போவான் போகின்றாரை’ என்ற இந்தச் சொற்றொடரை நாம் கூர்ந்து கவனித்திருக்க மாட்டோம்.
’போவான் போகின்றாரை’ என்பது போகிற அனுபவத்துக்காகவே போகிறவர்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
ஆச்சார்ய பெருமக்கள் திருவேங்கட யாத்திரை, அக்ரூரர் கோகுலம் செல்லுதல், வைகுண்டம் செல்லும் மார்க்கத்தைப் பற்றி குறிப்பிடுவர்.
கோவிந்தா என்ற நாமத்தில் திருப்பதி போகும் அனுபவம் இருக்கிறது. அந்த நாமத்தைச் சொன்னாலே அனைத்தும் கிட்டும்.
கோ என்பது பத்து அவதாரங்களையும் குறிக்கும். வேதம் என்று பொருள் தருவதால் வேதத்தை மீட்ட மத்ஸ்யாவதாரம் நினைவுக்கு வரும்.
பர்வதம் என்று பொருள் தருவதால் அதை தூக்கிய கூர்மாவதாரம் நினைவுக்கு வரும்
பூமி என்று பொருள் தருவதால் பூமியை உத்தாரணம் செய்த வராக அவதாரம் நினைவுக்கு வரும்.
நரசிம்மனை கோவிந்தா என்று வணங்குவது வழக்கம்.
பூமிக்கடியில் மூன்றடி மண் கேட்டதால் வாமன அவதாரம் நினைவுக்கு வரும்.
பூமி முழுதும் சுற்றிய பரசுராமனும் கோவிந்தன் தான்.
ஆயுதம் என்று பொருள் தருவதால், 50 வித அஸ்திர சாஸ்திரங்களை விச்வாமித்திரரிடம் இருந்து பெற்ற ராமாவதாரம் நினைவுக்கு வரும்.
பூமியை கலப்பையால் இழுத்த பலராமனுக்கு கோவிந்தன் என்ற பெயர் உண்டு.
பசு என்று பொருள் தருவதால் பசுக்களைக் காத்த கிருஷ்ணனும் கோவிந்தன் என்றே அழைக்கப்படுகிறான்.
இப்படி அனைத்து அவதாரங்களையும் உள்ளடக்கியவனாக வேங்கடவன் (கோவிந்தன்) இருக்கிறான்.
ஸ்ரீ வேங்கடமே அர்ச்சா பிரதானம் -கந்தம் -இவனுடன் அர்ச்சா திவ்ய மங்கள ஸ்வாமிகள் அனைவருக்குமே ஸாம்யம் சொல்லலாமே
ஆராவமுதன் உடன் சாம்யம் திருக்குடந்தை ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் சாதித்தது –
1-ஸப்த பிரியவ் –சேஷாத்ரி –வே ங்கடாத்ரி -ஆழ்வார் எழுவரால் மங்களா சாசனம் ஆராவமுதன் -திரு எழு கூற்று இருக்கை சந்தஸ் ரிஷிகள் காண்டம் மோக்ஷம்
2-நிகமவ் பிரியவ் -உபய வேதங்களும் சொல்லுமே -ஸ்ரீ நிவாஸனும் ருக் வேதமும் –
அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி தேபிஷ்ட்வா ஸாதயாமசி -ருக்கு -8-அஷ்டகம் -8-அத்யாயம் -13-வர்க்கம் –முதல் ருக்கு மந்த்ரம்
த்வயி அராயி சதி –குழந்தாய் நீ இஹ லோக பரலோக ஐஸ்வர்யம் இல்லாமல் இருந்தாயானால்
த்வயி காணே சதி -நீ வெளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவனாய் இருந்தால்
த்வயி விக்டே சதி -நீ ஆத்யாத்மீகம் -ஆதி பவ்திக்கம் -ஆதி தைவிகம் -தாப த்ரயங்களால் பீடிக்கப் பட்டு இருந்தாயாகில் —கடம் -தாஹம்
த்வயி ஸதான்வே சதி -புருஷார்த்தங்களை பெற முடியாமல் பிரதிபந்தகங்கள் இருந்தால்
ஸ்ரீம் பீடஸ்ய -திருமகளுக்கு திரு மார்பினால் பீடமாகிய ஸ்ரீ நிவாசனுடைய
கிரிம் -திருமலையைக் குறித்து
ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி கச்ச -ஸ்ரீ நிவாசனுடைய பக்தர்களோடு சென்று சேர்
தேபி -அவர்கள் மூலமாகவே
த்வா ஸ்ரீம் பீடஸ்ய ஸாதயாமசி -நீ ஸ்ரீ நிவாஸனை வேண்டிக் கொள்ள தகுதி பெற்று இருக்கிறாய்-
சமர்பிக்கத் தகுதி பெற்று இருப்பாய் என்றுமாம் –
ஸத்வ கிரி வேத வெற்பு
கண்ணன் அடி இணை எமக்குக் காட்டும் வெற்பு
கடு வினையர் இரு வினையும் கடியும் வெற்பு
திண்ணம் இது வீடு எனத் திகழும் வெற்பு
தெளிந்த பெரும் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு
புண்ணியத்தின் புகல் இது எனப் புகழும் வெற்பு
பொன்னுலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு
வேங்கட வெற்பு என விளங்கும் வேத வெற்பே
வைதிக விமானம் -தேர் வடிவ கர்ப்ப க்ரஹம் -குதிரையும் யானையும் இழுக்கும் –
ஸாகா -யானை நடை போல் ஸம்ஹிதா குதிரை போல் வேகமாக சேவிப்பார்கள்
அந்தணர் -பரமா வேத கோஷம் ஒலிக்கும் திருக்குடந்தை
3- பிருகு பிரியவ் -ஸாத்விக குணம் பரீஷை -ஹேம ரிஷியாக இவரே பிறந்து -பாதாள ஸ்ரீ நிவாஸன் -மேட்டு ஸ்ரீ நிவாஸன் -கோமள வல்லி திருக்கல்யாணம்
4- சிவ பிரியவ் -கபிலேஸ்வரன் -யதா சம்பு அழகை அனுபவித்து -குமார தாரா கார்த்திகேயன் தபஸ் -வேல் கொடுத்த –
கும்பேஸ்வரர் பின் -சூழ்ந்து சூழ்ந்து அனுபவம் இங்கும் -குடமூக்கு -நாகேஸ்வரர் பல வடிவங்கள் கொண்டு
5-பிரியவ் சடாரே -த்வயம் பூர்வ உத்தர -இங்கு -ஆழ்வார் தீர்த்தம் தெளி குரல் அருவி -கைங்கர்யம் செய்ய அழைக்கும்
முதல் திவ்ய தேசம் -கண்ணாவான்–வேங்கட வெற்பனே
ஆராவமுதே-யாருக்கு என்று சொல்லாமல் -தன்னோடு பிறரோடு வாசி அற தனக்கே – -அனைவருக்கும் -ஆராவமுத ஆழ்வார் -சீரார் செந்நெல் -சாத்துப்படி -கவரி வீசும் –
6-தேவர்களுக்கு பிரியவ் -மண்ணோர் விண்ணோர்க்கும் -மண்ணவரும் விண்ணவரும் விரும்பும் வெற்பு -அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன்
அமுதினிலும் ஆற்ற கில்லான் -33 கோடி தேவரும் சூழ்ந்து கருவறையில்
7-பாதாதி கேசாந்தம் ஸ்தோத்ரம் ஆதி சங்கரர் -அபர்யாத அம்ருதம் த்யான சோபனம் பெற்றார்கள்
8- இரண்டு லஷ்மி-திரு மார்பில் -மடலில் திருவடி வருடிய
9-நாராயணனுக்கு அனுக்ரஹம் -நாராயணாத்ரி -ரிஷி தபஸ் செய்த இடம் -லஷ்மி நாராயணன் பக்தர் -ராஜ கோபுரம் கட்டி -அந்திம ஸம்ஸ்காரம் -ஐப்பசி அமாவாசை அன்று ஸ்ரார்த்தம் 12 மணிக்கு தீபாவளி சந்நிதி சாத்தி –
10- வராஹ ஷேத்ரங்கள் இரண்டும் -வராஹ குளம் கும்பகோணத்தில் உண்டு
11-படி ஏறியே போக வேண்டும் -3500 படிகள் -9 படிகள் இங்கு -வாழ்க்கைப்படிகள் -பரமபத சோபனம் -விவேகம் -நிர்வேதம் -விரக்தி -பீதி -பிரசாத ஹேது -சரணாகதி ஐந்தும் நாம் செய்ய
உதக்ரமணம் அர்ச்சிராதி -விராஜா நதி கடந்து -ஸ்ரீ வைகுண்ட பிராப்தி –
12-வைகுண்ட வாசவ் -கலியுக வைகுண்டம்-ஏதானும் ஆவேனே – -பூ லோக வைகுண்டம் ஸ்ரீ ரெங்கம் போல் கும்பகோணம்
பரமபத வாசல் இல்லை –
ஷேத்ரமே புண்யம் -திருமலையே புண்யம்
13-கருணையால் புகழ் -தயா சதகம் -அப்ரமேயம் ப்ரமேயம் கடந்து உள்ளவன் கண்ணுக்கு காட்சி –
14-சார்ங்க ராஜர்கள் -இருவரும் -சாரங்கீ விருஷாத்ரி தயா சதகம் -பாபங்களை பிக்க அருள் அம்புகள் -மூலவரும் சார்ங்க பாணி -த்யான ஸ்லோகம் -சயானம் –
15-வேங்கடேசவ் –பாபங்களைக் போக்கி அருளி -இருவரும் -தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் -ஆழ்வார் வேம் கடம் ஈசன் -தமிழ்
16-இவற்றைக் காட்டிய உபகாரம் இருவருக்குமே சேரும்
———————
கோவிந்தா என்று அழைத்தாலே மனதளவில் திருமலைக்கு யாத்திரை செல்லலாம். அக்ரூரர் போல கோகுலம் போகலாம். வைகுண்டம் செல்லும் மார்க்கமும் புலப்படும்…
குப்ஜா அவரைத் தன்னுடனேயே தங்கும்படி அவள் வற்புறுத்தினாள். அது தன்னால் இயலாதென்ற கிருஷ்ணர், தன்னை மதுராபுரிக்கு கம்சன் உத்தரவின் பேரில் அழைத்து வந்த அக்ரூரனின் இல்லத்துக்கு புறப்பட்டார்.
அக்ரூரர் மிகச்சிறந்த ராஜதந்திரி. கிருஷ்ணரின் மகாபக்தர். அவர், கிருஷ்ணரை தகுந்த முறையில் வரவேற்று அவரது பாதத்தை கழுவி தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டார். அவரது பாதத்தை தன் மடியில் தூக்கி வைத்து வருடினார். கண்ணீர் மல்க அவரைப் பிரார்த்தித்தார். கம்சனையும் அவனது கொடிய நண்பர்களையும் கொன்றதற்காக நன்றி கூறினார். அக்ரூரரை மிக முக்கிய காரியம் நாடியும் கிருஷ்ணர் பார்க்க வந்திருந்தார்.
கிருஷ்ணரின் மைத்துனர்களான பாண்டவர்கள். ஹஸ்தினாபுரத்தில் வசித்து வந்தனர். ஹஸ்தினாபுரம் என்றால் யானைகள் நிறைந்த இடம். யானைகள் கட்டிக் காக்க நிறைய செல்வம் வேண்டும். அந்தளவுக்கு செல்வம் படைத்த பூமி அது. பாண்டவர்களுக்கு எதிராக அவர்களது பெரியப்பா திருதராஷ்டிரனின் மக்களான கவுரவர்கள் செயல்பட்டு வந்தனர்.
அவர்கள் பாண்டவர்களின் பூமியை அபகரித்திருந்தனர். இதுபற்றி விசாரித்து, திருதராஷ்டடரனுக்கு நல்லறிவு புகட்ட தகுதியானவர் அக்ரூரர் என்பதை உணர்ந்திருந்தார் கிருஷ்ணர். மேலும் அவர் பாண்டவர்களின் தாய் குந்திக்கும் உறவினர். அதை அக்ரூரரிடம் எடுத்துச் சொன்னார். அவரது கட்டளையை ஏற்ற அக்ரூரர் சில நாட்களிலேயே ஹஸ்தினாபுரம் புறப்பட்டு விட்டார். திருதராஷ்டிரனின் சகோதரர் விதுரர் நியாயத்துக்கு கட்டுபட்டவர்.
அவர் மூலமாக, ஹஸ்தினாபுரத்தில் நடக்கு விஷயங்களை அறிந்து கொண்டார். அக்ரூரர் அதனால் தான் நியாயத்தைப் பேசும் விதுரரைத் தொடர்பு கொண்டார். பின்னர் குந்தியை சந்தித்து நடந்த விஷயங்களை அறிந்தார். திருதராஷ்டிரன் பிள்ளைப்பாசத்தால், பாண்டவர்களைக் கொல்ல திட்டமிடுவதை உறுதி செய்தி பின்னரே திருதராஷ்டிரனிடம் சென்று அறிவுரை வழங்கினார்.
அவன் செய்வது நியாயமல்ல என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொன்னார். அப்போது திருதராஷ்டிரன் தன் தவறை உணர்ந்திருப்பதை ஒப்புக் கொண்டான். ஆனாலும் அவன் அவரிடம், அக்ரூரரே ! உமது போதனைகள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை என்பதை நானறிவேன். ஆனாலும், ஒருவனுக்கு மரணம் என விதிக்கப்பட்டிருக்கும் வேளையில் யார் அறிவுரை சொன்னாலும் அதனால் பயனில்லாமல் போய்விடும்.
அந்த அறிவுரைகள் அமுதம் என்று தெரிந்தாலும் அதை அவன் ஏற்க மாட்டான். உமது அறிவுரைகளை நான் ஏற்காதது கூட அந்த கடவுளின் சித்தம் தான். ஏனெனில், கடவுளின் சித்தத்தை தடுத்து நிறுத்தும் சக்தி யாருக்கும் இல்லை. அது நம் இருவருக்கும் பொருந்தும். அறிவுரை சொல்பவனும், பெறுபவனும் கூட அதற்கு விதிவிலக்கல்ல. பூமியில் பாவிகளைக் குறைக்க யது வம்சத்தில் பரமாத்மா தோன்றியுள்ளதை நான் அணிந்திருந்தும் என்னால் ஏதும் செய்ய முடியாமைக்கு வருந்துகிறேன், என்றான்.
திருதராஷ்டிரன் நிர்ப்பந்தத்தின் பிடியில் இருக்கிறான் என்பதை அக்ரூரர் அறிந்து கொண்டார். திருதராஷ்டிரனும் தன் பிள்ளைகளைக் காவு கொடுப்பதற்கென்றே நிர்ப்பந்தத்தின் பிடியில் சிக்கியிருந்தான். அக்ரூரர் மதுராவுக்கு திரும்பி, கிருஷ்ண பலராமரிடம் விஷயத்தைச் சொன்னார்.
போரைத் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்த கிருஷ்ணர், பாண்டவர்களுக்காக பலவகையில் போராடி வெற்றி ஈட்டிக் கொடுத்தார். இந்த போர்க்களத்திலே கீதை என்னும் வாழ்க்கையின் யதார்த்த நிலையை உணர்த்தும் அருமருந்தையும் தந்தார்.
கம்சன் கண்ணனுக்குச் செய்த இன்னல்கள் பல. ஒவ்வொரு முறையும் அவனுக்குத் தோல்வி தான். கம்சன் மேலும் ஒரு திட்டம் தீட்டினான். அவனிடம் பணிபுரியும் அக்ரூரரை அழைத்து ( 10.37.38) “தனுர்யாகத்தைக் காணக் கண்ணையும் பலராமனையும் மதுராவிற்கு விரைவில் அழைத்து வாருங்கள்!” என்று ஒரு சதி திட்டம் தீட்டுகிறான்.
மிக்க அறிவு படைத்த அக்ரூரர் ( 10.38.1 ) கண்ணனை அழைத்து வர ரதத்தில் கோகுலம் செல்கிறார். அவர் செல்லும் வழியில் ( ஜருகண்டி, ஜருகண்டியில் தப்பித்து பெருமாள் சேவிக்க வேண்டும் என்பது போல் ) அவர் தாமரைக் கண்ணனிடம் அன்புமயமான பக்தியில் மூழ்கி அவனை நினைத்துக்கொள்கிறார்.
நான் என்ன புண்ணியம் செய்தேனோ! என்ன தவம் செய்தேனோ! சான்றோர்களுக்கு ஏதாவது தானம் கொடுத்தேனா ? ஏன் என்றால் இன்று கேசவனைக் காணப் போகிறேன் !
கீழ் ஜாதியில் பிறந்த எனக்கு வேதம் ஓதும் வாய்ப்பு கிடைக்காத போதும், மகான்கள் கொண்டாடும் பகவானின் தரிசனம் எளிதில் கிடைக்க போகிறதே! யோகிகள் தியானிக்கும் அவன் திருவடிகளை வணங்கி என் பிறவிப் பயனை அடையப் போகிறேன்.
கம்சன் என்ற கொடியவன் இன்று எனக்குப் பேருதவி செய்திருக்கிறான். அவன் திருவடியை வணங்கி, என் அறியாமை இருளை கடக்க போகிறேன்.
அவனுடைய திருவடிகளைப் பிரம்மா, சிவன் முதலிய தேவர்களும், திருமகளும் முனிவர்களும், பக்தர்களும் பூஜித்துள்ளார்கள். கோபர்களுடன் மாடு மேய்க்கக் காட்டில் சுற்றி, கோபிகளின் ஸ்பரிசம் பட்ட அந்தத் திருவடியை நான் காணப் போகிறேன்.
வெளியே கொடிய கம்சனின் தூதுவன் ஆனால் உள்ளே கண்ணனின் அடிமை என் எண்ணத்தைக் கண்ணன் புரிந்துகொள்வான். என்னைப் பார்த்தவுடன் ‘அக்ரூரரே!” என்று கூப்பிடும் அந்த நேரத்துக்கு காத்துக்கொண்டு இருக்கிறேன்.
இப்படி வழிநெடுக கண்ணனைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டே மனத்தால் முன்பே கோகுலம் வந்தடைந்த அக்ரூரர் உடலால் இப்போது வந்து சேர்ந்தார்!
அங்கே கீழே கண்ணனின் திருவடி சுவடுகளைக் கண்டதும் அவருக்கு மகிழ்ச்சி பொங்க, பரபரப்பு மிகுந்து, அன்பால் உடல் புல்லரிக்க, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக, இவை பகவான் கண்ணனின் திருவடித்துகள்கள் அன்றோ! என்று அதன் மேல் விழுந்து புரண்டார்.
அங்கே கண்ணன் அவரை வரவேற்று “அன்புக்குரிய ஐயனே! வழிப் பயணம் நன்கு அமைந்ததா ?” என்று விசாரித்தான்.
அக்ரூரர் வந்த விஷயதை சொல்லி கண்ணையும் பலராமனையும் அழைத்துக் கொண்டு மதுராவிற்கு புறப்பட்டார். வழியில் யமுனையை அடைந்து, கைக்கால்களை சுத்தம் செய்து, தெளிந்த நீரில் நீராடினார். அடிக்கடி கண்ணனும் பலராமனும் பத்திரமாக இருக்கிறார்களா என்று அஞ்சி ரதத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டார்.
அப்படி பயந்துகொண்டு நீரினுள் முழுகியபோது, அங்கே தண்ணீருக்குள் கண்ணணையும் பலராமனையும் கண்டார். அந்த காட்சி ( 10.39.46) தொண்டரடிப் பொடியாழ்வார் பாடியது போல
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
என்று அவனுடைய திருவடியைத் தலைவணங்கித் துதித்துக்கொண்டு இருக்க, ஆயிரம் தலைகளுடன் கூடிய ஆதிசேஷனின் படுக்கையில் தெளிந்த முகம், அழகிய புன்சிரிப்பு, கருணைப் பார்வை, அழகிய புருவங்கள் என்று திருப்பாணாழ்வார் ’காட்டவே கண்ட’ சேவையை அக்ரூரர் சேவித்து கோதுகலமாக (குதூகலமாக) அவன் ஸ்வரூபத்தைக் கண்டு பரமானந்தத்தை அடைந்தார்.
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் என்பதற்கு ஓர் அர்த்தம் ’எம்பெருமானுக்கு என்ன ஆபத்து வருமோ என்று பயப்படுபவர்களான ஆழ்வார்களுக்கு ஒரே வாரிசு ஆண்டாள்’ என்பதைப் போல அக்ரூரர் பயந்தார்!
அவனுக்கு என்ன ஆகிவிடுமோ என்று தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால், அவன் ஆவாவென்று ஆராய்ந்து அருள் புரிவான்!
ஸ்ரீ நாராயணீயம் –சதகம் -72—ஸ்ரீ அக்ரூர ஆகமனம்–
கம்ஸோ அத நாரத கிரா வ்ரஜ வாஸி நம் த்வாமா
கர்ண்ய தீர்ண ஹ்ருதய ஸ ஹி காந்தி நேயம்
ஆஸூய கார் முக மகச்ச லதோ பவந்த
மா நேது மேந மஹி நோத ஹி நாத ஸாயின் –1–
பாம்பணை மேல். பள்ளி கொண்ட குருவாயூரப்பா! தாங்கள் கோகுலத்தில் வசித்து வருவதாக
ஸ்ரீநாரதர் கூறக் கேட்ட கம்ஸன் (தனது முயற்சி வீணானது கண்டு) மனம் நொந்து தனுர்யாகம்’ என்னும்
ஒரு காரணத்தைக் காட்டித் தங்களை அழைத்து வர எண்ணி,
காந்தினி என்பவரின் மகனான அக்ரூரை அனுப்பினான்.
அக்ரூர ஏஷ பவதம் க்ரி பரஸ் சிராய
த்வத் தர்சநா ஷ மமநா ஷிதி பால பீத்யா
தஸ்யாஜ்ஞ யைவ புன ரீஷிதுமுத்ய தஸ்த்வா
மா நந்த பார மதி பூரி தரம் ப பார –2-
அந்த அக்ரூரர் தங்கள் திருவடிகளையே சரணமாகப் பற்றி வெகுகாலமாகவே தங்களைக் காண
வேண்டுமென்ற விருப்பமுடையவராயினும், அரசனான கம்ஸனிடம் கொண்ட பயத்தினால்
தங்களைக் காணலாம் என்று மனதிலும் நினைக்க முடியாது தவித்தவர். அத்தகைய அவர்
இப்பொழுது அதே அரசனுடைய கட்டளையால் தங்களை தரிசனம் செய்ய ஆவல் கொண்டு
மனதில் ஆனந்தத்தின் பூரிப்பை அடைந்தார்.
ஸோ அயம் ரதேந ஸூ க்ருதீ பவதோ நிவாஸம்
கச்சன் மநோ ரத கணாம் ஸ் த்வயி தார்ய மாணான்
ஆஸ்வாத யன் முஹுரா பாய பயே ந தைவம்
ஸம் ப்ராரதயன் பதி ந கிஞ்சிதபி வ்யஜா நாத் –3-
பெரும் பேறு படைத்த அந்த அக்ரூரர் தேரில் ஏறிக் கொண்டு தங்கள் இருப்பிடமான – கோகுலத்தை
நோக்கிச் செல்கையில், தங்களைப் பற்றியே பற்பல சிந்தனைகளில் மூழ்கி அவற்றை சுவைத்துக் கொண்டே
(வழியில் கம்ஸனால் அதற்கு ஏதாவது) தடங்கல் — வந்துவிடுமோ என்று பயந்து இஷ்ட தெய்வங்களை
வேண்டிக் கொண்டு (செல்கையில்) வழியில் – எங்கு என்ன நடக்கிறது என்று எதையுமே உணராது சென்றார்-
த்ரஷ்யாமி வேத சத கீத கதிம் புமாம் ஸம்
ஸ்ப்ரஷ்யாமி கிம்ஸ் விதபி நாம பரிஷ் வஜேயம்
கிம் வஹ்யதே ச கலு மாம் க்வ நு வீக்ஷித ஸ்யா
தித்தம் நி நாய ச பவ ன் மயமேவ மார்கம் –4-
“அடைய வேண்டிய பரமபுருஷன் ஸ்ரீபகவானே என்று வேதங்களால் நூற்றுக்கணக்கான இடங்களில்
கொண்டாடப்படுகின்ற ஸ்ரீகிருஷ்ணனை நான் காண்பேனா? நான் தொடுவேனா? –
இறுகத் தழுவிக் கொள்வேனா? அவர் என்னிடம் அக்ரூரரே’ என்றழைத்துப் பேசுவாரா?
எங்கு சென்றால் அவரைக் காணலாம்?” என்றிவ்வாறு பலபடியாக நினைத்து,
தங்கள் நினைவாகவே அக்ரூரர் வழியைக் கடந்தார்.
பூய க்ரமாத பிவி சந் பவதம் கிரி பூதம்
வ்ருந்தா வனம் ஹர விரிஞ்ச ஸூ ராபி வந்த்யம்
ஆனந்த மக் ந இவ லக் ந இவ ப்ரமோஹே
கிம் கிம் தசாந்தர மவாப ந பங்கஜா ஷை –5-
தங்கள் திருவடிகள் படிந்ததால் மிகப் புனிதமானதும், பரமசிவன், பிரம்மா மற்றும் தேவர்களால்
வணங்கத் தக்கதுமான பிருந்தாவனத்தில் புகுந்ததும் ஆனந்தக் கடலில் மூழ்கினாற் போலும்
மோகத்தில் ஆழ்ந்தாற் போலும் வர்ணிக்க முடியாதவாறு என்னென்ன நிலையைத்தான் அடைந்தாரோ?
பஸ்யன் நவந்தத பவத் விஹ்ருதிஸ் தலா நி
பாம் ஸூஷ் வ வேஷ்டத பவச் சரணாங்கி தே ஷு
கிம் ப்ரூ மஹே பஹு ஜ நா ஹி ததாபி ஜாதா
ஏவம் து பக்தி தரலா விரலா பரமாத்ம ன் –6-
பரமாத்மா, ஸ்ரீ குருவாயூரப்பா! தாங்கள் விளையாடிய இடங்களைக் கண்டதும் வீழ்ந்து வணங்கினார்.
தங்கள் திருவடி இலச்சினை பட்டுள்ள புழுதிகளில் விழுந்து புரண்டார். நாங்கள் என்னதான் சொல்வோம்?
தாங்கள் திரு வவதாரம் செய்திருந்த அச்சமயத்தில் எத்தனையோ பல பெரியோர்கள் தோன்றி யிருந்தும்,
(அக்ரூரரைப் போல) இப்படி பக்தியின் பரவசத்தில் மூழ்கியவர்கள் மிகமிகக் குறைவே.
சாயம் ச கோப பவ நா நி பவச் சரித்ர
கீதாம்ருத ப்ரஸ்ருத கர்ண ரஸயா நாநி
பஸ்யன் ப்ரமோத சரிதேவ கிலோஹ்ய மாநோ
கச்சன் பவத் பவ ந ஸந்நிதி மன்வயா ஸீத் –7-
தங்களது திருவிளையாடல்களை விளக்கும் பாடல்களை கோபர்கள் தங்கள் இல்லங்களில் பாட,
அது அக்ரூரருக்கு அமுதினும் இனிமையாகக் காதுகளில் பரவி நிற்க, அவ்வமுதம் தவழ்ந்து வரும்
கோபர்களின் வீடுகளைக் கண்டு கொண்டே, அச்செவி யமுதப் பெருக்கினால் உந்தித் தள்ளப் பட்டாற்
போன்று மெதுவாக நடந்து மாலையில் தங்களது திருமாளிகை முன் வந்தடைந்தார். –
தாவத் ததர்ச பஸூதோஹ விலோக லோலம்
பக்தோத்த மாகதி மிவ ப்ரதி பால யந்தம்
பூமன் பவந்த மய மக்ர ஜவந்த மந்தர்
ப்ரஹ்ம அநு பூதி ரஸ ஸிந்து மிவோத்வ மந்தம் –8-
எங்கும் நிறைந்து விளங்கும் குருவாயூரப்பா! பசுக்கள் பால் கறத்தலைப் பார்ப்பதில் மகிழ்ச்சி
கொண்டவராகவும், ஓர் உத்தம பக்தனின் வருகையை எதிர் நோக்கி நிற்பவர் போன்றும்
அண்ணனான பலராமனோடு கூட நின்று கொண்டிருப்பவரும், உள்ளம் நிறைந்து அனுபவிக்கப்
பெறும் பிரும்மானந்த அமுதக் கடலை (பக்தனுக்காக) வெளியிலே மடை திறந்து விடுபவர் போன்றும்
உள்ள தங்களை. இந்த அக்ரூரர் கண்டார்.
சா யந்த நா ப்லவ விசேஷ விவிக்த காத் ரவ்
த்வவ் பீத நீல ருசிராம் பர லோப நீ யவ்
நாதி ப்ரபஞ்ச த்ருதி பூஷண சாரு வேஷவ்
மந்த ஸ்மிதார்த்ர வதனவ் ச யுவாம் ததர்ச -9-
மாலையில் நீராடித் தூய்மையான திருமேனியுடன் கண் கவரும் அழகிய மஞ்சள் பட்டும், நீலப்பட்டும்
உடுத்திக் கவர்ச்சியாக, உலகியல் போன்று அதிகமான அணி கலன்கள் அணியாத அதனால்
மிக அழகாக விளங்கும் வேடத்துடன் குளிர்ந்த புன்முறுவல் பூத்த முகத்துடன்
உள்ள உங்களிருவரையும் அவர் தரிசித்தார்.
தூராத் ரதாத் சம வருஹ்ய நமந்த மேந
முக்தாப்ய பக்த குல மௌலி மதோப கூஹன்
ஹர்ஷான் மிதாக்ஷர கிரா குசலாநு யோகீ
பாணிம் ப்ரக்ருஹ்ய சபலோ அத க்ருஹம் நினேத –10-
தொலைவிலிருந்தே (தங்களைக் கண்டதும்) தேரைவிட்டு இறங்கி வணங்கிக் கொண்டே வருகிற
பக்த சிரேஷ்டரான அக்ரூரரை, வாரி எடுத்துத் தழுவிக் கொண்டு. மகிழ்ச்சிப் பெருக்கினால்
பேசத் திறனற்று தழுதழுத்த குரலுடன் ‘க்ஷேமம்’ விசாரித்துவிட்டு, பலராமனோடு கூட
அவரது கரங்களைப் பற்றிக் கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்தீர்கள்.
நந்தேந சாக மமிதாத ரமர்ச யித்வா
தம் யாதவம் தது திதாம் நிசமய்ய வார்தாம்
கோபே ஷு பூ பதி நிதேச கதாம் நிவேத்ய
நாநா கதாபிரிஹ தேந நிஸாம நை ஷீ –11-
அங்கு ஸ்ரீநந்தகோபருடன் சேர்ந்து யதுகுலத் தோன்றலான அக்ரூரரை முறைப்படி – வரவேற்று உபசரித்து,
அவர் கூறிய செய்தி கேட்டு, அந்த அரச கட்டளையை கோபர்கள் அனைவருக்கும் தெரிவித்தீர்கள்.
பின் அவரோடு பற்பல கதைகளைப் பேசிக் கொண்டே அவ்விரவைக் கழித்தீர்கள்.
சந்த்ரா க்ருஹே கிமுத சந்த்ர பகா க்ருஹே நு
ராதா க்ருஹே நு பவநே கிமு மைத்ர விந்தே
தூர்தோ விலம்பத இதி ப்ரமதா பிருச்சை
ரசாங்கிதோ நிசி மருத் புர நாத பாயா –12-
இன்று ஸ்ரீ கிருஷ்ணன் சந்திரை சந்த்ர பாகை ராதை அல்லது மித்ரா விந்தையின் வீட்டில்
தங்கி இருக்கிறான் என்று கோபிகள் தங்களை சந்தேகித்தார்கள் –
ஸ்ரீ குருவாயூரப்பா அடியேனை ரக்ஷித்து அருள வேண்டும் –
—————–
பாகவத புராணத்தில் அக்ரூரரின் பிருந்தாவன யாத்திரையும், மண்ணுலக வாழ்வில் திருவேங்கட யாத்திரையும், ஆன்மிக வாழ்கையில் ஆன்மா வைகுந்தம் நோக்கிச் செல்லும் “அர்ச்சிராதி கதி” என்ற புனித யாத்திரையும் மிகப் புகழ்பெற்றவை. நம்மாழ்வாரும் இராமனுசரும் செய்துள்ள பேருதவியால் பரமபதப் பயணத்தின் இனிமையையும் பரமபதத்தின் உயர்வையும் வேதங்களில் அர்ச்சிராதி மார்க்கம் என்று சொல்லப்பட்டுள்ளது.-
உயிர் உடலை விட்டுப் பிரிகின்ற போது ஏற்படும் பொறுக்கமுடியாத துன்பங்களுக்கு மாற்றாக எம்பெருமான் தோன்றி அருள்வதையும் வழியில் பல உலகங்களையும் தாண்டிச் செல்லும் போது ஏற்படும் இன்ப அநுபவங்களையும் நித்ய சூரிகளும் பிராட்டியுடன் எம்பெருமானும் மகிழந்து வரவேற்று அருள்வதையும் விளக்குகிறார், ஆழ்வார்.
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே –10-9-1-
நாரணன் தமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழி வனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-
வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-
அதாவது;
ஜீவாத்மா என்ற முமுக்ஷீ – மோஷத்தில் விருப்பமுடையவன் உடலைத்துறந்து, பரமபதம் புறப்படுவதைப் பார்த்து, மேகங்கள் மகிழச்சியால் இசைக்கருவிகள் போன்று முழங்கின. கடல்கள், அலைகளாகிய கைகளை வீசி ஆராவரம் செய்தன.
வைகுந்தம் செல்பவனை அழைத்துச் செல்லும் ஆதி வாஹிகர்கள், தமது கைகளால் தொழுது, வரவேற்றனர். அங்கு வாழும் ரிஷிகள் மலர்மாரி பொழிந்து, தமது மௌன நிலையையும் கடந்து, வாய்த்திறந்து “இங்கே எழுந்தருளுக” என்று கூறி வரவேற்றனர், வைகுந்தம் செல்பவர், ஆங்காங்கே தங்கிச் செல்லும் பொருட்டு, தங்கும் இடங்கள் அமைத்தனர். கின்னரர் முதலியோர், இனிய இசைப்பாடல்கள் பாடினர். வேதங்களில் வல்லவர்கள் தாம் செய்த யாகங்களின் பலன்களை, வைகுந்தம் செல்பவர்களுக்குப் பரிசாக அருள்கின்றனர் குளிர்ந்த அருட்பார்வையுடன் கூடிய பென்கள், இவர்களை அருளுடன் பார்த்து வாழ்த்தினார். மருதர் வசுக்கள் முதலியோர், இவர்களைப்பின் தொடர்ந்து தோத்திரங்கள் சொல்லிக்கொண்டே வர பகவானின் வியூக நிலையிலும் விபவ அவதாரங்களிலும், விருப்பம் கொண்டு இருப்பதோடு நின்றுவிடாமல், அர்ச்சாவதாரத்திற்கு, எம்பெருமானின் எளிமையில் ஈடுபட்ட சிறப்பை நினைத்து, இவர்களைப் போற்றுகிறார்களாம். அர்ச்சாவதாரத்திற்கு அதிலும் மற்ற திவ்ய தேசங்களுக்குத்கிடைக்காமல், திருக்குடந்தைக்கு மடடும் கிடைத்த தனிச் சிறப்பே இது. பயணம் தொடர்கிறது. பரமபதத்தில் எம்பெருமான் விளங்கும் திருக்கோயிலின் கோபுர வாசலில் நித்யசூரிகள் வரவேற்கின்றனர்.
பரமபதத்தில், எம்பெருமானுக்கும், நித்திய சூரிகளுக்கும் ஒரே வகையான வடிவம் இருக்குமாதலால், எம்பெருமானுக்கு க்ரீடம் உண்டு. (எம்பெருமான்) ரக்ஷகத்துவத்துக்கு (அடியார்களை காக்கும் தொழிலில்) முடி சூடி இருக்கும் இவர்கள் அடிமை செய்கைக்கு (கைங்கர்யம் புரிவதற்கு) முடி சூடி இருப்பார்கள் என்று இருவருக்கும் வேறுபாடு தோன்றும் முறையில் வைணவ மரபிற்கு ஏற்ப நயமாக உரை உள்ளது.
வைகுந்தம் செல்வோர் இவ்வாறு “கொடி அணி நெடுமதி்ள் கோபுரம் குறுகினர்” என்றபடி கோபுரத்தை அடைந்தனர். இவர்களை வரவேற்கும் பரமபதநாதனை, “வடிவுடை மாதவன்” என்கிறார் ஆழ்வார். புதிய பேரழகு வாய்ந்த எம்பெருமான் என்பது பொருள் வைகுந்தத்துக்கு வருபவரைக் கண்டவுடன், எம்பெருமான் புதிய பேரழகோடு விளங்குகிறானாம்
திரு வாசல் காக்கும் முதலிகள் என்று கூறப்படும் துவாரபாலகர் வரவேற்றனர். கைப்பிடித்து அழைத்துச் சென்று, பணி செய்யத்தக்க முறையில் தங்கள் கையில் அதன் அடையாளமாக வைத்திருந்த பிரம்பை, வந்தவர் கையில் கொடுப்பார்களாம்.
சமுத்ரஜலம் ஆறு உற்பத்தியாகும் மலையைச் சேர்ந்தாற்போன்று, உலகவாழ்வில் அல்லற்பட்டவர்கள், பரமபதத்தை அடைந்ததைக் கண்டு அவர்கள் வியந்தனர். வேதம் வல்லவர் வைகுந்தத்திற்கு வந்தவரின் திருப்பாதங்களைப் புனித நீரால் கழுவினால். இவர்கள் வருகையால் முகம் மலரப்பெற்ற வைகுந்தப் பெண்டிதர், வைகுந்தம் செல்வோர்க்குச் செல்வம் போன்ற திருவடி நிலைகளையும், மணம் மிகுந்த வண்ணப்பொடிகளையும் கைகளில் ஏந்தி, தாம் செய்த புண்ணியத்தின் பயனாகத் தான் இவர்கள் வந்துள்ளதாகக் கருதி மகிழ்ந்தனர்.
இவ்வாறான வரவேற்பைப் பெற்று, எம்பெருமாள் விளங்கும். திருமாமணி மண்டபத்தில், அந்தமில் பேரின்பத்து அடியரோடும், எம்பெருமானோடும், கூடி இருந்து குளிர்ந்தார்கள் என்ற இனிய விளக்கத்தை நாம் திருவாய் மொழியில், நம்மாழ்வாரின் அருளிச் செயலாகக் காணும் போது, வியப்பால் மகிழ்ச்சி வருகிறது.
ஸ்ரீ ராமானுஜர், பரமபதம் பற்றியும் எம்பெருமானைப் பற்றியும், அப்பெருமானை எப்போதும் தம் விழிகளால் பருகிவாழும் நித்ய சூரிகளைப், பற்றியும் வேதவாய் மொழிகொண்டு விளக்கி இருக்கும், “வேதாந்த சங்கிரகம்” என்கிற க்ரந்தத்தில் சொல்கிறார்.
பரப்ரஹ்மம் என்று கூறப்பெறுவது ஸ்ரீ மந்நாராயணன் ஒருவனே, இவனுடைய வடிவம் ‘பல பலவே சோதி வடிவு” என்றபடி அளவற்றது. மாசு இல்லாதது. இப்பெருமானிடம் ஞானம், பலம், ஐச்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ் போன்ற எண்ணற்ற குணங்கள் இப்பெருமானைத் தவிர உள்ள, சேதந அசேதநப் பொருள்கள் இப்பெருமானின் விருப்பத்திற்கு ஏற்பச் செயல்படுகின்றன. இவைகள் நிறைந்த “விபூதி” என்று ,வழங்கப்படும்.
பெருமானுக்கு திவ்ய ஆபரணங்கள் திவ்ய ஆயுதங்கள் திவ்ய தேவிமார்கள் திவ்ய பரிஜனங்கள் திவ்ய வடிவம் முதலியவை யாராலும் செய்யப்படாமல் (அப்ராக்ருதம்) எம்பெருமானைப் போன்றே உண்மைப் பொருள்களாக நிலைத்த பொருள்களாக உள்ளன.
எம்பெருமானின் முதன்மையான தேவி பெரிய பிராட்டியாக திருமகள் பூமிதேவியாகிய நிலமகளும் ஒரு தேவி நெருங்கியப் பணி செய்வோர் (பரிஜனங்கள்) எண்ணற்றவர் பணிவிடை செய்வதற்கு உதவியாக அளவற்ற கருவிகள் உண்டு இத்தகைய எம்பெருமானின் இருப்பிடம் வைகுண்டம் இதனை நித்ய விபூதி பரமபதம் என்று கூறுவர். இத்தகைய ) வைகுந்தத்தில் எம்பெருமானை எப்போதும் இடைவிடாமல் சேவித்துக் கொண்டிருக்கும் நித்திய சூரிகள் உண்டு இவை எல்லாமே எம்பெருமானைப் போன்றே என்றும் அழியாத உண்மைப் பொருள்கள். இத்தகைய செய்திகள் எல்லாவற்றையும் ஸ்ரீ இராமானுஜர் விவரமாக அருளியுள்ளார்.
பிரளய காலத்தில் மற்றவை எல்லாம் அழிய எம்பெருமான் ஒருவன் மட்டுமே விளங்குவது போல் அப்பெருமானின் தேவியர் பரிஜனங்கள் அணிகள் ஆயுதங்கள் நித்ய விபூதி நித்ய சூரிகள் ஆகிய அனைவரும் அழியாமல் நிலைத்து வாழ்பவர் என்பது ஸ்ரீ இராமானுஜர் அருளிய சிறந்த விளக்கமாகும். இக்கருத்துகளை விளக்கவந்த இதிகாஸ புராணத்தொடர்களையும் வியாஸரிஷி அருளிய ப்ரஹ்ம ஸீத்ரத்தையும் எடுத்துக்காட்டி ஸ்ரீ இராமானுஜர் விளக்கியுள்ளார்.
பரமபதத்தின் இத்தகைய நிலையைத் தான் கம்பரும் பரமபதம் கால இல்லாதது நிலையானது சுருக்கமோ பெருக்கமோ இல்லாதது சத்வ குணம் மாறாதது ஐந்து பூதங்களும் அழிந்தாலும் தான் அழியாது இருப்பது என்கிறார்.
“சிறு காலை இலா நிலையோ திரியா குறுகா நெடுகா குணம் வேறுபாடா
உறுகால் கிளர் பூதம் எலாம் உகினும் மறுகா நெறி”
ஜீவாத்மாவின் குறிக்கோள் பரமபதத்தை அடைவதே என்பதை வேதங்களும், உபநிஷத்துக்களும் சொல்லி வழிகளையும் சொல்கின்றன.
இவ்வுலகில் பாற்கடலையும், பரம பதத்தையும் நம் மானிடக் கண்களால் காண முடியாது. என்பதை பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி திருவரங்கத்துமாலை இவற்றில் சொல்லியுள்ளார்.
“ஒத்து அமரர் ஏத்தும், ஒளிவிசும்பும் (வைகுந்தம்) பாற்கடலும் இத்தலத்தில் காண்பரிய” தேவர்களில் கூடப் பலர், இதுவரை, வைகுந்தம் கண்டது இல்லை என்றும், அப்படிச் சென்றவர் கூடத் திரும்பவும் அங்கிருந்து வந்தது இல்லை “வான் நாடரில் சிலர், சென்று, கண்டார் இல்லை, மற்று அதனில் போனாரில் மீளப் புவியில் வந்தார் இல்லை”
ஸ்ரீமத் வைகுண்ட தாம்நி ப்ரதித விரஜயாலங் க்ருதே திவ்ய லோகே,,
நித்யே நந்தாங்க யுக்தே ச்ருதிசிகர நுதே வ்யோமயாநேச லக்ஷ்ம்யா
ஆஸீநம் சாதிசேஷே கலசபவதிசம் வீக்ஷமாணம் ஸீரேட்யம்,
கம்பீரோ தாரபாவம் ஸகலஸீரவரம் வாஸிதேவம் ப்ரபத்யே–( ஸ்ரீ விஷ்ணு ஸ்தலாதர்சம்–தியானச்லோகம்)
இடர் உடையேன், சொல்ல எளிதோ பிரமன்
அடரும் விடையோற்கும் அரிதே தொடரும்
கருவையாகும், தம் பிறவிக்கட்டு அறுத்த மீளாத்
திருவைகுந்தம் பெறுவார் சிலர்.”
———————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply