச் செய்தாரோ
அவரின் பொருட்டு நம: என்பது இந்த ஶ்லோகத்தின் அர்த்தம்.

உபப்ருஹ்மணங்கள் உதவி கொண்டு வேதார்த்தங்கள் நிஶ்சயிக்கப்படாத பொழுது, அவை சரியாக இருப்பதில்லை
என்பது * இதிஹாஸபுராணப்யாம் வேதம் ஸமுமபப்ருஹ்மயேத் * என்ற ப்ரமாண வசனத்தினால் தோற்றும்.

———–

சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்யாயத்திற்கும் 4 பாதங்கள்.
அதனால் மொத்தம் 16 பாதங்கள். ஒவ்வொரு பாதம் தன்னிலும் ஒரு குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது.
எனவே * ஶ்ருதிஸிரஸி விதீப்தனான * எம்பெருமானுக்கு மொத்தம் 16 திருக்குணங்கள்
சாரீரக மீமாம்ஸையினால் ப்ரதிபாதிக்கப்பட்டுள்ளன.
அதனை அடைவே ஸ்வாமி தேஶிகன் * ஸாராவளியில் * ஶ்லோகமாக அருளிச் செய்தார்.

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1), தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3); நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1); ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) – ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) – தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)- மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.
இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது. ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று
16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

———-

ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே –

இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல்
ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.

———-

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும்,
பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ,
அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

———————

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஶரதாத்மஜே |
வேத: ப்ராசதேஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||–இது ஸ்காந்த புராணத்தில் உள்ள வசனம்

———-

ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தரமீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார்.

————–

7-வது காண்டத்தில், 5-வது ப்ரஸ்நத்தில் மேற்கண்டவற்றைக் காண்கிறோம்.
இங்கு, வேதேப்யஸ்ஸ்வாஹா) என்று வருகிறது. உடனே, காதாப்யஸ்ஸ்வாஹா) என்கிறது.
ஸம்ஸ்க்ருத வேதத்தையும், த்ராவிட வேதமான திவ்ய ப்ரபந்தத்தையும் முறையே வேத மற்றும் காதா என்கிற சொற்கள் குறிக்கின்றன.
ஸ்வாமி தேசிகன் காதா இவ்வார்த்தையை த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் பலமுறை
திவ்ய ப்ரபந்தத்தைக் குறித்து உபயோகப் படுத்தியிருப்பது தெரிகிறது.
உதாரணமாக, தாத்பர்ய ரத்னாவளியின் இரண்டாவது பாசுரம் காண்க:

ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதிதகுணருசிம் நேத்ரயந் ஸம்ப்ரதாயம்
தத்தல்லப்தி-ப்ரஸக்தை: அநுபதி-விபுதை: அர்த்திதோ வேங்கடேச: |
கல்பாந்தயூந: சடஜிதுபநிசத்-துக்த-ஸிந்தும் விமத்நந்
க்ரத்நாதி ஸ்வாது-காதா-லஹரி-தச-சதீ-நிர்கதம் ரத்நஜாதம்)||

பொருள் –
காலத்தைக் கடந்த இளமையுடையரான ஸ்ரீமந்நாராயணின் திருக்கல்யாண குணங்களாகிற ரத்தினங்களைத்
தன்னில் கொண்டதாய், அவன் துயிலும் பாற்கடல் போன்றதாய், ஆயிரம் அலைகள் போல் எழும் இனிமையான
ஆயிரம் பாடல்(காதா)களைக் கொண்டதாய், சடகோபரின் திருவாயிலிருந்து புறப்பட்ட மொழிக்கடலை,
வேங்கடேசனாகிய நான், இதில் அடங்கியுள்ள அமுதப் பொருள்களை அநுபவிக்க வேண்டும் என்று ஆசையுற்ற
அடியார்களால் வேண்டப்பட்டு, பெரியோர்கள் வழிவந்த அறிவின் மத்தைக்கொண்டு கடைகிறேன்.
இத்துடன் த்ராவிட வேதாந்தத்தின் பெருமைகளை ஸம்ஸ்க்ருத வேதத்தின் மூலம் கண்டறியும் விசாரம் முற்றிற்று.

—————–

எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:
உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸங்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குண கண
யவனவன்=புருஷோத்தமன்

—————-

பகவந் –
“மைத்ரேய! பகவச் சப்தஸ் ஸர்வகாரண காரணே! ஸம்பார்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த்வயாந்வித:
நேதாகமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததாமுநே. ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யசஸச்ஸ்ரீய:
ஜ்ஞாநவைராக்ய யோச்சைவ, ஷண்ணாம் பக இதீரணா. வஸந்தி தத்ர பூதாநி பூதாத்மந்யகிலாத்மநி,
ஸச பூதேஷ்வசேஷேஷு வகாரார்த்தஸ் ததோவ்யய:ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்ய சேஷத:
பகவத்சப்தவாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி: ஏவமேஷ மஹாசப்தோ மைத்ரேய! பகவாநிதி,
பரப்ரஹ்ம பூதஸ்ய வாஸுதேவஸ்ய நாந்யக: தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித:
சப்தோயம் நோபசாரேண த்வந்யத்ர ஹ்யுபசாரத:” (விஷ்ணுபுராணம் 6-5-72)

[ மைத்ரேயரே! ‘பகவான்’ என்னும் சப்தம் ஸர்வ காரணங்களுக்கும் காரண பூதனான ஸர்வேச்வரன்
விஷயத்தில் சொல்லப் பெறுகிறது. ‘(ப்ரக்ருதியை) கார்யதசை அடையச்செய்பவன்,
‘ஸ்வாமி’ என்னும் இரண்டு அர்த்தங்களுடன் கூடியது பகாரம்; முனிவரே!
அவ்வாறே ‘ரக்ஷிப்பவன், ஸம்ஹரிப்பவன், ஸ்ருஷ்டிப்பவன்’ என்பது ககாரத்தின் அர்த்தம்.
ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும்
‘பக’ என்னும் பதம் வாசகமாயிருக்கிறது.
பூதங்களை சரீரமாகக்கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன.
அவனும் அகில பூதங்களிலும் வஸிக்கின்றான். ஆகையால் அழிவற்றவனான பகவான் வகராத்துக்கு அர்த்தமாகிறான்.
கீழானவையான முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத
‘ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் எல்லா குணங்களும்
‘பகவாந்’ என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன. மைத்ரேயரே! இம்மாதிரியாக பகவான் என்னும்
இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான வாஸுதேவனுக்கே உரித்தானது. வேறொருவரையும் குறிக்காது.
‘பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது’ என்னும் பரிபாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில்
ஔபசாரிகமாகச் சொல்லப் பெறுவதில்லை. மற்ற விஷயங்களில் ஔபசாரிகமாக அமுக்யமாகச் சொல்லப் பெறுகிறது.]

————-

பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்

ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால்
அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரமபதம் அடைகிறது-

பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11)
“எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே”

———————-

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே
விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா

“அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது

ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.

விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது
அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்-

——————-

எம்பெருமானார் கிரீட, மகுட, சூடாவதம்ச என்ற மூன்று சொற்களால்
எம்பெருமானின் பரதவ, சௌலப்ய, பிரணயித்வமாகிற மூன்று அரசு நிலைகளைக் காட்டியருளுகிறார்.
பாரளந்த பேரரசே என்பதில் சௌலப்யத்தில் அரசன் என்றபடி.த்ரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது
அவன் தன் திருவடியை ஒவ்வொருவர் தலையிலும் வைத்தருளினான்.
எம் விசும்பரசே என்றதில் பரத்வம் சொன்னபடி. அவன் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளின் தலைவனைத் திகழ்கிறான்.
எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே என்றதில் அவன் கலப்பதும் பிரிவதுமாக ஆழ்வார் பால் பூண்ட பிரணயித்வம் தெரிகிறது.

————————

தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணீ”–

”கம்பீராம்பஸ்சமுத்பூத சம்ருஷ்ட நாள ரவிகரவிகசித புண்டரீக தலாமலாயதேக்ஷண”–வேதார்த்த சங்க்ரஹம்

(i)கம் பிபதி இதி கபி:=ஆதித்ய: தேன அஸ்யதே க்ஷிப்யதே விகாஸ்யதே இதி கப்யாசம்-சூரியனால் மலர்த்தப்பட்ட தாமரை

(ii)கம் பிபதி இதி கபி:=நாளம்,தஸ்மின் அஸ்தே இதி கப்யாசம்-கொழுத்த தண்டுகளுடன் கூடிய தாமரைகள்

(iii)கம் ஜலம் ஆச உபவேசனேஇதி ஜலேபி ஆஸ்தே இதி கப்யாசம் -[ தண்ணீரால் தாங்கப்படும் தாமரை ]

கம்பீராம்பஸ்ஸமுத்பூத புண்டரீக – தாமரை ஜலஜம், அல்லது அம்புஜம் அல்லது நீரசம் எனப்படும்
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமாபோலே” என்கிறார்
சிறிய திருமடலில், திருமங்கை மன்னன், ”நீரார் கமலம்போல் செங்கண் மால் என்றொருவன்” என்கிறார்.
எம்பெருமானின் சிவந்த கண்கள் அழகியநீர்த் தாமரை போலுள்ளன.
மேலும் திருவிருத்தத்தில் ஆழ்வார் “அழலலர் தாமரைக் கண்ணன்” என்கிறார் இதே பொருளில்.
இவ்விடத்து வ்யாக்யானத்தில் ஸ்வாமி நம்பிள்ளை கப்யாச ஸ்ருதியை நன்கு மேற்கோள் காட்டி விளக்குகிறார்.
இதில் முதற்பதம் “கம்பீர” எனும் அடைமொழி நீரின் விரிவைக் குறிப்பது ஆழ்வாரின் திருவாய்மொழியில்
“தண் பெருநீர் தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன்” என வருகிறது.
தாமரை பெரிய குளிர்ந்த தடாகத்தில் பூத்துள்ளது, எம்பெருமானின் திருக் கண்களும் அவ்வாறுள்ளன.
”ஸம்ர்ஷ்ட நால புண்டரீக” – தாமரை எவ்வாறு நீரைச் சார்ந்தே உள்ளதோ அதே அளவு தன் தடித்த செவ்விய தண்டையும் சார்ந்துள்ளது
தண்டு பற்றிய குறிப்பும் ஆழ்வார் பாசுரங்களிளிருந்தே கிடைக்கிறது.
திருவிருத்தத்தில் ஆழ்வார், “எம்பிரான் தடங்கண்கள் மென்கால் கமலத் தடம்போல் பொலிந்தன”
எம்பெருமானின் அழகிய திருக் கண்கள் எழிலார்ந்த தண்டின்மீது துலங்கும் தாமரைபோல் பொலிந்தன.

”ரவிகர விகசித” – நீரில் தண்டால் தாங்கப்படும் தாமரை மலர்வது சூரியனின் கிரணங்களால் சொல்லமுடியாத
பேரழகுள்ள பெருமானின் திருக்கண்களோடு ஓரளவாகிலும் ஒப்பு சொல்லக் கூடியது தண்டோடு அழகாய்
நீரில் நிற்கும் மலர்ந்த தாமரையே ஆகும். சூரியனின் கிரணங்களே அவனது கைகள்.
”செஞ்சுடர்த் தாமரை” எனும் ஆழ்வார் பாசுரத்தில் இவ்வுவமை கிடைக்கிறது.
பெருமானின் கணங்களுக்கும் தாமரைக்குமுள்ள சம்பந்தம் கூறப் படாவிடினும்,
குலசேகரப் பெருமாள் சூரியனுக்கும் தாமரைக்குமுள்ள தொடர்பைத் தம் பெருமாள் திருமொழியில்
“செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கல்லால் அலராவால்” என்று அருளிச் செய்கிறார்.

புண்டரீக தளாமலா யதேக்ஷணா – மூலத்தில் “புண்டரீகமேவமக்ஷிணீ “என்று இவ்வளவே உள்ளதை
எளிதாகத் தாமரைபோலும் கண்களை உடையவன் என்றோ புண்டரீகேக்ஷணன் என்றோ சொல்லி விடலாம்.
ஆனால் ஸ்வாமி தள, ஆமல, ஆயத எனும் மூன்று சொற்களை
புண்டரீக மற்றும் ஈக்ஷண எனும் இரண்டு சொற்களின் நடுவில் சேர்த்துள்ளார்.
இது ஆழ்வார்களின் பாசுரங்களின் தாக்கத்தாலேயே ஆகும்.

ஆழ்வார்கள் “தாமரைத் தடங்கண்ணன்”, “கமலத் தடம் பெருங்கண்ணன்” என்பன போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழில் “தட”வும் வடமொழியில் “தள”வும் ஒன்றே.
வடமொழியின் “ள” தமிழில் “ட” ஆகிறது. ள, ட இரண்டுக்கும் வேறுபாடு இல்லை.
இக்கொள்கையைத் தமிழ்ப்புலவோர் “எழுத்துப்போலி” என்பர்.
பூர்வாசார்யர்கள் தம் வியாக்யானங்களில் “தடம்” எனும் சொல்லை, “பெரிய”, ”குளம்”, ”இதழ்” என்று விளக்குகிறார்கள்.
இவ்விடத்தில் இதழ் எனும் பொருள் பொருந்துவதாகும்.

ஆழ்வாரின் “கமலக் கண்ணன்…அமலங்களாக விழிக்கும்” – எம்பெருமானின் கருணை நோக்கு
எல்லாப் பாவங்களையும் நீக்கும். எம்பெருமானின் நோக்கின் தன்மை “அமல” என்பதால் தெரிய வருகிறது
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு “ஆயத “ என்ற சொல் எங்கிருந்து வருகிறது எனக்காண்பது எளிது.
திருப்பாணாழ்வாரின் “கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்” எனும்
அவர் சொற்கள் நம் நினைவில் உடனே தோன்றும்.

————–

உக்த்லக்ஷண-தர்மசீலா வைஷ்ணவாக்ரேஸர: மத் ஸமாச்ரயேண ப்ரவ்ருத்தா:
மந்நாமகர்ம-ஸ்வரூபாணாம் வாங்மநஸாகோசாரதயா மத்தர்சநேந விநா ஸ்வாத்மதாரணபோஷநாதிகமலபமாநா:
க்ஷண மாத்ர காலம் கல்ப ஸஹஸ்ரம் மந்வாநா ப்ரசிதில-ஸர்வ-காத்ரா பவேயுரிதி
மத்ஸ்வரூப சேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேந தேஷாம் பரித்ராணாய”

தர்மசீலா: =அவர்கள் நியமிக்கப்பட்ட தர்மத்தைத் தங்கள் தகுதியாக உடையவர்கள்.
“தர்மம்” என்ற சொல் பொதுப்படையான தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்,
அல்லது விசேஷமாக வைஷ்ணவ தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
முன் ஸ்லோகத்தில் “யதா யதாஹி தர்மஸ்ய” என்றிருப்பதால் முதலில் சொன்ன பொருளும்,
இவ்வுரையில் அடுத்த சொல் “வைஷ்ணவாக்ரேசரா:” என்றுள்ளதால் பின் சொன்ன பொருளும் ஒக்கும்.

வைஷ்ணவாக்ரேசரா: – இவர்கள் வைஷ்ணவர்களில் முதன்மையானோர். இதுதான் இங்கு மிக முக்யமான குறிப்பு.
ஸ்வாமி இராமானுசரின் சம்ப்ரதாயத்தில் ஆழ்வார்களே உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
வைஷ்ணவாக்ரேசரா: என்கிற சொல் அவர்களின் உயர்ந்த ஸ்தானத்தைக் காட்டுகிறது.

மத் ஸமாஸ்ரயேண பவித்ரா: – என்னையே அடைக்கலமாகக் கொண்டவர்கள்.
இக் குறிப்பு, “துயரறு சுடரடி தொழுது”,
“ஆழிவண்ண நின் அடியினை அடைந்தேன்” போன்ற ஆழ்வார்களின் திருவாக்குகளால் கிளர்த் தப்பட்டது.

மந்நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங் மனஸாகோசாரதயா –
“என் சொல்லிச்சொல்லுகேன்?”
“நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்லே” என்று ஆழ்வார்கள் எம்பெருமானின்
திவ்ய நாமங்கள், திவ்ய சேஷ்டிதங்கள் முதலானவை நினைவையும் சொல்லையும் கடந்தவை என்று உணர்ந்தவர்கள்.

மத் தர்சநேன வினா ஸ்வாத்ம தாரணபோஷணாதிகம் அலபமாநா: –
ஆழ்வார்களால் எம்பெருமானைக் காணாமலும் உணராமலும் நிற்கவோ தரிக்கவோ இயலாது.
“தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே”,
“காண வாராய் என்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து” போன்ற பாசுரங்களில் இது தெளிவு.

க்ஷண மாத்ர காலம் கல்ப சஹச்ரம் மன்வானா: – எம்பெருமானோடு ஒரு நொடிப் பிரிவும்கூட ஆழ்வார்களால்
ஆயிரம் ஊழிக் காலப் பிரிவாகவே உணரப்படுகிறது. இதை அவர்கள் சொற்களிலேயே காணலாம்.
“ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ”,
“ஊழியில் பெரிதாய் நாழிகை என்னும்”,
“ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்” போல்வன,

ப்ரசிதில-சர்வ-காத்ரா: –
எம்பெருமானோடு பிரிந்தபோதும், சேர்ந்தபோதும் ஆழ்வார்களின் திருமேனி களைத்தும் இளைத்துமே போந்தன.
கூடலில், சேர்த்தி இன்பத்தால் களைப்பு. பிரிவில், துயரத்தால் களைப்பு.
“காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்”,
“காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலுமெழா மயிர்க் கூச்சமறா”,
“உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்தொழிந்தேன்”,
மற்றும் “உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள் துள்ளஞ் சோரத் துயிலணை கொள்ளேன்” என்பன போல்வன.

சுருங்கச் சொல்லில், “ஒரு ஸாது வைஷ்ணவர்களில் தலைவராய் இருப்பார், தர்ம ஒழுக்கத்தில் நிலை நிற்பவர்,
கண்ணனான என்னையே புகலாய் நினைத்திருப்பார், என் நாமங்களும் சேஷ்டிதங்களும் திவ்யமானவை,
மனதையும் சொல்லையும் கடந்தவை என்றிருப்பார், இவற்றின் அனுபவமின்றித் தரித்திலராவார்,
என் காட்சியும் உனர்வுமின்றித் தரித்திலர், என் பிரிவு ஒரு கணமும் ஓர் ஊழியாய் நினைப்பார்”
ஒரு சாது எம்பெருமானோடு கொண்டுள்ள உறவு இப்படி நெருக்கமும் நுட்பமும் கொண்டது .

————

மன்மனா பவ மத பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யசி யுக்த்வைவமாத்மானம் மத்பராயணா:

மன் மனா பவ – மயி ஸர்வேச்வரே நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாந ஸர்வஞ்ஞே ஸத்யஸங்கல்பே
நிகிலஜதேககாரணே பரஸ்மிந் ப்ரம்மணி பு௫ஷோத்தமே புண்டரீகதலாமலாயதேக்ஷணே ஸ்வச்சநீலஜீமுதஸங்காக்ஷே
யுகபதுதிததினகரஸஹஸ்ர ஸத்ருசதேஜஸி லாவண்யாம்௫தமஹோததே உதாரபீவரசதுர்பாஹோ அத்யுஜ்ஜவலபீதாம்பரே
அமலகிரீடமகரகுண்டலஹாரகேயுரகடகபூஷிதே அபரகா௫ண்யஸெளசீல்யஸெளந்தர்யமாதுர்ய காம்பீர்ய ஔதார்ய
வாத்ஸல்யஜலதௌ அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே ஸர்வஸ்வாமினி தைலதாராவதவிச்சேதேன நிவிஷ்டமநா பவ)

ஸர்வேச்வரேச்வரனான என் மேல் மனதை வை, என் மேல் = ஒரு குறையுமில்லாத, எல்லா மங்கலங்களும்
விரும்பத்தக்க கல்யாண குணங்களும் மிக்க, ஸர்வ வியாபி ஸத்ய சங்கல்பன், ஸர்வ காரணன், பரப்ரம்மம்,
அப்போதலர்ந்த அரவிந்தம் போன்ற செந்தாமரைக்கண்ணன், காள மேகம்போலும் கவின் மிகு கருணைத் தோற்றமுள்ளவன் ,
கதிராயிரம் இரவி கலந்தெரித் தாற் போல் தேஜோமயன், வண்ணப் பீதகவாடை தரித்தவன், பலபலவே ஆபரணமும் முடியும்
குண்டலமும் ஆரமும் கங்கணமும் தோள்வளையும் பூண்டு கருணையும் அன்பும் உடையனாய் எளிவரும் இயல்வினனாய்
சுலபனாய் எவர்க்கும் புகலாய் உள்ள என் மேல் அர்ஜுனா உன் அன்பை இடையீடின்றி வை என்கிறான்.

பண்டருமாறன் பசுந்தமிழ்ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுசமுனி வேழம் ….என்றும்

கலிமிக்க செந்நெற்கழனிக்குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து
அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன் ….என்றும் போற்றினார்

————-

ஸ்ரீ யாமுநாரயஸமோ வித்வான் ந பூதோ ந பவிஷ்யதி என்று உறுதியாகக் கூறுவர்.
ஸ்வாமியைப் போன்று ஒரு மஹாவித்வான் பிறந்ததும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை.
திருவரங்கத்தமுதனாரும் ஸ்வாமியை ‘யதிகட்கிறைவன் யமுனைத்துறைவன்’ என்று இவரை
யதிகளுக்கு, அதாவது ஸந்யாஸிகளுக்கு இறைவன் என்றே போற்றுகிறார்.

ந வயம் கவ்யஸ்து கேவலம்,ந வயம் கேவல-தந்த்ர-பாரகா:, அபிது ப்ரதிவாதிவாரண-ப்ரகடாடோப-விபாடந-க்ஷமா:)

“நாம் வெறும் கவி மட்டும் அல்ல; வெறும் ஆகம தந்த்ரங்கள் அறிந்த வித்வான்கள் மட்டும் அல்ல;
நாம் அதற்கும் மேல், யானை போன்ற ப்ரதிவாதிகளின் ஆணவப் பிளிறல்களை அடக்கும் வல்லமைப் பெற்றவர்கள்” என்றார்.

வேத வேதாந்தத்தின் ரஹஸ்யமான மறைபொருளின் அர்த்தத்தை ஸ்ரீ பராசர மஹரிஷியை விட
ஸ்வாமி நம்மாழ்வார் நன்றாக விளக்கியுள்ளார். மேலும், ஆழ்வாரின் இனிமையான பாசுரங்கள்
எம்பெருமானுக்கு மிகவும் உகப்பாகவும், உலகுய்ய வைப்பதாகவும் உள்ளது. ஆழ்வார் பரம க்ருபையால்
நமக்கருளிச்செய்த பகவத் விஷயத்தை மனத்திற்கொண்டு, ஸ்வாமி ஆளவந்தார் ஆழ்வாரையும்,
கோடானுகோடி ஜீவன்களுக்கு தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் அருளிய எம்பெருமானையும் சமநிலையில் காண்கிறார்.
எப்படி வேதாந்தமானது, பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணனை எல்லோருக்கும் தாய், தந்தை, எல்லாம் என்று சொல்கிறதோ,
அதேபோல், ஸ்வாமி ஆளவந்தார் வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவடியே
தமக்கு எல்லாம் என்று சரணடைந்தார்” – வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் மூர்த்நா ப்ரணமாமி

—————————

விஷ்ணோர் தேஹானுரூபாம் வை கரோத் யேஷாத் மநஸ்தநூம்–
எம்பெருமான் திவ்ய மங்கள விக்கிரகத்துக்கு அனுரூப திருமேனி கொள்கிறாள் பிராட்டியும் –
ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி-அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோ ரேஷா அநபாயநீ –

காவேரீ விராஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம் -ச வாஸூ தேவோ பகவான் ப்ரத்யக்ஷம் பரமம் பதம் –
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்க மிவா பரம்

பரஸ்ய ப்ரஹ்மானோ யத்ர சேஷித்வம் ஸ்ப்புடம் ஈஷ்யதே-ஸ்ருதி பிரகாசிகாகாரர் ஸ்ரீ ஸூக்தி
திங்நாகை ரர்ச்சிதஸ் தத்ர புரா விஷ்ணுஸ் சநாதன-ததோ ஹஸ்தி கிரீர் நாமக்க்யாதி ராசீன் மஹா கிரே-புராண பிரமாணம்-
திக்கஜங்களால் பூஜிக்கப் பட்டதால் ஹஸ்திகிரி
ராமோ விக்ரஹவான் தர்ம –கிருஷ்ணம் தர்மம் சனாதனம் —

தஸ்மை ராமாநுஜார்ய நாம பரம யோகிநே யா ஸ்ருதி ஸ்ம்ருதி சூத்ராணாம் அந்தர் ஜுரம் அஸீஸமத் —

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரு-ச ஏவ சர்வ லோகாநா முத்தர்த்தா நாத்ர சம்சய -ஸ்ரீ கூரத் தாழ்வான்-

நசேத் ராமாநுஜத் யேஷா சதுரா சதுரஷரீ காவஸ்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸ –
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி பதம் பாதி நான்யத்ர –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –

இராமானுஜம் லஷ்மண பூர்வஜம் ச –
தேவதாயா குரோஸ்ஸாபி மந்த்ரஸ்யாபி ப்ரகீர்த்த நாத் ஐஹிக ஆமுஷ்மிகீ சித்தி த்விஜஸ் யாஸ் தே ந சம்சய —
தேவதை குரு மந்த்ரம் இவற்றை கீர்த்தனம் செய்வதால் இம்மை மறுமை பயன்கள் உண்டு -ஐயம் இல்லையே –

குரோர் நாம சதா ஜபேத் –
பவபயாபி தப்த ஜன பாகதேய வைபவ பாவிதா வதரணேந பகவதா பாஷ்ய காரேண–ஸ்ருத பிரகாசிகை ஸ்ரீ ஸூக்தி-
சம்சார பயத்தால் தவித்து கொண்டு இருக்கும் மக்களின் பாக்கியத்தின் வைபவத்தினால் நேர்ந்தது ஸ்ரீ பாஷ்யகாரர் திருவவதாரம் –
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநூம் மக்நான் உத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா-
விஷ்ணுச் சேஷீ ததீயச்சுப குணநிலயோ விக்ரஹ ஸ்ரீ சடாரி –
ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பாத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம் – -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் அன்றோ –

ஸ்ரீ ராமாநுஜாய முநயே நம யுக்தி மாத்ரம் காமா துரோ அபி குமதி கலயன் நபீஷ்ணம் –
யாமாமநந்தி யமினாம் பகவஜ் ஜனாநாம் தாமேவ விந்ததி கதிம் தமஸ பரஸ்தாத் –
புத்தி கேட்டு காமத்தால் பீடிக்கப் பட்டவனாக இருப்பினும் ஸ்ரீ ராமாநுஜாய நாம என்று சொல்லுமவன் மோக்ஷம் அடைகின்றனர் –

உத்யத்தி நேச நிப முல்லச தூர்த்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –உதய சூர்யன் ஒத்து
திருமண் காப்பு துலங்கும் ஸ்வாமி உமது அழகிய திருமேனி காட்டி அருளுவாய் –
சரீர ஆத்ம லஷணம் ஆவது-யஸ்ய – சேதனஸ்ய- யஸ்ய த்ரவ்யம் -சர்வாத்மனா ஸ்வார்த்தே -நியந்தும் தாரயிதும் சக்யம்-
தத் சேஷை தைக ஸ்வரூப பஞ்ச தஸ்ய சரீரம் -சர்வாத்மனா –

லஷ்மீ நாதாக்கய சிந்தவ் சடரிபு ஜலத ப்ராப்ய காருண்ய நீரம் -நாத அத்ரவ் அப்யஷிஞ்சத் ததநு ரகுவராம் போஜ சஷூர்ஜ் ஜராப்யாம்
கத்வா தாம் யாமு நாக்க்யாம் சரிதம் அத யதீந்த்ராக்க்ய பத்மா கரேந்த்ரம் சம்பூர்ய ப்ராணிச ஸயீ ப்ரவஹதி சததம் தேசிகேந்த்ர ப்ரமவ்கை —

ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்யத் ந கிஞ்சன –
ஆசிநோதிஹி சாஸ்த்ரார்த்தாந் ஆஸாரே ஸ்த்தாபயத்யபி ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் தமாசார்யம் ப்ரசக்ஷதே –ஆச்சார்ய லக்ஷணம் –

ந்ருதேஹ மாத்யம் ப்ரதிலப்ய துர்லபம் ப்லவம் ஸூ கல்யம் குரு கர்ண தாரம் -மயாநுகூலேன நபஸ்வதேரித புமான் பவாப்திம் நதரேத்ச ஆத்மஹா —
முதன்மை வாய்ந்த -கிடைத்தற்கு அரிய -திறமை வாய்ந்த -குருவை ஓட காரனாக கொண்டதுமான மானிட உடல் ஆகிய ஓடத்தை பெற்று –
அனுகூலமாய் இருக்கும் என்னை – ஈஸ்வரனான -காற்றினால் தூண்டப்பட்டு சம்சாரக் கடலை தாண்டாதவன் தற்கொலை செய்து கொண்டவன் ஆவான் –

ஸக்ருத் ஸ்ம்ருதோபி கோவிந்த ந்ருணாம் ஜன்ம சதைச் சிதம்-பாபராசிம் தஹத்யாச தூலராசி மிவாநல–கோவிந்தனை ஒருகால் நினைத்தாலும்
சேதனர் நூறு பிறவிகளில் சேர்த்த பாப குவியலை நெருப்பு பஞ்சு குவியலை போலே உடனே கொளுத்தி விடுகிறான் –

வரம் ஹூதவஹ ஜ்வாலா பஞ்ச ராந்தர் வ்யவஸ்த்திதி -ந ஸவ்ரி சிந்தா திமுக ஜன சம்வாச சைவசம் —
கண்ணன் பால் சிந்தனை இல்லா மனுஷர் உடன் வாசம் செய்யும் கொடுமை கொழுந்து விட்டு எரியும் நெருப்பு கூண்டுக்களுள் இருப்பதை விட கொடியது

மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ –
ஆரியன் -சமதி சர்வ சாஸ்த்ரரர் –அதத்வேப்யோ தூராத்யாதா புத்தி யேஷாம் தே ஆர்யா —
சாஸ்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் -தத்வம் அல்லாதவற்றவைகள் நின்றும் தூரஸ்தர்
யஸ்மாத் தாதுபதேஷடாசவ் தஸ்மாத் குருத்ரோ குரு –உபதேசம் பண்ணும் ஆச்சார்யன் உபதேசிக்கப் படும் எம்பெருமானை விட மேம்பட்டவர்
நாராயணோ அபி விக்ருதிம் யாதி குரோ ப்ரஸியு தஸ்ய துர்புத்தே கமலம் ஜலாத பேதம் சோஷயதி ரவிர் ந போஷயதி –

தத்தேரங்கீ நிஜமபி பதம் தேசிகா தேச காங்ஷி-வ்யாஸ திலகம் -அரங்கன் தன் பாதத்தை ஆச்சார்யர் கட்டளையை எதிர்பார்த்து அளிக்கிறான்
த்ருணீக்ருத விரிஞ்யாதி நிரங்குச விபூதய ராமானுஜ பதாம் போஜ ஸமாச்ரயண சாலிந
மஹதோ வேத வ்ருஷஸ்ய மூல பூதஸ் சனாதன ஸ்கந்த பூதா ருகாத் யாஸித்தே சாகா பூதாஸ் ததாபரே —
கிருதயுகம் வேதம் மரம் -தர்மம் வேர் -ருகாதிகள் தண்டு -மற்றவை கிளைகள் –
விஷ்ணோர் பூதாநி லோகாநாம் பாவநாய சரந்திஹி–ஸ்ரீமத் பாகவதம் –1–2–28-திரிந்து புனிதமாக்கும் முதல் ஆழ்வார்கள்
சிர நிர்வ்ருத்தம் அப்யேதத் ப்ரத்யக்ஷம் இவ தர்சிதம் -பால காண்டம் -முன்பே நிகழ்ந்து இருந்தும் நேரில் நிகழ்வது போல் காட்டப்பட்டது –
யாவன் சரனவ் ப்ராது பார்த்திவ வ்யஞ்ஜ நான்விதவ் சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர் பவிஷ்யதி —
ஸ்ரீ பரதன் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசன் மேல் அவா –

நைவ சப்தே ஸ்வதோ தோஷா ப்ராமாண்ய பரிபந்தின–சந்தி கிந்து ஸ்வதஸ் தஸ்ய ப்ரமாணத்வமிதிஸ்த்திதி –
வக்து ராசய தோஷேண கேஷூ சித்ததபோத்யதே–
சப்தத்தில் பிரமாணம் ஆவதற்கு தடங்கலான குற்றங்கள் இயல்பாக இல்லை -பின்னையோ எனில் பிரமாணம் ஆகும் தன்மையே –
அதன் இடத்தில் இயல்பாய் அமைந்து
உள்ளது என்பது தான் உண்மை நிலை -இயல்பான அந்த பிராமணத் தன்மை சொல்லுகிறவனுடைய கருத்தில் உள்ள குற்றத்தால்
சில இடங்களில் வேறுபடுகிறது -ஆகம ப்ராமாண்யம் –ஆளவந்தார் –

ததாஸ்துதே மதுபித ஸ்துதி லேசவச்யாத் கர்ணாம்ருதை ஸ்து திசதை ரநவாப்தா பூர்வம் த்வன் மௌலி கந்த ஸூபகா முபஹ்ருத்ய மாலாம் லேபே மஹத் தர
பதாநுகுணம் பிரசாதம் –ஸ்ரீதேசிகன் -பெரியாழ்வார் என்ற பெயர் பெற்றது சூடிக் கொடுத்த இவள் திரு மாலை சமர்ப்பித்ததாலே என்றவாறு –

பரம ஸூஹ்ருதி பாந்தவே களத்ரே ஸூததநயா பித்ரு மாத்ருப் ருத்ய வர்க்கே சடமதி ருபயாதியோ அர்த்த த்ருஷ்ணாம்
தமதமசேஷ்ட மவேஹி நாஸ்ய பக்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7–30–சடமதி உடன் உள்ளவன் ஸ்ரீ விஷ்ணு பக்தன் அல்லன் –

அசேஷ ஜகத்திதா நுஸாசந ஸ்ருதி நிகர சிர –உலகு அனைத்துக்கும் ஹிதம் கற்பிக்கும் வேதாந்தம் -வேதாந்த சங்க்ரஹம் –
மாதா பித்ரு ஸஹஸ்ரேப்யோ வத்சல தரம் ஹி சாஸ்திரம்

கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமன் –சிவன் வாணனை ரஷித்து அளிக்க பெருமாளை வேண்டிக் கொண்டான் –
உன்னை புருஷோத்தமனாக அறிகிறேன் என்றபடி -கிருஷ்ண கிருஷ்ண ஜகந்நாத –தற்கால பாடம்

தேஜஸ் -துர்ஜனை அநபிபவ நீயத்வம்–ஸ்ரீ கீதா பாஷ்யம் -தீயோரால் அடர்க்கப் படாமை –
கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டாரம் ஈஸ்வரம் நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷாண்டோ பஹாதா ஜநா –
கலிகாலம் பாஷாண்டிகள் மலிந்து இருப்பார்களே –
யத் ப்ரஹ்ம கல்ப நியதா அநுபவேப்ய நாஸ்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஐந்துரிஹா க்ஷணார்த்தே–
அரை நொடியில் -பதினாயிரம் ப்ரஹ்ம கர்ப்ப காலம் அனுபவித்தாலும் தீராத பாபங்களை சம்பாதிக்கிறோம் –
வாஸூ தேவம் பரித்யஜ்ய யோந்யம் தேவ முபாஸதே த்ருஷிதோ ஜாஹ்நவீ தீரே கூபம் கநதி துர்மதி –
-விடாய் தீர கங்கை கரையில் கிணறு வெட்டுவது போலே தேவதாந்த்ர பஜனம் –

வால்மீகி கிரி ஸம்பூதா ராம சாகரகாமிநீ புநாதி புவனம் புண்யா ராமாயண மஹாநதீ –
-வால்மீகி மலையில் தோன்றி -பெருமாள் என்னும் கடலை நோக்கிச் செல்லும் புண்ய நதி ஸ்ரீ ராமாயணம் –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்க்க கல்லோல சங்குலம் காண்டக்ராஹ மஹாமீநம் வந்தே ராமாயனார்ணவம் — –
ஸ்லோகங்கள் -சார நீர் -சர்க்கம் அலைகள் -காண்டம் -முதலை / பெரிய மீன்கள் / ஸ்ரீ ராமாயணம் கடல் –
ய பிபன் சததம் ராம சரிதாம்ருத சாகரம் அதிருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதசம கல்மஷம் — ஸ்ரீ ராம சரிதம் அமுத கடலை பருகி
போதும் என்று திருப்தி அடையாத குற்றம் அற்ற வால்மீகி -பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் போலே –

சம்யக் நியாய கலாபேந மஹா பாரதேநச உப ப்ரும்ஹித வேதாய நமோ வியாஸாய விஷ்ணவே
-ஸ்ரீ சுருதி பிரகாசர் -ஸ்ரீ வேத வியாசர் மஹா பாரதத்தையும் பரம கிருபையால் அருளிச் செய்கிறார்

சீல க ஏஷ தவ ஹந்த தயைகஸிந்தோ ஷூத்ரே ப்ருதக் ஜநபதே ஜகதண்ட மத்யே ஷோதீய ஸோபிஹி ஜனஸ்ய க்ருதே
க்ருதீத்வ மத்ராவதீர்ய நநு லோசந கோசரோ பூ —
அதிமானுஷ ஸ்தவம் -அருளே நிறைந்த கடலே –அற்ப சகல மனுஷ நயன விஷயமாகும் படி திரு அவதரித்து
அருளும் உன் ஷீலா குணத்தை என் என்பது –
ஜடரா குஹரே தேவஸ் திஷ்டன் நிஷ்தவர தீர்க்கா நிபதித நிஜா பாத்யாதித் சாவ தீர்ண பித்ருக்ரமாத் -ரஹஸ்ய த்ரயசாரம் –
அளற்று ஓடையில் விழுந்த குழந்தை எடுக்கவே –
கம்சத்தவமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -என்று மார்க்கண்டேயன் உபதேசிக்க -திரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் –

அநதிகத பத வாக்ய ஸ்வரூப ததர்த்த யாதாத்ம்ய ப்ரத்யஷாதி சகல பிராமண ததிதி கர்த்தவ்யதா ரூப சமீசி
நந்யாய மார்காணாம்–ஸ்ரீ பாஷ்யம் மஹா சித்தாந்தம் –
சொல் வாக்கியங்களின் ஸ்வரூபம் பொருளின் உண்மை கருத்து ப்ரத்யக்ஷம் முதலிய பிரமாணங்களை உணர்த்துவது
அதற்கு உறுப்பான நேரிய யுக்தி வலிகள் இவற்றை அறியாதவர்கள் -பேதையர் –

கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரேஷ்டாரம் ஈஸ்வரம் -நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பஹதா ஜநா –
ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் ப்ராப்ய ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்நிய ந கிஞ்சன –
யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா –பெருமாள் உடன் கூடி சுவர்க்கம் பிரிந்தால் நரகம் -பிராட்டி –
நலம் என நினைமின் நரகு அழுந்தாதே –திருவாய் -2–10-7-
பசவ பாசிதா பூர்வம் பரமேண ஸ்வலீலயா தேநைவ மோசநீயாஸ்தே நாநயைர் மோசயிதும் ஷமா –
கன்ம பாசக்கயிற்றால் கட்டப்பட்டு -அவனாலே விடுவிக்கப் படத் தக்கவர்கள் -பிறரால் அல்ல –
யா ப்ரீதிர விவேகா நாம் விஷயேஷ்வ நபாயிநீ -த்வம் அநு ஸ்மரத்தாஸ் சாமே ஹ்ருதயா ந்நாபசர்ப்பது -ஸ்ரீ விஷ்ணு புராணம் –1–20–13-
சம்சாரிகள் விஷயாந்தரங்களில் ப்ரீதி நீங்காது இருப்பது போலே உன்னை தொடர்ந்து நினைந்த வண்ணம் இருக்கும்
என் இருதயத்தின் நின்றும் நீங்காது நிலைத்து இருந்து அருள்வாய் –
கிருஷ்ண ஏவஹி லோகா நாம் உத்பத்திர் அபிசாப்யய—

பஹி ரந்தஸ் தமச்சேதி ஜ்யோதிர் வந்தே ஸூ தர்சனம் யேநாவ் யாஹத சங்கல்பம் கஸ்து லஷ்மீ தரம் விது –மாயவனுக்கு மஹிமை ஸூ தர்சனம்
சர்வ பாபாநி வேம் ப்ராஹூ கடஸ் தத்தாஹ உச்யதே –பிரமாணம் – வேம் -பாபங்களை -அவற்றை கொளுத்துவதால் கட–எனவே வேங்கடம் –
யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா பிரதீயதே -தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச –சரணாகதி வித்யை அளித்த ஆச்சார்யனே
ஸ்ரீ வைகுண்டமும் திருப் பாற் கடலும் ஸ்ரீ மத் த்வாரகையும் எல்லாம் வகுத்த இடமே –
யோந்யதா சாந்த மாத்மாநம் அந்யதா பிரதிபத்யதே கிம் தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாப ஹாரிணா–ஆத்ம அபஹாரமே மிக பெரிய பாபம் –
அநாத்மன் யாத்மா புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யாமதி –அவித்யாதரு சம்பூதி பீஜ மேதத் த்விதாஸ்த்திதம் –சம்சார வ்ருஷத்துக்கு வித்து-
சதுர் வேததாரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி வேதபார பராக்ரஅந்த ச வை ப்ராஹ்மண கர்தபா — வாஸூ தேவனை அறியாமல் குங்குமம் சுமந்த கழுதை –
அந்நியம் தேஹி வரம் தேவ பிரசித்தம் சர்வ ஜந்துஷூ மர்த்யோ பூத்வா பவாநேவ மாமாராதய கேசவ –
மாம் வஹவா ச தேவேச வரம் மத்தோ க்ருஹாணாச யேநாஹம் சர்வ பூதா நாம் பூஜ்யாத் பூஜ்யத்ரோஸ் பவம் –
கேசவன் அனைவரும் அறியும்படி நீ வரம் வாங்கி கொள்ள வேண்டும் -அனைவரும் பூஜிக்க உரியவனாக ஆகும் படி அருள வேணும் -என்றதும்
த்வம்ச ருத்ர மஹா பாஹோ சாஸ்த்ராணி காரயா -மோஹ சாஸ்திரங்களை செய்விக்க வேண்டும் -மருள் சுரந்த பசுபதி ஆகமம் –

சதேவ சோம்யே இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
த்வயோர்பாவ–த்விதா- த்விதைவ- த்வைதம்- நத்வைதம் அத்வைதம் –
இதம் சர்வம் யத் அயமாத்மா -ப்ருஹ–6–5–7-
ம்ருத்யோஸ் சம்ருத்யும் ஆப்நோதி ய இஹ நாநேவ பஸ்யதி –ப்ருஹ –6–4–19-
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம –தைத்ய -ஆனந்த வல்லி -1–1-
நிஷ்களம் நிஷ்க்ரியம் –
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மய்வ பவதி -முண்டகம் –3–2–6-
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யச்சா பவேத் –
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்க்கி ஸூர்யா சந்தமசவ் வித்ருதவ் திஷ்டத–ப்ருஹ –5-8–8–நியமனம் ஆதாரம்
ஐததாத்ம் யமிதம் சர்வம்–சாந்தோக்யம் –6–8-7-
தத்வமஸி —
நித்யோ நித்யானாம் சேதனச் சேதனானாம் ஏகோ பஹு நாம் யோவிததாதி காமான் –கட-2–5–12- / ஸ்வேதா -6-13-
அஹமாத்மா குடாகேச சர்வ பூதாசய ஸ்த்தித—ஸ்ரீ கீதை –18-20-
சர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி சர்வ –ஸ்ரீ கீதை –11–40-
ஏஷ சம்பிரசாதோ அஸ்மத் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஸ்பத்யதே –
ய ஆத்மாநம் அந்தரோ யமயதி–ப்ருஹதாரண்யகம் –
தத பூத பவ்ய ஈஸ்வரத்வா தேவ வாத்சல்யா திசயாத் தேகதா நபி தோஷான் போக்யதயா பஸ்ய தீத்யர்த்த –வாத்சல்ய குணத்தால்
தோஷங்களை போக்யமாக ஈஸ்வரன் கொள்கிறான் –
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -யேன ஜாதானி ஜீவநதி -யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத் விஜிஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்ம -தைத்ரியம் பிருகு வல்லி –
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் –ததைஷத பஹூஸ்யாம் பிரஜா யே யே தி –சாந்தோக்யம் -6-2-1-
சந்மூலாஸ் சோம்யே மா பிரஜா –என்று தொடங்கி-ச ஆத்மா -6-8-6-
தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யதே அத சம்பத்ஸ்யே —6-14-2-
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதாலும் இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகிறது
ஏஷ ஹேவ அனந்யாதி-என்கிற சுருதி வாக்யத்தில் அந்வய முகனே தெரிவிக்கப் பட்ட அர்த்தமே நான்ய பந்தா வித்யதே அனயனாய
-ஸ்ருதியில் வ்யதிரேக முகேன தெரிவிக்கப் படுகிறது
ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்று ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷனே ஆனந்த மயன் என்கிறது –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதச்சன-
அபஹத பாப்மா-விஜரோ-விம்ருத்யூர் -விசோக–விபாஸ -சத்யகாம -ஸத்யஸங்கல்ப –
தஸ்மாத்வா ஏதச்மாத் விஞ்ஞான மயாத்-அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய—சைஷா ஆனந்தச்ய மீமாம்ச பவதி–
தே யே சதம் பிரஜாபதேர் ஆனந்தா ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்ய சாகா மகாதச்ய —
கோஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹயேவா நந்தயாதி —
என்று ஒதப்படுகிறது -கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் ப்ராக்ருதமான ஆனந்தத்தை அடைய முடியும் –
கோ வான் ப்ராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தத்தை அடைய முடியும் -ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மாவே அன்றோ-
அத யா ஏஷோந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே -சாந்தோக்யம் -என்று தொடங்கும் அந்தராதித்ய வித்தை-
அதில் -ஹிரண்யமஸ்ரூர் ஹிரண்யகேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அஷீணீ
தஸ்ய உதிதி நாம ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித உதேதி ஹ வை வர்வேப்ய பாப்மப்யோ யா ஏவம் வேத –
–ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ எகோ நாராயண -ஸூ பால உபநிஷத் –
-தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -புருஷ சூக்தம்-
யத் ஊர்த்வம் கார்க்கிதிவோ யதர்வாக் ப்ருதிவ்யா –ப்ரு-3–8–6-மூன்று காலங்களில் உண்டாக்கப்பட்ட அனைத்தும் அவற்றுக்கு
காரண பூதமான ஆகாசத்தில் சேர்க்கப்பட்டு அதனையே ஆதாரமாக கொண்டு உள்ளன –
கஸ்மின் நு கல்வாகச ஒதச்ச ப்ரோதச்ச –ப்ரு–5–8–7-இந்த ஆகாசத்துக்கு காரண பூதம் எது என்னில்-
ஏதஸ்மிந் து கல் வஷரே கார்க்கி ஆகச ஒதச்ச ப்ரோதச்ச–ப்ரு –3–8–7- அக்ஷரமே ஆதாரம் -இதுவே பிரதானம் –

ந தஸ்ய பிராணா உத்க்ராமந்தி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -4–4–6-

—————-

கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா-8-5-10-
கண்களால் காண்கிற பாலினுள்ளே நெய் உண்டாய் இருக்க காண அரிதானாப் போலே-
கடைந்த பால் இல்லை -கறந்த பால் என்கிறார் –
எல்லா பொருள்களிலும் நின்று வைத்து காண ஒண்ணாதபடி-நிற்கிற மிக்க ஆச்சர்யத்தை உடையவனே-
பலவகைப்பட்ட நிறங்களை உடைய பசுக்கள் உடைய பாலோ என்னில் –ஒரே நிறம் உடையது –
அது போலே ஞான ஸ்வரூபமான ஆத்துமா பார்க்கத் தக்கது
தேவர்கள் முதலான சரீர பேதங்கள் பசுக்களைப் போன்றவை –
எப்படி பாலில் நெய் மறைந்து இருக்கிறதோ–அது போன்று கடவுள் எல்லா பொருள்களிலும் வசிக்கிறார் –
மனம் என்னும் மத்தினால் எப்போதும் கடைய வேண்டும் –

கவாம் அநேன வர்ணானாம் ஷீரச்யது ஏக வர்ணதா–ஷீரவத் பஸ்யதி ஜ்ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதமிவ பயஸி நிகூடம் பூதே பூதே ச வசதி விஜ்ஞ்ஞானம்–சத்தம் மந்தே தவ்யம் மனஸா மந்தாந பூதேன
சர்வ பூதாதி வாசம் யத் பூதேஷு ச வசத்யபி–சர்வா நுஹ்ரஹகத்வேன தத் அஸ்மி அஹம் வாசுதேவ இதி -பிரமவித் உபநிஷதம்

எந்தப் பொருளானது எல்லாப் பிராணிகளுக்கும் இருப்பிடமோ-எல்லா பூதங்களிலும் எந்தப் பொருள் வசிக்கின்றதோ
அந்தப் பொருள் எல்லாவற்றுக்கும் சத்தியை உண்டாக்குகிறது-அந்த வாசுதேவன் நான் ஆகிறேன் -எனபது உபநிடதம் –

காலத்தாலும்
கடைதல் முதலிய செயல்களாலும்–மதன பூர்வ பாவி தோய்ப்பதை சொல்லும் -முதலிய என்பதால் –
தோற்றுகிற நெய் -கறந்த காலத்தில் தோற்றாதே அன்றோ –
ஆதலால் கறந்த பால் -என்று விசேடிக்கிறார் -என்கை
உன் பக்கல் பாரத்தை வைத்தவன் ஆகிற செயலால் –ரஷாபாரத்தை அவன் பக்கலில் வைக்கும் சம்ஸ்காரம் –அல்லது-காண அரியை -என்றவாறு-

—————

எல்லியும் பிரவேசம் –
மாயக் கூத்தா -திருவாய்மொழி யிலே
ஆழ்வார் தமக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் ஆகையாலே பேசினார் –
சர்வேஸ்வரனுக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே பேசிற்று இல்லை-
ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டேன் -என்கிறபடியே-
இத் தலையில் விடாய்-ஒரு கண நேரத்துக்கு மேல் உயிர் வாழேன் நான் -என்று அன்றோ அத்தலையில் விடாய் இருப்பது-
ஜீவிதம் தாரயிஷ்யாமி மாசம் தசரராத்மஜா-ஊர்த்த்வம் மாசாத் ந ஜீவிஷ்யே சத்யேன அஹம் ப்ரவீமி தே -சுந்த -38-68-
சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணமபி விநாதாம் அஸி தேஷணம்-66-10-

————

“மத்‌பக்தம்‌ ங்வபசம்‌ வாபி நிரந்தரம்‌ குர்வந்தி யே நரா: | பத்வகோடிர௱தேநாபி ௩ க்ஷமாமி வஸுந்த,ரே |” [பூகேவியே! சண்டாளனாயிருக்கபோதிலும்‌ என்னுடைய பக்தனை எந்த ஜனங்கள்‌ நிந்தை செய்கிறார்களோ,
அவர்‌களைக்‌ கோடிக்கணக்கான பத்மகாலங்களானாலும்‌ பொறுக்க மாட்டேன்‌.

| ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்‌,ய வர்த்ததே | ஆஜ்ஞாச்சசே,தீ, மம த்‌,ரோஹீ (05२11456 509 ந த வைஷ்ணவ: || [ ஸ்ருதியும்‌, ஸ்ம்ருதிகளும்‌ என்னுடைய ஆஜ்ஞைகளே. அவற்றை எவன்‌ மீறி ஈடக்கறுனோ அவன்‌ என்‌ ஆணையை மீறி நடக்கிறவனாகையால்‌ எனக்கு த்ரோஹம்‌ செய்தவ னாதறான்‌. என்னுடைய பக்தனாயிருந்தபோதிலும்‌ அவன்‌ வைஷ்னவனல்லன்‌. ] “மநீஷீ வைதி,காசாரம்‌ மஸா5$5பி ௩ லங்க,யேத்‌” [ ஈல்ல மனத்தையுடையவன்‌ வேததர்மத்தை மனத்தினாலேயும்‌ மீறக்கூடாது. ]

“ய: மாஸ்த்ரவிதி,முத்ஸ்ருஜ்ய வர்த்ததே காமகாரத: | ® नण ஸித்‌;திமவாப்நோதி ௩ ஸாுகழம்‌ ௩ பராங்க;திம்‌’ [ எவனொருவன்‌ சாஸ்திரவிதியை வீட்டுத்‌ தன்‌ இஷ்டப்படி நடக்கறானோ அவன்‌ சித்தியையும்‌, ஸுகத்தையும்‌ மேலான கதியையும்‌ அடைவதில்லை. ] “தாகஹம்‌ த்‌,விஷத: க்ரூராம்‌ ஸம்ஸாரேஷு நராதழமார்‌| க்ஷிபாம்யஜஸ்ரமமரப,ாநா ஸாரீஷ்வேவ யோ நிஷா ||” [என்னை த்‌வேஷிப்பவர்களும்‌, கொடூரமானவர்களும்‌, மனிதர்களுள்‌ இழ்மையானவர்களும்‌, சபமற்றவர்களுமான அவர்களை ஸம்ஸாரத்தில்‌ ௮ திலும்‌ அஸுரயோனிகளில்‌ (ஏப்போதும்‌ தள்ளுகிறேன்‌.]

“யதபராத,ஸஹஸ்ரமஜஸ்ர ஜம்‌ த்வயி முரண்ய ஹிரண்ய உபாவஹத்‌ | வரக, தேர சிரம்‌ த்வமவிக்ரியோ விக்ருதிம்‌ அர்ப்ப,க நிர்பஜநாத,க;ா: 1″ [சரண்யனே! உன்‌ வீஜயத்தில்‌ ஹிரண்யன்‌ இடைவீடா து செய்த ஆயிரக்கணக்கான அபரா தங்களினாலும்‌ வெகுநாள்‌ விகாரமடையாத நீ; சிறவனான ப்ரஹ்லாதனைத்‌ தன்‌ புறத்தியதால்‌ விகாரமடைந்தாய்‌] என்‌ று பாகவதாபசாரம்‌ செய்தவர்களில்‌ தலைவனாக எண்ணப்படும்‌ ஹிரண்யனே.

“வர்ணாஸ்ரமா சாரவதா புருஷேண பர: புமாந்‌ | விஷ்ணுராராத்‌,யதே பந்தள நரந்யஸ்‌ தத்‌ தோஷகாரக: ॥” ‘[வர்ணாங்ரம தர்மப்படி நடக்கும்‌ புருஷனா லேயே பரம புருஷனான விஷ்ணு ஆரா திக்கப்படுகிறான்‌ . அவனை உ௨௧ப்‌ பிப்பது வேறொன்றுமன்று.] என்று ஸ்ரீவீஷ்ணுபுராணத்‌ தில்‌ சொல்லப்பட்ட தன்றோ. (தவ தர்மா) உன்னை அடைவ தற்கு ஸாதனமாகச்‌ சொல்லப்பட்ட தர்மங்களை *யஜ்ஞோ த,நேக தபஸா ऽना ८०७९ விவிதி,ஷந்தி ப்ராஹ்மணா:” , [யஜ்ஞத்தினாலும்‌. தானத்தினாலும்‌. சீபஸ்ஸினாலும்‌ ப்ராஹ்‌ மணர்கள்‌ பரமா ப்மாவை அறிய விரும்புகிறோர்கள்‌.] என்று சொல்லப்பட்ட கன்றோ. (தவ தர்மா) “யஜ்ஞதாநதப: கர்ம ௩ த்யாஜ்யம்‌ கார்யமேவ தத்‌” [யஜ்ஞம்‌, தானம்‌. தபஸ்‌ | ஆகிய கர்மங்கள்‌ வீடத்தக்கவையல்ல; செய்யத்தக்கவையே. | என்‌ ¢ உன்‌ னாலேயே விதிக்கப்பட்ட தர்மங்களை. (தர்மா) தர்மாணி’ என்னும்‌ பதத்தின்‌ சளந்தஸரூபம்‌. (யத்‌ யுபேோ பிம) யாகொரு சாரணத்தினால்‌ லோபம்‌ செய்தோமோ “ ம்ருத்யோ: பதம்‌ யோபயந்த: “ என்றவீடத்திற்போலே “யோபயதி’ என்னும்‌ தாது லோபம்‌ செய்வது என்னும்‌ பொருளிலே வந்துள்ளது. (தேவ ) வாஸுகேவனே! (தஸ்மாத்‌ ஏநஸ;) அந்த அந்தப்‌ பாபங்களினால்‌. (மா ந ரீரிஷ:) எங்களை ஹிம்ஸிக்கவேண்டாம்‌. ரிஷதி’ தாது ஹிம்ஸை என்னும்‌ பொருளையுடையது. (ஏஈஸ:) “ஏதி கர்த்தாரம்‌ இதி ஏஈ:” [தன்னைச்‌ செய்பவனை வந்து அடைகிற தாகையால்‌ “कः என்று பாபம்‌ சொல்லப்படுகிறது. ] என்று வ்யுத்பத்தி,

“யத தே,நுஸஹஸ்ரேஷு வத்ஸோ விந்த,தி மாதரம்‌ | தத பூர்வக்ருதம்‌ கர்ம கர்த்தாரமதி,க,ச்ச,தி ॥” [ ஆயிரக்கணக்கான பசுக்களில்‌ எப்படிக்‌ கன்றுக்குட்டி தாயை அடைகிறதோ, அப்படியே முன்‌ செய்யப்பட்ட கர்மமும்‌ செய்தவனை அடைறெது

“ய ஏஷோ அந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருங்யதே…. தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்ட கமேவமக்ஷிணீ”’ [ ஆதித்யமண்டலத்தின்‌ நடுவில்‌ யாவனொரு ஸுவர்ண மயனான புருஷன்‌ காணப்படுகிறொனோ, அவனுக்கு ஸூர்ய னல்‌ ८०००१८५ தாமரைபோன்ற இரு கண்கள்‌ உள.]

“ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந: | , நாக, பர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாக,தோ மது,ராம்‌ புரீம்‌ | [பாற்கடலில்‌ பையத்தயின்ற பரமனான இந்த ஸ்ரீமந்‌ நாராயணனேசேஷயயனத்தைவீட்டு மதராபுரிக்குக்‌கண்ணனாய்‌ வந்துள்ளான்‌.]

“தத்‌, விப்ராஸோ விபந்யவோ ஜாக்‌,ருவாம்ஸஸ்‌ ஸமிந்த,தே” [ஸர்வஜ்ஞர்களாய்‌, அதிப்பதையே தொழிலாகக்‌ கொண்ட வர்களாயுள்ள நித்யஸூரிகள்‌ அப்பரமபதத்தில்‌ (எப்போ அம்‌) வீழிப்புடன்‌ வீளங்குகறார்கள்‌.]

“தத்‌, யதள இவஷீகதூலமக்‌ரெள ப்ரோதம்‌ ப்ரதூ,யேத | ஏவம்‌ ஹாஸ்ய ஸர்வே பாப்மா௩: ப்ரதூ,யந்தே |”
[அக்னியில்‌ இட்ட டஞ்சு எப்படிக்‌ கொளுத்தப்படு கிறதோ அப்படியே இவனுடைய எல்லாப்‌ பாபங்களும்‌ தஹிக்கப்படுகின்‌ றன. ]
தத்‌, யதள புஷ்கரபலாரய ஆபோ ए ங்லிஷ்யந்தே | ஏவம்‌ ஏவம்விதி, பாபம்‌ கர்ம ® ங்லிஷ்யதே || `
[எப்படித்‌ தாமரை யிலையில்‌ தண்ணீர்‌ ஓட்டுவதில்லையோ: அப்படியே இம்மாதிரி ௮றிபவனீடத்தில்‌ பாபகர்மம்‌ ஓட்டாது..] என்று வேதங்களிலும்‌.
“ தத.தி,கம உத்தர பூர்வாக,யோரமங்லேஷவிகாமொள ”
[ப்ரஹ்ம வித்யையைத்‌ தொடங்கியவுடன்‌ உத்தராகங்கள்‌ ஓட்டமாட்டா; பூர்வாகங்‌ கள்‌ நசித்துவிடும்‌.] என்று பாதராயணராலும்‌.

நீலதோயத, மத்யஸ்தஎ வித்வுல்லேகேவ பளஸ்வரா ‘ ^” ப்ரஸந்நாதி,த்ய வர்ச்சஸம்‌” -சந்த்பூ,ாஸ்கர வர்ச்சஸம்‌” [குளிர்ச்சியிலே சந்திரன்‌ போன்‌ றதாய்‌, ஒளியிலே ஸூர்யன்‌. போன்றதான காந்தியை உடையவல்‌ ]

“க்ருஷ்ண க்ருஷ்ணேதி க்ருஷ்ணேதி யோ மாம்‌ ஸ்மரதி நித்யமா: | ஜலம்‌ பி,த்வா யதஏ பத்மம்‌ ஈரகாது,த்‌,தராம்யஹம்‌ |” [க்ருஷ்ணா! க்ருஷ்ணா! என்று எவனொருவன்‌ . என்னை எப்போதும்‌ நினைக்கறொனோ அவனை, ஜலத்தைப்‌ பிளந்து கொண்டு தாமரையை எடுப்பதுபேரல்‌ நான்‌ ` நரகத்தி லிருந்து தூக்கிவிழுகிறேன்‌.] என்று ஸ்ரீ விஷணுதர்மத்தி லும்‌ சொல்லப்படுகின்‌ றது.

“ தே,வதிர்யங்மநுஷ்யேஷு புந்நாமா ப,க,வாந்‌ ஹரி: | ஸ்த்ரீாம்நீ லக்ஷமீர்‌ மைத்ரேம ஈாநயோர்‌ வித்‌,யதே பரம்‌ ॥ ग [மைத்ரேயரே ! தேவர்‌, திர்யக்‌, மநுஷ்யர்‌ ஆகிய இவற்றில்‌, ஆணாயிருப்பது பகவான்‌ ஹரியாகவும்‌, டெண்ணாயிருப்ப.து லக்ஷ்மீ தவியாகவும்‌ உள்ளனர்‌. இவ்விருவர்க்கும்‌ மேலான தொன்றுமில்லை.]

நாயமாத்மா ப்ரவசநேந லப்‌,யோ ந மேதயா ௩ பூஹுநா ங்ருதேந | யமேவைஷ வ்ருணுதே தே௩ லப்‌,யஸ்‌ தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌ ||” [இப்பரமாத்மா (பக்தியற்ற) ங்ரவண (0/5 தியானங்களால்‌ அடையத்தக்கவனல்லன்‌ ; எவனை இப்பரமபுருஷன்‌ வரிக்‌ கிரறானோ அவனாலேயே அடையத்தக்கவன்‌; அவனுக்கு இப்பரமாத்மா தன்‌ திவ்யரூத்கை-(ஸ்வரூபத்தை )-காட்டு கிறான்‌.] என்று சுடர்மிகுசருதியில்‌ சொல்லப்பட்டது.

“ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸ௩்வ: | தா யதஸ்யாய௩ம்‌ பூர்வம்‌ தேக நாராயண: ஸ்ம்ருத: ॥ ‘ [ஜலம்‌ ஈரனாகிற பகவானால்‌ ஸ்ருஷ்டி. செய்யப்பட்ட தாகை. யால்‌ நாரமெனப்படுகிறது அது ப்ரளயகாலத்தில்‌: இவ னுக்கு இருப்பீடமாயிருக்கையால்‌ இவன்‌ நாராயணனெனப்‌ படுகிறான்‌ ] என்று மனுஸ்ம்ருதி

“ ப்ருஹத்த்வாத்‌; ப்‌ரும்ஹணத்வாச்ச தத்‌; ப்‌;ரஹ்மேத்யபி,தி,யதே [பெரியதாயிருக்கையாலும்‌, பிறரைப்‌ பெரியவர்களாகச்‌ செய்வதாலும்‌ ப்ரஹ்மமென்று அப்பரம்பொருள்‌ சொல்லப்‌ படுகிறது.] என்று ப்ரஹ்ம சப்தார்த்தம்‌ சாஸ்திரங்களில்‌ சொல்லப்பட்டது

தத்வம் ஹிதம் புருஷார்த்தம்—“நாராயண பரம் ப்ரஹ்ம தத்துவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண பர-4
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-5”

இவனே பரஞ்சோதி –பர தத்வம் -பரமாத்மா பர ப்ரஹ்மம் –
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்-பரேசம் பரமாத்மநாம் அநாதி நிதானம் பரம் –
த்வம் ஹி ப்ரஹ்ம பரம் ஜ்யோதி கூடம் ப்ரஹ்மணி வாங்மயே-

“க இதி ப்‌,ரஹ்மணோ நாம ஈமேரா5ஹம்‌ ஸர்வதே,ஹிநாம்‌ | . ஆவாம்‌ தவாங்கே, ஸம்பூ,தெள தஸ்மாத்‌ கேமுவநாமவார்‌ ||” [‘க:’ என்று ப்ரஹ்மாவுக்குப்பெயர்‌; தேஹத்தில்‌ அபிமான முள்ள எல்லாருக்கும்‌ நான்‌ ஈசன்‌; ப்ரஹ்மருக்ரர்களாகய நாங்கள்‌ இருவரும்‌ உன்னுடைய சரீரத்தனின்‌ றும்‌ பிறந்‌ தாம்‌; ஆகையால்‌ நீ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனாயிருக்கிறாய்‌. ] என்‌ று ஹரிவம்ச த்தில்‌ பேசநின்ற சிவனாலும்‌ பேசப்பட்டது.

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சன ஸ்தாபகரான -ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி அருளிய ஸந்த்யா வந்தன பாஷ்யம்‌–

February 26, 2023
அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்த்த,ாம்‌  வா| 
ய: ஸ்மரேத்‌ புண்டரீகாகஷம்‌ ஸ பூாஹ்யாப்‌,யந்தர: ராசி: ॥ 
[இதன்‌ ~ பொருள்‌: பரிசுத்தனாயில்லாவிடிலும்‌, இருந்தாலும்‌, 
எந் திலையிலீருந்தாலும்‌, செந்தாமரைக் கண்ணணை நினைப்பவன்‌ 
உள்ளும்‌ புறமும்‌ சுத்தனாகிறான்‌. |
ஓம்‌ பூ ஓம்‌ புவ: ஓம்‌ न, ஓம்‌ மஹ:. 
ஓம்‌ ह, ஓம்‌ தப;:. ஓம்‌ ஸத்யம்‌ | 
ஓம்‌ தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌ । ப;ர்க்கேோ தேவஸ்ய இமஹி। 
தி,யோ யோ एः ப்ரசோதஙஹாத்‌ || 
ஓம்‌ ஆப: ஜ்யோத ரஸ: அம்ருதம்‌ ப்‌,ரஹ்ம 
பூர்புவஸ்ஸுவரோம்‌ ॥ 


இது ப்ராணாயாமமந்திரம்‌. 'பூ4்‌ *புவ:"'.....'ஸத்யம்‌'என்பவை 

` ஏழு வ்யாஹ்ருதிகள்‌ எனப்படும்‌. ஓம்‌ பூ;:..ஓம்‌ ஸத்யம்‌” என்ற 
தால்‌, அந்த வ்யாஹருதிகளால்‌ சொல்லப்படுபவன்‌ ஒங்காரவாச்ய 
னான பகவானே என்று பொருளாகிறது. பூலோகம்‌ முதல்‌ ஸத்ய 
லோகம்வரை எல்லாம்‌ ஓங்கார வாச்யனான பகவானே; அதாவது, 


இவையனை த்துக்கும்‌ அவனே ஆத்மா என்று பொருள்‌, இனி. 
இதற்குமேல்‌ “தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌ பரர்க்கேோே தே,வஸ்ய 
தீமஹி இ,யோ யோ ந: ப்ரசோதயாத்‌ ”” என்னும்‌ மந்திரப்பகுதி 
காயத்ரீமந்திரம்‌ எனப்படும்‌. அதன்‌ பதவுரை வருமாறு. 

1. ஸவிது-உல்கங்களை ஸ்ருஷ்டி த்தவனாகிய, தே,வஸ்ய- 
ஈாராயணனுடையவையும்‌. வரேண்யம்‌-எல்லாரா லும்‌ வரிக்‌ 
கத்தகுந்தவையுமர்ன, தத்‌ பர்க்க;- அந்தக்‌ கல்யராணகுணங்‌ 
களின்‌ ஸமூஹத்தை, தீமஹி-—தியானம்‌ செய்வோம்‌; ய: 
எந்த தேவன்‌, ந:-நம்முடைய. திய:-புத்திகளை, ப்ரசோத, 
யாத்‌-( தன்‌ விஜயமான உடபாளன கைங்கர்யங்களில்‌ ) 
ॐ चण : 

எ. தேவஸ்ய-ப்ரகாசம்‌ முதலிய குணங்களையுடைய, 
ஸவிது:- ஸூர்யனுக்குள்ளே எழுந்தருளியிருப்பவனும்‌, 
வரேண்யம்‌-எல்லாரா லும்‌ வரிக்கப்படுபவனும்‌, பர்க்க,:-ஜளி 
மயமான தஇிவ்யமங்கள விக்ரஹவீசிஷ்டனுமான பகவானை, 
தீமஹி- தியானம்‌ செய்கிறோம்‌. (மற்றவை முன்போல்‌) 


இனி, ''ஜமாப:”' என்று தொடங்கியுள்ள ப்ராணாயாமமந்திரப்‌ 
பகுதி காயத்ரீசிரஸ்‌ எனப்படும்‌. “அப்பு, ஜ்யோதி, ரஸம்‌, அம்ருதம்‌, 
ப்ரஹ்ம, பூட்‌, புவ:, ஸுவ!” என்று சொல்லப்படுபவன்‌ ஓங்கார 
வாச்யனான பகவானே” என்று பொருள்‌. ஆக, இம்மூன்று பகுதியும்‌ 
சேர்ந்தது ப்ராணாயாம மந்திரமாகும்‌, இதை வலதுகைப்‌ பெருவிர 
லாலும்‌ மோதிரவிரலாலும்‌ மூக்கைப்பிடித்துக்கொண்டு (பூரக கும்‌ பக 
ரேசகங்களுடன்‌)உச்சரிப்பது ப்ராணாயாமமாகும்‌. ஸந்த்யாவந்தனத்‌ 
தின்‌ தொடக்கத்தில்‌ “அபவித்ர:' என்னும்‌ மந்திரத்தை அநுஸந்‌ 
திந்து, ஓருதடவை ஆசமநமும்‌, ஒருதடவை ப்ராணாயாமமும்‌ 
செய்துவிட்டு, பின்வருமாறு ஸங்கல்பிக்‌ கவேண்டும்ஈ:- 

* ஸந்த்யாவந்தனத்தின்‌ தொடக்கத்தில்‌ ஆசமனம்‌ ஆனபிறகு 
சிலரும்‌, ப்ராணாயாமத்‌தற்குப்பின்‌ ஸங்கல்பீத்தன்‌ தோடக்கத்தில்‌ 
சிலரும்‌ அனுஸந்திக்கும்‌ ச்லோகங்கள்‌; 

८०० क 10119765 ,7 0 விஷ்ணும்‌ மாமபிவர்ணம்‌ சதுர்பு,ஜம்‌ | 
ப்ரஸந்கவத,நம்‌ த்யாயேத்‌ ஸர்வவிக்‌,நோபமராந்தயே || 

யஸ்ய த்‌,விரத,வக்த்ராத்யா: பாரிஷத்‌,யா: பரங்மதம்‌ ॥ 
விக்‌,நம்‌ நிக்‌,நந்தி ஸததம்‌ விஷ்வக்ஸேகம்‌ தமாங்ரயே || 
ஓம்‌ ஸ்ரீஅச்யுதாய நம:, ஓம்‌ ஸ்ரீ அநந்தாய நம:, ஓம்‌ ஸ்ரீகேோவிந் 
தாய நம:, ஸ்ரீப,க,வத;ாஜ்ஞயா ப, கவத்கைங்கர்யம்‌ ப்ராத: ஸந்த்யா 
முபாஸிஷ்யே. ( அல்லது ப்ராத: ஸீந்த்யாவந்த;நம்‌ கரிஷ்யே ) 
என்று காலையிலும்‌, *“'ப்ராத: ஸந்த்யாமுபாஸிஷ்யே '' என்ற 
ஸ்தானத்தில்‌, ““ஸாயம்‌ ஸந்த்‌யாமுபாஸிஷ்யே'' (அல்லது “ஸாயம்‌ 
ஸந்த்‌யாவந்த;,நம்‌ கரிஸ்யே') என்று மாலையிலும்‌, १०८०0 54५07 580 
கம்‌ கரிஷ்யே” என்று மத்யாந்ஹத்திலும்‌ ஸங்கல்பிக்கவேண் டியது. 
*'பகவானுவடம ஆணையினால்‌, அவனுக்குக்‌ கைங்கரியமாயிருக்கும்‌ 
அந்தந்தக்‌ கர்மங்களைச்‌ செய்கிறேன்‌” என்று பொருள்‌. 


* எரா: ஜலாபிமந்த்ரண மந்த்ர: 
(முக்காலத்திலும்‌ அநுஸ ந்‌ திக்கவேண்டியது) . 
२. आपो वा इदं सवै । विश्वाभूतान्यापः। प्राणा वा आपः पशव 
आपः। ARTE: अन्नमापः। संराडापः। विराडापः। खराडापः। छन्दांस्यापः। 
ज्योतीष्यापः। सत्यमापः। स्वा देवता आपः। த்தா ओं॥ 


2. ஆபோ வா @550 ஸர்வம்‌। விங்வா பூ,தாந்யாப: 
ப்ராணா வா ஆப:। (५०० ஆப:। அம்ருதமாப: | அந்நமாப: 
ஸம்ராடளப: ! விராடப்‌: | ஸ்வராடளப:। சுந்தாம்ஸ்யாப: 
ஜ்யோதீம்ஷ்யாப:। ஸத்யமாப:। ஸர்வர தே,வாதர ஆப: 
பூர்பு,வஸ்ஸுவராப ஓம்‌ ॥ 


இம்மந்திரத்தால்‌ ஜலத்தை அபிமந்த்ரணம்‌ செய்து மூன்று 
காலங்களிலும்‌ ஏ श्रीकेरावाय ண: ஓம்‌ ஸ்ரீகேயவாய நம: என்று 
நெற்றியில்‌ அந்த ஜலத்தால்‌ ஊர்த்வபுண்ட்ரத்தை தரிப்பது. 


பதவுரை:-ஆபோ வா இத;ம்‌ ஸர்வம்‌-( உயிரற்ற) இவை 
எல்லாம்‌ அப்பு" [மீர்‌] எனப்படும்‌ பகவானே; விங்வா 


* இம்மந்திரம்‌ ஆபஸ்தம்பஸ 9த்ரஸ்தர்களுக்கு இல்லை, 


जा ஆப:-எல்லர உயிர்களும்‌ அவனே; ப்ராணா: வா ஆப:- 
முக்கிய ப்ராணனும்‌ அவனே; (10००1; ஆப:-ஸம்ஸாரி சேதா 
ரும்‌ அவனே: அம்ருதம்‌ ஆப: மோக்ஷஸாுகமும்‌ அவனே; 
அந்நம்‌ ஆப:- இவ்வுலக ஸுகமும்‌ அவனே; ஸம்ராட்‌ ஆப:- 
மிகவிளங்கும்‌ பரமபதமும்‌ அவனே; விராட்‌ ஆப:- இவ்வுலக 
மும்‌ அவனே; ஸ்வராட்‌ ஆப;-சுதந்திரனான முக்த புருஷனும்‌ 
அவனே; சூந்தளம்ஸி ஆப:-வேதங்களும்‌ அவனே; ஜ்யோ 
தீம்ஷி ஆப:-—எல்லாச்சோ திகளும்‌ அவனே; ஸத்யம்‌ ஆப 
உண்மையும்‌ அவனே; ஸர்வா: தேவதா: ஆப:-எல்லா 
தேவதைகளும்‌ அவனே; ஓம்‌ பூர்பு,வஸ்‌ ஸுவராப ஓம்‌ 
மூவுலகங்களும்‌ ஓங்காரப்பொருளான அவனே. 


कालतयेऽपि प्रथमतः पोक्चषणमन्त 
` முக்காலத்திலும்‌ முதலில்‌ ப்ரோக்ஷண மந்த்ரம்‌ 

[இதைச்சொல்லி நீரைத்‌ தலையில்‌ ப்ரோக்ஷித்துக்கொள்ள 

வேண்டியது. ] 

३, என்‌ றாகி ता न उ दधातन। महे 
रणाय चक्षसे। यो वः रिषतमो रसः। तस्य भाजयतेह नः। उद्ती- 
रिवि मातरः। तखा अरं गमाम वः। यस्य क्षेयाय जिन्वथ। आपो 
जनयथा चनः 


3. ஆபோ ஹி ஷ்டனள மயோபு,வ:| தா ௩ ஊர்ஜே ததா 
த௩ । மஹே ரணாய சகக்ஷ்ஸே। யோ வ: ஸிவதமோ ரஸ: ! தஸ்ய 
ப,ாஜபதேஹ ए. । உமுதீரிவ மாதர:। தஸ்மா அரங்கஹமாம வ:। 
யஸ்ய க்ஷயாய ஜிந்வத,। ஆபோ 2०५१8 ௪ ந: ॥ 


இம்மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு, ஜலத்தை சிரஸ்‌ முதலான 
விடங்களில்‌ புரோக்ஷித்துக்கொண்டபீன்‌ ஒம்பூர்பு,வஸ்ஸுஃவ: என்று 
ஜலத்தாலே ஆஃ்ம ப்ரதக்ஷிணம்‌ செய்துகொள்ள வேண்டியது. 


பதவுரை: ஆப:-ஜஐலங்களே. மயோபு,வ: ஹி ஸ்த,; 
(அனைவருக்கும்‌) ஸுகத்கை அளிப்பவையாயன்றோே இருக்‌ 


கறீர்கள்‌; தா:அ௮ப்படிப்பட்ட நீங்கள்‌. न्न 
ஊர்ஜே-உறுதியானவனும்‌, மர பெியல்னும்‌, नक 
அழகியவனும்‌. சக்ஷஸே-( அனைவர்க்கும்‌), கண்ணாயிருப்பவ 
னுமான பரமபுருஷனுக்கு. தஃளதர--மமர்ட்பியுங்கள்‌: 
(சரணமாகஅடைவியுங்கள்‌ ) ய: வ: ஸிவ தம: ரஸ:- மிகமங்கள 
மான உங்களுடைய ரஸம்‌ (பக்தி) யாதொன்று 1 
தஸ்ய அந்த அன்பில்‌ ஒரு சிறிதையாவ து. இஹ இவ்வுல 
திலேயே. ௩:-எங்களுக்கு. உம௰த்‌: மாதர: இவ அன்பு நிரம்‌ 
பிய தரய்மார்போல உள்ள நீங்கள்‌, பாஜ அவை வரியும்‌ 
கள்‌: யஸ்ய-எந்த பகவானுக்கு, அயரய- இருப்பிட 
யிருக்‌ துகொண்டு, ஜிந்வத-பிரீதியை न 
தஸ்மை-அந்‌தபகவானை அடையும்பொருட்டு, வ: உங்களை, 
அரம்‌ கஹாம-மிகவும்‌ தியானிக்கிறோம்‌; ஆப: ஜலங்களே! 
ந: எங்களை, ஜூயத-௨யீர்ப்பியுங்கள்‌. 


प्रातः तीर्थप्रारानमन्वः-१ லையில்‌ $ 55117 णण மந்த்ரம்‌ 
(ஜலத்தைக்‌ கையில்‌ எடுத்துக்கொண்டு இம்மந்திரத்தை உச்சரித்‌ 
துப்‌ பருகி வேண்டியது.) 

४, दथ मा मन्युश्च TI मन्युकतेभ्यः। पापेभ्यो 
रन्ता । शद्राज्या पापमकार्षम्‌ । मनसा वाचा हस्ताभ्यां | TRE 
 हिश्चा। ena af दुरितं मयि। इदमद माममृत- 
योनौ र्ये ज्योतिषि ஏ खाहा ॥ 


4, कणे ५७०७ மா 0004005 மந்யுபதயங்ச ம்ர்புகரு 
தேப்‌ய:। பாபேப்‌,யோ ரக்ஷந்தாம்‌ ! யதராத்ர்யா பாபமகார்ஷூம்‌ | 
மஸ லாசா ஹஸ்தாப்யாம்‌| 11904017 00556 जण्ण छण | 
ராத்ரிஸ்தத;வலும்பது। யத்கிஞ்ச துரிதம்‌ மயிஇதமஹம்‌ पी 
ருதயோநெள ஸூிர்யே ஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா ॥ 


பதஏுரை- ஸூர்ய: ௪-கூரியனும்‌, மர்யு: ச-இந்திரனும்‌, 


மந்யுபதம: ௪ இந்திரனைத்‌ தலைவனாகக்‌ கொண்ட மற்ற 
தேவர்களும்‌, மா- என்னை, மத்யுக்ருதேப்‌,ய:-கோபத்தினால்‌ 


செய்யப்பட்ட, பாபேப்‌,ய:-பாபங்களிலிருந்து, ரக்ஷந்தாம்‌- 
காப்பாற்றட்டும்‌; மநஸா-மனத்தினாலும்‌. வாசா வாக்கி 
லும்‌, ஹஸ்தார!.,யாம்‌-கைகளினாலும்‌, பத்‌,ப்‌,யாம்‌-கால்களி 
லும்‌, உதரேண்ஃ-வயிற்றினாலும்‌, ரிங்கா குறியீனாலும்‌. 
யத்‌ ராத்ர்யா பாபம்‌ அகரர்ஷம்‌- யாதொரு பாபத்தை ராத்ரி 
யில்‌ நான்‌ செய்தேனோ, யத்‌ ஞ்ச துளித்‌ மயி-(அத ற்கு 
முன்‌ ) என்னால்‌ செய்யப்பட்ட மற்றும்‌ யாவை லெ பாடங்க 
ளூண்டோ. தத்‌-அந்த எல்லாப்பாபத்தையும்‌, ராத்ரி: 
ராத்ரிக்கு நிர்வாஹகனான பகவான்‌ , அவலும்பது-போக்கடிக்‌ 
கட்டும்‌. இதம்‌ மாம்‌-— இந்த என்னை. அஹம்‌-நான்‌, அம்ருத 
யோரெள-மோக்ஷ்காரணமாய்‌. ஸூர்யேு-ஸர்வகாரணனாய்‌, 
ஜ்யோதிஷி சோ தியுருவான பகவானிடம்‌, ஜுஹோமி— 
ஹோமம்‌ செய்கிறேன்‌ (அத்ம ஸமர்ப்டணம்‌ செய்கிறேன்‌ ) 
ஸ்வாஹா-(அதற்காக) நன்கு அழைக்கிறேன்‌. 


EE तीर्थप्रारानमन्लः -1०5५17 ஹ்௩த்தில்‌ தீர்த்தப்ராமம௩ மந்த்ரம்‌ 


५. आपः पुनन्तु पृथिवीं । परथिवी पूता पुनातु मां । पुनन्तु 
ब्ह्मणस्पतिः। saga पुनातु मां। यदुच्छिष्टममोञ्य। यदा दुरित 
मम। सवै पुनन्तु मामापः। असतां च प्रतिग्रहं खाहा॥ 


5. ஆப: புநந்து ५0 89०0 | ப்ருதி,வீ பூதா புநாது மாம்‌ | 
புநந்து ப்‌,ஹ்மணஸ்பதி: | ப்‌ஏஹ்மபூதா புநாது மாம்‌।| யது,ச்‌ 
சி,ஷ்டமபேோஜ்யம்‌ | யத்‌,வா துண்சரிதம்‌ 000 | ஸர்வம்‌ புநந்து 
மாமாப:! அஸ்தாம்‌ ௪ ப்ரதிக்‌,ரஹம்‌ ஸ்வாஹா।॥ 


பதவுரை:-ஆப:- ஜலம்‌. ப்ருதி,வீம்‌-( பூ, கங்களாலான ) 
என்‌ தேஹத்தை, புநந்து-டரிசு ததப்படுத்தட்டும்‌; ப்ருதி,வீ- 
என்‌ தேஹம்‌, பூதர-பரிசுத்தமா, மாம்‌-என்னை, புகாது 
பரிசுத்தப்படுத்தட்டும்‌; (ஆப:)--ஜலம்‌. (மாம்‌)-என்னை. 
புகந்து-(நேரேயும்‌) பரிசுத்தப்படுத் ட்டும்‌. ப்ஏஹ்மணஸ்‌ 
பதி: வேதத்திற்கு (அல்லது ப்ரஹ்மாவிற்கு) ஸ்வாமியா 
யிருப்பவராய்‌. ப்ரஹ்ம பூதா-௮அவ்வேதத்தை (அல்லது 


ப்ரஹ்மாவை) பரீசுத்கப்படுத்துமவருமான பகவான்‌, மாம்‌ 


புகாது-என்னைப்‌ பரிசுக்தப்படுத்தட்டும்‌. அபோஜ்யம்‌ யத்‌' 


உச்சிஷ்டம்‌-புசிக்ககச்தகாத யாதொரு சேஷத்தை (மான்‌ 
புசித்தேனே). யத்‌ வா மம துண்சரிதம்‌- ५, கொரு கெட்ட 
காரியம்‌ என்னால்‌ செய்யப்பட்டதோ, அஸதாம்‌ ச ப்ரதிக்‌, 
ரஹம்‌-— ஜீயவர்களிடமிருந்து (அல்லது இயபொருள்களை ) 
நான்‌ வாங்கியது யாகொன்‌ றுண்டோ. ஸர்வம்‌-(முற்கூ றிய) 
அனைத்தினின்‌ றும்‌, மாம்‌ ஆப: புரந்து என்னை பகவான்‌ 
பரிசுத்தப்படுத்தட்டும்‌. 
 सायन्तन तीर्थप्राशानमन्वः-८णक्षणकीर தீர்த்தப்ராரரக மந்த்ரம்‌ 
६, अग्निश्च मा मन्यु मन्युपतयश्च WA पपिम्यो 
Teall यदहया पापमकार्षम्‌ | मनसा वाचां ERA | पद्धयायुदरेण 
शिश्चा। अहस्तदवटम्पतु यक्किश्च TRG मथि। इदमहं माममृतयोनौ 
सत्ये ज्योतिषि जुहोमि खादा। 


6. அக்‌நிங்ச மா 100५10०5 மந்யுபதயங்ச மர்யுக்ருதேப்‌,ய:। 
பாபேப்‌,யோ ரக்ஷந்தாம்‌ | யத;ந்ஹா பாபமகார்ஷம்‌ | மாஸா 
வாசா ஹஸ்தாப்‌,யாம்‌ | பத்‌,ப்‌,யாமுத,ரேண ஸிங்கா ! அஹஸ்‌ 
தத,வலும்பது। யத்‌ இஞ்ச துரிதம்‌ மயி இதமஹம்‌ மாம்‌ 
அம்ருதயோநெள ஸத்யே ஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா!।! 

பதவுரை-காலையில்‌ சொல்லும்‌ மந்திரத்தைப்போலவே; ए 
என்றால்‌ அக்‌ நிக்கு அந்தர்யாமியான பகவான்‌ என்றோ அக்‌,ரநயனம்‌ 
செய்பவன்‌ (நற்கதிக்கு அழைத்துச்செல்பவன்‌) ஆன பகவான்‌ 
என்றோ கொள்வது: அஹு-என்றது பகலுக்கு நிர்வாஹகனன 
பகவான்‌ என்றபடி. ` * ஸத்யே' என்றது உண்மைப்பொருளான 
பரமபுருஷனிடத்தில்‌ என்றபடி. மற்றவை முன்போல. 


पुनः पोक्षणमन्तलः-०.१५५.५] ப்ரோக்ஷண மந்த்ரம்‌ (முக்காலத்திலும்‌) 
७, दधिक्राग्ण्णो अकाषं இணி वाजिनः। सुरभि नो 
UTE | प्रण आथूषि तारिषत्‌ | आपो दि छा. ..आपो जनयथा च नः || 


7. த.திக்ராவ்ண்ணோ அகார்ஷம்‌ ஜிஜஷ்ணோரங்வஸ்ய 
வாஜிந:| ஸுரபி,நேோ முகளகரத்‌ ப்ரண ஆயூம்ஷி தாரிஷத்‌ | 
ஆபோ ஹிஷ்ட ஏ, ...... ஆபோ ®" ௪ ஈ:॥ 

८ 


பதவுரை: தத$ி,க்ராவ்ண்ண:— தயிருக்குத்‌ தன்னேக்‌ 
கொடுத்தவனாய்‌. வாஜிந:-மிகவும்‌ வேகமுடைய, அங்வஸ்ப- 
குதிரையுருக்கொண்ட கேசியை, ஜிஷ்னோ:-ஜயித்தவனான 
கண்ணனுக்கு, அகார்ஷம்‌-(ஆத்மஸமர்ப்பணம்‌) செய்தேன்‌; 
ந:-எங்களுடைய. முகம்‌ முகங்களை, ஸுஈரபி-ஈல்ல மண 
முள்ளதாக. கரத்‌-(அந்த பகவான்‌) செய்யட்டும்‌; 
௩:-எங்களுடைய. ஆயூம்ஷி-ஆயுஸ்ஸுக்களை. ப்ரதாரிஷத்‌- 
வளரச்செய்யட்டும்‌. இதற்குப்பின்‌ அதுஸந்திக்கும்‌ 
“ஆபோஹிஷ்ட;ா'' என்று தொடங்கும்‌ மந்திரத்தின்‌ 
பதவுரையை ப்ரதம்ப்ரோ கஷணமமர்திரத்தில்‌ காண்க. 


அர்க்யப்ரத,ா௩ம்‌ 

“ஓம்‌ தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌, பர்க்கேளே தே,வஸ்ய தீமஹி, 
தியோ யே ந: ப்ரசோதஃயாத்‌'' என்னும்‌ காயத்ரிமந்திரத்தைச்‌ 
சொல்லிக்கொண்டு சூரியனை நோக்கிக்கொண்டு காலையிலும்‌ 
மாலையிலும்‌ மூன்‌ று தடவையும்‌, மத்யா ந்ஹத்தில்‌ இரண்‌ டுதடவையும்‌ 
இரண்டு கையாலும்‌ நின்றுகொண்டு அர்க்யப்ரதா நம்‌ செய்யவேண்‌ 
டும்‌. காலம்‌ கடந்து இதைச்செய்தால்‌, ஒரு ப்ராணாயாமம்செய்து, 
“காலாதிதப்ராயங்சித்தரர்த்தழம்‌ ஏகார்க்ய ப்ரத;ாநம்‌ கரிஷ்யே'* 
என்றுஸங்கல்பித்துக்கொண்டு முன்‌ போலவே காயத்ரிமந்த்ரோச்சா 
ரணத்துடன்‌ ஒரு அர்க்யப்ரதா நம்‌ செய்யவேண்டும்‌. இதற்குப்பின்‌ 
தீர்த்தத்தைக்‌ கையில்‌ எடுத்துக்கொண்டு '* ஓம்‌ பூர்பு,வஸ்ஸுஃவ: °» 
என்னும்‌ மந்திரத்தாலே ஓருதடவை ஆத்மப்ர தக்ஷிண ம்செய்து 
கொண்டு ''அஸாவாதி;த்யோ ப்ரஹ்ம” என்று அஞ்ஜலி செய்ய 
வேண்டும்‌.[இந்த ஸ-9ர்யன்‌ பரப்‌ஹ்மமே என்று இதன்பொருள்‌. | 
அதற்குப்பின்‌ ஆசமநம்செய்து, பின்வரும்‌ மந்திரங்களாலே 
முக்காலத்திலும்‌ (21) ஜலதர்ப்பணங்கள்‌ செய்யவேண்டும்‌. 


பொருள்‌ 


आदित्यं तपयामि ஆதி,த்யம்‌ தர்ப்பயாமி குரியனை த்ரூட்தி 
செய்விக்கிறேன்‌. 


10 
अङ्गारकं Oo. அங்க,ாரஃம்‌ க செவ்வாயை ,, 
डक க பமுக்ரம்‌ வெள்ளியை ,, 
सोमं श ஸோமம்‌ ड ட்ந்திரனை ७9 
बुघ > புடம்‌ ந்த ` புதனை ६ 
बृहस्पतिं .. (190 97०0. /9/2 =, வீயாழனை „+ 
शानैश्चरं ,, "०5७०७ ८2 ध சனியை வ 
राहु க ராஹாும்‌ FO ராஹுவை ஃ 
केत ५ கேதும்‌ 7 கேதுவை ஷ்‌ 
कैशाव १ கேசவம்‌ கேசவனை i 
नारायण .., நாராயணம்‌ भ நாராயணனை ,, 
माच्व ५ மாதவம்‌ பழ மா தவனை க 
गोविन्द्‌ ., கோவிந்தம்‌ ध கோவிந்தனை . 
विष्णु த்‌ விஷ்ணும்‌ ல வீஷ்ணுவை , 
NYA ,' ८0.5०४ 59510 =. ८०.5/9-ॐ.5 ष्ठा दण ,* 
लिविक्रमे ,, கீரிவிக்ரமம்‌ ५३ 57०9 @/ (८ छठा , , 
वामन i வாமம்‌ ` स வாமனனை श 
श्रीधरं ' 25402 oe ஸ்ரீகரனை „^ 
हषीकेदा ,' ஹ்ருஷீகேமம்‌ १, ஹ்ரூஷீகேசனை ,* 
पद्मनाभ (5 80571 42 ह பத்மநாடனை = ,, 
दामोदरं .. ` 53०८7530 च தாமோதானை .. 
தர்ப்பணம்‌ செய்தபின்‌ ஆசமநம்‌ செய்து, ''க்ருஷ்ணார்ப்பண 
மஸ்து'' '“*வாஸாுதேவார்ப்பணமஸ்து”” என்று தீர்த்தத்தால்‌ 


பகவதர்ப்பணம்‌ செய்யவேண்டும்‌. இத்துடன்‌ ஸந்த்யாவந்தனத்‌ 
தில்‌ ஜலபாகம்‌ முடிந்தது. இனி ஜபபாகம்‌. 
முக்காலத்திலும்‌ ஜபத்தின்‌ பூர்வாங்கங்கள்‌ 

முதலில்‌ ஒருதடவை ப்ராணாயாமம்‌ செய்து, 'ஓம்‌ ஸ்ரீஅச்யுதாய 
தம: ஒம்‌ ஸ்ரீஅநந்தாய நம: ஓம்‌ ஸ்ரீகேரவிந்த;ய நம: என்று 
ம்ரோத்ராசமனம்‌ செய்து பின்வருமாறு ஸங்கல்பிக்கவேண்டியது. 

श्रीभगवदाक्ञया भगवत्कैङ्कय Maar Aram करिष्ये 

“ஸ்ரீப,க,வதராஜ்ஞயா ப,க;வத்‌ கைங்கர்யம்‌ ப்ராதஸ்‌ 

ஸந்த்‌,யா களயத்ரீ மந்த்ரஜபம்‌ கரிஷ்யே" ` 


11 


[மத்யாந்ஹத்தில்‌ “ மாத்யா ந்ஹிக களயத்ரீ மந்த்ரஜபம்‌ கரிஷ்யே 

என்றும்‌, மாலையில்‌ ''ஸாயம்‌ ஸந்த்யா களயத்ரீ மந்த்ரஜபம்‌ 
கரிஷ்யே'' என்றும்‌ மாற்றிக்கொள்ளவேண்டியது. ஸங்கல்பித்த 
பிறகு ப்ராணாயாம /உந்திராவயவமான ப்ரணவத்திற்கும்‌ “பூ4:' முதல்‌ 
ஸத்யம்‌” வரையிலுள்ள ஏழு வ்யாஹ்ருதிகளூக்கும்‌ காயத்ரிக்கும்‌, 
காயத்ரீ சிரஸ்ஸஃக்கும்‌ ரிஷிச்சந்தோதேவதைகளைப்‌ பின்வருமாறு 


அநுஸந்திக்கவேண்டியது. 


प्रणवस्य ब्रह्मा ऋषिः देवी TTA छन्दः परमात्मा देवता। भूरादि 
सक्तवयाहतीनां अचिश्रगुक्कत्सवसिष्ठगोतमकादयपाङ्गिरसषयः गायच्युष्णिक- 
अनुष्टपशृहतीपङक्तिविष्टपजगत्यः छन्दांसि अग्निवाय्व Fanfare af 
देवा देवताः गायव्याः இனிச்‌: देवी गायत्री छन्दः सविता देवता । 
made: ब्रह्मा षिः GET छन्दः परमातमा देवता॥ सर्वेषां 
प्राणायामे विनियोगः 


ப்ரணவஸ்ய (आका ரிஷிர்‌. தேவீ களயத்ரீ சந்த; 
பரமாத்மா தேவதா! பூஏாதி, ஸப்த வ்யாஹ்ருதீநாம்‌ அத்ரி 
ப்‌, ரகு, குத்ஸ வஸிஷ்ட, கெளதம காங்யபாங்கிறஸ ரிஷய: 
காயத்ரீ உஷ்ணிக்‌ அநுஷ்டுப்‌ ப்‌,ருஹதீ பங்க்தி த்ரிஷ்டுப்‌ 
5०501; சர்தாம்ஸி அக்நி வாய்வர்க்க வா வரு 
ணேந்த்‌,ர விங்வேதே,வா தேவதா:। களயத்ர்யா: விஸ்வாமித்ர 
ரிஷி: தேவீ களயத்ரீ சந்த, ஸவிதா தே,வதா। கரயத்ரீமமிரஸ: 
ப்‌,ரஹ்மா ரிஷி: அநுஷ்டுப்‌ கூந்த; பரமாத்மா தேவதா | 
ஸர்வேஷாம்‌ ப்ராணாயாமே விநியோக; ॥ . 
[ப்ரணவத்திற்கு ரிஷி ப்ரஹ்மா: காயத்ரி சந்தஸ்‌; ` பரமாத்மா 
தேவதை; பூ: புவ: முதலிய ஏழு வியாஹ்ருதிகளுக்கும்‌ முறையே 
அத்ரி, ப்ருகு, குத்ஸர்‌, வஸிஷ்டர்‌, கெளதமர்‌, காய்யபர்‌, ஆங்கிரஸ்‌, 
ஆகிய இவர்கள்‌ ரிஷிகள்‌; காயத்ரி உலஷ்ணிக்‌. அ_நுஷ்டுப்‌, 
ப்ருஹதீ, பங்க்தி, த்ரிஷ்டுப்‌, ஜகதீ ஆகிய இவைகள்‌ சந்தஸ்‌ 
ஸுக்கள்‌; அக்நி, வாயு, ஸூர்யன்‌, ப்ருஹஸ்பதி, வருணன்‌, 
இந்திரன்‌, விச்வேதேவர்கள்‌ தேவதைகள்‌, காயத்ரிக்கு விங்வா 
மித்ரர்‌ ரிஷி; காயத்ரீ சந்தஸ்ஸு; ஸவிதா தேவதை; காயத்ரீ கிரஸ்‌ 
ஸுஃக்கு ப்ரஹ்மா ரிஷி; .அநுஷ்டுப்‌ சந்தஸ்‌; பரமாத்மா தேவதை 
அனைத்துக்கும்‌ ப்ராணாயாமத்தில்‌ விநியோகம்‌ (உபயோகம்‌).] 


12 


முற்கூறியவாறு ப்ராணாயாமமந்திரத்தின்‌ அவயவங்களின்‌ 
ரிஷி, ச௪ந்தஸ்ஸு தேவதைகளை அநுஸந்தித்தபின 10 தடவை 
ப்ராணாயாமம்‌ செய்யவேண்டும்‌. பிறகு “ஓம்‌ ஸ்ரீஅச்யுதாய 
நம; ஓம்‌ ஸ்ரீ அநந்தாய நம: ஓம்‌ ஸ்ரீ ப ரோவித்த,ாய நம: 
1.14 53921537 © @ए ५17 பூ,கவத்‌ கைங்கர்யம்‌ க;ாயத்ரீ மஹாமந்த்ரஜபம்‌ 
கரிஷ்யே” என்று அநுஸந்தித்து காயத்ரீ = 89 ०75 (காயத்ரியை 
அமைக்கும்‌) மந்திரமான ''ஆயாது'' என்னும்‌ அனுவாகத்தின்‌ 
ரிஷிச்சந்தோ தேவதைகளையும்‌, அவ்வ நுவாகத்தையும்‌ பின்வருமாறு 
அநுஸந்திக்கவேண்டும்‌. 

भआयास्विव्यद्वाकस्य ஏன்‌: अचुष्टप्‌ छन्दः गायत्री देवता ॥ 

ஆயாத்வித்யநுவாகஸ்ய 647 0653697 90; 

அநுஷ்டுப்‌ சந்த; க;ாயத்ரீ தே,வதா ॥ 

गायन्यावादनमन्वः- 57५७१००५) அழைக்கும்‌ மந்திரம்‌ 


८. आयातु वरदा சோர்‌ ब्रहमसंमितम्‌। गायतं छन्दसां 
मातेदं ब्रह्म जुषस्व नः॥ ओजोऽसि सहोऽसि aoa भ्राजोऽसि 
देवानां धाम नामासि । विश्वमसि विश्वायुः स्मसि सर्वायुः अभिभूरोम्‌ 
गायल्लीमावाहयामि ॥ सावित्रीमावाहयामि सरस्वतीमावाहयामि | 


8. ஆயாது வரத; தேவீ அக்ஷரம்‌ ப்‌,ரஹ்மஸம்மிதம்‌ | 
கரயத்ரீம்‌ ச,ந்த,ஸாம்‌ (07165550 ப்ரஹ்ம ஜுஷஸ்வ ௩: ॥ 
ஓஜோஸி ஸஹோஸி பலமஸி ப்‌,ராஜோஸி தே,வாநமம்‌ தாம 
நரமாஸி। விங்வமஸி விங்வாயு: ஸர்வமஸி ஸர்வாயுரபி,பூ,ரோம்‌ 
க,யத்ரீமாவாஹயாமி || = ஸாவித்ரீமாவாஹயாமி ஸரஸ்வத- 
மாவாஹயாமி || 


பதவுரை: வரத;ா-வரங்களையளிக்கும்‌. தே,வீ- ஸ்ரீதேவி 
யானவள்‌. ஆயாது-(இங்கு) எழுந்தருளட்டும்‌; அக்ஷரம்‌ 
அழியா ததும்‌, ஸம்மிதம்‌-—௩ஈ௩ன்கு அறியப்பட்ட துமான, 
ப்‌ரஹ்ம-ப்ரஹ்மமும்‌ (எழுந்தருளட்டும்‌.) ச௪ந்தஹஸாம்‌- 
வேதங்களுக்கு. மாத:-தாயாயிருக்கும்‌. களயத்ரி-காயத்ரியே. 
ஈம்‌ ஸ்ரீ தேவியையும்‌, இதம்‌ ப்ளஹ்ம-பரப்ரஹ்மமான 
இரந்த ஈநாராயணனையும்‌, ௩:-எங்களுக்கரக, ஜுஷஸ்வ-அடை 


13 


விப்பாயாக; (ஸ்ரீமந்‌ நாராயணனே!) ஓஜ: அஸி காரண 
சக்தியை உடையவனாகிறாய்‌; ஸஹ: அஸி-ரியமனசக்‌ தியை 
உடையவனாகதிறாம்‌ , பலம்‌ அஸி- பலத்தை உடையவனாகிறாய்‌; 
ப்‌,ராஜ: அஸி-ஓளியை உடையவனாகிறாய்‌; தே,வாநாம்‌-தேவர்‌ 
களுக்கு. தாம-இருப்பிடமாகவும்‌, நாம-பெயராகவும்‌. அஸி- 
ஆகிறாய்‌. விங்வம்‌ அஸி-“விங்வம்‌'என்னும்‌ பெயரை உடைய 
வலைறாய்‌. விஸ்வாயு: (அஸி)-—எல்லாவம்றுக்கும்‌ சேருமிட 
மாகிறாய்‌; ஸர்வமஸி- எல்லாம்‌ ஆகிறாய்‌; ஸர்வாயு: (அஸி) 
எல்லாவற்றுக்கும்‌ ஜீவனம்‌ ஆகிறாய்‌, 94/61, (அஸி) 
(०9500 திகளை)வெல்‌ லுமவனாகிறாய்‌.ஓம்‌-இப்படிப்பட்ட அகார 
வாச்யனுக்கே அடிமையான நான்‌. களயத்ரீம்‌—கரயத்ரியை. 
ஆவாஹயாமி அழைக்கிறேன்‌; ஸாவித்ரீம்‌- ஸாவித்ரியை 
( ஸவிதாவை தேவதையாக உடையவளை ) ஆவாஹ 
யாமி அழைக்கி றன்‌ , ஸரஸ்வதீம்‌ ஆவாஹயாமி-வாக்ரூப 
மாயிருக்கும்‌ காயத்ரியை அழைக்கிறேன்‌. | 


இதற்குப்பின்‌ முக்காலத்திலும்‌ '' களயத்ர்யா: வின்வாமித்ர 
ருஷி: தேவீ க;யத்ரீ சந்த: ஸவிகா தே,வதா ण என்று ருஷிச்‌ 
சந்தோதேவதைகளை அநுஸந்தித்து 108, 32, 28 என்னும்‌ 
கணக்கில்‌ இயன்‌ றவரையில்‌ ப்ரணவத்தோடும்‌ மூன்று வ்யாஹ்‌ 
ருதிகளோடும்‌. ( அதாவது ஓம்‌ பூட்‌ புவ: ஸுவ: என்றதோடு ) 
கூடிய காயத்ரீமந்திரத்தை ஜபிக்கவேண்டியது. 

உபஸ்ததார ஸங்கல்பம்‌ 

காயத்ரி ஜபம்‌ முடிந்தவுடன்‌ ஒரு ப்ராணாயாமம்‌ செய்து, “ஓம்‌ 
ஸ்ீஅச்யுதாய நம, ஓம்‌ ப்ரீ அதந்தாயமும: ஓம்‌ ்ரீகேோவி ந்தராய நம!" 
எனறு ம்ரோத்ராசமநம்‌ செய்து, "ஸ்ரீப,க,வத,ாஜ்ளயா பகவத்‌ 
கைங்கர்யம்‌ ப்ராதஸ்ஸந்த்யா கராயத்ர்யுபஸ்த;ாநம்‌ கரிஷ்யே ”' 
என று காலையிலும்‌, ''மாத்யா ந்ஹிககராயத்ர்யுபஸ்த,ாநம்‌ கரிஷ்யே" 
என்னும்‌ மாறுதலுடன்‌ = மத்யாந்ஹத்திலும்‌, *' ஸாயம்‌ ஸந்த்யா 
கராயத்ர்யுபஸ்த,ாநம்‌ கரிஷ்யே '' எண்னும்‌ மாறுதலுடன்‌ மாலை 
யிலும்‌ ஸங்கல்பித்து எழுந்திருக்‌*வேண்டியது. பிறகு கைகூப்பிக்‌ 


கொண்டு பின்வரும்‌ காயத்ரீ உத்‌,வாஸநமந்திரத்தை முக்‌ 


காலத்திலும்‌ உச்சரிக்கவேண்டியது. 


14 


९, उत्तमे शिखरे देवि! भूम्यां पर्वतमूर्धनि । 
बाहणेभ्यो qT गच्छ देवि! यथासुखम्‌ ॥ 

9. உத்தமே ०59९ 08859 @ ५०५१५ (7 9.5 6 5598 | 

ப்‌,ராஹ்மணேப்‌,யோ ஹ்யநுஜ்ஞாநம்‌ 59559 தேவி == 

யதளஸுகழம்‌ |] 

பதவுரை: தே,வி-காயத்ரீதேவியே! ஸ்ரீ செவியே! 
ப்‌,ராஹ்மணேப்‌,ய: ஆநுஜ்ஞார௩ம்‌ ( த,த;ளாஸி ) ஹி-பட்ரஹ்ம 
ஜ்ஞானிகளுக்கு உன்‌ அனுக்ரஹத்தால்‌ வரும்‌ அறிவைத்‌ 
தருகிறாயன்றோ. தே,வி-ஸ்ரீதவியே! உத்தமே-மிஃவுயர்ந்க. 
பர்வதமூர்த்த,நி மரிக,ரே-( சித்ரகூடம்‌, வேங்கடாசலம்‌ முத 
லான)மலைகளின்‌ உச்சியிலள்ள சிகரங்களிலே, யத ஸுகஹ்‌- 
இஷ்டப்படி வீளையாடுவதற்காக, க,ச்ச-செல்வாயா க. 

இனி, சூரியனை நோக்கிக்‌ கைகூப்பி நின்றுகொண்டு, பரம 
புருஷனைக்‌ குறித்துச்சொல்லப்படும்‌ பின்வரும்‌ மூன்று உபஸ்தான 
மந்திரங்களை முறையே காலையிலும்‌. நடுப்பகலீலும்‌ மாலையிலும்‌ 
அநுஸந்திக்கவேண்டும்‌. 

प्रतख्पस्थानमन्वः-कण 2०66 உபஸ்த;ா மந்த்ரம்‌ 


१०. मिलस्य எரி: | श्रवो देवस्य सानसि । सत्यै चित- 
श्रवस्तमम्‌ ॥ मित्रो जनानू यातयति प्रजानन्‌ मित्रो दाधार पृथिवीमुत 
qa! मित्रः ष्टीरनिमिषाऽमिचष्टे सत्याय हव्य घृतवद्विधेम॥ प्र स॒ 
मित्र मतौ अस्तु प्रयस्वान्‌ यस्त आदित्य शिक्षति वतेन। न हन्यते न 
जीयते त्वोतो எபி अश्नोत्यन्तितो न | 

10. மித்ரஸ்ய சர்ஷணித்‌,ருத: | ங்ரவோ தே,வஸ்ய ஸாந 
ஸிம்‌। ஸத்யம்‌ சித்ரங்ரவஸ்தமம்‌ ॥ மித்ரோ ஜநாந்‌ யாதயதி 
ப்ரஜாநந்‌ மித்ரோ தளதனளர ப்ருதீவீமுத த்ணாம்‌ | மித்ர: க்ருஷ்‌ 
டீரநிமிஷா $பி,சஷ்டே ஸத்யாய ஹவ்யம்‌ க்‌,ருதவத்‌, விதேம ॥ 
ப்ர ஸ மித்ர மர்த்தோ அஸ்து ப்ரயஸ்வாம்‌ யஸ்‌ த ஆதித்ய 
ஸ்ரிக்ஷதி வ்ரதேந | ௩ ஹந்யதே ௩ ஜீயதே த்வோதேர நைந 
மம்ஹோ அங்நோத்யந்திதோ ௩ தூஏாத்‌॥ 


15 


பதவுரை சர்ஷணித்‌,௬ுத:-(ஸஞ்சரிக்கும்‌) உலகங்களை 
தரித்து நிற்பவனாய்‌. மித்ரஸ்ய- அனைவரையும்‌ காப்பாற்று 
மவனான., தேவள்‌ ய_பகவானுடைய, ஸாநஸிம்‌— விரும்பத்‌ 
தீக்கதும்‌, ஸத்யம்‌- -நிலைநிற்பதும்‌. சித்ரங்ரவஸ்தமம்‌ - பிக 
வுயர்ந்த வீசித்திரரர்த்தியை உடையதுமான. ஸஹ்ரவ:௪ஸம்‌ 
ஸார ரக்ஷ்ணத்தை (விரும்புகிறேன்‌); ப்ரஜாரத்‌-எல்லா மறிக்க 
மித்ர:-பகவான்‌. ஜநாந்‌-ஜீவர்களை, யாதயதி-௩டத்திவைக்‌ 
கிறான்‌; மித்ர;-அளவ,ற்றவனான பகவான்‌, ப்ருதி,வீம்‌ உத 
த்‌யாம்‌-— பூமியையும்‌ சுவர்க்கத்சையும்‌. தனளதார- தரித்து 
நிற்கிறான்‌; மித்ர: மூவுலகையுமளந்த பகவான்‌. க்ருஷ்டீ: 
பயிர்களால்‌ ஜீவிக்கும்‌ உயிர்களை. அநிமிஷா-கண்கொட்டா 
மல்‌. அபிசஷ்டே-கண்டுகொண்டிருக்கிறான்‌; ஸத்யாய- 
உண்மைப்டெொருளான அவனுக்கு, க்‌,ருதவத்‌-(அன்பாகி ற) 
நெய்யுடன்கூடிய. ஹவ்யம்‌- (ஆத்மாவாகிற) ஹவிஸ்ஸை. 
விதே,ம-ஹோமம்‌ செய்யக்கடவோம்‌. மித்ர-ஸர்வரகஷ்கனே! 
ஆதி;த்ய-அதிதியின்‌ பிள்ளையரான வாமனனே! ய: மர்த்த:- 
எவனொரு மனிசன்‌, தே வ்ரதே௩ மரிக்ஷதி- உன்‌ பரணாக,க 
ரகஷண விரதத்தை நினைத்துத்‌ தன்னைத்‌ தேற்றிக்கொண்‌ 
டிருக்கறுானோ, ஸூ:-அவன்‌, ப்ரஅதிகமாக, ப்ரயஸ்வாந்‌ 
அஸ்து- (உன்‌ அதுபவமாகிற) அந்கத்கை உடையவனா 
கட்டும்‌; த்வோத:-உன்‌ இடைய பக்தன்‌, ந ஹர்யதே- 
எவராலும்‌ ஹிம்ஸிக்கப்படுவதில்ல; ௩ ஜீயதே—(எவரா 
இம்‌) ஜயிக்கப்படுவதுமில்லை; ஏ௩ம்‌- இவனை. அம்ஹ- 
பாபம்‌, அந்தித:- அருகிலும்‌, ௩ அங்நோதி அணுகாது. 
தூஏராத்‌-வெகுதாரத்திலும்‌, ௩ அங்கோதி- அணுகா து. 


எனகக னானரா-மாத்‌,யாந்ஹிகோபஸ்த, நமந்த்ரம்‌ 
११. आ सत्येन रजसा என்‌ निवेदायन्नमृते मत्थश्च। 
हिरण्ययेन सविता रथेनादेवो याति भुवना विपश्यन्‌ ॥। Sed तमसस्परि 
Gad उ्योतिरुत्तरम्‌। देवं देवता aime ज्योतिरुत्तमम्‌ TT 
जातवेदसं देवे वहन्ति केतवः। दशो विश्वाय wg चित्रं देवानाभरद- 


16 


गादनीक எதன்‌ वरुणस्याभेः। आप्रा चावाप्रथिवी अन्तरिक्ष छथ 
आत्मा जगतस्तस्थुषश्च Taf पुरस्ताच्छकरमुचरत्‌।॥ पश्येम शर- 
दधतम्‌ । जीवेम WCET | नन्दाम शरदश्छत५। मोदाम INERT: 
तस | भवाम ETAT | शृणवाम शरदस्यतम्‌। प्रत्रचाम शरदश्शतम्‌ | 
अ्गीताःस्याम MEAT | उ्योक्च दष इशे ॥ य उदगान्महतोऽ्णंवा- 
दविभ्ाजमान्सरिरस्य मध्यात्‌। स मा व्रषभो रोहिताक्षस्छयों विपशचिन्म- 
नसा पुनातु ॥ 


11. ஆஸத்யேர ரஜஸா வர்த்தமாநோ நிவேமரயர்‌ அம்‌ 
ருதம்‌ மர்த்யஞ்ச ஹிரண்யயேக ஸவிதா ரதோதேவோ யாதி 
புவநா விபங்யர்‌।| உத்‌,வயம்‌ தமஸஸ்பரி பங்யந்தோ ஜ்யோதி 
ருத்தரம்‌।| தேவம்‌ தே,வத்ரா ஸூர்யமக,ந்ம ஜ்யோதிருத்தமம்‌।! 
உது,த்யம்‌ ஜாதவேதஸம்‌ தே,வம்‌ வஹுந்தி கதவ । 50५०० 
விங்வாய ஸூர்யம்‌। சித்ரம்‌ தே,வா நாமுதகா @38ि 80 சக்ஷார்‌ 
மித்ரஸ்ய வருணஸ்யாக்‌, க: | ஆப்ரா த்யாவா ப்ருதி,வி அந்‌ 
தரிக்ஷம்‌ ஸூர்ய ஆத்மா ஐக,தஸ்‌ தஸ்துஷங்ச। தச்சக்ஷார்‌ 
தே,வஹிதம்‌ புரஸ்தாச்சு,க்ரமுச்சரத்‌ || (४०९६५१५ மர & 8८०००७0 
ஜீவேம மாரத;்மமதம்‌ ७0510 ०ण¶ @ ३०७०५०७८ மோதம்‌ ण्ण 
தஸ்முதம்‌. ப,வாம 0७०१ தப்பமதம்‌, மருணவாம ஸரதம்மதம்‌. 
ப்ரப்‌,ரவாம एण @ ३००००७1४, அஜீதாஸ்‌ ஸ்யாம ८०08 80०५०७५४. 
ஜ்யோக்‌ ச ஸூர்யம்‌ # ११७५ ய 9-ॐ59587 மஹதோர்ணவா த்‌ 
விப்‌,ராஜமாநஸ்‌ ஸரிரஸ்ய மத்வாத்‌ ஸமா வ்ருஷபே ரோஹி 
தாக்ஷ்ஸ்‌ ஸூர்யோ விபங்சிந்‌ மாஸா புநாது ॥ 


“பர்யேம'” என்பது முதல்‌, “ஸூர்யம்‌ த்ருஸே' வரையில்‌ 
வ்யோமமுத்ரையால்‌ .ஸஏர்யனைப்‌ பார்த்துக்கொண்டு உச்சரிப்பது. 


பதவுரை: ஸத்யேர ரஜஸா-அழிவற்றகான பரம்பதத்‌ 
தில்‌, மர்த்யம்‌ ௪-(மரணத்கை இயற்கையா கக்கொண்ட ) 
ஸம்ஸாரியையும்‌, அம்‌ ரதம்‌ ிவேமயங்‌-மோக்ஷத்தை அடை 
விக்க விரும்பியவனாய்‌. பவா விபங்யந்‌_ உலகங்களை நன்‌ 


17 


<^ பார்த்துக்கொண்டு, ஆ வர்த்தமா௩:—எதிர்‌ குழல்புக்க 
வனாய்‌. ஸவிதா தேவ:ஸர்வலோகங்களையும்‌ ஸ்ருஷ்டித்த 
பகவான்‌,  ஹிரண்யயேர ரதேர_பொன்மயமான தரு 
மேனியோடு (கல்லது கருடனாறெ ரதத்தில்‌) ஆ யாதி 
எழுந்தருளுகறோன்‌. உத்‌ -- ெந்ததாய்‌. தமஸ: - மூல 
ப்ரக்ருதிக்கு. உத்தரம்‌-—மேலான பரமபதத்தில்‌ விளங்கும்‌. 
ஜ்யோதி:-சோ தயுருவனான. தே,வம்‌-தேவனாய்‌, தேவத்ரா- 
மற்ற தேவர்களனைவரையும்‌ காப்பா ற்றுமவனாய்‌. ஸ்‌ 9ர்யம்‌— 
(எங்களை ) ஈன்கு நியமிப்பவனாய்‌, உத்தமம்‌ ஜ்யோதி: பரஞ்‌ 
சோ தியான நாராயணனை... பரி பம்யந்தநேரேகாணும்‌ 
ஈாம்‌,அகரும-பரணமடைகந்தோம்‌; ஸூிர்யம்‌-ஸூர்யனெனப்‌ 
படுபவனாய்‌, ஜாதவேத,ஸம்‌—வேதங்களைப்பி றப்பித்தவனான 
த்யம்‌ உ-அந்தகேவனையே, கேதவ:-மஹான்கள்‌, உத்‌,வஹந்தி- 
தங்கள்‌ நெஞ்சிலே தரித்து நிற்கிறார்கள்‌. (எத ற்காகவெனில்‌:) 
விங்வாய த்ருமே-— உலகமெல்லாம்‌ காண்பதற்காக. (யஸ்‌ 
மாத்‌-எந்த பகவானிடமீருரந்து) சித்ரம்‌-வீசத்ரமான, அநீகம்‌- 
னேனை, தே,வாநாம்‌-தேவர்களை ரக்ஷிப்பத ற்காக, २.७5 57 5 - 
உண்டாயிற்றோ. ஸு: ஸூர்ய:—அந்தப்‌ பரமாத்மா, ஐக,த: 
தஸ்து,ஷ: சஸ்காவர ஜங்கமங்களுக்கு (அசைவனவும்‌, 
அசையா தனவுமான பொருள்களுக்கு) ஆத்மா அர்தர்யாமி 
யாவான்‌; த்‌ வாவா ப்ருதி,வீ அந்தரிக்ஷம்‌ஆப்ரா:-தேவலோகம்‌, 
பூமி,(இவற்றினிடையிஓள்ள ) அந்தரிக்ஷம்‌ ஆகிய அனைச்கை 
யும்‌, சுற்றிலும்‌ வியாபித்திருப்பவன்‌; தத்‌ சக்ஷா: 
(அனைவர்க்கும்‌) கண்ணாயிருக்குமவனாய்‌, தே,வஹிதம்‌— 
தேவர்களுக்கு ஈன்மையளிப்பவனாய்‌, மமாக்ரம்‌- அமுக்க ற்ற 
வனான பகவான்‌, புரஸ்தாத்‌- முன்னதாகவே, உச்சரத்‌- 
(அவதரித்துத்‌] இரிகிறான்‌. மாதம்‌ மாரத;; பங்யேம- 
(உன்னை) நூறு ஆண்டுகள்‌ காணக்கடவோம்‌. முதம்‌ 
பாரத: ஜீவேம- நூறு ஆண்டுகள்‌ வாழக்கடவோம்‌; மாதம்‌ 
0०758: ஈந்தனம- நூறு ஆண்டுகள்‌ இன்புறுவோமாக; 
४०७४ एण ऽः மோதளம- நூறு வருஷங்கள்‌ ஆநந்திப்போமாக; 
மதம்‌ மரத;: பவாம- தூறு வருடங்கள்‌ உய்வு பெறக்‌ 


18 


கடவோம்‌; முதம்‌ जणा छः ங்ருணவாம_ நூறு அண்டுகள்‌ 
கேட்போமாக; முதம்‌ மரரத,: ப்ரப்‌,த வாம நூறு வருஷங்கள்‌ 
பேசக்கடவோம்‌; முதம்‌ णा ॐ: அஜீதா: ஸ்ய, ம- நூ று வருங்‌ 
கள்‌ வெல்லப்படா தவர்களாயிருப்போம்‌: ஜ்யோக்‌ ௪ வெகு 
நீண்ட காலம்‌, ஸ9ர்யம்‌-பரமாத்மாவை, த்‌; ருமோ-அ௮ றியக்கட 
வோம்‌; ய:-எட்சப்‌ பரமபுருஷஜன்‌ , மஹத: அர்ணவாத்‌-பெரி 
தான பாற்கடலினின்றும்‌, உத,களத்‌-அவதரித்தருளினானோ, 
ஸரிரஸ்ய மத்‌,யாத்‌ விப்‌,ராஜமாந:- ( அவதரித்தபின்பும்‌ ) 
பா நற்கடலின்‌ ஈடுவிலும்‌ எவன்‌ விளங்குகறானோ, வ்ருஷப,:- 
மிகச்‌சிறந்தவனாய்‌, ரோஹிதா க்ஷ:-செர்தா மரைக்கண்ணனாய்‌, 
ஸ9ர்ய;-ஜகத்காரணனாய்‌, விபங்சித்‌-எல்லாமறிந்தவனான, 
ஸ:-அப்பரமன்‌. மநஸா-தன்‌ திருவுள்ளத்தாலே, மா 
என்னை, புநாது-—டரீசுத்தப்படுத்தட்டும்‌. 


सायमुपस्थानमन्लः-0017 2००५१०० உபஸ்த;,ா நமந்த்ரம்‌ 


१२. इम मे वरुण शरी हवमद्या च TET । त्वामवस्युराचके | 
त्वा यामि ब्रह्मणा बन्दमानस्तद्‌ाशास्ते यजमानो ERR! अहेडमानो 
वरुणेह MEA मा न आयुः प्रमोषीः ॥ यच्चिद्धि ते विशो यथा प्रदेव 
ஏன चतम्‌ । मिनीमसि चयविद्यवि ॥ यक्किञ्चेद वरूण दैव्ये என்‌: 
द्रोह मनुष्याधरामसि। अचित्ती यत्तव धर्मां युयोपिम मानस्तसादेनसो 
देव रीरिषः॥ कितवासो यद्िरिपुनं दीवियद्वाधा Teg यन्न विद । 
सवां ता विष्य िथिरेव देवाथाते स्याम वरुण प्रियासः।। 


12. இமம்‌ மே வருண ங்ருதீ, ஹவமத்யாச ம்ருடய! த்வா 
மவஸ்யுராசகே | தத்‌ த்வா யாமி ப்‌,ரஹ்மணா வந்த,மாஈஸ்‌ 
ததளமாஸ்தே யஜமா ௩ோ ஹவிர்ப்பி:। அஹேடஹாரோ 
வருணேஹபேதி, உருமம்ஸ மா ௩ ஆயு: ப்ரமோவீ:॥ யச்‌ 
8538, தே விமேோோ யத, ப்ரதே,வ வருண வ்ரதம்‌ | மிநீமஸி 
த்வவித்யவவி।॥। யத்‌ கிஞ்சேத;ம்‌ வருண தை,வ்யே ஐநே$பி, 
த்‌,ரோஹும்‌ மநுஷ்யாங்‌ சராமஸி। அசித்தீ யத்‌ தவ தர்மா 


19 


யுயோபிம மாஈஸ்‌ தஸ்மாதே,நஸோ தேவ ரீரிஷ:।॥ கிதவாஸோ 
யத்‌, ரிரிபுர்‌ நதீ,வி யத்‌, வாக, ஸத்யமுத யங்க வித்ம | ஸர்வா 
தா விஷ்ய மிதி,ரேவ தே,வாத,ாதே ஸ்யாம வருண ப்ரியாஸ:।| 


பதவுரை: வருண-வரிக்கத்தக்க பரமபுருஜஷனே! மே- 
என்னுடைய. இமம்‌ ஹவம்‌- இந்தத்‌ துதியை. ங்ருதி,-கேட்பா 
யாக; அத்ய, ச௪-இப்போதும்‌, மாம்‌-என்னை, ம்ருட,ய- 
இன்புறச்செய்‌; த்வாம்‌-உன்னை, அவஸ்யு:-—( உன்‌ ) 
க்ஷண த்தை விரும்பியவனாய்‌, ஆசகே-யாசிக்கிறேன்‌; தத்‌ 
நீண்ட ஆயுளுக்காக, த்வா-உன்னை, ப்‌,ரஹ்மணா வந்தமாந;- 
வேதத்தால்‌ வணங்கியவலாய்‌. யாமி-—மரணமடைகிழேன்‌; 
தத்‌-ஈான்‌ விரும்பும்‌ அவ்வாயுளையே. யஜமா௩:-யாகம்‌ செய்யும்‌ 
யஜமானனும்‌ ஹவிர்ப்பி,:- ஹவீஸ்ஸுக்களாலே.ஆமாாஸ்தே- 
வீரும்புகிறான்‌; வருண வருணனே! அஷஹேடமாந:-கோடங்‌ 
கொள்ளாமல்‌. இஹு இவ்விஷயத்தில்‌, பேதி 
ஸங்கல்பீப்பாய்‌; உருமம்ஸமிகவும்‌ புகழப்படுபவனே! षः 
ஆயு:- எங்களுடைய ஆயுளை, மா ப்ரமோஷீ:-அபஹரிக்காதே; 
ஹேதே,வ-தேவனே! வருண-வரிக்கத்தக்கவனே! சித்‌ ஹி- 
அறிவுடைய நாங்களும்‌. விம: யதள-ஜந்துக்கைப்போலே, - 
த்‌,யவித்‌,யவி-தினந்தோறும்‌. யத்‌ தே வ்ரதம்‌ ப்ரமிந்ம%ஸி- 
உன்னுடைய யாதொரு கைங்கர்யத்தை மிகவும்‌ அழித்‌ 
தோமோ. கிஞ்ச— மேலும்‌, தைவ்யே ஜறே-—தேவனாகிற 
உன்‌ அடியார்களிடம்‌. மநுஷ்யா:-— நீசமனிதராயிருக்கும்‌ ஈாங்‌ 
கள்‌. யத்‌ இதும்‌ அபி,த்‌,ரோஹம்‌ சராமஸி-யாதொரு பெரும்‌ 
தரோகத்தை இழைத்கோமே. அசித்தீ - அறியாமையால்‌, 
தவ தர்மா உன்‌ விஷயமான தர்மங்களை, யத்‌ யுயோபிம- 
அழியச்செய்தது யாதொன்று உண்டே. தஸ்மாத்‌ ஏகஸ:— 
அந்தக அந்கப்‌ பாபங்களினால்‌. மா ௩: ரீரிஷ:-எங்களை நீ ஹிம்‌ 
ஸிக்கவேண்டாம்‌; தீ,வி-(சொக்கட்டான்‌ முதலிய) சூது 
விளையாட்டுகளில்‌. கிதவாஸ: ௩-தஷ்டர்களைப்போல. யத்‌ 
அகரா ரிரிபு:_— யாதொரு பாபங்களை எங்களுக்கு ஒட்டவைத்‌ 
தார்களோ. யத்‌ வா ஸத்யம்‌-—எந்தப்பாபம்‌ அறிந்து செய்யப்‌ 


20 


பட்டதோ, உத யத்‌ ௩ வித்ம-—எதை நாங்கள்‌ அறியாமல்‌ 
செய்தோமோ. ஸபிதி,ரா இவ-ஏற்கனவே சிதைந்து இடக்கும்‌, 
ஸர்வா: தா:-அந்த எல்லாப்பாபங்களையும்‌. விஷ்ய-என்னை 
விட்டுப்பிரிர்து ஓடச்செய்வாய்‌; தே, வருண-வரிக்கத்‌ 
தக்க வாஸுதேவனே! அத அதற்குப்பின்‌, தே-உனக்கு, 
ப்ரியரஸ:-இனியவர்களாக. ஸ்யாம-கரங்கள்‌ ஆகக்கடவோம்‌. 


இப்படி காலையிலும்‌, நடுப்பகலிலும்‌, மாலையிலும்‌ அந்தந்த 
மந்திரங்களைச்‌ சொல்லி உபஸ்தாநம்‌ செய்தபிறகு, 


“सन्ध्यायै नमः। TASS नमः। sd नमः। aA 
नमः। सर्वाभ्यो देवताभ्यो नमः। कामोका्षीन्मन्युरकाषीन्नमो नमः। 
श्रीविष्णवे नमः। भूम्यै नमः। ब्रह्मणे नमः।" 


“ஸந்த்யாயை 19: | ஸாவித்ர்யை நம:। களயத்ர்யை 
நம:। ஸரஸ்வத்யை நம: ஸர்வாப்‌ யோ தே,வதாப்‌,யோ நம:| 
காமோகார்வீந்‌ மந்யுரகார்வீந்‌ ஈமோநம: । ஸ்ரீ விஷ்ணவே நம: | 
பூம்யை ஈம:| ப்ஏஹ்மணே நம: ॥ 


என்று கைகூப்பியவனாய்‌ நான்கு திக்குகளையும்‌ நோக்கி உச்சரித்துக்‌ 


கொண்டு, இரண்டுதடவை ஆத்மப்ரதக்ஷதிணம்‌ செய்துகொள்வது. 


இதற்குப்பின்‌ அபி, வாது மந்திரத்தைப்‌ பீன்வருமாறு 
“அபி, வாதயே 1..த்ர்யார்ஷேயப்ரவரார்வித 2१... 50; 
5, ७८97547 045 (அல்லது ஆபஸ்தம்ப) ஸூத்ர: 4, யஜு: 
ஸாகளத்யாயி' 5. ..அர்மாநாமாஹமஸ்மி பே: என்று 
தங்களுடைய [1.ப்ரவரம்‌ 2.கோத்ரம்‌. 8०००-४ क ८0. சகீ.பமாகை, 
9. ८ण ८0८ (பெயர்‌) ஆகியவற்றைச்‌ சொல்லி ஸாஷ்டாங்கமாக 
தண்டன்‌ ஸமர்ப்பிக்கவேண்டியது. அதற்குப்பின்‌ ஸ்ரீக்ருஷ்ண 
க்ருஷ்ணாய நம: என்று பத்துத்தடவை ஜபம்‌ செய்து. 


कायेन वाचा AAA बुद्ध्यात्मना वा प्रकृतैः खभावात्‌। 
करोमि यद्यत्सकलं परस्मै नारायणायेति समर्षयामि।॥ 


21 


காயே வாசர 1056 नण अ कक வா 
1558५017 @ षा வா ப்ரக்ருதேஸ்‌ ஸ்வபாவாத்‌ | 
கரோமி யத்‌; யத்‌ ஸகலம்‌ பரஸ்மை 
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி | 
[மநோவாக்காயங்களாலும்‌, புத்தியினாலும்‌, ப்ரக்ருதியின்‌ ஸ்வ 
பாவத்தினால்‌ எதை எதைச்‌ செய்கிறேனோ அவையெல்லாம்‌ பர 
ப்ரஹ்மமான ஸ்ரீமந்நாராயணனுக்கேயென்று ஸமர்ப்பிக்கிறேன்‌.] 
என்று அநுஸந்தித்து ஆசமநம்செய்து, "ஸ்ரீக்ருஷணார்ப்பண 
மஸ்து'” “ வாஸுதே,வார்ப்பணமஸ்து ' என்று இரண்டு 
அர்க்யப்ரதாம்‌ செய்து பின்வரும்‌ பகவத்ஸ்தோ த்ரங்களை 
அனுஸர்திப்பது:— 


ध्येयः सदा सवितरमण्डलमध्यवतीं नारायणस्सरसिजासनसनिविष्टः। 
केयुश्वान्मकरङण्डलवान्किरीरी हागी हिरण्मयवपुः YATE: Il 


த்‌ யேயஸ்‌ ஸதா ஸவித்ருமண்ட,ல மத்ய வர்த்தி 
` நாராயணஸ்‌ ஸரஸிஜாஸ௩ ஸந்நிவிஷ்ட: | 
கேயூரவாந்‌ மகரகுண்ட,லவாந்‌ இரீடீ 
ஹாரீ ஹிரண்மயவபுர்‌ த்‌,ருதமரங்க,சக்ர: || 
[தோள்வளைகள்‌,: மகரகுண்டலங்கள்‌, கிரீடம்‌, ஹாரம்‌ முதலிய 
ஆபரணங்களை அணிந்தவராய்‌, சங்கசக்ரங்களை தரித்தவராய்‌. 
பொன்போன்ற மேனியராய்‌, பழத்மாஸனத்தில்‌ எழுந்தருளியிருப்‌ 
பவராய்‌, ஸ9ர்யமண்டலத்தின்‌ நடுவில்‌ வீளங்கும்‌ நாராயணர்‌ 
எப்போதும்‌ தியானிக்கத்தக்கவர்‌. 


TETRA द्वारकानिरयाऽच्युत। 
गोविन्द पुण्डरिकाक्ष रश्च मां TAT II 
பரங்க,சக்ரக,தாபாணே த்‌,வாரகாநிலயாச்யுத | 
கோவிந்த, புண்டளீகாக்ஷ ரக்ஷ மாம்‌ மாரணாகதாம்‌॥ 
[சங்கசக்ரகதைகளைக்‌ கையிலுடையவனே! த்வாரகாவாஸியான 


அச்யுதனே! கோவிந்தனே! புண்டரிகாக்ஷனே! ரைணமடைந்த 
என்னை ரக்ஷிப்பாயாக.] 


22 


नमो ब्रह्मण्यदेवाय गोनराह्मणहिताय च| 
जगद्धिताय தண गोविन्दाय नमो नमः। 
நமோ ப்ஏஹ்மண்யதேவாய கேளப்‌ஏா ஹமணஹிதாய =| 
ஜக,த்‌,தி,தாய க்ருஷ்ணாய கேளவிந்த,ாய நமோ நம: || 
[அக்தணர்க்கு அருந்தெய்வமும்‌. பசுக்கட்கும்‌, அந்தணர்க்‌ 
கும்‌ ஈன்மையைச்‌ செய்பவனும்‌, உலகிற்கு ஈன்மையைச்‌ 
செய்பவனும்‌. பசுக்களைச்‌ சென்றடைந்தவனுமான க்ருஷ்ண 
னுக்கு ஈமஸ்காரம்‌. | 


श्रीरङ्गमङ्कलनिधि करणानिबास श्रीवेङ्कटाद्िशिखरार्यकारमेषम्‌। 
श्रीहस्तिशिरशिखरोञ्ञ्यर्पारिजातं श्रीश्च नमामि शिरसा यदुशेरुदीपम्‌ |) 


ஸ்ரீரங்கமங்க,ளரிதி,ம்‌ கருணாநிவரஸம்‌ 

ஸ்ரீவேங்கடாத்‌,ரி மிகளாலயகாளமேக,ம்‌ | 

ஸ்ரீஹஸ்திமையல ஸிக,ரோஜ்ஜ்வல பாரிஜாதம்‌ 

ஸ்ரீராம்‌ நமாமி ஸிரஸா யது,பைல 8ம்‌ ॥ 
[கருணைக்கோரிருப்பிடமான திருவரங்கத்தின்‌ மங்களச்செல்வத்தை 
யும்‌, திருவேங்கடமலையுச்சியில்‌ விளங்கும்‌ கார்மேகத்தையும்‌, 
அத்திகிரி (காஞ்சி) மேல்‌ விளங்கும்‌ பாரிஜாதத்தையும்‌, யதுகிரி 
(திருநாராயணபுரம்‌) மேல்‌ விளங்கும்‌ விளக்கையும்‌ தலையால்‌ 
வணங்குகிறேன்‌ .] 


ஸந்த்யாவமர்‌ தந ம்‌ முற்றிற்று. 


E3 


* 
NANA 





2 °08009660060600000S 
ई முனனுரை 2 


ॐ ७७ $ॐॐॐॐॐॐऊॐ 


யஜுர்வேத ஸர்த்யாவந்தாபாஷ்யமாகிற இந்நூல்‌, 
கீர்‌ த்திமூர்த்தியாம்‌, ஸ்ரீவைஷ்ணவ ஸாுதர்சனம்‌ என்னும்‌ 
மிகச்சிறந்த மர்தப்பத்திரிகையைச்‌ சென்ற ஸர்வஜித்‌ 
வருஷம்‌ மார்கழியில்‌ திருவோணத்தில்‌ தொடங்கியவராய்‌. 
ஐந்து வருடங்களுக்குமேல்‌ அதைத்‌ தாமே ஆசரியரா 
யிருந்து ஈடத்திவந்தவராய்‌, எந்கையாரான ஸ்ரீ உ.வே 
௧. ஸ்ரீநிவாஸய்யங்கார்‌ ஸ்வாமியால்‌ ஸுதர்சனத்தின்‌ 
கொடக்க வருடங்களில்‌ அதிலேயே சிறிது சிறிதாக வெளி 
யிடப்பட்டுவந்து, பிறகு தனிப்புத்தகமாகவும்‌ வெளியிடப்‌ 
யட்டதாகும்‌. இப்போது இந்நூல்‌ இரண்டா து பதிப்பைக்‌ 
காண்கிறது. 


“ஸந்த்‌,யாஹீநோ 500கஇர்‌ நித்யம்‌ அநர்ஹஸ்‌ ஸர்வகர்மஸு | 
யத,ந்யத்‌ குருதே கர்ம ௩ தஸ்ய பலபாக்‌ பவேத்‌ |" 
[ஸந்த்யாவந்தனம்‌ செய்யா தவன்‌ எப்போதும்‌ அடரிசத்த 
னைவன; எந்த வைதிககர்மத்தையும்‌ செய்யக்‌ தகுதியற்ற 
வன்‌. எக்கருமக்தைச்‌ செய்தாலும்‌ தன்‌ பலனை 
அடையமாட்டான்‌. ] என்கிறபடியே மற்ற கர்மங்களை 
அநுஷ்ட்டிப்பதற்குத்‌ தகுதியை வினைக்கும்‌ பெருமை 
பெற்றது காலத்ரய ஸந்த்யா வந்தனம்‌. இகை பக ०580 दण 
கைங்கர்யமாக ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அனைவரும்‌ அநுஷ்ட்டிக்க 
வேண்டும்‌ என்படத ஸகலபூர்வாசார்யர்களுடையவும்‌ 
ஸித்தாந்தமாகும்‌. இக்கருத்‌ தனலேயே ஆசார்யங்ரேஷ்ட்ட, 
ரான ०.१.९57 ८०४ .+4८- (7 எனனும்‌ ம்ருதப்ரகாிகாசார்யர்‌ 
ஸரந்த்ய! வந்தன த்திற்கு வடமொழியில்‌ மிகச்சிறந்ததொரு 
வியாக்கியானம்‌ அருளிச்செய்தள்ளார்‌. 


இவ்வரிய வியாக்கியான த்தையே முற்றிலும்‌ அழுவி, 
9.5 207 (9०४01 9.9 ஆஸ்தளனத்கை அலங்கரித்த ஜீயர்‌ 
ஸ்வாமிகளில்‌ ஒருவரான. ஸ்ரீமந்காராயண ஜீயர்ஸ்வாமி 
யின்‌ பாஷயக்தையும்‌ ஆங்காங்கு காட்டிச்செல்வது எந்தை 
யாரிய ற்றிய இந்க ஸந்த்யாவந்கநபாஷ்யம்‌. ஆழ்வார்களின்‌ 
அநளிச்செயல்களிலிருர்தும்‌ ஏராளமான மேற்கோள்களைக்‌ 


காட்டி உபயவேதரந்தங்கையும்‌ डक न्ला। - ५111 10.5.5 
யிருப்பது இந்த பாஷ்யத்தின்‌ சிறப்பாகும்‌. இக்காரணத்‌ 
தாலேயே இது யிகச்சிறந்ததொரு அதுபவக்ஸந்தமாகவும்‌ 
திகழ்கின்றது. 


ஸ்ரீ வைஷ்ணவாக்‌,ரஸரராய்‌. பூர்வாசார்யர்களோடு 
ஒத்த நிஷ்ட்பையை உடையவராய்‌, வைணவத்துக்குத்‌ 
தண்ணீர்ப்பந்தல்‌ வைத்ததுபோலே பெரியதொரு தர்ம 
நிதியைஏற்படுத்தி அதன்மூலம்‌ பூர்வாசார்ய க்ரந்தங்களும்‌. 
ஸ்ரீ வைஷ்ணவ ஸாதர்சன பத்திரிகையும்‌ ஸாங்வதமாக 
அச்‌சிட்டுவர ஏற்பாடு செய்திருப்பவராய்‌. பொருளல்லாத 
அடியேனை ஒரு பொருளாக்கு வியேஷேகடா க்ஷம்செய்து. 
தாம்‌ தொடங்கிய பணிகளைத்‌ தமக்குப்‌ பிறகும்‌ தொடர்ந்து 
நஈடைபெறும்படி செய்துவருபவரான. எந்தையார்‌ 
ஸ்ரீ வைஷ்ணவ ஸாுதர்சனத்தின்‌ மூலம்‌ தொடங்கிய நூல்கள்‌ 
பல. அவற்றுள்‌ அவலர நிறைவுபெறுத்தியவை இருப்‌ 
பல்லாண்டு வியாக்க்யானமும்‌. திருப்பாவை வியாக்‌ி 
யானமும்‌. இந்த ஸந்த்யாவந்‌ ககபாஷ்யமுமாகும்‌. அவற்றில்‌ 
திருப்பாவை வீயாக்கயானம்‌ முன்னமே வெளியிடப்‌ 
பட்டது. ஸந்த்யாவந்தநபாஷ்யம்‌ இப்போது வெளியிடப்‌ 
படுகிறது. திருப்பல்லாண்டு வியாக்கியானம்‌ விரைவில்‌ 
ஸாுதர்சனத்திலேயே வெளியிடப்பெறும்‌. அவரால்‌ தொடங்‌ 
கப்பெற்று. அடியேனால்‌ பூர்த்திசெய்யட்பெற்ற பெரியாழ்வார்‌ 
ப்ரபரவமும்‌ தொடர்ந்து எழுதட்பெற்றுவரும்‌ விஸ்ணுசித்த 
விஜயம்‌ முதலானவற்றின்‌ முதற்பகுதியும்‌ அடியேனிடமே 
இடைக்கும்‌. அன்பர்கள்‌ பெற்றுப்‌ பயனடையலாம்‌. 


ஸ்ரீவைஷ்ணவ தாஸன்‌, 


ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார்‌, 

 

ஸந்த்யாவந்த நபாஷயம்‌. 


[ ஸ்ரீ உ. வே. கி. ஸ்ரீரிவாஸய்யங்கார்‌ ஸ்வாமி 
ஸ்ரீவைஷ்ணவ 6४.०5 9 0७०९ ஸ்தாபகர்‌ | 
-@- 
அவதரரிகை 

“நரராயணபரா வேதள தேவா நாராயணாங்கஜா: | 
நாராயணபரா லோகா காராயணபரா மகள: |!" 
[வேதங்கள்‌ நாராயணனைச்‌ சொல்லுபவை; தேவர்கள்‌ 
நாராயணனுடைய அங்கத்திலிருந்து உண்டானவர்கள்‌; 
உலகங்களும்‌ நாராயணனையே பற்றியிருப்பவை; யாகங்களும்‌ 
நாராயணனையே ஆராதீப்பவை.] என்னும்‌, 


நாபிர்‌ போக்‌ நிர்‌ முகமம்பு, ரேதோ 
த்‌,யெள: ஸீர்ஷமாமமா: ம்ருதிரங்க்‌,ரிருர்வீ | 
சந்த்‌,ரோ மகோ யஸ்ய த்ருகள்க்க ஆத்மா 
ஹ்யஹம்‌ ஸமுத்‌,ரோ ஜடம்‌ பு,ஜேந்த்பா: ॥ 
ரோமாணி யஸ்யெளவத,யோம்பு,வாஹா: 
கேமரா விரிஞ்சோ தி,ஷணா விஸர்க்க;: | 
ப்ரஜாபதிர்‌ ஹ்ருதயம்‌ யஸ்ய தர்ம: 
ஸ வை பவார்‌ புருஷோ லோககல்ப: || 
[ாபியே ஆகாசம்‌; அக்நி முகம்‌; ஜலம்‌ ரேதஸ்‌, ஸ்வர்க்கம்‌ 
தலை: திக்குகளே செவிகள்‌; தஇருவடிகள்‌ பூமி; சந்த்ரன்‌ 
மனஸ்‌. ஸூர்யன்‌ கண்‌; அஹங்காரம்‌ சிவனாகிய நானே; 
சமுத்திரம்‌ வயிறு; இந்திரன்‌ புஜங்கள்‌; ` ஓஷதிகள்‌ 
ரோமங்கள்‌; மேகங்கள்‌ தலைமயிர்‌; பிரமனே புத்தி; பிரஜா 
பதியே அண்குறி; தர்மமே ஹ்ருதயம்‌; (இப்படிப்பட்ட) 
நீரே உலகத்தை சரீரமாகக்கொண்ட வீராட்புருஷனாக நீர்‌. ] 
என்றும்‌ ஸ்ரீபாகவதத்தில்‌ சொல்லப்பட்டிருக்கிறது. 

“ஜ்யோதிம்ஷி விஷ்ணுர்‌ பு,வநாநி விஷ்ணு: 
678 விஷ்ணுர்‌ கிரயோ திலுமச | 
நத்‌,யஸ்‌ ஸமுத்‌,ராமச௪ச ஸ ஏவ ஸர்பம்‌ 
யத,ஸ்தி யந்நாஸ்தி ௪ விப்ரவர்ய |!” 
[விப்ரச்ரேஷ்டரே! சந்திரன முகலிய சோதிகளும்‌ 
விஷ்ணுவே; உலகங்களும்‌ விஷணுவே; வனங்களும்‌, மலை 
களும்‌. திசைகளும்‌ விஷ்ணுவே. நதிகளும்‌, சமுக்திரங்களும்‌. 
விகாரமடைபவையும்‌,  விகாரமடையாதவையும்‌ ஆகிய 
எல்லாம்‌ அ௮வனே.] என்றும்‌. 


“ஸர்வரத்கமயோ மேரு: ஸர்வாங்சர்யமயம்‌ நப: | 
ஸர்வதீர்த்தமமி க,ங்கள ஸர்வதே,வமயோ ஹரி: |." 
[மேருமலை ஸர்வரத்னங்களையும்‌ கொண்ட து; ஆகாசம்‌ எல்லா 
அச்சரியங்களையும்‌ உடையது; கங்கை ஸர்வதிர்த்தமய 
மானது; ஹரி எல்லா கேவதைகளையும்‌ சரிரமாகக்‌ 
கொண்டவர்‌. / என்றும்‌ பராசரசெள௩காதி ரிஷிகள்‌ 
சொல்லியிருக்கிறார்கள்‌. 


“ஸு ஆத்மா அங்களந்யந்யர தேவதா: `` [அந்தப்‌ பரம 
புருஷன்‌ ( எல்லாருக்கும்‌ ) ஆத்மாவாயிருக்கறொோன்‌; மற்ற 
தெய்வங்கள்‌ அங்கங்களாகின்‌ றனர்‌.] என்று வேதமும்‌ 
விளம்பிற்று. ஸ்ரீமக்காராயணனே பரமாத்மாவென்றும்‌, 
மற்றவர்களெல்லாராம்‌ அவனுக்கு சரீரபூதர்களான ஜீவர்‌ 
களே என்றும்‌ ஸகலஃஸ்த்ரங்களும்‌ கோஷிக்கின்‌ றன. 
இதையே பாரரரீரகமீமாம்ஸாமாஸ்த்ரமும்‌ உத்கோஷிக்கறது. 
தேவமநுஷ்யதிர்யக்ஸ்தாவரசரிரங்களிலிருக்கும்‌ ஆத்மாக்களை 
யெல்லாம்‌ தரிப்பவன்‌ தாமோதரனே; நியமிப்பவன்‌ 
ஈாரரயணனே; ஸ்வாமியாயிருப்பவன்‌ ஸ்ரீதரனே. இப்படி 
ஜீவபரர்கள்‌ ஒருவரையொருவர்‌ பிரித்துப்‌ பார்க்கமுடி 
யாதபம்‌ ஒன்று சேர்ந்திருப்பதினால்‌ ஜீவாதக்மாக்களைச்‌ 
சொல்லும்‌ பதங்களெல்லாம்‌ அபர்யவஸாறவ்ரு த்‌ இயினால்‌ 
அந்தர்யாமிபகவான்‌ வரையிலும்‌ குறிக்கும்‌. இவ்விஷயங்க ளை 

“ய ஆத்மநி திஷ்ட்டந்காத்மகோந்தரோ யமாத்மா ந வேத, 
யஸ்யமத்மா மாரீரம்‌ ய ஆத்மா௩மந்தரோ யமயதி ஸ த ஆத்மா 
அந்தர்யாம்யம்ருத்‌: |!" [எவன்‌ ஆத்மாவிலிருந்தகொண்டு 
ஆச்மாவினாள்ளும்‌ இருக்றொனோ, எவனை ஆத்மா அறிய 
வில்லையோ. எவனுக்கு ஆத்மா ८०0 8८60, எவன்‌ ஆத்மாவை 
உள்ளிருக்துகொண்டு நியமிக்கறொனோ. அழிவற்றவனான 
அவனே உனக்கும்‌ ஆத்மாவாகவும்‌. உள்ளிருந்து நியமிப்ப 
வனாகவுமிருக்கிறான்‌.] என்றும்‌. ஏஷ ஸர்வபூ,தாந்தராத்மா 
அபஹதபாப்மா தி,வ்யோ தேவ ஏகே நாராயண:'' [பரம 
பகத்திலிருக்கும்‌ இந்க நாராயணன்‌ ஒருவனே, தோஷ 
மற்றவனாகவும்‌ எல்லா ஜீவர! சிகளுக்கும்‌ அந்தராத்மாவாக 
வும்‌ விளங்குகிறான்‌. ] என்றும்‌. “யஸ்ய ப்ருதிீ மமரீரம்‌ ய: 
ப்ருதி,வீமந்தரே ஸஞ்சரர்‌ யம்‌ ப்ருதி,வீ ' வேத, [எவனுக்கு 
பூமி ५०१४ 8८67, எவன்‌ பூமியினுள்‌ ஸஞ்சரிறச்துக்கொண்டி 
ருக்கறானோ. . எவனை பூமியானது அ௮றியவில்லையோ........ J 
என்றும்‌. -அந்த: ப்ரவிஷ்ட: மராஸ்தா ஜநாநாம்‌ ஸர்வாத்மா'' 
[ஸர்வாந்தர்யாமியான நாராயணன்‌ ஜனங்களை உள்‌ 
நுழைந்து நியமிக்கறாோன்‌.] என்றும்‌, “ அந்தர்‌ ப,ஹிங்ச 
தத்‌ ஸர்வம்‌ வ்யாப்ய நாராயண: कण्ठीः" [ஈாராயணன்‌ 
அவையெல்லா வற்றையும்‌ உள்ளும்‌, புறமும்‌ வியாபித்து 
நிற்கறொோன்‌.] என்றும்‌. + कछ ப்ரஹ்மா ஸ ஸிவ: ஸேந்த்‌,ர: 
ஸோஃக்ஷர: பரம: ஸவராட்‌ "` / அவனே பிரமனுக்கும்‌. சிவ 
னுக்கும்‌, இந்திரனுக்கும்‌. அழிவற்றவனும்‌. கர்மவசப்படாத 
வனும்‌, மேலானவனுமான முக்கா த்ம/வுக்கும்‌ அந்தர்யாமி, | 
என்றும்‌. பல பல வாக்யங்களில்‌ வேதம்‌ விளக்கிற்று. 
எல்லாப்‌ பொருள்களுக்கும்‌  அந்தர்ய। மியாயிருப்பதால்‌ 
ஸ்ரீமந்காராயணன்‌ ஸர்வமப்தவாச்யலாயிருக்கறான்‌ என்று 
ஆசார்யர்களும்‌ நிர்வஹித்திருக்கிறார்கள்‌. 


இப்படிப்பட்ட ஸ்ரீமந்கநாராயணனை அடைவதற்கு பக்தி 
ரூபமான ஜ்ஞாநமே ஸாதநமென்பதை “'தமேவம்‌ வித்‌,வா 


ஈம்ருத இஹ ப,வதி'' [அவனை இம்மாதிரி அறிபவன்‌ இந்த 
ஜன்‌ மத்திலேயே மோக்ஷம்‌ அடைகறான்‌.] என்றும்‌. “யோ 
வேத, நிஹிதம்‌ கு,ஹாயாம்‌ பரமே வ்யேரமந்‌। ஸோூ$ங்நுதே 
ஸர்வாந்‌ காமாக்‌ ஸஹ ப்‌,ரஹ்மணா விபம்சிநேதி |” [ஹ்ருதய 
குலையிலிருக்கும்‌ பரமாத்மாவை எவன்‌ அறிறொனே, 
அவன்‌ பரமபதத்தில்‌ ஸர்வஜ்ஞனான பரமாத்மாவுடன்‌ அவ 
னுடைய கல்யாணகுணங்கள்‌ எல்லாவற்றையும்‌ அதநுபவிக்‌ 
கிறான்‌.] என்றும்‌ வேதீவாக்யங்கள்‌ விளக்குகின்‌ றன. 


ஸ்ம்ருதீதிஹாஸபுராணங்களிலும்‌. இந்த விஷயமே 


பிரஸித்தப்படுத்தப்பட்டிருக்கிறது. 

“த்‌ யாயந்‌ நாராயணம்‌ தே,வம்‌ ஸ்நாநாதிஷு ௪ = 10 6072 | 
ப்‌, ரஹ்மலோகமவாப்நோதி ௩ சேஹாஜாயதே புந: ||” 
[ஸ்நானம்‌ முதலிய எல்லாக்‌ கர்மங்களைச்‌ செய்யும்போதும்‌, 
தேவனாகிய நாராயணனை தியானிப்பவன்‌ ட்ரஹ்மத்தின்‌ 
உலகத்தை அடைகிழுன்‌ ; மறுபடியும்‌ இங்கு பிறப்பதில்லை. ] 
என்றும்‌. 


“அநந்யாம்‌ சிந்தயந்தோ மாம்‌ யே ஜரா: பர்யுபாஸதே | 
தேஷாம்‌ நித்யாபி,யுக்தாநாம்‌ யோக,க்ஷேம்‌ வஹாம்யஹம்‌।।”' 
[மற்ற எதையும்‌ நினையாதவர்களாய்‌. என்னையே எந்த 
ஜனங்கள்‌ உபாஸிக்கிறார்களேோ, எப்போதும்‌ என்னுடன்‌ 
சேர்ந்தருக்கையை வீரும்பும்‌ அவர்களுடைய யோக 
கேேமத்தை நான்‌ வஹிக்கறேன்‌.] என்றும்‌, 


“விசார்ய ச புராணார்த்த,ாம்‌ ஸவேதரநாத்மடி ஸ்திதம்‌ । 
விஷ்ணும்‌ ஸத,ா ஹ்ருதி, த்‌,யாயேத்‌ ஸம்ஸாராக,விமுக்தயே।/”' 
[வேதங்களுடன்‌ கூடிய புராணங்களின்‌ பொருள்களை 
விசாரித்து. ஆத்மாவினாள்ளிருக்கும்‌ விஷ்ணுவை. ஸம்ஸார 
பாபங்கள்‌ நீங்குவதற்காக எப்போதும்‌ ஹ்ருதயத்தினுள்‌ 
இயானிக்கவேண்டும்‌.] என்றும்‌, 


“ஆலோட்‌,ம ஸர்வமாஸ்த்ராணி விசார்ய ௪ (|; பு: | 
இத,மேகம்‌ ஸுநிஷ்பந்நம்‌ த்‌,யேயோ நாராயணஸ்ஸத,ா ॥!”' 
[எல்லா சாஸ்திரங்களையும்‌ பார்த்து, மறுபடியும்‌ மறுபடி 
யும்‌ விசாரம்‌ செய்தால்‌ நாராயணனே எப்போதும்‌ 
தஇயானிக்கத்தக்க௨ன்‌ '' என்னுமிது ஒன்றே ஈன்றாகத்‌ தேறி 
நிற்கும்‌.] என்றும்‌, 


“யஸ்ய த்வாபரோ மர்த்யோ ப்ஏஹ்மஹத்த்யாதி,தேோஷஜம்‌। 

ஈாமாயேத்‌ பாதகம்‌ ஸத்‌,ய: இம்‌ புக: கத்‌,யதே பரம்‌ |” 
[எவனை தியானிப்பதில்‌ ஈடுபட்டிருக்கும்‌ மனிதன்‌ ப்ரஹ்ம 
ஹத்தி முதலிய கோஷங்களாலேற்படும்‌ பாபத்தை உடனே 
போக்கடிக்கிறானோ, (அவன்‌ விஜயத்தில்‌) மற்ற பாபங்களைப்‌ 
பற்றிச்‌ சொல்லவும்‌ வேண்டுமோ?] என்றும்‌, 


“ஹரிர்‌ ஹரதி பாபாநி துஷ்டசித்தைரபி ஸ்ம்ருத: | 
அரிச்ச,யாபி ஸம்ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக: ॥” 
[கெட்ட மனமுடையவர்களாலும்‌ நினைக்கப்பட்ட ஹரி 
பாபங்களைப்‌ போக்கடிக்கறொோன்‌. இஷ்டப்படாமல்‌ தொடப்‌ 
பட்டபோதிலும்‌ நெருப்பு தஹித்தே தீருமன்‌ றே. ] என்றும்‌, 


“ர௬ுசோ யஜ9ம்ஷி ஸாமாரி யோதீ,தே$ஸக்ருத;ஞ்ஜஸா | 
ஸக்ருந்காராயணம்‌ ஸ்ம்ருத்வா பலம்‌ தஸ்ய ஸமங்நுதே |” 
[ எவனொருவன்‌. ருக்‌. யஜுஸ்‌ ஸாம வேதங்களைப்‌ பலதடவை 
நன்றாக அத்யயனம்‌ செய்கிறானோ. அவனுடைய டலனை ஒரு 
கடவை நாராயணனை நினைப்ப தினால்‌ அடைகஞறோன்‌. ] என்றும்‌, 


“வ்ரஜந்த்யகந்யமகஸோ ஜ்ஞாத்வா பூ,தாதிமவ்யயம்‌ | 

யே பஹந்தி து மாம்‌ ப,க்த்யா மயி தே தேஷு சரப்யஹம்‌ |॥'” 
[வேறொன்‌ நிலும்‌ செல்லா த மனமுடையவர்களரய்‌. என்னை 
பூகங்களுக்குக்‌ காரணபூகனாகவும்‌. அழிவம்றவனாயும்‌ அறிந்து 
எவர்கள்‌ பக்தியுடன்‌ ஆராதிக்கறோர்களோ. அவர்கள்‌ 
என்னிடத்திலிருக்கிறார்கள்‌; கானும்‌ அவர்களிடத்திலிருக்‌ 
கிறேன்‌.] என்றும்‌ சொல்லப்பட்ட தன்றோ. இந்த விதி 
வாக்கியங்களிலிருந்து நாராயணனையே நர்ம்‌ ( 17 ०००८० 
செய்யவேண்டுமென்றும்‌. தஇயானம்‌, மனனம்‌. பஜனம்‌. 
அஅஸ்மரணம்‌ முதலிய பதங்களினால்‌ சொல்லப்படும்‌ பக்தி 
அவனை அடைவதற்கு உபாயமென்றும்‌ ஏற்படுகிறது. 


இப்படிப்பட்ட இந்த பக்திக்கு அங்கம்‌ கர்மமே என்று 


ஸகல சாஸ்த்ரங்களிலும்‌ ப்ரஸித்தம்‌. மநோ வாக்‌ காய 


கர்மங்களால்‌ அந்த பகவானுக்கு ஆராதனம்‌ செய்ய 

வேண்டுமென்பது 
“தஸ்மாத;ுந்ய ப௱வஸ்த்வம்‌ தே,வதே,வம்‌ 77 क 555४ | 
ஆராதயரந்‌ ஹ்ருஷீகேமாம்‌ மநோவாக்காயகர்மபி,:॥ ' 

[ ஆகையால்‌. நீ வேறொன்றிலும்‌ நினைவில்ல: கவனாய்‌ தேவ 


தவனும்‌.இந்திரியங்களை நியமிப்பவனுமானஜநார்த்தனனை.. 


(08/50 வாக்‌ கரய கர்மங்களால்‌ ஆராதித்துக்கொண்‌டிருப்பா 
யாக.] என்றும்‌. 


“ஸா ஜிஹ்வா யா ஹரிம்‌ ஸ்தெளதி தச்சித்தம்‌ யத்‌ தத£ர்ப்பிதம்‌| 
தாவேவ = கரெள ங்லாக்‌,யெள யெள தத்பூஜநதத்பரெள |!” 
. [எது ஹரியைத்‌ துதிக்கிறகோ அதுவே நாக்கு; அவனிடம்‌ 
எது செலுத்தப்பட்டிருக்கிற கோ அதுவே மனம்‌; எக்கை 
கள்‌ அந்தப்‌ பரமாத்மாவைப்‌ பூஜிப்பதில்‌ ஈடுபட்டிரறாக்‌ 
கின்‌ றன வோ, அக்கைகளே சிறந்தவை] என்றும்‌. 
“ம்ருதிஸ்ம்ருத்யுதி,தம்‌ ஸம்யக்‌ ஙித்யமாசாரமாசரேத்‌ |” 
[சீருதிஸ்ம்ருதிகளிற்‌ சொல்லப்பட்ட ஆசாரங்களை நன்றாக 
எப்போதும்‌ அநுஷ்டிக்கவேண்டியது.] என்றும்‌. 
“ஆசாரப்ரப,வோ தர்மோ தர்மஸ்ய ப்ரபுரச்யுத: |!" 
[ஆசாரத்தைக்‌ காரணமாகக்கொண்ட ௧. தர்மம்‌; தர்மத்திற்கு 
௮அச்யுதனே ஸ்வாமி.] என்றும்‌ சொல்லப்பட்ட து. 


இப்படிப்பட்ட இந்தக்கர்மம்‌ நித்யமென்றும்‌,மறைமித்திக 
மென்றும்‌. காம்யமென்றும்‌ மூவகைப்படும்‌. ப்ராஹ்மண 
க்ூஷத்ரியவைங்யர்களாகிற மூன்று வர்ணத்தவரும்‌, ஸ்ருதி 
ஸ்ம்ருதிகளில்‌ சொல்லப்பட்ட நித்யறைமித்‌ திககர்மங்களை 
அனுஷ்டிப்பதே மேலான பகவதாரரதனமென்பதும்‌ மோக்ஷ 
ஹேதவென்பதும்‌, 

“ஸ்வகர்மணா தமப்யீர்ச்ய ஸித்‌,தி,ம்‌ விந்த,தி மாநவ:' 
[கன்னுடைய கர்மத்தனால்‌ பகவானை அர்ச்சனம்‌ செய்து 
மநுஷ்யன்‌ ஸித்தியை அடைகறோன்‌.] என்றும்‌. 
*'கர்மணைவ ஹி ஸம்ஸித்‌,திமாஸ்தி,தா ஜககாத,ய:' 
[கர்மத்தனலேயே, ஜனகர்‌ முதலியவர்கள்‌. மேலான 
ஸித்தியை அடைந்தார்கள்‌ ] என்று தையிலும்‌, 


“வர்ணாமங்ரமாசாரவதா புருஷேண பர: புமாந்‌ |. 
விஷ்ணுராராத்‌,யதே பந்த, நாந்யஸ்‌ தத்தோஷகாரக: |'' 
[வர்ணாச்ரமங்களுக்குத்‌ தகுந்த ஆசாரத்சகை உடையவனான 
புருஷனால்‌ பரமபுருஷனான விஷ்ணு ஆராதிக்கப்படுகிறார்‌. 
அவருக்குப்‌ பிரியத்தைக்‌ தரும்‌ வழி வேறில்லை. ] என்றும்‌. 
“வாஸுதே,வே மநோ யஸ்ய ஜபஹோமார்ச்சநாதி*| 
தஸ்யாந்தராயோ மைத்ரேய! தே,வேந்த்,த்வாதி,கம்‌ ப,லம்‌॥'' 
[ மைத்ரேயரே! ஐபம்‌, ஹோமம்‌, அர்ச்சனம்‌ முதலிய கர்மங்‌ 
களைச்‌ செய்கையில்‌ எவனுடைய மனம்‌ வாஸுதேவனீடத்‌ 
தில்‌ ००८१७. 5.08 57, அவனுக்கு கேவேந்திரனாயிருக்கை 


முதலிய பலங்கள்‌ டையூறாகவே தின்‌ றன.] என்றும்‌ 
(^ ய்‌ cB dD A 


விஷணுபுராணத்திலும்‌ பேசப்பட்டது. மேலும்‌, 


“ஸ்ருதிஸ்ம்ருத்யுதி,தம்‌ க்ருத்யம்‌ மநஸாபி ऊ யே ஈரா:। 
ஸ்முல்லங்க்‌,ய ப்ரவர்த்தந்தே ௩ பூத்தா மம (147 (99) || ` 

[ ங்ருதிஸ்ம்ருதிகளில்‌ சொல்லப்பட்டகர்மத்கை नै ए = மனிகர்‌ 

கள்‌ மனஸ்ஸினாலும்‌ மீறி நடக்கிறர்களோ. அவர்கள்‌ என்‌ னுடைய பக்தர்களல்லர்‌.] என்றும்‌, 


“ஜக,த்கர்த்‌ துர்‌ மஹேமாஸ்ய தி,வ்யாஜ்ஞாகாரிணோ வயம்‌ | 
இதி நித்யக்ரியா:. குர்யுர்‌ ஈரா யே வைஷ்ணவாஸ்து தே ॥ 


[ஜகத்‌ காரணனும்‌, மேலான ஈச்வரனுமான பகவா 
னுடைய திவ்யா ஜ்ஞைப்படி நடப்பவர்கள்‌ நாங்கள்‌ ' ' என்று 
கொண்டு எந்த மனிதர்கள்‌ நீத்யகர்மங்க அதுஷ்டிக்ிறொர்‌ 
களோ. அவர்களே வைஷ்ணவர்கள்‌.]' என்றும்‌, 


“விஷ்ணுப,க்திஸமாயுக்தாந்‌ ங்ரெளதஸ்மார்த்தப்ரவர்த்தகார்‌ | 
ப்ரீதோ பவதி யோ த்ருஷ்ட்வா வைஷ்ணவோ 5ஸெள 
ப்ரகீர்த்தித: ॥'' 
[ச்ருதிஸ்ம்ருதிகளில்‌ விதிக்கப்பட்ட நித்யகர்மங்களைச்‌ செய்‌ 
பவர்களும்‌. விஷ்ணுடக்தியுடன்‌ கூடியிருப்ப்வர்களுமான 
மனிதர்களைக்கண்டு எந்த மனிதன்‌ ப்ரீதியடைகறானே. 
அவனே வைஷ்ணவனென்று சொல்லப்படுகிறான்‌. ] என்றும்‌, 
“ந சலதி நிஜவர்ணதர்மதோ ய:.... தமவேஹி விஷ்ணுப,க்தம்‌'” 
[எவன்‌ தன்னுடைய வர்ண தர்மத்தினின்றும்‌ நழுவ 
வில்லையோ. அவனையே வீஷ்ணுடக்தனென்று அறிவாயாக. ] 
என்றும்‌ நித்யறைமித்திகாதி கர்மங்களை அநுஷ்டிப்பது 
வைஷ்ணவ லக்ஷணமென்று சீர்த்திக்கப்படட்ட த. 


இப்படிப்பட்ட இரந்த நித்யகர்மங்களில்‌ ஸந்த்யா 
வந்தனம்‌ ப்ரதானமான து. இக்கர்மத்தை அநுஷ்டிக்கா தவன்‌ 
ஸகலகர்மங்களையும்‌ அதுஷ்டிக்கத்‌ தகரதவனாகிறானென்பது 


“ஹந்த்‌யாஹீநேோ 5மமாசிர்‌ நிச்யம நர்ஹஸ்‌ ஸர்வகர்மஸஈ | 
யத,ற்யத்‌ குருதே கர்ம ந தஸ்ய ப,லபாாக்‌ ப,வேத்‌ ||” 
[ஸரந்த்யாவந்தனம்‌ செய்யா தவன்‌ எப்போதும்‌ அசுத்தமான 
வன்‌; ஒரு கர்மத்திற்கும்‌ யோக்யகையற்றன்‌ ; வேறு எந்தக்‌ 
கர்மத்தைச்‌ செய்தா லும்‌ அதன்‌ பலனை அடையமாட்டான்‌ .] 
என்று தக்ஷஸ்ம்ருதியிலும்‌, 

“நோபதிஷ்ட)ி ய: பூர்வாமுபாஸ்தே ந = பங்சிமாம்‌ | 

ஸ एए ூத்‌,ரவத்‌, பஹிஷ்கார்யஸ்‌ ஸர்‌ வஸ்மாத்‌, த்‌,விஜகர்மண::।॥” 
[எவனொருவன்‌ காலையிலும்‌. மாலையிலும்‌ ஸந்த்யாவம்தனம்‌ 
செய்யவில்லையோ. அவன்‌ இருபிறப்பாளர்க்கு ஏற்பட்ட 

எல்லாக்‌ கருமங்களிலிருந்தும்‌, குத்ரனைப்போல்‌ நீக்கத்‌ 
தக்கவன்‌.] என்று மற்றொரு ஸ்ம்ருதியிலும்‌. 

“நியதஸ்ய து ஸநயாஸ: கர்மணோ நோபபத்யதே'' 

[ அவசியம்‌ செய்யவேண்டிய கர்மத்தை விடுதல்‌ பொரும்‌ 
தாது.] என்று கதையிலும்‌ சொல்லப்பட்டது. 


அழ்வார்களும்‌ ஆசாரியர்களும்‌ இவ்‌ விஷயத்தைப்‌ 
பற்றிப்‌ பேசியிருப்டதை இனி ஆராய்வோம்‌. 


“நகரமருள்‌ புரிந்து நான்முகற்குப்‌ பூமேல்‌ 

பகர மறை பயந்த பண்பன்‌ -பெயரினையே 

புத்தியால்‌ சிந்தியாது ஓதி உருவெண்ணும்‌ 

அந்தியால்‌ ஆம்பயனங்கென்‌'்‌ 
என்று பொய்கையாழ்வார்‌ அருளிச்செய்தார்‌. “எம்பெருமா 
னுடைய திருநாமங்களை மனத்தால்‌ நினையாமல்‌ பிக்கப்‌ 
படும்‌ ஸந்த்யாவந்தனத்தால்‌ என்ன பயன்‌'' என்று 
அருளியதிலிருந்து. பகவத்‌ கைங்கர்யமாக நினைத்துச்‌ செய்யும்‌ 
ஸந்தக்யை மேலான பனைத்‌ தருவது என்றும்‌ ஏற்படுகிறது. 
திருமங்கையாழ்வார்‌ 


“சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி யோதுவித்‌(து) 
ஆதியாய்‌ வரும்‌ அந்தணாளரரறு அணியாலி அம்மானே! 
என்று அருளிச்செய்தார்‌. இங்கு “சந்தி' என்பது ஸந்த்யா 
வந்தனம்‌ முதலிய நித்யகர்மங்களையும்‌, 'வேள்வி' என்டது 
நையமித்த்க கர்மங்களையும்‌. சடங்கு” என்பது காம்ய 
கர்மங்களையும்‌ குறிக்கிறது. இதிலிருந்து அக்காலத்தில்‌ 
வ்யபதிஷ்டர்களாயிருந்த விப்ரர்கள்‌5 நித்ய: நையித்திக 
கர்மங்களையும்‌. ( காமரஹிதமான ) காம்யகர்மங்களையும்‌ 
பகவத்கைங்கர்யமாக அநுஷ்டித்தே வரந்தார்களென்று 
ஏற்படுகிறது. நம்மாழ்வாரும்‌ 
*“செந்தொழிலவர்‌ வேத வேள்வியறாச்‌ சிரிவரமங்கல நகர்‌ 
அந்தமில்‌ புகழாய்‌ 

என்று அருளிச்செய்தார்‌. ஸூத்ரகாரரான பாதராயணரும்‌, 
“அக்‌,நிஹோத்ராதி, து 55 500 017 ८।९/ 5 ॐ 8530 ८०/57 த்‌[ அக்னி 
ஹோத்ரம்‌ முதலியவைகள்‌ (அநுஷ்டிக்கப்பட வேண்டியவை 
களே); வீத்மையாகிற காரியத்தின்‌ பொருட்டு அவைகள்‌ 
காணப்படுவதால்‌.] என்று உபாஸகர்களுக்கு அக்நி 
ஹோத்ரம்‌ முதலிய நித்ய நைமித்திக கர்மங்கள்‌ 'அவசியம்‌ 
அநுஷ்டிக்கத்தக்கவை என்பகை உபதேசித்தார்‌. இங்கு 
ஆதி பாப்தத்தினால்‌ ஸந்த்யாவந்தநாதிகள்‌ சொல்லப்படு 
இன்றன. ஸ்ரீபாஷ்ய தாபாஷ்யா திகளில்‌ எம்பெருமானாரும்‌ 
இவ்விஷயங்களை விரித்துரைத்தார்‌. 


இனி, ப்ரபந்நர்கள்‌ இந்த சக்க சட ஸ்ம 
செய்யவேண்டுமா என்பதைப்‌ பற்றிய வீசரிரம்‌ செய்யப்‌ 
படுகிறது. பரமகாருணிகரான பெரியவாச்சான்பிள்‌ னை பரந்த 
ரஹஸ்யத்தில்‌ தீவயப்ரகரணத்தில்‌ “ அகையால்‌ ஸந்த்யா 
வந்தநாதிகளோடாதி வீடவுமாம்‌; சிகாயஞ்ஞோபவீதாதி, 
களோபாதி கிடக்கவுமாம்‌ என்கற அறியமம்‌ அநுஷ்டராந 
தீவயத்திலும்‌ ப்ரகாசிக்கிறது,'' என்று அருளிச்செய்தார்‌. 
இதிலிருந்து ஸந்த்யா வந்‌ தநா திகளை ப்ரடந்நர்களில்‌ சிறந்தவர்‌ 
களான சில அதிகாரிகள்‌ வீட்டடாலும்‌. அவர்களுக்கு தோஷ 
மில்லை என்று ஏற்படுகிறது. இவ்வீஷய த்தைச்‌ சரமங்லோக 
ப்ரகரணத்திலும்‌ பின்வருமாறு வீவரித்திருக்கிறார்‌.— 


“ஆக, பஹுவசனத் தாலே மோக்ஷஸாத தயா ப்ரத 
மான தர்மங்களை எடுக்கையா ல. தர்மவிமேஷமான ஸர்வ 
பப்‌,த,ம்‌ தரைவர்ணிகஸாதாரணமாய்‌. ஸந்த்யாஹீ 
நோ$0ுகிர்‌ நித்யமநர்ஹஸ்‌ ஸர்வகர்மஸு ', £தே த்,வகம்‌ 
புஞஜதே பாபா யே பசந்த்யாத்மகாரணாத்‌ ' என்று யோக்‌, 
யதாபா த,கமான ஸந்த்யாவந்தன டஞ்சமஹாயஜ்ஞா தஇகனைச்‌ 
சொல்லுகிறது. ப்ரதானமான கர்மாதிகளைச்‌ சொன்ன 
போதே. இவற்றுக்கு ५75५115 7८7 58500 व्य அவையும்‌. 
"नण ऊ (017८147 மஹாபளஹோ नण 5 , 5; ம்‌ (4/ @८।॥ @5८2' 
என்று ப்ரயோழநாபாவத்தாலே தன்னடையே கழியும்‌ 
படியாயிருக்க,  த்யாஜ்யதயா ப்ருதங்கிர்தேமம்‌ பண்ணு 
கைக்கு ஹேதுவென்னென்னில்‌: *ஸர்வகர்ம பஹிஷ்க்ருத:" 
என்‌ று ஒரு கர்மத்தக்கும்‌ அர்ஹனல்லன்‌ என்கையாலே. மேல்‌ 
வக்ஷ்யமாணமான ஸ்வீகா ரா நுஷஸ்டரனத்துக்கும்‌ யோக்‌,ய தர 
பாதகமான இவை அபேக்ஷிதமாகாதோ? என்று உதிக்கிற 
சங்கையை வ்யாவர்த்திக்கைக்காக ப்ரு 59597 5 १५०८४ 
பண்ணுழெது. அந்த 62०95 ८ 0 ॐ ॐ1 5 & = சைதர்ய. மாத்ரமே 
५१०. அபேகவிதம்‌........ ஆக, அநுஷ்டிக்கப்புகுகிற ஸ்வீகாரத்‌ 
தக்கு ஸந்த்யாவந்தனம்‌ அந லீபக்ஷிதமென்கைக்காக ப்ரு கங்‌ 
நிர்த்தேசம்‌ பண்ணிற்று........ இந்க ஸர்வப்தர்‌ தன்னிலே 
“லோகஸங்க்‌,ரஹமீமவ। பி ஸம பமயர்கர்த்துமர்ஹஸி' என்று 
லோகஸங்க்‌ரஹார்த்கமாகக்‌ கர்த்தவ்யமான கர்மங்களும்‌, 
புத்ரார்த்தமாகப்‌ பண்ணும்‌ பும்ஸவநாதி வ்யாபாரங்களும்‌ 
த்யாஜ்யதயா அநுஸக்கதேயம்‌........ இனி ஆந்ருமும்ஸ்யமே 
இவற்றினுடைய அநுஷ்டாநத்துக்கு ஹேதுவாகக்‌ கடவது;.... 
அநந்தரம்‌ * பரித்யஜ்ய ' என்று அதினுடைய தீயாக, 
ப்ரகாரத்தைச்சொல்லுகிறது தர்மஸ்வரூபத்யாக,த்கதையோ? 
சுர்மபலாதி,த்யாக,த்தையோ? தர்மத்தில்‌உபாயத்வபுட ல்‌; தி, 
த்யாக,க்தையோ? என்னில்‌: இவ்வதிகாரிக்கு யாவச்சரீர 
பாதம்‌  காலகஷேபத்துக்காக பகவத்தோஷஹேதுபூத, 
மானவை அநுஷ்ட்டேயமாகையாலேதர்மஸ்வரூபத்யாகமாக 
மாட்டாது; பலா திகள்‌. ஸாததனுக்குங்கூட த்யாஜ்யமாகக்‌ 
கீழே உக்தமாகையாலே, பலாதி,த்யாகத்தைச்‌ சொல்லுகிற 
தகாகவொண்ணா து. ஆக, இங்கு தர்மந்களினுடைய உபாய 
தவப்‌ தி,த்யாகத்தைச்‌ சொல்லுறது. அந்த உபாயத்வ 
ப்த்‌;தித்யாகமாவது:- லாபஹேதுவான ` பகவத்ப்ரிதிக்கு 
ஸாதநமென்கிற ப்ரதிபத்தியைத்‌ தவிருகை, ஆகையாலே 
ஸ்வரூப த்யாகத்தால்‌ வரும்‌ குறையும்‌. பலாதித்யாக த்தைச்‌ 
சொல்லுகிறதென்கிறத்தால்‌ வரும்‌ பு£ருச்தியுமின்‌ றியிே 
ஓழியும்‌........ அவன்‌ (ஸாத,கன்‌) உபாயத்வபீத்யா அநுஷ்டிக்‌ 
கும்‌; இவன்‌ (ப்ரபன்னன்‌ ) போக;ப்டத்யா அநுஷ்டிக்கும்‌. 
அவன்‌ விதிப்ரேரிதனாய்‌ அநுஷ்டிக்கும்‌; இவன்‌ ராகப்ரேரி 
தனாய்‌ அநுஷ்டிக்கும்‌. அவனுக்கு வர்ணாம்ரமதர்மம்‌ நியமேக 
அநுஷ்டிக்கவேணும்‌; இவனுக்கு வர்ணாச்ரமதர்மா நுஷ்டாந 
மாகவுமாம்‌; வைஷ்ணவகஞ்சித்காரமாகவுயூம்‌.  ப்ராதி 
கூல்யறிவ்ருத்‌ தியிலே நியமம்‌; ஆறுகூல்யங்களில்‌ ஏதேனு 
மாம்‌. ஆகையிழே நம்மாசார்யர்கள்‌ இவற்றை அநுஷ்டிப்பா 
ரும்‌ அநுஷ்டியாதாருமாய்ப்‌ போருகிறது. அந்த நியம 
மில்லாமையிறே ஸாதகனான அக்ரூரன்‌ ஸாத்யவஸ்த 
ஸந்நிஹிதமாயிருக்கச்‌ செய்தேயும்‌. தன்னுடைய க்ருத்யத்‌ 
திலே அரந்வயித்த து" 


இரந்த ஸ்ரீஸமூக்திகளிலிருந்து பின்வரும்‌ விஷயங்கள்‌ 
தெளிவா கின்‌ றன:—(1) “ஸர்வதர்மாந்‌ பரித்யஜ்ய'' என்கிற 
வீடத்தில்‌ ஸர்வசப்தத்தாலே பலஸாதாமான கர்மயோகாதி 
களை அநுஷ்டிப்பதற்கு யோக்‌யதையைத்‌ தரும்‌ (யோக்‌ 
யதா$$பாத,கமான ) ஸந்த்யாவந்தனம்‌ முதலிய கர்மங்களை 
விடச்சொல்லுகிறது. (2) இங்கு வீடுகையா வது அவைகளை 
அதநுஷ்டியாமலே இருப்பதன்று. அவைகள்‌ எம்பெருமானை 
அடைய உபாயம்‌ என்னும்‌ புத்தியை விடுவதே இங்கு 
சொல்லப்படும்‌ பரித்யாகம்‌, (38) பகவத்கைங்கர்பரூபமாக 
இவைகளை ப்ரடன்னன்‌ அதநுஷ்டிப்பான்‌. (4) இவைகளை 
அநுஷ்டிப்பதற்கு லோகஸங்க்ரஹமும்‌ காரணமல்ல; லோகம்‌ 
க்ேமத்தை அடையவேண்டும்‌ என்னும்‌ இரக்கமே (ஆர்ரு 
५०८४०४५ 6) காரணம்‌. (5) குஜணகாலமும்‌ இடைவீடாமல்‌ 
பகவத்பாகவதகைங்கர்யத்திலே ஈடுபட்டிருக்கும்‌ சில 
அதிகாரிகள்‌ இந்த ஸந்த்யா வந்தனாதிகளை முழுவதும்‌ வீட்டா 
இம்‌ அதனால்‌ தோஷமில்லை. இம்மாதிரியான அதிகாரிகள்‌ 
நம்‌ ஆசாரியர்களிலும்‌ சிலர்‌ இருந்திருக்கிறார்கள்‌. திருக்‌ 
கண்ணமங்கையாண்டான்‌ என்னும்‌ மஹான்‌ அவர்களில்‌ 
ஒருவர்‌. ப்ரபன்னன்‌ பகவத்கைங்கர்யங்களையே செய்துவர 
வேண்டும்‌; அனால்‌ ஸந்த்யாவந்தநா திருபமான பகவத்‌ 
வகைங்கர்யத்தைத்‌ தான்‌ செய்யவேண்டுமென்னும்‌ கட்டாய 
யில்லை. ஆகையால்‌ பகவத்பாகவத கைங்கர்யத்‌ திலீடுபட்டி. 
ருக்கும்போது ஸந்த்யாவர்‌ தநா திகாலம்‌ வந்தால்‌, ப்ரபன்னன்‌ 
அந்த ஸந்க்யாவந்கநரதிகளை விடலாம்‌. ஆனால்‌ உபாஸகன்‌ 
அச்சமயங்களிலும்‌ ஸந்த்யாவந்தநா திகளை (` அநுஷ்டித்தே 
யாகவேண்டும்‌. திருக்கண்ணமங்கையாண்டானைப்‌ போன்ற 
அதிகாரிகள்‌ இக்காலத்தில்‌ ஒருவரும்‌ இலராகையால்‌ இக்‌ 
காலத்திலுள்ள ப்ரபன்னர்கள்‌ ஸந்த்யாவர்‌ தநா திகளை பகவத்‌ 
பாகவதகைங்கர்ய ந. துக்கு இடையூறாக இல்லாத காலங்களில்‌, 
பகவதாஜ்ஞையாகவும்‌, பகவத்கைங்கர்யமாகவும்‌ நினைத்து 
அநுஷ்டிக்கவேண்டிய தே என்பகே இந்த ஸ்ரீஸூக்திகளி 
லீருந்து ஏற்படும்‌. 

“பராமுரம்‌ முநிவரம்‌ க்ருதபெளர்‌ வாண்ஹிகக்ரியம்‌ | 
மைத்ரேய: பரிபப்ரச்ச, ப்ரணிபத்யாபி,வாத்‌,ய ௪ ॥'* 
[பகவானை மனனம்‌ செய்யும்‌ ரிஷிகளில்‌ சிறந்கவரும்‌. காலை 
யில்‌ செய்யவேண்டிய கர்மாநுஷ்டானங்களையெல்லாம்‌ செய்து 
முடித்தவரும்‌. வைதிகதர்மத்துக்கு விரோதிகளான பாஹ்ய 
குத்ருஷ்டிகளை ப்ரமாண தர்க்கங்களாகிற சரங்களாலே 
ஜயித்ததாலும்‌,உள்ளிருக்கும்‌ விரோதிகளான ராகத்வேஷாதி 
களை ५८८० 58.07 தி,களாலே ஜயித்ததாலும்‌ பராசரர்‌ என்று 
பெயர்‌ பெற்றவருமான முனிவரை மைத்ரேய மஹர்வி தன்‌ 
பெயரைச்சொல்லி "அபி. வாதனம்‌ செய்து. ஸாஷடாங்க 
ஈமஸ்காரம்செய்து நன்றாகக்‌ கேட்டார்‌. ] என்பது ஸ்ரீவிஷ்ணு 
புராண த்தில்‌ முதல்‌ மலோகமாகப்‌ படிக்கப்பட்டிருக்கிறது. 
இகற்கு பூர்வசிக ஸ்ர வைஷ்ணவ பரமாசார்யர்களான 
ஸ்ரீவிஷ்ணுசித்தாசாரியர்‌ என்ற எங்களாழ்வானும்‌. ஸ்ரீமத்‌ 
க்ருஷ்ணஸ ரி என்ற திருகாமத்தையுடைய பெரியவாச்சான்‌ 
பிள்ளையும்‌ வ்யாக்யானம்‌ செய்திருக்கிறார்கள்‌. “ ஸ்வ 
தர்மா நுஷ்ட;நாவிருத்‌; தே, ம௩: ப்ரஸாத,கரஸமயே புராணாதி, 
ஆக்‌,யேயமிதி ஸ்ாஸ்த்ரதள்ஸநாத்‌ '' [தனக்கேற்பட்ட 
கர்மா நுஷ்டானத்திற்கு விரோதமில்லாமலும்‌, மனஸ்ஸுக்கு 
ஸந்தோஷத்தை அளிப்பதா கவுமிருக்கும்‌ காலத்தில்‌ புராணம்‌ 
முதலியவைகளைச்‌ சொல்லவேண்டும்‌ எவ்று சாஸ்த்ரத்தில்‌ 
காணப்படுவதால்‌] என்றும்‌. “ப,சுவித்ஸஹமாராதநாதிகா 
விமேோஷதோ விமலம௩ஸம்‌'' . [பகவானை (கர்மங்களால்‌) 
ஆராதிப்பது முதலியவைகளால்‌ மிகவும்‌ தூய்மையடைந்த 
மனஸ்ஸை உடையவரான பராசரரை.] என்றும்‌ 
எங்களாழ்வான்‌ வியாக்க்யோானம்‌ செய்‌ சருளீனார்‌. பெரிய 
வாச்சான்பிள்ளையும்‌ -“பரமாத்மோபாஸநத்துக்கு அங்கமாக 
०7 00.575 595८907८. ஜ்ஞாநபூர்வகமான அநுஸஷ்டானமும்‌ 
அநுஷ்டிதமான ஸமயத்திலே.'' என்றும்‌. *'பரபக்்ப்ரதி 
க்ஷேபம்‌ பண்ணுகிறபோ தும்‌ அவஸரமன் று; உபாஸாகால 
மும்‌ அவஸரமன்று; ககங்கமான அநுஷஸ்டானமையமும்‌ 
அவஸரமன்று. ஆகையாலே க்ருகக்ருத்யனாய்‌, தன்னுடைய 
ஜ்ஞானத்துக்கு வீடு தேட்டமான அவஸ்ரத்திலல கேட்டான்‌ 
என்கை என்று அருளிச்செய்தார்‌. இவைகளிலிருந்து 
நித்யகர்மானுஷ்டானமான ஸரந்த்யாவந்கனத்தை அவசியம்‌ 
செய்யவேண்டுமென்‌ றும்‌, அதன்‌ மூலமாக பகவான்‌ 
ஆரா திக்கப்படுகறானென்றும்‌. அப்படி ஆராதிப்பதினால்‌ 
மனஸ்‌ சுத்தி அடைதநெது என்றும்‌. நித்யகர்மங்கள்‌ 
அநுஷ்டிக்கப்படவேண்டுமென்று சாஸ்திரங்களில்‌ விதிக்‌ 
கப்பட்டிருக்கிறதென்றும்‌. கர்மாநுஷ்டானம்‌ பரமாத்மோ 
८47 ०४ 5.8. அங்கமென்‌ றும்‌ தெளிவாகிறது. 

அசார்யாக்ரேஸரரான பிள்ளை லோகசார்யர்‌ ஸ்ரீவசன 
பூணத்தில்‌ “கைங்கர்யந்தானிரண்டு; அதாவ து-இஷ்டஞ்‌ 
செய்கையும்‌. அநிஷ்டம்‌ தவிருகையும்‌; இஷ்டாநிஷ்டங்கள்‌ 
வர்னாங்ரமங்களையும்‌ ஆனத்மஸ்வரூபத்தையும்‌ அவலம்பிஜ்‌ 
இருக்கும்‌." என்று அருளிச்செய்தார்‌, அவ்விடத்தில்‌ மண 
வாள மாமுனிகள்‌ அருளிய பின்‌ வரும்‌ வ்யாக்யான ஸ்ரீஸ௫க்தி 
யும்‌ இவ்விடத்தில்‌ அதுஸந்திக்கவுரியது- ஸ்வவர்ண 
ஸ்வாங்ரமோசிதமான தர்மங்களை பரார்த்தயுக்‌த்யா 
அதுஷ்டிக்கை இஷ்டமாய்‌,ஸ்வார்‌ 5,51८.15 சத்வா அநுஷ்டிக்கை 
அநிஷ்டமாயிருக்கை. பரார்த்தபுத்யா அநுஷ்டிக்கையாவ.து:- 
லோகஸங்க்ரஹதயாவாகவும்‌ ०६८, புத்ரர்களுடைய உஜ்‌ 
ஜீவநார்த்தமாகவும்‌  ஆரந்ருமம்ஸ்யத்காலே அதுஷ்டிக்கை. 
இவ்வர்த்தத்ைகை * இனி இவற்றில்‌ நம்‌ ஆசார்யர்கள்‌ 
அதுஷ்டிக்கிறவை மரிஷ்யபுத்ரர்களுடைய உஜ்ஜீவரார்த்த, 
மாக ஆரந்ருமம்ஸ்யத்தாலே அநுஷ்டிக்கிறார்களித்தனை; 
இப்படி அனுஷ்டியாதபோது பகலத்‌ விபூதிபூதரான 
சேதநர்க்கு நாசஹேதுவாகையாலே ஈச்வரனுக்கு அரபிமத 
பூசீனவான்‌;ஆகையால்‌ யாதோரளவாலே லோகஸங்க்‌,ரஹம்‌ 
பிறக்கும்‌. யரதோரளவாலே ஸிஷ்ய புத்ரர்களுக்கு உஜ்ஜீவ ந 
முண்டாம்‌ அவ்வளவும்‌ அநுஷ்டே,யமென்‌ றதாய்த்து;ப்ரவ்ருத்தி 
தர்மந்தானே அபிஸந்தி, ७८५ ०35 57@ நிவ்ருத்தி 
தர்மமானவோபாதி இந்த நிவ்விருத்திகர்மமும்‌ ப்ராப்யாந்‌ 
தர்க்க,தமாகக்கடவது; இவ்விடத்தில்‌ அகரணேப்ரத்யவாயம்‌ 
எம்பெருமானுடைய அஈபிமதத்வமும்‌, தன்‌ னுடைய 
புருஷார்த்த, ஹாநியுமாகக்‌ கடவது' என்று தனிங்லோகத்‌ 
தில்‌ இவர்‌ தாமே அருளிச்செய்தாரிறே. இனி ஸ்வார்த்த, 
பக்த்யா அநுஷ்டிக்கையாவ த :-ஸ்வவர்ணஸ்வாங்ரமோசித 
மாக விஹிகமாகையாலே நமக்கு இவையனுஷ்டியாதொழி 
யில்‌ க்ருத்யாகரணரூபபாபம்‌ வருமென்று நினைத்து 
அநுஷ்டிக்கை.....(இஷ்டாநிஷ்டங்கள்‌ ) இத்யாதிக்கு ஸ்வ 
வர்ணஸ்வாய்ரமோசிதங்களைச்‌ செய்கை இஷ்டம்‌; 5 55०9 55 
தங்களைச்‌ செய்கை அநிஷ்டம்‌' என்றும்‌ 'ஆத்மஸ்வரூபக்‌ 
தக்கு உசிதமானவற்றைச்‌ செய்கை இஸ்டம்‌; தத்‌,விருத்‌, 
தங்களைச்‌ செய்கை அநிஷ்டம்‌' என்றும்‌ யோலஜிக்கவுமாம்‌. 
அங்ஙனுமன்‌ 056 क. = -ஒளபாதிகமுமாய்‌. அமித்யமுமான 
வர்ணாய்ரமங்களிலே ஊற்றிருக்கை அநிஷ்டம்‌; நிருபாதிக 
நித்யபேஷமான ஆத்மஸ்வரூபத்தலே ஊற்றிருக்கை 
இஷ்டம்‌ என்றும்‌ யோலிக்கவுமாம்‌. இங்ஙன்‌ ஊற்றத்தை 
யிட்டுச்சொல்லுகையன்‌ றிக்கே, 'அநிஷ்டம்‌ வர்ணாங்ரமத்தை 
அவலம்பித்திருக்கும்‌; இஷ்டம்‌ ஆக்மஸ்வரூபத்தை அவலம்‌ 
பீத்திருக்கும்‌' என்று இங்ஙனே விப,ஜித்து வர்ணாங்ரமா 
சாரத்தை அநிஷ்டகோடியாகச்‌ சொல்லப்பார்க்கில்‌ “ஸ்ருதி: 
ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்‌ய வர்த்ததே। 
ஆஜ்ஞாச்சே,த, மம த்‌,ரேரஹீ மத்‌,ப,க்தோ 5பி ஈ வைஷ்ணவ; ॥ 
[வேதமும்‌, ஸ்ம்ருதிகளளும்‌ என்னுடைய ஆஜ்ஞையே; 
எவன்‌ அகை ।6.7 ஈடக்கிறுனோ அவன்‌ என்‌ கட்டனையை 
மீறினவனாகவும்‌ எனக்கு த்ரோஹியாகவுமிருப்பதனால்‌ 
எனக்கு பக்தனாயிருந்கபோதிலும்‌ வைஷ்ணவனல்லல்‌ ; ] 
என்றும்‌, 'அவிப்லவடய தர்மாணாம்‌ பாலகரய குலஸ்ய ௪| 
ஸங்க்‌,ரஹாய ௪ லோகஸ்ய மர்யாத,ாஸ்த,பநாய ச || ப்ரியாய 
மம விஷ்ணோங்ச தேவதேவஸ்ய ஸார்ங்கிண:। மநீஷீ 
வைதி,காசாரம்‌ மஸாபி ௩ லங்க,யேத்‌ ॥' [வர்ணாச்ரமதர்மங்‌ 
கள்‌ அழியாமலிருப்பகற்காகவும்‌. ` குலகர்மங்களைக்‌ காப்‌ 
பாற்றுவதற்காகவும்‌, லோகஸங்க்ரஹத்திற்காகவும்‌, சாஸ்த்ர 
மர்யாதைஃை நிலைநபிறுத்துவதற்காகவும்‌, எனக்கும்‌. தேவ 
தவனும்‌, சார்ங்கமென்னும்‌ வில்லாண்டவனுமான 
விஷ்ணுவுக்கும்‌ பீரியத்தைச்‌ செய்யும்பொருட்டும்‌ புத்தி 
மானானவன்‌ வேதத்தில்‌ சொல்லப்பட்ட ஆசாரத்தை 
மனத்தினாலும்‌ மீறலாகா த.] “யதா, ஹி வல்லபே௱ராஜ்ஞோ 
ஈதீ;ம்‌ ராஜ்ஞா ப்ரவர்த்திதாம்‌। லேோகோபயோகிஜீம்‌ ரம்யாம்‌ 
ப,ஹுஸஸ்யவிவர்த்‌,தி,£ீம்‌ || லங்க,யந்‌ மட லமாரோஹேத, 
பேக்்ஜோஃ5பி தாம்‌ ப்ரதி! ஏவம்‌ விலங்க,யந்‌ மர்த்யேோ மர்யா 
தரம்‌ வேத;,றிர்மிதாம்‌ || ப்ர்யோ$5 ௩ ப்ரியோ5ஸெள மே 
மதரஜ்ஞாவ்யதிவர்த்தநாத்‌ | உபாயத்வக்‌,ரஹம்‌ தத்ர வர்ஜயேந்‌ 
மாஸா ஸாுதீ,:॥'' [ராஜாவினால்‌ உண்டாக்கப்பட்ட தும்‌. 
உலகத்திற்கு உபயோகப்படுவ தும்‌, அழகியதும்‌, அதிகமான 
பயிர்களை வளரச்செய்வதுமான நதிக்கு, அர்நதியை அபே௯ூஷி 
யாதவனும்‌ ராஜாவுக்குப்‌ பீரியனாயிருப்பவனுமான ஒருவன்‌. 
கெடுதிகளைச்‌ செய்தானாகில்‌ எப்படி சூலத்தில்‌ ஏற்றப்படு 
வானோ. அப்படியே வேதங்களால்‌ சொல்லப்பட்ட தர்மங்‌ 
களின்‌ வரம்புகளை (4 8.0 மனிதன்‌ எனக்கு இஷ்டனானா 
ஓம்‌ என்‌ கட்டளையை மீறினபடியாலே எனக்குப்‌ பிரியனான 
வனல்லன்‌; புத்திமான்‌ அந்தக்‌ கர்மாநுஷ்டான விஷயத்தில்‌ 
மனத்தில்‌ உபாயத்வபுத்தியை விடக்கடவன்‌.] என்றும்‌ 
ஸர்வேண்வரனும்‌' பிராட்டியும்‌ அருளிச்செய்த வசனங்‌ 
களோடும்‌ பூர்வாசார்யர்களுடைய வசநா நுஷ்ட்டானங்‌ 
களோடும்‌ விரோதிக்குமி8ற; ஆனபின்பு ழ்ச்சொன்ன 
படியே இவ்வாக்யத்துக்குப்‌ பொருளாகக்சடவது.”' 


இந்த ஸ்ரீஸூக்திகளிலிருந்து பின்வரும்‌ வீஷயங்கள்‌ 
கெளிவாகின்‌ றன: (1) ஸந்த்யா வந்தம்‌ முதலிய வர்ணா 
மரமதர்மங்களை “பிறருக்கு நன்மையைத்‌ தருவது' என்னும்‌ 
நினைவுடன்‌ அநுஷ்டிக்க வேண்டும்‌; தனக்கு நன்மையைத்‌ 
தருவது' என்னும்‌ நினைவுடன்‌ அநுஷ்டிக்கலாகர து. 
(2) லோகஸங்க்ரஹமும்‌. சிஷ்யபுத்ரர்களுடைய உஜ்ஜீவன 
மும்‌ இவற்றை அநுஷ்டிக்கைக்கு ஹேது. (3) இவை 
ப்ரபந்நனுக்கு ப்ராட்யத்தில்‌ அடங்கி விடுகின்றன. (4) 
இவற்றை அறுஷ்டியாவீடில்‌ எம்பெருமானுடைய அப்ரீதி 
எற்படுகிறட்டியா லும்‌, ஸ்வயம்ப்ரயோஜுமும்‌, பகவத்‌ 
கைங்கர்யமுமான இவற்றை இழக்கை கைங்கர்யஹானி 
யாகையாலும்‌ இவை அவச்யம்‌ அநுஷ்டிக்கப்படவேண்டு 
மவையே. (5) வர்ணாங்ரமாசாரத்திலேயே ஊன்றி ஆத்ம 
ஸ்வரூபத்தை அறியாமலிருக்கை அநிஷ்டமேயொழிய. வர்ணா 
ம்ரமாசாராநுஷ்டானம்‌ அநிஷ்டமன்று. இவைகளிலிருந்து 
ஸந்த்யாவந்தநம்‌ முதலிய வர்ணாங்ரமதர்மங்களை அ நுஷ்டிக்க 
வேண்டுமென்பதே எல்லா ஆசார்யர்களுக்கும்‌ உகந்த பக்ஷ 
மென்று கெளிவாக விளங்குகிறது. 


இந்த ஸந்த்யாவந்தன த்தை அறுஷ்டிக்கும்போ து அர்த்‌ 
தத்தை அறிர்ஜே அதுஷ்டிக்கவேண்டும்‌. அர்த்தஜ்ஞூர ७ 
மில்லாமல்‌ இவற்றை அனதுஷ்டிப்பது நிஷஸ்ப்ரயோஜனம்‌ 
என்பதே. “அதிகமப்யத்வயநம்‌ அ௩நுபாஷிதம்‌ அவக, 
ॐ1717 5590 கஸ்ய சந்தரபனளர இவ கேவலம்‌ பரிங்ரமகரம்‌ 
[வேதமானது அத்யயனம்‌ செய்யப்பட்ட போதி 
னும்‌, திரும்பப்படிக்கப்படாமலும்‌. அர்த்தம்‌ அறியப்‌ 
படாமலுயிருந்தால்‌, கழுதைக்குச்‌ சந்தனக்கட்டையின்‌ 
சுமையைப்போல்‌ ங்ரமத்தையே தருவதாக ஆகிறது. ] என்று 
நிருக்திசாரரால்‌ சொல்லப்பட்டது. ய ஏதேந ஹவிஷா 
யஜேத ய வு சைததே,வம்‌ வேத, '' [எவன்‌ இந்த ஹவீஸ்ஸி 
னால்‌ யாகம்‌ செய்றொனோ எவன்‌ இதை இப்படி அறிகறொனோ 
(அவர்களிருவரும்‌ இந்தப்‌ பலனை அடைகிறோர்கள்‌.)] என்று 
வேதத்தில்‌ அநுஷ்டானத்தினால்‌ அடையும்‌ பலனை அர்த்‌ 
தத்தை அறிவதனலேயே அடையலாமென்‌ றும்‌ சொல்லப்‌ 
பட்டது. ஆகையால்‌ இந்த மந்த்ரங்களின்‌ அர்த்தத்தை 
அறியவேண்டியது அவசியம்‌. 


நாம்‌ அனுஷ்டிக்கும்‌ மந்த்ரங்களின்‌ அர்த்தம்‌ தெரியாத 
காரணத்தினாலேயே அதன்‌ அவசியத்தை அறியாமல்‌ 
அனுஷ்டிக்காமல்‌ இருக்கிறார்கள்‌. எனையாவது ஒன்றைச்‌ 
செய்யவேண்டியது என்று விதித்திரக்கிறது என்று 
சொன்னால்‌ அக்காரணத்தை மட்டும்‌ கொண்டு அனுஷ்டிக்‌ 
கும்‌ காலம்‌ இதுவல்ல. அப்படி அனுஷ்டித்தால்‌ அதை 
மூடநம்பிக்கை (प्लान) என்‌ கிறார்கள்‌. மந்த்ரத்தின்‌ 
அர்த்தம்‌ என்ன? அதை ஏன்‌ அனுஷ்டிக்கவேண்டும்‌ 2 
அனுஷ்டித்தால்‌ பலன்‌ என்ன? அனுஷ்டிக்காவீடில்‌ தோஷ 
மென்ன? என்கிற கேள்விகள்‌ ஏற்படுகின்றன. இக்கேள்வி 
களுக்கு பதில்‌ சொல்லாவிடில்‌ பலர்‌ இக்கர்மத்கை 
அனுஷ்டிப்பார்கள்‌ என்று எதிர்பார்க்கமுடியா,து. இம்மாதிரி 
கேள்வீகள்‌ கேட்கும்‌ தன்மை வேதத்திலும்‌ பல இடங்களில்‌ 
காணப்படுகிறது. 


“மந்தூரம்‌ த்ராயத இதி மந்த்ர: ˆ” மனனம்‌ செய்ப 
வனைக்‌ காப்பாற்றுவதல்லவேோ மந்த்ரம்‌. மந்த்ரத்தின்‌ 
அர்த்தத்தைத்‌ தெரியாமலும்‌. ரிஷி, சந்தஸ்‌. தேவதை 
இவைகளை அறியாமலும்‌ செய்யும்‌ மந்த்ரம்‌ விபரீதபலன்‌ கலை 
அல்லவோ கொடுக்கும்‌. கணெறு வெட்டப்பூதம்‌ புறப்பட்ட 
கதைபோல்‌ ஆகிவிடும்‌. மேலும்‌ மந்த்ரங்களோ ஸம்ஸ்க்ருத 
பாஜையில்‌ இருக்கின்றன. அதுவோ நமக்குத்‌ தாய்‌ பாஷை 
யல்ல. எந்த 'ஸமூஹுத்தினராலும்‌ அது இப்பொழுது 
பேசப்படும்‌ பாஷையாக இல்லை. இதனால்‌ மந்த்ரங்களுக்குத்‌ 
தமிழில்‌ அர்த்தம்‌ தெரியவேண்டியது அவசியமாயிருக்கிறது. 
८5.57 8८67 ஜபிக்கவேண்டிய விஷயம்‌. ஜஐபஃமே மந்த்ரத்தி 
னால்‌ சொல்லப்படும்‌ பரம்பொருளை தியானம்‌ பண்ணுவது. 
இயானமேோ அறியப்பட்ட வஸ்துவைப்பற்றித்தான்‌ செய்ய 
முடியும்‌. அர்த்தம்‌ கெரியாவிடில்‌  தயானிக்கப்படும்‌ 
வ்ஸ்‌.துவை அறியமுடியாது. இதனாலேயே மந்த்ரம்‌ 
அதுஷ்டேயார்த்சுப்ரகாயிகம்‌ என்றும்‌, (0/6 नथ 545८2 என்‌ 
அம்‌ ०८ 10 8८177 ॐ भा 7 @ சொல்லப்பட்டிருக்கறது. மந்த்ரங்‌ 
களின்‌ அர்த்தங்களை அறியாத புருஷனுக்கு தியானம்‌ என்பது 
முடியாத காரியம்‌. “ யோஹவா அவிதிதார்ஷேயச்ச,ந்தே- 
தை,வ்த ப்‌,ராஹ்மணே௩ மந்த்ரேண யஜதி யாஜயதி வர 
அத்‌,யாபயதி வர்‌ ஸ்தஎணுர்வர்ச்ச,தி க;ர்த்தம்‌ வா55பத்‌வயதே 
ப்ரவாமீயதே பாபீயாந்‌ ப,வதி யாதயாமந்யஸ்ய சரந்தாம்ஸி 
ப,வந்தி'' [எவன்‌ ரிஷி, சந்தஸ்‌, தேவதை, பிரயோகம்‌ 
இவைகளைத்‌ கெரிக்துகொள்ளாமல்‌ மந்த்ரத்தைக்கொண்டு 
மாத்திரம்‌ யாகம்‌ செய்றோனோ, யாகத்தைச்‌ செய்விக்றொனோ. 
அத்யயனம்‌ சேய்விக்கறுினோ, அவன்‌ பட்டுப்போன மர 
மாகிறான்‌; பள்ளத்தில்‌ விழுகிறான்‌; மரணத்கையாவ்து 
அடைகிறான்‌; = பாபியாகிறான்‌ இவனுடைய மந்த்ரங்கள்‌ 
வீர்யமற்றவைகளர்க ஆகின்‌ றன. ] । 
அவிதி,த்வா ருஷிம்‌ சந்தே தைவதம்‌ யோக,மேவ =| 
யோக5த்‌,யாபயேத்‌ யாஜயேத்‌, வா (யஜேத்‌, வா5பி) பாபீயாந்‌ 
ஜாயதே து 6४-॥ 
[ரஷியையும்‌.சந்தஸ்ஸையும்‌,தேவதையையும்‌, ப்ரயோக த்கை 
யும்‌ அறியாமல்‌ எவன்‌ அத்யயனம்‌ செய்விக்கிறானோ, யாகம்‌ 
செய்விக்கறானோ (செய்கிறழுனோ) அவன்‌ பாபியாக ஆகிறான்‌. ] 

“அத, யோ மந்த்ரே மந்த்ரே வேத,| ஸ ஸர்வமாயுரேதி | 

, ஸஸ்ரேயார்‌ ப,வதி। அயா தயாமாந்யஸ்ய ச,ந்த,ம்ஸி ப,வந்தி॥” 
[எவன்‌ மந்திரங்கள்‌ தோறும்‌, (ரிஷி சந்கஸ்‌ கேவகை 
ஆகிய) இவைகளை =9, 8 (7 छो, அவன்‌ பூர்ணமான ஆயுளை 
அடைகிறான்‌; அவன்‌ புகழுடன்‌ வீளங்குகிறான்‌; அவனுடைய 
மந்திரங்கள்‌ வீர்பமுடையவையாக ஆகன் றன. ] 


“ருஷிம்‌ சந்தே, தே,வதாங்ச த்‌,யாயேர்மந்த்ரஸ்ய ஸர்வத,ா। 
` யஸ்து மந்த்ரம்‌ ஜபேத்‌,கரர்க்‌,ய! क 55540 தஸ்ய பலம்‌ 

பவேத்‌ |!” 
[கார்க்யமுனிவரே! எவன்‌ மந்திரத்‌தினுடைய ருஷி. சந்தஸ்‌, 
தேவதை இவைகளை எப்போதும்‌ தியாடம்‌ செய்சறோனோ, 
எவன்‌ மந்திரத்தை ஓஜபிக்கறுனோ. அவனுக்குப்‌ பலஸம்ருத்தி 
(நிறைவு) உண்டாகும்‌. ] 

“ ஸ்தளாணுரயம்‌ ப௱ரவஹ: கில அதீ,த்ய வேதம்‌ ए 
விஜாகாதி யோரர்த்தம்‌। யோ5ர்த்தஜ்ஞ இத்‌ ஸகலம்‌ ப,த்ஸ 
100० 65 ஸ நாகமேதி ஜ்ஞாநவிதூ,தபாப்மா ॥|' ' 
[வேதத்தை அத்யயனம்‌ செய்தும்‌. எவனொருவன்‌ அதன்‌ 
பொருளை அறியவில்ல்யோ. அவன்‌ சுமைதாங்கி 
யாகிறா।னன்றோ. எவன்‌ பொருளை அறிகறுனோ அவன்‌ 
ஸகலமங்களங்களையும்‌ அடைகிறான்‌; ஜ்ஞானத்தால்‌ பாபம்‌ 
நீங்கப்பெற்றவனாய்‌ அவன்‌ ஸ்வர்க்கத்தை அடைகறொன்‌ . | 
என்று ங்ருதிஸ்ம்ருதிகளில்‌ சொல்லப்பட்டிருப்பதால்‌., மந்தி 
ரங்களின்‌ அர்த்தமும்‌. ரிஷி, சந்தஸ்‌, தேவதை இவைகளும்‌ 
அவசியம்‌ அறியவேண்டியவைகள்‌ என்று ஏற்படுகிறது. 

ருஷி என்றால்‌ யார்‌? சந்தஸ்‌ என்றால்‌ என்ன? தகேவகை 
என்றால்‌ எது? இவைகளுக்குள்‌ என்ன ஸம்பந்தம்‌? எதற்‌ 
காக நாம்‌ இவைகளை அறியவேண்டும்‌? என்கிற கேள்வி 
கள்‌ ஏற்படுகின்றன. 


“யோ யஸ்ய வாக்யம்‌ மந்த்ர: ஸ தஸ்ய ருவி:"' 

[எந்த மந்திரம்‌ எவருடைய வார்த்தையோ. அவர்‌ அதற்கு 
ருஷி.] என்று பெள௩கபகவான்‌ சொல்லியிருப்பதிலிருந்‌ து 
மந்திரத்தை எவர்‌ முதலில்‌ அறிந்து வெளிப்படு த்தனரோ. 
அவர்‌ அந்த மந்திரத்திற்கு ருஷியெனப்படுகிறோர்‌ என்று 
ஏற்படுகிறது. அந்த மந்திரத்கை ஐபிப்பதற்கு முன்‌ 
அவருக்கு ஈம்முடைய நஈன்றியறிவைக்‌ காட்ட அவர்‌ 
பெயரைச்‌ சொல்லவேண்டியது கடமையே. ஆழ்வார்களின்‌ 
பிரபந்த ஆரம்‌்பத்திற்கு முன்னும்‌.  ஆசாரியர்களுடைய 
கிரந்தங்களின்‌ ஆரம்பத்திலும்‌, அவரவர்‌ தனயன்‌ களை 
அறுஸந்திப்பதும்‌ இந்த நியாயத்தனலேயே. 
“ச௪ந்தேோபி,ரேவாத்மாநம்‌ ச,௱த,ஙித்வா உபாயாக்த: 
ச,ந்த;ஸாம்‌ ச,ந்த,ஸ்த்வம்‌'* 
[வேதவாக்கியங்கள்‌, தங்களைச்‌ சந்தஸ்ஸாுக்களினால்‌ மறைத்‌ 
அக்‌ கொண்டு வந்தன. (ஆகையினால்‌) சந்தஸ்ஸாுக்களுக்கு 
சந்தஸ்‌ என்று பெயர்‌ எஏற்படுகிறது.] என்று ச்ருதி 
சொல்லிற்று. ப்ரஸித்தமான சந்தஸ்ஸுக்கள்‌ ஏழு. 'பூ!' முத 
லிய ஏழு வ்யா ஹ்ரு திகளுக்கு ஏழு சந்தஸ்ஸாக்கள்‌ சொல்லப்‌ 
பட்டிருக்கின்றன. சந்தஸ்ஸாகிற பெட்டியில்‌ மந்திரமாகிற 
தனம்‌ மறைத்து வைக்கட்பட்டிருக்கிறது. பெட்டியைத்‌ 
திறந்து தனத்தை எடுப்பதுபோல்‌ சந்தஸ்ஸின்‌ லக்ஷண த்தை 
யும்‌. ஸ்வரத்தையும்‌ அனுஸரித்து மந்திரத்தை உச்சரிக்க 
வேண்டும்‌. 
“யோ$ர்த்த, உச்யதே ஸா தேவதா'' 
[மந்திரத்தினால்‌ எந்த வஸ்து ப்ரதிபாதிக்கப்படுகிறதோ, 
அத தேவகை.] என்றார்‌ மெளநகர்‌. பலவிதமான மந்திரங்‌ 
களில்‌ பல பல கதேவதைகளைச்சொல்லும்‌ ~ சப்தங்கள்‌ 
சொல்லப்பட்டிருக்கின்‌ றன. அவைகள்‌ அவர்களை மட்டும்‌ 
குறிக்கன்‌ றனவா. அல்லது அவர்களுக்கு அந்தர்யாமியான 
ஈரராயணனையும்‌ குறிக்கன்‌ றனவா என்னும்‌ கேள்வி ஏற்படு 
கிறது. சாரிரகமீமாம்ஸாசாஸ்த்ரத்தில்‌ பகவான்டா தராயணர்‌ 
எல்லா தேவதைகளும்‌ பரமாத்மாவின்‌ சரீரமென்றும்‌, 

சரீரத்தைக்‌ குறிக்கும்‌ சப்தங்கள்‌ சரீரியரான பரமாத்மாவை 
யும்‌ குறிக்கும்‌ என்‌ றும்‌ நிர்ணயித்திருக்கறார்‌. மந்திரங்கள்‌ 
இரண்டு வகைப்பட்டவை. சல நேராகவே பகவானைச்‌ 
சொல்லுபவை; மற்றும்‌ சில பரமபுரறுஷனுடைய விபூதி 
(ஐங்வர்யம்‌) ஆகிய தேவைகளைச்‌ சொல்லி. அவர்கள்‌ மூல 
மாக அவர்களுக்கு அந்தர்யாமியான அச்சுகனையும்‌ சொல்லு 
பவை. ஸந்த்யாவந்கனமந்த்ரங்களில்‌ பெரும்பா ன்மை 
யானவை இரண்டாவது வகையைச்‌ சேர்ந்தவையே. 


ஸந்த்யாவந்தந! இகள்‌ அத்வைதத்திற்கு அநுகுணமா? 
வீசிஸ்டாத்வைதத்துக்கு ஏற்றவையா? என்கிற கேள்வி 
ஏற்படுறெது. அத்வைதிகள்‌ வேதத்தை அத்யயனம்‌ செய்‌ 
கிறார்கள்‌; அத்யயனமும்‌ செய்விக்றொர்கள்‌. வேதவாக்யங்‌ 
களில்‌ சிலவற்றிற்கு மஹாவாக்யங்களென்று மஹிமை 
கூறுகிறார்கள்‌. வர்ணாங்ரமதர்மங்களில்‌ சேர்ந்த ஸ்நாமம்‌. 
ஸந்த்யா வந்தனம்‌. யஜ்ஞம்‌ முசகலியவைகளை ப்ரஹ்மார்ப்ப 
ணம்‌ என்று சொல்லி அநுஸ்டித்தும்‌ வருகிறார்கள்‌ 
கநபாடிகள்‌. திக்ஷிதர்கள்‌ முதலிய பட்டங்களையும்‌ வைத்துக்‌ 
.கெொண்டிருக்கறொர்கள்‌. அப்படியிருக்க ஸந்த்யாவந்தனம்‌ 
அத்வைதத்திற்கு அநுகுணமான தல்லவென்கற ஸந்தேஹம்‌ 
எப்படி ஏற்படக்கூடும்‌? என்று கேட்கலாம்‌. 


“ந வர்ணா इह வர்ணாம்ரமாசாரதர்மா 
நமே தாரணா த்யாகயோகளத,யோ$பி | 
௩ வேதா ந யஜ்ஞா ௩ தீர்த்தும்‌ ப்‌,ருவந்தி 
௩ एए कणा ௩ ஸமாஸ்த்ரம்‌ ௩ ஸிஷ்யோ ந மபிக்ஷா!।! 
[எனக்கு வர்ணங்கள்‌. கிடையாது; வர்ணாங்ரமாசார தர்ம்ங்‌ 
களும்‌ கிடையாது; காரணையும்‌, சகுயானம்‌. யோகம்‌ 
முதலியவையும்‌ இல்லை; வேதமும்‌ -இல்லை; .யஜ்ஞங்களும்‌ 
இல்லை; திர்த்தங்களும்‌ இல்லையென்றே .( முன்னோர்கள்‌ ) 
சொல்லுகிறார்கள்‌: ஆஜ்ஞைசெய்பவனும்‌ இல்லை; சாஸ்த்ர 
மும்‌ இல்லை; சிஷ்யனும்‌ இல்லை; சிஷையும்‌ இல்லை: ] என்று. 
அக்வைதிகள்‌ தங்கள்‌ நெந்தங்களில்‌ எழுதி வைத்திருக்கிறார்‌ 
கள்‌. அத்வைதிகள்‌ ஸந்யாஸம்‌ வாங்கிக்கொண்டவுடன்‌ 
சிகையையும்‌. ஸூத்ரத்தையும்‌ விட்டுவிடுகிறார்கள்‌. உயி 
ருடனிருக்கும்‌ வரையில்‌ செய்யவேண்டியதான ஸந்த்யா 
வந்கனாதிகளையும்‌ விட்டுவிடுகிறார்கள்‌. இதை மனத்‌ திற்கொண்டே 

“ஹ்ந்த்‌யாவந்தரவேளாயாம்‌ ப்‌,ரஹ்மா5ஹமிதி மந்யஸே | 
கண்டல்ட்‌,டுகவேளாயாம்‌ தண்டலாத;ய தாவஸி 1" 

[ஸந்த்யாவந்தனம்‌ செய்யவேண்டிய வேளையில்‌ நான்‌ 
ப்ரஹ்மம்‌ ' என்று நினைக்கிறாய்‌. குஞ்ஜாலாடு விநியோகம்‌ 
செய்யும்‌ வேளையில்‌ தடியை எடுத்துக்கொண்டு தாவித்தாவி 
ஒடுரறோய்‌.] என்று ஒரு ஹாஸ்யரஸமுள்ள ங்லோகம்‌ ஏற்‌ 
பட்டிருக்கிறது. வைஷ்ணவ ஸந்யாஸிகள்‌ சிகை. ப்ரஹ்ஃ 
ஸூத்ரம்‌. ஸந்த்யாவந்தனம்‌ முதலியவைகளை வீடுவ தில்லை. 

“அஸ்மிக்‌ மமாஸ்த்ரே....ஆத்மைகத்வவிஜ்ஞர௩ம்‌ 

ப்ரதிபிபாதவிஷிதம்‌ । 
அஸ்ய ஹி பே,க,வலம்பி, கர்மஜ்ஞா௩ம்‌ க்வோபயுஜ்யதே ॥'' 
[இந்க மாஸ்க்ரத்தில்‌ ஆத்மா ஒன்றே என்னும்‌ அறிவே 
சொல்ல ப்படவேண்டியது. இதற்கு பேதத்தையே ஆகார 
மாகக்‌ கொண்ட கர்மஜ்ஞானம்‌ எங்கு உபயோகப்படும்‌? ] 
என்றம்‌, 

“ வர்ணாங்ரமவிமேோஷ = कणा 5५01 ஸாத,ந இதிகர்த்த- 
வ்யதாத்‌,யநந்தவிகல்பாஸ்பத;ம்‌ கர்ம ஸகலபே,த,தர் மந 
நிவ்ருத்திரூபா 5ஜ்ஞாருநிவருத்தே: கதஹமிவ ஸாதம்‌ பவேத்‌” 
[ வர்ணவிபோஷங்கள்‌. ஆங்ரமவியேோஷங்கள்‌. ஸாத்யம்‌. 
ஸாதனம்‌. இதிகர்த்தவ்யதை முதலிய எண்ணற்ற பேதங்‌ 
களுக்கு இருப்பிடமான கர்மம்‌ எல்லா பேத அறிவையும்‌ 
போக்கடிக்கையா கிற அஜ்ஞார௩ நிவ்ருத்திக்கு எப்படித்தான்‌ 
ஸாதனமாகும்‌?2] என்றும்‌ ஸ்ரீபாஸஷ்யம்‌ லகுயூர்வப்க்ஷத்‌ தில்‌ 
அத்வைதிகளின் மதம்‌ விவரிக்கப்பட்ட து. “ஜ்ஞானம்‌ ஒன்றே 
உண்மை; ஜ்ஞாதா. ஜ்ஞோயம்‌ முதவியவையெல்லாம்‌ பொய்‌” 
என்று சொல்லும்‌ அத்வைதிகளுக்கு ' ஸந்த்யாவந்கனம்‌ 
முதலியவை அநுகுணமானவையல்ல என்பது தெளிவாகும்‌. 

“"தஸ்யைவ வேதஸ்ய த்‌,யாஈரூபஸ்ய 
அஹர ஹர நுஷ்டீயமா நஸ்ய 
அப்‌,யாஸாதே,யா 5திரயஸ்ய ஆப்ரயாணாத,நுவர்த்தமா௩ஸ்ய 
ப்‌,ரஹ்மப்ராப்திஸாத,நத்வாத்‌ தது;த்பத்தயே ஸர்வாணி 
ஆஸரமகர்மாணி யா வஜ்லஜீவம்‌ அநுஷ்டே,யா௩ி |" 
( இனந்தோறும்‌ அதுஷ்டிக்கப்படுவ தும்‌, அப்பியாஸத்‌ தினால்‌ 
விருத்தியடைவிக்கத்தக்க தும்‌, சாகும்‌ வரையில்‌ தொடர்ந்து 
வருவதுமான த்யானரூபமான அவ்வறிவே ப்ரஹ்மத்தை 
அடைவதற்கு ஸா தன மாயிருக்கையால்‌. அது உண்டாவதின்‌ 
பொருட்டு எல்லா ஆங்ரமகர்மங்களும்‌ அனுஷ்டிக்க 
வேண்டியவையே.] என்று லகு ஸித்தார்த தீதில்‌ சொல்லப்‌ 
பட்டது. ஹாரீதஸ்ம்ருதியில்‌ ஆறாவது அக்தியாயத்தில்‌ 

“க்ருதஸந்த்யஸ்‌ ததோ ராத்ரிம்‌ ஈயேத்‌ தே.வக்‌ருஹாதி,ஷா.... 
த்ரித,ண்டபப்‌ ருத்‌ யோ ஹி ப்ருத,க்‌ ஸமாசரேத்‌ 
1 | ८००४ ए; பமறைர்‌ யஸ்து (4307 ८ कप ठव: | 
ஸம்முச்ய ஸம்ஸாரஸமஸ்தப,க்த,நாத்‌ 

ஸ யாதி விஷ்ணோரம்ருதாத்மந: பத,ம்‌ |" 
[ஸர்யாஸியானவன்‌, ஸாயம்‌ ஸந்த்யையைச்‌ செய்து. டிற்கு 
ராத்ரி வேளையை தேவாலயம்‌ முதவியவிடங்களில்‌ கழிக்கக்‌ 
கடவன்‌; தீரிதண்டத்தை தரித்த எந்த ஸர்யாஸியானவன்‌. 
இந்திரியங்களை வெளிவிஷயங்களில்‌ செல்லாமல்‌ அடக்க. 
க்ரமமாக இம்மாதிரி ௩டக்கறானோ. அவன்‌ ஸம்ஸாரத்தி 
வள்ள எல்லா பந்தங்களினின்றும்‌ விடுபட்டு அழிவற்ற 
ஸீவருபத்தையுடையவனான விஷ்ணுவின்‌ பரமபதத்தை 
அடைகறோன்‌ , ] என்று ஸரந்யாஸிகளுக்கும்‌ ஸந்த்யாவந்தனம்‌ 
விதிக்கப்பட்டது. அதே அத்தியாயத்தில்‌ அவர்கள்‌ ப்ராணா 
யாமம்‌, காயத்ரீ முதலியவைகளையும்‌ அநுஷ்டிக்கவேண்டு 
மென்‌ று சொல்லியிருக்கிறார்‌. அடுத்த அத்தியாயத்தில்‌ 
“யதராந்கம்‌ மது,ஸீம்யுக்தம்‌ மது,ர( ச? )ாந்நேக ஸம்யுதம்‌ । 
உபராப்‌யாமேவ பக்ஷாப்‌யாம்‌ யத; கே, பக்ஷிணாம்‌ க,தி: ॥ 
ததை,வ ஜ்ஞாஈகர்மப்‌,யாம்‌ ப்ராப்யதே (अ कण एणा ७०९७0 
[எப்படி இனிய 09४5 ॐ! ८ - न्न கலந்த உணவும்‌, உணவுடன்‌ 
கலந்த இனிய ரஸமம்‌ (உண்ண போக்யமாயிருக்‌ 
தின்றனவோே ). எப்படி இரண்டு இறக்கைகளுடன்‌ ஆகாயத்‌ 
தில்‌ பக்ஷிகள்‌ பறக்கின்றனவோ, அப்படியே ஜஞானத்தி 
னாலும்‌. கர்மத்தினாலும்‌ அழிவற்றதான ப்ரஹ்மம்‌ அடையப்‌ 
படுறது. ] என்று கர்மா துஷ்டானம்‌ மோக்ஷஸா தன மென்று 
சொல்லப்பட்டது. மற்ற ஸ்ம்ருதிகளிலும்‌ இம்மா திரிய 
சொல்லப்பட்டிருக்கிறது. இவைகளிலிருந்து கர்மாநுஷ்டா 
னம்‌ விஷ்டாத்வைதிகளாலும்‌. ஸ்ம்ருதிகர்த்தாக்களாலும்‌ 
ஆகரிக்கப்பட்டதென்றும்‌. ஸந்த்யாவந்தனம்‌ முதலிய 
கர்மா நுஷ்டானங்கள்‌, வீசிஷ்டாத்வைதஸித்தாந்தத்திற்கே 
பொருந்தியவையென்‌ றும்‌ வீளங்குகிறது. 
“ம்ருதிஸ்ம்ருத ச விப்ராணாம்‌ சக்ஷாஷீ தேநிர்மிதே | 
காணஸ்‌ தத்ரைகயா ஹீநோ த்‌,வாப்‌,யாமந்த, ப்ர8ீர்த்தித:॥”' 
[ வேதங்களும்‌. ஸ்ம்ருதிகளும்‌, ப்ராஹ்மணர்களுக்கு தெய்வத்‌ 
தனால்‌ ஏற்படுத்தப்பட்ட இரண்டு கண்கள்‌; அதில்‌ ஒன்றை 
அறியா தவன்‌ காணன்‌ (ஒரு கண்‌ பொட்டையன்‌ ) எனறும்‌ 
இரண்டுமறியா தவன்‌ அந்தன்‌ (முழுக்குருடன்‌) என்றும்‌ 
சொல்லப்படுறோன்‌.] என்று. ஹாரீதஸ்ம்ருதியில்‌ (1-2௦) 
சொல்லப்பட்டது. இருபிறப்பாளர்க்குப்‌ பல 
ஸம்ஸ்கா ரங்களைச்‌ செய்யவேண்டுமென்‌ ஓுங்ரு திஸ்ம்ரு திகளில்‌ 
சொல்லப்பட்டிருக்றெ அ. 
"एषह ஜாயதே முத்‌: கர்மணா ஜாயதே த்விஜ: 
[பிறக்கும்போது சூத்ரனாக்ப்‌ பிறக்றொன்‌; ஸம்ஸ்காரங்‌ 
களாலேயே த்விஜனாக छन्नेन, என்று படிக்கப்பட்ட. 
த்விஜர்களுக்கு முக்யமான ஸம்ஸ்காரம்‌ உபநயனமாயிருந்த 
போதிலும்‌ அதற்கு முன்னும்‌ பல ஸம்ஸ்காரங்களை அவசியம்‌ 
செய்யவேண்டியிருக்கிறது. அவைகளைச்‌ செய்யாமல்‌ உப 
நயனம்‌ செய்யமுடியாது. ஒரு சிசு உண்டாவதற்கு முன்‌ 
அவனுடைய தாய்தந்தையருக்கு மரஸ்த்ரப்படி விவாஹம்‌ 
ஆகியிருக்கவேண்டும்‌; விவாஹம்‌ தூர்மப்ரஜோத்பத்திக்‌ 
காகவே என்று ஸங்கல்பம்‌ செய்யப்படுகிறது. யிறகு 
கர்ப்பளதளா காலத்தில்‌ * விஷ்ணுர்யோரிம்‌ கல்பயது '' 
என்னும்‌ மந்திரத்தினால்‌ கர்ப்பதாஈ ஸம்ஸ்காரம்‌ செய்யப்‌ 
படுகிறது. கர்ப்பம்‌ தரித்தவுடன்‌ புருஷப்ரஜையாகப்‌ 
பிறக்கவேண்டுமென் பத்ற்காகப்‌ பும்ஸவநம்‌ என்னும்‌ 
ஸம்ஸ்காரம்‌ செய்யப்படுகிறது. ஆறு. அல்லது எட்டாவது 
மாதங்களில்‌ விஷ்ணு பலியுடன்‌ ஸீமந்தோந்றயயறம்‌ என்னும்‌ 
ஸம்ஸ்காரம்‌ செய்யப்படவேண்டும்‌. ஸீமந்கத்திற்கு முன்‌ 
சிசு ஜனித்துவிட்டால்‌. புண்யாஹவாசனத்திற்குப்‌ பிறகு 
ஸீமந்தம்‌ செய்தேயாகவேண்டும்‌. குழந்தை பிறந்தவுடன்‌ 
செய்யவேண்டிய முதல்‌ ஸம்ஸ்காரம்‌ ஜாதகர்மமாகும்‌. 
பிறந்த பதினோராவது நாள்‌ நாமகரணம்‌ செய்யவேண்டும்‌. 
நாலாவது மாதத்தில்‌ குழந்தை வீட்டிலிருந்து வெளியிற்‌ 
செல்லுவதாகிற நிஷ்க்ரமணம்‌ என்னும்‌ ஸம்ஸ்காரத்தைச்‌ 
செய்யவேண்மிம்‌. ஆறாவது மாதத்தில்‌ அந்£ப்ரானம்‌ 
(உணவு ஊட்டுதல்‌) என்னும்‌ ஸம்ஸ்காரம்‌ செய்யவேண்டும்‌. 
அதன்‌ பிறகு மூன்றாவது வயது பிறந்த பிறகு செளளம்‌ 
(சிகை வைத்தல்‌ ) என்னும்‌ ஸம்ஸ்காரம்‌ செய்யப்பட 
வேண்டும்‌. அவரவர்‌ குலாசாரப்படி பூர்வசிகையோ, மத்யம 
சிகையோ, அபரசிகையோ வைக்கவேண்டும்‌. அப்படிச்‌ 
செளளகர்மம்‌ செய்து சிகை வைத்தக்கொள்ளா தவர்களும்‌, 
வைத்துக்கொண்டு-விட்டவர்களும்‌. மறுபடி கைவைத்துக்‌ 
கொண்டாலொழிய அவர்களுக்கு உப௫யனம்‌ செய்யக்‌ 
கூடாது. செய்தாலும்‌ அது வ்யர்த்தமேயாகும்‌. உபநயனம்‌. 
விவாஹம்‌ முதலியவைகள்‌ ஆனபிறகு சிகாவிஸர்ஜாம்‌ 
செய்தவர்களுக்கு மறுபடி சிகைவைத் துக்கொண்டு புஈரு 


பயனம்‌ செய்துகொள்ளவேண்டும்‌. இல்லாவிடில்‌ அவர்கள்‌ 
பதிதர்களாகவும்‌ கர்மங்கள்‌ அநுஷ்டிப்பதற்கு யோக்யதை 
யற்றவர்களாஃவும்‌ ஆகிறார்கள்‌; செய்யும்‌ கர்மங்களும்‌ 
நிஷ்ப்ரயோ ஜனமா கன்‌ றன. 


மிகும்‌ புண்ட்‌,ஞ்ச ஸ9த்ரஞ்ச ஸமயா சாரமேவ ௪ | 

பூர்வைராசரிதம்‌ குர்யாத;்யத; பதிதோ ப,வேத்‌ ॥ 
[சகையையும்‌. புண்ட்ரத்கையும்‌., ப்ரஹ்மஸ௫த்ரத்தையும்‌, 
ஸமயாசாரங்களையும்‌. முன்னோர்களால்‌ அநுஷ்டிக்கப்பட்ட 
படியே செய்யவேண்டியது; இல்லாவிடில்‌ பதிதனாகறான்‌. ] 
என்றும்‌ 
“ஸதே,பவீ,தீ சைவ ஸ்யாத்‌ ஸதா பத்‌ தலபிகேள த்விஜ: 
[ப்ரரஹ்மணன்‌ எப்போதும்‌ யஜ்ஞோபவீதத்தை தரித்த 
வாயிருக்கவேண்டும்‌; எப்போதும்‌ முடிந்த சிகையுடனீருக்க 
வேண்டும்‌.] என்றும்‌ ஸ்ம்ருதிகளில்‌ சொல்லப்பட்ட அ. 
சிகையை விட்டவர்களின்‌ கதி முகற்கோணல்‌ முற்றும்‌ 
கோணல்‌ என்பதுபோலவேயாகும்‌. 


இம்மாதிரி ஸம்ஸ்காரங்கள்‌ பெண்களுக்கு உண்டா ? 
இர்த' ஸம்ஸ்கரரங்கள்‌ எதற்காகச்‌ செய்யப்படுகின்‌ றன ? 
என்னும்‌ கேள்விகள்‌ எழுகின்றன. மேலே கண்ட ஸம்‌ 
ஸ்காரங்கள்‌ பெண்களுக்கு மந்த்ரமில்லாமல்‌ செய்யப்படு 
இன்றன; விவாகம்‌ மட்டும்‌ அவர்களுக்கும்‌ மந்தரத்துடன்‌ 
செய்யப்படுகிறது. இந்த ஸம்ஸ்காரங்களைச்‌ செய்வதற்கு 
இரண்டு காரணங்கள்‌ உள: (1) ஸ்த்ரீ புருஷர்களின்‌ 
சுக்ல சோணிதங்களின்‌ சேர்க்கையினால்‌ மநுஷ்ய சரீரம்‌ 
ஏற்படுறெது. இக்காரணத்தினால்‌ அது அசுத்தியையும்‌ 
பாபத்தையும்‌ உடையது என்பத சொல்லாமலே வீளங்கும்‌. 
அவை போகாவிடில்‌ ப்ரஹ்மோபதேசத்திற்கு யோக்யதை 
கிடையாது. மேற்‌ சொன்ன ஸம்ஸ்காரங்கள்‌ இந்த 
அசுத்தியையும்‌. பாபத்தையும்‌ போக்கடிக்கின்‌ றன என்று 
ஸ்ம்ருதிகளில்‌ கோவிக்கப்படுகிற து.  


“கர்ப்பாத,ாம்‌ ருதெள பும்ஸ: ஸவரம்‌ ஸ்பந்த.ாத்‌ புரா | 
ஷஷ்டே,$ஷ்டமே வா ஸீமந்த: ப்ரஸவே ஜாதகர்ம =| 
அஹுந்யேகாத,;மே ௩ாம சதுர்த்தே, மாஸி நிஷ்க்ரம: | 
ஷஷ்டே,$ந்நப்ராமமகம்‌ மாஸி சூடன்‌ கா௩்யா யதராகுலம்‌ || 
ஏவமே௩: ७०७४ யாதி பீ,ஜகரர்ப்ப, ஸமுத்‌,ப,வம்‌ | 
தூஷ்ணீமேதா: க்ரியா: ஸ்த்ரீணாம்‌ விவாஹஸ்து ஸமந்த்ரக:।॥”' 

[ருதுகாலத்தில்‌ கர்ப்பாதான த்தையும்‌, கர்ப்பம்‌ அசைவ 

தற்கு முன்‌ பும்ஸவனத்தையும்‌. ஆறு அல்லது எட்டாவது 

மாதத்தில்‌ ஸீமந்தமும்‌, குழந்தை பிறந்தவுடன்‌ ஜாதகர்ம 
மும்‌, பிறந்தபின்‌ பதினோராவது நாள்‌ நாமகரணமும்‌, 
நரலாவது மாதம்‌ நிஷ்க்ரமணமும்‌, அறாவது மாதத்தில்‌ 
அந்கப்ராயனமும்‌. குலாசாரப்படி செளளமும்‌ செய்யப்பட 
வேண்டியது. இம்மாதிரி செய்வதனால்‌. சுக்லசோணிதங்‌ 
களினால்‌ உண்டாகும்‌ பரபமான ॐ சாந்தியடைகிறது. ஸ்த்ரீ 
களுக்கு“ இந்தக்‌ கர்மங்கள்‌ மந்த்ரமில்லாமல்‌ செய்யப்படு 
கின்றன ; “விவாஹம்‌ மட்டும்‌ மந்த்ரத்துடன்‌ செய்யப்படு 

8.7.51. என்று யாஜ்ளூவல்க்ய -ஸ்ம்ருதியில்‌ (1-11. 14, 13) 

சொல்லப்பட்டது (2) ஸம்ஸ்காரங்கள்‌ செய்யப்படுவ 
தற்கு: ஸூக்ஷ்மமும்‌. ரஹஸ்யமுமான மற்றொரு காரணமும்‌ 
உண்டு. .ப்ரஹ்மோடதேசமான்‌.து. பரமாத்மாவைப்‌ பற்றிய 
உபதேசம்‌ என்பது எல்லாரும்‌ ஒப்புக்கொண்டது. 


“காரராயணபரம்‌ ப்‌,ரஹ்ம தத்வம்‌ ஈநாராயண: பர: | 
நாராய்ணபரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண: பர: |!” 

என்று வேதம்‌ ஈாராயண்னையே- பர்ப்ரஹ்ம்மாகவும்‌. பர்‌ 
தத்வமாக்வும்‌. பரஞ்சோதியாகவும்‌” “பரமாத்மாவாகவும்‌ 
ஸர்தேஹத்‌திற்டெமில்லாமல்‌ நிர்ணயித்தது. ப்ரஹ்மமாகிற 
நாராயணனைப்‌ பற்றிய உபதேசத்தைப்‌' பெறுவதற்குத்‌ 
தகுந்த யோக்பதையமையும்‌ இந்த ஸம்ஸ்காரங்கள்‌ உண்டாக்கு 
கன்றன. பளீஹ்ய ( வெளி ) ` சத்தியை மட்டுமல்லாமல்‌ 
மநோவாக்கரயங்களா ७८“ த்ரிகரணங்களின்‌' சித்தியையும்‌ 
இந்த ஸம்ஸ்காரங்கள்‌ கொடுக்கின்‌ றன. மேலும்‌! அவைகள்‌ 
படிப்படியாக ஜீவாத்மாவை நாராயணனுக்கு தாஸனாக 
ஆக்குகின்‌ றன. “* லரநபக்ுஷ இவாண்டஹ: '' என்கறபடி 
சிறகொடிந்த பக்ஷி போல்‌ சரீரயில்லாமல்‌ திண்டாடித்‌ திரி 
யும்‌ ஜீவனுக்கு சரீரத்தைக்‌ கொடுப்பது கரர்ப்பாதரத்தின்‌ 
நோக்கமாகும்‌. ° பரிரமாத்யம்‌ கலு துர்மஸாதறீம்‌ ” [சரீர 
மன்றோ முதலாவதான தர்மஸாதனம்‌.] £ என்கிறபடியே 
சரீரமில்லாமல்‌ மோக்ஷோபாயங்களை அநுஷ்டிக்கமுடியா து. 
வைஷ்ணவ ०८८50 5८2 உண்டாகவேண்டுமென்று பகவான்‌ 
விஷ்ணுவிடம்‌ விஜ்ஞாபனம்‌ செய்வதே கர்ப்பதாஈ 
மந்த்ரங்களிலிருந்து தேறி நிற்கும்‌ பொருளாகும்‌. . = 


. அப்படி: உண்டான கர்ப்பம்‌ புருஷ ப்ரஜையாகவேண்டு 
மென்பதற்காக, புருஜஸூக்க உத்தரா நுவாகத்தின்‌ முதல்‌ 
ருக்கும்‌. “ ஸாபர்ணோ$ஸி கருத்மாக்‌ ' என்று தொடங்கும்‌ 
வேதமந்திரங்களும்‌ பும்ஸவநத்தன்போது அறநுஸந்திக்கப்‌ 
படுகின்றன. வேத ஸ்வரூப விஹங்கரா ஜனான கருடனையும்‌. 
கருட (வேத ) வாஹனனான நாராயணனையும்‌ வேதாந்த 
வித்தான வைஷணவ புருஷப்ரஜை உண்டரகவேண்டு 
மென்று பீரார்த்திப்பதே இதன்‌ ரஹஸ்யார்த்தம்‌. விஷ்ணு 
பலியாகிற பாயஸப்ரதானத்தினாலும்‌. ஸீமந்த மந்த்ரங்களா 
லும்‌. ` கர்ப்பத்தைக்‌ கடாக்ஷித்துக்‌ காப்பாற்றவேண்டு 
மென்று எம்பெருமானும்‌, புருஷகாரபூதையான ஸ்ரீதேவி 
யும்‌ பிரார்த்திக்கப்படுகிறோர்கள்‌. இரந்த ஸமயத்திலிருந்து 
ஜனனம்‌ வரையில்‌ ஸாத்விகனன வைஷ்ணவப்ரஜைக்கு 
எம்பெருமான்‌ ளேவை ஸாதிப்பதை 


“கருக்‌ கோட்டியுள்‌ கிட்‌ த கைதொழுதேன்‌ கண்டேன்‌ 
திருக்கோட்டியெந்தை நிறம்‌ 
என்று பூதத்தாழ்வார்‌ பாடினார்‌. 


ஜாயமாநந்து புருஷம்‌ யம்‌ (10०6५1४ மது,ஸஏத; | 
ஸாத்விகஸ்‌ ஸ து விஜ்ஞேய: ஸ வை மோக்ஷார்த்த,சிந்தக:।| 
[பிறக்கும்போது எந்த ஜீவனை மதுஸூதனன்‌ கடாக்ஷிக்‌ 
கிறானோ அவன்‌ ஸத்வ குணத்தையுடையவனென்று அறியத்‌ 
தக்கவன்‌. மோக்ஷத்தை அடையவேண்டுமென்ற சிந்தனை 
யுடையவன்‌ அவனே. ] என்றும்‌ சொல்லப்பட்டது. குழந்தை 
பிறந்தவுடன்‌ 


“விங்வஸ்ய கேதுர்‌ பு,வாஸ்ய கள்ப்பேோ 
2 ४559 ஆப்ருணாத்‌ ஜாயமா௩;”' 
முதலிய மந்திரங்களாலும்‌. 


“ஓம்‌ ஸத,ஸஸ்பதிமத்‌,பு,தம்‌ ப்ரியமிர்த்‌,ஸ்ய காம்யம்‌ 
ஸநிம்‌ மேதாமயாஸிஷம்‌ ஸ்வாஹா"' 

என்னும்‌ மந்திரத்தாலும்‌ ஞானமயனும்‌. ஜ்யோதிஸ்‌ ஸ்வ 
ரூபனுமான ஜீவாத்மா உலகத்திற்குக்‌ கொடிபோன்‌ றவனா 
கவும்‌, மால்‌ சமயத்திற்கோர்‌ மலையிட்ட திபமாகவுமாகி, பரம 
புருஷனுடைய அன்புக்குப்‌ பாத்ரமாகி நித்யஸுரிகளின்‌ 
கோஷ்டியில்‌ சேரக்கடவனென்று பிரார்த்திக்கப்படுகிறது. 
ரூபமற்றவனாயிருந்‌து. சரீரத்தைப்‌ பெற்று ரூபமடைக்த 
ஜீவனை அடையாளம்‌ கண்டு பிடிப்பதற்காக நாமகரணம்‌ 
செய்யப்படுகிற து. 


“ஏகாந்த வயபதே,ஷ்டவ்யோ நைவ க்,ராமகுலாதி,பி,: | 
விஷ்ணுநா வ்யபதே;ஷ்டவ்யச6்‌ தஸ்ய ஸர்வம்‌ ஸ ஏவஹி ||'' 
[பரமைகாந்தியானவன்‌. க்ராமம்‌. குலம்‌ முதலியவைகளால்‌ 
பெயரிட த்தக்கவனல்லன்‌ ; விஷ்ணுவின்‌ பெயரினாலேயே 
சொல்லத்தக்சுவன்‌; அவனுக்கு (உண்ணும்‌ சோறு பருகு 
நீர்‌ தின்னும்‌ வெற்றிலை முதலிய) எல்லாம்‌ அப்பெருமானே 
யன்றோ.] என்று பகவானுடைய பெயர்களை வைஷ்ணவ 
னுக்கு வைக்கவேண்டுமென்று சாஸ்திரம்‌ சொல்லிற்று. 
இப்படிப்‌ பெயர்‌ வைப்பது பாபம்‌ போவதற்கும்‌, 
வைஷ்ணவத்வஸித்திக்குமேயாகும்‌. “நாம மே தேஹி 
பாப்மகோ அபஹத்யை '' [(எம்பெருமானுடைய ) பெயர்களை 
என்னுடைய பாபங்கள்‌ போவதற்காகக்‌ கொடுப்பீராக. ] 
என்று ருக்ரன்‌ பிரமனைக்‌ கேட்டதாகவும்‌, அவன்‌ 
காராயணனுடைய எட்டு பெயர்களைக்‌ கொடுத்ததாகவும்‌ 
வேதத்தில்‌ உத்கோஷிக்கப்பட்டது. இப்படி நாமகரணம்‌ 
செய்வது தானும்‌ தன்னை அழைக்கும்‌ மாதாபிதாக்களும்‌, 
மற்றவர்களும்‌ உஜ்ஜீவிக்க ஹேதுவாதிறடு. நாராயண 
ஈரமஸ்மரணம்‌, உச்சாரணம்‌. லேகளும்‌ முதலியவையும்‌ 
உய்வதற்கு உபாயமாகின்றனவன்றோ. மாதவன்‌ மாதா 
மறலி உலகம்‌ புகாள்‌; நாரணன்‌ தமப்பன்‌ நரகம்‌ புகான்‌. 
நாமகரணத்தின்‌ மற்ற விசஹங்கள்‌ பெரியாழ்வார்‌ 
ப்ரபாவத்தில்‌ விஸ்தாரமாகக்‌ காணலாம்‌. “அர்நம்ப்‌ரஹ்மேதி . 
வ்யஜாநாத்‌'' எனப்பட்ட அந்நத்தை ஊட்டுவதாகிற அந்ந 
ப்ராணனமும்‌ பகவானை அடைவதற்கு ஒரு படியாகும்‌. 
செளளம்‌ எனப்படும்‌ ஸம்ஸ்காரம்‌ மூன்றாவது வருஷத்தில்‌ 
செய்யப்படுகிறது; ப்ரஹ்மம்‌ ப்ரவேசிப்பதும்‌. ஜீவன்‌ 
முக்தியடையும்‌ காலத்தில்‌ சிரஸ்ஸை பேதித்துக்கொண்டு 
போவதுமான இடம்‌ ப்மஹ்மரர்த்ரமெனப்படுகிறது, 
ஊர்த்‌,வக,திக்கு அடையாளமான ஊர்த்வ புண்ட்‌,ரத்தைப்‌ 
போன்ற ஊர்த்‌, வசிகை ப்ஸஹ்மரந்த்த்தில்‌ வைக்கப்பட 
வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. மற்ற சிகை 
களுக்கும்‌ ஸ்களாங்கள்‌ விதிக்கப்பட்டிருக்கின்‌ றன. 


இனி உபாயனமென்னும்‌ ஸம்ஸ்காரத்தைப்பற்றி 
விசாரிப்போம்‌, உபநயனமென்னும்‌ பதத்திற்கு * உபஃ 
ஸமீபத்தில்‌, ஈயனம்‌-(சிஷ்யனை) அழைத்துச்‌ செல்லுதல்‌ ' 
என்று பொருள்‌. யாருக்கு ஸமீபத்தில்‌? என்கிற வினா 
ஏற்படுகிறது. ஸ்ம்ருத்யர்த்த, ஸ'ரத்தில்‌. “ஆசார்ய ஸமீப 
ஈயனம்‌ வா'' என்று சொல்லப்பட்டிருக்கறெது. ஆசாரியனை 
அண்டி, ஸாவித்ரியுப தசம்பெற்று. ப்ரஹ்மத்தின்‌ 
அருகில்‌ செல்வ த ற்கு உபரயனமென்‌ று பெயர்‌. இதனாலேயே 
அதற்கு ப்ரஹ்மோடதேசம்‌ என்று பெயரேற்பட்டது. 
அதற்குப்‌ பிறகு ப்ரஹ்மசாரி என்னும்‌ பெயரும்‌ 
சிஷ்யனுக்கு ஏற்படுகிறது. அவன்‌ தரிக்கும்‌ பூணூலுக்கு 
ப்ரஹ்மஸூத்ரம்‌ என்ற பெயர்‌ வழங்கி வருது. 
உடநயனத்திற்குப்‌ பிறகே வேதாத்மீனம்‌ ஆரம்பிக்க 
வேண்டும்‌. அதனால்‌ * வேதணைமீபாயரம்‌ '. (வேதத்திற்கு 
அருகில்‌. அழைத்துச்‌ செல்லல்‌) என்றும்‌ உபஈயனத்திற்குப்‌ 
பொருள்‌ கொள்ளலாம்‌. வேதவேதாந்தங்களில்‌ உத்கோவிக்‌ 
கப்படும்‌ உண்மைப்‌ பொருள்கள்‌ (தத்துவங்கள்‌ ) யாவை? 
அவைகளில்‌ உயர்ந்த உண்மை . ( பரதத்துவம்‌ ) எது? 
என்பதே. ப்ரஹ்மோபதேசத்தில்‌ விளக்கப்படுகின்றது, 
உபாயனத்திற்கு யஜ்ஞோபவீக தாரணம்‌ ஒரு அவசியமான 
அங்கமாகும்‌. யஜ்ஞோடவீத தாரணத்திற்கு மந்த்ரம்‌ 
பின்வருமாறு: 


எள்ளி परमे पविते प्रजापतेथत्सहजे पुरस्तात्‌ 
आयुष्यमन्रयै प्रतिमुख शुभ्र यज्ञोपवीत बदमस्तु तेजः॥ 
யஜ்ஞோபவீதம்‌ பரமம்‌ பவித்ரம்‌ 
ப்ரஜாபதேர்‌ யத்‌ ஸஹஜம்‌ புரஸ்தாத்‌ | 
ஆயுஷ்யமக்,ர்யம்‌ ப்ரதிமுஞ்ச மமாப்ரம்‌ 
யஜ்ஞோபவீதம்‌ ப,லமஸ்து தேஜ: || 
[ உயர்ந்ததும்‌, பரிசுத்தமானதும்‌, ப்ரஜாபதியாகிய பிரம 
னுடன்‌ முதலில்‌ பிறந்ததும்‌, தீர்க்காயுஸ்ஸைக்‌ கொடுப்ப 
தம்‌. மிகவும்‌ அழகாயிருப்பதுமான யஜ்ஞோபடவீதத்தை 
தரிப்பாயாக; இரந்த யஞ்ஞோடவீதம்‌ (உனக்கு) பலத்தை 
யும்‌, தேஜஸ்ஸையும்‌ கொடுக்கட்டும்‌. ] 

யஜ்ஞனோபவீதமென்றால்‌ அர்த்தமென்ன? “யஜ்ஞோ 
வை வீஷ்ணு '' என்றும்‌. “யஜ்ஞோ யஜ்ஞ்பதிர்‌'' என்றும்‌ 
சொல்லுகிறபடியே பகவான்‌ விஷ்ணுவுக்கு : யஜ்ஞ: ' 
என்பது ஒரு திருராமம்‌. அவனைக்‌ குறித்தே கர்மங்கள்‌ 
செய்யப்படுகிறபடியால்‌ . கர்மங்களும்‌ யஜ்ஞமெனப்படு 
கின்றன... * உபவீதம்‌ ' என்றால்‌ சுற்றியிறாக்கும்‌ வஸ்து. 
யஜ்ஞ்மாகிய வீஷ்ணுவைச்சு ற்‌ றியிருப்ப தனால்‌ யஜ்ஞோபவீத 
மென்ற பெயர்‌ பொருந்தும்‌. இதிலிருந்து உள்ளே அந்தர்‌ 
யாமியான நாராயணன்‌ இருக்கறானென்றும்‌. அவனைச்‌ 
சுற்றியிருப்பத யஜ்ஞோடவீகம்‌ என்றும்‌ ஏற்படுகிறது. 
“" ५18 @१ १ 5 59८0 உடவீதம்‌ '' என்கிறபடியே யஜஞம்‌ செய்வ 
தற்கு அவங்யாபேக்ஷிதமான உபவீதம்‌ என்றும்‌ பொருள்‌ 
கொள்ளலாம்‌. இதிலிநந்து இந்த யஜ்ஞோடிபவீதமில்லாமல்‌ 
எக்கருமத்தையும்‌ அநுஷ்டிக்கமுடியாது என்று ஏற்படு 
கிறது. இதற்கு ப்ரஹ்மஸூக்ரமென்றும்‌ மற்றொரு 
பெயருண்டு. “ஸுூசநாத்‌ ஸ ூத்ரமித்யாஹாு: '' என்று 
சொல்லப்பட்டபடியே ப்ரஹ்மத்தை ஸூசிப்பது (உணர்த்து 
வது) ப்ரஹ்மஸுூத்ரமாகும்‌. இது எப்படி ப்ரஹ்மத்கைக்‌ . 
காட்டுகிறது? எனில்‌: ப்ரஹ்மஸூத்ரம்‌ முப்புரியூட்டின 
தாகவும்‌ ப்ரஹ்ம முடிச்சுடன்‌ கூடினதாகவும்‌ இருக்கது. 
இந்த மூன்று நூல்களும்‌ சித்‌. அசித்‌. ஈச்வரன்‌ என்னும்‌ 
மூன்று தத்துவங்களும்‌ ஒன்றாகச்‌ சேர்ந்திருக்கன்‌ றன 
என்பதைக்‌ காட்டுகிறது. சாரீரகமீமாம்ஸாசாஸ்த்ர த்தின்‌ 
தாத்பர்யம்‌ முழுவதும்‌ இதில்‌ அடங்கியிருக்கின்‌ றது. 
யஜ்ஞோபவீதகத்தை தரித்தி. ப்ரஹ்மோபகதகேசம்‌ செய்யப்‌ 
பெற்ற பின்பே ஸந்த்யாவந்தனத்தைச்‌ செய்வதற்கு 
யோக்யதை உண்டாகிறது. ப்ரஹ்மசாரிக்கு ஒரு பூணூலும்‌, 
க்‌,ருஹஸ்‌தரர்களுக்கு இரண்டு பூணூலும்‌, உத்தரீயார்த்தம்‌ 
மூன்றாவது பூணூலும்‌ தரிச்கவேண்டுமென்று விதிக்கப்‌ 
பட்டிருக்கிறது. ஊர்த்வகதிக்குக்‌ கொண்டுபோதற்கு அறி 
குறியாக யஜ்‌ஞோபவீதத்தின்‌ ப்ரஹ்மமுடிச்சு மேல்‌ நேக்கி 
யும்‌, அந்தர்யாமியான அச்யுதன்‌ அமர்ந்திருக்கும்‌ இருதய 
கமலத்திற்கு நேராகவும்‌ இருக்கவேண்டும்‌. 

छा பே, ரூர்த்‌, வமநரயுஷ்யமதேன நாபேஸ்‌ தபோக்ஷய: | 
தஸ்மாந்காபி,ஸமம்‌ குர்யாது,வவீதம்‌ விசக்ூஷண: || 
[யஜ்ஞோபவீதம்‌ நாபிக்கு மேலிருந்ததாகில்‌ ஆயுள்‌ குறைவு; 
நாபிக்குக்‌ கீமே தொங்கிற்றாகில்‌ தபோநாசம்‌ ஏற்படும்‌; 


ஆகையால்‌ அறிவாளியாயிருப்பவன்‌ யஜ்‌3ஞாபவீக த்தை 
5719 வரையில்‌ தொரங்கும்படியாகச்‌ செய்யக்கடவன்‌.] 
என்றும்‌, ' அதிக பருமனுடையதாயிருநதால்‌, சீர்த்தியை 
அபஹரிக்கிறது; மிகவும்‌ மெல்லியதாயிருந்தால்‌ தனத்தை 
அபஹரிக்கறது.'' என்றும்‌. யஜ்ஞோடவீதத்தின்‌ அளவு 
சொல்லப்பட்டமு. காத்யாயன ஸ்ம்ருதியிலும்‌(1-3) 
ப்ருஷ்ட,லம்மே ச ஈாப்‌,யாஞ்ச த்‌,ருதம்‌ யத்‌, ०95 55685 கடிம்‌ | 
தத்‌, தரார்யமுபவீதம்‌ ஸ்யாந்‌ ஈரதே,£ ® 01150 ௩ சோச்ச்ரிதம்‌ || 
[(பின்புறம்‌) முதுகெலும்பிலும்‌. (முஃ புறம்‌) ஈநாபிவரையி 
லும்‌ பொருந்தும்படியாகவும்‌. இடுப்பை அடைவதாகவும்‌ 
உபவீதம்‌ தரிக்கப்படவேண்டும்‌; இதைக்காட்டிலும்‌ ழே 
கதொங்கவும்‌ கூடாது; மேலே இருக்கவும்‌ கூடாத.] என்று 
சொல்லப்பட்ட த. 


“அஷ்டவர்ஷம்‌ ப்‌,ராஹ்மணமுபநயேத்‌ | கர்ப்பாஷ்டமே வா || 
ஏகாதஹுவர்ஷம்‌ ராஜந்யம்‌ | த்‌,வாத,மாவர்ஷம்‌ வையமயம்‌ | * 
[கர்ப்பம்‌ தரித்த பிறகாவது. பிறந்த பின்பாவது. எட்டு 
வயதான ப்ரரஹ்மணனுக்கும்‌, பதினொன்று வயதான 
க்ஷக்ரியனுக்கும்‌. பன்னிரண்டு வயதான வைங்யனுக்கும்‌ 
உபயனம்‌ செய்யவேண்டியது. ] என்று உடயன காலம்‌ 
விளக்கப்பட்டது. பதினாறு வயதிற்குள்‌ உபநயனம்‌ செய்யப்‌ 
படாதவன்‌ வ்ராத்யனாகிறான்‌. மாசி மாதத்திலிருந்து ஆனி 
மாதும்‌ வரையில்‌ உபநயனத்துக்குத்‌ தகுந்த கரலமாகச்‌ 
சொல்லப்பட்டிருக்கிறது.  உப௩யனகாலத்தில்‌ அந்தந்த 
மரக தி,பதிகள்‌ அஸ்தமள மாயிருக்கக்கூடா தவயஜுர்வேதத்‌ 
இற்கு சுக்ரன்‌ சாகா இபதி; ருக்வேதத்‌திற்கு குரு சாகாதிடத; 
ப்ராஹ்மணர்களுக்கு தேவகுரு அஸுரகுருவாகிய குரு 
சுக்ரர்கள்‌ பலமாயீருக்கவேண்டும்‌. க்ஷதீரியர்களுக்கு ஸேநாதி 
பதியான செவ்வாயும்‌, வைச்யர்களுக்கு தரர்யவ்ருத்தி 
செய்யும்‌ அம்ருதகிரணனான சந்த்ரனும்‌ சாகா திபதிகள்‌. 
இத வார ஈஷத்ரம்‌ முதலியவையெல்லாம்‌ பஞ்சாங்கத்தைப்‌ பார்த்து நிர்ணயித்துக்கொள்ளவேண்டும்‌. 
பிதர. பிதாமஹன்‌. மூத்த சகோதரன்‌. ஆசாரியன்‌ 
ஆகிய இவர்கள்‌ க்ரமமாக உபாயனம்‌ செய்ய அதிகாரிகள்‌. 
உபநயனமானவன்‌ மறு பிறவி பிறந்தவனாகக்‌ கருதப்படு 
கிறான்‌. தீ;விஜ:', என்னும்‌ பெயரே இருபிறப்பாளன்‌ 
என்னும்‌ பொருளையுடையது. இரந்த இரண்டாவது பிறப்‌ 
பிற்குப்‌ பிகா ஆசார்யன்‌; மாதா ஸாவித்ரீ, 


"° த்‌,வயமிஹ வை புருஷ்ஸ்ய ரேதோ ப்‌,ராஹ்மணஸ்ய 
ஊர்த்‌ வம்‌ ஈாபேரர்வாசீம்‌ மந்யத | தத்‌, ५। आ अआ 5 (०100 ஈாபேஸ்‌ 
தேநராஸ்ய அநெளரஸீ ப்ரஜா ஜாயதே யது,பநயதி யத்‌ ஸாத, 
கரோதி। அத, யதர்வாசீகம்‌ நாபேஸ்‌ தேரஸ்யெளரஸீ 
ப்ரஜா ஜாயதே| ஜ௩ந்யாம்‌ ஜநயதி! தஸ்மாத்‌ ங்ரோத்ரியம்‌ 
அநூசா௩ம்‌ அபுத்ரோ5$ஸீதி ௩ வதந்தி ॥ ”்‌ 
[வேதவித்தான புருஷனுக்கு, காபிக்கு மேற்பட்ட தும்‌, 
கீழ்ப்பட்டதுமான இருவகை வீர்யங்களிருக்கின்‌ றன; ஒருவ 
னுக்கு உபநயனம்‌ செய்து அவனைப்‌ பரிசுத்தமானவனாகச்‌ 
செய்யும்போது. இந்த ப்ராஹ்மணனுடைய நாபிக்கு மேற்‌ 
பட்ட வீர்யத்திலீருந்து ஞானபுத்திரன்‌ பிறக்கிறான்‌. 
ஈாபிக்குக்‌ கீழ்ப்பட்ட வீர்யத்தனால்‌ தராயாரிடத்தில்‌ இவ 
னுக்கு ஒளரஸபுத்திரன்‌ பிறக்றொன்‌. ஆஅகசையால்‌, வேத 
வேதாந்கங்களை அறிந்து. அத்யயனம்‌ செய்விப்பவனை 
நீ பிள்ளையற்றவன்‌ ' என்று பெரியோர்கள்‌ சொல்ல 
மாட்டார்கள்‌.] என்று வஸிஷ்டஸம்ஹிதையில்‌ இரண்டா 
வது அத்தியாயம்‌ ஆரம்பத்தில்‌ சொல்லப்பட்டது இங்கு 
அநுஸந்திக்கத்தக்கது. 

இனி ஸந்தியாவந்தனம்‌ என்னும்‌ சப்தத்தின்‌ அர்த்தம்‌ 
விசாரிக்கப்படுகிறது. ஸந்த்‌,யை என்பது ஒரு தேவதையின்‌ 
பெயர்‌; அதற்கு வந்தனமே ஸந்த்யாவந்தனம்‌ என்று 
மேலெழுந்தவாரியான பொருள்‌ கோன்றும்‌. ஸூர்ய 
னுடைய உதயாஸ்தமன வேளைகளில்‌ ஸந்த்யாகாலம்‌ ஏற்‌ 
பட்டிருப்பதால்‌ ஸர்யனைக்‌ குறித்து ஈமஸ்கா ரமே ஸந்த்யா 
வந்தனம்‌ என்று சிலர்‌ பொருள்‌ கொள்ளுகிறார்கள்‌. 

பபீஷா$ஸ்மாத்‌, வாத; பவதே பீ,ஷோதே,தி ஸூிர்ய:'' 
[இப்பரமபுருஷஜனிடம்‌ பயத்தினால்‌ காற்று வீசுறெது; 
ஸுூர்யனும்‌ இவனிடம்‌ பயத்தினால்‌ உதிககிறான்‌.] என்று 
வேதத்தில்‌ சொல்லப்பட்டது. புருஷோத்தமனுடைய 
அஜ்ஞாசக்ரத்திற்கு பயந்து, தினம்‌ தவறாமல்‌. அலுப்‌ 
பீல்லாமல்‌, சலிப்பில்லாமல்‌ ஸூர்யன்‌ உதிப்பதாகவும்‌. 
அஸ்தமிப்பதாகவும்‌ உடனிஷஜத்துகள்‌ உத்கோஷிக்கிறபடி 
யால்‌, மறந்தும்‌ புறந்தொழாமாந்தர்களாகிய முமுக்ஷாக்‌ 
களாலும்‌ அவசயெமனுஷ்டிக்கப்படவேண்டிய கர்மமாயெ 
ஸந்த்யாவந்தனம்‌ ஸூர்யனைக்‌ குறித்த உபாஸனமாக இருக்க 
முடியாது. ஸந்த்யாகாலமும்‌, காலத்துக்கு அதிதேவதை 
யும்‌ காலாதிதனன கண்ணனுக்குக்‌ கட்டுப்பட்டவையே 
யாகையால்‌, மேற்சொன்ன நியாயம்‌ இங்கும்‌ பொருந்தும்‌. 
ஸந்த்யாவந்தனத்தில்‌ படிக்கப்படும்‌ மந்திரங்கள்‌ ஒப்பாரும்‌ 
மிக்காரும்‌ இல்லாதவனான உலகளந்த உத்தமனையே குறிக்‌ 
கின்றன என்பதை ங்ருதிஸ்ம்ருததிறாஸபுராணங்களைக்‌ 
கொண்டு பின்னால்‌ விவரிப்போம்‌. ஆழ்வாரும்‌ 


“நகரம்‌ அருள்‌ புரிந்து கான்முகற்குப்‌ பூமேல்‌ 

பகர மறை பயந்த பண்பன்‌-—பெயரினையே 

புக்தியால்‌ சிந்தியாது ஓதி உருவெண்ணும்‌ 

அந்தியால்‌ ஆம்பயனங்(கு) என்‌? 

என்‌ று அருளிச்செய்தார்‌. இவைகளிலிருந்து ஸந்த்யாகாலத்‌ 
தில்‌ பரமாத்மாவான நாராயணனை நமஸ்கரிப்டதே ஸந்த்யா 
வந்தனத்தின்‌ ஸாரார்த்தமென்று விளங்குகிறது. ஸந்த்யோ 
பாஸூம்‌ என்னும்‌ பதத்திற்கு மற்றோரு விதமாகவும்‌ 
பொருள்‌ கொள்ளலாம்‌: ஜீவனும்‌, பரமாத்மாவும்‌ சரீரசரீரி 
யாகச்‌ சேர்ந்திருப்பது ஸந்த்யை. இந்தச்‌ சேர்க்கையை 
தயானம்செய்வது ஸந்த்யோபாஸனம்‌ என்றும்‌ சொல்லலாம்‌. 


தியானயோகத்தில்‌ அமர்ந்து நூற்றுக்‌ கணக்கான 
வருஷங்கள்‌ தவம்‌ செய்த ரிஷிகள்‌ அக்காலங்களில்‌ பரம 
புருஜனும்‌. மற்றவையும்‌ ஒன்றுசேர்ந்திருக்கையை 
தியானிப்பதாகிற ஸந்த்யோபாஸன த்கையே செய்து வந்தார்‌ 
கள்‌. நாம்‌ செய்வதுபோல்‌, ஜலபாகமும்‌. ஜபபாகமும்‌ கூடிய 
ஸந்த்யாவந்தனத்சை அக்காலங்களில்‌ அவர்கள்‌ செய்யவு 
மில்லை: செய்திருக்கவும்‌ முடியாது. 


“ஹ்ருதளகாமே சித;ாதி;த்யஸ்‌ ஸதள பதி நிரந்தரம்‌ । 
ஈாஸ்தமேதி ௩ சோதே,தி கதம்‌ ஸந்த்‌யாமுபாஸ்மஹே ||” 
[ ஹ்ருதயாகாச த்தில்‌, ஞானஸ்வருூபியான பகவானாகய 
ஸூர்யன்‌ இடைவிடாமல்‌ எப்போதும்‌ பிரகாசிக்கறான்‌ ; 
அஸ்தமிப்பதுமில்லை: உதிப்பதுமில்லை: (அப்படியிருக்கும்‌ 
போது) எப்படி ஸந்த்யையை உபாஸீப்போம்‌.] என்ற 
பரமாணவசனமும்‌ இங்கு அநுஸந்திக்கத்தக்கது. இதே 
நியாய த்தனலேயே பகவத்கைங்கர்யம்‌ செய்பவர்கள்‌, 
ஸந்த்யாகாலம்‌ நேர்ந்தாலும்‌. அதை விடவேண்டுமேயொழிய 
பகவதீ கைங்கர்யத்தை விடலாகாது என்று சொல்லப்‌ 
பட்டது, இவர்கள்‌ அநுஷ்டியா த ஸந்த்யா நுஷ்டானங்களை, 
எண்ணிறந்த வாலகில்யர்கள்‌. இவர்களுக்கு பதிலாக 
அநுஷ்டிப்பதாகச்‌ சொல்லப்பட்டிருக்றெ து. 


வேதாத்யயனம்‌ செய்வதற்குச்‌ சில இதிகள்‌ விலக்காக 
இருக்கின்றன; வ்ருத்தி ்யங்களினால்‌ ஏற்படும்‌ திட்டு 
காலங்களில்‌ வேதாத்யயனம்‌ செய்யக்கூடாது. ஸந்த்யா 
வந்தனம்‌, வேதமந்திரங்கள்‌ நிரம்பியதாயிருந்தபோதிலும்‌, 
அதை அதுஷ்டிப்பதற்கு முற்கூறிய விலக்குகள்‌ கிடையாது. 
தினந்தோறும்‌ அவசியம்‌ அனுஷ்டிக்கவேண்டுமாகையால்‌ 
அதற்கு நித்யகர்மம்‌ எனப்பெயர்‌. 


இந்த ஸந்த்யாவந்தனம்‌ செய்வதினால்‌ பலன்‌ என்ன? 
செய்யாவிடில்‌ தோஷம்‌ (அகரணே ப்ரத்யவாயம்‌) என்ன? 
இதற்குத்‌ தனித்து ஒரு பலனும்‌ கிடையாது. மநுஸ்ம்ருதி 
५५० இதனால்‌ நீண்ட ஆயுளை முனிவர்கள்‌ பெற்றார்கள்‌ 
என்று இகன்‌ மஹிமை கூறப்பட்டிருக்கறது. இதை 
அநுஸ்டிப்பவர்கள்‌, நேயமற்ற வாழ்வையும்‌. குறைவற்ற 
செல்வத்தையும்‌. ப்ரஹ்மதேஜஸ்ஸையும்‌ அடைகிறார்‌ 
களென்று அநேக ஸ்ம்ருதிகள்‌ அறைகின்றன. “பகவா 
னுடைய ஆஜ்ஞையை அநுவர்த்தித்தோம்‌; கைங்கர்யத்தைச்‌ 
செய்தோம்‌' என்னும்‌ (015 नन துஷ்டியே பரமப்ரயோஜனம்‌. 
பகவதாஜ்ஞையை மீறுவதும்‌, கைங்கர்யஹாஙீயும்‌ செய்யா 
விடில்‌ வரும்‌ தோஷங்கள்‌. “தேறு ஞானத்தர்‌ வேத 
வேள்வியறாச்‌ சிரீவர மங்கலாகர்‌ '' என்ற ஈம்மாழ்வார்‌ 
பாசுரத்தின்‌ வியாக்கியானத்தில்‌ “இது அதுஷ்டிக்கறெதென்‌? 
என்னில்‌: ஈங்வராஜ்ஞாதுவர்த்தனம்‌ பண்ணினானாகறான்‌ ; 
இனித்தான்‌ நிஷித்தாசரணம்‌ ரஜஸ்தமஸ்ஸுக்களை வர்த்‌ 
இ,ப்பிக்குமாப்போலே, இதுவும்‌ ஸத்வவ்ரு த்தியையும்‌ 
பண்ணிக்கொழுக்கக்கடவதாயீருக்குமிறே. இனித்தான்‌ 
சேதானாகையாலே ஒரு ப்ரவ்ருத்தி பண்ணியன்‌ றி நில்லானே. 
“ஹத்வாத்‌ ஸஞ்ஜாயதே ஜ்ஞாரம்‌ ' என்று ஜ்ஞரநத்துக்கும்‌ 
அடியாயிருக்குமிறே. ஆகையாலே அநுஷ்டேயமாகக்‌ கடவது” 
என்று ஈம்பிள்ளை அருளியது இங்கு நினைக்கத்தக்க்‌ து. 
இந்த ஸந்த்யாவந்தனத்திற்கு பாஷ்யம்‌ செய்தவர்கள்‌ 

இருவர்‌. ச்ருதப்ரகாசிகாசாரியர்‌ என்று கீர்த்திபெற்ற 
ஸுதர்சன பட்டரும்‌. அடஹோபிமைடம்‌ இரண்டாவது 
பட்டத்தில்‌ எழுந்தருளியிருந்த ஸ்ரீமந்நாராயணயதிீந்த்ரரும்‌ 
இசற்கு ஸம்ஸ்க்ருதத்‌ தில்‌ வியாக்யானம்‌ செய்திருக்கிறார்கள்‌. 
அவர்களுடைய வியாக்க்யானங்களை அதுஸரித்து இங்கு 
தமிழில்‌ வியாக்கயானம்‌ செய்யப்படுகிறது. 


அவதாரிகை முற்றிற்று. 
------------

ஸந்த்யாவந்தக பாஷ்யம்‌ 

பூர்வாந்ஹிகங்கள்‌ 

ஸந்த்யாவந்தனம்‌ செய்வத ற்குமுன்‌ செய்யவேண்டிய . 
கரரியங்கள்‌ பல உள. அவைகளைச்‌ செய்யாமல்‌ 
ஸந்த்யாவந்தனம்‌ செய்யமுடியாதானபடியால்‌ அவைகளை 
இங்கு விசாரிப்பது அவசியமாகிறது. அந்ஹிசகமாவ து: 
*அஹஸ்‌' எனப்படும்‌ ஒருதினத்தில்‌ செய்யவேண்டிய 
காரியங்கள்‌. ஸாதாரணமாக 'அஹஸ்‌' என்பது பகல்‌ 
காலத்தைப்‌ பற்றியே பிரயோகப்படுத்தப்பட்டாலும்‌, 
ஸூர்யோதயத்திலீருந்து மறுநாள்‌ ஸர்யோதயம்‌ 
வரையிலுள்ள தின த்தையும்‌ குறிக்கும்‌. 

முதன்முதல்‌ செய்யவேண்டிய கர்மம்‌ தூக்கத்திலிருந்து 
எழுந்திருப்பது. இது ப்ராஹ்ம முஹூர்த்தகத்தில்‌ 
செய்யவேண்டிய காரியம்‌. ப்ராஹ்ம முஹூர்த்தம்‌ என்பது 
இரவின்‌ நாலாவது யாமத்தினுடைய பிற்பாதி. அதாவது, 
ஸுூர்யோதயத்திற்குமுன்‌ ஒன்றரை மணி காலம்‌. உல: 
காலம்‌ என்பது ஸூர்யோதயத்திற்குமின்‌ 5 நாழிகை 
(2 மணி) காலம்‌. இந்த விடியற்காலையில்‌ எழுந்திருந்து 
பளர்யையுடன்‌கூட விஷ்ணுவை தியானம்‌ செய்து 
தர்மார்த்தங்களைச்‌ சிர்திக்கவேண்டும்‌ என்பது 
“பத்ந்யா ஸஹ ஹரிம்‌ த்‌,யாத்வா தர்மமர்த்த,ம்‌ ௪ சிந்தயேத்‌'' 
என்‌ று ஒருஸ்ம்ரு தியில்‌ சொல்லப்பட்ட த. ஸ்ம்ருதிரத்ன த்தில்‌ 

“மஹாபாரதமாக்‌யாந௩ம்‌ க்ஜிதிம்‌ க,ம்‌ கஸரஸ்வதீம்‌ | 
ப்‌,ரரஹ்மணாந்‌ கேரமமவஞ்சைவ ப்ராதருத்தஎளய கீர்த்தயேத்‌ ॥ 
[மஹாபாரதத்தையும்‌. பூமியையும்‌. பசுவையும்‌, ஸரஸ்வதி 
தேவியையும்‌, ப்ராஹ்மணர்களையும்‌ விஷ்ணுவையும்‌ வீடியற்‌ 
காலையில்‌ எழுந்திருந்து கீர்த்தனம்‌ செய்யவேண்டியது. ] 
என்று உரைக்கப்பட்டது. 

“உச்சை: ஸ்வரேண ய: ப்ராத: ஸ்தோதுமிச்சே,த,நந்யதீ,:। 
வாஸுதே,வாதி,தே,வா௩ாம்‌ நாமஸங்கர்த்தநம்‌ சரேத்‌ ॥”' 
[ எவனொருவன்‌ மற்றோன்‌ நறிலும்‌ மனம்‌ செலுத்தாமல்‌ காலை 
வேளையில்‌ உரத்த குரலில்‌ பாட விரும்புறோனோ. அவன்‌ 
வாஸுீதவன்‌ . முதலிய தேவர்களுடைய .திருநாம ஸங்‌ 
கீர்த்தனத்கைச்‌ செய்யக்கடவன்‌.] என்று மாண்டில்ய 
ஸ்ம்ருதியிலும்‌ சொல்லப்பட்ட த. 
“ப்ராதர்‌ தே,வேதி க்ருஷ்ணேதி & कष ०9 6558 = ஜல்பதாம்‌ | 
மத்யாந்ஹே சாபராண்ஹே ச யோ5வஸாத,ஸ உச்யதாம்‌।!”' 
[“தேவனே! கிருஷ்ணா! கோவிந்தா!” என்று காலை வேளை 
யிலும்‌ மத்யாந்ஹத்திலும்‌ பிற்பகலிலும்‌ பிதற்றுமவர்களுக்கு 
என்ன அக்கம்‌ ஏற்படும்‌ என்று சொல்லுங்கள்‌.] என்று. 
விஷ்ணு தர்மத்தில்‌ உத்கோஷிக்கப்பட்ட த. 

“ப்ஏராஹ்மே முஹூர்த்த உத்தளய சிந்தயேத;த்மநோ ஹிதம்‌ | 
குரும்‌ விஷ்ணும்‌ நமஸ்க்ருத்ய மாதாபித்ரோஸ்‌ ததைவ =| 
[ப்ராஹ்ம முகூர்த்தத்தில்‌ எழுந்திருந்து ப்ரதமாசார்யரான 
விஷணுவையும்‌, தாய்‌ தந்தையரையும்‌ நமஸ்கரித்துத்‌ தனக்கு 
நன்மையை எண்ணக்கடவன்‌.] என்று செள௩கபகவான்‌ 

அருளிச்‌ செய்தார்‌. 
“வெள்ளத்தரவில்‌ துயிலமர்ந்த வித்தினை 
உள்ளத்துக்கொண்டு முனிவர்களும்‌ யோகிகளும்‌ 
மெள்ளவெழுந்து அரியென்ற பேரரவம்‌ 

உள்ளம்‌ புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்‌" _என்று 
ஆண்டாளும்‌ இவ்விஷயத்தையே திருப்பாவையில்‌ அருளிச்‌ 
செய்தாளன்றோ. இவ்விடத்தில்‌ வியாக்கயானம்‌ செய்த 
பெரியவாச்சான்‌ பிள்ளையும்‌ 
“ஹரிர்‌ ஹரதி பாபாநி துஷ்டசித்தைரபி ஸ்ம்ருத: |" 
[தஷ்டசித்தர்களால்‌ நீினைக்கப்பட்டபோதிலும்‌ ஹரியான 
வன்‌ பாடங்களைப்‌ டோக்கடிக்கீறான்‌ ./என்‌ ற ப்ரமாணத்தைக்‌ 
காட்டியருளினார்‌. 

“ப்ராஹ்மே முஹா9ர்த்தே தேவாநாம்‌ பித்ரூணாம்‌ ச ஸமாக,ம: 
ஜாக,ரஸ்தத்ர கர்த்தவ்ய: பித்ருஸம்மாநநம்‌ ஹி தத்‌ ॥'' 
[ப்ரஹ்ம முஹூர்த்தத்தில்‌. தேவர்களுக்கும்‌. பீத்றாக்களுக்‌ 
கும்‌ சேர்க்கை ஏற்படுகிறது, (ஆகையால்‌) அப்பொழுது 
விழிக்துக்கொண்டிருக்கவேண்டும்‌. அதுவே பித்ருக்களே 
கெளரவப்படுத்துவதாகும்‌.] என்‌ றும்‌ 

"901 (60 முஹூர்த்தே ஸேவேதரம்‌ பயநம்‌ யத்ர த,ம்பதீ | 
ரமமமா நதுல்யம்‌ தக்‌, வேங்ம பித்ருபி,: பரிவர்ஜ்யதே |” 
[ப்ரஹ்ம முஹுூர்த்தத்தில்‌, எந்த வீட்டில்‌ தம்பதிகள்‌ 
சயனத்திலிருக்றோர்களோ. அந்த வீடு சுடுகாட்டிற்குச்‌ 
சமானமான து. பித்ருகளால்‌ விலக்கப்படுகிறது.] என்றும்‌ 
ஸ்ம்ருதிகளில்‌ சொல்லப்பட்டிருப்பதிலிருந்து ப்ராஹ்ம 
முஹடூர்த்தத்தில்‌ யாவரும்‌ அவசியம்‌ விழித்திருக்கவேண்டும்‌ 
என்று @,0 98. 2/. 

“சத்வாரீமாநி கர்மாணி ஸந்த்‌,யாயாம்‌ பரிவர்ஜயேத்‌ | 
ஆஹாரம்‌ மைது,நம்‌ நித்ளாம்‌ ஸ்வாத்யரயம்‌ ச ததைவ ச॥ 
ஆஹாராத்‌ ஜாயதே வ்யாதி,: கர்ப்ப வேதம்ச மைதுநாத்‌ | 
95307857 ஜாயதே5லக்ஷமீ: ஸ்வாத்‌,யாயாதளயுஷ: க்ஷயம்‌।)” 

[ஆஹாரம்‌. (0515 0, தூக்கம்‌, படித்தல்‌ என்னும்‌ நான்கு 
கர்மங்களைபும்‌ ஸந்த்யாகா லத்தில்‌ விடவேண்டும்‌. ஆஹாரத்‌ 
தினால்‌ வியாதியும்‌. மைதன த்தினால்‌ கர்ப்பநாசமும்‌. நித்ரை 
யீனால்‌ மூதேவியும்‌, படித்தலால்‌ ஆயுட்குறைவும்‌ உண்டா 
கிறது.] என்று ப்ருஹந்மனுவால்‌ சொல்லப்பட்டது. 

இவைகளிலிருந்து நாம்ப்ரா ஹ்மமுஹ£ர்த்தத்தில்‌ எழும்‌ 
ந்‌ பரப்ரஹ்மமாயெ மந்கநாராயணனை யாரனிக்க 
५ 20 
வேண்டுமென்‌ று தெளிவாகிறது, வைகறையில்‌ தயிலெழுதல்‌ 
கேஹாரோக்யத்திற்கும்‌ நீண்ட ஆயுளை அடைவதற்கும்‌ 
அறுகுணமானது என்பது எல்லாரும்‌ அறிந்ததே, தீர்க்க 
தர்‌்சகளான நம்‌ முன்னோர்கள்‌ ஏற்படுத்திய நியமங்களும்‌ 
ஆசார அநுஷ்டானங்களும்‌ இஹபரஸா தூகங்கள்‌ என்பதை 
ஆகேபயில்லாமல்‌ ஓப்புக்கொள்ளலாம்‌ 


, அடுத்தபடியாகச்‌ செய்யவேண்டியது ப,ஹிர்விஹார:' 
என்‌ று சொல்லப்பட்ட வெளி ஸஞ்சாரம்‌. தேஹச த்தியின்‌ 
பொருட்டு வீட்டுக்குத்‌ தென்‌ திசையில்‌ ஒரு அம்புபோய்‌ 
விழும்தூரத்திற்கப்பால்‌ மலஜலவீஸர்‌ ஜடம்‌ செய்யவேண்டும்‌. 
இதைப்பற்றியும்‌ ஸ்ம்ருதிகளில்‌ அநேக விதிகள்‌ சோல்லப்‌ 
பட்டிருக்கின்றன. பூணூலை மாலையாக வலது செவியில்‌ 
தரித்து, மெளனமாக சுத்தமான இடத்தில்‌ விஸர்ஜனம்‌ 
செய்யவேண்டும்‌. வலது செவியில்‌ பூணூலை தரிப்பது, 
பூனூல்‌ ழே தெரங்கி ௮சுத்தப்படரமலிருப்பத ற்காகவும்‌, 
சுத்தமாயிருப்பதற்காகவுமாகும்‌. விஸர்ஜனம்‌ செய்தபிறகு. 
ஜலம்‌. மண்‌ இவைகளால்‌ ஸெளசம்‌ (சுத்தி) செய்தகொள்ள 
வேண்டும்‌. 

அடுத்தபடியாகச்‌ செய்யவேண்டியது “ கண்டோம்‌ ' 
எனப்படும்‌ வாய்‌ கொப்பளித்தல்‌;ப்ராஹ்மணனுடைய வலது 
புறத்தில்‌ எப்போதும்‌ கேவதைகள்‌ வஸிக்கிறபடியால்‌, 
எப்போதும்‌ இடதுபுறத்திலேயே கொப்பளிக்கவேண்டும்‌ 
என்று சாஸ்திரம்‌ விதிக்கிறது. 


அடுத்தபடியாகச்‌ செய்யவேண்டியது ' த,ந்தத,ாவமம்‌ ' 
எனப்படும்‌ பல்தலக்கல்‌, 


“ஆயுர்‌ (5600 யமேோ வர்ச்ச: ப்ரஜா பமமாவஸ நி ௪ | 
ப்‌,ரஹ்மப்ரஜ்ஞாம்‌ ௪ மேதராம்‌ ௪ த்வம்‌ நோ தேஹி 
வாஸ்பதே ॥'' 
[ஓ வ்ருக்ஷராஜனே! ஆயுள்‌. பலம்‌, £ீர்த்தி, காந்தி. ஸந்ததி, 
பசுக்கள்‌, தனங்கள்‌, ப்ரஹ்மஜ்ஞானம்‌. மரதியில்லாமை 
ஆகிய இவைகளை எங்களுக்குக்‌ கொடுப்பரயாக.] என்னும்‌ 
இந்த மந்திரத்தைச்‌ செசெொல்லி மரத்தைத்‌ தொட்டு 
அதிலிருந்து குச்சியை க்ரஹிக்கவேண்டும்‌. ஆலமரம்‌, வேல 
மரம்‌ முதலிய தவர்ப்பு, புளிப்பு. வரஸனை, பாலள்ளவை 
களான மரங்களின்‌ குச்சியை உபயோகப்படுத்தவேண்டும்‌ 
என்று மார்க்கண்டேயர்‌ விதித்தார்‌. 

அடுத்தபடியாகச்‌ செய்யவேண்டியது ஸ்நானம்‌, ஒரு 
நாளில்‌ காலை, மத்யாந்ஹம்‌, மாலை ஆக ஷூன்று காலங்களி 
லும்‌ ஸந்த்யாவந்தனத்திற்கு முன்‌ ஸ்நானம்‌ செய்யவேண்டு 
மென்று சொல்லப்பட்டிருக்கிறது. இவைகளில்‌ ப்ராத: 
ஸ்நாநம்‌ மிகவும்‌ முக்கயமானகஅ. 


க்ஷாப்‌யந்தி ஹி ஸுஷுப்தஸ்ய இந்த்‌ரியாணி ஸ்ரவந்தி ச | 
அங்களுநி மைதரம்‌ யாந்தி ஹ்யுத்தமாந்யத,மைஸ்‌ ஸஹ ॥ 
அத்யந்தமலிந: காய: நவச்சித்ஸஸம ந்வித: | 
ஸ்ரவத்யேவ தி,வாராத்ரம்‌ ப்ராத:ஸ்நா௩ம்‌ விமேோத,நம்‌ ॥ 
ப்ராத:ஸ்நா௩ம்‌ ப்ரமாம்ஸந்தி த்‌,ருஷ்டாத்‌;ருஷ்டசுரம்‌ ஹி தத்‌ । 
அஸ்நாத்வா நாசரேத்‌ கர்ம ஜபஹோமாதி, கிஞ்ச௩ ॥ 
ஸர்வமர்ஹதி மரஈத்‌,தரத்மட ப்ராத:ஸ்௩ாயீ ஐபாதி,கம்‌ | 
ப்ராதருத்தளாய யோ விப்ர: ஸந்த்‌யாஸ்நாகம்‌ ஸமாசரேத்‌ || 
ஸப்தஜந்மக்ருதம்‌ பாபம்‌ த்ரிபிர்‌ வர்ஷைர்‌ வ்யபோஹதி ॥ 

குணா தம ஸ்நாநபரஸ்ய ஸாத்யா: 

ரூபம்‌ = தேஜங்ச படலம்‌ ச மெொளசம்‌ । 
ஆயுஷ்யமாரோக்‌,யமலோலுபத்வம்‌ 
ॐ: 9१००५४५ ए 7 ७०००० த்‌,ருதிங்ச மேதா ॥ 

[மனிதன்‌ தூங்கும்போது அவனுடைய இந்திரியங்கள்‌ 
கலக்கத்தை அடைகின்‌ றன; தாழ்ந்த இந்திரியங்களும்‌, 
உயர்ந்த . இந்திரியங்களும்‌ ஒரே நில்மையை அடைகின்‌ றன; 
ஒன்பது தவாரங்களுடைய உடம்பு, மிகவும்‌ அசுத்தியை 
அடைகின்றது. பகலிலும்‌ இரவிலும்‌ மிகவும்‌ தளர்ச்சியை 
உடைத்தான்றது. காலையில்‌ குளித்தல்‌ மிகவும்‌ பரிசுத்தி 
யைத்‌ தருவது. காலையில்‌ குளித்தலைப்‌ பெரியோர்கள்‌ 
மிகவும்‌ புகழ்கிறார்கள்‌. இஹபரஸுகங்களை அது ஸாதித்துத்‌ 
தருகின்‌ றதல்லவா, ஜபம்‌. ஹோமம்‌ முதலிய எதையும்‌ 
ஸ்நானம்‌ செய்யாமல்‌ அநுஷ்டிக்கக்கூடாது. சுக்தமான 
७5 27.55 உடையவனாயிருப்ப தினால்‌, காலையில்‌ குளிப்பவன்‌ 
ஜபம்‌ முதலிய எல்லாவற்றையும்‌ செய்யத்தகுந்தவன்‌ . எந்த 
ப்ரராஹ்மணன்‌ காலையில்‌ எழுந்து தினந்‌ தோறும்‌ 
ப்ராத;:ஸ்நானத்தகைச்‌ செய்கிறானோ. அவன்‌ ஏழு ஜன்மங்களில்‌ 
செய்த பாவத்தை மூன்று வருஷத்தில்‌ போக்கடிக்கிறான்‌. 
ரூபம்‌, காந்தி, பலம்‌, சுத்தி, நீண்ட ஆயுள்‌, ஆரோக்கியம்‌. 
க்ஷுத்ரவிஜயங்களில்‌ ஆசையின்மை, தஃஸ்வப்ஈநாசம்‌, 
தைரியம்‌, அறிவு; என்னும்‌ பத்து குணங்களும்‌ ஸ்நானம்‌ 
செய்பவனுக்கு எளிதில்‌ திட்டும்‌.] என்று தக்ஷஸ்ம்ருதியில்‌ சொல்லப்பட்டது. 

ஸ்நானம்‌ பலவி தமா கச்‌ சொல்லப்படுகிற து. அவைகளில்‌ 
முக்கியமானது வாருணஸ்நானம்‌. ஜலத்தில்‌ தலை முழுகும்‌ 
படி அமிழ்ந்து தீர்த்தமாடுவது வாருணஸ்நானம்‌ எனப்படு 
கிறது. *ம்ருத்திகே ஹந மே பாபம்‌' [பூமியே! என்னுடைய 
பாபத்தைப்‌ போக்கடிப்பாயாக] என்று ஆரம்பிக்கும்‌ 
மந்திரங்களைச்‌ சொல்லி சரீரம்‌ முழுவதும்‌ சுத்தமான 
மண்ணைப்‌ பூசிக்கொள்வது பார்த்திவ (ப்ருதிவீ ஸம்பந்த 
மான) ஸ்நானம்‌ எனப்படுகிறது. அக்நிஹோ த்ரச்‌ சாம்பலை 
உடம்பில்‌ பூசிக்கொள்வது ஆக்ரேயஸ்நானம்‌ என்று 
உரைக்கப்படுகிறது. பசுக்களின்‌ குளம்புத்தூள்களை 
.கோஸாவித்ரீ மந்திரத்தால்‌ உடம்பில்‌ படியவைத்துக்‌ 
கொள்வது வாயவீயஸ்நராம்‌ எனப்படும்‌. வெயிலுடன்‌ 
கூடி மழை பெய்யும்போது அதில்‌ நனைவது திவ்யஸ்நானம்‌ 
அல்லது அகாசஸ்நாநம்‌ என்று சொல்லப்படுகிறது. இப்படி 
பஞ்சபூ,தஸ்நானங்களைத்‌ தவிர ' ' ஆபோஹிஷ்டா'' என்னும்‌ 
மந்திரத்தின்‌ ஒவ்வொரு பாதத்தையும்‌ உச்சரித்துக்கொண்டு 
முறையே தலை, மார்பு: கால்‌ ஆகிய அங்கங்களில்‌ ப்ரோக௯கித்‌ 
தஅக்கொள்வது மந்த்ரஸ்க5ானம்‌ எனப்படுகிறது. ஸூர்ய 
மண்டல மத்யத்தில்‌ தங்கவர்ணத்‌ தருமேனியுடையவனாய்‌. 
ஸங்க,சக்ரசுரனாய்‌. கேயூரமகரகுண்டலங்களை தரித்தவனாய்‌ 
எழுந்தருளியிருக்கும்‌ ஸ்ரீமந்காராயணனுடைய திருவடித்‌ 
தாமரையிலிருந்து ப்ரவஹிக்கும்‌ கங்கை.ப்ரஹ்மரந்க்‌,ர த்தின்‌ 
வழியாக கேகத்தினுள்‌ புகுந்து ஸகல மலங்கனையும்‌ 
போக்கடிப்பதாக மனஸ்ஸினாலே தியானம்‌ செய்வதே மாரஸ 
ஸ்நானமாகும்‌, இரண்டு கால்‌. இரண்டு கை. முகம்‌ ஆகிய 
7.5! அங்கங்களையும்‌ ஜலக்தினால்‌ அலம்புயவது பஞ்சாங்க, 
ஸ்நானமாகும்‌, ஈர வஸ்த்ரத்தனால்‌ உடம்பு முழுவதும்‌ 
தடைச்துக்‌ கொள்வது காபில ஸ்நானம்‌ என்ப்படும்‌. 
ஊர்த்‌,வபுண்ட்ரத்தை தரித்து ஒங்காரத்தை ஜபிப்பது ஒரு 
விதமான ஸ்நானம்‌. ஸ்நானம்‌ செய்யும்போது ஸ்ரீமந்காரா 
யணனையே ஸ்மரிக்கவேண்டும்‌. 

“ஆபோ நாரா இதி ப்ரோக்தாஸ்‌ தா யத,ஸ்யாயர௩ம்‌ புக: | 
தஸ்மாந்‌ நாராயணம்‌ தே,வம்‌ ஸ்காஈகாலே ஸ்மரேத்‌, 11554: ॥' ' 
[ஈரனாயெ பகவானுக்கு இருப்பிடமாயிருத்தலால்‌ ஜலம்‌ 
"एण 72" எனப்படுகிறது. ஆகையால்‌ ஞானியானவன்‌ நாரா 
யணனாகிற தேவனை ஸ்நானகாலத்தில்‌ நினைக்கக்கடவன்‌. ] 
என்று ०9५८, ०९7 விதித்தார்‌. 

*த்யாயேரந்காராயணம்‌ தே,வம்‌ ஸ்நாநாதி,ஷு ௪ கர்மஸு | 

ப்ராயங்சித்தேஒு ஸர்வேஷு முச்யதே த,ஷ்க்ருதாத்‌ புமாந்।'' 
[ஸ்கானம்‌ முதலிய கர்மங்களின்‌்போதும்‌. எவ்விதமான 
ப்ராயங்சித்தங்கள்‌ செய்யும்போதும்‌ ஸ்ரீமந்நாராயணனை 
தியானம்‌ செய்யும்‌ மனிதன்‌ எல்லாப்‌ பாடங்களினின்‌ றும்‌ 
வீடுபடுகிறான்‌.] என்று செளனகர்‌ ஸ்தாபித்தார்‌. 

“த்‌ யாயேர்‌ நாராயணம்‌ தேவம்‌ ஸ்நாந்ாதிஷு ௪ கர்மஸஈ | 
ப்‌சஹ்மலோகமவாப்நோதி ந சேஹ ஐரயதே (ह; |” 
[ஸ்நானம்‌ முதலிய கர்மங்களின்போ து ஸ்ரீமந்நாராயணனை 
தியானம்‌ செய்யவேண்டியது, அப்படிச்‌ செய்பவன்‌ ப்ரஹ்ம 
லோகத்தை அடைகிறான்‌ , இங்கு மறுபடியும்‌ பிறப்பதில்லை. ] 
என்று தச்ஷர்‌ தெரிவித்தார்‌. 

“ஸோ$ந்தர்ஜலமாவிமய வாக்‌,வதோ நியமேர @ | 

ஹரிம்‌ ஸம்ஸ்ம்ருத்ய மநஸா மஜ்ஜயேச்‌ சோரவஜ்ஜலே |!” 
[ அவன்‌ , ஜலத்தில்‌ முழு, வாக்கை அடக்கனெவனாய்‌. ஹரியை 
நினைத்துக்கொண்டு. திருடன்‌ போல்‌ ஜலத்தில்‌ மறைந்திருக்க 
வேண்டும்‌. ] என்று ஹாரீதர்‌ விதித்தார்‌. 


“ஹங்கல்ப: ஸூக்தப்ட,நம்‌ மார்ஜும்‌ சாக மர்ஷணம்‌ | 
தே,வதாதர்ப்பணம்‌ சைவ ஸ்௩ர௩ம்‌ பஞ்சாங்கமுச்யதே |॥!'' 
[ஸங்கல்பம்‌ புருஷ क 50 திகளைப்‌ படிப்பது, உடம்பு 
தேய்த்துக்கொள்ளு தல்‌, அகமர்ஜஷணஸக்தஜபம்‌, தேவதை 
களுக்குத்கர்ப்பணம்‌ செய்தல்‌ என்ற ந்து அங்கங்களை 
உடையதாக ஸ்நானம்‌ சொல்லப்படுகிற து.]என்‌ று 950 व्ल ॐ 
திற்கு ஐந்து அங்கங்கள்‌ ஸ்ம்ருதியில்‌ விதிக்கப்பட்டன. 


அடுத்தபடியாகச்‌ செய்யவேண்டியது வஸ்த்ரதா ரணம்‌. 
காஷாயவஸ்த்ரம்‌. கறுப்புவஸ்த்ரம்‌. அழுக்குத்துணி, தலைப்‌ 
பில்லாத துணி, இரண்டு வஸ்த்ரங்களைச்‌ சேர்த்துத்‌ தைக்கப்‌ 
பட்டது. சிவப்பு. மஞ்சள்‌, புகை நிறமுள்ள வஸ்த்ரங்கள்‌ 
முதலியவை கூடாதென்று தடுக்கப்பட்டிருக்கிறது. 


“ஸப்தவாதாஹதம்‌ வஸ்த்ரம்‌ மராஈஷ்கவத்‌ ப்ரதிபாதி,தம்‌ | 
वधो छा ०7५4 த்‌,விஜாதீநாம்‌ ஆத்‌,ருதம்‌ கெளதமாதி,பி,:॥1 
ஜப்யே ஹோமே தத; ஸ்காநே 'தை,வே பித்ர்யே ச கர்மணி | 
பத்மீயாந்‌ நாஸாரீம்‌ கக்ஷயாம்‌ மேஷகாலே யதே,ச்ச,யா।॥'' 

[எழுதடவை காற்றில்‌ உதறப்பட்டதாகில்‌, அந்த வஸ்த்ரம்‌ 

ஈரமேயாயினும்‌ உலர்ந்ததுபோலவே கெளதமாதி மஹர்ஷி 

களால்‌ அங்கிகரிக்கப்பட்டிருக்கறது. ஜபம்‌. ஹோமம்‌. 
ஸ்நானம்‌, தேவபித்ருகார்யங்கள்‌ ஆகிய இவைகளில்‌ ஆஸுர 

மான (அ௮அஸா-ுரஸம்பந்தியான) கச்சங்களை தரிக்கக்கூடா த. 

மற்ற காலங்களில்‌ இஷ்டப்படி வஸ்த்ரத்தை தரித்துக்‌ 

கொள்ளலாம்‌.] என்று ஸ்ம்ருதி ரத்நாவளியில்‌ சொல்லப்‌ 
பட்டது. 'ப்ரஹ்மசாரிகள்‌ கீழ்வஸ்த்ரம்‌ ஒன்றை மட்டும்‌ 
கச்சமில்லாமல்‌ தரிக்கவேண்டும்‌. க்ருஹஸ்தர்கள்‌ இடுப்பில்‌ 
ஒரு வஸ்த்ரமும்‌. மேல்‌ ஒரு உத்தரீயமும்‌ தரிக்கவேண்டும்‌, 
உத்தரீயமில்லாவிடில்‌ மூன்றாவது பூணூல்‌ தரித்தால்‌ 
உத்தரீயத்திற்கு பதிலாக ஆகிறது. வானப்ரஸ்தர்களும்‌ 
க்ருஹஸ்தர்கள்‌ போலவே வஸ்ச்ரத்கை தரிக்கவேண்டும்‌. 
ஸந்யாஸிகள்‌ காஷாய வஸ்த்ரத்தகை ப்ர்ஹமசாரிகளைப்‌ 
போலவே தரிக்கலேண்டும்‌. வஸ்த்ரம்‌ தரிக்கும்‌ விதங்களைப்‌ 
பற்றி ஸ்ம்ருதிகளில்‌ விரிவாக வர்ணிக்கப்படவில்லை. 

அடுத்தபடியாகச்‌ செய்யவேண்டியது ஊர்த்‌,வபுண்ட்‌,ா 
தப்ரணம்‌. இதை தரிக்காமல்‌ செய்யும்‌ நித்யறையித்திக 
கர்மங்களும்‌, தேவபித்ரு கார்யங்களும்‌, திருவாராதனமும்‌ 
நிஷ்டலமாகும்‌. இதர மதஸ்கர்கள்‌ அவரவர்‌ மதத்திற்கு 
அறுகுணமான புண்ட்ரங்களை தரித்துக்‌ கர்மங்களைச்‌ 
செய்யவேண்டும்‌. 

இனி ஸந்த்யாவட்‌ தத்தின்‌ ஆரம்பத்திலும்‌, இடையில்‌ 
பலவிடங்களிலும்‌. மற்று பல கர்மங்களிலும்‌ செய்ய 
வேண்டியதான ஆசம௩ம்‌ விவரிக்கப்படுகறது. ஸந்த்‌,யர 
வந்தனம்‌ ஜலபாகபென்‌ றும்‌. ஜபபாகமென்‌ றும்‌ இரண்டாகப்‌ 
பீரிக்கப்பட்டிருக்கறது. அதில்‌ ஜலபாகத்தின்‌ முதலில்‌ 
செய்யப்படுவது ஆசமனம்‌. ஆசமனத்தை அறுஷ்டிக்க 
வேண்டிய முறை பீன்‌ வருமாறு: வலது கையை கோகர்ணம்‌ 
( பசுவின்‌ காது ) போல்‌ .மடித்துக்கொண்டு உள்ளங்கையி 
லிருக்கும்‌ மாஷமென்னும்‌ ஒரு ரேகை முழுகுவத ற்கு மட்டும்‌ 
வேண்டிய ஜலத்தை எடுத்துக்கொண்டு : அச்யுதாய ஈம: " 
என்னும்‌ மந்திரத்தை உச்சரித்தத்‌ திர்த்கத்தை உட்‌ 
கொண்டு. தீர்த்தம்‌ மார்புத்‌ தலத்தை அடைந்த பிறகு, 
மறுபடியும்‌ அம்மா திரியே தீர்த்தத்தை எடுத்து : அ௩ந்தாய 
ஈம: ' என்று சொல்லி உட்கொண்டு. . மறுபடியும்‌ அம்‌ 
மாதிரியே ஜலத்தை எடுத்து ` கோவிந்தாய நம: ' என்று 
உட்கொள்ளவேண்டும்‌. பிறகு இரண்டு தடவை உதடு 
களைத்‌ துடைக்கவேண்டியது.

“அங்கு,ஷ்டமுூலே ததோ முகம்‌ வை ஸமுபஸ்ப்ருமேத்‌ | 
அங்குஷ்டநாமிகாப்‌,யாம்‌ து ஸ்ப்ருமேரந்ரேத்ரத்‌,வயம்‌ தத:॥) 
छं ०४५७००१५ 56५17 859१ ஸ்ப்ருமெந்கரஸாபுடத்‌,வயம்‌ | 
கநிஷ்டளங்குகஷ்டயோகே;ு ஸ்ர வணே ஸமுபஸ்ப்ருமேத்‌ |} 
ஸர்வாஸாமேவ ५१९७९ ஹ்ருதயந்து தலேந வா । 
ஸம்ஸ்ப்ருமேத்‌, வை ஸிரஸ்தத்‌,வத்‌ அங்குஷ்டேகா தவா 

த்‌,வயம்‌ |!" 

[ அதன்‌ பிறகு அங்குஷ்டமூலத்‌ தனால்‌ முகத்தையும்‌, கட்டை 

விரல்‌. பவித்ரவிரல்‌ இவைகளைக்‌ கூட்டி இருகண்களையும்‌. 

ஆள்காட்டிவிரல்‌. கட்டைவீரல்‌ இவைகளைக்‌ கூட்டி மூக்கின்‌ 
இரு பக்கங்களையும்‌, சிறு விரல்‌, கட்டைவிரல்‌ இவைகளைக்‌ 
கூட்டி இரு காதுகளையும்‌. எல்லா விரல்களையும்‌ சேர்த்தா 
வது அல்லது உள்ளங்கையாலாவது ஹ்ருதயத்தையும்‌. 
அம்மா திரியேயாவது. கட்டை வீரலாலாவது தலையையும்‌ 
தொடவேண்டியது.] என்று வ்யாஸஸ்ம்ருதியில்‌ ஆசம௩ 
ப்ரகாரம்‌ சொல்லப்பட்டது. 'கேசவாய ஈம:' என்று 
உச்சரித்துக்கொண்டு வலது கன்னத்தையும்‌. ` காராயணாய 
ஈம: ' என்று இட்து கன்னத்தையும்‌. வலதுகைப்‌ டெரு 
விரலாலும்‌,  மாதவாய நம: ' என்று வலது கண்ணையும்‌ 
* கோவிந்தாய நம: ' என்று இடது கண்ணையும்‌ வலது கை 
பவித்ர விரலாலும்‌, ` விஷ்ணவே நம:' என்று வலது 
மூக்கையும்‌, * மதுஸ9ததாய ஈம: ' என்று இடது மூக்கை 
யும்‌ வலதகை அள்காட்டிவிரலா லும்‌, ` த்ரிவிக்ரமாய நம: ' 
என்று வலது காதையும்‌. “வாமநாய நம: என்று இடது 
காதையும்‌ வலதுகை சிறுவீரலாலும்‌. .'ஸ்ரீத,ராய 010; ' 
என்று வலது தோளையும்‌, ` ஹ்ருஷீகேமசாய நம: ' என்று 

இடது தோளையும்‌ வலது @ 5 நடு விரலாலும்‌, ' (53107419 ५) 

10: " என்று ஐந்து விரல்களாலும்‌ ஹ்ருதயத்தையும்‌, 

* தளமோதராய ஈம: ' என்று ஐந்து விரல்களாலும்‌ தலையில்‌ 

ப்ரஹ்மரந்த்‌,ரப்ரதேசத்தையும்‌ छ = ८० 5 5 தின்‌ போது 

ஸ்பர்பிப்பது அநாதி, மிஷெடாசாரஸித்‌்தமாய்‌ இருந்து 
வருகிறது. 


“அங்கு,ஷ்டேர து தேறிந்யா நாபி,ம்‌ ச ஸமுபஸ்ப்ருமேத்‌ '' 
[வலது கை பெருவிரலையும்‌ ஆள்காட்டி வீரலையும்‌ சேர்த்து 
நாபியைத்‌ தொடவேண்டும்‌] என்று ஹாரிதர்‌ விதித்ததி 
லிருந்து : பத்ம௩ாப,ாய நம: ' என்று நாபியையும்‌ கொடலாம்‌ 
என்று ஏற்படுகிறது. இம்மாதிரியே வைஷ்ணவஸ்மார்த்த 
०9८47 55८0. ப்ராஹ்மண ஸமூஹத்தினர்‌ முழுவதும்‌ அச்யுத 
கேசவா திநாமங்களை உச்சரித்தக்கொண்டே ஆசமநத்தை 
அநுஷ்டிக்கறோர்கள்‌. சிற்சலர்‌ சிவனுடைய நாரமங்களை 
உச்சரித்துக்கொண்டு ஆசமாத்தைச்‌ செய்வதாகத்‌ தெரி 
கிறது. ஸ்ம்ருதிகளில்‌ நாமோச்சாரணத்தைப்‌ பற்றி விதிகள்‌ 
இருப்பதாகத்‌ தெரியவில்ல, அனால்‌,  தர்மஜ்ஞுஸமய: 
ப்ரமாணம்‌ வேதாயண்ச '' [தர்மத்தை அறிந்தவர்களுடைய 
ஆசாரமே முக்ய ப்ரமாணம்‌. வேதங்களும்‌ ப்ரமாணமாகின்‌ 
மன.] என்று தர்மஸூத்ரத்தில்‌ சொல்லியபடியே மஹான்‌ 
களுடைய அநுஷ்டானம்‌ வேதத்தைக்‌ காட்டிலும்‌ ப்ரபல 
ப்ரமாணமாகையால்‌ நமக்கு இவைகளெல்லாம்‌ அவசியம்‌ 
அநுஷ்டிக்கவேண்டியவையே. ம்ருதியும்‌ “ த்ரிராசாமேத்‌ | 
5569: பரிம்ருஜ்ய। ஸக்ருது,பஸ்ப்ருங்ய '' [மூன்று தடவை 
தண்ணீரைப்‌ பருகவேண்டும்‌. இரண்டு தடவை (உதடு 
களைத்‌) துடைக்கவேண்டும்‌. ஒரு தடவை (அங்க்ங்களை ) 
ஸ்பர்‌சிக்கவேண்டும்‌.] என்று ஆசமனத்தை வீதித்தது. 


“அங்கு ஷ்டே ஏ 5க்‌,நிரிதி க்‌,யாத: ப்ரோக்தா வாயு: ப்ரதே,மபிநீ | 
அநாமிகா தத; ஸூர்ய: கநிஷ்ட, மக,வா ஸ்ம்ருதா ॥ 


 ப்ரஜாபதிர்‌ மத்யமா து ஜ்ஞோயா மாாத்‌,திமபீ,ப்ஸதா |” 


[பெருவிரல்‌ ௮க்நியை தேவதையாக உடையது; ஆள்காட்டி 
வீரல்‌ வாயுவை தேவதையாக உடையதாகச்‌ சொல்லப்‌ 
பட்டது. பவித்திரவிரல்‌ ஸூர்யனை தேவதையாக வுடையது, 
சிறு விரல்‌ இந்திரனை தேவதையாக ' உடையது. ஈடுவிரல்‌ 
பிரஜாப தியை தேவதையாக உடையது. இவைகளை சத்தியை 
விரும்புமவன்‌ அறியவேண்டியது,] என்று ஹாரீதஸ்ம்ருதி 
யில்‌ சொல்லப்பட்டது.  “ முகளதிந்த்ரங்ச அக்‌,நிய்ச `" 
என்‌ கிறபடியே அக்னி முகத்திலிருந்து உண்டானவனாகை 
யாலும்‌, முகத்துக்கு அதிதேவதகையாகையா லும்‌, ௮அக்கியை 
தகேவதையாகக்‌ கொண்ட டெருவிரலால்‌ முகத்தைத்‌ தொட 
வேண்டும்‌. '' சோஸ்‌ ஸ9ர்யோ அஜாயத'' என்கிறபடியே 
கண்ணிலிருந்து ஸூர்யன்‌ பிறக்கையாலும்‌, கண்ணுக்கு 
தேவதையாகையா லும்‌, ஸூர்யனை தேவகையாகக்கொண்ட 
பவித்திரவிரலால்‌ கண்ணைத்தொடுவது பொருத்தமுள்ள த. 
ங்வாஸத்திற்கு உபயோகப்படும்‌ இந்திரியமான மூக்கை. 
ங்வாஸிக்கப்படும்‌ வாயு பவை தகேவதையாகக்கொண்ட 
ஒள்காட்டிவிரலால்‌ தொடுவது நியாயமே. சனிக்கு 
(இடிக்கு) அதிபதியான இந்திரனை தேவதையா கக்‌ கொண்ட 
சிறு விரலால்‌ சப்தத்தை கிரஹிக்கும்‌ இந்திரியமான காதை 
ஸ்பர்சிப்பதும்‌ பொருத்தமுடைய து. இப்படிப்‌ பல அங்கங்‌ 
களைத்‌ தொடுவதால்‌ அந்தந்த அங்கங்களுக்கு சுத்தி எற்‌ 
படுகிறது என்றும்‌ தெளிவாகிறது. 

“ய: க்ரியாம்‌ குருதே மோஹாத்‌ அநாசம்யைவ நாஸ்திக: | 
ப,வந்தி ஹி வருத தஸ்ய க்ரியா: ஸர்வா ந ஸம்மய:; ||” 
[ஈாஸ்‌திகனான எவனொருவன்‌. மயக்கத்தனால்‌ ஆசமனம்‌ 
செய்யாமல்‌ கருமங்களைச்‌ செய்கிறானோ. அவனுடைய 
கருமங்களெல்லாம்‌ வீணாகின்றன. இதில்‌ ஸந்தேஹே 
யமில்லை.] என்று சாஸ்திரங்களில்‌ சொல்லப்பட்ட திலிருநீது 
ஆசமனம்‌ செய்யவேண்டிய தின்‌ அவசியம்‌ அறியப்படுகிற து. 

பாதெள ஹஸ்தெள ச ப்ரக்ஷாள்ய..யாதெள பூமெள ப்ரதிஷ்‌ 
பளப்ய பத்;த,கச்சஹிக, : புண்டளீகாக்மிஷ்டதை,வதம்‌ 

ஸ்ம்ருத்வாசாமேத்‌ ”' 
[பாதங்களையும்‌, கைகளையும்‌ அலம்பி, பரதங்களை பூமியில்‌ 
ஊன்றி, கக்சத்தையும்‌, சிகையையும்‌ முடிந்தவனாய்‌. இஷ்ட 
தெய்வமான புண்டரீகாகஷனை நினைத்து ஆசமனம்‌ செய்ய 
வேண்டும்‌.] என்று ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில்‌ சொல்லப்‌ 


“அம்ஸெள ஸ்ப்ருஷ்ட்வா கராக்‌,ரேண தோயம்‌ 
ஸ்ப்ருஷ்ட்வா ஸமாஹித: | 
ஸம்ஸ்ம்ருத்ய பத்ம௩ாப,ம்‌ ச விப்ர: ஸம்யக்‌, சிமாத்‌,த்யதிர”' 
(क्छ. நுனியால்‌ தோள்களை ஸ்டர்‌சித்து, தண்ணீரையும்‌ 
ஸ்பர்சித்து. . பத்மநாபனை நினைப்பதினால்‌ ப்ரரஹ்மணன்‌ 
நன்கு பரிசுத்தமடைகிறான்‌.] என்று வ்யாக்ரபாதரால்‌ 
சொல்லப்பட்ட து. -' ஓங்காரேண ஸஹ யஜ்ஞபுருஷம்‌ மநஸா 
ஸ்மரேத்‌'' [ஓங்காரத்தை உச்சரித்துக்கொண்டு யஜ்ள 
ருஜனான விஷ்ணுவை மனஸ்ஸினால்‌ நினைக்கவேண்டிய ௧. | 
என்று நாராயணீயமென்‌ னும்‌ வீயாக்க்யோனத்தில்‌ சொல்லப்‌ 
பட்டது. இவைகளிலிருந்து பகவத்ஸ்மரணமும்‌. நாமோச்‌ 
சாரணமும்‌ ஆசமனத்தின்‌ போது செய்யவேண்டுமென்ப து 
ஸ்ம்ருதிகளிலிருந்தும்‌ ஏற்படுகிறது. 


“த்ரி: ப்ராங்நீயாத;போ யத்து ப்ரீதாஸ்தேநாஹ தே,வதா: | 
ப்‌,ரஹ்மா விஷ்ணுங்ச क भ ४०७ ப,வந்தீத்யநுமம்ரும: | 
கங்கள்‌ ௪ யமுநா சைவ ப்ரீயேதே பரிமார்ஜநாத்‌ | 
ஸம்ஸ்ப்ருஷ்டயோர்‌ லோசநயோ:; ப்ரீயேதாம்‌ 
ஸிப்‌ ாஸ்கரெள | 
நாஸத்யஸம்ஜ்ஞெள ப்ரீயேதே ஸ்ப்ருஷ்டே நாஸாபுடத்‌வயே| 
கர்ணயோ: ஸ்ப்ருஷ்டயோஸ்‌ தத்‌,வத்‌ ப்ரீயேதே 
சாஈலாநிலெள ॥ 
ஸம்ஸ்ப்ருஷ்டே ஹ்ருத,யே சாஸ்ய ப்ரீயந்தே ஸர்வதே,வதா:| 
07 58 ஸம்ஸ்பர்மநாத்‌, தே,வ: ப்ரீதஸ்து புருஷோ ப,வேத்‌।| 
ய ஏவம்‌ ப்‌,ராஹ்மணோ நித்யமுபஸ்பர்மாமாசரேத்‌ | 
ப்‌,ரஹ்மாதி, ஸ்தம்பபர்யந்தம்‌. ஐக,த்‌ ஸ பரிதர்ப்பயேத்‌ |" 
[மன்று தடவை தீர்த்தத்தை உட்கொண்டானாகல்‌. அதனால்‌ 
எல்லா தேவர்களும்‌, முக்கியமாக ப்ரஹ்மவிஷ்ணுருத்ரர்‌ 
களும்‌ திருப்தியடைறொர்கள்‌ என்று மஹான்‌ களிடமீருந்து 
கேள்விப்படுகிறோம்‌. உதடுகளை த்‌ துடைப்ப தினால்‌ கங்கையும்‌, 
யமுனையும்‌ பிரீ தியடை றார்கள்‌. இரு கண்‌ ளையும்‌ ஸ்பர்சிப்ப 
தால்‌ சந்த்ரஸூர்யர்கள்‌ ஸந்தோவிக்கிறார்கள்‌. இரு மூக்குப்‌ 
பக்கங்களையும்‌ பசகெொடுவதால்‌ அம்விநீதேவதைகள்‌ 
அரந்தத்தை அடை கறார்கள்‌. இரு காதுகளையும்‌ ஸ்பர்சிப்ப 
தால்‌ அக்நியும்‌, வாயுவும்‌ திராப்தியடை கன்‌ றனர்‌. இவ 
னுடைய ஹ்ருதயம்‌ தொடப்பட்டவுடன்‌ எல்லா தேவதை 
களும்‌ ஸந்தோஷிக்கிறாோர்கள்‌. தலையில்‌ தொடுவதால்‌ பரம 
புருஜனானநா ராயணன்‌ ப்ரீதியடைகறான்‌ எந்த ப்ராஹ்மணன்‌ 
இம்மாதிரி இனந்தோறும்‌ உபஸ்பர்னத்தை அறுஷ்டிக்‌ 
கிறானோ. அவன்‌ பிரமன்‌ முதலாகப்‌ புல்‌ வரையிலுள்ள 
எல்லா உலகையும்‌ திருப்தி செய்விக்கறான்‌.] என்று 
வ்யாஸஸ்ம்ருதியில்‌ ஆசமனத்தின்‌ பெருமை பேசப்பட்டது. 


“யத்‌ ப்ரதமும்‌ ஆசாமதி தேட ருக்‌,வேதம்‌ ப்ரீணாதி 
யத்‌, த்‌,விதீயம்‌ தே யஜுர்வேத,ம்‌ ப்ரீணாதி யத்‌ த்ருதீயம்‌ 
தே कण 00695300 | யத்‌ ப்ரதஹம்‌ பரிமார்ஷ்டி தேகாதள்வ 
९०15500 யத்‌, த்‌,விதீயம்‌ தேக இதிஹாஸபுராணம்‌ | யத்‌ ஸவ்யபம்‌ 
பாணிம்‌ ப்ரோக்ஷதி பாதென மபிரோ ஹ்ருதயம்‌ ஈாஸிகே 
சக்ஷஷீ ங்ரோத்ரே நாபிம்‌ சோபஸ்ப்ருமேத்‌ தேநெளவதி, 
வநஸ்பதய: ஸர்வாங்ச தே,வதா: ப்ரீணாத்யாப்நோதி। ஆசம௩ா 
தே,வ ஸர்வஸ்மாத்‌ பாபாத்‌ ப்ரமுச்யதே ” 

[முகல்‌ தடவை ஆசமனம்‌ செய்வதினால்‌ ருக்வேதத்தை 
50118 செய்விக்கறொன்‌. இரண்டாவது அசமனத்தினால்‌ 
யஜு-ர்வேதத்தையும்‌, மூன்றாவது ஆசமனத்தினால்‌ ஸாம 
வேதத்தையும்‌ திருப்தி செய்விக்கறான்‌. முதல்‌ தடவை 
துடைப்பதினால்‌ அதர்வணவேதத்தையும்‌. இரண்டவது 
தடவை துடைப்பதால்‌ இதிஹாஸ புராணங்களையும்‌ த்ருப்தி 
செய்விக்கறான்‌. இடதுகை, இருபா தங்கள்‌, தலை. ஹ்ருதயம்‌. 
நாசிதுவாரங்கள்‌. காதுகள்‌. நாடி இவைகளை ஸ்பர்சிப்பதால்‌ 
ஓஷதிகளையும்‌. வனஸ்பதிகளையும்‌, எல்லா தேவதைகளையும்‌ 

பிரீ தியடைவிக்கிறான்‌. அவர்களை அடை றோன்‌. ஆசமனத்‌ 
தினால்‌ எல்லாப்பாபங்களினின்‌ றும்‌ வீடுபடுகிறான்‌.] என்று 
போதாயனரால்‌ சோல்லப்பட்டது. 


இனி அச்யுதன்‌, அந்தன்‌ முதலிய திருநரமங்களின்‌ 
சப்தத்தின்‌ சீர்மையும்‌. அர்த்தத்தின்‌ பெருமையும்‌ 
விவரிக்கபட்படுகன்‌ றன. 


“அச்யுதா௩ந்தகே,ா விந்த, நாமோச்சாரணபேஜாத்‌ | 
நமங்யந்தி ஸகலா ரோக;ா: ஸத்யம்‌ ஸத்யம்‌ வதராம்யஹம்‌ |!" 
[ அச்சுதன்‌. அநந்தன்‌. கோவிந்தன்‌ என்னும்‌ திருநாமங்களை 
உச்சரிப்பதாகிற மருந்தினால்‌. எல்லா வியாதிகளும்‌ நாச 
மடைகின்‌ றன. உண்மை உண்மை' என்று இருகால்‌ 
ஸத்யம்‌ செய்து சொல்லுகிறேன்‌ நான்‌.] என்று அச்யுதன்‌. 
அனந்தன்‌ , கோவிந்தன்‌ என்னும்‌ திருநாமங்களின்‌ டெருமை 
வீஷ்னுதர்மத்தில்‌ உத்கோவிக்கப்பட்ட த. 


“ஆர்த்தா விஷண்ணா: மரிதி,லாங்ச பீ,தா: 
கேோோரேஷு ச வ்யாதிஜஷு வர்த்தமாரா: | 
ஸங்ர்த்ய காராயணமாப்‌,த,மாத்ரம்‌ 
விமுக்தது,:க்க,ா: ஸுகி,நேோர பவந்தி |" 
[ஆத்யாத்மிகம்‌, ஆதிபென திகம்‌, ஆதிதை,விகம்‌ என்னும்‌ 
தாபங்களினால்‌ தபிக்குமவர்களும்‌. பயந்தவர்களும்‌. கோர 
மான வியாதிகளினால்‌ துன்பமடைபவர்களும்‌ நாராயணன்‌ 
என்னும்‌ சப்தத்தை மட்டும்‌ சீர்த்தனம்‌ செய்வதாலேயே 
எல்லா துக்கங்களும்‌ நீங்கப்பெற்று, மோக்ஷ ஸுகத்தையும்‌ 
அடை சறார்கள்‌.] என்று பாரதத்தில்‌ பேசப்பட்டது. 


“நாராயணேதி மாப்‌,தே5ஸ்தி வாகஸ்தி வமவர்த்திநீ | 
ததராபி நரகே கேரரே பதந்தீதி கிமத்பு,தம்‌ ॥'' 

[ஈாராயணன்‌ என்னும்‌ சப்தமிருக்கறெது; வாயும்‌ வசத்தி 

லிருக்கிறது. அப்படியும்‌ கோரமான நரகத்தில்‌ பலர்‌ 
விழுகின்றனர்‌ என்பது என்ன ஒச்சரியம்‌!] என்று புராணங்‌ 
களில்‌ பேசப்பட்ட து. பொய்கையாழ்வாரும்‌ இதையே = ` 

“நரவாயிலுண்டே நமோ நாரணாவென்று 
ஓவா துரைக்கும்‌ உரையுண்டே-— மூவாத 
மாக்கதிக்கண்‌, செல்லும்‌ வகையுண்டே என்னொருவர்‌ 
தீக்கதிக்கண்‌ செல்லும்திறம்‌.”' —என்று அருளிச்செய்தார்‌. 


*“அவமேநாபி யந்நாம்ஙி கீர்த்திதே ஸர்வபாதகை: | 
புமாந்‌ விமுச்யதே ஸத்‌,ய: ஸிம்ஹத்ரஸ்தைர்‌ ம்ருகை,ரிவ |) 
யந்காம கீர்த்தநம்‌ ப,க்த்யா விலாயநமநுத்தமம்‌ | 
மைத்ரேயாபமோஷபாபாநாம்‌ த, தூ௩காமிவ பாவக: |" 
(०, பு. (6-8)] 
[அந்த பகவானுடைய திருநாமம்‌ யத்ருச்சையாகல்‌ கீர்த்‌ 
திக்கப்பட்டபோதிலும்‌. ஒரு மனிதனுடைய பாடங்கள்‌ 
ஸிம்ஹத்தினால்‌ பயமுறுத்தப்பட்ட ம்ருகங்கள்‌ விலகப்‌ 
போவதபோல்‌, விட்டோடிப்போ கன்‌ றன. மைத்ரேயரே! 
ஸுவர்ணம்‌ முதலிய தாதுக்களுடைய அழுக்கை நெருப்பு 
போக்குவதுபோல்‌, பக்திய்டன்‌ அப்பெருமானுடைய இரு 
நாமஸங்கீர்த்தனம்‌ செய்தல்‌ எல்லாப்பரடங்களையும்‌ 
போக்கடிக்கும்‌ ஒப்பற்ற ஸாதனமாகும்‌.] என்றும்‌. 


“த்‌ யாயாந்‌ க்ருதே யஜந்‌ யஜ்லஞை: த்ரேதாயாம்‌ 
த்‌,வாபரே 5ாச்சயக்‌ | 
५159 कष्ण ढी தத;,ாப்கோதி கலெள ஸங்கீர்த்ய கேமரவம்‌ ॥ 
[வி. பு. (6-2-17)] 
[-கவானை தியானிப்பதால்‌ கருதயுகத்திலும்‌, யஜ்ஞங்களைக்‌ 
காண்டு ஆராதிப்பதால்‌ த்ரேதாயுகத்திலும்‌. அர்ச்சனை 
செய்வதால்‌ த்வாபரயுகத்திலும்‌ எதை அடைகறானே அதைக்‌ 
கலியுகத்தில்‌ கேசவனை ஸங்கீர்த்தனம்‌ செய்வதாலேயே 
அடையலாம்‌.] என்றும்‌ 


“திம்‌. சித்ரம்‌ தத,க,ம்‌ ப்ரயாதி விலயம்‌ 
தத்ராச்யுதே ர்த்திதே'' 
[அச்யுகனுடைய ்‌ நாமம்‌ கீர்த்திக்கப்பட்டவுடன்‌ அவ்‌ 
விடத்திலேயே பாபங்கள்‌ நூசமடைகின்‌ றன என்னுமிவ்‌ 
விஷயத்தில்‌ ஆச்சரியம்‌ என்ன? ] என்றும்‌ வீஷ்ணுபுராணத்‌ 
தில்‌ உரைக்கப்பட்டது 


“அஜ்ஞாகதோ ஜ்ஞா௩தோ வா வாஸுதே,வஸ்ய கீர்த்தநாத்‌ | 

தத்ஸர்வம்‌ விலயம்‌ யாதி தோயஸ்த,ம்‌ லவணம்‌ யத |” 
[அறிந்தோ, அறியாமலோ வாஸுதேவனுடைய இரு 
நரமத்கைச்‌ சொன்னானாகில்‌ அவனுடைய பாபமெல்லாம்‌ 
'தண்ணீரினுள்ளிருக்கும்‌ உப்பைப்போல்‌ கரைந்து வீடு 
தன்றன.] என்றும்‌, 


“முமாயாலம்‌ ஜலம்‌ வந்ஹேஸ்‌ தமஸோ பாஸ்கரோதவ: | 

` ஸாந்தி: கலேரகெ,ளக,ஸ்ய நாமஸங்கீர்த்தகம்‌ ஹரே: ॥” 

[ செருப்பை அணைப்பதற்கு நீரும்‌. இருட்டைப்‌ போக்கடிக்க 
ஸூர்யோதய்மும்‌ பேரதுமானவை. (௮து போலவே ) 
கலிகோலாஹலத்தினாலண்டாகும்‌ ८4 ¶ (+न @ ना ना @ @ 5८ 
போக்கடிப்பது ஹரியின்‌ நாமஸங்கீர்த்தனமே,] என்றும்‌. 
"५1 710 ஸங்கீர்த்தநதோ விமுச்யதே'' [எவனுடைய இரு 

நாமஸங்கீர்‌ ததனத்தினால்‌ மோக்ஷ்மடை கிறு ] என்றும்‌. 
'யந்நாமஸங்கீர்த்தகதோ மஹாபயாத்‌,; விமோக்ஷமாப்நோதி 
ந ஸம்மாயம்‌ நர: ' [எவனுடைய திருநாமஸங்கீர்த்தன த்தால்‌ 
மனிதன்‌ யேறாபத்தினின்‌ றும்‌ ஸந்தேஹயில்லாமல்‌ வீடுதலை 
யடைகிறானலே........] என்‌ மறும்‌, 


“ஹக்ருது,ச்சரிதம்‌ யே ஹரிரித்யக்ரத்‌,வயம்‌ | 

பத்த, பரிகரஸ்தேர மோச௯்தாய கமம்‌ ப்ரதி” 

[ ஹரி என்னுமிவ்விரண்பெழுத்‌தும்‌ எவனால்‌ ஒருதடவை 
உச்சரிக்கப்பட்டதோ. அவன்‌ மோசத்துக்குப்‌ போவதற்‌ 
காகச்‌ செய்யவேண்டியவைகளைச்‌ செய்துவிட்டான்‌ ]என்றும்‌, 


“யஸ்ய ஈாம்நி ஸ்ம்ருதே மர்த்யஸ்‌ ஸமுத்க்ராங்தேர௩ந்தரம்‌ ! 
ப்ராப்நோதி வைஷ்ணவம்‌ ஸ்த;ா௩ம்‌ புநராவ்ருத்திவர்ஜிதம்‌ |!” 
[எவனுடைய இருநாமத்தை நினைத்த மனிதன்‌ இறந்த 
பின்பு: திரும்பிவருகையற்றதான விஷ்ணுவினுடைய பரம 
டத த்தை அடை றொலே........ ] என்றும்‌ விஷ்ணுதர்மத்தில்‌ 
பலவிடங்களில்‌ பேசப்பட்டதன்றோ. மற்றோரிடத்தில்‌ 


“ஹீர்வாந்‌ காமாந்‌ ப்ராப்நுவந்தே வியாலாந் 
த்ரைலோக்யே$ஸ்மிந்‌ க்ருஷ்ண நாமாபி,த,ாநாத்‌ '' 

[ இம்மூவுலகிலுமுள்ள மிகப்பெரிய இஷ்டவஸ்‌ தக்களெல்லா 

வற்றையும்‌ கிருஷ்ணனென்னும்‌ திருநாமத்தைச்‌ சொல்லு 

வதன்‌ மூலமாகவே அடைகீறோர்கள்‌] என்று கோவிக்கப்‌ 
பட்டது. வேறோரிடத்தில்‌ 

“ஹங்கீர்த்தயேஜ்ஜக,ந்காதம்‌ வேதம்‌ வா5பி ஸமீரயேத்‌'' 

[ ஜகந்கா தனான பெருமானை ஸங்சீர்த்தனம்‌  செய்ய்க்கடவன்‌; 
அல்லது வேதத்தையாவது ஒதக்கடவன்‌ . ] என்று நாராயண 
நாம ஸங்கீர்த்தனம்‌ வேதாத்யனத்தைக்காட்டிலும்‌ மேன 
சென்று உணர்த்தப்பட்டது, இவையெல்லாவற்றிற்கும்‌ 
மூலமான வேதத்திலும்‌ - த்ருவாஸோ அஸ்ய கீரயோ 
ஜ௩ாஸ: '' [இவனைக்‌ ூர்த்திக்கும்‌ ஜனங்கள்‌ நிலையான 
மோக்ஷஸ்தரனத்தை அடைகிறோர்கள்‌.] என்‌ று உத்கோ விக்‌ 
கப்பட்டது. 

“கெடுமிடராயவெல்லாம்‌ கேசவாவென்ன நாளும்‌ 
கொடுவினை செய்யும்‌ கூற்றின்‌ தமர்களும்‌ குறுககில்லார்‌ 
என்று நம்மாழ்வார்‌ அருளினார்‌. 


“கரவலிற்‌ புலனை வைத்துக்‌ கலிதன்னைக்‌ கடக்குப்பாய்ந்து 
நாவலிட்டுழிதருகின்றோம்‌ ஈமன்தமர்‌ தலைகள்‌ மீதே 
மூவுலகுண்டுமிழ்ந்த முதல்வ! நின்‌ நாமங்கற்ற 
ஆவலிப்புடைமை கண்டாய அரங்கமா நகருளானே! ५ | 
என்றும்‌,


“பச்சைமாமலைபோல்‌ மேனிப்பவளவாய்க்‌ கமலச்செங்கண்‌ 
அச்சுதா! அமரரேறே! ஆயர்தம்‌ கொழுந்தே! என்னும்‌ 
இச்சுவை தவிர மான்‌ போய்‌ இந்திரலோகமாளும்‌ 
அச்சுவை பெறினும்‌, வேண்டேன்‌ அரங்கமா௩கருளானே!'' 
_என்றும்‌, 


“மொய்த்த வல்‌ வினையுள்‌ நின்று மூன்றெழுதீதுடைய பேரால்‌ 
கத்திரபந்துமன்றே பராங்கதி கண்டுகொண்டான்‌ "என்றும்‌, 


“நமனும்‌ முற்கலனும்‌ பேச நரகில்‌ நின்றார்கள்‌ கேட்க 
ஈரகமே சுவர்க்கமாகும்‌ நாமங்களுடைய ஈம்பி'” 

என்றும்‌ தொண்டரடிப்பொடியாழ்வார்‌ தஇருநாமஸங்கீர்த்‌ 
தனப்ரபவத்தைப்‌ பலகால்‌ அருளிச்செய்தருளினார்‌. 
திருமங்கையாழ்வாரும்‌ முதல்‌ திருமொழியில்‌ நரராயண 
கநாமப்ரபாவத்தைப்‌ பலபடியாகப்‌ பேசியருளிஞார்‌. 


`" இத்திருநாமந்தான்‌ ப்ரயோஜநாந்தரபரர்க்கு ப்ர 
யோஜனத்தைக்‌ கொடுக்கும்‌; உபாயார்தரநிஷ்டரர்க்குப்‌ 
பாவநமாயிருக்கும்‌; ப்ரபந்ஈர்க்கு கேஹயாத்ராமேஷேமா 
யிருக்கும்‌; முத்துப்படும்‌ துறையில்‌ முழுகுவார்‌ முத்தைக்‌ 
கொடுத்துப்‌ பழங்கொள்ளுவர்கள்‌; செழுமுத்து வெண்ணெற் 
கெனச்‌ சென்று' மாறுவர்களிறே. விலையறியும்‌ செட்டிகள்‌ 
பக்கல்‌ புகுர்கவாறே பெருவிலையனாம்‌. செருக்கரானார்‌ 
இத்தைப்பூண்டு அதுபவிப்பார்கள்‌; அப்படியே ப்ர 
யோஜநார்‌தரபரர்க்கும்‌ உறுட்பாய்‌, ஸாத,நாந்தரநிஷடரர்க்‌ 
கும்‌ உறுப்பாய்‌,ப்ரடர்நர்க்கு ஸ்வயம்ப்ரயோஜாமுமாயாய்த்து 
இத்திருநாமமிருப்பது '" என்றும்‌. “ இப்படிச்‌ சேதனன்‌ 
தான்‌ மூலையடியே திரிந்தாலும்‌, அவ்ன்‌ தோஸங்களைப்‌ 
போக்கி, மேல்‌ செல்லுகிற நன்மைகளைக்‌ கொடுக்கும்படி 
யாய்த்‌து திருநாமத்தினுடைய ப்ரபாவமிருப்பத'' என்றும்‌, 
“ பக்தியினுடைய துஷ்கரகையோபர்‌ தி ப்ரபத்திநிஷ்டா 
ஹேதுவான மஹாவீங்வாஸமும்‌ சிலர்க்குக்‌ கட்டுகை 
ஸந்‌-8 
அரிதாகையாலே இதில்‌ இழியக்‌ கூசினவர்களுக்கு ஸர்வா £, 
கரரமான யாத்;ருச்சி,க பகவந்நாம ஸங்கீர்த்தனமே சேத 
ருடைய பாபத்தைப்‌ போக்கி ஸாக்ருதரீனுகூலமாகக்‌ கர்ம 
யோகாதிகளிலே கூட்டுதல்‌. ப்ரபச்தியிலே மூட்டுதல்‌, 
விரோதியைப்‌ போக்கி ப்ராப்யத்தைக்‌ கொடுக்கைக்குத்‌ 
தானே நிர்வாஹகமாதலாம்படியான வைபவத்தை உடைத்‌ 
தாயாய்த்து இருநாமத்தினுடைய வைபவயிருப்பது'' என்‌ 
மம்‌ பரமகாருணிகரான பெரியவாச்சான்பிள்ளை அருளிச்‌ 
செய்தார்‌. இவையெல்லாவற்றையும்‌ வேதாந்தாசார்யரர்ன 
பட்டரும்‌ ஸ்ரீஸ்ஹஸ்ரநாமபாஷ்யத்திலே பரபக்ஷ ர திக்ேப 
பூர்வகமாகப்‌ பரக்க அருளிச்செய்தார்‌. அபியுக்தாக்‌்ரே 
ஸரரான பிள்ளைலோகாசார்யரும்‌, “ வாச்யப்ரபாவம்‌ 
போலன்று வாசகப்ரபளவம்‌. அவன்‌ தூரஸ்த்தனானாலும்‌ 
இது கிட்டி நின்று உதவும்‌. த்‌,ரெளபதிக்கு ஆபத்திலே 
புடவை சுரந்தது திருநாமமிறே. சொல்லும்‌ க்ரமமொழியச்‌ 
சொன்னாலும்‌ தன்‌ ஸ்வரூபம்‌ கெடநில்லாது. இதுதான்‌ 
“குலந்தரும்‌' என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும்‌ 
கொடுக்கும்‌. ஐம்வர்யகைவல்யப வல்லா ங்களை ஆசைப்‌ 
பட்டவர்களுக்கு அவற்றைக்‌ கொடுக்கும்‌. கர்மஜ்ஞாடபக்தி 
களிலே  இழிந்தவர்களுக்கு விரோதியைப்‌ போக்கி, 
அவற்றைத்‌ தலைக்கட்டிக்‌ கொடுக்கும்‌. ப்ரபத்தியிலே இழிந்‌ 
தவர்களுக்கு ஸ்வரூடஜ்ஞாகத்தைப்‌ பிறப்பிச்துக்‌ கால 
கேபத்துக்கும்‌ போக்த்துக்கும்‌ ஹேதுவாயிருக்கும்‌'' என்று 
முமுக்ஷாப்படியில்‌ அருளிச்செய்தார்‌. இனி. அமுதிலும்‌ 
இனியவையான அச்யுதாதி நாமங்களின்‌ அரும்பொருள்கள்‌ 
அறிவிக்கப்படுகின்‌ றன. 


(அச்யுதன்‌) ** யஸ்மாத்‌ ப்ராப்தா ந ச்யவந்தே '' என்கிற 
படியே அடியவர்களை நழுவவிடா தவன்‌; எல்லாரையும்‌ எல்லா 
அவஸ்தைகளிலும்‌ ரக்ஷிக்குமவன்‌ ° 


“யஸ்மாந்க ச்யுதபூர்வோ5ஹமச்யுதஸ்தேந கர்மணா'' 

( அடியவர்களிட மிருந்து ஈழுவா மலீருக்கறேனாகையால்‌ நரன்‌ 
அச்சுத னெனப்படுகிறேன்‌ .] என்று சாஸ்திரம்‌ சொல்லிற்று. 
( அச்யுதன்‌ ) ப்ரீளயகரலத்தில்‌ இவர்கள்‌ படும்‌ நோவு 
பொறுக்கமாட்டாமல்‌. தன்‌ வயிற்றிலேவைத்து ரக்ஷிக்கு 
மவன்‌; ஸ்ருஷ்டி காலத்தில்‌ அசித்ஸமராய்க்‌ கிடக்குமிவர்‌ 
களைக்‌ கண்டு இரங்கிக்‌ கரணகளேபரங்கலைக்‌ (சரீரேர்திரி 
யங்களைக்‌) கொடுக்குமவன்‌.  “ஆதுமில்‌ காலத்தெந்தை 
அச்சுதன்‌ '' என்று இவ்வர்த்தத்தை ஆழ்வார்‌ அருளிச்‌ 
செய்தார்‌. (அச்யுதன்‌ ) தமர்கள்‌ நெருப்பிலே விழுந்தாலும்‌. 
அவர்களைத்‌ தீங்கு வாராதபடி காப்பா ற்றுமவன்‌. “அறியும்‌ 
செந்தியைத்‌ தழுவி அச்சுதன்‌ என்னும்‌ மெய்‌ வேவாள்‌'' 
என்றார்‌ ஆழ்வார்‌. (அச்யுதன்‌) தன்னடியார்களை நமன்‌ தமர்‌ 
கையிலே காட்டிக்‌ கொடாமல்‌ கரப்பாற்றுமவன்‌; 

“அயர வாங்கும்‌ நமன்‌ தமர்க்கு அருநஞ்சினை அச்சுதன்‌ தன்னை '' 
என்றார்‌ ஆழ்வார்‌. ( அச்யுதன்‌ ) சேதனர்களைத்‌ தங்கள்‌ 
கையில்‌ காட்டிக்கொடாமல்‌ ரக்ிப்பதற்காக அவர்‌ 
களோ டொருவனாகத்‌ தோன்‌ றுமவன்‌. “தேவகி தன்‌ வயிற்றில்‌ 
அத்தத்தின்‌ பத்தாம்‌ நாள்‌ தோன்றிய அச்சுதன்‌'' என்று 
பெரியாழ்வாரும்‌, 

“'அச்யுதப,£நுநா தே,வகீபூர்வஸர்த்‌,யாயாமாவிர்ப்பூ தம்‌ 
[அச்சுதனாகிற ஸூர்யன்‌ தேவகியாகிற ப்ராத:ஸந்த்‌,யா 
காலத்தில்‌ தோன்றினான்‌. ] “ என்று ८4 7५० (6227 @$ ५१८8 
அருளிச்செய்தனர்‌. ( அச்யுதன்‌ ) தன்னிடம்‌ அன்புள்ள 
வரைக்‌ கைநழுவவிடா தவன்‌. “'அரிமுகன்‌ அச்சுதன்‌ கைமேல்‌ 
என்‌ கைவைத்து” என்று ஆண்டாள்‌ அருளிச்செய்தாள்‌. 
( ௮ச்யுதன்‌ ) 

“மரங்க,சக்ரக,தாபாணே! த்‌,வாரகாநிலயாச்யுத!'” 
[சங்கசக்ர கதைகளைக்‌ கையில்‌ கொண்டவனே! த்வாரகா 
வாஸியே! அடியாரை ந முவவீடாத அச்சுதனே!] 
என்றழைத்த த்ரெளபதிக்குத்துகிலளித்த தும்‌ இக்திரு 
நரமமேயன்றோ. (அச்யுதன்‌) 

“மித்ரபாவேந ஸம்ப்ராப்தம்‌ ௩ த்யஜேயம்‌ கத;ஞ்சந'' 
[ஈண்டனென்‌ ற வேஷத்துடன்‌ என்னை ,அடைந்தவனையும்‌ 
நான்‌ ஒருபோதும்‌ விடமாட்டேன்‌.] என்றும்‌, 

“ஆநயைநம்‌ ஹரிங்ரேஷ்ட, த,த்தமஸ்யாப,யம்‌ மயா | 
விபீ,ஷணோ வட ஸாக்ஸரீவ யதி, வா ராவண: ஸ்வயம்‌ |'' 

[ வாஈரத்தலைவனான ஸாக்ரீவனே! இவன்‌ வீபீஷணனாயிருந்‌ 
தாலும்‌, ராவணன்‌ தானேயாயிருந்தாலும்‌ இவனுக்கு நான்‌ 
அபயமளித்துவீட்டேன்‌. நீ இவனை அழைத்துவா | என்றும்‌, 


“ஸக்ருதே,வ ப்ரபந்காய தவாஸ்மீதி ௪ யாசதே | 
அபயம்‌ ஸர்வபூ,தேப்‌யோ த,தரம்யேதத்‌, வ்ரதம்‌ மம।॥'' 


[ஓரு கடவை சரணமடைந்தவனுக்கும்‌ 'உன்னடியேன்‌ நான்‌' 
என்று யாசிப்பவனுக்கும்‌ எல்லா பூதங்களினின்‌ றும்‌ அபய 
மளிக்கிறேன்‌. இதுவே என்னுடைய விரதம்‌.] என்றும்‌ 
அடைந்தவர்களை அளிப்பதையே விரதமாகக்கொண்ட 
சக்கரவர்த்தித்திருமகனாய்‌ அவதரித்தவன்‌,  '' அச்சுதன்‌ 
தன்னைத்‌ தயரதற்கு மகன்‌ தன்னையன்றி மற்றிலேன்‌ கஞ்ச 
மாகவே '' என்‌ று சடகோபன்‌ அருளினாரல்லவா. (அச்யுதன ) 
१9 ८1.3८ 147 நுநா அவீர்ப்பூதம்‌'' "தேவகி தன்‌ வயிற்றில்‌ 
தோன்‌ றிய அச்சுதன்‌” என்‌ கிறபடியே சேதனர்களை நழுவ 
விடவொண்ணாமையாலே கருஷ்ணனாய்‌ அவதரித்து, 


“ஸர்வதன்மாந்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ மரணம்‌ வ்ரஜ । 
அஹம்‌ த்வா ஸர்வபாபேப்‌,யோ மோக்ஷயிஷ்யாமி மாமருச:।?' 


[எல்லா மோக்ஷஸாதனங்களையும்‌ வாஸனையுடன்‌ விட்டு 
என்னையே சரணமடை. நான்‌ உன்னை எல்லாப்‌ பாடங்‌ 
களினின் றும்‌ விடுவிக்கறேன்‌; வருந்தாகதே.] என்று 
அருளிச்செய்தவன்‌. (அச்யுதன்‌ ) ஸ்வாங்ரிதர்களை அஜ்ஞாஈ 
அந்யதராஜ்ஞா௩ வீபரித ஜ்ஞாரங்களின்‌ கையில்‌ காட்டிக்‌ 
கொடாமல்‌ காப்பாற்றுமவன்‌. 
“நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்‌ லப்‌,த,ா த்வத்ப்ரஸாதராந்‌ 

மயா ९5 |@ ° 
[ அச்சுதனே! (வீபரிதஜ்ஞானமா யெ) மோஹம்‌ நசித்தது; 
உன்னருளால்‌ உண்மை அறிவு என்னால்‌ அடையப்பட்ட து] 
என்பதல்லவோ அர்ஜுனன்‌ வார்த்தை. (அச்யுதன்‌) இவ்‌ 
வுலகிலிரு்து மோக்ஷ்மடைகந்கத முக்தரையும்‌. நித்யஸு௫ூரி 
களையும்‌ -'புணேக்கொடுக்கிலும்‌ போகவொட்டார்‌?' என்கிற 
படியே அங்கிருந்து நழுவவிடா தவன்‌. =“ ௮ச்சுதனை........ 
அந்தன்‌ தன்மேல்‌ நண்ணிநன்குறைகன்றானை '' என்று 
நம்மாழ்வாரும்‌, “அச்சம்‌ நோயோடல்லல்‌ பல்‌ பிறப்பவாய 
மூப்பிவை வைத்த சிந்தை வைத்தவாக்கைமாற்றி வானி 
லேற்றுவான்‌ அச்சுதன்‌ அநந்தகீர்த்தி ஆதியந்தமில்லவன்‌ 
நச்சராவணைக்‌ கிடர்த நாதன்‌'' என்று திருமழிசையாழ்வா 
ரும்‌ ““ அச்சுகா அமரரேறே ' ' என்று தொண்டரடிப்பொடி 
களும்‌ இவ்வர்‌ த்தத்தை அறுஸந்தித்‌ கருளினார்கள்‌. (அச்யுதன்‌) 
இத்தால்‌ அடைந்தவர்களுக்கு அல்லல்‌ வந்தபோது அவர்‌ 
களை விட்டகலும்‌ ருத்ராதிகளைக்‌ காட்டிலும்‌ வ்யாவ்ருத்தி 
( வேறுபாடு ) சொல்லப்படுகிறது. இகனாலேயேயன்றோே 
“ிவம்‌ '' என்று சொன்ன நாராயணானுவாகமும்‌. இது 
ருத்ரனைக்‌ குறிக்கும்‌ பதமல்ல என்று தெளிவிப்பதற்காக 
“அச்யுதம்‌ என்று படித்தது. 


“பரிவின்றி வாணனைக்‌ காத்துமென்றன்று படையொடும்‌ 


வந்தெதிர்ந்த திரிபுரம்‌ செற்றவனும்‌ மகனும்‌ பின்னும்‌ அங்கியும்‌ 

போர்தொலைய பொருசிறைப்‌ புள்ளைக்கடாவிய மாயனை ஆயனைப்‌ 

பொற்சக்கரத்‌ தரியினை அச்சுதனைப்‌ பற்றி யான்‌ இறையேனும்‌ இடரிலனே,”' 
என்று வேதம்‌ தமிழ்‌ செய்த மாறனும்‌ இவ்விஷயத்தை 
உணர்த்தினார்‌. (அச்யுதன்‌ ) அடியவர்களை ஈழுவவிடாத 
வன்‌” என்னுமிந்த மஹாகுணத்தைத்‌ தெரிவிக்கும்‌ திருநாம 
மாகையாலே, இதை வேதமும்‌. வைதிகர்கனும்‌, டக்தர்களும்‌ 
மிகவும்‌ ஆதரிப்பர்கள்‌. ஆழ்வார்கள்‌ இத்திருநாமத்தை 
அதரித்த ப்ரகாரத்தை மேலே விவரித்zதோம்‌. 


“யந்நாயம்‌ ப,க,வாம்‌ ப்ரஹ்மா ஜாநாதி பரமம்‌ (550 | 
தந்ததா: ஸ்ம १ 53598470 தவ ஸர்வகதாச்யுத ॥" 
[௮ச்சுகனே! ஸர்வவ்யாபியே! மேலான ப்ராப்யமான எதை 
பகவானான பிரமனும்‌ அறியானோ. உலகிற்கெல்லாம்‌ இருப்‌ 
பிீடமானஅந்த உன்னுடைய ஸ்வரூபத்தை வணங்குகிறோம்‌. ] 
என்று ப்ரயோஜனாந்தரபரரான தேவர்களும்‌, 


“ ஸர்வேம௦ ஸர்வபூ,தாத்மந்‌ ஸர்வ ஸர்வாய்ரயாச்யுத ”' 
என்று அவர்களுக்குத்‌ தலைவனான பிரமனும்‌, 


“அவலோகநததாநேக பூ,யோ மாம்‌ பாலயாச்யுத'' என்று 
அநந்யப்ரயோ ஜனனான ப்ரஹ்லாதாழ்வானும்‌. `" த்வாரகா 
நிலயாச்யுத” என்‌ று க்ருஷ்ணையும்‌. -த்வத்ப்ரஸாத,ந்மயாச்‌ 
யுத” என்று நஈரனாகிய அர்ஜுனனும்‌. 


“்‌ ஹதவீர்யோ ஹதவிஷோ छ 56657 5ஹம்‌ த்வயாச்யுத "" 
என்று காளியனும்‌ இத்திருநராமத்தை அறநுஸந்தித்தார்‌ 
களன்‌ றே. 


இதுவரையில்‌ அச்யுகசப்தத்துக்கு அடியவர்களை நழுவ 
விடாதவன்‌' என்னும்‌ பொருள்‌ வீவரிக்கப்பட்டது. இணி 
நழுவாத ஸ்வரூடரூபகுணவிபூதிகளையுடையவன்‌ என்னும்‌ 
அர்த்தம்‌ விளக்கப்படுகிறது, (அச்யுதன்‌) "ए ச்யவதே இத்‌ 
யச்யுத:' என்றெபடியே, ப்ரஹ்மருத்ரா திகளைப்‌ போலின்‌ 
றியே ஒருபடியாலும்‌ அழிவில்லா தவனாயிருப்பவன்‌ . 

“ச்யவநோத்பத்தியுக்தேஷு ப்‌,ரஹ்மேந்த்‌,ரவருணாதி,ஷ | 
யஸ்மாந்ந ச்யவஸே ஸ்தரநாத்‌ தஸ்மாத்‌ 
ஸங்£ர்த்யஸே 5ச்யுத; ॥” 
[ஈழுவுதலென்னும்‌ மரணம்‌, பிறப்பு ஆகிய இவற்றுடன்‌ 
கூடிய பிரமன்‌ . இந்திரன்‌, வருணன்‌ முதலிய தேவர்களுள்‌, 
தன்னுடைய ஸ்தானத்திலிருந்து நழுவாதவனாகையால்‌ நீ 
அச்யுதனெனப்படுகிறாய்‌.] என்று மாஸ்த்ரம்‌ சொல்லிற்று. 
“ஜாயதே$ஸ்தி வர்த்‌,த,தே பரிணமதே அபக்ஷீயதே விநங்யதி 
இதி ஷட்‌,ப,வவிகாரரஹிதத்வாத,ச்யுத: ''  [பிறக்கிறான்‌. 
உயிர்வாழ்கறோன்‌, வளருகிறான்‌. பரிணாமமடைகறோன்‌, 
குறைவடைகிறான்‌ , நாசமடைகறோன்‌ என்னும்‌ ஆறு விீகாரங்‌ 
களுமற்ரவனாகையாலே அச்யுதனெனப்படுகிறான்‌,] என்று 
சங்கரர்‌ பாஷ்யம்‌ செய்தபடியே இங்கு விநாசத்தைச்‌ 
சொன்னது ஷட்‌பவவிகாரங்களுக்கும்‌ உபலக்ஷணம்‌. ஆம்‌ 
வார்களும்‌ இவ்வர்த்தத்தைப்‌ பலவிடங்களில்‌ அ.,நுஸந்தித்‌ 
தருளினார்கள்‌. “பச்சை மாமலைபோல்‌ மேனி பவளவாய்‌ 
கமலச்செங்கண்‌ அச்சுதா'' என்று தொண்டரடிட்பொடியாழ்‌ 
வார்‌ அழியாத திவ்யமங்கள விக்ரஹத்தை உடையவனென்‌ 
பதை உணர்த்தினார்‌. "` அச்சுதன்‌ அரந்தரீர்த்தி'' என்று 
திருமழிசையாழ்வாரும்‌. “ ஆர்ந்த புகழச்சுதன்‌ ” என்று 
நம்மாழ்வாரும்‌ அழியாத புகழுடையவன்‌ என்று அச்யுத 
சப்தத்துக்கு வியாக்கயானம் செய்தார்கள்‌. மாங்க,சக்ரக,த,ா 
பாணே த்்‌,வாரகாநிலயாச்யுத” என்ற துரெளடதியும்‌ 
ஸர்வேங்வரன்‌ நித்யவிபூ,தியோடும்‌ லீலாவீபூ,தியோடும்‌ 
எழுந்தருளியிருக்கும்‌ இருப்புக்கு என்‌ றும்‌ அழிவில்லை என்று 
உணர்த்தினாள்‌. (௮ச்யுதன்‌ ) ஸகலசேதநாசேதனங்களையும்‌ 
வீடாமல்‌ வியாபித்தும்‌ தரித்தும்‌ நிற்பவன்‌ என்றும்‌ 
பொருள்கொள்ளலாம்‌. இத்தால்‌ ஸர்வவ்யாபகத்வமும்‌, 
ஸர்வதராரகத்வமும்‌ சொலள்லப்பட்டதாகிறது. ' அடியவர்‌ 
களை நழுவவிடா தவன்‌ ” என்னும்‌ பொருளைத்‌: தெரிவிக்கை 
யாலும்‌, மற்றும்‌ பலஅரும்பொருள்களையும்‌ உடைத்தாயிருக்‌ 
கையாலும்‌, வேதத்தாலும்‌, இதிஹாஸபுராணாதிகளா லும்‌, 
ஆம்வார்களாலும்‌ மிகவும்‌ ஆதரிக்கப்படுகையா லும்‌ இக்திரு 
நாமம்‌ ஆசமனத்தின்‌ ஆரம்பத்தில்‌ அநுஸந்திக்கப்படுகறது. 

நிற்க; ஆழ்வார்களுடைய ஸ்ரீஸம௰க்திகளுக்குப்‌ பெரிய 
வாச்சான்பிள்ளை முதலிய மஹாசார்யர்களால்‌ விவரிக்கப்‌ 
படாத சில அர்த்தங்கள்‌ இங்கு கொள்ளப்பட்டிருக்கன்‌ 
மனவே; அவை எப்படிப்‌ பொருந்தும்‌ ஏன்று சிலர்‌ சங்கிக்கக்‌ 
கூடும்‌. அவர்களுக்குச்‌ சொல்லுகிறோம்‌: ஆழ்வார்களின்‌ 
ஆழ்கடல்டோன்‌ ற அருளிச்செயல்களின்‌ பரவங்களாகிய 
ரத்னங்களையெல்லாம்‌ 530 0 5990 கமாக்குவது முடியா தகாரிய 
மாகையாலே, நம்மாசார்யர்கள்‌ அவைகளின்‌ ஸாரமான 
பொருளை ஏடுபடுத்தியருளினார்கள்‌. ஆகையால்‌ அவ்வாழ்வா 
ராசாரியர்களுடைய ஸ்ரீஸடூக்திசளுக்கு அவிருத்தமாயும்‌, 
ப்ரகரணந்திற்குப்‌ பொருந்தியவையாயுமுள்ள பொருள்களை 
யும்‌ கொள்வதில்‌ தவறில்லை. ஆழ்வார்களின்‌ அமுதினுமினிய 
அருளிச்செயல்களின்‌ ஆழ்பொருன்களையெல்லாம்‌ ஆரே அள விட்டு அறியவல்லார்‌? 

இனி அந்தன்‌” என்னும்‌ நாமத்தின்‌ அரும்பொருள்‌ 
அறிவிக்கப்படுகிறது. இத்திருநாமமும்‌ அச்யுதநாமத்தைப்‌ 
போல்‌ அருமறையால்‌ ஆதரிக்கப்பட்டது. அச்சுதன்‌ 
அரநந்தகீர்த்தி” என்று அச்யுகநாமத்திற்கு அர்த்தமருளிய 
இருமழிசையாமழ்வார்‌ * ஆதியந்தமில்லவன்‌ ” என்று அநந்த 
நாமத்தை அடுதீதபடியாக விவரித்தருளினார்‌. ஈம்மாழ்வரும்‌ 
“அண்ணலை அச்சுதனை அநந்தனை" என்று இத்திருநாமங்‌ 
கனைச்‌ சேர்த்துப்‌ படித்தார்‌. 'அச்யுதன்‌” என்னும்‌ திருநாமம்‌ 
" அடியவர்களை ஈழுவவிடாதவன்‌ ' என்று உரைக்கிறது, 
தமர்களைக்‌ கைவீடாமைக்காக அநேக அவதாரங்களை எடுத்‌ 
அம்‌, அளவற்ற குணங்களை வெளிப்படுத்தியும்‌ எல்லாவற்றை 
யும்‌ வியாபித்‌தும்‌ விளங்குமவன்‌ என்பதை அநந்தநாமம்‌ 
அறிவிக்கின்‌ றது. 

“கந்தள்வாப்ஸரஸஸ்‌ ஸித்‌,த,ா: கிங்கரோரக,சாரணா: | 
நரந்தம்‌ குணாநாம்‌ க,ச்ச;ந்தி தோநந்தோ 5யமவ்யய: |!” 
(2-6-24) 

[கந்தர்வர்கள்‌, அப்ஸரஸ்ஸாுகள்‌, ஸித்தர்கள்‌. கின்னரர்கள்‌, 
நாகர்கள்‌, சாரணர்கள்‌ ஆக எல்லாரும்‌ இவனுடைய 
குணங்களை முடிவு காண்பதில்லை. ஆகையால்‌ இவன்‌ 
அநந்தனெனப்படுகிழான்‌.] என்று ஸ்ரீவீஷ்ணுபுராணத்தில்‌ 
அநந்த பப்,தரர்த்தழம்‌ சொல்லப்பட்டது. இத்தால்‌ குணங்‌ 
களாலும்‌. சரீரங்களா லும்‌, ஐங்வர்யத்தா லும்‌ ஊளவற்றவன்‌ 
அந்தன்‌ எனப்பட்டதாறெது. 


“கமோ$ஸ்த்வநந்தாய ஸஹஸ்ரமூர்த்தயே 
ஸஹஸ்ரபாத;ாக்ஷி மிரோருப,ாஹவே | 

ஸஹஸ்ரநாம்கே புருஷாய மராங்வதே 
ஸஹஸ்ர கோமீயுக,த,ாரிணே ௩ம: |!" 


[கணக்கற்ற சரீரங்களை உடையவனும்‌. அளவற்ற பாதங்‌ 
களையும்‌. கண்களையும்‌. தலைகளையும்‌. தொடைகளையும்‌.கைகளை 
யும்‌ உடையவனும்‌, கணக்கற்றதிருநா மங்களை உடையவனும்‌ 
நித்ய புருஷனும்‌. அளவுகடந்த யுகங்களை தரிப்பவனுமான 
அரந்தனுக்கு நமஸ்காரம்‌. ] என்று பிரமனால்‌ அநந்தனென்‌ 
னும்‌ திருநாமத்தின்‌ அர்த்கம்‌ அதுஸந்திக்கப்பட்ட து, 
( அநந்தன்‌ ) காலத்தாலும்‌. தேசத்தாலும்‌, வஸ்துவாலும்‌ 
அளவுபட்டிறராத ஸ்வரூபத்தை உடையவன்‌. ஸத்யம்‌ 
ஜ்ஞா௩ம்‌ அநந்தம்‌ ப்ரஹ்ம "` [ப்ரஹ்மம்‌ விகாரமற்றதாகவும்‌, 
ஞானஸ்வரூபமாகவும்‌. கூன்றீ விதமான அளவுமற்றதாக 
வும்‌ உள்ளது]  ' அதைதஸ்யைவாந்தோ நாஸ்தி யத்‌, 
ப்‌,ரஹ்ம'' [ப்ரஹ்மமென்று யா தொன்றுள்ளகோ அதற்கு 
முடிவில்லை]  ' அரந்கும்‌....ஸமுத்‌,ரேந்தம்‌ '' [பாற்கடலில்‌ 
தயிலும்‌ அந்தன்‌ |. என்று வேதங்களிலும்‌. “ நாஸ்த்‌- 
யந்தேச விஸ்தரஸ்ய மே'' [என்னுடைய ஐங்வர்யத்துக்கு 
அளவில்லை.] என்று கீதையிலும்‌, “ஆதியந்த மில்லவன்‌'' 
“அச்சுதனை அநந்தனை'' என்று ஆழ்வாள்களாலும்‌ சொல்லப்‌ 
பட்டவை இவ்விஷயத்தில்‌ ப்ரமாணங்கள்‌. 

அடுத்தபடியாக கோவிந்தசப்தார்த்தம்‌ விவரிக்கப்படு 
கிறது. “அநந்தன்‌' என்று புருஷோ த்தமனுடைய பரத்வம்‌ 
பேசப்பட்டது. “அப்படிப்பட்ட பெருமையை உடையவனை 
அதிநிஹீனரான ஈம்மரல்‌ அணுகமுடியுமோ என்று 
அடியவர்‌ அஞ்சாமைக்காக. *இடக்கையும்‌ வலக்கையு 
மறியாத ஆயர்களோடும்‌. பகுத்தறிவற்ற பசுக்களோடும்‌ 
ஒரு நீராகக்கலந்து பரிமாறுமவன்‌' என்னும்‌ பொருளை 
யுடைய கோவிந்தநாமம்‌ கோவிக்கப்படுகிறது. “அச்சுதா! 
அமரரேறே!' என்று அச்யுக அநந்த பாப்தார்த்தங்களை 
அநுஸந்தித்த தொண்டரடிப்பொடியாழ்வாரும்‌. “ஆயர்தம்‌ 
கொழுந்கதே!'' என்று அடுத்தபடியாக கோவிந்த சப்தார்த்‌ 
தத்தை அருளிச்செய்தாரன்றோ. (கோவிந்தன்‌ ) “ காவ: 
விந்த,தி '' [ பசுக்களை அடைகிறான்‌ ] என்றெ வ்யுத்_த்தி 
யின்படியே, நித்யஸூரிகளின்‌ நாதனாயிருக்குமிருப்பில்‌ 
பொருந்தாமல்‌ அறிவற்றவைகளான பசுக்களை அடைவதற்‌ 
காக கிருஷ்ணனாய்‌ வந்து திருவவதரித்தவன்‌., 

“அஹம்‌ கிலேந்த்‌,ரோ தேவாநாம்‌ த்வம்‌ க,வாமிந்த்தாம்‌ க,த:। 
கோவிந்த, இதி லோகாஸ்த்வாம்‌ ஸ்தோஷ்யந்தி பு,வி ஸமாமவதம்‌ ||." 
[ஈரான்‌ தேவர்களுக்கெல்லாம்‌ இந்திரனாயிருக்கிறேன்‌. நீ 
பசுக்களுக்கு இர்திரனாயிராக்கும்‌ தன்மையைத்‌ கானாகவே 
அடைந்தாய்‌. ஆகையால்‌ இவ்வுலகில்‌ கோவீந்தன்‌ என்று 
எல்லாரும்‌ எப்போதும்‌ உன்னைத்‌ துதிப்பார்கள்‌.] என்று 
ஹரிவம்‌சத்தில்‌ கோவர்த்தனதாரியான @ 7८ 7 न) ठा ऊ 
குறித்து தேவேந்திரன்‌ ததித்தானன்றோ. “ऊ ०५; ०9085 , 
6५100" என்றபடியே பசக்களுக்குப்‌ புகலிடம்‌ என்றும்‌ 
பொருள்‌ கொள்ளலாம்‌. 

“சட்டித்தயிரும்‌ தடாவினி ல்‌ வெண்ணெயுமுண்‌ 
பட்டிக்கன்றே!” என்றும்‌ “பட்டிமேய்ந்தோர்‌ காரேறு பல. 
தேவற்கோர்‌ கீழ்க்கன்றாய்‌ " என்றும்‌ அறாளிச்செய்யும்படி. 
யன்‌ றோ இவன்‌ பசுக்களுடன்‌ புரையறக்கலக்கும்படி. இந்த 
மஹாகுணத்தை நினைத்து ஆழ்வார்கள்‌ அடிக்கடி வாய்வெரு 
வுவர்கள்‌. “கோவிந்தன்‌ குணம்பாடி ஆவிகாத்திருப்பேனே” 
என்று ஆண்டாள்‌ இக்குண த்தையே தனக்கு ப்ராணதபாரக 
மாகக்‌ கொண்டிருந்தாள்‌. 


“கற்றினம்‌ மேய்க்கிலும்‌ மேய்க்கப்பெற்றான்‌ 
காடுவாழ்‌ சாதியும்‌ ஆகப்பெற்றான்‌ 
பற்றி யுரலிடை ஆப்புமுண்டான்‌ 
பாவிகாள்‌! உங்களுக்கேச்சுக்கொலோ''-என்றறும்‌, 


“மிகொம்மை முலைகள்‌ இடர்‌தீரக்‌ கோவிந்தற்கு ஓர்குற்றேவல்‌ 
இம்மைப்பிறவி செய்யாதே இனிப்‌ போய்ச்செய்யும்‌ 
தவந்தரனென்‌'' என்‌ றும்‌, 

“கொங்கைத்‌ தலமிவை நோக்கிக்‌ காணீர்‌ 
கோவிந்தனுக்கல்லால்‌ வாயில்‌ போகா'' என்றும்‌. 
சொல்லும்படியன்‌்றோே கோன்தக்குக்‌ கோவிந்கனிடமுள்ள காதல்‌. 

“கூட்டிலிருந்‌ து கிளியெப்போ தும்‌ கோவிந்தா! கோவிந்தா! 
என்றழைக்கும்‌ '' என்று இவளுடைய கிளியும்‌ இத்திரு 
நாமத்தையன்றோ வாய்புஜத்துவ து. நம்மாழ்வாரும்‌ 
“கோவிந்தன்‌ குடக்கூத்தன்‌ கோவலன்‌ என்றென்றே குனித்து” 
என்று தமக்கு இத்திருநாமத்திலுள்ள ஈடுபாட்டை வெளிப்‌ 
படுத்தினார்‌. 

“கேளவிந்தே,தி யதரக்ரந்த,த்‌ க்ருஷ்ணா மாம்‌ தூ,ரவாஸிரம்‌ | 
ருணம்‌ ப்ரவ்ருத்‌,த,மிவ மே ஹ்ருத,யாந்நாபஸர்ப்பதி ॥'* 
[வெகுதூரத்திலிருந்த என்னை“கோவிந்தா/”என்‌ று த்ரெளடதி 
கூப்பிட்டதானது விருத்தியடைந்த “கடன்பேரல்‌ என்‌ 
ம௩ஸ்ஸிலிருந்து அகலுகிறதில்லை.] என்று. அச்யுதாதிஈாமங்‌ 
களையும்‌ அவள்‌ உச்சரித்தருந்தபோதிலும்‌ பகவானுடைய 
திருவுள்ளத்தைப்‌ புண்படுத்திற்று இத்திருநாமமேயன்றே. 
இத்திருநாமத்தன்‌ பெருமையைப்‌ பன்னியுரைக்குங்கால்‌ 
பாரதமாம்‌. (கோவிந்தன்‌ ) கேோரயப்‌,தும்‌ பூமியையும்‌ குறிக்கு 
மாகையால்‌ *கரம்‌ விந்த,தி ? என்று பூமியை ஜலத்தில்‌ 
நின்றும்‌ குத்தியெடுத்த வராஹஹூர்த்தியைச்‌ சொல்லுவ 
தாகவும்‌ கொள்ளலாம்‌. 'மஹாவராஹோ கேவிந்த,: "என்று 
ஸ்ரீஸஹஸ்ரநாமத்திலும்‌ இவ்வர்த்தம்‌ ஆகரிக்கப்பட்ட த. 

“ஈஷ்டாம்‌ வை தரணீம்‌ பூர்வமவிந்த;ம்‌ வை கு,ஹாசு,தாம்‌ | 

கேவிந்த, இதி தேநாஹம்‌ தே,வைர்‌ வாக்‌,பிரபிஷடுத: | ' 
[பாதாளத்தில்‌ ஓளித்துவைக்கப்பட்டிருந்த பூமியை முன்‌ 
னொரு காலத்தில்‌ ஈரான்‌ தேடியடைந்கதேனாகையால்‌. கேவர்‌ 
களால்‌ கோவிீர்தனென்‌ று ஸ்தோத்ரம்‌ செய்யட்பெற்ழேன்‌. ] 
என்று பாரதத்தில்‌ மோசக்ூதர்மத்தில்‌ பகவானாலேயே 
சொல்லப்பட்டது. இத்தால்‌ ஆபத்துக்கரலத்தில்‌. ரக்ஷ்ய 
வஸ்தவின்‌ அபேகைையை எதிர்பாராமலே மேல்விழுந்து. 
தன்‌ பெருமைக்குப்பொருந்தரத உருவத்தையும்‌ கொண்டு 
ரக்ஷிக்கும்‌ பெருங்குணம்‌ பேசப்படுநெது. 

“உத்‌,த்‌,ருதா5ஸி வராஹேண க்ருஷ்ணேந ஸாதபளஹுநா `" 
[பூமிப்பிராட்டியே! நூறுகைகளை உடையவனும்‌, அநந்த 
ஸ்வரூபிய்மான வராஹ மூர்ச்தியால்‌ எடுக்கப்பட்டவளாய்‌ 
இருக்கிறாய்‌. ] என்று பண்டை மறையிலும்‌, 

“ஈனச்‌ சொல்லாயினுமாக எறிதிரை வையம்‌ முற்றும்‌ 
ஏனத்துருவாய்‌ இடந்தபிரான்‌ இருங்கற்பகம்‌ சேர்‌ 
வானத்தவர்க்கும்‌ அல்லா தவர்க்கும்‌ மற்றெல்லாயவர்க்கும்‌ 
ஞானப்பிரானையல்லால்‌ இல்லை छा का கண்ட ஈல்லதுவே'  

“நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்க்ததொப்பக்‌ 
கோலவராகமொன்றாய்‌ நிலம்‌ கோட்டிடைக்‌ கொண்ட எந்தாய்‌!'' —என்‌ றும்‌, 

° பாசிதூர்த்துக்‌ கிடந்த பார்மகட்குப்‌ பண்டொருநாள்‌ 
மாசுடம்பில்‌ நீர்வாரா மானமிலாப்‌ பன்‌ றியாம்‌ 
தேசுடைய தேவர்‌ திருவரங்கச்‌ செல்வனார்‌ 
பேசியிருப்பனகள்‌ பேர்க்கவும்‌ பேராவே” _ என்‌ றும்‌ 
தமிழ்‌ மறைகளிலும்‌ இப்பெருமானின்‌ பெருமைகள்‌ பேசுப்‌ 
பட்டனவன்‌ றோ. 

“'கெளரேவைஷா தத;ா வாணீ தாம்‌ ச யத்‌, விந்த,தே ப,வார்‌ | 
கேோவிந்தஸ்து ததோ தே,வ முகிபி,: கத்‌,யதே ப,வாந்‌ |” 

[ீசப்தமான து :'கெள:' என்று சொல்லப்படுகிற து. வார்த்தை 
களையெல்லாம்‌ நீரே அடைவதால்‌ நீர்‌ கோவிந்தனென்று 
முனிவர்களால்‌ சொல்லப்படுகிறீர்‌.] என்கிற நிர்வசன த்தின்‌ 
படியே ஸர்வமாப்‌,த,வாச்யன்‌ என்றும்‌ இத்திருநாமத் துக்குப்‌ 
பொருள்கொள்ளலாம்‌. “சொல்லினால்‌ தொடர்ச்சி நீ சொலப்‌ 
படும்‌ பொருளும்‌ நீ'' என்று திருமழிசையாழ்வார்‌ இல்வர்த்‌ 
தத்கை அறுஸந்தித்தார்‌. (கோவிந்தன்‌ ) கேோசப்தம்‌ வேத 
வாக்கியங்களைக்‌ குறிப்பதாகக்கொண்டு வேதத்தினால்‌ சொல்‌ 
லப்படுமவன்‌ என்றும்‌ பொருள்கொள்ளலாம்‌. அச்சம்‌... 
ஏற்றுவான்‌ அச்சுதன்‌ அ௩ந்தகீர்ந்தி ஆதியந்தமில்லவன்‌ 
ஈச்சராவணைக்‌ கிடந்த ஈாதன்‌ '' என்று அச்சுதன்‌. அந்தன்‌ 
என்னும்‌ திருநாமங்களுக்கு அர்த்தம்‌ செய்த திருமழிசை 
யாழ்வார்‌ -' வேதகதனே ”' என்று கோவிந்தசப்தார்த்தத்தை 
அருளிச்செய்தார்‌. (கோவிந்தன்‌ ) எந்த கேவதையைக்‌ 
குறித்து ஸ்தோத்ரம்‌ செய்தாலும்‌ அவை இவனையே 
அடைவதால்‌ கோவிந்தன்‌ எனப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌. 

“ நும்‌இன்‌ கவிகொண்டு நும்‌நும்‌ இட்டாதெய்வமேத்தினால்‌ 
செம்மின்‌ சுடர்முடி என்‌ திருமாலுக்குச்‌ சேருமே என்றார்‌ 
ஈம்மாழ்வார்‌. (கோவிந்தன்‌) கோசப்தம்‌ ஒளியைக்குறிப்ப 
தால்‌ பரஞ்சோ தயாயிராப்பவன்‌ என்‌ றும்‌ பொருள்‌ கொள்ள 
லாம்‌. நம்மாழ்வாரும்‌ 
“பரஞ்சோதி நீ பரமாய்‌ நின்னிகழ்ந்து பின்மற்றோர்‌ 
பரஞ்சோதியின்‌ மையின்‌ படியோவி நிகழ்கின்ற 
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம்‌ படைத்த எம்‌ 
பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்கமாட்டேனே '' 
என்று இப்பொருளை அதுஸந்தித் தருளினார்‌. “ஈாராயணபரோ 
ஜ்யோதி:'' என்றும்‌. ** பரம்‌ ஜ்யோதிருபஸம்பத்‌,ய '' என்றும்‌. 
ˆ" ஆதி,த்யவர்ணம்‌ '' என்றும்‌, 

“௩ தத்ர ஸூர்யோ பாதி ௩ சந்த்ஜதாரகம்‌ 
நேமா வித்யுதோ பந்தி குதோ 5யமக்‌,நி: | 
தமேவ பாந்தமநுப,ாதி ஸர்வம்‌ 
தஸ்ய பாஸா ஸர்வமித,ம்‌ 61147 छी ॥” 
[அப்பரமபுருஷனுக்கு முன்‌ ஸூர்யனும்‌ பீரகாசிப்பதில்லை; 
சந்திரனும்‌, ஈக்ஷத்திரங்களும்‌. இந்த மின்‌ னல்களும்‌ பிரகாசிக்‌ 
திறதில்லை. அக்னியைப்‌ பற்றிச்‌ சொல்லவும்‌ வேண்டுமோ? 
ஒளிவீடும்‌ அவனை அநுஸரித்தே எல்லாம்‌ ஓளிவிடுகின்‌ றன. 
அவனுடைய ஒளியாலேயே இவையெல்லாம்‌ பிரகா சிக்கன்‌ 
றன.] என்றும்‌ வேதங்களிலும்‌ 


“ 8969 ஸூர்யஸஹஸ்ரஸ்ய ப,வேத்‌, யுகவது,த்தி,தா | 

யதி, 047; ஸத்‌,ருமீ ஸா ஸ்யாத்‌, பாஸஸ்‌ தஸ்ய மஹாத்மந:।॥” 
[ ஆகாயத்தில்‌, ஒரே ஸமயத்ஜில்‌ ஆயிரம்‌ ஸூர்யர்களுடைய 
ஒளி கதோன்றிற்றாகில்‌. அவ்வொளிஅந்த மஹாபுருஜனுடைய 
ஒளிக்கு ஒட்பாகலாம்‌.] என்று கீதையிலும்‌ ஒர்த்திக்கப்‌ பட்ட தன்றோ. 

இனி கேசவன்‌ முதலிய பன்‌ னிருநாமங்களின்‌ பரமார்த்‌ 
கங்களைப்‌ பன்‌ னியுரைப்போம்‌. இப்பன்னிரு நாமங்களையும்‌ 
ஆழ்வார்கள்‌ மிகவுகந்து அநுஸந்தித்துக்கொண்டு போருவர்‌ 
கள்‌. “ பாரார்தொல்‌ புகழான்‌ புதுவை மன்னன்‌ பன்னிரு 
நாமத்தால்‌ சொன்ன ஆராத அந்தாதி "' என்றும்‌. “பண்ணிற்‌ 
பன்னிரு ஈரமப்பாட்டு அண்ணல்‌ தாள்‌ அணைவிக்குமே ” 

என்‌ அம்‌ பெரியாழ்வாரும்‌ நம்மாழ்வாரும்‌ இப்டன்னிருநா மங்‌ 
களையும்‌ தொடர்ந்து அநுஸந்திக்கும்‌ பாட்டுக்களைப்‌ பாடி 
யுள்ளார்கள்‌. த்வாதமேோோ ர்தவபுண்ட்பங்களுக்கும்‌ இப்பன்‌ 
னிரண்டு & क 5 07 ५) ए ऊक @ ना அ௮நுஸந்திக்கப்படுகின்‌ றன, 
புருஷோத்தமனுடைய அம்ாாத்தைப்‌ பெற்ற த்வாதச 
ஆதித்யர்களுக்கும்‌ இப்பன்னிரு நாமங்களே கூட்டப்‌ 
பெற்றிருக்கன்‌ றன. எம்பெருமானுக்குப்‌ பரம்‌, வியூஹம்‌, 
கிபவம்‌, அந்தர்யாமி, அர்ச்சை என்று. ஐந்து ௮வஸ்கைகள்‌ 
உள்ளனவென்ப து ஸகலங்ரு தீதிஹாஸ்‌ புராண பாஞ்சராத்ர 
ஸரஸ்த்ரங்களில்‌ கோஷிக்கப்படுகன்றது. இவ்வைந்து 
அவஸ்தைகளும்‌ இப்டன்னிருநாமங்களிலும்‌ அநுஸந்திக்கப்‌ 
படுகின்‌ றன. மாலரி கேசவன்‌ காரணன்‌ சமோதவன்‌ 
கோவிந்தன்‌ வைகுந்தன்‌” என்று நம்மாழ்வார்‌ அருளிச்‌ 
செய்கையாலே “ கேசவன்‌ நாராயணன்‌, மாதவன்‌ கோவிந்‌ 
தன்‌ '' என்னுமிந்த நான்கு திருநாமங்களும்‌ ஸ்ரீவைகுண்ட 
ஈாதனாயெழுந்தருளியிருக்கும்‌ பராவஸ்கதையைக்‌ குறிக்கின்‌ 
றனவென்‌ பது வீளங்குகிற து, “விஸ்ணு” எனும்‌ அடுத்த 
திருநாமம்‌ அரிருத்தநாரரயணனாகிய வியூஹத்தைக்குறிப்ப 
தன்‌ மூலம்‌ மற்ற வியூஹங்களையும்‌ உணர்த்துகறது. 
மது ஸ9தணன்‌' என்பதும்‌ அந்த வியூஹமூர்த் தியின்‌ 
சேஷ்டிதத்தைச்‌ சொல்லுகிறது. “இரிவிக்கரமன்‌. வாமனன்‌. 
தாமோதரன்‌ என்னும்‌ திருநாமங்கள்‌ விபவாவதாரங்களைச்‌ 
சொல்லுகன்‌ றன. ஸ்ரீத,ரன்‌” என்னும்‌ திருநாமம்‌ அவ்விப 
வாவதாரங்களிலும்‌ பகவான்‌ பிராட்டியுடனேயே அவதரிக்‌ 
கிறானென்று காட்டுகிறது. “ஹ்ருஷீகேசன்‌' என்னும்‌ திரு 
காமம்‌ அந்தர்யாமியாய்‌ நின்று இந்திரியங்களை நியமிக்கும்‌ 
இருப்பை உரைக்கிறது. 'ஸ்ரீத,ரன்‌” @० = ०4५, எல்லாத்‌ திரு 
நாமங்களும்‌ திருமலை முதலிய திவ்யகேத்ரங்களில்‌ எழுக்‌ 
தருளியிருக்கும்‌ ஸ்ரீநிவாஸன்‌ முதலிய அர்ச்சாமூர்த்திகளையும்‌ 
உணர்த்துகின்‌ றன. "பத்மாபன்‌' என்று இவ்வவகாரங்‌ 


களுக்கெல்லாம்‌ மூலராவதாரமான க்ஷீராப்திநாதனைப்‌ பேசு கிறது. ,
ஆக, இப்படி ஐம்து அவஸ்தைகளும்‌ இந்காமங்களில்‌ 
அநுபவிக்கப்படுகின்‌ றன. இனி இத்திருநாமங்களின்‌ அர்த்‌ 
தங்களைச்‌ சிந்திப்போம்‌. (கேசவன்‌ ) ககாரத்தினால்‌ சொல்லப்‌ 
படும்‌ பிரமனையும்‌, “ஈசன்‌? என்று பெயர்‌ பெற்ற சிவனை யும்‌ உண்டாக்கினவன்‌, 

“க இதி ப்‌,ரஹ்மணோ நாம ஈமேரா5ஹம்‌ ஸர்வதே,ஹிநாம்‌ | 
. ஆவாம்‌ தவாங்கே, ஸம்பூ,தெள தஸ்மாத்‌ கேமுவநாமவார்‌ ||” 

['க:' என்று ப்ரஹ்மாவுக்குப்பெயர்‌; தேஹத்தில்‌ அபிமான 
முள்ள எல்லாருக்கும்‌ நான்‌ ஈசன்‌; ப்ரஹ்மருக்ரர்களாகய 
நாங்கள்‌ இருவரும்‌ உன்னுடைய சரீரத்தனின்‌ றும்‌ பிறந்‌ 
தாம்‌; ஆகையால்‌ நீ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தை 
உடையவனாயிருக்கிறாய்‌. ] என்‌ று ஹரிவம்ச த்தில்‌ பேசநின்ற 
சிவனாலும்‌ பேசப்பட்டது. -'நாராயணாத்‌, ப்‌,ரஹ்மா ஜாயதே। 
நாராயணாத்‌, 05368007 ஜாயதே|'' [ஈாராயணனிடமிருந்து 
பிரமன்‌ பிறக்கிறான்‌: ௩ாராயணனிடமிருந்து உருத்திரன்‌ 
உண்டாகிறான்‌.] என்பது முதலான வேதவாக்கியங்களை 
யும்‌. மற்றப்ரமாணங்களையும்‌, “தெய்வநான்முகக்கொழுமுளை 
ஈன்று முக்கணீசனொடு தேவு பல (15 ०9" முதலிய ஆழ்வார்‌ 
அருளிச்செயல்களையும்‌ இவ்விடத்தில்‌ அநுஸந்திப்பது. 
(கேசவன்‌ ) பிரமனையும்‌ சிவனையும்‌ தன்வசத்தில்‌ வைத்திருப்‌ 
பவன்‌ என்றும்‌ பொருள்கொள்ளலாம்‌. 'நாராயணாத்‌ ப்ரஜா 
யந்தே।| ஈாராயணாத்‌ ப்ரவர்த்தந்தே | நாராயணே ப்ரலீயந்தே।'்‌ 
[பிரமன்‌ முதலிய எல்லாரும்‌ நாராயணனிடமீருந்து 
உண்டாகதறார்கள்‌: நாராயணனால்‌ வாழ்கிறார்கள்‌: 
நாராயணனிடமே லயமடை றார்கள்‌. ] என்று சொல்லிற்று 
சுடர்மிகு சுருதியும்‌, 


“கள்வா! எம்மையும்‌ ஏழுலகும்‌ நின்‌ 
உள்ளே தோற்றிய இறைவ! என்று 
வெள்ளேறன்‌ நான்முகன்‌ இந்திரன்‌ வானவர்‌ 
புள்ளூர்தி கழல்‌ பணிந்(து) ஏத்துவரே.”' _என்‌ மும்‌, 

“நெற்றியுள்‌ நின்றென்னையாளும்‌ நிறைமலர்ப்பாதங்கள்‌ சூடி 
கற்றைத்‌தழாய்‌ முடிக்கோலக்‌ கண்ணபிரானைத்‌ தொழுவார்‌ 
ஒற்றைப்பிறையணிந்தானும்‌ நான்முகனும்‌ இந்திரனும்‌” 
என்றும்‌ ஆழ்வார்‌ அருளிச்செய்தார்‌. “விண்ணோர்தலைவா 
கேசவா'' என்று நம்மாழ்வார்‌ இத்திருநாமத்தக்குப்‌ பொரு 
ளூுரைத்தார்‌, “கேசவா புருடோத்தமா'' எவ்றார்‌ பெரியாழ்‌ 
வாரும்‌. உத்க்ருஷ்டபுருஷர்களான ப்ரஹ்மருத்ரர்களைக்‌ 
காட்டிலும்‌ மேலானவன்‌ என்றபடி. (கேசவன்‌ ) சோதி 
மயமான ஸூர்யன்‌ முசலியவைகளின்‌ கரணங்கள்‌ கேச 
ப்தத்தினால்‌ சொல்லப்படுகின்‌ றன, அவைகளைத்‌ தன்‌ 
வசக்தில்‌ கொண்டிருக்கையால்‌ கேசவன்‌ எனப்படுவதாக வும்‌ கொள்ளலாம்‌. 

“அம்ரவோ யே ப்ரகரமாந்தே மம தே கேமுஸம்ஜ்ஞிதா: | 
ஸர்வஜ்ஞா: கேமவம்‌ தஸ்மாந்‌ மாமா ஹார்த்‌,விஜஸத்தமா:।'” 

[ உலகில்‌ பிரகா சிக்கும்‌ என்‌ னுடைய ரணங்கள்‌ கேசமெனப்‌ 
படுகின்‌ றன. ஆகையால்‌ எல்லாமறிந்த ப்ராஹ்மணங்ரேஷ்‌ 
டர்கள்‌ என்னைக்‌ கேசவனென்‌ று சொல்லுகிறார்கள்‌. ] என்று 
மஹாபாரதத்தில்‌ சொல்லப்பட்ட த. கோவிந்கநாம வியாக்கி 
யானத்தில்‌ எடுக்கப்பட்டவையான "५ தத்ர ஸூர்யோ பாதி” 
முதலிய ப்ரமாணங்களை இங்கும்‌ அநுஸரந்திப்பது. 
“திருவடியை நாரணனைக்‌ கேசவனைப்‌ பரஞ்சுடரை ' என்று 
ஆழ்வார்‌ இவ்வர்த்தத்தை உணர்த்தினர்‌. (கேசவன்‌ ) 
“கேயாாத்‌, வோ5ந்யதரஸ்யாம்‌'' பூ மநிந்த; (त एए णा न... 
ப,வந்தி மதுபளத,ய: ' என்கிற வியாகரண விதிகளின்படி 
கேயாப்தத்தன்மேல்‌ வ:' என்னும்‌ ப்ரத்யயம்‌ வந்து 
“ப்ரராஸ்தகேமான்‌' ( புகழ்ப்பெற்ற கேசங்களை உடையவல்‌ ) 
என்னும்‌ பொருளைத்தருகிறது. அதாவது: “ய ஏஷோ&ந்த 
ராதி,த்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருங்யதே ஹிரண்யங்மம்ருர்‌ 
ஹிரண்யகேரு;”[ஸ எர்யனுக்கு நடுவில்‌ யா வனொரு ஸுவர்ண 
மயனான புருஷன்‌ விளங்குகறொனோ, அவன்‌ ஸாுவர்ணம்‌ 
போன்று அழகானமீசையையும்‌.கேசங்களையும்‌ உடையவன்‌. | 
என்று வேதத்தாலும்‌ புகழ்ப்பெற்ற மய்ர்முடிகளை உடைய 
வன்‌ என்று பொருள்‌. 4 

“கொள்கின்ற கோளிருளைச்‌ சுகிர்க்திட்ட கொழுஞ்சுருளின்‌ 
உள்கொண்ட நீல ஈன்னூல்‌ தழைகொல்‌? அன்று மாயன்குழல்‌ 
விள்கின்‌ ற பூ்தண்துழாய்‌ விரைகாற வந்தென்னுயிரைக்‌ 
கள்கின்றவாறறியீர்‌ அன்னைமீர்‌ கழறாநிற்றிரே.'' என்றும்‌. 

“முன்னமுகத்தணியார்‌ மொய்குழல்கள்‌ ' என்றும்‌, “சுருண்‌ 
டிருண்ட குழல்‌ தாழ்ந்த முகத்தான்‌” என்றும்‌ - மைவண்ண 
ஈறுங்குஞ்சி குழல்பின்தாழ”' என்றும்‌, “குழலழகர்‌'' என்றும்‌ 
ஆழ்வார்கள்‌ இக்கேசலெளந்தர்யத்தை அநுடவித்தார்கள்‌. 
(கேசவன்‌ ) இத்தால்‌ சிக்குத்தலையரான இதரதகெய்வங்களிற்‌ 
காட்டிலும்‌ வ்யாவ்ருத்திசொல்லப்டடுகிற து.” “பிங்கள ஜடோ 
தே,வ:' என்றும்‌, “ஒருருவம்‌ பொன்னுருவம்‌ ஒன்று ०55" 
என்றும்‌ சொல்லுகிற ப்ரஹ்மருத்ரர்கள்‌ மயிர்போலே 
குராலாயமேறி ஒடியிருக்கையன்‌ றிக்கே, * நீலகுஞ்சதெ மூர்த்‌ 
த,ஜம்‌ *, * குழலிருண்டு சுருண்டு ' என்கிறபடியே கண்டவர்‌ 
கள்‌ கண்களிலே அஞ்ஜனமெழுதினாற் போலே ச்யாமளமா 
யிருக்கை''என்‌ று மைவண்ணாறுங்குஞ்ச வீயாக்க்யானத்தில்‌ 
கலித்‌,வம்ஸநாசார்யர்‌ அருளிச்செய்தது இங்கு அநுஸந்திக்கத்‌ 
தக்கது. 


“நரகே பச்யமாநஸ்து யமேந பரிப,ாவஷித: | 
கிம்‌ த்வயா நார்ச்சிதோ தே,வ: கேமுவ: க்லேரரநா ரர௩: ||" 

[ஈரகத்தில்‌ வேதனையை அனுடவிக்கும்‌ ஒரு மனிதன்‌ “அடே! 
உன்னால்‌ கிலேசங்களையெல்லாம்‌ போக்கும்‌ சேசவன்‌ ஏன்‌ 
அர்ச்சிக்கப்படவில்லை?'' என்‌ று யமனால்‌ கேட்கப்படட்டான்‌. | 
என்று புராணம்‌ சொல்லிற்று. கேவ: க்லேமநாமரந: ' 
என்றதின்‌ தாத்பர்யத்தை. “தாபத்ரயாதுரரோடு விரஹதா 
பாதுரரோடு வாசியற ஸர்வருக்கும்‌ ஸ்ரமஹரமாம்படிகாண்‌ 
திருக்குழலின்‌ பரிமளம்‌ மிகுந்தபடி; *கேமரவ: க்லேமமநா சமா:”? 
என்னக்கடவதிறே ;. த்ருஷ்டிப்ரியம! யிருக்கையன்‌ நிக்கே 
நெஞ்சில்‌ ஸ்ரமமெல்லாம்‌ போம்படிகாண்‌ திருக்குழலின்‌ 
பரிமளம்‌ மிகுந்கபடுட'' என்று பரமகாருணிகரான பெரிய 
வாச்சான்பிள்ளை மைவண்ண ஈறழங்குஞ்சி வியாக்க்யானத்தில்‌ 
அருளிச்செய்தார்‌. (கேசவன்‌ ) கேசி என்னாம்‌ அஸுரனைக்‌ 
கொன்‌ ற க்ருஷ்ணன்‌ என்றும்‌ பொருள்கொள்ளலாம்‌. 


“யஸ்மாத்‌ த்வயைவ து,ஷ்டாத்மா ஹத; கேம ஐநார்த்த;௩ | 
தஸ்மாத்‌ கேரரவநாமா தவம்‌ லோகே க்ஹவாதிம்‌ க,மிஷ்யஸி।”' 

[ஜனார்த்தனனே! ( உன்னைக்‌ கொல்லவேணுமென்னும்‌ ) 
கெட்ட எண்ணத்துடன்‌ வந்த கேசி உன்னாலேயே கொல்லப்‌ 
பட்டானாகையால்‌ நீ உலகில்‌ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்‌ । 
தால்‌ ஒீர்த்திபெறுவாய்‌.] என்று நாரதரால்‌ ஸ்ரீவிஷ்ணு 
புரரணத்தில்‌ இப்பொருள்‌ பேசப்பட்டது. =" கேமாவம்‌ 
கேயிஹந்தாரம்‌'' என்றும்‌ மற்றோரிடத்தில்‌ இவ்வர்த்தம்‌ 
சொல்லப்பட்ட து. - கேரரவ: கேமிஹா”' என்று இப்பொருள்‌ 
ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமத்திலும்‌ ஆதரிக்கப்பட்ட ௮. 
“கண்ணன்‌ கேசவன்‌'' என்றும்‌, `" நாராயணன்‌ மூர்த்தி 
கேசவன்‌'' என்றும்‌ ஆழ்வார்களாலும்‌ இவ்வர்த்தம்‌ அறு 
ஸந்திக்கப்பட்டது. இப்படிப்‌ பொருள்கொள்ளும்போ து 
எம்பெருமானுடைய வீரோ , நிரஸன ஸீலத்வம்‌ தோற்று 
கிறது. கண்ணன்‌ கேசவன்‌ நம்பி' : கேசவ௩ம்பீ உன்னைக்‌ 
காதுகுத்த'' “கேசவநம்பியைக்‌ கால்பீடிப்பாள்‌ என்னுமிப்‌ 
பேபறனக்கு அருள்கண்டாய்‌'' என்று இத்திருநாமத்தின்‌ 
குணபூர்த்தியை அறுஸந்தித்தார்கள்‌. 


“கரவ; க்லேமஹா லோகே த்‌,;வைரூப்யேண க்திதெள 
ஸ்தி,த: | 
மதுராக்‌,யே மஹாகேேத்ரே வாராணஸ்யாமபி த்‌,விஜ ॥”' 

[வீப்ரரே! கிலேசங்களைப்போக்கடிக்கும்‌ குழலழகையுடைய 
பெருமான்‌. மதுரை என்னும்‌ மஹாகேத்திரத்திலும்‌ 
வாராணஸி எனப்படும்‌ காசியிலும்‌ பூமியீல்‌ கோயில்கொண்‌ 
டெழுந்தருளியிருக்கிறான்‌..] என்னும்‌ ப்ரமாணத்தைக்காட்டி. | 

பட்டர்‌ இத்திருநாமத்தை அர்ச்சாவதாரபரமாக வியாக்கி 
யானம்‌ செய்தருளினார்‌. இப்படிப்‌ பரவீபவார்ச்சாவதாரங்‌ 
களைக்குறிக்கக்‌ கூடியதேயாகிலும்‌ கேசவன்‌ நாரணன்‌ 
சீமாதவன்‌ கோவிந்தன்‌ வைகுந்தன்‌?' என்று நம்மாழ்வார்‌ 
அருளிச்செய்கையால்‌. இத்திருநாமத்துக்குப்‌ பராவஸ்தை 
யைக்குறிக்கும்‌ பொருளே இங்கு முக்கியார்த்தமாகக்‌ கடவது. 

கேசவன்‌ என்னும்‌ தஇிருநாமத்தினால்‌ பிரமருத்திரர்‌ 
களுக்கும்‌ உத்பாதகன்‌ என்‌ று உரைக்கப்பட்ட து. இப்படிப்‌ 
பட்டவன்‌ யார்‌ என்னும்‌,கேள்வி எழ. 'நாராயணன்‌' என்று 
வேதராந்குஸித்தமான அஸாதளரணமான தஇருநாமத்தைப்‌ 
படிக்கிறது. இத்திருநாமத்தை வேதங்களும்‌. இதிஹாஸ 
புராணங்களும்‌ ஆழ்வார்களும்‌ மிகவும்‌ ஆதரித்துப்போந்‌ 
தார்களென்பது ஸுப்ரஸித்தம்‌. இதிலுள்ள ணகாரமான து 
வேறெந்த தெய்வத்திற்கும்‌ இத்திருநமம்‌ பொருந்தா 
தென்பதைக்‌ காட்டுறது. இத்திருநாமத்தின்‌ அர்த்தங்‌ 
களோ அயிரம்‌ ஈநாவுடடைத்த ஆதிசேவனாலும்‌ அளவிட்டுச்‌ 
சொல்லமுடியா தவை. நாராயணனுடைய பெருமையை 
அறிந்தாலும்‌ அறியலாம்‌; நாராயண நாமத்தினுடைய 
அர்த்த, வைபவத்தை எவராலும்‌ அறியமுடியாது. பரம 
காருணிகர்களும்‌ ஸர்வஜ்ஞஸார்வபெனமர்களுமான ஈம்‌ 
ஆழ்வார்களும்‌ ஆசாரியர்களும்‌ இத்திருநாமத்தின்‌ பொருளைப்‌ 
பலவிடங்களில்‌ பேசியிருக்கிறார்கள்‌. அந்த ஸ்ரீஸக்திகளைத்‌ 
தணையாகக்கொண்டு நாமும்‌ இத்திருநாமத்தின்‌ பொருட்‌ 
பெருமையை இயன்‌ யவரையில்‌ அநுபவிக்க முற்படுவோம்‌. 

“ ரிங்‌-க்ஷயே ”' என்று தாதுவாகையாலே. 'ர' என்னாம்‌ 
எழுத்து க்ஷயித்துப்போகும்‌ பதரர்த்தங்களைக்‌ குறிக்கிறது. 
௩' என்னும்‌ எழுத்து அதை நிஷேதி,க்கிறது. ஆக, நர: 
என்று நித்யமாய்‌ விளங்கும்‌ வஸ்துவைக்‌ குறிக்கிறது. 
*“ஈராணாம்‌ ஸமூஹ: நார: என்‌ கிறபடியே कः" என்‌ னும்‌ 
பதம்‌ இப்படிப்பட்ட நித்யவஸ்‌துக்களின்‌ ஸமூஹத்தைக்‌ 
குறிக்கிறது. 'நாரா:' என்னும்‌ பன்மையால்‌ அப்படிப்பட்ட 
நித்யவஸ்‌ துக்களின்‌ ஸமூஹங்கள்‌ பல உள என்று உணர்த்தப்‌ 
படுகிறது. இப்படிப்பட்ட இந்த நித்யவஸ்‌ துக்களின்‌ 
ஸமூஹங்கள்‌ எவை என்‌ பதைப்‌ பரமகாருணிகரான பெரிய 
வாச்சான்பிள்ளை ** அவையாவன: ஜஞாநமக் த்யா தி, திவ்‌, 
யாத்மகுணங்களும்‌, குணப்ரகாப0கமான திவ்யமங்கள 
விகரஹங்களும்‌. விக்ரஹ்குணமான ஸெளந்தர்யாதிகளும்‌. 
அந்த ஸெளந்தர்யாதிகளோபாதி பூக்தாப்போலே சாத்தின 
கிரீடமகுடா தி திவ்யா பரணங்களும்‌, அவ்வா பரணங்களோடு 
விகல்பிக்கலாம்படியான பயங்க,சக்ராதி திவ்யாயுதங்களும்‌, 
இத்தனையும்‌ காட்டிலெரித்த நிலாவாகா தபடி அருகேயிருர்து 
அந்பவிக்கிற லக்ஷ்மீ ப்ரப்,ரு தி மஹிஷீவர்க்கங்களும்‌, 
அச்சேர்‌ த்தியிலே அடிமை செய்க ற அநந்‌ தகருடவிஷ்வக்ஸே 
ப்ரமுகரான ஸரிஸங்க,மும்‌, அவர்களோபா தபோய்‌ அடிமை 
செய்கிற (05 50 9, அவர்களுக்கு அடிமை செய்கைக்குப்‌ 
பரிகரமான ச,டதீரசாமரா தி,பரிச்‌ச, 5 8/5 @ ८2, அவ்வடிமைக்கு 
வர்த்த,கமாய்‌ பஞ்சோடனிஷந்மயமான ८0 ८०" 1,58.049, 
குணத்ரயாத்மிகையான மூலப்‌) க்ரு தியும்‌, புருஷ்மஷடியும்‌, 
அஹோராத்ரா திவிபாகயுக்தமான காலதத்வமும்‌. ப்ரவாஹ 
ரூபேண நித்யமான மஹதா திகளும்‌. தத்கார்யம! ன அண்டங்‌ 
களும்‌. அண்டாரந்தர்வர்த்திகளான சதஅர்விக,பூகீங்‌ 
களும்‌. பஞ்சோபனிஷஹந்மயமாகையாலே பரமபதமும்‌ 
மஹா த்மகமாயிருக்கும்‌; குணத்ரய த்யிகையாகையாலே 
மூலப்ரக்ருதியும்‌ ஸமூஹு த்மிகையாயிருக்கும்‌்‌ அஹோராத்‌ 
ராதி,விபாகங்கள்‌ = 5 = ८0 क क, ८7 @ @ காலமும்‌ 
ஸமூஹாத்மகமாயிருக்கும்‌'' என்று பரந்த ரஹஸ்யத்தில்‌ 
பரகக அருளிச்செய்தார்‌. 

அடுத்தபடியாகவுள்ள அயநா்ப்தம்‌ பல பொருள்களை 
உடையது. அவைகளில்‌ இருப்பிடம்‌ ' என்பதும்‌ ஒன்று. 
^" छाप; அயரும்‌ யஸ்ய ஸூ;-—நாராயண:'' [நித்யபதரர்த்தட 
ஸமூஹங்களாகிற நாரங்கள்‌ எவனுக்கு இருப்பிடமோ. 
அவன்‌ ஈரராயணன்‌ ] என்று நாராயண சப்தத்துக்கு ஒரு 
பொருள்‌ ஏற்படுகிறது. இத்தால்‌ இவன்‌ எல்லாப்‌ பதார்த்தங்‌ 
களையும்‌ : உடல்‌ மிசை உயிரெனக்கரந்தெங்கும்‌ பரந்துளன்‌ '. 
என்று சொல்லப்பட்டதாகிறது. 

“சேதகாசேத௩ம்‌ ஸர்வம்‌ விஷ்ணோர்‌ யத்‌, வ்யதிரிச்யதே | 
நாரம்‌ தத,யநஞ்சேத,ம்‌ யஸ்ய நாராயண்ஸ்து ஸ: ॥'' 
[விஷ்ணுவைக்காட்டிலும்வேறுபட்டதான எல்லாச்‌ சேதநா 
சேதனங்களும்‌ நாரசப்தத்தால்‌ சொல்லப்படுகின்‌ றன. அது 
எவனுக்கு இருப்பிடமாயுள்ளடதோ அப்பரமாத்மா நாராயண 
னெனப்படுகறான்‌.] என்று இவ்வர்த்தத்தை சாஸ்திரம்‌ 
சொல்லிற்று. இந்த பஹுவ்ரீஹறிஸமாஸப்‌ பொருளில்‌ 
அரந்தர்வ்யாப்தியும்‌, அடுத்தபடியாகச்‌ சொல்லப்படும்‌ 
தச்புருஷஸமாஸப்‌ பொருளில்‌ பரஹிர்வ்யாப்தியும்‌ உணர்த்‌ 
தீப்படுகின்றன எல்‌ று ஆசார்யர்கள்‌ அருளிச்செய்வர்‌. 


“யச்ச கிஞ்சித்‌ ஜக,த்யஸ்மிர்‌ த்‌,ருங்யதே ங்ரூயதே$பி வா | 
அந்தர்‌ ப,ஹிம்ச தத்‌ ஸர்வம்‌, வ்யாப்ய காராயண: ஸ்தி,த: |” 
[ இவ்வுலகில்‌ காண்பனவும்‌. கேட்டனவுமான எல்லா வஸ்துக்‌ 
களிலும்‌ உள்ளும்‌ புறமும்‌ நாராயணன்‌ வியாபித்து 
நிற்கறோன்‌.] என்று பண்டை மழையிலும்‌, 


“ஆக்கையுள்ளும்‌ ஆவியுள்ளும்‌ அல்ல புறத்தினுள்ளும்‌ 

நீக்கமின்றி எங்கும்‌ நின்றாய்‌! ' என்று தமிழ்‌ வேதத்திலும்‌ 
இவ்வர்த்தம்‌ சொல்லப்பட்ட. து. இப்பொருளில்‌ எம்பெரு 
மானுடைய ஸர்வவ்யாபகத்வம்‌ சொல்லப்படுகிறது. 
“நாராணாம்‌ அயநம்‌ ய: ஸ:'' [நித்யபதளர்த்த, ஸமூஹங்க 
ளாகிற நாரங்களுக்கு எவனொருவன்‌ இருப்பிடமாயிருக்‌ 
கிறானோ அவன்‌ நாராயணன்‌ ] என்ற தத்புருஜஸமாஸத்தின்‌