Archive for July, 2022

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- இரண்டாம் பிரகரணம் -சித்த உபாய நிஷ்ட வைபவ-பிரகரணம்-சூர்ணிகை -159–243-

July 24, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

————-

சூரணை -159-

அதிகாரி த்ர்யத்துக்கும் புருஷகாரம் அவர்ஜநீயம் –

சூரணை -160-

தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –

அதிகாரி த்ரயம் -இத்யாதி -அஞ்ஞானத்தாலே ப்ரபன்னர் என்று தொடங்கிச் சொன்ன அதிகாரிகள் மூவருக்கும் கீழே ஸாதிதமான புருஷகாரம்
அவனுடைய ஸ்வரூப நிரூபக முமாய் இருக்கையாலே ஸர்வதா அவர்ஜ நீயம் என்று முதலிலே
புருஷகார வைபவமும் உபாய வைபவமும் -என்று தொடங்கின புருஷகார உபாயங்களை தத் தத் சோதன பூர்வக மாக நிகமித்து

ஆக இப்படி த்வயத்தில் பூர்வ கண்ட அர்த்தத்தை அருளிச் செய்து
மேல் உத்தர கண்ட அர்த்தத்தை பாஷ்யகாரர் கத்யத்தில் அருளிச் செய்த க்ரமத்திலே –

நமஸ் ஸப்தார்த்தம் முன்னாக
தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –என்று அருளிச் செய்கிறார் -அதாவது
சேஷத்வம் பாரதந்தர்யம் முன்னாக அஹங்காரம் மமகாரம் ஈறாக நடுவு அனுபவ விரோதிகளான அவற்றை எல்லாம் கழிக்கை -அதுக்கடி என் என்ன
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் பிரதம தசையாய்
ப்ராப்ய அனுரூபமான ஸ்வரூபம் சரம தசையாய் இருக்கையாலே
யத் த்வத் பிரியம் ததிஹ-என்று இது வன்றோ நிறைவு அழிந்தார் நிற்குமாறே -என்றும் சொல்லக் கடவது இறே

தனக்குத் தான் என்று தொடங்கி யுக்த ப்ரகாரத்திலே பர கத ஸ்வீ கார விஷய பூதனான தனக்கு அப்பர சேஷ ஏக ஸ்வரூபனான தான்
நம்முடைய சேஷத்வ அனுரூபமாக சேஷி யானவன் விநியோகம் கொண்டு அருள வேணும் என்று இருக்குமது
அவன் கொண்டு அருளுகிற விநியோகத்துக்கு விருத்தமாகையாலே அநாதியான பகவத் பிராப்தி பிரதிபந்தக கர்மங்களோ பாதி
அவனுடைய விநியோகத்துக்கு விலக்காய் இருக்கும் என்கிறது –

———-

சூரணை -161—

அழகுக்கு இட்ட சட்டை அணைக்கைக்கு விரோதி யாமாப்  போல —

அது என் -சேஷத்வத்தாலே அன்றோ ஆத்மாவை ஆதரிக்கிறது
இப்படி அவனுக்கு ஆதரணீயமாம் படி அலங்காரமான சேஷத்வம் அனுபவ விரோதியாம் படி எங்கனே என்ன
அழகுக்கு -என்று தொடங்கி த்ருஷ்டாந்த முகத்தாலே சொல்லுகிறது –

சூரணை -162–

ஹாரோபி—

ஹாரோபி  நார்பித கண்டே ஸ்பர்ச சம்ரோத பீருணா ஆவயோரந்தரே ஜாதா பர்வதாஸ் சரிதோ த்ருமா – என்றார் இறே

இவ்வர்த்த விஷயமாகப் பெருமாளும் –சம்ஸ்லேஷ தசையில் ,ஸ்பர்ச விரோதி யாம் என்னும் அச்சத்தாலே ,

பிராட்டி திருக் கழுத்தில் ஒரு முத்து வடம் உட்பட பூண்பது இல்லை என்றார் இறே பெருமாள் –

————-

சூரணை -163–

புண்யம் போலே பாரதந்த்ர்யமும் பர அனுபவத்துக்கு  விலக்கு –

புண்யம் போலே -இத்யாதி -இப்படி இருக்கிற சேஷத்வத்தைப் பற்ற இட்டு வைத்த இடத்தே இருக்கும் படியான பாரதந்தர்யம் நன்று இறே -என்ன
ஸாஸ்த்ரங்களிலே நிஷேதிக்கிற பாபங்களில் காட்டில் அவற்றிலே அநுஷ்டேயமாக விதிக்கிற புண்யம் நன்றே யாகிலும்
மோக்ஷ விரோதித்வாத் -புண்ய பாப விதூய -என்கையாலே புண்யமும் த்யாஜ்யம் ஆகிறாப் போலே
அவன் இட்டு வைத்த இடத்தே இருக்கும்படியான பாரதந்தர்யமும்
கட்டை போலே எதிர் விழி கொடா விடில் அவனுக்குப் போக விரோதமாகையாலே த்யாஜ்யம் -என்கிறார் –

——————

சூரணை -164–

குணம் போலே சேஷ நிவ்ருத்தி –

குணம் போலே -இத்யாதி -கீழ் லோக வேத ஸித்தமான த்ருஷ்டாந்தங்களாலே அவன் கொண்டு அருளுகிற விநியோகத்துக்குப் புறம்பான
சேஷத்வ பாரதந்தர்யங்கள் ஸ்வரூப விருத்தம் என்று -குணம் போலே -இத்யாதியாலே
ஆத்மாவுக்கு அந்தரங்க குணமான அவை விருத்தமானாப் போலே
அவித்யாதி தோஷத்தைப் போக்கி அவன் நம்மை விநியோகம் கொள்ள வேண்டாவோ என்னுமதுவும் தோஷாவஹம் என்று
அவை தன்னையே தோஷ நிவ்ருத்திக்கு த்ருஷ்டாந்தம் ஆக்குகிறார் –

————–

சூரணை -165–

ஆபரணம் அநபிமதமாய் அழுக்கு அபிமதமாய் நின்றது இறே  –

ஆபரணம் -என்று தொடங்கி -இவ்வர்த்தம் லோக ப்ரஸித்தம் என்கிறார் -அதாவது
ராஜகுமாரன் வேட்டைக்குப் போய் மீண்டு ராஜப் பெரும் தெருவே வாரா நிற்க
ஆர்த்ர மாலின்யமலிநையாய்க் கொண்டு நின்றாள் ஒரு சேடியைக் கண்டு இவளை அந்தப்புரத்து ஏற அழைப்பியுங்கோள் என்று
அந்தரங்கரை நியமிக்க அவர்கள் பய அதிசயத்தாலே அவளை ஸ்நாதை யாக்கி அலங்கரித்துக் கொண்டு வந்து முன்னே நிறுத்த
அவன் இவளை இங்கன் வந்தாள் என்று அநாதரிக்க -அவர்கள் அவளை முன்புற்ற வேஷத்தையே தரிப்பித்துக் கொண்டு வர
அவன் ஆதரித்துப் புஜித்தான் என்று பிரசித்தம் இறே –

———

சூரணை -166–

ஸ்நானம் ரோஷ ஜனகம் என்கிற வார்த்தையை ஸ்மரிப்பது  –

இவ் வர்த்த விஷயமாக ராவண வத அநந்தரம் திருவடி பெருமாள் பக்கல் ஏறப் பிராட்டியை எழுந்து அருள்வித்துக் கொண்டு போகிற தசையிலே
இவருடைய இந்த வேஷத்தைக் கண்டால் அவர் ஸஹிக்க மாட்டார் என்று திருமஞ்சனம் பண்ணி வைக்காத தேட
அவனைப் பார்த்து -ஸ்நாநம் ரோஷ ஜனகம் கிடாய் -என்று பிராட்டி அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது என்கிறார்
அதுக்கு ஒக்கப் பெருமாளும் -தீபோ நேத்ரா துரஸ் யேவ ப்ரதி கூலாசி மே த்ருடம் -என்றார் இறே
த்வயி ப்ரசன்னே கிமாஹா பரைர்ந த்வய்ய ப்ரசன்னே கிமாஹா பரைர் ந -ரக்தே விரக்தேபி வரே வதூ நாம் நிரர்த்தக குங்கும பத்ர பங்க -என்றார் இறே ப்ரஹ்லாதனும் –

—————

சூரணை -167–

வஞ்ச கள்வன் மங்க ஒட்டு —

இப்படி தோஷமே போக்யமாக அவன் தான் விரும்பக் கண்ட இடம் உண்டோ என்ன
உண்டு என்னும் இடத்துக்கு உதாஹரணமாக
வஞ்சக்கள்வன்
மங்க வொட்டு -என்று எடுக்கிறார் –
நன்கு என்னுடலம் கை விடான் -என்றார் இறே
மங்க வொட்டு -என்று கால் கட்டிற்று –

————

சூரணை -168–

வேர் சூடும் அவர்கள் மண் பற்று கழற்றாது போல் ஞானியை விக்ரஹத்தோடு ஆதரிக்கும் —

ஹேயமான ப்ரக்ருதியை அவன் இப்படி ஆதரிக்கிறது தான் என் என்ன
வேர் சூடுமவர் -இத்யாதியாலே அத்தை த்ருஷ்டாந்த முகேந ப்ரகாசிப்பிக்கிறார் –

————

சூரணை -169–
பரம ஆர்த்தனான இவனுடைய
சரீர ஸ்திதிக்கு  ஹேது
கேவல பகவத் இச்சை இறே –

ஆனால் -ஆர்த்தா நாம் ஆ ஸூ பலதா -என்னா நிற்க -இப்படி ஞானாதிகராய் அத்யந்தம் ஆர்த்த அதிகாரியானவர்களுக்கு
இஸ் ஸரீரத்தோடே இருக்கிற இருப்புக்கு ஹேது என் என்ன -பரம ஆர்த்தனான இவனுடைய -இத்யாதியாலே சொல்லுகிறது –

ஆர்த்தன் என்பது -ஸம்ஸாரம் அடிக் கொதித்தவனை
பர ஆர்த்தன் என்றது அத்தலையில் வை லக்ஷண்ய அனுபவ அபி நிவேசத்தாலே கிட்டி அல்லது தரியாதவனை
பரம ஆர்த்தன் என்பது அவ் வைலக்ஷண்ய அநுஸந்தானத்தாலே அதி சங்கை பண்ணி அத்தலைக்கு
நம்மை ஒழியப் பரிவர் இல்லை என்று மங்களா ஸாஸனம் பண்ணித் த்வரிக்கிறவனை

இப்படி திருப்தரும் மூன்று வகையாய் இருக்கும் -எங்கனே என்னில்
தான் வாஸனை பண்ணின தேஹத்தில் சா பலத்தால் வந்த திருப்தியும்
ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் அடியான ஸ்வரூப நைர்ப்பல்யத்தாலே வந்த திருப்தியும்
பகவத் பாகவத கைங்கர்யம் அடியாக வந்த திருப்தியும் உடையராய் இருக்கை

கேவல பகவத் இச்சை என்றது
கர்ம ஆராப்த சரீரமே யாகிலும் கர்ம சேஷத்தால் அன்றிக்கே -மோக்ஷயிஷ்யாமி என்று
ஸர்வ சக்தி தன் கேவல வாஞ்ச அதிசயத்தாலே வைத்தான் அத்தனை -என்கிறார் –

————

சூர்ணிகை -170-

திருமாலிரும் சோலை மலையே–என்கிறபடியே -உகந்து அருளினை நிலங்கள்
எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் –

இப்படி இவ்விஷயத்திலே பண்ணும் அபி நிவேசத்துக்கு த்ருஷ்டாந்தமாக ஆழ்வார்கள் விஷயமாக
அவன் பண்ணின அபி நிவேசத்தை அருளிச் செய்கிறார் -திருமாலிருஞ்சோலை மலையே -என்று தொடங்கி
இதில் ஆழ்வாருடைய ஒரோ அவயவங்களிலே இவ்விரண்டு திவ்ய தேசத்தில் பண்ணும் விருப்பத்தைப் பண்ணும் என்கையாலே
எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்தில் பண்ணும் என்கிறார் –

————-

சூரணை -171-

அங்குத்தை வாசம் சாதனம் –
இங்குத்தை வாசம் சாத்யம் –

அங்குத்தை வாஸம் -இத்யாதி -அவ்வுகந்து அருளின நிலங்களில் வாஸம் தானும்
நாகத்தணைக் குடந்தை
நின்றது எந்தை ஊரகத்து
நிற்பதும் ஓர் வெற்பகத்து –இத்யாதில் படியே
அணைப்பார் கருத்தானாகைக்காக வாகையாலே
அங்குத்தை வாஸம் சாதனம் -இங்குத்தை வாஸம் ஸாத்யம் -என்கிறார்
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தான் -என்றார் இறே-

————

சூரணை -172-

கல்லும் கனை கடலும் –பெரிய திருவந்தாதி – 68-என்கிறபடியே
இது சித்தித்தால் –
அவற்றில் ஆதாரம் மட்டமாய் இருக்கும் –

கல்லும் கனை கடலும் இத்யாதி -இந்த ஞானாதிகனுடைய சாத்தியமான நெஞ்சு நாடு நிலமானவாறே இதுக்கு சாதனமான
உகந்து அருளின நிலங்களில் ஆதரம் அற்பமாய் இருக்கும் என்கிறார் –

————–

சூரணை -173-

இளம் கோவில் கை விடேல் –இரண்டாம் திருவந்தாதி -54-என்று
இவன் பிரார்த்திக்க வேண்டும் படியாய் இருக்கும் –

அது அப்படியாகக் கூடுமோ என்ன -இளங்கோயில் இத்யாதி –
என் நெஞ்சம் கோயில் கொண்ட -என்கிறபடியே
மூல ஆலயமான பெரும் கோயிலுக்குள்ளே ப்ரதிஷ்டித்து உன்னை அனுபவித்தேன்
இனி இதுக்குப் பாலாலயமான ஷீராப்தியையும் கை விடாது ஒழிய வேணும் என்று அபேக்ஷித்து வைக்கையாலே
அது கூடும் இறே என்கிறார் –

————

சூரணை -174-

ப்ராப்ய ப்ரீதி விஷயத் வத்தாலும்
க்ருதஞ்சதையாலும்
பின்பு அவை
அபிமதங்களாய்  இருக்கும் —

அங்கனே யாகில் ஆறு ஏறினார்க்குத் தெப்பம் வேண்டாவோ பாதி அவனுக்கு அபேக்ஷிதம் கிட்டின பின்பு
அவ்வோ தேச வாஸத்தை இவர்கள் அபேக்ஷிக்கிறது என்
அவன் தானும் அத்யாபி ஆதரிக்கிறதும் என் என்ன -ப்ராப்ய ப்ரீதி இத்யாதியாலே சொல்லுகிறது –
அவனுக்குப் ப்ராப்யராய் -கச்சி பேர் மல்லை என்று மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே -என்று
இருக்கும்படியான ஆழ்வார்களுடைய உகப்புக்கு விஷயமாகையாலும்
இவ்விடங்களில் நிலையாலே இறே இவர்களை பெற்றோம் என்று இருக்கும் க்ருதஜ்ஞதையாலும்
அந்தப் ப்ராப்யம் கை புகுந்த பின்பும் அவ்வோ தேசங்கள் அபிமதமாய் அவன் வர்த்திக்கும் என்கிறார் –
திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் -என்றது
அத்தேச விசேஷத்தில் க்ருதஜ்ஞதையாலே இறே –

——–

சூரணை -175–

ஆகையாலே தோஷ நிவ்ருத்தி போலே-ஆந்தர குணமும் விரோதியாய் இருக்கும் –

ஆகையாலே -இத்யாதி -இப்படி இவ்வதிகாரி யுடைய தோஷமே போக்யமாக அவன் ஆதரிக்குமது உண்டாகையாலே
இவன் தன் தோஷத்தைப் போக்கி விநியோகம் கொள்ள வேணும் என்னுமது தோஷா வஹம் என்னும் இடம் ஸித்த மாகையால்
இது போலே அவன் விநியோகத்துக்குப் புறம்பாய் வரும் ஆந்தரமான சேஷத்வ பாரதந்தர்யங்களும் ஸ்வரூப விரோதியாய் இருக்கும் என்று
தனக்குத் தான் தேடும் நன்மை -என்று தொடங்கி ப்ரதிபாதித்த அர்த்த விசேஷங்களை அந்யோன்ய த்ருஷ்டாந்த முகத்தாலே த்ருடீ கரிக்கிறார்
கீழே குணம் போலே தோஷ நிவ்ருத்தி என்றார் இறே –

—————-

சூரணை -176–

தோஷ நிவ்ருத்தி தானே தோஷமாம் இறே —

தோஷ நிவ்ருத்தி தானே -இத்யாதி -ஆந்தர குணம் தோஷா வஹம் என்னும் இடத்துக்கு த்ருஷ்டாந்தம் ஆக்கின
இந்த தோஷ நிவ்ருத்தி தானே தோஷமாம்-என்னும் இடம் இவ்வளவாக ஸாதித்தோம் இறே என்கிறார் –

———-

சூரணை –177-

தன்னால் வரும் நன்மை விலைப் பால்-போலே
அவனால் வரும் நன்மை முலைப் பால் போலே—என்று பிள்ளான் வார்த்தை-

இப்படி தன் நினைவால் வருமது புருஷார்த்த விரோதியாம் அளவன்றிக்கே சமுசித ஸ்வரூப உபாயாதி ஸகலங்களிலும்
தான் தேடுமது துர்லபமுமாய் -ஸாவதியுமாய் -சோபாதிகமுமாய் -ஸ்வரூபத்துக்கு அநநு ரூபமாயும் இருக்கும்
என்னும் இடத்தை -தன்னால் வரும் நன்மை விலைப் பால் போலே என்றும் –
நிருபாதிகனான -அவன் அடியாக வரும் நன்மை முலைப் பால் போலே ஸூ லபமுமாய் -நிருபாதிகமுமாய் -எல்லா அவஸ்தையிலும்
தாரகமாகையாலே ஸ்வரூபத்துக்கு அநு ரூபமுமாய் இருக்கும் என்று பிள்ளான் அருளிச் செய்வர் -என்கிறார் –

———————–

சூரணை -178-

அவனை ஒழிய தான் தனக்கு நன்மை தேடுகை யாவது –
ஸ்தநந்தய பிரஜையை மாதா பிதாக்கள் கையில் நின்றும் வாங்கி
காதுகனான ஆட்டு வாணியன் கையிலே-காட்டிக் கொடுக்குமா போலே இருப்பது ஓன்று –

அவனை ஒழிய -இத்யாதி -இப்படிப் ப்ராப்தனானவனை ஒழிய எல்லா வழியாலும் அப்ராப்தனான தான் தனக்கு ஸ்வரூப உஜ்ஜீவனம் தேடுகை
ஸ்வரூப ஹானி என்னும் இடத்தை -காதுகனான -என்று தொடங்கி -த்ருஷ்டாந்த முகேந அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
முலை பிரியில் முடியும் ஸ்நந்தயம் போலே -நான் உன்னை அன்றி அறியிலேன் – என்னும் படி நித்ய ஸ்தநந்த்யமான ஆத்மாவை
மாதா பிதாக்கள் கையில் நின்றும் வாங்குகையாவது -ஸ்ரீ யபதியே இதுக்கு அவஸ்த அநு ரூபமாக நன்மை ஆசா சிப்பான் என்று இராமை –
காதுகனான ஆட்டு வாணியன் கையிலே காட்டிக் கொடுக்குமா போலே யாவது -இது நெடும் காலம் தன்னை
அஸத் சமானாக்குகைக்கே வழி பார்த்து போந்த தானே தன் ஸ்வரூப உஜ்ஜீவனத்துக்கு வழி பார்க்கை –
அத்தால் வரும் ஹானி யாவது -அவ்வாட்டு வாணியன் அதன் காலை அறுத்து அடையாளமாகத் தூக்கி வைத்து – அப்பிரஜையை அறுத்து
அம்மாம்சத்தோடே கலந்து கூறு செய்து விற்று வயிறு வளர்க்குமா போலே இவனும் தன்னை ஆத்ம வித்தாகவும்
ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு யத்னம் பண்ணுகிறானாக நினைத்தானே யாகிலும்
அநாதி வாஸனையாலே தேஹமே ஆத்மாவாக நினைத்து ஆத்ம ஸ்வரூபத்தை அழித்து அத்தால் வந்த அநேக பாப சஞ்சயங்களாலே
அந வரதம் ஸம்ஸரிக்கையே பலமாய் விடும் என்கிறார் –

————

சூரணை -179-

தன்னை தானே இறே முடிப்பான் –

ஆத்மைவ ரிபுராத்மந -என்கிறபடியே தனக்கு இப்படி பாதகனாவானும் தானே யாகையாலே –
தன்னைத் தானே இறே முடிப்பான் -என்கிறார் –

————–

சூரணை -180-

தன்னை தானே முடிக்கை யாவது –
அஹங்காரத்தையும்
விஷயங்களையும்
விரும்புகை —

தனக்குத் தான் தேடும் நன்மை -என்று தொடங்கி இவ்வளவான அர்த்தத்தைத் அருளிச் செய்து மேல்
தன்னைத் தான் முடிக்கை யாவது -அஹங்காரத்தையும் விஷயங்களையும் விரும்புகை -என்று தொடங்கி
ம -என்கிற ஷஷ்ட் யர்த்தமான அஹம் -மமதா தோஷங்களை அருளிச் செய்கிறார் –

——————

சூரணை -181-

அஹங்காரம் அக்நி ஸ்பர்சம் போலே –

அஹங்காரம் அக்நி ஸ்பர்சம் போலே –என்று அதில் பிரதமோ பாத்தமான அஹங்கார தோஷத்தை அருளிச் செய்கிறார் –
அத் தோஷமாவது ஸ்மஸ அக்னி கிளம்பினால் மருங்கடைந்து தூற்ற வளவிலே சுடும்
அக்னி ஹோத்ர அக்னி கிளம்பினால் அங்குள்ள யஜமான பத்நீ பாத்ரங்கள் எல்லாவற்றையும் தக்தமாக்குமா போலே
அல்லாதாருக்கு உண்டாம் அஹங்காரத்தைப் பற்ற அநந்ய ப்ரயோஜனனான இவ்வுபேய அதிகாரி பக்கலிலே அஹங்காரம் உண்டானால்
ஓன்று பட ஸ்வரூப நாஸகம் என்று தாத்பர்யம் –

——————

சூரணை -182–

ந காம கலுஷம் சித்தம் –
ந ஹி மே ஜீவிதே நார்த்த-
ந தேஹம் –
எம்மா வீட்டு திறமும் –

இவ்வர்த்தத்தில்-ந காம கலுஷம் சித்தம் –
என்றது கைங்கர்யத்தில் ஸ்வ கர்த்ருத்வ ஸ்வ ரஸத்வங்கள் இவனுக்கு ஸ்வரூப ஹானி என்னும் இடத்தில் பிரமாணம்
ந ஹி மே -என்று தொடங்கி -எம்மா வீட்டு திறமும் செப்பம் -என்னும் அளவாகவும்
ஸ்வ அஹங்கார ஸ்பர்சம் உள்ளவை அடங்க துஷ்டம் என்னும் இடத்தில் பிரமாணம் –

————-

சூரணை -183–

பிரதிகூல விஷய ஸ்பர்சம் விஷ ஸ்பர்சம் போலே
அனுகூல விஷய ஸ்பர்சம் விஷ மிஸ்ர போஜனம் போலே-

இனி -பிரதிகூல விஷய ஸ்பர்சம் –என்று தொடங்கி -கீழே விஷயங்களையும் விரும்புகை -என்று ப்ரஸ்தாவித்த மமதா விஷய
ஸ்பர்சத்தால் வரும் தோஷத்தை விஸ்தரேண அருளிச் செய்தார்
பிரதிகூல விஷய ஸ்பர்சம் -என்றது -சாஸ்திரங்களிலே இவனுக்கு பிரதிகூலங்களாக நிஷேதிக்கப் பட்ட பர தாராதிகளை –
விஷ ஸ்பர்சம் போலே-என்றது அது ஸரீரத்திலே ஸ்பர்சித்த மாத்ரத்திலே பிராண ஹானியாமாப் போலே
அவை இவனுக்கு ஸ்வரூப நாஸகம் ஆகையாலே –
அனுகூல விஷய ஸ்பர்சம் -என்றது -ஸாஸ்த்ரங்களிலே
இவனுக்கு அனுகூலங்களாக விதிக்கப் பட்ட ஸ்வ தாராதிகள் –
அவை -விஷ மிஸ்ர போஜனம் போலே-என்றது -கேவல விஷம் ஸ்பர்சித்தால் மணி மந்த்ர ஒவ்ஷதாதிகளாலே
அறிந்து மாற்றலாய் இருக்கும் –
இது அங்கன் அன்றிக்கே அபிமதமான போஜனத்திலே அஞ்ஞாதமாய்க் கலசின விஷம் ஆரோக்ய கரமுமாய் போக ரூபமாய்
இருக்கும் என்றே புஜிக்கையாலே படுக்கையோடே பிராணன் போய்க் கிடக்கைக்கு ஹேதுவாமோ பாதி
அத்யந்தம் ஸ்வரூப நாஸகம் -என்கிறது –

————–

சூரணை -184—

அக்னி ஜ்வாலையை விழுங்கி விடாய் கெட நினைக்குமா போலேயும்-
ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்க நினைக்குமா போலேயும்-
விஷய பிரவண னாய் ஸூகிக்க நினைக்கை —

அக்னி ஜ்வாலையை -இத்யாதி -இப்படி உபய ஆகாரேண சொன்ன விஷய அனுபவ ஸூகம் ஸ்வரூப ஹானி என்னும் இடத்தை
பிரமாண ப்ரஸித்தமான திருஷ்டாந்த முகத்தாலே அருளிச் செய்கிறார் -எங்கனே என்னில்
ஆஸ்வாத்ய தஹந ஜ்வாலா முதன்யா சமனம் யதா ததா விஷய ஸம்ஸர்காத் ஸூ க சிந்தா சரீரிண–என்றும் –
விஷயாணாம் து ஸம்ஸர்காத் யோ பிபர்த்தி ஸூ கம் நர ந்ருத்யத பணி நஸ் சாயாம் விஸ்ரம் ஆஸ்ரயதே ச -என்றும்
சொல்லுகிறபடியே கர்ம காலத்தில் பெரு விடாய்ப் பட்டவன் நெருஞ்சிப் பழம் போலே சிவந்து குளிர்ந்த
தண்ணீராகப் பிரமித்து அக்னி ஜ்வாலையை விழுங்கி த்ருஷார்த்தி தீர நினைக்குமா போலேயும்
மத்யாஹ் நார்க்க மரீசி தப்தனானவன் தன்னுடைய தாப ஸ்ரமம் ஆறுகைக்கு ப்ரக்ருதியாப்ரகுபித புஜங்க பணா மண்டலச் சாயையைப்
பணைத்து ஓங்கின மர நிழலாக நினைத்து அதிலே ஒதுங்க நினைப்பாரைப் போலேயும் இறே
விஷய ஸூகத்தாலே இவன் ஸூ கிக்கப் பார்க்குமது -என்கிறார் –
அங்கார ஸத்ருஸா நாரீ க்ருத கும்ப சம புமான் தஸ்மான் நாரிஷு ஸம் சர்க்கம் தூரத பரிவர்ஜயேத் -என்றும்
விஷஸ்ய விஷயாணாம் து தூர மத் யந்த மந்தரம் உப யுக்தம் விஷம் ஹந்தி விஷயாஸ் ஸ்மரணாதபி -என்றும் சொல்லக் கடவது இறே –

—————

சூரணை -185–

அஸூணமா முடியுமா போலே பகவத் அனுபவைக பரனாய்-
ம்ருது பிரக்ருதயாய் இருக்கும் அவன் விஷய தர்சனத்தாலே முடியும் படி.–

அஸூணமா -இத்யாதி -இத்தால் இவ்வதிகாரிக்கு இப்படிப்பட்ட விஷய ஸ்பர்சம் வேண்டா –
அதனுடைய தர்சன மாத்ரம் அமையும் ஸ்வரூப ஹானிக்கு -என்கிறார் -அதாவது
அஸூணமா-என்பதொரு பக்ஷி விசேஷத்தை அகப்படுத்தி ஹிம்சிக்க நினைத்தான் ஒருவன் அவை உள்ள இடத்திலே இருந்து –
அதி மிருதுவாய் பாடினவாறே ஸூக ஸ்ரவண ஏக தத் பரங்களானவை அங்கேற வரும்
அவ்வளவிலே அவன் அருகே இருந்த முரசை அடிக்க அக்கடின த்வனி செவிப்பட்ட அளவிலே அவை கலங்கி முடியுமா போலே
பகவத் குண அனுபவ ஆனந்த ஏக தத் பரனாய் அவ்வனுபவ அதிசயத்தாலே மெல்கி அதி மிருது ஸ்வ பாவனாய் இருக்கிற இவ்வதிகாரி
இன்னமுது எனத் தோன்றும் விஷய தர்சன மாத்ரத்தாலே மயங்கி ஸ்வரூப ஞானம் ,அறைந்து முடியும் படியும் –

—————-

சூரணை -186–

காட்டிப் படுப்பாயோ என்னக் கடவதிறே—

காட்டிப் படுப்பாயோ -என்று விஷய தர்சன மாத்ரமே நாஸகம் என்றார் இறே
உழைக் கன்றே போல நோக்கமுடையவர் வலையில் பட்டு -என்றும்
மாத் யந்தி ப்ரமதாம் த்ருஷ்ட்வா ஸூராந் பீத்வாது மாத் யந்தி தஸ்மாத் த்ருஷ்ட்டி பதான் நாரீம் தூரத பரி வர்ஜயேத்-என்றும்
கௌளீ மாத்வீ ச பைஷ்டீ ச விஜ்ஜேயாஸ் த்ரி விதாஸ் ஸூரா -என்றும்
சதுர்த்தா ஸ்த்ரீ ஸூரா ப்ரோக்தாஸ் தஸ்மாத் தாம் பரி த்யஜேத் -என்றும் சொல்லக் கடவது இறே –

———–

சூரணை-187–

அஜ்ஞனான விஷய பிரவணன்-கேவல நாஸ்திகனைப் போலே –
ஞானவானான விஷய பிரவணன்-ஆஸ்திக நாஸ்திகனைப் போலே –

சூரணை -188-

கேவல நாஸ்திகனைத் திருத்தலாம்

ஆஸ்திக நாஸ்திகனை-ஒரு நாளும் திருந்த ஒண்ணாது –

பகவத் ப்ரபாவத்தாலே ஞானாதிகனான இவனுக்கு இவ்விஷய அனுபவ ருசி இப்படி ஸ்வரூப ஹானியாகக் கூடுமோ என்ன
அல்லாதாரைப் பற்ற -விதுஷோதி க்ரமே தண்ட பூயஸ் த்வம் -என்கிறபடியே அவனுக்கு அது தோஷா வஹம் என்னும் இடத்தை
அஜ்ஞனான விஷய பிரவணன் என்று தொடங்கிச் சொல்லுகிறது -அது எங்கனே என்னில்
இப்படி யுக்தமான விஷய தோஷத்தில் அஞ்ஞனாய்க் கொண்டு அவ்விஷயத்தே ப்ரவணனாய் இருக்குமவன்
உதர பரண மாத்ர கேவல இச்சோ புருஷப ஸோஸ் ச பஸோஸ் ச கோ விசேஷ -என்னும்படியான
முதலிலே அத்ருஷ்ட ருசி இல்லாத ஸூத்த நாஸ்திகனோடு ஒக்கும் –
இதில் விஷய தோஷத்தை உள்ளபடி அறிந்து வைத்து -இவ்விஷய அனுபவத்தாலே ஸூ கிக்க நினைக்கிற இவ்வதிகாரி
காண்கிற தேஹாதி ரிக்தரான ஆத்ம ஈஸ்வர ஞானம் யுண்டாய் வைத்தே அவற்றில் தாத்பர்யம் அற்று ஸ்வைர சஞ்சாரியாய்த் திரியுமவனோடே ஒக்கும் என்கிறார்

ஆனால் இவற்றில் சொன்ன தாத்பர்யம் என் என்ன
அஜ்ஞஸ் ஸூக மாராத்யதே ஸூக தர மாராத்யதே விசேஷஜ்ஞ -ஞான லவ துர் விதக்தம் ப்ரஹ்மாபி நரம் ந ரஞ்ஞயதி-என்கிறபடியே
கேவல நாஸ்திகனானவனை அஞ்ஞாத ஞாபன முகத்தாலே திருத்தலாம் –
அறிந்து வைத்தே அதில் நிஷ்ணாதன் அல்லாத ஆஸ்திக நாஸ்திகனானவனை எத்தனையேனும் அதிசயித ஞானராலும்
யாவஜ் ஜீவம் திருத்த ஒண்ணாமையாலே இவன் ஈஸ்வரனுக்கு தண்ட்யனேயாம் அத்தனை -என்றபடி
அநு பதன் நபி விஸ்வப்ரே கேவலம் அநு கம்ப்யதே கர்ணாந்த லோசந கூபே பதம் கைர்ந வித்பயதே-என்னக் கடவது இறே –

ஆக கீழ் ப்ரபன்னனுக்கு -விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம்-என்ற இடத்தில் இவ்விஷய ப்ராவண்யம்
உபாய அதிகாரிக்கு த்யாஜ்யம் என்கையிலே
ஊற்றமாகையாலே இங்கே உபேய அதிகாரிக்குத் த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லி நின்றது –

———–

சூரணை -189-

இவை இரண்டும் ஸ்வரூபேண முடிக்கும் அளவு அன்றிக்கே
பாகவத விரோதத்தையும் விளைத்து முடிக்கும் –

இனி இவை இரண்டும் -என்று தொடங்கி -அஹங்காரத்தையும் விஷயங்களையும் விரும்புகை -என்ற
அஹங்கார மமதா ரூபமான விஷயப்ப்ராவண்யமும் என்ற
இவை இரண்டும் ஸ்வயமேவ நின்று இவ்வாத்மாவை நசிப்பிக்கையே அன்றிக்கே
பாகவத அபசாரமாகிற மஹா அநர்த்தத்தையும் உண்டாக்கி நசிப்பிக்கும் என்று
இவ் வஹங்கார விஷய ப்ராவண்யம் அடியாக வருகிற
பாகவத அபசாரத்தினுடைய க்ரவ்ர்யத்தை அருளிச் செய்கிறார் மேல் –

இதில் ஸ்வரூபேணே என்றது -ஸ்வேந ரூபேண -என்றபடி –

—————–

சூரணை-190-

நாம ரூபங்களை உடையராய்
பாகவத விரோதம் பண்ணிப் போருமவர்கள்-தக்த படம் போலே –

நாம ரூபங்களை -இத்யாதி -இப் பாகவத அபசார பலம் அல்லாதார்க்கும் ஒத்து இருக்க -நாம ரூபங்களை உடையராய் -என்று விசேஷித்து
கீழில் ப்ரகரண பலத்தாலே வைஷ்ணவத்வ சிஹ்னமான நாம ரூபங்களை உடையராய் வைத்து பாகவத அபசாரத்தைக் கூசாதே பண்ணி தத் பயத்தால் வரும் அனுதாப ஸூ ன்யராய்க் கொண்டு திரியுமவர்கள்
தக்த படம் போலே என்றது -நேய மஸ்தி புரீ லங்கா -இத்யாதி வத்-அஸத் சமராய்க் கொண்டு சஞ்சரிக்கிறார் இத்தனை என்றபடி –

——————

சூரணை -191–

மடிப் புடவை வெந்தால் உண்டையும் பாவும் ஒத்துக் கிடக்கும்
காற்று அடித்தவாறே பறந்து போம் –

அது எங்கனே என்ன -மடிப்புடவை -இத்யாதியாலே சொல்லுகிறது –
கேவலம் புடவை வெந்தால் என்னாதே -ஒரு ஸம்ஸ்கார விசேஷம் தோற்றும் படி -மடிப் புடவை வெந்தால் உண்டையும் பாவும் ஒத்துக் கிடக்கும் -என்றது
புஜ யுகமபி சிஹ்நை ரங்கிதம் -இத்யாதி க்ரமத்திலே ஸாத்விக லக்ஷண ஸம்ஸ்க்ருத வேஷராய் வைத்தே பாகவத அபசாரத்தாலே

————-

சூரணை -192-

ஈஸ்வரன் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச் செய்வர்-

ஸர்வ பூத ஸூஹ்ருத்தான ஈஸ்வரனுடைய திரு உள்ளம் இவர்கள் பக்கல் இப்படி சீறக் கூடுமோ என்ன
அச் சீற்றத்தின் மிகுதியாலே அன்றோ அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்களும் என்று
நஞ்சீயர் அருளிச் செய்யும் படியை இவ் வர்த்தத்துக்கு உதாஹரிகிறார் -ஈஸ்வரன் அவதரித்து -இத்யாதி –
நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரன் தன் ஸங்கல்பத்தாலே அழியச் செய்கை யன்றிக்கே இதர ஸஜாதீயனாய் வந்து அவதரித்துத் தானே
கை தொடானாய்ச் செய்த அதிசயித சக்தித்வாதிகள் தோற்றும் படியான அகில வியாபாரங்களும் அபிமதரான பாகவத விஷயத்தில்
அபசாரமும் அஸஹ்யமாய் இறே அருளிச் செய்வர் அல்லது அவனுக்கு விரோதிகள் ஒருவரும் இல்லை இறே –
யத் அபராத ஸஹஸ்ரம் அஜஸ் ரஜம் த்வயி சரண்ய ஹிரண்ய உபாவஹத்-வரத
தேந சிரம் த்வம விக்ரியோ விக்ருதி மர்ப்பக நிர்ப்பஐநாதகா -என்றார் இறே கூரத்தாழ்வானும்-

———-

சூரணை -193–

அவமாநக்ரியா–

(அவமாந க்ரியா -என்று அவ்வீஸ்வர வசனம் எடுக்கிறார் –
அவமான க்ரியா தேஷாம் ,சம்ஹரித் அகிலம் ஜகத் –
ஈஸ்வரனை இல்லை செய்தவரும் ஆச்சார்யர்களை இல்லை செய்ய மாட்டார்களே )
யா பிரீதிர் மயி சம்விருத்தா மத் பக்தேஷு சதாச்துதே அவமான க்ரியா
தேஷாம் ,சம்ஹரித் அகிலம் ஜகத் -மகா பாரதம்-என்று அருளினான் இறே

சூரணை -194-

பாகவத அபசாரம் தான் அநேக விதம் –

இப்படி அஹம் மமதை களாலே ஆரப்தமாம் பாகவத அபசாரம் தான் உத்பத்தி நிரூபணம் -வாஸ நிரூபணம் –
ஆலஸ்ய நிரூபணம் -அவஸ்தா நிரூபணம் -முதலானவை
அநேகமாகையாலே -பாகவத அபசாரம் தான் அநேக விதம் என்கிறார்-

———

சூரணை -195-

அவற்றில் ஓன்று தான் அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம் –

அதிலே இத்யாதி -அவற்றில் ஜென்ம நிரூபணம் கொடியதாகையாலே
அத்தை விசேஷித்து எடுக்கிறார் –

———–

சூரணை –196–

இது தான் அர்ச்சா அவதாரத்திலும்  உபாதான ஸ்ம்ருதியிலும் காட்டில் க்ரூரம்-

அதில் க்ரவ்ர்யம் எவ்வளவு என்ன –
அர்ச்சா அவதாரத்திலும்  உபாதான ஸ்ம்ருதியிலும் காட்டில் அதி க்ரூரம்-என்கிறார் –

———-

சூரணை -197–

அது தன்னுடைய க்ரூரம் தான் எவ்வளவு என்கிறார்-

அதிலும் குரூரமான படி என் -என்ன -அத்தை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -அதாவது
அர்ச்சாவதார உபாதான வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம் மாத்ரு யோனி பர்ஷா யாஸ் துல்யம் ஆஹூரேவம் மநீஷிண –என்று
மாத்ரு யோநி பரிக்ஷையை ஸாஸ்த்ரம் த்ருஷ்டாந்தமாகச் சொல்லுகிற இடத்தில் அர்ச்சாவதார உபாதான ஸ்ம்ருதி ரூபமான அபசாரத்தை
அந்த மாத்ரு யோநி பரிக்ஷையில் அபசார துல்யமாகச் சொல்லி –
வைஷ்ணவ உத்பத்தி ரூபமான அபசாரம் வாக்குக்கு நிலம் அல்லாமை தோற்ற –
ஏவமாஹு -என்று அவ்வபசாரத்தை அதி தேசித்து விடுகையாலே என்கை –
ஆகை இறே -ஸாஸ்த்ரம் அத்தைச் சொல்லிற்று என்று விசேஷித்தது –
அது தான் மாத்ரு யோநி பரீஷையோடு ஓக்கை யாவது -கீழே -இது தான் -ஸாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே -என்று தொடங்கிச் சொன்ன க்ரமத்திலே
அநாதி காலம் விஷய ப்ரவணனாய்க் கொண்டு நாஸ்திகனாய் -அசன்னேவ-என்னும் படி போந்த இவனை
பொருள் அல்லாத என்னை -இத்யாதிப்படியே –
ருசி ஜநகத்வம் முதலாக நித்ய கைங்கர்யம் முடிவாக உண்டாக்கி –
ஸ்வரூபா பத்தியையும் பிறப்பிக்குமது அர்ச்சாவதாரமாகையாலே அதனுடைய வை லக்ஷண்ய அவை லக்ஷண்ய நிரூபணம் பண்ணுமது
அல்லாத ஸ்த்ரீகளுடைய யோநி வை லக்ஷண்ய நிரூபண வாஸனையாலே தனக்கு உத்பாதகையாய்
மாத்ரு தேவோ பவ -என்று பிரதமத்திலே பூஜ்யையாக விதித்து இருக்கிற மாத்ரு யோநி வை லக்ஷண்ய அவை லக்ஷண்ய நிரூபணம்
பண்ணுமோ பாதி மஹா பாதகமாகையாலே –

————-

சூர்ணிகை -198-

திரிசங்குவைப் போலே கர்ம சண்டாளனாய் -மார்விலிட்ட யஜ்ஜோபவீதம் தானே வாராய் விடும் —

ஆனால் காற்று அடித்தவாறே பறந்து போம் -என்கையாலே சரீர அவஸ அநந்தரம் இப்படி ஸ்வரூப ஹானி வரும் அத்தனையோ என்னில் -அங்கன் அன்று
மத் பக்தான் ஸ்ரோத்ரியோ நிந்தன் ஸத்யஸ் சண்டாள தாம் வ்ரஜேத் -என்றும்
நுமர்களைப் பழிப்பராகில் ஆங்கே யவர்கள் தாம் புலையர் போலும் -என்றும் சொல்லுகிறபடியே
இஜ்ஜன்மத்திலே அதிலும் -அபசாரம் பண்ணின நிலையிலே -ஸ்வரூப ஹாநியாம் -என்னும் இடத்தை -த்ரி சங்குவைப் போலே -என்று தொடங்கிச் சொல்லுகிறது
அதாவது – ஸ ஸரீர ஸ்வர்க்கம் யுண்டாம் படி தன்னை யஜிப்பிக்க வேணும் என்று ஸ்வ ஆச்சார்யனான வஸிஷ்டனை அபேக்ஷிக்க
அவன் அது அப்ராப்தம் என்று நிஷேதித்தது பொறாமல் அவ்வஸிஷ்ட புத்திரர்கள் பக்கலிலே சென்று அவன் இவ் வ்ருத்தாந்த கத நத்தைப் பண்ண
அவர்கள் ஆச்சார்ய வாக்ய அதி லங்கனம் பண்ணின அப்போதே நீ சண்டாளன் என்று சபிக்க
அநந்தரம் அவனுடைய ஷத்ரிய வேஷ உசிதமான ஆபராணாதிகள் எல்லாம் நிஹீந த்ரவ்யங்களாய்க் கொண்டு
நீ ச வேஷோ சிதமாய் விட்டாப் போலே பாகவத உத்பத்தி நிரூபணம் அடியாக சண்டாளனாய் உத்தம வர்ணனான தன் மார்பில் இட்ட ப்ரஹ்ம வர்சஸ்ஸூக்கு
ஹேதுவான யஜ்ஜோ பவீதம் தானே -அவர்கள் தாம் புல்லியர் -என்கிற ஜன்மத்துக்கு உறுப்பான வாராய்
அபசாரம் பண்ணின வாக்கில் த்ருபிசம் தானே அபேயமுமாய் விடும் என்கிறார் –

————

சூர்ணிகை –199-

ஜாதி சண்டாளனுக்கு காலாந்தரத்திலே பாகவதனாகைக்கு யோக்யதை யுண்டு –அதுவும் இல்லை இவனுக்கு –

சூர்ணிகை –200-

ஆரூட பதிதனாகையாலே-

இங்கனே யாகில் லோகத்தில் சண்டாளர்களுக்கும் ஒரு கால் உஜ்ஜீவனம் உண்டாகிறவோ பாதி இவனுக்கும் ஒரு காலாந்தரத்திலே யாகிலும்
உஜ்ஜீவனம் உண்டாமோ என்னில் -இல்லை என்னும் இடத்தை -ஜாதி சண்டாளனுக்கு -இத்யாதியாலே அருளிச் செய்கிறார்
அதாவது வீசி நடக்க மாட்டாதவன் மெத்தென மெத்தன வாகிலும் பர்வத ஆரோஹணம் பண்ணுமோ பாதி
ஜாதி சண்டாளனுக்கு ஸத்ய ஆர்ஜவாதி
தர்ம அனுஷ்டானத்தாலே ஸத்வ உத்ரேகம் யுண்டாய் அத்தாலே பாகவதனாகைக்கு யோக்யதை யுண்டு
உயர ஏறினவன் விழுந்தால் உருக் காண ஒண்ணாத படி உடைந்து போமா போலே உத்தம வர்ணத்தில் நின்று உத்பத்தியிலே
அபசாரம் பண்ணிய அப்பதித்வமே ஸ்வரூபம் என்னும் படி அத பதிக்கையாலே அவனுடைய யோக்கியதையும் இவனுக்கு இல்லை என்கிறார் –

———-

சூர்ணிகை –201-

இது தனக்கு அதிகாரி நியமம் இல்லை –

சூர்ணிகை -202-

தமர்களில் தலைவராய் சாதி அந்தணர்களேலும் -என்கையாலே-

இது தனக்கு இத்யாதி -இவ் வபசாரம் இதர விஷயங்களில் ஒழிந்து ஞானாதிக விஷயத்திலும் இப்படி ஸ்வரூப ஹானியாகக் கூடுமோ என்னில்
இவ் வபசாரம் பலிக்கும் இடத்தில் அவ்வதிகாரி நியமம் இல்லை என்று இதுக்குப் பிரமாணமாக
தமர்களில் தலைவராய -என்று அருளிச் செய்கிறார் –

———-

சூர்ணிகை -203-

இவ்விடத்தில்
வைநதேய விருத்தாந்தத்தைத்தையும்-
பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது-

இவ் விடத்திலே என்று தொடங்கி அதுக்கு ஐதிஹ்யங்களை ஸ்மரிப்பிக்கிறார் -அவை எங்கனே என்னில் –
பெரிய திருவடி விநதா ஸூதனாய் வந்து அவதரித்த தசையிலே -இவனுக்கு பால்ய மித்ரனாய் இருப்பான் ஒரு ப்ராஹ்மண புத்ரன்
வேத அத்யயனம் பண்ணின சமயத்திலே குரு தஷிணைக்கு பஞ்ச வர்ணமான பஞ்ச சத அஸ்வம் தரச் சொல்லி அவனை ஆச்சார்யன் அருளிச் செய்ய
ஆஸ்திக்யத்தாலே அப்படிச் செய்கிறோம் என்று அவ் வை நதேயனையும் ஸஹ கரிப்பித்துக் கொண்டு போகா நிற்க
பர்வத பார்ஸ்வத்திலே வர்த்திப்பளாய்-
சாண்டில்யை என்ற பெயரை யுடையாள் ஒரு பாகவதை யானவள் நீங்கள் ஏதேனும் அபசாரத்தைப் பண்ணினது உண்டோ இப்படிக்கு கிடப்பான் என் என்ன
இவ்வளவுண்டு -விலக்ஷணையான இவளுக்கு வாஸம் ஒரு திவ்ய தேசமாகப் பெற்றது இல்லையே என்று இருந்தோம் என்ன –
அங்கன் இருந்தால் உங்கள் இளைப்பில் இவ்வாதித்யம் எனக்குக் கூடுமோ -தப்ப நினைத்தி கோள் என்று கையாலே தடவி அவர்களைத் தரிப்பிக்க
அநந்தரம் அவர்கள் தரித்து எழுந்து இருந்து சிறகும் எழுந்து போனார்கள் என்று ப்ராமண ஸித்தமாகையாலும்
கூரத்தாழ்வான் தன் சிஷ்யனான பிள்ளைப் பிள்ளை ஆழ்வானைக் குறித்து அவர் அதற்குப் பதறி இருக்கையாலே
இவருக்கு இது பாகவத அபசார பர்யந்தமாகப் பலிக்கில் செய்வது என் என்று த்ரிவித கரணங்களையும் தமக்குத் தக்ஷிணையாகத் தா என்று வாங்கிப்
பின்பு உடையவர் அருளிச் செய்த வார்த்தைக்காக
உமக்கு மற்றை மானஸ காயிகங்கள் இரண்டும் மீளத் தந்தோம்
வாக்கு ஒன்றையும் பரிஹரித்துக் கொள்ளும் என்று அருளிச் செய்கையாலும்
அபசாரத்துக்கு அதிகாரி நியமம் இல்லாமைக்கு வை நதேய வ்ருத்தாந்தத்தையும் -பிள்ளைப்பிள்ளான் ஆழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது-என்கிறார் –

——————–

சூர்ணிகை -204-

ஞான அனுஷ்டானங்களை ஒழிந்தாலும் பேற்றுக்கு அவர்கள் பக்கல் சம்பந்தமே அமைகிறாப் போலே
அவை யுண்டானாலும் இழவுக்கு அவர்கள் பக்கல் அபசாரம் போரும் –

அது எங்கனே என்னில் -ஞான அனுஷ்டான ஹீநோபி ததா பாகவதேஷணாத் -ஜீவேத் ததா தத் யுக்தோபி நஸ்யேத் ததந பேஷணாத் – என்கிறபடியே
எத்தையேனும் மோக்ஷ ஹேதுவான ஞான அனுஷ்டானங்கள் அன்றியிலே இருந்தார்களே யாகிலும்
அந்தோ நந்த க்ரஹண வச த -இத்யாதிப்படியே
அப் பேற்றுக்கு அத் தேசிகரான பாகவதர்களுடைய ஸம்பந்தமே போருமோ பாதி –
அப் பல ஹாநிக்கும் ஸ்வரூப ஹாநிக்கும் அவர்களுடைய அந பேஷண ஹேதுவாக அபசாரமே போரும் -என்கிறார் –

—————–

சூர்ணிகை -205-

இதில் ஜென்ம வ்ருத்தாதி நியமம் இல்லை-

இதில் ஜென்ம வ்ருத்தாதி நியமம் இல்லை-என்றது -உத்க்ருஷ்டமான ஜென்ம வ்ருத்த ஞானங்களை
யுடையாருடைய ஸம்பந்தத்தாலே உஜ்ஜீவனமும் அவர்கள் பக்கல் இழவுமாக வேணும் என்கிற நியமம் இல்லை
இவற்றால் குறைய நின்றார்களே யாகிலும் அவர்கள் நேரே பாகவதர்கள் ஆகில் அவர்களுடைய சம்பந்தமே உஜ்ஜீவன ஹேதுவாய்
அவர்கள் பக்கல் அபசாரமே இழவுக்கு ஹேதுவாம் என்றபடி –

—————-

சூர்ணிகை –206–

இவ் வர்த்தம் கைசிக வ்ருத்தாந்தத்திலும்
உபரிசர வ்ருத்தாந்தத்திலும் காணலாம் –

இவ்வர்த்தம் எங்கே கண்டோம் என்ன -அத்தைச் சொல்லுகிறது -இவ் வர்த்தம் கைசிக வ்ருத்தாந்தத்திலும்-என்று தொடங்கி –
கைசிக வ்ருத்தாந்தத்திலே சரக வம்சஜனாய் -உத்க்ருஷ்ட ஜன்மாவான ஸோம சர்மாவினுடைய யஜ்ஞ சாபம் எத்தனையேனும்
அபக்ருஷ்ட ஜென்ம வ்ருத்தங்களை யுடையரான ஸ்வ பாகருடைய ஸம்பாஷண ஸஹ வாஸாதி களாலே
யஜ்ஞ ஸாபாத் வி நிர்முக்த ஸோம சர்மா மஹா யஸா -என்கிறபடியே அவனுக்குப் போகக் காண்கையாலும்
உபரிசரவ ஸூ வ்ருத்தாந்தத்தாலே ஆகாஸ ஸாரியான ரதத்தை யுடையனாய் – ஷத்ரியனுமாய் இருக்கிற உபரிசரவஸூ ஸகல தர்ம ஸூஷ்ம ஜ்ஞானனுமாய்-அத்யந்தம் ஞானாதிகனுமாய் இருக்கையினாலே
பிஷ்ட பஸூக் கொண்டே யஜிப்புதோம் என்ற ருஷிகளுக்கும்
யதாவான பஸூக் கொண்டே யஜிக்க வேணும் என்கிற தேவர்களுக்கும் விவாதம் ப்ரஸ்துதமாய் -அவர்கள் ஞானாதிகனானவனைக் கேட்க வர
அத்தை நாம் எல்லாரும் கூட விசாரிக்கும் அத்தனை அன்றோ என்று அவர்கள் பொருந்தச் சொல்லாதே
சேஷிகள் உகந்ததே சேஷ பூதங்கள் இட வேண்டாவோ என்று சிவிட்கெனச் சொல்ல
அத்தாலே ரிஷிகளும் த்வம்ஸ -என்று சபிக்க
அவர்களிலும் ஞானாதிகனான உபரி சரவஸூ அதிபதிக்கக் காண்கையாலும்
இவை இரண்டிலும் காணலாம் -என்கிறார் –

—–

சூரணை -207-

பிராமணியம் விலை செல்லுகிறது-வேதாத்யய நாதி முகத்தாலே–பகவல் லாப ஹேது என்று –
அது தானே இழவுக்கு உறுப்பாகில் –த்யாஜ்யமாம் இறே —

ஆனால் அபிமத வித்யா வ்ருத்தங்களுடைய உத்க்ருஷ்டதையால் வரும் பிரயோஜனம் ஒன்றும் இல்லையோ என்ன –
ப்ராஹ்மண்யம் விலைச் சொல்லுகிறது -இத்யாதியாலே அவை பகவத் ப்ரத்யா சத்தி ஹேதுவாம் என்று இறே உத்தேஸ்யமாவது –
அவை தானே நாஸ ஹேதுவாமாகில் த்யாஜ்யமாம் அத்தனை இறே என்கிறார் –
அதாவது –
உத்க்ருஷ்ட ஜன்மா வாகையால் வருகிற வை லக்ஷண்யம் ஸர்வ ஸாமான்யமாக உத்தேஸ்யமாய்க் கொண்டு போருகிறது
பிரதமத்திலே சாங்கமான வேத அத்யயனம் என்ன -அதில் அர்த்த பரி ஞானம் என்ன
ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -என்கிறபடியே -அந்த ஞான அநு ரூபமான நிஷ்டை என்ன –
அவைகளால் -அல்லாதாரைப் பற்ற ஸூ கரமாக பகவத் பிராப்தி ஹேதுவாம் என்று இறே –
அந்த ப்ராஹ்மண்யத்தால் வந்த உத்தேஸ் யதை -தானே பாகவதர் பக்கல் அப க்ருஷ்ட புத்திக்கு ஹேதுவாய் ஸ்வரூபத்தை நசிப்பிக்குமாகில் அது தானும் த்யாஜ்யம் இறே -என்கிறார் –

————-

சூரணை -208-

ஜன்ம விருத்தங்களினுடைய-உத்கர்ஷமும் அபகர்ஷமும்
பேற்றுக்கும் இழவுக்கும் அபிரயோஜகம் –

ஜென்ம வ்ருத்தங்களினுடைய -இத்யாதி -ஆகக் கீழே ப்ரதிபாதிதமான அர்த்தம்
ஜென்ம வ்ருத்தங்களினுடைய உத்கர்ஷமும் பேற்றுக்குப் பிரயோஜகம் அன்று
அபகர்ஷமும் இழவுக்கு ப்ரயோஜகம் அன்று –

—————

சூரணை-209–

பிரயோஜகம் பகவத் சம்பந்தமும்- தத் அசம்பந்தமும் –

இனி -உஜ்ஜீவன ஹேதுவாய்க் கொண்டு -கார்யகரமாவது
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விது -என்கையாலே பகவத் சம்பந்த ஞானம் உண்டாகையும்
அஸத் ப்ரஹ்மேதி வேத சேத் அசன்னேவ ஸ பவதி -என்கையாலே நாஸ ஹேதுவாயத் தலைக்கட்டுவதும்
அப் பகவத் ஸம்பந்த ஞானம் இல்லாமையும் என்றதாயிற்று –

——–

சூரணை -210-

பகவத் சம்பந்தம்-உண்டானால்-இரண்டும் ஒக்குமோ என்னில் –

சூரணை -211-

ஒவ்வாது –

பகவத் ஸம்பந்தம் உண்டானால் -இத்யாதி -இப்படி உஜ்ஜீவன ஹேதுவான பகவத் சம்பந்த ஞானம்
கீழ்ச் சொன்ன உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ஜன்மாக்கள் இருவருக்கும் உண்டானால் தான்
அவை இரண்டு ஜென்மமும் தன்னில் ஒக்குமோ என்று நிரூபித்து -அவ்வளவிலும்
ஒன்றினுடைய தோஷா வஹத்வ புத்யா ஒன்றுக்கு உதகர்ஷம் தோற்றுகையாலலே இரண்டும் ஒவ்வாது -என்கிறார் –

———

சூரணை -212-

உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மம்-பிரசம்ச  சம்பாவனையாலே-
சரீரே ச -என்கிற படியே பய ஜனகம் –

சூரணை-213-

அதுக்கு ஸ்வரூப ப்ராப்தமான நைசயம் பாவிக்க வேணும் –

இதில் இப்படி தோஷா வஹமான ஜென்மம் ஏது -அத்தைப் பற்ற அதிகமான ஜென்மம் ஏது என்ன -உத்க்ருஷ்டமாக பிரமித்த -என்று தொடங்கிச் சொல்லுகிறது
ஸ்வரூப யாதாத்ம்ய ஞான ப்ரகாசகமான திரு மந்திரத்தில்
ப்ரணவத்தாலே ஆபி ஜாத்யமும் –
நமஸ்ஸாலே வித்யையும்
சரம பதத்தில் சதுர்த் யர்த்தமே வ்ருத்தமும்
தனக்கு நிலை நின்ற அபிஜன வித்யா வருத்தங்களாய் இருக்க
அஸ்த்திரமான தோல் புரையே போம் அபிஜன வித்தா விருத்தங்களாலே தான் உத்க்ருஷ்டனாக பிரமித்த
உத்தம ஜென்மம் யதாவான அபிஜன விருத்தங்களை யுடைய ததீய சேஷத்வ பர்யந்தமான அத்யந்த பாரதந்தர்ய விருத்தமாய்க் கொண்டு
ஸ்வரூப நாஸகம் ஆகையாலே
ஸரீரே மஹத் பயம் வர்த்ததே -என்று சொல்லுகிறபடியே ஸ்வரூப விருத்தமான உபாயாந்தர அனுஷ்டான யோக்கியமான உத்க்ருஷ்ட ஜென்மத்தில்
சரீரம் ஸ்வரூப அனுரூபமான பாகவத அனுவர்த்தனத்துக்கும் விரோதியாய் இருக்கையாலும்
மிகவும் பயாவஹமாய் இருந்த உத்க்ருஷ்ட ஜன்மத்துக்கு
தம் அடியார் அடியோங்கள் -என்கிற நிஷ்க்ருஷ்ட ஸ்வரூப அனுரூபமான தாழ்ச்சியை நினைத்த படி வாராமையாலே பாவிக்க வேண்டுகையாலும்
உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜென்மம் தோஷாவஹம் என்கிறார் –

———–

சூரணை -214-

அபக்ருஷ்டமாக பிரமித்த-உத்க்ருஷ்ட ஜென்மத்துக்கு
இரண்டு தோஷமும் இல்லை-

இனி -அபக்ருஷ்டமாக -இத்யாதி -ஸ்வரூப ஸ்பர்ஸி களாய்க் கொண்டு நிலை நின்ற ஆபி ஜாத்யாதிகளால் அவன் அதிக ஜன்மாவாய் இருக்கக் காண்கிற
சரீரத்தை இட்டு இவன் தன்னை உத்க்ருஷ்டமாக பிரமித்தால் போலே -தான் அபக்ருஷ்டனாக பிரமித்தவனுடைய
உத்க்ருஷ்ட ஜன்மத்துக்கு பய ஜனகன் என்றும் சோக ஜனகன் என்றும் பாவிக்க வேணும் என்கிற
யுக்தமான உபய தோஷமும் இல்லை –

———

சூரணை -215-

நைச்சயம் ஜன்ம சித்தம்-

நைச்சயம் ஜன்ம சித்தம்–என்கிற இத்தால் ஸ்வரூப அனுரூபமான பாகவத அநு வர்த்தனத்துக்கும்
ஸ்வரூபத்துக்குச் சேராத உபாயந்தரங்களினுடைய அனுஷ்டானத்துக்கு யோக்யதை இல்லாமைக்கு
நைச்யம் பாவிக்க வேண்டாத படி -அது அவனுக்கு ஜன்ம ஸித்தம் –

———

சூரணை -216–

ஆகையால் உத்க்ருஷ்ட ஜன்மமே ஸ்ரேஷ்டம்-

ஆகையால் -இத்யாதி -இப்படி இவனுக்கு இரண்டு தோஷமும் இல்லாமையாலே
வந்தேறியான உத்க்ருஷ்ட ஜென்மமும் இன்றிக்கே
நிலை நின்ற உத்க்ருஷ்ட ஜென்மமே ஸ்ரேஷ்டம் என்று நிச்சயித்து அருளிச் செய்கிறார் –

—————-

சூரணை-217–

ஸ்வசோபி மஹீ பால-

ஸ்வ சோபி மஹீ பால – விஷ்ணு பக்தோ த்விஜாதிக-விஷ்ணு பக்தி விஹீநச்து யதிச்ச ஸ்வபசாதம -என்று இவ்வர்த்தத்தில் பிரமாணம்
அவைஷ்ணவோ வேதவித் யோ வேத ஹீநோ ஹி வைஷ்ணவ -ஜ்யாயாம் சம நயோர் வித்தி யஸ்ய பக்திஸ் ஸதா மயி -என்னா நின்றது இறே

————-

சூரணை -218–

நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷம் சமிப்பது விலக்ஷண சம்பந்த்தாலே-

நிக்ருஷ்ட ஜென்மத்தால் -இத்யாதி -ஆனால் உத்க்ருஷ்ட ஜன்மாவாக பிரமித்தவனுடைய அபக்ருஷ்ட ஜென்மம்
அடியாக வந்த கீழ் யுக்தமான தோஷங்கள் நிலை நின்றே விடுமத்தனையோ என்ன –
அது போவது உத்க்ருஷ்ட ஜன்மாவாக நிச்சயித்த விலக்ஷணனுடைய அபிமான விசேஷத்தாலே -என்கிறார் –

—————

சூரணை -219–

சம்பந்தத்துக்கு யோக்யதை உண்டாம் போது-ஜன்ம கொத்தை-போக வேணும் –

ஸம்பந்தத்துக்கு -இத்யாதி -அவர்களுடைய அபிமான அந்தர் பூதனாகைக்கு அதிகாரம் யுண்டாகும் போது
இவன் உத்க்ருஷ்டனாக பிரமித்த வந்தேறியான ஜன்ம வ்ருத்த அபிமான தோஷம் போக வேணும் –

—————–

சூரணை  -220–

ஜென்மத்துக்கு கொத்தையும் அதுக்கு பரிகாரமும் -பழுதிலா ஒழுகல்–என்ற பாட்டிலே அருளிச் செய்தார்-

ஜன்மத்துக்கு -இத்யாதி -உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மத்துக்கு ஆபி ஜாத் யாதிகள் வந்தேறி என்னும் இடத்தையும்
அதுக்குப் பரிஹாரம் அந்த விலக்ஷண அபிமானம் என்னும் இடத்தையும்
பழுதிலா ஒழுகல் -என்ற பாட்டிலே ஆழ்வார் அருளிச் செய்தார் -என்கிறார் –

————–

சூரணை -221–

வேதகப் பொன் போலே இவர்களோட்டை சம்பந்தம்-

வேதகப் பொன் -இத்யாதி -இப்படி அபக்ருஷ்ட ஜன்மாவானவன் -அவ் விலக்ஷண ஸம்பந்த மாத்ரத்தாலே
விலக்ஷணனாகக் கூடுமோ என்னில் –
ரஸ குளிகை யானது விஸஜாதீய த்ரவ்யங்களையும் விலக்ஷண த்ரவ்யம் ஆக்குமா போலே
இவர்களும் நச்சு மா மருந்தான கேவல பகவத் ப்ரபாவம் அடியாக வந்த பாக விசேஷத்தாலே
அவனையும் விலக்ஷணன் ஆக்கக் குறையில்லை -என்கிறார் –

——————-

சூரணை -222–

இவர்கள் பக்கல் சாம்ய புத்தியும் ,ஆதிக்ய புத்தியும் நடக்க வேணும் —

இவர்கள் பக்கல் -இத்யாதி -இப்படி ஸ்வ ஸம்பந்த மாத்ரத்தாலே ஸ்வரூப உஜ்ஜீவனம் உண்டாக்குமவர்கள் பக்கலில்
அவர்கள் பிரதிபத்தி பண்ணும் படி தான் எங்கனே என்ன –
ஸமராகவும் அதிகராகவும் பிரதிபத்தி பண்ண வேணும் -என்கிறார் –

——————-

சூரணை-223–

அதாவது ஆச்சர்ய துல்யர் என்றும்
சம்சாரிகளிலும்
தன்னிலும்
ஈச்வரனிலும் அதிகர் என்றும் நினைக்கை-

அதாவது -இத்யாதி -அவர்கள் பக்கல் ஸாம்ய புத்தியும் -ஆதிக்ய புத்தியும் -நடக்கை யாவது -ப்ரத்யஷிதாத்ம நாதராய் பகவத் அநுபவ ஏக போகராய்
ஸ்ரீ காஞ்சீ பூர்ண ஸத்ருசரான அவ்விலக்ஷண அதிகாரிகள் பக்கல் -ஸதாசார்யேண ஸந்த்ருஷ்டா ப்ராப்னுவந்தி பராங்கதிம் -என்கிறபடியே
ஸ்வ ஸம்பந்த மாத்ரத்தாலே உஜ்ஜீவிப்பிக்கிற -விப்ரஸ் ஸ்ரேஷ்ட தமோ குரு -என்கிற ஸ்வா சார்ய ஸத்ருசர் என்றும்
அதிகாரம் இடத்தில் ஸ்வ ஜாதி ஸம்பந்த ருசி பின்னாட்டாத படி பரமை காந்திகளான வர்களுடைய ப்ரக்ருதி பந்துக்களான ஸம்ஸாரிகளிலும்
தேஹ யாத்ராபராவஸ் யாதிகளை யுடைய தன்னிலும்
வாய் திறந்து க்ருத்யா க்ருத்யங்களை விதிக்கை முதலானவற்றாலே அர்ச்சாவதார ரூபியான
ஸர்வேஸ்வரனிலும் அவர்கள் அதிகர் என்றும் ஸ்மரிக்கை –

—————–

சூரணை -224-

ஆச்சார்ய சாம்யத்துக்கு அடி ஆச்சார்ய வசனம் –

ஆச்சார்ய ஸாம்யத்துக்கு -இத்யாதி -ப்ரத்யுபகார விஸத்ருசமாக உபகாரகனான ஆச்சார்யனோடு சம புத்தி பண்ணுகைக்கு அடி
அவன் உபதேச காலத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் நம்மைக் கண்டாப் போலே காண் என்று உபதேசிக்கையாலே -என்கை –

——————–

சூரணை -225-

இப்படி நினையாது ஒழிகையும் அபசாரம் –

இப்படி நினையாது ஒழிகையும் அபசாரம் –என்றது அவ்விலக்ஷண அதிகாரிகள் பக்கல் இவ்வநு ஸந்தான விசேஷங்கள் நடையாடா விடில்
கீழ்ச் சொன்ன பாகவத அபசாரத்திலே இதுவும் ஓன்று என்றதாயிற்று –

——————-

சூரணை -226-

இவ் அர்த்தம்
இதிகாச புராணங்களிலும் –
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமையிலும் –
கண் சோர வெம் குருதியிலும் –
நண்ணாத வாள் அவுணரிலும் –
தேட்டறும் திறல் தேனிலும் —
மேம் பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் -விசதமாகக் காணலாம் –

கீழே விசதமாகச் சொன்ன பாகவத வைபவம் பிரபல ப்ராமண ஸித்தமுமாய்-ப்ராமாணிக வசன ஸித்தமுமாய் இருக்கும் என்னும் இடம்
விசதமாகக் காணலாம் என்கிறார் -இவ் அர்த்தம் இதிகாச புராணங்களிலும் –என்று தொடங்கி -எங்கனே என்னில்
ஸ்ரீ வராஹ புராணத்திலே , “மத் பக்தம் ஸ்வபசம் வாபி நிந்தாம்-குர்வந்தி யே நரா:, பத்மகோடி சதேநாபி ந ஷமாமி வஸுந்தரே ” இத்யாதியாலே -–பாகவத வைபவம் ப்ரோக்தம்
(மத் பக்தம் ஸ்வ பசம் வாபி நிந்தாம் குர்வந்தி யே நரா பத்ம கோடி சதே நாபி நகதிஸ் தஸ்ய வித்யதே -என்றும் )
ஸூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ஸ்வ பசம் ததா வீக்ஷதே ஜாதி சாமான்யாத் ஸ யாதி நரகம் நர -என்றும்
ந ஸூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா –ஸர்வ வர்ணே ஷு தே ஸூத்ரா யே ஹ்ய பக்தா ஜனார்தனே -இத்யாதி களாலே இதிஹாச புராணங்களிலும்
பயிலும் சுடர் ஒளி –
நெடுமாற்கு அடிமை -திருவாய் மொழி களிலே -நம்மாழ்வாரும்
கண் சோர வெங்குருதி –
நண்ணாத வாள் அவுணர் -என்கிற திரு மொழிகளிலே திருமங்கை ஆழ்வாரும்
தேட்டரும் திறல் தேன் -என்கிற திருமொழியிலே பெருமாளும்
மேம் பொருளுக்கு மேல் அஞ்சு பாட்டுக்களிலே ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும்
விஸ்தரித்து அருளிச் செய்கையாலே விசதமாகக் காணலாம் -என்கிறார் –

————–

சூரணை-227-

ஷத்ரியனான விஸ்வாமித்திரன் பிரம ரிஷி ஆனான் .

ஆனாலும் இப்படி இஜ் ஜென்மம் தன்னிலே இந்த ஹேய ஸரீரத்தோடே இருக்கிறவர்கள் உத்தம ஜென்மாவினுடைய தோஷ நிவ்ருத்தி பூர்வகமாக
அவனை உஜ்ஜீவிக்கும் படி உத்க்ருஷ்டரானவர்கள் என்றால் இது கூடுமோ என்ன
ஒருவனுக்கு வந்தேறியான தொரு உபாதி விசேஷமான தபோ பலத்தாலே ஒரு உத்க்ருஷ்டம் உண்டான படி கண்டால்
நிருபாதிகமான பகவத் சம்பந்தம் அவர்களுக்கு அவ் வுத்கர்ஷத்தைப் பண்ண மாட்டாதோ என்னும் அர்த்தத்தை
ஷத்ரியனான விஸ்வாமித்ரன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
விஸ்வாமித்ரனுக்கு அடியில் ஷத்ரிய ஜென்மமாய் இருக்க வந்தேறியான தொரு தபோ பலத்தாலே ப்ரஹ்ம ரிஷித்வம் ஆகிற
உத் கர்ஷத்தை அடைந்த பின்பு ஷத்ரியத்வம் பின்னாட்டித்து இல்லை இறே –

————–

சூரணை -228-

ஸ்ரீ விபீஷணனை குல பாம்சன் என்றான் –
பெருமாள் இஷ்வாகு வம்ச்யனாக நினைத்து வார்த்தை அருளிச் செய்கிறார் –

விபீஷணனை -இத்யாதி -ஸோ பாதிக பந்துவான ராவணன் -விபீஷணஸ்து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித -என்னும் படியான
ஸ்ரீ விபீஷணப் பெருமாளை -த்வாம் து திக் குல பாம்ஸநம் -என்று இக்குலத்துக்கு அழுக்காய்ப் பிறந்தாய் நீ போ என்று உபேக்ஷித்தான்
பெருமாள் இத்யாதி -நிருபாதிக பந்துவான பெருமாள் -ந த்ய ஜேயம் கதஞ்சந -என்று இவனை விடில் நாம் உளோம் ஆகோம் -என்று கைக்கொண்டு
ஆக்யாஹி மம தத்த்வேந ராக்ஷஸாநாம் பலா பலம் -என்று தம் பின் பிறந்த இளைய பெருமாளோ பாதியாக இவரையும் நினைத்து
ராக்ஷஸருடைய பலா பலங்கள் இருக்கும் படி சொல்லிக் காணீர் -என்றார் இறே என்கிறார் –

—————–

சூரணை -229-

பெரிய உடையாருக்கு பெருமாள் ப்ரஹ்ம மேத சம்ஸ்காரம் பண்ணி அருளினார் –

பெரிய உடையார் என்று தொடங்கி -இந் நிருபாதிகமான பகவத் ஸம்பந்தமே பிரபலமாய்க் கொண்டு கார்யகரமாவது என்னும் இடத்தைப்
பல உதாஹரணங்களாலும் பிரகாசிப்பிக்கிறார் -எங்கனே என்னில்
சர்வாதிகராய் ஆசார பிரதானரான பெருமாள் திர்யக் ஜாதீயராய் மாம்ஸாசியுமான ஜடாயு மஹா ராஜரை
ப்ரஹ்ம மேதத்தாலே சம்ஸ்கரித்தார் -என்றும் –

—————–

சூரணை -230-

தர்ம புத்ரர் அசரீர வாக்யத்தையும் ஞான ஆதிக்யத்தையும் கொண்டு ஸ்ரீ விதுரரை ப்ரஹ்ம மேதத்தாலே சம்ஸ்கரித்தார்–

தர்ம தேவதா ஸ்வரூபமான தர்ம புத்திரர் பூஜ்யரான ஸ்ரீ விதுரருடைய ஸம்ஸ்கார சிந்தா வ்யாகுலிதரான தசையிலே
அசரீரி -உமக்கு ப்ரஹ்ம மேத ஸம்ஸ்கார யோக்யர் இவர் என்று சொல்லுகையாலும்
ஸம் ப்ரதி பன்னமான அவருடைய ஞானாதிக்யத்தாலும்
ஹீந ஜன்மாவான அவரை ப்ரஹ்ம மேதத்தால் ஸம்ஸ்காரம் பண்ணினார் என்றும் –

———–

சூரணை-231-

ருஷிகள் தர்ம வ்யாதன் வாசலிலே துவண்டு தர்ம சந்தேகங்களை சமிப்பித்து கொண்டார்கள் –

மஹ ரிஷிகள் தர்ம ஸூஷ்ம விசேஷஞ்ஞன் யாகையாலே தர்ம வ்யாதன் என்று ப்ரசித்தனான வேடனுடைய வாசலிலே
தர்ம ஸந்தேஹ நிவ்ருத்தி யர்த்தமாக வந்து அவன் வேட்டையாடி வரும் அவஸர ப்ரதீ ஷிதராய்க் கொண்டிருந்து
தர்ம ஸந்தேஹ நிவ்ருத்தி பண்ணிக் கொண்டு போனார்கள் என்றும் –

—————

சூரணை-232-

கிருஷ்ணன் பீஷ்மத் துரோணாதிகள் க்ரஹங்களை விட்டு-ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே அமுது செய்தான்-

ஸ்ரீ கிருஷ்ணன் தூது எழுந்து அருளின மத்யாஹன வேளையிலே மீண்டு எழுந்து அருளா நிற்க
பீஷ்ம த்ரோணா வதி க்ரம்ய மாம் சைவ மது ஸூதந -கிமர்த்தம் புண்டரீகாக்ஷ புக்தம் வ்ருஷல போஜனம் -என்னும் படி
ஆபி ஜாத்யத்தாலும் -வித்யையிலும் -வ்ருத்தத்திலும் -இவை ஓர் ஒன்றிலே விசேஷித்து துரபிமானம் பண்ணி இருக்கிற
துரியோதனையும் -ஸ்ரீ பீஷ்மரையும் -துரோணாச்சார்யரையும் அதிக்ரமித்துப் போந்து
இத்துரபிமானங்களாலே துஷ்டம் இல்லாத ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே
புக்த வத்ஸூ த்வி ஜாக்ர்யேஷு நிஷண்ண பரமாஸனே விதுராந்நாநி புபுஜே ஸூ சீநி குணவந்தி ச -என்று
பக்தி ரசத்தாலும் பாவநாத்வத்தாலும் போக்யத்வங்களோடே கிருஷ்ணன் அமுது செய்தான் என்றும் –

———-

சூரணை -233-

பெருமாள் ஸ்ரீ சபரி கையினாலே அமுது செய்து அருளினார் –

சபர்யா பூஜிதஸ் சமயக் ராமோ தசரதாத் மஜா-என்கிற படியே சக்ரவர்த்தி திரு மகனான பெருமாள்
வேடுவச்சியான ஸ்ரீ சபரி கையாலே திருந்தத் திருவாராதனம் கொண்டு அருளினார் -என்றும்
இப்படி இதிஹாஸ புராண யுக்தங்களான உதாஹரணங்களை அருளிச் செய்து –

——————————-

சூரணை -234-

மாறனேர் நம்பி விஷயமாக பெரிய நம்பி உடையவருக்கு அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-

மேல் -மாறநேர் நம்பி -இத்யாதியாலே
நம் தர்சன ப்ரவர்த்தகரான பாஷ்யகாரருக்கும் -பிரதம ஆச்சார்யரான பெரிய நம்பியினுடைய அனுஷ்டானத்தையும்
பிரகாசிப்பிக்கிறார் -அதாவது
மாறநேர் நம்பி தம்முடைய அந்திம தசையில் ப்ரக்ருதி பந்துக்களுடைய ஸ்பர்சம் வரில் செய்வது என் என்று அதி சங்கை பண்ணி
ஸ ப்ரஹ்ம சரியான பெரிய நம்பியைப் பார்த்து
ஆளவந்தார் அபிமானித்த சரீரமான பின்பு இப்புரோடாசத்தை நாய்க்கு இடாதே கிடீர் -என்ன
அவரும் அத்தசையிலே உதவித் தாமே அத்திரு மேனிக்கு வேண்டும் ஸம்ஸ்காரம் எல்லாம் பண்ணித் திரு முடியும் விளக்கி மீள எழுந்து அருளி இருக்க
இச்செய்தியை உடையவர் கேட்டருளி -ஸ்ரீ பாதத்தில் சென்று கண்டு லோக உபக்ரோசம் பிறக்கும்படி தேவர் இங்கனே செய்து அருளலாமோ
இங்கன் வேண்டினால் வேறு சில ஸத்வ நிஷ்டராய் இருப்பாரைக் கொண்டு செய்வித்தால் ஆகாதோ என்ன
ஸந்த்யாவந்தனத்துக்கு ஆள் இடுவாரைப் போலே அவர் நியமித்த காரியத்துக்கு ஆள் இட்டு இருக்கவோ என்ன
ஆசார ப்ரதாநரான பெருமாள் பெரிய யுடையாரை ஸம்ஸ்கரிக்கிற இடத்தில் -வைதர்ம்யம் நேஹ வித்யதே -என்ற ராமானுஜரும் இருந்திலரோ
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை களுக்கு நான் பொருள் சொல்லக் கடவேனாகவும்
நீர் அதில் அர்த்தத்தை அனுஷ்ட்டிக்கக் கடவீராயுமோ இருப்பது என்று அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது என்கிறார் –
இவ்வநுஷ்டானத்தை ராஜாவும் கேட்டு இவரை அழைத்து நியமிக்க -அவனும் ஸூர்ய வம்சம் ஆகையாலே நான் செய்தேன் அன்று
உங்கள் பூர்வர்கள் அனுஷ்டித்தத்தை அனுஷ்டித்தேன் இத்தனை
நான் பெருமாளில் அதிகனாய்த் தவிரவோ –
இவர் அப்பஷியில் தண்ணியராய்த் தவிரவோ -என்ன
அவனும் அவ்வளவில் பீதனாய் ஆதரித்து விட்டான் -என்று ப்ரஸித்தம் இறே –

————-

சூரணை -235-

ப்ராதுர்ப்பாவை -இத்யாதி-

மேல் -ப்ராதுர்பாவைஸ் ஸூர நர சமோ தேவதேவஸ் ததீய ஜாத்யா வ்ருத்தைரபி ச குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா
கிந்து ஸ்ரீ மத் புவன பவன த்ரணதா அன்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்ப கல்ப ப்ரகர்ஷ –என்று
உத்தமமான அனுஷ்டானத்துக்கு விஷய பூதரானவர்களுடைய அவதாரம்
ஸர்வேஸ்வரனுடைய ஸூர நர திர்யக் ஸ்தாவர அவதாரங்கள் போலேயான பின்பு
இவ்வநுஷ்டானங்கள் உண்டானால் லோக கர்ஹை இல்லை என்றும்
இவ்வதிகாரம் இன்றிக்கே ஜகாத் ஸ்ருஷ்டிகளை யுடையவன் பக்கல் விமுகரானவர் பக்கல் யுண்டான
வித்யா வ்ருத்த பாஹுள்யமும் விதவாலங்காரம் போலே என்றும் சொன்ன
ஸ்ரீ ஸூக வாக்கியத்தை -ப்ராதுர்ப்பாவை -இத்யாதி-என்று ப்ரசங்கிக்கிறார் –

——————–

சூரணை -236-

பாகவதன் அன்றிக்கே வேதார்த்த ஞானாதிகளை உடையவன் -குங்குமம் சுமந்த கழுதை யோபாதி என்று சொல்லா நின்றது இறே –

பாகவதன் அன்றிக்கே -இத்யாதி -இப்படி பகவத் சம்பந்தம் அடியாக வந்த வை லக்ஷண்யம் இன்றிக்கே இருக்க
வேத அத்யயனம் என்ன
அதில் அர்த்த பரி ஞானம் என்ன
ஞான அனுரூபமான அதில் அனுஷ்டானம் என்ன –
இவை இத்தனைக்கும் தாங்கள் நிர்வாஹகராய் இருக்குமவர்
விலக்ஷண போக ஏக தத் பரரானவருக்கு போக உபகரணமான குங்குமப் பாரத்தை பூதி கந்த
தத் பரமான கர்த்தபம் பூர்ணமாக வஹிக்குமோ பாதி என்றும் பிரமாண சித்தம் இறே என்கிறார் –
சதுர் வேத தரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி-வேத பார பராக்ராந்தஸ் சவை ப்ராஹ்மண கர்த்தப-என்று
ஸ்ம்ருதி ப்ரஸித்தமாகையாலே

——————

சூரணை-237-

ராஜாவான ஸ்ரீ குலசேகர பெருமாள்-திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை ஆசைப் பட்டார் –

ஆக நிஹீன ஜன்மாவானவன் இஜ் ஜென்மம் தன்னிலே பகவத் ப்ரத்யாசத்தியாலே இப்படி உத்தேச்யமான அளவே அன்று
அந் நிக்ருஷ்ட ஜென்மம் தன்னை உத்க்ருஷ்ட ஜன்மாக்களானாரும்
ஆசைப்பட்டும்
ஆஸ்தாநம் -பண்ணியும் போரும்படி இறே
அந்த பகவத் ப்ரத்யா சத்தியால் வரும் வை லக்ஷண்யம் என்கிறார் -ராஜாவானவன் என்று தொடங்கி -அவை எங்கனே என்னில்
வாசிகை பக்ஷி ம்ருகதாம் மானஸைர் அந்த்ய ஜாதிதாம் சரீரஜை கர்ம தோஷை யாதி ஸ்தாவர தாம் நர -என்கிறபடியே
பாப பலமாய் வரும் திர்யக் ஸ்தாவர ஜென்மங்களை த்வதீய வர்ணரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள்
வேம்கடத்து கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –என்றும்
மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே –என்றும்
செண்பகமாய் இருக்கும் திரு உடையேன் ஆவேனே –என்றும்
தம்பகமாய் இருக்கும் தவம் உடையேன் ஆவேனே -என்றும்
இத்யாதிகளாலே ஆசைப்பட்டார் –

—————–

சூரணை -238-

ப்ராஹ்மண உத்தமரான-பெரிய ஆழ்வாரும்-திரு மகளாரும்- கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணினார்கள் –

பிரதம வர்ணத்தில் ஞானாதிக்யத்தாலே பிரதம கண்யரான பெரியாழ்வாரும் அவர் திருமகளாரான நாய்ச்சியாரும்
கிருஷ்ணாவதாரத்தில் அனுபவ அபி நிவேசத்தாலே இடை முடியும் இடைப்பேச்சும் முடை நாற்றமுமாம் படி
அவன் அவதரித்த கோப ஜென்மத்தை ஏறிட்டுக் கொண்டார்கள்

ஆசாமஹோ சரண ரேணு ஜூஷாமஹம் ஸ்யாம் பிருந்தாவநே கிமபி குல்மல தெவ்ஷதீ நாம்
யா துஸ்த் யஜம் ஸ்வ ஜனமார்ய பத்தஞ்சு ஹித்வா பேஜுர் முகுந்த பதவீம் ஸ்ருதி பிர் விம்ருக்யாம் -என்றும்
பத்யு ப்ரஜா நாம் ஐஸ்வர்யம் பஸூநாம் வா ந காமயே அஹம் கதம்போ வா யமுநா தடே -என்றும்
இத்யாதியாலே ஸ்ரீ ஸூக ப்ரஹ்ம மஹ ரிஷியும் அவன் திருவடிகளில் சம்பந்தமுடைய
ஸ்த்தவராதிகளாகையே ஆசைப்பட்டான் இறே-

பிரதம வர்ணத்தில் ஞானாதிக்யத்தாலே பிரதம கண்யரான பெரியாழ்வாரும் அவர் திருமகளாரான நாய்ச்சியாரும்
கிருஷ்ணாவதாரத்தில் அனுபவ அபி நிவேசத்தாலே இடை முடியும் இடைப்பேச்சும் முடை நாற்றமுமாம் படி
அவன் அவதரித்த கோப ஜென்மத்தை ஏறிட்டுக் கொண்டார்கள்

ஆசாமஹோ சரண ரேணு ஜூஷாமஹம் ஸ்யாம் பிருந்தாவநே கிமபி குல்மல தெவ்ஷதீ நாம்
யா துஸ்த் யஜம் ஸ்வ ஜனமார்ய பத்தஞ்சு ஹித்வா பேஜுர் முகுந்த பதவீம் ஸ்ருதி பிர் விம்ருக்யாம் -என்றும்
பத்யு ப்ரஜா நாம் ஐஸ்வர்யம் பஸூநாம் வா ந காமயே அஹம் கதம்போ வா யமுநா தடே -என்றும்
இத்யாதியாலே ஸ்ரீ ஸூக ப்ரஹ்ம மஹ ரிஷியும் அவன் திருவடிகளில் சம்பந்தமுடைய
ஸ்த்தவராதிகளாகையே ஆசைப்பட்டான் இறே

——————-

சூரணை -239-

கந்தல் கழிந்தால் சர்வருக்கும் நாரீணாம் உத்தமை உடைய அவஸ்தை வரக் கடவதாய் இருக்கும் –

கந்தல் கழிந்தால் -இத்யாதி -இத்தால் கீழ்ச் சொல்லிக் கொடு போந்த உத்கர்ஷ அபகர்ஷ வைஷம்யம் தான்
இவர்களுடைய கர்ம தாரதம்யத்தால் வந்த சரீர வைசிஷ்டியிலே வருமவை யாகையாலே
அக் கந்தல் கழிந்த நிஷ்க்ருஷ்ட வேஷத்தைப் பார்த்தால் ஸகல ஆத்மாக்களுக்கும் அநந்யார்ஹ சேக்ஷத்வாதிகளாலே
அவனுக்கு அத்யந்த அபிமதையான பிராட்டி தசை பிறக்கக் காட்டுவதாய் இருக்கும் -என்கிறார் –

—————–

சூரணை -240-

ஆறு பிரகாரத்தாலே-பரி சுத்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு தத் சாம்யம் உண்டாய் இருக்கும் –

ஆறு பிரகாரத்தாலே இத்யாதி -ஈஸ்வரீம் ஸர்வ பூதா நாம் -என்கிறவளுடைய அவஸ்த்தை இவர்களுக்கு வருகையாவது என் என்ன
பரி ஸூத்தமான நிஷ்க்ருஷ்ட ஆத்ம ஸ்வரூபத்துக்கு ஞான ஆனந்தங்களும்
சேஷத்வ பாரதந்தர்யங்களும்
ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கையும்
விஸ்லேஷத்தில் தரியாது ஒழிகையுமாகிற
அவளுக்கு உண்டான ஆறு பிரகாரமும் உண்டாய் இருக்கையாலே
அவளோடே ஸர்வ ஸாம்யம் இல்லையே யாகிலும் இவ்வாறு பிரகாரத்தாலே தத் ஸாம்யம் உண்டு என்கிறார் –
ஆனால் இவளுக்கு இவற்றில் அதிகமான பிரகாரங்கள் எவை என்னில்
நிரூபகத்வம்
அபிமதத்வம்
அநு ரூபத்வம்
சேஷித்வ ஸம்பந்த த்வாரா பாவத்வம்
புருஷகாரத்வம்
ப்ராப்ய பூர கத்வம் –முதலானவை இறே –

————-

சூரணை -241-

த்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்காரத்திலே-அத்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்கார ராஹித்யத்தாலே –

ஆக -கீழே -அஹங்காரத்தையும் விஷயங்களையும் விரும்புகை -என்று தொடங்கிச் சொன்ன அஹம் மமதைகளையும்
அவ் வஹம் மமதா கார்யமான பாகவத அபசாரத்தினுடைய க்ரவ்ர்ய ப்ரதிபாதன அர்த்தமாக ப்ரஸ்துதமான
பாகவத வைபவத்துக்கு மூலமான பகவத் சம்பந்த யாதாத்ம்யத்தையும் -த்ருஷ்டத்தில் உத் கர்ஷம் அஹங்காரத்தாலே -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
அதாவது -குக்ராம நியாமகனைத் தொடங்கி ஸர்வ நிர்வாஹகரான பிரம்மா அளவாக
அஹங்கார மமகாரங்களினுடைய அதிசயம் எவ்வளவு உண்டு அவ்வளவும் த்ருஷ்டத்தில் உத் கர்ஷம் யுண்டாய் இருக்கும் என்றும்
பகவத் சம்பந்தம் அடியாக உத்தேஸ்யமான பாகவத விஷயத்தில் எத்தனையேனும் ஜென்ம ஞான வ்ருத்தங்களால் குறைய நின்றவர்கள் பக்கலிலும்
அவ் வஹங்கார மமகார ராஹித்யத்தாலே அத்ருஷ்டத்தில் உத் கர்ஷம் யுண்டாம் என்றும் நிகமிக்கிறார் –

—————-

சூரணை -242-

ப்ரஹ்மாவாய் இழந்து போதல்-இடைச்சியாய் பெற்று விடுதல்- செய்யும் படியாய் இருக்கும் –

இவ் வஹங்காரம் உண்டானதாலும் இல்லை யானதாலும் வரும் பிரயோஜனம் ஏது என்னச் சொல்லுகிறது -ப்ரஹ்மாவாய் இழந்து போதல் -இத்யாதி
கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் -என்றும்
கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் -என்றும் சொல்லுகிறபடியே
அவ்வஹங்காரத்தில் அதிகனான பிரம்மாவாய் -த்வி பரார்த்த அவசானே மாம் ப்ராப்தும் அர்ஹஸி பத்ம ஜ -என்று
இவ்வஹம் மமதை உள்ள அளவும் ஈஸ்வரனாய் இழந்து போதல்
ஜென்ம ஞான வ்ருத்தங்களால் அவ்வஹங்கார ரஹிதை யான சிந்தயந்தி யாகிற இடைச்சியாய் அவனை லாபித்துக் கொள்ளுதல்
செய்யும் படியாய் இருக்கும் -என்று –

———————-

சூரணை-243-

இப்படி சர்வ பிரகாரத்தாலும் நாச ஹேதுவான அஹங்காரத்துக்கும்-அதனுடைய கார்யமான
விஷய ப்ராவண்யத்துக்கும் விளை நிலம் தான்-ஆகையாலே –
1–தன்னைக் கண்டால் சத்ருவைக் கண்டால் போலேயும் –
2–அவற்றுக்கு வர்த்தகரான சம்சாரிகளைக் கண்டால் சர்ப்பத்தை கண்டால் போலேயும் –
3–அவற்றுக்கு நிவர்தகரான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் பந்துக்களை கண்டால் போலேயும் –
4–ஈஸ்வரனைக் கண்டால் பிதாவைக் கண்டால் போலேயும் –
5–ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டால் போலேயும் –
6–சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தை கண்டால் போலேயும் -நினைத்து –
அஹங்கார -அர்த்த- காமங்கள் மூன்றும்–(த்ரி த்வாரங்கள் இவை நரகத்தில் தள்ள )-அஹங்காரம் அனுகூலர் பக்கல் அநாதாரத்தையும்–அர்த்தம் -பிரதிகூலர் பக்கல் பிராவண்யத்தையும்-
காமம் – உபேஷிக்கும் அவர்கள்-(பைய நடமின் எண்ணா முன்) பக்கல் அபேஷையும்-பிறப்பிக்கும் என்று அஞ்சி –
ஆத்ம குணங்கள் நம்மாலும் -பிறராலும்-பிறப்பித்துக் கொள்ள ஒண்ணாது –
சதாசார்ய பிரசாதம் அடியாக வருகிற பகவத் பிரசாதத்தாலே பிறக்கும் அத்தனை என்று துணிந்து –
7–தேக யாத்ரையில் உபேஷையும் –
8–ஆத்ம யாத்ரையில் அபேஷையும் –
9–பிராக்ருத வஸ்துக்களில் போக்யதா புத்தி நிவ்ருத்தியும் –
10–தேக தாரணம் பரமாத்ம சமாராதான சமாப்தி பிரசாத பிரதிபத்தி என்கிற புத்தி விசேஷமும் -(-பிராசாதம் அடியாகவே இந்த தேக தாரணம் இதுக்கு என்ற பிரதிபத்தி உண்டாகும் )
11–தனக்கு ஒரு க்லேசம் உண்டானால் கர்ம பலம் என்றாதல்-
க்ருபா பலம் என்றாதல்-பிறக்கும் ப்ரீதியும் (-இந்த பூமி கஷ்டம் விலகாத பூமி என்ற எண்ணம் வேண்டுமே -இந்த பூமியில் கஷ்டம் வேண்டாம் என்று நினைக்காமல் -கிருபா பலத்தால் கஷ்டம் கொடுத்து மோக்ஷம் இச்சை பிறப்பிக்கிறான் என்ற எண்ணம் வேண்டுமே )
12–ஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தி நிவ்ருத்தியும் –
13–விலஷணருடைய ஜ்ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சையும் –
14–உகந்து அருளின நிலங்களில் ஆதராதிசயமும் ,மங்களாசாசனமும் –
15–இதர விஷயங்களில் அருசியும் –
16–ஆர்த்தியும்
17–அனுவர்தன நியதியும் -(-45-விஷயங்கள் அனுவர்த்த நியதிகள் இதில் மேல் விவரிப்பார் )
18–ஆகார நியதியும் –
19–அனுகூல சஹவாசமும் –
20–பிரதிகூல சஹாவாச நிவ்ருத்தியும் –
சதாசார்ய ப்ரசாதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –

இரண்டாம் பிரகரணம் முற்றிற்று-

இவ்வளவாக -தனக்குத் தான் தேடும் நன்மை -என்று தொடங்கின நமஸ் சப்தார்த்தை அருளிச் செய்தார் –
இனி ஸ்வரூப அனுரூபமாக சோதிதமான உபாய உபேயங்களில் நிஷ்ணாதரான அதிகாரிகளுடைய அனுசந்தான பிரகார விசேஷங்களை
இப்படி ஸர்வ பிரகாரத்தாலும் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -எங்கனே என்னில்
ஸ்வரூப தசையோடு
உபாய தசையோடு
புருஷகார தசையோடு
வாசியற ஸர்வ பிரகாரத்தாலும் ஸ்வரூப நாசகமாகச் சொன்ன அஹங்காரத்துக்கும் அது அடியாக வரும் மமக விஷயமான
இஸ் ஸப்தாதி விஷய ப்ராவண்யத்துக்கும் ஜென்ம பூமி சரீர விசிஷ்டனான தானாகையாலே அந்த சரீர விசிஷ்டமான ஸ்வ விஷய ஞானம் பிறந்தால்
தன்னை ஸ்வ அநர்த்த கரரான சத்ருக்களைக் கண்டால் போலேயும்

அவ்வஹங்கார மமகாரங்களை அதிசயிப்பிக்கிற ஸம்ஸாரிகளை அனுசந்தித்தால் அணுகில் அள்ளிக் கொள்ளும் என்று அஞ்ச வேண்டும்படியான ஸர்ப்பத்தைக் கண்டால் போலேயும்

மத்யம பத நிஷ்டராகையாலே அவ்வஹம் மமதா நிவர்த்தகரான ஸ்ரீ வைஷ்ணவர்களை அனுசந்தித்தால் தன்னுடைய அர்த்த ப்ராமண அபிமானங்களுக்கு அபிமானிகளான ப்ராண பந்துக்களைக் கண்டால் போலேயும்

ஸர்வ பிரகார ரக்ஷகனாய் நிருபாதிக சேஷியான ஈஸ்வரனை அனுசந்தித்தால் தன்னுடைய அநவதானத்தாலே வரும் அக்ருத்யங்களை அறிந்து
ஹித பரனாகையாலே ஸிஷித்துக் கொண்டு போரும் பிதாவைக் கண்டால் போலேயும்

ஸ்வரூப உத்பாதகனுமாய் -ஸ்வரூப வர்த்தகனுமாய்த் தன்னை ஆதரித்தார்க்கு எல்லாம் சத்தையை நோக்கிக் கொண்டு போரும் ஆச்சார்ய விஷயத்தை அனுசந்தித்தால் பெறில் தரித்தல் பெறா விடில் முடியும்படியான பெரும் பசியனானவன்
அந்நாத்வை ப்ரஜா ப்ரஜாயந்தே -இத்யாதிகளில் படியே ஸர்வ ஒவ்ஷதமான அன்னத்தைக் கண்டால் போலே அபி நிவிஷ்டனாய் இருக்கை –
அதாவது –
ஆச்சார்ய சங்கம்
ஆச்சார்ய விக்ரஹ சங்கம்
ஆச்சார்ய கைங்கர்ய சங்கம்
ஆச்சார்யனுடைய வார்த்தையிலே இன்ன இடத்திலே இன்னபடி அருளிச் செய்தான்
என்று இருக்கும் அதிசங்கம் யுடையவனாகை –
அத்யந்த பாரதந்தர்யத்தையே வடிவாக யுடையராய் அத ஏவ அபிமத ரூபமான சிஷ்யர்களைக் கண்டால்
அவர்களுக்கு சேஷத்வமாகிற சட்டையை இட்டு ஆத்ம குணங்களாகிற ஆபரணங்களை பூட்டி பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் அபிமான
அந்தர்ப்பூதனாக்குகை ஆகிற அந்தப்புரத்தில் வைத்து
தேவதாந்தர ப்ரயோஜனாந்தர நிவ்ருத்தி சாதனாந்தர நிவ்ருத்தி முதலான கல் மதிளை இட்டு வைத்து ரஷிக்கையாலே அபிமத விஷயத்தைக் கண்டால் போலேயும் நினைத்து என்கிறது –

மண்ணீரை ஒரு பாத்ரத்திலே எடுத்துத் தேற்றம்பாலை இட்டுத் தேற்றி -அது தெளித்தால் பாத்ராந்தத்திலே சேர்க்கும் தனையும்
காற்று அடிக்கில் கலங்கும் என்று நோக்குவாரைப் போலே ஞான அஞ்ஞான மிஸ்ரமான தேஹத்திலே இருக்கிற ஆத்மாவைத்
திருமந்திரம் ஆகிற தேற்றம் பாலாலே தேற்றி -அப்ராக்ருதமான தேஹாந்தரத்திலே வர்த்தித்த போது காண்
ஸ்வரூப சித்தி உள்ளது என்றார் இறே ஆச்சான் பிள்ளையும்

இனி அஹங்கார -அர்த்த காமங்கள் மூன்றும் -என்று தொடங்கி

அஹங்காரமானது அனுகூலரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கலிலே பிரயோஜனம் கொள்ள வேணும் என்னும் ருசியைப் பிறப்பிக்கையாலே
அவர்கள் பக்கல் அநாதாரத்தைப் பிறப்பிக்கும் என்றும்

அர்த்த ஸ்ரத்தை யானது பிரதிகூலரான சம்சாரிகள் பக்கலிலே ப்ராவண்யத்தை விளைக்கும் என்றும்

காம ஸ்ரத்தை யானது -ஈஸி போமின் -என்று உபேக்ஷிக்கும் விஷயங்களிலே -பல்லே ழையர் தாம் இழிப்பச் செல்வர் -என்னும்படியான அபேக்ஷையைப் பிறப்பிக்கும் என்றும்

அடைவே இவற்றுக்கு அஞ்சி -சம தம நியதாத்மா -இத்யாதியாலே சொல்லப்படுகிற ஆத்ம குணங்கள்
அநாதிகாலம் ஸம்ஸரிக்கைக்கே வழி பார்த்துப் போந்த நம்மாலும் –
இஸ் ஸம்ஸார வர்த்தகராயப் போந்த பிறராலும் உண்டாக்கிக் கொள்ள ஒண்ணாது
ஸப்த பூருஷ விஜ்ஜேயே சந்தத ஏகாந்த்ய நிர்மலே குலே ஜாதோ குணைர் யுக்தோ விப்ர ஸ்ரேஷ்ட தமோ குரு -என்கிறபடியே
விலக்ஷண அதிகாரியாய் -ஆத்ம குணங்களால் பரிபூர்ணனாய் -பரம கிருபாவானான ஸதாசார்ய அங்கீ காரம் அடியான
பகவத் கடாக்ஷத்தாலே பிறக்கும் என்று அத்யவசித்து
அது எங்கனே என்னில்
அபிஷிக்த க்ஷத்ரியர்அதிக குல அபிமானத்தாலே பிறந்த கன்யகைக்குப் பிறந்த வன்றே தொடங்கி அறைப்பத்திட்டு அங்க மணி செய்து அது பக்வமானவாறே
அவஸர ப்ரதீஷனாய்க் கொண்டு அங்கீ கரிக்குமா போலே ஸதாச்சார்ய அபிமானம் அடியான பகவத் ப்ரஸாதத்தாலே ஆத்ம குணங்கள் யுண்டாய்
அங்கீ க்ருதனாம் என்றபடி –

ஆக -தன்னைக் கண்டால் என்று தொடங்கி -இவ்வளவும் வர -இவ்வதிகாரியுடைய அனுசந்தான பிரகாரங்களை சொல்லி
மேல் தேஹ யாத்திரையில் உபேக்ஷையும் -என்று தொடங்கி -மங்களா ஸாஸனம் அளவும்
இவனுடைய திநசர்யை இருக்கும்படியை அருளிச் செய்கிறார் –

அதில் கர்ம ஆரப்தமான தேஹ யாத்ரை கர்ம அனுரூபமாக ஸ்வயமேவ வருகையாலே
யோ மே கர்ப்ப கதஸ்யாபி வ்ருத்திம் கல்பிதவான் ப்ரபு –
சேஷ வ்ருத்தி விதாநே ஹி கிம் ஸூப்தஸ் ஸோதவா கத -என்று அதில் தனக்கு உபேக்ஷையும்

சேஷத்வ ஸ்வரூபமான ஆத்மாவினுடைய ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்திலே அபேக்ஷையும்

அக் கைங்கர்ய ஏக போகனான தனக்கு ஹேயமான பிராகிருத வஸ்துக்களில் வாசனையால் வரும் போக்யதா புத்தியால்
பஞ்ச பூதாத்ம கைர் த்ரவ்யை பஞ்ச பூதாத்மகம் வபுஸ் ஆப்யாயதே யதி தத பும்சோ போகோத்ர கிம் குத -என்று நிவ்ருத்தனாகையும்

இனி -ஆமின் சுவை யவை ஆறோடு அடிசிலை -அத்ய சனமாம் படி புஜித்துக் கிடந்து புரளாதே தேகம் தரித்து இருக்கைக்கு வேண்டும் அளவே
பரமாத்ம ஸமாராதனத்தினுடைய பூர்த்தி ரூபமான ப்ரஸாத ப்ரதிபத்தி பண்ணும் இடத்தில் பதி விரதைக்கு பர்த்துர் உச்சிஷ்ட போஜனம்
பாதி வ்ரத்ய ஹேதுவாமோ பாதி ஸ்வரூப அனுரூபம் என்கிற புத்தியாலே தேஹ தாரணம் பண்ணுகையும்

ஏவம் வித அனுஷ்டானங்களை யுடைய தனக்கு ப்ராரப்த சரீரம் அடியாகச் சில துக்க அனுபவம் உண்டானால்
இச்சரீரத்தோடே அநுபாவ்யமாம் அவற்றில் அச்சுமை கழிந்தது இறே என்று ப்ரீதனாதல்
அன்றிக்கே
ஹரீர் துக்காநி பக்தேப்யோ ஹித புத்யா கரோதி ஹி ஸஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா -என்றும்
யஸ்யா நுக்ரஹம் இச்சாமி தஸ்ய வித்தம் ஹராம் யஹம் -என்கிறபடியே
சரீர க்ரந்தியால் வருகிற துக்கம் மீளவும் கர்ஹியாத படி பண்ணுகிற பகவத் கிருபையினுடைய பலம் என்றாதல்
அகிலேசத்தில் உண்டாம் உகப்பும் ஏவம் விதமான தன்னுடைய அனுஷ்டானங்களைத் தன் பேற்றுக்குக் கைம்முதலாக நினையாது ஒழிகை யும்
இவற்றை கேவலம் உபேய தயா அனுஷ்டித்துப் போருகிற விலக்ஷணரான பூர்வர்களுடைய ஞான அனுஷ்டானங்கள் நமக்கு உண்டாக வேணும் என்கிற ஆசையும்
ந கந்தைர் ந அநு லேபைஸ் ச நைவ புஷ்பைர் மநோ ஹரை ஸாந்நித்யம் குருதே தத்ர யத்ர சந்தி ந வைஷ்ணவா -என்கையாலே
விலக்ஷணரான ஆழ்வார்கள் ஆச்சார்யர்களுக்கு ஆதரணீய ஸ்தலம் என்று ஸர்வேஸ்வரன் உகந்து வர்த்திக்கிற
திவ்ய தேசங்களில் நித்ய வாஸ நித்ய கைங்கர்யம் தொடக்கமான வற்றில் அத்யந்த ஆதரமும்
அத் தேச விசேஷங்களிலே உகந்து அருளின அர்ச்சாவதார வைலக்ஷண்ய அனுசந்தானத்தாலே
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு -இத்யாதியில் படியே
வெளி விழுங்குகிறதோ என்று நித்ய ஸூரிகளும் அஞ்சி அனுபவிக்கும் படியான விலக்ஷண விஷயம் இந் நிலத்திலே நிரந்தர வாஸம் பண்ணுவதே
என்று இவ்விஷயத்தில் பரிவாலே வரும் மங்களா ஸாஸனமும்

அவ்விலக்ஷண விஷய வியதிரிக்தங்களான ஸப்தாதி விஷயங்களில்
பரம் த்ருஷ்ட்வா நிவர்த்தந்தே -என்கிற அருசியும்

இப்படியே இவற்றில் அருசி உண்டானாலும் –
பா மாரு மூவுலகில் படியே இருந்ததின் நடுவு நின்றும் அக்கரைப் படப்பெறாத ஆர்த்தியும்

வாய் அவனை அல்லது வாழ்த்தாது -இத்யாதியில் படியே பகவத் பாகவத வ்யதிரிக்த விஷயங்களில் த்ரி கரண வ்யபிசாரமும் வாராத படியான அநு வர்த்தன நியதியும்

யுக்தமான
அனுசந்தான
அனுஷ்டான
அநு ரூப
ஞான ஹேதுவுமாய்
ஸாஸ்த்ர அவிருத்தமுமாய்
ததீய அபிமான அந்தர் கதமுமான ஆகாரத்தில் நியதியும்

அவ்வாஹார நியதி முதலானவற்றிலே நிரதரான ஸ்ரீ வைஷ்ணவ ஸஹ வாசமாகிற அநுகூல ஸஹ வாஸமும்

அவ்வனுகூல ஸஹ வாஸத்துக்கு எதிர் தட்டாய்
ந சவுரி சிந்தா திமுக ஜன ஸம் வாஸ வைச ஸம் வரம் ஹுதவஹஜ்வாலா பஞ்சராந்தர் வ்யவஸ்திதிதி -என்கிறபடியே
ஹுத வஹ ஜ்வாலா பஞ்சர வாஸமே ஸ்ரேஷ்டம் என்னும்படி கொடியராய் பகவத் விமுகரான பிரதிகூல ஸஹ வாஸ நிவ்ருத்தியும்

இப்படி இவை இத்தனையும்
கீழ்ச் சொன்ன ஆத்ம குணங்களுக்கு அடியான அந்த ஸதாசார்யருடைய ப்ரஸாதத்தாலே அபி வ்ருத்தமாம் படி
அனுஷ்டித்துக் கொண்டு வர்த்திக்கக் கடவன் -என்று
இவ் வதிகாரிக்குக் கர்தவ்யமான தின சரிதத்தை அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- இரண்டாம் பிரகரணம் -உபாயாந்தர தோஷமும்-பெறுவான் முறையும் –சூர்ணிகை -115–159-

July 21, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

———

சூரணை -115-

பிரபகாந்தர பரித்யாகத்துக்கும்
அஞ்ஞான அசக்திகள் அன்று –
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது –

இனி -பிரபகாந்தர பரித்யாகத்துக்கும்-என்று தொடங்கி -இப்படி இதர விஷயங்களை ஸ்வரூபத்துக்கு அப்ராப்தம் என்று விடுகிறாப் போலவும்
பகவத் விஷயத்தில் ஸ்வரூப ப்ராப்தம் என்று பற்றுகிறாப் போலவும்
உபாய தசையில் உபாயாந்தரங்களும் ஸ்வரூபத்துக்கு அப்ராப்தம் என்றே விடப்படுகின்றன -என்று
அங்கம் தன்னை ஒழிந்தவற்றைப் பொறாது ஒழிகை -என்று தொடங்கிக் கீழ்ப் ப்ரஸ்துதமாய் வருகிற உபாயத்துக்கு அங்கமான
உபாயாந்தர தியாகத்தை இங்கே வெளியாக அருளிச் செய்கிறார் -ப்ராபகாந்தர பரித்யாகத்துக்கும் -இத்யாதி

இதர உபாய தியாகத்துக்குத் தன்னுடைய அஞ்ஞான அசக்திகளும் ஹேதுவாய் இருந்ததே யாகிலும் -அது பிரதான ஹேது அன்று
ஆனால் ஏதாவது என்ன -ஸ்வரூப விரோதமே -இத்யாதி
அத்யந்த பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு ஸ்வ யத்ன ரூபமான உபாயாந்தரங்கள் -ராஜ மஹிஷிக்குக் கொட்டை நூற்று உண்கையும் குடம் சுமைக்கையும்
அவத்யமாமோபாதி ஸ்வரூபத்துக்குச் சேராது என்கிற இதுவே பிரதான ஹேது என்கிறார் –

—————-

சூரணை -116-

பிரபாகாந்தரம் அஞ்ஞருக்கு  உபாயம் –

பிராபகாந்தாரம் இத்யாதி -அஞ்ஞர்க்கு உபாயம் என்றது –
இப்படி அத்யந்த பாரதந்தர்ய ஞானம் பிறவாதார்க்கு உபாயம் -என்றபடி

————-

சூரணை -117-

ஞானிகளுக்கு அபாயம்-

ஞானிகளுக்கு அபாயம்-என்றது –
அத்யந்த பாரதந்தர்ய ஞானம் யுடையாருக்கு ஸ்வ ப்ரவ்ருத்தி ரூபமான உபாயங்கள் ஸ்வரூப விரோதி யாகையாலே –

—————-

சூரணை -118-

அபாயமாய் ஆயிற்று-ஸ்வரூப நாசகம் ஆகையாலே —

அகில வேதாந்த விஹிதமானவது அபாயமானபடி என் என்னில்
ஸ்வ ரக்ஷணத்தில் அந்வயம் இல்லாத ஸ்வரூபத்தை அழிக்குமவை யாகையாலே
அத்தை விவரிக்கிறார் -ஸ்வரூப நாசமாகையாலே –

————-

சூரணை -119-

நெறி காட்டி நீக்குதியோ -என்னா நின்றது இறே –

இவ்வர்த்தத்தில் பிரமாணம் உண்டோ என்னில்
இதுக்குப் பிரமாணமாக -நெறி காட்டி நீக்குதியோ -என்று ஆப்த தமரான ஆழ்வார் பாசுரத்தைப் பிரகாசிப்பிக்கிறார் –

——————

சூரணை -120-
வர்த்ததே மே மகத் பயம் -என்கையாலே
பய ஜநகம்-
மா ஸூச -என்கையாலே
சோக ஜநகம்-

வர்த்ததே மே -இத்யாதி -இப்படி ஸ்வரூப ஹானியாம் அளவன்றிக்கே
பய ஜனகமுமாய் -சோக ஜனகமுமாயும் இருக்கும் என்னும் இடத்துக்கும் பிரமாணம் காட்டுகிறார்
இதில் -ஸரீரே ச கதவ் சாபி வர்த்ததே மே மஹத் பயம் -என்கையாலே
உபாயாந்தர அனுஷ்டானத்துக்கு அனுரூபமான வர்த்தமான தேஹத்திலும் -தேஹாந்தர ப்ராப்தி கதியிலும் பயம் உண்டாகா நின்றது -என்கையாலும்
அர்ஜுனனுக்கு இதர உபாய ஸ்ரவண அநந்தரம் சோகம் பிறக்க -மா ஸூ ச -என்ன வேண்டுகையாலும்
பய ஜனகமும்
சோக ஜனகமும் -என்கிறது –

—————–

சூரணை -121-

இப்படிக் கொள்ளாத போது–ஏதத் பிரவ்ருத்தியில்-பிராயச் சித்தி விதி  கூடாது –

இப்படிக் கொள்ளாத போது -இத்யாதி -இதர உபாயங்கள் ஸ்வரூப நாஸகம் என்றும் -பய ஜனகம் -சோக ஜனகங்கள் -என்றும் ஸாஸ்த்ர அபிப்ராயமாகக் கொள்ளா விடில்
அஸ் சாஸ்திரம் தானே உபாயாந்தரங்களில் உபாய புத்தியைப் பண்ணின ப்ரபந்ந அதிகாரியைக் குறித்து
உபாயா நாம் உபாயத்வ ஸ்வீகாரேப்யே ததேவஹி -அபாய கரணே சைவ ப்ராயச்சித்தம் ஸமா சரேத்
ப்ராயஸ் சித்திரியம் ஸாத்ர யத் புநஸ் சரணம் வ்ரஜேத் -என்று
இதர உபாயங்களில் உபாயத்வ புத்தி பண்ணினவனுக்கு அபாய கரணத்தோடே ஓக்க -ப்ராயச் சித்தம் பண் என்று விதிக்கக் கூடாது இறே என்கிறார்
அதாவது ஸூ த்ர ஸ்பர்சத்தில் இறே ப்ராஹ்மணனுக்கு ஸ்நான விதி உள்ளது –
சஜாதீயனான ப்ராஹ்மணன் ஸ்பர்சத்தில் அவ்விதி இல்லை இறே –

——————–

சூரணை-122-

திரு குருகை பிரான் பிள்ளான் பணிக்கும் படி –
மதிரா பிந்து மிஸ்ரமான சாத கும்பமய கும்பகத தீர்த்த சலிலம் போலே
அஹங்கார மிஸ்ரமான வுபாயாந்தரம்–

அவ் வபிப்ராயத்தைப் பற்ற இறே ப்ராமாணிகரான பிள்ளான் வார்த்தையும் -அது எங்கனே என்னில் -திருக் குருகைப் பிரான் -இத்யாதி
சாத கும்ப மயம் என்றது -ஸ்வர்ண மயமான கும்பம் -என்ற படியாய் -இத்தால்
பக்திக்கு ஆஸ்ரயமாய் விலக்ஷணமான ஞான ஆனந்த ஸ்வரூபத்தை நினைத்து –
அதில் உண்டான கங்கா ஜலத்தை பகவத் விஷயத்தில் பக்தியாகவும் நினைத்து
இவை இரண்டும் உபாதேய தமமானாலும்-அஹங்கார மஹா பாந மத மத்தான் மாத்ருஸா -என்று
அஹங்காரத்திலே மதிரா புத்தி உண்டாகையாலே
அந்த ஸ்வ யத்ன ஸ்பர்ச மாத்ரத்தை மதிரா பிந்துவாக நினைத்து இப்படி தத் ஸ்பர்சமுள்ள உபாயம் தோஷ துஷ்டம் என்று அருளிச் செய்தார் இறே என்கிறார்
இவ்வளவும் அன்றிக்கே பல விஸத்ருசமும் -என்கிறது –

———————–

சூரணை -123-

ரத்னத்துக்கு பலகரை போலேயும்
ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம் போலேயும்
பலத்துக்கு சத்ருசம் அன்று –

ரத்னத்துக்கு பலகரை போலேயும்-இத்யாதியாலே பல கரையும் எலுமிச்சம் பழமும் ரத்னத்துக்கும் ராஜ்யத்துக்கும்
ஸத்ருசம் அன்றே யாகிலும் அவற்றை உபஹாரமாகக் கொடுத்தே யாகிலும் அவரவர் அபிமதங்கள் பெறக் காணா நின்றோமே
அவ்வோபாதி தானாகாத் தட்டென் -என்ன –

—————–

சூரணை -124-

தான் தரித்திரன் ஆகையாலே
தனக்கு கொடுக்கலாவது ஒன்றும் இல்லை –

தான் தரித்ரன் -என்று தொடங்கிச் சொல்லுகிறது –
த்ரய ஏவாதநா ராஜன் பார்யா தாஸஸ் ததா ஸூதா யத்தே ஸமதி கச்சந்தி யஸ்யை தே தஸ்ய தத் தநம் -என்று
தான் ஸ்வரூபத அகிஞ்சனன் ஆகையாலே ஒரு வழியாலும் தனக்கு கிஞ்சித் கரிக்கலாவது இல்லை என்ன –

————–

சூரணை -125-

அவன் தந்த அத்தை கொடுக்கும் இடத்தில் –
அடைவிலே கொடுக்கில் அநு பாயமாம் –
அடைவு கெட கொடுக்கில் களவு வெளிப்படும் –

அவன் தந்தத்தை -இத்யாதி -அது என் –
விசித்ரா தேஹ சம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம் யுதா -என்கையாலே
அவன் தந்த கரணங்களைக் கொண்டு அவனுக்கு கிஞ்சித் கரித்தாலோ -என்ன
அக்கரணங்கள் உடையவனைக் குறித்து கரணம் விநியோகப்பட வேணும் என்கிற க்ரமத்திலே உபகரிக்கில் அது உபாயம் ஆகாது -உபேயமாய் விடும்
அடைவு கெட -இத்யாதி -மதீயம் என்று ஸமர்ப்பிக்கில் ராஜ தனத்தை ஏகாந்தத்திலே அபஹரித்து ஓலக்கத்திலே உபஹரிக்குமோ பாதி களவு வெளிப்படும் –

————–

சூரணை -126-

பர்த்ரு போகத்தை வயிறு வளர்க்கைக்கு
உறுப்பு ஆக்குமா போலே இருவருக்கும் அவத்யம் –

பர்த்ரு போகத்தை -இத்யாதியாலே -அவ்வளவும் அன்று -பதி வ்ரதையானவள் பார்த்தாவுக்கு உடம்பு கொடுத்து
அத்தை ஜீவனார்த்தம் என்று நினைக்கில்
பர்த்ரு பார்யா ஸம்பந்தம் குலையுமா போலே
உபய ஸ்வரூப விருத்தமும் -என்கிறார் –

—————

சூரணை -127-

(ஸ்வரூப நாசகமான வற்றை )வேதாந்தங்கள் உபாயமாக விதிக்கிறபடி என் என்னில் –

சூரணை -128-

ஒவ்ஷத சேவை பண்ணாதவர்களுக்கு-
அபிமத வஸ்துக்களிலே அத்தை கலசி இடுவாரை போலே –
ஈஸ்வரனை கலந்து விதிக்கிறது இத்தனை –

ஸ்வரூப நாசகமான வற்றை -என்று தொடங்கி -இப்படி அநேக தோஷ பூயிஷ்டமான உபாஸனத்தை வேதாந்தங்களில் சேதனனைக் குறித்து
த்யாயீத உபாஸீத -என்று விதிக்கிறபடி எங்கனே என்ன
ஒவ்ஷத ஸேவை -இத்யாதியாலே சொல்லுகிறது -அதாவது –
மரணாந்தமான வியாதி நிவ்ருத்திக்கு மஹா ஒவ் ஷதத்தை விதித்தால் அது ஒருவனுக்கு ருசியாதாப் போலே
வைப்பாம் மருந்தாம் -என்கிற ஏக ரூபையாய் ஸம்ஸார பேஷஜமான ஸக்ருத் ஸேவை என்றாலும் அதில் ருசி விஸ்வாசங்கள் பிறவாதார்க்கு
அவர்கள் பக்கல் வாத்சல்ய அதிசயத்தால் அவர்கள் வாசனை பண்ணின அபிமத வஸ்துக்களிலே கலந்தாகிலும் அவனுக்குப் பிரயோகிப்பாரைப் போலே
அவ்வேதாந்தங்களும் ப்ரவ்ருத்தி யுபாயங்களிலே பரந்தவர்களுக்கு நிவ்ருத்தி ரூப உபாயத்தில் ருசி விஸ்வாசங்கள் பிறவாமையாலே
தமேவ ஸாத்யம் -என்றும்
தமேவ சரணம் கச்ச -என்றும்
மாமேவ யே ப்ரபத்யந்தே -என்றும்
அத்யயனத்துக்குப் பிரதிநிதியாக -நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி – என்றும் இத்யாதி களாலே
இதர உபாயங்களிலே ஸ்வ தந்த்ர உபாயமான ஈஸ்வரனைக் கலந்து உபாயமாக்கி ப்ரயோகிக்கிறது அத்தனை –

———–

சூரணை -129-

இத்தை பிரவிர்ப்பித்தது பர ஹிம்சையை நிவர்திப்பிக்கைக்காக –

இத்தைப் ப்ரவ்ருத்திப்பித்தது -இத்யாதி -இப்படிக்கு கலந்தாகிலும் இதர சாதனத்தை விதித்தது
குமைத்திட்டுக் கொன்று உண்பர் அறப் பொருளை அறிந்து ஓரார் -என்கிறபடியே
சரீர போஷண அர்த்தமாக அஸாஸ்த்ரீயமான ஹிம்ஸையிலே அனவரத தத் பரரான அவர்களை அதில் நின்றும் மீட் கைக்காக
அக்னீ ஷோமீயம்ப ஸூமால பேத -இத்யாதி வைதிக ஹிம்ஸையிலே மூட்டினது அத்தனை என்கிறார்

———————–

சூரணை-130-

இது தான் பூர்வ விஹித ஹிம்சை போலே
விதி நிஷேதங்கள் இரண்டுக்கும் குறை இல்லை –

ஆனால் விதித்து வைத்து இப்போது விடச் சொல்கிறது என் என்ன -இது தான் -இத்யாதி –
அடியிலே ஆஸ்திகனாகைக்காக அபிசார கர்மத்தை விதித்து வைத்து –
அனந்த்ரம் அவனை அத்ருஷ்ட பரன் ஆக்குகைக்காக-அவற்றை நிஷேதித்து வைத்தவோ பாதி
இதில் விதி நிஷேதங்கள் உசிதம் -என்கிறார் –

————–

சூரணை -131-

அத்தை சாஸ்திர விஸ்வாசத்துக்காக விதித்தது –
இத்தை ஸ்வரூப விஸ்வாசத்துக்காக விதித்தது –

அந்த அபிசார விதியை முதலிலே நாஸ்திகனாய் ஸாஸ்த்ரத்திலே விஸ்வாஸம் இல்லாதவனுக்கு தத் விஸ்வாஸ ஹேதுவாக விதித்தது
சாதனாந்தரத்தை விதித்தது -ஈஸ்வரோஹம் அஹம் போகீ -என்கிறவன் தன்னை ஈஸ்வர சேஷம் என்று இருக்கைக்காக –

—————

சூரணை -132-

அது தோல் புரையே போம் –
இது மர்ம ஸ்பர்சி –

அது தோல் புரையே போம் -இத்யாதி -அந்த ஸ்யேந விதி கேவலம் தேஹ போஷண அர்த்தமாக வாகையாலே -அத்தேஹ அவசானத்திலே அந்த விதியும் போம் –
இந்த இதர உபாயம் ஆத்ம ஸ்வரூப ஞானம் அடியாக வருகையாலே ஸ்வரூப நாஸகம் -என்கிறார் –

——————-

சூரணை-133-

இது தான் கர்ம சாத்யம் ஆகையாலே –
துஷ்கரமுமாய் இருக்கும் –

இது தான் கர்ம ஸாத்யம் -இத்யாதி -ஸர்வ அபேஷா ச யஜ்ஞாதி ஸ்ருதேரஸ் வவத் -என்றும்
யஜ்ஜேந தாநேந -இத்யாதியில் சொல்லப் படுகிறவை
தர்மான்நாதி துஸ் சரம் தானான்நாதி துஷ் கரம் -என்றும் சொல்லுகையாலும்
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஜ்ஞாந ஸமாதிபி -நராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே -என்கையாலும்
இதற்கு துஷ்கரத்வ தோஷம் உண்டு -என்கிறார் –

————

சூர்ணிகை – 134–

பிரபத்தி உபாயத்துக்கு இக் குற்றங்கள் ஒன்றுமே இல்லை-

ஆக -பிராப காந்தர பரித்யாகத்துக்கும் -என்று தொடங்கி -பிரபத்தி அங்க தயா த்யாஜ்யமான இதர உபாயங்களினுடைய தோஷ பூயிஷ்டதையை
ஸ்வரூப நாஸகம்
பய ஜனகம்
சோக ஜனகம்
பல வி ஸத்ருசம்
உபய ஸ்வரூப விருத்தம்
துஷ்கரம்
இத்யாதிகளாலே சொல்லிப்
பற்றப்படும் பிரபத்தி யுபாயத்துக்கு இவ் வாசக தோஷமும் இல்லை -என்று தொடங்கி
இவ்வுபாய வை லக்ஷண்யத்தை அருளிச் செய்கிறார் மேல்
அதில் இக்குற்றங்கள் ஒன்றும் இல்லை -என்று விசேஷிக்கையாலே
மற்ற ஒரு குற்றம் உண்டு என்னும் இடம் ஸூ சிதம் –

———–

சூர்ணிகை —135-

ஆத்ம யாதாம்ய ஞான கார்யம் ஆகையாலே
ஸ்வரூபத்துக்கு உசிதமாய்
சிற்ற வேண்டா என்கிறபடியே -நிவ்ருத்தி சாத்யமாகையாலே
ஸூ கரமுமாயும் இருக்கும்-

இனி மேல் -ஆத்ம யாதாத்ம்ய கார்யம் ஆகையாலே -என்று தொடங்கி இவ்வுபாய வை லக்ஷண்யத்தை உபபாதிக்கிறார் -அதாவது
இவ்வுபாயம் அத்யந்த பரதந்தர்ய ஞானம் பிறந்தால் வருமாதாகையாலே அத்யந்தம் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்ததுமாய்
சிற்றுகை -சிதறுகையாய்-அலைய வேண்டா என்கையாலே
பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிரபத்தி -என்கிற
ஸ்வ வியாபார ஸூந்யதையாலே பெறுமதாகையாலே யுக்த தோஷங்கள் இல்லாமையே யன்றியே ஸூ கரமுமாயும் இருக்கும் –

———-

சூர்ணிகை –136-

பூர்ண விஷயமாகையாலே பெருமைக்கு ஈடாகப் பச்சை விட ஒண்ணாது –

சூர்ணிகை –137-

ஆபி முக்கிய ஸூசக மாத்ரத்திலே ஸந்தோஷம் விளையும் –

சூர்ணிகை –138-

பூர்த்தி கை வாங்காதே மேல் விழுகைக்கு ஹேது வித்தனை-

பூர்ண விஷயம் -இத்யாதி -இவனுடைய சைதன்யம் அடியாகச் சில கிஞ்சித் கரிக்க நினைக்கில்-சரண்யனானவன்
ஸ்ரீ யபதியாய்
அவாப்த ஸமஸ்த காமனாய் -இருக்கையாலே
அவ்வைபவ அனுரூபமாக உபகரிக்க அரிது என்ன
அகிஞ்சனான இவன் அகன்றே போம் அத்தனையோ என்ன
இவன் தன் விலக்காமையைத் தெரிவிக்கின்ற வியாபார மாத்ரமான கேவல அபிமிக்க ஸூ சகத்தாலே அவன் திரு உள்ளம் உகக்கும் –
ஆகையால் இவன் இட்டது கொண்டு திருப்தனாக வேண்டாத பூர்த்தி இறாயாதே அபி நிவேசித்துப் பற்றுகைக்கு அடியான அத்தனை -என்கிறார் –

—————

சூர்ணிகை–139—

பத்ரம் புஷ்பம் — அந்யாத் பூர்ணாத் — புரிவதுவும் புகை பூவே –

இதில் பிரமாணம் என் என்ன -பத்ரம் புஷ்பம் -என்று தொடங்கிச் சொல்லுகிறது –
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா பிரயச்சத்தி ததஹம் பக்த் யுப ஹ்ருத் மஸ்நாமி ப்ரயதாத்மன-ஸ்ரீ கீதை -9–26–என்கிரா திரு முகப் பாசுரத்தாலும்
அந்யத் பூர்ணாதாபாம் கும்பா தந்யத் பாதாவ நேஜனாத் அந்யத் குசல சம்ப்ரஸ்நாந் நதே இச்சதி ஜனார்த்தன-உத்யோக பர்வம் -என்று
கிறுசதனனை ஐஸ்வர்யத்தாலே வஸீ கரிக்க நினைத்த த்ருதராஷ்ட்ரனைக் குறித்து ஸஞ்சயன் சொல்லுகையாலும்
புரிவதில் யீசனையென்று தொடங்கி -புரிவதுவும் புகை பூவே -1-61-என்று
அவ்வர்த்தத்தை ஆழ்வாரும் அருளிச் செய்கையாலும்
ஆபி முக்ய ஸூசகமே வேண்டுவது என்று அருளிச் செய்கிறார் –

——

சூர்ணிகை –140-

புல்லைக் காட்டி அழைத்துப் புல்லை இடுவாரைப் போலே பல சாதனங்களுக்கு பேதம் இல்லை –

சூர்ணிகை –141-

ஆகையால் ஸூக ரூபமாய் இருக்கும் –

இப்படி ஸூகரமான மாத்ரமே அன்று -இது பல ஸத்ருசமும் என்கிறார் -புல்லைக்காட்டி -இத்யாதியாலே -அதாவது
போக ரூபமான
புருஷகார
குண
விக்ரஹங்களே உபாயமுமாய்
அது தானே உபேயமுமாய் இருக்கையாலே இவற்றுக்குப் பிரிவில் யாகையாலே
இவ்வுபாயம் -ஸ்ம்ருதோ யச்சதி ஸோபநம் -என்று ஸூக ரூபமாய் இருக்கும் -என்கிறார் –

——————-

சூரணை -142-

இவன் அவனைப் பெற நினைக்கும் போது
இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –

சூரணை-143-

அவன் இவனை பெற நினைக்கும் போது
பாதகமும் விலக்கு அன்று —

இனி இக் குற்றங்கள் இல்லை என்ற இடத்தே ஸூ சிதமான குற்றத்தைத் தோற்றுவியா நின்று கொண்டு
இவ்வுபாயத்தில் ஸ்வ கதமான ஸ்வீ காரமும் ஸ்வரூப ஹானி என்கிறார் மேல் -இவன் அவனைப் பெற நினைக்கும் போது -என்று தொடங்கி
அஞ்ஞனாய் -அசக்தனாய் இருக்கிற இவன் ஸர்வஞ்ஞனாய் -ஸர்வ சக்தியானவனைத் தன் பேறாகத் தான் பற்றும் அன்று
அஹங்கார கர்ப்பமான இதர சாதனங்களோ பாதி விலக்ஷண உபாயமாக சாதித்த இந்தப் பிரபத்தியும் சாதனம் அன்று
அவன் தன் பேறாகத் தான் விஷயீ கரிக்கும் அன்று இவனுடைய மஹா பாதகாதி ஸமஸ்தமும் பிரதிபந்தகம் ஆக மாட்டாது –

——–

சூரணை -144-

இவை இரண்டும்
ஸ்ரீ பரத ஆழ்வான் பக்கலிலும்
ஸ்ரீ குகப் பெருமாள் பக்கலிலும்
காணலாம் –

சூரணை -145-

ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நன்மை தானே தீமை ஆயிற்று –
ஸ்ரீ குகப் பெருமாளுக்கு தீமை தானே நன்மை ஆயிற்று –

அவை எங்கே கண்டோம் என்ன -ஸ்ரீ பரதாழ்வான் இத்யாதியாலே -அவ்விரண்டத்தையும் வெளியிடுகிறார் -அது எங்கனே என்னில்
ஸ்ரீ பரதாழ்வான் -ஏபிஸ் ஸ சிவைஸ் ஸார்த்தம் -இத்யாதியாலே தம்முடைய பேற்றை மநோ ரதித்து
ஸேஷ்யே புரஸ் தாச்சா லாயாம் யா வந்த மே ப்ரஸீ ததி-என்று அவருடைய பிரபத்தி தானே
சரண்ய ஹ்ருதய அநு ஸாரி யல்லாமையாலே
நீரே ஸ்வ தந்தரராய் நம்மைப் பரதந்த்ரராக்கி மீட்க வந்தீரோ -என்கையாலே தீமையாய்த் தலைக்கட்டிற்று இறே
ஸிஷ்ட பரிபாலனமும் துஷ்ட நிக்ரஹமும் பண்ணிப் போந்த சக்ரவர்த்தித் திரு மகன்
நெடும் காலம் வன்னியராய் வழி யடித்துத் திரிந்த நம்மைக் கண்ட போதே
தலை அறுக்கை தவிரார் என்று ஸ்வ தோஷ அணு ஸந்தானராய் முகம் காட்டாதே இருந்த ஸ்ரீ குஹப் பெருமாளுக்கு
பத்ப்யாம் அபிகமாச்சைவ ஸ்நேஹ சந்தர்சநேந ச -என்றும்
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி -என்றும்
அருளிச் செய்யும்படி அது தானே நன்மையாய்த் தலைக்கட்டிற்று இறே –

————

சூரணை -146-

சர்வ அபராதங்களுக்கும் பிராயச்சித்தமான
பிரபத்தி தானும் –
அபராத கோடி யிலேயாய்
ஷாமணம் பண்ண வேண்டும் படி
நில்லா நின்றது இறே —

இப்படி சரண்ய ஹ்ருதய அநு ஸாரி யல்லாத பிரபத்தி ஸ்வரூப ஹானி என்னும் அர்த்தத்தை
ஆச்சார்ய அனுஷ்டான ப்ரஸித்தியாலே விஸதீ கரிக்கிறார் -சர்வ அபராதங்களுக்கும் -இத்யாதியாலே -அதாவது
ப்ராயச் சித்த அந்ய சேஷாணி தப கர்மாத்மகாநிவை யாநி தேஷாம் அசேஷணாம் கிருஷ்ண அநு ஸ்மரணம் பரம் -என்கிறபடியே
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாம் படி ஸர்வ அபராத ப்ராயச் சித்தமாக ப்ரஸித்தமான ப்ரபத்தியும்
அபராத கோடியிலே யாகையாவது கத்யத்திலே பாஷ்யகாரர் தாம் பண்ணின பிரபத்தி சரண்ய ஹ்ருதய அநு சாரி அன்றோ என்று சங்கித்து
பிதேவ புத்ரஸ்ய சகேவ சக்யு ப்ரிய ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும் -என்று அபராத ஷாமணம் பண்ணுகையாலும்
மத் வ்ருத்தம் அசிந்த யித்வா நாத முனிம் விலோக்ய ப்ரஸீத -என்று ஆளவந்தார் ஷாமணம் பண்ணுகையாலும்
ஷாமணம் பண்ண வேண்டும் படி நின்றது இறே என்கிறார் –

——————

சூரணை -147-

நெடு நாள் அந்ய பரையாய் போந்த பார்யை லஜ்ஜா பயங்கள் இன்றிக்கே –
பர்த்ரு சாகரத்தாலே நின்று -என்னை அங்கீகரிக்க வேணும் -என்று அபேஷிக்குமா போலே –
இருப்பது ஓன்று இது இறே-இவன் பண்ணும் பிரபத்தி –

அது அபராதம் என்னும் இடத்தை லோக த்ருஷ்ட்டி ப்ரக்ரியையாலே அருளிச் செய்கிறார் -நெடு நாள் -என்று தொடங்கி –
சிர காலம் ஸ்வ பர்த்ரு வ்யதிரிக்த விஷய அனுபவ பரவஸையாய்ப் போந்த பார்யை அவ்வியாபாரத்தில் லஜ்ஜையும் பர்த்ரு தந்தத்தால் வரும் பயமும் இன்றிக்கே
அவன் ஸந்நிதியிலே நின்று உனக்கு அநந்யார்ஹை யாம்படி நீ தாலி கட்டின என்னை நீயே அங்கீ கரித்து புஜிக்க வேணும் என்று அபேக்ஷிக்குமா போலே இறே
அநாதி காலம் அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்தர்யங்களாலே -அசன்னேவ-என்னும்படி கை கழிந்தவன் இப்போது நிரூபாதிக சேஷியான நீயே ரக்ஷிக்க வேணும் என்று தான் சரணாகதனாகை –

—————-

சூரணை -148-

கிருபையால் வரும் பாரதந்த்ர்யத்தில் காட்டில்
ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் பாரதந்த்ர்யம் பிரபலம் –

இப்படி ஸ்வ கத ப்ரபந்ந அதிகாரிகளான காக்க விபீஷணாதிகள் பக்கலிலேயும்
க்ருபயா பர்யபாலயத் -என்றும்
நத்யஜேயம் கதஞ்சன -என்றும்
கார்யகரமாகக் காணா நின்றோமே என்ன -கிருபையால் வரும் -இத்யாதி
பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூப கிருபையாலே -ஆஸ்ரித பரதந்த்ரனாய்க் கொண்டு அவர்களையும் அங்கீ கரிக்குமதுவும் இல்லை என்கிறது அன்று
அத்தைப் பற்ற பட்டத்துக்கு உரிய ஆனையும் அரசும் போலே தன்னுடைய நிரங்குச ஸ்வா தந்தர்யத்தாலே ஆஸ்ரித பராதீனனாய் அங்கீ கரிக்குமதுவே
அத்யந்தம் பலவத்தரம் -என்கிறார் –

———–

சூரணை -149-

இவ் அர்த்தத்தை வேத புருஷன் அபேஷித்தான்-

இப்படிப்பட்ட பர கத ஸ்வீ காரத்தை -நாயமாத்மா -என்று தொடங்கி
நாய மாதமா பிரவசநேன லப்ய- நமேதையா ந பஹூன ச்ருதேன-
யமே வைஷ வ்ருணுதே தேந லப்ய -தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் -என்று
வேத புருஷனும் விஸ்தரித்துச் சொன்னான் என்கிறார் –

இந்த ஜீவன் -ஞான பிரசாதத்தால் – பரமாத்மாவை -எதனால் அடைய முடியாது -பிரவசனம் பண்ணி மனனம் பண்ணி லபிக்க முடியாது —
நமேதையா-பக்தி உபாசனத்தாலும் முடியாது -ப்ரீதி ரூபாபன்ன உபாசன பரம்
யாரை பரமாத்மா இச்சிகிறானோ அந்த சேதனனால் மட்டுமே லபிக்கப் படுகிறான் -தன்னுடைய ஸ்வரூபாதிகளை தர்சிப்பிக்கிறான் –

கட வல்லியிலும் -முண்டக உபநிஷத்திலும் சொல்லுகையாலே ஆதரித்தான் -என்கை –

————

சூரணை -150-

அபேஷா நிரபேஷமாக
திருவடிக்கும் -ஸ்ரீ குகப் பெருமாளுக்கும்
இது உண்டாயிற்று –

அபேஷா நிரபேஷமாக -இத்யாதி-தம் தாம் பக்கல் நினைவு இன்றிக்கே இருக்க
ஏஷ ஸர்வ பூதஸ்து பரிஷ் வங்கோ ஹனூமதா மயா காலமிமம் ப்ராப்ய தத் தஸ் தஸ்ய மஹாத்மந -என்றும்
வாத மா மகன் மற்கடம் -இத்யாதிப்படியே திருவடிக்கு
ஏழை ஏதலன் – இத்யாதிப்படியே குஹப்பெருமாளுக்கும்
இப் பர கத ஸ்வீ காரம் உண்டாயிற்று என்று இதுக்கு அதிகாரிகளைக் காட்டுகிறார் –

———————–

சூரணை -151-

இவன் முன்னிடும் அவர்களை-அவன் முன்னிடும் என்னும் இடம்
அபய பிரதா நத்திலும் காணலாம் –

இப்படி ஸ்வா தந்தர்யத்தாலே தான் நினைத்தபடி அங்கீ கரிக்குமாகில் அந்த ஸ்வா தந்தர்யம் ஷிபாமி -என்று உபேக்ஷிக்கைக்கும் ஹேது வாகாதோ -என்ன
அந்த ஸ்வாதந்தர்யத்தால் விஷயீ கரிக்கும் இடத்தில் புருஷகார ஸாக்ஷி பூர்வகமாக விஷயீ கரிக்கையாலே
அவனாலும் விடப்போகாது என்கிறது மேல் -இவன் முன்னிடுமவர்களை -இத்யாதி
இச்சேதனன் புருஷகாரமாக முன்னிடுமவர்களை உபாய பூதனான தானும்
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்கையாலே ஒவ் பாதிகமுமாய்
அவள் -அகலகில்லேன் -என்று இருக்கையாலே நித்யமாயுமாய் இருக்கையாலே
அது இருவருக்கும் உண்டு இறே என்கிறார்
ஸ்ரீ மத் பதத்திலே எல்லாரும் இவளை முன்னிட அவனும் முன்னிட்டு அங்கீ கரிக்கும் என்ற இடம்
ஸ்ரீ குஹப்பெருமாள் விஷயமாக -மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி -என்று முன்னிட்டுப் பற்றுகையாலே அவன் பக்கலிலும்
நிவேதியத மாம் க்ஷிப்ரம் -என்று விபீஷணன் முன்னிட்டு
மஹா ராஜரை -ஆநயைநம் ஹரி ஸ்ரேஷ்ட -என்று பெருமாள் முன்னிடுகையாலே அபய பிரதானத்திலும் காணலாம் –

————–

சூரணை –152

இருவர் முன் இடுகிறது- தம் தாம் குற்றங்களை சமிப்பிக்கைகாக –

இருவரும் இத்யாதி -தம் தாம் குற்றங்களை சமிப்பிக்கை யாவது –
பஹு தோஷ துஷ்டனாகையாலே சேதனன் அபராத ஷாமணார்த்தமாக முன்னிடும்
ஈஸ்வரன் தன் ஸ்வா தந்தர்யத்தாலே சேதனன் தன்னைக் கிட்ட ஒண்ணாதபடி இருந்த குற்றம் அவர்கள் நெஞ்சில் படாதபடி பண்ணுகைக்காக முன்னிடும் –

———

சூரணை-153 —

ஸ்வரூப சித்தியும் அத்தாலே –

சூரணை-154–

ஒவ்பாதிகமாய்-நித்யமுமான-பாரதந்த்ர்யம் இருவருக்கும் உண்டு இறே—

ஸ்வரூப சித்தியும் அத்தாலே -ஸ்வரூபம் ஸித்திக்கை யாவது என் என்னில்
ஒவ் பாதிகமுமாய் -இத்யாதி சேதனருக்குத் ததீயர் என்றே அவர்களுக்கு சேஷமாகையாலே ஒவ் பாதிகமுமாய் –

அது தான் யாவதாத்ம பாவி என்று நமஸ்ஸூ சொல்லுகையாலே அது தான் நித்யமானவோ பாதி
ஈஸ்வரனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யமும் பற்றி ஸ்வரூப லாபம் என்கிறது

——–

சூரணை-155–

அநித்தியமான இருவர் பாரதந்த்ர்யமும்- குலைவது அத்தாலே —

அநித்யமான இத்யாதி -மோக்ஷயிஷ்யாமி என்னும் அளவில் அநித்யமானவையான அவஸ்யம் அநு போக்தவ்ய மான
கர்ம பரதந்த்ரனாய்க் கொண்டு புஜிக்கிற கர்ம பாரதந்தர்யமும்
கர்ம அனுரூபமாக இவனைப் புஜிக்கக் கடவ ஸங்கல்ப பாரதந்ரயமுமாகிற
இவ்விரண்டு பாரதந்தர்யமும் குலைவதும் இப்புருஷகாரத்தாலே –

————-

சூரணை-156–

ஸ ஸாஷிகம் ஆகையாலே-
இப் பந்தத்தை இருவராலும் இல்லை செய்ய போகாது —

ஸ ஸாஷிகம் இத்யாதி -இப்படி ஸாக்ஷி ஸஹிதமான ஒவ் பாதிகமுமாய் நித்யமுமான இப்பந்தத்தை ஸர்வ ஸக்தியான அவனோடே
த்வத் ஸர்வ ஸக்தே ரதிகாஸ்ம தாதே கீடஸ்ய ஸக்தி -என்று அஸ் சக்தியை அதிக்ரமிக்கும் இவனோடே வாசியற
இருவராலும் இல்லை செய்ய வரிதாய் இருக்கும் –

———–

சூரணை -157-

என்னை நெகிழ்க்கிலும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய –

இருவராலும் இல்லை செய்யப் போகாமைக்கு -மேல் இரண்டு பிரமாணங்களும்

————

சூரணை -158-
கர்மணி வ்யுத்பத்தியில்
ஸ்வரூப குணங்களால் வருகிற
கர்த்ரு சங்கோச ராஹித்யத்தை
நினைப்பது –

கர்மணி வ்யுத்பத்தியில்-இத்யாதி -கர்மணி த்விதீயா என்கையாலே
கர்மணி வ்யுத்பத்தியில் ஸ்வரூபத்தாலும் ப்ரணயித்வ குணத்தாலும் வருகிற ஸேவா கர்த்தாக்களுடைய
சங்கோச ராஹித்யத்தை நினைப்பது என்று
இவ் வர்த்தத்தில் பிராமண ப்ராபல்யத்தை ஸ்மரிப்பிக்கிறார்
சேஷித்வே பரம புமான் பரிகாராஹ்யேதே தவஸ் ஸ்பாரணே -என்னக் கடவது இறே –

———-

சூரணை -159-

அதிகாரி த்ர்யத்துக்கும் புருஷகாரம் அவர்ஜநீயம் –

சூரணை -160-

தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –

அதிகாரி த்ரயம் -இத்யாதி -அஞ்ஞானத்தாலே ப்ரபன்னர் என்று தொடங்கிச் சொன்ன அதிகாரிகள் மூவருக்கும் கீழே ஸாதிதமான புருஷகாரம்
அவனுடைய ஸ்வரூப நிரூபக முமாய் இருக்கையாலே ஸர்வதா அவர்ஜ நீயம் என்று முதலிலே
புருஷகார வைபவமும் உபாய வைபவமும் -என்று தொடங்கின புருஷகார உபாயங்களை தத் தத் சோதன பூர்வக மாக நிகமித்து

ஆக இப்படி த்வயத்தில் பூர்வ கண்ட அர்த்தத்தை அருளிச் செய்து
மேல் உத்தர கண்ட அர்த்தத்தை பாஷ்யகாரர் கத்யத்தில் அருளிச் செய்த க்ரமத்திலே –

நமஸ் ஸப்தார்த்தம் முன்னாக
தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –என்று அருளிச் செய்கிறார் -அதாவது
சேஷத்வம் பாரதந்தர்யம் முன்னாக அஹங்காரம் மமகாரம் ஈறாக நடுவு அனுபவ விரோதிகளான அவற்றை எல்லாம் கழிக்கை -அதுக்கடி என் என்ன
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் பிரதம தசையாய்
ப்ராப்ய அனுரூபமான ஸ்வரூபம் சரம தசையாய் இருக்கையாலே
யத் த்வத் பிரியம் ததிஹ-என்று இது வன்றோ நிறைவு அழிந்தார் நிற்குமாறே -என்றும் சொல்லக் கடவது இறே

தனக்குத் தான் என்று தொடங்கி யுக்த ப்ரகாரத்திலே பர கத ஸ்வீ கார விஷய பூதனான தனக்கு அப்பர சேஷ ஏக ஸ்வரூபனான தான்
நம்முடைய சேஷத்வ அனுரூபமாக சேஷி யானவன் விநியோகம் கொண்டு அருள வேணும் என்று இருக்குமது
அவன் கொண்டு அருளுகிற விநியோகத்துக்கு விருத்தமாகையாலே அநாதியான பகவத் பிராப்தி பிரதிபந்தக கர்மங்களோ பாதி
அவனுடைய விநியோகத்துக்கு விலக்காய் இருக்கும் என்கிறது –

——————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

 

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்- முதல் பிரகரணம் -உபாய ஸ்வீ கார வைபவ -பிரகரணம்-சூர்ணிகை -23-114–

July 20, 2022

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

———–

ஆக
இப்படி புருஷகார வைபவம் -என்று தொடங்கின அர்த்தத்தை முதல் பிரகரணத்தில் அருளிச் செய்து தலைக்கட்டி
பிரபத்தி யுபதேசம் என்ற ப்ரசங்கத்தாலே இந்த பிரபத்தி வை லக்ஷண்யத்தை ச ப்ரகாரமாக அருளிச் செய்கிறார் மேல் –

உபாய ஸ்வீ கார வைபவ -பிரகரணம்-சூர்ணிகை -23-114–

————-

சூரணை -23-

பிரபத்திக்கு
தேச நியமமும்
கால நியமமும்
பிரகார நியமமும்
அதிகாரி நியமமும்
பல நியமும் -இல்லை-

பிரபத்திக்கு இத்யாதி
ந தேச காலவ் ந அவஸ்த்தாம் யோகோஹ்யய மபேஷதே -என்றும்
ந திதி ந ச நக்ஷத்ரம் ந க்ரஹோ ந ச சந்த்ரமா ஸ்ரத்தைவ காரணம் நிரூணாம் அஷ்டாக்ஷர பரிக்ரஹே -என்றும்
சொல்லுகிறபடியே இதுக்கு தேச கால நியமம் இல்லை –

—————

சூரணை -24-

விஷய நியமமே உள்ளது –

நிரபேஷ உபாயமான இதுக்கு -பிரபத்தவ்ய விஷய நியமமே உள்ளது என்கிறார் மேல் -கர்மத்துக்கு -இத்யாதியாலே

—————–

சூரணை-25-

கர்மத்துக்கு புண்ய ஷேத்ரம்
வசந்தாதி காலம்
சாஸ்திர உக்தங்களான தத் தத் பிரகாரங்கள்
த்ரை வர்ணிகர்-என்று இவை எல்லாம்
வ்யவஸ்திதங்களாய்  இருக்கும்  –

இவ் வுபாய ஸுகர்ய சாதன அர்த்தமாக ஏதத் ப்ரதிகோடி சாதனங்களுக்கு -தேச காலாதி சாபேஷதை -உண்டு என்கிறார் –
இத்தால்
யஜ்ஜேந தாநேந தபஸா அ நாஸகேந ப்ராஹ்மணா விவிதி ஷந்தி-என்கையாலே
பக்திக்கு பிரதம உபகாரமான கர்மத்துக்கு தேசோயம் ஸர்வ காம துக்-என்னும்படியான புண்ய ஷேத்ரமும்
வசந்தே வசந்தே ஜ்யோதிஷா யஜேத-என்கையாலே வஸந்தாதி காலம்
ஆக்நேயம் அஷ்டாகபாலம் ஐந்தரம் த்வாதஸ கபாலம் -இத்யாதி பிரகார விதாயக ஸாஸ்த்ர உக்தங்களான
அவ்வவ் உபாயங்களும்
இவை தான் த்ரை வர்ணிகருக்கே கர்த்தவ்யங்கள் ஆகையாலும் -அது தன்னிலும்
கிருஷ்ண கேஸோக்நீநாததீத -என்கையாலே இவை அத்தனையும் ஸர்வதா வேணும் என்கிறார் –

————-

சூரணை -26-

ச ஏஷ தேச கால -என்கையாலே–இதுக்கு தேச கால நியமம் இல்லை –

இவ்வோபாதி ப்ரபத்தியும் உபாயமாய் இருக்கச் செய்தே அவை வேண்டா என்கைக்கு பிரமாணம் அருளிச் செய்கிறார்
ச ஏஷ தேச கால -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் விஷயமாகப் பெருமாளை நோக்கித் திருவடி விண்ணப்பம் செய்த வார்த்தை இத்யாதியாலே

————–

சூரணை-27-

இவ் அர்த்தம் மந்திர ரத்னத்தில்
பிரதம பதத்தில்-ஸூ ஸ்பஷ்டம்-

தேச காலாதி நியமம் இன்றிக்கே
திருமாலை விரைந்து அடி சேர்மினே -என்னும்படியான இவ்வர்த்தம்
ஸகல பிராமண ஸாரமான த்வ்யத்தில் ஸ்ரீமத் பதத்தில்
மதுப்பில் விசதம் என்கிறார்

———–

சூரணை-28-

பிரகார நியதி இல்லை என்னும் இடமெங்கும் காணலாம் –

இனி பிரகார நியதி இத்யாதியாலே
யுக்தமான தேச காலாதிகளில் விசேஷித்து பிரகார அதிகாரி பல நியமங்கள் இல்லை என்னும் இடத்தை விவரித்து
அருளிச் செய்கிறார் மேல் –

———-

சூரணை-29-

திரௌபதி ஸ்நாதையாய் அன்றே பிரபத்தி பண்ணிற்று –
அர்ஜுனன் நீசர் நடுவே இறே இவ் அர்த்தம் கேட்டது –

இந்த பிரகார நியதி இல்லாமை ப்ரபத்தாக்கள் பக்கல் எங்கும் காணலாம் –
அது எங்கே கண்டது என்ன -கீழே பிரஸ்த்துதரா னவர்களில் – திரௌபதி அப்ரயதையான தசையிலே பிரபத்தி பண்ணுகையாலும்
நெடும் தகையை நினையாதார் நீசர் தாமே -என்கிற ஹேயர் நடுவே அர்ஜுனன் இப்பிரபத்தி அர்த்தத்தைக் கேட்கையாலும்
பிரகார நியதி இல்லாமை விசதம் இறே –

————-

சூரணை -30-

ஆகையால் சுத்தி அசுத்திகள் இரண்டும் தேட வேண்டா –
இருந்தபடியே அதிகாரியாம் இத்தனை –

ஸூத்தி அஸூத்யாதிகள் இத்யாதி
கீழ் அஸூத்தரான தசையிலே ப்ரபன்னரானமை சொல்லுகையாலே
அவ் வஸூத்தி தான் இதுக்கு அங்கமாகிறதோ என்ன
அஸூத்தி அங்கம் அல்லாதவோபாதி ஸூத்தியும் இதுக்கு அங்கம் அல்ல
ருசி பிறந்த தசையில் நின்ற நிலையே அதிகாரம் -என்கிறார் –

————–

சூரணை -31-

இவ் இடத்திலே வேல் வெட்டி பிள்ளைக்கு பிள்ளை
அருளி செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-

வேல் வெட்டிப் பிள்ளைக்கு -இத்யாதியாலே இவ்வர்த்தத்தில் ஆப்த வசனத்தை அருளிச் செய்கிறார் -அதாவது
பெருமாள் சமுத்திர ராஜனான வருணனை சரணம் புகுந்த இடத்தில் ப்ராங் முகத்வாதி நியமங்களோடே சரணம் புகுருகையாலே
யத் தாசரதி ஸ்ரேஷ்ட -இத்யாதி க்ரமத்தாலே அல்லாதாருக்கும் அவை அநுஷ்டேயங்கள் ஆகாதோ -என்று வேல் வெட்டிப்பிள்ளை நம்பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய
அது அங்கனே அன்று காணும் -ஸமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி -என்று பெருமாளுக்கு இவ்வர்த்தத்தை உபதேசித்த
ஸ்ரீ விபீஷணப் பெருமாள் சரணம் புகுகிற இடத்தில் -கடலிலே கால் தோய்த்தல் -அடங்கின வெற்றிலை உமிழ்தல் -செய்யாமையாலே
அவை சர்வ சாதாரணம் அன்று காணும்
அவர் ஆசார ப்ரதாநமான குலோத் பவராகையாலே அவை தானே வந்தது அத்தனை –
தீஷிதனுக்கு கர்ம யோக்யதா ஹேதுவான சிகா யஜ்ஜோ பவீதங்கள் கிடந்தவோ பாதி நை சர்கிகமானவை கிடக்குவுமாய்
அவனுக்கு நித்தியமான சந்தியாவந்தனம் இல்லாதாவோ பாதி இவனுக்கும் ஸ்வீ கார தசையிலே தத் அங்கமாக ஒரு நியதி வேண்டாமையாலே
இவன் நின்ற நிலையே காணும் இதுக்கு அதிகாரம் -என்று அருளிச் செய்தார் –

—————-

சூரணை -32-

அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் –
தர்ம புத்ராதிகளும்
திரௌபதியும்
காகமும்
காளியனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பெருமாளும்
இளைய பெருமாளும்
தொடக்கமானவர்கள்
சரணம் புகுருகையாலே
அதிகாரி நியமம் இல்லை –

அதிகார நியமம் –இத்யாதி
திரௌபத்யா ஸஹிதாஸ் ஸர்வே நமஸ் ஸத்ருக் ஜனார்த்தனம் -என்று
ஷத்ரியரான தர்ம புத்ராதிகள் சரணம் புகுருகையாலும்
ரக்ஷமாம் சரணாகதாம்-என்று ஸ்திரீயான திரௌபதி சரணம் புகுருகையாலும்
ஸ பித்ரா சேத்யாதி தமேவ சரணம் கத -என்று தேவ யோனியான காகம் சரணம் புகுருகையாலும்
கிருபா மாத்ரா மநோ வ்ருத்தி ப்ரஸீத மே -என்று திர்யக் யோனியான காளியன் சரணம் புகுருகையாலும்
ஸ து நாகவர ஸ்ரீ மான் -இத்யாதி மனஸா சிந்தயத் ஹரிம் -என்று கஜேந்திரன் சரணம் புகுருகையாலும்
த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ஸ் ச ராகவம் சரணம் கத -என்று ராக்ஷஸ யோனியான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணம் புகுருகையாலும்
அஞ்சலிம் ப்ராங் முக க்ருத்வா -என்று ஸர்வாதிகாரன பெருமாள் சரணம் புகுருகையாலும்
ஸ பிராதுஸ் சரணவ் காடம் நிபீட்ய -என்று பெருமாளை பிரியில் தரியாதபடி அநந்யார்ஹரான இளைய பெருமாள் சரணம் புகுருகையாலும்
அதிகாரி நியமம் இல்லை -என்கிறார் –

—————-

சூரணை-33-

பல நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என்-என்னில்
தர்ம புத்ராதிகளுக்கு பலம் ராஜ்ஜியம் –
திரௌபதிக்கு பலம் வஸ்த்ரம் –
காகத்துக்கும் காளியனுக்கும் பலம் பிராணன்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு பலம் கைங்கர்யம் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு பலம் ராம பிராப்தி –
பெருமாளுக்கு பலம் சமுத்திர தரணம் –
இளைய பெருமாளுக்கு பலம் ராம அநு வ்ருத்தி–

பல நியமம் -இத்யாதியாலே
கீழ்ச் சொன்ன அதிகாரிகளுக்கு பலம் ஒருபடிப்பட்டு இராமையாலே
ஸகல பல ப்ரதமான இவ்வுபாயத்துக்குப் பல நியமம் இல்லை -என்கிறார்-

———

சூரணை -34-

விஷய நியமம் ஆவது-குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை-பூர்த்தி உள்ளதும் அர்ச்சாவதாரத்திலே –

சூரணை -35-

ஆழ்வார்கள் பல இடங்களிலும்-பிரபத்தி பண்ணிற்றும்-அர்ச்சாவதாரத்திலே –

மேல் -விஷய நியமம் -இத்யாதியாலே
கீழே -விஷய நியமமே உள்ளது -என்று ப்ரதிஜ்ஜை பண்ணினதை ப்ரதிபாதிக்கிறார் –
ஸமஸ்த கல்யாண குண பரி பூர்த்தி உள்ள இடமே சரண்ய விஷயம் என்றும் –
அது தான் அல்லாத இடங்களை பற்றி அர்ச்சாவதாரத்திலே அதி சாய்த்து இருக்கும் என்றும் –
இக்குண பூர்த்தியாலே அனுஷ்டாதாக்களான ஆழ்வார்களும்
பிறந்த வாற்றிலும் மற்றும் க்வா சித்கமாக அவதாராதிகளிலே சரணம் புகுந்தார்களாகிலும்
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -என்றும்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் -என்றும்
இத்யாதிகளிலே உகந்து அருளின நிலங்களிலே விசேஷித்து சரணம் புகுகையாலும்
அர்ச்சாவதாரமே ஸகலர்க்கும் சரண்ய விஷயம் என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

——————-

சூரணை -36-

பூர்ணம் -என்கையாலே எல்லா குணங்களும் புஷ்கலங்கள் –

பூர்ணம் -இத்யாதி -இத்தால் –
ப்ரமாதாக்களுடைய அனுஷ்டானமே அன்றிக்கே -கடவல்லியில் -த்வயத்தில் -பூர்வ உத்தர கண்ட மத்யத்திலே
ஓதப்படுகிற பிரமாண ப்ராபல்யத்தையும் ப்ரதிபாதிக்கிறார் –
இதம் பூர்ணம் அத பூர்ணம் இதம் பூர்ணாத் பூர்ணம் உத்ருச்யதே பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் ஏவ வஸிஷ்யதே ஸர்வம் பூர்ணம் ஸஹோம் -என்னக் கடவது இறே –

———-

சூரணை-37-

பிரபத்திக்கு அபேஷிதங்களான ஸுலப்யாதிகள்-இருட்டறையிலே விளக்குப் போலே-பிரகாசிப்பது இங்கே –

ப்ரபத்திக்கு இத்யாதி -இத்தால் -அர்ச்சையிலே இக் குணங்கள் பிரகாசிக்கும் படியை அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
ப்ரவ்ருத்தி ரூப உபாயங்களில் அஞ்ஞனாய் -அஸக்தனாய் -அகிஞ்சனனாய் -அபராத பூர்ணனானவன் –
ஆஸ்ரயிக்கும் இடத்தில்
கண்டு பற்றுகைக்கும்
இவன் கைம்முதல் பாராமைக்கும்
பற்றும் இடத்தில் இவன் தோஷத்தைக் குணமாகக் கொள்ளுகை
முதலானவற்றுக்கும் அபேக்ஷிதங்களான
ஸுலப்ய
வாத்ஸல்ய
அவாப்த ஸமஸ்த காமத்வாதி -குணங்கள்
பகவத் ஸ்வரூப திரோதாநகரியான இவ்விபூதியில்
இருந்ததே குடியாக எல்லாருக்கும் ஆஸ்ரயிக்கும் படி நிற்கையாலே
பிறப்பாய் ஒளி வரும் முழு நலம் -என்கிறபடியே
அவை இவ்விடத்திலே விசேஷித்து பிரகாசிக்கும் என்கிறார் –

——————-

சூரணை -38-

பூர்த்தியையும் ஸ்வா தந்தர்யத்தையும் குலைத்து கொண்டு
தன்னை அநாதரிக்கிறவர்களை-தான் ஆதரித்து நிற்கிற இடம் –

இப்படி இவ்விடத்தில் எல்லாக் குணங்களும் பரிபூர்ணமே யாகில்
அர்ச்சயஸ் ஸர்வ ஸஹிஷ்ணு -இத்யாதிப்படியே –
இச் சேதனன் கை பார்த்து இருக்கிற படி எங்கனே என்ன
ஆஸ்ரித அர்த்தமாக அக்குணங்களை அமைத்துக் கொண்டு இருக்கும் அத்தனை என்று
ஸுலப்ய காஷ்டையை ஸாதிக்கிறார் –

—————

சூரணை-39-

பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் –
ஆவரண ஜலம் போலே பரத்வம் –
பால் கடல் போலே வியூஹம் –
பெருக்காறு போலே விபவங்கள் –
அதில் தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் —

இஸ் ஸம்ஸாரி சேதனனுக்கு எதிர்த்தட்டான நித்ய ஸூரிகள் பக்கல் ஆஸ்ரயண உப யோகியான இக்குணங்களுக்கு
விஷயம் இல்லாமையாலே பர அவஸ்தையில் பகல் விளக்குப் பட்டு இருக்கும்
அவற்றுக்கு விஷயமுள்ள இடத்திலே ப்ரகாசித்த வத்தனையான பின்பு அவை அன்றோ என்ன
பூதக ஜலம் போலே -என்று தொடங்கி அருளிச் செய்கிறார்
பூதக ஜலம்-இத்யாதியாலே
எங்கும் ஜல ஸாம்யம் யுண்டே யாகிலும் -தடாக ஜலம் ஸர்வ கால -ஸர்வ அவஸ்தைகளிலும் -ஸர்வருக்கும் உபயோக யோக்யமாமோ பாதி
பரத்வாதி ஸர்வ அவஸ்தைகளிலும் இக்குணங்கள் ஏகீ பாவித்து இருந்ததே யாகிலும்
பர வ்யூஹங்கள் தேச விப்ரக்ருஷ்டங்களாகையாலும்
அந்தர்யாமித்வம் அதீந்திரியாகார ஸ்வ பாவ விப்ரக்ருஷ்டங்களாகையாலும்
அவதாரங்கள் கால விப்ரக்ருஷ்டங்களாகையாலும்
இவை நாலிலும் வைத்துக் கொண்டு அர்ச்சாவதார இக்குறைகள் ஒன்றும் இன்றிக்கே
பின்னானார் வணங்கும் சோதி -என்கிறபடியே
ஸர்வதா சமாஸ்ரயணீயம் என்னும் இடத்தை
த்ருஷ்டாந்த முகத்தாலே அருளிச் செய்கிறார்
அதிலே தேங்கின மடுக்கள் -என்றது
அர்ச்சா முகமாக ப்ராசுர்யேண உகந்து அருளுவது அவதார விக்ரஹங்கள் ஆகையாலே –

———

ஆனால் இவ்வர்ச்சா வவதாரம் ஆஸ்ரயித்து இருக்கிற சேதனனுக்குச் செய்யும் உபகாரம் தான் என் என்ன
செய்யும் உபகாரங்களை அருளிச் செய்கிறார் -இது தான் ஸாஸ்த்ரங்களால் -இத்யாதியால்

சூரணை -40-

இது தான் சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே
விஷயாந்தரங்களில் மண்டி
விமுகராய் போரும் சேதனருக்கு
வைமுக்யத்தை  மாற்றி
ருசியை விளைக்க கடவதாய்-
ருசி பிறந்தால்  உபாயமாய் –
உபாய பரிக்ரகம் பண்ணினால் –
போக்யமுமாய்
இருக்கும் —

இது தான் –இப்படி ஸூலபமான அர்ச்சாவதாரம் தான்
அதீந்த்ர்ய அர்த்த ப்ரகாசகங்களான ஸாஸ்த்ரங்களாலும்
அஞ்ஞாத ஞாபந முகத்தாலே திருத்த அரிதாம் படி பகவத் வ்யதிரிக்தங்களான ஸப்தாதி விஷய அனுபவ அபி நிவேசம் பண்ணி
நீங்கும் விரதத்தை ஏறிட்டுக் கொண்டு வர்த்திக்கிற சேதனர்க்கு -தன் பால் ஆதரம் பெறுக வைத்த அழகன் -என்கிறபடியே
அவர்கள் வாசலிலே சென்றாகிலும் தன் வடிவழகை அனுபவிப்பித்து வை முக்கியத்தை பற்றி -பிரதம பாவியான ருசியை உண்டாக்கி
விஷய வை லக்ஷண்யத்தாலே யாதாவான ருசி பிறந்தால் தன்னைப் பெறுகைக்கு வேறே ஓன்று தேட வேண்டாதே
எடுத்தாப் போலே கோயிலாம் படியான தானே உபாயமாய் –
தன்னைப் பற்றின அநந்தரத்திலே சேஷ பூதனான இவனுக்கு போக்யமான அனுபவ ஜெனித ப்ரீதி காரித
கைங்கர்யத்தையும் கை மேலே பண்ணிக் கொடுக்கும் என்கிறார் –

ஆக
ப்ரபத்திக்கு தேச நியமம்-என்று தொடங்கி
பிரபத்தி வை லக்ஷண்யத்தையும்
பிரபத்தவ்ய விஷய வை லக்ஷண்யத்தையும்
ப்ரதிபாதித்தார் –

———-

சூரணை -41-

இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் –

மேல் இந்த அர்ச்சாவதாரம் தன்னிலே ப்ரபத்தாக்களான அதிகாரிகள் த்ரி விதராய் இருப்பர்கள் என்கிறார் –
இது தன்னில் -இத்யாதியால்

———

சூரணை -42-

அஞ்ஞரும்–ஞானாதிகரும்-பக்தி பரவசரும் —

அவர்களுடைய த்ரை வித்யம் இருக்கும் படி எங்கனே என்னில் -அஞ்ஞரும் இத்யாதியால்
ஸம்ஸார ஆர்ணவ மக்நா நாம் விஷய அக்ராந்த சேதஸாம் -என்கிறபடியே
ஸம்ஸாரம் ஆகிற பெரும் கடலிலே விழுந்து நஷ்ட ஸர்வ சேஷ்டராய் -விவித விஷய க்ராஹகங்களால் வந்த
வ்யஸன பரம்பர அபி பூதராகையாலே இத்துக்க நிவ்ருத்தி அர்த்தமாக உபாயாந்தரங்களிலே இழிகைக்கு
ஒருபடியாலும் ஞான சக்திகள் இல்லாமையாலும்
விஷ்ணு போதம் அல்லது வேறு கத்தி இல்லை என்று ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியானவன் பக்கலிலே பர ந்யாஸம் பண்ணி இருப்பாரும்
ஸ்வ ப்ரவ்ருத்தி ரூபமான உபாயாந்தரங்களில் இழிகைக்கு யோக்யதை இல்லாத படியான அத்யந்த பாரதந்தர்ய ஸ்வரூப யாதாத்ம்ய ஞானாதிக்யத்தால்
ப்ராப்த சேஷியான அவன் பக்கலிலே ஸர்வ பர ந்யாஸம் பண்ணி இருப்பாரும்
இவ்விஷயத்தில் வடிவு அழகில் உண்டான வை லக்ஷண்ய அனுஸந்தா நத்தாலே ஈடுபட்டு
இதர உபாய அனுஷ்டானத்தில் இழியவும் கூட ஸக்தர் அல்லாத படி இட்ட கால் இட்ட கையராம் படி
பக்தி பரவசராய் இருக்கையாலே ஸகல பர ஸமர்ப்பணம் பண்ணுவாருமாய்
இப்படி இவர்கள் ராஸி த்ரய அந்தர் பூந்தராய் இருப்பார் என்கிறார் –

———-

சூரணை -43-

இவர்களுடைய த்ரை வித்யம் எங்கே காணலாம் என்னும் அபேக்ஷையிலே அருளிச் செய்கிறார்

அஞ்ஞானத்தாலே    பிரபன்னர் அஸ்மதாதிகள்-

ஞானாதிக்யத்தாலே பிரபன்னர் பூர்வாசார்யர்கள் –

பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் ஆழ்வார்கள் –

இனி அஸ்மதாதிகள் -என்றது
ப்ரபந்ந அதிகாரிகளிலே வேறே சிலரை ப்ரக்ருதி பாரவஸ்யத்தாலே அஞ்ஞராக அருளிச் செய்ய மாட்டாமையாலே
ஆதி -ஸப்தத்தாலே -இவ்வதிகாரி பாஹுல்யத்தை அருளிச் செய்கிறார் –
ஞான ஆதிக்யத்தாலே ப்ரபன்னரான ஆச்சார்யர்கள் என்றது
நாத யாமுனர் தொடக்கமானவர்களை
ஆழ்வார்கள் பக்தி பரவசர் என்னும் இடம் அவர்கள் பாசுரங்களாலே அறியலாம் –

———–

சூரணை -44-

இப்படி சொல்லுகிறதும் ஊற்றத்தை பற்ற —

இவ்வாகாரங்கள் ராஸி த்ரயத்துக்கும் உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஒரோ ஆகாரங்களே உள்ளது என்னும் படி அவற்றிலே ஊன்றிப் போருகையாலே

———–

சூரணை -45-

இம் மூன்றும் மூன்று தத்வத்தையும் பற்றி வரும் –

அசித் சம்பந்தம் அடியான அஞ்ஞானத்தாலும்
ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்ய வேதனத்தால் யுண்டான ஞான ஆதிக்யத்தாலும்
பகவத் விஷயத்தில் பக்தி பாரவஸ்யத்தாலும்
சரணம் புகுகையாலே மூன்று ராஸியும் கீழ்ச் சொன்ன தத்வ த்ரய ஞான நிபந்தமாய் வரும் என்கிறார் –

———

சூரணை -46-

என்னான் செய்கேன் -என்கிற இடத்தில்  இம் மூன்றும் உண்டு –

இத்தால் பரமாச்சார்யாருடைய பாசுரத்தாலே இம்மூன்று அதிகாரிகளுடைய நினைவு பிரகாசிக்கும் என்கிறார் –

———

சூரணை -47-

அங்கு ஒன்றைப் பற்றி இருக்கும் –

சூரணை -48-

முக்கியம் அதுவே –

அவ்வாழ்வாருடைய திரு உள்ளத்தால் பர பக்தி பாரவஸ் யத்தால் வந்த ப்ரபத்தியேயாய் இருக்கும் –
பகவத் வை லக்ஷண்யம் அடியாக வந்தது ஆகையால் முக்யமும் அதுவே என்கிறார் –

———

சூரணை -49-

அவித்யாத -என்கிற ஸ்லோகத்தில் இம் மூன்றும் சொல்லிற்று –

அவித்யாதோ தேவே பரிப்ருட தயாவா விதிதயா ஸ்வ பக்தேர்-பூம்நாவா ஜகதி கதி மன்யாம்

அவிதுஷாம்-கதிர் கம்யச்சாஸௌ ஹரிரித ஜினந்தாஹ்வைய மனோரஹச்யம் வ்யாஜஹ்ரே  சகலு பகவான் ஸௌ நகமுனி –

த்ரை வித்ய பேதத்துக்குப் பிரமாணம்
இதில் தேவ என்கிறது பக்தி விஷயமாக

————

சூரணை -50-

இதம் சரணம் அஜ்ஞானாம் –

இதம் சரணம் அஞ்ஞானம் இதம் ஏவ விஜாநதாம்-இதம் திதீர்ஷதாம் பாரம் இதம் ஆநந்த்ய மிச்சதாம்–ஸ்ரீ லஷ்மி தந்த்ர ஸ்லோகம் -100-

பாரம் திதீர்ஷதாம்-என்கிறது மூவருக்கும் ஒக்கும்

———

சூரணை -51-

பக்தி தன்னிலே அவஸ்தாபேதம் பிறந்தவாறே-இது தான் குலையக் கடவதாய் இருக்கும் –

இதில் பக்தி பாரவஸ் யத்தாலே ப்ரபன்னரானவர்களுக்கு -அதனுடைய பாக விசேஷத்தாலே வந்த அவஸ்த்தா பேதங்களாலே
ஸ்வரூப ஹானியான ப்ரவ்ருத்தியிலே மூட்ட -இந்த பிரபத்தி விஸ்வாசம் குலையக் கடவதாய் இருக்கும் என்று
அவ்வதிகாரிகளான ஆழ்வார்களுடைய அனுஷ்டானங்கள் விஷய வைலக்ஷண்ய அதீனமாய் வருகையாலே
ஸ்வரூப ஹானி அன்று என்று பரிஹரிக்கிறார் –

———-

சூரணை -52-

தன்னைப் பேணவும் பண்ணும் –தரிக்கவும் பண்ணும் –

சூரணை -53-

இந்த ஸ்வபாவ விசேஷங்கள்-கல்யாண குணங்களிலும்-திரு சரங்களிலும்-

திரு நாமங்களிலும்-திரு குழல் ஓசையிலும்-காணலாம்-

அவ் விஷய வைலக்ஷண்யம் ஆழ்வார்களை ஒருபடிப் பட்டு இருக்க ஒட்டாமை –
அவ்விஷய அனுபந்திகளானவற்றின் பக்கலிலும் காணலாம் என்கிறது
பக்தி பாரவஸ் யத்தாலே -பந்தோடு கழல் மருவாள் -இத்யாதியில் படியே தன்னைப் பேணாமையும்
இட்ட கால் இட்ட கைகள் -இத்யாதிப்படியே தறியாமையும் யுடையராய் இருப்பாரை
அவன் வரவைக் குறித்து ஸ்வயமேவ -காரை பூணும் -இத்யாதில் படியே தந்தாமை அலங்கரித்துப் போரவும்
அத்தசையிலே அவன் வரக்கொள்ள அவ்வரவு தானே அநிஷ்டமாய்
போகு நம்பீ –
கழகமேறேல் நம்பீ -இத்யாதில் படியே தள்ளித் தரித்து இருக்கவும் பண்ணும் அவஸ்த்தா விசேஷங்களைப் பிறப்பிக்கிற
ஸ்வ பாவ விசேஷங்கள் -வல்வினையேனை ஏற்கின்ற குணங்களை உடையாய் -என்றும்
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து இருப்பேனே -என்றும் இத்யாதிகளாலே
கல்யாண குணங்களிலும்
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே -என்றும்
சரங்களே கொடிதாய் அடுகின்ற -என்றும் இத்யாதிகளாலே
திருச்சரங்களிலும்
திருமாலைப் பாடக் கேட்டு மடக் கிளியைக் கை கூப்பி வணங்கினாளே -என்றும்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்-என்று இத்யாதிகளாலே
திரு நாமங்களிலும்
அவனுடைய தீம் குழல் ஈரும் -என்றும்
ஆ கள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே -என்றும்
எங்களுக்கே ஒரு நாள் வந்தூத உன் குழல் இன்னிசை போதராயே -என்றும் இத்யாதியாலே
திருக் குழல் ஓசையிலும் தோற்றும் என்கிறார் –

————

சூரணை -54-

இது தன்னை பார்த்தால்- – (பிரபத்தி தன்னைப் பார்த்தால்-பிரபத்தி ஸ்வரூபத்தை –உபாயமாக கொள்ளும் அன்றும் )
பிதாவுக்கு புத்ரன் எழுத்து வாங்குமா போலே-இருப்பது ஓன்று –

இப்படி பக்தி பாரவஸ்ய ப்ரபத்தியில் வரும் ஸம்சய நிவ்ருத்தியைப் பண்ணி -இது தன்னைப் பார்த்தால் -என்று தொடங்கி
உக்தையான ப்ரபத்தியினுடைய ஸ்வரூப சோதனம் பண்ணுகிறார் -இது தன்னைப் பார்த்தால் -என்று தொடங்கி –
நிரூபாதிக சேஷ வஸ்துவினுடைய ஸ்வரூப அனுரூபமான இந்த பிரபத்தி தன்னை உபாயம் என்னப் பார்த்தால் என்று தொடங்கி
பிதாவுக்கு -இத்யாதியாலே -நிஷேகாதி முகத்தாலே தன்னை உண்டாக்கின ஜனகன் பக்கலிலே ஒரு ப்ரயோஜனத்தை அபேக்ஷித்து
புத்ரன் தன்னை ஆவண ஓலை எழுதி அறவிலை செய்து கொடுக்குமா போலே உபய ஸம்பந்த விருத்தம் என்கிறார் –

————–

சூரணை -55-

இது தனக்கு ஸ்வரூபம்-தன்னைப் பொறாது-ஒழிகை –

ஆனால் இது தனக்கு வேஷம் எது என்னச் சொல்கிறது மேல் -இது தனக்கு -இத்யாதி
இப்பிரபத்தி தன்னுடைய ஸ்வரூபம் தன்னை உபாயம் என்னப் பெறாது ஒழிகை

————-

சூரணை -56-

அங்கம் தன்னை-ஒழிந்தவற்றை-பொறாது ஒழிகை –(சரம ஸ்லோகத்தில் இத்தை சாங்கமாக விதிக்கையாலே –)

இப் பிரபத்திக்கு அங்கம் தன்னை ஒழிந்த ஸ்வ ப்ரவ்ருத்தி ரூபமானவை ஒன்றையும் ஸஹியாது ஒழிகை

———-

சூரணை -57-

உபாயம் தன்னை பொறுக்கும்-

சூரணை-58-

உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் –

(இரண்டையும் -என்றது -தன்னையும் மற்றத்தையும் உபாயம் என்னப் பொறுக்கும் –

அங்கம் என்றாலும் அங்கி என்றாலும் பொறுக்கும் –)

ஆனால் தன்னை யுபாயம் என்னப் பொறுக்கும் இந்த ஸித்த உபாய வ்யதிரிக்தமான உபயாந்தரம் தன்னை உபாயம் என்னவும் பொறுக்கும்
தனக்கு அவிநா பூதமாகையாலே ப்ரவ்ருத்தி ஸ்வரூபமான அம்சத்தையும் பொறுக்கும் –

——–

சூரணை -59-

இது இரண்டையும் பொறாது-

இந்த பிரபத்தி
உபாயத்வத்தையும்
சேதன க்ரியாதிகள் அங்கம் ஆகுகையும்
பொறாது என்கிறார் –

———–

சூரணை -60-

பலத்துக்கு ஆத்ம ஞானமும்-அப்ரதிஷேதமுமே-வேண்டுவது –

ஆனால் பல ஸித்தி உண்டாம்படி எங்கனே என்ன -பலத்துக்கு என்று தொடங்கிச் சொல்லுகிறது
அவ ரஷணே -என்கிற தாத்வர்த்த ஸித்தமான தத் ஏக ரஷ்யத்வ ரூப ஆத்ம ஞானமும்
ரக்ஷகனுடைய ஸ்வீ கார விஷய பூதனான தன் விலக்காமையுமே
பொறுக்க அபேக்ஷிதம் என்கிறார் –

————

சூரணை-61-

அல்லாத போது-பந்தத்துக்கும்-பூர்த்திக்கும்-கொத்தையாம் –

இனி அல்லாத போது -என்றது -அநாதி காலம் அஹம் கர்த்தா -அஹம் போக்தா -என்று போந்த இத்தனையிலும் சில உண்டாக வேண்டாவோ என்ற போது
பந்தத்துக்கும் இத்யாதி
ததேக சேஷமாய்த் ததேக ரஷ்யமான பந்தத்துக்கும்
அவனுடைய அவாப்த ஸமஸ்த காமத்வ ரூபமான பூர்த்திக்கும்
மாலின்யமாம் –

———

சூரணை -62-

ஆபத்தை போக்கி கொள்ளுகிறோம் என்று –
பிரமித்து –அத்தை விளைத்து கொள்ளாது-ஒழிகையே வேண்டுவது –

ஆகையால் -ஆபத்தை -என்று தொடங்கி -அஞ்ஞனாய் -அசக்தனாய் -அபூரணனான தான்
மம மாயா துரத்யயா -என்கிற அவித்யா ஸம்பந்த ரூபமான ஆபன் நிவ்ருத்திக்கு ஆயாஸிக்க வேணும் என்று ப்ரமித்து
பொல்லா வாக்கையின் புணர் வினை யறுக்கலறா -என்கிறபடியே
அவ்வாபத்தை சத சாகமாகப் பணைப்பித்துக் கொள்ளாது ஒழிகையே இவனுக்குக் கர்தவ்யம் என்கிறார் –

—————-

சூரணை -63-

ரஷணத்துக்கு அபேஷிதம்-ரஷ்யத்வ அனுமதியே –

ஆனால் நித்ய ஸம்ஸாரியான இவனை ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வராதபடி ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாக ரக்ஷிக்கும் படி எங்கனே என்னில்
ரக்ஷணத்துக்கு இத்யாதி
ரஷ்ய அபேஷாம் ப்ரதீக்ஷதே -என்கிற இவனுக்கு ரக்ஷண தர்மத்துக்கு வேண்டுவது
ஸ்வரூப பத ரஷ்ய மாத்ரமான இவனுடைய –
வைத்தேன் மதியால் -என்கிற அனுமதி மாத்திரமே அபேக்ஷிதம் -என்கை –

————

சூரணை -64-

எல்லா உபாயத்துக்கும் பொது வாகையாலும் –
சைதன்ய கார்யம் ஆகையாலும் –
பிராப்தி தசையிலும் அநு வர்திக்கை யாலும் –
ஸ்வரூப வ்யதிரேகி யல்லாமையாலும்-
அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை சாதனமாக்க ஒண்ணாது —

ஆனால் இப்படி இத்தசையில் இசைவை அபேக்ஷித்து இருந்து ரக்ஷிக்கும் இடத்தில் அவ்வனுமதிதான் சாதனம் ஆகாதோ என்னில்
ஆகாது என்னும் இடத்தைப் பல யுக்திகளாலே அருளிச் செய்கிறார் -எல்லா உபாயத்துக்கும் -என்று தொடங்கி
ஜ்யோதிஷ்டோமாதிகளை அனுஷ்டி என்றால் -அப்படிச் செய்கிறோம் என்ற அனுமதி மாத்ரத்தால் அவற்றை அனுஷ்ட்டித்தான் ஆகாமையாலும்
இம்மாத்திரத்தாலே சேதனனான ஆகாரம் தெரிவிக்கின்ற இத்தனையே யாகையாலும்
அவன் ஏவி அடிமை கொள்ளும் இடத்தில் இவ்வனுமதி பல வேளையிலும் அனுவர்த்திக்கையாலும்
அத ஏவ விருத்தம் இல்லாமையாலும்
சைதன்ய ஆதாரமான அசித் வியாவ்ருத்தி மாத்ரமாய்
அதிகாரி விசேஷணமான இவன் அனுமதியை உபாயமாக்க ஒரு வழி இல்லை என்கிறார்
அசாதாரணமான ஸ்த்ரீயை அபிமதனானவன் ஸ்தந போஷண அத்யவஸர ப்ரதீஷனாய் அனுபவித்தால் அவள் அவ்வனுபவத்துக்கு சாதன அனுஷ்டானம் பண்ணினாள் ஆகாள் இறே –

————

சூரணை -65-

அசித் வியாவிருத்திக்கு பிரயோஜனம்-உபாயத்தில் உபகார ஸ்ம்ருதியும்-உபேயத்தில் உகப்பும் –

இந்த அசித் வ்யாவ்ருத்தி வேஷம் ஸாதனமே யல்ல வாகில் இது எதுக்கு பிரயோஜனம் என்ன
உபாய தசையில் அவன் பண்ணின உபகாரத்தில் -உனக்கு என் செய்கேன் -என்கிற உபகார ஸ்ம்ருதியும்
உபேய தசையில் எதிர் விழியால் உண்டான உகப்புக்கும் உறுப்பு -என்கிறார் –

————-

சூரணை-66-

உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்கிறபடியே-பிராப்திக்கு உபாயம்-அவன் நினைவு —

இப்படி அத்தலையால் வந்த நினைவே உபாயம் என்கைக்கு ஆப்த வசனத்தை எடுக்கிறார் –
உன் மனத்தால் -இத்யாதியாலே –

———–

சூரணை -67-

அது தான் எப்போதும் உண்டு –

ஸர்வஞ்ஞனாய் -காருணிகனான அவன் நினைவு காதாசித்கம் ஆகிறது என்
அது நித்யமானால் ஆகாதோ என்ன
அது தான் எப்போதும் உண்டு -என்கிறார் –

————–

சூரணை -68-

அது பலிப்பது-இவன் நினைவு மாறினால் –

ஆனால் அது ஸர்வதா பலம் ஆகாது ஒழிகிறது என் என்ன -அது பழிப்பது இத்யாதி
ஸர்வஜ்ஜோபி ப்ரதீக்ஷதே -என்கிறபடியே நான் எனக்கு உரியேன் என்கிற இவன்
கை வாங்கும் அளவை கடாக்ஷித்து அருளுகையாலே என்கிறார் –

———

சூரணை -69-

அந்திம காலத்துக்கு தஞ்சம் –
இப்போது தஞ்சம் என் –
என்கிற நினைவு குலைகை-என்று
ஜீயர் அருளி செய்வர் –

இதுக்கு உதாஹரணம் -அந்திம -காலத்துக்கு இத்யாதி -அதாவது
நஞ்சீயர் ஒரு ஸ்ரீ வைஷ்ணவருடைய அந்திம தசையிலே அறிய வேணும் என்று எழுந்து அருள
அவர் -இப்போது எனக்குத் தஞ்சமாக ஓன்று அருளிச் செய்ய வேணும் -என்ன
வாரீர் இப்போது உமக்குத் தனிபாம் தேட இருந்தீர்
இத்தலையில் தங்கம் என் என்கிற நினைவு குளிகை தானே காணும் தஞ்சம்
ஆனபின்பு ஸ்வ யத்ன ஸ்வ ப்ரயோஜனங்களில் நிர் அந்வயராய் நிர்ப் பயராய் இருக்காய் காணும் உமக்கு
ஸ்வரூப அனுரூபமான தஞ்சைமாவது -என்று அருளிச் செய்தார் –

————-

சூரணை -70-

பிராப்தாவும்
பிராபகனும்
பிராப்திக்கு உகப்பானும்
அவனே —

ஆக
இது தனக்கு ஸ்வரூபம் தன்னைப் பெறாது ஒழிகை -என்று தொடங்கி
இவனுடைய ஸ்வீ காரம் உபாயம் ஆகாது -ஸ்வரூபமாம் அத்தனை என்னும் இடத்தை இவ்வளவும் உப பாதித்து
இங்கே ப்ரஸ்துதமான ஸ்வரூபத்தை ச ப்ரகாரமாக சோதிக்கிறார்
ப்ராப்தாவும் என்று தொடங்கி –
இப்படி ஸ்வ யத்ன ஸ்வ ப்ரயோஜனங்களில் அந்வயம் இல்லாத படி இவனுடைய ஸ்வரூப சித்த்யதிகள் அவன் அதீனம் ஆகையாலே
என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் கைத்து -என்றும்
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -என்றும் சொல்லுகிறபடியே
நிர்ஹேதுகமாக இத் தலையை வந்து பிராபிக்கக் கடவானும்
நயாமி -என்கிறபடியே இவனுக்குப் ப்ராபகனும்
இவனைப் ப்ராபித்தால் உகப்பானும் அவனே என்று உபபாதிக்கிறார் –

————–

சூரணை -71-

ஸ்வ யத்ன நிவ்ருத்தி
பாரதந்த்ர்ய பலம் –
ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி
சேஷத்வ பலம் –

இப்படி எல்லாமே அவனே என்கைக்குத் தான் நிபந்தநம் என் என்னில்
ஸர்வதா ஸ்வ ஸ்வா தந்தர்ய ராஹித்யமே ஸ்வரூபமாம் படி-பாரதந்தர்ய சேஷத்வங்கள் இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப தர்மங்களாய்க் கொண்டு பலிக்கையாலே -என்கிறார் மேல்
இவை பலிக்கிற படி தான் எங்கனே என்னில் -ஸ்வ யத்ன நிவ்ருத்தி -இத்யாதி
அசித்வத் உண்டான அத்யந்த பாரதந்தர்யத்தாலே ஸ்வ யத்ன நிவ்ருத்தி உண்டாகையாலும்
பரகத அதிசய ஆதாயகமான சேஷத்வத்தாலே ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தி உண்டாகையாளுண்ம் அவை இரண்டும் பலித்தது என்கிறார் –

———-

சூரணை -72-

பர ப்ரயோஜன பிரவ்ருத்தி
பிரயத்ன பலம் –
தத் விஷய ப்ரீதி
சைதன்ய பலம் –

இவ்வோபாதி ஞான சிகீர்ஷா ப்ரயத்னங்களும் ஆத்ம தர்மம் அன்றோ -அவற்றுக்குப் பிரயோஜனம் என் என்ன -பர ப்ரயோஜன ப்ரவ்ருத்தி என்று தொடங்கி –
பிரதானமான சேஷத்வ பாரதந்தர்யங்களுக்கு சேஷமாய்க் கொண்டு இவை அவற்றை ச ப்ரயோஜனமாக்கும் படியை அருளிச் செய்கிறார் –
அதாவது
பாரதந்தர்யத்தாலே பலித்த ஸ்வ யத்ன நிவ்ருத்தியை உடைய ஸ்வரூப கதமான கர்த்ருத்வம் அடியாக வந்த ப்ரயத்னம் ஆகையாலே
அந்த பர ப்ரயோஜன ப்ரவ்ருத்தி ரூபமான பலமன் அந்த ப்ரயத்னத்தால் என்றும்
தத் விஷய ப்ரீதியாலே பர அதிசய ஆதாயகமான சேஷத்வத்தாலே பலித்த ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தியை உடைய ஸ்வரூப கதமான ஞாத்ருத்வத்துக்குப் பலம்
அன்ன மதந்த மத்மி-என்றும்
பவள வாய் காண்பேனே -என்றும் சொல்லுகிறபடியே
இத்தலையில் பிரவிருத்தி கண்டு விக்ருதமான பகவத் விஷயத்தினுடைய ப்ரீதிக்கு எதிர் விழி கொடுக்கையால் வந்த ப்ரீதி என்றும் அருளிச் செய்கிறார்
அந்த ப்ரீதி தானே இறே இவனுக்கு அதந்தமத்மி -என்கிற நிலை நின்ற போக்த்ருத்வமாவது –

—————–

சூரணை -73-

அஹம் -அர்த்தத்துக்கு
ஞான ஆனந்தங்கள்
தடஸ்தம் என்னும் படி
தாஸ்யம் இறே
அந்தரங்க நிரூபகம் –

ஆனால் சேஷத்வ பாரதந்தர்யங்களும் ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களும் ஆத்ம தர்மங்களாய் இருக்க
சேஷத்வ பாரதந்தர்யங்களை ப்ரதானம் ஆக்கி ஞாத்ருத்வ கர்த்ருத்வங்களை அவற்றுக்கு சேஷமாக்குகைக்கு நியாமகம் ஏது –
மற்றைப்படி யானாலாகாதோ என்ன -அது சேராது என்னும் இடத்தை -ஞான ஆனந்தங்கள் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
அதாவது
இவ்வாத்மாவுக்கு பஹிரங்கமான அசித் வ்யாவ்ருத்தி ரூபமான ஞான ஆனந்தங்களும் புற இதழ் என்னும் படி அந்தரங்கமான ஈஸ்வர வ்யாவ்ருத்தி ரூபமான தாஸ்யம் அந்தரங்கமாகையாலே தத் தர்மங்களையும் தத் அனுரூபமாகக் கொள்ள வேணும் இறே என்கிறார்
அந்தரங்க பஹி ரங்க யோர் அந்தரங்கம் பலீய-என்னக் கடவது இறே –

————–

சூரணை-74-

இது தான் வந்தேறி அன்று –

சூரணை -75-

ஸ்வாதந்த்ர்யமும்–அந்ய சேஷத்வமும்-வந்தேறி-

முன்பு அஹமிதமபி வேத்மி -என்று ஞான ஆனந்த ரூபமான அஹம் அர்த்தமும் தத் தர்மங்களுமான ஞான ஆனந்தங்களும் அன்றோ ப்ரகாசித்துப் போந்தது
இப்போது அன்றோ தாஸ்யாதிகள் ப்ரகாசிக்கிறது -ஆகையால் இது வந்தேறி யன்றோ என்ன
ஆகந்துக விரோதியான அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாலே அபி பூதமாய்க் கிடந்த வித்தனை –
தந் நிவ்ருத்தியில் ஆத்மாவுக்கு தாஸ்யம் ஸ்வதஸ் ஸித்தம் இறே -என்கிறார் -இது தான் வந்தேறி அன்று -என்று தொடக்கி –

——————

சூரணை -76-

சேஷத்வ விரோதி  ஸ்வாதந்த்ர்யம்-தச் சேஷத்வ விரோதி ததிதர சேஷத்வம் –

இதில் சேஷத்வ விரோதி -இத்யாதியாலே சாமான்யேன சேஷத்வத்துக்கு விரோதி தனக்குத் தான் கடவன் என்கை –
விசேஷித்து பகவச் சேஷத்வத்துக்கு விரோதி இதர சேஷமாகை என்கிறார் –

——————

சூரணை -77-

அஹங்காரம் ஆகிற ஆர்ப்பை துடைத்தால் –ஆத்மாவுக்கு அழியாத பேர் -அடியான் -என்று இறே-

அஹங்காரம் -இத்யாதி -இப்படி ஸ்வரூபத்துக்கு வந்தேறியான அழுக்கு அறுத்தால் –
யஸ்யாஸ்மி –
பரவாநஸ்மி –இத்யாதிகளாலே சொல்லப்படுகிற
தாஸ்ய விஸிஷ்டமான ஆத்மாவுக்கு வாஸ்தவமான நாமம் அடியான் இறே என்கிறார்-

———-

சூரணை -78-

க்ராம குலாதிகளால்-வரும் பேர்-அநர்த்த ஹேது –

க்ராம குலாதிகளால் -இத்யாதி -கீழ் இப்படி உக்த ஸ்வரூபமான னவனுக்கு
கோயிலிலே வாழும் வைட்டணவன் -என்றும்
ராமானுஜ அங்கரி சரணோஸ்மி -இத்யாதியாலும் வருகிற நிர்த்தேசம் ஒழிந்து
அல்லாத ஒவ்பாதிக குல சரண கோத்ராதிகளாலே வருமது ஸ்வரூப ஹானி என்று அதுக்கு பிரமாணம் அருளிச் செய்கிறார் –

———

சூரணை -79-

ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய –

ஏகாந்தீ வியபதேஷ்டவ்யோ நைவ  க்ராம குலாதிபி -விஷ்ணுனா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய சர்வம்  ச ஏவ ஹி-விஷ்வக் சேனர் சம்ஹிதை -என்று

———-

சூரணை -80-

உபாயத்துக்கு-(அதிகாரி ஆகும் பொழுது )
பிராட்டியையும்
திரௌபதியையும்-
திருக் கண்ண மங்கை ஆண்டானையும் –
போலே இருக்க வேணும் —

உபேயத்துக்கு-(அதிகாரி ஆகும் பொழுது )
இளைய பெருமாளையும் –
பெரிய உடையாரையும் –
பிள்ளை திரு நறையூர் அரையரையும்-
சிந்தயந்தியையும் –
போலே இருக்க வேணும் —

ஆக இப்போது தஞ்சம் என் என்கிற நினைவு குலைகை -என்ற பாசுரத்திலே ப்ரஸ்துதமான ஸ்வரூபத்தை இவ்வளவாக
பாரங்கதமாக்கி -அப்பாசுரத்தால் பலித்த ஸ்வ யத்ன ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்தி ரூபமான உபாய உபேயங்களிலே நிஷ்டரான அதிகாரிகளை
இப்ப்ரபந்ந அதிகாரிக்கு த்ருஷ்டாந்தமாக வெளியிடுகிறார் -உபாயத்தில் -என்று தொடங்கி -எங்கனே என்னில் –
உபாய அத்யவசாயத்தில் நெருப்பை நீராக்க வல்ல பிராட்டி ஸ்வ ரக்ஷணத்தில் இழியாதே
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் என்று இருந்தால் போலேயும்
ஸ்த்ரீத்வத்துக்குப் படி எடுக்க வேண்டும்படியான திரௌபதி அம் மஹா சதஸ்ஸிலே பிறந்த பரிபவத்தில் உரிக்கிற துகிலை வாஸனையாலே தானும் ஒரு கை பற்றாது ஒழிந்தால் போலேயும்
திருக்கண்ண மங்கை யாண்டான் பத்தராவி திருவடிகளிலே ஸர்வ பர ந்யாஸம் பண்ணி அவர் கைப்புடையிலே கண் வளர்ந்தால் போலேயும்
இவ்வதிகாரியும் இருக்க வேணும் என்கிறார் –

ஆனால் உபேய அதிகாரிகள் இருக்கும் படி எங்கனே என்கிற சங்கையிலே சொல்லுகிறது -உபேயத்தில் -என்று தொடங்கி –
ஜலான் மத்ஸ்யா விவோத்ருதவ் -என்றும்
குருஷ்வ மாம் அநு சரன் -என்றும்
பெருமாளைப் பிரியில் தரியாதே பின் சென்று
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று ஸர்வவித கைங்கர்யங்களையும் அதிகரித்து
அது தன்னிலும்
ஸ்வயம் து ருசிரே தேசே -இத்யாதியாலே அவனுக்கு உகந்த அடிமையிலே அதிகரித்த இளைய பெருமாளைப் போலேயும்
ஆஸ்ரயண வேளையிலும் புருஷீ கரித்து -அடிமை செய்வார் திருமாலுக்கே -என்கிறபடி
அடிமை கொள்ளுகைக்கு முற்பாடையான பிராட்டி விஷயமாகத் தம்மை அழிய மாறி அடிமை செய்த ஜடாயு மஹா ராஜரையும்
திரு நாராயண புரத்தில் வேத நாராயணர் விஷயமாக அக்னி பயத்தால் வந்த அபாயத்தில் அந்த பகவத் ஸுகுமார்ய அநுஸந்தானத்தாலே
ஸ குடும்பராக விதக்தராம் படி ஸாஹஸ ப்ரவ்ருத்தி பண்ணின திரு நறையூர் அரையரையும்
தத் சித்த விமலாஹ்லாத -இத்யாதிப்படியே
தான் யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாமையாலே முடிந்த சிந்தையந்தியைப் போலேயும் இருக்க வேணும் என்கிறார் –

————–

சூரணை -81-

பிராட்டிக்கும் திரௌபதிக்கும் வாசி
சக்தியும் அசக்தியும் –

சூரணை -82-

பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்-
திரௌபதி லஜ்ஜையை விட்டாள் –
திரு கண்ண மங்கை ஆண்டான் ஸ்வ வியாபாரத்தை விட்டான் –

இனி உக்தரான உபாய அதிகாரிகள் தம்தாமுக்கு உள்ள கைம்முதல்களைக் கழித்து விடக் காண்கையாலே
உபாய தசையில் இவ்வதிகாரியும் தம் கைம்முதலாய் உள்ளவற்றைக் கழிக்கக் கடவன்
என்னும் இடத்தை -பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள் -என்று தொடங்கிச் சொல்லுகிறது –

—————

சூரணை-83-

பசியராய் இருப்பார் அட்ட சோறும் உண்ண வேணும்
அடுகிற சோறும் உண்ண வேணும் என்னுமா போலே –
காட்டுக்கு போகிற போது-இளைய பெருமாள் பிரியில் தரியாமையை முன்னிட்டு –
அடிமை செய்ய வேணும் –
எல்லா அடிமையும் செய்ய வேணும் –
ஏவிக் கொள்ளவும் வேணும் -என்றார் –
படை வீட்டில் புகுந்த பின்பு -காட்டில் தனி இடத்தில் –
ஸ்வயம் பாகத்திலே வயிற்றை பெருக்கின படியால் –
ஒப்பூண் உண்ண மாட்டாதே –
ஒரு திருக் கையாலே திரு வெண் குற்றக் கொடையும் –
ஒரு திருக் கையாலே திரு வெண் சாமரத்தையும் –
தரித்து அடிமை செய்தார் –

சூரணை -84-
பெரிய உடையாரும்
பிள்ளை திரு நறையூர் அரையரும்
உடம்பை உபேஷித்தார்கள் –
சிந்தயந்திக்கு உடம்பு தன்னடையே போயிற்று –

இனி பசியராய் இருப்பார் -என்று தொடங்கி
உடம்பு தன்னடையே போயிற்று -என்னும் அளவும்
அவ்வுபேய அதிகாரிகளுடைய அனுஷ்டானத்தை விசதமாக வ்யாக்யானம் பண்ணுகிறார் –

————-

சூரணை-85
உபாயத்துக்கு
சக்தியையும்
லஜ்ஜையையும்
யத்னமும்
குலைய வேணும் —

உபேயத்துக்கு
பிரேமமும்
தன்னை பேணாமையும்
தரியாமையும்
வேணும்-

உபாயத்துக்கு இத்யாதியாலே
இப்படி இவ்வ்வநுஷ்டானங்களில் சிஷ்டாசாரம் யுண்டாகையாலே கீழே ஸ்வ யத்ன ஸ்வ ப்ரயோஜன நிவ்ருத்திகளிலே ப்ரஸ்துதரான
இவ்விரண்டு அதிகாரிகளுக்கும் அவை அநுஷ்டேயம் என்னும் இடத்தை அருளிச் செய்கிறார்
தறியாமையும் வேணும் என்னும் அளவும் –

——————

சூரணை-86-

இவனுக்கு வைதமாய் வரும் அது இறே
த்யஜிக்கலாவது –
ராக ப்ராப்தமாய் வருமது
த்யஜிக்க ஒண்ணாது இறே –

ஆனால் பெரிய யுடையாருக்கு -அவ்யவஸ்தித்வ ஹி த்ருஸ்யதே யுத்தே ஐயபராஜயவ் -என்று
யுத்தத்தில் வெற்றி தோல்விகள் வ்யவஸ்திதங்கள் இல்லாமையாலும்
சிந்தயந்திக்கு அனுபவ அலாபத்தாலே ஸ்வயமேவ சரீரம் விடுகையாலும்
முடிகை பிராப்தம்
உத்தம வர்ணரான திரு நறையூர் அரையர் ஒன்றையும் பாராதே ஸ்வயமேவ ஆத்ம பாதகராய்க் கொண்டு செய்த அதி ஸாஹஸ ப்ரவ்ருத்தி
ஸாஸ்த்ரங்களுக்கும் ஸ்வரூபத்துக்கும் சேராது இறே என்ன
இவனுக்கு வைதமாய் வரும்து இறே -என்று தொடங்கி அது சேரும் என்னும் இடத்தைச் சொல்லுகிறது
விதமாய் வரும்து என்றது -சில பலாந்தரங்களை உத்தேசித்து
ப்ராஹ்மணார்த்தே கவார்த்தே வா ஸம்யக் ப்ராணன் பரித்யஜேத் -இத்யாதி
விதி பரதந்த்ரமாய் வரும் வியாபாரங்கள் இறே இவ்வதிகாரிக்கு விடலாவது
விஷய வை லக்ஷண்யத்தாலே ராக ப்ரேரிதமாய்க் கொண்டு தானே வருமத்தைத் தள்ள ஒண்ணாது இறே –

——————–

சூரணை -87-
உபாயத்வ அநு சந்தானம்
நிவர்தகம் –
உபேயத்வ அநு சந்தானம்
பிரவர்தகம் –

உபாயத்வ அனுசந்தானம் நிவர்த்தகம் -என்றது
ஸ்வ ப்ரவ்ருத்தி ரூபமான அவ்வனுஷ்டானத்தில் உபாயத்வ புத்தி யுண்டாய்த்தாகில்
அது ஸ்வரூப ஹானி யாகையாலே தானே இத்தை நிவர்த்திப்பிக்கும் -என்னுதல்
அன்றிக்கே
இவ்விஷயம் தன்னை உபாயமாக அனுசந்திக்கில் -அது ஸித்த உபாயமாகையாலே தானே நிவர்த்திப்பிக்கும் என்னுதல்
இனி உபேயத்வ அனுசந்தானம் ப்ரவர்த்தகம் -என்றது –
இவ்விரண்டும் இன்றிக்கே உபேய வை லக்ஷண்ய அனுசந்தானம் தானே ப்ரவர்த்திப்பித்தது என்கிறார் –

————-

சூரணை-88-

அப்ராப்த விஷயங்களிலே
சக்தனானவன்
அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்
பிராப்த விஷய ப்ரவணனுக்கு
சொல்ல வேண்டா இறே –

உபேயம் என்ன ஸாஸ்த்ர விருத்தங்களான ஏவம் வித ப்ரவ்ருத்தியிலே இவர் ப்ரவர்த்திக்கலாமோ என்ன
அப்ராப்த விஷயங்கள் -இத்யாதியாலே -அருளிச் செய்கிறார்
பகவத் ஏக போகமான ஸ்வரூபத்துக்கு விருத்தமாய்
சிஷ்ட கர்ஹிதமாய்
ஜூகுப்ஸா விஷயங்களுமாய்
உதர்க்கத்தில் நரகாவஹமான விஷயங்களிலே அபி நிவிஷ்டமானவனும் தன்னை அழிய மாறியும் அத்தைப் பெற வேணும் என்று இரா நின்றால்
எல்லா வழியால் அதற்கு எதிர்த்தட்டாய் ஸ்வரூப ப்ராப்தமான பகவத் விஷய வை லக்ஷண்யத்திலே ஈடுபட்ட இவருக்கு இப்படிப் படச் சொல்ல வேணுமோ என்கிறார் –

————

சூரணை -89-

அனுஷ்டானமும்
அந் அனுஷ்டானமும்
உபாய  கோடியில் அன்வயியாது —

ப்ரயோஜன மநுத்திஸ்யா ந மந்தோபி ப்ரவர்த்ததே -என்கையாலே
இது உபாயமாய் ஸம்பவிக்கிலோ என்னில் -அனுஷ்டானமும் -இத்யாதி
கீழ்ச் சொன்ன உபாய அதிகாரி லக்ஷண தயா வந்த அனுஷ்டானங்கள் உபாயத்தில் அந்வயியாதவோ பாதி
இவருடைய இந்த அனுஷ்டானமும் உபாயத்தில் அந்வயியாது
அங்கன் அன்றாகில் இது தான் உபேய அதிகாரிகள் எல்லாருக்கும் அநுஷ்டேயமாம் இறே –

——————

சூரணை -90-

அநந்ய உபயத்வமும்
அநந்ய உபேயத்வமும்
அநந்ய தைவத்வமும்
குலையும் படியான பிரவ்ருத்தி
காண நின்றோம் இறே –

இவர் அநித்யமான சரீரத்தை அழிய மாறின இதுக்குப் படுகிறதோ
நித்தியமான ஆத்ம வஸ்துவும் அஸத் சமமாம் படி அத்யந்த விலக்ஷணரானவர்களும் விஷய வைலக்ஷண்யத்தாலே அநந்ய உபாயத்வாதிகள் குலைந்து
அலமாவா நிற்க என்று அவ்வனுஷ்டானத்தில் ப்ரஸித்தியைப் பிரகாசிப்பிக்கிறார் -அநந்ய உபாயத்வமும் -என்று தொடங்கி
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்றும்
மற்றை நம் காமன்கள் மாற்றும் -என்றும்
உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்றும்
அநந்ய உபாயதவாதிகள் யுடைய பிராட்டி
வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு -நோற்கின்றேன் காம தேவா -என்றும்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பான் என்னும் இப்பேறு எனக்கு அருள் செய் கண்டாய் -என்றும்
மன்மதனே உன்னை வணங்குகின்றேன் –இத்யாதியாலே
அவை குலையும்படியான ப்ரவ்ருத்திகளிலே ப்ரவர்த்திக்கையாலும்
அல்லாத ஆழ்வார்களும்
நோற்ற நோன்பு -என்று தொடங்கி அடுத்ததுசுத்து பிரபத்தி பண்ணுகையாலும்
மடல் எடுக்கையாலும்
ஓதி நாமம் குளித்து -இத்யாதியாலே உபாயாந்தரங்களிலே இழிய நினைக்கையாலும்
இவ்வநுஷ்டானம் ப்ரத்யக்ஷம் இறே -என்கிறார் –

————-

சூரணை -91-

ஞான விபாக கார்யமான
அஞ்ஞானத்தாலே வருமவை எல்லாம்
அடிக் கழஞ்சு பெறும்–

ஆனால் அவர்கள் செயல் தானும் அஞ்ஞான கார்யமாய் இருந்ததே என்ன -அத்தைப் பரிஹரிக்கிறார் ஞான விபாக கார்யம் -இத்யாதி
பகவத் வை லக்ஷண்ய ஞானத்தினுடைய பரிபாக தசையிலே உண்டாமதான பக்தி பாரவஸ் யத்தாலே முன்னாடி தோற்றாதே
இப்படிப்படும் அலமாப்புக் கண்டு அங்கு அதிசயித புருஷார்த்த அந்வயியாய் விடும் என்கிறார்
அடிக்கழஞ்சு பெறுகை யாவது
அதில் அந்வயித்த அம்சம் பல ரூபமாய் இருக்கையாலே அத் யுத்தமம் என்கை-

————–

சூரணை -92-

உபாய பலமாய்
உபேய அந்தர்பூதமாய்
இருக்குமது
உபாய பிரதிபந்தகம் ஆகாது –

உபாய பலமாய் –இத்யாதியால் –
இத்தலையில் ஸ்வீ காரமும் பொறாத சுணை யுடைய உபாயத்துக்கும் இந்த ஸ்வ ப்ரவ்ருத்தி ரூப வியாபாரங்கள் விலக்காகாவோ என்ன
அந்த உபாய ஸ்வீ கார அநந்தரம் பெரும் பேறு அன்றோ என்னுதல்
அன்றிக்கே
உபாய பூதனுடைய அநாதி கால கிருஷி பலமாய் அபி நிவேச அதிசயத்தாலே உபாயாந்தரங்களிலும் ப்ரவ்ருத்திக்கும் படியான
இவனுடைய துடிப்பைக் கண்டு அவனுக்குப் பிறக்கும் முகோலாசம் ப்ராப்ய அந்தர் கதமாகையாலே ஸித்த உபாயத்துக்கு அவை விலக்கு ஆகாது என்கிறார் –

————-

சூரணை -93-
சாத்ய சமானம்
விளம்ப அசஹம் என்று இறே
சாதனத்துக்கு ஏற்றம் –
சாத்ய ப்ராவண்யம்
அடியாக இறே
சாதனத்தில் இழிகிறது —

இந்த ப்ரேம அதிசயத்தால் வந்த கலக்கம் விலக்கு ஆகாது என்னும் இடத்தை விசதம் ஆக்குகிறார் -ஸாத்ய ஸமாநம் -என்று தொடங்கி -அதாவது
ஸர்வதா இவ்வுபாயம் தான் புருஷகார குண விக்ரஹங்களால் பூர்ணமாய்க் கொண்டே இருக்கையாலே
ஸர்வதா ஸாத்யத்தோடே ஒக்கும் என்றும்
ஸித்தமுமாய் ஸர்வ சக்தித்வாதிகளோடே கூடி இருக்கையாலே
ப்ரேமாந்த்யத்தாலே இப்படிப் பதறும்படி விளம்பத்தைப் பொறாது என்றும் அன்றோ இதர உபாயங்களை பற்ற இவ்வுபாயத்துக்கு ஆதிக்யம்
ஸாத்ய ப்ராவண்யம் –இத்யாதி -இப்படிப்பட்ட ப்ராப்யத்தில் த்வராதிசயத்தாலே இறே ப்ரதமத்திலே தான் இந்த ப்ராபகத்தை ஸ்வீ கரிக்கிறது
ஆகையால் விஷய வை லக்ஷண்ய அதீனமாய் வந்த அதி ப்ரவ்ருத்தி உபாய விரோதி யாகாது
ஸ்வரூப அனுரூபமாம் இத்தனை என்று திரு நறையூர் அறையருடைய அதி ப்ரவ்ருத்தியில் சங்கையை இவ்வளவாகப் பரிஹாரம் பண்ணி நின்றது –

———–

சூரணை-94-

இவனுக்கு பிறக்கும் ஆத்ம குணங்கள்
எல்லாவற்றுக்கும்
பிரதான ஹேது
இந்த பிராவண்யம் –

மேல் -இவனுக்குப் பிறக்கும் -என்று தொடங்கி -இப்படி இந்த ப்ராவண்யம் பல வேளையிலே யாராது உபகாரகமாகை அன்றிக்கே
தன்னுடைய உத்பத்தியிலே ஸந்நிபத்ய உபகாரகங்களான ஆத்ம குணங்களுக்கு மூலமும் தானே யன்றோ என்கிறது –

————-

சூரணை -95-

மால் பால் மனம்  சுழிப்ப-
பரமாத்மநி யோரக்த –
கண்டு கேட்டு உற்று மோந்து –

அது எங்கனே என்னில் –
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்றும்
பரமாத்மநி யோ ரக்த விரக்தோ அபரமாத்மநி -என்றும்
கண்டு கேட்டு -என்று தொடங்கி -கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் -என்றும்
இப்படி விலக்ஷண விஷய தர்சனத்தாலே முதலில் ஐஸ்வர்ய கைவல்யங்களில் நசையற்று என்கையாலும் -என்கிறார் –

——————-

சூரணை -96-

ஆத்ம குணங்களில் பிரதானம்
சமமும் தமமும் –

ஆத்ம குணங்களில் -இத்யாதி -சமமாவது -பர தாராதிகளில் போகாத படி இந்திரியங்களை நியமிக்கை
தமமாவது -உபஸமநம் தம -என்கையாலே ஸ்வ தாராதிகளிலும் ஒன்றாக நெஞ்சு போகாமே நியமிக்கை –

——————-

சூரணை -97-

இந்த இரண்டும்  உண்டானால் -ஆசார்யன் கை புகுரும் –
ஆச்சார்யன் கை புகுந்தவாறே திரு மந்த்ரம் கை புகுரும் –
திரு மந்த்ரம் கை புகுந்தவாறே ஈஸ்வரன் கை புகுரும் –
ஈஸ்வரன் கை புகுந்தவாறே -வைகுந்த மா நகர் மற்றது கையதுவே –
என்கிற படியே பிராப்ய பூமி கை புகுரும் —

இவை இரண்டும் உண்டானால் என்று தொடங்கி -இவன் சம தம உபேதனானவாறே ஸதாசார்ய ஸ்வீ காரம் உண்டாகும்
அவ்வங்கீ கார்த்தாலே ருஷோ யஜும் ஷி -இத்யாதில் படியே
ஸகல ஸாஸ்த்ர ஸங்க்ரஹமான திருமந்திரம் ஸித்திக்கும்
இது ஸித்தித்தவாறே ஸகல வேத வேத்யமான ஸர்வேஸ்வரன் சந்நிஹிதனாம்
அவன் சந்நிஹிதனானவாறே அபுநரா வ்ருத்தி லக்ஷண மோக்ஷம் அதி ஸூலபமாம் -என்கிறார் –

————–

சூரணை -98-

பிராப்ய லாபம் பிராபகத்தாலே –
பிராபக லாபம் திரு மந்த்ரத்தாலே –
திரு மந்திர லாபம் ஆச்சார்யனாலே –
ஆச்சார்யா லாபம் ஆத்ம குணத்தாலே –

இனி ப்ராப்ய லாபம் என்று தொடங்கி -ஸிம்ஹ அவ லோகந ந்யாயத்தாலே யுக்த அர்த்தத்தை ஸ்த்திரீ கரிக்கிறாதல்
நிஸ் ரேணிகா ந்யாயத்தாலே இவ்வதிகாரிக்கு இவற்றினுடைய ஸ்வரூப ஸித்தி உண்டாம் என்கிறார் ஆதல்
மீள ஆச்சார்ய லாபம் என்கிறது ஸ்வரூப ஞான பிரதர் என்றும் சொல்லுவார் –

——–

சூரணை -99-

இது தான் ஐஸ்வர்ய காமர்க்கும் –
உபாசகருக்கும் –
பிரபன்னருக்கும் –
வேணும் —

சூரணை -100-
மூவரிலும் வைத்து கொண்டு
மிகவும் வேண்டுவது
பிரபன்னனுக்கு –

இப்படிப் பகவத் ப்ராவண்யம் மூலமாக வந்த ஆத்ம குணங்களால் வரும் பல பரம்பரைகளைச் சொல்லுகிறது
ப்ரபந்ந அதிகாரிக்கு விஷய விரக்தியில் ஊற்றம் சொல்லுகைக்காக –
இவ்விஷயத்தில் ஒரோ வகைகளாலே உபாதேய புத்தி பண்ணி இருக்கிற ஐஸ்வர்ய காமனையும் உபாசகரையும் எடுக்கிறார் -இது தான் -என்று தொடங்கி
இது தான் என்றது இவ்வாத்ம குணம் தான் என்றபடி
ஐஸ்வர்ய காமருக்கும் -இந்திரியாணி புரா ஜித்வா ஜிதம் த்ரி புவனம் த்வயா -என்கையாலே
இந்திரிய ஜய அர்த்தமாக பர தாராதிகள் நிஷித்தங்கள்
ஸ்வ தாராதிகள் ப்ராப்ய தயா உபாதேயங்கள்
உபாஸகனுக்கு சாந்தோ தாந்த -இத்யாதிகளில் படியே உபாஸன விரோதித்வேந பர தாராதிகள் பரித்யாஜ்யங்கள்
ஸ்வ தாராதிகள் ஸஹ தர்ம சாரிணீத்வேந உபாதேயங்கள்
ப்ரபன்னனுக்கு பகவத் அனுபவ விரோதித்வேந உபாயமும் பரித்யஜ்யம் –

———

சூரணை -101-

மற்றை இருவருக்கும்
நிஷித்த விஷய நிவ்ருத்தியே அமையும் –
பிரபன்னனுக்கு
விஹித விஷய நிவ்ருத்தி தன்  ஏற்றம் –

இனி பிரபன்னனுக்கு விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம் என்கிறது -ஸ்வ தாராதிகள் மற்றை இருவருக்கும் உபேய தயாவும் உபாய தயாவும் உபாதேயங்கள் ஆகையாலும்
ஏகாந்தீ து வினிஸ் சித்ய தேவதா விஷயாந்தரை -பஃத்யுபாயம் சமம் கிருஷ்ண ப்ராப்தவ் கிருஷ்ண ஏக சாதன -என்கிறபடியே
இவன் ததேக போகனுமாய் ததேக உபாயனுமாகையாலே இவனுக்கு ஸ்வ தாரதாதிகளையும் விடுகை அவர்களைப் பற்ற ஆதிக்யம் -என்றபடி –

—————-

சூரணை -102-

இது தான் சிலருக்கு அழகாலே பிறக்கும் –
சிலருக்கு அருளாலே பிறக்கும் –
சிலர்க்கு ஆசாரத்தாலே பிறக்கும் –

இது தான் இத்யாதி –இந்த இதர விஷய விரக்தி ப்ரபன்னனுக்குப் பிறக்கும்படி தான் எங்கனே என்னில்
கீழே அஞ்ஞானத்தாலே ப்ரபன்னர் என்று தொடங்கிச் சொன்ன அதிகாரிகளை -இவ்விடத்தில் அவரோஹ க்ரமத்தாலே அருளிச் செய்கிறார்
பக்தி பாரவஸ்ய ப்ரபன்னர்க்கு விஷய வை லக்ஷண்யத்தாலும்
ஞாணாதிக்ய ப்ரபன்னர்க்கு நிர்ஹேதுக கிருபையாலும் பிறக்கும்
சிலருக்கு ஆசாரத்தாலே என்றது
ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா -என்கிற பகவத் ஆஜ்ஞ அதி லங்கனத்தாலே வந்த தண்ட தரத்வம் அடியாக வருகிற ஆசாரத்தாலே யாதல்
ராமாவதாராதிகளில் அவருடைய ஆசாரம் அஸ்மத்தாதிகளைக் குறித்து அன்றோ என்னுதல்
எம்பார் முதலான ஆச்சார்யர் அனுஷ்டானங்களாலே யாதல்
இவ்விஷய விரக்தி பிறக்கும் -என்கிறார் –

———-

சூரணை -103-

பிறக்கும் க்ரமம் என் என்னில் –
அழகு அஞ்ஞானத்தை விளைக்கும்
அருள் அருசியை விளைக்கும்  –
ஆசாரம் அச்சத்தை விளைக்கும் –

இவ் வதிகாரிகளுக்கு அந்த வை லக்ஷண்யாதிகள் விரக்தி உண்டாக்கும் க்ரமம் என் என்னில்
அவனுடைய அபரிச்சின்னமான திவ்ய ஸுந்தர்யம்
நோ பஜநம் ஸ்மரன் நிதம் ஸரீரம் -என்கிறபடியே
,முதலிலே இதர விஷய ஞானம் இல்லாத படி பண்ணும்
அவனுடைய அருள் அன்ன மென்னடையினார் கலவியை அருவருக்கப் பண்ணும்
கீழ்ச் சொன்ன பகவத் பாகவத அனுஷ்டானங்கள் ஆகிற ஆசாரம் பயத்தை உண்டாக்கும் என்கிறார் –

——–

சூரணை -104-

இவையும் ஊற்றத்தைப் பற்றச்  சொல்லுகிறது –

இவையும் -என்றது -கீழேயும் ஊற்றம் சொல்லுகையாலே அஞ்ஞானமும் அரிசியும் பயமும் அதிகாரி த்ரயத்துக்கும் உண்டாய் இருக்க
ஒவ்வொன்றிலே ஊற்றமாய் இருக்கையாலே –

——-

சூரணை-105-

அருசி பிறக்கும் போதைக்கு
தோஷ தர்சனம் அபேஷிதமாய் இருக்கும் —

சூரணை -106-

அது பிரதான ஹேது அன்று –

சூரணை -107-

அப்ராப்தையே பிரதான ஹேது –

அருசி பிறக்கும் போதைக்கு -இத்யாதி -இவ்வதிகாரிகளுக்கு அருசி பிறப்பது விஷயங்களுடைய தோஷ பூயிஷ்டதையைக் கண்டாலோ என்னில்
அதுவும் ஒரு ஹேது
பகவத் ஏக போகமான ஸ்வரூபத்துக்குச் சேராது என்று விடுமதுவே பிரதான ஹேது -என்கிறார் –

———

சூரணை -108-
பகவத் விஷயத்தில் இழிகிறதும்
குணம் கண்டு அன்று –
ஸ்வரூப ப்ராப்தம் என்று —

பகவத் விஷயத்தில் -இத்யாதி -கீழே மால் பால் மனம் சுழிப்ப -இத்யாதி ப்ரமாணங்களாலே இதுக்குப் ப்ரதிகோடியாக எடுத்த
பகவத் விஷயத்தில் பிரவணராகிறதும் -கல்யாண குண தர்சனத்தாலேயோ -ஸ்வரூப அனுரூபம் அன்றோ என்ன
இக் குணங்கள் அவ்வஸ்து கதமே யாகிலும் ஸ்வரூப அனுரூபம் என்றே பற்றுகிறது -என்னும் இடத்தை ன் அநஸூயைக்குப் பிராட்டி அருளிச் செய்த வார்த்தா பர்யந்தமாக அருளிச் செய்கிறார் –

———-

சூரணை -109-

இப்படி கொள்ளாத போது-
குண ஹீனம் என்று நினைத்த தசையில்
பகவத் விஷய பிரவ்ருத்தியும்
தோஷ அனுசந்தான தசையில்
சம்சாரத்தில் பிரவ்ருத்தியும்
கூடாது — (சேராது பொருந்தாது -அனுப பன்னம் என்றவாறு )

இப்படிக் கொள்ளாத போது -இத்யாதியாலே இவ்வர்த்தத்தை
பர்வதோயம் அக்னி மான் தூமத்வாத் யத் யக்னி மான் ந பவதி தர்ஹி தூமவான் அபி ந பவதி -என்னுமா போலே
அநிஷ்ட ப்ரசங்க முகத்தாலே த்ருடீ கரிக்கிறார் –
அதாவது -ஸ்வரூப அனுரூபம் என்றும் ஸ்வரூப ஹானி என்றும் கொள்ளாத போது அபி நிவேச அனுரூபமாக அவன் முகம் காட்டாத படியாலே
அவனுடைய குண ஹானியே தோற்றுகிற அளவிலும் ஆழ்வார்கள் மேன்மேல் என அவ்விஷயத்திலே மண்டுகையும்
ஸம்ஸாரத்திலே தோஷம் ஸர்வ ஸம் பிரதிபன்னமாகக் காணா நிற்கச் செய்தேயும் அதிலே ஆதரித்துப் ப்ரவர்த்திக்கையும் கூடாது இறே என்கிறார்
இதர விஷய தோஷ தர்சனத்தாலே விடப்படுமாகில் -அஸ் ஸம்ஸார அனுபவ தசையிலே சிலருக்கு அசிந்திதமாக ராஜ்ய ஷோபம் பிறந்து
அவர்கள் ச குடும்பமாக பர்வத ஆரோஹணம் பண்ணா நிற்க -மத்யே மார்க்கே கர்ப்பிணிக்கு ப்ரஸவ காலமாகத் தன்னால் பரிஹரிக்க அரிதான பாரங்களாலும்
புத்ர பஸ் வாதி பாரவஸ் யத்தாலும் அத்யந்த பீதி யுக்தனாய்ப் போரு கிற சமயத்திலே அபஹர்த்தாக்களால் ப்ராண பர்யந்தமான
ஆபத்து வந்தாலும் இற்றை அளவுக்கு பிராணன் ஆகிலும் கிடந்ததே என்று தான் முடியும் அளவும் அதில் அருசி பிறவாதே
புத்ரா தய கதமம மீ -இத்யாதில் படியே அக்குடும்ப ரக்ஷணத்திலே ப்ரவர்த்திக்கக் காண்கையாலும் கூடாது இறே
ஆகையால் சம்சாரத்தைத் தோஷம் கண்டு கை விடுகிறதும் இல்லை
பகவத் விஷயத்தை குணம் கண்டு பற்றுகிறதும் இல்லை –
ஸ்வரூப ஹானி என்று விடுகையும்
ஸ்வரூப பிராப்தம் என்று பற்றுகையுமே
நிலை நின்ற ஆகாரம் என்கிறார் –

———–

சூரணை -110-

கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் –
அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் –
என்னா நின்றார்கள் இறே —

கொடிய என்னெஞ்சம் -இத்யாதி -பகவத் விஷயம் ஸ்வரூப அனுரூபம் என்றே பற்றுகிறதுக்கு பிரமாணங்கள் –

—————–

சூரணை-111-

குண கிருத தாஸ்யத்திலும் காட்டிலும்
ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் இறே பிரதானம் —

குண கிருத தாஸ்யத்திலும் -இத்யாதியாலே சொல்லுகிற இவ்வர்த்தத்தில் பிரஸித்துக்கு அடி -ரஹஸ்ய த்ரயத்தில்
சேஷத்வமும் குணத்தால் வந்தது -என்ற அநந்தரம்
சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -என்றும்
குண அத்யவசாயம் சொல்லா நிற்க ஸ்வாமித்வத்தாலே ஸ்வரூப அத்யவசாயத்தைச் சொல்லுகையாலும்
திரு மேனியையும் குணங்களையும் சொல்லும் -என்ற அநந்தரம்
சேஷித்வத்திலே நோக்கு -என்கையாலும்
ஸ்வரூப உபாய புருஷார்த்தங்கள் மூன்றிலும் குண க்ருதமாய் வருமத்தைப் பற்ற ஸ்வரூப பிரயுக்தமானது ப்ரபலமாகையாலே -என்கை –

————–

சூரணை -112-

அநசூயைக்கு பிராட்டி அருளிய வார்த்தையை
ஸ்மரிப்பது–

இவ்வர்த்தத்துக்கு உதாஹரணம் -அநஸூயைக்கு -இத்யாதி
அத்ரி பகவான் ஆஸ்ரமத்திலே பெருமாள் எழுந்து அருளின போது அவன் அநஸூயை இடுவித்துப் பிராட்டியை ஆதரிப்பித்த அநந்தரத்திலே
அவள் பெருமாள் ஸுகுமார்யத்தைக் கண்டு பிராட்டியைப் பார்த்து -ஸ்திரீகளுக்கு பார்த்தாக்களே கிடீர் தேவதை
இவ்வை லக்ஷண்யத்திலே ஈடுபட்டுக் காட்டிலே வந்த நீர் இவர் அளவிலே இன்று போலே என்றும் இருக்க வேணும் கிடீர் -என்ன
அவளைப் பார்த்து -இவரையும் இவர் வை லக்ஷண்யத்தையும் வ்யதிரேகித்துக் காட்ட வல்லேனாகில் இறே
இவ்வழகை ஒழியவும் நாம் பெருமாளுக்கு நல்லேன் ஆண்மை காட்டலானமை -என்றாள் –

————

சூரணை -113-

பகவத் விஷய பிரவ்ருத்தி பின்னை
சேருமோ  என்னில் –
அதுக்கடி பிராவண்யம் –
அதுக்கடி சம்பந்தம் –
அது தான் ஒவ்பாதிகம் அன்று –
சத்தா பிரயுக்தம் –

ஆனால் வேம்பின் புழு வேம்பன்றி உண்ணாது -என்னும்படி இப்படி சத்தா ப்ரயுக்த தாஸ்யத்தை யுடைய ஸ்வரூபத்துக்கு முன்பு சொன்ன
அநந்ய தைவத்தாதிகள் குலையும்படியான பகவத் விஷயத்தில் அதி ப்ரவ்ருத்திகள் சேருமோ என்னில்
அதுக்கடி ப்ராவண்யம் -என்று தொடங்கி -சத்தா பிரயுக்த ஸம்பந்த கார்யமான ப்ராவண்யம் அடியாக வருகிற
ப்ரவ்ருத்தி களாகையாலே சேரும் என்கிறார் மேல் –
அவ்வாதி ப்ரவ்ருத்திக்கு அடி பகவத் விஷயத்தில் ப்ராவண்ய அதிசயம்
அப்பிராவண்யத்துக்கு அடி -மாதா பிதா பிராதா நிவாஸ சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண -என்கிற சம்பந்தம்
அஸ் ஸம்பந்தம் தான் வந்தேறி அன்று –

———

சூரணை -114-

அந்த சத்தை பிராவண்ய கார்யமான
அனுபவம் இல்லாத போது குலையும் –
அது குலையாமைக்காக வருமவை எல்லாம்
அவர்ஜநீயங்களுமாய்-பிராப்தங்களுமாய் -இருக்கும் –
ஆகையாலே பகவத் விஷய பிரவ்ருத்தி சேரும் –

யாவதாத்ம பாவி அப்ருதக் ஸித்தமான அந்த சத்தை ஸ்வ சத்தா ப்ரயுக்த சம்பந்த கார்யமான ப்ராவண்யம் அடியாக வரும் பகவத் அனுபவம் பெறா விடில்
மாந்து சோர்கிற பசியிலே சோறு பெறாத போது பிராணன் போமா போலே குலையும்
அது குலையாமைக்காக -இத்யாதி -இஸ் சத்தா ஸத் பாவ ஹேதுவாய்க் கொண்டு பி வரும் வியாபாரங்கள் எல்லாம் வருந்தியும் விடப்போகாத படியுமாய்
விழுக்காட்டில் ஸ்வரூபத்துக்கு உசிதமுமாய் இருக்கும்
ஆகையாலே பகவத் விஷய ப்ரவ்ருத்தி சேரும் என்று சோத்ய பரிஹாரம் பண்ணுகிறார் –

————————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .-

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்-முதல் பிரகரணம் –புருஷகார உபாய வைபவ பிரகரணம் –சூர்ணிகை-1-22- —

July 17, 2022

நமஸ் ஸ்ரீ ஸைல நாதாய குந்தீ நகர ஜன்மநே
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலி நே

ஸ்வாதீந தேசிகம் வந்தே தேவராஜ பதாஸ்ரயம்
வஸோ பூஷா ப்ரபந்தஸ்ய வ்யாக்யாம் யோ க்ருத ஸாதரம் —

—————

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் –1-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

—————

முதல் பிரகரணம்-
புருஷகார உபாய வைபவ பிரகரணம் –13-சூர்ணிகை வரை புருஷகார வைபவமும் –
மேலே -14-சூர்ணிகை உபாய வைபவமும் –
மேலே -22-சூர்ணிகை வரை உபய சாதாரண வைபவமும் அருளிச் செய்கிறார் –

———–

ஸ்ரீ யபதியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் -ஸமஸ்த கல்யாண குணாத்மகனான -ஸர்வேஸ்வரன் -தன் நிர்ஹேதுக கிருபையாலே
அசித் அவிசேஷிதாந் -இத்யாதியில் சொல்லுகிறபடியே
கரண களேபர விதூரராய் -போக மோக்ஷ ஸூ ன்யரான சேதனருக்கு கரண களேபரங்களைக் கொடுத்து
இவர்களுக்கு புருஷார்த்த -தத் சாதன -ஞானம் பிறக்கைக்காக வேதங்களையும் -வேத உப ப்ரும்ஹணங்க ளான ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களையும் கொடுத்து அருள
அவற்றில் சொல்லுகிற தத்வ ஹித புருஷார்த்தங்கள் ஒருவருக்கும் அவகாஹித்து அறிய அரிதாகையாலே
தத் அவகாஹன சதுரரான நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்த வசன ஸ்ரேஷ்டங்களாலே அலங்க்ருதமான அர்த்த விசேஷங்களை
பிள்ளை தம் பரம கிருபையாலே இவ்வசன பூஷண கிரந்த முகேந அருளிச் செய்கிறார் –


சூர்ணிகை -1- வேதார்த்தம் அறுதியிடுவது -ஸ்ம்ருதி -இதிஹாஸ -புராணங்களாலே –

இத்தால் இப் பிரபந்த ப்ரதிபாத்யங்களான அர்த்த விசேஷங்களுக்கு எல்லாம் ப்ரதிபாதிக ப்ரமாணம்
பிரம விப்ர லம்பாதி தோஷ சம்பாவன கந்த ரஹிதமான வேதம் என்னும் இடம்
உபக்ரமத்திலே -உளன் சுடர் மிகு சுருதியுள் -என்று அருளிச் செய்கையாலும்
ப்ரத்யக்ஷம் ஏகம் ஸர்வாகா -இத்யாதி க்ரமத்திலே அல்லாதார் ப்ரத்யஷாதிகளை ப்ரமாணமாகக் கொள்ளா நிற்க
ஆதவ் வேதா பிரமாணம் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில்-2-19- என்று பிரமாணாந்தரங்களில் பிரதான பிரமாணமாக பட்டர் வேதத்தை அங்கீ கரிக்கையாலும்
இவரும் வேதார்த்தம் அறுதியிடுவது -என்று உபக்ரமித்து அருளிச் செய்கிறார் –

வேதார்த்தம் அறுதியிடுவது –
பூர்வ உத்தர பாக த்வய ரூபமான நிகில வேத வேதாந்த தாத்பர்ய நிச்சயம் பண்ணுவது –

ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களாலே -என்றது
ப்ராயேண பூர்வ பாகார்த்த பூரணம் தர்ம ஸாஸ்த்ரத இதிஹாஸ புராணாப்யாம் வேதாந்தார்த்த ப்ரகாஸ்யதே-என்றும்
இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸம் உப ப்ரும்ஹ யேத் -என்றும்
சொல்லுகையாலே இவற்றைக் கொண்டே அவற்றை அறுதியிட்டு வேண்டும் என்கிறார்

———————————

சூரணை-2

ஸ்ம்ருதியாலே பூர்வ பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –
மற்றை இரண்டாலும் உத்தர பாகத்தில் அர்த்தம் அறுதி இடக் கடவது –

ஸ்ம்ருதியாலே இத்யாதி –
இத்தால் இந்த வேதத்தினுடைய பூர்வ உத்தர பாக்க த்வயத்தில்
கபந்த மீமாம்சகனான பாட்டனையும்
ராஹு மீமாம்சகனான மாயா வாந்தியையும்
போல் அன்றிக்கே -உபய பாகமும் ஏக ஸாஸ்த்ர தயா பிரமாணமாக அங்கீ க்ருதம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்
இதில் எந்த பாகத்தில் அர்த்தம் எத்தாலே அறுதி யிடக் கடவது என்னில்
ஆசார வ்யவஹார ப்ராயச்சித்தங்களை விதிக்கிற ஸ்ம்ருதியாலே கர்ம பாகமான பூர்வ பாக அர்த்தத்தை அறுதி யிடக் கடவது என்கிறார்
மற்றை இரண்டாலும் -இத்யாதி
ஸர்வேஸ்வரனுடைய குண சேஷ்டி தாதிகளை பிரகாசிப்பிக்கிற இதிஹாஸ புராணங்களாலே உத்தர பாக அர்த்தத்தை அறுதி இடக் கடவது -என்கிறார் –

——–

சூரணை -3
இவை இரண்டிலும் வைத்து கொண்டு இதிஹாசம் பிரபலம் –

இவை இரண்டிலும் -இத்யாதி
யஸ்மின் கல்பே து யத் ப்ரோக்தம் -இத்யாதிப்படியே
பகவத் அவதாரமான வேத வியாசனனாலே மஹா பாரதம் ப்ரவ்ருத்தமாகையாலும்
வேத வேத்யே பரே பும்ஸி -இத்யாதிப்படியே
சாஷாத் வேத அவதாரமான ஸ்ரீ ராமாயணம் அயோ நிஜரான ஸ்ரீ வால்மீகி பகவானாலே ப்ரவ்ருத்தமாகையாலும்
இதிஹாசம் ப்ரபலம் என்கிறார் –

———-

சூரணை -4
அத்தாலே அது முற் பட்டது –

அத்தாலே அது முற் பட்டது –என்றுகீழ் உக்தமான பிரகாரத்தாலும்
இதிஹாஸ புராணாநி கல்பான் என்றும்
இதிஹாஸ புராணாப்யாம் -என்றும்
இத்தை ஸ்ருதி ஸ்ம்ருதிகள் முற்பட எடுக்கையாலே
புராணத்துக்கும் ப்ரமாணத்வ ஸாம்யம் உண்டாய் இருக்க இதிஹாசம் முற்பட்டது
வர்ண ஸாம்யம் உண்டாய் இருக்க க்ஷத்ரியாதிகளுக்கு முன்னே ப்ராஹ்மணனை எடுக்குமா போலே முற்பட்டது -என்கை –

———

சூரணை -5-

இதிஹாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது –
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது –-

இனி -இதிஹாஸ ஸ்ரேஷ்டம் -என்றது
நாராயண கதாம் இமாம் -என்று தொடங்கி
பாரத வம்சத்தையும்
பூசல் பட்டோலையும் -புணர்ந்து
தத் அர்த்தமாக -வாசம் ஸுரி கதாலாப கங்கயைவ புநீம் அஹே -என்று எச்சில் வாய் ஸூத்தி பண்ண வேண்டாத படி
கோன் வஸ்மின் -என்று தொடங்கி அவனுடைய அவதார சேஷ்டிதங்களையே சொல்லித் தலைக்கட்டுகையாலே
சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது -இத்தால்
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் ஸீதாயாஸ் சரிதம் மஹத் -என்றும்
ஸ்ரீ மத் ராமாயணம் அபி பரம் ப்ரணிதா த்வச் சரித்ரே -என்றும் சொல்லுகிறபடியே
சாமாந்யேன ஸ்திரீகளுக்குச் சிறை இருக்குமது ஹேயமாய் இருக்க
ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் -என்கிற தன்னை
அழிய மாறி
சிறை இருந்த தேவ ஸ்திரீகளை விடுவித்து
அவ்விருப்பிலே பிராணி ரக்ஷண அர்த்தமாகாது தான் இருக்கையாலே வந்த ஏற்றத்தைச் சொல்கிறது –

தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் -என்னக் கடவது இறே

மஹா பாரதத்தில் –இத்யாதி
ஸ்திரீகளுக்கு சிறை இருக்குமோ பாதி புருஷனுக்கு தூது போகை ஹேயமாய் இருக்க
புருஷோத்தமனான தான் ஆஸ்ரித வ்யாமோஹத்தாலே
இன்னார் தூதன் என நின்றான் -என்னும்படி
முன்புற்றை நெஞ்சாறல் தீர்ந்தமை தோற்ற ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே இட்ட சட்டை வெடிக்க -நிற்கையாலே வந்த ஏற்றத்தைச் சொல்லுகிறது –

——–

சூரணை-6-

இவை இரண்டாலும் புருஷகார வைபவமும் –
உபாய வைபவமும் -சொல்லிற்று ஆய்த்து –

இவை இரண்டாலும் இத்யாதி
ஆக -வேதார்த்தம் என்று தொடங்கி -பிராமண சோதனத்தைப் பண்ணி –
இப்படி சோதிதமான பிராமண ப்ரதிபாதிதமான அர்த்தம் புருஷகார -உபாயங்கள் -என்று பிரதமத்திலே ப்ரஸ்தாவித்து –
அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா – என்று
தர்மே பிரமீய மாணே ஹி வேதேந கரணாத்மநா -என்றும்
தர்ம ஸம்ஸ்தாபன அர்த்தாய ஸம்பவாமி -என்றும்
வேதங்களுக்கும் வேத்யனுக்கும் சேதனர்க்கும்
சித்த ஸ்வரூபமான தர்ம சம்ஸ்தாப நத்திலே தாத்பர்யமாகையாலே
இப்பிரபந்தத்திலும் ஒரு முமுஷுவுக்கு ஞாதவ்யமான தத்வ ஹிதாதி ஸகல அர்த்தங்களையும் சாதியா நின்றதே யாகிலும்
உபாய யாதாத்ம்யத்தை வெளியிடுகையிலே தாத்பர்யமாகையாலே அதுக்கு உபயுக்தமாக பிரதமத்திலே புருஷகார உபாயங்களை அருளிச் செய்கிறார் –
சிறை இருக்கையும்
தூது போகையும் -ஆகிய
இவை இரண்டாலும் புருஷகார உபாயங்களினுடைய வைபவங்களை சொல்லிற்றாய் விட்டது என்கிறார் –

————

சூரணை -7-

புருஷகாரம் ஆம் போது கிருபையும் பாரதந்த்ர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும்-

புருஷகாரமாம் போது -என்று தொடங்கி
ப்ரஸ்துதமான புருஷகார வேஷத்துக்கு அனுரூபமான குணங்களை விதிக்கிறார் –
இதில் கிருபை வேணும் என்றது –
தன்னைப் பற்றும் போது அவ்யவதாநேந பற்ற வேண்டுகையாலே -சேதன விஷயமாக கிருபை வேணும்
புருஷகார தசையில் தான் ஈஸ்வரனைப் பற்றும் போதும் அவ்யவதாநேந பற்ற வேண்டுகையாலே
அவனுக்கு சேஷபூதையாய் நம்முடைய நினைவே தனக்கு நினைவாம்படி இருக்கிறவள் சொல்லும் கார்யம் என்றும்
கொள்ளுகைக்காகவும் பாரதந்தர்யமும் அநந்யார்ஹத்வமும் வேணும் என்கிறது –

————————

சூரணை-8-

பிராட்டி முற்பட பிரிந்தது தன்னுடைய கிருபையை வெளி இடுகைக்காக –
நடுவில் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளி இடுகைக்காக –
அநந்தரம் பிரிந்தது அனந்யார்ஹத்வத்தை வெளி இடுகைக்காக –

பிராட்டி முற்படப் பிரிந்தது –இத்யாதியாலே
யுக்தமான குணங்கள் புருஷகாரத்துக்கு பிராமண ஸித்தம் என்னும் இடத்தை வெளியிடுகிறார் –
இதில் முற்படப் பிரிந்தது கிருபையை வெளியிட்டபடி எங்கனே என்னில்
இஹ சந்தோ ந வா சந்தி -இத்யாதியாலே
பர அநர்த்தம் கண்டு ஸஹிக்க மாட்டாதே
மித்ர மௌபயிகம் கர்த்தும் -இத்யாதியாலே அநர்த்த பரிஹாரத்தை அருளிச் செய்கையாலும்
கார்யம் கருணமார்யேண – என்று தன்னை நலிந்தாரையும் ரஷிக்கை யாலும்
கிருபையை வெளியிட்டு அருளினாள்-

வந வாஸ வ்யாஜேந வந்த நடுவில் பிரிவில்
த்யஜேயம் ராகவம் வம்சே பர்துர் மா பரிஹாஸ்யதி என்று
பெருமாள் நினைவை பின் சென்று
பாஸ்கரேண ப்ரபா யதா -என்கிற தான் பிரிந்து இருக்கையாலே
பாரதந்தர்யத்தை வெளியிட்டாள் -என்கிறார்

அநந்தரம் -இத்யாதியாலே
வால் மீகி தன் ஆஸ்ரமத்தில் நின்றும் இவளை எழுந்து அருள்வித்துக் கொண்டு வர
ஜனக ஸமான மஹரிஷி இடத்திலே இருக்கையாலே நீ செய்ய வேண்டுவது ஓன்று இல்லையே யாகிலும்
லோக அபவாத பரிஹார அர்த்தமாக ஒரு ப்ரத்யயத்தைப் பண்ணி வா என்ன
நான் பெருமாளுக்கு அநந்யார்ஹை யாகில் பூமி நீயே ஜனனியானமை தோற்ற இடம் தா -என்று
எழுந்து அருளுகையாலே அநந்யார்ஹத்தை வெளியிட்டு அருளினாள் என்கிறார் –

————–

சூரணை-9-

சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள் இரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும் –

சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள் இரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும் – என்றது
இப்படி அவதார ப்ரயுக்தமான ஸம்ஸ்லேஷ தசையோடு விஸ்லேஷ தசையோடு வாசியற
ஸீதா சமஷம் காகுஸ்த்தம் இதன் வசனம் அப்ரவீத் -என்றும்
ஸீதாம் உவாஸ -என்றும் சொல்லுகையாலே -ஸம்ஸ்லேஷ திசையிலும்
விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞ –இத்யாதிகளாலே விஸ்லேஷ தசையிலும் புருஷீ கரிக்கையே இவளுக்கு ஸ்வரூபம் என்னும் இடம் ப்ரகாசிக்கும் என்கிறார் –

—————-

சூரணை-10-

ஸம்ஸ்லேஷ தசையில் ஈஸ்வரனைத் திருத்தும்
விஸ்லேஷ தசையில் சேதனனைத் திருத்தும் –

ஸம்ஸ்லேஷ தசையில் இத்யாதியாலே
இவள் இன்ன தசையில் இன்னாரைத் திருத்தும் என்னும் வகையை அருளிச் செய்கிறார்

————-

சூரணை -11

இருவரையும் திருத்துவதும்  உபதேசத்தாலே –

இருவரையும் நிறுத்துவதும் -என்று தொடங்கி
இவ்வகையில் இவள் திருத்தும் பிரகாரம் ஏது என்ன

நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனைத் திருத்தி உபதேசிக்கை யாவது –
பிதேவ த்வத் ப்ரேயான் -இத்யாதியில் படியே
தேஹம் பொல்லா வாக்கை -தேஸம் இருள் தரும் மா ஞாலம் -தேசிகரோ என்னில் பகவத் விமுகர்
மணல் சோற்றில் கல் ஆராய்வார் உண்டோ -இவர்கள் தோஷத்தை வாத்சல்யத்துக்கு இரையாக்கி அங்கீ கரித்து அருளீர் -என்று உபதேசிக்கையும்

இச்சேதனனைத் திருத்தி உபதேசிக்கை யாவது
விதித –இத்யாதி களாலே அவனுடைய வாத்சல்யாதி குணங்களை பிரகாசிப்பித்துப் பற்றுவிக்கையும்

—————–

சூரணை-12-

உபதேசத்தாலே இருவருடையவும் கர்ம பாரதந்த்ர்யம் குலையும் –

உபதேசத்தாலே -இத்யாதியால் -இப்படி இருவருக்கும் உபதேசிகையாலே
சேதனனுக்கு அவஸ்யம் அநு போக்தவ்யமான -கர்ம பரதந்த்ரனாய் புஜிக்கை -குலையும்
ஈஸ்வரனுக்கு சேதனருடைய புண்ய பாப அநு ரூபமாக அநுபவிக்கக் கடவோம் என்று
இருக்கும் ஸ்வ சங்கல்ப பாரதந்தர்யமும் குலையும் என்கிறார்
இவ் விரண்டு வகைக்கும் ஈஸ்வரன் ஸஹித்தோம் என்கை இறே உள்ளது –

————-

சூரணை -13-உபதேசத்தாலே மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும் –
ஈஸ்வரனை அழகாலே திருத்தும் –

உபதேஸத்தாலே மீளாத போது என்றது
நிரங்குச ஸ்வா தந்தர்யத்தாலும் -அநாதி கால பாப வாஸனையாலும் -இவ்விருவரும் மீளாத போது என்றபடி
சேதனரை -இத்யாதி –
சேதனரை அருளால் திருத்துகை யாவது
பங்கயத்தாள் திருவருள் -என்கிற காருண்ய வர்ஷத்தாலே பதம் செய்விக்கை
ஈஸ்வரனை அழகாலே திருத்துகை யாவது
உசிதைர் உபாயைர் விஸ்மார்ய ஸ்வ ஜனயஸி –என்கிறபடியே
கச்சை நெகிழ்த்தல் -கண்ணைப் புரட்டுதல் செய்து -வடிவு அழகாலே மயக்கி -வசமாக்கிக் கொள்ளுகை –

———————-

ஆக
ஸ்ரீ ராமாயணத்தால் சொன்ன புருஷகார ஸ்வரூபத்தை ஸ ப்ரகாரமாகச் சொல்லி
மஹா பாரத ப்ரதிபாத்யமான உபாய ஸ்வரூபத்தை அருளிச் செய்கிறார் மேல் -அறியாத அர்த்தங்களை -என்று தொடங்கி

சூரணை -14
அறியாத அர்த்தங்களை அடைய அறிவித்து –
ஆச்சார்ய க்ருத்யர்த்தையும்
புருஷகார க்ருத்யர்த்தையும்
உபாய க்ருத்யர்த்தையும்
தானே ஏறிட்டு கொள்ளுகையாலே
மகா பாரதத்தில் -உபாய வைபவம் சொல்லிற்று ஆய்த்து –

அர்ஜுனனுக்குத் தத்த்வ விவேகாதிகளாலே அஞ்ஞாத ஞாபனம் பண்ணுகையாலே -ஆச்சார்ய க்ருத்யத்தையும்
தானே அவனை ஆஸ்ரயிப்பித்துக் கொள்ளுகையாலே புருஷகார க்ருத்யத்தையும்
கிருஷ்ணம் தர்மம் ச நாதனம்-என்று உபாயம் தானேயாய் இருக்கச் செய்தே
அவ் வர்ஜுனன் -த்வமே உபாய பூதோ மே பவ – என்னாது இருக்க
மாமேகம் சரணம் வ்ரஜ -என்று உபாய க்ருத்யத்தையும் தானே ஏறிட்டுக் கொள்ளுகையாலே –

அன்றிக்கே
வஸ்து உபேயமாய் இருக்க இவனுடைய செயலறுதியாலே உபாயம் ஆகிறான் ஆகையாலே ஏறிட்டுக் கொண்டான் என்கிறது ஆகவுமாம்

ஆச்சார்ய க்ருத்யத்தை ஏறிட்டுக் கொண்டவன் -தானே உபாய க்ருத்யத்தையும் ஏறிட்டுக் கொள்ளுகையாலே
இங்கே இப் பிரபந்த தாத்பர்யமான சரம உபாயம் ஸூசிதம் –

————-

ஆக
கீழ் -புருஷகார உபாயங்களினுடைய வை லக்ஷண்யத்தை ச பிரகாரமாக அருளிச் செய்தாராய் நின்றது
இனி புருஷகாரம் உபாயம் சொல்லிற்று என்னாதே
புருஷகார வைபவமும் உபாய வைபவமும் சொல்லிற்று என்பான் என் என்ன
இவற்றுக்கு வைபவமாவது -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -புருஷகாரத்துக்கும் -இத்யாதி –

உபய சாதாரண வைபவம்
சூரணை-15-

புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் வைபவம் ஆவது –
தோஷத்தையும் -குண ஹானியையும் பார்த்து உபேஷியாத அளவு அன்றிக்கே –
அங்கீகாரத்துக்கு அவை தன்னையே பச்சை ஆக்குகை-

இதில் தோஷமும் குண ஹானியும் ஆகிறது -அக்ருத்ய கரணமும் க்ருத்ய அகரணுமும் -ஆகையாலே இவை இரண்டையும் பார்த்து
சேதனரை புருஷகார உபாய பூதரானவர்கள் விட மாட்டாத அளவன்றிக்கே
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் -என்கிறபடியே
அவர்களை அங்கீ கரிக்கும் இடத்தில் -அவை தன்னையே ஆதரணீயமான உபஹாரமாக்கி அங்கீ கரிக்கை -என்கிறார்
த்யஜ்யதே யதி தோஷேண குணேந பரி க்ருஹ்யதே ஸ்வ ஸாதாரண அர்த்தோயம் ஆஸ்ரிதஸ்ய க்ருதம் பலம் -என்னக் கடவது இறே –

————

சூரணை -16
இரண்டும்  இரண்டும் குலைய வேணும் என்று இருக்கில்
இரண்டுக்கும் இரண்டும் உண்டாயிற்றாம் –

இரண்டும் இரண்டும் இத்யாதி –
இரண்டும் என்கிறது -கீழ் ப்ரஸ்துதமான -புருஷகார உபாயங்களை –
மறித்து இரண்டு என்கிறது -தோஷ குண ஹானிகளை
இவை இரண்டும் போனவாறே அங்கீ கரிக்கிறோம் என்று இருக்கில்
இரண்டுக்கும் இரண்டும் உண்டாகை யாவது-புருஷகாரத்துக்கும் உபாயத்துக்கும் அந்த தோஷ குண ஹாநிகள் உண்டாகை
புருஷகாரத்துக்கு அந்த தோஷ குண ஹாநிகள் வரும்படி எங்கனே என்னில் –
மாத்ருத்வ ப்ரயுக்தமான சம்பந்தத்தைப் பாராதே ஸ்தநந்த்ய ப்ரஜையினுடைய தலையைத் திருகித் தள்ளும் தாயைப் போலே இவனை உபேக்ஷிக்கையாலும்
பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபமான கிருபையே வடிவான தன்னுடைய கிருபையை இவனுக்கு பண்ணாது ஒழிகையாலும்
உபாயத்துக்கு தோஷ குண ஹாநிகள் ஆவது
பித்ருத்வ ப்ரயுக்தமான சம்பந்தத்தைப் பாராதே-ஷிபாம் யஜஸ் ரம ஸூபான் -என்று தள்ளுகையும்
இவனுடைய தோஷங்களை கணக்கறு நலமான தன் வாத்சல்யத்துக்கு இரையாக்காது ஒழிகையும்

————–

சூரணை-17-

இரண்டும்  குலைந்தது என்று இருக்கில்
இத் தலைக்கு இரண்டும் உண்டாயிற்றாம் –

இரண்டும் குலைந்தது என்று இருக்கில் –இத்யாதி
சேதனன் நம்முடைய தோஷ குண ஹானிகள் போனவாறே அன்றோ
இது நெடும்காலம் அங்கீ கரியாதவன் இன்று அங்கீ கரிக்கிறது என்று இருக்கில் இவனுக்கு அவை உண்டாம்படி என் என்னில்
தம் ஸ்வம் ஆகையாலே விட மாட்டாமல் ஸ்வாமி யானவன் அங்கீ கரித்தான் என்று இராமையாலே தோஷமும்
நம் தோஷங்களைப் பாராதே நிர் ஹேதுகமாகப் பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அங்கீ கரித்தான் என்று இராமையாலே குண ஹானியும் யுண்டாய்த்து என்கிறார் –

———–

சூரணை -18-

ராஷசிகள் தோஷம் பிரசித்தம் –

இனி புருஷகாரம் இவை இரண்டும் பாராதே இப்படிப் பச்சை யாக்கி அங்கீ கரித்த இடம் உண்டோ என்ன
ராக்ஷஸிகள் தோஷம் ப்ரஸித்தம் -என்று அவ்வர்த்தத்தை வெளியிடுகிறார்
இங்கு ராஷசிகளுக்கு தோஷ குண ஹானிகளாவது
ததை வார்த்ராபராதா -என்னும்படி தர்ஜன பர்த்ஸ நாதிகளிலே ஸந்ததம் தத் பரைகளானதுவும்
ஸ்த்ரீத்வ சாமான்யத்தை இட்டாகிலும் த்ரிஜடாதிகளைப் போலே அனுகூல பாஷணாதிகள் பண்ணாமையும்

இவற்றைப் பச்சையாக்கி அங்கீ கரித்த படி எங்கனே என்னில்
இவர்களை நலிய ஆர்த்தித்த திருவடியைக் குறித்து
பாபாநாம் வா ஸூபா நாம் வா -என்றும்
ராஜ ஸம்ஸ்ரய வஸ்யா நாம் குரவந்தீ நாம் பராஜ்ஞயா விதேயாநாம் ச தாஸீ நாம் க குப்யேத் வாந ரோத்தம -என்றும்
ஸ்வாமிக்கு சந்த அநு வ்ருத்திகளாய்க் கொண்டு சாவதானைகளாக நலிந்தவர்கள் ஓக்க பூர்ண அதிகாரிகள் உண்டோ –

இப்படி ஸ்வாமி கார்யம் செய்தார் தண்ட் யராம் இடத்தில் உன்னோடு அவர்களோடு வாசியுண்டோ என்று மன்றாடி மறுதலைத்து
ரஷந்த்யா பவநாத்மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா -என்னும்படி அவர்களை ரக்ஷித்து
பவேயம் சரணம் ஹி வ -என்று அங்கீ கரிக்கையாலே ப்ரகாசிதம் –

————

சூரணை-19-

ஜிதேந்திரியரில் தலைவனாய்
ஆஸ்திக அக்ரேசரனாய்
கேசவச்யாத்மா-என்று-கிருஷ்ணனுக்கு தாரகனாய் –
இருக்கிற அர்ஜுனனுக்கு தோஷம் எது என்னில்
பந்துக்கள் பக்கல்-சிநேகமும் -காருண்யமும் -வத பீதியும்-

சூரணை-20-

திரௌபதி பரிபவம் கண்டு இருந்தது-கிருஷ்ண அபிப்ராயத்தாலே பிரதான தோஷம் –

இனி உபாய பூதன் இரண்டும் பாராதே அங்கீ கரித்த இடம் உண்டோ என்ன -அத்தைச் சொல்லுகிறது மேல்
ஜிதேந்த்ரியரில் தலைவனாய் -இத்யாதி
ஊர்வசியையும் முறை கூறி உபேக்ஷிக்கும் படி -இந்த்ரிய ஜெயம் பண்ணினவர்களில் ப்ரதானனாய்
ப்ரவஹ்யாம் யந ஸூயவே -என்று வைப்பான அர்த்தங்களையும் பரக்க உபதேஸிக்கும் படி பரம ஆஸ்திகனாய்
பிராணஸ்ய ப்ராண -என்று லோகத்தில் தாரகங்களானவற்றுக்குத் காரகனான கிருஷ்ணனுக்கும் -அர்ஜுன கேஸவஸ் யாத்மா -என்னும்படி ப்ராண பூதனான அர்ஜுனனுக்கு
தோஷம் பாராதே அங்கீ கரித்த படி எங்கனே என்னில்
பந்துக்கள் இத்யாதியாலே
அவனுக்கும் ஸாமான்ய தோஷமும் விசேஷ தோஷமும் உண்டு என்னும் இடம் காட்டுகிறார் –
அதாவது
யுத்த யுன்முகனான ஷத்ரியனுக்கு வத பீதி வர்த்தித்தால் யாகத்தில் பஸ்வாலம்பந பீதியோ பாதி ப்ராயச்சித்த விஷயமாகையாலே
ஆச்சார்யான் மாதுலான் ப்ராத்ரூன் புத்ரான் பவுத்ரான் ஸகீம் ஸ்ததா ஸ்வ ஸூரான் ஸூ
ஹ்ருதஸ் சைவ சேநயோர் உபயோர் அபி -என்று
ப்ரக்ருதி பந்துக்கள் பக்கல் யுண்டான ஸ்நேஹமும் -சாமான்யேன உண்டான பர அநர்த்த அஸஹமான காருண்யமும்
இவர்களை வதித்தால் வரும் அநர்த்தத்தில் பீதியும் வர்த்தித்த சாமான்ய தோஷமும் பாராமையும்
சங்க சக்ர கதா பாணே -இத்யாதியால்
சரணாகதையான திரௌபதியினுடைய பரிபவத்தை தர்ம ஆபாஸ அதி லங்கந பீதியாலே கூடப்பார்த்துக் கொண்டு இருந்த விசேஷ தோஷமும் பாராமையும் அங்கீ கரித்தமை யுண்டு -என்கிறார் –

—————–

சூரணை -21-

பாண்டவர்களையும் நிரசிக்க பிராப்தமாய் இருக்க- வைத்தது திரௌபதி உடைய மங்கள சூத்ரத்துக்காக –

பாண்டவர்களை -இத்யாதியாலே
இந்த தோஷ துஷ்டதையை அர்ஜுனனுக்கும் ஸ்தீரி கரிக்கிறார்
ஞானாதிகரான பீஷ்மாதிகள் தன்னை யுள்ளபடி அறிந்து இருக்கச் செய்தே அவர்களையும் நிரசித்தது
அவளுடைய பரிபவத்தைப் பொறுத்து இருக்கையாலே இறே
இங்கனே இருக்க அர்ஜூனாதிகளை நிரசியாது ஒழிந்தது விரித்த தலை கண்டு பொறுக்க மாட்டாதவன் வெறும் கழுத்துக் கண்டு பொறுக்க மாட்டாமை இறே -என்கிறார்

——–

 

சூரணை -22-

அர்ஜுனனுக்கு
தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும்
பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும்
இவளுக்காக —

அர்ஜுனனுக்கு -இத்யாதியாலே
இப்படி தலை யறாத மாத்ரமேயோ
அநுகூலா சரணங்களைப் பண்ணிற்றும் இவளுக்காக இறே என்கிறது
அங்கன் அல்லது பிரபத்தி யுபதேச அநந்தரத்திலே
இதம் தே நாதபஸ்காய -இத்யாதி –இச்சீரிய அர்த்தத்தை இவனுக்கு வெளியிட்டோமே என்று அனுதபிக்கக் கூடாது இறே

ஆக
இப்படி புருஷகார வைபவம் -என்று தொடங்கின அர்த்தத்தை இவ்வளவாகத் தலைக்கட்டி
பிரபத்தி யுபதேசம் என்ற ப்ரசங்கத்தாலே இந்த பிரபத்தி வை லக்ஷண்யத்தை ச ப்ரகாரமாக அருளிச் செய்கிறார் மேல் –

———–

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .-

 

ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வியாக்யானம்

July 17, 2022

ஸ்ரீ உவே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் முதன் முறையாக ஓலைச்சுவடியில் இருந்து பதிப்பித்து உபகரித்து அருளினார்

ஸ்ரீ ஆழ்வார் திரு நகரி ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை மேலைத் திரு மாளிகை ஸ்ரீ கோவிந்தாரியாருடைய பார்யை
ஸ்ரீ மதி அலமேலு மங்கை அம்மங்கார் அவர்கள் 1919-1920-தமிழக அரசின் கீழ்த் திசைச் சுவடி நூலகத்துக்கு வழங்கியதாக நூலாகக் குறிப்பு உள்ளது
ஓலைச் சுவடியின் தொடக்கத்தில்
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை திரு மாளிகை பொன்னப்பங்கார் ஏடு –
என்று குறிப்பிடப் பெற்று உள்ளது

இந்த சுவடியின் தொடக்கத்தில்
நம ஸ்ரீ சைல நாதாய குந்தீ நகர ஜன்மநே ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே -என்ற தனியனும்
ஸ்வாதீந தேசிகம் வந்தே தேவராஜ பத ஆஸ்ரயம்
வாஸோ பூஷா பிரபந்தஸ்ய வ்யாக்யாம் யோ க்ருத ஸா தரம் –

தேவ ராஜர் என்ற இயல் பெயர் கொண்ட நாலூர் ஆச்சான் பிள்ளை திருவடிகளைப் பற்றியவர்

ஸ்வாதீந தேசிகர் –கூர குலோத்தம தாசர் என்ற ஆச்சார்யரைத் தமக்கு அதீனராக யுடைய திருவாய் மொழிப்பிள்ளை என்றபடி
பாண்டிய அரசனின் பிரதான மந்திரியான திருமலை ஆழ்வார் என்னும் திருவாய் மொழிப்பிள்ளை
ஆழ்வார் திருநகரியை காடு திருத்தி நாடாக்கி –
மறைத்து வைக்கப்பட்டு இருந்த நம்மாழ்வார் உத்சவ விக்ரஹத்தையும் தேடி எடுத்து மீண்டும் ப்ரதிஷ்டை செய்வித்து
ராமானுஜ சதுர்வேதி மங்கலம் அக்ரஹாரத்தையும் ஏற்படுத்தி
பவிஷ்யதாச்சார்ய விக்ரஹத்தையும் பிரதிஷ்டை செய்வித்து
இவை அனைத்தையும் அவர் அரசுச் செல்வாக்குக் காரணமாக ஸ்வ ஆதீனமாகச் செய்த படியால் ஸ்வா தீன தேசிகர் என்று வழங்கப்பட்டார் -என்றுமாம் –

திருவாய் மொழிப்பிள்ளை வம்சத்தவர் அனைவருமே திருவாய் மொழிப்பிள்ளை என்றே வழங்கப்படுவதால்
மா முனிகளுக்கும் பிற்காலத்தில் வந்தவராலும் பண்ணப் பெற்றும் இருக்கலாம்


இதில் எங்கும் காணப்படாத சில அரிய ஐதிஹ்யங்கள் இடம் பெற்று உள்ளன –

1-உடையவருக்கும் கூரத்தாழ்வானுக்கும் இடையே நடந்த பரிமாற்றம் -சூர்ணிகை -332-ல் காணப்படுகிறது
திருக்கண் மலர் நிமித்தமாக பாஷ்யகாரருடைய நியோகாத் பெருமாள் திரு முன்பே வரதராஜ ஸ்த்வத்தை விண்ணப்பம் செய்ய
பெருமாளும் திரு உள்ளம் உகந்து அருளி -உமக்கு வேண்டுவது என் என்ன –
நான் புக்க லோகம் நாலூரானும் புக வேணும் என்ன –
அத்தைக் கேட்டு பாஷ்யகாரரும் ஆழ்வானோடே அதி குபிதராய்க் கொண்டு மடத்து ஏற எழுந்து அருள
ஆழ்வானை அருளப் பாடிட்டு-பல வேளையிலே இப்படிச் செய்தாயே -என்ன
தேவரீர் அபிமான அந்தர் கதனான அடியேனுடைய த்யாஜ்யமான சரீரத்திலே கழஞ்சு மாம்ஸம் இல்லை என்று தேவரீருடைய திரு உள்ளம் படுகிறபடி கண்டால்
ஸ்வரூப நாஸம் பிறந்த நாலூரானுக்கு அடியேன் என் பட வேணும் -என்ன –
ஆனால் நான் திரு முன்பே நியமித்த போது என் நினைந்து இருந்தாய் -என்ன
இதுவும் ஒரு விநியோகப் பிரகாரமோ என்று இருந்தேன் என்றார் இறே

2- இதே போல் பட்டருக்கு நஞ்சீயருக்கும் இடையே நடந்த பரிமாற்றம் வேறு எந்த நூலிலும் இடம் பெறாமல் இதில் சூர்ணிகை -338 ல் காணப் படுகிறது

பட்டருக்குத் திரு மாளிகையில் பரிசாரகர் திருவாராதனத்துக்கு உபாதான த்ரவ்யம் செலவாய்த்தது என்று விண்ணப்பம் செய்ய
அவரும் இப்படியேயான அர்த்தம் இல்லையோ என்ன
நஞ்சீயர் கொண்டு வந்த தானம் ஒழிய இல்லை என்ன
அவர் எங்குற்றார் என்று ஆய்ந்தவாறே
ஸேவார்த்தமாக எழுந்து அருளினார் என்று கேட்டருளி
இங்கு எழுந்து அருளினை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பரிமாற இரண்டு பணத்துக்கு அடைக்காய் அமுது கொண்டு வரச் சொல்லு என்று போக விட
அவரும் இத்தைக் கேட்டு இன்ன இடத்திலே தனம் இருக்கிறது -அத்தை எடுத்து வரச் சொல் என்னுதல்
தாமே எழுந்து அருளி எடுத்துக் கொடுத்தல் செய்யாதே
இப்படித் திரு மாளிகையிலே செலவு என்று நினைத்துத் தம்முடைய மேல் சாத்தின காஷாயத்தைக் கடையில் வைத்து அவரும் அடைக்காய் அமுது கொண்டு வர
அத்தைக் கண்டு அருளி பட்டரும் இனிய வஸ்துவை எடுத்து அழித்துக் காஷாயத்தையும் மீட்டுக் கொடுங்கோள் என்று அருளிச் செய்தார் இறே

3- மாறனேர் நம்பிக்குப் பெரிய நம்பிகள் செய்த சரம கைங்கர்யம் –
மற்ற வியாக்யானங்களிலும் குறிப்பிடப்பட்டாலும் இதில் எம்பெருமானார் பெரிய நம்பிகள் சம்வாதம் விரிவாக உள்ளது -சூர்ணிகை -234-

இச் செய்தியை உடையவர் கேட்டருளி ஸ்ரீ பாதத்திலே சென்று கண்டு லோக உபக்ரோஸம் பிறக்கும்படி தேவர் இங்கனே செய்து அருளலாமோ
இங்கன் வேண்டினாள் வேறு சில ஸத்வ நிஷ்டராய் இருப்பாரைக் கொண்டு செய்வித்தால் ஆகாதோ என்ன
ஸந்த்யாவந்தனத்துக்கு ஆள் இடுவாரைப் போலே அவர் நியமித்த காரியத்துக்கு ஆள் இட்டு இருக்கவோ என்ன
ஆகில் அங்கு உற்றைக்கு அநந்யார்ஹனான அடியேனை நியமிக்கலாகாதோ என்ன
ஆசார பிரதானரான பெருமாள் இப்படி பெரிய உடையாரை ஸம்ஸ்கரிக்கிற இடத்தில் -வை தர்ம்யம் நேஹ வித்யதே -என்ற ராமானுஜனும் இருந்திலரோ
பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமைகளுக்கு நான் போடும் சொல்லக் கடவேனாகவும்
நீர் அதில் அர்த்தத்தை அனுஷ்ட்டிக்கக் கடைவீராயுமோ இருப்பது என்று அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது -என்கிறார்
இவ்வநுஷ்டானத்தை ராஜாவும் கேட்டு இவரை அழைத்து நியமிக்க -அவனும் ஸூர்ய வம்சம் ஆகையால் நான் செய்தேன் அன்று
உங்கள் பூர்வர்கள் அனுஷ்டித்தத்தை அனுஷ்டித்தேன் அத்தனை
நான் பெருமாளின் அதிகனாய் தவிரவோ
இவர் அப்பஷியில் தண்ணியராய் தவிரவோ என்ன
அவனும் அவ்வளவில் பீதனாய் ஆதரித்து விட்டான் என்று பிரசித்தம் இறே

4- மேலும் ஒரு நிகழ்ச்சி -சூர்ணிகை -327-
ஒரு ஞானாதிகரை ஆஸ்ரயித்தார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் தம்முடைய ஆச்சார்யரானவர் ஒரு ஸம் சர்க்க தோஷத்தாலே
கீழை யூரிலே தேவதாசி பக்கலிலே சக்தராய் சர்வத்தையும் கொடுத்து நிற்கிற தசையிலே ஒரு திவஸ விசேஷத்திலே
இனி இவன் அகிஞ்சனன் என்று அவள் அநாதரிக்க -அத்தாலே விஷண்ணராய்ப் பெருமாளுடைய நந்தவனத்தில் போயாகிலும்
இப்போதே இளநீர் தொடக்கமான உபகாரங்களை ஆஹரித்துக் கொண்டு வர வேணும் என்று நிர்பந்திக்க
அந்த ஸ்ரீ வைஷ்ணவரும் அப்போதே புறப்பட்டு வந்து ஸ்ரீ பாதத்தின் கீழே தெண்டனாக விழுந்து
இப்படி இவ்வடிகளுக்கு அமுதுபடி த்ரோஹ பர்யந்தமாக ஆத்ம நாசம் பிறக்கும் அளவில் தேவரீரே ரக்ஷித்து அருள வேணும் என்று
கண்ணும் கண்ண நீருமாய்க் கொண்டு பெருமாளை சரணம் புக -உள்ளத்தே உறையும் மாலான பெருமாள் அருளாலே
அப்போதே அவர்கள் நினைவு மாறி என் செய்தோம் ஆனோம் என்று பீதனாய் இவர் பேரைச் சொல்லி அழைத்துக் கூப்பிட்டுக் கொண்டு வர
அவரும் எழுந்து இருந்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு மோஹித்து வித்தராம்படி பண்ணினார் என்கையாலே விசதமாய்க் காணலாமாய்த்து –

5- மேலும் ஒரு நிகழ்ச்சி -சூர்ணிகை -327-
ஒரு க்ராம விசேஷத்திலே வர்த்திப்பான் ஒரு க்ராமணி புத்திரனும் ஒரு சாத்விக புத்திரனும் க்ஷேத்ர அவ லோகநம் பண்ணிக் கொண்டு போருகிற சமயத்திலே
க்ராமணி புத்ரன் சாத்விக புத்ரனைப் பரிபவித்து பரிஹரித்து விட
அத்தைக் கேட்டு அவன் பிதா அவ்விடத்தில் நீ சொல்லிற்று என் என்று கேட்க
இவனும் நான் அவனோடு எத்தைச் சொல்வது மௌனியாய் வந்தேன் என்ன
ஐயோ அப்படிச் செய்ததே என்று வெறுத்து
கத ஸ்ரீஸ் ச கதாயும்ஸ் ச ப்ராஹ்யாத் வேஷ்ட்டி யோ நர -என்கையாலே
ஏக புத்திரனான அவன் அநர்த்தப்படாதே அம்பலத்தில் போயாகிலும் அவனை மெள்ள வைத்து வா – என்ன
அவனும் அப்படியே வைத்து வர
அந்த க்ராமணி அத்தை அறிந்து மிகவும் ஆதரித்தான்-என்று அருளிச் செய்வார் –

6- மேலும் ஒரு நிகழ்ச்சி -சூர்ணிகை -327-
ஒரு நகரத்தில் ஒரு வேஸ்யை த்யூத வியாபாராதி வினோத அர்த்தமாகப் புறம் திண்ணையைக் காட்டி வைத்தாளாய்
அதிலே ஒரு பாகவதன் வர்ஷத்துக்கு ஒதுங்கி இருக்க -மத்திய ராத்திரி யானைவாறே
தலையாரிக்காரர் இவனைத் தனியே கிடப்பான் என் -இவன் தஸ்கரன் என்று ஹிம்சிக்கப் புக
அத்தை வேஸ்யையும் தன்னை உத்தேசித்து வந்த அபிமத விஷயமாக நினைத்துப் பிற்பட்டு அவர்களால் வந்த
வியஸனத்தை நிவர்த்திப்பித்துத் தனக்கு அபிமதன் அல்லாமையாலே மீண்டு போக
அத்தை அவளுக்கு ஸூஹ்ருதமாக ஈஸ்வரன் முதலிடுகையாலே -அவர்களுக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் –என்றும் –


இதிஹாச புராண கதைகள் –
துளஸீ மஹாத்ம்யத்தில் சொல்லுகிற கதை முதலானவற்றை ஹருதீ கரித்து சூர்ணிகை -260-இல் –

ஒரு செய் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
அதாவது
ஒரு பாகவதனுடைய திரு மாளிகைக்கு பார்ஸ்வ வார்த்தியாய் இருப்பான் ஒரு ப்ராக்ருதன் காட்டிலே போய் விறகு ஒடித்துக் கட்டின அளவிலே
ஒரு துளஸீ வனத்தைக் கண்டு தம் அசல் அகத்தில் அவனுக்கு ஆதரணீயம் என்று அத்தை ஆஹரித்த அளவிலே
இவனுக்கு அந்திம காலம் ப்ராப்தமாய் -அத்தைப் பற்ற யம தூதரும் வந்து ப்ரவேசிக்க -இவன் கையும் திருப் பள்ளித் தாமமுமான நிலையைக் கண்டு
மேலிட மாட்டாதே காலனும் விறகு கட்டிலே பாம்பாய் ப்ரவேசித்துக் கிடக்க-அத்தை அவன் வஹித்துக் கொண்டு வாரா நிற்க
அத்தைக் கண்டு அப் பாகவதனும் முந்துற அவ்விறகு கட்டைப் போக விடுத்து அதிலே கிடக்கிற பாம்பையும் அவனுக்கு காட்டி
அவன் கையைப் பிடித்துக் கொண்டு திரு முன்பே சென்று இச்செய்தியை அவனுக்கு உணர்த்தித்த திருவடிகளிலே சம்பந்திப்பித்து உஜ்ஜீவிப்பித்தான் என்றது இறே

அடுத்தது சூர்ணிகை -321-இல்
இந்த குரு ஸூஸ்ருஷையே பிரதானம் என்னும் இடம் கௌதமன் பக்கலிலே வித்யார்த்தியாய்ச சென்ற ப்ராஹ்மண புத்ரனைத்
தன்னுடைய பசு பாலந கர்மத்திலே நியோகித்து விட்டு ஸிஷ்யனுடைய ஸூஸ்ரூஷா சாதன அர்த்தமாக பிஷா சரணத்தை நிஷேதித்து அப் பசுக்களின் பயஸ்ஸை ஆச்சார்யன் த்ரவ்யத்வேந ஆகாது என்று நிரோதித்துக்
கன்று உண்கிற போதில் அதின் கடைவாய் நுரைகளை உச்சிஷ்டம் என்று நிரோதித்து
இப்படிப் பல வகைகளாலும் அவனுடைய ஜீவனத்தைச் சுருக்க -அவனும் வீழ் கனியும் ஊழ் இலையும் நுகர்ந்து பசு மேய்க்கக் கோடை முதிர்ந்து அப்பச்சிலைகளும் தீய்ந்தவாறே
எருக்கம் பழுத்தலை பஷித்துக் கண் வெடித்துப் பசு மேய்த்து வாரா நிற்கப் பாழ் குழியிலே விழுந்து கிடைக்க
அவ்விடத்திலும் கன்றுண்டு போகிறதே என்று கிலேசப்பட
அந்த குருவும் பத்னியும் அங்கே வந்து இவனை எடுத்து கிருபை பண்ணி ஸர்வஞ்ஞனாம் படி ப்ரஸாதித்தார்கள் என்கையாலே வ்யக்தம் –

நிர்வாஹங்கள்
சூர்ணிகை -54-
பிதாவுக்குப் புத்ரன் எழுத்து வாங்குமா போலே
இதுக்கு -மா முனிகள் -தாமப்பனுக்கு புத்ரனானவன் –நீ என்னை ரக்ஷிக்க வேணும் -என்று எழுத்து வாங்கினால்
இவரோ -ஜனகன் பக்கலிலே ஒரு ப்ரயோஜனத்தை அபேக்ஷித்து புத்ரன் தன்னை ஆவண ஓலை எழுதி அறவிலை செய்து கொடுக்குமா போலே –என்று அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை -165-இல்
ஆபரணம் அநபிமதமாய்-அழுக்கு அபிமதமாய் -இரா நின்றது இறே
இதற்கு மா முனிகள் -லோகத்தில் விஷய ப்ரவணராய் இருப்பவருக்கு அபிமத விஷயத்தினுடைய ஓவ்ஜ்வல்ய ஹேதுவான ஆபரணம் அநபிமதமாய்
அநவ்ஜ்வல்ய ஹேதுவான அழுக்கு அபிமதமாய் இரா நின்றது இறே -என்கை –
இவரோ -அதாவது ராஜகுமாரன் வேட்டைக்குப் போய் மீண்டு ராஜப் பெரும் தெருவே வாரா நிற்க
ஆர்த்ர மாலின்யமலிநையாய்க் கொண்டு நின்றாள் ஒரு சேடியைக் கண்டு -இவளை அந்தப்புரம் ஏற அழைப்பியுங்கோள் என்று அந்தரங்கரை நியமிக்க –
அவர்கள் பயாதிசயத்தாலே அவளை ஸ்நாதை யாக்கி அலங்கரித்துக் கொண்டு வந்து முன்னே நிறுத்த
அவன் இவளை இங்கு என் வந்தாள் என்று அநாதரிக்க
அவர்கள் அவளை முன்புற்ற வேஷத்தையே தரிப்பித்துக் கொண்டு வர
அவன் ஆதரித்து புஜித்தான் என்று ப்ரஸித்தம் இறே -என்று இவ்விஷயம் ஒரு கதை போலச் சொல்லப் படகியுள்ளது –

சூர்ணிகை –181-இல்
அஹங்காரம் அக்னி ஸ்பர்சம் போலே
என்பதை விளக்க -அத் தோஷமாவது -ஸ்மஸாந அக்னி கிளம்பினால் மருங்கு அடைந்து தூற்ற அளவிலே சுடும் –
அக்னி ஹோத்ர அக்னி கிளம்பினால் அங்குள்ள யஜமான பத்னீ பாத்திரங்கள் எல்லாவற்றையும் தக்தம் ஆக்குமா போலே
அல்லாதாருக்கு உண்டாம் அஹங்காரத்தைப் பற்ற அநந்ய ப்ரயோஜனான இவ் வுபேய அதிகாரி பக்கலிலே அஹங்காரம் உண்டானால்
ஓன்று பட ஸ்வரூப நாஸகம் என்று தாத்பர்யம் என்று விளக்கமாக உள்ளது –
மற்ற வியாக்யானங்களில் இந்த விளக்கம் இல்லை –

சூர்ணிகை -96-இல்
ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும்
இதுக்கு மா முனிகள் -சமமானது அந்தக்கரண நியமனம் -தமமாவது பாஹ்ய கரண நியமனம்
இவரோ -சமமானது பர தாராதிகளில் போகாதபடி இந்திரியங்களை நியமிக்கஇ
தமமாவது -உபஸ மனம் தம -என்கையாலே ஸ்வ தாராதிகளிலும் ஒன்றாக நெஞ்சு போகாமே நியமிக்கை –
என்று அருளிச் செய்கிறார்

சூர்ணிகை –240-இல்
ஜீவாத்மாக்களுக்கும் பிராட்டிக்கும் ஆறு பிரகாரங்களால் சாம்யம்
இத்தை விளக்க மற்ற வியாக்யானங்களில்
1-அநந்யார்ஹ சேஷத்வம்
2-அநந்ய சரண்யத்வம்
3-அநந்ய போக்யத்வம்
4- ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கை
5- விஸ்லேஷத்தில் தரியாமை
6-தத் ஏக நிர்வாஹ் யத்வம்
இவரோ
ஞான -ஆனந்தங்களும் -சேஷத்வ பாரதந்தர்யங்களும் -ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கையும் -விஸ்லேஷத்தில் தரியாது ஒழிகையும்
ஆகிற அவளுக்கு உண்டான ஆறு பிரகாரமும் உண்டாய் இருக்கையாலே அவளோடு ஸர்வ ஸாம்யம் இல்லையாகிலும்
இவ்வாறு பிரகாரங்களாலே தத் ஸாம்யம் யுண்டு என்கிறார்
இவளுக்கு உண்டான அதிகமான பிரகாரங்கள்
நிரூபகத்வம்
அபிமதத்வம்
அநு ரூபத்வம்
சேஷித்வ சம்பந்த த்வாரா பாவத்வம்
புருஷகாரத்வம்
ப்ராப்ய பூரகத்வம் -முதலானைவை இறே என்று
வேறு ஆறு பிரகாரங்கள் அருளிச் செய்யப்பட்டுள்ளது மட்டும் அல்லாமல் வேறுபாடுகளும் உண்டு என்று சுட்டிக் காட்டப் படுகிறது

சூர்ணிகை –169-இல்
பரம ஆர்த்தனைப் பற்றியது
இத்தனை விளக்கும் போது
ஆர்த்தன் என்பது –

ஸம்ஸாரம் அடிக் கொதித்தவனை
பர ஆர்த்தன் என்றது அத்தலையில் வை லக்ஷண்ய அனுபவ அபி நிவேசத்தாலே கிட்டி அல்லது தரியாதவனை
பரம ஆர்த்தன் என்பது அவ் வைலக்ஷண்ய அநுஸந்தானத்தாலே அதி சங்கை பண்ணி அத்தலைக்கு
நம்மை ஒழியப் பரிவர் இல்லை என்று மங்களா ஸாஸனம் பண்ணித் த்வரிக்கிறவனை
இப்படி திருப்தரும் மூன்று வகையாய் இருக்கும் -எங்கனே என்னில்
தான் வாஸனை பண்ணின தேஹத்தில் சா பலத்தால் வந்த திருப்தியும்
ஸ்வ ஸ்வாமி ஸம்பந்தம் அடியான ஸ்வரூப நைர்ப்பல்யத்தாலே வந்த திருப்தியும்
பகவத் பாகவத கைங்கர்யம் அடியாக வந்த திருப்தியும் உடையராய் இருக்கை
என்று ஆர்த்தனிலும் திருப்தானிலும் மூன்று வகைகளை அருளிச் செய்கிறார்
இந்த விஷயம் மற்ற வியாக்யானங்களில் கூறப்பட வில்லை

சூர்ணிகை – 335-இல்
ஆச்சார்யனுக்கு தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹாநி என்ற ஸூ த்ரத்துக்கு
சிஷ்யனுக்குத் தன்னுடைய ஸ்வரூப ரக்ஷணமும் -ஆச்சார்யனுக்குத் தன்னுடைய தேஹ ரக்ஷணமும் கர்த்தவ்யம் அன்று என்றதாயிற்று -மா முனிகள் வியாக்யானம்
இவரோ
அதே கருத்தும் மற்ற ஒரு நிர்வாஹமும் -அன்றிக்கே
தேஹ ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது -ஆச்சார்யன் தான் -தான் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணாதே
அவனுடைய தேஹ அனுகுணமானவற்றையே சொல்லி அனுவர்த்திக்கை ஸ்வரூப ஹானி என்றும்
ஆத்ம ரக்ஷணம் ஸ்வரூப ஹானியாவது ஆச்சார்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் சிஷ்யன் தான் பலகாலும் ப்ரவர்த்தித்திக் கொண்டு வருகை ஸ்வரூப ஹானி என்றுமாம்

———-

பாசுரங்களின் உட் பொருள்கள்
இன்னார் தூதன் என நின்றான் -பாசுர விளக்கம் -சூர்ணிகை -5-இல்
முன்புற்றை நெஞ்சாறல் தீர்ந்தமை தோற்ற ஹர்ஷ ப்ரகரஷத்தாலே இட்ட சட்டை வெடிக்க நிற்கையாலே வந்த ஏற்றம் சொல்லுகிறது
அதாவது -நின்றான் -முன்பு இருந்த குறை தீர்ந்து பூரித்து நின்றான் –

சூர்ணிகை -380-இல் அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் -என்பதற்கு
ஈன்ற தாயாய் வைத்து அவளுக்கு அரியும் சினம் உண்டாகக் கூடாது இறே –
அகற்றிடினும் -கூடாதது கூடினாலும் என்றபடி –

—-

ஸூ த்ரங்களின் சொல் பொருள்களின் உட் கருத்து
ஈஸ்வரன் தானும் ஆச்சார்யத்வத்தை ஆசைப்பட்டு இருக்கும் -என்றதன் கருத்தை
அடுத்த சூர்ணிகை வியாக்யானத்தில்
இனித்தான் நிரங்குச ஸ்வ தந்த்ரன் ஆச்சார்யத்வத்தை ஆசைப்படுகை சேராதது ஓன்று இறே -எங்கனே என்னில்
தாஸோஹம் கோசலேந்த்ரஸ்ய -என்று பரதந்த்ர ஸ்வரூபனாய் கடகனான திருவடி
ஊர்த்வம் மாஸாந்த ஜீவிஷ்யே
ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்னும்படியான
இரண்டு தலையையும் சத்தை உண்டாக்கின அது கண்டு ஆசைப்பட்டு –
அவதரித்து
தூத்ய முகேந கடகனாய்
இரண்டு தலைக்கும் பூசல் விளைவித்துப் போனதான் இறே
அர்ஜுனனைக் குறித்து மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்றதும் கார்யகரம் ஆய்த்து இல்லை
அது பின்புள்ளாருக்கு-ஸதாச்சார்ய உபதேசத்தகாலே பலமாயிற்று இறே
ஆகையால் இவன் ஆசைப்பட்ட போம் அத்தனை என்கிறது –
ஸ்வ தந்த்ரனான இவனால் ஆசைப்பட மட்டுமே முடியும் -என்பதைக் காட்டி அருளுகிறார்


பிரமாணங்கள்
மற்ற வியாக்யானங்களில் இல்லாத பலவும் இவரால் காட்டப்பட்டுள்ளன
சூர்ணிகை -268-இல்
ஆசா மஹா சரண ரேணு ஜூஷா மஹம் ஸ்யாம் பிருந்தாவநே கிமபி குல்மலத ஒவ் ஷதீ நாம் யா துஸ் த்யஜம்
ஸ்வ ஜன மார்ய பதஞ்ச ஹித்வா பேஜுர் முகுந்த பதவீம் சுருதி பிர் விம்ருக்யாம் -என்றும்
பத்யு ப்ரஜா நாம் ஐஸ்வர்யம் பஸு நாம் வா ந காமயே காம் கதம்போ பூயாஸம் ருந்தோ வா யமுனா தடே என்றும் இத்யாதிகளாலே
ஸ்ரீ ஸூக ப்ரஹ்ம மஹ ரிஷியும் அவன் திருவடிகளில் சம்பந்தம் உடைய ஸ்த் தாவராதிகளை ஆசைப்பட்டான் இறே

——-
உவமைகள்
வேறு உபாயங்களைக் கை விடுகைக்கு காரணம் அவை ஸ்வரூப விரோதங்கள் -சூர்ணிகை -115-என்ற கருத்தை விளக்க
ராஜ மஹிஷிக்குக் கொட்டை நூற்று உண்கையும்-குடம் சுமைக்கையும் அவத்யமாமோபாதி ஸ்வரூபத்துக்குச் சேராது என்கிற இதுவே பிரதான ஹேது என்கிறார்

சூர்ணிகை -174-இல்
ஆறு ஏறினாருக்குத் தெப்பம் வேண்டாவோ பாதி -என்ற உதாரணமும்

சூர்ணிகை -199-இல்
வீசி நடக்க மாட்டாதவன் மெத்தென மெத்தன வாகிலும் பர்வதா ரோஹணம் பண்ணுமோ பாதி -என்கிற உதாரணமும் காட்டப்படுகிறது –

——————–

ஸூத்ர அர்த்தோ வர்ண்யதே தத்ர வாக்யை ஸூத்ர அநு சாரிபி
ஸூத்ரத்தை அநு சரித்த வாக்யங்களால் ஸூத்ரார்த்தம் இதில் வர்ணிக்கப்படுகிறது –

————

த்ராவிட ஸ்ருதி குஹ்யா நாம் அந்தர் ஜ்வரம் அஸீஸமத் தம் லோகார்ய குரும் வந்தே யோ அவதாரஸ் ஸ்ரீ யப்பதே

திவ்ய ப்ரபந்தங்களுடைய குஹ்யங்களான ரஹஸ்ய த்ரய ஜ்வரத்தை ஆற்றியவர் –
ஸ்ரீ பெரும் தேவியார் மணாளன் – ஸ்ரீ பேர் அருளாளன் -அவதாரம்
அந்த ஸ்ரீ பிள்ளை உலகாரியனை சேவிக்கிறேன் என்றவாறு

தஸ்மை ராமாநுஜார்யாய -நம பரம யோகிநே -யஸ் சுருதி ஸ்ம்ருதி ஸூத்ராணாம் அந்தர் ஜ்வரம் அஸீஸமத் –ஸ்ருத பிரகாசிகை

பூர்வ அபிதேயேந ஸஹ யேந தர்ம விசேஷண அனந்தர அபிதேயஸ் சம்பத்யதே ஸ தர்ம விசேஷ அனந்தர அபிதேய விஷ்டஸ் சங்கதி
இதுவே சங்கத்தின் லக்ஷணம்
முதலில் சொல்லப்பட்ட விஷயத்துடன் எந்த தர்ம விசேஷத்தால் அடுத்துச் சொல்லப்படும் விஷயம் சம்பந்தித்து இருக்கிறதோ
அடுத்துச் சொல்லப்படும் விஷயத்தில் உள்ள அந்த தர்ம விசேஷம் சங்கதி ஆகும்

முதல் திருவாய் மொழி -பரத்வ பரம்
இரண்டாம் திருவாய் மொழி பஜ நீயத்வம்
பரத்வம்-காரணம் -பஜ நீயத்வம் -கார்யம் -மேன்மை உள்ள வஸ்துவைப் பற்றினாள் தானே புருஷார்த்தம் கிட்டும் -கார்யதா சங்கதி

மூன்றாம் திருவாய் மொழி -ஸுலப்ய பரம் -பஜ நீயத்வம் வர இதுவே காரணம் -காரணதா என்பது சங்கதி

அப்படியே
ப்ரசங்க
ஆக்ஷேப
த்ருஷ்டாந்த
ப்ரத் யுதாஹரணம்
அபவாதம்
அதி தேச
உபோத்காத –முதலிய பல சங்கதிகள் உள்ளன

இவை அனைத்துமே ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளையால் நன்கு காட்டப் பட்டுள்ளன –

அவிஸ்த்ருதா ஸூ கம்பீரா ராமானுஜ முநேர் கிரஸ் தர்ச யந்து ப்ரஸாதேந ஸ்வம் பாவம் அகிலம் த்ருடம் -ஸ்ருத பிரகாசிகை
இதே போலவே ஸ்ரீ சைலேச குரோர் கிரஸ் -விஸ்தாரமாக இல்லாமல் -அதே சமயம் ஆழ்ந்த பொருள்கள் உள்ள திரு வாக்கு

———

முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தம்மை மிகக் கொண்டு கற்றோர் -தம்முயிர்க்கு
மின்னணியாய்ச் சேரச் சமைத்தவரே சீர் வசன பூடணம்
என்னும் பேர் இக்கலைக்கு இட்டார் பின் பி-

அன்ன புகழ் முடும்பை அண்ணல் உலகாரியன்
இன்னருளால் செய்த கலை யாவையிலும் -உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கு இல்லை
புகழ் அல இவ் வார்த்தை மெய் இப்போது

சச் சம்ப்ரதாய சம் உக்தரான ஸ்ரீ ஆச்சார்யகளாலே ஆதரணீயமான வ்யாக்யானமே
சத் பரிக்ராஹ்யம் என்றது ஆய்த்து –

சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியை தான்-என்றது
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடங்கி
அதன் தாத்பர்யமான ஸ்ரீ வசன பூஷண அர்த்தத்தையும்
ஸ்ரீ திரு நாராயணபுரத்தில் ஆய்
ஸ்ரீ திருவாய்மொழி யாச்சார்யர் (ஆச்சான் பிள்ளையும் )
ஸ்ரீ ஆயி சிஷ்யரான ஸ்ரீ நல்லப்ப நாயன்–இவர்களை தர்சிப்பிக்கிறது –ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வ்யாக்யான ஸ்ரீ ஸூக்திகள்

————

லோக குரும் குருபிஸ் சஹா பூர்வை கூர குலோத்தம தாசம் உதாரம்
ஸ்ரீ நக பதி அபிராம வரே ஸௌ தீப்ரசயம் வரயோகி ந மீடே–ரஹஸ்யரார்த்த பரம்பரை பற்றிய தனியன் -மா முனிகள்-

பூர்வர்கள் அனைவரையும் லோக குருவையும் சொல்லி கூர குலோத்தமை தாசர் அருள் பெற்ற இவர்களையும் சொல்லி அருளுகிறார் –
நகபதி திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை –
அபிராம வர சவ்–அழகிய மணவாள பெருமாள் பிள்ளை -மாப்பிள்ளை-தீப்ரசயம் வரயோகி-
திகழக் கிடந்தான் திரு நாவீறுடையான் தாதர் -மா முனிகளின் திருத் தகப்பனார் –

லோகாச்சார்ய குரவே கிருஷ்ண பாதச்ய சூனவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம –அமுத மயமான அஷ்டாதச ரஹஸ்யங்கள் அருளிய கிருஷ்ண பாதஸ்ய சோனு திருக் குமாரர்

லோகாச்சார்ய க்ருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
சமஸ்தாத்ம குண வாஸம் வந்தே கூர குலோத்தமம்–திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்த தனியன்
ஸமஸ்த ஆத்ம குண வாசம் உள்ள கூர குலோத்தம தாசர்

நம ஸ்ரீ சைல நாதாயா குந்தீ நகர ஜன்மனே
பிரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே–மா முனிகள் அருளிச் செய்தது -தம் ஆச்சார்யர் மேல் –

லோகாச்சார்ய பதாம் போஜ ராஜ ஹம்சாயித அந்தரம்
ஞான வைராக்ய ஜலதிம் வந்தே ஸௌம்ய வரம் குரும்-கோட்டூர் தாய் வழி பாட்டனார் -அழகிய மணவாள பிள்ளை –ராஜ ஹம்சம் –

ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாசம் அமலம் அசேஷ சாஸ்திர விதம்
சுந்தர வரகுரு கர்ணா கந்தளித ஞான மந்த்ரம் கலையே–திரு நாவீறுடைய பிரான் –மா முனிகள் தம் தகப்பனார் மேல் அருளிச் செய்த தனியன்
திகழ்க் கிடந்தான் திரு நா வீறுடைய பிரான் -அமலம் – குற்றம் அற்ற -ஞான மந்த்ரம் -ஞான கோயில் போலே –

கோதில் உலகாசிரியன் கூர குலோத்தம தாசர்
தீதில் திருமலை யாழ்வார் செழுங்குரவை மணவாளர்
ஒதரிய புகழ் நா வீறுடைய பிரான் தாதருடன்
போத மணவாள முனி பொன்னடிகள் போற்றுவனே

முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள்
தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு -மின் அணியாச்
சேரச் சமைத்தவரே சீர் வசன பூஷணம் என்
பேர் இக்கலைக்கு இட்டார் பின்

ஆறு பிரகரணமாக வகுக்கும் ஸ்லோகம் –

1–புருஷகார வைபவஞ்ச–
2– சாதனச்ய கௌ ரவம்–
3–தத் அதிகாரி க்ருத்யம் –
4–அஸ்ய சத்குரு உபசேவனம்-
5–ஹரிதயாம் அஹேதுகீம்–
6–குரோர் உபாயதாஞ்ச யோ–
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே

1–புருஷகார வைபவஞ்ச—அவதாரிகை முதல் -4—ஸூ த்ரங்கள் -5-முதல் -22-ஸூ த்ரங்கள்/ மேல்- -18-ஸூ த்ரங்கள் புருஷகார வைபவம்
2– சாதனச்ய கௌ ரவம்—உபாயமான பெருமான் மேன்மை -57-ஸூ த்ரங்கள் –23- முதல் -70/ -ஸூ த்ரங்கள் -வரை / 71-79-ஸூ த்ரங்கள்-பிராசங்கிகம்
3–தத் அதிகாரி க்ருத்யம்-பிரபன்னன் செய்ய வேண்டியவை -நிஷ்டை –228– –ஸூ த்ரங்கள் -80-முதல் –307 ஸூ த்ரங்கள்-வரை
இதுவரை -பூர்வ பாகம் – த்வயார்த்தம் -இவை அனைத்தும்
இந்த -307-ஸூ த்ரங்களில் /பூர்வ த்வய வார்த்தார்த்தம் -155-உத்தர த்வய வார்த்தை அர்த்தம் -148-/
மேலே உத்தர பாகம் ஆச்சார்யர் பிரபாவம் –

4–அஸ்ய சத்குரு உபசேவனம்–58–ஸூ த்ரங்கள் –308-முதல் -365-ஸூ த்ரங்கள் வரை
5–ஹரிதயாம் அஹேதுகீம்–வரவாறு ஒன்றும் இல்லை -ஹேது இல்லாமல் தானே அவன் தயை —41 –ஸூ த்ரங்கள் –366–முதல் -406 –வரை
6–குரோர் உபாயதாஞ்ச யோ–ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம் —57-ஸூ த்ரங்கள் -407-முதல் -463-ஸூ த்ரங்கள் வரை –

வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே

சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத
சாரார்த்த ஸந்க்ரஹ மஹாரசா வாக்ய ஜாதம்
சர்வஞ்ஞ லோககுரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
ஆகண்ட உத்கண்ட வைகுண்ட பிரியானாம் கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்—முமுஷுக்களுக்கு கண்ட பூஷணம் –

ஆறு பிரகரணமாக வகுக்கும் பாட்டு –

1–பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை
2–ஆறு
3–பெறுவான் முறை
4–அவன் கூறு குருவை பனுவல்
5–கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான்
6–மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு எலாம் வசன பூடணம் அதில்
தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே –

ஒன்பது பிரகரணமாக வகுக்கும் பாட்டு –

1–திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்
2–திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்
3–அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்
4–மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்
5–ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்
6–நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்
7–சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர்தன்மையும்
8–தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்
9–மன்னிய இன்பமும் மா கதியும்
குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்
அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன்
எங்கோன் ஏர் உலகாரியன்
தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்

1-திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்-
2–திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்—உபாய பிரகரணம் -23-முதல் –
3–அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்–இதுவும் உபாய பிரகரணம்
4–மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்–சித்த உபாய நிஷ்டர்
5–ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்–பிரபன்ன தின சரியை –

6–நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்–ஆச்சார்ய உபசேவனம் பிரகரணம் -ஆச்சார்ய லக்ஷணம்
7–சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர்தன்மையும்–சிஷ்யர் லக்ஷணம் –
8–தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்–ஹேது இல்லாமல் –
9–மன்னிய இன்பமும் மா கதியும்
குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்–ஆச்சார்ய உபாய உபேய வைபவம் –

லோகாச்சார்ய க்ருதே லோகஹிதே வசன பூஷண
தத்வார்த்த தர்சி நோ லோகே தந் நிஷ்டாச்ச சூதுர்லபா-

ஜகதாச்சார்யா ரசிதே ஸ்ரீ மத் வசன பூஷணே
தத்வ ஞாநஞ்ச தந் நிஷ்டாஞ்ச தேஹி நாத யதீந்திர மே–இந்த நிஷ்டைக்கும் யதீந்த்ரர் கிருபையே உதவ வேண்டும் –

———————————

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–

1–புருஷகார வைபவஞ்ச—அவதாரிகை முதல் -4—ஸூ த்ரங்கள் -5-முதல் -22-ஸூ த்ரங்கள்/ மேல்- -18-ஸூ த்ரங்கள் புருஷகார வைபவம்-

2– சாதனச்ய கௌ ரவம்—உபாயமான பெருமான் மேன்மை -57-ஸூ த்ரங்கள் –23- முதல் -70/ -ஸூ த்ரங்கள் -வரை / 71-79-ஸூ த்ரங்கள்-பிராசங்கிகம்-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114

3-உபாயாந்தர தோஷம் -115–141

4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-

5-6-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

இதுவரை -பூர்வ பாகம் – த்வயார்த்தம் -இவை அனைத்தும்
இந்த -307-ஸூ த்ரங்களில் /பூர்வ த்வய வார்த்தார்த்தம் -155-உத்தர த்வய வார்த்தை அர்த்தம் -148-/
மேலே உத்தர பாகம் ஆச்சார்யர் பிரபாவம் –

7–அஸ்ய சத்குரு உபசேவனம்–58–ஸூ த்ரங்கள் –308-முதல் -365-ஸூ த்ரங்கள் வரை
8–ஹரிதயாம் அஹேதுகீம்–வரவாறு ஒன்றும் இல்லை -ஹேது இல்லாமல் தானே அவன் தயை —41 –ஸூ த்ரங்கள் –366–முதல் -406 –வரை
9–குரோர் உபாயதாஞ்ச யோ–ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம் —57-ஸூ த்ரங்கள் -407-முதல் -463-ஸூ த்ரங்கள் வரை –

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .-

 

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிச் செய்த ஸ்ரீ நித்ய கிரந்தம் —

July 15, 2022

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிச் செய்த நவ கிரந்தகளுக்குள் இறுதியானது – ஸ்ரீ நித்ய கிரந்தம் -என்பது
ஸ்ரீ பகவத் ஆராதன ப்ரயோகம் வஷ்யே -பகவானை ஆராதிக்கும் முறையைக் கூறுகிறேன் -என்று தொடங்கி இருப்பதால்
இது பகவத் ஆராதன கிரமத்தைத் தெரிவிப்பதற்காகவே அருளிச் செய்யப் பெற்று இருந்தாலும்
அதற்குப் பூர்வ அங்கமாக உடலைச் சுத்தி செய்து கொள்வது முதலியனவும் இந்நூலில் முதலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளன

திருவாராதனம் செய்யும் முன்பு அவனை சரண் அடைய வேண்டும் என்பதால்
தமேவ சரணம் உப கச்சேத் அகில இத்யாதிநா -என்று இந்நூலில் அருளிச் செய்யப் பெற்றுள்ளது
அகில ஹேய ப்ரத்ய நீக -என்பது முதலான சூர்ணிகைகளால் எம்பெருமானைச் சரண் அடைய வேண்டும் என்பதால்
அகில ஹேய ப்ரத்ய நீக என்பது தொடங்கி
த்வத் பாதார விந்த யுகளம் சரணம் அஹம் ப்ரபத்யே -என்பது வரையும்
அதற்கு மேல் உள்ள ஸ்லோகங்களையும் இங்கு அனுசந்திக்க வேண்டும் என்பர் பெரியோர்

தண்டம் சமர்ப்பித்து பற்றி ப்ரணம்ய – வணங்கி -என்று ஒருமையிலே அருளிச் செய்தமையால்
ஒரு முறை தண்டம் சமர்ப்பிப்பதே எம்பெருமானாருடைய ஸித்தாந்தம் என்பது தெளிவு
அதே போல் மணி சேவிப்பதையும் அருளிச் செய்யாமையால் இல்லங்களில் திரு வாராதனம் செய்யும் பொழுது மணி சேவிப்பது இல்லை என்ற அனுஷ்டானமும் காட்டப்படுகிறது –

இறுதியில்
ஸ்ருதி ஸூகைஸ் ஸ்தோத்ரைஸ் அபிஷ்டூய-செவிக்கு இனிய சொற்களால் ஸ்துதித்து -என்று அருளிச் செய்யப்பட்டுள்ளதால்
செவிக்கு இனிய செஞ்சொல் -திருவாய் -10-6-11-திவ்ய பிரபந்த பாசுரங்களை சேவிக்க வேணும் என்பதையும் காட்டி அருளுகிறார் –

————————-

ஸ்ரீ நித்ய கிரந்த சாரம் –

நித்யம் –பரமை காந்திகளுக்கு –
பகவத் ஆராதனை பிரகாரம் வஷ்யே-யாகம் –யஜ தேவ பூஜாயாம் -திருவாராதனம் –
பகவத் ப்ரீத்யர்த்தம் கைங்கர்ய ரூபம் -ஏகாந்தி -பரமை காந்தி – மானஸ காகித க்ருதவ்யங்கள் –
பஞ்ச கால பராயணம் –ஆறு நாழிகையாக பிரித்து –
பிராத காலம் – சங்கம காலம் -மத்தியான -அபரான காலம் -சாயங்காலம் –
அபி கமனம் –நோக்கி போவது – உபாதானம் -சேகரிப்பது -இஜ்ஜா யாகம் திருவாராதனம் -ஸ்வாத்யாயம் – யோக காலம் –
யானை -ராஜா -இளவரசன் -பிறந்த குழைந்தை -போன்ற பரிவுடன் -ப்ரீதி காரித கைங்கர்யம் -ரதி -ஆசை உடன் -பரமை காந்தி -பகவான் ஒருவனுக்கு சேஷ பூதன்
கல்யாணை
திரு உதரம் -ஆப்ய வகாரிகம் –அன்னம் பழங்கள் சமர்ப்பித்து – சம் ஸ்பர்சிக்கம் –சந்தனம் புஷபம்-
ஒவ்பசாரிகம் தூபம் தீபம் – அகில பரி ஜனங்களுக்கும் -ஸமஸ்த மங்கள பரிவாரங்கள் –
திரு மந்த்ரம் -சுத்தி –திக் பந்தனம் -திக்குகளுக்கு –
தீர்த்த பீடம் -உடம்பில் மண் பூசி -அநு லேபனம் -உதக அஞ்சலி -கங்கா ஜலம் இடது திருவடி கட்டை விரலில் வந்த தீர்த்தம் என்ற நினைவால் -சப்த -தடவை –
திருவடியில் தலை வைத்து -எதுவரை இயலுமோ அது வரை திரு மந்த்ரம் -சுக்ல வஸ்திரம் -பன்னிரு திருமண் -பெருமாள் தாயார் நினைத்து –
அஷ்டோஷார சதம் மூல மந்த்ரம் -ஸ்ரீ வைகுண்டம் பரிஷத் -தேவர்கள் ரிஷிகள் -யாக பூமிக்கு கச்சதி –
குரு பரம்பரை பூர்வகம் –த்வயம் -பிராபகம் பிராப்யம் அவனே -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -ஸ்வரூபம் ரூபம் விபூதி குணம் ஐஸ்வர்யம் -அனுசந்தானம் –
ப்ரத்யக்ஷ ரூப அனுசந்தானம் -சர்வேஸ்வரஸ்வரம் -ஸ்வாமித்வம் –தாஸ்ய சித்திக்காக -அத்யந்த ப்ரீதி -ப்ரீதி காரித பரி பூர்ண கைங்கர்யம்
தன்னால் கொடுக்கப்பட்ட சரீரம் தானே விநியோகம் கொள்கிறான் –

சரீர சுத்தி பூத சுத்தி -மூல மந்த்ரம் வைத்து -ஸூ ஆத்மாநாம் -ஓம் இத் ஆத்மாநாம் உன்ஜீத -ஆத்மாவை பகவான் கட்டை விரலில் சமர்ப்பித்து –
ஆராதனை காலத்தில் பகவத் பிரசாதத்தால் -உயர்ந்த சரீரம் வழங்குவான் -அம்ருத மயம் -சர்வ கைங்கர்யம் பண்ணும் யோக்யதை –மானஸ வியாபாரம் –
ஸூரபி முத்திரை காட்டி –பரிகல்பயாமி -அர்க்யம் பாத்யம் ஆசமனீய ஸ்நாநீய வட்டில்கள் –ஸர்வார்த்த தோயம் -நடுவில் -பிரதி க்ரஹ பாத்திரம் படிகம் –
திரு ஒத்து வாடை சமர்ப்பித்து –
ஓம் ஆதார சக்தி நம கூர்ம ரூபி நம -பீடம் – ஸ்ரீ வைகுண்டாய திவ்ய மண்டபம் நம ஸ்ரீ பூமா நீளா -பத்னீ ஜனங்கள் ஆவாஹனம் –
க்ரீடாதி திவ்ய பூஷணங்கள் எல்லாம் நித்ய ஸூரிகள் –நினைவுடன் வணங்கி –
திவ்ய ஆயுதங்கள் -பஞ்சாயுதங்கள் -ஸ்பர்சம் கொண்டதால் பூரித்து உள்ள – -திரு அனந்த ஆழ்வான்-பெரிய திருவடி
ஸ்ரீ விஷ்வக் சேனர்–ஸூத்ரவதி சமேத -(ஏக பீடம் திரு மால் இரும் சோலை சேவை உண்டே -இருவருக்கும் )
கஜா முகன் தொடங்கி விஷ்வக் சேனர் பரிஜனம் -வாசல் காப்பார்களை வணங்கி –
குமுதாய -கோயில் காப்பார்கள் -ஸூ முகன் -ஸூ பிரதிஷ்டன் -போல்வார் -திவ்ய அவதார தேசங்கள் -நம் அர்ச்சை தானே அனைத்தாகவும்-
ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன நியாமகன் –

மந்த்ராஸனம் -ஸ்நாநாசனம் -அலங்காராசனம் -போஜ்யாசனம் -புநர் மந்த்ராஸனம் -பர்யங்காசனம்
மூன்று வியாபக மந்த்ரங்கள் -அனுசந்தானம் -யதா சக்தி -சர்வ போக பூரணீம் -மாத்ரா பிரசாதம் -அதி ப்ரிய தரம் –

————–

ஸ்ரீ நித்ய கிரந்தத்தில் உள்ள விஷயங்கள்
1- பகவானே நம்மைக் கொண்டு திருவாராதனம் செய்வித்துத் கொள்கிறான் என்று அனுசந்தித்தல்
2-நீர் நிலைக்குச் சென்று தேஹ சுத்தி செய்து கொள்ளுதல்
3-தீர்த்தமாடுதல்
4-வேஷ்ட்டி உத்தரீயம் அணிந்து திருமண் காப்பு இட்டுக் கொள்ளுதல்
5-ஆதார சக்தி தர்ப்பணம் முதலியவை செய்தல்
6-குரு பரம்பரையை அனுசந்தித்து பிறகு அகில ஹேய ப்ரத்ய நீக என்பது முதலிய
சரணாகதி கத்ய சூர்ணிகைகளையும் அனுசந்தித்து எம்பெருமானைச் சரண் அடைதல்
7-எம்பெருமானுடைய வலது திருவடிகளில் புகுவதாக நினைத்தால்
8-ஆவாஹனங்கள் செய்து வட்டில் முதலியவற்றை வைத்தல்
9-எம்பெருமானுடைய பரிஜன பரிவாரங்களை வணங்குதல்
10- எம்பெருமானுக்கு தண்டம் சமர்ப்பித்துத் திரு வாராதனத்தைத் தொடங்குதல்
11-அர்க்கியம் பாத்யம் ஆசமநீயம் சமர்ப்பித்தல்
12-ஸ்நாநாசனம் -திருமஞ்சனம் -சமர்ப்பித்தல்
13-அலங்கார ஆசனம் சமர்ப்பித்தல்
14-மந்த்ராஸனம் -உபசாரங்கள் -சமர்ப்பித்தல்
15-போஜியாசானம் -அமுது =சமர்ப்பித்தல்
16-மீண்டும் மந்த்ராஸனம் சமர்ப்பித்தல்
17-செவிக்கினிய செஞ்சொற்களால் ஸ்துதித்தல்
18-தண்டம் ஸமர்ப்பித்து திருவாராதனத்தை நிறைவு செய்தல் –

————-

அத பரமைகாந்திநோ பகவத் ஆராதன பிரயோகம் வஷ்யே

இனி பரமைகாந்திகளுடைய பகவானை ஆராதிக்கும் முறையைக் கூறுகிறேன்

பகவத் கைங்கர்ய ரதிர் பரமைகாந்தீ பூத்வா -பகவாநேவ ஸ்வ சேஷ பூதேந மயா
ஸ்வகீயைஸ் ச கல்யாண தமை ஒவ்ப சாரிக ஸாம் ஸ்பர்சிக அப்யவ  ஹாரிகை போகை
அகில பரிஜன பரிச்சாக அந்விதம்
ஸ்வாத்மாநம் ப்ரீதிம் காரயிதும் உபக்ரமத இதி அநு சந்தாய
தீர்த்தம் கத்வா ஸூசவ் தேசே பாதவ் ப்ரஷாள்ய ஆஸம்ய தீரம் ஸம் சோத்ய
ஸூசவ் தேசே மூல மந்த்ரேண ம்ருதம் ஆதாய த்விதா க்ருத்வா சோதி ததீரே நிதாய
ஏகேந அதிக பாகேந தேஹ மல பிரஷாளநம் க்ருத்வா நீமஜ்ஜ்ய ஆஸம்ய பிராணாயாம த்ரயம் ஆஸீநோ பகவந்தம் த்யானம் க்ருத்வா
அந்யம் ம்ருத் பாகம் ஆதாய வாம பாணி தலே த்ரிதா க்ருத்வா ப்ருதக் ப்ருதக் ஸம் ப்ரோஷ்ய
அபி மந்த்ர்ய ஏகேந திக் பந்தனம் அஸ்த்ர மந்த்ரேண குர்யாத்
அன்யேன தீர் தஸ்ய பீடம் இதரேண காத்ராநு லேபநம்

பகவானுக்கு கைங்கர்யம் செய்வதில் விருப்பமுடைய பரமைகாந்தியாக ஆகி
பகவானே தன்னுடைய அடியவனான என்னால்
தன்னுடையவைகளான மங்களமான உபசாரங்களான குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனத்துக்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய போகங்களால் அனைத்து அடியவர்களுடன் பரிவாரங்களுடன் கூடிய
தன்னை ப்ரீதி செய்து கொள்வதற்குத் தொடங்குகிறான் என்று அனுசந்தித்து
தீர்த்தத்துக்கு -நதி வல்லது குளத்துக்குச் சென்று -சுத்தமான இடத்திலே கால்களைக் கழுவிக் கொண்டு
ஆசமனம் செய்து கரையை நன்கு சுத்தம் செய்து
சுத்தமான இடத்தில் இருந்து திருமந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு
மண்ணை எடுத்து அதனை இரு பங்கு ஆக்கி சுத்தமான இடத்தில் வைத்து
மண்ணில் ஒரு அதிக பாகத்தால் உடலை சுத்தம் செய்து கொண்டு தீர்த்தத்தில் முழுகி
ஆசமனம் செய்து அமர்ந்து பகவானை த்யானித்துக் கொண்டு மூன்று முறை பிராணாயாமம் செய்து
மற்ற ஒரு மண்ணின் பாகத்தை எடுத்து -இடது கையில் மூன்று பாகமாக்கி தனித்தனியே நன்றாக ப்ரோக்ஷித்து மந்த்ரித்து
மண்ணின் ஒரு பாக்கத்தால் -ஸஹஸ்ரோல்காய ஸ்வாஹா –வீர்யாய அஸ்த்ராய பட் -என்ற அஸ்த்ர மந்திரத்தால் திக் பந்தனம் செயய வேண்டும்
மற்ற ஒரு மண்ணின் பாகம் தீர்த்தத்துக்குப் பீடமாகும்
மற்ற ஒரு மண்ணின் பாகத்தால் உடலைத் தேய்த்துக் கொள்ள வேண்டும் –

தத பாணீ ப்ரஷால்ய உதக அஞ்சலி மாதாய தீர்தஸ்ய அர்க்க்யம் உத் ஷிப்ய
பகவத் பாத அங்குஷ்ட விநிஸ்ருத கங்கா ஜலம் ஸங்கல்பித பீடே ஆவாஹ்ய அர்க்யம் தத்வா மூல மந்த்ரேண அபி மந்த்ர்ய
உதக அஞ்சலி மாதாய ஸப்த க்ருத்வா அபி மந்த்ர்ய ஸ்வ மூர்த்நி சிஞ்சேத் ஏவம் த்ரி பஞ்ச க்ருதவ ஸப்த க்ருத்வோ வா

பிறகு இரு கைகளையும் கழுவிக் கொண்டு கைகளில் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு பகவானுடைய திருவடிகளின் கட்டை விரலில் இருந்து பெருகுகிற
கங்கா ஜலத்தை சங்கல்ப்பித்து வைத்து இருக்கிற பீடத்தில் ஆவாஹனம் செய்து அர்க்யம் கொடுத்து மூல மந்திரத்தினால் அபி மந்திரித்து தலையிலே நனைத்துக் கொள்ள வேண்டும் –
இவ்வாறு மூன்று முறை ஐந்து முறை அல்லது ஏழு முறை செய்ய வேண்டும்

தஷிணேந பாணிநா ஜல மாத்தையா அபி மந்த்ர்ய பீத்வா ஆஸம்ய ஸ்வாதமாநம் ஸம் ப்ரோஷ்ய -பரி ஷிஸ்ய -தீர்தே நிமக்னோ
பகவத் பாதாரவிந்த வின்யஸ்த சிரஸ்க யாவச் சக்தி மூல மந்த்ரம் ஜபித்வா
உத்தீர்ய ஸூக்லஸ்த்ரதரோ த்ருத உத்தரீ யஸ்ஸ ஆஸம்ய
ஊர்த்வ புண்ட்ரான் தத் தன் மந்த்ரேண தாரயித்வா பகவந்தம் அநு ஸ்ம்ருத்ய
தத் தன் மந்த்ரேண பகவத் பர்யந்த அபி தாயிநா மூல மந்த்ரேண ச ஜலம் பீதவா ஆஸம்ய ப்ரோஷ்ய பரி ஷிஸ்ய
உதக அஞ்சலிம் பகவத் பாதயோ நிஷிப்ய ப்ராணாநா யம்ய பக்கவாதம் த்யாத்வா
அஷ்டோத்தர சதம் மூல மந்த்ரம் ஆவர்த்ய பரி க்ரம்ய நமஸ் க்ருத்ய ஆதார ஸக்த்யாதி ப்ருதி வ்யந்தம் தர்ப யித்வா
ஸ்ரீ வைகுண்டாதி பாரிஷ தாந்தம் தர்ப யித்வா தேவான் ருஷீன் பித்ரூன் பகவத் ஆத்மகான் த்யாத்வா ஸந்தர்ப
வஸ்திரம் ஸூசைவ தேசே ஸம் பீட்ய ஆஸம்ய ஆவாஹிததீர்தம் மூல மந்த்ரேண ஆத்மநி ஸமாஹ்ருத்ய யாக பூமிம் கச்சேத்

வலது கையால் தண்ணீரை எடுத்துக் கொண்டு அபி மந்திரித்து பருகி ஆசமனம் செய்து தன்னை ப்ரோக்ஷித்துக் கொண்டு
தீர்த்தத்தில் முழுகி பகவானுடைய திருவடித் தாமரைகளைத் தலையிலே கொண்டவனாக நினைத்துக் கொண்டு
சக்தி யுள்ளவரை மூல மந்த்ரத்தை ஜபித்து தீர்த்தத்தில் இருந்து எழுந்து
வெண்மையான ஆடையை அணிந்தவனாய் உத்தரீயத்தையும் அணிந்தவனாய் ஆசமனம் செய்து
திரு மண் காப்பினை அந்தவந்த மந்த்ரங்களைச் சொல்லி தரித்துக் கொண்டு பகவானை நினைத்துக் கொண்டு
பகவான் வரை அந்தவந்த மந்த்ரங்களைச் சொல்லி -திருமந்த்ரத்தையும் சொல்லி தீர்த்தத்தைப் பருகி ஆசமனம் செய்து ப்ரோக்ஷித்துக் கொண்டு
பரி சேஷணம் செய்து கையிலே தீர்த்தத்தை எடுத்து பகவானுடைய திருவடிகளில் சமர்ப்பித்து பிராணாயாமம் செய்து
பகவானை நினைத்துக் கொண்டு நூற்று எட்டு முறை மூல மந்த்ரத்தை ஜபித்து தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்கி
ஆதார சக்தி முதல் பிருத்வி வரை தர்ப்பித்து ஸ்ரீ வைகுண்டம் முதலாக எம்பெருமானுடைய பரிவாரங்கள் வரை தர்ப்பித்து
பகவானை ஆத்மாவாகக் கொண்டவர்களாக தேவர்கள் முனிவர்கள் பித்ருக்கள் ஆகியோரை த்யானித்துத் தர்ப்பித்து
முன் களைந்த ஆடையை சுத்தமான இடத்தில் பிழிந்து சாய்த்து ஆசமனம் செய்து முன்பு ஆவாஹனம் செய்த தீர்த்தத்தை மூல மந்திரத்தால் தன்னிடம் ஆவாஹனம் செய்து
யாக பூமியான திருவாராதனம் செய்ய வேண்டிய இடத்துக்குச் செல்ல வேண்டும் –

ஸூ ப்ரஷாலித பாணி பாத ஸ்வா சாந்த ஸூசவ் தேசே அதி மநோ ஹரே நிஸ் சப்தே புவம் சங்க்ருஹ்ய தாம்
சோஷணாதிபி விசோத்ய குரு பரம்பரயா பரம கூறும் பகவந்தம் உபாகம்ய தமேவ ப்ராப்யத்வேந ப்ராபகத்வேந அநிஷ்ட நிவாரகத்வேந இஷ்ட ப்ராபகத்வேந ச யதா வஸ்தித
ஸ்வரூப ரூப குண விபூதி லீலோ பகரண விஸ்தாரம் அநு சந்தாய தமேவ சரணம் உபா கச்சேத் அகில ஹேய –இத்யாதி நா

நன்றாக அலம்பிய கை கால்களுடன் சுத்தமான மனத்துடன் சுத்தமான மனத்துக்கு இனிய சப்தம் இல்லாத இடத்தை அடைந்து
அந்த இடத்தை உணர்த்துதல் முதலியவைகளால் சுத்தம் செய்து
குரு பரம்பரை வழியாகப் பரம குருவான பகவானை அடைந்து ஸ்துதித்து –
அந்த பகவானையே அடையப்படுபவனாகவும் -அடைவிப்பவனாகவும் -விரும்பாதவற்றைத் தவிர்ப்பவனாகவும் –
விரும்பியவற்றைத் தருபவனாகவும் -அவனுடைய உள்ளபடியான ஸ்வரூபம் திருமேனி கல்யாண குணங்கள்
உபய விபூதிச் செல்வங்கள் முதலிய விளையாட்டு உபகரணங்களை விரிவாக அனுசந்தித்து
சரணாகதி கத்யத்தில் உள்ள அகில ஹேய -முதலிய சூர்ணிகைகளையும் அனுசந்தித்து
அந்த பகவானையே சரணம் அடைய வேண்டும் –

ஏவம் சரணம் உபாகம்ய தத் ப்ரஸாதோப ப்ரும்ஹித மநோ வ்ருத்தி தமேவ பகவந்தம் ஸர்வேஸ்வரேஸ்வரம் ஆத்மந
ஸ்வாமித்வேந அநு சந்தாய அத்யர்த ப்ரியா வாரித
விசததம ப்ரத்யக்ஷ ரூப அநு த்யாயேந த்யாயன் ஆஸீத
தத தத் அனுபவ ஜெனித அதிமாத்ர ப்ரீதி காரித பரிபூர்ண கைங்கர்ய ரூப பூஜாம் ஆரபேத

இப்படி சரண் அடைந்து அவனுடைய அருளால் பெறப்பட்ட மனத்தின் செயல்பாட்டை உடையவனாய் ஸர்வேஸ்வர ஈஸ்வரனான அந்த பகவானையே
தனக்கு ஸ்வாமியாக அநு சந்தித்து மிகவும் பிரியமாய்த் தடை இன்றித் தொடர்வதும் நேரில் காண்பது போல மிகத் தெளிவாக உள்ளதுமான
தியானத்தினால் தியானித்துக் கொண்டு இருக்க வேண்டும் –
பிறகு அந்த அனுபவத்தினால் பிறந்த மிக்க ப்ரீதியினால் செய்விக்கப் பட்ட பரிபூர்ண கைங்கர்ய ரூபமான திரு வாராதனத்தைத் தொடங்க வேண்டும் –

பகவான் ஏவ ஸ்வ நியாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வ சேஷதைக ரசேந அநே நாத்மநா
ஸ்வ கீயைஸ் ச தேஹ இந்த்ரிய அந்தக்கரணை
ஸ்வ கீய கல்யாண தம த்ரவ்ய மயான் ஒவ்ப சாரிக ஸாம்ஸ்பர்ஸிக அப்யவ ஹாரிகாதி ஸமஸ்த போகான் அதி ப்ரபூதான் அதி சமக்ரான் அதி ப்ரிய தமான் அத்யந்த பக்தி க்ருதான்
அகில பரிஜன பரிச்சதான் விதாய
ஸ்வஸ்மை ஸ்வ ப்ரீதயே ஸ்வயமேவ ப்ரதிபாத யிதும் உபக்ரமத இதி அநு சந்தாய
ஸ்வ தேஹ பஞ்ச உபநிஷந் மந்த்ரான் ஸம்ஹார க்ரமேண ந்யஸ்ய ப்ராணாயாமேந ஏகேந தஷிணேந பாணிநா
நாபி தேசே மூல மந்த்ரம் நியஸ்ய மந்த்ரோத்பூத சண்ட வாய்வாப் யாயித நாபீ தேசஸ்தா வாயுநா ஸரீரம் அந்தர் பஹிஸ்ஸ ஸர்வ தாத்தாவை மயம்
தத்துவ க்ரமேண விசோஷ்ய புநரபி ப்ராணாயாமேந ஏகேந ஹ்ருத் தேசே மூல மந்த்ரம் ந்யஸ்ய மந்த்ரோத்பூத
சக்ராக் நிஜ் வாலோப ப்ரும்ஹித
ஜாடராக்னிநா தக்த தத் தத் சமஷ்டி ப்ரலீந ஸர்வ தத்வ ஸர்வ கில்பிஷ ஸர்வ அஞ்ஞான தத் வாஸநோ பூத்வா
பகவத் தக்ஷிண பாத அங்குஷ்டே மூல மந்த்ரேண ஸ்வாத்மாநம் ப்ரவேசயேத்

பகவானே தன்னால் நியமிக்கப் படுகிற ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்திகளை உடையதும்
தனக்கு அடிமைப்பட்டு இருத்தலையே ரஸமாக உடைய இந்த ஆத்மாவினால்
தன்னுடைய தேஹ இந்திரிய மனஸ் முதலிய கரணங்களினால்
தன்னுடைய மங்களமான பொருள்களான உபசாரங்களான குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனதற்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய மிகவும் உயர்ந்தவைகளாய் -மிகவும் நிறைந்தவைகளாய்-மிக ப்ரீதியானைவைகளாய்
மிக்க பக்தியினால் ஆனவைகளாய் உள்ள அனைத்து போகங்களால்
அனைத்து அடியவர் பரிவாரங்களுடன் கூடிய தன்னை ப்ரீத்தி செய்து கொள்வதற்காகத் தானே தொடங்குகிறான் என்று அனுசந்தித்து
தன்னுடைய உடலில் பஞ்ச உபநிஷத் மந்த்ரங்களை ஸம்ஹார க்ரமத்தில் ந்யாஸம் செய்து கொண்டு
ஒரு பிராணாயாமத்தால் வலது கையினால் தொப்புளில் தொட்டு மூல மந்த்ரத்தை நியாஸம் செய்து
மந்திரத்தினால் யுண்டான சண்ட வாயுவாகிய தொப்புளின் காற்றினால் ஸர்வ தத்வ மயமான உடலை உட்ப்புறமும் வெளிப்புறமும் தத்வ க்ரமத்தினால் உலர்த்தி
மறுபடியும் ஒரு பிராணாயாமத்தினால் உதய பிரதேசத்தில் மூல மந்த்ரத்தை ந்யாஸம் செய்து மந்திரத்தினால் யுண்டான சக்ர அக்னி ஜ்வாலையினால் பெறப்பட்ட ஜாடராக்னியினால்
அனைத்துத் தத்துவங்களும் அனைத்துப் பாபங்களும் அனைத்து அஞ்ஞானங்களும் அதன் வாசனைகளும் எரிக்கப் பட்டவனாகி
பகவானுடைய வலது திருவடிகளின் கட்டை விரலில் மூல மந்திரத்தினால் தன்னை நுழைக்க வேண்டும்
தான் நுழைவதாக நினைத்துக் கொள்ள வேண்டும் –

அபரேண ப்ராணாயாமேந பகவத் ப்ரஸாதேந பகவத் கிங்கரத்வ யோக்யதாம் ஆ பாத்ய தஸ்மாத் ஆதாய
தத் வாம பாத அங்குஷ்ட அத ஸ்தாத் மூல மந்த்ரேண ஆத்மாநம் வின்யஸ்ய
தேவ வாம பாத அங்குஷ்ட நாகா ஸீதாம் ஸூ மண்டல நிர்கலத் திவ்ய அம்ருத ரஸை ஆத்மாநம் அபி ஷிஸ்ய
பகவத் ப்ரஸாதேந தத் அம்ருத மயம் ஸர்வ கைங்கர்ய மநோ ஹரம் ஸர்வ கைங்கர்ய யோக்யம் ஸரீரம் லப்தவா
தஸ்மிந் ஸரீரே பஞ்ச உபநிஷத் மாத்ரான் ஸ்ருஷ்ட்டி க்ரமேண விந்யஸ்யேத்
ஓம் ஷாம் நம பராய பரமேஷ்ட் யாத்மநே நம -இதி மூர்த்நீ ஸ்ப்ருசேத்
ஓம் யாம் நம பராய புருஷோத்தமநே நம –இதி நாஸாக்ரே
ஓம் ராம் நம பராய விஸ்வாத்மநே -இதி ஹ்ருதயே
ஓம் வாம் நம பராய நிவ்ருத் யாத்மநே நம -இதி குஹ்யே
ஓம் லாம் நம பராய ஸர்வாத்மநே நம -இதி பாதயோ
ஏவம் ந்யாஸம் குர்வன் தத் தத் சக்தி மாயம் உத்பூத தேஹம் த்யாயேத்

மற்ற ஒரு பிராணாயாமம் செய்து பகவானுடைய அருளினால் பகவானுக்குக் கைங்கர்யம் செய்யும் தகுதியை அடைந்து -அதனால் பெற்ற
பகவானுடைய வலது திருவடி கட்டை விரலின் அடியில் மூல மந்திரத்தால் தன்னை ந்யாஸம் செய்து
பகவானுடைய வலது திருவடிக் கட்டை விரல் நகத்தின் நின்றும் பெருகும் குளிர்ந்த அம்ருத மயமான தாரைகளால் தன்னை நனைத்து
பகவானுடைய அருளினால் அம்ருத மயமாய் எல்லாக் கைங்கர்யங்களையும் செய்வதற்கு மநோ ஹரமாய்
எல்லாக் கைங்கர்யங்களையும் செய்வதற்கு தகுதியான உடலைப் பெற்று
அந்த உடலில் பஞ்ச உபநிஷத் மந்த்ரங்களை ஸ்ருஷ்ட்டி க்ரமத்தில் ந்யாஸம் செய்ய வேண்டும்
ஓம் ஷாம் நம பராய பரமேஷ்ட் யாத்மநே நம -என்று தலையைத் தொட வேண்டும்
ஓம் யாம் நம பராய புருஷோத்தமநே நம –என்று மூக்கின் நுனியைத் தொட வேண்டும்
ஓம் ராம் நம பராய விஸ்வாத்மநே -என்று இதயத்தைத் தொட வேண்டும்
ஓம் வாம் நம பராய நிவ்ருத் யாத்மநே நம -என்று வயிற்றைத் தொட வேண்டும்
ஓம் லாம் நம பராய ஸர்வாத்மநே நம -என்று கால்களைத் தொட வேண்டும்
இப்படி ந்யாஸம் செய்து அந்தவந்த சக்தி மயத்தினால் உண்டான உடலை உடையவனாகத் தன்னை நினைக்க வேண்டும் –

புநரபி ப்ராணாயாமேந ஏகேந பகவத் வாம பாத அங்குஷ்ட விநிஸ்ருத அம்ருத தாரயா ஆத்மாநம் அபி ஷிச்ய
க்ருத லாஞ்சன த்ருத ஊர்த்வ புண்ட்ர பகவத் யாகம் ஆரபேத

மறுபடியும் ஒரு ப்ராணாயாமத்தினால் பகவானுடைய வலது திருவடிக் கட்டை விரலில் இருந்து பெருகும் அம்ருத தாரைகளினால் தன்னை நனைத்து
சக்ர அங்கனத்தையும் பன்னிரு திருமண் காப்புகளையும் தரித்துக் கொண்டு பகவானுக்குத் திருவாராதனத்தைத் தொடங்க வேண்டும் –

பகவான் ஏவ ஸர்வம் காரயதீதி பூர்வ வத் த்யாத்வா ஹ்ருத்யாகம் க்ருத்வா ஸம் பாரான் ஸம் ப்ருத்ய
ஆத்மந வாம பார்ஸ்வே ஜல கும்பே தோயம் உத் பூர்ய கந்த புஷ்பயுதம் க்ருத்வா
ஸப்த க்ருத்வா அபி மந்த்ர்ய வி சோஷ்ய தக்த்வா திவ்ய அம்ருத தோயம் உத் பாத்ய
அஸ்திர மந்த்ரேண ரஷாம் க்ருத்வா ஸூரபி முத்ராம் ப்ரதர்ஸ்யஅன்யானி பூஜா த்ரவ்யாணி ஆத்மந
தக்ஷிண பார்ஸ்வே நிதாய
ஆத்மந புரத ஸ்வாஸ் தீர்ணே பீடே க்ரமேண ஆக்நே யாதி கோணேஷு அர்க்ய பாத்ய ஆசமனீய ஸ்நாநீய பாத்ராணி நிதாய
அஸ்த்ர மந்த்ரேண ப்ரஷால்ய சோஷாணாதி நா பாத்ராணி வி சோத்ய ஸம்ஸ்க்ருத தோயேந தாநி பூரயித்வா
அர்க்ய பாத்ரே கந்த புஷ்ப குஸாக்ர அக்ஷதா தீநி நிஷிபேத்
தூர்வாம் விஷ்ணு பர்ணீம் ஸ்யாமாகம் பத்மகம் பாத்ய பாத்ரே
ஏலா லவங்க தக்கோல லாமஜ்ஜக ஜாதீ புஷ்பாணி ஆசம நீயே
த்வே ஹரித்ரே முரா சைலேய தக்கோல ஜடாமாசிமலயஜ கந்த சம்பக புஷ்பாணி
ஸித்தார்த்தி காதீ நிஸ்நா நீயே

பகவானே தன்னைக் கொண்டு எல்லாம் செய்வித்துத் கொள்கிறான் என்று முன்பு போலவே நினைத்து
இதய யாகம் செய்து திருவாராதனப் பொருள்களை சேகரித்துக் கொண்டு
தன்னுடைய இடது புறத்தில் தீர்த்தக் குடத்தில் தீர்த்தத்தை நிறைத்து -கந்த புஷ்பத்தைச் -குங்குமப்பூவைச் -சேர்த்து
ஏழு முறை திரு மந்திரத்தினால் அபி மந்திரித்து உலர்த்தி எரித்து -சுத்தம் செய்வதாகப் பாவித்து
அஸ்த்ர மந்த்ரத்தினாலே காப்பீட்டு ஸூரபி முத்ரையைக் காட்டி மற்ற திருவாராதனப் பொருள்களை தனக்கு வலது புறத்தில் வைத்து
தனக்கு முன்னால் உள்ள ஒரு பீடத்தில் -தட்டில் -முறையே தென் கிழக்கு மூலை முதலிய இடங்களில்
அர்க்ய பாத்ய ஆசமனீய ஸ்நாநீய வட்டில்களை வைத்து அஸ்த்ர மந்திரத்தால் அலம்பி உலர்த்துதல் முதலியவற்றால் பாத்ரங்களை சுத்தம் செய்து
நல்ல தீர்த்தத்தால் அவ் வட்டில்களை நிறைத்து அர்க்ய பாத்ரத்தில் கந்த புஷ்பம் தர்ப்பை நுனி அக்ஷதை முதலியவற்றைச் சேர்க்க வேண்டும்
தூர்வா விஷ்ணு பர்வணீ ஸ்யாமகம் பத்மகம் ஆகியவற்றைப் பாத்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
ஏலம் லவங்கம் தக்கோலம் லாமஜ்கம் ஜாதீ புஷ்பம ஆகியவற்றை ஆசமனீய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
இருவித மஞ்சள் முரை சைலேயம் தக்கோலம் ஜடாமாஸி மலை நாட்டு சந்தனம் சம்பக புஷ்பம ஸித்தார்த்தகம் ஆகியவற்றை ஸ்நாநீய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –

அந்யஸ்மின் பாத்ரே ஸர்வார்த்த தோயம் சங்கல்ப்ய ததோ அர்க்ய பாத்ரம் பாணிநா ஸ்ப்ருஷ்ட்வா மூல மந்த்ரேண அபி மந்த்ர்ய
ஓம் நமோ பகவதே அர்க்யம் பரிகல்பயாமி இதி அர்க்யம் பரிகல்பயேத்
ஏவம் பாத்யம் பரிகல்பயாமி இதி பாத்யம் ஆசமனம் பரிகல்பயாமி இதி ஆசாமி நீயம் ஸ்நா நீயம் பரிகல்பயாமி இதி ஸ்நா நீயம்
ஸூத்தோ தகம் பரிகல்பயாமி இதி ஸூ த்தோதகம் தத அர்க்ய ஜலாத் ஜாலம் அன்யேன பாத்ரேண ஆதாய யாக பூமிம்
ஸர்வாணி யாக த்ரவ்யாணி ஆத்மாநம் ச ப்ரத்யேகம் ப்ரோஷ்ய ஆஸனம் பரிகல்பயேத்

மற்ற ஒரு பாத்திரத்தில் ஸர்வார்த்த தோயம் -சுத்தோதகம் -தூய நீர் -ஸங்கல்பித்து பிறகு அர்க்ய பாத்ரத்தைக் கைகளால் தொட்டு மூல மந்திரத்தால் அபி மந்தரித்து
ஓம் நமோ பகவதே அர்க்யம் பரி கல்பயாமி இதி -அர்க்யத்தை ந்யாஸம் செய்ய வேண்டும் –
இப்படியே பாத்யம் பரி கல்பயாமி -என்று பாத்யம்
ஆசம நீயம் பரி கல்பயாமி என்று ஆசம நீயம்
ஸ்நா நீயம் பரி கல்பயாமி என்று ஸ்நா நீயம்
சுத்தோதகம் பரி கல்பயாமி என்று சுத்தோதகம்
பிறகு அர்க்ய ஜலத்தில் இருந்து தீர்த்தத்தை மற்ற ஒரு பாத்ரத்தினால் எடுத்து யாக பூமியை -பெருமாள் எழுந்து அருளிய இத்தையும் –
எல்லாத் திருவாராதனப் பொருள்களையும் தன்னையும் தனித் தனியாக ப்ரோக்ஷித்து ஆசனத்தை ஏற்படுத்த வேண்டும் –

ஓம் ஆதார சக்த்யை நம
ஓம் மூல ப்ரக்ருத்யை நம
ஓம் அகில ஜகதாதார கூர்ம ரூபிணே நாராயணாய நம
ஓம் பகவதே அநந்தாய நாக ராஜாய நம
போம் பூம் பூம்யை நம
இதி யதா ஸ்தாநம் உபர்யுபரி த்யாத்வா ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய லோகாய நம இதி ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய ஐந பதாய நம இதி திவ்ய ஜந பதம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய நகராய நம -இதி திவ்ய நகரம் ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய விமானாய நம -இதி திவ்ய விமானம் ப்ரணம்ய
ஓம் ஆனந்த விமானாய திவ்ய மண்டப ரத்நாய நம -இதி மண்டப ரத்னம் ப்ரணம்ய
தஸ்மிந் அநந்தாய -நாக ராஜாய -நம இதி ஆஸ்தரணம் ப்ரணம்ய தஸ்மிந் உபரி
ஓம் தர்மாய நம -இதி ஆக் நேய்யாம் பாதம் வின்யஸ்ய
ஓம் ஞானாய நம -இதி நைர் ருதியாம்
ஓம் வைராக்யாய நம -இதி வாயவ்யாம்
ஓம் ஐஸ்வர்யாய நம -இதி ஐசான்யாம்
ஓம் அதர்மாய நம இதி ப்ராஸ்யாம் பீட காத்ரம் வின்யஸ்ய
ஓம் அஞ்ஞானாய நம இதி தஷிணாஸ் யாம்
ஓம் அவைராக்யாய நம இதி ப்ரதீஸ்யாம்
ஓம் அனைஸ்வர்யாய நம இதி உத்தரஸ் யாம் ஏபி பரிச்சின்ன தனும் பீட பூதம் ஸதாத்மகம நந்தம் வின்யஸ்யபஸ்சாத் ஸர்வ கார்யயோன் முகம் விபும் அநந்தம் ஓம் அநந்தாய நம இதி வின்யஸ்ய

ஓம் ஆதார சக்த்யை நம
ஓம் மூல ப்ரக்ருத்யை நம
ஓம் அகில ஜகதாதார கூர்ம ரூபிணே நாராயணாய நம
ஓம் பகவதே அநந்தாய நாக ராஜாய நம
பூம் பூம் பூம்யை நம
என்று ஒன்றின் மேல் ஒன்றாக அந்த அந்த ஸ்தானத்தைத் த்யானம் செய்து வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய லோகாய நம -என்று ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய ஐந பதாய நம -என்று திவ்ய ஜந பதத்தை -தேசத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய நகராய நம -என்று திவ்ய நகரத்தை வணங்கி
ஓம் ஸ்ரீ வைகுண்டாய திவ்ய விமானாய நம -என்று திவ்ய விமானத்தை வணங்கி
ஓம் ஆனந்த விமானாய திவ்ய மண்டப ரத்நாய நம -என்று மண்டப ரத்னத்தை வணங்கி
அதில்
அநந்தாய -நாக ராஜாய -நம என்று பள்ளிக்கட்டிலை வணங்கி
அதற்கு மேலே (தஸ்மிந் உபரி )
ஓம் தர்மாய நம -என்று தென் கிழக்கில் பாத பீடத்தையும் – (ஆக் நேய்யாம் பாதம் வின்யஸ்ய )
ஓம் ஞானாய நம -என்று தென் மேற்கில் ( நைர் ருதியாம் )
ஓம் வைராக்யாய நம -என்று -வட மேற்கில் ( வாயவ்யாம் )
ஓம் ஐஸ்வர்யாய நம -என்று வட கிழக்கில் ( ஐசான்யாம் )

ஓம் அதர்மாய நம -என்று கிழக்கில் பாத பீடத்தை ந்யாஸம் செய்து (ப்ராஸ்யாம் பீட காத்ரம் வின்யஸ்ய)
ஓம் அஞ்ஞானாய நம -என்று தெற்கில் ( தஷிணாஸ் யாம் )
ஓம் அவைராக்யாய நம -என்று மேற்கில் ( ப்ரதீஸ்யாம் )
ஓம் அனைஸ்வர்யாய நம -என்று வடக்கில் ( உத்தரஸ் யாம்)
இவற்றை உடலாகக் கொண்ட பீடமாக இருக்கின்ற திரு அனந்தாழ்வானை ந்யாஸம் செய்து (ஏபி பரிச்சின்ன தனும் பீட பூதம் ஸதாத்மகம நந்தம் வின்யஸ்ய )
பிறகு எல்லாக் காரியங்களுக்கும் உன்முகமாய் எங்கும் உள்ள அனந்தாழ்வானை (பஸ்சாத் ஸர்வ கார்யயோன் முகம் விபும் அநந்தம் )
ஓம் அநந்தாய நம -என்று ந்யாஸம் செய்து ( வின்யஸ்ய)

தஸ்மிந் உபரி ஓம் பத்மாய நம -இதி பத்மம் வி ந்யஸ்ய
தத் பூர்வ பத்ரே ஓம் விமலாயை சாமர ஹஸ்தாயை நம இதி விமலாம் சாமர ஹஸ்தாம் வி ந்யஸ்ய
தத் ஆரப்ய
ப்ரா தஷிண்யேந ஐஸா நந்தம் பத்ரேஷு
ஓம் உத் கர்ஷிண்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஞானாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் க்ரியாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் போகாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ப்ரஹ் வ்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஸத்யாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஈஸா நாயை சாமர ஹஸ்தாயை நம
இதி அஷ்ட சக்தீஸ் சாமர ஹஸ்த வி ந்யஸ்ய
ஓம் அனுக்ரஹாயை சாமர ஹஸ்தாய நம–இதி கர்ணிகா பூர்வ பாகே அனுக்ரஹாம் சாமர ஹஸ்தாய வி ந்யஸ்ய

அதற்கும் மேல் (தஸ்மிந் உபரி )ஓம் பத்மாய நம -இதி ஆஸன பத்மத்தை ந்யாஸம் செய்து (பத்மம் வி ந்யஸ்ய )
முன் இதழில் (தத் பூர்வ பத்ரே ) ஓம் விமலாயை சாமர ஹஸ்தாயை நம -என்று சாமரத்தைக் கையில் கொண்டுள்ள
கன்னிகையான விமலையை ந்யாஸம் செய்து (இதி விமலாம் சாமர ஹஸ்தாம் வி ந்யஸ்ய )
அது முதல் கொண்டு (தத் ஆரப்ய)
ப்ரதக்ஷிணமாக வட கிழக்கு வரை உள்ள இதழ்களில் (ப்ரா தஷிண்யேந ஐஸா நந்தம் பத்ரேஷு )
ஓம் உத் கர்ஷிண்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஞானாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் க்ரியாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் போகாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ப்ரஹ் வ்யை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஸத்யாயை சாமர ஹஸ்தாயை நம
ஓம் ஈஸா நாயை சாமர ஹஸ்தாயை நம
என்று அஷ்ட சக்திகளான சாமர கன்னிகைகளை ந்யாஸம் செய்து (இதி அஷ்ட சக்தீஸ் சாமர ஹஸ்த வி ந்யஸ்ய )
ஓம் அனுக்ரஹாயை சாமர ஹஸ்தாய நம–என்று கர்ணிகையின் முன் பாகத்தில் அனுக்ரஹா என்ற சாமர கன்னிகையை ந்யாஸம் செய்து (இதி கர்ணிகா பூர்வ பாகே அனுக்ரஹாம் சாமர ஹஸ்தாய வி ந்யஸ்ய )

ஓம் ஜகத் ப்ரக்ருதயே யோக பீடாய நம -இதி யோக பீடம் விந்யஸ்ய
ஓம் திவ்யாய யோக பர்யங்காயா -திவ்ய யோக பீட பர் யங்காய நம இதி திவ்ய யோக பீட பர் யங்கம் வி ந்யஸ்ய
தஸ்மிந் அநந்தம் நாக ராஜம் ஸஹஸ்ர பாணி ஸோபிதம் ஓம் அநந்தாய நாக ராஜாய நம இதி வி ந்யஸ்ய
ஓம் அநந்தாய நம இதி புரத பாத பீடம் வி ந்யஸ்ய
ஸர்வாண் யாதார ஸக்த்யாதீ நி பீடாந்தாநி தத்த்வாநி ப்ரத்யேகம்
கந்த புஷ்ப தூப தீபைபரப் யர்ச்ய ஸர்வ பரி வாராணாம் தத் தத் ஸ்தாநே ஷு பத்மாஸ நாநி ஸங்கல்ப்ய
அனந்த கருட விஷ்வக் ஸே நா நாம் ஸ பீடகம் பத்மம் வி ந்யஸ்ய
ஸர்வத புஷ்பாஷ தாதீ நி வி கீர்ய யோக பீடஸ்ய பஸ்சி மோத்தர திக்பாகே
ஓம் அஸ்மத் குருப்யோ நம இதி குரூன்
கந்த புஷ்ப தூப தீபை ஸம் பூஜ்ய ப்ரணம்ய அநு ஜ்ஞாப்ய பகவத் யாகம் ஆராபதே

ஓம் ஜகத் ப்ரக்ருதயே யோக பீடாய நம -என்று யோக பீடத்தை ந்யாஸம் செய்து (இதி யோக பீடம் விந்யஸ்ய )
ஓம் திவ்யாய யோக பர்யங்காயா -திவ்ய யோக பீட பர் யங்காய நம -என்று திவ்ய யோகப் பீடப்
பள்ளிக்கட்டிலை ந்யாஸம் செய்து (இதி திவ்ய யோக பீட பர் யங்கம் வி ந்யஸ்ய )
அதில் நாக ராஜனாய் ஆயிரம் படங்களால் பிரகாசிக்கின்ற ஆதி சேஷனை (தஸ்மிந் அநந்தம் நாக ராஜம் ஸஹஸ்ர பாணி ஸோபிதம் )
ஓம் அநந்தாய நாக ராஜாய நம -என்று ந்யாஸம் செய்து (இதி வி ந்யஸ்ய )
ஓம் அநந்தாய நம-என்று முன்னால் பாத பீடத்தை ந்யாஸம் செய்து ( இதி புரத பாத பீடம் வி ந்யஸ்ய )
ஆதார சக்தி தொடங்கி பீடம் வரை எல்லாத் தத்துவங்களையும் தனித்தனியாக
சந்தனம் புஷ்ப்பம் தூபம் தீபம் இவற்றால் அர்ச்சித்து (ஸர்வாண் யாதார ஸக்த்யாதீ நி பீடாந்தாநி தத்த்வாநி ப்ரத்யேகம் கந்த புஷ்ப தூப தீபைபரப் யர்ச்ய )
எல்லாப் பரிவாரங்களும் அவரவர் ஸ்தானங்களில் பத்மாஸனங்களை அமைத்து (ஸர்வ பரி வாராணாம் தத் தத் ஸ்தாநே ஷு பத்மாஸ நாநி ஸங்கல்ப்ய )
அனந்த கருட விஷ்வக் சேனர்களை பத்மத்தோடே கூடிய பீடத்தில் அமைத்து (அனந்த கருட விஷ்வக் ஸே நா நாம் ஸ பீடகம் பத்மம் வி ந்யஸ்ய )
எல்லாருக்கும் புஷ்பம் அக்ஷதை முதலியவற்றை ஸமர்ப்பித்து (ஸர்வத புஷ்பாஷ தாதீ நி வி கீர்ய )
யோக பீடத்தின் வடமேற்கு பாகத்தில் (யோக பீடஸ்ய பஸ்சி மோத்தர திக்பாகே )
ஓம் அஸ்மத் குருப்யோ நம-என்று ஆச்சார்யர்களை ( இதி குரூன் )
சந்தனம் புஷ்ப்பம் தூபம் தீபம் ஆகியவற்றால் (கந்த புஷ்ப தூப தீபை )
நன்றாகக் பூஜித்து வணங்கி (ஸம் பூஜ்ய ப்ரணம்ய )
அவர்கள் அனுமதி கொண்டு எம்பெருமானின் திருவாராதனத்தை ஆரம்பிக்க வேண்டும் (அநு ஜ்ஞாப்ய பகவத் யாகம் ஆராபதே )

கல்பிதே நாக போகே ஸமா ஸீநம் பகவந்தம் நாராயணம்
புண்டரீக தலா மலாய தாக்ஷம்
கிரீட மகுட கேயூர ஹார கடகாதி ஸர்வ பூஷணை பூஷிதம்
ஆகுஞ்சித தக்ஷிண பாதம் பிரசாரித வாம பாதம் ஜாநு விந்யஸ்ய பிரசாரித தக்ஷிண புஜம் நாக போக விந் யஸ்ய வாம புஜம்
ஊர்த்வ புஜத்வயேந சங்க சக்ர தரம் ஸர்வேஷாம் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ப்ரலய ஹேது பூத மஜ்ஜ நாபம்
கௌஸ்துபேந விராஜா மாநம் ஸகா சதம் உதக்ர ப்ரபுத்த ஸ்புரத் அபூர்வ அசிந்த்ய பரம சத்த்வ பஞ்ச சக்தி மய விக்ரஹம்
பஞ்ச உபநிஷதைர் த்யாத்வா ஆராத நாபி முகோ பவ இதி மூல மந்த்ரேண ப்ரார்த்ய மூல மந்த்ரேண தண்டவத் ப்ரணம்ய
உத்தாய ஸ்வா கதம் நிவேத்ய யாவதாராத ந ஸமாப்தி ஸாந்நித்ய யாஸ நம் குர்யாத்-

அமைக்கப்பட்ட அரவணையில் வீற்று இருப்பவனும் -தாமரை இதழ் போன்ற அகன்ற கண்களை உடையவனும்
கிரீடம் மகுடம் கேயூரம் ஹாரம் கடகம் முதலிய ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டவனும்
மடக்கிய வலது திருவடியை உடையவனும் -நீட்டித் தொங்க விட்ட இடது திருவடியை யுடையவனும்
முழங்காலில் நீட்டி வைத்த வலது திருக்கரத்தை யுடையவனும்
அரவணையில் வைத்த இடது திருக்கரத்தை யுடையவனும்
மேல் இரண்டு திருக்கரங்களால் சங்கு சக்கரங்களைத் தரித்தவனும்
அனைவரையும் படைத்தால் காத்தல் அழித்தல் ஆகியவற்றுக்குக் காரணமான திரு நாபியை யுடையவனும்
கௌஸ்துப மணியினால் பிரகாசிப்பவனும்
பிரகாசிக்கின்ற மிக உயர்ந்த நல்ல மலர்ச்சியுடன் விளங்குகிற அபூர்வமான நினைக்கவும் முடியாத பரம ஸத்வமாய்
பஞ்ச சக்தி மயமான திரு மேனியை யுடையவனுமான பகவான் நாராயணனை பஞ்ச உபநிஷத்துக்களால் தியானித்து
திரு வாராதனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று திரு மந்திரத்தினால் பிரார்த்தித்துக் கொண்டு
திரு மந்த்ரத்தைக் கூறி தடி போல் விழுந்து வணங்கி எழுந்து வரவேற்புக் கூறி திருவாராதனம் முடியும் வரை எழுந்து அருளி இருக்கும் படி யாசிக்க வேண்டும்

அந்யத்ர ஸ்வாபி மத தேசே பூஜா சேத் ஏவமாவாஹநம்
மந்த்ர யோக சமாஹ்வாநம் கர புஷ்போப தர்சனம்
பிம்போ பவேஸநம் சைவ யோக விக்ரஹ சிந்தனம்
பிரணாமஸ் ச ஸமுத்தா நம் ஸ்வா கதம் புஷ்ப்ப மேவ ச
சாந்நித்ய யாசநம் சேதி தத்ராஹ்வா நஸ்ய சத் க்ரியா

வேறு விருப்பமான இடத்தில் பூஜை என்றால் இப்படி ஆவாஹனம் செய்ய வேண்டும்
மந்த்ரத்தைக் கூறுதல் -எம்பெருமானை அழைத்தல் -கையில் புஷபத்தைக் காட்டுதல் –
பிம்பத்தில் எழுந்து அருள்ச செய்தல் -எம்பெருமானுடைய திரு மேனியைத் தியானித்தல் -வணங்குதல் –
எழுதல் -வரவேற்புக் கூறுதல் – புஷ்பம் சமர்ப்பித்தல் -சாந்நித்யம் செய்ய வேண்டும் -எழுந்து அருளி இருக்க வேண்டும் -என்று வேண்டுதல்
ஆகிய இவை ஆவாஹனம் செய்வதற்கு உரிய சத் க்ரியைகளாகும்

ததோ பகவந்தம் ப்ரணம்ய தஷிணத -ஓம் ஸ்ரீம் ஸ்ரியை நம -இதி ஸ்ரியம் ஆவாஹ்ய ப்ரணம்ய
வாமத ஓம் பூம் பூம்யை நம இதி புவம் ஆவாஹ்ய தத்ரைவ ஓம் நீம் நீலாயை நம இதி நீலாம் ஆவாஹ்ய
ஓம் கிரீடாய மகுடாதி பதயே நம இதி உபரி பாகவத பஸ்சிம பார்ஸ்வே சதுர் பாஹும் சதுர் வக்த்ரம் க்ருதாஞ்சலி புடம் மூர்த்னி பகவத் கிரீடம் தார யந்தம் க்ரீடாக் யதி வ்ய புருஷம் பிரணம்ய

பிறகு பகவானை வணங்கி வலது பக்கத்தில் ஓம் ஸ்ரீம் ஸ்ரீ யை நம -என்று பெரிய பிராட்டியாரை ஆவாஹனம் செய்து வணங்கி
இடது பக்கத்தில் ஓம் பூம் பூம்யை நம -என்று பூமிப் பிராட்டியை ஆவாஹநம் செய்து
அங்கேயே ஓம் நீம் நீளாயை நம -என்று நீளா தேவியை ஆவாஹனம் செய்து
ஓம் கிரீடாய மகுடாதி பதயே நம -என்று மேலே பகவானுடைய வலப்புறத்தில் நான்கு தோள்களை யுடையவனாய் நான்கு முகங்களை யுடையவனாய்
கூப்பிய கையனாய் திரு முடியில் பகவானுடைய கிரீடத்தை தரிப்பவனான கிரீடம் என்கிற திவ்ய புருஷனை வணங்கி

ஏவ மேவ
ஓம் கிரீட மால்யாயா பீட காத்மநே நம -இத்யா பீடகம் தத்ரைவ புரஸ்தாத் ப்ரணம்ய
ஓம் தக்ஷிண குண்டலாய மகராத்மநே நம இதி தக்ஷிண குண்டலம் தக்ஷிணத ப்ரணம்ய
ஓம் வாம குண்டலாய மகராத்மநே நம இதி வாம குண்டலம் வாமத ப்ரணம்ய
ஓம் வைஜயந்த்யை வனமால்யை நம இதி வனமாலாம் புரத பிராணமய
ஓம் ஸ்ரீ துல்யை இதி துல ஸீம் -தேவீம் -புரத ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ வாத்ஸாய ஸ்ரீ நிவாஸாய நம இதி ஸ்ரீ வத்ஸம் புரத ப்ரணம்ய
ஓம் ஹாராய ஸர்வ ஆபராணாதி பதயே நம இதி ஹாரம் புரத ப்ரணம்ய
ஓம் ஸ்ரீ கௌஸ்துபாய ஸர்வ ரத்நாதி பதயே நம இதி
கௌஸ்துபம் புரத ப்ரணம்ய
ஓம் காஞ்சீ குண உஜ்ஜவலாய பீதாம்பராய நம இதி பீதாம்பரம் புரத ப்ரணம்ய

இப்படியே

ஓம் கிரீட மால்யாயா பீட காத்மநே நம – என்று ஆபீடகத்தை
அங்கேயே முன்னால் வணங்கி
ஓம் தக்ஷிண குண்டலாய மகராத்மநே நம என்று வலது
திருக்காதில் உள்ள குண்டலத்தை வலப்புறத்தில் வணங்கி
ஓம் வாம குண்டலாய மகராத்மநே நம -என்று இடது திருக்காதில் உள்ள குண்டலத்தகை இடப்புறத்தில் வணங்கி
ஓம் வைஜயந்த்யை வனமால்யை நம என்று வனமாலையை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ துல்யை இதி துல ஸீம் -தேவீம் –என்று திருத்துழாய் தேவியை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ வாத்ஸாய ஸ்ரீ நிவாஸாய நம என்று ஸ்ரீ வத்ஸாத்தை முன்னால் வணங்கி
ஓம் ஹாராய ஸர்வ ஆபராணாதி பதயே நம -என்று காரத்தை முன்னால் வணங்கி
ஓம் ஸ்ரீ கௌஸ்துபாய ஸர்வ ரத்நாதி பதயே நம -என்று கௌஸ்துபத்தை முன்னால் வணங்கி
ஓம் காஞ்சீ குண உஜ்ஜவலாய பீதாம்பராய நம -என்று பீதாம்பரத்தை முன்புறம் வணங்கி

ஓம் ஸர்வேப்யோ பகவத் பூஷண ணேப்யோ நம இதி ஸர்வ பூஷணாநி ஸர்வத ப்ரணம்ய
ஓம் ஸூ தர்சனாய ஹேதி ராஜாய நம இதி ஸூ தர்சனம் ரக்த வர்ணம் ரக்த நேத்ரம் த்வி -சதுர் -புஜம் க்ருதாஞ்சலி புடம்
பகவந்த மாலோக யந்தம் தத் தர்சன அநந்த ப்ரும்ஹித முகம் மூர்த்நி பகவச் சக்ரம் தார யந்தம்
தஷிணத பிராணமய ஓம் நந்தகாய கட் காதி பதயே நம இதி நந்த காத்மா நம் சிரஸி பகவத் கட்கம் தார யந்தம்
தத்ரைவ ப்ரணம்ய ஓம் பத்மாய நம இதி பத்மம் -பத்மம் சிரஸி தார யந்தம் -ப்ரணம்ய
ஓம் பாஞ்ச ஜந்யாய சங்காதி பதயே நம இதி சங்காத்மாநம் ஸித வர்ணம் -ரக்த நேத்ரம் -த்வி புஜம் க்ருதாஞ்சலி புடம்
சிரஸி பகவச் சங்கம் தார யந்தம் வாமத ப்ரணம்ய
ஓம் கௌமோதக்யை கதாதி பதயே நம இதி கதாத்மாநம் தத்ரைவ ப்ரணம்ய

ஓம் ஸர்வேப்யோ பகவத் பூஷண ணேப்யோ நம -என்று எல்லா ஆபரணங்களையும் சுற்றிலும் வணங்கி –
ஓம் ஸூ தர்சனாய ஹேதி ராஜாய நம -என்று சிவந்த நிறம் உள்ளவரும் சிவந்த கண்களை யுடையவரும்
இரு -நான்கு -திருக்கைகளை உடையவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும் – பகவானை நோக்கிக் கொண்டு இருப்பவரும் –
பகவானை சேவித்தால் உண்டான மகிழ்ச்சியுடன் கூடிய முகத்தை யுடையவரும் தலையில் பகவானுடைய சக்கரத்தைத் தாங்கி இருப்பவருமான ஸூதர்சனரை வலப்புறத்தில் வணங்கி
ஓம் நந்தகாய கட் காதி பதயே நம -என்று நந்தகன் என்னும் பெயரை யுடையவரும் தலையிலே பகவானுடைய வாளைத் தாங்கி இருப்பவருமானவரை அங்கேயே வணங்கி
ஓம் பத்மாய நம என்று தாமரையை -தாமரையைத் தலையில் தாங்கியவரை-வணங்கி –
ஓம் பாஞ்ச ஜந்யாய சங்காதி பதயே நம -என்று சங்கமாய்-வெண்மை நிறம் யுடையவரும் -சிவந்த கண்களை யுடையவரும் –
இரு கைகளை யுடையவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும்
தலையில் பகவானுடைய சங்கத்தைத் தாங்கி இருப்பவரை இடது புறத்தில் வணங்கி –
ஓம் கௌமோதக்யை கதாதி பதயே நம -என்று கதா யுதமாக இருப்பவரை அங்கேயே வணங்கி –

தத்ரைவ -ஓம் ஸார்ங்காய சாபாதி பதயே நம இதி சார்ங்காத்மாநம் ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் திவ்யாயுதேப்யோ நம இதி ஸர்வா யுதாநி பரித ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாதாரவிந்த ஸம் வாஹி நீப்யோ நம இதி திவ்ய பாதாரவிந்த ஸம் வாஹி நீஸ் சமந்தத ப்ரணம்ய
ஓம் அநந்தாய நாக ராஜாய நம இதி ப்ருஷ்டத அநந்தம் -பகவந்தம் -நாக ராஜம் சதுர் புஜம்
ஹலமுஸல தரம் க்ருதாஞ்சலி புடம் பணாமணி ஸஹஸ்ர மண்டித உத்தம அங்கம் பகவந்த மாலோகயந்தம்
பகவத் ஸ்பர்ச நாநந்த ப்ரும்ஹித ஸர்வ காத்ரம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிஜனே ப்யோ நம இதி அநுக்த அநந்த பரிஜனாந் சமந்தத ப்ரணம்ய
ஓம் பகவத் பாதுகாப்யாம் நம இதி பகவத் பாதுகே புரத ப்ரணம்ய

அங்கேயே -ஓம் ஸார்ங்காய சாபாதி பதயே நம–என்று சார்ங்கத்தை-வில்லை – வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் திவ்யாயுதேப்யோ நம -என்று எல்லா ஆயுதங்களையும் சுற்றலும் வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாதாரவிந்த ஸம் வாஹி நீப்யோ நம -என்று பகவானுடைய திருவடிகளை வருடுபவர்கள் அனைவரையும் வணங்கி
ஓம் அநந்தாய நாக ராஜாய நம -என்று அநந்தன் என்ற பெயரை யுடையவரும் -பகவான் நாக ராஜரும்-
நான்கு கைகளை யுடையவனும் -கலப்பை உலக்கை ஆகியவற்றைத் தாங்கி இருப்பவனும்
அஞ்சலி செய்து இருப்பவனும் -ஆயிரம் படங்களைக் ன்கொண்ட தலைகளை யுடையவனும் –
பகவானை சேவித்துக் கொண்டு இருப்பவனும் -பகவானைத் தொட்டுக் கொண்டு இருப்பதால் உண்டான மகிழ்ச்சி யோடு கொடிய உடலை உடையவனுமான ஆதி சேஷனை தியானித்து பின்புறம் வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிஜனே ப்யோ நம -என்று இங்கு கூறப்படாத எல்லாப் பரிவாரங்களும் சுற்றிலும் வணங்கி
ஓம் பகவத் பாதுகாப்யாம் நம -என்று பகவானுடைய இரு பாதுகைகளை முன்னால் வணங்கி

ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிச்ச தேப்யோ நம இதி ஸர்வ பரிச்ச தான் சமந்தத ப்ரணம்ய
ஓம் வைநதேயாய நம இதி அக்ரதோ -பகவதோ பகவந்தம் -வைநதேயம் ஆஸீநம் த்வி புஜம் க்ருதாஞ்சலி புடம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் நமோ பகவதே விஷ்வக் சேநாய இதி பகவத ப்ராக் உத்தர பார்ஸ்வே தஷிணாபி முகம் பகவந்தம் விஷ்வக் சேனம் ஆஸீநம்
சதுர் புஜம் சங்க சக்ர தரம் க்ருதாஞ்சலி புடம் நீல மேக நிபம் த்யாத்வா ப்ரணம்ய
ஓம் கம் கஜாநநாய நம -ஓம் ஜம் ஜயத் சேநாய நம -ஓம் ஹம் ஹரி வக்த்ராய நம –
ஓம் கம் கால ப்ரக்ருதி ஸம் ஜ் ஞாய நம -ஓம் ஸர்வேப்யோ பகவத் விஷ்வக் சேந பரி ஜநேப்யோ நம -இதி விஷ்வக் சேந பரி ஜநான் பிராணமய
ஓம் சண்டாய த்வார பாலைய்யா நம -ஓம் ப்ரசண்டாய த்வார பாலாய நம இதி பூர்வ த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் பத்ராய த்வார பாலாய நம -ஓம் ஸூ பத்ராய த்வார பாலாய நம-இதி தக்ஷிண த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் ஜயாய த்வார பாலாய நம – ஓம் விஜயாய த்வார பாலாய நம -இதி பஸ்சிம த்வார பார்ஸ்வயோ ப்ரணம்ய
ஓம் தாத்ரே த்வார பாலாய நம –ஓம் விதாத்ரே த்வார பாலாய நம -இதி உத்தர த்வார பார்ஸ்வயோ பிரணமேத்
ஏதே த்வார பாலாஸ் ஸர்வே சங்க சக்ர கதா தரா ஆஜ்ஞா முத்ர யுதா த்யதவ்யா-

ஓம் ஸர்வேப்யோ பகவத் பரிச்ச தேப்யோ நம –என்று எம்பெருமானுடைய எல்லா அடியவர்களையும் சுற்றிலும் வணங்கி
ஓம் வைநதேயாய நம -என்று பகவானுக்கு முன்னால் வீற்று இருக்கின்றவனும் -இரு கைகளை யுடையவனும் –
அஞ்சலி செய்து இருப்பவனுமான பகவான் கருடனை த்யானம் செய்து வணங்கி
ஓம் நமோ பகவதே விஷ்வக் சேநாய -என்று எம்பெருமானுக்கு முன்னால் வடக்குப் பக்கத்தில் தெற்கு நோக்கி வீற்று இருப்பவரும் –
நான்கு திருக்கரங்களை உடையவரும் -சங்க சக்கரங்களை தரித்து இருப்பவரும் -அஞ்சலி செய்து இருப்பவரும் –
நீலமேகம் போன்ற நிறத்தை உடையவருமான பகவான் விஷ்வக் சேனரை தியானித்து வணங்கி –
ஓம் கம் கஜாநநாய நம -ஓம் ஜம் ஜயத் சேநாய நம -ஓம் ஹம் ஹரி வக்த்ராய நம –
ஓம் கம் கால ப்ரக்ருதி ஸம் ஜ் ஞாய நம -ஓம் ஸர்வேப்யோ பகவத் விஷ்வக் சேந பரி ஜநேப்யோ நம -என்று
விஷ்வக் சேனருடைய அடியவர்களை வணங்கி
ஓம் சண்டாய த்வார பாலைய்யா நம -ஓம் ப்ரசண்டாய த்வார பாலாய நம -என்று கிழக்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் பத்ராய த்வார பாலாய நம -ஓம் ஸூ பத்ராய த்வார பாலாய நம- என்று தெற்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் ஜயாய த்வார பாலாய நம – ஓம் விஜயாய த்வார பாலாய நம -என்று மேற்கு வாசல் பக்கத்தில் வணங்கி
ஓம் தாத்ரே த்வார பாலாய நம –ஓம் விதாத்ரே த்வார பாலாய நம -என்று வடக்கு வாசல் பக்கத்திலே வணங்க வேண்டும்
இந்த த்வார பாலகர்கள் யாவரையும் சங்க சக்கரம் தரித்தவர்களாயும் ஆணை இடுகின்ற முத்திரை யுடையவர்களாகவும் தியானிக்க வேண்டும் –

ஓம் ஸர்வேப்யோ பகவத் த்வார பாலயோ நம இதி ஸர்வ த்வாரேஷு ஸர்வ த்வார பாலான் ப்ரணம்ய
ஓம் குமுதாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி பூர்வஸ்யாம் திஸி
பார்ஷ தேஸ்வரம் குமுதம் ப்ரணம்ய
ஓம் குமுதாஷாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி ஆக்நேய்யாம் குமுதாஷம் ப்ரணம்ய
ஓம் புண்டரீகாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி தக்ஷிண ஸ்யாம் புண்டரீகம் ப்ரணம்ய
ஓம் வாமநாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி நைர் ருத்யாம் வாமனம் ப்ரணம்ய
ஓம் சங்கு கர்ணாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி பஸ்ஸிமஸ்யாம் சங்கு கர்ணம் ப்ரணம்ய
ஓம் ஸர்ப நேத்ராய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி வாயவ்யாம் ஸர்ப நேத்ரம் ப்ரணம்ய
ஓம் ஸூ முகாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி உதீச்யாம் ஸூ முகம் ப்ரணம்ய
ஓம் ஸூ ப்ரதிஷ்டாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம இதி ஐஸாந்யாம் ஸூ ப்ரதிஷ்டம் ப்ரணம்ய
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாரிஷாதேப்யோ நம இதி ஸர்வ ஸ்மாத் பஹி பிரணமேத்

ஓம் ஸர்வேப்யோ பகவத் த்வார பாலயோ நம -என்று எல்லா வாசல்களிலும் உள்ள த்வார பாளர்கள் அனைவரையும் வணங்கி
ஓம் குமுதாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம-என்று கிழக்கு திசையில் பார்ஷ தேஸ்வரனான குமுதனை வணங்கி
ஓம் குமுதாஷாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று தென் கிழக்கில் குமுதாஷனை வணங்கி
ஓம் புண்டரீகாய கணாதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம-என்று தெற்கில் புண்டரீகனை வணங்கி
ஓம் வாமநாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று தென் மேற்கில் வாமனனை வணங்கி
ஓம் சங்கு கர்ணாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம என்று மேற்கில் சங்கு கர்ணனை வணங்கி
ஓம் ஸர்ப நேத்ராய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வட மேற்கில் ஸர்ப நேத்ரனனை வணங்கி
ஓம் ஸூ முகாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வடக்கில் ஸூ முகனை வணங்கி
ஓம் ஸூ ப்ரதிஷ்டாய கணபதி பதயே ஸ வாஹந பரிவார ப்ரஹரணாய நம -என்று வட கிழக்கில் ஸூ ப்ரதிஷ்டனை வணங்கி
ஓம் ஸர்வேப்யோ பகவத் பாரிஷாதேப்யோ நம -என்று எல்லாரையும் வெளிப்புறத்தில் வணங்க வேண்டும் –

அந்யத்ர ஆவாஹ்ய பூஜாயாம் ஆவஹ நஸ்தா நாநி பரம வ்யோம -ஷீரார்ணவ -ஆதித்ய மண்டல ஹ்ருதயாநி -மதுரா த்வாரகா -கோகுல -அயோத்யாதீநி
திவ்ய அவதார ஸ்தாநாநி ச அன்யாநி ப்வராணிகாநி ஸ்ரீ ரெங்காதீ நி ச யதா ருசி

மற்றோர் இடத்தில் ஆவாஹநம் செய்து திருவாராதனம் செய்வதற்கு உரிய இடங்களாக பரமபதம் திருப்பாற் கடல் -ஸூர்ய மண்டலம் முதலிய இடங்களையும்
வடமதுரை துவாரகை கோகுலம் அயோத்யை முதலிய திவ்ய அவதார ஸ்தலங்களையும்
ஸ்ரீ ரெங்கம் முதலிய திவ்ய தேசங்களையும் அவரவர் விருப்பப்படி ஆவாஹநம் செய்து கொள்ள வேண்டும் –

பாத்ரேண பூர்வ ஸ்தாபித அர்க்ய பாத்ராத் அர்க்ய ஜலம் ஆதாய பாணிப்யாம் முக சமம் உத்த்ருத்ய
பகவன் இதம் பிரதி க்ருஹ்ணீஷ்வ இதி சிந்தயன் பகவான் முகே தர்ச யித்வா பகவத் தக்ஷிண ஹஸ்தே கிஞ்சித் ப்ரதாயார்க்க்யம் ப்ரதிக்ருஹ பாத்ரே ப்ரஷிபேத் ஹஸ்தவ் ப்ரஷால்ய
பாதயோ புஷ்பாணி சமர்ப்ய பாத்ய பாத்ராத் பாத்ய ஜலம் ஆதாய பாதயோ கிஞ்சித் தத்வா மனஸா பாதவ் ப்ரஷாலயன் பாத்யம் பிரிதிக்ருஹ பாத்ரே நிஷிபேத்

முன்பு ஏற்படுத்தப்பட்ட அர்க்ய பாத்திரத்தில் இருந்து அர்க்ய ஜலத்தை எடுத்துக் கைகளாலன் முகத்துக்கு சமமாக உயர வைத்துக் கொண்டு
பகவானே இதனை ஏற்றுக் கொண்டு அருள வேணும் -என்று நினைத்து -பிரார்த்தித்து -பகவானுடைய திரு முகத்தின் முன் காட்டி
பகவானுடைய வலது திருக்கரத்தில் சிறிது அர்க்யம் சமர்ப்பித்து ப்ரதிக்ருஹ -படிக -பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –
கைகளை அலம்பி எம்பெருமானுடைய திருவடிகளில் புஷ்பங்களை சமர்ப்பித்து பாத்ய பாத்திரத்தில் இருந்து பாத்ய ஜலத்தை எடுத்து
திருவடிகளில் சிறிது சேர்த்து மனத்தினால் திருவடிகளை விளக்குவதாக நினைத்து பி பாத்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும் –

ஹஸ்தவ் ப்ரஷால்ய
வஸ்த்ரேண பாதவ் ஸம் ம்ருஜ்ய கந்த புஷ்பாணி தத்வா
ஆசம நீய பாத்ராத் ஆசம நீய மாதாய பகவத் தஷிண ஹஸ்தே கிஞ்சித் ப்ரதாய பகவத் வதேந ஆசம நீயம் சமர்ப்பிதம் இதி மனசா பாவயன் சேஷ மாசம நீயம் ப்ரதிக்ரஹ பாத்ரே நிஷி பேத்
ததோ கந்த புஷ்ப தூப தீப ஆசமன முக வாஸ தாம் பூலாதி நிவேதநம் க்ருத்வா ப்ரணம்ய
ஆத்மா நம் ஆத்மீயம் ச ஸர்வம் பகவன் நித்ய கிங்கரத்வாய ஸ்வீ குர்வ இதி பகவதே நிவேதயேத்
தத ஸ்நாநார்தம் ஆஸனம் ஆ நீய
கந்தாதி ப்ரப்யர்ச்ய பகவந்தம் ப்ரணம்ய அனுஜ் ஞாய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே மால்ய பூஷண வஸ்த்ராண் யப நீய விஷ்வக் ஸேனாய தத்வா ஸ்நாந சாடி காம் ப்ரதாய பாத்யாசமா நீய பாத பீட ப்ரதான தந்த காஷ்ட ஜிஹ்வா நிர்லேஹந

கைகளை அலம்பி
வஸ்திரத்தினால் திருவடிகளை ஒத்துத் துடைத்து -பூக்களை சமர்ப்பித்து ஆசம நீய பாத்திரத்தில் இருந்து ஆசம நீயம் எடுத்து
பகவானுடைய வலது திருக்கரத்தில் சிறிது ஸமர்ப்பித்து பகவானுடைய திரு வாயில் ஆசம நீயம் சமர்ப்பிக்கப் பட்டது என்று மனத்தினால் பாவித்து
மிகுந்த ஆசம நீய தீர்த்தத்தை ப்ரதிக்ருஹ பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
பிறகு புஷ்பம் தூபம் தீபம் தாம்பூலம் முதலிய வற்றை நிவேதனம் செய்து -தண்டன் சமர்ப்பித்து –
தன்னுடைய ஆத்மாவையும் ஆத்மாவைச் சேர்ந்த எல்லாவற்றையும் பகவானே நித்ய கைங்கர்யம் செய்வதற்க்காக
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பகவான் இடம் சமர்ப்பிக்க வேண்டும்
பிறகு திருமஞ்சனத்துக்காக ஆஸனத்தை ஏற்படுத்தி கந்தம் முதலியவற்றால் அர்ச்சித்து பகவானை தண்டன் சமர்ப்பித்து அனுமதி கொண்டு
பாதுகையை சமர்ப்பித்து பகவான் சாத்திக் கொண்டு இருக்கிற மாலை ஆபரணங்கள் வஸ்திரம் ஆகியவற்றைக் கழற்றி விஷ்வக் சேனர் இடம் கொடுத்து விட்டு
திருமஞ்சன வஸ்திரம் சாத்தி பாத்யம் ஆசம நீயம் பாத பீடம் சமர்ப்பித்து
திரு முத்து பல் விளக்குதல் திரு நாக்கு வழித்தல்

கண்டூஷ முக ப்ரஷாலந ஆசமன ஆ தர்ச ப்ரதர்சன ஹஸ்த ப்ரஷாலந -முக வாஸ தாம்பூல
தைலாப் யங்க–உத்வர்தாமலக தோய -கங்கதப் லோத தேஹ ஸோதந ஸாடிகா ப்ரதான
ஹரித்ரா லேபந ப்ரஷாலந வஸ்த்ர உத்தரீய யஜ்ஜோ பவீத ப்ரதான பாத்ய ஆசமன பவித்ர ப்ரதான
கந்த புஷ்ப தூப தீப ஆசமன – ந்ருத்த -கீத -வாத்யாதி ஸர்வ மங்கள ஸம் யுக்த
அபிஷேக நீராஞ்சன ஆசமன-தேஹ சோதந -ப்லோத வஸ்த்ர உத்தரீய யஜ்ஜோபவீத -ஆசமன -கூர்ச பிரசாரண
ஸஹஸ்ர தாராபிஷேக நீராஞ்சன ஆசமன -தேஹ சோதந ப்லோத வஸ்திர உத்தரீய -யஜ்ஜோ பவீத ஆசமநாநி தத்யாத் –

வாய் கொப்பளித்தல் திரு முகம் விளக்குதல் -ஆசமனம் – கண்ணாடி காண்பித்தல் -கைகளை அலம்புதல் -தாம்பூலம்
எண்ணெய் காப்பு – நல்ல நெல்லிக்காய் சேர்த்த தீர்த்தம் –திருமேனியைத் துடைக்கும் உலர்ந்த வஸ்திரம் -மான்கள் காப்பு தெளித்தல் -வஸ்திரம் உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் சமர்ப்பித்தல் –
பாத்யம் ஆசமநம் பவித்ரம் சமர்ப்பித்தல் -கந்தம் புஷ்பம தூபம் -தீபம் ஆசமனம் -நாட்டியம் இசை வாத்தியங்கள் முதலிய மண்கலன்களோடு கூடிய
திருமஞ்சன ஆலத்தி ஆசமனம் ஆகியவை சமர்ப்பித்து மறுபடியும் திரு மேனி துடைக்கும் உலர்ந்த வஸ்திர உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் ஆசமனம் கூர்ச்சம் சமர்ப்பித்தல்
சஹஸ்ர தாரை திருமஞ்சனம் ஆலத்தி ஆசமனம் திருமேனி துடைக்கும் உலர்ந்த வஸ்திர உத்தரீயம் யஜ்ஜோ பவீதம் ஆசமனம் ஆகியவை சமர்ப்பிப்பது –

தத அலங்காராஸனம் அப்யர்ச்ச ப்ரணம்ய அநுஜ ஞாய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பூர்வவத்
ஸ்நாநீய வர்ஜம் அர்க்க்ய பாத்ய ஆசமநீய ஸூத்தோத்தகாநி மந்த்ரேண கல்பயித்வா பகவதே
கந்தபுஷ்ப பாத ஸம் மர்தந-வஸ்திர -உத்தரீய -பூஷண -உபவீத -பார்க்க பாதுகா ஆசமநீயாநி தத்வா
ஸர்வ பரிவாராணாம் ஸ்நாந வஸ்த்ராதி பூஷணாந்தம் தத்வா கந்தாதீன் தேவ அநந்தரம் ஸர்வ பரிவாராணாம் ப்ரத்யேகம் ப்ரதாய தூப தீப ஆசமநீயாநி தத்யாத்
அதவா ஸர்வ பரிவாராணாம் கந்தாதீநேவ தத்யாத்

பிறகு அலங்காரச்சாநத்தைப் பூஜித்து -வணங்கி -எம்பெருமானுடைய அனுமதி கொண்டு -பாதுகையை சமர்ப்பித்து
அங்கு எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானுக்கு முன்பு போலவே ஸ்நா நீயத்தைத் தவிர்த்து
அர்க்க்ய பாத்ய ஆசமநீய ஸூத்த தீர்த்தங்களை மந்திரத்தினால் ஏற்படுத்தி எம்பெருமானுக்கு கந்த புஷ்பம
திருவடிகளை வருடுதல் -வஸ்திரம் உத்தரீயம் -ஆபரணங்கள் -யஜ்ஜோ பவீதம் அரக்ய பாத்ய ஆசமநீயங்கள் சமர்ப்பித்து
காந்தம் முதலியவற்றை எம்பெருமானுக்குப் பிறகு எல்லாப் பரிவாரங்களும் தனித்தனியே ஸமர்ப்பித்து தூப தீப ஆசமநீயங்களை சமர்ப்பிக்க வேண்டும்
அல்லது எல்லாப் பரிவாரங்களும் காந்தம் முதலியவற்றை மட்டுமே ஸமர்ப்பிக்க வேண்டும் –

கந்த புஷ்ப ப்ரதான -அலங்கார -அஞ்சன -ஊர்த்வ புண்ட்ர -ஆதர்ச -தூப தீப -ஆசமன -த்வஜ -சத்ர -சாமர -வாஹந –
சங்க சிஹ்ன -காஹல -பேர்யாதி -சகல ந்ருத்த கீதா வாத்யாதிபி
அப்யர்ச்ச மூல மந்த்ரேண புஷ்பம ப்ரதாய

கந்த புஷ்பங்களை ஸமர்ப்பித்து அலங்காரம் அஞ்சனம் திருமண் காப்பு கண்ணாடி தூபம் தீபம் ஆசமனம் கொடி குடை சாமரம் வாஹனம்
சங்கம் திருச்சின்னம் காளம் பேரிகை முதலியவற்றுடன் நாட்டியம் இசை அனைத்து வாத்யங்கள் இவற்றுடன் அர்ச்சித்து மூல-திரு -மந்த்ரத்தினால் புஷ்பம் சமர்ப்பித்து
ஒவ்வொரு அஷரத்துக்கும் புஷ்பம் சமர்ப்பித்து –

த்வாதஸ அக்ஷரேண -விஷ்ணு ஷட் அக்ஷரேண-விஷ்ணு காயத்ர்யா -பஞ்ச உபநிஷதை -புருஷ ஸூக்தர்க்பி
அந்யைஸ் ச பகவன் மந்த்ரை சக்தஸ் சேத் -புஷ்பம் ப்ரதாய தேவ்யாதி திவ்ய பரிஷாதாந்தம் தத் தத் மந்த்ரேண புஷ்பம் தத்வா ப்ரணம்ய
ப்ரதி திஸம் ப்ரதக்ஷிண ப்ரணாம பூர்வகம் பகவதே புஷ்பாஞ்சலிம் தத்வா புரத ப்ரணம்ய
ஸ்ருதி ஸூகை ஸ்தோத்ரை ஸ்துத்வா ஆத்மாநம் நித்ய கிங்கர தயா நிவேத்ய ததைவ த்யாத்வா யதா ஸக்தி மூல மந்த்ரம் ஜபித்வா
ஸர்வ போக ப்ரபூர்ணம் மாத்ரம் தத்வா முகா வாஸ தாம்பூலே ப்ரதாய அர்க்யம் தத்வா போஜ்யாசனம் அப்யர்ச்ச ப்ரணம்ய
அநுஜ் ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பாத்ய ஆசமநீய அர்ஹாணி தத்வா

ஓம் நமோ பகவதே வாஸூ தேவாய -என்ற 12 எழுத்து மந்திரத்தாலும்
ஓம் விஷ்ணவே நம -என்ற ஆறு எழுத்து மந்திரத்தாலும்
ஓம் நாராயணாய வித்மஹே வாஸூ தேவாய தீ மஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் -என்கிற விஷ்ணு காயத்ரியாலும்
பஞ்ச உபநிஷத்துக்களாலும்
புருஷ ஸூக்த ருக்குகளினாலும்
பிற பகவன் மந்த்ரங்களாலும்
சக்தியுள்ளவரை புஷ்ப்பங்களை சமர்ப்பித்து
பிராட்டி முதலிய அடியவர்கள் அனைவருக்கும் அவரவருக்கு உரிய மந்திரங்களுடன் புஷ்பம் ஸமர்ப்பித்து வணங்கி
எல்லா திசைகளிலும் ப்ரதக்ஷிணம் பிரணாமம் இவற்றுடன் எம்பெருமானுக்கு புஷ்பாஞ்சாலி ஸமர்ப்பித்து முன்னால் வணங்கி
செவிக்கு இனிய ஸ்தோத்ரங்களால் -திருப்பாவை முதலிய அருளிச் செயல்களால் -ஸ்துதித்து
தன்னை நித்ய கைங்கர்ய பரனாக ஸமர்ப்பித்து -அப்படியே தியானித்து -சக்தி யுள்ளவரை மூல திரு மந்த்ரத்தை ஜபித்து
எல்லா போகங்களையும் பூர்த்தி செய்யும் மாத்திரையை ஸமர்ப்பித்து வாயுக்கு வாஸனை அளிக்கும் தாம்பூலம் சமர்ப்பித்து
அர்க்கியம் சமர்ப்பித்து போஜ்யசாநத்தைப் பூஜித்து வணங்கி
பகவான் அனுமதி கொண்டு -பாதுகை ஸமர்ப்பித்து அங்கே எழுந்து அருளி இருக்கும் பகவானுக்கு பாத்ய ஆசமனீயங்களை ஸமர்ப்பித்து –

குடம் மாஷிகம் ஸர்பி ததி ஷீரம் சேதி பாத்ரை நிஷிப்ய
ஸோஷணாதி பிர் விஸோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய மது பர்கம் அவநத ஸிரா ஹர்ஷோத்புல்ல நயநோ ஹ்ருஷ்ட மநா பூத்வா ப்ரதாய ஆசமநீயம் தத்யாத்
யத் கிஞ்சித் த்ரவ்யம் பகவதே தீயதே தத் ஸர்வம் சோஷணாதி பிர் விஸோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய தத்யாத்

வெல்லம் தேன் நெய் தயிர் பால் ஆகியவற்றைத் தனித்தனிப் பாதிரிரத்தில் சேர்த்து சோஷணம் முதலியவற்றால் சுத்தப்படுத்தி
அர்க்ய ஜலத்தால் ப்ரோக்ஷித்து மதுபர்க்கத்தை குனிந்த தலையுடன் கண்களில் மகிழ்ச்சி பொங்க
உகப்பான மனத்துடன் கூடியவனாகி ஸமர்ப்பித்து ஆசமநீயம் ஸமர்ப்பிக்க வேண்டும்
எந்தப் பொருள்கள் எல்லாம் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கப் படுகிறதோ அவை அனைத்தையும் சோஷணம் முதலியவற்றால் சுத்தப்படுத்தி அர்க்ய ஜலத்தால் ப்ரோக்ஷித்து சமர்ப்பிக்க வேண்டும் –

ததஸ் ச காம் ஸ்வர்ண ரத்நாதி கம் ச யதா ஸக்தி தத்யாத்
ததஸ் ஸூ ஸம்ஸ்க்ருதாந்நம் ஆஜ்யாட் யம் ததி ஷீர மதூ நிச பல மூல வ்யஞ்ஜநாநி
மோத காஸ் ச அந்யாநி ச லோகே ப்ரிய தமாநி ஆத்ம நஸ் ச இஷ்டா நி ஸாஸ்த்ரா விருத்தா நி ஸம் ப்ருத்ய சோஷணாதி பிர் விசோத்ய அர்க்ய ஜலேந ஸம் ப்ரோஷ்ய அஸ்த்ர மந்த்ரேண ரஷாம் க்ருத்வா ஸூரபி முத்ராம் ப்ரதர்ஸ்ய
அர்ஹண பூர்வகம் ஹவிர் நிவேதயேத் அதி ப்ரபூதம் அதி சமக்ரம் அதி ப்ரிய தமம் அத்யந்த பக்தி க்ருதம் இதம் ஸ்வீ குர்வ இதி ப்ரணாம பூர்வகம்
அத்யந்த ஸாத் வச வி நயா வநதோ பூத்வா நிவேத யேத்-

பிறகு பசு தங்கம் ரத்னம் முதலியவற்றையும் தன்னால் முடிந்தவரை ஸமர்ப்பிக்க வேண்டும் –
பிறகு நன்றாக சமைக்கப் பட்ட அன்னத்தில் நெய் மிகுதியாகச் சேர்த்து தயிர் பால் தேன் முதலியவற்றையும்
பழங்கள் கிழங்குகள் வியஞ்சனங்களையும்
பிற பணியாரங்களையும் உலகில் மிகவும் விரும்பப்படுகிற பொருள்களாய் -தனக்கும் மிகவும் விருப்பமானவைகளாய்
ஸாஸ்த்ர விருத்தம் இல்லாதாவைகள் ஆனவற்றையும் சேர்த்து
அஸ்த்ர மந்திரத்தினால் காப்பிட்டு ஸூரபி முத்ரையைக் காட்டி அர்ப்பணிக்கும் பாவத்துடன் அமுது செய்விக்க வேண்டும் –
மிகவும் அதிகமானையும் -மிகவும் நிறைந்துள்ளவையும் -மிகவும் ப்ரீதியுடன் கூடியவையுமான இவற்றை
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வணக்கத்துடன் மிகவும் பணிவாக தலை சாய்த்து அமுது செய்விக்க வேண்டும் –

ததஸ் ச அநு பாந தர்பணோ ப்ரதாய ஹஸ்த ப்ரஷாலந ஆசமந ஹஸ்த ஸம் மார்ஜந -சந்தந -முகா வாஸ தாம்பூலாதீநி தத்வா ப்ரணம்ய
புந மந்த்ராஸனம் கூர்சேந மார்ஜயித்வா அப்யர்ச்ச அநுஜ்ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே மால்யாதிகம் அபோஹ்ய விஷ்வக் சேநாய தத்வா
பாத்யா சம நீய -கந்த -புஷ்ப தூப தீப ஆசமன அபூப பலாதீநி தத்வா
ஆசமன முகா வாஸ தாம்பூல ந்ருத்த கீத வாத்யாதி ப்ரப்யர்ச்ச ப்ரதக்ஷிணத் வயம் க்ருத்வா தண்டவத் ப்ரணம்ய

பிறகு தீர்த்தத்தை அன்புடன் ஸமர்ப்பித்து -திருக்கைகளை விளக்குதல் -ஆசமனம் -திருக்கைகளைத் துடைத்தல் -சந்தனம் தாம்பூலம்
முதலியவற்றை சமர்ப்பித்து வணங்கி மீண்டும் மந்த்ராசனத்தை தர்ப்பையினால் துடைத்து அர்ச்சித்து அனுமதி கொண்டு
பாதுகையை சமர்ப்பித்து எழுந்து அருளியுள்ள எம்பெருமானுடைய மாலை முதலியவற்றைக் களைந்து விஷ்வக் சேனரிடம் சமர்ப்பித்து பாத்யம் ஆசமநீயம் புஷ்பாம் தூபம் தீபம் ஆசமனம் அப்பம் பழங்கள் முதலியவற்றை ஸமர்ப்பித்து
ஆசமனம் தாம்பூலம் நாட்டியம் இசை வாத்தியங்கள் இவற்றால் அர்ச்சித்து இரண்டு ப்ரதக்ஷிணங்கள் செய்து தடியைப் போலே விழுந்து வணங்கி –

பர்யங்காசனம் அப்யர்ச்ய அனுஜ் ஞாப்ய பாதுகே ப்ரதாய தத்ரோப விஷ்டே பாத்யாசமநே தத்வா
மால்யா பூஷண வஸ்த்ராணி அப நீய விஷ்வக் ஸேனாய தத்வா
ஸூக சயன உசிதம் ஸூக ஸ்பர்சம் ச வாஸ ச தது சிதானி பூஷணாநி உபவீதம் ச ப்ரதாய ஆசம நீயம் தத்வா
கந்த புஷ்ப தூப தீப ஆசமன முகா வாஸ தாம்பூலாதி ப்ரப்யர்ச்ச
ஸ்ருதி ஸூகை ஸ்தோத்ரை அபிஷ் டூய பகவா நேவ ஸ்வ ந்யாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வ சேஷ தைக ரஸேந
அநேந ஆத்மநா ஸ்வ கீயைஸ் ச தேஹ இந்த்ரிய அந்தக்கரணை ஸ்வ கீய கல்யாண தம த்ரவ்ய மயான்
ஒவ்ப சாரிக ஸாம் ஸ்பர்ஸிக அப்யவ ஹாரிகாதி சமஸத் போகான் அதி ப்ரபூதான் அதி சமக்ரான் அதி ப்ரிய தமான் அத்யந்த பக்தி க்ருதான்
அகில பரிஜன பரிச்சதாந் விதாய ஸ்வஸ்மை ஸ்வ ப்ரீதயே ஸ்வயமேவ ப்ரதிபாதிதவாந் இதி அநு சந்தாய
பகவந்தம் அனுஜ் ஞாப்ய பகவன் நிவேதித ஹவிஸ் சேஷாத் விஷ்வக் ஸேனாய கிஞ்சித் துத் த்ருத்ய நிதாய
அந்யத் ஸர்வம் ஸ்வா சார்ய ப்ரமுகே ப்யோ வைஷ்ணவேப்யோ தத்வா
பகவத் யாகாவா சிஷ்டை ஜலாதி பிர் த்ரவ்யை விஷ்வேக் சேனம் அப்யர்ச்ச பூர்வோத்ததம் ஹவிஸ் ச தத்வா
ததர்சனம் பரி ஸமாப்ய பகவந்தம்
அஷ்டாங்கேந ப்ரணாமேந ப்ரணம்ய சரணம் உப கச்சேத்

பர்யங்க ஆசனத்தை அர்ச்சித்து அனுமதி கொண்டு -பாதுகையை ஸமர்ப்பித்து அங்கே எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானுக்கு
பாத்யம் ஆசமனம் ஸமர்ப்பித்து -மாலை ஆபரணங்கள் -மேல் வஸ்திரங்கள் -ஆகியவற்றைக் களைந்து விஷ்வக் சேனரிடம் சமர்ப்பித்து
ஸூ கமாக சயனிப்பதற்கு ஏற்ற மென்மையான வஸ்த்ரத்தையும் அதற்கு ஏற்ற ஆபரணங்கள் யஜ்ஜோ பவீதத்தையும் ஸமர்ப்பித்து
ஆசமனம் ஸமர்ப்பித்து புஷ்பம் தீபம் தூபம் ஆசமனம் தாம்பூலம் முதலியவற்றால் அர்ச்சித்து
செவிக்கு இனிய ஸ்தோத்ரங்களால் -அருளிச் செயல்களால் -திருப்பாவை முதலியவற்றின் சாற்றுப் பாசுரங்களை -சேவித்து ஸ்துதித்து
பகவானே தன்னால் நியமிக்கப் படுகிற ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்திகளை யுடையதும் தனக்கு அடிமைப்பட்டு இருத்தலையே ரஸமாக யுடைய இந்த ஆத்மாவினால்
தன்னுடைய தேஹ இந்த்ரிய மனஸ் முதலிய கரணங்களால் தன்னுடைய மங்களமான பொருள்களான -உபசாரங்களான -குடை சாமரம் முதலியவைகள்
தன்னை ஸ்பர்சிக்கக் கூடியவைகளான அர்க்யம் பாத்யம் முதலியவைகள்
நிவேதனத்துக்கு உரிய அன்னம் பழம் முதலியவைகள்
ஆகிய மிகவும் உயர்ந்தவைகளாய் மிகவும் நிறைந்தவைகளாய் -மிக ப்ரீதி யானைவைகளாய்
மிக்க பக்தியினால் ஆனவைகளாய் உள்ள அனைத்து போகங்களால்
அனைத்து அடியவர் பரிவாரங்களுடன் கூடிய தன்னைத் தானே ப்ரீதி செய்து கொள்வதற்காகத் தானே திருவாராதனம் செய்து கொண்டான் என்று அனுசந்தித்து
பகவான் அனுமதி கொண்டு பகவானுக்கு அமுது செய்வித்து ப்ரசாதத்தில் விஷ்வக் சேனருக்குச் சிறிது எடுத்து வைத்து –
மற்ற எல்லாவற்றையும் தன ஆச்சார்யர் முதலிய ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சமர்ப்பித்து
பகவானுக்குத் திருவாராதனம் செய்து மிகுந்த தீர்த்தம் முதலிய பொருள்களால் விஷ்வக் சேனரைப் பூஜித்து
முன்பு எடுத்து வைத்து இருந்த பிரசாதத்தையும் ஸமர்ப்பித்து அந்தப் பூஜையை முடித்து -பகவானை
எட்டு அங்கங்களுடன் கூடிய ப்ரணாமத்தால் வணங்கிச் சரண் அடைய வேண்டும் –

மநோ புத்தி அபி மாநேந ஸஹ ந்யஸ்ய தரா தலே
கூர்ம வத் சதுரஸ் பாதான் சிரஸ் தத்ரைவ பஞ்சமம்
ப்ரதக்ஷிண ஸமே தேந த்வேவம் ரூபேண ஸர்வதா
அஷ்டாங்கேந நமஸ் க்ருத்ய ஹ்யு விஸ்ய அக்ரத ப்ரபோ

இத் யுக்த அஷ்டாங்க ப்ரணாம ஸரணாகதி ப்ரகாரஸ் ச பூர்வ யுக்த ததஸ்
அர்க்ய ஜலம் ப்ரதாய பகவந்தம் அனுஜ ஞாப்ய பூஜாம் ஸமா பயேத்

இதி ஸ்ரீ பகவத் ராமாநுஜ விரசிதோ நித்ய க்ரந்த ஸமாப்தம்

மனம் புத்தி அபிமானம் -அஹங்காரம் -இவை மூன்றையும் அடக்கி
தரையில் ஆமை போலே நான்கு கால்கள் -கைகள் இரண்டு -கால்கள் இரண்டு -தலை ஆகிய ஐந்தையும் தரையில் படும்படி ப்ரதக்ஷிணத்தோடு கூடியதாய்
இப்படி எப்போதும் அஷ்டாங்கத்துடன் எம்பெருமான் திரு முன்பே நமஸ்கரித்து அமர்ந்து என்று அஷ்டாங்க பிராணாமம் கூறப்பட்டுள்ளது

சரணாகதி செய்யும் முறை முன்பே கூறப்பட்டது

பிறகு அர்க்ய தீர்த்தத்தை ஸமர்ப்பித்து பகவானுடைய அனுமதி கொண்டு திருவாராதனத்தை முடிப்பது

ஸ்ரீ பகவத் ராமானுஜர் அருளிய நித்ய கிரந்தம் நிறைவடைந்தது –

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணண் ஸ்வாமிகள் அருளிச் செய்த செய்ய தாமரைத் தாளிணை வாழியே – பாசுர வியாக்யானம் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்

July 13, 2022

ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் இந்த வியாக்யானத்தை ஓலைச் சுவடியில் இருந்து பதிப்பித்து உபகரித்து அருளினார்

வாழி திருவாய் மொழிப் பிள்ளை மா தகவால்
வாழும் மணவாள மா முனிவன்-வாழி யவன்
மாறன் திருவாய் மொழிப் பொருளை மா நிலத்தோர்
தேறும்படி உரைக்கும் சீர்-

செய்ய தாமரை தாளிணை வாழியே
சேலை வாழி திரு நாபி வாழி
துய்ய மார்பும் புரி நூலும் வாழியே
சுந்தரத் திருத் தோளிணை வாழியே
கையும் ஏந்திய முக்கோலும் வாழியே
கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யிலாத மணவாள மா முனி
புந்தி வாழி புகழ் வாழி வாழியே

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ -கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மா முனியே
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் –

—————

இதில் ஸ்ரீ கூரத்தாழ்வானைப் பற்றிய ஐதிக்யமும்
ஸ்ரீ அண்ணராய சக்ரவர்தியைப் பற்றிய இதிஹாசமும் உண்டு

செய்ய தாமரை பாடிய சீர் அண்ணன் -என்றே ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணண் ஸ்வாமிகளுக்கு நிரூபகம் –

அவர் அருளிச் செய்த மா முனிகள் பாதகாதி கேசாந்த மாலையில் இருந்து பாலா மேற்கோள்களும் இதில் உண்டு

சாடூக்திகள் -நயவுரைகள் பலவும் இதில் இடம் பெற்றுள்ளன
கால்வாசியிலே நில்லாமல் அரை வாசி தேடுமவர் இறே
இக்கை கண்ட இவரைக் கை விட்டு இருக்க மாட்டாரே
கண் காணக் கை விட்டார்
இவர் கண் இறே எல்லாருக்கும் களை கண் -போன்ற சாடூக்திகள் இதிலே உண்டே –

சீர் ஆரும் செங்கமலத் திருவடிகள் வாழியே
வந்தருளி என்னை எடுத்த மலர்த்தாள்கள் வாழியே
முந்தை மறைத் தமிழ் விளக்கும் முத்திரைக் கை வாழியே
கார் போலும் செங்கை யுரை முக்கோலும் வாழியே
கருணை குடி கொண்டு அருளும் கண்ணினை வாழியே
வார் காதும் திருநாம மணி நுதலும் வாழியே
நீள் புவியில் தன் புகழை நிறுத்துமவன் வாழியே
—-
கலி கண்டித்த திறல் வாழியே –வாழித் திரு நாமாந்தர பாசுரத்தில் பல அடிகள் மேற்கோளாகக் காட்டப் பட்டுள்ளன –

—————-

இதில் ஆச்சார்யன் அருளே விளை நீராக ஜீவனமாய் வாழுமவர்க்கும்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழின் (கண்ணி நுண் சிறுத்தாம்பு -9அர்த்தத்தை
இப் படியில் யுண்டான அடியார்க்கு அருள் செய்யும் ஓவ்தார்ய குணத்துக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகிறது –

வாழி திருவாய் மொழிப் பிள்ளை மா தகவால்
வாழும் மணவாள மா முனிவன்-வாழி யவன்
மாறன் திருவாய் மொழிப் பொருளை மா நிலத்தோர்
தேறும்படி உரைக்கும் சீர்-

திருவாய் மொழிப் பிள்ளை மா தகவால் வாழும் மணவாள மா முனிவன்-வாழி
அதாவது
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் -உபதேச -1- என்றும்
திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப்பிள்ளை சீர் அருளால் -ஆர்த்தி பிரபந்தம் -21-என்றும்
ஸ்ரீ சைல நாத கருணா பரிணா மதத்தாம் –யதிராஜ விம்சதி -19- என்றும்
இவர் ஸ்ரீ சைல தயா பாத்ரராய் இருக்கும் படி என்கை
ஸூ குமாரராய் இருப்பார் பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாதாப் போலே
இவரும் ஆமூல சூடம் அருளால் மன்னி இருக்கும் படி

மா தகவு –
பெரிய தகவு
பெரும் கருணை
திருவாய் மொழிப்பிள்ளை தீ வினையேன் தன்னை குருவாகி வந்து உய்யக் கொண்டு -ஆர்த்தி பிரபந்தம் -46- என்று
குருவானவருடைய குருவான நிர்ஹேதுக கிருபையாலே வாழுமவராய்த்து இவர் தாம்
ஸ்வ யத் நத்தாலே பெரு பெறுமவர் அல்லரே இறே

தகவு -உபாயம்
வாழ்வு -உபேயம்
ஆச்சார்யன் அருளாக இறே ப்ராப்ய லாபம் உண்டாவது

இரக்கம் உபாயம் இனிமை உபேயம்-நஞ்சீயர் -என்னக் கடவது இறே

இப்படியே தேசிக தயையாலே வாழுமவர் இன்னார் என்கிறது -மணவாள மா முனிவன் -என்று
இவர்
மா தகவுக்கு இலக்கு ஆகையாலே மா முனி யானார்
பெரிய ஜீயர் என்று இறே ப்ரஸித்தி

மணவாள மா முனிவன்
அழகிய மணவாள ஜீயர்

வாழி திருவாய் மொழிப்பிள்ளை மா தகவால் வாழும் மணவாள மா முனிவன் என்கையாலே
அழகிய மணவாளன் சீர் அருளுக்கு இலக்கான வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயரில் வ்யாவ்ருத்தி

தெருள் தரு மா தேசிகரான திருமலை யாழ்வார் அருள் அதிகமாய்
ஆதிக்யத்தையும் உண்டாக்கும் –
ஏவம் வித நிரவதிக தயா பாத்ரரானவர்
நித்தியமாக வாழ்ந்து அருள வேணும் என்கிறது –

தாமும் தம்முடைய இரங்கும் கருணையாலே எல்லாருக்கும் திருவாய் மொழியின் ஈட்டை ப்ரஸாதித்துக் கொண்டு இங்கே வாழ்ந்து அருள வேணும் என்கிறது –

அவரோபாதி அவர் குணங்களும் ஆஸாஸ்யம் -விரும்பத் தக்கவை – என்கிறது -அவன் மாறன் மறைப் பொருளை மா நிலத்தோர் தேறும்படி உரைக்கும் படி சீர் என்று
அதாவது
ஆச்சார்ய ப்ரஸாதத்தாலே பெரு மதிப்பை யுடையவராக ஆனார் இந்நல்லார்

அவருடைய திராவிட வேதார்த்தத்தை மஹா ப்ருத்வீயில் உண்டானவர்கள் எல்லாருக்கும் வியாக்யானம் செய்து அருளும் ஸம்பத்தும் ஒவ்தார்யாதி குணங்களும் வாழ வேணும்

சீர்
ஸம்பத்து -என்னுதல்
குணம் -என்னுதல்

ஸ்ரீ மதி ஸ்ரீ பதி ஸ்வாமின் –என்றும்
பெரிய திரு மண்டபத்துப் பேர் அழகு -என்றும்
அத ஸ்ரீ சைல நாதாய நாம்நி ஸ்ரீ மதி மண்டபே -பூர்வ தினசர்யா -என்றும்
சொல்லுகிற வைபவத்தை யுடைய திரு மண்டபங்களிலே ஸ பரிவாரான வர வர நாமாவான ஸ்வ ஸ்வாமிக்கும்
வர வர ப்ருத்யரான ஸ்வ ஸிஷ்யர்களுக்கும்
அர்த்த பஞ்சக ப்ரதிபாதகமான திருவாய் மொழிக்கு ஈட்டோடே ஐந்து வியாக்யானங்களைக் கேட்பித்தும்-ப்ரஸாதித்தும் போருகிற வைபவமும்
அத்தை அவர்களுக்கு உடன் உரைத்து ப்ரஸாதித்து அருளும் ஒவ் தார்ய கிருபா வாத்சல்யாதி குணங்களும்
உண்டாய் இறே இருப்பது
அத்தை இங்கே சீர் என்கிறது –

ஸோயம் பூய: ஸ்வயமுபகதோ தேஷிகைஸ் ஸம்ஸதம் தே|
ஷ்ருத்வா கூடம் ஷடரிபு கிராமர்த்த தத்வம் த்வ துக்தம் ||
ஆகோபாலம் ப்ரதயதி தராமத்விதீயம் த்விதீயம்|
வாசாம் தூரம் வரவரமுநே வைபவம் ஷேஷஷாயீ || -ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் –14||

(அப்படிப்பட்ட இந்த அரவணைப் பள்ளியான் மறுபடி உம்மை ஆசார்யராக அடைந்து உம்மால் கூறப்பட்ட
ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளின் உண்மைப் பொருளை ரஹஸ்யத்தில் கேட்டு நிகரில்லாத
வாக்குக்கு எட்டாத உமது வைபவத்தை மூடரும் அறியப் பரவச் செய்கிறார்.)

என்று இறே ஜீயருடைய வாசா மகோசர வைபவம் இருப்பது

ஊரும்-பேரும் -செல்வமான திருவாய் மொழி அடியாக வந்த செல்வமும் வாழ வேணும் என்று மங்களா ஸாஸனம் பண்ணுகிறது

திருவாய் மொழிப் பொருளை மா நிலத்தோர் தேறும்படி உரைக்கும் சீர் என்ற இத்தால்
இத்தனியன் தான் திருவாய் மொழியின் ஈடு நித்யம் அநு சந்தித்துச் சாற்றும் போது அநு சந்திக்க வேணும் என்று ஸூ வ்யக்தமாய் இருக்கிறது

அத ஏவ
அருளிச் செயல்கள் எல்லாத்தினுடையவும் அநு ஸந்தான அநந்தரம் அநு சந்திக்குமதாய் இருக்கும் இறே-

—————-

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முநயே விததே நம
யத் ஸ்ம்ருதிஸ் ஸர்வ ஸித்தீ நாம் அந்தராய நிவாரிணீ –

யாவர் ஒருவரைப் பற்றிய நினைவு எல்லா வெற்றிகளுக்கும் இடையூறுகளை நீக்கி விடுமோ அந்த ஸ்ரீ மன் மணவாள மா முனிகளை வணங்குகிறேன்

ஸ்ரீ சைல தயா பாத்ரம் -( தீ பக்த்யாதி குணார்ணவம் யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜா மாதரம் முநிம் )
என்று தொடங்கி அருளிச் செய்த
சேனை முதலியார் நாயனார் (சேனை முதலியாருக்கு நாயனார் ஸ்வாமி -நம்பெருமாள் )
ஜீயருடைய கல்யாண குணங்களிலே தோற்று அடிமை புக்க படியைப் பிரகாசிப்பிக்கிறராய் நின்றார்

அவர் தம் அடியரான இவரும் அக்குணங்களுக்கும் ஸுந்தர்யாதி களுக்கும் ஆஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்திலே ஈடுபட்டு
பாதாதி கேஸ அந்தமாக அனுபவித்துத்
தம்முடைய பிரிவின் மிகுதியாலே மங்களா ஸாஸனம் பண்ணின படியை அடைவே அருளிச் செய்கிறார் இதில்

செய்ய தாமரை பாடின சீர் அண்ணன் -என்று இறே இவர்க்கு நிரூபகம்
இப்படி மங்களா சாசனம் பண்ணுகிறவர்-தம்முடைய சேஷத்வ அனுகுணமாக
உன் பொன்னடி வாழ்க -என்னுமாப்போலே(பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே -பெரியாழ்வார் -5-2-8-)
பொன்னடியாம் செங்கமலப் போதுகளுக்கு முந்துற மங்களா சாசனம் பண்ணுகையிலே ப்ரவ்ருத்தராகிறார் –

செய்ய தாமரை தாளிணை வாழியே
சேலை வாழி திரு நாபி வாழி
துய்ய மார்பும் புரி நூலும் வாழியே
சுந்தரத் திருத் தோளிணை வாழியே
கையும் ஏந்திய முக்கோலும் வாழியே
கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யிலாத மணவாள மா முனி
புந்தி வாழி புகழ் வாழி வாழியே

செய்ய தாமரை தாளிணை வாழியே
பிரஜை முலையில் வாய் வைக்கும்
நாண் மலராம் அடித்தாமரை -திருவாய் -3-3-9-

இவை யாய்த்து -உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்குமது -திருவாய் -7-1-10- என்கிறபடியே
இதுவும் ஸ்வரூபமாய் இருக்கும்

இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி -பெருமாள் திருமொழி -2-4-5-என்கிறபடியே வாழ்த்துகை இறே நிலை நின்ற ஸ்வரூபம்

செய்ய தாமரை தாளிணை வாழியே
இவர் அடியைத் தொடரும்படி (ராமானுஜ நூற்றந்தாதி -63)
ராக ஸுவ் மனஸ்ய பத ஸுப் ராத்ரங்கள் உண்டாயிற்று
(ராகம் – சிவப்பு -அன்பு –பதம் -அடி -சொற்கள் -ஸுப்ராத்ரம் -சேர்த்தி )
அதாவது
அழகியதாய்ச் சிவந்த செவ்வித் தாமாரைப் பூப் போலே தர்ச நீயமுமாய் போக்யமுமாய்த் தாமரைப் பூவை நிறைத்து வைத்தால் போலே சேர்த்தி அழகையும் யுடைத்தாய்
உபாய பூர்த்தியையும் யுடைத்தாய்த்துத் திருவடிகள் இருப்பத

உன் மீலத் பத்ம கர்பேத்யாதி -உத்தர தினசர்யா –5-என்றும்

போதச் சிவந்து பரிமளம் வீசிப் புதுக்கணித்த சீதக் கமலத்தை நீரற வோட்டி -பாதாதி கேச மாலை -1-என்றும்

சீராரும் செங்கமலத் திருவடிகள் வாழியே -என்றும் இறே அடி அறிவார் வார்த்தை

இப்படி
இதனுடைய ஸுந்தர்யத்தையும் போக்யதா ப்ரகர்ஷத்தையும் அனுபவித்த இவர்
மங்களா ஸாஸனம் பண்ணி யல்லது நிற்க மாட்டாரே

உன் சேவடி செவ்வித் திருக்காப்பு -திருப் பல்லாண்டு -1- என்னுமா போலே

அன்றியே
செய்ய -என்கிற இத்தால்
(சிவந்த என்ற பொருள் கொள்ளாமல் – செம்மை என்றும் பொருள் கொண்டு )
திருவடிகளுடைய செவ்வியைச் சொல்லிற்றாய்
ஆஸ்ரிதர் அளவும் வந்து செல்லுகிற வாத்சல்யத்தை யுடைத்து என்கை
இது அண்ணராய சக்ரவர்த்திக்குப் ப்ரத்யக்ஷம்
( மா முனிகள் சரம தசையில் எழுந்து அருளி இருந்த போது அண்ணராய சக்ரவர்த்தி என்பவர் ஸேவித்து நிற்க
மடங்கிக் கிடந்த மா முனிகளின் திருவடிகள் தாமே நீண்டு அவர் தலையிலே வைத்து அருள் புரிந்தமை இங்கு நினைக்கத் தக்கது )

வந்தருளி என்னை எடுத்த மலர்த்தாள்கள் வாழியே -என்கிறபடியே
தம்மையும் முந்துற வந்து விஷயீ கரித்தது திருவடிகளாயிற்று

திருக்கமல பாதம் வந்து -அமலனாதி பிரான் -1-என்றும்
அடியேனை அங்கே வந்து தாங்கு தாமரை யன்ன பொன்னாரடி -பெரிய திருமொழி -7-3-5-என்றும் சொல்லக் கடவது இறே

இவர் இப்படித் தம்மை விஷயீ கரித்த செய்ய தாமரைத் தாள்களைக் கொண்டு சென்னித் தரிக்குமது -அளவாய் இருக்கிற
பொற் காலானது தன் சென்னித் திடரிலே ஏறும்படி அருளாலே வைத்து அருளுவதே என்று அவற்றினுடைய
பாவனத்வ போக்யத்வங்களை அனுபவித்து அவற்றுக்குத் தம்மோட்டை ஸம்பந்தத்தாலே ஓர் அவத்யமும் வாராது ஒழிய வேணும் என்று மங்களா ஸாஸனம் பண்ணுறார் ஆகவுமாம்

ஆகையால் இவருக்குப் ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் அடி தானே யாய் இருக்கை

இனித் திருவடிகளுக்கு இவ்வருகு கந்தவ்ய பூமி இல்லாமையாலே
மேலே –
திருவரையோடே சேர்ந்து சிவந்து நிற்பதான திருப்பரி யட்டத்தில் அழகிலே சென்று
அச்சேர்த்திக்கு மங்களத்தை ஆசாசிக்கிறார் -சேலை வாழி -என்று

கால் வாசியிலே நில்லாமல் அரை வாசி தேடுமவர் இறே

திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி -என்று
திருவரையில் உடை அழகும் பரபாகமாய் இறே இருப்பது –

சந்த்ரனைச் சூழ்ந்த பரி வேஷம் (ஒளி வெள்ளம் )போலே யாயிற்றுத் திருவரைக்குத் திருப் பரியட்டத்தோடே சேர்த்தி

ஸூதா நிதி மிவ ஸ்வைர ஸ்வீ க்ருதோ தக்ர விக்ரஹம் ப்ரஸன்னார்க்க ப்ரதீகாஸ பரி வேஷ்டிதம் -பூர்வ தினசர்யா -3-
(தேவரீருடைய இச்சையால் எடுத்துக் கொள்ளப் பட்ட அழகான தேவரீருடைய திருமேனி அமுதக்கடல் போல் குளிர்ந்த பிரகாசத்தை யுடைய ஸூர்யனுடைய ஒளியுடன் கொடியது போல் உள்ளது -) என்னக் கடவது இறே

ஈனமிலாத இள நாயிறாகும் எழிலும் செக்கர் வானமும் ஒத்த துவராடையும் -பாதாதி கேச மாலை –3-என்றும்

ஆதாம்ர விமலாம் பரம் -பூர்வ தினசர்யா -5- ( சிவந்துள்ள ஆடையுடன் கூடியவர் ) என்றும்
அத்யாச்சர்யமாய் இறே இருப்பது –

இத்தால்
பீதக வாடைப்பிரானார் பிரம குருவாகி -பெரியாழ்வார் -5-2-8-வந்தமை தோற்றுகிறது

அதுக்கு மேலே
கண்டவர்களைக் கால் தாழப் பண்ண வற்றான திரு நாபி அழகிலே போந்து
அவ்வழகுக்குப் போற்றி என்கிறார் –
திரு நாபி வாழி -என்று

திருப்பரி யட்டத்துடனே சேர்ந்து இறே திரு நாபி இருப்பது

அந்தி போல் நிறத்தாடை -என்ற அநந்தரம்
உந்தி மேலது அன்றோ (அமலனாதி -5 )-என்று அருளிச் செய்கிறார்

அது தான் அல்லாத அவயவங்கள் காட்டில் அழகியதாய்
அழகு ஆற்றில் திகழ் சுழி போலே இறே உந்தித் சுழி இருப்பது
ஸுந்தர்ய சாகரம் இட்டளப் பட்டு சுழித்தால் போலே இருக்கிற இதினுடைய வை லக்ஷண்யம் கண்ட இவருக்கு
வாழ்த்தி அல்லது நிற்கப் போகாதே
இது தான் மடவார் உந்தித் சுழியிலே சுழலுகிற மனஸ்ஸை மீட்டுத் தன்னிடத்திலே ஆழங்கால் படுத்த வற்றாயும் இருக்கும் –

அநந்தரம்
திரு நாபிக்கு மேலாய் விசாலமாய் விமலமாய் ஸூ ந்தரமாய் இருக்கிற திரு மார்பையும்
அத்தோடே சேர்ந்த திரு யஜ்ஜோ பவீதத்தையும் கண்டு காப்பிடுகிறார் –
துய்ய மார்வும் புரி நூலும் -என்று

மார்வுக்குத் தூய்மை யாவது
ஹ்ருதயேந உத்வஹன் ஹரிம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-12-( மார்வில் ஹரியைத் தாங்கிக் கொண்டு ) என்று
நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை -மூன்றாம் திருவந்தாதி -81-உடைத்தாகை

அத்தாலே
அவர்கள் ஹ்ருதயம் சவும்ய ரூபமாய் இருக்கும்

அவ்வளவும் அன்றியிலே
மார்வம் என்பதோர் கோயிலிலே மாதவன் என்னும் தெய்வம் -பெரியாழ்வார் -4-5-3-என்கிறபடியே
இவர் திரு உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டு
அரவிந்தப் பாவையும் தானுமான -பெரியாழ்வார் -5-2-10- சேர்த்தி யுடனே யாய்த்து அவன் எழுந்து அருளி இருப்பது –

விசேஷித்து -வக்ஷஸ்தலம் மாதவ ஸ்தானம் ஆகையாலே (பன்னிரு திருமண் காம்புகளில் மார்வில் அணியும் திரு மண் காப்புக்குத் திரு நாமம் மாதவன் ஆகையால் )
உள்ளொடு புறம்போடே வாசியற மாதவன் உறையும் இடமாய்த்து

மங்களம் மாதவா ராம மனஸ் பத்மாய மங்களம் -என்றும்
ஸ்ரீ மத் ஸூந்தர ஜாமாத்ரு முனி மானஸ வாஸிநே ஸ்ரீ நிவாஸாய -ஸ்ரீ வெங்கடேச மங்கள ஸ்தோத்ரம் -என்றும் சொல்லக் கடவது இறே

அவன் தான் அநந்ய ப்ரயோஜனருடைய ஹ்ருதயங்களிலும் ஆசார்ய பரதந்திரருடைய ஹ்ருதயங்களிமாய்த்து அத்யாதரத்துடனே எழுந்து அருளி இருப்பது –

விண்ணாட்டில் சால விரும்புமே வேறே ஒன்றை எண்ணாதார் நெஞ்சத்து இருப்பு -ஞான ஸாரம் -9-என்றும்

தன்னாரியன் பொருட்டாச் ஸங்கல்பம் செய்பவர் நெஞ்சு எந்நாளும் மாலுக்கு இடம் -ஞான ஸாரம் -37-என்றும் சொல்லக் கடவது இறே

அந்த
1- அநந்ய ப்ரயோஜ நதையையும்
2- ஆச்சார்ய பரதந்த்ரதையையும் ஆய்த்து இன்னிக்குத் தூய்மையாகச் சொல்லுகிறது –

அதுக்கும் மேலே
அழகாரும் எதிராசர்க்கு அன்பு உடையான் -என்னும்படி
இவர் திரு உள்ளம் யதீந்த்ர ப்ராவண்யத்தை யுடைத்தாய் இருக்கையாலே
இன்று இவன் வந்து இருப்பிடம் என் தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே -ராமானுஜ நூற்றந்தாதி -106-என்கிறபடியே
பரம ஹம்ஸரான எம்பெருமானார் எழுந்து அருளி இருக்கிற மானஸ பத்ம ஆஸனத்தை உடையதாயும் இருக்கும் –

ராகாதி தூஷிதமான சித்தத்தில் அவன் அநாஸ் பதியாய் இருக்குமா போலே
அங்க ராக ரஞ்சிதமான இவருடைய ஹ்ருதயத்திலும் ஆஸ்பதியாய் அன்றி இரானாய்த்து
இப்படி இவன் எழுந்து அருளி இருக்கையாலே சவும்ய ஜாமாத்ரு முனியுடைய ஹ்ருதயம் அத்யந்த சவும்ய ரூபமாய் இருக்கும் என்கை

ஆகையால்
நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -திருப்பல்லாண்டு -2- என்கிறபடியே
இவரும் இருவருமாக சேர்த்திக்கு இருப்பிடமான திரு மார்வைத்
துய்ய மாறவும் புரி நூலும் வாழி -என்று மங்களா ஸாஸனம் பண்ணுகிறார் ஆகவுமாம்

இவர் மானஸ வாஸியாய் இருக்கிறவனும்
புலம் புரி நூலவன் -பெரிய திருமொழி -9-9-9-இறே

அலர் மேல் மங்கை யுறை மார்பன் -திருவாய் -6-10-10- என்கையாலே
அம் மா ஒருத்திக்கு இடமுடையாய்த்து அம்மார்வு
இம்மார்வு இருவருக்கும் இடமுடைத்தாய் இருக்கும்

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றாள் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையா மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும் அணையாம் திரு மாற்கு அரவு -முதல் திருவந்தாதி -53-

மங்களம் பன்ன கேந்த்ராய என்றும்
அநந்தனாம் அவரே மணவாள மா முனி -என்றும் சொல்லக் கடவது இறே

அதவா
துய்ய மார்வும்
ஸூபேந மனஸா த்யாதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-28-நல்ல மனத்தினால் நினைக்கப்பட்டு -என்கிறபடியே
ஆஸ்ரிதருடைய அபராதங்களைப் பொறுத்து அவர்களுக்கு எப்போதும் ஓக்க நன்மையைச் சிந்திக்கிற ஸுஹார்தத்தை யுடைத்தாகை

உரஸா தாராயாமாஸ-பாரதம் -அர்ஜுனன் மீது விடப்பட்ட பாணங்களைத் தன் மார்வில் கண்ணன் ஏற்றான் -என்றும்
நன் நெஞ்ச வன்னம் -பெரிய திருமொழி -7-2-7-என்றும் சொல்லுகிறபடியே
தீமையைத் தவிப்பதற்கும் நன்மையை உண்டாக்குவதற்கும் -இவை இரண்டுக்கும் – தானேயாய் இருக்கை-

துய்ய மார்பும்
ஏராரும் செய்ய வடிவு -ஆர்த்தி பிரபந்தம் -30-என்னுமா போலே
இங்கும் யாவத் போகத்தைப் பற்றிச் சொல்லவுமாம்

மந்தர கிரி மதித மஹார்ணவ உத்கீர்ண பேந பிண்ட பாண்டர ஸூ ந்தர ஸூ குமார திவ்ய விக்ரஹ
மந்தர மலையாலே கடையப்பட்ட கடலில் இருந்து யுண்டான நுரையினுடைய வெண்மையின் அழகுடன் கூடிய மென்மையான திரு மேனி
என்று இறே இருப்பது

ஆக
இவற்றால் சொல்லிற்றாய்த்து
பாஹ்ய அப் யந்த்ர ஸூசி என்கை

இனித் திரு மார்வோடே சேர்ந்து இறே திரு யஜ்ஜோ பவீதம் இருப்பது

தாமரைத் தார் இடம் கொண்ட மார்வும் வண் புரி நூலும் -பாதாதி கேச மாலை -5-

துஷார கரகர நிகர விஸத தர விமலோ பவீத பரி ஸோபித விசால வக்ஷஸ்தல
சந்திரனுடைய கிரணங்களைப் போலே வெண்மையான பரி ஸூத்தமான முப்புரி நூலினால் ப்ரகாசிக்கின்ற விசாலமான மார்பு -என்கிறபடியே
சந்திரனுக்கு கிரணங்கள் தேஜஸ் கரம் ஆனால் போலே யாய்த்து திரு மார்வுக்குத் திரு யஜ்ஜோ பவீதம் இருப்பது –

ஸோபிதம் யஜ்ஞ ஸூத்ரேண -பூர்வ தினசர்யா -வெண் புரி நூலினால் அழகு பெற்று விளங்குகின்றவர் -என்னக் கடவது இறே

அன்றிக்கே
இம் முந்நூலான மெய்ந்நூலாலே இறே பொய்ந்நூல்களையும் கள்ள நூல்களையும் கருமம்-உண்மை – அன்று என்று கழிப்பது

வகுள தர தவள மாலா வக்ஷஸ்தலம் வேத பாஹ்ய ப்ரவர ஸமய வாதச் சேத நம் —
வெண்மையான மகிழ் மாலையை அணிந்த திரு மார்வை உடையவர் -வேதத்துக்குப் புறம்பான சமயத்தைச் சேர்ந்தவர்களை அழிப்பவர் -என்னக் கடவது இறே

தம்முடைய ப்ரஹ்ம ஸூத்ரத்தாலே இறே இவனுடைய காம ஸூத்ரங்களைக் கழிப்பது

ராஜேந்திர சோழனிலே பாஹ்யருடைய சங்கத்தாலே ஸிகா யஜ்ஜோ பவீதங்களைக் கழித்த ப்ராஹ்மண புத்ரன்
ஆழ்வானைக் கண்டு மீண்டும் அவற்றைத் தரித்து வர அவன் பிதாவானவன் ஆழ்வானைக் கண்டாய் யாகாதே -என்றான் இறே
பெரிய திருமொழி -8-1-வியாக்யானத்தில் பெரியவாச்சான் பிள்ளை காட்டி அருகிலும் ஐதிக்யம் இது
இது போல் அன்றோ மா முனிகளும் தம்மை சேவித்தவர்களைப் பவித்ரர்களாக்கி அருளுகிறார் என்றவாறு –

இனித் திரு மார்வோடு சேர்ந்த திருத்தோள்களுக்கு அரண் செய்கிறார் –
திருத் தோளிணை வாழியே
மல்லாண்ட திண் தோளுக்குப் பல்லாண்டு -திருப்பல்லாண்டு -1-என்னுமா போலே

ஸூந்தரத் திருத் தோளிணை
புஜ த்வய வித்ருத விசததர சங்க சக்ர -சங்கு சக்ர சிஹனங்கள் விளங்கும் திருத்தோள்கள் என்றபடி
லாஞ்சனங்களை உடைத்தாய்த்துத் திருத்தோள்கள் இருப்பது

தோளார் சுடர்த் திகிரி சங்குடைய சுந்தரன் -ஞான சாரம் -7-இறே அவன் தான்

சிங்கார மாலைத் திருத் தோள்களும் அதிலே திகழும் சங்கு ஆழியும் –பாதாதி கேச மாலை -7- என்று அனுபாவ்யமாய் இறே இருப்பது-

தோளிணை
எப்போதும் கை கழலா நேமியான் -பெரிய திருவந்தாதி -87-என்கிறபடியே
இவருக்குத் திருத் தோள்களானவை எப்பொழுதும் சங்கு ஆழி இலங்கு புயமாய் இருக்கையாலே
வலத்துறையும் சுடர் ஆழியும் பாஞ்ச சன்னியமும் -திருப்பல்லாண்டு -2- இங்கும் உண்டாய் இருக்கை

அன்றிக்கே
திருத்தோள்கள் தான் பகவ லாஞ்சனத்திலே ப்ரமாணமுமாய் அபவித்ரரை ஸூபவித்ரராக்கியும்
துர் வ்ருத்தரை வ்ருத்த வான்கள் ஆக்கியும் போருமதாய் இருக்கும் –

அநந்தரம்
திருத்தோள்களில் ஏக தேசமான திருக்கையையும்
அதிலே தரித்த த்ரி தண்டத்தையும் கண்டு
அதுக்குத் தாம் கடகாக நிற்கிறார் –
கையும் ஏந்திய முக்கோலும் வாழியே

வெறும் கை தானே போருமாய்த்து ஆகர்ஷிக்கைக்கு
அதிலே த்ரி தண்டமுமானால் அழகு இரட்டிக்கச் சொல்ல வேண்டா விறே –

அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான் -நாச்சியார் -12-4- என்னுமா போலே
காரும் சுரபியும் போலே விளங்கு கைத்தாமரையிலே சேர்ந்து இருந்த தாண்டும் -பாதாதி கேச மாலை -5-என்று இறே சேர்த்தி இருப்பது

இக் கை கண்ட இவரைக் கை விட்டு இருக்க மாட்டாரே –

அன்றிக்கே
முந்தை மறைத் தமிழ் விளக்கும் முத்திரைக் கை வாழியே -என்கிறபடியே
தனது தொண்டக் குலம் சூழ இருக்க அவர்களுக்குத் தமிழ் வேதமான திரு வாய் மொழியினுடைய அர்த்தத்தை
ஹஸ்த முத்ரையால் உபதேசிப்பது அருளுவதும் அநுபாவ்யமாய் இறே இருக்கும் இவருக்கு

உந் நித்ர பத்ம ஸூ பகாம் உபதேஸ முத்ராம் -யதிராஜ சப்தாதி -25-அப்பொழுது அலர்ந்த தாமரையின் அழகுடைய ஞான முத்ரை என்றும்
எழில் ஞான முத்திரை வாழியே -ஆர்த்தி பிரபந்தம் -20- என்றும் சொல்லக் கடவது இறே –

ஏந்திய
பூ ஏந்தினால் போல் இருக்கை

கையும் ஏந்திய முக் கோலும் வாழியே
நின் கையில் வேல் போற்றி என்று நாச்சியார் கையில் ஏந்திய வேலுக்கு மங்களா ஸாஸனம் -செய்தால் போலே
இவரும் மா முனிகள் கையில் ஏந்திய முக்கோலுக்கு மங்களா ஸாஸனம் செய்கிறார்

அன்றிக்கே
கமல கர தல வித்ருத த்ரி தாண்ட தர்சன த்ருத ஸமஸ்த பாஷண்ட ஸூ தூர பரிஹ்ருத நிஜா வசத-
தாமரை போன்ற திருக்கையில் தரித்த த்ரி தண்டத்தைக் கண்ட பாஷண்டிகள் அனைவரும் வெகு தூரம் ஓடும்படியான இருப்பிடத்தை யுடையவர்
என்று ஒருக்கோலார் தொடக்கமானவரை எல்லாம் ஓட்டுமதாய் இருக்கும்-

கருணை பொங்கிய கண்ணினை வாழியே
கண் காணக் கை விட்டார்
கண்ணால் கண்டு கொண்டு இருக்கும் போதே கை விட்டார் என்றும்
கண்ணைக் கண்டவுடன் கையை விட்டு விட்டார் என்று சாடூக்தி -நயவுரை

கார் போலும் செங்கை யுறை முக்கோலும் வாழியே
கருணை குடி கொண்டு அருளும் கண்ணினை வாழியே –என்று
திருக்கைக்கு அனந்தர பாவியாய்ப் பேசுவது திருக்கண்களை இறே

திருக்கைகளினாலே ஸ்பர்சித்து அருளினை பின்பு இறே திருக்கண்களால் கடாக்ஷித்து ரக்ஷித்து அருளுவது

கருணை பொங்கிய கண்ணினை
கருணைக் கடலான இவருடைய கிருபை பெருகும் ஆனைத் தாள்கள் இருக்கிற படி

நிரந்தர கருணாம்ருத தரங்கிணீ பிரார்த்தரிதா பாங்கைர் அநுகூலம் அபி ஷிஞ்ச —
எப்பொழுதும் அமுதம் அன்ன கருணையானது பெருகுகின்ற உமது கடைக்கண் பார்வையாலே அனுகூலனான என்னை நனைக்க வேண்டும்
என்றார் இறே
இவரைப் போல் கண்ணுடையார் ஒருவரும் இல்லையே –
இவர் கண் இறே எல்லாருக்கும் களை கண்
கண் அருளாலே இறே எல்லாரையும் ரக்ஷித்து அருளுவது –

கண்ணினை
அலர்ந்த செவ்வித் தாமாரைப் பூவிலே இரண்டு வண்டுகள் படிந்து இருக்குமா போலே யாய்த்து
திருக்கண்களானவை திரு முக மண்டலத்துக்கும் கண் காட்டிகளாய் இருக்கிற படி

ஸ்மயமாந முகாம்போஜம் தயமாந த்ருகஞ்சலம்–பூர்வ தினசர்யா -10-புன் முறுவலுடன் விளங்கும் தாமரை போன்ற திரு முகமும் –
திரு உள்ளத்தில் பொங்கும் கருணையை வெளிப்படுத்துகின்ற திருக் கண்களும்-என்று அன்றோ இவற்றின் சேர்த்தி இருப்பது –

திருக் கண்களை அருளிச் செய்தது உத்தம அங்கத்தில் அழகுக்கு எல்லாம் உப லக்ஷணம்

வாழி செவ்வாய் –பாதாதி கேசவ மாலை -10-என்றும்
வார் காதும் திருநாமம் அணி நுதலும் வாழியே -என்றும்
அவற்றையும் திருநாமாந்தரங்களிலே காணலாய் இருக்கும்

அத்தாலே அவை இரண்டையும் -கண்ணினை -மங்களா சாசனம் பண்ணி அருளினார்
இவர் ஜீயர் திருக்கண் மலரிலே யாய்த்து ஜிதம் என்று தம்மை எழுதிக் கொடுத்தது –

இவ்வளவும் ஸூ ரூப வை லக்ஷண்யத்தை அனுபவித்து

மங்களா ஸாஸனம் பண்ணின இவர்
இனி ஸ்வரூப குணமான ஞான வை லக்ஷண்யத்தையும் அனுபவித்து மங்களா ஸாஸனம் பண்ணுவாராக அதிலே இழிகிறார்

கட் கண் என்றும் உட் கண் என்றும் -பெரிய திருவந்தாதி -28-
நேத்ரேண ஞாநேந -என்றும்
ஞான சஷுஸ்ஸூ க்கள் இரண்டுக்கும் தர்ச நத்வம் ஒத்து இருக்கையாலே ஒரு சேர்த்தி யுண்டு இறே
அத்தாலே –பொய்யிலாத மணவாள மா முனி புந்தி -என்று
ஞானத்தைப் பேசுகிறார் –

புந்தி -புலன் -புத்தி -ஞானம் –

பொய்யிலாத
இவர் விஷயத்தில் சொன்ன ஏற்றம் எல்லாம் யதார்த்தமாக யுண்டு என்கை
இனிச் சொல்ல மாட்டாதார் குறையே யுள்ளது

அன்றிக்கே
ஆஸ்ரிதரானவர்களுக்கு அஸத்வாதி தோஷங்கள் வராமல் நோக்கிப் போரு கிறவர் என்னவுமாம்

காமாதி தோஷ தரம் ஆத்ம பதாஸ்ரிதாநாம் -யதிராஜ விம்சதி -1-என்கிறபடியே
செறிந்தவர் தமேதத்தை மாற்றுபவராய் இருப்பர் -பாதாதி கேச மாலை

மணவாள மா முனி
ரக்ஷகர் அன்றிக்கே ஒழிந்தாலும் வடிவில் போக்யதையாலும் திரு நாம வைலக்ஷண்யத்தாலும் விட ஒண்ணாது இருக்கை

பொய்யிலாமை புந்திக்கு விசேஷணம் ஆகவுமாம்
அப்போது
இராமானுசன் மெய்ம்மதிக் கடலே -இராமானுச நூற்றந்தாதி -58 என்கிறபடியே
உண்மை நன் ஞானமான யதார்த்த ஞானத்தை யுடையவர் என்கை
அதாவது
மெய் ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி -திருவாய் -3-2-7-என்கிறபடியே
ஸம்ஸார ஆர்ணவ மக்நரானவர்களை
ஞானக்கையாலே -திருவாய் -2-9-2-உத்தரித்துப் போருமவர் என்கை –
சேதனர் படும் ஆபத்தைக் கண்டால்
கையாளும்
காலாலும் இறே
இவர் எடுத்து ரக்ஷித்து அருளுவது –

ஞானக்கை தந்து வந்தருளி எடுத்த புந்தி வாழியே

ஞானப் ப்ரதானர்களாய் இறே இவர்கள் இருப்பது –

தீ பக்த்யாதி குணார்ணவம் -தனியன் -என்றும்
புந்தி வாழி -என்றும் அருளிச் செய்து போருகையாலே
ஞானம் சார பூத குணமாகையாலே அத்தைப் ப்ரதானமாகச் சொல்லக் கடவது –

தத்ர ஸத்வம் நிர்மலத்வாத் ப்ரகாசகம் -என்கிறபடியே
ஸூத்த ஸத்வ மயமான விக்ரஹமாகையாலே
உள்ளில் பிரகாசித்வம் என்ன -உள்ளுள் உள்ள வற்றை பிரகாசிப்பிக்க -என்னக் கடவது இறே

புந்தி என்று
ஞான மாத்ரத்தையும் சொன்னது பக்த்யாதிகளுக்கும் உப லக்ஷணம்
மங்களம் நிர்மலா ஞான பக்தி வைராக்ய ராஸயே -என்னக் கடவது இறே

வாழி
மங்களா ஸாஸனம் பண்ணி அருளினார்
ஞான பக்த்யாதிகள் இறே ஆத்ம அலங்காரம் என்பது
ஞான பக்த்யாதி பூஷிதம் -என்னுமா போலே

அன்றிக்கே
ஆச்சார்யனுக்கு அடையாளம் அறிவும் அனுஷ்டானமும் என்றும்
ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே யுடையனான குரு -உபதேச -61-என்றும் இறே
ஆச்சார்ய லக்ஷணம் அருளிச் செய்தது
ஆகையால் ஆஸ்ரிதருடைய அஞ்ஞானத்தைப் போக்கி
ஸம்பந்த ஞானத்தை விளைவித்து
கைங்கர்ய பர்யந்தமாக நடத்திக் கொண்டு போருவது எல்லாம்
தம்முடைய ஞான அனுஷ்டானங்களாலே என்கை

மணவாள மா முனி புந்தி -என்கையாலே
இவருடைய ஞானம் அல்லாதாருடைய ஞானத்தில் காட்டில் அத்யந்த விலக்ஷணமாய்
தத்வ த்ரயங்களையும் அலகலகாகக் காண வல்லதாய்
தாமாரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி -67-என்கிறபடியே
ஸ்ரீ யபதியை விஷயமாக யுடைத்தாய்
அது தான்
ததீய சேஷத்வம் ஆகிற சரம அவதியான எல்லை நிலத்திலே நிலை நின்று போருமதாய் இருக்கும்
தத்வ த்ரயங்களோடு ஸ்ரீ வசன பூஷணம் கண்ட ஸகல ஸாஸ்த்ர ஆச்சார்யர் என்னக் கடவது இறே

ஆக
இவை எல்லா வற்றாலும்
கீதையை அருளிய கண்ணன் என்கோ -திருவாய் -3-4-6- என்னும்படி
நிறை ஞானத்து ஒரு மூர்த்தியான -திருவாய் -6-8-6-
கீதா உபநிஷத் ஆச்சார்யனோடே விகல்பிக்கலாம் படி ஞான நீதியாய் இருக்கிற இவருடைய ஞானமானது
கலி தோஷம் தட்டாமல் நித்ய மங்களமாய்ச் செல்ல வேணும் என்று வாழ்த்தி அருளினார் என்கை
கலி தோஷத்தாலே இறே சேதனருடைய ஞானம் அல்பீ பவித்துப் போருவது

இவர் பல்லவ

ராயருக்கே கலி கண்டித்த திறல் வாழியே -என்னக் கடவது இறே
கலி கன்றியான் -திருமங்கை ஆழ்வார் என்றும் நம்பிள்ளை என்றும் கொள்ளலாம் -அருளாலே உயர்ந்தவர் இறே இவர் தான்

இனி
இவர் இப்படித் தம்முடைய ஞான அனுஷ்டானங்களாலே ஞான விபாகமற

ஸகல சேதனரையும்
ரஷித்துக் கொண்டு போருகையாலே வந்த புகழைச் சொல்லுகிறது –
ஞாலம் யுண்ட புகழ் போல் இருபத்தொரு புகழாய்த்து இது
தன் புகழ் நயவாருடைய புகழ் போற்றி இருக்கிற படி
அதாவது
ஞான வைபவத்தாலே வந்த புகழானது
தொல் புகழ் சுடர் மிக்கு எழுந்தது -இராமானுச நூற்று அந்தாதி -61-என்கிறபடியே
நிரவதிக தேஜோ ரூபமாய்
அப்ரதிஹதமாய்
வாழ வேணும் என்கை

புகழ் வாழி -என்ற
அநந்தரம்
வாழி என்று
இரட்டிப்பாய் இருக்கிறதுக்கு பிரயோஜனம் பல்லாண்டு பல்லாண்டு என்கிறார் ஆகவுமாம்

அன்றிக்கே
நீள் புவியில் தன் புகழை நிறுத்துமவன் வாழியே -பாதாதி கேச மாலை -10–என்கிறபடியே
கீழ்ச் சொன்ன யஸஸூக்கு ஆதாரமாய்
அனுக்தமான ஆத்ம ஸ்வரூப வை லக்ஷண்யமும் அனவரத பாவியாய்ச் செல்ல வேணும் என்று ஆசாசிக்கிறார் ஆகவுமாம்
அடியே தொடங்கி இதுவே இறே இவருக்கு யாத்திரை –

இத்தால்
சரம பர்வமான ஜீயர் விஷயத்தில் மங்களா சாஸனமே அனுகூலரானவர்க்கு அனவரத கர்த்தவ்யம் என்று

அருளிச் செய்து தலைக்கட்டி அருளினார் ஆயிற்று

வாழி செந்தாமரைத் தாள் துவராடை மருங்கு கொப்பூழ்
வாழி முன்னூலுறை மார்பு முக்கோல் அங்கை வாழி திண் தோள்
வாழி செவ்வாய் விழி வாழ் பொன் நாமம் மருவு நுதல்
வாழி பொற் கோயில் மணவாள மா முனி வாழ் முடியே –பாதாதி கேச மாலை நிகமன பாசுரம் –

—————–

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ -கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மா முனியே
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் –

அடியார்கள் வாழ
அணி யரங்கன் திரு முற்றத்து அடியார் -பெருமாள் திருமொழி -1-10-என்றும்
அரங்கன் மெய்யடியார் -பெருமாள் திருமொழி -2-1- என்றும்
திருமால் அடியார் -திருவாய் -5-6-11- என்றும் சொல்லப்படுகிற
ஸ்ரீ வைஷ்ணவர்கள் நாள் தோறும் அபி வ்ருத்தமாய் வாழும்படிக்கு இவர் தான்
பொலிக பொலிக பொலிக -திருவாய் -5-2-1- என்றாய்த்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களா ஸாஸனம் பண்ணுவது –

அரங்க நகர் வாழ
அடியாருக்கு ஆவாஸ -இருப்பிடமான -அரங்க நகர் –

அடியார் நிலாகின்ற வைகுந்தம் -திரு விருத்தம் -75- என்னும்படி இருக்கை

நல்லோர்கள் வாழும் நளிர் அரங்கம் -நாச்சியார் -11-5-இறே

அந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யுடனே கோயில் வாழும்படிக்கும் கோயில் மணவாள மா முனியான இவர் தாம்
ஸ்ரீ மத் ஸ்ரீ ரெங்க ஸ்ரீயம் அநு பத்ரவாம் அநு தினம் ஸம் வர்த்தய –ஸ்ரீ ரெங்கச் செல்வமானது தடை ஏதும் இல்லாமல் நாளும் வளரட்டும் -என்றும்

ஸ்ரீமத் ரங்கம் ஜயது பரமம் தாம தேஜோ நிதாநம் |
பூமா தஸ்மிந் பவது குசலீ கோபி பூமா ஸஹாய: ||
திவ்யம் தஸ்மை திசது பகவந் தேசிகோ தேசிகாநாம் |
காலே காலே வரவரமுநி: கல்பயந் மங்களானி || -ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் –8-

(மங்களா ஸாஸன ஸ்லோகம் இது
பூமா – உபநிஷத் சொல்லும் – அதிசய ஆனந்த குணக் கடல்
பூமா ஸஹாயா -ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமா தேவிமார்கள் உடன் –
அடியார்கள் வாழ அருளிச் செயல் வாழ குரவர் வாழ
வியாக்யானம் வாழ -அரங்க நகர் வாழ -மணவாள மா முனியே -நீர் நூற்று ஆண்டு இரும்

ஒளிக்கு நிதி போன்ற சிறந்த தலமான செல்வமுள்ள ஸ்ரீரங்க நகரம் விளங்க வேண்டும்.
அதில் ஒளிகளுக்கெல்லாம் ஒளி(யான எம்பெருமான்) க்ஷேமமாக வாழ வேண்டும்.
ஆசார்யர்களுக்கு ஆசார்யரான மணவாள மாமுனிகள் காலந்தோறும் மங்களங்களைச் செய்து கொண்டு
அவருக்கு ஓர் ஒளியை அளிக்க வேண்டும்.-என்று இறே மங்களா ஸாஸனம் பண்ணி அருளிற்று )

செல்வம் சிறக்கப் பெற்றதாய் பரம பதத்தில் உள்ள ஒளி போன்ற ஒளிக்கு இருப்பிடமானதாய் இதற்கு மேல் இல்லை என்னும்படி உயர்ந்த முதல் திவ்ய தேசமான ஸ்ரீ ரெங்க க்ஷேத்ரமானது தீது ஏதும் இன்றிச் சிறந்து விளங்கிடுக
அந்த ஸ்ரீ ரெங்கத்தில் மண் மகளுக்கும் மலர் மக்களுக்கும் மணவாளனாய் -அளவிடற்கு அரிய ஆனந்தத்தை உடையவனாக மனம் மொழிக்கு எட்டாத ஒரு பரம புருஷன் க்ஷேமம் யுடையவனாக எழுந்து அருளுக
அழகிய மணவாளனை உள்ளிட்ட பல ஆச்சார்யர்கட்க்கு ஆச்சார்யரான மணவாள மா முனிகள் எல்லாக் காலத்திலும் மங்களங்களை வேண்டுகின்ற வராய் அப் பரம புருஷனுக்கு பரம பதத்தில் உள்ளது போன்ற ஐஸ்வர்யத்தைத் தந்து அருள்க என்றும் கூறியுள்ள படி மணவாள மா முனிகள் மங்களா சாசனம் செய்து அருளினார் –

பெரியோர்களோடும் பெரிய பெருமாளோடும் பெரிய கோயில் ஆழ்வார் வேணும் என்றாய்த்து பெரிய ஜீயர் மங்களா ஸாஸனம் பண்ணும் படி –
அத்தாலே இறே அபி விருத்தமாய்ச் செல்லுகிறது
அது தான் திருமால் கோயிலான திருவாளன் திருப்பதி -பெரியாழ்வார் -4-8-10-இறே

சடகோபன் தண் தமிழ் நூல் வாழ –
தொண்டர்க்கு அமுதாய் -திருவாய் -9-4-9-
திருமாளவன் கவியான -திரு விருத்தம் -48-திருவாய் மொழியை
அஞ்சு வியாக்யானத்துடனே வளர்த்துப் போருமவராகையாலே திருவாய் மொழி வாழும்படிக்கும்

முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரமும் -திருவாய் -7-2-11-என்னும்படி
பெரிய பெருமாள் விஷயமான திருவாய் மொழிப் பெருக்கத்தோடே வாழ வேணும் என்று

சடகோபன் இட்டத் தமிழ் பா இசை வாழியே-இயல் சாற்று – -என்றாய்த்து திருவாய் மொழியை வாழ்த்துவது –

கவிப்பா அமுதின் கறியின் சுவையொடு கண்ணன் உண்ணக் குவிப்பான் சடகோபன் -சதா கோபர் அந்தாதி -7-
பண் இசைகளாகிய கறியுடன் -மிகுதியாகப் பரிமாறி -என்றும்

வகுள பூஷண வாக் அம்ருத அஸநம் -என்றும் சொல்லுகையாலே
இருவருக்கும்-எம்பெருமானுக்கு அவன் அடியார்களுக்கும் – ஜீவனமாய் இருக்கும் -தொண்டர்க்கு அமுது அன்றோ

இப்படி
ஸ்வ -பர -ஜீவன மானத்தை வர்த்திப்பிக்க வேணும் இறே இவருக்கு

திருமால் அடியார்களைத் திருவாய் மொழியை முன்னிட்டு இறே பூசிப்பது
இப்படி பூசிக்கப் பட்ட மாதவன் பூதங்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள் மண் மேல் பண் தான் பாடி நின்று ஆடப் பரந்து திரிகையாலே -திருவாய் -5-2-2-
பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்யம் செய்ததே -பெரியாழ்வார் -4-1-6-என்று
பாத ஸஞ்சார பூதமாய் யாய்த்து அவர்களை யுஜ்ஜீவிப்பது –

மணவாள மா முனியே
லோகத்துக்கு எல்லாம் மா லோகம் போலே இருக்கிற அழகிய மணவாள ஜீயரே
அடியார் குல விளக்காய்
அரங்க மங்கள தீபமாய்
இராமானுச முனி செய்ய குன்றில் ஏற்றிய தீபமாய்
அத்தாலே தமிழ் வேதம் துலங்கப் பண்ணினவராகையாலே

இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
பல்லாண்டு பல்லாண்டு -என்றபடி
நூற்றாண்டு என்று மனுஷ்ய ஆயஸ்ஸை இட்டு உப லஷித்து
ஜீவேம சரதஸ் சதம் -நூற்று ஆண்டுகள் வாழ்வேனாக – என்றும்
பர சதம் சமா -பல நூற்று ஆண்டுகள் -என்றும்
கால தத்வம் உள்ளதனையும் வாழ்ந்து அருள வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறது

அகல்பதத் பவது –அஸ்மத் குருர் வர வர ப்ரவரோ முனீ நாம் அந்தஸ் தமஸ் சமய தந்தத்வஸாம் யதீய த்யான பங்கஜ தளாரிண பாத யுக்மம் -என்னக் கடவது இறே

அடியார்கள் வாழ
செய்ய தாமரைத் தாளிணை வாழியே -என்று தேவரீரை சூழ்ந்து இருந்து ஏத்துமவர்களாய்
பரி ஜநைஸ் ஸஹ வாஸிநம் -அடியார்களுடன் கூடி இருக்க வேணும் -என்று
தேவர் விரும்பிப் போரும் வர வர முனி ப்ருத்யர்கள் வாழ்வாராக

அரங்க நகர் வாழ
திருவரங்கம் திருப்பதியை இருப்பாகப் பெற்றோம் -ஆர்த்தி பிரபந்தம் -55-என்றார் அன்றோ
ரங்கே தாமநி ஸூகா ஸீநம் -பூர்வ தினசரி 1-என்னும்படியாக
தேவர் இனிதாக எழுந்து அருளி இருக்கும் அரங்க நகரானதும் வாழ்வதாக

சடகோபன் தண் தமிழ் வாழ்க
மாறன் கலை உணவாகப் பெற்றோம் -ஆர்த்தி பிரபந்தம் -55-என்றபடி
தேவரீருக்குப் போக்யமாய்
வேத நூல் என்னும்படியான திருவாய் மொழி வைதிக பரிக்ரஹத்தோடே வாழ்வதாக

கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ
மண்ணுலகில் மனிசர் உய்ய -பெருமாள் திரு மொழி -1-10-
பார் உழகைப் பொன் உலகு ஆக்க வல்லோம் என்று
பூதலம் எங்கும் பொன்னுலகு ஆக்கின படி வாழ்வதாக

அடியார்கள் நடுவும்
ஆழ்வார்கள் நடுவும்
திருவாய் மொழியின் இன்னிசை மன்னும் இடம் தொறும் எழுந்து அருளி இருக்கிற மணவாள மா முனியே

இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
எனையோர்-என்னைப் போன்றவர்கள் – உஜ்ஜீவிக்கவுமாம்

ஜயது யஸஸா துங்கம் ரங்கம் ஜக த்ரய மங்களம்
ஜயது ஸூ சிரம் தஸ்மிந் பூமா ரமா மணி பூஷணம்
வரத குருணா சார்த்தம் தஸ்மை ஸூபாந் யபி வர்த்தயன்
வர வர முநி ஸ்ரீ மான் ராமானுஜோ ஜயது ஷிதவ் –ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் –104-

உயர்ந்த கீர்த்தியை யுடைய மூவுலகங்களுக்கு மங்களகரமான ஸ்ரீரங்க திவ்ய தேசம் ஜய சீலமாக இருக்கட்டும்.
வெகு காலமாக அங்கே பூ தேவி ஸ்ரீ தேவிகளுக்கு ஆபரணம் போன்ற பெருமாளும் ஜய சீலமாக இருக்கட்டும்.
வரத குருவுடன் அங்கே சுபங்களை வ்ருத்தி செய்து கொண்டு ஸ்ரீமானான ராமாநுஜ முநியும் மணவாள மாமுநியும் வாழட்டும்.

கீர்த்தியினால் உயர்ந்து உலகம் மூன்றுக்கும் மங்களம் தரும் அணியான ஸ்ரீ ரெங்க நகரம் குறை ஏதும் இன்றி விளங்கிடுக
அந்த திவ்ய நகரத்தில் ஸ்ரீ மஹா லஷ்மிக்கு ரத்ன ஆபரணமாய் மிகப் பெருமை படைத்த ஸ்ரீ ரெங்க நாதப்பெருமாள் வெகுகாலம் குறை ஒன்றும் இல்லாமல் விளங்கிடுக
அத்தகைய பெருமாளுக்கு அநேக மங்களங்களை கோயில் அண்ணனோடே கூடி ஆசா சனம் செய்து வளர்த்துக் கொண்டு
மங்களா ஸாஸனம் என்கிற செல்வத்தை மிகப் படைத்த ராமானுஜரோடே அபின்னரான -வேறு படாத -மணவாள மா முனிகள் பூமியில் இறையும் குறையின்றி வாழ்ந்திடுக–என்றாய்த்து தேசமும் தேசிகர்களும் வாழ்த்திப் போருவைத்து —

——————–———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணண் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கலியனும் ஸ்ரீ அமுதனும்–ஸ்ரீ திரு ஏழு கூற்று இருக்கை வியாக்யானம் —

July 12, 2022

ஸ்ரீ சார்ங்க பாணி -மூலவரையும் உத்சவரையும் சொல்வார்கள்
வில்லே அடையாளம் சாப லதா -சபலம் மனஸ் -தோஷம்
கொடி போன்ற வில் -சார்ங்க பாணி உன்னைக்கொண்டாட
தோஷமே உன்னிடம் இருந்தால் குணமாகும்
விஷமே அம்ருதம் ஆனதே
அவன் இடம் சேர நமது தோஷங்களைப் போக்கி அருளுவான்

இயல்வாகவே ஸ்ரீ கலியன் அமுதன் இடம் ஆழ்ந்து -சாரங்கம் அம்சமே இவர்
முதல் மங்களா சாசனம்
திருமணம் கொல்லையில் -வயலாலி மணவாளன் -அரசன் -அரச மரத்தில் மந்த்ர அரசை ஆலி நாட்டு அரசனுக்கு -வாடினேன் வாடி ஆரம்பித்து
ஆவியே -குடந்தையே தொழுது அடுத்த
ஆறு அங்கம் கூட அவதரித்தவர் -ஆறு பிரபந்தங்களிலும்
திரு நெடும் தாண்டகம் -நிகமனத்திலும் -தண் குடந்தை கிடந்த மாலை அடி நாயன் நினைந்திட்டேனே
உபக்ரமம் உபஸம்ஹாரம் -அப்பியாசம் -எங்கும் அமுதன் தானே

பெரிய திருமொழியில் -களைப்பு ஏற்படும் பொழுது -அமுதன் காட்சி கொடுத்து -இதுவே அவருக்கு coffee
பத்ரிகாஸ்ரமம்
சள கிராமம் அடை நெஞ்சே
திரு நீர்மலை
திருவாலி திருநகரி -ஓ மண் அளந்த -என் தனக்கு துணையாளன்
நாச்சியார் கோயில் -குடந்தைக்கிடந்தானை நறையூரில் கண்டேனே
திருச்சேறை
தேர் அழுந்தூர்
திரு நாகை-

நான்காம் பதிகம் மட்டுமே இல்லை

கோயிலே ஐஸ்வர்யம் பிரசித்தம் -குடந்தையில் சவுந்தர்யம் பிரசித்தம் -நஞ்சீயர் நம்பிள்ளை-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -25-பாசுரங்கள் மங்களாசாசனம்

சூழ் புனல் குடந்தையே தொழுது என் நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –1-1-2-

சூழ் புனல் குடந்தையே தொழுமின் நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்ய்மின் நாராயணா வென்னும் நாமம் –1-1-7-

ஊரான் குடந்தை யுத்தமன் — தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-

நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-

தண் குடந்தை நகராளா ! வரை எடுத்த தோளாளா ! என் தனக்கு ஓர் துணையா ளானாகாயே !–3-6-5-

குயிலாலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடமாடீ ! துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ ! !–3-6-8-

தண் குடந்தை நகராளன் ஐவர் க்காய் அமரில் தேர் உய்த்த தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே –5-5-7-

கொங்கேறு சோலைக் குடந்தை கிடந்தானை நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே-6-8-9-

கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் யுலகை இடந்த நம்பி —நாமம் சொல்லில் நமோ நாராயணமே—6-10-1-

குடந்தைத் தலைக் கோவினைக் குடமாடிய கூத்தனை எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே –7-3-3-

பேரானைக் குடந்தை பெருமானை –காரர் கரு முகிலைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-9-

கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த மைந்தா வுன்னை என்றும் மறவாமை பெற்றேனே –8-9-5-

தோடவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த சேடர்கோல் என்று தெரிக்க மாட்டேன் –அச்சோ ஒருவர் அழகியவா –9-2-2-

யமரர் தம் கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே –10-1-6-

கொங்கார் சோலைக் குடந்தை கிடந்த மால் இங்கே போதுங்கொலோ –10-10-8-

குடந்தை மேவிச் சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தார் தம்மையே –11-3-4-

உம்மை யுய்யக் கொண்ட கொண்டற் கைம் மணி வண்ணன் தண் குடந்தை நகர் பாடி யாடீர்களே–11-6-9-

உலகம் கொண்ட கோவினைக் குடந்தைமேய குருமணித்திரளை–என் சொல்லிப் புகழ்வர் தாமே.-திருக்குறுந்தாண்டகம் – 6-

தூவி சேரன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை பாவியேன் பாவியாது பாவியேனாயினேனே.–திருக்குறுந்தாண்டகம் – 14-

தண் காலும் தண் குடந்தை நகரும் பாடித் தண் கோவலூர்ப் பாடி யாடக் கேட்டு –நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே. திருநெடுந்தாண்டகம் – 17-

பேர்ப் பாடித் தண் குடந்தை நகரும் பாடி பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் –திருநெடுந்தாண்டகம் – 19-

தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே. –திருநெடுந்தாண்டகம் – 29-

நின்னடியிணை பணிவன் வருமிடரகல மாற்றோ வினையே–பொன்னித் தடங்கொண்ட தாமரை சூழும் மலர்ந்த
தண் பூங்குடந்தை –பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே.–திருவெழுகூற்றிருக்கை

காரார் குடந்தை கடிகை கடல் மல்லை ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை –சிறிய திருமடல் – 73

பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர் விடையை தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை –பெரிய திருமடல் – 114

———–

மூன்று முறை திருநெடும் தாண்டகத்தில்
தண் குடந்தை பாடி -வெப்பம் தவிர்க்க தண்மை –
ஆஸ்ரிதர் இடம் முறை அறிய ஸம்ஸ்லேஷித்த இடம்
தனக்கு ஆக்கின திரு அமுதை திருமழிசைப் பிரானுக்கு கொடுத்து -கலத்தது உண்ட -இதுவே தண்மை
மூன்று முறை -தாப த்ரயங்கள் உண்டே – ஆதி ஆத்மீகம் ஆதி பவ்திகம் -ஆதி தெய்விகம் –

ஸ்ரீ பாஷ்யம் -திருவடியிலே சேவை குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன்
தாபத் த்ரய அம்ருதத்வாய -ஸஹ ஏவ அறியப்படுபவன் -அவனை அறிய வேண்டும்

24 திவ்ய பிரபந்தங்களிலே ஒரு திவ்ய பிரபந்தம் முழுவதுமே ஆரா மதனுக்கு -பக்கம் நோக்கு அறியாத பரகாலன்
பாட்டுப்பிச்சன் அரங்கன் -மடல் அவனுக்கே மதிள் உனக்கு
அதில் மற்ற திவ்ய தேசங்களையும் பாடி
அக் குறை தீர்க்கவே திரு எழு கூற்று இருக்கை

அமலனாதி பிரான் -திருவேங்கடத்துக்கும் உண்டே
திருமாலை -மதுரையும் உண்டே
திருப்பள்ளி எழுச்சி -திரு அயோத்யா

———–

ஏழு அடுக்குகள் -இருப்பிடம் -தேர்
ஆழ்வார் எழுவர் மங்களா ஸாஸனம்
வேதம் -கிருஷ்ண யஜுர் -ஸூர்ய நாராயணன் -தேவர்கள் பார்த்து பொங்கும் பரிவு -விழாமல் இருக்க தேர் அமைக்க
பா அணி -ஸப்த சந்தஸ்ஸூ க்கள் -சொல்லால் தேர்
காயத்ரி ஜெகதீ -தேர் சக்கரம்
உஷ்ணிக் பிரஷ்டுப் -இரண்டு தேர் கட்டைகள் bambar
அனுஷ்டுப் பந்தி -இரண்டு குதிரைகள்
ப்ருஹத் தேர் மேடை
சாந்தோரஹம் -தேரில் சஞ்சரிக்கிறான்

கல் தேர் -கர்பக்ருஹம் -குதிரையும் யானையும் கட்டப்பட்ட தேர் -சாகா யானை போல் ஸம்ஹிதா குதிரை போல் -வேதத்தில் உண்டே

மரத் தேர் -சித்திரத் தேர்

சொல் தேர் இது
ஆசு கவி மதுர கவி விஸ்தார கவி சித்ர கவி -நாலு கவி

ஸம்ஸார துக்கம் -பாரமாய் பழ வினை பற்று அறுக்க ஆராவமுதன் இடம் சரணாகதி

சார்ங்க அம்சம் -சார்ங்க பாணி
நம்மாழ்வார் -ஆராவமுதே -சரணாகதி பண்ணிக் காட்டி அருளினாரே

தேர் தட்டில் தானே சரம ஸ்லோக உபதேசம் -அதனாலும் -தேரில் உள்ள பெருமாள் திருவடிகளைப் பற்றுகிறார்

சொல் தேரில் அமர்த்தி சரணாகதி -ரத பந்தனம்

46 வரிகள்
36 வரிகள் தேர் போன்று
10 வரிகள் அமுதனைப்பற்றி -தசாவதாரம் அமுதன்
ப்ருஹதீ பா வகையில் -36 உண்டே

3-5-7-9-11-13-13-பெட்டிகள் ஏழிலும்

அமுதனின் 18 குணங்களும் உண்டே இதில் -18- அத்யாயம் –சரண்யத்வம்

18 குணங்கள் விவரணம், அதிலும் ஸர்வ போக்யத்வம் , தன் திருமேனி அழகை தானே பருக விழைந்து உத்தான சயனம் -பின்னழகு ரசித்து பின் முன் அழகை ரசிக்க,ஆராவமுதே

1-காரணந்து த்யேய -ஆதி மூலம் -ஒரு பேர் உந்தி –அயனை ஈன்றனை

2- விரோதி நிரஸனம் -தோட்டம் வைத்தவன் தண்ணீர் விடுவான் -இலங்கை செற்ற பெருமாள்

3-ஆஸ்ரித ரக்ஷணம் -ஒரு மாணாகி –அளந்தாயே

4-ஆபத் ஸஹத்வம் -தொழும் காதல் வேழத்தை –மடுவில் –

5-பல பிரதன் -முத்தீ -கர்ம ஞான பக்தி யோக -உபாயாந்தர பரர்களுக்கும் பலன் தருபவன் நீயே –

6-பரத்வம் -ஆறு பொதி சடையோன் -அறிய முடியாத -ஈஸ்வரோஹம் -அதுவும் அவனது இன்னருளே
சின் முத்திரை -கட்டை விரலை தானாக கீழே இறக்க முடியாதே -மற்ற விரலை கீழே தானாக தள்ளி

7-ஏழு உலகு எயிற்றிலே கொண்டாயே -ஸம்ஸார உத்தாரகத்வம் -ஸுசீல்யம் ஸுலப்யம்

8-இனிமை -போக்யத்வம்-ஹிதம் சொல்லும் பொழுதும் பிரியமாக -ஆறு சுவைப் பயனும் நீயே
பஞ்சாயுதங்களும் அமுதனும் -சுடர் விடும் ஐம்படை

மூலவர் உத்சவர் பின் அழகைப்பார்த்தி மயங்கி படுக்க -கிடந்தவாறு எழுந்து -சாக்கி -முன் அழகை
ஆராவமுத ஆழ்வான் -யாருக்கு சொல்லாமல் -தனக்கும்
9-சர்வ போக்யத்வம் உண்டே

ஆபத்தைப் போக்கும் அழகு -ஐம்படை ஏந்தி ரஷிக்கத் தயாராக உள்ளான் –

வில் இருக்கும் அம்பு இருக்காதே
பாபங்களை நோக்கி புறப்பட்டு திரும்பாமல் இருக்கிறதாம்

10-ஸர்வ பல ப்ரதத்வம் –நான்கு தோள் முந்நீர் வண்ணா -நான்கு புருஷார்த்தங்கள்-maal இதனாலே அவன் பெயர் -திரு மால்

11- ஸ்ரீ யபத்வம் -வருட -யோக நித்திரை -அறி துயில் அமர்ந்தனை

12- ஸூலப ஆராதனை -வர்ணாஸ்ரம கர்ம அனுஷ்டானம் திரு ஆராதனமாகக் கொண்டாயே

13- சர்வ சரீரீ -ஐம் பெரும் பூதமும் நீயே –ஆத்மா சரீரம் -அந்தர்யாமி -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்

14- தடைகளைத் தகர்த்து -ஏழு விடை செற்றாயே –

15-ஸாஸ்த்ர யோநித்வாத் –சாஸ்திரம் ஆச்சார்ய முகமாகவே கற்க -மறை -ஆறு வகை சமயமும் அறிய முடியாத நிலை

16-வேதாந்த தத்வ சிந்த்தாம் -மஹா லஷ்மி – ஐம்பால் ஓதி திருவை ஆகத்து இருத்தி –

17- சித் அசித் விசிஷ்டா -ஏகமேவ அத்விதீயம்

18- ஸுலப்யம் -சீரார் செந்நெல் கவரி வீசும் -செல்வம் மல்கும் திருக் குடந்தை –ஞானம் பக்தி வைராக்யம்

தென் -அழகான
வைதிக விமானம்
வேத கோஷம் ஒலிக்கும்
ஆடு அரவு -அமுதம் அனுபவித்து ஆடிக்கொண்டே இருக்கும் பரமன்
சிவனும் பல வடிவங்களில் -மதியத்தில் இவனே -ஸ்பஷ்டம் பரத்வமும் ஸுலபயமும்
நின் அடி இணை பணிவேன் வரும் இடர் -வந்து கொண்டே இருக்குமே -அகல -பாற்று –
உன்னையே அனுபவிக்கும் படி அருள வேணும் –

————-

 

எழுவர் -மங்களா சாசனம்
நாலாயிரம் நாத முனிகளுக்கு அளிக்க உதவிய ஆழ்வான்
அகஸ்தியர் -ஏழு கடல் நீரைப்பருகி -ஆசமனம் -சாரமாக அமுதம் –
தாயார் இடம் -குடம் -தானே தாயார் -குட முனிவர் –

பெண் ரஹஸ்யம் வைக்க மாட்டாமல் குட மூக்கு -கும்ப கோணம் -குடந்தை –
அனைத்து மொழிகள் வார்த்தைக்குள் ஆராவமுதமே தானே சாரம் –
தேவர்களும் அறியாத -சமஸ்க்ருதம் கூட அறிய மாட்டாமல்

ஆரா அமுதே -ஆழ்வார் ஈடுபட்டு -ரஹஸ்யம் வெளி வந்ததே –
அருளிச் செயல்களையும் வெளியிட்ட வைபவம் -13-ஆழ்வார் -இவர் தானே –
ஆராவமுத ஆழ்வார் ஆதரித்த பேறுகளை -மா முனிகள் –

பூதம் பேய்
பெருமை
பிணி தீர்க்கம்
அடியார் வசம்
வாத்சல்யம்

திரு மங்கை -சார்ங்கம் அம்சம் -வில் பிடித்த இவன் இடம் அபி நிவேசம் இருக்கச் சொல்ல வேண்டுமோ
ஆவியே –குடந்தையே தொழுது -தொடங்கி –
தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயன் நினைந்திட்டேனே
ஆறு பிரபந்தங்களிலும் மங்களா சாசனம் –
ஆரா இன்னமுத்தை
குடந்தை -அச்சோ ஒருவர் அழகிய வா

அமுதன் புத்துணர்ச்சி கொடுத்து பெரிய திருமொழி முழுவதும்
திரு எழு கூற்று இருக்கை -ஒரே திவ்ய தேசம் -பக்கம் நோக்கு அறியான் பரகாலன்
46-வரிகள் -ஏழு அடுக்கு
மேல் மூன்று பெட்டிகள் –அப்புறம் -5-7-9-11-13-13-பெட்டிகள்-
36 வரிகள் பெட்டிகளுக்குள்
பின்பு 10 வரிகள் – திவ்ய தேசம் வளப்பம்
கொடி -கும்பகோணம் வெற்றிலை இன்றும் சிறப்பு உண்டே
செல்வம் மல்கும் தென் திருக் குடந்தை –ஆடு அரவு அமளியில் அறி துயில் அமர்ந்த
பரமன் நின் அடி இணை பணிவன்-இடர் அகல -சரணாகதி பண்ணி அருளுகிறார் –

ஏழு அடுக்கு -ஏழு ஆழ்வார்கள் –
வேதம் -ஏழு சந்தஸ் ஸூக்கள் -உண்டே
காயத்ரி அனுஷ்டுப் பிருஹத் ஜகதி -இவையே தேர் -தைத்ரியம்
காயத்ரி ஜகதி இரண்டும் தேர் சக்கரம்
உஷ்னுப் த்ருஷ்டுப் தேர் கட்டைகள்
அனுஷ்டுப் பங்க்தி குதிரை
பிருஹத் தேர் மேடை –

கல் தேர் மர தேர் சொல் தேர் மூன்று தேர்கள் மதனுக்கு
கர்ப்ப க்ருஹம் -குதிரையும் யானையும் உண்டே -அழகும்
வைதிக விமானம் -வேதம் இரண்டு பகுதிகள் -சாகை -யானை -சம்ஹிதை -குதிரை போல் வேகமாக –
இத்தை உணர்த்தவே இரண்டும் இங்கு
சித்திரை தேர் -மர தேர் -பிரசித்தம் –

ஆண்டாள்
ஆராவமுதனின் சூடிக் களைந்த மாலை -குடந்தை கிடந்த குடமாடி –ஆசைப்பட்டாள் –
கோதாஸ்தவம் -ஆசு கவி -அமுதன் இவளுக்கு -சாரங்க பாணிக்கு துல்ய
கமலை -அமுதனாம் அரங்கனுக்கு மேலை இட்டாள் வாழியே –

பெரியாழ்வார் –பிள்ளைத் தமிழ் -ஆண் குழந்தை -பத்து பருவங்கள் -சப்பாணி -நான்காவது —
ஒன்பதாவது மாதம் உட்கார்ந்து கை கொட்டும்
நான்கு நிலா –
வாசப்படி -படித்தால் மேலே ஏறலாம் -ரேழி -நடை பாதை -கூடம் -சத்சங்கம் -மநம் பக்குவம் -பூஜ -முற்றம்
தூணிலா –முற்றத்து –
வா நிலா அம்புலி வா என்று -நிலா -இங்கு நிலவுகின்ற அம்புலி
நீ நிலா -நீ நின்று சப்பாணி

நம்மாழ்வார் -ஆராவமுதே -அளவு மீறினால் அமுதமும் நஞ்சு இல்லையே இங்கு
கும்பேஸ்வரர் -பின் இருந்து -பின் அழகை பார்க்கவே
ச ஏகதா பவதி -பல வடிவங்கள் -சுற்றி பல ஈஸ்வர கோயில்களில் பருகிக் கொண்டு –

யாருக்கு ஆராவமுதே -சொல்லாமல்
இன்னார் இனையார் இல்லாமல் தனக்கும் கூட -ஆராவமுதன் –

கருடனாக தானே இருந்து -உபய நாச்சியாரும் தானாகவே -ஆதி சேஷனாக இருந்து
உத்சவர் கையில் சார்ங்கம் -மூலவர் திரு நாமம் சாரங்க பாணி
த்யான ஸ்லோகம் -வந்தே சயான போகே சார்ங்க பாணி –
ஆராவமுதன் முன் அழகை பார்க்க எழுந்து இருந்து எட்டிப் பார்த்தான் -திரு மழிசை பிரான் வியாஜ்யமாக –
தானே ஆழ்ந்து ஆழ்வான் திரு நாமம் பெற்றான் -இது இரண்டாவது காரணம்
கீழே நாலாயிரம் அருளியதால் ஆழ்வார் பார்த்தோம்
நெல்லும் கவரி வீசும்படி -உடலும் உருகும் படி
ஏரார் -அழகு குடி கொண்டு கிடந்தாய் –
ஐஸ்வர்யம் கோயிலில் பிரசித்தம் இங்கு சவ்ந்தர்யம் மாதுர்யம் அழகு பிரசித்தம்

வேறே ஒருவர் மூலம் மோக்ஷம் காலனைக் கொண்டு மோதிரம் கொள்ளுவது போல்
பேறு தராமல்
உலகம் -உண்ட -தாயார் உடன்
ராஜ கோபாலனாக வந்து அருள –
சூழ் விசும்பில் -குடந்தை எம் கோவலன் குடி அடியாருக்கே
ஸ்ரீ வித்யா ராஜகோபாலனாக –

திரு மழிசை பிரான் -மூன்றாவது காரணம் -இவரால் –
அமுது செய்த போனகம் விரும்பி அமுது செய்தானே
நடந்த கால்கள் –வாழி -கேசனே –
உத்தான சயனம் -பக்த பராதீனன்
ஆழ்வாரின் வார்த்தையில் ஆழ்ந்து -இது நான்காவது காரணம்
கோ நிலாவ -நந்தன் மகிழ கொட்டாய்

பேயாழ்வார்
சேர்ந்த திருமால் –30-கடல் -குடந்தை -வேங்கடம் -நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு
வாய்ந்த மறை பாடகம் ஆதி சேஷன் திருத்துழாய் –ஒன்பது இடங்கள்
மனசுக்கு வருவது புருஷார்த்தம் -திவ்ய தேசம் -transit places -அங்குத்தை வாசம் சாதனம் இங்குத்தை வாசம் சாதகம்
வாத்சல்யம் காட்டி அருளி –
அத்தி வரதர் உணர்த்தும் தத்வம் -அந்த களேபர -பாசி பிடித்த அனந்த சிராஸ் –
தூய வைகுண்டம் போல் கர்ப்ப க்ருஹம் -வெளி வந்து-உணர்த்தி விட்டு மறைகிறார்

பூதத்தாழ்வார்
எங்கள் திருமால் -செங்கண் -புண்டரீகாக்ஷத்வம் -மைத்தடம் கண்ணினாய் –
இருவருக்கும் பார்த்து கொண்டே இருப்பதால் விளைந்த விகாரம்
நெடு மால் -திரு மார்பா -திருவடி ரேகைகளாலே பரம் பொருள் ஆகிறான் –
இமையோர் தலைமகன் -எங்கள் பெருமான் -அவற்றை விட்டு
பொங்கு அரவணை மேல் குடமூக்கில் கோயிலாகக் கொண்டு –

பாரம்யம் கலியன் -பெருமையைப் பாடி அருளி
நதார்த்தி சமநம் -அடி பணிந்த அணியார் துயர் ஆர்த்தி போக்கு ஆண்டாள்
தஸ்யா பிதா ஸுசீல்யம் -வடக்கு பிரகாரம் தூணிலா முற்றம் -ஆண்டாள் சந்நிதி
மாதுர்யம் நம்மாழ்வார்
பக்தேஷு விதேயம் -ஆஸ்ரித பரதந்த்ரன்
மஹத் பூதவ் -வாத்சல்யம் -ஸுலப்யம் -accessibility -நாம் பற்றும் படி கோயில் கொண்டு
நீராக கலப்பது ஸுசீல்யம் -பெரியாழ்வார் காட்டி அருளி –
இப்படி பிரதானம் ஏழும்-நதிகள் -சுரங்கள் ஏழு காண்டம் -ஏழு நாட்கள் -ஸப்த பிரகாரம் -ஸப்த கிரி போல்

பெருமை
பக்தர் பிணி தீர்க்கும் கோதை பாட
அருமை எளிமை
ஆராவமுதாய இனிப்பதாய்
அடியார் வசம்
வாத்சல்யம்
திரு உடனே நாம் பற்றும் படி நின்ற வாற்றை இயம்பினாரே -இப்படி ஏழும்

————

வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர்  வாழ் வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன்
தூயோன் சுடர் மான வேல் —தனியன் –

எம்பெருமானுக்கு திரு மதிள் போல் அரணாய் இருப்பதான ஆறு பிரபந்தங்கள்
செய்து அருளின ஆழ்வாருடைய திரு நாமங்கள்
பலவற்றையும் சொல்லி அவரை வாழ்த்துகிறது இதில் –

பிரத்யசேஷ குரவஸ் ஸ்துத்யா-என்னக் கடவது இறே –
ஆழ்வார்கள் அர்ச்சாவதாரமாய் எப்போதும் எல்லாருக்கும் பிரத்யஷராய் இறே இருப்பது –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்-

வாழி பரகாலன் –
பகவத் த்விட்டுக்களான பிரதிகூலருக்கு காலரானவர் வாழி

வாழி கலிகன்றி-
கலி தோஷ நிவாரகர் வாழி

வாழி குறையலூர் வாழ் வேந்தன் —
திருக் குறையலூரை அவதார ஸ்தலமாக உடையராய் –
அது வாழும் படிக்கு அத்தை நோக்குகிற ராஜா என்னுதல்-
அங்கே வாழுகிறவர் என்னுதல்

வாழியரோ–மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன் தூயோன் சுடர் மான வேல் -என்று
ஆழ்வாரையும்
அவர் திருக் கையிலே வேலையையும் ஒருகாலே ஆசாசித்த படி –

மாயோனை –
அரங்கத்து அரவணைப் பள்ளி கொள்ளும் மாயோனை இறே வாள் வலியால் மந்திரம் கொண்டது –
தென்னரங்கன் தன்னை வழி பறித்த வாளன் இறே –
கைப் பொருள்கள் முன்னமே கைக் கொண்டவர் இடத்திலே இறே மந்திரப் பொருள் கைக் கொண்டது –
மந்திரத்தைப் பற்றி இறே மந்திரம் கொண்டது

மங்கையர் கோன்-
மங்கையர் மன்னன் இறே

தூயோன் –
தூய்மை என்னும் பாஹ்யாப்யந்தர சுத்தியை யுடையவர்

அங்கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்டமுக்கி யடையார் சீயம்
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் -என்று
தாமே தம் திரு நாமங்களைக் கூறினார் இறே

சுடர்மான வேல் –
தேஜோ ரூபமான மான வேல் –
பெரிய வேல்
திருமங்கை மன்னன் எடுக்கும்படியான வேல் –

வாழியரோ –
இத்தால் ஆழ்வாரோ பாதி
ஆயுதமும் ஆசாஸ்யம் என்றபடி –
நின் கையில் வேல் போற்றி என்னக் கடவது இறே
இது தான் கொற்ற வேல் ஆகையாலே வெற்றி வேலாய் இருக்கும் –
இதன் விஜயத்தை வேண்டுகிறது —ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்

————————————————————————–

அவதாரிகை -1-
சம்சார ஸ்வபாவ அனுசந்தானத்தாலே மிக அவசன்னரான ஆழ்வார்
அவற்றின் பரிகாரமாக
அவனைக் கைகளால் தொழுது
மனசாலே நினைத்து
வாயாலே பேசி திருவடிகளிலே விழுந்தார் –

இங்கனே கிடந்தது நோவு பட உமக்கு அபேஷிதம் என் என்ன
பகவத் விரோதியாகிற சம்சாரத்தை வாசனையோடு போக்கித் தர வேணும் -என்றார்

அத்தை நம்மால் செய்யல் ஆவாதே என்ன

உன்னை ஒழிந்த சகல பதார்த்தங்கள் உடைய ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் உனது அதீனமே
சர்வ சமாஸ்ரயநீயன் ஆகவும்
ஆபத் சகன் ஆகவும்  இருக்கிற நீயே
என்னுடைய சம்சாரத்தைக் கழித்து அருளா விடில்
என்னால் கழித்துக் கொள்ளப் போகாதே -என்று
திருவடிகளிலே விழுந்து தம் தசையை அறிவிக்கிறவராய் -இருக்கிறது –

அவதாரிகை -2-
முதலிலே கரண களேபர விதுரமாய்
அவிஜ்ஞ்ஞேய ஸ்வரூபமாய்
அசித் கல்பமாய் இருக்கிற இவற்றை -அர்த்தித்வாதி நிரபேஷமாக
உன்னுடைய நிரவதிக தயையாலே உண்டாக்கின நீயே அருளிக் கடாஷியாயகில்
அமூநி புவநாநி பாவித்தும் நாலம்-ஸ்தோத்ர ரத்னம் -10–
முதலிலே இவை யுண்டாகவே மாட்டாது
சத்தையே தொடங்கி உன்னதீனமான பின்பு உன்னை ஒழிய இவற்றுக்கு ஒரு பிரவ்ருத்தி நிவ்ருத்தி கூடாது
என்னும் இடம் சொல்லவும் வேணுமோ

இது இல்லாத வன்று உண்டாக்கின நீயே இதுக்கு ஒரு போக்கடி பார்க்கை ஒழிய
நான் ஓன்று செய்து உன்னைப் பெறுகை என்று ஒரு பொருள் உண்டோ-

சரணா மறை பயந்த -தாமரை யானோடு
மரணாய மன்னுயிர்கட்கெல்லாம் -அரணாய
பேராழி கொண்ட பிரானன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு –முதல் திரு -60-என்றபடி

ஜ்ஞானாதிகனான சதுர முகனோடே கூட உத்பத்தி விநாசாதிகளுக்கு கர்மீ பவிக்கிற சகல சேதனர்க்கும்
ரஷை என்று பெற்ற பெற்றவை எல்லாம்
நம் மேல் வினை கடிவான் என்றபடி

ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்காக கையிலே திரு ஆழியைத் தரித்துக் கொண்டு இருக்கிற
உபகாரகனான அவன் பார்க்கில் பார்க்கும் இத்தனை அல்லது
வேறு கடல் சூழ்ந்த பூமியில் உள்ள சேதனர் தங்களுக்கு ரஷை தாங்கள் அன்றியார்கள்

அவனை ஒழிய இவை அறியாது ஒழிய வேண்டுகிறது என் என்னில் –
நைவ கிஞ்சித் -ஜிதந்தே -1-6-இத்யாதி –
உனக்கு-பரோஷமாய் இருப்பது ஓன்று இல்லை
எத்தனை யேனும் ஜ்ஞானாதிகரராய் இருப்பாருக்கும் நீ கண்ணுக்கு விஷயம் ஆகாய்
உனக்கு கை புகராதது ஒன்றும் இல்லை –
எத்தனை யேனும் அதிசய ஜ்ஞானாதிகர்க்கும் நீ கை புகுந்தாய் இராய்-

இத்தால் சொல்லிற்று ஆயிற்று என்ன வென்றால்
ஒருவனுக்கு கண்ணும் தோற்றாதே
காலும் கடை தாராதே இருப்பது

ஒருவனுக்குக் கண்ணும் தோற்றி
காலும் கடை தருவது

இப்படி இருந்தால் யார் வழி காட்டிக் கொடு போவார்கள்
நான் அஜ்ஞனாய் அசக்தனாய் இருந்தேன் -நீ சர்வஜ்ஞனாய் சர்வ சக்தனாய் இருந்தாய்
இங்கனே இருந்த பின்பு நீ என் கார்யம் செய்து தலைக் கட்டும் இத்தனை போக்கி
நான் என் கார்யம் செய்து தலைக் கட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ என்கிறார்-

நீ தந்த ஜ்ஞானம் கொண்டு அறியப் பார்த்தாலும்
அறிந்த படி செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான சக்தி எனக்கு யுண்டோ –

ஆழ்வாருக்கு முதலிலே செப்பேட்டைக் கையிலே கொடுத்து நிதியைக் காட்டிக் கொடுப்பாரைப் போலே
திரு மந்த்ரத்தையும்
அதில் அர்த்தத்துக்கு எல்லை நிலமாகக் கோயில்களையும் காட்டிக் கொடுக்கக் கண்டு
க்ருதக்ருத்யராய் –
சம்சாரத்தையும் பரம பதத்தையும் ஒக்க மறந்தார்

ஆழ்வாரைப் பார்த்து எம்பெருமான் -நீர் இருக்கிறது சம்சாரத்தில் கிடீர் -என்று அருளிச் செய்ய –
அதன் கொடுமையை அனுசந்தித்து ஆற்றாமையாலே
மநோ வாக் காயங்களாலே எம்பெருமானை அனுபவித்து ஆற்றப் பார்த்தார்

அது பண்டையிலும் இரட்டையாய் மிகவும் ஆற்றாமையாலே எம்பெருமானுடைய சரண்யதவத்தைப் பேசிக் கொண்டு
அதுக்கு எல்லை நிலமான திருக் குடந்தையில் ஆராவமுத ஆழ்வார் திருவடிகளையே
எத்தசைக்கும் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவாரணத்துக்கும் உபாயமாக பற்றி முடிக்கிறார் –

சித்திர கவி வகைகள்
சக்ரபந்தம் -பத்ம பந்தம் -நாக பந்தம் -ரதபந்தம்

————————————————————————–

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறையானை ஈன்றனை –
ஒரு முறை இரு சுடர்  மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியின் அட்டனை
மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு  மானுரியிலங்கு மார்வினன் இரு  பிறப் பொரு மாணாகி
ஒரு முறை  ஈரடி மூவுலகு அளந்தனை
நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை
ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை
முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அறு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன் அகத்தினுள் செறுத்து
நான்குடன் அடக்கி முக்குணத்து இரண்டவை அகற்றி  ஒன்றினில்
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை
முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை
ஏழு உலகு எயிற்றினில்  கொண்டனை
கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை
சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை
சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண நின்னீரடி யொன்றிய மனத்தால்
ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அங்கையின் முப்பொழுதும் வருட அறி துயில் அமர்ந்தனை
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை
மேதகு மைம் பெரும் பூதமும் நீயே
அறுபத முரலும்   கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை
அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை
அறமுதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை

குன்றாமது மலர்ச்சோலை வண் கொடிப் படப்பை
வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ்வன முடுத்த
கற்போர் புரி செய்கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியி லறி துயில் அமர்ந்த பரம
நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –

தனிப்பாடல் –
இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பன என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருத்துந்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே

————————————————————————–

வியாக்யானம் -1-

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்  ஒரு முறையானை ஈன்றனை –

ஒரு பேர் உந்தி
வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களுக்கும்
அத்விதீய காரணமாக
பரப்புடைய திரு நாபியிலே

இரு மலர்த் தவிசில்
அப் பரப்பு அடங்கலும் கண் செறி இட்டால் போலே
பெரிய திகழ்கிற மலராகிய ஆசனத்திலே

ஒரு முறையானை ஈன்றனை
ஒரு கால் விசஜாதிய ஜன்மாவான சதுர் முகனை உண்டாக்கினான்-

ஒரு கால் என்றாலும்
ப்ரவாஹ ரூபேண நித்தியமாய் இருக்கும் இறே-நா வேஷஸே-ஸ்தோத்ர ரத்னம் -10-

ஒரு பேர் உந்தி —
ஜகத்தை பிரளயம் கொண்ட காலத்திலே
நிர்ஹேதுக கிருபையாலே
இவற்றின் உடைய சத்தையை உண்டாக்கினவனே
பிரதான ஆதியாய் திரு நாபி

இரு மலர்த் தவிசில்-   –
பெரிய இதழ்களை உடைய தாமரையிலே

ஒரு முறையானை ஈன்றனை –
இவற்றின் உடைய சத்தாதிகளை உண்டாக்கின உனக்கே
பரம் அன்றோ எல்லாரையும் ரஷிக்கிறது

நீ உண்டாக்கின இவற்றின் பிறப்பை அறுக்க உனக்கு அரிதோ   —

————————————————————————–

வியாக்யானம் -2-

ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒரு முறையானை ஈன்றனை –

நாம ரூப விபாஹா அனர்கமாய் இருக்கிற இத்தை
விபதமமாக்கி
சூஷ்ம ரூபேண அவஸ்தைகளைப் பிறப்பித்து
மஹானாக்கி
அஹங்காரமாக்கி-
தன் மாத்ரைகள் ஆக்கி –
பூதங்கள் ஆக்கி –
பௌதிகமான வர்ண சிருஷ்டி யளவும் வரப் பண்ணி

பின்னை அவ்வருகு உண்டான தேவாதி காயங்களை -அடங்கலும் அவன் முகத்தாலே பண்ணுவதாக
முதலிலே சதுர் முகனை யுண்டாக்கினான் ஆயிற்று

முன்பு உள்ளவை எல்லாம் தானே கை தொட்டுச் செய்து
பின்பு சதுர் முகனை அதிஷ்டித்து நின்று செய்வானாகப் பார்த்தான் –

முன்பு அசித்தைக் கொண்டு கார்யம் கொண்டதோடு பாதி
இவனைக் கொண்டு கார்யம் கொள்ளப் பார்த்ததோடு
வாசி அற்று இருக்கிறதாயிற்று இவனுக்கு –

பாரதந்த்ர்யத்தில் வந்தால் இவனுக்கும் அசித் சாம்யம் உண்டு –
சேதனரான வாசியால் பெறுகிற ஏற்றம் கார்யத்துக்கு
கடவான் அவனே என்று அறுதி இட்டு இருக்கை யாயிற்று

————————————————————————–

ஒரு முறை இரு சுடர் மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய
ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை-

வியாக்யானம் -1–
தான் உண்டாக்கின பயிருக்குக் களை பறிப்பானும் தானே யானால் போலே
ஸ்ருஷ்டமான ஜகத்தை அழிவு செய்யும் ராஷசரை நிரசிப்பானும் தானே —

ஒரு முறை -ஒரு பர்யாயம்

இரு சுடர் -சந்த்ராதித்யர்கள்

மீதினிலியங்கா -மேலே சஞ்சரிக்கப் பயப்படும்படியாய் –

மும் மதிளிலங்கை-கிரி துர்க்க ஜல துர்க்க வன துர்க்க என்கிற
மூன்றையும் உடைத்தான நினைத்தாற்கு அஞ்ச வேண்டும் படியான ராஷசர்
குளவிக் கூடு சேர்ந்தால் போலே சேர்த்து அம்மணக் கூத்தடிக்கும் தேசம் –

இரு கால் வளைய ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை-
இரண்டு கோடியும் வளைந்து நிற்கும் பிரதானமான ஸ்ரீ சார்ங்கத்திலே பொருந்தி –
இரண்டு எயிற்றையும் யுடைத்தாய் -நெருப்பை உமிழா நின்றுள்ள சரத்தாலே கட்டுப் பொகட்டாய்-

வாளியில் அட்டனை -ப்ரஹ்ம சிருஷ்டியைப் போல் அன்றியே –
பத்தும் பத்தாக அம்பால் எதிர்த்துப்-பிராட்டியினுடைய சம்ஸ்லேஷ விரோதியைப் போக்கினால் போலே
என்னுடைய விரோதிகளையும் போக்க வேண்டும் என்று கருத்து-

—————————————

வியாக்யானம் -2-
பிரிவுக்கு ஹேது பூதனான ராவணனை அழியச் செய்தாள் பிராட்டியோ -நீ யன்றோ –

ஒரு கால் சந்த்ர ஸூர்யர்களும் கூட மேலே சஞ்சரிக்கவும் அஞ்சும்படியாய்
காட்டரண் மலை யரண் நீர் அரண் என்கிற மூன்று வகைப்பட்ட அரணை யுடைத்தாய் இருக்கிற இலங்கையை
வில்லினுடைய கோடி த்வயமும் வளையும் படி
அத்விதீயமான ஸ்ரீ சார்ங்கத்திலே பூட்டப்பட்டு -இரண்டு எயிற்றையும் யுடைத்தாய்
தொடுக்கும் போது அம்பாய் எதிரிகள் மேலே தைக்கும் போது நெருப்பாய்த் தைக்கும் அம்பாலே முடித்தாய்-

அடைந்த அரு வினையோடு அல்லல் நோய் பாவம்
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் –நுடங்கு இடையை
முன் இலங்கை வைத்தான் முரண் அழிய
முன் ஒரு நாள் தன வில் அங்கை வைத்தான் சரண் -முதல் திரு -59-என்றபடி-

இவ் வாத்மாவுக்கு ஸ்வதஸ் சித்தம் அல்ல –
அய பிண்டத்தையும் அக்னியையும் சேர்த்து வைத்தால் போலே
அன்யோன்ய சம்யோகத்தாலே
அதினுடைய பரமாணுக்கள் ஸூஷ்ம ரூபேண அசித்தில் வந்து சங்க்ரமிக்கை யினாலே யாதல்-அன்றிக்கே –
அதனுடைய குணத்தை பஜிக்கையினாலே யாதல் –
அதினுடைய ஔஜ்வல்யத்தையும் வர்ணத்தையும் உடைத்தாய் இருக்குமா போலே
நித்தியமான ஆத்ம வஸ்து அநாதியாய் உள்ள அசித் சம்யோகத்தாலே
அந்த அசித்திலே அஹம் அபிமானத்தைப் பண்ணும்படி பலிக்கிற-அவித்யா கர்ம வாசனா ருசிகள் –
அவை யடியாக பரிக்ரஹித்த சரீரத்தைப் பற்றி வரக் கடவதான ஆதி வ்யாதி நிஷித்த அனுஷ்டானம்-

இப்படி கார்யமாயும் அடி காண ஒண்ணாதபடி கிடக்கிறவை-
புதுப் புடவையை அழுக்கு கழற்றுமா போலே-க்ரமத்தாலே போகை அன்றிக்கே
ஒரு காலே சவாசநமாகப் போக்க வேண்டில்

நுடங்கிடையை இத்யாதி –
அதுக்கு செய்ய வேண்டுவது என் என்ன –
பிரபல பிரதிபந்தகங்களை வருத்தம் அறப் போக்க வல்லவனைப் பற்ற வடுக்கும் –

நுடங்கிடையை –
கண்டாருக்கு என்னாய் விளையக் கடவதோ -என்று
அஞ்ச வேண்டும் படியான சௌகுமார்யத்தை யுடைத்தான இடையை
யுடையவளைக் கிடீர் பிரித்து வைத்தது -என்கை-

முன்பு இலங்கையிலே கொடு புக்குச் சிறை வைத்த ராவணன் மிடுக்கு அழியும் படியாக –
மேகத்திலே மின்னினால் போலே அழகிய திருக் கையிலே ஸ்ரீ சார்ங்கத்தை வைத்தவன் –
எதிரிகளை அழியச் செய்கைக்கு ஒரு வியாபாரம் வேண்டா –
கையிலே வில்லை வைக்க அமையும் –

அழகிய திருக் கையிலே வில்லைப் பிடித்தவன் உபாயம் என்னுதல் –
அவனை உபாயமாகப் பற்றுங்கோள்-என்று விதியாதல் –

நுடங்கிடையை முன்னிலங்கை வைத்தான் -என்றதுக்கு கருத்து என் என்னில்
ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவை என்னது என்று இருக்கை யாவது –
பிராட்டியைப் பிரித்த ராவணனோடு ஒக்கும் என்கை –
தன்னைப் பற்றினார்க்கு அவள் விரோதியைப் போக்கினாப் போலே விரோதியைப் போக்கிக் கொடுக்கும் என்கை –
அவளோடு ஒத்த பிராப்தியும் அவன் பக்கல் இவனுக்கு உண்டு என்கையும்
அவனைப் பற்றுவார் அவள் முன்னாகப் பற்றுவார் என்கையும் –

ஒரு பேருந்தி இரு மலர்த் தவிசில்ஒரு முறையானை ஈன்றனை –
ஒரு முறை இரு சுடர் மீதினிலியங்கா-மும் மதிளிலங்கை இரு கால் வளைய
ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் –

இல்லாததை யுண்டாக்கின உனக்கு உள்ளதுக்கு
ஒரு குண தானம் பண்ணுகை அரிதோ என்கையும்

பிராட்டியோட்டைக் கலவிக்கு விரோதியான ராவணனை அழியச் செய்த உனக்கு
என்னுடைய பிரதிபந்தகம் போக்குகை அரிதோ என்கையும்

வாளியில் அட்டனை-
ப்ரஹ்ம சிருஷ்டி போலே சங்கல்ப்பத்தாலே செய்கை அன்றிக்கே
நேர் கொடு நேரே பூசலில் நின்று அழியச் செய்தாய் –

————————————————————————–

மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன்
இரு பிறப் பொரு மாணாகி-ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-

வியாக்யானம் -1-
அம்பாலே சாதிக்க ஒண்ணாத இடம் அழகாலே சாதித்த படி சொல்கிறது –

மூவடி நானிலம் வேண்டி -நாலுவகைப் பட்ட பூமியிலே -மலை காடு நிலம் கடல் -என்கிற -மூவடியை வேண்டி –

முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் –
ஒரு காளமேகத்தில் மின்னலை ஏறிட்டால் போலே-
திரு யஜ்ஞோபவீதமும் -அத்தோடு கூடின க்ருஷ்ணாஜிநமும் விளங்கா நின்ற திரு மார்பை யுடையையாய் –

இரு பிறப் பொரு மாணாகி-த்வ்ஜனுமாய் -ஒப்பில்லாத ஸ்ரீ வாமனனுமாய்
தானே இன்னும் ஒரு கால் இவ்வடிவு கொள்ள வேணும் என்னிலும் இப்படி வாயாத வடிவுடையையாய்

ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-ஒருகால் இரண்டு அடியாலே மூன்று லோகத்தையும் அளந்து கொண்டாய்-

இத்தால்-
இந்தரனுக்கு ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்தால் போலே
என்னுடைய சேஷத்வத்தையும் மீட்டுத் தந்து அருள வேணும்-என்கிறார் –

தேவர்கள் சென்று இரந்தார்கட்கு இடர் நீக்கிய -கோட்டங்கை வாமனனாய் -திருவாய்மொழி -7-5-6–என்று
உன்னை இரந்தார்கட்கு நீயும் இரந்து அவர்கள் அபேஷிதம் பார்க்கும் அவன் அல்லையோ –

இசையாதார் தலைகளிலே வைத்த திருவடிகளை இசைந்த என் தலையிலே வைக்கல் ஆகாதோ-

பிரயோஜனாந்தர பரனுடைய இழவு தீர்த்த உனக்கு அநந்ய பிரயோஜனான என்னுடைய இழவு தீர்க்கலாகாதோ

இந்த்ரன் கழஞ்சு மண் அன்றோ இழந்தது -நான் என்னையும் உன்னையும் அன்றோ இழந்தது –

————————————————————————–

வியாக்யானம் -2-
அம்பாலே அழிக்க ஒண்ணாத இடத்தை -அழகாலும் இரப்பாலும் அழியச் செய்த படி –

பிரயோஜனாந்தர பரர்களான இந்த்ராதிகளுடைய கார்யம் செய்த நீ
உன்னையே பிரயோஜனமாக நினைத்து இருக்கிற என் கார்யம் செய்யலாகாதோ –

மூவடி நானிலம் வேண்டி-ஈரடியாலே பூமியை அளந்து
ஓரடிக்கு அவனை சிறையிட்டு வைக்க நினைத்து மூன்றடியை இரந்தான் ஆயிற்று –

நெய்தல் மருதம் முல்லை குறிஞ்சி என்றால் போலே சொல்லுகிற
அன்னலும் துன்னலுமான பூமியை அர்த்தித்தது –
இந்நாலிலும் ருஷீஷாம்சமாக கழித்தது பாலை நிலம் என்றும் சொல்லுவார்கள் –
இவருக்கு அபிமதம் நாலு என்னும் இடம் தோற்றி இருந்தது இறே

முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் இரு பிறப் பொரு மாணாகி-
ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-
மேகத்திலே-மின்னினால் போலே சாத்தின யஜ்ஞோபவீதமும்
கிருஷ்ணாஜிநமும் விளங்கா நின்றுள்ள திரு மார்பை யுடையையாய்
உப நயனம் பண்ணின புதுமை தோற்றும் படி இருப்பாயுமாய் –

இந்த்ரனுடைய அர்த்தித்வம் தலைக் கட்டுகைக்காக இட்ட போதோடு இடாத போதோடு வாசி அற-
முகம் மலர்ந்து போம்படி இறபபிலே தகண் ஏறின வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து-
ஒரு கால் த்ரை லோகத்தையும் ஈரடியால் அளந்து கொண்டாய்

ஆசையில்லாதார் தலை மேலேயும் வைக்கும் திருவடிகளை ஆசையுடைய என் தலை மேலேயும் வைக்கலாகாதோ-

இந்த்ரனைப் போலே கழஞ்சு மண் பெறுதல் –
மகா பலியைப் போலே ஔதார்யம் கொண்டாடுதல் செய்ய இருக்கிறேனோ நான் –
உன்னைப் பெற வேணும் என்று அன்றோ நான் அர்த்தித்திக்கிறது-

உன்னை வைத்து வேறு ஒன்றை இரந்தார்க்கோ நீ இரப்பாளனாகக் கார்யம் செய்வது –
உன்னையே இரந்தார் கார்யம் செய்யலாகாதோ –

மதீய மூர்த்தா நமலங்கரிஷ்யதி கதா –ஸ்தோத்ர ரத்னம் -31-என்று இறே நான் இருக்கிறது-

——————————————————————–

நாற்றிசை நடுங்க–அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி
ஒரு தனி வேழத் தரந்தையை-ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-

வியாக்யானம் -1-
பெரு மதிப்பரான இந்த்ராதிகளுக்கயோ அபேஷிதம் செய்தது என்னில்
அன்று
ஆபத்தும் விசுவாசமும் என்கிறது அல்பம் உண்டானால்
தான் தண்ணியரான திர்யக்குகளுக்கும் அபேஷிதம் செய்யும் என்கிறது-

நாற்றிசை நடுங்க-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபத்தை நினைத்து கலங்கின கலக்கத்தைக் கண்டு-
ஜகத்துக்கு என்ன மிறுக்குப் புகுகிறதோ -என்று அறியாதே நடுங்க –

அஞ்சிறைப் பறவை ஏறி –
மிக்க அழகையும் வேகத்தையும் உடைத்தான சிறகை யுடைத்தான பெரிய திருவடி மேல் ஏறி-

நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை-
நாலா நின்ற வாயையும் மூன்று மதத்தையும் இரண்டு செவியையும் யுடைத்தாய்
வேறு துணை இன்றிக்கே தன் மிடுக்கு அற்று நின்ற ஆனையினுடைய மகா துக்கத்தை

அரந்தை -துக்கம் –

ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-அத்தசையிலே வேற்று நிலமாய்
பெரிய நீர் வெள்ளமான மடுவிலே தீர்த்தாய்
முதலையின் வாயில் நின்றும் ஆனையை மீட்டால் போலே
சம்சாரம் கொண்ட என்னையும் மீட்க வேண்டும் -என்கிறார்-

கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே தயோர்த் வந்தவ சமம் யுத்தம்
திவ்யம் வர்ஷ சஹச்ரகம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்று

ஆனைக்கு முதலை ஓன்று
எனக்கு முதலை ஐந்து

அது மிடுக்கான யானை
நான் துர்பலன் -என்கிறார்

——————————————————–

வியாக்யானம் -2-
பெரு மதிப்பரான இந்த்ராதிகளுக்காக உன்னை அழிய மாறிக் கார்யம் செய்த அளவேயோ –
ஜன்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்ற ஆனை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே
அரை குலையத் தலை குலைய வந்து விழுந்தவன் அன்றோ –

நாற்றிசை நடுங்க-அஞ்சிறைப் பறவை ஏறி நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை-
ஜகத் ஸ்ருஷ்டியாதிகளுக்கும் சங்கல்பத்ததுக்கு அவ் வருகு யுண்டு என்று அறியாமையாலே
ஜகத் உபசம்ஹாரத்துக்கும் அவ்வருகாய் இருந்ததீ-

இது ஒரு சீற்றம் இருந்த படி என் -என்று இருந்ததே குடியாக எல்லாரும் அஞ்சும்படியாக
மேருவுக்கு இனிய மேகம் போலே -அழகிய சிறகை யுடைய பெரிய திருவடி திருத் தோளிலே ஏறி-
பெரிய வேகத்தோடு

நாலா நின்றுள்ள வாயை யுடைத்தாய்
மூன்று வகைப் பட்ட மதத்தை யுடைத்தாய் -இரண்டு கன்னங்கள் குறி –
இரண்டு செவியை யுடைத்தாய்-வேறு துணை இன்றிக்கே
அத்விதீயமாய் இருக்கிற யானையுடைய துக்கத்தை

அத் தசையிலே வேற்று நிலமாய் மிக்க வெள்ளத்தை யுடைத்தான மடுவிலே
அரை குலைய தலை குலைய வந்து விழுந்து போக்கினாய்

க்ரஹம் சக்ரேண மாதவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்றபடி
மடுவிலே போய்ப் புக்கு ஆனையையும் முதலையுமாக அணைத்துக் கொண்டு போந்து கரையிலே ஏறி
ஆனைக்கு நலிவு வாராத படி திரு ஆழியாலே முதலையைக் கிழித்து பொகட்டான் ஆயிற்று –

ராஜ புத்ரனோடு வினை யுண்ட கைக் கூட்டனுக்கும் பால் திரளை இடக் கடவது காண்-என்று
பட்டர் அருளிச் செய்யும் படி –

நால் வாய் மும்மதத் திரு செவி ஒரு தனி வேழத் தரந்தையை-என்றால் போலே
சொல்லுவதுக்கு கருத்து யாது என்னில்
பிரஜை கிணற்றில் விழுந்தால் –
காதும் கண்ட வாளியும்-காலும் தலையும் -வடிவும் இருக்கும் படி காண் -என்பாரைப் போலே
இடர்ப்பட்ட இதனுடைய அவயவங்கள் அவனுக்கு ஆகர்ஷகம் ஆன படியாலே சொல்லுகிறது –

வேழத் அரந்தையை – –
எளியராய் இருப்பார் நோவு பட்டால் போல் அன்று இறே இதனுடைய நோவுபாடு –

பரமா பதமா பன்ன -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –

சர்வேஸ்வரன் தன்னைப் பேணாதே வந்து விழ வேண்டும் படி கரை கண்ட ஆபத்து ஆயிற்று –

இவ் வாபத்துக்கு அவதி என் என்னில் –
மநஸா சிந்தயத் வாயால் கூப்பிடுமதோவிற்று-வாயால் கூப்பிடவும் இயலாத படி –

ஒரு நாள் இருநீர் மடுவில் தீர்த்தனை-
அங்கு காலம் அளவிட்டு இருக்கும் -முதலை ஓன்று -தான் ஆனை –
இங்கோ என்றால் -காலம் அநாதி -இந்த்ரியங்கள் ஐந்து -நானோ துர்ப்பலன் –
ஆனால் வாசி பார்த்துத் தர வேண்டாவோ –

காலைக் கதுவிடுகின்ற -கயலொடு வாளை விரவி -நாச் திரு -3-5-
ஆந்தராளர் குடியிலே பிறந்து ஈஸ்வரன் மர்மஜ்ஞையாய் இருப்பாள் ஒருத்தி வார்த்தை
ஒரு நீர்ப் புழு நலியப் பொறுக்க மாட்டாதவன் –
இரண்டு கிடாய் காலைப் பற்றி நலிகிறது என்கிறாள் –

————————————————————————–

முத் தீ நான்மறை ஐவகை வேள்வி அரு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை-

வியாக்யானம் -1-
உபாயாந்தர நிஷ்டருக்கும் அவற்றை நடத்திக் கொடுப்புதி இறே –
யோகோ யோக விதாம் நேதா -என்கிறபடியே –

முத் தீ –
மூன்று பிள்ளை பெறுவாரைப் போலே –
கார்ஹாபத்ய ஆஹவ நீய -தஷிண அக்னிகளையும் –

நான்மறை –
ருக் யஜூஸ் சாம அதர்வணங்களையும் யுடையராய் –

ஐ வகை வேள்வி-
தேவ யஜ்ந -பித்ரு யஜ்ஞோ -பூத யஜ்ஞோ-மனுஷ்ய யஜ்ஞோ-ப்ரஹ்ம யஜ்ஞ–என்னும்
பஞ்ச மகா யஜ்ஞங்களையும்

இத்தால் கர்ம யோகம் சொல்லிற்று

அறு தொழில் -யஜனம் -யாஜனம் -அத்யயனம் -அத்யாபனம் -தானம் -ப்ரதிக்ரஹம் -என்கிற
ஷட் கர்மங்களை யுடையரான

அந்தணர் வணங்கும் தன்மையை-
அநந்ய பிரயோஜனரான ப்ராஹ்மணராலே ஆஸ்ரயிக்கப் படும் ஸ்வபாவத்தை யுடையையாய் –

———————————–

வியாக்யானம் -2-
வர்ணங்களில் உத்க்ருஷ்ட வர்ணமாய் நல் வழி போகக் கடவதாய் இருக்கும் ப்ராஹ்மண ஜாதிக்கு அடைய-
ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படியைச் சொல்கிறது

முத் தீ-
மூன்று பிள்ளையைப் பெற்ற தாயைப் போலே
ஆஹவ நீய கார்ஹ பத்ய தஷிணாக்னி என்கிற அக்னி த்ரயமும்

நான் மறை –
நாலு வகைப் பட்ட வேதங்களும்

ஐ வகை வேள்வி-பஞ்ச மகா யஜ்ஞமும்

அறு தொழில்-
அத்யயனம் பண்ணுகை -பண்ணுவிக்கை-யஜிக்கை -யஜிப்பிக்கை -தானம் பண்ணுகை கொள்ளுகை-என்றால்
போலே சொல்லுகிற இவற்றைத் தொழிலாக யுடையரான

அந்தணர் வணங்கும் தன்மையை-
ப்ராஹ்மாணருக்கு ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படி சொல்லிற்று

————————————————————————–

ஐம் புலன் அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி
முக் குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை –

வியாக்யானம் -1-
கர்ம யோகத்தை அங்கமாக யுடைத்தான உபாயம் சொல்லப் படுகிறது –

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து-
சஷூராதி இந்த்ரியங்களை சப்தாதி விஷயங்களிலே போகாமே உள்ளே அடக்கி

நான்குடன் அடக்கி-
மநோ
புத்தி
சித்த
அஹங்காரங்களையும்-செறுத்து

ஆஹார
நித்ரா
பயம்
ஐதுனங்கள் -உடல் உறவு -இவற்றைத் தவிர்த்து என்றுமாம் –

முக் குணத்து இரண்டவை அகற்றி-
குணத் த்ரயங்களில் ரஜஸ் தமஸ் ஸூக்களை த்யஜித்து

ஒன்றினில் ஒன்றி நின்று-சத்வம் ஒன்றினிலே பொருந்தி நின்று –

ஆங்கு-
அந்த யோகத்திலே

இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை-
புண்ய பாப ரூபமான கர்மங்களாலே வரும் சம்சாரத்தை அறுக்கும்-
உபாசகராலே அறியப்படும் ஸ்வ பாவத்தை யுடையையாய்

இப்படி இருந்த யோகத்தாலே அனுபவிக்கை யாவது –
ஸ்ரீ கஜேந்த ஆழ்வானுடைய மிடுக்குள்ள தசையோடு ஒக்கும் அத்தனை
ஆன பின்பு அவனையே உபாயமாகப் பற்றிப் பிழைக்க வேணும் –

————————————————————————–

வியாக்யானம் -2-
இனி சம்சார பய பீதராய் முமுஷூக்களாய் இருப்பாருக்கு ஆஸ்ரயணீயனாய் இருக்கும் படி சொல்கிறது-

ஐம்புலன் அகத்தினுள் செறுத்து-
ஸ்ரோத்ராதிகளை விஷயங்களிலே போகாத படி நியமித்து-

நான்குடன் அடக்கி-
நித்ய அநித்திய வஸ்து விவேகம் –
சமதமதாதி சாதனா சம்பத்து –
இஹாமுத்ர பலபோக விராகம்
முமுஷூத்வம் -என்றால் போலே-சொல்லுகிற சாதன சதுஷ்டத்தையும் யுடையராய்

அன்றிக்கே
ஆஹாராதிகளைத் தவிர்த்து என்றுமாம் –

முக் குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில்-ஒன்றி நின்று-
சத்வ ரஜஸ் தமஸ் ஸூக்களில் வைத்துக் கொண்டு ரஜஸ் தமஸ் ஸூக்களை கழித்து
நிஷ்க்ருஷ்ட சத்வத்தை யுடையராய்க் கொண்டு நின்று

ஆங்கு-
அந்த யோகத்தாலே –

இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை –
புண்ய பாப ரூப கர்மங்கள் அடியான சம்சாரிக துக்கத்தை-அறுத்துக் கொள்ள வேணும் என்று இருப்பார்
அறியும் ஸ்வ பாவத்தை யுடையனாய் இருக்கும் –

சாதநாந்தர பரிக்ரஹம் பண்ணினார் உன்னைப் பெற்றுப் போகா நிற்க –
உன்னையே சாதனமாக பரிக்ரஹித்த நான்
உன்னைப் பெறாதே போவதே –

————————————————————————–

முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-

வியாக்யானம் -1-
தம்தாமுடைய கண்களின் மிகுதியாலும்
ஜ்ஞாதிக்யம் என்கிற இதுவே ஏற்றமாகக் கணிசிப்பார்க்கும் –
அவர்களுக்கும் எட்டாத ஸ்வபாவத்தை யுடையவன் என்கிறது –

முக்கண் நால் தோள் –
மூன்று கண்களையும் -நான்கு தோள்களையும் யுடையவன் ஆகையாலே -பஹூ பரிகரனாய்

ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் –
ஐந்து வாயை யுடைய பாம்பையும் கங்கையையும்
ஏக தேசத்திலே அடக்கின ஜடையை யுடையவன் ஆகையாலே-அதிக சக்தனாய் இருந்துள்ள ருத்ரனும்

அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-
இப்பிடார் கொண்டு அறிய ஒண்ணாத
ஸ்வ பாவமாக இருக்கிற பெருமையை யுடையையாய் நின்றாய்

ஆகையாலே பெரிய கிழாயான ருத்ராதிகள் நிலை இதுவானால்
ஷூத்ரரான எங்களுக்கு பெற விரகு யுண்டோ-
நீயே விஷயீ கரிக்கும் அத்தனை என்று கருத்து-

————————————————————————–

வியாக்யானம் -2-
அபிமாநிகளாய் இருப்பார் எத்தனையேனும் அதிசயித ஜ்ஞானராய் இருந்தார்களே யாகிலும்-
அவர்களுக்கும் அறிய ஒண்ணாத படியான உத்கர்ஷம் சொல்லுகிறது –

முக்கண் நால் தோள் ஐ வாய் அரவொடு ஆறு பொதி சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை-
லலாட நேத்ரனாய் -சர்வேஸ்வரன் நாலு தோளும் தானுமாய் இருந்தான் என்று –
தானும் நாலு தோளும் யுடையவனாய்
ஐந்து வாயை யுடைய அரவை யுடையவனாய்
கங்கையை அடக்கின ஜடையை யுடையவனான ருத்ரன்
தன் உயர்த்தி எல்லாம் கொண்டு அறியப் பார்த்தாலும் அறிய ஒண்ணாத ஸ்வபாவம் ஆகிற-
பெருமையை யுடையையாய் நின்றாய் –

கிழாயர் படுகிறது -இதுவானால்
நான் உன்னை அறிக்கை என்று ஒரு பொருள் யுண்டோ-

————————————————————————–

ஏழு உலகு எயிற்றினில் கொண்டனை-

வியாக்யானம் -1-
ஆபத்து வந்தால் சக்தனோடு அசக்தனோடு வாசி இன்றிக்கே
சர்வ பிராணிகளுக்கும் உதவி அருளினாய் –

மகா வராஹமாய் பிரளயம் கொண்ட ஏழு உலகத்தையும் திரு எயிற்றினிலே வைத்து அருளினாய் –

இத்தால்
பிரளயம் கொண்ட பூமியை எடுத்தால் போலே
பவார்ணவம் கொண்ட என்னையும் எடுத்து அருள வேணும் -என்கிறார் –

———————————————————–

வியாக்யானம் -2-
ஆபத்து வந்த அன்று -அந்த ருத்ராதிகளோ நீயோ உதவினார்
பிரளயம் கொண்டு அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்த லோகங்களை
மகா வராஹமாய் புக்கு இடந்து எடுத்து
திரு எயிற்றினில் ஏக தேசத்தில்
ஒரு நீல மணி அழுத்தினால் போலே கிடக்கும்படி வைத்தாய் –

சம்சார பிரளயம் கொண்ட என்னையா எடுக்கலாகாது –

————————————————————————–

கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை-

வியாக்யானம் -1-
மனுஷ்யருக்குப் போக்யமான ஷட் ரச ரூபமான பிரயோஜனம் ஆனாய்

என்னுடைய பிரயோஜனத்தையும் எனக்குத் தந்து அருள வேணும் -என்கிறார் –

——————————————————

வியாக்யானம் -2-
சாஸ்த்ரங்களால் ஷட் ரசங்களுடைய பிரயோஜனமாய் இருந்து வைத்து-
என்னுடைய பிரயோஜனத்தையும் எனக்குத் தந்து அருள வேணும் -என்கிறார் –

————————————————————————–

சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண-

வியாக்யானம் -1-
தம்முடைய போக்யமாய் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –

சுடர் விடும் ஐம்படை அங்கியுள் அமர்ந்தனை-
மிகவும் விளங்கா நின்றுள்ள பஞ்சாயுதங்களையும்
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும்படியாய் இருந்துள்ள திருக் கைகளினுள்ளே
ஆபரணம் போலே அமரும்படி தரித்தாய்

சுந்தர நால் தோள்-
அழகை வகுத்தால் போலே நாலு தோள்களையும் யுடையையாய்

முந்நீர் வண்ண-
ஸ்ரமஹரமான வடிவை யுடையவனே

——————————————————————-

வியாக்யானம் -2-
சுடர் விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை-

மிகவும் பிரகாசத்தை யுடைத்தாய் இருக்கிற திவுய ஆயுதங்களை
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியான அழகிய திருக் கையிலே தரிப்பாய்

சுந்தர நால் தோள்-
தனக்குத் தானே அழகை விளைப்பதான நாலு திருத் தோள்களை யுடையையாய்

முந்நீர் வண்ண–
கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையவனே –

————————————————————————–

நின்னீரடி யொன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும்
மலரன அங்கையின்-முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை –

வியாக்யானம் -1-
தம்முடைய அபேஷிதம் பெறுகைக்கு புருஷகாரம் யுண்டு என்கிறார் –

நின்னீரடி யொன்றிய மனத்தால்-
அநந்ய போக ரசராய்

ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும்-
கல்மஷம் கழற்றின பூர்ண சந்தரனைப் போலே
தாம்தாம் போகத்தை கொட சொல்லா நின்ற திரு முகத்தை யுடையவராய் –

மங்கையர்-
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -என்றும்
யுவதிச்ச குமாரிணீம் என்றும்-தங்கள் பருவத்தாலே பிச்சேற்ற வல்ல பிராட்டிமார் இருவரும்

மலரன அங்கையின்-
புஷ்பத்தை த்ருஷ்டாந்திக்க ஒண்ணாத மென்மையை யுடையையான திருக் கைகளாலே

முப்பொழுதும் வருட –
சர்வகாலமும் வருட

அறிதுயில்-
ஆஸ்ரீ த சம்ரஷண பிரகாரத்தை அனுசந்திக்கை

அமர்ந்தனை –
வீசு வில்லிட்டு எழுப்பினாலும் எழுப்பப் போகாது –

—————————————————————-

வியாக்யானம் -2-

நின்னீரடி யொன்றிய மனத்தால்-
தேவரீர் திருவடிகளிலே ஒருமைப் பட்ட நெஞ்சை யுடையவராய்

ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் –
சந்தரனைப் போலே தர்ச நீயமாய் குளிர்ந்த திரு முகத்தை யுடைத்தாய் இருக்கிற-
ஸ்ரீ பெரிய பிராட்டியாரும்
ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் –

மலரன அங்கையின் –
பூ தொட்டால் போலே இருக்கிற மிருதுவான திருக் கைகளாலே

முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை –
திருவடிகளை வருட –
ஜகத் ரஷண ரூபமான யோக நித்ரையிலே ஒருப்பட்டு இருந்தாய்-

எனக்குப் புருஷகாரம் இல்லாமே இழக்கிறேனோ

————————————————————————–

நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை மேதகு மைம் பெரும் பூதமும் நீயே-

வியாக்யானம் -1-
முன்பு அனுசந்தித்த படியே ரஷித்த ரஷண பிரகாரம் சொல்லுகிறது —

நெறி முறை-
சாஸ்திர மரியாதை தப்பாத படி

நால் வகை வருணமும் ஆயினை-
சாதுர் வர்ண்யமும் நீ இட்ட வழக்கு –
ஆத்மாக்களுக்கு வர்ணங்களைக் கொடுத்ததும்
அவர்களுடைய அனுஷ்டானத்துக்கு ஆராத்யனாய் இருப்பானும் அவன் இறே

அஹம் ஹி சர்வ யஜ்ஞானாம் போக்தா-ஸ்ரீ கீதை -9-24- என்றும்
வர்ணாஸ்ரம ஆசாரவத புருஷேண பர –புமான் விஷ்ணுர் ஆராத்யே பந்தா
நான்யச் தத் தோஷகாரகா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றும்
சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டும் -ஸ்ரீ கீதை -4-13-என்றும் -சொல்லக் கடவது இறே –

(அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச
ந து மாமபிஜாநந்தி தத்த்வேநாதஸ்ச்யவந்தி தே–ஸ்ரீ கீதை -9-24

ஹி ஸர்வயஜ்ஞாநாம்-ஏனெனில் எல்லா வேள்விகளிலும்,
போக்தா ச ப்ரபு ச அஹம் ஏவ-உணவு உண்பவனும்; தலைவனும் நானே தான்!
து தே மாம்-ஆனால் என்னை அவர்கள்
தத்த்வேந ந அபிஜாநந்தி-உள்ளபடி அறியாதவர்,
அத: ச்யவந்தி-ஆகையால் வீழ்ச்சி அடைகிறார்கள்.

நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே தலைவன்;
என்னை மனிதர் உள்ளபடி அறியார்;
ஆதலால் நழுவி வீழ்வார்)

(சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ:
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்–ஸ்ரீ கீதை -4-13

குண கர்ம விபாகஸ:-குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி பிரிவுகளாக
சாதுர்வர்ண்யம், மயா ஸ்ருஷ்டம்-நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப் பட்டது,
தஸ்ய கர்தாரம் அபி-நானே அவற்றை செய்தேன் என்றாலும்,
அவ்யயம் மாம்-அழிவற்றவனாகிய என்னை
அகர்தாரம், வித்தி-கர்த்தா அல்லேன் என்று உணர்.

குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன்.
செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்.)

மேதகு மைம் பெரும் பூதமும் நீயே-
ஆத்மாக்களுடைய தேக ஆரம்பங்களான மகா பூதங்களும் நீயே

மேதகு-
மேவித்தக்கு இருக்கும்

மேவுகை யாவது
தேவ அஹம் மனுஷ்ய அஹம் என்கிறபடியே பொருந்தி இருக்கை
அதாவது
யாதேனும் ஒரு ஆக்கையிலே புக்கு –திருவிருத்தம் -95-அங்கே தக்கிருக்கை –
அதாவது
கர்மத்துக்கு அனுகூலமாய் இருக்கை

இத்தால்
சத்தாதிகள் நீ இட்ட வழக்கான பின்பு
உன்னை ஒழிய ரஷகர் யுண்டோ என்கை –

————————————————————–

வியாக்யானம் -2-
சாஸ்திர முறை தப்பாத படி முறையிலே நடக்கிற நாலு வகைப் பட்ட வர்ணங்களும்
நீ இட்ட வழக்காய் இருக்கிறது
ஜகத் ஆரம்பகமான பூத பஞ்சகங்களும் நீ இட்ட வழக்கு
சத்தாதிகளும் உன் அதீனமான பின்பு உன்னை ஒழிய ரஷகர் யுண்டோ –

————————————————————————–

அறுபத முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை –

சாமான்ய ரஷணம் சொல்லி விசேஷ ரஷணம் சொல்லுகிறது –

அறுபத முரலும் கூந்தல் காரணம்-
வண்டுகள் தேனைப் பருகி முரலா நின்றுள்ள திருக் குழலை யுடையவள் ஆகையாலே-
போக்ய பூதையான நப்பின்னை பிராட்டியின் பொருட்டு

ஏழ் விடை யடங்கச் செற்றனை –
ஏழு எருத்தையும் ஊனப் படாத படி நெரித்தாய் –

இத்தால்-
நப்பின்னை பிராட்டி யுடைய சம்ஸ்லேஷத்துக்கு விரோதிகளைப் போக்கினால் போலே-
என்னுடைய விரோதிகளையும் போக்கித் தந்து அருள வேணும் -என்று கருத்து –

————————————————————————–

வியாக்யானம் -2-
அறுபத முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை-

ஆறு காலை யுடைத்தாய்-
மது பான அர்த்தமாக படிந்த வண்டுகள் மது பானமத்தாய்க் கொண்டு
ஆளத்தி வையா-மயிர் முடியை யுடைய நப்பின்னை பிராட்டியோட்டை சம்ஸ்லேஷத்துக்கு
பிரதி பந்தகமான ருஷபங்கள் ஏழையும் ஊட்டியாக நெரித்தாய்

என்னுடைய பிரதிபந்தகங்களை நீயே போக்கி அருள வேணும் –

————————————————————————–

அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை-

வியாக்யானம் -1-
அநாஸ்ரிதரான பாஹ்யருடைய நினைவுக்கு கோசரமில்லை-

————————————————————————–

வியாக்யானம் -2-
ஆறு வகைப் பட்ட பாஹ்ய சமயங்களால் அறிய ஒண்ணாத ஸ்வ பாவத்தை உடையையே இருந்தாய் –
சார்வாகர் -பௌத்தர்-சமணர் -நையாயிக வைசேஷிகர் -சாஙக்யர் பாசுபதர் –

————————————————————————–

ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை –

வியாக்யானம் -1-
ஐந்து லஷணம் உடைய திருக் குழல் கற்றையை யுடைய
பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே வைத்தாய் –

மேல் சொல்லப் படுகிற ஐஸ்வர்ய சௌலப்யங்களுக்கு அடியான
ஸ்ரீ யபதித்வம் சொல்லப் படுகிறது –

——————————————————————

வியாக்யானம் -2-
அஞ்சு லஷணத்தை யுடைத்தான மயிர் முடியை யுடையாளாய் –
சுருண்டு பளபளத்து -நறுமணம் அடர்த்தி மென்மை –
ந கச்சித் ந அபராத்யதி என்னும்
பெரிய பிராட்டியாரைத் திரு மார்பினில் வைத்து அருளினாய்-

————————————————————————–

அற முதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை-

வியாக்யானம் -1-
தர்மார்த்த சகல புருஷார்த்த பிரதனுமாய் –
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நிர்வாஹகனாய் –
ஸூக துக்கங்கள் இரண்டுக்கும் நிர்வாஹகனாய்
சர்வமும் ஸ்வ பிரகாரமாக இருக்கச் செய்தே -அவற்றோடு ஓட்டற்று நின்றாய்

இத்தால் ஐஸ்வர்யம் சொல்லிற்று –

————————————————————————–

வியாக்யானம் -2-
தர்மார்த்த காம மோஷங்கள் ஆகிற புருஷார்த்த சதுஷ்ட்யங்களுமாய்-
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நடுவே ஸ்வ ரூபேண நின்று -அவர்களை சரீரமாகக் கொண்டு நின்று

ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் ஸ சம்ஜஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தன -ஸ்ரீ விஷ்ணு புராணம்
என்னலாம் படி நிற்பானாய்

சுக துக்கங்களுக்கு நியாமகனாய்

காரண அவஸ்தையிலே சத் சப்த வச்யனாய்

சிருஷ்டி காலத்தில் வந்தவாறே
பஹூஸ்யாம் என்கிறபடியே –
விஸ்த்ருதனாய் நிற்கிறாயும் நீ

————————————————————————–

குன்றாமது மலர்ச்சோலை வண் கொடிப் படப்பை வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ்வன முடுத்த கற்போர் புரி செய்கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும் செல்வம் மல்கு
தென் திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியிலறி துயில் அமர்ந்த பரம–

வியாக்யானம் -1-
குன்றாமது மலர் -என்று மேலுக்கு
நீர்மைக்கு எல்லையான இடத்தில் சரணம் புகுகிறார்

குன்றா மது மலர்ச் சோலை-
குன்றாத மது வெள்ளத்தை யுடைத்தான பூஞ்சோலை –
ஆராவமுத ஆழ்வாருடைய கடாஷம் ஆகிற அமுத வெள்ளத்தாலே வளருகிற
சோலை யாகையாலே நித்ய வசந்தமாகச் செல்லுகிறது –

வண் கொடிப் படப்பை-
அழகிய கொடிக்கால்களையும் நீர் நிலத்தையும் யுடைய

வரு புனல் பொன்னி மா மணி யலைக்கும் செந்நெல் ஒண் கழனித் திகழ் வன முடுத்த –
பெருகி வாரா நின்ற
திருப் பொன்னி மஹார்க்கமான ரத்னங்களைக் கொழித்து ஏற வருகிற

இத்தால்
விளைகிற சென்நெல்லையும் யுடைத்தாயாகையாலே அழகிய கழனியையும் யுடைத்தாய்
விளங்கா நின்ற அழகிய வனங்களாலும் சூழப் பெற்ற

கற்போர் புரிசை –
வித்வான்கள் படுகாடு கிடக்கும் நகரி

கனக மாளிகை-
பொன்னாலே செய்யப் பட்ட மாளிகை

நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்-
அதில் நிமிரா நின்றுள்ள கொடிகள் சந்த்ரனைச் சென்று துவக்கும் –

செல்வம் மல்கு தென் திருக் குடந்தை-
நிரதிசயமான சம்பத்தையும் போக்யதையும் யுடைய திருக் குடந்தையிலே

அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க-
அநந்ய பிரயோஜனரான பிராமணர் ரஹச்யமான ஸூக்த்தங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்க

ஆடரவமளியி லறி துயில் அமர்ந்த பரம-
தன்னுடைய ஸ்பர்சத்தாலே விரிக்கப் பட்ட
பணங்களை யுடைய திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையில்
ஜகத் ரஷணத்துக்காக உணர்ந்து கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலே சர்வேஸ்வரன் ஆனவனே

ஆடரவு-
திரு வநந்த வாழ்வான் உடைய உஸ்வாச நிஸ்வாசங்களாலே
தூங்கு தொட்டிலைப் போலே என்னவுமாம் –

————————————————

வியாக்யானம் -2-
குன்றாத மதுவையும் மலரையும் யுடைத்தான சோலையையும் யுடைத்தாய்
அழகிய கொடிகளை யுடைத்தான தோட்டங்களையும் யுடைத்தாய்
மாறாத ஜல சம்ருத்தியையும் யுடைத்தான பொன்னி பாய்ந்து ரத்னங்களைக் கொழித்து ஏறிடா நிற்பதாய்
அழகிய சென்நெல்லையும் யுடைத்தான கழனிகளை யுடைத்தாய்
திகழா நின்றுள்ள வனத்தை சுற்றிலே யுடைத்தாய் –
தொழில் ஓரப்படா நின்றுள்ள மதிளையும் யுடைத்தாய்
பொன்னாலே செய்யப் பட்ட மாளிகைகளிலே நட்ட கொடிகளானவை ஆகாசத்தில்
சஞ்சரிக்கிற சந்த்ரனை துவக்கினாலும் சுற்றிடா நிற்பதாய்
நிரவதிக சம்பத்தையும் போக்யதையும் யுடைத்தான திருக் குடந்தையிலே
பிராமணர் வேத ஸூக்த்தங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்க
உன்னோட்டை ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை யுடைய திரு வநந்த வாழ்வான் ஆகிற
படுக்கையிலே ஜகத் ரஷணத்திலே அவஹிதனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற சர்வாதிகனே —

————————————————————————–

நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே –

வியாக்யானம் -1-
உன்னுடைய திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –
இத்தை அனுபவிக்கைக்கு விரோதியைப் போக்கி அருள வேணும் –
இத்தால் –
இஷ்டப் பிராப்திக்கும்
அநிஷ்ட நிவாரணத்துக்கும்
சித்தமான உபாயத்தை பற்றிவிடுகிறார் –

————————————————————————–

வியாக்யானம் -2-
என்னுடைய ஸ்வரூப அனுரூபமாக
தேவரீர் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

நீயும் உன்னுடைய ஸ்வரூப அனுரூபமாக
என்னுடைய சம்சாரிக வருத்தத்தைக் கழித்துத் தர வேணும் -என்கிறார்-

————————————————————————–

இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பது என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே –

ஆராவமுத ஆழ்வார் உடைய திருவடி இணைகள் ஆழ்வார் திரு உள்ளத்தில் பொருந்தி
பெறாமல் இருப்பதை- ஆழ்வார் அனுசந்திப்பதாக
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் அருளிச் செய்கிறார்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர் ஸ்ரீ உ வே வேங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பத்ராசலம்-ஸ்ரீ சீதா இராமச்சந்திர ஸ்வாமிகள் திருக் கோவில்

July 11, 2022

பத்ராசலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர ஸ்வாமிகள் திருக் கோவில்

இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் இராமருக்காக அமைக்கப்பட்ட இந்து சமயக் கோவிலாகும். பத்ராச்சலம் நகரத்தில் அமைந்த கோவிலில் மூலவரான இராமருக்கும் அவர் துணைவி சீதைக்கும் திருக்கல்யாண உற்சவம் ஆண்டு தோறும் இராமநவமியன்று மிகுந்த சிறப்புடன் நடத்தப்படுகிறது –

பத்திராசலம் கோவில் 17 நூற்றாண்டில் வாழ்ந்த துறவியும் கீர்த்தனைகளை இயற்றியவருமான பக்த இராமதாஸ் என்ற கஞ்சர்ல கோபண்ணா என்பவருடைய வாழ்க்கையுடன் மிகவும் இணைந்துள்ளது.

கோபண்ணா பத்திராசலத்தில் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியல் வட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்தார். இவர் அரசாங்கக் கருவூலத்தின் பணத்தைப் பயன்படுத்தி இந்தக் கோவிலைக் கட்டினாராம். இதனால் அரசு இவரை கோல்கொண்டா சிறைச்சாலையில் அடைத்து கடுங்காவல் தண்டனை வழங்கியதாம். பத்திராசல இராமர், கோபண்ணா கோவில் கட்ட செலவழித்த பணத்தை தம் தெய்வ சக்தியால் அந்நாட்டை ஆண்ட சுல்தானுக்குத் திரும்பக் கொடுத்தாராம். இதனால் வியப்புற்ற சுல்தான் உடனே கோபண்ணாவை விடுதலை செய்தார். இதைத் தொடர்ந்து கோபண்ணா பத்திராசல இராமதாசர் என்னும் பெயர் பூண்டு தெலுங்கில் பற்பல கீர்த்தனைகளை இராமர் பேர் பாடி தொகுத்தாராம்.

புகழ் பெற்ற இதிகாசமான இராமாயணத்துடன் பத்திராசலமும் விச்யநகரமும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இராமர், இலக்குவன் மற்றும் சீதை ஆகிய மூவரும் வனவாசத்தின் போது தங்கியதாகக் கருதப்படும் பர்ணசாலை பத்திராசலத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இராமர் சீதையை மீட்க இலங்கை செல்லும் வழியில் இன்று பத்திராசல இராமர் கோவில் அமைந்துள்ள இடத்தில் கோதாவரி நதியைக் கடந்ததாக நம்பப்படுகிறது.

புராணங்கள் மேரு மற்றும் மேனகையின் மகனான பத்திரன் என்பவன் இராமரை நோக்கி தவமியற்றியதாகச் சொல்கிறது.

கபீர்தாஸ் என்ற இசுலாமியர் கூட இக்கோவிலுடன் தொடர்பிலிருந்திருக்கிறார். இக்கோவிலில் நுழைய கபீர்தாசுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாம். அப்போது கோவிலில் இருந்த மூலவர் மற்றும் துணைக் கடவுளர் சிலைகளும் மறைந்து போயினவாம். பின்னர் கபீர்தாசர் கோவிலுக்குள் நுழைய அனுமதி கிடைத்தவுடன் சிலைகள் மீண்டும் தங்கள் இடத்தில் மீண்டும் தோன்றினவாம்.

பத்திராசலம் உலகிலுள்ள பலநூறு ஆயிரம் பக்தர்களைத் தன வசம் கவர்ந்திழுக்கிறது.

புண்ணிய நதியான கோதாவரி பத்திராசலம் என்னும் இம் மலையைச் சுற்றியவாறு தெற்கு நோக்கிப் பாய்கிறது.

இம்மலை மேரு மற்றும் மேனகாவின் மகனான பத்திரன் பெயரால் பத்திரகிரி என்று அழைக்கப்படுகிறது. இம்மலையின் வரலாரோ இராமாயணத்துடன் இணைந்துள்ளது. இராமயணத்தில் தண்டகாரண்யம் என்று அழைக்கப்பட்ட மலை சூழ்ந்த பகுதியில் இராமன், இலக்குவன் மற்றும் சீதை ஆகிய மூவரும் அவர்கள் வனவாசத்தை இங்கே நிகழ்த்தியதாகத் தெரிகிறது.

இந்தக் கோவிலுடன் தொடர்புடைய மற்றொரு புராணச் செய்தியில் திருமால் பக்த பத்திரன் என்னும் மலைநாட்டு (அரச) முனிவனின் கடும் தவத்தை மெச்சி அவருக்கு அருளும் நோக்கத்தில் இராமாவதாரம் எடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

வைகுண்ட இராம அவதாரம் நிகழக் காரணமாக வரலாறு நமக்குச் சொல்வது பத்திரன் என்னும் பக்தனின் வேண்டுகோளை ஏற்று திருமால் இராமனாக அவதரித்தார் என்பதாகும்.

கோதாவரி நதிதீரத்தில் தண்டகாரண்யத்தில் பத்திர முனிவர் இராமபிரானின் அருள் வேண்டித் தவமியற்றினார். முனிவர் இராமனை தன உள்ளத்தில் அமரும்படி வேண்டினார். இராமபிரானோ தான் தன துணைவி சீதையைத் தேடிச் செல்வதாகவும், சீதையைக் கண்டு சிறை மீட்டு, இராவணனை தண்டித்து தர்மத்தை நிலைநாட்டிய பின்னர் அயோத்தி திரும்பும் வழியில் தன பக்தனின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக வாக்களித்தார்.

எனினும் இராமாவதாரத்தில் தன பக்தனின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாது போயிற்று. முனிவரும் தன கடும் தவத்தை தொடர்ந்து அச்சுறுத்தினார். இதைத் தொடர்ந்து திருமால் வைகுண்ட இராமனாக அவதரித்தார்.

தன் பக்தனின் வேண்டுகோளை நிறைவேற்ற தன துணைகளான இலக்குவ மற்றும் சீதை ஆகியோருடன் சங்கநாதம் ஒலித்தவாறு முனிவர் முன் தோன்றினார். இராமபிரான் தன நான்கு கைகளுடன், வலது கையில் சங்கு, இடது கையில் சக்கரம், மற்ற இரு கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தி, சீதையைத் தன இடது மடியிலும், இலக்குவனை வலது மடியிலும் அமர்த்தி இருந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

இந்த தெய்வ திருச்சிலைகள் அமர்ந்த இடம் பத்திர முனிவரின் தலைப் பகுதி என்பதால் இந்த மலை பத்திராசலம் என்ற பெயரில் விளங்கித் திகழ்கிறது.

பத்திராசலம் அருகே பத்திரி ரெட்டிபாளையம் என்ற கிராமத்தில் 17 ஆம் நூற்றாண்டில் வசித்துவந்த இராம பக்தையான போகல தம்மக்கா என்ற பெண்மணி வைகுண்ட இராமர், சீதா மற்றும் இலக்குவன் சிலைகளைக் கண்டெடுத்தாகச் சொல்கிறார்கள்.

ஒரு இரவில் வைகுண்ட இராமபிரான் இவள் கனவில் தோன்றி முனிவர்களும் தவயோகிகளும் வழிபட்ட என் சிலை பத்திரகிரியில் உள்ளது என்றும், இவற்றை தேடிக் கண்டுபிடித்து பூசை செய்து வர முக்தி அடைவாய்’ என்று வாய் மலர்ந்தருளினார்.

மறு நாளே இப்பெண்மணி இந்த சிலைகளைத் தேடி அலைந்து முடிவில் ஒரு கரையான் புற்றருகில் கண்டுபிடித்தாள்.

புற்றில் உள்ளே இருந்த இச்சிலைக்கு குடம் குடமாய் கோதாவரி நீரால் முழுக்காட்டினாள். புற்று கரைந்து சிலை வெளிப்பட்டது.

அன்று முதல் இவள் தினந்தோறும் சிலைக்குப் பூசை செய்தாள்,

கீழே விழுந்த பணம் பழத்தை எடுத்து தெய்வத்திற்குப் படைத்தாள். பின்னாளில் கிராமத்தார் உதவியுடன் ஒரு மண்டபமும் கட்டினாள்.

பத்திராசலம் கோவிலைக் கட்டியவர் கஞ்சர்ல கோபண்ணா என்ற பக்த இராமதாஸ் ஆவார்.

இவர் பதினேழாம் நூற்றாண்டு (1630 கி.பி) கம்மமேட் வட்டம் நிலகொண்டபள்ளி என்னும் கிராமத்தில் லிங்கன்ன மூர்த்தி மற்றும் காமாம்பா ஆகிய பெற்றோர்களுக்கு மகனாக அவதரித்தார்.

வட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த இவர் தன அலுவலகப் பணிகளைச் செம்மையாகவும் சிறப்பாகவும் செய்து வந்தார்.

நவாப்புக்காக செவ்வனே நிலவரிகளை வசூலித்ததோடு இராம நாமத்தை ஓதியும் தன வீட்டில் ஏழைகளுக்கு உணவளித்தும் மகிழ்ந்தார்

ஒரு சமயம் பல்வோஞ்ச பரகானா (palvoncha paragana). என்ற கிராமத்து மக்கள் பத்திராசலத்தில் சிலைகளைக் காணச் (ஜடர) சென்ற செய்தியினைக் கேள்விப்பட்டு தானும் ஆவல் மிகுதியுடன் அங்கு சென்றார். அங்கே கண்ட சிலைகளின் அழகில் மயங்கினார்.

அப்போதே கிராம மக்களிடம் கோவில் கட்டும் திருப்பணிக்காக நிதியுதவி வேண்டினார்.

கிராம மக்கள் அவரிடம் நிலவரியாக வசூலித்த பணத்தை கோவில் கட்டும் பணிக்காகச் செலவு செய்யுமாறும், அறுவடை முடிந்தவுடன் செலவு செய்த பணத்தை திரும்பக் கொடுத்து ஈடு செய்து விடுவதாகவும் கூறினர்.

இதனைத் தொடர்ந்து கோல்கொண்டா நவாப்பிடம் தேவையான அனுமதி பெறாமல் நிலவரி மூலம் வசூலான ரூபாய் ஆறு லட்சம் பணத்தைச் செலவு செய்து கோவில் திருப்பணிகளை நிறைவு செய்தார்.

கோவில் திருப்பணிகள் முடிவுறும் தருவாயில், சுதர்சன சக்கரம் ஒன்றை மூலவர் விமானத்தின் மேல் நிறுவும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பெரும் அவதியுற்று உறக்கத்தில் ஆழ்ந்தார். இராமர் அவர் கனவில் தோன்றி அவரை கோதாவரி நதியில் முழுக்குப் போடுமாறும் அங்கே அவருக்கு வேண்டிய விடை கிடைக்கும் எனக் கூறி மறைந்தார். மறுநாள் இராமதாசர் நதியில் முங்கிய போது ஒரு சுதர்சன சக்கரத்தை அங்கு கண்டெடுத்தார். இந்த சக்கரம் இந்த நதியில் அவருடைய அன்பிற்குரிய கடவுள் இராமரால் அருளப்பட்டது என்று நம்பினார்.

திருப்பணிகள் முடிந்த தருவாயில் அவருக்குப் பல இன்னல்கள் காத்திருந்தன. நிலவரிப் பணத்தைத் தவறான வழியில் கோவில் கட்டப் பயன்படுத்திய குற்றத்திற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று கோல்கொண்டா சிறையில் சொல்லவொண்ணாத் துன்பங்களை அனுபவித்தார். துன்பங்களைத் தாங்க இயலாத நிலையில், இராமதாசர் இராமபிரானிடம் தம்மைக் காத்தருளும்படி பாடிப் பணிந்தார். உணர்ச்சி மயமான இந்தப் பாடல்கள் தாசரதி சதகம் மற்றும் கீர்த்தனைகள் என்ற பெயரில் புகழ்பெற்றன.

குதூப் சாகி அரச வம்சத்தைச் சேர்ந்த கோல்கொண்டா அரசர் தானிஷா, இராமதாசர் சிறை பிடிக்கப்பட்ட பின்பு இராமர் பால் காட்டிய இறை நம்பிக்கையும் பக்தியையும் கண்டு மெய்சிலிர்த்தார். தானும் ஒரு இராம பக்தனாக மாறினார்.

மேலும் ஒரு படி முன்னேறி கோவில் நிர்வாகச் செலவுகளைத் தன அரசே ஏற்கும்படி அமைத்தார்.

இது மட்டுமல்லாமல் இராமனும் இலக்குவனும் ராமோஜி மற்றும் லக்ஷமோஜி என்ற உருவில் வந்து இராமதாசர் செலவழித்த ஆறு லட்சம் முஹர்களை திரும்பச் செலுத்தி தமது பக்தனைச் சிறையிலிருந்து விடுவித்த நிகழ்வு கண்டு கோல்கொண்டா அரசர் நெகிழ்ந்து போனார். பின்னிரவில் வந்து தம்மை அணுகிய இந்த இரண்டு நபர்களிடம் அரசர் தாம் பணம் பெற்றுக்கொண்டதற்கான இரசீதினை வழங்கினார்.

இதன் பின்னர் இந்த இருவரும் அரசரிடம் பெற்ற இரசீதினை சிறையில் இருந்த இராமதாசரின் படுக்கைக்கு அடியில் வைத்து விட்டார்கள்.

மறுநாள் கண்விழித்த அரசர் இரவு தம்மிடம் வந்து இரசீது பெற்றுச்சென்றது வேறு யாருமல்ல, இவர்கள் இராமனும் இலக்குவனுமே என்று உணர்ந்தார். உடனே இராமதாசரை சிறையிலிருந்து விடுதலை செய்தார். இராமதாசரைப் பணிந்து வணங்கி மன்னிப்புக் கோரினர்.

தாம் பெற்ற தங்க முஹர்களை அவர் காலடியில் வைத்துக் காணிக்கையாக்கினார்.

ஆனால் இராமதாசரோ தங்க முஹர்களை திரும்ப வாங்க மறுத்துவிட்டார். என்றாலும் இரண்டே இரண்டு தங்க நாணயங்களை மட்டும் இறைவனின் திருவிளையாடலை நினைவு கூறும் பொருட்டு பெற்றுக் கொண்டார். இந்த இரண்டு தங்க நாணயங்களை இன்றும் பத்திராசலம் கோவிலில் காணலாம்.

இராமனின் சக்தியினை உணர்ந்த கோல்கொண்டா அரசன் தானிஷா பல்வோஞ்ச பரகானா கிராமத்தில் கிடைக்கும் ரூபாய் 20000/- அளவிலான வருமானமானத்தை கோவில் பராமரிப்பு செலவுகளுக்கென்று ஒதுக்கி ஆணையிட்டார். இந்த ஆணை குதூப் சாகி அரச வம்சம் ஆண்ட காலம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் கோவிலில் ஸ்ரீ ராம நவமி தினத்தன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தன்று மூலவருக்கு அணிவிக்க சிறப்பு அலுவலர் மூலம் முத்துக்களை (pearls) யானையில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

இன்றும் கூட ஆந்திர அரசு இராம நவமியன்று முத்துக்களை அளிக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறது.

தெலங்காணா மாநிலத்திலுள்ள பத்ராசலம் தக்ஷிண அயோத்தியாக போற்றப்படுகிறது.

ஸ்ரீராம நவமி உற்சவத்தின் பாகமாக ஸ்ரீசீதாராம கல்யாண மகோற்சவம் அங்கு வெகு விமரிசையாக நடக்கிறது.

சைத்ர மாதம் சுத்த நவமியன்று காலை பத்தரை மணி முதல் பன்னிரண்டு மணிக்குள் அபிஜித லக்ன சுப முகூர்தத்தில் சீதாராம கல்யாணம் வைபவமாக கண்ணிற்கு விருந்தாக நடக்கிறது. அர்ச்சகர்களின் வேத மந்திர உச்சாரணையால் நகரம் முழுவதும் பவித்திரச் சூழல் நிலவியது.

இயந்திரங்களில் போட்டு நெல்லை இடிக்காமல் ஒவ்வொரு நெல்லையும் கையால் உரித்து எடுத்து, அந்த அரிசியால் செய்யபட்ட அக்ஷதைகலை மட்டுமே பத்ராசலம் திருக்கோவிலில் நடைபெறும் ஸ்ரீ சீதா ராமன் கல்யாண மகோத்சவத்தில் உபயோகப் படுத்தப் படுகிறது.

18ம் நூட்றாண்டில் பக்த ராமதாசனால் செய்யபட்ட மாங்கல்ய சூத்ரம் தான் இன்றும் சீதாராமர் கலாயன மகோத்சவத்தில் பயன் படுத்தப் படுகிறது

இந்த திருக்கோவிளில் கற்பகிரக கோபுரத்தை ஒரே கிரானைட் கல்லால் செதுக்கபட்டது அதனுடய எடை 36 டன்.

பக்தனுடய கோரிக்கைக்கு இணங்கி ஸ்ரீராமன் இங்கு தரிசனம் அளித்தாராம். அதனால் தான் கற்ப கிரஹம் கோவில் அருகில் பத்ர ரூபத்தில் சிலை பார்க்கலாம். அந்த சிலைக்கு அருகில் காதை ஒட்டி நாம் நின்றால் ஸ்ரீ ராம நாமம் உச்சரிக்கும் ஒலி கேட்கும் என்று சொல்கிறார்கள்.

இராமதாசர் கோவிலில் அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி (Suprabhata Seva) தொடங்கி இரவு பவலிம்பு சேவை வரை தினசரி நடக்க வேண்டிய நித்ய பூசைகளையும் சேவைகளையும் தொகுத்து கல்வெட்டாக இரண்டு தூண்களில் சிலாசாசனலு என்ற பெயரில் செதுக்கி வைத்துள்ளார். இந்தக் கல்வெட்டுக்கள் தினசரி அலுவல்கள், சடங்குகள் மற்றும் பூசைகள் பற்றி விவரிக்கின்றன. இதனைத் தொடர்ந்து பல்வோஞ்ச பரகானாவின் வட்டாட்சியரான தும்ரு நரசிம்ம தாசா மற்றும் இவரின் சக ஊழியரான வரத இராமதாசா ஆகிய இருவரும் குண்டூரிலிருந்து வந்து பத்திராசலம் கோவிலின் நிர்வாகப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர்.

————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பத்ராசலம்-ஸ்ரீ சீதா இராமச்சந்திர ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னத்துக்குள் ஸ்ரீ மன் நாதமுனிகள் விஷயமாக சதுஸ் ஸ்லோஹி –

July 9, 2022

ஸ்வாதயன் நிஹா சர்வேஷாம்
த்ரய்யந் தார்த்தம் ஸூ துர் க்ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர
தம் வந்தே யாமுநாஹ் வயம்-

ஸ்வாதயன்-அனுபவத்திக் கொண்டே –
யன் ப்ரத்யயம் -அனுபவிப்பித்து-
இஹ -இந்த காலத்தில் -இத்தைச் சொல்லும் பொழுது -இதில் –
சர்வேஷாம்-சர்வாதிகாரம் இந்த ஸ்தோத்ரம் -ஸ்ரத்தையே வேண்டுவது
ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந் தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –

————

நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம

நமோ நமோ யாமுநாயா-அஷ்டாக்ஷர மந்த்ரம் போல் இதுவே-

———————————————————

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லாபஸ் ஸ்ரீ தர்ஸ்சதா –

அபயப்ரதா நாமா நமஸ் மதகுரு மஹம் பஜே
யத் கடாஷா தயம் ஜந்துர புநர் ஜன்மதாம் கத

————————————————-

ஸ்ரீ பகவத் ஸ்தோத்ரம் பண்ணப் புக்கவர்
ஆசார்ய ஸ்துதியிலே பார்ப்பான் என் -என்னில்
கர்னே ஸ்ப்ருஷ்டே கடிம் சாலயதி -போலே அசங்கதம் -என்னில்
ஸ்ரீ பகவத் விஷயத்தைத் தமக்கு ஸ்துதி விஷயம் ஆக்கிக் கொடுத்த உபகார ஸ்ம்ருதியாலும்
ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு அடியான ஜ்ஞான வைசத்யார்த்தமாகவும்
அவிக்ன பரி சமாப்த் யர்த்தமாகவும் -பண்ணுகிறார் -ஆகையாலே சங்கதம் –

ஆனால் மானசமாக அமையாதோ -என்னில்
இப் பிரபந்தத்தை அதிகரிப்பார்க்கு உபகாரம் ஆகையாலே வாசிகம் ஆக்கினதும் யுக்தம் –

உபகார ச்ம்ருதியாலே வந்த ஆசார்ய அனுவர்த்தனம் பிரமாண பிரசித்தம் –
ஆசார்ய தேவோ பவ -என்றும்
நம ருஷிப்யோ மந்திர க்ருத்ப்ய -என்றும்
ச ஹி வித்யா தஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம -என்றும்
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ -என்றும்
ஒரு ரத்னத்தை ஒருவன் கொடுத்தால் அதனுடைய மஹார்க்கத்தை அறியக் கொடுத்தவனை
ஆதரிக்க பிரமாணம் வேண்டுமோ -ஆகையால் இது உபபன்னம் –

ஜ்ஞான வைசத் யார்த்தமாக ஆசார்ய அனுவர்த்தனம் சிஷ்டாசார ப்ராப்தம் –
அபி வந்தா குரு நாதௌ-சிஷ்யதீ பதமி நீர வீன் –இது மீமாம்சகா -என்றும்
யதா கனன் கனித்ரேண-இதி மனு -என்றும்
யஸ்ய பிரசாதாத் வஷ்யாமி நாராயண கதாமிமாம் -இதி வைசம்பாயன -என்றும்
லௌகிகம் வைதிகம் வாபி -இதி மனு -என்றும்

அங்கனே ஆகில்
ஸ்வ ஆசார்யனை விட்டு அவர் குருக்களை பற்றுவான் என் என்னில்
ஆசார்ய ஸ்துதியிலும் ஆசார்ய பிரியம் இறே உத்தேச்யம் –
ஸ்வாஸ்ரயணத்தில் காட்டில் ஸ்ரீ பெரிய முதலியாரை ஆஸ்ரயிக்கும் இடத்தில்
ப்ரீதி மிக்கு இருக்கையாலே அதைப் பேசுகிறார் –

ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் ப்ராவண்யம் அடியாக பிறந்த ஜ்ஞாநத்தை
ஸ்ரீ ஆழ்வார் பிரசாதத்தாலெ பெற்று -தம் அளவிலே பர்யவசிக்கை அன்றிக்கே
பின்பு உள்ளார்க்கும் உபகாரமாம் படி
இந்த தர்சன ஸ்தாபகர் ஆனபடியாலும் –
ஸ்ரீ மணக்கால் நம்பி -பெரிய முதலியார் உடைய அர்த்தம் இது
உம்முடைய பேற்றுக்கு எல்லாம் அவருடைய திருவடிகளிலே சம்பந்தமே -என்கையாலும்
அவரை ஆஸ்ரயிக்கிறார்

இதை நினைத்து இறே ஸ்ரீ பட்டர் – ப்ரதமமபி குரும் நாத மீடே -என்றதும் .
வேத காரணமான பிரணவம் வேதாத் யந்தம் களிலே ஆனால் போலே –

இங்கும் ஆதி அந்தம் களிலே ஆசார்ய ஸ்துதி யாய்
நடுவிலே பகவத் ஸ்தோத்ரம் ஆக இருக்கிறது –

முதலிட்டு மூன்று ஸ்லோகத்தாலே
ஸ்ரீ பெரிய முதலியாரை நமஸ்கரிக்கிறார் –

————————————————————————

ஸ்லோகம் -1- அவதாரிகை –

முதல் ஸ்லோகத்தில் ஒருவனைக் கவி பாடப் புக்கால்
அவன் ஐஸ்வர்யத்தைச் சொல்லிக் கவி பாடுமா போலே
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஐஸ்வர்யமான ஜ்ஞான வைராக்யங்கள் உடைய பிரகர்ஷத்தை சொல்லி நமஸ்கரிக்கிறார் –

மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் –புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி
தாம் தொழா நிற்பார் தமர் -முதல் திருவந்தாதி -43-என்று
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு தனம் பக்த்யாதிகள் என்று சொல்லிற்று இறே –

நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாயா முநயே அகாத பகவத் பக்தி சிந்தவே–1-

நமோ –
அஹம் அபி ந மம பகவத ஏவ அஹம் அஸ்மீத் ஏவம் அமமதாம் யோஜயத்யதோ நம இதி -என்கிறபடியே
எனக்கு உரியேன் அல்லேன் –
பெரிய முதலியாருக்கு சேஷம் -என்கிறார் –

நமோ விஷ்ணவே -என்கிறாப் போலே –
நமோ நாதாயா -என்கிறார் உபகார ஸ்ம்ருதி யாலே –

ஓம் நமோ விஷ்ணவே (ஷடத் அக்ஷரீ )-என்றும்
நம இத்யேவ வாதி ந -என்றும்
நம ரிஷிப்யோ மந்த்ர க்ருத்ப்ய -என்றும்
தேஷாமபி நமோ நம -என்றும் சொல்லக் கடவது இறே –

ஸ்ரீ ஈஸ்வர முனிகள் -ஸ்ரீ ரங்க நாதன் என்று திருநாமம் சாற்றுகையாலே
நாதன் என்று திரு நாமம் ஆகிறது –
எப்படிப் பட்டவர் -என்னும் அபேஷையில் சொல்லுகிறது –

அசிந்த்ய –
இவருடைய ஜ்ஞானாதிகள் இன்னாருடைய ஜ்ஞானாதிகள் போலே இருக்கும் என்று
நினைக்க ஒண்ணாது -என்னுதல்
இவ்வளவு என்று ஜ்ஞானாதிகராலும் -பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை

அத்புத –
கீழ் இயத்தா ராஹித்யத்தைச் சொல்லுகையாலே-க்ருஹீதாம்சம் அனுசந்தித்தார்க்கு
ஆச்சர்ய அவஹமாய் இருக்கும் -என்கை –
அமுதூரும் என்றக்கால் -இத்யாதியில் க்ருஹீதாம்சம் இனிதாய் இருக்கும் என்றது இறே –

அக்லிஷ்ட –
வ்யாசாதிகளைப் போலே ஸ்வ யதன சாத்திய தபஸ்ஸாலே வந்தது அன்றிக்கே
ததாமி புத்தி யோகம் தம் -என்றும்
மயர்வற மதி நலம் அருளினன் -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே வருத்தம் அற்று இருக்கை-

ஜ்ஞான –
ஜ்ஞானம் ஆவது -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை –
அதாவது –
ஆத்மா ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷம் என்றும்
அசித் ஸ்வரூபம் த்யாஜ்யம் என்றும் –
ஈஸ்வரன் உபயோர் நியந்தா என்றும் -அறிகை –

ஜ்ஞானம் என்றால் இவ் விசேஷத்தைக் காட்டுகிறது
தத் ஜ்ஞானம் அஜ்ஞானம் அதோ அந்ய துக்தம்-என்றும்
வித்ய அந்ய அசில் பனை புணம் -என்றும்
வ்யதிரிக்த விஷய ஜ்ஞானம் அநர்த்தா வஹம் என்றும் அதி சூத்ரம் என்றும் -சொல்லிற்று இறே –

வைராக்ய –
இவ் விலஷண ஜ்ஞானத்தாலே பகவத் வ்யதிரிக்தங்களில்
நிஸ்ப்ருஹராய் இருக்கை –
வேண்டேன் மனை வாழ்க்கையை -பெரிய திருமொழி -6-1-

ராசயே –
ராசி என்று சமூஹம்-
ஜ்ஞான இராசே –வைராக்ய ராசயே –
ஜ்ஞான வைராக்யங்கள் ஒன்றாய் இருக்க ராசயே -என்பான் என் -என்னில் –
ஸ்ரீ பகவத் ஸ்வரூபாதிகள் ஜ்ஞான விஷயங்கள் ஆகையாலே பல –
பிதரம் மாதரம் -என்று த்யாஜ்ய விஷயங்களும் பலவாகையாலே சொல்லலாம் –

லோகத்தில் விலஷணர் உடைய ஜ்ஞான வைராக்யங்கள் எல்லாம் இவருடைய
ஜ்ஞான வைராக்யங்களிலே அந்தர்ப்பூதம் ஆம்படி இருக்கையாலே சொல்லுகிறது -என்றுமாம் –

யத் கிஞ்சித் சாது குர்வந்தி யஸ் தத் வேத யத்ச வேத ச மயைத துக்த இதி –
யத் கிஞ்சித் சாத்வ நுஷ்டிதம் கர்ம யச்ச சர்வ சேதன கதம்
விஜ்ஞானம் ததுபயம் யதி யஜ்ஞான கர்மாந்தர்கதம் ச ரைக்வ -இதி -என்றும்
லோகத்தில் அனுஷ்டிதமான கர்மங்களும் ஞானங்களும் யாவன் ஒருத்தன் உடைய
கர்ம ஞானங்களிலே அந்தர் கதமாய் இருக்கும் -அவன் தானே கிடீர் ரைக்வன் -என்று பார்த்து சொல்லுமா போலே

முநயே –
ந விவேதாத்மநோ காத்ரம் -என்றும்
பஸ்யந்நபி ந த்ருஷ்ட்வான் -என்கிறபடியே
த்தேய வஸ்துவை சர்வதா சாஷாத் கரிக்கை

ஏது செய்தால் மறக்கேன் மனனே -பெரிய திரு மொழி -9-3-3- என்றும்
என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -திருவாய் மொழி -7-3-6- என்றும்
இவர் கிருஷ்ணனை அனுசந்தித்து இருக்க ராஜாவாலும் சமாதி பங்கம் பண்ணப் போயிற்று இல்லை –

ராம மேவா நுபச்யந்த -என்னுமா போலே –

அகாத பகவத் பக்தி சிந்தவே –
பக்தியாவது ஜ்ஞான விசேஷமாய் இருக்க -பக்தியைப் பிரித்துச் சொல்லிற்று –
அதினுடைய ப்ராசுர்யம் சொல்லுகைக்காகவும் –
ப்ரதான்யம் சொல்லுகை தோற்றுகைக்காகவும் –

பக்தி யாகிறது -சிநேக பூர்வம் அனு த்யானம் பக்தி -என்றும்
ஸ்வாமிநி தாசச்ய சிநேக மயீ ஸ்திதி -என்றும் சொல்லுகிறபடியே-
அனுபவ ஆசை -அனுபவிப்பதில் விருப்பம் –

பகவச் சப்தத்தாலே பரம பதத்தில் இருப்பைச் சொல்கிறது –
வாஸூ தேவோ அஸி பூர்ண – என்று ஷாட் குணிய பூர்ணனாய் இறே இருப்பது

அகாத
அஷோப்ய-கலக்க ஒண்ணாத –
அர்த்தாந்தரம் -பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –
ஒருவரால் நிலை கொள்ள ஒண்ணாது இருக்கை –

சிந்தவே –
காதல் கடலின் மிகப் பெரிது –திருவாய்மொழி -7-3-6-என்றும்
ஆசை என்னும் கடல் -பெரிய திருமொழி -4-9-3- என்றும்
ஈஸ்வரனுக்கும் நிலை கொள்ள ஒண்ணாதே
தாம் அதில் புக்கு அமிழ்ந்தபடியாய் இருக்கை –

அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
முனயே அகாத பகவத் பக்தி சிந்தவே நாதாய நம -என்று அந்வயம் –

இப்படிப்பட்ட எம்பெருமானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி இவற்றைப் பற்றிய ஞானம் -ஞானமாவது தத்வ த்ரய -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை-அர்த்த பஞ்சக ஞானம் என்றுமாம்
அன்னை அத்தன் புத்ரன் பூமி வாசவார் குழலார் இவர்களைப் பற்றிய வைராக்யங்கள் -இரண்டுமே கும்பலாகக் குவிந்து இவராக ஆயிற்று

(பகவத் பக்தி ரசத்துக்கு -ஆழ்ந்ததோர் கடல் போலே இருப்பாரே -கலக்க முடியாதபடி –
பகவத் பக்திக்கு சமுத்திரம் என்றும்
பகவத் பக்தி யாகிற சமுத்திரத்தை தம்மிடம் கொண்டவர் என்றுமாம் )

————————————————————————–

ஸ்லோகம் -2- அவதாரிகை
முதல் ஸ்லோகத்தாலே பரத்வ விஷயமான ஜ்ஞானாதிகள் உடைய பிரகர்ஷம் சொல்லிற்று
இந்த ஸ்லோகத்தாலே அவதார விஷயமான ஜ்ஞானாதிகள் ஆகையாலே
அதினுடைய ப்ரக்ருஷ்ட தரத்வம் சொல்லுகிறது

அன்றிக்கே
கீழ் சொன்ன ஜ்ஞானாதிகள் தம்மளவில் பர்யவசியாதே
என்னளவும் வர வெள்ளம் கோத்தது –
என்னவுமாம் –

தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜா தத்தவ
ஜ்ஞான அனுராக மஹிமா அதிசய அந்த ஸீம்நே
நாதாயா நாத முநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரனௌ சரணம் மதீயம்-2-

மது ஜிதங்க்ரி ஸரோஜா -எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைப் பற்றின
தத்தவ ஜ்ஞான–உண்மை உணர்ச்சி என்ன
அனுராக –ஆசை என்ன
மஹிமா அதிசய அந்த ஸீம்நே–இவற்றின் பெரு மேன்மைக்கு எல்லை நிலமாயும்
நாதாயா-எனக்கு நாதராயும் இருக்கிற
தஸ்மை நாத முநயே நமோ–அந்த நாத முனிகளுக்கு நமஸ்காரம்
அத்ர பரத்ர சாபி-இவ்வுலகத்திலும் மேல் உலகத்திலும்
நித்யம் யதீய சரனௌ-எப்போதும் -எந்த ஸ்ரீமந் நாதமுனிகளுடைய திருவடிகள்

தஸ்மை நமோ –
நமஸ் தஸ்மை நமஸ் தஸ்மை -என்றும்
நமோ நமஸ்தே ஆஸ்து சஹஸ்ர க்ருத்வ-என்றும் சொல்லுகிறபடியே –
இன்னம் அவர்க்கு அடியேன் -என்கிறார் –

மது ஜீத் –
அநிருத்தராய் வந்து அவதரித்து
முதல் களையான மதுவை நிரசித்தால் போலே
பகவத் ப்ராப்தி பந்தகங்களைப் போக்குமவன் -என்கை –

அங்க்ரி –
அந்த ஸ்வ பாவத்திலே -குணைர் தாஸ்யம் உபாகத -என்று பெரிய முதலியார் தோற்று இருக்கும் படியையும்
அவருடைய அனன்யார்ஹ சேஷத்வமும் சொல்லுகிறது –

ஸரோஜ –
சம்பந்தம் இல்லா விடிலும் விட ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறது –
விகாசம் செவ்வி குளிர்ச்சி பரிமளம் முதலான வற்றுக்குத் தாமரையை ஒரு படிக்குப் போலியாகச்
சொல்லலாய் இருக்கை –

தத்தவ ஜ்ஞான –
தத்வ ஜ்ஞானம் ஆவது –
அவதார விஷய ஜ்ஞானமும்
ஆஸ்ரித பாரதந்த்ர்ய விஷய ஜ்ஞானமும் –
ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத
த்யக்த்வா தேகம் புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன -ஸ்ரீ கீதை -4-9-என்று
தானே அருளிச் செய்தான் இறே –

தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -என்றும்
அஹத்வா ராவணம் சங்க்யே-என்றும்
யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக் நஞ்சாபி மாந்த
பவேன் மம ஸூகம் கிஞ்சித் பஸ்மாசாத் குருதாம் சிகி -என்று அருளிச் செய்தான் இறே சக்கரவர்த்தி திருமகன் –
அப்யஹம் ஜீவிதம் ஜ்ஹ்யாம் -என்றும்
ஆத்மாநாம் நாதி வர்த்தேதா -இத்யாதி

அனு ராக-
அனு ராகம் ஆவது -இவற்றை எல்லாவற்றையும் அனுபவித்தால் அல்லது நிற்க ஒண்ணாத ப்ரேமம் –

மஹிமா அதிசய அந்த ஸீம்நே –
ஜ்ஞான அநு ராகங்கள் உடைய மஹத்த்வத்தின் முடிவே எல்லையாய் இருக்குமவர்க்கு
மஹிமா -மஹத்த்வம் –
மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே
ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே
இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –

நாதாயா –
அஸ்மத் நாதாயா –

நாத முநயே –
இத் தர்சனத்துக்கு நாதனே -என்று
மது சூதனை யன்றி மற்று இலேன் -திருவாய்மொழி -2-7-6-என்று இருக்கும்
மஹாத்மாக்களாலே கொண்டாடப் படுவாராய் ஆயிற்று –
தத்வ ஹிதங்களை திரு வுள்ளத்திலே கூடு பூரிக்குமவர் –
தஸ்மை நம -என்று அந்வயம் –

உபகார ஸம்ருதியாலே அவரை ஆதரித்தீர் ஆகில்
ஐஹிக ஆமுஷ்மிகங்களுக்கு வேண்டாவோ -என்று பகவத் அபிப்ராயமாக அருளிச் செய்கிறார் –
அத்ர பரத்ர சாபி –
சம்சாரத்திலும்
பிராப்யமான நித்ய விபூதியிலும் –

நித்யம் –
நித்ய அக்னி ஹோத்ரம் போல் அன்றிக்கே
அனவரதம் -என்கை –

யதீய சரனௌ –
என்னை இவ் வவஸ்தாபன்னனாக்கிய திருவடிகள் –

சரணம் –
உபாய உபேயங்கள் இரண்டும்

மதீயம் –
பெரிய முதலியார் திருவடிகள் ஆகில் எனக்கு இரண்டுமாய் இருக்கும் -என்கை –
அதாவது -சம்சார தசையிலே பகவானே உபாயம் என்று உபதேசித்து
உபாயாத்யவசாயத்துக்கு அடியான ஸ்வ அனுக்ரஹத்தாலே
பகவத் பிராவணயத்தை விளைத்தும்
பிராப்ய தேசத்தில் சென்றால் நித்ய ஸூரிகள் கோஷ்டியில் பிரவேசிப்பித்தும்
பின்பு நித்ய ஸூரிகளோபாதி உத்தேச்யமாய் இருக்கையாலும் -அப்படிச் சொல்கிறது –

அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரனௌ மதீயம் சரணம்
மது ஜிதங்க்ரி சரோஜ தத்தவ ஜ்ஞான அனுராக மஹிம
அதிசய அந்த சீம்னே நாதாய தஸ்மை
நாத முனயே நம -என்று அந்வயம் –

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ —
வானவர் நாடு –
ஆச்சார்யர் திருவடிகளே உத்தேச்யம்
சரணம் -உபாயம் உபேயம் இரண்டுமே என்றபடி -)

பகவத் தத்வ ஞானமும் பகவத் அநு ராகமும் இவர் இடம் சேர்ந்து விசரமித்தன போலும் -ஆகவே இவற்றுக்கு இவரே ஸீமா பூமி –

மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே
ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே
இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –

——————————————————————————-

ஸ்லோகம் -3- அவதாரிகை –

த்ருஷார்த்தனுக்குத் தண்ணீர் குடிக்கப் பர்யாப்தி பிறவாதாப் போலே
பின்னையும் அவர்க்கு அடியேன் -என்கிறார்

ஆஸ்ரிதரை ஒரு காலும் நழுவ விடாத அச்யுத விஷயத்திலே
ஜ்ஞான பக்த்யாதிகள் ஆகையாலே
தம்மளவில் பர்யவசியாதே
பகவத் விஷயத்துக்கு அபூமியான சம்சாரம் எங்கும்
வெள்ளம் இடும்படியான இவர் உடைய
ஜ்ஞான பக்திகள் உடைய
பிரக்ருஷ்டதையைச் சொல்லுகிறது –

பூயோ நமோ அபரிமித அச்யுத பக்தி தத்தவ
ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி
யோகாய நாத முநயே யமிநாம் வராய-3-

அபரிமித அச்யுத பக்தி –அளவில்லாத பகவத் பக்தி என்ன
அபரிமித தத்தவ ஜ்ஞாநம்–அளவில்லாத தத்வ ஞானம் என்ன
அம்ருதாப்தி பரிவாஹ ஸூபைர்–இவை யாகிற அமுதக் கடலின் பரிவாஹம் போன்று பிரசன்ன சீதளங்களான
வசோபி-ஸ்ரீ ஸூக்தி களாலே
லோகே -இவ் வுலகத்தில்
அவதீர்ண பரமார்த்த –அவதாரம் செய்து இருக்கிற பரம புருஷார்த்தமாயும்
சமக்ர பக்தி யோகாய –பரி பூர்ணமாயும் இருக்கிற பக்தி யோகத்தை உடையவராய்
யமிநாம் வராய–யோகிகளின் சிறந்தவரான
நாத முநயே -பூயோ நமோ—நாத முனிகளுக்கு மறுபடியும் நமஸ்காரம்

பூயோ நமோ
புனஸ்ஸ நம
நமோ நமஸ்தே -என்கிறபடியே

அபரிமித –
கிடந்த பாயிலே வெள்ளம் கோத்தால் போலே
இருந்த இடங்களிலே வந்து கிட்டும்படி
எல்லை இறந்து இருக்கை –

அச்யுத –
நியந்த்ருத்வ ஸ்வாமித்வாதி கல்யாண குணங்களாலே குறை வற்று இருக்கை -என்னுதல் –
ஏக ரூபமாய் இருக்கும் -என்னுதல்
என்றும் ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் இருப்பை நழுவ விடாதவன் -என்னுதல் –
ஆர்ந்த புகழ் அச்சுதன் -திருவாய்மொழி -3-5-11- என்றும்
நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -திருவாய்மொழி -3-6-8-என்கிறபடியே
ஆஸ்ரிதரை தம் தாம் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாதவன் -என்னுதல் –

பக்தி தத்தவ ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூபைர் வசோபி –
பக்தி தத்வ ஜ்ஞானங்கள் ஆகிற
அம்ருதாப்தி யினுடைய பரிவாஹ ரூபமான
ஸூபமான வசஸ் ஸூக்களாலே-
உபாயம் ஈஸ்வரன் ஆகையாலே ஜ்ஞான பக்திகள் போக ரூபமாய்
அபரிச்சின்னமாய் இருக்கும் -என்கை –

பரிவாஹம் ஆவது -அவ்வவ ரஷண அர்த்தமாக
அதிக ஜல நிர்க்க மனஸ் ரோதஸ்ஸூ –
வசஸ் ஸூக்களுக்கு ஸூபத்வம் ஆவது –
அவிஸ் தர்ம சந்திக்தம் -இத்யாதிகளை உடைத்தாய் இருக்கை

லோகே –
பகவத் பக்திக்கு மேட்டு மடையான சம்சாரத்திலே
சைஷா பார்க்கவீ வாருணீ வித்யா பரமே வ்யோமன் ப்ரதிஷ்ட்டிதா -என்று
பரம பதத்தில் பரிமாறக் கடவ பக்தியை
நான் முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் -திருவாய்மொழி -7-5-1-என்கிறபடியே
சம்சாரத்தில் நடையாடும்படி பண்ணினபடி –

அவதீர்ண –
ஈஸ்வராவதாரம் போலே இறே
ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –

பரமார்த்த –
பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –
சமக்ர –
அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –

பக்தி யோகாய –
பக்தியை உடையரான –
உக்தமான பக்தி தத்வ ஜ்ஞானங்கள் இரண்டையும்
பக்தி சப்தத்தாலே சொல்லிற்று

நாத முநயே யமிநாம் வராய –
முடியானே -திருவாய்மொழி -3-8- யில் சொல்லுகிற படியே
அவனை அல்லது அறியாத கரணங்களை உடையராய் இருப்பார்க்குத் தலைவர் ஆனவருக்கு
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி -11-என்று
இருக்கும் அவர்களுக்கு வரணீயராய் இருக்குமவர் -என்றுமாம்-

அபரிமித அச்யுத பக்தி தத்வ ஜ்ஞானம்
அம்ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி யோகாய
யமிநாம் வராய நாத முனயே பூயோ நம -என்று அந்வயம்-

ஸ்ரீ ஸூக்திகளை பக்தி பரிவாஹம் என்றது –சொல்லாவிடில் சரீரம் தரிக்க முடியாது -பக்தி பலாத்காரத்தாலே அவதரித்த சொற்கள்
அம்ருத பரிவாஹம் -பிரசன்னமாயும் மதுரமாயும் சீதளமாயும்
ஸ்ரீ நியாய தத்வம் போன்ற இப்பொழுது லுப்தமான கிரந்தங்களும்-நித்ய காலக்ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் -இவையே பின்பு ஏடு படுத்தப் பட்டு நம்மளவும் வந்தனவே
யோகம் -குருகைக் காவல் அப்பன் அளவு மட்டுமே –
பக்தி -நெஞ்சு கனிந்து ப்ரீதி ரூபமான த்யானம் -பரமார்த்த சமக்ர -இரண்டு விசேஷங்கள் -ஸ்வயம் பிரயோஜனம் -என்றும் அவனை பிராபிக்க பர்யாபதமான உபகரணம் என்றது ஆயிற்று –
அவதீர்ண –
ஈச்வராவதாரம் போலே இறே
ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –
பரமார்த்த –
பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –
சமக்ர –
அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –

(வசோபி – ஸ்ரீ -ந்யாய தத்வம் -கிரந்தம் ஸ்ரீ தேசிகன் போன்றார் காட்டி அருளி உள்ளார்கள்
நித்ய கால ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் உண்டே
பக்தி யோகம் -ஸ்ரீ -குருகை காவல் அப்பனுக்கு பிரசாதித்து அருளிய யோக சாஸ்திரமும் –
ஸ்ரீ -மணக்கால் நம்பி போல்வாருக்கு சாதித்து அருளிய பிரபத்தி சாஸ்திரமும் –
பரமார்த்த -சமக்ர -இரண்டு விசேஷணங்கள்-பரம புருஷார்த்தம் என்றும் -பரி பூர்ணம் -என்றும் –
ஸ்வயம் பிரயோஜனம் என்றதாயிற்று -)

———————————————————————————

ஸ்தோத்ரம் -65-அவதாரிகை –

ராமோ த்விர் நாபி பாஷதே-என்கிற சங்கல்பத்தை விட்டீரே யாகிலும்
ஸ்ரீ பெரிய முதலியாரோடு வித்யையாலும்
ஜன்மத்தாலும் உண்டான சம்பந்தத்தையே பார்த்து அருளி –
என்னுடைய நன்மை தீமைகளைப் பாராதே
விஷயீ கரிக்க வேணும் -என்ன

அதுக்குக் கண்ணழிவு இல்லாமையாலே
அப்படிச் செய்கிறோம் -என்று ஈஸ்வரன் அனுமதி பண்ண

தாம் அனுமதி பெற்றாராய்
ஸ்தோத்ரம் தலைக் கட்டுகிறது –

அக்ருத்ரிம த்வச் சரணார விந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதி மாத்மவந்தம்
பிதாமஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம சிந்தயித்வா–65-

அக்ருத்ரிம –
க்ரியயா நிர்வ்ருத்த க்ருத்ரிம தத் ரஹித அக்ருத்ரிம
ஸ்வாபாவிக -இத்யர்த்த –
ஒரு செய்கையால் உண்டாக்கப் பட்டது க்ருத்ரிமம் -செயற்கை
அப்படி அற்றது அக்ருத்ரிமம் -இயற்கையானது –
குலம் தானே யோகி குலம் ஆகையாலே
நை சர்க்கிகம் -என்கை –
மெய்யான ப்ரேமம் -என்னவுமாம் –

தவச் –
ப்ராப்த சேஷியான உன்னுடைய

சரணார விந்த –
ஆஸ்ரிதருக்கு இழியும் துறையை போக்யமான
திருவடிகளை –

ப்ரேம ப்ரகர்ஷாவதிம்-
ப்ரேமாதிஸய ஸீமா பூமி யானவர்
நமக்கு இதர விஷயங்களில் ப்ரேமம் எல்லாம்
இவர்க்கு வகுத்த விஷயத்திலே இறே இருப்பது –

மாத்மவந்தம் –
பகவத் சேஷத்வம் ஸ்வரூமாகவே
ஆத்மா யாதாம்ய ஜ்ஞானம் உடையவர் -என்கை –
தநவந்தம் -என்னுமா போலே –

பிதாமஹம் நாத முநிம் –
குடல் துடக்கை உடையராய்
பகவத் ஜ்ஞான நிதியாய்
உள்ளவரை –

விலோக்ய –
கடாஷித்து

ப்ரஸீத –
அபராதங்களைப் பொறுத்து அருள வேணும் –

மத் வ்ருத்தம சிந்தயித்வா –
அஸ்த் கர்மத்தை விஸ்மரிக்கக் கடவராக வேணும் -என்கை –

மத் வ்ருத்தம் -என்று
சத் கர்மத்தை நினைக்கிறது –
வ்ருத்தவான் என்றால் சத் கர்ம யுக்தனை இறே சொல்லுகிறது –

ஸ்வ கதமான வற்றை அநாதரித்து
பெரிய முதலியார் சம்பந்தம் எனக்குத் தஞ்சமாக வேணும் என்று பிரார்த்தித்து
ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –

(பிதாமஹத்வம் வித்யையாலும் ஜென்மத்தாலும் –ஸ்ரீ ஈஸ்வர பட்டாழ்வார் இவர் திருத் தந்தை – )

—————————————————————————–

ப்ரஹர்ஷயிஷ்யாமி என்கிற இத்தால் பரார்த்த கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்ற ஸம்ப்ரதாய தாத்பர்யத்தை அறுதி யிட்டார்

த்வயத்தில் உத்தர வாக்கியத்தில் நமஸ் ஸப்தம் கைங்கர்யத்தில் களை அறுக்கிறது
களையாவது தனக்கு என்னப் பண்ணுகை
ஸ்வயம் துருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -என்று இளைய பெருமாளும்
தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -என்று ஆழ்வாரும்
மற்றை நம் காமன்கள் மாற்று -என்று நாச்சியாரும்
ஐம்புலன் அகத்தடக்கி -என்று தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும்
ப்ராப்தாவும் ப்ராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்று ஸ்ரீ மத் லோகாச்சார்யாரும்
அஹம் அந்நாத -என்ற போக்த்ருத்வத்துக்கு முன்னே அஹம் அன்னம் என்று

தன்னுடைய போக்யத்வத்தை அன்றோ முக்தன் சொல்லுவதாக ஸ்ருதியும் ஓதிற்று
போக்த்ருத்வமும் போக்யத்வாய விறே
புங்க்தே ஸ்வ போகம் அகிலம் பதி போக சேஷம் -என்னா நின்றது இறே –

—————–

இப்படிப்பட்ட புருஷார்த்தத்துக்கு உபாயமாக அவன் தன்னையே பற்றுகிறார் ஆளவந்தார்-

ந தர்ம நிஷ் டோஸ்மி -என்று கர்ம ஞானாதிகளைக் கை விட்டது அஞ்ஞான அசக்திகளால் அன்று
பல விலம்பம் என்றும் அல்ல
அவதார ரஹஸ்ய ஞான ஸஹ க்ருத பக்தி ரூப உபாயாந்தரம் தேஹ அவசானத்திலே பலிக்கும் என்று
ஏவம் யோ வேத்தி தத்த்வத த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மாமேதி -என்று கீதாச்சார்யன் அருளிச் செய்தான் அன்றோ
அவ்வழியாலும் கை வையாதே எம்பெருமானையே தஞ்சமாகப் பற்றியது உபாயாந்தர சாமான்யம் அப்ராப்தம் என்று அன்றோ —

ஸ்வரூப விருத்தம் என்று இறே கை விட்டது
ப்ரபாகாந்தர்ப் பரித்யாகத்துக்கும் அஞ்ஞான சக்திகள் அன்று
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது -என்று அன்றோ ஸ்ரீ வசன பூஷண நிஷ் கர்ஷம்
ஆகையால் அன்றோ விதி ரஹஸ்யத்தில் பரித்யஜ்ய என்று உபாயாந்தர பரித்யாகத்தை விதித்தான்
ஸ்நாத்வா புஞ்ஜீத -என்னுமா போலே விட்டே பற்ற வேண்டும் -என்று இறே சம்பிரதாய நிஷ் கர்ஷம் –

——————-

இதில் ஆதி அந்தங்களில் பிதா மஹாரான ஸ்ரீ மன் நாதமுனிகளை நிர்தேசித்து உள்ளார்

ஸ்ரீ காட்டு மன்னார் கோயில் கோபால ரத்னத்தைத் தனக்குத் தந்த மஹா உபகாரகரான ஆச்சார்யன்

என்று முதற் கண் மூன்று ஸ்லோகங்களாலே ஸ்துதித்தார்

தன்னுடைய சரணாகதி தர்மத்தையும் அநாதரித்து அவர் சம்பந்தமான கண்ணழிவு அற்ற உபாயத்தையே பார்த்து
அடியேனைக் கடாக்ஷிக்க வேண்டும் என்று விண்ணப்பித்து தலைக் கட்டுகிறார்

தனமாய தானே கை கூடும் -என்று ஸ்ரீ வைஷ்ணவ தனமான ஞான பக்தி வைராக்யங்களோடே
பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யத்தோடே வாசியற எல்லாமே ஆச்சார்ய அதீநம் என்றபடி

ஆச்சார்ய வைபவத்தில் உபக்ரமித்து ஆச்சார்ய வைபவத்தில் உப ஸம்ஹாரம் செய்யும் உத்க்ருஷ்ட ஸ்தோத்ர ரத்னம் –

————————————————————-

யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்த அசேஷ கல்மஷ
வஸ்து தாம் உபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்

எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று
அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய ஸ்ரீ யாமுனாசார்யரை வணங்குகிறேன் –

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –