சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற-மாயன் அன்று
ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில்
ஏதிலாராம் மெய்ஞ் ஞானமில் -ஸ்ரீ நான்முகன் -71-
ஸர்வ உபநிஷதோ காவ தோக்தா கோபால நந்தன
பார்த்தோ வத்ஸ ஸூ தீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் –
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி -திருவாய் -4-8-6-
ஸ்ரீ மஹா பாரதம் சம்சார விமோசகம்
அதுவே கோது என்னும்படி ஸ்ரீ கீதை
வேதேஷு பவ்ருஷம் ஸூக்தம் தர்ம ஸாஸ்த்ரே ஷு மாநவம்
பாரதே பகவத் கீதா புராணேஷு ச வைஷ்ணவம்
பர ப்ரஹ்ம ஸப்த வாஸ்யனான நாராயணனே பரதத்வம்
ப்ரஸாத விஸிஷ்டனான அவனே பரம ஹிதம்
போக்யதா விஸிஷ்டனான அவனே பரம புருஷார்த்தம் -ப்ராப்யம்
கர்மா ஞான பக்திஉபாயங்களாலே அடையப்படும் பரம் பொருள் அவனே
கேஸவ அர்ஜுன ஸம்வாதத்தை உள்ளடக்கிய சஞ்சயன் த்ருதராஷ்டன் ஸம்வாதம்
கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ண பல கிருஷ்ண நாதஸ் ச பாண்டவ
ஸ்ரீ கீதா ஸங்க்ரஹம் -ஸ்ரீ ஆளவந்தார்
மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப்பொருள் தெரியப் பாரினில் சொன்ன இராமானுசன் -ஸ்ரீ கீதா பாஷ்யம்
ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த தாத்பர்ய சந்திரிகை
வில்லை பொகட்டு நின்றதில் இராவணனுக்கும் அர்ஜுனனுக்கும் சாம்யம் உண்டே யாகிலும் -நெடு வாசி உண்டே
அவன் ஓய்ந்தது அசக்தியினால்
இவன் ஓய்ந்தது தர்மத்தில் அதர்ம புத்தியால்
அர்ஜுனனை ரதியாக்கி தன்னை சாரதியாக அமைத்து ஆஸ்ரித வாத்சல்யம் விவஷிதம்
பார்த்தன் தன் தேர் முன் நின்றானை -அவனுக்காக அம்புகளுக்கு தன்னை இலக்காக்கிக் கொண்டானே –
1–ஸ்ரீ அர்ஜுனன் விஷாத யோகம் —
த்ருதராஷ்ட்ர உவாச–
தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே ஸம வேதா யுயுத்ஸவ–
மாமகா பாண்டவாஷ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய—-৷৷1.1৷৷
த்⁴ருதராஷ்ட்ர உவாச = திருதராஷ்டிரன் சொல்லுகிறான்;
த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே = தர்ம க்ஷேத்ரமான குருஷேத்ரத்தில்
ஸமவேதா: = ஒன்றாகக் கூடி
யுயுத்ஸவ: = யுத்தம் செய்ய வந்திருக்கும்
மாமகா: = நம்மவர்களும்;
பாண்ட³வா: = பாண்டவரும்;
கிம் அகுர்வத = என்ன செய்கிறார்கள்
————–
2–ஸ்ரீ சாங்க்ய யோகம் —
ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா—
ந சைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத பரம்—৷৷2.12৷৷
ந = இல்லை
து = நீ
எவ = நிச்சயமாக
அஹம் = ஸர்வேஸ்வரனான நான்
ஜாது = முற்காலத்தில் எப்போதும்
ந = இல்லை
அஸம் = இருத்தல்
ந = இல்லை
த்வம் = நீ
ந = இல்லை
இமே = இவர்கள்
ஜநாதி⁴பா: = ஜனா + அதிபா = ஜனங்களை ஆளும் மனிதர்கள்
ந = இல்லை
எவ = நிச்சயமாக
ந = இல்லை
ப⁴விஷ்யாம: = இருப்போம்
ஸர்வே = அனைவரும்
வயம் = நாம்
அத = இதில் இருந்து, இங்கிருந்து
பரம் = எதிர் காலத்தில்
தேஹிநோஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா—
ததா தேஹாந்தர ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி—৷৷2.13৷৷
தேஹிநா = உடலை உடையவன்
அஸ்மிந் = இந்த
யதா = அப்படியே
தேஹே = உடல்
கௌமாரம் = குழந்தைப் பருவம்
யௌவநம் = இளமைப் பருவம்
ஜரா = முதுமை பருவம்
ததா = எப்படியோ
தேஹாந்தரப்ராப்திர் = உடலை அடைவதைப் போல
தீ⁴ரஸ் = அறிவுள்ளவன்
தத்ர = அது போல
ந = இல்லை
முஹ்யதி = குழப்பம் மயக்கம் அடைவது
அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாஃ ஸரீரிண–
அநாஸிநோ அப்ரமே யஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத—৷৷2.18৷৷
அந்தவந்த = அந்தம் உள்ள. முடியக் கூடிய
இமே = இவை
தே³ஹா = வடிவங்கள்
நித்யஸ்ய = நிரந்தரமான
உக்தா: = சொல்லப் பட்டது
ஸ²ரீரிண:| = வடிவங்களை தாங்கும்,உடலை கொண்டு இருக்கும்
அநாஸிந = நாசம் என்றால் அழிவு. அ + நாசம் = அழிவற்ற
அப்ரமேயஸ்ய = அளவற்ற
தஸ்மாத் = எனவே
யுத்⁴யஸ்வ = போர் செய்
பா⁴ரத = பாரத குல தோன்றலே
ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்—நாயம் பூத்வா பவிதா வா ந பூய–
அஜோ நித்ய ஸாஸ்வதோயம் புராணோ–ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே—৷৷2.20৷৷
ந = இல்லை
ஜாயதே = பிறப்பது
ம்ரியதே = இறப்பது
வா = மாறாக
கதா³சிந் = எப்போதும்
ந = இல்லை
அயம் = அவன்
பூ⁴த்வா = தோன்றிய பின்
ப⁴விதா= நிலைத்து இருத்தல்
வா = மேலும்
ந = இல்லை
பூ⁴ய:| = மறுபடியும்
அஜோ = பிறப்பது இல்லை
நித்ய: = நிரந்தரமான
ஸா²ஸ்²வத = அநாதியான
அயம் = அவன்
புராணோ = பழமையானது
ந = இல்லை
ஹந்யதே = கொல்லப் படுவது
ஹந்யமாநே = கொல்வதும்
ஸ²ரீரே = உடல்
வாஸாம் ஸி ஜீர்ணாநி யதா விஹாய–நவாநி கருஹ்ணாதி நரோபராணி.—
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி –அந்யாநி ஸம் யாதி நவாநி தேஹீ—৷৷2.22৷৷
வாஸாம்ஸி – உடைகள். வஸ் என்றால் அணிதல். வஸ்திரம் என்றால் அணிந்து கொள்ளும் ஒன்று.
ஜீர்ணாநி = உபயோகம் தீர்ந்த பின். பழசானாவுடன்
யதா = எவ்வாறு
விஹாய = நிராகரிக்கப் படுகிறதோ
நவாநி = புதிய
க்³ருஹ்ணாதி = எடுத்துக் கொள்கிறது
நரோ = மனிதன்
அபராணி = வேறு ஒன்றை, புதிய ஒன்றை
ததா = அது போல
ஸ²ரீராணி = உடல்
விஹாய = அனுபவம் தீர்ந்த பின்
ஜீர்ணாந் = பழையது ஆன பின்
அந்யாநி = மற்றது
ஸம்யாதி = அடைகிறது
நவாநி = புதிய
தே³ஹீ = உடலை உடைய அது
உத்பத்தி விநாசம் -அவஸ்தா விசேஷங்கள்
மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம் புண்ணார் ஆக்கை -கலியன்
கிழிந்த வஸ்திரம் கைவிடுவது போல் சரீரம் கைவிடுவது –
சீர்யதே இதி சரீரம் -அழிவதையே இயற்கையாகக் கொண்டது
நைநம் சிந்தந்தி ஸஸ்த்ராணி நைநம் தஹதி பாவக–
ந சைநம் க்லேத யந்த்யாபோ ந ஸோஷயதி மாருத—৷৷2.23৷৷
ந = இல்லை
ஏனம் = இந்த
சி²ந்த³ந்தி = வெட்டினாலும்
ஸ²ஸ்த்ராணி = ஆயுதங்கள் மூலம்
ந = இல்லை
ஏனம் = இந்த
த³ஹதி = எரிதல்
பாவக:| = தீயில்
ந = இல்லை
ச = மேலும்
ஏனம் = இந்த
க்லேத³யந்த்தி = நனைவது
அபா = தண்ணீரில்
ந = இல்லை
ஸோ²ஷயதி = உலர்வது
மாருத: = காற்றில்
அச்சேத்யோயம் அதாஹ்யோயம் அக்லேத்ய அஸோஷ்ய ஏவ ச.–
நித்ய ஸர்வகத ஸ்தாணுரசலோயம் ஸநாதந—৷৷2.24৷৷
அச்சே²த்³யோ = வெட்ட முடியாது
அயம் = அது
அதாஹ்யோ = எரிக்க முடியாது
அயம் = அது
அக்லேத்³யோ = நனைக்க முடியாது
அஸோ²ஷ்ய = உலர்த்த முடியாது
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
நித்ய: = நிரந்தரமான
ஸர்வக³த:= எங்கும் நிறைந்த
ஸ்தா²ணு = உறுதியாக
அலோயம் = நகராத
ஸநாதந: = புராதனமானது
ஸுக துக்கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ.–
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி—৷৷2.38৷৷
ஸுக²து³:கே² = சுகம், துக்கம்
அதற்குக் காரணமான
லாபா⁴லாபௌ⁴ = இலாபம் – அ இலாபம்-விரும்பிய பொருள் கிடைப்பதாயும் கிடைக்காமலும்
அதற்குக் காரணமான
ஜயாஜயௌ| = ஜெயம் – அ ஜெயம்
ஸமே க்ருத்வா = சரி சமம் என்று கொண்டு
ததோ = பின்
யுத்³தா⁴ய = யுத்தம் செய்ய
யுஜ்யஸ்வ = தயாராவாய்-முயல்வாய்
ஏவம் = இவ்வாறு-இவ்வண்ணமாகப் போர் புரிந்தால்
பாபம் = பாவம்-துன்ப மயமான ஸம்ஸாரத்தை
அவாப்ஸ்யஸி = அடைய மாட்டாய்
த்ரைகுண்ய விஷயா வேதா நிஸ்த்ரை குண்யோ பவார்ஜுந.–
நிர் த்வந்த்வோ நித்ய ஸத்த்வஸ்தோ நிர்யோக க்ஷேம ஆத்மவாந்—-৷৷2.45৷৷
த்ரை = மூன்று
குண்ய = குணங்களின்
விஷயா = விசேஷ தன்மை பற்றி
வேதா = வேதங்கள்
நிஸ் = விலகி, தாண்டி, ஒட்டாமல்
த்ரை = மூன்று
குண்யோ = குணங்களில் இருந்து
ப⁴வா ர்ஜுந = பவ + அர்ஜுனா = இருப்பாய் அர்ஜுனா
நிர் = இல்லாமல்
த்³வந்த்வோ = இரண்டு அல்லது இரட்டை
நித்ய = எப்போதும்
ஸத்த்வ = சத்வ
ஸ்தோ = ஸ்திரமாக, உறுதியாக இருப்பாய்
நிர் = இல்லமால்
யோக = ஆடம்பரங்களில்
க்ஷேம = சுகங்களில்
ஆத்மவாந் = ஆத்மாவில் ஒன்றி
யாவாநர்த உதபாநே ஸர்வத ஸம்ப்லுதோதகே.–
தாவாந் ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத—৷৷2.46৷৷
யாவாந் = அதுவரை, அந்த அளவு
அர்த = பயன், உபயோகம், தேவை
உத³பாநே = குளம், குட்டை, ஏரி-நீர் நிலையில்
ஸர்வத: = அனைத்து பக்கங்களிலும்
ஸம்ப்லுதோத³கே = நீர் நிறைந்த பொழுது
தாவாந் = அந்த அளவு
ஸர்வேஷு = அனைத்து
வேதே³ஷு = வேதங்களில்
ப்³ராஹ்மணஸ்ய = பிராமணனுக்கு-வைதிகனுக்கு
விஜாநத: = அறிந்தவனுக்கு (விஞானத் )-அறிவாளியான முமுஷுக்கு
கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந.–
மா கர்ம பல ஹேதுர் பூர்மா தே ஸங்கோஸ்த்வ கர்மணி—৷৷2.47৷৷
கர்மணி = வேலை செய்வதில்-நித்ய நைமித்திக கர்மங்களில் மட்டும்
ஏவ = நிச்சயமாக
அதி⁴காரஸ் = அதிகாரம்
தே = உன்
மா = இல்லை
ப²லேஷு = ‘பல்’ என்றால் பழம். பலேஷு, பலன்.
