Archive for September, 2022

ஶ்ரீ அவதூ⁴தஸித்³த⁴விரசித ப⁴க்திஸ்தோத்ரம்

September 30, 2022

ஶ்ரீ அவதூ⁴தஸித்³த⁴விரசித ப⁴க்திஸ்தோத்ரம்

ப்ரத்யக்ஷ வஸ்து விஷயாய ஜக³த்³தி⁴தாய
விஶ்வஸ்தி²தி ப்ரலய ஸம்ப⁴வ காரணாய ।
ஸர்வாத்மநே விஜித கோப மநோப⁴வாய
துப்⁴யம் நமஸ் த்ரிபு⁴வந ப்ரப⁴வே ஶிவாய ॥ 1॥

ஸத்யம் ந வேத்³மி கிமஹம் யத³கோ³சரோऽஸி
வாசஸ்பதேரபி கி³ராம் கிமுதாஸ்மதா³தே:³ ।
ப⁴க்திஸ் ததா²பி ப⁴வதோ கு³ண கீர்தநேஷு
யந்மாம் நியோ ஜயதி கிம் தத³ஹம் கரோமி ॥ 2॥

ரவார்கேந்து³ வஹ்நி மருதா³த்ம மஹீ பயோதி⁴ரஷ்டாபி⁴ரேவ தநுபி⁴ர்ப⁴வதா ஸமஸ்தே ।
வ்யாப்தே ஜக³த்ய பரமிச்ச²தி யோऽத்ர வக்தும்
கோऽந்யோ ஹ தத்ர பதயா ஸத்³ரு’ஶோऽஸ்தி தேந ॥ 3॥

த்⁴ரு’த்யாதி³பி:⁴ ஸ்வதநுவ்ரு’த்திபி⁴ரேவ யத்³வத்³
ஏகோ ப⁴வாந் வஹதி ஸம் ப்ரதி லோக மாத்ராம் ।
தத்³வத்³ விபோ⁴ யதி³ ஜக³த்யபரோऽஸ்தி கஶ்சிந் நிர்மத் ஸரா: கிமிதி ந ப்ரவத³ந்தி ஸந்த: ॥ 4॥

யோகா³த³பாஸ்த தமஸோ பு⁴வந த்ரயேऽபி
முக்²யா பிதா மஹ புரந்த³ர விஷ்ணவோऽபி ।
அத்³யாபி தே³வ ந வித³ந்தி க்ரு’த ப்ரயத்நாஸ்தத்வம் தவேதி தத³ஹோ மஹதி³ந்த்³ரஜாலம் ॥ 5॥

பா⁴வோத்³ப⁴வ ஸ்தி²தி விபத் கரண ப்ரவ்ரு’த்தௌ
ஸம்ஜ்ஞா விபி⁴ந்நரசநாஸ் த்வயி ஸம்ப⁴வந்தி ।
ஸாம்யே ஸ்தி²த: ப்ரதிநிவ்ரு’த்த ஸமஸ்த கார்யோ
நேந்த்³ரோ ந விஷ்ணுரஸி நாபி பிதா மஹோऽஸி ॥ 6॥

கேசித்³ ப⁴வந்த மநுபாதி⁴மநாம ரூபம்
விஜ்ஞாநமேவ பரமார்த²தயா ப்ரபந்நா: ।
அந்யே த்ரிதா⁴து பரிகல்பநயா விஶுத்³த⁴மூசு: ஸ்வ ஶாஸ்த்ர ஸமயம் பரிபால யந்த: ॥ 7॥

ஸாங்க்²யை: ஸமஸ்த ஜக³து³த்³ப⁴வகாரணாநி
ப்ரோக்தாநி யாநி க²லு ஸத்த்வ ரஜஸ் தமாம்ஸி ।
ரூபாணி தாந்யபி தவைவ ஸமக்³ரஶக்தே:
கிம் தந்ந யத் பரிக³தம் பு⁴வி ஶக்திபி⁴ஸ்தே ॥ 8॥

நித்யம் விநாஶி யத³ரூப மநேக மேகமுக்³ரம் ப்ரஶாந்தம கு³ணம் கு³ண ஸந்நிவிஷ்டம் ।
ஸம்ஸாரிணம் வஶிநமத்⁴ருவம ஸ்வதந்த்ரம்
தே³வம் ப⁴வந்தம ஸக்ரு’த் கவய: ஸ்துவந்தி ॥ 9॥

வாசா மதீத விஷயோ நிருபாக்²யபா⁴வாத்
ப்ரோக்தோऽஸி ஶூந்யமிதி கைஶ்சித³ஸத் ப்ரதிஜ்ஞை: ।
த்வாமேவ கேசித³பி வாசக வாச்ய யோகா³த்
ஸந்தம் விஶேஷண வஶாத் பரிகல்ப யந்தி ॥ 10॥

ஆத்³யந்தயோஸ் த்ரி பு⁴வநஸ்ய ப⁴வந்தமேவ
யம் வைதி³கா: புருஷமாஹுரபே⁴த்³யமாத்³யம் ।
ப⁴யஸ்தமேவ ஜநந ப்ரலயாந்தராலே
ஸம்ஸார ஜாலமிதி ஜாத விகார மூசு: ॥ 11॥

ஆத்மாநமாத்மநி யதா³ ஸ்வயமாத்மநைவ
ஸம்யம்ய திஷ்ட²ஸி நிமீலித ஸர்வ ஶக்தே!।
லீநம் ததா³ த்வயி ஜக³த் க²லு தாவதா³ஸ்தே
யாவத் தவோத்³ப⁴வதி நாத² புந: ஸிஸ்ரு’க்ஷா ॥ 12॥

த்வத்த: பரம் ஜக³தி நாத² ந சாஸ்தி கிஞ்சிந் நாணு: க்வசிந்ந ச மஹாந் ப⁴வத: ஸகாஶாத் ।
ஸர்வாத்மகோऽஸி ப⁴வதைவ ஸமஸ்த மேதத³ந்த: க்ரு’தம் நநு ஜக³ந் மணி நேவ ஸூத்ரம் ॥ 13॥

சேதாம்ஸி யாநி ஸுக² து:³க² விஶேஷபா⁴ஞ்ஜி
யே ச ப்ரதா⁴ந பரிணாம விகார பே⁴தா:³ ।
த்வம் தே³வ ஜந்மநி புந: ப்ரலயே ச தேஷாம்
ஹேது: ஸமஸ்த பயஸாமிவ தோயராஶி: ॥ 14॥

அஸ்தாஸ் த்வயா ஸுர கு³ரோ! ஸ்வதநௌ யதை³வ
ஸ்வாத்மாநலாநில ஜலாவநி சந்த்³ர ஸூர்யா: ।
லோகேऽபரஸ்ய ப⁴வதா நநு காரணஸ்ய
மூலே ததை³வ நிஹித: ஸகலே குடா²ர: ॥ 15॥

ஸ்தௌதி ப்ரஸஹ்ய தவ ஷோட³ஶதா⁴ விப⁴ஜ்ய
மூர்திம் ப்ரமாண ரசநோ முநிரக்ஷபாத:³ ।
த்³ரவ்யாதி³ வஸ்து ரசநாபி⁴ருபாத்தபே⁴தை³ர்வை ஶேஷிகே கணபு⁴ஜாऽபி நநு ஸ்துதோऽஸி ॥ 16॥

ப³த்⁴நாதி காசித³பி ஶக்திரநந்த ஶக்தே:
க்ஷேத்ரஜ்ஞம ப்ரதிஹதா தவ பாஶஜாலை: ।
ஜ்ஞாநாஸிநா ச விநிக்ரு’த்ய கு³ணாந ஶேஷாநந்யா கரோத்யபி⁴முக²ம் புருஷம் விமுக்தௌ ॥ 17॥

ஏகாம் ப³த ச்யுத ஸமஸ்த ப⁴வ ப்ரவ்ரு’த்தி மாஹுர் விமுக்தி மிதி ஶாந்தத மாம வஸ்தா²ம் ।
ஸ்தி²த்யுத்³ப⁴வ ப்ரலயிநீம பராமவஸ்தா²ம்
ஸம்ஸாரிணீமிதி வத³ந்தி தவைவ ஸந்த: ॥ 18॥

அஜ்ஞாநதீவ்ரதிமிரோபஹதப்ரகாஶாஸ்த்வத்³தூ³ஷணம் ப்ரதி விநஷ்டதி⁴யோऽபி ஸந்த: ।
தாவத் த்யஜந்தி ந ப⁴வம் ப⁴க³வந்ஸ்த்வயைவ
யாவத் ஸ்வஶக்திவிப⁴வைர்ந விபோ³தி⁴தா: ஸ்யு: ॥ 19॥

கு³ஹ்யம் கு³ஹாஶ்ரயமஜம் பரமம் பவித்ர மேகம் விபு⁴ம் ஸகல வாங் மயபீ³ஜமாத்³யம் ।
ஸம்யக் ப்ரயுக்தமபி⁴வாஞ்சி²த ஹேதுபூ⁴த மாஹுர் ப⁴வந்தமபரே நநு ஶப்³த³தத்வம் ॥ 20॥

தீர்த ²க்ரியாவ்யஸநிந: ஸ்வமநீஷிகாபி⁴ ருத்ப்ரேக்ஷ்ய தத்வமிதி யத்³யத³மீ வத³ந்தி ।
தத்தத் த்வமேவ ப⁴வதோऽஸ்தி ந கிஞ்சித³ந்யத்
ஸம்ஜ்ஞாஸு கேவல மயம் விது³ஷாம் விவாத:³ ॥ 21॥

ஸர்வஜ்ஞபீ³ஜமவிகாரம லுப்த ஶக்திம்
நிஶ்ரேயஸாப்⁴யுத³ய மார்க³விதா⁴ந ஹேதும் ।
த்வாமேவ தே³வ! கு³ரவ: ப்ரத²மேऽபி ஸம்ய கா³ராத்⁴ய தீர்த²கரபா⁴ மஹிமாநமாபு: ॥ 22॥

ஸர்வஜ்ஞதா யத³பி லக்ஷணயா பரஸ்ய
முக்²யா ததா²பி ப⁴வத: பரமேஶ்வரத்வாத் ।
ஸ்வாதந்த்ர்ய மப்யநுபசார முபைதி யோக³ம்
த்வய்யேவ நாத² ஜக³த: க²லு கர்த்ரு’பா⁴வாத் ॥ 23॥

த்³ரு’ஶ்யேத கஶ்சித³தி⁴க³ச்ச²தி வஸ்து ஜாத மந்யோऽநுமாந ஸமயைரபரோऽபி ஶப்³தை:³ ।
ப்ரத்யக் ஷவத்து ப⁴வத: புநர க்ரமேண
ஸர்வம் கராமலகவத்³விதி³தம் ப்ரமேயம் ॥ 24॥

அஸ்யாத் மநோ விஷயிண: பரதந்த்ர வ்ரு’த்தேரஸ்யாஶ்ச நாத² ஜக³த: ப்ரக்ரு’தே பராயா: ।
ஸம்யோஜநே ச விரதௌ ச பரோऽஸி ஹேது:
ஸம்ஸார சக்ர பரிவர்தந யந்த்ர வாஹ: ॥ 25॥

குர்வந் முஹு: ஸ்வயம தந்த்³ரிதயாऽபி பு³த்³த்⁴யா
கர்மாணி ஶாஸ்த்ர ஸமயோப நிப³ந்த⁴நாநி ।
ஸம்யுஜ்யதே ஸமுசிதேந து யத்ப²லேந
தச் சேஷ்டிதஸ்ய ப²லம ப்ரதிமம் தவைவ ॥ 26॥

உத்ஸாஹ ஶக்தி ரஹிதாந் விகலாந புண்யாந்
மந்தா³ந் நிரஸ்த ஸமயாநக்⁴ரு’ணாநஸத்யாந் ।
ஆவாஞ்சி²தேந விநியோஜயதா ப²லேந
லுப்தஸ் த்வயா புருஷகார விஶேஷவாத:³ ॥ 27॥

கர்மாணி வேத³விஹிதாநி ஸுக²ப்ரதா³நி
ப்ரேத்யைதி தத்ப²லமித³ம் ப²லமந்தவச்ச ।
த்வச்சா²ஸநே ஸுக²மநந்தம ஶேஷதோ³ஷப்லோஷாய ப⁴க்தி விஹிதாம் ப்ரணதிம் யதா³ஹு: ॥ 28॥

ப்ராகாம்ய மாத்மநி யதா³ ப்ரகடீக ரோஷி
வ்யக்தீ: ப்ரதி க்ஷணமநேக வித்³யா த³தா⁴ந: ।
த்வய்யேவ ஸோऽபி ப⁴க³வந்! ப⁴ஜதேऽர்த²வத்தாம்
ப்ராயோ வித³க்³த⁴ரசித: க்ஷண ப⁴ங்க³வாத:³ ॥ 29॥

யத்தீர்தி²கைர்ஜக³தி ஜந்மபி⁴ரப்ரமேயைர் நாஸாத்³யதே பத³மிதி ஸ்வமதேஷு கீ³தம் ।
பு³த்³த்⁴யேக ஜந்மிகமிதி ப்³ருவதாம் விக்³ரு’ஹ்ய
தேஷாம் த்வயா நநு க்ரு’தஶ் சரண: ஶிரஸ்ஸு ॥ 30॥

லுப்³தா⁴ மலீம ஸதி⁴ய: ஸமயாத³பேதா
ராகோ³பரக்த மநஸோ வஶிநோऽப்யஸந்த: ।
த்வச்சா²ஸநே விஹித லிங்க³பரிக்³ரஹேண
முச்யந்த இத்யதி மஹாம்ஸ்தவ ஸிம்ஹநாத:³ ॥ 31॥

அவ்யாஹ தஸ்ய ப⁴க³வந்! ப⁴வதா³க³மஸ்ய
சிந்தாமணேரிவ மஹாந ஸம: ப்ரபா⁴வ: ।
ஸம்யக்³ விதா⁴ந விஹிதாம் யத³வாப்ய தீ³க்ஷாம்
ஜ்ஞாநாத்³ரு’தேऽபி க²லு கேவலதா முபைதி ॥ 32॥

ஜ்ஞாநம் திரஸ்க்ரு’தமித³ம் பஶுவாஸ நாபி⁴ராஸ்தாம் யதா³த்மநி விமுக்தி ப²லஸ்ய பீ³ஜம் ।
தத்³வாரிணேவ ப⁴க³வந்! ப⁴வதா³க³மேந
ஸம்பாதி³தம் ப⁴வதி மோக்ஷ ப²ல ப்ரஸூத்யை ॥ 33॥

ஜந்தௌ யதா³ தவ கதா³சித³நுக்³ரஹேச்சா²
க்ஷீணாஶயே ப⁴வதி ஜந்மபி⁴ரப்ரமேயை: ।
ஸம்ஸார ஜால மதிவாஹ்ய ததை³வ ஶாந்தி மாத்யந்திகீம் வ்ரஜதி போ³த ⁴விவர்ஜிதோऽபி ॥ 34॥

ஏதச் சதுர்த³ஶ வித⁴ம் பு⁴வநம் ஸமஸ்தம்
ஸம்ஸார மண்ட³லம வாந்தரபே⁴த³பி⁴ந்நம் ।
த்வம் பாஸி ஹம்ஸி வித³தா⁴ஸி யத்³ரு’ச்ச²யேதி
மத்வா ந லிப்யத இதி ப்ரவத³ந்தி ஸந்த: ॥ 35॥

ஐஶ்வர்யம ப்ரதிஹதம் ஸஹஜோ விராக³ஸ் த்ரு’ப்திர் நிஸர்க³ஜநிதா வஶிதேந்த்³ரி யேஷு ।
ஆத்யந்திகம் ஸுக²மநாவரணா ச ஶக்திர் ஜ்ஞாநம் ச ஸர்வ விஷயம் ப⁴க³வந்ஸ் தவைவ ॥ 36॥

யத்நாது³பாத்த தபஸோऽபி ஹி யத்³ து³ராபமாத் யந்திகம் ஸுக²மபாஸ்தஸமஸ்தது:³க²ம் ।
நீதா: க²ரோஷ்ட்ர தரவோऽபி யதி³த்யஹோ தே
ஸ்வாதந்த்ர்யம ப்ரதிஹதம் பு⁴வநத்ரயேऽபி ॥ 37॥

யேநாமலஸ்பு²ரிதரத்நஶிகா²விதாநோ
ஹேமீக்ரு’தோ நிபததா ஸகல: ஸுமேரு: ।
தஸ்யா துலம் ப²லமித³ம் தவ ஶுக்ர விந்தோ³ரேகஸ்ய யத் கநக பூ⁴ஷணமாப லோக: ॥ 38॥

காலேந ஸஞ்சிதம புண்யமநந்த கல்பம்
லோக த்ர யஸ்ய யத³பூ⁴த் த்ரிபுர ப்ரகாரம் ।
த³க்³த⁴ம் த்வயா ததி³தி ஸம்யக³வேத்ய கஸ்ய
மூடா⁴த்³ரு’தே ப⁴வதி ந த்வயி பக்ஷபாத: ॥ 39॥

க்ஷீரோத³ஸாரமத²நப்ரதிலப்³த⁴ஜந்ம
வித்ராஸி தத்ரித³ஶ ஸம்ஹதி கால கூடம் ।
நிர்மத்ஸரேண பிப³தா ஜக³தோ ஹிதாய
பீதஸ் த்வயைவ ஸகலோ நநு ஸாது⁴வாத:³ ॥ 40॥

ஶாந்தாத் மநாऽபி ப⁴க³வந்! ப⁴வதா ப்ரஸஹ்ய
நேத்ரோத்³ப⁴வேந த³ஹதா த³ஹநேந காமம் ।
அல்பீயஸோऽபி மஹதாம் ஸமதி க்ரமஸ்ய
மந்யே ஜநாய விஷம: கதி²தோ விபாக: ॥ 41॥

ஸ்நேஹாத்³ விதா⁴ய த³யிதாம் வபுஷோऽர்த⁴பா⁴கே³
து⁴ர்யஸ்ததா²பி ப⁴க³வந்! ஶமிநாம் த்வமேவ ।
த்ரைலோக்ய விஸ்மய க்ரு’தாம் தவ சேஷ்டிதாநா மத்³யாபி கஶ்சித³பி நா நுக்ரு’திம் கரோதி ॥ 42॥

உச்சைஸ் திரஸ் க்ரு’தமித³ம் பு⁴வநம் ஸமஸ்தம்
யோக³ப்ரபா⁴வ ஜநிதேந ப³லேந யேந ।
தஸ்ய ப்ரஜாபதி ஸுதஸ்ய ஹ்ரு’த: ப்ரஸஹ்ய
க³ர்வஸ்த்வ யேதி ப³த கஸ்ய ந விஸ்ம யோऽத்ர ॥ 43॥

அங்கு³ஷ்ட²கேந ப⁴வதா விநிபீடி³தஸ்ய
யஸ்யாஸவோ ந விக³தா: ஸஹஸா கத²ஞ்சித் ।
யத்நாத் ஸ ஏவ ஹரிணா விஜிதஶ் சிரேண
நீத்யா த³ஶாநந இதி க்வ நு விஸ்மயோऽயம் ॥ 44॥

மந்தா³கிநீகநக பங்கஜ பாரிஜாத புஷ்பாதி ⁴வாஸித ஜலா நப⁴ஸ: பதந்தீ ।
லக்³நா துஷார கணிகேவ ஜடாக்³ரபா⁴கே³
கேநாபரேண ப⁴வ தேவ த்⁴ரு’தாऽநுக்³ரு’ஹ்ய ॥ 45॥

ஆஸ்தாம் தவாந்யத³பி தாவத³துல்ய கக்ஷ்யமைஶ்வர்ய மீஶ்வரபத³ஸ்ய நிமித்த பூ⁴தம் ।
த்வச்சே²ப²ஸோऽபி ப⁴க³வந்! ந க³தோऽவஸாநம்
விஷ்ணு: பிதாமஹயுத: கிமுதாபரஸ்ய ॥ 46॥

ஶ்வேதஸ்ய ம்ரு’த்யுத³ஶநாந்தர வர்திநோऽபி
ஸூநாபஶோரிவ வதா⁴வஸரே ஸ்தி²தஸ்ய ।
ப்ராணாந் நிக்³ரு’ஹ்ய ப⁴வதா யத³காரி தஸ்ய
தத்கஸ்ய விஸ்மய மலம் ந கரோதி லோகே ॥ 47॥

ப்ரீதேந யத்³வது³பமந்யுரபாஸ்தமந்யு:
க்ஷீரோத³ஸம்விப⁴ஜநேந க்ரு’தஸ்த்வயாऽஸௌ ।
தத்³வத்³விபோ⁴! யதி³ ஜக³த்ய பரோऽஸ்தி கஶ்சிந் நிர்முச்ய மத் ஸரமமீ ப்ரவத³ந்து ஸந்த: ॥ 48॥

வ்ரு’த்ரத்³விஷ: ஸகுலிஶஸ்ய பு⁴ஜஸ்ய ஶக்திருத்தம்பி⁴தா விஹஸதா ப⁴வதா யதை²வ ।
பூஷ்ணஸ் ததை²வ த³ஶநேஷு ப⁴க³ஸ்ய சாக்ஷ்ணோர்த³க்ஷஸ்ய ச க்ரது ப²லே மமதா நிரஸ்தா ॥ 49॥

விஷ்ணு ப்ரஜாபதி புரந்த³ரலோக பாலைஸ் திர்யக் ஸுராஸுரநரைர பரைஶ்ச தி³வ்யை: ।
லோகே யதா² பஶுபதே! தவ கல்பிதாநி
ஸ்தா²நாநி தத்³வத³பரஸ்ய வத³ந்து கஸ்ய ॥ 50॥

ஶக்ராத்ம ஜஸ்ய நிஜ ஶார்ங்க³ரதா²ங்க³பாணௌ
க்ரு’ஷ்ணே ஸ்தி²தேऽபி ஶகலீ க்ரு’ததா³நவேந்த்³ரே ।
த்³ரோணாபகே³யக்ரு’பகர்ணப⁴யார்தி³தஸ்ய
ஶம் ஶங்கர த்வமக்ரு’தா² ப்⁴ரு’ஶமர்ஜுநஸ்ய ॥ 51॥

ஆராதி⁴தேந ப⁴க³வந்! ப⁴வதா ஹிரண்ய வ்ரு’ஷ்டிம் மருத்தந்ரு’பதே: கிரதா யியக்ஷோ: ।
யே க்²யாபிதா ஜக³தி ப⁴க்த ஜந ப்ரஸாதா³ஸ்தந்நாத்³பு⁴தம் தவ விபோ⁴! பரமேஶ்வரத்வம் ॥ 52॥

தீவ்ர வ்ரதஸ்ய கணதூ⁴மநிபாநதப்த ஸர்வேந்த்³ரியஸ்ய ப⁴வதா ப்⁴ரு’கு³நந்த³நஸ்ய ।
துஷ்டேந ஶர்ம யத³காரி ததா³ ஸ ஶுக்ர:
ஶீதோஷ்ண வாத ஜலதை³ர்தி³வி பா⁴ஸமாந: ॥ 53॥

ஏதாநி பாஸி பு⁴வநாநி யதா³ விக்³ரு’ஹ்ய
ஸேயம் விபூ⁴திரதுலா தவ தாவதா³ஸ்தாம் ।
த³க்ஷ ப்ரஸூதிமபி தே பு⁴வநத்ரயேऽபி
கஶ்சிந்ந வேத்தி ப⁴வதா ஸஹ கோ விவாத:³ ॥ 54॥

உந்மார்க³வர்தி கு³ண தோ³ஷ விவேகமந்த³முக்³ரம் மலீமஸம ஸம்யத மல்பஸாரம் ।
பீ⁴தார்திநாஶந த³யாபர லோகநாத²
தே³வ ப்ரஸீத³ மம சித்தமித³ம் ப்ரஶாதி⁴ ॥ 55॥

ஏதாநி நாத²! சபலாநி து³ராஶயாநி
லுப்³தா⁴நி ரம்யவிஷயோபநிப³ந்த⁴நாநி ।
து³ர்தா³ந்தவாஜிஸத்³ரு’ஶாந்யவிதே⁴பா⁴வாத்³
வஶ்யாநி மே குரு ஸதை³வ ஷடி³ந்த்³ரியாணி ॥ 56॥

நந்தீ³ஶ்வரஸ்ய மநுஜஸ்ய ஸதோऽதிகஷ்டம்
காலேந ம்ரு’த்யும சிரேண நிநீஷிதஸ்ய ।
ஸர்வாத்மநாऽऽத்ம ஸமதா யத³காரி துஷ்ட்யா
நாஶ்சர்யமேதத ³ப⁴வந்ந ச பா⁴வி நாஸ்தி ॥ 57॥

ஸம்ஸார பாஶவஶ மேதத³நீஶமீஶ!
மித்²யாகுதர்கதி மிரோபஹத ப்ரகாஶம் ।
சேதோ மம க்ஷபிதமந்மத²! த³க்³த⁴கால !
ஸத் ஸேவிதே பதி² நியோஜய தே³வதே³வ! ॥ 58॥

காயாநுப³ந்தி⁴பி⁴ரநேகவிதை⁴ரபாயை
ராகா³தி³பி⁴ஶ்ச மநஸி ப்ரதிலப்³த⁴பா⁴வை: ।
மூட:⁴ ப்ரு’த²க் ப்ரு’த²க³ஹம் ப்ரவிலுப்ய மாநஸ் த்வத்த: பரம் கத²ய கம் ஶரணம் வ்ரஜாமி ॥ 59॥

ஆயாஸகேந க²லு காமபிஶாசகேந
க்ரோத⁴க்³ரஹேண ச புநர் நிரவக்³ரஹேண ।
க்³ரஸ்தஸ்ய விக்லவதி⁴ய: ப்ரவி முக்தி ஹேதோர் யத் க்ரு’த்யமத்ர மம தத்ர தவைவ ஶக்தி: ॥ 60॥

யா ஸா ஜக³த் பரிப⁴வஸ்ய நிமித்தபூ⁴தா
ஹேது: ஸ்வயம் ஸுர பதேரபி லாக⁴வஸ்ய ।
ஸா மாம் விட³ம்ப³யதி நாத²! ஸதை³வ த்ரு’ஷ்ணாம்
பி⁴ந்தி⁴ ப்ரஸஹ்ய ப⁴க³வந்ந புநர்ப⁴வாய ॥ 61॥

யேநாவ்ரு’த: பஶுரயம் ஹ்ரு’த போ³த⁴ஶக்திஸ் தத்த்வம் ந வேத்தி ஜக³தே ஹிதமாத்மநே வா ।
சி²ந்தி⁴ ப்ரஸஹ்ய ப⁴க³வந்! மம தத் ஸமஸ்த மஜ்ஞாநஜம் திமிரமஸ்து மஹாந் ப்ரகாஶ: ॥ 62॥

ஸர்வாபதா³ம் நிலயமத்⁴ருவம ஸ்வதந்த்ரமாஸந்நபாதம விவேகம ஸாரமஜ்ஞம் ।
யாவச்ச²ரீரகமித³ம் ந விபத்³யதே மே
தாவந்நியோஜய விபோ⁴! குஶலக்ரியாஸு ॥ 63॥

யத் கி²த்³யதே கமலயோநிரபி ஸ்துவாந:
ஸாக்ஷாச் சதுர்பி⁴ரபி நாம முகை²ர்ப⁴வந்தம் ।
தத் கே வயம் தவ கு³ணஸ்தவந க்ரியாஸு
ப⁴க்தி: ப்ரமாணமிதி ஸர்வமித³ம் க்ஷமஸ்வ ॥ 64॥

க்ரு’த்வா மயா தவ நுதிம் ஜக³தே³கப³ந்தோ⁴!
ப⁴க்த்யா ஸ்வபு³த்³தி⁴ஸத்³ரு’ஶீமவதூ⁴தநாம்நா ।
புண்யம் யத³ல்பமபி கிஞ்சிது³பாத்தமத்ர
லோகஸ்ய தேந ப⁴க³வந்ஸ்த்வயி ப⁴க்திரஸ்து ॥

இதி ஶ்ரீமத³வதூ⁴தஸித்³த⁴விரசிதம் ப⁴க்திஸ்தோத்ரம் ஸமாப்தம் ।

ப⁴க்திஸ்தோத்ரம் கா ஹிந்தீ³ அநுவாத³
ஜக³த் கீ ஸமஸ்த ப்ரத்யக்ஷ வஸ்துஏம் ஜிநகா விஷய ஹைம், ஸம்ஸார
கா ஹித கரநே வாலே, ஜக³த் கீ ஸ்தி²தி, ப்ரலய ஔர உத்பத்தி கே
காரணபூ⁴த, ஸர்வாத்மக, காம ஔர க்ரோத⁴ கோ ஜீத லேநே வாலே,
த்ரிபு⁴வந கே ஸ்வாமீ ஶிவ கோ மைம் நமஸ்கார கரதா ஹூँ॥ 1॥

க்யா மைம் யஹ நஹீம் ஜாநதா கி ஆப வாசஸ்பதி கீ வாணீ கே பீ⁴ அகோ³சர
ஹைம், அர்தா²த் யஹ பா³த ஸத்ய ஹை கி ப்³ரு’ஹஸ்பதி கீ வாணீ பீ⁴ ஆபகே
கு³ணகா³ந மே அஸமர்த² ஹோ ஜாதீ ஹை । ஐஸீ பரிஸ்தி²தி மே பீ⁴ மேரீ
அநுராகா³த்மிகா ப⁴க்தி ஆபகீ கு³ணாவலீ கே வர்ணந கே லியே முஜே² ப்ரேரித
கர ரஹீ ஹை, தோ மைம் க்யா கரூம் ? அபி⁴ப்ராய யஹ ஹை கி ஆபகீ
ப⁴க்தி நே ப³லாத் முஜே² இஸ ஸ்துதி கீ ரசநா மே லகா³ தி³யா ஹை ॥ 2॥

ஆகாஶ, ஸூர்ய, சந்த்³ர, வஹ்நி, வாயு, ஆத்மா, ப்ரு’த்²வீ ததா²
ஸமுத்³ர யே ஆட² ஆபகீ மூர்தியாம் ஹைம் । ஆபகீ இந மூர்தியோம் ஸே ஸாரா
ஜக³த் வ்யாப்த ஹை । இதநா ஜாந லேநே பர பீ⁴ யதி³ கோஈ கிஸீ அந்ய தே³வதா கீ
ஸ்துதி கரதா ஹை தோ உஸஸே ப³ட⁴़கர நிர்லஜ்ஜ ஔர கௌந ஹோகா³ ? ॥ 3॥

த்⁴ரு’தி ஆதி³ அபநே ஶரீர கீ வ்ரு’த்தியோம் ஸே ஹீ ஜிஸ ப்ரகார ஆப அகேலே
ஆஜகல பூரே ஜக³த் கே யோக³க்ஷேம கா பா⁴ர வஹந கர ரஹே ஹை,
ஹே விபோ⁴! யதி³ உஸ ப்ரகார கா கார்ய ஸம்பந்ந கரநே வாலா ஜக³த் மேம்
கோஈ ஔர பீ⁴ ஹை தோ மாத்ஸர்ய ரஹித ஸஜ்ஜந லோக³ இஸ விஷய மே க்யோம்
குச² நஹீம் கஹதே ? ॥ 4॥

யோக³ த்³வாரா அபநே அஜ்ஞாநாந்த⁴கார கோ தூ³ர கரநே வாலே, த்ரிலோகீ
மேம் ப்ரமுக² ஸ்தா²ந ரக²நே வாலே ப்³ரஹ்மா, இந்த்³ர ததா² விஷ்ணு பீ⁴
யத்ந கரநே பர பீ⁴ ஆஜ தக ஆபகே தத்த்வ கோ நஹீம் ஜாந ஸகே ।
க்யா யஹ ஏக ப³ட³़ா பா⁴ரீ இந்த்³ர ஜால நஹீம் ஹை ? ॥ 5॥

பா⁴வ ஜக³த் கீ உத்பத்தி, ஸ்தி²தி ஔர ஸம்ஹார கரநே மேம் ப்ரவ்ரு’த்த
ஹோநே பர உந உந கார்யோம் கே அநுரூப ஆபகே அநேக நாம ஹோ ஜாதே ஹைம் ।
இஸீ ப்ரகார ஆபகே ஸமஸ்த கார்யப்ரபஞ்ச கோ ஸமேட கர ஸாம்யாவஸ்தா²
மேம் அவஸ்தி²த ஹோநே பர ந தோ ஆப இந்த்³ர ஹைம், ந விஷ்ணு ஔர ந பிதாமஹ
ஹீ । அர்தா²த் ஆபகே ஸாம்யாவஸ்தா² மேம் அவஸ்தி²த ஹோ ஜாநே பர இந
ஸம்ஜ்ஞாஓம் கீ கோஈ ஸ்தி²தி நஹீம் ரஹ ஜாதீ ॥ 6॥

விஜ்ஞாநவாதீ³ பௌ³த்³த⁴ தா³ர்ஶநிக ஆபகோ உபாதி⁴ ஸே விநிர்முக்த, நாம
ஔர ரூப ஸே ரஹித பரமார்த²த: விஜ்ஞாந ஸ்வரூப ஹீ மாநதே ஹைம் ।
தூ³ஸரே வைபா⁴ஷிக பௌ³த்³த⁴ அபநே த³ர்ஶந கீ மர்யாதா³ கோ ஸ்வீகார
கரதே ஹுஏ ஆபகோ த்ரிதா⁴து (காய, ரூப ஔர ஆரூப்ய) கீ பரிகல்பநா
ஸே விஶுத்³த⁴ மாநதே ஹைம் ॥ 7॥

ஸாங்க்²யத³ர்ஶந மேம் ஸத்த்வ, ரஜ ஔர தம இந தீந கு³ணோம் கோ
ஸமஸ்த ஜக³த் கீ உத்பத்தி கா காரண மாநா க³யா ஹை । ஆப ஸமஸ்த
ஶக்தியோம் கே அதி⁴ஷ்டா²தா ஹைம் । யே தீந கு³ண பீ⁴ ஆபகீ இந ஶக்தியோம்
கே ஹீ விலாஸ ஹைம் । இஸ ஸம்ஸார மே ஐஸீ கௌந ஸீ வஸ்து ஹை, ஜோ கி
ஆபகீ இந ஶக்தியோம் ஸே வ்யாப்த நஹீம் ஹை ? ॥ 8॥

கவிக³ண நித்ய ஹோநே பர பீ⁴ விநாஶீ, ரூப ரஹித ஹோநே பர பீ⁴ அநேக
ததா² ஏக, ப்ரசண்ட³ ஏவம் ஸௌம்ய ரூபதா⁴ரீ, கு³ண ரஹித ஹோநே பர பீ⁴ ஸபீ⁴
கு³ணோம் ஸே முக்த, ஸம்ஸாரீ ஹோநே பர பீ⁴ ஸம்யமஶீல, ஸாத² ஹீ அஸ்தி²ர
ஔர பராதீ⁴ந இஸ ப்ரகார பரஸ்பர விரோதீ⁴ கு³ணோம் ஸே யுக்த மாந கர
ஆபகீ ஸ்துதி கரதே ஹைம் ॥ 9॥

ஆக்²யா ஸே ரஹித ஹோநே கே காரண ஆப வாணீ கே விஷய ஸே அதீத ஹைம்,
அர்தா²த் நாம ஔர ரூப ஸே ரஹித ஹோநே கே காரண ஆபகே விஷய மேம் வாணீ
ப்ரவ்ரு’த்த நஹீம் ஹோ ஸகதீ, இஸலியே குச² அபஸித்³தா⁴ந்தீ தா³ர்ஶநிக
ஆபகோ ஶூந்ய அர்தா²த் அபா⁴வாத்மக மாநதே ஹைம் । இஸகே விபரீத குச²
தா³ர்ஶநிக ஐஸே பீ⁴ ஹைம், ஜோ கி வாசக ஔர வாச்ய கே யோக³ ஸே
அத²வா விஶேஷண கே ப³ல ஸே ஆபகோ ஸத் ரூப மேம் ஹீ ஸ்வீகார கரதே ஹைம் ॥ 10॥

இஸ ஸம்ஸார கீ ஆத்³யாவஸ்தா²ஔர அந்திமாவஸ்தா² மே அர்தா²த் ஸ்ரு’ஷ்டி
கே ஆரம்ப⁴ ஹோநே கே பூர்வ கீ ததா² ஸம்ஹார ஹோ ஜாநே கே பா³த³ கீ அவஸ்தா²
மேம் வைதி³க க³ண ஆபகோ ஹீ நிர்விகார ஆதி³ புருஷ மாநதே ஹைம் । இஸீ
ப்ரகார ஸ்ரு’ஷ்டி ஔர ப்ரலய கே பீ³ச கே கால மேம் உஸமேம் விகார
உத்பந்ந ஹோ ஜாநே கே காரண உஸ ஆதி³புருஷ கோ ஹீ ஸம்ஸார ஜால கே நாம ஸே அபி⁴ஹித கரதே ஹைம் ॥ 11॥

அபநீ ஸமஸ்த ஶக்தியோம் கோ அபநே மேம் ஹீ அந்தர்ஹித கரநே வாலே ஹே
ப்ரபோ⁴! ஜப³ ஆப ஸ்வயம் அபநே கோ, அபநே மேம் நியந்த்ரித கர லேதே
ஹைம் தோ யஹ ஸம்ஸார தப³ தக ஆப மேம் லீந ரஹதா ஹை, ஜப³ தக கி
ஆபகீ புந: ஸ்ரு’ஷ்டி கரநே கீ இச்சா² உத்பந்ந நஹீம் ஹோ ஜாதீ ॥ 12॥

ஹே நாத²! இஸ ஸம்ஸார மே ஆபஸே உத்க்ரு’ஷ்ட ஔர கோஈ பீ⁴ வஸ்து நஹீம்
ஹை । கோஈ பீ⁴ வஸ்து ந தோ ஆபஸே அதி⁴க ஸூக்ஷ்ம ஹை ஔர ந மஹாந் ஹீ ।
ஆப ஸர்வாத்மக ஹைம் । மணி ஜைஸே ஸூத்ர கோ அபநே மேம் சி²பா லேதீ ஹை, உஸீ
பா⁴ந்தி இஸ ஸாரே ஜக³த் கோ ஆப அபநே ஸ்வரூப மே சி²பாயே ஹுஏ ஹைம் ॥13॥

ஹே தே³வ! ஸமுத்³ர ஸே ஹீ ஜைஸே ஸபீ⁴ ப்ரகார கே ஜல விகாரோம் கீ
உத்பத்தி ஹோதீ ஹை ஔர அந்த மேம் வே ஸப³ உஸீ மேம் லீந ஹோ ஜாதே ஹைம்,
உஸீ பா⁴ந்தி ஆப நாநா ப்ரகார கே ஸுக²ஔர து:³க² கே விஶேஷ பா⁴ஜந
சித்தோம் கே ததா² ப்ரதா⁴ந (ப்ரக்ரு’தி) கே பரிணாம ஸே ஆவிர்பூ⁴த ஹோநே
வாலே விவித⁴ விகாரோம் கீ உத்பத்தி ஔர நாஶ கே காரண ஹைம் ॥ 14॥

ஹே தே³வகு³ரோ! ஜப³ ஆபநே அபநே அஷ்ட மூர்தி ஶிவ ரூப மேம் ஆகாஶ,
ஆத்மா, தேஜ, வாயு, ஜல ப்ரு’தி²வீ, சந்த்³ர ஔர ஸூர்ய கோ
அந்தர்ஹித கர லியா, தபீ⁴ ஆபநே அபநே ஸே பி⁴ந்ந, அந்ய த³ர்ஶநோம்
கே த்³வாரா ஸ்வீக்ரு’த, அந்ய காரணோம் கே மூல மேம் குடா²ராகா⁴த கர
தி³யா, அர்தா²த் அபநே அஷ்ட மூர்தி ஶிவ ரூப ஸே ஹீ ஆப இஸ ஜக³த் கீ
ஸ்ரு’ப்டி கரதே ஹைம் । ஆபஸே பி⁴ந்ந இஸ ஜக³த் கா ஔர கோஈ காரண நஹீம் ஹை ॥ 15॥

ப்ரமாண ஶாஸ்த்ர ந்யாயத³ர்ஶந கே ரசயிதா அக்ஷபாத³ முநி கௌ³தம ஆபகீ
மூர்தி கா ப்ரமாண, ப்ரமேய ஆதி³ ஸோலஹ பதா³ர்தோ²ம் மேம் ஜப³ரத³ஸ்தீ விபா⁴க³
கர கே உஸகீ ஸ்துதி கரதே ஹைம் । வைஶேஷிக த³ர்ஶந கே ரசயிதா
கணாத³ முநி நே பீ⁴ த்³ரவ்ய, கு³ண ஆதி³ ஸாத பதா³ர்தோ²ம் மேம் ஆபகீ மூர்தி கா
விபா⁴க³ கர உஸகீ ஸ்துதி கீ ஹை । அபி⁴ப்ராய யஹ ஹை கி ந்யாயத³ர்ஶநகார
நே ப்ரமாண, ப்ரமேய ஆதி³ ஸோலஹ பதா³ர்தோ²ம் கே தத்த்வஜ்ஞாந கோ ஔர கணாத³
முநி நே த்³ரவ்ய, கு³ண ஆதி³ ஸாத பதா³ர்தோ²ம் கே தத்த்வஜ்ஞாந கோ மோக்ஷ கா
காரண மாநா ஹை, வஹ ஸப³ கேவல உநகே பு³த்³தி⁴ விகாஸ கா த்³யோதக ஹைம்,
வஸ்துத: ஆபகே ஸ்வரூப ஸே பி⁴ந்ந உநகீ கோஈ ஸத்தா நஹீம் ஹை ॥ 16॥

அநந்த ஶக்தியோம் ஸே ஸம்பந்ந ஆபகீ ஏக ஶக்தி (அஜ்ஞாந) ஐஸீ ஹை,
ஜோ கி யதி³ தூ³ர நஹீம் கீ ஜாதீ ஹை தோ க்ஷேத்ரஜ்ஞ ஜீவ கோ ஸம்ஸார
ரூபீ பாஶ ஜால ஸே பா³ந்த⁴ லேதீ ஹை । ஆபகீ ஏக தூ³ஸரீ ஶக்தி பீ⁴ ஹை,
ஜிஸகீ ஸஹாயதா ஸே ஜ்ஞாந ரூபீ தலவார ஸே ஸம்பூர்ணம் ஸாம்ஸாரிக கு³ணோம்
கா உச்சே²த³ கர ஜீவ கோ முக்தி கீ ஓர உந்முக² கியா ஜாதா ஹை ॥ 17॥

ஸாது⁴ஜந ஆபகீ ஹீ ஏக ஶாந்ததம அவஸ்தா² கோ, ஜிஸமேம் ஸபீ⁴
ஸாம்ஸாரிக ப்ரவ்ரு’த்தியாம் நி:ஶேஷ ஹோ சுகீ ரஹதீ ஹைம், விமுக்தி கீ
ஸம்ஜ்ஞா தே³தே ஹைம் ஔர தூ³ஸரீ அவஸ்தா² கோ, ஜிஸமேம் ஸ்ரு’ஷ்டி, ஸ்தி²தி,
ஸம்ஹார ரூபீ கார்ய சலதா ரஹதா ஹை, ஸம்ஸாரிணீ அர்தா²த் ப³ந்தா⁴வஸ்தா² கஹதே ஹைம் ॥ 18॥

ஹே ப⁴க³வந்! தீவ்ர அஜ்ஞாந ரூபீ அந்த⁴கார ஸே ஜிநகா ஜ்ஞாந ரூபீ
ப்ரகாஶ நஷ்ட ஹோ சுகா ஹை, ஜ்ஞாந ரூபீ ப்ரகாஶ கே நஷ்ட ஹோ
ஜாநே ஸே ஜோ விநஷ்ட பு³த்³தி⁴ ஜந ஆபகோ தோ³ஷ த்³ரு’ஷ்டி ஸே ஹீ தே³க²தே
ரஹதே ஹைம், வே பீ⁴ தப³ தக ஸம்ஸார கோ நஹீம் சோ²ட³़ பாதே, ஜப³
தக ஆப உநகோ அபநீ அநுக்³ரஹ ஶக்தி கே ப³ல ஸே ஜகா³ நஹீம் தே³தே ।
அர்தா²த் யஹ ஆபகீ ஹீ விஶேஷதா ஹை கி ஆபகே ப்ரதி தோ³ஷத்³ரு’ஷ்டி
ரக²நே வாலே ப்ராணியோம் பர பீ⁴ ஆப அநுக்³ரஹ கரதே ஹைம் ॥ 19॥

வையாகரண க³ண ஆபகோ கு³ஹ்ய, கு³ஹாஶ்ரய, அஜ, பரம பவித்ர,
ஏக, விபு⁴, ஸகல ஶாஸ்த்ரோம் கே ஆதி³ காரண, விதி⁴ பூர்வக
ப்ரயுக்த ஹோநே பர அபீ⁴ஷ்ட ப²ல கோ தே³நே வாலே ஶப்³த³ தத்த்வ கே
ரூப மேம் ஸ்வீகார கரதே ஹைம் ॥ 20॥

நாநா ஶாஸ்த்ரோம் கே ரசயிதா மநீஷீ க³ண அபநீ-அபநீ பு³த்³தி⁴ கே அநுஸார
கல்பநா கரகே தத்த்வோம் கீ நாநா ப்ரகார கீ வ்யாக்²யா கரதே ஹைம் । இந
வித்³வாநோம் நே ஜோ குச² பீ⁴ ப்ரதிபாதி³த கியா ஹை, வஹ ஸப³ ஆபகா ஹீ
ஸ்வரூப ஹை, ஆபஸே பி⁴ந்ந ஔர குச² பீ⁴ நஹீம் ஹை । வித்³வஜ்ஜநோம் கா
யஹ விவாத³ கேவல நாம கோ லேகர ஹை । அர்தா²த் நாநா ஶாஸ்த்ரோம் மேம்
ஜோ குச² பீ⁴ ப்ரதிபாதி³த ஹை, உஸமேம் மூலதத்த்வ கே நாம-பே⁴த³ கே
ஸிவாய ஔர குச² பீ⁴ பே⁴த³ நஹீம் ஹை ॥ 21॥

ஹே தே³வ! ஆப ஸர்வஜ்ஞதா கே பீ³ஜ ஹைம், அவிகாரீ ஹைம், ஆப நித்ய
உத்³யதஶக்திமாந் ஹைம், நி:ஶ்ரேயஸ் ததா² அப்⁴யுத³ய (ஶ்ரேயஸ் ததா²
ப்ரேயஸ் லௌகிக ததா² பாரலௌகிக) மார்க³ கே ப்ரவர்தந கே மூல காரண
ஹைம் । ஹமாரே பூர்வ கு³ருஜநோம் நே ஆபகீ ஹீ உபாஸநா கரகே நாநா ஶாஸ்த்ரோம்
கீ ரசநா கரநே கா ஸாமர்த்²ய ப்ராப்த கர அபநீ மஹிமா ஸ்தா²பித கீ ஹை ॥ 22॥

யத்³யபி அந்யத்ர பீ⁴ ஸர்வஜ்ஞதா கா உபசார ஸே ப்ரயோக³ ஹோதா ஹை,
உஸகா முக்²ய ப்ரயோக³ ஆப மேம் ஹீ அந்வித ஹை, க்யோங்கி ஐஶ்வர்ய கீ
பராகாஷ்டா² ஆப மேம் ஹீ ஹை । ஹே நாத²! ஆப ஹீ ஜக³த் கே கர்தா ஹைம்,
இஸலியே அநுபதி⁴க ஸ்வாதந்த்ர்ய பீ⁴ ஆப மேம் ஹீ வித்³யமாந ஹை ॥ 23॥

கோஈ வ்யக்தி த்³ரு’ஶ்ய அர்தா²த் ப்ரத்யக்ஷ ப்ரமாண ஸே வஸ்துஓம் கோ
ஜாநதா ஹை, தூ³ஸரா அநுமாந கீ பத்³த⁴தி ஸே ஔர தீஸரா ஶப்³த³ ப்ரமாண
கே த்³வாரா । இஸகே விபரீத ஆபகோ தோ பி³நா கிஸீ க்ரம கே ஹீ அபநே
ஹாத² மே ரகே² ஹுஏ ஆம்வலே கே ஸமாந ஸமஸ்த ப்ரமேய ப்ரத்யக்ஷ
ரூப ஸே ஹீ ஸதா³ பா⁴ஸித ஹோதே ஹைம் । அர்தா²த் ஹாத² மே ரகே² ஹுஏ
ஆம்வலே கா ஜிஸ ப்ரகார ஸபீ⁴ ப்ராணியோம் கோ ப்ரத்யக்ஷ அநுப⁴வ ஹோதா
ஹை, உஸீ பா⁴ந்தி ஸம்ஸார கே ஸமஸ்த பதா³ர்த² ஸதா³ விநா க்ரம கே அபநே
ஸாமநே ப்ரத்யக்ஷ ரூப ஸே உபஸ்தி²த ரஹதே ஹைம் ॥ 24॥

ஹே நாத²! பராதீ⁴ந வ்ரு’த்திவாலே இஸ விஷயீ ஜீவாத்மா கே ஸாத² ஜக³த்
கீ இஸ பரா ப்ரக்ரு’தி கே ஸம்யோக³ஔர வியோக³ மேம் ஆப ஹீ மூல காரண
ஹைம் । இஸ ஸம்ஸார சக்ர மேம் பரிவர்தந கா ஜோ யந்த்ர சலதா ஹை,
உஸகோ சலாநே வாலே ஆப ஹீ ஹைம் ॥ 25॥

மநுஷ்ய ஸ்வயம் ப்ரமாத³ ரஹித பு³த்³தி⁴ ஸே ஶாஸ்த்ரோம் மே வர்ணித நியமோம்
கே அநுஸார நிரந்தர கர்ம கரதா ரஹதா ஹை, உஸகோ அபநே கர்மோம்
கே ஸமுசித ப²ல கீ அதி⁴க³தி ஹோதீ ஹை, கிந்து யஹ தபீ⁴ ஸம்ப⁴வ
ஹோதா ஹை, ஜப³ கி ஆபகீ அநோகீ² க்ரு’பா உஸ பர ஹோ ஜாய ॥ 26॥

உத்ஸாஹ ஶக்தி ஸே ரஹித, ஆதுர, பாபாத்மா, மந்த³மதி, மர்யாதா³
கா பாலந ந கரநே வாலே, நிர்த³யீ, அஸத்யபா⁴ஷீ வ்யக்தியோம் கோ பீ⁴ ஆப
மநோவாஞ்சி²த ப²ல ப்ரதா³ந கரதே ஹைம் । இஸ ப்ரகார ஆப நே புருஷகார
அர்தா²த் பௌருஷ கீ விஶேஷதா கோ லுப்த கர தி³யா ஹை । அர்தா²த்
ஆபகீ அஹைதுகீ க்ரு’பா கே காரண புருஷகார அர்தா²த் மநுஷ்ய கே ப்ரயத்ந
கா கோஈ மஹத்த்வ நஹீம் ரஹ ஜாதா ॥ 27॥

வேத³-விஹித கர்ம ஸுக²ப்ரத³ ஹைம், ஸ்வர்க³ தே³நே வாலே ஹைம், கிந்து யஹ
ஸ்வர்க³ கா ஸுக² மரநே கே பா³த³ மிலதா ஹை ஔர யஹ நஶ்வர பீ⁴ ஹை ।
ஆபகீ ஶரண மேம் ஆநே பர தோ அவிநஶ்வர ஶாஶ்வத ஸுக²
ப்ராப்த ஹோதா ஹை, க்யோங்கி ஶாஸ்த்ரோம் மேம் ப³தாயா க³யா ஹை கி ஆபகே
ப்ரதி ப⁴க்திபூர்வக கீ க³யீ ப்ரணதி ஸபீ⁴ ப்ரகார கே தோ³ஷோம் கோ தோ⁴ தே³தீ ஹை ॥ 28॥

ஹே ப⁴க³வந்! ப்ரதிக்ஷண அநேக வ்யக்தியோம் கோ அர்தா²த் அநேக ரூபோம் கோ
தா⁴ரண கரநே வாலீ அபநீ ப்ராகாம்ய ஶக்தி அர்தா²த் இச்சா²நுஸார
ரூப தா⁴ரண கரநே வாலீ ஶக்தி கோ ஜப³ ஆப ப்ரகட கரதே ஹைம்,
உஸ ஸமய க்ஷணப⁴ங்க³வாத³ ஆப மேம் ஹீ ஸார்த²க ஹோதா ஹை । அர்தா²த்
க்ஷண-க்ஷண மேம் ஜோ ஆப ரூப-பரிவர்தந கரதே ஹைம், இஸஸே
ஆப மே பௌ³த்³தோ⁴ம் கே க்ஷணப⁴ங்க³வாத³ கீ ஸார்த²கதா ஸித்³த⁴ ஹோதீ ஹை।
இஸ ப்ரகார யஹ க்ஷணப⁴ங்க³வாத³ ப்ராய: கிஸீ சதுர வ்யக்தி கீ கல்பநா மாநீ ஜாநீ சாஹியே ॥ 29॥

அநேக ஶாஸ்த்ரகாரோம் நே அபநே-அபநே ஶாஸ்த்ரோம் மேம் கஹா ஹை கி அநேக ஜந்மோம்
கே அநந்தர பீ⁴ பரம பத³ கீ ப்ராப்தி நஹீம் ஹோதீ । இஸ ப்ரகார கஹநே
வாலே ஶாஸ்த்ரகாரோம் கே விரோத⁴ மே ப³ல பூர்வக யஹ கஹகர கி வஹ பரம
பத³ தோ ஏக ஹீ ஜந்ம மேம் ப்ராப்த ஹோ ஜாதா ஹை, ஆபநே நிஶ்சய ஹீ உநகே
மஸ்தக பர அபநா சரண ரகா² ஹை ॥ 30॥

லோபீ⁴, மலிந பு³த்³தி⁴ வாலே, மர்யாதா³ ஸே விமுக², காமநாஓம் கே
தா³ஸ, ஸம்யம ஸே ரஹித, பாயாத்மா வ்யக்தி பீ⁴ ஶைவாக³ம மேம் விஹித
லக்ஷணோம் கே தா⁴ரண கரநே ஸே அவஶ்ய ஹீ இஸ ஸம்ஸார-சக்ர ஸே
முக்த ஹோ ஜாதே ஹைம் । யஹ ஆபகா அதி க³ம்பீ⁴ர ஸிம்ஹநாத³ ஹை ॥ 31॥

ஹே ப⁴க³வந்! ஆபகே த்³வாரா உபதி³ஷ்ட ஆக³மஶாஸ்த்ர அந்ய ஶாஸ்த்ரோம் ஸே
பா³தி⁴த நஹீம் ஹோதா । சிந்தாமணி கே ஸமாந இஸகா மஹாந் அத்³பு⁴த
ப்ரபா⁴வ யஹ ஹை கி இஸ ஶாஸ்த்ர மேம் உபதி³ஷ்ட விதா⁴ந கே அநுஸார
ஸமீசீந பத்³த⁴தி ஸே தீ³க்ஷா க்³ரஹண கர லேநே பர வ்யக்தி பி³நா
ஜ்ஞாந கீ அதி⁴க³தி கே ஹீ மோக்ஷ ப்ராப்த கர லேதா ஹை । அபி⁴ப்ராய
யஹ ஹை கி உபநிஷத்³, கீ³தா ஆதி³ மேம் ப³தாயா க³யா ஹை கி பி³நா ஜ்ஞாந
கே முக்தி நஹீம் ஹோதீ, கிந்து ஶைவாக³ம கா யஹ அத்³பு⁴த ஸாமர்த்²ய
ஹை கி பி³நா ஹீ ஜ்ஞாந கே ஶாஸ்த்ராநுமோதி³த தீ³க்ஷா கே க்³ரஹண கரநே
மாத்ர ஸே மநுஷ்ய முக்த ஹோ ஜாதா ஹை ॥ 32॥

ஹே ப⁴க³வந்! ஆத்மா கே முக்தி ரூப ப²ல கா காரண ஜ்ஞாந ப⁴லே ஹீ
பாஶவிக வாஸநாஓம் ஸே திரஸ்க்ரு’த கர தி³யா ஜாஏ, கிந்து பீ³ஜ மேம்
ஜல தே³நே ஸே ஜைஸே வஹ பு³த்³தி⁴ஶீல ஹோதா ஹுஆ ப²லவாந் ஹோ ஜாதா ஹை,
உஸீ ப்ரகார ஆபகே த்³வாரா உபதி³ஷ்ட ஶைவாக³ம மேம் ப்ரத³ர்ஶித விதி⁴
ஸே பூர்ணாபி⁴ஷேக தீ³க்ஷா கே ஜலாபி⁴ஷேக ஸே அபி⁴ஷிக்த ஸாத⁴க
மோக்ஷரூபீ ப²ல கே ப்ரஸவ கா ஸாமர்த்²ய ப்ராப்த கர லேதா ஹை ।
அபி⁴ப்ராய யஹ ஹை கி ஆக³மிக தீ³க்ஷா மோக்ஷப்ரஸவிநீ ஹை ।
வஹாம் ஜ்ஞாந கீ அபேக்ஷா யா உபேக்ஷா கா கோஈ மஹத்வ நஹீம் ஹை ॥ 33॥

அஸங்க்²ய ஜந்மோம் கே பா³த³ ஜப³ கபீ⁴ ப்ராணீ கீ வாஸநாயேம் க்ஷீண ஹோ
ஜாதீ ஹைம், தோ உஸகே ஊபர க்ரு’பா கரநே கீ ஆபகீ இச்சா² ஹோதீ ஹை ।
உஸகே ஸாத² ஹீ வஹ ஸம்ஸார ஜால கோ தோட³़ கர ஆத்யந்திக ஶாந்தி
பா லேதா ஹை, சாஹே உஸே ஜ்ஞாந ப்ராப்த ஹோ யா ந ஹோ ॥ 34॥

அவாந்தர பே⁴தோ³ம் ஸே யுக்த, சதுர்த³ஶ பு⁴வநமய இஸ ஸாரே ஸம்ஸார
கா ஆப பாலந கரதே ஹைம், நாஶ கரதே ஹைம் ஔர நிர்மாண கரதே
ஹைம் । யஹ ஸப³ ஆப ஸ்வேச்ச²யா அபநீ ஸ்வாதந்த்ர்ய ஶக்தி கீ ஸஹாயதா
ஸே நிர்லிப்த பா⁴வ ஸே கரதே ஹைம் । இஸலியே ஶிஷ்ட ஜநோம் கா யஹ
கஹநா டீ²க ஹீ ஹை கி யஹ ஸப³ கரநே பர பீ⁴ ஆப கபீ⁴ இநமேம்
லிப்த நஹீம் ஹோதே ॥ 35॥

ஹே ப⁴க³வந்! அப்ரதிஹத ஐஶ்வர்ய, ஸஹஜ விராக³, ஸ்வாபா⁴விக
த்ரு’ப்தி, இந்த்³ரியோம் பர வஶிதா, ஸர்வாதிஶாயீ ஸுக², ஆவரண ரஹித
ஶக்தி ஔர ஸர்வவிஷயக ஜ்ஞாந இந விஶேஷணோம் ஸே யுக்த யே கு³ண
கேவல ஆப மேம் ஹீ ஹைம் ॥ 36॥

ஆபநே க³ர்த³ப⁴, உஷ்ட்ர ஔர வ்ரு’க்ஷோம் கோ பீ⁴ உஸ பத³ பர பஹுँசா
தி³யா, ஜஹாம் பர து:³க² கா லவலேஶ பீ⁴ நஹீம் ஹை ஔர ஜோ ஆத்யந்திக
ஸுக² கா ஸ்தா²ந ஹை, ஜிஸகோ யத்நபூர்வக தபஸ்யா கரநே பர பீ⁴
நஹீம் பாயா ஜா ஸகதா । இஸமே கோஈ ஆஶ்சர்ய கீ பா³த பீ⁴ நஹீம் ஹை ।
யஹ தோ தீநோம் பு⁴வநோம் மே வ்யாப்த ஆபகீ அப்ரதிஹத ஸ்வாதந்த்ர்ய ஶக்தி
கா ஹீ கே²ல ஹை ॥ 37॥

ஆபகே ஶுக்ர கீ ஏக பூ³ந்த³ கா இதநா அதுலநீய ப்ரபா⁴வ ஹை கி ஜிஸகே
கி³ரநே ஸே நிர்மல, சமகீலே ரத்நோம் கீ கிரணோம் கே ப்ரகாஶ ஸே கி⁴ரா
ஹுஆ ஸம்பூர்ண ஸுமேரு பர்வத ஸோநே கா ஹோ க³யா । உஸீ கா யஹ
ஸுப²ல ஹை கி லோகோ³ம் கோ ஸோநே கே ஆபூ⁴ஷண ப்ராப்த ஹோ ஸகே ஹைம்॥ 38॥

தீநோம் லோகோம் கே அநந்த கல்போம் கே பாப-புஞ்ஜ கே ஸமாந காலக்ரம
ஸே த்ரிபுர கே இகட்டா² ஹோநே பர ஆபநே உஸகோ ப⁴ஸ்ம கர தி³யா தா² ।
இஸ வ்ரு’த்தாந்த கோ ஜோ டீ²க ஸே ஜாநதா ஹை, மூட⁴ கோ சோ²ட³-கர,
கிஸ ஸஹ்ரு’த³ய வ்யக்தி கா ஆபகீ தரப² பக்ஷபாத நஹீம் ஹோகா³ ॥ 39॥

க்ஷீர ஸாக³ர கே மத²ந ஸே உத்பந்ந காலகூட மஹாவிஷ கோ, ஜிஸநே
தே³வதாஓம் கோ ப⁴யபீ⁴த கர தி³யா தா², கேவல ஜக³த் கே கல்யாண கே
லியே நிர்மத்ஸர பா⁴வ ஸே ஆபநே பீ லியா தா² । யஹ ஸச ஹீ ஹை கி
இஸகே ஸாத² ஹீ ஸாரே ஜக³த் கா ஸாது⁴வாத³ பீ⁴ ஆபகோ ஹீ பீநே கோ மிலா ।
அபி⁴ப்ராய யஹ ஹை கி ஜப³ அந்ய தே³வதா க³ண ஸமுத்³ர-மந்த²ந ஸே
ப்ராப்த ரத்நோம் கீ லூட-க²ஸோட மே லகே³ தே² தோ உநகே இஸ கார்ய கே ப்ரதி
அபநே மந மே பி³நா கோஈ ஈர்ஷ்யா ரகே² காலகூட விஷ கே ரூப மேம் ஜக³த்
கே ஸாமநே ஆயே ப⁴ய கா பரிஹார கரநே கே லியே உத்³யத ஹோகர ஆபநே
ஜக³த் கா ஸாது⁴வாத³ ப்ராப்த கியா ॥ 40॥

ஹே ப⁴க³வந்! அத்யந்த ஶாந்த ஸ்வபா⁴வ கே ஹோதே ஹுஏ பீ⁴ ஆபநே காமதே³வ கோ
அபநே தீஸரே நேத்ர ஸே உத்பந்ந அக்³நி ஸே ப³ட³़ீ ஹீ உக்³ரதா ஸே ப⁴ஸ்ம கர
தி³யா । ஐஸா ஆபநே இஸ லியே கியா கி ஜந ஸாதா⁴ரண கோ யஹ ஶிக்ஷா
மில ஜாய கி மஹாந் வ்யக்தியோம் கீ இச்சா² கே விருத்³த⁴ கியே க³யே சோ²டே
ஸே அபராத⁴ கா பீ⁴ கிதநா ப⁴யங்கர பரிணாம ஹோ ஸகதா ஹை ॥ 41॥

ஹே ப⁴க³வந்! அபநே ஶரீர கே அர்த⁴பா⁴க³ மேம் ஸ்நேஹவஶ ப்ரியா பார்வதீ
கோ ஸ்தா²ந தே³கர கே பீ⁴ ஆப ஹீ விஷயோம் ஸே விரக்த தபஸ்வியோம் மேம்
அக்³ரக³ண்ய ஹைம் । த்ரிலோகீ கோ ஆஶ்வர்ய மே ட³़ால தே³நே வாலீ ஆப கீ
சேஷ்டாஓம் கீ நகல கரநே வாலா ஆஜ பீ⁴ கோஈ தி³கா²ஈ நஹீம் தே³தா ॥ 42॥

அபநே யோக³ ஸாமர்த்²ய கே த்³வாரா ப்ராப்த ப³ல ஸே தே³வர்ஷி நாரத³ நே
ஸமஸ்த விஶ்வ கா கோ⁴ர திரஸ்கார கியா தா² । ப்ரஜாபதி கே
மாநஸபுத்ர தே³வர்ஷி நாரத³ கே இஸ க³ர்வ கோ பீ⁴ ஆபநே ப³ல
பூர்வக தூ³ர கர தி³யா । ஆபகே இஸ ஸாமர்த்²ய பர கிஸகோ ஆஶ்சர்ய நஹீம் ஹோகா³ ? ॥ 43॥

கைலாஸ பர்வத கோ மாத்ர அங்கூ³டே² ஸே ஆபநே த³பா³யா தா² । இதநே ஸே ஹீ
ராவண கீ யஹ து³ர்த³ஶா ஹோ க³ஈ கி உஸகே ப்ராண ஏகாஏக நிகல நஹீம்
க³யே । உஸீ த³ஶாநந ராவண கோ ஜீதநே கே லியே விஷ்ணு கே அவதார
ப⁴க³வாந் ராமசந்த்³ர கோ ராஜநீதி ஔர ப்ரப³ல உத்³யோக³ கா ஸஹாரா
லேநே பர பீ⁴ ப³ஹுத ஸமய லக³ க³யா । இஸமேம் விஸ்மய கீ கோஈ பா³த நஹீம் ஹை ॥ 44॥

ஸ்வர்ணமய கமல ததா² பாரிஜாத கே பூ²லோம் கீ ஸுக³ந்தி⁴ ஸே ஸுரபி⁴த
ஜலவாலீ, ஆகாஶ ஸே ப்ரு’த்²வீ பர கி³ரதீ ஹுஈ க³ங்கா³ அபநீ ஜடா
கே அக்³ரபா⁴க³ மேம் ஆபகோ பாநீ கீ பு²ஹார கே ஸமாந லக³ ரஹீ தீ² ।
இஸகோ தா⁴ரண கரநே கீ ஸாமர்த்²ய ஔர கிஸமேம் தீ² ? யஹ ஆப கா ஹீ
அநுக்³ரஹ ஹை கி லோக-கல்யாண கே லியே இஸகோ ஆபநே தா⁴ரண கியா ॥ 45॥
ஈஶ்வர பத³ கீ ப்ரவ்ரு’த்தி கே மூலகாரண, ஜிஸகீ கோஈ துலநா நஹீம்
ஹோ ஸகதீ, ஐஸே ஆபகே அந்ய ஐஶ்வர்ய கீ பா³த கோ தோ ஹம சோ²ட³ தே³தே
ஹைம் । ஹே ப⁴க³வந்! விஷ்ணு ஔர பிதாமஹ ப்³ரஹ்மா பீ⁴ ஆபகே லிங்க³
கா பீ⁴ அந்த ந பா ஸகே । ஐஸீ பரிஸ்தி²தி மே அந்ய ஐஶ்வர்யோம் கீ தோ
பா³த கரநா ஹீ வ்யர்த² ஹை ॥ 46॥

ம்ரு’த்யு கே விகரால தா³ँதோம் கே பீ³ச பட³़ே ஹுஏ ஶ்வேத ரு’ஷி கே, ஜோ
கி கஸாஈ கே க⁴ர மேம் காடநே கே லாயே க³யே பஶு கீ தரஹ ம்ரு’த்யு கீ
பகட³़ மேம் தே², ப்ராணோம் கீ யம கே க்ரூர பாஶோம் ஸே ஆபநே ரக்ஷா கீ தீ² ।
இஸ பா³த கோ ஜாந கர ஸம்ஸார கே கிஸ ப்ராணீ கோ ஆஶ்சர்ய நஹீம் ஹோகா³॥ 47॥

ஹே விபோ⁴! ஆபநே ஜிஸ ப்ரகார ப்ரஸந்ந ஹோகர உபமந்யு ரு’ஷி கோ
க்ஷீர ஸமுத்³ர கா தா³ந கர தி³யா ஔர இஸ ப்ரகார உநகே க்ரோத⁴ கோ
ஶாந்த கியா, இஸ ப்ரகார கா உதா³ர வர தே³நே வாலா ஜக³த் மேம் கோஈ தூ³ஸரா
ஹை தோ மத்ஸர கா பரித்யாக³ கர ஸஜ்ஜந லோக³ உஸே ப³தாயேம் ॥ 48॥

ஹே ப்ரபோ⁴! வ்ரு’த்ராஸுர கே ஶத்ரு இந்த்³ர கே வஜ்ர கீ ததா² உஸகீ பு⁴ஜாஓம்
கீ ஶக்தி கோ ஆபநே ஜிஸ ப்ரகார ஹம்ஸதே ஹம்ஸதே குண்டி²த கர தி³யா
தா², வைஸே ஹீ பூஷந் தே³வதா கே தா³தோம் கோ, ப⁴க³ தே³வதா கே ஆங்கோ²ம் கோ
ஔர த³க்ஷ கீ யஜ்ஞ கே ப²ல கீ மமதா கோ நஷ்ட கர தி³யா ॥ 49॥

ஹே பஶுபதே! விஷ்ணு, ப்ரஜாபதி, இந்த்³ர, லோகபால, பஶு-பக்ஷீ,
தே³வதா³நவ, மநுஷ்ய ஏவம் அந்ய தி³வ்ய யோநி கே ஜீவோம் நே இஸ லோக
மேம் ஆபகே லியே ஜிஸ ப்ரகார ஸ்தா²நோம் கீ கல்பநா கீ ஹை, வைஸீ கிஸ
தூ³ஸரே தே³வதா கே லியே ஹுஈ ஹை, ப³தாயேம் । அர்தா²த் ஶிவ கே அதிரிக்த
அந்ய கிஸீ தூ³ஸரே தே³வதா கே லியே இஸ ப்ரகார ஸ்தா²நோம் கீ கல்பநா கீ
க³யீ ஹோ, ஐஸா கஹீம் தே³க²நே கோ நஹீம் மிலதா ॥ 50॥

ஹே கல்யாணகாரீ ஶங்கர! ப³ட³़ே ப³ட³़ே தா³நவோம் கோ டுகடா³ டுகடா³ கர
தே³நே வாலே, ஶார்ங்க³ த⁴நுஷ ஔர ஸுத³ர்ஶந சக்ர கோ தா⁴ரண கரநே வாலே
ஶ்ரீ க்ரு’ஷ்ண கே அபநே ரக்ஷக கே ரூப மே வித்³யமாந ரஹநே பர
பீ⁴ த்³ரோணாசார்ய, பீ⁴ஷ்ம பிதாமஹ, க்ரு’பாசார்ய ஔர கர்ண ஜைஸே
மஹாரதி²யோம் கே ப⁴ய ஸே வ்யாகுல இந்த்³ரபுத்ர அர்ஜுந கோ பாஶுபதாஸ்த்ர
கா தா³ந கர ஆபநே ஹீ ப⁴ய முக்த கர ஸுகீ² கியா தா² ॥ 51॥

ஹே ப⁴க³வந்! பா³ர பா³ர யஜ்ஞ கரநே வாலே மருத்த நாமக ராஜா கீ
ஆராத⁴நா ஸே ப்ரஸந்ந ஹோகர ஆபநே உஸகீ ஸஹாயதா கே லியே ஸுவர்ண
கீ வ்ரு’ஷ்டி கீ தீ² । இஸ ப்ரகார ஆபநே ஸம்ஸார மேம் ப⁴க்த ஜநோம் கே
ஊபர அநுக்³ரஹ கரநே கே அநேக உதா³ஹரண ப்ரக்²யாபித கியே ஹைம் । ஆபகே
ஸாமர்த்²ய கோ தே³க²தே ஹுஏ இஸமேம் கோஈ ஆஶ்சர்ய கீ பா³த நஹீம் ஹை ॥52॥

மஹர்ஷி ப்⁴ரு’கு³ கே புத்ர ஶுக்ராசார்ய ஜப³ கடோ²ர தபஸ்யா கர
ரஹே தே², உஸ ஸமய உநகீ ஸமஸ்த இந்த்³ரியாம் தூ⁴மகணோம் கே பீநே ஸே தப
க³ஈ தீ² । உநகீ இஸ தபஸ்யா ஸே ஸந்துஷ்ட ஹோகர ஆபநே உநகோ ஆகாஶ
மே ஸர்தீ³, க³ர்மீ, பவந ஔர மேக⁴ ஆதி³ கீ உபாதி⁴யோம் ஸே நிர்முக்த
ப்ரகாஶமய ஸ்தா²ந தே³கர ஸுகீ² கர தி³யா தா² ॥ 53॥

இந பு⁴வநோம் கே பீ⁴தர ப்ரவேஶ கர ஆப லோக-லோகாந்தரோம் கீ ரக்ஷா
கரதே ஹைம் । ஆபகீ இஸ அதுலநீய விபூ⁴தி கீ சர்சா தோ²ட³़ீ தே³ர கே
லிஏ சோ²ட³ பீ⁴ தீ³ ஜாஏ । (ஸதீ கே அர்த்³தா⁴ங்க³ கே ரூப மேம்) ஆபகீ ஜோ
த³க்ஷ ஸே உத்பத்தி ஹை உஸே தீநோம் லோகோம் மேம் பீ⁴ கோஈ நஹீம் ஜாநதா ஹை।
ஐஸே மேம் ஆபகே ஸாத² விவாத³ ஹீ க்யா ? ॥ 54॥

ஸம்ஸார ஸாக³ர ஸே ட³ரே ஹுஏ வ்யக்தியோம் கீ பீட³़ா கா ஶமந கரநே வாலே,
த³யா பராயண, த்ரிபு⁴வந கே ஸ்வாமீ ஹே தே³வ! ஆப முஜ² பர
ப்ரஸந்ந ஹோம் ஏவம் மேரே மந கோ அநுஶாஸித கரேம் । மேரா யஹ
மந பு³ரே ராஸ்தே மேம் பட³़ா ஹுஆ ஹை, கு³ண ஔர தோ³ஷ கீ பரக²
கரநே மேம் கமஜோர ஹை, உக்³ர, கலுஷித, அநியந்த்ரித ஔர
கல்பப்ராண ஹை ॥ 55॥

து³ஷ்ட வாஸநாஓம் ஸே ப⁴ரீ ஹுஈ, ஆபாதத: ரமணீய வைஷயிக ப்ரபஞ்சோம்
ஸே ப³ந்தீ⁴ ஹுஈ யே சஞ்சல ஔர லுப்³த⁴ இந்த்³ரியாம் முஜே² ப்ராப்த ஹுஈ ஹைம் ।
அவிநயீ ஹோநே கே காரண யே இந்த்³ரியாம் து³ஷ்ட கோ⁴ட³़ே கே
ஸமாந குபத² மேம் ப்ரவ்ரு’த்த ஹைம் । ஹே நாத²! பாஞ்ச ஜ்ஞாநேந்த்³ரிய
ஔர மந ஸஹித இந ச:² இந்த்³ரியோம் கோ ஆப ஸதா³ கே லியே மேரே வஶ
மேம் கர தீ³ஜியே ॥ 56॥

நந்தீ³ஶ்வர ஏக ஸாதா⁴ரண மாநவ தே² । கால கே பாஶ மே ப³ந்தே⁴ ஹுஏ
வஹ அதீவ கஷ்டதா³யிநீ ம்ரு’த்யு கே முँஹ மே துரந்த ஹீ லே ஜாயே ஜாநே
வாலே தே² । உநகே ஊபர ப்ரஸந்ந ஹோகர ஆபநே ஸப³ ப்ரகார ஸே உநகோ
அபநே ஸமாந ப³நா தி³யா । யஹ கோஈ ஆஶ்சர்ய கீ பா³த நஹீம் ஹை ஔர
ஐஸா பீ⁴ நஹீம் ஹை கி இஸ ப்ரகார கா ஆஶ்சர்ய பி²ர கபீ⁴ நஹீம் ஹோகா³ ॥ 57॥

காமதே³வ ஔர கால கோ பீ⁴ ப⁴ஸ்ம கர தே³நே வாலே, ஹே தே³வதாஓம் கே
அதி⁴பதி! மேரா மந ஸாம்ஸாரிக பாஶோம் மே ப³ந்தா⁴ ஹுஆ அஸஹாய பட³़ா
ஹை । ப்⁴ரமோத்பாத³க குதர்க ரூபீ அந்த⁴கார ஸே ஆவ்ரு’த ரஹநே கே காரண
ஜ்ஞாந கா ப்ரகாஶ இஸகே பாஸ நஹீம் பஹுँச பாதா । அத: ஹே நாத²!
இஸகோ ஆப ஸாது⁴ ஜநோம் கே த்³வாரா அநுஸேவித மார்க³ மேம் லகா³இயே ॥58॥

ஜ்வர, அதீஸார ஆதி³ நாநா ப்ரகார கே ரோகோ³ம் ஸே மேரா ஶரீர கி⁴ரா
ரஹதா ஹை ஔர ராக³த்³வேஷ ஆதி³ தோ³ஷ மேரே மந கோ ஸதா³ கே⁴ரே ரஹதே
ஹைம் । இஸ ப்ரகார கபீ⁴ ஶாரீரிக ஔர கபீ⁴ மாநஸிக தோ³ஷோம் ஸே கி⁴ரீ
மூட⁴़தா கே காரண மேரா ஸ்வரூப லுப்த ஹோ க³யா ஹை । ஐஸீ அவஸ்தா² மேம்
ப³தாஇயே நாத²! ஆப கே ஸிவாய மைம் கிஸகீ ஶரண மே ஜாஊँ॥ 59॥

பீட³़ா பஹுँசாநே வாலே காம ரூபீ பிஶாச ஸே ஔர அநியந்த்ரித க்ரோத⁴
ரூபீ க்³ரஹ ஸே க்³ரஸ்த ரஹநே கே காரண மேரீ பு³த்³தி⁴ குண்டி²த ஹோ க³யீ ஹை ।
இஸ லியே முக்தி கீ ப்ராப்தி கே லியே முஜே² ஜோ குச² கரநா சாஹியே,
உஸமேம் கேவல ஆபகீ ஶக்தி ஹீ ஸஹாயக ஹோ ஸகதீ ஹை ॥ 60॥

ஹே நாத²! ஜோ விஶ்வ கே ஸாரே பராப⁴வோம் கீ மூல காரண ஹை, ஜோ ஸ்வயம்
தே³வராஜ இந்த்³ர கீ பீ⁴ லகு⁴தா (க்ஷுத்³ரதா) கா காரண ப³நதீ ஹை, வஹ
த்ரு’ஷ்ணா முஜே² ஸதா³ விட³़ம்ப³நா மேம் ட³़ாலே ரஹதீ ஹை । ஹே ப⁴க³வந்!
ஆப த்³ரு’ட⁴தாபூர்வக மேரீ உஸ த்ரு’ஷ்ணா கோ சி²ந்ந-பி⁴ந்ந கர தீ³ஜியே,
ஜிஸஸே மேரா புநர்ஜந்ம ந ஹோ ॥ 61॥

ஜிஸ அஜ்ஞாந ஸே ஆச்சா²தி³த ரஹநே கே காரண பஶு ஸத்³ரு’ஶ யஹ
ஜீவ அபநீ ஜ்ஞாந ஶக்தி க³ம்வா பை³ட²தா ஹை ஔர இஸ ப்ரகார விஶ்வ
கே அத²வா அபநே கல்யாண கே பரமார்த² காரண கோ நஹீம் ஜாநா பாதா ।
ஹே ப⁴க³வந்! ஆப மேரே உஸ ஸமஸ்த அஜ்ஞாநஜந்ய அந்த⁴கார கோ
ப³லபூர்வக சி²ந்ந-பி⁴ந்ந கர தீ³ஜியே, பரிணாம-ஸ்வரூப மஹாந்
ஜ்ஞாநமய ஆலோக சாரோம் தரப² பை²ல ஜாஏ ॥ 62॥

ஹே விபோ⁴! ஸபீ⁴ விபதா³ஓம் கா ஆஶ்ரய-ஸ்த²ல, அஸ்தி²ர, பரதந்த்ர,
பதநோந்முக², விவேகஶூந்ய, ஸாரஹீந ஔர மூட⁴தா ஸே ப⁴ரா மேரா
யஹ க்ஷுத்³ர ஶரீர ஜப³ தக விபத்தி-க்³ரஸ்த நஹீம் ஹோ ஜாதா,
உஸஸே பஹலே ஹீ ஆப இஸே புண்ய கர்மோம் கீ ஓர ப்ரவ்ரு’த்த கர தே³ம் ॥ 63॥

நாபி⁴கமல ஸே உத்பந்ந ஸ்வயம் ப்³ரஹ்மா பீ⁴ அபநே சாரோம் முகோ²ம் ஸே
ஆபகீ ஸ்துதி கரதே ஹுஏ ஜப³ த²க ஜாதே ஹைம் தோ ஐஸீ ஸ்தி²தி மேம்
ஆபகீ கு³ணக³ரிமா கா வர்ணந கரநே மேம் ஹம லோக³ கஹாँதக ஸமர்த²
ஹோகே³ம் ? இஸ கார்ய மேம் கேவல ஆபகீ ப⁴க்தி ஹீ ப்ரமாண ஹோ ஸகதீ ஹை,
அத: இஸ ஸம்பூர்ண வாசாலதா கே லியே ஆப ஹமேம் க்ஷமா கரேம் ॥ 64॥

ஹே ப⁴க³வந்! ஆப இஸ ஸம்ஸார கே ஏக மாத்ர ப³ந்து⁴ ஹைம் । அவதூ⁴த
நாம தா⁴ரீ இஸ வ்யக்தி நே ப⁴க்தி பூர்வக அபநீ பு³த்³தி⁴ கே அநுஸார
ஆபகீ ஸ்துதி கரகே ஜோ குச² தோ²டா³ ஸா பீ⁴ புண்ய ப்ராப்த கியா ஹை,
உஸகே ப²ல ஸ்வரூப ஆபகே ப்ரதி ஜநதா கீ ப⁴க்தி ஜாகே³ (யஹீ மேரீ காமநா ஹை) ॥ 65॥

ஶ்ரீ அவதூ⁴த ஸித்³த ⁴விரசித ப⁴க்தி ஸ்தோத்ர ஸமாப்த ஹ

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில் –விதி -பத பிரயோகங்கள் —

September 30, 2022

விதி –
1-கோட்ப்பாடு –
2-முறைமை –
3-பாபங்கள் –
4-பாக்யம் –
5-இறை அருள் –
6-புண்யம் -ஸூஹ்ருதம்
7-கட்டளை –
8-கைங்கர்யம் –
9-திண்ணம் உறுதிப்பாடு –
10-ஆக்குதல் –
இப்படி பத்து அர்த்தங்கள் உண்டே

——————–

    விதி (15)
1-விதி இன்மையால் அது மாட்டோம் வித்தக பிள்ளாய் விரையேல் - 
2-மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே - 
3-வெறுப்பொடு சமணர் முண்டர் விதி இல் சாக்கியர்கள் நின்-பால் - 
4-மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதி இலா என்னை போல - 
5-விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதி இலேன் மதி ஒன்று இல்லை - 
6-தாழ்த்து இரு கை கூப்பு என்றால் கூப்பாத பாழ்த்த விதி
-எங்கு உற்றாய் என்று அவனை ஏத்தாது என் நெஞ்சமே - 
7-கூட்டும் விதி என்று கூடும்-கொலோ தென் குருகை_பிரான் -
8-அவரவர் விதி வழி அடைய நின்றனரே - 
9-விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே -
10-நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே - 
11-மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர் - 
12-எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் - 
13-அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே - 
14-விண் உலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே -
15-விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர் - 
--------------
விதியே (2) 
16-இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே -
17-வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே - 
---------
விதி-கொலோ (1)
18-முன்னம் நோற்ற விதி-கொலோ முகில்_வண்ணன் மாயம்-கொலோ அவன் -
---------------
    விதிக்கிற்றியே (3)
19-வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கர கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே -
20-வித்தகன் வேங்கட_வாணன் என்னும் விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே -
21-துவரை பிரானுக்கே சங்கற்பித்து தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே - 
---------------

விதியில்
22-மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர் - 
-------------
    விதியின் (1)
23-விளக்கினை விதியின் காண்பார் மெய்ம்மையை காண்கிற்பாரே -
----------
விதியினமே (1)
24-முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே - 
-----------
விதியினால் (1)
25-விதியினால் பெடை மணக்கும் மென் நடைய அன்னங்காள் -
--------
விதியினை (1)
26-விதியினை கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே - 
--------------

இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்—நாச்சியார் திருமொழி -3-2-

விதியின்மையால் அது மாட்டோம் –
அது பொல்லாதோ -அழகியது ஓன்று அன்றோ –
ஆகிலும் எங்கள் பாக்ய ஹானியாலே அது மாட்டு கிறிலோம் -என்கிறார்கள் –

விதி இன்மையால் அது மாட்டோம்-என்று –
அது -என்றார்கள் இறே-அவன் நினைவைத் தாங்கள் அறிந்தமை தோற்ற

———-

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்
மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே— பெருமாள் திருமொழி –4-2-

மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே—
கீழ்ச் சொன்ன குருகாய் பிறக்கில் அதுக்கு சிறகு உண்டாகையாலே ஸ்ரீ திருமலையில் அல்லனாய்
கழியப் பறக்கைக்கு யோக்யதை யுண்டு இறே
அப்படியும் ஓன்று அன்றியே
உத்பத்தி ஸ்திதி லயங்களுக்கு ஸ்ரீ திருமலையிலேயாய் மீனாய்ப் பிறப்பேன் -என்கிறார் –

பிறக்கும் விதியுடையேன் ஆவேனே –
இப்போது மீனாய் பிறக்கவும் வேண்டா
ஒரு ஸூஹ்ருதத்தாலே அந்த ஜன்மம் மேல் வரும் என்று திண்மை பெறவும் அமையும் என்கிறார் —

—————

வெறுப்போடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரியனகள் பேசில் போவதே நோயதாகிக்
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை யாங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் யரங்க மா நகர் உளானே—-திருமாலை —8—-

விதியில் சாக்கியர்கள் –
பகவத் உத்கர்ஷத்தை அறிந்து
தத் சமாஸ்ரயணத்தைப் பண்ணி
அனுபவிக்கைக்கு ஈடான பாக்கியம் இல்லாதவர் -பௌத்தர்

————-

மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதியிலா வென்னைப் போலே
பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னர்
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம் அன்றே–15-

நான் நெடுநாள் தன பக்கல் வைமுக்யம் பண்ணிப் போந்த இடத்தில்
என்னைக் கிட்ட மாட்டாதே நின்றான்

எனக்கு அத்வேஷம் பிறந்த அளவிலே
மேல் விழுந்து விஷயீ கரித்தான்-

இவை இரண்டும் என் பக்கலிலே கண்டேன் –

விதியிலா வென்னை –
அவனுடைய சீலம் இதுவாய் இருக்க –
விஷயாந்தர பிரவணனாய்
பகவத் விஷய விமூகனாய்ப் போந்த பாக்ய ஹீனன் என்று
முன்பு இழந்த இழவுக்கு வெறுக்கிறார் –

பழுதே பல பகலும் போயின -என்று
பெற்ற பேற்றில் காட்டில் இழந்த இழவே மேல் படி இறே
இவ்விஷயத்தில் கை வந்தார் படி இருப்பது
நிந்திதஸ் ஸ்வ ஸேல்லோகே ஸ்வாத்மாப்யேனம் விகர்ஹதே -என்னக் கடவது இறே –

——————-

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி யொன்று இல்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணினை களிக்குமாறே –17-

வாக் வியாபாரம் புறம்பே யானாலும் -காயிக வியாபாரங்களில்
நம் பக்கல் பண்ணிற்றது ஏதும் உண்டோ என்ன –
விதியிலேன்-
விதிர்வித் -என்கிறபடியே
காயிக வியாபாரத்தைச் சொல்லுகிறது –

உன்னை உத்தேசித்து உன் பக்கல் அனுகூலமாக இதுக்கு முன்பு கையால் ஒன்றும் செய்திலேன் –
சாஜிஹ்வா யாஹரிம் ஸ் தௌ தி -என்கிறவதுவும்
யௌதத் பூஜா கரௌ கரௌ -என்கிறவதுவும் –

புறம்பே தப்பிற்றாகிலும் -நெஞ்சாலே தான் நினைத்தாரோ -வென்ன –
மதி யொன்று இல்லை –
உன் வாசி அறியாது ஒழிந்தால்
நீ ஒருவன் உண்டு என்ற அறிவும் கூட இல்லை –

——————–

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–ஸ்ரீ பெரிய திருவந்தாதி –84-

பாழ்த்த விதி என்று
தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம்
பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்

—————-

கூட்டும் விதி என்று கூடும் கொலோ தென் குருகைப்பிரான்
பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என்னாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே —ஸ்ரீ ராமாநுச நூற்றந்தாதி –29 –

ஸ்ரீ எம்பெருமானார் திவ்ய குணங்களை உள்ளபடி அறிந்து இருக்கும் அவர்கள் திரள்களை
என் கண்கள் களிக்கும்படி கூட்டக் கடவ -ஸூஹ்ருதம் இன்று கூடுமோ-என்கிறார் –

விதி-ஸூஹ்ருதம்-இவர் தமக்கு பேற்றுக்கு அடியான -ஸூஹ்ருதமாக நினைத்து இருப்பது அத்தலையில் கிருபையை இறே-
தம்மாலும் ஸ்ரீ எம்பெருமானாராலுமே விலக்க இயலாமையின் கிருபையை விதி என்றார் –
கூட்டும் விதி -என்பதனால்-அதன் விளைவு தவிர்க்க ஒண்ணாதது என்பது புலனாகிறது
ஸ்ரீ நம் ஆழ்வாரும் -விதி வாய்க்கின்று காப்பார் யார் -திருவாய் மொழி -5 1-1 – -என்று தவிர்க்க-இயலாமையை –
ஐயோ கண்ண பிரான் அறையோ இனிப் போனாலே -என்று விளக்கி காட்டி-இருப்பது இங்கு உணரத் தக்கது –

——————

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –ஸ்ரீ திருவாய் மொழி –1-1-5-

அவரவர் விதி வழி யடைய நின்றனரே-விதித்த மார்க்கத்தில் பலம் பெற அந்தர்யாமியாக நின்று அருளி –
அவ்வவ ஆஸ்ரயணீயர் தந்தாமுடைய ஆகமாதிகளிலே விதித்து வைத்த பிரகாரங்களிலே அடையும்படியாக நம் இறையவர் அந்தராத்மாவாக நின்றார்
அன்றிக்கே
சர்வேஸ்வரன் காம நாதிகாரத்தில்–ஸ்ரீ கீதை 7 அதிகாரம்- அருளிச் செய்தபடியே -அவர்கள் அடையும்படியாக -என்னுதல் –
காமத்தால் இழுக்கப் பட்ட ஞானம் -சரீரமாக பல தேவதைகள் -அவர்கள் மேல் உறுதியான நம்பிக்கை நான் தான் பண்ணிக் கொடுக்கிறேன் என்கிறான்
திரிபுரா தேவியார் ராமானுஜர் காட்டிய –ஐதிகம் -உய்ய ஒரே வழி உடையவர் திருவடி
சர்வேஸ்வரன் இரா மடம் ஊட்டுவாரைப் போலே முகம் தோற்றாதே அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலே
அவர்களும் ஆஸ்ரயித்தார்களாய்-
இவர்களும் பல பிரதான சக்தர் ஆகிறார்கள் இத்தனை –
அவனை ஒழிந்த அன்று இவர்கள் ஆஸ்ரயிக்கவும் மாட்டார்கள் -அவர்கள் பல பிரதானம் பண்ணவும் மாட்டார்கள் -என்கிறார்
ஐயன் பாழியில் ஆனை போருக்கு உரித்ததாம் அன்று ஆயிற்று -அவ்வோ தேவதா மாத்ரங்களுக்கு பல பிரதான சக்தி உள்ளது –
சாஸ்தா ஸ்தானம் ஐயனார் கோயிலில் உள்ள யானை போலே –

————-

மதுசூ தனைஅன்றி மற்றுஇலேன்என்று
எத்தாலும் கருமம் இன்றித்
துதிசூழ்ந்த பாடல்கள் பாடி ஆடநின்று
ஊழிஊழி தொறும்
எதிர்சூழல் புக்கு,எனைத் தோர்பிறப்பும்
எனக்கே அருள்கள் செய்ய
விதிசூழ்ந்த தால்எனக்கேல் அம்மான்
திரிவிக் கிரமனையே.–2-7-6-

‘‘எனைத்தோர் பிறப்பும் எதிர்சூழல் புக்கு எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால்’ அதாவது,
‘எதிர் சூழல் புக்கு ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் அவன் போம் வரம்புக்கு எதிர் வரம்பே வருமாறு போன்று,
இவர் பிறந்த பிறவிதோறும் தானும் எதிரே பிறந்து வந்தான்’ என்கிறார் என்றபடி.
இவர் கர்மமடியாகப் பிறக்க, அவன் அநுக்கிரகத்தாலே பிறந்து வந்தான் இத்தனை.
‘சூழல்’ என்று அவதாரத்தைச் சொல்லக் கடவது.
‘விதி’ என்றது, பகவானுடைய கிருபையை.

‘பகவானுடைய கிருபையை விதி என்பான் என்?’ என்னில்,
இறைவனுக்குத் தப்ப ஒண்ணாதது ஆகையாலே. அதாவது,
நாம் நினைத்தவற்றைத் தலைகட்ட ஒட்டாத கர்மம் போன்று, ஈஸ்வரன் நினைத்த காரியங்களையும் கிருபைக்குப் பரதந்திரனாய்த் தலைக்கட்டமாட்டானாகையாலே என்றபடி.
‘தங்களிலும் திருவருளே மிகுந்து இரட்சித்துக்கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்;
கொலை செய்தற்குத் தக்கதான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் கண்ணழிவு செய்யுமவர்’ என்பர் ஸ்ரீவால்மீகி பகவான்.
எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே – சர்வேஸ்வரனாய் இருந்தும், ஸ்ரீவாமனனாய் வந்து அவதரித்து,
மூன்று அடியாலே மூன்று உலகங்களையும் திருவடிகளின்கீழே இட்டுக்கொண்டு,
எல்லாரோடும் பொருந்தின சௌலப்யந்தான் பரத்துவம் என்னும்படி என்னை அங்கீகரிப்பதற்கு ஒரு விதி சூழ்ந்தது.
‘அம்மான் திரிவிக்கிரமனை எனக்கே அருள்கள் செய்ய எனக்கு என்னவே ஒரு விதி சூழ்ந்தது’ என்க.
———–

என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான் தனைக்
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே?–4-5-7-

சொன்மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் –
சொன்மாலைகள் நன்று சூட்டும் படியான பாக்கியத்தை பிராபிக்க (அடையப் )பெற்றோம்.
பரத்துவத்தில் குணங்கள் உளவாம் தன்மை-ஸத்பாவம் – மாத்திரமே உள்ளது,
அவதரித்த இடத்தே அன்றோ அவை பிரகாசிப்பன?
‘இப்படி விஷயம் பூர்ணமானால் (நிறைவுற்றிருந்தால் )‘பேச ஒண்ணாது’ என்று மீளுகை அன்றிக்கே,
இந்நிலையிலே விளாக்குலை கொண்டு பேசும்படியானேன்,’ என்பார், ‘நன்று சூட்டும்’ என்கிறார்.

இவர் இப்போது ‘விதி’ என்கிறது,
பகவானுடைய கிருபையை.
தமக்குப் பலிக்கையாலும்,
அவனுக்குத் தவிர ஒண்ணாதாகையாலும், ‘விதி’ என்கிறார்.
‘விதி சூழ்ந்ததால்’-திருவாய்.-2. 7 : 6. என்றாரே யன்றோ முன்னரும்?

—————-

கையார் சக்கரத்து என் கருமா ணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமேபுற மேஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதிவாய்க் கின்று காப்பார்ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-

விதிவாய்க்கின்று – பகவானுடைய கிருபை கரை புரளப் பெருகா நின்றால் நம்மாற் செய்யலாவது உண்டோ?
‘விதி’ என்கிறது, பகவானுடைய கிருபையை.
“கேசவன் தமர்” என்னும் திருவாய்மொழிக்கு இப்பால் எல்லாம் இவர், ‘விதி’ என்கிறது, பகவானுடைய கிருபையை.
கிருபையை ‘விதி’ என்பதற்கு அடி, அவனால் தப்ப ஒண்ணாதபடி இருக்கையாலே.
வாய்க்கின்று – பகவானுடைய கிருபை ஈஸ்வரனுடைய ஸ்வாதந்திரியமாகிய கரை புரளப் பெருகி வந்து கிட்டுமிடத்தில்.
காப்பார் ஆர் – இதனைத் தடை செய்வார் ஆவார் உளரோ?
இரண்டு சேதநராலும் தடை செய்யப்போகாது என்பார் ‘காப்பது எது?’ என்னாமல், ‘காப்பார் ஆர்?’ என்கிறார்.
பரதந்திரனான இவனாலும் தகைய ஒண்ணாது, ஸ்வதந்திரனான அவனாலும் தகைய ஒண்ணாது;
பலத்தை அநுபவிக்கிற இவனாலும் தகைய ஒண்ணாது, பலத்தைக் கொடுக்கிற அவனாலும் தகைய ஒண்ணாது என்றபடி.
அன்றிக்கே, காப்பார் ஆர் என்பதற்கு, கிருபை உண்டாவதற்குக் காரணமான பிராட்டி காக்கவோ?
கிருபைக்குப் பரதந்திரப்பட்டவனான நீ காக்கவோ?
கிருபைக்குப் பாத்திரமான நான் காக்கவோ? என்று பொருள் கோடலுமாம்.
“மித்ர பாவேந” என்கிற ஸ்லோகத்திலே எம்பார்,
‘சர்வஜ்ஞனுக்கு ஒரு அஜ்ஞானமும் மறதியும், சர்வ சக்திக்கு ஒரு அசத்தியும் உண்டு’ என்று அருளிச் செய்வர்.
ஒருவன், தன்னை அடைந்தால், முன்பு புத்தி பூர்வம் பண்ணிப் போந்த குற்றங்களிலே மறதி,
ஞானம் பிறந்த பின்பு தன்னை அறியாமலே வரும் குற்றங்களில் அஜ்ஞானம் அவனை விட வேண்டி வருமளவிலே அசக்தி.
இப்படி இருக்கைக்குக் காரணம், இயல்பிலே அமைந்த குடல் தொடக்கு.-
‘இயல்பிலே அமைந்த குடல் தொடக்கு’ என்றது நாராயண பதத்தால் கூறப் படுகின்ற சம்பந்தத்தைத் திருவுள்ளம் பற்றி.

———

அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதிவாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம் மா துன்பொழித்தாய்! என்று கைதலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும்என் மேலானே.–5-1-7-

எம் மா பாவியார்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் – எல்லா வழியாலும் மஹா பாவத்தைப் பண்ணினவர்கள் பக்கலிலும்
பகவானுடைய கிருபை பெருகப் புக்கால் தடை இல்லை கண்டீர்.
பகவானுடைய கிருபை பெருகப் புக்கால் ‘கரையிலே நின்றோம்’ என்னத் தப்ப விரகு இல்லை.

————-

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

அது செய்யும் இடத்தில் நான் சொன்னபடி செய்தானாக வேண்டி இரா நின்றான் –
அது நமது விதி வகையே -என்பதற்கு
அது நமது புண்ணியத்திற்கு தகுதியாக அன்றோ -என்று முன்னைய பெரியோர்கள் நிர்வஹிப்பர்கள் –
இதனை எம்பெருமானார் கேட்டருளி
இத் திருவாய் மொழியிலே மேல் ஓடுகிற அர்த்தத்தோடு சேராது
நாம் விதித்த படியே செய்வானாக இருந்தான் -என்கிறார் -என்று அருளிச் செய்வர் –
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிஸா நுஷூ ரம்ச்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதச்த தே-அயோத்யா -31-25
பரவாநச்மி காகுத்ச த்வயி வர்ஷசதம் ஸ்திதே
ஸ்வயந்து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -அயோத்யா -15-7-
என்கிறபடியே-இவன் சொன்னபடியே செய்யா நின்றான் –
நமது சொல் வகையே -என்னாமல்-நமது விதி வகையே -என்பான் என் என்னில்
விதியை மீறுவதில் பாபத்துக்கு அஞ்சுவாரைப் போலே அஞ்சா நின்றான்
தான் ஸ்வதந்த்ரனாய் நினைத்த படி செய்கைக்கு
தன் பக்கல் குறைவற்றாலும் -புருஷார்த்தமாக பிராட்டியும் இருக்க –
இத் தலையில் இச்சை ஒழிய கொடு போகானே அவன் –
புருடோத்தமன் ஆண்மையில் குறை வரும்படி செய்யானே –
நமது விதி வகையே –
த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிதா
த்வயா நிஸ்ருஷ்டாத்மா பிரேன யத் யதா
ப்ரீயேன சேனாபதீனா ந்யயேதி தத்
ததா அனுஜாநத்தம் உதார வீஷணை-ஸ்தோத்ர ரத்னம் -42
சேனாபதி முதலியாராலே எந்தக் காரியம் எந்தப்படி
விண்ணப்பம் செய்யப் பட்டதோ
அந்த கார்யத்தை அந்தப் படியே நிறைந்த அருளாலே அனுமதி செய்கின்றவனான உன்னை -என்கிறபடியே
இது பட்டர் தாமே அருளிச் செய்ய நான் கேட்டேன் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்-

————-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே
எண்ணினவாறாகா இக்கருமங்கள் என்நெஞ்சே –10-6-3-

சர்வ சக்தன் கூட்டிச் செல்வது தானே என்றால் -தன் இஷ்ட்டப்படி செய்பவன் அல்லையே
இப்படி செய் அப்படி செய் என்று ஆழ்வார் விதிக்க செய்வதிலே ஆசை கொண்டவன் அன்றோ திருவாட்டாற்று எம்பெருமான்
அதனால் -விதி வகையே -என்கிறார் இங்கும் முதல் பாட்டில் போலே
சேதன லாபம் ஈஸ்வரனுக்கே ஆதலால் அவன் விரைவது தானே பிராப்தம் -சபலமாகக் கூடியதும் அது தானே -சாஸ்த்ரார்த்தம்

————-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே –
கடலிலே உள்ள நீர் மலையிலே ஏறக் கோத்தால் போன்று
இப்பிறவியிலே உழன்று திரிகின்றவர்கள்
பரம பதத்தில் புகுரும்படிக்கு ஈடாக
புண்ணியத்தை பண்ணுவதே -என்று ஆழம் கால் பட்டார்கள் –

திருவாசல் முதலிகளால்
பரமபதம் புகுவது தங்கள் பாக்கியம்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
தலை விதியே சாமான்ய அர்த்தம்
விதி பாக்கியம்
அதுக்கும்
அது நமது விதி வகையே
பாக்ய அனுகுணமாக
விதி வகை புகுந்தனர்
மண்ணவர் ஆகி வைத்து விண்ணவர் ஆவதே

————-

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-

விதி வகை புகுந்தனர் என்று —
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -என்று இவர்கள் சொல்லுகிற வார்த்தை அன்று என்று
வேறு சிலர் –இவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்றது-நாம் செய்த புண்ணியத்தின் பலம் அன்றோ -என்பர் -என்றது
விஷயங்கள் நடை யாடுகிற இவ் உலகத்தில் இருந்து வைத்து வேறு பயனைக் கருதாதவராய் –
பகவானுடைய குணங்களை அனுபவிக்கிற மகா புருஷர்களாய்
விண்ணுளாரிலும் சீரியர் எனப்படுகிற இவர்கள் வந்து புகுரப் பெற்றது நாம் செய்த புண்ணியத்தின் பலம் என்றோ என்பார்கள் என்றபடி –
கீழே -வைகுந்தம்புகுவது -என்றார் –
இங்கு புகுந்தனர் -என்கையாலே தங்கள் புன்யத்தைக் காட்டுகிறது –

————–

துணை நிலை மற்று எமக்கோர் உளது என்று இராது தொழுமின்கள் தொண்டர் தொலைப்
உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி
பணை முலை யாயர் மாதர்  உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர்
இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே—பெரிய திருமொழி -11-4-9-

அறுக்கும் விதியே –ஓன்று என்னலாம் படி நின்ற மருதுகள் முறிந்து விழும்படியாக
நடை கற்ற தெள்ளியவன்-நம்முடைய பாபத்தை ச வாசனமாக போக்கும்-இது நிச்சிதம் –

————

அன்னைமீர்! அணி மா மயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-

முன்னம் நோற்ற விதி கொலோ –
ஒக்கப் பிறந்து வளர்ந்தோம், பின்பு இது சாதிக்கக் கண்டிலோம்.
ஆதலால், முன்னரே செய்துவைத்த புண்ணியத்தின் பலமோ இது!
“புண்ணியமானது, விதி என்றும் விதானம் என்றும் சொல்லப்படுமன்றோ” என்னக் கடவதன்றோ.
இவளாலே செய்யப்பட்ட தர்மத்துக்கு இத்தனை பலம் கனக்க உண்டாகமாட்டாது;
இது சித்த தர்ம பலமாக வேணும்;
ஆகையால், முகில் வண்ணன் மாயம் கொலோ –
பிடாத்தை விழவிட்டு வடிவினைக் காட்டினானோ? —
பிடாம் -பச்சை வடம் -வஸ்த்ரம் -முகில் நகர்ந்து சந்தரன் காண்பது போலே –
இத் தலையாலே சாதித்தது ஓர் அசேதனமான கிரியைக்கு இத்தனை கனத்த பலம் உண்டாக மாட்டாமையாலே
‘முன்னம் நோற்ற விதி கொலோ?’ என்று ஐயப்பட்டாள்.
இப்படி முன்பு ஒருவடிவில் பலிக்கக் காணாமையாலே ‘முகில் வண்ணன் மாயம் கொலோ?’ என்று இங்கே ஐயப்படுகிறாள்.

————

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –நாச்சியார் திருமொழி –1-1-

அக்கையும் திரு வாழியுமான சேர்த்தி அழகை காண வேணும் என்று ஆசைப் படுகிற என்னை
அவனுடனே சேர்த்து விட வல்லையே-
அவனோ அண்ணியனாய் வந்து நின்றான்-
எனக்கு அவனை ஒழியச் செல்லாமை உண்டாய் இருந்தது -இனி சேர்த்து விட வல்லையே-

மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு
முப்போது முன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து
வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும்
விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–1-3-

திருமலையிலே பொருந்தின பின்பு உஜ்ஜ்வலனாய்த்து
அந்த விளக்கில் புகும்படி என்னை நியமிக்க வேணும் என்கிறாள் –

சுவரில் புராண நின் பேர் எழுதிச்
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்ககளும் கருப்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காம தேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றயே–1-4-

என் ஆற்றாமை இருந்தபடி கண்டாயே
இனி இம் முலைகளிலே செவ்வி அழிவதற்கு முன்பே சேர்க்க வல்லையே –

—————

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடு இனவானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே –2-3-4-

இந்தரனுக்கு என்று இடையர் எடுத்த எழில் உடைத்தான விழவிலே
முன்பு செய்து போரும் படியிலே மந்த்ரோக்தமான படியே பண்ணுகிற
அநுஷ்டான ரூபமான பூஜையை பெறாமையாலே

—————

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே-திருக்குறும் தாண்டகம் -1–

விதியினை
அவன் ஸ்வாதந்த்ர்யத்தாலும்
என் கருமத்தாலும்
தவிர்க்க ஒண்ணாத கிருபை –

விதி வாய்க்கின்று காப்பார் யார்
விதி சூழ்ந்ததால்
இவ்வளவான பேற்றுக்கு அடியான தம்முடைய ஸூஹ்ருதத்தைச் சொல்லுகிறார் –

————————–

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–திருக்குறும் தாண்டகம் -18-

விதியில் காண்பர்-
சாஸ்த்ரங்களில் விதித்தபடியே உபாசித்து அவனைக் காண்பார் –
மெய்ம்மையே காண்கிற்பாரே –
என்றும் உளனாய் இருக்கிற சர்வேஸ்வரனை காண வல்லரே -காண -மாட்டார் -என்றபடி –
அதவா –
இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே உபாசித்துக் காண்பாருக்கு காணலாம் -என்றுமாம் –
அங்க பிரபத்தி இல்லாமல் காண மாட்டார் என்றபடி

————

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக் குயில்காள் நீரலீரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2-

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ என்று ஒருத்தி
மதியெலாம் உள்கலங்கி மயங்குமால் என்னீரே–1-4-3-

அனுபவித்தாலும் மாளாத பாபம் –
விதி பாக்கியம் -பிரிந்து வருந்தாதே கூடி இருந்து களித்து
விதி -சாஸ்திர விதி -சாஸ்திர விதி படி மணந்து பிரியாமல் இருக்கிறீர்கள்
கந்தர்வ விவாஹம் போல் கூடி பிரிவாற்றாமை எய்தி தவிக்கின்றேன்
பெருமாள் பிராட்டியை பிரிந்து கடலும் மழையும் அரித்துக் கொண்டு வாரா நிற்கச் செய்தே
ராஜ்ய தாரங்களை இழந்து கிடந்த மகா ராஜரைக் கண்டு அவர் குறையை தீர்த்த பின்பு இ றே
தம் இழவில் நெஞ்சு சென்றது
அங்கன் இன்றிக்கே இப்போது இவை குறைவற்று இருக்கிற இது தான் இவள் பாக்யமாய் இருக்கும் இ றே –
பாக்கியம் அர்த்தத்தில்

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
சாஸ்திர முறைப்படி க்ருஹஸ் ஆஸ்ரமம் விவஷிதம்
இடர் இல்லாதபோகம் இடரில்போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள் -திருவாய் மொழி -6-1-4-
சம்சார பந்த தாபம் தட்டாத பகவத் அனுபவம் விவஷிதம்
அந்தரம் ஒன்றும் இன்றி அலர்மேல் அசையும் அன்னங்காள் -திருவாய் மொழி -6-8-10
பாதாரவிந்தத்தில் பொருந்தியது விவஷிதம்
தடம் புனல்வாய் இரை தேர்ந்து மிக வின்பம் பட மேவும் மென்னடைய அன்னங்காள் -திருவாய் மொழி -9-5-10-
சதாச்சார்யர் இடம் அர்த்தங்களை பெற்று ஆனந்தம்
நல் குடிச் சீர்மையில் அன்னங்காள் -திரு விருத்தம் ஆபிஜாத்யம் விவஷிதம்

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கீதா ஸாஸ்த்ர சார ஸ்லோகங்கள் -பாசுரங்கள் -பேடிகா விபாகம் —

September 29, 2022

ஸ்ரீ பாத்ம புராணம் ஸ்ரீ கீதா மஹாத்ம்யம் சொல்லும்
பார்வதி கீதா மஹாத்ம்யம் ருத்ரனார் இடம் கேட்க
பக்தி வளர இது அறிய வேண்டுமே
சாலப்பல நாள் உகந்து உயிர்கள் காப்பான்

நானே கீதை
முதல் 5 அத்தியாயங்கள் -தலைப் பாகம்
அடுத்த 10 அத்தியாயங்கள் –6-15-கைகள் பாகம்
அடுத்த அத்யாயம் -16-வயிறு பாகம்
அடுத்த 2 அத்தியாயங்கள் -17-18-திருவடி பாகம்
இப்படி 18 அத்யாயம் -கண்ணனே உரு எடுத்தால் போல் ஸ்ரீ கீதை
இனி அவதரிக்க வேண்டாம்-நிம்மிதியாக சயனித்து உள்ளேன்

———-

ஸ்வ தர்ம ஜ்ஞ்ஞான வைராக்ய சாத்ய பக்த் யேக கோசர
நாராயண பரம் ப்ரஹ்ம கீதா சாஸ்திரே சமீரித– -1-

ஸ்வ தர்ம ஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர: –
தன் (வர்ணாச்ரம) தர்ம ரூபமாயிருக்கும் கர்ம யோகத்தாலும், ஞான யோகத்தாலும்,
இதர விஷயங்களில் பற்றின்மையாலும் உண்டாகும் பக்தி யொன்றுக்கே விஷயமாகுமவனாய்
பரம் ப்ரஹ்ம – பரப்ரஹ்மமான, நாராயண: – நாராயணன்,
கீதா ஶாஸ்த்ரே – கீதையாகிற ஶாஸ்திரத்தில்,
ஸமீரித: – அறிவிக்கப் பட்டுள்ளான்.

ஜீவனுக்கு உரிய தர்ம-கர்ம – ஞானங்களால் -மற்றும் வேறு விஷயங்களில்
பற்று இல்லாத நிலையாலும் பக்தி யோகம் கை கூடும் –
இப்படி பக்தி யோகத்துக்கு மட்டும் இலக்காகும் பர ப்ரஹ்மம் ஸ்ரீ மன் நாராயணன்
ஸ்ரீ பகவத் கீதையில் நன்றாக அருளிச் செய்யப் பட்டுள்ளன –

விசர்க்கம் இல்லாமல் இருந்தால் நாராயனைக் காட்டிலும் வேறே ஒருவர் சொல்ல இடம் உண்டே
இவன் ஏவ பரம் ப்ரஹ்மம் என்று இங்கு காட்டி அருளுகிறார்

———————————-

ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி சித்த் யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே — –2-

ஸுஸம்ஸ்க்ருதே – (சேஷத்வ ஜ்ஞாநம், இதர விஷயங்களில் பற்றின்மை முதலான புத்தி விஶேஷங்களாலே)
நன்கு அலங்கரிக்கப்பட்ட,
ஜ்ஞாந கர்மாத்மிகே நிஷ்டே – ஞான யோகமும், கர்ம யோகமும்,
யோக லக்ஷ்யே – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தை அடையும் பொருட்டு்ம்,
ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே – (அதற்குப் பின்) ஆத்மாநுபவத்தை அடையும் பொருட்டும்,
பூர்வ ஷட்கேந – (கீதையின்) முதல் ஆறு அத்தியாயங்களாலும்,
சோதிதே – விதிக்கப்பட்டன.

ஜீவாத்ம சாஷாத்காரம் –
யோகத்தை அடையும் விதத்தையும் –
ஆத்ம அனுபவத்தை அடையும் விதத்தையும்-
பகவத் விஷய ஞானம் இதர விஷய வைராக்யம் -இவற்றால்
அலங்கரிக்கப் பட்ட ஞான கர்ம யோகங்கள்
முதல் ஆறு அத்தியாயங்களில் அருளிச் செய்யப் பட்டன

———————————————————

மத்யமே பகவத் தத்தவ யாதாத்ம்ய அவாப்தி சித்தயே
ஜ்ஞான கர்மாபி நிர்வர்த்த்யோ பக்தி யோக பிரகீர்த்திதே –3-

மத்யமே – நடு ஆறு அத்தியாயங்களில்,
பகவத் தத்வ யாதாத்ம்ய அவாப்தி ஸித்தயே – பகவானாகிற பரதத்துவத்தின் உண்மையான அநுபவம்
உண்டாவதன் பொருட்டு,
ஜ்ஞாந கர்ம அபிநிர்வர்த்ய: – ஜ்ஞாநத்தோடு கூடிய கர்ம யோகத்தாலே உண்டாகும்,
பக்தி யோக: – பக்தியோகம்,
ப்ரகீர்த்தித: – சொல்லப்படுகிறது.

மத்திய ஆறு அத்தியாயங்களில் ஞான கர்ம யோகம் மூலம் உண்டாக வல்ல
பர ப்ரஹ்மத்தின் உண்மையான அனுபவம் பெற-ஞான கர்ம யோகங்களால் சாதிக்கப்படும் –
பக்தி யோகம் விரிவாக அருளப்படுகிறது –

ஞானம் த்யானம் உபாசனம்-மூலமே அடையலாம் – -உபநிஷத் சொல்லும்
தமேவ வித்வான் –அம்ருத இஹ பவதி -ஞான யோகத்தால்
ஸ்ரோதவ்யா கேட்டு மந்தவ்ய -நினைத்து -நிதித்யாஸவ்ய -தைல தாராவத் -தியானாதால்
உபாசனம் –ஞானம் வந்து -வேறு ஓன்று நினைவு இல்லாமல்
இங்கு பக்தி –உபாசனத்தில் அன்பு காதல் வேட்கை -கலந்து -வேறு வேறு நிலைகள் –
ஸ்நேஹம் பூர்வம் அநு த்யானம் -பக்தி என்றவாறு –
பீதி இல்லாமல் -பக்தியுடன் திரு – ஆராதனம் –
கேள்விகள் இல்லாமல் -அனுபவம் -இங்கு -கீழே ஞானத்துக்கு கேள்விகள் -தர்க்க ரீதியாக பதில்கள் உண்டு –
7–8–9-பக்தி யோகம் முடியும்–பக்தர் ஏற்றம் -பக்தி பெருமை -பற்றி சொல்லி கடைசியில்
ஒரே ஸ்லோகத்தால் பக்தி யோகம் கௌரவம் தோன்ற -பீடிகை கீழ் எல்லாம் –
மீண்டும் சொல்கிறேன் -கேளு ஆரம்பித்து –9-அத்யாயம் -சொல்ல வந்தால் தடுக்க வில்லையே
சொல்கிறேன் -என்பான் -மேகம் தானே வர்ஷிக்குமே – –

————————————————————————

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம்
கர்ம தீர் பக்திரித்யாதி பூர்வ சேஷோ அந்தி மோதித –4-

ப்ரதாந புருஷ வ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் – ஸுக்ஷ்மமான மூல ப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம்,
ஸர்வேஶ்வரன் ஆகியவற்றைப் பற்றிய விளக்கமும்,
கர்ம: – கர்ம யோகமும்,
தீ: – ஜ்ஞாந யோகமும்,
பக்தி: – பக்தி யோகமும்,
இத்யாதி: – இவற்றை அநுஷ்டிக்கும் முறை முதலானவையும், (ஆகிய இவற்றில்)
பூர்வ ஶேஷ: – முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை,
அந்திமோதித: – கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன.

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம் -மூல பிரகிருதி ஜீவன் -பிரக்ருதியி இருந்து உண்டாகும்
மஹான் போன்றவை -சர்வேஸ்வரன் -பற்றியும் –
கர்ம தீர் பக்திரித்யாதி -பூர்வ சேஷோஅந்தி மோதித –கர்ம ஞான பக்தி யோகங்களில் எஞ்சி உள்ளவற்றையும்
முதல் மூன்றால் -தத்வ ஞானம் விசாரம் — அடுத்த மூன்றால் அனுஷ்டானம் பண்ணும் முறைகள் –

சொல்லி முடித்ததும் பெரிய சோகம் -அர்ஜுனனுக்கு -ஆராய்ந்து பார் -சரியானதை பண்ணு
பொறுப்பை தலையில் போட்டான் –
கீழே ஒன்றும் தெரிதா சோகம் -இங்கு இவன் பெருமையை அறிந்த பின்பு வந்த சோகம் –
சரம ஸ்லோகம் சொல்லி -சோக நிவ்ருத்தி

—————————————————————-

கருமமும் ஞானமும் கொண்டு எழும் காதலுக்கு ஓர் இலக்கு என்று
அருமறை யுச்சியுள் ஆதரித்து ஓதும் அரும் பிரஹ்மம்
திருமகளோடு அரும் திருமால் என்று தான் உரைத்தான்
தருமம் உகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே –1-

கருமமும் ஞானமும் கொண்டு -முதல் ஷட்கத்தின் அர்த்தமும்
எழும் காதலுக்கு ஓர் இலக்கு என்று -இரண்டாம் ஷட்கத்தின் அர்த்தமும்
அருமறை யுச்சியுள் ஆதரித்து ஓதும் அரும் பிரஹ்மம்-சேதன அசேதனங்களில் வேறுபட்ட ப்ரஹ்மம் -மூன்றாம் ஷட்கத்தின் முற்பகுதியின் அர்த்தம்
திருமகளோடு அரும் திருமால் என்று தான் உரைத்தான் தருமம் உகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே –மூன்றாம் ஷட்கத்தின் பிற்பகுதியின் அர்த்தம் –

—————-

சுத்தி யார் நெஞ்சில் அத் தொல் கரும ஞானத்தால்
அத்தியாது ஒன்றை அறத்துறந்தோர்–பத்தியால்
நண்ணும் பரமனாம் நாரணனே நல் கீதைக்கு
எண்ணும் பொருளாம் இசைந்து –6—-முதல் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

தொல் கரும ஞானத்தால் – பழமையான உபாயங்களான கர்ம யோகத்தாலும், ஞான யோகத்தாலும்,
சுத்தி ஆர் தம் நெஞ்சில் – பரிசுத்தி யடைந்த தம் நெஞ்சில், ஒன்றை அ(ர்)த்தியாது –
(பகவத் கைங்கர்யம் தவிர) வேறொன்றை விரும்பாது,
அறத்துறந்தோர் – மிகவும் வைராக்யமுடையவர்கள்,
பத்தியால் – (முற் கூறிய கர்ம ஜ்ஞாந வைராக்யங்களாலே உண்டான) பக்தி யோகத்தாலே,
நண்ணும் – அடையும்,
பரமன் – பர ப்ரஹ்மமாகிற, நாரணனே – நாராயணனே,
நற் கீதைக்கு – மிகச் சிறந்த பகவத் கீதைக்கு,
இசைந்து – (அறிவாளிகள் அனைவரும்) அங்கீகரித்து,
எண்ணும் பொருளாம் – நினைக்கும் பொருளாவான்.

ஞானம் கர்ம நலம் சேர் நிலையதனை
யான மன யோகத்தார் யாய்நது இங்கு -ஊனம் அறத்
தன்னாருயிர் உணரும் தன்மையினை நல் கீதை
முன் ஓர் ஆறு ஒத்தும் ஓதும் முயன்று –7–இரண்டாம் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

ஞானம் கரும நலம் சேர் நிலையதனை – ஞான யோகத்தையும், கர்ம யோகத்தையும்,
ஆன மன யோகத்து – (அவற்றின் காரியம்) ஆன மானஸ ஸாக்ஷாத்காரத்தின் பொருட்டு,
ஆராய்ந்து – எண்ணி அநுஷ்டித்து,
இங்கு – இவ்வுலகிலேயே,
ஊனம் அற – குறைவில்லாமல்,
தன் ஆர் உயிர் உணரும் தன்மையினை – தன் ஆத்மாவை அநுபவிக்கும் தன்மையை,
நற்கீதை – மிகச் சிறந்த கீதையின்,
முன் ஆறு ஓத்து – முற்பட்ட ஆறு அத்தியாயங்கள்,
முயன்று ஓதும் – உறுதியுடன் ஓதும்.

உள்ளபடி இறையை உற்று எய்த முற்று அறம் சேர்
தெள்ளறிவில் வந்து திகழ் பத்தி –வெள்ள
நடையாடும் யோகத்தை நாதன் அருள் கீதை
இடை ஆறு ஒது ஓதும் எடுத்து –8–மூன்றாம் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

உள்ளபடி இறையை உற்று எய்த – பகவானை யுள்ளபடி அறிந்து அநுபவிப்பதன் பொருட்டு,
முற்று அறம் சேர் தெள் அறிவில் வந்து திகழ் – பரிபூர்ணமான கர்ம யோகத்தோடு கூடிய தெளிந்த ஞானத்தால் உண்டாகும்,
பத்தி வெள்ளம் நடையாடும் யோகத்தை – பக்தி வெள்ளம் பெருகி வரும் பக்தி யோகத்தை,
நாதன் அருள் கீதை – ஸர்வ ஸ்வாமியான பகவான் அருளும் கீதையின்,
இடை ஆறு ஓத்து – இடையிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
எடுத்து ஓதும் – அறியும்படி ஓதும்.

கருமம் அறிவு அன்பு இவற்றின் கண்ணார் தெளிவில்
வரும் சித் அசித் இறையோன் மாட்சி -யருமை யற
என் நாதன் அன்று தந்த எழில் கீதை வேதாந்தப்
பின்னாறு ஒது ஓதும் பெயர்ந்து –9-நான்காம் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

கருமம் அறிவு அன்பு இவற்றின் கண் ஆர் தெளிவில் வரும் – கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகிய
இவற்றினால் வரும் தெளிவினாலே அறியப்படும்,
சித்து அசித்து இறையோன் மாட்சி – சேதனம், (ஸூக்ஷ்ம,ஸ்தூல ரூபமான) அசேதனம், ஸர்வேச்வரன் ஆகியவற்றின் பெருமையை,
அருமை அற – சிரமம் இல்லாமல்,
என் நாதன் தந்த எழில் கீதை வேதாந்த – என் ஸ்வாமியான கண்ணன் அருளிய அழகிய கீதையாகிற உபநிஷத்தின்,
பின் ஆறு ஓத்து – பின் ஆறு அத்தியாயங்களும்,
பெயர்ந்து ஓதும் – (முன் சொல்லப்படாத அம்சங்களை) மறுபடியும் ஓதும்.

10. தானமுடன் றீர்த்தந் தவம் புரிதலை வேள்வி
யான முத லாறும் அறம் இறைவற்கே -நயந்த
தன்மையாற் றன்னகத்தைச் சங்கமபயன்றுறத்தல்
கன்ம யோகத்தின் கணக்கு.

தானமுடன் தீர்த்தம் தவம் புரிதல் ஐ வேள்வி ஆன்முதல் ஆறும் அறம் – தானமளித்தல், தீர்த்தமாடுதல், தவம் செய்தல்,
பஞ்ச மஹா யஜ்ஞங்களை அநுஷ்டித்தல் முதலான ஸாதனங்கள் கர்மம் எனப்படுகின்றன.
இறைவற்கே நயந்த தன்மையால் – (இக் கர்மங்களை) ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யமாகவே செய்யும் தன்மையால்,
சங்கம பயன் துறத்தல் – (இவற்றில்) பற்றையும், பலனையும் விடுவது,
கன்ம யோகத்தின் கணக்கு – கர்ம யோகத்தின் ஸ்வரூபமாகும்.

11. அற்ற முரைக்கி லதுகேண்மி னம்புயத்தாள்
கொற்றவனை நெஞ்சிற் குடியிருத்தி – மற்றொன்றை
யத்தியா தொன்று மவன்பா னலம்புனைதல்
பத்தியோ கத்தின் படி.

அற்றம் உரைக்கில் – உண்மையை உரக்கச் சொன்னால்,
அது கேண்மின் – அதைச் சொல்லுகிறேன் கேளுங்கள்;
அம்புயத்தாள் கொற்றவனை – லக்ஷ்மீ நாதனை,
நெஞ்சில் குடி யிருத்தி – நெஞ்சில் அமைத்து,
மற்றொன்றை அ(ர்)த்தியாது – வேறு பலன்களை விரும்பாமல்,
ஒன்றும் அவன் பால் – நம்மிடம் பொருந்தும் அவனிடம்,
நலம் புனைதல் – தியானம், அர்ச்சனம் முதலானவற்றைச் செய்வது,
பத்தி யோகத்தின் படி – பக்தி யோகத்தின் ஸ்வரூபமாகும்.

12. புலன் பொறியை நீக்கித் தம் புத்தியினிற் செம்மை
யலம் புரிவார்க் குற்ற வுயிர் மாட்சி – நலம் புனைந்து
மான யோகத் திறையை மன்னு நிலை காண்பதே
ஞான யோகத்தி னலம்.

புலன் பொறியை நீக்கி – விஷயங்களில் மேயாதபடி இந்திரியங்களைத் தவிர்த்து,
தம் புத்தியினில் – தம் நெஞ்சில்,
செம்மை அலம் புரிவார்க்கு – நேர்மைக் குணத்தை மிகுதியாக உடையவர்களுக்கு,
உற்ற – தோன்றும்,
உயிர் மாட்சி நலம் புனைந்து – உயிரின் பெருமையிலே நன்றாக வூன்றி,
மான யோகத்து – யோக முறைகளினாலே,
இறையை – (தேஹத்துக்கு) ஈச்வரனான ஜீவனுடைய,
மன்னு நிலை – நிலைக்கும் நிலையை,
காண்பதே – அனுபவித்தலே,
ஞான யோகத்தின் நலம் – ஞான யோகத்தின் ஸ்வரூபமாகும்.

13. இந்த வகை யமைந்த யோகங்க ளிம் மூன்றுந்
தந்த மிடையிற் றனித்தனிசே – ரந்தமிலா
வானந்த வின்பத் தணையநெறி யாகுமே
மானந் தருமியல்பால் வாய்ந்து.

ஆய்ந்து மானம் தரும் இயல்வால் – ஆராய்ந்து பார்த்த பிரமாணங்கள் சொல்லுகிறபடி,
இந்த வகை அமைந்த யோகங்கள் இம் மூன்றும் – இப்படிப்பட்ட தன்மைகளை யுடைய இந்த மூன்று யோகங்களும்,
தந்தம் இடையே தனித் தனி சேர் – ஒவ்வொரு யோகமும் மற்ற இரு யோகங்களோடு தனித் தனியாகச் சேர்ந்திருப்பதன் மூலம்,
அந்தம் இலா ஆனந்த இன்பத்து அணைய நெறி ஆகுமே – அந்தமில் பேரின்பத்தை அடைய உபாயங்களாகும்.

——————

ஸ்ரீ கீதா -1–ஸ்ரீ அர்ஜுனன் விஷாத யோகம் —

அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திரர் அவதரணம் க்ருதம்–5-

அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியா – தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும்,
உண்டான தர்மத்தில் அதர்ம புத்தியாலே,
ஆகுலம் – கலங்கி நிற்பவனாய்,
ப்ரபந்நம் – சரணமடைந்தவனான,
பார்த்தம் உத்திஶ்ய – அர்ஜுனனைக் குறித்து,
ஶாஸ்த்ரா வதரணம் க்ருதம் – கீதா சாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.

காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

வா -சமுச்சயம் -விகல்பம் அன்றோ -குணங்களில் ஆரோபித்து -அவை கார்யம் செய்யாதே –
ஆகவே அவன் இடம் ஆரோபித்து
ஈஸ்வரன் -நியமனம் -ஆகவே ஸர்வேஸ்வர பத பிரயோகம்

இரண்டாம் அத்தியாயத்தில் அருளிச் செய்தவற்றை விவரித்து மூன்றாம் அத்யாயம் தொடங்கி ஆறாம் அத்யாயம் வரை
ஆத்ம சாஷாத்காரம் சொல்லி மேல் பரமாத்மா சாஷாத்காரம் ஏழாம் அத்யாயம் தொடங்கி-
அகாரம் -திருமந்திரம் -த்வயம்-சரம ஸ்லோகம் -நம் சம்ப்ரதாயம் 20 சொற்கள் 65 அக்ஷரங்கள் தானே-

உகவை யடைந்த யுறவுடையார் பொரலுற்ற வந்நாள்
தகவுடன் அன்பு கரை புரளத் தருமத்தின் அளவில்
உளம் மிக அஞ்சி விழுந்து அடி சேர்ந்த விசயனுக்கொர்
நகையுடன் உண்மை உரைக்க அமைந்தனன் நாரணனே –2–

வேண்டிடத்தி லன்றி வெறுத்து நலமிரக்கம்
பூண்டவற்றைப் பொல்லாப் புலமென்று – மீன்டகன்று
சுற்றமது நோக்கியே சோகித்த தேர்விச
னுற்றமயல் சொல்லுமுத லோத்து.

வேண்டிடத்தில் அன்றி – தகாத இடத்தில்,
நலம் இரக்கம் பூண்டு – அன்பையையும் கருணையையும் கொண்டு,
வெறுத்து – (யுத்தம் முதலான ஸ்வதர்மங்களை) வெறுத்து,
அவற்றை – அந்த ஸ்வ தர்மங்களை,
பொல்லா புலம் என்று – தர்மம் அல்லாதவை என்று கூறி,
மீண்டு அகன்று – (யுத்தத்திலிருந்து) மீண்டு விலகிப் போய்,
சுற்றம் அது நோக்கியே – (பற்று வைக்கத் தகாத) அந்த உறவினர்களைப் பார்த்து,
சோகித்த – வருத்தமுற்ற,
தேர் விசயன் – தேரிலுள்ள அர்ஜுனன்,
உற்ற – அடைந்த,
மயல் – மயக்கத்தை,
முதல் ஓத்து சொல்லும் – முதல் அத்தியாயம் உரைக்கும்.

—————

ஸ்ரீ கீதா -2–ஸ்ரீ சாங்க்ய யோகம் —

இந்த அத்யாயம் -11 ஸ்லோகம் வரை முன்னுரை-ஆளவந்தார் -சாஸ்திரம் பிறக்க இந்த முன்னுரை
சோகம் சொல்லும் -முதல் அத்யாயம்-சோகம் போக்கும் மேல் ஸ்லோகங்கள்–வியாசர் –

12 -30 ஆத்மா நித்யம் சொல்லி
31 –கர்ம யோகம் –53 வரை
53–72 வரை ஞான யோகம் –
புருஷார்த்தம் பெருமை முதலில் சொல்லி அப்புறம் உபாயம் —

———————-

அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திர ரவதரணம் க்ருதம்—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–5-

காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

————–

நித்யாத்மா சங்க கர்மேஹா கோசரா சாங்க்ய யோகதீ
த்வதீய ஸ்திததீ லஷா ப்ரோக்தா தந் மோஹ சாந்தயே —ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்—6-

நித்ய ஆத்ம அஸங்க கர்ம ஈஹா கோசரா – நித்யமான ஆத்ம தத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டானமென்ன
இவற்றை விஷயமாகக் கொண்டதாய்,
ஸ்திததீ லக்ஷா – ஸ்திதப்ரஜ்ஞ தசையை லக்ஷியமாகக் கொண்டதான,
ஸாங்க்ய யோகதீ – ஆத்ம ஜ்ஞானமும், கர்ம யோகத்தைப் பற்றிய அறிவும்,
தந் மோஹ ஶாந்தயே – அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக,
த்விதீயே – இரண்டாம் அத்தியாயத்தில்,
ப்ரோக்தா – உபதேசிக்கப்படுகிறது.

——————–

உடலம் அழிந்திடும் உள் உயிர் ஓன்று அழியாது எனைப்போல்
விடுமது பற்று விடாத தடைத்த கிரிசைகளே
கடுக வுனக்கு உயிர் காட்டும் நினைவு அதனால் உளதாம்
விடும் மயல் என்று விசயணத் தேற்றினான் வித்தகனே –3-

இரண்டாம் அத்யாய சாரம் -ஜீவாத்மா நித்யம் – கர்ம பலனை அனுபவிக்க சரீரம் புகுந்து –
பலனைக் கருதாமல் கர்மங்களில் பற்று வைக்காமல் பகவத் கைங்கர்யமாக பண்ண வேண்டும்-
இத்தால் சர்வேஸ்வரனுக்கு சரீரமான ஆத்ம ஸ்வரூபத்தை இடைவிடால் சிந்தித்து -ஞான யோகம் –
தேரில் பாகனாய் நின்ற போதே ஆசார்யனாகவும் நின்று உபதேசித்த அதிசயச் செய்கையை நினைந்து வித்தகன் என்று அருளிச் செய்கிறார் –

மேலிரண்டா மோத்தால் விசயன் வெறுப்பகற்றக்
கோலி யுயிருடலின் கூற்றிவைகள் – காலியுடன்
போமாயன் மன்னுயிர்கள் பொன்றாமை முன்னகமா
மாமாயன் சொன்னான் மகிழ்ந்து.

காலியுடன் போம் ஆயன் – பசுக்களின் பின் போகும் இடையனும்,
மா மாயன் – பேராச்சிரியமான ஸ்வரூப ரூப குண விபூதிகளை யுடையவனுமான கண்ணன்,
விசயன் வெறுப்பு அகற்றக் கோலி – அர்ஜுனனுக்கு (யுத்தத்தினாலுண்டான) வெறுப்பை நீக்க நினைத்து,
மன் உயிரின் பொன்றாமை முன்னகமா – நிலை நிற்கும் ஆத்மாவின் ஆத்மாவின் அழியாமையை முன்னிட்டுக் கொண்டு,
உயிர் உடலின் கூற்றிவைகள் – உயிரினுடையவும், உடலினுடையவும் (அழியாமை, அழியும் தன்மை முதலான) இத்தன்மைகளை,
மேல் இரண்டாம் ஓத்தால் – அடுத்ததான இரண்டாமத்தியாயத் தால், மகிழ்ந்து சொன்னான் – மகிழ்ச்சியுடன் உபதேசித்தான்.

11-13: ப்ராப்யமான ஆத்மா நித்யமானது; ப்ராப்தி விரோதியான சரீரம் அநித்யமானது.
14-15: ப்ராப்திக்கு உபாயமான யுத்தம் முதலான கர்மங்களை அநுஷ்டிப்பதால் ஏற்படும் இன்ப துன்பம் முதலானவற்றைப்
பொறுத்துக் கொள்ளுகிறவனே மோக்ஷமடையலாம்.
16-25: உத்பத்தி, விநாஶம், பரிணாமம் முதலான தன்மைகள் எல்லாம் தேஹத்தினுடையவையே; ஆத்மாவுக்கு இவை கிடையாது.
26-28: தேஹத்தைக் காட்டிலும் வேறான ஆத்மா இல்லை என்று நினைத்தாலும், நேர்ந்தே தீர வேண்டிய ஜந்ம மரணங்களைக் குறித்து வருந்த இடமில்லை.
29: ஆத்ம நித்யத்வ ப்ரஸம்ஸை.
30: ஆத்ம நித்யத்வம் எல்லா ஆத்மாக்களுக்கும் பொதுவானது.
31-34: யுத்தம் இம்மை மறுமைகளில் நன்மையை விளைக்கும் தர்மமே யொழிய அதர்மமாகாது.
35-37: உறவினர் முதலான தகாதவிட அன்பாலே போர் புரியாமலிருப்பது தவறு.
(இதுவரையில் அஸ்தான ஸ்நேஹ காருண்யமும், தர்மத்தை அதர்மமென மயங்குவதும் போக்கடிக்கப்பட்டது.
இனி, தர்மவிஷயமான உபதேசம்.)

38: மோக்ஷமடைய விரும்பும் க்ஷத்ரியன் இன்ப துன்பங்கள் முதலானவற்றில் ஸம புத்தியுடன் போரிட வேண்டும்.
39-52: பலனில் பற்றற்று, அகர்த்ருத்வாநுஸந்தானத்துடன் (கர்த்ருத்வ, மமதா, பல த்யாகங்கள்) தனக்குரிய கர்மங்களை
அநுஷ்டிப்பதாகிற கர்ம யோகம் மோக் ஷஸாதனமாகும்; பலனில் பற்றுடன் அனுஷ்டிக்கும் கர்மம் தாழ்ந்தது.
53: முற்கூறிய கர்ம யோகத்தின் பலம் ஞான யோகம். ஞான யோகத்தின் பலம் யோகம் எனப்படும் ஆத்ம ஸாக்ஷாத்காரம்.
54-58: ஸ்தித ப்ரஜ்ஞநிலை எனப்படும் ஜ்ஞான யோகத்தின் நான்கு நிலைகளின் விவரணம்.
59-68: ஞானயோகம் அடைய அரியது. திவ்ய மங்கள விக்ரஹத்தோடு கூடிய பரம புருஷனிடம் நெஞ்சு செலுத்துகிறவனுக்கே
அது ஸித்திக்கும். அப்படிச் செலுத்தாதவனுக்கு ஸித்திக்காது.
69-71: ஞான யோகத்தின் பலமான ஆத்ம தர்சனத்தின் பெருமையும், அதை அடையும் மூன்று விதமான அதிகாரிகளும்.
72: அத்தியாயத்தின் ஸாரார்த்தம்.

——————-

ஸ்ரீ கீதா  – 3-ஸ்ரீ கர்ம யோகம் –

அசக்த்யா லோக ரஷயை குணேஷ் வாரோப்ய கர்த்ருதாம்
சர்வேஸ்வரே வா ந்யஸ் யோகதா த்ருதீயே கர்ம கார்யதா –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–7-

லோக ரக்ஷாயை – (ஜ்ஞாந யோகத்தில் அதிகாரமில்லாத) ஜனங்களைக் காப்பதற்காக,
குணேஷு – ஸத்வ ரஜஸ் தமோ குணங்களில்,
கர்த்ருதாம் ஆரோப்ய – தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை அநுஸந்தித்து,
ஸர்வேஶ்வரே வா ந்யஸ்ய – அந்த குணங்கள் முதலான அனைத்துக்கும் ஈஶ்வரனான பகவானிடத்தில்
அக் கர்த்ருத்வத்தைச் சேர்த்து விட்டு,
அஸக்த்யா – மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல்,
கர்ம கார்யதா – கர்மங்களைச் செய்ய வேண்டுமென்பது,
த்ருதீயே உக்தா – மூன்றாமத்தியாயத்தில் கூறப்பட்டது.

—————-

மூன்றாமோத் தாகுமிது முன்னுரைத்த புந்தியினும்
ஏன்றா வது கரும மென்பதனா – லான்றமைந்து
தன் கருமஞ் செய்யுமதே தக்கதென மிக்குரைக்கும்
வன் கருமந் தீரும் வகை.

முன் உரைத்த புந்தியினும் – முன் அத்தியாயத்தில் கூறப்பட்ட ஞான யோகத்தைக் காட்டிலும்,
ஏன்று ஆவது கருமம் – (அனைவரும்) ஏற்றுக் கொள்ளத் தக்கதாயிருப்பது கரும யோகமே,
என்பதனால் – என்னும் காரணத்தினால்,
ஆன்று அமைந்து – மற்ற பலன்களில் பற்றில்லாமல் இருந்து கொண்டு, கர்த்ருத்வ த்யாகத்தையும் செய்து கொண்டு,
தன் கருமம் செய்யுமதே – தன்னுடைய வர்ணாச்ரம தர்மங்களைச் செய்வதே,
வன் கருமம் தீரும் வகை – வலியதான புண்ய பாபரூபமான கர்மங்களைப் போக்கும் வழிகளுள்,
தக்கது – (அனைவருக்கும்) தக்கது,
என – என்று,
மூன்றாம் ஓத்தாகும் இது – இந்த மூன்றாம் அத்தியாயம்,
மிக்கு உரைக்கும் – உறுதியுடன் கூறும்.

————

1-2 ப்ரவ்ருத்தி மார்க்கமான கர்ம யோகம் ஆத்ம தர்ஶனத்துக்கு நேரே காரணமன்று; நிவ்ருத்தி மார்க்கமான ஜ்ஞாந யோகமே அதற்கு நேரே காரணம். இப்படி ஞான யோகமே சிறந்ததாயிருக்க கர்ம யோகத்தில் ஏன் என்னை ஏவுகிறாய் என்று அர்ஜுனன் கேட்கிறான்.

3-8 எளிதாகச் செய்யத் தக்கதாயிருக்கை, நழுவ இடமில்லாததா யிருக்கை, விடமுடியாததா யிருக்கை முதலான காரணங்களால் கர்ம யோகம் ஜ்ஞாந யோகத்தைக் காட்டிலும் சிறந்தது.

9-16 பகவதாரதனமான யஜ்ஞத்திற்கு உறுப்பாகாத கர்மங்களே இவனை ஸம்ஸாரத்தில் கட்டுப் படுத்தும்; அதற்கு உறுப்பான கர்மங்கள் புருஷார்த்த ஸாதனமாகுமே யொழிய இவனைக் கட்டுப் படுத்தாது.

17-19 ஆத்ம தர்ஶனம் கைவரப் பெற்ற முக்தனான கைவல்ய நிஷ்டனே வர்ணாஶ்ரம தர்மங்களைச் செய்யாமலிருக்கலாமாகையால், அப்படி முக்தனல்லாத நீ கர்ம யோகத்தை அனுஷ்டித்தே ஆத்ம தர்ஶனத்தைப் பெற வேணும்.

20 ஜனகர் முதலானோர் கர்ம யோகத்தாலேயே ஆத்ம தர்ஶனத்தைப் பெற்றனர்.

21-26 சான்றோனாகப் புகழ் பெற்றவன், தான் ஜ்ஞான யோகாதிகாரியாயினும் அதில் அதில் அதிகாரமில்லாதவர்களை ரக்ஷிப்பதற்காகவும், அவர்களைக் கலக்குவதன் மூலம் தனக்குண்டாகும் அநர்த்தத்தைத் தவிர்ப்பதற்காகவும் கர்ம யோகத்தையே அநுஷ்டிக்க வேண்டும்.

27-30 ‘ஸர்வேஶ்வரனால் தூண்டப்பட்டு, ஸத்வாதி குணங்களுக்கு வசப்பட்டவனாகவே நான் கர்மம் செய்கிறேன்’ என்னும் அகர்த்ருத்வாநுஸந்தானத்தோடு கூடவே கர்மங்களைச் செய்ய வேண்டும். இப்படி கர்ம யோகத்தில் ஞானம் கலந்திருக்கையால், ஞான யோகத்தை யிடையிடாமல் அதுவே நேரே ஆத்ம தர்ஶனத்துக்கு உபாயமாகும். ஆகையால் அது ஞான யோகத்தை விடத் தாழ்ந்ததல்ல.

31-32 கர்ம யோகத்தை அநுஷ்டிப்பாரின் சிறப்பு; அதை அநுஷ்டியாதாரின் தாழ்வு.

33-43 எத்தகைய சிறந்த ஞாந யோகாதிகாரியையும், அநாதி வாஸநையும் அது காரணமாக வரும் காம க்ரோதங்களும் ஜ்ஞாந யோகத்தினின்றும் நழுவச் செய்துவிடும். அநாதி வாஸனை முதலானவற்றுக்கு அடியான பாபங்களைப் போக்கும் கர்ம யோகத்தில் ஈடுபடுவதன் மூலமே இவற்றை வெல்ல முடியும். ஆகையால் நழுவுதற்கிடமுள்ளதாய், செயற்கரியதான ஜ்ஞான யோகத்தைக் காட்டிலும், நழுவுதற்கிடமற்றதாய், செயற்கெளியதான கர்ம யோகமே ஜ்ஞாந யோகாதிகாரியோடு, கர்மயோகாதிகாரியோடு வாசியற அனைவராலும் கைக்கொள்ளத் தக்கது.

————-

ஸ்ரீ கீதா-4—-ஸ்ரீ ஞான யோகம்-(ஸ்ரீ கர்ம யோகத்துக்குள் உள்ள ஞான பாகம் – )

பிரசங்காத் ஸ்வ ஸ்வபாவ உக்தி-கர்மணோ அகர்ம அஸ்ய ச -பேதா– ஜ்ஞாநஸ்ய மஹாத்ம்யம்–
சதுர்த்தாத்யாய உச்யதே– ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -8–

பிரசங்காத் -நினைவுக்கு வந்தமையால்-உபேஷா அநர்ஹத்வம் -புறக்கணிக்கத் தகாத சங்கதி –
ஸ்வ ஸ்வபாவ உக்தி-அவதார நிலையில் உள்ள தனது ஸ்வ பாவம்
கர்மணோ -கர்ம யோகம்
அகர்மதா -கர்ம யோகத்தில் வேறுபட்ட யோகமான ஞான யோகமே ஆகுதலும்
அஸ்ய ச -இந்தக் கர்ம யோகத்தின்
பேதா-: -உட் பிரிவுகளும்
ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் -அதில் அடங்கிய ஞானத்தின் பெருமையும்
சதுர்த்தா3த்4யாய உச்யவத –நான்காம் அத்தியாயத்தில் சொல்லப் படுகின்றன –

ராமானுஜ பாஷ்யம் -இதில் ஆறு விஷயங்களும் அடங்கும் என்பார்-

கர்ம யோகத்தின் பிரமாணிகத்வமும் -கர்ம யோகத்தின் ஸ்வரூபமும் -இந்த நான்குக்குள் நடுங்கும்

அதே கர்ம யோகத்தினுடைய–பரம்பரையா வந்த -மாறுதல் இல்லாத -அதே கர்ம யோகத்தின் -அஸ்யைவ கர்மா யோகஸ்ய ஞான பாகம்

பிறவாமை தந்திடத் தானே பிறக்கும் பெருமைகளும்
துறவாக் கிரிசைகள் தூ மதி தன்னால் துலங்குகையும்
இறவா உயிர் நல் நிலை கண்டிடும் உலகின் நிலையும்
மறை வாழும் மாயவன் நேயனுக்குக்கன்று அறிவித்தனனே –5-

நான்காம் அத்யாய சாரம் –
பிறவாமை தந்திடத் தானே பிறக்கும் பெருமைகளும் -திருவவதார ரகச்யங்களும்
துறவாக் கிரிசைகள் தூ மதி தன்னால் துலங்குகையும்-விட முடியாத கர்மங்கள் பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றிய ஜ்ஞானத்தை
தம்முள் அடக்கிக் கொண்டு இருப்பதால் ஜ்ஞான யோகமாக பிரசாத்தித்தலையும்-
கிரிசைகள் பன்மை -தேவாத ஆராதனம் -இந்த்ரியங்களை அடக்குதல் -ப்ராணா யாமம் -யாகம் தானம் ஹோமம் தவம்
புண்ய தீர்த்த ஸ்நானம் -புண்ய ஷேத்திர யாத்ரை -வேதம் கற்று கற்பித்தல் போல்வன
இறவா உயிர் நல் நிலை கண்டிடும் உலகின் நிலையும் -அழிவற்ற ஆத்மாவின் நல்ல ஸ்வ பாவத்தை அறிந்த அதிகாரியின் மேன்மையையும்
மறை வாழும் மாயவன் நேயனுக்குக்கன்று அறிவித்தனனே-வேதத்தால் போற்றப்படும் ஸ்ரீ கண்ணன்
தனது நண்பனுக்கு பாரத போர் அன்று உபதேசித்து அருளினான் –

நாரா யணன்கீதை நாலாமோத் திற்றனது
சீரார் பிறவிச் சிறப்புடனே – யேராரும்
யோகத் துடன்கரும முற்றியலு மாறுரைக்கு
மேகப் பலபரிசா வேய்ந்து.

நாராயணன் – (கண்‍ணனாய் அவதரித்த) நாராயணன்,
கீதை நாலாமோத்தில் – கீதையின் நாலாம் அத்தியாயத்தில்,
தனது சீரார் பிறவிச் சிறப்புடனே – பெருமை மிகுந்த தன் அவதாரச் சிறப்போடு கூட,
ஏராரும் யோகத்துடன் – சிறப்புற்ற ஞானத்தோடு,
ஏகம் கருமம் – ஒன்றான கருமம்,
பலபரிசா ஏய்ந்து – பல வகைகளாக இருந்துகொண்டு,
முற்று இயலும் ஆறு – (ஜ்ஞான யோகத்தை இடையிடாமலே) பரிபூர்ண ஸாதனமாயிருக்கும் வகையை,
உரைக்கும் – உபதேசிக்கிறான்.

1-அவதார ரஹஸ்யம் (-4-11-)

1-அவதார சத்வத்வம் —
2-அஜகத் ஸ்வஸ் ஸ்வபாவத்வம் —
3-சுத்த சத்வ மயத்வஞ்ச –
4–ஸூ இச்சா மாத்ரா நிதானதா
5-தர்ம கிலானோ சமுதயா –
6–சாது சம்ரக்ஷணர்த்ததா —

2-கர்ம யோகத்துக்குள் ஞான யோகம் (12-24)-

12-17- கர்ம யோகத்துக்குள் ஞான ஆகாரம் -பீடிகை ஆறு ஸ்லோகங்கள் –இதில் முதல் நான்கும் ஒரு வகை-கர்ம யோகம் செய்யும் அதிகாரி பற்றியும் –

அடுத்த இரண்டும் கர்ம யோகத்தின் பெருமையை நேரடியாக அருளிச் செய்கிறார்-

ஸ்லோகங்கள் 18-19-20- ஒரு பிரகரணம் -மேல் ஸ்லோகங்கள் 21-22-23- ஒரு பிரகரணம்

24- ஸ்லோகத்தால் -கர்மங்களில் உள்ள அனைத்துமே ப்ரஹ்மாத்மகமே என்கிற ஞானத்தால் –அனைத்தும் ப்ரஹ்ம கார்யம் என்ற எண்ணத்தால் -ஞானாகாரம் என்று பார்க்கலாம் என்கிறார்-

3-அஸ்ய ச -பேதா-13-வித கர்ம யோகங்கள் அருளிச் செய்கிறான் -பேதங்கள் –(25-33-)

4-ஜ்ஞாநஸ்ய மஹாத்ம்யம்-(33-42)

————–

ஸ்ரீ கீதா -5—-ஸ்ரீ கர்ம சந்யாச யோகம் —

கர்ம யோகச்ய சௌகர்யம் சைக்ர்யம் காஸ்சன தத் விதா
ப்ரஹ்ம ஜ்ஞான பிரகாரச்ச பஞ்சமத்யாய உச்யதே -ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -9-

1–கர்ம யோகச்ய சௌகர்யம்-எளிதாக பண்ணலாமே -ஸூகரம் -மூன்றாவது அத்தியாயத்தில் சொன்னதை மீண்டும் –
2–சைக்ர்யம் காஸ்சன தத்விதா -சீக்கிரமாக பலத்தைக் கொடுக்கும் -இரண்டாவது ஏற்றம் –ஞான யோகம் குறைபாடு –
விட்ட இடத்தில் ஞான யோகம் தொடர முடியாதே -கர்ம யோகம் அப்படி இல்லையே –
3–தத்விதா -அங்கங்கள் விதிக்கிறான்
4-ப்ரஹ்ம ஜ்ஞான பிரகாரச்ச –தன்னைப் போலே பிறரை நினைக்க-சம தர்சனம் –
அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் -ஒரே ஜாதி -சேஷ பூதன்-ஒன்றே –

கண்டு எளிதாம் கருமம் உயிர் காட்டக் கடுகுதலும்
மண்டி யதன் படியில் மனம் கொள்ளும் வரிசைகளும்
கண்டு அறியா உயிரைக் காணலுற்ற நினைவுகளும்
வண் துவரேசன் இயம்பினன் வாசவன் மைந்தனுக்கே –6-

ஐந்தாம் அத்யாய சாரம் –
கண்டு எளிதாம் கருமம் சாஸ்த்ரங்களைக் கொண்டு அறிந்து அனுஷ்டிக்க ஸூ லாபமான கர்ம யோகம்
ஞான யோகம் போலே கடினம் இல்லையே கர்ம யோகம் -செய்யச் செய்ய ரஜஸ் தமஸ் குணங்கள் நீங்கி ஆசை த்வேஷம் ஒழிந்து மனம் தெளியும்
மனம் இந்த்ரியங்கள் தம் வசப்பட ஆத்மா சாஷாத்கார ஞானம் உண்டாகும்
உயிர் காட்டக் கடுகுதலும் –ஆத்மாவைக் காட்டுவதற்கு விரைதலும்
மண்டி யதன் படியில்-அந்த கர்மயோக பிரகாரன்களிலே ஈடுபட்டு
மனம் கொள்ளும் வரிசைகளும் -மனத்தில் நினைக்க வேண்டிய பிரகாரங்களும்
கண்டு அறியா உயிரைக் -நேரில் கண்டு அறிய முடியாத ஜீவாத்மாவின் ஸ்வ ரூபத்தை
காணலுற்ற நினைவுகளும் -எங்கும் ஞான ஸ்வரூபமாக பார்க்கும் படியான பற்பக்வம் அடைந்த ஞானங்களும்
வண் துவரேசன் இயம்பினன் -உபதேசித்து அருளினான் –வாசவன் மைந்தனுக்கே -இந்த்ரன் புத்ரனான அர்ஜுனனுக்கு –

அண்ண லருள்கீதை யஞ்சாமோத் துக்கருமந்
திண்ண முனர்வதனைச் சேர்ந்தமைந்த – வண்ணமது
சிந்தை தெளியத் தெளிவுற் றுரைக்குமதே
முந்தை மறைநெறியை மூண்டு.

அண்ணல் -ஸ்வாமியாகிற கண்ணன்,
அருள் – அருளிச் செய்த,
கீதை – கீதாஶாஸ்திரத்தின்,
அஞ்சாம் ஓத்து – ஐந்தாம் அத்தியாயம்,
முந்தை மறை நெறியை மூண்டு – பழையதான வேதமார்க்கத்தைப் பின்பற்றி,
கருமம் – கர்ம யோகம்,
உணர்வு அதனை திண்ணம் சேர்ந்து அமைந்த வண்ணம் அது – “நான் கர்த்தாவல்லன்” என்னும் அறிவோடு
உறுதியாகச் சேர்ந்து பொருந்தியிருக்கும் தன்மையை,
சிந்தை தெளிய – (அர்ஜுனனுடைய) மனம் தெளிவடையும்படியாக, தெளிவுற்று உரைக்குமதே – மிக விளக்கமாகச் சொல்லுவதாகும்.

1 கர்மஜ்ஞானயோகங்களில் எது சிறந்தது? என்று அர்ஜுனன் கேள்வி.
2-7 செயற்கெளிமையாலும், விரைவில் பலனளிக்கும் தன்மையாலும் கர்மயோகமே ஜ்ஞான யோகத்தைக் காட்டிலும் சிறந்தது என்று கண்ணனின் பதில்.
8-11 அகர்த்ருத்வாநுஸந்தானத்தில் ஒரு வகை – இந்த்ரிய ப்ராணன்களில் கர்த்ருத்வத்தை அந்ஸந்திக்கை.
12 பல த்யாகம் மோக்ஷஹேது.
13 சரீரத்தில் கர்த்ருத்வத்தை அநுஸந்திக்கை. (அகர்த்வாநுஸந்தாதனத்தில் மற்றொரு வகை.)
14-15 ஆத்மாவுக்குக் கர்த்ருத்வமின்மை. ப்ரக்ருதி வாஸனையின் கர்த்ருத்வம். (அகர்த்வாநுஸந்தாதனத்தில் மற்றொரு வகை.)
16 அகர்த்ருதாநுஸந்தானத்தை உள்ளடக்கிய ஆத்மவிஷயஜ்ஞாநத்தின் பெருமை.
17 ஆத்மாநுபவமாகிற மாடத்திற்கு ஏறும் படிக்கட்டாயிருக்கும் அறிவின் படிகளின் வரிசை.
1. ஆத்மதர்ஶனம் வேண்டும் என்ற உறுதியுடையவர்கள்
2. ஆத்மதர்ஶனத்தை குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்கள்.
3. அதற்காக முயல்பவர்கள்
4. ஆத்மதர்ஶனமே வாழ்க்கையின் பயனாக நினைப்பவர்கள்.
இவர்கள் கர்மவாஸனை நீங்கப் பெற்று மேற்கூறியபடி ஆத்மதர்ஶனத்தைப் பெறுவர்.
18-19 ஆத்மாக்கள் அனைவரும்ஜ்ஞானைகாகாரத்தால் ஸமர் என்னும் அறிவு – ஆத்மஸாக்ஷாத்காரத்தை மறுமையில் விளைப்பது;
இம்மையிலும் மேலான துக்கநிவ்ருத்தியை அளிப்பது.
20-25 ஸம தர்ஶந நிலை ஏற்பட உதவும் ஆறு அநுஷ்டாந முறைகள்.
1. ஆசார்ய உபதேசத்தாலே, ஆத்மாவைப் பற்றியஜ்ஞானத்தைப் பெறுதல்.
2. சரீரத்தை வேறுபடுத்தி ஆத்மாவை எண்ணி மகிழ்தல்.
3. இன்பத்தில் மகிழாமலும் துன்பத்தில் வருத்தமுறாமலும்,

இவை ப்ரக்ருதியின் செயல்களென எண்ணி யிருத்தல்.
4. மனம்ப்ரக்ருதி விஷயங்களினின்றும் நீங்கப்பெற்று ஆத்மாவை அநுபவித்து மகிழ்தல்.
5. ப்ரக்ருதியினால் ஏற்படும் இன்பங்கள் நிலையற்றவையாதலால் துன்பத்திலேயே முடிவுறும்.
6. காமக்ரோதங்களை வென்றால் ஆத்மாநுபவம் இம்மையிலேயே சிறிது ஏற்படும். சரீரத்தை விட்டவுடன் முழுமை பெறும்.
26 ஆத்ம ஸமதர்ஶனம் கைவந்தோர் அனைத்துயிர்களிடமும் அன்பு பாராட்டி, அவற்றின் உஜ்ஜீவனத்துக்கு பாடுபடுவர்.
இத்தகைய ஸமதர்ஶனத்தால் ஆத்மாநுபவம் விரைவில் ஏற்படும்.
27-28 நித்ய நைமித்திக கர்மாநுஷ்டாநம் யோகத்தில் (த்யானத்தில்) நிறைவுறும்.
29 ஸர்வலோக ஸர்வேஶ்வரன் என்று கண்ணனை அறிந்து அவனுக்கு ஆராதனமாக கர்மயோகத்தை செய்வது எளிது.

————–

ஸ்ரீ கீதா-6— ஸ்ரீ யோக அப்பியாச யோகம் –(ஸ்ரீ அத்யாத்ம யோகம்:)

யோகாப்யாப்ஸ விதிர் யோகீ சதுர்த்தா யோக சாதனம்
யோக சித்திஸ் ஸ்வ யோகஸ்ய பாரம்யம் ஷஷ்ட உச்யத –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–10-

1–யோகாப்யாப்ஸ விதி -முறைகள் -6-28-வரை
2–யோகீ சதுர்த்தா –நான்கு வகை யோகீகள் -6-29–6-32-வரை
3-யோக சாதனம் -சாதனங்கள் -அப்பியாசம் -வைராக்யம் இவையே சாதனங்கள் –6-33–6-36
4–யோக சித்திஸ் -தடை வந்தாலும் சித்திக்கும் -6-37-6-46
5–ஸ்வ யோகஸ்ய பாரம்யம் –அடுத்த அத்யாயம் முன்னுரை போலே –
பக்தி யோகமே உயர்ந்தது -46–47-ஸ்லோகங்களில் சொல்லி –
பக்குவம் -ஏற்பட்ட பின்பு -விஷய கௌரவம் மறைத்தே தானே அருளிச் செய்ய வேன்டும் –

யோக முயற்சியும் யோகில் சமநிலை நால் வகையும்
யோகின் உபாயமும் யோகுதனால் வரும் பேறுகளும்
யோகு தனில் தன் நிறமுடை யோகு தன் முக்கியமும்
நாகணை யோகி நவின்றனன் முடி வீரனுக்கே –7-

ஆறாம் அத்யாய சாரம் –
பக்தி யோக விளக்கம் உபதேசித்து அருளினான் –

யோக விதியோகி யோகத்து நாலுவகை
யோகமது மேலா வுயர்நிலைமை – மேகநிக
ரண்ண லருள்கீதை யாறாமோத் தின்பொருளாத்
திண்ண முடிந்ததிது சேர்ந்து.

யோக விதி – யோகமாகிற ஆத்மஸாக்ஷாத்காரத்தைப் பழகும் முறையும்,
யோகி யோகத்து நாலு வகை – அதைப் பழகும் யோகியரிலும், அந்த யோகத்திலும் உள்ள நாலு பிரிவும்,
யோகம் அது – ஸு ப்ரஸித்தமான பக்தி யோகம்,
மேலா உயர் நிலைமை – எல்லா யோகங்களைக் காட்டிலும் மேலாக உயர்ந்து நிற்கும் நிலையும்,
இது சேர்ந்து – ஆகிய இவ்வர்த்தங்கள் சேர்ந்து,
மேகம் நிகர் அண்ணல் அருள் கீதை ஆறாம் ஓத்தின் பொருளா திண்ணம் முடிந்தது – மேகத்தை ஒத்த ஸ்வாமியான
கண்ணன் அருளிய கீதையின் ஆறாம் அத்தியாயத்தின் பொருளாக அறுதியிடப்பட்டு நிறைவடைந்தது.

1-6 ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்திற்கு, ஜ்ஞானத்தை உள்ளடக்கிய கர்மயோகமே காரணம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அக்கர்மயோகத்தை விவரித்தல்.
7-9 யோகாப்யாஸ விதியின் (யோகமாகிற ஆத்மஸாக்ஷாத்காரத்தை பழகும் முறையின்) தொடக்க நிலை.
10-28 யோகாப்யாஸவிதி விவரணம்.
10-12 பாஹ்ய உபகரண நியமம்.
13-14 அந்தரங்க உபகரணங்களான ஶரீர மநஸ்ஸுக்களின் நியமம்.
15 ஶுபாஶ்ரயமான பகவத் விக்ரஹத்தைச் சிந்திப்பது யோகோபகரணங்களில் முக்யமானது.
16-17 மற்றும் சில நியமங்கள் – உண்பது, உழைப்பு, தூக்கம் ஆகியவற்றில் அளவுடன் இருத்தல்.
18 யோகயோக்ய தஶையின் விளக்கம் – ஆத்மாஜ்ஞானத்தின் நன்மையை அறிந்ததால் ஏற்படும் மனவமைதி யோக்யதை.
20-23 யோகாப்யாஸம் மிகச் சிறந்த புருஷார்த்தம்.
24-27 யோகாப்யாஸத்திற்கு உறுப்பான மமகார பரித்யாகம் முதலானவை.
28 ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்தின் பலம்.

29-32 நாலுவகைப்பட்ட யோகிகள்.
1. எல்லா வுயிரிலும் ஆத்மாவைக் காணுதல்
2. எல்லாவற்றிலும் பகவானைக் காணுதல்
3. அந்தர்யாமியைக் காணுதல்
4. ஸுக துக்கங்களிலிருந்து விடுபடுதல்.

33-34 யோக ஸாதனமான அப்யாஸம் (ஆத்மசிந்தனம்), வைராக்யம் முதலானவற்றைத் தெளிவாக அறிவதற்காக அர்ஜுனனின் கேள்வி.
35-36 யோக ஸாதனம் – பகவதாராதனமான அகர்த்ருத்வாநுஸந்தாநத்துடன் கூடிய கர்மாநுஷ்டானத்தாலே மனஶ் ஶுத்தி ஏற்படும். அதன் பிறகு யோகம் ஸித்திக்கும்.
37-39 யோக மாஹாத்ம்யத்தை அறிவதற்காக ‘யோகப்ரஷ்டனுக்கு போகமோக்ஷங்கள் இரண்டுமே கிடைக்காதோ’ என்று அர்ஜுனனின் கேள்வி.
40-45 யோகப்ரஷ்டனுக்கு இரண்டுமே காலக்ரமத்தில் கிடைக்கும் என்று கண்ணனின் பதில். (யோகமாஹாத்ம்யம்)
46 தபஸ்விகள் முதலானோரைக்காட்டிலும் ஜீவாத்மயோகியின் சிறப்பு.
47 தபஸ்விகள் முதலானோர், ஜீவாத்மயோகி ஆகிய அனைவரைக் காட்டிலும் பரமாத்மோபாஸகனின் சிறப்பு (பக்தியோகமாஹாத்ம்யம்).

முதல் ஷட்கத்தின் ஸாரம்:
சோக முயிருணர்வு தொல்கருமச் செய்தியதி
லாகு மறிவுயர்த்தி யார்வகைகள் – யோகமுயிர்
காட்சி யிவற்றின் கருத்துமுத லாறோத்தின்
மாட்சிமை சொல்லும் வகை.

சோகம் – (அர்ஜுனனுடைய) சோகம்,
உயிர் உணர்வு – ஜீவாத்மதத்துவத்தைப் பற்றிய அறிவு,
தொல் கருமச் செய்தி – பழைமையான கர்மயோகாநுஷ்டானம்,
அதில் ஆகும் அறிவுயர்த்தி – அக்கர்மயோகத்தில் அடங்கிய அறிவின் சிறப்பு.
(அதில்) ஆர் வகைகள் – அக்கர்மயோகத்தில் உள்ள சில வகைகள்,
உயிர் காட்சி யோகம் – ஆத்மாவைக் காண்பதாகிற யோகம்,
இவற்றின் கருத்து – ஆகிய இவ்வாறு அர்த்தங்களின் விளக்கமும்,
முதல் ஆறு ஓத்தின் – (முறையே) முதல் ஆறு அத்தியாயங்களின்,
மாட்சிமை சொல்லும் வகை – முக்கியமான அர்த்தங்களைச் சொல்லும் வகையாகும்.

பூர்வமத்யமஷட்கார்த்த ஸங்கதி:
முன்னாறு நல்லுணர்வின் முற்றுங் கருமத்தாற்
றன்னா ருயிருணர்வு தானுரைத்துப் – பின்னார்வத்
தேறு மனத்தா லிறைவன்பா லன்புசெயல்
கூறு நடுவாறுங் கூர்ந்து

முதல் ஆறு – முதல் ஷட்கத்தினால் (ஆறு அத்தியாயங்களால்),
நல்லுணர்வின் முற்றும் கருமத்தால் – (ஆத்மாவைப் பற்றிய) உண்மையறிவினால் நிறைவடையும் கர்மயோகத்தால்,
தன் ஆர் உயிர் உணர்வு தான் உரைத்து – தனது அருமையான ஜீவாத்மஸ்வரூபத்தின் ஸாக்ஷாத்காரம் உண்டாவதாகக் கூறி,
ஆர்வம் தேறு மனத்தால் – அன்பு நிறைந்த நெஞ்சினால்,
இறைவன் பால் அன்பு செயல் – ஸர்வேஶ்வரனிடம் பக்தி செலுத்துவதாகிற பக்தி யோகத்தை,
நடு ஆறும் – (கீதையின்) நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்களும், கூர்ந்து கூறும் – விரிவாக விளக்கும்.

· அங்கம், ப்ராப்தா ஆகிய இரண்டையும் முதல் ஷட்கத்தில் கூறிய பின்
அங்கி, ப்ராப்யம் ஆகிய இரண்டையும் மத்யமஷட்கத்தில் கூறுகிறது.
· ஞானாம்ஶத்தை உள்ளடக்கிய கர்மயோகத்தை அங்கமாகக் கொண்டு பக்தியோகம் அங்கியாகிறது.
· ஜீவாத்மாவான ப்ராப்தாவுக்கு பரமாத்மா பரமப்ராப்யம்.

———————————————————————————

ஸ்ரீ கீதா  -7— –ஸ்ரீ பரம ஹம்ஸ விஞ்ஞான யோகம் —

ஸ்வ யாதாத்ம்யம் ப்ரக்ருத்யாஸ்ய திரோதிஸ் சரணாகதி
பக்த பேத ப்ரபுத் தஸ்ய ஸ்ரைஷ்ட்யம் சப்தம உச்யதே -11-

1–ஸ்வ யாதாத்ம்யம்-தன்னுடைய இயற்கையான தன்மை -பெருமைகள் –12-ஸ்லோகங்கள் வரை
2–ப்ரக்ருத்யாஸ்ய திரோதிஸ்–மாயை -பிரகிருதி -தடுப்பு சுவர் -`13–14-ஸ்லோகங்கள்
3–சரணாகதி –மேலே -18-அத்யாயம் சரணாகதி வேறே -இங்கு பிரக்ருதி திரை போக்க -அவனைப் பற்றிய உண்மையான ஞானம் பிறக்க
4–பக்த பேத–வருபவர் நான்கு வகை – வராதவர் நான்கு வகை
5–ப்ரபுத் தஸ்ய ஸ்ரைஷ்ட்யம்–மிகவும் பிடித்த பகவத் லாபார்த்தி ஞானி பக்தன் –

தானின்ற யுண்மையைத் தன் தனி மாயை மறைத்தமையும்
தானன்றி மாயை தனித் தவிர்ப்பான் விரகு அற்றமையும்
மேனின்ற பத்தர்கள் நால்வரில் ஞானி தன் மேன்மைகளும்
தேனின்ற செங்கழலான் தெளிவித்தான் பார்த்தனுக்கே –8-

ஏழாம் அத்யாய சாரம்
பத்தர்கள் நால்வரில்-ஆர்த்தான் -அர்த்தார்த்தி- ஜிஜ்ஞாஸூ-ஜ்ஞானி
மாயை -பிரகிருதி –

ஆங்குமுத லேழாமோத் தன்புக் கிலக்காகு
மோங்குமிறை மாயத் தொழிக்குமப் – பாங்கிற்
சரண நெறியடைந்தார் தம்பேத ஞானி
யரணுயர்வு சொல்லு மமைந்து.

ஆங்கு முதல் – அந்த மத்யமஷட்கத்தில் முதல் அத்தியாயமான,
ஏழாம் ஓத்து – ஏழாம் அத்தியாயம்,
அன்புக்கு இலக்காகும் ஓங்கும் இறை – பக்திக்கு விஷயமாகும் தலைசிறந்த ஸர்வேஶ்வரனையும்,
மாயம் – (அவனை ஜீவனுக்கு மறைக்கும்) ப்ரக்ருதியையும்,
ஒழிக்கும் அப்பாங்கில் சரண நெறி – (அம்மறைவைப்) போக்கடிக்கும் தன்மையையுடைய ஶரணாகதியையும்,
அடைந்தார் தம் பேதம் – உபாஸிப்பவர்களின் (நாலு வகையான) உட்பிரிவையும்,
ஞானி அரண் உயர்வு – (அந்நால்வரில்) ஞானி (எம்பெருமானுக்கே) தாரகனாயிருக்கும் சிறப்புற்றவன் என்பதையும்,
அமைந்து சொல்லும் – நன்றாகக் கூறும்.

I 1-12 ஸ்வயாதாத்ம்யம் – பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவு.
1 உண்மையறிவைக் கூறுவதாக ப்ரதிஜ்ஞை
2 இவ்வறிவைப் பூர்ணமாகப் பெற்றால், அறியவேண்டியது வேறொன்றுமில்லை.
3 மோக்ஷ ஸித்தியின் பொருட்டுக் கடைசிவரை முயல்பவன் ஆயிரத்தில் ஒருவன்;
அவர்களிலும் ஆயிரத்தில் ஒருவன் பரமபுருஷனையே ப்ராப்யமாய் அறிபவன்.
அவர்களிலும் ஆயிரத்தில் ஒருவனே அவனை ப்ராபகமாகவும் அறிபவன்.
4 எட்டு விதமான அசேதன ஸமஷ்டிப் பொருளும் பரம புருஷ பர தந்த்ரமானது.
5 அசேதந ப்ரக்ருதிக்கு மேற்பட்ட சேதந ஸமஷ்டியும் பரமபுருஷ பரதந்த்ரமானது.
6 முற்கூறிய சேதநாசேதந ஸமஷ்டிகளைக் காரணமாகக் கொண்ட வ்யஷ்டிப் பொருள்களுக்கும் பரமபுருஷனே காரணமாகவும், ஶேஷியாகவுமிருப்பவன்.
7 கல்யாண குணங்களால் ஜீவர்களைக் காட்டிலும் மிகவுயர்ந்தவனும் பரமபுருஷனே.
7 அவனே அனைத்துக்கும் ஶரீரியாகவுமிருப்பவன். இக் காரணங்களால் அவனே இயற்கையான ப்ராப்ய ப்ராபகங்களா யிருப்பவன்.
8-11 சேதநாசேதநப் பொருள்களில் அவற்றின் ப்ராப்யத்வத்திற்கும், ப்ராபகத்வத்திற்கும் உறுப்பாக உள்ள சிறந்த பெருமைகள் பரமபுருஷாதீனமாய் வருபவையே.
12 ஸாத்விகர்களுக்கு ப்ராப்ய ப்ராபகங்களாயிருக்கும் முற்கூறியவை போலே,
ராஜஸ தாமஸர்களுக்கு ப்ராப்யமாகவும், ப்ராபகமாகவுமிருக்கும் பொருள்களின் தன்மைகளும்,
அவ் வப் பொருள்களும் பரமபுருஷாதீநமே; பரமபுருஷன் அவற்றுக்கு அதீனமானவனல்லன்.

II 13-14 பரமபுருஷனைப் பற்றிய முற்கூறிய உண்மை யறிவை – அவனுக்கு அதீனமான ப்ரக்ருதியின் ஸம்பந்தம் ஜீவனுக்கு மறைக்கிறது.

III 14 ஜீவனுக்குள்ள ப்ரக்ருதி ஸம்பந்தம் பரமபுருஷ ஶரணாகதியாலேயே நீங்குகிறது.
15 மேன்மேலே பாபிஷ்டர்களான நாலுவகைப்பட்ட பாபிகள் பரமபுருஷனை ஶரணமடைவதில்லை.

IV பக்தபேதம்
16 மேன்மேலே புண்ணியமிகுதியால் உண்டாகும் ப்ரபத்திச் சிறப்பாலே சிறப்புற்ற நாலு வகை பக்தர்கள் பரம புருஷனை ஶரணமடைகின்றனர்.
1) ஆர்த்தன், 2) அர்த்தார்த்தீ (இருவரும் சேர்ந்து ஐஶ்வர்யார்த்திகள்), 3) ஜிஜ்ஞாஸூ (கைவல்யார்த்தி), 4) ஜ்ஞாநி (பகவச் சரணார்த்தி)

V 17-27 ஞானியின் சிறப்பு
17 மூவரில், ஸாதனதஶையோடு ஸாத்யதஶையோடு வாசியற எப்போதும் எம்பெருமானுடன் சேர்ந்திருப்பவனாகையாலும்,
எம்பெருமான் ஒருவனிடமே அன்பு பூண்டவனாகையாலும் ஜ்ஞாநியானவன் – ஸாதநதஶையில் மாத்திரம் எம்பெருமானோடு
சேர்ந்திருப்பவர்களும், ஸ்வஸாத்யமான ஐஶ்வர்ய கைவல்யங்களிலும், அவற்றுக்கு ஸாதனமாக எம்பெருமானிடமும் அன்பு
பூண்டவர்களுமான ஐஶ்வர்ய கைவல்யார்த்திகளைக் காட்டிலும் சிறப்புற்றவன். எம்பெருமானிடம் பேரன்பு பூண்டவன்;
எம்பெருமானுக்கு மிகவினியவன்.
18 மூவருமே பகவான் ஒருவனையே பலப்ரதானமாகப் பற்றியவர்களாகையாலே உதாரர்கள்;
ஜ்ஞாநியோவெனில், எம்பெருமானையே பரமப்ராப்யமாகவும் பற்றியவனாகையாலே அவனுக்கே ஆத்மாவாய் (தாரகனாய்) இருப்பவன்.
19 பல ஜன்மங்கள் கழித்து உபாஸகஜ்ஞானிக்குப் பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவை அநுஸந்திப்பதாலே ‘
அவனே ப்ராப்யனாகவும் ப்ராபகனாகவு மிருப்பவன்’ என்னும் அறிவு ஏற்பட்டு, அவனையே எல்லாமாகப் பற்றுகிறான்.
இவ்வறிவு ஏற்பட்ட ஜன்மமே இவனுக்குக் கடைசி ஜன்மம். இத்தகைய ஜ்ஞாநி மஹாத்மாவாவான். எம்பெருமானுக்கே கிடைத்தற்கரியவன் இவன்.
20 ராஜஸ தாமஸ நூல்களில் சொன்ன நியமங்களைப்பற்றி நின்று தாழ்ந்த பலன்களுக்காக மற்ற தெய்வங்களை வழிபடுகிறார்கள் பலர்.
21 அவர்களுக்கும் தனது ஶரீரமான அந்த தெய்வங்களிடம் பக்திஶ்ரத்தைகளை எம்பெருமானே ஏற்படுத்துகிறான்.
22 பக்தி ஶ்ரத்தைகளோடு அந்த தெய்வங்களை ஆராதிப்பவர்களுக்கு, அந்த தெய்வங்களுக்கு அந்தர்யாமியான எம்பெருமானே பலனளிக்கிறான்.
23 புல்லறிவாளர்களான அவர்களுக்குக் கிடைக்கும் பலன் அல்பமாகவும் அஸ்திரமாகவுமே இருக்கிறது. பகவத் பக்தர்கள் அநந்த ஸ்திரபலனையே எளிதில் பெறுகிறார்கள்.
24 முற்கூறியவர்களிலும் கீழ்ப்பட்ட அறிவிலிகள் பலர் பரமபுருஷனை ஸாமாந்ய ஜீவனாக நினைக்கிறார்கள்.
25 மனிதவுருக்கொண்டு அவதரித்திருக்கும் ஸர்வேஶ்வரனை இவ்வறிவிலிகள் அறிவதில்லை.
26 பரமபுருஷனை உள்ளபடியறிபவன் முக்காலத்திலும் ஒருவனுமேயில்லை.
27 இதற்குக் காரணம் – அநாதிகாலமாக ஜீவர்கள் ப்ரதமப்ரவ்ருத்தியில் ப்ராக்ருத விஷயமான ஜ்ஞாநேச்சாப்ரயத்னங்களையே செய்து
புண்ய பாப கர்மங்களைக் குவித்து வைத்திருப்பதால், பிறக்கும்போதே ப்ராக்ருத விஷயத்தில் நிற்கையேயாகும்.
VI முடிவுரை
28 இவர்களில் புண்யத்தாலே பாபம் சிறிதுசிறிதாக அழியப் பெற்றவர்கள், தத்தம் புண்ணியத்தின் ஏற்றத் தாழ்வுகள் ஏற்ப, ஐஶ்வர்யத்தையோ, கைவல்யத்தையோ,
பரமபுருஷனையோ பெற விரும்பி உறுதியுடன் பக்திசெய்கிறார்கள். புண்யபாப லக்ஷணம்.
29 கைவல்யார்த்திக்கு அறியவேண்டிய அர்த்த விஶேஷங்களும், கைவிடவேண்டி யதும் பற்றிய ப்ரஸ்தாவம்.
30 ஐஶ்வர்யார்த்திக்கு அறியவேண்டும் அர்த்தவிஶேஷங்களும் கைக்கொள்ள வேண்டியவையும், ஐஶ்வர்யகைவல்ய பகவச் சரணார்த்திகளான ப்ரவ்ருத்தி பரர் அனைவர்க்கும்
பொதுவாக அறிய வேண்டியவையும், கைக்கொள்ள வேண்டியவையும் பற்றிய ப்ரஸ்தாவம்.

——————————————————————————————————–

ஸ்ரீ கீதா  – -8—-ஸ்ரீ அப்யாஸ யோகம்:

ஐஸ்வர்யா அஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்தி நாம்
வேத்யோ பாதேய பாவா நாம் அஷ்டமே பேத உச்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்-12-

ஐஸ்வர்யா அஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்தி நாம் -மூவருக்கும்
வேத்யோ பாதேய பாவா நாம் -அறிய வேண்டியவை பற்ற வேண்டியவை
அஷ்டமே பேத உச்யதே –வேறு பாடுகள் உபதேசிக்கப் படுகின்றன-

ஆராத செல்வமும் ஆருயிர் காணும் அரும் பயனும்
பேராது தன் கழல் கீழ் அமரும் பெரு வாழ்ச்சிகளும்
சோராது உகந்தவர் தூ மதி கொள்வதும் செய்வனவும்
தேரா விசயனுக்குத் திரு நாரணன் செப்பினனே –9-

8 அத்யாய சாரம்
சோராது உகந்தவர் தூ மதி கொள்வதும் செய்வனவும் -மூவகை அதிகாரிகளும் -ஐஸ்வர்ய-கைவல்ய -பகவல்லாப -அதிகாரிகளும்
குறைவு படாது பெற வேண்டும் என்று விரும்பிய அதிகாரிகள் பரிசுத்தமான தம் மனத்தால்
அறிய வேண்டியனவும் -அனுஷ்டிக்க வேண்டியனவும் –

போக முயிருண்மை பூமகள்கோனைப்பெறுதற்
காக முயல்வார்க் கறிவமர – மேகநிறத்
தெம்மா னருள்கீதை யெட்டாமோத் திற்பொருள்கள்
செய்ம்மா வகையுரைக்குஞ் சேர்ந்து.

போகம் – ஐஶ்வர்ய போகங்கள்,
உயிருண்மை – ப்ரக்ருதியினின்றும் நீங்கிய ஆத்மாநுபவம்,
பூமகள் கோனை – ஸ்ரீமந்நாராயணன் ஆகிய இம்மூன்று ப்ராப்யங்களில் ஒன்றை,
பெறுதற்காக – பெறுவதற்காக, முயல்வார்க்கு – முயற்சி செய்பவர்களுக்கு,
அறிவு அமர வகை – அறியவேண்டியவைகளையும்,
செய் மா வகை – அநுஷ்டிக்க வேண்டியவைகளையும்,
மேக நிறத்து எம்மான் அருள்கீதை எட்டாம் ஓத்தில் பொருள்கள் – மேகம் போன்ற நிறத்தையுடைய எம்பெருமானான
கண்ணன் அருளிய கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் ஶ்லோகங்கள், சேர்ந்து உரைக்கும் – ஒன்றுகூடிச் சொல்லும்.

1-2 1. கைவல்யார்த்திகள் அறியவேண்டிய ப்ரஹ்ம, அத்யாத்ம, கர்ம என்பவை யாவை?
2. ஐஶ்வர்யார்த்திகள் அறியவேண்டிய அதிபூதம், அதிதைவம் என்பவை யாவை?
3. மூவகை அதிகாரிகளும் அறியவேண்டிய அதியஜ்ஞம் என்பது யாது? அதற்கு அதியஜ்ஞத்தன்மை எப்படி வந்தது?
4. மூவருக்கும் அந்திம ஸ்ம்ருதி எத்தகையது? – என்று அர்ஜுனனின் கேள்விகள்.
3 முதற் கேள்விக்குக் கண்ணனின் பதில்.
4 முற்பாதியால் இரண்டாவது கேள்விக்கும், பிற்பாதியால் மூன்றாவது கேள்விக்கும் கண்ணனின் பதில்.
5 அந்திமஸ்ம்ருதி பற்றிய நாலாவது கேள்விக்குக் கண்ணனின் சுருக்கமான பதில் –
‘ஈஶ்வரன் விஷயமான அந்திமஸ்ம்ருதி அவரவர் விரும்பும் வகையில் ஈஶ்வரனோடு ஸாம்யத்தை விளைக்கும்’ என்று.
6 இது ஈஶ்வரவிஷயத்தில் மட்டுமல்ல. கடைசிக் காலத்தில் எந்த விஷயத்தை மனிதன் நினைத்தாலும் அந் நினைவுதானே
அடுத்த பிறப்பில் அவ்விஷயம் போன்ற ஒரு நிலையை அவனுக்கு விளைத்து விடும்.
7 ஆகையால் அர்ஜுனன் எப்போதும் தன்னைப்பற்றிய நினைவையும், அதை விளைக்கும் க்ஷத்ரிய தர்மமான யுத்தத்தையும்
செய்ய வேண்டும் என்று கண்ணன் நாலாவது கேள்விக்கு விளக்கமான பதில் கூறுகிறான்.
8-14 அவரவர்க்குரிய அந்திம ஸ்ம்ருதி ஏற்படுவதற்குறுப்பான உபாஸன பேதம்.
8-10 ஐஶ்வர்யார்த்திக்குரிய உபாஸன முறையும், அதையொட்டி ஏற்படும் அந்திம ஸ்ம்ருதியும்.
14 ஜ்ஞாநி பகவானை உபாஸிக்கும் முறையும், அடையும் முறையும்.
15-28 ஜ்ஞாநிக்கும், கைவல்யார்த்திக்கும் இந்த ஸம்ஸாரமண்டலத்திற்குத் திரும்பி வராமையை உடைய அழிவற்ற பலன்.
ஐஶ்வர்யார்த்திக்குக் கர்மபூமிக்கே திரும்பி வரும் அழிவுள்ள பலன்.
15 ஜ்ஞாநியடையும் பலனான பகவதநுபவம் நித்யமானது.
16 தன்னை ப்ராப்யமாயடைந்தவர்களுக்குக் கிடைக்கும் பலன் நித்யமாயிருப்ப தற்கும், ஐஶ்வர்யார்த்தியின் பலன் அநித்யமாயிருப்பதற்கும் காரணம்.
17-19 ப்ரஹ்மலோகம் ஈறாகவுள்ள உலகங்களுக்கும், அவற்றினுள்ளிருப்பவர் களுக்கும் உத்பத்தி விநாஶங்களின் காலவரம்பு இருக்கையாலே ஐஶ்வர்யம் அநித்யமே.
20-21 கைவல்யாநுபவத்திற்கும் அழிவு இல்லாமையால் அதிலிருந்து மற்றொரு அநுபவத்தை அடைவதாகிற புநராவ்ருத்தி இல்லை.
22 கைவல்யத்தை அடைந்தவனுக்கு ப்ரஹ்மாநுபவம் என்றுமே கிடையாதாகை யால், கேவலாத்மாநுபவமாகிற அவனுடைய அநுபவத்தைக் காட்டிலும்,
பரிபூர்ண ப்ரஹ்மாநுபவமாகிற ஜ்ஞாநியினுடைய அநுபவம் மிகவும் வேறுபட்டது.
23-24 பரமபுருஷ நிஷ்டனும், ப்ரஹ்மாத்மகமாகத் தன் ஆத்மாவை உபாஸிக்கும் பஞ்சாக்னி வித்யா நிஷ்டனுமான இருவகையான ஜ்ஞாநிகள்
ப்ரஹ்மத்தை அடைவதற்கு வழியான அர்ச்சிராதிகதியின் விவரணம்.
25 புண்ணியம் செய்த ஐஶ்வர்யார்த்திகள் ஸ்வர்க்கம் முதலான புண்ணிய லோகங்களுக்குச் செல்லும் வழியான தூமாதிமார்க்கத்தின் விவரணம்.
26 முற்கூறிய இரண்டு கதிகளும் ஶ்ருதிப்ரஸித்தமானவை. அர்ச்சிராதிகதியால் செல்பவன் திரும்பி வருதலில்லாத
பகவதநுபவத்தை அடைகிறான். தூமாதிகதியால் செல்பவன் கர்ம பூமிக்கே திரும்பி வருகிறான்.
27 அர்ச்சிராதிகதி சிந்தனம் தினந்தோறும் ஜ்ஞாநியால் செய்யப்படவேண்டும்.
28 ஏழு, எட்டு அத்தியாயங்களாகிற இரு அத்தியாயங்களில் சொல்லப்பட்ட -ப்ராப்யமாய், ப்ராபகமாய், ஶேஷியாய், காரணமாய்,
ஜ்ஞாநிக்கு தாரக போஷக போக்யமாயிருக்கும் கண்ணனின் பெருமையை அறிபவன் எல்லா ஸாதநாநுஷ்டானங்களைச் செய்தவர்கள்
அடையும் பலனைக் காட்டிலும் சிறந்த பலனை இவ்விபூதியிலேயே பெற்று, மறுமையில் பரமபதத்தையும் அடைகிறான் –
என்னும் அத்யாய த்வயார்த்த சிந்தன பலஶ்ருதி.

—————————————————————————-

ஸ்ரீ கீதா  -9—ஸ்ரீ ராஜ வித்யா ராஜ குஹ்யா யோகம் —

ஸ்வ மஹாத்ம்யம் -மனுஷ்யத்வே பரத்வஞ்ச -மஹாத்மானம் விசேஷ-
நவமே யோகோ- பக்தி ரூப ப்ரக்ரிதிதா -13-

பக்தி யோகம் 7-அத்யாயம் -அருளிச் செய்து- இதில் நிகமிக்கிறான் -நான்கு விஷயங்கள் –
1-ஸ்வ மஹாத்ம்யம் -மீண்டும் அருளிச் செய்து –9-10–
2-மனுஷ்யத்வே பரத்வம் -ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தவன் அன்றோ
3-அநந்ய பக்தர்களின் ஏற்றம் –
4-பக்தி ரூபம் -ஆக இந்த நான்கும் –
ஸூயாதாத்ம்யம் -கீழே -7-அத்யாயம் -இங்கு மாஹாத்ம்யம் –
ஸ்திதோஸ்மி-சொல்ல வில்லையே -அதனால் மேலும் –

தன் மேன்மையும் தன் பிறப்பில் தளராத் தனி நிலையம்
பன்மேனி நன்னினன்பால் பிரியா வன்பர் ஆசைகளும்
புன்மேனி விண்ணவர் பால் புரியாத தன் பத்திமையும்
நன்மேனி நாராணன் நரனுக்கு நவின்றனனே–10-

9 அத்யாய சாரம் –
புன்மேனி விண்ணவர் பால் புரியாத தன் பத்திமையும் -அல்பமாய் அழிந்து போவதான
தேவ யோனி கொண்ட விண்ணவர் தன் பால் செலுத்தாத பக்தி யோகமும் –

உன்னப் படும்பர னொண்சீர் மருவுயர்த்தி
மன்னப் பயில்ஞானி வாசிதான் – றன்னமர்ந்து
நின்றியலும் பத்தி நிகழ்ந்துரைத்த நற்கீதை
யொன்றியசீ ரொன்பதா மோத்து.

உன்னப்படும் – உபாஸிக்கப்படும்,
பரன் – பரமாத்மாவினுடைய,
ஒண்சீர் மருவு – ஸெளலப்ய ஸெளசீல்யங்களோடு கூடிய,
உயர்த்தி – மேன்மையை,
மன்னப் பயில்ஞானி வாசிதான் – எப்போதும் சிந்திக்கும் ஞானியின் சிறப்போடு,
தன்னமர்ந்து நின்றியலும் பத்தி – தன்னிடத்தில் பொருந்தி நிலையாக உபாஸிப்பதாகிற பக்தியோகத்தை,
நற்கீதை சீர் ஒன்றிய ஒன்பதா மோத்து – நல்ல கீதையின் சிறப்புப் பொருந்திய ஒன்பதாம் அத்தியாயம்,
நிகழ்ந்துரைத்த – நன்கு உரைத்தது.

1 வேதாந்த ரஹஸ்யமான ஸாதன பக்தியை உபதேசிப்பதாகக் கண்ணன் ப்ரதிஜ்ஞை செய்தல்.
2 கர்ம ஜ்ஞான யோகங்களைக் காட்டிலும் பக்தி யோகத்துக்குள்ள சிறப்பு.
3 ஶ்ரத்தை யின்மையால் பக்தி யோகத்தை அநுஷ்டிக்காதவர்கள் மோக்ஷமடையாமல் ஸம்ஸாரத்திலேயே உழல்கின்றனர்.
4-10 பக்தி யோகமாகிற உபாயத்தால் அடையப்படும் (ப்ராப்யமாகிற) எம்பெருமானின் பெருமை. மனிதனாகப் பிறந்த நிலையிலும் பரத்வம்.
4,5 பரம புருஷன் மற்ற பொருள்களால் அறியப்படாமல் அவற்றை ஸங்கல்ப மாத்ரத்தாலே தரிப்பவனாய், நியமிப்பவனாய்,
படைப்பவனாய், அனைத்துக்கும் ஶரீரியாய், ஶேஷியாய் இருப்பவன்.
6 எல்லாப் பொருள்களின் ஸ்திதிப்ரவ்ருத்திகளும் தனக்கு அதீனமானவை என்பதைக் கண்ணன் த்ருஷ்டாந்தம் காட்டி நிரூபித்தல்.
7 அவற்றின் உத்பத்தி ப்ரளயங்களும் தன் அதீனமே என்று கூறல்.
8 ஸமஷ்டி வ்யஷ்டி ரூபமாயுள்ள ஸ்ருஷ்டியின் முறையை விளக்குதல்.
9 கர்மானுகுணமாக ஸ்ருஷ்டிப்பதால் தனக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் (பக்ஷபாதம், கருணையின்மை) விளையமாட்டா என்று நிரூபித்தல்.
10 தலைவனான தன்னால் தூண்டப்பட்டே மூலப்ரக்ருதி உலகனைத்தையும் படைக்கிறது எனல்.
11,12 ஆஸுர ஸ்வபாவமுள்ளவர்கள் முற்கூறிய தன் பெருமையை உணராத அறிவிலிகளாய் அழிந்து போகிறார்கள் என்று கூறல்.
13 ஸ்வயம் ப்ரயோஜன பக்தி நிஷ்டர்களான மஹாத்மாக்களின் பெருமை.
14,15 ஸாதந பக்தி நிஷ்டர்களான உபாஸக ஜ்ஞானிகளின் பெருமை.
16-19 உபாஸனத்துக்குறுப்பாக – ஒருவனான தானே கார்ய நிலையில் இவ்வுலகிலுள்ள பல பொருள்களை ஶரீரமாகக் கொண்டிருப்பதையும்,
அவற்றின் ஸத்தா ஸ்திதி ப்ரவ்ருத்திகள் தன்னதீனம் என்பதையும் நிரூபித்தல்.
20,21 ஜ்ஞாநிகளுக்கு நேர் எதிர்த் தட்டானவர்களாய், தாழ்ந்த பலன்களை விரும்பும் அறிவிலிகளின் தன்மைகளை விவரித்தல்.
22 தன்னை நினைப்பது தவிர வேறொன்றறியாத மஹாத்மாக்களின் யோக க்ஷேமங்களைத் தானே வஹிப்பதாகக் கூறுதல்.
23 வேதாந்த விதிப்படி மற்ற தேவதைகளுக்கு அந்தர்யாமியாகத் தன்னை அறியாமல் அவர்களிடம் பக்தி செலுத்துகிறவர்களுக்கு அதனாலேயே மோக்ஷம் கிடைப்பதில்லை.
24 தேவதைகளைக் குறித்த யாகங்கள் பரமபுருஷனுக்கே ஆராதனமாகின்றன என அறிந்தவர்களுக்கு மோக்ஷமும்,
அப்படி அறியாதவர்களுக்கு அல்பாஸ்திர பலன்களுக்குமே கிடைக்கும்.
25 முற்கூறியபடி பலனில் வேறுபாடு அவரவர்களின் ஸங்கல்பத்தின் வேறுபாட்டாலே விளைகிறது.
26 தான் ஆராதனைக்கு மிக எளியவன் என நிரூபித்தல்.
27 பக்தி யோகத்திற்கு அங்கமான அநுஸந்தானம் (பகவதர்ப்பணம்-ஶேஷத்வானுஸந்தானம்).
28 அவ்வநுஸந்தானத்தின் பலன் – தன்னை அடைதல்.
29,30 ஜன்மம், ஆகாரம், ஸ்வபாவம், ஜ்ஞாநம், ஒழுக்கம் ஆகியவற்றால் எத்தனை தாழ்ந்தவனாயினும் ஸ்வயம்ப்ரயோஜன பக்தியைச்
செய்தானாகில் அவனிடம் கண்ணனின் ஈடுபாடு.
31 ஒழுக்கத்தில் குறைந்தவனானாலும் பக்தி செய்தால் விரைவில் தர்மாத்மாவாகி நற்பேறு பெறுவான்.
32,33 முற்பிறப்புக்களில் செய்த பாப மிகுதியாலே தாழ்ந்த பிறவியை எடுத்தவர்களும் தன்னை ஆஶ்ரயிப்பதாலேயே மோக்ஷமடையும்போது,
உயற்பிறவியினர் தன்னை ஆஶ்ரயித்து மோக்ஷமடைவது நிச்சயம் என்று கூறி அர்ஜுனனை பக்தி செய்யும்படி விதித்தல்.
34 ஸாதனபக்தியின் தனித்தன்மைகளை விவரித்தல்.

—————————————————————————

ஸ்ரீ கீதா 10–ஸ்ரீ விபூதி அத்யாயம் —

ஸ்வ கல்யாண குண அனந்த்ய க்ருத்ஸ்ன ஸ்வாதீன தாமதி
பக்த் யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா விஸ்தீர்ணா தஸமோதிதா—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–14-

ஸ்வ கல்யாண குண அனந்த்ய க்ருத்ஸ்ன ஸ்வாதீன தாமதி -கல்யாண குணங்கள் நியமன சக்தி விபூதிகள் அனைத்தையும் அறிந்து
பக்த் யுத்பத்தி –ப்ரீதி உடன் பக்தி செய்ய உபக்ரமித்து
விவ்ருத்த்யர்த்தா –அத்தை வளர்ப்பதற்காக
விஸ்தீர்ணா தஸமோதிதா-விவரித்து அருளிச் செய்கிறான்
கேட்க கேட்க பக்தி பிறக்கும் -பிறந்த பக்தி வளரும் –

எல்லையிலாத தன் சீலமாம் இன்னமுதக் கடலும்
எல்லையிலாத விபூதி எலாம் தனதானமையும்
எல்லையில் பக்திதனை எழுவிக்கத் திருவருளால்
எல்லையில் ஈசன் இயம்பினான் இந்திரன் மைந்தனுக்கே –11-

10-அத்யாய சாரம் –

அண்ண லுலகி லனைத்துந்தா னாய்நின்ற
வண்ணம் விரித்துரைத்த வண்மையினைத் – திண்ணமாங்
கன்புறவே யோங்க வருள்கீதை பத்தாமோத்
தின்புறவே யோது மெடுத்து.

1-3 தன்னை தேவாதி தேவனாக அநுஸந்திப்பதால், பக்தி உண்டாவதற்குத் தடையான பாபங்கள் நீங்கி, பக்தியுண்டாகும் என்று கண்ணன் அர்ஜுனனுக்கு நிரூபித்தல்.
4-8 தனது ஐஶ்வர்யம், கல்யாணகுணங்கள் ஆகியவற்றை அநுஸந்திப்பதால் பக்தி வளரும் என்பதை கண்ணன் அர்ஜுனனுக்கு நிரூபித்தல்.
9-11 பக்தியின் உச்சநிலையை அடைந்த ஸ்வயம்ப்ரயோஜன பக்திநிஷ்டனின் பெருமையை விளக்குதல்.
12-18 கண்ணனுடைய கல்யாண குணச் சேர்த்தியையும், செல்வச் சிறப்பையும் சுருக்கமாகக் கேட்ட அர்ஜுனன் அதன் விரிவைக் கேட்க விரும்பி வார்த்தை சொல்லுதல்.
12-15 கண்ணன் முன் ஶ்லோகங்களில் சுருங்கச் சொன்ன அர்த்தங்களில் தனக்குள்ள நம்பிக்கையையும்,
அந்த நம்பிக்கையால் அதில் அஸூயை இல்லாமலிருப் பதையும் அர்ஜுனன் காட்டுதல்.
16-18 விபூதிகளை விரிவாகச் சொல்லவேண்டுமென்று அர்ஜுனன் கண்ணனை வினவுதல்.
19 கண்ணன் தனது விபூதிகளை ஒவ்வொன்றாக விரிவாக வர்ணிப்பதும், கேட்பதும் இயலாதாகையால் முக்யமானவற்றைச்
சுருக்கமாக வகைப்படுத்திக் கூறுவதாக ப்ரதிஜ்ஞை செய்தல்.
20 ஶ்லோகத்தின் முற்பாதியில் – தன்னைத் தன் விபூதியான மற்ற பொருள்களோடு அடுத்துள்ள ஶ்லோகங்களில் ஒரே வேற்றுமையில் படிப்பதற்குக் காரணம் –
அவை தனக்கு ஶரீரமாகவும் தான் அவற்றுக்கு ஆத்மாவாகவும் இருப்பதே என்று காட்டி, பிற்பாதியாலே – அனைத்தையும் படைத்தளித்தழிப்பவனா யிருக்கை
முதலான கல்யாண குணங்களே யோகஶப்தத்தால் சொல்லப்படு கின்றன என்றும், அடுத்துள்ள ஶ்லோகங்களாலில் தன்னை
மற்ற பொருள்களோடு ஒரே வேற்றுமையில் படிப்பதற்கு அவை கார்யப்பொருளாகவும், தான் அவற்றுக்குக் காரணமாகவுமிருப்பது
மற்றொரு ஹேதுவாகும் என்றும் கண்ணன் காட்டுதல்.
21-39 பற்பல பொருள்களோடு கண்ணன் தன்னை ஒரே வேற்றுமையில் படித்தல்.
39 தன்னைப் பற்பல பொருள்களோடு ஒரே வேற்றுமையில் படித்ததற்குத் தான் அனைத்துக்கும் அந்தர்யாமியாயிருப்ப்தே காரணம் என்று நிகமனம் செய்தல்.
40 தன் விபூதிகளுக்கு எல்லையில்லாமையால் ஓரளவுக்கே அவற்றைச் சொன்னேன் என்று கூறல்.
41 இது வரையில் சொல்லப்பட்ட விபூதிகள் – சொல்லப்படாதவையும் அவஶ்யம் சொல்லவேண்டியவையுமான மற்றும் பல முக்ய விபூதிகளுக்கு எடுத்துக்காட்டே என்று கூறி
ப்ரகரணத்தை நிறைவு படுத்தல்.
42 முக்யமானவை, அமுக்யமானவை என்னும் வாசியில்லாமல் பார்க்கும்போது, எல்லா உலகமும் தன்னுடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதியாலே தரிக்கப்படும் விபூதியே
என்று கூறி அத்யாயத்தை முடித்தல்.

———————————————————————————–

ஸ்ரீ கீதா  -11—-ஸ்ரீ விஸ்வ ரூப யோகம் –

ஏகாதசே ஸ்வ யாதாம்ய சாஷாத்கார அவ லோகனம்
தத்தமுக்தம் விதி ப்ராப்த்யோ பக்த்யே கோபா யதா ததா –15-

ஏகாதசே
ஸ்வ யாதாம்ய -பர ப்ரஹ்மம் பற்றி -உண்மை அறிவை அடைய
சாஷாத்கார -விஸ்வரூபம் காண -முக்காலத்தில் -உள்ளவை அனைத்தையும் -பாண்டவர் ஜெயம் -கூட காணப் போகிறான்
அவலோகனம் -கண்களால் -காண திவ்ய சஷூஸ்
தத்தமுக்தம் -கொடுக்கப்பட்டு -32-ஸ்லோகங்கள் வரை இதுவே -மேலே அர்ஜுனன் ஸ்தோத்ர ஸ்லோகங்கள்
விதி ப்ராப்த்யோ -விதி -அறிவதற்கும் -வேதனம் – அடைவதற்கும் -கடைசி நான்கு ஸ்லோகங்கள்
பக்த்யே கோபா யதா ததா –பக்தி ஒன்றே வழியாகும்
உதங்க பிரஸ்னம் -சஞ்சயன் இது ஒன்றே மனசை விட்டு நீங்காமல் இருக்கிறதே –

எல்லாம் தனக்கு உருவாய் இலங்கும் வகை தான் உரைத்துச்
சொல்லால் அறிந்தது சோராமல் கண்டிட வேண்டும் என்ற
வில்லாளனுக்கு அன்று மெய்க்கண் கொடுத்து இது வேறு உண்டோ
நல்லார்கள் காண்பர் என்றும் நவின்றான் நங்கள் நாயகனே –12-

11-அத்யாய சாரம் –
மெய்க்கண் கொடுத்து இது வேறு உண்டோ -தன் ஸ்வரூபத்தை காண தெய்விக சஷூஸ் அருளி
-இவ்வாறு தன்னை காண வேறு சாதனம் இல்லையே –

பார்த்தனுக்கு மாயனருள் கீதைப் பதினொன்றா
மோத்திவ் வுலகெல்லா முடம்பதனிற் – கோத்தபடி
காட்டுமது தன்னறிவு கண்டடைத றன்பத்தி
கூட்டுமதுஞ் சொல்லுங் குறித்து.

பார்த்தனுக்கு – அர்ஜுனனுக்கு,
மாயன் அருள் – மாயப் பிரானாகிய கண்ணன் அருளிய,
கீதை பதினொன்றாம் ஓத்து – கீதையின் பதினொன்றாம் அத்தியாயம்,
இவ்வுலகெல்லாம் – இவ்வுலகனைத்தையும்,
உடம்பதனில் – தன் சரீரத்தில்,
கோத்தபடி காட்டுமது – (கண்ணனின் ஒரு பகுதியாகக்) கோத்துக் கொண்டிருக்கும் படியைக் காட்டுவதாகும்.
தன் அறிவு கண்டு அடைதல் – தன்னை அறிவதும், காண்பதும், அடைவதுமாகிற பயன்களை,
தன் பத்தி கூட்டுமதும் – தன் விஷயமான பக்தியோகம் கூட்டி வைப்பதையும்,
குறித்துச் சொல்லும் – குறிக்கொண்டு கூறும்.

1-3 அர்ஜுனன் தனது நன்றியையும் ஆஸ்திக்யத்தையும் க்ருஷ்ண பக்தியையும் காட்டுகிறான்.
4 விஶ்வரூபத்தைக் காட்டும்படி அர்ஜுனனுடைய ப்ரார்த்தனை.
5-8 திவ்ய சக்ஷுஸ்ஸை அர்ஜுனனுக்கு அளித்துத் தன் விஶ்வ ரூபத்தைக் கண்ண்னன் அவனுக்குக் காட்டுதல்.
9-13 விஶ்வரூப வர்ணனை.
14-30 அர்ஜுனன் விஶ்வரூபத்தின் பெருமைகளைக் கூறித் துதித்தல்.
31 அர்ஜுனனின் கேள்வி – (பயங்கர உருவத்தின் பயன்)
32-34 கண்ணனின் பதில் – (ஸ்வஸங்கல்ப ஶக்தியின் வீர்யம்)
35-46 அர்ஜுனனின் துதியும், மன்னிப்பு வேண்டுதலும், பிரார்த்தனையும்.
47-49 கண்ணனின் அபயப்ரதானம்.
50 கண்ணன் இயல்வான நான்கு தோள் திருமேனியை எடுத்துக்கொண்டு அர்ஜுனனைத் தேற்றியது.
51 அவ்வுருவைக் கண்ட அர்ஜுனன் தான் இன்புற்றுத் தன்னிலை பெற்றதைக் கூறுதல்.
52-55 கண்ணன் அர்ஜுனனுக்கு பக்தியோகத்தின் பெருமையையும் ஶுபாஶ்ரயமாயிருக்கும்
திருமேனியின் பெருமையையும் பேசுதல்.

——————————————————————————–

ஸ்ரீ கீதா  -12– ஸ்ரீ பக்தி யோகம்:

பக்தேஸ் ஸ்ரைஷ்ட்யம் உபாயோக்தி அசக்தஸ் யாத்ம நிஷ்டதா
தத் பிரகாராஸ் த்வதி ப்ரீதி பக்தே த்வாதச உச்யதே — ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–16-

1–பக்தேஸ் ஸ்ரைஷ்ட்யம் –ஆத்ம உபாசனத்தை விட பக்தியின் பெருமை —
கீழ் உள்ள கர்ம ஞான யோகத்தை விட உயர்ந்தது சொல்ல வேண்டாமே
கைவல்யார்த்தி விட பகவல் லாபார்த்தி உடைய ஏற்றம் –
2-உபாயோக்தி -உபாய யுக்தி -பக்தி செய்யும் முறை -விதிகள் –
3–அசக்தஸ் யாத்ம நிஷ்டதா -அசக்தனுக்கு ஆத்ம உபாசனம் -இந்த உபாசனம் கர்ம ஞான யோகம் மூலம் சொல்லிய ஆத்ம உபாசனம்
4–தத் பிரகாராஸ்-அதன் பிரகாரங்களை விவரித்து–12-13–12-19/ -7-ஸ்லோகங்களால் –
த்வதி ப்ரீதி பக்தே த்வாதச உச்யதே –அதி ப்ரீதி பக்தி -அத்தனை ப்ரீதி கண்ணனுக்கு -கோதுகுலம் உடைய பாவாய் போலே

தன் கழலில் பத்தி தாழாததும் அதன் காரணமாம்
இன் குண சிந்தையும் ஈது அறியார்க்கு அவ்வடிமைகளும்
தன் கருமங்கள் அறியாதவற்கு இலகு நிலையும்
தன் கழல் அன்பர்க்கு நல்லவன் சாற்றினன் பார்த்தனுக்கே –13-

12 அத்யாய சாரம்

பத்தி யறிவாற் கடக்கும் பலவகையு
மத்தி லுகப்பி னதிசயமு – முத்தி தரும்
பண்பி னருள்கீதை பன்னிரண்டா மோத்துரைக்குந்
திண்பயிலுந் சொல்லாற் செறிந்து.

முத்திதரும் பண்பின் அருள் கீதை – வீடு பேற்றைத் தரும் இயல்பால் (கண்ணன்) அருளிய கீதையின்,
பன்னிரண்டாமோத்து – பன்னிரண்டாவது அத்தியாயம்,
பத்தி யறிவாற்கு – பக்தியோகத்தை அறிபவனுக்கு,
அடக்கும் பல வகையும் – கைக் கொள்ள வேண்டிய பல குணங்களும்,
அத்தில் – அந்த பக்தி யோகத்தில்,
உகப்பின் அதிசயமும் – (எம்பெருமானுக்குள்ள) அன்பின் மிகுதியும்,
திண் பயிலும் சொல்லால் செறிந்து உரைக்கும் – உறுதியானதாய் அனைவராலும் அனுஸந்திக்கத் தக்கதான
சொற்களால் நன்றாகக் கூறும்.

1 பகவதுபாஸகர்கள், ஆத்மோபாஸகர்கள் என்னுமிருவரில் எவர் தம் பயனை விரைவில் அடைவர்கள்?
என்னும் அர்ஜுனனின் கேள்வி.
2 “என்னையே ப்ராப்யமாக நினைத்து உபாஸிப்பவர்கள் ஆத்மோபாஸகர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள்’
என்னும் கண்ணனின் பதில்.
3-5 முற்கூறிய ஜ்ஞானியைக் காட்டிலும் கைவல்ய நிஷ்டனின் தாழ்வைக் கண்ணன் விளக்குதல்.
6-7 தன்னை உபாஸிப்பவர்கள் சிறந்தவர்கள் என்று முற்கூறியதைக் கண்ணன் மிகத் தெளிவாகக் கூறுதல்.
8 “நீ என்னிடம் பக்தி செய்வாய்” என்று அர்ஜுனனைக் குறித்து விதித்தல்.
9 “என்னிடம் உறுதியான நெஞ்சைச் செலுத்த இயலவில்லை யாகில் என் கல்யான குணங்களை
அனுஸந்திப்பதாகிற அப்யாஸ யோகத்தின் மூலம் பக்தியை யடையலாம்” என்று கூறல்.
10 “அப்யாஸ யோகத்தில் ஶக்தியில்லையாகில் என் விஷயமான கர்மங்களைச் செய்வதில் ஈடுபடுவதால்
விரைவில் அப்யாஸ யோகத்தைப் பெற்று பக்தியைச் செலுத்தி என்னை அடையலாம்” என்று கூறல்.
11 “பக்தி யோகத்தில் ஶக்தியில்லாதவன் அதை ஸாதித்துத் தரும் உபாய பரம்பரையில் எல்லை நிலமான
கர்ம யோகத்தை அநுஷ்டிக்க வேண்டும்” என்று கூறல்.
12 ஒன்பது, பத்து, பதினொன்று ஶ்லோகங்களை விளக்குதல்.
13-19 பலனில் விருப்பமற்றுச் செய்யப்படும் கர்மயோகத்தில் ஊன்றி நிற்பவன் கைக் கொள்ள வேண்டிய குணங்களை விவரித்தல்.
20 பக்திநிஷ்டன் தனக்கு மிகவினியவன் எனக்கூறல்.

மத்யம ஷட்கத்தின் ஸாரப்பொருள்:
பத்திவகை யாங்கறிந்து சேரப் பரன்பெருமை
யெத்தியலு மாய்நித் ததுவடிவி – லொத்தியலக்
காட்டியது பத்திநலங் கண்ணன் றருகீதை
மாட்டிடையா றொத்தின் வகை.

கண்ணன் தரு கீதை மாட்டு – கண்ணன் அருளிச் செய்த கீதையில்,
இடை ஆறு ஓத்தின் வகை – நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
எத்தியலுமாய் – கர்ம யோகம் முழுவதையும் அநுஷ்டித்து,
நித்தது வடிவிலொத்தியல – நித்யமான ஆத்மஸ்வரூபத்தை நேரே காண்பது போன்ற காட்சியைக் கண்டு,
பத்தி வகை ஆந்கு அறிந்து – பக்தியோகத்தின் தன்மைகளை அதன்பின் அறிந்து,
பரன் பெருமை சேர – பரம்பொருளின் அனுபவத்தைப் பெறுவதற்காக,
பத்தி நலம் – பக்தி யோகத்தின் பெருமைகளை, காட்டியது – விளக்கிற்று.

மூன்று ஷட்கங்களின் ஸாரப் பொருள்:
கன்ம முயிருணர்வாற் கட்டவரு முன்னாறு
நன்மையிறை பத்தி நடுவாறு – தன்மையுடன்
காயமுயி ரீசன் கருமமறி வன்புவகை
யேயவமைந் தேலுமீ றாறு.

முன் ஆறு – முதல் ஆறு அத்தியாயங்கள்,
கட்டவரும் – முயற்சி செய்ய உண்டாகும்,
கன்மம் உயிருணர்வால் – கர்மஜ்ஞாந யோகங்களால்,
ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்,
நடு ஆறு – நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
நன்மை இறை பத்தி – சிறப்புமிக்க பரமாத்ம பக்தியோகத்தால்,
ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்.
ஈறு ஆறு – கடைசியிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
காயம் உயிர் ஈசன் கருமம் அறிவு அன்பு வகை – உடல், உயிர், ஈச்வரன், கர்ம ஜ்ஞான பக்தி யோகங்கள்,
தன்மையுடன் – இவற்றின் தன்மைகளோடு,
ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்.

———————————————————————-

ஸ்ரீ கீதா -13—ஸ்ரீ க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்:

தேஹ ஸ்வரூபம் ஆத்மாப்தி ஹேது ஆத்ம விசோதநம்
பந்த ஹேதுர் விவேகஸ்ஸ த்ரயோதச உதீர்யதே –17-

1-தேஹ ஸ்வரூபம் -தேகத்தின் இயற்க்கைத் தன்மை
2-ஆத்மாப்தி ஹேது -ஆத்மா அடையும் உபாயம் -20–ஆத்ம குணங்கள் விளக்கி –
3-ஆத்ம விசோதநம் -ஆத்ம விசாரம் -ஆராய்ச்சி
4-பந்த ஹேதுர் -ஆத்ம பந்த காரணம்
5-விவேகஸ்ஸ -பகுத்து அறிதல் –

ஊனின் படியும் உயிரின் பிரிவும் உயிர் பெறுவார்
ஞானம் பெரு வகையும் ஞானம் ஈன்ற வுயிர்ப்பயனும்
ஊன் நின்றதற்கு அடியும் உயிர் வேறிடும் உள் விரகும்
தேனின்ற பாதன் தெளிவித்தனன் சிலைப் பார்த்தனுக்கே –14-

13 அத்யாய சாரம் –
ஊனின் படியும் -சரீரத்தினுடைய ஸ்வரூபமும்
உயிரின் பிரிவும் -ஜீவாத்மா சாராரத்தைப் பிரிந்து நிற்கும் நிலையையும்
உயிர் வேறிடும் உள் விரகும் -ஆத்மாவை சரீரத்தில் இருந்து வேறுபடக் காண்பதற்கு வேண்டிய மனத்தால் செய்ய வேண்டிய உபாயங்களையும் –

ஈங்கு முதலாகி யேய்ந்தபதின் மூன்றாமோத்
தாங்குடல மாருயி ராப்புறுத – னீங்குநெறி
தன்மையுடன் மற்றுந் தகைமைபெறச் சோதித்து
நன்மையுடன் சொல்லு நயந்து.

ஈங்கு – இந்த கடைசி ஷட்கத்தில்,
முதல் ஆகி ஏய்ந்த பதிமூன்றாம் ஓத்து – முதலாவதாகப் பொருந்தியிருக்கும் பதிமூன்றாம் அத்தியாயம்,
ஆங்கு – இந்த ஸம்ஸாரத்தில்,
ஆர் உயிர் உடலம் ஆப்பு உறுதல் – ஜீவாத்மாவானது உடலிலே கட்டுப்படுவதையும்,
நீங்கு நெறி – அதிலிருந்து விடுபட வழியையும்,
தன்மையுடன் – அந்த தேஹாத்மாக்களின் ஸ்வரூபத்துடன்,
முற்றும் தகைமை பெற – மற்றுமுள்ள ஸ்வபாவங்களையும்,
சோதித்து – ஆராய்ந்து,
நன்மையுடன் நயந்து சொல்லும் – சிறப்பாக விருப்பத்தோடு கூறும்.

1 ஶரீரமே க்ஷேத்ரம் எனப்படும்; அதை அறியும் ஜீவனே க்ஷேத்ரஜ்ஞன் எனப் படுவான்.
2 இரண்டுமே ஸர்வேஶ்வரனுக்கு ஶேஷமானவை என அறிவதே உண்மை யறிவு.
3 இரண்டைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லப் போவதாகப் ப்ரதிஜ்ஞை.
4 இவ் வறிவு ஸகல ப்ரமாண ஸித்தம்.
5,6 க்ஷேத்ரத்தைப் பற்றிய உண்மை யறிவைச் சுருங்கக் கூறல்.
7-11 ஆத்ம ஜ்ஞான ஸாதனமான அமாநித்வம் முதலான இருபது குணங்களைக் கூறுதல்.
இது க்ஷேத்ரத்தினால் விளையும் கார்யத்தின் விளக்கமுமாகும்.

அமாநித்வம் அதம்பித்வம் அஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம்
ஆசார்யோபாஸநம் ஶெளசம்ஸ்தைர்ய மாத்மவிநிக்ரஹ:

இந்த்ரியார்த்தேஷு வைராக்யமநஹங்கார ஏவ ச
ஜன்மம்ருத்யுஜராவ்யாதி து:கதோஷாநுதர்ஶநம்

அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு
நித்யம் ச ஸமசித்தத்வம் இஷ்டாநிஷ்டோபபத்திஷு

மயி சாநந்யயோகேன பக்திரவ்யபிசாரிணீ
விவிக்ததேஶஸேவித்வம் அரதிர் ஜநஸம்ஸதி

அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்வஜ்ஞாநார்ததர்ஶநம்
ஏதத்ஜ்ஞாநமிதிப்ரோக்தம் அஜ்ஞாநம் யததோ (அ)ந்யதா

12-17 க்ஷேத்ரஜ்ஞன் எனப்படும் ஜீவ ஸ்வரூபத்தின் விளக்கம்.
18 கார்யத்தோடு கூடிய க்ஷேத்ரத்தையும், க்ஷேத்ரஜ்ஞனையும் அறிவதின் பலம்.
19-22 ஆத்மா ஶரீரத்தில் கட்டுப்பட்டிருப்பதற்குக் காரணம் ஸத்வாதி குணங்களால் உண்டாகும் இன்ப துன்பங்களில் பற்றே யாகும்.
23 ப்ரக்ருதி புருஷர்களைப் பிரித்தறியும் விவேக ஜ்ஞானத்தின் பலம் பிறவி நீங்குதலே.
24-25 பிரித்தறியும் விவேகிகளின் பல படிகள்.
26 தேஹமும் ஆத்மாவும் பிறவியிலிருந்தே அழுந்தக் கட்டப்பட்டிருப்பதால், அவற்றைப் பிரித்தறிவது அரிது.
27-33 தேஹாத்மாக்களைப் பிரித்தறியும் முறையாகிற விவேகத்தை விளக்குதல்.
34 க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞர்களைப் பிரித்தறியும் ஞானத்தின் பலம் ஆத்ம ப்ராப்தி எனக்கூறி அத்தியாயத்தை நிறைவுறுத்தல்.

——————————————————————————————-

ஸ்ரீ கீதா  -14—-ஸ்ரீ குண த்ரய விபாக யோகம்:

குண பந்த விதா தேஷாம் கர்த்ருத்வம் தந் நிவர்த்தனம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம் சதுர்தச உதீர்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -18-

குண பந்த விதா -முக்குணங்களால் கட்டுப்பட்டு
தேஷாம் கர்த்ருத்வம் -இவற்றுக்கே கர்த்ருத்வம் -ஆத்மாவுக்கு இல்லை
தந் நிவர்த்தனம் -தாண்டி நிற்கும் உபாயம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம்–ஐஸ்வர்யம் கைவல்யம் பகவத் லாபார்த்தம் மூன்றுக்கும் தன் திருவடியே -பிராசங்கிக்கமாக –

முக்குண சேர்க்கை பிறவி காரணம் -அறிய படிக்கட்டு —
ஆச்சார்ய ஹிருதயம் சொல்லுமே இந்த ஏழையும் -இது சூழல் -ஆதி அந்தம் காண முடியாதே –
7-படிகள் – நிரதிசய ஆனந்தம்-ஸ்ரீ வைகுண்டம் – -அனந்த கிலேச பாஜனம்-சம்சாரம் -கடைசி படிகள்
6-ஞாதவ்ய பஞ்சக ஞான அஞ்ஞானங்கள் -அடுத்த படி -ஞானம் ஏற்பட்டால் ஸ்ரீ வைகுண்டம் -இல்லாவிட்டால் சம்சாரம்
அர்த்த பஞ்சக -ஞானம் வருவதற்கு என்ன வேணும்
5–இவற்றுக்கு காரணம் இரண்டில் ஒன்றினில் ஒன்றுகைகள்-அதாவது – சத்வா சத்வங்கள் –
சத்வ குணம் இருந்தால் வரும் -ரஜஸ் தமஸ் களால் அஞ்ஞானம் -ஞானான் மோக்ஷம் அன்றோ –
அதற்கு என்ன பண்ணனும் -சத்வ குணம் வளர –
4–ஜென்ம ஜாயமான கால கடாக்ஷம் -பிறப்பால் -ரஜஸ் தமஸ் -ஜாயமான கால கடாக்ஷம் -இவற்றுக்கு மூலம் –
3-இரு நல்லருள் நல் வினைகள் -கர்மமும் கிருபையும் -என்றபடி -இவற்றுக்கு அடி-
2–கர்மா க்ருபா பீஜம் பொய்ந்நின்ற ஞானம் – -அவித்யா ஸுஹார்த்தங்கள்-அருள் புரிந்த – ஏதன் நிமித்தம்
1 முன்னமே முதல் முன்னமே யான அசித் அயன அநாதி சம்பந்தங்கள் -இது தான் கீழ் படிக்கட்டு
இவை கிட்டமும் வேட்டு வேளானும் போலே
ஒண் பொருள் பொருள் அல்லாத என்னாதே நானில்லாத யானும் உளனாவான் என்கிற
சாம்யம் பெறத் தின்று ஊதி அந்தமும் வாழ்வும் ஆகிற ஹானி சத்தைகளை உண்டாக்கும் –
பரமாத்மா அசித் சாம்யம் சம்பந்திப்பவர்களை சாம்யம் ஆக்குவதில் சாம்யம்
சித் அசித் இரண்டும் சொத்து -என்பதில் சாம்யம் -சித் பரமாத்மா ஞானம் சாம்யம் –
பஞ்சாக்கினி வித்யா பிரகரணம் —ஜென்மம் -பபம் புண்ணியம் -எதனால் -உதங்க பிரஸ்னம் -உத்திரம் இல்லையே –
கர்மா ஆதி அற்றது -அந்தம் உண்டு –கிருபையால் வெட்டி விட முடியும் –
மேக மண்டலம் -வ்ருஷடி மழையாகி -பயிர் -தானியம் / அன்னம் / புருஷன் /
ரேதஸ் சோணிதம் -கர்ப்பம் -/பூர்வ க்ருத கர்மா தான் நிர்ணயிக்கும் -/
கர்மா –ஜென்ம -அசத்வ குணம் –எதிர் நீச்சல் போட்டு சத்வ குணம் வளர்க்க –
புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன் அடிக்க கீழ் அமர்ந்து புகுந்தேனே –
இதை விளக்க இந்த அத்யாயம் -25 ஸ்லோகம் விவரித்து சொல்லி –26-ஸ்லோகம்- திருவடி பற்றி
போக்கிக் கொள் என்கிறான்

முக்குணமே உயிர் முற்றவும் கட்டிட மூண்டமையும்
முக்குணமே யனைத்தும் வினை கொள்ள முயன்றமையும்
முக்குண மாயை கடத்தலும் முக்கதி தந்து அளிப்பும்
முக்குணம் அற்ற பிரான் மொழிந்தான் முடியோன் தனக்கே –15-

14-அத்யாய சாரம்

முக்கதி தந்து அளிப்பும்-ஐஸ்வர்யம் கைவல்யம் மோஷம் ஆகிய மூன்று கதிகளையும் அருளி ரஷிக்கும் விதமும் –

முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பதுவு
மக்குணங்க ணீங்குவிக்கு மவ்விரகு – மிக்குயர்ந்த
கீதை பதினாலா மோத்துக் கிளர்ந்துரைக்கும்
போதத் தியல்பாற் புரிந்து.

மிக்கு உயர்ந்த கீதை பதினாலாம் ஓத்து – மிகச் சிறந்த கீதையின் பதினாலாம் அத்தியாயம்,
முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பு அதுவும் – (ஸத்வம் முதலிய) மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்தில்
(தாமே செயலுக்குக் காரணமாயிருந்து) நன்றாகக் கட்டிவிடுகின்ற முறையும்,
அக்குணங்கள் நீங்குவிக்கும் அவ்விரகும் – அந்த குணங்களை நீங்கச் செய்யும் முறையையும்,
போதத்து இயல்பால் – அறிவிக்க வேண்டிய முறையில்,
புரிந்து – விருப்பத்தோடு,
கிளர்ந்து உரைக்கும் – உறுதியாகக் கூறும்.

1-2 இவ்வத்தியாயத்தில் கூறப்படும் அறிவைப் புகழ்தல்.
3-4 ஜீவனுக்கு ஶரீர ஸம்பந்தம் ஸ்ருஷ்டியின் தொடக்கத்திலும் அதற்குப் பின்பும்
தன்னாலேயே செய்யப்படுகிறது என்று கண்ணன் உரைத்தல்.
5 முக்குணங்களே பிறவிகள் தொடர்வதற்குக் காரணம்.
6-8 ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்களின் தனித்தன்மையையும்
அவை ஜீவனைக் கட்டும் முறையையும் விளக்குதல்.
9 இக்குணங்கள் ஜீவனைக் கட்டுவதற்குக் காரணங்களில் முக்யமானதைக் காட்டுதல்.
10 ஒவ்வொரு ஶரீரத்தில் இக்குணங்களில் ஒவ்வொன்று மேலோங்கி யிருப்பதால் அதன் விளைவுகளே
அந்த உடலில் உண்டாகின்றன எனக் கூறல்.
11-13 முறையே முக்குணங்களும் மேலோங்கி நிற்பதை அவற்றின் கார்யங் கொண்டு அறியலாம் என்று விளக்குதல்.
14-15 முக்குணங்களில் ஒவ்வொன்று மேலோங்கி யிருக்கும் போது மரணமடைந்தால் உண்டாகும் பலம்.
16-18 மிகுதியான ஸத்வ குணம் முதலானவற்றாலே விளையும் பலன்களை விளக்குதல்.
(இதுவரை குணங்கள் ஜீவனைக் கட்டும் முறை விளக்கப்பட்டது)
19 குணங்களின் கர்த்ருத்வம் (செயல் புரியும் தன்மை) அவசியம் அறியத்தக்கது.
20 குணங்களைக் கடந்து நிற்பவன், மரணம், தோற்றம், வான்பிணி, மூப்பு முதலானவை நீங்கப் பெற்று,
மரணமற்ற தன் ஆத்மாவை அனுபவிக்கிறான்.
21 குணங்கடந்தவனுடைய உள் வெளி அடையாளங்களைப் பற்றியும், குணங்களைக் கடந்து நிற்பது எப்படி?
என்பது பற்றியும் அர்ஜுனனின் கேள்வி.
22-25 அந்தக் கேள்விக்குப் பதிலாக குணங்கடந்தவனின் உள் வெளி அடையாளங்களை விளக்குதல்.
26 குணங்கடந்த நிலைக்குத் தன்னிடம் செய்யப்படும் ஏகாந்த பக்தியே முக்ய காரணம் என்று விவரித்தல்.
27 ஐஶ்வர்ய கைவல்ய பகவத்ப்ராப்திகள் தன்னாலேயே விளைபவை என விவரித்தல்.

————————–——————————————————————————

ஸ்ரீ கீதா-15—ஸ்ரீ புருஷோத்தம யோகம்–

அசின் மிஸ்ராத் விஸூத்தாச்ச சேத நாத் புருஷோத்தம
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம் யாத் அந்ய பஞ்சத சோதித–ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –19-

அசின் மிஸ்ராத் சேதநாத்– அசித் உடன் கூடிய சேதனர்கள் -பத்தாத்மா
விஸூத்தாச்ச சேத நாத்—அசித் நீக்கி சுத்த -முக்தாத்மா சேதனர்கள் –
புருஷோத்தம –
வ்யாப நாத்-வியாபிக்கிற படியால்
பரணாத்-தரிக்கிற படியால்
ஸ்வாம் யாத்-நியமிக்கிறபடியால்
அந்ய-வேறுபட்ட புருஷோத்தமன் -ஸமஸ்த ஸூவ இதர விலக்ஷணன் –
வேறு பட்டு –உயர்ந்த — சம்பந்தம் கொண்டே –பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஸ்திதிகள் –
ஆகாசம் -வியாபகம் மட்டும் -பூ தேனை தரிக்கும் -ராஜா சிலரை நியமிக்கலாம் -இவனோ சர்வரையும் சர்வத்தையும் –

தன்னை பற்றி -ஸூ யாதாம்யாம் -7-அத்யாயம்
ஸூ மாஹாத்ம்யம் -9-அத்யாயம் – இவற்றின் விளக்கம் இது -பூர்வ சேஷம் –
புருஷன் புரி நாடியில் இருந்து -எல்லா ஆத்மாக்களும் புருஷன் –
பத்தன் முக்தன் நித்யன் -மூவர் புருஷோத்தமன் -இம்மூவரிலும் வாசி -இந்த கோஷ்ட்டியில் இல்லையே
அபுருஷன் -அசித் -வர்க்கம்-
புருஷோத்தம வித்யை அறிந்தால் அந்த ஜென்மத்தில் மோக்ஷம் -அவதார ரஹஸ்ய ஞானம் போலே
நடுவில் நாம சங்கீர்த்தனமும் இதே கிட்டும் பார்த்தோம் –
பிரபத்தி நிஷ்டர்களுக்கு -சர்வ தர்மான் பரித்யஜ்ய -இவை எல்லாம் கைங்கர்யம் -சாதனம் இல்லை –

மூ வெட்டினும் மோகம் அடைந்த உயிர்களினும்
நா வெட்டு எழுத்தோடு நல்வீடு நண்ணின நம்பரினும்
மேவு எட்டு வன் குண விண்ணோர் களினும் விசயனக்குத்
தாவிட்டு உலகு அளந்தான் தனை வேறு என்று சாற்றினனே –16-

15 அத்யாய சாரம் –
மூ வெட்டினும் -24 தத்வங்கள் ஆகிய பிரக்ருதியைக் காட்டிலும்
மோகம் அடைந்த உயிர்களினும் -அதில் மோகம் அடைந்து அஜ்ஞானம் பெற்றுள்ள பத்த ஜீவர்களைக் காட்டிலும்
நா வெட்டு எழுத்தோடு நல்வீடு நண்ணின நம்பரினும் -திரு அஷ்டாஷர அனுசந்தத்தால் சிறந்த மோஷத்தைப் பெற்ற சிறந்த முக்தர்களைக் காட்டிலும்
மேவு எட்டு வன் குண விண்ணோர் களினும் -அபஹத பாப்மாதி எட்டு வலிய குணங்களை யுடைய நித்யர்களைக் காட்டிலும்
விசயனக்குத் தாவிட்டு உலகு அளந்தான்
தனை வேறு என்று சாற்றினனே-தன்னை வேறு பட்டவன் -புருஷோத்தமன் -என்று உபதேசித்து அருளினான் –

மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும்
மாறு உன்னும் உயிர் வகையில் – உத்தமனா மன்னி அவை
மீது உள் பரந்து பரித்து இறையாய் மேவினனை
யோதும் பதினைந்தா மோத்து.

மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும் – அனாதி காலமாகச் சேர்ந்திருக்கும் அசேதனமான ப்ராக்ருத சரீரத்தோடு
கூடிய பத்த ஜீவனைக்காட்டிலும்,
மாறு உன்னும் உயிர் வகையில் – அவ்வசித்தை விட்டு நீங்கியதாக அறியப்படும் முக்தாத்மாவைக் காட்டிலும்,
உத்தமனா மன்னி – மேற்பட்டவனாக விளங்கி,
அவை மீது உள் பரந்து – அவ்விரண்டையும் வ்யாபித்து,
பரித்து – அவற்றைத் தாங்கி,
இறையாய் – அவற்றை உடையவனாய்,
மேவினனை – பொருந்தியிருக்கும் புருஷோத்தமனான நாராயணனை,
பதினைந்தாம் ஓத்து – (கீதையின்) பதினைந்தாம் அத்யாயம்,
ஓதும் – கூறும்.

1 ஸம்ஸாரம் ஓர் அரசமரமாக உருவகப்படுத்தப்பட்டு அதை அறிந்தவனே வேதத்தை நன்கறிந்தவன் எனப்படுகிறது.
2 முற்கூறிய உருவகம் மேலும் நீட்டிக்கப்படுகிறது.
3 இந்த மரத்திற்கு குணங்களில் பற்றே காரணமென்றும் குணங்கடந்த நிலையாலேயே இது அழிகிறதென்றும்,
அஜ்ஞானமே இதற்கு ஆதாரமென்றும் ஸம்ஸாரிகளால் அறியப்படுவதில்லை.
3-4 நல்லறிவால் விளைந்த ‘குணங்களில் பற்றின்மை’யாகிற ஆயுதத்தாலே இம்மரத்தை வெட்டி,
ப்ராப்யமான ஆத்மா தேடத்தக்கது.
4 எம்பெருமானை ஶரணமடைவதன் மூலமே பற்றின்மையாகிற ஆயுதத்தைப் பெற்று
ஸம்ஸாரத்தை வெட்டி வீழ்த்தலாம்.
5 எம்பெருமானை ஶரணமடைந்தவர்களுக்கு தேஹாத்ம மயக்கம் நீங்குகை, குணங்களில் பற்றை வெல்லுகை,
ஆத்ம ஜ்ஞானத்தில் எப்போதும் ஈடுபட்டிருக்கை, மற்ற விஷயங்களில் விருப்பம் நீங்கப் பெற்றவர்களாகை,
இன்ப துன்பங்களாகிற இரட்டைகளிலிருந்து விடுபடுகை முதலானவை அனைத்தும் எளிதாகி
ஆத்மாநுபவமாகிற பலமும் ஸித்திக்கிறது.
6 பரிஶுத்தாத்ம ஸ்வரூபத்தின் பெருமை.
7 எம்பெருமானுடைய செல்வமாயிருக்கும் ஸம்ஸாரி ஜீவன் தான் சேர்த்து வைத்திருக்கும் புண்ய பாப ரூபமான
விலங்குகளாலே வலியக் கட்டப் பெற்று, தன் ஶரீரமாகிற சிறையிலே அடைபட்டிருக்கிறான்.
8 அவன் ஒரு ஶரீரத்திலிருந்து மற்றொரு ஶரீரத்தில் புகுவது முதலான துன்பங்களை அனுபவிக்கிறான்.
9 இந்த்ரியங்களைக் கொண்டு அவன் விஷம் கலந்த தேன் போன்ற ப்ராக்ருத விஷயங்களை அனுபவித்து உழலுகின்றான்.
10 இத் துன்பங்களை யெல்லாம் அவன் அனுபவிப்பதற்குக் காரணம் ஆத்மாபஹார மாகிற திருட்டே.
இவன் தன் ஸ்வரூபத்தை அறியாமைக்குக் காரணம் தேஹத்தையே ஆத்மா என்று மயங்குவதே.
இந்த மயக்கமில்லாமல் அறிவுக் கண்ணை யுடையவர்கள் ஆத்மாவை அறிவே வடிவெடுத்ததாகக் காண்கிறார்கள்.
11 முன் ஶ்லோகங்களின் விளக்கம்.
12-14 ஸூர்யன், சந்திரன், அக்னி முதலானவற்றுக்குள்ளதான பொருள்களைப் ப்ரகாஶிக்கச் செய்யும் ஶக்தியும்,
பூமியின் தாரண ஶக்தியும், சந்திரனின் போஷண ஶக்தியும் ஜாடராக்னியின் ஜீர்ணம் செய்யும் ஶக்தியும்
இது போல் உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்குமுள்ளதான ஒவ்வொரு கார்யத்தைச் செய்யும் ஶக்திகளும்
எம்பெருமானுடையவையே. ஆகையால், ப்ராக்ருதப் பொருள்கள் எல்லாம் எம்பெருமானின் செல்வமே.
15 எல்லாப்பொருள்களையும் எம்பெருமானோடு ஒரே வேற்றுமையில் படிப்பதற்குக் காரணம் அவன்
அனைவருடைய ஹ்ருதயத்திலும் எழுந்தருளி நியமிப்பதே. வேதங்கள் இவ்வர்த்தத்தைச் சொல்லுகின்றன.
எல்லா வேத வாக்யங்களாலும் முக்கியமாக அறியப்படுபவனும் அவற்றில் சொல்லப்பட்ட
கர்மங்களுக்குப் பலம் அளிப்பவனும் எம்பெருமானே.
16 புருஷோத்தம வித்யையின் தொடக்கம்: க்ஷர புருஷனாகிற ஸம்ஸாரி ஜீவன் அக்ஷர புருஷனாகிற முக்தன்
என்று ஜீவர்கள் இருவகைப்படுவர்.
17 அசித், ஸம்ஸாரி ஜீவன், முக்தன் என்னும் மூன்று பொருளையும் வ்யாபித்து, தாங்கி நின்று,
நியமிக்கும் பரமாத்மாவாகிற உத்தம புருஷன் முற்கூறிய க்ஷராக்ஷர புருஷர்களைக் காட்டிலும் வேறுபட்டவன்.
18 ஸம்ஸாரி ஜீவனைக் கடந்து நிற்பதாலும் முக்தனைக் காட்டிலும் மேலானவனாயிருப்பதாலும் ஶ்ருதி ஸ்ம்ருதிகளில்
“புருஷோத்தமன்” என்று பெயர் பெற்றவன் எம்பெருமானே.
19 இந்தப் புருஷோத்தம வித்யையை அறிந்தவன் எல்லா மோக்ஷோபாயங்களையும் அறிந்தவனாகிறான்.
பக்தி வகைகள் அனைத்தாலும் பக்தியைச் செய்தவனாகிறான்.
20 “உன் தகுதியைப் பார்த்து இந்தப் பரமரஹஸ்யமான ஶாஸ்த்ரத்தை உனக்கு உபதேஶித்தேன்.
இதை அறிந்து அறிய வேண்டியதனைத்தையும் அறிந்தவனாகவும், செய்ய வேண்டியதனைத்தையும்
செய்தவனாகவும் ஆவாயாக” என்று அர்ஜுனனுக்குக் கண்ணன் உபதேஶித்து அத்தியாயத்தை நிறைவுபடுத்துகிறான்.

———————————————————

ஸ்ரீ கீதா  -16–ஸ்ரீ தேவாஸூர விபாக அத்யாயம் —

தேவாஸூர விபாகோக்தி பூர்விகா சாஸ்திர வஸ்யதா
தத்வ அனுஷ்டான விஜ்ஞானஸ் தேமநே ஷோடஸ உச்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –20-

தேவாஸூர விபாக-உக்தி பூர்விகா -தேவ அஸூர -விபாகம் சொல்வதை முன்னிட்டு
சாஸ்திர வஸ்யதா-சாஸ்திரம் வஸ்யராய வாழ வேண்டும்
தத்வ அனுஷ்டான விஜ்ஞானஸ் -தத்வம் -உண்மை பொருள் -பற்றிய ஞானம் ஏற்படவும்-அடைய- உபாயம் அனுஷ்டானம் பற்றிய ஞானமும்
தேமநே -ஸ்திரமாக -ஆழமாக உறுதியாக -இருக்க வேண்டுமே -வேதமும் வேதாந்தமும் தான் இந்த உறுதியை கொடுக்கும்
கீழே அவன் புருஷோத்தமன் சொல்லி -அவனைப் பற்றிய ஞானமும் -அடைய வேண்டிய அனுஷ்டானமும் இங்கு -அருளிச் செய்கிறான்
ஒரே வழி சாஸ்திரம் தானே –ப்ரத்யக்ஷம் அனுமானம் மூலம் -இல்லாமல் -வேதம் ஒன்றே புகல் -வேதைக சமைத கம்யன் -சாஸ்த்ர யோநித்வாத்-

ஆணை மாறாதவர் தேவர் அல்லா வழக்கோர் அசுரர்
கோணை மராத குணச் செல்வா நீ குறிக்கோள் மறையைப்
பேணிய தத்துவமும் பிணியற்ற கிரிசைகளும்
காண் இதனால் விசயா வென்று கண்ணன் இயம்பினனே –17-

16 அத்யாய சாரம்
கோணை மராத குணச் செல்வா –வக்கிரத் தன்மை கலவாத குணமாகிய செல்வத்தை உடையவனே -இரண்டாவது மா ஸூ ச -அருளினான் –
பேணிய தத்துவமும் -கொண்டாடப்படும் பரதத்வமும்
பிணியற்ற கிரிசைகளும் -பலனில் பற்று வைப்பதாகிய தீங்கு இல்லாத கர்மங்களும்
காண் இதனால் விசயா வென்று -இந்த வேதத்தால் அறிந்து கொள் அர்ஜுனனே என்று உபதேசித்து அருளினான் –

தன்மையாற் றேவ ரசுரரெனச் சார்பிறவி
நன்மைசேர் சாத்திரத்தி னாடுதலும் – தொன்மை
யுரைக்கங் கறிவுரைப்புக் காட்டுதற்குக் கீதை
யுரைக்கும் பதினாறா மோத்து.

கீதை பதினாறாம் ஓத்து – கீதையின் பதினாறாம் அத்தியாயம்,
அங்கு தொன்மை உரைக்கு – அந்த கீதையில் இதுவரை (அடையத்தக்க) தத்துவத்தைப் பற்றியும்
அதை (அடைவிக்கும்) உபாயாநுஷ்டானத்தைப் பற்றியும் சொல்லப்பட்ட விஷயங்களின்,
அறிவு உரைப்பு காட்டுதற்கு – அறிவு உறுதிப்படுவதற்காக,
தன்மையால் தேவர் அசுரர் என சார்பிறவி – (மனிதர்கள்) தம் இயல்வால் தேவர் அசுரர் என இருவகை
பிறவிகளாகப் பிரிவுபட்டிருப்பதையும்,
நன்மை சேர் சாத்திரத்தின் நாடுதலும் – நன்மையை அடைவிக்கும் சாஸ்திரத்திற்கு வசப்பட்டிருக்கும்
தன்மையையும், உரைக்கும் – விளக்குகிறது.

1-3 தெய்வப்பிறவி வகுப்பில் சேர்ந்தவனுக்குரிய முக்கியமான குணங்கள்.
1. பயமின்மை,
2. மனத்தின் பரிசுத்தி,
3. (ப்ரக்ருதியினின்றும் நீங்கிய) ஆத்ம ஸ்வரூபத்தைச் சிந்தித்திருத்தல்,
4. நல்ல வழியில் தேடிய பொருளை நல்லோர்களுக்களித்தல்,
5. மனத்தை ஶப்தாதி விஷயங்களில் பாயாமல் தடுக்கப் பழகுதல்,
6. (பலனில் பற்றற்று பகவதாராதனமாகப்) பஞ்ச மஹா யஜ்ஞம் முதலானவற்றை அனுஷ்டித்தல்,
7. வேதாத்யயனத்தில் ஈடுபடுதல்,
8. ஏகாதசி உபவாஸம் முதலான தவங்களில் ஈடுபடுதல்,
9. மனம் மொழி மெய்களால் ஒருபடிப் பட்டிருத்தல்,
10. எந்த ஜீவராசியையும் துன்புறுத்தாமை,
11. ஜீவராசிகளுக்கு நன்மையான உண்மையையே உரைத்தல்,
12. பிறரைத் துன்புறுத்துவதில் மூட்டும் கோபம் இல்லாதவனாயிருக்கை,
13. தனக்கு நன்மையை விளைக்காத உடைமைகளைக் கை விடுதல்,
14. (மனம் தவிர்ந்த) இந்த்ரியங்களை ஶப்தாதி விஷயங்களில் பாயாமல் தடுக்கப் பழகுதல்,
15. (பிறர்க்குத் தீங்கு விளைக்கும்) கோட்சொல்லுதலைத் தவிர்த்தல்,
16. ஜீவராசிகளின் துன்பங் கண்டு பொறாமலிருத்தல்,
17. விஷயங்களில் பற்றின்மை,
18. (நல்லோர்கள் அணுகலாம்படி) மென்மையுடனிருக்கை,
19. தகாத செயல்களைச் செய்வதில் வெள்கி யிருத்தல்,
20. அருகிலிருக்கும் அழகிய பொருள்களையும் ஆசைப் படாமை,
21. (தீயவர்களால்) வெல்ல வொண்ணாமை,
22. (துன்புறுத்துபவர்களிடமும்) பொறுமை,
23. (பேராபத்து வந்தாலும்) செய்ய வேண்டியதில் உறுதியாயிருக்கை,
24. (மநோ வாக் காயங்களில் சாஸ்த்ரங்களில் சொல்லிய) பரிசுத்தி யாகிற அனுஷ்டானத்
தகுதியை உடையவனாயிருக்கை,
25. பிறர் நற் செயல்களைத் தடுக்காமை,
26. தகாத கர்வம் இன்மை ஆகிய இருபத்தாறு குணங்கள்.

4 அஸுரப் பிறவி வகுப்பில் சேர்ந்தவனுக்குரிய முக்கியமான குணங்கள்:
1. (தார்மிகன் என்னும்) புகழைப் பெற தர்மத்தை அநுஷ்டிப்பது,
2. (ஶப்தாதி விஷ்யங்களை அனுபவிப்பதனால் உண்டாகும்) செருக்கு,
3. அதிகமான கர்வம்,
4. (பிறரைத் துன்புறுத்தம்) கோபம்,
5. (நல்லோர்களை வெறுப்படையச் செய்யும்) கடுமை,
6. தத்வ விஷயத்திலும், செய்யத் தக்கது அல்லது தகாத விஷயத்திலும் அறிவின்மை ஆகிய ஆறு குணங்கள்.

5 எம்பெருமான் ஆணையைப் பின் செல்வதாகிற தேவர்களுக்குரிய செல்வம் ஸம்ஸார விடுதலைக்கும்,
எம்பெருமானுடைய ஆணையை மீறுவதாகிற அசுரர்க்குரிய செல்வம் தாழ்ந்த கதிகளை அடைவதற்கும் உறுப்பாகின்றன.
5* அர்ஜுனன் தேவர்க்குரிய செல்வத்தைப் பெற்றவனே என்று கூறி அவனது வருத்தத்தைப் போக்குதல்.
6 தேவர்க்குரிய ஆசாரம் கர்மஜ்ஞான பக்தியோகங்களைச் சொல்லும்போது விரிவாகக் கூறப்பட்டது.
அசுரர்க்குரிய ஆசாரம் மேலே (18-வது ஶ்லோகம் வரை) சொல்லப்படுகிறது.
7 1) அசுரப்பிறவிகள், ஐஶ்வர்ய ஸாதனமாகவும், மோக் ஷஸாதனமாகவும்
இருக்கும் வைதிக தர்மத்தை அறியமாட்டார்கள்,
2) அவர்களிடம் ஶுத்தி இருக்காது,
3) ஸந்த்யாவந்தனம் முதலான ஆசாரமும் அவர்களிடம் இருக்காது.
4) உண்மை உரைத்தலும் அவர்களிடம் இருக்காது.

8 1) அசுரர்கள் உலகம் ப்ரஹ்மாத்மகம், ப்ரஹ்மத்தில் நிலை நிற்பது,
ப்ரஹ்மத்தால் நியமிக்கப்படுவது என்று சொல்வதில்ல
2) ஆண், பெண் சேர்க்கையால் உண்டாகாதது எதுவுமில்லையாகையால் உலகனைத்தும்
காமத்தையே காரணமாகக் கொண்டது என்று கூறுகிறார்கள்.

9 அசுரர்கள் தேஹத்திலும் வேறுபட்ட ஆத்மாவை அறியாமல் கொடிய செயல்களைச் செய்பவர்களாய்,
உலகம் அழிவதற்குக் காரணமாகிறார்கள்.
10 அசுரர்கள் காமத்தை நிறைவேற்ற அநியாய வழியில் தேடப்பெற்ற பொருள்களைக் கொண்டு
சாஸ்த்ரத்திற்கு முரண்பட்ட விரதங்களைக் கொண்டவர்களாய், டம்பம், துரபிமானம், மதம்
ஆகியவற்றோடு கூடியவர்களாய்ச் செயல்படுகிறார்கள்.
11 அசுரர்கள் அளவிடவொண்ணாத கவலைகளை யுடையவர்களாய், காமாநுபவத்தையே
பரம புருஷார்த்தமாக நினைப்பவர்கள்.
12 1) அசுரர்கள் நூற்றுக்கணக்கான ஆஶாபாஶங்களால் கட்டப்பட்டவர்கள்.
2) காமத்திலும், கோபத்திலுமே ஊன்றி நிற்பவர்கள்.
12. காமாநுபவத்திற்குத் தவறான வழிகளில் பொருளை விரும்பித் தேடுகிறார்கள்.
13 அசுரர்கள் தங்களுடைய இஷ்டப்ராப்தி தம் திறமையாலேயேயொழிய முன்வினையால் அல்ல என்று மயங்கி, காமாநுபவத்தில் பெற்றதையும், பெறவேண்டியதையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
*14 அசுரர்கள் ‘ஶத்ரு நிரஶனம்’ முதலான அநிஷ்ட நிவ்ருத்திகளும் தம் திறமையாலேயேயொழிய முன் வினையால் அல்ல என்று மயங்கியிருக்கிறார்கள்.
14*-15 அசுரர்கள் முற்கூறிய தம் திறமையும், மற்றும் பல திறமைகளும் தமக்கு இயல்பாக உள்ளதேயொழிய, புண்யத்தால் உண்டானதன்று என்று மயங்கியிருக்கிறார்கள்.
16 அசுரர்கள் பல கவலைகளையும், மயக்கங்களையும், புலனின்பங்களில் ஈடுபாட்டையும் உடையவர்களாயிருக்கையாலே அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.
17 1) அசுரர்கள் தம்மைத்தாமே பெருமைபேசிக் கொள்பவர்கள்.
2) பணிவில்லாமல் நிமிர்ந்து நிற்பவர்கள்.
3) பணத்தினாலும் (கல்வி, குடிப்பிறப்பு ஆகியவற்றால் உண்டான)

அபிமானத்தாலும் விளையும் கர்வத்தை உடையவர்கள்.
4) புகழையே பயனாகக் கொண்டு சாஸ்த்ர விதிக்கு முரணாக டம்பத்திற்காக

யாகம் செய்கிறார்கள்.
18 அசுரர்கள் அஹங்காரத்தையும், தன் பலத்தையும், கர்வத்தையும் கோபத்தையும் பற்றி நிற்பவர்களாய், அனைத்தையும் செய்விக்கும் பகவானிடத்தில் பொறாமையுடையவர்களாய் யாகம் செய்கிறார்கள்.
19 பகவானைத்வேஷிப்பவர்களாய், கொடியவர்களாய், மனிதர்களில் கடையானவர்களாய், அமங்களாமானவர்களான அவ்வசுரர்களை எம்பெருமான் பிறவிகளில், அதிலும் ஆஸுரப் பிறவிகளிலேயே தள்ளுகிறான்.
20 முற்கூறியபடி ஆஸுரப்பிறவிகளடைந்த அசுரர்கள் விபரீதஜ்ஞானம் வளரப் பெற்றவர்களாய், மேன்மேலும் தாழ்ந்த கதிகளையே அடைகிறார்கள்.
21 ஆஸுரத்தன்மைக்கு நுழைவாயிலாயிருக்கும் காமம், க்ரோதம், லோபம் என்னும் மூன்றையும் நல்லவர்கள் அவசியம் கைவிடவேண்டும்.
22 இம்மூன்றையும் கைவிடுபவன் தனது நன்மைக்கு முயற்சி செய்து பகவானையே அடைகிறான்.
23 ஆஸுரத்தன்மைக்கு மூலகாரணமான முற்கூறிய மூன்றைக்காட்டிலும் முக்கியமான காரணம் சாஸ்திர நம்பிக்கையின்மையே; சாஸ்திர விதியைக் கைவிடுபவன் இம்மை மறுமைப் பயன்களையும், மேலான கதியையும் அடையவே மாட்டான்.
24 ஆகையால், கைக்கொள்ளத்தக்கதையும் தகாததையும் நிர்ணயிப்பதில் சாஸ்த்ரமே (வேதமே) ப்ரமாணம். ஆகையால் வேதத்தில் சொல்லப்பட்ட புருஷோத்தமனாகிற தத்துவத்தையும், அவனை அடைய உபாயமான தர்மத்தையும் கைக்கொள்ள வேண்டும்.

————————————————————————-

ஸ்ரீ கீதா  -17-ஸ்ரீ ஶ்ரத்தா த்ரய விபாக யோகம்–

அசாஸ்த்ரம் ஆஸூரம் க்ருத்ஸ்நம் சாஸ்த்ரீயம் குணத ப்ருதக்
லஷணம் சாஸ்திர சித்தஸ்ய த்ரிதா சப்தத சோதிதம்—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்—21-

சாஸ்திரம் விதிக்காத கர்மாக்களை ஸ்ரத்தை உடன் -மனம் போன படி இல்லாமல் -செய்தால் பலன் கிட்டுமோ என்ற சங்கை –
அர்ஜுனன் கேட்பதில் -புரிந்து கொள்ளாத கேள்வி பதில் -5-ஸ்லோகம் –
மனம் போன படி என்றாலே சாஸ்திரம் விதிக்காத செயல்கள் தானே – அனைத்தும் வீண் –
இந்த அத்யாயம் முழுவத்துக்கும் இதே கருத்து
சாஸ்திரம் விதித்தவற்றை ஸ்ரத்தை உடன் செய்து பயன் பெற வேண்டும்

1–அசாஸ்த்ரம் ஆஸூரம் க்ருத்ஸ்நம்-ஓன்று விடாமல் எல்லாம் -சாஸ்திரத்தில் விதிக்கப் படாத அனைத்தும்
அஸூர தன்மை -என் ஆணையை மீறினவை தானே -இது தான் கேள்விக்கு பதில் –
2– சாஸ்த்ரீயம் குணத ப்ருதக் -சாஸ்திரம் விதிக்கப் பட்டவை செய்தால்-செய்கிறவனுடைய -குணங்களை பொறுத்து
-சாத்விக ராக்ஷஸ தாமஸ கர்மா மூவகை -பலன்களும் மூவகை –
ஆகாரம் -தபஸ் -இப்படி ஐந்துக்கும் சாத்விக ராஜஸ தாமஸ -மூன்றினில் இரண்டை அகற்றி ஒன்றினில் ஒன்றி –
கண்ணனுக்கு பிடித்தது என்பதால் எப்பாடு பட்டாவது தூக்கி விடுவாரே -ஆனு கூலஸ்ய சங்கல்பம் பிரதி கூலஸ்ய வர்ஜனம் –
3–லஷணம் சாஸ்திர சித்தஸ்ய -யஜ்ஜம் தானம் தபஸ் இவற்றை சித்தி அடைய– ஓம் சது தது– மூன்று சொற்களை சேர்த்து சொல்ல வேண்டும்

மறை பொருந்தாதவை வல் அசுரர்க்கு வகுத்தமையும்
மறை பொருந்தும் நிலையின் வன் குணப்படி மூவகையும்
மறை நிலை தன்னை வகுக்கும் குறி மூன்றின் மேன்மையுமம்
மறை யுமிழ்ந்தான் உரைத்தான் வாசவன் தன் சிறுவனுக்கு –18-

17 அத்யாய சாரம் –
மறை நிலை தன்னை வகுக்கும் -வேதத்தில் விதிக்கப்பட்ட கர்ம அனுஷ்டானத்தை -மற்றவற்றின் நின்று வேறுபடுத்திக் காட்டுகின்ற –
குறி மூன்றின் மேன்மையுமம் –ஓம் -தத் -சத் -என்ற மூன்று லஷணங்களின் உயர்வும் –

ஆசுரமா மின்மை சாத்திரந்தான் சாத்திரத்திற்
றேசுடைய கன்மஞ் செறிகுணத்தாற் – பேசு நெறி
சேர்ந்தேயிம் முக்குணங்கள் செப்புமே மூவகையா
வோர்ந்தே பதினேழா மோத்து.

சாத்திரந்தான் இன்மை – சாஸ்திரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
ஆசுரம் ஆம் – அசுரர்க்குரியதாகும்;
சாத்திரத்தில் தேசுடைய கன்மம் – சாத்திரத்தில் விதிக்கப்பட்டிருக்கையாகிற சிறப்புடைய கர்மங்கள்,
செறி குணத்தால் மூவகையா – (தேஹத்தோடு) சேர்ந்திருக்கும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும்
மூன்று குணங்களை யிட்டு மூவகையாகவும்,
பேசு நெறி இம்முக்குணங்கள் சேர்ந்தே மூவகையா – (சாஸ்த்ரங்களில் புகழப்படும் ஓம் தத் ஸத் என்னும்)
இந்த மூன்று பதங்களின் சேர்த்தியினால் (மற்ற கர்மங்களைக் காட்டிலும்) மூன்று வகையில் வேறுபட்டிருப்பதாகவும்,
பதினேழாம் ஓத்து – பதினேழாம் அத்தியாயம்,
ஓர்ந்தே செப்புமே – ஆராய்ந்து கூறும்.

1 ஶாஸ்த்ரவிதி இல்லாமற் போனாலும் ஶ்ரத்தையோடு செய்யப்படும் கர்மங்களைப் பற்றி அர்ஜுனனின் கேள்வி.
2 ஶாஸ்த்ரங்களை ஒட்டியிருக்கும் ஶ்ரத்தை குணங்களையிட்டு கர்மம் மூவகைப்படுகிறது.
3 ஶ்ரத்தை எப்படிப்பட்டதோ அதற்குத்தக்க பலனே கிடைக்கும்.
4 ஸத்விக ராஜஸ தாமஸர்களால் ஆராதிக்கப்படுபவர்கள்.
5-6 ஶாஸ்த்ர விதிக்கு முரணான கர்மங்கள் பகவதாஜ்ஞையை மீறுவதால் எப் பயனையும் விளைப்பதில்லை
என்பதோடல்லாமல் அனர்த்தத்தையும் விளைக்கின்றன.
7 ஸத்வ ரஜஸ் தமோ குணங்களையிட்டு ஆஹாரமும், தவமும், தானமும் மூவகைப்பட்டிருக்கும் என்று கூறுதல்.
8 ஸாத்விக ஆஹாரத்தின் விளக்கம்.
9 ராஜஸ ஆஹாரத்தின் விளக்கம்.
10 தாமஸ ஆஹார விளக்கம்.
11 ஸாத்விக யாக விளக்கம்.
12 ராஜஸ யாக விளக்கம்.
13 தாமஸ யாக விளக்கம்.
14 உடலால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
15 வாக்கால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
16 மனத்தால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
17 ஸாத்விக தவத்தின் விளக்கம்.
18 ராஜஸ தவத்தின் விளக்கம்.
19 தாமஸ தவத்தின் விளக்கம்.
20 ஸாத்விக தானத்தின் விளக்கம்.
21 ராஜாஸ தானத்தின் விளக்கம்.
22 தாமஸ தானத்தின் விளக்கம்.
23 வைதிக கர்மங்கள் “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று ஶப்தங்களோடு இணைந்திருக்க வேண்டு
என்னும் வைதிக கர்ம லக்ஷணம்.
24 மூன்று ஶப்தங்களில் முதலாவதான ப்ரணவம் வைதிக கர்மங்களோடும், வேதங்களொடும்,
மூவர்ணத்தவர்களோடும் சேர்ந்திருக்கும் முறை.
25 வைதிக கர்மம் முதலான மூன்றுக்கும், “தத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்தி;
மோக்ஷ ஸாதனமான கர்மங்களுக்கு “தத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்திருக்கை லக்ஷணம்.
26 “ஸத்” என்னும் சொல்லின் வழக்குகள் (ப்ரயோகங்கள்).
27 வைதிக கர்மங்கள் முதலான மூன்றுக்கும் “ஸத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்தி;
ப்ராக்ருத பல ஸாதனங்களுக்கு “ஸத்” என்னும் ஶப்தத்தோடு சேர்ந்திருக்கை லக்ஷணம்.
28 ஶாஸ்த்ரத்தை யொட்டிச் செய்யப்படுவதானாலும் ஶ்ரத்தையில்லாமல் செய்யப்படும் கர்மம்
“அஸத்” என்று சொல்லப்படும். அதனால் எப்பலனும் இல்லை.

———————————————————————————-

ஸ்ரீ கீதா -18-ஸ்ரீ மோக்ஷ உபதேச யோகம்:

ஈஸ்வரே கர்த்ருதா புத்தி சத்வ உபாதேயதா அந்தி மே-
ஸ்வ கர்ம பரிணாமஸ் ஸ சாஸ்திர சாரார்த்த உச்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –22-

1–ஈஸ்வரே கர்த்ருதா புத்தி -கர்த்தா நான் அல்லேன் -ஈஸ்வரன் தூண்டச் செய்கிறேன் என்ற புத்தி வேண்டுமே –18-17-வரை –
2–சத்த்வோ பாதே யதாந்தி மே—சத்வ உபாதேயதா அந்தி மே-கடைசி அத்தியாயத்தில் – –சத்வ குணத்துடன் -18-18–18-43-வரை –
சாத்விக ஞானம் -சாத்விக புத்தி -சாத்விக கர்மா -சாத்விக தியாகம் – சாத்விக கர்த்தா —
தேவதை ஆகாரம் தானம் யஜ்ஜம் தபஸ்-ஐந்தையும் கீழே பார்த்தோம்
-இங்கு -கர்மம் ஞானம் புத்தி த்ருதி கர்த்தா -என்ற ஐந்தும் சொல்வான்
3–ஸ்வ கர்ம பரிணாமஸ் ஸ –ஞானம் உள் அடக்கிய கர்மா யோகத்தால் –18-44—18-54-வரை –
4–சாஸ்திர சாரார்த்த உச்யதே –சாஸ்த்ர சாரத்தை அருளிச் செய்கிறான் –
சாரார்த்தம் -ஸாத்ய பக்தி ஏக கோசாரத்தால்–பக்தி யோகத்தால் மட்டும் தான் அவனை அடைய முடியும் –
-18–66–சரம உபாயம் சொல்லும் ஸ்லோகம் என்றபடி –
பக்தி சரமமா -சரணாகதி சரமமா என்னில் -கீதா சாஸ்திரம் படி பக்தியே
பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க சரணாகதி -இங்கு
சரம ஸ்லோகம் வைபவம் இங்கு இல்லை -ரஹஸ்ய த்ரயத்தில் சேர்த்து -சரணாகதியை உபாயம் -நேரே முக்திக்கு உபாயம் சரணாகதி என்றவாறு –
ஒரே ஸ்லோகம் கொண்டு -இங்கு பக்திக்கு அங்கம் -அங்கு ஸ்வதந்திரமாக உபாயம் என்றவாறு –

சத்துவ வீடுடை நல கருமம் தான் உகந்தமையும்
சத்துவம் உள்ளது தான் குறிக்கொள் வகை செய்ததுவும்
சத்துவ நல கிரிசைப் பயனும் சரணாகதியும்
சத்துவமே தருவான் உரைத்தான் தனிப் பார்த்தனுக்கே –19-

18 அத்யாய சாரம் –
கர்த்ருத்வ மமதை இல்லாமல் பலன் சம்பந்தத்தையும் விட்டு -மூன்று வித த்யாகம்-
பகவத் ஆராதனம் என்றே கருதி வர்ணாஸ்ரம கர்மங்களைச் செய்து -மனம் தெளிந்து -இடைவிடாமல் சிந்தித்து முக்தி அடையலாம் –

செய்கருமத் தீசனே கர்த்தாவாச் சிந்திப்பு(ம்)
மெய்கருதுஞ் சத்துவத்தின் மெய்ப்பாடு – முய்கருமஞ்
சாருங்க் கதியுமிச் சாரத்தின் சாரமுமுற்
றோரும் பதினெட்டா மோத்து.

செய் கருமத்து ஈசனே கர்த்தாவா சிந்திப்பும் – அநுஷ்டிக்கப்படும் கர்மத்திற்கு ஸர்வேஶ்வரனே கர்த்தா என்னும் நினைவையும்,
மெய் கருதும் சத்துவத்தின் மெய்ப்பாடும் – உண்மையான ஜ்ஞானத்திற்குக் காரணமான ஸத்வகுணம் கைக்கொள்ளத்தக்கது என்பதையும்,
உய்கருமம் சாரும் கதியும் – முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதையும்,
இச்சாரத்தின் சாரமும் – ஶாஸ்த்ரங்களின் ஸாரமான இந்த கீதையின் ஸாரம் பக்திப்ரபத்திகளே என்பதையும்,
பதினெட்டாம் ஓத்து – (கீதையின்) பதினெட்டாம் அத்தியாயம்,
உற்று ஓரும் – நன்கு ஆராய்ந்துரைக்கும்.

1 ஸந்யாஸ த்யாகங்கள் ஒன்றா வெவ்வேறா, அவற்றின் ஸ்வரூபம் என்ன என்று அறிவதற்காக அர்ஜுனனின் கேள்வி.
2, 3 ஸந்யாஸ த்யாகங்களைப் பற்றிய அறிவாளிகளின் கருத்துக்கள்;
4-6 த்யாகம், ஸந்யாஸம் எனும் இரண்டும் ஒன்றே; கர்மங்களினுடைய ஸ்வரூபத்யாகம் தவறானது. ஸங்கல்பத்தையும் (கர்மம் என்னுடையது என்னும் எண்ணத்தையும்), பலனில் விருப்பத்தையும் விட்டு, கர்மங்கள் அனுஷ்டிக்கப்பட வேண்டியவையே.
7 கர்மஸ்வருபத்யாகம் தாமஸத்யாகம் (தமோகுணத்தால் விளைவது)
8 உடலுக்கு வருத்தம் விளையும் என்னும் அச்சத்தால் கர்மத்தை விடுவது ராஜஸத்யாகம். அதற்குப் பலனில்லை.
9 பலஸங்கங்களை மட்டும் விட்டு நித்யநைமித்திக கர்மங்களை அனுஷ்டிப்பது ஸாத்விகத்யாகமாகும்.
10 ஸாத்விகத்யாகத்தோடு கூடியவனுடைய ஆத்மகுணங்கள்.
11,12 கர்மபலத்யாகமே உண்மையான த்யாகமாகும். அத்தகையவனிடம் கர்மத்தின் பலன் ஒட்டாது. (இதுவரை அர்ஜுனனின் கேள்விக்குப் பதில் உரைக்கப்பட்டது.)
13-15 கர்த்ருத்வத்யாகத்தை ப்ரஸ்தாபித்தல், கர்மங்களுக்கு ஐந்து காரணங்களைக் காட்டுதல், ஐந்தாவது காரணமான பரமாத்மாவே ப்ரதான காரணம் என்று கூறுதல். (பராயத்தாதிகரணம்)
16,17 கர்த்ருத்வத்யாகத்தை விளக்குதல். (இந்தஶ்லோகம் வரை ‘கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே’ என்னும் அறிவு விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்)
18 கர்மங்களைப் பற்றிய வேதவிதி -ஜ்ஞாநம், ஜ்ஞேயம், ஜ்ஞாதா என்னும் மூன்றுடன் கூடியது. கர்மத்தின் வகை கரணம், கர்மா, கர்த்தா என்று மூன்று.
19 ஜ்ஞாநம் (கர்மத்தைப் பற்றிய அறிவு), கர்மம் (செய்யப்படும் கர்மம்), கர்த்தா (கர்மத்தைச் செய்பவன்) ஆகிய ஒவ்வொன்றும் முக்குணங்களையிட்டு மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.
20 ஸாத்விக ஜ்ஞாநத்தின் விளக்கம்.
21 ராஜஸ ஜ்ஞாநத்தின் விளக்கம்.
22 தாமஸ ஜ்ஞாநத்தின் விளக்கம்.
23 ஸாத்விக கர்மத்தின் விளக்கம்.
24 ராஜஸ கர்மத்தின் விளக்கம்.
25 தாமஸ கர்மத்தின் விளக்கம்.
26 ஸாத்விக கர்த்தாவின் விளக்கம்.
27 ராஜஸ கர்த்தாவின் விளக்கம்.
28 தாமஸ கர்த்தாவின் விளக்கம்.
29 புத்தி, த்ருதி ஆகியவை குணத்தையிட்டு மூவகைப்படும் என்று கூறுதல்.
30 ஸாத்விக புத்தியின் விளக்கம்.
31 ராஜஸ புத்தியின் விளக்கம்.
32 தாமஸ புத்தியின் விளக்கம்.
33 ஸாத்விக த்ருதியின் விளக்கம்.
34 ராஜஸ த்ருதியின் விளக்கம்.
35 தாமஸ த்ருதியின் விளக்கம்.
36,37 ஸுகம் குணத்தையிட்டு மூவகைப்படுவதை விளக்கத் தொடங்கி ஸாத்விக ஸுகத்தின் விளக்கம்.
38 ராஜஸ ஸுகத்தின் விளக்கம்.
39 தாமஸ ஸுகத்தின் விளக்கம்.
(ஶ்லோக 18 முதல் 39 வரையில் ஸத்வகுணமே கைக்கொள்ளத்தக்கது என்னும் விஷயம் விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்).
40 பத்த ஜீவர்களில் இந்த முக்குணங்களிலிருந்து விடுபட்டவன் எவனுமில்லை.
41 நாலு வர்ணத்தவர்களுக்கும் அவரவர் குலத்துக்கேற்றபடி தொழில்களையும், ஜீவனோபாயங்களையும் விளக்கத் தொடங்குதல்.
42 ப்ராம்மணருக்குரிய செயல்கள்.
43 க்ஷத்ரியருக்குரிய செயல்கள்.
44 வைசிய, சூத்ரர்களுக்குரிய செயல்கள்.
45 அவனவன் வர்ணத்துக்குரிய கர்மங்களில் நிலைநிற்பதால் மோக்ஷத்தையே அடையலாம் என்று விளக்கத் தொடங்குகிறான்.
46 அந்தந்த வர்ணத்துக்குரிய கர்மம் பரமாத்மாவுக்கு ஆராதனமாகையால் மோக்ஷகாரணமாகும்.
47 கர்மயோகமே ஜ்ஞானயோகத்தைக் காட்டிலும் சிறந்தது. அதை அநுஷ்டிப்பவன் ஸம்ஸாரத்தை அடையமாட்டான்.
48 ஜ்ஞானயோகத்தைச் செய்யத் தகுதியுள்ளவனுக்கும் கர்மயோகத்தை அநுஷ்டிப்பதே சிறந்தது.
49 கர்மயோகத்தை அனுஷ்டிப்பதாலேயே ஜ்ஞாநயோகத்தின் பலனாகிய தியான நிஷ்டையை அடையலாம்.
50 இந்தத் தியான நிஷ்டையால் ஆத்மதரிசனத்தைப் பெறும் வழியைக் கூறத் தொடங்குதல்.
51-53 ஆத்ம தரிசனத்தைப் பெறும் வழியைச் சுருக்கமாக விளக்குதல்.
54 ஆத்ம ஸாக்ஷாத்காரத்தாலே பரமபுருஷன் விஷயத்தில் பரபக்தி விளையும்.
55 பரபக்தியாலே பரமபுருஷனை உள்ளபடி அறிகையாகிற பரஜ்ஞாநத்தைப் பெற்று, அதற்குப் பின் அந்தப் பரபக்தியின் முற்றிய நிலையான பரமபக்தியாலே முக்தி நிலையில் பரமபுருஷனோடு ஸாயுஜ்யம் பெறுகிறான் ஜீவன்.
56 காம்யகர்மங்களையும் முற்கூறியபடி மூன்று வகைப்பட்ட பரித்யாகத்தோடு அனுஷ்டித்தால் மோக்ஷபலனை அடையலாம்.
57 ‘மூவகைப்பட்ட பரித்யாகங்களோடு என்னிடம் நெஞ்சை வைத்து உனக்குரிய யுத்தம் முதலான கர்மங்களைச் செய்வாயாக’ என்று அர்ஜுனனை நியமிக்கிறான்.
58 ‘முற்கூறியபடி கர்மங்களைச் செய்தால் ஸம்ஸாரத் துன்பங்களைத் தாண்டலாம், செய்யாவிட்டால் ஆத்மநாசத்தையே அடைவாய்’ என்கிறான்.
59 எப்படியாயினும் நீ போர் புரிவதைத் தவிர்க்க முடியாது என்கிறான்.
60 நீ போர் புரிய மாட்டேன் என்று உறுதிகொண்டாலும் உன் சரீரம் உன்னைப் போர் புரியும்படி நியமித்துவிடும் என்கிறான்.
(இதுவரையில் தனக்குரிய கர்மத்தால் மோக்ஷத்தையே அடையலாம் என்னும் விஷயம் விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்.)
61 எல்லா உயிர்களும் ஸர்வேஶ்வரனான என்னால் ஹ்ருதயத்திலிருந்து பூர்வகர்மங்களை அநுஸரித்து சரீரத்தின் வழியில் செல்லும்படி நியமிக்கப்படு கிறார்கள் என்கிறான்.
62 அந்தப் பரமாத்மாவான என்னையே எல்லாவகையாலும் சரணமடைவாய். என் அருளாலே எல்லாக்கர்மங்களிலிருந்தும் விடுபட்டுப் பரமபதத்தையும் அடைவாய் என்கிறான்.
63 நான் இதுவரையில் மோக்ஷஸாதனமாகச் சொன்னவைகளில் உன் தகுதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்றதை நீ கைக்கொள்வாய் என்கிறான்.
64,65 – 62வது ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட சரணாகதியை உடனே அர்ஜுனன் ஏற்றுக்கொள்ளாமையால் ப்ரவ்ருத்திபரனான அவனுக்கு பக்தியோகத்தை விதிக்கிறான்.
66 சென்ற ஶ்லோகத்தில் விதிக்கப்பட்ட பக்தியோகத்திற்கு அங்கமாக சரணாகதி சொல்லப்படுகிறது.

(இதுவரை கீதாபாஷ்யத்தையொட்டி 62வது ஶ்லோகம் முதல் 66வது ஶ்லோகம் வரை சுருக்கம் சொல்லப்பட்டது. கத்யங்களில் எம்பெருமானார் திருவுள்ளம் பற்றியபடி அவற்றின் சுருக்கம் பின்வருமாறு.)

62. ஸர்வேஶ்வரனை ஜீவன் பற்றும் பற்றாகிற ஸ்வகத ஸ்வீகாரம் விதிக்கப்படுகிறது.
63. கர்மஜ்ஞானபக்தி யோகங்கள், தான் பற்றும் பற்றில் உபாய புத்தியுடன் ஈஶ்வரனைச் சரணமடைவது ஆகிய இந்த மோக்ஷோபாயங்களில் ஏதாவதொன்றைக் கைக்கொள்வாய் என்கிறான்.
64,65. அர்ஜுனன் வாளாவிருந்ததைக் கண்டு பக்தியோகமே அவனுக்குத் தக்கது என்று நினைத்து பக்தியோகத்தை அவனுக்கு விதிக்கிறான்.
66. “ஸர்வஸ்வாமியாய், அனைவரையும் நியமிக்கும் எம்பெருமான் அவனுக்கு அத்யந்த பரதந்த்ரனான என்னிடம் என்னை ரக்ஷித்துக்கொள்ளும் பொறுப்பை விட்டுவிட்டானே’ என்று கலங்கிய அர்ஜுனனுக்கு ‘இந்த எல்லா உபாயங்களிலும் உபாயபுத்தியை வைக்காமல் என்னைச் சரணடைந்தால், நான் உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கிறேன்” என்கிறான்.
(கீதார்த்த ஸங்க்ரஹத்தில் இதுவே ஶாஸ்த்ரார்த்தம் எனப்பட்டது.)

67 ‘நீ இவ்வர்த்தத்தை தகுதியில்லாதவர்களுக்கு உபதேசிக்காதே’ என்று கூறுகிறான்.
68 ‘தகுதியுள்ளவர்களுக்கு இந்த ஶாஸ்த்ரத்தை அவசியம் பொருளுடன் உபதேசிக்க வேண்டும்’ என்றும், ‘அப்படி உபதேசிப்பவனுக்கு மோக்ஷபலனே ஸித்திக்கும்’ என்றும் கூறுகிறான்.
69 ‘இந்த ஶாஸ்த்ரத்தை வ்யாக்யானம் செய்பவன் என்னிடம் பரமபக்தியை அடைந்து என்னையே அடைவான் என்று கூறியது பொருந்துமோ’ என்னும் ஐயம் எழ, ‘இந்த ஶாஸ்த்ரத்தை பக்தர்களுக்குத் தெரிவிப்பதாலேயே ஒரு மஹாத்மாவான ஜ்ஞாநியின் மனநிலையை பெற்றுவிடும் அந்த உபந்யாஸகனைக் காட்டிலும் எனக்கு இனியது செய்பவனோ இனியவனோ முக்காலத்திலும் வேறொருவன் இல்லையாகையாலே இது பொருந்தியதே” என்று சென்ற ஶ்லோகத்தை விளக்குகிறான்.
70 “ஓர் ஆசார்யனிடமிருந்து இந்த ஶாஸ்த்ரத்தை அர்த்தத்தோடு கேட்பவன் உபாஸகஜ்ஞானியை ஒத்தவனாகிறான்” என்று கூறுகிறான்.
71 “இந்த ஶாஸ்த்ரத்தை ஓர் ஆசார்யனிடமிருந்து (மூலத்தைக்) கேட்பதை மட்டும் செய்பவன் என்னிடம் பக்திக்குத் தடையான பாபங்கள் நீங்கப் பெற்று இதன் பொருளையும் உணரலாம்படி பக்தர்களின் கூட்டத்தில் சேரப்பெறுகிறான்” என்கிறான்.
72 “இந்த ஶாஸ்த்ரத்தை ஒருமுகப்பட்ட மனத்தோடு கேட்டாயா? அறிவின்மையால் உனக்கு விளைந்த மயக்கம் தீர்ந்ததா?” என்று கண்ணன் அர்ஜுனனைக் கேட்கிறான்.
73 “உன்னருளால் என்னுடைய விபரீதஜ்ஞாநம் அழிந்தது. உண்மையறிவை அடைந்து ஐயம் நீங்கப்பெற்று நிலைநின்றவனானேன். உன் வார்த்தைப்படி போர் புரிகிறேன்” என்று அர்ஜுனன் கூறுகிறான்.
74-78 ஸஞ்ஜயன் திருதிராஷ்டிரனுக்கு “கண்ணனும் அர்ஜுனனும் இருக்குமிடத்தில்தான் வெற்றி” என்னும் தன்னுடைய அபிப்ராயத்தைக் கூறுகிறான்.
கீதாஶ்லோகார்த்தச் சுருக்கம் நிறைவுற்றது.

———–

த்ருதீய ஷட்கத்தின் ஸாரப் பொருள்:

உடலுயிரின் றன்மை யுறுகுணத்தின் பன்மை
யிடரிலெழி லீசன்ற னேற்றந் திடவசுரர்
தேவ ரியல்வுகுணஞ் சேர்க்கருமண்ய் சார்ந்தமர்வு
மாவனபின் னாறோத் தமர்ந்து.

உடல் உயிரின் தன்மை – உடல் உயிர் ஆகியவற்றின் தன்மைகள்,
உறு குணத்தின் பன்மை – உடலில் சேர்ந்திருக்கும் குணங்கள் மூன்றாயிருக்கை,
இடரில் எழில் ஈசன் தன் ஏற்றம் – குற்றமற்ற நன்மைகளையுடைய ஈசனுடைய பெருமைகள்,
திட அசுரர் தேவர் இயல்வு – (ஒவ்வொரு மனிதனை) உறுதியாகப் பற்றிநிற்கும் அசுரத்தன்மையும் தேவத்தன்மையும்,
குணம் சேர் கருமம் சார்ந்து அமர்வும் ஆவன – குணத்துக்குத் தக்க கருமமுடைய நாலுவர்ணமும் ஆகியவற்றை,
பின் ஆறு ஓத்து அமர்ந்து – கடைசியாக ஆறு அத்தியாயங்கள் கொண்ட த்ருதீய ஷட்கம் கூறுகிறது.

23) கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம்
ஜ்ஞாந யோகோ ஜிதஸ்வாந்தை: பரிஶுத்தாத்மநி ஸ்திதி:

கர்மயோக: – கர்மயோகமாவது,
தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம் – தவம், தீர்த்த யாத்திரை, தானம், யஜ்ஞம் (யாகம்) முதலானவற்றில்
இடைவிடாது ஈடுபடுதலே யாகும்.
ஜ்ஞாந யோக: – ஜ்ஞாந யோகமாவது,
ஜிதஸ்வாந்தை: – தனது மனத்தை வென்றவர்களால்,
பரிஶுத்தாத்மநி ஸ்திதி: – ஶரீரத்தோடு தொடர்பற்ற தம் ஆத்மாவில் (இடைவிடாமல் சிந்திப்பதன் மூலம்) நிலைநிற்றலே யாகும்.

24) பக்தியோக: பரைகாந்த ப்ரீத்யாத்யாநாதி ஷூஸ்திதி:
த்ரயாணாமபி யோகாநாம் த்ரிபி: அந்யோந்ய ஸங்கம:

பக்தியோக: – பக்தியோகமாவது,
பரைகாந்த ப்ரீத்யா – பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனிடமே செலுத்தப்பட்ட அன்போடு கூட,
த்யாநாதிஷூ ஸ்திதி: – தியானித்தல், அர்ச்சனம் செய்தல், வணங்குதல் முதலானவற்றில் நிலைநிற்றலே யாகும்.
த்ரயாணாமபி யோகாநாம் – கர்மம், ஜ்ஞாநம், பக்தி எனப்படும் மூன்று யோகங்களில்,
த்ரிபி: அந்யோந்ய ஸங்கம: – ஒவ்வொரு யோகத்திலும் மற்ற இரண்டும் சேர்ந்திருக்கின்றன.

25) நித்ய நைமித்திகாநாம் ச பராராதந ரூபிணாம்
ஆத்ம த்ருஷ்டேஸ்த்ர யோப்யேதே யோக த்வாரேண ஸாதகா:

பராராதந ரூபிணாம் – பரமபுருஷனுக்கு ஆராதனமாயிருக்கும்,
நித்ய நைமித்திகாநாம் ச – நித்ய நைமித்திக கர்மங்களுக்கும்,
(த்ரிபி: ஸங்கம: – மூன்று யோகங்களிலும் சேர்த்தியுண்டு),
ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களும்,
யோக த்வாரேண – (மனம் ஒருமுகப்பட்டிருக்கையாகிற) ஸமாதி நிலையை விளைப்பதன் மூலம்,
ஆத்ம த்ருஷ்டே – ஆத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு,
ஸாதகா: – உபாயங்களாகின்றன.

26) நிரஸ்த நிகிலாஜ்ஞாநோத்ருஷ்ட்வாத்மாநம் பராநுகம்
ப்ரதிலப்ய பராம் பக்திம் தயைவாப்நோதி தத்பதம்

நிரஸ்த நிகில அஜ்ஞாந: – (உபாயத்திற்குத் தடையான) எல்லா அஜ்ஞானங்களும் நீங்கப் பெற்றவனாய்,
பராநுகம் – பரம புருஷனுக்கு அடிமைப் பட்டிருக்கும்,
ஆத்மாநம் – தன் ஸ்வரூபத்தை,
த்ருஷ்ட்வா – கண்டு (அதன் விளைவாக),
பராம் பக்திம் – பரபக்தியை,
ப்ரதிலப்ய – அடைந்து,
தயா ஏவ – அந்த மேலான பக்தியாலேயே,
தத் பதம் – அந்த எம்பெருமானுடைய திருவடிகளை,
ஆப்நோதி – அடைகிறான்.

27) பக்தி யோகஸ் ததர்த்தீசேத் ஸமக்ரைஶ்வர்ய ஸாதக:
ஆத்மார்த்தீ சேத்த்ர யோப்யேதே தத் கைவல்யஸ்ய ஸாதகா:

பக்தியோக: – பக்தியோகமானது,
ததர்த்தீசேத் – மிகச் சிறந்த செல்வத்தை விரும்பினவனாகில்,
ஸமக்ரைஶ்வர்ய ஸாதக: – மிகச் சிறந்த செல்வத்தையளிக்கும்.
ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களுமே,
ஆத்மார்த்தீசேத் – ஆத்மஸ்வரூபத்தை அநுபவிக்க விரும்பினானாகில்,
தத்கைவல்யஸ்ய ஸாதகா: – ஆத்மமாத்ர அநுபவத்தை அளிக்கக் கூடியவை.

28) ஐகாந்த்யம் பகவத் யேஷாம் ஸமாநமதி காரிணாம்
யாவத் ப்ராப்தி பரார்த்தீசேத் ததே வாத்யந்தமஶ்நுதே

ஏஷாம் அதிகாரிணாம் – இந்த மூன்று வகைப்பட்ட அதிகாரிகளுக்கும்,
பகவதி – எம்பெருமானிடம்,
ஐகாந்த்யம் – மற்ற தெய்வங்களைத் தொழாமல் அவன் ஒருவனையே தொழுமவர்களாயிருக்கும் பக்தி,
ஸமாநம் – பொதுவானது;
யாவத் ப்ராப்தி – பலனை அடைவதற்குள்,
பரார்த்தீசேத் – (ஐஶ்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும்) பரம ப்ராப்யமான பரம புருஷனின் திருவடிகளை
அடைய விரும்பினானாகில்,
தத் ஏவ – அந்தத் திருவடியையே,
அத்யந்தம் – எப்போதும்,
அஶ்நுதே – அடைகிறான்.
(உபாஸக ஜ்ஞானி பலனை அடையும் வரையில் எம்பெருமானையே விரும்பினானாகில்,
அவன் திருவடியையே என்றும் அடைகிறான்.)

29) ஜ்ஞாநீ து பரமைகாந்தீ ததாயத்தாத்ம ஜீவந:
தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்கஸ் ததேகதீ:

பரமைகாந்தீ ஜ்ஞாநீ து – பரமைகாந்தியான ஜ்ஞாநியோவெனில்,
ததாயத்தாத்ம ஜீவந: – எம்பெருமானையே பற்றி நிற்கும் தன் வாழ்வை யுடையவனாய்,
தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்க: – அந்த எம்பெருமானோடு சேர்ந்தால் இன்பத்தையும்,
அவனைப் பிரிந்தால் துன்பத்தையும் அடைபவனாய்,
ததேகதீ: – அவன் ஒருவனிடமே தன் அறிவை வைத்தவனாய் இருப்பவன்.

——————-

30) பகவத் த்யாந யோகோக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை:
லப்தாத்மா தத் கத ப்ராண மநோ புத்தீந்த்ரிய க்ரிய:

பகவத்த்யாந யோக உக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை: – எம்பெருமானைத் தியானிப்பது, காண்பது, அவனைப் பற்றிப் பேசுவது,
அவனை வணங்குவது, துதிப்பது, திரு நாம ஸங்கீர்த்தனம் செய்வது ஆகியவற்றால்,
லப்தாத்மா தத்கதப்ராண மநோபுத்தி இந்த்ரியக்ரிய: – எம்பெருமானிடம் ஈடுபட்ட ப்ராணன், மனம், புத்தி, இந்த்ரியங்கள்
ஆகியவற்றின் செயல்களை உடையவன்.

——————

31) நிஜ கர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித:
உபாயதாம் பரித்யஜ்ய ந்யஸ்யேத் தேவே து தாமபீ:

நிஜகர்மாதி – தனது வர்ணாஶ்ரமங்களுக்குரிய கர்மம் தொடக்கமாக,
பக்த்யந்தம் – பக்தி ஈறாகவுள்ள அனைத்தையும்,
உபாயதாம் பரித்யஜ்ய – இவை ‘உபாயம்’ என்னும் எண்ணத்தைக் கைவிட்டு,
ப்ரீத்யா ஏவ காரித: – (வகுத்த ஸ்வாமியைப் பற்றியவை என்னும்) அன்பாலே தூண்டப்பட்டவனாய்,
குர்யாத் – (பரமைகாந்தியான ஜ்ஞாநி) செய்யக்கடவன்;
அபீ: – பயமற்றவனாய்,
தாம் – அந்த உபாயத்வத்தை,
தேவே து – எம்பெருமானிடமே,
ந்யஸ்யேத் – அநுஸந்திக்க வேண்டும்.

————

அத்தியாயங்களின் ஸாரப் பொருள்:

1-2.9 உறவினர்களிடம் தகாத அன்பினாலும், கருணையினாலும், தனக்கு தர்மமான யுத்தத்தை அதர்மம் என
நினைத்துக் கலங்கிச் சரண் அடைந்த அர்ஜுனனைக் குறித்து அவனது மயக்கம் தெளிவடைவதற்காக
ஸ்ரீ கீதா ஶாஸ்த்ரம் தொடங்கப்பட்டது.

2 ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவுடையவனாய், கர்ம யோகத்தை அநுஷ்டிப்பவனுக்கு ஸ்திதப்ரஜ்ஞ நிலை எனப்படும்
ஜ்ஞாந யோகம் ஏற்பட்டு, அது நிறைவடைந்தால் ஆத்மா (மனத்தால்) நேரே காணப் படுகிறது.

3 ஜ்ஞாந யோகத்தை அநுஷ்டிக்க ஶக்தி யில்லாதவனும், ஶக்தி யிருந்த போதிலும் சான்றோனாகப் புகழ் பெற்றவனும்,
தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை (செயல் புரியும் தன்மையை) குணங்களிலோ, ஸர்வேஶ்வரனிடமோ சேர்ப்பதாகிற
கர்த்ருத்வ த்யாகத்தைச் செய்து, மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல் கர்மங்களைச் செய்வதாகிற
(ஞானத்தோடு கூடிய) கர்ம யோகத்தை அநுஷ்டிப்பதாலேயே ஆத்ம ஸாக்ஷாத்காரத்தை அடையலாம்.

4 1.அவதார ரஹஸ்யஜ்ஞானம்.
2. ஞானத்தை உள்ளடக்கிய கர்மயோகம் ஞான யோகமாகவே யுள்ளது.
3. கர்ம யோக ஸ்வரூபம்.
4. அதன் வகைகள்.

5 1.கர்மயோகம் செய்வதற்கு எளியது; ஜ்ஞாநயோகத்தைக் காட்டிலும் விரைவில் ஆத்மஸாக்ஷாத்காரமாகிற பலனை அளிப்பது.
2. அந்த கர்மயோகத்தின் அங்கங்கள்.
3. ஶுத்தமான (ஶரீர ஸம்பந்தமற்ற) ஆத்மாக்கள் அனைவரும் ஸமமாயிருப்பவர்கள் என்று காண்பதற்கு உறுப்பான கர்ம யோகியின் நிலை.

6 1-ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்தைப் பழகும் முறை.
2.ஆத்ம ஸாக்ஷாத்காரம் செய்யும் யோகிகளில் நாலு வகை.
3. அவ் வாத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு ஸாதனமாயிருக்கும் அப்யாஸம்(சிந்தநம்), வைராக்யம் முதலானவை.
4. தொடங்கிய யோகம் இடையில் தடைப் பட்டாலும், அடியோடு அழிந்து விடாமல் கால க்ரமத்தில் ஸித்தி யடையும்.
5. ஸர்வேஶ்வரனை விஷயமாகக் கொண்ட பக்தி யோகம் முற்கூறிய ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற யோகத்தைக் காட்டிலும் சிறப்புற்றது.

7 -1. பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவு.
2.அது ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் ஜீவர்களுக்கு மறைக்கப் பட்டுள்ளது.
3.பரம புருஷனை ஶரணமடைவதால் அம் மறைவு நீங்கும்.
4.பக்தர்களில் நாலு வகை.
5.இந் நால்வரில் ஞானியின் சிறப்பு.

8 -ஐஶ்வர்யத்தை அல்லது கைவல்யத்தை அல்லது பரம புருஷனை அடைய விரும்புகிறவர்கள் அறிய வேண்டியவைகளும்,
கைக் கொள்ள வேண்டியவைகளும் யாவை என்பதன் விளக்கம்.
(பரமபுருஷனே ப்ராப்யம், ப்ராபகம், தாரக போஷக போக்யங்கள் முதலான எல்லாமாயிருப்பவன் என்று உணர்ந்த ஞானிக்கு
உபாயாநுஷ்டாநம் எதையும் எதிர்ப்பாராமல் எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபையாலேயே
மோக்ஷம் கிடைக்கிறது என்பது 7-8 அத்தியாயங்களின் பரம ஸாரம்.)

9 (1) எம்பெருமானுடைய பெருமை, (2) மனிதனாயிருக்கும்போதே மேன்மையுடையவனாயிருக்கை,
(3) ஜ்ஞானிகளுக்குள்ள சிறப்பு, (4) பக்தியோக மெனப்படும் உபாஸனம் ஆகியவை விளக்கப்பட்டது.

10 ஸாதந பக்தி உண்டாகி வளர்வதற்காக, தனது கல்யாண குணங்கள் அளவற்றவை என்றும்,
எல்லாப் பொருள்களும் தனக்கு வசப்பட்டவை என்றும் விரிவாக உபதேசிக்கப்பட்டது.

11 (1) தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண் அர்ஜுனனுக்குக் கண்ணனால் கொடுக்கப்பட்டது.
(2) பரம்பொருளை அறிவது, காண்பது, அடைவது ஆகியவை பக்தி ஒன்றையே காரணமாகக் கொண்டவை என்று சொல்லப்பட்டது.

12 (1) ஆத்மாவைப் ப்ராப்யமாக நினைத்து உபாஸிப்பதை காட்டிலும், பகவானை ப்ராப்யமாக நினைத்து உபாஸிக்கிற பக்தியின் சிறப்பு.
(2) இந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தல்.
(3) பக்தியில் சக்தியில்லாதவன் ஆத்மாவையே உபாஸிக்க வேண்டும்.
(4) கர்மயோகம் அனுஷ்டிப்பவர்கள் கைக்கொள்ள வேண்டிய ஆத்மகுணங்கள்.

13 (1) தேஹத்தின் ஸ்வரூபம், (2) ஜீவாத்மஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயம், (3) ஆத்மாவை ஆராய்ந்து அறிதல்,
(4) ஆத்மாவுக்கு அசித்தோடு தொடர்பு ஏற்படுவதற்குக் காரணம், (5) ஆத்மாவை அசித்திலிருந்து பிரித்து அனுஸந்திக்கும் முறை.

14 (1) ஸத்வம் முதலான மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்திற்குக் காரணமாகும் முறை.
(2) அந்த குணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மை.
(3) அந்த குணங்களை நீக்கும் முறை.
(4) ஐஶ்வர்யம், கைவல்யம், பகவத் ப்ராப்தி என்னும் மூன்று பலன்களும் எம்பெருமானிடமிருந்தே கிடைக்கின்றன.

15 அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்தஜீவனைக் காட்டிலும், ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப்
பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும், (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும், (அவர்களைத்) தாங்குகையாலும்,
(அவர்களை) உடையவனாயிருக்கையாலும் வேறுபட்டவன் புருஷோத்தமனான நாராயணன்.

16 (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டா நத்தையும் பற்றிய அறிவு உறுதிப்படுவதற்காக,
(மனிதர்களுக்குள்) தேவப்பிரிவு, அஸுரப்பிரிவு என்னும் இருபிரிவுகள் இருப்பதை விளக்கிய பின்
மனிதன் சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மையை விளக்குதல்.

17 (1) ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும் அஸுரர்க்குரியது; ஆகையால் பயனற்றது.
(2) ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட கர்மம் ஸத்வரஜஸ்தமோ குணங்கள் மூன்றையிட்டு மூன்றுவிதமாய் இருப்பது.
(3) “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று பதங்கள் ஶாஸ்த்ர விஹித கர்மங்களோடு சேர்வதன் மூலம்
(அவற்றை மற்ற கர்மங்களினின்று வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன.

18 (1) கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவு அவசியம்.
(2) ஸத்வகுணம் கைக் கொள்ளத் தக்கது.
(3) முற்கூறிய நினைவுடன் அனுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் மோக்ஷமாகும்.
(4) இந்த ஸ்ரீ கீதா ஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்தமான பக்தி ப்ரபத்திகள்.

————————-

ஸ்ரீ கீதை பதினெட்டு அத்தியாயங்களின் பரம ஸாரப்பொருள்:

32) ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதிஸ் தத் பதமாப்நுயாத்
தத் ப்ரதாநமிதம் ஶாஸ்த்ரமிதி கீதார்த்த ஸங்க்ரஹ:

ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதி – எம்பெருமானுடைய முகமலர்த்தியையே பயனாகக் கொண்டதாய்,
எல்லாக் காலத்திலும் செய்யப்படுவதான அடிமையையே விரும்புகின்ற பரமைகாந்தி,
தத் பதம் – (அவ்வடிமைக்குறுப்பாக) எம்பெருமானுடைய திருவடிகளை,
ஆப்நுயாத் – அடைவான்;
இதம் ஶாஸ்த்ரம் – இந்த கீதா ஶாஸ்த்ரம்,
தத் ப்ரதாநம் – சேதனனைப் பரமை காந்தி யாக்குவதை முக்கியமான குறிக்கோளாகக் கொண்டது.
இதி – இவ்வண்ணமாக,
கீதார்த்த ஸங்க்ரஹ: – கீதையின் பொருளை சுருக்கிக் கூறும் ‘கீதார்த்த ஸங்க்ரஹம்’ என்னும் நூல் நிறைவு பெறுகிறது.

————–

ஸ்ரீ எம்பெருமானே ப்ராப்யம் ப்ராபகம் முதலான அனைத்தும் என்னும் உறுதியுடன்,
அவனிடம் ஸ்வயம் ப்ரயோஜன பக்தி செய்யும் பரமை காந்திக்கு எம்பெருமான் பரம மோக்ஷத்தை நிர் ஹேதுகமாக அருளுகிறான்;
கர்ம யோகம் முதலான உபாயங்கள் அனைத்தும் இத்தகைய பரமை காந்திகளை உருவாக்கும் வழிகளே.

ஸ்ரீ கீதை அத்யாய ஸாரார்த்தம் நிறைவுற்றது.

——————————————————————-

வன் பற்று அறுக்கும் மருந்து என்று மாயவன் தான் உரைத்த
இன்பக்கடல் அமுது ஆம் என நின்ற விக்கீதை தனை
யன்பர்க்குக் உரைப்பவர் கேட்பவர் ஆதரித்து ஓய்ஹுமவர்
துன்பக் கடலுள் துளங்குகை நீங்கித் துலங்குவரே–20-

பலன் சொல்லி அருளுகிறார் –

——————————————————————————————-

தீதற்ற நல் குணப் பாற்கடல் தாமரைச் செம்மலர் மேல்
மாதுற்ற மார்வன் மருவ இன் கீதையின் வண் பொருளைக்
கோதற்ற நான் மறை மௌலி யின் ஆசிரியன் குறித்தான்
காதல் துணிவுடையார் கற்கும் வண்ணம் கருத்துடனே –21-

நான் மறை மௌலி யின் ஆசிரியன்-வேதாந்த சாரியார் -என்றபடி –

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பகவத் கீதா மஹாத்ம்யம் —

September 28, 2022

ஓம் பார்தா²ய ப்ரதிபோ³தி⁴தாம் ப⁴க³வதா நாராயணேந ஸ்வயம்|
வ்யாஸேந க்³ரதி²தாம் புராண முநிநா மத்⁴யே மஹா பா⁴ரதம்||
அத்³வைதாம்ருத வர்ஷிணீம் ப⁴க³வதீமஷ்டாத³ஸா² த்⁴யாயிநீமம்ப³|
த்வாமநுஸந்த³தா⁴மி ப⁴க³வத்³ கீ³தே ப⁴வத்³வேஷிணீம்||

பார்தா²ய = பார்த்தனுக்காக
ப⁴க³வதா நாராயணேந = பகவான் நாராயணனால்
ஸ்வயம் ப்ரதிபோ³தி⁴தாம் = தானே உபதேசித்தது
புராண முநிநா வ்யாஸேந = பழமையான முனிவர் வியாசரால்
மஹாபா⁴ரதம் மத்⁴யே க்³ரதி²தாம் = மகாபாரதத்தின் நடுவே தொகுக்கப் பட்டது
அம்ப³! ப⁴க³வத்³ கீ³தே! = தாயே! பகவத் கீதே!
அஷ்டாத³ஸ² அத்⁴யாயிநீம் = பதினெட்டு அத்தியாயம் கொண்டவளே!
அத்³வைத அம்ருத வர்ஷிணீம் = அத்வைத அம்ருதத்தை மழையாகப் பொழிபவளே!
ப⁴க³வதீம் = இறைவியே!
ப⁴வத்³வேஷிணீம் = பிறப்பை நீக்குபவளே!
த்வாம் அநுஸந்த³தா⁴மி = உன்னை தியானிக்கிறேன்

—————

நமோऽஸ்துதே வ்யாஸ விஸா²ல பு³த்³தே⁴ பு²ல்லாரவிந்தா³யத பத்ர நேத்ர|
யேந த்வயா பா⁴ரத தைல பூர்ண​: ப்ர ஜ்வாலிதோ ஜ்ஞா²ந மய​: ப்ரதீ³ப​:||

வ்யாஸ = வியாச பகவானே!
விஸா²லபு³த்³தே⁴ = விசாலமான ஞானம்/புத்தி கொண்டவரே!
பு²ல்ல அரவிந்த³ அயத பத்ர நேத்ர = பூத்த தாமரை இதழ்கள் போன்ற கண்கள் கொண்டவரே!
த்வயா = உங்களால்
யேந பா⁴ரத = இந்த மகா பாரதம்
தைல பூர்ண​: = எண்ணை ஊற்றப் பட்டு நிறைந்து உள்ள
ஞா²நமய​: ப்ரதீ³ப​: = ஞானமயமான ஒளி பரப்பும் விளக்கென
ப்ரஜ்வாலித: = ஒளிர்கிறது
தே நம: அஸ்து = உங்களுக்கு வணக்கங்கள்

—————–

ப்ரபந்ந பாரிஜாதாய தோத்ர வேத்ரைக பாணயே|
ஜ்ஞாந முத்³ராய க்ருஷ்ணாய கீ³தாம்ருதது³ஹே நம​:||

ப்ரபந்ந பாரிஜாதாய = அண்டியவர்களுக்கு வேண்டியதைத் தரும் பாரிஜாத கற்பக விருட்சமான
தோத்ர வேத்ர ஏக பாணயே = ஒரு கையில் தேரோட்டும் சாரதியாக சாட்டை கம்புடனும்
ஜ்ஞாநமுத்³ராய = (இன்னொரு கையில்) ஞானத்தின் சின்னத்தை முத்திரையாக பிடித்து கொண்டிருக்கும்
கீ³த அம்ருத து³ஹே = கீதை என்னும் அமுதத்தை கறந்து தருகின்ற
க்ருஷ்ணாய நம​: = ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வணக்கங்கள்

—————

வஸுதே³வ ஸுதம் தே³வம் கம்ஸ சாணூர மர்த³நம்|
தே³வகீ பரமாநந்த³ம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரூம்||

வஸுதே³வஸுதம் = வசுதேவரின் பிள்ளையான
தே³வம் = தேவனான
கம்ஸசாணூரமர்த³நம் = கம்சன் சாணுரன் ஆகியோரை அழித்தவனான
தே³வகீபரமாநந்த³ம் = தேவகியின் பரம ஆனந்தமான
க்ருஷ்ணம் = க்ருஷ்ணனனை
ஜக³த்³ கு³ரூம் வந்தே³ = உலகாசிரியனை வணங்குகிறேன்

—————

பீ⁴ஷ்ம த்³ரோண தடா ஜயத்³ரத² ஜலா கா³ந்தா⁴ர நீலோத் பலா|
ஸ²ல்ய க்³ராஹவதீ க்ருபேண வஹநீ கர்ணேந வேலாகுலா||
அஸ்²வத்தா²ம விகர்ண கோ⁴ர மகரா து³ர்யோத⁴நா வர்திநீ|
ஸோத்தீர்ணா  க²லு பாண்ட³வை ரணநதீ³ கைவர்தக​: கேஸ²வ​:||

பீ⁴ஷ்ம த்³ரோண தடா = பீஷ்மரும் துரோணரும் இரு கரைகளாகவும்
ஜயத்³ரத²ஜலா = ஜயத்ரதன் அதன் நீராகவும்
கா³ந்தா⁴ர நீலோத்பலா = காந்தாரன் அதில் பூத்த அல்லி மலராகவும்
ஸ²ல்யக்³ராஹவதீ = சல்யன் சுறா மீனாகவும்
க்ருபேண வஹநீ = கிருபன் அதன் வேகமாகவும்
கர்ணேந வேலாகுலா = கர்ணன் அதில் எழும்பும் அலையாகவும்
அஸ்²வத்தா²ம விகர்ண கோ⁴ர மகரா: = அஸ்வத்தாமன் விகர்ணன் ஆகியோர் கோரமான திமிங்கலம் போன்ற மீன்களாகவும்
து³ர்யோத⁴ந ஆவர்திநீ = துர்யோதனன் அதன் சுழல்களாகவும்
ஸா ரணநதீ³ = இருக்கும் அந்த போர் நதி
பாண்ட³வை: = பாண்டவர்களால்
உத்தீர்ணா = கடக்கப் பட்டது
கேஸ²வ​: கைவர்தக​: க²லு = (ஏனெனில்) கேசவன் படகோட்டி அல்லவோ !

———————-

பாராஸ²ர்ய வச​: ஸரோஜமமலம் கீ³தார்த²க³ந்தோ⁴த்கடம்|
நாநாக்²யாநககேஸரம் ஹரிகதா²ஸம்போ³த⁴நாபோ³தி⁴தம்||
லோகே ஸஜ்ஜநஷட்பதை³ரஹரஹ​: பேபீயமாநம் முதா³|
பூ⁴யாத்³பா⁴ரதபங்கஜம் கலிமலப்ரத்⁴வம்ஸிந​: ஸ்²ரேயஸே||

பாராஸ²ர்ய வச​: ஸரோஜம் = பராசரரின் மகன் (வியாசன்) வார்த்தைகளில் நீரில் பூத்த தாமரையாகவும்
கீ³த அர்த² க³ந்த⁴: உத்கடம் = கீதையின் உபதேசங்கள் அதன் நறுமணமாகவும்
நாநாக்²யாநக கேஸரம் = பல்வேறு கதைகள் பின்னிப் பிணைந்த தாமரைத் தண்டுகளாகவும்
ஹரிகதா² ஸம்போ³த⁴நா போ³தி⁴தம்= ஹரியின் கதைகளே அத்தாமரையின் விரிந்து அகன்ற இதழ்களாகவும்
லோகே = இவ்வுலகில்
அஹரஹ​: = ஒவ்வொரு நாளும்
ஸஜ்ஜந ஷட்பதை³ = நல்ல மனிதர்களான தேனீக்களால்
முதா³ = மகிழ்ச்சியாக
பேபீயமாநம் = அருந்தப் படுவதும்
கலிமலப்ரத்⁴வம்ஸிந​: = கலி என்னும் மலம் (தீங்கைத்) தொலைப்பதாகவும்
அமலம் = குற்றமில்லாததும்
பா⁴ரத பங்கஜம் = ஆகிய பாரதம் என்னும் தாமரையால்
ஸ்²ரேயஸே பூ⁴யாத் = நன்மை விளையட்டும்

——————–

மூகம் கரோதி வாசாலம் பங்கு³ம் லங்க⁴யதே கி³ரிம்|
யத் க்ருபா தமஹம் வந்தே³ பரமாநந்த³மாத⁴வம்||

யத் க்ருபா = எவருடைய கருணையால்
மூகம் = ஊமையும்
வாசாலம் = பேசும் திறன்
கரோதி = அடைகிறானோ
பங்கு³ம் = ஊனமுற்றவனும்
கி³ரிம் லங்க⁴யதே = மலை ஏறும் திறனுடையவனாகிறானோ
தம் பரமாநந்த³மாத⁴வம் = அந்த பரமானந்தம் தரும் மாதவனை
அஹம் வந்தே³ = நான் வணங்குகிறேன்

—————

கீ³தா ஸா²ஸ்த்ரமித³ம் புண்யம் ய​: படே²த் ப்ரயத​: புமாந்|
விஷ்ணோ​: பத³மவாப்நோதி ப⁴ய ஸோ²காதி³வர்ஜித​: ||

இத³ம் புண்யம் = இந்த புண்ணியமான
கீ³தா ஸா²ஸ்த்ரம் = கீதா சாத்திரத்தை
ய​: புமாந் = எந்த மனிதர்
ப்ரயத​: படே²த் = முயற்சி செய்து படிக்கிறாரோ (அவர்)
ப⁴யஸோ²காதி³ = பயம், சோகம் ஆகியவை
வர்ஜித​: = நீங்கி
விஷ்ணோ​: பத³ம் = விஷ்ணுவின் பதத்தை
அவாப்நோதி = அடைகிறார்.

————–

கீ³தாத்⁴யயந ஸீ²லஸ்ய ப்ராணாயாம பரஸ்ய ச|
நைவ ஸந்தி ஹி பாபாநி பூர்வ ஜந்ம க்ருதாநி ச||

கீ³தா அத்⁴யயந ஸீ²லஸ்ய = (எவர்) எப்போதும் கீதையை ஓதிக்கொண்டும்
ப்ராணாயாம பரஸ்ய ச = மூச்சை அடக்கி யோகத்திலும் திளைக்கிறாரோ அவரிடம்
பாபாநி = பாவங்கள்
பூர்வ ஜந்ம க்ருதாநி ச ஏவ = கடந்த ஜன்ம செயல்களின் விளைவுகளும்
ந ஸந்தி = இருப்பதில்லை

—————–

மல நிர்மோசநம் பும்ஸாம் ஜல ஸ்நாநம் தி³நே தி³நே|
ஸக்ருத்³ கீ³தாம்ப⁴ஸி ஸ்நாநம் ஸம்ஸார மல நாஸ²நம்||

பும்ஸாம் = மனிதர்கள்
தி³நே தி³நே = தினந்தோறும்
ஜல ஸ்நாநம் = நீரில் குளிப்பதால்
மல நிர்மோசநம் = உடல் அழுக்கு அகற்றப் படுகிறது
ஸக்ருத் = ஒரு தடவை
கீ³தா அம்ப⁴ஸி ஸ்நாநம் = கீதை என்னும் நீரில் குளிப்பதால்
ஸம்ஸார மல நாஸ²நம் = சம்சாரம் என்னும் மாசு நீங்குகிறது.

—————–

கீ³தா ஸுகீ³தா கர்தவ்யா கிமந்யை​: ஸா²ஸ்த்ர விஸ்தரை​:|
யா ஸ்வயம் பத்³மநாப⁴ஸ்ய முக²பத்³மாத்³விநி​:ஸ்ருதா||

பத்³மநாப⁴ஸ்ய = பத்மநாபனின்
ஸ்வயம் முக²பத்³மாத் = தன்னுடைய முகத் தாமரையிலிருந்து
யா விநி​:ஸ்ருதா = எது வெளி வந்ததோ
ஸுகீ³தா = கேட்க இனிமையானதோ
கீ³தா = அந்த கீதை
கர்தவ்யா = படிக்கப் பட வேண்டும்
அந்யை​: = வேறு
ஸா²ஸ்த்ர விஸ்தரை​: கிம் = சாத்திரங்களை விரிவாக (படிக்க வேண்டும்) எதற்கு?

————–

பா⁴ரதாம்ருத ஸர்வஸ்வம் விஷ்ணோர் வக்த்ராத்³விநி​:ஸ்ருதம்|
கீ³தாக³ங்கோ³த³கம் பீத்வா புநர் ஜந்ம ந வித்³யதே||

விஷ்ணோ: வக்த்ராத் = விஷ்ணுவினுடைய திருமுகத்தில் இருந்து
பா⁴ரத அம்ருத ஸர்வஸ்வம் = பாரதம் என்னும் அமுத களஞ்சியம்
விநி​:ஸ்ருதம் = உதித்தது
கீ³தாக³ங்கோ³த³கம் = கீதை என்னும் கங்கை நீரை
பீத்வா = குடித்த பின்
புநர்ஜந்ம ந வித்³யதே = மறுபடி ஒரு ஜன்மம் ஏற்படுவது இல்லை

—————–

ஸர்வோபநிஷதோ³ கா³வோ தோ³க்³தா⁴ கோ³பால நந்த³ந​:|
பார்தோ² வத்ஸ​: ஸுதீ⁴ர் போ⁴க்தா து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத்||

ஸர்வ உபநிஷத³: கா³வ: = எல்லா உபநிடதங்களும் பசுக்களாம்
தோ³க்³தா⁴ கோ³பால நந்த³ந​: =  கண்ணனே பால் கறப்பவனாம்
பார்த²: வத்ஸ​: = பார்த்தனே கன்றாம்
ஸுதீ⁴ போ⁴க்தா = தெளிந்த அறிவுடையோரே பால் அருந்துவோர்
து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத் = அமுதமான கீதையே பால்

—————–

ஏகம் ஸா²ஸ்த்ரம் தே³வகீ புத்ரகீ³தமேகோ தே³வோ தே³வகீ புத்ர ஏவ|
ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமாநி யாநி கர்மாப்யேகம் தஸ்ய தே³வஸ்ய ஸேவா||

ஏகம் ஸா²ஸ்த்ரம் தே³வகீபுத்ர கீ³தம் = ஒரே சாத்திரம் தேவகி மைந்தனின் வார்த்தைகள்
ஏக: தே³வ: தே³வகீ புத்ர ஏவ = தேவகியின் மைந்தனே ஒரே தெய்வம்
தஸ்ய யாநி நாமாநி ஏக: மந்த்ர: = அவரது பெயர்களே ஒரே மந்திரம்
ஏகம் கர்மா: அபி = ஒரே கடமையும் (தொழிலும்)
தஸ்ய தே³வஸ்ய = அந்த தேவனுடைய
ஸேவா = சேவை செய்தலே

————-

ஸா²ந்தாகாரம் பு⁴ஜக³ஸ²யநம் பத்³மநாப⁴ம் ஸுரேஸ²ம்
விஸ்²வாதா⁴ரம் க³க³ந ஸத்³ருஸ²ம் மேக⁴வர்ணம் ஸு²பா⁴ங்க³ம்|
லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகி³பி⁴ர் த்⁴யாந க³ம்யம்
வந்தே³ விஷ்ணும் ப⁴வ ப⁴ய ஹரம் ஸர்வ லோகைக நாத²ம்||

ஸா²ந்தாகாரம் = அமைதி வடிவானவர்
பு⁴ஜக³ஸ²யநம் = பாம்பின் மீது துயிலுபவர்
பத்³மநாப⁴ம் = தாமரை போன்ற நாபி கொண்டவர்
ஸுரேஸ²ம் = தேவர்களின் தலைவர்
விஸ்²வாதா⁴ரம் = உலகைத் தாங்குபவர்
க³க³நஸத்³ருஸ²ம் = ஆகாயம் போன்றவர்
மேக⁴வர்ணம் = மேகத்தின் நிறத்தை ஒத்தவர்
ஸு²பா⁴ங்க³ம் = சுபமான உடலைக் கொண்டவர்
லக்ஷ்மீகாந்தம் = திருமகளின் கணவர்
கமலநயநம் = தாமரைக் கண்கள் உடையவர்
யோகி³பி⁴: = யோகிகளால்
த்⁴யாந க³ம்யம் = தியானித்து அடையப் படுபவர்
ப⁴வப⁴ய ஹரம் = பிறவி என்னும் பயத்தை போக்குபவர்
ஸர்வ லோகைக நாத²ம் = எல்லா உலகிற்கும் தலைவர்
விஷ்ணும் = விஷ்ணுவை
வந்தே³ = வணங்குகிறேன்

———————

யம் ப்³ரஹ்மா வருணேந்த்³ரருத்³ர மருத​: ஸ்துந்வந்தி தி³வ்யை​: ஸ்தவை:।
வேதை³: ​ஸாங்க³ பத³ க்ரமோபநிஷதை³ர் கா³யந்தி யம் ஸாமகா³​:।।
த்⁴யாநா வஸ்தி²ததத்³ க³தேந மநஸா பஸ்²யந்தி யம் யோகி³நோ।
யஸ்யாந்தம் ந விது³​: ஸுராஸுரக³ணா தே³வாய தஸ்மை நம​:।।

யம் = எவரை
ப்³ரஹ்மா வருண: இந்த்³ர ருத்³ர மருத​: = பிரம்மா வருணன் இந்திரன் உருத்திரன் மருத்துகள் எல்லாரும்
தி³வ்யை​: ஸ்தவை: = திவ்விய துதிகளால்
ஸ்துந்வந்தி = துதிக்கிறார்களோ
யம் = எவரை
ஸாமகா³​: = சாம வேதம் ஓதுபவர்கள்
ஸாங்க³ பத³ க்ரம = பத க்ரம முறைகளுடன்
உபநிஷதை³: = உபநிடதங்களாலும்
வேதை³: ​= வேதங்களாலும்
கா³யந்தி = இசைக்கிறார்களோ
த்⁴யாநா வஸ்தி²த: யோகி³ந: = தியானத்தில் நிலைபெற்ற யோகிகள்
தத்³ க³தேந மநஸா = பரவச மனதுடன்
யம் பஸ்²யந்தி = எவரைப் பார்க்கிறார்களோ
யஸ்ய அந்தம் = எவரை முழுவதுமாக
ஸுர அஸுரக³ணா: = தேவர்களும் அசுரர்களும்
ந விது³​: = அறியவில்லையோ
தே³வாய தஸ்மை நம​: = அந்த தேவனுக்கு வணக்கங்கள்

ஸ்ரீ பகவான் வேத வ்யாஸரே கூறுகிறார் :

கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: ஸாஸ்த்ரஸங்க் ரஹை:
யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத் மாத் விநி:ஸ்ருதா – (மஹா. பீஷ்ம. 43/1)

ஸ்ரீ கீதையை நல்ல முறையில் கேட்க வேண்டும், பாட வேண்டும், படிக்க வேண்டும், கற்பிக்க வேண்டும்,
மனனம் செய்ய வேண்டும், மனதில் தரிக்க வேண்டும்.
கீதை பகவான் பத்மநாபனின் முகத் தாமரையிலிருந்து வெளிவந்தது.
எனவே, கீதையைச் செவ்வனே ஓதுதல் வேண்டும். பிற சாஸ்த்ர நூல்கள் எதற்கு?

————-

ஸ்ரீ கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது. கங்கையில் நீராடுவதற்குப் பயன் முக்தி என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.
கங்கையில் நீராடுபவன் வேண்டுமானால் முக்தி அடையலாம். அவன் பிறரைக் கரையேற்ற முடியாது.
ஆனால் கீதை வடிவான கங்கையில் மூழ்கி எழுபவன் தான் மட்டும் முக்தியைப் பெறுவதில்லை.
பிறரையும் கரையேற்றும் தகுதி படைத்தவன் ஆகிறான். கங்கை பகவானுடைய திருவடித் தாமரையிலிருந்து பெருகியது.
ஆனால் கீதை ஸாக்ஷõத் பகவானுடைய திருமுகத் தாமரையிலிருந்து வெளிவந்தது.
கங்கைக்குச் சென்று அதில் நீராடுபவனுக்கு மட்டுமே கங்கை முக்தியை அளிக்கிறது.
கீதையோ ஒவ்வொரு வீடாகச் சென்று அங்குள்ளவருக்கு முக்தி மார்க்கத்தை போதிக்கிறது.
ஆகவே கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது.

ஸ்ரீ கீதை காயத்ரியை விடச் சிறந்தது. காயத்ரி ஜபம் செய்தால் மனிதன் முக்தி பெறுவான். அது சரிதான்.
காயத்ரியை ஜபம் செய்பவன் ஒருவன் மட்டுமே முக்தி பெற முடியும்.
கீதா பாராயணம் செய்பவன் தானும் கரையேறிப் பிறரையும் கரையேற்றுவானே!
முக்தியை அளிக்கும் பகவானே அவனைச் சார்ந்து விடுகிறான் என்றால்
அப்புறம் முக்தியைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?
முக்தி அவனுடைய திருவடித் தூசியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அவன் முக்தியெனும் சத்திரத்தைத் திறந்து விடுகிறான்.

ஸ்ரீ கீதை பகவானைவிடப் பெருமை வாய்ந்தது என்று சொல்வோமேயானால் அதுவும் மிகையாகாது.
ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்.

கீதாஸ்ரயேஹம் திஷ்டாமி கீதா மே சோத்தமம் க்ருஹம்
கீதா ஜ்ஞாநமுபாஸ்ரித்ய த்ரீந்லோகாந் பாலயாம்யஹம் – (வராஹபுராணம்)

(கீதையை அண்டி நான் வாழ்கிறேன். கீதை தான் என்னுடைய சிறந்த வீடு.
கீதையின் ஞானத்தைக் கைக் கொண்டு நான் மூவுலகங்களையும் காக்கிறேன்)

——————–

உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய இம் மூன்று நூல்களும் பிரஸ்தானத்திரயம்
என்னும் பெயர் பெறுகின்றன. முடிவான பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது அதன் பொருள்

பகவத் கீதை மஹாபாரதம் என்னும் இதிகாசத்தில் அடங்கியுள்ளது.
பீஷ்ம பர்வத்தில் 25-வது அத்தியாயத்திலிருந்து 42-வது அத்தியாயம் வரையில் இந்த அரிய நூலைக் காணலாம்.
ஆக, இதன் கண் பதினெட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன.
இவைகளில் அமைந்துள்ள ஸ்லோகங்களின் தொகை எழுநூறு.

பதினெட்டு அத்தியாயங்களில் உள்ள பதினெட்டு யோகங்களையும் மேலும் தொகுத்து
நான்கு யோகங்களில் அடக்கி வைக்கலாம்.
அந்த நான்கும் முறையே கர்ம யோகம், ராஜ யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்று பெயர் பெறுகின்றன.
இந்த நான்கினுள் ஆரம்ப தசையில் இருப்பது கர்ம யோகமென்றும்,
பிறகு அது ராஜ யோகமாகப் பரிணமிக்கிறதென்றும்,
அதினின்று பக்தி யோகம் ஓங்கிறதென்றும்,
இறுதியில் அது ஞானமாக முற்றுப்பெறுகிறது என்றும் பொருள்படுத்துவது ஐதிகமாக வந்துள்ளது.
கீதையில் பதினெட்டு அத்தியாயங்களின் அமைப்பே அதற்குத் தக்க சான்றாகிறது.
நான்கு யோகங்களையும் அரும்பு, பிஞ்சு, காய், கனி என்று பொருள்படுத்துவாரும் உளர்.

அது பதினெட்டு அத்தியாயங்களையுடையது. திரிஷட்கம் அல்லது மூவாறு (3*6) என்று
அப்பதினெட்டு அத்தியாயங்களும் பகரப்பெறுகின்றன.

அவைகளுள் முதல் ஆறு அத்தியாயங்கள் த்வம் (நீ) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற
ஜீவதத்துவத்தை விஸ்தாரமாக விளக்கிக்கொண்டு போகின்றன. இது முதல் ஷ்டகம்.

ஏழாவது அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் ஈறாக உள்ளவை இரண்டாவது ஷட்கம்.
மஹாவாக்கியத்தில் தத் (அது) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற பரதத்துவம்

பதின்மூன்றாவது அத்தியாயத்திலிருந்து பதினெட்டாம் அத்தியாயம் வரையில் உள்ள ஆறு அத்தியாயங்களுக்கு
மூன்றாவது ஷட்கம் என்று பெயர். மஹாவாக்கியத்தில் அஸி (இருக்கிறாய்) என்னும் சொல்லுக்கு இலக்காயுள்ள
பரமாத்ம-ஜீவாத்ம இணக்கத்தை இப்பகுதி தெளிவுபடுத்துகிறது.

தத் த்வம் அஸி என்ற மூன்று பகுதிகளுக்கும் சமமான அந்தஸ்து கொடுத்திருப்பது பகவத்கீதை.
அந்தந்தப் பகுதியை அது ஓர்மைப்படுத்தி விளக்கியிருப்பது போன்று தெளிவாகவும் முறையாகவும்
வேறு ஒரு நூல் செய்யக் கிடையாது.
ஆக, மஹாவாக்கியத்துக்கு முறையான வியாக்யானம் என்று இதை இயம்ப வேண்டும்.

————

தாரோ உவாச:

1. பகவான் பரமேஷான பக்திர் அவ்யபி சாரிணீ
பிராரப்தம் பூஜ்ய மானஸ்ய கதம் பவதி ஹே பிரபோ

நிலமகள்-சொன்னது:

பகவானே, பரமேசா, பிராரப்த கர்மத்தால் கட்டுண்டு கிடக்கும் ஒருவன் மாற்று அறியாத பக்தியைப் பெறுவது எங்ஙனம்?

ஸ்ரீ விஷ்ணுர் உவாச:

2. ப்ராரப்தம் பூஜ்ய மானோ ஹி கீதா அப்யாசரதா சதா
ச முக்தா ச ஸுகீ லோகே கர்மணா நோபலிப்யதே

ஸ்ரீ விஷ்ணு சொன்னது:

கீதா அப்பியாசத்தில் ஒருவன் சதா மகிழ்வடைந்திருப்பானாகில், பிராரப்த கர்மத்தில் கட்டுண்டு கிடக்கினும்,
அவனே முக்தன், இவ்வுலகிலேயே சுகத்தை அனுபவிப்பவனும் அவனே. புதிய கர்மத்தில் அவன் தேய்வுறான்.

3. மகா பாபாதி பாபானி கீதா தியானம் கரோதி சேத்
க்வச்சித் ஸ்பர்ஷம் ந குர்வந்தி நளினி தளம் அம்புவத்

கீதா தியானம் செய்கின்றவனை பாவங்களுள் மஹா பாபமும் தீண்டுவது கிடையாது.
தாமரையிலை தண்ணீரில் தோய்வுறாதிருப்பது போன்று அவன் இருக்கிறான்.

4. கீதாயஹ் புஸ்தகம் யத்ர யத்ர பாட: ப்ரவர்த்ததே
தத்ர சர்வாணி தீர்தாணி பிரயாகாதீணி தத்ர வை

கீதா புஸ்தகம் எங்கு இருக்கிறதோ, எங்கு கீதா பாடம் நடைபெறுகிறதோ அங்குப் புண்ணிய
தீர்த்தங்களனைத்தும், பிரயாகைகளும் மற்றும் உள்ளவைகளும் வந்து கூடுகின்றன.

5. சர்வே தேவாச்ச ரிஷயோ யோகின: பன்னகாஷ்ச்ச யே
கோபாலா கோபிகா வாபி நாரத் உத்தவ பார்சதை:

தேவர்கள் அனைவரும், ரிஷிகளும், யோகிகளும், பன்னகர்களும், கோபாலர்களும், கோபிகளும்,
நாரதரும், உத்தவரும், அவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஆங்கு உளர்.

6. சஹாயோ ஜாயதே ஷீக்ரம் யத்ர கீதா ப்ரவர்த்ததே
யத்ர கீதா விசாரஷ்ச்ச பதனம் பாதனம் ஸ்ருதம்
தத்ராஹம் நிஷ்சிதம் ப்ரித்வி நிவாசாமி சதைவ ஹி

எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு சீக்கிரம் சஹாயம் வருகிறது. எங்கு கீதை ஆராய்ச்சி செய்யப்படுகிறதோ,
ஓதப்படுகிறதோ, புகட்டவும் கேட்கவும் செய்யப்படுகிறதோ, ஆங்கு நிலமகளே கேள், நான் நிச்சயமாக ஸதா வாசம் செய்கிறேன்.

7. கீதாஸ்ரையேஹம் திஷ்தாமி கீதா மே சோட்டமம் க்ரிஹம்
கீதா ஞானம் உபாஸ்ரித்ய த்ரீன் லோகான் பாலயாம் யஹம்

கீதை என்னும் புகலிடத்தில் நான் வீற்றிருக்கிறேன். எனக்கு உத்தமமான இருப்பிடம் கீதை.
கீதாஞானத்தில் நின்றுகொண்டு மூவுலகங்களையும் நான் பரிபாலிக்கிறேன்.

8. கீதா மே பரமா வித்யா ப்ரஹ்ம ரூபா ந சம்ஷய:
அர்த்த மாத்ர அக்ஷரா நித்யா ச்வாநிர் வாச்ய பதாத்மிகா

எனது பரம வித்தையாயிருப்பது கீதை; அது ப்ரஹ்ம ரூபம் என்பதில் சம்சயமில்லை. அர்த்த மாத்திரையாய்,
அக்ஷரமாய், நித்தியமாய், எனது சொரூபத்தைச் சொல்லால் விளக்க முடியாததாய் இந்த ஞானம் உளது.

9. சிதானந்தேன கிருஷ்னேன ப்ரோக்தா ஸ்வாமுகதோர்ஜுன
வேத த்ரயீ பர ஆனந்தா தத்வார்த்த ஞான சம்யுதா

மூன்று வேதங்களின் வடிவமாய், பேரானந்த வடிவமாய், தத்துவத்தை உள்ளபடி விளக்குவதாயுள்ள
இந்த ஞானம் சிதானந்த கிருஷ்ணனால் அர்ஜுனனுக்குத் திருவாய் மலர்ந்தருளப் பெற்றது.

10. யோ அஷ்டதசா ஜபேன் நித்யம் நரோ நிஷ்ச்சல மானசா:
ஞான சித்திம் ச லபதே ததோ யாதி பரம் பதம்

உறுதியான உள்ளத்துடன் எம்மனிதன் நாள்தோறும் பதினெட்டு அத்தியாயங்களையும் ஓதுகின்றானோ,
அவன் ஞான சித்தியடைந்து பிறகு பரமபதத்தைச் சேருகிறான்.

11. பாடே அசமர்த்த சம்பூர்ணம் தடோர்தம் பாடம் ஆசரேத்
ததா கோதா நஜம் புண்யம் லபதே நாட்ற சம்ஷயா

முழுதும் படனம் செய்ய இயலாவிட்டால் அதன் பாதியைப் படிக்கலாம். அப்படிச் செய்கின்றவன்
கோதானத்தினின்று விளையும் புண்ணியத்தைப் பெறுகிறான். அதில் சந்தேகமில்லை.

12. த்ரி பாகம் பாடமானஸ்து கங்கா ஸ்நான பலம் லபேத்
ஷடம்சம் ஜபமானஸ்து சோம யாக பலம் லபேத்

மூன்றில் ஒரு பகுதி படிக்கிறவன் கங்கா ஸ்நான பலனை அடைகிறான்.
ஆறில் ஒரு பங்கு படிப்பவன் சோமயாகப் பலனைப் பெறுகிறான்.

13. ஏக அத்தியாயம் து யோ நித்யம் படதே பக்தி சம்யுத:
ருத்ர லோகம் அவாப்நோதி கணோ பூத்வா வசீசிரம்

பக்தியுடன் ஓர் அத்தியாயமாவது நித்தியம் படிப்பவன் ருத்திர லோகத்தையடைந்து
அவனுடைய கணங்களில் ஒருவனாக அங்கு நெடிது வாழ்கிறான்.

14. அத்தியாயம் ஸ்லோக பாடம் வா நித்யம் யஹ் படதே நர:
ஸ யாதி நரதாம் யாவன் மந்வந்திரம் வசுந்தரே

வசுந்தரே, ஒரு அத்தியாயத்தின் அல்லது ஒரு சுலோகத்தின் காற்பங்கு நாள்தோறும் படிப்பவன்
ஒரு மன்வந்தரம் முடியும் வரையில் மானுடப்பிறப்பு எடுக்கிறான்.

15-16. கீதா யஹ் ஸ்லோக தசகம் சப்த பஞ்ச சதுஸ்தயம்
த்வுத்ரீநேகம் ததர் தம்வா ஷ்லோகாநாம் யஹ் படேன்நர:
சந்திரலோகம் அவாப்னோதி வர்ஷானாம் ஆயுதம் துருவம்
கீதா பாட சமாயுக்தோ ம்ரிதோ மானுஷடாம் வ்ரஜேத்

கீதையினுடைய பத்து, ஏழு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, அல்லது ஒன்றோ, பாதியோ ஸ்லோகத்தைப் படனம்
பண்ணுபவன் சந்திரலோகத்தில் பதினாயிரம் வருஷங்கள் வசிக்கிறான்.
கீதையைப் படித்துக் கொண்டிருக்கும் போது உயிர் துறப்பவன் மனுஷ்ய லோகத்தை அடைகிறான்.

17. கீதா அப்யாசம் புன க்ரித்வா லபதே முக்திம் உத்தமாம்
கீதேத் யுச்சார சம்யுக்தோ ம்ரிய மானோ கதிம் லபேத்

கீதா அப்பியாசம் செய்துகொண்டிருப்பவன் உத்தமமான முக்தியடைகிறான்.
மரணமடையும் போது கீதை என்று உச்சரிக்கும் மனிதன் வீடுபெறுவான்.

18. கீதார்த்த ஸ்ரவணா சக்தோ மஹா பாப யுடோபி வா
வைகுந்தம் சமவாப்நோதி விஷ்ணுனா சஹ மோடதே

மஹாபாவம் செய்தவனும் கீதையின் அர்த்தத்தைக் கேட்பதில் விருப்பமுடையவனா யிருப்பானாகில்
அவன் வைகுண்டம் ஏகி விஷ்ணுவுடன் பேரானந்தம் திளைப்பான்.

19. கீதார்த்தம் த்யாயதே நித்யம் க்ரித்வா கர்மாணி பூரிஷ:
ஜீவன் முக்தா ஸ விஜ்னேயோ தேஹாந்தே பரமம் பதம்.

ஓயாது கர்மம் செய்துகொண்டிருப்பதற்கு இடையில் யார் கீதையின் அர்த்தத்தை இடையறாது எண்ணிக்
கொண்டிருக்கிறானோ அவனை ஜீவன் முக்தன் என்று கருதவேண்டும். உடல் அழியும்போது அவன் பரமபதத்தை அடைகிறான்.

20. கீதாம் ஆஸ்ரித்ய பகவோ பூபுஜோ ஜனகாதயா
நிர்தூத கல்மஷா லோகே கீதா யாதாஹ் பரம் பதம்

இந்த கீதையைத் துணையாய்க்கொண்டு ஜனகன் போன்ற பூபாலர்கள் பலர் இவ்வுலகில் குறைகள்
நீங்கப்பெற்றவராயினர். பின்பு பரமபதத்தையும் பெற்றனர் என்று பாடப்பட்டிருக்கிறது.

21. கீதா யஹ் படனம் க்ரித்வா மஹாத்மியம் நைவ யஹ் படேத்
வ்ரிதா பாடோ பவேத் தஸ்ய ஷ்ரம ஏவ ஹ்யுதா ஹ்ரிதா:

கீதையை வாசித்தான பிறகு, இங்கு இயம்பியபடி அதன் மஹாத்மியத்தை வாசிக்காதவனுக்கு
வாசிப்பு வீண் போனதாகும்; முயற்சியும் வீண்போனதேயாம்.

22. ஏதன் மஹாத்மிய சம்யுக்தம் கீதா அப்யாசம் கரோதி யஹ்
ஸ தத் பலம் அவாப்நோதி துர்லபம் கதிம் ஆப்னுயாத்

இந்த மாஹாத்மியத்தோடு கூடிய கீதா அப்பியாசத்தை யார் செய்கின்றானோ அவன் ஈண்டு இயம்பியுள்ள
பலனைப் பெறுகின்றான். கிடைப்பதற்கு அரிய உயர்கதியும் அவனுக்குக் கிடைக்கிறது.

ஸூத உவாச:

23. மஹாத்மியம் ஏதத் கீதாயாஹ் மையா ப்ரோக்தம் சனாதனம்
கீதாந்தே ச படேத்யஸ்து யதுக்தம் தத் பலம் லபேத்

ஸூதர் சொன்னது:

கீதையை வாசித்தான பிறகு என்னால் இயம்பப்பட்ட இந்த கீதா மாஹாத்மியத்தை யார் வாசிக்கிறானோ
அவன் இதில் விளக்கியுள்ள பலனைப் பெறுவான்.

இதி ஸ்ரீ வராஹபுராணே ஸ்ரீ கீதா மஹாத்மியம் சம்பூர்ணம்
வராஹ புராணத்தில் கீதாமாஹாத்மியம் ஸம்பூரணம்.

————–

கீதையும் 18 அத்தியாயங்களும்: கீழே கொடுக்கப்பட்டுள்ள பதினெட்டு வித குணங்களில்
நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால் தான்
இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

1-காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
2-குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
3-லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
4-மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா?
அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
5-மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
6-டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
7-அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
8-சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
9-ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
10-தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
11-ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
12-மனம்: நம் மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழ வேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
13-அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
14-கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
15-காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
16-மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
17-நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
18-மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும்.
கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும்.
உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

————

1. விஷாத யோகம்.
பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும்
என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம்.
2. சாங்கிய யோகம்.
பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது.
3. கர்மயோகம்.
உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம்.
4.ஞான கர்ம சன்னியாச யோகம்.
பாவம், புண்ணியங்கள் பற்றிக் கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது.
5. சன்னியாச யோகம்.
நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது.
6.தியான யோகம்.
கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில்
இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது.
7. ஞானம்.
இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது.
8. அட்சர பிரம்ம யோகம்.
எந் நேரமும் இறைவனைப் பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது.
9. ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம்.
கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக்
காண்பது தான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது.ஒன்பதாம் படி.
10. விபூதி யோகம்.
அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது.பத்தாம் படி.
11. விஸ்வரூப தரிசன யோகம்.
ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
12. பக்தி யோகம்.
இன்பம் – துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை – பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து
எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது.
13. ஷேத்ரக்ஞ விபாக யோகம்.
எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல்.
14. குணத்ர விபாக யோகம்.
பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே.
15. தெய்வாசுர விபாக யோகம்.
தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது.
16. சம்பத் விபாக யோகம்.
இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது.
17. சிரித்தாத்ரய விபாக யோகம்.
சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது.
18.மோட்ச சன்யாச யோகம்.
யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று
இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது.

சத்தியம் நிறைந்த இந்தப் பதினெட்டு அத்தியாயங்களையும் முழு மனதுடன் படித்து, அதன் படி வாழ்ந்து வந்தால்,
நமக்கு பகவான் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே
பதினெட்டு அத்தியாயங்கள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ சரமோபாய தாத்பர்யம்–

September 28, 2022

ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை அந்த வ்யாக்யானத்தை எழுதி முடிக்க, திருவாய்மொழிக்கான அவருடைய வ்யாக்யானமே
ஈடு முப்பத்தியாராயிரப்படி என்று பிரபலமாக வழங்கப்படுகிறது.
நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளையை, ஈயுண்ணி மாதவப் பெருமாளின் வழித் தோன்றல்களுக்கு கற்பிக்கும் பொருட்டு
அந்த வ்யாக்யானத்தை ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் தருமாறு பணித்தார்.

“ஈதல்” என்ற தமிழ் சொல்லுக்கு தர்மம் என்று பொருள்.
“உண்ணுதல்” என்றால் சாப்பிடுவது.
ஈயுண்ணி என்பதன் பொருள் பிற ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உணவளித்த பின்பே தாம் உண்பவர் என்பதாகும்,

ஈயுண்ணி மாதவப் பெருமாள் அவற்றை தம்முடைய மகனான ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளுக்கு உபதேசித்தார்.
ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் அவற்றைத் தம்முடைய அன்பிற்கு பாத்திரமான சிஷ்யர் நாலூர் பிள்ளைக்கு உபதேசித்தார்.
இவ்வாறாக ஒவ்வொரு ஆசார்யரிடமிருந்து
சிஷ்யர் என்ற முறையில் இவை உபதேசிக்கப்பட்டு வந்தது.
நாலூர் பிள்ளையின் அன்பிற்கு பாத்திரமான சிஷ்யரும் மகனும் நாலூராச்சான் பிள்ளையாவார்.
நாலூராச்சான் பிள்ளை நாலூர் பிள்ளையின் திருவடித் தாமரைகளின் கீழ்மர்ந்து ஈடு முப்பத்தாறாயிரப்படியைக் கற்றார்.
நாலூராச்சன் பிள்ளைக்கு இருந்த பல சிஷ்யர்களில் திருவாய்மொழிப் பிள்ளையும் ஒருவர்.
நாலூர் பிள்ளையும் நாலூராச்சான் பிள்ளையும் தேவப் பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்யும் பொருட்டு காஞ்சிபுரம் செல்லும் பொழுது,
எம்பெருமானே நாலூராச்சான் பிள்ளையை திருவாய்மொழிப் பிள்ளைக்கு ஈடு வ்யாக்யானம் போதிக்குமாறு பணித்தார்.
திருவாய்மொழிப் பிள்ளையும் மற்றோரும் ஈடு வ்யாக்யானத்தை நாலூராச்சான் பிள்ளையிடம் பயின்று
அதனை ஈட்டுப் பெருக்கர் (ஈட்டு வியாக்கியானத்தை வளர்ப்பவர்) என்று கொண்டாடப்படும் மணவாள மாமுனிகளுக்கு கற்பித்தார்.
இவ்வாறாக ஈடு வ்யாக்யானம் மணவாள மாமுனிகளை அடையும் என்று அறிந்திருந்ததனாலேயே,
ஸ்ரீ நம்பிள்ளை அதனை ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்குக் கொடுத்தார்.

சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியை தான்-என்றது
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடங்கி
அதன் தாத்பர்யமான ஸ்ரீ வசன பூஷண அர்த்தத்தையும்
ஸ்ரீ திரு நாராயணபுரத்தில் ஆய்
ஸ்ரீ திருவாய்மொழி யாச்சார்யர் (ஆச்சான் பிள்ளையும் )
ஸ்ரீ ஆயி சிஷ்யரான ஸ்ரீ நல்லப்ப நாயன்–இவர்களை தர்சிப்பிக்கிறது –

அதிஷ்டித சதுர் க்ராமாசார்யா தேவ பதேர் குரோ
சாஹார்த்தைர் லேபிரே யேன சர்வேச த்ராவிடாகமா-என்னக் கடவது இறே-

(தேவ பதேர் -நாலூர் ஆச்சான் பிள்ளையே தேவப் பெருமாள் )

ஈயுண்ணி மாதவப் பெருமாள் தனியன்

லோகாசார்ய பதாம்போஜ ஸம்ஸரயம் கருணாம்புதிம் |
வேதாந்த த்வய ஸம்பன்னம் பதவார்யம் அஹம்பஜே ||

ஈயுண்ணி பத்மனபாப் பெருமாள் தனியன்

மாதவாசார்ய ஸத்புத்ரம் தத்பாதகமலாச்ரிதம் |
வாத்ஸல்யாதி குணைர் யுக்தம் பத்மநாப குரும் பஜே ||

நாலூர் பிள்ளை தனியன்

சதுர்க்ராம குலோத்பூதம் த்ராவிட பிரஹ்ம வேதிநம் |
யஜ்ஞார்ய வம்சதிலகம் ஸ்ரீவராஹமஹம் பஜே ||

நாலுராச்சான் பிள்ளை தனியன்

நமோஸ்து தேவராஜாய சதுர்க்கிராம நிவாஸினே |
ராமானுஜார்ய தாஸஸ்ய ஸுதாய குணஸாலினே ||

—————-

ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ சரமோபாய தாத்பர்யம்

சரமோபாய தாத்பர்யம் யதீந்த்ர விஷயேகரோத் |

யஸ்தமார்ய வரம் வந்தே தேவராஜாஹ்வயம்குரும் ||

பகவத் ப்ராப்தி ப்ரதிபந்தகமான ஸம்ஸாரத்தில் அருசி பிறந்து பகவத் சரணாரவிந்த ப்ராப்தி ரூபமான மோக்ஷத்திலிச்சை பிறந்த வதிகாரி ,
தத் சித் யர்த்தமாக சரம பர்வமான எம்பெருமானார் அபிமானத் திலே ஒதுங்கி , தத் விஷய ப்ரபத்தி நிஷ்டையை யுடையவனாயிருக்க வேணும் .

பகவத் ப்ராப்தி ரூப மோக்ஷத்தை பெறுகைக்குடலாக வேதாந்தங்களிலே கர்மாத் யுபாய சதுஷ்டயத்தைச் சொல்லிப் போரா நிற்க ,
அத்தை விட்டு , அதில் லகுவான சரம பர்வ விஷயத்தில் ப்ரபத்தியை பேற்றுக்குடலாக அவலம்பிக்கும்படி எங்ஙனேயென்னில்;

1 ”யத்ய தாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்ததே வேதரோ ஜந: | ஸயத் ப்ரமாணம் குருதே லோகஸ்ததநுவர்ததே” என்கிற கணக்கிலே
ஞாநாதிகரான நம் பூர்வாசார்யர்கள் யாதொன்றை யநுஷ்டித்தார்கள், யாதொன்றை யதநுப்ரமாணமாக அங்கீகரித்தார்கள்,
அவையிரண்டு மிறே பின்புள்ள அஸ்மதாதிகளுக்கு க்ராஹ்யங்கள்

1 பகவத்கீதா அத்யா 3 ஶ்லோ 21 யத் யதா சரதி ஶ்ரேஷ்ட:

எல்லா ஶாஸ்த்ரங்களையும் அறிந்தவனென்றும் அநுஷ்டான ஸம்பந்நனென்றும் ப்ரஸித்தனான மனுஷ்யன்
யத்யதாசரதி — எந்தபடி யநுஷ்டிக்கிறான் ,
தத்ததேவ – அந்த அந்த படிகளையே ,
இதரோஜந: — பூர்ணஜ்ஞாநமில்லாதவனும் ,
ஆசரதி – அநுஷ்டிக்கிறான் ,
ச: — அந்த ஶ்ரேஷ்ட மநுஷ்யன் ,
யத் ப்ரமாணம் – ( இப்படி யநுஷ்டிக்கப்படுமவைகளை ) எவ்வளவாக வறுதியிட்டு ,
குருதே — அநுஷ்டிக்கிறானோ ,
தத் -– அத்தை அவ்வளவென்றே நினைத்து ,
லோக: — ஊர்ணஜ்ஞாநமில்லாத மனுஷ்யனும் ,
அநுவர்த்ததே -– அந்த ஶ்ரேஷ்டனை பின் சென்று அநுஷ்டிக்கிறான்.

2 “கர்ம ஞானஞ்ச பக்தி: ப்ரபதந மிதிச ப்ராப்ய சித்யர்த்த மேதானாலோச்யாலோச்ய ஹேதூந் புநரிஹ சுதராந் தோஷ த்ருஷ்டிம் விதாய | கர்தும் சக்தான பூர்வே யதிவர சரண த்வந்த்வ மூர்தாபி யுக்தாஸ்தத் காருண்யாபிமாநாத் ததநுச குரவோ

2 பூர்வாசார்ய ஸூக்தி ( கர்மஜ்ஞாநஞ்சேதி ) கர்மஜ்ஞாநஞ்ச பக்தி: ப்ரபதநமிதிச -– கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளென்கிற ,
ஹேதூந் –- உபாய சதுஷ்டயத்தையும் ,
ப்ராப்ய -– அடைந்து , அதாவது பகவத் ப்ராப்திக்கு ஸாதநங்கள் என்று அறிந்து ,
புந: — திரும்பவும் ,
ஏதாந் -– இந்த உபாயங்களை ,
ஸித்யர்த்தம் –- பேற்றுக்குடலாமோவென்று ,
ஆலோச்யாலோச்ய –- உணர்ந்து உணர்ந்து பார்த்து ,
இஹ -– இந்த உபாயங்களில் ,
சுதராம் – மிகவும் ,
தோஷத்ருஷ்டிம் –- தோஷ தர்ஸநத்தை ,
விதாய —- செய்து( அதாவது கர்ம,ஜ்ஞாந,பக்திகளநுஷ்டிக்க வஸ்யங்களென்பதற்கு மேலே ,
இவை பர தந்த்ரமான ஸ்வரூபத்துக்கு விருத்தங்களென்கிற தோஷம் ப்ரதாநமாயிருக்கிற தென்றும் ;
ப்ரபத் யுபாயம் மஹா விஸ்வாஸ ரூபமா யிருக்கைக்கு மேலே நிரங்குசமான ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயமிதற்கு நியதமாயிருக்கிறதென்றும் ;
( நன்றாக அறுதியிட்டு என்கை ) ,
கர்தும் – இவற்றையநுஷ்டிக்கைக்கு ,

முக்திமாப்தா மஹாப்தா: || என்று கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளாகிற உபாய சதுஷ்டயத்தையும் பேற்றுக் குடலாக பற்றலாமோ
என்று உணர்ந்துணர்ந்து பார்த்த விடத்தில் ஸ்வரூப விருத்தத்வதுஸ்ஸகத்வ விஸ்வாஸபூயஸ்த்வாதி தோஷங்கள் காண்கை யாலே
இவைகளெல்லாம் அரும் தேவைகளாய் இருந்ததென்று பரித்யஜித்து எம்பெருமானார்க்கு முன்புள்ள ஆசார்யர்களும் பின்புள்ள ஆசார்யர்களும் தாங்கள் ஜ்ஞாநாதிகருமாய் ப்ரமாணிக அபக்ரேசருமா யிருக்கையாலே
பரம காருணிகராய் ப்ரபந்ந ஜந கூடஸ்தரான வெம்பெருமானாருடைய திருவடிகள் ஸம்பந்தத்தையும் திருமுடிகள் ஸம்பந்தத்தையும் பெற்றுடையராய்
எம்பெருமானாருடைய காருண்ய ப்ரவாஹ ஜநிதமான வபிமாநத்தாலே பேறு பெற்றார்களிறே

பூர்வர்களுடைய வநுஷ்டாநத்தை பிடித்து நடத்தும்போது அது ப்ரமாண புரஸ்ஸரமாகா விடில் நிரஸ்த கோடியில் அந்தர்பவிதாயோவென்னில் ;

திராதிறே , 1 விதயஶ்ச வைதிகாஸ் தவதீய கம்பீரா மனோனு சாரிண: “ என்றதிறே .

1 ஸ்தோத்ர ரத்நம் – ஶ்லோ 20 ( வ்யதயஶ்ச வைதிகா இதி ) வைதிகா:

விதயஶ்ச – இதம் குரு இதம் மாகார்ஷீ: என்று ஸ்வதந்த்ரமான வைதிக விதிகளும் ,
த்வதீய கம்பீர மனோனுசாரிண: – அநந்யப்ரயோஜநாராயாஶ்ர யித்தவர்களுடைய கம்பீரமான மநஸ்ஸை பின் செல்லா நின்றன ,
மநஸ்ஸுக்கு காம்பீர்யமாவது , ஷுத்ரமான ஐஶ்வர்யாதிகளில் கால் தாழாதே அநந்ய ப்ரயோஜநமாகை ,
“ நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும் “ என்னும்படி பகவத் விஷயத்தில் அபவகாஹியாதார்க்கிறே
வைதிகமான “ நிதித்யாஸிதவ்ய: “ – என்கிற விதி வேண்டுவது .

இதுக்கு மேலே முக்தகண்டமாக ப்ரமாண முண்டாகில் முக்யமன்றோ ? வென்னில் ; அது தானுமுண்டு ; எங்ஙனேயென்னில் ,

ஸ்ரீஶாஸ்த்ரத்திலே பெரிய பிராட்டியைக் குறித்து , ஈஶ்வரன் தன்னுடைய வவதார வைபவத்தைச் சொல்லு கிறவிடத்திலே

2 “ ஸம்யக் உக்தம் த்வயா விஷ்ணோ ஜந்மநாந்த வைபவம் | த்வதாசார்யா வவதாரத்வ ப்ரகாரம்பிமேவத ||

2 ( ஸம்யக் உக்தமிதி ) – ஹே விஷ்ணோ – ஸர்வாந்தர்யாமியாயிருக்கு மவரே ,
த்வயா – தேவரீராலே ,
தவ ஜந்மநாம் – தேவரீரதான அவதாரங்க ளினுடைய ,
வைபவம் – ப்ரபாவமானது ,
ஸம்ய குக்தம் – நன்றாக சொல்லப்பட்டது ,
த்வதாசார்யா வதாரத்வ ப்ரகாரம்பி – இனி தேவரீ ருடைய வாசார்ய ரூபமான வவதார விசேஷத்தினுடைய ப்ரகாரத்தையும் ,
மே – எனக்கு ,
வத – அருளிச் செய்யவேணும் , என்று
பிராட்டி பெருமாளை நோக்கி விண்ணப்பம் செய்தாரென்கை .

1 தர்மஜ்ஞ ஸமய: ப்ரமாணம் “ என்றும் “ மேலையார் செய்வன கள் “ என்றும் சிஷ்ட்டாசாரமே ப்ரபல ப்ரமாணமாகச் சொல்லக் காண்கையாலே , ப்ரமாண சித்தமாயிருக்கும் . இவர்கள் அநுஷ்டாந ப்ரமாணானு குணமாயல்ல

ந ஶக்தா — ஸமர்த்தர்களாகாமல் ,
மஹாப்தா: — ஜ்ஞாநாதிகராயும் ப்ரமாணிகாக்ரேசரருமாயுமிருக்கிற ,
பூர்வே குரவ: — நம் பூர்வாசார்யர்கள் ,
யதிவர சரணத்வந்த்வ மூர்தாபியுக்தாஸ்ஸந்த: — எம்பெருமானாருடைய திருவடி ஸம்பந்தத்தாலும் திருமுடி ஸம்பந்தத்தாலும் ஸமஸ்த ஶிஷ்ட ஜநபூஜ்ய ராய்க்கொண்டு ,
தத்காருண்யாபிமானாத் – அந்த வெம்பெருமானாருடைய நிர்ஹேதுக க்ருபையினாலுண்டான வபிமானத்தாலே ,
ததநுச – அந்த வாசார்யர்களை ( அதாவது தங்களை என்ற படி ) பின் சென்றவர்களோடு கூட ,
முக்திமாப்தா: — பேற்று பெற்றார்கள் .
——————–

3 த்வயாசார்யாவதாரஸ்து கிமர்தம் க்ரியதே ப்ரபோ |

க்ருதஸ்யாப்வயதாரஸ்ய பலம் வா கிமவாப்ஸ்யஸி ||

3 ( த்வயாசார்யாவதாரஸ்த்விதி ) – ஹே ப்ரபோ – ஓ ஸ்வாமீ
ஆசார்யாவதாரஸ் து – ஆசார்ய ரூப அவதாரமானது ,
( இவ் விடத்தில் து – என்கிற அவ்யம் பரத்வ , வ்யூஹ விபவாதிகளைக் காட்டிலும்
ஆசார்யாவதாரத்துக் குண்டான வைலக்ஷண்ய விசேஷத்தைக் காட்டுகிறது )
த்வயா – தேவரீராலே ,
கிமர்தம் க்ரியதே – எந்த ப்ரயோஜநத்துக்காக செய்யப் படுகிறது ,
க்ருத்ஸ்யாப் யவதாரஸ்ய – அப்படி செய்யப்பட்ட வந்த வவதார விசேஷத்துக்கு ,
கிம்வாபலம் – எந்த பலன் தான் ,
அவாப்ஸ்யஸி – அடையப் போகிறீர் .

4 இதி ப்ருஷ்டோ மஹாலக்ஷ்ம்யா பகவாந் புருஷோத்தம: |

குருரூபாவதாரஸ்ய மஹாத்ம்யம் வக்துமுத்யத: ||

4 ( இதி ப்ருஷ்ட இதி ) – பகவான் புருஷோத்தம: — ஷாட்குண்ய பரி பூர்ணனாயும் ,
நித்யஸூரி நிர்வாஹகனாயும் இருந்துள்ள எம்பெருமான் ,
மஹா லக்ஷ்ம்யா –- பெரிய பிராட்டியாராலே ,
இதி ப்ருஷ்டஸன் –- இந்த ப்ரகார மாக கேட்கப்பட்டவராய்க் கொண்டு ,
குருரூ பாவ்தாரஸ்ய –- ஆசார்ய ரூப மான அவதாரத்தினுடைய ,
வைபவம் –- வைபவத்தை ,
வக்தும் – சொல்லுகைக்கு ,
உத்யத: — ( ஆபூதிதிஶேஷத: ) யத்நித்தவரானார் .
மஹாத்ம்யம் வக்துமுத்யத

————–

ஸ்ரீபகவாந் | 1 ஸாது ப்ருஷ்ட்டஸ் ்வயா தேவீ ஸாராம்ஸார வித்தமே | ஸ்ருணு வக்ஷயே மதாசார்ய , ஜந்மநோ வைபவம் தவ ||

1 ( ஸாது ப்ருஷ்ட்ட இதி ) சார வித்தமே -– சாரஜ்ஞர்களில் ஶ்ரேஷ்ட்டை யான ,
ஹே தேவி -– ஸர்வ ஸமாஶ்ரயணீயையானவளே ,
ஸாது — ஶ்லாக்யமாய் இருந்துள்ள ,
ஸாராம்ஸ: — ஸார பூதமான விஷயம்,
ப்ருஷ்ட: — கேட்கப் பட்டது ,
மதாசார்ய ஜந்மந: — என்னால் செய்யப்பட்ட தான ஆசார்யாவதாரத்தினுடைய ,
வைபவம் -– மஹாத்ம்ய விஶேஷத்தை,
தவ – உனக்கு ,
வக்ஷ்யே -– சொல்லுகிறேன் ,
ஶ்ருணு – கேளாய் , என்று பெருமாள் அருளிச்செய்தாரென்கை .

2 ஸம்ஸார ஸாகரே மக்நாந், சேதநாநுஜ்ஜிஹீர்ஷயா | ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானீ சேதிஹாஸா: ப்ரதர்ஸிதா: | தேந மார்கேண கே நாபி முக்திர் லப்தா ந பூதலே ||

2 ( ஸம்ஸார ஸாகர இதி ) ஸம்ஸார ஸாகரே –- ஸம்ஸாரமாகிற பெருங் கடலிலே ,
மக்நாந் –- முழுகிக் கிடக்கிற ,
சேதநாந் –– பத்த சேதநரை ,
உஜ்ஜி ஹீர்ஷயா -– கரையேத்த வேணுமென்கிற விச்சையினாலே ,
ஶ்ருதி ஸ்ம்ருதி புராணாநி இதிஹாஸஸ்ச –- அபௌருஷேயமாய் நித்ய நிர்தோஷமாய் , ஸ்வத: ப்ரமாணங்களான ருகாதி வேதங்களும்
ததுபப்ருஹ்மணங்களான ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களும் ,
ப்ரதர்ஶிதா: — விஸதமாக வெளியிடப்பட்டது
( இத்தனையும் செய்த போதிலும் )
தேந மார்கேண – கீழ்ச் சொன்ன ஶ்ருத்யாதி மார்க்கத்தாலே
பூதலே -– லீலா விபூதியில் ,
கேநாபி – ஒருத்தனாலேயும் ,
முக்தி: — பகவத் ப்ராப்தி ரூப மோக்ஷமானது ,
ந லப்தா – அடையப் படவில்லை .

3 ததோ விபவரூபேண ஜந்மாநி ஸுபஹுநிமே || ஜாதாநிதேவி மோக்ஷஆர்த்த கோபி ந பவத் ||

3 ( ததோ விபவரூபேணேதி ) – இப்படி மத் ஆஜ்ஞா ரூபங்களான ஶ்ருதி ஸ்ம்ருத்யாதிகளால் நாம் நினைத்தபடி நடவாத பின்பு ,
விபவ ரூபேண – ராம க்ருஷ்ணாதி ரூபத்தாலே ,
ஸுபஹுநி -– அநேகங்களான ,
ஜந்மாநி – அவதாரங்களானவை ,
மே -– சேதநோஜ்ஜீவநார்தியான எனக்கு ,
ஜாதாநி –- என்னுடைய இச்சையினாலே உண்டாய்த்தன , ஹே தேவி -– சேதநோஜ் ஜீவநத்தில் எனக்கு முற்பாடளாய் ஸந்தோஷிக்கும் அவளே ,
தத்ராபி -– அப்படி யவதாரங்கள் செய்தவிடத்திலும் ,
( “ அவஜாநந்தி மாம் மூடாம் மாநுஷீம் தநுமாஸ்ரிதம் “ என்கிறபடியே , ஸஜாதீயத்வேந ஸுலபனாய் அவதரித்த
விவ்வளவே ஹேதுவாக சேதநர்கள் நம்மை யவமதி செய்கையாலே ) ,
கோபி — ஒருத்தனாவது , மோக்ஷஆர்த்தி — மோக்ஷஆபேக்ஷஐ யுடையவனாக , ந பவது — ஆகவில்லை .

————-

1 வேதாந்தே விவிதோபாய பக்த்யாத்யா விஹிதா மயா |

தேஷ்வப்யக்தாஸ்யாத் மாநஸ்ஸம்ஸரந்தி புந:புந: ||

1 ( வேதாந்தே விவிதோபாய இதி ) “ படாதன பட்டு “ என்கிறபடியே நாம் , எவ்வளவு பட்டது மன்னிக்கே ) ,
மயா — என்னாலே ,
வேதாந்தே — ப்ரஹ்ம ப்ரதிபாதந பரமான வேதாந்த ஶாஸ்த்ரங்களிலே ,
பக்த்யாத்யா: — பக்தி யோகம் முதலான ,
விவிதோபாயா: — அநேக விதமான உபாயங்கள் ,
விஹிதா: — விதிக்கப்பட்டவை ,
( இப்படி விதித்த விடத்திலும் ) ,
ஆத்மாந: — பத்த சேதநர்கள் ,
தேஷ்வபி — அந்த பக்த்யாத யுபாயங்களை யனுஷ்டிக்கும் விஷயத்திலும் ,
அஶக்தாஸ் ஸந்த: — ஶக்தி யில்லாதவர்களாய்க் கொண்டு ,
புந:புந: — அடிக்கடி ,
ஸம் ஸரந்தி — ஜன்ம மரணாதி க்லேஶ பாஹிகளாய்க் கொண்டு திரிகிறார்கள் .

2 ஏவம் பஹுவிதோபாயேஷ் வநிஷ்பந்ந பலேஷ் வஹம் |
ஸதாசார்ய ஸ்வரூபேண ஜநித்வா ஸர்வ சேதநாந் |
வ்யூஹ க்ராஹம் க்ருஹீத்வைவ கமிஷ்யா மீத்வ சிந்தயம் ||

2 ( ஏவம் பஹுவிதோபாயேஷ்விதி ) ஏவம் — இந்த ப்ரகாரமாக ,
பஹுவிதோபாயேஷு — சேதநோஜ்ஜீவனார்த்தமாக நாம் செய்த வுபாயங்க ளெல்லாம் ,
அநிஷ்பந்ந பலேஷுஸத்ஸு — நிஷ்பலங்களாய்ச் சென்றவளவில் ,
அஹம் — ஸர்வஜ்ஞனான நான் ,
ஸதாசார்ய ஸ்வரூபேண — ஜ்ஞாநமநுஷ்டாநமிவை நன்றாகவே யுடையனான வாசார்யனாய் ,
ஜநித்வா — அவதரித்து ,
ஸர்வ சேதநாந் — எல்லா சேதநர்க ளையும் ,
வ்யூஹ க்ராஹம் க்ருஹீத்வைவ — வாரிப் பிடியாக பிடித்துக் கொண்டே ,
கமிஷ்யாமீதி — நலமந்தமில்லதோர் நாடு புகுவோமென்று ,
அசிந்தயம் — எண்ணினேன் .

3 ஏவம் சந்சிந்த்ய பத்மாக்ஷஇ குருரூபேணவைபுரா |

அவதீர்ணோ ஜநாந் காம்ஸ்சித்ஜநாந் பவாதப்யுத்தரம் மே ||

3 ( ஏவம் ஸந்சிந்த்யேதி ) ஏ பத்மாஷீ — தாமரைப் பூப்போன்ற திருக் கண்களை யுடையவளாய் ,
ரமே — நமக்கு ஆனந்தவஹையாயும் ஸ்வயமாநம் நிர்பரையுமாயிருக்குமவளே ,
ஏவம் ஸந்சிந்த்ய — இந்த ப்ரகாரமாக வெண்ணி ,
புரா — முற்காலத்திலே ,
குரு ரூபேண — தத்தாத்ரேயாதி ரூபியாய் ,
அவதீர்ண: — அவதரித்தவனாய்க் கொண்டு ,
காம்ஸசித்ஜநாந் — சில பத்த சேதநர்கள் ,
பவாத் — ஜன்ம மரணாதி ரூபமான ஸம்ஸாரத்தில் நின்றும்
அப்யுத்தரம் — கரை யேத்தினேன் .

4 இத: பரம்சாபி கரிஷ்யதே | மயா யதா புராதேவி ஜநி: க்ருதா ததா| குரு ஸ்வரூபேண நிமக்நசேதநாந் ஸமுத்தரிஷ்யாமி நிஜப்ரபாவத: 

4 ( இத:பரமிதி ) ஹே தேவி — நமக்கு அபிமதமாயும் அநுரூபமாயும் இருந்துள்ள விக்ரஹ குணங்களும் ஆத்ம குணங்களுமுடையவளே ,
புரா — முன்பு ,
மயா — என்னாலே ,
ஜநி: — ஆசார்ய ரூபாவதாரமானது ,
யதா க்ருதா — எவ்விதமாக செய்யப் பட்டதோ ,
ததா — அவ் விதமாகவே ,
இத:பரஞ்சாபி — இனிமேலும் ,
கரிஷ்யதே — செய்யப்படப் போகிறது ,
குரு ஸ்வரூபேண — அப்படி செய்யப்பட்ட வந்த வவதாரத்தில் நாம் ஆசார்ய ரூபியாய்க் கொண்டு ,
நிமக்ந சேதநாந் — ஸம்ஸார ஸாகரத்தில் முழுகிக் கிடக்கிற பத்த சேதநர்களை ,
நிஜ ப்ரபாவத: — ஆசார் யாபிமான ரூபமான நம்முடைய ப்ரபாவத் தாலே ,
ஸமுத்தரிஷ்யாமி — “ ந ச புநராவர்த்ததே “ என்னும்படி கரை யேத்தப் போகிறேன் .

——————-

1க்ஷ்மீ: ||

1 ( லக்ஷ்மீ: )( இப்படி எம்பெருமானார் அருளிச்செய்த வார்த்தை களைக் கேட்டு ) பிராட்டி மீளவும் சொல்லுகிறார் .

2 கஸ்மிந் குலே பவாந் விஷ்ணோ கரிஷ்யதி. குரோர்ஜநிம் | கஸ்மிந் யுகேவதீர்ணஸ்த்வம் பவிஷ்யஸி வத

ப்ரபோ: ||

2 ( கஸ்மிந் குல இதி ) ஹே விஷ்ணோ — ஸர்வ வ்யாபியான ஸ்வாமீ ,
பவாந் — தேவரீர் ,
குரோர் ஜநிம் — ஆசார்ய ரூபமான விலக்ஷண அவதாரத்தை
கஸ்மிந் குலே — எந்த திரு வம்ஸத்திலே ,
கரிஷ்யதி — செய்யப் போகிறது ,
ஹே ப்ரபோ — ஸர்வ நியந்தாவான ஓ ஸ்வாமீ ,
த்வம் — தேவரீர் ,
கஸ்மிந் யுகே — எந்த யுகத்திலே தான் ,
அவதீர்ணோ பவிஷ்யஸி -அவதரிக்கப் போகிறீர் ?
வத — ( இவ் வர்த்தத்தை “ தான் யஹம் வேத ஸர்வாணி “ என்கிறபடியே , தேவரீர் தானே யறிந்திருப்பதால் )
தேவரீரே அருளிச் செய்ய வேணுமென்று பிராட்டி விண்ணப்பம் செய்தாரென்கை .

3 ஶ்ரீபகவான் || 4 அஹமாசார்ய ரூபேண பவிஷ்யாமி யுகே யுகே ||

3 ( ஶ்ரீபகவான் ) இப்படி விண்ணப்பம் செய்த பிராட்டியை நோக்கி எம்பெருமான் அருளிச் செய்கிறார் .

4 தத்ராபி யோகிநாம் பும்ஸாம் குலே மஹதி ஜந்ம மே ||

( அஹமிதி ) ஹே தேவி — நிரவதிக தேஜஸ்ஸை யுடையவளான பிராட்டி
( இந்த பதம் மேலில் ஶ்லோகத்திலிருந்து இவ் விடத்திற்கு ஆகர்ஷிக்கப் படுகிறது ) ,
அஹம் — ஸர்வ ஜ்ஞனான நான் ,
ஆசார்ய ரூபேண — ஆசார்ய ரூபியாய்க் கொண்டு ,
யுகே யுகே — யுகங்கள் தோறும் ,
பவிஷ்யாமி — அவதரிக்கப் போகிறேன் ,
தத்ராபி — அப்படி யவதரிக்கு மிடத்திலும் ,
யோகிநாம் பும்ஸாம் — பரம யோகிகளாயிருக்கிற மஹா புருஷர்க ளுடைய ,
மஹதி — ஸர்வ ஶ்லாக்யமாயிருந்துள்ள ,
குலே — திருவம்ஸத்திலே ,
மே — எனக்கு ,
ஜந்ம — அவதாரமானது ,
பவிஷ்யதி — உண்டாகப் போகிறது

1 விஶிஷ்யமே தேவிகலௌ யுகே குரோர்ஜநிர்பவித்ரீ கலு ஸத்குலே ரமே | த்ரிதண்ட காஷாய படோர்த்வ புண்ட்ர பாக் பவிஷ் யதி ஸா ஹி புஜிஷ்ய பூயஸீ ||

1 ( விஶிஷ்ய மே தேவீதி )
ஹே ரமே தேவி — நிரதிஶய ஆநந்த யுக்தையாய்க் கொண்டு நமக்கு பட்ட மஹிஷியாயிருக்குமவளே ,
கலௌ யுகேது — கலி யுகத்திலேயோ வென்றால் ,
( இவ் விடத்தில் பூர்வத்தில் காட்டிலும் விசேஷம் சொல்ல வேண்டுகையாலே ,
து — என்கிற அவ்யயம் அத்யாஹரிக்கப்பட்டது )
ஸத் குலே — ஒரு விலக்ஷணமான திரு வம்ஶத்திலே
மே — எனக்கு ,
விஶிஷ்ய — பூர்வ அவதாரங்களைக் காட்டில் விலக்ஷணமாக ,
குரோர்ஜநி: — ஆசார்ய ரூபாவதாரமானது ,
பவித்ரீகலு — உண்டாகப் போகிறது

( இவ்விடத்தில் கலு என்கிற அவ்யயமிருப்பதால் இவ்வர்த்தம் ப்ரமாண ப்ரதிபந்நமென்று சொல்லுகிறது ) , ஸா — அந்த அவதாரமானது

( “ அடையார் கமலத்தலர் மகள் கேள்வன் “ என்கிற பாசுரத்தின் படியே ,
மனோ புத்தி , ஞாநங்களுக்கும் , ஸாத்விக தாமஸ ரூபத் விவிதாஹங்காரங்களுக்கும் அபிமாநிகரான பஞ்சாயுதாழ்வார் ,
தம் நினைவைப் பின் சென்று தாமதிகரித்த கார்யத்துக்கு ஸஹகரிக்கையாலே ) ,
புஜிஷ்ய பூயஸீ ஸதி — அபரிமிதமான சிஷ்ய ஸம்பத்தை யுடைத்தானதாய்க் கொண்டு ,
த்ரிதண்ட காஷாய படோர்த்வ புண்ட்ர பாக் — “ காஷாயசோபி “என்கிற ஶ்லோகத்தின்படியே ,
த்ரிதண்டமென்ன , காஷாய வஸ்த்ர மென்ன , த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களென்ன இவைகளையுடையது ,
பவிஷ்யதி — ஆகக் கடவது .
இது சத்ரந்த பதமா இவ்வர்த்தம் காட்டுகிறது ,
இவ்விடத்தில் , ஹி என்கிற அந்வயம் இருப்பதால் , இவ் வர்த்தத்தினு டைய ப்ரஸித்தி சொல்லப்படுகிறது .

2 ஸர்வோபாய தரித்ராணாம் சேதநாநாம் வராநநே | மமாபிமாநாத் ஸர்வேஷாம் முக்தி: குருஸரீரிண:

2 ( ஸர்வோபாய தரித்ராணாமிதி ) ஹே வராநநே ஸர்வோத்க்ருஷ்டமான திருமுக மண்டலத்தை உடைய பிராட்டி ,
ஸர்வோபாய தரித்ராணாம் — கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளாகிற உபாயங்களென்கிற கைமுதலற்றவராயிருக்கிற ,
ஸர்வேஷாம் சேதநாநாம் — ஶ்ரீ வசநபூஷணத்திலருளிச் செய்த படியே , அஜ்ஞரும் ஞாநாதிகரும் பக்தி விவசருமான எல்லா சேதநர்களுக் கும் ,
( இவ்விடத்தில் பக்தி விவசரென்பது , ஆசார்ய ப்ரேமாதிஸயத்தாலே ஸிதில கரணராய்
ஆந்ரு ஶம்ஸத்தாலே பரார்த்தமாகவாவது , ஒன்றையும் அடவு படவநுஷ்டிக்க க்ஷமரல்லாதவரை ) ,
குரு ஸரீரிண: — பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து என்கிறபடியே , ஆசார்யரூபியாய் இருக்கிற,
மம — என்னுடைய ,
அபிமாநாத் — அபிமாநத்தாலே ,
முக்தி: — மோக்ஷ மானது ,
( பவிஷ்யதி ந ஶம்ஶய: ) நிஶ் ஶம்ஶயமாக உண்டாகக் கடவது
( இந்த பதங்கள் , மேல் சொல்லப்போகிற
மத்க்ருதோ யோபிமாநஸ் ஸ்யாத் , என்கிற ஶ்லோகத்திலிருந்து
ஆகர்ஷிக்கப்படுகிறது . )

1 மத்பக்தாஜ்ஞாந பூர்ணாயே பவிஷ்யந்தி கலௌ யுகே |
த்ரிதண்டிந அபிமாநாந் மே தே ஸர்வே குருரூபிண: |
முக்தி பாஜோ பவிஷ்யந்தி ஸத்யே நாஹம் ப்ரவீமிதே ||

1 ( மத் பக்தா இதி ) கலௌ யுகே — கலியும் கெடும் என்னும்படியான பெருமை பெற்று வந்த கலியுகத்திலேயே — யாதொருத்தர் ,
ஜ்ஞாந பூர்ணாஸ்ஸந்த — அர்த்த பஞ்சக ஜ்ஞாந பூர்த்தியுடையவர்களாய்க் கொண்டு,
( ஜ்ஞாநத்துக்கு பூர்த்தியாவது , “ எல்லாம் வகுத்த விடமே என்றிருக்கக் கடவன் “ என்கிற
ஸ்ரீ ஸூக்திபடியே யெல்லாமாசார்ய விஷயமாக வறுதியிடுகை ) ,
மத் பக்தா பவிஷ்யந்தி — ஆசார்யரூபியான வென்னிடத்தில் நிரதிஶய பக்தி யுடையவர்களாகிறார்களோ ,
தே ஸர்வே — அப்படிப்பட்டவர்களெல்லாரும்,
த்ரிதண்டிந: — த்ரிதண்டதாரியாயும் ,
குரு ரூபிண: — ஆசார்ய ரூபியாயுமிருக்கிற ,
மே — என்னுடைய ,
அபிமாநாத் — அபிமாநத்தாலே ,
முக்திபாஜோ பவிஷ்யந்தி — பேற்று பெற்றவர்களாகப் போகிறார்கள்
( இவ்வர்த்தத்தை ) ,
அஹம் —நான் ,
தே — உனக்கு ,
ஸத்யேந — ஸபத பூர்வமாக ,
ப்ரவீமி — சொல்லுகிறேன் .

2 மத் க்ருதோ யோபிமாநஸ்யாதாசார்யத்வே ஸுபாநநே |

யேவ முக்திதோ தேவி பவிஷ்யதி ந ஶம்ஶய: ||

2 ( மத்க்ருதோ யோபிமாநஸ்ஸ்யாத் இதி ) ஹே ஸுபாநநே — ஸர்வருக்கும் மங்களாவஹமான திருமுக மண்டலத்தை யுடையவர்களாயும் ,
தேவி — நம்முடைய விபூத்யைஶ்வர்யத்துக்கு ஸஹ தர்மசாரிணியாயுமிருக்கும் பிராட்டி ,
ஆசார்யத்வே — ஆசார்ய கார்யமான வுபதேச விஷயத்திலே
மத்க்ருத இதி — ( பின்புள்ளார் உபதேசத்தாலும் , அது க்ருபா மாத்ர ப்ரஸந்ந ரான ) நம்மால்
செய்யப்பட்டதென்று நாம் நினைத்திருக்கையாகிற ,
யோபிமாநஸ் ஸ்யாத் — யாதோரபிமாந விசேஷமுண்டோ ,
ஸயேவ — அதுவே தான் ,
முக்தி த: — ( உபதேசம் செய்யுமவர்களுடைய ஜ்ஞாநாநுஷ் டான பூர்த்தியைப் பாராமல் ) மோக் ஷப்ரதமாக ,
பவிஷ்யதி — ஆகப் போகிறது ,
ந ஶம்ஶய: — இது விஷயத்தில் ஸந்தேஹமில்லை .

3 குரு ரூபஸ்ய மே நாம்நா ஸமயோ விஜயீ பவேத் ||

3 ( குரு ரூபஸ்யேதி ) ஸமய: — ( அப்படிப்பட்ட வாசார்ய ரூபாவதாரத்தில் நம்மால் உத்தரிக்கப்பட்ட ) விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தமானது ,
குரு ரூபஸ்ய — ஆசார்ய ரூபியாயிருக்கிற ,
மே — என்னுடைய ,
நாம்நா — திரு நாமத்தாலே ,
விஜயீ பவேத் — “ இடங்கொள் ஸமயத்தையெல்லா மெடுத்துக் களைவன போலே நடந்தும் , பரந்தும் , குனித்தும் நாடகம் செய்கின்றனவே “ என்கிறபடியே
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்தை களிலும் ஸர்வோத்க்ருஷ்டமாக , அபிவ்ருத்தி யடையக் கடவது ;
இவ் விடத்தில் என்னுடைய திரு நாமத்தாலே யென்னது ,
இராமாநுஜ , என்கிற திருநாமத்தாலே யென்றாய் , இத்தால் , இராமாநுஜ ஸித்தாந்தம் -( எம்பெருமானார் தரிசநம் ) என்று ஜய ஶீலமாகக் கடவதென்கை .

————-

1 மத்காலாதநு பத்மாக்ஷஈ ஸமயோ லோபமேஷ்யதி ||

1 ( மத்காலாதந் விதி ) ஹே பத்மாஷீ — தாமரை போன்ற திருக் கண் அழகை யுடைய பிராட்டி ,
ஸமய: — அப்படி வ்ருத்தி யடைந்து வருகிற பரம வைதிக ஸித்தாந்தமானது ,
மத்காலாதநு — நம்முடையதான வந்த வாசார்யாவதாரத்துக்குப் பின்பு ,
( இவ்விடத்தில் “ பூத்வா பூயோ வர வர முநிர்போகிநாம் ஸார்வபௌம: “ என்கிற வபியுக்தோக்திப்படியே ,
யதிவர புநரவதாரமான பெரிய ஜீயர் காலத்துக்கும் பின்பு , என்று கொள்ள வேணும்)லோபமேஷ்யதி — ஸங்கோசத்தை யடையப் போகிறது .

2 குரு ரூபஸ்ய மே ஶக்திம் தத்ரதத்ர நிதாயவை |

ஸமயம் ஸங்க்ரஹீஷ்யாமி நாதிலுப்தோ யதா பவேத் ||

2 ( குருரூபஸ்ய மே ஶக்தி மிதி ) — ( இவ்வர்த்தத்தை நாம் முன்னமே யறிந்து ) குருரூபஸ்ய — ஆசார்ய ரூபியாயிருக்கிற ,
மே — நம்முடையே ,
ஶக்திம் — திவ்ய ஶக்தியை ,
தத்ர தத்ர — ( நமக்கு வுத்தேஶ்யமாயிருக்கிற ) அந்த அந்த ஸ்தலங்களிலே ,
நிதாய — அர்ச்சா ரூபமாக ப்ரதிஷ்டிப்பித்து ,
ஸமயம் — லோபிக்கப்போகிற ஸித்தாந்தத்தை ,
யதா — எந்த ப்ரகாரமாக ,
நாதிலுப்தோ பவேத் — மிகவும் லோபத்தை யடையாமலிருக்குமோ ,
ததா — அந்த ப்ரகாரமாக ,
ஸங்க்ரஹீஷ்யாமி — சேரப் பிடிக்கப் போகிறோம் .

3 மமாசார்யாவதாரேது ஏஷாம் பக்திர்பவிஷ்யதி | தேஷாமேவ பவேந் முக்திர் நாந்யேஷாம் ஸுலபா பவேத் ||

3 ( மமாசார்யாவதாரேத் இதி ) யேஷாம்து — யவர்களுக்கானால் ,
மம — என்னுடையதான ,
ஆசார்யாவதாரே — ஆசார்ய ரூபமான வவதார விசேஷத்திலே ,
பக்தி: — ஸ்நேஹ பூர்வகமாய் , இடைவிடாத நினைவு ,
பவிஷ்யதி — உண்டாகக் கடவதோ ,
தேஷாமேவ — அவர்களுக்குத்தானே ,
முக்தி: — பகவத்ப்ராப்தியாவது ,
ஸுலபா — சுகமாக லபிக்குமது ,
பவேத் — ஆகக் கடவது ,
அந்யேஷாம் — அந்த வாசார்ய பக்தி யில்லாதவர்களுக்கு ,
ஸுலபா ந பவேத் — சுலபமாக மாட்டாது .

1 அஸ்மிந்நர்தேஹி விஸ்வாஸஸ்ர்வேஷாம் ந ஜநிஷ்யதி |

மத்கடாக்ஷஓ பவேத்யஸ்மிந் மைய்யேவ ப்ரவணோஹிய: | தஸ்ய தஸ்ய ஹ்ருதிஸ்தோயம் பவிஷ்யதி ந ஶம்ஸய: ||

1 ( அஸ்மிந்நர்த இதி ) அஸ்மிந் அர்த்தே — “ ஆசார்யாபிமாநமே வுத்தாரகம் “ என்னுமிவ்வர்த்தத்திலே ,
விஶ்வாஸ: — இது தான் பரமார்த்தம் என்கிற நினைவு ,
ஸர்வேஷாம் — எல்லாருக்கும் ,
ந ஜநிஷ்யதி: — உண்டாகப்போகிறதில்லை என்பது நிச்சயம் ;
( ஆனால் பின்னை யுஜ்ஜீவிக்கும் விறகேதென்னில் )
யஸமிந் — எந்த சேதநந் விஷயத்திலே ,
மத் கடாக்ஷ: — ஆசார்ய ரூபியாயிருக்கிற வென்னுடைய கடாக்ஷமானது ,
பவேத் — உண்டாகக் கடவதோ ,
ய: — எந்த சேதநன் தான் ,
மய்யேவ — என்னிடத்தலேயே,
ப்ரவண: — நெஞ்சிரக்கமுடையனாயிருப்பனோ ,
தஸ்ய தஸ்ய — அந்த வந்த வதிகாரிக்கு ,
ஹ்ருதிஸ்த: — நெஞ்சில் நிலை நின்றதாக ,
அயம் -– இந்த பாவ விசேஷமானது
( அதாவது “ ஆசார்யாபிமாநமே வுத்தாரகம் “ என்கிற நினைவென்கை ) ,
பவிஷ்யதி -– உண்டாகப்போகிறது,
ந ஶம்ஶய: — இவ்வர்த்தத்தில் ஶம்ஶயமில்லை ,
ஹி – இவ்வர்த்தம் ஸுப்ரசித்தம் .

என்றிப்படி ப்ரபல ப்ரமாணங்களை எம்பெருமான் தானே யருளிச்செய்து வைக்கையாலே ,
முக்த கண்டமாக முக்ய ப்ரமாணங்களும் இவ்வர்த் தத்தில் குறைவரக் காண்கின்றன .
இவை யெல்லாவற்றையும் முன் கொண்டு , இந்த ப்ரமாண ப்ரதிபாத்யமான வர்த்தங்களைத் தெளிய வறிந்து ,
நம்மாசார்யக ளனைவரும் தந்நிஷ்டராய் ,
தங்களைப் பற்றினார்க்கும் , இத்தையே யோக்யதாநுகுணமாக உபதேசித்துப் போந்தார்கள் .
இப்படி ஆசார்யாபிமாநமே உத்தாரகமென்றும் ,
த்ரிதண்டதாரியா யாசார்ய ரூபேண தானே அவதரிப்பனென்றும் , ஈஶ்வரனருளிச்செய்கையாலே
மற்றுமவனருளிச்செய்த வர்த்தங்க ளெல்லாம் எம்பெருமானாரிடத்திலே யாயிற்று நிலை நின்றிருப்பது ;
ஆகையால் ஆசார்யத்வ பூர்த்தி யுள்ளதும் அபவரிடத்திலேயேயிறே ,
அவர் அபிமானமே நமக்கெல்லா முத்தாரகமென்று. ஶம்ஶய விபர்யமற நம் பூர்வாசார்யர்களும் அறுதியிட்டார்களிறே ;
ஆகையாலே நம் பூர்வாசார்யார்களநுஷ்டாநமே நமக்கெல்லாம் ப்ரமாணமென்பது
“ தர்மஜ்ஞ ஸமய “ – ஸமயமென்னும் ப்ரபல ப்ரமாணப்ரதிபந்நமென் றும் , சொல்லிற்றாயிற்று .

—————-

இனி சரம பர்வமான எம் பெருமானார் அபிமாநத்திலே ஓதுங்கி
“ தேவுமற்றறியேன் “ என்னுமதிகாரிக்கு , பக்தி ப்ரபத்திகளிரண்டும் பயாவஹமாயிருக்கும் . எங்ஙனேயென்னில் ;
பக்தி தான் ஸ்வ யத்ந ஸாத்யமாகையாலும் , பகவத் பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு ஸ்வ ப்ர வ்ருத்தி விரோதியாகையாலும் ,
ஸ்வ ஸ்வாதந்த்ரிய ரூபமான வஹங்காரத்தை விளைவித்து பாரதந்த்ரிய ஸ்வரூபமான வாத்ம சத்தையை யழிக்குமென்று பயம் பிறக்குமிறே ;
பாரதந்த்ரிய ஸ்வரூபத்துக்கு அனு குணமாய் பகவத் விஷய விஸ்வாச ரூபமான ப்ரபத்யுபாயமும்
1 “ பவமோக்ஷணயோஸ்த்வயைவ ஜந்து: க்ரியதே ரங்கநிதே “ என்கிறபடியே
பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாய் நிரங்குச ஸ்வதந்த்ரனான வெம்பெருமான் தன்னுடைய ஸ்வாதந்த்ரியத்தாலே
மீளவும் ஸம்ஸரிப்பிக்கில் செய்வதென்னென்று பயப்படப்பண்ணும் .
இப்படி ஸ்வ ப்ரவ்ருத்தி ஸாத்யமான பக்த் யுபாயமும் , ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஸாத்யமான ப்ரபத்யுபாயமும் , பய ஜநகமாகையாலே
சரம பர்வநிஷ்டனுக்கு நெஞ்சில் தங்காது ;

1 ( பவமோக்ஷணயோஸ்த்வயைவ ஜந்து: க்ரியதே ரங்கநிதே ) ஹே ரங்க நிதே -– “ நிதயேர்த்திநாம் “ என்னுமாப் போலே
அர்த்திகளுக்கு நிதியாய்க் கொண்டு கோயிலிலே கண்வளர்ந்திருக்குமவரே ,
ஜந்து: — சேதநநாநவன்,
த்வயைவ –- உன்னாலே தான் ,
பவ மோக்ஷணயோ: — பந்த மோக்ஷங்க ளிரண்டுக்கும் விஷயமாக ,
க்ரியதே -– செய்யப்படுகிறான் ;
“ இல்லவல் லருள் நல்வினைகள் ” என்னும் மாசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்திப் படியே புண்ய பாப ரூப கர்மங்களடியாக ஸம்ஸரிப்பித்தும் ;
இப்படிப்பட்ட விந்த சேதநர்களுடைய துக்கதர்ஶந மாத்ரத்தாலே நிர் ஹேதுகமாக கடாஷித்து நிரதிசய ஆனந்த ரூப
ஸ்வ ப்ராப்தி பர்யந்தமாக விவர்களை யுஜ்ஜீவிப்பித்தும் போருகிற வீஶ்வரனுடைய செயல்களைக் கண்டால் ,
இத்தனையுமவனே செய்தமை , இவனுக்கு விசதமாக ப்ரகாசிக்குமென்னதாயிற்று ;
இதற்கு மேல் சொல்ல வேண்டுமவையாய் வருகிற வைஷம்ய நைர்க்ருண்ய தோஷ பரிஹாரங்கள் ஸ்ரீபாஷ்யாதிகளிலே கண்டு கொள்வது .

ஆகையாலிறே , இவ் வதிகாரிக்கு பக்தி ப்ரபத்திக ளுபாயமன்னென்றும் ,
எம்பெருமானாருடைய வபிமாநமே யுத்தாரகமென்றும் ,
நம் பூர்வாசார்யர்க ளறுதியிட்டதும் . (ப்ரயாண காலே ) இத்யாதி , —
அதாவது பக்தி ப்ரபத்திகள் உபாயமல்லாமையாலே , நிர் ஹேதுகமாக கடாஷித்து பவ்யனாக்கி கொண்டு போறும்
பரமகாருணிகராய் ஸதாசார்யரான வெம்பெருமானார் , இவன் நம்முடையவனென்று அபிமாநித்திருக்கும் அந்தவபிமாநமே ,
இவனுக்கு ஸம்சாரோத்தாரக மென்றபடி
ஆசார்யாபிமாநமே உத்தாரகமென்று , ஸ்தோத்ரத்தின் முடிவிலே பரமாசார்யரான ஆளவந்தாரும் அருளிச் செய்தார் இறே .

இனி இந்த வாசார்யாபிமாநந்தான் ஸ்வேதரோபாயங்களுக்கு அங்கமோ ! ஸ்வதந்த்ரோபாயமோ ! வென்னில் ,
உபயமுமாயிருக் கும் ; எங்ஙனேயென்னில் ,
மஹா விஸ்வாச ரூபையான ப்ரபத்தியானது , கர்ம ஜ்ஞாந பக்திகளாகிற உபாயாந்தரங்களுக்கு விச்சேதா பாதக
பாபஹரத்வேந தத்வர்த்தகமான வங்கமுமாய் ,
1 “ ஸாத்ய பக்திஸ்து ஸாஹம்த்ரி ப்ராரப்தஸ்யாபி பூயஸீ “ என்கிறபடியே ,
1 ப்ரபந்ந பாரிஜாதே –- பலோதய பத்ததௌ — ஶ்லோ 178
( ஸாத்ய பக்திஸ்து ஸாஹம்த்ரீ ப்ராரப்தஸ்யாபி பூயஸீ ) – இதற்கு பூர்வார்தம் ,

“ உபாய பக்தி: ப்ராரப்த வ்யதிரிக்தாக நாஸிநி “ என்று . இவ்விடத்தில்
பக்தியென்கிறது பற்றின விஷயந்தன்னில் அவ்யபிசாரிணியான சேவையை .
இதுதான் , உபாய விஷயத்திலாம்போது தந்நிஷ்டா விஶேஷத்தைச் சொல்லுகிறது ;
உபாயபக்தி: — ஸாங்கமான பக்த்யுபாயத்தில் அவ்யபி சாரிணியான நிஷ்டையானது ,
ப்ராரப்த வ்யதிரிக்தாஹ நாஸினீ – ப்ராரப்த கர்ம வ்யதிரிக்தங்களான பூர்வோத்தராகங்களை நஸிப்பித்துவிடும்;
பூயஸீ -– பாமரு மூவுலகத்தில் படியான பரமார்த்தரிடத்தி லதிசயித்திருக்கிற ,
ஸா -– ஸாத்ய பக்திஸ்து –
“ தஸ்மாந்யாஸமேஷாந் “ என்று
வேதாந்தங் களிலே ப்ரஸித்தமாயும் உபேயாந்தர பூதமாயுமிருக்கிற ப்ரபத்யுபாயமோ வென்னில் ,
ப்ராரப்தஸ்யாபி – கர்ம ஜ்ஞாந ஸஹ க்ருதையான பக்த்யுபாயத் தாலும் கூட அவிநாஸ்யமாயிருந்துள்ள ப்ராரப்த கர்மத்துக்கும் ,
ஹம்த்ரி – நாசகமாயிருக்கும் ;
து –- என்கிற அவ்யயம் பக்த்யுபாயத்தில் காட்டில் , இப்ரத்யுபாயத்துக்குண்டான வைலக்ஷண்ய விசேஷத்தைக் காட்டுகிறது ;

இவ்விடத்தில் ஆர்த்த ப்ரபந்நர் விவஷிதராகையாலே ,அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட ப்ராப்திக்கு ஸ்வதந்த்ரோபாயமு மாயிருக்குமாப் போலே ;
இதுவும் ஸ்வேதரோபாயங்களுக்கு உபதேஷ்ட்ருத்வ ப்ரவர்த்தகத் வாதிகளாலே , அங்கமுமாய் ,

“ 1 தேவமிவாசார்ய துபாஸீத “ ,

1 ஸ்ருதி ( தேவமிவேதி ) ஆசார்யம் – ஆசார்யனை , தேவமிவ -– ( எனக்கு மேல் பூஜ்யரில்லாமையாலே
என்மாத்ரமாகிலுமவர்களை யாராதித்து நல் வழி போங்கோளென்று சொல்லுகிற
“ சச பூஜ்யோ யதாஹ்யஹம் “ என்கிற உபப்ரும்மணத்தின்படியே
மனிசர்க்குத்தேவர் போலத் தேவர்க்கும் தேவனான வெம்பெருமானைப்போலே ,
உபாஸீத – உபாஸநம் ஸ்யாத்ரு வாநுஸ்ம்ருதி: “ என்கிற அத்யர்த்த ப்ரேமத்தோடே யநுவர்த்திக்கக் கடவன் .

2 “ ஆசார்யான் புருஷோ வேதா “ ,

2 ஸ்ருதி ( ஆசார்யவாநிதி ) –-
ஆசார்யவான் – ஜ்ஞாநாநுஷ்டான பரிபூர்ண னான வாசார்யனை யுடையனாயிருக்கிற ,
புருஷ: — முமுஷு வான புருஷன் ,
வேத -– அர்த்த பஞ்சகங்களை யலகலகாக வறியக் கடவன் .

3 “ உபாயோபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத் “

3 ப்ரபந்ந பாரிஜாதே –
குரூபாஸநபத்ததௌ – ஶ்லோ 18 ( உபாயோபேய பாவேநேதி ) – தமேவ -– அப்படிப்பட்ட ஆசார்யனையே ,
உபாயோபேய பாவேந — உபாயோபேயங்களிரண்டும் அவனே என்கிற நினைவோடே ,
சரணம் –- ரக்ஷகனாக ,
வ்ரஜேத் –- புத்தி பண்ணக் கடவன் .

என்று இத்யாதி களில் சொல்லுகிறபடியே
இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹாரத்தில் தனக்கு மேலற்ற ஸ்வதந்த்ரோபாயமுமாயிருக்கும் .
பக்தி ஸ்வதந்த்ரோபாயமுமாயிருக்க ப்ரபத்தி ஸ்வதந்த்ரோபாயமானாப் போலே
இந்த வாசார்யாபி மாநமாகிற சரம ப்ரபத்தியும் , ஸ்வதந்த்ரோபாயமாய் வந்தது ;
பக்திக்கந்தர்யாமி விஷயம் ,
ப்ரபத்திக்கச் சாந்வதாரம் விஷயம் ,
சரம ப்ரபத்திக்கு பகவதவதாரமான வெம்பெரு மானார் விஷயம் .
ப்ராக்ருத விக்ரஹ யுக்தரா யெழுந்தருளியிருக்கை யாலே ,அவர்களுக்குண்டான அவ்வார்த்தி விஶேஷத்தையே
ப்ராரப்த கர்ம:பல மாகக் கொண்டு ஈஶ்வரன் அந்த கர்மங்களை வஸிப்பிக்குமென்னபடி ;

“ ததப்ராப்தி மஹாது:கவிலீநாஶேஷ பாதகா “ என்று
சிந்தயந்திக்கு பகவத் ப்ராப்தி , நினைத்தபோதே கிடைக்க வில்லை யென்னும் ஆற்றாமையாகிற
மஹாது:காநுபவத்தாலே ஸமஸ்த பாபங்களும் வுருமாய்ந்து போயிற்றே என்று சொல்லிற்றே

ஸஜாதீய புத்தி பண்ணலாம்படி யிருந்ததேயாகிலும் ,
எம்பெருமானா ரிடத்திலே எம்பெருமான் ஸ்வரூபேண நின்று விஶேஷாதிஷ்டாநம் பண்ணுகையாலும் ,
இவ்வர்த்தத்தை ஸ்வயமேவ அருளிச் செய்கையாலும் ,
பகவதவதாரம் எம்பெருமானார் என்கிற வம்ஸத்தில் ஶம்ஶயமில்லை .

——————–

1 ததுக்தம் பாஞ்சராத்ரே பகவதா ஸேநேஸம் ப்ரதி ;

1 ( ததுக்தமிதி ) – த
த் -– கீழ்ச்சொன்ன பகவதவதார மெம்பெருமானாரென் கிற விவ்வர்த்தம் ,
பாஞ்சராத்ரே –- ஸ்ரீபாஞ்சராத்ர ஶாஸ்த்ரத்தில் ,
பகவதா -– ஈஶ்வரனாலே ,
ஸேநேஸம் ப்ரதி -– ஸேனை முதலியாரைக் குறித்து ,
உக்தம் – அருளிச்செய்யப்பட்டது .

2 மம ஸ்வரூபம் ஸர்வஸ்மாத் பரஸ்ய ஜகதீசிது: || ஷட்விதம் பரிபூர்ணந்த த்ஸேநேச பரிபட்யதே ||

2 எங்ஙனேயென்னில்
( மமஸ்வரூபமிதி ) –ஹே ஸேநேஸ –- வாரீர் ஸேனை முதலியாரே ,
ஸர்வஸ்மாத் பரஸ்ய -– ஸர்வ ஸ்வாமியாகவும் ,
ஜகதீசிது: — ஸர்வ நியந்தாவாகவுமிருக்கிற ,
மம -– என்னுடைய ,

தத் –-ஸகல வேதாந்தங்களிலும் ப்ரஸித்தமான ,
ஸ்வரூபம் -– அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹ விஶிஷ்ட ஸ்திதியானது ,
பரிபூர்ணம் –- “ இதம் பூர்ணமத:பூர்ணம் “ என்கிறபடியே ஜ்ஞாநபலைஶ்வர்யாதி கல்யாணகுண புஷ்கலமாயும் ,
ஷட்விதம் –- ஆறு ப்ரகாரமுடைத்தானதாயும் ,
பரிபட்யதே — ஶாஸ்த்ரங்களிலெங்கும் ப்ரதிபாதிக்கப்படுகிறது .

3 பரத்வ , வ்யூஹ , விபவமந் தர்யாமித்வ மே வ ச | அர்ச்சா சார்யாவதாரௌ த்வௌ ஷாட்வித் யம் மே ப்ரகீர்த்திதம் ||

3 ( பரத்வேதி ) -– அந்த ஷட்விதமான ஸ்வரூபமெப்படிப்பட்டதென்ன ,
பரத்வ வ்யூஹ விபவம் –- பரத்வமென்றும் , வ்யூஹமென்றும் , விபவ மென்றும் ,
அந்தர்யாமித்வமேவச – அந்தர்யாமித்வமென்றும் ;
( இவ்விடத் தில் , ஏவ—ச—என்கிற அவ்யவங்களிரண்டும் , வாக்யாலங்காரமாகக் கொள்வது )
அர்ச்சாசார்யாவதாரௌத்வௌ | — “ ஸர்வம் பூர்ணம் ச ஹோம் “ என்கிறபடியே
ஸமஸ்த கல்யாண குண புஷ்கலமாகையாலே ப்ரபத்திக்கு நியத விஷயமான வர்ச்சாவதாரம் ,
இப்படிப்பட்ட ஸித்தோபாயத்துக்கு பஹிர்பூதமன்றியே
தத்சரமாவதியான –- ஆசார்யரூபாவதாரம் , என்கிற விவையிரண்டுமென்றும் ,
மே -– என்னுடையதான ,
ஷாட்வித்யம் –- ஆறு ப்ரகாரமானது ,
ப்ரகீர்த்திதம் — ஶாஸ்த்ரங்களில் ப்ரதிபாதிக்கப்பட்டது .

—————-

1 பூர்வஸ்மாதபீ பூர்வஸ்மாத்ஸுலபோ ஹ்யுத்தரோத்தர: | தேஷ்வாசார்யாவதரணே காருண்யம் பரிபூரிதம் ||

1 ( பூர்வஸ்மாதபீ இதி ) –
பூர்வஸ்மாதபீ பூர்வஸ்மாத் -– பரத்வம் முதல் முன்முன்னானவைகள் காட்டில் ,
உத்தரோத்தர: — பின்பின்னான வவதாரம்,
ஸுலப: — ஒன்றைக் காட்டிலுமொன்றாஶ்ரிதற்கு ஸுலபமாயிருக்கும் ,
தேஷு – அவைகளில் வைத்துக் கொண்டு ,
ஆசார்யாவதரணே -– ஸர்வ ஸுலபமான ஆசார்யாவதாரத்திலே ,
காருண்யம் – ஆஶ்ரித ஸம் ரக்ஷணமே, ஸ்வபாவமாயிருக்கைக்கு ஈடான க்ருபையானது ,
பரிபூரிதம் –- வடிவிலே தொடைக் கொள்ளலாம்படி புஷ்கலமாயிருக்கும்

2 ஜ்ஞாநாதி குணதஸ் தத்ர விஶேஷா திஷ்டிதிர் பவேத் |
ஆசநந்த்வாத் தயாளுத்வாத் ஜ்ஞாநித்வாத் குரு பாவத: |
சரமஸ்ய வதாரஸ்ய குருரூபஸ்ய மே ஸதா ||

2 ( ஜ்ஞாநாதிகுணத இதி )
குருரூபஸ்ய –- ஆசார்ய ரூபத்தை யுடைத்தா யிருக்கிற ,
சரமஸ்யாவதாரஸ்ய –- கடைசி அவதாரமானது ,
ஆசந்த்வாத் –- “ நடமினோ தமர்களுள்ளீர் “ என்கிறபடியே சென்று ஸேவிக்க வேண்டியதான வர்ச்சாவதாரம் போலன்றிக்கே
“ பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து “ என்று ஆஶ்ரிதரிருக்குமிடம் தேடி வந்து கிட்டியிருப்பதாலும் ,
தயா ளுத்வாத் -– கர்மாநுகுணமாக விவனை ஸம்ஸ்கரிக்கவும் விடும் ஸ்வதந்த்ர மான தயை போலன்றிக்கே
ஸர்வ ப்ரகாரத்தாலு மிவனை யுஜ்ஜீவிப்பித்தே விடும் நிரதிஶய தயையை யுடைத்தாயிருக்கையாலும் ,
ஜ்ஞாநித்வாத் – “ ஜ்ஞாநீத்வாத்மயிவ மே மதம் “ என்கிறபடியே
நமக்கு தாரகமானதாயிருக் கையாலும் ,
குருபாவத: — அஜ்ஞாந நிவர்த்தகனென்கிறதே ஸ்வரூபமா யிருக்கையாலும் ,
தத்ர – அந்த அவதாரத்தில் ,
ஜ்ஞாநாதிகுணத: — ஜ்ஞாந பலைஶ்வர்யாதி குணங்களையுடைத்தான முந்தின வவதார பஞ்சகத்திற் காட்டில் ,
மே – என்னுடைய ,
விஶேஷாதிஷ்டிதி: — விஶேஷாதிஷ்டான மானது ,
ஸதா –- எப்போதும் ,
பவேத் –- உண்டாயிருக்கக் கடவது .

3 ப்ராப்யத்வ ப்ராபகத்வே த்வேஸ்வநிஷ்டே ந குணௌ மதௌ | தஸ்மாந்மத்பாதயுகளம் ஶரண்யம் மோக்ஷகாமிநாம் ||

3 ( ப்ராப்யத்வ ப்ராபகத்வே இதி ) –
(அந்தவவதாரத்தில்) ப்ராப்யத்வ ப்ராப கத்வே த்வே –- உபாயத்வம் – உபேயத்வம் ஆகிற விவையிரண்டும் ,
ஸ்வ நிஷ்டே -– நமக்கு ஸ்வரூபமாகவேயிருக்கும் ;
குணௌ – நமக்கவை குணங்களாக ,
நமதௌ – எண்ணப் பட்டதன்று ,
தஸ்மாத் -– ஆன படியாலே,

என்று பகவான் தானே யருளிச் செய்தாரிறே -இத்தாலும் , எம்பெரு மானார் திருவடிகளே ஸம்ஸாரோத்தரணோபாயம் .
இனி ஸ்வதந்த்ர னாயிருப்பானொரு மஹா ப்ரபுவைக் கண்டு கார்யம் கொள்ளுமவன்
அவன் கையைப் பிடித்து வேண்டிக்கொள்ளுமளவில் அவன் இனியனாய் இவன் கார்யம் செய்கைக்கும்
ஸ்வதந்த்ரனாய் சீறி யுதறி யுபேஷிக்கைக்கும் மஉடலாயிருக்கும் ;
அந்த ப்ரபு தன்னையே காலைப் பிடித்துக் கொள்ளுமளவில் ,அவன் தயா பரவசனாய் , உதறமாட்டா மல் , கார்யம் செய்து விடுமோபாதி ,
சரணஸ்தாநீயரான வெம்பெருமானாரை பற்றினால் , அவன் பரம தயாளுவாய் இவன் கார்யம் செய்யுமிடத்தில் ஸம்ஸயமில்லையிறே .

———————

1 “ லோகே ச பாதபதநம் பாணிஸங்க்ரஹணாதபி | தயா ஹேதுதயா த்ருஷ்டுமித்யுக்தம் சரணாவிதி “ என்றும் ;

1 ( லோகே ச பாதபதநமிதி ) லோகே ச -– இருள் தரு மா ஞாலமாகையாலே சரணாகத ஸம்ரக்ஷணம் பரம தர்மமென்றறுதி யிடமாட்டாத இந்த விபூதி யிலும் கூட ,
பாத பதநம் -– காலைப் பிடித்துக்கொள்ளுமது ,
பாணி ஸங்க்ர ஹணாதபி -– கையைப் பிடித்துக்கொள்ளுமதிலும்காட்டில் ,
தயா ஹேது தயா -– க்ருபை யுண்டாகுகைக்கு காரணமாக ,
த்ருஷ்டமிதி -– காணப்பட்ட தென்று ,
சரணாவிதி –- ( மந்த்ர ரத்நத்தில் ) “ சரணௌ “ என்று ( திருவடி களைப் பற்றும்படி ) ,
உக்தம் –- சொல்லப்பட்டது .

2 “ அநதிக்ரமணீயம்ஹி சரண க்ரஹணம் “ என்றும் , சொல்லுகிற படியே , சரணக்ரஹண மமோகோபாயமிறே |

2 ( அநதிக்ரமணீயமிதி )
சரணக்ரஹணம் – அஜ்ஞன் முதல் ஸர்வஜ்ஞன் வரையிலுள்ள யெல்லார்க்கும் காலைப் பிடித்துக் கொள்கையென்றால் ,
அநதிக்ரமணீயம்ஹி – அதிக்ரமிக்கக்கூடாத தாய் இருக்குமிறே ;

பட்டர் திருவணையாடி மீண்டெழுந்தருளுகிறபோது பாதிரி என்கிற கிராமத்திலே ஒரு வேடவனகத்திலே ஓர் இரவு தங்கின வளவிலே பிறந்த ( முசலின் விஷயமான ) வார்த்தையை இவ்விடத்திலநுஸந்திப்பது ; இத்தால் திருவடிகளைப் பற்றுமது அமோகோபாயமென்னதாயித்து .

நம்பெருமாள் , பெரிய திருவோலக்கமாக வெழுந்தருளியிருக்க , திருவடி தொழ வந்தவர்கள் , எம்பெருமானாரை நோக்கி தண்டனிட, தத்காலவர்த்தியான ராஜா , எம்பெருமானாரை தண்டனிட்டு , எல்லாரும் பெருமாளை விட்டு உம்மையே தண்டனிடா நின்னார்கள்

இதுக்கு இப்பொருளருளிச்செய்ய வேணுமென்ன ,
உம்முடைய பக்கலிலே சிலர் கார்யம் கொள்ள வந்தால் அவர்களில் , ஒருவன் உடுவரைக் கொண்டு வந்தான் ,
ஒருவன் உம்முடைய பாதுகையைப் பிடித்து நின்றான் , இதிலே யாருக்கு நீர் முந்துற கார்யம் செய்வீர் ! என்ன ;
காலைப் பிடித்தவனிடத்திலே ப்ரீதி விளையுமென்ன ,
அப்ப டியே நாம் நம்பெருமாளுக்கு திருவடிகளாயிருப்போம்
, அதனால் நம்மைப் பத்தினார்க்கு கார்யாம்ஶத்திலொரு குறையுமின்றியிலே யமோகமாகப் பலிக்குமென்றருளிச் செய்தார் .
உத்தாரகமான வெம் பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தம் தேவதாந்தர , மந்த்ராந்தர தோஷ ஸ்பர்ஶத்தாலே கலங்கி
குலையாமல் ஸத்தையுடன் கிடைக் கப்பெறில் , ஸ்வரூபாலங்காரமான தத்வஜ்ஞாநமும் , அநந்யபக்தி யும் , அந்யவைராக்யமும் இல்லாவிடிலும் ,
மேலந்த ஸம்பந்தத் தாலே யுண்டாக்கிக் கொள்ளலாம் ;
ம்ருதஸஞ்சீவினியான வெம் பெருமானாரோட்டை ஸம்பந்தம் நிஷித்தாநுஷ்டாநாந்வயலேஸத் தாலே யவன் கைவிடும்படி குலைந்தால் ,
அநர்தமே விளைந்து , அத்தால் ஜ்ஞாநாதிகள் சிலதுண்டானாப்போலே தோற்றிற்றாகிலும் , ப்ரயோஜநமில்லையாம் .
ஸதாசார்யரான எம்பெருமானாரோடு ஸம்பந்தமற்ற ஜ்ஞாநாதிகளுமிவனுக்கு , அவத்யகரமாய் தலைக்கட் டும் ;

அவத்யகரமாகையாவது , பகவந்நிக்ரஹத்தை விளைத்து யாவ தாத்மபாவி நரகத்திலே தள்ளிவிடுமென்றபடி , எம்பெருமானாரோ டுண்டான ஸம்பந்தம் ஸ்வரூபவிகாஸஹேது , ததபாவம் ஸ்வரூப விநாஶஹேது , என்று வங்கீபுரத்து நம்பி வார்த்தை .

1 “ மையாசார்யாவதாரேது யஸ்ய பக்திர் ந வித்யதே , தஸ்யாத்ம நாசஸ்ஸேநேஸ பவிஷ்யதி ந ஶம்ஸய: “ என்று எம்பெருமான் தானேயருளிச்செய்தானிறே .

1 விஶ்வக்ஸேந ஸம்ஹிதாயாம் — ( மய்யாசார்யாவதாரேத்விதி )
ஹே ஸேநேஸ -– வாரீர் ஸேனை முதலியாரே ,
ஆசார்யாவதாரே –- ஆசார்ய ரூபியாயவதரித்திருக்கிற ,
மயி -– என்னிடத்தில் ,
யஸ்யது –- எவனுக்கானால் ,
பக்தி: — அத்யந்த ஸ்நேஹத்தோடு ,
மோக்ஷகாமிநாம் முமுஷுக்களுக்கு ,
மத்பாதயுகளம் — அப்படி யாசார்ய ரூபியாயிருக்கிற நம் திருவடிகளிரண்டுமே ,
சரண்யம் — ரக்ஷகமாகக் கடவது .

1 “ ஸ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ர சரணத்வந்த்வாஶ்ரயாஶ்ரீபதிர் மாமாத்ருத்ய மஹாபல ப்ரசவிதா ஜாதோஹி ரங்கேஸ்வர: |
தத் த்ருஷ்ட்வா மயி ரங்கநாதரமணீ ஸ்ரீரங்கநாயக்யஹோ ஸ்ரீராமாநுஜ பாதபாகயமிதி ப்ராசீகச ஸ்வாந்தயாம் “
என்று இறே நம்பிள்ளை யருளிச் செய்யும்படி ; அதாவது
எம்பெருமானாருடைய திருவடிகளில் ஸம்பந்தமுடையவனன்றோ வென்று பெரிய பெருமாள் , என்னை யாதரித்து
“ அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்தமை “ யாகிற மஹா: பலத்தைத் தருவாராக ஒருப்பட்டார் ;
அத்தைப் பெருமாளுக்கு பத்நியா யினிய விஷயமாயிருக்கிற ஸ்ரீரங்கநாச்சியார் கண்டு ,
எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமுண்டான பின்பு தத் ஶத்ருஶமாகக் கொடுக்கலாவ திதுவன்று , வேறு தகுதியா யிருப்பதொரு பலம் கொடுக்க வேணும் என்று , நினைத்துக் காணாமையாலே ,
தம்முடைய நிர்ஹேதுகமான க்ருபையை , என் பக்கலிலேயொரு மடையாக வெளியிட்டாள் ;
இதென்ன வாச்சர்ய மென்று கண்டருளினாரென்றபடி ,
இத்தால் எம்பெருமானாரோடு ஸம்பந்தமுண்டாகவே , பிராட்டியும் எம் பெருமானு மொருவர்க் கொருவர் பரிந்து மேல் விழுவார்களென்று மர்த்தம் சொல்லப்பட்டது,
நிர்ஹேதுகமாக விஷயீகரிக்கும் பரம காருணிகரான வெம்பெருமானார் இவன் நம்முடையவன் , என்றபிமாநிக் குமபிமாநமே
ஸம்ஸாரோத் தாரகமென்று கூடிய தாஸ்யருசியானது ,
ந வித்யதே -– இல்லாமல் போகிறதோ ,
தஸ்ய –- அந்த சேதநநுக்கு ,
ஆத்மநாஶ: — ( ஶேஷத்வமில்லாத போது ஸ்வரூப மில்லை “ யாகையாலே ) ஸ்வரூபநாஶமானது ,
பவிஷ்யதி -– உண்டாகக் கடவது ;
ந ஶம்ஶய: — ( இவ்வர்த்தத்தில் ப்ரமாணங்கள் சுருக்கமறக் காண் கையாலே ) ஸந்தேஹமில்லை .
1 ( ஸ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ரேதி ) -– இதுதான் ப்ரமாணிகாக்ரேசரரான நம்பிள்ளை யருளிச்செய்த ஶ்லோகமா யிருக்கும் ;
ஶ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ர சரணத்வந்த்வாஶ்ரயாத் –- ஸ்ரீமத் –- ஸ்ரீவைஷ்ணவஸம்பத்தை யுடையராய் ,
அன்றிக்கே பகவதநுபவகைங்கர்யரூபமாகிற நிலைநின்ற ஸம்பத்தையுடையராய் ,
அஜ்ஞநுமன் றிக்கே நமக்கபேஷிதமான ப்ராப்யத்தை தருகைக்கீடான ஜ்ஞாநாதி ஸம்பத்தையுடையரா யென்றுமருளிச் செய்வர் ;

லக்ஷ்மண தேஶிகேந்த்ர – ஆசார்ய குல ஶிகாமணியான வெம்பெருமானாருடைய
( இவ்விடத்தில் “ லக்ஷ்மண ” என்கிற பதம் அவதாரத்தினுடைய ஊத்தக் காலைக் காட்டுகிறது ) ,
சரணத்வந்த் வாஶ்ரயாத் – இரண்டு திருவடி களை யாஶ்ரயித்த பலத்தாலே
( மந்த்ர ரத்ந்த்தில் “ சரணௌ “ என்கிற பதத்துக்குச் சொன்ன வர்த்தங்களெல்லா மிவ்விடத்துக்கு சேரும் ),
ஸ்ரீபதி: — ஸ்ரீய:பதியான ,
ரங்கேஶ்வர: — பெரியபெருமாளானவர் ,
மாம் — ( ஸ்வப்ந முகேன தம்முடைய திருவடிகளிரண்டுமே உபாயோபேயங்களென்று
எம்பெருமானார் தாமே காட்டிக் கொடுக்கும்படியான பாக்யமுடைய ) அடியேனை ,
ஆத்ருத்ய – விஶேஷ கடாக்ஷம் செய்தருளி ,
மஹா:பல ப்ரசவிதா – நித்ய கைங்கர்யமாகிற பரம புருஷார்த்தத்தைத் தருவாராக
( ப்ரதம பருவநிஷ்டருக்கு கொடுப்பது ஃபலம் , இவர்க்கு கொடுப்பது மஹாபலம் , அதாவது , அடியார்க்காள்படுத்துகை ) ,
ஜாதோஹி – ஒருப் பட்டாறிறே ,
தத் – அப்படிப்பட்ட பெரியபெருமாளுடைய திருவுள்ளக் கருத்தை ,
த்ருஷ்ட்வா – கடாஷித்தருளி ,
ரங்கநாத ரமணீ –( ஶம்ஶ்லேஷ தஸையிலீஶ்வரனையும் , விஶ்லேஷதஸையில் சேதநநையும் திருத்தி
சேதநரக்ஷணமே யாத்ரையா யிருக்கையாலே ) பெரியபெருமாளுக்கு ஆனந்தாவஹையாயிருக்கிற ஸ்ரீரங்கநாயகீ –-
பெரியகோயில் ஐஶ்வர்யத்துக்கெல்லாம் கடவுளான ஸ்ரீரங்கநாயகியாரானவர் ,
அயம் –- இந்த நம்பிள்ளை ,
ஸ்ரீராமாநுஜ பாத பாக் இதி –- பெரியபெருமாள் தாமே விரும்பி உபய விபூத்யைஶ்வர்யத்தையும் கொடுக்கும் படியான
ஜ்ஞாநாதி குணஸம்பத்தையுடைய வெம்பெருமானார் திருவடிகளை யாஶ்ரயித்தவ னென்று ,
மயி –- அடியேனிடத்தில் ,
ஸ்வாம் – தனக்கஸாதாரணமா யிருக்கிற ,
தயாம் – “ பாபாநாம் வா ஸுபாநாம் வா “ என்கிறபடியே , அஜ்ஞ , விஶேஷஜ்ஞ விபாகமறவெல்லாரும் வாழும்படியான நிர்ஹேதுக க்ருபையை ,
ப்ராசீகசத் – பரிபூர்ணமாக வெளியிட்டாள் ;
அஹோ – “ என்னைப் புவியிலொரு பொருளாக்கி “ இத்யாதியில்படியே ,
எம்பெருமானார் செய்தருளின விவ்வுபகாரம் ஆச்சர்ய கரமாயிருக்கிறதென்கிறார் .

சாரார்த சதுஷ்டய விவரணத்தில் அம்மங்கி யம்மாளுக்கு , எங்களாழ் வான் தாமுமருளிச் செய்தாறிறே .

ஸோமாஸியாண்டானும் ,

1 பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வப்ரவ்ருத்தி ஸாத்யாயா பக்தே: ஸ்வாதந்த்ர்யரூபாஹங்கார

1 ஸோமாஸியாண்டானருளிச் செய்த சரமோபாய விவரணத்திலே. (பகவத் ப்ரவருத்தி விரோதி இத்யாதி ) –
பகவத் ப்ரவ்ருத்தி விரோதி -–ஸ்வாமியாய் ஜநகத்வாத் பகவந்தமுபேத்ய – தத் சரணார விந்தயுகள
சரணாகதேரபி நிரங்குஶைஸ்வர்ய பகவத் ஸ்வாதந்த்ர்ய ஸ்மரணத்வாரா பீதிஹேது
ஸ்வதந்த்ரனானவன் ஸ்வயமாய் பரதந்த்ரனாயிருக்கிறவிவனைப் பெற நினைக்கையாகிற
பகவதி ப்ரவ்ருத்திக்கு ப்ரதிபந்தகமாயிருந்துள்ள , ஸ்வப்ரவ்ருத்தி
ஸாத்யாயா: — ஸ்வ யத்ந ரூப ப்ரவ்ருத்தி விஶேஷத்தாலே ஸாதிக்கப்படுமதான,
பக்தே: — கர்ம ஜ்ஞாந ஸஹக்ருதையான பக்தி யோகத்திற்கு ,
ஸ்வாதந்த்ர்ய ரூபாஹங்கார ஜநகத்வாத் — ஸ்வாதந்த்ர ரூபாஹங் கார ஜநகத்வமுண்டாயிருகையாலும் ,
( அதாவது , ஸ்ரீபாஷ்யத்திலறுதி யிட்டபடியே விவேக விமோதிகளாகிற நியமங்களையுடையனாய் ,
வர்ணா ஶ்ரம விஹிதக ர்மங்களைத் தானநுஷ்டித்த பின்பு “ த்ருவாநுஸ்ம்ருதி “ யென்கிற பக்தியோகத்தை
நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கை யாலே , இதில் ஸ்வ ஸ்வாதந்த்ர்ய ரூபமான வஹங்காரம் பிறக்குமென்ன படி )

( இவ்விடத்தில் ப்ராஸங்கிகமாக சில அர்த்தவிஶேஷங்கள் சொல்லப்படுகி றது ; அதாவது ,
“ ஸ்வஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவித்து “ என்கிற படியே ,
பக்தி யோகமானது நழுவும் போது ,
“ ஏவம் நியம யுக்தஸ் யாஶ்ரம விஹித கர்மாநுஷ்டாநேநைவ வித்யா நிஷ்பத்திரித் யுக்தம் பவதி “ என்று
அந்த பக்தி யோகத்துக்கு ஸாதகங்களாக வறுதியிடப்பட்ட விவேக விமோ காதிகளும் ,
தத் ஸாத்யையான பக்தி யோகத்தோடு , ஸ்வ ஸ்வாதந்த்ர்ய ரூபாஹங்கார ஜநகமென்று ,
இந்த சரமாதிகாரிக்கு த்யாஜ்யமாய்விடுமோ வென்னில் , ஆகாது ;
“ இவன் தானிவைதன்னை நேராக விட்டிலன் “ என்கிற க்ரமத்திலே ,
இவையெல்லாமிவனுக்கு வகுத்தவிடமான வெம் பெருமானாருடைய முகமலர்த்தியாகிற உபேயத்துக்கு ஶேஷமாய்க் கொண்டு ,
அத்தாலே யவர் விஷயத்தில் “ த்யாயேத்ஜபேந்நமேத் பக்த்யா பஜேதப்யர்ச்சயேந்முதா “ என்று ஶாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட
( நிரவதிக ப்ரேம ரூப த்ருவாநுஸ்ம்ருதியென்கிற ) பக்தி யோகத்துக்கு நாடோறு மதிஶயாவஹங்களாகையாலே ,
மிகவுமுத்தேஶ்யங்களு முபாதேயதமங்களு மாயிருக்கும் –

இவ்வர்த்தங்களை ” ஜ்ஞாநாநுஷ்டாநங்களிரண்டுமல்லாதார்க்கு பாயாங்கமாயிருக்கும் , இவனுக்குபேயாங்கமாயிருக்கும் “ என்று துடங்கி
ஸ்ரீ வசந பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்திலே பரக்க வருளிச் செய்தாறிறே –
இவ்வளவும் ப்ராஸங்கிகமாக சொல்லவேண்டித்து )

இனி ப்ரக்ருதார்த்தங் கள் சொல்லப்படுகிறது

பகவந்தமுபேத்ய தத் சரணாரவிந்த யுகள சரணா கதேரபி –
த்வா ச , ததுபயவிஷய பகவதவதாரபூத பரமகாருணிக ராமாநுஜ யோகி
சரணாரவிந்த சரணாகதிரேவ ஸர்வோஜ்ஜீவனாய பவதி இதி ஸமர்த்திதம் “ என்று
ஸ்வ ப்ரணீதமான சரமோபாய விவரணத்திலே யருளிச் செய்தார் இறே |

பகவந்தம் -– ஈஶ்வரனை ,
உபேத்ய –- கிட்டி ( இவ்விடத்தில் ப்ரபத்தி விவஷிதமாகையாலே யதுக்கு நியத விஷயமான வர்ச்சாவதாரத்திலே நோக்காய் ,
அதுதான் “பூர்ணம் “ என்கையாலே , ஆஶ்ரயண ஸௌகர்யாபாதகங்களான குணங்களோடு
ஆஶ்ரித கார்யாபாதகங்களான குணங்களோடு வாசியற
ஸகல கல்யாண குண பூர்ணமென்கிற விவ்வர்த் தத்தை இந்த பகவத் ஶப்தம் காட்டுகிறது ) ,
தத் சரணாரவிந்த யுகள சரணாகதேரபி —
தத்சரணாரவிந்தயுகள — அந்த வெம்பெருமானுடைய திருவடித் தாமரைகளிரண்டிலும் செய்யப்படுமதான ;
சரணாகதேரபி — உபாயாந்தர பரித்யாகமாகிற வங்கத்தோடே கூடி ,
ஸ்வதந்த்ரமாயிருந்துள்ள ப்ரபத்திக்கும் ; நிரங்குஶைஸ்வர்ய பகவத் ஸ்வாதந்த்ர்ய ஸ்மரணத்வாரா —
நிரங்கு ஶைஸ்வர்ய -– பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் தனக்கு மேலற்ற நிர்வாஹக னான ;
பகவத் – எம்பெருமானுடையதான ,
ஸ்வாதந்த்ர்ய -– கர்ம நிபந்தனமாக ஸம்ஸரிப்பிக்கவும் ,
காருண்ய நிபந்தனமாக முக்தனாக்கவும் வல்ல ஸ்வாதந்த்ர்யத்தினுடைய ;
ஸ்மரண த்வாரா -– அநுஸந்திக்கிற வழியாலே ;
பீதி ஹேது த்வாச்ச – பலத்தில் ஸம்ஶயத்தால் வரும் பயத்துக்கு காரண மாகையாலும் ;
ததுபயவிஷய பகவதவதாரபூத பரமகாருணிக ராமாநுஜ யோகி சரணாரவிந்த சரணாகதிரேவ ;
ததுபயவிஷய -– அந்த பக்தி ப்ரபத்தி களிரண்டுக்கும் விஷயபூதனான ;
பகவத் — ஈஶ்வரனுடைய ;
அவதாரபூத -–அவதார விஶேஷமான ,
பரமகாருணிக – ( பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கையன்றிக்கே , மோக்ஷ ஏக ஹேதுவாயிருக்கையாலே )
ஈஶ்வரனிற்காட்டிலும் மேலான காருணிகராயிருக்கிற ,
ராமாநுஜயோகி – எம்பெருமானாருடைய ,
இவ்விடத்தில் யோகி என்கிற பதம் ஸுபாஶ்ரய மான வெம்பெருமானிடத்தில் தம் திருவுள்ளத்தை
ஸ்தாவர ப்ரதிஷ்டை யாக வைத்திருக்கும்படியைச் சொல்லுகிறது ) ,
சரணாரவிந்த – திருவடித் தாமரைகளிலே ( செய்யப்படுமதான ) ,
சரணாகதிரேவ – ப்ரபத்தி தானே ,ஸர்வோஜ்ஜீவனாய – அஜ்ஞ , விசேஷஜ்ஞ விபாகமறவெல்லாருடையவும் உஜ்ஜீவனத்தைப் பொருட்டு ,
பவதி இதி – ஆகிறதென்று ,
ஸமர்த்திதம் – நிர்வஹிக்கப்பட்டதென்கை |

வாதிகேசரி அழகிய மணவாளஜீயரும் 1 “ பார தந்த்ர்யம் ஸ்வரூபம் ஹி ஸர்வஜீவாத்மநாமபி | தத்வ்ருத்தா ஹி பக்திஸ்து ஜீவ யத்நாபி லாஷிணீ ||

1 வாதிகேஸரி அழகியமணவாளச் சீயரருளிச் செய்த சரம குரு சரிதையில், ( பாரதந்த்ர்யமிதி )
ஸர்வ ஜீவாத்மநாமபி –- பத்த , முக்த , நித்யரென்கிற த்ரிவிதாத்ம வர்க்கத்துக்கும் ,
பாரதந்த்ர்யம் – ஈஶ்வரனிட்ட வழக்காயிருக்கை ,
ஸ்வரூபம் ஹி – ஜ்ஞாநாநந்தங்களிற் காட்டிலும் அந்தரங்க நிரூபகமாகவே யிருக்கும் ,
ஜீவயத்நாபிலாஷிணி –- ( “ ஒன்றி நின்று நற்றவம் செய்து” என்கிற பாட்டிலும் ,“
புன்புல வழியடைத்து “ என்கிற பாட்டிலும் திருமழிசைப்பிரானருளிச் செய்த ) சேதந ப்ரயத்நங்களை யபேஷித்திருக்கிற
பக்திஸ்து — ( ஸர்வ க்ரமத்தாலே பரபக்த்யாதி ரூபேண ஸாதிக்கப்படுவதான)பக்தி யோகமோ வென்னில் ;
தத் விருத்தாஹி — அந்த பாரதந்த்ர்யமாகிற ஸ்வரூபத்துக்கு விருத்தமாகவே யிருக்கும் |

த்யாகோ நிவ்ருத்தி ஸாத்யோயம் நிர்மலாநந்த ஸாயிந: | ஸ்வாதந்த்ர்ய ஸ்ம்ருதிமாத்ரேண பீதிஹேதுர்பவிஷ்யதி || 1
தஸ்மாத் பக்திம் ப்ரபத்திம் ச விஹாய விமலாஶயா: | அஸ்மத் ஆர்யா மஹாத்மாந: சரணாஶ்ரயா:|

தத்க்ருதேந அபிமாநேந நிஸ்தரந்தி பவார்ணவம் ||

( த்யாக இதி ) – நிவ்ருத்தி ஸாத்ய: —
“ சிற்ற வேண்டா “ என்கிறபடியே பகவத் ப்ரவ்ருத்திக்கு விரோதியான ஸ்வ ப்ரவ்ருத்தியினுடைய நிவ்ருத்தியினாலே ஸாதிக்கப்படுமதான ,
அயம் த்யாக: — இந்த ப்ரபத்தியானது ; (
இவ்விடத்தில் புரோவர்த்தியாநத்தைக் காட்டுமதான “ அயம் “ என்கிற பதம் ப்ரயோகித்திருக்கையாலே ,
ப்ரபத்யுபாயமானது , ஸகல வேத வேதாந்தாதிகளிலும் புகழ் பெற்றதென்றும் ,
தர்மஜ்ஞ ருசி பரிக்ருஹீத மென்றும் ,
சரண்ய ஹ்ருதயாநுஸாரியென்றும் ,
பாரதந்த்ர்ய ஸ்வரூபத் துக்குசிதமானதென்றும் , இத்யாதிகளைக் காட்டுகிறது ),
நிர்மலானந்த ஸாயிந: ;
நிர்மல – அகிலஹேய ப்ரத்யநீகனாயும் ,
அநந்த ஸாயிந: — திரு வனந்தாழ்வானாகிற படுக்கையிலே சாய்ந்தருளுகிறவனாயுமிருக்கிற வெம் பெருமானுடைய ;
ஸ்வாதந்த்ர்ய ஸ்ருதி மாத்ரேண –
ஸ்வாதந்த்ர்ய – நிரங்குச ஸ்வாதந்த்ர்யத்தினுடைய ,
ஸ்ம்ருதி மாத்ரேண –ஸ்மரண மாத்திரத்தினாலே ,
பீதி ஹேது: — ஃபலஸித்தியிலே ஶம்ஶயமாகிற பயத்துக்கு காரண மாக ,
பவிஷ்யதி – ஆகக்கடவது |

( இந்த ஶ்லோகத்தில் “ நிர்மல “ என்கிற பதம் “
அநஸ்நந்யோ அபிசாகசீதி“ என்கிற ஸ்ருதியில் சொல்லுகிற
“ தத் கத தோஷைர ஸம்ஸ்புருஷ்டத் வத்தை “
( அதாவது சேதந தோஷங்கள் ஈஶ்வரனுக்கு தட்டாமையை ) சொல்லுகிறது ,
ஸ்ருதியில் “ அபிசாக சீதி “ என்றிருப்பதால் ,
அகில ஹேயப்ரத்யநீகனாய் என்று அர்த்தமெழுத வேண்டிற்று ;
இப்படி விளங்கா நின்றுள்ள வீஶ்வரன் தான் சேதனனோடே ஏக தத்வமென்னலாம்படி பொருந்தி யிருக்கச் செய்தேயும் ,
“ தயோரந்ய:பிப்பலம் ஸ்வாத்வத்தி “ என்று அந்த ஸ்ருதியில் சொல்லுகிறபடியே
சேதநந் கர்மஃபலத்தை யநுபவிக்குமிடத் தில் –- தன் கர்மஃபலத்தை தான் புஜிக்கிறானென்று , உபேஷித்திருக்கை யாலே ,
“ நிர்மல” என்கிற குணம் ஸ்வாதந்த்ர்ய பயத்துக்கு ஹேதுவாகிறது|

இனி “ அனந்தஸாயிந: “ என்கிற பதத்தினர்த்தத்தை ஆராயுமிடத்தில் –-
அது தான் , ஸ்ரீநாரத பகவான் போல்வாரையும் ,
கச்ச நாரதமாசிரம் | ஏகாக்ராச்சிந்தயேயுர்மாம் நைஷாம் விக்நோ பவேதிதி “ என்று
ப்ரேமம் இல்லாதவராக விலக்க வேண்டும்படி நித்ய நிரவத்ய நிரதிசய ப்ரேமமுடையராய் “
அஸ்தாநேபயஸங்கிகளா “ யிருக்கிறவர்களுக்குத் தன்னுடம்பை ஸர்வ ஸ்வதாநமாக கொடுத்துக் கொண்டிருக்கும்படியைச் சொல்லுகையாலே ,
அநாதி கர்ம பரவசராய்க்கொண்டு , பகவதி ப்ரேம கந்தமே கண்டறியாத
நம்மை “ ஷிபாமி “ என்று தள்ளி விடுகைக்கு ஹேதுவாயிருக்கிற ஸ்வா தந்த்ர்யத்தினுடைய பயம் ஸித்தம் ;
இதுக்கு மேலே , பரதந்த்ர ஶேஷியாய்,மோஷ ஏக ஹேதுவான ஆசார்யாவதாரத்துக்கு ஊற்றுவாயான திருவநந் தாழ்வானும் ,
பகவத் ப்ரேம பரவசராய் , அஸ்தாநே பயஶங்கைபண்ணி ,“
தஹ்யமாநா வநந்தஸ்ய விஷ ஜ்வாலா ப்ரவேஸ “ என்று ,
ஷீராப்தி நாதனைக் கிட்டத் தேடுகிற மதுகைடபரென்கிற அசுரரை , தன் விஷ ஜ்வாலைகளாலே
உறுமாய்ந்துபோம்படி பண்ணுகிறவவதாநத்தை காட்டுகையாலே
“ அநந்தஸாயிநா “ என்கிறது மிகவும் பய ஹேதுவாயிருக்கும் |
“ வத்யதா மேஷ தண்டேன தீவ்ரேண ஸஸிவைஸ்ஸஹ | ராவணஸ்ய ந்ருஸம் சஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண: “ என்றிறே ,
ப்ரேம பரவசருடைய பரி மாற்றமிருக்கும்படி |
( ஸ்ரீநாரத பகவான் ஸ்வேததீபத்துக்கு எழுந்தருளி அங் குள்ள திவ்ய புருஷர்களை ஸேவித்து தத்ஸமீபத்தில் நின்று ,
ஊர்த்வ பாஹுவாய் ஸமாஹித சித்தனாய் , ஸர்வேஶ்வரனை , ஸ்ரீமஹா புருஷ ஸ்தவமென்கிற
பரம குஹ்யமான ஸ்தோத்ரத்தாலே ஸ்துதிக்க , அப்போது ஸர்வேஶ்வரன் ,
இவருக்கு தன்னுடைய விஶ்வ ரூபத்தை அநேக வர்ண ஸம்ஸ்தாநத்தோடு விசித்ரதரமாகக் காட்டிக்கொடுத்து ,
ஏகதத்விதத்ரிதர்க ளுக்கும் கூடக் காணவரிதான இந்த திவ்ய ரூபத்தை , ஏகாந்தி ஸத்தமராகை யாலே நீர் காணப்பெற்றீர் .
இவ்விடத்திலிருக்கிற திவ்ய புருஷர்களுடைய பக்திபாரவஸ்யத்தைப் பார்த்தால் , உம்முடைய பக்தி
குளப்படியென்ன வேண்டும்படியா யிருக்குமாகையாலே , அவர்களுடைய த்ருவாநுஸ்ம்ரு திக்கு விக்நம் தட்டாதபடி நீர்
இவ் விடத்திலிருந்து கடுகப் புறப்பட்டுப்போ மென்று ஸர்வேஶ்வரனருளிச் செய்ததாக ,
ஸ்ரீமஹாபாரத சாந்தி பர்வாந்தர் கத மோக்ஷ தர்ம பர்வத்தில் 339-340 அத்யாயங்களில்
சொல்லப்பட்ட வர்த்தம், இவ்விடத்தில் அநுஸந்தேயமாகக் கடவது | )

1 ( தஸ்மாதிதி ) , தஸ்மாத் – அந்தக்காரணத்தாலே ;
விமலாஶயா: — பரிசுத்தமான அந்த:கரணத்தை யுடையராய்
மஹாத்மாந: — ஸர்வஜ்ஞரா யிருக்கிற ;
( இவ்விடத்தில் , விமலாஶயா: — மஹாத்மாந: என்கிற பதங் கள் ,
“ மநஸாதுவிஸுத்தேந “ என்கிறபடியே
“ அறியவேண்டு மர்த்தமெல் லாமறிகைக்கு “ அந்த:கரண ஸுத்தி தான் ப்ரதானகாரணமென்று மர்த்தத் தைக் காட்டுகிறது “ )
அஸ்மதார்யா: — நம் பூருவாசாரியர்கள் ;
பக்திம் – ஸ்வரூப விருத்தமான பக்தி யோகத்தையும் ,
ப்ரபத்திம் ச -– “ ப்ரபத்யுபாயத் திக்கிக் குற்றங்கள் ஒன்றுமில்லை “ என்கிறபடியே
நிர்தோஷமாயிருக்கச் செய்தேயும் , ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயமுள்ளதான ப்ரபத்தியையும் ,
விஹாய –- விட்டு ,
ஸதாசார்ய சரணாஶ்ரயாஸ்ஸந்த: — அந்த ஸித்தோபா யத்துக்கு வேறாவதன்றியே தத் சரமாவதியான
ஸதாசார்யனுடைய திருவ டிகளே யுபாயோபேயமென் றாஶ்ரயித்தவர்களாய்க் கொண்டு ,
தத் க்ருதேந – அந்த ஸதாசார்யனாலே பண்ணப்பட்ட ,
அபிமாநேந -– இவன் நம்முடைய வனென்கிற அபிமாநத்தாலே ,
பவார்ணவம் –- ஸம்ஸார ஸாகரத்தை ,
நிஸ்தரந்தி -– கடக்கப் பாய்கிறார்கள் |

1 லகூபாயேந லப்தவ்யே:பலே மஹதி தேஹிநாம் |
குரூபாய த்வயாத் கிம்வா கர்த்தவ்யம்ஸ்யாந் முமுஷுபி: || என்று
சரமகுரு சரிதையிலே யருளிச் செய்தாறிறே |

1 ( லகூ பாயேநேதி )
தேஹிநாம் -– விரோதியான ப்ரக்ருதியோடு கூடி அதிட்டவழக்காயிருக்கிற சேதநவர்க்கத்திற்கு ,
மஹதி:பலே “ :பலமத உப பத்தே: “ என்று , எம்பெருமானாலேயே ஸித்திக்க வேண்டும்படியான
பெருமையை யுடையதாய் ஸகல புருஷார்த்த விலக்ஷணமான கைங்கர்ய ரூப :பலமானது ,
லகூபாயேந –- ( க்ருப மாத்ர ப்ரபந்நரான ஸதாசார்யரு டைய வபிமாநமாகிற ) ஸுலபோபாயத்தாலே ;
லப்த வ்யேஸதி –- அடைய த்தக்கதாயிருக்க ,
முமுஷுபி: — ப்ரக்ருதியினுடைய தோஷங்களையறிந்து ப்ராப்ய ருசி தலை யெடுத்திருக்குமதிகாரிகளாலே ;
குரூபாயத்வயாத் -– ஸ்வரூப விரோத பயத்தாலும் , ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயத்தாலும் ,
துர்ல பங்களான பக்தி ப்ரபத்திகளால் ;
கர்த்தவ்யம் -– செய்யவேண்டுமது ;
கிம்வாஸ்யாத் -– என்னதானிருக்கும் |
ப்ரக்ருதி பரவசராகையாலே முமுஷுத்வமில்லாத சேதநர்களுக்கும் கூட , ஸதாசார்யாபிமாநத்தாலே பேறு லபிக்கத்தக்கதாயிருக்க ,
முமுஷுக்களாய் ஆசார்ய அபிமாநத்திலொதுங்கி யிருக்குமவர்களுக்குச் சொல்ல வேண்டா விறே ;
ஆகையாலே, இவர்களுக்கு பக்தி ப்ரபத்திகளால் கார்யமில்லை யென்றபடி |

ப்ராமாணிகாக்ரேசரரான பட்டரும் ,

2 பரம காருணிகச்ய பரமகுரோர் பகவத: ஸ்ரீமந் நாராயணஸ்ய புண்டரீக தளா மலாயதேக்ஷணமுக கமல விகாஸ

2 ஸ்ரீபராஶரபட்டார்ய ஸுக்தி |
( பரம காருணிகேத்யாதி )
பரமகாருணிகஸ்ய – ( “ ஈஶ்வரஶ்யச ஸௌஹார்த்தம் “ இத்யாதியில் படியே , ஆசார்ய ப்ராப்திக்கும் ப்ரதம ஹேது தானாகையாலே ) மேலான காருணிகனாய் ;
பரம குரோ: — “ லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் “ என்று குரு பரம்பராதியிலே தன்னை யநுஸந்திக்க வேண்டுகையாலே , மேலானவாசார்யனாய் ;
பகவத: — அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதானனாய் ;
ஸ்ரீமந் நாராயணஸ்ய –
ஸ்ரீமத் – புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரோடே நித்ய ஸம்யுக்தனாயிருக்கிற ,
நாராயணஸ்ய -– எம்பெருமானுடைய ;
புண்டரீக தளாமலாயதேக்ஷண முககமலவிகாஸ ஹேதுபூதம் ஹி -–
புண்டரீக தள – வெள்ளைத் தாமரை தளங்களைப் போன்றதாயும் ,
அமல — நிர்மலங்களாயும் ,
ஆயத – நீண்டதுகளாயு மிருக்கிற ,
ஈக்ஷண -– திருக்கண்களை யுடைத்தான ,
முக கமல — திருமுக மண்டலமாகிற செந்தாமரையினுடைய,
விகாஸ — மலர்கைக்கு ,
ஹேது பூதம் ஹி – காரணபூதமாகவேயன்றோ ?
பகவத் ராமாநுஜ சரணார விந்த சரணவரணம் —
பகவத் ராமாநுஜ “ ஸர்வ கல்யாண ஸம்பூர்ணம் , ஸர்வஜ்ஞாநோப ப்ரும்ஹிதம் ;
ஆசார்யமாஶ்ர யேத் “ என்கிற ஸர்வ கல்யாண குணங்களையும் ,
பரிபூர்ண ஜ்ஞாநத்தையும் உடையரான எம்பெருமானாருடைய ,
சரணாரவிந்த -– திருவடித் தாமரைகளிலே பண்ணும் ,
சரணவரணம் – சரணாகதி தானிருப்பது ; என்கை |
(இத்தால் எம்பெருமானார் திருவடிகளில் ஸமாஶ்ரயணமே ஸ்ரீமந்நாராயணனுடைய முக்கோல்லாஸ ஹேதுபூதமென்னதாயிற்று )
தஸ்மாத் -– அந்த ஹேதுவினாலே ,
ததேவ – அந்த எம்பெருமானாருடைய திருவடிகளிலே பண்ணும் ப்ரபத்தி தானே ,
அஸ்மாகம் – அஸ்மதாதிக ளுக்கு ,
உஜ்ஜீவனாய – உஜ்ஜீவிக்கைக்கு ,
அலமிதி -– போறுமென்று ,
அஸ்மத் தாதபாதா: — பூஜ்யரான நம் திருத்தகப்பனார் , மேநிறே – திருவுள்ளத்திலறுதியிட்டாரென்கை |

ஹேது பூதம் ஹி பகவத் ராமாநுஜ சரணாரவிந்த சரண வரணம் |
தஸ்மாத் ததேவாஸ்மாக முஜ்ஜீவனாயாலமித்யஸ்மத்தாத பாதாமேனிறே “ என்று
ஆழ்வானுடைய ஸித்தாந்தமாக குருப்ரபாவதீபி கையிலே யருளிச்செய்தார் |

1 க்ஷ்மணாசார்ய குருபாத ஸேவிநாம் ரக்ஷணாய …..கலு தத் க்ருபா பரம் | யத் க்ஷணேன நிஜ முக்யமாநி தாம் வ்யுத்ஷிணோதி ……..

1 ( லக்ஷ்மணார்யேதி ) –
இந்த ஶ்லோகம் தான் எழுபத்துநாலு ஸிம்ஹா ஸநஸ்தர்களிலே முதலியாண்டான் போல்வாரான ஆசார்யர் அருளிச் செய்ததாயிருக்கும் |
இதில் எம்பெருமானார் ஸ்வாஶ்ரிதர்க்கு “ வித்யா மதோ , தந மத ஸ்ததைவாபிஜநோ மத: “ என்கிற முக்குறும்பை
ஸவாஸ நமாக நிரஸித்தபடியைச் சொல்லி , எவ்வழியாலுமவரே ரக்ஷகரென்று சொல்லுகிறது |
தத் க்ருபா , பரம் என்கிற பதங்களால் அவருடைய க்ரு பையே அவரை ஆஶ்ரயித்தவர்களுக்கு ரக்ஷகமென்றும் ,
கலு , என்று இவ்வர்த்தத்தினுடைய ப்ரஸித்தியும் , சொல்லுகையாலே ,
ஆசார்ய ப்ராப்திக்கு பூர்வ பாவியான அத்வேஷாதிகள் மாத்ரமே பகவத் க்ருபையாலே உண்டாகிற தத்தனைப் போக்கி ,
ஆசார்ய ப்ராப்திக்குப் பின்பு “ செயல் நன்றாக திருத்துகை “ ஆசார்ய க்ருத்தமென்னதாயித்து ;
“ ஆசார்யன் சிச்ச னாருயிரைப் பேணுமவன் “ என்னக் கடவதிறே |
உடையவர் தாம் ப்ரமா ணங்களைக் கொண்டு ஸ்வாஶ்ரிதரைத் தாமே திருத்துகை யன்றிக்கே,
திருக்கோட்டியூர் நம்பியைக்கொண்டும் , முதலியாண்டானுக்கு ஸ்வரூப சிக்ஷஐ ப்ரஸாதிப்பித்தருளினார் ;
இவரைப் பின்சென்றவாழ்வானும் பிள்ளை பிள்ளையாழ்வானுக்கு ஸ்வரூப சிஷை ப்ரஸாதித்தருளினார் |

“ திருத்தித் திருமகள் கேள்வனுக்காக்கு “ மதிலும் காட்டில் ,
ததீயர்க்கும் அவர்கள் மிகவும் விரும்புகிற வாசார்யனுக்கும் இஷ்ட விநியோகார்ஹ னாம்படி செய்கை மிகவும் உத்தேஶ்யம் ;
ஸர்வேஶ்வரன் தானும் அடியார்க்காள்படுத்துமிறே |
இனி இவர்களைத் திருத்தி முக்குறும்பை ஸவாஸநமாக நிரஸித்தாலொழிய ,
அந்த உத்தேஸ்யம் தலைக் கட்டப் போகாது ; அதுவும் ஈஶ்வரனே செய்தா லோவென்னில் ?
அவன்தான் ஸ்வாதந்த்ர்யத்தாலே “ ந க்ஷமாமி “ என்று கொண்டு
“ அவமான க்ரியா தேஷாம் ஸம்ஹரத்யகிலம் ஜகத் “ என்று , சீறுகையாலே
இவர்களைத் திருத்த விசையமாட்டான் ;
இப்படிப்பட்ட வெம்பெருமான் திருவுள்ள மறிந்து இவர்களை யவன் கையில் காட்டிக் கொடுக்கில் என்படுமோ என்று வயிறெரிந்து
க்ருபா மாத்ர ப்ரஸந்நராய் இவர்களை வரிந்து திருத்துகையா லிறே
“ லக்ஷ்மணார்ய குருபாத ஸேவிநாம் ரக்ஷணாயகலு தத்க்ருபா பரம் “ என்றருளிச் செய்ததும் |
யத் – எந்த காரணத்தினாலே
( எம்பெருமானார் நிர்ஹேதுகமான தம்முடைய ஆஶ்ரித வாத்ஸல்யமே காரணமாக என்கை)
நிஜ முக்யமாநிதாம் –
நிஜ – தம்மைப் பற்றின ஆசார்யர்களிடத்தில் உண்டாகக் கடவதான ,
முக்யமாநி தாம் – முக்குறும்பை ,
ஃபலரீதி தத்வத: —
ஃபல — இவை இருப்பதாலும் , இவற்றை நிரஸிப்பதாலும் வரக் கடஃ:பலத் தினுடைய ,
ரீதி தத்வத: — ப்ரகார யாதாத்ம்யத்தாலே ,
( அதாவது ப்ரகா ரங்களை உள்ளபடிக் காட்டுகையாலே என்கை) |
க்ஷணேன – ஒரு நிமிஷத்திலே ஏக தேசமான அல்ப காலத்திலேயே ,
வ்யுத்ஷிணோதி –- ஸவாஸநமாக எடுத்துப் பொகடுகிறாரோ ,
தத் —அந்தக் காரணத்தினாலே ,
( யத்த தோர் நித்ய ஸம்பந்த: என்கிற ந்யாயத்தாலே இங்கு “தத்” சப்தம் வருகிறது )
லக்ஷ்மணார்ய குருபாத ஸேவிநாம் – லக்ஷ்மணார்ய குரு -– “ ஆசார்யோ வேதஸம்பந்ந:” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஸர்வ லக்ஷண ஸம்பந்நராய் ஆஶ்ரிதர்க்கு அஜ்ஞாந நிவர்த்தகராயக் கொண்டு ,
உத்தாரக ஆசார்ய ரான எம்பெருமானாருடைய ,
பாதஸேவிநாம் – ( “ இராமாநுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ “ என்கிறபடியே , பரம ப்ராப்யமான )
திருவடி களை உபாயமாகப் பற்றினவர்களுடைய ,
ரக்ஷணாய – ரக்ஷணத்தின் பொருட்டு ,
தத் க்ருபா பரம் கலு – அந்த வெம்பெருமானாருடைய க்ருபை தானே யன்றோ ? அமைந்திருக்கிறது |
இப்படி ஸ்வரூப சோதநமே பிடித்து :பலரீதி த்த்வத: “ என்று பூர்வர்கள் சொல்லும் முக்தகமிறே |

1 “ ஸ்வ வ்யாபாரேண ஸாத்யா பஜநகதிரியம் ஸ்வாநுரூபத்வஹா நாத்யாஜ்யா பூஜ்யைஹி ப்ரபந்நைச் சரண வரணிதா தேஶிகைர் நாப்யுபாத்தா |
கிம்த்வாசார்யாபிமாநாத் பரமபதமஹோ லப்யதே நாந்யதோ , ந தஸ்மாத் ராமாநுஜாங்க்ரி த்விதீயமநுபமம் ஸாதநம் பாவயாம: “ என்று
பக்தி ப்ரபத்திகளை த்யாஜ்ய கோடியிலேயாக்கி
தத் க்ருபையினாலேயாயிருக்க ,
பேற்றுக்கவர் திருவடிகளே ஸாதநமென்பது , கிம் புநர் ந்யாய ஸித்தமிறே யென்கை |

1 நாயனாராச்சாம்பிள்ளை யருளிச்செய்த ஸ்ரீஸூக்தி | ( ஸ்வ வ்யாபாரே ணேதி ) –
ஸ்வ வ்யாபாரேண -– ஸ்வப்ரயத்நத்தாலே
( இங்குச் சொல்ல வேண்டிய வர்த்த விஶேஷங்களெல்லாம் , இதற்கு முன்னமே சொல்லப் பட்டிருக்கிறது ) ;
ஸாத்யா – ஸாதிக்கப்படுவதான ,
இயம் பஜநகதி: — இந்த பக்த்யுபாயமானது
( இவ்விடத்தில் ஸமீப வர்த்தியாநத்தைக் காட்டுகிற இயம் என்கிற பதம் ஸ்ரீபாஷ்யத்திலறுதியிட்ட
இந்த பக்த்யுபாயத்தின் ப்ராதாந்யம் இவர் திருவுள்ளத்திலோடுகின்ற படியைக் காட்டுகிறது )
ஸ்வாநு ரூபத்வ ஹாநாத் —
ஸ்வ – பரதந்த்ரனான தன்னுடைய ஸ்வரூபத்துக்கு ,
அநுரூபத்வ -– அநுகுணமாயிருக்கும்படியை ,
ஹாநாத் -– விட்டிருக்கை யாலே ,
பூஜ்யை: — பூஜ்யராயிருக்கிற ,
ப்ரபந்நை: — ஜ்ஞாநாதிக்யத்தாலே , ப்ரபந்நரான நாத யாமுந யதிவராதிகளாலே ,
த்யாஜ்யா -– த்யஜிக்கத் தக்க தாய்விட்டது ; ( அப்படியே )
தேஶிகை: — நம்முடைய உஜ்ஜீவநத்துக்கு கட வரான அந்த ஆசார்யர்களாலே ,
சரணவரணிதாபி -– பகவச் சரணாரவிந்த சரணாகதனாயிருக்கும்படியும் ,
ஸ்வாநுரூபத்வ ஹாநாத் –
ஸ்வ -– ஆசார்ய பரதந்த்ரனாயிருக்கிற தன்னுடைய ஸ்வரூபத்துக்கு ,
அநுரூபத்வ -– அநு குணமாயிருக்கும் படியை ,
ஹாநாத் -– விட்டிருக்கையாலே ,
நோபாத்தா –- அங்கீகரிக்கப்படவில்லை |
அதவா -–
பயாபயங்களிரண்டும் மாறி மாறி நடக்கும் ப்ரஶக்தியில்லாததாக அங்கீகரிக்கப்படவில்லையென்னுமாம் |
கிந்து -– பின்னையோவென்னில் ,
ஆசார்யாபிமாநாத் -– “ ஆசிநோதிஹி ஶாஸ்த்ரார்த்தான் “ இத்யாதி ப்ரகாரங்களாலே
பரிபூர்ணனான ஸதாசார்ய னுடைய வபிமாநத்தாலே |
பரமபதம் – நலமந்தமில்லதோர் நாடானது ,
லப்யதே –- அடையப் படுகிறது ; ( என்றும் )
அந்யத: — பகவத் பாரதந்த்ர்யத்துக்கு விரோதியான பக்த்யுபாயமென்ன
ஆசார்ய பாரதந்த்ர்யத்துக்கு விரோதியான பகவத் சரணாரவிந்த சரணாகதியென்ன ,
இவைகளாலே , ந லப்யதே – அடையப் படுகிறதில்லை ;
ந சேஜ்யயா “ )
பக்த்யா த்வநந்யயா ஸக்ய: ( இத்யாதி பரஸ்ஸதங்களான ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே |
“ உபய பரிகர்மித ஸ்வாந் தஸ்ய “
ஏவம் நியமயுக் தஸ்ய ; இத்யாதி ஜ்ஞாநாநுஷ்டான பரிபூர்ணனான வதிகாரியினாலே அடையப்படுமதான பரமபதமானது ,
ஆசார்யாபிமான ரூப ஸுலபோபாயத்தாலே லபிக்கப்படுகிறதென்கிறது ) ஆஶ்சர்யமென்னபடி |
தஸ்மாத் –- இப்படி ஆசார்யாபிமாநமே உத்தாரக மாகையாலே ,
ந: — அஸ்மதாதிகளுக்கு
இராமாநுஜாங்க்ரித்விதயம் — இராமாநுஜ –- ( உபாயாத்மகமானவாசார்யத்வ முள்ள ) எம்பெருமானா ருடைய ,
அங்க்ரித்விதயம் -– திருவடிகளிரண்டுமே,
அநுபமம் – இதர நிரபேக்ஷமாகையாலே நிகரின்றிக்கே இருக்கிற ,
ஸாதநம் -– உபாயமாக ,
பாவயாம: — அத்யவஸிக்கக்கடவோம் | 1
எம்பெருமானாருடைய வபிமாநத்தாலே பேறு தப்பாதென்று , தத் சரணார விந்தங்களை
யுபாயமாக வறுதியிட்டார் இறே நாயனாராச்சாம் பிள்ளையும் |

இப்படி நம் பூர்வ ஆசார்யார்களனைவரும் ப்ரமாண புரஸ் ஸரமாக வெம்பெருமானாரிடத்திலே யுத்தாரகக்வத்தை யறுதி யிட்டு ,
அவர் அபிமாநத்திலே யொதுங்கி “ தேவுமற்றறியேன் “ என்று ததேகநிஷ்டராய் போந்தார்களிறே |
ஆகையால் எம்பெருமானாரோடுண்டான ஸம்பந்தத்துக் கிசையாதே
“ தொண்டுக்கே கோலம் பூண்டு” என்கிறபடியே குழச்சியிடுவதும் , கும்பிடுவதுமாய் கொண்டு
பரப்ரா மகராய்த் திரியும் துர்மாநிகளான கள்ளக் கழணிமிண்டர்க்கு ,
யாவ தாத்மபாவி யீஶ்வரன் பல:ப்ரதனன்றிக்கே, ஸம்ஸார ஸாகரத்திலே யழுந்தி போரும்படி யிட்டு வைப்பன் |
இவ்வர்த்தத்தை , இராமாநுசன் மன்னு மாமலர்த்தாள் பொருந்தா நிலையுடை புன்மையினோர்க் கென்றும்
நன்மை செய்யா பெருந்தேவரைப் பரவும் பெரியோர் “ என்று ஸ்பஷ்டமாக வருளிச் செய்தார் இறே |

1 யஸ் ஸ்ரீலக்ஷ்மண யோகி வர்ய சரண த்வந்த்வாஶ்ரயீ நா பவத் தஸ்யாத்யந்த தயாதி ஸத் குணநிதிர் நாராயண ஸ்ரீபதி: |  நஞ்ஜீயரருளிச் செய்த ஸ்ரீஸூக்தி

( யஸ் ஸ்ரீலக்ஷ்மணேதி ) –
ய: — எந்த சேதநந் ,
ஸ்ரீலக்ஷ்மணயோகிவர்ய , சரண த்வந்த்வாஶ்ரயீ — ஸ்ரீ – ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயை யுடையராய் , லக்ஷ்மண யோகி வர்ய – சேஷாவதாரமென்று ஸூசிக்குமதான
லக்ஷ்மண னென்கிற திருநாமத்தையுடைய யோகிஶ்ரேஷ்டருடைய
( இளைய பெரு மாள் “ ந தேவ லோகாக்ரமணம் “ ) என்னிருந்தாப்போலே இவரும்
“ காகுத்தன் கடியார் பொழிலரங்கத் தம்மானை “ யல்ல தறியாரிரே ) |
சரணத்வந்த்வாஶ்ரயீ -– ஒன்றைக்காட்டிலுமொன்று போக்யமாய் ஸேர்த்தி யழகையுடைய இரண்டு திருவடிகளுமே
யுபாயோபேயத்வேந தாதும் முக்தி மனாதரோபவ ப்ருஹத் வாராஸயே ஸந்ததம் நிஷேப்யைவ ஹ்ருதாபிநோ
கணயதி ப்ராக் சித்த கர்மேரித: “ என்று நஞ்ஜீயர் இவ் வர்த்தத்தை யருளிச் செய்தார் ;

அதாவது
எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்த ரஹிதநாய் நான் வைஷ்ணவனென்று யாதொருத்தன்
ப்ரஸித்தி தோற்றவிருக்கிறான் , அவனுக்கு நிரவதிக வாத்ஸல்ய யுக்தனான ஸர்வேஶ்வரன் ,
புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரருகிலிருந்தாலும் தயாதி குண பரிபூர்ணனாயிருந் தாலும் ,
மோக்ஷபலம் கொடாமல் அநாதரித்து , யாவதாத்மபாவி ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே தள்ளியிட்டு வைத்து ,
அவன் தான் தன்னுடைய அநாதி சித்தமான கர்மத்துக்கு பரவசனாகி , இப்படி அநர்த்தப்பட்டானென்று கொண்டு ,
என் செய்தான் , என் பட்டான், என்று , திருவுள்ளத்தாலும் எண்ணானென்னபடி —
இப்படி பரம காருணிகராய் , பரமோத்தாரகரான வெம்பெருமானர் அபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் வைஷ்ணவாதிகாரி , த
னக்கு ஸஹவாஸ யோக்யரும் ஸதாநுபவ யோக்யரும் , ஸத்கார யோக்யரும் , உண்டாம்படி தேடிக் கொண்டிருக்க வேணும் ;
இல்லை யாகில் ஸ்வ ஸ்வரூப ப்ரத்யுதிவந்து அத:பதித்து விடுவன் ,
இதில் , ஸஹவாஸ யோக்யராகிறார் , மரு வற்ற சரம பர்வ நிஷ்டராய் , எம்பெருமானாருடைய பற்றினவனாக ,
ந பவத் — ஆகவில்லையோ ,
தஸ்ய — அந்த சேதநநுக்கு ,
( இந்த பதத்துக்கு தாதும் முக்திமநாதர: என்கிற பதங்களோடு ஸம்பந்தம் )
நாராயண: — நிரவதிக வாத்ஸல்யாதி கல்யாண குணயுக்தனான ஸர்வேஶ்வரன் ,
ஸ்ரீபதி: — புருஷகாரபூதையான பிராட்டி சொல்வழி வருமவனாயிருந்தாலும்
அத்யந்த தயாதி ஸத்குணநிதி: — நிரவதிக க்ருபாதி குண பரிபூர்ணனாயிருந்தாலும் ,
முக்திம் -– மோக்ஷத்தை ,
தாதும் -– கொடுக்கைக்கு ,
அநாதரஸ் ஸந் – ஆதரமில்லாதவனாய்க் கொண்டு( ராமாநுஜ பதாஶ்ரயனாகாத வந்த சேதனனை ) ,
ப்ருஹத்வாராஸயே -– ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே ,
நிஷேப்யைவ — “ ஷிபாமி “ என்கிற படியே மறுவலிடாதபடி தள்ளி விட்டு ,
( அயம் ) ப்ராக் ஸித்தி கர்மேரித: — ( இதி ) ( இவன் தான் ) தன்னுடைய அநாதி சித்தமான
கர்மத்தாலே ப்ரேரிதனாய் ( இப்படி அதோ கதி யடைந்தானென்று கொண்டு ) ,
ஹ்ருதாபி – ஒருக்காலும் மனஸ்ஸாலும் கூட ,
நோ கணயதி – ( இவன் என்பட்டான் என் செய்தான் என்று ) எண்ணமாட்டானென்கை |

# ( குண:ப்ரதிபாதகமான ) திவ்யஸூக்திகளை ப்ரஸங்கிக்கில் ,
இவையும் சில ஸூக்திகளிருந்தபடியே , பாவியேன் , இவற்றை யநாதி காலமிழந்து கெட்டேன் , என்று நெஞ்சுருகி
யீடுபட்டிருக்கு மவர்கள் ; ஸதாநுபவ யோக்யராகிறார் ,
எம்பெருமானார் திருநாம த்தை யுச்சரியா விடில் நாக்கு வற்றுமென்று ததேகாநுஸந்தான தத் பரராய் ,
ததுக்தி ஶ்ரவணத்தில் ப்ரணவராய் , ஸர்வநேத்ராங்க விக்ரி யையை யுடையவராய் ,
தத் விஷயத்தில் ப்ரவணராயிருக்குமவர்கள்; ஸத்காரயோக்யராகிறார் ,
தேஹயாத்ரையில் உபேஷை பிறந்து , ஆத்ம யாத்ரையில் மிக்க வபிநிவேஶத்தை யுடையராய் ,
ததீயாபிமா நத்திலே யொதுங்கி எம்பெருமானாருடைய திருநாமாநுஸந்தாநத் தாலே மாதுகரங்கொண்டு , தேஹதாரணம் பண்ணி வர்த்திக்குமவர்கள் |
எம்பெருமானாருடைய கல்யாண குணங்களிலே மக்நாஶயரல் லாதாரோடு ஸஹவாஸம் , சரம பர்வாதிகாரிக்கு அவத்யமாயிருக்கும் ;
“ இராமாநுசன் தன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரே னெனக்கென்ன தாழ்வினியே “, என்றும் , அருளிச்செய்து வைத்தார் இறே |
இவ் வதிகாரிக்கு க்ஷணமுமிடைவிடாமல் காலஷேபத்துக்கு விஷயமாகிறது

# ( குணப்ரதிபாதகமாக ) என்கிற குண்டலித க்ரந்தமில்லாவிடிலும் , அழகி யது .
1 ( த்வத் ப்ரபந்த பரிஶீலநைரிதி ) – இதுதான் எம்பெருமானார் விஷயமான ப்ரார்தநா பஞ்சகத்தில் ஶ்லோகமாயிருக்கும் .
இதில் எம்பெருமானாராலே ப்ரதிபாதிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்யாதி வேதாந்த க்ரந்தங்களுடைய பரிசீலநத்தால் கால யாபநம் பெறவேண்டுமென்று ப்ரார்த்திக்கிறது . “
பராங்குச முனீந்த்ராதி “ என்கிற ஶ்லோகத்திலே அருளிச் செயல்களில் ருசியை ப்ரார்த்திக்கிறவர்
அதற்கு முன் ஸ்ரீபாஷ்யாதி பரிசீலநத்தை ப்ரார்த்திப்பானெ னென்னில் ? —
“ 1 த்வத் ப்ரபந்த பரிஶீலநை: காலஷேபோஸ்து-என்கிறபடியே
தத் ப்ரதிபாதிதமான வேதாந்த க்ரந்தங்களும் , பகவத்  குணாநுபவரூபாதி திவ்ய ஸூக்திகளும் ;
திவ்யஸூக்திகளாவன –- ஆழ்வார்களுடைய வருளிச்செயல்களும் , திருப்பாவையும்
பூர்வா சார்யர்களருளிச் செய்த ரஹஸ்யங்களும் .
இனி யிந்த சரமாகாதிகாரிக்கு நாலு நிலையுண்டு , அதாவது ,
ஸ்வரூப ஜ்ஞாநமென்றும் ,
ஸ்வரூப நிஷ்டையென்றும் ,
ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமென்றும் ,
ஸ்வரூப யாதாத்ம்ய நிஷ்டையென்றும் நாலுவகையாயிருக்கும் ;

இவற்றில் ஸ்வரூபஜ்ஞாநமாவது-
பகவத் பரதந்த்ரமாயிருக்கிற வசா தாரணாகாரத்தை யெவ்வழியாலும் ஸத்தை குலையாமல் நின்று ணர்ந்து ,
அதுதான் ததீயபர்யந்தமாகாவிடில் குலையுமாகையாலே
யெம்பெருமானாருக்கும் ததீயருக்கும் , அத்யந்த பரதந்த்ரமா யிருக்கு மென்றறுதி யிட்டு ,
ததேக நிஷ்டராயிருக்கு மிருப்பை யுள்ளபடியறிகை

ஸ்வரூபநிஷ்டையாவது , இஷ்ட விநியோகார்ஹ ஸ்வரூபமான-Two lines of handwritten Telugu manuscript–எழுதியது புரியவில்லை

“ மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் “ என்கிறவிடத்தில் ஸ்ரீபாஷ்யத்தை யருளிச் செயல்களுக்குக் காவலாகச் சொல்லுகையாலே .
இனி , இந்த ஶ்லோகத்தில் “ ஆமோக்ஷம் லக்ஷ்மணார்ய “ இத்யாதி பதங்களுமிருக்கையாலே , அவைகளையும் சேர்த்துக் கொண்டு அர்த்தமெழுதப்படுகிறது .
ஹே லக்ஷ்மணார்ய – அபியுக்தாக்ரேசரரான வெம்பெருமானாரே ,
ஸத்பி: — தேவரீரபிமாநத்திலே யொதுங்கியிருக்கும் ஸத்துக்களோடே ,
ஸஹவாஸம் — ஸஹவாஸத்தை ,
உபேயுஷாம் – அடைந்திருக்கிற ,
ந: — அடியோங்க ளுக்கு ,
த்வத் ப்ரபந்தபரிசீலனை –
த்வத் – தேவரீராலே ப்ரதிபாதிக்கப்பட்ட ,
ப்ரபந்த -– ஸ்ரீபாஷ்யாதி வேதாந்த க்ரந்தங்களினுடைய ,
பரிசீலனை –- பரிசீல நத்தாலே
( பரி என்கிற உபஸர்க்கத்தோடு கூடின இந்த பதம் அந்த க்ரந்தங்களி லறுதியிடப்பட்ட அர்த்தங்களில்
ஓன்றும் நழுவாதபடி அடிக்கடி ஸேவிக்கும்படியைச் சொல்லுகிறது ) ,
காலஷேப: — கால க்ஷேபமாக ,
அஸ்து –- ஆகக் கடவது ;
இப்படியெத்தனை நாள் வரையென்னில் ?
ஆமோக்ஷம் -– மோக்ஷமுண்டாகிற வரையிலும் . ( ப்ரக்ருதிஸம்பந்தமிருக் கிறவரையிலும் )
மந்யதா ப்ரதிபத்யாதிகள் துர்ஜயமாகையாலும் ,
அதுகளை ஸ்ரீபாஷ்யாதி ஸூக்திகளாலே பல படியாக நிரஸித்திருக்கையாலும் ,
மோக்ஷமுண்டாகிற வரையில் , இன்னமொரு ஜந்மமுண்டாகிலும் அப்போதும் இவற்றினுடைய பரிஶீலநமே
காலஷேபமாயிருக்க வேணுமென்று ப்ரார்த்திக்கிறார் ) .

ததீயஶேஷத்வம் ;
1 “ அகிஞ்சித் காரஸ்ய ஶேஷத்வாநுபபத்தி: “ என்கிறபடியே

1 ( அகிஞ்சித்கரஸ்யேதி ) —-
அகிஞ்சித் கரஸ்ய – கிஞ்சித்கரியாதவனுக்கு ,
ஶேஷத்வாநுபபத்தி: — ஶேஷத்வத்தினுடைய வுபபத்தியில்லை என்கை

கிஞ்சித்காரமில்லாதபோது அந்த ஶேஷத்வம் நிலை நில்லாமையாலே ,
தத் சித்யர்த்தமாக , தத் ப்ரதிஸம்பந்திகளாய் பரம ஶேஷிகளான எம்பெருமானாரபிமான நிஷ்டர் விஷயத்திலும் ,
த்ரிவித கரணத்தாலும் , கிஞ்சித்கரித்துப்போரும் நிலையிலேயொரு படப் பண்ணுகை .

ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமானது
எம்பெருமானா ருடைய வபிமாநத்திலொதுங்கி , தத் விஷய கிஞ்சித்காரத்தாலே நிலையையுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் ,
அவ்யபிசாரிணியான பக்தியைப் பண்ணி , தத் விஷய விஷயீகாரத்திலே ஸ்வ ஸ்வரூபத்தைச் சொறுகியிட்டு ,
இந்த ஸ்வரூபம் அத்தலைக்கே யுறுப்பாய் விநியோகப்படவேணுமென்று
இவ்வர்த்தத்தினுடைய நித்ய ப்ரார்த் தனையிலே நிலையுடையனா யிருக்குமிருப்பை யுள்ளபடியறிகை ; “
உன் தொண்டர்கட்கே யன்புற்றிருக்கும்படி யென்னையாக்கியங்காட் படுத்தே “ என்று , அமுதனாரும் இவ்வர்த்தத்தை யருளிச்செய்தார் இறே

ஸ்வரூப யாதாத்ம்ய நிஷ்டையாவது ,
சரம பர்வமான எம்பெரு மானாருடைய முக விகாஸத்துக் குடலாக ததீய விஷய கிஞ்சித்காரத் தாலும்,
தன் முக விகாஸ ஹேதுவான தத் சேஷ விஷய கிஞ்சித்காரத் தாலும்,
ஸ்வரூபத்தை விநியோகார்ஹமாம்படி , தத்தத் சந்தாநு வர்த்தன பூர்வகமாக
அஶேஷ ஶேஷ வ்ருத்தியிலுமந்வயிப்பித்து , அதுதான் தத் தத் விஷய பூதரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
பரம்பரா பர்யந்தமாக த்ரிவித கரணத்தாலும் பர்யவஸிக்கும்படி பண்ணி ,
தத் விஷய கிஞ்சித்காராபாவத்தில் ஆத்ம ஸத்தையில்லை யென்னும் படியான நிலை பிறந்து ததேகநிஷ்டையிலே தத்பரனாயிருக்கை .
இனி இவ்வர்த்த நிஷ்டைதான் ஓரொருவர்க்கு சரம ஶேஷியான. வெம்பெருமானாருடைய கடாக்ஷ விசேஷத்தாலே
லபிக்குமதொழிய மற்றபடி துர்லபமாயிற்று ;
ஆகையாலேயிறே அந்த சந்தத்தில் சரம சேஷியான வெம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யம்
ஸார்வத்ரி கமன்றிக்கே , தேடிப் பிடிக்க வேண்டும்படி க்வாசித்க மாயிருக்கிறது .

“ அஸ்மிந்நர்தே விஶ்வாஸஸ் ஸர்வேஷாம் ந ஜநிஷ்யதி | மத் கடாஷோ பவேத் யஸ்மிந் மய்யேவ ப்ரவணோஹிய: |
தஸ்ய தஸ்ய ஹ்ருதிஸ் தோயம் பவிஷ்யதி ந ஶம்ஶய: “ என்று ,
எம்பெருமான் தானே சரம பர்வ விஷயமான ப்ரதிபத்தி , தத் கடாக்ஷமடியாக வுண்டாகவேணுமென்று சொல்லிவைத்தானிறே .
உஜ்ஜீவநேச்சுவான வதிகாரி , தனக்கு , ப்ரதமத்திலே சரம பர்வமான வெம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யம் விளைகைக் குடலாக ,
ததபிமாந நிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் கரண த்ரயத்தாலுமநுவர்த்தநம் பண்ணி , ததவசர ப்ரதீக்ஷனாய் ,
தனக்கவர்கள் ஸ்வரூப ஸோதநம் கொடுத்து, தன்னை விரும்பி மேல் விழுந்து , தத் குண வைபவத்தை யுபதேசிக்க
சுக்கான் பாறை போலே கடின ஹ்ருதயனன்றிக்கே நெஞ்சிரக்கமுடை யனாய்ச் செவிதாழ்த்து ,
கண்ணும் கண்ணீருமா யிருக்கும் படியான பரிபாக தசை பிறந்தால் ,சரமசேஷி கடாக்ஷம் பிறந்து
தடையின்றி யிலே யிவன் பக்கல் ப்ரவஹிக்கும் ;
பின்பு , தத் ஸம்பந்தம் அபிச் சின்ன ஸ்ரோதோ ரூபேண நடந்து செல்லுமிறே .
இப்படிப்பட்ட ஸம் பந்தத்தை இவனுக்கவர்களுணர்த்தும்போது , இவன் அறியாததாய் ,
எம்பெருமானாரும் ததீயருமறிந்ததாயிருப்பன சில கைமுதலிவன் பக்கலுண்டாயிருக்கவேணுமிறே ;
அவையாவன : —
நிரங்குஸ ஸ்வ தந்த்ரனாய் நிருபாதிக ஶேஷியான வெம்பெருமான் ,
இவ்வதிகாரியி னிடத்திலே நன்மையை நினைக்கும் படியான குளிர்ந்த திருவுள்ள த்தை யுடையனாக வேணும் ;
அதுக்கடியாக விவனுக்கு ஜ்ஞாதமாய் , அவனுக்கு ஜ்ஞாதமா யிருப்பதொரு யாத்ருச்சிக ஸூஹ்ருதம் பிறந்திருக்க வேணும் ;
இவன் பக்கலேதேனும் யாத்ருச்சிகமாக ஒரு நன்மை காணும் போது என்றோவென்று ,
எங்குமொக்க வ்யாப்தி பண்ணி யவ காசம் பார்த்திருக்கும் ஸர்வேஶ்வரனுடைய கடாக்ஷ விஶேஷம்
இவன் பக்கல் அபிமுகமாயிருக்க வேணும் ;
இப்படி யெம்பெருமானுடைய விஶேஷ கடாக்ஷ மபிமுகமான தசையிலே , பகவத் ப்ரஸங்கம் வந் தால் ,
சிவிட்கென்று த்வேஷம் கொண்டாடாமல் , அநுமதி ப்ரதனா யிருக்கவேணும் ;
இதடியாக பகவத் குண விக்ரஹ விபூதி தர்சநத்தில் முகம் மாறாடாமல ,அபிமுகனா யிருக்கும் படியான நினைவு பிறக்க வேணும் ;
இதுக்கெல்லாமடியாக இவை இத்தனையும் பெற்று , பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி விஷய ஜ்ஞாநத்தையுடையராய்
நிஷ் க்ருஷ்ட ஸத்வ குண நிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவர்களோடு ஸம்பந்தத்துக்கு பூர்வபாவியான ஸம்பாஷணமுண்டாக வேணும் ;
இவையித்த னையுமுண்டாகிலிறே , இவனுக்கு ஸதாசார்யராய் சரம பர்வனான வெம்பெருமானாரோடு ஸம்பந்தம் சித்திப்பது .
“ ஈஶ்வரஸ்ய ச ஸௌஹார்தம்( ஈஶ்வரஸ்ய ச ஸௌஹார்தமிதி ) –
இந்த ஶ்லோகந்தான் இப் ப்ரபந்தத்துக்கு நாயக ரத்னமாயிருக்கிறது .
ஆசார்ய ப்ராப்திக்காக வீஶ்வரன் பண்ணுகிற க்ருஷி பரம்பரைகளைச் சொல்லுகையாலே , சரமோபாயவைபவத்தைப் பற்றி இதுக்குமேல் வக்தவ்யாம்ஶமில்லை .
ஆஶ்ரயண ஸௌகர்ய ஆபாத கங்களான வாத்ஸல்ய , ஸ்வாமித்வ , ஸௌஶீல்ய , ஸௌலப்யங்களும்,
ஆஶ்ரித கார்ய ஆபாதகங்களான ஜ்ஞாந , ஶக்திகளுமாக , பகவத் ப்ராப்திக்கு ஆறு குணங்கள் போலே ,
ஆசார்ய ப்ராப்திக்கும் இந்த ஶ்லோகத்தில் சொல்லுகிற ஆறு ஹேதுக்களும் அக் குணங்களோடு
இவற்றுக்கு உண்டான ஸாதர்ம்யத்தை க்ரந்த விஸ்தரபயத்தாலே இவ்விடத்தில் ப்ரதி பாதிக்கிக்கிறிலோம் .
ஈஸ்வரஸ்ய –- ஸர்வ நியந்தாவான வெம்பெருமா னுடைய ஸௌஹார்தம் –
சேதந விஷயத்தில் நன்மையை நினைப்பிடு கைக்கீடான நல்ல ஹ்ருதயமும் ,
( இவ்விடத்தில் , ஈஸ்வரபதம் “ மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹ நம் ச “ என்று கர்மாநுகுணமாக
பந்தமோக்ஷங்க ளிரண்டுக்கும் கடவனாயிருக்கும்படியைக் காட்டுகிறது .
ச -– என்கிற , அவ்யவம் , இப்படிப்பட்டவனுக்கு ஸௌஹார்தம் ஜநிக்கை யறிதென்னும் படியான வதிஸங்கையைக் காட்டுகிறது ;
நிரங்குச ஸ்வாதந்த்ர்யத்தாலே இவனை ஸம்ஸார ஹேது வான நிக்ரஹ ஸக்திக்கிலக்காக்கி
“ ஷிபாமி “ என்று தள்ளி வைத்தமையை பார்த்தால் , இவனுக்கும் ஸௌஹார்த மென்பதுண்டோ என்று அதிசங்கை பண்ண வேண்டும்படியிறே யிருப்பது .
இனி ஸௌஹார்தம் என்கிற பதம் நிருபாதிக ஸ்நேஹத்தைக் காட்டு கிறது ;
பிதா புத்ர ஸம்பந்தத்தாலே ஸ்நேஹம் நிருபாதிகமாகவே இருக்கும் ;
“ ஷிபாமி “ என்பதும் ஹித பரனாய்ச் செய்தவித்தனை )
இப்படி நிருபாதிக ஸ்நேஹ யுக்தனான வீஶ்வரனிவனிடத்தில் நன்மை–
யத்ருச்சா ஸுஹ்ருதம் ததா | விஷ்ணோ: ப்ரஸாதாதத் வேஷ ஆபி முக்யம் ச ஸாத்விகை: ஸம்பாஷணம்
ஷடேதாநி ஹ்யாசார்ய ப்ராப்தி ஹேதவ: “ என்று இறே
இதுக்கு நினைக்கும்படியைச் சொல்லுகிறது மேல் ,
யத்ருச்சா ஸுஹ்ருதம் –
விடாயைத்தீர்த்தாய் , ஒதுங்க நிழலைக் கொடுத்தாய் ; என்றாப்போலே ஈஶ்வரனே உண்டாக்குகிற யாத்ருச்சிக ஸுஹ்ருதமும் ,
ததா –- ஸௌ ஹார்தத்தாலே யாத்ருச்சா ஸுஹ்ருதம் பிறந்தாப்போலே ,
விஷ்ணோ: ப்ரஸாதாத் -– ஸர்வ வ்யாபகனான , அவனுடைய அநுக்ரஹத்தாலே ,
அத்வேஷ அபிமுக்யம் ச –- பகவத் ப்ரஸங்கத்தில் த்வேஷமில்லாமை யென்ன
பகவத் குண விக்ரஹாதிகளி லாபிமுக்யமென்ன ,
விவை யிரண்டும் ,
ஸாத்விகை: ஸம்பாஷணம் – வேதங்கற்பான் போன்ற பரம ஸாத்வி கரோடு ஸம்பாஷணமும் , ஏதாநிஷட் -– ( ஆகிற ) இவையாறும் ,
ஆசார்ய ப்ராப்தி ஹேதவ: — ஆசார்ய ப்ராப்திக்குக் காரணங்களாகின்றன .
( இவற்றில் விஷ்ணோ: என்கிற பதம் ஸர்வத்ர வ்யாபித்து நிற்கும்படியைச் சொல்லுகையாலே
நிருபாதிக ஸ்நேஹ விஶிஷ்டனான வீஶ்வரன் சேதநனிடத்தில் யத்ருச்சா ஸுஹ்ருதம் கிடைக்கும்போது , என்றோ , என்று ,
அவசர ப்ரதீக்ஷனா யிருக்கும்படியைக் காட்டுகிறது .
ததா – என்கிற அவ்யயமும்,
ப்ரஸாதாத் என்கிற பஞ்சம்யந்த பதமும் நிருபாதிக ஸ்நேஹத்தாலே யத்ருச்சா ஸுஹ்ருதத்தைத் தேடிப் பிடித்தாப்போலே ,
க்ருபையாலே அத்வேஷாதிகள் உண்டாக்கினபடி சொல்லுகிறது .
அத்வேஷத்துக்கும் , ஆபிமுக்யத்துக்கும் ஹேது பகவத் ப்ரஸாதமே தவிர , யத்ருச்சா ஸுஹ்ரு தமன் னென்னுமிடம்
ஸ்ரீ வசந பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்திலே ஸுஸ்பஷ்டம் .
பகவத் ப்ரஸாதத்துக்கு யத்ருச்சாஸுஹ்ருதம் காரணமானதும் , வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராமைக்காக வாயிற்று ;
இல்லையாகில் ஸௌஹார் தத்தாலே பகவத் ப்ரஸாதமும்
அத்தாலே யத்ருச்சாஸுஹ்ருதமுமாக விப்படி பிறக்கவமையும் .
அத்வேஷ பதம் ஸம தமாதி ஸமஸ்தாத்ம குணங்களுக்கு முபலக்ஷணம் ;
“ ஆசார்ய லாபம் ஆத்மகுணத்தாலே “ என்கையாலே , அத்வேஷமும் ஆபிமுக்யமும் பகவத்க்ருபையாலே என்று சொல்லுகையாலே
“ ஆசார்யலாபம் பகவானாலே “ என்கிற சரம ஸூக்த் யர்த்தம் ஸூசிக்கப்படுகிறது .
ஸாத்விகைஸ் ஸம்பாஷணம் என்னுமிடத்தில் ஜந்ம வ்ருத்தாதிகளை யிட்டுச்சொல்லாதே ,
அவிஶேஷண ஸாத்விகை : என்கையாலும் ,
ஸம்பாஷணமாவது ஸம்யக் பாஷணமாகையாலும் ,
ஜந்ம வ்ருத்தாதி நிரூபணம் பண்ணாதே ஜ்ஞாந விஶேஷத்தையே பார்த்து
“ தொழுமினீர் கொடுமின் கொள்மின் “ என்கிற படியே ,
பரம ஸாத்விகரோடு கலந்து பலிமாறும்படியைச் சொல்லுகிறது .

இனி எம்பெருமானாருடைய வபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் சரமாதிகாரியான வைஷ்ணவனுக்கு வஸ்தவ்ய பூமியா வது ,
“ இராமாநுசனை தொழும் பெரியோரெழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிட “ மென்கையாலே ,
எம்பெருமானார் திருவடிக ளில் ப்ராவண்யமுடையவராய் , பெரியமதிப்பராய் ,
தத் ஸம்பந்த வைலக்ஷ்ண்யாபிவிருத்தி யுண்டாகப் பெற்றோமென்கிற ஹர்ஷ ப்ர ஹர்ஷத்தாலே ஸ
ஸம்ப்ரந்ருத்தம் பண்ணி வர்த்திக்கிற ஸாத்விக ஸ்ரீவைஷ்ணவர்களெழுந்தருளி யிருக்கும் பரமபாவனமான தேசம் .
“ அஸ்மத் தேஶிக பகவத் ராமாநுஜ யோகி சரணயுகள ———ஷடேதாநி , என்கையாலே ,
ஆசார்ய ப்ராப்திக்கு இவை யித்தனையும் வேண்டுமென்றதாயித்து ;
அவையாவன ; கர்மமடியாக , “ ஷிபாமி “ என்கிற பகவந் நிக்ரஹம் மாறி , நிருபாதிக ஸ்நேஹம் தலையெடுக்க வேணும் ;
அதடியாக யத்ருச்சா ஸுஹ்ருதமென்பதொன்னுண்டாக வேணும் ;
ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வாராமைக்காக இந்த யத்ருச்சா ஸுஹ்ருதத்தை ஹேதுவாகக் கொண்டு பகவத் க்ருபை பிறக்க வேணும் .
அத்தாலே அத்வேஷமும் , அத்தைப் பின் செல்லுமதான ஆபிமுக்யம் உண்டாக வேணும் .
அதுக்கு மேலே , ஆசார்ய ஸமாஶ்ரயணத்துக்கு ப்ரதாந அபேஷிதமான பாகவதர்களோடு ஸம்பாஷணமாகிற ஸம்பந்த முண்டாக வேணும் .
ஆகவிவையத்தனையும் வேணுமென்றதாயித்து .
ஆசார்யப்ராப்திஹேதவ: என்கிறவிதில் ஆசார்ய பதம் “ ஆசினோதிஹி ஶாஸ்த்ரார்தான் “ இத்யாதியில் சொல்லுகிறபடியே ,
ஞானமனுட்டான மிவை நன்றாகவே வுடையனான னாசார்யனைச் சொல்லுகிறது .
ப்ராப்தி , யென்கையாலே யிப்படிப்பட்ட வாசார்யன் லபிக்குமது பெறாப்பேறாயிருக்கு மென்கிறது .
ஈஶ்வரனைப் பார்த்தால் ஸௌஹார்தம் பிறக்கையே அரிதென்னும்படி இருக்கையாலும் ,
சேதநனைப் பார்த்தால் அத்வேஷமுள்பட பகவத் க்ருபையாலே உண்டாக வேண்டும்படி அஸூயா ப்ரஸவ பூவா யிருக்கையாலும் ,
கர்மங்களைப் பார்த்தால் ஒவ்வொன்றும் ப்ரம்ம கல்ப நியுதாநுபவேப்யநாச்யமா யிருக்கையாலும் ,
அத்வேஷ பதத்தாலே ஸூசிக்கப்பட்ட மற்ற வாத்ம குணங்களைப் பார்த்தால் அவை நம்மாலும் , பிறராலும் பிறப்பித்துக்கொள்ள வொண்ணாததுகளா யிருக்கையாலும் ,
ஆசார்ய லாபம் பெறாப் பேறாகவே யிருக்கும் )

நாயனாராச்சாம்பிள்ளை அருளிச்செய்த ஸ்ரீஸூக்தி , ( அஸ்மத் தேஶிகேத்யாதி )
அஸ்மத் தேஶிக பகவத்ராமாநுஜ யோகிசரணயுகளமாஶ்ரிதாநாம் –
அஸ்மத் தேஶிக – நம்மு டைய உஜ்ஜீவநத்துக்கு கடவரான ,
பகவத்ராமாநுஜயோகி – பகவத் ஸர்வமாஸ்ரிதாநாம் ததபிமாநைகநிஷ்டாநாம்
தத் குண ஸந்தோஹாநுப வாநந்தாம்ருத ஸாகரதரங்க ஷீகர ஸம்பந்த ஶீதலஹ்ருதயாநாம் ததீய திவ்ய கல்யாண குணங்களையும் ,
பரிபூர்ணஜ்ஞாநத்தையுமுடையரான , ராமாநுஜயோகி — “
அவை தம்மொடும் வந்திருப்பிடம மாயனிராமாநுசன் மனத்து “ என்கிறபடியே ,
ஸர்வேஶ் வரன் ஸ விபூதிகனாய்க்கொண்டு தம்முடைய திருவுள்ளத்தில் வீற்றிருக் கும்படியான யோக நிஷ்டையையுடைய வெம்பெருமானாருடைய ,
( யோக ரஹஸ்ய க்ரமம் குருகைக் காவலப்ப னோடே தீர்த்தம் ப்ரஸாதித்ததாயிருந்தாலும்
“ யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மனா |
ஶ்ரத்தாவான் பஜதே யோ மாம்ஸமே யுக்ததமோ மத: “ என்கிறபடியே
“ உணர்ந்த மெய்ஞ்ஞாநியர் யோகம் தொறும் “ என்கிற பாட்டில் சொன்ன நிரதிசய ப்ரேமத்தை
இவ்விடத்தில் யோக நிஷ்டையாக சொல்லுகிறது ;
இதுதான் “ நித்ய யுக்த ஏக பக்தி: “ என்றும் ,“
ஜ்ஞாநீத்வாத்மைவ “ என்றும்,
அவனே வாய் விட்டு புகழும்படியான பெருமையை யுடைத்தா யிருக்குமிறே ) .
சரண யுகளம் –- இரண்டு திருவடி களை ,
ஆஶ்ரிதானாம் -– உபாயோ பேயமென்று பற்றினவர்களாயும் ,
ததபிமானைகநிஷ்டாநாம் -– அந்த வெம்பெருமானாருடைய வபிமாநத்தி லேயே நிலைபெற்றவர்களாயும்,
தத்குண ஸந்தோஹாநுபவானந்தாம்ருத ஸாகர தரங்க ஷீகர ஸம்பந்த ஸீதல ஹ்ருதயாநாம் –
தத்குணஸந்தோஹ –
( “ செம்மை நூற்புலவர்க் கெண்ணருங் கீர்த்தி “ என்கிறபடியே
பேரளவு டையவர்களுக்கு பரிச்சேதிக்கவரிதான )
அவருடையதான கல்யாண குண ஸமூஹத்தினுடைய ,
அநுபவ – அநுபவத்தினாலுண்டான ,
ஆனந்த – ஆனந்தமாகிற ,
அம்ருத ஸாகர -– அம்ருதமய ஸமுத்திரத்தினுடைய ,
தரங்க -– அலைகளின் ,
ஷீகர – திவலைகளுடைய ,
ஸம்பந்த -– நித்ய ஸம்ஶ்லேஷத்தாலே ,
ஶீதல ஹ்ருதயாநாம் – குளிர்ந்த திரு வுள்ளத்தை யுடையவர்களாயும் ,
ததீய திவ்ய நாமோச்சாரண ஜநித ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத ஸம்ப்ரம நர்த்தனம் குர்வதாம் –
ததீய – அந்த வெம்பெருமானா ருடையதான ,
திவ்ய நாம – ( “ சதுரா சதுரக்ஷரீ “ என்று அபியுக்தர் நெஞ்சுருகி கொண்டாடுமதான ) திருநாமத்தினுடைய ,
உச்சாரண – வாக் வ்யாபார மாத்ரத்தாலே ,
ஜநித -– உண்டான ,
ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத் – ஆனந்தாதிஸயத்தாலே ,
ஸஸம்ப்ரமநர்த்தனம் குர்வதாம் –- ( ப்ரீதியுள்ள டங்காமையாலே ) பரவஸராய் ,
நர்த்தனம் குர்வதாம் – நர்த்தனம் செய்யு மவர்களாயும் ,
ஸாத்விகாக்ரேசராணாம் -– பரமஸாத்விகளில் உத்க்ருஷ்ட தமராயும் ,
ஸமதமாதிகுணேபேதாநாம் – ஸமதமாத்யாத்மகுண ஸம்பந்ந ராயும்
( இவ்விடத்தில் ஸமம் என்கிறது அந்த:கரண நியமனத்தை;
நாமோச்சாரண ஜநித ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத் ஸம்ப்ரம நர்த்தனம் குர்வதாம் ஸ்வாதி காக்ரேசராணாம்
ஸம தமாதி குணே பேதாநாம் தத்வ வித்தமானாம் அஸ்மத் ஸ்வாமிநாம் ஆந்த்ர பூர்ண கோவிந்தார்ய துல்ய
ஸ்வபாவாநாம் உபாதேயதம திவ்ய ஜ்ஞாந பக்தி வைராக்ய நிஷ்டானாம் , ஸ்ரீவைஷ்ணவானாம் ஆவாசஸ்தான மேவ
அஸ்மதாதி சரமாதிகாரிணாம் அபி ஆவாஸபூமி: “ என்று
நாயனா ராச்சாம் பிள்ளை யருளிச்செய்தார் இறே .

இனி இந்த சரமாதிகாரிக்கு பரிஹரிக்க வேண்டும் அம் ஶங்கள் சிலவுண்டு ;
அவையாவன –1- பரம காருணிகரான வெம்பெருமானாருடைய குணானுஸந்தான
ஸ்ரவணத்தில் ஸிவிட்கென்று நெஞ்சிறக்க மற்றிருக்கும் துர்மாநிகளுடன் ஸம்பாஷணமும் ,
2-அவர்களுடன் ஸஹவாஸமும் ,
3-அவர்களுடன் கூடி புஜிக்குமதுவும் ,
4-தத் பாத தீர்த்தமும் ,
5-பாணி பக்வாந்நபோஜநமும் ,
ஶரீர ஸம்பந்த ப்ரயுக்தமாக வவர்களுடன்.
(தமமென்கிறது பாஷ்யகரண நியமனத்தை ) ,
தத்வ வித்தமாநாம் -– பராவர தத்வ யதாத்ம்யத்தை யறிந்தவர்களில் ஸ்ரேஷ்டராயும் ,
அஸ்மத் ஸ்வாமி நாம் -– அஸ்மதாதிகளுக்கு வகுத்த ஶேஷிகளாயும் ,
ஆந்த்ரபூர்ணகோவிந் தார்ய துல்ய ஸ்வபாவாநாம் -– வடுகநம்பி , எம்பார் , இவர்களோடொத்த வாசார்யநிஷ்டையை யுடையவர்களாயும் ,
உபாதேயதம திவ்ய ஜ்ஞாந பக்தி வைராக்ய நிஷ்டானாம் –
உபாதேயதம -– “ மூவரிலும் வைத்துக்கொண்டு மிகவும் வேண்டுவது ப்ரபந்நநுக்கு “ என்கிறபடியே மிகவும் வேண்டுமவை யான ,
திவ்யஜ்ஞாந -– ( கேவலனுடைய ஜ்ஞாநம் போலன்றிக்கே ,“ தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு “ என்கிற ) ;
ஸ்ரீய: பதி விஷயமான ஜ்ஞாநமென்ன ,
பக்தி -– ( ஸர்வக்ரமத்தாலே பரபக்த்யாதி ரூபேண பரிணமிக்கக் கடவதான ) தத்விஷயத்தில் பக்தி யென்ன ,
வைராக்ய –- “ ப்ரபந்நனுக்கு விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற் றம் “ என்கிற வைராக்ய விஶேஷமென்ன ,
இவற்றில் , நிஷ்டானாம் -– நிலை நின்றவர்களாயுமிருக்கிற ,
( இவ்விடத்தில் , திவ்ய , என்கிற பதம் , ஜ்ஞாந பக்தி வைராக்யங்கள் மூன்றிலு மந்வயித்து ,
அவற்றினுடைய நிஷ்க்ருஷ்ட வேஷத்தைக் காட்டுகிறது ) .
ஸ்ரீவைஷ்ணவாநாம் – இராமாநு சனைத் தொழும் பெரியோர்களுடைய ,
ஆவாசஸ்தாநமேவ – எழுந்திரைத் தாடுமிடம் என்கிற விருப்பிடமே ,
ஆவாசபூமி( “ தேசோயம் ஸர்வ காம துக் “ என்கிறபடியே
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் , இஷ்டப்ராப்திக்கும் ஹேதுவாய்க்கொண்டு )
வஸ்தவ்யமான விடமாகக் கடவதென்னபடி அஸ்மதாதி சரமாதிகாரிணாமபி –-
அஸ்மதாதி — அடியேன் முதலான சரமாதிகாரிணாமபி ( ஸ்வாபிமாநத்தா லே யீஶ்வராபிமாநத்தைக் குலைத்துக்கொள்ளுகையாலே
போக்கற்ற செயல் மாண்டு “
6-த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌகமத்யே மித்யாசராமி “ என்கைக்குத் பரந்தவாஸக்தி யுண்டாகையும் ,
7-தத் க்ருத பகவத் குணாநுஸந்தான ஶ்ரவணமும் ,
8-தத் ததீய ஸத்காரமும் ,
9-தத் தத்த த்ரவ்ய ஸ்வீகார மும்,
10-தத் விஷய ப்ரணாமமும் ,
ஆக இந்த 10 க்ருத்யமும் ,
சரம பர்வமான வெம்பெருமானார் விஷயத்தில் மருவத்த ப்ராவண்யமு டையனாய் ,
ததபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் உத்தமாதிகாரி க்கு விஶேஷித்து பரிஹரிக்கவேணும் .
இல்லையாகில் , ஒருதலை த்வந்த்வ பக்தியும் , ஒருதலை # விழுப்புமாய் போருமிவனுக்கு , உபய ஸம்பந்தமும் குலைந்து ,
யாவதாத்மபாவி ஸம்ஸாரமநுவர்த் திக்குமொழிய , கரை காண்கிறதில்லை .

ஸ்ரீய:பதியாய் ,
பரம தயாளு வாய் ,
பரம ஶேஷியாய் ,
ஸர்வ ஶக்தி யுக்தனான வெம்பெருமானுடைய திருவடிகளை யுபாயமாகப்பற்றி ,
தத் குண ப்ரதிபாதிக திவ்ய ப்ரபந்தங்களை , யநுஸந்தாநத்துக்கு விஷயமாக்கி ,
“பொழுதெனக்கு மற்றது வெப்போது “ என்கிறபடியே போது போக்கி வர்த்திக்கிற நமக்கு ,
பேற்றில் கண்ணழிவுண்டோவென்று நினைத்து , சரம பர்வத்திலிறங்காமல் , துரபிமாநிகளாயிருக்கும் கழணிமிண்டரான ஸ்ரீவைஷ்ணவர்கள் ,
அவர்கள் தங்கள் தங்கள் நினைவாலே பேறுண் டென்றிருக்கிலும் ,

“ ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜே சரணமிதி தியா @ தத்ர பக்தி தக்கவரா யிருக்கிற ) பஞ்சமோபாய நிஷ்டர்க்கும் 
ஈஶ்வரன் ஸர்வஜ்ஞனாகையாலே , சரம பர்வமான வெம்பெருமானார் பக்கல் கண் வையோமென்றிருந்த வதுவே ஹேதுவாக
வவர்களுக்கு , பேற்றைப் பண்ணிக் கொடாத மாத்ரமே யன்றியே ,
இவர்கள் ஸ்வரூபத்தையும் , கால க்ரமத்திலே , ஸங்குசிதமாம் படி பண்ணி விடுவன்

# யிழவு பாடாந்தரம் @ தத் ப்ரபத்தி பாடாந்தரம் .

எம்பார் ஸூக்தி – ( ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜ இதி )
ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜே –
ஸ்ரீச -– ஸ்ரீய:பதியினுடைய ,
ஸ்ரீமத் பதாப்ஜே –-
“ பிராட்டியுமவனும் விடிலும் திரு வடிகள் விடாது “ என்கிற பெருமையை யுடைத்தான “ திருவடித்தாமரைக ளிரண்டுமே
“ சரணமிதி -– இதர நிரபேக்ஷமான வுபாயமென்கிற ,
தியா –- புத்தியினாலே ,
தத்ர – அந்த திருவடிகளிலே பக்தி

த்வராணாம் ஸ்ரீமத் ராமாநுஜார்ய ப்ரணதிம் அபஜதாம் கூட சித்தா ஸயாநாம் |
காருண்ய ஷாந்தி ஸிந்து ஸ்வ பத நிவஸதிம் நேஸ்வரோ தாது மிச்சேதித்யேவம் சிந்தகாநாமபி பரமபதம் தாதுகா மஸ் ஸஜாது “ என்று ,
எம்பாரருளிச்செய்த இந்த திவ்ய ஸூக்தி ,
உக்தமமான வர்த்தத்துக்கு ப்ரமாணமாக அநு ஸந்தேயமாகக் கடவது .

த்வராணாம். –
“ ஸ்நேஹ பூர்வமநுத்யாநம் பக்தி: “ என்கிற ப்ரீதி பூர்வக ஸ்மரணத்தில் மேன் மேலும் அபிநிவேஸமாகிற த்வரையை யுடையவராய்க் கொண்டு ,
( பாடாந்தரம் தத் ப்ரபத்தி த்வராணாம் –- அந்த திருவடிக ளில் பண்ணக் கடவதான சரண வரண ரூப ப்ரபத்தியில்
த்வரையை யுடைய வர்களாய்க்கொண்டு ,
இந்த பக்ஷத்தில் , த்வரை , ஸாதநாந்தரங்களுடைய தோஷ தர்ஶநத்தாலும் , ஸம்ஸாரத்திலடிக் கொதிப்பாலும் உண்டாகிற தென்று கொள்ளவேணும் ) . ஸ்ரீமத்ராமாநுஜார்ய ப்ரணதிம பஜதாம் –
ஸ்ரீமத் –- அந்த ஸ்ரீய:பதியினுடைய திருவடிகள் தாமே யென்னும்படியான நிரவதிக ஸம்பத்தை யுடையராயிருக்கிற ,
ராமாநுஜார்ய -– எம்பெருமானாருடைய ,
ப்ரணதிம் –- ( திருவடிகளில் செய்யக் கடவதான ) சரணாகதியை ,
அபஜதாம் – செய்யாதவர்களாய் ,
கூடஸித்தாஸயாநாம் — இப்படி எம்பெரு மானாரை யுபேஷித்திருக்கிற தங்களுடைய வந்தரங்காபிப்ராயத்தை வெளிப்படுத்தாமல் ,
தம்மை எம்பெருமானார் தர்ஶநத்தில் நிஷ்டை யுடைய வரென்று பிறர் நினைக்கும்படி இருக்குமவர்களுக்கு ,
( எம்பெருமான் பரம பதத்திலிடம் கொடானென்கிற மேலில் வாக்யத்தோடி இதற்கு அந்வயம் ).
காருண்யஷாந்தி ஸிந்து: —
காருண்ய –- ( அத்வேஷம் துடங்கி யாசார்ய ப்ராப்தி பர்யந்தமாக செய்து கொடுக்கைக்கீடான ) க்ருபைக்கும் , ஷாந்தி: –

( “ தன்னடியார் “ என்கிற பாட்டின்படியே
“ என்னடியார் அது செய்யார் “ என்கைக்கீடான பொறுமைக்கும் ,
ஸிந்து: — ஸமுத்திரம் போலே யிருக்கு மவனான ,
ஈஶ்வர: — ஸர்வேஶ்வரன் ,
ஸ்வபதநிவசதிம் -– தனக்குப் படை வீடான பரமபதத்தில் ஸ்தானத்தை ,
தாதும் -– கொடுக்கைக்கு ,
நேச்சத் –- இச்சிக்க மாட்டான் .
( இவ்வளவேயன்றிக்கே )
இத்யேவம் -– இந்த ப்ரகார மாகவே ,
சிந்தகாநாமபி –- ( எம்பெருமானார் திருவடிகளை ஆஶ்ரயியோ மென்று ) மநஸ்ஸில் நினைக்குமவர்களுக்கும் கூட ,
ஜாது –- ஒருகாலும் ,
பரமபதம் -– நலமந்தமில்லதோர் நாட்டை ,
தாதுகாம: — கொடுக்க இச்சை யுடையவனாக ,
ந பவேத் -– ஆக மாட்டான் )
( இவ்விடத்தில் ந பவேத் என்கிற அவ்யயமும் , க்ரியையும் ஔசித்யத்தாலே அத்யாஹரிக்கப்படு கிறது .
இத்தால் கால க்ரமத்திலே இவர்களுடைய ஸாமாந்ய ஜ்ஞாநத்தையும் மலிநமாம்படி பண்ணி
ஸ்வரூபத்தை ஸங்குசிதமாக்கி விடுவதென்ற தாயித்து )

இன்னமும் ராமாநுஜ பதச்சாயையென்று புகழ் பெற்றவிவர்
“ ஸ்ரீமந் நாராயண சரணாரவிந்த சரணாகதிரேவ உஜ்ஜீவநாய பவதீதி புத்யா ,
பகவந்தம் பரம காருணிகம் பரமோதாரம் அபார கல்யாண குணாகரம்
அபரிமித வாத்ஸல்ய ஸௌஶீல்ய ஸாகரம் அசரண்ய அகில ஜந சரண்யம் அநவரதம்
ஆஶ்ரயணீய சரண கமல யுகளமபி மதாநுரூப நிரவதிக அனந்த சந்தோஹ ஜநக
“ நித்யஸூரி பரிஷ தந்தர் பாவ மஹா:பல ப்ரஸாதக மஸ்மதுத் தாரகம் அதி ரமணீய
விமலதர , லாவண்யகர திவ்ய மங்கள விக்ரஹமதிஶீதல விமல கம்பீர ஜலாஸயப்ரபவ
மிஹிரதருண கிரணநிகிர விகசித விராஜ மான கமலதளாயத திவ்யநயனயுகளம் ஸ்வவசகமிதி
சிதசிதீஶ்வர தத்வ த்ரய ஸூசக தண்ட த்ரய ரூப மண்டன மண்டித மஸ்மந்மாதர
மஸ்மத்பிதரமம்ருத லஹரீவதநுகூல நவ்ய திவ்ய கோமல விமல மதுராயமாண
நிஜஸூக்திகலாபைராஸ்ரி தாநகில ஜநாஹ்லாதயந்தம் ஸ்ரீமந்தமார்ய ஜநாபிவந்த்யம்
அஸ்மத் குலநாத மஸ்மத் அஸாதாரண ஶேஷிண மஸ் மதாதி ரக்ஷ்யவர்க ஸர்வ ப்ரகார ரக்ஷணைக தீஷாகுரும்
ஸ்ரீராமா நுஜாசார்யமநாத்ருத்ய , பரமகாருணிக: பகவாநேவ ஸ்வசரணகமல ஸமாஶ்ரிதாநாமஸ்மாகம்
ஸ்வப்ராப்திரூப பலம் ப்ரயச்சதீதி ஸ்வமதேந விசிந்த்ய வர்த்தமாநாநாம் ,
தத்வஜ்ஞாநலவலேஶ தேஶாதிகாநாம் துரபிமாநஸஹக்ருத ,
பரப்ராமக வ்ருத்தாநாம் ரூபவேஷதாரிணாம் வயமேவ ஸ்ரீவைஷ்ண வா இதி ,
ஸ்வமதேநாத்மாநம் பஹுமந்யமாநாநாம் சேதநாநாம் , அபார காருண்யௌதார்ய வாத்ஸல்ய
ஸௌஶீல்யைக நிதிரபி பகவான் புருஷோத்தம:

( 1 ) எம்பார் ஸ்ரீஸூக்தி ( ஸ்ரீமந்நாராயணேத்யாதி )
ஸ்ரீமந்நாராயண சரணார விந்த சரணாகதிரேவ — ஸ்ரீய:பதியான ஸர்வேஶ்வரனுடைய சரணாரவிந்த -– திருவடித் தாமரைகளில் பண்ணும் ,
சரணாகதிரேவ -– ப்ரபத்திதானே ,
உஜ்ஜீவநாய – ஆத்மோஜ்ஜீவநத்தைப் பொருட்டு ,
பவதீதி -– ஆகிறதென்கிற,
புத்யா — “ வ்யவஸாயாத்மிகா புத்தி: “ என்கிற ஜ்ஞாந விஶேஷத்தாலே ;
பகவந்தம் -– பரிபூர்ண ஜ்ஞாநத்தை யுடையராயும் ,
பரம காருணிகம் –- பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவான வீஶ்வரனிற்காட்டிலும் மேலான காருணிகராயும் ,
பரமோதாரம் –- ( ஸ்வாபிமாநாந்தர்பூதர்க்கு கார்யம் செய்யவேணும் “ என்று ஈஶ்வரனோடே மன்னாடுகையாலே )
இதுக்கு மேலில்லை யென்னும்படியான ஔதார்யத்தை யுடையராயும் ,
அபார கல்யாண குணா கரன் -– அபாரமான கல்யாண குணங்களுக்கு நிவாசஸ்தாந பூதராயும் ,
அபரிமித வாத்ஸல்ய ஸௌஶீல்ய ஸாகரம் –- அவற்றில் வாத் ஸல்ய ஸௌஶீல்யங்கள் அபரிமிதமா யிருக்கையாலே ,
அவற்றுக்கு ஸமுத்ரம் போன்றவராயும் ,
( வாத்ஸல்யம் தோஷபோக்யத்வம் ,
ஸௌஶீல்யம் -– தாழ்ந்தவர்களோடு கலந்து பரிமாறுகை )
அசரண்யாகில ஜநசரண்யம் –
அசரண்ய -– ( “ நன்மையென்று பேரிடலாவதொரு தீமையும் காணாத “ , ஸர்வேஶ்வரனும் கைவிடுகையாலே )
கத்யந்தரமில்லாத ,
அகில ஜந -– ஸமஸ்த சேதநர்களுக்கும் ,
சரண்யம் -– ரக்ஷகராயும் ,
அநவரதமாஶ்ரயணீய சரண கமலயுகளம் —
அநவரதம் -– “ அத்ர பரத்ராச் சாபி “ என்கிறபடியே ஸம்ஸாரத்திலும் , ப்ராப்யமான நித்ய விபூதியிலும் ,
ஆஶ்ரயணீய –- ஆஶ்ரயிக்கைக்கு யோக்யமான ,
சரணகமலயுகளம் –-திருவடித் தாமரைகள் இரண்டுமுடையவராயும் ,
அபிமதாநுரூப + மஹாப் பலப்ரஸாதகம் –
அபிமதாநுரூப – ( ஸ்வரூப ஜ்ஞாநமுடையவனுக்கு ) அபிமதமாயும் , அநுரூபமாயும் , இருந்துள்ள ,
நிரவதிகானந்த -– எல்லை யில்லாத ஆனந்தத்தினுடைய ,
ஸந்தோஹ -– ஸமூஹத்துக்கு ,
ஜநக –- மேன்மேலும் அபிவிருத்தியை யுண்டாக்குமதான ,
நித்யஸூரி பரிஷத் –- நித்யஸூரி கோஷ்டியில் ,
அந்தர்பாவ –- உடன் கூடுகையாகிற ,
மஹா:பல –- ஸர்வோத்தம்மான:பலத்தை ,
ப்ரஸாதகம் -– க்ருபை செய்தருளுமவராயும் ,
அஸ்மதுத்தாரகம் -– அடியே னுக்கு உத்தாரகாசார்யராயும்
( முதலிலே பெரியநம்பி தம்மை விஷயீகரித் ததற்கும் , உடையவர் காரணமாகையாலும் ,
அவர்தா முபாயோபேயங்களி ரண்டும் எம்பெருமானார் திருவடிகளேயென்று தமக்கு காட்டிக்கொடுக்கை யாலும் , அடியேனுக்கு உத்தாரகாசார்யனென்கிறார் ) .
அதிரமணீய + மங்க ளவிக்ரஹம் —
அதிரமணீய -– பரம போக்யமாய்
( “ உன்றன்மெய்யில் பிறங் கிய சீரன்றி வேண்டிலன் “ என்னும்படியிறே போக்யதைதானிருப்பது )
விமலதர -– ( ஜ்ஞாந பரிமளமெல்லாம் வடிவிலே தொடைக்கொள்ளலாம் படி ) மிகவும் நிர்மலமாய் ,
லாவண்ய கர – ( பகவத் குணாநுபவத்தாலே களித்திருக்கையாலே , திருமேனியெங்கும் நிறைந்த ) காந்தி வெள்ளத்துக் கிருப்பிடமாய் ,
திவ்யமங்கள -– ( “ திருமாலிருஞ்சோலைமலையே “ என்கி றபடியே , எம்பெருமான் விரும்புகையாலே ) அப்ராக்ருதமாய் விலக்ஷண மாயிருக்கிற ,
விக்ரஹம் –- திருமேனியை யுடையவராயும் ,
அதிஶீதல + நயனயுகளம் —
அதிஶீதல –- மிகவும் குளிர்ந்து ,
விமல –- தெளிந்து ,
கம்பீர –- ஆழங்காணவரிதாயிருக்கிற ,
ஜலாஶய –- ஏரியில் ,
ப்ரபவ –- பிறந்ததாய் ,
மிஹிரதருணகிரண –- பாலஸூர்ய கிரணங்களாலே ,
விகசித – அலர்த்தப்பட்டதாய் ,
விராஜமான – செவ்வி மாறாமல் ப்ரகாஸித்துக் கொண்டிருக்கிற ,
கமலதள -– தாமரை யிதழைப் போலே ,
ஆயத – கர்ணாந்த விஶ்ராந்தமான ,
திவ்ய நயன யுகளம் -– கண்ணுள் நின்றகலாதவனுக்கு கோயில் கட்டணமாயிருக்கிற திருக் கண்களை யுடையவராயும் ;
( இவ்விடத்தில் கண்ணென்று ஜ்ஞாநமாய் அதுதான் ஸ்ரீய:பதி விஷயமா யிருக்கையாலும்
இரண்டாயிருக்கையாலும் உபய வேதாந்த விஷய ஜ்ஞாநத் தைக் காட்டுகிறது ) .
ஸ்வ — வசகமிதி தம் வசமாக்கப்பட்ட ,
சிதசிதீஶ்வர -– சேதந த
த்வம், அசேதந தத்வம் , ஈஶ்வரதத்வமென்கிற , தத்வத்ரய -– மூன்று தத்வத்துக்கும் ,
ஸூசக –- ஸூசிக்குமதாயிருக்கிற ,
தண்ட த்ரய ரூப -– த்ரிதண்டரூபமான ,
மண்டன -– அலங்காரத்தாலே ,
மண்டிதம் –- அலங்க ரிக்கப்பட்டவராயும் ,
அஸ்மந் மாதரம் -– அடியேனுக்கு ப்ரியமே நடத்திக் கொண்டு போருகையாலே , மாத்ருபூதராயும் ,
அஸ்மத் பிதரம் -–இதத்தைச் செய்கையாலே தந்தையாயும் ,
அம்ருதலஹரீவத் + ஆஹ்லாதயந்தம் —-
அம்ருதலஹரீவத் — அம்ருதப்ரவாஹத்தினுடைய அலைகள் போலே , அநுகூல -– செவிக்கினய செஞ்சொற்களாய் ,
நவ்ய –- அபூர்வங்களாய் ,
திவ்ய –- “ கேட்டாரார் வானவர்கள் “ என்கையாலே திவ்யரான நித்ய ஸூரிகளுக்கு கேட்க யோக்யங்களாய் ,
கோமல –- ம்ருது ஶைலியோடுகூடி ,
விமல –- நிர்தோஷங்களாய் ,
மதுராயமாண -– (ஸ்ரீய:பதி , நித்யஹேயப்ரத்யநீகனாயும் , கல்யாணைகதானனாயும் இருப்பனென் றறுதியிடுகையாலே )
தேனும் பாலும் கன்னலும் அமுதும் போலிருப்ப தான ;
நிஜ ஸூக்திகலாபை: — ஸ்ரீபாஷ்யம் முதலான தம்முடைய திவ்ய ஸூக்தித்தொடைகளாலே ;
ஆஶ்ரிதான் -– தம்மை ஆஶ்ரயித்த ,
அகில ஜனான் –- ஸமஸ்த சேதநர்களையும் ;
ஆஹ்லாதயந்தம் –- ஆனந்திப்பித் துக் கொண்டிருக்குமவராயும் ,
ஸ்ரீமந்தம் — “ ஸம்ஸேவிதஸ் ஸம்யமி ஸப்தஸத்யா பீடைஸ்சதுஸ்ஸப்ததிபிஸ்ஸமேத: “ இத்யாதி படியே
அடியார்களுடைய நிரவதிக ஸம்பத்தை உடையவராயும் ,
ஆர்ய ஜநாபி வந்த்யம் -– நாதயாமுந ப்ரப்ருதி பூர்வாசார்யர்களால் புகழப்பட்டவராயும் ,
அஸ்மத் குல நாதம் -– நம்முடைய ப்ரபந்நகுலத்துக்கு நாதராயும் ,
அஸ்மதஸாதாரண ஶேஷிணம் -– அடியேனுக்கு வகுத்த ஶேஷியாயும் ,
அஸ்மதாதிரக்ஷ்யவர்க + தீக்ஷஆகுரும் ––
அஸ்மதாதி –- அடியேன் முத லான ,
ரக்ஷ்யவர்க -– ரக்ஷ்ய பூதருடைய திரளை ,
ஸர்வப்ரகார –- எல்லா ப்ரகாரத்தாலும் ,
ரக்ஷண -–ரஷிக்கை யென்கிற ,
ஏக –- முக்யமான ,
தீஷா – தீஷையுடைய ,
குரும் – ஆசார்யராயுமிருக்கிற ,
ஸ்ரீராமாநுஜா சார்யம் -– தர்ஶந ஸ்தாபநாசார்யரான வெம்பெருமானாரை ,
அநாத்ருத்ய -– அநாதரித்து ,
பரம காருணிக: — ( ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே , அடியே தொடங்கி க்ருஷி பண்ணிக்கொண்டு போருகையாலே ) தனக்கு மேலற்ற காருணிகரான ,
பகவாநேவ – ஆஶ்ரயண ஸௌகர்யாபாதகங்க ளோடு , ஆஶ்ரித கார்யாபாதகங்களோடு வாசியற
ஸமஸ்த கல்யாண குணங்களாலும் பரிபூர்ணனான ஸர்வேஶ்வரன்தானே ,
ஸ்வசரண கமலஸமாஶ் ரிதானாம் -– ( “ வணங்க வைத்த கரணமிவை “ என்னுமவர் வேண்டாதபடி
“ விசித்ரா தேஹ ஸம்பத்திரீஶ்வராய நிவேதிதும் “ என்று ஶாஸ்த்ரத்தாலறிந்து தம் திருவடித் தாமரைகளை ஆஶ்ரயித்தவர்களான ,
அஸ்மாகம் –- நமக்கு ,
ஸ்வப்ராப்திரூபபலம் –- தன்னுடைய ப்ராப்தியாகிற பரம்புருஷார்த் தத்தை ,
ப்ரயச்சதீதி — தருகிறானென்று ,
ஸ்வமதேந — ( அஹங்கார தூஷிதமான ) ஸ்வாபீப்ராயத்தாலே ,
விசிந்த்ய –- ஆலோசித்து ,
வர்த்த மாநாநாம் -– அந் நிலையில் நின்றும் பேராதவர்களாயும் ,
தத்வஜ்ஞாந லவலேஸ தேஸாதிகாநாம் —
தத்வஜ்ஞாந –- வேதாந்த ஜ்ஞாநத்தினுடைய,
லவலேஸ -– ஏகதேஶத்தில் அல்ப பாகமாவது நடையாடுகிற ,
தேஶ — ப்ரதேஶத்தை ,
அதிகாநாம் – அதிக்ரமித்து ( அதாவது அந்த ஜ்ஞாந மாத்ரமேயன்றிக்கே
தத்வ ஜ்ஞாநமென்பதொன்றுண் டென்றிருக்குமவர்கள் வஸிக்கும் ப்ரதேஶத்தையும் கூடவறியாமல் ) இருக்கிறவர்களாயும் ,
( “ பரஞ்சோதிரூப ஸம்பத்ய “ இத்யாதி ப்ரகாரமாக ஆவிர்பூதஸ்வரூப னான வாத்மாவுக்கு ஶேஷத்வமே ஸ்வரூபமாய்
அது தான் ததீய பர்யந்த மாயன்றி நில்லாதென்கிறவிதுவே வேதாந்த ஜ்ஞாநத்தினுடைய உள்கருத் தாய்
அந்த ததீயருடைய முகமலர்த்திக்குறுப்பாக வாசார்ய ஶேஷத்வம் ராகப்ராப்தமாய் தன்னடையே வருகிறதாகையாலே ,
ஆசார்யத்வ பூர்த்தி யுள்ள வெம்பெருமானாரை யனாதரித்தவர்களுடைய தத்வ ஜ்ஞாநம்
அஸத்கல்பமாகவேயிருக்குமென்று கருத்து )
துரபிமாந ஸஹக்ருத பரப்ராமக வ்ருத்தாநாம் — ( இப்படி தத்வயாதாத்ம்ய ஜ்ஞாநகந்தமே யில்லாதிருந்தாலும் )
துர்மாநத்தை யுள்கொண்டு , தம்மைப் பிறர் காணில் “ இந்தளத்தில் தாமரைபோலே யிவரும் சிலரேயென்று மோஹிக்கும்படி ,
பரமஸாத்விகருடைய வநுஷ்டாநத்தை யபிநயிக்குமவர்களாயும் ;
ரூபவேஷதாரிணாம் -– ( “ ஆக்ருதிமத்வச்சரணாரவிந்த ப்ரேம “ என்கிற தற்கு நேரே எதிர்தட்டாக )
க்ருத்ரிமமான ஸ்ரீவைஷ்ணவரூப வேஷங்களை யுடையவர்களாயும் ,
வயமேவ + மந்யமாநாநாம் —
வயமேவ – நாங்களே,
ஸ்ரீவைஷ்ணவா இதி -– வைஷ்ணவாக்ரேசரரென்று ,
ஸ்வமதேந -– அஹங் கார க்ரஸ்தமான தம்முடைய வபிப்ராயத்தாலே ,
ஆத்மாநம் -– தங்களை,
பஹுமந்யமாநாநாம் -– ( “ அமர்யாத: க்ஷஊத்ர: “ இத்யாதிக்கு நேரே எதிர் தட்டாக )
போரப் பொலியக் கொண்டாடிக் கொள்ளு மவர்களாயுமிருக்கிற ,
சேதநாநாம் -– சேதநர்களுக்கு , ( இவர்களை அசேதநர் என்னவேண்டியிரு க்க , “ சேதநாநாம் “ என்றது
அமங்கள வாரத்தை , மங்களவாரமென்றாப் போலே )
பகவான் -– அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைக தானனாய் ,
புருஷோத்தம: — “ யஸ்மாத் க்ஷரமதீதோஹ மக்ஷராதபிசோத்தம: |
அதோ ஸ்ரீமந்நாராயண: அஸ்மத்குல ஸ்வாமிநோ பகவத: ஸ்ரீமத்ராமாநுஜ குரோ:சரணயுகள
ஸம்பந்தராஹித்யம் ஹ்ருதிநிதாய கதாசிதபி ஸ்வப்ராப்திரூப மோக்ஷ:பலமகுர்வாண: ,
யாவதாத்ம பாவி ஸம்ஸார நிரயகர்த்தே
“ ஷிபாம்யஜஸ்ர “ மிதி வதன் நிஷேப்ய , கதாசிதபி தான் ஹ்ருதாநகணயன் ,
ராமாநுஜகுரு க்ருபாபிமாநாந்த் தர்பூத ஸாத்விக ஜநேஷு ஸ்மிலோகே வேதேச ப்ரதித: புருஷோத்தம: “ என்கிறபடியே
க்ஷர ஶப்த வாச்யரான பக்தசேதநரென்ன ,
அக்ஷர ஶப்தவாச்யரான முக்தசேதநரென்ன
இவர்களில் காட்டில் விலக்ஷணனாகையாலே புருஷோத்தமனென்று ப்ரஸித்தனாயிருக்கிற , ஸ்ரீமந்நாராயண: — ஸ்ரீய:பதியானவன் ,
அபார காருண்ய + நிதிரபி ,
அபார –- பாரமில்லாத ,
காருண்ய – ( “ க்ருபா காப்யுபஜாயதே “ என்கிறபடியே , ஸம்ஸாரி சேதநருடைய உஜ்ஜீவநத்துக்கு ஹேதுபூதமான ) காருண்யமென்ன ,
ஔதார்ய “ சேரும் கொடை “ என்கிற உதாரத்வமென்ன ,
வாத்ஸல்ய -– தோஷ போக்யத்வமென்ன ,
ஸௌஶீல்யதன் — பெருமை பாராதே தாழ்ந்தார்களோடு புரையறக்கலக்கும் ஸ்வபாவமென்ன , இவற்றுக்கு ,
ஏக –- அத்விதீயனான ,
நிதிரபி – நிவாச ஸ்தான பூதனாயிருந்தாலும் ,
அஸ்மத் குல ஸ்வாமிந: + ஹ்ருதிநிதாய —
அஸ்மத் குல ஸ்வாமிந: — “ ந: குலபதே: “ என்கிறபடியே அடியேனுடைய குலத்துக்கு ஸ்வாமியாய் ,
பகவத: ( நம்முடைய உஜ்ஜீவநத்துக்கு வேண்டும் கைமுதல்களான ) ஸர்வ கல்யாண குணங்களையும் ,
பரிபூர்ண ஜ்ஞாநத்தையும் உடையராய் ,
ஸ்ரீமத் ராமாநுஜகுரோ: — ( “ ஆசார்ய பதமென்று தனியேயொரு பதமுண்டு , அதுள்ளது எம்பெருமானார்க்கே , என்கிற )
நிலை நின்ற ஆசார்ய பத ஸம்பத்தை யுடையருமான வெம்பெருமானாருடைய ,
சரணயுகள ஸம்பந்த ராஹித்யம் —
சரணயுகள -– இரண்டு திருவடிகளில் ,
ஸம்பந்த ராஹித்யம் -– ஆஶ்ரயண ரூப ஸம்பந்தமில்லாமையை ,
ஹ்ருதி –- தன் திருவுள்ளத்திலே ,
நிதாய -– வைத்து ,
கதாசிதபி –- ஒருக் காலமும் ,
ஸ்வ:ப்ராப்தி ரூப மோக்ஷ:பலம் — தன்னுடைய ப்ராப்தியா கிற மோக்ஷ:பலத்தை ,
அகுர்வாண: — செய்து கொடுக்காமல் ,
யாவதாத்ம பாவி + நிஷேப்ய —
யாவதாத்ம பாவி – ஆத்ம ஸத்தை யுள்ளதனையும் ,
ஸம்ஸார நிரயகர்த்தே –- ஸம்ஸாரமாகிற நரக கூபத்திலே “ ஷிபாம்ய ஜஸ்ர “ மிதிவதன் , நிஷேப்ய -– அஹங்காரம் , பலம் , தர்ப்பம் , காமம் , க்ரோதம் ச ஸம்சிதா: “ என்று தொடங்கி
“ தாநஹம் த்விஷத: க்ரூரான் ஸம்ஸாரேஷு நராதமான் க்ஷஇபாம்யஜஸ்ரம் “ என்று
அஹங்காராதி தோஷ துஷ்டரான புருஷாதமரை ஜந்ம மரணாதி ரூபேண சுழன்று வருகிற ஸம்ஸாரத்தில்
க்ரூர ஸ்வபாவமுள்ளவராய் பிறக்கும் படியாகவே

நித்ய தத்தத்ருஷ்டி: தேப்யஸ்ஸர்வஸ்வதாந கரணேபி கிமபி ந தத்தமே வேத்யத்யாப்ய பரிதுஷ்ட: ,
ராமாநுஜகுரு சரணயுகள ப்ராவண்ய நைரந்தர்ய ப்ரதாநைக நிஷ்ணாதோ வர்த்ததே “ என்று
எம்பெருமானாரோடு ஸம்பந்தமில்லாதவர்களுக்கு , ஸர்வ ப்ரகாரத்தாலும் ஈஶ்வரன் ஸ்வ ப்ராப்தி பண்ணிக் கொடாமல் ,
யாவதாத்மபாவி ஸம்ஸாரமாகிற நரக குழியிலே தள்ளியிட்டுவைத்து ,
திருவுள்ளத் தாலும் அவர்களை நினையா நின்றருளிச் செய்தார் இறே .
ஆகையால் ஸர்வ ப்ரகாரத்தாலும் , உஜ்ஜீவிக்க வேணுமென்றும் நினைவுடைய வன் ,
அசரண்ய சரண்யராய் , பரம காருணிகராய் , பரமோதாரரான வெம்பெருமானாருடைய
வபிமாநமே , உத்தாரகமென்றறுதியிட்டு , ததேகநிஷ்டனாய்
“ தேவு மற்று அறியேன் “ என்று ஶேஷித்வ , சரண் யத்வ ப்ராப்யத்வங்களை
யெம்பெருமானார் பக்கலிலே யறுதியிட்டு ,நிக்ரஹித்துத் தள்ளி விடுவேனென்றாப்போலே சொல்லிக்கொண்டே தள்ளி விட்டு ,
கதாசிதபி — ஒருக் காலமும் ,
தான்— அவர்களை ,
ஹ்ருதா — திருவுள்ளத்தால் ,
ந கணயன் –- நினையாமல் ,
ராமாநுஜகுரு + தத்த த்ருஷ்டி:–
ராமாநுஜகுரு -– அஜ்ஞாநி வர்த்தகரான வெம்பெருமானாருடைய ,
க்ருபாபி மாநாந்தர்பூத நிர்ஹேதுக க்ருபையால் வந்த வபிமாநத்தி லொதுங்கின ,
ஸாத்விக ஜநேஷு –- பரம ஸாத்விகரான ஸ்ரீவைஷ்ணவர்க ளிடத்திலே ,
நித்ய தத்த த்ருஷ்டி: — வைத்த கண் வாங்காமல் பூர்ண கடாக்ஷமுடையனாயக் கொண்டு ,
தேப்யஸ்ஸர்வஸ்வ + பரிதுஷ்ட: —–
தேப்ய: — அவர்களுக்கு ,
ஸர்வஸ்தாந கரணேபி -– உபயவிபூதியோடு தன்னையே கொடுத்திருந்தாலும் ,
கிமபி ந தத்தமேவேதி -– ( “ அஸ்மை ந கிஞ்சிதுசிதம் க்ருதம் “ என்னாப் போலே ) இவர்களுக்குத் தகுதியாக
ஒன்றும் செய்யப் பெற்றிலோமே ? என்று ,
அத்யாப்யபரிதுஷ்ட: — இன்னமும் குறைவாளனாய் ,
ராமாநுஜா + வர்த்ததே —
ராமாநுஜகுரு – அப்படிப்பட்ட வெம்பெருமானாருடைய ,
சரண யுகள –- இரண்டு திருவடிகளிலும் ( உண்டாயிருக்கிற ) ,
ப்ராவண்ய -– நிரதிசய ப்ரீதிக்கு ,
நைரந்தர்ய –- தைலதாரா துல்யமான அவிச்சேதத்தை ,
ப்ரதான கொடுக் கையில் ,
ஏக -– அத்விதீயனான ,
நிஷ்ணாத: — உள் புக்காராயுமவனாய் ( அதாவது ஆண்களையும் பெண்ணுடை யுடுக்கப்பண்ணும்
வைர உறுக்கா கையாலே , இவ்வதிகாரிக்கு நித்ய சத்ருவான தன்னுடைய நிரதிசய
ஸௌந்தர்யத்தில் ஆழங்கால்பட்டு , இரு கரையராகாமல் நோக்கிக் கொண்டு போறுமவனாய் )
வர்த்ததே -– இதுவே பணியாக விருக்கிறான் , என்று எம்பார் அருளிச்செய்தாரென்கை .

சரமோபாய தாத்பர்ய ப்ரமாண வசநாயா: |

பூர்வாசார்ய லஸத்ஸூக்தீரூபஜீவ்ய விசோதிதா: ||.

பேற்றுக்குடலாக ப்ரதம பர்வத்தில் நெஞ்சு தாழ்ந்து , இருகரை யனாய் யாதாயாதம் பண்ணிய லமாவாதே ,
எம்பெருமானார் அபிமாநத்திலே ஓதுங்கி , நமக்குப் பேற்றில் கண்ணழிவில்லை யென்று நெஞ்சில் தேற்றமுடையவனாய் ,
எம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்ய சீமா பூமிகளான பரம ஸாத்விக வர்க்கத்துடன் ,
“ போதயந்த: பரஸ் பரம் “ பண்ணிக்கொண்டு ,
பரஸம்ருத்யைக ப்ரயோஜனனாய் ,
எம் பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யமுடையாரைக் கண்டால் , இந்தளத்திலே தாமரைப் பூத்தாப்போலே ,
இருள் தரு மாஞா லமான விக்கொடு உலகத்திலே , இங்ஙனேயும் சிலருண்டாகப் பெறுவதே யென்று
ஷர்ஷ புலகித ஶரீரனாய் , யாவச் சரீரபாதம் , த்ரிவித கரணத் தாலும் , ஒருபடிப்பட ஸ்வரூபத்தை நோக்கிக்கொண்டு .,
எம்பெருமா னாருடைய , திருநாமோச்சாரணமில்லாவிடில் நாக்கு வற்றும்படி யான நிலையோடு பொருந்தி ,
மநஸ்ஸை ஸாவதாநமாய்ப் பண்ணிக் கொண்டு , ஸ்வரூபாநுகுணமாக வர்த்திக்க வேணும் .

சரமோபாய தாத்பர்யம் ஸமாப்தம்

சரமோபாய தாத்பர்யம் தேவராஜகுரூதிதம் |

ஸம்ப்ரதாயாநுரோதேந யதாமதி விசோதிதம் ||

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஜிதந்தே ஸ்தோத்ரம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 27, 2022

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூனவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா

———–

அவதாரிகை –
ஜிதந்தே -யாவது -ருக் வேத கிலம் .
தத்வ ப்ரதிபாதந பரமான ஸ்ரீ புருஷ ஸூக்தம் சர்வ ஸ்ருதிகளிலும்
ஓதிப் போருமா போலே -இதுவும் –
ஸ்ரீ சாஸ்திரங்களிலும்
இதிஹாச புராணங்களிலும்
மஹா மந்த்ரம் என்று -திரு மந்த்ரத்தோபாதி -பரம ரஹஸ்யமாக சொல்லிப் போருமது ஓன்று –

வேத அஷர ராசியைப் பௌருஷேயமான இதிஹாச புராணங்களிலே
எழுதிப் படுத்துப் போருவான் என் என்னில்
கிலமாகிறது அப்ரஹதம் ஸ்தானம் –
ஸூத்ர காரர்கள் கில (கிலம் -பகுதி என்றபடி ) சஹிதமாக தாங்கள் அத்யயனம் பண்ணிப் போந்தவர்கள் ஆகையாலே
ஸ்மார்த்த விதானங்களிலே மந்த்ரமாக விநியோகித்துப் போரா நின்றார்கள் இறே-
இப்படி இதிஹாச புராணங்களிலே ஸ்ரீ சாஸ்த்ரத்திலே
ஜிதந்தே இதி மந்த்ரேண-என்று -மந்த்ரமாக விநியோகித்துப் போருமது ஓன்று –

ஸ்வேதத் தீப வாசிகள் ஷீராப்தி நாதனுடைய சௌந்த்ர்யாதிகளிலே
தோற்று -ஈடுபட்டுச் சொல்லும் ஸ்தோத்ரம் –

இதுக்கு ஸ்தோத்ரத்வமும் ஸ்தவ ப்ரியனுக்கு ப்ரிய தமத்வமாகை –

ப்ரஹ்மாதிகளுக்கு துஷ் ப்ராபமான ஸ்தலத்திலே தோன்றின இது
இதிஹாச புராணங்களிலே எழுதிப் படிக்கும்படி ஸூலபமான படி என் என்னில்
இம் மந்த்ரத்துக்கு ப்ரதிபாத்யமான ஷீராப்தி நாதனைத் திருவடித் தொழ ஆதரித்து
ஸ்ரீ நாரத பகவான் ஸ்வேத த்வீபத்திலே சென்ற வளவிலே
ஏக தத்வித த்ரிதர்கள் தபஸ் பண்ணிக் கொண்டு இருக்க
இவைகளுக்கும் கிட்ட ஒண்ணாத விஷயத்தை நம்மால் காண முடியாது -என்று மீண்டு
அவர்களைக் குறித்து -எனக்குச் செய்ய அடுப்பது என் -என்று கேட்க

இத் திரு மாளிக்கைக்கு உள்ளே ஸ்வேத த்வீப வாசிகள்
ஷீராப்தி நாதனைக் கண்டு பண்ணும் ஸ்தோத்ரம்
நெடு நாளே நாங்கள் தபஸ் பண்ணுகிறோம் ஆகையால் ஜ்ஞாதவ்யம் ஆயிற்று –
எங்கள் பக்கல் இத்தை லபித்தது அனுசந்தி -என்ன
அவனும் அவர்கள் பக்கலிலே ஜிதந்தே ஸ்தோத்ரத்தை லபித்துப் போரா நிற்க-

சயந்தம் -என்கிற பர்வதத்திலே பகவத் உபாசனம் பண்ணுகிற ப்ரஹ்மாவை வந்து அனுவர்த்தித்து
பிறந்த வ்ருத்தாந்தத்தை அவனுக்கு விஜ்ஞாபிக்க
எனக்கு அந்த ஸ்தோத்ரத்தைச் சொல் – என்று
ஸ்ரீ நாரத பகவான் பக்கலிலே க்ரஹித்தான் குடும்பி –

அவன் பக்கலிலே புக்கதாகையாலே
இதிஹாச புராணங்களிலே எழுதப் பட்டு
பகவத் பரராய் இருப்பார் எல்லார்க்கும் லபிக்கும்படி ஸூலபம் ஆயிற்று –
இது ஜிதந்தேயினுடைய-திரு அவதாரம் –

இது தன்னுடைய உள்வாயை அனுசந்தித்தால்
ப்ரபத்திக்கு வ்யாக்யானமாய் இருக்கிறது –
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டையும் சொல்லுகிறது –
ப்ரபத்திக்கு அதிகாரிகள் அஜ்ஞரும் சர்வஜ்ஞரும் பக்தி பரவசரும் -என்று த்ரிவிதர் –
என்று பட்டர் அருளிச் செய்தார் இறே-

அவித்யாதோ தேவே பரிப்ருட தயா வா விதிதயா ஸ்வ பக்தோ பூம்நா
வா ஜகதி கதி மன்யா மவிதஷாம் கதிர் கம்யஸ்சாசௌ ஹரிரித
ஜிதந்தாஹ் வயமநோ ரஹச்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவான் சௌநக முநி-பட்டர்

அஜ்ஞன் ஆகிறான் – பகவல் லாபத்துக்குத் தன் பக்கலிலே ஜ்ஞான சக்த்யாதிகள் இல்லாதவன் –
சர்வஜ்ஞன் ஆகிறான் – தேச கால வஸ்துக்களாலே பரிச்சேதிக்க ஒண்ணாத வைபவத்தை யுடையவன்
ஈஸ்வரன் என்று இருக்கையாலே அநந்ய சாத்யன் -என்று இருக்குமவன் –
பக்தி பரவசன் ஆகிறான் -ஜ்ஞான சக்த்யாதிகள் உண்டாய் இருக்கச் செய்தேயும் அடைவுபட அனுஷ்டிக்க மாட்டாதவன் –
இவர்கள் மூவரும் பகவத் விஷயம் ஒழிய வேறு உபாயம் உண்டு என்று அறியாதவர்கள் –
இவர்களுக்கு ப்ராபகனுமாய் ப்ராப்யனுமாய் இருக்கும் சர்வேஸ்வரன் -என்று
ஜிதந்தே -என்று பேரை உடைத்தான மந்திர ரஹஸ்யத்தை
சர்வஜ்ஞனான சௌநக பகவான் வியாக்யானம் பண்ணப் பெறுவதே -என்கிறார்-பட்டர்

ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் –என்றும் -ஸ்ரீ விஷ்ணு தத்வம்
ஆத்மா தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச சதா ஸ்மர-என்றும் -ஸ்ரீ விஷ்ணு தத்வம் –
சொல்லுகிறபடியே -த்வயத்துக்கு அதிகாரி யானவன் ஈஸ்வரனுக்கே அனந்யார்ஹ சேஷ பூதன் ஆவான் இறே-

இப்படிப் பட்ட சேஷத்வத்தை உடைய இவ்வாத்மாக்கள்–அநாதியான பிரகிருதி சம்பந்தத்தாலே-அறியாதே –
ஈஸ்வரனுடைய ஸ்வாமித்வ ஸ்வா தந்த்ர்யங்களை-தங்கள் தலையிலே ஏறிட்டுக் கொண்டு ஆத்ம அபஹாரிகளாய் வர்த்திப்பார்கள் –

ஆத்ம அபஹாரம் ஆவது -அஹங்கார மமகாரங்கள் –
த்வ யஷரஸ்து பவேன் ம்ருத்யு த்ரய அக்ஷரம் ப்ரஹ்மண பதம் -என்றும்
மமேதி த்வ யஷரோ ம்ருத்யு-ந மம -சாஸ்வதம் -என்றும் -சொல்லுகிறபடியே
யானே என்னை அறிய கிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -என்று இறே அபியுக்தர் வார்த்தையும்

பாபங்களில் தலையான பாபமும் இவ்வாதம அபஹாரமே-
யோ அந்யதா சாந்த மாத்மாநம் -இத்யாதிகளில் ஸ்புடம் –
பாபத்துக்கு பிராயச் சித்தம் -இவ்வாத்மா பகவச் சேஷம் என்றால் விவாதம் பண்ணாது இருக்கை –
தேன சேத விவாதஸ்தே-என்றும்-(மனுபகவான் கங்கை ஸ்நானம் -பற்றிய வ்ருத்தாந்தம்-நம்பி தீர்த்தம் செய்தாலே லாபம்- )
உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்ம்மினே – திருவாய் -1-2-1-என்றும்
ஷேத்ரஜ்ஞஸ்ய ஈஸ்வர ஜ்ஞாநாத் வி ஸூத்தி பரமா மதா-என்றும் சொல்லக் கடவது இறே –

ஈஸ்வரன்- இப்படி அஹங்கார மமகார க்ரஸ்தராய் -சப்தாதி விஷய பிரவணராய்-அதிலே
பரமேஸ்வர சம்ஜ்ஞோ அஜ்ஞ -கிமந்யோ மய்ய வஸ்திதே
ததா அபி மர்த்து காமஸ்த்வம் ப்ரப்ரவீஷி புன புன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-23-என்றும்
த்விதா பஜ்யேயமப்யேவம் ந நமேயம் து கஸ்ய சித் -யுத்த -36-11-என்று இருக்கும்
ஹிரண்ய ராவணாதிகளைப் போலே தன்னோடு எதிரம்பு கோத்து நிற்கிற ஆத்மாக்களைப் பார்த்தருளி
இவை சாஸ்திர மார்க்கத்தாலே திருத்த ஒருப்பட்டது அல்ல
இவர்கள் உடைய விஷய ப்ராவண்யமே பற்றாசாக நம்முடைய
அழகுகளையும் சீலாதி குணங்களையும் காட்டித் திருத்துவோம் -என்று
வழி இட்டு -பிரதமத்தில் ருசி ஜனகனாய்
ருசி பிறந்தார்க்கு உபாயமுமாய்
அதிலே நிஷ்டர் ஆனவருக்கு ப்ராப்யனுமாய் இருக்கும் படியைச் சொல்லுகிறது –
இப்பிரபந்தம் –

ப்ராப்ய ப்ராபகங்களை முதல் ஸ்லோகத்தாலே சங்க்ரஹமாகச் சொல்லி
மேலில் ஸ்லோகங்களாலே விஸ்தரிக்கிறது -என்று பட்டர் நிர்வாஹம் –

முதல் இரண்டு ஸ்லோகங்களாலே-பிராப்ய பிராபகங்களைச் சொல்லி –
மேலில் ஸ்லோகங்களாலே அதுக்கு அடியான சரண்யதையைச் சொல்லுகிறதாகவுமாம்-

சரண்யதையை முதலில் சொல்லி உபாய உபேயங்களை சொல்ல பிராப்தமாய் இருக்க
பின்னே சரண்யதையைச் சொல்லுவான் என் -என்னில்
முனியே நான் முகனிலே -10-10-திருவாணை இட்டு -பின்பு அது பெறா வாணை யல்லாமை
சாதித்தால் போலே இது -என்று திரு நறையூர் அரையர் நிர்வாஹம் –

———————————————

ஸ்தோத்ரம் -1- அவதாரிகை –

முதல் ஸ்லோகத்தாலே –
ப்ராப்ய நிஷ்கர்ஷ பர்யந்தமாக
இவன் பிரார்த்திக்கும் படியாக
ஈஸ்வரன் தன் அழகாலே தோற்ப்பித்துக் கொண்ட படியைச் சொல்கிறது-

ஜிதந்தே புண்டரீ காஷா ! நமஸ்தே விஸ்வ பாவந !
நமஸ்தே அஸ்து ஹ்ருஷீ கேஸ ! மஹா புருஷ ! பூர்வஜ !

ஜிதந்தே –
யாதானும் பற்றி நீங்கும் விரதம் -திருவிருத்தம் -95- என்கிறபடியே
விஷயாந்தரங்களை பற்றி
எம்பெருமான் முகத்தில் விழியேன் -என்று இவன் விரதம் கொண்டு இருக்க –
ஈஸ்வரன் -தான் ஒட்டு வந்து -திருவாய் -1-7-7-என்கிறபடியே
விஷயாந்தரங்களில் துவக்கு அறுத்து
ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கி
அவசியம் உம்மைக் கொண்டு அல்லது விடேன் -என்று விரதம் கொண்டு
யாத்ருச்சிகமாக இவன் விஷயாந்தரங்களில் நெகிழ நின்ற அளவிலே
இருந்தான் கண்டு கொண்டு -திருவாய் -8-7-2-என்கிறபடியே
தன் அழகைக் காட்டி ஜெயித்து
இவன் தோற்றமை கண்டு ப்ரீதனாய்
தோற்றார் ஆர் -என்று கேட்டருள
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7-என்கிறபடியே
ஜெயஸ்தவ-என்கிறான் –
த்ருதீ யார்த்தே ஷஷ்டியாய் உன்னாலே ஜெயம் -என்னுதல் –
பாவே நிஷ்டையாய் உன்னுடைய ஜெயம் -என்னுதல்
பந்தம் அடியான சங்கல்பம் அவனது
அதின் சன்னிதியாலே கர்மம் அடியாக வந்த இவன் சங்கல்பம் ஜீவிக்கவோ –
சர்வ சக்தி சங்கல்பத்தை விஷய சபலனுடைய சங்கல்பம் அழிக்கவோ
நாம் என் கொண்டு உம்மை வெல்ல –

புண்டரீ காஷா ! –
அழகிய கண்கள் ஆகிற ப்ரஹ்மாஸ்த்ரத்தை உடைய உனக்கு வெல்ல ஒண்ணாதது உண்டோ
சேதனர் சேதனங்களை அகப்படுத்துவது கண் வழியாலே யாகையாலே
திருக் கண்களாலே ஜெயித்தாய் -என்கை-
ஸ்வ தந்த்ரனை முறையைக் காட்டி மீட்கலாம்
விஷய ப்ரவணனை மீட்க அழகு அல்லது பரிகரம் உண்டோ –

நமஸ்தே
ஆரதை ஆர் வென்றார் -என்னில்
ஆராய்ந்த வாறே உன்னதை நான் அபஹரிக்க
என்னை ஜெயித்து
நீயே உன்னதைக் கைக் கொண்டாயாய் இருந்தது –
அஹம் அபி ந மம பகவத ஏவாஹம் அஸ்மி -ஸ்ரீ விஷ்ணு ஷடக்ஷரி-என்னக் கடவது இறே –

நமஸ்தே
நமஸ் சப்தம் சரண பர்யாயம் ஆகையால் -ப்ரபதன் -என்னவுமாம்-
எங்கனே என்னில் கண் அழகிலே ஈடுபட்டு மிடுக்கு அறுகையாலே
அசக்தாதிகாரமான உபாயத்தைப் பற்றுகிறான்
பிராப்யத்தில் ருசி பிறந்தால் அத்தை லபிக்கும் சாதனம் இறே அனந்தரம் தேட்டம் -அத்தைச் சொல்லுகிறது –

நமஸ்தே
விஷயாந்தரங்களில் துவக்கை அறுத்த உபகாரத்துக்கு ப்ரத்யுபகாரமாக
என் ஆத்மாவைத் தந்தேன் -என்று ஆத்ம சமர்ப்பணத்தை சொல்லுகிறது -என்றுமாம் –
எனதாவி தந்து ஒழிந்தேன் -திருவாய் -2-3-4-என்னுமா போலே
இது வகைப் பொருள் –

நமஸ்தே அஸ்து –
அப்படி எனக்காகை தவிர்ந்து
உனக்கே யாம்படி பண்ணி அருள வேணும் –
மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -திருவாய் -10-10-6–என்னுமா போலே –
ருசியைப் பிறப்பித்து
தன் பேறாக உபகரியா நிற்க
மேல் விழுந்து அர்த்திப்பான் -என் -என்னில்
ருசியை விளைப்பித்து
ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கினவாறே ஸ்வரூப அநு குணமான அடிமையைப் பிரார்த்திக்கிறான் –

கூனி கூன் நிமிர்ந்து யோக்யதை பெற்றவாறே
வஸ்த்ரே பிரக்ருஹ்ய கோவிந்த மம கேஹம் வ்ரஜேதி வை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-11-என்று
மடி பிடித்தால் போலே இங்கும்
ஆத்மாவினுடைய கோணாகையாலே- கோண் -கூன் -வளைவு –
கண் அழகாலே நிமிர்த்துக் கொண்டான் -என்கை –
அஹங்கார மமகாரம் ஆகிற கோண் போய் பாரதந்த்ர்யம் பிரகாசித்தால் இறே
கைங்கர்ய ரசத்துக்கு யோக்யம் ஆவது –
ஸ்ரீ மாலாகாரரை அழகாலே ருசியைப் பிறப்பித்து
புன புன பரணம் யாஹ மாலாகாரோ அதி விஸ்மித-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-23-என்று
திருவடிகளிலே விழும்படி பண்ணி அடிமை கொண்டான் இறே-

விஸ்வ பாவந ! –
மேல் அபேஷிதம் செய்கைக்கு ப்ராப்தி சொல்லுகிறது –
விஸ்வம் பாவயதீதி விஸ்வ பாவந-
உரு மாய்ந்து கிடந்த இந்த ஜகத்தை உண்டாக்கினவன் அல்லையோ –
இல்லாததை உண்டாக்கினவனுக்கு
உள்ளத்துக்கு ஒரு குணம் விளைப்பிக்கைக்குப் பணி உண்டோ –
முமுஷூ ஸிஸ்ருஷ்யா வன்றோ பகவத் ஸ்ருஷ்டி –

ஹ்ருஷீ கேஸ ! –
ஸ்ருஷ்டி காலத்தில் விலக்கும் பரிகரம் இல்லை –
இப்போது உன் இந்த்ரியங்களைத் திருத்த ஒண்ணாமையாலே
விலக்கும் பரிகரம் உண்டே -என்னில்
அவையும் நீ இட்ட வழக்கு அன்றோ
ஹ்ருஷீகா ணீந்த்ரியாண் யா ஹூஸ் தேஷாமீஸோ யதோ பவான் -ஹ்ருஷீ கேச இதி க்யாத -என்றும்
இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான்-திருவாய் -2-7-10-என்றும் சொல்லக் கடவது இறே –
இந்த்ரியங்களுக்கு என்னோடு உண்டான சம்பந்தம் கர்மோபாதிகம் –
யஸ் சஷூஷி திஷ்டன் –வாசி திஷ்டன் -என்கிறபடியே- நிருபாதிக சம்பந்தம் உன் பாடே யன்றோ –

மஹா புருஷ !-
சக்தி உண்டானாலும் வல்லது எல்லாம் செய்வார் உண்டோ -என்னில்
புருஷ
புரு பஹூ ஸநோதீதி -புருஷ -என்னும்படியே
மறித்து உன்பாடு வர வேண்டாதபடி அபேஷிதங்களை மிகவும் கொடுக்க வல்ல பரமோதாரன் அல்லையோ –
அன்றிக்கே
உன்னையும் உன் உடைமையையும் -பக்தாநாம்-(மேலே ஐந்தாம் ஸ்லோகத்தில் இத்தை விவரிப்பார்) -என்கிறபடியே
அர்த்தியாய்க் கொடுக்கை –
ஸ சர்வாநர்த்தி நோ த்ருஷ்ட்வா ஸமேத்ய பிரதி நந்த்ய ஸ -அயோத்யா -16-27-என்னக் கடவது இறே-

பூர்வஜ !
கீழ்ச் சொன்ன ஔதார்யம் தன்னை அனுஷ்டானத்தாலே விவரிக்கிறது –
ஸ்ருஷ்டியோடே-அவதாரத்தோடே வாசி அற இழவு பேறு தொடக்கமான எல்லாத்துக்கும் முற்பாடன் அல்லையோ –
பஹூஸ்யாம் -என்று பிரயோஜனமும் அபிமானமும் தன்னதானவோ பாதி
ஸ ஏகாகீ ந ரமேத-என்னும் இழவும் தன்னதாகச் சொல்லிற்று இறே –
அவதாரத்திலும் -ஸ்ருஷ்டமான ஜகத்திலே நம்மை அபிமுகிகளாகக் கடவார் -என்னும் நோயாசையாலே
சம்பவாம் யாத்ம மாயயா – -என்று ஸ்வ இச்சையாலேயாய் இருப்பது –
ஸ ஹி தேவை ரர்த்தி தோஜ்ஜஞே -என்று தேவர்கள் உடைய அர்த்தித்வம் இல்லையோ -என்னில்
அது வியாஜ்யம் -சாது பரித்ராணமே பிரயோஜனம் –
பரித்ராணாம் சாது நாம் -என்று தொடங்கி
தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்றான் இறே
அர்ஜுனன் உடைய யுத்த பரோத்ஸாஹந வ்யாஜமாக
ஸ்வ விஷய பக்தி யோகத்தை அவதரிப்பித்தாப் போலே –
உபாய உபேயதவே ததிஹ தவ தத்தவம் -என்று
உபேய பாதததோபாதி உபாய பாவமும் நித்யம் இறே –
ஒருத்தன் ஸ்வீகரித்த போதாக உபாயமாகிறான் அன்று இறே –
போக வேளையிலும் பஞ்ச லஷம் குடியில் பெண்களில் காட்டில் தன்னுடைய முற்பாடு தோற்றுகைக்காக இறே
திருக் குழலை வாய் வைத்து அருளிற்று –
இந்த போகம் தான் அவிச்சின்னமாக வேணும் என்று அபி நிவேசம் பிறந்தவனுக்கு
அப்போது அவிச்சின்ன போக ஸ்தானம் எங்கேயோ தேட வேண்டாத படி
வைகுண்ட பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத் பதி ஆஸ்தே -என்கிறபடியே
நித்ய விபூதியிலே இவனுடைய வரலாறு பார்த்து இருக்கிறான் இறே –

———————————————

ஸ்தோத்ரம் -2- அவதாரிகை –

கீழ் ஸ்லோகத்திலே உபேயத்தை நிர்ணயித்து- தத் சித்த்யர்த்தமாக உபாயத்தை அத்யவசிக்கிறான்-
உபேயத்திலும் தலையான உபேயத்தை லபித்தால் போலே
உபாயத்திலும் தலையான உபாயத்தை லபிக்கப் பெற்ற படி –

புத்திர பசு அந்நாதிகளையே ப்ராப்யம் என்று இருப்பாரும் –
தேவர்களைப் பற்றி ஸ்வர்க்கத்தை லபிக்கையே புருஷார்த்தம் என்று இருப்பாரும்
ஈஸ்வரனைப் பற்றி வைத்து இந்திர பதம் முதலான பதங்களையே புருஷார்த்தம் என்று
அவன் பக்கலிலே லபிக்க இருப்பாருமாய் இருக்கிற சம்சாரத்திலே
சர்வாதிகனாய் உபய விபூதி நாதனாய் இருக்கிற சர்வேஸ்வரன் திருவடிகளிலே
நித்ய கைங்கர்யத்தையே புருஷார்த்தம் என்று இருக்கையாகிற இது ஒருத்தருக்கும் கிட்டவது ஓன்று அன்று இறே –

மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷூ -என்றும்
ஸ மகாத்மா ஸூ துர்லப -என்றும்- அவன் தனக்கும் துர்லபமாய் இறே இருப்பது –

அது போலே -உபாயங்களிலும் வந்தால்
கர்ம யோகாத் யுபாயங்களைப் பற்றுவாரும்
கிம் ஜ்பன் முச்யதே ஜந்துர் ஜன்ம சம்சார பந்த நாத் -என்கிறபடியே திரு நாமங்களைப் பற்றுவாரும்
தேஸோ அயம் சர்வ காம துக் -என்கிறபடியே தேச விசேஷங்களைப் பற்றுவாருமாக -இப்படி
சேதன பேதத்தோபாதி உபாய பேதமும் அசங்க்யாதமாகச் செல்லுகிற -சொல்லுகிற – சம்சாரத்திலே –
ஸூசகமாய் நிர்பயமாய் இருக்கிற சித்த உபாய பரிக்ரஹம் கிடைப்பது ஓன்று அன்று இறே –
அப்படிப் பட்ட உபாய பரிக்ரஹத்தைச் சொல்லுகிறது –

த்வயத்துக்கு வியாக்யானம் பண்ணுகிறதாகில் அதில் க்ரமம் ஒழிய முற்பட
ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுவான் என் என்னில் –
இப்பிராப்யம் தான் இத்தலையில் ருசியால் வந்தது அன்றிக்கே
ருசியே தொடங்கி அத்தலையால் வந்தது ஆகையாலே
முற்பட நிஷ்கர்ஷித்து அனந்தரம் உபாய ஸ்வீகாரத்தைப் பண்ணுகிறான் –

தேவாநாம் தாநவாநாம் ச சாமான்யம் அதி தைவதம்
சர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ–2-

தேவாநாம் தாநவாநாம் ச சாமான்யம் அதி தைவதம் –
என்று இவ் உபாய ஸ்வீகாரத்துக்கு அதிகாரி நியதி இல்லை -என்கிறது
தேவர்கள் ஆகிறார் -ஈஸ்வரனுக்கு அனுகூல கோடியில் உள்ளார் –
தாநவர் -ஆகிறார் ப்ராதி கூல்யத்தில் வ்யவஸிதராய் இருக்குமவர்கள் –
விஷ்ணு பக்தி பரோ தேவோ விபரீதஸ்ததா அஸூர -என்னக் கடவது இறே –
த்வௌ பூதசர்க்கௌ லோகே அஸ்மின் தைவ ஆஸூர ஏவ ச-என்று –
இரண்டுக்கு உள்ளே அந்தர் பூதை இறே ஸ்ருஷ்டி –

சாமான்யம் அதி தைவதம் -சரணத் வந்த்வம்-
சர்வ சாதாரணமான திருவடிகளை –
இத்தால் சம்பந்த சாமான்யத்தைச் சொல்லுகிறது அன்று –
ஆஸ்ரயணீயத்வே சமமாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது
இப்படி விசேஷிககிறது எத்தாலே -என்னில் –
விமுகரான காலத்தில் ஆஸ்ரித விரோதிகள் என்று இட்டு அழியச் செய்யுமவன் ஆகையாலே
அவுணர்க்கு என்றும் சலம் புரிந்து அங்கு அருள் இல்லாத தன்மையாளன் -திரு நெடும் தாண்டகம் -6-என்னக் கடவது இறே –
நிஹீன ஜன்ம குண வ்ருத்தரோடு -இவற்றால் உத்க்ருஷ்டரோடு -வாசி அற எல்லார்க்கும்
ஆதித்யோதயம் போலே எனக்கு என்று பற்றலாம் படியான திருவடிகள் -என்கை –

ராவணன் எச்சிலைத் தின்று வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-
சர்வ லோக சரண்யாய -என்று வழக்குப் பேசி பற்றலாம் படி இறே இருப்பது –
சம அஹம் சர்வ பூதேஷு – என்று இறே சரண்யன் வார்த்தை
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்று
ஆச்ரயண யோக்யமான மனுஷ்ய சாமான்யத்திலே கிருபை மிக்கு இறே இருப்பது –

பர துக்க அஸஹிஷ்ணுத்வம் இறே கிருபை யாவது –
ஆச்ரயண வேளையில் -யதி வா ராவணன் ஸ்வயம் -என்றான் இறே-
எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -என்றும்
பொது நின்ற பொன்னம் கழல் -என்றும் இறே அபியுக்தர் வார்த்தை –

ஸ்ர்வதா –
ப்ராதி கூல்யம் பண்ணுகிற வேளையே யானாலும்
ரஷக அபேஷையே வேண்டுவதாக விஷயீ கரிக்கும் திருவடிகள் –
பாபா நாம் வா –கார்யம் கருண மார்யேண -என்னக் கடவது இறே –
ஈடும் எடுப்புமில் ஈசன் -திருவாய் -1-6-3-என்று ஆழ்வாரும் அருளிச் செய்ததுக்கும் அடி இது விறே –
அநலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய-என்றத்துக்கும் முதல் இதுவே இறே-

சரணம் வ்ரஜாமி –
உபாயமாக அடைகின்றேன்-
கீழ்ச் சொன்ன சர்வாதிகாரத்வம் சித்த உபாயத்தைக் குறித்து -என்கை –
சாதனாந்தரங்கள் அதிக்ருதாதிகாரங்களாய் இறே இருப்பது –
வ்ரஜ–கதௌ -என்கிற கத்யர்த்தம் புத்த்யர்த்தமாய்- அத்யவசிக்கிறேன் -என்றபடி –

இத்தால் சரண்யன் சந்நிதி வேண்டா -ப்ராப்தியே அமையும் -என்கை-
ஆசார்ய ருசி பரிக்ருஹீதமான வாக்யத்தில்-த்வயத்தில்- க்ரியா பதத்தில்-ப்ரபத்யே -வர்த்தமான நிர்த்தேசத்துக்கும் அடி –
வ்ரஜாமி -என்கிற வர்த்தமான நிர்த்தேசமே –
அதை கௌணமாக உபதேசித்துப் போருகிறதும் அவனுடைய சக்ருதேவ பிரபன்னாய -என்கிற வாக்யத்தைப் பற்ற
ஆக சக்ருத் விதாநம்- ஈஸ்வர விஷயீகாரத்தைப் பற்ற –
ப்ராப்ய ருசியாலே ப்ராப்தி அளவும் செல்ல அனுவர்த்திக்க கடவது ராகத்தாலே –

வ்ரஜாமி –
வ்ரீஹி ஸ்வீகாரம்-தேவதா முத்திஸ்ய த்ரவ்ய த்யாக ரூபமான யாகமும் அன்றிக்கே
தத் அங்கமான ப்ரயாஜாதிகளும் அன்றிக்கே இருக்கிறாப் போலே-
உபாய ஸ்வீகாரமும் உபாயம் அன்று
அதுக்கு அங்கமும் அன்றிக்கே -அதிகாரி விசேஷணமாய்க் கிடக்கிறது –

தவ –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் -என்றும்
கபோதா வானர ஸ்ரேஷ்ட கிம் புநர் மத் விதோ ஜன -என்றும்
தன்னை அழிய மாறி சரணாகத பரித்ராணம் பண்ணின கபோதாபாக்யனமும்
அருளிச் செய்த தேவர் உடைய -சரண த்வந்தவம் வ்ரஜாமி -என்று அந்வயம்-

முதல் ஸ்லோகம் ப்ராப்ய சங்க்ரஹமான போது
இந்த ஸ்லோகம் -நமஸ்தே -என்கிற பதத்துக்கு விவரணம் ஆகிறது –
விவரண அபேஷை என் என்னில் –
மத்யாஜி மாம் நமஸ் குரு-என்று நமஸ் சப்தம் சாதனாந்தரத்துக்கும் சாதாரணம் ஆகையால்
சரண சப்த பர்யாயம் நமஸ் சப்தத்தின் உடைய விவரணம் ஆகிறது –
கச்சத்வமேநம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா – என்று விதித்த
சரணாகதி யினுடைய அனுஷ்டான வேளையிலே
த்ரௌ பத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ரூர் ஜனார்த்தநம் -என்று நமஸ்சைப் பண்ணினார்கள் –
ஆகையால் ஸ்தான பிரமாணத்தாலே -சரண சப்த பர்யாயம் -நமஸ் சப்தம்-

————————————————————————

ஸ்தோத்ரம் -3 -அவதாரிகை –

கீழ் இரண்டு ஸ்லோகத்தாலே -பிராப்ய ப்ராபகங்களைச் சொல்லிற்றாய்-
அந்த உபாய ஸ்வீகாரத்துக்கு அடியான சரண்யதையைச் சொல்லுகிறது மேலில் ஸ்லோகங்கள் –
அதில் –
இந்த ஸ்லோகத்தில் -அநந்தரம் -சரண்யதைக்கு உறுப்பாக அவனுடைய
ஜகத் காரணத்வ பிரயுக்தமான சர்வஞ்ஞத்வாதி மஹா குணங்களைச் சொல்லுகிறது –
காரணந்து த்யேய -என்கிறபடியே
உபாஸ்யம் ஜகத் காரண வஸ்துவானவோ பாதி
சரண்யமும் ஜகத் காரண வஸ்துவே இறே -எங்கனே என்னில்
யோ ப்ரஹ்மாணம் விதாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ்ஸ ப்ரஹிணோதி தஸ்மை -என்று
ஜகத் காரண வஸ்துவைச் சொல்லி
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்று மோஷ சித்திக்காக
அவன் திருவடிகளில் பண்ணும் ப்ரபத்தியை ஸோபாநமாக (படிக்கட்டாக) விதித்தது இறே –

ஏகஸ் த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா ஸம்ஹாரகஸ் ததா
அத்யஷஸ் ச அநுமந்தா ச குணமாயா ஸமாவ்ருத—3–

ஏகஸ் த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா –
லோகஸ்ய ஸ்ரஷ்டா — த்வம் -ஏக -அஸி –
லோக -சப்தத்தாலே-லோக்யத இதி லோக -என்கிற வ்யுத்பத்தியாலே-(பார்க்கப்படுவதால் லோகம் என்றபடி )
ப்ரத்யஷ சித்தமாயும் ஸ்ருதி சித்தமாயும் உள்ள சகல பதார்த்தங்களுக்கும் ஸ்ரஷ்டா -என்கை –

த்வம் -என்கிற ஏக வசனத்தாலே-ஸ்ரஷ்ட்ராந்தர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –
ஆகாசாத் வாயு -வாயோ ரக்னி-அக்நேராப – அத்ப்ய ப்ருதிவீ -என்று அசேதனங்களுக்கும்
ப்ரஹ்மா அஸ்ருஜத் -இத்யாதிகளிலே சேதனர்க்கும் ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே கர்த்ருத்வம் சொல்லா நிற்க
ஈஸ்வரனே சர்வ ஸ்ரஷ்டா என்றபடி என் -என்னில்
சேதன அசேதன சரீரி யானவன் சர்வ ஸ்ரஷ்டா வாகையால் சர்வ ஸ்ரஷ்டா ஈஸ்வரனே –
ஸ்வாத் சரீராத் சிஸ்ருஷூர் விவிதா பிரஜா -என்று மனு
ஸ ஏவ ஸ்ருஜ்யஸ்ஸ ச ஸர்க்க கர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ச பால்யதே ச
ப்ரஹ்மாத் யவஸ்தாபிர் அசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்டோ
வரதோ வரேண்ய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-70–இதி பராசர
தத பித்யா நா தேவ து தல் லிங்காத் ஸ -இதி ப்ரஹ்ம ஸூத்ரம் -2-3-14-

ஏக -பதத்தாலே சஹாயாந்தர நிரபேஷதையைச் சொல்லுகிறது –
ஏகாகீ ந ரமேத-என்ற இழவு தன்னதான படி சொல்லுகிறது –
பஹூஸ்யாம் பிரஜாயேய -என்று இவனுடைய பிரயோஜனமும் அபிமானமும் தன்னது -என்கிறது
ஏகமே அத்விதீயம் -என்று சஹகாரி நைரபேஷ்யம் சொல்லுகிறது –
இந்த சஹாயாந்தர நைரபேஷ்யம் தன்னை –
தனிமா புகழே எஞ்ஞான்றும்-திருவாய் -8-10-7-என்கிற பாட்டிலே ஆழ்வார் அருளிச் செய்தார் இறே –

இத்தால் –
அர்த்தித்வ நிரபேஷமாக இவற்றை உண்டாக்கினவன்
அர்த்தித்வமும் உண்டானால் ரஷிக்கச் சொல்ல வேண்டா விறே -என்கை –

சரம ஸ்லோகத்தில் ஏக பதம் உபாய நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது
இந்த ஏக பதம் உத்பாதகத்வத்தில் நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது –

ஸம்ஹாரகஸ் ததா –
ஸ்ருஷ்டியோபாதியும்-ஹித காமனாய் சம்ஹரிக்கிறாய் நீ ஒருவனுமே அன்றோ –
புருஷார்த்த உபயோகியாக சரீரத்தைக் கொடுக்க
இத்தைக் கொண்டு பர ஹிம்ஸாதிகளிலே இழிந்து அதி ப்ரவ்ருத்தனாய்த் தன்னை
நசிப்பித்துக் கொள்ளுமளவிலே-அந்த சரீரத்தையும் அழியச் செய்கை ஹிதமே இறே –
இத்தாலும் சரண்யதையைச் சொல்லுகிறது -இவன் தன்னை இவன் கையில் காட்டிக் கொடாமையாலே –

அத்யஷஸ்ச –
காலத்தை எதிர் பார்த்து இருப்பவனாகவும் –
ஸ்ருஷ்டி பிரயோஜனமான மோஷ ருசி இவர்களுக்கு உண்டாக வற்றே -என்று
அவசர ப்ரதீஷனாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –
ஆள் பார்த்து உழி தருவாய் கண்டு கொள் -என்னக் கடவது இறே –
புருஷார்த்த சாதனமான ஸ்வ சரீரம் கொண்டு புருஷார்த்தத்தில் இழிகை அன்றிக்கே –
ஸ்ருஷ்டி சம்ஹாரத்துக்கே விஷயம் ஆவதே இவை -என்று இவற்றின் உடைய அனர்த்தத்தை
அனுசந்தித்து இருக்கிறபடியைச் சொல்லுகிறது -என்றுமாம் –
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்னக் கடவது இறே
இப்படி இருக்கிறவன் புருஷார்த்தத்தை அபேஷித்தால் ரஷிக்கச் சொல்ல வேண்டா விறே –

அநுமந்தா ச –
விஷயாந்தரங்களில் ப்ராவண்யத்தால் தத் சாதனமான பந்த கர்மங்களிலே ப்ரவர்த்தியா நின்றாலும்
அங்கண்ணனாய்க் கொண்டு நிஷேதிக்க மாட்டாதே நிற்கும் –
எத்தாலே -என்னில் –
சூத்திர பிரயோஜனத்துகாகிலும் நம் பக்கலிலே வரப் பெற்றோம்
சர்வ சக்தியான நாம் உளோம் இறே
இடம் வந்த விடத்திலே ரஷிக்கிறோம் -என்னும் நினைவாலே
இப்படி வத்சலனானவன் -இத்தலை இசைந்தால் –
ஹித காமன் -என்னும் இடம் சொல்ல வேணுமோ -என்று கருத்து –

குண மாயா ஸமாவ்ருத –
முக் குணங்கள் உடன் கூடிய பிரகிருதியால் மறைக்கப் பட்டவனாகவும் இருக்கிறாய்
இப்படி இவர்கள் பஹிர் முகராகைக்கு அடி என் -என்னில் –
குணமயியான மாயையால் மறைக்கப் படுகையாலே –
பகவத் ஸ்வரூப திரோதா நகரீம் -என்கிறபடியே
இச் சேதனனை மாயை மறைக்கையாலே அவனையும் மறைத்ததாம் இறே
தன் உடைமையான இவன் –
குண வஸ்யனாய் –
பொய்ந்நின்ற ஞானத்திலே -திரு விருத்தம் -1- கலங்கினால்
இக் குண சம்பந்தம் இன்றிக்கே சர்வஜ்ஞ்ஞானவனே சரண்யனாக வேணும் -என்று கருத்து –
ஸத்த்வாதயோ ந ஸந்தீஸே யத்ர ச ப்ராக்ருதா குணா -என்னக் கடவது இறே –

முதல் ஸ்லோகம் சர்வ ஸங்க்ரஹமான போது
இஸ் ஸ்லோகம் -விஸ்வ பாவந -என்கிற பதத்தின் உடைய விவரணம் ஆகிறது –
ஜனி ஸ்திதி லயங்களுக்கு ஆஸ்ரயமாகையும்
சஹகாரி நைரபேஷ்யமும்-இறே பகவல் லஷணம் –
அது இஸ் ஸ்லோகத்தில் சொல்லுகிறது –

——————————————————————–

ஸ்தோத்ரம் -4-அவதாரிகை –

கீழ்ச் சொன்ன பகவத் காரணத்வம்-
காரணந்து த்யேய – என்றும்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -என்றும்
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
உபாசனத்துக்கும் சாதாரணம் ஆகையாலும்
பிரபத்தி உபாசனத்துக்கு அங்கமாவது ஒழிய -ஸ்வ தந்திர உபாயம் என்கைக்கு அனுஷ்டானம் உண்டோ -என்ன-

ஸ்ருஷ்டியில் கர்மீ பவித்தவர்களிலே
தம்தாமுடைய மனஸ்ஸூக்கு நிர்வாஹகராய் இருப்பார் சிலர்
உன்னையே உபாயமாகப் பற்றி சம்சாரத்தைக் கடவா நிற்பார்கள் -என்கிறது
இத்தால் –
ப்ரபத்திக்கு பிரமாண சித்தியே யன்று உள்ளது-ஸிஷ்டாசாரமும் உண்டு -என்கிறது –

ஸம்சார ஸாகரம் கோரம் அநந்த க்லேஸ பாஜநம்
த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண —4

நிஸ்தரந்தி -தாண்டுகிறார்கள்-மநீஷிண-மனசை வென்றவர்கள் என்றபடி –
இத்தால் சிஷ்டாசாரம் சொன்னபடி –

ஸம்சார ஸாகரம் –
ஸம்சாரம் ஆகிறது -அவித்யா கர்ம வாசனா ருசி பிரகிருதி சம்பந்தங்களும்
ஷட் பாவ விகாரங்களும்
புத்ர மித்ர களத்ராதிகளும்-தத் கார்யம் ஆகையாலே –
ஸம்சார சப்த வாச்யங்கள் ஆகிற இத்தனை –
ஜன்ம சம்சார பந்தநாத் –முச்யதே -என்று ஜன்மாதிகளைக் கார்ய வர்க்கங்களாகவும்
அவித்யாதிகளைக் காரண வர்க்கமாகவும் சொல்லிற்று இறே –

பரிச்சேதிக்க ஒண்ணாமை யாலும்
தன் பக்கல் இழிந்தாரைக் கொண்டு இழியுமதாகையாலும்
புகலாம் இத்தனை போக்கி
புக்கால் தம் தாமால் கரையேற ஒண்ணாமையாலும்
இத்தை -சாகரமாக நிரூபிக்கிறது –

கோரம் –
கொடிதாய் இருக்கை -அதாவது
சர்வர்க்கும் துக்கம் என்று மீளலாம் நரகாதிகளைப் போல் அன்றிக்கே
ஆத்மாவுக்கு விநாச ஹேதுவாய் இருக்கச் செய்தேயும்
இன்னமுது எனத் தோன்றி -திருவாய் -7-1-8-என்று முகப்பிலே
ஆகர்ஷகமாய் இருக்கும் தன்மையை உடைத்தாய் இருக்கை –
அஹங்கார சித்திக்கும்
விஷயாந்தர போகத்துக்கும்
சம்சாரிகள் உபாய அனுஷ்டானம் பண்ணுகிறார்கள் -இறே-

அநந்த க்லேஸ பாஜநம் –
தாப த்ரய துக்கத்தால் தொகை அற்ற க்லேசத்துக்கு எல்லாம்
உத்பத்தி ஸ்தானமாய் இருக்கை
நலமந்த மில்லதோர் நாடு -திருவாய் -2-8-4- என்று ஒரு தேச விசேஷத்தில் ஸூகத்திற்கு
முடிவு இல்லாதாப் போலே இதில் துக்கத்துக்கு முடிவு இல்லை -என்கை –

த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய –
தார தம்யத்தை உடைத்தான சம்சாரத்தின் உடைய
கொடுமை சொல்லிற்று கீழ் –
இத்தைக் கடப்பிக்கும் உபாயத்தின் உடைய சௌலப்யத்தைச் சொல்லுகிறது –
த்வாம் –
ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில் ஜகத் காரணத்வ பிரயுக்தமான மஹா குணங்களை உடைய உன்னை –
அவதாரணத்தாலே-
ஜகத் ஸ்ருஷ்டியில் சஹாயாந்தர நைரபேஷ்யம் போலே
உபாய பாவத்திலும் சஹகாரி சாபேஷன் அல்லன் என்கிறது –
த்வமேவ உபாய பூதோ மே பவ -என்கிற இதினுடைய
உப ப்ரும்ஹணமான சாஸ்திரத்திலும் இந்த நைரபேஷ்யம் உக்தம் இறே –
மாமேவ யே ப்ரபத்யந்தே -என்று இறே சரண்யன் வார்த்தையும் –
ஆசார்ய சேவையும் இவ் வவதாரணத்துக்குத் தாத்பர்யம் அறிகை-

சரணம் -என்று
உபாசனத்தை வ்யாவர்த்திக்கிறது-
வ்ரஜாமி சரணம் தவ -என்கிற இடத்தில்
வ்ரஜாமி -யினுடைய ஸ்தானத்தில் -ப்ராப்ய -என்கிறது –
பகவல் லாபத்தோபாதி-உபாய பாவமும் ஸூலபம் என்று தோற்றுகைக்காக –
ஆறு-ஆர் – எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -திருவாய் -5-7-10-என்று
இவ் உபாய பிரசித்தியை பகவத் பிரசாத காரயமாக ஆழ்வார் அருளிச் செய்தார் இறே

நிஸ்தரந்தி –
உன்னாலே இத்தைக் கடப்பார்கள் –

மநீஷிண –
மனோ ஜேதார–மநீஷிண –
விஷயாந்தர பிரவணமான மனஸ்சையும்
சாதனாந்தர பிரவணமான மனஸ்சையும்
ஜெயித்து இருக்குமவர்கள் –
சம்சார ஆர்ணவ மக்நாநாம் –விஷ்ணு போதம் விநானயத்-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -1-59–என்று
சாஸ்திராந்தரத்திலே இத்தை உப ப்ரும்ஹித்தது இறே –

முதல் ஸ்லோகம் சங்க்ரஹமான பஷத்தில் –
நமஸ்தே -என்கிற பதத்தைப் பற்றி உதிக்கிறது இஸ் ஸ்லோகம் –
அதனுடைய அனுஷ்டான பிரகாரம் சொல்லுகிறது –
அதனுடைய ப்ராவண்யத்துக்காகப் பல பர்யந்தமான சிஷ்டாசாரம் சொல்லுகிறது இஸ் ஸ்லோகம் –

————————————————————————–

ஸ்லோகம் -5-அவதாரிகை –

த்வமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி -என்று
உன்னையே உபாயமாகப் பற்றி சம்சாரத்தை கடக்குமவர்களுக்கு
உன்னையும் உன் உடைமையையும் அனுகூலமாக்கி வைப்புதி -என்கிறது -இத்தால் –

ஆஸ்ரிதர் தங்களையும் தங்கள் உடைமையையும் ஈஸ்வரனுக்கு ஆக்கி வைக்கிறது -ஸ்வரூபத்தாலே –
அவன் தன்னையும் தன் உடைமையையும் அவர்களுக்கு ஆக்கி வைக்கிறது -வாத்சல்ய சௌசீல்யாதி களாலே –

ஆகையாலே
இத்தால் -வாத்சல்ய சௌசீல்யாதிகளைச் சொல்லுகிறது –
இத்தாலும் சரண்யதையைச் சொல்லுகிறது –
கீழ் -ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில் சொன்ன
ஸ்வாமித்வ சௌலப்யங்களோபாதி
வாத்சல்ய சௌசீல்யங்களும் சரண்ய லஷணம் ஆகையாலே-

ந தே ரூபம் ந சாகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததா அபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே–5-

ந தே ரூபம் –
ரூபம் -எனபது திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
ஆகார -என்று திவ்ய விக்ரஹத்தை மேலே சொல்லுகையாலே-
இஸ் ஸ்லோகத்தால்
ஸ்வரூபாதிகள் இவனுக்கு இல்லை என்கிறது -எங்கனே -என்னில்
தே -என்று
நிர்த்தேசித்து வைத்து -ஸ்வரூபாதிகளை நிஷேதிக்கையாலே
நிஷேதிக்கிறது எவ் வாகாரத்தாலே -என்னில்
ஸ்வரூபாதிகளாலே தேவர் கொள்ளுவது ஒரு கார்யம் இல்லை என்று ஸ்வார்த்தத்தை நிஷேதிக்கிறது –

தே ரூபம் ந தே –
உன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் உனக்காய் இராது
ஆஸ்ரித ரஷணத்துக்கு அனுகூலமாய் இருக்கில்
ஸ்வ தந்த்ரமாய் இருக்கிற அது பர தந்த்ரமாய் இருக்கும் –
மயி ப்ருத்யே ஸ்திதே தேவா நா ஜ்ஞாபயத கிம் ந்ருபை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12-என்றும்
கிங்க ரௌ சமுபஸ்தி தௌ -பால -31-4-என்றும் சொல்லக் கடவது இறே-

சர்வ நியந்தா வானவன் ஒரு சம்சாரிக்கு புத்திரன் ஆனான் இறே –
இது இறே ஆஸ்ரித அர்த்தமான ஸ்வரூப அந்யதா பாவம் –
இந்த ஸ்வரூப சப்தத்தாலே ஸ்வரூப ஆஸ்ரயமான ஜ்ஞான சக்த்யாதிகளையும் உப லஷிக்கிறது-
எத்தாலே என்னில் –
இஸ் ஸ்லோகத்தை விவரிக்கிற கூரத் ஆழ்வான் –
ப்ரவர குணா கணாஸ் ச ஜ்ஞான சக்த்யாத யஸ்தே -ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -63-என்றான் இறே –
எஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -என்று
ஸ்ருதி சித்தமான சர்வஜ்ஞதையை உடையவன் –
ஆஸ்ரித அர்த்தமாக -அவிஜ்ஞாதா -என்று
அஜ்ஞனுமாய்
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்து அசத்ய சங்கல்பன் ஆனான் இறே –
அநந்ய அதீநத்வம் தவ கில ஜகுர் வைதிககிர பராதீநம் த்வாம் து ப்ரணத பரதந்த்ரம் மநு மஹே –
உபாலம்போ அயம் போ ஸ்ரயதி பத சார்வஜ்ஞயமபி தே யதோ தோஷம் பக்தேஷ்விஹ வரத
நைவாகலயஸி -ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -20-என்று
ஆழ்வானும் ஆஸ்ரித விஷயத்தில் பார தந்த்ர்யத்தையும்
தத் கத தோஷத்தில் அஜ்ஞதையையும்-சொன்னான் இறே

ந சாகாரோ –
திவ்ய விக்ரஹமும் ஆஸ்ரித ரஷணத்துக்கு அனுகூலமான பிரகாரத்தை உடைத்தாய் இருக்கும் –
பரம பதத்தில் ஸூரிகளுக்கு போக யோக்யமாய் இருக்கும் –
வ்யூஹங்களில் வந்தால் ஸ்வேத த்வீப வாசிகளுக்கு போக யோக்யமாய் இருக்கும் —
ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயமாய் இருக்கும் –
விபவங்களில் வந்தால் அதீந்த்ரியமான விக்ரஹத்தை சாது பரித்ராணார்த்தமாக
இந்திரிய கோசரமாக்கி அனுபவிக்கப் பார்த்தால் அனுபவிக்கலாய் இருக்கும் –
இந்த ஆகார -சப்தத்தாலே ஆகார ஆஸ்ர்யமான திவ்ய ஆபரணங்களையும் உப லஷிக்கிறது –
பூஷணான் யாயுதாநி -என்றான் இறே ஆழ்வானும் –
வஸ்தராண்ய ஆபரணாநி ச தம் விநா கைகயீ புத்ரம் பரதம் தர்ம சாரிணம் -என்றவையும்
ஆஸ்ரித அர்த்தமாய் இறே இருப்பது –

ந ஆயுதாநி –
இவை ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு ஆயுதமாயும்
வினை அற்று அனுபவிப்பார்க்கு ஆபரணமாயும் இருக்கும் –
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் –பெரிய திருவந்தாதி -87–என்றும்
கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய் -திருவாய் -6-9-1- என்றும்
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும் -திருவாய் -4-2-9-என்றும் சொல்லக் கடவது இறே –
பரிஜன பரிபர்ஹா பூஷணான் யாயுதாநி -என்கிறபடியே
பரிஜன பரிச்சதங்களுக்கு உப லஷணமாய்
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்றும்
அடியார்கள் குழாங்களை–உடன் கூடுவது என்று கொலோ -திருவாய் -2-3-10-என்றும்
ஆஸ்ரிதர்க்கு ப்ராப்யமாய் இறே பரிஜனம் இருப்பது –
பரிச் சதங்களும் ஸூரி கோடியிலே அந்தர் பூதமாய் இருக்கச் செய்தேயும்
நித்ய ஸூரிகளுக்கு கைங்கர்ய உபகரணமாய் இறே இருப்பது –

ந ச ஆஸ்பதம்-
பரம பதம் முதலான போக ஸ்தானங்களும்
தனக்கு போக ஸ்தானம் அன்றிக்கே
ஆஸ்ரிதர்க்காக நின்ற நிலைகளிலே காட்டி
அனுபவிக்கச் சமைந்தவையாய் இருக்கும் –

ததா அபி புருஷாகாரோ –
இப்படி இருக்கச் செய்தேயும் -புருஷ பிரகாரனாய் இருக்கிற இருப்பு
எப்போதும் குலையாதே இருக்கும் –
புருஷ ஏவேதம் சர்வம் –
ஸ்ஹஸ்ரஸீர்ஷா புருஷ -என்னும்
வேதாந்தங்களிலே சர்வாதிகனாக ஓதிப் போருகிறவன் –
இப்படி ஆஸ்ரித அதீநன் ஆனான் என்கிற- மஹா குணம் தோற்றுகைக்காக –

பக்தாநாம் த்வம் –
பக்தர்களுக்காய் இருப்பது –
அவர்கள் உனக்காய் இருக்கும் இருப்பு ஸ்வரூபத்தாலே –
நீ அவர்க்காய் இருக்கும் இருப்பு உன்னுடைய தாதர்த்யம் ஆஸ்ரித சங்கல்பத்தாலேயாய் இருக்கும் –
இத்தை -சகல மேதத் சம்ஸ்ரிதாரத்தம் சகர்த்த -என்றான் இறே ஆழ்வானும்
பரிஜன பரி பரஹா பூஷணான் யாயுதானி ப்ரவர குணா கணாஸ் ஸ ஜ்ஞான சக்த்யாத யஸ்தே
பரமபத மதாண்டான் யாத்மதே ஹஸ்ததாத்மா வரத சகலமேதத் சம் ஸ்ரீ தார்த்தம் சகர்த்த –

ப்ரகாஸஸே –
ஸ்வ தந்த்ரனுக்குத் தத் விருத்தமான பார தந்த்ர்யம் அனுபபன்னம் அன்றோ -என்னில்
இதிஹாச புராணங்களிலே –
யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக்நஞ்சாபி மா நத-
பவேன் மம ஸூ கம் கிஞ்சித் பஸ்ம ஸாத் குருதாம் ஸி கீ -என்றும்
நிச்ருஷ்டாத்மா ஸூஹ்ருத் ஸூஸ -என்றும்
இத்யாதிகளிலே ஆஸ்ரித பரதந்த்ரனாய் பிரகாசியா நின்றாய் -என்னுதல்
ஆஸ்ரிப்பாருக்கு எளியனாக உஜ்ஜ்வலியா நின்றாய் -என்னுதல் –
( அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ இந்தளூரீரே -பக்தானாம் த்வம் ப்ரகாஸஸே )

முதல் ஸ்லோகம் சங்க க்ரஹமான பஷத்தில்
ஹ்ருஷீ கேச -என்கிற பதத்தின் விவரணமாய் இருக்கிறது இஸ் ஸ்லோகம் –
அப்ராப்தமான விஷயாந்தரங்களில் நின்றும் மீட்டுத் தன்னையே விஷயம் ஆக்குகையாலே –
அப்ராப்தங்களில் நின்றும் மீட்டு ப்ராப்தங்களிலே அன்விப்பிக்கை
நிர்வாஹக க்ருத்யம் இறே –

———————————————————————–

ஸ்தோத்ரம் -6-அவதாரிகை –

ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில்
ஜகத் காரணத்வ பிரயுக்தமான ஸ்வாமித்வ சௌலப்யங்கள் உண்டானாலும்
கீழ் ஸ்லோகத்தில் தன்னையும் தன் உடைமையையும் ஆஸ்ரித அர்த்தம் ஆக்கின
வாத்சல்ய சௌசீல்யங்கள் உண்டானாலும்
ஜ்ஞான சக்த்யாதிகள் சொல்லுகிறது இஸ் ஸ்லோகம் –
முன்பு உக்தமான குணங்கள் ஆஸ்ரிதர்க்கு அவனை விஷயீகரிகைக்கு
உறுப்பாம் இத்தனை ஒழிய அபிமத சித்திக்கு ஜ்ஞான சக்திகள் வேணும் இறே –

நைவ கிஞ்சித் பரோஷம் தே ப்ரத்யஷோ அஸி ந கஸ்யசித்
நைவ கிஞ்சித ஸித்தந்தே ந ஸ ஸித்தோ அஸி கஸ்யசித்—6-

நைவ கிஞ்சித் பரோஷம் தே –
தே பரோஷம் ந கிஞ்சி தேவ –
உனக்கு அப்ரத்யஷமாய் இருப்பது ஒன்றும் இல்லை –
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வ வித் -என்கிறபடியே
சர்வஜ்ஞன் என்றும்-

ப்ரத்யஷோ அஸி ந க
ஸ்வாபாவிகீ ஜ்ஞான பல க்ரியா ஸ -என்று
ஸ்வ தஸ் சர்வஞ்ஞத்வம் சத்தா பிரயுக்தம் -என்றும்
யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத-
(நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள் -இது இப்பொழுது கிடைக்கவில்லை ) -என்று
யுகபத் சாஷாத் காரமும் பிரமாண சித்தம் இறே –

அப்படிப் பட்ட தேவர்க்கு என்னுடைய ஸ்வரூப யாதாம்யத்தையும்
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்ய ஸ்வரூபத்தையும்
தத் விரோதி பிரகிருதி சம்பந்தம் என்னும் இடத்தையும்
பிரகிருதி சம்பந்தத்தாலே நான் புகாத நரகம் இல்லை -நான் நுழையாத கர்ப்பம் இல்லை -என்றும்
வாயாலே விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ –
இன்னமும் நான் அறிந்த அளவன்றோ விண்ணப்பம் செய்யலாவது –
ப்ரவாஹ ரூபேண அநாதியாய் போந்த என்னுடைய அக்ருத்ய கரணாதி பூர்வ வ்ருத்தம்
பழகிப் போந்த தேவரை ஒழிய மற்று அறிவார் உண்டோ –
அறிந்து விண்ணப்பம் செய்யலான விஜ்ஞாபன பிரகாரம் தான் வேறு அறிவார் உண்டோ –
இவற்றில் எனக்கு ஒரு ஜ்ஞானம் இல்லாதாப் போலே
தேவர்க்கும் அஜ்ஞாதமாய் இருப்பது ஒன்றும் இல்லை –

கஸ்யசித் ந ப்ரத்யஷோ அஸி –
ந சந்த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பச்யாதி கஸ்ஸ நை நம் -தைத்ரியம் நாராயண வல்லி-என்று
ஒருவருக்கும் சஷூர் விஷயன் அல்லை –
அன்வய வ்யதிரேகத்தால் தேவருடைய அதீந்ரியத்வத்தை
த்ருடீ கரிக்கிறது இறே ஸ்ருதி தான் –
இப்படிப் பட்ட தேவரை பிரத்யஷிக்கும் போது
ஆனைக்கு உதவினால் போலே ஆவிர்ப்பவித்துக் காட்டக் காணுதல்
அவதரித்துக் காட்டக் காணுதல் இறே –
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வாரும்
வாசத் தடம் போலே வருவானே ஒரு நாள் காண வாராயே -திருவாய் -8-5-1-என்று
காண ஆசைப் பட்டார் இத்தனை இறே
தாம் காண யத்னம் பண்ணிற்று இலர் –
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா -என்று இறே ஆளவந்தார் வார்த்தையும் –

நைவ கிஞ்சித ஸித்தந்தே –
தே அஸித்தம் ந கிஞ்சி தேவ –
பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -என்கிறபடியே
சர்வ சக்தியான தேவர்க்கு ஆஸ்ரித ரஷணத்தில் அகடிதம் என்று கை வாங்க வேண்டுவது ஓன்று உண்டோ
சங்கல்பம் அடியாக சர்வமும் சித்தம் அன்றோ –
சஞ்சீவயன் நபிமருதம் ஸூத முத்தராயாஸ் சாந்தீபி நேஸ் சிரம்ருதம் ஸூதம் ஆநயம்ச்ச
தாம்நோ நிஜாத் த்விஜ ஸூதான் புநர் ஆநயன் வா ஸ்வா மேவ தாம் தனு மஹோ கதமா நய ஸ்தவம் -என்று
இப்படி அகடிதங்களை கடிப்பிக்கும் தேவரே
நித்ய சம்சாரியான என்னை நித்ய ஸூரிகள் பரிமாற்றத்திலே அன்வயிப்பிக்கத் தட்டில்லை என்று கருத்து –

ந ஸ ஸித்தோ அஸி கஸ்யசித்-
கஸ்யசித்-ந ஸ ஸித்தோ அஸி-
ஒருவருக்கும் ஸ்வ சாமர்த்யத்தாலே ப்ராபிக்க அரியையாகா நின்றாய் –
க்ருதக்ருத்யன் ஆனாலும் ப்ராப்திக்கு -நயாமி பரமாம் கதிம் -என்கிறபடியே
அவன் கை பார்த்து இருக்க வேணும் -என்கை –

ஆக
பேற்றுக்கு உறுப்பான ஜ்ஞான சக்த்யாதிகள் உள்ளது உனக்கே –
உன்னை ஒழிந்தார் அடங்கலும் அஜ்ஞ்ஞரும் அசக்தரும் –
கண்ணும் காலும் உடையாய் நீ
உன்னை ஒழிந்தார் அடங்கலும் குருடும் முடமும் –
சேதனனுடைய ஜ்ஞான சக்திகளுக்கு விநியோகம்
பிரதமத்தில் -உபாய ஸ்வீகாரத்தில் ஜ்ஞானமும்
அத்யவஸாயத்திலே சக்தியுமாகக் கடவது –
இந்த ஜ்ஞான சக்திகள் இரண்டும் போகத்திலே யாகக் கடவது –

இத்தால் -சொல்லிற்று ஆய்த்து –
இத்தலை இசைவே அடியாகக் கொண்டு
ஸ்வ சம்பந்தத்தாலே ரஷியா விடில்-தேவர்க்குப் பழி என்றது ஆயிற்று –
ரஷண தர்மத்தில் ஈஸ்வரன் உடைய ஜ்ஞான சக்த்யாதிகளே தாரகம் –
ஆத்மாவுக்கு ஈஸ்வர பிராப்தி அன்று -ஈஸ்வரனுக்கு ஆத்மா பிராப்தி காண் நினைவு -என்று ஜீயர் அருளிச் செய்வர் –
அஹம் அன்னம் -என்கிற இதுவே அர்த்தம்
அந்நாத-என்று இத்தலையில் போக்த்ருத்வம்ஸ்வ லாபத்தால்
ஈஸ்வரனுக்கு பேறான ஹர்ஷம் தனக்குப் புருஷார்த்தம் ஆகை-

சங்க்ரஹ பஷத்தில் இஸ் ஸ்லோகம்
ஜிதந்தே -என்கிற பதத்தின் உடைய விவரணமாகக் கடவது –

————————————————————————–

ஸ்தோத்ரம் -7 -அவதாரிகை –

கீழ் ஸ்லோகத்தில் சொன்ன ஜ்ஞான சக்த்யாதிகளை அனுசந்தித்து -அந்த சக்தி காரிதமான
பகவத் அனுபவத்துக்கு வர்த்தகமான பரம பதத்தே என்னைப் போக விட வேணும் -என்கிறது –
முக்த ப்ராப்யமான பூமியைத் தருவான் இறே சரண்யவான் -என்று பட்டர் நிர்வாஹம்
நித்ய அனுபாவ்யமான தேவர் திருவடிகளை லபிக்க வேணும் -என்கிறது -என்னவுமாம்-இது பூர்வர்கள் நிர்வாஹம்-

கார்யாணாம் காரணம் பூர்வம் வசஸாம் வாச்ய முத்தமம்
யோகாநாம் பரமாம் ஸித்திம் பரமம் தே பதம் விது–7-

கார்யாணாம் காரணம் பூர்வம் –
அந்யோந்ய கார்ய காரண பாவங்களை வ்யாவர்த்திக்கிறது-
ப்ரதாந பும்ஸோ ராஜயோ காரணம் கார்ய பூதயோ -என்கிறபடியே
பிரதான புருஷர்களும் ஈஸ்வரனைக் குறித்துக் கார்யங்களாகக் கடவது இறே –
யத ப்ரஸூதா ஜகாத ப்ரஸூதீ தோ யேன ஜீவான் வ்யஸ ஸர்ஜ பூம்யாம் -என்றது இறே
அந்த பிரகிருதி புருஷர்களைக் காரணமாக உடைத்தாய் இறே
மஹதாதி கார்யங்கள் இருப்பது –
அவற்றைக் காரணமாக உடைத்தாய் இறே அண்டம் இருப்பது –
அண்டாந்தர் வர்த்தியான பிரம்மாவைக் காரணமாக உடைத்தாய் இறே தேவாதி சதுர்வித சேதனரும்-
தத் போகய போக உபகரண போக ஸ்தானங்களும் இருப்பது –

(ப்ரக்ருதி ச -என்றும் -ப்ரதிஜ்ஜை த்ருஷ்டாந்தம் இரண்டுக்கும் விரோதம் வாராமைக்காக-அநுபரோதாத் –
ப்ரஹ்ம ஸூ த்ரங்கள் — ஸ்வேத கேது உத்தாலகர் சம்வாதம்-உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று காட்டி –
வேர் முதலா வித்தாய் -த்ரிவித காரணங்களும் ப்ரஹ்மமே -அபின்ன நிமித்த உபாதானம் ப்ரஹ்மம் –
அறிந்தால் எல்லாம் அறிந்தது ஆகுமே-காரணமே கார்யம்-கார்யாணாம் காரணம் பூர்வம்-காரணந்து த்யேயா )

ஆக –
பஹூ முகமான காரணங்கள் எல்லாம் பிரதம காரணமாய் இறே சர்வேஸ்வரன் இருப்பது
கார்யாணாம் காரணம் பூர்வம் -என்று
தேச பரமான போது அவனுக்கு பிரகிருதி நித்ய விசேஷணம் ஆகையாலே
அத்தை ஜகத் காரணம் என்றால் போலே
பரம பதம் அவனுக்கு விசேஷணம் ஆகையாலே பூர்வ ஷண வர்த்தியாய் பூர்வ காரணம் என்னலாம் –
இத்தால் பரம பதத்தின் உடைய நித்தியத்தை -சொல்லுகிறது
தத ஷரே பரமே வ்யோமன் -என்றும்
கலங்கா பெரு நகரம் -மூன் திருவந்தாதி -51-என்றும் சொல்லக் கடவது இறே-
(கலக்குவாரும் கலங்குவாரும் இங்கே தானே -அங்கு இல்லையே)

வசஸாம் வாச்ய முத்தமம் –
லௌகிகமாயும் வைதிகமாயும் உள்ள சர்வ சப்தங்களுக்கும்
பிரதான வாச்யன் ஈஸ்வரன் -என்கிறது –
(சொற்களுக்கு மிகச் சிறந்த பொருள் -கடிகாரம் -ப்ரஹ்மம் என்பதே உத்தம பொருள் என்றவாறு
எல்லாப் பொருள்களும் தத்வ தைரியம் முக்கோல் -என்று அறிய வேண்டுமே )
அநேன ஜீவே நாத்ம நா அநு ப்ர விஸ்ய நாம ரூபா வ்யாகரவாணி-என்றும்
தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ரா விஸத் -என்று தொடங்கி
சத்யம் சாந்ருதம் ச சத்யம பவத் -என்றும் -சொல்லக் கடவது இறே
சராசர வ்யபாஸ்ர யஸ்து ஸ்யாத் தத் வ்யபதேஸோபாக்தஸ் தத் பாவ பாவித்வாத் –ப்ரஹ்ம சூத்ரம் -2-3-17-என்கிற
ஸூத்ரமும் ப்ரதானதயா வாச்யன் ஈஸ்வரன் என்றது இறே –

இத்தால் ஸ்ருஷ்டமான பதார்த்தங்களில் ஆராத்யரான
தேவதைகளோடு
ஆராதகரான மனுஷ்யரோடு
ஆராதன உபகரணங்களான திர்யக் ஸ்தாவரங்களோடு வாசி அற
சர்வ அந்தராத்மாவாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –
வசஸாம் வாச்ய முத்தமம் –
என்கிறது தேச பரமான போது ப்ராதான்யத்தை லஷிக்கிறது-
பரமே வ்யோமன் -என்றும்
தனி யுலகு -பெரியாழ்வார் திரு -5-4-9- என்றும் சொல்லக் கடவது இறே –

யோகாநாம் பரமாம் ஸித்திம் –
என்று ப்ராப்யாந்தர்க்கதமான சம்சார விமோசனத்தை வ்யாவர்த்திக்கிறது
த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண-ஸ்தோத்ரம் -4-என்றது இறே –
இத்தால் நிரவதிக போக்யமான திருவடிகளைச் சொல்லுகிறது
நலமந்தம் இல்லாதோர் நாடு -திருவாய் -2-8-4-என்று
தேசமும் நிரதிசய போக்யமாய் இறே இருப்பது

பரமம் தே பதம் –
தே பரமம் பதம் –
சர்வ காரணனுமாய்-சர்வ சப்த வாச்யனுமாய் -சர்வ உபாய சாத்யனுமாய் இருந்துள்ள
உன்னுடைய சர்வாதிகமாய் நிரதிசய போக்யமான திருவடிகளை -என்னுதல்
உன்னுடைய நிரதிசய போக்யமான ஸ்தானத்தை -என்னுதல் –

விது –
ஜ்ஞானாதிகராய் இருக்குமவர்கள் அறியா நிற்பார்கள் –
நித்தியமாய் பிரதானாய் அதிகமாய் நிரதிசய போக்யமாய்
இருப்பதொரு நாடு உண்டு என்றும்
அந்த தேசத்தே
ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத் பதி -ஆஸ்தே -என்கிறபடியே
இருப்பதொரு விக்ரஹம் உண்டு என்றும் அறிவார்
சகல வேதாந்த தாத்பர்யம் கைப்பட்ட சர்வஜ்ஞ்ஞர் இறே –

அபேஷிக்கிறவன் தன சிறுமையைப் பார்த்தும்
அவனுடைய நிருபாதிக ஸ்வாதந்த்ர்யத்தைப் பார்த்தும் -அர்த்தியாதே
இங்குத்தை வைலஷண்யத்தைக் கொண்டாடுகிறான்
கருத்து அறிந்து அங்கே போக விடுகைக்காக –
ஒருத்தன் கையிலே எலுமிச்சம் பழம் இருந்தால் அதன் நன்மையாலே ஒருத்தன் அதைக் கொண்டாடினால்
உதாரன் ஆனவன் எதிர் தலையில் நினைவு அறிந்து கொடுக்குமா போலே –

சங்க்ரஹ பஷத்திலே -மகா புருஷ -என்கிற பதத்தின் உடைய வ்யாக்யானமாய் இருக்கிறது –

——————————

ஸ்தோத்ரம் -8-அவதாரிகை –

கீழ் ஸ்லோகத்திலே
பரம பதத்தில் போக்யதையை அனுசந்தித்தான்-(வேத புருஷன் என்றவாறு -இது ரிக் வேதப்பகுதி தானே) –
அந்த போக்ய அனுசந்தானத்தாலே சம்சாரத்திலே பொருந்தாத படியான பயம் பிறந்தது
அந்த பய நிவ்ருத்தியைப் பண்ணி அருள வேணும் என்று அபேஷிக்கிறது இஸ் ஸ்லோகம் –
சம்சார பய நிவர்த்தகன் இறே சரண்யன் ஆனவன் –
சம்சாரத்தை உள்ளபடி அறிந்தவனுக்கும் சம்சாரம் பய ஸ்தானமாய் இருக்கும் –
ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தவனுக்கும் அது பய ஸ்தானமாய் இருக்கும்
அவ்வோபாதி ப்ராப்ய பூமியில் போக்யதையை அனுசந்தித்தாலும் பய ஸ்தானமாய் இருக்கும் இறே-

அஹம் பீதோ அஸ்மி தேவேஸ ஸம்ஸாரே அஸ்மின் பயாவஹே
பாஹி மாம் புண்டரீகாஷ ! ந ஜாநே ஸரணம் பரம் —8-

பயாவஹே அஸ்மின் ஸம்ஸாரே அஹம்-
சம்சாரம் ஆகிறது ஏது –
அது பயாவஹமாய் இருக்கிறபடி -எங்கனே என்னில்
1-அவித்யா -2-கர்ம-3- வாசனா -4- ருசி -5- பிரகிருதி சம்பந்தங்கள்– சம்சாரம் ஆகிறது
அவித்யை ஆகிறது அஜ்ஞானம்-(அர்த்த பஞ்சக ஞானம் இல்லாமை )
அதாகிறது -புக்க சரீரத்தில் அஹம் புத்தியும்
சரீர அனுபந்தியான பதார்த்தில் மமதா புத்தியும்
அநாத்மந்யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதியா மதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-11-
என்றான் இறே ஸ்ரீ பராசர பகவான் .
யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -திருவாய் -2-9-9-என்றும்
பிறர்க்கு உபதேசிக்கிற இடத்திலும் -நீர் நுமது -திருவாய் -1-2-3- என்றும்
அருளிச் செய்தார் இறே ஆழ்வாரும் –
அஹங்காரம் சேஷத்வத்தை அழிக்கையாலே பயாவஹம் –
மமதை பகவத் விஷயத்தில் போக்யதையை அழிக்கையாலே பயாவஹம் –

புண்ய பாப ரூபமாய்த்து கர்மம் இருப்பது
பாபம் நரகாத் யனுபவத்துக்கு ஹேது வாகையாலே பயாவஹம்
புண்யம் பயாவஹம் ஆனபடி என் -என்னில்
புண்ய பலமாவது ஸ்வர்க்காத் அனுபவங்கள் இறே
அவை ஸ்வரூபத்தை நசிக்கக் கடவ அஹங்கார மமகாரத்தை வர்த்திப்பிக்கையாலே பயாவஹம் –
அனர்த்த ஹேதுவான சப்தாதிகளிலே மூட்டுகையாலே பயாவஹம்

பிரகிருதி -தேக சம்பந்தம் ஆதி ரூபத்தாலும் வியாதி ரூபத்தாலும் பரபரிபவ ரூபத்தாலும்
சீதோஷ்ணாதிகளாலும் பயாவஹங்கள்-

இப்படிகளால் ருசி வாசனைகளும் பயாவஹங்கள் -எங்கனே என்னில்
ஆதி பரதன் சமாதி தசையிலே மானின் பக்கலிலே ருசி பிறந்து மானாய்ப் பிறந்தான் இறே –
அது தனக்கு அடி விஷயாந்தர ப்ராவண்யம் அன்று-
ரஷகத்வ வாசனையாலே இறே -(ஈஸ்வரனை விட்டு
தானே மானுக்கு ரக்ஷகன் என்ற எண்ணம் )
ஆகையாலே வாசனா ருசிகளும் பயாவஹங்கள் –
திருஷ்டி விஷம் போலே ருசி தானே பயாவஹமாய் இருக்கிறபடி
அதாகிறது -சம்சாரிகளுக்கு விட்டில் போலே அஹங்காரத்தை ஆதரித்து மேல் விழுந்து வர்த்திக்கையாலே
காண்கை தானே பயாவஹமாய் இருக்கும் இறே –
பூ மௌ நிபாத்யமாநோ அத்ரேரந்தராஸ்தே ஸ்வ பன்னிவ -என்று
மலையினின்றும் விழுகிறவன் நடுவே உறங்குமா போலே இறே
சம்சாரிகள் வருகிற அனர்த்தத்தைப் பற்றி புத்தி பண்ணாதே ஸூகிக்கிறபடி –
நலமந்த மில்லதோர் நாடு –திருவாய் -2-8-4-என்று ஒரு விபூதியாக முற்றடங்கி
ஸூகமாய் இருக்குமா போலே இறே இங்கும் கூட்டடங்க பயாவஹமாய் இருக்கும்படி –

அஹம் பீதோ அஸ்மி
சம்சாரத்தை அநந்த க்லேச பாஜனமாக அனுசந்திக்கிற நான் பயப்படா நின்றேன் –
அஸ்மி-வர்த்தமான நிர்த்தேசத்தாலே பய நிவ்ருத்திக்கு ஓர் அவகாசம் காண்கிறிலேன் –
சம்சாரத்தில் பய நிவ்ருத்திக்கு அவகாசமுண்டோ -என்னில்
ஈஸ்வரன் பக்கலிலே ந்யஸ்த பரனாய் இருக்குமவன் நிர்ப்பயனாய் இருக்கும் இறே –
அதுவும் எனக்கு அபாய ஸ்தானம் ஆகிறது இல்லை –
பிராப்யத்தில் அதி ப்ராவண்யத்தாலே த்வரை பிறந்தவனுக்கு அத்யாவசாயத்தாலே தரிக்க ஒண்ணாது இறே –
களை கண் மற்றிலேன் -திருவாய் -5-8-8- என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -திருவாய் -5-10-11-என்றும்
அத்யவசிதரான ஆழ்வார்
அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை –திருவாய் -10-9-11-என்று
அத்தேச விசேஷத்தில் போக்யதையை சாஷாத் கரித்து -அநந்தரம் –
முனியே நான் முகனே -திருவாய் -10-10-1-என்று கூப்பிட்டார் இறே-

தேவேஸ
அயர்வறும் அமரர்கள் -திருவாய் -1-1-1- என்கிறபடியே நீயும் அவர்களுமாய்
அங்கே களித்துத் திரியா நிற்க –
அவர்களோபாதி போகத்துக்கும் யோக்யனாய் இருக்கிற நான் இங்கே க்லேசப் படுகை தேவர்க்குப் போருமோ
பிராட்டியும் பய ஸ்தானமான இலங்கையில் இருந்த இடத்தில்
ஹா ராம ஹா லஷ்மணா- சுந்தர -28-8-என்றாள் இறே
இமையோர் தலைவா -திரு விருத்தம் -1- என்றும்
விண்ணுளார் பெருமானேயோ -திருவாய் -7-1-5- என்றும்
அருளிச் செய்தார் இறே ஆழ்வார் –

பாஹி மாம் –
மாம் பாஹி –
யோகா நாம் பரமாம் சித்திம் -என்கிறபடியே
அத்தேசத்தில் போக்யதையை அனுசந்தித்து மேல் விழுந்த தன்னை –
ஏஹி பஸ்ய சரீராணி – ஆரண்ய-6-16-என்னுமா போலே வடிவைக் காட்டி –

பாஹி
சரீர சம்பந்தத்தை அறுத்து
அர்ச்சிராதி மார்க்கத்தாலே நிர்ப்பயமான தேசத்திலே கொண்டு போக வேணும் –

புண்டரீகாஷ ! –
உன்னுடைய ஆகர்ஷகமான திருக் கண்களால் என்னைக் குளிர நோக்கி அருள வேணும் –
நான் என்னுடைய பய நிவ்ருத்திக்கு யத்னம் பண்ணும் அன்றோ நேர்த்தி உள்ளது –
தேவர் செய்து அருளும் இடத்தில் அநாயாசம் அன்றோ –
கீழ்ச் சொன்ன ஆஸ்ரயணீயமான வாத்சல்யாதிகளும்
பல சித்திக்கு உடலான ஜ்ஞான சக்த்யாதிகளும் வேணுமோ என்னை ரஷிக்கைக்கு –
முதல் -ஜிதந்தே புண்டரீ காஷ -என்று எனக்கு புறம்பு உள்ள அந்ய பரதையை தவிர்த்தால் போலே
பயத்தையும் போக்கி ரஷித்து அருள வேணும் –

(யதா கப்யாஸம் ஏவ புண்டரீகம்–ததைவ அக்ஷிணீ–இரண்டு திருக்கண்கள் –
ஆறு நிர்வாகங்கள் –மூன்று பொருந்தாது -மூன்று பொருந்தும்
1-உபாசன ஸ்தானம் -தண்ணீரை குடிப்பதால்-கப்யாஸம் -கம் பிபேதி – சூர்யனைக் குறிக்கும் –
புண்டரீகம்-ஹ்ருத் புண்டரீகம் -ஆதித்ய மண்டலம் போலே -உபாஸிக்க
சாஸ்திரம் தக்ஷிண அஸீ உபாசனம்–ஆக இரண்டும் என்பது பொருந்தாது -அத்யாகாரம் செய்து பொருள் வேறே
இரண்டு த்ருஷ்டாங்கள்-சொல்லி -ஓன்று அப்ரதானம் ஆகும் –
2-கப் குரங்கு -ஆஸம் ஆசனவாய் -போலே -இருக்கும் -சிவந்த தாமரை போலே -இரண்டு உபமானம்-தோஷம் —
3 -ஆஸம் மலர்ந்த -கப் ஈஸத் விகசித்த -துளி மலர்ந்த தாமரை ஒத்த -சிறுது மலர்ந்த -சிறுச் சிறிதே –
இரண்டுக்கும் ஒக்குமே -சாத்மிக்க என்றவாறு -கப்யாஸம் ஈஷத் ஒரு துளி அர்த்தம் நிகண்டுவில் இல்லையே -இந்த குற்றம்
4–கம்பீராம்ப ஸமுத்பூத– ஸ்ம்ருஷ்ட நாள –ரவிகர விகசித –புண்டரீக தள –
அமல ஆயத ஈஷண -அமல ஆயத ஈஷண – குற்றம் அற்ற-நீண்டு -தாமரையில் வியாவருத்தி
கம் -நீர் ஆஸம் ஆஸ்தானம் இருப்பிடம்-நீரில் உள்ள தாமரை
கபி நீரைக் குடிப்பதால் நாளம்-ஆஸம் நிலைத்து உள்ள தாமரை -ஸ்ம்ருஷ்ட -கெட்டியான தடிமனான
கம் பிபதீ சூரியனால் மலர்த்தப்பட்ட புண்டரீகம் –
அதீர்க்கம்-அப்ரேம துகம்-க்ஷண உஜ்ஜ்வலம் -ந சோர அந்தக்கரணம் பஸ்யதாம் -கூரத் தாழ்வான்-தாமரை ஒவ்வாதே
அரவம் சுமப்பது அஞ்சன மலை பூத்தது அரவிந்த வனமே -அரவிந்த மலர் தோறும் அதிசயம் உளதே –
அழுகையும் அஞ்சு நோக்கும் அந்நோக்கும் எல்லை இன்பத்து இறுதி கண்டாள்-)

ந ஜாநே ஸரணம் பரம் –
பரம் சரணம் ந ஜாநே –
உன்னை ஒழிய வேறு ஒரு உபாயம் அறிகிறிலேன்-
நிதித்யாஸி தவ்ய -என்று ஸ்ருதிகள் சொன்னாலும்
மன்மநா பவ மத் பக்த -என்று ரஷகரான தேவரீர் அருளிச் செய்தாலும்
நான் வேறு ஒரு உபாயம் அறிகிறிலேன் –
அதுக்கு ஹேது என் -என்னில்
சேதனனோடு அவனுக்கு உபகரணமான கரணங்களோடு வாசி அற தேவர் ஆதீனம் ஆகையாலே –
நமஸ்தே அஸ்து -என்றும்
ஹ்ருஷீ கேஸ -என்றும்
அனுசந்தித்தவன் இறே
மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞானமபோஹநம் ச -ஸ்ரீ கீதை -15-15–என்று இறே தேவர் வார்த்தையும் –

ஸங்க்ரஹ பஷத்தில்
இஸ் ஸ்லோகம் -புண்டரீ காஷ -என்கிற பதத்தின் உடைய விவரணம்-

———————————————————-

ஸ்தோத்ரம் -9- அவதாரிகை –

ந ஜாநே சரணம் பரம் -என்னலாமோ –
ஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவான உபாயங்களை சாஸ்திர முகத்தாலே உண்டாக்கி வைத்து
அதுக்கு மேல்
அல்ப வ்யாபாரத்தினாலே சகல துரிதங்களும் நசிக்கும் படியாகப் புண்ய காலம்
புண்ய ஷேத்ரம் முதலானவற்றை உண்டாக்கி வைத்திலோமோ –
வேறு உபாயாந்தரங்களும் உண்டாக அறிகிறிலேன் என்னலாமோ -என்னில்
அவற்றின் உடைய சத்பாவத்தை இல்லை என்கிறேன் அல்லேன் –
அவற்றிலே இழிந்த நான் நித்ய சம்சாரி யாகையாலே
முன்பு நின்ற நிலையும் கெடும் என்று சொன்னேன் -என்கிறான் –
இத்தால்
உபாயாந்தர பரித்யாக பூர்வகமாய் இருக்கும்
சித்த உபாய பரிக்ரஹம் என்னுமத்தைச் சொல்லுகிறது –
இப்படி நிரபேஷ உபாய பூதன் இறே சரண்யன் ஆவான் –

காலேஷ்வபி ச சர்வேஷூ திஷூ சர்வாஸூ சாச்யுத
சரீரே ச கதௌ சாபி வர்த்ததே மே மஹத் பயம்—-9

காலேஷ்வபி ச –
புண்யமான அயன விஷ்வாதிகளிலும் (விஷு புண்ய காலம்)-
அவற்றை விசேஷிக்கிற அர்த்த உதயாதி காலங்களிலும் –
அதாகிறது -இவ் விலஷண காலங்களிலே சேது தர்சன சங்கமங்களிலே பண்ணும்
தீர்த்த தாநாதிகளைச் சொல்லக் கடவது இறே –
கோக் நே சைவ ஸூராபே ச சோரே பக்ன வ்ரதே ததா
நிஷ்க்ருதிர் விஹிதா ஸத்பி க்ருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி -என்கிறபடியே
பிராயச்சித்தம் இல்லை என்கிற க்ருதக்னன்-க்ருதஜ்ஜை இல்லாதவன் – உடைய பாபம் உட்படப் போம் என்றது –

சர்வேஷ் வபி –
அஸ்வத்தம் சிந்து ராஜம் ச சதா சேவேத ந ஸ்ப்ருஸேத
மந்தவாரே ஸ்ப்ருஸேத பூர்வம் பரம் பரவணி ஸ் ப்ருஸேத -என்று
(மந்தவாரம் -சனிக்கிழமை மட்டும் அரச மரம் தொடலாம் -பருவ காலத்தில் தான் கடலைத் தொடலாம் )
அபர்வணி கடல் தீண்டல் ஆகாது என்னும் நியமம் இன்றிக்கே
சர்வ காலமும் சேவிக்கலாய் இருக்கும் கங்காதி தீர்த்தங்களை சமுச்சயிக்கிறது

திஷூ-
சகல பாவனங்களாகச் செய்து வைத்த இவை ஒழிய
தேசோ அயம் சர்வ காம துக் -என்கிறபடியே
பிரதமத்திலே பாவனமாய்
பின்பு பகவத் பிராப்திக்கு சாதனமுமாய்
பின்பு போக்யமுமாயும் இருக்கும் புண்ய தேசம் முதலான தேசங்களை சமுச்சயிக்கிறது –
மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ ஸூபா -என்னக் கடவது இறே

சர்வாஸூ ச –
இத்தால் -அவதரித்து அருளின தேசங்களை ஒழிய பகவத் சந்நிதி மாறாத
சாளக்ராம மண்டலம் முதலான தேசங்களை சமுச்சயிக்கிறது –

சரீரே ச-
கீழ்ச் சொன்ன தேசங்களில் பண்ணும் உபாய அனுஷ்டானத்துக்காக
சரீர மாத்யம் கலு தர்ம சாதனம் -என்றும்
விசித்ரா தேக சம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும் -என்றும்
சொல்லப்படுகிற இந்த சரீரம் எனக்கு வ்யர்த்தம் ஆகா நின்றதாகை-

கதௌ ச-
ஸ்வ தரமே நிதநம் ஸ்ரேய -பரதர்மோ பயாவஹ -என்கிறபடியே
சாதன அனுஷ்டான மத்யே மரணம் உண்டானாலும்
சரீராந்தரத்திலே தலைக் கட்டும் படியான
சரீராந்தர கதியும் எனக்கு வ்யர்த்தம்-

கதௌ-
சரீராந்தர க தௌ –
அபி சப்தத்தாலே அனுஷ்டேயமான கர்ம ஜ்ஞான பக்தி யாதிகளை சொல்லிற்று -என்னுதல்
முன்பு போன சரீரங்களை சமுச்சயிக்கிறது -என்னுதல்
முன்பு பரிக்ரஹித்துப் பொகட்ட சரீரங்கள் வ்யர்த்தமானவோபாதி
வர்த்தமான சரீரமும் வ்யர்த்தம் என்று கருத்து-

மே மஹத் பயம் –
இவை வ்யர்த்தமான அளவே அல்ல –
தேச கால சரீரங்களிலும் இவற்றைப் பற்றி நின்று அனுஷ்டிக்கும் கர்ம யோக யுபாயங்களிலும்
பயம் வர்த்தியா நின்றது –

பயம் வர்த்திப்பான் என் -என்னில் –
முன்பு தேவர் திருவடிகளை உபாயமாகப் பற்றி வர்த்திக்கையாலே
தேவர் உடைய இரக்கமும் கெடும் என்று இவை பயாவஹம் ஆகா நின்றன –

அனுகூலமானவை பய ஸ்தானம் ஆவான் என் -என்னில்
ஸ்வீகரித்த உபாயம் வேறு ஒன்றை சஹியாமை யாலே –
முதலிலே த்வாமேவ சரணம் ப்ராப்ய –ஸ்லோகம்-4- என்றவன் இறே
த்மேவ -என்று இறே சாஸ்திர விதானமும்
மாமேகம் -என்று இறே சரண்யன் உடைய வாக்யமும்

மஹத் பயம் வர்த்ததே –
பயாவஹே -ஸ்லோகம் -8- என்கிற சம்சார பயத்து அளவன்று இந்த பயம் –
விஷயாந்தர ப்ராவணயத்தால் வந்த பயத்து அளவன்று இறே
சாதனாந்தர அனுஷ்டானத்தால் வந்த பயம் -என்கை –
விஷயாந்தர ப்ராவணயத்தால் வந்த பயத்துக்கு ஈஸ்வரன் கிருபையைப் பற்றலாம்
அத்தையும் நழுவும்படி பண்ணுகிறது இறே சாதநாந்தர பரிக்ரஹம் –

அச்யுத –
இப்படி சர்வ உபாய ஸூந்யராய் இருப்பாரையும் நழுவ விடாத
ஸ்வ பாவத்திலே இறே தேவர்க்கு அச்யுத -என்கிற திரு நாமம் உண்டாயிற்று –
யஸ்மாத் ப்ராப்தா நச்யவந்தே ஸோ அச்யுத -என்று இறே திரு நாமத்துக்கு நிர்வாஹம் –
த்வாரகா நிலயா அச்யுதா -என்று தேவரை விஸ்வசித்துக் கையை விட்டவளை
அத் தசையில் விடாதவர் இறே தேவர் –
த்வத் பிரசாதான் மயாச்யுத -என்று சொல்லக் கடவது இறே –

சர்வ சங்க்ரஹ பஷத்தில் -நமஸ்தே -என்கிற பதத்துக்கு
சேஷமாகக் கடவது
அந்த ப்ரபதனமும் உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாகை யாலே-

——————————————————————————

ஸ்தோத்ரம் -10-அவதாரிகை –

உபாய உபேயங்கள் இரண்டும் நாமே யானாலும்
அநாதி காலம் இப்படி விஷய ப்ரவணனாய் நம் பக்கலிலே விமுகனாய்ப் போந்த சம்சாரிக்கு
விஷய வைமுக்ய பூர்வகமாக நம் பக்கலிலே ஆபிமுக்யம் பிறக்கைக்கு அடியான
பிரதம ஸூஹ்ருதம் இவன் தலையிலே ஆக வேண்டாவோ –

இஸ் ஸூஹ்ருதத்தால் ஆபிமுக்யம் பிறந்தால் பின்பு அன்றோ யதார்த்த ஜ்ஞானம் பிறப்பது –
அந்த ஜ்ஞானத்தாலே அன்றோ த்யாஜ்ய உபாதேய விபாகம் பிறப்பது –
த்யாஜ்ய நிவ்ருத்தி பூர்வகமான ப்ராப்ய சித்திக்கு உபாயம் அபேஷிதம் ஆவது பின்பு அன்றோ –
அத்தாலே அன்றோ ப்ராப்ய சித்தி
இது எல்லாத்துக்கும் அடியான பிரதம ஸூஹ்ருதம் இவன் கையாலே ஆக வேண்டாவோ -என்னில்

அந்த ஸூஹ்ருதமும் தேவர் திருவடிகளே -எனக்கு வேறு இல்லை -என்கிறது –
ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே என்று கீழ் உக்தமான அர்த்தத்தை நிகமிக்கிறது என்னவுமாம் –
த்வ சரணத் வந்தவம் வ்ரஜாமி -என்றும்
யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்றும்
ப்ராப்ய ப்ராபகங்கள் கீழே உக்தம் இறே-

த்வத் பாத கமலாத் அந்யந்த மே ஜன்மாந்த ரேஷ்வபி
நிமித்தம் குஸலஸ்யா நாஸ்தி யேந கச்சாமி ஸத் கதிம்–10-

த்வத் பாத கமலாத் அந்யந்த -குஸலஸ்யா நிமித்தம் -மே நாஸ்தி –
தேவர் திருவடிகள் பிராப்யமுமாய்
ப்ராபகமுமானவோ பாதி
பிரதம ஸூஹ்ருதம் எனக்கு தேவர் திருவடிகளை ஒழிய வேறு இல்லை –

த்வத் அந்யத் குஸலஸ்யா நிமித்தம் -மே நாஸ்தி –என்னவுமாய் இருக்க
பாத கமலம் -என்கிற பதத் த்வயங்கள்
ப்ராப்ய ப்ராபகங்களை ஸ்மரிப்பிக்கின்றன –
கமல பதம் போக்யதையை ஸ்மரிக்கிறவோபாதி
பாத பதம் உபாயத்தை ஸ்மரிப்பிகிறது –
சரண த்வந்த்வம் சரணம் வ்ரஜாமி -என்று திருவடிகளை இறே உபாயமாகச் சொல்லிற்று –

குஸலஸ்யா நிமித்தம் –
மங்கள ரூபமான உபாய சித்திக்கு ஹேதுவான
பிரதம ஸூஹ்ருதம்
சேதனனுக்கு மங்கள ரூபமாய் இறே இவ் உபாயம் ரசித்து இருப்பது –
பஹூ நாம் ஜன்ம நா மந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே -என்கிறபடியே
உபாய சித்தி ஹேதுவாய்
அநேக ஜன்ம ஸூஹ்ருத சாத்தியமாய் இருக்கிற பகவத் ஜ்ஞானம் ஆகிற
பிரதம ஸூஹ்ருதம் த்வத் பாத கமலா தந்யன் நாஸ்தி -என்னக் கடவதோ –

மே நாஸ்தி –
அந்த ஜ்ஞானி யானாலும் எனக்குத் திருவடி ஒழிய வேறு இல்லை –
அது என் -என்னில் –
ஸூஹ்ருத கார்யம் ஆவது சப்தாதி விஷய ப்ராவணயத்தின் நின்றும் மீட்டு
இவ்வாத்மாவுக்கு பகவத் ஆபிமுக்யத்தை பிறப்பிக்கை இறே அது
ஜிதந்தே புண்டரீ காஷ -என்கிறபடியே
இவ்வர்த்தம் தேவர் அழகாலே பிறந்த பின்பு
அந்த ஸூஹ்ருதம் எனக்கு தேவர் திருவடிகளே-

ஜன்மாந்த ரேஷ்வபி –
அழகைக் காட்டி மீட்டதுவும்
ஜன்மாந்தரங்களில் ஒரு ஸூஹ்ருத விசேஷம் உண்டாய்
அதன் பலமானாலோ என்னில்
விஷய பிரவணனை மீட்கைக்கு ஒரு ஸூஹ்ருத அபேஷை இல்லாமையாலே அதுவும் வேண்டுவது இல்லை –
என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -திருவாய் -1-7-5-என்று ஆழ்வார்
அருளிச் செய்ததுக்கும் அடி இது இறே –

யேந குஸலேந ஸத் கதிம் கச்சாமி
ஸத்கதி-என்கிறது விலஷணமான ப்ராப்யம் -அதாவது
யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்கிற பரம பதம் –
யேந குஸலேந ஸத் கதிம் கச்சாமி
தஸ்ய குஸலஸ்ய நிமித்தம் ஜன்மாந்தரேஷ் வபி
த்வத் பாத கமல தந்யத் மே நாஸ்தி -என்று
அந்வயம் –

நிகமன பேதத்திலே
யேந உபாயேந ஸத் கதிம் கச்சாமி
தஸ்ய தத் கதி ரூபஸ்ய ஹேது பூதம் உபாயம்
ஜன்மாந்த்ரேஸ்வபி த்வத் பாத கமல தந்யத் மே நாஸ்தி
என்றபடி –

சங்க்ரஹ பஷத்தில் –
பூர்வஜ -என்கிற பதத்தின் உடைய
விவரணமாய் இருக்கிறது –

———————

ஸ்தோத்ரம் -11-அவதாரிகை –

ப்ராப்ய ப்ராபகங்களும்
அதுக்கு அடியான ஸூஹ்ருதமும்
நாமே ஆகிலும் -உபாய பூதனான நான் மேலே
செய்ய வேண்டுவது என் -என்னில்
பிறந்த விஜ்ஞானமும் -ஜ்ஞானம் அடியாகப் பிறந்த அத்யவஸாயமும் நசியாது ஒழியப் பெறில்
யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்கிற ப்ராப்ய பூமியிலே போகவும் வேண்டா
பயவஹாமான சம்சார நிவ்ருத்தியும் வேண்டா –
எனக்கு என்றும் ஒக்க இதுவே அமையும் -என்கிறது-

விஜ்ஞானம் யதிதம் ப்ராப்தம் யதிதம் ஸ்தாந மார்ஜிதம்
ஜன்மாந்தரே அபி மே தேவ மாபூத் தஸ்ய பரிஷய —11-

விஜ்ஞானம்-
விலஷணமான ஜ்ஞானம்
சர்வாதிகமான ப்ராப்ய விஷயமாகவும்
சர்வாதிகமான பிராபக விஷயமாகவும் -பிறந்த ஜ்ஞானம் –
ப்ராப்யங்களில் பகவத் ப்ராப்திக்கு அவ்வருகாய் இருப்பதொரு ப்ராப்யம் இல்லாதாப் போலே –
சாதனங்களிலும் சித்த உபாயத்துக்கு அவ்வருகாய் இருப்பது ஓன்று இல்லை இறே-

யதிதம் விஜ்ஞானம்-
பரமான சித்தமுமாய்
ஹ்ருதய கமலத்திலே சந்நிஹிதமுமாய் இருக்கிற ஜ்ஞானம் –
வேதாந்தங்களிலே ப்ராப்யமும் ப்ராபகமும் ஈஸ்வரனே என்று பிரசித்தம் இறே
ஆநந்த மய -என்றும்
ரஸோ வை ச -என்றும்
சர்வ கந்தஸ் சர்வ ரஸ-என்றும் ப்ராப்யமாக பிரசித்தம் இறே

யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்று தொடங்கி
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
தஸ்மான் நயாஸ மேஷாம் தபஸா மதிரிக்த மா ஹூ -என்றும்
ஏஷ ஹேவாநந்த யாதி -என்றும் -உபாயமாகவும் பிரசித்தம் இறே -ப்ராப்தம் –

பிரயோஜநாந்தர பரர்க்கும்
சாதநாந்தர நிஷ்டருக்கும்
உட்பட உன்னாலே ப்ராபிக்கப் பட்டது –

யதிதம் ஸ்தாந மார்ஜிதம் –
ஸ்தானம் -என்று -ஸ்திதி –
அதாகிறது -இந்த ஜ்ஞான விஷயமான அத்யாவஸாயம் –

யதிதம் –
என்று ப்ரேதேசாந்தரத்தில் பிரசித்தியையும்
ஸ்வ ஹ்ருதய சந்நிதியையும் சொல்லுகிறது –
வ்யவஸாயா த்ருதே ப்ரஹ்மன் நாஸாதாயதி தத் பரம் -சாந்தி பர்வம் –என்னக் கடவது இறே –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கே -திருவாய் -5-10-11- என்றார் இறே ஆழ்வாரும்

ஆர்ஜிதம் –
பகவத் பிரசாத சித்தம் ஆகையாலே
ஜ்ஞானத்தை ப்ராப்தம் என்கிறது –
அதிகாரி விசேஷணமாய் -ஈஸ்வரனை அர்த்தித்தே நாம்
புருஷார்த்தமாகப் பெற வேண்டுவது ஓன்று ஆகையாலே
அத்யாவஸாயத்தை ஆர்ஜிக்கப் பட்டது- என்கிறது

ஜன்மாந்தரே –
இஜ் ஜன்மம் நசித்தாலும்
இந்த ஜ்ஞான அத்யாவஸாயங்கள் நசியாது ஒழிய வேணும் -என்கிறது
இத்தைப் புருஷார்த்தமாக அபேஷிப்பாரைக் கண்டறியோமே -என்ன –

மே –
எனக்கு இதுவே புருஷார்த்தம்
தாம் தாம் அர்தித்தது அன்றோ புருஷார்த்தம் ஆவது –

தேவ –
அர்த்திப்பார் உண்டானாலும்
நாம் புருஷார்த்தமாக கொடுத்துப் போருவது ஓன்று அன்றே -என்ன

தேவ –
சம்சாரிகளைப் போலே என்னைக் கொண்டு அறியாது ஒழிய வேணும்
லீலா ரஸம் அனுபவிக்கைக்கு விஷய பூதர் – சம்சாரிகள் அன்றோ

தஸ்ய –
ஜ்ஞான அத்யவஸாயங்களுக்கு உண்டான
ஐக கண்ட்யத்தாலே ஏக வசனத்திலே
சொல்லுகிறது –

பரிஷய -மாபூத் –
ஞானத்துக்கு பரி ஷயம் ஆகிறது -விஸ்ம்ருதி
அத்யாவஸாயத்துக்குப் பரி ஷயம் ஆகிறது விநாசம்
ஜ்ஞான விஸ்ரம்பம்ங்களுக்கு விஸ்ம்ருதி விநாசம் இன்றிக்கே ஒழிய வேணும் -என்கிறது –

கீழ் பரம பதத்தே கொடு போக வேணும் என்று அபேஷித்தும்
பயாவஹமான சம்சாரத்தை தவிர்த்துத் தர வேணும் என்று அபேஷித்தும் வைத்து
ஜ்ஞான அத்யாவஸாயங்களே அமையும் என்றேன் -என்றது
இவற்றின் உடைய ரஸயதையாலே-

உபகார ஸம்ருதியாலே ஆசார்யன் பக்கல் பிறந்த
போக்ய அதிசயத்தாலே
தேவு மற்று அறியேன் -என்னப் பண்ணிற்று இறே –

சம்சாரிகளை தர்சித்தால் ஜ்ஞான அத்யாவஸாயங்கள்
முக்த ப்ராப்ய ஸ்தலம் போலே இறே இருப்பது –
மேலால் பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு –பெரிய திருவந்தாதி -58
என்னும் ஆழ்வார் உடைய வார்த்தைக்கும் அடி இது இறே –

சங்க்ரஹ பஷத்தில்
இஸ் ஸ்லோகம்
நமஸ்தே -என்கிற பதத்தை
ஸமரித்துக் கிடக்கிறது

————————————————————————-

ஸ்தோத்ரம் -12-அவதாரிகை –

துக்க ரூபமான சம்சார நிவ்ருத்தியும்
ஸூக ரூபமான தேச பிராப்தியும் வேண்டா
அதிகாரி விசேஷணமான ஜ்ஞான விஸ்ரம்ப சித்தியாலே- புருஷார்த்தம் தலைக் கட்டிற்றாமோ-
இன்னம்
ஜன்மாந்த்ரே அபி -என்று பகவத் ப்ராப்தியான ஜென்மத்தை அனுமதி பண்ணுகையும் விருத்தம் அன்றோ -என்னில்
கீழ் அபேஷித்தவை ஒன்றும் வேண்டா-
சம்சாரியுமாய் -அது தன்னிலும் துர்க்கதியுமாய்ச் செல்லா நிற்கிலும்
தேவர் திருவடிகளில் உபாய உபேயங்கள் முதலான சகல பாபங்களும் கிடையாதே
மநோ ரதம் மாத்ரமே யானாலும்
ஸ்வ வஸர் போலே என்றும் ஒக்க க்ருத க்ருத்யனாகா நின்றேன் -என்கிறது –

துர்க்கதாவபி ஜாதாயாம் த்வத் கதோ மே மநோ ரத
யதி நாஸம் ந விந்தேத  தாவ்தா அஸ்மி க்ருதீ ஸதா–12

துர்க்க தாவபி ஜாதாயாம் –
துர்க்கதி -யாவது
மனஸ்சை ஒழிய இதர கரணங்கள் உதவாத தசை –
அதாகிறது –
அஸக்தியாலே -ஐயார் கண்டம் அடைக்கிலும்-திருவாய் -2-9-3-என்கிற உத் க்ரமண தசையிலும்
ஸ்வாபத்தாலே பாஹ்ய கரணங்கள் அடங்க உப ஸம்ஹ்ருதமான ஸவப்ன தசையிலும் –
இத் தசையிலேயாய்ச் செல்லா நின்றாலும் –

த்வத் கத –
ஸ்வரூப ரூப குண விபூதிகள் எல்லாம்
தனித் தனியே யாகப் பரமமான தேவர் திருவடிகளிலே அடையப் பட்ட மநோ ரதம் மாத்ரம் -என்கை-

மே மநோ ரத –
இழிந்த துறையிலே சபலனுமாய்
அவ்வருகு போக ஷமன் அன்றிக்கே இருக்கிற என்னுடைய மநோ ரதம்

மநோ ரதம் ஆவது -அபேஷிதமான புருஷார்த்தம் சித்தியாது ஒழிந்தாலும்
அதில் நசையாலே அவற்றை எண்ணா நிற்கை –

சித்தி இன்றிக்கே இருக்க
மநோ ரதம் மாத்ரமே புருஷார்தமாகக் கூடுமோ -என்னில்
ஊர்வசி யோடே அனுபவித்து
புண்ய ஷயத்தாலே விஸ்லேஷித்துப் போந்தவனுக்கு
வேறு சில விஷயங்களை அனுபவ யோக்கியம் ஆக்கினாலும்
அவற்றில் நெஞ்சு செல்லாதே அவள் தன்னையே நினைத்து இருக்கை
புருஷார்த்தம் ஆமா போலே இதுவும் கூடும் .

அவிலஷண விஷயத்தில் போகங்களைக் காட்டில் விலஷண விஷயத்தில் மநோ ரதம் மாத்ரமே ரசிக்கும் இறே-
பகவத் விஷயத்தில் மநோ ரதம் ஆவது –
பிதா த்வம் மாதா த்வம் -என்கிறபடியே -சர்வ வித பந்துவும் அவனேயாக வேணும் என்றும்
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் -அவனே யாக வேணும் என்றும்
அவனைப் பெறுகைக்கு உபாயம் அவனேயாக வேணும் என்றும்- இவையே இறே-

யதி நாஸம் ந விந்தேத –
இம் மநோ ரதம் விஷயாந்தர ஸம்சர்க்கத்தாலே விச்சேதத்தை அடையாதாகில் –
யதி -என்கிறது விஷயாந்தரங்கள் சாம்ராஜ்யம் பண்ணுகிற சம்சாரத்திலே
பகவன் மநோ ரதத்துக்கு விச்சேதம் இன்றிக்கே ஒழிகை யாகிற இது கிடைப்பது ஓன்று அன்று இறே –

1-ஒரு தேச லாபத்தாலே வந்த சுக சித்தியோ பாதியும்
2-சாம்சாரிகமான துக்க நிவ்ருத்தியோபாதியும்
3-ஜ்ஞான சித்தியோபாதியும்
4-இம் மநோ ரத சித்தியும்
பகவத் பிரசாத ஆயத்தம் -என்று கருத்து –

தாவ்தா அஸ்மி க்ருதீ ஸதா –
இம் மநோ ரத மாத்ரத்தாலே க்ருத க்ருத்யனாகா நின்றேன் –
என்றும் ஒக்க க்ருத க்ருத்யனாகா நின்றேன் –
ஸ்வஸ்த சரீரனான போதோடு -ருக்ண சரீரனான போதோடு -வாசி அற
ஆஸீநா வா ஸயாநா வா திஷ்டந்தோ வா யத்ர குத்ர வா –நமோ நாராயணாய மந்த்ராயா -என்கிற ந்யாயத்தாலே
ஸ்திதி சயன அத்யவஸ்தா விசேஷங்களோடு -ஜன்மாந்தரங்களோடு வாசி அற- ப்ராப்ய சித்தியில் போலே
இம் மநோ ரத சித்தி மாத்ரத்தாலே க்ருத க்ருத்யனாகா நின்றேன் -என்கை –

கீழ் ஸ்லோகத்தில் ப்ராப்ய சித்தியில் ஸாரஸ்யம் போலே ஜ்ஞான மாத்ரமே ரசிக்கும் என்கிறது
இதில் அந்த சித்தியும் வேண்டா
தத் சித்தி அர்த்தமான மநோ ரதம் மாத்ரமே அமையும் -என்று
அந்த ஸாரஸயத்தின் உடைய எல்லையைச் சொல்லுகிறது –
ஸமர்த்த விஷய ஸாரஸ்யம் இறே ஸம்ருதிக்கு ஸாரஸ்யம்
ஆகையாலே ஸமர்த்தவ்ய பகவத் விஷய சாரஸ்யத்தின் உடைய அவதி இல்லாமையைச் சொல்லிற்று -ஆய்த்து

நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக் கண்கள் அசும் பொழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே –5-4-8- என்று
பெரியாழ்வார் அருளிச் செய்ததற்கு முதல் இதுவே இறே –

நாஹம் து சக்யோபஜதோ அபி ஜந்தூன் பஜாம்யமீஷாம நுவ்ருத்தி வ்ருத்தயே
யதா அத நோ லப்ததநே விநஷ்டே தச் சிந்த யான்யன் நிப்ருதோ ந வேத
ஏவம் மதர்த்தோஜ்ஜி தலோகவேத ஸ்வாநாம் ஹி வோ மய் யநுவருத்தயே அபலா –
மயா பரோஷம் பஜதா திரு ஹிதம் மா ஸூ யிதும் மார்ஹத தத் ப்ரியம் ப்ரியா
ந பாரயே அஹம் நிரவத்ய சம்யுஜாம் ஸூ சாது கர்த்தும் விபுதா யுஷா அபிவ
யா மா பஜன் துர்ஜர கேஹ்ஸ் ருங்கலாம் சம்வ்ருச்ச்ய தத்வ பிரதியாது ஸா அது நா –
என்று இறே சேஷி வார்த்தையும் -(ராஸக்ரீடை -ஸூகம் மட்டுப்பட மறைந்து- நினைக்க வைத்தது போலே )

——————————————————————————

ஸ்தோத்ரம் -13-அவதாரிகை –

இஸ் ஸ்லோகத்தால் –
நான் உனக்கேயாய் இருக்கும் பாரதந்த்ர்ய ஸூகமே எனக்கு பிராப்யம் -என்கிறது –

கீழ் –
பரம பதத்தை ப்ராப்யம் என்றும்
சம்சார பயத்தைப் போக்கித் தர வேண்டும் என்றும்
இவை ஒன்றும் வேண்டா ஜ்ஞானமே அமையும் -என்றும்
அது தானும் வேண்டா -மநோ ரதம் மாத்ரமே அமையும் -என்றும்
ப்ராப்ய விரோதியான ஜென்மத்தை அனுமதி பண்ணியும் –
இப்படி
வ்யாஹத பாஷணம் பண்ணிற்று -என்-
ஒன்றே புருஷார்த்தமாக நிர்ணயித்து அபேஷிக்க வேண்டாவோ -என்னில் –
அவை வ்யாஹத பாஷணம் அல்ல
அடிமைக்கு ஏகாந்த தேசமான பரம பதத்தை ஆசைப் பட்டேன் –
அடிமைக்கு விரோதி என்று சம்சாரத்தை வேண்டாம் என்கிறது –
உன்னுடைய போக்யதாதிஸயத்தாலே த்வத் விஷய ஜ்ஞானமே அமையும் -என்றேன்
ஜென்மத்தை இசைந்ததும் ஜ்ஞானத்தின் யடைய சாரஸயாதிசயத்தாலே –
இவை எல்லாம் ப்ராஸங்கிகம் –

முதலிலே நமஸ்தே அஸ்து-என்று சொன்ன பாரதந்த்ர்ய ஸூகமே எனக்குக் காம விஷயம்
என்று புருஷார்த்தத்தை நிர்ணயித்துத் தலைக் கட்டுகிறது-

ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்திதம்
காமயே வைஷ்ணவத் வந்து சர்வ ஜன்ம ஸூ கேவலம்–13

ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்திதம் –
தே பாதயோ-ஸ்திதம்-மம சித்தம் -ந காம கலுஷம்
நிருபாதிக சேஷியாய்-நிரதிசய போக்யனாய் -இருந்துள்ள
உன்னுடைய திருவடிகளிலே
ஸ்திதமான என்னுடைய சித்தம்
வேறு ஒன்றை ஸ்வயம் புருஷார்த்தமாக நினைத்து கலங்குகிறது அன்று –
ஜிதம் தே புண்டரீ காஷ -என்கிறபடியே
நான் இருந்த இடத்தே வந்து முகம் காட்டி
ருசியைப் பிறப்பித்து
புகுர நிறுத்தின படியாலே
நிருபாதிக சேஷித்வமும்
நிரதிசய போக்யத்வமும்
எனக்கு அநு  பூதம் இறே –

காமயே –
சங்கத்தளவு அன்று -என்கை
தவ பரிஜன பாவம் காமயே -ஸ்தோத்ர ரத்நம் -47–என்று அருளிச் செய்ததுக்கும் முதல் இறே இது –
கேவல பதத்தாலே இத்தலைக்கு ரசித்து இருக்கும் படி அன்றிக்கே –
ஸ்ரக் சந்த நாதிகளைப் போலே -அத்தலைக்கே போக்யமாய் இருக்கும் -என்கை –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -திருவாய் -2-9-4-என்னக் கடவது இறே –
பார தந்த்ர்யமே ஸ்வரூபமாய் இருக்குமவனுக்கு
அநு கூல வ்ருத்தியில் வந்தால் ஸ்வபாவ நியதி இல்லை –

தத் யதா தருண வத்ஸா வத்ஸம் வத்ஸோ வா மாதரம் -என்று
ரஷ்ய ரஷகத்வ நியதி கண்டிலோம் இறே

ப்ராதா பர்த்தா ஸ பந்துஸ்ஸ பிதா ஸ மம ராகவ -என்று இளைய பெருமாளும்
ஒரு முறையிலே வ்யவஸ்திதராய் நின்றிலர் இறே –
தேரிலே ஏறின போது சத்ர சாமர தாரிகளாய் நின்றால் போலே
காட்டிலே போகிற போதும் கநித்தரபிட கதரரானார் இறே-(கோடாலி இத்யாதி)

தலை நீர்ப் பாட்டிலே பரிமாறுகிற பிராட்டியும்
தேவத்வே தேவதே ஹேயம் மனுஷ்யத்வே ஸ மாநுஷீ -என்று
அபிமதனுக்கு அநு ரூபமான ரூபமே தனக்கும் ரூபமாகப் பரிக்ரஹித்தாள் இறே

யதா யதா ஹி கௌசல்யா -என்கிறபடியே
கௌசல்யாரும் ஒரு முறையிலே நின்றிலள் இறே -சக்ரவர்த்தியைக் குறித்து –

ஸ்திதம் – ஸம் ஸ்திதம் -நிலை நின்ற –
யஸ்ய அஸ்மி -என்கிறபடியே வந்தேறி அன்றிக்கே
குணைர் தாஸ்யம் உபாகத –என்கிறபடியே
அழகுக்கு தோற்று இழிந்த என்னுடைய நெஞ்சு ஆகையாலே
விஷயாந்தரம் கண்டு போக்குவது ஓன்று அன்று -என்கை –

மம சித்தம் –
என் மனனே -திருவாய் -1-1-1–என்னுமா போலே
நெஞ்சினுடைய பவ்யதையைக் கண்டு உகக்கிறான் –

காமயே சர்வ ஜன்ம ஸூ கேவலம் -வைஷ்ணவத்வம் து-
து -சப்தத்தாலே-அவதாரணத்தைச் சொல்லுகிறது –
வைஷ்ணத்வம் -ஆவது –
பகவத் பார தந்த்ர்ய ஸூகமாதல்
தத் அநுகூல வ்ருத்தியாதல் –

ஏதமாநந்த மய மாத்மாந முபஸங்கராமதி -என்றும்
அநு சஞ்சரன் -என்றும்
யேன யேன ததா கச்சதி தேன தேன சஹ கச்சதி
சாயா வா ஸதத்வ மநுகச்சேத் -என்றும்
வேதாந்தங்கள் பார தந்த்ர்யத்தையே புருஷார்த்தமாகச் சொல்லிற்றின விறே

குருஷ்வ மாம் அநு சரம் -என்னக் கடவது இறே –

சர்வ ஜன்மஸூ-
நித்யனான ஆத்மாவுக்கு ஜன்மம் ஆவது
சரீர சம்யோகம் இறே

சேஷத்வ ரசம் அவிச்சின்னமாய்ச் செல்லுமாகில்
ஜன்ம பரம்பரைகளை அனுமதி பண்ணினாலும் விரோதம் இல்லை -என்கை –

சம்சாரே அஸ்மின் பயாவஹே மாம் பாஹி –ஸ்தோத்ரம் -8- என்கிற இதுவும்
தாஸ்ய ரசத்துக்கு விரோதி -என்று இறே –

இத்தால்
ஜன்ம சம்பந்தம் அறுகை ஸ்வயம் புருஷார்த்தம் அன்று -என்கை –

அதவா –
சர்வ ஜன்மஸூ–
அஜாயமாநோ பஹுதா விஜாயதே -என்றும் –
பஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி -என்றும்
ஜகத் ரஷண அர்த்தமாக அவதரிக்கும் அவதாரங்கள் தோறும் தொடர்ந்து
அடிமை செய்ய வேணும் -என்றான் என்றுமாம் –

————————————————————–

ஸ்தோத்ரம் -14-அவதாரிகை –

இதில் ஓடின பாவ வ்ருத்தி இன்றிக்கே ஒழிந்தவன்
இப் பாசுரத்தை நாள் தோறும் படித்து
அடியேனாக வேணும் -என்று
ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணுவான் –

இத்யேவம் அநாயா ஸ்துத்யா ஸ்துத்வா தேவம் திநே திநே
கிங்கரோ அஸ்மீதி ச ஆத்மாநம் தேவாயைவம் நிவேத யேத்–14

இத்யேவம் –
இதி -என்றும்
ஏவம் -என்றும்
அர்த்தத்தின் உடையவும்
சப்தத்தின் உடையவும்
ஸ்வரூபம் சொல்லுகிறது –

இத்தால் அல்லாத ஜிதந்தைகளில் காட்டில்
இதுக்கு உண்டான ஏற்றம் சொல்லுகிறது –

அநயா ஸ்துத்யா –
ஜிதந்த இதி மந்த்ரேண -என்று ப்ரதேசாந்த்ரத்திலே மந்த்ரமாகச் சொல்லிற்று –
இங்கு ஸ்தோத்ரமாகச் சொல்லிற்று -இதுக்கு அடி என் -என்னில்

மந்தாரம் த்ராயத இதி மந்திர -என்கிறபடியே
அநு சந்தாதாவை உத்தரிப்பிக்கும் என்றிட்டு மந்த்ரம் -என்கிறது

ஸ்தவ்யனாய் ஸ்தவ பிரியனான ஈஸ்வரன்
திருச் செவி சாற்றினால் முகம் அலருமதாகையாலே ஸ்தோத்ரம் -என்கிறது –

தேவம்-
சாஷாத் தேவ புராணோ அசௌ-என்று
நிருபாதிக தேவனாகச் சொல்லக் கடவது இறே-

திநே திநே –
அர்த்த ஜ்ஞானம் உடையவனுக்கு
இந்த சப்த உச்சாரணம் காதா சித்கமாகவுமாம்
இந்த பாசுரத்தைப் பற்றுமவனுக்கு
நாள் தோறும் உச்சரிக்க வேணும் –

கிங்கரோ அஸ்மீதி ச ஆத்மாநம் தேவாயைவம் நிவேதயேத் –
நான் கிங்கரானாக வேணும் என்று
சர்வேஸ்வரன் திருவடிகளிலே
ஆத்ம சமர்ப்பணம் -பண்ணுவான் –

இவ்வித அனுஷ்டானத்துக்கு பிரயோஜனம் என் -என்னில்
விலஷணராய் இருப்பார் சொன்ன பாசுரத்தை
தேகாத்ம அபிமானிகள் சொன்னாலும்
அவர்களை நினைத்து
அவர்களைப் போலே
ஈஸ்வரன் விஷயீகரிக்கும் -என்று கருத்து –

எது போலே -என்னில்
ஓர் ஈற்று நல்ல கன்றிட்டு கறந்த பசு
பின்பு அசல் கன்றிட்டாலும் மறைத்துத்
தோல் கன்றை மடுவிக்க
பின்புத்தைக் கன்றையே நினைத்துப் பால் சுரக்குமா போலே –

——————————————————————

ஸ்ரீ ஜிதந்தே ஸ்தோத்ரம் –

ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸுசாச்யுத |

கிம் கரோஸ்மி ஹ்ருஷீகேஶ பூயோ பூயோஸ்மி கிங்கர || 15

பதவுரை —
அச்சுதா – ஆஶ்ரிதர்களை ஒருகாலும் நழுவ விடாது நோக்குமவனே,
ஹ்ருஷீகேஶ – இந்த்ரியங்களுக்கு நியாமகனான ஸர்வேஶ்வரனே,
ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸு– சிஷு வாதி மரணாந்தமான எல்லா அவஸ்த்தைகளிலும்,
கிங்கரா: அஸ்மி — தேவரீருக்கு தொண்டு பற்றிரா நிற்றீர்,
பூயோ பூயோஹா = கிங்கரோஸ்மி = ( கைங்கர்யத்திலுள்ள ஆதரத்திஶயத்தைக் குறித்தபடி )

————-

யச் ச அபராதம் க்ருதவான் அஜ்ஞாநாத் புருஷோத்தம |

மத் பக்த தி தேவேஶ தத் ஸர்வம் க்ஷந்து மர்ஹஸி || 16

பதவுரை —
புருஷோத்தமா தேவ தேவேஶா = புருஷோத்தமனான எம்பெருமானே,
அஹம் — அடியேன்,
அஜ்ஞாநாத் — அறிவில்லாமையினாலே,
அபராதம் க்ருதவாநிதி — பிழை செய்தேனென்பது யாதொன்றுண்டோ,
தத் ஸர்வம் — அத்தை எல்லாம்,
மத் பக்தா இதி — ‘இவன் நம்மடியானன்றோ’ என்று திருவுள்ளம் பற்றி,
க்ஷந்து மர்ஹஸி — க்ஷமிக்கக் கடவீர் .

————–

அஹங்கா ரார்த்த காமேஷு ப்ரீதிரத்யைவ நஶ்யது |

த்வாம் ப்ரந்நஸ்ய மே தே வர்ததாம ஶ்ரீமதி த்வயி || 17

பதவுரை —
ஹே தேவா = ஸ்வாமிந்,
த்வாம் — தேவரீரை,
ப்ரபந்நஸ்ய – ஆஶ்ரயித்தவனான,
மே — அடியேனுக்கு,
அஹங்காரார்த்த காமேஷு — கர்வமென்ன அர்த்தமென்ன காமமென்ன இவற்றிலுள்ள,
ப்ரீதிஹி – நஶையானது,
அத்யைவ –- இப்போதே,
நஶ்யது – ஓழியக் கடவது,
ஸ்ரீமதி -– ஸ்ரீய:பதியான,
த்வயி –- தேவரீரிடத்தில்,
ப்ரீதிஹி -– அன்பாவது,
வர்ததாம் – வளர்ந்தோங்குக .

———-

க்வாஹ மத்யந்த துர்புத்தி ஹி க்வ சாத்ம ஹிதவீ_ணம் |

யத்திதம் மம தேவேஶ ததாஜ்ஞாபய மாதவ || 18

பதவுரை –-
தேவேஶ = தேவாதிராஜனே,
அதந்த துர்புத்திஹி –- மிகவும் பொல்லா ஜ்ஞாந புத்தியை யுடைய,
அஹம் க்வா -– அடியேன் எங்கே,
ஆத்ம ஹித வீ_ணம் க்வா — தனக்கு நன்மை தேடிக் கொள்ளுகை என்பது எங்கே,
மாதவா -– ஸ்ரீய:பதியே,
மம -– அடியேனுக்கு,
யத் ஹிதம் -– யாதொன்று நன்மையா இருக்குமோ,
தத் ஆஜ்ஞபாய – அதனை தேவரீர் தாமே ஜ்ஞாபநம் செய்தருள வேணும் .
( மிகவும் துர் புத்தியனான அடியேன் ஸ்வ புத்தியாலே ஒரு நன்மை தேடிக் கொள்ள வல்லேனல்லேன்
ஆதலால் ஸர்வஜ்ஞநரான தேவரீரே கருத்தறிந்து கார்யம் செய்தருளவேணு மென்கிறது ) .

————-

ஸோஹம் தே தேவ தேவேஶ நார்சநாதௌ ஸ்துதௌ ந ச |

ஸாமர்த்யவான் க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ஹி ப்ரஸீத மே || 19

பதவுரை –-
தேவ தேவேஶ — ஸர்வோத்க்ருஷ்டனான எம்பெருமானே,
ஸோஹம் -– அடியேன்,
தே அர்சநாதௌ ஸ்துதௌ–- தேவரீருடைய திருவாராதநதி காரத்திலும்-ஸ்தோத்ரங்களிலும்
ந ஸாமர்த்யவான் — ஶக்தி யுடையேனல்லேன்,
( அதஹ = ஆகையினாலே )
க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ஹி -– க்ருபா குணமொன்றையே மனோ தர்மமாக வுடைய தேவரீர்,
மே –- அடியேன் திறத்தில்,
ப்ரஸீதா – ( அந்த நிர்ஹேதுக க்ருபை யடியாகவே ) இரங்கி அருள வேணும் .

——————

உபசார பதேஶேந க்ருதாந் அஹரஹர் மயா |

அபசாராந் இமான் ஸர்வாந்  ஷமஸ்வ புருஷோத்தம || 20.

பதவுரை –
புருஷோத்தமா –- வாரீர் புருஷோத்தமரே,
அஹரஹ -– நாள் தோறும்,
மயா –- அடியேனால்,
உபசாராபதேஶேந -– உபசரிக்கிற வ்யாஜத் தாலே,
க்ருதாந் –- பண்ணப்பட்ட,
இமாந் ஸர்வாநபசாரான் -– இந்த பகவதபசார பாகவதபசார அஸஹ்யாபசாரங்களெல்லாவற்றையும்,
ஷமஸ்வ — ஷமித்தருள வேணும் .

————————

ப்ரதம ஜிதந்தே ஸம்பூர்ணம்.

——-

த்விதீய ஜிதந்தே வ்யாக்யானம்

ஜிதந்தே புண்டரீகாக்ஷ பூர்ண ஷாட் குண்ய விக்ரஹ |

பராநந்த பர ப்ரஹ்மன் நமஸ்தே பரமாத்மநே || 1

பூர்ண ஷாட் குண்ய விக்ரஹ = ஜ்ஞாந ஶக்தி பலைஶ்வர்ய தேஜஸ்ஸுக் கள் என்கிற ஆறு குணங்களும் அமைந்த திரு மேனியை யுடையவரே ,
புண்டரீகாக்ஷ = செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடையவரே ,

பராநந்த = இதுக்கவ்வருகில்லை யென்னும்படி மேம்பாடுடைய ஆனந்தமுடையவரே ,
இங்ஙனே பஹுவ்ரீஹி ஸமாஸமன்றிக்கே ,
பரஶ் சாஸௌ ஆனந்தஶ்ச யென்று கர்ம தாரயமாய்
உத்தமமாந் ஆனந் தமே யென்றதாகவுமாம் ;
“ ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்யஜநாத் “ என்னக் கடவதிறே |
தத் குண ஸாரஸ்வத்வாத் தத் வ்யபதேஶம் பண்ணுகிறபடி
இங்ஙனமன்றிக்கே , பராநாநந்த யதீதி பராநந்தக யென்றாய் ,
“ யேஷ ஹ்யேவாநந்தயாதி “ என்கிறபடியே பிறரையும் தன்னோடொக்க ஆனந்திப்பிக்குமவரே யென்னவுமாம் |

பரப்ரம்ஹந் = ப்ரம்ஹ லக்ஷண மாகிறது ஜகஜ் ஜந்மாதி காரணத்வ மென்றிறே “ஜந்மாத்யஸ்யயத:“ இத்யாதி ஸூத்ரங்களாலே நிஷ்கரிக்கப்பட்டது ;
மூவுலகும் படைத்து அளித்து அழித்து -அனைத்துக்கும் ஹேது அவனே யென்கை
தே ஜிதம் = இப்படிப்பட்ட உனக்கு பல்லாண்டு;
பரமாத்மநே தே நம: = உலகனைத்துக்கெல்லாம் ஓருயிரான தேவரீரை தெண்டன் ஸமர்ப்பிக்கிறேன்

‘ஜிதம்‘ என்று வாய் படைத்த ப்ரயோஜநம் பெறுமாறு சொல்லி
‘ நம: ‘ என்று உடம்பு படைத்த ப்ரயோஜநம் பெறும்படி சொல்லுகிறது

—————

நமஸ்தே பீத வஸந நம: கடக தாரிணே |

நமோ நீலாலகா பத்த வேணீ ஸுந்தர விக்ரஹ || 2

பீத வஸந = பீதக வாடைப் பிரானே ,
கடக தாரிணே தே நம: = தோள் வளை பூண்டிரா நின்றுள்ள தேவரீருக்கு நமஸ்காரம் ;
நீலாலகா பத்த வேணீ ஸுந்தர விக்ரஹ = மை வண்ண நறுங் குஞ்சிக் குழல்களாலே ஸமைந்த வேணீ பந்தத்தாலே அழகு பெற்ற திருமேனி யுடையவனே ,
தே நம: = ஆதராதிஶயாதாம்ரேதிதம் .

————–

ஸ்புரத் வலய கேயூர நூபுராங்கத பூஷணை: |

ஷோபநைர் பூஷிதாகார கல்யாண குண வாரிதே || 3

கருணா பூர்ண ஹ்ருதய ஶங்க சக்ர கதா தர: |

அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோக்ய || 4

ஷோபநை: = அழகிய வாய் ,
ஸ்புரத் வலய கேயூர நூபுராங்கத பூஷணை: = விளங்கா நின்றுள்ள வளைகள் பாதகம் புஜ பந்தம் முதலிய திவ்யாபரண ங்களாலே ,
( அங்கதமென்றும் கேயூரமென்றும் தோள்வளைக்கு பேரா யினும் இங்கு ஸஹபார பலத்தாலே அர்த்த பேதம் கொள்ள வேணும் ,
ஓன்று தோள் வளையையும் ஒன்று புஜ வளையையும் சொல்லிற்றாகிறது ) ,
பூஷிதகார = இவ்வோ பூஷணங்களாலே அலங்க்ருதமான் திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையாய் ,
கல்யாண குண வாரிதே = வாத்ஸல் யாதி மங்கள குணங்களுக்குக் கடல் போன்றவனே ,
கருணா பூர்ண ஹ்ருதய = ஆஶ்ரிதர் திறத்திலே இரக்கம் மிக்கிரா நின்றுள்ள திருவுள்ள முடையவனே ,
ஶங்க சக்ர கதா தர = ஆஶ்ரிதர் நோவு படக் கண்டால் உடனே பரிஹரித்தருள்வதற்காக திவ்யாயுதங்களை என்றுமொக்கக் கையிலே ஏந்தி யுள்ளவனே ,
அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோக்ய = அம்ருதமும் ஆனந்தமும் நிறைந்த திருக் கண்களாலே குளிர கடாஷித்தருள வேணும் .

பகவத் விஷய மென்றால் செவி புதைக்கும்படியான இவ் விருள் தருமா ஜ்ஞாலத்திலே இங்ஙனே ஓரடியவரை லபிக்கப் பெற்றோமே ! என்று
திருக் கண்களாலே அம்ருதமும் ஆனந்தமும் புற வெள்ளமிடக் காண விரும்புகிறபடி .

——————-

க்ருஷம் க்ருதக்நம் துஷ் கர்ம காரிணம் பாப பாஜநம் |

அபராத ஸஹஸ்ராணாம் ஆகரம் கருணாகர || 5

க்ருபயா மாம் கேவலயா க்ருஹாண மதுராதிப |

விஷயார்ணவ மக்நம் மாம் உத்தர்தும் த்வம் இஹ அர்ஹஸி || 6

கருணாகரா = அருளுக்கு ஆகரமானவனே ,
மதுராதிப = “ நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராபுரீம் “ என்று
இங்குள்ளாரை வாரிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு போவதற்கு திரு மதுரையிலே வந்து திரு வவதரித்தவனே ,
க்ருஷம் = பலவகைப்பட்ட சிந்தைகளாலே உடல் மெலிந்து ,
க்ருதக்நம் = நீ எத்தனை நன்மை செய்தருளினாலும் அவற்றை ஒரு பொருளாக்கவும் மதிக்க மாட்டாவதனை ,
துஷ்கர காரிநம் = தீய செயல்களென்று ஶாஸ்த்ரங்களிலே எவை சில கர்மங் கள் க்ரஹிக்கப்பட்டிருக்கும் ,
அவற்றின் ஸ்வரூபம் என்னடி யாகவா யிற்று நிறம் பெறுவது ,
அவற்றை செய்துபோருகையே தொழிலாக உடையானே ,

பாப பாஜநம் = இப்போது செய்து போருகிற வளவேயோ ,
எந்நின்ற யோநியுமாய் கூடு பூரித்துக் கிடக்கும் பாபங்களுக்கும் களஞ் சியமாயிறே அடியேனிருப்பது .
அபராத ஸஹஸ்ராணா மாகரம் = தேவர் “ குணாநாமாகரோ மஹாந் “ என்று நாடெங்கும் புகழ் பெற்றால் போலே ,
அடியேனும் அபராத ஸஹஸ்ராணாமாகர: “ என்று விருது பிடித்துத் திரிகிறபடி பாரீர் ,
மாம் = இப்படி தேவரீருடைய நிக்ரஹ ஹேதுக்களில் அல்பமும் குறைவில்லாத அடியேனை ,
கேவலயா க்ருபயா க்ருஹாண = நிர்ஹேதுகமான க்ருபையாலே ‘ இவன் நம்மடியான் ‘ என்று திருவுள்ளம் பற்றி யருள வேணும் .
( கேவலயா ) மடி மாங்கா யிடும்படிக் கீடாக இத்தலையில் சிறிதேனும் தொங்கிற்றுண்டோ என்று தேடப் புக்கலும் கிடைப்பதொன்றில்லை காண் ,
உன்னுடைய க்ருபை யொன்றுமே ஜீவிக்க வேண்டும் கிடாய் ,
விஷயார்ணவ மக்நம் மாம் = ஶப்தாதி விஷயங்களாகிற கடலினுள்ளே அழுந்திக் கிடக்கிற அடியேனை
த்வமுத்தர்து மர்ஹஸி = தேவரீர் தாமே கரையேற்றக் கடவீர் .

——————

பிதா மாதா ஸுஹ்ருத் பந்து: ப்ராதா புத்ரஸ் த்வமேவ ஹி |

வித்யா தனஞ்ச காம்யஞ்ச நாந்யத் கிஞ்சித் த்வயா விநா || 7

பிதா = உத்பாதகனாய் ஹித காமனாயிருக்கிற பிதாவும் ,
மாதா = கர்ப தாரணம் பண்ணி ப்ரஶவ க்லேஶத்தை அநுபவித்து
அஷுசி ப்ரஸவங்க ளுக்கும் இறாயாதே ரஷித்து
உள்ளதனையும் ப்ரியமே நடத்திப் போரும் தாயும் ,
ஸுஹ்ருத் = எப்போதும் நன்மையே சிந்திக்கும் ஸகாவும் ,
பந்து: = ஓர் ஆபத்து வந்தவாறே கண்ணை துடைக்க வரும் பாந்தவ ஜ்ஞாநமும் ,
ப்ராதா = நன்மை தீமைகளுக்குத் துணை நிற்கு மவனான உடன் பிறந்தானும் ,
புத்ர: = நிரய நிஷ்டாரகனான பிள்ளையு மாகிற யெல்லாம் ,

த்வமே ஹி = “ சேலேய் கண்ணியரும் பெறும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே யினியாவாரே” என்கிறபடியே
யெல்லாஉறவு முறையும் எனக்கு நீயே காண் ,
வித்யா = இங்கு ஜீவநத்தையும் அங்கு உஜ்ஜீவநத்தையும் ,
தனம் ச = ஆபத் துக்கு உதவும் பொருளும் ,
காம்யம் ச = மற்றுமுள்ள க்ருஹ ஷேத்ர பஶ்வந் நாதி காம்ய வர்கமும் ,
த்வயா விநா அந்யத் கிஞ்சித் ந = எல்லாம் நீயே யன்றி வேறொன்றில்லை காண் அடியேனுக்கு –

——————-

யத்ர குத்ர குலே வாஸோ யேஷு கேஷு பவோஸ்து மே |

தவ தாஸ்ய ஏக போகே ஸ்யாத் ஸதா ஸர்வத்ர மே ரதி: || 8

மே = உன்னையே தஞ்சமாக பற்றின வெனக்கு ,
யத்ர குத்ர குலே வாஸா அஸ்து = பாதாள ப்ருத்வீ நரக ஸ்வர்காதிகளுள் எவ்விதத்தி லாகவுமாம் வாஸம் ,
யேஷு கேஷு பவஹ அஸ்து = ‘ யோநிஷு ’ என்றித்தனை அத்யாஹார்யம் =
ஸுர நர திர்யக் யோநிகளில் பேர் சொல்லவும் பொராததொரு யோநிகமாவும் பிறப்பிடம் ;
இதிலே ஒரு நிர்பந்தமில்லை காண் .
பின்னை அதுள்ளது யெவ் விஷயத்திலே யென் னில் ;
( தவேத்யாதி ) தேவரீருடைய ‘அடிமை என்னு ம் அக்கோயிந்மை’ என்கிற தாஸ்ய ஸாம்ராஜ்ய மென்பது யாதொன்றுண்டு ,
அது தன்னிலே யெனக்கு யெப்போதும் யெவ்விதத்தும் அபி ருசி வேண்டு மத்தனை காண் தேட்டம் |
‘ திவி வா புவி வா மமாஸ்து வாஸ: ‘ யென்பதை ஸ்மரிப்பது |

—————–

மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா கதஞ்சந |

த்வாம் விநா நாந்ய முத்திஶ்ய கரிஷ்யே கிஞ்சிதப் யஹம் || 9

மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா = நினைவுக்கு உறுப்பான நெஞ்சி னாலாவது ,
செய்கைக்குறுப்பான கரங்களினாலாவது , சொல்லுக்குறுப்பான வாக்கினாலாவது,
உத்துங்கன் விஷயத்திலே அதமன் செய்யக் கடவ செயலுக்கு உறுப்பான ஶிரஸினாலாவது ,

“ கர்மணா “ என்று இந்த்ரிய ஜந்ம வ்யாபாரத்தை சொல்லக் கடவதாகிலும்
இவ் விடத்திலே லக்ஷணயா கர்ம ஸாதநமான காரணந்தன்னை சொல்லிற்றாகிறது .
“ அர்தாத் ப்ரகரணா லிங்க தோசித்யா தர்த நிஶ்சய: “ யிறே .
ஆக , மநோ வாக் காய ஶிரஸ்ஸுக்களிலொன்றுலாவது ,

கதஞ் ச ந = எவ்வகையிலும் ,
த்வாம் விநா அந்ய முத்திஶ்ய = தேவரீரை யொழிய மற்றொருவரை யுத்தேசித்து ,
அஹம் கிஞ்சிதபி ந கரிஷ்யே = அடியேன் ஒன்றும் செய்யக் கடவனல்லேன் ,

தேவரீரை யொழிய மற்றொருவனையும் நெஞ்சாலும் நினையேன் ,
வாய் கொண்டும் பேசேன் , கையாலும் தொடேன் , தலையாலும் வணங்கேனென்கை .

கதஞ்ச ந = எப்படிப்பட்ட ஆபத்து நேர்ந்த போதிலு மென்றபடி .

—————

பாஹி பாஹி ஜகந் நாத க்ருபயா பக்த வத்ஸல |

அநாதோஹம தந்யோஹம க்ருதார்த: கதஞ்சந ||. 10

ஜகந்நாத = உலகங்கட்கு அரசே ,
பக்த வத்ஸல = ஆஶ்ரிதர்களின் குற்றங்களையே பச்சையாகக் கொள்ளுமவனே ,
க்ருபயா பாஹி பாஹி =கேவல க்ருபையினாலே ரஷித்தருள வேணும் ரஷித்தருள வேணும்.
ரக்ஷண த்வராதிஶய த்யோதநாய த்விருக்திஹி ,
அஹம் அநாத: = அடியேன் தேவரீரை யன்றி வேறொரு புகலற்றிரா நின்றேன் .
அதந்ய: = அகிஞ்சநன் ,
கதாஞ்சந அக்ருதார்த: = செய்ய வேண்டிய செயல்களில் ஏதாகிலுமொன்றையாவது சிறிது குறையவாகிலும் அநுஷ்டிக்கப் பெற் றிலேன்
ஆன பின்பு ,
க்ருபயா பாஹி = இத்தலையிலொன்றையும் ப்ரதீஷியாத க்ருபையைக் கொண்டு கார்யம் செய்யப் பாராய் .

—————-

ந்ருஶம்ஸ: பாப க்ருத் க்ரூரோ வஞ்சகோ நிஷ்டுரஸ் ஸதா |

பவார்ணவ நிமக்நம் மாம் அநந்ய கருணோததே || 11

கருணா பூர்ண த்ருஷ்டிப்யாம் தீநம் மாம் அவலோக்ய |

த்வத் அக்ரே பதிதம் த்யக்தும் தாவகம் ந அர்ஹஸி ப்ரபோ || 12

ந்ருஶம்ஸ: = காதுகன் ஆட்டு வாணியன் காண் அடியேன் ,
பாப க்ருத் = ஹிம்ஸை ஒன்று தானோ செய்து போனது ? “-நானே நாநாவித நரகம் புகு பாவம் செய்தேன் “ .
க்ரூர: = இத்தனை பாவம் செய்தும் நெஞ்சில் தான் சிறிது ஈரமுண்டோ ?
வஞ்சக: = பெரிய திரு விழிகளாலே நால்வர் நின்ற விடத்தே கையும் கர்தரியுமாய்த் திரியுமவன் காண் .
ஸதா நிஷ்டுர: = மாத்ரு காதுகனுக்கும் கை நொந்தால் ‘அம்மே’ யென்ன ப்ராப்தியுண்டு ,-அதுவுமில்லை காண் எனக்கு .
பவார்ணவ நிர்மக்நம் = பிறவிக் கடலுள் துலங்கா நிற்கிற ,
அநந்யம் = வேறு புகலற்றிருக்கிற ,
தீநம் = போர க்லேஶப் பட்டு இருக்கிற ,
மாம் = அடியேனை ,
கருணோததே = கருணைக் கடலே ,
கருணா பூர்ண த்ருஷ்டிப்யாம் அவலோக்ய = திருவருள் விஞ்சின திருக் கண்களாலே நோக்கி யருள வேணும் .
ப்ரபோ = எம்பெருமானே ,
த்வதக்ரே = தேவரீர் திருமுன்பே ,
பதிதம் = வேரற்ற மரம் போலே வீழ்ந்தவனாய் ,
தா அவகம் = ‘அஹம் மம’ என்றிருந்த நிலை குலைந்து உன்னுடையவனென்று பேர் சுமந்திரா நின்ற ,
மாம் = அடியேனை ,
த்யக்தும் ந அர்ஹஸி = கைவிடவில்லை யல்லை காண் .
( த்வதக்ரே பதிதம் ) * எத்திசையு முழன்றோடி யிளைத்து வீழ்ந்த காகா ஸுரனிலும் கெட்டேனோ ?
( த்யக்தும் நார்ஹஸி ப்ரபோ ) நிரங்குஸ ஸ்வாதந்த்ரனான வுனக்குச் செய்யக் கூடாததொன்றில்லை யேலும்
என்னை கை விடுகை உன்னுடைய செங்கோண்மைக்குச் சதிர் அன்று கிடாய்.

—————

மயா க்ருதாநி பாபாநி த்ரிவிதாநி புந: புந: |

த்வத் பாத பங்கஜம் ப்ராப்தும் நாந்யத் த்வத் கருணாம் விநா || 13

த்ரிவித பாபாநி = வாசிக காயிக மாநஸிக பேதத்தாலே மூன்று வகைப் பட்ட பாபங்களும் ,
புந: புந: மயா க்ருதாநி = ‘யத் ப்ரம்ஹ நியதாநு பவேப்யநாஶ்யம் த்த் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்து ரிஹ க்ஷணார்தே’ என்றபடியே
ஒன்றும் குறைவில்லாதபடி அடுத்தடுத்து அடியேனால் செய்து தலைக் கட்டப் பட்டன ,
த்வத் பாத பங்கஜம் ப்ராப்தும் = தேவரீருடைய திருவடித் தாமரை அடைய அணுகுவதற்கு ,
த்வத் கருணாம் விநா அந்யத் நா = நின்னருளன்றிப் புகலொன்றுமில்லை –

————————————

ஸாதநாநி ப்ரஸித்தாநி யாகாதீநி அப்ஜ லோசன |.

த்வத் ஆஜ்ஞயா ப்ர யுக்தாநி த்வாம் உத்திஷ்ய க்ருதாநி வை || 14

அப்ஜ லோசந = தாமரைக் கண்ணனே ,
த்வதாஜ்ஞயா ப்ர யுக்தாநி = “ ஶ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா “ என்கிறபடியே
தேவரீருடைய திவ்யாஜ்ஞையான ஶ்ருதி ஸ்ம்ருத்யாதிகளாலே சோதிதமான ,
யாகாதீநி ப்ரஸித்தாநி ஸாதநாநி = யாகம் முதலான ப்ரஸித்தங்களான ஸாதநங்களத்தனையும் ,
த்வாமுத்திஷ்ய க்ருதாநி = தேவரீரை யுத்தே ஸித்து செய்து முடிக்கப் பட்டன .

கீழ் ஶ்லோகத்திலே , ‘ த்ரிவிதமான பாபங்களையும் அடியேன் செய்து தலைக் கட்டினேன் ,
இனி தேவரீர் அருள் கொண்டு கார்யம் செய்யுமத்தனை ‘ என்று சொல்லி வைத்து ,

இதில் ‘தேவரீருடைய ஆஜ்ஞா சோதிதங்களான யாகாதி ஸாதநங்களைச் செய்து தலைக் கட்டினே’ னென்றால்
இரண்டும் தன்னில் சேருமோ வென்னில் ,

கீழ் ஶ்லோகத்துக்கு பொருந்துமாறு பொருள் கொள்ள வேண்டுகையாலே –
அடியேன் செய்து தலைக் கட்டிய யாகாதி ஸாதநா நுஷ்டானம் இந்த த்ரிவித பாபங்களே யாமத்தனை காண் யென்று
ஏக வாக்யார்த்தமாகக் கொள்ளக்கடவது .
யாகமாவது – பகவதாராதநம் ; “ யஜ — தேவ பூஜாயம் “ இறே
( க்ருதாநி வை ) “ நன்றாக நானிலத்தை வாழ்வித்தேன் “ என்றாப்போலே ஷோபோக்தி இருக்கிறபடி .

————-

பக்த்யைக லப்ய: புருஷோத்தமோஸௌ

ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேது: |

அகிஞ்சநோ அநந்ய கதிஶ் ஶரண்ய

க்ருஹாண மாம் க்லேஶிநம் அம்புஜாக்ஷ || 15

ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேது: = “ யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே “ இத்யாதிப்படியே
உலகங்களைப் படைத்தளித்துத் துடைக்க வல்ல ,
அஸௌ புருஷோத்தம: = புருஷோத்தமனாகிய இந்த தேவரீர்,
பக்த்யைக லப்ய: = “ பத்தராமவர்க்கலாது முத்தி முற்றலாகுமே “ என்கிறபடியே
பக்தி ஒன்றினாலேயே பெறத் தக்கர் ,
அகிஞ்சந: = இத் தலையில் பேற்றுக்குறுப்பான கைம்முதலொன்றுமில்லை .
அநந்ய கதி: = உபாயாந்தர ஶூந்யத்தை மாத்ரமல்ல , ரக்ஷகாந்தர ஶூந்யனாயு மிரா நின்றேன் ,
ஶரண்ய = ஸர்வ லோகங்களுக்கும் அநிஷ்ட நிவ்ருத்தி யையும் இஷ்ட ப்ராப்த்தியையும் பண்ணிக் கொடுக்குமவனே ,
அம்புஜா- = ஸ்வாமித்வ ஸூசகமான செந் தாமரை போன்ற திருக் கண்களை யுடைய வனே ,
க்லேஶிநம்= அவித்யாஸ் மித ராக த்வேஷா பிநிவேஸங்களாகிற க்லேஶங்களாலே பீடிதனான ,
மாம் = அடியேனை ,
க்ருஹாண = பற்றப் படுபவனாக அங்கீகரித்தருள வேணும் .

———————

தர்மார்த்த காம மோக்ஷ ஏஷு நேச்சா மம கதாசந |

த்வத் பாத பங்கஜாஸ்வாத ஜீவிதம் தீயதாம் மம || 16

தர்மார்த்த காம மோக்ஷ ஏஷு = இஷ்ட பூர்த்தாதிகளாலுண்டாகும் புண்யத்திலும் ,
புருஷார்த்த ஸாதநமான வைஶ்வர்யத்திலும் ,
ஸ்வ ப்ரயோ ஜநமான ஐஹிக போகத்திலும் ,
ஸ்வாநுபவரூப கைவல்யத்திலும்
ஸ்வ ப்ரீதிக்குறுப்பான மோக்ஷத்திலும் ,
மம = தேவரீருக்கு அத்யந்த பரதந்த்ரரான யெனக்கு எது வேண்டுவதென்னில் ,
த்வத் பாத பங்கஜாஸ்வாத ஜீவிதம் = தேவரீருடைய திருவடித் தாமரைகளை யநுபவிக்கையாகிற ஜீவநமானது ,
மம = அடியேனுக்கு ,
தீயதாம் = க்ருபையினால் , ப்ரஸாதித் தருள வேண்டும் .

—————–

காமயே தாவகத்வேந பரிசர்ய அநு வர்த்தநம் |

நித்யம் கிங்கர பாவேந பரி க்ருஹ்ணீஷ்வ மாம் விபோ || 17

தாவகத்வேந = தேவரீருக்கு பரதந்த்ரனாய் ,
பரிசர்யாநுவர்த்தநம் = கைங்கர்யம் செய்வதில் நிரதனா யிருக்கையாய் ,
காமயே = ஆசைப் படா நின்றேன்,
ஹே விபோ = ஸர்வ ஸ்வாமியே ,
மாம் = அடியேனை,
நித்யம் = மேலுள்ள காலமெல்லாம் ,
கிங்கர பாவேந = உரிய வடியனாக ,
பரி க்ருஹ்ணீஷ்வ = அங்கீகரித் தருள வேணும் .

——————-

லோகம் வைகுண்ட நாமாநம் திவ்யம் ஷாட் குண்ய ஸம்யுதம் |

அவைஷ்ணவாநாம் ப்ராப்யம் குண த்ரய விவர்ஜிதம் || 18

நித்ய ஸித்தைஸ் ஸமா கீர்ணம் த்வந்மயை: பாஞ்ச காலிகை: |

ஸபா ப்ராஸாத ஸம் யுக்தம் வநைஶ் சோபவநைர்யுதம் || 19

வாபீ கூப தடாகைஶ்ச வ்ருக்ஷ ஷண்டைஸ் ஸுமண்டிதம் |

அப்ராக்ருதம் ஸுரைர் வந்த்யம் அயுதார்க ஸம ப்ரபம் |

ப்ரக்ருஷ்ட ஸத்த்வ ஸம்பந்நம் ஸதா த்ரக்ஷ்யாமி சஷூஷா || 20

திவ்யம் = ஸ்வயம் ப்ரகாஶமாய் ,
ஷாட் குண்ய ஸம்யுதம் = ஜ்ஞாநாதி ஷாட் குண்ய விஶிஷ்டனான ஸர்வேஶ்வரனோடு கூடியதாய் ,
அல்லது, பகவத் ஸ்வரூபாதி திரோதயகமாந லீலா விபூதி போலன்றிக்கே ஸர்வேஶ்வரனுடைய ஷாட் குண்ய ப்ரகாஶகமாய் ,
அவைஷ்ணவாநாம் ப்ராப்யம் = விஷ்ணு பக்தி யில்லாதவர்களை அடைவதற்கு அஶக்யமாய் ,
குண த்ரய விவர்ஜிதம் = ஸத்வ ரஜோ தமோ ரூப குண த்ரய ஶூந்யமாய் ,
த்வந்மயை: = ஸர்வேஶ்வரனான உன்னோடு பரம ஸாம்யா பந்நர்களாய் ,
பாஞ்சகாலிகை: = அகால கால்யமாந விதத்திலே அபிகமநோ பாதானே ஜ்யாஸ்வாதாய யோகங்களாகிற ஐந்து காலங்களால் விபஜித்து பகவதாராதநம் செய்யுமவர்களான ,
நித்ய ஸித்தை: = நித்ய முக்தர் களாலே ,
ஸமாகீர்ணம் = சூழப்பட்டதாய் ,
ஸபா ப்ரஸாத ஸம்யுக்தம் = கொலு மண்டபம் உப்பரிகை முதலியவைகளோடு கூடியதாய் ,
வநை: = திவ்யகாந்தாரம் முதலிய தூரஸ்த வனங்களோடும்
உபவநைஶ்ச = ஸமீபஸ்தமான உத்யான வனங்களோடும் ,
யுதம் = கூடியிருப் பதே,
வாபீ கூப தடாகைஶ்ச = நடை வாவிகள், சிறு கிணறுகள், பெரிய குளங்கள் ஆகிய இவைகளாலும் ,
வ்ருக்ஷஷண்டை: = பலவகையான வ்ருக்ஷங்களாலும் ,
ஸுமண்டிதம் = அலங்கரிப்பதிருப்பதாய் ,
அப்ரா க்ருதம் = ப்ரக்ருதியின் விகாரங்களாக உண்டான தன்றிக்கே பஞ்சோப நிஷ்ணமாய் ,
ஸுரைர் வந்த்யம் = அயர்வறும் அமரர்களாலே ஸேவிக்கப் படுமதாய் ,
அயுதார்க ஸம்ப்ரபம் = அநேகமாயிரம் ஸூர்யர்களோ டொத்த காந்தியை யுடையதாயும் ,
ப்ரக்ருஷ்ட ஸத்த்வ ஸம்பந்நம் = ஶுத்த ஸத்வ மயமான ,
வைகுண்ட நாமாநம் லோகம் = ஸ்ரீவைகுந்த மென்கிற பரம பதத்தை ,
கதா = எப்போது ,
சஷூஷா = கண்களால் ,
த்ரக்ஷ்யாமி = கண்டு களிப்பேன்

—————–

க்ரீடந்தம் ரமயா ஸார்தம் லீலா பூமிஷு கேஶவம் |

மேகஶ்யாமம் விஶாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 21

லீலாபூமிஷு = விஹாரார்த்தமான ஸ்தலங்களில் ,
ரமயா ஸார்தம் = போக வர்தகையான பெரிய பிராட்டியாருடன் ,
க்ரீடந்தம் = விஹரியா நிற்பானாய் ,
மேகஶ்யாமம் = குளிர்ந்த மேகம் போலே ஶ்யாமளமான விக்ரஹத்தை யுடையனாய் ,
விஶாலாக்ஷம் = விஶாலமான திருக்கண்களை யுடையனாய் ,
கேஶவம் = ஆபத் காலத்தில் ப்ரஹ்ம ருத்ராதிகளை தன் மேனியில் இடம் கொடுத்து ரஷிக்கும் ஸர்வாதிகனான எம் பெரு மானை ,
சஷுஷா கதா த்ரக்ஷ்யாமி = கண்ணாரக் கண்டு ஸேவித்து ஆனந்திப்பது எப்போதோ .

————

உந்நஸம் சாரு வதநம் பிம்போஷ்டம் ஶோபிதாநநம் |

விஶால வக்ஷஸம் ஸ்ரீஶம் கம்பு க்ரீவம் ஜகத் குரும் || 22

ஆஜாநுபாஹு பரிகமுந்நதாம்ஸம் மது த்விஷம் |

விஶால நிம்ந நாபிம் தமாபீநஜகநம் ஹரிம் |

கரபோரும் ஸ்ரிய: காந்தம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 23

உந்நஸம் = உயர்ந்து அழகியதான நாசிகையை யுடையவனாய் ,
சாரு வதநம் = அழகிய திருவாயை யுடையவனாய்,
பிம்போஷ்டம் =கோவைப் பழத்தோடொத்த திருவதரத்தை யுடையவனாய் ,
ஶோபிதாநநம் = ஸமுதாய ஶோபா யுக்தமான திருமுக மண்டலத்தை யுடையவனாய் ,
விஶால நிம்ந நாபிம் = விசாலமாய் ஆழ்ந்திருப்பதான திரு வுந்தியை யுடையனாய்,
ஆபீநஜகநம் = பருத்த நிதம்ப ப்ரதேசத்தை யுடையனாய்,
விஶால வக்ஷஸம் ஸ்ரீஶம் = பெரிய பிராட்டியாருக்குக் கோயிற் கட்டட ணமான திரு மார்பை யுடையவனாய் ,
கம்பு க்ரீவம் = ஶங்கம் போன்ற திரு மிடற்றை யுடையனாய் ,
ஜகத் குரும் = ஸர்வ லோகத்துக்கும் ஶாஸ்த்ர ப்ரதாநாதிகளால் அஜ்ஞாந்ததைப் போக்குமவனாய் ,
ஆஜாநு பாஹுபரிகம் = முழங்காலளவும் நீண்ட பரிகம் போல் வர்த்துலமான திருக் கைகளை யுடையனாய் ,
உந்நதாம்ஸம் = உயரவே துத்த திருத் தோள்களை யுடையனாய் ,
மது த்விஷம் = ஆஶ்ரித விரோதியான மது வென்கிற அஶுரனை நிரஸித்த ,
கர போரும் = கையில் மணிக்கட்டு முதல் கடைசி விரல் நடுவிலுள்ள ஸ்தலம் போல்
அடி பருத்து நுனி சிறுத்து ம்ருதுவாயிருக்கும் திருத் துடைகளை யுடையனாய் ,
ஸ்ரிய: காந்தம் = பெரிய பிராட்டியாருக்கு வல்லபனாய் ,
ஹரிம் = ஆஶ்ரித ஆபத் நிவாரகனான ஸர்வேஶ்வரனை ,
கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா –கண்களால் சேவித்து ஆனந்திப்பது எப்போதோ

———————–

ஶங்க சக்ர கதா பத்மை ரங்கிதம் பாத பங்கஜம் |

ஶரச் சந்த்ர ஶதா க்ராந்த நகராஜி விராஜிதம் || 24

ஸுரா ஸுரைர் வந்த்யமாநம் ருஷிபிர் வந்திதம் ஸதா |

கதா வா தேவ மூர்தாநம் மாமகம் மண்ட யிஷ்யதி || 25

ஶங்க சக்ர கதா பத்மை ரங்கிதம் = ஶங்க ரேகை சக்ர ரேகை கதா ரேகை பத்ம ரேகை இவைகளால் அலங்க்ருதமாய் ,
ஶரச் சந்த்ர ஶதா க்ராந்த நகராஜ விராஜிதம் = அநேக ஶரத்களால் சந்த்ரர்களின் காந்தியை அதிக்ரமித்த
காந்தி பொருந்திய நக பங்க்திகளால் விளங்கா நிற்பதாய் ,
ஸுரா ஸுரைர் வந்த்யமாநம் = தேவாஶுர விபாகமற யெல்லோருக்கும் ஆஶ்ரயணீயமாய் ,
ருஷிபி: ஸதா வந்திதம் = மனன ஶீலரான ருஷிகளாலே யெப்போதும் ஸேவிக்கப் படுவதான ,
பாத பங்கஜம் = திருவடித் தாமரைகளை ,
ஹே தேவ = வாரீர் ஸர்வ ஸ்வாமியே ,
மாமகம் மூர்தாநம் = யென்னுடைய ஶிரஸ்ஸை ,
கதா வா = யெப்போது தான் ,
மண்டயிஷ்யதி = அலங்கரிப்பிக்கப் போகிறீர் |

—————-

கதா கம்பீரயா வாசா ஸ்ரியா யுக்தோ ஜகத்பதி: |

சாமர வ்யக்ர ஹஸ்தம் மாமேவம் குரு இதி வக்ஷ்யதி || 26

ஸ்ரியா யுக்த: = கைங்கர்ய வர்த்தகையான பெரிய பிராட்டியாரோடு கூடிய ,
ஜகத்பதி: = ஸர்வேஶ்வரன் ,
கம்பீரயா வாசா = மேன்மை தோற்றும்படி கம்பீரமான வார்த்தையினால் ,
சாமர வ்யக்ர ஹஸ்தம் மாம் = திரு வெண் சாமரம் பரிமாறுவதில் ஆசை பொருந்திய கைகளை யுடைய யென்னை ,
யேவம் குரு இதி = அப்படியே வெண் சாமரம் பரிமாறக் கடவாயென்று ,
கதா = யெப்போது ,
வக்ஷ்யதி = நியமிக்கப் போகிறான்

———————-

கதாஹம் ராஜ ராஜேந கண நாதேந சோதித: |

சரேயம் பகவத் பாத பரிசர்ய அநு வ்ருத்திஷு ||. 28

ராஜ ராஜேந = ராஜாதி ராஜனாய்,
கண நாதேந = பாரிஷட கண நாயகனான ஸர்வேஶ்வரனாலே ,
அஹம் = நான்,
பகவத் பாத பரிசர்ய அநு வ்ருத்திஷு = யெம்பெருமானுடைய திருவடிகளில் கைங்கர்யங்களை அநுந் யூதமாகச் செய்வதில் ,
சோதித: = நியமிக்கப் பட்டவனாய் ,
கதா = யெப்போது,
சரேயம் = கைங்கர்யங்களைச் செய்யக் கடவேன்

————–

ஶாந்தாய ச விஶுத்தாய தேஜஸே பரமாத்மநே |