Archive for January, 2023

ஸ்ரீ பாஷ்யம் திரண்ட கருத்துக்கள் !!–

January 30, 2023

ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-

இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .

இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயர்வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

———-

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||


'*வேத  சாஸ்த்ராத்‌ பரம்‌ நாஸ்தி''-வேதங்களிலும்‌ மேம்பட்ட  சாஸ்த்ரம்‌ ஒன்றுமில்லை, இவை பகவானாலேயே வெளி 
வந்தவை, மதி மயக்கம்‌, வஞ்சகம்‌, அய்வின்மை, ஆற்ற லின்மை ஆகிய இழிவுகள்‌ அற்றவை,
இந்த பாஷ்யத்தின்‌ கம்பீரமான உரை நடை, ஸூத்ரங்களை ஆராயும்‌ செம்மை, தேர்வை வெளி யிடும்‌ நுண்மை, தர்க்கமுறை போல்வன வற்றாத பேரின்‌ 
பலம்‌ நல்க வல்லன.
ப்‌ரஹ்ம ஸுத்ரம்‌; சேதன அசேதனங்களைத்‌ தனக்குச்‌ சரீரமாக  உடைய பகவானைப்‌ பற்றியது. இவன்‌ சரீரி. இவனைப்‌ 
பற்றிய சாஸ்த்ரம்‌, தர்க்க முறைப்படி அமைந்துள்ளது? 
ஆதலால்‌ -இது சாரீரக மீமாம்ஸை எனப்‌ பெபறும்‌,  (சாரீரகம்‌-:சரீரியான பகவானைப்‌ பற்றியது).
விசிஷ்டாத்வைத  மதத்திற்கு உயிர்‌ நாடியாக விளங்குவது ஸ்ரீ ராமாநுஜம்‌  அருளிய ஸ்ரீபாஷ்யம்‌) இந்த ஸ்ரீபாஷ்யம்‌ ஸரஸ்வதி 
தேவியால்‌ புகழப் பெற்றது. இவள்‌ ஸ்ரீ ராமாநுஜருக்கு  அளித்த விருது ஸ்ரீபாஷ்யகாரர்‌ என்பது
உலகம்‌ முழுதும்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌ என்று  ஸ்ரீ ராமாநுஜர்‌ வெளியிட்டிருக்கிறார்‌. 
“சேதன அசேதனங்கள்‌ யாவும்‌ இவனுக்கு உடைமைப்‌ பொருள்‌,  இவனுக்கு விசேஷணமாக (அடைமொழியாக) விளங்குகின்றன. 
இவன்‌ ப்ரகாரி; விசேஷ்யம்‌--விசேஷணத்‌தால்‌ அறியப்படுவோன்‌. இவன்‌ சேஷி, ஜீவர்கள்‌ இவனுக்கு சேஷபூதர்‌; 
இவன்‌ நியந்தா, இவர்கள்‌  இவனால்‌ நியமிக்கப்‌ பெறுவோர்‌; இவன்‌ ஆதாரம்‌, 
இவார்கள்‌ இவனால்‌ தரிக்கப்‌ பெறுவோர்‌; இவன்‌  நம்மை உடையவன்‌ நாராயணன்‌. 
நமக்கும்‌ இவனுக்கும்‌ உள்ள தொடர்பு இயல்பானது; இத்தொடர்பு  எக்காரணத்தாலும்‌ குலையாது'” என்று இவர்‌ வெளி  யிட்டிருக்கிறார்‌. 

“இத்‌ தொடர்பாலே இவன்‌ நமக்கு எல்லா  உறவுமானவன்‌, நம்மிடம்‌ கருணை மிக்கவன்‌; 
நம்மைக்‌  காப்பதே தனது பேறாக நினைப்பவன்‌” என்பது  ஸ்ரீ ராமாநுஜரது மதத்தின்‌ சாரம்‌. 
இது “எம்பெருமானார்‌ தரிசனம்‌'” என்று பாராட்டப்‌ பெற்றுள்ளது.

----------------
1. அவதாரிகை

“ஆரண நூல் வழிச் செவ்வை அளித்திடும் ஐதுகர்க்கு ஓர்
வாரணமாய் அவர் வாதக் கதலிகள் மாய்த்த பிரான்
ஏரணி கீர்த்தி ராமானுச முனி இன்னுரை சேர்
சீரணி சிந்தையினோம் சிந்தியோம் இனித் தீவினையே”
– (அதிகார ஸங்க்ரஹம் 4)-என்று ஸ்வாமி தேஶிகன் எதிராசர் பெருமையைப் பறை சாற்றுகிறார்.

தேசமெலாம் உகந்திடவே பெரும்பூதூரில் சித்திரையில் ஆதிரைநாள் வந்து தோன்றிய எம்பெருமானார் நம் விஸிஷ்டாத்வைத தர்ஶன ஸ்தாபகர். “பகவத் ராமானுஜ தர்ஶனம்” என்று இதனை திருக்கோட்டியூர் நம்பி கொண்டாடுகிறார். நம் குரு பரம்பரா வைபவங்களுள் மிக முக்யமானது உடையவர் அருளிய ஸ்ரீ பாஷ்யம். உலகில் எத்தனையோ பாஷ்யங்களிருப்பினும் ஸ்ரீ என்ற அடைமொழியுடன் கூடியது இது மட்டுமே. ஸரஸ்வதி தேவியே அங்கீகரித்து அருளிய பெயர் இந்த க்ரந்தத்துக்கும் அதனை அருளிச்செய்தவர்க்கும்.
இத்தகைய சிறப்புமிக்க ஸ்ரீபாஷ்யம், கற்க நியமங்கள் ஏராளம் இருப்பினும் அதன் ஸாரத்தை எல்லோரும் அறியலாம் என்பது ஸ்வாமி தேஶிகன் திருவுள்ளம்.

உபநிஷத் வார்த்தைகளுக்கு விசாரம் செய்யும் வகையில்
வ்யாஸர் சூத்ரங்களைச் (சுருக்கமான வாக்கியங்கள்) செய்தார். உபநிஷத் என்ற பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதமே இந்த சூத்ரங்கள்.

பகவத் விஷயம் பகவத் கீதை இவற்றைப் போல இதனையும் உபதேசிக்க வேணும் என்பது வ்யாசரின் உத்தேஸ்யம். இவரது சிஷ்யரான போதாயனர், “போதாயன சூத்ர வ்ருத்தி” என்ற க்ரந்தத்தைச் செய்தார். மகாபாரதத்தைவிடப் பெரியது இது. இதனைப்படித்து விட்டு வ்யாசர் திருவுள்ளத்தையொட்டி பாஷ்யம் செய்ய நினைத்தார் ராமானுஜர். காஷ்மீரத்தில் ஸரஸ்வதி பீடத்தில் இருந்த ஒரே சுவடியை அங்கு சென்று படித்து எழுத முடியாத நிலை. எண்ணம் ஈடேறாது பரமபதித்த ஆளவந்தாரின் மடங்கிய மூன்று விரல்களும் ராமானுஜரின் ப்ரதிஞையால் விரிந்தன. மூன்று விஷயங்களுள் ஒன்று ப்ரும்ஹ சூத்ரத்துக்கு பாஷ்யம் செய்வது. ஆளவந்தார் திருவுள்ளத்தை ராமானுஜரைக் கொண்டு நிறைவேற்ற அரங்கன் ஸங்கல்பித்தான். ஆக மொழியைக் கடக்கும் பெரும் புகழானாகிய தன் சிஷ்யன் கூரத்தாழ்வானுடன் காஷ்மீரம் சென்று அங்கு ஆழ்வான் மனதில் ஏற்றிக்கொண்ட சூத்ரங்களை ராமானுஜர் வியாக்யானம் செய்ய அதனைப் பட்டோலைப் படுத்தினார் ஆழ்வான். இதனைத் திரும்ப காஷ்மீரம் சென்று ஸரஸ்வதி பீடத்தில் வைத்து அங்கீகாரம் பெற வேண்டுமாகையால் ஆங்கே ஸரஸ்வதி தேவி தன் ஸிரஸில் ஏற்று ஸ்ரீபாஷ்யம் என்று பெயரிட ராமானுஜரும் ஸ்ரீபாஷ்யகாரர் ஆனார். ஸ்ரீ என்ற வேதத்துடன் பொருந்தி யிருப்பது இந்த ஸ்ரீபாஷ்யம். வித்யா மூர்த்திகளாகிய வ்யாசர், தக்ஷிணா மூர்த்தி, ஸரஸ்வதி ஆகியோர்க்கு ஆராத்ய தெய்வமாகிய ஹயக்ரீவ மூர்த்தியையும் அளித்தாள் தேவி. ஆக நம் சம்ப்ரதாயத்துடன் எம்பெருமானும் கூடவே வருகிறான். ஸம்ரதாய வ்ருத்திக்கு 74 ஸிம்ஹாஸநாதிபதிகளை நியமித்தார் ராமானுஜர். தன் ஞான புத்ரரான திருக் குருகைப் பிரான் பிள்ளான், முதலியாண்டான், நடாதூராழ்வான், கிடாம்பி ஆச்சான் ஆகிய நால்வரும் நேரடியாக பாஷ்யகாரரிடம் ஸ்ரீபாஷ்யம் கேட்டவர்கள். பிள்ளானின் சிஷ்யன் எங்களாழ்வான், அவரது சிஷ்யன் நடாதூரம்மாள், தொடர்ந்து அப்புள்ளார், இவரிடம் ஸ்வாமி தேஶிகன் என பரம்பரையாகிற்று.
ரங்கநாதனால் பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்யம் பேரருளானால் வளர்க்கப் பட்டது. பெற்ற தாய் ராமானுஜன் வளர்த்த தாய் தேஶிகன். ஆக ஆளவந்தார் நினைத்ததை காரேய் கருணை ராமானுஜர் செய்தார் .செயல்படுத்தி மக்களிடையே ஞானம், பக்தி, அனுபவம் ஏற்படுத்தியவர் ஸ்வாமி தேஶிகன்.

2 – பர ப்ரஹ்மம்

ஸ்ரீபாஷ்யம் என்ற க்ரந்தம் அருளியவர் ஸ்ரீபாஷ்யகாரர். இப்படி பெயரமைவது வெகு ஶ்ரேஷ்டம்.
“பவமரு பரிகிந்ந-……..நாடிந்தமான: (யதிராஜ ஸப்ததி 30) இன்ப நாடியைத் தட்டினால் மிகுந்த இன்பம் விளைவது போல எம்பெருமானின் ரஹஸ்யங்களைக்காட்டி நமக்கு பேரானந்தத்தைத் தர வல்லது இந்த எம்பெருமானாரின் ஸ்ரீபாஷ்யம் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
4 அத்யாயங்களளுள் 16 பாதங்களை அடக்கியது. இத்தனையிலும் மொத்தமாகப் காட்டப்படும் விஷயம் “பரப்ரஹ்மம்”.
முதலிரண்டு அத்யாயங்கள் ஆதிகாரணன் ஸ்ரீமன்நாராயணனே என்பதை உறுதிபட ஸ்தாபிக்கிறது.
3ம் அத்யாயம் உபாயத்வத்தையும்
4ம் அத்யாயம் பலாத்யாயமாயும் அமைகின்றன. இந்த 4 அத்யாயங்களின் மையக்கருத்தை பெரியாழ்வாரின் இத்திருமொழி தெளிவாய்த் தெரிவிக்கிறது.
“அண்டக்குலத்துக்கதிபதியாகி”–(ப்ரபஞ்ச ஸ்ருஷ்டி “அசுரர்இராக்கதரை…இருடீகேசன்தன்னை”–(தடையற்ற பெருமை)
“தொண்டக்குலத்துள்ளீர்”—(உபாயம்)
பண்டைக்குலத்தைத் தவிர்ந்து”—(ஸம்ஸாரம் தவிர்க்கும் பலம்)
“பூவளரும் திருமாது புணர்ந்த நம் புண்ணியானார்
தாவளமான தனித் தவம் சேர்ந்து தமருடனே
நாவளரும் பெரு நான்மறை ஓதிய கீதமெலாம்
பாவளரும் தமிழ் ப் பல்லாண்டிசையுடன் பாடுவமே” (பரமபத சோபானம் 18) என்கிறார் ஸ்வாமி.
வேதம் சொல்லும் பரப்ரஹ்மம் நம்மாழ்வார் குறிப்பிடும் “உயர்வற உயர்நலம் உடையவன்”. உலகங்களைப்டைத்து , அதில் வ்யாபித்து எண்ணற்ற கல்யாண குண கணங்களைக் கொண்டவனாகையால் உயர்ந்தவன் எம்பெருமான். ஜீவர்களுக்கு மோக்ஷஸ்தானமளிப்பதால் உயர்த்துபவன். நம்மாழ்வார் குறிப்பிடும் “உயர்வற உயர்நலமுடையவனும்”, “ஒத்தார்மிக்காரை இலையாய மாமாமயனும்”
“பகம்”என்ற 6 குணங்களையுடையனுமாகிய எம்பெருமானே ஶ்ருஷ்டி,ஸ்திதி, லய காரணனாவான். ஸத்ய, ஞான,
அனந்த ஆனந்த ஸ்வரூபனாகிய எம்பெருமானை
தேச, கால, வஸ்துக்களால் வரையறுக்க முடியாது என்பதை “நந்தா விளக்கே அளத்தற்கரியாய்” என திருவாய்மொழியும்,
“நந்துதலில்லா நல்விளக்காகி அந்தமில் அமுத ஆழியாய் நிற்றி”-என மும்மணிக்கோவை யும்  முழக்கமிடுகின்றன.
இப்படி பட்ட எம்பெருமானைத் தெரிந்து கொள்ள ஸாஸ்த்ரம் ஒன்றே உபகாரமாயிருக்கும்.எங்கும் கண்டிராத ப்ரஹ்மத்தை அனுமானிக்க முடியாது.
வேதமும் நாராயணனும் பிரிக்க முடியாத பதி பத்நீ பிணைப்பை ஒத்தவை.வேதம் பத்நீ.நாரயணன் நினைப்பதை வேதம் சொல்லும்.
ஆக வேதமாகிய பத்நீக்கு அதீனமான பதி நாராயணன்.
இத்தகைய வேதத்துக்கு ராமானுஜர் செய்த அலங்காரமே ஸ்ரீபாஷ்யம்.”ப்ரமாணம் லக்ஷ்மண முனி: ப்ரதி க்ருண்ணாது மாமகம்
ப்ரஸாதாயதி யத்ஸூக்தி: ஸ்வாதீன பதிகாம் ஶ்ருதிம்”—-
(யதிராஜ ஸப்ததி)
வேதத்தின் மூலம் எம்பெருமானை புருஷார்த்தமாக அனுபவிக்க வேணும் குழந்தையிடமிருந்து அம்மாவுக்கும் அம்மாவுடனிருக்கும் குழந்தைக்கும் கிடைக்கும்ஆனந்தம் போன்றது
ஜீவனுக்கும் எம்பெருமானுக்குமிடையே கிடைக்கும் ஆனந்தம்.உலகில் உள்ள வஸ்துக்களனைத்திலிருந்து விலக்ஷணமானவன் எம்பெருமான்.உவமைகூற
முடியாத ஞான, ஶக்தி, பல, வீர்ய, ஐஸ்வர்ய , தேஜஸ் உடையவன்.
“கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே” (2-6-10) என்கிறார் நம்மாழ்வார்.ஜகச்சக்ஷு எனப்படும் சூர்யனுக்கும் சிறிய விளக்கின் ஒளிக்கும் உள்ள வித்யாசம் போன்றும் , புழுவுக்கும் மனுஷ்யனுக்கமுள்ளதுபோன்றும், மனுஷ்யனுக்கும் தேவர்களுக்குமுள்ள வித்யாசம் போன்றும்
எல்லா வஸ்துக்களிலிருந்தும் வேறுபட்டு மேம்பட்டு விளங்குபவனே எம்பெருமான்.3- காரண வாக்யங்கள்
எம்பெருமானை அறிய பொருத்தமான ஸாஸ்த்ரம் வேதம் ஒன்றே. வேதமும் பகவானும் பிரிக்கக் கூடாதவை. வேத்தின் பூர்வ பாகம் அனுஷ்டானம் பற்றியும் பல தேவதைகளைக் குறித்த யாக யக்ஞங்கள் பற்றியது. உத்தர பாகமாகிய பின்பகுதி தேவதைகளுக்குள் அந்தர்யாமியாயிருந்து பலனளிக்கும் எம்பெருமானைப் பற்றிப் பேசுகிறது.
“வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை”— என்கிறார் கலியன்.
பிற தேவதைகள் எம்பெருமானுக்கு அங்கமாயுள்ளனர். க்ருஷ்ணன் திருவடியில் அர்ஜுனன் அர்ச்சித்த புஷ்பங்களை சிவன் திருமுடியால் ஏற்றான் என்பது வரலாறு. ஆக ஜீவர்களாகிய நாம் எம்பெருமானின் தாஸர்கள்.
ஆனால் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பது அபேத ஶ்ருதி. இதை “அத்வைதம்” என்பர்.
இந்த இரண்டும் வேறானது என்பது பேத ஶ்ருதி. இதை “த்வைதம்” என்பர். இவ் விரண்டுக்கும் நடுவே உள்ளது கடக ஶ்ருதி.
ராமானுஜர் இந்த இரண்டையும் எடுத்துக் கொண்டு ப்ரஹ்மம் தனியாக இல்லை எல்லா வஸ்துக்களிலும் சேர்ந்துள்ளது என்றார். ப்ரபஞ்சத்துடன் கூடியவன் பகவான் என்று சமன்வயப்படுத்தியவர் பாஷ்யகாரர். ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு ஆனால் அந்த ஜீவனுள் அந்தர்யாமியாக உள்ளான் எம்பெருமான்.
“க்ஷரந்த்யம்ருதமக்ஷரம் யதிபுரந்நரஸ்யோக்தய:
சிரந்தந ஸரஸ்வதீ சிகுர பந்த ஸைரந்த்ரிகா:”—(யதிராஜ ஸப் 36)
வேத மாதாவுக்கு உபநிஷத் சிரோ பாகமாயுள்ளது. குத்ருஷ்டிகள் சொன்ன தவறான வேதார்த்தங்களாகிய சிக்கல்களை நீக்கி அழகான மூன்று கால் பின்னலாகிய சிகை யலங்காரத்தை ராமானுஜர் தன் விஸிஷ்டாத்வைத சித்தாந்த ஸ்தாபகத்தாலே செய்தார் என்று ஸ்வாமி கூறுகிறார. இத்தகைய பாஷ்யம் அமுதம் போன்றது. ஸகுண ஸ்ருதி , நிர்குண ஸ்ருதி என்றும் வேதம் சொல்கிறது. எண்ணற்ற கல்யாண குணங்கள் எம்பெருமானுக்கு. அதே சமயம் எந்த ஹேய குணங்களும் (பசி, தாகம், மூப்பு, சோகம்) இல்லாதவன். என்பதே நிர்குண ஸ்ருதியின் அர்த்தம். இப்டிக்கான வேதார்த்தங்கள் ஸ்ரீபாஷ்யம் தந்ததால் “நாட்டிய நீச சமயங்கள் மாய்ந்தன நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது.”.
“காரணவாக்யங்கள்” என்பற்றை வேதம் காட்டுகிறது. ஜகத்காரணன் யார் என்ற சர்சைக்கான விளக்கம் இது.
ஸத் (நிலையாயிருப்பவன்) ஆகாசம் (சுற்றிலும் ப்ரகாசிப்பவன்) ஆத்மா (உள்ளிருந்து ஆள்பவன்) ப்ராண வாயு (மூச்சுக்காற்று) இவை எல்லாமாயுமிருப்பவன் எம்பெருமானே.
“ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று
நான்முகன் தன்னொடு தேவருலகோடு உயிர் படைத்தான்”
(திருவாய் 4-10-1)
ப்ரளயகாலத்தில் அவன் ஒருவனாலேயே உருவாக்கப்பட்டது இப்ரபஞ்சமும் வஸ்துக்களும். ஆக உலகைப் படைத்தவன் நாராயணன். மற்றவர்கள் அவனால் படைக்கப்பட்டவர்கள்
சிவன்,சம்பூ, ப்ரஹ்மா, இந்த்ரன் என்ற ஸப்தங்கள் எல்லாம் எம்பெருமானையே குறிப்பிடுகிறது என்பதை உபநிஷத் வாக்யத்தைக் கொண்டு ஆராய்ந்து சொல்லலாம்.
“முனியே நான்முகனே முக்கணப்பா”–என்கிறார் நம்மாழ்வார்.
“சாமான்ய புத்தி ஜனகாச்ச”…(.வரதராஜ பஞ்சாஸத் 15)
இந்த ப்ரபஞ்சத்தைப்படைக்க உபாதானகாரணமும், நிமித்த காரணமுமாயிருப்பவன் நாராயணனே.
“தானே உலகெலாம் தானே படைத்திடந்து தானே உண்டுமிழ்ந்து தானே ஆள்வானே” என்கிறார் நம்மாழ்வார்.

எல்லாவற்றுள்ளும் அந்தர்யாமியாயிருந்து உண்டாக்கி ரக்ஷிக்கிறான். ஆக இத்தகைய வேத வாக்யங்களை ஒன்றாகச் சேர்த்து வேதத்தையும் பகவானையும் இணைத்தவர் ஸ்ரீபாஷ்யகாரர்.

4- தர்க்க வாதங்கள்
நம்மால் ஊகித்து, அனுமானித்து அறியமுடியாததைச் சொல்வது வேதம். பகவானுடன் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும்
தெரிவிப்பது வேதம். நாம் படித்து அறிய வேண்டிய க்ரந்தங்கள் அநேகம். ஆனால் அவற்றையெல்லாம் படித்து அறிந்து கொள்ள மனுஷ்யனின் ஆயுள் போதாது. தடைகளும் குறுக்கிடும். அதனால் முனிவர்கள் நீண்ட க்ரந்தங்களை ஶ்லோக ரூபமாய் அளித்துள்ளனர். புராணங்கள் பகவத் ஸ்வரூபத்தையையும், ஸ்ம்ருதிகள் அனுஷ்டானத்தையும் சொல்கின்றன. தர்க்கத்தின் உதவியுடன் தான் வேதத்தைப் புரிந்து கொள்ளமுடியும் என்பதை ஸ்தாபித்தவர் நம் கவிதார்க்கிக ஸிம்ஹம். ஆழ்வார் ஸுக்திகளும் வேதத்தை அறிய பேருதவியாயுள்ளன.

“செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி தெளியாத மறைநிலங்ன்ள் தெளிகின்றோமே” –என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
“இந்த ப்ரபஞ்சத்தின் ஶ்ருஷ்டி கர்த்தா ஸ்ரீமன் நாராயணனே. இதனை ஏற்காதவன் வைதிகனே அல்லன்” தன் ஸ்தோத்ர ரத்னத்தில் “ஸ்வாபாவிகா நவதிகாதிஶ யேஸித்ருத்வம் நாராயணத்வயி நம்ருஷ்யஸி வைதிக:க:” என்பதாகச் சொல்கிறார் ஆளவந்தார்.
ப்ரபஞ்சம் புதியது அல்ல.
முன்பே உள்ள வஸ்துக்களை மாற்றிப் போட்டுக் கிடைக்கும் புதுஉருவமே என்பது பரிணாம வாதம். தங்கம் பலவித ஆபரணமாகி அதற்கு நாம ரூபமளித்தல் போல. ஆகாசத்துக்கு மேல் ப்ருக்ருதி. அதன் ஒரு பகுதியில் ஸ்பர்சம் ஏற்பட்டு அக்னி, வாயு, ஜலம், பூமியாக உண்டாகிறது. ஒரு வஸ்து இன்னொன்றாக பரிணாமம் அடையும்போது அதனுள் பெருமான் அந்தர்யாமியாக உள்ளான். ப்ருக்ருதிக்குள்ளே இருக்கும் எம்பெரூமான் ப்ரபஞ்சத்துக்குள்ளே வருகிறான்.
“திரியும் காற்றோடு அகல் விசும்பு
திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடிரு சுடர் தெய்வம்
மற்றும் மற்றும் முற்றுமாய்” (தி
ரு.மொழி3-6-5)இல்லாததை ஶ்ருஷ்டிப்பதில்லை. அவனுக்கே உள்ள அகடித கடனா ஸங்கல்ப சாமர்த்யத்தால் காரண /கார்ய வஸ்துக்களுக்குள் ஸுக்ஷ்மமாயுள்ளான். இதனை மறுத்து வேதத்துக்குப் புறம்பான அர்த்தம் சொல்லும் பௌத்த ஜைன மதங்களைக் கண்டித்து
வேதத்தின் உண்மைநிலையை ஸ்தாபித்தார் பாஷ்யகாரர்.
“பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப் பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேனிடைத்தான் புகுந்து தீர்த்தான்”–என்கிறது ராமானுசநூற்றந்தாதி 52)
“கபர்தி மத கர்தமம் கபில கல்பனா வாகுராம்
துரத்யமமதீத்ய தத் த்ருஹிண தந்த்ர யந்த்ரோதரம்
குத்ருஷ்டி குஹனா முகே நிபதத: பரப்ரம்ஹண:
கரக்ரஹ விசக்ஷணோ ஜயதி லக்ஷ்மணோயம் முனி”: 
(யதிராஜ ஸப் 38)
சைவச்சேற்றினின்றும், கபில வாத வலையினின்றும், கண்ட யோகா யந்த்ர சிக்கலினின்றும், மாயாவாதிகளின் பொய் ப்ரசாரத்தினின்றும் ப்ரஹ்மத்தைக் காப்பாற்றி அதன் பெருமைகளை நிலைநாட்டி கைதூக்கி நிறுத்தியவர் பாஷ்யகாரர். எம்பெருமானின் திருமேனி, ஸ்வரூப, குணம், விபவம், எல்லாவற்றையும் உண்மையென ஸ்தாபித்து ப்ரஹ்மத்தின் பெருமைகளை உலகுக்குக்காட்டி ப்ரஹ்மத்தைக் காத்தவர் எம்பெருமானார்.
5 – உலகப் படைப்பு
வேதம், ஶ்ருதி, ஸுத்ரம் இவற்றைத் தவறான அர்த்தங்களுடன் ப்ரசாரம் செய்ததால் அவைகளுக்கு ஏற்பட்ட ஜ்வரத்தைப் போக்கியவர் ராமானுஜர். வேதார்த்தங்களை ஸ்தாபித்த வ்யாஸரைப் பரிஹஸித்து, பாகவதம் உபதேசித்த ஶூகரைக் கேலிசெய்து, போதாயனரை வாதாயனராக்கிய குத்ருஷ்டிகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்றியவர் பாஷ்யகாரர். ப்ரும்ஹ ஸூத்ரத்தின் 2ம் அத்யாயத்தின் பின்பகுதியில் ஸ்ருஷ்டியின் விளக்கமுள்ளது.
“அசிதவிஷ்டான் ப்ரளயே ஜந்தூனவலோக்ய ஜாதநிர்வேதா
கரணகளேபர யோகம் விதரஸி வ்ருஷ ஶைலநாதகருணேத்வம்”
(தயாஶதகம் 17) – என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.
இத்தகைய ஶ்ருஷ்டி அவனுக்காகவும், நமக்காகவும்
செய்துள்ளான். பலவிதமான, ஆச்சர்யமான 26 தத்வங்களைப் வைத்துள்ளான் எம்பெருமான்.
ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம் மூன்றும் ஆதியில் (3+) உண்டானவை. இவைகளைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது.

  • அஹங்காரத்தின் ஒரு பகுதியிலிருந்து ஐந்து (5+)
  • ஞானேந்த்ரியங்கள் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்),
  • ஐந்து (5+) கர்மேந்த்ரியங்கள் (கை, கால், வாய், மலமூத்ர விஸர்ஜன உறுப்புகள்),
  • மனஸ் (+1) உண்டாயின.
  • அஹங்காரத்தின் மற்றொரு பக்கத்திலிருந்து பஞ்சபூதங்கள் உண்டாயின.
  • ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருத்வி ஆகியன (5+) பஞ்ச பூதங்ள் தோன்றுவதற்கு நடுவே 5 தன்மாத்ரங்கள் தோன்றுகின்றன. இவை ஒன்றிலிருந்து மற்றது மாறிவருகின்றன. இதனையே “மானாங்கார மனங்களே” என்கிறார் ஆழ்வார்.
  • 25 வது தத்வம் ஜீவன்.
  • எம்பெருமான் 26 வது தத்வம்.

இந்த 25 தத்வங்களுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்து ஆள்பவன். அதுவே அவனுக்கு 26 வது திருநாமம் ஆண்டவன் என்பது. இதுவே “ஶ்ருஷ்டிக்ரியா” என்பதாகும்.

இந்த்ரியம் என்பது ஶரீரத்தின் பாகமன்று. உறுப்பு செய்வதை உணர்வதாகிற ஞானத்தை அளிக்க வல்லது இந்த்ரியம். கண் பார்ப்பதை இன்னது என்ற ஞானத்தைக் தருவதே இந்த்ரியம். இதை ஶ்ருஷ்டித்தவன் ரிஷிகேசனாகிறான். (இந்த்ரியங்களை அளித்து ஆள்பவன்)
“நாற்ற தோற்ற சுவை ஒலி உறலாகிநின்ற” என்கிறார் ஆழ்வார். இந்த பஞ்சேந்த்ரியங்களுள் இந்த்ரியங்களை நடத்தும் ப்ராண வாயு மிக முக்யம் அதுவே ஶ்ரேஷ்ட ‘ப்ராணன் எனப்படும்’.
“பூநிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்த காலிரண்டுமாய் மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய் நீநிலாய வண்ண நின்னை
யார் நினைக்க வல்வரே”— திருமழிசையாழ்வாரின் திருச்சந்த விருத்தப் பாசுரம் இது.இந்த 24 தத்வங்களைக் கொண்டு செய்யும் ஶ்ருஷ்டி ‘ஸமஷ்டி ஶ்ருஷ்டி’ எனப்படும். சேதனத்தை அசேனத்துடன் சேர்ப்பது ‘வ்யஷ்டி ஶ்ருஷ்டி’. தாயாரின் கர்பத்தில் ஜீவனைச் சேர்க்கிறான். ஆகாசத்தின் நீல நிறம், ஜ்வாலையில் பல நிறங்கள் எல்லாம் பஞ்சபூதங்களின் பஞ்சீகரணம் என்ற கலப்படத்தாலே உண்டாகின்றன. சத்தாகிய பஞ்ச பூதத்திலிருந்து கலப்பட பஞ்சபூதம் சேர்ந்து அண்டம் உண்டாகிறது.
அதுபோல் பல அண்டங்கள் தோன்றுகின்றன. அந்த அண்டத்துள் க்ஷீராப்தியில் சயனித்துள்ள எம்பெருமானின் நாபிகமலத்திலிருந்து ப்ரும்ஹா தோன்றி வேதோபதேசம் பெற்று அவனுள் அந்தர்யாமியாயிருந்து எம்பெருமானே ஶ்ருஷ்டி கார்யங்களைச் செய்கிறான். ஆக இந்த ஜகத் ஶ்ருஷ்டிக்கு உபாதான -நிமித்த காரணம் ஸ்ரீமன் நாராயணனே.
6. ஜீவாத்மா
ஸம்ஸாரத் தளையிலிருந்து விடுபட ஆசார்ய ஸ்ரீஸுக்திகளே உதவும். ஸ்ரீபாஷ்யத்தின் 2ம்அத்யாயம் ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும் அதன் செயல்பாட்டையும் பற்றியது.
“நான்” என்பதன் அர்த்தம் என்ன? அது பொதுவானதல்ல – “புஸ்தகம்” என்ற சொல்லைப் போல். நான் என்பதன் உடைமையாகிய தன்னைப்பற்றிய அறிவு தனக்கே வந்தால் அதுவே நான். புஸ்தகத்தின் ஞானம் அதற்கு வராது. அதனால் அது நான் ஆகாது. இந்த ஆத்மாவகிய நான் ஶரீரத்திலிருந்து வேறுபட்டது. இந்த ஶரீரம் இந்த்ரியங்களுக்குரியவன் ஆத்மா. அவற்றிலிருந்து வேறுபட்டது. இது பெரும்பாலும் ஹ்ருதயத்துக்குள்ளிருக்கும். மிக ஸுக்ஷ்ம ஸ்வரூபமுடைய ஆத்மா தேஜஸ்ஸின் ஒரு பொறியளவானது. ஞான ஸ்வரூபி. தானே தன்னிருப்பைத் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளது. பஞ்ச பூதத்தாலானதல்ல. உற்பத்தி/நாசமற்ற நித்யமானது. அடுத்தடுத்த ஶரீரத்தைச் சென்றடையக் கூடியது.
இதனை “ஆத்ம யாத்ரை” என்பர். ஆத்மா ஞானமுள்ளவன் (ஞாதா) கார்யம் செய்பவன் (கர்த்தா) அனுபவிப்பவன் (போக்தா) ஆத்மா பராதீனன் – எம்பெருமானுக்கு கட்டுப்பட்டவன். ஸ்வதந்த்ரனல்லன். ஜீவாத்மா, ஶரீரம், இந்த்ரியங்கள், ப்ராண வாயு, எம்பெருமான் க்ருபை ஆகிய 5ம் சேர்ந்தால்தான் ஒரு கார்யம் நடக்கும். (கண் இமைப்பது, மூச்சு விடுவது உள்பட).தனது ஞானத்தால் நல்லதையும் கெடுதலையும் தேர்ந்தெடுக்கும் சிறிய ஸ்வதந்த்ரம் ஜீவனுக்கு உள்ளது. செய்யத்தக்கவையால் நன்மையையும் அல்லாதவையால் தீமையையும் அடைகிறான். இதனைத் தேர்ந்தெடுப்பவன் ஜீவாத்மா தான் பகவானல்ல.
ஜீவாத்மாவுக்கு பல நிலைகளுள்ளன. ஸம்ஸார நிலையில் கர்த்தா போக்தாவாய் அனுபவிக்கிறான் விழிப்பு நிலையில். ஸ்வப்னம் தூக்க நிலை மற்றொன்று. 6 இந்த்ரியங்களும் ஓய்வு நிலையில் இருப்பது தூக்கம். இது எம்பெருமான் அளித்த வரப்ரசாதம். இச்சமயத்தில் உமிழ்நீர் சுரப்பதில்லை. ஆனால் ரத்த, ப்ராண வாயு ஓட்டம் நடக்கிறது. மறுநாள் காலை அதே ஞானத்துடன், புத்துணர்ச்சியுடன் எழுகிறோம்.
இதில் மனஸ் மட்டும் விழித்திருக்கும் நிலை “ஸ்வப்னம்”. அதிகமான பயம், மகிழ்ச்சி, துக்கம் இவற்றின் வெளிப்பாடுதான் ஸ்வப்னம். இதனை எம்பெருமானே செய்கிறான். இது ஒரு விசித்ர அனுபவம். புண்ய பாப பலனால் ஏற்படும் அனுபவமாகிய இதனை ஒரு லகு சிக்ஷையாகச் செய்கிறான் எம்பெருமான்.
ஜீவன் ஶரீரத்திலிருந்து வெளியேறும்போது ஸுக்ஷ்ம பஞ்சபூதங்களும் உடன் செல்லும். சுக துக்க அனுபவத்துக்குப் பின் மறுபடி பிறக்கும். மேகமாகி, மழையாகி, பயிராகி, அன்னமாகி, புருஷ ஆகாரமாகி, ஸ்த்ரீ கர்பத்தில் சேர்ந்து பிறக்கிறான்.
ஶரீரம் இந்த்ரியங்களுடனிருந்தால்தான் ஞானமிருக்கும். இத்தகைய நிலைகளால் கர்ம பலன் படி பகவான் வழி நடத்துகிறான். ஞானத்துக்கு விரோதியாக அவித்யா போனால் மோக்ஷம். புண்ய பாபத்தை விடுவதே மோக்ஷம். இதற்கு நமக்கு வைராக்யம் வரணும். இனிய ரஸத்துடன் கூடிய பழத்தையும் நல்ல சுகந்தத்துடன் கூடிய புஷ்பத்தையும் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதுபோல ஞானத்துடன் கூடிய நம்மை (ஜீவனை) அவனிடம் ஸமர்ப்பிக்க வேணும். அவர்தானே ஶ்ருஷ்டிகர்த்தா!

7. பரமாத்மா
உயர்ந்த நிலையிலுள்ள பகவான் சேஷீ. நாம் சேஷன். ஆத்மா என்றால் வ்யாபித்திருப்பவர் எனப்பொருள். ஶரீரத்தை ஆள்பவர் என்றும் பொருள். இது இரண்டுமே பகவானுக்கு மட்டுமே பொருந்தும். எல்லா சேதன அசேதன வஸ்துக்களின் உள்ளும், புறமும் வ்யாபித்திருப்பவன் பரமாத்மா. அவன் ஆளும் ஶரீரம் இந்த ப்ரபஞ்சம் முழுதும் என வேதம் ஸ்பஷ்டமாய்க் கூறுகிறது.
புண்ய பாபத்துக்குட்பட்டே ஶரீரம் அமையும். இவை இல்லாத போது பரமாத்வுக்கு ஶரீரம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பாஷ்யகாரர் சொல்லும் பதில். (ப்ருகதாரண்ய உபநிஷத் படி) ப்ரபஞ்சமே ஶரீரம் எனச் சொல்லும் வேதம் நம்மைப் போல கை, கால் என்ற இந்த்ரியங்கள், சுக துக்கங்கள் உள்ள ஶரீரமன்று.

ஸகலப்ரபஞ்சமும் பகவானால் ஆளப்படுகிறது. அவற்றுக்கு சேஷியாக, தரிப்பவனாயுள்ளான். அதனாலேயே அவன் பரமாத்மா என்றும் அந்தர்யாமி (உள்ளேயிருந்து நியமனம் செய்பவன்) என்றும் சொல்லப்படுகிறான். ஸ்வரூபம், ஸ்திதி, பரவ்ருத்தி ஆகிய மூன்றும் பகவானுக்கு அதீனம்.
(கடவுள் என தமிழில் கூறுவதும் பொருந்தும்) ப்ராண வாயு, ஆகாசம் ஆகியன ஶரீரத்துள்ளே இருப்பினும் நியமிக்காது.
(எஜமானன் வேலைக்காரனுக்கு கட்டளை இடுவான், அவனுள்ளே புகுந்து செயல்பட முடியாது) ஆனால் வஸ்துவின் உள்ளேயும் வெளியிலும் வ்யாபித்து நியமிப்பவர் பரமாத்மா ஒருவனே. ஆக எது சேஷமாயும், ஆளப்படுவதாயும், தரிக்கப்படுவதாயும் உள்ளதோ அது ஶரீரம். சேஷியாயும், ஆள்பவனாயும், தரிப்பவனாயும் உள்ளவனே பரமாத்மா.
எல்லா தேவதைகள், ஆத்மாக்கள் ப்ரஹ்மா விஷ்ணு சிவன் எல்லாம் ஒன்று என்றும், சமம் என்றும், இதற்கு மேலான ப்ரஹ்மம் ஒன்று உண்டு என்ற வாதங்களிருந்தன. இவற்றை நிரஸனம் செய்து வேதவாக்யங்கள் மூலமும் ஆழ்வார் ஸ்ரீஸுக்த்திகள் மூலமும்
பாஷ்யகாரர் பரமாத்மா என்பவன் நாராயணனே என்று ஸ்தாபித்தார்.
“பாராயது உண்டுமிழ்ந்த பவளத்தூணை“(பெரிய திருமொழி)

“ஞாலத்தூடே நடந்து நின்றும் கிடந்திருந்தும் சாலப்பலநாள் உகந்தோறுயிர்கள் காப்பானே”  (திருவாய்மொழி 6-9-3)

இத்தகைய பரமாத்மா ஞானானந்த ஸ்வரூபன். ஞானம் அனுகூலமாயிருப்பதுவே ஆனந்தம். ஆக ஞானத்தால் பெறுவதுவே மோக்ஷானந்தம். அதுவே நிரவதிக ஆனந்தம். மனம் வாக்கு காயத்துக்கு அப்பாற்பட்டது. இத்தகைய ஆனந்த ஸ்வரூபன் அனந்தமான கல்யாண குணங்கள், ஆஶ்சர்யமான விபூதி, திருமேனி கொண்டவன். சூர்யமண்டலத்தின் நடுவே ஸ்வர்ண மயமான திருமேனியுனிருப்பதாய் வேதம் சொல்கிறது. அவதாரங்களால் அவன் பெருமை இன்னும் கூடியது.-இவை தவிர அவனுக்கே உள்ள தனிப்பட்ட பெருமைகள் உள்ளன.

  1. பிராட்டியினால் வந்த பெருமை”ஶ்ரிய:பதி” என்பது.
  2. தனிக்கடலே தனிச்சுடரே தனிஉலகே என்று கொண்டு ப்ரளயத்துக்குட்படாத பரமபதநாதன் என்பது.
  3. ஸதா நித்யசூரிகள் சூழ வீற்றிருப்பவன்.
  4. வேதங்கள் ஸதா கோஷித்துக்கொண்டிருக்கும் வைபவன்.

வ்யாசர் இப்பரமாத்மாவை “உபயலிங்கம்” என்கிறார். அதாவது இவன் இரட்டை அடையாளம் கொண்டவன் என்று பொருள். அவை சகல கல்யாண குணங்களை உடையவன் என்பதும், தோஷங்கள் எதுவும் துளியும் ஒட்டாதவன் என்பதுமாகும். (தாமரை இலை தண்ணீர் போல.) மரம் ஒன்றில் இரு பறவைகள் வசிக்கும்போது ஒன்று ஸம்ஸார பந்தத்தில் உழலும் ஜீவன் மற்றொன்று எதிலும் சம்பந்தப் படாமல் அதனை வழி நடத்தும் பரமாத்மா. இத்தகைய பரமாத்மாவையே உபாயமாகப் பற்றிக்கொண்டு அவனை நாமடைய வேணும்.

8. ப்ரஹ்ம வித்தைகள்
ஸ்ரீபாஷ்யகாரர் தத்வ விஷயங்களை மிக அழகாய் வரிசைப்படுத்தியுள்ளார். 3ம் அத்யாயம் உபாய அத்யாயம், 4ம் அத்யாயம் பலாத்யாயம். ஸித்த விஷயத்தை முன்பாதியும் ஸாத்ய விஷயத்தை பின்பாதியும் சொல்கிறது. வணங்கி ஸேவித்து பாராயணம் செய்யவேண்டிய க்ரந்தம் ஸ்ரீபாஷ்யம்.
க்ரந்தம் “அ”வில் ஆரம்பித்து “ம”வில் முடிகிறது நடுவில் “உ”. இதுவே ப்ரணவ தத்வம்.

ப்ரணவாகார விமானத்தின் கீழ் ஆதி ஸேஷ ஸயனத்திலிருப்பவன் ரங்கநாதன். எம்பெருமானுக்கே சேஷனாயிருப்பவன். லீலாரசம் அனுபவிக்கும் எம்பெருமான் சேஷி. சேஷத்வம் என்பதே ஆனந்தம். அதுவே ஜீவனின் ஸ்வரூபம். இதற்கு அனுகூலமாய் கைங்கர்யம் செய்கிறோம். புண்யபாபத்தை ஒழித்துவிட்டால் ஆத்மா எம்பெருமானுடன் கூடியிருந்து குளிரலாம். அதுவே “ஸ்வரூப ப்ராப்தம்”.
“அல்பாஸ்திரை ரஸுகரை ரஸுகாவஸானை”–ஶரணாகதி தீபிகை.அல்பமான ஸந்தோஷங்களை விட்டு உன்னை அடைவிக்க உன்னால் தான் முடியும் என்கிறார் ஸ்வாமி. இதற்கு த்யானயோகம் ஒரு உபாயம். எப்படி எதனை நினைத்து த்யானம் செய்ய வேணும் என்பதைச் சொல்வதே “ப்ரஹ்ம வித்யா” 32 ப்ரஹ்ம வித்தைகள் உள்ளன.ஒவ்வொன்றுக்கும் பகவத் குணங்கள் த்யானிக்க விஸ்தாரமாகச் சொல்லப்பட்டுள்ளது. ப்ரும்ஹகுண அனுஸந்தானத்துக்கு மிக உகந்தவை இவை. கதைரூபமாய் எப்படி த்யானிக்க வேணும் என்று சொல்கிறது. இந்த ப்ரஹ்மத்தை “பூ:பாதௌயஸ்யநாபிர்…….”என்கிறது ஸஹஸ்ரநாமம்.ஆக ஒரு வித்தையை எடுத்துக்கொண்டு ஒரு குணத்தைத் த்யானம் செய்யலாம். “வசீ” என்பது ஒரு குணம். தன்வசத்தில் வைத்திருப்பவன். பக்தர்களுக்கு வசப்பட்டன் எம்பெருமான்
‘அனன்யா தீன……..’ என்ற தயாஶதக ஶ்லோகம் அவன் பக்தி பராதீனனாயிருப்தைக் காட்டுகிறது.

இந்த ப்ரஹ்ம வித்தைகளில் 32ம் வித்தையே ஶரணாகதி என்னும் “ந்யாஸ வித்யா”. பாஞ்சராத்ர ஆகமத்திலுள்ள த்வயமந்த்ர அனுஸந்தானத்தை ஒட்டி ராமானுஜர் காட்டித் தந்த கண்ணன் திருவடி. அவன் கருணையால் நாம் பெறும் பலன் ஶரணாகதி.

9. த்யான முறைகள்
“உபவீதிநமூர்த்வ புண்ட்ரவந்தம் த்ரிஜகத் புண்ய பலம் த்ரிதண்ட ஹஸ்தம் 

ஶரணாகத ஸார்த்தவாஹமீடே ஶிகயா ஶேகரிணம் பதீம் யதீநாம்”— (யதிராஜ ஸப்ததி)

ஶரணாகதி செய்தவர்களின் சமூகத்தை வழிநடத்தும் யதிபதியாகிய ராமானுஜரை வணங்குகிறேன் என்கிறார் ஸ்வாமி தேஶிகன்.

ஸ்ரீபாஷ்யத்தில் ஆங்காங்கே ஶரணாகதி பற்றி சொல்லப் படுகிறது. ராமானுஜர் ஶரணாகதியைத் தான் அனுஷ்டித்துக்காட்டி நம்மையும் அனுஷ்டிக்கச் சொன்னார்.
த்யானம் என்பது ஒரு யோகம். த்யானம் என்பதற்கு நிரந்தர சிந்தனை என்று அர்த்தம். இதுவும் ஒரு பகவதாராதனம். அனுஷ்டான க்ரந்தமாகிய பாஞ்சராத்ர ரக்ஷையில் த்யானத்தின் முக்யத்தை ஸ்வாமி சொல்லியுள்ளார். நித்யகர்மானுஷ்டானத்துள் ஒன்றாக இதனைச் செய்வது நல்லது.
இந்த த்யானம் தைலதாரை போலமையணும். நடுவில் தடை ஏற்பட்டால் பயம்/நஷ்டம். ஸித்தியானால் அபயம்/மோக்ஷம். ப்ரீதியுடன் செய்தால் எம்பெருமான் பலமடங்கு ப்ரீதியுடன் பக்தர்களிடம் நெருங்குவான். முதலாழ்வார்களை நெருக்கினாற்போல.
‘தம்மையுகப்பாரை தாமுகப்பான்’ (நாச்சியார் திருமொழி).

த்யானம் செய்ய 4 படிகள் உள்ளன.

  1. ஶ்ரவணம் (ஆசார்யனை அணுகி எம்பெருமானின் குணங்கள், அனுஷ்டானம் முதலியன கேட்டறிதல்)
  2. மனனம் – கேட்பவைகளை யுக்திகளைக் கொண்டு நினைத்துப் பார்த்தல்.
  3. த்யானம் – பக்தியுடன் எம்பெருமானை நினைத்தல்.
  4. தர்ஶனம் – இவைமூன்றின் பயனாக எம்பெருமானை ஸாக்ஷாத்கரித்தல்.

“எங்கும் பக்கம் நோக்கினான் என் பைந்தாமரை கண்ணனையே”–என்று திருக்குருகைக் காவலப்பன் த்யான யோகத்தால் கண்ணனயே காண, அவனும் பக்தனையே பார்த்து ஸந்தோஷிக்கிறான்.
இத்தகைய பக்தியோகம் குருகைக்காவலப்பனுடன் முடிந்தது. நம்மைப்போன்ற ஶரணாகதர்களுக்கு ஸ்ரீபாஷ்யம் முதலான க்ரந்த காலக்ஷேபங்கள் கேட்பதே ஶ்ரவணம். கேட்பவைகளை நினைப்பதே மனனம். எம்பெருமானின் குணானுபவம் த்யானம். அர்ச்சாமூர்த்திகளை ஸேவிப்பதே தரிசனம் .

யோகம் என்றால் ஒட்டுதல் -சேர்த்தல் என்று அர்த்தம். ஆக இந்த அனுஷ்டானம் ஆத்மாவை பகவானுடன் சேர்க்கிறது. பீஷ்மர் விதுரர் ஆகியோர் பக்தி யோகம் செய்தவர்கள். இதற்கு உள், வெளி அங்கங்கள் உண்டு. தானம், யாகம், தபஸ் போன்றவை வெளி அங்கங்கள் பக்தியோகத்திற்கு.
ஶரணாகதிக்கு வெளி அங்கங்களில்லை. பக்தியோகத்துக்கு அந்திம ஸ்ம்ருதி வரை முடிவில்லை. ஆனால் ஶரணாகதியை க்ஷணகாலத்தில் அனுஷ்டித்து சேதனன் க்ருத க்ருத்யனாகிறான். இதுவே அவனை ப்ரஹ்மத்துடன் சேர்க்கும் யாகம் போன்றது.
10. மோக்ஷமடைதல்
எல்லோரும் உஜ்ஜீவிக்க வழிகாட்டியவர் ராமானுஜர். இந்த பாரத தேசம் செய்த புண்யத்தின் பலனே அவரது திருஅவதாரம். 1000 வருடங்களாக ஞானமும் மோக்ஷமும் அருளிய ராமானுஜரை “முக்தி தரும் யதிராசர்” என்கிறார் ஸ்வாமி தேஶிகன். ஸ்ரீபாஷ்யத்தின் 4ம் அத்யாயத்தில் மோக்ஷம் பற்றி விஸ்தரிக்கிறார்.

இதில் 4 விஷயங்கள் உள்ளன.

1. புண்ய பாபத்தை விடுவது எப்படி?
கர்ம வசத்தால் அநாதி காலமாய் அநந்தமாய் சேர்ந்தவையே புண்ய பாபங்கள். நாம் செய்யும் நற்செயல்களால் ப்ரீதி அடைந்த பகவானின் அனுக்ரஹ ஸங்கல்பத்தால் வருவது புண்யம். தீயசெயல்களால் அத்ருப்தி அடைந்து நிக்ரஹ ஸங்கலபத்தால் வருவது பாபம். இரண்டுமே அனுபவித்துத் தீர்க்கப்பட வேண்டியவை. இதுவரை எடுத்த ஜென்மங்களில் சேர்ந்த பாவக் குவியல்கள் சஞ்சிதம் எனப்படும். ஶரணாகதி செய்தவுடன் இப்பாபம் முடிந்துவிடும். ப்ராரப்தம் இப்பிறவி வரை அனுபவித்துக் தீர்க்கணும்.ஶரணாகதி செய்தபின்.தெரியாமல் செய்த பாபம் ஒட்டாது. தெரிந்து செய்யும் பாபம் லகு தண்டனையினால் தீரும். இதில் பாகவதாபசாரம் முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டியது. மோக்ஷத்துக்குத் தடையாயிருப்பது இந்த பாப புண்யமே. தங்கச்சங்கிலியால் கட்டப்பட்ட காராக்ருஹமே இந்த நம் ஸம்ஸாரபந்தம்.
“காராக்ருஹே கனக ஶ்ருங்கலயாபி பந்த:” என்கிறார் ஸ்வாமி தேஶிகன் (வரதராஜ பஞ்சாஷத்).
2. ஶரீரத்திலிருந்து ஜீவன் எப்படி வெளியேறுகிறது?
ஹ்ருதயத்துள் ஒரு பொறியளவேயுள்ள ஜீவன் இந்த்ரியங்கள், பஞ்சபூதங்கள், மனஸ், பரமாத்மாவுடன் ஸுஷும்னா நாடி வழியே வெளியேறுகிறது.
3. அர்ச்சிராதி கதி என்பது என்ன?
இப்படி வெளியேறும் ஆத்மா அக்னி, வாயு, சூர்யன், மின்னல் என்ற லோகங்களைத்தாண்டி, ஆதிவாஹிகர்கள் அளிக்கும் விசேஷ உபசாரங்களை ஏற்று விரஜா நதியை அடைகிறது. விரஜையில் நீராடிய ஜீவன் ப்ராக்ருத ஶரீரம் விட்டு அப்ராக்ருத ஶரீரம் பெற்று அமானவன் என்ற வித்யுத் புருஷன் துணைகொண்டு ஸ்ரீவைகுண்டம் சேர்கிறான்.
4. ஸ்ரீவைகுண்டம்.
அப்ராக்ருத நதியாகிய விரஜையில் ஸ்நானம் செய்து ஸங்கல்பத்தால் அதைக் கடக்கிறான் ஜீவன். அங்கு சந்திரன் கேட்கும் கேள்வி “நீ யார்” என்பது. “தாயாரின் கர்ப வாசத்திலிருந்து பிறக்கச் செய்து, ஞானமளித்து, ஶரணாகதி செய்யவைத்து, என்னை இங்கே கொண்டு சேர்த்தவன், ஆத்மாவுக்குள் ஆத்மாவாயிருக்கும் எம்பெருமானே நான்” என்கிறது ஜீவன். இதனைக் கேட்டுச் சந்திரன் கைக்கூப்பி அனுப்ப ஸ்ரீவைகுண்ட வாயிலில் சேர்ப்பிக்கிறான் அமானவன். அப்ராக்ருத ஶரீரம் பெற்ற இந்த ஜீவனை அப்ஸரஸுக்கள் அலங்கரிக்கின்றனர். நுழைந்ததும் ஜீவன் ‘அரம்’ என்ற ‘குளம், ‘முஹுர்த்தர்’ என்ற காவல் தெய்வம் ‘தில்யம்’ என்ற மரம் ,’விரஜா’ என்ற நதி, ‘லாலஜ்யம்’ என்ற மாநிலம்  ‘அபராஜிதா’ என்ற நகர், த்வார பாலகர்கள் ஆகியவைகளைத் தாண்டி திருமாமணி மண்டபம் சேர்கிறான் . ஆங்கே ‘விஸக்ஷணம் ‘ என்ற பீடத்தில் ‘அமிதௌஜஸ்’ என்ற மெத்தையில் ஸ்ரீபூதேவி ஸஹிதமாய் வீற்றிருக்கும் பரமபத நாதனைக்கண்டு அவன் திருவடியைப் பற்றி ஏற, பெருமான் அவனைக் குழந்தையைத் தூக்கும் தாயாரின் வாத்ஸல்யத்துடன் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டு , ’நீயார்’ எனக் கேட்க “ஸ்வாமி !தேவரீர் தான் நான்” என்கிற ஜீவனை ப்ரீதியுடன் கொண்டாடுகிறார்.
“ஸத்யம், ஞானம், அனந்தம், ப்ரஹ்மம் தான் நீர்.
அந்த நீர்தான் நான்” என்று சொல்லிக் கொண்டு தன்னை வந்தடைந்த ஜீவனைக்கண்டு எம்பெருமான் ஸந்தோஷிக்க, ஜீவனும் இனி ஸம்சார பந்தமற்று எம்பெருமானின் பரிபூர்ண கல்யாணகுணங்கள், விபூதி, திருமேனிகளை அனுபவிக்கிறான். ‘இனி இவனைத் திரும்ப அனுப்ப மாட்டேன்’ என்கிறான் கண்ணன் கீதையில். “ஏற்றிவைத்து ஏணி வாங்கி” என்கிறார் பெரியாழ்வார்.
இத்தகைய மகத்வம் வாய்ந்த தத்வங்களடங்கிய ப்ரும்ஹ சூத்ரத்தை விவரித்து பாஷ்யம் அருளிய ஸ்ரீபாஷ்யகாரரின் திருவடிகளைச்
பற்றி உய்வோமாக.
————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்ய ஸாரம்!!–எளிய தமிழில் —

January 30, 2023

ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-

இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .

இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயர்வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

———-

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||

——–

'*வேத  சாஸ்த்ராத்‌ பரம்‌ நாஸ்தி''-வேதங்களிலும்‌ மேம்பட்ட  சாஸ்த்ரம்‌ ஒன்றுமில்லை, இவை பகவானாலேயே வெளி 
வந்தவை, மதி மயக்கம்‌, வஞ்சகம்‌, ஆய்வின்மை, ஆற்ற லின்மை ஆகிய இழிவுகள்‌ அற்றவை,
இந்த பாஷ்யத்தின்‌ கம்பீரமான உரை நடை, ஸூத்ரங்களை ஆராயும்‌ செம்மை, தேர்வை வெளி யிடும்‌ நுண்மை, தர்க்கமுறை போல்வன வற்றாத பேரின்‌ 
பலம்‌ நல்க வல்லன.
ப்‌ரஹ்ம ஸுத்ரம்‌; சேதன அசேதனங்களைத்‌ தனக்குச்‌ சரீரமாக  உடைய பகவானைப்‌ பற்றியது. இவன்‌ சரீரி. இவனைப்‌ 
பற்றிய சாஸ்த்ரம்‌, தர்க்க முறைப்படி அமைந்துள்ளது? 
ஆதலால்‌ -இது சாரீரக மீமாம்ஸை எனப்‌ பெபறும்‌,  (சாரீரகம்‌-:சரீரியான பகவானைப்‌ பற்றியது).
விசிஷ்டாத்வைத  மதத்திற்கு உயிர்‌ நாடியாக விளங்குவது ஸ்ரீ ராமாநுஜம்‌  அருளிய ஸ்ரீபாஷ்யம்‌) இந்த ஸ்ரீபாஷ்யம்‌ ஸரஸ்வதி 
தேவியால்‌ புகழப் பெற்றது. இவள்‌ ஸ்ரீ ராமாநுஜருக்கு  அளித்த விருது ஸ்ரீபாஷ்யகாரர்‌ என்பது
உலகம்‌ முழுதும்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌ என்று  ஸ்ரீ ராமாநுஜர்‌ வெளியிட்டிருக்கிறார்‌. 
“சேதன அசேதனங்கள்‌ யாவும்‌ இவனுக்கு உடைமைப்‌ பொருள்‌,  இவனுக்கு விசேஷணமாக (அடைமொழியாக) விளங்குகின்றன. 
இவன்‌ ப்ரகாரி; விசேஷ்யம்‌--விசேஷணத்‌தால்‌ அறியப்படுவோன்‌. இவன்‌ சேஷி, ஜீவர்கள்‌ இவனுக்கு சேஷ பூதர்‌; 
இவன்‌ நியந்தா, இவர்கள்‌  இவனால்‌ நியமிக்கப்‌ பெறுவோர்‌; இவன்‌ ஆதாரம்‌, 
இவர்கள்‌ இவனால்‌ தரிக்கப்‌ பெறுவோர்‌; இவன்‌  நம்மை உடையவன்‌ நாராயணன்‌. 
நமக்கும்‌ இவனுக்கும்‌ உள்ள தொடர்பு இயல்பானது; இத் தொடர்பு  எக் காரணத்தாலும்‌ குலையாது'” என்று இவர்‌ வெளியிட்டிருக்கிறார்‌. 

“இத்‌ தொடர்பாலே இவன்‌ நமக்கு எல்லா  உறவுமானவன்‌, நம்மிடம்‌ கருணை மிக்கவன்‌; 
நம்மைக்‌  காப்பதே தனது பேறாக நினைப்பவன்‌” என்பது  ஸ்ரீ ராமாநுஜரது மதத்தின்‌ சாரம்‌. 
இது “எம்பெருமானார்‌ தரிசனம்‌'” என்று பாராட்டப்‌ பெற்றுள்ளது.

--------------
இந்த நான்கு அத்யாயங்களின்‌ சுருக்கம்‌; 
(1) பகவாளைப்‌ பற்றி அறிந்துகொள்ள வேத வாக்கியங்களே ப்ரமாணம்‌--சான்றாவன; 
(2) பகவானே உலகுக்குக்‌  கரரணம்‌ என்பதற்கு மாறான கருத்துக்கள்‌ ஏற்பதற்கில 
(3) பசுவானை ஆராதிப்பவன்‌ பக்தியினாலே மோக்ஷம்‌  பெறக் கூடும்‌; 
(4) இந்த பக்தியின்‌ பலன்‌ மோக்ஷத்தின்‌  பேரானந்த அனுபவம்‌.
----------------
முதல்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1: சேதன ௮சேதனங்களைக்‌ காட்டிலும்‌  பகவான்‌ மாறுபட்டவன்‌. இவன்‌ உலகுக்குக்‌ காரணம்‌, -தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவன்‌. 
பாதம்‌ 2: இவன்‌ உலகைக்‌ காரியமாக உடையவன்‌. 
பாதம்‌ 3: இவனே யாவர்க்கும்‌ யாவற்றிற்கும்‌ ஆத்மா. 
பாதம்‌ 4: இவனால்‌ படைக்கப்படாதன, இவனுக்குச்‌  சரீரமல்லாதன இல. 
இரண்டாம்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1: கபில ஸ்ம்ருதி போன்றவை ஆதரிக்கத்‌. தக்கனவல்ல,. 
பாதம்‌ & : பிற மதங்களின்‌ குறைபாடுகள்‌. 
பாதம்‌ 3: சேதன அசேதனங்கள்‌ யாவும்‌ பகவானின்‌ காரியம்‌, பகவானால்‌ நியமிக்கப்படுவன. 
பாதம்‌ 4: இந்த்ரியங்கள்‌ முதலியவற்றின்‌ செயல்‌ பற்றியது. 
மூன்றாம்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1 : ஜீவர்களின்‌ தோஷங்கள்‌. 
பாதம்‌ 2: பகவானின்‌ குணங்கள்‌. 
பாதம்‌ 3: குணங்களை உபாஸநம்‌ செய்யும்‌ வகை: 
பாதம்‌ 4: உபாஸனத்திற்கான கார்மாவைப்‌ பற்‌றி. 
நான்காம்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1  உபாஸந அநுஷ்டானம்‌. 
பாதம்‌ 2: அர்ச்சிராதி மார்கம்‌--தொடக்கம்‌. 
பாதம்‌ 3: அர்ச்சிராதி மார்கம்‌. 
பாதம்‌ 4: மோக்ஷ பலம்‌.
----------------
முதல்‌ அத்யாயம்‌ . முதற்‌ பாதம்‌ 
வேதத்தின்‌ பூர்வ பாகம்‌, உத்தர பாகம்‌ இவற்றை நன்கு பயில்பவன்‌ கர்ம காண்டத்தில்‌ விவரிக்கப்படும்‌ தர்மங்கள்‌ அற்பம்‌, 
நிலையான பலனைத்‌ தரமாட்டா என்று தேறுகின்றான்‌. புண்ணிய கர்மாக்களால்‌ 
“பெறும்‌ பலன்களும்‌ அழியும்‌ இயல்புடையன, ஆதலால்‌ இவற்றால்‌ மோக்ஷம்‌ பெற இயலாது. 
பகவானை  நன்கு அறிபவன்‌ கார்மாக்களுக்கு வசமாகமாட்டான்‌? ஸம்ஸாரத்தில்‌ உழன்று துன்புறமாட்டான்‌. 
பகவானைப்‌ பற்றிய ஞானம்‌ நிலையான நற்பயனை அளிக்கும்‌ என்று ஒருவாறாக இவன்‌ அறித்து கொள்‌கிறான்‌. 
உறுதியான ஞானம்‌ பெறுவதற்கு வேதாந்த வாக்கியங்களை ஆராயக்‌ கருதுகிறான்‌. பகவானைப்‌ பற்றிச்‌ சரியான கருத்து எவர்க்கும்‌ 
ஏற்படாதென  'சிலர் கருத, இத்தகைய கருத்துடன்‌ பகவானைப்‌ பற்றிய  ஆய்வு தொடங்குகிறது. 
இது முதல்‌ அத்யாயம்‌; ஸமந்வயாத்யாயம்‌ எனப்படும்‌.
1. 1. பகவானைப்‌ பற்றி அறிய அவா 
எதிர்ப்பவர்களது கருத்து: பகவானைக்‌ கண்‌களால்‌ காண்பதற்கில்லை; இவனைப்‌ பற்றி அனுமானத்தைக்‌ கொண்டு அறியவும்‌ இயலாது. 
ஆதலால்‌ சொற்களின்‌ மூலம்‌ (வேதங்களைக்‌ கொண்டு) அறிய வேண்டும்‌. காரிய வாக்கியங்களாலேயே அறிவு நிகழ்கின்றது. 
ஒன்றும்‌ அறியாத குழந்தைக்கு முன்‌,“பசுவைக்‌ கொண்டு வா”, “பசுவைக்‌ கட்டு” என்றால்‌, அது பசு என்பதை அறிகின்றது. 
கொண்டு வருவது,  கட்டுவது என்ற செயல்களையும்‌ தெரிந்து கொள்கிறது. 
உலகிலுள்ள பொருள்களைப்‌ பற்றி அறிய இவ்வாறான  வாக்கியங்களே வேண்டுவன. 
பகவான்‌ ஸித்தமானவன்‌; காரிய வாக்கியத்தால்‌ அறிவதற்கில்லை. 
ஆதலால்‌ இவனைப்‌ பற்றி வேத வாக்கியங்களைக்‌ கொண்டு ஆய்வதற்கில்லை, 

விளக்கம்‌ : அறிவு பெறுவதற்குச்‌ செயல்கள்‌ பற்றிய வாக்கியங்கள்‌ அவசியமில்லை. குழந்தையிடம்‌, **இது மாமன்‌
*இது பாட்டி” என்றால்‌ மாமன்‌, பாட்டி யார்‌ யார்‌ என்று இது எளிதில்‌ புரிந்து கொள்கின்றது. 
ஆதலால்‌ ஸித்தமான பகவானைப்‌ பற்றி வேதாந்த வாக்கியங்களால்‌ தெரிந்து கொள்ளக்கூடும்‌.
முதல்‌ ஸூத்ரம்‌: அத அத: ப்ரஹ்ம-ஜிஜ்ஞாஸா- 
கர்மங்கள்‌ பற்றி ஆய்ந்தறிந்த பின்‌, இவற்றின்‌ பலன்‌  அற்பம்‌ என்று தேறுவதால்‌, 
பகவானை அறிய வேண்டமென்ற ஆவல்‌ ஏற்றதே என்பது இதன்‌ பொருள்‌, -ஆதலால்‌ பகவானைப்‌ பற்றிய ஆய்வு துவங்குகின்றது. 

(2) பகவானின்‌ லக்ஷணம்‌: ஓரு பொருளைப்‌ பற்றி அறிந்து கொள்ள விரும்பினால்‌, அதன்‌ லக்ஷணம்‌ முதலில்‌ 
தெரிந்து கொள்ள வேண்டும்‌. கண்ணால்‌ காணக் கூடாத பகவானைப்‌ பற்றி லகணம்‌ எங்ஙனம்‌ கூற முடியும்‌? 
இது எதிர்ப்போர்களது ஆஷேபம்‌. 

இந்த எதிர்ப்புக்கு விடை அளிக்கும்‌ ஸுித்ரம்‌, 
ஜந்மாதி அஸ்ய யத:--
கண்ணாற்‌ காணப்படும்‌ சேதன்‌  அசேதனங்களின்‌ சிருஷ்டி, ஸ்திதி, லயம்‌ இவை எவனிட  மிருந்து நிகழ்கின்றனவோ (அவனே பகவான்‌). 
௮ஸ்ய-  இந்த "உலகுக்கு. * 
தைத்திரீயத்தில்‌ ப்ருகுவல்லியில்‌ வந்துள்ள கருத்து: எதனிடமிருந்து இவ்வுலகங்கள்‌ உண்டாகின்றனவோ, 
பிறந்தவை எதனால்‌ வாழ்‌கின்றனவோ, வாழ்வன எதை ப்ரளயத்தில்‌ அடைகின்றனவோ அதை அறிவாயாக; அதுவே ப்ரஹ்மம்‌ என்பது. 
இதுதான்‌ மேலுள்ள ஸுூத்ரத்தின்‌, விளக்கம்‌.  இதனால்‌ பகவானின்‌ இலக்கணம்‌ கூறியாயிற்று. 

எதிர்ப்பு: இந்த வாக்கியத்தைக்‌ கொண்டு பகவானை அறிவதற்கில்லை. 

ஒரு பொருளின்‌ லக்ஷண்த்தை இரண்டு வகைகளில்‌ வெளியிடலாம்‌: ஒன்று அடைமொழியாக. *'தொங்கும்‌ கரமுடையது யானை”:, 
மற்றது உப லக்ஷணமாக: “*மரம்‌ வாசலில்‌ நிற்கும்‌ வீடு என்னுடையது.
'* தொங்கும்‌  கரத்தைக்‌ கொண்டு யானையை அறிகிறோம்‌; மரத்தைக்‌ கொண்டு வீட்டை அறிகிறோம்‌. 

ஜந்மாதி அஸ்ய யத: என்ற வாக்கியத்தில்‌ 
படைப்புக்குக்‌ காரணம்‌, ஸ்திதிக்குக்‌ காரணம்‌, லயத்‌திற்குச்‌ காரணம்‌ மூவகைக்‌ கருத்துக்கள்‌ உள்ளன. 
“முழுக்‌ கொம்பும்‌ அரைக்‌ கொம்பும்‌ கொம்பில்லாததும்‌”” என்று பசுவைச்‌ சொன்னால்‌ பசுக்கள்‌ மூன்று என்பதே தேறும்‌. 
இதே போல்‌ படைக்கும்‌ பகவான்‌, காக்கும்‌ பகவான்‌, அழிக்கும்‌ பகவான்‌ என்று பகவான்‌ மூவர்‌  என்றே கருதப்படுவர்‌. 
ஆதலால்‌ இங்குக்‌ கூறிய இலக்கணம்‌ சரியன்று. இது எதிர்ப்பவர்‌ வாதம்‌. 

மறுப்பு: கேசவன்‌ கறுத்த நிறமுடையவன்‌, இளைஞன்‌, சிவந்த கண்ணினன்‌ என்றால்‌ இவை யாவும்‌ ஒருவனையே குறிப்பன, 
இது போல்‌ படைக்கும்‌ பரம்‌ பொருளே காப்பவனும்‌ அழிப்பவனுமாவான்‌ என்பது தேறுமன்றோ? 
விசேஷண முறையில்‌ பகவானைப்‌ பற்றிய விவரணம்‌ இது. 

தேர்வு : புருஷ ஸுக்தத்தில்‌ “*ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்‌ ௪ த்ந்பெள””. பூதேவி, ஸ்ரீதேவி இவர்கள்‌ உன்‌ பத்நிகள்‌ 
என்பது காண்கிறோம்‌. இது உபலஷணமாக பகவானை அறிந்து கொள்ளலாம்‌. 
ஆக, படைப்பிற்குக்‌ காரணம்‌, ஸ்திதிக்குக்‌ காரணம்‌, லயத்திற்குக்‌ காரணம்‌ இவை மூன்றும்‌ தனித்தனி யாகவோ, 
சேர்ந்தோ பகவானுக்கு லஷணம்‌ என்றா யிற்று. படைப்பிற்குக்‌ காரணம்‌ நான்மூகன்‌ அல்லன்‌; 
அழிப்புக்குக்‌ காரணம்‌ பரம சிவன்‌ அல்லன்‌ என்பதும்‌ தேறுகின்றன. 

(3) சாஸ்த்ரம்‌ ஆதாரம்‌: ப்ரஹ்மத்தை அநுமானத்‌தாலேயே அறிந்து கொள்ளலாம்‌. 
குடத்திற்குக்‌ கர்த்தா  ஒருவன்‌ இருப்பது போல பூமிக்கும்‌ கர்த்தா ஒருவன்‌ இருக்க வேண்டும்‌ என்று அனுமானத்தால்‌ தேறலாகும்‌, 
ஆதலால்‌ முன்பு கூறிய வேத வாக்கியம்‌ அவசியமில்லை, சான்றாகாது--இது ஒரு கருத்து. 

மறுப்பு 2: ஆற்றல்‌ மிக்க பகவானே உலகைப்‌ படைக்‌கிறான்‌ என்பது ஏற்பதற்கன்று. 
விசுவாமித்ர முனிவன்‌  தனது தவத்தாலே ஓருலகைப்‌ படைத்தான்‌. 
ஆதலால்‌  பேராற்றல்‌ வாய்ந்த சிலர்‌ படைக்கக்கூடும்‌ என்பது ஊகிக்கலாம்‌. ஆதலால்‌ அனுமானத்தால்‌ இக் கருத்து நிறுவ இயலாது. 
வேறு எந்தச்‌ சான்றாலும்‌ அறிய  இயலாத போது சாஸ்த்ரமே ப்ரமாணம்‌ என்று அறக்‌ கற்றோர்‌ வெளியிட்டுள்ளனர்‌. 
இக் கருத்துடைய ஸூத்‌ரம்‌ சாஸ்த்ர யோநித்வாத்‌--
சாஸ்த்ரம்‌ ப்ரமாணமாகத் தேர்வதாலே பகவானைப்‌ பற்றிய ஆய்வு செய்யத் தகும்‌ என்பது. 

(4) பரம புருஷார்த்தம்‌ : புருஷார்த்தம்‌ என்பது நாம்‌ பெற விரும்புவது. 
ஒரு பொருளைப்‌ பற்றி அறியும்‌ போது அதைப்‌ பெறுவதற்கு விருப்பம்‌ வேண்டும்‌. 
இந்த விருப்பம்‌ எவ்வாறு பெறுகிறோம்‌ எனில்‌, அனு கூலமாக நினைப்பன கை கூடும்‌, ப்ரதிகூலங்கள்‌ அகலும்‌ 'என்ற கருத்தாலே. 
இதனாலேயே அப்பொருளைப்‌ பெற மூயற்சி செய்கிறோம்‌. 
பகவானைப்‌ பற்றி  அறியாததால்‌ முயற்சிக்கு வாய்ப்பில்லை என்பது எதிர்ப்பவர்களது கருத்து, 

மறுப்பு : வேதாந்தங்கள்‌ பரம் பொருளான பகவான்‌ எல்லை யற்ற ஆனந்த ஸ்வரூபன்‌ என்கின்றன. 
இத்தகைய பகவானைப்‌ பெறுவது தான்‌ பரம புருஷார்த்தமாகும்‌. 
தெடுங்‌ காலமாகசக் காணாமற்‌ போன தன்‌ மகனைது தகப்பன்‌ கண்டும்‌, அவன்‌ மிகச்‌ சிறந்தவனாக அறிந்தும்‌ பரமானந்தங்‌ கொள்கிறான்‌. 
இங்கு விருப்பம்‌ முயற்சி போல்வன இல; பெறுவது ஆனந்தம்‌. இது போன்றதே பகவானே புருஷார்த்தம்‌ என்று அறிவது. 

“தத்‌ து ஸமந்வயாத்‌' என்பது ஸுத்ரம்‌. 
இதன்‌ பொருள்‌ : பசுவான் சாஸ்த்ரத்தால்‌ புருஷார்த்தம்‌ என்று தெளிவாகச்‌ சொல்லப் படுவதால்‌, சாஸ்த்ரம்‌ ப்ரமாணமாகக்‌ கூடும்‌. 

இந்த நான்கு ஸுத்ரங்களும்‌ சேர்ந்து சதுஸ்‌ ஸுத்ரி என்ற பகுதி, பகவானைப்‌ பற்றி ஆராயக் கூடும்‌ என்ற கருத்துடையது,. 
ஆதலால்‌ ஆய்வு தொடங்குகின்றது. 

1. 2. ஸங்கல்பித்தது யார்‌? 

பகவானே உலகுக்குக்‌ காரணம்‌ என்ற பொருள்‌ முதலில்‌ விளக்கப் படுகின்றது: 
“*காரணந் து த்யேய?”  என்பதனால்‌ காரணம்‌ ஆராயப் படுகின்றது. 
மூல ப்ரக்‌ருதியே காரணம்‌, ஜீவர்கள்‌ காரணம்‌ என்ற வாதங்கள்‌  ஆராயப்பட்டு விலக்கப் பெறுகின்றன 
இந்த அத்யாயதின்‌ நான்கு பாதங்களிலும்‌. முன்பு விளக்கப்பெற்றது; 
ஜகத்‌ காரணமான ப்ரஹ்மமே புருஷார்த்தமென்று. சாந்தோக்யத்தில்‌ ஸத்வித்யையில்‌ அறிவற்ற மூலப்ரக்ருதியே உலகுக்குக்‌ காரணம்‌ என வந்துள்ளது. 
மூலப்ரக்ருதியோ அறிவில்‌லாதது, தோஷங்களுக்கு இருப்பிடம்‌. இது எவ்வாறு காரணமாகக்‌ கூடும்‌ என்பது ஸத்வித்யையிலுள்ள 
வாக்கியங்களைக்‌ கொண்டு ஆய்வு நிகழ்கின்றது. 

மூலப்ரக்ருதியே காரணம்‌ என்று வாதஞ்‌ செய்வோர்‌ கூறுவது : 
“தத்‌ தேஜ ஐக்ஷ்த''--அந்த அக்நி ஸங்கல்‌பித்தது என்று தொடங்கி, நெருப்பு, நீர்‌ போல்வன: ஸங்கல்பித்தன என்ற வாக்கியங்கள்‌ வருகின்றன. 
இவ்வாறு உயிரில்லாத தேஜஸ்‌ முதலாவன ஸங்கல்‌பித்தன என்பது முக்கியமான கருத்து கொள்வதன்று என்றே கருத வேண்டும்‌. 
இதே போல்‌ *'தத்‌ ஐக்ஷத”” என்ற வாக்கியத்திலும்‌. 
அன்றியும்‌ இவ் வுலகம்‌ ஸத்வம்‌, ரஜஸ்‌, தமஸ்‌ என்ற குண மயமானது; இம் மூன்றும்‌. கொண்டது மூல ப்ரக்ருதியே. 

மேலும்‌ இந்த ஸத் வித்யையில்‌ முதலில்‌ கூறியுள்ளது: 
ஐகத்‌ காரணமான ஸத்தை அறிந்தால்‌ யாவும்‌ அறிந்தன வாகும்‌ என்பது, உதாரணமாக: 
மண்ணிலிருந்து குடமும்‌, பொன்னிலிருந்து கிரீடமும்‌ உண்டாகின்றன. 
இந்த அனுமானத்தால்‌ ப்ரஹ்மம்‌ அறியப்படாதது?: 
சாஸ்த்ரம்‌ ஒன்றாலேயே ப்ரஹ்மம்‌ அறியப்படும்‌ என்பதால்‌ அனுமானத்தால்‌ அறிய இயலாது என்று தேறுகின்றது. 
ஆதலால்‌ அனுமானத்தால்‌ அறியப்படும்‌ மூல ப்ரக்ருதியே உலகுக்குக்‌ காரணமாகும்‌. 

மறுப்பு: ஜகத்‌ காரணப்‌ பொருளுக்கு ஸங்கல்பம்‌. கூறுவதால்‌ அது அறிவில்லாத மூல ப்ரக்ருதி யாகாது. 
சாஸ்த்ரங்கள்‌ வெளியிட்டுள்ளது: நுண்ணிய நிலையிலுள்ள சேதன அசேதனங்களைத்‌ தனக்குச்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ பகவானே காரணம்‌; 
ஸ்தூல நிலையில்‌  இவற்றைச்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ இவனே காரியம்‌. 
இவ்வாறு ஆய்ந்தால்‌ காரண காரிய ஓற்றுமை வெளிப்‌ படுகின்றது. ஆதலால்‌ ஜகத் காரணம்‌ பரம புருஷனே.. 

நெருப்பு ஸங்கல்பித்தது என்பது போன்ற வாக்கியங்களில்‌ பகவானே அந்தர்யாமியாக ஸங்கல்பித்தான்‌ என்று தேறலாம்‌. 
'*ஐதத்‌ ஆத்ம்யகம்‌ இதம்‌ ஸர்வம்‌'”-- 
இவை ஸத்தை ஆத்மாவாகக்‌ கொள்வன என்பது இங்குச்‌ சான்று. 
ஆதலால்‌ பகவானே ஸத்வித்யையில்‌ போற்றப்‌ படும்‌ ஜகத்‌ காரணப்‌ பொருளாவான்‌. 

தேர்வு 1. முமுக்ஷாவான ச்வேதகேது பெற்ற உபதேசம்‌ : ஐகத்‌ காரணமான ஸத்தை உபாஸித்தால்‌ 
சரீர முடிவில்‌ அதனைப்‌ பெறுவதே மோக்ஷம்‌ என்று. மூல ப்ரக்ருதியை உபாஸித்து இதையே மோக்ஷமாகமப்‌ பெறுவது எவ்வாறு? 
அன்றியும்‌ ஒருவன்‌ எதை உபாஸிக்‌கின்றானோ, அப்படியே இறந்த பின்‌ ஆகிறான்‌ என்பதும்‌ கூறப்படுகிறது. 
ஆதலால்‌ ஸத்‌ என்பது மூல ப்ரக்ருதி எனில்‌ அறிவற்ற இதை உபாஸித்து அறிவற்றவனே ஆக வேண்டும்‌. 
இதனாலும்‌ விளங்குவது பகவானே உபாதாந காரணம்‌ என்பது. 

தேர்வு 2: மூல ப்ரக்ருதியோ மோக்ஷ விரோதி; இதனால்‌ இதன்‌ இழிவு வெளிப்படை. மோக்ஷ காரணம்‌ 
என்பது ஏற்றமேயாகும்‌; இழிவாகாது, ஆதலால்‌ ஸத் என்பது மூலப்ரகிருதி யாகாது.  

தேர்வு 3: ஜகத்‌ காரணம்‌ அறிந்தால்‌ யாவும்‌ அறியலாம்‌ என்பது முக்கியமான கருத்தாகும்‌. 
அறிவற்ற  மூல ப்ரகிருதியை அறிந்தால்‌, இது காரணம்‌ என்றால்‌, காரியப்‌ பொருளான ஜீவனும்‌ அறிவற்றவன்‌ என்பதே தேறும்‌. 

தேர்வு 4: ஒருவன்‌ தூங்கும்போது ஜீவன்‌ தனக்குக்‌ காரணமான ஸத்தில்‌ ஓடுங்குகிறான்‌ என்பது ஒரு வேத. வாக்கியம்‌, 
ப்ரதானமே ஸத்‌ எனில்‌ இந்தக்‌ கருத்து ஏற்றதாகாது. _ 

தேர்வு 5: பல உபதிஷத்துக்களின்‌ கருத்து : எவன்‌: எல்லாப்‌ பொருள்களின்‌ ஸ்வ -ஸ்வரூப ஸ்வபாவங்களை 
அறிகிறானோ, அவனிடமிருந்தே இந்த மூல ப்ரக்ருதி  ஜீவர்கள் உண்டாகின்றது; 
இவை யாவும்‌ பரம புருஷனே; அப்பரம புருஷ னிடமிருந்தேதே அண்டம்‌ உண்டாயிற்று. நாராயணன்‌ ஒருவனே மூதவில்‌ இருந்தான்‌. 
இவ்வாறான வாக்கியங்‌கள்‌ ஒரூமூகமாக பகவானே உலகுக்குக்‌ காரணம்‌ என்று முழங்குகின்றன  

தேர்வு 6: இதே உபதிஷத்தில்‌ ஓரிடத்தில்‌ வந்துள்ளது; ஆத்மாவிடமிகுத்து ப்ராணன்‌, ஆகாசம்‌ உண்டாகின்றன; 
உலகம்‌ யாவும்‌ பரமாத்மாவிடமிருந்தே உண்டாகின்றது என்பது. 

இவ்வகைகளில்‌ ஆராய்ந்தால்‌ யாவும்‌ அறிந்த பரம்‌ பொருளே உலகுக்கு உபாதான காரணம்‌ என்பது தேறுகின்‌றது. 

1. 3. ஆனந்த மயன்‌ - யார்‌? 

மூலப்ரக்ருதிக்கு ஸங்கல்பம்‌ நேராது, ஆதலால்‌ அது உலகுக்குக்‌ காரணமாகாது என்று விளக்கப்பட்டது. 
ஜீவனுக்கு முக்ய ஸங்கல்பம்‌ கூடும்‌, ஆதலால்‌ இவன்‌  காரணமாகலாம்‌ என்பது ஆராயப்படுகின்றது. 

ஜீவன்‌ காரணமாகலாம்‌ என்பதற்கு விளக்கம்‌: 

தைத்திரீயத்தில்‌ ஜகத்‌ ஸ்ருஷ்டியைப்‌ பற்றி விளக்கத்‌ தொடங்கிப்‌ பின்வரும்‌ விவரங்கள்‌ உள்ளன ; 

அன்னத்தால்‌ வளர்வது சரீரம்‌; சரீரத்தை தரிப்பது ஐம்பால்‌ ப்ராணன்‌; ப்ராணனில்‌ நுண்ணியது புத்தி, 
இவ்வாறு படிப்படியாகக்‌ கூறி இவற்றைத்‌ தரிப்பது ஜீவன்‌ ஆனந்த மயன்‌ என்பது. 
விஜ்ஞான மயன்‌ என்ற புத்தியைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டது நுண்ணியதான ஆனந்தமயன்‌ ஆத்மா என்றும்‌ வந்துள்ளது. 
இந்த  விஜ்ஞான மயமான புத்திக்‌குச்‌ சரீரத்‌ தொடர்புள்ளது 
ஆத்மா என்பதால்‌ இது ஜீவாத்மாக வேண்டும்‌. ஆதலால்‌ ஜீவன்‌ ஆனந்த மயன்‌ என்பது தேறுகின்றது. 

மறுப்பு: இதே பகுதியில்‌ விஜ்ஞானம்‌ என்ற சொல்‌  பல இடங்களில்‌ ஜீவனைப்‌ பற்றியே வருகிறது. 
அறிவே இயல்பாகவும்‌ குணமாகவும்‌ உள்ள ஜீவன்‌ ஜ்ஞானமாகவும்‌ ஜ்ஞான மயமாகவும்‌ சொல்லக்கூடும்‌. 
இவனினும்‌: நுண்ணியதாய்‌, இவனை தரிப்பவன்‌ பரமாத்மாவான: ஆனந்த மயன்‌. 
அன்றியும்‌ ஆனந்தத்தை அளவிடும்போது மனுஷ்ய ஆனந்தத்தை அளவுகோலாக்‌ கொண்டு, இதைப்‌ போல்‌ 
நூறுநூறு மடங்காக அடுக்கிக்கொண்டு அளவு காணாத தால்‌ சொற்கள்‌ மீண்டன.
'*யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ”. இவ்வாறான பேரானந்தம்‌ உலக வாழ்க்கையில்‌ உழலும்‌ ஜீவனுக்கு இல்லை? 
பகவானுக்கே உண்டு. **சாரீர ஆத்மா” என்று சரீர ஸம்‌ பந்தம்‌ கூறும்‌ பகவானுக்கே இத்தகைய ஆனந்தம்‌ பொருந்தும்‌. 
பூமி, ஆத்மாக்கள்‌ யாவும்‌ பகவானுக்குச்‌ சரீரமாகக்‌ கூறப்படுகின்றன. 

தேர்வு 1: '*ஸத்யம்‌ ஜ்ஞாநம்‌ அதந்தம்‌ ப்ரஹ்ம”  என்ற விவரத்தால்‌ ப்ரஹ்மம்‌ ஆனந்தமயம்‌ என்று சொல்லப்படுகிறது. 
இந்த ப்ரஹ்மத்தை அறிபவன்‌ மேம்பட்ட பலமான பரப்ரஹ்மத்தை அடைகிறான்‌ என்பதும்‌ அறிவோம்‌. 
ஜீவன்‌ அடைவது இந்த ப்ரஹ்மம்‌. ஆதலால்‌ இவனைக்‌ காட்டிலும்‌ சிறப்புடைய பகவானே ஆனந்த மயனாக வேண்டும்‌. 

தேர்வு 2: படைக்கும்போது பகவான்‌, :நான்‌ பலவாறாகக்‌ கடவேன்‌” என்று ஸங்கல்பிக்கிறான்‌. 
சரீரமில்லாமல்‌ ஜீவன்‌ ஒன்றையும்‌ படைக்க இயலாது, ஆதலால்‌ உலகைப்‌ படைக்கும்‌ ஆனத்தமயன்‌ ஜீவனாக முடியாது. 

தேர்வு 3: தைத்திரீயத்தில்‌ ஜீவன்‌ ரஸஸ்வரூபியை அடைந்து ஆனந்த மூடையவனாகிறான்‌ என்று வந்துள்ளது. 
ஆதலால்‌ ஆநந்தமயன்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌. ஆனந்தமயன்‌ என்பதன்‌ கருத்து; 
வேறு எதுவும்‌ கலவாது முற்றிலும்‌ ஆனந்தமாகவே இருத்தல்‌. இது: ஸர்வேச்வரனுக்கே உரியது, 

1. 4. ஆதித்ய புருஷன்‌ யார்‌? 

சாதாரணமான ஜீவர்களுக்கு ஐகக்‌ காரணமாயிருப்பது கூடாதெனில்‌, விசேஷ சக்தி வாய்ந்தவர்‌களுக்கு இது கூடும்‌ 
என்ற சங்கையினால்‌ ஆதித்ய புருஷன்‌, அக்ஷிபுருஷன்‌ இவர்களைப்‌ பற்றி இங்கு ஆராய்வு நிகழ்கின்றது. 

ஆதித்யனுக்குள்‌ பொன்‌ மயமான புருஷன்‌ இருக்‌கிறான்‌; இவனுக்கு மீசை பொன்‌ மயம்‌, கேசம்‌, நகம்‌ பொன்‌ மயம்‌; 
கண்கள்‌ தாமரை போல்வன என்று சாந்‌தோக்யத்தில்‌ வந்துள்ளது. மீசை, சேசம்‌, நகம்‌ போல்வன சரீரம்‌ உள்ள ஜீவார்களுக்கே உள்ளன. 
ஆதலால்‌ இங்கு விவரிக்கப்‌ பெறுவது சக்தி மிகுந்த ஒரு ஜீவன்‌; இவனே உலகப்‌ படைப்பு செய்ய வல்லவன்‌, இது ஒரு கருத்து. 

மறுப்பு: உபநிஷத்துக்கள்‌ விளக்கியுள்ளது; ஆதித்ய புருஷன்‌ பாவங்களுக்‌ கப்பாற்பட்டவன்‌? 
இவனுக்குப்‌ பாடகர்கள்‌ ரிக்வேதம்‌, ஸாம வேதம்‌. கண்ணிலிருப்பவன்‌ ரிக்‌ வேத மாவான்‌. ஸாம வேத மாவான்‌, 
ஆதலால்‌ இப்புருஷன்‌ ஜீவனாக முடியாது. அன்றியும்‌ வேத வாக்‌ யங்கள்‌ மூலமாகவும்‌ &தை மூலமாகவும்‌ அறிவது: 
திவ்ய மங்கள விக்ரஹம்‌ பரமாத்மாவுக்கே உண்டு. ஆதலால்‌ ஆதித்யனிலும்‌ அக்ஷிகளிலும்‌ உள்ளே இருப்பவன்‌ பரமாத்மாவே. 

அன்றியும்‌ ஆதித்யன்‌ முதலான தேவர்கள்‌ யாவரும்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌, பகவான்‌ இவர்களுக்கு ஆத்மா என்று வேதங்கள்‌ ஓலிக்கன்றன, 
ஆதலால்‌ ஆதித்யனிலுள்ள புருஷன்‌ இவர்களைக்‌ காட்டிலும்‌ வேறுபட்ட பகவானே. 

1. 5. ஆகாசம்‌ ஜகத்‌ காரணமா? 

சாந்தோக்யத்தில்‌ (1-9-1) பூதங்கள்‌ யாவும்‌ ஆகாசத்திலிருந்து உண்டாகின்றன, 

விளக்கம்‌  பின்வரும்‌ உபநிஷத்‌ வாக்கியங்களை ஆராய்வோம்‌. இவ்வுலகம்‌ ஆத்மாவாகவே இருந்தது? 
ஆத்மாவிலிருந்து ஆகாசம்‌ உண்டாயிற்று; நாராயணன்‌ ஒருவனே இருந்தான்‌; பிரமனும்‌ இல்லை, 
சிவனும்‌ இவ்லை. நாராயணனிடமிருந்து பிரமன்‌ உண்டானான்‌. 
இவை யாவும்‌ நாராயணனே ஐகத்‌ காரணம்‌ என்று காட்டுகின்றன. 
அசேதனமான ஆகாசம்‌ காரணமாக முடியாது. ஆகாசம்‌ என்பதன்‌ பொருள்‌; *ஆ ஸமந்தாத்‌ீ காசதேத'”- எங்கும்‌ ப்ராசிக்கிறது, 
ஆதலால்‌ ஆகாசம்‌ என்பது. இதனால்‌ ஆகாசம்‌ என்ற சொல்‌ எங்கும்‌ விளங்கும்‌ நாராயணனைக்‌ குறிக்கும்‌. 
ஆதலால்‌ பகவானான நாராயணனே ஜகத்‌ காரணம்‌. 

1. 6. வாயு ஜகத்‌ காரணமா? 

சாந்தோக்யத்தில்‌ ஒரு வாக்கியம்‌: பூதங்கள்‌" யாவும்‌ ப்ராணனில்‌ லயிக்கின்றன, ப்ராணனிடமிருத்து வெளிக்‌ கிளம்புகின்றன. 
ப்ராணன்‌ என்பது ஜீவராசிகள்‌ வாழ்‌வதற்குக்‌ காரணமான வாயுவே ஆகும்‌. 
ஆதலால்‌  ஆகாசத்தைக்‌ காட்டிலும்‌ ஐகத்‌ காரணமாகத்‌ தகுதி பெறுவது இந்த வாயுவே. இது சிலர்‌ கருத்து, 

தேர்வு : ப்ராணனால்‌ வாழ்வு பெறுவது சரீரமே? ப்ராணனாலே தான்‌ இது செயல்படுகின்றது. ஆனால்‌ 
நாராயணனே யாவற்றிற்கும்‌ காரணம்‌ என்கின்றன வேத வாக்கியங்கள்‌. 
ஆதலால்‌ இவனே ப்ராணன்‌ என்‌பதுவே தேறும்‌. 

1. 7. அக்நி ஜகத்‌ காரணமாகுமா? 

“*வாயோரக்நி.'”' *வாயுவிலிருந்து தோன்றியது ௮க்னி- மூன்றாவது பூதம்‌. இதுதான்‌ ஜகத்‌ காரணம்‌ என்பது ஓரு கருத்து. 
இதன்‌ விளக்கம்‌: வியஷ்டி பதார்த்தங்கள்‌ (பகுத்துப்‌ படைக்கப்பட்டவை), ஸமஷ்டி. பதார்தங்கள்‌ (ஒட்டு மொத்தமாகப்‌ படைக்கப்பட்டவை) 
இவற்றுக்கும்‌ அப்பால்‌ மேலே பரமபதம்‌. இதற்கும்‌ மேலே மிகச்‌ சிறந்த உலோகங்களிலே ஒளி பரப்பும்‌ சோதி இலங்குகின்றது. 
அதுவே இம்மனிதனுள்‌ விளங்‌குஞ்‌ சோதி - ஜாடராக்தியோடு ஒன்றாகும்‌. இது சாந்‌தோக்ய வாக்கியம்‌. 
ஜாடராக்நியோடு ஒன்றெனக்‌ கூறுவதால்‌ இது பஞ்ச பூதங்களுள்‌ ஒன்றான அக்நி, 
சூரியன்‌ போன்ற அசேதனங்களான சோதிகளுள்‌ ஓன்று  என்பதே தெளிவு. 

மறுப்பு: இதே பகுதியிலே காணும்‌ வாக்கியம்‌: இப்‌ பரம் பொருளுக்கு பூதங்கள்‌ யாவும்‌ ஒரு பாதம்‌? 
மற்றைய மூன்றும்‌ பரமபதத்தில்‌ உள்ளன என்பது. இங்குக் கூறும்‌ சோதி, இவ்வுலகில்‌ காணும்‌ பூதங்கள்‌ 
யாவற்றையும்‌ ஒரு பாதமாகக்‌ கொண்டுள்ளது என்பதால்‌ இது நாராயணனைப்‌ பற்றியேயாகும்‌. 
மேலும்‌ பகவானது திருமேனி சூரியனைப்‌ போலே ஒளியுடையது மின்னற்கொடி போன்றது; 
ஆயிரம்‌ ஆதித்யர்களது ஓளி ஒரே காலத்தில்‌ நேரும்‌ எனில்‌, அது அம் மஹா புருஷனின்‌ திருமேனி ஒளிக்கு ஒப்பாகும்‌ என்ற வாக்‌யங்கள்‌ உள்ளன. 
திருமேனி சோதி மயமானதாலே சோதிகளுக்கெல்லாம்‌ ஒளியை அளிக்கும்‌ பரஞ்சோதி என்பது பொருந்தும்‌. இப்பரஞ்சோதி ஸர்வேச்வரனே. 

பகவான்‌ ஜாடராக்நி ஸ்வரூபன்‌ என்பதன்‌ கருத்து: இவன்‌ இதற்கு அந்தர்யாமி என்பதே. 
கீதையில்‌ பகவான்‌, **நானே ஜாடராக்நியாகி ப்ராணிகளின்‌ உடலிலே இருக்கிறேன்‌” என்றது ஒப்பு நோக்கு. 
ஆதலால்‌ சோதி என்பது பரஞ்சோதியான நாராயணனே. 

1. 8. இந்திரன்‌ ஜகத்‌ காரணமா? 

சூர்யன்‌, அக்நி போல்வாருக்குத்‌ தலைவனான. இந்திரன்‌ ஜகத்‌ காரணமா என்ற விஷயம்‌ இப்போது. 
ஆராயப்படுகின்றது. 

தனக்கு. உபதேசிக்க வேண்டும்‌ என்று கேட்ட ஒருவனுக்கு. இத்திரன்‌ கூறியது: 
என்னையே உபாஸிப்பாய்‌; அறிவு  ரூபமான ஆத்மாவாக இருக்கும்‌ நானே ப்ராணன்‌? 
ப்ராணனான என்னை ஆயுளாகவும்‌ அம்ருதமாகவும்‌ உபாஸிக்கக் கடவாய்‌ என்று. 
ஆதலால்‌ மோக்ஷ ஸாதனதிற்கு உபாயமாகச்‌ சொல்லும்‌ இந்திரனே ஜகதி, காரணம்‌. இது ஒரு கருத்து. 

விளக்கம்‌  இப்பகுதியில்‌ முதலிலும்‌ நடுவிலும்‌ முடிவிலும்‌ பரமாத்மாவின்‌ பெருமையே அதிகமாக விளக்கப்‌ படுகின்றது. 
ரத சக்கரத்தின்‌ ஆரங்கள்‌ போல சேதன. அசேதனங்கள்‌ ப்ராணன்‌ எனப்பெறும்‌ பரமாத்மாவிடம்‌ கோர்க்கப்‌ பட்டுள்ளன. 
ப்ராணனுக்கு ஆதாரம்‌ பரமாத்மா. இப்பரமாத்மா நம்மை மேலுலகங்களுக்குக் கொண்டு செல்ல விரும்புகிறான்‌; 
நற்செயல்கள்‌ செய்விக்‌கிறான்‌ என்றும்‌ வந்துள்ளது. 
இவ் விவரங்கள்‌ பிறப்பு, இறப்பு இவையுடைய இந்திரனைப்‌ பற்றி அல்ல. 
**ஸேந்த்ர:'' என்று பகவான்‌ இந்திரனுக்கு அந்தர்யாமி யாகப்‌ புருஷ ஸூக்தத்தில்‌ காண்கிறோம்‌. 
ஆகையால்‌ இங்கு இந்திரன்‌ எனப்‌ பெறுவோன்‌ ஸ்ரீமந்‌ நாரயணனே ஆவான்‌. 
“மாம்‌ உபாஸ்வ'” என்று இந்திரன்‌ கூறியதன்‌ கருத்து: எனக்கு அந்தர்யாமியான பரமாத்மாவை உபாஸிப்பாய்‌ என்பது. 
ப்ரஹ்மத்தை உபாஸித்த வாமதேவர்‌, “நானே மனு, நானே ஸர்யன்‌”” என்றறிந்தார்‌. எவ்வாறெனில்‌, 
இதன்‌ பொருள்‌: தமக்கு அந்தர்யாமி யான பகவானே மனுவுக்கும்‌ ஸுர்யனுக்கும்‌ அத்தர்‌யாமி என்பது. 
ஈச்வரன்‌ யாவர்க்கும்‌ அந்தர்யாமி ஆதலால்‌ இந்திரன்‌ கூறியது: எனக்கு அந்தர்யாமியான 
பரமாத்மாவைக்‌ கருதி என்னையே உபாஸிப்பாய்‌ என்பது. 

பகவானை உபாஸிப்பது மூன்று வகை: அவனது ஸ்வரூபத்தை நேரே அனுஸந்திப்பது, 
ஜீவ ஸ்வரூபத்‌திற்கு அந்தர்யாமியாக உபாஸிப்பது,அசேதன ஸ்வரூபத்‌திற்கு அந்தர்யாமியாக உபாஸிப்பது, 
இந்திரன்‌ வெளி யிட்டது: இந்திரனுக்கு அந்தர்யாமி நிலையையும்‌ ப்ராணனுக்கு அந்தர்யாமி நிலையையும்‌ பற்றி, 
ஆதலால்‌ ப்ரஹ்ம உபாஸனையே கூறப்படுகிறது. இந்திர ப்ராண சப்தத்தால்‌ தெரிவிப்பது பரமாத்மாவே என்பது. 
ஸித்தமான பகவான்ப்‌ பற்றி வேத வாக்கியங்களால்‌ அறிந்து கொள்ள இயலும்‌. 
வேத வாக்கியங்கள்‌ இவனது லஷணங்களை உரைப்பன. இவ்விஷயத்தில்‌ சாஸ்த்ரம்‌ தக்க சான்றாகும்‌. 
பரம புருஷார்த்தமாகிய பகவானைப்‌ பற்றி சாஸ்த்ரங்கள்‌ அறிவிக்கக்கூடும்‌. 

ஸத்வித்யையில்‌ சொல்லப்படும்‌ பகவான்‌ உலகுக்குக்‌ காரணமாவான்‌, மூலப்ரக்ருதி யன்று. 
இவனே ஆனந்த மயன்‌, ஜீவன்‌ அல்லன்‌. ஸுர்யனிலும்‌ கண்ணிலும்‌ இருப்பதாகக்‌ கூறப்படுபவன்‌ இந்த பகவானே. 
ஆகாசம்‌, ப்ராணன்‌, சோதி இவை ஐகத்‌ காரணமல்ல; பகவானே காரணம்‌. 

இந்திரனென்றும்‌ ப்ராணனென்றும்‌ பெருமையுடன்‌ கூறப்படுவது பகவானே, இந்திரனு மல்லன்‌, ப்ராணனு மன்று, 
---------
2... இரண்டாவது பாதம்‌ 

முதற்‌, பாதத்தின்‌ பொருள்‌ : ப்ரஹ்மம்‌ சேதன அசேதனங்களைக்‌ காட்டிலும்‌ விலஷணமானது; 
உலகுக்குத்‌ தனிக்‌ காரணம்‌ விலக்ஷண புருஷன்‌. ஐக்ஷ்த என்ற ஸுத்ரத்தால்‌ இவன்‌ 
அசேதனங்களைக்‌ காட்டிலும்‌ விலக்ஷணன்‌ என்பதும்‌, ஆனந்தமயன்‌ என்ற ஸுத்ரத்தால்‌ 
சேதனங்களைக்‌ காட்டிலும்‌ விலக்ஷணன்‌ என்பதும்‌ வெளியிடப்பட்டது. 
இப்பாதத்தில்‌ இவன்‌ ஐகச் சரீரன்‌ என்பது அறுதியிடப்படுகிறது. 

2-1. அனைத்தும்‌ ப்ரஹ்மமே 

சாந்தோக்யத்தில்‌ ஒரு வாக்கியம்‌ சாண்டில்ய வித்யையைப்‌ பற்றியது: 
*“ஸர்வம்‌ கல்விதம்‌ ப்ரஹ்ம -தஜ்ஜலாநிதி சாந்த உபாஸஹீத”” இது எல்லாம்‌. ப்ரஹ்மமே. 
அதனால்‌ (இவை) தோன்றி, வாழ்ந்து, அதில்‌ மறைவதால்‌. இவ்வாறு சாந்தி யுடையவளாக 
உபாஸிக்க வேண்டும்‌ என்கிறது இந்த வாக்கியம்‌.” 
தன்னுடைய கர்மத்தின்‌ பலனாலே ஜீவனே ப்ரஹ்மா முதல்‌ புல்‌ வரையில்‌ எல்லாப்‌ பொருள்களும்‌ ஆக முடியும்‌. 
பகவான்‌ தோஷங்களுக்கு எதிர்நிலை: தோஷங்‌களுக்குக்‌ கொள்கலமான எல்லாப்‌ பொருள்களுமாக, பகவான்‌ ஆகமுடியாது. 
ஜீவர்களின்‌ கர்ம மடியாகவே, உலகம்‌ தோன்றி, வாழ்ந்து, மறைகின்றது. 
**தஜ்ஜலாந்‌:' (தோன்றி வாழ்ந்து மறைவது) என்று சொல்‌ ஜீவனிடம்‌ பொருந்தும்‌. 
ஆதலால்‌ இந்த வாக்‌யத்தில்‌ சொல்லப்படுபவன்‌ ஜீவனே... 

மறுப்பு : தைத்திரீயத்தில்‌ ஒரு வாக்கியம்‌:**யதோவா இமாநி பூதாறி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி, 
ய்த் ப்ரயந்தயபிணம்விசந்தி, தத்‌ விஜிஜ்ஞாஸ்ஸ்‌வ கத்ப்ரஹ்மேதி'”--எவனிடமிகுந்து பொருள்கள்‌ யாவும்‌ 
தோன்றுகின்றனவோ. தோன்றியவை எதனால்‌ வாழ்‌கின்றனவோ, ப்ரளய காலத்தில்‌ எதனுள்‌ ஒடுங்குகின்றனவோ, 
அதை நீ அறிவாபய் என்பது படைத்துக்‌ காத்து அழிப்பது மூன்றும்‌ பரம்‌ பொருளுக்கே உரியன, ஜீவனுக்கு அல்ல. 

சங்கை : தோஷமே இல்லாத பரமாத்மா, தோஷங்‌ களுக்கு இருப்பிடமான பொருள்கள்‌ யாவுமாவது: எவ்வாறு ஒட்டும்‌? 

விளக்கம்‌ : ப்ரளய காலத்தில்‌ நுண்ணிய நிலையிலும்‌, ஸ்ருஷ்டியில்‌ ஸ்தூலமாகவும்‌ சேதன அசேதனங்‌கள்‌ உள்ளன. 
இவற்றை பகவான்‌ சரீரமாகக்‌ கொள்‌கிறான்‌. தோஷங்கள்‌ சரீரமான சேதனர்களிடமே உள்ளன, 
சரீரியான பகவானிடம்‌ இவை அணுகவும்‌ மாட்டா. ஆதலால்‌ இவனை எல்லாப்‌ பொருள்களுமாகக்‌ கூறலாம்‌. 
அன்றியும்‌ ஒரு சரீரத்திலுள்ள ஜீவன்‌ வேறொரு ஜீவனாக ஆகமுடியாது; ஜீவனை யாவுமாகச்‌ சொல்லுவது சரியன்று. 
ஆதலால்‌ ஐகத்‌ காரணமாகவும்‌ ஸர்வாத்மாவாகவும்‌ சொல்லப்படுவது பகவானே. 

அன்றியும்‌ பகவானைப்‌ பற்றி ஒரு வாக்கியம்‌: தூய மனத்தாலேயே அறியத்‌ தக்கவன்‌, ஒளி மயமானவன்‌, 
எல்லாச்‌ செயல்களையும்‌ ஆற்ற வல்லவன்‌; இவன்‌ எவனையும்‌ ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை; 
ஆதலால்‌ எவனிடமும்‌ வாய்‌ பேசாதவன்‌. இவை யாவும்‌ பரமாத்‌மாவுக்கே பொருந்துவன. 

மேலும்‌ பகவான்‌ ஜீவனால்‌ அடையப்‌ பெறுபவன்‌ என்றும்‌, ஜீவன்‌ இதற்குக்‌ கர்த்தா என்றும்‌ வேதவாக்யங்கள்‌ உள்ளன, 
ஆதலால்‌ உபாஸிக்கப்படும்‌  பகவான்‌ உபாஸனம்‌ செய்யும்‌ ஜீவனினும்‌ மாறுபட்ட.  பரம்பொருளே.

கீதையில்‌ வருவது (15-75) : பரம்‌ பொருளை உபாஸிப்பவன்‌ ஜீவன்‌, 
பரம புருஷன்‌ ஜீவனின்‌ இதயத்தில்‌  உறைபவன்‌ என்று. உபாஸநம்‌ செய்யப்படுவோன்‌ பகவானே. 

மறுப்பு : கட்டை விரல்‌ பருமனுள்ள இதயத்தில்‌ இருக்கும்‌ ஆத்மா நெல்லை விடக்‌ கோதுமையை விடக்‌ 
கடுகை விடச்‌ சிறியது என்கிறது உபநிஷத்‌. இதயத்தில்‌ இருக்கும்‌ என்னுடைய ஆத்மா என்று சொல்லுவதால்‌ 
இது ஜீவனைப்‌ பற்றியதே. பகவானைப்‌ பற்றியது எனில்‌ மிகச்‌ சிறிய இவன்‌ எவ்வாறு எங்கும்‌ வியாபிக்க இயலும்‌? 

விளக்கம்‌ : பரமாத்மாவை உபாஸிப்பதற்காகவே இதயத்தில்‌ ஏறிய நிலையை வெளியிட்டது. 
இவன்‌ பூமியை விடப்‌ பெரியவன்‌, அந்தரிக்ஷ்த்தை விடப்‌ பெரியவன்‌, தேவலோகத்தை விடப்‌ பெரியவன்‌ என்று இவ்‌வாறு 
வாக்‌யங்கள்‌ கூறுகின்றன. இந்தக்‌ காரணத்தாலும்‌ இந்த வித்யையில்‌ சொல்லப்படுபவன்‌ ஜீவனாக முடியாது; 
பரமபுருஷனே என்பது திண்ணம்‌. 

மறுப்பு : பகவான்‌ இதயத்தில்‌ உறைவதால்‌ இவன்‌ அவனைப்‌ பேரலவே இன்ப துன்பங்கள்‌ அனுபவிக்க நேரிடும்‌. 
ஆதலால்‌ இவ் வித்யையில்‌ சொல்லப்படுபவன்‌ ஜீவனே என்று கருத வேண்டும்‌. 

விளக்கம்‌ : பகவான்‌ இழிவுகளுக்கெல்லாம்‌ எதிர்த்‌ தலை; கல்யாண குணங்கள்‌ பலபல வாய்ந்தவன்‌; 
கர்மத்‌திற்கு வசப்படாதவன்‌; தனது இச்சையாலே சரீரத்தில்‌ உறைகின்றான்‌ என்று வாக்யங்கள்‌ கூறுகின்றன. 
இவன்‌  ஜீவனோடு இணைந்திருந்தும்‌ கர்ம பலத்தைப்‌ புசிப்பவன்‌ ஜீவனே, இவனல்லன்‌ என்று மேலும்‌ கூறுகின்றன, 
ஆதலால்‌ எல்லாம்‌ ப்ரஹ்மமே என்ற வாக்கியத்தில்‌  கருதப்படுவது பகவானே. 

2. 2. உண்பவன்‌ : கடவல்லியில்‌ [7-2 45) **யஸ்ய பிரஹ்ம ச க்ஷத்ரம்‌.௪. உயே பவத ஓதத: மருத்து? 
 
யஸ்யோப 'ஸேசதம்‌''-- எவனுக்கு ப்ராஹ்‌மணரும்‌ க்ஷ்த்ரியர்‌களும்‌ உணவாகின்றனரோ, : எவனுக்கு எமன்‌: 
ஊறுகாயோ என்று உண்பவன்‌ ஒருவனாக வெளியிடப்‌பட்டுள்ளது. கர்ம பலனுடைய ஜீவனே உணவு போன்றவற்றை உண்ண இயலும்‌. 
ஆதலால்‌ இங்குச்‌ சொல்லப்‌படுபவன்‌. ஜீவனே என்பது ஒரு கருத்து. 

விளக்கம்‌ : ஸம்ஹார காலத்தில்‌ பகவான்‌ செய்வது' இங்குக்‌ கூறப்படும்‌ பொருள்‌. ஸம்ஹாரம்‌ செய்வோன்‌ பகவான்‌; 
ப்ராண்மணர்‌, க்ஷத்ரியர்‌ என்பன உபலக்ஷணத்தால்‌ உலகங்களைக்‌ காட்டுவன. 
ஊறுகாயைக்‌ கொண்டு.  உணவு உண்பது போல பகவான்‌ யமனைத்‌ துணையாகக்‌ கொண்டு அழிக்கிறான்‌. 
உலகங்களை உண்பது என்பது ஜீவனால்‌ இயலாதது; ஆதலால்‌ "இங்குக்‌ கூறப்படுவது பகவானே..' 

இதய குகையில்‌ இருவர்‌ . ருதம்‌ பிபந்தெதெனெ ஸுஹ்ருதஸ்ய லோகே குஹாம்‌ ப்ரவிஷ்டென''(கடவல்லி 71-53-1312 
கர்ம பலத்தைப்‌ பருகுவோர்‌ இருவர்‌; புண்ய லோகமான இவ்வுலகில்‌ இதய குகையில்‌ நுழைந்திருப்பவர்கள்‌ 
இவ்விருவர்‌ என்ற வாக்கியத்தில்‌ கர்ம பலத்தைப்‌ பருகுவோர்‌ இருவர்‌ யார்‌ யார்‌? 
இவர்கள்‌ ஜீவனும்‌ ப்ராணனும்‌, அல்லது ஜீவனும்‌ புத்தியும்‌ என்பது ஒரு கருத்து. 

விளக்கம்‌ : ஜீவனும்‌ பகவானுமே இதயத்தில்‌ இருப்பவர்கள்‌ என்பதே வேத வாக்கியங்களில்‌ கூறப்‌படுகிறது. 
ஆத்ம ஞானத்தாலே அறிபவனும்‌, எங்கும்‌ வியாபித்திருப்பவனும்‌ இன்ப துன்பங்கள்‌ இல்லாதவனுமான பகவான்‌ 
இதயத்தில்‌ இருக்கிறான்‌ என்றும்‌, காம பலத்தை அனுபவிக்கும்‌ ஜீவன்‌ ப்ராணனோடு இதில்‌வாழ்கின்றான்‌ என்றும்‌ 
வேத வாக்கியங்கள்‌ கூறுன்றன: 
கர்ம பலன்‌ அனுபவிப்பது ஜீவன்‌; பகவானும்‌ அனுபவிக்‌கிறான்‌ என்பது எவ்வாறு? பகவான்‌ ஜீவனை அனுபவிக்கச்‌ செய்கிறான்‌; 
செய்விப்பவனையும்‌ செய்வதாகச்‌ சொல்லுவதுண்டு. ஆதலால்‌ உலகை உண்பவனாக ஓதப்படுவோன்‌ பரமாத்மாவே என்பது தேறுகின்றது. 

அன்றியும்‌ இதே பகுதியில்‌ வரும்‌ விஷயம்‌ ஒன்று; 
பகவான்‌ மிக மிகப்‌ பெரியவன்‌; இவன்‌ வரிக்கும்‌ ஜீவனே இவனை அடையத்‌ தக்கவன்‌. ஜீவன்‌ உபாஸிப்பவன்‌, 
பகவான்‌ உபாஸிக்கப்படுபவன்‌? ஜீவன்‌ பகவானை அடைபவன்‌ என்பது. 
ஆதலால் சராசரங்களை உண்பவன்‌ பரமாத்மாவே என்பது தேறுகின்றது. 

2. 3. கண்ணிலே காணப்படுவோன்‌ 
சாந்தோக்யத்தில்‌ (2-75-1) வருவது: யாவனொரு புருஷன்‌ கண்ணிலே காணப்படுகிறானோ, இவனே 
ஆத்மா, அம்ருதம்‌, அபயம்‌, ப்ரஹ்மம்‌ என்பது, 
-இவன்‌”* என்று  .. சாந்தோக்யத்தில்‌ (2-75-1) வருவது: யாவரும்‌ அறிந்ததாக ஓதியிருப்பதால்‌, 
இது ஜீவன்‌ அல்லது எதிரே நிற்பவரது ப்ரதிபிம்பம்‌, அல்லது கண்ணுக்கு அபிமான தேவதை. இது ஒரு கருத்து, 

விளக்கம்‌: இதே பகுதியில்‌ (4-75-3) வருவது* இவனே அனைவர்க்கும்‌ ஆத்மா, ஆராவமுது, 
பயமற்றவன்‌, ப்ரஹ்மம்‌, அழகான யாவும்‌ நிரம்பப்‌ பெற்றவன்‌, நல்லன யாவும்‌ வாய்ந்திருப்பவன்‌; 
இவனே அடியார்க்கு நல்லன தருபவன்‌; ஆதலால்‌ இவனே மிகச் சிறந்து விளங்குபவன்‌. 
இவ்வாறான பெருமை பரமாத்மாவுக்கே பொருந்தும்‌; ஜீவனுக்கும்‌ ப்ரதி பிம்பத்திற்கும்‌ அபிமான தேவதைக்கும்‌ பொருந்தாது. 

பரமாத்மாவை யோகிகள்‌ தமது கண்ணில்‌ தேக்க வல்லவார்‌. இதனாலும்‌ பகவான்‌ கண்ணில்‌ இருப்பதாகக் கொள்ளலாகும்‌. 
* பகவான்‌ சுகத்தோடு கூடியவன்‌ என்று வேத வாக்கியங்கள்‌ சொல்லுகின்றன. 
இவனை உபாஸிக்க வேண்டிய ஸ்தானத்தை ய ஏஷோசக்ஷிணி'' என்பதால்‌, கண்ணில்‌ உள்ள இவன்‌ பரமாத்மாவே ஆகவேண்டும்‌, 
மற்றவர்‌  அல்லர்‌. 

பரம புருஷனை உபாஸிப்பவர்களுக்கு அர்ச்சிராதி மார்கம்‌ உண்டு. 
அஷி புருஷனை அறிந்த உபகோஸலனுக்கு அர்ச்சிராதி உபதேசிக்கப்படுகிறது. ஆதலால்‌ அஷி புருஷன்‌ பரம புருஷனே. 

தேர்வு 1: சாந்தோக்யத்தில்‌ ஓரிடத்தில்‌ வரும்‌ விஷயம்‌: “ கம்‌ ப்ரஹ்ம கம்‌ ப்ரஹ்ம”'-
சுகமுள்ளது ப்ரஹ்மம்‌, மிகப்‌ பெரியது ப்ரஹ்மம்‌. இதனை உபாஸிக்‌கும்‌ ஸ்தானம்‌ கண்‌ என்பது. 
ஆதலால்‌ இவன்‌ பரமாத்‌மாவே; சுகமே காணாத மற்றையோர்‌ அல்லர்‌. 

தேர்வு 2: இந்த்ரியங்கள்‌ யாவற்றிற்கும்‌ வேர்ப்‌பற்றான ஜீவன்‌ இதயத்திலேயே இருக்கிறான்‌; 
ஆதலால்‌  கண்ணில்‌ இருப்பதற்கல்லை. எதிரில்‌ இருப்பவரது ப்ரதிபிம்பம்‌ எப்போதுமே கண்ணில்‌ இருக்க இயலாது? 
எதிரில்‌ இருக்கும்போதுதான்‌ ப்ரதிபிம்பம்‌ காணமுடியும்‌ * 
வெகு தொலைவிலுள்ள ஆதித்யன்‌ கண்ணில்‌ இருப்பதாகக்‌ கூறவில்லை; கிரணங்களாலே கண்ணில்‌ இருப்பதாகக்‌ கருதப்படுகிறது.
ஆதலால்‌ இம்மூன்றும்‌ குறிக்கும்‌ படவில்லை. அக்ஷி புருஷன்‌ பரமாத்மாவே.
 
2.4. அந்தர்யாமி பரம புருஷன்‌

ப்ருஹதாரண்யக உபநிஷத்தில்‌: எவன்‌ பூமியில்‌ நிற்கிறானோ, பூமிக்குள்‌ இருக்கிறானோ, 
எவனை பூமி  ௮றியாதோ, எவனுக்கு பூமி சரீரமோ, எவன்‌ பூமியுள் நுழைந்து நியமிக்கின்றானோ அவனே உனக்கு ஆத்மா என்றறிவாய்‌; 
அவன்‌ மரணமில்லாத அந்தர்யாமி என்று தொடங்கி, நீர்‌, நெருப்பு, அந்தரிக்ஷம்‌, வாயு, தயு வோகம்‌, ஆதித்யன்‌, 
திசைகள்‌, சந்த்ர தாரகைகள்‌,  ஆகாசம்‌, _தமஸ்‌, தேஜஸ்‌ இவற்றிற்கு அந்தர்யாமியாகச்‌ சொல்லப்பட்டுள்ளது. 
பின்பு ப்ராணன்‌, வாக்கு, கண்‌, காது, மனம்‌, தோல்‌, விஜ்ஞானம்‌, ரேதஸ்‌ இவற்‌றிற்கும்‌ அத்தர்யாமியாவான்‌ என்றும்‌ குறிப்பிட்டுள்ள . 
அன்றியும்‌ இந்த அந்தர்யாமி காண்பவன்‌, கேட்பவன்‌ என்பதும்‌, அன்றியும்‌ இவனைக்‌ காட்டிலும்‌ காண்பவன்‌ 
கேட்பவன்‌ வேறு எவனுமிலன்‌ என்றும்‌ விளக்கப்‌ பெற்றுள்ளது. அந்தர்யாமி என்று கூறிய பிறகு, 
இந்தரியங்களால்‌ வரும்‌ அறிவுடையவனாகக்‌ கூறுவதால்‌ இவன்‌ ஜீவன்‌ என்பதே தகும்‌. இது ஒரு கருத்து. 

தீர்வு : இங்கு விவரிக்கப்பெறும்‌ பண்புகள்‌ யாவும்‌ பரம்பொருளான நாராயணனுக்கே ஏற்றவை. 
**ஏஷ ஸர்வ பூதாத்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண;, அந்தர்பஹிச்ச தத்‌ ஸர்வம்‌ வயாப்ய 
நாராயணஸ்‌ ஸ்தித::” என்பன இதற்கு ஆதாரமாவன. 
காண்பவன்‌, கேட்பவன்‌ என்பன பற்றி, “இவன்‌ கண்‌ இல்லாமலே காண்கிறான்‌, காதில்லாமலே கேட்கிறான்‌”? 
என்று உபதிஷத்‌ இவனையே கூறுகிறது: “இவனைத்‌ தவிரக்‌ காண்பவன்‌ வேறிலன்‌'' என்றதும்‌ இவனைப்‌ பற்றியே. 

மேலும்‌ இப்பகுதியில்‌ பகவானைப்‌ பற்றி இயற்கையாகவே மரணமில்லாதவன்‌, யாவற்றுக்கும்‌ ஆத்மா, 
யாவற்றையும்‌ நியமிப்பவன்‌ என்று அந்தர்யாமியாகச்‌ சொல்லப்படுகிறது. இந்தப்‌ பண்புகள்‌ ஜீவர்களுக்கும்‌ பொருத்த மாட்டா. 

அன்றியும்‌, “எவன்‌ ஆத்மாவில்‌ நிற்கிறானோ, எவனை ஆத்மா அறியாதோ, எவனுக்கு ஆத்மா சரீரமோ அவனே ஆத்மா, அந்தர்யாமி” 
என்று காட்டப்‌  பெறுவதால்‌, நாராயணனே எல்லா பூதங்களுக்கும்‌  அந்தர்யாமி என்பது தெற்றென விளங்குகிறது. 

2-5. காணப்படாதவன்‌ 

முன்பு கூறியது, யாவும்‌ காண்பவனான அந்தர்யாமி  பரமாத்மா என்று. 
இங்குக்‌ காணப்படாததாகச்‌ சொல்லப்படும்‌ தத்வம்‌ ஒன்றை முண்டகோபதிஷத்‌ வெளியிட்டதைப்‌ பற்றி ஆராயப்படுகின்றது. 
பூதயோனி யான அக்ஷரத்திற்குப்‌ பண்புகள்‌: காணப்படாமை அறியப்படாமை, கோத்ரமின்மை, வர்ணமில்லாமை, 
கண்‌ காது கை கால்கள்‌ இல்லாமை, எங்கும்‌ வியாபித்‌து இருப்பது, தலைமை பெற்றது, அழிவின்மை, 
நுண்ணிய தாக இருப்பது, பூதங்களுக்குக்‌ காரணமாயிருப்பது.” 

அடுத்து: வரும்‌ கருத்து: மேலான அக்ஷரத்தைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌ என்பது. முதலில்‌ அக்ஷரம்‌: 
என்று சொல்லி, அக்ஷரத்திற்கு மேம்பட்டது என வந்துள்ளது. 

இவ்வாறான தத்வங்கள்‌ ப்ரகருதியும்‌ புருஷனுமாக வேண்டும்‌ என்பது ஒரு கருத்து. 
(பூதயோநி அக்ஷரம்‌--தங்களுக்குக்‌ காரணமாய்‌ அழிவில்லாதது). 

மறுப்பு: இதே உபநிஷத்தில்‌ குறிப்பிடப்படுவது* 
யஸ்‌ ஸர்வஜ்ஞ: ஸர்வவித்‌''--எவன்‌ எல்லாப்‌ பொருள்‌களின்‌ ஸ்வரூப ஸ்வபாவங்களை அறிவானோ. 
இதை ஆராய்ந்தால்‌ மேலே கூறியுள்ளது மூலப்ரக்ருதியாக முடியாது. 
“அக்ஷராத்‌ பரத: பர: மூலப்ரக்குதி' அழியாதது; இதைக் காட்டிலும்‌ மேலானது பரமாத்மாவுக்கே ஓக்கும்‌. 
“ததாகஷராத்‌ ஸம்பவதீஹ விச்வம்‌'”  இந்த அக்ஷரத்திலிருந்து சேதன அசேதனங்கள்‌ உண்டாகின்றன என்பதாலும்‌ இது மூலப்ரக்ருதி ஆகாது; 
பரமாத்மாவே யாகவேண்டும்‌. 

மேலும்‌ இந்த உபநிஷத்தில்‌ வெளியிட்டிருப்பது* 
இவனுக்கு அக்நி எனப்பெறும்‌ த்யுலோகம்‌ தலை, சூர்யர்‌கள்‌ கண்கள்‌, இசைகள்‌ காதுகள்‌, வேதங்கள்‌ மூச்சு, 
வாயு ப்ராணன்‌, உலகங்கள்‌ இதயம்‌, பூமி கால்கள்‌? 
இவன்‌ எல்லஈ. பூதங்களிலும்‌ அந்தராத்மாவாக இருப்‌பவன்‌: இந்த விவரங்கள்‌ யாவும்‌ பரமாத்மாவுக்கே ஏற்றவை. 
ஆதலால்‌ காணப்படாமை போன்ற பண்பு களால்‌ ஒதுவது பூதயோநி  எனப்பெறும்‌ பரமாத்‌ மாவையே 

2. 8... வைச்வாநரன்‌' 
முன்பு விளக்கியவாறு மூவுலகங்களும்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ மேன்மை பசுவானுக்கே, 
வேறு எதற்குமில்லை என்பது இங்கு நிருபிக்கப்படுகிறது. 
வைச்வாநர உபாஸனத்தைப்‌ பற்றிக்‌ கூறுமிடத்தில்‌ வைச்வாநரனைப்‌ பற்றி வரும்‌ விவரம்‌: 
எங்குமிருப்பவன்‌,,  எல்லா லோகங்களிலுமுள்ள எல்லா ஆத்மாக்களிலும்‌. அன்னத்தை உண்பவன்‌ என்று, 
வைச்வாநரன்‌ என்ற சொல்‌ ஜாடராக்நியாகவும்‌, பஞ்சபூதங்களுள்‌ ஒன்றான அக்நியாகவும்‌, 
ஒரு தேவதையாகவும்‌, பரமாத்மாவாகவும்‌ குறிப்பிடப்‌ பெற்றுள்ளது. 
ஆதலால்‌ வைச்வாநரம்‌ என்பது பரமாத்மாவே என்று தீர்மானிக்க இயவாது. (இது ஒரு கருத்து.) 

“மறுப்பு: இந்தப்‌ பகுதியில்‌ முதலில்‌ சொல்லப்‌ படுவது: ப்ரஹ்மம்‌ என்ற தத்வம்‌ யாவர்க்கும்‌ ஆத்மா' என்று. 
பின்பு இதனையே வைச்வாநரம்‌ என்றே காட்டி யுள்ளது. பல இடங்களிலும்‌ இவ்வாறே கூறப்படுகிறது. 
ஆதலால்‌ வைச்வாநரம்‌ என்பது பகவானையே. 
அன்‌றியும்‌ மூதலிலே காட்டியுள்ள பகுதியில்‌ வரும்‌ விவரங்கள்‌ யாவும்‌ பகவானைப்‌ பற்றியே வேறோர்‌ உபநிஷத்தில்‌ 
வந்துள்ளன. 

சங்கை: வைச்வாநரம்‌ என்பது கார்ஷஹ்பத்யம்‌ முதலான மூவகை அக்நிகளாகச்‌ சொல்லப்படுகிறது.. 
அன்றியும்‌ முதலில்‌ செய்யும்‌ ஆஹுதி *ப்ராணாய ஸ்வாஹா”” என்பது ஜாடராக்நியைப்‌ பற்றியே. 
ஜாட ராக்நி புருஷசரீரத்தில்‌ இருப்பது. ஆதலால்‌ இது. பர மாத்மா என்று தீர்மானிப்பதற்கில்லை. 
விளக்கம்‌ : இப்பகுதியில்‌ உபாஸனத்தைப்‌ பற்றிக்‌ கூறி இருப்பது: 
இது ஜாடராக்நியைச்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ பரமாத்மாவை என்பது. வைச்வாநராத்மா” புருஷன்‌ என்றும்‌, 
இவனே **ஸஹஸ்ர சீர்ஷா புருஷ:”: என்று சொல்லப்படுபவன்‌ என்றும்‌, 
புருஷ சப்தம்‌ இயல்‌பாக வாஸுதேவனிடமே நிலைநிற்பதெதன்றும்‌ வந்துள்‌ளது. 
ஆதலால்‌ இங்குக்‌ குறிப்பது ஜாடராக்நியைச்‌ சரீரமாகவுள்ள பரம புருஷனையே. 

தேர்வு 1: முதலில்‌ குறிப்பிட்டுள்ள விவரங்கள்‌ மூன்றாவது பூதமான அக்நிக்கு ஒவ்வா. 
ஆதலால்‌ வைச்வாநரன்‌ பரமாத்மாவே. 

தேர்வு 2: இப்பகுதியில்‌ வைச்வாநரனைப்‌ பற்றி இவன்‌ த்யுலோகம்‌ முதல்‌ பூமி வரையில்‌ (பூமியிலும்‌) 
எல்லாப்‌ பொருள்களிலும்‌, ஜீவர்களது அவயவங்களிலும்‌ உறைவதாக வேதத்தில்‌ வந்துள்ளது. 
இவ்வாறு விவரம்‌ பெற்றுள்ளவன்‌ பரம புருஷனே. 

தேர்வு 3: அக்நி;, வைச்வாநர: என்ற சொற்களின்‌ பொருள்‌: அக்ரம்‌ நயதீத்யக்நி: உயர்நிலைக்கு அழைத்து 
செல்பவன்‌ அக்நி. “*விச்வேஷாம்‌ நராணாம்‌ நேதா வைச்வாதர:--நரர்கள்‌ யாவரையும்‌ அழைத்துச்‌ செல்பவன்‌ வைச்வாதரன்‌. 
இவை நாராயணனையே குறிப்பன. 

*“ஸர்வம்‌ கல்விதம்‌ ப்ரஹ்ம” என்று யாவும்‌ ப்ரஹ்மமே. சராசரங்களை உண்பவனாகக்‌ கூறப்பட்டவனும்‌, 
கண்ணில்‌ நிற்பவன்‌ என்பவனும்‌, அந்தர்யாமி யாகக்‌ கூறப்பட்டவனும்‌, அக்ஷரம்‌ என்ற மூலப்ரக்ருதியைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌ என்பவனும்‌ 
வைச்வாநர: என்பவனும்‌ பரமாத்மாவே.  
-----------

3. மூன்றாம்‌ பாதம்‌ 

பகவானுக்கு சேதனங்கள்‌, அசேதனங்கள்‌ விட விலக்ஷணன்  என்று நிறுவும்போது 
முதல்‌ பாதத்தில்‌ தெளி வின்மையே 'மிக்குள்ள வேத வாக்கியங்களை வ்யாசர்‌ ஆராய்ந்தார்‌; 
இரண்டாம்‌ பாதத்தில்‌ தெளிவின்மை யுள்ள வாக்கியங்களை ஆராய்ந்தார்‌. 
இந்த அடையாளங்கள்‌ தெளிவாக உள்ள இடங்கள்‌ இப்பாதத்தில்‌ ஆய்வுக்குப்‌ பயன்படுகின்றன. 

3.1. தேவலோகம்‌, பூமி யாருக்குச்‌ சரீரம்‌? 

தேவலோகம்‌, பூமி இவற்றைச்‌ சரீரமாகக்‌ கொள்‌ளும்‌ வைச்வாநரன்‌ பரமாத்மா என்று விளக்கப்பட்டது. 
தேவலோகம்‌ சரீரமாகக்‌ கொள்பவன்‌ யார்‌ என்று இப்போது ஆய்வு. 

முண்டக உபநிஷத்தில்‌, எவனிடம்‌ தேவலோகம்‌,பூமி, அந்தரிஷம்‌, மனம்‌, இந்த்ரியங்கள்‌ யாவும்‌ சேர்ந்துள்ளனவோ, 
அந்த ஆத்மா ஒருவனையே ஆதரிப்பீர்‌ என்று வந்துள்ளது. 
மனம்‌ முதலான இந்த்ரியங்கள்‌ இவனுடன்‌ இணைந்துள்ளன; பலவிதமாகப்‌ பிறக்கும்‌ இவன்‌ சரீரத்‌தினுள்‌ திரிகிறான்‌. 
தேரின்‌ நாபியிலுள்ள ஆரங்கள்‌ போல்‌ இவனிடம்‌ நாடிகள்‌ சேர்ந்துள்ளன என்று மேலும்‌ விவரம்‌ காண்கிறோம்‌. 
மனம்‌ முதலான இந்த்ரியங்கள்‌ இவனிடம்‌ சேர்ந்திருப்பதாகவும்‌ கூறப்படுகிறது. 
இவை யாவும்‌ ஜீவனுக்கே பொருந்துவன என்பது ஒரு கருத்து. 

மறுப்பு : இப்பகுதியில்‌ இந்த விவரங்கள்‌ யாவும்‌ பரமாத்மாவையே பற்றியவை. இவனைப்‌ பற்றி மேலும்‌ கூறுவது. : 
இவன்‌ மோக்ஷத்திற்கு ஸாதனம்‌. இவனை அறிபவனே முக்தனாகிறான்‌, மோக்ஷத்திற்கு வேறு வழி யில்லை. 
மேலும்‌ நாராயண வல்லியில்‌, “தாமரை மலர்‌ போன்ற இதயத்தின்‌ நடுவில்‌ நுட்பமான துவாரம்‌ ஒன்றுள்ளது; 
இதில்‌ நாராயணன்‌ இருச்கிறான்‌ என்று வர்ணிக்கப்படுகிறது. கீதையிலும்‌, “*பிறப்பில்லாத பரம 
புருஷன்‌ பலபடியாகப்‌ பிறக்கிறான்‌'' என வந்துள்ளது. 
நம்‌ மனம்‌ முதலியவற்றிற்கு தாராயணனே ஆதாரம்‌: என்றறிகிறோம்‌. ஆதலால்‌ தேவலோகம்‌ முதலான  வற்றிற்கு ஆதாரமானவன்‌ பசுவானே. 

தேர்வு 1: ஆகாசம்‌, பூமி இவை இருப்பிடமாக உடையவன்‌, பொன்‌ நிறமானவன்‌, உலகைப்‌ படைப்பவன்‌, நியமிப்பவன்‌; 
உலகுக்குக்‌ காரணமானவன்‌.இதனால் தேறுவது: பகவானே எங்கும்‌ இருப்பிடமாக , பகவான்‌ உடையவன்‌ என்பது. 

தேர்வு 2: முண்டகோபநிஷத்தில்‌, ஜீவனும்‌ பகவானுமான இரண்டு பறவைகள்‌ இணைந்து ஒரே மரத்‌தில்‌ அமர்ந்துள்ளன;
ஒன்று கர்மமாகிய இனிய பழத்தைக்‌ தின்கின்றது, மற்றது இதைத்‌ தின்னாமல்‌ சிறப்புடன்‌ விளங்குகிறது என்றுள்ளது. 
கர்ம பலன்‌ இல்லாதவனும்‌, ஸா்வஜ்ஞனும்‌, மோக்ஷத்திற்கு உபாயமானவனும்‌ 
ஆகாசம்‌, பூமி போன்றவற்றை இருப்பிடமாக உடையவன்‌ பசுவானே என்பது தேறுகின்றது. 

-பூமா 
“பூமா” பெருமை உடையது என்ற தத்வத்தை அறிய நாரதர்‌ ஸநத்குமாரரிடம்‌ சென்றார்‌. ஸநத்குமாரர்‌ 

மூதலில்‌ நாமம்‌ பெரியது என்றார்‌. இதனிலும்‌ பெரியது வாக்கு என்றார்‌. இவ்வாறு படிப்படியாக உபதேதசித்து 
ஜீவன்தான்‌ ப்ரஹ்மம்‌ என்று உபதேசித்தார்‌. ப்ராணனோடு சேர்ந்திருப்பதாலே ப்ராணன்‌ எனப்படும்‌ ஜீவனே ப்ரஹ்மம்‌ என்றார்‌. 
இதற்கு மேல்‌ பல. கண்டங்‌கள்‌ வரையில்‌ இது பற்றி யாதும்‌ சொன்னதாகக்‌ கூற வில்லை. 
ஆதலால்‌ பூமா என்பது ப்ராணன்‌ எனப்படும்‌ ஜீவனே, இது ஒரு கருத்து. 

மறுப்பு: இதே பகுதியில்‌ ஒரு கண்டத்திற்குப்‌ பின்‌, *ஸத்யம்‌ என்ற ப்ரஹ்ம வித்யையில்‌ ஸத்யம்‌ என்பது 
பூமா” என்று விளக்கம்‌ பெற்றுள்ளது. ஸத்யம்‌ என்பது பகவான்‌; இதுவே, சுகமாகும்‌, மிகச்‌ சிறந்ததாகும்‌ என்று புகழ்‌ பெற்றுள்ளது. 
ப்ராணனைப்‌ பற்றிய பேச்சு இந்த பிரகரணத்தில் இல்லை; முன்னமே முடிந்து விட்டது. 

ஒரு ஸூத்ரத்தில்‌ பூமா என்பது ஜீவனைக்‌ காட்டிலும்‌ மேலானது என வந்துள்ளது. 
அன்றியும்‌, “ஆத்மா வினிடமிருந்து ப்ராணன்‌ உண்டாகின்றது” என்று தொடங்கி, ஸர்வ காரணமாக இருப்பது பூமா என்பதாலே என்று முடிகின்றது. 
இவ்விதம்‌ விவரித்தனயாவும்‌ பரமாத்மாவையே பற்றியவை. ஆதலால்‌ பூமா  என்றது பரமாத்மாவையே. 
ஆகாசம்‌ அக்ஷ்ரத்தை ௮ண்டியிருக்கிறது என்றார்‌ யாஜ்ஞவல்கீயர்‌. 
அக்ஷரம்‌ என்பது பருமனல்லாதது, அணுவல்லாதது, சிவப்பில்லாதது, பசையில்லாதது, நிழலற்றது என்று விவரிக்கப்படுகிறது. 
இங்கு ஆகாசத்‌திற்கு ஆதாரமாக இருப்பது மூலப்ரக்ருதி என்பது ஒரு கருத்து. 

விளக்கம்‌ : ஆகாசம்‌ பற்றிய விளக்கம்‌ ஒன்று. தேவலோகத்திற்கு மேலும்‌, பூமிக்குக்‌ சீழும்‌, இடையிலுள்ள உலகங்களிலும்‌ உள்ள 
பொருள்கள்‌ யாவும்‌ ஆகாசத்தையே அண்டி உள்ளன. இதனால்‌ ஆகாசம்‌ என்பது அம்பரம்‌ எனப்படுவதற்கும்‌ காரணமான 
மூலப்ரக்ருதியேயாகும்‌, இதற்கு ஆதாரமாவது பரமாத்‌மாவே. ஆதலால்‌ அக்ஷரம்‌ என்பது பரமாத்மாவையே. சங்கை : 
**யஸ்ய அக்ஷரம்‌ சரீரம்‌''! மூதலான வாக்‌ கியங்களில்‌ ஜீவனைப்‌ பற்றியே அக்ஷர சப்தம்‌ உள்ளது. ஆதலால்‌ ஜீவன்‌ அக்ஷரமாகக்‌ கூடும்‌. 
விளக்கம்‌: இந்த அஷரத்தின்‌ மேலான நியமனத்‌தாலே சூர்ய சந்திரர்‌ தரித்து திற்கிள்றனர்‌ என்பதுவும்‌ நாம்‌ அறிவோம்‌. 
இவ்வாறு நியமிப்பது ஜீவனுக்குப்‌ பொருந்தாது; பரமாத்மாவுக்கே உரியது. 

தேர்வு : அக்ஷரத்தைப்‌ பற்றி விளக்கப்பட்டுள்ளது 
வேறொன்றால்‌ காணப்படாதது, யாவற்றையும்‌ காண்‌பது; வேறொன்றால்‌ கேட்கப்படாதது, யாவற்றையும்‌ கேட்பது என்று 
காண முடியாததும்‌ கேட்க முடியாததுமான ௮சேதனம்‌ அக்ஷரமாவதற்‌ கில்லை. 
ஜீவன்‌ காண் முடியாதவன்‌, பரமாத்மாவால்‌ எப்போதும்‌ காணப்படுபவன்‌. ஆதலால்‌ இவனும்‌ அக்ஷரமாக முடியாது. 
ஆதலால்‌ தனது நியமனத்தாலேயே யாவற்றையும்‌ தரிக்கும்‌ பரம புருஷனே அக்ஷர புருஷன்‌ என்பது நிச்சயம்‌. 

3. 4, காணப்படுபவன்‌ ;: மூன்று மாத்திரையோடு: ப்ரணவத்தை உபாஸிப்பவன்‌ அந்தரிக்ஷத்திற்கும்‌ 
மேலான ப்ரஹ்மலோகம்‌ அடைகிறான்‌ என்று ப்ரச்‌நோ பநிஷத்தில்‌ உள்ளது. 
இவன்‌ தேஹ இந்த்ரியங்‌கனைக்‌ காட்டிலும்‌ மேலான ஜீவனைக்‌ காட்டிலும்‌ மேலான ஹ்ருதய வாஸியான புருஷனை அடைகிறான்‌ 
என்பதும்‌ காண்கிறோம்‌. ப்ரஹ்ம லோகம்‌ என்பது சதுர்முகனுடைய உலகம்‌ என்பது ஒரு கருத்து. 

விளக்கம்‌ : இதே ,பகுதியில்‌ வந்துள்ளது; ஹ்ருதய வாஸி புருஷன்‌ ஸம்ஸாரி ஜீவார்களைக்‌ காட்டிலும்‌ 
மேலான நித்ய முக்தரைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌ என்று குறித்துள்ளது, 
அன்றியும்‌ பசி, தாகம்‌ முதலான இல்லாதது; ஜரா மரண மில்லாதது, யாவரிலும்‌ மேம்‌ பட்டது என்றும்‌ காண்கிறோம்‌. 
இவ் விவரம்‌ கர்மத்‌திற்கு வசப்பட்ட சதுர்முகனுக்குப்‌ பொருந்தாது? பரமாத்மாவுக்கே பொருந்தும்‌. 
ப்ரஹ்மலோகம்‌ என்பது ப்ரஹ்மத்தின்‌ லோகம்‌, பரம பதம்‌; ப்ரஹ்மாவின்‌ லோகமன்று, 
**தத் விஷ்ணோ: பரமம்‌ பதம்‌” என்று பாராட்டப்பட்டது. அந்தரிஷத்திற்கு மேற்பட்ட லோகம்‌ நான்முகனின்‌ லோகம்‌ என்பதும்‌ சரியன்று, 
ஆதலால்‌ காணப்படுவது ஸாவேச்வரனாகிய ஸ்ரீமந்‌ நாராயணனே. 

3. 5. தஹராகாசம்‌ 

ஓர்‌ உபநிஷத்தில்‌ ஒரு வாக்கியம்‌, இதயத்தில்‌ வஸிப்பவன்‌ ஆகாசம்‌ என்கிறது. 
பரமன்‌ உறையுமிடமான உடலில்‌ தாமரை போன்ற சிறிய இடம்‌ உள்ளது; இது ப்ரஹ்மத்தின்‌ இருப்பிடம்‌, 
இதனுள்‌ நுண்ணிய நிலையில்‌ ஆகாசம்‌ இருக்கிறது; இதற்குள்‌ இருப்பது தேடத்தக்கது, அறியத்‌ தக்கது என்றும்‌, 
இது தஹராகாசம்‌ என்றும்‌ குறித்துள்ளது. இது பஞ்சபூதங்களுள்‌ ஒன்றான ஆகாசம்‌ என்பது ஒரு கருத்து. 

மறுப்பு: மேல்‌ வாக்கியத்தில்‌ வந்துள்ள கருத்து; 
இதயத்தில்‌ வஸிப்பவன்‌ எங்கும்‌ வியாபித்திருப்பவன்‌, பாவ மற்றவன்‌, மூப்பு மரண மில்லாதவன்‌, சோக மற்றவன்‌, 
பசி தாக மில்லாதவன்‌, தடைபடாத விருப்பமும்‌ ஸங்கல்பமும்‌ வாய்ந்தவன்‌ என்பது. ஆதலால்‌ தஹரா காசம்‌ பரமாத்மாவே. 
தஹராகாசத்தினுள்‌ இருப்பதை உபாஸிக்கும்போது இங்கு விவரிக்கப்படும்‌ கல்யாண குணங்களை உபாஸிக்க வேண்டும்‌ என்றும்‌ வந்துள்ளது. 
அன்றியும்‌ பூதாகாசம்‌ போல்‌ இதயத்திலுள்ள ஆகாசம்‌ பெரியது என்றும்‌ விளங்குகிறது. 
ஆதலால்‌ தஹராகாசம்‌ பூதாகாசத்தைக்‌ காட்டிலும்‌ மாறுபட்ட பரமாத்மாவே, 

தேர்வு 1 :: சேதனர்‌ தூங்குகின்ற போது தஹராகாசத்தை அடைகின்றனர்‌. இது ப்ரஹ்ம லோகம்‌ என்பது 
வேதத்தில்‌ ஒரு கருத்து. ப்ரஹ்ம லோகம்‌ அறியப்படும்‌ - ப்ரஹ்மத்தைச்‌ சொல்லும்‌. '*'லோக்யதே இதி லோக: 
அறியப்படுவதால்‌ லோகம்‌ எனப்பெறும்‌. ப்ரஹ்மம்‌ என்று வழங்குவது ஸதி என்று பரமாத்மாவையே, 
சேதனர்‌ தூங்கும் போது அடைவது பூதாகாசத்தை யன்று. ஆதலால்‌ தஹராகாசம்‌ பரமாத்மாவே. 

தேர்வு 2: தஹராகாசம்‌ பற்றி உபநிஷத்‌ வெனி யிடுவது: இவ்வாத்மா உலகங்கள்‌ ஒன்றோடொன்று 
கலவாமல்‌ அணையைப்‌ போலே பிரித்து தரித்து நிற்கிறான்‌; இவனே ஸர்வேச்வரன்‌: இவனே ஜீவரா்களுக்கு அதிபதி; 
ஜீவராசிகளைக்‌ காப்பாற்றுவோன்‌ என்று. இக்‌ காரணத்தாலும்‌ ஸ்ரீமந்‌ நாராயணனே தஹராகாசம்‌ என்று நிச்சயிக்கலாம்‌. 

தேர்வு 3: சாந்தோக்யத்தில்‌ ஒருவாக்கியம்‌ (7-9-1)பூதங்கள்‌ எல்லாம்‌ ஆகாசம்‌ என்ற பரமாத்மாவிடமிருந்தே உண்டாகின்றன என்பது. 
பரமாத்மாவைப்‌ பற்றி ஆகாசம்‌ என்ற சொல்‌ பயன்படுகிறது. ஆதலால்‌ தஹராகாசம்‌ பரமாத்மாவே. 

ஒரு சங்கை: தஹராகாசம்‌ சிறியதாக இருப்பதால்‌ அணுவான ஜீவன் தான்‌ இதில்‌ பொருந்தக்‌ கூடும்‌. விபுவான பரமாத்மா இதில்‌ இருக்க இயலாது. 

விளக்கம்‌ : முக்தனான ஜீவாத்மா பரமாத்மாவோடு  ஸாம்யம்‌ பெறுகிறான்‌; இது அநுகாரம்‌. இதனாலேயே 
மூக்தி தசையில்‌ பகவானுக்குள்ள குணங்கள்‌ இவனும்‌ பெறுகிறான்‌. தஹராகாசம்‌ அநுகாரத்தால்‌ இந்த 
குணங்கள்‌ படைக்கவில்லை; இயற்கையாகவே பெற்றுள்‌ளது. ஆதலால்‌ அநுகரிக்கும்‌ ஜீவனில்‌ வேறுபட்டது;
௮னுகரிக்கப்படுவதான தஹராகாசம்‌ பரமாத்மாவாக வேண்டும்‌. 

தேர்வு 4: கீதையிலும்‌, “பரமாத்மாவை ௨பாஸிப்‌பதால்‌ ஜீவன்‌ பரமாத்மாவை: அனுகரிக்கிறான்‌'' என்‌றுள்ளது (1484-2), 
ஆதலால்‌ தெற்றென விளங்குவது; அனுகரிக்கப்படும்‌ தஹராகாசம்‌ அனுகரிக்கும்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறான பரமாத்மாவே என்பது,
 
3. 6, ப்ரமிதன்‌. 

ப்ரமித: கட்டைவிரலளவுள்ளவன்‌. அங்குஷ்டம்‌-- கட்டைவிரல்‌. கட்டைவிரல்‌ அளவுள்ள புருஷன்‌ என்று தொடங்கும்‌ ரிக்குக்களில்‌ கூறியுள்ளது: 
அங்குஷ்ட மாத்‌ரம்‌ அளவுள்ள ஜீவன்‌ ப்ராணனை நியமிப்பவன்‌, தனது கர்மங்களால்‌ கட்டுண்டவன்‌; கட்டை விரல்‌ அளவுள்ளவன்‌ சஞ்சரிக்கிறான்‌ என்று. 
இங்குக்‌ குறிப்பது ஜீவனே என்பது ஒரு கருத்து, இவை யாவும்‌ ஜீவனுக்குப்‌. பொருந்துவன. 

விளக்கம்‌: இதே பகுதியில்‌ இந்தப்‌ புருஷன்‌ 'முக்‌ காலத்திலும்‌ எல்லாப்‌ புருஷர்களுக்குங்‌ காரணம்‌ என்று 
சொல்லப்படுகிறது. ஆதலால்‌ அங்குஷ்ட மாத்ரன்‌ பரமாத்மாவே. 

சங்கை : அளவே காண முடியாத பரமாத்மா எப்‌படிக்‌ கட்டைவிரல்‌ அளவுள்ளவனாகக்‌ கூடும்‌?' 

விளக்கம்‌ : உபாஸகர்களை அநுக்ரஹிப்பதற்காக  பரமாத்மா இவர்களது இதயத்தில்‌ கட்டைவிரல்‌ அள  விற்கு அமைந்திருக்கிறான்‌. 

சங்கை: குதிரை முதலானவற்றிற்குக்‌ கட்டை விரலே இல்லையே; இவற்றின்‌ இதயத்தில்‌ கட்டை வீரல்‌ 
அளவுக்கு இவன்‌ உறைகிறான்‌ என்பது எப்படிப்‌ பொருந்தும்‌? 

விளக்கம்‌ : மனிதர்கள்‌ உபாஸிப்பதற்காகக்‌ கூறுவதாலே கட்டைவிரல்‌ அளவு என்று குறிப்பிட்டுள்ளது. 

அங்குஷ்ட மாத்ரனைப்‌ பற்றி மேலும்‌ சில விவரங்கள்‌: 
'இவனிடம்‌ யாவரும்‌ நடுங்குகின்றனர்‌. இவனிடம்‌ பயத்‌தால்‌ அக்நி சுடுகிறது; ஸூர்யன்‌ காய்கிறான் இந்தரன்‌, 
வாயு, யமன்‌ தங்கள்‌ தங்கள்‌ செயல்களைச்‌ செய்‌கின்றனர்‌. இத்தகைய இயல்புடையவன்‌ பரமாத்மாவாக வேண்டும்‌. 

மேலும்‌ இந்தப்‌ புருஷனின்‌ ஒளியாலே எல்லா ஒளிகளும்‌ விளங்குகின்றன என்றும்‌ கூறுவதால்‌, இத்தகைய 
மேன்மை யுடையவன்‌ ஸ்ரீமந்‌ நாராயணனே என்பது தெளிவு. 

3. 7. ஆகாசம்‌ பரமாத்மாவே. 

சாந்தோக்யதக்தில்‌ தஹர வித்யையில்‌ கடைசியில்‌ வரூ வது: நாம ரூபங்களை நிர்வஹிப்பது ஆகாசமே. இவை! 
இல்லாமலிருப்பது எதுவோ அதுவே ப்ரஹ்மமாகவும்‌.. அம்ருதமாகவும்‌, ஆத்மாவாகவும்‌ இருப்பது. 
ஆகாச மெனப்படுபவன்‌ முக்தி யடைந்த ஜீவன்‌ என்பது ஒரு, கருத்து. 

ஆதரவான விளக்கம்‌ : முக்த ஜீவன்‌ உலக வாழ்விலிருந்து விடுதலை பெறுவது, குதிரை தனது உடலிலுள்ளஉரோமங்களை உதிர்ப்பது போல்‌, 
சந்திரன்‌ ராகுவின்‌ வாயிலிருந்து விடுதலை பெறுவதுபோல்‌ என்று சாந்‌தோக்யம்‌ வரைகன்றது. 
இந்த விவரங்கள்‌ முக்த ஜீவ னுக்கு நன்கு பொருந்துவன. நாம ரூபம்‌ வஹிப்பது: என்பது இவனுக்கே பொருந்தும்‌. 

மறுப்பு : ஜீவன்‌ நாம ரூபம்‌ பெறுவது தனது கர்மத்‌தாலே, நாம ரூபங்களை நிர்வஹிப்பவனுக்கு நாமரூபங்‌- 
கள்‌ இல்லை என்பதால்‌, இவன்‌ ஜீவனினும்‌ சதாம்‌ பரமாத்மாவே, 

இதற்கு முன்னமேயே தஹராகாசமான பரமாத்‌மாவைப்‌ பற்றிக்‌ கூறியிருக்கிறது. 
இதனை உபா ஸிப்பவனது ஸ்வரூபம்‌ இங்குச்‌ சொல்லப்படுகிறது. நாம ரூப நிர்வாஹம்‌ புருஷனுக்குப்‌ பொருந்தாது. 
ஆதலால்‌ புருஷ ஸக்தம்‌ போன்றவற்றில்‌ நாம ரூப திர்வஹகனாகக்‌ கூறப்படும்‌ நாராயணனே இவ்விடத்தில்‌ சொல்‌லும்‌ ஆகாசம்‌ என்பது தெள்ளத்‌ தெளிவு. 

ஒரு சங்கை : **தத்வமஸி'', “அஹம்‌ ப்ரஹ்மாஸ்மி”” போன்ற வாக்கியங்களில்‌ ஜீவன்‌ ப்ரஹ்மத்தினின்றும்‌ 
வேறுபடாதவன்‌ என்று காட்டியுள்ளது. ஆதலால்‌ முக்தி நிலையிலுள்ள ஜீவனே பரமாத்மா என்று தேறுகின்றது . 
இதனாலும்‌ ஆகாசம்‌ என்பது ஜீவன்‌ என்று கருதுவதே.  ஏற்றது. 

விளக்கம்‌ : தூங்கும்போது ஜீவனைப்‌ பேரறிவாளனான பரமாத்மா அணைத்துக் கொள்வதால்‌ ஜீவன்‌ எதையும்‌ அறிவதில்லை. 
இதேபோல்‌ மரணத்தின்போது பரமாத்மாவோடு ஒரு வகைச்‌ சேர்த்தி ஏற்படுகிறது, 
பரமாத்மாவால்‌ அணைக்கப்பட்டு ஜீவன்‌ சரீரத்தை விடுகின்றான்‌ என்பது வேதத்தில்‌ வருவது. 
தன்னைத்‌ தானே தழுவிக்கொள்வதும்‌, தன்னோடே தான்‌ சேர்த்தி பெறுவதும்‌ நிகழமாட்டா. 
தூக்க நிலையிலும்‌ மரண நிலையிலும்‌.ஜீவன்‌ பரமாத்மாவைவிட வேறு. 
ஆதலால்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ பரம புருஷன்‌ வேறு என்பது தேறுகின்றது. 
ஆதலால்‌ ஆகாசம்‌ எனப்‌ பெறுவோன்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌. வேறுபட்ட பரமாத்மாவே. 

மேலும்‌ “ஸர்வஸ்ய: அதிப்தி:””, “ஸர்வஸ்ய *வ€*”) “ஸர்வஸ்ய ஈசாந:'” என்று இவ்விடத்தில்‌ வருவதால்‌ 
இவன்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌ என்பது தெளிவு. ஆதலால்‌ இப்பகுதியில்‌ கூறப்படுவது பர்மாத்‌மாவே. 

3, 8, ப்ரஹ்மாதிகளின் உபாஸனம் நிலை  

'ஒரு கருத்து; தேவர்களுக்குச்‌ சரீரம்‌ இருப்பதாக ப்ரமாணம்‌ எதுவுமில்லை. தேஹ மிருந்தால்கான்‌ உபாஸநம்‌ செய்ய இயலும்‌. 
சரீரத்தின்‌ தொடர்பால்‌ நிகழும்‌ இன்ப துன்பங்கள்‌ இவர்களுக்கு நேரமாட்டா. ஆதலால்‌ இவற்றிலிருந்து விடுதலை. பெற விருப்ப்மும்‌ இராது. 
ஆதலால்‌ இவார்கள்‌ உபாஸநம்‌ செய்வதில்லை. இது ஒரு கருத்து. 

விளக்கம்‌ : இவர்களுக்குச்‌ சரீரம்‌ உண்டு, எவ்வாறெனில்‌: பகவான்‌ யாவர்க்கும்‌ நாம சூபங்கள்‌ அளிப்பதாக ஸங்கல்பித்தான்‌. 
தேஹ இந்தரியங்களைச்‌ செய்‌வதே நாம ரூபம்‌ என்பது. அன்றியும்‌ இந்திரன்‌, விரோசனன்‌ இவர்கள்‌ தங்கள்‌ கையில்‌ ஸமித்தை ஏற்றுக்‌ 
கொண்டே சதுர்முகனை அடைந்தனர்‌ என்பது ஒரு வரலாற்றில்‌ காண்கிறோம்‌. 
ஆதலால்‌ தேவர்களுக்கு அதிகாரம்‌ உண்டு, உபாஸநம்‌ செய்யத்‌ தகுதியும்‌ உண்டு. 

ஒரு சங்கை : யாகம்‌ செய்யும்போது தேவர்களை ஹவிஸ்‌ ஏற்பதற்காக அழைக்கிறோம்‌. யாகம்‌ பல இடங்களில்‌ நிகழலாம்‌. 
அப்போது ஒரே சரீரத்துடன்‌ எவ்‌வாறு சொல்லமுடியும்‌? ஆதலால்‌ சரீரம்‌ இல்லை என்பதே ஏற்கத்‌ தக்க கருத்து. 

விளக்கம்‌ : ஸெளபரி முனிவர்‌ ஒரே காலத்தில்‌ பல சரீரங்களோடு இன்பம்‌ துய்த்தார்‌. 
இதுபோல்‌  தேவர்‌களும்‌ பல சரீரங்கள்‌ ஏற்கக்‌ கூடியவர்களே. 

வேறொரு சங்கை : இவர்களுக்குச்‌ சரீரம்‌ உண்டெனில்‌ உற்பத்தி விநாசங்கள்‌ உள்ளன. 
விநாசம்‌ ஏற்படும்‌ போது இவர்களது பேர்களும்‌ மறைந்துபோம்‌. இப் பேர்‌கள்‌ இந்த்ரன்‌, வருணன்‌ போன்றவை வேதங்களில்‌ வருவன. 
ஆதலால்‌ வேத சப்தங்களும்‌ நிலைநிற்க மாட்டா--ஆதலால்‌ இவ்வாறு ஆராய்ந்தால்‌ இவர்களுக்குச்‌ சரீரம்‌ இல்லை என்றுதான்‌ ஊகிக்கவேண்டும்‌. 

விளக்கம்‌: “*'வேதேத ரூபே வ்யாசுரோத்‌ ப்ரஹ்மா”” வேதத்தைக்‌ கொண்டே நான்முகன்‌ படைத்தான்‌ என்‌பது வேத்‌ வாக்கியம்‌. 
“ஸூர்ய சந்த்ரமளெள தாதா யதா பூர்வ மகல்பயத்‌'' என்பது தைத்திரீய வாக்‌யம்‌.. 
படைப்பின்போது நான்முகன்‌ பூர்வ கல்பத்தில்‌ இருந்தவாறே வேதத்தின்‌ மூலமாகப்‌ படைக்கின்றான்‌, 
வேத சப்தங்களைக்‌. கொண்டே தனித்தனியாகவும்‌ படைக்‌கின்றான்‌. 
ஆதலால்‌ இந்த்ரன்‌, வாயு, அக்நி போன்ற பூதங்கள்‌ எப்போது முள்ளவையே. 

வேறொரு சங்கை: மது வித்யை போல்வன வற்றில்‌ வஸூக்கள்‌, ஆதித்யர்‌ போன்ற தேவர்களை உபாஸனம்‌. 
செய்து வஸு பதவி, ஆதித்ய பதவி பெறக்கூடும்‌ என்று கூறியிருக்கறது. 
ஏற்கனவே இப்பதவியிலுள்ள தேவர்‌கள்‌ உபாஸநம்‌ எவ்வாறு செய்யக்‌ கூடும்‌? 

விளக்கம்‌ : இத்தகைய தேவர்கள்‌ பரமாத்மாவைப்‌ பெறுவதற்கு உபாஸநம்‌ செய்யலாம்‌. 
அன்றியும்‌ இந்தப்‌ பதம்‌ எப்போதும்‌ நிலைப்பதற்காகவும்‌ உபாஸநம்‌ செய்யக்‌ கூடும்‌. 
ஆதலால்‌ தேவர்கள்‌ நம்மைப்‌ போல்‌ இறைஞ்சித்‌ தமது பதம்‌ நிலைக்கப்‌ பெறுகின்றனர்‌; பகவானையும்‌ பெறுகின்றனர்‌. 

தெளிவான வேத வாக்கியங்களைக்‌ 'கொண்டு பகவான்‌ எங்கும்‌ உறைபவன்‌ என்று விவரிக்கப்படுகின்றது. 
த்யுலோகம்‌, பூமி போல்வனவற்றிற்கு இருப்‌பிடம்‌ பகவான்‌. பூமா எனப்படுவது ஸத்யம்‌ என்ற பரமாத்மா. 
மூலப்ரக்ருதிக்கும்‌ ஆதாரமான அஷரமும்‌ பகவானே, ஞானிகளால்‌ காணப்படுவோன்‌ பசுவானே. 
தஹராகாசமும்‌ பகவான்‌, கட்டை விரல்‌ அளவிற்கு இதயத்தில்‌ உறைபவன்‌ பகவான்‌. 
நாமரூபங்களைச்‌ செய்யும்‌ ஆகாசம்‌ எனப்‌ பெறுவோனும்‌ பகவானே. 
தேவர்களும்‌ ௨பாஸநஞ்‌ செய்யத்‌ தக்கவர்களே. 

----------------

4. நாலாம்‌ பாதம்‌. 

மிகத்‌ தெளிவான வேத வாக்கியங்களைக்‌ கொண்டு பகவான்‌ சேதன அசேதனங்களைச்‌ சரீரமாகக்‌ கொள்‌பவன்‌ 
என்று நிலைநாட்டுவதோடு இவனிலும்‌ வேறு பட்ட ஒருவன்‌ இல்லை யென்பது இந்தப்‌ பாதத்தில்‌ விவரிக்கப்படுகிறது. 
4. 1, ஸாங்க்யர்‌ கொள்கை. 

கடோபநிஷத்தில்‌ (1-7-53-1-7-11) வந்துள்ள விஷயம்‌: இந்த்ரியங்களுக்கு மேற்பட்டவை அர்த்தங்கள்‌; 
அர்த்தங்‌களுக்கு மேற்பட்டது மனம்‌; மனத்திலும்‌ மேலானது அறிவு; அறிவைக்‌ காட்டிலும்‌ பெரியது ஆத்மாவான மஹான்‌; 
இதைக்‌ காட்டிலும்‌ மேலானது அவயக்தம்‌; இதனிலும்‌ புருஷன்‌ பெரியவன்‌; புருஷனைக்‌ காட்டிலும்‌ பெரியவன்‌ எவனுமிலன்‌; 
இப்புருஷனே எல்லை நிலம்‌, மேலான கதியு மாவான்‌. ஸாங்க்யார்களது கொள்கை இதனையே ஒட்டி யுள்ளது. 
இக்கருத்தின்படி இருபத்‌தைந்தாவது தத்வமான புரூஷனைக்‌ காட்டிலும்‌ மேலான தத்வம்‌ இல்லை. 
ஆதலால்‌ ஈச்வர தத்வம்‌ இல்லை. அவ்யக்தம்‌, ப்ரதானம்‌, ஆனுமாநிதம்‌ எனப்‌  பெறும்‌ மூலப்ரக்ருதியே 
உலகுக்குக்‌ காரணம்‌ என்கின்றனர்‌ நிரீச்வர ஸாங்க்யர்‌. 

மறுப்பு: கடோப நிஷத்தில்‌ இதே பகுதியில்‌ (1-8-10,12) பகவானை அடைய விரும்பும்‌ உபாஸகன்‌ 
தேரில்‌ ஏறிச்‌ செல்வதாக உருவகப்‌ படுத்தியுள்ளது. 
ஜீவன்‌ ரதி (ரதத்தில்‌ ஊர்பவன்‌). இவனது சரீரம்‌ தேர்‌? புத்தி தேர்ப் பாகன்‌; மனம்‌ கடிவாளம்‌; இந்த்ரியங்கள்‌ குதிரைகள்‌; 
சிற்றின்ப. விஷயங்கள்‌ இக்குதிரைகள்‌ செல்‌ லும்‌ வழி. 
இந்தத்‌ தேர்‌ மூதலானவற்றை வசப்படுத்திக்‌ கொள்வோன்‌ ஸம்ஸார வழியின்‌ அக்கரையான பரம 
பதத்தை அடைகிறான்‌ என்பதும்‌ வந்துள்ளது. 
இவ்விவரங்களை ஆராய்ந்தால்‌ மனம்‌, இந்த்ரியங்கள்‌ இவற்‌றோடு கூடிய சரீரத்தைக்‌ தன்‌ வசப்படுத்திக்‌ கொண்டு 
இப்புருஷன்‌ சேர்வது பரம புருஷனை என்பது தெளிவு 

இதே கருத்து கடவல்லியில்‌ (7-3-73)ல்‌ உள்ளது? 
அறிவாளியானவன்‌ வாக்கு முதலான இந்தீரியங்களை மனத்தில்‌ அடக்கவேண்டும்‌, 
இந்த மனத்தை ஆத்மா விலுள்ள அறிவில்‌ அடக்கவேண்டும்‌; 
இந்த அறிவைப்‌ பெரியவனான ஜீவாத்மாவில்‌ அடக்கவேண்டும்‌; 
இந்த ஜீவாத்மா தாழ்வுகள்‌ இல்லாத பரமாத்மாவிடம்‌ அடங்க வேண்டும்‌ என்று, 
இங்கு உபகாரஞ்‌ செய்யும்‌ பரம்‌ பரையே உள்ளது; காரண பரம்பரை யன்று; 
ஆதலால்‌ அவ்யக்தம்‌ என்று சொல்லால்‌ மூலப்ரக்ருதியைச்‌ சொல்ல வில்லை; சரீரத்தையே சொல்லுகின்றது. 

தேர்வு 1: வ்யக்தம்‌ என்ற ஸ்தூலமான உலகம்‌, அவ்யக்தம்‌ என்ற மூலப்ரக்ருதி, புருஷன்‌ இம்மூன்றையும்‌ 
அறிவது மோக்ஷம்‌ என்கின்றனர்‌ ஸாங்கயர்‌, இவ்வாறு “வேதத்தில்‌ கூறப்படவில்லை. ஆதலால்‌ ஸாங்க்ய தத்வம்‌ கூறவில்லை. 

ஸாங்க்யர்களது மறுப்பு : ஒரு மந்த்ரம்‌: சப்தம்‌, ஸ்பர்‌ சம்‌, ரஸம்‌, ரூபம்‌, கந்தம்‌ இல்லாததும்‌, அழிவில்லாததும்‌, 
ஆதியந்த மில்லாததும்‌, மஹானுக்கு மேற்பட்டதும்‌, நிலையானதுமான தத்வத்தை த்யானஞ்‌ செய்து 
ஸம்ஸாரத்திலிருந்து ஜீவன்‌ விடுதலை பெறுகிறான்‌ என்பது, 
மஹத: பரம்‌- மஹானளைக்‌ காட்டிலும்‌ பெரியது என்பதால்‌ இது மூலப்ரக்ருதியே. 

விளக்கம்‌; இப்பகுதியிலேயே இரண்டு மந்தரங்கள்‌ உள்ளன. 
ஒன்று கூறுவது: அறிவு சாரதியாகவும்‌, மனம்‌ கடிவாளமாகவும்‌ கொள்ளும்‌ மனிதன்‌ உலக வாழ்க்‌கையை நீத்து 
விஷ்ணுவின்‌ பதத்தை அடைகிறான்‌ என்பது. 
மற்றது: எல்லாப்‌ பொருள்களிலும்‌ மறைந்‌துறையும்‌ இந்தப்‌ பரமாத்மா மேலான நுண்ணறிவினாலேயே காணப்பெறுகிறான்‌ என்பது, 
ஆதலால்‌ முமுஷு அறியத்‌ தக்கது மூலப்ரக்ருதி ஆகாது; 

தீர்வு : நூகேதஸ்‌ என்ற ரிஷி குமாரனுக்கு யமன்‌ ப்ரஹ்ம ஸ்வரூபத்தையும்‌, ஜீவ ஸ்வரூபத்தையும்‌, 
செய்ய வேண்டிய உபாஸனத்தையும்‌ உபதேசித்தான்‌. ஆத்மா இது என்று .விளக்க, இது சேர்வது 
“*“தத் விஷ்ணோ: பரமம்‌ பதம்‌” என்று உபாஸனத்தால்‌ பெறும்‌ விஷ்ணுவின்‌ பதமாகிய மோக்ஷம்‌ என்றும்‌ வெளியிட்டான்‌. 
இங்கு அவ்யக்தம்‌ என்ற சொல்லால்‌ மூல ப்ரக்ரூதி சொல்லவில்லை. 
4, 2. அஜா என்னும்‌ மந்த்ரம்‌. 

ச்வேதாச்வதர உபநிஷத்தில்‌ அஜாம்‌ என்று தொடங்கும்  மந்த்ரம்‌: சிவப்பு, வெளுப்பு, கறுப்பு என்ற நிறங்கள்‌ 
உடையதாய்‌, தன்னைப்‌ போன்ற ப்ரஜைகள்‌ பல உற்‌பத்தி செய்வதாய்‌, பிறப்பற்றதான ஒன்றோடு ஒருவன்‌ உகந்து கூடியிருக்கிறான்‌. 
அனுபவிக்கும்‌ இதைப்‌ பிறப்பற்ற மற்றொருவன்‌ விட்டுச்‌ செல்லுகிறான்‌.
ஸாங்க்‌: யரின்‌ கருத்து; அஜா (பிறப்பற்றது); என்பது மூலப்ரக்‌ரதி; பல பொருள்‌ இது உற்பத்தி செய்வதாகக்‌ கூறி யிருக்கிறது. 
ஆதலால்‌ ப்ரஹ்மாதீமகம்‌ அல்லாத ஸ்வ தந்த்ரமான ப்ரக்ருதியே காரணம்‌ என்பது விளங்கும்‌. 

மறுப்பு : அஜாம்‌ என்ற இம்மந்த்ரத்தில்‌ மூலப்ரக்ருதி' ப்ரஹ்மாத்மகம்‌ அன்று என்பது கூறப்பெறவில்லை... 
”பஹ்வீ; ப்ரஜா; ஸ்ருஜமாநாம்‌'' என்ற இடத்திலும்‌ மஹான்‌ முதலிய தத்வங்களை ப்ரக்ருதி படைக்‌கிறது என்பதே உள்ளது; 
ஸ்வதந்த்ரமாகப்‌ படைக்‌கிறது என்று கூறவில்லை. ஆதலால்‌ ப்ரம்ஹத்தின்‌ தொடர்பற்ற மூல பரக்ருதி ஸ்வதந்த்ரமாகப்‌ படைக்கிறது என்று 
ஏற்பதற்கில்லை.' 

தேர்வு: தைத்திரீயத்தில்‌ பரமாத்மா அணுவைக்‌ காட்‌டிலும்‌ அணு, பெரியதைக்‌ காட்டிலும்‌ பெரியவன்‌ என்று 
தொடங்கிக்‌ கடல்கள்‌, மலைகள்‌ இவனிடமிருந்து தோன்‌றின என்று கூறுகின்றது. இம்மந்த்ரங்களினிடையே 
**அஜாமேகாம்‌”'”' என்ற மந்த்ரமும்‌ அமைந்துள்ளது.. 
ஆதலால்‌ மூலப்ரக்ருதி பகவானை ஆத்மாவாகவும்‌ காரணமாகவும்‌ கொண்டது என்பது வெளிப்படை. 

சங்கை: பகவான்‌ இவ்வுலகைப்‌ படைத்தான்‌ என்ற வாக்கியத்தால்‌ மூலப்ரகிருதியைப்‌ படைத்தான்‌. 
என்பது தேறுகின்றது, “*“அஜாமேகாம்‌'' என்று மூல ப்ரக்ருதி பிறப்பற்றது என்று வந்துள்ளது. இவை எவ்வாறு பொருந்தும்‌? 

விளக்கம்‌ : ப்ரளய காலத்தில்‌ நாம ரூப மில்லாமல்‌: மூலப்ரக்ருதி என்ற அசேதனப்‌ பொருள்‌ பகவானுக்கு சரீரமாக உள்ளது. 
அப்போது மஹான்‌ முதவியன பரிணாமம்‌ பெறவில்லை. ஆதலால்‌ ௮ஜா எனப்படுகிறது. 
ஸ்ருஷ்டி காலத்தில்‌ அதே மூலப்ரக்ருதி தன்மாத்திரைகள்‌ இந்த்ரியங்கள்‌, ஐந்து பூதங்களாக நாம ரூபம்‌ பெறுகிறது. 
ப்ரளய காலத்தில்‌ சூர்யன்‌ உதய ௮ஸ்‌தமனங்கள்‌ பெறுவதில்லை; 
ஸ்ருஷ்டி காலத்தில்‌ கார்ய நிலையில்‌ ஸ்தூலமாகி தேவர்களுக்கு போக்யமான மது என்ற நிலையில்‌ இருக்கிறான்‌. 
இதேபோல்‌ மூலப்ரக்ருதிக்குப்‌ பிறப்பும்‌ பிறப்பற்ற நிலையும்‌. 

4, 3. தத்‌வங்கள்‌ இருபத்தைந்து. 

*“யஸ்மிந்‌ பஞ்ச பஞ்சஜநா : ஆகாசச்‌ ச ப்ரதிஷ்டித:-தமேவ மந்ய ஆத்மாநம்‌ வித்வாந்‌ ப்ரஹ்மாம்ருதோ? ம்‌ர௬ுதம்‌''--
ஐயைந்து தத்‌ வங்களும்‌ ஆகாசமும்‌ எந்த ஆத்மாவிடம்‌ நிலை நிற்கின்றனவோ, பெரியதாய்‌ அழிவற்றதாய்‌ விளங்கும்‌ 
அந்த ஆத்மாவை இவ்வாறு அறியும்‌ மனிதன்‌ முக்தி பெறுகிறான்‌ என்பது ஒரு மந்த்ரம்‌.. 
ஸாங்கயா்களது கருத்து; ஐயைந்து என்பது இருபத்‌தைத்து. இவை; (1) பூதங்கள்‌ ஐந்து, (4) தன்மாத்ரைகள்‌ ஐந்து, 
(3) ஜ்ஞானேந்த்ரியங்கள்‌ ஐந்து, (4) கர்மேந்தரியங்கள்‌ ஐந்து, (5) மீதி ஐந்து ப்ரக்ருதி மஹான்‌, அஹங்காரம்‌, மனம்‌, ஆத்மா. 
பூதங்கள்‌ ஐந்தில்‌: ஆகாசம்‌ சொல்லப்படவில்லை. இந்த மந்த்ரம்‌ ப்ரஹ்‌மத்தை ஆத்மாவாகக்‌ கொள்ளாத ஸாங்க்ய தத்வங்களைக்‌ கூறுகின்றது. 

மறுப்பு : ஸாங்க்யர்‌ ப்ரஹ்மாத்மகமில்லாத இருபத்‌தைந்து தத்வங்களை ஓத்துக்கொள்கின்றனர்‌. 
அஜாம்‌ என்ற மந்தரத்தில்‌ இனவ பரமாத்மாவை அண்டியுள்‌ளன என்று விளங்குகிறது. 
“*யஸ்மிந்‌ பஞ்ச பஞ்சஜநா:;:* என்ற இடத்தில்‌, ''யஸ்மிந்‌'* என்று குறிப்பிடும்‌ தத்வம்‌ ஒன்றும்‌, விட்டுப்போன ஆகாசமும்‌ சேர்ந்து 
இருபத்‌தேழ தத்‌வங்கள்‌ என்பது தேறுகிறது. இது ஸாங்க்யர்‌களது கொள்கைக்குப்‌ புறம்பானது, 
ஆதலால்‌ ''பஞ்ச பஞ்சஜநா:'' என்பதன்‌ பொருள்‌ பஞ்ச ஜநங்கள்‌ என்ற பேருடைய ஐந்து பொருள்கள்‌ என்பதே தகும்‌. 
மெய்‌, வாய்‌, கண்‌, மூக்கு, செவி ஆகிய ஐந்துமே பஞ்சஜநங்கள்‌' எனப்‌ பெறுகின்றன, 
இவை பகவானால்‌ ஸத்தைப்‌ பெறுவனவாக விவரம்‌ பெறுவதால்‌, 
4, 4, ஐகத்துக்குக்‌ காரணம்‌. 

*ஸதேவஸோம்யே தமக்ரஆஸீத்‌'*, **அஸதேதவ இத்‌ மக்ர ஆஸித்‌'',*அஸத்வா இதமக்ர ஆஸீத்‌''என்ற வாக்கியங்கள்‌ வெளியிடுவது: 
ஜகத்‌ காரணமானது ஸத்‌ (நித்யமான இயல்புடையது); முதலில்‌ இது அஸத்தாகவே இருந்தது. ஆதலால்‌ ஐகத்‌ காரணம்‌ பரிணாமமுடையது- 
*-*தத்தேதேதம்‌ தர்ஹ்யவ்யாக்குத மாஸீத்‌'' அப்படிப்பட்ட இது அவ்யாக்ருதமாக இருந்தது என்றுள்ளது. 
அவ்யாக்‌ ருதம்‌: நாமரூபம்‌ என்ற லக்ஷணம்‌ கொள்ளாதது. அவ்‌ யாக்ருதம்‌ என்பது யாவரும்‌ அறிந்த ப்ரக்ருதியின்‌ பெயராகும்‌. 
நித்யமாயிருக்கும்‌ தன்மையும்‌ பரிணாமமுடைய தாக (அஸத்தாக) இருப்பதும்‌ பகவானிடம்‌ சேர்ந்‌திருக்க முடியாது. 
ஆதலால்‌ நித்யமான இயல்புடையதாயும்‌, படைப்பின்போது பரிணாமத்தை உடையதுமான மூலப்ரக்ருதயே ஜகத்‌ காரணமாகக்‌ கொள்ள 
வேண்டும்‌. அவ்யாக்ருதம்‌ என்று ப்ரஸித்து பெற்றது மூலப்ரக்ருதியே. இது ஸாங்கீயர்‌ கருத்து. 

மறுப்பு: தைத்திரீயத்தில்‌ வருவது: பகவான்‌, '*ஸத்‌யம்‌ ஜ்ஞானம்‌ அநந்தம்‌ ப்ரஹ்ம” என்றவாறு வேறுபாடில்லாதவன்‌; 
தானே ப்ரகாசிப்பவன்‌; தேச கால வஸ்துக்களாலே அளவுபடாதவன்‌ என்பதும்‌, ஸர்வஜ்ஞனான ப்ரஹ்மத்தோடே கூடி முக்தன்‌ அனுபவிக்‌கிறான்‌ என்பதும்‌. 
இதற்கு மேல்‌ இந்தப்‌ பரமாத்மாவிடமிருந்து ஆகாசம்‌ உண்டாயிற்று என்று கூறி அதையே அஸத்‌ என்று குறிப்பிட்டது. 
இந்த ஜகத்‌ காரணப்‌ பொருளையே ஸத்‌ என்றும்‌ அஸத்‌ என்றும்‌ விவரித்தது- 
7*ஐந்மாத்யஸ்ய யத:*” என்றும்‌ அறிவோம்‌. பகவான்‌ ஆகாசம்‌ முதலான யாவற்றிற்கும்‌ காரணமாக வேதங்கள்‌ முழக்குகின்றன. 
ஆதலால்‌ இவனே ஜகத் ஏக காரணம்‌ அன்று தேறுகின்றது. 

தீர்வு: அஸத்‌ என்று தைத்திரீயத்தில்‌ வந்துள்ள சொல்லுக்குப்‌ பொருளாக ப்ருஹதாரண்யத்தில்‌ அவ்‌யாக்ருதம்‌ என்பது காண்கிறோம்‌. 
““ஸ ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆநகாக்ரேப்ய்‌:'” அப்படிப்பட்டவனே நகத்தின் நுனி முதல்‌ முழுவதும்‌ வியாபிகிறான்‌. 
அஸத்‌ என்‌றும்‌, அவ்யாக்ருதம்‌ என்றும்‌ நாமருபமில்லாத மூலப்ரக்‌ருதியை சரீரமாகக்‌ கொண்ட பகவானையே இங்குக்‌ கூறு 
வதா்கக்‌ கொள்ளவேண்டும்‌. மூலப்ரக்ருதி ஐகத்‌ காரணமாவதற்கு ஆதாரம்‌ ஒன்றுமில்லை, 
4. 5. ஐகத்‌ கர்த்தா. 

கெளஷீதச என்ற உபநிஷத்தில்‌ உபதேசிக்கப்‌ படுவது: “*“யோவை பாலாகே! ஏதேஷாம்‌ புருஷாணாம்‌ 
கர்த்தா, யஸ்ய வை தத்‌ கர்ம ஸலவை வேதிதவ்ய:.- 
பாலகியே! இப்புருஷர்களுக்கு எவன்‌ கர்த்தாவோ, எவனுக்கு இந்தப் புண்ய பாப கர்மம்‌ உள்ளதோ அவனே 
அறியத்‌ தக்கவன்‌ என்பது. கர்ம ஸம்பந்தம்‌ கூறப்படுவதால்‌, கர்மத்தின்‌ மூலம்‌ இவ்வுலகுக்குக்‌ காரணமாக 
இருக்கும்‌ ஜீவனே குறிப்பு. அவனால்‌ அதிஷ்டிக்கப்பட்ட ப்ரதானமே ஜகத்‌ காரணம்‌. இது ஸாங்க்‌ய மதம்‌. 

மறுப்பு : இப்பகுதியில்‌ தொடக்கத்திலிருந்தே ப்ரஹ்‌ மத்தைப்‌ பற்றியே உபதேசம்‌. 
பாலாக, “*ஆதித்யன்‌ முதலானோர்‌ ஜகத்‌ காரணம்‌''என்றான்‌.இதற்கு அஜாத சத்ரு கூறியது: 
பாலாகியே! எவன்‌ ஆதித்யன்‌ முதலான கர்ம ஸம்பந்தமுள்ள புருஷார்களைப்‌ படைக்கிறானோ, 
எவனுக்கு இவ்வுலகம்‌ முழுதும்‌ கார்யமோ அவனே அறியத் தக்கவன்‌ என்பது, 
ஆதலால்‌ இவ்விடத்தில்‌ கர்ம ஸம்பந்தம்‌ குறிப்பன்று, “*க்ரியதே இதி கர்ம'”- செய்யப்‌ படுவது; 
இது உலகம்‌. ஜீவனது கர்மம்‌ ஜகத்‌ ஸ்ருஷ்டிக்‌குக்‌ காரணம்‌ என்பது ஏற்பதற்கான கருத்தன்று. 
ஆகையால்‌ இவ்வுலகம்‌ தனது காரியப்‌ பொருள்‌ என விளங்கும்‌ 
நாராயணனே அறியத் தக்கவன்‌ என்பது தேறுகின்றது.. 

அஜாதசத்ரு பாலாகிக்கு உபதேசஞ்‌ செய்வதற்‌தாகத்‌ தூங்கும்‌ ஒருவனிடம்‌ அழைத்துச்‌ சென்றான்‌. 
அவனைப்‌ பலவாகப்‌ பேர்‌ சொல்லி அழைத்தும்‌ அவன்‌ எழுந்திருக்கவில்லை. 
அவனைத்‌ தடியால்‌ அடித்து எழுந்திருக்கச்‌ செய்தான்‌, அஜாதசத்ரு பாலாகியை மூன்று கேள்விகள்‌ கேட்டான்‌; 
ஜீவன்‌ கனவு காணும்போது எங்‌கிருக்கிறான்‌? தூங்கும்போது எங்கிருக்கிறான்‌? விழிக்‌கும்போது எங்கிருக்கறான்‌? 
பாலாகி விடை சொல்ல வில்லை. ஆதலால்‌ அஜாதசத்ரு வெளியிட்ட விடை: 

முதற்‌ கேள்விக்கு விடை : நாடிகளில்‌ இருக்கிறான்‌7 
இரண்டாவதற்கு விடை; ப்ராண சரீரமான ப்ரஹ்மத்‌தில்‌ இருக்கிறான்‌; 
மூன்றாவதற்கு விடை: ப்ரஹ்மத்தி லிருந்து கிளம்புகிறான்‌. 

ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறுபட்ட பகவாளைப்‌ பற்றி அறிவிப்பதற்காகவே இந்தக்‌ கேள்விகள்‌ கேட்கப்‌ பட்டன. 
வேறொரு சாகையில்‌ இதே போன்ற கேள்‌விக்கு விடையாக வந்துள்ளது: 
தூங்குகிறவன்‌ தனது இதயத்திலுள்ள ஆகாச மென்னும்‌ பரமாத்மாவிடம்‌ படுத்திருக்கிறான்‌ என்பது. 
ஆதலால்‌ தூங்கும்‌ நிலையில்‌ ஆதாரமாக இருப்பவன்‌ பகவானே என்பது வெளிப்‌படை. 
இன்னும்‌ பல இடங்களில்‌ ஆகாச சப்தம்‌ பரமாத்‌மாவைக்‌ குறிக்கின்றது. 
ஆதலால்‌ இங்கு ஜீவளைப்‌ பற்றி வெளியிட்டிருப்பது இவனிலும்‌ வேறுபட்ட பரமாத்‌மாவை அறிவிப்பதற்காகவே, 
இவ்வாறு இப்பகுதி முழுதும்‌ ஆராய்ந்தால்‌, பரமாத்மாவே அறியத்‌ தக்கவனாகவும்‌, 
ஜகத்‌ காரணமாகவும்‌ கூறப்படுகிறான்‌ என்பது தேறுகிறது. 
புருஷன்‌ எனப்பெறும்‌ ஜீவன்‌ அறியத்‌ தக்கவன்‌ என்றும்‌, இவனால்‌ அதிஷ்டிக்கப்பட்ட ப்ரதானம்‌ ஜகத்‌ காரணம்‌ என்றும்‌ சொல்லவில்லை.
 
4. 6. த்ரஷ்டவ்ய:--யார்‌? 
ஜீவன்‌ ப்ரதானத்தோடு இணைந்து ஜகத்‌ காரணமாகமாட்டான்‌ என்பது விவரம்‌ பெறுகின்றது. 

“ஆத்மாவா அரே த்ரஷ்டவ்ய: சீரோதவ்ய: மந்த வய:--இந்த ஆத்மா காணத்‌ தக்கது, கேட்கத்‌ தக்கது, 
நினைக்கத்‌ தக்கது. நேரில்‌ காண்பது போல்‌ த்யானஞ்‌ செய்யத்‌ தக்கது என்ற வாக்கியத்தில்‌ ஆத்மா என்பது ஜிவன்‌. 
இந்தப்‌' புருஷனோடு கூடிய மூலப்ரக்ருதியே ஜகத்‌ காரணம்‌. இது ஸாங்க்யரது மதம்‌.  

இவர்கள்‌ அளிக்கும்‌ விவரம்‌: இதே பகுதியில்‌ முதலில்‌ வருவது: பதியின்‌ காமத்திற்குப்‌ பதி ப்ரியனாவதில்லை, 
ஆத்மாவின்‌ காமத்திற்காகவே ப்ரியனாகிறான்‌ என்று தொடங்கி, பதி என்ற இடத்தில்‌ மனைவி, புத்ரர்‌, 
பொருள்‌, பசுக்கள்‌, ப்ராஹ்மணார்‌, க்ஷத்ரியர்‌, லோகங்கள்‌, தேவர்கள்‌, வேதங்கள்‌, பூதங்கள்‌, ஸர்வம்‌ என்று 
விவரித்த பின்பு ''ஆத்மாவா அரே'' என்று வந்துள்ளது. 
இப்பகுதியில்‌ முழுதும்‌ ஜீவனைப்‌ பற்றியே; பகவானைப்‌ பற்றி அன்று. ஆத்மா ஒருவனைப்‌ பற்றியதாயினும்‌ 
இது ஜீவ சமூகம்‌ என்பது தேறும்‌. ஒரு புருஷனே சொல்‌லப்படுவதால்‌ இவனோடு கூடிய மூலப்ரக்ருதியே ஜகத்‌ 
காரணம்‌ என்பது தேதறும்‌. 

மறுப்பு : பதி முதலானோரார்‌ தங்கள்‌ தங்கள்‌ விருப்‌பம்‌ நிறை வேறும் பொருட்டு இனியவார்கள்‌ ஆவதில்லை. 
ஆத்மாவின்‌ விருப்பத்தின்‌ பொருட்டே என்று கூறியிருப்‌பதால்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறுபட்ட பரமாத்மாவைப்‌ பற்றியே கூறப்படுகிறது. 
மோக்ஷ உபாயத்தைப்‌ பற்றியதே இப்பகுதி. ஆகையாலே இங்குச்‌ சொல்லப்‌படுவது பகாவானே காணத்தக்கவன்‌ என்று. 

4, 7, பகவான்‌ உபாதான காரணம்‌, 

பகவான்‌ உலகுக்கு நிமித்த காரணமே ஆவான்‌; உபாதான காரணமாக முடியாது என்பது ஒரு கருத்து, 
இது ஸேச்வர ஸாங்க்யர்‌ மதக்‌ கொள்கை. 

இதற்கு விளக்கம்‌ : உலகில்‌ காண்பது, குடம்‌ முதலியவற்றிற்கு மண்‌ முதலியன உபாதான காரணம்‌, 
குலாலன்‌ முதலானோர்‌ நிமித்த காரணம்‌. நிமித்த காரணமும்‌ உபாதான காரணமும்‌ வேறுபட்டவை. 

“அஸ்மாந்‌ மாயி ஸ்ருலதே விச்வமேதத்‌''--இந்த ப்ரக்ருதியைக்‌ கொண்டே மாயப்பிரான்‌ இவ்வுலகைப்‌ 
படைக்கிறான்‌ என்பது போன்ற வாக்கியங்களில்‌ உபாதானமாகும்‌ மூலப்ரக்ருதிக்கும்‌ நிமித்த காரணமான 
பகவானுக்கும்‌ வேறுபாடு சொல்லப்படுகிறது. ப்ரஹ்மமே விகார மடைந்து உலகுக்கு உபாதான காரணமாகிறது: 
என்பதிற்கில்லை? ஏனெனில்‌ ப்ரஹ்மம்‌ விகாரமற்றது என்பதால்‌. 
ஆதலால்‌ மூல ப்ரக்ருதியே உபாகான காரணம்‌ என்பதே பொருந்தும்‌. 

மறுப்பு: ப்ரஹ்மம்‌ ஒன்றை அறிந்தால்‌ எல்லாவற்‌றையும்‌ அறிந்ததாகும்‌ என்பது வேத வாக்கியம்‌. 
உதாரணமாக: மண்‌ கட்டியை அறிந்தால்‌, மண்ணாலான பானைகள்‌ யாவற்றையும்‌ அறிந்ததாகும்‌. 
இதனால்‌ தேர்வது: சட்டி பானைகளுக்கு மண்‌ உபாதான காரணமாவது போல்‌ பகவானும்‌ உலகுக்கு உபாதான காரணம்‌ - என்பது. 
பகவான்‌ விசித்திரமான சக்தி வாய்ந்தவன்‌ -இவனது சக்தி போல்‌ வேறு எங்கும்‌ காணமுடியாது. 
ஆதலால்‌ இவன்‌ நிமித்த காரணமும்‌ உபாதான காரணமுமாவான்‌. 
ப்ரளயத்தின்போது இவன்‌ நுண்ணிய சேதன அசேதனங்களைச்‌ சரீரமாகவுடையவன்‌; 
படைப்‌பின்போது இவனே ஸ்தால சேதன அசேதனங்களாகிறான்‌. 
உபாதான காரணமானால்‌ சேதன அசேதனங்‌களின்‌ தோஷம்‌ இவனிடம்‌ சேருமே என்பதில்லை. 
இதனாலேதான்‌ இவன்‌ ''மாயீ'' எனப்‌ பெறுகிறான்‌. 

தேர்வு: நான்‌ பலவாகக்‌ கடவேன்‌ என்று பகவான்‌ ஸங்கல்பித்ததாலே இவனே உபாதான காரணம்‌, நிமித்த காரணமும்‌. 

தேர்வு 2: யஜுர்‌ வேதத்தில்‌  வாக்கியங்கள்‌? 
**புவாநாநி தாரயந்‌''. நிமித்த காரணம்‌, ''ப்ரஹ்ம ஸவ்‌ ருக்க ஆஸீத்‌ - உபாதான காரணம்‌. 
ஆகையால்‌ பகவான்‌ இருவகைக்‌ காரணமுமாவான்‌. 

தேர்வு 3: ஓர்‌ உபநிஷத்‌ வாக்கியம்‌: . சிலந்தி தான்‌ வெளியிடும்‌ நூலைத்‌ தானே இழுத்துக்‌ கொள்கிறது? 
பூமியிலிருந்து பலவகைப்‌ பயிர்கள்‌ உண்டாகின்றன: 
உயிருடனிருக்கும்‌ புருஷனிடம்‌ உரோமங்கள்‌ உண்டாகின்றன; இதுபோல்‌ பரம்பொருளிடமிருத்து ' உலக மனைத்தும்‌ உண்டாகின்றது. 
ஆதலால்‌ பகவான்‌ நிமித்த காரணமும்‌ உபாதான காரணமுமாவான்‌ என்று நிர்ணயிக்கப்படுகிறது. 
4.8. இதர தேவதைகள்‌ காரணமாக முடியாது. 

சிவனே ஜகத்‌ காரணம்‌ என்பது ஒரு கருத்து.இதற்கு ஆதாரங்கள்‌: (1) ச்வேதாச்வதரோபநிஷத்தில்‌, “*யதா 
தமஸ்‌ தந்‌ ந திவா ந ராத்ரி” என்ற ஸ்லோகத்தின்‌ கருத்து: எப்போது தமஸ்‌ மாத்திரம்‌ இருந்தது, பகல்‌, 
இரவு, ஸத்‌, அஸத்‌ ஒன்றுமில்லையோ, சிவன்‌ மட்டும்‌ இருந்தானோ அந்தப்‌ பரவஸ்துவே அழிவில்லாதது. 
(2) முதலில்‌ தமஸ்‌ ஒன்றே இருந்தது; அப்போது ஸத்து மில்லை, அஸத்து மில்லை; தமஸ்ஸைச்‌ சரீரமாசுக்‌ 
கொண்ட ப்ரஜாபதி ஒருவரே இருந்தார்‌. இங்கு ப்ரஜாபதி என்பது சிவனைக்‌ குறிக்கின்றது. 
இவற்றில்‌ சிவனே ஆகத்‌ காரணமாகக்‌ கூறப்படுகின்றான்‌. 

மறுப்பு : வேத வாக்கியங்கள்‌ பல நாராயணனே காரணம்‌ என்று முழக்குகின்றன. “ஸத்‌: என்பதன்‌ கருத்து வெளிப்படையாகச்‌ சொல்லவில்லை. 
இதை விளக்கும்‌ வாக்கியங்கள்‌; ஏகோஹவை நாராயண ஆஸீத், ந ப்ரஹ்மா, ந ஈசாத:- நாராயணன்‌ ஒருவனே முதலில்‌ இருந்தான்‌; 
'ப்ரஹ்மாவும்‌ இல்லை, சிவனுமில்லை; ,நாராயணன்‌ மனத்தால்‌ ஸங்கல்பித்தான்‌; 
'நாராயணமிட மிருந்து தோன்றிய அண்டத்தில் பிரமன்‌ பிறந்தான்‌; 
அவனிடம் இருந்து மூன்று கண்கள்‌ உடையவனும்‌, சூலம்‌ கையில்‌ ஏந்தியவனுமான புருஷன்‌ உண்டானான்‌,
நாராயணமிட மிருந்து எல்லாம்‌ உண்டாகின்றன; இவனிடமே எல்லாம்‌ லயிக்கின்றன. அதலால்‌ சிவன்‌ காரணமாக மாட்டான்‌. 

தேர்வு : உபநிஷத்துக்களில்‌ வந்துள்ள கருத்துக்கள்‌: 
(1) பரப்ரஹ்மம்‌ ஒன்றே ஈஸ்வரர்‌ பலர்‌ இருக்க முடியாது . நாராயணன்‌ படைப்பவன்‌; சிவன்‌ முதலோர்‌ படைக்கப்‌ பட்டவர் .
(2) உபதிஷத்துக்களில்‌ ஹரி, விஷ்ணு,அச்யுதன், புருஷன்‌, மஹாபுருஷன்‌, சிவன்‌, சம்பு, ,குத்ரன்‌ போன்ற ,சொற்கள்‌ வருகின்றன. 
ஐகத்‌ காரணமசக வரும்‌ இடங்களில்‌ சிவன்‌, ருத்ரன்‌ போன்ற பதங்கள்‌  நரராயணனாகக்‌ கொள்ள வேண்டும்‌. 
காரணத்வம்‌ நாராயணனுச்கே யாவதால்‌. 
(4) நாராயணன்‌ என்று சப்தம்‌ சிவனுக்குச்‌ சேராது என்பது பாணினி ஸூத்ரத்‌தால்‌ வெளிப்படை. 
நாராயணனைப்‌ பற்‌றிய திரு நாமங்கள் விஷ்ணுவையே சார்வன; வேறு தெய்வங்களைச்‌ சாரா; 
இவனுக்கே  என்று வாமன புராணம்‌ வெளியிட்டுள்ளது. 

சாச்வதம்‌ சிவம்‌ அச்யுதம்‌, ஸர்வ: சர்வ; சிவ: ஸ்தாணு:, அக்ஷரம்‌ பரமம்‌ ப்ரபும்‌, ஸூர்ய மண்டலத்‌தில்‌ உறைபவன்‌, 
**தத்‌ ஸவிதுர்‌ வரேண்யம்‌” என்து பாராட்டப்‌ பெறுவோன்‌ ஸ்ரீமந்‌ நாராயணனே. 
ஆதலால்‌ நிச்சயிப்பது பகவான்‌ நாராயணனே யாவகைக்‌ காரணமும்‌, மற்றைய தேவர்கள்‌ அல்லர்‌ என்பதே. 

அவ்யக்தம்‌ என்ற சொல்லால்‌ குறிப்பது சரீரம்‌. ஆதலால்‌ ஜகத்துக்கு மூலப்ரக்ருதி காரணமன்று. 
அஜா சப்தத்தாற்‌ சொல்லப்படுவது, ப்ரஹ்மம்‌ அத்தர்யாமியாகவுள்ள மூலப்ரக்குதி, இந்த்ரியங்கள்‌, ஆகாசம் 
முதலியவை  பகவானை அந்தார்யாமியாகக்‌ 'கொண்ட ப்ரஹ்மம்‌ ஒன்றையே காரணமாக வேத வாக்யங்கள்‌ கூறுகின்றன. 
இவனே அடையத்‌ தக்கவனாகவும்‌ கூறப் படுகிறான்‌, காணத்‌ தக்கவனாகவும்‌ கூறப் படுகிறான்‌ .. 

பகவான்‌ உவகுக்கு நிமித்த காரணமாகவும் மட்டும் இன்றி உபாதான காரணமுமாகிறான்‌. 
உலகுக்குக்‌ காரணம்‌, ஆனவனே உபாசிக்கப்படுமவனும் ஆவான் 
எனவே உபாசிக்கப்படும் தெய்வம் நாராயணனே -வேறு தெய்வமில்லை.
முதற்‌ பாதத்தில்‌ சொல்லிய காரணத்வம்‌ முதலியன நாராயணனுக்கே, வேறு எதற்குமில்லை என்று நிலை நிறுத்துவது நாலாம்‌ பாதம்‌.
------------------------
இரண்டாம்‌ அத்யாயம்‌ 

முதல்‌ அத்யாயத்தில்‌ பகவானது மேன்மை விவரிக்கப் பட்டது. இவன்‌ சேதன அசேதனங்களைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌; 
உலகுக்குக்‌ காரணம்‌; சக்தி வாய்ந்தவன் ; ஆனந்த மயன்‌. 
இவனே மூவகைக்‌ காரணங்களும்‌  ஆவான்‌ என்பது இரண்டாம்‌ அத்யாயத்தில்‌ ஸ்தாபிக்கப்படுகிறது . 
முதற்‌ பாதத்தில்‌ இதற்கு மாறுபடக்‌ கூறும்‌ கருத்‌துக்களை ஆராய்ந்து வ்யாஸர்‌ இவற்றை ஸ்தாபிக்கப்படுகிறார்‌. 
தர்க்கமே ஆதாரமாக, பகவான்‌ ஜகத்‌ காரண மில்லை என்ற பிற மதத்தினரது கொள்கைகளை வெளியிட்டு 
நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதற்கு இல்லை என்கிறார்  இந்தப்‌ பாதத்தில்‌. 
மூன்றாம்‌ பாதத்தில்‌ சேதன அசேதனங்கள்‌ பசுவானின்‌ கார்யம்‌ என்றும்‌, 
நாலம்‌  பாதத்தில்‌ ஜீவனுக்கு உபகரணங்களான ப்ராணன்‌,இந்திரியங்கள் யாவையும் பகவானால் படைக்கப்பட்டவை 
என்றும்‌ தெள்ளத்‌ தெளிவாக விளக்குகிறார்‌ வ்யாஸ பகவான்‌. .   

1. முதற்‌ பாதம்‌ 
உபாதான காரணம்‌". 

உலகுக்குக்‌ '' காரணம்‌' மூலப்ரக்ருதியே'. அதாவது ப்ரதானமே என்பது ஸாங்க்யர்களது கொள்கை, 
இதற்கு ஆதாரமாக இவர்கள்‌ கபில ஸ்ம்ருதி, யோக ஸ்ம்ருதி இவற்றையும்‌ தர்க்க வகைகளையும்‌ பயன்படுத்தி வாதஞ்‌ செய்கின்றனர்‌: 
இக்‌. கொள்கையை எதிர்த்து பகவானே மூவகைக்‌ காரணம்‌' என்பதை வ்யாஸர்‌ நிலைநிறுத்துகிறார்‌.. 
இந்தப்‌ பாதம்‌ ஸ்ம்ருதி பாதம்‌ எனப்பெறும்‌. 
(1) கபிலர்‌: உபநிஷத்துக்களால்‌ புகழப்‌ பெற்றவர்‌” ஆப்தர்‌. இவரது ஸ்ம்ருதி ஜகத்‌ காரணப்‌ பொருளைப்‌ பற்றியே விளக்குகின்றது. 
இவர்‌ ப்ரதானமே ஜகத்‌ காரணம்‌ என்று அறுதியிட்டுள்ளார்‌. சதுர்முகன்‌ வேதங்களை ஓதி, யரவர்க்கும்‌ ஓதுவித்த தனிப்‌ பெருமை 
வாய்ந்தவன்‌; இவன்‌ வெளியிட்ட யோக ஸ்ம்ருதி ப்ரதானமே ஜகத்‌ காரணம்‌ என்று கூறுகின்றது. 
ஆதலால்‌ பகவான்‌ உலகங்களுக்கு உபாதான காரணமாக மாட்‌டான்‌ என்கின்‌றனர்‌ ஸாங்கீயர்‌. 

மறுப்பு : மனு, வ்யாளர்‌ போன்றவர்கள்‌ பலர்‌ வேதாந்த வல்லுநர்‌, புகம்‌ பெற்றவர்கள்‌. இவர்களது கருத்து: 
பகவானே உபாதான காரணம்‌ என்பது? இதையே தான்‌ ஆதரிக்கவேண்டும்‌. இவர்கள்‌ வேதக்‌ கருத்‌துக்களை உள்ளபடி உரைப்பவர்கள்‌ என்றும்‌, 
இவர்களது வார்த்தைகள்‌ சிறப்புடையன என்றும்‌ வெளியிடப்‌ பெற்‌றுள்ளது. 

சதுர்முகன்‌ எப்போதும்‌ ஸத்வ குணம்‌ வாய்ந்தவனல்லன்‌;கல்பங்களில்‌ ராஜஸ தாமஸ குணங்கள்‌ மேலிடப்‌ பெற்றவன்‌. 
ஆதலால்‌ இவன்‌ வெளியிட்ட யோக ஸ்ம்ருதியின்‌ கருத்து மதி மயக்கத்தாலேயே வேதக்‌ கருத்துக்கு விபரீதம்‌. 
ஆதலால்‌ இவரது கருத்து அங்கீகரிப்பதற்‌கில்லை, 

(2) 'தர்க்கம்‌ (வாக்குவாத முறை) 
" பகவான்‌ ஆனந்தமயன்‌, பேரறிவாளன்‌, இன்ப துன்பங்கள் இல்லாதவன்‌. இந்த நிலைக்கு மாறுபட்டது உலகின்‌ நிலை. 
இவன்‌ உலகுக்கு உபாதான காரணம்‌ ஆனால்  இந்தக்‌ குறைகள்‌ இவனிடம்‌ இருக்க வேண்டும்‌, 
காரியமான பானையும்‌ காரணமான்‌ மண்ணும்‌! மண்‌ணுருவாக இருப்பது போல்‌. 
ஆதலால்‌ பகவான்‌. உபாதான காரணமாக மாட்டான்‌ என்பது ஒரு கருத்து. ,. 

மறுப்பு : சாஸ்த்ரங்களின்‌ மூலம்‌ தெளிவது: காரண நிலையில்‌ சேதன அசேதனங்கள்‌ பகவானோடு ஒன்றி விடுகின்றன; 
இது நுண்ணிய நிலை. பின்பு படைப்பின்‌ போது இவை ஸ்தூல நிலையில்‌ நாம ரூபங்கள்‌ பெறுகின்‌றன. 
இவ்விரண்டு நிலைகளிலும்‌ வேறுபாடு இல்வை. 
மனிதனுக்குப்‌ பிள்ளைமை, இளமை, முதுமை என்ற  நிலைகள்‌ போல்‌  இவ்விரண்டு நிலைகளும்‌. ஆத்லால்‌ இந்த தர்க்கம்‌ நிலை நிற்காது. 

(3) பிற மதத்தினரது முடிவு. 
வெறும்‌ தர்க்கத்தையே கொண்டு. வாதஞ்‌ செய்‌வோர்‌ பலர்‌, 
அணுகாரண வாதிகள்‌ கணாதருடைய வைசேஷிக மதம்‌, அஷய பாதருடைய நையாயிக மதம்‌:  சமண மதம்‌, 
பரமசிவன்‌ வெளியிட்ட சைவ மதம்‌ இவை ஒரே கருத்தை வெளியிட்டுள்ளன ப்ரதானமே உலகுக்குக்‌ காரணம்‌ என்று. 
இவை பல: ஓரே கருத்தைச்‌ சொல்லுவதால்‌ இக்கருத்தையே ஏற்றுக்‌ கொள்ள வேண்டும்‌. 
ஆதலால்‌ பகவான்‌: .  உபாதன காரணமல்லன்‌ என்கின்றனர்‌ ஸாங்கியர்‌. 

மறுப்பு : இம்மதங்களை வெளியிட்டவர்களது தர்க்‌கம்‌ ஒருவகைப்‌ பட்டதன்று; ஏற்றவாறு இயங்கவில்லை? 
இவர்கள்‌ பரமாணுக்களைப்‌ பற்றி ஆராயவில்லை.  சிலர்‌ இவை சூன்யம்‌ என்‌கின்றனர்‌; 
ஒரே நிலையில்லாமல்‌ இக்‌ கீழே விழுவோரது கருத்துக்களை ஏற்பது எவ்வாறு இயலும்‌? 
உலகைச்‌ சரீரமாக பகவான்‌ கொண்டுள்ளான்‌ என்று சாஸ்த்ரங்கள்‌ மூலம்‌ கூறுகின்றனர்‌;. 
இவ்வாறு கருதினால்‌' சரீரத்தில்‌ இருக்கும்‌ அவனைப்‌ போவவே பகவானும்‌ இன்ப துன்பங்களை அனுபவிக்க நேரிடும்‌, 
இதனால்‌ ஜீவனுக்கும்‌ பகவ௱னுக்‌கும்‌ வாசி ஒன்றுமில்லை-இந்த தோஷத்தால்‌ ப்ரஹ்ம காரண வாதம்‌ சரியன்‌று என்றனர்‌ ஸாங்க்யர்‌. 

மறுப்பு : ஜீவன்‌ இன்ப துன்பங்களை அனுபவிப்பது சரீரத்தோடு  இருப்பதால்‌ மாத்திரம்‌ அன்று; 
முக்‌யமாகாகக்‌ கர்‌மத்தாலேயே. ஜீவன்‌ முக்தனான பின்‌, விருப்‌பப்‌படி சரீரங்கள்‌ ஏற்றுக்கொண்டு பரமாத்மாவை அனுபவிக்கிறான் ; 
உண்பது, விளையாடுவது, இன்புறுவது போன்ற போகங்களையும்‌ பரமாத்மாவிடமே பெறுகிறான்‌. 
சாதாரண முக்தனுக்கே இப்பெருமை எனின்‌, பகவானது பெருமையைச்‌ சொல்லவேண்டுமோ? 
பகவானுக்கு ஜீவர்கள்‌ சரீரமாக இருப்பதால்‌ ஜீவர்கள்‌! ஸந்தோஷம்  இவனுக்கு நேராது, 
ஆதலால்‌ இவனுக்கும்‌ ஜீவனுக்கும்‌   வாசி யில்லை என்பது தகாது. 
அரசனது ஆணைப்படி இன்புறுகின்றனர்‌; மாறி நடப்‌பவர்‌ தண்டனை பெறுகின்றனர்‌. இத்த ஆணையால் 
அரசனுக்கு இன்ப துன்பங்கள்‌ இல, இதுபோல்‌ பகவான்‌ உலகை நியமிப்பவன் ; 
உலக அனுபவங்கள்‌ இவனைக் கிட்டாதே , இவன்‌ எவராலும் நிய மிக்கப்படாதவன்‌;
இன்ப துன்பங்கள்‌ இல்லாதவன்‌, ஆதலால்‌ இவன்‌ உபாதான காரணமாவதற்கு ஆஷேபம்‌ எதுவுமில்லை. 

(5) தர்க்க வாதம்‌ ஒன்று. 
உலகில்‌ காரணப்‌ பொருளுக்கும்‌ காரியப்‌ பொருளுக்‌கும்‌ காரணமான மண்ணுக்கும்‌ வேறுபாடுகள்‌ உள்ளன. 
காரணமான மண்ணுக்கும்‌ காரியமான குடத்திற்கும்‌ வேறுபாடுகள்‌ உள: நிலையால்‌ (மண்‌, குடம்‌), 
பெயரால்‌, வடிவால்‌, பயனால்‌ (குடம்‌ செய்ய, நீர்‌ முகக்க]). 
இதுபோல்‌ காரணமான பகவானுக்கும்‌ காரியமான உலகுக்கும்‌ மாறுபாடுகள்‌ உள்ளன. 
ஆதலால்‌ பகவானை உபாதான காரணமாகக்‌ கொள்ள இயலாது. இதுவும்‌ சாங்க்யர்களது  கருத்து. 

மறுப்பு : '*வாசாரம்பணம்‌'' என்ற உபநிஷத்‌ வாக்கியத்தில்‌ இதே கருத்து வந்துள்ளது, 
இவ் விடத்தில்‌**ம்ருத்திகா இதி ஏவ ஸத்யம்‌'”-- காரியமான குடம்‌ மண்‌ என்பதே உண்மை என்று காண்கிறோம்‌. 
ஆதலால்‌, மண்‌, குடம்‌ இவற்றிற்கு வேற்றுமை காண்பதற்கில்லை. 
அன்றியும்‌, *-இவ் வுலகம்‌ ஸத்‌ என்ற ப்ரஹ்மமாகவே இருந்தது'* என்பது போன்ற வாக்கியங்கள்‌ வெளியிடும் கருத்து? 
காரணமான மண்ணும்‌ காரியமான குடமும்‌ மண்ணாக விளங்குவதுபோல்‌, 
காரணமான பகவானே காரியமான உலகமாக இலங்குகிறான்‌ என்று. 
மண்ணுக்கும்‌ குடத்துக்கும் வேறுபாடுகள்‌ நிலையினாலேயே. 
ஓரே மனிதன்‌ குழந்தை , இளைஞன்‌, கிழவன்‌ போன்ற நிலைகளை அடைகிறான்‌. இதுபோலே இங்கும்‌ கொள்ளவேண்டும்‌. 
இது போல்‌ பகவானின்‌ நிலையும்‌ ஆய்ந்து அறியலாம்‌. 
நாம ரூபங்கள்‌ இல்லாமல்‌ ஸூஷ்ம நிலையிலுள்ள சேதன அசேதனங்களைச்‌ சரீரமாகக்‌ கொண்டிருப்பதே காரண நிலை; 
படைப்பித்குப்‌ பின்‌ ஸ்‌தூல 'நிலையில்‌ நாம ரூபங்கள்‌ கொண்டுள்ள சேதன அசேதனங்கள்‌ சரீரமாகதக் கொண்டிருப்பது க௱ரிய நிலை. 
இவ்வாறு இயங்குவதான்‌ சேதன அசேதனங்களின்‌ தோஷங்கள்‌ பகவானை அணுக” மாட்டா.

1. 2. நிமித்த காரணம்‌. 

பகவான்‌ நிமித்த காரணமாகிறான்‌ என்பது வேதாந்திகள் பக்ஷம்‌, 
“*ததி த்வமஸி'', “*அயமாத்மா ப்ரஹ்ம”. போன்ற வாக்கியங்களில்‌ ஜீவனைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவனாகத்‌ தோன்றும்‌ 
பகவானும்‌ ஜீவனும்‌ ஒன்று என்று இவர்கள்‌ ஒப்புக் கொள்கின்றனர்‌. 
பகவான்‌ ஸர்வஞ்ஞன் , பல நற்குணங்கள்‌ வாய்ந்தவன்‌ என்றும்‌ ஒப்‌புக் கொள்கின்றனர்‌, 
உலகமோ ஜீவர்களுக்கு கர்மங்களையே விளைவிப்பது. 
பகவானே ஜீவனாகில்‌ ஜீவனுடைய துன்பங்கள்‌ இவனைச்‌ சேரும்‌. 
ஆதலால்‌ இவன்‌ தனக்‌குத்‌ தானே தீமை தேடிக் கொள்ள மாட்டான்‌. 
தனக்கே விபரீதமான உலகை பகவான்‌ படைக்க மாட்டான்‌; அதாவது நிமித்த காரண மாகமாட்டான்‌. இது ஒரு கருத்து. ்‌ 
விளக்கம்‌ : உபநிஷத்துக்கள்‌ வெளியிட்டுள்ளது; 
பரமன்‌, ஜீவன்‌ இவர்களுள்‌ பரமன்‌ யாவும்‌ அறிந்தவன்‌, யாவையும்‌ நியமிப்பவன்‌; 
ஜீவன்‌ அறியாதவன்‌, நியமியாதவன்‌. 
பரமன்‌ ஆத்மாவினுள்‌ உறைகின்றான்‌, 
ஆத்மா இவனுக்குச்‌ சரீரம்‌; ஆதீமா இவனை அறிய மாட்டாது. 
ஆத்மாவையும்‌ இவனை நியமிக்கும்‌ பரம்‌ பொருளையும்‌ வேறாக அறிந்து, அப் பரம்பொருளின் அருளால்‌ இவன்‌ மோஷ்மடைகிறான்‌. 
இந்த,வாக்கியங்‌களால்‌ தேறுவது: ஜீவாத்மா பகவானைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌ என்பது, 
ஆனால்‌, '**தத்த்வமஸி'* போன்ற வாக்கியங்களில்‌ இருவரையும்‌ ஓன்றென்று சொல்லுவது எவ்வாறு? 
இவ் வாக்கயங்கள்‌ ரூபத்தின்‌ ஒற்றுமை சொல்லவில்லை; ஸ்வரூப பேதம்‌ சொல்லுகின்றன. 
ஜீவனது கர்மங்களின்படியே துன்பங்கள்‌: விளைகின்றன; பகவானுக்குக்‌ கர்மங்கள்‌ இல்லை . 
ஆதலால்‌ உலகைப்‌ படைத்து பகவான்‌ தனக்கு துன்பம் விளைவித்துக்‌ கொள்கிறான்‌ எள்ற கருத்து சரியன்று. 
ஆதலால்‌ பகவான்‌ உலகத்திற்கு நிமித்த காரணமாவான்‌.
கல்‌,கட்டை போல்வன அசேதனப்‌ பொருள்கள்‌. இவை பகவானாக முடியாது என்பது ஒவ்வாது 
இதுபோல்‌ அற்ப ஞானம்‌ வாய்ந்து அற்ப சக்தி வுடையவனாய்த்‌ துன்பம்‌ அனுபவிக்கும்‌ ஆத்மா பகவானாக முடியாது. 
இங்ஙனம்‌ ஆராய்ந்தால்‌ பகவான்‌ நாராயணனே உலகுக்கு நிமித்த காரணம்‌ என்று தேறலாகும்‌.
1. 3. பகவானுக்கு உபகரணங்கள்‌ தேவையா? 

மண்ணிலிருந்து குடம்‌ செய்யும்போது செய்பவன்‌ ஆற்றல்‌ மிக்கவனாக இருந்தாலும்‌, 
சக்கரம்‌, தண்டம்‌. (கோல்‌) இவை யில்லாமல்‌ ஓன்றுஞ்‌ செய்ய இயலாது. 
இதுபோல்‌ பகவான்‌ ஸர்வ சக்தனாக இருந்தாலும்‌ உபகரணங்களின்‌ உதவியின்றி உலகைப்‌ படைக்க இயலாது என்பது ஒரு கருத்து. 
தீர்வு: உபகரணங்கள்‌ இல்லாமலே படைப்பு நேரக்‌ கூடும்‌. 
பாலைக்‌ கரய்ச்சிச்‌ சிறிது மோரைச்‌ சேர்த்தால்‌ பால்‌ தயிராகின்றது; மோரின்‌ உதவி யில்லாமலும்‌ திரிந்து மாறிவிடுகிறது; 
மோர்‌ சேர்ப்பது விரைவில்‌ தயிர்‌ பெறுவதற்காக. 
பகவான்‌ எல்லை கடந்த சக்தி வாய்ந்தவன்‌; ஆதலால்‌ உபகரணம்‌ வேண்டியதில்‌லை . 
இவன்‌ படைத்த தேவர்களும்‌, பிரமன்‌, சிவன்‌ போல்‌வார்‌களும் தங்களது விருப்பப்படி படைக்க வல்லவர்‌, 
ஆதலால்‌. பகவானது ஆற்றலைப் பற்றி சங்கை கொள்‌வதற்கில்லை.
 
1. 4. விசித்திரமான சக்தி. 

ப்ரஹ்மம்‌ செயலற்றது, அவயவமற்றது என்கின்றதும் -பரஹ்மம் வேராக இருந்தது!என்‌றும் சொல்லுகின்றன, 
ஆதலால்‌, ஒரு சங்கை --அவயவமில்லாத பகவான்‌ பரிணமித்‌தால்‌ ஒரே பொருளாகத் தான்‌ மாற வேண்டும்‌; 
இவன்‌ காரியப்‌ பொருள்களுக்குக்‌ காரணமாகக்‌ கருத இயலாது. 
தன்னோடு ஒன்றிய அசேதனத்தோடு இயங்குவதாகக்‌ கொண்டாலும்‌, தனக்குக்‌ காரியமான ஓரே பொருளாவான் , 
ஒரே பொருளுக்கே சரீரமாக இருக்க முடியும்‌. 
விளக்கம்‌ : உலகில்‌ காணும்‌ பொருள்கள்‌ போலன்று ப்ரஹ்மம்‌. 
இதைப்பற்றி நேரில்‌ கண்டோ, அனுமானத்‌தாலோ தெரிந்து கொள்ள இயலாது; 
சாஸ்த்ரங்‌களைக்‌ கொண்டே அறிய வேண்டும்‌. 
வேதங்கள்‌ வெளியிட்டுள்ளது: ப்ரஹ்மம்‌ விகாரமில்லாதது,விசித்திரமான। சக்தி வாய்ந்தது. 
இத்தகைய சக்தி இதற்கே உள்ளது. 
நீருக்கே உள்ள குளிர்ச்சி போலவும்‌, நெருப்புக்கே உள்ள வெப்பம்‌ போலவும்‌, 
இத்தகைய சக்தியாலே இவன்‌ அந்தார்யாமி ஆகிறான்‌, 
அவயவ மில்லாமை, எல்லாம்‌ பொருள்களுமாகப்‌ பரிணமிப்பது இவை பகவானுக்கே அசாதாரணம் 
ப்ரஹ்மம்‌ காரிய நிலையில்‌ சேதனங்களாகவும்‌ அசேதனங்களாகவும்‌ மாறுவது தோஷ மில்லையோ எனில்‌, இல்லை. 
இவன்‌ யாதொரு லிகாரமும்‌ இல்லாதவன்‌; தோஷங்கள்‌ இவனை அணுகவும்‌ மாட்டா.
1. 5. உலகைப்‌ படைப்பதன்‌ பயன்‌. 

ஒரு சங்கை : பகவான்‌ நலன்கள்‌ யாவும்‌ பூர்ணமாக வாய்ந்தவன்‌; தனக்கென எதுவும்‌ நாடாதவன்‌, 
இவன்‌ இவ் வுலகைப்‌ படைப்பதன்‌ பயன்‌ என்ன? 
பயன்‌ எதுவும் இல்லாததால்‌, இவன்‌ இதைப்‌ படைப்பதில்லை என்று தேறுகன்றது. 
தீர்வு : சாஸ்த்ரங்கள்‌ வெளியிடுவது: பரிபூர்ணனான ஸர்வேஸ்வரன் இவ்வுலகைப்‌ படைப்பது அப்போ தப்போது அனுபவிக்கும்‌ லீலைக்காகவே 
இத்தகைய வீலை இவனுக்கு ஏத்தலைய பலனை எதிர்பார்த்து இல்லை என்பதற்கு ஆசார்யர்கள்‌ வெளியிட்டுள்ள விளக்கம்‌; 
உயிர்கள்‌ உய்வதற்காசு இவன்‌ எவ்வளவு முயற்சிகள்‌ , செய்தும்‌, உலகில்‌ பிறந்து இவர்கன்‌ இவ்வாறு துன்புறுவதே என்று அனுதாபத்துடன்‌ நோக்‌குகிறான்‌ என்பதே 
வேறொரு சங்கை: பகவான்‌ உலகத்திற்குக்‌ காரணம்‌ எனில்‌ ஏற்றத் தாழ்வுடன்‌ ஏன்‌ படைக்கவேண்டும்‌? 
இவ்வாறு படைப்பதால்‌ பஷபாதம்‌ என்ற தோஷமும்‌, கருணை யின்மை என்ற குற்றமும்‌ நேராவோ? 
தீர்வு: உலகம்‌ படைக்கும்போது ஜீவர்கள்‌ முன்னமேய செய்த புண்ய பாவ கார்மங்களைப்‌ பற்றியே! தான்‌ படைப்பு நிகழ்கிறது. 
இதனாலேதான்‌ ஏற்றத்‌. தாழ்வுகள்‌. 
வேறொரு சங்கை: படைப்பிற்கு முன்‌ ப்ரஹ்மமே தான்‌ இருந்தது என்று வேதங்கள்‌ வெளியிடுகின்‌றன. 
அப்போது ஜீவர்கள்‌ இல்லை எனில்‌, இவர்களது கர்மங்களைப்‌ பற்றியே படைப்பு என்பது எவ்வாறு பொருந்தும் ? 
ஏற்றத்‌ தாழ்வுகள்‌ நினைப்பதற்கே இல்லையே... 
தீர்வு : ப்ரஹ்மமே இருந்தது என்பதன்‌ கருத்து: ஜீவர்கள்‌ நுண்ணிய நிலையில்‌ நாம ரூபங்கள்‌ இல்லாமல் ப்ரஹ்மத்தோடு ஒன்றியிருந்தனர்‌ என்பதே, 
இவர்சுள்‌ அநாதி;இவர்களது கர்மங்களும்‌ அநாதி; இவர்களோடே இணைந்திருப்பன. 
இந்தக்‌ கர்மங்களின்‌ தராதரத்திற்கு ஏற்கவே பிறப்பின் தாரதம்யமும் 
ஆக் ப்ரஹ்மத்திற்கு யாதொரு தோஷமும்‌ இல்லை. 
இவ் வகையில்‌ ஆராய்ந்தால்‌ ப்ரஹ்மமே' உலகைப்‌ படைக்கின்றது என்பது திண்ணம்‌. 
ஆதலால்‌: இப்பாதத்தின்‌ கருத்து, பகவானே மூவகைக்‌ காரணமும் ஆகிறான் என்பதே . , 
இதுவே ஸ்ருதி ஸ்ம்ருதி சித்தம் . 
அணு காரண வாதிகள்‌ பெரும்பாலோர்‌ ப்ரதானமே உபாதான சாரணம்‌ என்கின்றனர்‌. 
இவர்களது தா்க ரீதியில்‌ குறைகள்‌ உள்ளன. இவர்களது கருத்தும்‌ ஏற்‌பதற்கில்லை. 
உபாதான காரணமாவதற்குக்‌ காரணப்‌ பொகுள்‌: காரியப்‌ பொருள்‌ இவை சமமான இயல்பு பெற வேண்‌டியதில்லை. 
உதாரணம்‌: சாணத்திலிருந்து தேள்‌ தோன்றுகிற து. 
ஜீவர்கள்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌. ஆதலால்‌ ஜீவர்‌களது தோஷங்கள்‌ பகவானைச்‌ சேருமெனில்‌,
கர்ம வசப்‌ படாத பகவானுக்கு தோஷங்கள்‌ இல்லையே . 
காரணமான. பக வானும்‌ கார்யமான உலகும்‌ வேறுபடாதவை. 
' பகவான்‌ நிமித்த காரணம்‌ எனில்‌, துன்பமே இயல்‌பான் ஜீவர்களைப்‌ படைப்பதால்‌, சரீரியான தான்‌ தனக்கு தீமை 
தேடிக்கொள்வது ஓவ்வாதே 
வேறொரு துணையும்‌ எதிர்பாராமல்‌ பகவான்‌ உலகைப்‌ படைக்கின்றான்‌. 
அவயவமற்ற பகவான்‌ பல பொருள்களுக்கு உபாதான காரணமாக மாட்டான்‌ என்பதை எதிர்த்து 
பகவான்‌ விசித்திரமான சக்தி உள்ளவன்‌ என்று நிர்வகிக்கப்படுகிறது.
உலகைப்‌ படைப்பது பகவானுக்கு லீலையே; வேறே பயன்‌ எதுவுமில்லை.
---------------

2, இரண்டாம்‌ பாதம்‌ 

பகவான்‌ உலகுக்குக்‌ காரணமல்லன்‌? ப்ரதானமே என்ற பிற மதத்தினர்களது வாதங்களை மறுத்து 
வ்யாஸ பகவான்‌ தமத: மதத்தை இது வரையில்‌: 'நிலை நிறுத்தி அருளிச் செய்தார் -
இவர்களது மதக்‌ கோட்பாடுகளை ஆராய்ந்து- இவை ஏற்பதற்கில்லை என்பதைத்‌ தர்க்கத்‌தின்‌ மூலம்‌ வெளியிடுகிறார்‌; 
ஆதலால்‌ இந்தப்‌ பாதம் தர்க்க பாதம்‌ 'எனப்‌ பெற்றது.
 
2. 1. ஸாங்க்ய மதம்‌. 

பகவானது நிலை இல்லாமலே ப்ரதானமே உலகுக்‌குக்‌ காரணம்‌ என்பது ஸாங்க்யர்‌ மதம்‌. 
இம் மதத்தின்‌ படி ப்ரதானம்‌ என்பது ஸத்வம்‌, ரஜஸ்‌, தமஸ்‌ ஆகிய பொருள்களாக அமைந்துள்ளது; 
இவை குணங்கள்‌ அல்ல. இவை இயல்பாகச்‌ சமநிலையில்‌ உள்ளன. 
அறிவுடைய புருஷனது முன்னிலையில்‌ ப்ரதானம்‌ விகார மடைகிறது (மாறுதல்‌ பெறுகிறது). 
புருஷ தத்வமோ குணமில்லாதது, அறிவு வடிவமானது, நித்யமானது, எங்கு மிருப்பது, செயலற்றது; 
சரீரங்களில்‌ வெவ்வேறாக இருப்பது. இது கார்த்தாவாகவும்‌, போக்தாவாகவும்‌ இருக்க முடியாது. 
ப்ரக்ருதி புருஷர்‌ அணுகியிருப்‌பதால்‌, ப்ரக்ருதிக்கு அறிவும்‌, புருஷனுக்கு கர்க்ருத்‌வமும்‌ (செயல்படுவதும்‌) நிகழ்கின்றன. 
தான்‌ கர்த்தா, போக்தா என்று நினைப்பதால்‌ ஸம்ஸாரம்‌; முன்பு கூறிய ஞானத்தால்‌ மோக்ஷம்‌.

மறுப்பு : ஸத்வம்‌, ரஜஸ்‌, தமஸ்‌ இவை குணங்கள்‌ என்றே வேதங்கள்‌ வெளியிட்டுள்ளன. 
ஆதலால்‌ இவை பிரதானமாக மாட்டா. 
மரத்தால்‌ தேரும்‌, கல்லால்‌ கட்டிட்மும்‌ நிருமிப்பதற்கு வேண்டிய உபகரணங்கள்‌ இருந்தாலும்‌ செய்வோர்‌ வேண்டும்‌. 
ஆதலால்‌ ப்ரக்குதி புருஷர்‌ அணுகியிருந்தும்‌ யாதொரு பயனுமில்லை. செய்‌பவன்‌ ஒருவன்‌ வேண்டும்‌. 

ஸாங்க்யர்‌ அளிக்கும்‌ சமாதானங்கள்‌, 
(1) ஒருவனது உதவியே யில்லாமல்‌ பால்‌ தயிராகிறது; 
(2) மேகத்திலிருந்து விழும்‌ நீர்‌ இளநீராகிறது; மாம்பழத்தின்‌ ரசமாகிறது; 
(4) பசு புல்லை மேய்ந்து பால்‌ சுரக்கின்றது; 
(4) காந்தக்கல்லின்‌ அருகில் உள்ள இரும்பு இயங்குகிறது 
(5) தொண்டி, குருடவின்‌ தோள்‌ மேல்‌ ஏறிக் கொண்டு வழி நடக்க இயலுகின்றது 
ஆதலால்‌ சேதனன்‌ ஒருவனது உதவி இல்லாமலே உலகப்‌ படைப்பு இயலும்‌. 
விளக்கம்‌ : மண்‌ குடமாவதும்‌, மரம்‌ ரதமாவதும்‌ ஓகு சேதனனது முயற்சியாலேயே. 
இதை உதாரணமாகக்‌ கொண்டு ப்ரக்ருதி மாறுபடுவது யாவும்‌ பரம சேதனனாலே என்று அனுமானித்து அறியலாகும் . 
பால்‌ தவிராக மாறுவதும்‌,மழைநீர்‌ இள நீராவதும்‌,மாம்‌ பழ ரசமாக மாறுவதும்‌ அப் பரம சேதனனாலே என்‌பது அனுமானம்‌. 
ஆதலால்‌ பகவானது சங்கல்பமின்‌றி. ப்ரக்ருதி பரிணமிக்க இயலாது. 
இரும்பு காந்தக் கல்வின்‌ அருகில்‌ இருந்தால் தான்‌ இயங்கும் ;
அதை அருகில்‌ வைப்பவன்‌ ஒருவன்‌ வேண்டும்‌, 
நொண்டி வழி தடப்பது தன்னுடைய முயற்சியாலும்‌, குருடனுடைய உதவியாலும்‌. 
குறைபாடுகள்‌ : ஸாங்க்ய மதத்தில்‌ வெளியிட்டு காட்டப்பட்டன ; 
ப்ரதான நிலையில்‌ ஸத்வம்‌, ரஜஸ்‌, தமஸ்‌ இவை சமமாக உள்ளன; இவற்றில்‌ ஏற்றத்‌ தாழ்வால்‌ படைப்பு நிகழ்கின்றது என்பது, 
இவ்வாறான ஏற்றத்‌ தாழ்வு எங்‌கனம்‌ ஏற்படுகிறது என்பதை விளக்கவில்லை. 
ஆதலால்‌, ஸர்வஜ்ஞனாகிய ஸா்வேச்வரனோடு தொடர்பு இருந்தால் தான்‌ ப்ரக்குதி ஜகத்துக்குக்‌ காரணமாகும்‌. 
ஸாங்கயரின்‌ கொள்கைப்படி புருஷன்‌ மாறுபாடில்‌லாதவன்‌. 
இவனுக்கு போகம்‌ ப்ரக்ருதியைக்‌ காண்பது; மோக்ஷம்‌ ப்ரக்ருதியிலிருந்து விடுதலை பெறுவது. 
விகார மற்ற புருஷனுக்கு போகமும்‌ மோக்ஷமும்‌ எவ்வாறு ஒட்டும்‌? 
ப்ரக்ருதியின்‌ பரிணாமத்தால்‌ சு௧ துக்க ரூபமான போகம்‌ எனில்‌, சேதனன்‌ ப்ரக்ருதி ஸந்நிதியில் இருப்‌பதாலும்‌, 
ப்ரக்ருதி நித்யமாதலாலும்‌ இவனது போகம்‌ எப்போதுமே நிகழும்‌; மோஷம்‌ வாய்ப்பதில்லை . 
புருஷன்‌ எப்போதும்‌ ப்ரக்ருதியின்‌ அருகிலேயே இருக்கிறான்‌; இதனாலே படைப்பு என்கின்றனர்‌ சாங்க்யர் . 
நித்யமான புருஷன்‌ அருகில்‌ இருப்பதால்‌ ஸம்யோகம் எப்போதும் படைப்பே நடக்கும்‌. மோக்ஷம்‌ எவ்வாறு நடக்கும்‌? 
இவ்வாறான முரண்பாடுகள்‌ பல. ஆதலால்‌ ஸாங்க்ய மதம்‌ எவ் வகையிலும்‌ பொருந்தாது.
2. 2. அணு காரண வாதம்‌. 
நையாயிகரும்‌ வைசேஷிகரும்‌ பகவானை அதிஷ்டாதாவாக ஒப்புக் கொண்டு 
பரமாணுக்களே ஐகத்திற்குக்‌ ' காரணம்‌ என்‌கின்றனர்‌. (அதிஷ்டாதா: தலைவனாக தியமிப்பவன்‌ ). 
பரமாணுக்களின்‌ தன்மை என்ன? இவை நுண்ணியன, நித்யமாவன, அவயவமற்றவை. 
இவை பல சேர்ந்து அவயவி ஆகின்றன. இந்த அவயவியை அவயவங்களாகப்‌ பிரித்துக் கொண்டே யிருந்தால்‌, பிரிக்க இயலாத நிலை திகழும்‌. 
இந்த நிலையில்‌ காண்பது பரமாணு, பரமாணுக்கள்‌ இரண்டிரண்டாகவும்‌, இந்த இரட்டைகள் மூன்றாகவும்‌ இவ்வாறே பெருகுகின்றன. 
காற்று, தீ , தீர்‌, நிலம்‌ இவற்றிற்குத்‌ தனித் தனியாகப்‌ பரமாணுக்‌கள்‌ உள; 
இப் பரமாணுக்கள்‌ அந்த அந்த பூதத்தின்‌ குணங்கள்‌ வாய்ந்தவை.

விளக்கம்‌! பரமாணுக்களுக்குப்‌ பரிணாமமே இல்லை-
இவை இரண்டாகவும்‌, இந்த இரட்டைகள்‌ மூன்றாகவும்‌, இவ்வாறு இணைந்தாலும்‌ பரிமாணம்‌ இராது; 
பரிமாணம்‌ இருத்தால்‌ அடிப்படையான பரமாணு கொள்கை நிலைக்காது. 
இவர்களது மதத்தின்படி உலகம்‌ எவ்வாறு உண்டாகின்றது? 
உலகம்‌ உண்டாவதற்கு ஆதாரமாக வுள்ளது பரமாணுக்களின்‌ முதற்‌ செயல்‌--
அத்ருஷ்டம்‌ என்பது? இது புண்ய பாவத்தால்‌ ஏற்படும்‌. இந்த முதற்‌ செயல்‌ இயல்பான செயல்‌; 
நெருப்பு மேல்‌ தோக்கி எரிவது. போன்ற இயற்கைப்‌ பண்பு. 
மறுப்பு _இம்மதத்தினர்‌ கூறும்‌ அத்ருஷ்டம்‌ பரமா ணுக்களைச்‌ சார்ந்ததா? ஜீவனைச்‌ சார்ந்ததா? 
பரமாணுக்களுக்குப்‌ புண்ய பாவங்கள்‌ இல, ஆதலால்‌ ஜீவனைச்‌ சார்ந்ததாக வேண்டும்‌. 
ஜீவன்‌ எப்போதும்‌ ப்ரக்ருதிக்கு. அருகில்‌ இருப்பதால்‌, ஜீவன்‌ நித்யமாதலால்‌ 
படைப்பு எப்போதும்‌ நிகழ்ந்து கொண்டே யிருக்க வேண்டும்‌. 
ஆதலால்‌ ஸா்வேச்வரனே உபாதான காரணம்‌ என்பது. தெளிவு 
அன்றியும்‌ காற்று, தீ , நீர்‌, நிலம்‌ இவற்றுக்கான குணங்கள்‌ இவற்றுக்குக்‌ காரணமான 
பரமாணுக்களில்‌ உள்ளன என்பது இம் மதத்தினரது கொள்கை. 
காரணப்‌ பொருளில்‌ இருந்தால் தான்‌ காரியப்‌ பொகுளில்‌ குணங்கள்‌ இருக்கும்‌ என்கிறார்கள்‌ இவா்சுள்‌. 
இந்த முறையில்‌ ஆய்ந்தால்‌, குடம்‌ முதலியவற்றின்‌ பண்புகள்‌ நிலை யின்மை, அவயவத்தோடு இருத்தல்‌, 
பருமன்‌ போல்வன பரமாணுக்களுக்கும் உள்ளன என்று இவர்கள்‌ ஒப்புக்‌ கொள்ளவேண்டும்‌. 
இது பரமாணுக்களைப்‌ பற்றிய. பண்புகளோடு மூரண்படும்‌. -ஆதலால்‌ இம் மதம்‌ ஆதரிப்பதற்‌கில்லை.
2. 3. வெளி உலகின்‌ நிலை. , 
பரமாணுக்களே உலகுக்கு உபாதான காரணம்‌. என்ற மதக்‌ கொள்கை முற்றிலும்‌ மறுக்கப்பட்டது. 
அணு காரண வாதத்தில்‌ பெளத்தர்களுக்கும்‌ ஒரளவு பங்குண்டு. 
இவர்களுள்‌ வைபாஷிகன்‌, ஸெளத்சாந்தி கன்‌ இவர்களது மதம்‌ வருமாறு; 
காற்று, தீ , நீர்‌, நிலம்‌ இவற்றிற்குக்‌ காரணம்‌ அத்த அந்த பூதத்தின்‌ பரமாணுக்கள்‌. 
இந்த நான்கு பூதங்கள்‌ இணைவதால்‌ உடல்‌,. ஸ்பர்சாதிகள் சத இந்த்ரியங்கள்‌, வெளிப்‌ பொருள்கள்‌ உண்டாகின்றன. 
சரீரத்திற்கு உள்ளே இருப்பது ஆத்மா; இது **நான்‌:* என்ற அறிவுக்கு விஷயமாகும்‌. 
வெளிப்‌ பொருள்கள்‌ யாவும்‌ க்ஷணம் மாத்ரமாகவே உள்ளன. 
இவை நிலையுள்ளன என்ற அறிவால்‌ உலக நடவடிக்கைகள்‌ 'நிகழ்கின்‌ றன. 
'ஆதலால்‌ உல்க உற்பத்திக்கும்‌ தடவடிக்கைகளுக்கும்‌ வேறு எதுவும்‌ காரணமாக ஒப்புக்கொள்ள வேண்டியாது இல்லை. 
ஒவ்வொரு ஷணந்தோறும் தோன்றும்‌ ஞானத்‌தின்‌ தொடர்பு தான்‌ ஆத்மா. 
தேர்வு 1 : பூதங்கள்‌ இணைந்து உலகமும்‌ உலகப்‌ பொருள்களும்‌ ' உண்டாக வேண்டும்‌; 
இவை க்ஷணிகம்‌ எனில்‌ இணைவதற்கு வாய்ப்பே இல்லை; ஆதலால்‌ உற்‌பத்தி இல்லை. 
இம் மதத்தின்படி பிறவி எப்படி நிகழ்கிறது? 
க்ஷணிகமான யொருள்கள்‌ நிலையாவன என்று நினைப்பது அறிவின்மை. 
அறிவின்மையால்‌ பிறவி; பின்பு சரீரத்‌திற்கு வேண்டிய வீர்யம்‌, ஸ்ம்ருதி, ப்ரீதி போல்வன பெற்று, 
பூமி முதலான தாதுக்கள்‌ பெற்று, இந்த்ரியங்‌கள்‌, ப்ராணன்கள்‌ உருவாகி 
யாவும்‌ சேர்ந்த சமுதாயம்‌ உடம்பாகிறது. 
மறுபடியும்‌ அவித்யையாலே இவை உருவாகிப்‌ பிறவிகள்‌ சுழன்று சுழன்று வருகின்றன. 
தேர்வு 2: அறிவு க்ஷணிகம்‌ என்பதாலே விபரீதமான அறிவு எவ்வாறு நிகழும்‌? 
அறிவின்மை வாய்ந்தவனின்‌ நிலைதான்‌ என்ன? 
ஆக இந்தக்‌ கருத்து ஆதரிப்பதற்‌ கன்று. 
தேர்வு 3: காலத்தையும்‌ பற்றி ஆராய்ந்தால்‌, இது ஷணிகம்‌ என்பதால்‌ ஒரு ஷணத்தில்‌ காணும்‌ பொருள்‌ அடுத்த க்ஷணத்தில்‌ இருக்க முடியாது. 
ஒரு குடத்தைக்‌ காணும்போது அது ஓவ்வொரு ஷணமூம்‌ புதிதாகவே இருக்கவேண்டும்‌. 
நாம்‌ குடம்‌ இல்லை என்று சொல்லும் போது குடம்‌ என்ற வடிவம்‌ இல்லை, அல்லது உடைந்து போயிற்று என்ற கருத்தே நிலவுகின்றது. 
இது, ஷணிகம்‌ என்பதற்கு வேறுபட்டது. ஆதலால்‌ ஷூணிகம்‌ என்ற கருத்து உலக தடவடிக்கைக்கு முரணானது. 
தேர்வு 4: காரியப்‌ பொருளான குடம்‌ மண்‌ மய மானது; பொன்‌ நகை பொன்‌ மயமானது, 
காரணமான மண்‌, பொன்‌ இவை சூன்யமாகக் கொண்டால்‌, குடம்‌, நகை இவை உருவம்‌ பெறுவது எவ்வாறு? ... 
தேர்வு 5: இம் மதக்‌ கொள்கைக்கு மாறாக நாம்‌ பூமியை நேரில்‌ காண்கிறோம்‌; 
ஆகாசம்‌ காண்பதற்‌ இல்லை எனினும்‌, பருந்து பறக்கிறது'” என்பது போன்ற அறிவால்‌ இது உண்டு என்று அறிகிறோம்‌ 
நேரில்‌ காண்பன சூன்யம்‌ என்ற கருத்து அபத்தமானது ... 
தேர்வு6: ஒரு பொருள்‌ க்ஷ்ணிகம்‌ எனில்‌ இதைப்‌ பற்றிய அறிவும்‌ ஷணிகமாக வேண்டும்‌. 
இம்மதத்தினர்‌ கூறும்‌ சமாதானம்‌: அறிவுக்குக்‌ காரணமாவது, அறிவை உண்டாக்கும்‌ பொருள்‌. 
ஆதலால்‌ அப் பொருளைக்‌ காணும்போது அறிவை உண்டாக்கி அது அழிந்து போகின்றது என்பது. 
அன்றியும்‌ பொருள்களின்‌ பண்பு நீலம்‌, மஞ்சள்‌, கறுப்பு போன்றவற்றை மனத்தில்‌ தேக்‌கிக் கொண்டு பின்பு அனுமானத்தால்‌ அறியக்கூடும்‌ என்கின்றனர்‌ இவர்கள்‌. 
இது உலகில்‌ நிகழ்வனவற்‌றுக்கு மாறுபாடானது. 
ஒரு பொருள்‌ அழிந்த பிறகு அதன்‌ அழிந்த வடிவையோ பண்பையோ வேறே ஓன்‌றில்‌ காண்பது என்பது நிகழாதது. 
தேர்வு 7: வருங்‌ காலத்திற்கான சில நன்மைகளைக்‌ கருதி நாம்‌ பல செய்கிறோம்‌. 
காலம்‌ க்ஷணிகம்‌ என்று கருதினால்‌ முயற்சிகள்‌ பயனற்றவையாகும்‌. 
ஆதலால்‌ பலவகையாலும்‌ இம் மதத்தின்‌ கொள்கைகள்‌ அனுபவத்திற்குப்‌ புறம்பாக வுள்ளன.

2.4. அறிவின்‌ நிலை. 

யோகாசாரர்களது மதம்‌: அறிவு ஒன்றே அடிப்‌ படை; இது ஷணிகம்‌. வெளிப்‌ பொருள்கள்‌ க்ஷணிகங்‌ கூட இல்லை; 
இவை பற்றி அறிய வேண்டியதில்லை. 
அறியப்படும்‌ பொருளின்‌ வடிவத்தை அறிவினுடைய. தாகவே கருதினால்‌ போதும்‌; 
வெளிப்‌ பொருள்‌களை ஸ்மரிக்க வேண்டியதில்லை. 
அறிவினுள்‌ இருக்கும்‌ வடிவம்‌, வெளியிலிருப்பது போல்‌ தோன்றுவது மயக்கத்தினால்‌. 
அறிவும்‌ அறியப்படும்‌ பொருளும்‌ எப்போதும்‌ சேர்ந்தே. அறியப்படுகின்றன; 
ஆதலால்‌ அறியப்படும்‌ பொருள்‌ அறிவைக்‌ காட்டிலும்‌ வேறன்று. 
வெளிப்‌ பொருள்கள்‌ உள்ளன என்று கொண்டால்‌, அந்த அந்தப்‌ பொருளின்‌ வடிவம்‌ அறிவில்‌ உள்ளதாகக்‌ கொள்ளவேண்டும்‌; 
இல்‌லாவிடில்‌ கடத்தைப்‌ பற்றிய அறிவு, படத்தைப்‌ பற்றிய அறிவு என்று பல வகையான தனித் தனியான அறிவுகளை நிருபிக்க இயலாது.
வெளிப்‌ பொருள்களை அறிவிக்கும்‌ அறிவை மாத்‌திரஙம் கொண்டு இவை உள்ளன என்பதற்கில்லை. 
காணும்போது நேரும்‌ அறிவு மாத்திரம்‌ கொண்டால்‌, முத்துச்சிப்பி வெள்ளியே என்றும்‌, 
பழுதை பாம்புதான்‌ என்றும்‌ ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்‌. 
ஆதலால்‌ விழிப்பு நிலையில்‌ காணப்படும்‌ அறிவுகள்‌, உள்ள பொருள்களைப்‌ பற்றி யல்ல; 
கனவில்‌ காணும்‌ பொகுள்‌களைப்‌ போல்‌ இவை இல்பொருள்களே என்று கொள்‌வது தான்‌ பொருத்த முடையது.

மறுப்பு: குடம்‌ ஒன்றைப்‌ பார்க்கும்போது, பார்ப்‌பது நாம்‌, பார்க்கப்படுவது குடம்‌; இது அறிவினாவே. 
அறிவு ஒன்றே உள்ளது என்று ஒப்புக்கொண்டால்‌ நாமும்‌ இல்லை, குடமும்‌ இல்லை என்பதுதானே தேறும்‌? 
ஆதலால்‌ இக் கொள்கை ஏளனத்திற்காகும்‌. 
தேர்வு 1: இரண்டு பொருள்கள்‌ சேர்ந்து அனுப விக்கப்படுகின்றன என்றால்‌, இவை வெவ்வேறானவை என்பதுதானே தேறும்‌. 
இவ்விரண்டில்‌ ஒன்று தான்‌ உள்‌ளது என்பது எப்படிப்‌ பொகுந்தும்‌? 
தேர்வு 2. நாம்‌ பார்க்கும்‌ குடம்‌ அறிவினாலே மாத்திரம்‌ இருக்கிறது என்பது சிறிதும்‌ பொருந்தாது .. 
ஆக்கப்‌' பொருளான மண்‌ வேண்டும்‌; ஆக்கும்‌ திறமை உபகரணங்கள் வேண்டும்‌. 
குடம்‌, படம்‌ போல்வனவற்றை அறிவிப்பதாக அறிவு உள்ளது; 
அறிவு தவிர்ந்த இவை இல என்பது எவ்வாறு சொல்லக்‌ கூடும்‌ 
தேர்வு 3: விழிப்பிற்‌ காணும்‌ பொருள்களுக்கும்‌ கனவிற்‌ காணும்‌ பொருள்களுக்கும்‌ வித்தியாசமுண்டு. 
விழிப்பில் காண்பன பொய்யாக மாட்டா; கனவிற்‌ காண்பன விழித்தவுடன்‌ மறைந்து விடுகன்றன. 
ஆத லால்‌ விழிப்பிற்‌ காண்பவை இல்பொருள்களாக அனுமானித்தால்‌, உள்ளனவற்றை 'இல்லனவாகச்‌ சொல்லும்‌ தோஷம்‌ தவிர்க்க முடியாது. 
தேர்வு 4: அறிவு எங்கும்‌ நிலவுவது. அறி பவன்‌, அறியப்படும்‌ பொருள்கள்‌ இவை இல்லாத அறிவு எங்குமில்லை, 
ஆதலால்‌ எங்கும்‌ காணப்படும்‌ பொருள்‌களைப்‌ பற்றி விளங்காத அறிவு ஏற்பதற்கில்லை. 
இவ்‌வாறு பல வகைகளிலும்‌ ஆராய்ந்தால்‌ தேறுவது: இந்த மதம்‌ உலக நடவடிக்கைகளுக்கு முற்றிலும்‌ மாறானது என்பது.

2. 5. யாவும்‌ சூன்யம்‌ 

மாத்யமிகனது மதம்‌ ப்ரமாண்ம்‌ (அறிவதற்குச்‌ சான்று), ப்ரமாதா (அறிபவன்‌), ப்ரமேயம்‌ (அறியப்‌ படுவது) என்பது மதி மயக்கத்தாலே. 
யாவும்‌ சூன்யம்‌; இந்தச்‌ சூன்யத்தைச்‌ சூன்யமென்று அறிவதே மோக்ஷம்‌. 
அறிவும்‌, அறிவால்‌ காணும்‌ வெளிப்‌ பொருள்களும்‌ இல்பொருள்களே; யாவும்‌ சூன்யம்‌ என்பதே உண்மையான நிலை. 
காண்பனவாகத்‌ தோன்றுவன யாவும்‌ பொய்‌. இத்தகைய தோற்றம்‌ அழிவதே மோக்ஷம்‌. 
மாத்யமிகன்‌ சூன்யவா தி, இவனது விளக்கம்‌ - ஒரு பொருள்‌' உண்டெனில்‌ இதற்குச்‌ சான்று தேவை;-
இல்லைலை யெனில்‌ 'இது வேண்‌டியதில்லை. மேலும்‌ ஒரு பொருள்‌ உண்டு எனில் எப்படி உண்டாகிறது? 
உள்ள பொருள்களில் இருந்தா , இல்லாத பொருள்களிலிருந்தா என்று தெளிய வேண்டும்‌. 
உள்ள பொருள்‌ களில் இருந்தே என்று கருதினால்‌, 'குடமாக அமையும் போது காரணப்‌ பொருளான மண்‌
இல்லை; ஆதலால்‌. இந்த மண்‌ அழிந்து விடுகிறது. 
ஆதலால்‌ தேறுவது; இல்‌லாத பொருள்களிலிருந்தே பண்டங்கள்‌ அமைகின்‌றன என்‌பது. 
இல்லாத பொருள்களிலிருந்து பண்டங்கள்‌. உண்டாக் மாட்டா; ஆதலால்‌ யாவும்‌ சூன்யம்‌ என்பதே தேறும்‌.'

தீர்வு : குடம்‌ இருப்பதாகச் சொல்லும் போது குடம்‌ 'என்ற அமைப்புடன்‌ இருக்கிறது என்பது தான் தேறும்‌; 
இல்லை எனில்‌ ஒட்டின்‌ அமைப்பில்‌ இருக்கிறது என்பதே வெளிப்படை. .
ஒரு நிலையில்‌ உள்ள்‌ பொருள்‌ வேறொரு நிலையில்‌ அமைவதே இல்லை என்ற சொல்லுக்குப்‌ பொருளாகக்‌ காண்கிறோம்‌. 
மண்‌ கட்டியின்‌ நிலையின்‌ அழிவே” ' குடத்தின்‌ உற்பத்தி ' எனக் கொள்ள வேண்டும்‌. 
கட்டி நிலையில்‌ உள்ள மண்‌ என்ற் திரவியம்‌ காரணப்‌ பொருளாகவும்‌, 
குட நிலையில்‌ இருக்கும்‌ அந்த மண்ணே காரியமா்கவும்‌'' கொள்கிறோம்‌. 
ஆதலால்‌ சூன்யமான்‌ ஒரு பொருளிலிருந்து' ஓரு பொருள்‌ உண்டாவதில்லை. ்‌

யாவும்‌ சூன்யம்‌ என்பதை ஒரு சான்றின்‌ மூலமே நிலை நிறுத்த வேண்டும்‌; 
அந்தச்‌' சான்று. 'உண்மையே என்று ஒப்புக் கொள்ள வேண்டும்‌." 
“இவ்வாறு ஒப்புக்‌ கொண்டால்‌ இந்தச்‌ சான்று" 'உண்மையாகின்ற்து:" 
ஆதலால்‌ “சூன்யம்‌” என்ற கருத்து 'இல்லை.' '
இத்தால் பொய்‌ என்றால்‌ எல்லாம்‌ சூன்யம்‌ என்றும் சான்றும்‌' பொய்யாகும் 
ஆகவே இவை உண்மை: என்பதே தேறும்‌, 
பல வகையில்‌ ஆராய்ந்தால் 'யாவையும் 'சூன்யம்‌ என்ற கொள்கை பொருந்தாது என்பது வெளிப்படை 

2. 6, ஜைநர்‌. மதம்‌. 
இவர்கள்‌ . ஒப்புக் கொள்ளும்‌ தத்வங்கள்‌ ஜீவன்‌; தர்மம்‌, அதர்மம்‌, காலம்‌, ஆகாசம்‌ என்பன, 
காலம்‌ அணுவான ஒரு திரவ்யம்‌; ஆகாசம்‌ அளவற்ற: வெளியிடம்‌. 
'இவை யாவும்‌ ஸப்த பங்கி நியாயத்திற்‌கு உட்பட்டவை. பொருள்கள்‌ யாவும்‌ இவ்வாறே. இந்த தியாயமாவது: 
பொருள்களின்‌ நிலை, (1) உள்ளது... (2) இல்லது, (3) உள்ளதும்‌ இல்லதும்‌, (4) உள்ளது, இல்லது என்றே சொல்லமுடியாது, 
(5) இல்லது, உள்‌ னது என்றே சொல்ல முடியாது, (6) இல்லது, உள்ள தென்றோ இல்லதென்றோ சொல்ல முடியாமல்‌ இருக்க லாம்‌, 
(7). உள்ளதும்‌.இல்லதும்‌, உள்ளதென்றோ இல்லது . என்றோ சொல்ல முடியாமல்‌ இருக்கலாம்‌. . , 
மறுப்பு; இது தர்க்க முறைக்கே ஒவ்வாதது; பொருள்கள்‌ உள்ளனவாகவும்‌ இல்லனவாகவும்‌, நித்ய மாகவும்‌ அநித்யமாகவும்‌, 
பின்னமாகவும்‌ முழூவனவாகவும்‌ ஒருபடிப்பட்டு இருக்கமாட்டாத முரணான தன்மைகள்‌. 
ஒரே காலத்தில்‌ ஓரே பொருளில்‌ அமைவதற்கில்லை, 
சர்க்கரையின்‌ தித்திப்பும்‌ உப்பின்‌ உவர்ப்பும்‌ ஒன்றி எவ்வாறு அமையும்‌?
இம் மதத்தினர்‌ ஆத்மாவைப்‌ பற்றி விசித்திரமான கஞத்து கொண்டுள்ளனர்‌. 
ஒரு சரீரத்துலுள்ள ஆத்மாவின்‌ பரிமாணம்‌ அந்த சரீரத்தின்‌ அளவைப்‌ பற்றியது, 
இந்தக்‌ கருத்தின்படி யானையின்‌ ஆத்மா மறு பிறவியில்‌ பூனையின்‌.சரீரத்தில்‌ புக இயலாது; 
பூனையின்‌ ஆத்மா பானையாகப்‌ பிறந்தால்‌, பானையின்‌ உடலில்‌ சிறிதளவு தான்‌ ஏற்கும்‌, 
முழுதும்‌ வியாபித்து அனுபவிப்பதற்‌கு இல்லை, 
இவ்வாறு ஆத்மா குறுகுவதும்‌ விரிவதும்‌ நேர்ந்தால்‌, இது மாறுபாடுடையது என்ற தோஷம்‌ நிகழும்‌
இதனால்‌ நிலையில்லை என்ற தோஷமும்‌ காணலாம்‌. 
ஆத்மாவுக்கு முக்தி நிலையில்‌ உள்ள பரிமாணமே நிலையானது, இயல்பானது, 
முக்தி திலையில்‌ வேறு சரீரம்‌ இல்லை, ஆதலால்‌ ஆத்மாவுக்கு இயல்பான பரி மாணத்தையே ஒத்துக் கொள்ள வேண்டும்‌. 
இவ்வாறு ஆராய்ந்தால்‌ ஜைந மதக்‌ கோட்பாடுகள்‌ ஏற்கத்‌ 
தக்கனவல்ல என்பது தேறும்‌. 
 
2.7. பாசுபத மதம்‌. 

பாசுபதர்‌ சைவ ஆகமத்தை ஆதரிப்பவர்‌, இவர்‌களது மதக்‌ கொள்கை 
ஈசனை அனுமானத்தின்‌ மூலம்‌ அறியவேண்டும்‌, உபநிஷத்துக்களால்‌ இல்லை. . 
இவன்‌ உலகுக்கு நிமித்த காரணம்‌; 
ப்ரக்ருதிதான்‌ உபாதான காரணம்‌, குலாலன்‌ மண்ணைக்‌ கொண்டு குடம்‌ செய்‌வது போல்‌ 
இவன்‌ உலகைப்‌ படைக்கிறான்‌. இவன்‌ சரீரம்‌ இல்லாதவன்‌. 
மறுப்பு: இம் மதம்‌ வேதத்திற்குப்‌ புறம்பானது; வேதங்கள்‌ நாராயணனே மூவகைக்‌ காரணமுமாவான்‌, 
இவனை மனனஞ்‌ செய்வதே மோக்ஷத்திற்குக்‌ காரணம்‌ என்கின்றன.

சிவன்‌ நிமித்த காரணன்‌ என்றால்‌ சரீரம் கொண்டல்‌லவோ படைக்க வேண்டும்‌? 
இவன்‌ படைப்பவன்‌ என்று அனுமானத்தால்‌ ஓத்துக் கொள்ள வேண்டும்‌. 
சரீரமில்‌லாத ஜீவன்‌ இந்த்ரியங்களை இயக்குவது போல்‌ சிவனும்‌ இயக்குகிறான்‌ எனக்‌ கொண்டால்‌, 
ஜீவனுக்கு இந்த நிலை புண்ய பாவ கர்மாவினால்‌ ஏற்பட்டுள்ளது போல்‌ இவனுக்கும்‌ ஏற்படும்‌ என்பது தேறும்‌. 
இது சரியன்று ஆதலால்‌ சாஸ்த்ரங்களாலே பகவானை ஏற்றுக் கொள்‌வது தான்‌ குறையேது மில்லாதது,
2. 8. பாஞ்சராத்ர ஆகமம்‌. 

பாஞ்சராத்ர சாஸ்த்ரத்தின்‌ சிறப்பை விவரிப்பது இப்பகுதி, இது பகவான்‌ நாராயணன்‌ அருளியது; 
(வேதங்களின்‌ சாரமாக பக்தர்களுக்கு இரங்கி வெளி விடப்பட்டது. 
மஹாபாரதத்தில்‌ மோஷ தர்மம்‌ ஞான காண்டத்தில்‌ வெளியிட்டுள்ளது; 
தயிரிலிகுந்து வெண்‌ணெய்‌ எடுப்பது போல் மஹா பாரதமான கடலை மத்தால்‌ கடைந்து இந்த சாஸ்த்ரம்‌ எடுக்கப்‌ பட்டது; 
மாந்தருள்‌ அந்தணர்‌ போலும்‌, வேதங்களில்‌ ஆரண்யகம்‌ போலும்‌, ஓஷதகளில்‌ அமுதம்‌ போலும்‌ சாரமாக விளங்குவது இந்த ஆகமம்‌. 
இதைப்‌ பதரிகாச்‌ர மத்தில்‌ நாராயணன்‌ நாரதருக்கு வெளியிட்டான்‌. 
இதில்‌ இரண்டு குறைகள்‌ கூறுவார்‌ சிலர்‌, 
கருத்துக்‌களை ஏற்றவாறு ஆராமையாலே. இந்த சாஸ்த்ரத்தில்‌ வாஸுதேவனிடமிருந்து ஸ்ங்கர்ஷணன்‌ என்னும்‌ ஜீவனும்‌, 
ஸங்கர்ஷணனிடமிருந்து ப்ரத்யும்நன்‌ என்ற மனமும்‌, ப்ரத்யும்நனிடமிருந்து அநிருத்தன்‌ என்ற அஹங்‌காரமும்‌ உண்டாவதாகக்‌ கூறியிருக்கிறது. 
ஜீவனுக்கு உற்பத்தி கூறுவது வேத வாக்கியங்களுக்கு முரண்பாடாகும்‌. 
இது பற்றிய தீர்வு: பகவான்‌ தன்‌. அடியார்களை அநுக்ரஹிப்பதற்காக இந்த வடிவங்களைத்‌ தனது விருப்பத்தால்‌ ஏற்றுக் கொள்கிறான்‌; 
இவ்வாறு ஏற்றுக்‌ கொள்வது அவதாரம்‌ போன்றது, 
மனம்‌ பரமாத்மாவிட மிருந்து உண்டாவதாக சாஸ்த்ரங்கள்‌ சொல்லுகின்‌றன; 
ஸங்கர்ஷணன் இடமிருந்து மனம்‌ என்பது உண்டாகின்றது என்பது முரண்பாடு என்பது இரண்டாவது குறை. 
பகவானே ஸங்கர்ஷணனாவதால்‌ இக் கருத்து ஏற்றுக் கொள்ளத்‌ தக்கதே, 
பல இடங்களில்‌ ஸங்கர்‌ ஷணன்‌ முதலானோர்‌ அவதாரமாகவே விவரிக்கப்‌ பெற்றுள்ளது. 
ஸாங்க்ய மதத்‌ தத்துவங்கள்‌ இருபத்தைந்து, 
யோகத்தில்‌ சொல்லப்‌பட்ட அஷ்டாங்க யோக க்ரமம்‌, வேதத்தின்‌ பூர்வ பாகத்தில்‌ விவரிக்கப்பட்ட கர்மங்கள்‌ 
இவற்‌றைப்‌ பாஞ்சராத்ரம்‌ ஒத்துக் கொள்கின்றது 
அஷ்டாங்க யோகம் ப்ரஹ்மத்தின் உபாஸந மூலமாக என்றும்‌, 
கர்மங்கள்‌ ப்ரஹ்மத்துக்கு ஆராதன ரூபம்‌ என்றும்‌ ஆரண்யகங்கள்‌ கூறுகின்றன. 
இவை யாவும்‌ பகவானான நாராயணனாலே என்று, பாஞ்சராத்ரம்‌ தெளிவு படுத்துதின்றது. 
இது வேதத்தை முற்றிலும்‌ ஓட்டியிருப்பதால்‌ மிகச்‌ சிறந்த ப்ரமாணமாகும்‌. 
சுருக்கம்‌ 
பிற மதத்தினரது கொள்கைகள்‌. 
ஸுங்க்யர்‌ பகவானது அதிஷ்டானம்‌ இல்லாமலே அசேதனமான ப்ரதானம்‌ உலகமாக மாறுகிறது. 
நையாயிகர்‌, வைசேஷிகர்‌ அதிஷ்டிக்கும்‌ ஈச்வரன்‌ இருந்த போதிலும்‌ பரமாணுக்களே காரணமாக உலகம்‌ தோன்றுகின்றது. 
வைபாஷிகள்‌, ஸெளத்ராந்திகள்‌ : வெளிப்‌ பொருள்‌களே இல்லை, ஞானம்‌ ஒன்றே உள்ளது: 
யோகாசாரன்‌: வெளிப்‌ பொருள்கள்‌ க்ஷணிகம்‌ என்‌பது கூடப்‌ பொருந்தாது, ஞானமும்‌ க்ஷணிகம்‌. 
மாத்யமிகன்‌ : ஷணிகமாகக் கூட எப்பொருளும்‌ இல்லை; யாவும்‌ சூன்யம்‌. 
ஜைனர்‌ : காரிய காரண ரூபத்தால்‌ உலகம்‌ நித்யமாகவும் அநித்யமாயும்‌,பின்னமாயும்‌ அபின்னமாயும்‌, ஸத்யமாயும்‌ அஸத்யமாயும்‌ இருக்கும்‌. 
ஆத்மா தனது கர்மாநுகுணமாக ஏற்கும்‌ சரீரத்தனவு உள்ளது. 
பாசுபதன்‌। உலகுக்கு உபாதான காரணம்‌ பரமாணுக்கள்‌; ஆகமத்தால்‌ அறியப்படும்‌ ஈச்வரன்‌ நிமித்த காரணம்‌. 
ஸம்ஸரரம்‌ ஆகமத்தில்‌ கூறியவாறு கர்மானுஷ்டங்களாலே பசுபதி ஸாரூப்பம்‌, மோக்ஷம்‌. 
பாஞ்சராத்ரம்‌ வேதத்தை ஒட்டியிருப்பதால் , வேதத்தைப்‌ போல்‌ முற்றிலும் ப்ரமாணமாகும்‌. 
மற்‌ற சமய மதங்களிலுள்ள குறைகள்‌ யாதும் இதுக்கு இல்லை .
------------------

3. மூன்றாம்‌ பாதம்‌ 

புறச்‌ சமயங்களான ஸாங்கீய மதம்‌, யோக மதம்‌ போல்வன யுக்திக்குப்‌ புறம்பானவை, 
இவற்றிற்குண்‌டான் தோஷங்கள்‌ வேதாந்த மதத்தில்‌ இல்லை என்று காட்டுவன மூன்றாம்‌ பாதமும்‌ நாலாம்‌ பாதமும்‌.. 
உலகுக்‌ கெல்லாம்‌ காரணமான ப்ரஹ்மத்
தின்‌ காரியப்‌ பொருள்களாவன சேதன அசேதனங்கள்‌, இவ்வாறு காரியமாகும்‌ வகை விசாரிக்கப் படுகிறது, 
ஆகாசம்‌, ஆத்மா, இந்த்ரியங்கள்‌ இவற்றிற்கு இயல்பான விகாரங்களை விளக்க வ்யாஸர்‌ 
இவை ப்ரஹ்மத்தாலே இயங்குகின்றன என்கிறார்‌ இந்தப்‌ பாதத்தில்‌. இது வியுத்‌ பாதம்‌.

3. 1. ஆகாசம்‌ : 
ஆகாசம்‌ அவயவ மில்லாதது; அவாயவமில்லாத ஆத்மாவைப்‌ போல்‌ இதுவும்‌ ஒரு காரியப்‌ பொருளாகாது. 
சாந்தோக்யத்தில்‌, '*'ததைகஷ்தபஹாுஸ்‌ யாம்‌ ப்ரஜாயேய”' (6-8-3) என்ற இடத்தில்‌ படைப்‌பைச்‌ சொல்லும் போது 
ஆகாயத்திலிருந்து உற்பத்தி கூறாமல்‌ தேஜஸ்‌ முதலாக உற்பத்தி கூறியிருக்கிறது. 
அன்றியும்‌ ப்ருஹதாரண்யத்தில்‌, '*வாயுச்‌ ச அந்தரிக்ஷம்‌: ச ஏததம்ருதம்‌''--வாயு, ஆகாசம்‌ இரண்டும்‌ விநாசமற்றவை என்று வந்துள்ளது; 
ஆகாசம்‌ அழிவில்லை எனில்‌ உற்பத்தியும்‌ இல்லை என்பது ஊகிக்கக்‌ கூடும்‌. இது ஒரு கருத்து. 
விளக்கம்‌ : 
தைத்‌ரயத்தில்‌, '*ஆத்மந ஆகாச: ஸம்‌: பூத (ஆந), ஆகாசம்‌ பரமாத்மாவிடமிருந்து உண்டா” யிற்று என்பது வந்துள்ளது. 
ஆகாசம்‌ அவயமற்றது என்‌பதைக்‌ கொண்டு உற்பத்தி இல்லை என்று தீர்மானிப்‌ பதற்கில்லை; 
ச்ருதி வாக்யமே ஆதாரம்‌. ஆதலால்‌ ஆகாசத்திற்கு உற்பத்தி உண்டு.
காரணமான மண் கட்டியைப்‌ பற்றிஅறித்தால்‌ காரியப்‌ பொருள்களைப்‌ பற்றி அறியக்கூடும்‌ என்ற இடத்‌தில்‌.
ப்ரஹ்மத்தை அறிந்தால்‌ அவனது காரியப்‌ பொருளான ஆகாசம்‌ முதலானவற்றை அறிந்து கொள்ளலாம்‌ என்றறிகிறோம்‌. 
ஆகாசம்‌ காரியப்‌ பொருளுக்கு உறுப்பாக காட்டிலும்‌ முன்பே பகவான்  இருக்க வேண்டும்‌, :
*அந்தரிஷம்‌ ச அம்ருதம்‌'” ஆகாசம்‌ (அழிவில்லாதது)என்பதன்‌ கருத்து, நீண்ட காலம்‌ இருப்‌பது என்பதே. 
அமரர்கள்‌ என்றால்‌ நெடுங்‌ காலம்‌ வாழ்வு என்பது போலே உற்பத்தி யின்மை பரம்பொருளுக்கே; 
மற்றவைகளுக்கு ஒருபடியாலும்‌ இது ஒவ்வாது.

3. 2. அக்நி, ஜலம்‌, பூமி. 

“வாயோ ரக்நி:'”, :*அக்நே ராப:'', '*அத்ப்ய: பருத்வீ'”“--வாயுவிலிருந்து அக்நியும்‌, அக்தியிலிருந்து ஜலமும்‌, 
ஜலத்திலிருந்து ப்ருத்வீ (பூமி)யும்‌ உண்டாயின என்பன உபதிஷத்‌ வாக்கியங்கள்‌. 
அன்றியும்‌ பரம்பொருளிலிருந்து ப்ராணன்‌, மனம்‌, இந்த்ரியங்கள்‌, ஆகாசம்‌ வாயு, தீ , நீர்‌ யாவும்‌ உண்டாகின்றன என்றும்‌ வந்துள்‌ளது. 
ஆகையால்‌ அக்நி, ஜலம்‌, பூமி இவற்றின்‌ படைப்பு: பரமாத்மாவிடமிருந்து நேராக அல்லாமல்‌ 
முப்பாட்‌டன்‌, பாட்டன்‌, அப்பன்‌ என்பது போல்‌ பரம்பரையா வேண்டும்‌ என்பது ஒரு கருத்து. 
சாந்தோக்யத்தில்‌ (6,2-2,4) "நான்‌ பலவாகக்‌ ௧டவேன்‌” என்று தேஜஸ்ஸும்‌, நாங்கள்‌ பலவாக ஆகக்‌ கடவோம்‌'” என்று அப்புகளும்‌ (நீர்‌) சங்கல்பித்ததாகவும்‌ காண்கிறோம்‌. 
அசேதனப்‌ பொருள்கள்‌ சங்கல்பிக்க இயலாது. ஆதலால்‌ இவற்றைச்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ பகவானே சங்கல்பித்ததாகக்‌ கருதவேண்டும்‌. 
**யஸ்ய ப்ரூத்வீ சரீரம்‌'' என்று தொடங்கிக்‌ காரியப்‌ பொருள்‌கள்‌ யாவும்‌ பரமாத்மாவுக்குச்‌ சரீரம்‌ என்பதால்‌ இக்‌. கருத்து ஏற்கத்தக்கது. 
'*ததநுப்ரவிச்ய ஸச்ச தயச்சா பவத்‌” அதை வியாபித்து ப்ரஹ்மம்‌ சேதனங்களாகவும்‌. அசேதனங்களாகவும்‌' ஆயிற்று, இது தைத்திரியம் 
பொருள்கள்‌ இவற்தைச் சொல்லும்‌'பதங்கள்‌ தேஜஸ்‌, வாயு , அக்நி, போலக்‌ ப்ரகாரியான பகவாளையே குறிப்பன. 
ஆதலால்‌ ஆகாசம்‌, அக்நி , வாயு, ஜலம்‌, பூமி, யாவும்‌ பகவானாலேயே படைக்கப்‌ பெறுவன.
3, 3. ஜீவ உற்பத்தி உண்டா? 

ஆகாசம்‌, தேஜஸ்‌ போன்ற ௮சேதனப்‌ பொருள்கள்‌ தங்களது பரிமாணம்‌ மாறும்‌ இயல்புடையன; 
இவை பகவானாலே படைக்கப்பெறுவன என்பது விளக்கப்‌ பட்டது. 
இவை தனது போகத்திற்காக ஏற்ற ஜீவாத்மாவும்‌ பகவானுக்குக்‌ காரியப்‌ பொருளா? இதற்கு உத்பத்தி உண்டா? என்பது இப்போது ஆராயப்படுகிறது. 
“ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத்‌'" என்ற ச்ருதியில்‌, ப்ரஹ்மம்‌ ஒன்றே முதலில்‌ இருத்தது என்றும்‌, 
“ தாயேத ஜீவாந்‌ வ்யஸஸர்ஐ பூம்யாம்‌''--பஞ்ச பூதங்களோடு ஜீவனைப்‌ படைத்தான்‌ என்றும்‌, 
*“யதோவா இமாநி தாதி ஜாயந்தே''-எவனிடமிருந்து இந்த பூதங்கள்‌ உண்டாகின்றனவோ என்றும்‌ ஜீவனுக்கு. உற்பத்தி கூறப்‌படுகிறது. 
ஆதலால்‌ அசேதனங்களைப்‌ போல்‌ ஜீவர்‌களும்‌ படைக்கப்பட்டவர்களே என்பது ஊூகிக்கலாம்‌.. 
இது இந்த சங்கைக்கு ஆதாரம்‌.

விளக்கம்‌ : ஜீவர்களைப்‌ பற்றிய ச்ருதி வாக்கியங்கள்‌ ; 
(ந ஜாயதே ம்ரிய்தே வா விபச்சித்‌”- அறிவுடைய ஜீவன்‌ பிறப்பதில்லை, இறப்பதில்லை. 
*அனைத்தும் அறித்த பகவானும்‌ அறிவிலியான ஜீவனும்‌ பிறப்பில்லாதவர்‌கள்‌!”, 
“*நித்யர்களான பல ஜீவர்களுக்கு பகவான்‌ விருப்‌பங்களை அளிக்கிறான்‌... .
இந்த ஜீவன்‌ சரீரம்‌ அழியும்‌ போது அழிவதில்லை,”” 
இவை ஜீவனுக்குப்‌ பிறப்பே இல்லை என்பதைத்‌ தெள்ளத்‌ தெளிவாகக்‌' கூறுகின்றன. _.. 
ஓரு சங்கை: 
உற்பத்தியே இல்லாத ஜீவன்‌ பகவானால் எவ்வாறு காரியப்‌ பொருள்‌ ஆவான்‌ 
விளக்கம்‌ : காரியமாகுந்‌ தன்மை என்பது-ஒரு பொருள்‌ வேறொரு நிலையில்‌ இருப்பது. 
அசேதனங்கள்‌ காரியமாகும் போது அவற்றின்‌ இயல்பான தன்மை மாறுகிறது. 
ஜீவனுக்கு 'இயல்பான தன்மைகள்‌ ஞானம்‌, ஆனந்தம்‌ போல்வன மாறுவதில்லை; 
இவை சுருங்குவதும்‌ விரிவதுமான தன்மையே 'ஏற்படுகிறது. _ 
ஒரு சங்கை : படைப்பிற்குமுன்‌ பகவான்‌ ஒருவனே இருந்ததாகப்‌ பல இடங்களில்‌ ச்ருதிகள்‌ கூறுகின்றனவே... ஜீவனது நிலை என்ன? 
சேதன அசேதனங்கள்‌ யாவும்‌. பகவானுக்குச்‌ சரீரம்‌. ப்ரளய காலத்தில்‌ இவை மிகவும்‌ நுண்ணிய நிலையில்‌ உள்ளன? 
படைப்பிற்குப்‌ பிறகு நாம ரூப முடையனவாக விளங்குகின்றன. 
ஜீவனுக்கு உற்பத்தியைக்‌ கூறும்‌ ச்ருதிகள்‌, இவனுக்குச்‌ சரீரத்தோடு உண்‌டாகும்‌ நிலையைப்‌ பிறப்பென்றும்‌, 
சரீரத்தை விட்டு நீங்குவது இறப்பென்றும்‌ கருத்துக்களாக வெளியிடுகின்‌றன. 
ஆதலால்‌ அசேதனப்‌ பொருள்கள்‌ போலே ஜீவனுக்கு உற்பத்தியில்லை; ஜீவன்‌ நித்தியமானவன்‌.
3. 4. ஜீவன்‌--ஞானம்‌. 

ஜீவனது ஞானத்தைப்‌ பற்றிச்‌ சிலர்‌ கருதுவன: 
(1) “விஜ்ஞானம்‌ யஜ்ஞம்‌ தநுதே''-ஞான ஸ்வபாவனான ஜீவன்‌ யாகம்‌ செய்கிறான்‌; 
“யோ விஜ்ஞாநே இஷ்ட்டந்‌"- எவன்‌ ஞான ஸ்வரூபத்தில்‌ நிற்கிறானோ என்று ஞானம்‌ ஆத்மாவுக்கு ஸ்வரூபமாகக்‌ கூறப்படுகிறது; 
ஆனால்‌ குணமாகக்‌ கூறப் பெறவில்லை. .... 
(2) தூக்கம்‌, மயக்கம்‌ ஆகிய நிலையில்‌ அறிவு காணப் படுவதில்லை; 
விழித்திருக்கும்போது அறிவு இத்த்ரியங்களுக்கு வசப்பட்டுள்ளது. ஆதலால்‌ ஜீவ னுக்கு இயற்கையாக அறிவில்லை. 
(3) உலகில்‌ ஜீவனுக்குக்‌ காரியம்‌ எங்கும்‌ உண்டு. ஆதலால்‌ இவன்‌ எல்லா இடங்களிலும்‌ எல்லாக்‌ காலத்‌திலும்‌ தோன்ற வேண்டும்‌: 
இந்த்ரியங்களையும்‌ பயன்‌ படுத்த வேண்டும்‌. 
இதனால்‌ குறைகள்‌ நேராதவாறு அவன்‌ கல்லைப்‌ போல்‌ ஜடப்பொருள்‌ என்றும்‌, 
அறிவு தோன்றி மறையும்‌ இயல்புடையது என்றும்‌ கருத வேண்டும்‌.

மறுப்பு : ப்ரச்ந உபநிஷத்தில்‌ (6-5) ஞானஸ்வ ரூபனான ஜீவன்‌ காண்பவன்‌, கேட்பவன்‌, முகர்பவன்‌, சுவைப்பவன்‌, 
நினைப்பவன்‌, அறிபவன்‌, செய்பவன்‌ என்று விளக்கமாகக்‌ காட்டப்பெற்றுள்ளது. 
ஆதலால்‌ ஜீவன்‌ ஞானத்தை குணமாக உடையவன்‌ என்பது தேறுகின்றது. 
ஜீவன்‌ ஜட ஸ்வரூபன்‌ என்பது தவறு. பத்த நிலையிலும்‌ முக்தி நிலையிலும்‌ இவன்‌ அறிய வல்லவன்‌. 
இவ்வாறு அறிவுடைமையால்‌ இவன்‌ எங்கும்‌ வியாபித்து யாவும்‌ அறிந்துகொள்கிறான்‌. 
சங்கை 1: ஜீவன்‌ அணு மயம்‌, இவன்‌ சரீரத்தில்‌ ஒரிடத்தில்‌ இருந்து கொண்டு சரீரத்தின்‌ அனுபவங்கள்‌ யாவையும்‌ எப்படிப்‌ பெறமுடியும்‌? 
தீர்வு: உடம்பில்‌ ஓரிடத்தில்‌ பூசிக் கொள்ளும்‌ சந்தனம்‌ எங்கும்‌ மணத்தைப்‌ பரப்புகின்றது. 
இதே போல்‌ ஜீவன்‌ நிலை. இது இதயத்தில்‌ இருந்துகொண்டு சூரியனின்‌ கிரணங்கள்‌ போல்‌ எங்கும்‌ வியாபிக்கும்‌ இயல்புடையது. 
சங்கை 2: ச்ருதிகளில்‌ ஜ்ஞானம்‌ .ஜீவனுக்கு ஸ்வரூப மாகச்‌ சொல்லப்படுகிறது. இது குணம்‌ என்பது எவ்வாறு? 
தீர்வு. பூமி மணமுள்ளது; இந்த இயல்பைக்‌ குணமாகக்‌ கருதுகிறோம்‌; 
இந்தப்‌ பண்பை பூமியிலிருந்து பிரித்து அறிவதற்காக மணம்‌ என்றே கூறுகிறோம்‌, 
ஆனந்த மயனான பகவானை ஆநந்த்தன்‌ என்றே சொல்லுகிறோம்‌. ஆதலால்‌ ஜீவனுக்கு அறிவு குணமாகக்‌ கருதப்படும்‌, 
இதனாலேயே ஜீவனை ஜ்ஞாதா என்‌கிறோம் . 
தூக்க நிலையை ஆராய்வோம்‌. இந் நிலையில்‌ ஞானம்‌ வெளியில்‌ தோன்றுவதில்லை; விழித்த பின்‌ 'தோன்றுகிறது. 
புருஷனுக்கு இயற்கையாக வாய்த்த ஆண்மை முதலியன தக்க பருவத்திலே தான்‌ வெளிப்படுகின்றன. 
இது போலவே தூக்கத்திலும்‌ விழிப்பிலும்‌ ஞானத்தின்‌ நிலை. 
எங்கும்‌ எக்காலத்திலும்‌ அறிவு பயன்படாமைக்குக்‌ காரணம்‌ அறிவின்‌ குறைவன்று, இந்த்ரியங்களைக்‌ கொண்டே அறிவு இயங்குகிறது. 
இவை பயன்படும்‌ காலத்திலும்‌ இடங்களிலும்‌ ஆத்ம ஞானம்‌ பெறும்‌. 
ஆதலால்‌ ஆத்மா இயல்பான ஞானம்‌ வாய்ந்தது தன்னையும்‌ பகவானையும்‌ அறிய வல்லது, 
இந்த ஞானம்‌ குணமுமாகும்‌.
3.5. ஜீவன்‌ கர்த்தாவா? 
.கடவல்லியில்‌ (28-19) ஒரு கருத்து; ஒருவனைத்‌ துன்‌ புறுத்துபவன்‌ உண்மையில்‌ துன்புறுத்துபவன்‌ அல்லன்‌-
துன்பப்படுபவன்‌ துன்பமுறுபவன்‌ அல்லன்‌ என்று ஜீவாத்‌ மாவுக்கு உண்மையில்‌ ஒரு செயலால்‌ செயல்படுவது இல்லை என்று கூறியிருக்கிறது. 
கீதையில்‌ பகவான்‌ (4.27.]) அஹங்காரத்தால்‌ மறைக்கப்படும்‌ ஆத்ம ஸ்வருபமுடையவன்‌ செய்யப்படும்‌ செயலைக்‌ குறித்து, 
“நான்‌ செய்பவன்‌” என்று மயங்குகிறான்‌ என்று கூறியிருக்க இரான்‌, (
19-20) சரீர இந்த்ரியங்கள்‌ செயல்‌ புரிவதில்‌ ப்ரக்ருதியே காரணம்‌, ஆதலால்‌ செயல்படுவது ஜீவனுக்கு இல்லை, 
ப்ரக்ருதிக்கே என்பது ஒரு கருத்து. 
மறுப்பு : துன்புறுத்துபவன்‌ துன்புறுபவன்‌ என்ற சொற்கள் ஆத்மா நித்யம்‌ என்ற கருத்தைக்‌ கூறும் போது வத்துள்ளன. 
கீதையில்‌ கூறப்பட்ட ச்லோகத்தில்‌ வரும் கருத்து: ஜீவன்‌ செயல்படும்‌ முயற்சிகள்‌ சரீரத்திலுள்ள முக் குணங்களின்‌ சேர்க்கையாலே என்று. 
கீதையில்‌, 1*அதிஷ்டாநம்‌'” என்ற ச்லோகத்தில்‌ (18-14), சரீரம்‌, கர்த்தாவான ஜீவன்‌, 
மனத்துடன்‌ கூடிய இத்த்ரியங்கள்‌, ப்ராணன்கள்‌, பரமாத்மா என்ற ஐந்தும்‌. 
காரியங்களுக்குக்‌ காரணம்‌ என்று காண்கிறோம்‌. 
சாஸ்த்ரங்கள்‌ ஜீவனுக்கு உபாஸநம்‌ முதலான செயல்‌களை விதிக்கின்றன. 
அரசன்‌ தன்‌ குடிகளுடன்‌ காட்டில்‌ விருப்பப்படி சஞ்சரிப்பது போல்‌ ஜீவன்‌ இந்த்ரியங்களைப்‌ பற்றிக்கொண்டு 
சரீரத்தில்‌ சஞ்சரிக்கிறான்‌ என்பது ப்ரஹதாரண்யத்தில்‌ வந்துள்ளது (4-4-28]. 
இனி ப்ரக்ருதி கர்த்தாவாகாது என்பது எளிதில்‌ அறியக்கூடும்‌. 
ஒரு செயலைச்‌ செய்பவனே அதன்‌ பலனை அனுபவிப்பான்‌ என்பது சாஸ்த்ரம்‌. 
ப்ரக்ருதி செயல்படுமானால்‌ அது செயலின்‌ பயனை அனுபவிக்குமா?' புத்தியும்‌ கர்த்தாவாகாது. 
மர வேலைக்காரன்‌ தன்னிடம்‌ வேலைக்கான உபகரணங்கள்‌ வைத்துக்‌ கொண்டிருந்தாலும்‌ தான்‌ விரும்பும் போது தான்‌ வேலை செய்கிறான்‌. 
இது போல்‌ இந்த்ரியங்கள்‌ உபகரணங்க ளாயினும்‌,ஜீவன்‌ தான்‌ விரும்பும்போதுதான்‌ செயல்படு கிறான்‌. 
அசேதனமான புத்தி கர்த்தாவானால்‌ அதற்கு விருப்பம்‌, விரும்பாமை இவை வேண்டும்‌. 
இவ்வாறு ஆராய்ந்து ஜீவனே செயல்களுக்குக்‌ காரணம்‌, இவற்றின்‌ பயனை இவனே அனுபவிக்கிறான்‌ என்பது தேறுகின்றது.
5. 6. செய்விப்பவன்‌ பரமாத்மா. 

சாஸ்த்ரங்கள்‌, **இதைச் செய்‌'*, * இதைச்‌ செய்யாதே” என்று விதிக்கன்றன. 
இதனால்‌ ஜீவனே செய்பவன்‌ அவனது இச்சைப்படி செய்பவன்‌ என்பது ஒரு கருத்து. 
சாஸ்த்ரங்களை ஆராய்ந்தால்‌ ஜீவனுக்கு அத்தர்யாமியாகி பகவான்‌ செயல்கள்‌ செய்விக்கிறான்‌ என்று அறியலாகும்‌. 
இதே கருத்து கீதையில்‌ வந்துள்ளது:
தான்‌ அந்தர்‌ யாமியாகி அவரவர்களது குணத்திற்கேற்ப இயங்கச் செய்கிறான்‌ என்று. ஆதலால்‌ ஜீவன்‌ செய்வன யாவும்‌ பகவான்‌ செய்விப்பதாலே. 
சங்கை : செயல்சுளைச்‌ செய்விப்பவன்‌ பகவானே எனில்‌, யாவரும்‌ நல்ல செயல்களே செய்யுமாறு இவன்‌ ஏன்‌ விரும்பக்கூடாது? 
தீயன செய்வித்து இவன்‌ ஏன் துன்புறுத்த வேண்டும்‌? 
விளக்கம்‌ : கர்மங்களின்‌ பயன்‌ அனுபவித்தே தீரும்‌ என்கின்றன சாஸ்த்ரங்கள்‌. இந்த விதிக்கு லிலக்கே இல்லை. 
நாம்‌ செய்வன யாவும்‌ முன்னைப்‌ பிறவிகளில்‌ சேர்ந்த கர்ம பலனுக்குக்‌கு ஏற்கவே, நமக்கென நன்னெறியையும்‌ இவன்‌ அருளியிருக்கிறான்‌. 
ஆதலால்‌ ஜீவன்‌ கார்மாவைச்‌ செய்யும்போது முதற்‌ கணம் பகவான்‌ இதில்‌ சம்பந்தப்படுவதில்லை. 
இச் செயல்கள்‌ தொடரும் போது இவன்‌ செய்விக்கிறான்‌.
4. 7, ஜிவன்‌-- பகவான்‌ தொடர்பு. 

ஜீவன்‌ செய்வன பகவானுக்கு அதீனமென்று விளக்‌ கப்பட்டது. 
ஜீவன்‌ பகவானுக்கு அம்சம்‌ என்பது இப்‌போது நிர்வஹிக்கப் படுகறது' 
ஜீவன்‌--ப்ரஹ்மா இவர்‌களது தொடர்பு பற்றி மூன்று மதத்தினரது கருத்து: 
(1) த்வைதம்‌: :*ஜ்ஞாஜ்ஜெள தவாவஜாலீச நீசெள'' (ச்வேதா 7-9): ஈச்வரன்‌ ஸர்வஜ்ஞன்‌, நியமிப்‌ பவன்‌; 
ஜீவன்‌ அஜ்ஞன்‌, நியமிக்கப்படுபவன்‌. 
இதனால்‌ ஜீவன்‌ பகவானைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌. 
(2) அத்வைதம்‌ : **ததீவமஸி', “அயமாத்மா ப்ரஹ்மா”” என்பன போன்ற ச்ருதிகளால்‌ தேறுவது? 
ஜீவனும்‌ ப்ரஹ்மமும்‌ ஒன்றே என்பது, 
(3) பேத--அபேதவாதிகள்‌. ச்ருதிகள்‌ சில ஜீவனுக்கும்‌ பகவானுக்கும்‌ பேதம்‌ சொல்லுகின்றன இவை 
பேத ச்ருதிகள்‌; ஒற்றுமை சொல்லுகின்றன; 
இவை அபேத ச்ருதிகள்‌. அபேத ச்ருதிகளை ஆதாரமாகக்‌ கொண்டு 
உண்மையான உபாதியினாலே ப்ரஹ்மம்‌ ஜீவர்களாகத்‌ தோன்றுகின்றது என்பது தேறும்‌. 
உபாதி என்று கருதப்படுவது பேத ச்ருதிகளால்‌ ஒருவாறு தேறும்‌ என்றே கருத வேண்டும்‌. 
ஆத்மாவைப்‌ பற்றி இவர்கள்‌ கூறுவது: இது பகவா னின்‌ ௮ம்சமாகாது. 
அவயவம்‌ இல்லாத பகவானைப்‌ பகுதி பகுதிகளாகப்‌ பிரிக்க முடியாது. 
அன்றியும்‌ இவன்‌ பகவானின்‌ அம்சமானால்‌ இவனது தோஷங்கள்‌ பகவானைச்‌ சேரும்‌. 
விளக்கம்‌ : “யஸ்ய ஆத்மா சரீரம்‌'' என்று ச்ருதிகள்‌ சொல்லுகின்றன. 
சரீரம்‌ என்பது ஆத்மாவுக்கு நிரூபகமான அடைமொழி. 
இதுபோல்‌, ஜீவன்‌ பகவானை விட்டுப்‌ பிரியாதவனாகி, இத்தகைய அடைமொழியாகி அதன்‌ ௮ம்சமாகிறான்‌. 
ஜீவர்களுக்கும்‌ பகவானுக்கு முள்ள வித்தியாசங்கள்‌ யாவும்‌ பேத ச்ருதிகளில்‌ விவரம்‌ பெற்றுள்ளன. ஆதலால்‌ ஜீவன்‌ பகவானின்‌ அம்சம்‌. 
சரீரத்தின்‌ தோஷங்கள்‌ ஆத்மாவைச்‌ சாரா. இதுபோல்‌ ஜீவனின்‌ தோஷம்‌ பகவானிடம்‌ அணுகமாட்டா. 
ஜீவன்‌ பகவானுக்கு சரீரம்‌; பகவான்‌ சரீரி, 
அக்நிக்கு ஒளி போல்‌ பகவானின்‌ சக்தியே இவ்வுலகில்‌ எங்கும்‌ பரவுகின்றது என்று விஷ்ணு புராணம்‌ போன்ற புராணங்கள்‌ முழக்குகின்றன. 
ஆதலால்‌ சேதன அசேதனங்கள்‌ யாவும்‌ பகவானுக்கு விசேஷணம்‌--அடை மொழி; ஆதலால்‌ பகவானை விட்டுப்‌ பிரிவதில்லை. 
சங்கை: ஜீவர்கள்‌ யாவரும்‌ பகவானின்‌ அம்சம்‌ எனில்‌ அந்தணர்‌, அல்லாதார்‌ என்ற வேறுபாடு எதற்கு? 
விளக்கம்‌ : இப் பாகுபாடு அவரவர்களது நிலையைப்‌ பற்றியது. 
அந்தணன்‌ வேதம்‌ ஒதுவதால்‌ ' தூயோன்‌; இதனால்‌ இவனுக்கு ஏற்றம்‌. 
நெருப்பு ஒன்றேயாயினும்‌ ஓமத்திற்கான நெருப்புக்கும்‌ இடுகாட்டில்‌ இருக்கும்‌. நெருப்புக்கும்‌ வித்தியாசம்‌ போல்‌ இதனையும்‌ கருத வேண்டும்‌. 
முதற்‌ பாதத்தின்‌ தொடர்பு மூன்றாம்‌ பாதம்‌. 
முதற்‌: பாதத்தில்‌ பகவான்‌ மூவகைக்‌ காரணமாவான்‌ என்பது நிரூபிக்கப்பட்டது. 
இந்தப்‌ பாதத்தில்‌ சேதன அசேதனங்கள்‌ யாவும்‌ பகவானால்‌ படைக்கப் பெறுவன என்‌பது விளக்கப்படுகின்றது. 
ஆகாசம்‌, வாயு, அக்நி, ஐலம்‌, பூமி இவை பகவானாலேயே படைக்சுப்படுகின்‌றன. 
ஆகாசத்திலிருந்து வாயுவும்‌, வாயுவிலிருந்து அக்நியும்‌, அக்நியிலிருந்து ஜலமும்‌, ஜலத்திலிருந்து பூமியும்‌, இவன்‌ படைத்தவை. 
காரியப்‌ பொருள்கள்‌ யாவும்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌ என்கின்றன உபநிஷத்துக்கள்‌. 
இவற்றைச்‌, சரீரமாகக்‌ கொண்டு இவன்‌ அந்தர்யாமியாகி இவற்‌றுள்‌ உறைகன்றான்‌ என்கின்றன சில உபநிஷத்துக்கள்‌., 
ஆதலால்‌ காரியப்‌ பொருள்‌ யாவும்‌ பரமாத்மாவிட மிருந்தே உண்டாகின்றன. ஜீவன்‌ பரமாத்மாவின்‌ அம்சம்‌; 
இதனால்‌ பரமாத்மாவோடு ஒன்றிவிடுகிறான்‌ என்பது தவறு. 
இவன்‌ வேலைக்காரனைப்‌ போல என்ற கருத்தும்‌ ஏற்பதற்‌ கில்லை. 
பகவானுக்கு அதீனமான ஞானம்‌ ஜீவனுக்கும்‌ உண்டு; 
பகவானால்‌ இவன்‌ தன்‌ செயல்களைச்‌ செய்கிறான்‌, இவன்‌ பகவானுக்குச்‌ சரீரம்‌; நித்யமானவன்‌, 
இவனிடமுள்ள தோஷங்கள்‌ , பகவானிடம்‌, அணுக மாட்டா-
----------------
4. நாலாவது பாதம்‌ 

மூன்றாம்‌ பாதத்தின்‌ சுருக்கம்‌ : 
மாறுபாடே இயல்‌பான அசேதனங்கள்‌,' நித்யமான' சேதனப்‌ பொருள்கள்‌ யாவும்‌ பகவானால்‌ படைக்கப்பட்டன; 
பகவானா லேயே நியமிக்கப்‌ பெறுவன, 
ஜீவனுடைய போகத்திற்‌கான உபகரணங்கள்‌ ப்ராணனும்‌ இந்த்ரியங்களும்‌, 
இவையும்‌ பகவானாலே படைக்கப்‌ பெறுவன என்பது இந்தப் பாதத்தில்‌ விளக்கம்‌ பெறுகின்றது. 
முக்ய ப்ராணனைத்‌ தவிர மற்றைய நாலும்‌ இந்த்ரியங்கள்‌. 
ஆதலால்‌ இந்தப்‌ பாதத்தின்‌ தலைப்பு ப்ராண பாதம்‌ என்பது,
4, 1. இந்த்ரியங்கள்‌. 

வேத வாக்கியங்கள்‌ வெளியிடுவது: ப்ரளய காலத்தில்‌ பரமாத்மா ஒருவனே இருந்தான்‌ என்று. 
முண்டக உப திஷத்‌ கூறுவது (2-7-3); பரமாத்மாவிடமிருந்து ப்ராணன்‌, மனம்‌, இந்த்ரியங்கள்‌ யாவும்‌ உண்டாகின்றன. 
இவை நித்யம்‌ என்று ஒரு வேத வாச்கியமும்‌ இல்லை, 
அன்றியும்‌ பகவான்‌ உலகைப்‌ படைத்து நாம ரூபங்கள்‌ செய்வதாகக்‌ கருதுகிறோம்‌; 
இவனைத்‌ தவிர மற்றைப்‌ பொருள்களைக்‌ குறிக்கும்‌ பெயர்கள்‌ படைப்பிற்குப்‌ பிறகே வழங்குகின்றன, 
ஆதலால்‌ ப்ராணன்‌, இத்த்ரியங்‌கள்‌ இவை நித்யமல்ல, ஈச்வரானாலே படைக்கப்‌ பெறுவன. 
இந்த்ரியங்கள்‌ பதினொன்று: ஐந்து ஞானேந்த்ரியங்‌கள்‌, ஐந்து கர்மேந்த்ரியங்கள்‌, மனம்‌ என்பன.
ஞானேந்த்‌ரியங்கள்‌: மெய்‌, வாய்‌, கண்‌, மூக்கு, செவி; 
கர்மேந்த்ரியங்கள்‌. வாக்‌ (பேசுவதற்கு), கை, கால்‌, பாயு (மல மூத்ரங்கள்‌ கழிவதற்காக), ௨பஸ்தம்‌ (இனம் பெருக்க )

“ப்ராணா வாவ ௬ஷமய:'' என்ற வாக்கியத்தில்‌ ப்ராணா: என்ற பன்மை இந்த்ரியங்களைக்‌ குறிக்கும்‌ என்கின்றனர்‌ இவர்‌. 
எல்லாம்‌ அழிந்த பின்பு பகவானே இருப்பதால்‌ ப்ராணா: என்ற பதம்‌ குறிப்பது பகவானையே . 
'“ஸர்வாணி ஹவா இமாநி பூதாதி ப்ராணமே வாழி ஸம்‌ விசந்‌தி '” 
(ப்ரளய காலத்தி ல்‌) பூதங்கள்‌ யாவும்‌ பிராணன்‌ எனப்‌ பெறும்‌ பரமாத்மாவினுள்‌ லயிக்‌கின்றன. 
ஆதலால்‌ ஆகாசாதிகள்‌ போலே இத்த்ரியங்‌களும்‌ பரமாத்மாவிடமிருந்து உண்டாகின்றன என்பது திண்ணம்‌.
4, 2. இந்த்ரியங்களின்‌ பரிமாணம்‌. 

ஜீவனது மரண தசையில்‌ ப்ராணன்கள்‌ எனப்‌ பெறும்‌ இந்த்ரியங்கள்‌ வெளியேறுகின்றன. 
ஆதலால்‌ இவை விபுவாக இருக்க முடியாது. இவை அணு பரிமாண முள்ளவை.
4, 3; முக்ய ப்ராணன்‌. 

ப்ராணன்‌ ஐவகைத்‌ தொழில்‌ புரிகின்றது; 
இத்‌ தொழில்களுக்கேற்ப இது ப்ராணன்‌, அபானன்‌, வயா னன்‌, உதானன்‌, ஸமானன்‌ என்ற பேர்கள்‌ பெற்றுள்ளது. 
இதற்கு முகிய ப்ராணன்‌ என்று பெயர்‌. 
முண்டக உப நிஷத்‌ வாக்கியம்‌ ஒன்று: இந்த பரமாத்மாவிடமிருந்து ப்ராணன்‌, மனம்‌, இந்த்ரியங்கள்‌, 
ஆகாசம்‌ முதலான ஐந்து பூதங்கள்‌ உண்டாகின்றன என்பது. -ஆதலால்‌ ப்ராணன்‌ வாயுவாகாது. 
ஜீவனுக்குப்‌ பயன்படுவன கண்‌ முதலான இந்த்ரியங்கள்‌ உபகரணங்களாக, 
இவற்றுடன்‌. ப்ராணனும்‌ இணைந்து கூறப்படுகின்றது. 
முக்ய ப்ராணன்‌ சரீரத்தையும்‌ இந்த்ரியங்களையும்‌ தரிக்கின்றது. 
ஆதலால்‌ இதுவும்‌ கண்‌ முதலியன போலே ஜீவனுக்கு உபகரணமாகும்‌. 
இதுவும்‌ பகவானாலேயே படைக்கப் பெறுவது,
4, 4. இந்த்ரியங்கள்‌-- தேவதைகள்‌. 

உபநிஷத்‌ ஒன்று வெளியிடுவது; அக்நி: தேவதை வாக்கை அதிஷ்டித்து (தலைமை ஏற்று) முகத்தில்‌ துழைகின்றது. 
வாயு தேவதை முக்ய ப்ராணனை அதிஷ்‌டிக்கின்றது; மூக்கில்‌ நுழைகின்றது. 
இவ்வாறு இந்த்ரியங்களை தேவதைகள்‌ : அதிஷ்டிக்கின்றன. 
இந்த தேவதைகள்‌ இவ்வாறு அதிஷ்டிப்பது - பகவானுடைய “சங்கல்பத்‌தாலேயே .-எவ்வாறெனில்‌, 
உபநிஷத்துக்கள்‌ 'கூறுவ்து:' பகவான்‌ அக்நிக்கு உள்ளும்‌ புறமுமாக நிற்‌கிறான்‌; இவனுக்கு அக்நி சரீரம்‌; 
எனினும்‌ அக்நி இவனை அறிவதில்லை; இவ்வாறே மற்றைய தேவதைகளும்‌. 
அன்றியும்‌ பகவானிடம்‌ பயந்து வாயு வீசுகின்றான்‌- சூரியன்‌ உதிக்கின்றான்‌; 
அக்நி, இந்த்ரன்‌, யமன்‌ ஆகி யோர்‌ செயல்‌ புரிகின்றனர்‌ என்பது ஓர்‌ உபறிஷத்‌ வாக்கியம்‌, 
பகவான்‌ இந்த தேவதைகளுக்கு அந்தர்‌யாமி யாகிறான்‌; நியமிக்கிறான்‌. 
ஆதலால்‌ இந்த்ரியங்‌கள்‌ செயல்படுவதும்‌, தேவதைகள்‌ இவற்றை அதிஷ்டிப்‌பதும்‌, 
ஜீவனும்‌ தரித்து நிற்பதும்‌ எல்லாம்‌ பகவானின்‌ சங்கல்பத்தாலே. , 
பசுவான்‌ உலகைப்‌ படைத்து அதனுள்‌ லகல சேதன அசேதனங்களாகிறான்‌ என்று தைத்திரீயம்‌ ஆநந்தவல்லியில்‌ காண்கிறோம்‌. 
கீதையிலும்‌ இவன்‌ கூறுவது: இவ்வுலகைத்‌ தான்‌ தாங்குவது தனது சக்தியின்‌ ஓர்‌ ௮ம்சத்தாலே; ஒரு திவலையாலே என்று. 
இதனாலும்‌ தேறுவது: அக்நி முதலான தேவதைகள்‌ இந்த்ரியங்களை தரித்து நிற்பது பகவானாலே என்று. 
தூங்கும்‌ நிலையில்‌ கண்‌ முதலியன செயல்படுவன வல்ல. 
எல்லா நிலையிலும்‌ முக்ய ப்ராணன்‌ சரீரத்தையும்‌ இந்த்ரியங்களையும்‌ தரித்து நிற்கிறது. 
இவ்வாறு ப்ராணனால்‌ தரிக்கப் படுவதால்‌ இந்த்ரியங்கள்‌ ப்ராணன்‌ எனப்படுகின்‌றன.

4. 5. வ்யஷ்டி ஸ்ருஷ்டி. 

இது வரையில்‌ பூதங்கள்‌ ஐந்து, இந்த்ரியங்கள்‌ ப்ராணன்‌ போல்வன பகவானால்‌ படைக்கப் பட்டவை என்று நிர்ணயிக்கப்பட்டது. 
தேவர்‌, மனிதர்‌ முதலான ஜீவர்கள்‌ யாவரும்‌ பகவானின்‌ காரியப்‌ பொருள்கள்‌ என்பது விளக்கப்படுகன்றது. 
சாந்தோக்யத்தில்‌ பசுவான்‌ கூறியதாக ஒரு. வாக்கியமுள்ளது: 
இந்தச்‌ சதுர்முகனைக்‌ கொண்டு உள்‌ நுழைந்து நான்‌ நாம ரூபங்களை அளிக்கக்‌ கடவேன்‌ என்று. 
ச்ருதி 'வாக்கியம்‌ ஒன்று: (பகவான்‌ சொல்லியதாக) நான்‌ நாம ரூபங்களைச்‌ செய்வேவளாக, இவை எவ்வாறு பொருந்தும்‌? 
விளக்கம்‌ : சாந்தோக்யத்தில்‌ (6-8-8) தீ , நீர்‌, பூமி என்ற மூன்று பூதங்களையும்‌ ஒன்று சேர்ப்பதாகிய திரி வ்‌ருத் கரணம்‌ சொல்லப்படுகிறது. 
இவ்வாறு செய்யப்பட்ட பூதங்களிலிருந்து அண்டம்‌ உண்டாகிறது. அண்டத்தில்‌ நான்முகன்‌ தோன்றுகிறான்‌. 
இதுவரையில்‌ ஸமஷ்டி , ஸ்ருஷ்டி--ஒட்டு மொத்தமாகப்‌ படைத்தல்‌.
**அநேந ஜீவேந- என்றவாறு தனக்குச்‌ சரீரமான சதுர்முகனைக்‌ கொண்டு பகவான்‌ 
வ்யஷ்டி ஸ்ருஷ்டியை (பாகுபாடுள்ள படைப்பைச்‌) செய்கிறான்‌ என்று தேறுகின்றது. 
அக்நி சங்கல்பித்தது, ஜலம்‌ சங்கல்பித்தது என்ற இடங்களில்‌ இவற்றைச்‌ சரீரமாகக்‌ கொள்ளும்‌ 
பகவான்‌ சங்கல்பித்ததாக் நிர்ணயம் செய்யப் பெற்றுள்ளது. 
ஆகையால்‌ உயிர்கள்‌ யாவையும்‌ படைப்பது பகவானே. 
ஜீவனுக்கு ஞானேந்த்ரியங்கள்‌ ஐந்து, கர்மேந்திரியங்‌கள்‌ ஐந்து; இவற்றோடு மனமும்‌ சேர்ந்து இந்த்ரியங்கள்‌ பதினொன்று. 
இவையும்‌ முக்ய ப்ராணனும்‌ அணுவானவை. இந்த்ரிய ப்ராணன்களை தரித்து நிற்பன அக்நி முதலான தேவதைகள் ; 
இவர்கள்‌ இவ்வாறு தரிப்பது பகவானுடைய சங்கல்பத்தாலே. 
தீ , நீர்‌, பூமி இவற்றைப்‌ படைத்து 0 சேர்த்து அண்டத்தைப்‌ படைத்தவன்‌ பகவான்‌. இது ஸ்மஷ்டி ஸ்ருஷ்டி. 
சதுர்முகனைக்‌ கொண்டு இவனுக்கு அந்தராத்மாவாகி பகவான்‌ சேதன ௮சேதனங்களைப்‌ படைத்தான்‌. 
ஆதலால்‌ எல்லா வகைப்‌ படைப்பும்‌ ஸா்வேச்வரனது செயல்‌,
-----------------
மூன்றாம்‌ அத்யாயம்‌ 
1. முதற்‌ பாதம்‌ 

முதல்‌ இரண்டு: அத்யாயங்களில்‌ விவரித்தவாறு மேன்மை யுள்ள ஸர்வேஸ்வரனைப்‌ பரம பதத்தில்‌ அனுப விப்பதற்குப்‌ பரந்த ஞானம்‌ வேண்டும்‌. 
இயல்பாக இத்தகைய ஞானம்‌ வாய்ந்த ஆத்மா உடற்‌ பிறவியால்‌ வருந்துகிறது. 
பகவானது கல்யாண குணங்களை அனுபவிக்க வேட்கை நேர்ந்தால்‌ உலக வாழ்க்கையில்‌ வெறுப்பு ஏற்‌படும்‌; 
இந்த விருப்பின்மை வைராக்யம்‌, உலக வாழ்ககையின்‌ தோஷங்களை அறிந்தால்‌ வைராக்யம்‌ நேரும்‌. 
இவ்வுலகப்‌ பிறவியில்‌ இழிவு எவ்வாறு எனில்‌, தாய்‌ வயிற்றில்‌ தோன்றி வெளி வருவது,இளமை, மூப்பு, பிணி, 
இவற்றால்‌ துன்புறுவது, கர்மங்களால்‌ மீண்டும்‌ மீண்டும்‌ பிறப்பது போல்வனவற்றாலே, 
கர்மங்களின்‌ ்பயனாக ஜீவன்‌ மேல்‌ லோகங்களுக்குச்‌ சென்றால்‌ மீண்டு வரும் போது பலவகையாக இன்னலே அனுபவிக்கிறான்‌. 
மேலுலகங்களில்‌ வாழ்வு முடிந்த பிறகு ஜீவன்‌ ஆகாசம்‌, மேகம்‌, பூமி இவற்றோடு இணைந்து 
௮ன்னமாகி ரேதஸ்‌ஸாகி ஸ்த்ரீயின்‌ உடலில்‌ சேருகிறான்‌. 
இந்த விவரங்‌களை ஆய்ந்துணர்ந்தால்‌ வைராக்யம்‌ ஏற்படும்‌. 
இந்த வைராக்யத்திற்குக்‌ காரணமாகும்‌ இந்தப்‌ பாதம்‌ வைராக்ய பாதம்‌ எனப்படுகிறது.. 
புண்யங்களின்‌ பயனாக ஜீவன்‌ தேவலோகம்‌ செல்‌லும் போதும்‌ மீளும் போதும்‌ பூத ஸூஷ்மங்களான இந்த்ரியங்களுடன்‌ இயங்குகிறான்‌.
1. 1. ஜீவனின்‌ மீட்சி 

ஜீவன்‌ தேவலோகஞ்‌ சேர்ந்து பின்பு மீளும் போது ஆகாயமாகிய அக்நியில்‌ சேருகிறான்‌ (ஹோமம்‌ செய்‌ யப்படுகிறான்‌)
ஸோம ராஜா என்ற அழகிய சரீரம்‌ பெறுகிறான்‌. 
பின்பு பர்ஜந்யம்‌ (மேகம்‌) என்ற இரண்‌டாவது அக்நியில்‌ ஹோமம்‌ செய்யப்படுகிறான்‌. 
இதற்‌குப்‌ பின்‌ மழையாகிறான்‌; இந்த மழை பூமியாகிய மூன்றாவது அக்நியில்‌ ஹோமம்‌ செய்யப்படுகிறது, 
௮மப் போது ஜீவன்‌ அன்னமாகிறான்‌, 
இந்த அன்னம்‌ புருஷ னாகிய நாலாவது ௮க்நியில்‌ ஹோமம்‌ செய்யப்படுகிறது 
இது ரேதஸ்ஸாக மாறிப்‌ பெண்பாலிடம்‌ ஐந்தாவது ஆஹுதியாகச்‌ சேருகிறது. 
இந்த நிலைகள்‌ ஒவ்வொன்‌றும்‌ ஜீவன்‌ பூத ஸுக்ஷ்மங்களோடு கூடவே பெறுகின்‌றான்‌. 
இது பஞ்சாக்நி வித்யையின்படி. ஜீவன்‌ சேரும்‌ ஒவ்வொரு நிலையிலும்‌ இவன்‌ அக்நியிற்‌ செய்யும்‌ ஆஹுதி போல்‌ விளங்குகிறான்‌. 
இவ்வாறு இவன்‌ ஐந்து திலைகளில்‌ சேருவதை விவரிப்பது பஞ்‌சாக்நி வித்யை ஆகும்‌.
1. 2. கர்ம பந்தம்‌ 

யாகம்‌ முதலிய கர்மங்களைச்‌ செய்து ஜீவன்‌ ஸ்வர்கம்‌ போன்ற பலன்களை அனுபவிக்கிறான்‌. அனு பவம்‌ தீர்ந்து விடுகிறது. 
ஆதலால்‌ இவன்‌ மீளும்போது கர்மம்‌ விஞ்சி யிராது. அதாவது 
கர்ம பலன்‌ முழுதும்‌ அனுபவிக்கும்‌ வரையில்‌ இவ்வுலகங்களில்‌ இருக்கிறான்‌ என்பது ஓர்‌ அபிப்பிராயம்‌. 
விளக்கம்‌ : கெளதம தர்ம ஸூத்ரம்‌, ஆபஸ்தம்ப ஸு்த்ரம்‌ இவை வெளியிட்டுள்ள கருத்து: 
தேவ லோகத்‌ தில்‌ ஜீவன்‌ கர்ம பலன்களை முழுதும்‌ அனுபவிப்பதில்லை. 
விஞ்சியுள்ன கர்மத்தை அனுபவிப்பதற்காகவே மீண்டு சிறப்புடைய ஜன்மங்கள்‌ பெறுகிறான்‌. 
இவ்வாறு பல வகைகளிலும்‌ ஆராய்ந்தால்‌ ஜீவன்‌ விஞ்சிய கர்மத்துடன்‌ மீள்கிறான்‌ என்பது அறியலாகும்‌.
 
1. 3. பாவச்‌ செயல்களின்‌ பலன்‌. 

விதித்த கர்மங்களைச்‌ செய்யாதவர்களும்‌, செய்யத்‌ தகாதனவற்றைச்‌ செய்பவர்களும்‌ அநிஷ்டகாரிகள்‌ எனப் படுகின்றனார்‌. 
இவர்கள்‌ சந்த்ர லோகம்‌ அடைவ தில்லை? 
ஏழு வகையான நரகங்களில்‌ : பாவச்‌ செயல்‌களின்‌ பயனை அனுபலிக்கிறார்கள்‌. 
இந்த அனுபவத்‌திற்குப்‌ பிறகு பூமியில்‌ ஈ, கொசு, புழு போன்ற இழிவான பிறவிகள்‌ பிறக்கின்றனர்‌. 
இவர்கள்‌ சந்த்ர லோகம்‌ செல்வதில்லை; 
ஆதலால்‌ முன்பு கூறிய ஐந்தாவது ஆஹாுதி-அதாவது மனைவியின்‌ கா்ப்பத்தில்‌ சேருவது இவர்களுக்கில்லை.
1. 4, ஒவ்வோர்‌ இடத்திலும்‌ ஜீவன்‌ தங்கும்‌ காலம்‌. 

யாகம்‌ முதலான கர்மங்களின்‌ பயனாக ஜீவன்‌ மேலுலகங்கள்‌ சென்று மீள்கிறான்‌ என்று முன்பு: கூறி யிருக்கிறது. 
இவன்‌ ஒவ்வொரு நிலையிலும்‌ எவ்வளவு காலம்‌ தங்கியிருப்பான்‌? 
பயிர்களோடு இணைந்த நிலையில்‌ ஜீவன்‌ மிகவும்‌ சிரமப்பட்டு வெளியேறுகிறான்‌ என்று அறிகிறோம்‌. 
ஆதலால்‌ அக்நி, மேகம்‌ இவற்றோடு இணையும்‌ காலம்‌ சொல்பமே என்பது தெளிவு. 
கர்மாக்களால்‌ ஜீவன்‌ படும்‌ துன்பங்கள்‌ இதுவரையில்‌ விவரம்‌ பெற்றுள்ளன. 
இவற்றிலிருந்து விடுதலை பெற்று பகவானை அடைவதே புருஷார்த்தம்‌ என்பது வலியுறுத்தப்படுகின்றது.
புண்ய கர்மாக்கள்‌ செய்யும்‌ ஜீவன்‌ இவற்றின்‌ பயனாக ஸ்வர்கம்‌ முதலியவற்றை அனுபவித்து 
எஞ்சிய கர்மாக்களோடு கீழே இறங்குகிறான்‌; 
ஐந்து நிலைகளை அடைகிறான்‌; ஐந்தாவது நிலை பெண்பாலிடம்‌ ரேதஸ்‌ஸாகச்‌ சேர்வது, 
இவன்‌ ஒவ்வொரு நிலையிலும்‌,அதிகம்‌ தங்குவதில்லை; 
தான்ய நிலையில்‌ தாமதம்‌ நிகழ்‌கின்றது. 
பாவம் செய்தவர்கள்‌ சந்த்ரனை அடைவதில்லை? 
ஏழு வகை நரகங்களில்‌ துன்பம்‌ அனுபவித்த பிறகு இழிவான பிறவி பிறக்கின்றனர்‌.

-----------------

2. இரண்டாம்‌ பாதம்‌. .. 

கர்மங்களிலிருந்து விடுபடும்‌ ஜீவன்‌ பகவானை அனுபவிக்கின்றது. 
இந்த பகவானுடைய மேன்மைக்குக்‌ காரணமான பண்புகள்‌ இரண்டு: 
இவனை இழிவுகள்‌ நாடாமலிருப்பது, இவனுக்கான தனிப்பட்ட குணங்கள்‌, இவை இரட்டைப்‌ பண்பு - உபய லிங்கமாகும்‌. 
இந்த: இரட்டைப்‌ பண்பு பற்றிய இந்தப்‌ பாதம்‌ உபய லிங்க பாதம்‌ எனப்பெறும்‌. 
அன்றியும்‌ ஜீவன்‌ கனவு, தூக்கம்‌, மயக்கம்‌ ஆகிய நிலைகளில்‌ படும்‌ துன்பங்கள்‌ விவரிக்கப்‌ படுகின்றன. 
ஜீவர்களைச்‌ சரீரமாக உடைய பகவானுக்கு இழிவு என்பதே இல்லை; 
சிறப்புற்ற குணங்கள்‌ வாய்ந்தவன்‌ இவன்‌ என்பதும்‌ விளக்கப்படுகிறது.
2. 1. கனவு: யார்‌ படைப்பு? 

ப்ருஹதாரண்ய உபநிஷத்தில்‌ (6-3-70) கனவு பற்றிக்‌ கூறியிருப்பது: 
கனவில்‌ ஜீவன்‌ காண்பன ரதம்‌, குதிரைகள்‌, இவை செல்லும்‌ பாதை, குளங்கள்‌, குட்டைகள்‌, ஆறுகள்‌ போல்வன, 
இவற்றை இவனே படைக்கிறான்‌. 
இவ் வுலகம்‌, பர லோகம்‌ இவற்றின்‌ சந்தியில்‌ ஏற்படுவது இந்த மூன்றாவது நிலை. 
இவற்றைப்‌ படைப்‌பவன்‌ ஜீவனே என்று வேதமும்‌ ஓதுகின்றது. 
அன்றியும்‌: கடவல்லியில்‌ (2-9-8) ஜீவன்‌ கனவில்‌ காணும்‌ பொருள்‌களைப்‌ படைக்கின்றான்‌ என்றும்‌ குறிப்பிடப்‌ பெற்றுள்‌ளது. 
ஆதலால்‌ கனவுகளைப்‌ படைப்பவன்‌ ஜீவனே. இது ஒரு கருத்து.

தேர்வு : “கனவில்‌ காண்பன விசித்திரமானவை, காண்‌: பவனே அனுபவிப்பவை; அருகிலுள்ளோர்‌ அனுபவிமப்‌ பதில்லை. 
இவ்வாறான விசித்திரங்கள்‌ செய்பவன்‌ பகவானேயாக வேண்டும்‌.
கனவு நிலையில்‌ ஞானம்‌ விளக்கம்‌- பெறுவதில்லை. 
ஆதலால்‌ ஜீவன்‌ கனவுகளைப்‌ படைக்‌க இயலாது. 
கனவில்‌ விரும்பாதவற்றையும்‌ காண்கிறோம்‌. 
ஜீவன்‌ படைப்பவனானால்‌ விரும்பாதவற்றைப்‌ படைத்து மனம் கலங்க மாட்டான்‌. 
ஆதலால்‌ கனவுகளுக்குக்‌ காரணம்‌ பகவானே. 
 
2. 2. தூக்க நிலை. 

தூக்க நிலையைப்‌ பற்றி மூன்று கருத்துக்கள்‌ வேதங்‌ களில்‌ உள்ளன. 
இந்த்ரியங்கள்‌ யாவும்‌ அடங்கி வெளி விஷயங்களை ௮னுபவிப்பதாகிய கலக்கமில்லாத நிலையில்‌ 
ஜீவன்‌ சரீரத்திலுள்ள நாடிகளில்‌ நுழைந்து இந்த நாடிகளின்‌ வழியாக இவற்றோடு தொடர்புள்ள 
இதயத்தில்‌ புரீதத்‌ என்ற மாமிச பிண்டத்தை அடைகிறான்‌; 
தூங்கும்‌ நிலையில்‌ ஸத்‌ என்ற ப்ரஹ்மத்தோடு நன்கு இணைந்திருக்கிறான்‌. 
நாடிகள்‌, புரீதத்‌, ப்ரஹ்மம்‌ "இம்மூன்றும்‌ சேர்ந்தே தூக்கத்தின்‌ நிலை.
2. 3. தூக்கத்திற்குப்‌ பின்பு ஜீவனது நிலை. 

ஒரு கருத்து : தூக்கத்தில்‌ ஜீவன்‌ தன்னை அறிவ தில்லை, மற்றைப்‌ பொருள்களையும்‌ அறிவதில்லை; 
தூங்கும்போது ப்ரஹ்மத்தில்‌ ஒடுங்கி விடுகிறான்‌. முக்த னுக்கும்‌ இவனுக்கும்‌ வாசியில்லை. 
முக்தனுக்குப்‌ பழைய சரீரம்‌, இந்த்ரியங்கள்‌ இவற்றோடு தொடர்பில்லை. 
இதுபோல்‌ தூக்கத்திலிருந்து விழித்து எழுந்திருப்பவன்‌ வேறு ஜீவனாக வேண்டும்‌.

தேர்வு : கர்மம்‌, நினைவு, வேத வாக்கியம்‌, மோக்ஷ விதிகள்‌ இவற்றை ஆராய்ந்து பின்வருமாறு முடிவு அளிக்‌ கப்படுகிறது.
கர்மம்‌ என்பது தூங்குவோன்‌ தூங்குவதற்கு முன்‌ செய்த புண்ய பாவங்கள்‌. இவை அனுபவித்தே தீரும்‌; 
ஆதலால்‌ விழித்து எழுவதற்கு முன்‌ இவன்‌ இவற்றை அனுபவிக்க வேண்டும்‌. 
இல்லையெனில்‌ ஒருவன்‌ செய்த தோஷத்தின்‌ பலன்‌ வேறொருவன்‌ அனு பவிக்கிறான்‌ என்ற தோஷம்‌ நேரும்‌. 
நினைவு என்பது? இரவில்‌ தாங்கியவன்‌ எழுந்திருக்கும் போது, '*தான்‌ தூங்கினேன்‌”? என்ற உணர்வு. 
ஆதலால்‌ துங்கி எழுந்‌திருப்பது வேறு ஜீவன்‌ என்ற கருத்து பொருந்தாது. 
மேலும்‌ சாந்தோக்யத்தில்‌ வரும்‌ கருத்து: ஒரு ஜீவன்‌ தூங்கும் போது எந்த சரீரத்தில்‌ 
(மனிதன்‌, சிங்கம்‌, புலி போன்‌ற) தூங்குகிறானோ அதே சரீரத்தில்‌ எழுந்‌திருக்‌கிறான்‌ என்பது. 

தூக்கத்தை முக்தி நிலையோடு ஓப்பிட இயலாது. 
முக்தன்‌ எல்லா அறிவும்‌ வாய்ந்தவன்‌, யாவும்‌ அறிபவன்‌, போகங்கள்‌ அனுபவிப்பவன்‌. 
தூக்க நிலையில்‌ இந்த்ரியங்கள்‌ களைப்பாறுகின்‌றன; 
ஜீவன்‌ பகவானை அனுபவித்து விஞ்சியுள்ள கர்மங்‌களை ௮னுபவிக்க எழுந்திருக்கிறான்‌. 
ஆதலால்‌ விழித்‌ தெழுந்தவன்‌ தூங்குபவனே ஆகிறான்‌. 
2. 4, மூர்ச்சை நிலை. 

மூர்ச்சை அடைந்தவன்‌ நிலை மரணத்தின்‌ பாதி நிலையேயாகும்‌. 
மூர்ச்சை நிலையில்‌ ஞானமில்லை- ஆனால்‌ இது ஞானமுள்ள விழிப்பு நிலையும்‌ கனவு நிலையும்‌ ஆகாது. 
தூக்க நிலை என்பது இந்திரியங்கள்‌ களைப்‌படைவதால்‌ ஏற்படும்‌; 
மூர்ச்சை நிலை மனக்‌ கலக்கத்‌தால்‌ ஏற்படுவது. இது தூக்க நிலையும்‌ ஆகாது. 
மரண நிலையில்‌ ப்ராணன்‌ அடியோடு இல்லை. ஆதலால்‌ மூர்ச்சை நிலை மரண நிலையின்‌ பாதி என்பது விளங்குகிறது.
 
2. 5. உபய லிங்கம்‌. 

ஜீவனுடைய தாழ்வு நிலை விவரிக்கப்பட்டது. 
ஏற்படுமோ என்ற ஐயம்‌ ஆராயப்படுகிறது. 
ஜீவனு டைய சரீர சம்பந்தத்தால்‌ பரமாத்மாவுக்குத்‌ தாழ்வு நேராது என்பதற்குக் காரணம்‌ 
ச்ருதிகள்‌ யாவும்‌ இரண்டு குணங்களைக்‌ குறிக்கின்‌றன; 
ஒன்று: இவன்‌ தாழ்வுகளுக்‌ கெல்லாம்‌ எதிர்நிலையாக இருப்பது; 
மற்றது: இவனுக்கே உரிய தனிப்பட்ட குணங்கள்‌--கல்யாண குணங்‌கள்‌. 
சாந்தோக்யத்தில்‌ (8-7-5) பரம் பொருள்‌ பாவமற்‌றது, மூப்பில்லாதது, மரணம்‌,. வருத்தம்‌, பசி, தாகம்‌ போன்றவை அற்றது; 
விரும்பப்படும்‌ நற்குணங்கள்‌ உடையது; தடையற்ற ஸங்கல்பம்‌ உடையது. 
விஷ்ணு புராணத்திலும்‌ (46-48) அவன்‌ தேஜஸ்‌, அளவற்ற ஞானம்‌, வீர்யம்‌, சக்தி முதலான ' நற்குணங்களுக்கு இருப்பிடம்‌; 
கிலேசம்‌ முதலான எந்த தோஷங்களும்‌ இலன்‌ என வந்துள்ளது.

அன்றியும்‌ - சேதன அசேதனங்களின்‌ அந்தர்யாமியாக பகவான்‌ உறைவது தனது விருப்பதாலேயே, இவற்றை நியமிப்பதற்காகவே. 
இதில் சங்கை : ஜீவன்‌ கர்ம வசப்பட்டவன்‌, ஆதலால்‌ இவன்‌ கொண்டுள்ள சரீரத்தோடு தொடர்பு தாழ்வைத்‌ தரக் கூடும்‌. 
பகவான்‌ இந்த சரீரத்தில்‌ உறைந்து இந்தத்‌ தொடர்பாலே லீலாரஸம்‌ அனுபவிக்கிறான்‌. 
முண்டக உபநிஷத்தில்‌ வரும்‌ விளக்கம்‌: பரமனாகிய பறவையும்‌, ஜீவனாகிய பறவையும்‌ இணைந்து ஓரே மரத்தில்‌ தங்குகின்றன; 
ஜீவனாகிய பறவை அதன்‌ இனிய பழத்தைப்‌ புசிக்கின்றது; 
பகவானாகிய மற்றது இதைப்‌ புசியாமல்‌ பெருமையுடன்‌ விளங்குகிறது. 
இப்‌ பறவைகள்‌ பிரியாமல்‌: இணைந்திருந்தும்‌ ஜீவனாகிய பறவை தான்‌ துன்பமுறுகிறது. 
ஆதலால்‌ பகவானுக்கு இழிவே யில்லை என்று தேறுகிறது. 
““பெருமையுடன்‌ விளங்குகிறது'' என்பது இதனோடு இணைந்து விளங்‌கும்‌ கல்யாண குணங்களைக்‌ காட்டுகிறது.
பகவான்‌ ஜீவ 'சரீரங்களைத்‌ தன்‌ சரீரமாகக்‌ கொண்டு வியாபிப்பது, 
அந்த ச்ரீரத்தோடு கூடிய ஜீவர்‌களையும்‌, அசேதனப்‌ பொருள்களையும்‌ நிர்வஹிப்‌பதற்கே, 
பகவானே நாம ரூபங்களைக்‌ கொடுக்கிறான்‌. 
ஆனால்‌ இந்த நாம ரூபங்களால்‌' இவன்‌ தீண்டப்படாதவன்‌ என்ற வேத வாக்யங்கள்‌ இக் கருத்தை வலியுறுத்துகின்றன. 
சங்கை : பகவான்‌ யாவும்‌ ௮றிந்தவன்‌, யாவற்றுக்‌கும்‌ அந்தராத்மா, ஐகத் காரணம்‌ என்று ஒவ்வொன்‌றாகக்‌ குணங்களைச்‌ சொல்லி 
வேத வாக்கியங்கள்‌, “தேதி?” எநேதி'* (இவ்வாறு இல்லை) என்று தள்ளுவ,தால்‌ இவன்‌ இழிவுக்கு எதிர்நிலை என்பது தேறும்‌. 
கல்யாண குணங்களுக்கு இருப்பிடம்‌ எனபது எவ்வாறு? 
பகவானது சக்தியோடு இயல்பான .ஞானம்‌, பலம்‌. முதலியனவும்‌ விவரிக்கின்றன வேத வாக்கியங்கள்‌, 
ஆதலால்‌ உபய லிங்கம்‌ நிலை நிறுத்தப் பெற்றது. 
சூரியன்‌ நீர்‌ நிலையில்‌ தோன்றுகின்றான்‌, நீரின்‌ குணம்‌ இவன்‌ பெறுவதில்லை; 
ஆகாசம்‌ குடம்‌ முதலிய வற்றில்‌ அடங்கியுள்ளது, எனினும்‌ குடம்‌ முதலியவற்‌,றில்‌ விரிவது, சுருங்குவது போன்ற குணம்‌ இதற்கில்லை. 
இது போல்‌ பகவான்‌ ஜீவனிடம்‌ நுழைவதால்‌, தோஷம்‌ எதுவும்‌ இவனைச்‌ சாராது. 
“நேதி நேதி: என்பதன்‌ கருந்து: பகவானுக்குச்‌ சில ரூபங்களை விவரித்த உபநிஷத்‌ இவ்வளவேயோ என்று 
நினைக்கச்கூடும்‌ என்பதற்காக இவ்வளவன்று, இவ்வள்வன்று என்று விளக்கியது. 
ஆதலால்‌ பகவான்‌ அழிவு 'களுக்‌ கெல்லாம்‌ எதிர்நிலை, 
கல்யாண குண கணங்கள்‌ எண்‌ணிறந்தன வாய்ந்தவன்‌ என்பது ஆஷேபமில்லாமல்‌ நிறுவப்பட்டது.

2, 6. ப்ரஹ்மமும்‌ அசேதனங்களும்‌. 

உருவமுள்ளனவும்‌ உருவமில்லாதனவுமான ௮சேதனப்‌ பொருள்கள்‌ யாவும்‌ ப்ரஹ்ம ஸ்வரூபம்‌ என்று வேதங்கள்‌ வெளியிடுகின்றன. 
ப்ரஹ்மமும்‌ உலகமும்‌ வேறாவனவையே என்று ஓதுகின்றன சில வேத வர்க்கியங்கள்‌. 
இக் கருத்துக்‌கள்‌ ஒன்றுவதற்காக ப்ரஹ்மம்‌. ப்ரளய காலத்தில்‌ உலகைச்‌ சுருக்கிக் கொண்டும்‌ 
படைப்புக்‌ காலத்தில்‌ விரித்துக் கொண்டும்‌ உள்ளது என்று கருதலாம்‌. 
அன்றியும்‌ மணியும்‌ அதன்‌ ஒளியும்‌ 'வேறுபட்டிருந்தும்‌ ஓளி யுடைமை என்ற தர்மத்தாலும்‌ ஒளியாலும்‌ ஒன்றுவது போல்‌ 
அசித்தும்‌ பரமாத்மாவும்‌ என்று கருதத்‌தகும்‌. 
ஆகையால்‌ உலகம்‌ ப்ரஹ்ம ரூபமாக இருப்பது ஒளி சூர்ய ரூபமாக இருப்பது போல என்பது பொருத்தும்‌. 
இது ஒரு சாரார்‌ கருத்து.

தேர்வு : ஜீவன்‌ ப்ரஹ்மத்திற்கு அம்சமாகவும்‌, ப்ர 'காரமாகவும்‌, சரீரமாகவும்‌ நிரூபிக்கப்பட்டது. 
இதே போல அசேதனங்கள்‌ சரீரமாகவும்‌, பகவான்‌ சரீரியாக வும்‌ கொள்வதே சரி. 
அன்றியும்‌ வேத வாக்கியங்களால்‌ தெளிவது: அசேதனத்தின்‌ தன்மைகள்‌ பகவனுக்‌கில்‌லை என்பது. 
அசேதனங்கள்‌ பகவானின்‌ அம்சமாகவே விளங்‌குகின்றன. 
ஆதலால்‌ பகவானோடு ஒன்றியோ, இனம்‌- பண்பு என்ற முறைப்படியோ இல்லை என்பது தேறலாகும்‌ 

2. 7. அணை என்பதன்‌ விளக்கம்‌. 

வேத வாக்கியங்கள்‌ நான்கு கருத்துக்கள்‌ வெளியிடுகின்றன: 
(1) பகவான்‌ ௮ணை, 
(2) நான்கு பாதங்கள்‌ உடையவன்‌, பதினாறு கலைகள்‌ வாய்ந்தவன்‌, 
(8) மோஷத்தை அடைவிக்கும்‌ அணை, 
(4) அன்றியும்‌ பெரியவனான பரமாத்மாவை விட மேலான ஒரு பொருள்‌ உண்டு. 
அணை என்பதால்‌ ஒரு கரையிலிருந்து எதிர்க்‌ கரைக்குப்‌ போகும்‌ சாதனம்‌ என்பதாலே இதுவரையில்‌ கூறிவந்த பெருமையுடைய 
ப்ரஹ்மத்தைக்‌ காட்டிலும்‌ மேலான தத்வம்‌ ஒன்றுண்டு. இவ்வாறு சிலர்‌ கருதுகின்றனர்‌.

மறுப்பு: அணை(ஸேது) என்பதன்‌ பயன்‌ இரண்டு: பக்கங்களிலும் உள்ள பொருள்கள்‌ கலவாது பாதுகாப்பதே. 
பகவான்‌ ஸேது என்பதை ஒட்டி சாந்தோக்யத்தில்‌ வந்துள்ள கருத்து இதுவேயாகும்‌: 
'*ஏஷாம்‌ வோகாநாம்‌. அஸம்பேதாய”' (8-8- 1)

ப்ரஹ்மம்‌ நான்கு பாதங்கள்‌ உடையது, பதினாறு கலைகள்‌ உடையது என்று கூறியது எளிதில்‌ மனனஞ்‌ "செய்து உபாஸிப்பதற்கே யாகும்‌. 
ப்ரஹ்மம்‌ எங்கும்‌ வ்யாபித்துள்ளது, யாவருமாய்‌ யாவுமாக்‌ இருக்கிறது என்று பல வேத வாக்கியங்கள்‌ கூறுவதால்‌, 
இதைக்‌ காட்டிலும்‌ மேலான தத்வம்‌ ஒன்றுமில்லை என்பது நிச்சயம்‌. ஜகத்‌ காரணமான பகவானே பரம் பொருள்‌ 

2. 8. போக மோக்ஷங்கள்‌ . 

சேதனன்‌ உபாஸநஞ்‌ செய்வதற்காக பகவானது குணங்கள்‌ வெளியிடப்பட்டன. 
பகவான்‌ தோஷங்களுக்கு எதிர்நிலை; கல்யாண குணங்களுக்குக் கொள்கலம்‌, 
யாவரையும்‌ காட்டிலும்‌ மேம்பட்டவன்‌. போக மோக்ஷங்களை அருளும்‌ மேன்மை இவனையே சாரும்‌ என்பது இனி விளக்கப் பெறும்‌.

ப்ருஹதாரண்யத்தில் பிறப்பிலியான பகவான்‌ அன்‌ னத்தையும்‌ தனத்தையும்‌ அளிப்பவன்‌; 
மோஷ ஆனந்தத்தையும்‌ அளிப்பவன்‌ என்று வந்துள்ளது. ்‌

யாகம்‌, தானம்‌, ஹோமம்‌, உபாஸநம்‌. இவற்றிற்கு அத்த அந்த தேவதைகள்‌ பலன்‌ அளிக்கின்றன. 
இந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியான பரம புருஷனாலேயே இந்த பலன்கள்‌ கிடைக்கின்றன. 
இந்தக்‌ கருத்தே வேதங்‌களிலும்‌ கீதையிலும்‌ வெளியிடப் பட்டுள்ளது. 
உலகில்‌ குடி மக்கள்‌ பயிர்‌ செய்தல்‌ போன்ற பணிகளாலே பொருள்கள்‌ சேர்த்து 
அரசனது ஏவலாளர்கள்‌ மூலமாக வரி கட்டி அரசனது உகப்பைப்‌ பெறுவது போல்‌ 
தேவதைகளை ஆராதிக்கும்‌ வகையால்‌ பகவானைச்‌ சேர்த்து பகவானது அருளைப்‌ பெறுகிறோம்‌. பலன்‌ அளிப்பது பகவான்‌.

இவனது அனுபவங்கள்‌ இவன்‌ கனவில்‌ காணும்‌ பொருள்கள்‌ பகவானால்‌ படைக்கப்‌ பெறுவன, 
இவன்‌ தூங்குமிடம்‌ ஹிதா, புரீதக்‌, பரமாத்மா ஆகிய மூன்று. 
தூங்கிய ஜீவனே தூக்கத்திலிருந்து விழித்தெழுகிறான்‌; வேறொருவன்‌ என்பதில்லை. 
மூர்ச்சை என்பது விழிப்பு, கனவு, தூக்கம்‌, மரணம்‌ ஆகிய நிலைகளைக் காட்டிலும்‌ வேறுபட்டது. 

பகவானை இரண்டு குணங்களாலே அறியலாம்‌. இழிவுகளுக்கு எதிர்நிலை, கணக்கற்ற கல்யாண குணங்‌ கள்‌ வாய்ந்தவன்‌. 
இக் கருத்து உபய லிங்கம்‌ எனப் பெறும்‌. உலகம்‌ பகவானுக்கு விசேஷணமாக இருந்து கொண்டு அம்சமுமாகிறது. 
பகவானைக்‌ காட்டிலும்‌ மேம்பட்ட தாகவோ அடையத்‌ தக்கதாகவோ வேறு எதுவுமில்லை. 
இவனே எல்லாக்‌ கர்மங்களுக்கும்‌ பலன்‌ அளிப்பவன்‌.

-----------------

3. மூன்றாம்‌ பாதம்‌ 

3. 1. வித்யைகள்‌ --ஆய்வு. 

பகவானை உபாஸநம்‌ செய்யும்போது பயன்படும்‌ வித்யைகளில்‌ பகவானது குணங்கள்‌ பற்றி விசாரிப்பதால்‌ 
இப்பாதம்‌ குண-உபஸம்ஹார பாதம்‌ எனப்‌ பெறுகின்றது. 

ப்ரஹ்மத்தை அடைவதற்காக உபாஸதம்‌ செய்ய 'வித்யைகள்‌ விதிக்கப்பட்டுள்ளன. இந்த வித்யைகளுக்கு 
வேத சாகைகளில்‌ குணங்கள்‌ சில மாறுபட விவரிக்கப்‌பட்டுள்ளன. ஒரே பெயருள்ள வித்யைகளுக்கு மாறு 
பாடு கூறப்பட்டால்‌ எப்படி அநுஷ்டிப்பது என்ற சங்கை எழுகின்றது. வேதங்களிலும்‌ உபநிஷத்துக்களிலும்‌ வைச்‌ 
வாநர வித்யை, தகர வித்யை, அக்ஷர விதியை இவை இதே பெயர்களுடன்‌ வருகன்றன. ஆனால்‌ ப்ரகரண பேதம்‌ உள்ளது. 
இவைபற்றி ஒன்றில்‌ இல்லாத குணங்களை மற்றதில்‌ ,சேர்த்துக் கொள்ள வேண்டும்‌. 
இத்தகைய வித்யைகளில்‌ விதி வாக்யம்‌, பலன்‌, உபாஸிக்‌கும்‌ பரமாத்மா, பெயர்‌ யாவும்‌ ஒறுமைப்பட்டுள்‌ளன. 

 3. 4. உத்கீதம்‌. 

உத்கீத உபாஸநம்‌ இரண்டு வகையாகக்‌ காட்டப்‌ பெற்றுள்ளது. இந்த இரண்டு உபாஸநங்களிலும்‌ வித்யை, 
பலன்‌, ஆக்யா என்பன மூன்றும்‌ ஒன்றாக இருந்தாலும்‌, உபாஸிக்கும்‌ பொருளான ரூபம்‌ வேறுபட்டிருக்கிறது. 
ஒன்றில்‌ உத்கீதம்‌ செய்பவனிடம்‌ முக்ய ப்ராணன்‌ என்று எண்ணமும்‌, ஒன்றில்‌ கானம்‌ செய்யும்‌ உத்கீதத்திலேயே 
முக்ய ப்ராணன்‌ என்ற எண்ணமும்‌ வேண்டும்‌" என்று 'வரையிட்டிருக்கிறது. இவ்வாறு இன்னும்‌ சில இடங்‌களில்‌ உள்ளன. 
ரூபம்‌ வெவ்வேறாக இருப்பதால்‌ வித்யைகளும்‌ வெவ்வேறு என்று  காட்டப்‌ பெற்றுள்ளது
3. 3. முக்ய ப்ராணன்‌. 

முக்ய ப்ராணன்‌ மூத்தது, சிறந்தது; வாக்‌ இந்தரியத்தைச்‌ செல்வமாக உடையது (வஸிஷ்டம்‌), 
' கண்னில்‌ ப்ரதிஷ்டையாக உள்ளது (நிலைநிறுத்தப்பட்டது) காது என்ற இந்தரியத்தில்‌ ஸம்பத்தாவ்‌ உள்ளது என்று வேதங்களால்‌ சிறப்பிக்கப்படுகிறது. 
இதை' ௨பாஸிக்கும்‌ போது இது முக்ய மென்றே உபாஸிப்பதும்‌ வஸிஷ்டத்வம்‌ போன்ற குணமுடையதாகவும்‌ சாஸ்த்ரங்கள்‌ கூறுகின்றன. 
இவ்வாறு மூன்று உபதிஷத்துக்களில்‌ மூவகை உபாஸநம்‌ கூறப்படுகிறது. எனினும்‌ இந்த வித்யைகள்‌ யாவும்‌ ஒன்றே. 
ஏனெனில்‌ இவை ப்ராணனின் அபிமான தேவதையாகக்‌ குறிக்கின்றன. 

3. 4. பகவானின்‌ குணங்கள்‌. 

பகவானின்‌ குணங்கள்‌ கணக்‌கில்லாதவை. இவை எல்‌லாவற்றையும்‌ வித்யைகளிலே ஓத இயலாது. 
எவற்றை எல்லா வித்யைகளிலும்‌ ஓதவேண்டும்‌? பகவானின் குணங்களில்‌ சில இவனது இயல்பை நிரூபிக்கின்றன. 
இவனைப்‌ பற்றி அறிந்து கொள்ளப்‌ பயன்படுகின்‌றன-- 
ஆனந்தம்‌ முதலான குணங்கள்‌; எல்லா' வித்யைகளிலும்‌ இவை ஓத வேண்டும்‌ -இவை முக்கியமானவை யாகையாலே. 
முக்கியமான ஐந்து குணங்கள்‌: ஆனத்தமா யிகுப்‌பது, வேறுபாடின்றி இருப்பது, ஞானமயமா யிருப்பது 
'அளவற்றதா யிருப்பது, தோஷங்கள்‌ இல்லாமல்‌ இருப்‌பது 

3. 5. புண்ய பாவங்கள்‌. - 

பகவானை உபாஸநம்‌ செய்பவன்‌ பரமபதம்‌ அடையும்‌ சமயத்தில்‌ இவனது புண்ய பாவங்களைப்‌ பற்றி 
'இரண்டு கருத்துக்கள்‌ வெளிவந்துள்ளன. ஓன்று: பரமபதம்‌ அடையும்‌ உபாஸகனை விட்டு இவை நீங்குகின்‌றன. 
இது ஹாதி; மற்றது. இவை: வேறு சிலரை அடை இன்றன--இது உபாயநம்‌: அதாவது இவனது உற்றார்‌ 
அல்லது நண்பர்‌ புண்யங்களை அடைகின்றனர்‌; விரோதிகள்‌ பாவங்களை அடைகின்றனர்‌. இவை ஒவ்வொன்று 
ஒவ்வொரு சாகையில்‌ ஆதரிக்கப்படுகிறது--சிந்தனை செய்து. உபாஸதம்‌ செய்வதற்காக. 
இவற்றுள்‌ ஒன்று அங்கமாகவும்‌, மற்றது அங்கியாகவும்‌ அமைந்ததால்‌ இரண்டையும்‌ சிந்திக்கவேண்டும்‌. சில சாகைகளில்‌ 
இரண்டு கருத்துக்களும்‌ வந்துள்ளன. 

இந்தப்‌ புண்ய பாவங்கள்‌ எப்போது நீங்குகின்றன என்பதும்‌ சாஸ்த்ரங்களில்‌ ஆராயப்‌ பெற்றுள்ளது. 
முக்தன்‌ சரீரத்தை விட்டுக்‌ கிளம்பும்போதே கர்மங்கள்‌ யாவும்‌ அழிந்து விடுகின்றன. 
ப்ரஹ்மாநுபவத்தை. 'இவனுக்கு அளிப்பதற்காக அர்ச்சிராதியில்‌ ஸூக்ஷ்ம சரீரம்‌ ஏற்படுகிறது, . 
பயிர்‌ செய்வதற்காகத்‌ தேக்கிய ஏரிநீர்‌, பயிர்‌ விளைந்த பின்‌ குளிப்பது, பருகுவது போன்ற நலன்களுக்கு ஆவது போல்‌ 
கர்மங்களை அனு  பவிப்பதற்கான ஸ்தூல சரீரம்‌, கர்ம அனுபவத்திற்குப்‌ பிறகு ஸூக்ஷ்ம சரீரமகய்‌ அர்சிராதியில்‌ பயன்‌படுகிறது. 

வஸிஷ்டர்‌ முதலான அதிகாரி புருஷர்களுக்கு அவரவர்களது பதவி நீங்கும்வரையில்‌ அப்பதவிக்குக்‌ காரண 
“மான கர்மமும்‌ பதவியும்‌ தொடர்ந்து நிற்கும்‌; இப்பதவி: மூடியும்‌ வரையில்‌ அர்ச்சிராதிகதி இல்லை. 
சரீரத்தின்‌ முடிவில்‌ அர்ச்சிராதிகதி ஏற்படுவோர்க்கே கர்ம பலம்‌ அனைத்தும்‌ நீங்கும்‌. 
3. 6. வித்யைகள்‌--அர்ச்சிராதி. 
அர்ச்சிராதியைப்‌ பற்றியுள்ள வித்யைகளில்‌ உபாஸந வகையில்‌ மாறுபாடு உள்ளது. எல்லா வித்யைகளாலும்‌ 
பரம்பொருளை அடையக்‌ கூடுமாதலால்‌ அர்ச்சிராதி எல்லா வித்யைகளுக்கும்‌ பொதுவானது. 

3. 7. உபாஸகம்‌- குணங்கள்‌. 

ஒரு வித்யையில்‌ உபாஸநத்திற்காக அஷர ப்ரஹ்மம்‌ விதிக்கப்பட்டுள்ளது. இத்த ப்ரஹ்மம்‌ மிகவும்‌ நுண்ணியது, 
எங்கும்‌ பரவியது; இந்த்ரியங்களாலே அறிய இயலாதது; வடிவாலும்‌, தேசத்தாலும்‌, காலத்தாலும்‌ 
அளவு படாதது என்று நினைக்கவேண்டும்‌ என்று, இது **அஸ்தூலத்வம்‌”' (ஸ்தூல மின்மை) என்ற குணம்‌. 
இது எல்லா வித்யைகளிலும்‌ ஓதவேண்டுமா என்பது சங்கை. பகவான்‌ எல்லா குணங்களும்‌ வாய்ந்தவன்‌; 
இவை இவனது ஸ்வரூபத்தை அறியப்‌ பயன்படுவன. ஆதலால்‌ குணங்கள்‌ யாவும்‌ மளனஞ்‌ செய்தே உபாஸதம்‌ செய்ய வேண்டும்‌. 
பகவான்‌ சேதன அசேதனங்களைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌ என்பதை அறிவதற்கான குணங்கள்‌ 
எல்லா வித்யைகளிலும்‌ ஓதத்‌ தக்கவை. மற்றைய குணங்‌கள்‌ அந்த அந்த வித்யையில்‌ 'விதித்துள்ளபடி, ௮நுஸத்திக்‌க வேண்டும்‌.
3. 8. வித்யைகள்‌: பரமாத்மாவின்‌ ' சூபம்‌. 

உஷஸ்தார்‌ என்பவர்‌, “நேரே காணப்படும்‌ ப்ரஹ்ம்மாய்‌, அனைத்துயிர்களிலும்‌ அந்தர்யாமியாக இருப்பவன்‌ யார்‌??” 
என்று கேட்கப்‌ பின்‌ வருமாறு விடை கூறப்‌பட்டது: யாவர்க்கும்‌ ப்ராண வாயுவை இயங்கச்‌ செய்‌பவன்‌; 
எல்லா ஜீவர்களுக்கும்‌ அந்தராத்மா என்பது. ககோளர்‌ என்பவர்‌  விடை, 
பசி, தாகம்‌...வருத்தம்‌,மயக்கம்‌ ஆகியவற்றைக்‌, கடந்திருப்பவன்‌; மகப்‌ பேறு, செல்வப்‌ பேறு, 
உலக வாழ்க்கை இவற்றில்‌ பாசமற்றவன்‌ என்பது, இவ் விரண்டு வித்யைகளிலும்‌ ரூபம்‌ வேறுபடுகிறது; 
எனினும்‌ ஜீவாத்மாவைக்‌ காட்டிலும்‌ பரமாத்மா வேறு ' என்ற ஒரே கருத்து இருப்பதால்‌,. இவற்றிற்குப்‌ பேத 
மில்லை என்பது தேறுகிறது. 

3. 9. உபாஸகம்‌-- குறிப்பு வேறுபாடு. 

சாந்தோக்‌யத்தில்‌ தகர. வித்யை பகவானுக்கு இருப்‌பிடம்‌ என்ற வித்யையும்‌, ப்ருஹதாரண்யகத்தில்‌ ஆகாசம்‌ 
இருப்பிடம்‌ என்ற வித்யையும்‌ உள்ளன. இவை வெவ்‌ வேறானவையா? ்‌ 

பிருஹதாரண்யகத்தில்‌ ஸத்ய ஸங்கல்பத்வம்‌ என்பதன்‌ விசேஷமான வசித்வம்‌ முதலானவை விவரிக்கப்‌ பெற்‌றுள்ளன; 
சாந்தோக்‌யத்தில்‌, வரும்‌ எட்டு குணங்களில்‌  ஒன்றான ஸத்ய ஸங்கல்பத்வத்தின்‌ விசேஷமே இது. 
அபஹதபாப்மத்வம்‌ போன்ற குணங்கள்‌ இங்கும்‌ காட்‌டப் பெற்‌றுள்ளன. ஆக இரண்டு வித்யைகளும்‌ ஒன்றே. 
3. 10. தஹர வித்யை, 

தஹர வித்யையில்‌ பரமாத்மாவையும்‌ அவனது கல்யாண குணங்களையும்‌ உபாஸிக்கலாம்‌ என்பது வந்துள்ளது
குணங்களை உபாஸநம்‌ செய்யும் போது தஹரஆகாசமாகிய பரமாத்மாவை மறுபடியும்‌ உபாஸநம்‌ செய்யவேண்டுமா? 
அபஹதபாப்மத்வம்‌ என்பது குணம்‌; இத்தகைய குணங்களோடு கூடியவன் பரமாத்மா? 
குணங்கள்‌ வேறு, .குணங்களை யுடையவன்‌ வேறு, ஆதலால்‌ 'இரண்டும்‌ செய்ய வேண்டியவை . 
. 
3. 11. வித்யைகள்‌ : உபாஸநம்‌ செய்யப்படும்‌ பொருள்‌. 

நாராயண அனுவாகத்திற்கு முந்திய அனுவாகத்தில்‌ தஹர வித்யை "வந்துள்ளது, இதில்‌ கூறியிருப்பது: 
பகவானுக்கு இருப்பிடம்‌ உபாஸகனது இதயத்தில்‌ இருக்கும்‌ சிறிய தாமரை. 
ஆகாசம்‌ போல்‌ அளவிட வொண்ணாததான பரம்பொருள்‌ இதனுள்‌ இருப்பவன்‌; இவனது குணங்கள்‌ உபாஸிக்க வேண்டுவன. 
நாராயண அனுவாகத்தில்‌ தாமரையின்‌ விவரம்‌ வந்துள்ளது. தலை கீழான தாமரை போன்ற இதயம்‌ கைபிடி அளவுள்ளது; 
கழுத்துக்குக்‌ ழே கொப்பூழுக்கு மேலே உள்ளது. இந்த விவரம்‌ தஹர வித்யையே விவரிப்பதா? எல்லா வித்யைகளுக்கும்‌ பொதுவா? 
பகவான்‌ யாவரினும்‌ மேம்பட்ட வன்‌ என்ற அடையாளமே (லிங்கம்‌) எல்லா வித்யைகளின்‌ கருத்து; 
ஆகையால்‌ இவனது குணங்கள்‌ பல ஓதப்‌படுகின்றன. யாவும்‌ இவனைக்‌ குறிப்பதால்‌ வித்யைகள்‌ 
சூறிக்கும்‌ பொருள்‌ ஒன்றே என்பதே தேறும்‌, இப்‌பொருள்‌ நாராயணன்‌. 

3. 12. உத்கீதம்‌. 

உத்கீத உபாஸநம்‌ பற்றிச்‌ சல சாகைகளில்‌ வந்துள்‌ ளது--உத்கீதத்தின்‌ அவயவமான ஓம்‌ என்ற ப்ரணவத்தை உபாஸிக்கவேண்டும்‌ என்று. 
இந்த உபாஸநம்‌ எல்லா சாகைகளிலும்‌ அந்வயிக்கும்‌. மந்த்ரங்கள்‌ வேறு பட்டிருந்தாலும்‌ யாகம்‌ என்பது எல்லா சாகைகளிலும்‌ ஒன்றே. 
இதே போல்‌ உத்கீத ௨பாஸநமும்‌. 
3. 13. வைச்வாநர வித்யை--உபாஸநம்‌. 

ஒளபமந்யவர்‌ முதலான ஆறு மஹரிஷிகள்‌ கைகேய  தேசத்து அரசனிடம்‌,''வைச்வாநர ஆத்மாவை உபதேசிக்கவேண்டும்‌'” என்று கேட்டனர்‌. 
அவன்‌ உபதேசிப்பது; ஸ்வர்கம்‌ முதல்‌ பூமி ஈறாக உள்ளன தலை, கால்‌ முதலான அவயவங்களாகக்‌ கொண்ட 
வைச்வாநர ஆத்‌மாவே உபாஸிக்கத்‌ தக்கவன்‌; இதன்‌ பலன்‌ ஸர்வாத்‌மாக்களிலும்‌ இருப்பவனாய்‌ அன்னமான ப்ரஹ்மத்தின்‌ 
அனுபவமே என்றான்‌. இந்த வித்யையில்‌ உபாஸநம்‌ பூர்ணமான வைச்வாநராத்மாவா? , 
இந்த இடத்தில்‌ எல்லாம்‌ ஒரே வாக்கியமாக இருப்பதால்‌ பூர்ணமான உபாஸநமே முறை. 
இந்த வரலாற்றில்‌ மஹ ரிஷிகள்‌ முதலில்‌ உத்தாலகரைக்‌ கேட்டு அவரிடம்‌ அறிய முடியாமல்‌ அரசனை அடைந்தனர்‌ என்பது குறிப்பு. 
3. 14. மற்றைய கருத்துக்‌கள்‌. 

ப்ரஹ்ம வித்யைகளில்‌ ஏதேனும்‌ ஒன்றை அனுஷ்டித்‌தால்‌ போதும்‌. உத்கீதம்‌ எப்போதும்‌ யாகத்தில்‌ அங்கமாகும்‌; 
இது ப்ரணவத்தோடே கூடியிருப்பதால்‌ இத்த உபாஸநம்‌ கா்மங்களுக்கு அங்கம்‌. 
ப்ரஹ்மவித்யைகளில்‌ எதை உபாஸநம்‌ செய்தாலும்‌ மோக்ஷ பலன்‌ கிடைக்‌கும்‌. 
ப்ரஹ்மத்தை அடைவதற்குப்‌ பயன்‌படும்‌ கர்மாக்களைப்‌ பற்றிய விவரங்கள்‌ இந்தப்‌ பாதத்தில்‌ ஆராயப்‌பட்டுன்ளன. 

வெவ்வேறு சாகைகளில்‌ கூறப்படும்‌ வைச்வாநரவித்யை, தஹர வித்யை போல்வன ஒன்றே. 
கெளஷீதகி  சாந்தோக்யம்‌ இவற்றில்‌ சொல்லப்படும்‌ ப்ராண வித்யையில்‌ வேறுபாடு இல்லை; ஆகையால்‌ இந்த வித்யைகள்‌ ஒன்றே. 

பகவானுடைய குணங்களுள்‌ அடிப்படையானவை விகாரமற்‌ நிருப்பது, ஞான மயமாவது, அனந்தமாவது, 
தோஷமற்‌ நிருப்பது, ஆனந்தமா யிருப்பது--எல்லா வித்யைகளிலும்‌ அநுஸந்திக்க வேண்டும்‌. 

தைத்திரீயம்‌ நாராயணவல்லியில்‌ பதினோராவது அநுவாகம்‌--நாராயண அநுவாகம்‌ எல்லா வித்யைகளிலும்‌ உபாஸிக்க வேண்டியது. 

ப்ரஹ்ம உபாஸந வித்யையில்‌ ஸ்வரூபத்தை நிருபிக்‌கும்‌ அடிப்படை குணங்கள்‌ ஞானம்‌ ஆனந்தம்‌ போல்வன 
அனுஸந்திக்க வேண்டுவன. 
--------------

4. நாலாம்‌ பாதம்‌. 

ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமான காமத்தைப்‌ பற்றி இப்பாதத்தில்‌ விசாரம்‌ செய்யப்படுகிறது. 
வைராக்ய பாதத்தில்‌ மோக்ஷத்திற்குப்‌ புறம்பான பலன்களைக்‌ கருதிக் கர்மங்கள்‌ செய்யத்‌ தகாதன என்பது காட்டப்‌ பட்டது. 
இத்தகைய விருப்ப மில்லாமல்‌ செய்யும்‌ கர்மங்கள்‌ ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம்‌ என்று நிரூபிக்கப்‌ படுகிறது. 
இந்தப்‌ பாதம்‌ அங்க பாதம்‌ எனப்படுகிறது. 
4. 1. ப்ரஹ்ம வித்யையாலே மோக்ஷம்‌. 

மோக்ஷ பலன்‌ ப்ரஹ்ம வித்யையாலேயே, கர்மங்களால் அன்று  என்பது வ்யாஸரது திருவுள்ளம்‌, இதற்கு மாறான கருத்துகள்‌: 
(1) தத்வமஸி என்ற வேத வாக்கியத்தில்‌ கர்மங்கள்‌ செய்யும்‌ கர்த்தாவும்‌ ப்ரஹ்மமும்‌ ஒரே வேற்றுமையில்‌ அமைந்திருப்பதால்‌ கர்த்தாவே 
ப்ரஹ்மம்‌ எனப்படுகிறான்‌. “ஆத்மா வா அரே த்ரஷ்‌டவ்ய:”” என்பதில்‌ இந்த ஜீவாத்மாவின்‌ உண்மை ஸ்வரூபம்‌ அறிய வேண்டும்‌ என்பதால்‌ 
ப்ரஹ்ம வித்யை அறிவது கர்மத்தால்‌. 
(2) ஜநகர்‌ முதலானோர்‌ கர்மத்‌தாலேயே முக்தி அடைந்தனர்‌. 
(3) வித்யை கர்மத்திற்கு அங்கம்‌ என்று வேத வாக்கியம்‌ கூறுகிறது. 
(4) வேதங்‌களை அத்யயநம்‌ செய்த பின்பு இல்லற தர்மம்‌ என்று அறிகிறோம்‌. இல்லறத்தில்‌ இருப்பவனுக்கே கர்மங்கள்‌  உரியன. 
(5) மனிதன்‌ நூறாண்டு காலம்‌ கர்மங்களைச்‌ செய்து கொண்டே வாழ விரும்ப வேண்டும்‌. 
(6) பரம லோகம்‌ செல்பவனுடன்‌ வித்யை கர்மம்‌ இவை தொடா்‌கின்றன; ப்ரஹ்ம ஞானிகள்‌ கர்‌மமே முக்கியமாகக்‌ கொள்பவர்‌. 

விளக்கம்‌ : தத்வமஸி என்ற வாக்கியத்தில்‌ பரமாத்மா ஜீவனுக்கு ஆத்மா. ஆதலால்‌ ப்ரஹ்மோபாஸகத்தால் என்றே கருத்து; 
இது ப்ரஹ்ம வித்யையாலே, கர்மத்தாலன்று. 

காலஷேயர்களான ரிஷிகள்‌, ''வேதாத்யயநம்‌ ஏன்‌ செய்ய வேண்டும்‌?”” என்று கேட்டனர்‌. இதன்‌ கருத்து, 
ப்ரஹ்ம ஞானிகளுக்குக்‌ கர்மம்‌ அவச்யமில்லை, செய்யும்‌ கர்மம மெல்லாம்‌ வித்யையோடே என்றது விரைவில்‌ பயன்‌ கொடுப்பதாக; இத்தகைய வித்யை உத்ததமேயாகும்‌. 

கர்மங்கள்‌ செய்ய விரும்புவது வேதத்தின்‌ பூர்வ பாகத்தின்‌ அர்த்த ஞானத்தாலே; 
இது போல்‌ மோக்ஷம்‌ விரும்புவது ப்ரஹ்ம ஞானத்தைப்‌ பற்றி உத்தர பாகத்‌தின்‌ அர்த்த ஞானத்தாலே. 
ஜனகர்‌ முதலானோர் கர்மத்‌தாலே முக்தி பெற்றனர்‌ என்பதன்‌ கருத்து,முக்தி அடையும்‌ வரையில்‌ கர்மம்‌ அனுஷ்டிக்கவேண்டும்‌ என்பதே. 
கர்மம்‌ ஆயுள்‌ முழுதும்‌ செய்யவேண்டும்‌ என்ற விதி ஸந்யாஸ ஆச்ரமத்திற்கு இல்லை. 
ஆதலால்‌ மோஷ புருஷார்த்தம்‌ ப்ரஹ்ம வித்யையினாலேதான்‌, கர்மத்தாலன்று. 
4, 2. உத்கீதம்‌ - நிலை. 
உத்கீதம்‌ யாகத்திற்கு அங்கம்‌. உத்கீதத்தை ஸ்துதித்‌தால்‌ போதுமா? அது யாவற்றிலும்‌ மிக இனிமையானது 
என்ற கருத்துடன்‌ உபாஸநம்‌ செய்யவேண்டுமா?உபாஸநத்தால்‌ வீர்யமுடைய பலன்‌ ஏற்படுவதற்காகச்‌ 
சுவை யுடைமை தோக்காகக் கருதி உபாஸநம்‌ செய்ய வேண்டும்‌ 
4. 3. உபாக்யானங்கள்‌. 

ப்ரஹ்ம வித்யை துதிக்கும்போது சில உபாக்யானங்‌கள்‌ ஓதப்படுகின்றன. 
*:மநுர்வை வைவஸ்வதோ ராஜா”, **“யமோ வைவவஸ்வத:'', வருண ஆதித்ய:”” என்று தொடங்குவன, 
இது மாதிரியானவை அந்த அந்த: வித்யையைத்‌ துதிப்பதற்காகவே. 
4. 4. ஸந்யாஸிகள்‌--கர்மாக்கள்‌. 
ப்ரஹ்ம லித்மையில்‌ ஸந்யாஸிகளுக்கு அதிகாரம்‌ உண்டு; யஜ்ஞம்‌ முதலியன இல்லை. 
இவர்களுக்கு ஆச்ரமத்திற்குரிய கர்மங்களே ப்ரஹ்ம வித்யையை அனுஷ்‌டிக்கப்‌ போதும்‌. 

4. 5. இல்லறம்‌-- கர்மாக்கள்‌. 

இல்லறத்திலுள்ளோர்‌ ஸந்யாஸிகளைப்‌ போலே கர்மங்கள்‌ இல்லாமல்‌ ப்ரஹ்ம வித்யை அநுஷ்டிக்கலாமா? 
வேதனம்‌ என்ற ஞானம்‌ மோக்ஷ ஸாதனமாக விதிக்கப்பட்டுள்ளது; இது த்யாநம்‌ முதலான சொற்களால்‌ சொல்லப்படும்‌ உபாஸநமே யாகும்‌. 
இது எம்‌பெருமானுக்கு உகப்பைத்‌ தரும்‌ யஜ்ஞம்‌ போல்வதால்‌ உண்டாகும்‌. ஆதலால்‌ அந்த அந்த ஆச்ரமத்திற்கான கர்மாக்கள்‌ செய்ய வேண்டும்‌. 

4.,6. இல்லறம்‌: சமதமம்‌. 
சமதமங்கள்‌ என்பது இந்த்ரியங்களை அடக்குவது. -இந்த்ரியங்களை ஒடுக்குவதால்‌ கர்மங்கள்‌ செய்ய இயலாதே என்பது சங்கை. 
“தஸ்மாத்‌ ஏவம்‌ வித்‌ சாந்தோ தாந்த: உபரத:'” என்ற வேத வாக்கியத்தில்‌ இந்த்ரியமான மனத்தை அடக்கினால்தான்‌ 
வெளி இந்த்ரியங்‌களையும்‌ அடக்கிக்‌ காம்ய கார்மங்களிலிருந்து நீங்கலாகுமே என்று வந்துள்ளது 
சமம்‌, தமம்‌ இவை மனத்தை ஒருமுகப்படுத்துகன்றன. ஆதலால்‌ இல்லறத்‌தனனான ப்ரஹ்ம நிஷ்டனுக்கும்‌ சமதமங்கள்‌ ஒடுக்க வேண்டும்‌. 

4. 7. அநாச்ரமிகள்‌--ப்ரஹ்ம வித்யை. 

ப்ரஹ்மசார்யம்‌, இல்லறம்‌, துறவு, வானப்ரஸ்தம்‌ ஆகிய இந்த நாலு ஆச்ரமங்களிலும்‌ இல்லாதவர்கள்‌ அநாச்ரமிகள்‌ 
இவர்களுக்கு ப்ரஹ்ம வித்வையில்‌ ௮திகாரம்‌ உண்டா? ரைக்வர்‌, பீஷ்மர்‌ இவர்கள்‌ அநாச்ரமிகளாகவே வாழ்ந்தனர்‌. ரைக்வரா்‌ ப்ரஹ்ம நிஷ்டராக 
இருந்தார்‌; பீஷ்மர்‌ வித்யா நிஷ்டராக இருந்தார்‌. ஐபம்‌ முதலானவை அநாச்ரமிகள்‌ விஷயத்தில்‌ அங்கமாகின்றன என்பது சாஸ்த்ரம்‌.
"**தபஸா ப்ரஹ்மசர்யேண”* என்ற இடத்தில்‌ பெண்பாலரோடு சேர்க்கை யில்லாத ஜீவாத்மாக்கள்‌ பரமாத்மாவை உபாஸித்து ஆதித்‌யனை அடைகிறார்கள்‌ என்பது காணலாம்‌. 

4, 8. ப்ரஹ்ம வித்யை : அங்கங்கள்‌. 

ப்ரஹ்ம வித்யைக்கு ஆத்ம குணங்களாகிய சமமும்‌ தமமும்‌ அங்கங்கள்‌ என்று முன்பு கூறப்பட்டது. 
“அது முநி:*” என்ற இடத்தில்‌ முனிசப்தம்‌ வேறோர்‌ அங்கமாக விதித்துள்ளது. இது மெளனம்‌ என்ற கருத்துடையது. 
பால்யம்‌, பாண்டித்யம்‌ இவற்றோடு மூன்றாவதஈாகக கூறப்பட்ட இது பகவானுடைய திருமேனியை மனனஞ்‌ 
செய்வதற்கே. 
4. 9, ப்ரஹ்ம வித்யை--உற்பத்தி காலம்‌. 

ப்ரஹ்ம வித்யைக்குக்‌ காரணம்‌ புண்ய கர்மங்கள்‌. -இக்கர்மங்கள்‌ செய்த உடனே ப்ரஹ்ம வித்யை உண்டாகிறதா? 
வேறே ஒரு  காலத்தில்‌ உண்டாகிறதா? அல்லது நிச்சயமில்லையா? என்பது சங்கை. 

புண்ய கர்மாக்கள்‌ செய்ததும்‌ வித்யைக்குத்‌ தடை யில்லாவிட்டால்‌ வித்யை உடனே உண்டாகும்‌; 
தடை  இருந்தால்‌ வேறொரு காலத்தில்‌ வித்யை ஏற்படும்‌. தடைகள்‌ ஏற்படுவது வலி மிக்க பூர்வ கர்மங்களாலே. 
மோக்ஷத்தைக்‌ குறிப்பாகக்‌ கொண்ட உபாஸனங்கள்‌ விஷயத்திலும்‌ தடை இல்லாமல்‌ இருந்தால்தான்‌ பலனை கைகூடும்‌. 

யாகம்‌ போன்ற கர்மாக்களோடு செய்யும்‌ பகவத் உபாஸநம்‌ மோக்ஷத்தை அளிக்கும்‌. 
இவ்வாறு பகவானுக்கு ஆராதனமான கர்மத்தில்‌  இதன்‌ ரஸத்‌துடன்‌ உபாஸிக்க வேண்டும்‌. 
ஸத்வித்யைகளில்‌ ச்வேத கேது முதலானோரது கதைகள்‌ அந்த வித்யைகளைப்‌  பு கழ்வத்ற்காக ஏற்பட்டவை. 

ஸந்யாஸிகள்‌ தங்களது கர்மங்களைச்‌ செய்யவேண்‌டும்‌, யாகம்‌ போன்றவை வேண்டியதில்லை. 
இல்லறத்திலிருக்கும்‌ முமுஷுக்கள்‌ தங்கள்‌ ஆச்ரமத்திற்கான தர்மங்களை ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாகச்‌ செய்யவேண்டும்‌. 

யஜ்ஞம்‌ முதலியன செய்யத்‌ தகுதியள்ளவர்களுக்கு சமம்‌, தமம்‌ இவை உபாஸநத்திற்கு அங்கம்‌. 
விதுரனுக்‌கும்‌ (மனைவி யில்லா தவனுக்கும்‌) ப்ரஹ்ம உபாஸநத்திற்கு தகுதி உண்டு. 

தங்களது ஆச்ரமத்திலிருந்து நழுவினால்  ப்ரஸ்ம உபாஸனத்திற்குத்‌ தகுதி இல்லை. , 
பசுவானது திவ்ய்  மங்களத்‌ திருமேனியைச்‌ சிந்திப்பதற்காக ப்ரஹ்ம உபாஸனத்திற்கு மெளனம்‌ அவசியம்‌
மோக்ஷத்தைக்‌ காட்டிலும்‌ வேறான பலன்களைக்‌ கருதிச்‌ செய்யும்‌ உபாஸனத்திற்குப்‌ பலன்‌ உடனே நேரும்‌ என்பதில்லை. 
 
----------------------
நாலாம்‌ அத்யாயம்‌ 
1. முதற்‌ பாதம்‌ 

பகவானே உலகத்திற்குக்‌ காரணம்‌ என்பது முதல்‌ இரண்டு அத்யாயங்களில்‌ ஐயந்‌ திரிபற நிரூபிக்கப்‌ பட்டது. 
மூன்றாவது அத்யாயத்தில்‌ விளக்கப்பட்டது:-பகவானைப்‌ பெறுவதற்கு ஸாதனம்‌, வித்யா ரூபமான உபாஸநம்‌ என்பது. 
ஞானம்‌ மாத்திரம்‌ உபாயமன்று, இது உபாஸநத்திற்கு அங்கம்‌, பக்தி ரூபமானது, பகவானே விஷயமானது. 
இந்த வித்யையின்‌ இயல்பு, பயன்‌ இவை இந்த அத்யாயத்தில்‌ வரும்‌ விஷயமாகும்‌. 
இந்த  அத்யாயம்‌ ப்ரஹ்ம வித்யையின்‌ பலனை விளக்குகிறது, 
ஆதலால்‌ பல அத்யாயம்‌ என்பது 
இதில்‌ முதற்‌ பாதம்‌. கருமம்‌ தீரும்‌ வகையும்‌, இரண்டாம்‌ பாதம்‌ ஸ்தூல சரீரம்‌ தீரும்‌ வகையும்‌, 
மூன்றாம்‌ பாதம்‌ ஸுக்ம சரீரம்‌ தீரும்‌ வகையும்‌ கூறுவன. 
நாலாவது பாதம்‌ வெளியிடுவது? 
பகவானைப்‌ பெற்று இன்பமுறுவது, ஜீவனின்‌ இயல்பான ஸ்வரூபம்‌ முழுதும்‌ ஒளிர்வது, 
ஜீவன்‌ இவ்வுலகுக்கு மீளாமை. 
இந்த நான்கு பாதங்கள்‌ முறையே 
ஆவ்ருத்தி பாதம்‌, 
உத்கராந்தி பாதம்‌, 
கதி பாதம்‌, 
ப்ராப்தி பாதம்‌, 

ஆவ்ருத்தி பாதத்தில்‌ ப்ரஹ்ம வித்யையானது பலன்‌ கிடைக்கும்‌ வரையில்‌ ஆவ்ருத்தி செய்ய வேண்டும்‌ என்பது 
போன்ற விஷயங்கள்‌ ஆராயப்படுகின்‌றன. 

1. 1. ப்ரஹ்ம வித்யை--இதற்காகும்‌ காலம்‌. 

உபாஸநதம்‌, வேதனம்‌, த்யானம்‌ இலை ஓரே பொருளுடையன. த்யானம்‌ என்பது எண்ணெயின்‌ தாரை 
போல இடையறாமல்‌ நிகழவேண்டும்‌. இதுவே ஸ்ம்ருதி எனப்படுவது. 
இதற்கு அங்கங்கள்‌ யமம்‌, நியமம்‌, ஆஸநம்‌, ப்ராணாயாமம்‌, ப்ரத்யாஹாரம்‌. தாரணம்‌. தேரே 
காணும்‌ நிலை வரையில்‌ உபாஸநம்‌ செய்யவேண்டும்‌. 
1, 2. உபாஸிக்கும்‌ வகை. 

உபாஸநம்‌ செய்யும்‌ முறை, **ப்ரஹ்மம்‌ நானே?” என்று. ஐகத்‌ கர்ரணனான பகவான்‌ தனக்குச்‌ சரீர 
பூதனான ஜீவாத்மாவைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌: 
இருளைக்‌ காட்டிலும்‌ ஒளிபோலும்‌, பாபத்தைக்‌ காட்டிலும்‌ புண்யம்‌ போலும்‌, சரீரத்தைக்‌ காட்டிலும்‌ 
ஆத்மா போலும்‌ இவ்வேறுபாடு. சாஸ்த்ரங்கள்‌ வெளியிட்‌டுள்ளது. பகவான்‌ ஆத்மாவுக்கு அந்தர்யாமி, 
ஆத்மாவின்‌ வெளியேயும்‌ உள்ளேயும்‌ வியாபித்திருக்கிறான்‌. ஆத்மாவை நியமிக்கிறான்‌. 
இவ்வாறு பகவானது குணங்‌களை நினைத்து இவன்‌ தனக்கு அந்தர்யாமியாக நினைத்து உபாஸிக்கவேண்டும்‌. 
ஜீவாத்மா சரீரத்திற்கு ஆத்மாவாக இருப்பதாலே '*நான்‌ மனிதன்‌''என்று கருதுகின்றது. 
இதுபோல்‌ ஜீவாத்மாவுக்கு ஆத்மாவான பரமாத்மாவை ஜீவாத்மா தான்‌ என்று கருதுவது தகும்‌. 
ஆதலால்‌ பகவானை ஆத்மா என்று உபாஸிக்கவேண்டும்‌' 

1. 3. ப்ரதீகங்கள்‌--உபாஸநம்‌, 
ப்ரஹ்மத்தின்‌ நாமம்‌, மனம்‌ போன்றவை ப்ரதீகங்‌கள்‌, இவை ப்ரஹ்மத்தைப் போல ௨பாஸகனுக்கு ஆத்மா அல்ல. 
ப்ரஹ்மம்‌ இவற்றைக்‌ காட்டிலும்‌ உயர்ந்தது, 
அரசனை வேலைக் காரனனாகக்‌ கருதிப்‌ பேசினால்‌ ஒன்‌றும்‌ நலம்‌ பெறுவதற்கில்லை--பெறுவது தண்டனையே 
ஆதலால்‌ ப்ரதீகங்கள்‌ ஆத்மா என்று உபாஸிக்கலாகாது. 

1. 4. உத்கீதம்‌, ஆதித்யன்‌. 
உபநிஷத்‌ வாக்கியங்களில்‌ யாகத்திற்கு அங்கமாக உத்கீத உபாஸநம்‌ சொல்லப்படுகிறது. 
உத்கீதத்தில்‌ ஆதித்யனை உபாஸிப்பதா? ஆதித்யனில்‌ உத்கீதம்‌ என்று உபாஸிப்பதா? 
உத்கீதத்தால்‌ ஆதித்யன்‌ முதலான  தேவர்களை ஆராதிப்பதால்‌ பலன்‌ கிடைக்கிறது 
அன்றியும்‌ இவர்கள்‌ உத்தீதத்தை விட உயர்ந்தவர்கள்‌. 
ஆதலால்‌ உத்கீதத்தில்‌ ஆதித்யன்‌ இருப்பதாக உபாஸநம்‌ செய்யவேண்டும்‌. 

1, 5. உபாஸநம்‌: நிலை. 
உபாஸநம்‌ பல முறை செய்யவேண்டும்‌ என்று நிர்ணயிக்கப்பட்டது. உபாஸநம்‌ செய்பவன்‌ உட்கார்ந்தே செய்யவேண்டும்‌. 
அப்போதுதான்‌ மன ஒருமைப்பாடு தேரக்கூடும்‌; த்யானம்‌ செய்யமுடியும்‌. 
நடந்தோ நின்று கொண்டோ செய்தால்‌ ஆயாசம்‌ ஏற்படும்‌; மன ஒருமைப்‌ பாடு இராது, 

உபாஸநம்‌ த்யான ரூப மாகையாலே மன ஒருமைப்‌ பாடு இன்றியமையாதது. 
த்யானம்‌ எண்ணெயின்‌ தாரை போலே இடையறாமல்‌ தொடர்ந்து நிகழவேண்டும்‌; மன ஒருமைப்பாடின்றி இது சாத்யமாகாது. 
நினைவு வெள்ளம்‌ த்யானமாகும்‌. த்யானம்‌ செய்யும்‌ போது அசையாமல்‌ இருக்சுவேண்டும்‌. 
ஆதலால்‌ பரிசுத்தமான இடத்தில்‌ ஏகாந்தமாக உட்கார்ந்து த்யானம்‌ செய்ய வேண்டும்‌. 
மேடு பள்ளங்கள்‌ உள்ள இடமானானல் உடல்‌ அசைவும்‌, மனக்‌ கலக்கமும்‌ நேரும்‌.
1. 6. உபாஸநம்‌ தேசம்‌, காலம்‌. : 

மரணம்‌ வரையில்‌ உபாஸநம்‌ தினந்தோறும்‌ நடக்க வேண்டும்‌. சாந்தோக்யதீதில்‌ இவ்வாறே கூறியிருக்‌ கிறது: 
இவ்வாறு அனுஷ்டித்து, ஜீவன்‌ ப்ரஹ்மலோகம்‌. சேருகிறான்‌, இதினின்று மீட்சி இல்லை.

1. 7. சேர்ந்துள்ள பாவங்கள்‌. 

தாமரை இலையில்‌ ஜலம்‌ ஒட்டுவதில்லை; இதே போல்‌ ப்ரஹ்ம உயாஸகனிடம்‌ பாப கர்மம்‌ சேர மாட்டா. 
முன்னமே சேர்ந்துள்ள பாவங்கள்‌ நெருப்பி லிட்ட பஞ்சப்பொதி போல்‌ அழிந்துவிடும்‌. 
இனி வரும்‌ பாவங்கள்‌ கவனக்‌ குறைவால்‌ நிகழ்வன; அறிந்து செய்‌ வனவல்ல. 
இவை உபாஸகனிடம்‌ ஒட்டுவதில்லை. இது சாந்தோக்யத்தின்‌ கருத்து.
1. 8. புண்ணியத்தின்‌ பலன்‌. 

மோஷம்‌ பெறுவதற்குப்‌ புண்ய கர்மாக்களும்‌ தடையாவன; இவற்றின்‌ பயனை அனுபவித்தே மோக்ஷம்‌, 
ஆதலால்‌ இவையும்‌ பாவச்‌ செயல்கள்‌ போல்வன. 
சாந் தோக்யத்தில்‌: ஸர்வே பாப்மாநோ யதோ நிவர்த்தந்தே (8-41) என்ற இடத்தில்‌: புண்யமும்‌ பாப சப்தத்தால்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஆதலால்‌ முதலில்‌ சேர்ந்துள்ள புண்யங்கள்‌ அழிகின்றன; பின்பு நிகழ்வன ஒட்டாமல்‌ போகின்றன.
1. 9. முன்‌ செய்த புண்ய பாவங்கள்‌. 

ப்ரஹ்ம வித்யைக்கு முன்‌ நேர்ந்த புண்ய பாவங்கள்‌ அழிகின்றன என்பது முன்பு கூறப்பட்டது. 
பலன்‌ கொடுக்கத்‌ தொடங்கிய கர்மம்‌--ப்ராப்த கர்மம்‌ என்பது அழியாது. 
சாந்தோக்யம்‌ (6-14-4) கூறுவது: உபாஸகனுக்கு ப்ராரப்த கார்மம்‌ மூடியும்‌ சரீரத்தின்‌ இறுதி வரை 
ப்ரஹ்மத்தை அடையக்‌ காலதாமதம்‌ ஏற்படுகிறது. அதற்குப்‌ பின்‌ ப்ரஹ்ம ப்ராப்தி . 
புண்ய பாவங்கள்‌ அழிந்தால்‌ சரீரம்‌ இல்லை. ஏனெனில்‌ சரீரம்‌ புண்ய பாவ அனுபவத்திற்கே. 
ஆதலால்‌ பலன்‌ கொடுக்கத்‌ தொடங்கிய பின்‌ நேரும்‌ புண்ய பாவங்கள்‌ அனுபவித்தே தீரவேண்டும்‌. 
“நூறு கோடி கல்பமானாலும்‌ பாவம்‌ அனுபவிக்காமல்‌ அழியாது” என்ற வாக்யம்‌ கர்மங்களின்‌ பலனைக் காட்டுவதற்காகவே .
ப்ரஹ்ம வித்யை யினால்‌ இவை தாமே அழியும்‌.
1. 10. நித்ய நைமித்திக கர்மாக்கள்‌. 

ப்ரஹ்ம வித்யைக்குப்‌ பின்‌ நேரும்‌ புண்ய பாவங்கள்‌ ஒட்டாமற்‌ போகின்றன என்று விளக்கப்பட்டது. 
இவை ஓட்டாவிடில்‌ நித்யமாகச்‌ செய்யும்‌ கர்மாக்களும்‌ நைமித்‌கிக கர்மாக்களும்‌ செய்யவேண்டியதில்லையே என்பு ஒரு சங்கை. 
வித்யை உண்டாவதற்காக இவை விடாமற்‌ செய்யவேணடுவன. 
வேத வாக்கியம்‌ ஓன்று: வேத அத்யனத்தாலும்‌, யஜ்ஞத்தாலும்‌, தானத்தாலும்‌, பலனைக்‌ கோராத தவத்தினாலும்‌ 
ப்ரஹ்ம ஞானிகள்‌ பரமாத்‌மாவை உபாஸிக்க விரும்புகிறார்கள்‌ என்று.
இவையாவும்‌ வித்யைக்கு அங்கங்கள்‌. வித்யை சரீரம்‌ முடியும்‌ வரையில்‌ செய்யவேண்டியது. 
இக் கர்மங்கள்‌ செய்யாவிடில்‌ இதனால்‌ விளையும்‌ பாவம்‌ மன நிலையைக்‌ குலைத்து விடும்‌. 
ஆதலால்‌ மனம்‌ தூயதாவதற்காக நித்ய நைமித்‌திகக் கர்மாக்களை எப்போதும்‌ செய்ய வேண்டும்‌.
1. 11. ப்ரஹ்ம வித்யைக்குப்‌ பின்‌ சேரும்‌ கர்ம பலன்கள்‌. 

இவை ப்ராரப்தங்கள்‌ எனப்படும்‌. கர்மாக்களின்‌ பலன்‌ அனுபவித்தே இவை தீரும்‌; 
ஆதலால்‌ ஓர் சரீரத்‌தின்‌ முடிவில்‌ தீரும்‌ என்பதற்கல்லை; எந்த ஜன்மத்தில்‌ அழிகின்றன என்பதும்‌ சொல்ல முடியாது. 
இதுவரையில்‌ தேறிய கருத்துக்கள்‌: 
(1) ப்ரஹ்ம. வித்யைக்கு முன்‌ சேர்ந்த புண்ய பாவங்கள்‌ ஸஞ்சிதம்‌ எனப்படுவன -இவை 'வித்யையின்‌ மகிமையால்‌ அழிகின்‌றன. 
(2) ப்ரஹ்ம வித்யைக்குப்‌ பின்‌ : கவனக்‌ குறைவால்‌ தேரும்‌ புண்ய பாவங்கள்‌ பகவானது கோபத்தை விளைவிப்பன அல்ல; 
ஆகையால்‌ ' இவை ஓட்டுவனவல்ல. 
(3) ஒரு பலனைக்‌ கருதி உபாஸகன்‌ செய்யும்‌ புண்ய கர்மாக்கள்‌ வலி மிக்க பாவ்ச்‌ செயல்களால்‌ தடைபட்‌.டால்‌, 
ப்ராரப்த கர்மங்கள்‌ முடியும்போது இவை நீங்‌ கும்‌. 
ஸஞ்சித புண்யங்களோடு இவை இவனுடைய அநுகூலரிடம்‌ சேரும்‌. 
(5) வித்யை உண்டான பின்‌ புத்தி பூர்வமாகச்‌ செய்யும்‌ பாவச்‌ செயல்களின்‌ பயன்‌, எஞ்சி யிருப்பனவாய்‌ முன்‌ சேர்ந்த 
பாவச்‌ செயல்களின்‌ பலனோடு இவனுடைய விரோதிகளிடம்‌ சேரும்‌ -இவ்வாறு பகவான்‌ சங்கல்பித்தது. 
மோஷம்‌ பெறுவதற்காகச்‌ செய்யும்‌' பகவத்‌ உபாஸநம்‌ ஆயுள் வரையில்‌ திரும்பாத திரும்பச்‌ செய்ய வேண்டும்‌. 
பகவானது ஸ்வரூபம்‌ தனக்கு ஆத்மா என்றே உபாஸிக்க வேண்டும்‌. 
மனம்‌ முதலான ப்ராக்ருதங்களை விட உயர்ந்‌தது ப்ரஹ்மம்‌, 
ஆதலால்‌ ப்ரஹ்ம உபாஸநங்களில்‌ மனம்‌ முதலியவற்றை ஆத்ம: எனக்‌ கருதி உபாஸிக்கக் கூடாது 
உத்தீதம்‌ முதலானவற்றில்‌ அவற்றின்‌ தேவதைகளை எண்ணி உபாஸநம்‌ செய்ய வேண்டும்‌. 
உட்கார்த்தே உபாஸநம்‌ செய்யவேண்டும்‌; -மரணம்‌ வரையில்‌ அனுஷ்‌டிக்க வேண்டும்‌. _ 
உபாஸஷநத்தின்‌ பலனாக நேரே காணும்‌ காட்சி போன்ற நிலை அடையும்போது முன்னமே செய்த புண்ய பாவங்கள்‌ அழிந்து விடுகின்றன; 
பின்பு அறியாமல்‌ செய்யும்‌ பாவங்கள்‌ ஒட்டுவனவல்ல. பலன்‌ கொடுக்‌கத்‌ தொடங்காத புண்ய பாவங்கள்‌ கிரமமாகத் தாமே அழிந்து விடுகின்றன.

--------------------
2. இரண்டாம்‌ பாதம்‌ 

ப்ரஹ்ம உபாஸநம்‌ நிறைவடைந்த பின்‌ உபாஸகனது புண்ய பாவங்கள்‌ அழியும்‌ என்று முன்‌ பாதத்தில்‌ விளக்கி யுள்ளது. 
மரண மடையும்‌ ஜீவன்‌ மோக்ஷம்‌ பெற்ற பின்‌ அர்ச்சிராதி மார்கமாகப்‌ பரமபதம்‌ சேரும்‌ 
வகை மூன்றாம்‌ பாதத்தில்‌ விவரிக்கப்படுகிதது. 
ப்ரஹ்ம வித்யையின்‌ பலனாக ஜீவன்‌ ஸுஷும்நா நாடி வழியாகச்‌ சரீரத்திலிருந்து கிளம்பும்‌ வகை (உத்க்ராத்தி) இப்‌ 
பாதத்தில்‌ ஆராயப்படுகிறது. 
2. 1. வாக்‌ இந்த்ரியம்‌. 

“வாங்‌ மநஸி ஸம்பத்யதே'” என்கிறது ஒரு வேத வாக்கியம்‌. மரணத்தின்போது வாக்‌ இந்த்ரியத்தின்‌ செயல்‌ குலைகிறது; 
இந்த இந்த்ரியம்‌ மனத்தோடு சேருகின்றது. மனத்தின்‌ செயல்‌ அடங்கவில்லை; ஆதலால்‌ செயல்‌ அடங்கிய வாக்கு இத்துடன்‌ சேருகிறது. 
வாக்‌கைப்‌ பின்பற்றி இந்த்ரியங்கள்‌ யாவும்‌ மனத்துடன்‌ சேருகின்றன. 

2. 2. மன இந்த்ரியம்‌., 

மனம்‌ அன்னமயம்‌, ப்ராணன்‌ ஜலமயம்‌ என்கிறது சாஸ்த்ரம்‌, அதாவது மனம்‌ அன்னத்தாலும்‌, ப்ராணன்‌ 
ஜலத்தாலும்‌ செயல்படுகின்றன என்பது கருத்து. 
மனம்‌ ஸாத்விக அஹங்காரத்தின்‌ விகாரம்‌, வாயு ரூபமான ப்ராணன்‌ ஆகாசத்தின்‌ விகாரம்‌, 
இந்தரியங்களோடு கூடிய மனம்‌ ப்ராணனோரடு சேர்ந்தடைகின்றது. 

2. 3. ப்ராணன்‌. 

இந்தரியங்களுடன்‌ சேர்த்த மனத்துடன்‌ இணைந்த ப்ராணன்‌ இந்த்ரியங்களுக்குத்‌ தலைவனான ஜீவாத்மாவிடம்‌ சேருகின்றது. 

ப்ராண: தேஜஸி”' என்பது சாந்தோக்ய வசனம்‌. 
யமூனை கங்கையோடு சேர்ந்ததே கடலை அடைகிறது. எனினும்‌ யமுனை கடலை அடைகிறது என்கிறோம்‌. 
இதைப்‌ போல இங்குக் கருத்து: ப்ராணன்‌ என்பது மனம்‌ இந்த்ரியங்கள்‌ இவற்றுடனேயே ஜீவாத்மாவைச்‌ சேருகிறது என்பதே. 

2. 4. பஞ்ச பூதங்கள்‌. 

“ப்ராண: தேஜஸி'' என்று முன்பு கூறப்பட்டது. 
அதாவது ப்ராணன்‌ என்பது மனம்‌, இந்தீரியங்கள்‌ இவற்றுடன்‌ தேஜஸ்ஸைச்‌ சேருகின்றது.
தேஜஸ்‌ என்பது பூதங்‌களின்‌ சேர்க்கையாலே ஏற்படுகிறது என்று சாஸ்த்ரம்‌ கூறுகிறது. 
தேஹத்திலிருந்து கிளம்பும்‌ ஜீவன்‌ பஞ்சபூத மயம்‌ என ப்ருஹதாரண்யகம்‌ வெளியிட்டுள்ளது (6-4-5) 
“-ப்ருத்வீமய: ஆயபோமய: தேஜோமய;”” என்று பூமி, ஜலம்‌, தேஜஸ்‌ இவற்றாலானது. 
அதாவது இவை மூன்றும்‌ சேர்ந்தது தேஜஸ்‌. ஆதலால்‌ ப்ராணன்‌ பூத் ஸுிஷ்மங்களோடு சேருகின்றது என்பது தெளிவு. 

2. 5. உத்க்ராந்தி. 

உத்க்ராந்தி என்பது. சரீரத்திலிருந்து ஜீவன்‌ பிரிந்து செல்லுதல்‌. இது ப்ரஹ்ம ஞானிகளுக்கு இல்லை, 
மற்றை யோர்க்கே என்பது சிலரது கருத்து. இதன்‌ காரணம்‌: 
ப்ரஹ்ம ஞானியின்‌ மனத்திலுள்ள விருப்பங்கள்‌ நீங்குகின்றன. அப்போதே இவனுக்கு மோக்ஷம்‌ என்று சாஸ்த்ரம்‌ கூறுகிறது. 
இதை ஆராய்ந்தால்‌ இவனிடம்‌ புண்ய பாவங்கள்‌ ஓட்டமட்டா;ஆதலால்‌ இங்கு வாழும்போதே ப்ரஷ்ம அனுபவம்‌ பெறுகிறான்‌ என்பது தேறும்‌. 
இங்கு இவ்வாறானளோர்‌ வாழும்‌ நிலையே முக்தி என்கிறார்கள்‌ 
இக்கருத்துடையோர்‌. ஜீவித்தல்‌ முக்தி இவை மாறுபட்ட கருத்துக்கள்‌; இவை இணைந்து நிகழமாட்டா. 
ஆதலால்‌  ப்ரஹ்ம ஞானிகளுக்கும்‌ உத்க்ராந்தி உண்டு என்பது தீர்வு.  

கடவல்லியிலிருந்து தெரிந்துகொள்வது ((2-8-16]); 
உடலில்‌ பல. நாடிகள்‌. உள்ளன;. இவழ்றுள்‌, ,ஸுஷும்ந. என்று நாடியின்‌ வழியாகச்‌ செல்பவன்‌ (மோக்ஷ மடைகிறான்‌, 
மற்றை நாடிகள்‌ எம்ணார மார்கங்கள்‌ என்பது. 
முக்தி அடைபவன்‌ உபாஸகன்‌. ஆதலால்‌ இவனுக்கு உத்கராந்தி உண்டு என்பது தேறுகின்றது. 

மரண நிலையில்‌ சரீரத்தில்‌ உஷ்ணம்‌ ஒரிடத்திலேயே காணப்படுகிறது; இது ஸுஷ்ம தேஹத்தின்‌ வெப்பம்‌. 
இது யாவர்க்கும்‌ உண்டு. இதனாலும்‌ உபாஸகனுக்குக்‌ உத்க்ராந்தி உண்டு எள்றறியலாம்‌. 
அர்ச்சிராதி வழி யாக உபாஸகன்‌ ப்ரஹ்மத்தை அடையும்‌ வரையில்‌ ' ப்ராணன்‌ இவனுடனேயே இயங்குகிறது. 

ஞானியைப்‌ பற்றிச்‌ சொல்லும்போது இவன்‌ மேன்‌ தோக்கிச்‌ செல்லும்‌ நாடி வழியாக (ஸு ஷும்நா) சூர்ய 
மண்டலத்தைப்‌ பிளந்து கொண்டு நான்முகனின்‌ உலகம்‌ செல்லுகிறான்‌ என்பதும்‌ சாஸ்த்ரத்தில்‌ உள்ளது. 
ஆதலால்‌ ஞானிக்கும்‌ உத்க்ராந்தி உண்டு. மூர்த்ந்ய நாடியில்‌ புகுவதற்கு முன்‌ இந்த உத்க்ராந்தி இம்மூவகை 
யினர்க்கும்‌ உண்டு. 
2. 6. பூத ஸுக்ஷூமங்கள்‌. 

ப்ராணனோடு சேர்ந்த பூத ஸூக்ஷ்மங்கள்‌ எங்குச்‌ செல்கின்றன? ““தேஜ: பரஸ்யாம்‌ தேவதாயாம்‌'”' என்‌பது வேத வாக்கியம்‌. 
இதயத்திற்கு அந்தர்யாமியான பகவானிடம்‌ பூதங்கள்‌ சேருகின்றன என்பது கருத்து. 
விழிப்பு நிலையில்‌ அனுபவிக்கும்‌ இன்பங்களால்‌ விளையும்‌ களைப்பு ஆறுவதற்கே ஜீவன்‌ தூங்கும்‌ நிலையில்‌ 
பரமாத்மாவோடு சேருகிறான்‌. ஸ்ருஷ்டியில்‌ அனுபவிக்கும்‌ இன்ப துன்பங்களின்‌ களைப்பு ஆறுவதற்கு ப்ரளய 
காலத்தில்‌ ஜீவன்‌ பசகவானோடு சேருகிறான்‌. மரண காலத்தில்‌ பூத ஸுிஷ்மங்கள்‌ எடுக்கப்படும்போது 
(நேரும்‌ களைப்பு ஆறுவதற்கு ஜீவன்‌ பரமாத்மாவோடு சேருகிறான்‌. இதுபோல்‌ பூத ஸக்ஷ்மங்கள்‌ இதயத்தி 
லுள்ள பரமாத்மாவோடு சேருகின்றன. 'இவைகளோடு சேர்ந்த. ஜீவன்‌!.அந்தர்யரமியான பரமாத்மாவை 
விட்டுப்‌ பிரிய முடியாதவாறு.சேருகிறான்‌.. 

2. 7. ப்ரஹ்ம ஞானிக்கு உத்க்ராந்தி. 

ப்ரஹ்மஞானி ' உபாஸநம்‌, செய்யும் போது தான்‌ மூர்தந்யநாடி.வழியாகச்‌ சரீரத்திலிருந்து வெளிக்கிளம்பி 
அர்ச்சிராதி மார்கத்தாலே: சென்று பரமாத்மாவை அடையப்‌ போவதாக தினந்தோறும்‌ இதையே சிந்தனை 
செய்வதால்‌ பகவான்‌ இதையே இவனுக்கு அருள்‌கிறான்‌. 
இவனது இதயத்தில்‌ இருள்‌ நீங்கி இந்த மூர்தந்ய நாடி யில்‌ ஒளி: சேருகிறது. 
இந்த ஒளியால்‌ இந்த நாடியின்‌  வ்ழியே ஜீவன்‌ கிளம்புகிறான்‌. . 

2. 8. ஜீவன்‌ மேலே செல்லும்‌ விதம்‌. 

சரீரத்தை விட்டு வெளிக்‌ இளம்பும்‌ ஜீவன்‌ சூர்ய கிரணங்களின்‌ வழியாக மேலே செல்லுகிறான்‌. 
சூர்ய கிரணங்கள்‌. இரவில்‌ காண்பதில்லை; ஜீவனின்‌ நிலை என்ன? என்ற சங்கை எழுகின்றது. 
இரவு வேளையிலும்‌  சூரிய கிரணங்கள்‌ உள்ளன; கண்ணுக்குப்‌ புலனாவ தல்ல. 
இரண்டு கிராமங்களை இணைக்கும்‌ நெடுஞ்‌ சாலை போல்‌ சூரிய கரணங்கள்‌ மேலுலகையும்‌ பூமியையும்‌ இணைக்கின்றன. 
இவை. நாடிகளிலும்‌ ப்ரகாஸி க்‌கின்றன. ஆதலால்‌ ப்ரஹ்மஞானி இரவில்‌ மரணமடைந்தாலும்‌ 
சூரிய கரணங்களின்‌ வெளிச்சத்தாலே மேலே. சென்று பரமாத்மாவை அடைகிறான்‌, 
2. 9. இரவில்‌ ஜீவன்‌ மரண மடைந்தால்‌? 

மோக்ஷ மடையும்‌ ஞானிக்குச்‌ சரீரத்தோ டிருக்கும்‌ வரையில்‌ கார்மத்தோடு தொடர்புண்டு. 
சரீரத்திற்குக்‌ காரணமான ப்ராரப்த கர்மம்‌ இரவிலும்‌ முடிவடையும்‌ ; அப்போது மரணம்‌ நேரும்‌. 
இவ்வாறு மரணம்‌ நேரும்‌ போதே மோக்ஷமும்‌ நேரும்‌. 
இவனுக்குச்‌ சரீர சம்பந்தத்‌திற்குக்‌ காரணமில்லை; ஆதலால்‌ இரவில்‌ இறத்தாலும்‌ ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு, 

2.10. தஷிணாயனத்தில்‌ மரணம்‌. 

தஷிணாயனத்தில்‌ மரணமடைந்தால்‌ ஜீவன்‌ சந்த்‌ரனை அடைகின்றான்‌ என்று சாஸ்த்ரம்‌ கூறுகிறது, 
சந்த்ரனை அடைந்தால்‌ ஸம்ஸார மண்டலத்திற்கு மீட்சியும்‌. சொல்லப்படுகிறது. 
பீஷ்மர்‌ தஷிணாயனத்தில்‌ மரண மடைய விரும்பாதவராய்‌ உத்தரர்யணத்தை நோக்கிக் கொண்டிருந்தார்‌. 
ஆதலால்‌ தக்ஷிணாயனத்தில்‌ மரணமடையும்‌ உபாஸகனின்‌ நிலை என்ன? 

சந்த்ரனிடம்‌ சேர்ந்து பூமிக்கு மீள்வது என்று சொல்‌லியது ப்ரஹ்மஞான மில்லாதவனுச்கு: 
இரவில்‌: மரணம்‌  ஏற்பட்டால்‌ ப்ரஹ்மஞானி சந்த்ரனை அடைந்து சிறிது  தேரம்‌ தங்கி உபசாரங்களைப்‌ பெற்று 
மேலே செல்லுகிறான்‌ என்பதே ஊகிக்கவேண்டியது. 
பீஷ்மர்‌ தாம்‌ இஷ்டப்பட்ட காலத்தில்‌ மரண மடையக்கூடும்‌ என்ற வரம்‌ பெற்றிருந்தார்‌. 
உத்தராயண காலத்தின்‌ சிறப்‌பைக்‌ காட்டுவதற்கே அவர்‌ இதை அபேஷித்தார்‌. 

மரண மடையும்‌ ஜீவனுடைய வாக்‌ இந்த்ரியம்‌ மனத்‌துடன்‌ சேருகின்றது;மனம்‌ ப்ராணனோடு சேருகின்றது. 
ப்ராணன்‌ ஜீவனோடு சேருகின்றது. ஜீவனோடு கூடிய ப்ராணன்‌ மற்றைய பூதங்களோடு தேஜஸ்ஸோடு சேருகின்றது.
யாவும்‌ பரமாத்மாவோடு சேருகின்றன; லயமடையவில்லை. ஜீவன்‌ மூர்தந்ய நாடி வழியாக வெளி வருகின்றான்‌; 
இது உத்காந்தி ஆகும்‌. ஜீவன்‌ சூர்யனின்‌ கரணங்களின்‌ வழியாக மேலே செல்லுகிறான்‌. 
இரவில்‌ மரண மடைந்தாலும்‌, தஷிணாயனத்தில்‌ மரண மடைந்தாலும்‌ உபாஸகனுக்கு ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு. 
----------

ப 3. மூன்றாம்‌ பாதம்‌ 

3.1. அர்ச்சிராதி. 
ஜீவன்‌ இதயத்தை விட்டு வெளி வந்ததும்‌ செல்லும்‌ மார்கம்‌ அர்ச்சிராதி என்பது. இந்த வழியில்‌ இவனை 
அழைத்துச்‌ செல்லும்‌ தேவர்கள்‌ அர்ச்சிஸ்‌ (அக்நி), அஹஸ்‌ (பகல்‌), சுக்லபக்ஷம்‌, உத்தராயணம்‌, ஸம்வத்‌ஸரம்‌ (ஆண்டு), 
ஆதித்யன்‌, சந்த்ரன்‌, வைத்யுதன்‌ (மின்‌னல்‌), வருணன்‌, இந்தீரன்‌,ப்ரஹ்மா. உபதிஷத்துக்களில்‌ சில வேறுபாடுகள்‌ இருந்தாலும்‌ 
அர்ச்சிராதி மார்கம்‌ ஒன்றே வெவ்வேறல்ல. 

ஃ. ஆதிவாஹிகர்‌. 

ப்ரஹ்ம ஞானியை அர்ச்சிராதி கதியில்‌ அழைத்துசி செல்லும்‌ தேவர்கள்‌ ஆதிவாஹிகர்‌. 
"இவர்கள்‌ தங்கள்‌ தங்கள்‌ ஸ்தானம்‌ வரையில்‌ அழைத்துச்‌ செல்லுகின்றனர்‌. வித்வத்‌ புருஷன்‌ அமாநவன்‌ எனப்படும்‌ தேவன்‌? 
இவன்‌ முக்தனை பகவானிட்ம்‌ அழைத்துச்‌ செல்லுகிறான்‌. 
3. 9. அர்ச்சிராதி கதியில்‌ செல்வோர்‌ யார்‌? 

ப்ரஹ்ம உபாஸநம்‌ செய்தோர்‌ ப்ரஹ்மத்தை அடைகின்றனர்‌ அர்ச்சிராதி வழியாக. 
கார்ய ப்ரஹ்மமான நான்முகனை உபாஸிப்பவர்கள்‌ ப்ரஹ்ம லோகத்தை அடைகின்றனர்‌. 
ப்ரஹ்மாவின்‌ ஆயுட்காலம்‌ வரையில்‌ அங்குத்‌ தங்கி அவன்‌ பரமாத்மாவிடம்‌ போகும்போது உடன்‌ செல்லுகின்றனர்‌. 
இதுபாதரி என்பவரின்‌ கருத்து. 
தேவதாந்த்ர உபாஸனம்  செய்வோர்‌. அல்பமான, தாழ்‌வான பலனே பெறுவர்‌. 
கேவலம்‌ அத்மாவையே உபாஸனம் செய்வோர்க்கு நித்யமான பலன்‌ கிடைத்தாலும்‌, இவர்களது இன்பம்‌ அல்பமானது, ஓரளவு உடையது. 
பஞ்சாக்நி வித்யாநிஷ்டர்‌ ப்ரஹ்மத்தை அத்தர்யாமி யாகக்‌ கருதுவதால்‌ இவர்களுக்கும்‌ அர்ச்சிராதி உண்டு. 

சுருக்கம்‌ 
ப்ரஹ்ம வித்யைகளை உபாஸிப்பவர்கள்‌ எந்த வித்‌யையாயினும்‌ ஒரே அர்ச்சிராதி வழியாலே ஸ்ரீவைகுண்‌டம்‌ சேருகின்றனர்‌. 
முக்த் புருஷன்‌ ஸம்வத்ஸரத்‌தை அடைத்த பின்‌ வாயுவை அடைந்து ஆதித்யனை அடைகிறான்‌; 
தடித்‌ என்ற மின்னலுக்குப்‌ பின்பு வருணன்‌, இந்த்ரன்‌, பிரமன்‌ இவர்களை அடைகிறான்‌. 
அர்ச்சிஸ்‌ முதலான தேவர்கள்‌ முக்த்‌னை ஆங்காங்கு அழைத்துச்‌ செல்லுகின்றனர்‌; இவர்கள்‌ ஆதிவாஹிகர்‌. 
ப்ரஹ்ம உபாஸகர்களையும்‌, தம்‌ ஆத்மாவை உபாஸிக்கும்‌ கேவலர்களையுமே ஆதிவாஹிகர்‌ அழைத்துச்‌ “செல்கின்றனர்‌. 
--------------
4, நாலாம்‌ பாதம்‌ 
4. 1. ஜீவன்‌--ஸ்வரூபம்‌. 

அர்ச்சிராதி கதியில்‌ செல்லும்‌ ஜீவன்‌ பரமாத்மாவை  அடைத்து தனது இயல்பான ரூபத்துடன்‌ மின்னுறான்‌ என்று சாந்தோக்யம்‌ கூறுகிறது (8-12-2).
ரூபம்‌  என்பதற்குப்‌ புதிதாக ஒரு சரீரம்‌ என்பது கருத்தன்று, -இவனது ஸ்வரூபமும்‌ விரிவடைந்து விளங்குகிறான்‌. 
இவனுக்கு எப்போதும்‌ நிலையானது பூர்ணமான ஞானம்‌. சரீரத்தோடு இருக்கும்போது இந்த ஞானம்‌ மறைக்கப்படுகிறது. 
சரீரத்திலிருந்து விடுபட்டதும்‌  இது பூர்ணமாக விளங்குகிறது. 
ஜீவனது ஸ்வரூபம்‌?  பாவம்‌, மூப்பு, மரணம்‌, வருத்தம்‌, பசி, தாகம்‌ இவை யாவும்‌ அற்றது; 
தடைபடாத்‌ விருப்பங்களும்‌ சங்கல்பங்‌ களும்‌ வாய்ந்தது. 
இந்த எட்டு குணங்களும்‌ முக்தி  நிலையில்‌ முற்றிலும்‌ விளங்குகின்றன. 
ரத்னத்திலிருந்து  அமுக்கை அகற்றினால்‌ அது நன்றாக ஒனிர்கன்றது; புதிதாக ஓளி கொள்ளவில்லை. 
கிணற்றிலிருந்து மண்ணை  வெளியேற்றினால்‌ தண்ணீர்‌ தோன்றுகிறது; இதுமுன்பு இருந்ததே; புதிதாக ஊறவில்லை. 
இதுதான்‌ முக்தனுடைய ஸ்வகூபம்‌. 

4, 2, முக்தனின்‌ அனுபவம்‌. 
தத்வமஸீ”'--அந்தப்‌ பொருள்‌ நீ ஆகிறாய்‌, 
“அய காத்மா ப்ரஹ்மா''-- இந்த ஆத்மா பரஹ்மமே ஆகும்‌- 

இவைபோன்ற வாக்கியங்கள்‌ ஜீவனுக்கும்‌ பகவானுக்கும்‌. "ஒற்றுமையை வெளியிடுகின்றன. 
மேலும்‌ சில வாக்கி யங்கள்‌, பகவானுக்கு ஜீவன்‌ சரீரம்‌, பகவான்‌ ஜீவாத்மா வில்‌: உள்ளும்‌ புறமாகவும்‌ அடர்ந்திருக்கிறான்‌, 
இவனை ஜீவாத்மா அறியமாட்டான்‌ என்று வேற்றுமையைக்‌ 'குறிக்கின்றன. 
பகவானுக்கு உள்ள எட்டு குணங்கள்‌ முக்த ஜீவனுக்கும்‌ உள்ளன என்ற கருத்தும்‌ வந்துள்ளது. 
இவற்றை ஆராய்ந்தால்‌ தேறுவது: முக்தனது இயல்பு, இவனது குணங்களால்‌ பகவானோடு ஓத்தது என்பதே. 
இவனும்‌ பகவானும்‌ ஒன்றே என்பது பொருந்தாது. 
4. 3. முக்த ஜீவனின்‌ ஸ்வரூபம்‌. 
முக்தி அடையும்‌ ஜீவனைப்‌ பற்றி சாந்தோக்யம்‌ (4-7-1) வெளியிட்‌டுள்ளவாறு: 
பாவ மற்றவன்‌, யாவகை ஆனந்தமும்‌ போன்ற குணங்கள்‌ ஜீவன்‌ பெறுகிறான்‌ 
என்பதால்‌ இவனது ஞானமும்‌ சொல்லப்படுகிறது. 
உப்புக்கட்டியானநு உள்ளும்‌ புறமும்‌ நடுவும்‌ ஒரே உவர்ப்பு மயமாக இருப்பது போல்‌ முக்தனது ஞானமும்‌ 
முழுதாக எங்கும்‌ அடர்ந்துள்ளது. 

4. 4. ஜீவன்‌-- ஸத்ய ஸங்கல்பம்‌. 
முக்தி நிலையில்‌ ஜீவன்‌ ஸத்ய ஸங்கல்பம்‌ என்ற குண  மூடையவன்‌ என்று அறிகிறோம்‌. 
“£ஸ தத்ர பர்யேதி ஐத்‌ இரீடந்‌ ரமமாண: ஸ்த்ரீ பிர்வா யாநைர்‌ லா  ஜ்ஞாதிபிர்‌ வா?” ஜீவன்விளையாடிக்கொண்டு களித்து, 
ஸ்த்ரீகளோடும்‌, வாகனங்களிலும்‌, உற்றாரோடும்‌ இன்ப முறுகிறான்‌ என்கிறது சாந்தோக்யம்‌ (9-72-22). 
இவ்வாறு முக்தன்‌ செயல்படுவது தனது ஸங்கல்பத்தா லேயே? வேறு முயற்சி எதுவும்‌ கொள்வதில்லை. 

சங்கை: முக்தன்‌ ஸ்த்ரீகள்‌ முதலோருடன்‌ களிப்பதாகக்‌ கூறுவதால்‌ இவனுக்குக்‌ கர்மத்தோடு தொடர்பு -திகழக்கூடும்‌.  

விளக்கம்‌ : ஜீவன்‌ ஸத்ய ஸங்கல்பன்‌ என்பதால்‌  இவன்‌ பகவானைத்‌ தவிர வேறு எதற்கும்‌ வசப்பட்டவன்‌ அல்லன்‌; 
ஆதலால்‌ இவனுக்கு விதி, தடை என்பன இல- 
ஆக இவன்‌ கர்மம்‌ முதலான எதற்கும்‌ வசப்படுவதில்லை- இவன்‌ நிலையாக அனுபவிப்பவை 
பகவானது ஸெளந்தர்‌யம்‌, சல்யாண குணங்கள்‌, இருவடிகளில்‌ கைங்கர்யம்‌ செய்வது போல்வன. 
4. 5. முக்தன்‌ --சரீரம்‌, இந்த்ரியங்கள்‌. 

தனது ஸங்கல்பத்தாலே முக்தன்‌ பித்ருக்கள்‌ போல்‌வாரைப்‌ படைக்கிறான்‌ என்று முன்பு கூறப் பெற்றது. 
இவ்வாறு படைக்கும்போது இவனுக்குச்‌ சாரீரம்‌ உண்டா என்பது சங்கை.  

சரீரத்துடன்‌ இருந்தால்‌ இன்ப துன்பங்கள்‌ நீங்க மாட்டா என்பது ஒரு ச்ருதி வாக்யம்‌, அதே இடத்தில்‌ விளக்கம்‌ பெறுவது: 
இந்தச்‌ சரீரத்திலிருந்து கிளம்பி முக்தாத்மா பரஞ்சோதியான பரம புருஷனை அடைந்து இன்பமுறுகிறான்‌ என்பது. 
ஆகையால்‌ முக்தனுக்குச்‌ சரீரமில்லை என்பது ஒரு கருத்து.: 

*ஸ ஏகதா பவதி, த்ரிதா பவதி, பஞ்சதா பவதி”'-- இவன்‌ ஒரு படியாகிறான்‌, மூன்று படியாகிறான்‌, 
ஐந்துபடி யாகிறான்‌ என்பது சாந்தோக்ய வாக்கியம்‌ 
ஜீவாத்மா பல பகுதிகளாகப்‌ பிரிய இயலாது. ஆதலால்‌ பல சரீரங்கள்‌ கொள்கின்றது என்பது ஊகிக்கலாம்‌. 
இவ்‌ விரண்டு கருத்துக்களும்‌ ஏற்றுக் கொள்ள வேண்டும்‌ என்று  தீர்வு வரையப்பட்டுள்ளது.. 

ஒரு சங்கை: பரமபதத்தில்‌ முக்தன்‌ பெறுவது பரமாத்மாவை அனுபவிப்பது ஒன்றே. 
வேறு அனுபவத்‌திற்காக இவன்‌ சரீரங்களைப்‌ படைக்க எவ்வாறு விரும்புவான்‌? உலகில்‌ இருக்கும்போது ஜீவன்‌ கனவு நிலையில்‌ 
தேர்‌, அதில்‌ பூட்டப்பட்ட குதிரைகள்‌, குளங்கள்‌, ததி போன்றவற்றை அனுபவிக்கிறான்‌. 
இந்தப்‌ படைப்பு: பகவனாலே என்பது தாம்‌ அறிந்ததே, இதுபோல்‌ இவன்து அனுபவத்திற்காக பசுவான்‌ பித்ரு ஸமூகம்‌ முதிய 
வற்றைப்‌ படைக்கிறான்‌; இவ்வாறு படைப்பது முக்தனது போக ரஸத்திற்காக என்று ஊகிக்கலாம்‌. 

வேரு சங்கை : கர்ம வசப்படாத முக்தன்‌ பித்‌ருக்கள்‌ முதலோரை விரும்புவது எவ்வாறு? 

விளக்கம்‌ : பகவான்‌ தசரதன்‌, வஸுதேவன்‌ முதலோரைப்‌ படைத்து இவர்களுக்கு மகனாக லீலாரஸம்‌ அனுபவித்தான்‌. 
இதுபோல்‌ முக்கர்‌ அனுபவிப்பதற்‌கும்‌ படைக்கிறான்‌. 
அன்றியும்‌ தமது ஸங்கல்பத்தாலே முக்தர்கள்‌ இவ்வாறு படைக்கின்றனர்‌ லீலா ரஸம்‌ அனுபவிப்பதற்கு. 

வேதொரு சங்கை : முக்தன்‌ பல சரீரங்கள்‌ ஏற்றுக்‌ கொள்கிறான்‌ எனில்‌ ஒரே ஆத்மா பல சரீரங்களில்‌ எவ்‌வாறு இயங்கும்‌? 

விளக்கம்‌ : முக்தன்‌ அணு பரிமாண முள்ளவனானாலும்‌ தனது அறிவினாலேயே யாவற்றையும்‌ அறிந்து கொள்ளுமாறு பரவுகிறான்‌. 
ஓரிடத்திலுள்ள விளக்கின்‌ ஒளி எங்கும்‌ பரவுவது போன்றது இது, அன்றியும்‌ ஸெளபரீ பல வடிவங்கள்‌ எடுத்துக்கொண்டு அனுபவித்‌தார்‌ என்பது அறிவோம்‌. 
முக்தன்‌ ஓரே சமயத்தில் பல சரீரங்களையும்‌ வியாபித்து எல்லாவற்றையும்‌ அறிந்து நடத்துகிறான்‌ என்று வேதம்‌ வெளியிட்டுள்ளது. 
4. 6, முக்தனது ஐச்வர்யம்‌ : 

தனது அனுபவத்திற்காக முக்தன்‌ சரீரங்களைப்‌ படைக்கக்கூடும்‌ என்பது முன்பு கூறப்பட்டது. 
உலகங்‌களைப்‌ படைப்பதும்‌ நியமிப்பதும்‌ ஸார்வேச்வரனுக்கே உரியது என்பது விளக்கப்படுகிறது. 
உலகங்களைப்‌ படைப்பது முதலான செயல்கள்‌ ஜீவனுக்குக்‌ கூறப்பட வில்லை. 
பூதங்கள்‌ எல்லாம்‌ பரம்பொருளாலே உண்டாயின, அவனாலே வாழ்‌கின்றன, அவனிடத்தில்‌ லயமடைகின்‌றன என்றும்‌,
ப்ரஹ்மம்‌ ஒன்றாகவே இருந்தது,தான்‌ பலவாக இயங்கச்‌ சங்கல்பித்தது என்றும்‌, 
ப்ரளய காலத்‌தில்‌ நாராயணன்‌ ஒருவனே இருந்தான்‌, பிரமனும்‌ சிவனுமில்லை என்றும்‌, 
இவன்‌ ஒருவனே யாவற்றையும்‌ நியமிக்‌கிறான்‌ என்றும்‌ வேத வாக்கியங்கள்‌ கூறுகின்றன. 
ஆதலால்‌ முக்தனது செல்வம்‌ உலகங்களைப்‌ படைப்பது, நியமிப்பது இவை நீங்கலாகவே. 

கர்மத்திற்கு வசப்படாத முக்தன்‌ எல்லா உலகங்களிலும்‌ தனது விருப்பத்திற்கேற்ப சஞ்சரிக்கிறான்‌ என்பது 
வேதத்தில்‌ வந்துள்ளது. இவ்வாறு அனுபவிப்பதால்‌ பெறும்‌ போகம்‌ அற்பமும்‌ நிலையற்றதுமாகும்‌ என்பது சங்கை
முக்தன்‌ அனுபவிப்பது வைகுந்தத்திலுள்ள போகங்களே. ப்ராக்ருதங்களான உலகங்களை இவன்‌ 
பகவானுடைய செல்வம்‌ என்றே நினைத்து அனுபவிக்கக்‌ கூடும்‌; இது விருப்பத்தால்‌, கர்மத்‌ தாலன்று. 
உலகைப்‌ படைப்பது,காப்பது, அழிப்பது போல்வன பகவானுக்கே உரியன என்று ச்ருதிகள்‌ கூறுகின்றன. 

ஒரு சங்கை: பகவான்‌ ஸ்வதந்த்ரன்‌; இவனது செயல்களைப்‌ பற்றி எவரும்‌ கேட்பற்தற்கில்லை. 
இவன்‌ ஜீவாத்மாவை இங்குத்‌ திருப்பி ௮னுப்புவானா? 

விளக்கம்‌: பகவான்‌ இவ்வாறு அனுப்பமாட்டான்‌ என்‌பதே சித்தாந்தம்‌, வேதங்கள்‌ வெளியிடுவது: 
யாவகையான குணங்களும்‌ வாய்ந்த பகவான்‌, “நான்‌ ஒரு சேதனனையாவது பெறமாட்டேனா?'' என்ற ஆவலுடன்‌ 
அவ்வப்போது உலகைப்‌ படைக்கிறான்‌. தன்னிடம்‌ பக்தி வாய்ந்தவர்களது அஜ்ஞானத்தைப்‌ போக்கித்‌ 
தன்னை அனுபவிப்பதாகிற ப்ரஹ்மானந்தத்தை அளிக்‌கிறான்‌, தன்னை விட்டுப்‌ பிரியாமல்‌ செய்து இன்புறுகிறான்‌. 

கீதையிலேயும்‌ பசுவான்‌ இதையே வெளியிடுகிறான்‌. 
மேலும்‌ “ந ௪ பரமபுருஷ: ஸத்யஸங்கல்ப:அத்யர்த்த ப்ரியம்‌ ஜ்ஞானிநம்‌ லப்த்வா,சுதர்சிதாவர்த்த யிஷ்பதி”
*பரம புருஷனும்‌ ஸத்ய ஸங்கல்பனுமாகிய பகவான்‌ தனக்கு மிகவும்‌ ப்ரியனான ஒரு ஞானியைப்‌ பெற்று ஒருபோதும்‌ 
மீண்டும்‌ கீழே செல்ல விரும்பவே மாட்டான்‌ என்று சுவைபட வாக்கியம்‌ அமைந்துள்ளது. 
பஹுூநாம்‌ ஜந்ம நாமந்தே ஜ்ஞாநவாந்‌ மாம்ப்ரபத்யதே! வாஸ தேவஸ்‌ ஸர்வ மிதிஸ மஹாத்மா ஸுதுர்லப:!-- 
ஞானி மிகச்‌ சிறந்தவன்‌; இவன்‌ துர்லபன்‌ என்றும்‌ கருதுகிறான்‌. பல  பிறவிகளுக்குப்‌ பின்‌ அறிவு முதிரப்‌ பெற்ற ஞானி, 
வாஸ தேவனே எனக்கு உபாயம்‌, என்னால்‌ பெறப்‌ பெறுபவன்‌, எனக்கு தாரகம்‌, போஷகம்‌, போக்யம்‌*
என்று பகவானைச்‌ சரணமாகப்‌ பற்றுகிறான்‌, இவன்‌ விசாலமான நெஞ்சுடையவன்‌ என்றும்‌,
தனக்குக்‌ கிடைத்‌தற்‌ கரியவன்‌ என்றும்‌ கண்ணன்‌ கூறுகிறான்‌. 
ஆதலால்‌ பகவான்‌ எவ்வகையாலும்‌ முக்தனை மீண்டும்‌ உலகிற்கு அனுப்பமாட்டான்‌; இது திண்ணம்‌. 

முக்தி நிலையில்‌ முக்தன்‌ தனது இயல்பான ஞானம்‌, பாவமின்மை முதலான எட்டு குணங்கள்‌. 
யாதொரு குறைவுமின்‌றி முற்றிலும்‌ விளங்கி பகவானை அனுபவிக்‌கின்றான்‌. இவன்‌ பகவானிடமிருந்து பிரிவதில்லை 
பகவானின்‌ கைங்கர்யத்தில்‌ தோய்ந்துள்ள முக்தன்‌ தனது சங்கல்பத்தாலேயே தான்‌ விரும்பும்‌ பொருள்களை அடைகிறான்‌. 
இவன்‌ சில சமயங்களில்‌ சரீரத்தோடு கூடியவனாகவும்‌, சில சமயங்கள்‌ சரீர மில்லாதவனாகவும்‌ அனுபவிக்கிறான்‌. 
இவனுக்கு உலகைப்‌ படைப்பது போன்ற தொழில்கள்‌ இல; இவை பகவானுக்கே உள. 
பகவானோடு போகம்‌ அனுபலிப்பதாலேயே இவன்‌ சாம்யம்‌ பெறுகிறான்‌. 
இவன்‌ எப்போதாயினும்‌ எவ்‌ விதத்திலாயினும்‌ ஸம்ஸாரத்திற்கு மீள மாட்டான்‌. 

--------------

அருஞ்‌ சொற்கள்‌ - விளக்கம்‌ 

அங்கம்‌ பிரிவு, உறுப்பு. 
அங்கை அங்கங்கள்‌ உடையவன்‌ (உடையது. 
அசேதனம்‌-- அறிவில்லாப்‌ பொருள்‌, சடப்பொருள்‌. 
அணுகாரண வாதி -உலகுக்குக்‌ காரணம்‌ பரமாணுக்‌கள்‌ என்ற கொள்கை உடையவன்‌. 
அத்வைகம்‌--லீவனும்‌ பரமனும்‌ ஒன்று என்றகொள்்‌ தை. 
அத்வைதி-- இக்கொள்கை உடையவன்‌ . 
அநாச்ரமி.-ப்ரஹ்மசரீயம்‌ முதலிய நான்கு வாழ்க்கை நிலைகளில்‌ ஒன்றிலும்‌ பொருத்தா தவன்‌. 
அதுகரணம்‌- முக்தி நிலையில்‌ பகவானைப்‌ போல்‌ குணங்கள்‌ ஜீவன்‌ பெற்று விளங்குவது. 
அரற்தராத்மா, அந்தர்யாமி-சரீரத்துள்‌ (ஆத்மாவில்‌ உறைழ்துள்ள பகவான்‌. ்‌ 
அபேத வாக்கியம்‌- ஜீவனுக்கும்‌ பகவானுக்கும்‌ பேத மின்மையைக்‌ கூறும்‌ வேத வாக்கியம்‌. 
அமா. நவன்‌--ஆதிவா ஹிகருள்‌ ஒருவன்‌; வித்யுத்‌ புருஷன்‌? -பகவானிடம்‌ முக்தனை அழைத்துச்‌ செல்வோன்‌. 
அம்பரம்‌ --மேல்‌ ஆகாசம்‌: 
அம்ருதம்‌--அழிவில்லாமை,. 
அர்ச்சிஸ்‌ -- அக்நி; அர்ச்சிராதி மார்கத்தில்‌ மூதல்‌ தேவதை, 
அவ்யக்தம்‌ -- படைப்பின்போது பகவானிடமிருந்து தோன்றும்‌ முதல்‌ நிலை; பிரித்து, தெரியாத நிலை. 
அனுமானம்‌--இந்தீரியங்கள்‌ மூலம்‌ ஏற்கும்‌ அறிவு ஆதா. சமாக ஊளகித்தறிவது. 
அனுஷ்டானம்‌ - ஒழுக்கம்‌, பழக்கம்‌. 
௮ஸத்‌-இல்பொருள்‌; நிலை இல்லாதது. 
அஹண்‌.-பகல்‌. 
அக்ஷரம்‌-- அழிவில்லாதது. 
அக்ஷி-சுண்‌; அ௮க்ஷி புருஷன்‌ -- கண்ணினுள்‌ இருக்கும்‌. தேவதை. 
அஸ்தாலம்‌--பருமனில்லாமை (ஸ்தூலம்‌--பருமன்‌ ), 
ஆச்ரமம்‌--ஏற்கும்‌ வாழ்க்கை நிலை; ப்ரஹ்மசர்யம்‌, இல்‌லம்‌, துறவு, வானப்ரஸ்தம்‌. 

ஆத்மா. ஜீவன்‌. ஆத்ம குணங்கள்‌ ஆத்மாவுக்கு மேன்‌மையைக்‌ காட்டும்‌ குணங்கள்‌; சமம்‌ தமம்‌ போல்வன. 
ஆதிவாஹிகர்‌ -- முக்தனை அபர்ச்சிராதி மார்கத்தில்‌ அழைத்துச்‌ செல்வோர்‌. 
ஆதித்ய புருஷன்‌ சூரிய மண்டலத்திலுள்ள தேவதை. 
ஆனந்த மயன்‌-- கலப்பில்லாத ஆனந்தமே இயல்பாக உடையவன்‌; பகவான்‌. 
ஆனுமானிகம்‌--அனுமானத்தால்‌ தேறுவது, 

உத்க்ராந்தி--அத்மா உடலை விட்டு நீங்குவது. 
உத்ககம்‌--இசைக்கப்பெறும்‌ மந்த்ரம்‌, ப்ரணவம்‌. 
உத்தர காண்டம்‌- வேதத்தின்‌ இரண்டாம்‌ பகுதி. 
உபகரணம்‌--௨ தவிப்‌ பொருள்‌, துணைக்‌ கருவி, 
உபயலிங்கம்‌ -- இரட்டை அடையாளம்‌; பகவானது இயல்பு, குணங்கள்‌ இவை பற்றியது. 
உபாரக்யானம்‌--வேள்வியின்போது படிக்கும்‌ வரலாறு. 
உபாதானம்‌ -ஆக்கப்‌ பொருள்‌ (பானைக்கு மண்‌). 
உபாதான சாரணம்‌- - பகவானே உபாதானமாகிக்‌ காரணமாவது, 
உபாஸனை. பகவானை வழிபடும்‌ முறை; 
உபாஸகன்‌.- இவ்வாறு வழிபடுவோன்‌. 

கர்மா கா்மம்‌--செயல்‌; கா்ம--பலன்‌ செய்யும்‌ புண்ய பாவங்களின்‌ பயன்‌, 
கல்யாண குணங்கள்‌--பகவானுக்கே உரியனவான தனிப்‌ பட்ட சிறந்த பண்புகள்‌. 
காரணப்‌ பொருள்‌ பண்டம்‌ செய்வதற்குக்‌ காரணமான பொருள்‌ (பானைக்குக்‌ காரணப்‌ பொருள்‌ சுளிமண்‌ 
காரியப்‌ பொருள்‌--இவ்வகையால்‌ உருவாகும்‌ பொருள்‌ (குடம்‌ காரியப்‌ பொருள்‌). 
கார்ஹபத்யம்‌-- மூன்று வகை அக்நிகளுள்‌ வீட்டில்‌ வளர்ப்பது. 
கேவலார்‌ :- வாழ்க்கையிலிருந்து விடுபட்டுத்‌. தமது அத்மாவையே அனுபவிப்பவர்‌. 

சங்கல்பித்தல்‌-. எண்ணுவது: எண்ணுவதாலே செயல்‌ நிகழ்தல்‌. 
சங்கை--ஐயம்‌, சந்தேகம்‌. 
சரீரம்‌ -உடல்‌; சரீரி-உடலை இருப்பிடமாக உடையவன்‌. 

சாதனம்‌ - கருவி; முயற்சியால்‌ பெறுவது. 
சாரீரகம்‌- சரீரத்‌ கொடர்புடையது. 
சேதனன்‌-- அறிவுடையவன்‌, ஜீவன்‌, ஆத்மா. 

சேஷபூதன்‌-- தலைவனுக்கு அடிமையாக உரியவன்‌. 
சேஷி--தலைவன்‌ (சேஷபூதர்களுக்குர. 
சூன்யம்‌-- இல்லாமை? 
சூன்யவாதி யாவும்‌ சூன்யம்‌ என்ற கருத்துடையவன்‌. 

ச்ருதி-வேதம்‌. 

தடித்‌-- மின்னல்‌. 
தத்வம்‌--உண்மை? உள்ளதான நிலை. 
தஹரம்‌-- இதயத்தில்‌ உள்ளிடம்‌; தஹர வித்யை-இதயத்தில்‌ உறையும்‌ பகவானை வழிபடும்‌ வகை, 
தன்மாத்ரை-- பொறிகள்‌ ஒவ்வொன்றின்‌ மூலம்‌ 
தாமஸம்‌--தமோ குணத்‌ தொடர்புடையது, 
த்யுலோகம்‌-மேலுலகம்‌, ஆகாசம்‌: 

நித்யம்‌- நிலையாக வுள்ள. 
நிமித்த காரணம்‌ - -படைப்பைைச்‌ செய்பவன்‌. 
நியத்தா--ஆணையாளன்‌, நியமிப்பவன்‌, ஆள்பவன்‌. 
நிர்வஹித்தல்‌- பொறுப்புடன்‌ மேற்பார்வை யிடு தல்‌. 
நைமித்திகம்‌--சறப்பு வழிபாடு. 

பரமாணு---அணுவின்‌ பகுதி. 
பரிணாமம்‌ நிலையில்‌ மாறுபாடு. 
பரிமாணம்‌- அளவு. 
பஷ பாதம்‌-- ஓரம்‌, ஒருபக்கத்தையே ஆதரித்தல்‌. 
பாதம்‌--கால்‌ பங்கு 
பாஷ்ய- விரிவுரை, 
பாஷ்யகாரர்‌--ராமா நுஜர்‌. 
புருஷார்த்தம்‌ -பெற விரும்பும்‌ பொருள்‌. 

தம்‌ படைப்பில்‌ உண்டானது; நீர்‌, நெருப்பு, வாயு போல, 

பூத ஸுஷ்மம்‌--பதத்தின்‌ நுண்ணிய நிலை 
பூத யோநி-பூதங்களுக்குக்‌ காரணம்‌; பூத யோநி. 
அக்ஷரம்‌ -பூதங்களுக்குக்‌ காரணமான பரம்பொருள்‌ (அழிவில்லாத பகவான்‌]. 

பூமா-- பெருமை வாய்ந்தது. 

பேதம்‌--மாறுபாடு; 
பேத வாதி-ஜீவனும்‌ பகவானும்‌ : வேறு என்று கருதுவோன்‌; 
பேத வாக்கியம்‌.- இவ்வா றான பேதத்தைக்‌ காட்டும்‌ வேக வாக்கியம்‌, 

போகம்‌--இன்ப அனுபவம்‌ 
போக்தா--அனுபவிப்‌. பவன்‌. 

ப்ரக்ருதி -(மூல ப்ரக்ருதி)--படைப்பிற்கு மூல காரணமாக இகுப்பது; 
பராக்ருதம்‌-ப்ரக்ருதியில்‌ தொடா்‌ புடையது. 
ப்ரகாரம்‌--தானே ஆகும்‌ நிலை; 
ப்ரகாரி இவ்வாறு ப்ரகாரமாகுபவன்‌.  

ப்ரதிபிம்பம்‌ கண்ணாடியில்‌ (தண்ணிரில்‌ தோன்றுக, நிழல்‌. வு ர 
ப்ரமாணம்‌ சான்று. 
ப்ரமாதா- சான்றால்‌ அ௮.றிபவன்‌. 
ப்ரமிதன்‌-- கட்டைவிரல்‌ அளவுடையவன்‌. 
யப்ரமேயம்‌--சான்றால்‌ அறியப்படுவது. 
ப்ரளயம்‌--உலகங்கள்‌ யாவும்‌ பகவானிடம்‌ ஒடுங்கும்‌ நிலை, 
ப்ரஸ்மம்‌--தெய்வம்‌, பகவான்‌; 
ப்ரஹ்ம ஞானி-பக வானை நன்கறிந்தவன்‌; 
ப்ரஹ்ம காரணவாதி-- உல௫ற்குக்‌ காரணம்‌ பகவானே என்‌ கொள்கை யுடையவன்‌. 
ப்ரஹ்ம வித்யை-- பகவானை வழிபடும்‌ வகை. 
ப்ரஸித்தி--பரவிய புகழ்‌. 
ப்ராணன்‌ உயிர்‌; முக்கியமான வாயு மற்றவை அபா நன்‌, வ்யாதநன்‌, உதாறன்‌, ஸமா நண்‌. 
வ்ராப்தி- பெறுதல்‌? ப்ரஹ்ம ப்ராப்தி பகவானைப்‌ பெறுவது. 

முக்தன்‌- உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றவன்‌; 
மூக்தி-.. இவன்‌ பெற்ற விடுதலை. 

யக்ஞம்‌--யாகம்‌, வேள்வி. 
யோகம்‌--ஒன்‌ றியிருத்தல்‌;' யோகி--இவ்வா நிருப்பவன்‌. 
லயம்‌--ஓன்றுதல்‌. -ராஜஸம்‌ ரஜோ குணத்தின்‌ தன்மை. 

ரூபம்‌-- வடிவம்‌, உருவம்‌. 
விகாரம்‌ - வேறுபாடு. 
விதா நிஷ்டர்‌--வித்யையில்‌ ஊன்‌றி  நிற்பவர்‌, 
விக்யுத்‌--மின்னல்‌; விதியுத்‌ புருஷன்‌ -அமாநவன்‌ 
அிலகஷிணம்‌- தனிப்பட்ட மேன்மை. 

விஜ்ஞானம்‌--ஏறந்த அறிவு. மெய்யறிவு: 
விஜ்ஞான மயள்‌--அறிவே வடிவாக இருப்பவன்‌ (பகவான்‌). 
வைத்யுதன்‌--மின்னல்‌ வடிவமான அமான வன்‌. 
வைச்வாநரன்‌--அக்நி மயமான தேவதை? வைச்வாதர 
வித்யை-- இந்த தேவதையை வழிபடும்‌ வகை, 
வ்யக்தம்‌- தெளிவாக விளங்குகிற. 
வ்யஷ்டி ஸ்ருஷ்டி--பலபல வகையாகப்‌ படைத்தல்‌. 
ஸஞ்‌௫தம்‌-- திரண்டு ஒன்று சேர்ந்த. 
ஸத்‌-- உண்மைப்‌ பொருள்‌. 
ஸத்வம்‌- முக்குணங்களுள்‌ ஒன்று. 
ஸம்வத்ஸரம்‌--அர்ச்சிராதி மார்கத்தில்‌ ஒரு நிலை, ஆண்டு என்ற பொருளுடையது. 
ஸுஷும்நா--ஒரு நாடியின்‌ பெயா்‌; தலையின்‌ உச்சி வரையில்‌ செல்லும்‌ நாடி. 
ஸுக்ஷ்மம்‌ - நுண்ணியது. 
ஸ்வரூபம்‌ --இயல்பு. 
க்ஷ்ணம்‌ நொடிப்‌ போது. 
க்ணிகம்‌--நொடிப்‌ போதுன்ளது. 
ஜகச்சரீரன்‌--உலகு தனது சரீரமாக வுடையவள்‌, பக வான்‌. 
ஐ.டம்‌--அறிவில்லாதது. 
ஐடரம்‌--வயிறு. 
ஜாடராக்தி--வயிற்றிலுள்ள அக்நி. 
“ஜீவன்‌--ஆத்மா. 

ஸ்ரீ: ஸ்ரீம்தே ராமாநுஜாய நம:

—————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வடுக நம்பி அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜ திவாகர அஷ்டோத்திர சதநாம வளி — ஸ்ரீ யதிராஜ மங்களம் ஸ்லோகம் —

January 28, 2023

ஸ்ரீ ராமானுஜ திவாகர அஷ்டோத்திர சத நாம வளி –

ஓம் ஸ்ரீ ராமானுஜாய நம

ஓம் புஷ்கராஷயா நம

ஓம் யதீந்திராயா நம

ஓம் கருணாராயா நம

ஓம் காந்திமத்யாத்மஜாயா நம

ஓம் ஸ்ரீ மதே நம

ஓம் லீலா மானுஷ விக்ரஹயா நம

ஓம் சர்வ ஸாஸ்த்ரார்த்த தத்வஜ்ஞயா நம

ஓம் சர்வஜ்ஞயா நம

ஓம் சஜ் ஜன ப்ரியா நம

ஓம் நாராயண க்ருபா பாத்ராயா நம

ஓம் ஸ்ரீ பூத புர நாயக நம

ஓம் அநகாய நம

ஓம் பக்த மந்தாராயா நம

ஓம் கேசவ ஆநந்த வர்த்தனாய நம

ஓம் காஞ்சி பூர்ண ப்ரிய ஸஹாயா நம

ஓம் ப்ரணரார்த்தி விநாசனாய நம

ஓம் புண்ய சங்கீர்த்தனாய நம

ஓம் புண்யாய நம

ஓம் ப்ரஹ்ம ராஷச மோசகாய நம

ஓம் யாதவ பாதிதா பார்த்த வ்ருஷச் சேத குடாரகாய நம

ஓம் அமோகாய நம

ஓம் லஷ்மண முனயே நம

ஓம் சாரதா சோக நாசனாய நம

ஓம் நிரந்தரம் அஜ்ஞான நிர்மோசன விசஷணாயே நம

ஓம் வேதாந்த த்வய சாரஜ்ஞாய   நம

ஓம் வரதாம்பு ப்ரதாயகாய நம

ஓம் பராபிப்ராய தத்வஜ்ஞாய   நம

ஓம் யாமுந அங்குலி   மோசகாய நம

ஓம் தேவராஜா க்ருபா லப்த ஷட் வாக்யார்த்த மஹோ ததயே நம

ஓம் பூர்ணார்ய லப்த  சந்மந்த்ராய நம

ஓம் சௌரி பாதாப்ஜ ஷட் பதாய நம

ஓம் த்ரிதண்ட தாரினே நம

ஓம் ப்ரஹ்மஜ்ஞாய நம

ஓம் ப்ரஹ்ம ஜ்ஞான பராயணாய நம

ஓம் ரங்கேச கைங்கர்ய ரதாய நம

ஓம் விபூதி த்வ்ய நாயகாய நம

ஓம் கோஷ்டீ பூர்ண க்ருபா லப்த மந்த்ர ராஜ ப்ரகாசகாய நம

ஓம் வர ரங்க அநுகம்பாத்த  த்ரவிடாம் நாய பாரகாய நம

ஓம் மாலாதரார்ய ஸூஜ்ஞாத த்ராவிட ஆம்நாயா தத்வதீயே நம

ஓம் சதுஸ் சப்ததி சிஷ்டாப்யாய நம

ஓம் பஞ்சாசார்யா பதாச்ரயாய நம

ஓம் பிரபீத விஷ தீர்த்தாம்பசே நம

ஓம் ப்ரகடீ க்ருத வைபவாய நம

ஓம் பிரணதார்த்தி ஹராசார்யா தத்த பிஷைக போஜனாயா நம

ஓம் பவீத்ரா க்ருத கூரேசாய நம

ஓம் பாகி நேயத்ரி தண்டகாய நம

ஓம் கூரேச தாசரத்யாதி சரமார்த்த ப்ரகாஸகாய நம

ஓம் ரங்கேச வேங்கடேசாதி ப்ரகடீ க்ருத வைபவாய நம

ஓம் தேவ ராஜ அர்ச்சந ஆராதாய நம

ஓம் மூக முக்தி ப்ரதாயகாய நம

ஓம் யஜ்ஞமூர்த்தி ப்ரதிஷ்டாத்ரே நம

ஓம் மந் நாதாய நம

ஓம் தரணீ தராய நம

ஓம் வரதாசார்ய சத் பக்தாய நம

ஓம் யஜ்ஞே சார்த்தி  விநாசகாய நம

ஓம் அனந்தாபீஷ்ட பலதாய நம

ஓம் விடலேந்திர ப்ரபூஜீதாய நம

ஓம் ஸ்ரீ சைல பூர்ண கருணா லப்த ராமாயண அர்த்தகாய நம

ஓம் பிரபத்தி தர்மக ஏக ரதாயா நம

ஓம் கோவிந்தாய பிரியாநுஜாய நம

ஓம் வ்யாச ஸூத்ரார்த்த தத்வஜ்ஞாய நம

ஓம் போதாயன மதாநுகாய நம

ஓம் ஸ்ரீ பாஷ்யாதி மஹாக்ரந்த காரகாய நம

ஓம் கலி நாசனாய நம

ஓம் அத்வைத மத விச்சேத்ரே நம

ஓம் விசிஷ்டாத்வைத பாரகாய நம

ஓம் குரங்க நகரீ பூர்ண மந்திர ரத்நோபதேசகாய நம

ஓம் விநா சிதாகில மதாய நம

ஓம் சேஷீ க்ருத ரமாபதயே நம

ஓம் புத்ரீ க்ருத சடாராதினே நம

ஓம் சடஜித் த்ருண மோசகாய நம

ஓம் பாஷா தத்த ஹயக்ரீவாய நம

ஓம் பாஷ்யகாராய நம

ஓம் மகாயசஸே நம

ஓம் பவித்ரீ கருட பூ பாகாய நம

ஓம் கூர்ம நாத ப்ரகாசகாய நம

ஓம் ஸ்ரீ வேங்கடாசலாதீச சங்க சக்ர  ப்ரதாயகாய நம

ஓம் ஸ்ரீ வெங்கடேச ச்வசுராய நம

ஓம் ஸ்ரீ ராம சக தேசிகாய நம

ஓம் க்ருபாமாத்ர ப்ரசன்னார்யாய நம

ஓம் கோபிகா மோஷ தாயகாய நம

ஓம் சமீசீ நார்ய சச் சிஷ்ய சத் க்ருதாய நம

ஓம் வைஷ்ணவ ப்ரியாய நம

ஓம் க்ருமி கண்ட  ந்ருப த்வம்சீனே நம

ஓம் சர்வ மந்திர மஹோததயே நம

ஓம் அங்கீ க்ருதாந்திர பூர்ணார்யாய நம

ஓம் சால க்ராம ப்ரதிஷ்டிதாய நம

ஓம் ஸ்ரீ பக்த க்ராம பூர்ணேசாய நம

ஓம் விஷ்ணு வர்த்தன ரஷகாய நம

ஓம் பௌத்த த்வாந்த சஹாஸ்ராம்சவே நம

ஓம் சேஷ ரூப ப்ரதர்சகாய நம

ஓம் நகரீ க்ருத வேதாத்ரினே நம

ஓம் டில்லீச்வர சமர்ச்சித்தாய நம

ஓம் நாராயண ப்ரடிஷ்டாத்ரே நம

ஓம் சம்பத் புத்ர விமோசகாய நம

ஓம் சம்பத் குமார ஜனகாய நம

ஓம் சாது லோக சிகாமணயே நம

ஓம் ஸூ ப்ரதிஷ்டித கோவிந்த ராஜாய நம

ஓம் பூர்ண மநோரதாய நம

ஓம் கோதாக்ரஜாய நம

ஓம் திக் விஜேத்ரே நம

ஓம் கோதா பீஷ்ட ப்ரபூரகாய நம

ஓம் சர்வ சம்சய விச்சேத்ரே நம

ஓம் விஷ்ணு லோக ப்ரதாயகாய நம

ஓம் அவ்யாஹத மஹத்வர்தம்மே நம

ஓம் யதிராஜாய நம

ஓம் ஜகத்குரவே நம

ஏவம் ராமானுஜர்யஸ்ய நாம் நாமஷ்டோத்தரம் சதம்
யா படத் ச்ருணுயாத் வாபி சர்வான் காமான் அவாப்நுயாத்
யதாந்த்ர பூர்ணேந  மஹாத்ம நேதம் ஸ்தோத்ரம் க்ருதம் சர்வஜநாவநாய
தஜ் ஜீவ பூதம் புவி வைஷ்ணவா நாம் பபூவ ராமானுஜ மாநசானாம்-

—————————————————————————————————————————————–

ஸ்ரீ யதிராஜ மங்களம் -ஸ்லோகம் —

ஸ்ரீ பராங்குச பாதாப்ஜ ஸூரபீக்ரு மௌலயே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன நாதாய யதிராஜாய மங்களம் –1-

நாத பன்மாஷ ராமார்ய பாத பங்கஜ சேவிநே
சேவ்யாய சர்வ யமி நாம் யதிராஜாய மங்களம் –2

பூர்ணார்ய பூர்ண கருணா பாத்ராயாமித தேஜஸே
மாலாதர ப்ரியா யாஸ்து யதிராஜாய மங்களம் –3-

சம்சேவ்ய யாமு நாசார்யமே கலவ்யோசம் யஹம் குரோ
அன்யன்னேதி பதே நித்யம் யதிராஜாய மங்களம் –4

ஸ்ரீ காஞ்சீ பூர்ண மிச்ரோக்த ரஹச்யார்த்தவிதே சதா
தேவராஜா ப்ரியா யாஸ்து யதிராஜாய மங்களம் -5

ஸ்ரீ மத் கோஷ்டீபுரீ பூர்ண திவ்யாஜ்ஞாம் குர்வதே முதா
ச்லோகார்த்தம் குர்வதே தஸ்மை யதிராஜாய மங்களம் –6

கூரேச குருகா நாத தாசரத்யாதி தேக்கா
யச்சிஷ்யா பாந்தி தே தஸ்மை யதிராஜாய மங்களம் -7

சரமச்லோக தத்வார்த்தம் ஞ்யாத்வார்யாஜ்ஞாம் விலங்க்யச
தத்தே தம் ஸ்வ கீயோப்யோ யதிராஜாய மங்களம் -8

ஸ்ரீ சைல  பூர்ணக்ருபயா ஸ்ரீ ராமாயண மர்த்ததா
பக்த்யா யேன ஸ்ருதம் தஸ்மை யதிராஜாய மங்களம் –9

சங்கராதி குத்ருஷ்டீ  நாம் பாஹ்யா நாம் நித நாய்ச
ஸ்ரீ பாஷ்யம் குர்வதே தஸ்மை யதிராஜாய மங்களம் -10-

குர்வந்துப நிஷத் பாஷ்யம் ஜகத் ரஷாம் கரோதிய
தயா பரதந்த்ராய பாஷ்யகராய மங்களம் -11

த்ரமிடோப நிஷத்வ்யாக்யாம் வதேதி மத நுஜ்ஞயா
சாசதே குருகேசம்தம் பாஷ்யகராய மங்களம் –12

கத்வாது சாரதா பீடம் வ்ருத்திம் போதைய நச்யச
அவலோக்யா கதா யாஸ்து பாஷ்யகராய மங்களம் -13

பரமாணும்ருஷாவாதி வாதி சம்ஹார காரிணே
தஸ்மை பகவதே ஸ்ரீ மத் பாஷ்யகராய மங்களம் –14

ஸ்ரீ மத் குரங்க பூர்ணாய ஸ்ரீ பாஷ்யம் வததேஸ்வயம்
பித்ரே சம்பத்  தஸ்யாபி பாஷ்யகராய மங்களம் -15

தத்வா வ்ருஷகிரி சாஸ்ய சங்க சக்ர ரமாபதே
பரமப்ரீதி யுக்தாய பாஷ்யகராய மங்களம் –16

ஸ்ந்யாசம் குருதே காஞ்ச்யாம் அநந்த சரஸீ தடே
வரதே விசத பாராய பாஷ்யகாராய மங்களம் -17-

ஸ்ரீ மத் மகா பூத புரே ஸ்ரீ மத் கேசவ யஜ்வன
காந்திமத்யாம் ப்ர ஸூ தாயா யதிராஜாய மங்களம் -18

சேஷதிவா சைன்யநாதோவா ஸ்ரீபதிர் வேதி சாத்விகை
விதர்க்யாய மகா ப்ராஜ்ஞை எதிராஜாயா மங்களம் –19

ப்ரக்ருஷ்ட குண பூர்ணாய ப்ராப்யாய ஸ்வாங்க்ரி சேவிதாம்
ப்ரபன்ன சார்த்தவாஹாய யதிராஜாய மங்களம் -20-

வேதாத்மக  ப்ரமாணே  சத்விகைச்ச ப்ரமாத்ருபி
ப்ரமேயண சஹ ஸ்ரீ மான் வர்த்ததாம் யதிசேகர–21

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வடுக நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்யம் சாரம் —

January 27, 2023

ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகங்கள்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பாராசார்ய வச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்–

—————

ஸ்ரீ பாஷ்யம் அறிந்து கொண்ட பின்பே மற்ற பகவத் விஷயம் அறிந்து எடுத்து சொல்லணும்
ஸ்ரீ பாஷ்ய காரரின் ஆறு கட்டளைகளில் முதலில் இத்தையே அருளிச் செய்கிறார்
பாஷ்யத்தோன் ஈடேற பார்வை செய்தான் வாழியே-ஆள வந்தார் கடாஷித்து -இளைய ஆழ்வாரை ஆம் முதல்வன் ஆக்கி அருளினார்

ஸ்ரீ பிரணவ அர்த்தங்களை ப்ரத்யக்ஷமாக ஸ்ரீ ரெங்க விமானத்திலே தரிசித்து கொள்ளலாம்
ஸ்ரீ பாஷ்யம் மூலமும் அறியலாமே-ஜீவாத்மாக்களுடைய -அநந்யார்ஹ சேஷத்வ -அநந்ய சரணத்வ -அநந்ய போக்யத்வ ரூப ஆகார த்ரயம்

தத்வ ஹித புருஷார்த்தங்களை சம்சய விபர்யயம் அற நிஷ்கரிஷித்து விளக்கக் கூடியது ஸ்ரீ பாஷ்யம் -நமக்கு ஜீவாது-

ஸ்ரீ வேத வியாசர் -ஆவேச அவதாரம் –அத்யாய சதுஷ்டயாத்மகமான சாரீரிக மீமாம்சக சாஸ்திரத்தில் முதல் இரண்டு அத்தியாயங்களில் பர ப்ரஹ்மத்தை
ஜகத் ஏக காரணமாயும் -சேதன அசேதன விலக்ஷணமாயும் சர்வ சேஷியாகவும் அறுதி இட்டார் -இதுவே பிராணவார்த நிரூபணம்
மூன்றாம் அத்தியாயத்தில் ப்ரஹ்மமே உபாயம் -என்று அறுதி இட்டார் -இதுவே நமஸ் சப்தார்த்த நிரூபணம் –
நான்காம் அத்தியாயத்தில் பர ப்ரஹ்மம் பிராப்யம் என்று அறுதி இட்டார் -இதுவே த்ருதீய பதார்த்த நிரூபணம்

காரணத்வமும் –அபாத்யத்வமும் -உபாயத்வமும் -உபேயத்வமும்-இ றே அத்யாய சதுஷ்ட்யார்த்தம் –

நான்கு அத்தியாயங்களையும் –விஷய த்விகம் அல்லது சித்த த்விகம் -என்றும் விஷயீ த்விகம் அல்லது ஸாத்ய த்விகம் என்றும் இரண்டு கூறாகப் பிரிப்பார்கள்
சித்த வஸ்துவைப் பற்றி பூர்வ த்விகமான முதல் இரண்டு அத்தியாயங்களும் விஷய த்விகம் அல்லது ஸாத்ய த்விகம் –
மூன்றாவது அத்தியாயத்தில் ப்ரதிபாதிதமான பக்தி ரூப ஞானமும் – நான்காவது அத்தியாயத்தில் ப்ரதிபாதிதமான ப்ரஹ்ம அனுபவ ரூப ஞானமும்
விஷயியாயும் சேதன யத்ன சாத்யமாயும் உள்ள படியால் விஷயீ த்விகம் அல்லது ஸாத்ய த்விகம் என்பர் –

விஷயம் –சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -ஆகிய ஐந்தும் உண்டே ஒவ் ஒரு அதிகரணங்களிலும்

அதிகரணம் -விசாரணை களம்
விஷயம் -சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -உண்டே -சித்தி அந்தம் -இறுதி முடிவு -பிரயோஜனம் ஐந்தும் –
தஹராதி கரணம் -உள்ளத்தே உறையும் மால் -விசாரம்
ஓட்டை மாடமே ப்ரஹ்ம புரமாகும் –

545 ஸூத்ரங்கள் -(சங்கரர் -555-ஸூத்ரங்கள் / மாதவர் -546- ஸூத்ரங்கள்)
நான்கு அத்தியாயங்கள் -சமந்வய–அவிரோத -சாதனா -பல அத்யாயங்கள் –
545 ஸூத்ரங்கள் –138 +149+182+76
156 அதிகரணங்கள்—–35+33+55+33

—————–

இந்த நான்கு அத்யாயங்களின்‌ சுருக்கம்‌; 
(1) பகவாளைப்‌ பற்றி அறிந்துகொள்ள வேத வாக்கியங்களே ப்ரமாணம்‌--சாரன்றாவன; 
(2) பகவானே உலகுக்குக்‌  கரரணம்‌ என்பதற்கு மாறான கருத்துக்கள்‌ ஏற்பதற்கில 
(3) பசுவானை ஆராதிப்பவன்‌ பக்தியினாலே மோக்ஷம்‌  பெறக்கூடும்‌; 
(4) இந்த பக்தியின்‌ பலன்‌ மோக்ஷத்தின்‌  பேரானந்த அனுபவம்‌.
----------------
முதல்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1: சேதன ௮சேதனங்களைக்‌ காட்டிலும்‌  பகவான்‌ மாறுபட்டவன்‌. இவன்‌ உலகுக்குக்‌ காரணம்‌, -தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவன்‌. 
பாதம்‌ 2: இவன்‌ உலகைக்‌ காரியமாக உடையவன்‌. 
பாதம்‌ 3: இவனே யாவர்க்கும்‌ யாவற்றிற்கும்‌ ஆத்மா. 
பாதம்‌ 4: இவனால்‌ படைக்கப்படாதன, இவனுக்குச்‌  சரீரமல்லாதன இல. 
இரண்டாம்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1: கபில ஸ்ம்ருதி போன்றவை ஆதரிக்கத்‌. தக்கனவல்ல,. 
பாதம்‌ & : பிற மதங்களின்‌ குறைபாடுகள்‌. 
பாதம்‌ 3: சேதன அசேதனங்கள்‌ யாவும்‌ பகவானின்‌ காரியம்‌, பகவானால்‌ நியமிக்கப்படுவன. 
பாதம்‌ 4: இந்த்ரியங்கள்‌ முதலியவற்றின்‌ செயல்‌ பற்றியது. 
மூன்றாம்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1 : ஜீவர்களின்‌ தோஷங்கள்‌. 
பாதம்‌ 2: பகவானின்‌ குணங்கள்‌. 
பாதம்‌ 3: குணங்களை உபாஸநம்‌ செய்யும்‌ வகை: 
பாதம்‌ 4: உபாஸனத்திற்கான கார்மாவைப்‌ பற்‌றி. 
நான்காம்‌ அத்யாயம்‌ 
பாதம்‌ 1  உபாஸந அநுஷ்டானம்‌. 
பாதம்‌ 2: அர்ச்சிராதி மார்கம்‌--தொடக்கம்‌. 
பாதம்‌ 3: அர்ச்சிராதி மார்கம்‌. 
பாதம்‌ 4: மோக்ஷ பலம்‌.
----------------

முதல் அத்யாயம் -1-சமன்வய அத்யாயம் –35–அதிகரணங்கள் –138 ஸூத்ரங்கள்

முதல் பாதம் -அயோயே வ்யவச்சேத பாதம் -அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம் -11–அதிகரணங்கள் –32 ஸூத்ரங்கள்
இரண்டாம் பாதம்-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்- -6–அதிகரணங்கள் –33 ஸூத்ரங்கள்
மூன்றாம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-10 -அதிகரணங்கள் –44 ஸூத்ரங்கள்
நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் -33–அதிகரணங்கள் –149 ஸூத்ரங்கள்

முதல் பாதம் ஸ்ம்ருதி பாதம் –10-அதிகரணங்கள் –36 ஸூத்ரங்கள்
இரண்டாம் பாதம் தர்க்க பாதம் –8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்
மூன்றாம் பாதம் – வியத் பாதம் –7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்-
நான்காம் பாதம் -பிராண பாதம் –8-அதிகரணங்கள் –29-ஸூத்ரங்கள்-

மூன்றாம் அத்யாயம் – சாதன அத்யாயம் 55-அதிகரணங்கள் –182-ஸூத்ரங்கள்-

முதல் பாதம் – வைராக்ய பாதம் –6-அதிகரணங்கள் –27-ஸூத்ரங்கள்-
இரண்டாம் பாதம் – உபய லிங்க பாதம் –8-அதிகரணங்கள் –40-ஸூத்ரங்கள்-
மூன்றாம் பாதம் – குண உப சம்ஹார பாதம் –26-அதிகரணங்கள் –64-ஸூத்ரங்கள்-
நான்காம் பாதம் – அங்க பாதம் –15-அதிகரணங்கள் –51-ஸூத்ரங்கள்-

நான்காம் அத்யாயம் – பல அத்யாயம் -33-அதிகரணங்கள் –76-ஸூத்ரங்கள்-

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் – 11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் – –11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–
மூன்றாம் பாதம் -கதி பாதம் -— 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்
நான்காம் பாதம் முக்தி பாதம் –6 அதிகரணங்கள் 22-ஸூத்ரங்கள்

—————

16 பாதங்கள்
1-ஜீவ மிக அஸ்பஷ்ட மாயும்
2-ஜீவ அஸ்பஷ்ட மாயும்
3-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
4-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
5-ஸாங்க்யாதி ஸ்ம்ருதி மூலமான தோஷ பரிஹாரம் காட்டுவது
6-ஸாங்க்யாதி பக்ஷங்கள் கண்டனம்
7-ஆகாசாதி த்ரவ்யங்களுக்கு ஸ்வரூப பரிணாம ரூபமான கார்யத்வம் கூறுவது
ஆத்மாக்களுக்கு ஸ்வ பாவ அந்யதா பாவ ரூப கார்யத்வம் கூறுவது
8-ஜீவ உபகரணமான இந்திரியாதிகளின் உத்பத்தி க்ரமம் கூறப்படுவது
9-வைராக்ய நிமித்தமாக புருஷனுக்கு ஏற்படும் தோஷங்கள்
10-ப்ராப்யத்தில் ஆசை தோன்ற ப்ரஹ்மத்துக்கு நிர்த்தோஷமும் கல்யாணைக தானத்வமும்
11-பகவானிடம் செய்யும் பக்தியின் பிரகாரங்கள்
12–பக்திக்கு வர்ணாஸ்ரம தர்மங்களை அங்கங்களாக விதித்தல்
13-உபாஸனா ஸ்வரூபமும் அநுஷ்டான க்ரமமும் விளக்கப்படுத்தல் -வித்யா மகிமையும் கூறுதல்
14-ஜீவன் உடலை விட்டுப் புறப்படுதல் -உத் க்ரமணம்
15-ஜீவனின் மோக்ஷ கதி சிந்தனம்
16-பிராப்தி -பலம் -மோக்ஷம் –

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வ நிஷ்டா –ஸ்லோகத்தால் ஸ்ரீ தேசிகன் 16 குணங்களுடன்
இப்பாதங்கள் விளக்குவதைக் காட்டி அருளுகிறார்

ஸ்ரஷ்டா-தேஹி -ஸ்வ நிஷ்டா -நிரவதி மஹிமா
அபாஸ்த பாத ஸ்ரீ தாப்தா காத்மா தேகேந்திரியாதேஹே உசித ஞானான க்ருத
சம்ஸ்ரவதவ் தந்த்ர வாஹி நிர்தோஷத்வாதி ரம்யோ பஹு பஜன பதம் ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய
பாபசித் ப்ரஹ்ம நாடி கதிக்ருத் ஆதி வாஹன் சாம்யதச்ச அத்ர வேத்ய

முதல் அத்யாயம் –
1-ஸ்ரஷ்டா–முதல் அத்யாயம் -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் இவனால்
2-தேஹி -இரண்டாம் பாதம் –சரீரீ இவன் -சேதன அசேதனங்கள் அனைத்தும் சரீரம்
3-ஸ்வ நிஷ்டா – மூன்றாம் பாதம் –ஆதாரம் நியமனம் சேஷி -சமஸ்தத்துக்கும் -தனக்கு தானே –
4-நிரவதி மஹிமா –நான்காம் பாதம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
இரண்டாம் அத்யாயம் –
5-அபாஸ்த பாத –முதல் பாதம் –சாங்க்ய யோக சாருவாக வைசேஷிக புத்த ஜைன பாசுபத -புற சமய வாதங்களால் பாதிக்கப் படாதவன்
6-ஸ்ரீ தாப்தா -இரண்டாம் பாதம் -சரண் அடைந்தாரை ரஷிப்பவன் -பாஞ்சராத்ர ஆகம சித்தன்
7-காத்மா –மூன்றாம் பாதம் -பிரகிருதி ஜீவர்களுக்கு அந்தராத்மாவாய் இருந்து சத்தை அளிப்பவன்
8-தேகேந்திரியாதேஹே உசித ஞானான க்ருத –நான்காம் பாதம் -சரீரம் கர்ம ஞான இந்திரியங்களை -கர்ம அனுகுணமாக அளிப்பவன்
மூன்றாம் அத்யாயம்
9-சம்ஸ்ரவதவ் தந்த்ர வாஹி -முதல் பாதம் –ஸமஸ்த -பிரவ்ருத்தி நிவ்ருத்தி கள் இவன் அதீனம்
10-நிர்தோஷத்வாதி ரம்யோ -இரண்டாம் பாதம் -உபய லிங்கம் -அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணி கதானன்
11-பஹு பஜன பதம் –மூன்றாம் பதம் – மோக்ஷப்ரதன்
12-ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –கர்மம் அடியாக பிரசாதம் -தர்ம அர்த்த காம மோக்ஷ புருஷார்த்த பல பிரதன்
நான்காம் அத்யாயம்
13-பாப சித்-முதல் பாதம் -கர்ம பல பாபா புண்ய பிரதிபந்தங்களை போக்குபவன்
14-ப்ரஹ்ம நாடி கதிக்ருத் -இரண்டாம் பாதம் –கர்மங்கள் தொலைந்த பின்பு -ப்ரஹ்ம நாடி வழியாக ஜீவனை புறப்படும் படி பண்ணுபவன்
15-ஆதி வாஹன் -மூன்றாம் பாதம் -வழித் துணை ஆப்தன்
16-சாம்யதச்ச அத்ர வேத்ய–நான்காம் பாதம் சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்யம் -போக சாம்யம் -அளிப்பவன்

சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்யாயத்திற்கும் 4 பாதங்கள்.
அதனால் மொத்தம் 16 பாதங்கள். ஒவ்வொரு பாதம் தன்னிலும் ஒரு குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது.
எனவே * ஶ்ருதிஸிரஸி விதீப்தனான * எம்பெருமானுக்கு மொத்தம் 16 திருக்குணங்கள்
சாரீரக மீமாம்ஸையினால் ப்ரதிபாதிக்கப்பட்டுள்ளன.
அதனை அடைவே ஸ்வாமி தேஶிகன் * ஸாராவளியில் * ஶ்லோகமாக அருளிச் செய்தார்.

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1),
தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3);
நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1);
ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) –
ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) –
தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)-
மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.

இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது.
ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று 16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

—————————–

முதல் இரண்டு அத்தியாயங்கள் பரம தத்வம்
அடுத்து பரம ஹிதம்
இறுதியில் பரம புருஷார்த்தம்

1-சமன்வய அத்தியாயம் -அந்வயம் –பொருத்தம் -சமன்வயம் -நல்ல பொருத்தம் –
1-1-அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–அயோக வியச்சேத பாதம் -ஸ்ரஷ்டத்வம் கல்யாண குணம்
1-2-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்-அந்நிய யோக விவச்சேத பாதம்–தேஹி அந்தர்யாமி நியாந்தா -சர்வ சரீரீ
1-3-ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்–ஸ்வ இஷ்டத்வம்
1-4-ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–நிரவதிக மஹிமை – உபாதான நிமித்த ஸஹ காரி -த்ரிவித காரணமும் இவனே –

2-அவிரோத அத்யாயம்
2-1-ஸ்ம்ருதி பாதம் –கபில ஸ்ம்ருதி நிரசனம்- அபஸ்த பாதத்வம் –யாராலும் மறுக்க ஒண்ணாத காரணத்வம்
2-2- தர்க்க பாதம் -சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன பாசுபத மதங்கள் நிரஸனம் -பாஞ்சராத்ர மத ஸ்தாபனம் -ஸ்ரீ தப்தத்வம் -ஆஸ்ரித பக்ஷ பாதி இவனே
2-3-வ்யுத் பாதம் –கத்மதீ உசித ஞான க்ருத்வம் -தர்ம பூத ஞானம் சுருங்கி விரிந்து -கர்மாதீனம் -ஸ்வரூப அந்யத் பாவ
2-4-இந்த்ரிய உசித ஞான க்ருத்வம் –தகுந்த புலன்கள் அருளும் தன்மை

3-சாதன அத்யாயம்
3-1-வைராக்ய பாதம் -ஸம்ஸ்ருதவ் தந்த்ர வாஹித்வம் –சம்சார தோஷ தர்சனம் -ஜாக்ருத ஸூஷூப்தி ஸ்வப்ன மூர்ச்சா அவஸ்தா சதுஷ்ட்யம்
3-2-உபய லிங்க பாதம் -நிர்தோஷத்வாதி ரம்யத்வம்
3-3- குண உப ஸம்ஹார பாதம் —32- ப்ரஹ்ம வித்யைகளைக் காட்டி அருளி –நாநா சப்தாதி பேதாத் —பஹு பஜன பாதம்
3-4-அங்க பாதம் -ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –பக்தி யோக அங்க விளக்கம் -வர்ணாஸ்ரம கர்ம பல ப்ரதத்வம்

4-பல அத்யாயம் –
4-1-ஆவ்ருத்தி பாதம் -பாபாச்சித்வம் –தைல தாராவத் -அவிச்சின்ன த்யான பல பிரதன்
4-2-உக்ராந்தி பாதம் -ப்ரஹ்ம நாடி கதி க்ருத்வம் —
4-3- கதி பாதம் -அர்ச்சிராதி மார்க்கம் –
4-4-பல பாதம் –அஷ்ட குண ஸாம்யம் -ஸாம்யா பத்தி பிரதன்

——-

545–ஸூத்ரங்கள் –156–அதிகரணங்கள்
முதல் அத்யாயம் முதல் பாதம் –11-அதிகரணங்கள்
முதல் நான்கும் ஒவ்வொன்றும் ஒரே ஸூத்ரங்கள் கொண்டவை
1-1-1-ஜிஜ்ஜாஸூ அதிகரணம்

1-1-2-ஜன்மாத்ய அதிகரணம்

1-1-3-ஸாஸ்த்ர யோநித்வாத் அதிகரணம்

1-1-4-ஸமன்வய அதிகரணம்

1-1-5-ஈக்ஷய அதிகாரணம் –இதில் –8-ஸூத்ரங்கள்
பர ப்ரஹ்மமே சங்கல்பித்து -காரணம் -பிரகிருதி அல்ல
சாந்தோக்யம் -6 அத்யாயம் -ஸத் வித்யை -உத்கலர் அவர் பிள்ளை ஸ்வேதகேது சம்வாதம் –
பூர்வ பக்ஷி -சாங்க்யர் —அஸப்தம் அனுமானம் -பிரதானம் -பிரக்ருதியே காரணம் என்பர்
ஈஷதே ந அஸப்தம் -முதல் ஸூத்ரம்

1-1-6-ஆனந்த மய அதிகரணம் –இதில் –8-ஸூத்ரங்கள் –
பர ப்ரஹ்மமே காரணம் -ஜீவன் அல்ல –
தஸ்மாத் வா ஏதஸ்மாத் ஆத்மநா ஆகாஸா ஸம்பூதா –தைத்ரியம்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் –ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
தைத்ரியம் ஆனந்தவல்லி
ஆனந்த மய அப்யாசாத் –முதல் ஸூத்ரம் -மீண்டும் மீண்டும் நூறு நூறாக -இதுவே அப்யாசம்

1-1-7-அந்தர அதிகரணம் –2-ஸூத்ரங்கள் -சாந்தோக்யம் அடிப்படை -அகர்ம வஸ்ய ப்ரஹ்மம் –
உயர்ந்த ஜீவர்கள்– விச்வாமித்திராதிகளும் அல்ல
ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி –
அந்த தத் தர்ம உபதேசாத் –முதல் ஸூத்ரம்
அந்த -ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி ஐஸ் பரமாத்மாவே -ஜீவாத்மா அல்ல
தர்ம உபதேசாத் -புண்டரீகாக்ஷத்வம் -அபஹத பாபமத்வாதிகள் -இவனுக்கே பொருந்தும் என்பதால் –

1-1-8-ஆகாஸ அதிகரணம் -1 ஸூத்ரம் –
ஆகாஸா தல் லிங்காத் –
சாந்தோக்யம்-முதல் அத்யாயம் – ஆகாஸ என்றது ப்ரஹ்மத்தையே –
ஆ சமந்தாத் காஸதே ப்ரகாஸதே -இதி ஆகாஸா

1-1-9- பிராண அதிகரணம் –1-ஸூத்ரம் -இதிலும் சாந்தோக்யம் பிராணான் என்று
ப்ரஹ்மத்தையே ப்ராணன் கொடுத்ததால் குறிப்பிடுகிறது –
அத ஏவ பிராணா –கீழ் சொன்ன காரணத்தால் பிராண சப்தமும் பரமாத்மாவையே குறிக்கும்-

1-1-10-ஜ்யோதிர் அதிகரணம் –4–ஸூத்ரங்கள் –
முண்டக உபநிஷத் -சாந்தோக்யம் -புருஷ ஸூக்தம் படி ப்ரஹ்மமே
பிராணன் -ஜாடராக்னி -உள்ள ஜீவனைக் குறிக்கும் பூர்வ பக்ஷம்
இவற்றுக்கும் அந்தராத்மா அவனே -என்று சித்தாந்தம் –

1-1-11-இந்த்ர ப்ராண அதிகரணம் —4–ஸூத்ரங்கள் –
கௌசிக உபநிஷத் -இந்திரன் ப்ரதர்தனன் ஸம்வாதம் -தானே பிராணன் -தன்னையே உபாஸிக்க சொன்னான் –
காரணம் து த்யேய –அதர்வசிக உபநிஷத் வாக்யம் –
ப்ரஹதாரண்ய உபநிஷத் ப்ரஹ்மத்தின் சரீரமே அனைத்தும் -அத்தை அறிந்தே இந்திரன் வாக்கியம் –
அநந்தன் -அஜரன் -அம்ருதம் இவனே-

இத்துடன் முதல் பாதம் முடிந்தது
அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்கியங்கள் கொண்டு ப்ரஹ்மமே காரணம் – என்றதாயிற்று –

அதிகரண சாராவளியில் -காட்டி அருளிய கல்யாண குணங்கள்
1-அக்ருத -ஸ்ரீ வைகுண்டத்தில் நித்தியமாக உள்ளபடியால்
2-விஸ்வ ஹேது –
3-ஸாஸ்த்ரிக ஸ்தாபன்யாத்-வேதைக சமைதி கம்யன்
4-நிருபாதிக பரம ப்ரேம யோகாத்
5-ஸ்வ இச்சையா ஸர்வ ஹேது
6-ஸூப குண விபவ அநந்த நிஸ் ஸீம ஹர்ஷாதி
7-ஸூத்த அகர்ம உத்த திவ்ய க்ருதி -அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்டன்
8-அநு பாதிக ஆகாசானாதி -த்ரிவித -தேச கால வஸ்து -அபரிச்சேத -பரஞ்சோதி இவனே –
9-ஸ பிராண அபிராண பேத வ்யுத் புதிர ஜகத்-ஸமஸ்த சித் அசித் ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஸம்ஹாரம் -அனைத்தும் இவனது அதீனமே
10-திவ்ய தீப்தி
11-பிராண இந்திராதி அந்தராத்மா இவனே –

சமன்வய அத்தியாயத்தில்
அயோக வியச்சேத பாதம் -முடிந்தது –

—————

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -உத்தர மீமாம்சை -சாரீரக மீமாம்சை -நான்கு அத்யாயம் -நான்கு பாதங்கள் ஒவ் ஒன்றிலும் -ஆக 16 அத்யாயங்கள் –
156 அதிகரணங்கள்–545-ஸூ த்தரங்கள் –

முதல் அத்யாயம் -1-சமன்வய அத்யாயம் –35–அதிகரணங்கள் –138 ஸூத்ரங்கள்

முதல் பாதம் -அயோயே வ்யவச்சேத பாதம் -அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம் -11–அதிகரணங்கள் –32 ஸூத்ரங்கள்
இரண்டாம் பாதம்-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்- -6–அதிகரணங்கள் –33 ஸூத்ரங்கள்
மூன்றாம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-10 -அதிகரணங்கள் –44 ஸூத்ரங்கள்
நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் -33–அதிகரணங்கள் –149 ஸூத்ரங்கள்

முதல் பாதம் ஸ்ம்ருதி பாதம் –10-அதிகரணங்கள் –36 ஸூத்ரங்கள்
இரண்டாம் பாதம் தர்க்க பாதம் –8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்
மூன்றாம் பாதம் – வியத் பாதம் –7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்-
நான்காம் பாதம் -பிராண பாதம் –8-அதிகரணங்கள் –29-ஸூத்ரங்கள்-

மூன்றாம் அத்யாயம் – சாதன அத்யாயம் 55-அதிகரணங்கள் –182-ஸூத்ரங்கள்-

முதல் பாதம் – வைராக்ய பாதம் –6-அதிகரணங்கள் –27-ஸூத்ரங்கள்-
இரண்டாம் பாதம் – உபய லிங்க பாதம் –8-அதிகரணங்கள் –40-ஸூத்ரங்கள்-
மூன்றாம் பாதம் – குண உப சம்ஹார பாதம் –26-அதிகரணங்கள் –64-ஸூத்ரங்கள்-
நான்காம் பாதம் – அங்க பாதம் –15-அதிகரணங்கள் –51-ஸூத்ரங்கள்-

நான்காம் அத்யாயம் – பல அத்யாயம் -33-அதிகரணங்கள் –76-ஸூத்ரங்கள்-

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் – 11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் – –11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–
மூன்றாம் பாதம் -கதி பாதம் -— 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்
நான்காம் பாதம் முக்தி பாதம் –6 அதிகரணங்கள் 22-ஸூத்ரங்கள்

————————————————————–

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-முதல் பாதம் -அயோக வ்யவச்சேத பாதம்-

அதிகரணங்கள் -11-
முதல் நான்கும் உபோத்காதம் -முன்னுரை
அடுத்த ஏழிலும் ஸ்ரீயப்பதியின் கல்யாண குணங்கள் அனுபவிக்கப் படுகின்றன
1-ஈஷத் அதிகரணத்தில் -ஸ்வ இச்சையால் சர்வத்துக்கும் காரணத்வமும்
2-ஆனந்தமய அதிகரணத்தில் சுபமான குண கணங்களுடன் எல்லையில்லா ஆனந்தம் உடைமையும்
3-அந்தராதித்ய அதிகரணத்தில் கர்ம சம்பந்தம் அற்ற ஸுத்தமான திவ்ய மங்கள விக்ரஹ யோகமும்
4-ஆகாஸ அதிகரணத்தில் எல்லையற்று நாற்புறங்களிலும் பிரகாசித்தலும்
5-ப்ராண அதிகரணத்தில் சேதன அசேதன சகல ஜகத்தையும் உயிர் வாழ்விக்கும் திறனையும்
6-ஜ்யோதிர் அதிகரணத்தில் திவ்யமாய் நிகரற்ற ஜ்யோதிஸ் ஸ்வரூபமும்
7-இந்த்ர ப்ராண அதிகரணத்தில் இந்த்ரன் பிராணன் முதலியவற்றுக்கு அந்தராத்மாவாய் விளங்குவதுமாகிய
கல்யாண குணங்கள் ஏழும் உடைய பரம புருஷன் முதல் பாதத்தில் விளக்கப்படுகிறான் –

———-

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்- இரண்டாம் பாதம் -ஆறு அதிகரணங்கள் —33 ஸூத்ரங்கள் –

1-ஸர்வத்ர பிரதீ ஸித்த அதிகரணத்தில் -தனக்கு அதீனமாக ஜகத் ஸ்தித்யாதிகளைக் கொண்டு
ஸர்வ பாவத்துடன் இருக்கும் கல்யாண குணம் அனுசந்தேயம்
2-அத்த அதிகரணத்தில் -உலகமுண்ட பெரு வாயன் என்னும் மங்கள குணம்
3-அந்தர் அதிகரணத்தில் -கண்களில் என்றும் நிலை பெற்று இருத்தல் என்ற திருக்குளம்
4-அந்தர்யாமி அதிகரணத்தில் சர்வத்தையும் சரீரமாகக் கொண்ட கல்யாண குணம்
5-அத்ருஸ்யத்வ அதிகரணத்தில் கல்பிதமான அக்னியாதி சரீரிகத்வ கல்யாண குணம்
6- வைச்வானர அதிகரணத்தில் ஸ்வர்க்காதி லோகங்களை அங்கமாகக் கொண்ட
வைச்வானர பதத்துக்கு விஷயமாகும் கல்யாண குணம்

———

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-மூன்றாம் பாதம் — 10 அதிகரணங்கள்–44 ஸூத்ரங்கள் –

1-த்யுப் வாத் யாயதனம் –விஸ்வமே பகவானுக்கு ஆத்மா
2-பூமா -எல்லையற்ற கருணை
3-அக்ஷர -நியமனமும் ஸர்வ ஆதாரத்வமும்
4-ஈஷதி கர்ம வ்யபதேசம் -முக்தர்களுக்கு போக்யமான ஸ்வ பாவம்
5-தஹர -தஹரமான தன்னை ஆதாரமாகக் கொண்ட அனைத்தையும் கொண்டமை -தஹர ஸ்வாதார ஸர்வத்வம்
6-ப்ரமித -ஹ்ருதயத்தில் பரிமிதனாய் இருந்து ஸர்வ நியாந்தாவாதல்
7-தேவதா -தேவதைகளால் உபாஸிக்கப் படுதல்
8-மத்வதி கரணம் -வஸூ வாதி தேவதைகளால் ஸ்வ சரீரக பரமாத்மா உபாஸிக்கப் படுத்தல்
9-அப ஸூத்ர –ஸூ த்ராதிகளால் உபாஸிக்கக் தகாத தன்மை
10-அர்த்தாந்தரத்வா திவ்ய பதேச -நாம ரூபாதி ஏக கர்த்ருத்வம்

———

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-
8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

1-அனு மாதிக அதிகரணத்தில் –சாங்க்யர் கூறும் ப்ரக்ரியா பிரகாரங்களும்
2-சமஸ அதிகரணத்தில் -அவர்கள் ஏற்கும் ஸ்ருஷ்டி க்ரமமும்
3- சாங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணத்தில் -அந்த எண்ணிக்கை அமைப்பும்
4-காரணத்வ அதிகரணத்தில் -அவர்கள் கூறும் அவ்யாக்ருதத்துடன் ஐக்யமும்
5- ஜகத் வாசித்வ அதிகரணத்தில் -தன் பாபம் பற்றிய வசனமும்
6-வாக்ய அந்வய அதிகரணத்தில் -கர்ம பலமான தோஷ சம்பந்தமும்
7-ப்ரக்ருத் யதிகரணத்தில்-உபாதான நிமித்த பேதமும்
8-சர்வ வியாக்யான அதிகரணத்தில் -ப்ரஹ்மாதிகளுக்குக் காரணத்வமும் –

————

இரண்டாம் அத்யாயம் –முதல் பாதம் -இந்த ஸ்ம்ருதி பாதத்தில் பத்து அதிகரணங்களில் பத்து பொருள்கள் கூறப்படுகின்றன

1-ஸ்ம்ருதி அதிகரணத்தில் -சாங்க்ய ஸ்ம்ருதி விரோதம் வருமே என்பது பூர்வ பஷியின் யுக்தி
2-யோக அதிகரணத்தில் –பிரஜாபதியின் மதத்தில் விரோதம் வரும் என்பது யுக்தி
3-ந விலக்ஷணத்வ அதிகரணத்தில் காரண பூத ப்ரஹ்மத்துக்கும் கார்யமான ஜகத்துடன் வேறுபாடு
4-சிஷ்டா பரிக்ரஹத்தில் பரமாணு காரணத்வத்துக்குப் பாதகம்
5-போக்த்ரா பத் யதிகரணத்தில் தேஹ சம்பந்தத்தால் சுக துக்க அனுபவம் தவிர்க்க முடியாது என்பது யுக்தி
6-ஆரம்பணாதி கரணத்தில் -காரியமும் உபாதான காரணமும் பின்னமாய் இருக்க வேண்டும் என்கிற யுக்தி
7-இதர வ்யபதேச அதிகரணத்தில் -தனக்கு ஹிதத்தைச் செய்யாமை அஹிதத்தைச் செய்வதால்
காரணத்வம் தகாது என யுக்தி
8-உப ஸம்ஹாரா தர்சன அதிகரணத்தில் -ஸஹ காரிகள் இல்லாமையால் காரணத்வம் தகாது எனும் யுக்தி
9-க்ருத்ஸன ப்ரஸக்தி அதிகரணத்தில் -ப்ரஹ்மம் பூர்ணமாய்க் காரணமா -ஏக தேசம் காரணமா என்கிற விகற்பம்
இவ்வாறு பத்து பூர்வ பக்ஷ யுக்திகளையும் முன் காட்டிய யுக்திகளால் ஸூத்ர காரர் நிராகரிக்கிறார் என்று திரு உள்ளம்
10-ந ப்ரயோஜனத்வ அதிகரணத்தில் -பயன் இன்மையால் ஸ்ருஷ்டியாதிகள் பொருந்தாது என்று ஆஷேபம்

———-

இரண்டாம் அத்யாயம் –இரண்டாம் பாதம்-

முதல் அதிகரணம் –ரசனா னுப பத்தி -காபிலர்கள் செய்த விரோதம்
இரண்டாம் அதிகரணம்-மஹத் தீர்க்கம் –காணாதர்கள் செய்த விரோதம்
மூன்றாம் அதிகரணம் -சமுதாயம் -வ்ருத்த வைபாஷிகன் செய்த விரோதங்கள்
நான்காம் அதிகரணம் –உபலப்தி -யோகாசாரர் செய்த விரோதங்கள்
ஐந்தாம் அதிகாரணம் -ஸர்வதா அனுபபத்தி -மாத்யமிக சூன்ய வாதி ப்ரசக்தி
ஆறாம் அதிகரணம் —ஏகஸ்மின்ன ஸம்பவம் -ஜைனர்கள் செய்த விரோதங்கள்
ஏழாம் அதிகரணம் -பசுபதி -பசுபதி மதஸ்தர் செய்த விரோதங்கள்
இவற்றைக் கண்டித்த பின்
எட்டாம் அதிகரணம் –உத்பத்ய சம்பவம் -பாஞ்சராத்ரம் -பாஞ்ச ராத்ரமே வேதாந்த மார்க அநுசாரி என்று ஸ்தாபித்தார்

——-

இரண்டாம் அத்யாயம் –மூன்றாம் பாதம் -ஏழு அதிகரணங்களின் சாரம்

1-வ்யத் அதி கரணத்தில் ஆகாசத்துக்கு க்லுப்தியும் உத்பத்தியும் பேசப்பட்டன
2-தேஜ அதிகரணத்தில் க்ரமமாகத் தோன்றும் மஹத்தாதி காரியங்களுக்கு
முந்தைய தத்வ விசிஷ்டனான ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே உத்பத்தி என்றதாயிற்று
3-ஆத்ம அதிகரணத்தில் நித்யனான ஜீவனுக்கு உத்பத்தி லயங்களாவன
தேஹச் சேர்க்கையும் தேஹ வியோகத்தையும் அடிப்படையாகக் கொண்டமையும் பேசப்பட்டன
4-ஞாத் அதிகரணத்தில் ஜீவனுக்கு ஞான குணாகாதவமும் ஞாத்ருத்வமும் பேசப்பட்டன
5-கர்த்ரு அதிகரணத்தில் ஜீவனுக்கு கர்த்ருத்வம் பேசப்பட்டது
6-பராயத் அதிகரணத்தில் ஜீவனுக்கு கர்த்ருத்வம் பகவத் அதீனம் என்று பேசப்பட்டன
7-அம்ச அதிகரணத்தில் -குணங்களும் தேஹங்களும் -குணம் ஜீவனுக்கு அம்சமாய் இருப்பது போல்
ப்ரஹ்மத்துக்கும் சித் அசித் ரூபமான ஜகத்தும் அம்சமானது என்று

———

இரண்டாம் அத்யாயம் –நாலாம் பாதம் -எட்டு அதிகரணங்களால் கூறப்பட்ட கருத்துக்கள்

1-பிராண அதிகரணத்தில் இந்திரியங்களின் உத்பத்தியும்
2-ஸப்த கத் யதிகரணத்தில் அவற்றுக்கு பதினோரு எண்ணிக்கையும்
3-பிராணஅணவ-அதிகரணத்தில் -அவற்றின் பரிமாணமும்
4-வாயு க்ரியா அதிகரணத்தில் பிராண வாயு ஸ்வரூபமும்
5-அணுச்ச அதிகரணத்தில் -பிராணனின் ஸூஷ்மத்வமும்
6-ஜ்யோதிராத் அதிகரணம் –அக்னி தேவதைகளின் வாகாதி அதிஷ்டானத்தில் பகவத் பாரதந்தர்யத்வமும்
7-த இந்த்ரிய அதிகரணம் -ப்ராணனுக்கு அதீந்த்ரத்வமும்
8-ஸம்ஞா மூர்த்தி க்லுப்த் யதி கரணம் -தன் நாபியில் தோன்றிய சதுர்முக சரீரகனாய் ஆத்யனாய்
பஞ்சீ கரண கர்த்தாவான பரம புருஷனிடம் சித் அசித் என்னும் வ்யஷ்டி நாம ரூப உத்பத்தியும்––

———-

மூன்றாம் அத்யாயம் — முதல் பாதம் —ஆறு அதிகரணங்களின் பொருள்களை

1-ததந்திர பிரதிபத்த்ய அதிகரணத்தில் தேஹத்தை விடும் ஜீவன் பூத ஸூஷ்மங்களுடன் போகிறான் என்றும்
2-க்ருதாத்ய யாதிகரணத்தில் -ஸ்வர்க்கத்தை அனுபவித்த ஜீவன் போன வழியிலும் வேறு வழியிலும் திரும்புகிறான் என்றும்
3-அநிஷ்டாதிகார்யாதிகரணத்தில் நரகம் அடைந்தவர்களுக்கு சந்த்ர பிராப்தி இல்லை என்றும்
4-தத் ஸ்வா பாவ்யாபத்த்யதிகரணத்தில் ஆகாசாதிகளுடன் ஸாம்யமே தவிர ஆகாசாதிகளாக ஜென்மம் இல்லை என்றும்
5-நாதிசிராதி கரணத்தில் -ஆகாசாதிகளில் இருந்து சீக்கிரம் இறங்குகிறான் என்றும்
6-அந்யா திஷ்டிதாதி கரணத்தில் -பர சரீர பூதமான வ்ரீஹ் யாதிகளிலே ஸம்பந்தம் மாத்ரமே

—–

மூன்றாம் அத்யாயம் — இரண்டாம் பாதம் —

1-சந்த்யாதி கரணத்தில் -ஸர்வேஸ்வரனே ஸ்வப்ன பதார்த்தங்களை படைக்கிறான் என்றும்
2-தத்பாவாதிகரணத்தில் -அவனே ஸூஷ்ப்தி தசையில் ஆதாரம் என்றும்
3-கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணத்தில் -உறங்கி விழிப்பவனும் ஒருவனே என்றும்
4-முக்தாதிகரணத்தில் -மூர்ச்சை அடைந்தவனை எழுப்புவான் என்றும் சில சமயங்களில் மரணத்திற்கும் காரணம் என்றும்
5-உபய லிங்க அதிகரணத்தில் -நிர்தோஷன் -கல்யாண குணகரன் என்றும்
6-அஹி குண்டலாதிகரணத்தில் -தனி சரீரமான அசித்துக்களை அம்சமாகக் கொண்டவன் என்றும்
7-பராதிகரணத்தில் எல்லாவற்றையும் விட இவனே சிறந்தவன் என்றும்
8-பலாதிகரணத்தில் -ஸர்வ கர்ம உபாசனங்களுக்கும் இவனே பல பிரதன் என்றும்

————

மூன்றாம் அத்யாயம் — மூன்றாம் பாதம் -28-அதிகரண சாரங்கள்

1-சர்வ வேதாந்த ப்ரத்யய அதிகரணம்–வித்யை ஐக்யம்
2-அந்யதாத்வ அதிகரணம்–இரு விதப்பிரிவு
3-சர்வாபேத அதிகரணம்–பிராண வித்யை ஐக்யம்
4-ஆனந்தாத் யதிகரணம் –சர்வ வித்யைகளிலும் ஸ்வரூபம் போலே ஆனந்தாதிகள் ஸ்வரூப நிரூபக தர்மத்திற்கு தொடர்ச்சி
5-கார்யாக்யா நாதிகரணம்-ப்ராணனுக்கு வஸ்திரம் என்று அப்பை ஜலத்தை -த்ருஷ்டி செய்தல்
6-சமா நாதிகரணம்-சாண்டில்ய வித்யை ஐக்யம்
7-சம்பந்தாதி கரணம்-அஹஸ் -அஹம் ஸப்தங்கள் பிரித்து நிலை பெறுதல்
8-சம்ப்ரு யதிகரணம்-சம்ப்ருத்யாதி குணங்களுக்கு ஸ்தான நியமம்
9-புருஷ வித்யாதிகரணம்–புருஷ வித்யா பேதம்
10-வேதாத்யதிகரணம்–சன்னோ மித்ர மந்திரங்களுக்கு பரஸ்பர சம்பந்தம்
11-ஹான்நயதி கரணம்-புண்ய பாப ஹான உபாதானங்களுக்குப் பரஸ்பர சம்பந்தம்
12-சாம்பராய திகரணம்-ஹான உபாதானங்களுக்கு ப்ராப்த காலங்கள்
13-அநிய மாதிகரணம்-அர்ச்சிராதி கதிகள் எல்லா வித்யைகட்க்கும் பொதுவாதல்
14-அஷரத்யதி கரணம்-எல்லா வித்யைகளிலும் அஸ்தூலத்வாதி குணச் சேர்க்கை
15-அந்தரத்வாதிகரணம்-பல சிஷ்யர்கள் கேட்ட அர்த்தங்களுக்குப் பரஸ்பரம் வ்யதிஹாரம்
16-காமாத் யதிகரணம் -தஹர வித்யைகளுக்கு ஐக்யம்
17-தந் நிர்த்தாரணா நியமாதி கரணம்-உத்கீத உபாசனத்தின் குண பல விதி
18-பிரதாணாதிகரணம்-அபஹத பாப்மத்வாதி உபாசனங்களில் எங்கும் குணியின் ஆவ்ருத்தி
19-லிங்க பூயஸ்த்வ அதிகரணம்- நிகில பர வித்யைகளிலும் அறியத் தக்கது
20-பூர்வ விகல்பாதி கரணம்-மனச் சித் ப்ரப்ருதிகளான அக்னிகள் வித்யாமயங்களாயும் வித்யாமய க்ரத்வ அனு ப்ரவேசிகளாயும் உள்ளமை –
21-சரீரே பாவதி கரணம்-சுத்தனான ஷேத்ரஞ்ஞன் சிந்த நீயன்
22-அங்காவபத்தா திகரணம்-க்ரிய அங்க பூத ஸர்வ உத் கீதங்களிலும் உபாசன விதி
23-பூமஜ்யாயஸ் த்வாதி கரணம்-வைச்வானர வித்யையில் ஸமஸ்த உபாஸனமே கார்யம்
24-சப்தாதி பேதாதி கரணம்-வித்யைகளின் நாநாத்வம் -பேதம்
25-விகல்பாதிகரணம்-மோஷார்த்த வித்யைகளில் விகல்பம்
26-யதாச்ரய பாவ அதிகரணம்–கீழ்ச் சொன்ன உத்கீத உபாசனத்திற்கு சொன்ன அநீயதையை யுக்திகளால் உறுதிப்படுத்தி ஸ்தாபித்தல்

————–

மூன்றாம் அத்யாயம் — நான்காம் பாதம் —15-அதிகரண சாரங்கள்

1-புருஷார்த்தாதி கரணம் -வித்யை கர்மாக்களை அங்கமாகக் கொண்டது –
2-ஸ்துதி மாத்ராதிகரணம் –உத்கீதையில் அப்ராப்தையான ரசதமத்வாதி த்ருஷ்டி விதிக்கப் படுகிறது –
3- பாரிப்லவாதி கரணம் – வித்யா விதி யுடன் கூடிய ஆக்யான சம்சனங்கள் வித்யா ஸித்த்யர்த்தங்கள் –
4- அக்நீந்த நாத்யாதி கரணம் -அந்தந்த ஆஸ்ரயம தியத தர்மங்களால் ஊர்த்தவ ரேதஸ்ஸுகளுக்கு சங்கா வித்யை உண்டு
5-சர்வ அபேஷாதி கரணம் –க்ருஹஸ்தனின் வித்யையும் யஜ்ஞ தானாதிகளை அபேக்ஷிப்பது –
6- சம தமாத்யாதிகரணம் –க்ருஹஸ்தனுக்கும் சாந்த்யாதிகள் தேவை
7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம் –ஆபத்து இல்லாக் காலத்தில் வித்வானுக்கும் அன்ன சுத்தியாலே யோக ஸித்தி
8- விஹி தத்வாதி கரணம் —ஒரு கர்மமே வித்யார்த்தமாகவும் ஆஸ்ரம அர்த்தமாகவும் ஆகலாம்
9-விதுராதிகரணம்-விதுரனுக்கும் வித்யா சம்பந்தம் உண்டு
10-தத் பூதாதிகரணம் —ப்ரஹ்மசர்யம் இழந்த நைஷ் டிகாதிகளுக்கு வித்யையில் அதிகாரம் இல்லை
11-ஸ்வாம்யதிகரணம் –
12-சஹ கார்யந்தர வித்யதிகரணம் -க்ரத்வங்கங்களில் ரஸ தமத்வாதி தர்சனம் ருத்விக் கர்த்ருகம்
13-அநாவிஷ்கராதி கரணம்-த்யான ஸித்த்யர்த்தமாக ஸூபாஸ்ரய தாரணா ரூபமான மௌனம் விதிக்கப் படுகிறது
14-ஐஹிகாதிகரணம் —காரணமான ஸூஹ்ருத துஷ்ஹ் ருதங்கள் பிரபல கர்மாந்தரங்களால்
தடைப்படா விடில் இம்மையில் ப்ரஹ்ம வித்யை உண்டாகிறது
15-முக்தி பலாதிகரணம் –அப்ரஹ்ம வித்யை போலவே ஸூஹ்ருதங்களும் பாகவத அபசாராதிகளால்
பிரதிபந்தகம் ஏற்பட்டால் ப்ரஹ்ம வித்யை உண்டாக்க மாட்டாது

———-

நான்காம் அத்யாயம் — முதல் பாதம் —11 அதிகரணங்களின் சாரம்

அதிகரணம் -1-ஆவ்ருத்யதிகரணம் -ப்ரஹ்ம வித்ய உபாசனம் அடிக்கடி செய்ய வேண்டும்
அதிகரணம் -2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—அஹம் ப்ரஹ்மாஸ்மி என்று உபாஸிக்க வேண்டும் –
அதிகரணம் -3- ப்ரதீகாதி கரணம் –ப்ரதீகங்களான மனம் முதலியவற்றில் அஹம் மன -என்று உபாஸிக்கக் கூடாது –
அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் -உத்கீதத்தில் ஆதித்யாதி த்ருஷ்டி செய்ய வேண்டும்
அதிகரணம் -5-ஆஸி நாதி கரணம் —ஆசனத்தில் வசதியாய் அமர்ந்தே உபாஸிக்க வேண்டும்
அதிகரணம் -6-ஆப்ரயாணாதி கரணம் -வித்யா யோனியான சரீரம் உள்ளதனையும் தினமும் இடைவிடாது சிந்திக்க வேண்டும்
அதிகரணம் -7-ததிகமாதிகரணம் -வித்யையின் மஹிமையால் பூர்வ உத்தர ஆகங்களுக்கு அஸ்லேஷ விநாசம் என்றும்
அதிகரணம் -8-இதராதிகரணம்–ஸ்வர்க்காதி சாதனமான புண்யத்துக்கும் அஸ்லேஷ விநாசங்கள் கூடும்
அதிகரணம் -9-அநாரப்த கார்யாதிகரணம்–பிராரப்த கர்மாக்களுக்கு போகத்தாலேயே நாசம்
அதிகரணம் -10-அக்னிஹோதராத்ய திகரணம்-வர்ணாஸ்ரம தர்மங்கள் அவஸ்யம் அநுஷ்டேத்யத்வம்
அதிகரணம் -11-இதர ஷபணாதி கரணம் –ப்ராரப்த்த கர்மத்தின் முடிவில் மோக்ஷம்

————-

நான்காம் அத்யாயம் — இரண்டாம் பாதம் —11 அதிகரணங்களின் சாரம்

அதிகரணம் -1-வாகாதி கரணம்–வாக்கு முதலிய பாஹ்ய இந்திரியங்களுக்கு மனஸ்ஸில் சம்பத்தியும்
அதிகரணம் -2- மநோதிகரணம் – இந்த்ரிய விஸிஷ்ட மனஸ்ஸுக்கு பிராண வாயுவில் ஸம்பத்தியும்
அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் -ப்ராணன்களுக்கு தேஹாத் யக்ஷனான ஜீவனிடத்தில் ஸம்பத்தியும்
அதிகரணம் -4-பூதாதிகரணம் -ஜீவனுக்குப் பூத ஸூஷ்மத்தில் ஸம்பத்தியும்
அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -வித்வானுக்கும் மற்றோருக்கும் – அவித்வானுக்கும் உத் க்ராந்தி சமம் என்னும் ஸம்பத்தியும்
அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் –பூத ஸூஷ் மம் தழுவிய ஜீவனுக்குப் பரமாத்மாவிடம் களைப்பாற ஸம்பத்தியும்
அதிகரணம் -7-அவிபாகாதி கரணம்–பரமாத்மாவிடம் ஸம்பத்தி என்றது ஸம்பந்தமே என்றும்
அதிகரணம் -8-ததோகோதி கரணம் –வித்வானுக்கு ப்ரஹ்ம நாடீ வழியே உத் க்ராந்தியும்
அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் -அர்ச்சிராதி கமனம் ஸூர்ய கிரணங்களை பற்றி என்றும்
அதிகரணம் -10-நிசாதிகரணம் -இரவில் ம்ருதனான வித்வானுக்கும் முக்தி உண்டு என்றும்
அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் –தஷிணாயணத்தில் ம்ருதனான முமுஷுக்கும் முக்தி உண்டு என்றும்

———-

நான்காம் அத்யாயம் — மூன்றாம் பாதம் —5 அதிகரணங்களின் சாரம்

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -ப்ரஹ்ம வித்யா பிரகரணங்களில் கூறிய அர்ச்சிராதி மார்க்கம் ஒன்றே என்றும்
அதிகரணம் -2-வாய்வதிகரணம்-அந்தரிக்ஷத்தில் அடங்கிய வாயுவே தேவ லோகம் என்று வழங்கப்படுகிறது என்றும்
அதிகரணம் -3–வருணாதி கரணம் –வித்யுத்துக்கு மேலே வருண இந்த்ர ப்ரஜாபதிகளுக்கு நிவேசம் என்றும்
அதிகரணம் -4-ஆதி வாஹாதிகரணம்-அர்ச்சிஸ் முதல் வித்யுத் வரை உள்ளவர் பரமபதத்தைச் சேர்ப்பிப்பவர் என்றும்
அதிகரணம் -5-கார்யாதிகரணம் -ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்களுக்கே அர்ச்சிராதி கதி என்றும்

——–

நான்காம் அத்யாயம் — நான்காம் பாதம் —ஆறு அதிகரணங்களின் சாரம் –

அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -அபஹத பாபமத்வாதி த்ருஷ்டி விஸிஷ்டமாக
ஸ்வரூப ஆவிர்பாவம் என்றும்
அதிகரணம் -2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -ஸ்வ பிரகாரியாய் பரம புருஷ பர்யந்தமாக
அஹம் ப்ரஹ்மாஸ்மி -என்கிற அனுபவம் உண்டு என்றும்
அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்—ஞான ஸ்வரூபமாக சுருதியில் கூறப்பட்ட முக்தனுக்கு
அபஹத பாபமத்வாதி குணங்களாகிற பிரகாரங்களுடன் ஸ்வ அனுபவமும்
அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் –தன் சங்கல்பத்தாலே ஞாத்யாதிகளை அடைதலும்
அதிகரணம் -5-அபாவாதி கரணம் –முக்தனுக்கும் தேஹ பரிக்ரஹத்தில் நியமம் இன்மையும்
அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -ப்ரஹ்ம சாம்ய ப்ரபத்தியில்
ஜகத் காரணத்வாதிகளான ப்ரஹ்ம லக்ஷண வர்ஜனமும்

—————

முதல் அத்யாயம் -1-சமன்வய அத்யாயம்

முதல் பாதம் -அயோயே வ்யவச்சேத பாதம் -அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம் -11–அதிகரணங்கள் –32 ஸூத்ரங்கள்

1-1-ஜிஞ்ஞாசாதி அதிகரணம் -ப்ரஹ்மத்தைப் பற்றிய ஆய்வு சரியானதே –
1-1-1-அததோ ப்ரஹ்ம ஜ்ஞ்ஞாச -ப்ரஹ்மத்தை அறிவதில் ஆராய்வதில் உள்ள விருப்பம்-
அத அத -என்று கர்ம விசாரத்துக்கு பின்பே -கர்ம விசாரத்தாலே -என்றபடி

1-2- ஜந்மாத்யாதி அதிகரணம் -படைத்து காத்து அழிப்பது ப்ரஹ்மமே-
1-1-2- ஜந்மாதி அஸ்ய யத–ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் திறமை எவனிடம் உள்ளவோ அவனே ப்ரஹ்மம் –

1-3-சாஸ்திர யோநித்வாதிகரணம் -வேதங்களே மூலமாக ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்
1-1-3- சாஸ்திர யோநித்வாத் -வேதங்களே பிரமாணங்கள்-அநு மானம் பிரத்யஷம் கொண்டு அறியலாகாது –

1-4-சமந்வயாதிகரணம் –ப்ரஹ்மத்துக்கு வேதங்களே பிரமாணங்கள் –
1-1-4-தத் து சமன்வயாத் –

1-5-ஈஷத் யதிகரணம் –சத் எனபது ஸ்ரீ மன் நாராயணனே
1-1-5- ஈஷதேர் நா சப்தம் -ஈஷ் என்பதம் மூலம் ப்ரஹ்மமே காரணம் -பிரகிருதி இல்லை என்கிறது
1-1-6- கௌண சேத் ந ஆத்ம சப்தாத் -ஆத்மா ப்ரஹ்மத்தையே குறிக்கும் -சத் என்பதும் ப்ரஹ்மமே
1-1-7-தந் நிஷ்டஸ்ய மோஷ உபதேசயாத் -சத் என்பவன் தன்னை உபாசிக்குமவர்களுக்கு மோஷம் அளிப்பவனே அதனால் ப்ரஹ்மமே –
1-1-8-ஹேயத்வா வச நாத் ச -சத் என்பதை தாழ்வாகவும் தவறாகவும் சொல்ல வில்லை –
1-1-9-பிரதிஜ்ஞ்ஞா விரோதாத் -சத் -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்றோம் அதனால் அது பிரகிருதி இல்லை ப்ரஹ்மமே –
1-1-10 –ஸ்வாப்யயாத்–தூங்கும் பொழுது சத் உடன் கலக்கிறோம் சத் ப்ரஹ்மமே
1-1-11-கதி சாமான்யாத் -சத் எனபது ப்ரஹ்மமே பல உபநிஷத்துக்களும் இத்தையே சொல்லும் –
1-1-12- ஸ்ருதத்வாச்ச –

1-6-ஆனந்தமயாதிகரணம் -ஆனந்தமயமாக உள்ளது ப்ரஹ்மமே –
1-1-13- ஆனந்தமய அப்யாசாத் –
1-1-14-விகார சப்தாத் ந இதி சேத் ந ப்ராசுர்யாத் –
1-1-15-தத்தேது (ஹேது)-வ்யபதேசாத் ச –
1-1-16-மாந்த்ர வர்ணிக மேவ ச கீயதே
1-1-17-ந இதர அநுபபத்தே –
1-1-18-பேத வ்யபதேசாத் ச-
1-1-19-காமாத் ச ந அநுமாநாபேஷா –
1-1-20-அஸ்மின் அஸ்ய ச தத்யோகம் சாஸ்தி –

1-7-அந்தர் அதிகரணம் -ஸூரியனுக்கு உள்ளே உள்ளவனும் ப்ரஹ்மமே .
1-1-21-அந்த தத்தர்மோபதேசாத் -கண்கள் உள்ளும் சூரியன் உள்ளும் இருப்பவன் ப்ரஹ்மமே-
1-1-22- பேத வ்யபதேசாத் ச அந்ய –

1-8-ஆகாசாதி கரணம் -ஆகாயம் எனப்படுவதும் ப்ரஹ்மமே –
1-1-23-ஆகாஸ தல் லிங்காத் —

1-9-ப்ராணாதி கரணம்–பிராணம் எனப்படுவதும் ப்ரஹ்மமே
1-1-24-அத ஏவ பிராண –

1-10-ஜ்யோதிர் அதிகரணம் -ஜோதி என்பதும் ப்ரஹ்மமே –
1-2-25-ஜ்யோதி சரணாபிதா நாத் —
1-1-26-சந்தோ அபிதா நாத் ந இதி சேத் ந ததாசே தோர்ப்பண நிஹமாத் ததாஹி தர்சனம்
1-1-27-பூதாதி பாத வ்யபதேசா அபபத்தே ச ஏவம்
1-1-28-உபதேச பேதாத் ந இதி சேத் ந உபய அஸ்மின் அபி அவிரோதாத் –

1-11-இந்திர பிராணா அதிகரணம் -இந்த்ரன் பிராணன் எனபது ப்ரஹ்மமே –
1-1-29-ப்ராணா ததா அநுகமாத் –
1-1-30- ந வக்து ஆத்ம உபதேசாத் இதி சேத் அத்யாத்ம சம்பந்த பூமா ஹ்யஸ்மின்-
1-1-31-சாஸ்திர த்ருஷ்ட்யா து உபதேச வாமதேவவத் –
1-1-32-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத ந உபாசாத்ரை வித்யாத் ஆ ஸ்ரீ தத்வாத் இஹ தத் யோகாத் –

———————

இரண்டாம் பாதம்-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்- -6–அதிகரணங்கள் –33 ஸூத்ரங்கள்

1-2-1- சர்வத்ர பிரசித்த அதிகரணம்-ப்ரஹ்மமே அனைத்தும் எனபது பரம் பொருளே
1-2-1- சர்வத்ர பிரசித்த உபதேசாத்-
1-2-2-விவஷித குணோபபத்தே –குணங்கள் பொருந்த வேண்டும் என்றால் பரம பொருளைக் குறித்தே ஆக வேண்டும்
1-2-3-அநுபபத்தே து ந சாரீர –
1-2-4-கர்ம கர்த்ரு வ்யபதேசாத் ச –
1-2-5-சப்த விசேஷாத் –
1-2-6-ச்ம்ருதேச்ச-ஸ்ம்ருதிகளிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளதால் –
1-2-7-அர்ப்ப கௌகசஸ்வாத தத் வ்யபதேசாத் ஸ நேதி சேத ந நியாயத்வாத் ஏவம் வ்யோமவத் ஸ
1-2-8-சம்போக ப்ராப்திரிதி சேத ந வை சேஷயாத்–

2-2-அத்தா அதிகரணம் -உண்பவனாக கூறப்படுபவன் ப்ரஹ்மமே
1-2-9-அத்தா சராசர க்ரஹணாத்–அனைவரையும் உண்பவனாகக் கூறப்படுபவன் பரமாத்மாவே
1-2-10-ப்ரகரணாத் ஸ -இங்கு உள்ள பிரகரணத்தாலும் பரமாத்மாவே ஆவான் –
1-2-11-குஹாம் பிரவிஷ்டை ஆத்மா நௌ ஹி தத் தர்சநாத் —
1-2-12-விசேஷணாத் ச –

2-3-அந்த்ராதிகரணம் -கண்களில் உள்ளவன் ப்ரஹ்மமே –
1-2-13-அந்தர உபபத்தே –
1-2-14-ஸ்தா நாதி வ்யபதேசாத் ச –
1-2-15-ஸூ க விசிஷ்டாதிபா நாத் ஏவ ச –
1-12-16-அத ஏவ ச ச ப்ரஹ்ம —
1-2-17-ஸ்ருத உபநிஷத் காக கத்யபி தா நாத் –
1-2-18-அனவஸ்திதே அசம்பவாத் ச

2-4-அந்தர்யாமி யதிகரணம் -அந்தர் யாமியாகக் கூறப்படுபவன் ப்ரஹ்மமே –
1-2-19-அந்தர்யாமீ அதிதைவாதி லோகாதிஷூ தத் தர்ம வ்யபதேசாத்-
1-2-20-ந ச ஸ்மார்த்தம் அதத்தர்மாபி லாபாத் சாரீர ச
1-2-21-உபயே அபி ஹி பேதே ந ஏநம் அதீயதே

2-5-அத்ருத்யச்வாதி குணாதிகரணம் -அஷரம் எனப்படுபவனும் ப்ரஹ்மமே
1-2-22-அத்ருச்யத்வாதி குணக தர்மோக்த-
1-2-23-விசேஷண பேத வ்யபதேசாப்யாம் ச ந இதரௌ-
1-2-24-ரூப உபன்யா சாத் ச –

2-6-வைச்வா நராதிகரணம் -வைச்வா நரன் எனப்படுபவனும் பரம் பொருளே-
1-2-25-வைச் வா நர சாதாரண சப்த விசேஷாத்-
1-2-26-ஸ்மர்ய மாணம் அநு மாநம் ஸ்யாத் இதி –
1-2-27-சப்தாதிப்ய அந்த பிரதிஷ்டா நாத் ச ந இதி சேத ந ததா தட்ருஷ்த்யுபதேசாத் அசம்பவாத் புருஷம் அபி ஏ நம் அதீயதே –
1-2-28-அத ஏவ ந தேவதா பூதம் ச –
1-2-29-சாஷாத் அபி அவிரோதம் ஜைமினி –
1-2-30-அபி வ்யக்தே இதி ஆஸ்மத்ரய-
1-2-31- அநு ச்ம்ருதே பாதரி-
1-2-32-சம்பத்தே இதி ஜைமினி ததா ஹீ தர்சயதி –
1-2-33-ஆமநந்தி ச ஏவம் அஸ்மின் –

——————————-

மூன்றாம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-10 -அதிகரணங்கள் –44 ஸூத்ரங்கள்

1-3-1-த்யுத்வாத்யதிகரணம் -தேவலோகம் பூமி ஆகியவற்றின் இருப்பிடம் ப்ரஹ்மமே –
1-3-1-த்யுத்வாதி ஆயாதநம் ஸ்வ சப்தாத் –
1-3-2-முக்தோ உபஸ்ருப்ய வ்யபதேசாத் ச –
1-3-3- ந அநு மாநம் அதச் சப்தாத் பிராண ப்ருச் ச –
1-3-4-பேத வ்யபதேசாத் –
1-3-5- பிரகரணாத்–
1-3-6-ஸ்தித்யத நாப்யாம் ச –

1-3-2-பூமாதி கரணம் -பூமா எனப்படுவதும் ப்ரஹ்மமே
1-3-7-பூமா சம்ப்ரசாதாத் தத் உபதேசாத் –
1-3-8-தர்மோபபத்தே ச-

1-3-3-அஷர அதி கரணம் -அஷரம் எனபது ப்ரஹ்மமே –
1-3-9-அஷரம் அம்பராந்த த்ருதே-
1-3-10-சா ச பிரசாச நாத் –
1-3-11-அந்ய பாவ யாவ்ருத்தே ச –

3-4-ஈஷதி கர்மாதிகரணம் -கானப்படுபவன் ப்ரஹ்மமே
1-3-12-ஈஷதி கர்ம வ்யபதேசாத் ச –

3-5-தஹராதி கரணம் -தஹரா ஆகாயம் என்பதுவும் ப்ரஹ்மமே
1-3-13-தஹர உத்தரேப்ய-
1-3-14-கதி சப்தாப்யாம் ததா ஹி த்ருஷ்டம் லிங்கம் ச –
1-3-15-த்ருதேச்ச மஹிம் ந அஸ்ய அஸ்மின் உபலப்தே –
1-3-16-பிரசித்தே ச –
1-3-17-இதர பராமர்சாத் ச இதி சேத ந அசம்பவாத் –
1-3-18-உத்தராத் சேத் ஆவிர்ப்பூத ஸ்வரூப து –
1-3-19-அன்யார்த்த ச பராமர்ச –
1-3-20-அல்ப ஸ்ருதே இதி சேத் தத் உக்தம் –
1-3-21-அநு க்ருதே தஸ்ய ச –
1-3-22- அபி ஸ்மர்யதே-

1-3-6-ப்ரமிதாதி கரணம் -கட்டை விரல் அளவுள்ளவன் ப்ரஹ்மமே –
1-3-23-சப்தாத் ஏவ ப்ரமித–
1-3-24-ஹ்ருதி அபேஷயா து மனுஷ்யாதிகாரத்வாத்

1-3-7-தேவாதிகரணம் -தேவர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை உண்டு
1-3-25-தத் உபரி அபி பாதராயண சம்பவாத்-
1-3-26-விரோத கர்மணி இதி சேத் ந அநேக பிரதிபத்தே தர்சநாத்–
1-3-27-சப்தே இதி சேத் ந அத பிரபவாத் ப்ரத்யஷ அநுமா நாப்யாம்-
1-3-28-அத ஏவ ச நித்யத்வம் —
1-3-29-சாமான நாம ரூபாத்வாத் ச ஆவ்ருத்தௌ அபி அவிரோத தர்சநாத் ஸ்ம்ருதே ச —

1-3-8–மத்வதிகரணம் -தேவர்களுக்கு மதுவித்யை உண்டு
1-3-30-மத்வாதிஷூ அசம்பவாத் அநதிகாரம் ஜைமிநி-
1-3-31-ஜ்யோதிஷி பாவாத் ச –
1-3-32-பாவம் து பாதராயண அஸ்தி ஹி —

1-3-9-அப ஸூ த்ராதி கரணம் -ஸூ த்ரர்களுக்கு ப்ரஹ்ம விதியை இல்லை –
1-3-33-ஸூகஸ்ய தத நாதர ஸ்ரவணாத் ததா ஆத்ரவணாத் ஸூச்யதே ஹி –
1-3-34-ஷத்ரியத்வ கதே -ச
1-3-35-உத்தரத்ர சைத்ரரதேன லிங்காத் —
1-3-36-சம்ஸ்கார பராமர்சாத் தத பாவாபி லாபாத் ச –
1-3-37-தத் பாவ நிர்த்த்தாரேண ச ப்ரவ்ருத்தே —
1-3-38-ஸ்ரவணாத் யய நார்த்த பிரதிஷேதாத் —
1-3-39- ச்ம்ருதே ச-

1-3-6-ப்ரமிதாதி கரணம் சேஷம்
1-3-40-கம்ப நாத் –
1-3-41-ஜ்யோதிர் தர்சநாத் –

1-3-10-அர்த் தாந்தரத்வ அதி வ்யபதேச அதிகரணம்-ஆகாயம் எனபது ப்ரஹ்மமே-
1-3-42-ஆகாச அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் —
1-3-43-ஸூ ஷூப்த்யுத் க்ராந்த்யோ -பேதேந –
1-3-44-பத்யாதி சப்தேப்ய —

———————

நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்ய விசாரம்-8-அதிகரணங்கள் –29 ஸூத்ரங்கள்

1-4-1-ஆநுமாநிகாதி கரணம் -பிரகிருதி உலகின் காரணம் இல்லை
1-4-1-ஆநுமாநிகம் அபி ஏகேஷாம் இதி சேத் ந சரீர ரூபக விந்யஸ்த க்ருஹூதே தர்சயதி ச –
1-4-2-ஸூஷ்மம் து ததர்ஹத்வாத் –
1-4-3-தத் அதீனத்வாத் அர்த்தவத் –
1-4-4-ஜ்ஞேய த்வாவச நாத் ச
1-4-5-வததி இதி சேத் ந ப்ராஜ்ஞோ ஹ பிரகரணாத்
1-4-6-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபன்யாச ப்ரசன ச –
1-4-7-மஹத்வத் ச –

1-4-2-சமசாதிகரணம் -ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொண்டு உள்ளது பிரகிருதி
1-4-8-சமசவத் அவிசேஷாத்-
1-4-9-ஜ்யோதிர் உபக்ரமா து ததா ஹி அதீயதே ஏகே –
1-4-10-கல்பந உபதேசாத் ச மத்வாதி வத் அவிரோத –

1-4-3-சங்க்ய உப சங்க்ரஹாதி கரணம் -இந்த்ரியங்களுக்கு ப்ரஹ்மமே அந்தர்யாமி –
1-4-11-ந சங்க்ய உப சங்கரஹாத் அபி நாநா பாவாத் அதிரேகாத் ச –
1-4-12-ப்ராணாதய வாக்ய சேஷாத்-
1-4-13-ஜ்யோதிஷா ஏகேஷாம் அஸ்தி அந்நே –

1-4-4-காரணத்வாதி கரணம் -ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் –
1-4-14-காரணத்வேன ச ஆகாசாதிஷூ யதா வ்யபதிஷ்ட உக்தே –
1-4-15-சமாகர்ஷாத் –

1-4-5-ஜகத்வாசித்வாதி கரணம் -ப்ரஹ்மமே அறியத்தக்கது –
1-4-16-ஜகத் வாசித்வாத்
1-4-17-ஜீவ முக்ய பிராண லிங்காத் ந இதி சேத தத் வ்யாக்யாதம் –
1-4-18-அன்யார்த்தம் து ஜைமினி ப்ரசன வியாக்யா நாப்யாம் அபி ச ஏவம் ஏகே –

1-4-6-வாக்ய அந்வயாதி கரணம் -காணப்படுபவன் ப்ரஹ்மமே –
1-4-19-வாக்ய அந்வயாத்
1-4-20-பிரதிஜ்ஞா சித்தே லிங்கம் ஆஸ்மரத்ய-
1-4-21-உத்க்ரமிஷ்யத ஏவம் பாவாத் இதி ஔடுலொமி
1-4-22-அவஸ்திதே–இதி காசக்ருத்சன

1-4-7-பிரக்ருத்யதிகரணம் -ப்ரஹ்மமே உபாதான காரணம் –
1-4-23-பிரகிருதி ச பிரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் —
1-4-24-அபித்யோப தேஸாத் ச-
1-4-25-சாஷாத் உபயாம்நா நாத் ச
1-4-26-ஆத்மக்ருதே
1-4-27-பரிணாமாத்–
1-4-28-யோ நிஸ்ஸ கீயதே ஹி-

1-4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -ஸ்ரீ மன் நாராயணனே அனைத்தும்-
1-4-29-ஏதேந சர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா

—————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
முதல் பாதம் ஸ்ம்ருதி பாதம் –9-அதிகரணங்கள் –36 ஸூத்ரங்கள்

2-1. ஸ்ம்ருதி பாதம்

2-1-1. ஸ்ம்ருதி அதி கரணம்
2-1-1 ஸ்ம்ருதி அநவகாச தோஷ ப்ரஸங்க: இதி சேத் ந அந்ய ஸ்ம்ருதி அநவகாச தோஷ ப்ரஸங்காத்
2-1-2 இதேரஷாம் ச அநு பலப்தே :

2-1-2. யோக ப்ரத் யுக்தி அதி கரணம்
2-1-3 யேதேந யோக: ப்ரத்யுக்த:

2-1-3–விலக்ஷணத்வ அதி கரணம்
2-1-4 ந விலக்ஷணத்வாத் அஸ்ய ததாத்வம் ச ஶப்தாத்
2-1-5 அபிமாநி வ்யபேதஶஸ் து விசேஷ அநு கதிப்யாம்
2-1-6 த்ருஶ் யேத து
2-1-7 அஸத் இதி சேத் ந ப்ரதிஷேத மாத்ரத்வாத்
2-1-8 அபீதவ் தத்வத் ப்ரஸங்காத் அஸமஞ்ஜஸம்
2-1-9 ந து த்ருஷ் டாந்த பாவாத்
2-1-10 ஸ்வபஷ தோஷாச்ச
2-1-11 தர்கா ப்ரதிஷ்டாநாத் அபி
2-1-12 அந்யதா அநு மேயம் இதி சேத் ஏவம் அபி அநிர் மோக்ஷ ப்ரஸங்க:

2-1-4. ஶிஷ்ட அபரிக்ரஹ அதிகரணம்
2-1-13 ஏதேந ஶிஷ்ட அபரிக்ரஹா அபி வ்யாக்யாதா:

2-1-5. போக்த்ரு ஆபத்தி அதி கரணம்
2-1-14 போக்த்ராபத்தே அபி பாக சேத் ஸ்யாத் லோகவத்
2-1-6. ஆரம்பண அதிகரணம்
2-1-15 தத் அநந்யத்வம் ஆரம்பண ஶப்தாப்ப்ய:
2-1-16 பாவே ச உபலப்தே
2-1-17 ஸத்த்வாத் ச அபரஸ் ய
2-1-18 அஸத் வ்யபேதஶாத் ந இதி சேத் ந தர்மாந்தேரண வாக்யாசே ஶஷாத் யுக்தே சப்தாந்தராச்ச
2-1-19 படவச்ச
2-1-20 யதா ச ப்ராணாதி

2-1-7. இதர வ்யபேதஶ அதிகரணம்
2-1-21 இதர வ்யபேதஶாத் ஹிதா கரணாத் தோஷ ப்ரஸக்தி
2-1-22 அதிகம் து பேத நிர்தேஶாத்
2-1-23 அஶ்மாதிவத் ச தத் அநுபபத்தி

2-1-8. உபஸம்ஹார தர்ஶந அதி கரணம்
2-1-24 உபஸம்ஹார தர்ஶநாத் ந இதி சேத் ந ஷீரவத் ஹி
2-1-25–தேவாதி வத் அபி லோகே

2-1-9. க்ருத்ஸ்ந ப்ரஸக்த அதிகரணம்
2-1-26 க்ருத்ஸ்ந ப்ரஸக்த நிரவயவத்வ ஶப்த கோபோ வா
2-1-27 ஶ்ருதேஸ் து ஶப்த மூலத்வாத்
2-1-28 ஆத்மநி ச ஏவம் விசித்ராத் ச ஹி
2-1-29 ஸ்வ பஷ தோஷாச்ச
2-1-30 ஸர்வா பேதா ச தத் தர்ஶநாத்
2-1-31 விகரணத்வாந் ந இதி சேத் தத் உக்தம்

2-1-10. ப்ரேயாஜநத்வ அதி கரணம்
2-1-32 ந ப்ரேயாஜநவத்த்வாத்
2-1-33 லோகவத் து லீலா கைவல்யம்
2-1-34 வைஷம்ய நைர்க்ருண்யே ந சாபேஷாத் வாத் ததா ஹி தர்ஸயதி
2-1-35 ந கர்ம அவி பாகாத் இதி சேத் ந அநாதித்வாத் உபபத்யேத ச அபி உபலப்யேத ச
2-1-36 ஸர்வ தர்ம உபபத்தேஶ் ச

————-

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
இரண்டாம் பாதம் தர்க்க பாதம் –8-அதிகரணங்கள் –42-ஸூத்ரங்கள்

2-2-தர்க்க பாதம்

2-2-1. ரசநா அநுபபத்தி அதிகரணம்
2-2-1 ரசநா அநுபபத்தேஶ் ச ந அநுமாநம் ப்ரவ்ருத்தேஶ் ச
2-2-2 பயோ அம்பு வத் சேத் தத்ராபி
2-2-3 வ்யதிரேக அநவஸ்தி தேஶ் ச அந பேஷத்வாத்
2-2-4 அந்யத்ர அபாவாத் ச ந த்ருணாதிவத்
2-2-5 புருஷ அஶ்மவத் இதி சேத் ததாபி
2-2-6 அங்கித்வ அநுபபத்தேஶ் ச
2-2-7 அந்யதா அநு மிதவ் ச ஜ்ஞஶக்தி வியோகாத்
2-2-8 அபி உபகேமபி அர்த்த அபாவாத்
2-2-9 விப்ரேதி ஷேதாச்ச அஸமஞ்ஜஸம்

2-2-2- மஹத் தீர்க அதி கரணம்
2-2-10-மஹத் தீர்கவத்வா ஹ்ரஸ்வ பரிமண்டலாப்யாம்
2-2-11-உபயதா அபி ந கர்மாத: தத் அபாவ:
2-2-12-ஸமவாய அப்யுபகமாத் சஸாம்யாத் அநவஸ்திதே
2-2-13-நித்யேமவ ச பாவாத்
2-2-14-ரூபாதி மத்த்வாத் ச விபர்யேயா தர்ஶநாத்
2-2-15-உபயதா ச தோஷாத்
2-2-16-அபரிக்ரஹாத் ச அத்யந்தம் அநேபேஷா

2-2-3- -ஸமுதாய அதிகரணம்
2-2-17- ஸமுதாய உபயே ஹேதுக அபி தத் அப்ராப்தி –
2-2-18- இதேரதர ப்ரத்யயத்வாத் உபபந்நம் இதி சேத் ந ஸங்காதபாவா நிமித்தத்வாத்
2-2-19- உத்த உத் பாதே ச சர்வ நிரோதாத்
2-2-20- அஸதி ப்ரதி ஜ்ஜோபேராேதோ ஓவ்யகபத்யம அந்யதா
2-2-21- ப்ரதி ஸங்க்யா அப்ரதி ஸங்க்யா நிரோத அப்ராப்தி அவிச்சேதாத்
2-2-22- உபயதா ச தோஷாத்
2-2-23- ஆகாேஶ ச அவி சேஷாத்
2-2-24- அநு ஸ்ம்ருதேஶ் ச
2-2-25- ந அஸேதா த்ருஷ் டத்வாத்
2-2-26- உதாஸீ நாநாம் அபி ச ஏவம் சித்தி

2-2-4- உபலப்தி அதி கரணம்
2-2-27- நாபாவ உபலப்தே
2-2-28- வைதர்ம்யாத் ச ந ஸ்வப்நாதி வத்
2-2-29- ந பாவோ அநு பலப்தே

2-2-5- ஸர்வதா அநுபபத்தி அதி கரணம்
2-2-30-ஸர்வதா அநு பபத்தேஶ் ச

2-2-6- ஏகஸ்மிந் அஸம்பவ அதி கரணம்
2-2-31-ந ஏகஸ்மிந் அஸம்பவாத்
2-2-32-ஏவம் சஆத்மா கார்த்ஸ்ந்யம்
2-2-33-ந ச பர்யாயாத் அபி அவி விராேதா விகாராதிப்ய
2-2-34-அந்த்யாவஸ்தி தேஶ் ச உபய நித்யத்வாத் அவி சேஷ

2-2-7- பசுபதி அதி கரணம்
2-2-35-பத்யுர் அஸமஞ்ஜ ஸ்யாத்
2-2-36-அதிஷ்டாந அநு பபத்தேஶ் ச
2-2-37-கரணவத் சேத் ந போகாதிப்ய
2-2-38-அந்த வத்த்வம் அஸர்வஜ்ஞதா வா

2-2-8- உத்பத்தி அஸம்பவ அதிகரணம்
2-2-39-உத்பத்தி அஸம்பவாத்
2-2-40-ந ச கர்து கரணம்
2-2-41-விஜ்ஞாந அதி பாவே வா தத் அப்ரதி ஷேத
2-2-42-விப்ரேதி ஷேதாத் ச

————

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
மூன்றாம் பாதம் – வியத் பாதம் –7-அதிகரணங்கள் –52-ஸூத்ரங்கள்-

2-3-1-வியத் அதி கரணம்
2-3-1-ந வியத் அஶ்ருதே
2-3-2-அஸ்தி து
2-3-3-கௌண்ய ஸம்பவாத் ஶப்தாச்ச
2-3-4-ஸ்யாத் ச ஏகஸ்ய ப்ரஹ்ம ஶப்தவத்
2-3-5-ப்ரதிஜ்ஞா ஹாநி: அவ்யதி ரேகாத்
2-3-6-ஶப்தேப்ய:
2-3-7-யாவத் விகாரம் து வி பாகோ லோகவத்
2-3-8-ஏதே ந மாதரிஶ்வா வ்யாக்யாத:
2-3-9-அஸம்பவஸ் து சதோ அநுபபத்தே

2-3-2-தேஜஸ் அதிகரணம்
2-3-10-தேஜோ தஸ் ததாஹி ஆஹ
2-3-11-ஆப:
2-3-12-ப்ருத்வீ
2-3-13-அதிகார ரூப ஶப்தாந்தேரப்ய:
2-3-14-ததபி த்யாநாத் ஏவ து தல் லிங்காத் ஸ:
2-3-15-விபர்யயேண து க்ரேமா அத உபபத்யேத ச
2-3-16-அந்தரா விஜ்ஞாந மநஸீ க்ரேமண தல் லிங்காத் இதி சேத் ந அவி சேஷாத்
2-3-17-சராசர வ்யாபாஶ்ரய து ஸ்யாத் தத் வ்யபேதஶத அபாக்த தத் பாவபா வித்வாத்

2-3-3. ஆத்மா அதிகரணம்
2-3-18 ந ஆத்மா ஶ்ருதேர் நித்யத்வாத் ச தாப்ய:

2-3-4- ஜ்ஞ: அதிகரணம்
2-3-19- ஜ்ஜோ அத ஏவ
2-3-20- உத்க்ராந்தி கதி ஆகதீ நாம்
2-3-21- ஸ்வாத்மநா ச உத்தரேயா:
2-3-22- ந அணுர் அத: ச்ருதேரிதி சேத் ந இதர அதி காராத்
2-3-23- ஸ்வ ஶப்தோந் மாநாப்யாம் ச
2-3-24- அவி ரோதஶ் சந்தநவத்
2-3-25- அவஸ்திதி வைவேஶஷ்யாத் இதி சேத் ந அப்யுபகமாத் ஹ்ருதி ஹி
2-3-26- குணாத் வா ஆலோகவத்
2-3-27- வ்யதி ரேக: கந்தவத் ததா ச தர்ஶயதி
2-3-28- ப்ருதக் உபேதஶாத்
2-3-29- தத் குண ஸாரத்வாத் து தத் வ்யபேதஶ: ப்ராஜ்ஞவத்
2-3-30- யாவத் ஆத்மபாவித்வாத் ச ந தோஷஸ் தத் தர்ஶநாத்
2-3-31- பம்ஸ் த்வாதி வத் அஸ்ய சதோ அபி வ்யக்தி யோகாத்
2-3-32- நித்ய உபலப்தி அநு பலப்தி ப்ரஸங்க: அந்யதர அநியேமா வா அந்யதா

2-3-5- கர்த்ரு அதி கரணம்
2-3-33-கர்தா ஶாஸ்த்ர அர்த்த வத்வாத்
2-3-34-உபாதாநாத் விஹார: உபேதஶாத்
2-3-35-வ்யபேதஶாத் ச க்ரியாயாம் ந சேத் நிர்தேஶ விபர்யய:
2-3-36-உபலப்திவத் அநியம:
2-3-37-ஶக்தி விபர்யயாத்
2-3-38-ஸமாத்ய பாவாத் ச
2-3-39-யதா ச தஷோ பயதா

2-3-6- பர ஆயத்த அதிகரணம்
2-3-40-பராத்து தத் ச்ருதே :
2-3-41-க்ருத ப்ரயத்ந அபேக்ஷஸ் து விஹித ப்ரதி ஷித்தா வையர்த்யாதிப்ய:

2-3-7- அம்ஶ அதி கரணம்
2-3-42-அம்ஸோ நாநா வ்யபேதஶாத் அந்யதா ச அபி தாஶ கித வாதித்வம் அதீயத ஏகே
2-3-43-மந்த்ர வர்ணாத்
2-3-44-அபி ச ஸ்மர்யதே
2-3-45-ப்ரகாஶாதி வத் து ந ஏவம் பர:
2-3-46-ஸ்மரந்தி ச
2-3-47-அநுஜ்ஞா பரிஹாரவ் தேஹ ஸம்பந்தாத் ஜ்யோதிர் ஆதிவத்
2-3-48-அஸந்த தேஶ் ச அவ்யதிகர:
2-3-49-ஆபாஸ ஏவ ச
2-3-50-அத்ருஷ்டா நியமாத்
2-3-51-அபி ஸந்த்யாதிஷு அபி ச ஏவம்
2-3-52-ப்ரேதஶ பேதாத் இதி சேத் ந அந்தர் பாவாத்

———————

இரண்டாம் அத்யாயம் -அவிரோத அத்யாயம் –
நான்காம் பாதம் – பிராண பாதம் –8-அதிகரணங்கள் –19-ஸூத்ரங்கள்-

2-4-1- ப்ராண உத்பத்தி அதி கரணம்
2-4-1- ததா ப்ராணா:
2-4-2- கௌண்ய ஸம்பவாத் தத் ப்ராக் ஶ்ருதேஶ் ச
2-4-3- தத் பூர்வகத்வாத் வாச:

2-4-2- ஸப்தகதி அதி கரணம்
2-4-4- ஸப்த கதே விசேஷி தத்வாத் ச
2-4-5- ஹஸ்தா தயஸ்து ஸ்திதே அதோ ந ஏவம்

2-4-3- ப்ராண அணுத்வ அதி கரணம்
2-4-6- அணவஶ் ச
2-4-7- ஶ்ரேஷ்டஶ் ச

2-4-4- வாயு க்ரியா அதி கரணம்
2-4-8- ந வாயு க்ரிேய ப்ருதக் உபேதேஶாத்
2-4-9- சஷுராதி வத் து தத் ஸஹ ஶிஷ் ட்யாதிப்ய:
2-4-10- அகரணத்வாத் ச ந ேதாஷ: ததாஹி தர்ஶயதி
2-4-11- பஞ்சவ்ருத்தி : மநோ வத் வ்யபதிஶ் யதே

2-4-5- ஶ்ரேஷ் ட அணுத்வ அதி கரணம்
2-4-12- அணுஶ் ச

2-4-6- ஜ்யோதி ஆதி அநுஷ் டாந அதிகரணம்
2-4-13- ஜ்யோதிராதி அநுஷ் டாநம் தத் ஆமநநாத் ப்ரணவதா ஶப்தாத்
2-4-14- தஸ் ய ச நித்யத்வாத்

2-4-7- இந்த்ரிய அதி கரணம்
2-4-15- த இந்த்ரியாணி தத் வ்யபேதஶாத் அந்யத்ர ஶ்ரேஷ் டாத்
2-4-16- பேத ஶ்ருதே வைலஷண்யாத் ச

2-4-8- ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்தி அதி கரணம்
2-4-17- ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்திஸ் து த்ரிவ்ருத் குர்வத உபேதஶாத்
2-4-18- மாம்ஸாதி பவ்மம் யதா ஶப்தம் இதரயோஶ் ச
2-4-19- வைசேஷ்யாத் து தத் வாத: தத் வாத:

———————-

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
முதல் பாதம் – வைராக்ய பாதம் –6-அதிகரணங்கள் –27-ஸூத்ரங்கள்-

3-1-வைராக்ய பாதம்

3-1-1-தத் அந்தர ப்ரதி பத்தி அதி கரணம்
3-1-1-தத் அந்தர ப்ரதி பத்தவ் ரம்ஹதி ஸம்பரிஷ் வக்த: ப்ரஶ்ந நிரூபணாப்யாம்
3-1-2-த்ர்யாத்மகத்வாத் தூ பூயஸ் த்வாத்
3-1-3-ப்ராண கதேஶ் ச
3-1-4-அக்ந்யாதி கதி ஶ்ருதே: இதி சேத் ந பாக் தத்வாத்
3-1-5-ப்ரதேம ஶ்ரவணாத் இதி சேத் ந தா ஏவ ஹி உபபத்தே
3-1-6-அஶ்ருதத்வாத் இதி சேத் ந இஷ்டாதி காரிணாம் ப்ரதீதே
3-1-7-பாக்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா ஹி தர்ஶயதி

3-1-2- க்ருத அத்யய அதி கரணம்
3-1-8- க்ருதாத்யேய அநு சயவாந் த்ருஷ்ட ஸ்ம்ருதிப்யாம் யேததம் அநேவம் ச
3-1-9- சரணாத் இதி சேத் ந உபஷாணார்தேதி கார்ஷ்ணா ஜிநி:
3-1-10- ஆநர்தக்யம் இதி சேத் ந தத் அபேஷத்வாத்
3-1-11- ஸூக்ருத துஷ் க்ருதே ஏவ இதி பாதரி:

3-1-3- அநிஷ் டாதி கார்ய அதி கரணம்
3-1-12- அநிஷ் டாதி காரிணாம் அபி ச ஶ்ரு தம்
3-1-13- ஸம்யமேந அ-2ய இதேரஷாம் ஆேராஹ அவேராஹ தத் க தர்ஶநாத்
3-1-14- ஸ்மரந்தி ச
3-1-15- அபி ஸப்த
3-1-16- தத்ராபி ச தத் வ்யாபாராத் அவி ரோத:
3-1-17- வித்யா கர்மநோ இதி ப்ரக்ருதத்வாத்
3-1-18- ந த்ருதீயே ததா உபலப்த:
3-1-19- ஸ்மர்யதே அப் ச லோகே
3-1-20- தர்ஶநாத் ச
3-1-21- த்ருதீய ஶப்த அவேராத: ஸம்ஸோக ஜஸ்ய

3-1-4- தத் ஸ்வாபாவ்ய ஆபத்தி அதி கரணம்
3-1-22- தத் ஸ்வாபாவ்யாபத்தி : உபபத்தே

3-1-5- ந அதி சிர அதி கரணம்
3-1-23- ந அதி சிரேண விசேஷாத்

3-1-6- அந்ய அதிஷ்டித அதி கரணம்
3-1-24- அந்யாதிஷ்டதேஷு பூர்வ வத் அபிலாபாத்
3-1-25- அஸூத்தம் இதி சேத் ந ஶப்தாத்
3-1-26- ரேத: சிக்யாே கோ அத
3-1-27- யோநே ஶரீரம்

———————–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
இரண்டாம் பாதம் – உபய லிங்க பாதம் –8-அதிகரணங்கள் –40-ஸூத்ரங்கள்-

3-2-1- ஸந்த்யா அதி கரணம்
3-2-1- ஸந்த்யே ஸ்ருஷ்டி ஆஹ ஹி
3-2-2- நிர்மாதாரம் ச ஏகே புத்ராதயத் ச
3-2-3- மாயாமாத்ரம் து கார்த்ஸ்ந் யேந அபிவ்யக்த ஸ்வரூபத்வாத்
3-2-4- பராபி த்யாநாத் து திரோஹிதம் ததோ ஹி அஸ்ய பந்த விபர்யயவ்
3-2-5- தேஹ யோகாத்வா ஸோ அபி
3-2-6- ஸூசகஶ் ச ஹி ஶ்ருதே ஆசஷதே ச தத்வித:

3-2-2- தத் அபாவ அதி கரணம்
3-2-7- தத் அபாேவா நாடீ ஷு தத் ச்ருதே ஆத்மநி ச
3-2-8- அத: ப்ரேபாேதா அஸ் மாத்

3-2-3- கர்ம அ ஸ்ம்ருதி ஶப்த விதி அதி கரணம்
3-2-9- ஸ ஏவ ச கர்ம அநு ஸ்ம்ருதி ஶப்த விதிப்ய:

3-2-4- முக்த அதி கரணம்
3-2-10- முக்தே அர்த ஸம்பத்தி பரிசேஷாத்

3-2-5- உபய லிங் க அதி கரணம்
3-2-11- ந ஸ்தாநதோ அபி பரஸ ய உபய லிங்கம் ஸர்வத்ர ஹி
3-2-12- ந பேதாத் இதி சேத் ந ப்ரத்யேகம் அதத்வசநாத்
3-2-13- அபி ச ஏவம் ஏகே
3-2-14- அரூபவத் ஏவ ஹி தத் ப்ரதா நத்வாத்
3-2-15- ப்ரகாஶவத் ச அவையர்த்யாத்
3-2-16- ஆஹச தந்மாத்ரம்
3-2-17- தர்ஶயதி வா அதோ அபி ஸ்மர்யதே
3-2-18- அத ஏவ ச உபமா ஸூர்ய காதிவத்
3-2-19- அம்புவத் அக்ரஹணாத் து ந ததாத்வம்
3-2-20- வ்ருத்தி ஹ்ராஸ பாக்த்வம் அந்தர்பாவாத் உபய ஸாமஞ்ஜஸ் யாத் ஏவம்தர்சநாத் ச
3-2-21- ப்ரக்ருதை தாவத்த்வம் ஹி ப்ரதி ஷேததி ததோ ப்ரவீதி ச பூய:
3-2-22- தத்அவ்யக்தம் ஆஹ ஹி
3-2-23- அபி ஸம்ராதேந ப்ரத்யஷ அநு மாநாப்யாம்
3-2-24- ப்ரகாசாதி வத் ச அவைசேஷ்யம் ப்ரகாச ச கர்மணி அப்யாஸாத்
3-2-25- அத: அநந்தேந ததா ஹி லிங்கம்

3-2-6- அஹி குண் டல அதிகரணம்
3-2-26- உபய வ்யபேதஶாத் து அஹி குண் டலவத்
3-2-27- ப்ரகாஶ ஆஶ்ரயவத்வா தேஜஸ் த்வாத்
3-2-28- பூர்வ வத்வா
3-2-29- ப்ரேதி சேஷதாத் ச

3-2-7- பர அதி கரணம்
3-2-30- பரமத: சேதூந் மாந ஸம்பந்த பேத வ்யபேதேஶப்ய:
3-2-31- ஸாமாந்யாத் து
3-2-32- புத்த்யர்த: பாதவத்
3-2-33- ஸ்தாநே விசேஷாத் ப்ரகாஶாதி வத்
3-2-34- உபபத்தேஶ் ச
3-2-35- தத: அந்ய ப்ரதி ஷேதாத்
3-2-36- அநேந ஸர்வகதத்வம் ஆயாம ஶப்தாதிப்ய:

3-2-8- பல அதி கரணம்
3-2-37- பலமத உபபத்தே :
3-2-38- ஶ்ருதத் வாச்ச
3-2-39- தர்மம் ஜைமினி ரத ஏவ
3-2-40- பூர்வம் பாதராயேணா ஹேது வ்யபேதேஶாத்

—————–

மூன்றாம் அத்யாயம் – சாதன த்யாயம் –
மூன்றாம் பாதம் – குண உப சம்ஹார பாதம் –26-அதிகரணங்கள் –64-ஸூத்ரங்கள்-

3-3-1- ஸர்வ வேதாந்த ப்ரத்யய அதி கரணம்
3-3-1- ஸர்வ வேதாந்த ப்ரத்யயம் ஸோதநாதி அவி சேஷாத்
3-3-2- பேதாந் ந இதி சேத் ஏகஸ்யாம் அபி
3-3-3- ஸ்வாத்யாயஸ்ய ததாத்வே ஹி ஸமாசாரே அதிகாராத் ச ஸவவத் ச தந் நியம:
3-3-4- தர்ஶயதி ச
3-3-5- உபஸம்ஹார: அர்த்தா பேதாத் விதி சேஷவத் ஸமாேந ச

3-3-2- அந்யதாத்வ அதிகரணம்
3-3-6- அந்யதாத்வம்ஶப்தாத் இதி ந அவி சேஷாத்
3-3-7- ந வா ப்ரகரண பேதாத் பவோ வரீயஸ் த்வாதி வத்
3-3-8- ஸம்ஜ்ஞாதஶ் சேத் தத் உக்தம் அஸ்தி து தத் அபி
3-3-9- வ்யாப்தேஶ் சஸமஞ்ஜஸம்

3-3-3- ஸர்வ அபேத அதி கரணம்
3-3-10- ஸர்வ அபேதாத்அந்யத்ர இமே

3-3-4- ஆநந்தாதி அதி கரணம்
3-3-11- ஆநந்தாதய: ப்ரதாநஸ் ய
3-3-12- ப்ரிய ஶிரஸ் த்வாத்ய அப்ராப்தி : உபசயா அபசெயௗ ஹி பேத
3-3-13- இதரே அர்த்த ஸாமாந்யாத்
3-3-14- ஆத்யாநாய ப்ரேயாஜந அபாவாத்
3-3-15- ஆத்ம ஶப்தாத்ச
3-3-16- ஆத்ம க்ருஹீதீ : இதரவத் உத்தராத்
3-3-17- அந்வயாத் இதி சேத் ஸ் யாத்அவதாரணாத்

3-3-5- கார்ய ஆக்யாந அதி கரணம்
3-3-18- கார்ய ஆக்யாநாத் அபூர்வம்

3-3-6- ஸமாந அதி கரணம்
3-3-19- ஸமாந ஏவம் ச அபேதாத்

3-3-7- ஸம்பந்த அதி கரணம்
3-3-20- ஸம்பந்தாத் ஏவம் அந்யத்ர அபி
3-3-21- ந வா விசேஷாத்
3-3-22- தர்ஶயதி ச

3-3-8- ஸம்ப்ருதி அதி கரணம்
3-3-23- ஸம்ப்ருதி த்யு வ்யாப்தி அபி ச அத:

3-3-9- பு ருஷ வித்ய அதி கரணம்
3-3-24- பு ரு ஷ வித்யாயாம் அபி ச இதேரஷாம் அநாம்நாநாத்

3-3-10- வேதாதி அதி கரணம்
3-3-25- வேதாத்ய அர்த்த பேதாத்
3-3-11-ஹாநி அதி கரணம்
3-3-26- ஹாநவ் உபாய ந ஶப்த சேஷத்வாத் குஶச் சந்தஸ் ஸ்துதி உபகாநவத் தத் உக்தம்

3-3-12- ஸாம்பராய அதி கரணம்
3-3-27- ஸாம்பராேய தர்த வ்யாபாவாத் ததா ஹி அந்யே
3-3-28- சந்தத உபய அவி ரோதாத்
3-3-29- கதே அர்த்தவத் த்வம் உபயதா அந்யதா ஹி விரோத:
3-3-30- உபபந்நஸ் தல்லஷாணார்த உபலப்தேர் லோகவத்
3-3-31- யாவத் அதி காரம் அவஸ்திதி : ஆதிகாரிகாணாம்

3-3-13-அநியம அதி கரணம்
3-3-32- அநியம: ஸர்வே ஷாம் அவிரோத: ஶப்த அநுமாநாப்யாம்

3-3-14- அஷரதி அதி கரணம்
3-3-33- அஷரதியாம் து அவிரோத: ஸாமாந்ய தத் பாவாப்யாம் ஔபஸதவத் தத் உக்தம்
3-3-34- இயத் ஆமநநாத்

3-3-15- அந்தரத்வ அதி கரணம்
3-3-35- அந்தரா பூத க்ராமவத் ஸ்வாத்மந: அந்யதா பேதாந் உபபத்தி : இதி சேத் ந உபேதசவத்
3-3-36- வ்யதி ஹாரோ விஶிம் ஷந்தி ஹி இதரவத்
3-3-37- ஸ ஏவஹி ஸத்யாதய:

3-3-16- காமாதி அதி கரணம்
3-3-38- காமாதி இதரத்ர தத்ர ச ஆயதநாதிப்ய:
3-3-39- ஆதராத் அலோப:
3-3-40- உபஸ்தி தே அத: தத் வசநாத்

3-3-17-.தந் நிர்தாரண அதி கரணம்
3-3-41- தந்நிர்தாரண அநியமஸ் தத் த்ருஷ்டே ப்ருதக் அப்ரதி பந்த: பலம்

3-3-18- ப்ரதாந அதி கரணம்
3-3-42- ப்ரதாநவத் ஏவ தத் உக்தம்

3-3-19- லிங்க பூயஸ் த்வ அதி கரணம்
3-3-43- லிங்க பூயஸ்த்வாத் தத் ஹி பலீயஸ் தத் அபி

3-3-20- பூர்வ விகல்ப அதி கரணம்
3-3-44- பூர்வ விகல்ப: ப்ரகரணாத் ஸ்யாத் க்ரியா மாநஸவத்
3-3-45- அதி தேஶாத் ச
3-3-46- வித்ய ஏவ நிர்தாரணாத் தர்ஶநாத் ச
3-3-47- ஶ்ருத்யாதி பலீயஸ் த்வாத் ச ந பாத:
3-3-48- அநுபந்தாதிப்ய: ப்ரஜ்ஞாந்தர ப்ருதக் த்வவத் த்ருஷ் டஶ் ச ததுக்தம்
3-3-49- ந ஸாமாந்யாத் அபி உபலப்தேர் ம்ருத்யு வந்ந ஹி லோகாபத்தி :
3-3-50- பரேணச ஶப்தஸ்ய தாத் வித்யம் பூயஸ் த்வாத் அநுபந்த:

3-3-21-சரீேர பாவாத் அதி கரணம்
3-3-51- ஏக ஆத்மந: ஶரீேர பாவாத்
3-3-52- வ்யதி ரேகஸ் தத் பாவா பாவித்வாத் ந து உபலப்தி வத்

3-3-22- அங்காவபத்த அதி கரணம்
3-3-53- அங்காவபத்தாஸ் து ந ஶாகாஸூ ஹி ப்ரவேதம்
3-3-54- மந்த்ராதிவத் வா அவிரோத:

3-3-23- பூம் ஜ்யாயஸ் த்வ அதி கரணம்
3-3-55- பூம்ந: க்ரது வத் ஜ்யாயஸ் த்வம் ததா ச தர்ஶயதி

3-3-24- ஶப்தாதி பேத அதி கரணம்
3-3-56- நாநா ஶப்தாதி பேதாத்

3-3-21-சரீரே பாவாத் அதி கரணம்
3-3-51- ஏக ஆத்மந: ஶரீரே பாவாத்
3-3-52- வ்யதி ரேகஸ் தத் பாவா பாவித்வாத் ந உபலப்தி வத்

3-3-22- அங்காவபத்த அதிகரணம்
3-3-53- அங்காவபத்தாஸ் து ந ஶாகாஸூ ஹி ப்ரதி வேதம்
3-3-54- மந்த்ராதி வத் வா அவிரோத:

3-3-23- பூம ஜ்யாயஸ்த்வ அதிகரணம்
3-3-55- பூம்ந: க்ரது வத் ஜ்யாயஸ் த்வம் ததா ச தர்ஶயதி

3-3-24- ஶப்தாதி பேத அதிகரணம்
3-3-56- நாநா ஶப்தாதி பேதாத்

3-3-25-விகல் ப அதி கரணம்
3-3-57- விகல்போ அவிஶிஷ் ட பலத்வாத்
3-3-58- காம்யாஸ் து யதா காமம் ஸமுச்சீ யேரந் ந வா பூர்வ ஹேது பாவாத்

3-3-26-யதா ஆஶ்ரய பாவ அதி கரணம்
3-3-59- அங்கேஷு யதாஶ்ரய பாவ:
3-3-60- ஶிஷ் டேஶ் ச
3-3-61- ஸமாஹாராத்
3-3-62- குண ஸாதாரண்ய ஶ்ருதேஶ் ச
3-3-63- ந வா தத் ஸஹ பாவா ஶ்ருதே
3-3-64- தர்ஶநாச் ச

———————–

நான்காம் பாதம் – அங்க பாதம் –15-அதிகரணங்கள் –51-ஸூத்ரங்கள்-

அதிகரணம்–3-4-1-புருஷார்த்த அதிகரணம்
3-4-1-புருஷார்த்த அத சப்தாத் இதி பாதராயண –
3-4-2-சேஷத்வத் புருஷார்த்த வாத யதா அன்யேஷூ இதி ஜைமினி —
3-4-3-ஆசார தர்சநாத் —
3-4-4-தத் ஸ்ருதே –
3-3-5-சமன்வ ஆரம்பணாத் –
3-3-6-தத்வத விதா நாத் –
3-4-7-நியமாத் –
3-4-8-அதிக உபதேசாத் து பாதராணஸ்ய ஏவம் தத் தர்சநாத் —
3-4-9-துல்யம் து தர்சனம் –
3-4-10-அசாவத்ரீகீ —
3-4-11- விபாக சதவத் –
3-4-12-அத்யாப ந மாத்ரவத்
3-14-13-நா விசேஷாத் –
3-4-14-ஸ்துதயே அநுமதிர் வா —
3-4-15-காம காரேண ச ஏகே
3-4-16-உபமர்த்தம் ச
3-4-17-ஊர்த்வ ரேதஸ் ஸூ ச சப்தே ஹி
3-4-18-பராமர்சம் ஜைமினி அசோத நாத் ச அபவததி ஹி –
3-4-19-அனுஷ்டேயம் பாதராயண சாம்ய ஸ்ருதே
3-4-20-விதி வா தாரணவத்-

அதிகரணம் -3-4-2- ஸ்துதி மாத்ராதிகரணம்
3-4-21-ஸ்துதி மாதரம் உபாதா நாத் இதி சேத் ந அபூர்வத்வாத்
3-4-22-பாவ சப்தாத் ச

அதிகரணம் -3-4-3- பாரிப்லவாதி கரணம்
3-4-23-பாரிப்லவ அர்த்தா இதி சேத் ந விசேஷி தத்வாத் –
3-4-24-ததா ச ஏக வாக்ய உப பந்தாத் —

அதிகரணம் -3-4-4- அக்நீ இந்தநாத்யாதி கரணம்
3-4-25-அத ஏவ ச அக்நீ இந்த நாதி அநபேஷா –

அதிகரணம் -3-4-5-சர்வ அபேஷாதி கரணம்
3-4-26-சர்வ அபேஷா ச யஜ்ஞாதி ஸ்ருதே அச்வவத் —

அதிகரணம் -3-4-6- சம தமாத்யாதிகரணம்
3-4-27-சம தமாத் யுபேத ஸ்யாத் ததாபி து தத்விதே –ததங்க தயா தேஷாம் அபி அவஸ்ய அநுஷ்டே யத்வாத்

அதிகரணம் -3-4-7-சர்வ அன்ன அநுமத்யதிகரணம்
3-3-28-சர்வ அன்ன அநு மதி -ச ப்ராணாத்யயே தத் தர்சநாத் –
3-3-29-அபாதாத் ச –
3-4-30-அபி ஸ்மர்யதே-
3-4-31-சப்தஸ் ச அத அகாமகாரே —

அதிகரணம் -3-4-8- விஹி தத்வாதி கரணம்
3-4-32-விஹிதத்வாத் ச ஆஸ்ரம கர்ம அபி
3-4-33-சஹ காரித்வேன ச
3-4-34-சர்வதா அபி த ஏவ உபய லிங்காத் —
3-3-35-அநபி பவம் ச தர்சயதி —

அதிகரணம் -3-4-9-விதுராதிகரணம்
3-4-36-அந்தரா ச அபி து தத்ருஷ்டே
3-4-37-அபி ஸ்மர்யதே –
3-4-38-விசேஷ அனுக்ரஹ ச –
3-4-39-அத து இதர ஜ்யாயா லிங்கா ச்ச

அதிகரணம்–3-4-10-தத் பூதாதிகரணம்
3-3-40-தத் பூதஸ்ய து ந அதத்பாவ ஜைமிநே அபி நியமாத் தத் ரூபா பாவேப்ய —
3-4-41-ந ச ஆதி காரிகம் அபி பதநாநுமாநாத் தத் அயோகாத்
3-4-42- உப பூர்வம் அபி இதி ஏகே பாவம் அசனவத் தத் உக்தம் –
3-4-43-பஹிஸ்த உபயதா அபி ஸ்ம்ருதே ஆசாராத் ச –

அதிகரணம் –3-4-11-ஸ்வாம்யதிகரணம்
3-4-44-ஸ்வாமி ந பலஸ்ருதே இதி ஆத்ரேய
3-4-45-ஆர்த்விஜ்யம் இதி ஔடுலொமி –தஸ்மை ஹி பரிக்ரீயதே

அதிகரணம் –3-4-12-சஹ கார்யந்தர வித்யதிகரணம்
3-4-46-சஹகார்யந்திர விதி பஷேண த்ருதீயம் தத்வதோ வித்யாதிவத்
3-4-47-க்ருத்சன பாவாத்து க்ருஹிணா உபாசம்ஹார
3-4-48-மௌனவத் விதைக்கு அங்கம் என்றதாயிற்று அபி உபதேசாத்

அதிகரணம் -3-4-13-அநாவிஷ்கராதி கரணம்
3-4-49-அநாவிஷ் குர்வன் அந்வயாத்

அதிகரணம் -3-4-14-ஐஹிகாதிகரணம் –
3-4-50-ஐஹிகம் அப்ரஸ்நுத பிரதிபந்தே தத் தர்சநாத்

அதிகரணம் -3-4–15-முக்தி பலாதிகரணம்
3-4-51-ஏவம் முக்தி பலா நியம தத் அவஸ்தா வத்ருதே தத் அவஸ்தா வத்ருதே

—————–

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–

முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் -உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் -பக்தியும் -ஆராயப்படுகின்றன –
இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது
கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது

———————————————————————————————————————————-
முதல் பாதம் -ஆவ்ருத்தி பாதம் –
உபாசகனின் கடைசி சரீரத்தில் புண்ய பாபங்கள் ஓட்டுவது இல்லை என்பதும் –
பக்தியும் -ஆராயப்படுகின்றன –
11-அதிகரணங்கள்–19 ஸூத்ரங்கள்–
———————————————————————————————————————————————————————-
அதிகரணம் -1-ஆவ்ருத்யதிகரணம் -2 ஸூத்ரங்கள்–
ஆயுள் முடியும் வரை உபாசனத்தை பலமுறை அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்கிறது –

4-1-1-ஆவ்ருத்தி அசக்ருத் உபதேசாத் –ப்ரஹ்மத்தை பற்றிய ஞானம் மீண்டும் மீண்டும் சிந்திக்கப் பட வேண்டும் என்கிறது
4-1-2- லிங்காத் ச-லிங்கம் ஸ்ம்ருதி அனுமானம் ஸ்ம்ருதியைக் கொண்டு ஸ்ருதியை அனுமானம் செய்வதால்ஸ்ம்ருதி எனபது லிங்கம்ஆகும்

———-

அதிகரணம் -2-ஆத்மத்வோபாஸ நாதிகரணம்—1 ஸூத்ரம்-
தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் என்கிறது –
4-1-3-ஆத்மேதி து உபகச்சந்தி க்ராஹயந்தி ச –
தன்னுடைய ஆத்மாவாகவே ப்ரஹ்மத்தை உபாசிக்க வேண்டும் -வேறு பட்டவனாக உபாசிக்க வேண்டும் என்பர் பூர்வ பஷி –

————–

அதிகரணம் -3- ப்ரதீகாதி கரணம் –2 ஸூத்ரங்கள்—
பிரதீகம் -மனம் சரீரம் போன்றவை -இவற்றை உபாசனம் சரி அல்ல -இவை ஆத்மா அல்ல -என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-4-ப்ரதீகே ந ஹி ஸ –மனம் போன்றவை உபாசகனின் ஆத்மா அல்ல -உபாசிக்கப்படும் பொருள்களே ஆகும் –
4-1-5-ப்ரஹ்ம த்ருஷ்டி உத்கர்ஷாத் –ப்ரஹ்மம் மனம் முதலானவற்றிலும் உயர்ந்தது-

———————

அதிகரணம் -4-ஆதித்யாதிமத்யதிகரணம் -1 ஸூத்ரம்–
உத்கீதம் போன்றவற்றையே சூரியன் முதலான தேவர்களாக பார்க்க வேண்டும் -என்று நிரூபிக்கப் படுகிறது-
4-1-6-ஆதித்யாதி மத்ய ஸ அங்கே உபபத்தே —

—————-

அதிகரணம் -5-ஆஸிநாதி கரணம் —4 ஸூத்ரங்கள்-
அமர்ந்து கொண்டு தான் உபாசனை செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது–
4-1-7-ஆஸிந சம்பவாத் —அமர்ந்து கொண்டு மட்டுமே -ஞானம் த்யானம் உபாசனம் -அப்போது தான் ஸ்ரத்தை உண்டாகும் -மன ஒருமைப்பாடு உண்டாகும்
4-1-8-த்யா நாத் ஸ —நிதித்யாசிதவ்ய –த்யானம் -வேறு எந்தவித எண்ணமும் தோன்றாதபடி இடைவிடாத நினைவு வெள்ளமே த்யானம்
4-1-9-அசைலம் ஸ அபேஷ்ய-அசையாமல் இருப்பதே த்யானம்
4-1-10-ஸ்மரந்தி ஸ –ஸ்ம்ருதியில் உள்ளது -ஸ்ரீ கீதை 6-11/12
4-1-11-யத்ர யகாக்ரதா தத்ர அவிசேஷாத்–மனதை ஒருமுகப் படுத்த கூறப்பட்ட அதே கால தேசங்களை உபாசனத்துக்கு கொள்ள வேண்டும்

—————–

அதிகரணம் -6-ஆப்ரயாணாதி கரணம் -1 ஸூத்ரம்-
மரணம் அடையும் காலம் வரையில் உபாசனம் செய்ய வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-1-12-ஆப்ரயாணாத் தத்ர அபி ஹி த்ருஷ்டம்–மரண காலம் வரையில் –ஏன் -ஸ்ருதிகளில் அப்படியே காண்கையாலே-

—————-

அதிகரணம் -7-ததிகமாதிகரணம் -1 ஸூத்ரம்-
ப்ரஹ்ம வித்யைக்கு முன்னால் செய்த பாவங்கள் ,வரப் போகும் பாவங்கள் ஆகியவை அழிகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-13-தததிகமே உத்தர பூர்வாகயோ –அச்லேஷ வி நாசௌ தத் வ்யபதேசாத் —

——————

அதிகரணம் -8-இதராதிகரணம்–1 ஸூத்ரம்–
முன்னர் செய்த புண்ணியங்கள் அழிந்து விடும் இனி செய்யப்படும் புண்யங்கள் ஒட்டாது -என்று நிரூபிக்கப் படுகிறது –
4-1-14-இதரச்ய அபி ஏவம் அசம்ச்லேஷ பாதே து —

——————–

அதிகரணம் -9-அநாரப்த கார்யாதிகரணம்–1 ஸூத்ரம் –
பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாப கர்மங்கள் மட்டுமே அழிகின்றன எனபது நிரூபிக்கப் படுகிறது –
4-1-15-அநாரப்த கார்யே ஏவது பூர்வே ததவதே –இதுவரை பலன் அளிக்கத் தொடங்காத புண்ய பாவங்கள் மட்டுமே அழிகின்றன

———————-

அதிகரணம் -10-அக்னி ஹோதராத்ய திகரணம்-3 ஸூத்ரங்கள் –
பலனை விரும்பாதவர்கள் கூட அக்னி ஹோத்ரம் போன்ற நித்ய கர்மாக்களை இயற்ற வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-16-அக்னிஹோத்ராதி து தத் கார்யாயைவ தத் தர்சநாத் –அக்னிஹோத்ரம் போன்றவையும் ப்ரஹ்ம வித்யைக்கே-
4-1-17-அத அந்யா அபி ஹி ஏகேஷாம் உபயோ –அக்னிஹோத்ரம் காட்டிலும் வேறு சிலவும் உளதால்
4-1-18-யதேவ வித்யயேதி ஹி —வித்யையின் மூலமாக

————————–

அதிகரணம் -11-இதர ஷபணாதி கரணம் –1 ஸூத்ரம்-
பிராரப்த கர்மம்-பலன் தரத் தொடக்கி விட்ட கர்மங்கள் ஒரே சரீரத்தில் முடிந்து விடும் என்னும் விதி கிடையாது என்று நிரூபிக்கப் படுகிறது
4-1-19-போகேந த்விதர ஷபயித்வா அத சம்பத்யதே –
பிராரப்த கர்மங்களின் பலன்கள் பல சரீரங்கள் எடுத்த பின்னரே கழியுமானால்-அந்த சரீரங்களின் முடிவில் ப்ரஹ்மத்தை அடைகிறான் –

—————————————-

இரண்டாம் பாதம் –உத்க்ராந்தி பாதம் -முக்தி பெரும் ஜீவன் சரீரத்தில் இருந்து கிளம்பும் விதம் ஆராயப்படுகிறது –
11 அதிகரணங்கள்–20 ஸூத்ரங்கள்–

————————————————————————————————————————

அதிகரணம் -1-வாகாதி கரணம்–2 ஸூத்ரங்கள் –
மரணம் அடைகின்றவனின் வாக்கு என்னும் இந்த்ரியம் மனத்துடன் இணைந்து விடுகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-1- வாக் மனஸி தர்சநாத் சப்தாத் ச –காண்கையாலும் வேதத்தில் ஓதப்படுவதாலும்
4-2-1- அத ஏவ சர்வாணி அநு

————

அதிகரணம் -2- மநோதிகரணம் – 1 ஸூத்ரம்-
மனம் பிராணனுடன் சேர்த்தியை அடைகிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-3-தத் மன பிராணா உத்தராத் —

——————-

அதிகரணம் -3- அத்யஷாதி கரணம் -1 ஸூத்ரம்–
பிராணன் ஜீவனுடன் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-4-ஸ அத்யஷே ததுபக மாதிப்ய —

—————–

அதிகரணம் -4-பூதாதிகரணம் -2 ஸூத்ரங்கள்-
ஜீவனுடன் கூடிய பிராணன் மற்ற பூதங்களுடன் சேர்ந்த தேஜஸ் ஸில் சேர்க்கிறது என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-5-பூதேஷு தச்ச்ருதே –
4-2-6-நைகஸ்மின் தர்சயதோ ஹி —

——————

அதிகரணம் -5-ஆஸ் ருத்யுபக்ரமாத் அதிகரணம் -7 ஸூத்ரங்கள்-
வெளிக்கிளம்புதல் -உத்க்ராந்தி எனபது மோஷம் பெறுபவன் மற்றவர்கள் இருவருக்கும் மூர்த்தன்ய நாடியில் புகுவதற்கு
முன்பே பொதுவானது என்று நிரூபிக்கப் படுகிறது
4-2-7-சமா நா ச ஆஸ் ருத்யுபக்ரமாத் அம்ருதத்வம் ச அநு போஷ்ய —
4-2-8-ததா பீதே சம்சார வ்யபதேசாத் —
4-2-9-ஸூ ஷ்மம் பிரமாணத ச ததா உபலப்தே –
4-2-10-ந உப மர்த்தே ந அத
4-2-11-அஸ்ய ஏவ சோபபத்தே
4-2-12-பிரதிஷேதாத் இதி சேத ந சாரீராத் ஸ்பஷ்டோ ஹி ஏகேஷாம் —
4-2-13-ச்மர்யதே ச

————

அதிகரணம் -6-பர சம்பத்த்யதிகரணம் –1 ஸூத்ரம்-
தேஜஸ் போன்றவை பரமாத்மாவுடன் இணைகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-14-தாநி பரே ததா ஹ்யாஹ

—————

அதிகரணம் -7-அவிபாகாதி கரணம்–1 ஸூத்ரம் –
பரமாத்மாவிடம் சேர்கின்றன ஒழிய லயம் அடைவது இல்லை
4-2-15-அவிபாகோ வசநாத் —

——————–

அதிகரணம் -8-ததோகோதி கரணம் –1 ஸூத்ரம்-
மூர்த்தன்ய நாடியின் மூலமே முக்தி அடைபவன் தன சரீரத்தை விட்டு வெளியே கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது
4-2-16-ததோ கோக்ரஜ்வலநம் தத் பிரகாசி தத்வாரோ வித்யா சாமர்த்யாத் தத்தேஷ கஸ்ய நு ஸ்ம்ருதி யோகாச்ச ஹார்த்தா நுக்ருஹீத க்சதாதிகயா

————–

அதிகரணம் -9-ரச்ம்யநு சாராதி கரணம் -–1 ஸூத்ரம்-
சூரியனின் கிரணங்கள் மூலமாகவே ப்ரஹ்ம ஞானி மேலே செல்கின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது-
4-2-17-ரச்ம்ய நு சாரீ-

———————-

அதிகரணம் -10-நிசாதிகரணம் -1 ஸூத்ரம் –
இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம ஞானி பிரமத்தை அடைவான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-2-18-நிசி நேதி சேத் ந சம்பந்தச்ய யாவத்தேஹ பாவித்வாத் தர்சயதி ச –

———————

அதிகரணம் -11-தஷிணாயநாதி கரணம் -2–ஸூத்ரங்கள்–
தஷிணாய நத்தில் மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம ப்ராப்தி உண்டு என்று நிரூபிக்கப் படுகிறது
4-2-19-அத ச அயநே அபி தஷிணே –
4-2-20-யோகிந ப்ரதி ச்மர்யேதே ச்மார்த்தே சைதே

———————————————————

நான்காம் அத்யாயம் -பல அத்யாயம்–கதி பாதம் -பரமபததுக்கு அழைத்துச் செல்லப்படும் வித்யா பலம் கூறப்படுகிறது
— 5 அதிகரணங்கள்–15 ஸூத்ரங்கள்
———————————————————————————————————————————

அதிகரணம் -1- அர்ச்சிராத்யாதி கரணம் -1 ஸூத்ரம்-
அனைத்து ப்ரஹ்ம விதியை நிஷ்டர்களும் அர்ச்சிராதி மார்க்கம் என்னும் ஒரே வழி மூலம் மோஷம் அடைகிறார்கள் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-3-1-அர்ச்சிராதி நா தத்ப்ராதிதே –

—————

அதிகரணம் -2-வாய்வதிகரணம்-1 ஸூத்ரம் –
சம்வத்சரத்தை அடையும் முக்தன் அதன் பின்னர் ஆதித்யனை அடைவதற்கு முன்னர் வாயுவை அடைகிறான் -என்று நிரூபிக்கப் படுகிறது —
4-3-2-வாயும் அப்தாத் அவிசேஷ விசேஷாப்யாம்

அதிகரணம் -3–வருணாதி கரணம் –1 ஸூத்ரம்–
தடித் எனப்படும் மின்னல் பின் வருணனும் இந்த்ரனும் அடையப் படுகிறார்கள் -என்று நிரூபிக்கப் படுகிறது –
4-3-3-தடித- அதி வருண -சம்பந்தாத் —

——————

அதிகரணம் -4-ஆதி வாஹாதிகரணம்-2 ஸூத்ரங்கள் –
அர்ச்சிஸ் போன்றவர்கள் ப்ரஹ்ம ஞானியை ப்ரஹ்மத்திடம் அழைத்துச் செல்லும் தேவதைகள் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-3-4-ஆதி வாஹிகா- தல்லிங்காத்-
4-3-5- வைத்யுதேந ஏவ தத் தச்ச்ருதே –

————————

அதிகரணம் -5-கார்யாதிகரணம் -10 ஸூத்ரங்கள்-
ஆதி வாஹிகர்கள் யாரை ப்ரஹ்மத்திடம் அழைத்து செல்கிறார்கள் எனபது நிரூபிக்கப் படுகிறது
4-3-6-கார்யம் பாதரி அஸ்ய கத்யுபபத்தே
4-3-7- விசேஷி தத்வாத் ச
4-3-8-சாமீப்யாத் து தத்வ்யபதேச –
4-3-9-கார்யாத்யயே ததத்ய ஷேண சஹாத பரம் அவிதா நாத் —
4-3-10-சம்ருதேச்ச
4-3-11-பரம் ஜைமினி முக்யத்வாத்
4-3-12-தர்ச நாத் ச —
4-3-13-ந ச கார்யே பிரத்யபி சந்தி —
4-3-14-அப்ரதீ காலம்ப நாத் நயதி இதி பாதராயண உபயதா ச தோஷாத் தத்க்ரது ச
4-3-15-விசேஷம் ச தர்சயதி

—————————————————–

முக்தி பாதம் -ப்ரஹ்மத்தை அடைந்த முக்தன் பெரும் ஐஸ்வர்யம் கூறப் படுகிறது
6 அதிகரணங்கள்–22-ஸூத்ரங்கள்

அதிகரணம் -1- சம்பத்ய ஆவிர்பாவாதி கரணம் -3 ஸூத்ரங்கள் –
முக்தாத்மா ஸ்வரூபத்தின் விளக்கத்தை அடைகிறான் எனபது நிரூபிக்கப் படுகிறது –
4-4-1-சம்பத்ய ஆவிர்பாவ -ஸ்வேந சப்தாத் —
4-4-2-முக்த பிரதிஜ்ஞா நாத் —
4-4-3-ஆத்மா ப்ரகரணாத்

—————–

அதிகரணம் -2-அவிபாகே நத்ருஷ்டவாதிகரணம் -1 ஸூத்ரம்-
முக்தன் பர ப்ரஹ்மத்தை விட்டு பிரியாதவன் என்று எண்ணிய படியே அனுபவிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-4-அபிபாகே ந த்ருஷ்டத்வாத் –

————————–

அதிகரணம் -3-ப்ரஹ்மாதிகரணம்—3 ஸூத்ரங்கள் –
ஸ்வேன ரூபேண ஸ்வரூபம் பெறுவது அல்லாமல் -அபஹதபாப்மா போன்ற எட்டு வித தன்மைகளையும் முக்தாத்மா அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-5-ப்ராஹ்மேண ஜைமினி உபன்யாசாதிப்ய-
4-4-6-சிதி தந்மாத்ரேன ததாத்மகத்வாத் இதி ஔடுலொமி —
4-4-7-ஏவம் அபி உபன்யாசாத் பூர்வபாவாத் அவிரோதம் பாதாராயண –

———————

அதிகரணம் -4-சங்கல்பாதி கரணம் – 2 ஸூத்ரங்கள்-
தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-8-சங்கல்பாத் ஏவ தத்ஸ்ருதே –
4-4-9-அத ஏவ ச அநந்ய அதிபதி

———————–

அதிகரணம் -5-அபாவாதி கரணம் –7 ஸூத்ரங்கள்-
முக்தன் சில கட்டங்களில் சரீரம் உள்ளவனாயும் சில கட்டங்களில் சரீரம் அற்றவானாகவும் உள்ளான் என்று கூறப்படுகிறது –
4-4-10-அபாவம் பாதரி -ஆஹா ஹி ஏவம் –
4-4-11-பாவம் ஜைமினி விகல்பாமந நாத் –
4-4-12-த்வா தசா ஹவத் உபயவிதம் பாதராயண அத –
4-4-13-தன்வ பாவே சந்த்யவத் உபபத்தே —
4-4-14-பாவே ஜாக்ரவத் –
4-4-15-ப்ரதீபவத் ஆவேச ததா ஹி தர்சயதி
4-4-16-ஸ்வாப்யய சம்பத்யோ ரன்யதராபேஷம் ஆவிஷ்க்ருதம் ஹி

———————————

அதிகரணம் -6-ஜகத் வ்யாபார வர்ஜாதி கரணம் -6 ஸூத்ரங்கள்-
ஸ்ருஷ்டியாதி செயல்பாடுகள் முக்தனுக்கு இல்லை -போகத்திலே மட்டுமே சாம்யம் –
சம்சாரத்துக்கு முக்தன் திரும்புவது இல்லை -எனபது போன்றவை நிரூபிக்கப் படுகின்றன
2-4-17-ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அசந்நிஹிதத்வாத் ச —
2-4-18-பிரத்யஷோ பதேசாத் இதி சேத் ந அதிகாரிக மண்டல ஸ்தோக்தே-
2-4-19-விகாராவர்த்தி ஸ ததா ஹி சிததிமாஹ-
4-4-20-தர்சயத ச ஏவம் ப்ரத்யஷாநுமாநே-
4-4-21-போக மாத்ர சாம்ய லிங்காச்ச-
4-4-22-அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் —

—————

முதல் அதிகரணம் -ஜிஜ்ஞாச அதிகரணம்
முதல் ஸூத்திரம் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா
அத -கர்ம விசாரம் செய்து முடித்த பின்பு
அத -கர்ம விசாரம் முடிந்த காரணத்தாலேயே
ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -இச்சைக்கு இலக்கான ப்ரஹ்ம விசாரம் செய்யத் தக்கது-

அத -அதற்குப் பிறகு -சங்கர பாஷ்யம் -சாதன சம்பந்தியின் ஆனந்தர்யமே -அது பொருந்தாது என்று மறுத்து-
ப்ரஹ்ம ஸ்வரூபம் பற்றி மற்றவர் தப்பாக கொள்வதை மறுத்து -லகு மகா பூர்வ பஷம் சித்தாந்தம்-

கர்ம மீமாம்சையில் அர்த்த வாத அதிகரணம் –
ஆம் நாயச்ய க்ரியார்த்தத்வாத் ஆனந்தக்யம் அததர்த்தா நாம் தஸ்மாத நித்யமுச்யதே  -ஸூத்திரம்
கர்த்தவ்யார்த்தங்களை நியமேந போதிப்பதே வேதங்களின் க்ருத்யம்
அர்த்தவாத ரூபங்கள் -பிராமணியம் சம்பவிக்க மாட்டாது
வாயவ்யம் ச்வேதமால பேத பூதி காம -கர்மம் கர்தவ்யமாக விதிக்கப் பட்டது
அடுத்த வாக்கியம் -வாயுர்வை ஷேபிஷ்டா தேவதா -வாயு  தேவதையின் பெருமை சொல்லும்
இது அர்த்தவாத வாக்கியம் –
கர்மம் விதிக்க வில்லை -விதி வாக்கியம் இல்லையே
விதி நாது ஏக வாக்யத்வாத் ச்துத்யர்த்தேன விதிநாம ஸ்யு-என்று முன் வாக்யத்துடன் சேர்த்து ஏக வாக்யமாக பிரமாண்யம் -ஜைமினி காட்டி அருளி
கார்யத்தில் அன்வயியாத ப்ரஹ்மம்-சித்த வஸ்துவை ஜிஜ்ஞாச்யமாக
ஸ்திரம் -அஸ்திரம் அறிந்து -அத -அத பதார்த்தம் –

———————————————————————————–

ஜன்மாத் யதிகரணம் –
ஜன்மாத்யஸ்ய யத -ஸூ த்த்ரம்
ஜந்மாதி -அஸ்ய -யத -மூன்று பதங்கள்
ஜந்மாதி -உத்பத்தி -ஸ்திதி -பிரளயங்கள்
அஸ்ய -கண்ணால் காணப்படும் சேதன மிஸ்ரமான பிரபஞ்சங்கள்
யத -எந்த வஸ்துவின் இடத்தின் நின்றும் ஆகின்றனவோ
அது தான் பர ப்ரஹ்மம்
தைத்ரிய உபநிஷத் ப்ருகு வல்லி-
யதோவா இமானி  பூதானி ஜாயந்தே யேன ஜாதானி ஜீவந்தி யத் பிரயந்த்ய பி சம்விசந்தி தத் விஜிஜ்ஞாஸ் ஸ்வ தத் ப்ரஹ்மேதி-

இங்கே பூர்வ பஷம் –
வ்யாவர்த்தகங்கள் பல -வ்யாவர்த்யமும் பலவாக வேணுமே
தேவ தத்தன் பருத்து கறுத்து யுவாவாய் செந்தாமரைக் கண்ணனாய் இருந்தான் –
அதோ பஷி இருப்பது தேவ தத்தன் கழனி-போலே மூன்றையும் ஜ்ஞாபக லஷணம்
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –
அறிந்த தன்மை கொண்டு ப்ரஹ்மம் காட்டப் பட முடியாது -பூர்வ பஷம் –

லோ வ்ருஷப
யுவா நீலோ வாமன பங்குச்ச தே
நீல வஸ்த்ர தாரீ ஸ்வேதா வஸ்த்ர தாரீ தேவ தத்த -கால விசேஷத்தால்
உழவன் விதைத்து பயிர் செய்து அறுப்பானே

——————————————————————————-

அடுத்து -சாஸ்திர யோநித்வாத் -அதிகரணம்
சாஸ்திர யோநித்வாத் -ஸூத்த்ரம் -சாஸ்த்ரத்தை பிரமாணமாக கொண்டபடியால் –
அப்பஷோ வாயு பஷோ-தீர்த்தத்தை குடிப்பவன் -வாயுவை பஷிப்பவன் -சப்த்தார்த்தம்
தீர்த்தத்தை மட்டும் குடிப்பவன் -வாயுவை மட்டுமே பஷிப்பவன்-போல சாஸ்திரம் ஏவ யோனி-பிரமாணம்-

இங்குப் பூர்வ பஷம்
அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவத் -வேறு பிரமாணத்தால் ப்ரஹ்மம் சித்தித்து விட்டால் அங்கெ சாஸ்த்ரம் பிரவர்த்தியாது
பூம் யங்கு ராதிகம்   சகர்த்ருகம் –கார்த்யத்வாத் -கடவத் -அனுமான சரீரம்
வேதாந்த சாஸ்திர விசார ரூபமான ப்ரஹ்ம விசாரம் -செய்யத் தக்கது அன்று-

இங்கு சித்தாந்தம்
விஸ்வா மித்ரர் -தவ வலிமையால் சிருஷ்டி -அந்யமிந்த்ரம் கரிஷ்யாமி –
ஆகையால் சாஸ்திரமே பிரபல பிரமாணம்-

——————————————————————————————

நான்காவது -அதிகரணம்
சமன்வயாதி கரணம்-
தத் து சமன்வயாத் -ஸூத்த்ரம்
தத் -கீழ் சொன்ன சாஸ்திர பிரமாண கதவம்
சமன்வயாத் -புருஷார்த்தமாக அன்வயிக்கிற படியால்-

இங்கு பூர்வ பஷம்
தெரிந்து கொள்ள வேணும் -என்கிற விருப்பம் உண்டாகாத வஸ்துவை சாஸ்திரம் பிரவர்த்தனம் பண்ணாதே
இஷ்ட பிராப்தி -யாகம் போல்வன
அநிஷ்ட பரிஹாரம் -மாம்ச பஷணம் நிவ்ருத்தி
வஸ்துவே கண்ணுக்கு தெரியாமல் -பிரயோஜனத்வம் கூடாதே-

இங்கு சித்தாந்தம்
இதுவே ஸ்வயம் பிரயோஜனம் -பரம புருஷார்த்தம்
பரமானந்த ஹேது பூதம் -பரமானந்த சந்தோஹஸ்வரூபம்-

—————————————————————————————-

இந்த நான்கும் சதுஸ் ஸூ த்ரி -சாஸ்த்ர ஆரம்ப சமர்த்தன பரங்கள் –
சோமாசி ஆண்டான் -முதல் ஸூத்ரம் சாஸ்த்ர ஆரம்ப சமர்த்தன பரம் என்பர்

——————————————————————————————-

அடுத்து ஈஷத் அதிகரணம் -இதில் ஜகத் காரண வஸ்துவுக்கு சங்கல்ப விசேஷம் -முக்கியம்
அதேனமான பிரதானமாக இருக்க முடியாதே
ஜீவன் ஜகத் காரண வஸ்து இல்லை காட்ட -ஆனந்த மய அதிகரணம்
ஆனந்த மயோப்யாசாத் -1-1-13-
ஆனந்தமய
அந்ய-சப்தம் மேல் உள்ள ஸூத்ரம் இருந்து வருவித்துக் கொண்டு
அப்யாசாத் -அளவு கடந்த
ஆனந்த வல்லி -துக்க மிஸ்ரமான ஜீவாத்மாவுக்கு சேராதே
தஸ்மாத்வா  ஏதஸ்மாத்  விஜ்ஞ்ஞான மயாத் அன்யோந்தர ஆத்மா ஆனந்தமய -ஆத்மாவை சொல்லி
ச்ரோத்ரியச்ய சாகா மஹதச்ய-முக்த ஆத்மாவை சொல்லி -அகாமஹத -விஷய விரக்தன்
ச்ரோத்ரியன் -வேதாந்த சரவணம் செய்து ப்ரஹ்ம உபாசனம் மூலம் பெற்ற -சோபாதிகம் நிருபாதிகம் இல்லை
ச ஏகோப்ரஹ்மண ஆனந்த -இயற்கையான -ஆனந்தம் பர ப்ரஹ்மத்துக்கே-

கோஹ்யவான்யாத் க பிராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹ் யேவா நந்தயாதி –
கோ வா அன்யாத்-கீழ் சொன்ன ஆகாசாதி -எந்த ஜந்து தான் ப்ராக்ருத மான ஆனந்தன் அடைய முடியும்
கோ வா பிராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தம் அடைய முடியும்
இப்படி அந்வய முகேன சொன்னதையே
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய –
ஏவம் தம் வித்வான் -இவ்விதமாக உபாசிப்பவன்
அம்ருதோ பவதி -மோஷ ஆனந்தம் அடைகிறான்
அயனாய -அந்த மோஷ ஆனந்தம் பெற
அந்ய பந்தா ந வித்யதே -அந்த பரம புருஷனை தவிர வேறு உபாயம் இல்லை
வ்யதிரேக முகேன  சொல்லிற்று
ச யச்சாயாம் புருஷே யச்சா சா யாதித்யே  ச ஏக -அவனே ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷன்-

இதன் மேல் பூர்வ பஷம்
ஆனந்த வல்லியில் -தஸ்மாத்வா  ஏதஸ்மாத்  விஜ்ஞ்ஞான மயாத் அன்யோந்தர ஆத்மா ஆனந்தமய -ஆத்மாவை சொல்லி
அந்த ஆனந்தமய ஆத்மாவுக்கு தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா -சரீர சம்பத்வத்வம் சொல்லி
அகர்ம வச்யனுக்கு சம்பாவிகம் இல்லையே

இங்கு சித்தாந்தம்
சரீரமாக கொண்டவன் -வேத வாக்கியம் உண்டே
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கைதான குணம் அவன் ஒருவனுக்கே
தயை குணத்தால் அடியார் துக்கம் கண்டு துக்கிப்பான்
இரண்டாவது ஸூத்த்ரம்
விகார சப்தான் நேதி சேன்ன ப்ராசுர்யாத்
அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யூர் விசோக –

—————————————————————————-

இரண்டாம் அத்யாயம் -சம்ருத்ய அத்யாயம்-
சம்ருத்ய நவகாச தோஷ பிரசங்க இதி சேத் –
கபில -சாங்க்ய மத நிரசனம் -மனு பராசர மக ரிஷிகள் வாக்யங்கள் விரோதிக்கும்

———————————————————————————-

இரண்டாம் அத்யாயம் முதல் பாதம் -க்ருத்ஸ ந ப்ரசக்தி-அதிகரணம்
பூர்வபஷ ஸூத்த்ரம் -ப்ரஹ்மம் ஜகத் காரணம் -வாதத்தில் ஜகத்தாக பரிணமிக்க  -ப்ரஹ்மமமோ நிர் வயவம் என்பதால்
ஏக தேச ந பரிணமிக்கிறது என்னும் பொது நிரவயவம் ஸ்ருதி விரோதிக்கும்
ப்ரஹ்மம் முழுவதுமே கார்யப் பொருளாக பரிணமிக்க வேண்டி வரும்
கீழே உபசம்ஹார அதிகரணத்தில் ஷீர திருஷ்டாந்தம் -பொருந்தாது -ஷீரம் சாவயவம் ஆகையாலே  –
மேல் சித்தாந்த ஸூத்த்ரம் -ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் –
து சப்தம் பூர்வபஷ வ்யாவர்த்திப்பிக்க வந்தது
ப்ரஹ்மம் நிரவயவம் -கார்யப் பொருளாக பரிணமிக்கும் -இரண்டும் ஸ்ருதி சித்தம்
லௌகிக பதார்த்த திருஷ்டியினால் கொள்ள முடியாது
சப்த பிரமாணம் ஒன்றாலே அறிய முடியும் -அநிர்வச நீயமான சக்தி விசேஷத்தை பொறுத்தது
பர ப்ரஹ்மத்துக்கு ஜகத் ஆத்மநா பரிணாமம் போலே பிரதி வஸ்து பூர்ணத்வமும் ஸ்ருதி சித்தம்-

—————————————————————————————

அடுத்த அதிகரணம் -பிரயோஜனவத்வ அதிகரணம் –
அவாப்த சமஸ்த காமன் –
இதில் முதல் ஸூத்ரம் -பூர்வபஷம்-( ஸ்ருஷ்டே ) ந பிரயோஜனவத்வாத்
மேல் சித்தாந்த ஸூத்திரம் -லோகவத் து லீலா கைவல்யம் –
மன் பல்லுயிர்களுமாய் பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டு யுடையான் -நம் ஆழ்வார்
நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -ஆண்டாள்
விஷம சிருஷ்டி காண்பதால் பஷபாதித்வமும் நிர்தயத்வமும் சங்கிக்க –
சங்கை தீர -அடுத்த ஸூத்திரம்
வைஷம்ய நைர்க்ருண்ய ந சாபேஷத்வாத் ததா ஹி தர்சயதி –
கருமங்களுக்குத் தக்கபடி -சிருஷ்டி-
இதன் மேலும் தோன்றும் சங்கைக்கு அடுத்த ஸூத்த்ரம்

——————————————————————————–

இரண்டாம் அத்யாயம் -இரண்டாம் பாதம் –
சர்வதா அநுபபத்தி அதிகரணம் –
சர்வ ஸூந்யவாதிகள் வாதம் நிரசிக்கப்படுகிறது
உத்பத்தி பாவத்தில் இருந்தா அபாவத்தில் இருந்தா
சர்வம் ஸூந்யம் என்பவர்கள் இந்த அர்த்தம் சாதிக்கும் பிரமாணம் உண்டு என்று இசையும் பஷத்தில்
பிரமாண சத்பாவத்தை இசைந்த போதே சர்வ ஸூந்ய  வாதம் தொலையுமே
அஸ்தி நாஸ்தி வாதங்கள் இங்கு இல்லை இப்பொழுது இல்லை
தேச காலங்களை சொல்லவே
சர்வதா -சர்வ பிரகாரத்தாலும்
அநுபபத்தே -சர்வ ஸூந்ய வாதம் உப பன்னம் ஆகாமையினாலே
உளன் எனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவனருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என இவை குணமுடைமையின்
உளன் இரு தகமையோடு ஒழிவிலன் பரந்தே-பாசுரம் ஆறாயிரப்படி  மொழி பெயர்ப்பே ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யத்தில் அருளிச் செய்து உள்ளார்

———————————————————————————————

முதல் அத்யாயத்தினால்
ஜகஜ் ஜென்மாதி காரணமாய் -சர்வ சேஷியான வஸ்து பர ப்ரஹ்மமே என்றும்
நான்முகனாதிகள் லீலைக்காக சிருஷ்டிக்கப் பட்டு உப சம்ஹரிக்கப் படுகிறார்கள்
அவன் நித்ய விபூதியில் ஸ்வ இச்சையினால் திவ்ய மங்கள விக்ரஹத்தை பரிஹரித்து
நித்ய முக்தர்களினால் அனுபவிக்கப் பட்டு கொண்டு இரா நின்றான் என்கிற முகத்தால்
ஸ்வரூப ஸ்வ பாதிகள் நிரூபிக்கப் பட்டன-

இனி இரண்டாம் அத்யாயத்தில்
பரபஷ பிரதிஷேப பூர்வகமாக சாதித்து கார்ய சாமான்யமும் பர ப்ரஹ்ம கார்யமே என்று சாதிக்கப் பட்டது-

ஆக இரண்டாலும் புருஷார்த்த ஸ்வரூபம் நிச்சயிக்கப் பட்டதாக தேறிற்று
அடுத்து மிகுந்த ருசி உண்டாக்கி இதர விஷய வைராக்கியம் விளைவிக்க
பின்னிரண்டு அத்யாயங்கள்
ஜிஜ்ஞாஸா ஸூத்ரத்திலே அந்த அர்த்தம் சாதிக்கப் பட்டு விட்டதே
பஞ்சாக்னி வித்யா நிரூபணத்தினால் விஷயங்களில் ஏற்படும் வைராக்கியம் கர்ம விசாரத்தினால் விளையாதே
அதனால் புன பிரயத்னம்
மூன்றாம் அத்யாயம் -கர்ம பலன்கள் நச்வரம் -நரக துல்யம் -பரமபுருஷ  பிராப்திக்கு உபாயம் தெரிவித்து
நான்காம் அத்யாயம் -உபாய பலமான உபேயத்தை தெரிவிக்கும் –

—————————————————————————————————–

மூன்றாம் அத்யாயம் -இரண்டாம் பாதம் -உபய லிங்க அதிகரணம்
ஜீவாத்மா -ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி மூர்ச்சாதி அவஸ்தைகளுக்கு ஹேதுவான
நாநா சரீரங்களை ஏற்றுக் கொண்டு
சுக துக்கங்களை அனுபவிக்கிறான் -என்று கீழே சொல்லி –
அப்படிப்பட்ட சரீரத்தில் பரமாத்மாவும் சம்பந்தம் பட்டு இருந்தாலும் சுக துக்கங்கள் ஒட்டாமல்
கல்யாணக் குணக் கடலாய் இருப்பவன் என்று காட்ட இந்த அதிகரணம்
ந ஸ்தான தோபி பரஸ்யோபயலிங்கம் சர்வத்ர ஹி -தலையான ஸூத்த்ரம்
பரஸ்ய -பரம புருஷனுக்கு
அபி -ஜீவாதிஷ்டித நாநா சரீரங்களில் இருப்பு இருந்தாலும்
ந -அபுருஷார்த்த சுக துக்க சம்பந்தம் கிடையாது
இதுக்கு ஹேது என் என்னில்
சர்வத்ர ஹி உபய லிங்கம் -பரம புருஷன் சர்வ ஸ்ருதி ச்ம்ர்திகளிலும்
ஹேய ப்ரத்ய நீகத்வம்
கல்யாணை கதா நத்வம்
என்கிற இரண்டு அசாதாராண தர்மங்களோடு கூடியவன்
அவன் அபஹத பாப்மா   -ஆனந்தமய அதிகரணத்தில் பார்த்தோம்
அகர்மவச்யன் முதல் அத்யாயம் இரண்டாம் பாதம்
அங்கு பூர்வ பஷ சரீரம் வேறு
இவ்விடத்தில் பூர்வ பஷ சரீரம் வேறு -சூஷ்ம இஷிகையால் உணர வேணும்

———————————————————————————————

மூன்றாம் அத்யாயம் கடைசி பாதம் –
சர்வ அன்ன அநு மதி அதிகரணம் –
முந்தின அதிகரணம் -ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு சமம் அவஸ்யகம் என்று சொல்லி
இதில் போஜன நியமம் ஆகிற நியம சம விசேஷம் ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு உண்டா -விசாரம்
சர்வ அன்ன அநு மதிச்ச ப்ரணாத்யயே தத் தர்சநாத் -ஸூத்திரம்-

ப்ரஹ்ம வித்யா அதிகாரியின் பிராண ஆபத்து விஷயமாகையாலே -எனபது ஸூ த்ரார்த்தம்
இங்கு பூர்வ பஷம் -ப்ர்ஹ்ம வித்யா நிஷ்டனுக்கு நிஷித்த ப்ரஹ்ம வித்யா நிஷ்டன் -உஷச்தன் என்பான்-
யானைப் பாகன் உண்டு மிகுந்த காறா மணியை பிராண ஆபத் தசையில்-உண்டு உயர் தரிக்கப் பெற்றான்
பிறகு அந்த யானைப் பாகன் கொடுத்த பானம் பருக வில்லை-ஆகார சுத்தி அவஸ்யகம்-

————————————————————————————

நான்காம், அத்யாயம்
மூன்றாம் அத்யாயம் உபாசன பரமாக பெரும்பாலும் செல்ல அதன் பலனை நிரூபிக்க நாலாம் அத்யாயம் அவதாரம் –
இதில் முதல் அதிகரணம் -ஆவ்ருத்த்ய அதிகரணம்
ஆவ்ருத்தி ரசக்ருதுபதேசாத் -முதல் ஸூ த்த்ரம்-

பூர்வ பஷம் -ஸ்வர்க்காதி-சக்ருத்-ஒரே தடவை போலே ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -பகவத் சிந்தன ரூபமான வேதனமும் சக்ருத்
மேலே சித்தாந்தம்

தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம்
வேதனம்
உபாசனம்
த்ருவா ஸ்ம்ருதி
சாஷாத் காரம்
பக்தி–பர்யாய சப்த்தங்கள் –
பக்த்யா த்வ அந்யயயா சக்யா அஹமேவம் விதோர்ஜூனா-ஸ்ரீ கீதா ஸ்லோஹம் போலே
தைலதாரா வத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம் என்று அறுதி இட்டு –
மேலே ஆறாவதாக -ஆப்ரயணாதி கரணம்
ஆப்ரயணாத் தத்ராபி ஹி த்ருஷ்டம் -ஸூ த்திரம்
ப்ரஹ்ம உபாசனம் -மரணாந்தமாக அனுஷ்டிக்கப் பட வேண்டும் -என்கிறது –

————————————————————————————————

இனி ததிகமாதி கரணம்
தததிகம உத்தர பூர்வாகயோ ரச் லேஷ விநாசௌ தத் வ்யபதேசாத் -ஸூத்திரம்
பூர்வ பாபங்களுக்கு விநாசமமும் -நசிக்கும்
உத்தர   பாபங்களுக்கு அச்லேஷமும் ஆகும் -தாமரை இலை தண்ணீர் போலே ஒட்டாது
இங்கு பூர்வபஷம் –
நாபுக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -அனுபவித்தே கருமம் தொலைக்க வேணும்
சித்தாந்தம்
இது சாமான்ய விஷயம்
நெருப்பு சுடும்
தண்ணீர் நெருப்பை அணைக்கும் இரண்டும் உண்மையே-ப்ரஹ்ம வித்யை சக்தியால் கரும சக்தி பிரதிஹதமாய் விடும் –

—————————————————————————————————

நிசாதி கரணம்
நிசி மரணம் இரவில் மரணம் -அதம கதிக்கே ஹேது பூர்வ பஷம்
ப்ரஹ்ம வித்துக்களுக்கு கர்ம சம்பந்தம் தேகம் யுள்ளவரைக்கும் மட்டுமே
அதனால் பாதகம் ஆகாது
திவா ச சுக்ல பஷச் ச -கீழே காட்டின வசனம் ப்ரஹ்ம வித்துக்களுக்கு சேராது

இனி தஷிணாயன அதி கரணம் –
ஒரே ஸூத்திரம்
தஷிணாயன மரணம் – சந்திர பிராப்தி பெற்று புநரா வ்ருத்தியும்
பீஷ்மர் ப்ரஹ்ம வித்து போல்வார் உத்தாராயண ப்ரதீஷை பண்ணினதாக சொல்லி
இதுவும் ப்ரஹ்ம வித்துக்களுக்கு இல்லை –
ஆக நிசி மரணமோ கிருஷ்ண பஷ மரணமோ தஷிணாயன மரணமோ பரம புருஷார்த்த பிராப்தியில் குறை இல்லை –

———————————————————————————————–

முடிவான அதிகரணம்
ஜகத் வியாபார வர்ஜாதி கரணம்
முக்த பிரஜைக்கு ஜகத் சிருஷ்டிக்கு அதிகாரம் இல்லை
பரமபதத்தில் நின்றும் மீட்சி இல்லை -இரண்டையும் சொல்லும்
பூர்வ பஷம் முக்தனுக்கு பரம புருஷன் சாம்யம் கிட்டும்
சத்யசங்கல்பத்வமும் கிட்டும்
சர்வ லோக சஞ்சாரம் -காமாந்நித்வமும் -காம ரூபித்வமும் –
லோகங்கள் அவனுக்கு ஆதீனம்
மேல் சித்தாந்தம்
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -அசாதாரண தர்மம் லஷணம் ப்ரஹ்மத்துக்கு சொல்லி –
வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி
ப்ரஹ்ம அனுபவம் செய்யும் இடத்து
தத் குணங்களிலும்
தத் விபூதிகளிலும்
ஏக தேசத்தையும் விடாமல்
பூர்த்தியாக அனுபவிப்பதே பலன்
பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம் செய்யும் பொழுது ஆனந்த சாம்யம் இந்த ஸ்ருதியினால் சித்திக்கும்
ச ஸ்வராட் பவதி -என்பதும் கர்ம வஸ்யம்
ஏஷ ஹ்யேவா நந்தயாதி இத்யாதி மூலம் முக்தன் சத்தா ஸ்திதி பிரவ்ருதிகள் எல்லாம்
பரம புருஷன் அதீநம் –

ஆனால் திரும்பி அவன் அனுப்புவானோ என்னில்
அநா வ்ருத்திச் சப்தாத் அநா வ்ருத்திச் சப்தாத் -சரம ஸூ த்திரம்
சாஸ்த்ரத்தை காட்டி ஸ்தாபித்தார் ஸூ த்த்ரகாரர்
ஈஸ்வரன் ஸ்வ தந்த்ரன் ஆனாலும்0
உந்மத்தன் அல்லன்
மூர்க்கன் அல்லன்
அரசிகன் அல்லன் –
சத்யசங்கல்ப்பன் என்ற பேர் பெற்றவன்
கிருஷி பண்ணி பெற்ற சேத்னனை  விடுவானோ
பரமபுருஷம் ஜ்ஞாநினம்  லப்த்வா
யானொட்டி  என்னுள் இருத்துவம் என்றிலன்
தானொட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று  என் உயிருள் கலந்து இயல்
வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே-என்றும்
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்து
தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும்
காட்கரையப்பன் கடியனே -என்றும்
ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகளைக்   கொண்டே ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்து தலைக் கட்டி அருளுகிறார்-

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ  P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ விஷ்ணு புராணம் ஐந்தாவது அம்சம்—ராஸ லீலை –

January 27, 2023

ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஸ்லோகம் -4-

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

————-

ஸ்ரீ பாகவதம் 10 ஸ்கந்தம் போல் இங்கும் ஐந்தாம் அம்சம் பூர்த்தியாக ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் 13 அத்யாயம் -14 ஸ்லோகம் -ஸரத் காலம் -சந்திரோதயம் -அல்லி மலர் இரவில் மலரும் -வாசனை மநோ ஹரமாக இருக்கும்

கண்ணனுக்கே ஆமது காமம் –

ஷீரம் சக்கரை ஏவ நம்பி மூத்த பிரானும் கண்ணனும்
சேர்ந்தே இருப்பார்கள்
விநா ராமேண -தனித்து சென்று புல்லாங் குழல்
நாராயணீயம் -இது வாய் அம்ருதம் பருகிற்றே -மாமன் உதடு பட்ட -வாலியும் இத்தைக் கொண்டே –
கஷ்டங்களையே ஊதித் தள்ளி மங்களம் அளிப்பவன் வேணுகான கிருஷ்ணன்

அந்த வேணுகானத்தைக் கேட்டு ஆய்ச்சியர் அனைவரும் பரவசமடைந்து மாளிகைகளைத் துறந்து பரபரப்புடன் ஸ்ரீகிருஷ்ணன் இருக்குமிடந்தேடி விரைந்து சென்றார்கள். அவர்களில் ஒருத்தி கண்ணனின் குழலிசையை உற்றுக்கேட்டு, அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள். மற்றொருத்தி அருகில் சென்று கிருஷ்ணா கிருஷ்ணா! என்று ஆவலோடு அழைத்துக்கொண்டும் வேறொன்றும் பேசமுடியாமல் நாணத்தோடு நின்றாள். வேறு ஒருத்தி கிருஷ்ணனிடம் கொண்ட அன்பு மிகுதியினாலே, ஒன்றும் தெரியாதவளாய் பக்கம் நின்றாள்.
ஒரு பெண், தன் மாளிகையிலிருந்து வெளியே வரும்போது அங்கே தன் மாமனாரைப் பார்த்தாள். பயந்தாள். கண்ணனிடம் போகமுடியாததால் கண்களை மூடிக்கொண்டு, தன்மயமாய், அந்தக் கோவிந்தனைத் தியானஞ் செய்து கொண்டிருந்தாள். மற்றொருத்தி கண்ணனிடத்திலேயே சித்தம் பற்றியிருப்பதாலுண்டான ஆனந்தத்தால், புண்ணியங்களும் அவளையடையாமற் போனது பற்றிய பெருந் துக்கத்தால் பாவங்களும் மாளப்பெற்றவளாய் பரப்பிரம்ம சொரூபியாய், ஜகத்காரணமான அவனையே சிந்தித்து, மூச்சடக்கி முக்தியை அடைந்தாள். இவ்விதமாகத் தன்னைச் சூழ்ந்த கோபியர்களுடன் ராஜ கோபாலன் ராஸக்கிரீடை என்ற உற்சவத்தில் குதூகலமாய் இருந்தான்.

கண்ணில் நிற்பவன் கண்ணன்-சிந்தயந்தி-நினைப்பவள் -இதுவே நிரூபகம் இவளுக்கு

வாசல்படி -மேல் வர -நடைபாதை ரேழி -கூடம் அடியார் சேர்க்கை -சமையல் மனம் பக்குவம் -பூஜை -வழிபட்டால் முற்றம் முக்தி கிட்டும்

அங்கனா மணிகினி யம்புஜ பாணிகி மங்களாவதிகினி மங்களம் … கோவிந்தா மாதவா யாதவ குல நந்தனா

மாலைப்பூசல் -மாலையும் வந்தது மாதவன் வரவில்லையே

வேய் மரு தோளிணை மெலியுமாலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்கா
காமரு குயில்களும் கூவுமாலோ கண மயிலவை கலந்து ஆலுமாலோ
ஆமருவின நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் யாயிரம் ஊழி யாலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ தகவில்லை தகவிலையே நீ கண்ணா –10-3-1-

மறைய -நிதானம் அடைந்து தேட -அனுகாரம்-அருகில் இருக்கும் உணர்வு கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்

சாரங்க பாணி தளர் நடை நடவானோ -நடந்து காட்டி
காளியனாக ஒருத்தி -தலையிலே நடமாடி -பக்த பாத தூளி பெற்ற பாக்கியவதி
சேறு செய்யும் தொண்டர் சேவடி செழும் சேறு -பாத தூளி என் சென்னிக்கு அணிவேனே
காளியன் தலையாக இருந்து வைக்கக் கொடுத்து வைக்க வில்லையே -கூரத்தாழ்வான்

மார் தட்டி நாம் அனுபவிக்கிறோம் என்று இருந்தீர்கள் நான் அப்படி இல்லை கூட்டிப்போனான்
எனக்காக பூ சூட்டினான் என்று நினைக்க விட்டுப் போனான்
இன்னும் ஒரு கோபியைக் கூட்டிப்போனான் -கையைப் பிடித்து

இழுத்து போன கால் அடிசுவடு
ஹஸ்த ஸம் ஸ்பர்சம் -கிடைத்த பாக்யம் -நினைத்தேன் விட்டுப்போனான்
மார் தட்டுவதைக் கழித்து மார்க்க சீர்ஷம் வருவது துர்லபம்

திரு நாமங்களை சங்கீர்த்தனம் பண்ணினால் வராமல் இருக்க முடியாதே-பட்டுப் பீதாம்பரம் அணிந்து சேவை சாதிக்க –

சாத்மிக்கவும் மறைந்தான் என்றுமாம்
அன்பு நிலைத்து இருக்கவே பிரிவித்துயர் கொடுத்தான்
lock down பக்தி உபன்யாசங்கள் மிக்கு இருந்ததே
நமது பக்தி வளரவே –
கூடி இருந்து அனுபவிக்கவே
பின்னாலே இருப்பது அடிச்சுவடு
முன்னாலே தோன்றிக் காட்டி அருளுவானே

ராச நடனம் -ஒரே கண்ணன் நடுவில் இதில்
பாகவதம் கோபிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு கண்ணன்

இவர்கள் கை பிடிக்க -கண்ணன் ஒவ்வொருவர் கைகையும் ஏக ஏக பிடித்து கண்ணை மூடி மெய் மறந்த இருக்க கோத்து விட்டானாம்
இவன் நிலவையையும் அல்லியையும் கண்ணன் பாட
இவர்கள் எல்லாமே கண்ணனாகவே நினைத்து ஆட

பராசரர் மைத்ரேயருக்குச் சொல்ல -சங்கை அவருக்கு வர –
கிருஷ்ணனே அதர்மம் செய்யலாமா -அவன் செய்வதே தர்மம் -நமக்குத்தான் வேதம் சாசனம் பண்ண வேண்டும்
நித்ய ப்ரஹ்மச்சாரி -உத்தரை கர்ப்பம் -பரீக்ஷித் -கரிக்கட்டை -தாண்டி காட்டினான்

இவனைப்பார்த்து பின் செய்வார்கள் -அவன் செய்வதை நாம் செய்யப்பார்ப்பது கூடாதே
விஷம் சிவன் உண்ணுவதோ -காளியன் தலையில் நடமாடுவது கோவர்தனம் தூக்குவதோ முடியாதே
செய்வதை ரசிக்க வேண்டும்
சொல்வதை செய்ய வேண்டும்
ராமன் அனுஷ்டித்துக் காட்டியவரையே செய்ய வேண்டும்
கோபிகள் செய்தவை பாபம் ஆகாதோ என்றால் -ஆத்ம ஸ்வரூபம் -அனைவருக்கும் அந்தர்யாமி -அனைவருமே அவனுக்கு சரீரம் தானே

கேட்பவர் மனம் அருவறுப்பு ஆகுமே என்றால் -ஜீவாத்மா பரமாத்மாவுடன் அனுபவம் என்று உணர வேண்டும்

அஷ்டபதி முதல் ஸ்லோகம் -ராதா -குழந்தை -நந்தகோபன் -விருத்தாந்தம் விளக்கும்

நினைத்தால் 2 வயசாகவும் 20 வயசாகவும் தமர் உகந்த உருவம் கொள்பவன் அன்றோ

ஸ்ரீஜயதேவரின் புகழ்பாடும் தியான ஸ்லோகங்களுக்கு பின்னர், முதல் ஸர்கத்தில்
“மேகைர் மேதுர மம்பரம்“ என்று தொடங்கும் முதல் ஸ்லோகம்
“காரிருள் கவ்வுகிறது–.வானில் மேக மூட்டம் காணப்படுகிறது,குழந்தை கிருஷ்ணன் அச்சப் படுகிறான்,அவனை வீட்டில் கொண்டுபோய் சேர்”
இவ்விதம் நந்த கோபன் உத்திரவுப்படி, செல்லும் வழியில், யமுனை நதிக்கரையில் புதர்களின் இடையே
ராதாவும் மாதவனும் புரிந்த கேளிக்கைகள் ஜயமடையட்டும் என்று மங்களா சாஸனம் செய்து கவிதையைத் தொடங்குகிறார்,

12.இவ்விடம் குழந்தை என்று கண்ணன் அழைக்கப் பட்டு மேலும் ராதையோடு கேளிக்கை புரிந்தான்
என்று கூறியதிலிருந்தும் கண்ணனுனடய வயது மிகக் குனறவு என்பது ஊர்ஜிதமாகிறது.
அவன் ராஸ லீலா கேளிக்கை எல்லாம் தன் பத்து வயதிற்குள் முடித்து விட்டான் என்றும் கூறப்படுகிறது.
இதிலிருந்து ராஸலீனல ஒரு தெய்வீகக் கேளிக்கை எனறு சந்தேகமறத் தெரிகிறது.
மேலும் “பய க்ருத் பய நாசன:” என்று பயத்தை உண்டாக்குபவனும்,அப் பயத்தை அழிப்பவனும் அவனே என்றிருக்க
கண்ணன் பயப்படுகிறான் என்ற விவரிப்பு, கண்ணன் குழந்தை ரூபத்தை ஏற்றது மட்டுமல்லாது,
அக் குழந்தைக்குறிய குணங்கனளயும் வெளிப்படுத்தி யுள்ளான் என்பது தெளிவாகிறது,

ஸ்ரீ நாராயண தீர்த்தரும் அவர் அருளிச் செய்த ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணியில்

ராஸக்ரீனட
34.7வது தரங்கத்தில்,கோபிகைகள் ஸம்ஸாரத்தில் வெறுப்பு ஏற்பட்டு அதனிடம் இருந்து விடுதலை அடையவே
ஸ்ரீ கிருஷ்ணனிடம் புகலிடம் அனடந்தோம்,.எனக் கூறிய பின் ராஸ க்ரீனட விவரிக்கப் படுகிறது.
ஆயர்பாடியிலுள்ள மங்கையர் அநேக ஆயிரம் பிறவிகளில் செய்த தவத்தால் கோப ஸ்த்ரீ என்ற
இந்தப் பிறவியில் ஸச்சிதானந்த வடிவான ஸ்ரீ கிருஷ்ணனின் திவ்ய தர்ஸனம்
பெற்று பிறவியின் பயனை அனடந்தனர் என்று கூறுகிறார்.(7வது தரங்கம் ஸ்லோ .4) .

வனவாச ராமர் திருச்சேறை சேவை உண்டே
தாடி இல்லையே-ஜடாமுடி சங்கல்பித்துக் கொண்டான் -பிரம்மாவுக்கு வெள்ளைத்தாடி உண்டே அவன் அப்பனுக்கு இல்லையே

அங்கங்கள் அழகு மாறி இருப்பதைக் கண்டு ஆலிங்கனம் செய்ய விரும்பிய தண்டகாரண்ய ரிஷிகள் பிரார்த்தித்த படியால் இந்த லீலைகள் -கேட்டபடி அனுக்ரஹம் செய்பவன் அன்றோ

இப்படி ஐந்து கேள்விகளுக்கும் சமாதானம்

மேலும் இரண்டு கேள்விகளுக்கும் பதில்கள் உண்டே
இவன் ஒருவனே புருஷோத்தமன் -மற்றவர் ஸ்த்ரீ பிராயர்
பெண்கள் வீட்டுக்கு திரும்பினார்களா –
போனார்கள் -இவர்கள் போய் வந்ததே அறியாமல் இருந்தார்கள்
இவர்கள் வடிவத்தில் இவர்கள் விட்ட வேலைகளை இவனே செய்தானாம்

சிசுபாலன் முக்தி இவர்களுக்குச் சொல்ல வேண்டுமா
ராதை போல் அனைத்தும் கண்ணனே -ஒரு சாரார் -ஆழ்வார்கள் போல்வார்
புதிதாக வரும் சாரார் கன்னிப்பெண்
திருமணம் -நாராயணனை அறிந்து உபாயாந்தரம் -சரணாகதி
மூவருக்கும் ஒரே பலன் -ரஸ க்ரீடை இத்தையே காட்டும்
போக சாம்ய பிரதத்வம்
நமக்கும் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் போல்
கௌஷீகம் ப்ரஹ்ம வித்யை சொல்லுவதையே காட்டும்-சேஷ பூதன் ஒரே அடையாளம் நாமம் ரூபம் வாசி இருக்காதே அங்கு

பலன் -உலகியல் காமம் வராதே -மனசில் அழுக்கு போகுமே -காஞ்சி மஹா பெரியவர் காட்டி அருளினாராம் –
சந்நியாசி தினமும் இத்தை பாராயணம் பண்ண வேண்டுமாம்
அதி மானுஷ ஸ்தவம் -இத்தை கீர்த்தனம் செய்வது பரம பாவனம் என்று காட்டி அருளுகிறார்

————————–

13. ராஸக் கிரீடை

இந்திரன் வணங்கிச்சென்ற பிறகு கோபாலர்கள் வந்து கோவர்த்தன பர்வதத்தையெடுத்த ஸ்ரீகிருஷ்ணனை நோக்கி, அப்பா கிருஷ்ணா! இப்போது நேரிட்ட பெருமழையிலிருந்து எங்களையும் பசுக்களையும் காத்தாய்! உன் செயல்கள் அற்புதமானவை! ஏனென்றால் கோவர்த்தன மலையை நீ குடையாகப் பிடித்திருக்கிறாய். உனது பிறப்போ தாழ்ந்த இடைக்குலம் தண்ணீரில் காளிங்க சர்ப்பராஜனை அடக்கியதும் பனங்காட்டில் தேநுகாசுரனை அழித்ததும் கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்ததுமாகிய உனது பாலிய லீலைகள் எங்கள் இதயங்களில் சந்தேகம் ஏற்படுத்தியுள்ளன மிகவும் பராக்கிரமமுள்ளவனே! சத்தியம், சத்தியம்! ஸ்ரீ ஹரியின் திருவடிகளின் மேல் ஆணை! நீ மனிதனல்ல? ஓ கிருஷ்ணா! பெண்டுகள் சிறுவர்கள் முதலிய இந்த ஆய்ப்பாடியில் இருப்பவர்கள் யாவருமே உன்மீது அன்பு கொண்டிருப்பதும், சகல தேவர்களும் ஒன்று கூடிச் செய்தாலும் செய்யமுடியாத உன் காரியங்களும் பாலியத்திலேயே இத்தகைய வீரம் இருப்பதும் இழிவான எங்கள் குலத்தில் உனது பிறப்பும் எங்களுக்குச் சந்தேகத்துக்கு ஏதுவாக இருக்கின்றன. நீ தேவனோ, தானவனோ, யக்ஷனோ, கந்தர்வனோ, யாரோ தெரியவில்லை யாராயிருந்தால் என்ன? நீ எங்களுக்கு உறவுமுறையானவன் உனக்குத் தண்டமிடுகிறோம் என்று வணங்கினார்கள்.
கிருஷ்ணன் சிறிது நேரம் மவுனமாக இருந்தான். பிறகு அவன் நட்புக்கோபத்துடன் ஓ, கோபாலரே! உங்களுக்கு ஏன் இந்த விசாரணை? என்னிடத்தில் அன்பிருந்தால், நான் உங்களுக்குக் கொண்டாடத் தக்கவனாக இருந்தால் நீங்கள் உறவினனாக நினையுங்கள்! நான் தேவனுமல்ல; கந்தர்வனுமல்ல நான் உங்கள் உறவினனாகப் பிறந்தவனேயன்றி வேறன்று ஆகையால் நீங்கள் வேறுவிதமாக சிந்திக்கவேண்டாம்! என்றான். அதன்பிறகு ஆயர்கள் மவுனமாகச் சென்றனர். பிறகு கண்ணன் அந்தக் கூதிர்ப் பருவத்தில் வானம் நிர்மலமாக இருப்பதையும், பாலைப் பொழிவது போல நிலவு காய்வதையும், திசைகள் யாவும் மணம் கமழும் மலர்கள் மலர்ந்திருப்பதையும் கடாட்சித்து, முன்பு தான் வரமளித்தவாறு கோபியரோடு சேர்ந்து கிரீடிப்பதற்குத் திருவுள்ளம் கொண்டு, தமையனோடு செல்லாமல் தனியாகவே வனத்துக்குச் சென்றான். பெண்களின் மனதைக் கவரும் விதமாகவும் இன்னது என்று சொல்லவுங்கூடாத இனிய தொனியோடு தாரமும் மந்திரமுமான ஓசை வேற்றுமைகளின் முறைப்பாடுடைய புல்லாங்குழலை எடுத்துக்கண்ணன் ஊதினான். அந்த வேணுகானத்தைக் கேட்டு ஆய்ச்சியர் அனைவரும் பரவசமடைந்து மாளிகைகளைத் துறந்து பரபரப்புடன் ஸ்ரீகிருஷ்ணன் இருக்குமிடந்தேடி விரைந்து சென்றார்கள். அவர்களில் ஒருத்தி கண்ணனின் குழலிசையை உற்றுக்கேட்டு, அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள். மற்றொருத்தி அருகில் சென்று கிருஷ்ணா கிருஷ்ணா! என்று ஆவலோடு அழைத்துக்கொண்டும் வேறொன்றும் பேசமுடியாமல் நாணத்தோடு நின்றாள். வேறு ஒருத்தி கிருஷ்ணனிடம் கொண்ட அன்பு மிகுதியினாலே, ஒன்றும் தெரியாதவளாய் பக்கம் நின்றாள்.
ஒரு பெண், தன் மாளிகையிலிருந்து வெளியே வரும்போது அங்கே தன் மாமனாரைப் பார்த்தாள். பயந்தாள். கண்ணனிடம் போகமுடியாததால் கண்களை மூடிக்கொண்டு, தன்மயமாய், அந்தக் கோவிந்தனைத் தியானஞ் செய்து கொண்டிருந்தாள். மற்றொருத்தி கண்ணனிடத்திலேயே சித்தம் பற்றியிருப்பதாலுண்டான ஆனந்தத்தால், புண்ணியங்களும் அவளையடையாமற் போனது பற்றிய பெருந் துக்கத்தால் பாவங்களும் மாளப்பெற்றவளாய் பரப்பிரம்ம சொரூபியாய், ஜகத்காரணமான அவனையே சிந்தித்து, மூச்சடக்கி முக்தியை அடைந்தாள். இவ்விதமாகத் தன்னைச் சூழ்ந்த கோபியர்களுடன் ராஜ கோபாலன் ராஸக்கிரீடை என்ற உற்சவத்தில் குதூகலமாய் இருந்தான். அதற்கு ஏற்றாற்போல சரத்கால நிலவும் பொழிந்து கொண்டிருந்தது. இவ்விதமாக கண்ணன் ராஸக்கிரீடை செய்தருளி வேறொரு இடத்திற்கு எழுந்து சென்றபோது யாதவக் கன்னியரெல்லாம் கூட்டமாகக் கூடி, கண்ணனின் திருவிளையாடல்களிலேயே மனம் லயிக்க அந்தப் பிருந்தாவனத்தின் நடுவில் திரிந்து ஒருத்தியிடம் மற்றொருத்தி பிதற்றிக் கொண்டிருந்தார்கள். ஒருத்தி தோழியரே! கேளுங்கள்! நான்தான் ஸ்ரீ கிருஷ்ணன் ஆதலால் நான் லலிதமாய் நடக்கிறேன் பாருங்கள் என்று நடந்து காட்டினாள். மற்றொருத்தி நீயல்லடி கண்ணன்! நானே கண்ணன். என்னுடைய பாடலைக்கேள்! என்றாள். வேறு ஒருத்தி ஏ துஷ்டனான காளியனே; ஓடாதே நான் கிருஷ்ணன். உன்னைப்பிடிக்கிறேன் என்று தன் தோள்களைத் தானே தட்டித் தன் கையையே சர்ப்பத்தைப் போல் பிடித்து நின்றாள் மற்றொருத்தி நீங்கள் மழைக்கு அஞ்சவேண்டாம். இதோ இந்தக் கோவர்த்தனகிரியை நான் குடையாகப் பிடிக்கிறேன் என்றாள்.
இவ்விதமாக இடைச்சியர் எல்லாம் கண்ணனின் திருவிளையாடல்களைச் செய்துகொண்டு மெய்மறந்த நிலையில் பிருந்தாவனத்தில் திரிந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு பெண் தரையைப் பார்த்து, அங்கத்தில் புளகாங்கிதம் உண்டான, அருகில் இருந்தவர்களை நோக்கி, தோழியரே பாருங்கள்! இங்கே துவஜம், வஜ்ரம், கமலம் அங்குசம் முதலிய இரேகைகளையுடைய கண்ணனது திருவடித் தாமரைகளின் சுவடுகள் இருக்கின்றன, இவற்றைப் பார்க்கும்போது, அவன் விளையாட்டோடு விநோதமாக நடந்திருக்கிறான் என்று தோன்றியது. இன்னும் பாருங்கள், மகாபுண்ணியம் செய்த எவளோ ஒருத்தி அவனுடன் கூடச் சேர்ந்து, மதத்தினால் மெல்லச்சென்றிருக்கிறாள். ஏனென்றால் இதோ பக்கத்தில் அவனுடைய அடிச்சுவடுகளும் நெருங்கிச் சிறியவைகளாகக் காணப்படுகின்றன; அடியே, இங்கே கண்ணன் உட்கார்ந்து பூப்பறித்திருக்கிறான். அதனால் தான் அவனுடைய திருவடிகளின் நுனிமட்டும் இங்குப் பதிந்துள்ளன. இதோ பாருங்களடி! இங்கே கண்ணன் உட்கார்ந்து அம்மலர்களால் ஒருத்தியை அலங்கரித்திருக்கிறான். அவளோ முற் பிறவியில் ஸ்ரீமந் நாராயணனை நன்றாக ஆராதித்திருக்கிறாள். இதோ பாருங்கள்! இங்கே அவன் பூப்புணர்ந்தவளை விட்டுவிட்டு, இந்த வழியாகப் போயிருக்கிறான். இங்கே ஒருத்தியின் அடிச்சுவடுகள் நுனியழுந்தியவையாகக் காணப்படுகின்றன. ஆகையால் அவள் முன்னே சென்ற கண்ணனைச் சேரும் பொருட்டு நிதம்பபாரத்தால் வருந்தி விரைவாக நடந்திருக்கிறாள். பாங்கியரே! இங்கே ஒருத்தி அவன் கைமேல் கை வைத்துக்கொண்டு அவன் கூடவே நடந்திருக்கிறாள். அதனால்தான் இங்கே அந்த மங்கையின் காலடி வைப்புகள் நீண்டிராமல் சிறிது நெருங்கி அசுவாதீனமாக இருக்கின்றன. அடியே இங்கே பாருங்களடி அந்த வஞ்சகக் கண்ணன் அந்த மங்கையின் கையை ஸ்பரிசித்தது மாத்திரமேயன்றி, வேறு ஸ்பரிசம் எதுவும் செய்யாததால், அந்த மங்கை அவமானப்பட்டு ஆசையற்றுத் திரும்பி விட்டதாகக் காலடிச் சுவடுகள் எடுத்துக்காட்டுகின்றன. அடியே, இங்கே பாருங்களடி இங்கே கண்ணனின் காலடிச் சுவடுகள் மிக விரைவாக வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அவன் இங்கே யாரோ ஒருத்தியை, நீ இங்கேயே இரு! நான் சீக்கிரமாகப்போய் நாமிருவரும் கூடுவதற்கு ஏற்ற இடத்தைப் பார்த்துக்கொண்டு வந்து சேருகிறேன்! என்று சொல்லிவிட்டு நழுவிப் போயிருக்கிறான் என்று தோன்றுகிறது. பாங்கியரே ! இதற்குமேல் அவன் சுவடு காணப்படவில்லை. ஆகையால் அவன் மற்றையோர் புகமுடியாத இடத்துக்குப் போய் இருக்கிறான். ஆகையால் திரும்புங்களடி! என்று சொல்லி, கன்னியர் யாவரும் கண்ணனை இனிக் காண்பது அரிதென்று மனம் மயங்கி, யமுனையாற்றின் கரையில் உட்கார்ந்து அவனது சரிதங்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.
அப்படிப்பட்ட சமயத்தில் கண்ணன் அங்கு வந்தான். அவன் வந்ததும் கன்னியரெல்லாம் களிப்படைந்தனர். அவர்களில் ஒருத்தி கிருஷ்ண கிருஷ்ண என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தாள். மற்றொருத்தி புருவங்களை நெறித்து கண்களாகிய வண்டுகளால் கண்ணனது முகாரவிந்தத்தைப் பானஞ் செய்தாள். வேறு ஒருத்தி கண்ணனைக் கண்டதும் கண்களை மூடிக்கொண்டு, அவனது திவ்விய ரூபத்தையே தியானித்துக் கொண்டிருந்தாள். இப்படியாகத் தன்னைக் காதலித்துப் பல வகையான சேஷ்டைகள் செய்தவண்ணம் தன்னைச் சூழ்ந்து நிற்கும் அப்பெணகளில் சிலரிடம் கண்ணன் இனிமையாகப் பேசியும் சிலரைக் கை தீண்டுவதாலும் சமாதானம் செய்தான். பிறகு கலக்கமின்றித் தெளிவுடன் இருந்த அப்பெண்களோடு ராஸக்கிரீடை செய்யலானான். அம்மங்கையர் அனைவரும் கண்ணனைவிட்டு அகலாமல் அருகிலேயே ஒட்டியொட்டி இருந்ததால், வட்டமாக அமையவேண்டி ராசமண்டல கோஷ்டி அமையவில்லை. எனவே கண்ணன் அப்பெண்கள் ஒவ்வொருத்தியின் கையைப் பிடிக்க அந்தச் சுகத்தில் பரவசமாய் ஒவ்வொருத்தியும் கண்களை மூடிய நிலையில் மெய்மறந்து நிற்கும் போது கண்ணன் அவளவள் கையை மற்றொருத்தியின் கையோடு சேர்த்து, அவர்களை வட்டமாக நிறுத்தினான். அப்போது எல்லாப் பெண்களும் ஆனந்தப் பரவசத்தால் கண்ணனுடைய கையைத் தான் பிடித்திருப்பதாக நினைத்தார்களே தவிர மற்றொரு பெண்ணின் கையைப் பிடித்திருப்பதாக நினைக்கவில்லை. கண்ணனோ, விரைவாகப்பாயும் லாகவத்தால், யாவருக்கும் அருகிலிருப்பது போலவே காணப்பட்டான். பிறகு சரத்கால வர்ணனைப் பாட்டும், அதற்குத் தாளமாக கன்னியரின் கைவளையல்களின் குலுக்கலும் சேர்ந்து ராஸக்ரீடை விளங்கியது. ஆயினும் கண்ணன் மட்டுமே சரத் காலத்துச் சந்திரனையும் நிலவையும் ஆம்பல் மலர்ந்த தடாகங்களையும் பாட கோபியர்கள் கண்ணனது திருநாமம் ஒன்றையே பாடினார்கள். இப்படிப் பாடிச் சுற்றிவரும்போது, ஒருத்தி கங்கணங்கள் ஒலி செய்யும் தன்கையை கண்ணனின் தோள்மீது பதித்தாள். மற்றொருத்தி, யானைத் துதிக்கை போன்ற தோளுடைய கண்ணனை இறுகக்கட்டிக் கொண்டு முத்தமிட்டாள். இன்னும் ஒருத்தி கண்ணனின் தலையோடு தன் தலையைச் சேர்த்து அவன் தோள்களைக் கட்டிக்கொண்டாள். இவ்விதம் ஒவ்வொருத்தியும் ஆனந்தித்த வண்ணம் கண்ணனைப் பிரியாமல் இருந்தார்கள். தன்னைப் பிரிந்தால் ஒரு கணமும் ஒரு கோடி வருடமும் போலத் தோன்றும்படி அப்பெண்களுக்கு ஆனந்தத்தை வளர்த்துக் கொண்டு ஸ்ரீகிருஷ்ணன் ராசக்ரீடை செய்தான். கோபிகா ஸ்திரீகள் அனைவரும் தன் தன் தாய்தந்தையராலும் உடன்பிறந்தாராலும் தடுக்கப்பட்டாலும் அவர்களை லட்சியம் செய்யாமல் இரவு நேரங்களில் கண்ணனிடம் வந்து சேர்ந்து அவனிடம் மிகவும் அன்போடு ரமித்திருந்தார்கள். கண்ணனும் மனுஷ்ய அவதாரத்துக்கேற்ப, இளமைக்குரிய சாபல்யத்தைப் பெருமைப்படுத்திக் கொண்டு, இரவுகள் தோறும் அக்கோபியருடன் ரமித்து வந்தான்.
மைத்ரேயரே! தருமத்தை ஸ்தாபிக்க அவதாரஞ் செய்த எம்பெருமான் தரும விரோதமான இத்தகைய காரியஞ் செய்யலாமா? இதனால் கோபிகா மங்கையருக்குப் பாதகம் உண்டாகாதோ என்று நீங்கள் கேட்பீர் எம்பெருமான், தன்னைச் சேர்ந்தோரின் சகல பாவங்களையும் போக்கடிக்கும் படியான தூய்மையோன் அந்த மங்கையரும், வேதாந்த நிர்ணயப்படி அன்பு செலுத்த வேண்டிய இடத்திலேயே தங்கள் அன்பைச் செலுத்தினார்கள். ஆகையால் அவர்களுக்கு சகல பாவ நிவர்த்தியுண்டாயிற்றே தவிர பாபம் சம்பவிக்கவில்லை. எம்பெருமானுக்கோ தேவர்களுக்கு உண்டாவது போன்ற பாவபந்தம் உண்டாவதில்லை. ஏனென்றால், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்சபூதங்கள் எப்படி எல்லாப் பிராணிகளிலும் வியாபித்துள்ளனவோ, அதுபோலவே அக்கோபிகா ஸ்திரீகளிடத்திலும் அவர்களின் கணவரிடத்திலும் ஏனைய ஆன்ம கோடிகளிடத்திலும் வியாபித்திருக்கும் பரமாத்மாவாகையால், கண்ணனுக்கும் புதியதொரு பந்தம் வந்ததில்லை என்பதை அறிவீராக!

————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பஜ கோவிந்தம்–தமிழாக்கம்: ஸ்ரீ அரங்க. இரகுநாதன் ஸ்வாமிகள்–

January 27, 2023

ஸ்ரீ பஜ கோவிந்தம் என்பது சமஸ்கிருத மொழியில் ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட எட்டாம் நூற்றாண்டு பக்திப் பாடலாகும்.
இது ஸ்ரீ ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கையின் விழுமியமாய்க் கருதப்படுகிறது.
இப் பாடல் ஸ்மர்த்தப் பிராமணர்கள் மட்டுமின்றி வைணவர்களிடையேயும் புகழ் பெற்றதாகும்.

பாடல் எழுந்த சூழல்
ஒரு முறை ஆதிசங்கரர் தனது சீடர் குழாத்துடன் வாரணாசித் தெருக்களில் சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது முதிர்ந்த குரு ஒருவர் தனது மாணவர்களுக்கு சமஸ்கிருத இலக்கணத்தைக் கற்பித்துக் கொண்டிருந்தாராம்.
இதைக் கண்ட சங்கரமுனி அவர் மீது இரங்கி முதிர்ந்த வயதில் இலக்கணம் கற்பிப்பதில் காலத்தை வீணாக்காமல்
கடவுளைப் புகழ்வதிலும் அவரைக் கண்டடைவதிலும் செலவழிக்க வேண்டும் எனும் பொருள் அமைய
‘பஜ கோவிந்தம் (கோவிந்தனைப் பாடுவோம்)’ எனப் பாடினாராம்
இப்பாடல் இருபத்தேழு வரிகளை உள்ளடக்கியது. உண்மையில் பதின்மூன்று வரிகள் மட்டுமே சங்கரரால் பாடப்பட்டவை என்றும்
இதர பதினான்கு வரிகள் அவரோடு அங்கிருந்த ஈரேழு சீடர் ஒவ்வொருவரும் பாடியதாய்ச் சொல்லப்படுகின்றது.

பஜ கோவிந்தம்

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

மூட ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம்
மூட ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்

யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

யாவத் வித்தோபார்ஜன ஸக்த:
தாவன்னிஜ பரிவாரோ ரக்த:
யாவத் வித்தோபார்ஜன ஸக்த:
தாவன்னிஜ பரிவாரோ ரக்த:

பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோபின ப்ருச்சதி கேஹே
வார்த்தாம் கோபின ப்ருச்சதி கேஹே

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

மாகுருதன ஜன யௌவ்வன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால:ஸ்ர்வம்
மாகுருதன ஜன யௌவ்வன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால:ஸ்ர்வம்

மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

ஸுரமந்திர தருமூல நிவாஸ:
சய்யா பூதலம் அசினம் வாஸ:
ஸுரமந்திர தருமூல நிவாஸ:
சய்யா பூதலம் அசினம் வாஸ:

ஸர்வ பரிக்ரஹ போகத்யாக:
ஸர்வ பரிக்ரஹ போகத்யாக:
கஸ்ய ஸுகம் நகரோதி விராக:
கஸ்ய ஸுகம் நகரோதி விராக:

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

பகவத் கீதா கிஞ்சிததீதா
பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்காஜல லவ கணிகா பீதா
பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்காஜல லவ கணிகா பீதா

ஸக்ருதபியேன முராரி
ஸக்ருதபியேன முராரி ஸமர்ச்சா
ஸக்ருதபியேன முராரி ஸமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன நசர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன நசர்ச்சா

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்

இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே
க்ருபயா பாரே பாஹி முராரே

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்
கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்

நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம்

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம்
அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம்

புத்ராதபி தனபாஜாம் பீதி:
புத்ராதபி தனபாஜாம் பீதி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி:

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

குரு சரணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாராத சிராத்பவ முக்த:
குரு சரணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாராத சிராத்பவ முக்த:

ஸேந்த்ரியமானஸ நியமாதேவம்
ஸேந்த்ரியமானஸ நியமாதேவம்
த்ருக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்
த்ருக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

——————

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே

ஏ மூட மனமே! கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.
நாம் போகும் காலம் வரும் போது நாம் படித்த எந்த கல்வியும் உடன் வராது. வீணாக பொய்க் கல்விகளில் நேரத்தை வீணாக்காதே.
நீ கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.

———–

மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோப்பாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்

ஏ மூடனே அளவற்ற செல்வம் சேர்க்கும் உன் தணியாத தாகத்தை விட்டுவிடு.
சஞ்சலமும் பேராசையும் இல்லாமல் மெய்ப் பொருளைப் பற்றிய எண்ணங்களை உன் மனதில் நினை.
நீ அடையும் செல்வம் எல்லாமே நீ செய்யும் வினைகளாலும் வினைப் பயன்களாலும் தான்.
அதைக் கொண்டு உன் மனதில் திருப்தி அடை.
நீ கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.

————

நாரி ஸ்தனபர நாபிதேசம்
த்ருஷ்வா மாகா மோஹாவேசம்
ஏதன் மாம்ஸ வஸாதி விகாரம்
மனஸி விசிந்தய வாரம் வாரம்

அழகான பெண்களின் அழகிய கொங்கைகளையும் வயிற்றுப் பிரதேசங்களையும் பார்த்து மயக்க ஆவேசம் அடையாதீர்கள்.
இவையெல்லாம் புலால், கொழுப்பு மற்றும் அது போன்ற பொருட்களின் மாற்று வடிவங்கள்
மனதில் இதனை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொள்ளுங்கள்.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்.

—–

நளிநீ தள கத ஜலம் அதிதரளம்
தத்வத் ஜீவிதம் அதிசய சபலம்
வித்தி வ்யாத்யபிமானக்ரஸ்தம்
லோகம் சோகஹதம் ச சமஸ்தம்

தாமரை இலையில் தங்கி இருக்கும் நீரானது நிலையில்லாதது.
அது போல வாழ்க்கையும் மிகவும் நிலையில்லாதது
இந்த உலகில் எல்லாமும் எல்லாரும் வியாதியாலும் தற்பெருமையாலும் விழுங்கப்பட்டவர்கள்
மேலும் (அந்த வியாதியாலும் தற்பெருமையாலும் ஏற்படும்) சோகத்தால் அழிக்கப்பட்டவர்கள் இதை நீ அறிவாய்.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்.

———-

யாவத் வித்தோ பார்ஜன சக்த:
தாவன் நிஜ பரிவாரோ ரக்த:
பஸ்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே

எது வரை பொருள் சம்பாதிக்கும் வலிமை இருக்கிறதோ அது வரை தான் உறவும் நட்பும் நம்மிடம் அன்பும் பற்றும் கொண்டு இருக்கும்
பின்னர் வலிவிழந்து நடுங்கும் முதிர்ந்த உடலுடன் வாழும் போது நம் வீட்டில் நம்மை அண்டி வாழ்ந்தவர் கூட
நாம் எப்படி இருக்கிறோம் என்று கவலைப்பட மாட்டார்கள்.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

————-

யாவத் பவனோ நிவசதி தேஹே
தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே
கதவதி வாயௌ தேஹாபாயே
பார்யா பிப்யதி தஸ்மின் காயே

எது வரையில் உடம்பில் மூச்சுக் காற்று இருக்கிறதோ அது வரையில் தான்
உன் வீட்டில் இருப்பவர்கள் உன் நலன்களைப் பற்றி விசாரிப்பார்கள்.
உடலை விட்டு அந்த மூச்சுக் காற்று போன பின்னால் இது நாள் வரை பல முறை அந்த உடலுடன்
கூடி வாழ்ந்த மனைவியும் அந்த உயிரற்ற உடலைக் கண்டு பயப்படுவாள்.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

———————-

பாலஸ்தாவத் க்ரீடா சக்த:
தருணஸ்தாவத் தருணீ சக்த:
வ்ருத்தஸ்தாவத் சிந்தா சக்த:
பரே ப்ரஹ்மணி கோபி ந சக்த:

சிறு வயதிலோ விளையாட்டுச் செயல்களிலேயே ஒவ்வொருவரும் மூழ்கிப் போகின்றனர்.
பருவ வயதிலோ இனக்கவர்ச்சியிலேயே மனமெல்லாம் இருக்கிறது.
முதுமைக்காலத்திலோ எத்தனையோ கவலைகள்.
ஐயோ! பரம்பொருளைப் பற்றி எண்ண ஒருவருக்கும் தமது வாழ்க்கையில் நேரமே இல்லையே?
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

—————-

கா தே காந்தா கஸ்தே புத்ர:
சம்சாரோயம் அதீவா விசித்ர:
கஸ்ய த்வம் க: குத ஆயாத:
தத்வம் சிந்தய ததிஹ ப்ராத:

யார் உனது துணைவி? யார் உனது புதல்வன்? இந்த உலகவாழ்க்கை மிகவும் விசித்ரமானது;
பெரிய பெரிய அறிவாளிகளையும் மயக்கக்கூடியது. நீ யாருக்கு உரியவன்? நீ யார்? எங்கிருந்து வந்தாய்?
அந்த உண்மையை இப்போது எண்ணிப் பார் சகோதரனே.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

————

ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி:

அடியவர், நல்லவர், உண்மைப் பொருளை அறிவதிலும் அடைவதிலும் நாட்டமுடையவர் இவர்களின் கூட்டு, பற்று இல்லாத நிலையை அளிக்கும்.
பற்று இல்லாத நிலையை அடைந்தால் மயக்கங்கள் இல்லாத நிலை கிடைக்கும்.
மயக்கம் இல்லாத நிலையை அடைந்தால் என்றும் நிலையான மறைப் பொருளை அடைய முடியும்.
அப்படி நிலையான மறைப் பொருளை அடைந்தால் இங்கேயே இப்போதே முக்தி நிலையை அடையலாம்.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

————

வயஸி கதே க: காம விகார:
சுஸ்கே நீரே க: காசார:
க்ஷீணே வித்தே க: பரிவார:
ஞாதே தத்வே க: சம்ஸார:

இளமை நீங்கி முதுமை வந்துவிட்டால் எங்கே போயின காமக் களியாட்டங்கள்?
நீர் நிலைகளில் நீர் வற்றிப் போனால் எங்கே போயின நீர் நிலைகளை நம்பி வாழும் பறவைகளும் விலங்குகளும்?
செல்வம் அழிந்து போனால் எங்கே போனார்கள் நம் நண்பர்களும் உறவினர்களும்?
உண்மைப் பொருளை அறிந்து கொண்ட பின் எங்கே போனது என்றும் மாறும் நிலையுடைய இந்த சம்ஸாரம்?
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

————

கா தே காந்தா தன கத சிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நிவந்தா
த்ரிஜகதி சஜ்ஜன சங்கதிர் ஏகா
பவதி பவார்னவ தரனே நௌகா

மனைவி மக்கள், வீடு வாசல், சொத்து சுகம் போன்றவற்றில் இருந்து எழும் கவலைகள் உனக்கு ஏன்? .
மூடனே ஏன் இந்த நிலை உனக்கு? உனக்கு இவை நல்ல கதி இல்லை.
மூன்று உலகங்களிலும், உண்மையை விரும்பும் நல்லவர்களின் உண்மையான நட்பு மட்டுமே.
பிறப்பு இறப்பு என்னும் மாபெரும் கடலைக் கடக்க உதவும் படகு போன்றது.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

———–

தின யாமின்யௌ சாயம் ப்ராத:
சிஷிர வஸந்தௌ புனர் ஆயாத:
கால: க்ரீடதி கச்சதி ஆயு:
தத் அபி ந முஞ்சதி ஆசா வாயு:

பகலும் இரவும்,மாலையும் காலையும், வாடையும் கோடையும் மீண்டும் மீண்டும் வருகின்றன.
காலமோ தன் விளையாட்டினை விளையாடிக் கொண்டிருக்கிறது.
வாழ்நாளோ போய்க் கொண்டிருக்கிறது.
ஆனாலும் என் ஆசையெனும் புயல் மட்டும் நின்றபாடில்லை.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

———–

மா குரு தன ஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்
மாயா மயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரம்ஹபதம் த்வம் ப்ரவிச விதித்வா

செல்வம் எப்போதும் நிலைக்காதது.
அது செல்வோம் செல்வோம் என்று சொல்வதால் தான் செல்வம் என்றே பெயர்.
சுற்றம், நண்பர்கள் இப்போது இருப்பார்கள்; நாளை இருக்க மாட்டார்கள்;
செல்வம் இருக்கும் வரை தான் எல்லாமும். இளமையோ நாளுக்கு நாள் நம்மை விட்டுத் தூரே செல்கிறது.
அதனால் செல்வம், சுற்றம்/நண்பர்கள் குழாம், இளமை இவற்றைப் பெற்றோம் என்ற கர்வம் கொள்ள வேண்டாம்.
பேரும் புகழும் இன்று வரும்; நாளை போகும்.
காலம் இந்த எல்லாவற்றையும் ஒரு நிமிடத்தில் அழித்து ஒழித்து விடும்.
தப்பித் தவறி தவறாக ஒரு வார்த்தை வந்தால் போதும்.
சேர்த்து வைத்த பெயரும் புகழும் காணாமல் போய்விடும்.
தப்பித் தவறி ஒரு சுடு சொல் சொன்னால் போதும்.
சுற்றமும் நட்பும் காணாமல் போய்விடும்.
தப்பித் தவறி ஒரு தவறான அடி எடுத்துவைத்தால் போதும்.
சேர்த்து வைத்தச் செல்வம் எல்லாம் காணாமல் போய்விடும்.
கால தேவன் (மரணம்) வந்துவிட்டாலோ எல்லாமே ஒரே நொடியில் காணாமல் போய்விடும்.
இங்கு எதுவுமே நிலையில்லாதது. தோற்ற மயக்கம். அழியக் கூடியது.
அதனால் அவைகளில் உள்ளப் பற்றினைத் துறந்துவிட்டு
இறைவனை அறியும் வழிகளில் நீ நுழைவாய்.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

—————

தமிழாக்கம்: ஸ்ரீ அரங்க. இரகுநாதன்

தனியன்கள்

காலடி தோன்றிய நாளடி தொட்டுஅவர்
காலடி பற்றிய காதலார்ச் … சீலர்க்கு
மாலடி பற்றுதல் மாணடி என்றவர்
தாளடி வீழ்ந்தேன் தவித்து.

பிரம்மஞானம் கூறி பிறப்பறுக்கும் ஆறென்(று)
இரண்டில்லா அத்வைதம் ஈந்தார் … சிறப்பொவ்வா
பத்தியில்லா ஞானமெனப் பண்டுரைத்தார் தாளிணையைப்
பத்திரமாய்ச் சிக்கெனவே பற்று.

வானப் பெரும்புகழ் வண்ஞானி சங்கரரின்
ஞானக் குவையெனும் நாயகன் பாமாலை
மோனப் பொருளுணர்ந்து முத்திபெற வெண்பாவில்
தீனன் பெயர்த்தேன் திளைத்து.

நூல்

ப⁴ஜ கோ³விந்த³ம் ப⁴ஜ கோ³விந்த³ம்
கோ³விந்த³ம் ப⁴ஜ மூட⁴மதே ।
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டு³க்ருʼங்கரணே ॥ 1॥

1) கோவிந்த கோவிந்த கூவிடுவாய் ஏமூடா
சேவித்து நீஉய்யும் சீலமிது .. ஆவிஏகும்
பாவியுந்தன் அந்திமநாள் பத்தியின்றிக் கற்றதெல்லாம்
மேவியுனைக் காவாது காண்

மூட⁴ ஜஹீஹி த⁴நாக³மத்ருʼஷ்ணாம்
குரு ஸத்³பு³த்³தி⁴ம் மநஸி வித்ருʼஷ்ணாம் ।
யல்லப⁴ஸே நிஜகர்மோபாத்தம்
வித்தம் தேந விநோத³ய சித்தம் ॥ 2॥

2) சொத்துகள் மீதுற்ற சூதான பற்றொழி
புத்தியால் பெற்றவை போற்றுவாய் ..மெத்த
உழைப்பின் உயர்வை உளத்தில் இருத்திப்
பிழையற வாழ்தலே பீடு

நாரீஸ்தநப⁴ரநாபீ⁴தே³ஶம்
த்³ருʼஷ்ட்வா மா கா³ மோஹாவேஶம் ।
ஏதந்மாம்ஸவஸாதி³விகாரம்
மநஸி விசிந்தய வாரம் வாரம் ॥ 3॥

3) நங்கையரின் ஊனழகில் நல்லோரும் நேர்கெடுவர்
தங்கஉடல் வெற்றுத் தசைக்கோளம் … அங்கஎழில்
உன்நிலை மாற்றா(து) உயர்ந்திட பக்திஆழ்
அந்நிலையே ஆ(று)என்(று) அறி.

நலிநீத³லக³தஜலமதிதரலம்
தத்³வஜ்ஜீவிதமதிஶயசபலம் ।
வித்³தி⁴ வ்யாத்⁴யபி⁴மாநக்³ரஸ்தம்
லோகம் ஶோகஹதம் ச ஸமஸ்தம் ॥ 4॥

4) கமலஇலை நீர்முத்து காண்சலன வாழ்க்கை
இமயமலை அன்னபெரும் இன்னல் … (இ)யமபயத்
துன்பத்தின் தாக்கத்தைத் தூளாக்கும் அப்பற்றே
இன்பத்துள் எல்லாம் இறை.

யாவத்³வித்தோபார்ஜநஸக்த-
ஸ்தாவந்நிஜபரிவாரோ ரக்த: ।
பஶ்சாஜ்ஜீவதி ஜர்ஜரதே³ஹே
வார்தாம் கோঽபி ந ப்ருʼச்ச²தி கே³ஹே ॥ 5॥

5) பெறுமுன் உழைப்பால் பெருகும் உறவால்
பெறுவாய் மகிழ்ச்சி பிறரால் … ஒருகால்
செயலகெட்(டு) உடல்கெட்டு சீர்கெட்ட காலை
அயல்பட்டுச் செல்வர் அகன்று.

யாவத்பவநோ நிவஸதி தே³ஹே
தாவத்ப்ருʼச்ச²தி குஶலம் கே³ஹே ।
க³தவதி வாயௌ தே³ஹாபாயே
பா⁴ர்யா பி³ப்⁴யதி தஸ்மிந்காயே ॥ 6॥ 

6) உயிரோட்டம் உள்ளவரை உன்சுற்றம் கூடும்
உயிரோட்டம் நின்றாலோ ஓடும் … உயிரனைய
இல்லாளும் ஆவியிலா இக்கூட்டிற் கஞ்சியங்கே
நில்லாமல் நீங்கல் நினை

பா³லஸ்தாவத்க்ரீடா³ஸக்த:
தருணஸ்தாவத்தருணீஸக்த: ।
வ்ருʼத்³த⁴ஸ்தாவச்சிந்தாஸக்த:
பரமே ப்³ரஹ்மணி கோঽபி ந ஸக்த: ॥ 7॥ 

7) குழவிப் பருவம் குதூகலம ஆகும்
இளமை வனிதையர் ஈனக் …களியினில்
மீதமும் இல்லறம் மென்றிட என்றுதான்
நாதனை எண்ணுவாய் நீ

கா தே காந்தா கஸ்தே புத்ர:
ஸம்ஸாரோঽயமதீவ விசித்ர: ।
கஸ்ய த்வம் க: குத ஆயாத-
ஸ்தத்த்வம் சிந்தய ததி³ஹ ப்⁴ராத:  ॥ 8॥  

8) பெற்றவர் உற்றவர் பிள்ளையும் சுற்றமும்
வெற்றுற(வு) ஆகிடும் வேடிக்கை … மற்றிவர்பால்
பற்றோடு தாபமேன் பாசமேன் நேசமேன்
சற்றுநீ சிந்திப்பாய் சீர்.

ஸத்ஸங்க³த்வே நிஸ்ஸங்க³த்வம்
நிஸ்ஸங்க³த்வே நிர்மோஹத்வம் ।
நிர்மோஹத்வே நிஶ்சலதத்த்வம்
நிஶ்சலதத்த்வே ஜீவந்முக்தி: ॥ 9॥

9) நல்லவர் நட்பால் நசிந்திடும் வீண்அவா
வல்லதாம் ஆசை விலகிடும் … நில்லாது
மோகமும் ; உள்ளமும் ஒருமுகப் பட்டிடின்
வேகமாய்க் கிட்டிடும் வீடு.

கா தே காந்தா த⁴நக³தசிந்தா 
வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா । 
த்ரிஜக³தி ஸஜ்ஜநஸங்க³திரேகா 
ப⁴வதி ப⁴வார்ணவதரணே நௌகா ॥ 10॥ 

10) மக்கள் மனைவியென மாயச் சகதியில்
சிக்கித் தவிக்கும் சிறுமதியே …. முக்காலும்
நல்லவர் நட்பொன்றே நம்பிறப் பாழியை
வெல்கிற ஓடமென் றுணர்

ஜடிலோ முண்டீ³ லுஞ்சி²தகேஶ:
காஷாயாம்ப³ரப³ஹுக்ருʼதவேஷ: ।
பஶ்யந்நபி ச ந பஶ்யதி மூடோ⁴
ஹ்யுத³ரநிமித்தம் ப³ஹுக்ருʼதவேஷ: ॥ 11॥

11) மழித்தலும் நீட்டலும் மாற்றிடாப் பற்றை
ஒழித்திடாப் பொய்யன் உலகம்…பழித்த(து)
அழித்திடா ஞானமில் அந்தகன் அவனைக்
கொழித்திடும் எத்தனென்றே கொள்

அங்க³ம் க³லிதம் பலிதம் முண்ட³ம்
த³ஶநவிஹீநம் ஜாதம் துண்ட³ம் ।
வ்ருʼத்³தோ⁴ யாதி க்³ருʼஹீத்வா த³ண்ட³ம்
தத³பி ந முஞ்சத்யாஶாபிண்ட³ம் ॥ 12॥

12) உடலம் தளர்ந்தும் உரோமம் நரைத்தும்
நடக்கக் கழியே நயப்பார் … கடைவாயிற்
பற்களும் போயினும் பாரிதன் மானிடர்
பற்றுகள் விட்டிலர் பார்

அக்³ரே வஹ்நி: ப்ருʼஷ்டே² பா⁴நு:
ராத்ரௌ சுபு³கஸமர்பிதஜாநு: ।
கரதலபி⁴க்ஷஸ்தருதலவாஸ-
ஸ்தத³பி ந முஞ்சத்யாஶாபாஶ: ॥ 13॥

13) முகத்தை முழங்காலில் மூடி உறக்கச்
சுகத்தில் திளைத்துச் சுவைப்பான் …. புகலென
ஈண்டும் மரத்தடி ஏழையும் ஆசைகள்
ஈண்டல் விடுத்தல் இலை

குருதே க³ங்கா³ஸாக³ரக³மநம்
வ்ரதபரிபாலநமத²வா தா³நம் ।
ஜ்ஞாநவிஹீந: ஸர்வமதேந
முக்திம் ந ப⁴ஜதி ஜந்மஶதேந ॥ 14॥

14) கங்கை குளித்தும் கடலில் முழுகினும்
அங்கை சுருக்கா(து) அளிப்பினும் …. பொங்கிடும்
ஞானம்கை கூடார்க்கு நண்ணும் பிறப்புநூறும்
மோனம்கை கூடாது காண்

ஸுரமந்தி³ரதருமூலநிவாஸ:
ஶய்யா பூ⁴தலமஜிநம் வாஸ: ।
ஸர்வபரிக்³ரஹபோ⁴க³த்யாக:³
கஸ்ய ஸுக²ம் ந கரோதி விராக:³ ॥ 15॥

15) சொத்துச் சுகங்களால் சோரா தொதுக்கியே
வெற்றுத் தரையில் விழிமூடார் … சித்தம்
சிறிதும் கலங்காத சீலோர் மகிழ்வைப்
பறித்துக் குலைப்பவர் பாழ்

யோக³ரதோ வா போ⁴க³ரதோ வா
ஸங்க³ரதோ வா ஸங்க³விஹீந: ।
யஸ்ய ப்³ரஹ்மணி ரமதே சித்தம்
நந்த³தி நந்த³தி நந்த³த்யேவ ॥ 16॥

16) இனிமைக் களிபெற்றும் இன்யோகம் கற்றும்
தனிமை விழைந்தும் தகவோர் … கனிந்தும்
உகப்பாய்ப் பரத்தில் ஒருங்கிணைந் தார்க்கிவ்
இகத்திலும் இன்பம் இலக்கு

ப⁴க³வத்³கீ³தா கிஞ்சித³தீ⁴தா
க³ங்கா³ஜலலவகணிகா பீதா ।
ஸக்ருʼத³பி யேந முராரிஸமர்சா
க்ரியதே தஸ்ய யமேந ந சர்சா ॥ 17॥

17) கங்கைச் சுவைநீரைக் கைத்தலம் மாந்தியும்
அங்கண் அரியுரை அன்புளம் …. தங்கிடத்
தோன்றும் பொழுதில் தொழுது வழிபட
ஈண்டும் பிறப்பொன் றிலை

ரத்²யாசர்படவிரசிதகந்த:²
புண்யாபுண்யவிவர்ஜிதபந்த:² ।
யோகீ³ யோக³நியோஜிதசித்தோ
ரமதே பா³லோந்மத்தவதே³வ ॥ 18॥

18) கந்தல் உடுத்திக் கடுவினை நீக்கியும்
அந்தத் தியானலயிப்(பு) ஆழ்பவர் … புந்தியுடைப்
பிள்ளையாய் யோகியாய்ப் பிச்சிபோல் வாழ்வரே
தெள்ளியன் நற்றாள் திளைத்து

கஸ்த்வம் கோঽஹம் குத ஆயாத:
கா மே ஜநநீ கோ மே தாத: ।
இதி பரிபா⁴வய ஸர்வமஸாரம்
விஶ்வம் த்யக்த்வா ஸ்வப்நவிசாரம் ॥ 19॥ 

19) எவருந்தன் பெற்றோர் உறவென்று பார்க்கில்
இவரெல்லாம் பொய்யான ஏய்ப்பே … இவற்றைப்
புரட்டென்றும் மாயப் புரிவென்றும் தேரி
விருட்டென்று மாயை விரட்டு

த்வயி மயி சாந்யத்ரைகோ விஷ்ணு-
ர்வ்யர்த²ம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு: ।
ப⁴வ ஸமசித்த: ஸர்வத்ர த்வம்
வாஞ்ச²ஸ்யசிராத்³யதி³ விஷ்ணுத்வம் ॥ 20॥

20) என்னுள் இருப்பான் இதர ருளுமிருப்பான்
என்னைப் பொருளின்றி ஏசாதே … தன்னுளே
காண்பானை மாற்றாருள் காண்பாரை மாறுகள்
காணாமல் நீங்கிடும் காண்

ஶத்ரௌ மித்ரே புத்ரே ப³ந்தௌ⁴
மா குரு யத்நம் விக்³ரஹஸந்தௌ⁴ ।
ஸர்வஸ்மிந்நபி பஶ்யாத்மாநம்
ஸர்வத்ரோத்ஸ்ருʼஜ பே⁴தா³ஜ்ஞாநம் ॥ 21॥

21) நண்பன் பகையென்றும் நம்மவர் சுற்றமென்றும்
மண்ணில் பொருளற்ற மாறுகள் … உன்னுடைச்
சக்தியைப் பேதத்தில் சாகடித்தால் எப்போது
முத்தியை ஏற்பாய் மொழி

காமம் க்ரோத⁴ம் லோப⁴ம் மோஹம்
த்யக்த்வாssத்மாநம் பா⁴வய கோsஹம் । 
ஆத்மஜ்ஞாநவிஹீநா மூடா⁴-
ஸ்தே பச்யந்தே நரகநிகூ³டா:⁴ ॥ 22॥ 

22) சினத்துடன் காமம் சிதைத்திடும் ஆசை
மனத்துள மாயையும் மாய்க்கத் ..துணையினைத்
தேராத மூடனைத் தீயாக ஆரிருள்
சோரா தெரித்திடும் சூழ்ந்து

கே³யம் கீ³தாநாமஸஹஸ்ரம்
த்⁴யேயம் ஶ்ரீபதிரூபமஜஸ்ரம் ।
நேயம் ஸஜ்ஜநஸங்கே³ சித்தம்
தே³யம் தீ³நஜநாய ச வித்தம் ॥ 23॥

23) ஆயிரம் நாமமொடு ஆர்த்திடுவாய் கீதையும்நீ
மாயவனைத் தூயவுளத் துள்ளிருத்து … ஆய்ந்தபின்னர்
நல்லோரின் நட்பினையே நாடிநீ பெற்றதெல்லாம்
இல்லார்க்கும் ஈவாய் இசைந்து

ஸுக²த: க்ரியதே ராமாபோ⁴க:³
பஶ்சாத்³த⁴ந்த ஶரீரே ரோக:³ ।
யத்³யபி லோகே மரணம் ஶரணம்
தத³பி ந முஞ்சதி பாபாசரணம் ॥ 24॥

24) மனிதா திளைக்கிறாய் மாதர் களியில்
பிணியில் உழல்கிறாய் பின்னர் … இனிஇதைச்
சாவுதான் நீக்கிச் சரிசெய்யும் என்றறிந்தும்
தீவினை நீக்கிடாய் தேர்ந்து

அர்த²மநர்த²ம் பா⁴வய நித்யம்
நாஸ்திதத: ஸுக²லேஶ: ஸத்யம் ।
புத்ராத³பி த⁴நபா⁴ஜாம் பீ⁴தி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி: ॥ 25॥

25) நிதியம் அமைதியை நீக்கும் மகிழ்ச்சி
மிதிபடும் செல்வம் மிகுந்தால் … விதியால்
மதித்த மகனும் மதியாப் பகையாம்
பொதிந்த அறமிதைப் போற்று

ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யாநித்ய விவேகவிசாரம் ।
ஜாப்யஸமேதஸமாதி⁴விதா⁴நம்
குர்வவதா⁴நம் மஹத³வதா⁴நம் ॥ 26॥

26) பலனடக்கும் மூச்சுப் புலனொடுக்க யார்க்கும்
நலனடக்கும் நில்லாமை நிற்றல்.. கலங்கியும்
ஓர்ந்தும் உரைத்தும் இறைமையில் ஆழ்பவர்
சேர்ந்தாரே வீடெனும் சீர்.

கு³ருசரணாம்பு³ஜநிர்ப⁴ரப⁴க்த:
ஸம்ஸாராத³சிராத்³ப⁴வ முக்த: ।
ஸேந்த்³ரியமாநஸநியமாதே³வம்
த்³ரக்ஷ்யஸி நிஜஹ்ருʼத³யஸ்த²ம் தே³வம் ॥ 27॥

27) குருவவர் தாளைக் குவையெனக் கொள்வார்க்(கு)
இருவினை இன்னல்கள் இல்லை … உருகும்
புலன்கள் உருவில் புகுந்திடக் காட்டும்
நலன்கள் இறைமை நமக்கு

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அரங்க. இரகுநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ சங்கர பாகவதாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ விஷ்ணு புராணம் இரண்டாவது அம்சம்—ஜடபரதர் உபாக்கியானம் -நான்காம் அம்சம் -மாந்தாதா -ஸுபரி விருத்தாந்தம்

January 27, 2023

ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஸ்லோகம் -4-

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

————-

ஸ்ரீ விஷ்ணு புராணம் இரண்டாவது அம்சம்—
3. அத்யாயம் பாரததேச வர்ணனை-
13. அத்யாயம் ஜடபரதர் உபாக்கியானம் –
14. அத்யாயம் பரம்பொருள் தெளிவு-

———-

தேவர்களும் கொண்டாடும் பாரத தேசம் 2-3-24
பா ரதம் -ஞானத்தில் திளைத்து இருக்கும்
மஹான்கள் நிறைந்த பூமி

பரதர் ஆட்சி செய்த பரத கண்டம்
துஷ்யந்தன் சகுந்தலை
ராமன் தம்பி
நாட்டியம் சாஸ்திரம் பரத முனி
ஆதி பரதர் –

சாளக்கிராமம் சென்றாராம் முதிர்ந்த வயசில் -பாக்ய சாலி -த்யானிக்கத் தொடங்கினார்
ராஜ ரிஷியாக அஹிம்சை உள்ளிடட நல்ல குணங்கள்
அச்யுத மாதவா கோவிந்தா வாசுதேவா ஆனந்தா கேசவா கிருஷ்ணா விஷ்ணு ஹ்ருதிகேசா நமோஸ்துதே
ஸ்வப்னத்திலும் திருநாம சங்கீர்த்தனம்
எழுந்து இருக்க ஹரி
உண்ணும் போது கோவிந்தா
தூங்க மாதவா
திரு நாமங்கள் பொருளையும் அறிந்து -சொல்வாராம்
அஜாமலன் நாராயணா பிள்ளையைக் கூப்பிட்டாள் பலன் பெற்றான்
நெருப்பு அறியாமல் கை வைத்தாலும் சுடுமே
மருந்தும் அத்தை அறியாமல் இருந்தாலும் பலன் உண்டே
கண்ணுள்ளே உள்ள காத்தன்மையினால் எண்ணிலும் வரும்

யுக்த ஆகார விகாரஸ்து யுக்த சேஷ்டித்த யுக்த ஸ்வப்னா அபத்தம் -சரியான அளவு -உணவு சேஷ்டிதம் தூக்கம் த்யானம் -ஸ்ரீ கீதை

பெரிய தியாகியாய் இருந்தாலும் இந்த மான் குட்டி மீது பற்றை விடமுடியாமல் தியானித்து
பகவத் தியானத்தையும் கைவிட்டார்

தைல தாராவத் -இதயத்தில் நல்ல எண்ணம் தொடர்ந்து வர வேண்டுமே –

சமாதி பங்கம் ஏற்பட்டு –
மரண நிலையில் புத்ரன் ஸ்தானத்தில் மான் குட்டி –
சரணாகதியை அவன் நமக்காவ் நினைத்து நயாமி கூட்டிச் செல்வானே

ஜெம்பு மார்க்கத்தில் மானாகவே பிறந்து முன் ஜென்ம நினைவுடன் பிறந்தார்
யோக ப்ரஷ்டர் -பற்றி கீதையில் உண்டே
நல்லது செய்தவன் என்றும் கெடுவது இல்லை என்பதே நான்மறையின் தீர்ப்பு

சாளக்கிராமம் க்ஷேத்ரம் சென்றதாம் -அங்கு த்யானம் செய்து –
அடுத்த ஜென்மம் யோகிக்கு மகனாக -கடைக்குட்டி -இங்கும் பரதர் பெயர் உடன்
முன்பு கற்ற வேதம் த்யானம் தொடர்ந்து-ஜடமாகவே இருந்தாராம் ஜட பரதர்

புகழ்ந்தால் கர்வம் வந்து த்யானம் குலையும்
அவமானம் செய்தால் நன்றாக தியானிக்கலாம்

முன்பு சொன்னதுபோல், அழுக்குத் தீர்ப்பது போன்ற செய்கைகள் ஒன்றுமில்லாமல், சிகை, யக்ஞோபவீதம் முதலிய பிராமணக் குறிகளும், நீராடல் சந்தியாவந்தனம் செய்தல் முதலிய பிராமணச் செயல்கள் மட்டுமே உடையவராய், பித்தனைப் போலவே ஜடபரதர் திரிந்துவந்தார்.

இந்நிலையில், சவ்வீர ராஜனுடைய சாரதியானவன் அவரைக் காளிக்கு நரபலியிட நிச்சயித்து, இரவில் அவரைப் பிடித்துக் கொண்டு சென்றான்.

பாகவதத்தில் ரகுகணன் ராஜா என்று சொல்லும்-

அந்தக் காளியானவள். அவர் மகாயோகி என்பதையறிந்து, அவரைப் பலியிட வந்த அந்தக் கொடியவனையே, தன் கத்தியினால் வெட்டி, அவனது கழுத்திலிருந்து ஒழுகிய ரத்தத்தை தன் பரிவாரத்துடன் கூடச்சேர்ந்து குடித்து மகிழ்ந்தாள்.

ராஜா பேச இவர் உபதேசம்
மதுரகவி கேட்க திருவாய் மொழி பெற்றோம்
இவை எல்லாம் ஈஸ்வரன் சங்கல்பம்

என்னை பார்க்க வில்லை -உன்னையே பார்க்காதவன் -அஹம் நான் -தேகத்துக்குள் உள்ள ஜீவனையே குறிக்கும் -அணு-ஞான ஆனந்த மயம் -சேஷன் –

ச்யுதன் -அழியும் சரீரம் -ஆத்மா நித்யம்
ஆத்ம ஸ்வரூபம் பேதம் இல்லை -பகவானுக்கு உடல் –
கபிலர் இடம் இத்தையே உபதேசமாகக் கேட்க போன எனக்கு நீர் உபதேசித்தீரே மகிழ்ந்தான்

சிறந்த பக்தி யோக நிஷ்டராக இருந்தாலும் பேற்றில் விளம்பம் ஒரு மானால் ஏற்பட்டது இவருக்கும்

கேட்டவர்களுக்கு பலன் முக்தி யோகம் சித்திக்கும்

நான்காம் அம்சம் இரண்டாம் அத்யாயம் மீன் வரலாறு வரும்
மாந்தாதா வ்ருத்தாந்தம் sun never sets in his raajyam
ஸுபரி -முனிவர் -மீன் சம்மதன் என்ற பெயர் உடன் குடும்பத்துடன் -ப்ரதக்ஷிணம் பண்ணி -வணங்க
நான் வீணாகப் போனேன்
குடும்பமாக அனுபவிக்காமல்
ஆபாஸ விருத்திக்கு ஐம்பது உருவம் கொண்டார்

ஸுபரி குடும்பம் பெருகி விரக்தி யாகி -வானப்ரஸ்தம் சென்று பேறு அடைந்தார்
பலன் -அஷ்ட ஜன்மா -எட்டுத்தலைமுறை அனுக்ரஹம்
தீய மார்க்கம் போகாமல்
எனது நான் அபிமானம் இல்லாமல் நடக்கும்
இவர் பேற்றுக்கு விளம்பம் மீனால் ஏற்பட்டது
நம் முயற்சியால் அடைய -இவ்வளவு விளம்பம்
அவனே கதி -சரணாகதி அடைய வேண்டுமே

———

3. பாரததேச வர்ணனை

சமுத்திரத்துக்கு வடக்கே இமயத்திற்குத் தெற்கே இருக்கிற பூமியானது பரதனுடைய சந்ததியார் வசிப்பதால், பாரதவர்ஷம் என்ற பெயரைப்பெற்றது. மைத்ரேயரே! இதன் பரப்பளவு ஒன்பதாயிரம் யோசனை தூரமாகும். சொர்க்கத்தையடைகிறவர்களும், மோக்ஷத்தையடைகிறவர்களுக்கும் பிரவிருத்தி, நிவர்த்தி கர்வ சாதன பூமியாக இருப்பது இதுவேயாகும். இதில் மகேந்திரம், மலயம், ஸஹ்யம், சுத்திமான், ரீக்ஷம் விந்தியம், பாரியாத்திரம் என்ற ஏழுவித மலைகள் இருக்கின்றன. பிராணிகள் இங்கிருந்து தான் சொர்க்கமடைகிறார்கள். மோக்ஷத்தைப் பெறுகிறார்கள். மிருகாதி பிறவிகளையும் நரகத்தையும் இங்கிருந்தே அடைகிறார்கள். இதைவிட வேறிடத்தில் மனிதர்களுக்கு சொர்க்கானுபவர்க்கங்களுக்கு உரிய கர்மங்கள் விதிக்கப்படவில்லை. இந்தப்பாரத வருஷத்துக்கு இந்திர த்வீபம் கசேரு, தாம்பர பர்ணம், கபஸ்திமான், நாகத்வீபம், சவுமியத்வீபம், காந்தர்வத்வீபம், வாருணத்வீபம், பாரதத்துவீபம் என்ற பெயருடைய ஒன்பது பிரிவுகள் உண்டு. அவற்றில் ஒன்பதாவது பிரிவான பாரதத்துவீபம் என்பதே நாமிருக்கும் இந்தப் பூமியாகும். இது சகரர் தோண்டிய கடலால் சூழப்பட்டுள்ளது. இந்தப்பாரத கண்டமானது தெற்கு வடக்கில் ஆயிரம் யோசனையளவாக இருக்கிறது. கிழக்கில் கிராத தேசமும், மேற்கில் யவனதேசமும் இருக்கின்றன. நடுவில் பிரம்ம க்ஷத்திரிய; வைசிய; சூத்திரர் என்ற நான்கு வருணத்தினரும் வகுப்பின்படி இருக்கின்றனர். யாகங்களைச் செய்வதும், யுத்தஞ்செய்து துஷ்டர்களையடக்குதலும், வாணிபஞ்செய்தலும், சிற்பத்தொழில் செய்வதுமாகிய ஜீவன உபாயங்களிலே மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதில் சதத்துரு சந்திர பானக முதலிய நதிகள்; இமயமலையிலிருந்து பெருகுகின்றன. வேதஸ்மிருதி முதலிய நதிகள் பாரியாத்திர பருவதத்திலிருந்து உண்டாகிப் பாய்கின்றன. நருமதை, சுரசை, முதலிய நதிகள் விந்திய மலையில் உற்பத்தியாகின்றன. தாபீ, பயோஷ்ணீ, நிர்விந்தியை முதலிய நதிகள் சஹ்ய பர்வதத்தின் தாழ்வரையின்று உண்டாகின்றன. கிருதமாலை, தாம்பரபருணீ நதிகள் மலயாசலத்தில் உண்டாகின்றன. திரிசாமா, ரிஷிகுல்யா முதலிய நதிகள் மகேந்திரகிரியில் உதிக்கின்றன. குமாரீ முதலிய நதிகள் சுத்திமத்தென்னும் மலையில் பிறந்தவை. இவற்றைச் சார்ந்த உபநதிகளும் வேறு ஆறுகளும் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. இவ்வாற்றங்கரையில் குரு பாஞ்சாலம், மத்தியதேசம், பூர்வதேசம், காமரூபம், ஆந்திரம், கலிங்கம், மகதம், பாண்டியதேசம், அபராந்தம், சவுராஷ்டிரம், சூத்திர தேசம், ஆபீரதேசம், பாப்பர தேசம், மாருகம், மாளவம், பாரியாத்தி ரம்சவ்வீரம், சிந்து, ஊணம், சால்வம், கோசலம், மத்திரம், ஆராமம், அம்பஷ்டம், பாரசீகம் முதலிய பல தேசத்து மக்களும் வாசஞ்செய்து கொண்டு, அவற்றின் தண்ணீரைப் பானம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் தான் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நால்வகை யுகபேதங்களும் உண்டு.

இங்குதான் யோகியர் தவஞ்செய்கின்றனர். யாகசீலர் யாகஞ்செய்கின்றனர். தானசீலர் தானம் செய்கின்றனர். இவ்விதமான பரலோக சாதகமான நல்ல தருமங்களை ஜனங்கள் ஆதரவோடு செய்து வருகின்றனர். இந்த ஜம்புத்தீவிலே யக்ஞ புருஷனாகவும், யக்ஞ சொரூபியாகவும் இருக்கிற ஸ்ரீவிஷ்ணுபகவான் யக்ஞங்களினால் ஆராதிக்கப்படுகிறான். ஏனெனில் இந்தச் சம்புத் தீவானது பரலோக சாதகமான கருமங்களைச் செய்யத் தகுந்த இடமாகையால், பாரதவருஷம் தான் உயர்வானது. மற்ற பூமியெல்லாம் போகங்களுக்கு உரியனவாம். ஒரு ஜந்து அநேகப் பிறவிகளிலே செய்த புண்ணியத்தினாலே இவ்விடத்தில் மனிதப்பிறவியாகப் பிறக்கும்; இந்தப் பாரத வருஷத்தைப் பற்றித் தேவதைகள் பாடியபாட்டைக் கேளுங்கள். சொர்க்கத்துக்கும் மோக்ஷத்துக்கும் ஏதுவான கர்மங்களுக்குச் சாதகமாயிருக்கிற இந்தப் பாரதவருஷத்திலே தேவஜன்மத்துக்குப் பின்னாயினும் இந்த ஜன்மத்தைப் பெறுவாராயின் அவர்களே புண்ணியவான்கள். அவர்களே தேவர்களிலும் மேலானவர்கள். அவ்விடத்து ஜனங்கள் கர்ம பயன்களிலே கருத்தை வைக்காமல் செய்யும் கருமங்களையெல்லாம் பரமாத்மாவான ஸ்ரீவிஷ்ணுவுக்கு அர்ப்பணஞ்செய்து நிர்மலர்களாய் அந்த அநந்தனிடத்திலே லயத்தை அடைகின்றனர். நமக்குச் சொர்க்கப் பிராப்தி காரணமான கருமம் அனுபவித்தலினாலே அழிந்த பிறகு எவ்விடத்திலே தேக சம்பந்தைப் பெறுவோமா அதையும் அறியோம். இப்போது பாரதவருஷத்திலே பிறவி பெற்று ஞானேந்திரியக் கர்மேந்திரியங்களைக் குறைவறப் பெற்றவர்கள், சுலபமாய், ஆன்மா கடைத்தேறும் வழியைத் தேடச் சக்தி பெற்றவர்களாவார்கள். ஆகையால் அவர்கள் மகாபுண்ணியவான்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மைத்ரேயரே! இப்படி ஒன்பது வருஷங்களாகப் பிரிந்து லக்ஷம் யோசனை பரப்பளவுள்ள ஜம்புத்து வீபத்தின் விவரத்தைச் சுருக்கமாகச் சொன்னேன். இந்த ஜம்புத்து வீபத்தைச் சுற்றிய வளையத்தைப் போல் லவண சமுத்திரமானது லக்ஷ யோசனை விஸ்தாரமுடையதாக அமைந்திருக்கிறது.

13. ஜடபரதர் உபாக்கியானம்

பராசர மகரிஷியே! நான் கேட்டவண்ணம் பூமி, கடல், நதிகள், கிரகங்கள் முதலியவற்றின் ஸ்வரூபங்களையும் மூன்று உலகமும் ஸ்ரீவிஷ்ணுவையே ஆதாரமாகக் கொண்டு நிலைபெற்றிருப்பதையும் ஞானஸ்வரூபமே முக்கியமானது என்பதையும் நீங்கள் எனக்கு விளக்கியருளினீர்கள்! பரத மாமன்னனது சரிதத்தை பின்னர் அறிவிப்பதாகச் சொன்னீர்கள். அதன்படி இப்போது அதைக் கூறியருளல் வேண்டும். யோகத்துடன் கூடி ஸ்ரீவாசுதேவனிடத்தில் இதயத்தை நிலைநிறுத்தித் தியானஞ்செய்து கொண்டு சாளக்கிராம ÷க்ஷத்திரத்தில் வசித்த அந்தப் பரதமகாராஜனுக்கு, ஸ்ரீஹரித்தியான பிரபாவத்தாலும், ÷க்ஷத்திர மகிமையினாலும் மோட்சமுண்டாகாமல், மறுபடி பிராமண ஜன்மம் எப்படி ஏற்பட்டது? அவர் அந்தப் பிராமணப் பிறவியில் என்ன செய்தார்? அந்த விஷயங்களை நீங்கள் எனக்குத் தெளிவுபடுத்தவேண்டும் என்றார் மைத்ரேயர். உடனே பராசரர் கூறலானார். மைத்ரேயரே! அந்தப் பரத மகாராசன் எம்பெருமானது திருவடிகளையே தியானஞ் செய்துகொண்டு சாளக்கிராமத்திலேயே பலகாலம் வசித்து வந்தார். அவர் மகா குணவான்; மிகவும் உத்தமர், அவர் சொப்பனம் மத்தியம் உள்பட சகல அவஸ்தைகளிலும் யக்ஞேச, அச்சுத கோவிந்த, மாதவ, அநந்த, கேசவ, விஷ்ணோ ஹ்ருஷிகேசா வாசுதேவா, உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! என்பதை உச்சரித்துக் கொண்டிருந்தாரேயல்லாது வேறொன்றையும் உச்சரிக்கவில்லை. வைதிக கிரியைகளை நடத்துவதற்காக சமித்து, புஷ்பம் தருப்பை முதலியவற்றைச் சேகரிப்பது போன்ற செயல்களைத் தவிர வேறெதையுஞ் செய்ததில்லை. இவ்விதமாகப் பரதர் பற்றில்லாமல் யோக தவம் செய்து வரும் போது, ஒருநாள் மகாநதியில் நீராடிச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து கொண்டிருக்கும்போது, அங்கே கருவுயிர்க்கும் தருணமுடைய மான் ஒன்று, தன்னந்தனியாகத் தண்ணீர் குடிக்க வந்தது. அது நீர் அருந்திக் கொண்டிருக்கும்போது, அதிபயங்கரமான சிங்கத்தின் கர்ஜனைக்குரல் கேட்டது. அந்தக் கர்ஜனையைக் கேட்ட மான் மிகவும் பயந்து திகைத்துப் பரபரப்புடன்; நதியின் உயர்ந்த கரை மீது ஏறிச் சென்றது. அப்போது அதன் கர்ப்பமானது கீழேயிருந்த நதி நீரில் விழுந்து அலைகளிலே மிதந்தது. பரதர் அந்தமான் குட்டியைக் கண்டு இரக்கங்கொண்டு, அதைத் தன் கையில் எடுத்துக் கொண்டார். இது இப்படியிருக்க அந்தமான், கருப்பம் விழுந்த அதிர்ச்சியினாலும் மிக உயரத்தில் ஏறிய வருத்தத்தாலும் கீழே விழுந்து இறந்தது. தாய்மாமன் இறந்ததும் அதன் சின்னஞ்சிறு மான்குட்டி அந்தரமாக இருப்பதையுங்கண்ட பரதயோகி மிகவும் இரக்கங்கொண்டு, அந்தக் குட்டியை எடுத்துக் கொண்டு தமது ஆசிரமம் சேர்ந்தார்.

பிறகு, அவர் மான் குட்டியை வெகு அன்புடனே வளர்த்து வந்தார். ஆசிரமத்தின் அருகாமையில் இருந்த இளம்புற்களை மேய்ந்து கொண்டும், புலியைக் கண்டால் பயந்து ஆசிரமத்துக்கு ஓடி வந்து ஒளிந்து கொண்டும் காலையில் புறப்பட்டு மேய்ந்து விட்டு, மாலையில் ஆசிரமத்திற்குத் திரும்பிவந்து தங்கிக்கொண்டும் இருந்தது. இவ்விதமாக அந்த மான் ஓடி விளையாடுவதைக் கண்ட பரதரின் மனம், அதனிடத்தில் பற்றும் பாசமும் கொள்ளலாயிற்று. ராஜ்யம், மக்கள் முதலிய பந்தபாசங்களை விட்டு, யோக நிஷ்டையிலிருந்த அந்த முனிவர் மான் மீது மிகவும் அபிமானம் கொண்டிருந்தார். அதைச் சிறிது நேரம் காணவிட்டாலுங்கூட, ஐயோ நம்முடைய மான்குட்டியைக் காணவில்லையே? அதைச் செந்நாய் தின்றதோ, புலியறைந்ததோ, இன்னமும் வரவில்லையே? என்ன செய்வேன்? என்று வருந்துவார் அந்த மான் விளையாடிய இடங்களில் அதன் சிறு குளம்புகளில் பெயர்க்கப்பட்ட மேடு பள்ளமான இடத்தைக் கண்டு மகிழ்ச்சியடைவேன்? அப்படிப்பட்ட என்னுடைய மான் குட்டி எங்கே போயிற்றே தெரியவில்லையே! அது என்னருகே வந்து, தனது கொம்பினால் என்னுடம்பை உரசி, சுகம் உண்டாக்குமோ? அது ÷க்ஷமமாய் இங்கே திரும்பி வந்து சேர்ந்து சுகத்தை உண்டாக்குமோ இங்கு வராமல் துன்பத்தை உண்டாக்குமோ? என்ன செய்வேன்? இப்போதுதான் முளைத்த தனது சிறுபற்களால் கடித்த தருப்பைப் புற்களும் நாணல்களும் சாமவேதிகளான பிரமச்சாரிகளைப் போல் மொட்டையாகத் தோன்றுகின்றனவே? இவ்வாறு அது மறுபடியும் வந்து மேயக் காண்பேனோ? என்று பரத மகரிஷி வருந்துவதும், அது வந்ததும் பெருமகிழ்ச்சியடைவதுமாக இருந்தார். இவ்வாறு அந்த மான் குட்டியின் மீது அன்பு பாராட்டி வந்ததால், ராஜ்ய போகாதிகளைத் துறந்த அவருக்கும் சமாதி நிஷ்டை கலைந்தது. இந்நிலையில் அவருக்கு மரண காலமும் நெருங்கியது. அப்போது, தந்தையை அவனது அன்பு மகன் நோக்குவதைப் போல, அந்த மான்குட்டியானது கண்ணில் கண்ணீர் ததும்ப நோக்கிக் கொண்டிருந்தது. அதுபோலவே, பிரியமான மகனைத் தந்தை பார்ப்பது போல பரதரும் கண்ணீர் ததும்ப மான்குட்டியைப் பார்த்துக் கொண்டே பிராணனை விட்டார். அதனால் மறுபிறவியில் அவர், கங்கைக் கரையில் ஒரு மானாகப் பிறந்தார். ஆயினும் தனது யோகச் சிறப்பினால் பூர்வ ஜன்ம ஞானமுடையவராக இருந்தார். அதனால் வெறுப்புற்றுத் தன் தாயைப் பிரிந்து முன்பிருந்த சாலக்கிராம ÷க்ஷத்திரத்தை அடைந்து, அங்குள்ள உலர்ந்த புற்களையும், சருகுகளையும் தின்று, மானாகப் பிறக்க ஹேதுவான கர்மங்களைக் கழித்து, அங்கேயே மரணமடைந்தார். பிறகு, அந்த ஊரிலேயே, நல்ல ஒழுக்கமும் யோக நிஷ்டையும் மிகுந்த உத்தமமான பிராமணர் குலத்திலே பூர்வ ஜன்ம ஸ்மரணையோடு பிறந்தார். பூர்வஞானம் தோன்றியதால், முன்பு போலவே சகல சாஸ்திரங்களின் உண்மையை உணர்ந்தவராய் எல்லாவிதமான ஞானத்திலும் தேர்ச்சி பெற்றவராய், ஆத்ம சொரூபத்தைப் பிரகிருதிக்கு வேறாகவும், தேவாதி சகல சரீரங்களிலும் உள்ள ஆத்ம ஸ்வரூபம் யாவும் தம்மைவிடப் பேதமில்லாமல், விலக்ஷணமான ஞானகாரமுள்ளவையாகப் பாவித்து வந்தார்.

வேத சாஸ்திரங்களைக் கற்றுத்தேர்ந்தார். அவர் ஆத்மஞானியாக இருந்ததால் எந்தவொரு கர்மத்தையும் செய்யவில்லை, மேலும், அழுக்கு நிறைந்த உடம்போடும், அழுக்கேறிய கந்தை ஆடைகளோடும், ஊத்தைப் பல்லோடும், கண்டோர் அருவருத்து, அவமதிக்கும்படி நடந்து வந்தார். உலகோர் செய்யும் வெகு மதிப்பானது, யாக சம்பத்துக்கு மிகுந்த கேட்டை விளைவிக்கும். அவமதிப்போ, கர்வ அகங்காரங்களைப் போக்குவதால் யோக சித்தியைத் தருவதாகும். ஆகையால் யோகியானவன், யாவரும் தன்னிடம் சேராமல், தன்னை அவமானம் செய்யும்படி ஜடனைப் போலக் காட்டிப் பெரியோருடைய ஒழுக்கத்திற்குப் பழுதுவராமல் காத்து நடக்கவேண்டும்! என்று இரணிய கர்ப்பவாக்கியங்களை நினைத்து அந்தப் பிராமணர் வித்துவானாக இருந்தும் மூடனைப் போலவும் பித்தனைப் போலவும் திரிந்து கொண்டிருந்தார். இவ்விதமாக அவர் இருந்ததால், அவருக்கு ஜடபரதர் என்ற பெயர் வழங்கலாயிற்று. புழுத்துக் கெட்டுப்போன உழுந்து, யவதானியம் முதலியவற்றால் செய்த அப்பங்களையோ, கீரையையோ காட்டுக் கிழங்குகளையோ ஏதாவது ஒன்றை அவர் தின்று பிராணதரணை செய்து வந்தார். இந்நிலையில் அவரது தந்தை இறந்தார். அவருடைய தம்பியரும், அண்ணன்மார்களும் மற்றுமுள்ள பந்துக்களும், அற்ப ஆகாரம் கொடுத்து, அவரைக் கொண்டு கழனி வேலையைச் செய்வித்து வந்தார்கள். அவர் அந்த வேலையைக் கூடத் திருத்தமாக செய்யாமல் மூடனைப் போலச் செய்துவந்தார். அவர், இதுபோன்று அற்ப ஆகாரத்தைப் புசித்து வந்தாலும் அவர் உடல் நன்றாகப் பருத்தும் கண்கள் இரண்டும் வித்தியாசமில்லாமல் சமமாக விளங்கவே தோற்றத்தில் மாற்றமின்றி இருந்துவந்தார். அவரது உறவினரும் ஊராரும் கூலி கொடுக்காமல், சிறிது ஆகாரத்தை அவருக்குக் கொடுத்து வேலை வாங்கி வந்தார்கள். அவர்கள் எந்த வேலையைச் செய்யச் சொன்னாலும் ஜடபரதர் அந்த வேலையைத் தடையின்றிச் செய்தார். முன்பு சொன்னதுபோல், அழுக்குத் தீர்ப்பது போன்ற செய்கைகள் ஒன்றுமில்லாமல், சிகை, யக்ஞோபவீதம் முதலிய பிராமணக் குறிகளும், நீராடல் சந்தியாவந்தனம் செய்தல் முதலிய பிராமணச் செயல்கள் மட்டுமே உடையவராய், பித்தனைப் போலவே ஜடபரதர் திரிந்துவந்தார். இந்நிலையில், சவ்வீர ராஜனுடைய சாரதியானவன் அவரைக் காளிக்கு நரபலியிட நிச்சயித்து, இரவில் அவரைப் பிடித்துக் கொண்டு சென்றான். பலியிடுவதற்குரிய அலங்காரங்களையெல்லாம் அவருக்குச் செய்து, காளியின் திருக்கோயிலின் எதிரே, கொலை செய்யும் இடத்தில் கொண்டு நிறுத்தினான். அந்தக் காளியானவள். அவர் மகாயோகி என்பதையறிந்து, அவரைப் பலியிட வந்த அந்தக் கொடியவனையே, தன் கத்தியினால் வெட்டி, அவனது கழுத்திலிருந்து ஒழுகிய ரத்தத்தை தன் பரிவாரத்துடன் கூடச்சேர்ந்து குடித்து மகிழ்ந்தாள்.

பிறகு ஒருநாள், சவ்வீர ராஜனுடைய சேவகன் ஒருவன் ஜடபரதரைப் பிடித்துக்கொண்டு சென்றான். ஜடபரதரை, அரசனது சிவிகையைச் சுமப்பதற்குத் தகுந்த சிவியானாக நினைத்து, அமிஞ்சி பிடித்துப் போட்டான். ஒருநாள் அரசன், இஷிமதி நதி தீரத்தில் இருந்த கபில மகாமுனிரைக் காண்பதற்கு விரும்பினான். துக்கமயமான சம்சாரத்தில் எது உயர்ந்தது! என்பதை அந்த முனிவரிடமிருந்து தெரிந்து கொள்ள அரசன் விரும்பினான். எனவே அவன் பயணப்பட்டான். அவ்வரசனுடைய பல்லக்குப் போயிகளாக அமிஞ்சி பிடித்துப் போட்டிருந்த ஆட்களிலே ஜடபரதரும் சேர்ந்திருந்தார். சகல ஞானமும் உணர்ந்தவராக அவர் இருந்தாலும் கூட, தமது முற்பிறவிப் பாவங்களைத் தொலைக்க, அவர் பல்லக்கை சுமந்து சென்று கொண்டிருந்தார். அப்படிப் போகும் போது, நுகத்தடியளவு தூரம் ஜந்து வொன்றும் இல்லாபடித் தரையைப் பார்த்துக்கொண்டே அவர் மெதுவாக நடந்து சென்றார். மற்றவர்கள் துரிதமாக நடந்தனர். பல்லக்கின் வேகம் குறைந்தது. அதனால் சிவிகையில் இருந்த அரசன் சரியாய் நடங்கள்! என்று சிவிகை யாரை அதட்டினான். அவன் அப்படி அதட்டியும் பல்லக்கின் வேகம் குறைந்ததால், அரசன் மிகவும் கோபத்துடன் சிவியாரே! என் பேச்சையுங் கடந்து ஏனிப்படி நடக்கிறீர்கள்? என்று பலமுறைகள் கூவினான். அதற்கு சிவியாட்கள், மகாராஜா! எங்களின் குற்றமில்லை. இவன்தான் இப்படி நடக்கிறான் என்று ஜடபரதரைக் குற்றம் சாட்டினார்கள். அதைக்கேட்ட அரசன், அடா! என் பல்லக்கைச் சிறிது தூரந்தானே நீ சுமந்திருக்கிறாய்! இதனாலேயே விடாய்த்துப் போய்விட்டாயே! மேலும் நீ வருத்தத்தை! சகிக்க மாட்டாதவனோ! பிரத்யக்ஷத்தில் நீ பருத்தவனாகவே காணப்படுகிறாயே! என்று கேட்டான். அதற்கு ஜடபரதர், அரசே! நான் பருத்தவனும் அல்ல. உனது பல்லக்கை நான் சுமக்கவும் இல்லை. அதற்காக நான் வருந்தவும் இல்லை. அதனால் நான் ஆயாசமும் அடையவில்லை! என்றார். அதைக் கேட்ட அரசன், அவரது கருத்தைப் புரிந்துகொள்ளாமல் பார்வையில் நீ பருமனாகத்தானே தோன்றுகிறாய்? இப்போது உனது தோளில் என் பல்லக்கு இருக்கிறது. சுமை சுமந்தால் எந்தப் பிராணிக்கும் களைப்பு ஏற்படும் என்பது நிச்சயமாக இருக்க நீ ஏன் பொய் சொல்கிறாய்? என்று கேட்டான். அதற்கு ஜடபரதப் பிராமணர், அரசே! நீ என்னவோ பிரத்யக்ஷமாய்க் கண்டேன் என்று சொன்னாயே அந்த வஸ்துவை முன்னே நான் அறியச் சொல்வாயாக அது பலம் உள்ளது என்பதையும் இல்லாதது என்பதையும் பற்றிப் பிறகு பேசலாம். மேலும் என்னாலே சிவிகை சுமக்கப்பட்டது. அது இப்போதும் என்மேல் இருக்கிறது என்று சொன்னாயல்லவா? இது சுத்தப்பொய். அதைக் குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக? நிலத்திலே இரண்டு பாதங்கள் இருக்கின்றன. அவற்றின்மேல் கணைக்கால்கள் இருக்கின்றன. அவற்றிலே தொடைகள் இரண்டும் நிற்கின்றன. அவற்றை ஆதாரமாகப் பற்றி நிற்கிறது. வயிறு, மார்பு, கைகள், தோள்கள் இவையனைத்தும் வயிற்றின் மேல் இருக்கின்றன. இந்தத் தோளின் மீது படிந்திருப்பது சிவிகை இப்படியிருக்க எனக்கு ஏது பாரம்? அந்தச் சிவிகையிலே நீ என்று உன்னால் நினைக்கப்பட்ட தேகம் இருக்கிறது. அந்தத் தேகத்தில் நீ இருக்கிறாய். அதுபோலவே, இந்த தேகத்தில் நான் இருக்கிறேன்.

அரசே! நீயும் நானும் தேகங்களாய் மாறி நிற்கிற மற்றவரும் பிருத்வி முதலிய பஞ்சபூதங்களாலே சுமக்கப்படுகிறோம். இந்தப் பூதவர்க்கமும் குணங்களின் வெள்ளத்திலே வீழ்ந்து, அதன் வசத்தால் நடத்தல் முதலிய செயல்களைச் செய்கின்றன. சத்துவம் முதலான குணங்கள் கருமங்களுக்கு வசப்பட்டிருக்கின்றன. அந்தக் கருமங்கள் அவித்தையினாலே சம்பாதிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வவித்தை சகல பிராணிகளிலும் இருக்கின்றது. ஆத்மாவோ சுத்தமாய், நாசமில்லாததாய், பசி முதலியவைகள் இல்லாததாய் சத்துவாதி குணரகிதமாய், குணமயமான பிரகிருதியைக் காட்டிலும் வேறானதாக இருக்கிறது. அது சகல ஜந்துக்களிலும் தேகம்போல் அநேக அம்சமாய் இராமல் ஒரே அம்சமாக இருக்கிறது. அது வளர்வதுமில்லை; தேய்வதுமில்லை. இப்படியாக ஆன்மாவுக்கு விருத்தியோ தேய்வோ இல்லாமலிருக்க, நான் பருத்திருக்கிறேன் என்று எந்த யுக்தியினாலே சொன்னாய்? அன்றியும் பூமி, பாதம், கணைக்கால், தொடை, இடை முதலான உறுப்புகளின் அடுக்கின் மேலுள்ள தோளில் இருக்கும் பல்லக்கினால் எனக்குப் பாரம் உண்டென்றால் அந்தப் பாரம் உனக்கும் சமமாக இருக்க வேண்டும். மேலும் சகலமான பேருக்கும் இந்தப் பல்லக்கின் பாரம் மட்டுமல்ல, காடு, மலை, வீடு முதலானவற்றைப் பற்றிய பாரமும் உண்டென்றே சொல்ல வேண்டும். இப்படியின்றி, ஆன்மாவானது பிராகிருதங்களான அவயவங்களைவிட வேறு என்பது சித்தப்படும்போது, நான் பாரத்தைச் சுமக்கிறேன் என்பது ஏது? இந்தப் பல்லக்கு எந்தப் பொருளால் ஆனதோ, அந்தப் பொருளால் ஆனது தான் இந்த உடம்புமாகும். இதில் தான் எனக்கும் மற்றவருக்கும் மமத்துவம்! எனது என்ற அபிமானம் உள்ளது! என்று சொல்லி விட்டுப் பல்லக்கைச் சுமந்து கொண்டு சென்றார். இதைக் கேட்டவுடன் அரசன் திடுக்கிட்டு சிவிகையிலிருந்து கீழே இறங்கி ஜடபரத யோகியாரின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு, ஐயா! அடியேன் அறியாமல் செய்த குற்றத்தை மன்னித்தருள வேண்டும். தேவரீர் ஜடனைப்போல ரூபந்தரித்துள்ளீர். தேவரீர் யார் என்றே தெரியவில்லை. என்ன காரணத்தினால் என்ன பயனைக் கருதி இங்கே எழுந்தருளினீர்கள் என்பதை எனக்குச் சொல்ல வேண்டும்! என்றான். அரசே! நீ யார் என்று என்னைக் கேட்டாயல்லவா? அதற்கு நான் இன்னார் என்று விடையளிக்க முடியவில்லையே! எப்பயனை கருதி எதனால் இங்கே வந்தாய் என்பதற்குப் பதில் சொல்ல வேண்டுவதில்லை. எங்கும் வருவதற்குப் பயன் அனுபவமே. இந்தச் சுகதுக்க அனுபவங்கள். புண்ணிய பாவங்களால் உண்டானவைகளாய். இடத்தையும் காலத்தையும் பற்றியிருப்பதால் ஜீவன்கள் தனது கர்மானுபவத்திற்கு உரியதேச காலங்களிலே தேகாதிகளைப் பெற்று வருகின்றனர் என்றார் ஜடபரதர்.

யோகியாரே! சகல காரியங்களுக்கும் தருமா தருமங்களும் காரணம் என்பதும் சுகதுக்க அனுபவித்திற்காகத் தேகம் பிரவேசிப்பது என்பது சரிதான். ஆனால் நான் இன்னார் என்று ஆன்மாவைக் குறித்துச் சொல்லக்கூடாது என்று கூறினீர்களே? அதையறிய விரும்புகிறேன் ஆத்மா என்பது இல்லாத பொருள். ஆகையால் அப்படிச் சொல்லக்கூடாது என்றால் ஆத்மா இருக்கிற வஸ்துவேயல்லாமல் இல்லாததன்றே இந்த நான் என்னும் சொல் ஆன்மாவின்மேல் பிரயோகிப்பது குற்றம் அல்லவே? இப்படியிருக்க நான் இன்னான் என்று சொல்ல முடியாது என்று நீங்கள் எப்படிச் சொன்னீர்கள்? என்று அரசன் கேட்டான். அரசே! ஆன்மாவைக் குறித்து நான் என்னும் சொல்லைப் பிரயோகிப்பது குற்றமல்ல. அதுவும் சரிதான். ஆனால் நான் இன்னான் என்பதனால் ஆத்மாவல்லாத தேகாதிகளிலே ஆத்மபுத்தியும், இப்படிப்பட்ட பிராந்தியைத் தெரிவிக்கும் சொல்லாவதும் ஆகிய குற்றங்கள் உண்டாம். அரசே! நான் என்று சொல்வது எது? நாக்கும், உதடுகளும், பற்களும், தாழ்களும் தான். நான் என்று சொல்கின்றன என்று நினைக்கிறாயே, அவைகள் அனைத்தும் கருவிகளே யல்லாமல் கர்த்தாவான ஆத்மாவன்று, தேகத்தைக் காட்டிலும் வேறானது. ஞானமே வடிவாகக் கொண்ட நான் என்னும் ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறான வடிவுள்ள ஆத்ம ஸ்வரூபம் ஒன்று இருக்குமானால் என்னை இன்னான் என்று சொல்லலாம். அப்படித்தான் இல்லையே? ஆன்மா நித்தியப்பொருள். உடல் முதலியவை அநித்தியப் பொருள்கள். ஆகையால் அரசனாகிய நீயும் இந்தச் சிவிகையைச் சுமக்கின்ற நாங்களும் எல்லாமே இருக்கும் பொருளல்ல. எப்படியெனில் முன்பு மரமாக இருந்தது வெட்டப்பட்டு கட்டையாயிற்று. பிறகு அது நீ ஏறியிருக்கிற பல்லக்கு ஆயிற்று. இந்த நிலையில் அதற்கு மரம் என்றோ கட்டை என்றோ பெயர்களில்லை! மகாராஜா மரத்தின்மேல் ஏறியிருக்கிறார் என்று இவர்களே சொல்வார்களா? அல்லது கட்டையின் மேல் இருக்கிறார் என்றுதான் சொல்வார்களா? சிவிகையில் இருக்கிறார் என்றுதானே சொல்வார்கள்? இதனை ஆராய்ந்தால் சிவிகை என்பது ஒருவகை ஜோடிப்பே ஆகும். அதாவது கட்டைகள் அடுக்கப்பட்ட ஜோடிப்பு. இந்த ஜோடிப்பைப் பிரித்துவிட்டுப் பிறகு பல்லக்கு எங்கே என்பதை தேடிப்பார். அதுபோலவே சலாகை முதலியவற்றைப் பிரித்துக் குடையைத் தேடிப்பார். இந்த நியாயத்தாலேயே, இன்னார், நான் இன்னார் எப்படி என்பது தெரியும், கர்மவசத்தால் உண்டாகியிருக்கிற தேகங்களிலே புருஷன் என்றும் ஸ்திரீ என்றும், மாடென்றும், ஆடென்றும், யானையென்றும், குதிரையென்றும், மரம் என்றும் கொடி என்றும் வழங்கப்படுகின்றன. நீ, நான் என்கிற சொற்களின் முக்கியப் பொருளான ஆன்ம சொரூபமானது ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல, தேவனுமல்ல, மனிதனுமல்ல, மிருகமுமல்ல, மரமுமல்ல. இத்தேவத்துவலதி தர்மங்கள் எல்லாம் கர்மத்தினால் வந்த சரீரரத்தின் ரூபபேதங்களேயாகும். அரசே! நீ உலகத்தாருக்கு அரசன்! தகப்பனுக்கு மகன்! பகைவனுக்கு பகைவன்! மனைவிக்கு மணாளன்! மகனுக்குப் பிதா! இப்படடியிருக்க உன்னை யார் என்று நான் சொல்வேன். மேலும் நீ என்ன சிரசா, கழுத்தா, வயிறா? இந்த உடம்புக்கு நீ யார்? உனக்கு இந்த உடல்யாது? இவ்விதமாய்ச் சகல உறுப்புகளுக்கும் வேறாய் இருக்கிற நீயே நன்றாக ஆலோசித்து நான் யார் என்று சிந்தித்துக்கொள். உண்மை இப்படியிருக்க என்னை நான் இன்னான்! என்று வேறுபடுத்தி எப்படிச் சொல்லமுடியும் என்று ஜடபரதர் விளக்கினார்.

——————

14. பரம்பொருள் தெளிவு

ஆத்ம தத்துவத்தைப் பற்றி ஜடபரதர் கூறியதும் அரசன், அவரை நோக்கி சுவாமீ! சகல ஜந்துக்களிலும் பிரகிருதியிலும் வேறாய் ஞானஸ்வரூபமாய் மகத்தானதாய் ஒரேவிதமான ஆத்ம ஸ்வரூபம் உண்டென்றும் கூறினீர்கள். சிவிகையை நான் சுமக்கவில்லை; என்னிடத்தில் சிவிகையும் இல்லை; இந்த உடல் சுமக்கின்றது. நம்மைவிட அது வேறானது. திரிகுணங்களின் ஏவலினால் பஞ்சபூதங்கள் அசைகின்றன. அந்தக்குணப் பிரவிருத்தியும் கருமத்தினால் ஏவப்படுகிறது. ஆகையால் அவற்றால் எனக்கென்ன என்றும் தாங்கள் இத்தகைய பரமார்த்தங்களைக் கூறினீர்கள். மகானே! நான் இந்தச் சம்சாரத்தில் எது உயர்ந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்காகக் கபில மஹாமுனிவரிடம் போகப் புறப்பட்டேன். இதனிடையில் அந்தப் பரமார்த்த விஷயத்தைத் தேவரீர் அருளிச் செய்ததால் என்மனம் தங்களையே நாடுகின்றது. கபில முனிவர் உலக அஞ்ஞானத்தைப் போக்கும் பொருட்டு பூமியில் இறங்கிய ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமானவர். தங்களையே அந்தக் கபிலராக நான் கருதுகிறேன். ஆகையால் அடியேனுக்கு எது உயர்ந்ததோ அதனை அறிவிக்க வேண்டும், என்றான். அரசே! இப்போது நீ என்னை உயர்வைப் பற்றிக் கேட்கிறாயா? அல்லது பரமார்த்தத்தைப் பற்றிக் கேட்கிறாயா? சிரேயசு என்பதும் பரமார்த்தம் என்பதும் ஒன்றல்ல. எந்த மனிதன் தனது இஷ்ட தேவதைகளை ஆராதித்துப் பணம் முதலிய சம்பத்துக்களை இச்சிக்கின்றானோ அந்தச் செலவப்பேறே சிரேயசு எனப்படும். அதுபோலவே, சந்தானத்தை இச்சிப்பவன் அதையடைவது சிரேயசாகும். யக்ஞாதி கர்மங்களைச் செய்து சுவர்க்காதிகளைப் பெற நினைப்பவனுக்கு அந்தச் சுவர்ககாதிகளே சிரேயசாகும். எந்தவொரு பயனையுங்கருதாமல் யாகாதி கர்மங்களைச் செய்பவனுக்கு அந்தக் கருமமே உயர்வாகும். யோக நிஷ்டையிலிருந்து ஆத்மத் தியானஞ் செய்வோருக்கு அதுவே உயர்ந்தது. அந்த ஆன்மாவுக்குப் பரமாத்மாவோடு ஒன்றாகக் கூடுதல் மேலான சிரேயசாகும். இப்படி ஒன்றுக்கொன்று மேலான ஏழு சிரேயசுகள், முக்கியமானவைகள். இவற்றின் உட்பிரிவான சிரேயசுகளும் உண்டு. இவையெல்லாம் பரமார்த்தங்களல்ல. எப்படியெனில் பணமே பரமார்த்தமானால் அதைத் தருமத்திற்காகவும், காமத்திற்காகவும் செலவு செய்வார்களல்லவா? அப்படிச் செலவு செய்வதனால் அது பரமார்த்தம் ஆகமாட்டாது. இதனால் சாதிக்கப்படுகின்ற தர்ம, காமங்களும் அழியக்கூடியவை. ஆதலால் அவை பரமார்த்தம் என்று சொல்லப்படமாட்டா; காரியங்கள் எல்லாம் காரணங்களுக்குப் பரமார்த்தமேயல்லாமல் யாவற்றுக்கும் ஆகமாட்டாது. ராஜ்யம் முதலானவை பரமார்த்தம் என்றால், அவை நிலையானதாகாமையால் அவை பரமார்த்த மாகாத்ரிக்கு, யஜுர், சாமம் என்ற வேதங்களின் விதிப்படி செய்கின்ற யாக கருமத்தையே பரமார்த்தம் என்று நீ நினைத்திருந்தாயானால், அதுவுமல்ல மண் என்ற காரணப்பொருளினால் உண்டாக்கப்படும் குடம் முதலியவைகளுக்கான காரியங்கள் எல்லாம் காரணமான மண்ணின் தன்மையையே அடைந்திருப்பதைப் போல், நாசப்படத்தக்க சமித்து; நெய், தர்ப்பை முதலியவற்றால் செய்யப்படும் யாகாதி கர்மமும் நாசப்படத்தக்கது. ஆகையால் அதுவும் பரமார்த்தமாகாது. பரமார்த்தம் என்பது நாசப்படாததாக ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்டதேயாகும்! யாதொரு பயனையும் விரும்பாமற் செய்கிற யாகங்கள், மோக்ஷத்துக்குச் சாதனமானவை. ஆகையால் அவை பயனைக் கொடுத்தவுடன் நசிப்பதால் அது பரமார்த்தமல்ல ஆன்மத் தியானமும், விசதம் விசத்தரம், பிறவற்றினின்றும் தெளிவு, நற்றெளிவு என்று இவ்வகைப்பட்ட அவஸ்தா பேதங்களை யடைதலாலும், போனதை நினைத்தல், பிரத்யக்ஷத் தோற்றம் முதலாக க்ஷணந்தோறும் மாறுதலினாலும் அது பரமார்த்தமன்று.

பரமாத்மாவோடு ஆத்மா ஐக்கியமாகின்ற யோகமே பரமார்த்தம் என்று சிலர் நினைக்கிறார்கள் அல்லவா? அப்படிப்பட்ட யோகம் பொய்; ஆகையால் அதுவும் பரமார்த்தம் அன்று! அந்த யோகம் ஏன் பொய்யென்றால் ஒரு பொருள் மற்றொரு பொருளாக ஆகமாட்டாதாகையால் ஜீவாத்மாவானது பரமாத்மாவாக மாறமாட்டாது. ஆகையால் அரசே! நான் முன்பு சொன்னவைகள் யாவும் சிரேயசுகள் என்பதில் ஐயமில்லை. பரமார்த்தம் எதுவென்று சுருக்கமாகச் சொல்கிறேன், கேள். தேகத்தைப் போலப் பல பொருளாயிராமல் ஒரு பொருளாயும், ஞானத்தினால் எங்கும் வியாபிக்கக் கூடியதாயும், தேகத்தைப் பற்றிய வித்தியாசமின்றிச் சமமாயும், நிர்மலமாயும், சத்துவாதிகுண சம்பந்தம் இல்லாததாயும், பிரகிருதிக்கு வேறுபட்டதாயும், உற்பத்தி விநாச விருத்தி க்ஷயாதிகள் இல்லாததாயும், நுண்மையினாலே அக்கினி வாயு ஜலாதிகளான அழிக்கும் பொருள்களுக்கு உட்படாததாயும், பற்றிக்கொள்ளுதல் முதலான தோஷங்கள் இன்றி, தேகாதிகளுக்கு அதிபதியாயும் இருக்கிற ஆத்மஸ்வரூபம் எதுவுண்டோ அது மேலான ஞானவடிவமாய், அவித்யா ரூபங்களான ஜாதி நாமாதிகளோடு பூதம், வர்த்தமானம், பவிஷியத் என்ற மூன்று காலங்களிலேயும் கூடாதது. தன்னுடையதும் பிறரதுமான தேகங்களில் இருக்கின்ற அந்த ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி எல்லாம் ஒரே விதம் என்ற ஞானம் எதுவுண்டோ, அந்த ஞானஸ்வரூபம் தான் பரமார்த்தமாம்! ஆதலால் தேக வித்தியாசத்தினால் மாறுபாடாக நினைப்பவர்கள் யதார்த்தத்தை அறியாதவர்கள். புல்லாங்குழலின் உள்ளே நுழைந்த காற்று ஒன்றாயிருந்தும் அதன் துவார பேதங்களினால் அந்தக் காற்றுக்கு ஆறுவகை ஸ்வரபேத நாமதேயம் உண்டாவதைப்போல, ஆத்துமஸ்வரூபம் பேதம் இல்லாததாக இருந்தும், அதற்குப் புறம்பான கர்ம பேதத்தினால் வந்த சரீர பேதத்தைப் பற்றி, தேவன், மனிதன் என்ற விவகாரம் உண்டாகிறது. அந்தக் கர்மாவாகிய மறைவு அழிந்தால் அந்தத் தேவாதிபேதம் இல்லவேயில்லை என்று அறிவாயாக! என்று ஜடபரதர் உபதேசித்தார்.

————–—————–

இவ்விதமாக குழந்தைப் பிறந்தவுடன் முனிவர்கள் ஒன்றுகூடி, பிறந்த இந்தக் குழந்தை, யாருடைய முலைப்பாலைப் பருகும்? என்று கேட்டார்கள். அப்போது அங்கே வந்த தேவேந்திரன் என்னைத் தாயாக வைத்து முலையுண்ணும் என்று சொல்லித் தனது பவித்திர விரலை, அந்தக் குழந்தையின் வாயில் கொடுக்க, அந்தப் பிள்ளை அந்த விரலிலிருந்து ஒழுகிய அமிர்தத்தைக் குடித்து ஒரே நாளில் வளர்ந்தது. இந்திரனுக்கு மாந்தாதா என்ற பெயரும் உண்டு. ஆகையால் அந்த அரசகுமாரனுக்கு மாந்தாதா என்ற பெயர் உண்டாயிற்று. அவன் மாமன்னனாகி பூமண்டலத்தை ஆண்டு வந்தான். இவனைப் பற்றிய பாடல் ஒன்று உண்டு. அதாவது எவ்வளவிலே சூரியன் உதயமாகிறானோ, எவ்வளவிலே அஸ்தமனமாகிறானோ, அந்த எல்லைகளுக்கு உட்பட்ட பூமண்டலம் முழுமையும் மாந்தாதாவின் ராஜ்யமாக இருந்தது! என்பது தான் அந்தப் பாடலாகும்.

அந்த மாந்தாதா, சசபிந்து என்பவனின் மகளாகிய இந்துமதி என்பவளை மணந்து, புருகுச்சன், அம்பரீஷன், நாபாகன் என்ற பிள்ளைகளையும் ஐம்பது பெண்களையும் பெற்றான். அந்தக் காலத்தில் ரிக் வேதமறிந்த சவுபரி என்ற முனிவர், தண்ணீரில் மூழ்கிப் பன்னிரண்டு ஆண்டுக்காலம் தவஞ்செய்து கொண்டிருந்தார். அந்தத் தண்ணீரில் சம்மதன் என்ற மிகப்பெரிய மீன் ஒன்று, பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், உறவினர்களாகிய தன் கிளைகள் அநேகம் முன்னும் பின்னும் பக்கங்களிலும் வாலிலும் தலையிலும் ஏறி விளையாடச் சஞ்சரித்துக் கொண்டிருந்தது, அவற்றைப் பிரியாமல் சம்மத மீன் எப்போதும் மகிழ்ச்சியுடன் அந்த முனிவருக்கு எதிரே சஞ்சரித்துக் கொண்டிருந்தது, அவற்றைப் பிரியாமல் சம்மத மீன் எப்போதும் மகிழ்ச்சியுடன் அந்த முனிவருக்கு எதிரே சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அதனால் சவுபரி முனிவரது மனஒருமைப்பாடு நீங்கியது. அவர் அந்த மச்சம் தன் கிளைகளோடு கூடி அனுபவிக்கும் மகிழ்ச்சியைக் கண்டு, ஓ! இந்த மீனோ விரும்பத்தகாத ஈனப் பிறப்பிற் பிறந்தது. ஆயினும் அது மிகவும் பாக்கியமுள்ளது. ஏனென்றால் புத்திர பவுத்ராதிகள் விளையாடிக் கொண்டிருக்க, அவற்றோடு இணைபிரியாமல் சஞ்சரித்து மகிழ்கின்றது. இதைப் பார்க்க நமக்கே எவ்வளவு ஆசையுண்டாகிறது? ஆகையால் நாமும் இப்படியாவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று ஆலோசித்து அந்தத் தடாகத்திலிருந்து வெளியே வந்து, சந்தானத்துக்காகக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு மாந்தாதா மன்னனிடம் வந்தார். இவர் வந்த செய்தியை அறிந்த மன்னன் அவரை எதிர்கொண்டழைத்து உபசரித்தான். அவனை சவுபரி முனிவர் நோக்கி, அரசனே! நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீ எனக்குக் கன்னிகாதானம் கொடுக்க வேண்டும். என்னுடைய வேண்டுதலை மறுக்காதே! ககுஸ்த வமிசத்தாரிடம் வந்த யாசகர் தாம் விரும்பியதைப் பெறாமலிருந்ததில்லை அல்லவா? இவ்வுலகில் எத்தனையோ அரசர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குங் கன்னிகைகள் இருக்கிறார்கள். ஆயினும், யாசகரின் இஷ்டத்தை நிறைவேற்றும் விரதமுடையது உனது குலம். உனக்கு ஐம்பது பெண்கள் இருக்கிறார்களல்லவா? அவர்களில் ஒருத்தியை எனக்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்க வேண்டும். என் பிரார்த்தனை நிறைவேறாமற் போயின் நான் வருந்துவேன். நான் வருந்தாமல் இருக்க, என் துன்பத்தை நீதான் நீக்கவேண்டும் என்றார். இவ்விதமாகச் சவுபரி முனிவர் சொன்னவுடன், மாந்தாதா மன்னன் அவரை உற்றுப் பார்த்தான். மூப்பினால் தளர்ந்து, தலை நரைத்திருந்தார் சவுபரி முனிவர்! ஆனாலும் அவருடைய வலிமையைப் பற்றிய பயத்தினால் அவரது விண்ணப்பத்தை மறுக்கமாட்டாமல் மாந்தாதா மன்னன் தலைகுனிந்து நெடுநேரம் யோசித்தான். அப்போது சவுபரி முனிவர், அரசனே! எதைப் பற்றிச் சிந்தனை செய்கிறாய்? நான் ஒன்றும் தகாததைச் சொல்லவில்லையே? அவசியம் யாருக்காவது கொடுத்தே தீரவேண்டிய கன்னியை எனக்குக் கொடுக்கும்படித்தானே நான் கேட்டேன்? இதனால் நீ புண்ணியம் பெறுவாய்! என்றார்.

அவரை அரசன் நோக்கி தவமுனிவரே! எனது குலமுறைப்படி, கன்னிகை யார் மீது இஷ்டப்படுகிறாளோ, அந்த வரனுக்கே அவளைக் கொடுப்பது வழக்கம். இது இப்படியிருக்கத் தேவரீரது வேண்டுதலோ எமது எண்ணங்களுக்கு மேற்பட்டது. அதனால் தான் செய்வதறியாமல் நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். அதைக்கேட்ட முனிவர் இந்த அரசன் நமது வேண்டுகோளை மறுக்க இதை ஓர் உபாயமாகச் சொல்லிவிட்டான் என்றே யோசித்தார். ஏனென்றால் இந்த முனிவன் முழுக்கிழவன். ஆகையால் எத்தகைய பெண்ணும் இவரை விரும்பமாட்டாள். அப்படியிருக்க நல்ல பருவமுடைய நம் கன்னியர் இவரை விரும்புவார்களோ? ஆகையால் தானே ஆசையற்றுப் போகட்டுமே என்று அரசன் நினைத்தே அப்படிக் கூறிவிட்டான். இனி அதற்கேற்ப நடக்கவேண்டும் என்று சவுபரிக் கிழவர் தமது மனதில் எண்ணிக்கொண்டு அரசனைப் பார்த்து, அரசனே! உங்கள் குலவிரதத்தை நான் அழிக்கவிரும்பவில்லை; என்னை உமது கன்னிகைகள் இருக்கும் அந்தப்புரத்திற்குப் போகும்படி, அந்தப்புரக் காவலாளிக்குக் கட்டளையிடுவாயாக. கன்னிகையே என்னைக் கதாலிப்பவளாயின் நான் கல்யாணஞ் செய்து கொள்கிறேன். இல்லாவிட்டால் முதிர்ந்த வயதில் இந்த முயற்சி எனக்கு ஏனென்று விட்டு விடுகிறேன்! என்றார். பிறகு அவர் கூறியபடியே செய்யும் வண்ணம் அந்தப்புரக் காவலாளிக்கு அரசன் கட்டளையிட்டான். அக்காவலாளியோடு சவுபரி முனிவர் கன்னிப் பெண்களின் அந்தப்புரத்தினுள்ளே போகும்போது சித்த கந்தர்வர்களைவிட மேம்பட்ட அழகான ரூபத்தை எடுத்துக் கொண்டார். சேவகன், முனிவரை அந்தப்புரத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு அங்கிருந்த கன்னியரைப் பார்த்து உங்கள் தந்தையான அரசரிடம் இந்த முனிவர் கன்னிகை வேண்டி வந்தார். கன்னிகைகளில் யார் பிரியப்பட்டு இவரை வரித்துக் கொள்கிறார்களோ, அவர்களையே அவர்களிஷ்டப்படி இந்த முனிவருக்குக் கொடுப்பேன் என்று மகாராஜா கட்டளையிட்டிருக்கிறார் என்றான். அதைக் கேட்டதும் அரசகுமாரிகள் அந்த முனிவரை வந்துப் பார்த்தார்கள். முனிவரின் புதுவடிவத்தையும் இளமை துள்ளும் மோகன ரூப அழகுகளையும் கண்டு அக்கன்னிகைகள் அனைவரும் காமாவேசமுடையவர்களாகி நல்ல மதத்த ஆண் யானையை பெண் யானைகள் சூழ்வதைப் போலச் சூழ்ந்து கொண்டு, நான் நான் என்று பரபரப்புடன் போட்டியிட்டு அவரை வரித்தார்கள். இதனால் அப்பெண்களிடையே கலகம் ஏற்பட்டது; அவர்கள் அனைவருமே அவரை விரும்பினார்கள். எனவே அங்கு நடந்தவற்றைக் காவலாளி அரசரிடம் தெரிவித்தான். அதைக் கேட்டதும் மாந்தாதா மன்னன் மிகவும் வியப்படைந்து, என்ன இது? இனி என்ன செய்வேன்? என்ன சொல்லி விட்டேன்? என்று மனம் கலங்கி, தனக்கு விருப்பம் இல்லாதிருந்தும், வாக்குக் கொடுத்து விட்டதற்காகப் பயந்து, தன் கன்னிப்பெண்களையெல்லாம் சவுபரி முனிவருக்கே திருமணஞ் செய்து கொடுத்தான்.

பிறகு, சவுபரி முனிவர் அரசகுமாரிகளை அழைத்துக் கொண்டு ஆசிரமத்தை அடைந்தார். அதன்பிறகு சிற்பியான விசுவகர்மாவை அழைத்து தமது மனைவியருக்குத் தனித்தனியாக மாளிகைகளையும் அன்னங்கள் நீந்தும் தடாகங்களையும் மலர் வனங்களையும் அமைத்துக் கொடுக்கச் செய்தார். அவ்வாறே விசுவகர்மாவும் அமைத்துக் கொடுத்தான். பின்பு, சவுபரி மாமுனிவரது ஆக்ஞையினால் அந்த மாளிகைகளில் நந்தனம் என்ற மகாநதியானது நித்தியமாக இருந்து வந்தது. அந்த மாளிகைகளில் ராஜகுமாரிகள் வசித்து போகங்களிலும் போஜன வகையிலும் திருப்தியடைந்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் அவர்களுடைய தந்தையான மாந்தாதா மன்னன் ஒரு சமயம் தன் பெண்கள் மீதுள்ள அன்பினால், அவர்களைப் பார்ப்பதற்காக முனிவரது ஆசிரமத்தை அடைந்தான். ஆசிரமம் இருந்த இடத்தில் ஸ்படிக மயமாய் விளங்கிய மாடமாளிகைகளைக் கண்டு அதிசயித்து ஒரு மாளிகையினுள்ளே நுழைந்தான். அங்கிருந்த தனது மகளைக் கண்டு, கண்களில் கண்ணீர் ததும்ப மகளே! நீ சுகமாக இருக்கிறாயா? அல்லது அசுகமாக இருக்கிறாயா? முனிவர் உன்னிடத்தில் அன்பாக இருக்கிறாரா? நீ நம்முடைய அந்தம்புரவாசத்தை நினைக்கிறாயா? என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண் தந்தையே! நான் சுகமாகவே இருக்கிறேன். எனக்கென்று ரமணீயமான உப்பரிகையும், அழகான தோட்டமும், நீர்ப்பறவைகளோடு தாமரை முதலியவை விளங்கும் தாடகங்களும், மனதிற்கினிமையான போஜனங்களும், திவ்வியமான ஆடையாபரணங்களும் மிகவும் பரிமளமுள்ள மலர்களும் மிகவும் மென்மையான சயனா சனங்களும் இன்னும் இல்லறத்துக்குரிய யாவுமே நன்றாக இருக்கின்றன ஒரு குறையும் எங்களுக்கில்லை. இருப்பினும் பிறந்த இடம் எப்படி மறக்கும்? ஆனால் துக்கத்துக்குக் காரணம் ஒன்றும் இருக்கிறது. அது என்னவென்றால், என் கணவராகிய அந்த முனிவர் எப்போதும் என்னிடமே காதல்கொண்டு, என்னை விட்டுப்பிரியாமல் இருக்கிறார். எனது சகோதரிகளே நினைப்பதில்லை இது தான் என்மனதை வருத்துகின்றது என்றாள்.

பிறகு மாந்தாதா மன்னன் மற்றொரு மகளின் மாளிகைக்குச் சென்று, அவளிடமும் முன்போலவே, அவளது சுகத்தைப் பற்றி விசாரித்தான். அதற்கு அவளும் தனக்கு கிருஹ பூஷண, சயன, போஜனாதி சவுக்கியங்களில் ஒன்றும் குறைவில்லை என்றும், ஆயினும் தன் கணவன் தன்னை விட்டுப் பிரியாமல் எந்நேரமும் தன்னுடனேயே மகிழ்ந்திருப்பதினால் தனது சகோதரிகளுக்கு நேர்ந்துள்ள துக்கமே தனக்குத் துக்க காரணமாக இருக்கிறதென்றும் சொன்னான். பிறகு மன்னன் இதுபோலவே ஒவ்வொரு புதல்வியின் மாளிகைக்கும் சென்று விசாரித்தான். எல்லோரும் ஒன்றுபோலவே பதில் சொல்லி, அவனை நன்கு உபசரித்தார்கள். இதனால் மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்து, ஏகாந்தத்தில் உட்கார்ந்திருந்த சவுபரி முனிவரைக் காணச் சென்று, அவரால் மரியாதை செய்யப்பெற்று, வெகு விநயத்துடன் அவரை நோக்கி, ஓ மகானுபவரே! தங்களின் உயர்வான சித்தியின் பிரபாவத்தைக் கண்டேன். நான் இதுபோன்ற சம்பத்து விலாசம் இருப்பதைக் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. இது எவ்வளவோ அவ்வளவும் உமது தவத்தின் பயன் ஆகும்! என்று சொல்லி, அவரை மிகவும் புகழ்ந்தான். பிறகு அவருடன் சிலகாலமிருந்து, இஷ்டமான போகங்களை அனுபவித்து, அதன் பிறகு தனது தலைநகரை அடைந்தான். சிலகாலத்துக்குப் பிறகு, சவுபரி முனிவரின் பத்தினிகளான குமாரிகளுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். அப்பிள்ளைகள் மீது சவுபரி முனிவருக்கு நாளுக்கு நாள் ஆசையும், அன்பும் அதிகமாயிற்று. அதனால் அவர் மமதையடைந்து, இந்தக் குழந்தைகள் மழலைச் சொற்களைச் சொல்லிக்கொண்டு சிற்றடிகளால் நடக்குமோ? இவர்கள் யவனமுடையவர்களாவார்களோ? இவர்கள் திருமணம் புரியத்தக்க பெண்களோடு கூடியிருக்கக் காண்பேனோ? இவர்களுக்குக் குழந்தைகள் உண்டாகுமோ? அக்குழந்தைகள் வளர்ந்து மனைவியரோடு சேர்ந்து சந்தானமுடையவர்களாக இருப்பதை நான் கண்டு களிப்பேனோ என்று இந்தவிதமாகக் காலம் செல்லச் செல்ல அவரது மனோரதங்கள் வளர்ந்து கொண்டே இருந்ததால், அவர் வேறு சிந்தனையில்லாமல் இருந்து வந்தார். இப்படியிருக்கும் போது சவுபரி முனிவர் தமக்குத் தாமே யோசிக்கலானார். ஓஹோ! எனக்கு நேர்ந்த மோகத்தை என்னவென்று சொல்வேன்? பதினாலாயிரம் ஆண்டுகள் சென்றாலும் இந்த மனோரதங்கள் ஒழியாது போலத் தோன்றுகிறதே! ஏனென்றால் முன்பு இருந்த மனோரதங்கள் நிறைவேற நிறைவேற புதியதான வெவ்வேற மனோரதங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றனவே. நாம் கோரியபடி குழந்தைகள் பிறந்து தவழ்ந்து சித்தடிவைத்து நடந்து வளர்ந்து பருவம் அடைந்து மணஞ்செய்து மக்களையும் பெறக் கண்டோம். இப்பொழுதோ, நமது மனமோ, பேரன்மாருக்கும் சந்ததியுண்டாவதைக் காண விரும்புகிறது. அதைக் கண்டாலும் வேறொன்று மேலும் உண்டாகும். அது நிறைய, வேறொன்று உண்டாகும். மேன்மேலும் ஆசையுண்டாவதைத் தடுப்பதுதான் எப்படி? மரணம் அடைவதனால் மாத்திரம் இந்த மனோரதங்களுக்கு முடிவுண்டாகுமேயன்றி வேறொன்றினாலும் முடிவுண்டாகாது.

இது இப்போது தான் எனக்கு நன்றாகத் தெரிகிறது. இவ்வாறு கோரிக்கைகளிலே அழுந்தியிருப்பவனுக்கு ஒருபோதும் மனமான பரம்பொருளைப் பற்றமாட்டாது. தண்ணீரில் வாசஞ்செய்யும்போது மித்திரனான மச்சத்தின் சேர்க்கையினால் அல்லவோ எனது சமாதி நிஷ்டைக்குலையலாயிற்று? சகவாச தோஷத்தால் அல்லவா, நான் அரசகுமாரிகளை மனைவியர்களாக அடைய நேர்ந்தது. இந்தப் பெண்டிரைக் கொண்டதால் அன்றோ மேன்மேலும் ஆசைப்பெருக்கம் உண்டாயிற்று. ஒரு பெண்டிரைக் கொள்வதும் ஒரு புத்திரனைப் பெறுவதுமே வெகு துக்கத்துக்குக் காரணமாக இருக்கும்போது ஐம்பது பெண்டிரையும் நூறு பிள்ளைகளையும் பெற்று நான் துக்கத்தைப் பெருக்கிக் கொண்டேனே? நான் தண்ணீரிலிருந்து செய்த தவப்பேற்றுக்கு இந்தச் செல்வப்பேறு இடையூறாயிற்றே? மச்சத்தின் கூட்டுறவால் ஏற்பட்ட மக்கட்பேற்றின் விருப்பத்தால் மனங்கவரப்பட்டுப் போனேனே? சங்கமற்றிருப்பதே முனிவர்களுக்கு மோக்ஷத்தின் காரணமாகும் சங்கத்தினால் குற்றங்கள் அல்லவா உண்டாகும்? யோக நிஷ்டை கை கூடியவனும் சங்கத்தால் வீழ்வானாகில் அற்ப சித்தியுள்ள என்போன்றோருக்கு கேட்கவும் வேண்டுமோ? இனிமேலாவது தக்க முயற்சிசெய்து, ஆன்மாவைக் காக்கவேண்டும். ஆகையால் எல்லாவற்றையும் அளிக்கவல்லவனும் இத்தகையது என்று சிந்திக்க ஒண்ணாத திவ்யச் சொரூபமுள்ளவனும், அணுவுக்கு அணுவாயும், மகத்துக்கு மகமாயும் இருப்பவனும், முன்பு ஒரு யுகத்திலே வெண்மையாயும் இந்த யுகத்திலே கருமையாயுமிரா நின்ற திவ்விய மங்கள விக்கிரஹமுள்ளவனும், பிரகிருதிக்கு உட்படாத தூய்மையுருவும், பிரகிருதிக்கு உட்பட்ட சுத்தமல்லாத சொரூபமுடையவனும், லோகேசுவரனுமான ஸ்ரீவிஷ்ணுபகவானை ஆராதிக்கக் கடவேன். சகல தேஜோரூபியாகவும், சர்வ ஸ்வரூபியாகவும், வெளிப்பட்டதும் வெளிப்படாததுமான திருமேனியை உடையவனாகவும், காரிய காரண ரூபியாகவும், தேச காலாதி பரிச்சேதமில்லாதவனாகவும் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிஷ்ணுவினிடத்திலே மீண்டும் பிறவியில்லாமல் இருத்தற்கு என் சித்தம் சஞ்சலமின்றி ஸ்திரமாக இருக்கக் கடவது. சர்வ பூதாத்துமகனாகவும் நிர்மலனாகவும் சர்வேசுவரனாகவும் ஆதி மத்யாந்தர ரகிதனாகவும் இருக்கும். அந்த அநந்தனைக் காட்டிலும் வேறாகத் தோன்றும்படியான பொருள் ஒன்றும் இல்லையோ அந்தத் தேசிகனுக்கு எல்லாம் தேசிகனாக எழுந்தருளியுள்ள ஸ்ரீவிஷ்ணுவை சரணமாகப் பற்றுகிறேன்! என்று இவ்விதம் தனக்குத்தானே சிந்தித்த சவுபரி முனிவர், புத்திரர்களையும் வீடு, தோட்டம் முதலிய யாவற்றையும் பற்றற விட்டு, தமது மனைவியருடன் வனத்துக்குச் சென்று, வானப் பிரஸ்தர் செய்யவேண்டிய நித்தியக்கர்ம அனுஷ்டானங்களைச் செய்து கொண்டு, சகல பாவங்களையும் போக்கிக் கொண்டு, அதனால் பக்குவமான சித்த நிலையை அடைந்து, அக்கினிகளே ஆத்மாவிலே ஏற்றிவிட்டுச் சந்நியாச ஆசிரமத்தில் பிரவேசித்தார். அவ்விதமாகி, சகல கிரியாக லாபத்தையும் எம்பெருமானுக்கே ஆராதனமாகச் சமர்ப்பித்து நாசம் இல்லாததும், விகார சூன்யமானதும் மரணாதிகளுக்கு இடமாகாததும் அளவற்றதும், பரம பாகவதர்கள் அடையும்படியானதுமான விஷ்ணுலோகம் என்று சொல்லப்படும் பரமபதத்தை அடைந்தார். மைத்ரேயரே! மாந்தாதா மன்னனைப் பற்றிய வரலாற்றிலேயே, இந்த சவுபரி முனிவரின் சரிதத்தையும் நான் உமக்கு சொன்னேன். இதை எவன் ஸ்மரிக்கிறானோ, படிக்கிறானோ, படிக்க வைக்கிறானோ, கேட்கிறானோ, கேட்பிக்கிறானோ, தரிக்கிறானோ, எழுதுகிறானோ, எழுதுவிக்கிறானோ, அதன்படி நடக்கிறானோ, நடத்துவிக்கிறானோ, உபதேசிக்கிறானோ, அவர்களுக்கெல்லாம் எட்டுப் பிறவிகள் வரையிலும் தீயச் சிந்தையும், தீய ஒழுக்கமும் தீயவழியில் மனம் வாக்கு செல்லுதலும், பரித்தியாகம் செய்ய வேண்டியவைகளிலே அபிமானமும் உண்டாவதில்லை!

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ந்யாஸ த்ரயீ!!–1-ஸ்ரீ ந்யாஸ விம்சதி-

January 26, 2023

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக்க கேஸரீ-வேதாந்தாசார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

————

பிறவிக் கடலைக் கடத்து விக்கும் நாவாய் ஸ்ரீ ந்யாஸ த்ரயீ!!

ந்யாஸம் என்றால் “பொறுப்புத் துறப்பு” என்று பொருள். மனிதப் பிறவியின் சாதனை எனலாம் இதனை. நிக்ஷேபணம், பர ந்யாஸம், ஶரணாகதி என்றும் இதற்குப் பெயர். எல்லா தபஸ்ஸிலும் ஶ்ரேஷ்டமானது இந்த ந்யாஸம் என்ற அனுஷ்டானம் என்கிறது வேதம்.
ஸ்வாமி தேஶிகன் அருளிச்செய்த சாஸ்த்ர, காவ்ய, நாடக, தர்க்க, ஸ்தோத்ர க்ரந்தம் எதுவாயினும் பரந்யாஸம் என்ற கருத்தையே மைய்யமாய்க் கொண்டு விளங்குவதால் “ஓரொன்று தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு வானேரப் போமளவும் வாழ்வு” என (ஏதேனும் ஒன்றைக் கற்றறிந்தாலே) மோக்ஷத்தில் ஜீவன்களைக் கொண்டு சேர்க்கும் வல்லமை படைத்தவை இந்த க்ரந்தங்கள். இந்த அனுஷ்டானத்திற்கென்றே ந்யாஸ தஶகம், ந்யாஸ விம்ஶதி, ந்யாஸ திலகம் என்ற மூன்று க்ரந்தங்களை அருளியுள்ளார் ஸ்வாமி. இம்மூன்றின் தொகுப்பே “ந்யாஸ த்ரயீ.”
இவற்றுள் தனிச்சிறப்பு வாய்ந்தது “ந்யாஸ விம்ஶதி”. ஶ்ருதி, ஸ்ம்ருதி, ஆழ்வார் ஸுக்த்திகள், ஆகம க்ரந்தங்கள் ஆகியவை கூறும் ப்ரதான விஷயங்களை இந்த ஸ்தோத்ர க்ரந்தம் உள்ளடக்கியுள்ளது. இக்காரணத்தால் அக்காலத்தில் வாழ்ந்த மகான்கள் ப்ரார்த்தித்ததற்கிணங்க சுருக்கமான வ்யாக்யானமாக (“திங்மாத்ர ப்ரதர்ஶனம்”) ஸ்வாமியே அருளியுள்ளதே அதன் சிறப்பு.

ந்யாஸ தசகம் ந்யாஸ விம்சதி ந்யாஸ திலகம் -ந்யாஸ த்ரய ஸ்தோத்திரங்கள்-

28 -ஸ்லோகங்களுக்குள் இது ஒன்றுக்கும் மட்டும் ஸ்வாமி தேசிகன் வியாக்யானமும் அருளிச் செய்து இதன் முக்யத்வத்தை காட்டி அருளுகிறார் –

ஶரணாகதி என்ற இந்த அனுஷ்டானத்தை ஓர் நல்ல ஆசார்யனை ஆஶ்ரயித்து அனுஷ்டிக்க வேணும் என வேதம் விதிக்கிறது இதற்கு “நியம விதி”
என்று பெயர். ஆசார்யன் மூலம் கற்கும் வித்தைகளே நிலைத்து நிற்கும். உபநிஷத் சொல்லும் “உப கோசலன்” கதை ஆசார்ய அனுக்ரஹம் ஒரு ஸிஷ்யனை ப்ரகாசப் படுத்துவதையும், ஸிஷ்ய நிஷ்டையையும் தெளிவாய்ச் சொல்கிறது.
ந்யாஶ விம்ஶதியின் முதல், இரண்டாம் ஶ்லோகம் ஆசார்ய லக்ஷணம் பற்றியது. ஸதாசார்யன் என்பவர் 14 லக்ஷணங்கள் பொருந்திய வராக இருக்க வேண்டும் என்பதற்கு ஸ்வாமியே எடுத்துக்காட்டாக உள்ளார் என்றால் மிகையில்லை.
சித்தம் சத் ஸம்ப்ரதாயே ஸ்திர தியம் அநகம் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
சத்வஸ்தம் சத்ய வாஸம் சமய நியதயா சாது வ்ருத்த்யா ஸமேதம்
டம்பா ஸூயாதி முக்தம் ஜித விஷயி கணம் தீர்க்க பந்தும் தயாளும்
ஸ்காலித்யே சாஸிதாரம் ஸ்வ பர ஹித பரம் தேசிகம் பூஷ்ணுரீப்சேத் –1-

சத் ஸம்ப்ரதாயே -நல்ல -சத்துக்கள் -ஸ்ம்ப்ரதாயத்திலே
சித்தம் -சித்தி -நிலை பெற்றவனும் -ப்ரஸித்தி வாய்ந்தவனும்
ஸ்திர தியம் -உறுதி கொண்ட மனப்பான்மை கொண்டவனும்
அநகம் –குற்றம் அற்றவனும்
ஸ்ரோத்ரியம் -வேத வேதாந்தங்களைக் கசடறக் கற்று அறிந்தவனும்
ப்ரஹ்ம நிஷ்டம்-பரமாத்மாவிடம் நிலை பெற்றவனும்
சத்வஸ்தம் -ஸத்வ குணத்தில் இருப்பவனும்
சத்ய வாஸம் -பேசியத்தைப் பழுது ஆக்காதவனும்
சமய நியதயா -காலம் தவறாத -காலத்துக்கு ஒத்ததான
சாது வ்ருத்த்யா -நல்ல ஒழுக்கத்தோடே -மதக் கொள்கைக்கு ஏற்ற நல்ல நடத்தை யுடையவனும்
ஸமேதம்-கூடியவனும்
டம்பா ஸூயாதி முக்தம் -டம்பம் அஸூயை போன்ற கெட்ட குணங்கள் இல்லாதவனும்-ஆதி -பிற ஆத்ம கெட்ட குணங்கள் இல்லாதவனும்
ஜித விஷயி கணம் -ஸப்தாதி விஷயங்களில் செல்லும் இயல்புடைய ஐம் புலன்களையும் தனது வசமாக்கிக் கொண்டவனும்
தீர்க்க பந்தும் -மிகப் பெரிய பந்துவாகவும்
தயாளும்-வருந்துவர் இடம் இரக்கம் கொண்டவனும்
ஸ்காலித்யே சாஸிதாரம் -தவறு நேர்ந்தால் கண்டிப்பவனும்
ஸ்வ பர ஹித பரம் -தனக்கும் பிறருக்கும் நன்மையைத் தேடுபவனும்
ஆகிய இந்த 14 குணங்கள் வாய்ந்தவரை
பூஷ்ணுர் –நல்ல நிலையில் இறுக்கப் போகும் சிஷ்யன்
தேசிகம் –ஆச்சார்யனாக
ஈப்சேத் –பெற விரும்ப வேணும்

ஆச்சார்ய லக்ஷணங்கள் -14-அருளிச் செய்கிறார் இதில் –

ஆசார்ய லக்ஷணங்கள்

  • ஸத் ஸம்ப்ரதாயே – ஸ்திரமான ஸம்ப்ரதாய வழியில் வந்த ஆசார்யன் ரிஷி துல்ய பக்தி,     வைராக்ய, அனுஷ்டானமுடையவராயிருப்பர்.
  • ஸ்திர தியம் – சந்தேகமற்ற ஸ்திர மான ஞானமுடையவராய் இருக்கவேண்டும்.
  • அநகம் – ஸாஸ்த்ரம் சொல்வதைச்செய்பவராய் தோஷமற்றிருத்தல்
  • ஸ்ரோத்ரியம் – வேத வேதாந்தங்களைக் கற்றவராயிருத்தல்
  • ப்ரும்ஹ நிஷ்டம் – எம்பெருமானிடம்அஸஞ்சல பக்தியுடனிருத்தல்
  • ஸத்வஸ்த்தம் – ஸத்வ குணத்தில் நிலைத்து ஸாத்விகராயிருத்தல்.
  • ஸத்ய வாசம் – ஸாஸ்த்ர ,லௌகீக விஷயங்களில் ஸத்யமாயிருத்தல்.
  • ஸமய நியதயா ஸாது வ்ருத்யா – காலத்திற்கேற்ப பெரியோர் வரையறுத்த அனுஷ்டானங்களை ச் செய்தல்.
  • டம்ப அஸூயாதி முக்தம் – தற்பெருமை,பொறாமை முதலிய தீயகுணங்களில்லாதிருத்தல்.
  • ஜித விஷயி கணம் – இந்த்ரியங்களை ஜெயித்திருத்தல்.
  • தீர்க்க பந்தும் – இம்மைக்கு மட்டுமன்றி மறுமைக்கும் வழிகாட்டும் வகையில் ஆத்ம பந்துவாயிருத்தல்.
  • தயாளும் – மாத்ரு வாத்ஸல்யம் போல கருணையுடனிருத்தல்.
  • ஸாஸிதாரம் – தவறைத் திருத்திப் பணி கொள்ளும் தகைமையனாயிருத்தல் (பயனன்றாகிலும், பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்துவார்)
  • ஸ்வபர ஹிதபரம் – ஹிதத்தைச் சொல்பவராயிருத்தல். பரஸ்பர ஆத்ம, ஶரீர ஹிதம் சொல்பவராயிருத்தல்.
  • ஆஸீ நோதி சாஸ்த்ரார்த்தம் -ஸூ யம் ஆச்ரயதே ஆச்சாரயத் -மூன்றும் -ஞானம் ஞானம் அனுஷ்டானம் வாக் சாதுர்யத்தால் சிஷயரை அப்படியே ஆக்கி –
    சேர்ப்பார்களை பஷிகளாக்கி ஞான கர்மங்களை சிறகு என்னும் -கடகர்கள்-
    கு ரு –கு -இருட்டை தொலைக்கும் – அம் பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரந்த சம்பந்தம் காட்டி -தடை காட்டி
    உம்பர் தெய்வம் என்னும் வாழ்வுக்கு சேர்ந்த நெறி காட்டும்-
    சம்சார நிவர்த்தகமான திரு மந்த்ரத்தை நேராக உபதேசிப்பவரே ஆச்சார்யர் –1–சித்தம் சத் ஸம்ப்ரதாயே–சத் சம்பிரதாய தத்வ த்ரய அர்த்த பஞ்சக -ஞானம் பெற்று
    2–ஸ்திரதியம் -அசைக்க முடியாத –புற சமயிகளால் —
    3–அநகம் -குற்றம் இல்லாத -க்யாதி லாப பூஜைக்காக இல்லாமல் தம் பேறாக –
    ஏற்ற காலங்கள் எதிர் பொங்க மீது அளிக்கும் –பாலை சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் -ஆற்றப் படைத்தான் –
    கூரத் தாழ்வான போல்வார் இந்த பசுக்களை -கொண்ட நம் ராமானுஜர் – மகன் -யதிராஜ சம்பத் குமாரார் -செல்ல -செல்வப் பிள்ளை –
    தாய்க்கும் தம்பிக்கும் மகனுக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் உண்டே இந்த லக்ஷணங்கள் –
    4–ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்–இது ஒன்றே நிஷ்டை
    5–சத்வஸ்தம் –சத்வ குணத்திலே நிலை நின்று
    6–சத்ய வாஸம்-உண்மையே பேசி -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு -பின்னோர்ந்து –தன நெஞ்சில் தோற்றியதை சொல்லி
    இது பூர்வர் சொன்னார் என்று உலகை மயக்குவார்கள் பலர் –
    ஆச்சார்யர் சிஷ்யனை தன் ஆச்சார்யனுக்கு சிஷ்யன் -என்ற நினைவால் –
    ஆச்சார்யர் திருவடிகளே சரணம் சொல்லி -வெள்ளத்தில் தப்பி -ஆச்சார்யர் தன் திருவடிகளே சரணம் என்று ஆழ்ந்த கதை –
    7– சமய நியதயா –அனுஷ்டானம் விடாமல்
    8—சாது வ்ருத்த்யா ஸமேதம்
    9–டம்பா ஸூ யாதி முக்தம் -டாம்பீகம் அ ஸூ யை இத்யாதிகள் இல்லாமல் – சரீரம் அர்த்தம் பிராணன் அனைத்தையும் சிஷ்யன் சமர்ப்பித்து
    சிஷ்யன் ஆச்சார்யர் தேக ரக்ஷணம் -சிஷ்யன் ஆத்ம ரக்ஷணம் ஆச்சார்யர் கடமை -சிஷ்யன் ஆசார்யன் சொத்தை வைத்து தன் தேக ரக்ஷணம்
    வாங்கிக் கொள்ள கூடாது -கொடுக்க கூடாது -நினைவுடன் கொடுக்காமல் அவர் சொத்தை திரும்பி கொடுக்கிறோம் -தன்னது என்று அபிமானிக்க கூடாதே
    கொள்ளில் மிடியனாம் -கொடுக்கில் கள்ளனாம் –
    10–ஜித விஷயி கணம்
    11 —தீர்க்க பந்தும்-எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்
    12–தயாளும் –கிருபை பொழிந்து- கட்டாயம் தரையில் பாட்டம் மழை பொழிந்தால் போலே பகவத் விஷயம் உபதேசித்து -சஜாதீயர் –
    அனுஷ்ட்டித்தும் உபதேசித்தும் காட்டி அருளுவார் -மோக்ஷ பந்த இரண்டும் பகவான் ஹேது -ஆச்சார்யர் மோக்ஷ ஏக ஹேது –
    13–ஸ்காலித்யே சாஸிதாரம்–சம்சாரத்தில் திருத்தி பணி கொண்டு
    14—ஸ்வ பர ஹித பரம்
    தேசிகம் பூஷ்ணுரீப்சேத் –மார்க்கம் திசைதி தேசிகம் -கை காட்டும்14-லக்ஷணங்கள்
    ஆச்சார்ய சம்பந்தம் இருப்பில் ஆத்ம குணங்கள் வந்து சேரும் பகவத் சம்பந்தமும் வரும் –
    ஆச்சார்யர் பிரியம் சிஷ்யன் செய்ய வேண்டும் –  சிஷ்யன் ஹிதம் ஆச்சார்யர் பார்க்க வேண்டும் – ஈஸ்வரனை கொண்டு ஆசார்யன் நடத்த கடவன்
    பெருமாள் நடுவில் இருந்து ஆச்சார்யருக்கு ஹிதமும் சிஷ்யனுக்கு பிரியமும் -நடத்தி அருளுவான் —

    ஸத் சம்பிரதாயத்தில் ஸித்தம் -ஸத் சம்பிரதாயத்தில் ஸ்திர தியம் -திட அத்யவசாயம்

    அநகம்–
    அகம் என்பது பாவம் துக்கம் வியசனம் -ஆபத்து -அஜாக்கிரதை –காம க்ரோதங்களால் வரும் வியசனம்
    இவை அனைத்தையும் விலக்கியவன் அநகம் உள்ளவன்

    ப்ரஹ்ம நிஷ்டை -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே என்று இருக்கும் நிலை

    ஸத்யம் பூத ஹிதம் ப்ரோக்தம் -ஸத்யமும் பிரியமும் கலந்த பேச்சு

    தர்மஞ்ஞய ஸமயே ப்ரமாணம் –ஆச்சார்யர் அனுஷ்டானத்தையே தழுவி இருத்தலே ஸமய நியதம்

    தீர்க்க பந்து -உலகு எல்லாமே உருவாகக் கொண்டவன்
    ஸர்வஸ் தரது துர்காணி ஸர்வோ பத்ராணி பஸ்யது-ஸ்ரீ வியாஸர் -அனைவர் துக்கங்களையும் போக்கி ஸர்வ ஸூஹ்ருத்தாக இருக்க வேண்டும்

    பயன் அன்றாகிலும் பாங்கு அல்லராகிலும் திருத்திப் பணி கொள்ள வேண்டுமே

ஆக இந்த குணங்களுடைய ஆசார்யனை ஸிஷ்யன் அணுக வேண்டும். இத்தகைய ஆசார்ய–ஸிஷ்ய சம்பந்தம் கர்மாதீனமாய் ஏற்படுவதல்ல. பூர்வ புண்ய பலத்தால் மட்டுமே கிட்டும்.

——————

இத்தகைய ஆசார்யனை பகவானைப் போல உபாஸிக்க வேணும் என்றும் அதற்கான காரணங்களையும் 2ம் ஶ்லோகத்தில் சொல்கிறார்.
ஸாக்ஷாத் நாராயணனே ஆசார்யனாய் அவதாரம் செய்கிறார் என்கிறது ஸாஸ்த்ரம். பக்தி, ஸ்தோத்ரம், கைங்கர்யம் ஆகியவற்றால் ஆசார்யனை அதிதேஶ்யம் செய்ய வேண்டும். இப்படி ஆசார்யனை உயர்ந்த ஸ்தானத்தில் இருத்துவதன் காரணங்களைப் பட்டியலிடுகிறார் ஸ்வாமி.
ஆசார்யன் செய்யும் உபகாரங்களுக்கு ப்ரத்யுபகாரம் ஸிஷ்யனால் செய்யவே முடியாது

அஞ்ஞான த்வாந்த ரோதாத் அக பரிஹரணாத் ஆத்ம சாம்யா வஹத்வாத்
ஜென்ம ப்ரத்வம்ஸி ஜென்ம ப்ரத கரிமதயா திவ்ய த்ருஷ்ட்டி பிரபாவாத்
நிஷ் ப்ரத்யூஹா ந்ருசம்ஸ்யான் நியதி ரஸதயா நித்ய சேஷித்வ யோகாத்
ஆச்சார்ய சத் ப்ரப் ரத யுபகரண தியா தேவவத் ஸ்யாது பாஸ்ய–2-

அஞ்ஞான த்வாந்த ரோதாத் -அறிவின்மை என்னும் அருளை அகற்றுவதாலும்
அக பரிஹரணாத் -கீழ் ஸ்லோகத்தில் காட்டிய பாபம் துக்கம் வியசனம் -மூன்று விதமான அகத்தை நீக்குவதாலும்
ஆத்ம சாம்யா வஹத்வாத்–பிறரையும் தன்னைப் போலவே ஆக்குவதாலும்
ஜென்ம ப்ரத்வம்ஸி ஜென்ம -மறு பிறவியைத் தீர்க்கும் வித்யா ஜென்மத்தை
ப்ரத -கொடுத்து அருளுபவர் என்கிற
கரிமதயா -பெருமையாலும்
திவ்ய த்ருஷ்ட்டி பிரபாவாத்–ஞானக் கண்ணின் மஹிமையாலும்
நிஷ் ப்ரத்யூஹா ஆந்ரு சம்ஸ்யான் -ஆந்ரு சம்ஸ்யம் -பிறருக்குத் தீங்கு செய்யாது இருப்பதையே தடை இன்றி நடத்தப்படுவதாலும்
நியதி ரஸ தயா -என்றும் மாறாத சுவை பொருந்தியதாலும்
நித்ய சேஷித்வ யோகாத்-ஒழிக்க முடியாத சேஷித்வம் கூடி இருப்பதாலும்
ஆச்சார்ய –ஆச்சார்யன்
சத் -ஸத்துக்களால்
அப்ரத் யுபகரண தியா -அவன் செய்து அருளும் உபகாரத்துக்கு சத்ருசமாக செய்ய ப்ரத்யுபகாரம் செய்ய முடியாது என்ற எண்ணம் கொண்டவனும்
தேவவத் -தேவனைப் போல்
ஸ்யாத் உபாஸ்ய-உபாஸிக்கத் தக்கவனாக இருக்க வேணும் -உபாஸிக்க வேணும் என்றபடி –

சிஷ்யன் ஆச்சார்யரையே பகவானாக கொள்ள வேண்டிய -8-காரணங்களை அருளிச் செய்கிறார் இதில் –
பிரதியுபகாரம் செய்ய நான்கு விபூதிகளும் இரண்டு பர ப்ரஹ்மமும் வேண்டுமே

ஆசார்யன் செய்யும் உபகாரங்களாவன.
  • அஞானம் என்ற இருட்டைப் போக்கி தத்வ, ஹித, புருஷார்த்தம் என்ற ஆத்ம ஞானத்தை அளிப்பவர் ஆசார்யன்.
  • ஶரணாகதி என்ற அனுஷ்டானத்தைச் செய்வித்து நம் பாவங்களனைத்தையும் அழித்து மோக்ஷத்துக்கு வழிகாட்டுபவர்.
  • ஞானம், குணம், அனுஷ்டானம் ஆகியவற்றை அளித்து தனக்குச் சமானமாக சிஷ்யனை ஆக்குகிறார்ஆசார்யன். எம்பெருமான் முக்தாத்மாவுக்கு ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம் அளிப்பது போல்.
    • ஸாலோக்யம் – முக்தனை ஶ்ரீ வைகுண்டலோகத்துக்கு வரவழைத்தல்.
    • ஸாமீப்யம் – அத்தனை பரும்ஹாண்டமான ஶ்ரீவைகுண்ட லோகத்தில் அவனுக்கு ஸமீபத்தில் நம்மை இருக்கச் செய்தல்
    • ஸாரூப்யம் – அவனைப்போல அப்ராக்ருதமான ரூபத்தை நமக்குத் தருவது.
    • ஸாயுஜ்யம் – இதற்கு மேலே தனக்குச் சமமான ப்ரும்ஹானந்தத்தை நமக்குத் தருவது
    • “தன்னோடொக்கத் தன் தாளிணைக்கீழ் வைக்கும் அப்பன்” என்கிறார் ஆழ்வார்.
  • வித்யா ஜன்மம் அளித்து ஆத்ம போஷணம் செய்து புதுப்பிறவி தந்து இந்த ஸம்ஸார பந்தம் தொடராது காப்பவர் ஆசார்யன். பிதாவாகிய ஆசார்யன், மந்த்ரமாகிய மாதாவினால் ஞானமாகிய புதுப் பிறவியைக் கொடுத்து சிஷ்யனை கடைத்தேறச் செய்கிறார்.
  • எம்பெருமானின் திவ்ய த்ருஷ்டியைப் போல ஆசார்யனும் சிஷ்யனைக் குளிரக் கடாக்ஷித்து அனுக்ரஹிக்கிறார். (ஆளவந்தார் கடாக்ஷம் உடையவர் மேல் படிந்தாற்போல. நடாதூரம்மாள் கடாக்ஷம் ஸ்வாமி தேஶிகன் மேல் விழுந்தாற்போல.)
  • எம்பெருமான் கருணை எல்லோரிடமும் தடையின்றி செல்வதுபோல் ஆசார்யனின் கருணையும் சிஷ்யனிடம் எல்லையின்றி சுரக்கின்றது.
  • எம்பெருமான் அடியார்களுக்கு என்றும் தெவிட்டாத அமுதமாய் இருப்பது போல் ஆசார்யனும் சிஷ்யர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் ஆனந்தத்தை அளிக்கிறார்.
  • எம்பெருமானைப் போல ஆசார்யனும் நித்ய ஸ்வாமி யாக உள்ளார் தன் சிஷ்யர்களுக்கு. எம்பெருமானுக்குள்ள ஜீவ சம்பந்தமும் ஆசார்யனுக்குள்ள சிஷ்ய சம்பந்தமும் ஒழிக்க ஒழியாது. இத்தகைய உயர்ந்த ஆசார்யனுக்கு ஸ்வரூபமாக, போக்யமாக, பாக்யமாக கைங்கர்யம் செய்வதே ப்ரத்யுபகாரமாக அமையும்.
  • ஆச்சார்ய தேவோ பவ -ஸ்ருதி
    மயர்வற மதிநலம் அருளுபவர் -நிர்ஹேதுகமாக அஞ்ஞான கந்தமே இல்லாதபடி -அறியாக் காலத்துள்ளே -அறியாதது அறிவித்த அத்தன்
    நாட்டுக்கு இருள் செக நான்மறை அந்தாதி நடை விளங்கவே
    வேதம் அரண்மனைக்கு விளக்கு போன்ற அருளிச் செயல்கள்
    ஸாஸ்த்ர பாணிநா ஸ்வயமேவ வந்து அவதரிக்கிறான் அன்றோ
    பாபம் பிரஞ்ஞாம் நாசயதி -அஞ்ஞானத்துக்கு மூல காரணம் தொல்லைப் பழ வினையே -அவற்றை முதலறித்து
    தாப த்ரயங்களைப் போக்கி அருளி -செடியாய வல் வினைகளைத் தீர்க்கும் திருமால் போலவே பண்டை வல்வினை பாற்றி அருளுகிறாரே ஆச்சார்யர்
    செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் அன்றோ
    அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –

————————————-

சத் புத்தி சாது சேவீ சமுசித சரிதஸ் தத்த்வ போதாபிலாஷீ
ஸூஸ்ருஷூஸ் த்யக்த மான ப்ரணி பதன பர ப்ரஸ்ன கால ப்ரதீஷ
சாந்தோ தாந்தோ அநஸூயு சரணமுபகத சாஸ்த்ர விசுவாஸ சாலீ
சிஷ்ய ப்ராப்த பரீஷாம் க்ருதவித் அபிமதம் தத்த்வத சிக்ஷணீய –3-

சத் புத்தி -நல்ல புத்திசாலியாயும்
சாது சேவீ –சாதுக்களை ஸேவை பண்ணும் ஸ்வ பாவம் உள்ளவனாயும்
சமுசித சரிதஸ் -தனது நிலைமைக்கு ஏற்ற நடை யுடையவனாயும்
தத்த்வ போதாபிலாஷீ-தத்வ ஞானங்களை அறிய அபி நிவேசம் கொண்டவனாயும்
ஸூஸ்ருஷூஸ் –ஆச்சார்யனுக்கு ஸூஸ்ருஷை செய்பவனாயும்
த்யக்த மான –கர்வத்தை விட்டவனாயும்
ப்ரணி பதன பர –ஆச்சார்யனைக் கண்ட போது ஸாஷ்டாங்க