கதா³சந| = என்றும் , எப்போதும்
மா = இல்லை
ஸ்வர்க்காதி பலங்களிலே ஆசை கொள்ளாமல்
கர்ம = வேலையின்
ப²லஹேதுர் = வேலையின் பலன்களில்
பூ⁴ர் = கொள்ளாதே
மா = இல்லை
தே = உன்
ஸங்கோ = சங்கம், தொடர்பு, எதிர்பார்ப்பு
அஸ்த் = இருக்க வேண்டும்
அகர்மணி -மோக்ஷ சாதனா கர்மத்தை அனுஷ்டியாமல் இருப்பதில்
ராக த்வேஷ வியுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஸ் சரந்.–
ஆத்ம வஸ்யைர் விதேயாத்மா ப்ரஸாதமதி கச்சதி–৷৷2.64৷৷
ராக த்வேஷ -எனது அருளாலே ராகமும் த்வேஷங்களும் -ஆசையும் வெறுப்பும்
வியுக்தைஸ்து –நீங்கப் பெற்றவையாய்
ஆத்ம வஸ்யைர் -தனக்கு வசப்பட்டு இருப்பவையான
இந்த்ரியைஸ் -இந்த்ரியங்களால்
விஷயாந் -சப்தாதி விஷயங்களை
சரந்.–கடந்தும் நிற்பவனாய்
விதேயாத்மா -மனத்தை அடக்கியவனான புருஷன்
ப்ரஸாம் -மனத் தெளிவை
அதி கச்சதி–அடைகிறான்
ஆபூர்யமாணம சல ப்ரதிஷ்டம் -ஸமுத்ரமாப ப்ரவிஸந்தி யத்வத்.–
தத்வத் காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே-ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ—৷৷2.70৷৷
யத்வத்–எப்படி
ஆபூர்யமாணம் –தானே நிறைந்து இருப்பதாய்
அசல ப்ரதிஷ்டம் -ஒரே நிலையில் இருப்பதான
ஸமுத்ரம் -கடலை
ஆப ப்ரவிஸந்தி .–நதீ ஜலங்கள் பிரவேசிக்கின்றனவோ
தத்வத் -அப்படியே
ஸர்வே காமா -ஸப்தம் முதலான விஷயங்கள் அனைத்தும்
யம் ப்ரவிஸந்தி -எவனைப் பிரவேசிக்கின்றனவோ
ஸ -அவனே
ஸாந்திம் ஆப்நோதி-விஷய அனுபவங்கள் நீங்கப் பெறுகை யாகிற சாந்தியை அடைகிறான்
காமகாமீ ந ஆப்நோதி —ஸப்தம் முதலான விஷயங்களை விரும்பி விகாரம் அடைபவன் சாந்தியை அடைவது இல்லை-
————
3-ஸ்ரீ கர்ம யோகம் –
ந ஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்ய கர்ம க்ருத்—
கார்யதே ஹ்யவஸ கர்ம ஸர்வ ப்ரகரிதி ஜைர்குணை—৷৷3.5৷৷
ந = இல்லை
ஹி = அதனால்
கஸ்சித் = ஒருவன்
க்ஷணம் = ஒரு நொடி கூட
அபி = இப்போது
ஜாது= ஒருபோதும்
திஷ்டதி = நிலையாக இருத்தல்
அகர்மக்ருத் = காரியம் ஒன்றும் செய்யாமல்
கார்யதே = செயல் என்பது
ஹி = அது
அவஸ: = அவனுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் , கட்டாயமாக , அவசியமாக
கர்ம = செயல்
ஸர்வ: = அனைத்து
ப்ரக்ருதிஜைர் = உயிர்களுக்கும்
குணை: = குணங்களில் இருந்து
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண–
ஷரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேத கர்மண—-৷৷3.8৷৷
நியதம் = நியமப்படி, ஒழுங்கு முறையாக
குரு = செய்தல்
கர்ம = கர்மங்களை
த்வம் = நீ
கர்ம = செயல்களை
ஜ்யாயோ = சிறப்பாக, உயர்வாக
ஹி = அதனால்
அகர்மண: = செயலன்றி இருப்பது
ஸரீர யாத்ரா = உடலின் போக்கு , உடலின் பயணம்
அபி = இருந்தும்
ச = மேலும்
தே = உன்
ந = இல்லை
ப்ரஸித்த்யேத் = வெற்றி அடைவது
அகர்மண: = செயலன்றி இருந்தால்
கர்மணைவ ஹி ஸம் ஸித்தி மாஸ்திதா ஜநகாதய–.
லோக ஸங்க்ரஹமேவாபி ஸம் பஸ்யந் கர்துமர்ஹஸி—-৷৷3.20৷৷
ஜனகர் முதலானோர் கர்ம யோகத்தாலேயே ஆத்ம பிராப்தி யாகிற பயனை அடைந்தார்கள் அன்றோ –
உலகத்தை இசையை வைப்பதில் கருத்தைக் கொண்டும் நீ கர்மத்தைச் செய்வதே தக்கது
ஜனகன் கர்ம யோகத்தால் ஆத்ம சாஷாத்காரம் -மேலையார் செய்வனகள் சிஷ்டாசாரம் உண்டே –
யத் யதாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்த தேவேதரோ ஜந–
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே—৷৷3.21৷৷
சிறந்தவன் எந்த கர்மங்களைச் செய்கிறானோ அந்த அந்த கர்மங்களையே உலகோரும் செய்கின்றனர்
அந்தச் சிறந்தவன் அக்கர்மத்தை எந்த அளவிதானாகச் செய்கிறானோ உலகமும் அந்த அளவினதாகவே செய்கிறது
சிஷ்டாச்சரமே ஸ்ரேஷ்டம்
மேலையார் செய்வனகள் கேட்டியேல்
தர்மஞ்ஞய சமய
க்ரியமாணம் ந கஸ்மை சித் யதர்த்தாய பிரகல்ப்யதே அக்ரியாவத் அநர்த்தாய தத்து கர்ம சமாசரேத் –
யே தத்ர ப்ராஹ்மணா ஸம் மர்ஸிந யுக்தா ஆயுக்தா அலூஷா தர்ம காமா ஸ்யு யதா தே தத்ர வர்த்தேரன் ததா தத்ர வர்த்தேதா -வேத
விதிப்படி ஆராய்ச்சியில் வல்லவர்களாய் -ஸாஸ்த்ரஞ்ஞர்கள் -காம க்ரோதாதிகள் அற்றவர்கள் -அறத்தில் விருப்பமுள்ள வைதிகர்கள் -நடக்கிற வழியிலே நீயும் நடப்பாய் –
ந மே பார்த்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந—
நாநவாப்த மவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி—৷৷3.22৷৷
பார்த்தனே -மூ வகைப்பட்ட பிறவிகளில் பிறக்கின்ற எனக்குச் செய்யத்தக்க கர்மம் ஏதும் இல்லை – ஏன் என்றால் –
இது வரையில் கிடைக்காது இருப்பதாய் ஒரு கர்மத்தினால் பெறத் தக்கதாய் இருப்பது எதுவும் இல்லை –
அப்படி இருந்த போதிலும் கர்மத்தில் நான் நிலை நிற்கவே செய்கிறேன்
பகவானும் வர்த்த ஏவச கர்மணி -கர்ம அனுஷ்டானம் விடாமல் செய்து காட்டி அருளுகிறான்
ஸ்ரேயாந் ஸ்வ தர்மோ விகுண பர தர்மாத் ஸ்வநுஷ்டிதாத்—
ஸ்வ தர்மே நிதநம் ஸ்ரேய பர தர்மோ பயாவஹ—-৷৷3.35৷৷
இயற்கையில் உரியதாய் இருக்கும் உபாயமான கர்ம யோகம் அங்கங்களில் குறையுடையதாக அனுஷ்ட்டிக்கப் பட்ட போதிலும்
குறைவற அனுஷ்ட்டிக்கப்பட்ட -பிறர்க்கு உரிய -ஞான யோகத்தைக் காட்டிலும் சிறந்தது –
தனக்கு உரிய உபாயமான கர்ம யோகத்தை அனுஷ்டித்துக் கொண்டு-அந்தப் பிறப்பில் பலன் அடையாமல் மரணம் அடைவதும் சிறந்தது –
ஸ்ரீ பகவாநுவாச-
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ குண ஸமுத்பவ–
மஹா ஸநோ மஹா பாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்–৷৷3.37৷৷
பகவான் கூறினான் -நீ கெட்ட விஷய அனுபவ காரணம்-ரஜோ குணத்தால் உண்டாவதாய் –
பெரும் தீனி தின்னும் காமமே யாகும்
இக் காமமே -தடை செய்யப்பட போது -தடை செய்தவர்களைக் குறித்து -பெரும் பாவச் செயல்களையும் புரியும்
கோபமாகப் பரிணமிக்கிறது –இக் காமத்தையே இந்த ஞான யோகத்துக்கு விரோதி என்று தெரிந்து கொள்வாயாக
நம் தரிசனத்தில் காமமும் க்ரோதமும் ஆத்ம தர்மமான ஞானத்தின் பரிணாம விசேஷமே
மஹாஸந ந ஜாது காம காமாநாம் உப போகே ந ஸாம்யதி
ஹவிஷா கிருஷ்ண வர்த்மேவ பூய ஏவாபி வர்த்ததே -பாரதம்
காமிகளின் காமம் அனுபவித்து அடங்காது -விரகிட விரகிட மென்மேலும் எரியும் அக்னி போலே அனுபவிக்க அனுபவிக்க மென்மேலும் வளரும் –
—————-
4—-ஸ்ரீ ஞான யோகம்-(ஸ்ரீ கர்ம யோகத்துக்குள் உள்ள ஞான பாகம் – )
ஸ்ரீ பகவாநுவாச-
பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந.–
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப—৷৷4.5৷৷
ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந
பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம்
ஆத்மாநம் மானுஷம் மன்யே
அஹம் வோ பாந்தவ ஜாத -அவதாரத்தில் மெய்ப்பாடு
அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.—
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—৷৷4.6৷৷
காமத்தால் ஏற்பட்ட பிறப்பற்றவனாய் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து கொண்டே –
எனக்கு உரிய திரு மேனியைத் தரித்துக் கொண்டே –
என் சங்கல்பத்தாலேயே பிறக்கிறேன்
கிருஷ்ண ஏவ ஹி லோகாநாம் உத்பத்திர் அபி சாப்யய
கிருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதம் இதம் விஸ்வம் சராசரம் -பாரதம்
வ்யக்தமேஷ மஹா யோகீ பரமாத்மா ஸநாதன
அநாதி மத்யே நிதநோ மஹத பரமோ மஹான் -யுத்த -பரமேஸ்வரேஸ்வரத் தன்மை பேசப்பட்டதே –
ந பூத சங்க ஸமஸ்தாநோ தேஹோஸ்ய பரமாத்மந -பாரதம்
ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாம் சமேதோ அஸ்தி ஸம்பவா -வாயு புராணம்
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்
ஷயந்தம் அஸ்ய ரஜஸ பராகே
ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ
தஸ்மிந் நயம் புருஷோ மநோ மய அம்ருதோ ஹிரண்மய
மாயா வபுநம் ஞானம்
மாயயா ஸததம் வேத்தி பிராணி மாம் ச ஸூபா ஸூபம்
பிதா புத்ரேண பித்ரு மான் யோநி யோநவ் -ஸ்ருதி
ஸமஸ்த சக்தி ரூபாணி தத் கரோதி ஜனேஸ்வர
தேவ திர்யங் மனுஷ்யாக்யா சேஷ்டா வாந்தி ஸ்வ லீலயா -ஸ்ரீ விஷ்ணு புராணம்
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்
மாவாகி ஆமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான்
யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி பாரத—
அப்யுத்தாநம தர்மஸ்ய ததாத்மாநம் ஸருஜாம் யஹம்—৷৷4.7৷৷
பரத குலத்திலே உதித்தவனே –எந்த எந்த காலங்களில் தர்மத்திற்கு வாட்டம் ஏற்படுகிறதோ –
அதர்மத்துக்கு எழுச்சி ஏற்படுகிறதோ -அந்த அந்தக் காலங்களில் நான் என்னையே படைத்துக் கொள்கிறேன்
பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்.-தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே—৷৷4.8৷৷
பிராமண தூஷகர் பாஹ்யர்
பிரமேய தூஷகர் -குத்ருஷ்டிகள்
த்ரிணி பதா விசக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்யா அதோ தர்மாணி தாரயன் -உலகு அளந்து தர்மங்களை நிலை நிறுத்தினான் –
ததா ஆத்மாநம் ஸ்ருஜாம் யஹம் -ஞானீ து ஆத்மைவ மே மதம் -ஞானிகளையே ஆத்மா என்கையாலே ஞானிகளை அவதரிப்பிக்கிறேன் என்கிறான்
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆளாயினரே
பீதகவாடைப்பிரானார் பிரம குருவாக வந்து
சாஷாத் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்ய மயீம் தனும் மக்நாத் உத்தரதே லோகான் காருண்யாத் ஸாஸ்த்ர பாணிநா
தத் வித்தி ப்ரணி பாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா.—
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்த்வ தர்ஸிந—৷৷4.34৷৷
நன்கு வணங்குவதாலும்-நன்கு கேட்பதாலும் -கைங்கர்யத்தினாலும் -அந்த ஆத்ம ஞானத்தை
ஞானிகள் இடம் அறிவாயாக –
ஆத்ம ஸ்வரூபத்தை சாஷாத் கரித்த ஞானிகள் உனக்கு ஆத்மாவைப் பற்றிய அறிவை உபதேசிப்பர் –
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே குருவாகித் தன்னருளால் மானிடர்க்காய் இந்நிலத்தில் தோன்றுவதால்
யார்க்கும் அவன் தாளிணையை உண்ணுவதே சால உறும் -ஞான சாரம்
சேமம் குருகையோ செய்ய திருப்பாற் கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோ
தாமம் துளவோ வகுளமோ தோள் இரண்டோ
நான்கும் உளவோ பெருமான் உனக்கு –
ந சலதி நிஜ வர்ண தர்மதோ ய சம மதிராத்ம ஸூ ஹ்ருத் வி பக்ஷ பக்ஷே
ந ஹரதி ந ச ஹந்தி கிஞ்சி துச்சை ஹித மநஸம் தமவேஹி விஷ்ணு பக்திம்-என்றும்
விஷ்ணுர் ஆராத்யதே பந்தாந அந்யஸ் தத் தோஷ காரக -என்றும் ஸ்ரீ விஷ்ணு புராணமும்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை யோதி யோதிவித்து ஆதியார் வரும் அந்தணாளர்
வைஷ்ணவ உத்தமர்கள் -ஸா தவ -யுக்த லக்ஷண தர்ம ஸீலா வைஷ்ணவ அக்ரேஸரா
மத் ஸமாஸ்ரயேண ப்ரவ்ருத்தா மன் நாம குண கர்ம ஸ்வரூபாணாம் வாங் மனஸா கோசர தயா
மத் தர்சனேந விநா ஸ்வாத்ம தாரண போஷணாதி கம் அலப மாநா க்ஷண மாத்ர காலம் கல்ப ஸஹஸ்ரம் மன்வாநா
பிரஸி தில ஸர்வ காத்ரா பவே யுரிதி மத் ஸ்வரூப சேஷ்டித அவ லோகநா லாபாதி தாநேந தேஷாம் பரித்ராணாய
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாமே கண்ணன்
தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் கால் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே
ஆஹ்லாத சீத நேத்ராம்பு புள கீக்ருத காத்ரவான் ஸதா பர குணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய ஸர்வ தேஹி பி
உன் தாளிணைக்கீழ் வாழ்ச்சி என்று இருப்பவர்கள்-
ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷
அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ
அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும்
மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான் –
————
5—-ஸ்ரீ கர்ம சந்யாச யோகம் —
வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி—
ஷுநி சைவ ஸ்வபாகே ச பண்டிதா ஸமதர்ஸிந—-৷৷5.18৷৷
அறிவாளிகள் கல்வியும் அடக்கமும் உடைய அந்தணர் இடமும் அவை அற்ற அந்தணர் இடமும்
உருவத்தால் சிறிய பசுவின் இடமும் உருவத்தால் பெரிய யானையின் இடமும் –
கொன்று தின்னப்படும் நாயிடமும் அதைக் கொண்டு தின்னும் சண்டாளனிடமும் கூட
ஆத்மா ஒரு படிப் பட்டு இருக்கையாலே சமமாகப் பார்ப்பவர்களாய் இருக்கின்றனர்-
யே ஹி ஸம் ஸ்பர்ஸஜா போகா துக்கயோநய ஏவ தே.—
ஆத்யந்தவந்த கௌந்தேய ந தேஷு ரமதே புத—–৷৷5.22৷৷
குந்தீ புத்திரனே விஷயங்களோடு இந்திரியங்கள் தொடர்பு கொள்வதால் ஏற்படும் இன்பங்கள் யாவை சில உண்டோ –
அவை துன்பத்திற்கே காரணமாய் இருப்பவை அன்றோ -முதலும் முடிவும் உள்ளவை அன்றோ –
அவற்றின் இயல்வை அறிபவன் அவற்றில் ஈடுபட மாட்டான்
போக்தாரம் யஜ்ஞ தபஸாம் ஸர்வ லோக மஹேஸ்வரம்—-
ஸுஹ்ருதம் ஸர்வ பூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸாந்திம் ருச்சதி—৷৷5.29৷৷
யாகங்களையும் தவங்களையும் ஏற்றுக் கொள்பவனும் எல்லா உலகங்களுக்கும் பெரிய ஈஸ்வரனும்
எல்லா உயிர்களுக்கும் நண்பனுமாக என்னை அறிந்து சாந்தி அடைகிறான்
—————
6— ஸ்ரீ யோக அப்பியாச யோகம் –(ஸ்ரீ அத்யாத்ம யோகம்:)
உத்தரே தாத்மநாத்மாநம் நாத்மாநம வஸாதயேத்—
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந—৷৷6.5৷৷
விஷயத்தில் பற்று அற்ற மனத்தினால் தன்னை உயர்த்தக் கடவன் –
தன்னைக் கீழே தள்ளக் கடவன் அல்லன் –
விஷயப் பற்று அற்ற மனமே தனக்கு உறவினனாய் இருப்பதாகும் –
விஷயப் பற்று உள்ள மனமே தனக்கு எதிரியாய் இருப்பதாகும்
பந்துராத்மாத் மநஸ் தஸ்ய யேநாத்மை வாத்மநா ஜித—
அநாத்ம நஸ்து ஸத்ருத்வே வர்தேதாத்மைவ ஸத்ருவத்—৷৷6.6৷৷
எந்த மனிதனால் தன் மனம் தன்னாலேயே விஷயங்களில் செல்லாமல் வெல்லப் பட்டதோ அம் மனிதனுக்கு
அம் மனம் உறவினன் ஆகும் -வெல்லப்படாத மனத்தை யுடைய மனிதனுக்கோ எனில்
தன் மனமே தன் எதிரியைப் போலே நன்மைக்குத் தடையாய் இருப்பதில் ஈடுபடும்
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷாயா
பந்தாய விஷயீ சங்கீ முக்த்யை நிர்விஷயம் மன
கைவல்யம் -அளவில் சிற்றின்பம் -விடை கொள்வார் –
அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர்
செற்றது மன்னுறில் அற்றிவை பற்றே
யோகிக்கு நான்கு வகைப்பட்ட ஸாம்ய புத்தி
ஸர்வத்ர சம தர்சன-6-29- -தன்னை அறிந்து மற்ற ஆத்மாக்களும் ஞான ஸ்வரூபத்தில் சாம்யம் -முதல் நிலை
யோ மாம் பஸ்யதி ஸர்வத்ர ஸர்வத்ர மயி பஸ்யதி -6-30-
முக்தி நிலையில் விபு வாய் பரமாத்மாவோடு ஒற்றுமை அறிவது -6-31-மூன்றாம் நிலை
நான்காம் நிலை ஸூகம் துக்கம் அற்ற நிலை -6-32-
ஸர்வ பூதஸ்த மாத்மாநம் ஸர்வ பூதாநி சாத்மநி.—
ஈக்ஷதே யோக யுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ஸந—৷৷6.29৷৷
யோக அப்யாஸத்தில் ஈடுபட்ட நெஞ்சை உடையவன் -ப்ரக்ருதி சம்பந்தம் அற்ற -எல்லா ஆத்மாக்களையும்
சமமாகக் காண்பவனாய் -எல்லா ஜீவர்களோடும் சமமான ஸ்வரூபத்தை உடையவனாகத் தன்னையும் –
தன்னோடு சமமான ஸ்வரூபத்தை உடையவர்களாக மற்ற எல்லா ஜீவர்களையும் காண்கிறான் –
யோ மாம் பஸ்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஸ்யதி—-
தஸ்யாஹம் ந ப்ரணஸ்யாமி ஸ ச மே ந ப்ரணஸ்யதி–৷৷6.30৷৷
எவன் ஒருவன் என்னை எல்லா ஆத்ம வஸ்துக்களிலும் -என் தன்மை இருப்பதை இட்டுக் காண்கிறானோ –
எல்லா ஆத்மாக்களையும் என்னிடம் -அவர்கள் தன்மை விருப்பத்தை இட்டுக் காண்கின்றானோ –
அவனுக்கு நான் காட்சி அளிக்காமல் போவது இல்லை -அவனும் எனக்கு காட்சி அளிக்காமல் போனது இல்லை –
ஸர்வ பூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வ மாஸ்தித—
ஸர்வதா வர்தமாநோபி ஸ யோகீ மயி வர்ததே—৷৷6.31৷৷
யோக தசையில் முன் கூறிய ஒற்றுமையை முன்னிட்டு எல்லா ஜீவர்களிலும் இருக்கும் என்னை –
ஞான சங்கோசம் அற்று இருக்கை யாகிற -ஒற்றுமையை அனுசந்திப்பவனாய் எவன் ஒருவன் காண்கிறானோ
அந்த யோகீ -யோகத்தில் இருந்து எழுந்த நிலையில் -எப்படி இருந்தாலும்
என்னோடு ஒப்புமையை அனுசந்திப்பவனாக வாழ்கிறான் –
அனைவரும் ப்ரஹ்மாவின் சரீரம் இதில் –பரமாத்மா மூலம் வந்த நினைவு மாறாதே -உயர்ந்த நிலை இது –
ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பஸ்யதி யோர்ஜுந.—
ஸுகம் வா யதி வா துக்கம் ஸ யோகீ பரமோ மத—৷৷6.32৷৷
அர்ஜுனா எவ்விடத்திலும் ஆத்மாக்கள் முன் கூறிய ஒப்புமையை உடையவர்களாக இருப்பதால்
தன்னிடமும் மற்றவர்கள் இடமும் உள்ள இன்பத்தையும் துன்பத்தையும் எவன் ஒருவன் சமமாகக் காண்கிறானோ
அந்த யோகியானவன் அனைவரிலும் சிறந்தவனாகக் கருதப்படுகிறான் –
அர்ஜுந உவாச
யோயம் யோகஸ் த்வயா ப்ரோக்த ஸாம்யேந மதுஸூதந–.-
ஏதஸ் யாஹம் ந பஸ்யாமி சஞ்சலத்வாத் ஸ்திதிம் ஸ்திராம்—৷৷6.33৷৷
சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்—-
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸு துஷ்கரம்–৷৷6.34৷৷
அர்ஜுனன் கேட்டான் -மது என்னும் அசுரனை அழித்த கண்ணனே -யாதொரு சமதர்சன ரூபமான இந்த யோகம்
உன்னால் உபதேசிக்கப்பட்டதோ-இந்த யோகம் நிலையாக நிற்பதை மனம் நிலை நில்லாமல் இருக்கும்
காரணத்தால் நான் காணவில்லை -ஏன் என்னில் மனமானது இயல்வாகவே நிலை நில்லாததாகவும் –
வலிமை உடையதாகவும் -அதனாலே கலங்க வைப்பதாகவும் -விபரீத விஷயங்களில் இழுப்பதில் உறுதியானதாகவும் உள்ளது
அதை அடக்குவது புயல் காற்றை அடக்குவது போலே மிகவும் அரிதாய் செய்ய இயலாதாகவே நான் நினைக்கிறேன்
ஸ்திரமான ஸ்தியை நான் காண வில்லையே என்கிறான் –நீ சொல்வது நடக்குமோ –
சஞ்சலம் தானே எங்கும் -எல்லா இடத்திலும் பேதங்கள் பார்க்கிறேன்
ஸ்ரீ பகவாநுவாச-
பார்த்த நைவேஹ நாமுத்ர விநாஸஸ் தஸ்ய வித்யதே.–
நஹி கல்யாண க்ருத்கஸ்சித் துர்கதிம் தாத கச்சதி–৷৷6.40৷৷
ஸ்ரீ பகவான் சொன்னார் -குந்தீ புத்திரனே -யோகத்தைத் தொடங்கி அதில் நின்றும் நழுவிய மனிதனுக்கு
பிராகிருத போகங்களிலோ -மோக்ஷ அனுபவத்திலோ -விரும்பியது கிடைக்காமல் இருத்தல் –
விரும்பாததை அடைதல் ஆகிய -விநாசம் ஒரு போதும் ஏற்படாது -அப்படி நல்ல கார்யமான
ஆத்ம சாஷாத்காரத்தைச் செய்யும் ஒருவன் விரும்பாத கதியை அடைய மாட்டான் அன்றோ –
யோகிநாமபி ஸர்வேஷாம் மத் கதேநாந்தராத்மநா—
ஸ்ரத்தாவாந் பஜதே யோ மாம் ஸ மே யுக்த தமோ மத—৷৷6.47৷৷-மேலே அருளிச் செய்யப் போகும் பக்தி யோகத்தை அறிமுகப் படுத்துகிறான்
முன் கூறிய யோகிகளைக் காட்டிலும் தபஸ்விகள் முதலான அனைவரைக் காட்டிலும் என்னிடம் ஈடுபட்டு இருக்கும்
நெஞ்சினால் என்னை அடைவதில் த்வரை உடையவனாய் எவன் என்னை உபாசிக்கிறானோ
அவன் மிக உயர்ந்தவனாக என்னால் எண்ணப் படுகிறான்
—————–
7— –ஸ்ரீ பரம ஹம்ஸ விஞ்ஞான யோகம் —
அத்வேஷம்
ஆபிமுக்யம்
ஆச்சார்ய உபதேசம்
கர்ம அனுஷ்டானம்
ஸித்த ஸூத்தி
சரீர ஆத்ம விவேகம்
கர்மா யோகம்
ஞான யோகம்
ஆத்ம தர்சனம் –இவற்றை கீழ் ஷட்கத்தில் உபதேசித்து அருளி
இதில்
பகவத் பக்தி உபதேசித்து அருளுகிறான்
மஹநீய விஷயே ப்ரீதி பக்தி -பக்தி ரூபமான உபாஸனம்
நாய மாத்மா ப்ரவசநேந லப்ய -ந மேதயா ந பஹுதா ஸ்ருதேந
யமே வைஷ வ்ருணுதே தேந லப்ய தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் -கட உபநிஷத்
ஸ்நேஹ பூர்வ தியானமே பக்தி
வேறே ஒருவன் கடைத்தலை நிற்கை அவனுக்கு தேஜோ ஹானி
நின் சாயை அழிவு கண்டாய்
மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித் யததி ஸித்தயே.–
யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந் மாம் வேத்தி தத்த்வத–৷৷—7.3৷৷
சாஸ்திரங்களைக் கற்கத் தகுதி படைத்தவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில் ஒருவனே
பயனை அடையும் வரையில் முயல்கின்றான் –
பயனை அடையும் வரையில் முயல்கின்றவர்களுக்குள் ஆயிரக் கணக்கானவர்களில்
ஒருவனே என்னை உள்ளபடி அறிகிறான்
பூமிராபோநலோ வாயுகம் மநோ புத்திரேவ ச.–
அஹங்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா৷৷—-7.4৷৷
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்னும் ஐம்பூதங்களும் மனம் முதலிய இந்திரியங்களும்
மஹான் அஹங்காரமும் ஆகிய எட்டு விதமாகப் பிரிந்து இருக்கும் பிரகிருதி
என்னுடையதே யாகும் என்று அறிவாயாக -இவை அனைத்தும் என் சரீரமே –
மத்த பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய.–
மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணி கணா இவ৷৷—-7.7৷৷
அர்ஜுனா என்னைக் காட்டிலும் வேறு பட்டு இருப்பவற்றில் ஓன்று கூட மிகவும் மேலானதாக இல்லை –
இந்த எல்லாப் பொருள்களும் நூலில் மணிகள் கோர்க்கப்பட்டு இருப்பது போலே
என் இடத்திலேயே கோர்க்கப்பட்டு இருக்கின்றன
தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா.–
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷
என்னுடையதான இந்த முக்குண மயமான ப்ரக்ருதி -தேவனான என்னால் படைக்கப் பட்டதாகையாலே –
எவராலும் தம் முயற்சியால் மட்டும் -கடக்க அரிதாக உள்ளது –
எவர்கள் என்னை சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்
சதுர்விதா பஜந்தே மாம் ஜநா ஸுக்ருதிநோர்ஜுந.–
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப৷৷—7.16৷৷
பரத குலத்து உதித்தவர்களில் தலைவனான அர்ஜுனன் -செல்வம் இழந்து வருந்துபவனும் –
புதிதாகச் செல்வத்தைப் பெற விரும்புவனும் -ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்க விரும்புவனும் –
ஸ்வரூப ஞானம் உடையவனுமாகிய புண்ய சாலிகளான நாலு வகைப்பட்ட ஜனங்கள் என்னை உபாசிக்கிறார்கள்
தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த ஏக பக்திர் விஸிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய৷—7.17৷৷
அந்த நால்வருக்குள் என்னோடு எப்போதும் சேர்ந்து இருப்பவனாய் -என் ஒருவன் இடமே ஈடுபாட்டை உடையவனாய்
இருப்பவனான நான் ஞானிக்கு சொல்ல ஒண்ணாத அளவுக்கு இனியவன் -அவனும் எனக்கு இனியவன்
நித்ய யுக்த –ஏக பக்தர் –அவர்கள் என்னிடம் காட்டும் ப்ரீதியை சர்வசக்தனான என்னாலும் கூட அவர்கள் இடம் காட்ட முடியாதே –
கீழே சொன்ன நால்வருக்குள்– என்னிடம் கூடவே இருக்கும் ஆசை கொண்டவன் –அநந்ய பக்தன் —
பிராப்யமும் பிராபகமும் நானே என்று இருப்பவர்கள் -ஏக பக்திர் –
உதா₄ராஸ் ஸர்வ ஏவைதே–ஞாநீ த்வாத்மைவ மே மதம் |–
ஆஸ்தி₂தஸ் ஸஹி யுக்தாத்மா–மாமேவாநுத்தமாம் க₃திம் ||—18-
இவர்கள் அனைவருமே வண்மை மிக்கவர்கள் -ஞானியோ என்னில் எனக்குத் தாரகமாகவே இருப்பவன் என்று
என் சித்தாந்தம் -என்னோடு சேர விரும்புகின்ற அவன் என்னையே ஒப்பற்ற ப்ராப்யமாகக் கொண்டுள்ளான் அன்றோ
ப₄ஹூநாம் ஜந்மநாமந்தே-ஞாநவாந் மாம் ப்ரபத்யந்தே |–
வாஸுதே₃வஸ் ஸர்வமிதி-ஸ மஹாத்மா ஸுது₃ர்லப₄ ||—19-
பல புண்ணியப் பிறவிகள் கழிந்த பின்பு அறிவு முதிர பெற்ற ஞானியானவன் –
வாஸூ தேவனே எனக்குப் பரம ப்ராப்யமாகவும் -ப்ராபகனாகவும் –தாரகம்-போஷகம் -போக்யம் முதலான
எல்லாமாகவும் இருக்கிறான் -என்று எண்ணி என்னைச் சரணம் அடைகிறான் –
அவன் விசாலமான நெஞ்சை உடையவன் ஆவான் -இவ்வுலகில் எனக்கும் மிகவும் கிடைத்தற்கு அரியவனாவான்
பல புண்ய ஜன்மாக்கள் கழிந்த பின்பே -ஞானம் படைத்தவன் என்னை சரண் அடைகிறான் –
யோ யோ யாம் யாம் தநும் ப₄க்த: ஶ்ரத்த₄யார்ச்சிதுமிச்ச₂தி ।–
தஸ்ய தஸ்யா சலாம் ஶ்ரத்தா₄ம் தாமேவ வித₃த₃தா₄ம்யஹம் ॥—21-
எந்த எந்த தேவதாந்த்ர பக்தன் எனது சரீரமான எந்த எந்த தேவதையை நம்பிக்கையோடு ஆராதிப்பதற்கு
விரும்புகிறானோ -அந்த அந்த பக்தனுக்கு அந்த தேவதா விஷயமான நம்பிக்கையையே
இடையூறுகளால் அசையாததாய் நான் நிலை நிறுத்துகிறேன்
ஜரா மரண மோக்ஷாய–மாமாஸ்ரித்ய யதந்தி யே ।–
தே ப்ரஹ்ம தத்விது₃: க்ருத்ஸ்நம்-அத்யாத்மம் கர்மசாகி₂லம் ॥–29-
கிழத்தன்மை மரணம் முதலான ஆறு ஊர்மிகளும் அடியோடு கழிந்து பிரகிருதி சம்பந்தம் அற்ற
ஆத்ம அனுபவ ரூப மோக்ஷம் கிடைப்பதற்காக என்னை அடைந்து எவர்கள் முயற்சி செய்கிறார்களோ –
அவர்கள் ப்ரஹ்மம் எனப்படுவதையும் அத்யாத்மம் எனப்படும் முழுவதையும்
கர்மம் எனப்படுவது அனைத்தையும் அறிய வேண்டும் –
————-
8—-ஸ்ரீ அப்யாஸ யோகம்:
மாமுபேத்ய புநர்ஜந்ம துக்காலய மஸாஸ்வதம்.–
நாப்நுவந்தி மஹாத்மாந ஸம் ஸித்திம் பரமாம் கதா—৷৷8.15৷৷
மேலான சம்சித்தி ரூபமான என்னை அடைந்தவர்களான மஹாத்மாக்களான ஞானிகள் என்னை அடைந்த பின்
எல்லா துன்பங்களுக்கும் இருப்பிடமாய் இருப்பதாய் நிலை நில்லாததான தேகத்தை மறுபடியும் அடைகிறது இல்லை –
மூன்றையும் சொல்லி -இதில் பகவல் லாபார்த்தி உடைய ஏற்றம் -சித்தி மூவருக்கும் -சம்சித்தி இவருக்கே –
ஆப்ரஹ்ம புவநால்லோகா புநராவர்திநோர்ஜுந.–
மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்யதே—৷৷8.16৷৷
அர்ஜுனா ப்ரஹ்மாண்டத்தினுள் இருக்கும் ப்ரஹ்ம லோகம் வரையில் உள்ள எல்லா உலகங்களும்
அழிவை உடையவை குந்தீ புத்திரனே என்னை அடைந்த பின்போ எனில் மறு பிறப்பு இல்லை
ஐஸ்வர்யார்த்தி எங்கு போகிறான் எதனால் திரும்ப வருகிறான் -அழிவுடைய லோகம் போகிறான் –
அதனால் அனுபவமும் அழியும் –
படைக்கப்பட்டு அழிக்கப் படுபவை -ப்ரஹ்ம லோகம் வரை அஸ்திரம் -லீலா விபூதி –
நித்ய சங்கல்பம் அடியாக நித்ய விபூதி -அநந்ய பிரயோஜனர்க்கு
தன்னையே ஓக்க அருள் செய்யும் பரம காருணிகன் அன்றோ –
நைதே ஸருதீ பார்த்த ஜாநந்யோகீ முஹ்யதி கஸ்சந.-
தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு யோக யுக்தோ பவார்ஜுந—8.27৷৷
குந்தீ பிள்ளையான அர்ஜுனா இந்த அர்ச்சிராதி தூமாதி மார்க்கங்கள் இரண்டையும் அறிகிற
எந்த ஞானியும் மயங்க மாட்டான்
ஆகையால் தினம் தோறும் அர்ச்சிராதி கதியை சிந்திப்பதாகிற யோகத்தோடு கூடியவனாக ஆவாயாக
எல்லா காலத்திலும் யோகத்துடன் இரு -அர்ச்சிராதி மார்க்க சிந்தனை வேன்டும் என்றவாறு –
—————-
9—ஸ்ரீ ராஜ வித்யா ராஜ குஹ்யா யோகம் —
அவஜாநந்தி மாம் மூடா மானுசிம் தநும் ஆஸ்ரிதம்
பரம் பாவம் அஜா நந்தோ மம பூத மஹேஸ்வரம் –9–11–
அவஜாநந்தி = அறியாமல்
மாம் = என்னை
மூடா⁴ = மூடர்கள்
மாநுஷீம்= மனித வடிவில் உள்ள
தநும் = வடிவம்
ஆஸ்²ரிதம் = நினைத்து
பரம் = மேலான
பா⁴வ = இயற்கை
அஜாநந்தோ = அறியாமல்
மம = என்
பூ⁴தமஹேஸ்²வரம் = அனைத்தின் தலைவன்
ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்ச த்ருட வ்ரதா-
நமஸ் யந்தஸ்ச மாம் பக்த்யா நித்ய யுக்தா உபாஸதே৷৷—9.14৷৷
ஸததம் = எப்போதும்
கீர்தயந்தோ = கீர்த்தனைகளை பாடிக் கொண்டு
மாம் = என்னை
யதந்தஸ் = பெரு முயற்சியுடன்
ச = மேலும்
த்³ருட⁴வ்ரதா: = திட சித்தத்துடன்
நமஸ்யந்தஸ் = வணங்கி
ச = மேலும்
மாம் = என்னை
ப⁴க்த்யா = பக்தர்கள்
நித்யயுக்தா = எப்போதும்
உபாஸதே = வழி படுகிறார்கள்
அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா பர்யுபாஸதே.–
தேஷாம் நித்யாபி யுக்தாநாம் யோக க்ஷேமம் வஹாம் யஹம்—৷৷9.22৷৷
அநந்யா = வேறு ஒன்றிலும்
சிந்த யந்தோ = மனதை செலுத்தாமல்
மாம் = என்னை
யே = அவர்கள்
ஜநா: = மக்கள்
பர் உபாஸதே = முறையுடன் உபாசித்து
தேஷாம் = அவர்களின்
நித்யா = எப்போதும்
அ பி⁴யுக்தாநாம் = என்னையே நினைத்து, பக்தியுடன்
யோக³ = தேவைகளை
க்ஷேமம் = பாதுகாத்து
வஹாம்ய = பொறுப்பு
அஹம் = நான்
அஹம் ஹி ஸர்வ யஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச.–
ந து மாமபிஜாநந்தி தத்த்வே நாதஸ் ச்யவந்தி தே—৷৷9.24৷৷
அஹம் = நான்
ஹி = நிச்சயமாக
ஸர்வ = அனைத்து
யஜ்ஞாநாம் = வேள்விகளின்
போ⁴க்தா = பலன்களை அனுபவிப்பவன்
ச = மேலும்
ப்ரபு = தலைவன்
எவ = மேலும்
ந = இல்லை
து = ஆனால்
மாம் = நான்
அபி⁴ஜாநந்தி = அவர்கள் அறிவது
தத்த்வேந = உண்மையில்
அதா = அதனால்
ஸ்²ச்யவந்தி = வீழ்கிறார்கள்
தே = அவர்கள்
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி.–
ததஹம் பக்த் யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந—৷৷9.26৷৷
பத்ரம் = இலை
புஷ்பம் = பூ
ப²லம் = பழம்
தோயம் = நீர்
யோ = யார்
மே = எனக்கு
ப⁴க்த்யா = பக்தியுடன்
ப்ரயச்ச²தி = அளிக்கிறார்களோ
தத் = அதை
அஹம் = நான்
ப⁴க்த்யுபஹ்ருதம் = பக்தியுடன் தருவதை
அஸ்²நாமி = ஏற்றுக் கொள்கிறேன்
ப்ரயத் ஆத்மந = தெளிந்த மனதுடன்
யத் கரோஷி யதஸ்நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத்.–
யத் தபஸ்யஸி கௌந்தேய தத் குருஷ்வ மதர்பணம்—৷৷9.27৷৷
யத் = எதைச்
கரோஷி = செய்தாலும்
யத = எதை
அஸ்²நாஸி = உண்டாலும்
யத் = எதை
ஜுஹோஷி = கொடுத்தல்
த³தா³ஸி = தானமாக
யத் = எதை
தபஸ்யஸி = தவம் செய்தாலும்
கௌந்தேய = குந்தி புத்திரனே
தத் = அவற்றை
குருஷ்வ = செய்
மத் = எனக்கு
அர்ப்பணம் = அர்ப்பணம்
ஸமோஹம் ஸர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய–
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் —৷৷9.29৷৷
ஸமோ = சமமாக
அஹம் = நான்
ஸர்வபூ⁴தேஷு = அனைத்து உயிர்களுக்கும்
ந = ஒருவரும் இல்லை
மே = எனக்கு
த்³வேஷ்யோ = பகைவர்கள்
அஸ்தி ந ப்ரிய: = நண்பர்கள்
யே = எவர்
பஜந்தி = தொழுகிறார்களோ
து = ஆனால்
மாம் = என்னை
பக்த்யா = பக்தியுடன்
மயி = என்னுள் இருக்கிறார்கள்
தே = அப்படி பட்டவர்களில்
தேஷு = அவர்களில்
சா = மேலும்
அபி = நிச்சயமாக
அஹம் = நான்
மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷
என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக –
அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி உடையவனாக ஆவாயாக
அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக –
என்னை வணங்குவாயாக
என்னையே மேலான ஆஸ்ரயமாகக் கொண்டவனாய் இவ்வண்ணமாக
நெஞ்சை பழக்பழக்குவதன் மூலம் என்னையே அடைவாயாக
நஞ்சீயர் உபாசகருக்குச் சொன்ன கிரமம் அடைய பிரபன்னருக்கு தேஹ யாத்ரா சேஷமாக ரஹஸ்யத்திலே உண்டு
திருமந்திரத்தை இடக்கை பத்துக்கொண்டு என்னுகை கர்மயோகம்
அதனுடைய அர்த்த அனுசந்தானம் பண்ணுகை ஞான யோகம்
அவ்வர்த்தம் இருக்கை பக்தி யோகம்
பக்தி பரவசராய் எம்பெருமானை நிர்வாஹகன் என்று துணிகை பிரபத்தி
————
10–ஸ்ரீ விபூதி அத்யாயம் —
அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த ஸர்வம் ப்ரவர்ததே.–
இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவ ஸமந்விதா—–৷৷10.8৷৷
நான் எல்லா உலகிற்கும் உத்பத்தி காரணம் ஆகிறேன் -என்னாலேயே பொருள்கள் அனைத்தும் செயல் படுகிறது
என்கிற இந்த என்னுடைய இயல்வான தடை அற்ற செல்வத்தையும் கல்யாண குண யோகத்தையும் அனுசந்தித்தே
தலை சிறந்த ஞானிகள் பேர் அன்புடையவர்களாய் எல்லாக் கல்யாண குணங்களோடும் கூடிய என்னை உபாசிக்கிறார்கள் –
மச் சித்தா மத் கத ப்ராணா போதயந்த பரஸ்பரம்.–
கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச৷৷10.9৷৷
மச் சித்தா = சித்தத்தை என்பால் நிறுத்தி
மத் கதப்ராணா = பிராணனை என்னில் நிறுத்தி
போ³த⁴யந்த: = போதனைகளை புரிந்து
பரஸ்பரம் = ஒருவருக்கொருவர்
கத²யந்த = பேசிக் கொண்டு
ச = மேலும்
மாம் = என்னைப் பற்றி
நித்யம் = எப்போதும்
துஷ்யந்தி = இன்புற்று இருக்கிறார்களோ
ச = மேலும்
ரமந்தி = மகிழ்கிறார்கள்
ச = மேலும்
தேஷாம் ஸதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம்.–
ததாமி புத்தி யோகம் தம் யேந மாமுபயாந்தி தே—-৷৷10.10৷৷
தேஷாம் = அவர்களுக்கு
ஸததயுக்தாநாம் = எப்போதும் செயல்பட்டுக் கொண்டு
ப⁴ஜதாம் = பஜனை
ப்ரீதிபூர்வகம் = அன்புடன் என்னை வழிபட்டு
த³தா³மி = நான் தருகிறேன்
பு³த்³தி⁴யோக³ம் = ஞான யோகம்
தம்= அது
யேந = அதனால்
மாம் = என்னிடம்
உபயந்தி = வருபவர்கள்
தே = அவர்கள்
அஹமாத்மா குடாகேஸ ஸர்வ பூதாஸயஸ்தித-
அஹமாதிஸ்ச மத்யம் ச பூதாநாமந்த ஏவ ச —৷৷10.20৷৷
அஹமாத்மா = அஹம் + ஆத்மா = அனைத்தின் உள்ளும்
கு³டா³கேஸ = குடா கேசா (அர்ஜுனா)
ஸர்வ = அனைத்து
பூ⁴தாஸ²= பூதங்களின்
யஸ்தி²த: = அனைத்தின் உள்ளே
அஹமாதி = அஹம் + ஆதி = அவற்றின் தொடக்கம்
ஸ்ச மத்⁴யம் = அவற்றின் மத்தி (நடு )
ச = மேலும்
பூ⁴தாநாமந்த = பூதாநாம் + அந்தம் = அவற்றின் இறுதி
ஏவ ச = நானே
அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந.—
விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்நமேகாம் ஸேந ஸ்திதோ ஜகத்—-৷৷10.42৷৷
அத = மேலும்
வா = அது, அதைப் பற்றி,
ப³ஹுன = பலப் பல
ஏதேந = அதன் மூலம்
கிம் = எதற்கு ?
ஜ்ஞாதேந = அறிவு, அறிவது
த்வா = நீ
அ ர்ஜுந = அர்ஜுனா
விஷ்டப்ய = தாங்குதல், அறிந்த பின்
அஹம் = நான்
இதம் = இதை
க்ருத்ஸ்நம் = முழுவதும்
ஏகாம்ஸே²ந = ஒரு பகுதியில் , ஒரு கூறில்
ஸ்தி²தோ = நிறுத்தி, சூழ்ந்து
ஜக³த் = உலகை
————-
11—-ஸ்ரீ விஸ்வ ரூப யோகம் –
ஏவமேதத் யதாத்த த்வமாத்மாநம் பரமேஸ்வர.–
த்ரஷ்டுமிச்சாமி தே ரூபமைஸ்வரம் புருஷோத்தம–৷৷11.3৷৷
ஏவம் = அப்படியே
தத் = இருக்கட்டும், உள்ளது
யதா = அது
அத்த = கூறியது
த்வம் = நீ
ஆத்மாநம் = தன்னைப் பற்றி (Self )
பரமேஸ்²வர = பரமேஸ்வர
த்ரஷ்டும் = காணும்படி
இச்சா²மி = இச்சை கொண்டு இருக்கிறேன்
தே = உன்னுடைய
ரூபம் = வடிவை
ஐஸ்வரம் = ஐஸ்வர்யமான, திவ்யமான, மங்களமான
புருஷோத்தம = புருஷ + உத்தமா = மனிதர்களில் உயர்ந்தவனே
ஆக்யாஹி மே கோ பவாநுக்ரரூபோ–நமோஸ்து தே தேவவர ப்ரஸீத—
விஜ்ஞாது மிச்சாமி பவந்தமாத்யம் -ந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவ்ருத்திம்–৷৷11.31৷৷
தேவர்களில் தலை சிறந்தவனே -மிகக் கடுமையான உருவத்தை உடைய தேவரீர் என்ன செய்ய விரும்புகிறீர் –
என்று ஆதி காரணனான தேவரீரைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன் –
நீர் செய்ய விரும்புவற்றை அறிகிறேன் அல்லேன் -எனக்கு அதைச் சொல்லுவீராக
உமக்கு எனது வணக்கம் உரித்தாகுக -அருள் புரிவீராக
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய—த்வமஸ்ய பூஜ்யஸ்ச குருர் கரீயாந்.—
ந த்வத் ஸமோஸ்த்யப்யதிக குதோந்யோ–லோக த்ரயேப்யப்ரதிமப்ரபாவ—৷৷11.43৷৷
ஒப்பற்ற பெருமை யுடையவனே-இந்த அசைவனவும் அசையாதனவும் அடங்கிய உலகுக்கு தந்தை யாகிறாய்
ஆகையாலே இவ்வுலகிற்கு வழி படத் தக்கவனும் ஆகிறாய்
தந்தையை விடச் சிறந்தவனாக ஆச்சார்யரும் ஆகிறாய்
மூ உலகிலும் கருணை முதலான எந்த குணத்தாலும் உன்னை ஒத்தவன் வேறு ஒருவனும் இல்லை
உன்னைக் காட்டிலும் மேற்பட்டவன் எப்படி இருக்க முடியும்
தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயம் –ப்ரஸாதயே த்வாமஹ மீஸமீட்யம்.–
பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யும் –ப்ரிய ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்—৷৷11.44৷৷
முன் கூறிய காரணத்தினால் அனைவரையும் நியமிப்பவனும் ஸ்துதிக்கத் தக்கவனுமான உன்னை
நான் வணங்கி உடலை ஒடுக்கி நின்று அருள வேண்டுகிறேன் –
தேவனே -தந்தை மகனுடைய குற்றத்தைப் போலவும் -தோழன் தோழனுடைய குற்றத்தைப் போலவும் –
எனக்கு இனியனான நீ உனக்கு இனியவனான என்னுடைய குற்றம் அனைத்தையும் பொறுத்து அருள வேணும்
அதனாலே -உடம்பை சுருக்கி கை ஏந்தி பிரார்த்திக்கிறேன் —
நாஹம் வேதைர்ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா–.
ஸக்ய ஏவம் விதோ த்ருஷ்டும் த்ருஷ்டவாநஸி மாம் யதா—৷৷11.53৷৷
பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப—৷৷11.54৷৷
எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி
நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால்
அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்
வேதத்தாலோ தபஸாலோ –யாகங்களாலும் முடியாதே -பக்தி ஒன்றை தவிர -அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் –
பக்தி இல்லாத வேதம் தபஸ் யாகம் தானம் மூலம் அடைய முடியாதே
பக்தி ஒன்றாலே முடியும் -எதிரிகளை தப்பிக்க செய்பவன் -பரந்தப –
அறிய பார்க்க அடைய -உண்மையாக -இந்த உருவத்தை பார்க்க பக்தி ஒன்றே –
பர பக்தி பர ஞானம் பரம பக்தி ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள் –
ஸம்ஸார ஸர்ப்ப சந்தஷ்ட நஷ்ட சேஷ்ட ஏக பேஷஜம்
கிருஷ்ணேதி வைஷ்ணவம் மசந்த்ரம் ஸ்ருத்வா முக்தோ பவேத் நர
————–
12– ஸ்ரீ பக்தி யோகம்:
ஸ்ரீ பகவாநுவாச-
மய்யாவேஸ்ய மநோ யே மாம் நித்ய யுக்தா உபாஸதே.–
ஸ்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா—৷৷12.2৷৷
ஸ்ரீபகவாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்கிறான்
மயி = என்னில்
ஆவேஷ்ய = முழுவதும் ஆழ்ந்து
மநோ = மனம்
யே = அவர்கள்
மாம்= என்னை
நித்யயுக்தா = எப்போதும் என்னை நினைத்து
உபாஸதே = உபாசனை செய்து
ஸ்ரத்தயா = சிரத்தையுடன்
பரயோ = உயர்ந்த
உபேதாஸ்தே = கூடியவர்களாக
மே யுக்ததமா மதா: =என்னால் யோகிகளில் சிறந்தவர்களாக கொள்ளப் படுவர்
தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்—-
பவாமி நசிராத் பார்த்த மய்யா வேஸித சேதஸாம்—৷৷12.7৷৷
தேஷாம் = அவர்களை
அஹம் = நான்
ஸமுத்தர்த = கரை ஏற்றுகிறேன்
ம்ருத்யு = மரணம்
ஸம்ஸார = மாறும், தொடர்ந்து செல்லும்
ஸாகராத் = விழுங்கும், கடல்
பவாமி = நான்
நசிராத் = வேகமாக
பார்த்த = பார்த்தனே
மய்யா = என்னை
அவேஸித = அடைகிறார்களோ
சேதஸாம் = மனதால்
யே து தர்ம்யாம் ருதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே.–
ஸ்ரத்ததாநா மத் பரமா பக்தாஸ் தேதீவ மே ப்ரியா—৷12.20৷৷
யே = அவர்கள்
து = மேலும்
தர்ம்யாம்ருத = தர்மம் என்ற அமிர்தத்தை
இதம் = இந்த
யதோக்தம் = இங்கே சொல்லப் பட்ட
பர்யுபாஸதே = பரி + உபாசதே = வழிபட்டு
ஸ்ரத்த தாநா = நம்பிக்கையுடன்
மத்பரமா = என்னையே பரமாகக் கொண்டு
பக்தாஸ் = பக்தர்கள்
தே = அவர்கள்
அதீவ = மிக அதிகமான
மே = அவன்
ப்ரியா: = பிரியமானவன்
———-
சரம ஷட்கம்
கீதா ஸூ கீதா கர்தவ்ய கிம் அந்யகி சாஸ்த்ர சங்க்ரஹி —
யா ஸ்வயம் பத்ம நாபஸ்ய முக பத்மத் வினிஸ்ரயா —
ஸ்ரீ கீதை இனிமை -ஸ்ரீ கீதாச்சார்யன் தானே சோதி வாய் திறந்து அருளிச் செய்தது –
இத்தை அறிந்தால் வேறே சாஸ்திரம் அறிவு வேண்டாமே –
பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம்
கர்ம தீர் பக்திரித்யாதி பூர்வ சேஷோஅந்தி மோதித –4-
பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம் -மூல பிரகிருதி ஜீவன் -பிரக்ருதியி இருந்து உண்டாகும்
மஹான் போன்றவை -சர்வேஸ்வரன் -பற்றியும் –
கர்ம தீர் பக்திரித்யாதி -பூர்வ சேஷோஅந்தி மோதித –கர்ம ஞான பக்தி யோகங்களில் எஞ்சி உள்ளவற்றையும்
முதல் மூன்றால் -தத்வ ஞானம் விசாரம் / அடுத்த மூன்றால் அனுஷ்டானம் பண்ணும் முறைகள் –
சொல்லி முடித்ததும் பெரிய சோகம் -அர்ஜுனனுக்கு -ஆராய்ந்து பார் -சரியானதை பண்ணு பொறுப்பை தலையில் போட்டான் –
கீழே ஒன்றும் அறியாத சோகம் அங்கு -இங்கு இவன் பெருமையை அறிந்த பின்பு வந்த சோகம் –
சரம ஸ்லோகம் சொல்லி -சோக நிவ்ருத்தி
தேஹ ஸ்வரூபம் ஆத்மாப்தி ஹேது ஆத்ம விசோதநம்
பந்த ஹேதுர் விவேகஸ்ஸ த்ரயோதச உதீர்யதே –17-
1-தேஹ ஸ்வரூபம் -தேகத்தின் இயற்க்கைத் தன்மை
2-ஆத்மாப்தி ஹேது -ஆத்மா அடையும் உபாயம் -20–ஆத்ம குணங்கள் விளக்கி –
3-ஆத்ம விசோதநம் -ஆத்ம விசாரம் -ஆராய்ச்சி
4-பந்த ஹேதுர் -ஆத்ம பந்த காரணம்
5-விவேகஸ்ஸ -பகுத்து அறிதல் –
——————————————
13—ஸ்ரீ க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்:
ஸ்ரீ பகவாநுவாச
இதம் ஸரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபிதீயதே–
ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு க்ஷேத்ரஜ்ஞ இதி தத்வித—-৷৷13.2৷৷
குந்தியின் செல்வனான அர்ஜுனா -வெளியில் காணப்படும் இந்த உடல் க்ஷேத்ரம் என்று சொல்லப் பெறுகிறது –
இந்த சரீரத்தை எனது என்று எவன் அறிகிறானோ அவனை ஷேத்ரஞ்ஞன் என்று
ஆத்ம தத்துவத்தை உணர்ந்தவர்கள் கூறுகின்றார்கள்
க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வ க்ஷேத்ரேஷு பாரத–
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞயோர் ஜ்ஞாநம் யத்தஜ் ஜ்ஞாநம் மதம் மம–৷৷13.3৷৷
க்ஷேத்ரஜ்ஞம் = க்ஷேத்ரம் பற்றிய ஞானம்
சா = மேலும்
அபி = அது அன்றியும்
மாம் = நான்
வித்தி = அறிவாய்
ஸர்வ க்ஷேத்ரேஷு = அனைத்து க்ஷேத்ரங்களிலும்
பாரத = பரத வம்சத்தவனே
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ ஓர் = க்ஷேத்ரம் மற்றும் அதை அறிபவனும்
ஜ்ஞாநம் = ஞானம்
யத் = அந்த
தஜ் = அது
ஜ்ஞாநம் = ஞானம்
மதம் = கொள்ளப்பட்டது
மம = என்னால்
ஐந்து ஸ்லோகங்களால் -20-குணங்கள் –
1-அமானித்வம் மரியாதை உடன் பெரியோர் இடம் -மானம் உடையவன் மாநி-
கிம் கரோ -பெருமாள் விசுவாமித்திரர் –வயோ வ்ருத்தர் திருவடிகளில் தலையை வைத்து
2-அடம்பித்தவம் தம்பம் இல்லாமை -எல்லாம் அவன் சொத்து தானே
3-அஹிம்சா -பூதங்கள் மேல் வாக்காலும் மனசாலும் கரணங்களாலும்-பிள்ளை பிள்ளை ஆழ்வான் -கூரத் தாழ்வான் சம்வாதம் –
மானஸ பாகவத அபசாரம்-யாருக்கும் தெரியாமல் -ராமானுஜர் இடம் சமர்ப்பித்தால் அடையலாம் –
4-ஷாந்தி-கலங்காமல் பொறுத்து –
5-ஆர்ஜவம்-முக்கரணங்கள் நேர்மை –
6-ஆச்சார்ய உபாசனம்-கைங்கர்யம்
7-க்ஷவ்சம் -சுத்தி முக்கரணங்களாலும்-வர்ணாசிரமம் விடாமல் –
8-ஸ்தைர்யம்–கலங்காமல் -உறுதியாக -அசஞ்சலமான பக்தி வேண்டுமே
9-ஆத்ம விநிக்ரஹம் -மனஸ் அடக்கம் –
10–இந்திரியங்கள் ஓடுவதை இழுத்து வைராக்யம் வளர்த்து -சப்தாதிகளில் வைராக்யம்–
11-அஹம் அல்லாத தேகத்தை அஹமாக நினைக்காமல் —
12-ஜன்மா இறப்பு மூப்பு வியாதி துக்க தோஷ தர்சனம்
13–அசக்தி -பற்று அற்ற தன்மை -ஆத்ம விஷயத்தை தவிர வேறு ஒன்றிலும் ஆசை இல்லாமை
14–புத்ரன் தாரம் வீடு இவற்றில் மிகுந்த ஆசை வைக்காமல்-இவை அநித்தியம் –
நித்தியமான உறவு -கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாய் தந்தை அவனே
ஆத்ம சிந்தனை பண்ணும் உறவினர்கள் இடமே பற்று வைத்து – கர்ணன் விபீஷணன் வாசி உண்டே –
15–நித்தியமாக சம சித்தம் இஷ்டங்கள் அநிஷ்டங்கள் -ஹர்ஷ கோபம் இல்லாமல்
16–அவன் இடமே அநந்ய அசையாத பக்தி செலுத்தி
17–தனிமையிலே இருக்கும் ஆசை கொண்டு சிந்தனைக்கு ஏற்ற
18–ஜனக் கூட்டங்கள் கண்டாலே ஓடி -பாம்பை கண்டால் போலே
19-ஆத்ம சிந்தனம் ஈடுபாடு
20— தத்வ ஞானம் தியானம் சிந்தனை –
இவையே ஞானம்-மற்றவை எல்லாம் அஞ்ஞானங்கள்
இதி க்ஷேத்ரம் ததா ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத–
மத் பக்த ஏதத் விஜ்ஞாய மத் பாவா யோப பத்யதே–৷৷13.19৷৷
இதி = இதுவே
க்ஷேத்ரம் = க்ஷேத்ரம்
ததா = அதே போல
ஜ்ஞாநம் = அறிவு
ஜ்ஞேயம் = அறியப்படுவது
ச = மேலும்
உக்தம் = சொல்லப்படுவது
ஸமாஸத:= தொகுத்து கூறினேன்
மத் பக்த = என் பக்தன்
ஏதத் = இந்த
விஜ்ஞாய = அறிந்த பின்
மத்³பா⁴வாய = என் தன்மையை
உபபத்யதே = அடைகிறான்
அநாதி த்வாந் நிர் குணத்வாத் பரமாத்மாயமவ்யய–
ஸரீரஸ்தோபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே–৷৷13.32৷৷
அநாதித்வாந் = தோற்றம் இல்லாமல்
நிர்குணத் வாத் = குணங்கள் இல்லாமல்
பரமாத்மா = பரமாத்மா
அயம் = அவன்
அவ்யய: = மாற்றமில்லாமல்
ஸரீர ஸ்த = சரீரத்தில் நிலை பெற்று இருந்தாலும்
அபி = மேலும்
கௌந்தேய = குந்தி மைந்தனே
ந கரோதி = அவன் செயல் படுவது இல்லை
ந லிப்யதே = பற்று கொள்வதும் இல்லை . அவன் மேல் கறை படிவதும் இல்லை
யதா ஸர்வ கதம் ஸௌக்ஷ்ம்யாதாகாஷம் நோபலிப்யதே–
ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே–৷৷13.33৷৷
யதா = அப்படி
ஸர்வகதம் = எங்கும் இருந்தாலும்
ஸௌக்ஷ்ம்யாத் = சூக்க்ஷுமமாய் இருப்பதால்
ஆ காஸம் = ஆகாசம்
ந பலிப்யதே = கரை படாமல் இருப்பது போல
ஸர்வத்ர = எங்கும்
ஆவஸ்தித = இருப்பினும்
தேஹே = தேகத்தில்
ததா = அதே போல
ஆத்மா = ஆத்மாவும்
ந பலிப்யதே = கரை படிவது இல்லை
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞயோரேவம் அந்தரம் ஜ்ஞாந சக்ஷுஷா–
பூத ப்ரக்ருதி மோக்ஷம் ச யே விதுர்யாந்தி தே பரம்–৷৷13.35৷৷
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞயோ = க்ஷேத்ரம் மாறும் க்ஷேத்ரன்ஞன்
எவம் = அப்படியாக
அந்தரம் = வேறுபாடுகளை
ஜ்ஞாந சக்ஷுஷா = ஞானக் கண்ணால் காண்பார்களோ
பூத ப்ரக்ருதி மோக்ஷம் = பிரக்ரிதியில் இருந்து மோக்ஷம் அடைகிறார்கள்
ச = மேலும்
யே = அவர்கள்
விது= அறிகிறார்கள்
யாந்தி = அடைகிறார்கள்
தே = அவர்கள்
பரம் = உயர் நிலையை
————–
14—-ஸ்ரீ குண த்ரய விபாக யோகம்:
குண பந்த விதா தேஷாம் கர்த்ருத்வம் தந் நிவர்த்தனம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம் சதுர்தச உதீர்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -18-
குண பந்த விதா -முக்குணங்களால் கட்டுப்பட்டு
தேஷாம் கர்த்ருத்வம் -இவற்றுக்கே கர்த்ருத்வம் -ஆத்மாவுக்கு இல்லை
தந் நிவர்த்தனம் -தாண்டி நிற்கும் உபாயம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம்–ஐஸ்வர்யம் கைவல்யம் பகவத் லாபார்த்தம் மூன்றுக்கும் தன் திருவடியே -பிராசங்கிக்கமாக –
இதம் ஜ்ஞாந முபாஸ்ரித்ய மம ஸாதர்ம்ய மாகதா–
ஸர்கேபி நோப ஜாயந்தே ப்ரலயே ந வ்யதந்தி ச–৷৷14.2৷৷
ஸ்ரீ பகவான் கூறுகிறார் -முன் கூறியதை விட வேறுபட்டதாய் அறிவுகளில் சிறந்ததாக அறிவைப்
பற்றி மறுபடியும் உரைக்கப் போகிறேன் –
எந்த அறிவைப் பெற்று எல்லா முனிவர்களும் இந்த சம்சாரத்துக்கு அப்பால் பட்டதான பேற்றைப் பெற்றனரோ –
சொல்லபோகும் அறிவைப் பெற்று என்னுடைய சாம்யத்தைப் பெற்றவர்
ஸ்ருஷ்ட்டி காலங்களில் பிறக்கவும் மாட்டார்கள் – பிரளய காலங்களில் ஞான சங்கோசாதிகளைப் பெற்று
சிரமப்படவும் மாட்டார்கள் –
உயர்ந்த அர்த்தம் மறுபடியும் சொல்கிறேன் – -மிக வேறு பட்ட உயர்ந்த -இதை அறிந்தே
எல்லா முனிவர்களும் சம்சாரம் தாண்டி ஆத்ம பிராப்தி மோக்ஷம் அடைந்தார்களோ அத்தை உன்னிடம்
அன்பினால் சொல்கிறேன் -முனி மனன சீலர் -இது நானே சொன்னது இல்லை -சர்வே முனிகளும் –
ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச–
ப்ரமாத மோஹௌ தமஸோ பவதோஜ்ஞாநமேவ ச—৷৷14.17৷৷
ஸத்த்வாத் = சத்வ குணம்
ஸஞ்ஜாயதே = உடன் பிறக்கிறது
ஜ்ஞாநம் = ஞானம்
ரஜஸோ = ரஜோ குணம்
லோப = பேராசை
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
ப்ரமாத = மயக்கமும்
மோஹௌ = குழப்பமும்
தமஸோ = தமோ குணத்தின்
பவதோ = ஒன்றாகிறது
அஜ்ஞாநம் = அறிவீனம்
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
ஸம துக்க ஸுக ஸ்வஸ்த ஸமலோஷ்டாஸ்ம காஞ்சந–
துல்ய ப்ரியாப்ரியோ தீரஸ் துல்ய நிந்தாத்ம ஸம் ஸ்துதி–৷৷14.24৷৷
ஸம துக ஸுக = துக்கத்தையும் இன்பத்தையும் சுகமாக பார்ப்பான்.
ஸ்வஸ்த = தன்னிறைவு கொண்டான்
ஸம லோஷ்டாஸ்ம காஞ்சந: = மண்ணாங் கட்டியையும் தங்கத்தையும் ஒன்றாகப் பார்ப்பான்
துல்ய ப்ரிய அப்ரியோ = மனதிற்கு பிடித்ததையும் பிடிக்காததையும் ஒரே அளவாக பார்ப்பான்
தீர = உறுதியுடன் இருப்பான்
துல்ய நிந்தாத்ம ஸம் ஸ்துதி: = நிந்தனையையும் புகழ்ச்சியையும் ஒன்றாகப் ஏற்றுக் கொள்வான்
மாநாபமாநயோஸ் துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ–
ஸர்வாரம்ப பரித்யாகீ குணாதீத ஸ உச்யதே৷৷14.25৷৷
மாநாபமாநயோஸ்துல்ய = மான அவமானங்களை ஒன்றாகக் கருதுவான்
ஸ்துல்யோ = ஒன்றாகக் கருதுவான்
மித்ராரிபக்ஷயோ: = நண்பனுக்கும் பகைவனுக்கும் இடையில்
ஸர்வாரம்பபரித்யாகீ = அனைத்து தொழில் முயற்சிகளையும் விடுத்து
குணாதீத: ஸ உச்யதே = குணங்களை கடந்தவனென்று கூறப்படுகிறான்
—————
15—ஸ்ரீ புருஷோத்தம யோகம்–
13 அத்தியாயத்தில் சரீரம் ஆத்மா ஸ்வரூப ஸ்வ பாவங்கள்
14-அத்தியாயத்தில் முக்குண வசத்தால் ஜீவனைக் கட்டி வைக்கின்றன -கடப்பது எவ்விதம்
தன்னிடம் பக்தி செய்து பரிசுத்த ஆத்மாவை அடைகிறான்
15-அத்தியாயத்தில் –புருஷோத்தம வித்யை உபதேசம்
சம்சார மரம் வெட்ட அஸங்கம்-நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்க்க அவனையே கால் கட்டி அவன் அருளாலேயே பெற வேண்டும் –
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநம் ச–
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–৷৷15.15৷৷
ஸர்வஸ்ய = அனைத்திலும்
ச = மேலும்
அஹம் = நான்
ஹ்ருதி = இதயமாக
ஸந்நிவிஷ்டோ = அமர்ந்து இருக்கிறேன்
மத்த: = என்னில் இருந்து
ஸ்ம்ருதிர் = வேதங்கள்
ஜ்ஞாநம் = ஞானம்
அபோஹநம் = எடுத்துச் செல்வது, மறப்பது
ச = மேலும்
வேதை³ஸ் = வேதங்களும்
ச = மேலும்
ஸர்வை = அனைத்திலும்
அஹம் = நான்
ஏவ = நிச்சயமாக
வேத்யோ = அறிந்து கொள்ள , புரிந்து கொள்ள
வேதாந்த க்ருத் = வேதாந்தங்களை செய்பவன்
வேத விதே = வேதாந்தங்களை அறிந்து கொள்பவன்
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
அஹம் = நான்
மேல் ஐந்து ஸ்லோகங்களால் புருஷோத்தம வித்யை உபதேசம்
யோ மாமேவ ஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம்–
ஸ ஸர்வவித் பஜதி மாம் ஸர்வ பாவேந பாரத–৷৷15.19৷৷
யோ = எவன் ஒருவன்
மாம் = என்னை
ஏவம்மே = அப்படியாக
அஸம்மூடோ = குழப்பம் இன்றி, தடுமாற்றம் இன்றி
ஜாநாதி = அறிகிறானோ
புருஷோத்தமம் = புருஷோத்தமன் என்று
ஸ = மேலும்
ஸர்வவித் = அனைத்தும் அறிந்தவன்
பஜதி = வணங்குகிறான்
மாம் = என்னை
ஸர்வ = அனைத்து
பாவேந =நிலைகளிலும்
பாரத = பாரத வம்சத்தில் பிறந்தவனே
இதி குஹ்ய தமம் ஸாஸ்த்ர மிதமுக்தம் மயாநக–
ஏதத் புத்த்வா புத்திமாந் ஸ்யாத் க்ருத க்ருத்யஸ்ச பாரத–৷৷15.20৷৷
இதி = இதுவே
குஹ்யதமம் = இரகசிய ஞானம். மறை பொருள்
ஸாஸ்த்ரம் = சாஸ்திரம்
இதம் = இது
யுக்தம்மு = சொல்லப்பட்டது
மயா = என்னால்
அநக = பாவம் இல்லாதவனே
ஏதத் = இதுவே
புத்த்வா = அறிந்தவன்
புத்திமான் = அறிவுள்ளவன்
ஸியாத் = அவனால்
க்ருத க்ரித்யஸ் = அவனால் செய்யத்தக்கது செய்வோன்
ச = மேலும்
பாரத = பாரத குலத்தவனே
—————
16–ஸ்ரீ தேவாஸூர விபாக அத்யாயம் —
தைவ ஸம்பத் உள்ளவனுக்கு 26 குணங்கள் முதல் மூன்று ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறான்
அஹிம்ஸா பிரதமம் புஷ்ப்பம் புஷ்ப்பம் இந்திரிய நிக்ரஹ ஸர்வ பூத தயா புஷ்ப்பம் ஷமா புஷ்ப்பம் விசேஷத
ஞானம் புஷ்ப்பம் தபஸ் புஷ்ப்பம் த்யானம் புஷ்ப்பம் ததை வ ச ஸத்யம் அஷ்டவித புஷ்ப்பம் விஷ்ணோ ப்ரீதி கரம் பவேத்
ஸத்யம் -விகாரம் இன்றி இருப்பவன்
தாநஹம் த்விஷத க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்–
க்ஷிபாம் யஜஸ்ரமஸுபா நாஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷
முன் கூறியபடி என்னை த்வேஷிப்பவர்களாய் -கொடியவர்களாய் -மனிதரில் கடையானவர்களாய் –
அமங்களமானவர்களான அவர்களை நான் இடைவிடாமல் பிறப்பு இறப்பு மூப்பு முதலானவை மாறி மாறி வரும்
பிறவிகளில் அதிலும் ஆஸூரப் பிறவிகளிலேயே தள்ளுகிறேன் –
என்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்
7- அத்யாயம் ஆஸூரம் பாவம் நால்வர் பற்றி சொன்ன நால்வரையே இங்கும்
தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதௌ–
ஜ்ஞாத்வா ஸாஸ்த்ர விதா நோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி–৷৷16.24৷৷
ஆகையால் உனக்குக் கைக் கொள்ளத் தக்கது இது கைக் கொள்ளத் தகாதது இது என்று நிர்ணயிப்பதில்
வேதமே ப்ரமாணமாகும்- ஆகையால் சாஸ்திரங்களில் சொல்லப்படும் தத்துவத்தை உள்ளபடி அறிந்து
இக் கர்ம பூமியில் அக் கர்மத்தையும் அந்த தத்வ ஞானத்தையும் நீ கைக் கொள்ளத் தக்கவனாகிறாய் –
ஆகையால் சாஸ்திரம் பிரமாணம் -ப்ரஹ்மம் உள்ளபடி -தெரிவதற்கும் உபாயம் அனுஷ்ட்டிக்கவும்
சாஸ்த்ர தத்வம் நானே உபாயமும் நானே -கர்மங்களை சாஸ்திரம் படி செய்ய யோக்யதை பெற்று
உயர்ந்த ப்ராப்யமான என்னை அடைவாய்
ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை ஆஜ்ஞா யஸ்தா முல்லங்க்ய வர்த்ததே
ஆஜ்ஞாச்சேதீ மம த்ரோகீ மத் பக்தோ அபி ந வைஷ்ணவ -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
————–
17-ஸ்ரீ ஶ்ரத்தா த்ரய விபாக யோகம்–
ஸாஸ்த்ர விஹித கர்மங்கள் ஸத்வம் ரஜஸ் தமஸ் -மூன்று குணங்களுக் சேர மூன்று விதமாய் இருக்கும் –
அன்ன மயம் ஹி சோம்ய மனம்
ஆகார ஸூத்தவ் ஸத்வ ஸூத்தி
ஸாத்விக ஆகாரத்தால் -ரஸம் ரத்தம் -மாம்சம் -மேதஸ் எலும்பு மஜ்ஜை ஸூ க்லம்-ஏழு தாதுக்களும் நிலை பெற்று விளங்கும்
காயிக வாசக மானஸ தபஸ்ஸூக்களை யும் பற்றி அருளிச் செய்கிறான்
தத் -ப்ரஹ்மம்
சத் -உள்ளது
சாது -மங்களம்
ப்ரணவத்துக்கு எல்லாவற்றுக்கும் தொடர்பு உண்டே
ஸத்பாவே ஸாதுபாவே ச ஸதித்யேதத் ப்ரயுஜ்யதே–
ப்ரஸஸ்தே கர்மணி ததா ஸச்சப்த பார்த்த யுஜ்யதே–৷৷17.26৷৷
குந்தீ புத்திரனே சத் என்னும் இச்சொல் இருக்கும் பொருள் என்னும் அர்த்தத்திலும் – நல்ல பொருள் என்னும் அர்த்தத்திலும்
உலகிலும் வேதங்களிலும் வழங்கப்படுகிறது – அவ்வண்ணமே நல்ல லௌகிக கர்மா விஷயங்களிலும்
சத் என்னும் சொல் வழங்கப் படுகிறது
சத் சப்தம் -லோகத்தில் சத் உணவு சத் பிள்ளை இருக்கிறது -சத் நன்றாக இருக்கிறது என்ற அர்த்தமும் உண்டே –
நல்ல லௌகிக கர்மங்களும் சத் சப்தம் சொல்வர் -சத் பிரயோகம் எதற்கு இந்த ஸ்லோகம்
யஜ்ஞே தபஸி தாநே ச ஸ்திதி ஸதிதி சோச்யதே–
கர்ம சைவ ததர்தீயம் ஸதித்யேவாபி தீயதே–৷৷17.27৷৷
யாகத்திலும் தவத்திலும் தானத்திலும் மூ வர்ணத்தவர்கள் நிலை நிற்பதும் சத் என்று சொல்லப்படுகிறது –
அந்த மூ வர்ணத்தவர்களுக்காகவே ஏற்பட்ட யஜ்ஞம் தானம் முதலான கர்மமும் சத் என்றே சொல்லப்படுகிறது
யஜ்ஜம் தானம் தாபஸ் -சத் சொல்லி செய்கிறார்கள் சத் ஓம் சேர்ந்தே -ஓம் பொது தானே -கர்மத்தை –
லௌகிக பலத்தை ஆசைப்பட்டு ஓம் சத்
அஸ்ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ் தப்தம் க்ருதம் ச யத்–
அஸதித்யுச்யதே பார்த்த ந ச தத் ப்ரேத்ய நோ இஹ–৷৷17.28৷৷
குந்தீ புத்திரனே -ஸ்ரத்தை இல்லாமல் செய்யப்படும் யாதொரு ஹோமமும் தானமும் யாதொரு தவமும் அனுஷ்ட்டிக்கப்படுகிறதோ –
அது – அசத் -என்று சொல்லப்படுகிறது – மோக்ஷத்தின் பொருட்டும் ஆவது இல்லை –
இவ்வுலகப் பலங்களின் பொருட்டும் ஆவதில்லை
அஸ்ரத்தையால் -இங்கு தான் இவன் கேள்விக்கு நேராக பதில் -சாஸ்த்ர விதி -இருந்தும் ஸ்ரத்தை இல்லா விடில் பலன் இல்லையே –
இது வரை ஸ்ரத்தையால் பண்ணினாலும் சாஸ்திரம் விதிக்கா விடில் வீண்
ஸ்ரத்தை இல்லா விடில் சத்தாகும் -மோக்ஷம் கொடுக்காது இந்த லோக ஐஸ்வர்யமும் கிடையாது -நோ இஹ -பிரத்ய –
—————-
18-ஸ்ரீ மோக்ஷ உபதேச யோகம்:
ஸாத்விக ராஜஸ தாமஸ தியாகங்கள்
ஜீவனுடைய கர்த்ருத்வம் பரமாத்மாவாலேயே நியமனம்
பராத்து தச் ஸ்ருதே -2-3-40-
ஸாத்விக ராஜஸ தாமஸ புத்திகள்
வர்ணாஸ்ரம தர்மங்கள்
நாராயண ஏக நிஷ்டஸ்ய யாயா சேஷ்டா தத் அர்ச்சனம்
யோ யோ ஜல்பஸ் ஸஜபஸ் தத் த்யானம் யன் நிரீக்ஷணம்
தத் பாதாம்ப்வதுலம் தீர்த்தம் தச் உச்சிஷ்டம் ஸூ பாவனம்
தத் யுக்தி மாத்ரம் மந்த்ர அர்க்யம் தத் ஸ்ப்ருஷ்ட மகிலம் ஸூசி –விஹகேந்த்ர ஸம்ஹிதை
ஸ்ரேயாந் ஸ்வ தர்மோ விகுண பரதர்மாத் ஸ்வநுஷ்டிதாத்–
ஸ்வபாவ நியதம் கர்ம குர்வந் நாப்நோதி கில்பிஷம்–৷৷18.47৷৷
சரீரத்தோடு கூடிய மனிதனுக்கு இயற்கையில் கை வரக்கூடிய உபாயமாய் இருக்கும் கர்ம யோகம் குறையுடையதாய்
இருந்தாலும் சில காலம் தனக்கு அனுஷ்ட்டிக்கப்பட்ட பிறருக்கு உரிய உபாயமான ஞான யோகத்தைக் காட்டிலும் சிறந்தது –
இயல்பாகவே பொருந்தி இருக்கும் கர்மத்தைச் செய்பவன் பாபத்தை பலமான சம்சாரத்தை அடைய மாட்டான்
வர்ணாஸ்ரமமே கர்ம யோகம் -14-வகை கீழே பார்த்தோம் தீர்த்த யாத்திரை போல்வன -பரிணமித்து பரம பக்தி வரை -உயர்ந்தது
தன் கர்மா உயர்ந்தது -குறைவாக செய்யப் பட்டாலும் இதுவே உயர்ந்தது –
பர தர்மம் ஞான யோகம் -நன்றாக அனுஷ்ட்டிடிக்கப் பட்டத்தை விட -இதுவே பழகியது —
ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே–
ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா–৷৷18.50৷৷
புத்த்யா விஸூத்தயா யுக்தோ த்ருத்யாத்மாநம் நியம்ய ச–
ஸப்தாதீந் விஷயாம் ஸ்த்யக்த்வா ராக த்வேஷௌ வ்யுதஸ்ய ச–৷৷18.51৷৷
விவிக்த ஸேவீ லக்வாஷீ யத வாக் காய மாநஸ–
த்யாந யோக பரோ நித்யம் வைராக்யம் ஸமுபாஸ்ரித–৷৷18.52৷
அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்–
விமுச்ய நிர்மமஸ் ஸாந்தோ ப்ரஹ்ம பூயாய கல்பதே–৷৷18.53৷৷
ப்ரஹ்ம பூத ப்ரஸந்நாத்மா ந ஸோசதி ந காங்க்ஷதி–
ஸமஸ் ஸர்வேஷு பூதேஷு மத் பக்திம் லபதே பராம்–৷৷18.54৷৷
குந்தீ புத்திரனே த்யான சித்தியை அடைந்தவன் எந்த உபாயத்தால் ப்ரஹ்மம் எனப்படும்
ஆத்ம ஸ்வரூபத்தை அடைவானோ
அந்த உபாயத்தை சுருக்கமாக என்னிடம் இருந்து கேட்பாயாக -அந்த ப்ரஹ்மம் எத்தகையது என்றால்
த்யான ரூபமான ஞானத்திற்குப் பரம ப்ராப்யமாய் இருப்பது அந்த ப்ரஹ்மமே
ஆத்ம தத்வ விஷயமான உண்மை அறிவோடு கூடியவனாய் – முன் கூறிய சாத்விக த்ருதியாலே
நெஞ்சை விஷயங்களில் இருந்து மீட்டு -சப்த ஸ்பர்ச ரஸ ரூப கந்தங்கள் ஆகிற புலன்களை விட்டு –
விருப்பு வெறுப்புக்களைக் கை விட்டு – த்யான விரோதிகளோடு தொடர்பு இல்லாத ஏகாந்தமான இடத்திலே
இருப்பவனாய் -அளவோடு உண்பவனாய் -மநோ வாக் காயங்களை தியானத்தில் ஈடுபடுத்தினவனாய் –
இறுதி வரையில் தினம் தோறும் த்யான யோகத்தை அனுஷ்டிப்பவனாய் –
ஆத்மா தவிர்ந்த விஷயங்களில் வைராக்கியத்தை வளர்ப்பவனாய் -தேகத்தில் ஆத்மா என்னும் அபிமானத்தையும்
அவ்வபிமானத்தை வளர்க்கும் வாசனா பலத்தையும் -அது காரணமாக வரும் கர்வத்தையும் -பேராசையையும் கோபத்தையும் –
உறவினரையும் கை விட்டு தன்னது அல்லாதது அனைத்திலும் தன்னது என்னும் நினைவு அற்றவனாய் –
ஆத்ம அனுபவத்தையே இனியதாகக் கொண்டவனாய்-த்யான யோகத்தைச் செய்பவன்
ஆத்மாவை உள்ளபடி அனுபவிக்கிறான் –
ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி கண்டவன் கலங்காத மனத்தை உடையவனாய் –
என்னைத் தவிர்ந்த வேறு எப்பொருளைப் பற்றியும் வருந்துவது இல்லை – வேறு ஒன்றை விரும்புவதும் இல்லை –
என்னைத் தவிர்ந்த மற்ற எல்லாப் பிராகிருதப் பொருள்களிலும் பற்று அற்று இருக்கையில் ஒத்தவனாய்
மேலான என் விஷயமான பக்தியை அடைகிறான் –
ஆத்மதியானத்துக்கு -சுருக்கமாக சொல்கிறேன் கேள் —
ஆத்ம சாஷாத்காரம் பற்றி -புத்தி -உண்மையான கலக்கம் அற்ற புத்தி சாத்விக த்ருதி
சப்தாதி விஷயாந்தரங்கள் -விருப்பு வெறுப்பு தொலைத்து -ஏகாந்தமான இடத்தில் -குறைந்த உணவு உண்டு
அடக்கப்பட்ட வாக்கு காயம் மனஸ்-த்யான யோகம் -நித்ய வைராக்யம் கொண்டு அஹங்காரம் பலம் வாசனை –
கர்வம் பேராசை கோபம் உறவுகளை விட்டு-நிர்மம -சாந்தமாக ஆத்மாவே இனியது ப்ரஹ்மம் ஆத்ம அனுபவம் பெறுகிறான் –
என்னை தவிர வேறு ஒன்றில் விருப்பம் இல்லாமல் -சம புத்தி கொண்டு என் பக்தியையும் பெறுகிறான் –
ஆத்ம சாஷாத்காரம் -உண்மை அறிவை பெற்று த்யானம் -பரமாத்மாவுக்கு சரீரம் சேஷ பூதன் நினைக்க நினைக்க -மாறுவான்
ஞான ஆனந்த மயன் விட சேஷத்வமே பிரதானம் -இது முதல் படி -பக்தியில் மூட்டும் –
என் விஷயமான உயர்ந்த பக்தியை அடைகிறான் -மனஸ் கலங்காமல் -என்னையே நினைத்து –
மற்றவை பற்றி நினைக்காமல் விரும்பாமல் -சமமாக ஜீவராசிகளை நினைத்து
எட்டு காரணங்கள்-
1-ஈஸ்வரன் என்று புரிந்து -ஆட்சி செலுத்துபன் அவனே —
2-காரண வஸ்துவை த்யானம் பண்ண சுருதிகள் சொல்லுமே -நிகில ஜகத் உதயலய லீலா –
3-நிரஸ்த நிகில தோஷ அகில ஹேய ப்ரத்ய நீக்கம் கல்யாண ஏக குணாத்மகம்-
பரம பாவ்யம் பவித்ராணாம் -மங்களங்களுக்கு இருப்பிடம்
4- அனவதிக அதிசய -இதம் பூர்ணம் -சர்வம் பூர்வம் –
5-அழகுக்கு குறை இல்லையே அம்ருத லாவண்ய சாகரம் அன்றோ
6-ஸ்ரீ யபதி -மூவர் ஆளும் உலகமும் மூன்று -நடுவாக வீற்று இருக்கும் நாயகன்
7-புண்டரீக நாயகன் -கீழே லாவண்யம் இங்கு ஸுந்தர்யம்-
அமலங்களாக விழிக்கும் -கமலக் கண்ணன் -தூது செய் கண்கள் -ஜிதந்தே புண்டரீகாஷா
8-ஸ்வாமி -இந்த காரணங்களால் –
தன்னடையே பரமாத்மா சிந்தனைக்கு கூட்டி செல்லும் -தேகமே எல்லாம் என்ற நினைவு மாறுவது தான் கஷ்டம் —
ஈஸ்வர ஸர்வ பூதாநாம் ஹ்ருத்தேஸேர்ஜுந திஷ்டதி–
ப்ராமயந் ஸர்வ பூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா–৷৷18.61৷৷
வாஸூ தேவன் எல்லா உயிர்களுக்கும் அறிவு உதயமாகும் ஹ்ருதயமாகிற இடத்தில்
ப்ரக்ருதி கார்யமான சரீரமாகிற யந்திரத்தில் ஏறி நிற்கும் எல்லா உயிர்களையும்
சர்வ ரஜஸ் தமோ குண மயமான மாயையால் அந்த குணங்களுக்கு அனுகுணமாக நடக்கச் செய்து கொண்டு நிற்கிறான்
நானே செய்வேன் என்றால் நீ தூண்டுகிறாய் என்று எதனால் சொன்னாய் -ஈஸ்வரன் -நியமிக்கிறவன் –
சர்வ ஜீவ ராசிகளுக்கு ஹிருதய பிரதேசம் -சிந்தனம் உதயம் ஆகும் இடம் -நானே உள்ளேன் —
இருந்து ஞானம் ஸ்மரணம் மறதி மூன்றையும் நானே செலுத்துகிறேன் முன்பே சொன்னேன் —
யந்த்ரம் -பிரகிருதி கார்யமான சரீரம் -அதில் ஏற்றி வைத்த ஆத்மா -மாயா சக்தியால் -முக்குணங்களில் ஈடுபடுத்தி –
முக்குணம் தகுந்த படி நடத்துகிறேன் -எத்தை செய்தாலும் என் ஆட்சியால் -சாமான்ய காரணம் பகவான் தான் –
விசேஷ கார்யம் கர்மா அன்றோ
மந் மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ் குரு–
மாமே வைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோஸி மே–৷৷18.65৷৷
என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக -அதிலும்
என்னிடத்தில் மிகவும் அன்புடையவனாக ஆவாயாக -அதிலும்
என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக
என்னை முக்கரணத்தாலும் வணங்குவாயாக
இப்படி அனுஷ்டிப்பதன் மூலம் என்னையே அடைவாய் -இது சத்யம் -உண்மை என்று உனக்கு ப்ரதிஜ்ஜை செய்கிறேன்
ஏன் எனில் எனக்கு நீ இனியவனாய் இருக்கிறாய் அன்றோ –
சத்யம் இட்டு ப்ரதிஞ்ஜை செய்து அன்றோ அருளிச் செய்கிறான் -நீ இனியவன் -என்னை அடைவாய் –
உனக்கு நல்லது பக்தி யோகம் தான் -இதற்கும் சோகப் பட்டான் -அதனால் மேல் ஸ்லோகம் –
முதலில் என்ன செய்ய வேண்டும் தர்மம் அதர்மம் மயக்கம் தாசன் சிஷ்யன்
கீழ் தேவன் அசுரர் விபாகம் கேட்டு சோகம் -இங்கு மூன்றாவது சோகம்
ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ–
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூச–৷৷18.66৷৷
எல்லா சாதனங்களையும் நன்கு விட்டு என் ஒருவனையே உபாயமாக அனுசந்திப்பாய்
நான் உன்னை எல்லாப் பாபங்களில் நின்றும் விடுக்கிறேன் -சோகப்படாதே
சோகப் படாதே –சரணாகதி விரிவாக கீழே பார்த்தோம் -என்னை ஒருவனையே பற்று-
சர்வ தடங்கலாக உள்ள எல்லா பாபங்களில் இருந்தும் விடுவிப்பேன் சோகப் படாதே –
பாபங்கள் இருந்ததே என்று தானே சோகப் பட்டு இருக்க வேண்டும் -பக்தி பண்ண -ஆரம்ப விரோதிகள் இருக்குமே
ஆரம்பிக்கவே முடியாதே –அதைக் கண்டு பயந்து சோகம் –
வர்ணாஸ்ரம கர்மங்கள் பண்ணிக் கொண்டே பலன்களை விட்டு -சர்வ தர்ம பல பரித்யாகம் -என்னையே கர்த்தா -ஆராதனாக பற்று -என்றவாறு –
இதம் தே நா தபஸ்காய நா பக்தாய கதாசந–
ந சாஸூஷ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோப்யஸூயதி–৷৷18.67৷৷
பரம ரஹஸ்யமாக என்னால் சொல்லப்பட்ட இந்த சாஸ்திரம் உன்னாலே
தவம் செய்யாதவனுக்குச் சொல்லப்படலாகாது
என்னிடமும் உன்னிடமும் பக்தி இல்லாதவனுக்கு ஒரு போதும் சொல்லப்படலாகாது
கேட்பதில் விருப்பம் இல்லாதவனுக்கு சொல்லப்படலாகாது
எவன் ஒருவன் என்னை துவேஷிக்கிறானோ அவனுக்கும் சொல்லப்படலாகாது
தபம் இல்லாதவனுக்கு சொல்லாதே –பக்தி இல்லாதவன் -ஆசை இல்லாதவன் -சொல்லாதே
அஸூயை உள்ளவனுக்கு சொல்லாதே –
திரௌபதி விரிந்த குழல் முடிப்பதே இவனுக்கு லஷ்யம் -அதனால்
ரஹஸ்யம்-ரத்னத்தை- முற்றத்தில் கொட்டி விட்டு பதண் பதண் என்கிறான் –
யத்ர யோகேஸ்வர க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தநுர்தர–
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம–৷৷18.78৷৷
எவ்விடத்தில் சிறப்புகளை எல்லாம் ஆளுபவனான கண்ணன் இருக்கிறானோ –
எவ்விடத்தில் வில்லை ஏந்திய அர்ஜுனன் இருக்கிறானோ -அவ்விடத்திலேயே
எல்லாச் செல்வமும் வெற்றியும் வைபவங்களை தர்மமும் நிலையாக உள்ளன -என்பது
எனது கருத்தாகும் என்று சஞ்சயன் கூறினான் –
முதல் கேள்விக்கு இங்கு பதில் -யார்க்கு வாழ்ச்சி -நேராக சொல்லாமல் எங்கு கண்ணனோ அர்ஜுனனோ அங்கே வெற்றி
காண்டீபம் தரித்த -யோகேஸ்வரன் சேர்த்தி இங்கு தான் வெற்றி நிச்சயம்
தர்மங்கள் வெற்றி வைபவம் செல்வம் இங்கு தான் இது என்னுடைய அபிப்ராயம் –
ஸ்ரீ கிருஷ்ண அனுக்ரஹம் தான் வெற்றி கொடுக்கும்
அது இல்லாமல் நீ கெட்டே போகிறாய் என்று த்ருதராஷ்ட்ரனுக்கு சொல்லி நிகமிக்கிறார்
ப்ரபன்னனுக்கு இருக்க வேண்டிய ஏழு லக்ஷணங்கள்
தேஹாத்ம அபிமான நிவ்ருத்தி
ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி
அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி
ஸ்வ யத்ன நிவ்ருத்தி
அபந்துஷு பந்துத்வ பிரதிபத்தி நிவ்ருத்தி
விஷய நிவ்ருத்தி
நமஸ்ஸின் யாதார்த்யமான பாகவத சேஷத்வம்
ஸ்ரீ கீதா ஸாஸ்த்ரம் இதம் புண்யம் ய படேத் ப்ரயத புமான்
விஷ்ணோ பதம் அவாப்நோதி பய சோகாதி வர்ஜித
ஸ்ரீ கீதா சாஸ்திரம் கேட்டால் தேர் கடாவிய கனை கழல் பெறப் பெறுவோம்
———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –