ஸ்ரீ எம்பெருமானார் பூர்வாச்சார்ய பரம்பரை யாகிற ரத்நாஹாரத்துக்கு நடுநாயக ரத்னம் என்பதை
ஸ்ரீ தேசிகன் யதிராஜ ஸப்ததியிலே
அமுநா தபந அதிசாயி பூம் நா
யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி
விபுதா நாம் ஹ்ருதயங்கமா விபாதி–15-
தேஜோவானான ஸூரியனிலும்-விஞ்சிய தேஜஸை யுடைய நம் ஸ்வாமி
நாயக ரத்னமாக அமைந்துள்ளதால்
மிகவும் பெருமை யுற்ற குரு பரம்பரையான ரத்ன ஹாரமானது மிகவும் பெருமை யுடையதாய்
தத்வ வித்துக்களான வித்வான்களுக்கு சிந்தனைக்கு இனியதாக விளங்குகிறது –
பூர்வாசார்ய பரம்பரையில், யதிராஜர் ஸுர்யனை விடப் ப்ரகாசத்துடன் நடுநாயக ரத்னமாக விளங்குகிறார் .
இதனால், குருபரம்பரைக்கே ஏற்றம் .குருபரம்பரை என்கிற மணிகளால் ஆன ஹாரத்தில் ,
பண்டிதர்களுக்கு , ஹ்ருதய அங்கமாக (மனத்துக்கு உகந்ததாக —மார்பில் பொருந்தியதாக)
இந்த நாயகக் கல்லாக, ஸ்ரீ ராமானுஜர் விளங்குகிறார்
ஸம்ஸாரிகள் துர் கதி கண்டு பொறுக்க மாட்டாதபடி கிருபை கரை புரண்டு இருக்கையாலே அர்த்தத்தின் சீர்மை பாராதே
அநர்த்தத்தையே பார்த்து திருக்கோட்டியூர் நம்பியிடம் பெற்ற ரஹஸ்ய த்ரய அர்த்தத்தை வெளியிட்டு அருளினார் எம்பெருமானார்
இவருடைய பர ஸம்ருத்திக்கு உகந்து -இவரது ஆஜ்ஞா அதி லங்கனம் பண்ணி அமர்யாதமாக பிரபத்தி பிரதானம் பண்ணின
ப்ரபாவத்தைக் கண்டு ஸாத்தி அருளிய திரு நாமம் அன்றோ இது
காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில் யாரே அறிபவர் நின்னருளின் தன்மை –
தர்சனம் -மதம் -பார்வை -கண் -பல பொருள்களைக் குறிக்கும் பதம்
மதம்
தர்சனம் என்னும் பதம் மதம் என்னும் பொருளைக் குறிக்கும் -நம் தர்சனத்துக்குத் தத்வங்கள் மூன்று -ஈடு மஹா பிரவேசம்
இதம் அகில தம கர்சனம் தர்சனம் ந -தேசிகன்
எம்பெருமானார் தர்சனம் என்றே பேர் இட்டு நாட்டி வைத்தார் நம்பெருமாள் -அத்தை வளர்த்த அச்செயலுக்காக –
யதி ஷமாப்ருத் த்ருஷ்டம் மதம் இஹ நவீ நம் ததபி கிம் –
தத் பராக் ஏவ அந்யத் வத ததபி கிம் வர்ண நிகேஷ
நிசாம் யந்தாம் யத்வா நிஜமத திரஸ்கார விகமாத்
நிரா தங்கா டங்க த்ரமிட குஹதேவ பரப்ருதய –57-
யதிராஜரின் விசிஷ்டாத்வைதம் பிற்பாடு தோன்றியது.
சங்கரரின் அத்வைதமோ, முன்னமே தோன்றியது. அதனால், அத்வைதமே சிறந்தது என்றனர், பிறமதத்தினர்.
மதங்களின் சிறப்புக்கும், உயர்வுக்கும் ,பழமையோ புதுமையோ காரணமல்ல.
விசிஷ்டாத்வைதம் பின்னாலே தோன்றியது என்பது, அதன் குறையல்ல !
உயர்ந்த அந்த தத்வத்தை,முன்னமேயே தோற்றுவிக்காதது மனிதனின் குறையே !
டங்கர் ,த்ரமிடர் , குஹதேவர் முதலிய பூர்வாசார்யர்கள் ,
சங்கரரைக் காட்டிலும் பழமையானவர்கள் தாங்கள் சொன்ன விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை எல்லோரும்
அப்போது பாராட்டியதால் , கவலை அற்றவர்களாக, கண்டனத்துக்கான நூல்களை அப்போது எழுதாது விடுத்தனர்
எம்பெருமானார் வளர்த்த இந்த தர்சனம் நூதனமே என்பாரேல்
அதனால் குறை ஒன்றும் இல்லை என்கிறார் –
இதை விட சங்கராதி மதங்கள் தொன்மை வாய்ந்தவை என்பதனால் என்ன பெருமை –
உறை கல்லில் உரைத்துப் பார்த்தால் தெரியும் –
இந்த விசிஷ்டாத்வைத மதத்தை ப்ராசீன காலத்திலேயே ப்ரவர்த்திப்பத்தது-
டங்கர் -த்ரமிட பாஷ்ய காரர் -குஹ தேவர் போல்வார் தெளிந்த ஞானம் யுடையவர் அன்றோ –
ஸம்ப்ரதாய பரிசுத்தி ஆரம்பத்தில் தேசிகன்
ஸர்வ லோக ஹிதமான அத்யாத்ம ஸாஸ்திரத்துக்கு பிரதம பிரவர்த்தகன் ஸர்வேஸ்வரன் -இந்த யுக ஆரம்பத்திலே ப்ரஹ்ம நந்த்யாதிகளுக்குப் பின்பு நம்மாழ்வார் ப்ரவர்த்தகர் ஆனார் –
ஸ்வாமி எம்பெருமானார் தாமே –
பகவத் போதாயன க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்திம் பூர்வாச்சார்யாஸ் சஞ்சி ஷுபு தன் மத அநு சாரேண ஸூத்ர அக்ஷராணி வ்யாக்யாஸ் யந்தே -ஸ்ரீ பாஷ்யம்
பகவத் போதாயன டங்க த்ரமிட குஹ தேவர் கபர்தி பாருசி ப்ரப்ருதி அவி கீத சிஷ்ட பரிக்ருஹீத புராதன
வேத வேதாங்க வ்யாக்யா ஸூவ்யக்தார்த்த ஸ்ருதி நிகர நிதர்ச்சி தோயம் பந்தா -வேதார்த்த ஸங்க்ரஹம்
இம்மதம் அநாதி -எம்பெருமானார் பரம ரக்ஷகர் -ஸ்ரஷ்டா அல்லர்
நாதோ பஞ்ஞம் ப்ரவ்ருத்தம் பஹு பிரு பசிதம் யாமுநேய ப்ரபந்நை த்ராதம் ஸம்யக் யதீந்த்ரை -தேசிகன்
எம்பெருமானார் தர்சனம் என்றே இதற்கு நம்பெருமாள் பேர் இட்டு நாட்டி வைத்தார்
அம்புவியோர் இந்தத் தரிசனத்தை வளர்த்த அந்தச்செயல் அறிகைக்காக -மா முனிகள்
நாட்டி வைத்தார் -நம்பெருமாள் தானே நேராக இந்தத் திருநாமம் சாத்தி அருளினார் என்றும்
நாட்டு வித்தார் -திருக்கோட்டியூர் நம்பிகள் மூலம் சாத்துவித்து அருளினார்
————–
இனி இதன் ப்ரமேயங்களைப் பார்ப்போம் –
பிரதிதந்தர சித்தாந்தம் -அசாதாரணம் -சரீராத்ம பாவம் -இதனாலேயே ப்ரஹ்ம விசாரம் -சாரீரிக மீமாம்ஸை –
யஸ்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வீ சரீரம் -ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா –நாராயண -உபநிஷத்
ச ஈஸ்வர வியஷ்ட்டி சமஷடி ரூப -ஸ்ரீ பராசர பகவான்
ஜகத் ஸர்வம் ஸரீரம் தே -ஸ்ரீ வால்மீகி பகவான்
அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ன -வேத வியாசர்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் நம்மாழ்வார்
யத் அண்டம் பராத்பரம் ப்ரஹ்ம சதே விபூதய -ஆளவந்தார்
விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தில்
தத்வம் -ஸ்ரீ மன் நாராயணனே பரதத்வம்
ஹிதம் -கிருபா விசிஷ்டனானவனே பரம உபாயம்
புருஷார்த்தம் -அவன் திரு உள்ள உகப்பே பரம புருஷார்த்தம்
பரத்வ ஸ்தாபகம் காரணத்வம் -முதல் பத்தில் பரத்வம் -அருளிச் செய்து -அடுத்த பத்தில் காரணத்வத்தையும் –
தத் அநு குணங்களான வியாபகத்வாதிகளையும் அடைவே அருளிச் செய்கிறார் –
———
வேதாந்தங்கள் காரண வஸ்துவை
ஸத்
ப்ரஹ்ம
ஆத்மா
ஹிரண்ய கர்ப்ப
சிவ
இந்த்ர
நாராயண
ஸப்தங்களால் நிர்த்தேசித்து உள்ளன
முதலில் சொன்ன ஆறும் பொதுச் சொற்கள்
நாராயண ஸப்தம் விசேஷ ஸப்தம்
நாராயண ஸப்த கடித வாக்கியத்தில் மட்டும் நாராயணன் ஒருவனே இருந்தான் -ப்ரஹ்மாவும் இலன் சிவனும் இலன் என்று ஸ்பஷ்டமாக ஓதப்பட்டுள்ளது
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈஸாந -உபநிஷத்
ஸத் ப்ரஹ்மாதி பரம காரண வாசிபி சப்தை நாராயண ஏவாபி தீயதே இதி நிச்சீயதே -வேதார்த்த ஸங்க்ரஹம்
ஸத் ப்ரஹ்மாத்ம பதை த்ரயீ சிரஸி
யோ நாராயண உக்த்யா ததா வ்யாக்யாதோ கதி ஸாம்ய லப்த விஷயான் அநந்ய த்வ போதோ ஜ்வலை -ஆழ்வான் ஸூந்தர பாஹு ஸ்தவம்
வாரணம் காரணன் என்று அழைக்க ஓடி வந்து அருள் புரிந்தவன் நாராயணன் ஒருவனே
ஆகவே நாராயணனே ஜகத் காரணன்
————
இனி ஸர்வ வியாபகத்வம்
உபாதானத்வமும் நிமித்தமும் -ஸஹ காரித்வமும் -ஆக – த்ரிவித காரணமும் அவனே அத்புத சக்தன்
அத்ரோச்யதே ஸகல இதர விலக்ஷணஸ்ய பரஸ்ய ப்ராஹ்மண ஸர்வ ஸக்தே சர்வஞ்ஞஸ்ய ஏக்ஸ்யைவ ஸர்வம் உபபத்யே -ஸ்ரீ பாஷ்யம்
ஸர்வஞ்ஞத்வ ஸர்வ சக்தித்வே நிமித்த உபாதானத உபயோகிநீ -ஸ்ருத ப்ரகாசிகா வாக்யம்
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வ்ருஷ -ஸ்ருதி
ப்ரக்ருதிச்ச -என்றும்
சாஷாச்ச உபாயம்னானாத் – என்றும் வ்யாஸ ஸூ த்ரங்கள்
வேர் முதல் முத்து -த்ராவிட உபநிஷத்
வியாப்ய கத தோஷம் தட்டாமல் வியாபிக்கிறான்
நிர்விகாரத்வம் ஸ்வரூப நிஷ்டம் என்றும்
விகாரம் சரீர பூத சேதன அசேதன கதம்
அசேஷ ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதானம் ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீரதயா தத் ஆத்ம பூதம் பரம் ப்ரஹ்ம ஸ்வ சரீர பூதே ப்ரபஞ்சே —
ஸ்வஸ் மின் ஏகதாம் ஆ பன்னே சதி –ஜகச் சரீர தயா ஆத்மானம் பரிண மயதீதி ஸர்வேஷு வேதாந்தேஷு பரிணாமம் உபதேச -ஸ்ரீ பாஷ்யம்
பரமாத்ம சித் அசித் சங்காத ரூப ஜகதாகார பரிணாமமே பரமாத்ம சரீர பூத சிதம் சகதா ஸர்வ ஏவ அபுருஷார்த்தா
ததா பூதா சிதம் ச கதாச்ச சர்வே விகாரா பரமாத்மனி கார்யத்வம் ததவாப்தயோ தயோ நியந்த்ருத்வேந ஆத்மத்வம் -ஸ்ரீ பாஷ்யம்
அவிகார ஸ்ருதயே ஸ்வரூப பரிணாம பரிஹாரா தேவ முக்யார்த்தா -வேதார்த்த ஸங்க்ரஹம்
என்றும் இறே எம்பெருமானார் நிஷ்கர்ஷம்
லோகத்தில் கார்ய காரணங்கள் போல் அன்றிக்கே உபாதான காரணமும் தானே யாகையாலே கார்ய பூத ஸமஸ்த வஸ்துக்களும் வியாபகனாய் -பெரிய ஜீயர் ஆச்சார்ய ஹ்ருதய வியாக்யானம்
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிருத்வீ சரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா –நாராயண -என்பதே மூல பிராமண கோஷம் –
————-
நாராயணனே ஸர்வ நியந்தா –
கீழ் சொன்ன வியாப்தி நிறம் பெறுவது நியந்த்ருதவத்தாலே
ஆகாசத்துக்கு வியாப்தி உண்டு -அசேதனம் ஆகையால் நியமன ஸாமர்த்யம் இல்லை –
ராஜாவுக்கு நியமன ஸாமர்த்யம் உண்டு -அணு மாத்ர ஸ்வரூபன் -ஆகையால் வியாபகத்வம் இல்லை
பகவான் பராமசேதனனாயும் விபூவாயும் இருக்கிற படியால் வியாபகனாயும் ஸர்வ நியாந்தாவாகவும் உள்ளான்
அனேந ந்ருப நபோ வ்யாவ்ருத்தி ஸ்ருத ப்ரகாஸகர்
சாந்தோக்யம் ஸத் வித்யா பிரகரணத்தில் -ஆதேச -பதத்துக்கு எம்பெருமானார்
ஆதிஸ்யதே அனேந இத்யாதேச –ஆதேச ப்ரஸாஸனம் -வேதார்த்த ஸங்க்ரஹம்
ஆதிஸ்யதே –ஆதேச -இதி ப்ரத்யயார்த்த வியாக்யானம்
ஆதேச ப்ரஸாஸனம் -இதி ப்ரக்ருத்யர்த்த வியாக்யானம் என்று இறே தாத்பர்ய தீபிகா
ஸாஸ்தா விஷ்ணுர் அசேஷஸ்ய -பள்ளிப்பிள்ளை வார்த்தை
ஈஸித்ருத்வம் நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக க -ஆளவந்தார்
வியாப்தி நிறம் பெற தனிக்கோல் செலுத்தும் ஸர்வ நியந்தா –
அந்தப்ரவிஷ்ட ஸாஸ்தா ஐநா நாம் ஸர்வாத்மா -வேத கோஷம்
————
நாராயணனே உபய விபூதி யுக்தன்
புகழு நல் ஒருவன் என்கோ -திருவாய் மொழி
ஸ்ரீ கீதை பத்தாவது அத்யாயம் -நாராயணன் விபூதி மான் என்று அறுதியிட்டார்கள்
தத் வ்யதிரிக்தஸ்ய ஸமஸ்தஸ்ய ததா யத்ததாம் தத் வியாப்யதாம் தத் ஆதாரதாம் தந் நியாம்யதாம் தத் சேஷதாம் தத் ஆத்ம கதாம்ச ப்ரதிபாத்ய -வேதார்த்த ஸங்க்ரஹம் –
ப்ரஹ்ம சிவயோரபி இந்த்ராதி சமானாகரதயா தத் விபூதித்வம் ச ப்ரதிபாதித்தம் -வேதார்த்த ஸங்க்ரஹம்
க்ஷயந்தம் அஸ்ய ரஜஸ பராகே
அனேந த்ரி குணாத் மக்காத ஷேத்ரஜ்ஞஸ்ய போக்ய பூதாத் வஸ்துந ப்ரஸ்தாத் விஷ்ணோ வாஸஸ்தானம் இதி கம்யதே-வேதார்த்த ஸங்க்ரஹம்
த்வேவா ப்ரஹ்மணோ ரூபே -மூர்த்தம் சைவ அமூர்த்தம்ச இதி ப்ரக்ருத்ய –ஸமஸ்தம் ஸ்தூல ஸூஷ்ம ரூபம் பிரபஞ்சம் ப்ரஹ்மணோ ரூபத்வேந பராம் ருஸ்ய-ஸ்ரீ பாஷ்யம்
நிதித்யாஸனாய ப்ரஹ்ம ஸ்வரூபம் உபதிசத் த்வேவாவ ப்ரஹ்மண -இத்யாதி ஸாஸ்த்ரம் ப்ரஹ்மணோ மூர்த்தா மூர்த்த ரூபத்வாதி விசிஷ்டதாம் ப்ராக் அசித்தாம் நாநு வதிம் சமம் -ஸ்ரீ பாஷ்யம்
லோக்யத இதி லோக தத் த்ரயம் லோகத்ரயம் அசேதனம் தத் ஸம்ஸ்ருஷ்ட -சேதன முக்தச் சேதி பிரமாணாவ காம்யம் ஏதத் த்ரயம் ய ஆத்மதயா ஆவிஸ்ய பிபர்தி-கீதா பாஷ்யம் என்று
உபய விபூதி நாதத்த்வத்தை வெளியிட்டு அருளி உள்ளார்கள்
ஆக அவனே ஸர்வ ஸப்த வாஸ்யன் ஆகிறான் –
————-
திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்டன்
அந்தராதித்யே ஹிரண்மய புருஷ –ஹிரண்மயஸ்மஸ்ரு –ஆ பிரணகாத் ஸர்வ ஏவ ஸூவர்ண –தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சுருதி
ராம கமல பத்ராஷ -ஸ்ரீ ராமாயணம்
இச்சா க்ருஹீத அபிமதோரு தேஹ -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ரூபம் வா அதீந்த்ரியம் –ஹிரண்மய இதி ரூப சாமான்யாத் -டங்காச்சார்ய வாக்யம்
யதா பூத வா திஹி ஸாஸ்த்ரம் –ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் –த்ரமிட பாஷ்யம்
துயர் அறு சுடர் அடி -திருவாய் மொழி
ஸ்வாம் ப்ரக்ருதிம் அதிஷ்டாயா ப்ரக்ருதி ஸ்வ பாவ ஸ்வ மேவ ஸ்வ பாவம் அதிஷ்டாய ஸ்வேநைவ ரூபேண ஸ்வ இச்சையா ஸம்பவாமி
இத்யர்த்த ஸ்வ ஸ்வரூபம் ஹி ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் —
க்ஷயந்தம் அஸ்ய ரஜஸ பராகே –அந்தராதித்யே ஹிரண்மய புருஷ -இத்யாதி ஸ்ருதி ஸித்தம் -கீதா பாஷ்யம்
இதாநீம் விஸ்வ சரீரத்வேந த்ருஸ்ய மான ரூப த்வம் தேனைவ ரூபேண பூர்வ ஸித்தேந சதுர் புஜேந ரூபேண யுக்தோ பவ -கீதா பாஷ்யம்
நீராய் நிலனாய் சிவனாய் அயனாய் -6-9-1-ஜெகதாகார அனுபவம் அனுவதித்திக் கொண்டு
கூராழி வெண் சங்கு ஏந்தி –வாராய் -என்று திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்ட அனுபத்தை – ஆசைப்படுகிறார் அன்றோ
—————–
உபய லிங்கம்
சத்ர சாமரங்கள் போல் அடையாளங்கள் -அகில ஹேய ப்ரத்ய நீகம்-கல்யாண குணை கதானத்வம் -என்று இது இறே பகவத் ஸப்த அர்த்தமாய்
ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம்ஸி அசேஷத பகவத் ஸப்த வாஸ்யாநி விநா ஹேயை குணாதிபி -ஸ்ரீ பராசரர் நிஷ்கர்ஷம்
ப்ரஹ்மம் ஸ குணம் என்பதை
ஈஷதே நா ஸப்தம்
ஆனந்த மய அப்யாஸத்
அந்த தத் தர்மோப தேசாத்
அத்ருஸ்யத்வாதி குணகஸ் தர்ம யுக்த
சாஸ ப்ரஸா ஸனாத்
அபித்யோ பதே சாச்ச
ஆனந்தா தய ப்ரதானஸ்ய -இத்யாதிகளால் வேத வியாஸரும்
யுக்தம் தத் குண கோபா ஸநாத் -என்று வாக்யகாரரான டேங்கர் என்ற ப்ரஹ்ம நந்தியும்
யத்யபி –ததாபி அந்தர் குணா மேவ தேவதாம் பஜதே –ஸ குணைவ தேவதா ப்ராப்யதே -த்ரமிட பாஷ்யகாரர்
அபவ்ருஷே யத்வ நித்யத்வங்களாலே வேதம் அகில பிரமாண விலக்ஷணமாய் இருப்பது போல்
இந்த உபய லிங்கத்தால் இவனும் அகில பிரமேய விலக்ஷணன் –
இவற்றையே தூயானைத் தூய மறையானை -11-7-3- கலியன்
நம்மாழ்வார் முதலடியிலே மாயாவாதிகள் மிடற்றைப் பிடிக்குமா போல் நலமுடையவன் -என்றார் போல்
மாறன் அடி பணிந்து உய்ந்தவரான எம்பெருமானாரும்
நிர்மல ஆனந்த கல்யாண நிதயே -வேதார்த்த ஸங்க்ரஹம்
நிர்மல ஆனந்த உதன்வதே -வேதாந்த சாரம்
ஸ்ரீ யபதி நிகில ஹேயப்ரத்ய நீக கல்யாண குணை கதான -கீதா பாஷ்யம்
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை குணை கதான -சரணாகதி கத்யம்
கல்யாண குணங்களே உள்ளவன் என்பதை ஸ குண ஸ்ருதியும்
அபேகுணங்கள் கேசமும் கிடையாது என்பதை நிர்குண ஸ்ருதியும் என்றும் இந்த நிர்ணயத்தை
ந ச நிர்குண வாக்ய விரோத ப்ராக்ருத ஹேய குண விஷயத்வாத் தேஷாம்
நிர்குணம் இத்யாதீனம்
பரஸ்ய ஸக்தி –ஏஷ ஆத்மா –ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப
இத்யாத்யா ஸ்ருதய ஞாத்ருத்வ பிரமுகான் கல்யாண குணான் -என்றும் அருளிச் செய்துள்ளார்
சங்க்யாதும் நைவ ஸக்யந்தே குணா தோஷச்ச சார்ங்கி ஆனந்த்யாத் -பிரதமோ ராசி அபாவதேவ பஸ்ஸிம -ஸாஸ்த்ர வசனம்
ஆழ்வானும் -தூரே குணா தவ து ஸத்வ ரஐஸ் தமாம் ஸி தேன த்ரயீ ப்ரதயதி த்வயி நிர்குணத்வம் நித்யம் ஹரே நிகில ஸத் குண சாகரம் ஹி த்வா மாமனந்தி பரமேஸ்வரம் ஈஸ்வராணாம் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
உபய லிங்கம் -உபய லக்ஷணம் நிரஸ்த நிகில தோஷத்வ கல்யாண குணாகரத்வ லக்ஷணோபேதம் இத்யர்த்த -ஸ்ரீ பாஷ்யம்
அந்நியோன்ய பின்ன விஷயா ந விரோத கந்தம் அர்ஹந்தி -நடாதூர் அம்மாள் தத்வ சார வாக்யம்
கல்யாணை அஸ்ய யோக ததிர விரஹோபி ஏக வாக்ய ஸ்ருதவ் ச -தேசிகன் -தத்வ முக்த கலாபம்
பதினாறு ஹேதுக்களைக் கொண்டு ஸத்ய கல்யாண குணாகரன் என்று ஸ்ருத பிரகாசிகர்
த இமே ஸத்ய காம -வேதாந்த கோஷம் –
—————
இவனே புருஷோத்தமன் –
பக்தனோடு முக்தனோடு நித்யனோடு வாசியற ஜீவ ஸாமான்யம் பகவத் பாரதந்த்ரம்
ஸ ஸ்வராட் பவதி
ஸ அக்ஷர பரம ஸ்வாட் -என்று ஸ்வா தந்தர்யம் ஓதப்பட்டு இருந்தாலும்
கர்மங்களைக் குறித்தே இந்த ஸ்வா தந்தர்யம்
அத ஏவ ச அநந்ய அதிபதி -வேத வியாச ஸூத்ரம்
அவன் ஒருவனே ஸ்வ தந்த்ரன் -புருஷோத்தமன் -மற்ற அனைவருமே பரதந்த்ரர்கள் -நாரீ துல்யர்கள்
இது பற்றியே நேஹ நா நா -என்று த்வதீய நிஷேதம்
பரமாத்ம ஸத்ருச ஸ்வ தந்த்ரன் மற்று ஒருவன் அல்லன் என்றவாறு –
ஸ ஏவ வாஸூ தேவோயம் ஸாஷாத் புருஷ உச்யதே -ஸ்ரீ ராமாயணம்
புருஷாத் கைவல்யார்த்தி ப்ராப்யாத் ஸ்வாத்ம ஸ்வரூபாத் உத்தம அபரிச்சின்ன தயா ஸ்ரேஷ்ட -ஸ்ரீ வசன பாஷ்ய டீகை
ந ச தேன விநா நித்ராம் லபதே புருஷோத்தம -ஸ்ரீ வால்மீகி பகவான்
புருஷோத்தம க -ஆளவந்தார்
ப்ரஹ்ம சப்தேந புருஷோத்தமோ அபி தீயதே -ஸ்ரீ பாஷ்யம்
————–
இவனே ஸ்ரீ மான்
பரமாத்வாய் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -அத ஏவ ச ஸ ப்ரஹ்ம
மலர்மகள் விரும்பும் –அடிகள் -1-3-1-
அருளாத திருமால் -1-3-8-
நம் திருவுடை அடிகள் -1-3-8-
அருளாத திருமால் -1-4-7-
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமால் -1-5-7-
மலராள் மைந்தன் -1-5-9-
திரு மகளார் தனிக்கேள்வன் -1-6-9-
திருவின் மணாளன் -1-9-1-
பூ மகளார் தனிக்கேள்வன் -1-9-3-
உடன் அமர் திருமகள் -1-9-4-
மைந்தனை மலராள் மணவாளனை -1-10-4-
செல்வ நாரணன் -1-10-8-
நீயும் திருமாலால் -2-1-1-
ஞாலம் படைத்தவனைத் திரு மார்வனை -3-7-8-
திரு நாரணன் தாள் -4-1-1-0
மைய கண்ணாள் –உறை மார்பினன் -4-5-2-
மணிமாமை குறைவில்லா மலர் மாதர் உரை மார்வன் -4-8-2-
குடந்தைத் திருமால் -5-8-7-
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -6-10-10-
என் திருமகள் சேர் மார்பனே -7-2-9-
எழில் மலர் மாதரும் தானும் -7-10-1-
என் திரு வாழ் மார்பன் -8-3-7-
கமல மலர் மேல் செய்யாள் திரு மார்பினில் சேர் திருமாலை -9-4-1-
திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமால் -10-6-9-
உன் திரு மார்பத்து மாலை நான்கை -10-10-2-
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -10-10-7-
என்று த்வய விவரணமான திருவாய் மொழியிலே ஸ்ரீ மானாக அருளிச் செய்கிறார் –
ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே -ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம்
பாஷ்யகாரர் இது கொண்டு ஸூ த்ர வாக்கியங்களை ஒருங்க விடுவார்
புரா ஸூத்ரை வியாஸ –விவவ்ரே–வகுள தரதாம் ஏத்ய ஸ புன உபா வேதவ் க்ரந்தவ் கடயிதும் ராமாவரஜ-ஆச்சான் பிள்ளை
பொய்கையார் பரனை உபய விபூதி உக்தன் என்றும்
பூதத்தார் -அவனை நாராயணன் -என்றும்
பேயார் -அவனை ஸ்ரீ மான் என்று நிர்ணயித்து அருளிச் செய்கிறார்கள்-பெரியவாச்சான் பிள்ளை
ஸ்ரத்தயா தேவா தேவத்வம் அஸ்னுதே -என்றும்
ஹ்ரீச்சதே லஷ்மீச்ச பத்ன்யவ் -என்றும் வேத புருஷனும்
திருவில்லாத் தேவரை தேறேன்மின் தேவு -என்று திருமழிசைப் பிரானும்
வேதாந்தா தத்வ சிந்தாம் முரபிதுரசி யத் பாத சிந்ஹை தரந்தி -என்று பராசர பட்டரும்
கஸ் ஸ்ரீ ஸ்ரீய -என்று ஆளவந்தாரும்
ஸ்ரீ யபதித்வத்தைப் பரக்க அருளிச் செய்தார்கள் அன்றோ –
———————-
இவனே ஸகல பல பிரதன்
தத்வ த்ரயங்கள் -அசித் -சித் -ஈஸ்வரன்
புருஷார்த்த த்ரவ்யங்கள் -ஐஸ்வர்யம் -கைவல்யம் -பரம மோக்ஷம்
ஐம்கருவி கண்ட வின்பம் -தெரிவரிய அளவில்லாச் சிற்று இன்பம் –திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்ட சதிர் -4-9-10-
இதில் முதலாவது போகம் -மற்றவை இரண்டும் அபவர்க்கம் –
போக அபவர்க்க ஸகல பல பிரதன் நாராயணனே
இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே –
வீடு முதல் முழுவதுமாய் –
வீடு முதலாம் –
பரஸ்மா தேவாஸ்மாத் புருஷாத் தத் பிராப்தி ரூபம் அபவர்காக்யம் பலம் இதி ஸம் ப்ரதி ப்ரூதே துல்ய ந்யாய தயா
ஸாஸ்த்ரீயம் ஐஹிகம் ஆமுஷ்மிகம் அபி பலம் அத ஏவ பரஸ்மாத் புருஷாத் பவதி இதி சாமான்யேந பலம் அத இத் யுச்யதே -எம்பெருமானார்
————-
ஆக
1-அகில ஜகத் காரணன்
2- ஸர்வ வியாபகன்
3-ஸர்வ நியாந்தா
4-உபய விபூதி யுக்தன்
5-திவ்ய விக்ரஹ யுக்தன்
6-உபய லிங்கம்
7-புருஷோத்தமன்
8-ஸ்ரீ மான்
9-ஸகல பல பிரதன்–
நாராயணனே என்று எம்பெருமானார் தர்சனத்தில் பர தத்வம் பற்றிய விஷயங்களை அனுபவித்தோம் –
இத்தை அறிய ஸாஸ்திரமே பிரமாணம்
தர்க்கஸ்ய அப்ரதிஷ்ட்டி தத்வாதபி ஸ்ருதி மூல ப்ரஹ்ம காரண வாத ஏவ ஆஸ்ரயணீய -ஸ்ரீ பாஷ்யம்
அத அதீந்த்ரிய அர்த்தே ஸாஸ்த்ரம் ஏவ பிரமாணம் தத் உப பிரும்ணா யைவ தர்க்க உபாதேய-ஸ்ரீ பாஷ்யம்
ஏவம் சித் அசித் வஸ்து சரீரதயா தத் விசிஷ்டஸ்ய ப்ரஹ்மண ஏவ ஜகத் உபாதானத்வம் நிமித்தத் வம்ச நாநுமான கம்யம் இதி
ஸாஸ்த்ர ஏக பிரமாண கத்வாத் தஸ்ய -யதோவா இத்யாதி வாக்கியம் நிகில ஜகத் ஏக காரணம் ப்ரஹ்ம போதயதி இதி -வேதார்த்த சாரம் –
———
இனி பர தத்வ பிரசங்காத் அவர தத்வங்களான சேதன அசேதனங்களைப் பற்றிச் சிறிது அனுபவிப்போம்
ஜீவ தத்வம்
ஞாதாவாகையையாலே -தேஹாதிகளைக் காட்டில் வேறுபட்டவன் ஜீவாத்மா
பகவத் சேஷ பூதன் என்பதால் சேஷியான பகவானைக் காட்டிலும் வேறுபட்டவன் –
இதம் சரீரம் –ஏதத்யோ வேத்தி -ஷேத்ரஞ்ஞம் சாபி மாம் – கீதாச்சார்யன்
மூல மந்திரத்தில் மகாரமும் லுப்த சதுர்த்தி விஸிஷ்ட ஆகாரமும் -ஜீவனை ஞாதா சேஷன் -என்று கூறும்
பிறர் நன் பொருள் -கண்ணி நுண் சிறுத்தாம்பு
ஞாத்ருத்வம் பஹிரங்கம்
சேஷத்வம் அந்தரங்கம்
தாஸ்யம் இறே அந்தரங்க நிரூபகம்-ஸ்ரீ வசன பூஷணம்
அகாரத்தாலே சேஷத்வத்தைச் சொல்லி –
பின்பு இறே மகாரத்தாலே ஞாத்ருத்வத்தைச் சொல்லிற்று
மனத்தையும் ஒளியையும் கொண்டு பூவையும் ரத்னத்தையும் விரும்புமா போலே சேஷம் என்று ஆத்மாவை ஆதரிக்கிறது
அல்லாத போது -உயிரினால் குறைவிலம் -என்கிறபடியே த்யாஜ்யம்
ஸ்ரீ வேத வியாசர் முந்துற சேஷத்வத்தை முதல் அத்யாயம் அந்தர்யாம் யதிகரணாதிகளில் சொல்லி
பின்பு இறே இரண்டாம் அத்தியாயத்தில் ஞாத்ருத்வத்தை அருளிச் செய்கிறார் –
அத ஏவ பாஷ்ய காரைர் -சேஷத்வே சதி ஞாத்ருத்வம் சேதன லக்ஷணம் ஸம்ப்ரதாய பரம்பரா ப்ராப்தம் க்ருதம் என்றும்
அஹம் ப்ரத்யய வேத்யத்வாத் மந்த்ரே ப்ரதமம் ஈரணாத் பாஷ்ய காரஸ்ய வஸனாத் –சேஷத்வ முக்யதா ஸித்தே -ஸ்ரீ வசன பூஷண மீமாம்ஸா வாக்கியம்
ஞாத்ருத்வ விஸிஷ்ட சேஷத்வமே தாஸ்யம்
இது இறே அசித் ஈஸ்வர உபய வை லக்ஷண்ய ஸாதகமாய் இருப்பது
ஏதத் விஷய ஞானம் இல்லாத போது சத்தான ஜீவனும் அசித் ப்ராயன் அன்றோ என்று உபநிஷத் அசன்னேவ-பவத் என்கிறது
தாஸ பூதா ஸ்வத ஸர்வே ஹி ஆத்மாந பரமாத்மந -ஸாஸ்த்ர வசனம்
தாஸ்யேந லப்த சத்தாகா தாஸ பூதா –பூ சத்தாயாம் -என்று இறே தாது
தாஸ ஸப்தம் சேஷத்வத்தையும்
ஆத்ம ஸப்தம் ஞாத்ருத்வத்தையும் காட்டுவதைக் காணலாம்
ஆக பகவத் தாஸ்யத்தாலே லப்த சத்தாகும் ஜீவா தத்வம் என அறிந்தோம் –
———
அசித் தத்வம்
அசித் தத்வம் அறிவில்லாதது
பிரகிருதி காலம் சுத்த சத்வம் தர்ம பூத ஞானாமியென்ற நான்கு வகை
பிரகிருதி தத்வம் விரோதி -அர்த்த பஞ்சக ஞானத்தில் ஓன்று விரோதி ஸ்வரூபம் -இத்தையே மாயா என்பர்
அர்த்த பஞ்சக ஞானமே நிரதிசய ஆனந்த -பரம மோக்ஷ -ஹேது
அர்த்த பஞ்சக அஞ்ஞானம் அனந்த கிலேச -ஸம்ஸார ஹேது
அநாத்மாவான தன்னை ஆத்மாவாகவும்
அபோக்யமான தன்னை போக்யமாகவும்
அஸ்திர மான தன்னை ஸ்திரமாகவும்
காட்டும் விசித்திர சக்தி மாயா -பிரக்ருதிக்கு உண்டே
மாயாந்து ப்ரக்ருதிம் வித்யாத் மாயினம் து மஹேஸ்வரம் -உபநிஷத்
மம மாயா துரத்யயா -கீதா உபநிஷத்
இத்தை கழித்துக் கொள்ளவே பக்தி ப்ரபத்திகள் –
ஆக
அசேஷ சித்த அசித் வஸ்து சேஷீ நாராயணன் பரதத்வம் என்றும்
அவன் திருவடிகளில் தாஸ பூதன் ஜீவாத்மா என்றும்
கர்ம அனுகுண ப்ராக்ருத அசித் சம்பந்தம் விரோதி என்றும்
தத்வ த்ரயங்கள் பற்றி அறிந்தோம்
இனி
ஹிதம்
புருஷார்த்தம் பார்ப்போம்
—————-
பரம ஹிதம்
ஆத்ம க்ஷேமம் அடைய உபாயம் கிருபா விஸிஷ்ட ப்ரஹ்மமே
ஸ்வ ப்ராப்தவ் ஸ்வயம் இஹ கரணம் ஸ்ரீ தர ப்ரத்யபாதி தேசிகன்
உப பத்தே ச -வியாசர்
ப்ராப்யஸ் யைவ பரம புருஷஸ்ய ஸ்வ ப்ராப்தவ் ஸ்வஸ் யைவ உபாயத்வ ப்ரதீதே -நாயமாத்மா -இதி அநன்ய உபாயத்வ ஸ்ரவணாத் -ஸ்ரீ பாஷ்யம்
ப்ராப்யஸ் யைவ பரமாத்மந ப்ராபகத்வ உப பத்தே யதாஹ –நாயமாத்மா -இதி –வேதாந்த ஸாரம்
புல்லைக்காட்டி அழைத்துப் புல்லை இடுவாரைப் போலே பல சாதனங்களுக்குப் பேதம் இல்லை
ப்ராப்தாவும் ப்ராபகனும் அவனே -ப்ராப்திக்கு உகப்பானும் அவனே
நல்குரவும் -6-3- அவதாரிகையில் ஈட்டில் இவ்விஷயம் வியக்தம்
ஆக பகவானே உபாயம்
உபாயத அவச்சேதகம் காருண்யம் –
———
பரம புருஷார்த்தம்
பகவன் முகோலாசமே ஜீவாத்மாவுக்கு பலம் -ப்ராப்யம்
பர்த்ரு பார்யா பாவ சம்பந்தம் அடியாக -உகாரார்த்த நீர்ணீதம்
ஜீவனான பார்யையைப் பார்த்து
இச்சிப்பான்
அடைவான்
அனுபவிப்பான்
நிறைந்த அனுபவம் பெறுவான்
ஆனந்திப்பான்
பகவானாக பர்த்ருவான பரமாத்மாவின் ப்ரிய மோத ப்ரமோத ஆனந்தங்கள் இருக்கும் படி –
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் –பரஸ்மை பத நிர்தேசம் -ப்ராப்தி கிரியா பலம் ஆனந்தம் பரஸ்மை -அந்நியனான பகவானுக்கே சேரும்
ஆப்நோதி -அத்யர்த்த ஞானினம் லப்தவா –
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -இளைய பெருமாள்
தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே -ஆழ்வார்
மற்றை நம் காமன்கள் மாற்று -ஆண்டாள்
ஆம் பரிசு அறிந்து கொண்டு ஐம் புலன் அகத்து அடக்கி -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித -ஆளவந்தார்
ப்ராப்திக்கு உகப்பானும் அவனே
ஆக பகவானே உபேயம் என்றும்
அவன் உகப்பு உபேயத அவச்சேதகம் என்றும் அறிந்தோம் –
ஆக
எம்பெருமானார் தர்சனத்தில்
தத்வ
ஹித
புருஷார்த்த
நிஷ்கர்ஷம் இருக்கும் படி அறிந்து
இனி இவற்றின் படி இருக்க வேண்டிய அனுஷ்டானம் பற்றியும் அறிய வேண்டுமே –
———–
அனுஷ்டானம் –
ஸ்ரீ கீதையில் சரம ஷட்கத்தில் முதல் மூன்று அத்யாயங்களால் தத்துவத்தையும்
அடுத்த மூன்றால் அனுஷ்டானத்தையும் நிரூபித்து அருளுகிறார் -தேசிகன்
ஆழ்வார் -உயர்வற திருவாய் மொழியால் தத்துவத்தையும்
வீடுமின் முற்றவும் -திருவாய் மொழியால் அனுஷ்டானத்தையும் அருளிச் செய்கிறார் -நம்பிள்ளை
இத்தை ஹிதத்திலும் சேர்ப்பார்கள் நம் பூர்வர்கள்
தத்வ ஹித புருஷார்த்தங்களை தெளிவாக அறிந்த அதிகாரி
ஐஸ்வர்ய கைவல்ய -ப்ராப்ய ஆபாசங்களிலே நசையற்று
கர்ம ஞான பக்தியாதிகளான ப்ராபக ஆபாசங்களை அடியோடு கைவிட்டு-
ஸ்வரூப அனுரூபமான திவ்ய தம்பதி கைங்கர்யங்களிலே ஆசைப்பட்டு
ஸ்வரூப அனுரூபமாக பிராட்டியைப் புருஷகாரமாகப் பற்றி
பகவானை உபாயமாகப் பற்றக் கடவன்
இதுவே உயர்ந்த தவமான பிரபத்தி மார்க்கம்
தஸ்மாத் நியாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு -ஸ்ருதி
——–
இந்த ஸ்ரீவைஷ்ணவ ப்ரபன்னன் சரணாகதி செய்த பின்பு மோக்ஷம் அடையும் வரை நடந்து கொள்ள வேண்டும் படியை
உத்தர க்ருத்யத்தை ஸாஸ்த்ரம் விளக்கும்
இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களில் குண அனுபவ கைங்கர்யங்களே பொழுது போக்காகக் கொண்டு
மங்களா ஸாஸனமும்
ஆர்த்தியும்
அணுவார்த்தன நியதியும்
ஆகார நியமமும்
அனுகூல ஸஹவாஸமும்
பிரதிகூல ஸஹவாஸ நிவ்ருத்தியும்
வர்த்தித்துக் கொண்டு போகக் கடவன்
இவனுக்கு ஐந்து ஸ்பர்சம் பரிஹார்யங்கள் -அவை
சைவ ஸ்பர்சம்
மாயாவாத ஸ்பர்சம்
ஏகாயன ஸ்பர்சம்
உபாயாந்தர ஸ்பர்சம்
விஷயாந்தர ஸ்பர்சம்
அவனுடைய பரத்வத்தை அனுசந்தித்தவாறே சைவ ஸ்பர்சம் அகலும்
அவனுடைய உபய லிங்கத்தை அறியவே மாயாவதி ஸ்பர்சம் அகலும்
ஸ்ரீ யபதித்வத்தை அனுசந்திக்கவே ஏகாயன ஸ்பர்சம் அகலும்
அவனுடைய நிரபேஷ உபாயத்வத்தை அறியவே உபயாந்தர ஸ்பர்சம் அகலும்
அவனது திவ்ய மங்கள போக்யதையை அறியவே விஷயாந்தர ஸ்பர்சம் அகலும்
தேஹ தாரணமான தள்ள அளவு போஜனமும்
பரமாத்மா ஸமாராதன சமாப்தியான ப்ரஸாத பிரதிபத்தி என்கிற புத்தியோடு வர்த்திக்கக் கடவன்- பிள்ளை
லோகாச்சார்யார்
பிரதிபத்தி கர்மம் இடா பஷணாதி உபையுக்த ஸம்ஸ்காரம் என்பர் மீமாம்ஸகர்
ப்ரபன்னன் ஆஸனாதி அனுயாக அந்தமான் பகவத் ஆராதனத்தை பரம ப்ரேமத்தோடே செய்து கொண்டு
பகவத் பாகவத ஆச்சார்ய அபசாரங்களை நெஞ்சாலும் நினையாதவனாய்
பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே என்கிறபடி
கரை குறுகும் காலம் எதிர்பார்த்து இருப்பன் –
இதுவே இவன் அனுஷ்டானம்
இப்படி
தத்வ பரமாக ஐந்து கிரந்தங்களையும்
அனுஷ்டான பரமாக நான்கு கிரந்தங்களையும்
நவரத்னங்களாக எம்பெருமான் அருளிச் செய்து ஸ்ரீ விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ஸம் ரக்ஷணம் செய்து அருளினார்
ஆகவே இறே நம்பெருமாள் அபிமானித்து எம்பெருமானார் தர்சனம் என்று பேர் இட்டு நாட்டுவித்து அருளினார் –
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
Leave a Reply