இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-
“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.
————
அவதாரிகை –
கீழில் பத்துப் பாட்டாலும்
முற்பட உணர்ந்தவர்கள் உறங்குகிறவர்களை எழுப்ப
எல்லாரும் கூடி வந்து -ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையிலே சென்று
கோயில் காப்பானையும் வாசல் காப்பானையும் எழுப்புகிறார்கள் –
செய்யாதன செய்யோம் -என்று பண்ணின பிரதிஞ்ஞை-அனுஷ்டான பர்யந்தமாக்க வேணுமே –
ததீயரை முன்னிட்டு பற்றாத அன்று முறை தப்பின சூர்பணகை பட்டது படும் அத்தனை –
வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டும் -என்னும்-
பெரியாழ்வார் திருமகள் இறே இவள்-
முதல் ஐந்து பாட்டாலே
பகவத் அனுபவ உபகரணங்கள் அருளிச் செய்யப் பட்டன
ஆறாம் பாட்டாலே –
பகவத் ஏக போகரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அநந்ய பிரயோஜனராய் -இவ்விஷயத்தில்
தேசிகர் இன்றிக்கே இருப்பாரை அவர்கள் பக்கல் பரிவாலே
தேசிகர் ஆக்குகை தங்களுக்கு க்ருத்யம் என்று இருக்கை
ஸ்ரீ வைஷ்ணத்வ லக்ஷணம் என்று அவர்களுடைய ஸ்வ பாவத்தை சொல்லுகிறது –
ஏழாம் பாட்டாலே –
பகவத் விஷயத்திலே ஞாதமான அர்த்தம் ஒருத்தனுக்கு விஸ்திருதம் ஆனால்
தங்கள் பரிவாலே
போதயந்த பரஸ்பரம் என்கிறபடியே அறிவிக்கை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –
எட்டாம் பாட்டில் –
பகவத் அனுபவத்தில் பிரத்யா சன்னராய் இருப்பாரைக் குறித்து சாபேஷாராய் இருக்கையும்
அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனைப் பற்றுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –
பத்தாம் பாட்டில் –
ஞாநித்வாத்மைவமே மதம் -என்றும் –
அஹம் சச மம ப்ரிய என்றும் –
அவன் பக்ஷபதித்து இருப்பார் பக்கல் நித்ய சாபேஷராய் இருக்கை ஸ்வரூபம் என்கிறது –
11-பாட்டில் –
பகவத் சம்பந்தம் விச்சேதியாதே போந்த ஆச்சார்ய சந்தான ப்ரஸூதர் நமக்கு பூஜ்யர்
அவர்கள் அடியாக பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது
12-பாட்டில்
பகவத் விஸ்லேஷம் அஸஹ்யமாம் படி அவகாஹித்தார்கள் நமக்கு உத்தேச்யராம் அளவு அன்றிக்கே
தத் சம்பந்தி சம்பந்திகளும் உத்தேசியர் என்று இருக்கை ஸ்வரூபம் என்கிறது –
13-பாட்டில்
பகவத் அனுபவ பரிகரமான ஞான வைராக்ய பக்திகளால் பூர்ணராய் இருப்பார் திறத்து
ததர்த்தமாக ஸ்ரீ வைஷ்ணவர் சாபேஷராய் இருக்கை ஸ்வரூபம் என்கிறது
14-பாட்டில்
பகவத் விஷயத்திலே மூட்டுகையாலே அதிகரித்த நிர்வாஹகர் முன்னாக
பகவத் அனுபவம் செய்கை ஸ்வரூபம் என்கிறது –
15-பாட்டில் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸமூஹம் அபிமதமாய் இருக்குமவர்களைக் கண்டால்
அந்த சமூகமாக அவர்களை உகத்தல் ஸ்வரூபம் என்கிறது –
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களையும் தனித்தனியே எழுப்பின படிக்கு உப லக்ஷணம் –
இப் பத்து பெண்களையும் எழுப்பினது –
முற்பட உணர்ந்த பெண்கள் உறங்குகிறவர்களையும் எழுப்பி –
எல்லாரையும் கூட்டி பெரும் கூட்டமாகத் திரண்டு
ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையில் சென்று
கோயில் காப்பானையும்
திரு வாசல் காக்கும் முதலிகளையும்
திருவாசல் திருக் காப்பு நீக்க வேணும் என்று இரக்கிறார்கள்-
செய்யாதன செய்யோம் -என்று
பண்ணின ப்ரதிஞ்ஜையை அனுஷ்டான பர்யந்தம் ஆக்க வேணும் இறே –
உகந்து அருளின நிலங்களில் உள்ளுப் புகும் போது
ஷேத்ராதிபதிகளையும்
த்வாராத்யஷர்களையும் அனுமதி கொண்டு
புக வேணும் என்று ஸ்ரீ பகவத் சாஸ்த்ரங்களிலே சொல்லுகிற அர்த்தம்
இவர்கள் ஆயர் சிறுமியர்களாய் அறிந்திலர்களே ஆகிலும்
உள்ளே புகுர விட வேணும் என்னும் ஆசை யோடே இருக்கையாலே
ஞானாதிகருடைய அனுஷ்டானமும் கோல் விழுக்காட்டாலே பலிக்கிறது –
ஜனபத சரி தந்த ரீப–(ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் )
ஸ்மேராநநா ஷிக மலை–(ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் )
த்வதீய கம்பீர மநோ நு சாரிண (ஸ்ரீ ஆளவந்தார் )-என்கிறபடியே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசாரத்தை வைதிக விதிகள் பின் செல்லும் அத்தனை இறே
ராகத்தால் ஸ்வயம் ஏவ ப்ரவ்ருத்தாராம் இடத்தில் ராகத்துக்கு விதி முற்பட மாட்டாது
ராகம் தனக்கும் விதி அடி ஆகாதே –
அருளினன்(1-1-1 ) என்கிற பகவத் பிரசாதம் அடி யாய்த்து இறே
இனி ஓர் அடி இட வேண்டினாலும் ருசி கார்யம் ஆகையால்
ருசி உத்பாதகனான அவன் தானே அடியாம் அத்தனை இறே
இது தான் இதர விஷயத்திலே ருசி அன்றே –
வகுத்த விஷயத்திலே ருசி இறே –
காம்ய கர்மாதிகாரிகளுக்கும் த்யாஜ்யமாய் இறே இது இருப்பது
தச் ஸ்ரேஷ்டம் ஜென்ம -என்கிறது ஜென்மமாய்-
சா வித்யா யா வி முக்தயே–என்கிறது வித்யையாய் –
யன்ன பந்தாய -என்கிறது கர்மமாய் –
வரும் வழி அறியும் போது
சாஸ்த்ர சங்கத்தை வரியடைவே கற்று அர்த்த நிர்ணயத்துக்கும் அனுஷ்டானத்துக்கும் நெடும் காலம் செல்லும்
அத்தை அப்யசித்தவர்கள் அதனுடைய தாத்பர்யத்தை கேட்ட அநந்தரம் அனுஷ்ட்டிக்கலாய் இருக்கும்
குளிகை கைப் பட்டால் இரும்பு பொன்னாமா போலே பலிப்பதும் செய்யும்
நஞ்சீயர் நம் பிள்ளைக்கு -ரச வாதம் கைப்பட்டவன் இருந்த இடம் எல்லாம் பொன்னாமா போலே
ப்ரமேயம் கைப் பட்டவனுக்கு சொல்லிற்று எல்லாம் வார்த்தையாம் -என்றார் –
முமுஷூர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்கிற ஸ்ருதியினுடைய
உப ப்ரும்ஹண மான அபய பிரதானத்திலே
நிவேதயதமாம்-என்கிற ஸ்லோகத்தில்
அவனைப் பெறும் இடத்தில் ததீயர் முன்னாக பெற வேணும் என்று சொன்ன அர்த்தத்தை
இப் பாட்டாலே சொல்லுகிறது –
இப் பாட்டில் –
முன்பு உணர்த்தினவர்களும் உணர்ந்தவர்களும் எல்லாரும் கூடி
பகவத் அனுபவத்துக்கு தேசிகனான ஆச்சார்யன் திரு மாளிகையிலே புக்கு
அங்கு கோயில் காப்பானையும் வாசல் காப்பானையும்-எழுப்புகிறார்கள்
ஆச்சார்ய சம்பந்த கடகரை முன்னிட்டு-ஆச்சார்யனை தொழுகையும் பெரியோர் செயல் இறே –
(வேதம் வல்லார்கள் -ஸ்தானம் -6-10-பத்து பெண்கள் -கண்ணனே அவர்கள் வசம் –
சொல்லும் அவிடு ஸ்ருதியும் -வேதமே இவர்கள் கைப்பட்டு பின் தொடரும்
இனி விண்ணோர்கள் ஸ்தானம் -கோயில் காப்பான் வாசல் காப்பான் க்ஷேத்ர பாலகர் -த்வார பாலகர் –
18-19-20-நப்பின்னைப் பிராட்டி திருவடிகளில் சரணம் புக்கு புருஷகாரமாக
மேலே -21 -29–நேராக-பிரதான சேஷி – அவனைப் பிரார்த்தித்து
30-தானான தன்மையுடன் அருளிச் செய்கிறாள் -)
(வானர முதலிகள் புருஷகாரமாக விபீஷணன் பெருமாளை பற்றியது போலவும்
ஆழ்வாரும் வைகல் பூம் கழிவாய் -திரு வண் வண்டூர் -கடகரைப் -பற்றி –
அலர்மேல் மங்கை -மூலம் உறை மார்பனைப் பற்றியது போல் )
(அவனே இவர்கள் கை புகுந்த பின்பு ஸாஸ்த்ர விஷயம் இவர்கள் அறிந்து பின் தொடர வேண்டாமே -)
(எம்பெருமானார் செல்லப்படுகிறார் -இவரே குரு பரம்பரையில் நாயகக்கல்
விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ -உத்தார ஆச்சார்யர் -)
(வைகல் பூம் கழிவாய் -திரு வண் வண்டூர் -கடகரைப் -பற்றி –
அலர்மேல் மங்கை -மூலம் உறை மார்பனைப் பற்றியது போல் )
(ச பூஜ்யவா யதாஹ்யயம் -என்னை பூஜிக்கும் அளவாவது பாகவதரை பூஜிக்க வேண்டும் -பகவத் வசனம்
உபகரித்த வஸ்துவின் பெருமையால் உபகாரகர் மஹிமை
சமுத்திர இவ காம்பீர்யம் -அவன் சங்கல்பித்து இப்படி ஆச்சார்ய பாகவத வைபவம் வைத்து அருளுகிறார் )
நாயகனில் -16–அம்பரமே –17 –-இவை இரண்டாலும் பகவத் விஷயத்தை கிட்டுவார்
தத் ப்ரத்யா சன்னரைப் புருஷகாரமாகக் கொண்டு புகுருகை ஸ்வரூபம் -என்கிறது –
—————————–
நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாசல் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறிமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா நீ
நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்
நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய கோயில் காப்பானே –
ஸ்ரீ நந்த கோபர் திரு மாளிகைக்கு காவலாய்
எங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –
நாயகன் என்று ஸ்ரீ நந்த கோபரை சொல்லிற்று ஆகவுமாம் –
இவர்களால் பெறுமவன் அன்றோ நாயகன் -ஆவான் –
இவனை நாயகன் என்கிறது என் என்ன –
பல சித்தி ஆச்சார்யனாலே ஆகையாலே -உபகாரகனை நாயகன் என்கிறார்கள்
பிரதான சேஷியைக் காட்டில் த்வார சேஷிகளே எங்களுக்கு
சேஷிகள் என்கிறார்கள் –
நாயகனாய் நின்ற –
நாயகனாய் என்கிற நாயகத்வம் திரு வாசல் காக்கும் முதலிகளுக்கு விசேஷணம் ஆகவுமாம் –
ஸ்ரீ நந்த கோபர்க்கு விசேஷணம் ஆகவுமாம் –
உத்தேச்யமாய் பாவிக்கிற கிருஷ்ணன் பக்கல் சொல்லாது (செல்லாது )ஒழியும் அத்தனையே வேண்டுவது
(நாயகனாய் நின்ற மணி வண்ணன் மாயன் சேராதே இப்பொழுது )
கடகரை சேஷி என்று இருக்குமவர்கள் இறே இவர்கள் –
ஆளவந்தார் எம்பெருமானை ஸ்தோத்ரம் பண்ண என்று புக்கு ஆச்சார்ய ஸ்தோத்ரத்திலே இழிந்தார் –
அதுக்கு அடி –
ஒருத்தன் ரத்னத்தைக் கொடுத்தால் அதன் விலை அறிய -அறியக்
கொடுத்தவன் பக்கல் விருப்பம் பிறக்குமா போலே
சாஸ்திரங்கள் எங்கும் அப்யஸித்து பார்க்கும் இடத்து
உபாயமாகத் தோற்றுகிற கர்ம ஞான பக்திகள் பேற்றுக்கு சாதனமாக மாட்டாது –
பகவத் சம்பந்திகளை முன்னிட்டுக் கொண்டு அவனையே உபாயமாகப் பற்றுமது பேற்றுக்கு உடல் என்று
ஸ்வ பிரபந்தத்தில் முதலிலும் முடிவிலும்
பரமாச்சார்யரான பெரிய முதலியாரைப் பற்றினார் –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே என்று
தாம் பண்ணின ப்ரபத்தியையும் கீழில் அவற்றோடு காற்கடைக் கொண்டு –
நாத முனிம் வி லோக்ய -என்று பெரிய முதலியாரை முன்னிட்டார் –
பிரபத்தி பண்ணுகிறவன் இவன் ஆகில் –
பேறு அவனாலே யாகில் –
இவர்களை முன்னிடுகிறது என் என்னில்
சாபராதனான இவன் பிரபத்தி பண்ணுகிறான் என்று இவனுடைய பூர்வ அவஸ்தையை நினைத்து
ஈஸ்வரன் சிவிட்க்கு என்னவும் கூடும்
அது செய்யாத படி மறுக்க ஒண்ணாத மனிசரை இட்டுப் பொறுப்பிக்கவும் வேணும் –
இவனுக்குப் பிறக்கும் அத்யவசாயமும் போட்கனாகையாலே
மெய்யான வியவசாயம் யுடையாரை முன்னிட்டு அல்லது கார்யகரம் ஆகாது என்று முன்னிடுகிறது
பாபிஷ்ட -க்ஷத்ர பந்துச் ச புண்டரீகச் ச புண்யக்ருத் ஆச்சார்ய வத்தயா முக்தவ் தஸ்மாத் ஆச்சார்யவான் பவேத் –
வேறாக வேத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் -(நான்முகன் )
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் -(திருவாய் -7-10-11 )
அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் -(பெரிய திருமொழி -2-6)
ஆர் தொழுவார் பாதமவை தொழுவது அன்றே (இரண்டாம் )-என்றும் இவை இறே ஆழ்வார்கள் படி –
உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் —
அடியார்க்கு என்னை ஆட்படுத்த -ஈஸ்வரனுடைய கிருஷிக்கு பலம் இவர்களோடு சம்பந்திக்கை இறே –
செல்வனைப் போலே -ஏத்த வல்லார் அடியோம் -என்ற பெரியாழ்வார் இருக்கை இறே
தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் -என்று ஆண்டாள் இருந்தது
பட்டர் -நஞ்சீயரை -பெரிய பெருமாள் தஞ்சம் என்று இருக்குமவரை தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்தார்
நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
நாயகன் முழு வேழ் உலகுக்குமாய் (6-4 )-என்றும் –
தொல்லை வானவர் தம் நாயகன் -என்றும் –
சகல லோகங்களுக்கும் சகல தேவதைகளுக்கும் நாயகனான சர்வேஸ்வரன் நம்முடை நாயகன் என்று
யசோதை பிராட்டி உட்பட சொல்லும் படி ஆயர் நாயகனாய் நிற்க
உந்தம் அடிகள் முனிவர் -என்று
பிரசித்தமாம் படி ஸ்வாமிகளாய் நியமிக்கிறார் ஸ்ரீ நந்தகோபர் ஆகையால்
உபய விபூதி நாயகனான கிருஷ்ணனுக்கும் நாயகர் ஆகையால்
ஸ்ரீ நந்த கோபரை-
நாயகனாய் நின்ற நந்தகோபன் -என்கிறார்கள் –
நாயகனாய் நின்ற-
தன்னுடைய சேஷித்வம் சித்திக்கைக்காக
தனக்கு புறம்பாய் இருப்பான் ஒரு சேஷியை தேடித் போக
வேண்டி இருக்கை அன்றிக்கே-
தானே சேஷித்வ காஷ்டையிலே நிற்கிற –
நந்த கோபனுடைய-
பகவத் அனுபவ ஜனித ஆனந்த நிர்பரனாய்-
சம் ஸ்ரீ தர ரஷகனான ஆச்சார்யன் உடைய
——–
நந்த கோபனுடைய கோயில் –
நாங்கள் ஆஸ்ரயிக்கிறவன் பரதந்த்ரன்
தங்களை சேஷிகளாக்க வைக்க இசைவாரோடே கலந்து
பரிமாற விறே இவன் இங்கு வந்து அவதரித்தது –
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ -என்று
பரமபதத்திலும் தான் பரதந்த்ரனாய் அவர்கள் இட்ட வழக்காய் இறே இருப்பது –
நந்த கோபனுடைய கோயில்
கிருஷ்ணன் உகப்பது பாரதந்தர்யம் ஆகையால் –
ஸ்ரீ வைகுண்டத்தில் இழவு தீர -ஸ்ரீ நந்த கோபற்குப் பிள்ளையாய்
நந்தகோபன் மகன் -என்று அவரை இட்டுத் தன்னைச் சொல்லும் படி
தான் பரதந்த்ரனாய் க்ருதார்த்தனான இடம் ஆகையால்
அவர் அபிமானத்தில் இவன் ஒதுங்கினான் என்னும் இடம் தோற்ற
கிருஷ்ணனுடைய கோயில் என்னாதே
நந்த கோபனுடைய கோயில் என்கிறது
யுவராஜா மம அந்நிய -என்று சக்கரவர்த்தி ஆசைப்பட்டு பெறாத போனதை –
நந்தகோபன் இளவரசு என்கையாலே
ஸ்ரீ நந்த கோபர் பெற்றார் –
வாசுதேவன் மதுரை மன்னன் -என்கையாலே –
இப் பேறு ஸ்ரீ வாசுதேவர்க்கும் இல்லை
நந்தன் பெற்றனன் வாசுதேவன் பெற்றிலன் -என்று
ராஜ குலங்களில் பிரசித்தம் இறே
பரம பதம் தன்னிலும் வான் இளவரசு இறே –
அதுவும் வானவர் நாடாய் –
கடவர்கள் முடியுடை வானவராய்-
அவர்கள் தான் (மூத்தவராய் )மூதுவராய் -(ஸாத்ய சந்தி தேவர் )
இவன் அவர்கள் மடியிலே கிடப்பது –
சிறகில் ஒதுங்குவது –
பிரம்புக்கு அஞ்சி சொன்னதுக்கு எல்லாம் அப்படி அப்படி என்னும் இளவரசாய் இறே வளருவது –
தத்ர காஷாயிநோ வ்ருத்தான் —
மேலாப்பின் கீழ் வருவான் –
அனந்த போக பர் யங்கே நிஷண்ணம் -என்றும் சொல்லக் கடவது இறே –
பக்வனான பின்பு ஸ்ரீ சத்ய பாமை பிராட்டி பக்கலிலே ராஜ்ய தூரை ( பொறுப்பை ) வைத்து
தூதுவ சாரத்யங்களிலே இறே அதிகரித்தது –
நந்த கோபனுடைய கோயில் –
ராஜ தாநீ பிதுர் மம(பெருமாள் சீதா பிராட்டி இடம் திரும்பி வரும் பொழுது சொன்னது )
நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
நாயகனாய் நின்ற கோயில் காப்பானே என்னவுமாம்
எங்களுக்கு நாயகனான நந்த கோபனுடைய கோயில் காப்பானே என்னவுமாம்
இவர்களால் லபிக்கிற எம்பெருமான் பக்கல் அன்று நாயகத்வம் –
இவர்கள் தங்கள் பக்கலிலே
(நந்தகோபன் -ஸ்பஷ்டம் மூன்று பாசுரங்களில் -ஆற்றப் படைத்தான் மகனே -21 பாசுரம்)
பிதா மஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரசீத மத் வ்ருத்தம சிந்தயித்வா -என்றார் ஆளவந்தார்
சர்வ சாஸ்திரங்களையும் ஆராய்ந்தவர் ஆகையால் பெருப் பெருத்த உபாயங்களை பார்த்த இடத்தில் –
தன் தலையால் அவனைப் பெறலாய் இருந்தது இல்லை –
பகவத் சம்பந்தம் உடையார்யோட்டை சம்பந்தமே பகவத் கடாக்ஷத்துக்கு உறுப்பு என்றார்
அதாகிறது -இவன் அத்யாவசியம் போட்கனாய் (கிருத்ரிமமாய் )இருக்கும்
புருஷகாரம் வலிதாக அதுவே கார்யகரமாம் என்கை –
(அக்ருத்ரிம த்வச் சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்ம வந்தம் |
பிதா மஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்த யித்வா ||-ஶ்லோகம் 65 –
எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.)
(பராங்குச பாத பத்மம் -மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -குறையல் பிரான் அடிக் கீழ் இன்றும் சேவிக்கிறோமே -அனுஷ்டித்துக் காட்டினார்)
(ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்)
வல்ல பரிசு தருவிப்பரேல் -என்று பெரியாழ்வாராலே பெருமத்தனையே -என்று
அறுதியிலிட்டால் போலே
பாபிஷ்ட க்ஷத்ர பந்துஸ்ச புண்டரீகஸ்ச புண்ய க்ருத் ஆச்சார்ய வத்தயா முக்தவ்
தஸ்மாத் ஆச்சார்யவான் பவேத் (சத்திர பந்துவும் பாரங்கதி கண்டு கொண்டானே )-என்னுமா போலேயும்
பட்டர் நஞ்சீயருக்கு -பெருமாளை தஞ்சம் என்று இரும் –
பெருமாள் தஞ்சம் என்று சொல்லுகையாலே நானும் உமக்குத் தஞ்சம் என்றபடி -என்று அருளிச் செய்தார்
ஆகையாலே ஆச்சார்யர்கள் உபகாரகர் என்று நாயகன் -என்கிறாள்
நந்தகோபனுடைய கோயில்
எம்பெருமான் பரதந்த்ரன் ஆகையாலே -ஸ்ரீ நந்தகோபருடைய கோயில் என்கிறார்கள்
பரமபதத்தில் அப்படியே -அடியார் நிலாகின்ற வைகுந்தம் இறே(திருவிருத்தம் )-அங்கு வான் இளவரசு (வைகுந்தக் குட்டன் -அங்கு ஈர் அரசு படாதே இங்கு ஆழ்வார் ஆதி நாதர் )
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் பிரம்பின் கீழும் -திருவனந்த ஆழ்வான் மடியிலும் -திருவடி சிறகின் கீழும் வளரும்
இத்தனை இத் தத்துவம் போலே
யுவராஜ மம ந்யத -என்று சக்கரவர்த்தி பாரித்துப் போனான்(யுவராஜ வான் இளவரசு-பாரித்தே இழந்தே போனான் அன்றோ )
ஸ்ரீ நந்த கோபர் பெற்றார் -நந்த கோபாலன் கடைத் தலைக்கே (நாச்சியார் -12)-(எடுத்த பேராளன் )
ஒரு தண்ணீர் பந்தலைக் கண்டால் இது வைத்த ஸ்ரீ மான் ஆர் என்னக் கடவது இறே
தயரதன் பெற்ற மரகத மணித்தடம் இறே
தங்களை சேஷியாக வைக்க இசைவாரோடே பரிமாற இறே இங்கு வருகிறது
இங்குத்தைக்கு ஸ்ரீ சத்யபாமை பிராட்டியை நாடாள விட்டு தான் பாண்டவர்களுக்கு சொல்லிற்று செய்து திரியும்
—————–
கோயில் காப்பானே –
சிறு பெண்கள் ஆகையாலே
அவன் தொழிலை இட்டு சொல்கிறார்கள் –
இன்னது பிடிப்பான் -என்னுமா போலே
அவனும் உகக்கும்படியாலே சொல்லுகிறார்கள் ஆகவுமாம் –
இத்தால் –
சேஷ வ்ருத்தி பிரயுக்தமான பேரே
இவ் வாத்மாவுக்கு பேர் என்னும் இடம் தோற்றுகிறது-
கோயில் காப்பானே
தங்களுடைய மவ்க்த்யத்தாலும்-
அவன் உகக்குமதாகையாலும் அவன் தொழிலை இட்டுச் சொல்லுகிறார்கள்
கோயில் காப்பானே
இத்தால்
சேஷ வ்ருத்தி ப்ரயுக்தமான பேரே ஆத்மாவுக்கு நிலை நின்ற பேர் என்னும் இடம் தோற்றுகிறது
யதோசிதம் சேஷ இதீரி தேஜநை (ஆளவந்தார் )-என்றும் –
ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய நைவ க்ராம குல -என்றும் சொல்லக் கடவது இறே
கோயில் காப்பானே
தான் காக்கும் இயல்வினன் ஆகையால் –
பொழில் ஏழும் காவல் பூண்டு சகல லோக ரக்ஷணம் பண்ணுகிற எங்கள் நிதியை
செப்போடே நோக்குகிறவன் அன்றோ –
ஸ்ரீ நந்தகோபர் தாழ்த்தார் –
கம்சன் வெட்டியன் –
காப்பாரும் இல்லை –
என்று நாங்கள் வயிறு எரிந்து இருக்க –
எங்கள் வயிறு எரிதல் தீர்க்கிறவன் அன்றோ –
கோயில் காப்பானே –
ஏஷ ஸூப்தேஷூ ஜாகர்த்தி -என்று
சம்சாரிகள் பக்கல் உணர்த்தி பெறுவதற்கு முன்பு தான் உணர்ந்து இருக்கும்
இவர்கள் அனுமதி பெற்ற பின்பு
நிஸ் ருஷ்டாத்மா ஸூஹ்ருத் ஸூ ச (ஸ்ரீ இராமாயண யுத்த காண்டம் )-என்று
தன்னுடைய ரக்ஷகத்வத்தை இவர்கள் தலையில் வைத்து
தான் உறங்கா நிற்கும் –
மஹேந்திர கல்பம் பரிபாலயம்ஸ் ததா -என்னக் கடவது இறே
(குகன் மஹேந்திரனைப் போன்று இருந்த பெருமாளை நானும் லஷ்மணனும் ரஷித்தோம் என்று பரதன் இடம் )
காப்பானே –
இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப-என்று
பலர் நோக்கும் இடத்தில் ஆறில் ஓன்று கொள்ளாதே எல்லாருடைய காவலும் நீ ஒருவனே கொள்ளுகிறவனே –
(கோலார்ந்த நெடும் சங்கம்-பஞ்சாயுதம் கருடன் ஆறும் அங்கு )
கோயில் காப்பானே
உன்னைக் காவலாக வைத்தது
உகவாதார் புகுராமைக்கும்
உகப்பாரை புகுரா விடுகைக்கும் அன்றோ –
ஆன பின்பு அவனை ஆசைப்பட்ட எங்களுடைய ஆர்த்தியையும் ஆராய வேண்டாவோ –
அவன் கண்ணாலே போங்கோள்-என்று சொல்ல –
திரு வாசல் காக்கும் முதலியை எழுப்புகிறார்கள் –
கோயில் காப்பானே –
கோயில் உண்டு-அவனுக்கு பிரதிபாதகத்வேன இருப்பிடமான திருமந்தரம்
அத்தை அநாதாரிகள் செவிப் படுத்தாதபடி-ரஷிக்குமவனே –
கோயில் காப்பானே
சேஷத்வ ப்ரயுக்தமான பேர் –
ஆத்மாவுக்கு நிலை நின்ற பேர் -யதோசிதம் சேஷ இதீ ரிதே ஜநை
சிறு பெண்கள் ஆகையாலே அவன் தொழிலை இட்டுப் பேசுகிறார்கள் –
இன்னது (சுந்தர பாண்டியன் )பிடிப்பான் என்னுமா போலே அவன் உகக்கும் பேராலே சொல்லிற்று ஆகவுமாம் –
(நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||ஶ்லோகம் 40-அநந்தன் இயல் பெயரைச் சொல்லாமல் ஆதி சேஷன் என்றே )
—————–
கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே –
அவன் கண்ணாலே போங்கோள் என்று சொல்ல
திருவாசல் காக்கிறவனை வந்து எழுப்புகிறார்கள் -கோயில் காப்பான் -என்று –
அங்குத்தைக்கும் நிர்வாஹகனாய்
அவன் தன்னையே கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பான் -என்னவுமாம் –
ஷேத்ராதிபதி தன்னை கோயில் காப்பான் என்று
வேறே திருவாசல் காப்பனைச் சொல்லிற்றாகவுமாம் –
ஆர் விக்நம் பண்ணுகிறார்களோ என்று பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள் –
கொடித் தோன்றும் தோரண வாசல்-
ஆர்த்த ரஷணத்துக்கு கொடி கட்டி தோரணமும் நட்டு வைத்தாப் போலே
பெண்கள் தடுமாற்றம் தீர முகம் தருகைக்கு அன்றோ உன்னை இங்கே வைத்தது –
கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே
இரண்டும் ஒருவனையே சொல்லிற்று ஆகவுமாம் –
கோயில் காப்பானே என்று ஷேத்ராதிபதியைச் சொல்லி
வாசல் காப்பானே என்று திரு வாசல் காக்கும் முதலியைச் சொல்லிற்று ஆகவுமாம் –
யாராலே விக்னம் வருகிறதோ என்று பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள் –
சர்வான் தேவான் நமஸ் யந்தி -என்று
தேவதாந்த்ரங்கள் காலில் விழுமவர்கள் பரிவர் காலிலே விழச் சொல்ல வேணுமோ
கொடித் தோன்றும
அல்லாத மாளிகைகள் எல்லாம் தன் மாளிகையோடு ஒத்து இருக்கையாலே
பெண்கள் மத்திய ராத்திரியில் வந்தால் தடுமாற ஒண்ணாது
அவற்றில் காட்டில் நம் மாளிகைக்கு வாசி தெரிய வேணும் என்று கொடியும் தோரணமும் நட்டு வைத்தார் –
பெருமாளைக் காணப் பெறாதே ஆர்த்தனான ஸ்ரீ பரத ஆழ்வான்
ராம ஆஸ்ரம ஸூ சகமான தூம வல் கலங்களைக் கண்டு தரித்தால் போலே
கொடியையும் தோரணத்தையும் கண்டு இவர்கள் தரிக்கைக்காக வாய்த்து நட்டு வைத்தது
தண்ணீர் பந்தல்கள் தடாகங்கள் சமயத்தவர்கள் த்ருஷார்த்தற்கு தூரத்திலே தோற்ற வேணும் என்று
கொடியும் தோரணமும் நட்டு
தண்ணீர் பந்தலையும் கடையையும் காட்டுமா போலே அன்றோ
அடையாளங்களையும் பண்ணி எங்களுக்காக அன்றோ உன்னை இங்கு வைத்தது
வாஸத் தடம் இறே உள்ளுக் கிடக்கிறது –
க்ரீஷ்மே சீதமிவஹ்ருதம் -என்கிற தண்ணீருக்கு
கொடி அணி நெடு மதிலும் வாசலில் வானவரும் வைக்குமா போலேயும்
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்துக்கு
பதாகாபிர் அலங்க்ருதாம் –தத்ர காஷாயி நோ வ்ருத்தான் என்று
கொடியும் காவலும் கடை கட்டினால் போலேயும் –
வாசல் காப்பானே
கொடியும் தோரணமும் அசேதனம் ஆகையால் அழைக்க மாட்டாது –
உள்ளுக் கொண்டு புகாது –
நீ சேதனனான வாசி நாங்கள் பெற வேண்டாவோ –
அர்ஜுனன் ஸூபத்ரையைக் கொண்டு போகக் கடவன் என்று
வாசல் காக்கும் முதலைகளை அனுமதி பண்ணி இருங்கோள் என்று அருளிச் செய்து வைத்தால் போலே
இவனுக்கும் பெண்கள் புகுரக் கடவர்கள் என்று கிருஷ்ணன் சொல்லி வைக்கும்
அத்தாலே இவன் நம்மை உள்ளும் புக அனுமதி பண்ணும் என்று இருக்கிறார்கள் –
கொடித் தோன்றும் தோரணவாசல் காப்பானே –
இவனுடைய ரஷகத்வம் விளங்கா நின்றுள்ள-
அகார நாம சப்தார்தங்களைக் காக்குமவனே-
இவர்கள் இப்படி தன்னை ஸ்தோத்ரம் பண்ணினவாறே கண்ணாலே உள்ளே புகுருங்கோள்-என்றான்
கொடித் தோன்றும் தோரண-வாசல் காப்பானே
கோயில் காப்பான் என்று இங்குத்தைக்குமாய் அவன் தன்னையே வாசல் காப்பான் என்கை
அன்றிக்கே—
ஷேத்ராதிபதிகளை கோயில் காப்பானே என்று சொல்லி – வேறே திரு வாசல் காப்பானைச் சொல்லிற்று ஆக்கவுமாம்
ஆர் விக்னம் பண்ணுகிறார் என்று அறியாமை பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள்
திருத் தோரண வாசல் காக்குமவன் பக்கலிலே சென்று –
ஆர்த்த த்ராணத்துக்காக தோரணமும் கொடியும் நட்டு வைத்தால் போலே
பெண்கள் தடுமாற்றம் தீர முகம் தருகைக்கு அன்றோ உன்னை இங்கு வைத்தது
————-
மணிக் கதவம் தாள் திறவாய் –
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு -என்னுமா போலே
புகுவாரை தன் அழகாலே கால் கட்டும் கதவினுடைய தாள் திறவாய்
திரு வாசலுக்குள் புகுவாரை கால் கட்டும் இது
அவன் புக்காரை புறப்படாதபடி கால் கட்டும் தன் அழகாலே –
தாள் திறவாய் -என்றவாறே
அவன் பயமுள்ள தேசத்தில்
மத்திய ராத்ரியிலே வந்து திறக்க
அழைக்கிற நீங்கள் ஆர் -என்ன –
இருந்த இடத்தில் பயம் என் என்ன –
காலம் த்ரேதா யுகமாய்
தமப்பனார் சம்பராந்தகனுமாய்
பிள்ளைகள் தாங்களும் ஆண் புலிகளாய்
மந்த்ரிகள் வசிஷ்டாதிகளாய்
ஊரும் திரு அயோத்யையாய்
பயம் அற்று இருக்கிறதோ –
காலம் கலிக்கு தோள் தீண்டியான த்வாபராந்தம்
தமப்பனார் சாது -ஸ்ரீ நந்தகோபர் –
இவர்கள் சிறு பிள்ளைகள் -அதுக்கு மேலே தீம்பர்கள்
ஊர் இடைச் சேரி
கம்சன் சத்ரு
எழும் பூண்டுகள் எல்லாம் அசூர பூண்டுகள்
பயம் கெட்டு இருக்கலாமோ என்ன –
பெண்களுக்கு பயப்பட வேண்டுமா -என்ன
சூர்பணகை -பெண் அன்றோ என்ன –
அவள் ராஷசி -நாங்கள் ஆயர் சிறுமியர்
இவனுக்கு என்ன வருகிறதோ என்று வயிறு பிடிக்கும் இடையருக்கு
பிறந்த வர்கள் அன்றோ -என்ன –
பூதனைக்கு பின்பு இடைச்சிகளுக்கு அன்றோ பயப்பட வேண்டுகிறது -என்ன
ஆயர் சிறிமியரோமுக்கு
கிரித்ரிமம் அறியாத சிறு பெண்கள் -என்ன-வார்த்தையிலே அறியலாம்
வந்த கார்யத்தைச் சொல்லுங்கோள் -என்ன –
மணிக் கதவம்
மாமன் மகளே மணிக் கதவம் -என்று
பெண்கள் மாளிகை எல்லாம் மணிக் காதவமாம் படி சாதரம்யம் கொடுக்கிற
கிருஷ்ணன் மாளிகை வாசல் மணிக் கதவமாகச் சொல்ல வேணுமோ
மணிக் கதவம்
பூவியில் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு-(திருவாய் -6 -7) புற வாயில் போக்யதை வாசலில் வர ஒட்டாது –
கார்ய வசத்தால் வருந்தி வாசலில் வந்தவர்களை –
சதத் அந்தப்புர துவாரம் என்று வாசல்
தன் அழகால் உள்ளுப் புகுவாரைக் காற்கடைக் கட்டும் –
அவன் புக்காரை புறப்படாத படி நுழையும் சிந்தையராக்கி-(திருவாய்- 6-5-5) கால் கட்டும் தன் போக்யத்தையாலே –
உள்ளுப் புகும் போது ஒரு வண்ணம் சென்று புக வேணும் -(திருவாய் -6-1 )
உள்ளுப் புக்கால் –
மற்று ஒன்றினைக் காணாவே என்னப் பண்ணும் –
மணிக் கதவம் தாள் திறவாய்
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு (பெரிய திருமொழி )-என்னுமா போலே
கதவில் போக்யதையில் நெஞ்சும் கண்ணும் பிணிப்பு உண்ணாமல் திறந்து உள்ளே விடுகிறிலையே –
தாள் திறவாய் -என்றவாறே –
மத்திய ராத்திரியிலே வந்து திறக்க அழைக்கிறவர்கள் தான் யார் பயம் மிக்க தேசத்திலே என்ன
பயாநாம அபஹாரி இருந்த தேசத்தில் பயம் என் என்ன –
த்ரேதா யுகம் ஆகையால் காலமும் நல்லடிக் காலமுமாய் –
தமப்பனார் ஸம்ப்ராந்தகனுமாய்
பிள்ளைகள் தாமும் ஆண் புலிகளாய் –
அவர்கள் தான் வழியே போய் வழியே வருமவர்களாய்-
ஊரும் திரு அயோத்யையாய் –
அஞ்சாதே பாலில் உண்டு பனியில் கிடக்கிறதோ
காலம் கலிக்குத் தோள் தீண்டியான த்வாபராந்தமாய் –
தமப்பனார் சாது ஸ்ரீ நந்தகோபராவது –
இவர்கள் சிறு பிள்ளைகளாவது –
அதிலே தீம்பாராவது –
ஊர் இடைச்சேரி யாவது –
அது தான் கம்சன் படை வீட்டுக்கு அணித்தாய் –
அவனுக்கு இறை இறுக்கும் ஊராவது
கம்சன் தான் சத்ருவாவது –
எழும் பூண்டு எல்லாம் அசுர மயமாவது –
ஆன பின்பு பயம் கெட்டோ இருக்கிறது
பயப்பட வேண்டும் இடத்தில்
மத்திய ராத்திரியில் கதவு திறக்கச் சொல்லுகிறவர்கள் தான் யார் என்றான் –
எங்களுக்கு அஞ்ச வேணுமோ -நாங்கள் பெண் பிள்ளைகள் அல்லவோ என்ன –
சூர்ப்பணகை ஸ்த்ரீ அன்றோ –
அஞ்சுவன் வெஞ்சொல் நங்காய்-(பெரிய திருமொழி 3-7)என்று
பிற்பாடாரும் (பரகால நாயகி )கூட அஞ்சும் படியாக அன்றோ அவள் நலிந்தது-
ஒரு மாளிகையும் வாசல் காப்பாரும் இல்லாமை அன்றோ என்ன –
அவள் ராக்ஷஸி -நாங்களோ இடைப்பெண்கள் அன்றோ என்ன
பூதனை இடைச்சி அன்றோ -இடைச்சிகளுக்கு அன்றோ மிகவும் அஞ்ச வேண்டுவது என்றான்
ஆயர் சிறிமியரோமுக்கு
இவனுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடிக்கும் இடையருக்கு பிறந்த க்ருத்ரிமம் அறியாத கன்னிகைகள் அன்றோ –
எட்டும் இரண்டும் அறியாத எங்கள் பருவத்தைப் பாராய் –
பூதனையைப் போலே தனித்து வந்தோம் அல்லோம்
அஞ்சு லக்ஷம் குடியில் பெண்கள் எல்லாரும் கூடி அன்றோ வந்தது -என்று -ஆயர் சிறுமியரோம் -என்கிறார்கள்
பாலைகள் என்ன ஒண்ணுமோ –
கன்றாய் அன்றோ வந்து நலியப் பார்த்தது –
பருவம் கொண்டு விசுவசிக்க ஒண்ணாது
உங்கள் வார்த்தையிலே அறியலாம் -வந்த கார்யம் சொல்லுங்கோள் என்றான் –
மணிக் கதவம் தாள் திறவாய்-
ஞான ஆனந்த ஸ்வரூபன் ஆகையாலே-ஸ்லாக்கியமாய் இருந்துள்ள ஆத்ம ஸ்வரூப அனுபவத்தையும்-
அத்தால் வரும் ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பிரதி பத்தியையும்-தவிர்த்து அருளாய்-
பயமுள்ள தேசத்தில்-அர்த்த ராத்ரியில் வந்து எழுப்புகிறவர்கள் யார் என்ன
ஆயர் சிறிமியரோமுக்கு-
எம்பெருமானே உபாயம் உபேயம்-என்று-அத்யவசித்து இருக்கும் ஜ்ஞான ஜன்மாக்கள் திரு வம்சத்திலே-
பிறந்த பகவத் அனன்யார்ஹ சேஷ பூதர்களான நமக்கு –
நீங்கள் வந்த கார்யம் ஏது என்
மணிக் கதவம் தாள் திறவாய்
என்கிறார்கள்
மணிக் கதவம்
கதவில் அழகு உள்ளுப் புகுவாரை வழி பறிக்கும் –
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு –
ச ததந்தா புரத்வாரம் ஸமாதீத்ய ஐநா குலம் -(சுமந்திரன் செய்தி சொல்ல பெருமாள் இடம் -ஜன சமுத்திரம் தாண்டி போனானே )
ஒரு வண்ணம் சென்று புக்கு
(என்னுறு நோய் யானுரைப்பக் கேள்மின்,* இரும்பொழில்சூழ்- மன்னு மறையோர் திருநறையூர் மா மலை போல்,*
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு,*என்னுடைய கண்களிப்ப நோக்கினேன்,* – பெரிய திருமடல்)
(ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண் கிளியே!
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலைத் திரு வண் வண்டூர்
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.-6-1-7)
மணிக் கதவம்
இது உள்ளே புகுவாரைக் கால் காட்டும் –
அவன் புக்காரை புறப்படாதபடி கால் காட்டும்
ஆயர் சிறிமியரோமுக்கு
திருவாசல் காக்குமவன் -கோயில் காப்பானே கொடுத்த தோன்றும் தோரண வாசல் காப்பானே என்று நம்மை —
இம் மத்திய ராத்ரிப் போதிலே யார் -திறக்க அழைக்கிற நீங்கள் யார் -பயம் மிக்கு இருக்கிற தேசத்திலே -என்ன
பயம் என் என்ன
காலமும் நல்லடிக் காலமுமாய் தமப்பனாரும் சக்கரவர்த்தியாய் –
ஊரும் திரு அயோத்யையாய் -தாங்களும் ஆண் புலி களாய் மந்திரிகளான வசிஷ்டாதிகளும் இல்லையே
இங்கு சாது ஸ்ரீ நந்த கோபரும் சிறு பிள்ளைகளும் –
தீம்பர்களாயும் – இடைச் சேரியுமாய் இருக்கிறதுக்கு மேலே கம்சன் சத்ருவாயிற்று –
எழும் பூண்டு எல்லாம் அஸூரப் பூண்டாவது
ஆன பின்பு பயம் கெட்டு இருக்கலாமோ -என்ன –
எங்களுக்கு பயப்பட வேணுமோ-நாங்கள் இடைச்சாதி அன்றோ என்ன
சுக சாரணர்கள் ஸ்ரீ சேனையோடே கலந்து புகுந்தால் போலே
இடையயரே அஸூரர்கள் கலந்து புகுரிலும் தெரிய ஒண்ணாது என்ன
அது உண்டோ நாங்கள் பெண்கள் அன்றோ என்ன –
சூர்பணகி பெண் பெண்டாட்டி அன்றோ என்ன
அவள் ராக்ஷஸி –
நாங்கள் இவனுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடிக்கும் இடையருக்குப் பிறந்த இடைச்சிகள் அன்றோ என்ன
பூதனைக்குப் பின்பு இடைச்சிகளுக்கு அன்றோ பயப்பட வேண்டுவது என்ன
நாங்கள் க்ருத்ரிமைகள் இல்லாத கன்யகைகள் அன்றோ -எங்கள் பருவத்தைப் பாராய் என்ன
பருவம் பார்த்துக் கொள்ளுகிறோம் -வார்த்தையிலே அறியலாம் -நீங்கள் வந்த கார்யம் சொல்லுங்கோள் என்ன
————
அறை பறை –
நோன்புக்கு பறை வேண்டி வந்தோம் -என்ன
அதுவாகில் திருப் பள்ளி உணர்ந்தால் விண்ணப்பம் செய்கிறோம்
அவ்வளவும் நில்லுங்கோள் -என்ன –
அறை பறை
நோன்புக்கு பறை வேண்டி வந்தோம் என்று தங்கள் மௌக்யம் தோற்ற சொன்னார்கள்
பறை வேண்டி வந்தோம் என்றவாறே –
அதுவாகில் திருப் பள்ளி உணர்ந்த வாறே விண்ணப்பம் செய்து தருகிறோம் நில்லுங்கோள் என்றான்
அறை பறை-
த்வநிக்கிற வாத்தியம் வேண்டி வந்தோம் என்ன
புருஷார்த்தம் வேண்டி வந்தோம் என்ன
ஆகில் திருப் பள்ளி உணர்ந்த அநந்தரம் விண்ணப்பம் செய்து
தருவிக்கிறேன் -என்ன
அறை பறை
நோன்புக்குப் பறை வேண்டி வந்தோம் என்ன –
அது வாகில் திருப் பள்ளி உணர்ந்தவாறே விண்ணப்பம் செய்து கேள்வி கொள்கிறோம் என்ன
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
அது வேண்டா
நேற்றே கேட்டு அவனும் தருகிறோம் என்றான் என்கிறார்கள்
———–
மாயன் –
பெண்கள் கோஷ்டியில் தாழ நின்று பரிமாறின படி –
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
நீ இன்று அறிவிக்க வேண்டாத படி நென்னேற்றே தருவதாக அருளிச் செய்தான்
மாயன் –
பெண்கள் கோஷ்ட்டியில் தாழ நின்று கையைக் காலைப் பிடித்துப் பரிமாறின படி
மாயன்
எங்களுக்கு இஷ்ட விநியோக அர்ஹனானவன்
மாயன்
எங்கள் கோஷ்டியிலே தாழ நின்று கையைக் காலைப் பிடித்த படி
————-
மணி வண்ணன் –
தாழ நில்லா விடிலும் விட ஒண்ணாத வடிவு அழகு –
பூ அலர்ந்தாப் போலே வார்த்தை சொல்லுகிற போதை ஒஷ்ட ஸ்புரணம் -பிரகாசம் -என்னவுமாம்-
வாக்மீ ஸ்ரீ மான் என்னுமா போலே
மணி வண்ணன்
தாழ நில்லாதே அபவ்யனாய் காதுகன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவு அழகை யுடையவன்
மணி வண்ணன்
இவர்களைக் கிடந்த இடத்திலே கிடக்க ஒட்டாதே இப்படி படுத்துகிற வடிவு அழகு
மணி வண்ணன்
தாழ நின்றதிலும் அவன் வடிவே போறும் என்கை
பூ அலரும் போது பிறக்கும் செவ்வி போலே வார்த்தை செய்யும் போதை அழகு –
வாக்மீ ஸ்ரீ மான் -என்னக் கடவது இறே
———–
நென்னலே –
உன் காலைப் பிடிக்க வேண்டி இருக்கிற இன்று போலேயோ
அவன் காலைப் பிடிக்க இருந்த நென்னேற்றம்
ஒரு நாளே -என்றார்கள் –
ஏகாரத்துக்கு சேர்த்து வியாக்யானம் –
நென்னலே –
இப்படி நிவாரகர் இன்றிக்கே கிட்டி அனுமதி கொள்ளப் பெற்ற நென்னேற்றும் ஒரு நாளே
இன்று உன்னை அனுமதி கொள்ளுகைக்கு உன் கால் பிடிக்க வேண்டுகிற இன்று போலேயோ
அவன் காலைக் கையைப் பிடிக்க இருக்கும் நென்னேற்று நாள்
எங்களுக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணின நாள்
நென்னலே
திரு முளை யன்று
நேற்று கையார் சக்கரம் என்னுமா போலே
நென்னலே
உன் கால் பிடிக்க வேண்டுகிற இன்று போலேயோ-
அவன் காலைக் கையைப் பிடிக்க இருந்த நேற்றை நாளும் ஒரு நாளே -என்கிறார்கள்
———–
வாய் நேரந்தான் –
ஓலக்கத்தில் ஒரு வார்த்தை சொன்னான் ஆகில்
மெய்யாக வேணுமோ -என்ன
ஒருத்திக்குச் சொன்ன வார்த்தை அவள் விஷயத்தில்
பழுதாய்த்தாகில் அன்றோ
இவ்வார்தையும் பழுதாவது -என்ன –
சொன்னானே யாகிலும் நீங்கள் பிரயோஜனாந்த பரர்கள் அன்றோ என்ன –
வாய் நேரந்தான்
நென்னலே வாய் நேரந்தான்
திருமூளையினன்று நென்னேற்றை கையார் சக்கரமும் ஒரு நாளே என்னுமா போலே
மணி வண்ணன் –வாய் நேரந்தான் –
பூவலரும் போதை நெகிழ்ச்சியால் பிறக்கும் செவ்வி போலே
வார்த்தை அருளிச் செய்கிற போது பண்ணின ஸ்மிதமும்
நின்ற நிலையும்-வடிவும் -இருந்த படி காண் –
வாக்மீ ஸ்ரீ மான் —
சோதி வாய் திறந்து –(9-2 )
நேர்ந்தான்
ஓலக்கத்திலே ஒரு வார்த்தை அருளிச் செய்தானாகில் -அத்தை மெய் என்று இருக்கவோ –
அந்தரங்கமாகச் சொல்ல வேண்டாவோ -என்றான்
சொல்லாது ஒழிந்தவன்-செய்யலாவது இல்லை –
இத்தனை சொன்ன பின்பு அவன் வார்த்தையில் பழுது உண்டோ
ராமோ த்விர் நாபிபாஷதே —
அன்ருதம் நோக்த்த பூர்வம் மே —
ந மே மோகம் வசோ பவேத் -என்றும்
செய்ய நினைக்கிலேன் ஆகில் சொல்லான் –
சொன்னான் ஆகில் தப்பாது –
அவன் உங்கள் கார்யம் செய்கிறோம் என்றான் ஆகிலும் எங்களை இங்கு வைத்ததுக்கு பிரயோஜனம் வேண்டாவோ
பத்து எட்டு திரு முகம் மறுக்கப் பெற்று உடையோம் அன்றோ நாங்கள் –
எங்கள் பணிக்கு அவனோ கடவான்-
ஆராய இருக்கிற எனக்கு உங்களுடைய அகவாய் அறிய வேண்டாவோ
உங்கள் நினைவு தெரியாதே ஆராய்ந்து அன்றி விடேன் என்றான்
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்-
ஆஸ்ரித பரதந்த்ரனாய்
சுலபனாய்
ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய்
எம்பெருமான்
நென் நேற்றே பறை தருகிறேன் என்று
மன பூர்வகமாக சொல்லி வைத்தான் –
ஆகிலும் நீங்கள் பிரயோஜனாந்த பரர அன்றோ என்ன –
வாய் நேரந்தான்
ஓலக்கத்திலே ஒரு வார்த்தை சொன்னானாகில் மெய் என்று இருக்கவோ அந்தரங்கமாகச் சொல்ல வேண்டாமோ என்ன
ராமோ த்விர் நாபி பாஷதே என்றும் –
அந்ருதம் நோக்த பூர்வம் மே என்றும் –
க்ருஷ்ணே ந மே மோகம் வசோ பவேத் -என்றும்
சொல்லாது ஒழிந்த அன்று செய்யலாவது இல்லை –
சொன்ன பின்பு அவன் வார்த்தையிலே பழுதுண்டோ -(நேர்த்திக்கடன் போல் பிரதிஜ்ஜை தப்பாதே )
————-
தூயோமாய் வந்தோம் –
பறை -என்று ஒரு வியாஜ்யம் –
அநந்ய பிரயோஜனைகள் நாங்கள் –
அதாவது
அவனுக்கு மங்களா சாசனம் பண்ணுமது ஒழிய
தங்களுக்கு ஓன்று அன்றிக்கே இருக்கை-
வந்தோம் –
அவள் செய்வதை நாங்கள் செய்தோம் -என்கை-
நீங்கள் அநந்ய பிரயோஜனைகள் என்கைக்கு
அடையாளம் என் என்ன –
தூயோமாய் வந்தோம்
நாங்கள் ஆராய வேண்டும் படி வந்தவர்கள் அல்லோம் —
உனக்கு அங்கன் பயப்பட வேண்டும் படி பாவ தோஷம் இல்லை
எங்கள் தலையிலும் ஒன்றும் கிடக்க வந்தோமும் அல்லோம் –
அவனுடைய ரக்ஷையும் அவனுடைய பிரயோஜனமும் ஒழிய
ஸ்வ யத்னமாதல்
ஸ்வ பிரயோஜனமாதல் பற்ற வந்தோமும் அல்லோம் –
உபயாந்தரங்களைக் கொண்டு பெறுவாரும் அல்லோம் –
பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு அகல்வாரும் அல்லோம் –
தூயோமாய் வந்தோம்
தூய்மை யாவது தான்
சிலவற்றை ஏறிட்டுக் கொள்ளாதே நம்முடைய ரக்ஷை அவனாலேயே என்று இருக்கை
ராவண பவனத்தை விட்டுப் போந்தவன் வழியிலே முழுகி வந்தான் என்று இல்லையே –
தூசி ஏறின படை நடுவே நின்று இறே பரம ரகஸ்யம் கேட்டது
தூயோமாய் வந்தோம்
திருவடி -திருவாழி மோதிரமும் -தன் வடிவும் காட்டாதே மிடற்று ஓசை காட்டி விசுவசித்திப்பித்தால் போலே
இவர்களும் தங்கள் ஆர்த்த த்வனியைக் காட்டுகிறார்கள்
ஹனுமான் விலலாபஹ –
உவாஸ பிராணா தச்ச மஹா நேஷ –ஸ்வ ரேண மஹாதா மஹான் -என்று ஆர்த்த நாதம் கேட்டவாறே
ஆநயைநம் -என்றும்
அஸ்மாபிஸ் துலயோ பவது -என்னவும் பண்ணிற்று இறே
(அவனிலும் தண்ணியன்-அவன் பிறந்த வயிற்றில் பிறந்தேன் என்று சொல்லிக் கொண்டான் விபீஷணன்
இவர்கள் தூயோமாய் வந்தோம்
அவன் அசுத்தியும் இவர்கள் சுத்தியும் கார்யகரம் இல்லை
அவன் நினைவே கார்யகரம் ஆகும் )
வந்தோம் –
எங்கள் வரவிலே தெரியாதோ பாவ சுத்தி –
இங்கு வர்த்திக்கிற உனக்கு அடைவு தெரியாமை இல்லையே
அவன் செய்யக் கடவதை நாங்கள் செய்தோம் –
எங்களை ஒத்த ஆர்த்தி உடையார் இருந்த இடத்திலே அவன் சென்று
கார்யம் செய்ய வேண்டி இருக்க நாங்கள் அல்லவோ வந்து கொடு நின்றோம் –
உங்கள் தூய்மை நாடி அறியும் படி நீங்கள் அநந்ய பிரயோஜனைகள் என்கைக்கு அடையாளம் சொல்லுங்கோள்-
உங்கள் ஆற்றாமை வந்த போதே பறையின் அளவுள்ள வென்றான் –
தூயோமாய் வந்தோம் –
பறை என்றது வியாஜ்ய மாதரம்
நாங்கள் அநந்ய பிரயோஜனராய் வந்தோம் –
அநந்ய பிரயோஜனருக்கு கர்த்தவ்யம் என்ன என்ன –
—————–
துயில் எழ பாடுவான் –
திருப் பள்ளி எழுச்சி பாட வந்தோம்
பிராட்டி பெருமாள் உறங்குகிற படியைக் கண்டு உகந்தாள் –
இவர்கள் இவன் உணருகிறபடியைக் காண ஆசைப் படுகிறாள்
அங்கனே யாகில் திறக்கிறேன் -நில்லுங்கோள் -என்ன –
துயில் எழப் பாடுவான்
என்கிறார்கள் –
அவன் உணர்ந்து அருளும் போதை அழகுக்கும் மங்களா சாசனம் பண்ண வன்றோ நாங்கள் வந்தது –
பிரயோஜனாந்தர பரர்கள் அன்றோ ஓலக்கத்தில் புகுவார் –
அநந்ய பிரயோஜனர் இறே கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே புகுரப் பெறுவார் –
துயில் எழப் பாடுவான்
ச மயா போதிதஸ் ஸ்ரீ மான் -என்று
பிராட்டி உறங்குகிற படி கண்டு உகந்தாள்-
இவர்கள் உணரும் படி காண ஆசைப்படுகிறார்கள் –
உறகல் உறகல் -என்று உணர்ந்து இருப்பாரையும் உணர்த்தி அசிர்க்கும் பெரியாழ்வார்
பெண் பிள்ளைகள் உன்னையும் அசிர்ப்போம் சிலர் –
மடியாது இன்றே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் -என்றும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -என்றும்
எழுப்புமவர்களோட்டை வாசனையால் இப்போது பள்ளி உணர்த்த வந்தோம் –
இவர்கள் பாவ சுத்தியை அறிந்து குணக்ரஹணம் பண்ணி வைத்தே
இவர்கள் பேச்சு கேட்க்கைக்காக இன்னமும்
ஒரு நிலை நின்று புகுர விட வேண்டும் என்று நினைக்குமே-
அத்தை இவர்கள் பாவஞ்ஞஜை களாகையாலே அறிந்தார்கள்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்-
பத்து எட்டுத் திரு முகம் மறுக்கப் பெற்றுடையோம் –
எங்கள் பணிக்கு அவனோ கடவன் -நாங்கள் ஆராயக் கடவோம் என்ன
உனக்கு ஆராய வேண்டும் பயம் இல்லை -நாங்கள் தூயோமாய் வந்தான் என்கிறார்கள்
தூய்மை அவனுடைய ரக்ஷையும் –
அவன் பிரயோஜனமும் ஒழிய ஸ்வ யத்னம் -ஸ்வ பிரயோஜனம்-இல்லாமல் இருக்கை
திருவடி திருவாழி மோதிரத்தையும் தன் வடிவையும் காட்டாதே
தன் மிடற்றின் ஓசையைக் காட்டி விஸ்வசிப்பித்தால் போலே தங்களுடைய ஆர்த்த த்வனியைக் காட்டுகிறார்கள்
பிரணாதஸ் ச மஹா நேஷ-என்ற ஆர்த்த நாதம் –
ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட-என்னப் பண்ணிற்று இறே
பண்டு சொன்ன தூயோமில் -(5-பாசுரம் -)வார்த்தை யடைய இவ் விடத்துக்கு ஆகரம்
வந்தோம்
இங்கு வர்த்திக்கிற உனக்கு அடைவு தெரியாமல் இல்லை –
அவன் செய்யக் கடவதை நாங்கள் செய்தோம்-என்கை
இப்படி பிரமாணம் என் என்று அவன் கேட்க
துயில் எழப் பாடுவான்
என்கிறார்கள் -உங்கள் ஆற்றாமை -பறையின் அளவள்ள- இன்னம் சொல்லுங்கோள் -என்ன
உறகல் உறகல்-என்று உணர்ந்து இருப்பாரையும் அசிர்க்கும் பெரியாழ்வார் பெண் பிள்ளைகள்
உன்னையும் அசிர்ப்போம் சிலர் என்கிறார்கள்
ச மயா போதித-என்று பிராட்டி உறங்குகின்ற படி கண்டு உகந்தாள்
இவர்கள் உணரும்படி காண ஆசைப் படுகிறார்கள் –
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு –
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் –
அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -என்னுமவர்கள் பெண் பிள்ளைகள் இறே இவர்கள் –
ஆகில் விடிந்தவாறே பார்த்துக் கொள்கிறோம் இப்போது போங்கோள்-என்றான் –
—————
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே –
எங்களை முற்பட நிஷேதியாது ஒழிய வேணும் –
நெஞ்சால் நினைத்தாய் ஆகிலும் வாயால் நிஷேதியாது ஒழிய வேணும் –
உன் கையது கிடாய் இவர்களுக்கு –
அவன் கையது இறே வாழ் நாள்
அவன் சத்தை பெற
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே –
நெஞ்சால் சில நல்லது நினைத்தாயாகிலும்
வாயாலே நெருப்பைச் சொரிந்தால் போலே நிஷேதியாது ஒழிய வேணும்-
இவர்களுக்கு இவன் வாயது இறே வாழ் நாள் –
வாசா தர்மம் அவாப்னுஹி-என்று ஒரு வாய்ச் சொல்லாலே
தண்ணீர் பந்தல் வைக்கலாய் இருக்க ஏன் தான் இழக்கிறாயே
மாற்றாதே –
என்று நிஷேதிக்கிறது என்ன பிராப்தி கொண்டு என்ன –
சேஷ பூதராய் இருப்பாரை முட்டத் தொடரலாமா பிரானே -என்கிறார்கள்
துயில் எழப் பாடுவான்-
திருப்பள்ளி எழுச்சி பாட வந்தோம் –
ஆகில் நில்லுங்கோள் திறக்கிறேன் என்ன
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா-
வாக்காலே முந்துற முன்னம் எங்களை நிஷேதியாதே கொள்-
எங்களை முற்பட நிஷேதியாது ஒழிய வேணும் –
நெஞ்சால் நினைத்தாய் ஆகிலும் வாயால் நிஷேதியாது ஒழிய வேணும் —
ஆகில் கதவைத் திறந்து கொண்டு புகுருங்கோள் என்ன –
————
அம்மா –
பச்சை இடுகிறார்கள்
உள் இருக்கிறவனோ நாதன்
நீ அல்லையோ -என்ன
தாளை உருவிக் கதவை தள்ளிக் கொடு புகுருங்கோள் என்ன –
அம்மா –
பிரதான சேஷிகளை நாங்கள் அறிந்தோமோ –
த்வார சேஷிகள் அன்றோ எங்களுக்கு கடவர்கள்-
அவன் வாய் நேர்ந்தாலும் கார்யம் தலைக் காட்டித் தருவாய் நீ அன்றோ-
வத்யதாம் என்றவர்களே
அஸ்மா பிஸ் துல்யோ பவது-என்ன வேண்டிற்று இறே
தாநஹம் த்விஷத -என்றவன் –
ததாமி -என்றாலும் -நீங்கள் வேண்டாத இடத்தில் ந ஷமாமி -என்னும்
(அசுரர் யோனியில் தள்ளுவேன்
சரண் அடைந்தால் புத்தி யோகம் தருவேன்
அவனும் பாகவத அபசாரம் செய்தால் பொறுக்க மாட்டேன் என்றானே )
அம்மா
தாரா பித்ரு க்ருதா இதி -என்று நீ புக விட்டால் அன்றோ எங்களை உகப்பது
இவர்கள் அர்த்தித்தவத்தையும்-
தனக்கேற பாவ சுத்தியையும் கண்டவாறே
நான் நிஷேதிக்கிறேன் அல்லேன் –
தள்ளிக் கொண்டு புகுருங்கோள் என்றான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா –
மனத்தினால் நினைத்தாலும் வாயாலே நெருப்பைச் சொரியாதே கொள்-
இவர்களுக்கு இவன் வாயது இறே வாழ் நாள்
யம்மா
அவன் வாய் நேர்ந்தாலும் இவர்கள் நடத்தா விடில் கார்ய கரம் ஆகாதே –
வத்ய தாம் என்றவாறே
அஸ் மாபிஸ் துல்ய -என்ன வேணும் இறே
தா நஹம் த்விஷத-என்றவனே
ததாமி என்றாலும் இவர்களுக்கு வேண்டாவிடில்
ந ஷமாமி கதாசன -என்னும் அத்தனை
பிதாமஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத
கோயில் காப்பானே
ஏஷ ஸூப் தேஷூ ஜாகர்த்தி என்கிறபடியே இவன் இசைவதற்கு முன்பு அவன் உணர்ந்து இவனை நோக்கும் –
இவன் இசைந்த பின்பு இவன் உணர்ந்து அவனை நோக்க அவன் உறங்கும்
(கட வல்லி -நாம் தூங்கும் பொழுதும் அவன் விழித்து நாம் விரும்புவதை நிறைவேற்ற)
—————–
நீ நேச நிலைக் கதவம் நீக்கு –
அது உன்னிலும் பரிவுடைத்தான கதவு
எங்களால் தள்ளப் போகாது
நீயே திறக்க வேணும் –
என்கிறார்கள்
சேதன அசேதன விபாகம் இன்றிக்கே
இவ் ஊரில் உள்ளது எல்லாம் அனுகூலமாய் இருக்கிறபடி –
கம்சன் படை வீட்டில் எல்லாம் பிரதிகூலமாய் இருக்குமா போலே –
நேச நிலைக் கதவம் –
செறிந்து இருக்கிற கதவையும் நிலையையும் –
நீக்கு-
நீயே வந்து திறக்க வேணும் –
நீ-நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்-
அது உன்னிலும் பரிவுடைய கதவு -எங்களால் தள்ளப் போகாது –
நீயே திறக்க வேணும் –
இவன் விலக்குகிறது ஸ்நேஹத்தாலே யானால் தள்ளப் போகாதே இருக்கிறது ஸ்நே ஹத்தாலே என்று இருக்கிறார்கள்
திறந்து கொள்வார் முகத்திலே அறையும் போலே –
கம்சன் பரிகரம் அடைய பிரதி கூலமாய் இருக்குமா போலே
திருவாய்ப்பாடியிலே சேதன அசேதன விபாகம் இன்றியிலே எல்லாம் அனுகூலமாய்த்து இருப்பது
அகால பலிநோ வ்ருஷா–அபி வ்ருஷா பரிம்லாநா –என்று அன்வய வியதிரேகங்களில்
ஹர்ஷ சோகம் உண்டானால் ஸ்நேஹம் உண்டாக்காத தட்டில்லை-
சகடத்திலே அசுரன் கிடந்தவோபாதி-
அனுகூலரும் சேதன சமாதியில் அங்குத்தைக்கு உறுப்பாவாறே
படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே என்னும் படியாய் கிடக்கிறாரோபாதி
நிலையும் கதவுமாய் நிற்பாரையும் கிடக்கும் இறே
நேச நிலைக் கதவம்
நிலையும் கதவும் பொருந்தின பொருத்தம் ஆகவுமாம் –
ஆன பின்பு நீயே திறந்து புகுர விட வேணும் என்கிறார்கள் –
நீ நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்
நீ வா எனிலும்
ஸ்னேக உக்தமான நிலையை உடைத்தான கதவைத் திறந்து விடாய்
நீ எம்பெருமான் இடத்திலே பிரேம அதிசயத்தாலே
அநாதிகாரிகளுக்கு அவனை உள்ளபடி காட்டாதாப் போலே
ஆத்ம ஸ்வரூபம் ஸுவ வை லஷண்யத்தாலே
அதிகாரிகளுக்கும் பகவத் விஷயத்தை
மறைக்கக் கடவதாய் இறே இருப்பது-
நீ நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்-
உள்ளே இருக்கிறவனோ எங்களுக்கு நாயகன் நீ அன்றோ –
நாங்கள் த்வார சேஷியை ஒழிய பர சேஷியை உடையோம் அல்லோம்
நீ அன்றோ எங்களுக்கு நிர்வாஹகன் –
ஆன பின்பு வாசா தர்ம நவாப் நு ஹி-பண்ணாயோ -என்று இவர்கள் அர்த்திக்க
இவர்களை தாளை யுருவிக் கதவைத் தள்ளிக் கொடு புகுருங்கோள்-என்ன
அது உன்னிலும் பரிவுடைய கதவு காண்-எங்களால் தள்ள ஒண்ணாது -நீயே திற -என்கிறார்கள்
நேச நிலைக்கு கதவம்
கதவும் நிலையும் செறிந்த செறிவாகவுமாம்
கம்சன் படைவீட்டில் அடைய பிரதிகூலிக்கும் படி இங்கு எல்லாரும் அனுகூலிக்கும் படி
படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே -என்னுமா போலே –
அணைய ஊர புனைய –ஸ்தாவர ஜென்மங்களை பெருமக்கள் ஆதரிப்பார்கள் அன்றோ
————
ஸ்வா பதேசம்
கோயில் காப்பான் -திருமந்திரம் காப்பான்-ப்ரணவாரா ஆகாரம் -ஸ்ரீ பாஷ்யம் -திருக்கோயில்
சங்கு -சாவி -திருமந்த்ரார்த்தம்
தோரண வாசல் காப்பான் த்வயம் -காப்பான்
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்த சரம ஸ்லோகம் காப்பான்
ஆச்சார்யர் பரம்
நாங்கள் துயில் எழ -ஆச்சார்யரைப் பாட அஞ்ஞானம் போகுமே-அனந்த மாயயா ஸூஸூப்த்த –
வாய் பேசும் நங்காய் -வியாக்யானம் செய்து அருளும் ஆச்சார்யர்-ஆடிப்பாடி துள்ளி -நாணாதாய்
(உபகார ஆச்சார்யர் உத்தாரக ஆச்சார்யர் போல் இங்கும் இரண்டு காப்பான் )
நேச நிலைக்கதவம் -திரு உள்ளம் உகந்து
குரு பரம்பரை சஜாதீய தலைவர் நாதமுனிகள் -நாயகன் –
மன்னார் கோயில் நந்த கோபன் கோயில்
நாலாயிரம் காத்து அருளி
வாய் திறந்து தாளத்துடன் -தாளம் வழங்கி தமிழ் மறை தந்த வள்ளல் -தாள் திறவாய்
பவிஷ்ய ஆச்சார்யர் அவதாரம் பற்றி நென்னலே வாய் நேர்ந்தாரே ஆழ்வார் –
—————————————————————————————————————————————————-
16. நென்னலே வாய் நேர்ந்தான் :
கூடி இருந்ததாம் காலத்து கண்ணன் தான்
தேடி உரைத்தவையே கொண்டு யாம் — நாடி வந்தோம்
நாயகநீ! கை நீட்டி ஆகாதென் ஓவாதே
நேய நிலைக் கதவம் நீக்கு.
பூ வராஹன் வார்த்தை – அஹம் ஸ்மராமி மத் பக்தம் – நாராயணனே நமக்க பறை என்கிற உபேய புத்தி அத்யவசாயத்தோடே வந்தோம்.
பெருமாள் வார்த்தை – தவாஸ்மி இதீச யாசதே ததாம் ஏதத் விரதம் – பரமனடிப் பாடி பாகவதேக உபாய புத்தியோடே வந்தோம்.
கீதாசார்யன் வார்த்தை – அஹம் துவா மோக்ஷ இஷ்யாமி மாஸுச : – நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று உபாயாந்தரங்களை விட்டு வந்தோம்.
இப்படி பேற்றுக்கு துவரிக்கையும், உபய உபேய நிஷ்டையாகிற தூய்மையோடே வந்தோம் என்றவாறு.
விபவாவதார எம்பெருமான்கள் மட்டுமல்லாது, அர்ச்சாவதார பெருமாள்கள் மொழிந்தமை கேட்ட வந்தோம் என்பதை
நம்பெருமாள் வார்த்தை – அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ –
நீராட என்று பகவத் ஸம்ஸ்லேஷத்தையும்,
பாடி என்று மங்களாசாஸன தத்பரதையோடே ஸாலோக, ஸாமீப்ய ஸாயுஜ்யத்தை ஆஸாசித்து வந்தோம்.
மலையப்பன் வார்த்தை – தொண்டை மன்னவன் திண்திறல் ஒருவருக்கு வளங்கொள் மந்திரம் அருளிச் செய்தவாறு –
திருமந்திரத்தில் உள்ள நம பதத்தை பூர்வ உத்தர ஸ்தானாதிகளில் வைத்து பார்க்கிற வகையில்
ஓம் நம :
நமோந் நம :
நாராயணாய நம :
என்ற கணக்கிலே
நாராயணனே நமக்கே (1) என்றும்
நாராயணன் மூர்த்தி (7) என்றும்
நாற்றத்துழாய்முடி நாராயணன் (10) என்றும்
ஸ்வ சேஷத்வம் , அன்ய சேஷத்வம் கழிந்தவர்களாய் பகவத்தேக சேஷர்களாய் பாடிக்கொண்டு வந்தோம்.
தேவப் பெருமாள் ஆறு வார்த்தை – நாகணைமிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறுமானிட்டவர் நாம் செய்வதென்
வில்லிபுத்தூர் கோன் விட்டுசித்தன் வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே – என்ற கணக்கில்
பகவத் வசனங்களே யானாலும், கபிலாவதாரம், புத்தாவதாரம் போன்ற ஆழ்வார் ஆசார்யர்கள் கைக்கொள்ளாத
உபதேசங்களை கழித்து, எம்பெருமானார் மதித்த வார்த்தை என்று கொண்டு – உய்யுமாறு எண்ணி வந்தோம்.
இன்னும் திருமாலிருஞ்சோலை மலை அழகர் வார்த்தை – ராமானுஜ சம்பந்திகள் அகதிகள் அல்லர் என்றும்,
அவருடைய திருவடி சம்பந்தம் போலே திருமுடி சம்பந்தமும் உத்தாரகம் என்பதை வெளியிட்ட படியே
ராமானுஜ அனுயாயிகளாக – தனித்த தேட்டமாக அல்லாது, துணைத் தேட்டமாக வந்தோம்.
நாதமுனிகள் யோக சாஸ்திரத்தை குருகை காவலப்பனிடம் வைத்துப் போக்கி,
பிரபன்னாம்ருதமான திருவாய்மொழி மற்றும் ஏனைய ஆழ்வார்கள் பாசுரங்கள் 4000மும் அர்த்தத்தோடே
நம்மாழ்வாரிடம் பெற்றபடி உய்யக் கொண்டார் பக்கலில் கொடுத்து மணக்கால் நம்பி, ஆளவந்தார் வழி 74 மதகுகளைக் கொண்ட
வீராணம் ஏரியைப் போன்ற எம்பெருமானார் வரை சேர்த்த கணக்கிலே சாதன பக்தியைக் கழித்து, சித்தோபாயமான கண்ணனையே நாடி
விபவத்திலும், அர்ச்சையிலும் கண்ணன் தான் வாயமலர்ந்தருளிய படிக்கும்.
ஆழ்வார் ஆச்சார்யர்கள் காட்டிக் கொடுத்த படிக்குமாய் வந்தோம் வந்தோம் .
தூமலர் தூவித் தொழுது என்று உபாய புத்தி தியாகமும்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் என்று உபேயத்தில் களை அறுக்கையுமாக
நீராடம் – பாஹ்ய கரண சுத்தி
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க – ஆந்தர சுத்தி
ஆகிற தூய்மையோடே வந்தோம்.
நீ நேய நிலைக் கதவம் நீக்கு – என்று துவார சேஷிகள் காலில் விழுகிறாள் ஆண்டாள்.
நாயகனும் எம்பெருமானும்-எம்பிரானை புத்ரனாக பெற்றதில் நந்த கோபனுக்கும் எம்பெருமானாருக்கும் சாம்யம் உண்டே-எதிராஜ சம்பத் குமார் -செல்வப் பிள்ளை
கோயில் காப்பானும் -எம்பெருமானாரே
தென்னரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
ஸ்ரீ மன் ஸ்ரீ ரங்க ஸ்ரீ ரியம் அனுபத்ரவாம் அனுதினம் சம்வர்த்தய –
மன்னிய தென்னரங்காபுரி மா மலை மற்றும் உவந்திடு நாள் -சகல திவ்ய தேசங்களையும் உத்தரித்து அருளினவர் –
கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பான் –
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் -என்றும்
நெடு வரைத் தோரணம் நிரந்து எங்கும் தொழுதனர் உலகே -என்றும்
சொல்லுகிறபடியே கொடியும் தோரணமான வாசல் பரமபத வாசல்
இதுவும் எம்பெருமானார் ஆளுக்குகைக்கு உட்பட்டதே –
எம்பெருமானார் திருவடிகளை பெறாதாவர்களுக்கு அரிது என்னும் இடம் காட்டப்பட்டது
மணிக் கதவம் தாள் திறவாய்
ஒன்பது ரத்னங்கள்
மறைப் பொருளுக்கு ரஷணமான நவ கிரந்தங்கள் செய்து அருளி
தாள் திறவாய்
இவற்றின் பொருள்களை நாங்கள் அறியும் படி காட்டி அருளுவீர்
நென்னலே வாய் நேரந்தான் –
முன்னமே எம்பெருமான் சோதி வாய் திறந்து எம்பெருமானாரைப் பற்றி அருளிய
கலௌ ராமானுஜஸ் ஸ்ம்ருத-என்றும்
கலௌ கச்சித் பவிஷ்யதி -என்றும்
உபதேஷ்யந்தி தி ஜ்ஞானம் ஜ்ஞாநினஸ் தத்வ தரிசின -என்றும்
நின்றான் -யாத்ரை போகாமல் நின்றார் ராமானுஜர்
தத்து கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ –
யதிராஜ சம்பத் குமாரா செல்வ பிள்ளை -நந்த கோபன் கண்ணனை -பெயர் தகும்
ஆனந்தப் படுத்தியவர் –
உடைய கோயில் -உடைய பதம் இந்த பாசுரத்தில் மட்டுமே -உடையவர் –
கோயில் காப்பான் திருவரங்கா -புரி மாமலை மற்றும் உவந்திடும் நாள் -திருத்தி பணி கொண்டார்
சீமான் இளையாழ்வார் வந்து அருளிய நாள் திருவாதிரை நாளே –
கடல் வண்ணன் கோயிலே என்னும் –
மன்னரை காணில் திருமாலை கண்டேனே என்னும்
கோயில் காப்பான் -எம்பெருமானார்
உடையவர் உபய விபூதியும் கையிலே உடையவர்
கொடி தோன்றும் தோரண வாயில் -நித்ய விபூதி
கோபுரம் -நடுதோரணம் நிறைத்து -கொடி அணி
எம்பெருமானார் சம்பந்தமே கொடுக்கும்
மணிக்கதவம் ரத்னம் நவ ரத்னம் -அருளி தாள் திறவாய் –
அனந்த- பிரதம ரூபம்–லஷ்மனச்து பல பத்ரன் கலௌ கச்சித் பவிஷ்யதி -அவதரிக்கப் போகிறார் –
சேஷாம் -யாதவ பிரகாசர் இடம் பிரம்ம ரஜஸ் சொல்லி -ராமானுஜா நீ சொல் –
நென்னலே வாய் நேரந்தான்
தர்மஸ்ய கிலாது ததா ஆத்மாநாம் -ஞானி து ஆதமைவ மே மதம்
சம்பவாமி ஆத்மா மாயா சொல்லாமல் ஆத்மாவை உண்டு பண்ணுகிறேன்
ஆத்மா யார் ஞானி
கீதையிலே சொல்லி அருளி
தூயோமாய் வந்தோம் -சாஷாத் நாராயணன் நினைக்கிறோம்
நமக்கு துயில் எழ பாடுவான் -சம்சார நித்தரை
பாடுவான் ஹாவு ஹாவு அஹம் அன்னம் அஹம் அன்னாதோ பாட்டு கேட்கும் இடம் -கிருபா மாத்ரா பிரசன்னாச்சார்யர்
நேசக் கதவு இரட்டை–பிரணவம் -மந்திர சேஷம் -திரு மந்த்ரம்–பூர்வ கண்டம் உத்தர கண்டம் -த்வயம்–பூர்வார்த்தம் உத்தரார்தம் சரம ஸ்லோகம்
நேய மாலை –
நேச நிலைக்கதவம் நீக்கேலோ
நடு நாயகம் -எம்பெருமானார் -யதிராஜ சம்பத்காரர் பெற்ற நந்த கோபர் இவர் இ றே
கோயில் காப்பான் -தென்னரங்கள் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
ஸ்ரீ மன ஸ்ரீ ரெங்க ஸ்ரிய மனுபத்ரவாம் அநு தினம் சம்வர்த்தய –
மன்னிய தென்னரங்கா புரி மா மலை மற்றும் உவந்திடும் நாள் -சகல திவ்ய தேசங்களையும் உத்தரிப்பவர்
கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே –
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
நெடு வரைத் தோரணம் நிறைந்து எங்கும் தொழுதனர் உலகே
பரமபத வாசலையையும் தமது ஆளுக்கைக்க் கீழ் வைத்து இருக்கும் ஸ்வாமி
மணிக்கதவம் தாள் திறவாய்
மணி ரத்னம் -நவ கிரந்தங்கள் -அறிவிலி ஆயர் சிறிமியோர் எமக்கு மணிக் கதகம் தாள் திறவாய்
நென்னலே வாய் நேரந்தான் -கலௌ ராமானுஜஸ் ஸ்ம்ருத -என்றும்–கலௌ கச்சித் பவிஷ்யதி -என்றும்
உபதேஷ்யந்தி தே ஜ்ஞானம் ஜ்ஞாநினஸ் தத்வ தர்சின –
நேய மாலை
திருமந்தரம் த்வயம் சரம ஸ்லோகம் எல்லாம் இரட்டை
பிரணவம் மந்திர சேஷம்
பூர்வ வாக்கியம் உத்தர வாக்கியம்
பூர்வார்த்தம் உத்தரார்த்தம்
நம் பொருளைக் காப்பாற்றித் தரும் கதவு
கதவம்
நிலைக்கதவம்
நேச நிலைக்கதவம்
மூன்றும் சொன்னது ரகஸ்ய த்ரயத்தையும்
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருளான ஆத்ம ஸ்வரூபம் காப்பாற்றிக் கொடுக்கும் கதவம் -திரு மந்த்ரம்
துணை நின்று ரஷிப்பதாக பிரதிஞ்ஞை செய்யும் சரம ஸ்லோகம் -நேசக் கதவம்
த்வயம் நேசக்கதவம்
——————————————————–
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —
————————————————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –