ஸ்ரீ ப்ருந்தாரண்ய நிவாஸாய பல ராமானுஜாய ச
ருக்மிணீ ப்ராண நாதாய பார்த்த ஸூதாய மங்களம்
ஸம்யக் நியாய கலா பேந மஹதா பாரதே ந ச உப ப்ரும்ஹித வேதாய நமோ வ்யாஸாய விஷ்ணவே
ருஷிம் ஜூஸா மஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவோதிதம்
ஸஹஸ்ர சாகாம் யோ அத்ராஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம்
ஸ்ரீ வாஸூ தேவனான கிருஷ்ணனும் -ஸ்ரீ கீதையும்
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயநரான ஸ்ரீ வேத வியாஸரும் -ஸ்ரீ சாரீரகமும்
ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமான ஸ்ரீ நம்மாழ்வாரும் -ஸ்ரீ திருவாய் மொழியும்
காட்டி அருளும் வேதாந்த அர்த்தம் ஒன்றே ஆகும்
பக்த்யா பரமயா வா அபி ப்ரபத்யா வா
ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய –நிதித்யாஸி தவ்ய
முமுஷுர்வை சரணம் அஹம் ப்ரபத்யே
ஆத்யே பஸ்யன் உபாயம் பிரபுமிஹ பரம ப்ராப்ய பூதம் த்விதீயே கல்யாண உதார மூர்த்தே
த்விதயமிதமிதி ப்ரேஷாமாணஸ் த்ருதீயே -அதிகரண சாராவளி
முதல் பத்தால் உபாயத்வமும் -இரண்டாம் பத்தால் உபேயத்வமும் -மூன்றாம் பத்தால் திவ்ய விக்ரஹ யோகமும் அருளிச் செய்கிறார் என்றவாறு
அன்ன மய பிராண மய மநோ மயங்கள் -மூன்றும் அசித் -முதற்கண் அசித் விலக்ஷணன் என்றும்
விஞ்ஞான மயன் ஜீவன் -பின்பு சித்த வைலக்ஷண்யம் என்றும்
ஆனந்தமயன் ஏதத் உபய விலக்ஷணன் என்றும்
சாரீரக ஆரம்பத்தில் முதல் மூன்று அதிகரணத்தால் புத்தி ஆரோஹ க்ரமத்துக்குச் சேர – ஸ்தூல அருந்ததி நியாயத்தகுக்கும் சேர -வேத வியாசர்
ஆழ்வார் பர ஸ்வரூபத்தை முதற்கண் அருளிச் செய்து
மனனகம் மலமற மலர்மிசை எழு தரும் மனன் உணர்வு அளவிலன் -என்று ஜீவ விலக்ஷணன் என்றும்
பின்பு பொறி யுணர்வு அவை இலன் -என்று அசித் விலக்ஷணன் என்றும் அருளிச் செய்கிறார் –
ஆக சேதன அசேதன விலக்ஷண தத்வமே ஜகாத் காரணம் என்பது கிருஷ்ண த்ரய ஸித்தாந்தம் -இதுவே வைதிக மதம் –
அபின்ன நிமித்த உபாதன காரண பூதன்
வேர் முதல் வித்தாய் -2-8-10-
ஏதம் விபூதிம் யோகஞ்ச -பத்தாம் அத்தியாயத்தில் குண யோகத்தையும் விபூதி யோகத்தையும் விளக்கினான்
வேத வியாசர்
ஆதராதலோப -3-3-39-என்றும்
பிரக்ருதை தாவத்வம் ஹி ப்ரதி ஷேததி ததோ ப்ரவீதி ச பூய -3-2-21- என்றும்
ந ஸ்தானதோ அபி பரஸ்ய உபய லிங்கம் ஸர்வத்ர ஹி -3-2-11 -என்றும்
குண யோகத்தையும் விபூதி யோகத்தையும் கூறினார்
தஸ்மாத் ப்ரஹ்ம த்வி லிங்கம் த்வித விபவம் இத்யேவ பெத்தாந்த பக்ஷ -என்றும்
கல்யாணை அஸ்ய யோக தத் இதர விரஹோ அபி ஏக வாக்ய ஸ்ருதவ் ச என்றும் தேசிகன்
பரமாத்மா கல்யாண குண விஸிஷ்டன் -குண உப சம்ஹார பாதம்
புகழு நல் ஒருவன் என்கோ -என்று குண யோகத்தையும்
பொருவில் சீரப் பூமி என்கோ -என்று விபூதி யோகத்தையும் ஆழ்வார்
ஆக
கல்யாண குண விசிஷ்டமாயும்
அப குண ரஹிதமாயும்
உபய விபூதி விசிஷ்டமாயும்
சேதன அசேதன விலக்ஷண ஜகத் காரண பூதமாயும்
திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனாடும்
ஸ்ரீ விசிஷ்டமாயும்
உள்ளது பரமாத்ம தத்வம் என்பதே கிருஷ்ண த்ரய ஸித்தாந்தம் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் –ஆகதோ மதுராம் புரீம்
புரா ஸூத்ரை வ்யாஸ ஸ்ருதி சத சிரோ அர்த்தம் க்ரதிதவான்
விவவ்ரே தம் ஸ்ராவ்யம் வகுள தரதாம் ஏத்ய யா புனஸ்
உபா வேதவ் க்ரந்தவ் கடயிதும் அலம் யுக்தி ப்ரஸவ்
புனர் ஐஜ்ஜே ராமா வரஜ இதி ஸ ப்ரஹ்ம முகுர –
——————————————
பிரியம்
எது பிரியம் -யாருக்கு பிரியம் -எப்படி பிரியம்
வர்ணாஸ்ரம ஆசார வதா புருஷேண பர புமான்
விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நான்ய தத் தோஷ காரக -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-8-9-ஒவ்ர்ய -சகர ஸம்வாதம் -ஒவ்ரய வசனம்
இந்தப் பிரமாணத்தை வேதாந்த ஸங்க்ரஹத்தில் உதாஹரித்து அருளுகிறார் –
தத் தோஷ காரக -இத்யேநேந பகவத் தோஷ ஹேது பூத ஞான அங்கத்வம் ஸித்தம் -என்று
எது பிரியம் என்பதுக்கு விடை வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் –
யாருக்கு பிரியம்
ஸர்வ நியந்தா -ஸர்வ ப்ரஸாஸ்தா –ஸர்வேஸ்வரன் ஆனவனுக்கு –
எப்படி பிரியம்
ஸ்வாமி நியமனப்படி தாசன் நடப்பதே ஸ்வாமிக்குப் பிரியம் –
பகவத் நியமன அனுகுணம் நடப்பவன் -ஸாஸன அனுவ்ருத்தியே -இப்படி நடப்பவன் தேவன்
மீதூர்ந்து நடப்பவன் அசூரன் –
த்வௌ பூதஸர்கௌ லோகேஸ்மிந் தைவ ஆஸுர ஏவ ச–
தைவோ விஸ்தரஸ ப்ரோக்த ஆஸுரம் பார்த்த மே ஸ்ருணு–৷৷16.6৷৷
த்வௌ = இரண்டு
பூத ஸர்கௌ = உயிர் கூட்டங்களில்
லோகே =இந்த உலகில்
அஸ்மிந் = இந்த
தைவ = தெய்வீக
ஆஸுர = அசுர
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
தைவோ = தெய்வீக
விஸ்தரஸ: = விரிவாக
ப்ரோக்த = சொன்னேன்
ஆஸுரம் = அசுரர்களை
பார்த = பார்த்தனே
மே = என்னிடம் இருந்து
ஸ்ருணு = கேட்பாயாக
ஆஸுரம் மே ஸ்²ருணு = அசுர இயல் பற்றி என்னிடம் கேள்
குந்தீ புத்திரனே இந்த கர்மா யோகத்தில் ஜீவ ராசிகளின் உத்பத்தி தேவர்க்கு உரியது -அஸூரர்க்கு உரியது
என்று இருவகைப்பட்டது -தேவர்க்கு உரிய ஆசாரம் விரிவாகச் சொல்லப்பட்டது –
அஸூ ரர்க்கு உரிய ஆசாரத்தை என்னிடம் இருந்து கேட்பாயாக
பகவத் ஆணை படி நடப்பவர் தேவர்கள் -மீறுபவர்கள் அசுரர்கள் -தன்மை பற்றி சொல்கிறேன் –
ய ஸாஸ்த்ர விதி முத்ஸ்ருஜ்ய வர்ததே காம காரத–
ந ஸ ஸித்தி மவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம்–৷৷16.23৷৷
எவன் ஒருவன் வேதமாகிற எனது ஆணையைக் கை விட்டு தன் விருப்பப்படி செயல் புரிகிறானோ –
அவன் மறுமையில் ஸ்வர்க்கம் முதலான பயனையும் இம்மையில் இன்பத்தையும் மேலான கதியையும் அடைவது இல்லை –
அத்யாயம் சுருக்கம் -சாஸ்த்ர விதியை தாண்டி தம் மனம் போன படி ஆசைப் பட்டு அனைத்தையும் இழக்கிறார்கள்
ஸ்வர்க்கம் அடைவதும் மாட்டான் -இவ்வுலக இன்பமும் இல்லை -ஸ்ரீ வைகுண்டமும் கிட்டான்
பகவான் ஸாஸ்தா -அவன் சாஸனமே சாஸ்த்ரம்
அவன் ஸ்வாமி சேஷி
பதிம் விஸ் வஸ்ய
ஆத்மேஸ்வரம்
யஸ்யாஸ்மி ந தன அந்தரேமி
சரம ஷட்கம் -தத்வ ஞானம் விளைய உபதேசம் பூர்வ த்ரிகம் -தத்வ ஞான அனுகுண அனுஷ்டான உபதேசம் உத்தர த்ரிகம்
ஸாஸ்த்ர முறைப்படி அனுஷ்ட்டிக்க வேணும் -16 அத்யாயம்
ஸாத்விக ஸ்ரத்தையுடன் அனுஷ்ட்டிக்க வேணும் -17 அத்யாயம்
வர்ணாஸ்ரமங்களை கணிசித்து அனுஷ்ட்டிக்க வேணும் -18 அத்யாயம்
பகவத் அபசாரமாவது -வர்ணாஸ்ரம விபரீதமான உபசாரம் -ஸ்ரீ வசன பூஷணம்
ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவ ஆஜ்ஞா யஸ்தாம் உல்லங்க்ய வர்த்ததே
ஆஜ்ஞாச் சேதீ மம த்ரோஹீ மத் பக்தோ அபி ந வைஷ்ணவ –
வர்ணாஸ்ரமங்கள் கர்மம் என்றும் கைங்கர்யம் என்றும் பேதம் -அதிகாரிகளைப் பொறுத்து –
ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -26 –
இந்த க்ரியா வ்ருத்தி சப்தங்களால் சொன்ன கர்ம கைங்கர்யங்கள்
இவர்களுக்கு எதுக்கு அநுகுணமாய் இருக்கும் என்ன சொல்லுகிறது-
கர்ம கைங்கர்யங்கள்
சத்ய அசத்ய
நித்ய அநித்திய
வர்ண தாஸ்ய
அனுகுணங்கள்-
அதாவது கர்மம்-(ஸாஸ்த்ர ஆஞ்ஞா ரூப கர்மங்கள்) அசத்யமாய்–அநித்யுமுமான வர்ணத்துக்கு அநுகுணமாய் இருக்கும்
கைங்கர்யம் சத்தியமாய் நித்யமுமான தாஸ்யத்துக்கு அநுகுணமாய் இருக்கும் என்கை-
வர்ணத்தை அசத்தியம் அநித்தியம் என்கிறது ஆத்மாவுக்கு உள்ள வேஷம் அல்லாமையாலே
சததைக ரூபம் அன்றிக்கே -ஔ பாதிகமுமாய் அநித்யமுமாய் நச்வரமான
தேக அவதியாய் போருகையாலே
தாஸ்யத்தை சத்யம் நித்யம் என்கிறது-திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் திருப்பல்லாண்டு -11- என்கிறபடியே
ஆத்மாக்கு உள்ள வேஷம் ஆகையாலே
சததைக ரூபமாய் யாவதாத்மா அனுவர்த்தி யாகையலே-
வர்ண அனுகுணம் என்றது -வர்ணத்துக்கு சேர்ந்தது என்ற படி
தாஸ்ய அனுகுணம் என்றதும் அப்படியே–தாஸ்யத்துக்கு சேர்ந்தது என்ற படி-
(விசிஷ்ட வேஷத்தை பொறுத்தே இருக்கும் கர்மம் -அசத்திய அநித்ய வர்ணம்
கைங்கர்யம் நிஷ்க்ருஷ்ட வேஷம் பொறுத்தே இருக்கும் -சத்யமாயும் -நித்யமாயும் தாஸ்யம்
திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -தாஸ்யம் பழைமை நித்யம் -அங்கும் உண்டே நிருபாதிகம் -சத்யம் )
————————————————————
மனீஷீ வைதிக ஆசாரம் மனஸா அபி ந லங்கயேத்
பகவத் நியமத்தைப் பரிபாலனம் செய்வது ஒவ்வொரு ஸ்ரீ வைஷ்ணவனுக்கும் அவஸ்ய கர்தவ்யமாகும்
ஆகையால்
பிரியம் பகவத் பிரியம்
அவ்வழியாலே பாகவத பிரியம்
அவ்வழியாலே ஆச்சார்ய பிரியம்
ஸ்வ ஸ்வ வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் என்று தேறியது
——————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–
Leave a Reply