ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த சங்கல்ப ஸூர்யோதயம்– நாடகம் –முதல் அங்கம் —

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————-

வித்ராஸி நீ விபூத வைரி வரூதி நீ நாம்
பத்மாஸநேந பரிசார விதவ் ப்ரயுக்தா
உத் ப்ரேஷ்யதே புத ஜநைர் உப பத்தி பூம் நா
கண்டா ஹரேர் ஸமஜநிஷ்ட யாதாத்ம நேதி –ஸ்ரீ சங்கல்ப ஸூர்யோத ஸ்லோகம்

பிரமதேவன் பெருமாளை ஆராதிக்க எந்த மணியை உபயோகித்தாரோ
எந்த மணியின் நாதம் அசுரர்களை பயந்து ஓடச் செய்ததோ =-
அந்த மினியின் அவதாரமே இந்த நாடக ஆசிரியரான ஸ்ரீ ஸ்வாமினி தேசிகன்
என்று ஞானாதிகர்கள் தகுந்த ஹேதுக்களாலே நிர்வஹிக்கிறார்கள்

———————–

ஸ்ரீ ஸ்வாமி தேசிகனின் ஸங்கல்ப சூரியோதயம் என்னும் ஸம்ஸ்க்ருத நாடகத்தில்,
யோகம் புரிவதற்கு சரியான இடத்தை தேடி விவேக மஹாராஜன் தன் ஸாரதியான தர்கனுடன் செல்கிறார்.
அப்பொழுது இருவரும் அயோத்தி மாநகரை அடைந்தனர்.
“எம்பெருமானின் அவதாரத்தினால், பாபமெல்லாம் போய் சுத்தமான ஸாகேத தேசத்தை (அயோத்திக்கு மற்றோரு பெயர்)
மஹாராஜர் காணலாம். ஸ்ரீவைகுண்டத்திலுள்ள அயோத்தியே இந்த அயோத்திமாநகரம்.
இங்கு வெள்ளமிடும் ஸரயூநதியே விரஜை நதியாகும். அங்கே சாஸ்த்ர விதிப்படி பசுக்கள் கட்ட யூபஸ்தம்பங்கள் இருந்தன.
அவை ஸ்ரீராமன் யாகத்திற் சேர்ந்தவையாகும். ரகுபதியான எம்பெருமான் தான் ஸ்வதந்ரமாய் எதையும் செய்யலாமாகையாலே,
தன் அவதாரத்தை பூர்த்திசெய்து கொண்டு ஸ்ரீவைகுண்டத்திற்கு திரும்பிச் செல்லும் போது,
அயோத்தியில் இருந்த அனைத்து ஜீவராசிகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.
அப்பேற்பட்ட இந்த தேசம் ஸம்சாரத் துயரினை நீக்கி ஸ்ரீவைகுண்டம் அளிக்கும் மோக்ஷ தேசமாகும்.” என்று
அயோத்தியின் பெருமையை ஸாரதி விவேக மஹாராஜாவிடம் விளக்கினான்.

அப்பொழுது விவேகன் எங்கும் பார்த்த படி
“அயோத்தியில் உத்யானங்களில்(மாடங்களில்) கிளிக்கூட்டங்கள் மூன்று வேதங்களையும் ஓதுகின்றன.
பண்டைய தர்மானுஷ்டானங்கள் இதனின்று நன்றாக தெரிகிறது. மேலும் ஜனங்களின் “ராம்” என்ற கோஷத்துடன் கூடியபடி
அயோத்தி மாநகரம், ரகுவம்சத்து அரசர்கள் நாட்டிய சிறந்த யூபஸ்தம்பங்களாலும் நேர்த்தியாக விளங்குகின்றது.” என்று கூறினான்.
மேலும் அயோத்தியை ரசித்த படி, விவேகன் மகிழ்ச்சியும், மயிர் சிலிர்ப்புடன் ,
“இந்த்ரியங்கள் (புலன்கள்) என்ற முகங்களினால், பயங்கரமான மனமென்னும் அரக்கனை,
யோகிகளின் நல்லது எது கேட்டது எது என்று பார்த்து அறியும் விவேகமென்னும் அம்புகளின் திரள்களால், அழிப்பவனும்,
தயரதன் மகனாகவும் , தயையே வடிவாக உள்ள ஜானகிதேவியாருடன் இருக்கும் அந்தத் திருமாலான ராமன்,
நல்லாருக்கு அபயம்(அடைக்கலம்) அளிப்பானாக.” என்று ஆவலுடன் கைகூப்பிக் கொண்டான்.

மேலும் “வேறொரு புகல் இல்லாதவர்களை தானே முன்னின்று காப்பதாகிற விரதத்தினால், மேன் மேலும் வளருகிற
புகழையுடையவன் ராமன். இந்திரன் தன் மனம் போனபடி செய்த காரியத்தால், கோபத்தை அடைந்தவரும்,
சாபத்தையே ஆயுதமாகவுடைய கௌதம முனிவரின் மனைவியான அஹல்யையினுடைய கல்லாயிருக்கும்
கெட்ட தசையை போக்கடிக்கும் திருவடித்தாமரைகளின் தூள்களையுடைய சிறந்த அந்த ராமபிரானை வணங்குகிறேன்.
“ஸ்ரீராமனுக்கு எனது வந்தனம்.” என்று விவேகன் வார்த்தை மூலம் சுவாமி தேசிகன் அயோத்தியை மங்களாசாஸனம் செய்கிறார்.

ஸாவதகா வீராதீன ஸூதே சாகர மேகலா மருத சஞ்சீவநீ யதா மருதய மாண தசாம கதா -அசாரங்கள் மலிந்து சாரங்கள் மெலிந்து இருப்பதே இவ்வுலக இயற்க்கை

யமோ வைவஸவதோ ராஜா யஸ தவைஷ ஹ்ருதி சதிதஸ் தேந சேத விவாதஸ தே மாகங்காம மா குரூந கம -மநு ஸ்ம்ருதி -8-92-
சர்வ நியாமகன் -தண்டதரன் -ஸூர்ய வம்ச -ஆதித்ய மண்டலா வாசி -அனைவருக்கும் இனியவன் –
உனது உள்ளத்தில் உள்ளவனாய் இருந்தும் நெடுநாளவனுடன் விவாதம் அனுவர்த்தித்து -த்வம் மே -அஹம் மே -தொடருகிறதே
இது தொலைந்தால் கங்கா முதலிய புண்ய நதி தீர்த்தங்கள் ஆட வேண்டா =புண்ய க்ஷேத்ரம் சேவிக்கப் போக வேண்டா
விவாதம் நீங்கும் அளவே வேண்டுவது –

உன் தன்னோடு உறவு நமக்கு இங்கு ஒழியாது
திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்

———————-

வஹதி மஹிலாமாத்யோ வேதாஸ்த்ரயீமுகரைர்முகை
வரதனுதயா வாமோ பாக: ஶிவஸ்ய விவர்ததே |
ததபி பரமம் தத்த்வம் கோபிஜனஸ்ய வஶம்வதம்
மதனகதனைர்ன க்லிஶ்யந்தே கதம் ந்விதரே ஜனா: ||–சங்கல்ப சூர்யோதயம்-

வேதம் முழங்கும் தன் திருநாவில் நான்முகன் தன் மனைவி கலைமகளைத் தாங்கினான்…
சிவனுக்கு ஒரு பாதி உடலே பெண்ணாக ஆனது…
இவர்களை விட கண்ணனென்னும் பெரிய தத்துவமோ கோபிமார்களின் வசத்தில் ஆட்பட்டு கிடக்கிறான்…
மன்மதனிடம் போரிட்டு இவர்களே தோற்றார்கள் என்றால் சாமான்ய மக்கள் என்ன ஆவரோ!

ஆத்யோ வேதா: என்று பிரமன், ஒன்பது பிரஜாபதிகளில் முதன்மையானவன் என்றும்,
முதன்மையானவனே பெண்ணைத் தன் நாவில் தாங்குகிறான் என்றும் குறிப்பிடுகிறார்.
அடுத்து “சிவ”னென்னும் பெயர் தாங்கியவன், இடம் வலமாக மாறி “வசி” என்று வசப்பட்டவனாகி விட்டான் என்று குறிப்பிடுகிறார்.
அடுத்து கோபிகைகளைக் குறிப்பதற்கு, ஆண்பால் சொல்லான கோபி ஜன: என்று குறிப்பிட்டது,
கோபிகைகள் “இடைப் பேச்சும் முடை நாற்றமுமாக” பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் அழகு என்று சொல்ல முடியாமல் இருந்ததை
சூசகமாக சுட்டிக் காட்டி, அவர்கள் பார்வைக்காகவும் கண்ணன் காத்திருந்தான் என்று குறிப்பிடுகிறார்.

வஹதி மஹிலாமாத்யோ வேதாஸ்த்ரயீமுகரைர்முகை
வரதனுதயா வாமோ பாக: ஶிவஸ்ய விவர்ததே |
ததபி பரமம் தத்த்வம் கோபிஜனஸ்ய வஶம்வதம்
மதனகதனைர்ன க்லிஶ்யந்தே யதீஶ்வர ஸம்ஶ்ரயா: ||–யதிராஜ சப்ததி

மன்மதனிடம் போரிட்டு யதிகளின் அரசனை அண்டியவர்கள் தோற்பதில்லை…

————-

பத்து காட்சிகள் கொண்ட நாடகம்
சம்சாரத்தில் மாறி மாறி பிறந்து உழன்று உள்ளவர்கள் அத்தை விடுத்து மோக்ஷம் பெறுவதை உணர்த்துவதே
இதன் மையக் கருத்தாகும்–
இரண்டு கதா பாத்திரங்கள் – -விவேகன் என்றும் மஹா மோகன் என்றும் இரண்டு அரசர்கள் –
ஜீவாத்மாக்களைக் காத்து மோக்ஷம் பெற்றுத்தருவதை குறிக் கோளாக விவேகனும் பரிவாரங்களும் இருக்க
சம்சாரத்தில் மூழ்கும்படி செய்வதையே குறிக் கோளாக மஹா மோகனும் அவனது பரிவாரங்களும் இருக்கும்

கதா பாத்திரங்கள் –
விவேக அணி
விவேகன் -அரசன் -நல்லது தீயது பிரித்து அறியக் கூடிய ஞானம்
ஸூ மதி –விவேகனின் மனைவி
சமன் தமன் ஸ்வாத்யாயன் தோஷ -விவேகனின் மந்திரிகள்
விவசாயன் -விவேகனின் சேனாதிபதி -ஜீவாத்மாக்கள் முயற்சி
தர்க்கன் -விவேகனின் தேரோட்டி
ஸம்ஸ்காரன் -விவேகனின் சில்பி
அநுபவன் -ஸம்ஸ்காரனின் தந்தை
ஸங்கல்பன்- விஷ்ணு பக்தி –பகவானுடைய பரிவா ரங்கள்-
சித்தாந்தி -ஆச்சார்யர் -பகவத் ராமானுஜர்
வாதம் -சிஷ்யன் -ஸ்வாமி தேசிகன்
நாரதன் -தும்புரு -மைத்ரி -கருணை -முதிதா –ஸூ மதியின் தோழிகள்
ஷாந்தி விரக்தி ஜூகுப்ஸை திதிஷை துஷ்டி–ஸூ மதியின் பணிப்பெண்கள் –

மஹா மோஹன் அணியினர் –
மஹா மோஹன்–அரசன் -அஞ்ஞானம் மற்றும் மயக்கம் உண்டாக்குபவன்
துர்மதி -மஹா மோகனின் மனைவி
காமன் க்ரோதன் -படைத்தளபதிகள் –
ராகன் த்வேஷன் டம்பன் லோபன் தரப்பன் -கர்வன் -ஸ்தம்பம் -மந்திரிகள் -சிலரை சிஷ்யர்கள் என்றும் கூறுவர்
சம்வ்ருத்தி சத்யன் -தூதுவன்
வசந்தன் -காமனின் நண்பன்
அபி நிவேசன் -பொருளாதாரன்
திருஷ்ணை ஆசை லோபனின் மனைவி
குஹனை -வஞ்சனை -டம்பனின் மனைவி
அஸூயை பொறாமை -தர்ப்பனின் மனைவி
துர்வாசன் -அபிநிவேசனின் மனைவி
விக்னன் ஒற்றன்
மனன் மத்சரன் -ஆலோசகர்கள்
ஸ்ருங்காரன் -காமனின் சிஷ்யன்
ப்ரமன்-நண்பன் –

——-

உபோத்காதம் -முன்னுரை
யத் பக்தி பிரசயாத்மகே திந முகே த்ருஷ்ட்டி ஷம ஷேத்ரிண
க்ஷிப்ரம் ஸம்ஸ்ருதி சர்வரீம் ஷிபதி யத் சங்கல்ப ஸூர்யோதயம்
தத்வை ரஸ்தா விபூஷணை ரதிகத ஸ்வாதீந நித்யோந்நதி
ஸ்ரீமா நஸ்து ச மே ஸமஸ்த விபதத்தாராய நாராயண -1-

சம்சாரம் என்னும் இரவில் ஜீவாத்மா உறங்கியபடி இருக்க -பக்தி யோகம் விடியற்காலை உண்டாக –
ஸ்ரீ மந் நாராயணனின் சங்கல்பமே ஸூர்ய உதயம்
ஜீவாத்மா அனைத்தையும் தெளிவாக காண உதவும் -இதன் மூலம் சம்சாரம் என்னும் இருள் விலகும் –
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து தத்துவங்களும் திவ்ய ஆயுதங்கள் -திவ்ய ஆபரணங்களாக அவன் திரு மேனியில் உள்ளன
அவனே அனைத்துக்கும் காரணம் -அப்படிப்பட்ட அவன் எனக்கு சம்சாரத்தால் உண்டாகும் தீங்குகளைக் கிடைக்கும்படி செய்வானாக –

லஷ்யே யத்ர சுருதிமிதகுணா க்ருஷ்ட்டி லப்தா வதாநை
ப்ரத்யக் பாண பிரணவ தனுஷா சத்த்வ வத்பி ப்ரயுக்த
மத்யே வஷஸ் ஸ்புரதி மஹசா பத்ரல கௌஸ்து பாத்மா
பத்மா காந்தா ச பவது தயா துக்த சிந்து ஸ்ரியை வ -2-

ஜீவாத்மா இறகுகள் உடன் கூடிய அம்பு போலே -சத்வ குணத்தில் நிலைத்து நின்று –
ஸ்ருதியின் படியே பகவத் த்யானத்தில் ஆழ்ந்து வில்லாளி -வில்லில் உள்ள நாண்-என்றுமாம் –
ஜீவாத்மா என்னும் அம்பை -பிரணவம் வில்லில் தொடுத்து -பகவானுடைய திரு மார்பில் எய்கிறான்
அப்படிப்பட்ட ஜீவாத்மா கௌஸ்துபம் ஸ்தானம்
தயை என்னும் குண பாற் கடலாக உள்ள ஸ்ரீ யபதி அனைத்து செல்வங்களுக்கும் நன்மைகளுக்கும் துணை நிற்பானாக –

இந்த இரண்டு ஸ்லோகங்களும் நாந்தி-இஷ்ட தைவ நமஸ்காரங்கள் -பக்தியையும் பிரபத்தியையும் குறிக்கும் ஸ்லோகங்கள் -இவை இரண்டும்

அங்கம் -1-காட்சி -1-
ஸூத்ரதாரர் –
சர்வேஸ்வரன் -அனைத்து தேவர்கள் அஸூரர்கள் உடைய கோடிக் கணக்கான க்ரீடங்களுடைய ஒளிக் கிரணங்கள் கொண்டு
ஆலத்தி வழிக்கப்படும் திருவடிப் பீடம் கொண்டவன்–தன்னைச் சரணம் அடைந்தவர்களை ரஷிக்க விரதம் பூண்டவன் –
தாமரையில் அவதரித்தவளுடன் சேர்ந்து நின்று தர்மம் செய்பவன் –
சம்சாரம் என்னும் காட்டுத்தீயை அணைக்க வல்ல மழை மேகமாக உள்ளவன் –
இப்படிப்பட்ட சர்வேஸ்வரனின் தோற்றத்தை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தும் திவ்ய தேசங்களாக
கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரம் பூரி ஜகந்நாதர் கோயில் பாண்டுரெங்கம் போல் பலவும் உள்ளன

ஆங்கு ஆங்கு உள்ள எம்பெருமானை அவனுடைய உத்சவத்தின் பொழுது சேவிக்க ஆசை கொண்டு அந்த அந்த
திவ்ய தேசங்களுக்கு பலரும் செல்கிறார்கள் –
இப்படிப்பட்ட அடியவர்களின் பாத தூளிகளால் இந்த பூ மண்டலமே தூய்மை யாகிறது –
அவர்கள் இப்பொழுது திருக் காவேரியால் சூழப்பட்ட இந்த திவ்ய தேசத்தில் உள்ளனர் –
அவர்களுக்கும் பெரிய திருவடி போன்ற நித்ய ஸூரிகளுக்கும் வேறுபாடு இல்லை –
அவர்கள் அனைவராலும் போற்றப்படுபவர்களாயும் -தோஷம் இல்லாதவர்களாயும் –
தங்கள் குலத்துக்கு ஏற்ற ஞானம் உள்ளவர்களாயும் -அதற்கு ஏற்ற அனுஷ்டானங்களை உடையவர்களாயும் –
குணங்களும் கொண்டவர்களாயும் உள்ளனர் –
எல்லையற்ற காலமாக தொடர்ந்தபடி உள்ள பிரகிருதி என்னும் பெரும் சூழலில் அகப்பட்டு -வேதங்களுக்கு புறம்பாக
பொருள் உரைத்து இருப்பவர்களை மதம் கொண்ட யானைகள் வாழை மரத்தைச் சாய்த்து போன்று இவர்களை வீழ்த்துகிறார்கள்-
இவர்கள் இப்பொழுது மோக்ஷ மார்க்கத்தை விரும்பியபடி உள்ளனர் –இவர்கள் அனைத்து திசைகளிலும் ஒளிரும் ரத்னங்களாயும் –
உபநிஷத்துக்களில் பொதிந்து உள்ள ஆழ்ந்த பொருள்களை மற்றவர்களுக்கு விளக்க வல்ல ஆச்சார்யர்களாகவும் உள்ளனர் –
இவ்விதமாக அனைத்துக் கலைகளிலும் தெளிந்த இவர்களால் ஸூத்ரகாரனான நான் உத்தரவு இடப்பட்டுள்ளேன் –

லலித மனஸாம் ப்ரீத்யை பிப்ரத் ஸாந்தர பூமிகாம
நவம குணோ யஸ்மின் நாடயே ரஸோ நவமஸ் ஸ்திதஸ்
ஜநந பதவீ ஐங்கால திச்சிதா ந்ருகுணீ பவந்
நடபரிஷதா தேநாஸ் வாதம் சதாமுபசிந்விதி –3-

எனக்கு –ஸூத்ரதாரனுக்கு -இடைப்பட்ட உத்தரவு என்னவென்றால் –
தாழ்ந்த விஷயங்களில் எப்போதும் மனசைச் செலுத்தும் மக்கள் இன்பம் அடையும்படி
மற்ற ரசங்கள் அனைத்து இடத்தைப் பிடிப்பதும் குறையற்ற குணமும் கொண்ட ஒன்பது ரசம் நிறைந்த சாந்தி ரசம் நிறைந்த
நாடகம் நடத்துவாயாக -வேதனைகளை நீக்க வேண்டும்
அதில் ஜீவாத்மாவுக்கு வேண்டிய குணங்களே நாடக பாத்திரங்கள் –

சன்மார்க்க வர்த்தகர் -பரத ஸாஸ்த்ர உபாத்தியாயர் -அவருடைய சிஷ்யர் நாட்டிய சக்ரவர்த்தி சந்தோஷ பாலகர் –
அவர் புத்ரன் நான் -வைகுண்ட விநோதிந் -என்ற பெயர் –
சிங்கத்தைக் கண்ட யானை போலே மற்ற நடிகர்கள் என்னைக் கண்டு ஓடுவார்கள்
நான் மேலே சொன்னபடி சான்றோர்கள் உத்தரவை ஏற்றுக் கொண்டுள்ளேன்
இத்தை பார்க்க வித்வான்கள் பலர் கூடியுள்ளனர்

அவதாரித நாட்ய தேசி மார்க்கை ரஸமீசீ பராங்முகைரமீபி
பரதாகம தைவதைரிவைஷா பரிஷத் ஸம்ப்ரிதி பாஸதே மஹத்பி -4-

இந்த நாடக அரங்கம் பாவனை -இசை -நடனம் -இவற்றை நன்கு அறிந்தவர்களால் நிறைந்துள்ளது
வேறே விஷயத்தில் முகம் திருப்பாதவர்கள் –
பரத ஸாஸ்த்ர தேவதைகளோ இவர்கள் என்னும் படி உள்ளதே

ஆகவே நான் அனைத்து சாஸ்திரங்களை நன்கு அறியச் செய்வதும் -எண்ணிறந்த அவதாரங்களை தனது மேன்மை குறையாமல்
அவதரித்ததும் -அஞ்ஞான சமுத்திரத்தை வற்றச் செய்பவனும் -மனத்திலே பக்தியை மட்டுமே வளரச் செய்பவனுமான
முதன்மையான தேவதையை ஆடுகிறேன் –

ப்ராஸீ சந்த்யா காசித் அந்தர் நிசாயாஸ் பிரஞ்ஞா த்ருஷ்டே அஞ்சனஸ் ரீர பூர்வா
வக்த்ரீ வேதான் பாது மே வாஜி வக்த்ரா வாகீ சாக்யா வாஸூ தேவஸ்ய மூர்த்தி –5-

ஸூத்ர தாரன் தொடர்ந்து உரைக்கிறான் –
அஞ்ஞானத்தை போக்க வல்ல அதி காலைப் பொழுது -ஞானக் கண்ணுக்கு தீட்டப்படும் அஞ்சனம் –
நான்முகனுக்கு வேதத்தை அளிப்பவன் -குதிரை முகன் -வாகீசன் -வாஸூ தேவ மூர்த்தி
எனது மனக்கண் முன்னே தோற்றுவானாக –

தேவோ ந சுபமாதநோது தசதா நிர்வர்த்தயன் பூமிகாம்
ரங்கே தாமனி லப்த நிர்பர ரஸைரத்யஷிதோ பாவுகைஸ்
யத் பாவேஷு ப்ருதக் விதேஷு அநு குணாந் பாவாந் ஸ்வயம் பிப்ரதீ
யத்தர் மைரிஹ தர்மிநீ விஹரதே நாநா க்ருதிஸ் நாயிகா –6-

ஸூத்ர தாரன் அஞ்சலி ஹஸ்தத்துடன் பணிவாக மேலும் கூறுகிறான் –
நாடகத்தில் பத்து வித வேஷங்கள் போல தச அவதாரங்கள்-திருவரங்கம் மேடையில் ஸ்ரீ பெரிய பிராட்டியார் அவனுக்குத் தக்க
துல்ய சீல வயோ வ்ருத்தையாய் – காண்பவர் ரஸ அனுபவம் பெறும்படி -ஸ்ரீ ரெங்கநாதன் நமக்கு
அனைத்து விதமான நன்மைகளையும் பெருக்கும் படி இருப்பானாக –

இவ்வாறு இறை வணக்கம் செய்து பராத்பரன் கடாக்ஷம் பெற்று மேலும் தொடர்கிறான் –

சுருதி கிரீட விஹார ஜூஷா தியா ஸூரபிதாம் இஹ நாடக பத்ததிம்
முஹுர வேஷ்ய விவேக முபக்நயந் மதமபச்சிமாமி விபச்சிதாம் –7-

வேதாந்த க்ரீடமே ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-இதனுடன் புத்தியின் திருமணம் அடையப் பெற்றதாக நாடகம் –
இதில் விவேகன் கதா பாத்திரம் கொண்டு ஞானிகளின் விருப்பங்களுக்கு மதிப்பு அளிப்பேன் –

ஸூத்ர தாரன்-நாடகக் கலைஞ்சர்கள் வேடம் புனையும் அறையின் பக்கம் முகத்தைத் திருப்பி உரைக்கிறான் –
மரியாதைக்கு உரிய நடியான -நடிகை -தங்களால் இந்த நாடக அரங்கம் மகிழ்வுடன் ஏற்கப்பட வேண்டும்

நடியானவள் மிகவும் பவ்யத்தையுடன் வந்து
இதோ நான் வந்தேன் -உங்கள் உத்தரவை மிகவும் விருப்பத்துடன் ஏற்கும் எனக்கு நீங்கள் உத்தடவு இடுங்கள் –

ஸூத்ர தாரன் -நடியிடம்
சிறந்தவளே -இந்த அரங்கத்தில் சாத்விகர்களால் உத்தவிடப்பட்ட நாடகம் நடைபெற உள்ளது
இதில் நடிக்க வேடங்கள் புனைந்து சிறந்த நம் நடிகர்கள் தயாராக உள்ளார்களா –

நடி-ஸூத்ர தாரன் இடம்
இவர்கள் உங்களுக்கு கை கால் போன்றவர்கள் அன்றோ -உங்கள் எண்ணப்படியே செய்வதில் வேகம் காட்டாமல் இருப்பார்களோ
இந்த நாடகத்தின் பெயர் தன்மை இவற்றை உங்கள் இடம் இருந்து அறிய விரும்புகிறேன் –

ஸூத்ரதாரர்
இது சங்கல்ப ஸூர்யோதயம்–விவேகம் கதாபாத்திரத்தை நாயகனாகக் கொண்டது

பாவம் விதந்தி பரமத்ர பரா வரஞ்ஞா ப்ராஞ்சா தநா
ப்ரகுண நூதன சம் விதாநம் நே
யஸ்மின் குணஸ் தனுப்ருத சதா சத் பிரகார
பத்ரீ பவந்த் யனு குணைரதி தைவதைஸ் ஸ்வை -8-

நாடகத்தின் மையக் கருத்து சாந்தம்
சரியான விவேகம் கொண்டவர்களும் -ஞானத்தை சொத்தாகக் கொண்டவர்களும் அறிவாளிகள்
நல் குணம் தீய குணம் இந்த நாடக கதா பாத்திரங்கள்

விவேக ப்ராகல்ப்ய ஸ்புரித ரண வீரப்யதிகர பர ப்ரஹ்மோ
தந்த பிரகடித தயா வீர விபவ
பிரபுத்த ஷேத்ரஞ்ஞ ஸ்திதி கடித சாந்தா க்ருதிரபூத்
பிரயோகச்சித்ர அயம் பவ ரஸ பூஜாம் அபி அபிமத–9-

இந்த நாடகத்தில் விவேகம் -என்பவனுடைய யுத்தத்தின் காணும் வீர ரசம் பல இடங்களில் உண்டு
இந்த வீரம் தயை கருணை உள்ளடக்கியதாக உள்ளது –
இதில் பர ப்ரஹ்மத்தின் லீலைகளை லீலைகளை தெளிந்த ஜீவாத்மாவின் சாந்தி ரசமும் வெளிப்படுத்தப் படுவதால்
சம்சாரத்தில் உள்ளோருக்கு விருப்பமாய் இருக்கும்

இந்த நாடகத்தின் பெருமை எல்லை அற்றது -உலகில் சங்குகள் எண்ணற்றவை -பங்கை ஜன்யத்துக்கு ஈடாகாதே

ஏ லோகான் இஹ வஞ்சயந்தி விரலோ தஞ்சன் மஹா கஞ்சுகா
தே திஷ்டந்து மஹத் க்ருஹேஷு மாணயஸ் கிம் தைரிதம் சிந்த்யதாம்
ஸ்ரீ வத்ச பிரதி வேஸதீ பரூஸினா சார்தம் கிமா பாஷ்யதே
பத்ம உல்லாசந தர்பனேந மணிநா ப்ரத் நேஷு ரத்நேஷ்வபி –10-

ஒரு சிலர் ரத்ன கற்களை ஆடைகளில் பதித்து மயக்குகிறார்கள் -எதுவும் ஸ்ரீ கௌஸ்துபத்துக்கு ஒவ்வாதே
ஸ்ரீ தாமரையாளை விளக்கு -கண்ணாடி போலே உல்லாசமாகக் காட்டும்

இந்த நாடகத்துக்கு மேலும் ஒரு காரணத்தாலும் மேன்மை உண்டே

அப திஸ்ய கிமப்ய சேஷ குப்த்யை நிகாமந்தேஷு நிரூட கௌரவேண
ப்ரவிபக்த ஹித அஹித பிரயோக கவிநா காருணிகேந கல்பித அசவ் -11-

உலக நன்மைக்காக உபாதேயம் த்யாஜ்யம் பகுத்து அறிய ஸ்ரீ வேதாந்தசசார்யனான அடியேனால் இது இயற்றப்பட்டது

நடி ஸூத்ர தாரனிடம்
இந்த நாடகத்தை உருவாக்கிய கவியின் பெயர் என்ன
அவரிடம் உள்ள மரியாதை காரணமாக இங்கு உள்ளவர்கள் நம் மேல் அன்பு காட்டுகிறார்களா –

ஸூத்ர தாரர் நடியிடம்
நீ கேள்விப்படவில்லையா
புண்டரீகாக்ஷர் என்னும் சோமயாஜியின் புத்ரரும் -உயர்ந்த குணங்களுக்கு இருப்பிடமாயும் –
விச்வாமித்ர கோத்ரத்துக்கு அணிகலனும் அனந்த ஸூரி என்பவரின் புத்ரருமான வேங்கடநாதரே இத்தை இயற்றினர்
ஸ்ரீ ரெங்கநாதர் ஆணையால் இவருக்கு வேதாந்தச்சார்யார் என்னும் விருது கிடைத்தது
அனைவராலும் கவி தார்க்கிக்க சிம்மம் என்றும் போற்றப் பெறுபவர்

கௌட வைதர்ப பாஞ்சால மாலாகாராம் சரஸ்வதீம்
யஸ்ய நித்யம் பிரசம் சந்தி சந்த ஸுவ்ரபவேதிந –12-

கௌடம் வைதர்பம் பாஞ்சாலம் சொல்லமைப்புகள் உள்ள சொல் தொடர்கள் ரசங்கள் இருப்பதாக
கவிகள் கொண்டாடுவார்கள்

அந் யேந்த்ரகம் புவனமந்யத நிந்த்ரகம் வா கர்தும் ஷமே கவிர பூதயமந்வ வாயே
ஜென்ம த்விதீயம் ருஷிபி கதிதம் யதஸ் சா தேவீ ச விஸ்வ ஜெநநீ யதநந்யகோத்ரா –13-

இந்த லோகத்துக்கு வேறே ஒரு இந்த்ரனையோ இந்த்ரன் இல்லாத லோகத்தையோ படைக்க வல்ல வம்சத்தில் அவதரித்த கவி இவர்
காயத்ரி உபதேசம் பெற்று இரண்டாம் பிறப்பு அடைவது போலே இவருடைய மண்தக்ராமும் கோத்ரமும் –

விசித்ராசிநீ விபுகவைரி வரூதிநீ நாம்
பத்மாஸநேந பரிசார விதவ் ப்ரயுக்தா
உத்ப்ரேஷ்யதே புத ஜனைர் உபபத்தி பூம்நா
கண்டா ஹரே சமஜ நிஷ்ட யதாத்மாநேதி –14-

அஸூரர்களை விரட்டவும் -நான்குமானால் ஆராதனத்தில் உபயோகிக்கப்பட்ட திருமலையில் உள்ள திரு மணி
இவர் ரூபம் என்று பல பிரமாணங்கள் கொண்டு சான்றோர்கள் நிர்மாணித்தார்கள்

விம்சப்யதே விஸ்ருத நாநாவித வித்யஸ்
த்ரிம் சத்வாரம் ஸ்ராவித சாரீர பாஷ்ய
ஸ்ரேயஸ் ஸ்ரீ மாந் வேங்கட நாத சுருதி பத்யம்
நாத ப்ரீத்யை நாடகமர்த்யே வ்யதிதைதம்-15-

தமது இருபது வயதுக்குள் பல வித்யைகளைக் கற்றார் -முப்பது முறை ஸ்ரீ பாஷ்ய பிரவசனம் செய்தார் –
ஸ்ரீ பகவத் ப்ரீதிக்காக மோக்ஷ புருஷார்த்தத்தைக் குறித்து புகழ் பெற்ற இந்த நாடகத்தை இயற்றினார் –

நடி ஸூத்ரதாரன் இடம்
இவர் மனம் பகவத் விஷயமாக வேதாந்தத்தில் ஈடு பட்டுள்ளது
இவர் வாக்கு வேதாந்த விரோதிகளை நிரசிக்க வல்லதாயும் கடினமான தர்க்கம் உள்ளவையாயும் உள்ளது
நம்மால் பிறருக்கு இன்பம் கொடுக்கும் படி எவ்வாறு இந்த நாடகமாக இவர் வாக்கு அமையும்
ஸூத்ரதாரர் பதில் -புன்னகையுடன்
இவர் பகவத் ப்ரீத்திக்கு மட்டும் கருத்து கொண்டவராக மற்ற சிந்தனைகளுக்கு இடம் அளிக்காதவராக உள்ளார்
என்று எண்ணுகிறாயா

மநு வ்யாஸ ப்ராசேதச பரிஷதர்ஹா க்வசி தியம்
ஸூ தா ஸிக்தா ஸூ க் தி ஸ்வயம் உதயம் அந்விச்சதி ஜநே
நிருந்தியு ஸ் கே விந்த்யாசல விகட சந்த்யா ந ட
ஜடா பரிப்ராந்தா பங்கோ ருபரி யதி கங்கா நிபததி –16

மநு இத்யாதிகள் நிறைந்த சபைக்கு ஏற்ற ஸூக்தி தாமாகவே வெளிப்பட்டுள்ளது –
கங்கா நீர் முடவன் மீதி விழுந்தால் யாரால் தடுக்க முடியும் –

அந்யத பி நித்யா யது பவதி
கம்பீர பீஷண கதிர் கிரி கண்ட நாதவ் சூடா பதம்
பசுபதேரபி கூர்ணயந்தி
ஸ்வாது ப்ரசன்ன ஸூபகாநி வஸூந்தராயாம் சோதாம் ஸி தர்சயதி கிம் ந ஸூரஸ்ந வந்தீ -17-

மலைகளையும் பிளந்து பசுபதியையும் மயக்கம் அடையும்படி பெருகும் கங்கை தெளிவாக
இனிய வெல்லத்துடன் பிரவாகித்து போலே கரடுமுரடாக இருந்தாலும் மென்மையான
இனிய பொருள்களைக் கூடியவை

நடி ஸூத்ர தாரனிடம் மிகவும் மகிழ்ச்சியுடன் ஐயா நீங்கள் உரைத்தது மிகவும் பொருத்தமே
சங்கீத ஸாஸ்த்ர ஆச்சார்யர்கள் சாந்தி என்னும் ரசம் இல்லை என்கிறார்களே -இந்த நாடகத்தில் அது உள்ளதை
எவ்விதம் சரி என்று சொல்ல முடியும்

இதுக்கு ஸூத்ர தாரன்
அவர்களை நான் பரத சாஸ்திரம் அறிந்தவர்களாக நான் ஏற்க வில்லை
அதவா தாத்ருஸாந் மத்வா ஜகதி துர்லபாந் சங்கே சாந்திர ஸோல்லா சம ஸக்ய மபி மே நி ரே -18-
சாந்தி ரசம் அனுபவிப்பவர்கள் துர்லபம் என்று எண்ணி வெளிப்படுத்துவது அரிது என்று சொல்லி இருப்பார்கள்

அசப்ய பரி பாடி காம் அதி கரோதி ஸ்ருங்காரிதா
பரஸ்பர திரஸ் க்ருதம் பரிசி நோ தி வீரா யிதம்
விருத்த கதிரத்புதஸ் ததல மல்பஸாரைஸ் பரை ஸ்
சமஸ்து பரி சிஷ்யதே சமித சித்த கேதோ ரஸ –19-

ஸ்ருங்கார ரஸம் சபைக்குத் தகாதவர்களுக்கே இன்பம் அளிக்கும்
வீரம் ஒருவரை ஒருவர் ஒப்புமை செய்து அவமானம் செய்வதை வளர்க்கும்
உண்மையான அனுபவங்களுக்கு முரண்பட்ட இவற்றால் என்ன பயன்
மனத்துக்கு அமைதி அளிக்க வல்ல ஒரே ரஸம் சாந்தி ரஸமே

நடி ஸூத்ர தாரனிடம்
ஐயா அப்படியே இருக்கலாம் -இந்த சாந்தி ரசமானது சநகாதி முனிவர்களால் ஏற்கப்பட்டதாக உள்ளது –
இத்தகைய ரசம் அனைத்து இந்திரியங்களையும் வசப்படுத்தி தகுந்த யோகத்தின் மூலமே அடையப்படும்
இப்படி இருக்க அனைவராலும் காணப்படும் இந்த நாடகத்தின் மூலம் அடையப்படுவது எவ்வாறு

ஸூத்ர தாரன் நாடியிடம்
அறிந்தவளே -அப்படி உரைக்க வேண்டாம்
அனைத்து விதமான வர்ணாஸ்ரம தர்மங்களைத் துறந்தாலும் ஆத்மாவுக்கு எந்தவித தோஷமும் ஏற்படுவது இல்லை
என்று கூறும் அலேப மத வாதி வாதங்கள் இந்த நாடகத்தில் கூறப்படுவது இல்லை
ஆகவே நீ சந்தேகம் கொள்ள வேண்டாம் -ஆயிரக்கணக்கான கர்மங்கள் -எந்தவித பலன்களுக்காக இல்லாமல் செய்யவே
அவை மோக்ஷத்துக்கு இட்டுச் செல்லும் என்றானே ஸ்ரீ கீதாச்சார்யர்
இவை அனைவருக்கும் இன்பம் அளிப்பதாகவும் நம் போல்வாருக்கு வாழ்வு ஆதாரமாகவும் உள்ளன

மேலும் கீழே கூறப்படும் விஷயமும் கூறப்படுவதையும் காணலாம்
ந தத் சாஸ்திரம் ந சா வித்யா ந தத் சில்பம் த நா கலா
நாசவ் யோகோ ந தஜ் ஞானம் நாடகே யன்ன த்ருச்யதே –20-

நாடகம் மூலம் கூறப்பட முடியாத சாஸ்திரமோ வித்யையோ சிற்பக்கலையோ யோகமோ ஞானமோ
ஏதும் இங்கு காணப்படுவது இல்லை

ஸூத்ரகாரர் நடியிடம்
அச்சம் கொள்ள வேண்டாம்
நம்மிடம் பாக்யம் உள்ளது

லக்ஷண ஸம்ருத்திரநகா ரஸ பரி போஷச்ச ஸஹ்ருத்ய க்ராஹ்ய
சம்பததி நாடகே அஸ்மின் ச ஏஷ சைலூஷ ஸூ க்ருத பரிபாக –21-

இந்த நாடகத்தில் அனைத்துவித லக்ஷணங்களும் நன்றாக உள்ளன
சிறந்த மனம் உள்ளவர்கள் நன்றாக அனுபவிக்கும் படி ரசம் மிக்கு உள்ளது
இது நாடகத்தில் நடிப்பவர்களின் பாக்யமே ஆகும்

வித்யா சம்பந்நி திர வஹிதோ வேங்கடேச கவீந்த்ர
சித்தாரம்பச் சிரமபிநயே மாமக ஷாத்ர வர்க
ப்ரக்யா தேயம் பரிஷத நகா பக்ஷ பாதா நபி ஜ் ஞ
ராமா தீநாம் குல தனமிதம் ரங்கதா யாதி ரங்கம் –22-

வித்யை என்னும் செல்வத்துக்கு நிதியாக கவிகளின் அரசர் வேங்கடேசர் கவனமாகவே உள்ளார்
இங்குள்ள நாடகக் கலைஞர்களும் பலகாலம் தங்கள் உள்ளதை பலவிதங்களிலும் நிரூபிக்கிறார்கள்
இங்கு கூடி உள்ளவர்கள் பார பக்ஷம் காணாதவர்கள் தோஷங்கள் அற்றவர்கள்
ஸ்ரீ ராமன் முதலானவர்களுடைய குலதனமான ஸ்ரீ ரெங்க விமானமே இந்த நாடக அரங்கம்

ஸூத்ர தாரன் நடியிடம்
சமதன நிதிம் சத்த்வ ப்ராயம் ப்ரயோக மயோகித
ஸ்வ குண வசத ஸ்தோதும் யத்வா வரீவ்ரது நிந்திதும்
கிமஹ பஹுபி கிம் நிச்சின்னம் ந விஸ்வ மனீஸ்வரம்
ததுப நிஹிதா ஜாக்ரத்யேவம் சதுர்தச சாக்ஷிண –23-

சம தமாதி ஆத்ம குண புதையலான சத்வ குணமே ரூபமாக உள்ள இந்த நாடகம் லௌகிகரராலே
இகழவும் செய்தாலும் நமக்கு நஷ்டம் இல்லையே
ஈஸ்வரனும் -14=சாட்சிகளும் உலகில் உண்டே
ஸூர்யன் சந்திரன் காற்று அக்னி ஸ்வர்க்கம் பூமி நீர் இதயம் யமன் பகல் இரவு
விடியற்காலை ஸந்த்யாகாலம் தர்மங்கள் ஆகியவை

மேலும் விவேகம் நிறைந்தவர்களுக்குப் பொறாமை முதலிய நிலைகள் அவர்கள் அறியாமல் உண்டானாலும்
மின்னல் போன்று உண்டாகும் பொழுதே அழிந்து விடும்

மவ்னம் விப்ரது மத் சரேண நமிதாஸ் தூர்ணே தா ஏவ த்ருவம்
காலோந் நித்ர கதம்ப கோல வபுஷஸ் கம்பஸ் புரந் மௌலயஸ்
கிஞ்சித் வ்ரீடித குஞ்சதாஷ மவஸாதுத்தாந தத்தா நநா
ப்ரஸ் தோஷ் யந்த்ய வதிம் ப்ரயோக பதவீ ஸாரஸ்ய ஸாரஸ்ய –24-

அவர்கள் பொறாமை காரணமாக எதுவும் பேசாமல் மவ்னமாகவே இருக்கட்டும் –
வெகு விரைவில் ரோமங்கள் அனைத்தும் கதம்ப மர மலர்கள் கார் காலத்தில் போல் சிலிர்த்த படி நிற்கும்
அதைத் தொடர்ந்து தங்கள் தவறை நினைத்து இந்த நாடகத்தை உயர்வாகவே பேசுவார்கள்

உபவேத முதாரதீ ஸ்வ நாம் நா பரத ஸூ சித பாவாரக தாளம்
யமுதா ஹரதி ஸ்ந விஸ்வ குப்தயை போக்யம் தத பிஜ்ஜை ரவ ஹிஷ்க்ருதா வயம் ஸ்ம -25-

ப ர த –பாவம் ராகம் தாளம் காண்பித்து அருளிய பரதர் -உப வேதம் அறிந்தவர்களால்
நாம் இந்தக்கலையை விடாமல் ஆள் படுத்தப் பட்டோம் –

நடி ஸூத்ரதாரனிட ம்-
நன்கு அறிந்தவர்களும் குறை கூற வாய்ப்பை எதிர்பார்த்து இருப்பார்களே
நம்மால் இந்த நாடகத்தை எவ் விதமான குறை இல்லாமல் முடிக்க இயலுமா -என்று கேட்டான் –

ஸூத்ரதாரன் நடியிடம்
மற்றவர்களுடைய நற் குணங்களை எப்போதும் கொண்டாடுபவளே
சிலருக்கு சாஸ்த்ர ஞானம் தெளிவாக இருந்தாலும் மீண்டும் கேள்விகளை எழுப்பி சங்கைகளை தெளிவு படுத்தவே
கலக்கம் இல்லாமல் இருக்கும் ஞானவான்களை நாம் மதிக்க வேண்டும் –

பூய ஸீ ராபி கலா கலங்கிதா ப்ராப்ய கிஞ்சித பஸீ யதே சநை
ஏகயாபி கலயா விசுத்தயா யோ அபி கோ அபி பஜதே கிரீஸதாம் –26-

ஒருவனிடம் பல கலைகள் இருந்தாலும் களங்கம் இருந்தால் சந்திரன் போல்
நாள் தோறும் தேய்ந்து கொண்டே இருப்பான்
ஒரே கலை இருந்தாலும் தெளிவாக இருப்பான் ஆகில் சிவன் சிரஸா வஹிப்பான் –

நடி ஸூத் ரதாரன் இடம்
இனி இங்கு கூடி உள்ளவர்களை இந்த நாடகத்தைக் காணும் படி செய்வேனாக
இது பராசரர் வியாசர் போன்றவர்களால் கொண்டாடத் தக்கது –
தத்வ ஞானம் போதிக்கும்படியாகவும்
சங்கீதம் மூலம் பரம புருஷனை கடாக்ஷிக்க செய்யும் படியாகவும் உள்ளது

விவேக ப்ரா ரம்பே விமத மத பங்க ப்ரயதநே
முமுஷா ஸம் ஸித்தவ் முர மதந யோகே ச சபலே
முகா தீன் நித்யாதும் நிப்ருதும் இஹ நாடயே க்ருத முகை
பவத்பி ஸ்தா தவ்யம் பரத மத தைரேய மதிபி –27-

ஸூத்ர தாரன் தனது கைகளைக் குவித்தபடி கூறுவது
பரதமுனிவருடைய சாஸ்திரங்களை நன்கு அறிந்தவர்களே -உங்களுடைய கவனம் முழுவதும்
நாடகத்தின் லக்ஷணமாக உள்ள சந்திகளில் வைப்பீர்களாக -அவை யாவன –
விவேகன் என்னும் அரசன் ஜீவாத்மாவுக்கு மோக்ஷம் அடையும்படி செய்தல்
மற்ற மாதங்களில் கூறப்பட்ட கருத்துக்களை மறுத்தல்
ஜீவாத்மா மோக்ஷத்தில் விருப்பம் கொள்ளுதல்
யோகம் என்னும் உபாயத்தைக் கைக் கொள்ளுதல்
மற்றும் பலனைப் பெறுதல் என்பவை ஆகும்
இவை முறையே
முகம் -பிரதிமுகம் -கர்ப்பம் -அவமர்சம் -மற்றும் நிர்வஹணம்-எனப்படும் –

ஸமய நியதை ப்ரயாகை ஸத் பத ஸீ மாம் அநு ஞாதோ விதுஷ
கிரணை ரிவ திவ ஸக்ருத ஷிப் யந்தே தாம ஸாரம்பா –28

திரையின் உட் புறத்தில் இருந்து எழும் குரல்
நக்ஷத்ர பாதையில் செல்லும் சூரியனின் கதிர்களால் சரியான நேரத்தில் இருளானது விரட்டப் படுகிறது
இதே போன்று நல் மார்க்கத்தில் செல்லும் ஞானிகளால் தாமஸம் நிறைந்தவர்கள் செய்யும்
அனைத்து முயற்சிகளும் விலக்கப் படுகின்றன –

நம்முடைய நாடகத் தொழில்களின் செய்கைகள் மற்றும் முமுஷுக்களின் செய்கைகள் ஆகியவற்றை
ஒரே போன்ற சொற்களைக் கொண்டு இந்த நாடகத்தின் தொடக்கத்தில் சுருக்கமாகக் கூறுவதை
நன்றாகக் கவனித்துக் கேட்ப்பாயாக -அதாவது

துர்ஜனம் பிரதிபக்ஷம் ச தூரத் யஷ்டி ரயம் ஜன
விவேகச்ச மஹா மோஹம் விஜேதும் பிரப விஷ்யத–29-

ஸூத்ர தாரன் கூறுவது -தனது விரோதியான மஹா மோஹனை எவ்விதம் விவேகம் என்னும் அரசன்
வென்றானோ அது போன்று நானும் என்னுடைய விரோதிகளை வெல்வேன் என தீர்க்க தரிசனமாகக் கூறுகிறேன்

திரையின் உள்ளே இருந்து எழும் குரல் –கைகளிலே கூடியதாகவும் இனிமையாகவும் உள்ள வில்லை —
காமனுடைய கரும்பு வில் ஏந்தியபடி – மென்மையானதும் நறு மணம் வீசுவதாயும் ஆகிய மலர்க் கண்களைக் கொண்ட படி –
எனது அனைத்து விரோதி களுக்கும் அச்சத்தை உண்டாக்கும் நான் உள்ள போது நாடகக் கலைஞர்களின்
குலத்துக்கு அனல் போன்று உள்ள அவன் யார்
எங்களுடைய அரசனும் துர்மதி என்பவளுடைய கணவனும் நாடக மேடை என்னும் யுத்த களத்தில் உள்ள
பெரிய கலைஞனும் ஆகிய மஹா மோஹன் என்ற எங்கள் அரசனின் இந்த அவையில் எங்களுடைய
விரோதிகளுக்குச் சார்பாகக் குரல் எழுப்புபவன் யார் –

ஸூத்ர தாரன் -பயத்துடன் பரபரப்புடன் சுற்றிலும் நோக்கி -கோபத்தினால் அக்னி போன்று
சிவந்த கண்களுடன் தனது நண்பன் ஒருவன் இடம் யாரோ ஒருவர் வருகிறார் –
ஆஹா அவர் யார் என நான் காண்கிறேன் -அவர்

அபவர்க்க விருத்தேஷு த்ரிஷு வர்க்கேஷு திஷ்டதாம்
ப்ரதான புருஷார்த்தஸ்ய பச்சி மஸ்ய அதி தைவதம் –30-

மோஷத்துக்கு எதிர் தட்டாய் உள்ள மூன்று புருஷார்த்தங்களை எப்பொழுதும் நாடிய படி உள்ளவருக்கு
முதன்மையான முடிவாக உள்ள அபிமான தேவதை யாவான் –

அர்த்தா வ சேஷித மஹேஸ்வர பவ்ருஷ அயம்
வர்க்கே த்ருதீயம் அவதீர யதாம் விநேதா
ரத்யா ஸலீல பரி ரம்பண லோக கத்யா
புஷ்ணா யுத புல கிதை குபுஜ அப்யுபைதி –31-

ஸூத்ர தாரன் கூறுவது
மேலும் இவன் பரமேஸ்வரனுடைய ஆண்மையைப் பாதியாகக் குறைத்தவன் ஆவான்
மூன்றாவது புருஷார்த்தம் ஆகிய காமம் என்பதை முடிக்க முயலுபவர்களை மலர்க்கண்
மற்றும் கரும்பு வில் கொண்டு தண்டிப்பவன் ஆவான்
அழகான நடையைக் கொண்ட ரதியால் நன்கு அணைக்கப் பட்டவனாக ஒரு கரத்தில் முடிகள் சிலிர்த்தபடி
உள்ளவனாக வருகிறான்
ஸூத்ரகாரன் கூறுவது –
ஆகவே அவனை விட்டு நாம் விலகுவோம்
இந்தப் பருவத்துக்கு உரிய காம விழாவில் பலரும் தங்களை மறந்து ஈடுபட்ட படி உள்ளனர்
அவர்களுடன் கலந்து நமது நிலையை மறைத்த படி நாம் அடுத்து செய்ய வேண்டியத்தைச் செய்வோம்
இவ்விதம் உரைத்து விட்டு இருவரும் அகன்றனர்

ப்ரஸ்தாவனை -அறிமுக பாவம் சம்பூர்ணம் –

விஷ்கம்ப -நாடக விஷயங்களை கதா பாத்திரங்கள் மூலம் அறிதல்
காமன் தனது மனைவி உடன் வசந்தனின் கையைப் பிடித்து வருதல்
காமன் கூறுவது -யார் அவன் -ஹே ஹே -நாடகக் கலைஞர்கள் குலத்துக்கு இழிவாக உள்ளவனே

தர நமித மநோஜ்ஜே ப்ரூலதா சாப பாஜாம்
தரல ஹ்ருதய லஷ்யே தாத்ருஸ ஸ்நேஹ திக்தே
குவலய நயனநாம் கூணிதே லோச நாஸ்த்ரே
சரண யது விவேக காம் திசம் காம்தி சீக –32-

காமன் கூறுவது -குவளை மலர் போன்றதும் -காதல் பார்வை வீசுவதும் -சற்றே வளைந்த புருவங்களின் கீழே
உள்ள பெண்கள் கண்கள் காதல் என்னும் தைலம் பூசப்பட்டு -எனது வில்லில் இருந்து வரும் பொழுது
விவேகம் எந்த திசையில் அச்சம் கொண்டு ஓட இயலும் –

வசந்தன் -தனது மனத்தில் எண்ணுவது
விஷம் நிறைந்த அம்புகள் கொண்ட பேராசை கொண்ட மன்மதன் உள்ளான் –
அர்ச்சிராதி மார்க்கம் காட்டும் குழுவில் நான் உள்ளேன்
மன்மத சம்பந்த ருசி வாஸனை எளிதில் விலக்க முடியாது
உரத்த குரலில் மன்மதன் இடம் கூறத் தொடங்கி
மஹா மோஹனின் புகழ் பாடவும் விவேகனை அச்சம் கொண்டு ஓட வைக்கவும் இந்த விழாவை மங்களமாகத் தொடங்குகிறேன்

சூடா வேல்லித சாரு ஹல்ல கபர வ்யாலம்பி லோலம்பக
க்ரீடந்த் யத்ர ஹிரண் மயாநி தகத ஸ்ருங்காணி ஸ்ருங்காரிண
தந் வங்கீகர யந்த்ர யந்த்ரண கலா தந்த்ர ஷரத்பிஸ் த்ரிகா
கஸ்தூரி பரிவாஹ மேதுரமிலத் ஜம்பால லம்பாலகா –33-

வசந்தன் கூறுவது
இளைஞர்கள் தலையில் செங்கழு நீர் மலர் சூடி -அதில் வண்டுகள் ஆடிப்பாட
பெண்டிர் கஸ்தூரி கலந்த நீரை பீச்சாங்குழல் கொண்டு தெளித்த நீர் சேறு போல் படிந்துள்ளது –

காமன் உரைப்பது –
மிகவும் நல்லது வஸந்தா -தீயவனாகிய அந்த விவேகன் தோற்கடிக்கப் பட்டவனே ஆகிறான் –
எப்படி என்றால் –
காவேரிக் கரையில் நடைபெறும் இந்த மஹா உத்சவத்தின் தொடக்கம் என்பது சுவர்க்கத்தில் உள்ள நந்தவனங்களையும்
தோற்கடிக்கச் செய்வதாகவே உள்ளதால் ஆகும்
இங்கு

உந் நித்ராம் புஜ வாடிகாம் உபய தோரோதோ நிரோதோல்லத்
ஸ்ரோதஸ் ஸ்ம்ருத ஸாரணீ சத க்ருத ஸ்வச் சந்த கந்தாப்லவாம்
கேலச் சோல வதூ விதூத கவரீ சைவாலிதாம் அன்வஹம்
பஸ்யமே ப்லவமாந ஹம்ஸ மிதுனஸ்மேஸாம் கவரோத்மஜாம் –34-

காமன் கூறுவது -ஒவ்வொரு நாளும் நன்கு மலர்ந்த தாமரைகளால் நிறைந்த கரைகளைக் கொண்டதாக நாம் காவேரியைக் காண்கிறோம்
இரண்டு கரைகளுக்குள் அடங்கி ஓடும் காவேரியின் வெள்ளமானது நூற்றுக்கணக்கான வாய்க்கால்கள் வழியே வெளியேறி
சுற்றி உள்ள பகுதிகள் அனைத்தையுமே ஈரமாக வைத்துள்ளது –
இதில் விளையாடி மகிழ்கின்ற சோழ தேசத்துப் பெண்களின் மிதந்தபடி உள்ள கூந்தலானது கறுத்த கொடிகள் போன்று உள்ளன –
ஜோடியாக நீந்தும் அன்னப் பறவைகள் சிரித்தபடி உள்ள தோற்றத்தை உண்டாக்குகின்றன –

காமனின் மனைவியாகிய ரதி உரைப்பது
இந்த மஹா உத்ஸவம் மிகவும் அழகாக உள்ளது – ஆனால் நமது மன்னராகிய மஹா மோஹனுடைய தடை படாத தலைவிதி
காரணமாக விவேகம் செல்ல இயலாத விரோதியாக உள்ளான் என்பதை எண்ணும் போது என் மனம் தடுமாறுகிறது –

காமன் ரதியிடம் உரைப்பது
ஏதும் அறியாத குழந்தை போன்று உள்ளவளே -எனது பிராணன் போன்றவளே -பெண்ளுடைய தேவதையே –
நமக்கு வேண்டப்பட்ட ஒருவன் கிட்டினான் என்பதை எண்ணி மகிழ வேண்டிய இந்தத் தருணத்தில்
குழந்தையைப் போன்ற மநோ பாவத்தை வெளிப்படுத்தி விவேகனுடைய பெருமையை ஏன் வர்ணிக்கிறாய் –
நீயே காண்பாயாக –

கர த்ருத லலிதே சஷு தன்வனோ மே ப்ரமர குணார்பித புஷ்ப மார்கணஸ்ய
மருத நல சர அபி மேரு தந்வா க்ஷணம் அதி லங்கித ஸாஸன கதம் ஸ்யாத் –35-

காமன் கூறுவது
எனது கையில் இளைய கரும்பு வில் உள்ளது –எனது பாணங்கள் மலர்களால் ஆனவை ஆகும் –
அந்த மலர்களில் அமர்ந்துள்ள வண்டுகளே இந்த வில்லின் நாணாக உள்ளன -இவ்விதம் உள்ள எனது கட்டளையை
திரிபுரம் எரிக்கச் செல்லும் போது மேரு மலையை வில்லாகக் கொண்டு காற்றுடன் கூடிய நெருப்பைக்
கணையாகத் தொடுக்கும் சிவன் கூட ஒரு நொடியாவது மீற இயலுமோ

வசந்தன் ரதியிடம் உரைப்பது
தோழியே காமன் உரைப்பது சரியே யாகும் -இது வெறும் தற் புகழ்ச்சியே அல்ல –
இந்த உலகில் ஒரு கொசு வானத்து யானையை எதிர்த்து நிற்குமா -இந்த உலகின் வரலாற்றை நீ அறியவில்லை –
உனது கணவனுடைய வீரச் செயல்களை நீ கண்டது இல்லை -அதாவது –

வஹதி மஹிளாம் ஆத்யோ வேதாஸ் த்ரயீ முகரைர் முகைர்
வர தநு தயா வாமோ பாக சிவஸ்ய விவர்த்ததே
ததாபி பரமம் தத்துவம் கோபீ ஜனஸ்ய வசம் வதம்
மதந கதநைர்ந க்லிஸ் யந்தே கதம் ந்வி தரே ஜநா –36–

வசந்தன் கூறுவது
முதலில் வெளிப்பட்ட நான்முகன் மூன்று வேதங்களை ஓதும் தனது முகங்களில் தனது மனைவியை வைத்துள்ளான்
சிவனது இடது பாகம் பெண் வடிவாகவே மாறி உள்ளது -யாருக்கும் வசப்படாத பரம தத்துவமான நாராயணனும்
கோபிகளுக்கு வசப்பட்டான் இவ்விதம் உள்ளபோது மற்றவர்கள் எவ்விதம் மன்மதனுக்கு வசப்படாமல் இருப்பர் –

காமன் உரைப்பது
சரியாக உரைத்தாய் வசந்தா -உனது சொற்கள் அப்படியே அந்த அந்த காலத்துக்கு ஏற்றபடியே உள்ளன

விஸ்வம் யுவதி ஸாத் க்ருதம் பவதா தத்த சாயகே
விவேக கிம் நு வர்த்ததே விபக்ஷ அபி மயி ஸ்திதே –37-

காமன் கூறுவது –
இந்த உலகம் முழுவதும் பெண்கள் வசம் ஆக்குவதற்காக உன்னுடைய அம்பை எனக்கு நீ கொடுத்துள்ளாய் –
இவ்விதம் நான் முன்பாக நிற்கும் போது விவேகம் நிலைப்பானோ –

ரதி காமனிடம் கூறுவது –
எஜமானரே இது உண்மையே ஆகும் -ஆனால் வைராக்யம் என்பதான -யாராலும் புக இயலாத கோட்டையில் விவேகன் உள்ளான் –
அவனுக்குக் காவலாக -தமம்-புலன் அடக்கம் -மற்றும் சமம் -மன அடக்கம் -ஆகிய மந்திரிகள் உள்ளனர் –
,அவன் யாருடைய துணையாக வேண்டாத வீரனாக உள்ளான் –
இயலாத செயல்களையும் எந்தவித அபாயமும் இன்றியே செய்ய வல்லனாக உள்ளான் –
ஆகவே அவன் எத்தை எப்போது செய்வான் என்ற கலகத்துடனே நான் உள்ளேன் –

ரதியிடம் காமன் கூறுவது
அச்சம் கொண்டவளே -அஞ்ச வேண்டாம் -நீ நம்முடைய விரோதிக் கூட்டத்தில் பற்றுக் கொண்டவர்களால் ஏமாற்றப் பட்டுள்ளாய்
ஆகவே நம்முடைய கூட்டத்தின் திறனையும் மேன்மையையும் நீ அறியவில்லை
இந்த உலகம் முழுவதையும் வெல்லக் கூடிய உனது கணவனுக்கு உள்ளதான வெற்றி அளிக்கக் கூடிய கருவிகளைக் காண்பாயாக –

வபுர ப்ரதிமம் நிதம்பிநீநாம் த்ருட ஸுந்தர்ய குணம் தரவா நம்ரம்
ஸ்ரவண அவதி நேத்ர சித்ர ப்ருங்கம் தனு ராத்யம் மம முஷ்டி மேய மத்யம் –38-

காமன் கூறுவது –
ஈடில்லாத அழகான பெண்களுடைய உருவம் எனக்கு வில்லனாகும் -இந்த சில சற்றே வளைந்து உள்ளது –
அதனுடைய நாண் என்பது வலிமையாகவும் பெண்களுடைய அழகாகவும் உள்ளது –
அதனுடைய அம்புகளானவை அவர்களுடைய காதுகள் முடிய நீண்டுள்ள கண்களே ஆகும் –
பிடித்துக் கொள்ள ஏற்றதாக உள்ள வில்லின் நடுப்பகுதி யானது அவர்களது இடுப்பாகும் –

சைலீம் விலோ பயதி சாந்தி மகா கரோதி வ்ரீடாம் வ்யுதஸ்யதி விரக்திம் அபஹ்ருதே ச
கர்ணாம்ருதம் கமபி தத் கலமா ஷிணீ நாம் நாமாபி கிம் ந விகரோதி நிசம்யமாநம் –39–

காமன் கூறுவது -மேலும் இனிமையான குரல் கொண்ட இந்தப் பெண்களுடைய பெயர் மட்டும்
செவிக்கு அமிர்தமாகவும் -ஒருவருடைய அனைத்து உடைமைகளையும் குலைக்கும் படியாயும் இருக்கும் –
அவர்களுடைய குரல் மன அமைதியைக் குலைப்பதாக உள்ளது -ஒருவருடைய வெட்கத்தை விலக்கி
அவர்களுடைய வைராக்யத்தை அழிக்கும்
எந்த மாறுதல்களைத் தான் அவர்கள் குரல் ஏற்படுத்துவது இல்லை

வசந்தன் கூறுவது
இப்படி உள்ள போது பெண்களைக் குறித்து புகழ்ந்து பேசும்போது கேட்பது -அவர்களைக் குறித்துப் பேசுவது
முதலானவற்றால் மனம் கலங்கும் என்பது உறுதியே யாகும் –

திஷ்டது குணா வமர்ச ஸ்த்ரீ குணாம் ஆலோக நாதிபி சார்தம்
தோஷ அநு சிந்த நார்த்தா ஸ்ம்ருதிரஷி தூரி கரோதி வைராக்யம் –40-

வசந்தன் கூறுவது –
பெண்களுடைய குணங்கள் குறித்து அதிகமாகப் புகழ்தல்
மற்றும் அவர்களைக் காணுதல் போன்றவை ஒரு புறம் இருக்கட்டும் –
அவர்களுடைய தோஷங்களைக் குறித்துச் சிந்திக்கும் நேரத்தில் கூட பெண்களைக் குறித்த எண்ணங்கள்
மனத்தை வைராக்யம் என்ற நிலையில் இருந்து மாற்றி விடும் –

அபிச ப்ரபூத மத மேதுராத் மநோ விஷயாட வீஷூ விவிதா ஸூ தாவத
ஸ்வ பலேந ஹந்த மநஸோ நிவர்த்தநம் பிச தந்து நேவ ஸூர தந்தி யந்த்ரணம் –41-

வசந்தன் கூறுவது
மிகுந்த வலிமையுடன் மதம் பிடித்து பலவகையான உலக விஷயங்கள் என்னும் காட்டிலே
எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி திரியும் மனசை ஒருவன் தனது முயற்சியால் கட்டுப்படுத்த முயலுதல்
என்பது ஐரா வதம் என்ற யானையை தாமரை நூல் கொண்டு காட்டுவதுக்கு சமானம் ஆகுமே –

ரதி கூறுவது
எஜமானரே மனதை உறுதியாகப் பற்றுகின்ற வலிமையான மயக்கங்கள் எதுவாக இருந்தாலும்
அதனைப் போக்க வல்லவர்களாக யோகிகள் உள்ளனர் –
அவர்களை அணுகாமல் தங்கள் இருத்தல் வேண்டும்

காமன் சிரித்த படி உரைத்தல் –
அன்பானவளே -உனது கண்களில் உள்ள தடுமாற்றத்தை -உனது மனதிலும் நான் காண்கிறேன்
யோகிகளின் முதன்மையானவர்களைக் கூட -இளம் பெண்கள் என்னும்
யோகிகளுடைய கால்களில் விழும்படி நான் செய்ய வில்லையா –

ஸூபக பருஷைர் மதஸ்த்ரைஸ் கீலிதம் அந்யோன்ய கவசிதைர் காதம்
கிம் ந விதிதம் பவத்யா கிம் அபி பிதஸ் ஸ்யூத ஜீவிதம் மிது நம் –41-

காமன் கூறுவது
அழகானதும் கொடியதாக உள்ளதுமாகிய எனது அம்புகளால் ஒன்றாக இணைக்கப் பட்டு
ஒருவருடைய உடல் கொண்டு மற்ற ஒருவருடைய உடல் மூடப்பட்ட படி ஒன்றுடன் ஓன்று பின்னிய நிலையில்
உள்ள ஒரு ஜோடியை -(இது அர்த்த நாரீஸ்வரரைக் குறிக்கும் ) நீ அறியவில்லை போலும் –

ரதி காமனிடம் உரைத்தல்
உயர்ந்தவர் உம்முடைய மேன்மையைக் குறித்து நான் நன்றாக அறிவேன்–
ஆனால் தற்போது பலத்த சூறைக்காற்றால் அடிபட்ட வாழை மரங்கள் போன்று நான் ஆட்டம் காண்கிறேன்
ஏன் என்றால்
நல்ல ஆலோசனைகளால் திறன் அடைந்தவனும் -தகுந்த தெய்வத்தால் உதவப் பெற்றவனும்
விதியானது உதவும்படி உள்ளவனும் -யமம் நியாமாதிகளால் உதவப் பெற்றவனும் –
மேலும் பல உபாயங்களைக் கொண்ட வானுமாக உள்ள நம்முடைய சத்ரு
எப்போது வேண்டுமானாலும் எதையாகிலும் செய்யக்கூடும் என்பதை எண்ணுகிறேன்
ஞானமானது மோக்ஷத்தைத் தவிர மற்ற அனைத்துப் பலன்களையும் அளிக்க வல்லது என்பதை அனைவரும் அறிவார்

காமன் கோபம் கலந்த சிரிப்புடன் உரைத்தல்
பேதையே
நீ இனிமையாகப் பேசினாலும் உனது அச்சமானது பேதமையே யாகும் –
ஒலிக்கும் வண்டுகள் என்பதான நாணில் கோர்க்கப் பட்டதும் அனைத்து உலகங்களும் இலக்காகக் கொண்ட
அம்புகள் கொண்டதுமாகிய வில்லைக் உடையவனும் -எப்போதும் வெற்றியிலே மட்டுமே
கவனம் கொண்டவனுமாக உனது அன்பனான நான் உள்ளேன்
இப்படி உள்ள என் முன்பே அறிவு என்ன செய்ய இயலும் -யார் எதன் மூலம் மோக்ஷம் பெற முடியும்
உனது இடைப்பகுதியில் உள்ள நுண்மையானது உனது மனத்தில் காணப்பட வில்லையே –
கெட்டாய் -உனது ஸ்தனங்களில் உள்ள காடின்யமும் பருமனும் உனது மனத்தில் புகுந்தது போலும் –
அல்லது இயல்பாகவே உள்ள பெண்மையிடம் முதலில் காணப்படும் தன்மையானது உன்னிடம் உள்ளது எனலாம் –

மயா அதிஷ்ட க்ரோத ப்ரயாதி கிம் அப்யாந்த்யமத ச
ஸ்ம்ருதி பிரம்ச சேத்தா விகடயதி புத்திம் சபதி ச
தயா முக்த ஷேத்ரீ தமஸீ ஜஹனே விந்ததி லயம்
ததா பூதே கிம் வா ஜனயது (தி ) விவேகோ ஜடமதி — 43-

காமன் கூறுவது
நான் ஆணை இட்டால் கோபம் என்பவன் முதலில் அஞ்ஞானம் என்னும் இருளை உண்டாக்குவான் -தொடர்ந்து மறதி உண்டாக்கும் –
அதன் பின்பு புத்திக்கு அழிவு உண்டாகும் -புத்தியைஇழக்கும் ஒருவன் சம்சாரம் என்னும் அடர்ந்த இருளில் லயிக்கிறான்
இப்படிப்பட்ட ஒருவன் இடம் விவேகம் என்ன செய்ய இயலும் -அவனுடைய பத்னியும் ஜடமாகிறாள் –

காமன் ரதியிடம் உரைத்தல்
நம்முடைய விரைவுடன் கூடிய சேனையை விவேகனின் அமைச்சர்களான சமம் தமம் போன்றவர்களால் தடுக்க இயலாது –
தேவர்கள் அசுரர்கள் தலையில் இடது காலை வைத்த மஹா மோஹன் யாராலும் வெல்ல ஒண்ணாதவன்
சிங்கத்துக்கு முன்பாக அல்ப விலங்கு என்ன செய்ய இயலும் –

பரஸ்ய புருஷஸ் யேவ பஞ்ச பிச்ச மம ஆயுதைஸ்
சமயே ஷு விமத் யந்தே ஸத்வந்தஸ் அபி சத்ரவ–44-

காமன் கூறுவது -பரம புருஷன் போலவே நானும் ஐந்து ஆயுதங்கள் கொண்டவன் –
ஸாத்விகர் களையும் கூட அழிக்க வல்லவை -மேலும்

அலமிஹ விபுதாத்யை ஆகம க்ராஹ்ய வாசோ
முனி பரிஷிதி தர்மான் காயதோ முக்தி ஹேதூன்
தபஸி நியத வ்ருத்தேஸ் தஸ்ய தேவஸ்ய சாந்தி
ஜெனித யுவதி ரத்னம் தர்ச யத்யூரு காண்டம் –45–

காமன் கூறுவது -தேவர்கள் ஒரு புறம் இருக்கட்டும் -வேதங்களைப் போன்ற பேச்சு கொண்டவனும் –
முனிவருடைய சபையில் – மோஷத்தைப் பற்றி உரைப்பவனும் -ஆன
நாராயணனுடைய தொடையில் இருந்து உண்டானவள் ஊர்வசி அல்லவா –
ரதி -உமது சக்தி அறிவேன் -எனக்கு அறியாத ஒன்றை நீங்கள் கூற வேணும் –
-சிங்கம் யானை -பகை போல் விவேகன் மஹா மோஹன் -இடையில் உள்ள பகைக்குக் காரணம் என்ன
காமன் -அன்பாளவளே -இத்தை நான் முதலில் இருந்து கூறுகிறேன் –

த்ரி குண கடிதாத் போக்த்ரு புத்திஸ் ஸதீ ததநு வ்ரதா
ஸமய நியதோஸ் ஸ்ராயம் த்ரேதா குலம் சமஜீ ஜனத்
ப்ரதமம் இஹ தத் போக த்வேஷ்யம்விவேக புரஸ் சரம்
த்விதய மிதரஜ் ஜுஷ்டம் ராக ப்ரமோஹ முகம் மித –46-

காமன் கூறுவது
ஜீவாத்மாவின் பத்தினியான புத்தி என்பவள் -முக்குண மயத்தாலே ஓன்று ஓன்று அதிகமாக உள்ள போது மூன்று குலங்களைப் பெற்று எடுக்கிறாள்
ஸத்வ குணத்தால் விவேகமும் -இன்பங்களை அனுபவிப்பதை ஜீவாத்மாவை வெறுக்கப் பண்ணும்
ராஜஸம் தாமசம் ஆகியவற்றின் கூடிய ராகம் -மஹா மோஹம் -இரண்டு குலங்களும் ஓன்று சேர்ந்து நிற்கின்றன –
காமன் -இந்த இரண்டு பிரிவினர்கள் -விவேகன் மற்றும் மஹா மோஹன் ஆகியோர்களைத் தங்கள் குல அரசர்களாக ஆக்கினார்கள் –

மோஹஸ்ய தர்ம பத்நீ துர் மதி அபவர்க்க தோஷ த்ருஷ்டி மயீ
விஷய ரஸ தோஷ த்ருஷ்டி ஸூமதி அநந்யா விவேகஸ்ய –47-

காமன் கூறுவது -மோஹனுடைய தர்ம பத்னி துர்மதி –இவள் மோக்ஷ தோஷமே பார்ப்பவள்
விவேகன் தர்ம பத்னி ஸூமதி -உலக விஷய தோஷங்களையே பார்ப்பவள் –

ரதி -அதன் பின்னர் -அதன் பின்னர்

காமன் –அதனைத் தொடர்ந்து ரஜோ குணத்தின் மூலமாக உள்ள ராகம் -ஆசை -முதலானவர்கள் –
தமோ குணத்தின் ஆதாரமாகத் திகழ்கின்ற ஸம்ஸார சக்கரவர்த்தியான மஹா மோஹனுக்கு
அசுரர்கள் ராக்ஷஸர்களுக்கு உதவின்படி உதவுகிறார்கள் –
ஆனால் சத்வத்தில் இருந்து பிறந்த விவேகனின் குலமானது குறைந்த துணையுடன் பலம் அற்று இருந்தது –
நம்முடைய தந்தையாகிய ஜீவாத்மா பொதுவான -நடுநிலைமையான -உள்ளவர் என்றாலும் –
தமது தர்ம பத்தினியான -புத்தி -தர்ம பூத ஞானம் -உடன் நம்மிடமே அன்புடன் உள்ளார் –
தங்களுடைய கருத்துக்களுக்கு தாங்களே ஆஷேபம் கூறுபவர்களும் -ஜாதிவாதிகள் என்று கூறப்படுபவர்களும் –
ஆகிய சிலரைப் போன்று எப்போதும் சூழ்ச்சியுடன் உள்ள விவேகன் முதலானவர்கள் நம்முடைய தந்தையான ஜீவாத்மா
நம்முடன் நெருக்கமாக உள்ளதை விரும்பவில்லை -ஆகவே ஜாவாத்மாவின் இன்பங்களை அழித்து எண்களையும் அழிக்க முயல்கிறார்கள் –
தந்தையை அழிப்பவர்கள் தாங்களும் அழிவார்கள் என்று தெரிந்தே இவ்விதம் செய்கிறார்கள் –

இவர்கள் செய்வது என்ன வென்றால் நம்முடைய தந்தை எல்லையற்ற காலமாக அனுபவித்தபடி உள்ள ப்ரக்ருதியில்
பல்வேறு தோஷங்கள் உள்ளதாகக் கூறி -அவருக்கு பிரகிருதியின் மீது வெறுப்பை உண்டாக்கி –
மீண்டும் சம்சாரம் என்ற நம்முடைய குடும்பத்துக்குத் திரும்பாமல் -மஹா ப்ரஸ்தானம் என்பதைச் செய்யும் படி தூண்டுகிறார்கள்
ஆனால் நம்முடைய குலத்தை நாமே அழிக்கலாமோ என்பதற்கு
வானவர் அரசன் சுக்ரீவன் ராக்ஷஸ அரசன் விபீஷணன் செய்வதைக் கூறுகிறார்கள் –

இதன் மூலம் நம்முடைய தந்தையான ஜீவாத்மா அடையும் துயரங்களைக் காண இயலவில்லை –
இவர்கள் செய்கின்ற இந்தச் செயல்களால் – ஜீவாத்மா பல விஷயங்களிலும் வீணாகிறான் –
மற்றவர்கள் தோஷங்களைக் காண குருடன் ஆகிறான் -மற்றவர்களை பழிப்பதில் ஊமை ஆகிறான் –
மற்றவர்களை பழிக்கும் விஷயங்களில் கேட்பதில் முதல்தர செவிடன் ஆகிறான் –
பரதாரம் விரும்பும் விஷயத்தில் பெண் ஆகிறான் –
பெண்களை வசப்படுத்தும் வழிகளை ஆராயாமல் உள்ளான் –
புலன்களை இழந்த ஒருவன் போன்று பெண்கள் விஷயத்தில் உள்ளான் –

ஆகவே இவர்கள் விஷயத்தில் சகோதரத் தன்மையை விட்டுவிட்டு அவர்களை அழிக்க விரும்புகிறோம் –
எனவே நாங்களும் அவர்களும் முறையே பிறவிருத்தி -சுய நலம் விரும்பும் செயல்கள் –
மற்றும் நிவ்ருத்தி -சுய நலம் அற்ற செயல்கள் -தர்மங்களைக் கைக்கொள்ள வேண்டும் –
இதன் மூலம் ஸத்வ குணத்தை முதன்மையாகக் கொண்ட அவர்களுடைய குலமானது
ஸூர்யன் முன்பாக அழியும் மின்மினிப் பூச்சிகளின் ஒளி போல் ஆகும் –

ஸுஹார்த்த மித்த மந வாப்ய ஸஹோ த ராணாம் ஆஸீத்
ஸ்வ மூல குண பேத வசாத் விரோத
ஏக பிரஜாபதி புவா மபி வைர பந்த
ஸ்வாத் மாவதி ஸ்வய முதேதி ஸூ ரா ஸூ ராணாம் –48–

காமன் கூறுவது
இப்படியாக எங்களுக்கு உரியதான பிறவிக் குணங்களில் வேறுபாடு உள்ளதால் எங்களுக்கு இடையே உள்ள
சகோதரத் தன்மை மறைந்து பகைமையே மேல் ஓங்கி உள்ளது –
கஸ்யப பிரஜாபதி என்னும் ஒரு தந்தைக்கே பிறந்துள்ள போதிலும் அசுரர்கள் மற்றும் தேவர்களுக்கும் இடையே
எப்பொழுதும் பகையே உள்ளது அல்லவா –

ரதி
இத்தகைய பாபமானது அழிய வேண்டும் -தந்தையுடைய இன்பத்தை அவருக்குப் பிறந்தவர்களே அழிக்க முயல்கிறார்களே
அது மட்டும் அல்லாமல் தங்களுடன் பிறந்தவர்களுக்கே அழிவை ஏற்படுத்த எண்ணுகிறார்களே
நாதனே உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே போர் மூளாதபடியாக இருப்பதற்கு ஒரு வழி இல்லையா

காமன் – நீ ஏதும் அறியாதவளாக உள்ளாய்
அவ்விதம் எங்களுக்கு இடையே சமாதானம் ஏற்பட வழி இல்லையே

ஸ்வத சதஸ் ஸத்வ விஹிநாநாம் சத்தயைவா பராத்யதாம் த
கதம் காரம் ப்ரதீ கார கல்ப கோடி சதைரபி –49–

காமன் கூறுவது
நல்ல தன்மைகள் சிறிதும் அற்றவர்களாயும் -மற்றவர்கள் இருப்பையே தோஷமாக எண்ணுபவர்களாயும்
உள்ளவர்களுக்கு எத்தை கோடி கல்பங்கள் உண்டானாலும் அமைதி ஏற்படுமா

அபி ச
பிரதி புருஷ விபக்த மூர்த்தி பேதா வயமிதரே ச மிதி ப்ரதீப வ்ருத்தா
க்வசித் அதி கரணே ஸமாப தந்த ஸூ தனு ததீ மஹி வத்ய காத கத்வம்–50–

காமன் கூறுவது
மேலும் -ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வெவ்வேறு உருவத்தில் உள்ள நாங்களும் எங்கள் விரோதிகளும்
ஒருவருக்கு ஒருவர் எதிராகவே செயல் படுவோம்
ஒரே இடத்தில் நாங்கள் இருந்தால் ஒருவர் அழிபவராகவும் – மற்ற ஒருவர் அழிப்பவராகவும் இருப்போம் —

காமன் -நாங்கள் செல்வம் சற்று இன்பங்களில் ஆசை கொண்டவர்கள் ஆவோம் –
எங்கள் விரோதிகளோ நாராயணன் இடம் மட்டுமே ஈடுபாடு கொண்டவர்கள் –
இவ்வாறு இருக்க பேச்சுக்காகவாகவும் எங்களுக்குள் சேர்த்தி கிடையாது –
அவ்விதம் சேர்ந்து இருக்க இடம் இருந்தாலும் பகைவர்களை அழிக்க வல்ல மஹா மோஹன் அவ்விதம் செய்ய அனுமதிக்க மாட்டார் –
மேலும் யாருடைய உதவியையும் இல்லாமல் அனைவரையும் வீழ்த்த வல்ல வீரனான நான் அதற்கு எவ்விதம் இசைவேன்
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதே

ரதி -ஐயனே -தங்களுடைய குலத்தை தாங்களே அழிக்கக் கொடிய அந்தக் கொடியவர்களாலே
பலம் பொருந்திய உங்களை அழிக்க எத்தகைய சதித்திட்டம் தீட்டப் பட்டுள்ளதோ

காமன் -அச்சம் நிறைந்தவளே -அது ராஜ குல ரஹஸ்யம் -அத்தை வெளியிடுதல் தகாது -குறிப்பாக பெண்கள் இடம் கூறுதல் ஆகாதே

ரதி -காமனுடையை கைகளை பிடித்த படியே –என் மேலும் எனது தோழனாகிய வஸந்தன் மீதும் ஆணையிட்டுக் கூறுகிறேன்
அந்த ரஹஸ்யத்தைக் கூறுவீராக –

வஸந்தன் தனது மனதில் நினைத்தல் –எத்தனை உரைப்பது -விதியின் விளையாட்டுக்காகக் காலம் உரைக்க இயலுமோ –
அல்லது அதனைத் தடுக்க இயலுமோ –
தொடர்ந்து உரத்த குரலில் -தோழனே மகரக் கொடி கொண்டவனே

மநோ ரத ஸமர்த்தா நாம் மஹா மோஹ விகோதி நாம்
மந்த்ர பேத நமஸ் மாபி கார்யே தத் பரி பந்திபி –51-

வஸந்தன் கூறுவது -ஆசை கொள்வதில் சிறந்தவராகிய மஹா மோஹனுடைய பகைவர்களுடைய
சதித் திட்டங்களை வெளியிடுவதில் என்ன தவறு உள்ளது –

காமன் -பிரியமானவளே -அப்படியானால் உனக்கு நான் கூறுவேன்
அந்த மூடர்களுடைய அரசனாகிய விவேகன் நிவ்ருத்தி மார்க்கம் என்னும் தர்மத்தை உரைக்கிறான்
இதனை ஏதும் விளையாமல் உள்ளதான உபநிஷத் என்னும் பூமியில் வசிக்கும் சில க்ரூரமானவர்கள் ஏற்கிறார்கள்
அவர்கள் நம்முடைய குலத்துக்குத் தகாத வழியில்
அழிவை உண்டாக்க எண்ணுகிறார்கள்
இத்தகைய நிவ்ருத்தி தர்மமானது -எனது எந்த ஒரு செயலையும் நான் செய்ய வில்லை –என்னும்
கொள்கையைக் கொண்டதாக உள்ளது –
இத்தகைய வழியைக் கடைப்பிடிப்பவர்கள் குருடர்கள் செவிடர்கள் ஊமைகள் பேடிகள் என்பதான நிலையில் இருந்தபடி
மற்றவர்களுடைய தவறுகளையே மட்டும் காண்பவர்களாக உள்ளனர் –
இவர்களுடைய கருத்தின் படி புத்தியானது தவிர்க்க முடியாததும் குணப்படுத்த இயலாததும் ஆகிய
தர்மத்துடன் தொடர்பு கொண்டு புருஷருக்குள் பிசாசு புகுந்தது போன்று ஆகிறது –
அத்தகைய சேர்க்கையால் நம்முடைய குலத்தின் மீது ஆழ்ந்த த்வேஷத்தை மட்டுமே நெஞ்சகத்தில் கொண்டபடி –
மேலும் இனிமையான வேஷம் பூண்ட படி பரபக்தி என்னும் ப்ரஹ்ம ராக்ஷஸி தோன்றுகிறாள்
இவள் சம்சார இன்பங்களுக்கு பீமரதி என்னும் காள ராத்ரி போன்றவள் ஆகிறாள்
பீமரதி –77 வருஷம் 7 மாதம் 7 வது நாள் இரவு

குண த்ரேத உன்மேஷ க்ரம பரிணத அநந்த விக்ருதி
க்வசித் காலே புத்தி குல யுகல கூடஸ்த க்ருஹிணீ
அதி க்ரூராத் யந்த பிரளய விதிது மந்த்ர புருஷாம்
புரா பீமா காராம் ஸ்ருஜதி பர பக்திம் பர வதீ –53-

காமன் கூறுவது -நம்முடைய குலங்களுக்குத் தாயாக உள்ள புத்தி என்பவள் மூன்று குணங்களுடைய
ஏற்றத் தாழ்வு வரிசை காரணமாக பலவிதமான எண்ணற்ற மாறுதல்களை அடைகிறாள்
அவள் ஒரு கால கட்டத்தில் வேறு ஒருவருக்கு வசப்பட்டு அழிவு என்பதான மோக்ஷத்தை நடக்கும்படி
செய்த மந்த்ர ஆலோசனைகளின் பலனை அடைந்து
தனது சுதந்திரம் இல்லாத காரணத்தால் பரபக்தி என்னும் குரூரமான உருவத்தைப் பெற்று எடுக்க வேண்டும் –

ப்ர வ்ரஜ்யாதி யுதா பரத்ர புருஷே பாதி வ்ரதீம் பிப்ரதீ
பக்தி ஸா ப்ரதிருத்த ஸர்வ காரணாம் கோரம் தபஸ் தப்யதா
துஷ்டா தேந ஜனார்த்தநஸ்ய கருணா குர்வீத தத் கங்கரம்
க்வசித் கைடப கோடி கல்ப மஸூ ரம் –54-

காமன் கூறுவது –
அதன் பின்னர் அந்த பரபக்தி என்பவள் பதிவிரதை என இருந்து ஸந்யாஸம் போன்ற பலவற்றைக் கைக்கொண்டு
பரமபுருஷன் மட்டுமே நோக்கம் கொண்டவளாக இந்த்ரங்களை அடக்கி கடுமையான தவம் இயற்றுவாள் –
அவளுடைய பக்தியைக் கண்டு மகிழும் ஜனார்த்தனன் தனது கருணை காரணமாக
கோடி கைடப அஸூரர்களும் ஈடாக முடியாதபடியான அஸூர குணம் கொண்ட ஒரு பணியாளை அவனுக்கு நியமனம் செய்கிறான் –
கூற வாதத்தை பாதியில் நிறுத்துகிறான்

வசந்தன் தனக்குள் கூறுகிறான்
அந்த அஸூரன் -ஸங்கல்ப ஸூர்ய உதயமே ஆவான்
மேலே கூறப்பட்ட ஸ்லோகத்தை –அவன் நம்மை முடியுடன் அளிப்பவன் ஆவான் – என்று முடிக்க வேணும்
ஆனால் அதற்கு முன்பாக நாம் வேறு விதமாக முடிப்போம்
இவ்விதம் எண்ணியபடி உரத்த குரலில் இதுக்கு மேலே ஏதும் கூற வேண்டாம் என்றான்

ரதி மிகவும் பரபரப்பாக
நாதனே என்னைக் காக்க வேண்டும் -என்னைக் காக்க வேண்டும் -என்று
உரைத்த படி தனது கணவனை அழைத்துக் கொள்கிறாள் –

காமன் -அவளை அணைத்துக் கொண்டு
இதற்கு முன்பு இது போன்ற சுகத்தை அனுபவித்தது இல்லை என்னும்படியாக நின்று தனக்குள் கூறுவது

ஜெனித வலய மங்கே தத்த ஹாராவ மர்தே
முஷித நிகில கேதே மோஹ ஸந்தோஷ ஹே தவ்
ஸ சகித பரி ரம்பே ஸாம் ப்ரதம் -ஸ ஆதரம் -காத ராஷ்யா ஸ்த்யஜதி
யுகல சிந்தாம் அங்கயோ அந்தராத்மா –55–

காமன் -மனத்தில் சிந்திப்பது –
பரபரப்பாக அலைகின்ற கண்களுடன் இவள் நம்மை அணைத்துக் கொள்கிறாளே -இந்த அணைப்பால் இவள் வளைகள் உடைந்தன
ஹாரத்தின் முத்துக்கள் நசுங்கின -இவளுடைய வலிகள் குறைந்தன -இது மோஹனுக்கு மகிழ்வை அளிக்கும்
நாங்கள் இருவரும் இரண்டு சரீரங்கள் என்னும் எண்ணமே எனக்கு மறைந்தது
எங்களுடைய மனம் மற்றும் எங்கள் அந்தர் யாமியான சர்வேஸ்வரனை கூட இவ்விதம் இரண்டாக எண்ணக் கூடுமோ –

காமன் உரத்த குரலில் பிரகாசத்துடன்
தோழியே நீ அச்சம் கொள்ள வேண்டாம் -நீ மஹா மோஹனுடைய சேனைத் தலைவர்களில் ஒருவனாகிய எனது மனைவி அல்லவோ
சாந்தம் கொள்வாயாக -நான் கூறிய சொற்கள் உண்மையானவை அல்ல
அவை தனது இந்த்ர ஜால வித்யை மூலம் ஒரு ஊரையே தன் வாயாலே விழுங்குவது போலே ஆகும்
அவை வேதங்களை கண் மூடித்தனமாக நம்பியபடி தெருவில் உலவும் ஒரு வழிப்போக்கனுடைய சொற்கள் போலே ஆகும் –

குவ்ருத்தம் இதி கௌக்குடம் வ்ரதம் அதி ஷிபத்பிஸ்ததா
ஸூதா கர சதருது ப்ரப்ருதிபி ஸ்வயம் சரஸ்வலே
நதத் பிரமர பங்க்திகே நமதி கார்மகே மாமகே
விரக்தி க்ருஹ தேஹ லீம் க இஹ தோஹலீ வீக்ஷதே –56-

காமன் கூறுவது -சேவல் ஓன்று தன் பேடையைப் பலாத்காரமாக ஆக்ரமிப்பது போன்ற செயல்களை
சந்திரனும் இந்திரனும் கண்டிக்கிறார்கள்
ஆயினும் அவ்வழி தவறியே அவர்கள் நடக்கிறார்கள்
வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற எனது வில்லானது வளைக்கப்படும் போது
வைராக்யம் என்னும் வீட்டின் அருகில் செல்லக் கூட யார் தான் விரும்புவார்கள் –

காமன் -மஹா பலம் பொருந்திய நம்முடைய மந்திரிகள் ஒரு புறம் இருக்கட்டும்

ப்ரமாதா லஸ்ய நித்ராதி விவித வ்யூஹ விக்ரஹ
ப்ரஜ்ஞா வரண கோராத்மா மோஹ கேந விஜேஷ்யதே –57-

காமன் கூறுவது
பக்தி ஞானம் என்பதை மறைப்பதையே வடிவம் கொண்டவனாகவும்
கவனக்குறைவு சுறுசுறுப்பின்மை உறக்கம் போன்ற வ்யூஹமான பல படைகளைக் கொண்டவன் மோஹன் ஆவான்
இப்படிப்பட்ட அவனை யாரால் வெல்ல இயலும்

ரதி தனக்குள் பேசுகிறாள்
விதி காரணமாக நம்முடைய கணவன் முரணாகப் பேசுகிறார்
அதாவது கேந -யாரால் எதனால் -மோஹனை வெல்ல முடியும்
பின்பு உரத்த குரலில்
மோகனுக்கு மங்களம் உண்டாகட்டும் –

அயி மன்மத பத்தி மா ஸ்ம சபஷீர் நநு மோஹாதீஷு ஸம்ஸ்திதேஷு ஸத் ஸூ
ப்ரக்ருதிம் புருஷ ப்ரபித் ஸமாந பிரதிபத்யதே விரக்திதோ விமுக்தம் –58–

வசந்தன் ரதியிடம் கூறுவது
தோழியே -மன்மதனின் பத்னியே -அச்சம் கொள்ள வேண்டாம்
மோஹன் போன்ற பலரும் உயிருடன் உள்ள போது -புருஷன் என்னும் ஜீவாத்மா
ப்ரக்ருதியை அடைந்து வைராக்யத்தைச் சார்ந்த விடுதலை அடைவான்

இதற்கு மற்ற ஒரு பொருளும் சொல்லலாம்
மோஹன் போன்ற பலரும் இறந்த பின்னர் புருஷனாகிய ஜீவாத்மா தனது தூய்மையான நிலையை அடைந்து
வைராக்யத்தின் துணையுடன் மோக்ஷத்தை அடைவான்

ரதி தனக்குள் கூறுவது
வசந்தனின் இந்தப் பேச்சானது அவன் கூற வருவதற்கு மாறான பொருள் தருவதாகத் தோன்றுகிறது
பின்னர் உரத்த குரலில்
விவேக்குக்கு விவேகம் இல்லையே
அவனுடைய மந்திரிகளாகிய சமன் தமன் இவர்களுக்கும் விவேகம் இல்லையா –
புருஷனாகிய ஜீவாத்மா மூல ப்ரக்ருதியை விட்டு அகன்றால் நம்மைப் போன்றே
எந்தவிதமான வேறுபாடும் இன்றி அழிவு அன்றோ உண்டாகும்

காமன் கூறுவது -நீ கூறியது சரியே –
புருஷனாகிய ஜீவாத்மா தனது ஞானம் என்ற கண்ணைக் கொண்டு அனைத்தையும் காண்கிற சாக்ஷியாக உள்ளான்
நம்முடைய மேன்மைகளை இந்தப் பாபிகளால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை
ஆகவே நம்முடைய இரண்டு குலங்களும் அழிவதற்கான வழியைக் குறித்து ரஹசியமாகத் திட்டம் தீட்டுகிறார்கள்
தங்களுடைய இந்த முயற்சிகள் வீணாகப் போவதை இந்த மூடர்கள் நிச்சயமாக அறிவார்கள்

ப்ரஸூப்தா நபி யுத்தேந ஸூக்ரீவ ஸூபடாநிவ
கர்ம சக்திர நுச் சேத்யா புநருத்தோ த்ஸே தயிஷ்யதி –59–

காமன் கூறுவது -ஸூ க்ரீவனுடைய வானரர்களைப் போன்ற வீழ்ந்த வீரர்களைப் போன்று
மஹா மோஹன் மற்றும் அவனுடைய சேனைகள் அனைவரும்
தங்களுடைய பூர்வ கர்ம வினையின் சக்தியால் எழுவார்கள் —

திரையின் பின்னால் இருந்து
கண்கள் கெட்டுப்போன அவன் யார்
அனைவருடைய அனுகூல்யத்திலேயே நோக்கம் கொண்ட படி உள்ள நம்மை பாபிகள் என்று அழைப்பது யார்
தாழ்ந்த ஒழுக்கம் கொண்டவனே -எங்களுடைய பிறப்புக்கு காரணமாக உள்ளவனை விலங்கி பூட்டி அழிக்கும்
உங்களை அழிப்பதிலும் அவனுடைய துக்கங்கள் அனைத்தையும் நீக்கி அவனுக்குப் பேரானந்தம் அடைய வைப்பதிலும்
அஸூரர்களுடைய குலத்துக்கு விரோதியான பகவானுடைய கருணைக்கு உட்பட்டு நாங்கள் முயல்கிறோம்
அடுத்து உள்ள சொற்கள் உபநிஷத்தில் கூறப்பட்டவை –

ஸ்வாதீன ஸம் சாரண நாட்ய நிரூட வ்ருத்தே
சந்தோஷித ப்ரணத பூமிக யாஸ்ய பும்ஸ
ஸ்தாநே விதாஸ்வதி விபுஸ் ஸ்திர சிஹ்ன மேதம்
க்ரீட நடஸ் ஸ டஸ்ய பகவான் க்ருபயா பரமம் ஸ்வ ஸாம்யம் —-60-

ஒரு நடிகன் போன்று பகவானுடைய நாடக லீலைகளில் பங்கு பெறுகிறான்
அவனது ஆஜ்ஜைக்கு இணங்க ஸம்ஸாரம் என்னும் நாடகத்தில் பல வேடங்களைப் பூணுகிறான்

இறுதியாக சரணாகத்தான் என்னும் பாத்திரத்தை ஏற்று பகவானை மகிழும்படி செய்கிறான்
இப்படிப்பட்ட ஜீவாத்மா பரமபதத்தில் உள்ள போது பரமாத்மாவாகிய தனக்கு மட்டுமே
அசாதாரணமான அடையாளங்கள் செயல்பாடுகளைத் தவிர்ந்து
தன்னை ஒத்த நிலை ஜீவாத்மாவும் அடையும் படி செய்து அருளுகிறார்

ரிபு மதந க்ருதம் யசோ மஹீய பித்ரு பரி ரக்ஷண சம்ம்ருதச்ச தர்ம
அபிமத கட நோத் பவச்ச ஹர்ஷ சபதி விதாஸ்யதி சந்நிதிம் ஸ்வயம் ந –61-

அந்த வேளையில் நம்முடைய விரோதிகளை வென்றதன் விளைவாக நமக்குப் புகழ் கிட்டும்
நம்முடைய தந்தையைக் காப்பாற்றிய கடமையை செய்தவர்கள் ஆவோம்
நாம் எண்ணியது தானே நடந்தது என்பதால் உண்டாகும் மகிழ்ச்சி நம்முடைய இதயங்களில் நிறைந்து நிற்கும் –

காமன் தன் அச்சத்தை மறைத்துக் கொண்டு தன் மனைவியை நோக்கியபடி
பிரியமானவளே மோஹனுடைய விரோதிகளுக்கு அரசனாகிய விவேகன்
தனது மனைவியான ஸூ மேதி யுடன் கூடியவனாக நம்மிடம் வருகிறான் –

முகுலயதி விவித் ஸாம் மோஹ வித் வம்சம் இச்சன்
விம்ருசதி நிகமாந்தான் வீக்ஷதே மோக்ஷ தர்மான்
நிச மயதி ச கீதம் நித்ய போகாந்த பக்த்யா
குண பரிஷத வேஷீ குப்த மந்த்ரோ விவேக –62-

இந்த விவேகம் ஐயங்கள் அனைத்தும் நீங்கப் பெற்றவனாக உள்ளான்
மோஹனை அழிக்க விருப்பம் கொண்டவனாக வேதாந்தங்களை நன்றாக ஆராய்கிறான்
மோக்ஷ மார்க்கம் கூட்டிச் செல்லும் கர்மங்கள் குறித்துப் படிக்கிறான்
சமநிலை உள்ளவனாய் திரு அஷ்டாக்ஷரத்தை பிறர் அறியாதபடி உச்சரிக்கிறான்
ஸ்ரீ கீதையை பக்தியுடன் எப்போதும் அறிகிறான் –

ப்ரதயங் முகீம் ஸூமதி தீப்தம் இஹ பிரசிந்வந்
ப்ராப்தோதய அப்ய மித ராக பலோ பபந்ந
ஷாம்யந் அஹங்க்ருதி மயீ மவஸோ ஹிமாநீம்
பாஸ்வா நசவ் பஜதி விஷ்ணு பதம் விவேக –62-

உதய ஸூர்யன் தனது கிரணங்களுடன் மேரு நோக்கி வானத்தில் நகர்ந்து பணியை நீக்கி செல்வது போல்
விவேக்கும் தனது மனைவி ஸூ மதியுடன் ஒளியைப் பெருக்கிய படி உள்ளான் –
வேறே பற்றுதல் இல்லாமல் பரமாத்மாவிடம் ஆழ்ந்த பற்றுதலையே வளர்த்து
அஹங்காரத்தைத் தன் வசப்படுத்தி
விஷ்ணுவின் உயர்ந்த திருவடிகளையே நாடியபடி உள்ளான்

காமன் தொடர்ந்து
நம்முடைய விரோதி வரும் பொழுது நாம் இங்கு இருப்பது சரி இல்லை
மேலும் நாம் இப்போது அவனை சந்திக்கும் தருணமும் இல்லை –
நமக்கு இப்போது துணை யாரும் இல்லை
என்று சொல்லிக் கொண்டே வெளியேறினான்

மிஸ்ர விஷ்கம்பம் ஸம்பூர்ணம் –

——-

அரசன் விவேகனும் அரசி ஸூ மதியும் அரங்கத்தில் வருதல்
விவேகன் தனது மனைவியுடன் மிக சிந்தனையுடன்
பிரியமானவளே முடிவில்லாத வினைகள் என்னும் விஷக் காட்டின் வேராக உள்ளவனும்
கர்வம் கொண்டவனுமாகிய காமனின் பேச்சைக் கேட்டாயா
அனைவருடைய பாபங்களையும் நீக்க முயன்று வரும் நம்மை அவன் பாபி என்று பழித்துக் கூறுகிறான்
அல்லது
பஸ்யதி பரேஷு தோஷான் அஸத அபி ஜன சத அபி நைவ குணான்
விபரீதம் இதம் ஸ்வஸ்மிந் மஹிமா மோஹாஞ் ஜனஸ் யைஷ –63-

விவேகன் கூறுதல்
மற்றவர்கள் இடத்தில் இல்லாத குற்றங்களைக் காண்பதையும்
அவர்கள் இடம் உள்ள நல்லவற்றைக் காணாது இருத்தலையுமே பொதுவாக அனைவரும் செய்கிறார்கள்
ஆனால் அவர்கள் தங்களைப் பொறுத்த வரையில் இந்தத் தன்மையை நேர் மாறாகக் கொள்கிறார்கள்
இது அவர்களுடைய கண்களில் தடவப்பட்ட மோகம் என்னும் மையின் மகிமை ஆகும்

ஸூமதி
அனைத்தும் அறிந்தவரே தங்களுடைய முகத்தில் தென்படும் விகாரத்தைக் கூட
மாசு இல்லாத கண்ணாடியின் தோஷமாகவே கூறுவார்கள் அல்லவோ

விவேகன்
நீ உரைப்பது சரியே ஆகும்
நீ எப்போதும் உண்மையை மட்டும் காண்கிறாய்
அவற்றை உள்ளது உள்ளபடி உரைக்கிறாய்
மேலும்

நிர்தூத நிகில தோஷா நிரவதி புருஷார்த்த லம்பந பிரவணா
ஸத் கவி பணிதி இவ த்வம் ஸ குண அலங்கார பாவ ரஸ ஜூஷ்டா –64-

விவேகன் கூறுதல்
ஒரு சிறந்த கவிஞனால் படைக்கப்பட்டதும் -எவ்விதமான தோஷமும் அற்றதும் –
உயர்ந்த புருஷார்த்தத்தை அடையும்படிச் செய்வதில் நோக்கம் என்பதாக உள்ள
கவிதையின் மொழி போன்று நீ உள்ளாய்
அதாவது சிறந்த குணம் அலங்காரங்கள் பாவம் மற்றும் ரஸம் பொருந்தியவளாக நீ உள்ளாய் —

விவேகம் ஸூ மதியிடம்
பிரியமானவளே ஹா -நற் குணங்களில் எந்தவிதமான மாற்றமும் அடையாத மனிதர்களை பீடித்து
அவர்கள் அடையும் துன்பத்தைக் கண்டு ரசிக்கும்
இந்தக் காமம் க்ரோதம் மற்றும் லோபம் போன்றவர்கள் நல்ல வழியில் நடப்பவர்கள் எனக் கூறப் படுகிறார்கள்
ஆனால் நாம் அந்த மனிதனுக்குப் பெரும் பேறு உண்டாக்க எண்ணுகிறோம்
அவனுக்கு அனைத்து உயிர்களுடைய நண்பனாக எப்பொழுதும் திகழ் பவனும்
அனைவரையும் தாபத்த்ரயங்களில் இருந்து காப்பவனும் ஆகிய பகவானுடைய கருணையைப் பெற்றுத்தர முயல்கின்றோம்
இப்படிப்பட்ட நாம் தகாத வழியில் செல்பவர்களாகக் கூறப்படுகிறோம்
மனநிலை குன்றிய இவர்களுடைய பேச்சு எவ்விதமாக உள்ளது
இவர்கள் அனைவரும் பரமாத்மாவின் அனுக்ரஹத்தைப் பெரும் பொருட்டு
உன்னுடன் இணைந்து மேற் கொள்ள இருக்கின்ற நோன்பை நோக்குவாயாக –

மஹத் யாரம்பே அஸ்மின் மதுரிபு பதயா ஸம் ப்ருதத் ருதிர்
பஹிஷ் க்ருத்யாராதீந் ஸூ முகி பஹிரந்தச்ச பவத
சமாதா வாயாதா ஷபிதவ் ருஜிதம் ஷேத்ரிண மகம்
பர ப்ராப்தயா தன்யம் பரிணமயிதம் ப்ராப்த நியம —-65-

விவேகன் கூறுதல்
அழகான நெற்றியை யுடையவளே -இந்தப் பெரும் தொடக்கத்தில் மது என்ற அசுரனை அழித்த
பகவானுடைய கருணையால் தூண்டப்பட்டு எனது உள்ளும் புறமும் உள்ள விரோதிகளை
விரட்டிய பின்னர் செய்வது என் என்றால்
பகவானைத் த்யானிப்பதன் மூலமாக அந்தப்புருஷனுடைய அனைத்துப் பாபங்களையும் விலக்கி
அவன் பகவானை அடையும்படி செய்து அவனை மகிழ வைப்பதே ஆகும் –

ஸூ மதி –
அனைத்தும் அறிந்தவரே -ஜீவாத்மா என்பவன் தனது இயல்பாகவே எப்போதும் உள்ளவனாக-
தோஷம் அற்றவனாக -ஆனந்தம் நிறைந்தவனாக –
அமைதி நிறைந்தவனாக -தானாகவே தன்னை வெளிப்படுத்த வல்லவனாக –
அனைவருக்கும் இனிமை யானவனாக உள்ளவன் ஆவான்
இப்படிப்பட்ட அவன் மஹா மோஹனால் கர்வம் மற்றும் வெறுப்பு என்பது போன்ற தீயவர்கள் மூலமாக
எந்தவிதமான இடையூறும் இல்லாமல் உள்ள
அஹங்காரம் என்னும் காற்றால் கிளர்ந்து எழுகின்ற வினைகள் என்னும் அலைகள் ஓங்குவதால்
பயங்கரமாக உள்ள துன்பம் என்ற சமுத்திரத்தில் எவ்வாறு தள்ளப்பட்டான்

அரசன் –
அன்பானவளே -அனைத்தையும் நுட்பமாகக் காண்பவளே -நாம் நேரடியாகக் காண்பதை எவ்விதம் நிராகரிக்க இயலும்
வேதங்கள் கூறுவதை நம்பாமல் இருக்க முடியுமா நீயே காண்பாயாக –

ஸ்வத பிராப்தம் ரூபம் யத் இஹ கில பாவேஷு
தத் அபி த்யஜந்தஸ்தே த்ருஷ்டா நியதி கடித உபாதி வசத
ப்ரக்ருதியா திஷ்டந்தி ஹி உபாதி விகமே தே ச
ஸதசா வநாதி சம்சார புருஷ முப ருந்தே கலாதி ச –66-

விவேகன் கூறுதல்
ஒவ்வொரு வஸ்துவும் தனது இயல்பான தன்மையை விட விதி மூலமாக உண்டாகின்ற சேர்க்கை –
உபாதி -காரணமாக் கை விடுகின்றன
அந்த உபாதியானது மறைந்தவுடன் அவை தங்கள் இயல்பான நிலைக்கு மீண்டும் திரும்புகின்றன
இதனைப் போன்றே புருஷனாகிய ஜீவாத்மா எல்லையற்ற காலமாக உபாதியுடன் கூடியவனாக இருந்து
ஒளி வீசாமல் உள்ளான்
தகுந்த வழியால் அந்த உபாதி விலகும் –

ஸூ மதி
உண்மையே ஆகும் -ஆனால் மிகுந்த கருணை கொண்டவனும் மஹா லஷ்மி நாதனுமான
பகவானால் இத்தனை காலமாக மிகவும் கொடியதான துன்பங்களிலே சிக்கித் தவித்தபடி
உள்ள இந்தப் புருஷன் எவ்வாறு நிராகரிக்கப் பட்டான் –

அரசன்
அதை நீ அறியவில்லையா –எல்லை யற்ற காளான்களாகத் தொடர்ந்து வரும் கர்மங்கள்
என்னும் அவித்யையால் ஜீவாத்மா சம்சாரத்தில் உழல்கிறான்
தகுந்த காலத்தில் அவன் இதில் இருந்து மீட்கப்படுகிறான்

மித கலஹ கல்ப நா விஷம வ்ருத்தி லீலா தயா
பரி க்ரஹண கௌதுக பிரதித பரா வஸ்ய ப்ரபு
ஸ்வ லஷித ஸமுத் கமே ஸூஹ்ருத லக்ஷணே குத்ர சித்
குண க்ஷதலி பித்ரு மாதுபநிபா திநஸ் பாதிஸ் ந –67-

விவேகம் கூறுதல்
பிரபுவுக்கு -லீலை தயை என்று இரண்டு தேவிமார்கள் உள்ளனர்
இருவருக்கும் இடையே எப்போதும் கலகம் உண்டாகி விரோதம் ஏற்பட்ட படி உள்ளது
ஆகவே தான் செய்யும் செயல்களுக்குத் தன்னை மட்டுமே நம்புவது இல்லை
ஜீவாத்மாவிடம் ஏதேனும் நற்செயல் உள்ளது போன்று காணப் பட்டால் -தோற்ற அளவில் மட்டுமே உள்ளதான
அந்தச் செயலின் விளைவாக அவன் ஜீவாத்மாவுக்கு உதவுகிறான்
பனை ஓலையில் உள்ள புழுவின் மூலமாக அவற்றில் உண்டாகும் துளைகள் எழுத்துக்கள் போலே
தோன்றுமா போலே இதுவும் ஆகும் –

ஸூக துக்க வாஹி நீநாம் வ்யத்யய விநிமய நிவர்த்த நாநர்ஹே
நியத க்ரம ப்ரவாஹே நிபதி தம் உத் ஷிப்ய மோததே தேவ –68–

விவேகம் கூறுதல் -இன்ப துன்பங்கள் என்பவை வெள்ளம் போன்று வருகின்றன -இதில் ஜீவாத்மா விழுகிறான்
இவற்றின் போக்கானது முன்பே தீர்மானிக்கப் பட்டதே ஆகும் -இவற்றை நிறுத்துவது மாற்றுவதோ இயலாது
ஆனால் இவ்விதம் விழுந்தவனை தகுந்த நேரத்தில் பகவான் மேலே உயர்த்தி மகிழும்படி செய்கிறான்

ஸூ மதி -எல்லையற்ற காலமாக இந்த ஜீவாத்மாவால் மோக்ஷம் அடையப்பட வில்லை –
எதிர் காலம் என்பதும் எல்லையற்றதாகவே உள்ளது
இவ்விதம் உள்ளபோது எவ்விதம் யாரால் மோக்ஷம் பெறுவான் என்பதை
எண்ணும் போது எனது இதயம் துடிக்கிறது

அரசன் -தேவி விவேகனின் பத்னியே -தகுந்த பிரமாணங்களையும் நியாயங்களையும்
அறியாதவள் போல் கேட்க்கிறாயே –

கால ஸ்வ பாவ நியதி யத் ருச்சா திஷு வஸ்துஷு
காரணம் கிமி வாத் ரேதி தாபஸை ரபி தர்கிதம்–69-

விவேகன் கூறுகிறான்-அனைத்திற்கும் காரணமாக உள்ள ப்ரஹ்மமானது –
காலமா -இயற்கையா -வினைகளா -தற்செயலாக நேரும் செயல்களா என்பது போன்ற கேள்விகளை
தவங்கள் பல புரிகின்றவர்களே கேட்க்கின்றார்கள் –

விவேகன் -இது மட்டும் உறுதியானது –

கர்ம அவித்யாதி சக்ரே ப்ரதி புருஷம் இஹ அநாதி சித்ர ப்ரவாஹே
தத் தத் காலே விபக்திர் பவதி பஹு விதா ஸர்வ ஸித்தாந்த ஸித்தா
தல் லப்த ஸ்வா வகாச ப்ரதம குரு க்ருபா க்ருஹ்ய மாண கதாசித்
முக்த ஐஸ்வர்யாந்த சம்பந் நிதி ரிபி பவிதா கச்சித் சித்தம் விபச்சித் –70-

விவேகன் கூறுகிறான்
கர்மங்கள் அஞ்ஞானம் போன்ற பலவும் சக்கரம் போன்று சுழன்றபடி உள்ளன
இவை எல்லையற்ற காலமாக சம்சாரத்தில் உள்ள ஒவ்வொரு புருஷனுக்கும் பிரவாகமாக வருகின்றன
அந்த அந்த கால கட்டத்தில் பூர்வ கர்மங்கள் அந்த அந்த பலன்களை அளிக்கின்றன
இந்தக்கருத்தானது அனைத்து மதங்களினுடைய சித்தாந்தங்களிலும் உள்ளது –
குறிப்பிட்ட பலன் அளிக்கும் நேரத்தில் முதல் ஆச்சார்யனாக உள்ள பகவான் அதற்கான தருணத்தை
எதிர்பார்த்து நின்றவன் போன்று அந்த அந்த ஜீவாத்மாக்களுக்குத் தனது கருணையைப் பொழிகிறான்
அந்த ஜீவாத்மா விவேகம் போன்றவை அடையப்பெற்று முக்தி அளவான செல்வங்களைப் பெறுகிறான் —

விவேகன் -நான் இருக்கின்ற நேரத்தில் ஜீவாத்மாவானது இவ்விதம் மோக்ஷம் பெற்றது ஆகும்

தர்போ தக்ர தச இந்த்ரியாநந மநோ நக் தஞ்சர அதிஷ்டிதே
தேஹே அஸ்மின் பவ ஸிந்துநா பரிகதே தீ நாம் தசாம் ஆஸ்தித
அத்யத்வே ஹநுமத் ஸமேந குருணா ப்ரக்யாபி தார்த்தஸ் புமான்
லங்கா ருத்த வைதேஹ ராஜ தநயான் யாயேந லா லப்யதே –71-

விவேகன் கூறுதல் –மனமானது கர்வம் கொண்ட பத்து தலைகளை யுடைய இவனைப் போன்று
பத்து இந்த்ரியங்களாலே அலைக்கழிக்கப் படுகிறது
இது ஸம்ஸாரம் என்னும் கடலால் சூழப்பட்ட உடலிலே தங்கி உள்ளது
கடலால் சூழப்பட்ட இலங்கையிலே சிறைப்பட்ட வைதேஹ அரசனுடைய புத்ரியான சீதா பிராட்டியைப் போல்
தீனமான நிலையில் ஜீவாத்மா உள்ளது
அவளுடைய இருப்பானாது திருவடியால் உணர்த்தப்பட்டது போல் ஆச்சார்யனால்
இந்த ஜீவாத்மாவுக்கு அனைத்தும் உணர்த்தப்படுகின்றது –
அதன் பின்னர் தெளிவடைந்து ஜீவாத்மா அவனை அடைவது உறுதி என்று உள்ளான் –
விவேகன் மேலும்

பஹுல துரித த்வாரே ப்ராஹ்ம புரே பர ஸம்மத
ஸ்வ மதி கடித ஸ்வா தந்தர்யத்வாத் அயந்த்ரித சேஷ்டித
விஷம ச சிவைர் ஸ்வே ஸ்வே கார்யே விக்ருஹ்ய விக்ருஷ்யதே
நர பதி ரிவ ஷீ போ நாநா விதை அயம் இந்த்ரியை –72-

விவேகன் கூறுவது -ப்ரஹ்மத்துக்கே உரியதான சரீரம் என்னும் நகரத்தில் ஒன்பது வாசல்கள் வழியே
பாபங்கள் உள்ளே செல்கின்றன
இதனால் அந்த நகரத்துள் இருக்கும் ஜீவாத்மா தான் ஸ்வதந்த்ரமானவன் என்று மனதில் எண்ணுகிறான்
இதனாலேயே யாராலும் அடக்க இயலாத பலவற்றையும் செய்கிறான் -பல்வேறு இந்த்ரியங்களால்
பல திக்குகளிலும் அலைக்கப் படுகிறான்
தகாத செயல்கள் கொண்ட அமைச்சர் ஒருவரால் தவறான வழிகளில் நடத்தப்படும் அரசனைப் போல் உள்ளான் –

ஸூ மதி -ஆர்ய புத்ரரே -நெருப்பினால் சூலப்படும் ஒரு வீட்டில் இருப்பதற்கு ஒப்பான நிலையில் உள்ள புருஷன்
தன்னைக் கவனத்துடன் காப்பாற்றிக் கொள்ள மாட்டானோ

ராஜா -விவேகன் -பிரியமானவளே -அனைத்தும் அறிந்தவளே -எல்லையற்றதான ஆசை என்னும் சமுத்ரத்தைக் கடப்பது இயலாத ஒன்றாகும்

ஸ்திரத்ர சவி பக்திமத் த்ரிவித ராக த்ருஸ் யோதயம்
ஸூம் ருஷ்ட மணி பித்திவத் ஸ்வயம அபித்யமாந புமான்
த்ரி யுக்ம குண சில்பநா த்ரி குண தூலிகா தாரிணா
விவிஸ்ய விநிவேசிதம் வஹதி சித்ரம் அத்யத்புதம் –73-

விவேகன் கூறுதல் -எந்தவிதமான களங்கமும் இன்றி காணப்படும் அழகான சுவர் ஓன்று பல சித்ரங்களைக் கொண்டு உள்ளது போன்று
பிரதானம் என்பதில் தனது லீலை என்னும் தூரிகையால் ஆறு குணங்களைக் கொண்ட தெய்வீகமான ஓவியன்
அசைகின்ற மற்றும் அசையாமல் உள்ள சரீரங்களை ஓவியமாகத் தீட்டுகிறான்
அந்த ஓவியங்களை -மூன்று வர்ணங்கள் -ஸத்வம் -வெண்மை ராஜஸம் -சிகப்பு -தாமஸம் -கறுப்பு -கொண்டு அமைக்கிறான்
இவையே மூன்று விதமான ராகங்களாக -செல்வ ஆசை -இன்ப ஆசை -மக்கள் ஆசை -என்று அமைகின்றன
இந்தச் சரீரங்களான சித்தரத்தை இதுவே நான் என்று கொண்டாடியபடியே புருஷன் பிரியாமல் இருக்கிறான் –

ஸூ மதி
இவ்விதம் மனநிலை சரியாக இல்லாதபடி மாறிய தனது கணவனை
அவனுடைய பத்னி புத்தி திருத்த வில்லையா

ராஜா -விவேகன்
பிரியமானவளே -நுட்பமாகப் பேசுபவளே -தானே தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வல்ல
அந்த புத்தியும் உறங்கிய படியே உள்ளாள்

பத்யவ் தூரம் கதவதி ரவவ் பத்னி நீவ ப்ரஸூப்தாம்ல
நாகாரா ஸூ முகி நிப்ருதா வர்த்ததே புத்தி ரம்பா
மாயா யோகான் மலிநி தருசவ் வல்லபே துல்ய சீலா
ராஹு க்ரஸ்தே துஹிந கிரணே நிஷ் ப்ரபா யமி நீவ –74-

விவேகன் கூறுதல்
சூரியன் தனது கணவன் தூரமாகச் செல்ல -தாமரைக் குளமானது உறங்குகிறது
இதே போன்று நமது தாயாகிய புத்தியும் அசையாமல் உறங்குகிறாள்
அழகான நெற்றி கொண்டவளே தனக்கு மிகவும் பிரியமான சந்திரன் ராகுவால் விழுங்கப்படும் போது
இறைவனது ஒளி யற்று உள்ளது
அதனைப் போன்று பிரக்ருதியுடன் சம்பந்தம் கொண்டதால் ஒளி இழந்த கணவனைப் போன்றே புத்தியும் உள்ளாள் –

ஸூ மதி –
அனைத்தும் அறிந்தவரே -இந்தப் புருஷனுக்கு அவனுடைய பத்தினியான புத்தி யுடன் உள்ள
இந்த நிலையை வருந்தத்தக்கதாகவே யுள்ளது
இப்படிப்பட்ட புருஷன் இந்தத் துக்கம் நீங்கி மோக்ஷம் அடையும் நிலையை விரித்துக் கூற வேண்டும்

ராஜா -விவேகன்
தேவீ அடுத்தவருடைய நன்மையைக் குறித்து எப்போதும் சிந்தித்தபடி உள்ளவளே
நான் இது பற்றி முன்பு அறிந்தவற்றை நினைவு கூர்ந்து உரைக்கிறேன்

துராஸே தஸ்தேம்நா துரித பரிபாகே ந பவிந
ப்ரமாதீ ஸம்ஸார ப்ரசம ரஹித அயம் ப்ரபவதி
நிரோதே தஸ்யை கா நிரூ பாதிக காருண்ய கடித
ஸ்வ தந்த்ர இச்சா சக்தி ஸ்வயம் உபதிம் ஆஸ்தாய -தாய -ரமதே –75-

விவேகன் கூறுதல்
ஒருக்காலும் விலக்க ஒண்ணாத வினைப்பயனால் சம்சாரம் வருத்துவதாயும்
மேன்மேலும் துக்கம் வளர்க்குமாயுமே இருக்கும்
ஸ்வ தந்த்ரனான சர்வேஸ்வரனுடைய இச்சை -நிர்ஹேதுக கிருபை ஒன்றாலே
நல்ல சூழ்நிலையை உண்டாக்கி நன்மையை உண்டாக்கி மகிழும்

ஸூமதி –
அத்தகைய தகுந்த சூழ்நிலையை உண்டாக்குதல் என்பது என்ன வென்று எனது செவிகளிலே
நான் கேட்கலாம் என்றால் அதனைத் தங்கள் கூற வேண்டும்
ராஜா -விவேகன்
எந்தக்கபடமும் இல்லாமல் பேசுகின்ற பிரியமானவளே
அந்த உண்மையை நான் சுருக்கமாக உரைக்க நீ கேட்ப்பாயாக

மதநமத்ஸர மாந மய புமான் பஹு பிசாச க்ருஹீத இவார்பக
நிகம ஸித்த நரேந்திர நிரீக்ஷயா ணாத் நிபுண பத்திம் அப்யவபத்யதே –76-

விவேகன் கூறுதல் –
பலவிதமான பிசாசுக்கள் இடம் அகப்பட்ட குழந்தை போன்று புருஷனானவன்
கர்வம் கோபம் விருப்பு போன்றவற்றின் பிடியில் சிக்கியுள்ளான்
வேதம் என்னும் உயர்ந்த இடத்தின் மூலம் அனைவராலும் அறியப்படுபவனும்
அனைத்து ஜீவர்களுடைய ஈஸ்வரனாகவும் உள்ள வைத்யனால் நோக்கப்படும் பொழுது நேர் வழிக்குத் திரும்புகிறான் –

அநக தேசிக த்ருஷ்டி ஸூதா ப்லவே விதி வஸாத் உப ஸேதுஷி தேஹிந
விமல போதமுக விவிதா குணா பரிண மந்த்ய பவர்க தாசங்குரா –77-

அதன் பின்னர் அந்தப்புருஷன் எந்தவித தோஷங்களும் அற்ற ஒரு சான்றோனுடைய கடாக்ஷம் என்னும்
அம்ருதத்தில் விதி வசத்தால் மூழ்குகிறான்
அப்போது மோக்ஷம் என்பதற்கான முளைகளான ஞானாதி குணங்கள் உண்டாகின்றன –

ஸ்வாதீநே தர பாத பீதி பருஷ ஸ்வர்வாஸ துர் வசநா
பாச கர்ஷண யந்த்ரணாபி அபித ஷிப் தாத்மந ஷேத்ரிண
நிஷ் ப்ரத்யூஹ விஜ்ரும்பமாண கருணா துக்த அர்ணவே நிர்பரா
பக்தி சேத்ஸ்யதி பாகதேய வசன ப்ராப்யே பர ப்ரஹ்மணி –78-

விவேகன் கூறுதல்
துர்வாசனையால் ஜீவாத்மாஸ அங்கும் இங்கும் அலைக்கழிக்கப் படுகிறான்
ஸ்வர்க்கம் கிட்ட வேணும் என்னும் ஆசை உண்டாகிறது
மேலும் ஏதேனும் ஒரு கட்டத்தில் தனக்குத் தானே எஜமானன் என்னும் நிலையில் இருந்து
கீழே விழுவோம் என்னும் அச்சமும் அவனுக்கு எப்போதும் உண்டாகியபடியே உள்ளது
அப்போது பாக்யத்தால் எந்தவித தடையும் இல்லாமல் பெருகுகின்ற தயைக்குப் பாற்கடலாக உள்ளதும்
நம்மால் அடையப்பட வேண்டியதுமாகிய பர ப்ரஹ்மத்தின் இடம் ஜீவாத்மாவுக்கு பக்தி உண்டாகிறது –

விவேகன் –
இதற்கு இடையில் தன்னிடம் உள்ள அனைத்துச் செல்வங்களையும் தக்ஷிணையாக அளித்து
ஒரு யஜ்ஜம் நடத்தப்பட வேண்டும்

அந்த யஜ்ஜத்தில்
த்வயா ஜூஷ்ட பத்ந்யா பிதி வதிஹ யஷ்டா ஸ்வயமஹம்
விதத்தே சார்த்விஜ்யம் சம தம முகோ அயம் குண கண
அகஸ்மாத் உத்தேச்யோ பவதி பகவன் ஆத்ம ஹவிஷ
பசுர் பத்தோ முக்திம் பஜதி விகலத் கர்ம நிகில –79-

விவேகன் கூறுதல்
எனது தர்ம பத்னியாகிய உன்னுடன் இணைந்து அந்த யஜ்ஜத்தின் எஜமானன் ஆவேன்
சமம் தமம் முதலான குணங்கள் ருத்விக்குகள் ஆவர்
அந்த யஜ்ஜத்தில் எந்தவிதமான பலனும் எதிர்பார்க்கப் படாமல் ஆத்மா வானது
பகவானுக்கு ஹரிர்பாவமாக அளிக்கப் படும்
இதன் விளைவாக வினை என்ற விலங்கு நீங்குகிறது
ஆகவே அந்த யஜ்ஜத்தின் பசுவாகிய ஜீவாத்மா முக்தி அடைகிறான் –

விவேகன் மேலும் -இத்தனையும் நீ அறிய வேண்டும்

ஸ்வ ரக்ஷண பரார்பண க்ஷணிக சத்ரிணா ஷேத்ரிண
ப்ரவர்த்ய க்ருபயா ஸ்திதம் ப்ரபுர பூதுர் வோதயாம்
ஜகத் விபரி வர்தந ப்ரதிந நித்ய சக்தி ஸ்வயம்
ஷி பத்ய புநரங்குரம் துரிதம் அஸ்ய லஷ்மீ பதி –80-

விவேகன் கூறுதல்
தன்னைக் காப்பாற்றும் பொறுப்பை பகவானிடம் சமர்ப்பித்தலாகிற பிரபத்தி என்னும் யஜ்ஜத்தை ஒரு நொடியில் செய்யலாம்
அப்படிப்பட்ட ஜீவாத்மாவுக்கு இங்கு உள்ள போது அந்த ஜீவாத்மா உட்பட வேறே யாருக்கும் உண்டாக்காத நிலையை
ஸ்ரீ யபதி தானாகவே தனது கிருபையால் அளிக்கிறான்
இந்த ஜகத்தை அழிக்க வல்ல அவன் அந்த ஜீவாத்மாவின் அனைத்து பாபங்களையும் அழிக்கிறான்

ஸூ மதி
அனைத்தும் அறிந்தவரே -தங்கள் கூறும் இந்த நிலையை ஜீவாத்மா எப்போது அடைகிறான்

விவேகன்
மூன்று உலகத்தில் உள்ள அனைத்தையும் அறிந்தவளே -பொறுத்துக்க கொள்ள இயலாத கடுமையான துக்கம்
என்னும் சமுத்ரத்திலே மூழ்கியபடி உள்ள ஜீவாத்மாவுக்கு
ஸாஸ்த்ரம் மற்றும் யுக்தி இரண்டுக்கும் ஏற்றபடியாக -கரை ஏறுவதற்கு வழியானது நிச்சயம் உண்டாகும்
என்பதை எண்ணி மகிழ வேண்டும் –
இது மட்டுமே தற்காலத்தில் செய்யக் கூடியதாகும் –

நிரபாய தேசிக நிதர்சிதா மிமாம் கமலா ஸஹாய கருணா திரோ ஹணீம்
க்ரமச அதிருஹ்ய க்ருதிந சமிந்தத பரிசுத்த ஸத்வ பரிகர்மிதே பதே –81- விவேகன் மேலும் கூறுதல்

ஸ்ரீ யபதி -எப்போதும் மறையாத தனது தயை என்னும் ஏணியை வைத்துள்ளான்
தக்க செயல் கொண்ட பாக்யசாலிகள் தங்களுடைய ஆச்சார்யனால்
அந்த ஏணியைக் காண்பிக்கப் படுகிறார்கள்
அவர்கள் படிப்படியாக அதிலே ஏறிச் சென்று தூய்மையான ஸத்வம் மட்டுமே கொண்ட
ஸ்ரீ பரமபதத்தை அடைகிறார்கள்

ஸ்வயம் உப ஸமயந்தீ ஸ்வாமி ந ஸ்வைர லீலாம்
ஸ்வமத மிஹ பஹுநா ஸ்வாது பத்யம் பிரஜா நாம்
நியத மிய மிதா நீம் அந்யதா வா பவித்ரீ
நிரவதி ஸூக ஸித்யை நிஷ் ப்ரகம்பாநு கம்பா –82-விவேகன் மேலும் கூறுதல்

ஜீவாத்மாவைத் தண்டித்தல் என்பதான அவனுடைய லீலைகளைத் தானே தணித்து
தனக்கு விருப்பமானதாகவும்
பிரஜைகளுக்கு நன்மை அளிக்க நல்லதாகவும் அவர்களுக்கு விருப்பமானதாகவும்
உள்ளதை தயா தேவி அளிக்கிறாள்
இப்படியாக ஜீவாத்மாவின் அளவற்ற ஸூ கத்துக்கு அவளே காரணமாக இருக்கிறாள் –

விவேகன் மேலும்
அவிரல குணச்சாயா மாயா தமஸ் ப்ரதிரோதி நீ
பரிஹ்ருத ரஜஸ் பங்கா தோஷைர சங்கடிதா த்ரிபி
மதுரிபு தயா மூர்த்திர் திவ்யா நிராக்ருத கண்டகா
வஹதி நிகமான் வர்த்தன்யேஷா புரீம் அபராஜிதாம் –83-

விவேகன் கூறுதல்
இங்கிருந்து ஸ்ரீ வைகுண்டம் எனப்படும் அபராஜிதம் என்னும் இறுதியான இடத்துக்கு ஒரு பாதை அமைந்துள்ளது
அது மது என்னும் அசூரனை வதைத்த ஸர்வேஸ்வரனுடைய தயை என்பதே யாகும்
அந்தப் பாதையில் அவனுடைய குணங்கள் நிழலாக உள்ளன
அந்த நிழலானது மாயை என்னும் இருளை விளக்குவதாகும்
அது ரஜஸ் மூலம் உண்டாக்க வல்ல பாபம் என்னும் சேறு இல்லாதது ஆகும்
அதில் மூன்று விதமான துக்கங்கள் இல்லை
முட்கள் போன்ற இடையூறுகள் யாதும் இல்லை

ஸூ மதி
அளவற்ற வினைகள் என்னும் சுமைகளை சுமந்தபடி ஸம்ஸாரம் என்னும் சமுத்திரத்தில் உள்ள
ஜீவாத்மா காப்பாற்றப்படுகிறான் என்னும் இந்தச் சொற்களானவை
குழந்தைகளை மகிழவைக்கும் போலியான சொற்களோ என நான் அச்சம் கொள்கிறேன்

விவேகன்
உள்ளதை உள்ளபடி காண்பவளே நீ தவறான கண்ணோட்டத்தில் நோக்காமல் இருப்பாயாக-
ஸூமதி உண்மையை மட்டும் உரைக்கும் ஸாஸ்த்ரங்கள் தவறாக உரைப்பதைக் கண்டுள்ளாயா-
உனக்கு நான் மேலும் நம்பிக்கை ஊட்டுவேன்

சபே தைஷிடிக்யேந ஸ்வயம் இஹ பவத்யா ச ஸூமதே
த்வயைவ த்ரஷ்டவ்ய ஸ்வபநவிகம உன்மீலித தியா
அஹங்கார க்ராஹ க்ரஹ கதந சாக்ரந்ததநு ப்ருத்
முமுஷா ஸம்ரப்தோ முர மதந ஸங்கல்ப மஹிமா –84-

விவேகன் கூறுதல்
எனக்கு ஸாஸ்த்ரங்களின் மீது உள்ள நம்பிக்கை மற்றும் உன் ஆணை வைக்கிறே
ஸூ மதி
நான் கூறும் பகவத் ஸங்கல்பத்தையே நீயே காண இயலும்
உறக்கம் நீங்கிக் கண் வேண்டும்
சரீரத்தின் மீது கொண்டுள்ள பிடிப்பு முதலான அஹம் நான் என்பது போன்ற எண்ணங்களே
ஸம்ஸாரத்தில் முதலைகள் ஆகும்
இது பீடித்ததே -என்று கதறியபடி அழைக்க வேண்டும் படியாக ஒருவனுக்கு மோக்ஷத்தில் விருப்பம் ஏற்பட் டால்
முரன் என்னும் அஸூரனை வதைத்த பகவானின் ஸங்கல்ப வேகமானது கண் கூடாக அறியலாம் படி உள்ளது –

விவேகன்
பொதுவாகவே பகவத் ஸங்கல்பமானது தன்னைச் சரணம் புகுந்தவன் விஷயத்தில் தப்பாது
மேலும்

தீநோ த்ருப்யது வாபராத்யது பரம் வ்யாவ்ர்த்ததாம் வா தத
ஸ்வா தவ்ய சரணாகத சாக நத ஸத் பிஸ்ததா ஸ்தாப்யதே
விச்வாமித்ர கபோத ராகவ ரகு வ்யோ மாக்வகப்ரே யஸீ
நாலீ ஜங்க ப்ருஹஸ்பதி பரப்ருதி பிர்நத்வேஷ கண்டா பத –85-

விவேகன் கூறுதல்
சக்தி நிறைந்தவனைச் சரணம் புகுந்தால் அவன் காப்பாற்றுவான் என்பது பொதுவான ஒன்றாகும்
உடனேயே பலம் பெற வேண்டும் என்று உள்ளவன்
தாமதம் ஆயினும் பலம் பெற வேண்டும் என்று உள்ளவன்
குற்றங்களை செய்பவன்
குற்றங்கள் அற்றவன்
என எவ்விதமாக இருந்தாலும் இது பொருந்தும்
இந்தக் கருத்தானது
விசுவாமித்திரர்
புறா
இராமன்
ரகு
நாலீ ஜங்கன்
ப்ருஹஸ்பதி
போன்ற பல உத்தமர்கள் விஷயத்தில் நிலை நாட்டப் பட்டது –

ஸூ மதி –
நான்முகன் முதலான பெரிய தேவதைகளும் அவர்களுடைய பக்தர்களால் மோக்ஷத்திற்காக உபாசிக்கப் படுகிறார்கள்
இவ்வாறு இருக்க ஸ்ரீ யபதியை மட்டுமே மோக்ஷம் அளிப்பவன் என்று ஏன் கூறுகிறார்கள்

ராஜா -விவேகன்
பிரியமானவளே உனது நுட்பமான கேள்வியானது உனது மதி நுட்பத்தை உணர்த்துகிறது
நீ அறியவில்லையா =மது ஸூதனனுடைய மஹாத்ம்யம் அசாதாரணமானதாகும்

புரா வேதஸ் ஸ்தம் வாவித புருஷ ஸ்ருஷ்டே ஸ்திதி மதி
ஸ்திரா பக்தி ஸூதே விபது பரதிம் பும்ஸி பரமே
ததன்யான் அம்யச் சத் அபி லஷித முக்தி ஸூர கணான்
உதன்யாம் ப்ராலே யை ரூப சமயிதும் வாஞ்சதி ஜட

விவேகன் கூறுதல் -அனைத்தையும் ஸ்ருஷ்டிப்பவனும் காப்பவனுமாகிய பரமபுருஷன் இடம் உண்டான நிலையான பக்தி மட்டுமே
நான்முகன் தொடக்கமாக புல் பூண்டு உள்ளிட்ட அனைத்தையும் அவற்றின் ஆபத்துக்களில் நின்றும் விடுவிக்கும்
அவனை விடுத்து மோக்ஷத்தை விரும்பி மற்ற தேவதைகளை அர்ச்சிப்பவன் பனித்துளி கொண்டு தனது தாக்கத்தைத் தீர்க்க முயலும் முட்டாள் ஆகிறான்

விவேகம் -ஓவியத்தில் தீட்டப்பட்ட ஆயிரம் ஸூர்யன்கள் ஒன்றாக நின்றாலும் அவை இருளைப் போக்காது -எனவே

அபத்தவ் விகத சந்திம் அநாதி நித்ரம்
சேதஸ் விநஸ் த்ரி குண சக்தி மயீ த்ரி யாமா
நாதஸ்ய கேவல மாசவ் நரகாந்த கர்த்து
ஸங்கல்ப ஸூர்ய விபவேந ஸமாபநீயா –87-

இடைவிடாமல் எல்லையற்ற காலங்களாக சேதனர்களுக்கு அஞ்ஞாத்தைத் தருவதாக முக்குண மாயம் எனும் சக்தி கொண்ட இரவு உள்ளது
இது நரகாசுரனை அழித்தவனும் அனைத்துக்கும் நாதனான ஸூர்யனுடைய வைபவத்தாலே மட்டுமே விலகும் –

ஸூ மதி
இந்நாளில் உயர்ந்த புருஷன் யார் என்னும் உண்மையை அறியும் விஷயத்தில் தேவர்களும் ரிஷிகளும் கூட தடுமாறியபடியே உள்ளனர்
இவ்விதம் உள்ள போது உம்முடைய பக்தியை எப்படி ஒரே புருஷோத்தமன் இடம் வைக்கிறீர்கள்

விவேகன்
தேவீ அப்படி அல்ல -இந்த முடிவானது ஸ்ம்ருதி மற்றும் புராணங்கள் வாயிலாக உபநிஷத்துக்களை ஆராய்ந்து அறியப்பட்டதாகும்
வேதங்கள் அந்தணர்கள் மற்றும் கேசவன் ஆகியோர் ஒரே வகுப்பினரே ஆவர்

மேயம் விஷ்ணுர் வேத வாதாச்ச மாநம்
மாதாரச்ச ப்ரஹ்மண சத்துவ நிஷ்டா
சித்தம் தோஷாமைகராஸ்யம் ப்ரதீய கீட பிராயைர்
துர் விதக்தை கிம் அந்யை –87-

விவேகன் கூறுதல்

உயர்ந்த புருஷனே விஷ்ணு என அனைவராலும் அறியப்படுகிறான்
இவ்விதம் அறிவதற்கு பிரமாணமாக வேதங்கள் உள்ளன
இந்த உண்மையை அறிபவர்கள் ஸத்வ குணத்தில் எப்போதும் நிலை நிற்கும் அந்தணர்கள் ஆவர்
இதனால் தான் இம்மூவரும் ஒரே வகுப்பினர் எனப்பட்டது
இவ்விதம் உள்ள போது எந்தவிதமான திறனும் அற்ற புழுக்கள் போன்ற மற்றவர்களால் என்ன ஆகப்போகிறது –

சாஸ்த்ராண்ய லோஜ்ய சர்வாண்ய சிதில கதிபிர் யுக்தி வர்கைர் விசார்ய
ஸ்வாந்தர் நிர்தார்ய தத்வம் ஸ்வ புஜமபி மஹத் யுத்தரன் ஸூரி சங்கே
ஸத்யம் ஸத்யம் ச ஸத்யம் புநரிதி கதயன் சாதரம் வேத வாதீ
பாராசர்ய ப்ரமாணம் யதி க இஹ பரஸ் கேசவாதா விரஸ்தி –88 –

விவேகன் கூறுதல் –
பராசரருடைய புத்திரரான வேத வியாசர் அனைத்து வேத சாஸ்திரங்களையும் நன்றாக ஆராய்ந்து அசைக்க இயலாத பழக்க யுக்திகளைக் கொண்டு விசாரித்து
உறுதியான ஒரு முடிவு எடுத்து ஞானிகள் நிறைந்த சபையிலே தனது புஜத்தை உயர்த்தி -ஸத்யம் ஸத்யம் ஸத்யம் -என உரைத்தார் –
இப்படிப்பட்ட வேத வியாசர் அனைத்தையும் அறிந்தவர் என்னும் போது கேசவனைக் காட்டிலும் உயர்ந்தவர் யார் உள்ளனர் –

விவேகன் -சான்றோர்கள் செல்லும் வழியே செல்ல வேண்டும் என்று மஹ ரிஷிகள் கூறுவர் -இதனை நீயே இங்கு காணலாம்-

தர்கோ ந ப்ரதிதிஷ்டதி ப்ரபவதி த்ரய்யாபி வையாகுலீ
ஷேபம் யாந்தி மிதஸ் ஷதா ருஷிகிரஸ் ஷு தோக்தய கிம் புந
இத்தம் தத்த்வ வி நிச்சயோ நிதிரிவ ஷிப்தோ குஹாப் யந்தரே
பந்தாநம் து மஹா ஜநஸ்ய விஷ்ணு ப்ரத்யஞ்ச மத் யஞ்சதி –89-

விவேகன் கூறுதல் -தர்க்கம் என்பது தனியாக நிலைத்து நின்று இதனை உரைக்க வல்லது அல்ல –
வேதங்களும் தகுந்த விசாரம் இல்லை என்றால் குழப்பமாக உள்ளன –
ரிஷிகளுடைய வாக்கானது ஒன்றுடன் ஓன்று முரண்பாடாகவே உள்ளன –
இவ்விதம் உள்ள போது சாதாரணமானவர்களுடைய பேச்சு குறித்து என்ன கூறுவது
ஒரு குகைக்குள் மறைந்துள்ள புதையல் போன்று தத்வ ஞானம் மறைந்து உள்ளது –
ஆகவே விஷ்ணுவின் பெருமையை உணர்ந்த பராசரர் நம்மை நல் வழிப்படுத்துகிறார்

விவேகன் கூறுதல் -வியாஸர் -வால்மீகீ -மநு -ப்ருஹஸ்பதி -ஸூகர் -ஸுநகர் போன்ற பல சான்றோர்கள் நமக்கு அந்த வழியைக் காண்பிக்கட்டும்
இவ்விடம் உள்ள பல பிரமாணங்கள் இருக்கட்டும் -நான் மீண்டும் கூறுகிறேன் –

அப ஜந்ம ஜராதிகாம் ஸம்ருத்திம் க்ருபயா சம்முகயன் அசேஷ பும்ஸாம்
பர தைவத பாரமார்த்யவேதீ பரி க்ருஹணாதி பராசர ஸ்வயம் ந –90-

விவேகன் கூறுதல் -பராசரர் தனது கருணை காரணமாக எந்த ஒரு மனிதனையும் விடாமல்
பிறப்பு மற்றும் வயோதிகம் போன்றவை இல்லாத அந்த முழுமையான தத்வத்தைக் கூறட்டும் –
பர தேவதையின் உண்மையை அறிந்த பராசரர் நம்முடைய கையைப் பிடிக்கட்டும் –

ஸூ மதி -தாங்கள் கூறுவதை மறுக்க இயலாது -பல இன்றி ஜீவாத்மாவால் உபநிஷத்துக்கள் திரண்ட கருத்தை அறிய இயலாது
ஆயினும் அவற்றின் உண்மையை அறிய அவன் ஆவலாக இருக்கிறான் –
ஆகவே அனைத்து ஸாஸ்த்ரங்களுடைய ஸாரத்தை தாமதம் இன்றி கூறுபடியாக உங்களை நான் வேண்டுகிறேன்

அரசன் -விவேகன் -நீ எண்ணியது நல்லதே ஆகும் -நான் கூறுகிறேன் –

ஸ்வ ஸங்கல்ப உபக்ந த்ரிவித சித் அசித் வஸ்து விததி
புமர்த்தா நாமேக ஸ்வயம் இஹ சதுர்ணாம் ப்ரஸவ பூ
சுபஸ்த்ரோதோ பாஜாம் ஸ்ருதி பரிஷதாம்
ஸ்ரீ பதிரஸாவ நந்தஸ் ஸிந்தூ நாமுததிரிவ விஸ்ராந்தி விஷய –91-

விவேகன் கூறுதல் -மூன்றுவிதமான சேதனங்களும் -மூன்று விதமான அசேதனங்களும் -ஸுத்த ஸத்வமும்
மஹா லஷ்மியின் பதியுடைய ஸங்கல்பத்தில் அடங்கி நிற்கின்றன
அவன் மட்டுமே நான்கு புருஷார்த்தங்களை அளிக்கிறான்
அனைத்து நதிகளும் சென்று சேரும் சமுத்திரம் போன்று அனைத்து ஸ்ருதிகளும் சென்று கலக்கும் இடமாக அவனே உள்ளான் –

பர பத்மா காந்த ப்ரணிபதநம் அஸ்மின் ஹித தமம்
சுபஸ்தத் ஸங்கல்பச் சுலகயதி ஸம்ஸார ஜலிதம்
ஜடித்யேவம் ப்ரஞ்ஞாம் உப ஐநயதா கேந சித்சவ்
அவித்யா வேதாலீ மதி பததி மந்த்ரேண புருஷ –92-

விவேகன் கூறுதல் -மஹா லஷ்மியின் நாதனே புருஷோத்தமன் ஆவான் –
அவனிடம் செய்யப்படும் ஸரணாகதியே அனைத்திலும் உயர்ந்த நன்மை ஆகும் –
ஸுபமான அவனுடைய ஸங்கல்பமானது ஸம்ஸாரம் என்னும் சமுத்திரத்தை உள்ளங்கை அளவு நீராக்கும்
இப்படிப்பட்ட உயர்ந்த அறிவை அளிக்க வல்ல மந்திரத்தின் -அஷ்டாக்ஷரத்தின் -பலம் மூலமாக
புருஷனானவன் அஞ்ஞானம் என்னும் வேதாளத்தின் பிடியில் சிக்காமல் விரைவில் மீள்வான் –

விவேகன் -பிரியமானவளே -குறைந்த அறிவு கொண்டவர்களுக்கும் கூட மன ஆறுதல் அளிக்க வல்ல வற்றை நான் கூறினேன் -ஆனாலும்

த்ருத நிகம கவச மூடா கஷ்டம் ஸம் ப்ரதி குத்ருஷ்டய கேசித்
சலயந்தி ஸுகதாதீந் ஸ்யா லோபா லம்ப துல்யயா வாசா -93-

விவேகன் கூறுதல் -தவறான பார்வை கொண்ட சிலர் வேதங்களைத் தங்கள் போர்வையாக அணிந்த படி
தம்மை மறைத்துக் கொண்டு பவுத்தர் முதலானவர்களைக் கண்டிப்பது போன்று பாவனை செய்கிறார்கள்
அதாவது -மருமகன் மைத்துனனைக் கண்டிப்பது போன்று போலியாக உள்ளனர் –

விவேகன் -வேதாந்தத்தில் வல்லவர்கள் -இவர்களுக்கான பதில்களை விரிவாக அளித்து உள்ளனர் –
சான்றோர்கள் சுருக்கமான வடிவில் உள்ள பதில்கள் மூலம் விரிவான கருத்துக்களை உரைக்க வல்லவர்கள் அல்லவோ

ஸூ மதி –நீங்கள் சரியாக உரைத்தீர்கள் -ஆனால் திருடர்களால் கைப்பற்றப் பட்ட பசுக்கள் போன்று அவர்களுடைய தவறான கருத்துக்களால்
உபநிஷத்துக்களில் தவறாகப் பொருள் அளிக்கப் படுமோ என்னும் அச்சம் எனது மனதில் உண்டாகிறது –

விவேகன் -அச்சம் கொள்ள வேண்டா
அவிப்லுத பரிக்ரஹ ஸ்ம்ருதி சதைக கண்டீ ஸ்ருதி
ஸ்வ பக்த விகல ஸ்ம்ருதீ ஸ்வ பநத அபி ந ப்ரேஷதே
ஸ்வத ப்ரமித ஸாதிநீ ஸூ த்ருட தர்சு குப்தா ச ஸா
ருணத்தி புநத ப்ரதிஷ்டதி க்ருதர்க கோலாஹலம் –94-

விவேகன் கூறுதல் -எந்த விதமான விவாதமும் இன்றி ஏற்கப்பட்ட மஹரிஷிகளுடைய நூற்றுக்கணக்கான ஸ்ம்ருதிகளுடைய
கருத்துடன் ஒத்துப் போகும் ஸ்ருதியானது தனது பொருளை உணர்த்தும்
வேதங்களுடன் ஒத்துப் போகாத ஸ்ம்ருதிகளுடைய ஆதரவை அவை கனவிலும் எதிர்பார்ப்பது இல்லை –
அந்த வாதங்கள் அனைத்தும் தங்களுடைய விருப்பம் போன்று -எந்தவிதமான அடிப்படையும் இன்றி உரைக்கும் தவறான பொருளாகும்
ஆனால் அனைத்து ஞானங்களையும் உள்ளடக்கிய ஸ்ருதியானது தகுந்த தர்க்கத்தின் துணை யுடன் அந்தக் கருத்துக்களைத் தள்ளுகின்றன –

திரைக்கு பின்னால் இருந்து எழும் குரல்
மூலச்சேதப யோஜ்ஜிதேந மஹதா மோஹேந துர் மதஸா
கம்ஸேந ப்ரபு ருக்ரசேந இவ நஸ் காராக்ருஹ ஸ்தாபித
விக்யா தேந விவேக பூமிபதி நா விச்வே பகாரார்த்திநா
க்ருஷ்ணே நேவ பலோத்தரேண க்ருணிநா முக்தஸ் ஸ்ரியம் ப்ராப்ஸ்யதி –95-

தனது வளர்ச்சிக்குத் தடையாய் உள்ளது என தனது தந்தையான உக்ரசேனனை கம்சன் சிறையில் அடைத்தான் –
நம்முடைய யஜமானனாகிய ஜீவாத்மாவை ஸம்ஸாரமாகிய சிறையில் அடைத்தான்
தனது தமையனான பலராமனுடைய உதவியுடன் உக்ரசேனனை கிருஷ்ணன் விடுவித்தான்
இதனைப் போன்றே நம்முடைய ஜீவாத்மாவும் இந்த உலகுக்கு நன்மை செய்யும் அரசனாகிய விவேகனால் விடுவிக்கப் படுவான்
அதன் பின்னர் முக்தர்களுடைய ஐஸ்வர்யத்தை ஜீவாத்மா அடைவான் –

விவேகன் மிகுந்த உவகையுடன் -அதனைக் கேட்டவனாக –

ப்ரியே யாராலும் உண்டாக்கப்படாத வேதங்களின் ஒலி போன்று உண்மையை விளம்புகின்ற
இந்த அசரீரி கூறுவதைக் கேட்டாயா

ஸூமதி -மிகுந்த ஆனந்தம் கொண்டவளாக
எனது எஜமானரே இது தேவர்களுடைய வாக்கு அல்லவோ -இது பொய்யாகாது

விவேகன்
அன்பானவளே உன்னை எனது துணையாகக் கொண்டுள்ளேன்
உனது துணையுடன் வெற்றியானது எனது கைகளிலே வருவது உறுதியாகும் –

ரிபு குண விஜி கீஷா பிந்து லேசஸ் அபி அசவ் மே
மது ஜித நுஜி க்ருஷா வாஹிநீ வர்த்தி தாத்மா
சபலயிது மதீஷ்டே ஸாது சம்ப்லா வயிஷ்யன்
கதி கண பஹு மான்யம் யத்ந ஸந்தான வ்ருக்ஷம் –96–

விவேகன் கூறுவது
எனது விரோதிகளை வெல்ல வேண்டும் என்று எனக்குள்ளே இருக்கும் ஆசையானது இப்பொழுது சிறு துளியாகவே உள்ளது
ஆயினும் அது மது ஸூ தனின் கிருபை என்னும் வெள்ளத்தால் பெருகி
ஸாதுக்களால் கொண்டாடப்படும் மோக்ஷத்திற்கான முயற்சி என்பதான கற்பக மரத்துக்கு என்றும் பாய்ந்த படி இருந்து
நல்ல பயனை அளிப்பதாக இருக்கும் –

———————————————378–

அங்கம் -2-விசாரணை
இவள் ஸூ மதியின் பணிப்பெண் -ஒன்றைச் செய்தல் ஏற்புடையதா ஏற்புடையது ஆகாதா என்னும் ஆய்வு
இவள் ஸ்ரத்தை என்னும் மற்ற ஒரு பணிப் பெண்ணிடம் உரையாடுகிறாள்
தோழியே களைப்பு காரணமாக உனது நெற்றியில் வியர்வைத் துளிகள் காணப்படுகின்றன
தனது கன்றைக் காண ஆவலாக உள்ள பசு போன்று நீ உள்ளாய்

முஹ சந்த சந்திஅ ஸூஹா ஸூஹ ஆ சவி புள்ள மள்ளி ம அரந்த ணிஹா
ணவ ஸோம்ம ஜோவ்வண களிஆ ஸூரி முவ்வ ஹந்தி துஹ ஸே அகணா –98-

———————-380

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: