ஸ்ரீ:–மூன்றாவது–சொல்லணியியலுரை
https://www.tamilvu.org/node/154572?linkid=118853
————
மடக்கு
252.குறித்துரையெழுத்தின்கூட்டமுதன்மொழி
மறித்துமோர்பொருடரமடக்குதன்மடக்கே.
என்பது சூத்திரம்.
இவ்வோத் தென்னபெயர்த்தோவெனின், சொல்லானாமணிகளினியல்புணர்த்திற்றாதலாற் சொல்லணியியலென்னும் பெயர்த்து.
அஃதாக, இச்சூத்திர மென்னுதலிற்றோவெனின், பொதுவகையான் மடக்கென்னுமலங்கார முணர்-ற்று.
(இ-ள்) புலவனா லொருபொருள்குறிக்கப்பட்டுச் செய்யுளினிடத்துத் தொடரெழுத்தாற்சொல்லப்பட்ட முதன்மொழி
வருமொழியுமாய்ப் பெயர்த்துமொருபொருடருவதாகமடக்குவதூஉம் மடக்கென்னும் அலங்காரமா மென்றவாறு.
உம்மையாற் றொடரெழுத்துமொழியன்றி ஓரெழுத்தே பெயர்த்து மடக்குவதும் மடக்கேயா மென்றவாறு.
புலவன், பொருள், செய்யுள், வருமொழியென்பன சொல்லெச்சம். எழுத்தின்கூட்டமெனவே இரண்டு முதலாகிய வெல்லாவெழுத்துமெனக் கொள்க
253.அதுவே,
தொடர்பிடைவிடாதுந்தொடர்பிடைவிட்டு
மடைவினிலிருமையுமமைவனவாகியு
நடைபெறுமுப்பாற்றெனநவின்றனரே.
(எ-ன்) அம் மடக்கினதுபாகுபாடுணர்-ற்று.
(இ-ள்) அச்சொல்லப்பட்டமடக்கு, தம்மிற்றாந்தொடருத லிடைவிடாது மிடைவிட்டு முறையே யிரண்டு தன்மையும்
பொருந்துவனவாகியு மொருசெய்யுளகத்து நடக்கு மூன்றுபகுதியையுடைத்தென்று முதனூலாசிரியர் கூறின ரென்றவாறு.
எனவே இது வழி நூலென்பதுந் தமக்கு மதுவேகருத்தென்பதுங் கூறினாரெனக் கொள்க.
254.ஒன்றாதியவாவொருநான்களவுஞ்
சென்றுநடைபெறுஞ்சீர்த்ததற்கடியே.
(எ-ன்) இதுவும் அதனையே வகுத்துணர்-ற்று.
(இ-ள்) அதற்கு (அம்மடக்கிற்கு) அடிவரையறை நான்கடிச் செய்யுளுள்ளே நடக்குங்கால் ஓரடிமுதலாக
வீரடிக்கண்ணு மூன்றடிக் கண்ணு நான்கடிக்கண்ணு முன்னர்க்கூறியபடியே சென்று நடக்கு மழகினையுடைத் தென்றவாறு.
ஒருநான்களவுமென்றதனால் நான்கடிச்செய்யுளென்ப தாற்றலாற் போந்தபொருள். ஒருநான்களவுமென்னு மும்மை
முற்றும்மையெனக் கொள்க. அவற்றிற்கெல்லாஞ் செய்யுண் மேற்காட்டுதும்.
255. முதலிடைகடையேமுதலொடிடைகடை
யிடையொடுகடைமுழுதெனவெழுவகைத்தே.
(எ-ன்) இதுவு மதனையே வகுத்துணர்–ற்று.
(இ-ள்) அம்மடக்கு முதன்மடக்கும், இடைமடக்கும், கடைமடக்கும், முதலொடிடைமடக்கும், முதலொடுகடைமடக்கும்,
இடையொடுகடைமடக்கும், முற்றுமடக்கும் என முறையே எழுவகைப்படு மென்றவாறு. அம்மடக்கென்பது அதிகாரம்பற்றி விரிந்தது.
256.அவற்றுள்,
அடிமுதன்மடக்கோரைம்மூன்றாகும். (5)
257.இடைகடையவுமதனெண்ணிலைபெறுமே. (6)
258.உணர்வுறின்மடக்கிவையோரிடத்தனவே.
(எ-ன்) இவைமூன்றுசூத்திரமு மடிதொறு மோரிடத்தா மடக்கினது தானமு மெண்ணும் வரையறுத்துணர்-ற்று.
(இ-ள்) அங்ஙனங்கூறப்பட்ட வெழுவகைத்தானத்தினுள்ளும், அடிமுதன்மடக்குப் பதினைந்தாம்
இடைமடக்குங் கடைமடக்கு மென்னப்பட்ட விரண்டு மொரோவொன்று முன்னர்க்கூறிய அடிமுதன் மடக்குப்போலப்
பதினைந்து பதினைந்தென்னு மெண்ணினதுவரையறை நிலைபெறுமென்றவாறு
ஆராயுமிடத் திவைநாற்பத்தைந்து மோரிடத்து மடக்கென்பனவா மென்றவாறு.
அவையாவன முதலடிமுதன்மடக்கு, இரண்டாமடி முதன்மடக்கு, மூன்றாமடி முதன்மடக்கு,
நாலாமடி முதன்மடக்கு இவைநாலு மோரடியோரிடத்து முதன்மடக்கு
இனி, முதலிரண்டடியுமுதன்மடக்கு, முதலடியுமூன்றாமடியு முதன்மடக்கு, முதலடியுநாலாமடியுமுதன்மடக்கு,
கடையிரண்டடியு முதன்மடக்கு, இடையிரண்டடியு முதன்மடக்கு, இரண்டாமடியுமீற்றடியுமுதன்மடக்கு இவையாறுமீரடிமுதன்மடக்கு,
ஈற்றடியொழித் தேனைமூன்றடியுமுதன்மடக்கு, முதலயலடியொழித் தேனைமூன்றடியுமுதன்மடக்கு,
ஈற்றயலடியொழித் தேனைமூன்றடியு முதன்மடக்கு முதலடி யொழித்தேனைமூன்றடியுட் முதன்மடக்கு
இவைநாலு மூன்றடிமுதன்மடக்குநாலடிமுதன்முற்று மடக்குஆக விவைபதினைந்தும் அடிமுதன்மடக்கு.
இனி, அடியிடை மடக்கும், அடியிறுதிமடக்குமிவ்வண்ணமே பதினைந்து பதினைந்தாம்.
இவை நாற்பத்தைந்திற்கு முதாரண முன்னர்க்காட்டுதும்.
259.அடிதொறுமீரிடத்தனவாய்முதலொ
டிடைகடையிடைகடைகளினியன்றனவுந்
திதமுறநான்கறுபானெனச்சிவணி
யதனொடுமடக்கொருநூற்றைந்தாகும்.
(எ-ன்) அடிதொறு மீரிடத்தனவாமடக்கிற்கும், மூவிடத்தனவா மடக்கிற்குந் தானமும் வரையறையு முணர்–ற்று.
(இ-ள்) செய்யுளினடிதொறும் ஆதியொடிடை, ஆதியொடுகடை, இடையொடுகடை யென்றுசொல்லப்பட்ட
தானங்களி னீரிடத்தனவாய் நடந்தனவும், முத லிடை கடையென மூன்றிடத்து மடக்குவனவுமான
நாலுதானத்திலு முண்மையாக வறுபதென்று கூறும்படிக்குப் பொருந்தி முன்னர்க்கூறப்பட்ட வோரிடத்துமடக்கு
நாற்பத்தைந்தொடு மடக்கு நூற்றைந்தா மென்றவாறு.
இச்சூத்திரத்துண் முதலேவந்த முதலொடென்பதனை முதனிலைத் தீபகமாக்கி யிடைகடையென்னு மிரண்டினு மேற்றுக.
260.அவற்றுள்,
முதற்றொடைவிகற்பமேழொடுநான்கொடுந்
திதப்படவோரடியொழிந்தனசிவணும்.
(எ-ன்) இதுவு மத்தானங்களைத் தொடைவிகற்பங்களாற் கூறுபடுத்தி விரித்துணர்–ற்று.
(இ-ள்) அவற்றுள், (அங்ஙனங்கூறப்பட்ட வோரிடத்தனவு மீரிடத்தனவு மூவிடத்தனவுமாக மடக்குமவற்றுள்)
அடியொடு பொருந்தின முதற்றொடை விகற்பமென்னு மிணைமுதலாகிய வேழொடுங் கடையிணை, யிடையிணை,
முதற்கூழை, இரண்டாஞ்சீர் நான்காஞ்சீரொடு புணர்ந்த பின் னென்னு நான்கொடுங்கூடிப் பதினொரு
தொடைவிகற்பங்களொடுந் தெளிவுபெற வோரடியொழிந்தமடக்குகள் வருதலைப்பொருந்து மென்றவாறு.
261.இடைவிடாமடக்கிவையெனமொழிப.
(எ-ன்) இது தொடர்பிடைவிடாதுமென்றசூத்திரத்தினுள் மூன்று பாகுபடு மடக் கென்றவற்றுள், முதலேகூறியபாகுபா டுணர்-ற்று.
(இ-ள்) இங்ஙனங்கூறப்பட்ட நூற்றைந்துமே யிடைவிடாமடக் கென்றுகூறுவர் புலவரென்றவாறு.
இவற்றிற்கெல்லாஞ் செய்யுள் வருமாறு
மதியார்மதியார்வனைவேணியினான்
விதியாலிரந்ததனைமீட்ட–முதியானை
மாதவனையல்லான்மதிப்பரோபேரின்பத்
தாதரவுபூண்டவுளத்தால். (624)
இது முதலடி முதன்மடக்கு.
(இ-ள்) அறிவுடையோர், பிறையையும் ஆத்தித்தாரையுஞ்சூடின சடையையுடையான் பிரமசிரத்தையறுத்தகாரணத்தாற்
பிரமசிரத்தி லிரந்ததனைப்போக்கின முதன்மையுடையோனைப் பெரியபிராட்டிகொழுநனை யுள்ளத்தாற்றியானிப்பதன்றிப்
பரமபதத் தின்பத்தின்மே லாசை பற்றினவுள்ளத்தால் வேறொருகடவுளைத் தியானிப்பதில்லை யென்றவாறு.
வேறொருகடவுளரையென்பது சொல்லெச்சம். ஓகாரம் – எதிர்மறை. இதற்குப் புலவிர்காளென்னு
முன்னிலையெழுவாய் தோன்றாது நின்றதாக விரித்துரைக்க. மதிப்பரே யெனினுமாம். அதற்கு ஏகார மெதிர்மறை.
திணை – பாடாண். துறை – செவியறிவுறூஉகடவுள்வாழ்த்துமாம்.
அமுதமடப்பாவையாடகப்போதல்கக்
குமுதங்குமுதங்கொளுந்தீத்–தமியராய்த்
தாழ்ந்தார்தமையன்றித்தண்ணளிமால் *கள்வனிற்பொய்
சூழ்ந்தார்தமைவருத்தாதோ. (625)
இஃ திரண்டாமடி முதன்மடக்கு.
(இ-ள்) அமுதமடப்பாவை – திருமகள். ஆடகப்போது – பொற்றாமரை. அல்கல் – குவிதல்வறுமையெய்தலெனினுமாம்.
குமுதம் – ஆம்பல். குமுதங்கொளுந்தீ – மகிழ்ச்சியெய்துந்தீ. தீ – சந்திரன், தன்னைச் சுடுதலாற் றீயென்றாள்.
தமியராய்த்தாழ்ந்தார் – புமான்களை நீங்கி மெலிந்தார். பொய்சூழ்ந்தார் – பொய்சொல்லவு நினைந்தார்.
தமை வருத்தாதோ – அவர்தமை வருத்தாதோ வருத்திற்றாகில் நமது தலைவரும் வருவர். வாராமையால் வருத்தாதொழிந்த தென்றவாறு.
பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – நிலவுகண்டழுங்கல். இதற்குந் தோழீயென்பதனைத் தோன்றாதுநின்றதாக விரிக்க. ஓகாரம் வினா.
சிட்டர்பரவுந்திருமால்செழும்பொழில்சூ
1ழட்டபுயகரத்துளாயிழையார்க்–கிட்டிடைதான்
சித்திரமோசித்திரமோதெவ்வர்முரண்முருக்கு
மத்திரமோகண்ணென்பவை. (626)
இது மூன்றாமடிமுதன்மடக்கு.- இது அட்டபுயங்கமெனப்படும்.
(இ-ள்) சிட்டர் – தொண்டர். அட்டபுயகரம் – திருப்பதி. இட்டிடை – சிறியவிடை.
சித்திரமோ என்னுமிரண்டனுள், ஒன்று வெளிஒன்று பொய். பகுதி – இயற்கை. துறை – தகையணங்குறுத்தல்.
நன்காரிமாறனெனுநாவீறன்வண்குருகூர்
மன்கார்வரைமயிற்குமன்னவா–மென்கோங்
கரும்பாங்கரும்பாங்களபமுலையின்சொற்
சுரும்பாநயனத்துணை. (627)
* கள்வன் – திருக்கள்வனூர்.
இதுவுமது. பகுதி – பாங்கற்கூட்டம். துறை- பாங்கன் செவ்வி செப்பல்.
தெண்டிரைப்பார்போற்றுந்திருவெள்ளியங்குடியார்
தண்டுளபமார்பந்தழுவாநாள்–வண்டுளர்பூந்
தேனிலாய்நீண்டகுழற்சேயிழைதன்னாருயிரும்
வானிலாவானிலாவாம். (628)
இது நாலாமடிமுதன்மடக்கு.
(இ-ள்) வண்டுளர் – வண்டுகுடையும். பூந்தேனிலாய்நீண்டகுழல் – பூவிற்றே னிலைபெற்று நீண்ட குழல்.
சேயிழைதன்னாருயிரும் – சிவந்த பூணினையுடையாள்கேடில்லாவுயிரும்.
வானிலாவானிலாவாம் – விசும்பின் கண்ணுதிக்குமதியா லுடம்பின்கண் நில்லாததன்மையையுடைத்தா மென்றவாறு.
உயிரும் வானிலாவா னிலாவாம் என்பது நீருந் தன்பாலிருந்தன என்பதுபோல ஒருமையிற்பன்மை மயக்கம்.
திணை – பெருந்திணை. துறை – கண்டுகைசோர்தல். இவை நான்கும் ஓரடி முதன்மடக்கு.
நிலமனிலமன்னெடுவெளிதீநீரா
யலமனலமன்னமலன்–புலனைந்தும்
வென்றார்தொழுமால்விளங்குதிருவிண்ணகர
மென்றார்க்குமுண்டோவிடர். (629)
இது முதலிரண்டடியும் முதன்மடக்கு.
(இ-ள்) நிலமனிலமன்னெடுவெளிதீநீராய்-நிலமும் வாயுவும் நிலைபெற்ற பெரிய ஆகாயமுந் தீயு நீருமாகி.
அலமனலமன்னமலன் – நிறைவு பொருந்தின ஆனந்தமாக்கம்பெற்ற அழுக்கற்றவ னென்றவாறு.
திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்துநகரவாழ்த்துமாம்.
மாதவனின்மாதவனின்வன்றாட்டுகளணவு
போதவண்மெய்ச்சாபமதைப்போக்கினளப்–பாதமலர்ப்
பொற்போதிப்பொற்போதிப்பூதலத்திட்டஞ்சலிப்பா
ரிற்போதமிக்கவர்யார்யார். (630)
இது முதலடியும் மூன்றாமடியும் முதன்மடக்கு.
(இ-ள்) மாதவனில் – கௌதமபாரியையாகிய அகலிகை. மாதவனின் – திருமகள்காந்தனேநினது. வன்றாள்…
போக்கினள் – வலியதாளிற்பூழியைப் பரிசித்தகாலத்தக் கௌதமனாற் றனதுமேனிக் கெய்திய கற்படிவத்தைப்போக்கின ளாகையால்.
அப்பாதமலர்…………… பூதலத்திட்டு – அந்தத் திருவடித்தாமரைசெய்தபொலிவையேத்திப் பொன்போலுநிறத்தை
யுடையபூக்களை யிப்பூமியிலிருந் தத்திருவடிகளிற் சாத்தி.
அஞ்சலிப்பாரிற் போதமிக்கவர்யார்யார் – தியானித்து வணங்குவாரினும் ஞானமிகுந்தவரில்லை யென்றவாறு.
இன் – நீக்கம். அடுக்கு, துணிவின்கண்வந்தது.
மாதவனில் “மென்மைவரினேளலணனவா” மென்பதனால் லகாரந்திரிந்து னகார மாயிற்று.
மாதவன் – படர்க்கைமுன்னிலையாகிய இடமயக்கத்துவந்த அண்மைவிளி. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.
மறுகுமறுகுமலைவார்சடையான்விற்போன்
றிறுகுமுலைமேற்பசலையேறு–முறுதேந்
தெகிழ்மலர்ப்பாணத்தான்செருக்கடந்தமாறன்
மகிழ்மகிழ்த்தார்வேட்டாண்மனம். (631)
இது முதலடியும் நாலாமடியும் முதன்மடக்கு.
(இ-ள்) உறுதேம் – பரிமளமிகுந்ததேன். தெகிழ்மலர்…………. மாறன் – வழியாநின்ற பூவாளிகளையுடையானாகிய
காமனதுபோரை வென்ற காரிமாறப்பிரான்.
மகிழ்……….. மனம் – சூடுதற்குவிரும்பின வகுளமாலிகையை விரும்பின விவளுடையமனமானது.
மறுகு……….. யேறும் – ஊசலாடாநிற்கும்அதுவுமன்றி, அறுகினைப்புனைந்த நீண்ட சடையான்வில்லாகிய விமவானைப்
போலத் திண்ணிதாயமுலைமேற் பசலையும் பரவாநிற்கும்ஆதலா லெங்ஙன முயிர்வாழும், யாதோசெய லென்றவாறு.
திணை – பெருந்திணை. துறை – கண்டுகைசோர்தல்.
ஆயிரம்பெற்றானொருமூன்றைந்துற்றானாதியர்க்கு
மேயமுதல்வனெனுமெய்வேதம்–பாய்திரைப்பா
லாழியானாழியானஞ்சிறைப்புட்பாகனெனுங்
கோழியான்கோழியான்கோ. (632)
இது கடையிரண்டடியும் முதன்மடக்கு.
(இ-ள்) உண்மைவேதமானது, பரந்த திரையோடுங்கூடிய பாற்கடலையுஞ் சக்கிராயுதத்தையுமுடையனாகி யழகிய
சிறையையுடைய புட்பாகனெனுந் திருவுறையூர்மாதவனைக் கோழிக்கொடியானையும், கண்ணாயிரம் பெற்றானையும்,
ஒருமூன்றுபெற்றானையும், மூன்றுமைந்தும் பெற்றானையுமாதியாகவுடையார்க்கெல்லா மந்தர்யாமியாக வுள்ளே
பொருந்திய முதல்வனென்றுகூறாநிற்கு மென்றவாறு.
மெய்வேதங்கூறுமெனக் கூட்டுக. கோ – கண். கண்ணென்பதனை யாயிரமென்பது முதலாயவற்றிற்கு முதனிலைத் தீபகமாக்கியும்,
மூன்றென்பதனை மூன்று, மூன்றுமைந்து மென்னு மிரண்டிற்கு முதனிலைத் தீபகமாக்கியும்,
மூன்று மைந்துமென வும்மை தொக்கதாக விரித்தும் உரைக்க. கோழி – உறையூர். திணை – பாடாண். துறை – கடவுள் வாழ்த்து.
சலராசிமண்மேற்றவறிழையாஞான
மிலராயிலராயினுமா–மலரா
னனத்தானனத்தானருட்குருகூர்மாற
னெனத்தானணுகாதிடர். (633)
இஃ திடையிரண்டடியும் முதன்மடக்கு.
(இ-ள்) தவறிழையாஞானம் – தீங்கினைப்பயவா வுண்மைஞானம்.
இலராயிலராயினுமா மென்பது – ஞானமில்லாதவரா யில்லின்கண்வாழ் வாரேயாயினுமாக வென்றவாறு.
உம்மை – இழிவுசிறப்பும்மை.
மலரானனத்தானனத்தா னென்பது – தாமரைமலர்போன்ற திருமுகமண்ட லத்தையுடையான் அன்னவாகனத்தையுடையா னென்றவாறு.
அருட் குருகூர்மாறனெனத்தானணுகாதிடர் என்பது அருளொடுகூடிய திருக்குருகூர்க் காரிமாறப்பிரானென் றொருக்காற்கூறின
வரிடத்துத் துன்பமென்பது சிறிதுமணுகா தென்றவாறு. எனவே யணுகுவது பேரின்ப மென்பது பயன். துறை – இதுவுமது.
மாசரதந்தன்னைவழுத்தலெனுமன்பெனக்குத்
தாசரதிதாசரதிதன்னாமந்–தேசுபெறப்
பாடார்நினைந்திடார்பல்காலிவர்க்கெளிதோ
வீடாதவீடாதன்மேல். (634)
இஃ திரண்டாமடியும் நான்காமடியும் முதன்மடக்கு.
(இ-ள்) மாசரதந்தன்னை………. தாசரதி – பரதெய்வங்களைத் துதியாது தன்னைத்துதிப்பதே ஆன்மலாபமாகிய
பெரிய சதிர்ப்பாடென்றறிந்து தன்னிடத் தன்புறுதலைப் பேதையேனாகிய எனக்குந் தரப்பட்ட சதிர்ப்பாட்டையுடையவன்.
சாசரதிதன்னாமம் – தசரதன் பிள்ளையினது திருநாமமாகிய ராம வென்பதனை தேசுபெற……….
பல்கால் – நாவும் மனதும் விளக்கமெய்தப் பலகாலுஞ்சொல்லார், சிந்திப்பதுஞ்செய்யார்.
இவர்க்கெளிதோ வீடாதவீடாதன்மேல் – இவ்வறியாமையுடைய வித்தன்மையோர்க்குச் சரீரம்விட்டகாலத் தழிவில்லாத
பரமபதத்தின்கட் சென்று பேரின்பமெய்துத லெளியதொன்றாகா தென்றவாறு.
உம்மை இழிவுசிறப்பு. ஓகார மெதிர்மறை. துறை – இதுவுமது. இவையாறு மீரடிமுதன்மடக்கு. இனி மூவடி முதன்மடக்கு வருமாறு
வேலைவேலைக்கடுவைவென்றவிழிநீர்ததும்பு
மாலைமாலைப்பணிவார்வண்குருகூர்ச்–சோலைக்
கயலேகயலேகவர்குருகேநீக்க
முயலேமென்றார்க்கேமொழி. (635)
இஃ தீற்றடியொழிந் தேனைமூன்றடியும் முதன்மடக்கு.
(இ-ள்) வேலினை, கடலுட்பிறந்த நஞ்சினை வென்றதாமென்று அவர் பாராட்டின விழிகளானவை துன்பநீர்துளிக்கும் மயக்கத்தினை,
திருமாலடிகளைவணங்குவார் வளவிய குருகாபுரியின்கட் சோலைப்பக்கத்து நீரின்கட் கயலைப்பருகாநின்றகுருகேநின்னைவிட்டுநீங்குதல்
உள்ளத்தாலும் முயலுதல்செய்யேமென்று வஞ்சமொழிகூறிப் பிரிந்தவருடன் கூறுவாயாக வென்றவாறு.
பகுதி – ஒருவழித்தணத்தல். துறை – பறவையோடு பரிவுற்றுரைத்தல்.
போதகமுன்போதகமுன்புட்பாகன்பூங்கமல
மாதகலாதெய்துமணிமார்பன்–சீத
மலர்மலர்நீர்ப்பொன்னிமதிளரங்கன்பேர்கற்
கலர்கலருள்வன்பாதகர். (636)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் முதன்மடக்கு.
(இ-ள்) போதகமுன்பு – கசேந்திரன்முற்காலத்து. ஓதகமுன் – மூலமேயென்றுகூறப்பட்டவாவியினிடத்தெதிர்ப்பட்ட.
புட்பாகன் – கலுழவாகனன். பூங்கமல……………….. மணிமார்பன் – பொலிவினையுடைய குளம்பினொடுங்கூடிய
ஆவினது கூட்டத்தைவளர்ப்பான், திருமூழிக்கள மென்னுந் திருப்பதியையுமுடையான் றீயமக்களுக் கொளிக்குங்
கள்ளத்தையுடையனா மென்றவாறு. எனவே, நன்மக்களை வெளிவந்து காப்பானென்பது பயன். துறை – கடவுள்வாழ்த்து.
பணியும்பணியும்பனிமாமதியா
மணியுமணியுமரற்கும்–பிணிசெய்
தலைதலைதீர்த்தான்சரணமல்லாதேதம்ப
மிலையிலைத்தாரீந்துபுலவீர் (639)
இது நாலடியும் முதன்முற்றுமடக்கு.
(இ-ள்) புலவிர்காள் ! பாம்பையுங் குளிர்ந்த பெரியமதியாய் மேலாக்கஞ்செய்யு மாலையையுஞ் சடைமேற்புனைந்த
சிவனாகிய பெரியோனுக்குந் துன்பத்தைச்செய் தறிவைநடுங்குவித்த பிரமசிரமானதைக் கையைவிட்டு நீங்குவித்தானாகிய
ஸ்ரீமந் நாராயணன்றிருவடிகளல்லாதே, அந்தியகாலத் தறிவுநிலைகலங்கிச்சாய்ந்து பிறவியாகியகுழியிலே
நீர் விழும்பொழுது வீழாதே நும்மைத் தாங்குந்தூண் வேறில்லையாதலா லவன்றிருவடிகளிற்
றுளபமாலிகையைச்சூட்டி வணங்குவீராக வென்றவாறு.
அரற்கு மென்னு மும்மை சிறப்பும்மை. இலைத்தார் – இலைமாலை யாதலால், துளவமாலிகையென்றாயிற்று.
புலவீர் பணியு மெனக்கூட்டுக. திணை – பாடாண். துறை – ஓம்படை ; கடவுள்வாழ்த்துமாம்.
இவை பதினைந்தும் அடிமுதன்மடக்கு.
இனி இடைமடக்கு வருமாறு :-
கயிலாயம்பொன்னுலகம்புரந்தரனும்புரந்தரனுங்
களிக்கமேனா
ளெயிலார்தென்னிலங்கையர்கோன்பஃறலைக்கோர்கணைவழங்கு
மிந்தளூரான்
மயிலாய்மைவரையணங்கேநினதுயிராமேவல்புரி
மயிலைக்காவல்
பயிலாயத்தெழுந்தருளித்துணைவிழியாலுணர்த்தியருள்
பாரிப்பாயே. (640)
இது முதலடியிடைமடக்கு.
(இ-ள்) கயிலாயம் பொன்னுலகம் புரந்தரனும் புரந்தரனுங் களிக்க என்பது வெள்ளிமலையையுந் துறக்கத்தையுந் தமதாகப்புரந்து அரனும்
புரந்தரனுங் களிப்பெய்த என்பதாம். எயிலார்………. கோன் – கோட்டையாற் பெருத்த தெற்கின் கண்ணுண்டாய
விலங்கையிலுள்ளார்க்கு அரசனாகிய விராவணன்.
பஃறலைக்கோர்……. ளூரான். பல தலைகளும் அறும்படிக் கொருவாளிதொட்ட திருவிந்தளூரான்.
மயிலாய்………. பாரிப்பாயே – மயில்களாடப்பட்ட மேகந்தவழும் மலையிலுறையுந் தெய்வமனையாய் !
நினதுயிர்போன்றவளாய் நினதேவல்விரும்புமவளாம் மயில்போலுஞ்சாயலை யுடையாளை நின்னைக்காப்பவரா யிடைவிடாத
ஆயவெள்ளத்தார் கூட்டத்தடைந்து திருக்கண்பார்வையாற் குறிப்பினுணர்த்திக் கருணையை விரிப்பாயாக வென்றவாறு.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – தோழியைக் காட்டென்றல்.
புண்டரிகப்பொகுட்டணங்கேமும்மதமாவிருமருப்பிற்
புழைக்கைநீட்டி
யொண்டிறலானொருவனைநம்மகிழ்மாறன்மகிழ்மாற
னுறந்தையோங்கற்
கொண்டலுணின்றிருபிறைநள்ளிடைவருபாம்பெனவளைத்துக்
கொண்டகாலை
மண்டமர்க்கூற்றுவன்கணிச்சியெனத்தடிந்தததனையவன்
வாகைவேலே. (641)
இஃ திரண்டாமடியிடைமடக்கு.
இதனுள், மகிழ்மாறன்மகிழ்மாறனுறந்தையோங்கல் என்பது வகுளமாலிகையையுடைய காரிமாறப்பிரான் மகிழ்ந்து
போற்றும் மாயோன்றனது திருவுறையூர்வரையிடத்தென்பதாம். ஒழிந்தனவுரையிற் கொள்க. பகுதி – நடுங்கநாட்டம். துறையு மது.
பாரெழுதும்படிக்கெழுதாமறைமொழியைத்தமிழ்மொழியாய்ப்
பகர்ந்தமாற
னீரெழுதெண்டிரைப்பொருநைத்திருநாடன்வரையணங்கி
னீர்மைகுன்றாச்
சீரெழுதியெனையெழுதிக்களபமுலைக்களபமுலைத்
தேமென்கோதை
யூரெழுதிப்பேரெழுதிக்கிழிகொடுசீறூர்மறுகே
யுலாவுவேனே. (642)
இது மூன்றாமடியிடைமடக்கு.
இதனுள், களபமுலைக்களபமுலைத்தேமென்கோதை என்பது மான் மதக்குழம்பையுடைய முலையாகிய யானையையும்,
முல்லைமாலிகையினது தேனொடுங்கூடிய குழலையுமுடையா ளென்றவாறு. பார் என்பது உலகின் கண்ணுயர்ந்தோ ரென்றவாறு.
நீர்மைகுன்றாச் சீரெழுதியென்பது பெண்ணினதிலக்கணங்குன்றாத அவயவ அவயவிகளின்பொலிவினை யெழுதி யென்றவாறு.
பகுதி – சேட்படை. துறை – மடலேறும்வகை யுரைத்தல்.
மறைபடுசொற்பொருளினைத்தெற்றெனத்தமிழ்செய்நாவீறன்
மழைதோய்செவ்வி
யுறைபடுதெள்ளறலருவித்துடரிவரையரமகளிர்க்
குவமையாவீர்
நறைபடுசந்தனப்பொழில்சூழ்புனத்திடைவந்தடைந்ததெனி
னவில்வீரொன்னார்
கறைபடுவன்பகழியொடுமன்னாகமன்னாகங்
கதிகற்றாங்கே. (643)
இது நான்காமடியிடைமடக்கு.
(இ-ள்) மறையிடத்துண்டானசொல்லின்கண் மறைந்தபொருளினைத் தெளியும்படிக்குத் தமிழ்மொழியாகச்செய்த நாவீறரது
மேகம் படிந்த பருவத்துப்பெய்யுந் துளிகளாலுண்டான தெளிந்தநீராய்வரு மருவியையுடைய துடரிவரையில்
அரமகளிர்க் குவமையாகப்பட்ட மங்கைமீர் ! முகையவிழ்ந்தபூவிற்றேன் றுளித் தாரவாரிக்குஞ் சந்தனப் பொழில்சூழ்ந்த
நுமதுபுனத்தின்கண் சத்துருக்களைக் கொலைசெய் துண்டான குருதியின்முழுகிய பகழிதைத்ததொடும்
ஒரு அரசுவா ஆக்கம்பெற்ற மலை நடைகற்றதுபோல வந்தடைந்த துண்டெனிற் கூறுவீராக வென்றவாறு.
உவமையாவீரென்றதனாலவர்கள் காந்தியை யுயர்த்திக்கூறினானாம். ஆங்கு என்ற துவமவுருபு. கதி – நடை.
பகுதி – மதியுடன்படுத்தல். துறை – வேழம்வினாதல். இவைநாலு மோரடியிடைமடக்கு.
இனி யீரடியிடைமடக்கு வருமாறு :-
அந்தரத்தாரருவியுவாவடமலைமன்வடமலைமன்
னந்தண்சாரற்
சந்தனப்பூந்துணர்மலிந்தவண்டழையவண்டழைய
தனைக்கொண்டுற்றேன்
சிந்துரவாணுதற்களபப்புளகமுலைத்துவரிதழ்வாய்ச்
செவ்வேலுண்கட்
கொந்தவிழ்பூங்குழலீர்கைக்கொள்வீர்மாரனையடிமை
கொள்வீர்மாதோ. (644)
இது முதலிரண்டடியும் இடைமடக்கு.
இதனுள், அந்தரத்தாரருவியுவாவடமலைமன்வடமலைமன் னந்தண் சாரலென்பது-விசும்பின் உச்சியினின்றுமிழிந் தாரவாரிக்கு நீரருவியும்,
யானைத்திரளும் ஆலமரத்தினையலைக்கும் நிலைபெற்ற வடவேங்கட மென்னும் மலைக்கு மன்னன்,
அவனதாம் அழகிய குளிர்ந்த மலைப்பக்கத் தின்கண் ணென்றவாறு.
பூந்துணர்மலிந்த வண்டழைய வண்டழை யதனைக்கொண்டுற்றே னென்பது – பூங்கொத்துக்கள் பரிமளத்தினாற் கூட்டமான
வண்டுகளைத் தன்னிடத்தழைக்கப்பட்ட அழகியவளப் பத்தையுடைய சந்தனத்தழையதனைக் கையுறையாகக் கைக்கொண்டு
நும்மிடத்துவந்தே னென்றவாறு. ஒழிந்தனவும் உரையிற்கொள்க. பகுதி – இதுவுமது. துறை – கருத்தறிவித்தல்.
கதியேபற்றுனர்ஞானக்கண்ணகலாக்கண்ணகலா
காயங்காண்பா
னதியேமுற்றியவரங்கத்திடைதுயிலும்புயல்வரைமே
னயந்துவாழ்நும்
பதியேதிங்குரைத்திடுமென்றனனறையீர்நறையீர்மென்
பதுமைபோல்வீர்
மதியேதிங்கினியெனவுந்தெளிகிலனேகுதற்குமொரு
வழிசொல்வீரே. (645)
இது முதலடியும் மூன்றாமடியும் இடைமடக்கு.
(இ-ள்) பேரின்பத்தையுட்கொண்டா ருள்ளக்கண்ணைவிட்டு நீங்காத இடமகன்ற பரமாகாயத்தைச் சென்றுகாணவேண்டித்
திருக்காவிரியாகிய விரண்டாறுசூழ்ந்த அரங்கத்தினடுவே கண்வளருங் காளமேகம்போன்ற திருமேனியையுடைய
அரங்கநாதன்வரையினிடத்து விருப்பத்துடன் வாழுந்தேனோடுங்கூடிய குளிர்ந்ததாமரையாளையொப்பீர் !
இவ்விடத்து நும்முடையபதி யேதென்று கூறுகவென்றனன் கூறுகின்றிலீர்,
இனிமேன் மதி யாதென்றுந் துணிகிலன் ; மீண்டுபோவதற்கொருவழியுங் காண்கின்றில னென்றவாறு
னறையீர்நறையீரென்பதனைப் பாடமாற்றி ஒற்றைப் பெயர்த்து அறையீரெனக்கூட்டுக.
இதனுள், கதியேபற்றினர்ஞானக்கண்ணகலாக் கண்ணகலாகாயமென்பனமுதலாக அரங்கத்திடைதுயிலும்
புயல்வரைமே னயந்து வாழ்நும் பதியேதிங்குரைத்திடுமென்றனனறையீ ரென்பன வீறாக நோக்கென்னும் யாப்புக்காலெனக்கொள்க ;
என்னை “மாத்திரை முதலாவடிநிலைகாறு, நோக்குதற்காரணநோக்கெனப்படுமே” என்றாராகலின்.
அஃதே லிதனுள் நோக்கிக்கொள்ளக்கிடந்தமை யாதோவெனின், பேரின்பத்தைவிரும்பினார் ஞானக்கண்ணை விட்டு
நீங்காத பரமாகாயத்தை யவர்சென்று காணவேண்டிப் பரமகிருபையால் வெளிவந் தரங்கத்திடைக் கண்வளரும்
அவன்வரையிடத்து விருப்பத்துடன்வாழுந் தாமரை யாளைப்போல்வீரென்றதனால், அவன்வரையிலிருந்தும் யான்விரும்பிய
நுமது சீறூரை யெனக் குரைக்கின்றிலீ ரென்னதறுகண்மையோ என்பது நோக்கிக்கொள்ளக்கிடந்தமையா னெனக்கொள்க.
ஏகாரமிரண்டனுள், முன்னையது பிரிநிலை. ஏனைய தீற்றசை. ஒழிந்தனவு முரையிற் கொள்க. பகுதி – இதுவுமது. துறை – பதிவினாதல்.
வயற்கழுநீர்க்கழிகவின்மாண்கொழுநனையேகொழுநனையே
மகிழ்நன்மாதர்
கயற்கருங்கண்ணெனமலராமுனங்களைகட்டெறிதிருக்காட்
கரைமால்வெற்பிற்
செயற்கரியதிருவுருவாலுயிர்கொல்லிப்பாவையராய்ச்
சிறந்தீருங்க
ளியற்பெயர்யாதெனவினவியதைமொழியுமொழியுமிகழ்
வதனைமன்னோ. (646)
இது முதலடியும் ஈற்றடியும் இடைமடக்கு.
இதனுள், கழுநீர்க்கழிகவின்மாண்கொழுநனையே கொழுநனையே மகிழ் நன்மாதர் என்பது செங்கழுநீரினது
மிக்க அழகினையுடைய மாட்சிமைப்பட்ட கொழுவியபூமுகையைத் தங்கள்புமான்களை விரும்பு நல்ல கடைசிய ரென்றவாறு.
கொழுநனையேயென்பது தேற்றேகாரம் ; பிரிநிலையுமாம்.
கொழுநனையேவிரும்பும்மாதர் கொழுவியநனை மலராமுன்னங் களைகட்டெறியென்றது இறைச்சி. என்னை?
முகையாய்நிற்பதன் மலர்ந்தா லிவை யெமது கண்ணுக் குவமையா யெமது கொழுநற்கு விருப்பத்தைக்
கொடுக்குமென்னு மாற்சரியத்தாற் களைகட்டெறிந்தா ரென்னுங் குறிப்புப் பொருட்புறத்ததாய்நிற்றலானெனக்கொள்க.
அதன்றெனில். கண்ணெனமலராமுன்னங் களைகட்டெறிந்தாரென்பது பயனில்கூற்றாம்.
சிறப்புப்பெயர் கொல்லிப்பாவையென்பது செய்தற்கரிய வுமது அழகிய வடிவினாலறிந்தேம். அறியாத இயற்பெயரை மொழியும் ;
எம்மையிகழ் வதனை யொழிவீராக வென்றவாறு. செயற்கரியதிருவுரு – எழுதுதற் கரியதிருவுரு.
பகுதி – இதுவுமது. துறை – பெயர்வினாதல்.
பூந்துளபம்புனைதிருமால்பொன்னியினுட்பொறியரவிற்
புயல்போல்வண்ணந்
தோய்ந்து துயில்பயிலரங்கேசனைத்தொழுமாறன்றுடரித்
தோகைபோல்வீர்
வாய்ந்தவனப்பல்குலுக்குத்தனக்குவடுதனக்குவடு
வகிராமுங்க
ளேந்தெழிற்கட்புலங்கொளநின்றிடையேதங்கிடையேதங்
கியம்புவீரே. (647)
இது கடையிரண்டடியும் இடைமடக்கு.
(இ-ள்) வாய்ந்தவனப்பல்குலுக்குத் தனக்குவடுதனக்குவடு வகிராமுங்கள் என்பது வனப்புவாய்ந்தவெனப் பாடமாற்றி
அழகுவாய்ந்த அல்குலுக்குந் தனமாகிய மலைதனக்கும் வடுவகிர் நிகராகியவுங்கள் என்றவாறு.
ஏந்தெழிற்கட்புலங்கொள என்பது உயர்ந்த அழகினையுடைய கட்புலனாக என்றவாறு.
இடையேதங்கிடையேதங்கியம்புவீரே என்பது இரண்டிற்குநடுவே குடியிருக்கும் மருங்கான தெது தானவ்விடத்தென்று
வினவுவேற் கிதுவென்று சொல்லுவீராக வென்றவாறு.
எனவே, எனது கண்ணிற்குப் புலப்படுவதின்றென்பது போந்தபொருள். பகுதி – இதுவுமது. துறை – இடைவினாதல்.
உரையார்ந்ததொகைப்பனுவன்முழுதுணர்ந்துமுலகியலொன்
றுணராதார்போல்
வரையாதுமறைபுரிகோமானினைவுமானினைவு
மனத்துணாடி
விரையார்நன்பசுந்துளபத்திருமாலைத்திருமாலை
வில்லிபுத்தூர்த்
திரையாடைப்புவிமகடன்கோமானைவணங்கலரிற்
றிகைக்கின்றேனே. (648)
இஃ திடையிரண்டடியு மிடைமடக்கு.
இதனுள், கோமானினைவுமானினைவுமனத்துணாடி என்பது தலைவனே ! உனதுள்ளத்துநினைவும், எனது மான் போலும்
விழியினை யுடையாண்மனத்துணினைவும் எனதுமனத்துட்குறித்து என்றவாறு.
துளபத்திருமாலைத்திருமாலை வணங்கலரிற் றிகை்கின்றேனே என்பது துளபமாகிய அழகியமாலையையுடைய
திருமகளோடுங்கூடிய மாயோனை வணங்காத் தீயமக்களைப்போல யான் மனமறுகாநின்றே னென்றவாறு.
உலகியலொன்றுணராமை-உலகநடை சிறிதுமறியாமை. மறைபுரிதல் – வரைந்துகொள்ளாது களவொழுக்கத்தை நீட்டிக்கவிரும்புதல்.
பகுதி – பகற்குறி. துறை – வருத்தங்கூறி வரைவுகடாதல்.
மீனமாதியவாயவவதாரம்புரிந்தருண்மால்விண்ணோர்போற்றும்
வானமாமலைவளர்சீவரமங்கைவரமங்கைமார்நீரென்றான்
மோனமாயிருந்ததனாற்பயனேதுவிருந்தினர்க்குமுகமன்கூறி
யீனமாகியவுறுநோய்களைகண்ணாங்களைகண்ணாங்கியற்றிலீரே. (649)
இஃ திரண்டாமடியு மீற்றடியு மிடைமடக்கு.
இதனுள், சீவரமங்கை வரமங்கைமார் நீரென்றா லென்பது சீவர மங்கையென்னுந்திருப்பதியிற் சேட்டமாகிய மங்கைப்
பருவத்து மடந்தையரையொப்பீரென் றுலகினுள்ளா ரும்மைக் கூறுவராயின் என்பதாம்.
பருவம் பெதும்பையராயினும் வியப்பினான் மங்கைப்பருவத் துள்ளாரையொப்பீ ரென்றான். மோனம் – மௌனம்.
நோய்களைகண் ணாங்களைகண்ணாங்கியற்றிலீ ரென்பது காமமாகியபிணியைக்களையுங் கருணையாங் காவலை நீர் செய்கிலீ ரென்றவாறு.
ஒழிந்தனவு முரையிற் கொள்க. பகுதி – மதியுடன்படுதல். துறை – மொழிபெறாதுவருந்தல். இவையாறு மீரடியிடைமடக்கு.
இனி மூன்றடியிடைமடக்குவருமாறு :-
இருங்கணையின்றிவணுறிவர்தனுவேட்டைதனுவேட்டை
யிசையாதெவ்வுள்
வருந்திருமால்பனிவரைமேற்காவியங்கண்காவியங்கண்
மதியுட்கொண்டோ
ரொருங்குபுகழ்வதற்கரிதாமாதினைமாதினைக்காவ
லுவந்தாளென்கை
பொருந்துவதன்றிருவருந்தம்முட்காதன்மதர்நோக்கிற்
புகல்கின்றாரே. (650)
இஃ தீற்றடியொழிந்த வேனைமூன்றடியு மிடைமடக்கு.
(இ-ள்) இவ்விடத் திப்புனத்துற்றவிவர்கையிற் பெருமையுடைய கணையு மில்லை, இவர்யாக்கையுந் தளர்ச்சியுடையது,
ஆகையா லிவர் வில்வேட்டையும் பொருந்துவதன்று ; இஃதன்றி, இந்த மாதராளைப் பெரியு தினைக்காவல்
வரும்பினாளென்கையு முண்மையன்று, இவள் நீலோற்பலம்போன்றகண்களைப் பலகாப்பியங்களையு முணர்வினாலுட்
கொண்டோரெல்லாங்கூடியும் புகழ்தற்கரிதாம் ; இருவருமொருவ ரொருவர்மேலுள்ளவுள்ளக்காதலைக் கண்களாலுரைக்கின்றனரென்றவாறு.
பகுதி – குறையுறவுணர்தல். துறை – இருவர்நினைவுமொருவழியுணர்தல்.
சுனையுணீனிறநாண்மலர்நாண்மலர்தொறுந்துணர்தெகிழ்ந்துக்க
நனையுண்மூழ்கியபலவினின்சுளையினைநாங்கைமால்வரைக்கிள்ளை
யனையபேடைவாயருத்தியினருத்தியின்புறுநிலையதுகண்டோர்
நினைகலானழுங்காற்றலையாற்றலைநினதுகண்ணுறின்மானே. (651)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் இடைமடக்கு.
(இ-ள்) சுனையுணீனிற……….. தொறும் என்பது சுனையின்கண் ணுண்டாவதாய நீலமணியினொளியு முவமைக்கு
நாணும் நீலோற்பலம் பக்குவம்வந்து மலருந்தொறும் என்றவாறு.
துணர்தெகிழ்ந்து………. கிள்ளை என்பது அகவிதழ்நிறைந்தொழுகிய தேனின்கண், கரைசார்ந்த சோலைப்புறத்து
வீசுகொம்பர்நின்று மளிந்துவீழ்ந்து நனைந்த பலவி னினியசுளையைத் திருநாங்கைமாயோன்வரையிற் சேவற்கிளியானது என்றவாறு.
அனையபேடைவாய்….. கண்டு என்பது தனதுயிரனைய பெடைவாயி லன்பினாலருத்தி யின்பமெய்து நீதியைக் கண்டு என்றவாறு.
ஓர்நினைகலான்……………… மானே என்பது ஒருவராலுநினைத்தற்கரிய பெருமையானொருவ னிரங்கு மிரக்கத்தின்
மிகுதியை நினது கண் காணி னாற்றுவாயல்லை, மான்போலுங்கண்ணினையுடையா யென்றவாறு.
ஒருவராலு மென்பதும், உயிரென்பதும், பேடையென்பதனாற் சேவலென்பதும் வருவிக்கப்பட்டன.
பகுதி – குறைநயப்பித்தல். துறை – விரவிக்கூறல்.
மாமடந்தைகுடிபுகுந்தவன்பிலுறுமன்பிலுறுமாயோன்வெற்பிற்
காமருவண்டினமேநீர்தாந்தாந்தாந்தாமெனவாழ்கமலவைப்பிற்
பூமடந்தைமுகமலர்போன்றொருகமலத்திருகுவளைபூத்தவாகத்
தாமருவிக்குமுதமும்வெண்முல்லையுமுல்லையுமுளவோசாற்றுவீரே. (652)
இஃ தீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் இடைமடக்கு.
(இ-ள்) மாமடந்தைகுடிபுகுந்த வன்பிலுறுமன்பிலுறு மாயோன் வெற்பில் என்பது பெரியபிராட்டிகுடிகொண்ட
அன்பிலென்னுந்திருப்பதியின் மிக்க அன்பிலெய்திய மாயவனதுவெற்பில்வந்த என்றவாறு.
காமருவண்டினமே………. கமலவைப்பின் என்பது அழகிய வண்டுகாள் ! நீங்கடாம் தாந்தாந்தாமென்ற பாட்டோடும்
வைகும் மருதநிலத்தின் கண்ணேயுள்ள தாமரையோடையின்கண் என்றவாறு. பூமடந்தை…………… சாற்றுவீரே என்பது
இந்தப் பூமகள் முகத்தாமரையையொப்பதா யொருதாமரையினிடத் திரண்டுகுவளை பூத்தனவாக நிலைபெற்று
மவற்றுட னொருசேதாம்பலும் முல்லையரும்பும் முல்லையாகியபண்ணுங் கண்ணிற்
கண்டனவுஞ் செவியாற்கேட்டனவு முளவாகிற் சொல்லுவீராக வென்றவாறு. பகுதி – இயற்கை. துறை – வண்டொடுநன்னய முரைத்தல்.
உருவளர்மாத்தினமகலத்துறுதிறத்திற்பயோதரங்க
ளொருங்குதோய்ந்து
பொருவருநன்பரிமளங்கூர்வனமாலைவனமாலை
பொருந்திச்செய்ய
பருதியுடன்பனிமதியுமிருபாலுமிருபாலும்
பயின்றுதோன்றுந்
திருநெடுமால்பொருவருமிவ்வடமலையும்வடமலையு
முலைச்செந்தேனே. (653)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் இடைமடக்கு.
(இ-ள்) முத்துவடங்கிடந்தசையுமுலையொடுங்கூடிய தேன்போலு மொழியினையுடையாய் !
ஒளிதழையாநின்ற பெரியபிராட்டி நாளுந் திருமார்பிற் குடிகொண்ட கூறுபாட்டால் அவளது திருமுலைச்சுவடுகளைத் தழீஇயதுடன்,
ஒப்பில்லாமணத்தைப்பெருப்பித்துக்காடாகிய வியல்பையுடைய துளபமாலையையும் பொருந்தி, செம்மையுடையநேமியாகிய
ஆதித்தனுடன் பாஞ்சசன்னியமாகிய குளிர்ந்த மதியையும் வல மிட மென்னு மிரண்டுபக்கமுந் தரித்திருக்குமுறையும்
இடைவிடாத தோற்றப்பொலிவுண்டாந் திருவொடுங்கூடிய மாயோனையொக்கும் ;
சினையோடும்வளராநின்ற மாமரத்தின்கூட்டந் தன்னிடத்துற்ற கூறுபாட்டோடுங் காளமேகங்க ளொக்கத் தவழ்தல்பொருந்தியும்
ஒப்பில்லாத நல்ல மணத்தைப்பெருக்குங் காடாகிய வியல்பையுடைய துளபமாலைபொருந்தியும்,
ஆதித்தனுடன் சந்திரனும் இரண்டுபக்கமுமிருக்குமுறையும் பொருந்தியுந் தோன்றுமிவ் வடவேங்கடமாகிய மலையு மென்றவாறு.
இதனுள் வனமாலைவனமாலை யென்பது அத்தச்சிலேடை. பருதியும் பனிமதியுமென்பது மாட்டேறில்லா வுருவகம்.
ஒழிந்தன சத்தச்சிலேடை. பகுதி – குறைநயப்பித்தல். துறை – அறியாள்போறல்.
முளைநிலாவினைநேர்நுதனேர்நுதன்முகிணகையணைமென்றோ
ளிளையளாமிவட்கேமமேமமதுறவேதிலரணிவானற்
கிளையினீண்டினர்கேளினிக்கேளினிக்கெழுதகையுறல்வேண்டிற்
களைகணானிறைகடிநகர்க்கடிநகர்காணமன்விரைவாயே. (654)
இது நான்கடியும் இடைமுற்றுமடக்கு.
(இ-ள்) இளம்பிறையை யுவமை குறிக்கப்பட்ட சிறியநுதலினையும், முல்லைமுகைபோன்ற பல்லினையும்,
அணை போன்ற மெல்லிய தோளினையும், இளமைத்தன்மையையு முடையளா மிவளுக்குப் பொன்னை யின்பமுற
வணிவான் அயலவர் மகட்பேசித் தமரொடு மெமதுமனையிடத்துக் குழுமின ராகையா லினிக் கேட்பாயாக மன்னனே !
உனது சுற்றத்தோடும் எம்மோடுண்டாகிய இந்த நட்பு மிகுதல்வேண்டினையே லுலகத் துயிர்கட்குக் காவலாகிய
இறைவனாம் மாயோன் திருக்கடிநகரிடத்துத் திருமணம் நகரிலுள்ளார்காண அயலவர்க்குமுன்னே
யிவளை வரைந்து கொள்வான் விரைவாயாக வென்றவாறு.
நேர்நுதல் – சிறுநுதல். “சிறுநுதற்பேரமர்க்கட்செய்யவா” யென்றார் பிறரும்.
பகுதி – உடன்போக்கு. துறை – மகட்பேச்சுரைத்தல். இவை 15-ம் இடைமடக்கு.
இனி அடியிறுதிமடக்கு வருமாறு :-
கூன்பிறையவெண்கோட்டிற்கொன்னாகங்கொன்னாகந்
தான்பதைத்துமூலமெனத்தாழாதுதவியமால்
வான்புகழுந்தென்னாகைமானனையீர்வண்டழையிங்
கேன்புரிந்துகொள்ளாதிருப்பதிசைப்பீரே. (655)
இது முதலடியிறுதிமடக்கு.
இதனுள், கூன்பிறைய வெண்கோட்டிற் கொன்னாகங் கொன்னாகந்தான்பதைத்தென்பது வளைந்த பிறைபோன்ற
வெண்கோட்டினாற் கொல்லும் யானை பெரியவுடம்பு நடுக்கமுற்று என்பதாம். தான் – அசை.
மூல,,,,,,,,,மால் என்பது மூலமென்றுகூறத் தாமதியாதுதவிய மாயோ னென்றவாறு. ஒழிந்தனவும் உரையிற்கொள்க.
பகுதி – சேட்படை. துறை – தழைகொண்டுசேறல்.
தோலாதநேமிமுதலைம்படையுஞ்சூழ்ந்திறைஞ்சப்
பாலாழியுட்டுயில்கூர்பன்னகத்தான்பன்னகத்தான்
மேலாமவுணனுரங்கிழித்தவிண்ணகரான
காலானதென்றலைமேல்வைத்துக்களித்தேனே. (656)
இஃ திரண்டாமடியிறுதிமடக்கு.
இதனுள், பன்னகத்தான் – பாம்பணையான். பன்னகத்தான் மேலாமவுணனுரங்கிழித்தான் என்பது பலநகங்களால்
வெற்றியான் மேம்பட்ட விரணியனுரத்தமார்பைப் பிளந்தா னென்றவாறு. ஒழிந்தனவும் உரையிற்கொள்க. துறை – கடவுள்வாழ்த்து.
சூழித்தறுகட்கடாயானைதோலாத
பாழிப்பகுவாயிடங்கரின்கைப்பட்டநா
ளாழிப்படையுடன்சென்றாளரியையாளரியைக்
காழித்திருமாலைக்கண்டுட்களித்தேனே. (657)
இது மூன்றாமடியிறுதிமடக்கு.
இதனுள், ஆளரியையாளரியை…………… களித்தேனே என்பது ஆண்ட அரியென்னுந் திருநாமத்தையுடையானை,
நரனுஞ் சிங்கமு மானானை, சீகாழியில்வாழுந் திருமாலைக் கண்களாற்கண் டுள்ளங்களித்தே னென்றவாறு.
துறை – கடவுள்வாழ்த்து.
அண்ணாந்தெழுந்ததுணைமுலையார்க்காருயிர்தங்
கண்ணாங்கொழுநரெனுங்கட்டுரைகேட்டுற்றுணர்ந்துந்
தண்ணார்வகுளத்தமிழ்மாறர்க்கன்பிலர்போன்
றெண்ணாதகன்றனராலென்சுகமேயென்சுகமே. (658)
இது நாலாமடியிறுதிமடக்கு.
இதனுள், என்சுகமேயென்சுகமே என்பது எனக்கு என்னுடைய கிளியே ! என்னமகிழ்ச்சியுள்ள தென்றவாறு.
பகுதி – பொருள்வயிற் பிரிதல். துறை – பறவையொடுபரிவுற்றுரைத்தல்.
இவை நாலும் ஓரடி யிறுதிமடக்கு. இனி ஈரடியிறுதிமடக்கு வருமாறு :-
மூன்றாயமைந்ததொழின்முன்னானைமுன்னானை
தான்றாழ்தடத்தழைத்தசங்கரியைச்சங்கரியைத்
தோன்றாதிடத்தமைத்தசூழ்ச்சியனைத்தொல்லைநா
ளீன்றானையீன்றானையென்னுளத்தேவைத்தேனே. (659)
இது முதலிரண்டடியும் இறுதிமடக்கு.
(இ-ள்) சிருட்டி திதி சங்காரமென்று தன்னாலமைக்கப்பட்ட மூன்றிற்கு மங்கங்கு முன்னாயிருக்கப்பட்டவனை,
முதலைமுன்னானயானை தா னாழ்ந்ததடத்துநின்று மூலமென்றழைத்த சங்கினையுடைய அரியென்னுந் திருநாமத்தையுடையானை,
உமையை வேறுபட்டுத்தோன்றாது தனதிடப்பாகத்தடக்கின விசாரத்தையுடைய அரனை
முற்காலத்தீன்ற பிரமனையீன்றவனை முத்தியளிக்கவல்ல பிரமமென வுட்கொண்டே னென்றவாறு.
திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.
கோதறவில்வாங்கியுடக்குஞ்சரத்தாற்குஞ்சரத்தாற்
கேதமிழைத்தவிராவணியையன்றுதவ
சாதனத்தாற்கொன்றபிரான்றம்முன்னைத்தம்முன்னைப்
பாதகந்தீரப்புகழ்வார்பாதம்பணிந்தேனே. (660)
இது முதலடியும் மூன்றாமடியும் இறுதிமடக்கு.
(இ-ள்) குற்றந்தீரத் தனுவைக் கைக்கொண்டு தொடுக்கும் அம்பினால் ஐராவதப்பாகனான இந்திரனுக்கு மானபங்கத்தை
யுண்டாக்கின இந்திரசெயித்தை, முற்காலத்துத் தவசரிதையாற்கொன்ற இலக்குமண னென்னு மெனது
சுவாமிக்குத் தமையனை, யாவரேயாயினுந் தங்கள் கழிபிறப்பிற் பாவந்தீரப் புகழாநின்றார்
அவர்பாதத்தை யெனதுபிறவித் துன்பம்நீங்க வணங்கினே னென்றவாறு. திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பணிதல்.
பொன்பொற்றிலங்குமலர்ப்பூவையேபூவையே
மன்பொற்றிருமேனிமாயோன்வடமலைமேன்
மின்பொற்றொடித்தடக்கைகூப்பாதவீறென்னோ
நின்பொற்றிருநுதற்குநேர்மதிக்குநேர்மதிக்கும். (661)
இது முதலடியும் ஈற்றடியும் இறுதிமடக்கு.
இதனுள், மலர்ப்பூவையேபூவையே மன்பொற்றிருமேனி என்பது தாமரையிலிருக்குந் திருமகளையொப்பாய் !
காயாம்பூவையொத்த மிக்க பொலிவினையுடைய திருமேனி என்றவாறு. நின்பொற்றிருநுதற்கு நேர்மதிக்கும் நேர்மதிக்கும் என்பது
உனது அழகியநெற்றிக் குவமை குறிக்கும் நேரிய பிறைக்கு மென்றவாறு ஒழிந்தனவு முரையிற்கொள்க.
பகுதி – நாணநாட்டம். துறை – பிறைதொழுகென்றல்.
அந்தமுதலாயமைந்தானையெம்மனோர்
பந்தமறுத்தாள்பரனைச்சுமித்திரைதன்
மைந்தனொடுங்கான்போந்தமாதவனைமாதவனை
யெந்தையையல்லாதிறையுண்டென்னாவேயென்னாவே. (662)
இது கடையிரண்டடியும் இறுதிமடக்கு.
இதனுள், மாதவனைமாதவனை என்பது திருமகள்காந்தனை, பெரிய தவசரிதையுடையானை யென்றவாறு.
எந்தையை – எம்முடைய சுவாமியை. அல்லாதிறையுண்டென்னாவேயென்னாவே என்பது அவனை யன்றி
வேறு பரப்பிரம முண்டென்றுகூறா தென்னுடையநா வென்றவாறு. ஏகார மிறுதிய தீற்றசை. துறை – கடவுள்வாழ்த்து.
தாவாதபேரின்பஞ்சார்வதற்குச்சிற்றின்பத்
தேவாமலென்னைமதனெய்யாமையெய்யாமை
மாவாதனைமறந்துவாமனனேவாமனனே
தேவாதிதேவனெனச்சந்ததமுஞ்சிந்தித்தே. (663)
இஃ திடையிரண்டடியும் இறுதிமடக்கு.
(இ-ள்) என்னைமதனெய்யாமையெய்யாமை என்பது என்னைக் காமன் சிற்றின்பத்திலேவேண்டிமூட்ட
என்மேற் பஞ்சபாணங்களை யிடைவிடாமைத் தொடுத்திடாமல் என்றவாறு.
வாமனனே………………….. வாமனனே என்பது வாமனாவதாரமாகிய நாராயணனே தேவர்க்கெல்லாம் முதலான
தேவனென அனவரதமுஞ் சிந்தித்துக் கழிந்தபிறப்பிலு மிப்பிறப்பிலு முண்டான பொல்லாத வாதனைகள்யாவும் மறந்து
என்னோ டொத்துவா என்னுடையமனனே ! என்றவாறு.
திணை – காஞ்சியைச் சார்ந்த பொதுவியல். துறை – பொருண்மொழிக்காஞ்சி. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்தெனினு மாம்.
காண்டகுபொற்பூமடந்தைநற்பாரிகண்ணன்பே
ராண்டபழம்பதியுமந்தாமமந்தாமங்
கூண்டளிபண்பாடுதுழாய்கூராழிகைவலத்தே
பூண்டதவன்சீருளத்தேபூரியார்பூரியார். (664)
இது நாலாமடியும் இரண்டாமடியும் இறுதிமடக்கு.
இதனுள், ஆண்டபழம்பதியும்………. துழாய் என்பது அவன்புரந்த தொன்மைப்பதமாவது பரமபதம்,
அழகிய மாலையாவதும் வண்டுகள் தேனையுண்டு பண்களைப்பாடும் வனமாலையாம் என்றவாறு.
அவன்சீ ருளத்தேபூரியார் பூரியார் என்பது அவனதாந் திருமேனியிற்காந்தியைத் தீயமக்கள் உள்ளத்தாற் றியானித்து
அகத்தே நிறையா ரென்றவாறு. எனவே யெப்படியீடேறுவ ரென்பது குறிப்பு. திணை – பாடாண்.
துறை – புகழார்ப்பழித்தல் ; கடவுள்வாழ்த்தெனினு மாம். இவையாறும் ஈரடி யிறுதிமடக்கு.
இனி மூன்றடியிறுதிமடக்கு வருமாறு :-
முன்னிலங்கொள்ளாதபிலமுன்பரையுமுன்பரையுந்
தன்னரனாலீந்தவரந்தாவுறவேதாவுறவே
மன்னிலங்கேசன்முதலாமைந்தரையுமைந்தரையு
மின்னுயிருண்டான்குணங்கற்றின்பம்பயின்றேனே. (665)
இஃ தீற்றடியொழித் தேனைமூன்றடியும் இறுதிமடக்கு.
(இ-ள்) மன்னிலங்கேசன்முதலா மைந்தரையு மைந்தரையும் என்பது இராவணன்முதலாய மிடுக்குள்ளாரையும்,
அவர்கள்புதல்வரையும் என்றவாறு ; முன் னிலங்கொள்ளாத பிலமுன்பரையு முன் பரையுந் தன்னரனாலீந்தவரந் தாவுற
வேதா வுறவே என்பது முன்னாளிற் பூமி யிடங்கொள்ளாத பாதாலத்தின் மூலபெலப்படையாய்வந்த வலியுடை யாரையும்
முன்னா ளுமை தனதுபுமானான சிவனாற்கொடுப்பித்த வரமும், பிறர்கொடுத்தவரமும் அழிவுறப் பிரமாவும்
பேராண்மையிருந்தபடியோ வென்று மனத்திலே விசாரிக்க என்றவாறு ;
இன்னுயிருண்டான்……………. பயின்றேனே என்பது அவர்க ளினியவுயிரையுண்ட தெசரதராமன் கலியாண
குணங்களைக் கூறிப் பேரின்பமெய்தினேன் என்றவாறு. திணை – இதுவுமது. துறை – கடவுள்வாழ்த்து.
கண்படையுண்கண்சிறிதுங்கண்ணகன்றகண்ணகன்றவ்
வொண்பொருள்செய்வார்பிரிவினுண்ணிறையுமுண்ணிறையும்
பண்புறநில்லாதினியீங்கென்செய்வேன்பாமாறன்
றண்பொருநைத்தண்டுறைவாழ்தாராவேதாராவே. (666)
இது கடையயலடி யொழிந்த வேனைமூன்றடியும் இறுதிமடக்கு.
(இ-ள்) பாமாறன்றண்பொருநை……………… தாராவே ! என்பது திருவாய்மொழியாகிய பனுவலைச்செய்த காரிமாறப்
பிரான்பொருநைத் தண்டுறையினிடத்துத் தாராவாகியபறவையே ! என்றவாறு.
கண்ணகன்ற……….. பிரிவின் என்பது இடம்விரிந்தநாட்டின்கணீங்கிச் சுத்ததிரவியத்தை யீட்டவேண்டிப் பிரிந்தார்பிரிவினால் என்றவாறு ;
உண்ணிறையுமுண்ணிறையும் பண்புறநில்லாது என்பது என துள்ளத்து ணிறைந்ததொன்றாய மகளிர்க்குச்சிறந்ததென
வுலகம் விசாரிக்கப்பட்ட எனது நிறையானதும் எனது குணத்தின்வழி நில்லாது ; அதுவேயுமன்றி என்றவாறு ;
கண்படை யுண்கண் சிறிதுந் தாரா என்பது எனது மையுண்கண்களானவை கணப்பொழுது முறங்குவதுஞ் செய்கின்றில என்றவாறு.
இனி யீங்கென்செய்வேன் என்பதுமே லிவ்விடத் தியான்செய்வது யாதுதா னென்றவாறு.
இது கொண்டு கூட்டுப்பொருள்கோள். பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – பறவை யொடுபரிவுற்றிரங்கல்.
பாழிமருப்பேனமதாய்ப்பாரிடந்தான்பாரிடந்தான்
சூழியல்புற்றாடுபுலித்தோலுடையான்றோற்றஞ்சால்
காழ்வயிரக்குன்றெடுத்தகண்டகனைக்கண்டகனை
யூழறக்கொன்றானகர்பூந்தேனிலுறையூருறையூர். (667)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் இறுதிமடக்கு.
(இ-ள்) ஏனமதாய்ப் பாரிடந்தான்-வராகமாகிப் பூமியை யுழுதெடுத்தான்;
பாரிடந்தான்…….. தோற்றஞ்சால் – பூதகணங்கள் சூழுமியல்புபொருந்தச் சுடுகாடரங்காக நடஞ்செய்யும்
புலித்தோலுடை யுடையானது
தோற்றஞ்சான்ற காழ்வயிரக்குன்றெடுத்தகண்டகனைக் கண்டகனை யூழறக்கொன்றானகர் – மிகவுந்திண்ணியகயிலையை
யெடுத்த விராவணனாகியபாதகனைச் செருக்களத்துக்கண்டு திருவுள்ளத் திரக்கத்தின் முறையின்றிக் கொன்றவனது
நகரமானது பூந்தேனிலுறையூருறையூர் கோட்டிலுங் கொடியிலு நீரிலுமுண்டாகிய பூவிற்றேன்றுளி திசைதிசை
பரக்குந் திருவுறையூரா மென்றவாறு. திணை – பாடாண். துறை – நகரவாழ்த்து கடவுள்வாழ்த்துமாம்.
ஏற்றமாம்வெள்ளோதிமத்தான்மழவிடையூர்
தோற்றமார்வெய்யபுலித்தோலுடையான்றோலுடையான்
போற்றவாழ்வுற்றவிருப்புள்ளேறுபுள்ளேறு
மாற்றலானன்பிலார்க்கன்பிலானன்பிலான். (668)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் இறுதிமடக்கு.
இதனுள், புலித்தோலுடையான் றோலுடையா னென்பது புலியினதுதோலை யுடையாகவுடையானும், ஐராவதத்தையுடையானும் என்பதாம்.
விருப்புள்ளேறுபுள்ளேறு என்பது தன்னிடத்தன் புள்ளத்து மிகும் கருடனிலேறும் என்பதாம் ;
அன்பிலார்க்கன்பிலானன்பிலான் என்பது தன்னிடத் தன்பிலாரிடத் தன்பிலாதா னவன்யாவனெனி லன்பிலென்னுந்திருப்பதியின் மாயோ னென்பதாம்.
எனவே அயனும் அரனும் இந்திரனும் பரவும்படிக்கு வாழ்வுபெற்ற கருடவாகனத்திலேறும் பெருமையையுடையான்
அவன் யாவனெனில் அன்பிலாதாரிடத் தன்பிலாதான், அன்பிலென்னுந், திருப்பதியின் மாயோன்;
அவனுக்கன்புசெய்வீராயிற் புலவீர்காள் ! நுமக்கு முத்தி பெறலாமென்பது குறிப்பு. திணை – வாகை. துறை – பொருளொடு புணர்தல்.
வாமவெங்கதிர்மண்டிலமண்டில
நாமநேமியினான்மறைநான்மறைப்
பூமன்றந்தையொண்பொற்கழற்பொற்கழற்
காமன்பாரடிப்போதென்றலைத்தலை. (669)
இது நான்கடியும் இறுதிமடக்கு.
(இ-ள்) ஆதித்தன்மண்டிலத்தை வட்டத்திருவாழியான் மறைக்கப் பட்டவன், நாலுவேதத்தையு மோதியுணர்ந்தவனாந்
தாமரைப்போதிற் பிறந்த பிரமனுக்குப் பிதா, அவனதாம் பொன்னின்வீரக் கழல்புனைந்த பொலிவினையுடைய
திருவடிகளிடத்துண்டாம் அன்புடையார் திருவடித் தாமரைப்பூவை எனதுசிரத்தின்கட்புனைந்தே னென்றவாறு.
கழற்கு என்பது ஏழாவது நான்காவதாயிற்று. மண்டிலம் ஆதித்தன்மண்டலத்திற்கும், வட்டத்திற்கும்பேர்.
திணை – இதுவுமது. துறை – பழிச்சினர்ப்பணிதல்.
இவை பதினைந்தும் அடியிறுதிமடக்கு. ஆகமடக்கு-45.
இவை நாற்பத்தைந்து மோரடியு மீரடியு மூவடியு நாலடியுமாகி யடிதோறு மோரிடத்தைமடக்கியது.
இனியடிதோறு மீரிடத்தனவா மூவகைமடக்கினுள் முதலொடிடைமடக்கு வருமாறு :-
கட்காவிகட்காவிநைவதும்வண்டிமிர்காமன்காமன்வாளிக்
குட்காநைவுறுநிறையுமுற்றுணர்ந்துமுறுதியெனக்குறுகிலீராற்
புட்காமன்வடமதுரைப்புரிகுழலீர்காமவலையுள்புக்காழ்ந்து
மட்காநின்றதற்குறுதிப்புணைமடலென்றேயுளத்தேமதிக்கின்றேனே. ()
இது முதலடி முதலொடிடைமடக்கு.
இதனுள், கட்காவிகட்காவிநைவதும் என்பது கண்ணாகியசெங்கழு நீர்களுக் கெனதாவி வருந்துவதும் என்பதாம்.
காமன் காமன்வாளிக்கு என்பது காவினிடத்து நிலைபெற்ற காமன்பஞ்சபாணங்களுக்கு என்பதாம். ஒழிந்தனவு முரையிற்கொள்க.
பகுதி – மடல். துறை – தன்றுணி வுரைத்தல்.
அலையோடுயர்பாற்கடல்கடைந்தானன்பிலனையீர்திருவயிறா
லிலையோவிலையோவிடைநினைவிங்கென்னோவென்னோவறியீர்போன்
மலையோமுலைவாணுதல்சிலையோமையுண்கருங்கட்குவளையுள்வன்
கொலையோகுடிகொண்டதுசிறிதுங்குடிகொண்டிலவோகருணையுமே. ()
இஃதிரண்டாமடி முதலொடிடைமடக்கு.
இதனுள், வயிறாலிலையோ விலையோவிடையென்பது நுமது அழகிய வயி றாலினிலையோ இடையென்னுமுறுப் புமக்கில்லையோ என்பதாம்.
நினைவிங்கென்னோ வென்னோவறியீ ரென்பது இவ்விடத்து நுமது விசாரம் யாதோ? எனது காமப்பிணியையுந் தெளிகிலீர் என்பதாம்.
ஒழிந்தனவு முரையிற்கொள்க. பகுதி -……. துறை-இடைவினாதல்.
இரவிற்குப்படருழந்திவ்விரவொழிப்பாயெனவிரங்கியிடதுபாகம்
புரவிற்குங்களிவரவன்றிரப்பொழித்ததுறிலரங்கபொருணீயன்றே
கரவெற்புக்கரவெற்புக்கவினணியான்கங்கையன்கங்கையனாமந்த
வரவெற்பன்மலரயனுமகிழ்ந்திடச்சென்றுதவியதூஉமதிக்குங்காலே. ()
இது மூன்றாமடி முதலொடிடைமடக்கு.
(இ-ள்) பிரமசிரத்திலிரந்ததற்குத் துன்பமிகுந் தவ்விரப்பினைத் தவிர்ப்பாயாக வென்று சிவன்வேண்டற்குக் கருணைகூர்ந்து,
அவனதிடப் பாகத்தை யச்சிவன்கொடுப்பத் தனதாகவாண்ட அவன் பாரியா முமைக்கும் மனத்துட்களிப்புண்டாக
முற்காலத் தவ்விரப்பைத் தவிர்த்தகருணையை விசாரிப்பாருண்டாகி லப்பரப்பிரமம் அரங்க நாதனே ! நீயேயாம் ;
அதுவுமன்றி, கைபடைத்தமலையென்பதாங் கெசேந்திரன் மூலமேயென்ன அதற்கும்,
அரவும் எலும்பும் அழகுசெய்யு மாபரணமாகப் புனைந்தான், பிரமசிரத்தைக் கையிலேந்தினான்,
கங்கை யாற்றை வேணியிற்கட்டினான், அந்தச் சேட்டமானவெள்ளிமலையானும் மலருளானாம்
பிரமனு மகிழும்படிக்குச்சென்று தவியதூஉம் விசாரிக்கிலென்றவாறு.
ஒழித்ததும் என்னு மும்மை செய்யுள்விகாரத்தாற் றொக்கது. வெற்பன் மலரயனும் என்பது
“எஞ்சுபொருட்கிளவிசெஞ் சொலாயிற், பிற்படக்கிளவார்முற்படக்கிளத்தல்” என்பதனால் வெற்பனும் என்னுஞ் சொல்
வெற்பனென வும்மையில்சொல்லாயிற்று. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.
அருண்மாலைபயின்றகெழுதகையிகுளைவேண்டலிற்சென்
றறையாண்மாரன்
பொருமாலைக்கிடுகருப்புச்சிலைவளைத்தித்துயர்க்கடற்கோர்
புணையுங்காணேன்
மருண்மாலைவரும்வருமென்றிடைவேற்காயெவன்செயன்மேன்
மனனேமல்லைத்
திருமாலைத்திருமாலைக்கண்டளியாயளியாய்நின்
றிருத்தாரென்றே. (673)
இது நாலாமடி முதலொடிடைமடக்கு.
(இ-ள்) மனனே ! இருண்ட மாலை வரும்வருமென் றுண்டியு முறக்கமுந்தவிர்ந் துடம்புமுயிரு மெலியா
நின்றவெனக் குடலு முயிரு மாக்கமெய்த என்னிடத்து வைத்தகருணை யியல்பாக இடைவிடாத உரிமையையுடைய
எனதுயிர்த்தோழியானவள், திருக்கடன்மல்லை மாயோனைச் சென்றுகண்டு, நினதுதாமத்தை
விருப்புற்றமையா லென்னுயிரான பொலிவினையுடையாள் பொலிவிழப்ப அவளிடத் துண்டான மயக்கத்தை நினது
திருவுளத்தாற்கண்டு நினதுதிருமார்பிற் புனைவதாய வண்டுகள் நல்லதென்றாராயும் அழகியதிருமாலிகையைத்
திருவருள் புரிந்து தாராயென்று வேண்டிக்கோடலோடுங் கூறாள்;
அஃதறிந்து காமனானவன் ஆலையினிடத் திடும்படிக்குண்டானகரும்பைச் சிலையாக வளைத்துப்
பூப்பாணங்களையுடக்கிப் போர்செய்யாநின்றான் ; ஆதலால் இத்துன்பமாகியகடலைக் கடக்க அவன்றாமமாகிய
புணையேயன்றி வேறு புணையுங் காணேன், இனிமேல் யாதுசெய்வ தென்றவாறு.
இதனுள், திருமாலைத் திருமாலையென்பது திருவினோடுங்கூடிய மாலை, பொலிவினையுடையாண்மயக்கத்தை யென்பதாம்.
கண்டென்பதனைத் தோழி சென்றுகண்டு, திருவுளத்தாற்கண்டு என இரண்டிடத்துங் கூட்டுக.
அளியாயளியாயென்பவற்றுள் முன்னையது ஒருதொழிலினை மேற் செய்யாயென்னு மெதிர்மறையாகிய முன்னிலைவினைச்சொல்,
அத் தொழிலைச்செய்யென்ன எடுத்தலோசையாற்கூறி வேண்டிக்கோடற்கண் ணுடம்பாட்டு முன்னிலைவினைச்சொல்லாயிற்று ;
என்னை “செய்யாயென்னு முன்னிலைவினைச்சொல், செய்யென்கிளவியாகிடனுடைத்தே” என்றாராகலி னறிக.
பின்னையது வண்டுகள் நல்லதென்றாராயும் என்பதாம். திருமாலையென்பது பிறள்போற்கூறியதாம். தலைவிகூற்று.
முன்னிலை -தோழி. மனனே என்பது முன்னிலைப்புறமொழி. பொருள்கோள் -கொண்டுகூட்டு; மாட்டுறுப்பெனினுமாம்.
திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – மெலிவொடுகூறல். இவைநாலு மோரடியிடத்து முதலுமிடையு மடக்கியது.
இனி யீரடியிடத்து முதலு மிடையு மடக்குதல் வருமாறு :-
பொருந்தார்பொருந்தார்வரைமார்பிற்புதையப்புதையப்புதைவரிவில்
வருந்தாவருந்தாபதனமனதுகளிக்கக்களிக்கமிதிலைபுகுந்
திருந்தாரணியோர்புகழவளைத்திறுத்தானிமையோரிடுக்கணுறா
தருந்தாரமுதன்றருள்குடந்தையாராவமுதென்னகத்தமுதே. (674)
இது முதலிரண்டடியும் முதலொடிடைமடக்கு.
(இ-ள்) சத்துருக்களாயுள்ளார் சமர்முகத்துப் புறங்கொடாது போர்செய்யும் வெற்றிமாலைபுனைந்த வரைபோன்ற
மருமத்திற் புதையும் படிக்குக் கட்டிலம்பைத்தொடுக்கப்பட்ட நாரிவரிந்த தனுவை இந்திரியங்களில் வியாபரிக்குஞ்
சத்தாதிகளுக்குச் சற்று மீடுபடாத அரியதவத்தையுடையோனாகிய விச்சுவாமித்திரன்மனத்துட்பிரியமோங்கப்
பிராட்டி திருவுள்ளமுஞ் சனகராசன்மனதுங் களிக்க மிதிலையுட்புகுந்து பெரிய தாரணியோர் கொண்டாட வளைத்து முறித்தான்,
அவன் யாரெனில் விண்ணோர்துன்பமெய்தாமை யாராவமுதைக் கடைந்துகொடுத்த திருக்குடந்தையாராவமுதம்,
அவன் என்னுள்ளத்துக்குத் தித்திக்கு மமுதமா மென்றவாறு. துறை – கடவுள்வாழ்த்து.
உமையாளுமுமையாளும்பசுபதியுமும்பரினும்
பரின்வாழ்வெய்துஞ்
சுமையாகநிலைபெறுமீங்கிதுகிளையேலெனநந்தி
சொன்னபோது
மமையாதுன்னமையாதுன்னக்கயிலைகிளைகிளைக்கை
யரக்கனாதி
கமையாலெய்தியவரங்கள்காட்கரையாய்களைந்திலையேற்
களைகண்யாரே. (675)
இது முதலடியும் மூன்றாமடியும் முதலொடிடைமடக்கு.
(இ-ள்) உமையாளும்…… வாழ்வெய்தும் என்பது உம்மை யாட்கொள்ளும் உமையானவளுஞ் சிவனும் உச்சிமலையின்கண்
தேவர்க ளோடுங்கூடிச் செல்வமெய்தும் என்பதாம் ; சுமையாக….. போதும் என்பது அவர்களைத் தனது
சென்னியிற்கொண்டுநிற்கும் இவ்விடத் திந்த மலையை யெடாதேகொள்வாயென நந்திசொன்னகாலத்தும் என்பதாம் ;
அமையாதுன்….. அரக்கன் என்பது அவனுரைக்குமடங்காதே உன்னமரமும் மூங்கிலும் ஆச்சாவும் நெருங்கின
அந்தக் கயிலையைக் கிண்டியெடுத்த விருபதாகியகையையுடைய விராவணன் என்பதாம் ;
ஆதி….. யாரே என்பது ஆதிகாலத்து இந்திரியங்களையடக்கின பொறையாலெய்தியவரங்களைத் திருக்காட்கரையாய் !
அழித்து அவனைக் கொன்றிலையெனி லுலகுயிர்கட் கியாவர் காவ லென்றவாறு. துறை-இதுவுமது.
இமையவரையிமையவரைமகிழ்விப்பான்பொருவில்பொரு
வில்லாயேந்திச்
சமையவுடக்குபுசரந்தொட்டெயிலொருமூன்றெரிகதுவத்
தலைநாள்வென்ற
வுமையவருமதிப்பவெயிலேழுடையான்பஃறலைக்கு
முறையூராயா
டமையமைவில்லினைவளைத்தன்றேவினையேவினைநினைப்போன்
றளியார்யாரே. (676)
இது முதலடியும் நாலாமடியும் முதலொடிடைமடக்கு.
(இ-ள்) இமையவரை யிமையவரைமகிழ்விப்பா னென்பது இமவா னென்னுமலையைத் தேவர்களைக் களிப்பிக்கவேண்டி யென்பதாம் ;
பொருவில் பொருவில்லாயேந்தி என்பது ஒப்பற்ற போர்பொருதற்குரிய வில்லாகவெடுத் தென்பதாம் ;
சமையவுடக்குபு…… மதிப்ப எனப்து குறைவறவுடக்கி யம்பைத்துரந்து மூன்றுகோட்டையினும் அனல்பற்ற முன்னை
நாண் முப்புராதிகளைவென்ற வுமைபாகரும் மதிப்பதாக என்பதாம் ;
எயிலேழுடையான்…. உறையூராய் என்பது ஏழுகோட்டையோனாகிய விராவணன்பத்துத்தலைக்குந் திருவுறையூராய் ! என்பதாம் ;
ஆடமை யமைவில்லினை….. யேவினை என்பது வெற்றிபொருந்தின மூங்கில்வில்லைவளைத்து முன்னாள் அம்பினைவிட்டனை என்பதாம் ;
நினைப்போன்றளியார்யாரே என்பது ஆதலால் நின்னைப்போ லுலகுயிர்களைக் காக்குங்கருணையுடையகடவுளர் இல்லை யென்றவாறு.
துறை-இதுவுமது.
சுந்தரத்தோளிணையழகர்துணையடிசேர்மகிழ்மாறன்
றுடரிநீடுஞ்
சந்தனச்சோலையுளுறைவார்க்கிறைவாசங்கர
னுதற்கட்டழலான்மேனாள்
வெந்திறல்வெந்திறல்வேளுமிரதியிரதியுமாண்மை
விழைமென்கொங்கை
மந்தரமந்தரமிடைவிற்கரும்புருவங்கரும்புருவ
மதிக்குங்காலே. (677)
இது கடையிரண்டடியும் முதலொடிடைமடக்கு.
(இ-ள்) இறைவனே ! அழகியதிருத்தோளிணையையுடைய அழக ருபயதிருவடிகளை மனோ வாக்குக்காயங்களாற்பொருந்தின
வகுளாபரண மாறன்றுடரிமலையினிடத் தோங்கின சந்தனச்சோலையுளுறைவார் கொங்கைக் குவமை
குறிக்குங்கான் மந்தரபருவதமேயாம், இடைஆகாயமாம், கரியபுருவம் காமனுக்குவில்லாகிய கரும்பினதுருவமா மென்றவாறு.
சிவனுடைய நெற்றிக்கண்ணினுண்டாகியதழலினான் முன்னைக் காலத்து வெவ்வியவீரம் வெந்ததனோடும்
உருவமுமிழந்த காமனும் விரும்புவதா மிரதியும் ஆணாந்தன்மையையுவப்பதாங் காந்தியையுடைய கொங்கைக்கெனக் கூட்டுக.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – செவ்வி செப்பல்.
பொய்யாதபேரின்பம்வேண்டினர்கள்பேரண்டம்பூத்தவுந்திச்
செய்யாசெய்யாள்விரும்பியுறையுறையூராவெனவேதிளைப்பக்கண்டு
மெய்யாமையெய்யாமையேத்திலரஞ்சிலர்சிலரவ்வியமதண்ட
மெய்யாகமதிக்கிலரந்தோவந்தோநரகத்தேவீழ்கின்றாரே. (678)
இஃ திடையிரண்டடியும் முதலொடிடைமடக்கு.
(இ-ள்) அழிவில்லாதபேரின்பத்தைவிரும்பின அறிவுடையோர்கள், எண்ணில்பல்கோடியண்டங்களைப்பெற்ற
திருவுந்தியாகிய செறுவையுடையவனே ! திருமகள்விருப்புற்றுக்குடியிருக்குந் திருவுறை யூரையுடையவனே
யென்றொழிவில்லாதுகூறிப் பேரானந்தமெய்துவதனைக் கண்டுங் கேட்டும், விட்டுநீங்காத அறியாமையாற் சிலர்
அவன்றிருவடிகளை யேத்துகின்றிலர், அவ்வியமதண்டத்தைநினைந் தஞ்சுவதுஞ் செய்கின்றிலர்,
அதனை மெய்யென்பதுந் தெளிகின்றிலர், ஐயோ ஐயோ நரகின்கண்ணேவீழாநின்றன ரென்றவாறு.
எனவே எங்ஙன மீடேறுவ ரென்பது குறிப்பு. எய்யாமை எய்யாமையால் என மூன்றாவதுதொக்குநின்றுவிரிந்தது.
அந்தோ அந்தோ என்பது இரக்கத்தின்கட்குறிப்பு. திணை – பாடாண். துறை – வாயுறை வாழ்த்து.
கைம்மலைக்கன்றுதவியமால்காட்கரைமான்கற்புநிலை
காட்டவேண்டி
யம்மனையம்மனைவிரும்பிக்கிளைகிளைபோலயர்ந்திடவைத்
தகன்றகாலை
நம்மனையைக்காண்டொறுமெய்ந்நடுங்குதன்மேலுணர்வழிக்கு
நயந்தக்கிள்ளை
யெம்மனையெம்மனைபுக்காளினியினியபாலளிப்பா
ரெமக்காரென்றே. (679)
இது முதலயலடியொடு நாலாமடி முதலொடிடைமடக்கு.
(இ-ள்) கையையுடைய மலையென்பதாம் யானைக்கு, அது முதலை கைப்பட்டநாண் மூலமேயென்றழைப்பச்
சென்றுதவிய மாயோன் றிருக்காட்கரையின் மான்போலும் விழியினையுடையாள், நாணினுங் கற்புச் சிறந்ததென்று
நூல்சொல்லக் குடிப்பிறந்தார்கண் ணிலைபெற்றதனை யெமக்கறிவிக்கவேண்டி, அழகியமன்னனை எம்முடைய
ஆய்விரும்பிக் கிள்ளையான தெமதுகிளைபோலவருந்தும்படிக்குத் தோழிகைப்படவைத்துடன் போனகாலத் தியா னெமதுமனையினது
பொலிவழிவைக் காணுந் தோறும் மெய்ந்நடுக்குறுதன்மேலும், முன்னங்கூறிய அக்கிள்ளை, தன்னைவளர்த்த
அன்னையைக் காணவிரும்பி அவ்வையே ! எம்முடைய அன்னை யிம்மனையைவிட் டெந்த மாளிகையிலேபுகுந்தா ளென்று
மெமக்கினியபாலினை மேற்றருவார்யாவ ரென்று மென்னுணர்வை யழியாநிற்குமென்றவாறு.
பகுதி – உடன்போக்கு. துறை – நற்றாயிரங்கல். இவை யாறு மீரடி யாதியொடிடைமடக்கு.
இனி மூன்றடி முதலொடிடை மடக்கு வருமாறு :-
நூறுநூறுபோன்றாரமுமாரமு
நொய்தினின்வெதும்பாநீ
ரூறுமூறுமாமதன்படைபடைத்திட
வுபயகண்மலரந்தோ
வேறுமேறுமாபதிபதிகிளைத்திடு
மிருபதுகரத்தானைக்
கூறுசெய்கணையரங்கன்மெய்தோய்ந்திடாக்
கொம்மைவெம்முலையாட்கே. (680)
இஃ தீற்றடியொழித் தேனைமூன்றடியும் முதலொடிடைமடக்கு,
இதனுள், நூறுநூறுபோன்றாரமுமாரமு மென்பது துகள்படும், சுண்ணாம்புபோல முத்துவடமுஞ் சந்தனச்சேறு என்பதாம்.
நீரூறு மூறுமாமதன்படைபடைத்திட வுபயகண்மல ரென்பது துன்பக்கண்ணீ ரூறாநிற்கும் ;
விரணங்களைக் கரியமதனன்பூப்பாணங்களுண்டாக்கு கையா லிரண்டுகண்மலர்களினிடத்து மென்பதாம்.
ஏறு மே றுமா பதிபதி கிளைத்திடு மிருபதுகரத்தானை யென்பது இடபத்தையும் பூதத்தையும் வாகனமாகவேறும்
உமைக்குப்புமானானவன்பதியாகிய கயிலையை யெடுத்த இருபதுகையுடைய இராவணனை யென்பதாம்.
கூறு செய்கணை யரங்கன்மெய் தோய்ந்திடாக் கொம்மைவெம்முலையாட்கே யென்பது துண்டஞ்செய்த பாணத்தையுடைய
அரங்கநாதனைத் தழுவாத கொம்மைவெம்முலையாட் கென்பதாம்.
கொம்மைமுலையாட்கு, நூறும் ஆரமும் ஆரமும் ; கண்கள் நீருறும் என்று முடிக்க.
திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – கண்டுகைசோர்தல்.
மின்னுமின்னுநுண்ணிடையிடைந்தனளினிமேதகுமின்னோடு
மன்னுமன்னுமெம்மனைவயின்வயினுறத்தினையொடுதேனார்ந்தே
துன்னுகங்குலிற்றுயின்றெழுந்திறையுறைதுவரைமாநகர்க்காலை
முன்னுமுன்னுமுண்டுண்டிவணிவணிகர்முறையொடும்பதிந்தாரே. (681)
இஃதீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடிடைமடக்கு.
இதனுள், மின்னு மின்னு நுண்ணிடை யிடைந்தன ளென்பது ஒளிரும் மின்னுப்போன்ற சிறிய இடையினையுடையாள் வருந்தின ளென்பதாம்.
மேதகுமின்னோடு மன்னு மன்னு மெம்மனைவயின் வயினுறத் தினையொடு தேனார்ந் தென்பது பெருமைபொருந்தின
மின்னை யொப்பாளுடன்பொருந்திய மன்னனே! நீயும் நுமக்குரிய எம்மில்லினிடத்துக் காலம்பெறத் தினையுந் தேனு மருந்தி யென்பதாம்.
துவரை மாநகர்க் காலை முன்னு முன்னுமுண்டுண்டிவ ணிவணிகர்முறையொடும் பதிந்தா ரென்பது துவராபுரியினிடத்துக் காலையிற்செல்வாயாக ;
நுமக்குமுன்னே தினையொடுந் தேனைக்கூட்டியுண்டு இவ்விடத் திவளை யொத்த கற்புங் காந்தியும்பெற்றமுறையொடும்
புமான்களை நீங்காது தங்கினார் பலருமுண் டென்பதாம். மின்னு – உகரவிகுதி அல்வழிக்கண் மிக்கது, இயல்புகணம்வரலாலென்றறிக.
மன் அண்மைவிளி. நீ யென்னும் முன்னிலைப்பெய ரெஞ்சிநின்று விரிந்தது. ஒழிந்தனவும் உரையிற்கொள்க.
பகுதி – உடன்போக்கு. துறை – நெறிவிலக்கல். விருந்து விலக்கென்பது மிது.
தோலாததோலாதபனைநோக்குநோக்குபயசுடரைக்கூட்டி
மேலாகமூன்றுடையசிவனயன்கேட்பவுமழைப்பவிரைந்துமேனாட்
பாலாழிப்பாலாழிப்படையுடனேவந்துவந்துபடிறுதீர்நீ
யாலாலநுண்டுளைப்பற்பணியணையாயணையாயென்னனந்தையானே. (682)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடிடைமடக்கு.
இதனுள், தோலாத தோல் – சிங்கவேற்றிற்குந் தோற்றிடாத கெசேந்திரன். நோக்குநோக்கு – அழகியகண்கள் ; பார்க்குங்கண் களென்றுமாம்.
ஆதபன் – சூரியன். உபயசுடர் – ஒழிந்த இந்துவும் அக்கினியும். மேலாக மூன்றுடைய வென்பதனை ஆகமேன் மூன்றுடைய என மாறி,
சொரூபத்தின்மேல் நோக்குமூன்றாகவுடைய வெனவியைக்க.
சிவனயன் கேட்பவும் என்பது சிவனும் அயனும் கேட்கும் படிக்கும் (உம்மையால்) யாவருங் கேட்பவும் என்பதாம்.
அழைப்ப – மூலமேயென் றொருகாற் கூப்பிட. மேனாள் – பண்டு. பாலாழிப்பால் – திருப்பாற்கடலுட் கடவுள் ;
“பாலதாணையி” னென்பதா லறிக. வந்து வந்தென்பதை உவந்துவந்து என மாறுக.
படிறுதீர்நீ – இடுக்கண் டவிர்த்த நீ. ஆலால நுண்டுளைப்பற் பணியணையாய் – துளும்புநஞ்சினைக் கக்குஞ் சிறியதுளைப்பற்
பாம்பணையையுடையாய். அணையாயென் னனந்தையானே யென்பது – என்னை அனந்தபுரத்தானே ! அணைவாயாக வென்பதாம்.
(இ-ள்) பாலாழியுட்கடவுளாகிய அனந்தபுரத்து மாதவனே ! கெசேந்திரன், சிவனும் அயனுங் கேட்க மூலமே
யென்றழைப்பச் சக்கராயுதத்துடன் வந்துதவிய கருணையையுடைய நீ, யான் பலகாலும் நினது
திருமார்பைநினைந் திரங்கவு மென்னை யணையாதது என்ன தறுகண்மையோ வென்றவாறு.
பொருள்கோள் – கொண்டுகூட்டு ; மாட்டுறுப்பெனினு மாம். திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – மெலிவொடுகூறல்.
வயவாற்றவழ்சூல்வளையுயிர்த்தமணிவெண்டரளநிலவெறிக்குங்
கயவாய்க்கயவாய்க்கருமேதிகமலக்கமலக்கழிநறவுண்
டுயவாற்றுயவாற்றிடையுழக்கத்தூநீர்க்கயலேகயலேய்திவ்
வியவாவியவாமரங்கேசனெய்தானெய்தான்மதனம்பே. (683)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடிடைமடக்கு. இதனுள், வயாவென்பது வயவாயிற்று.
(இ-ள்) சூலுளைந்தவருத்தத்தோடுந் தவழுஞ் சூல்வளையீன்ற அழகிய வெண்முத்தம் நிலவுபோலச் சுடர்விடுங் கயத்தினிடத்துப்
பெரிய வாயையுடைய கரிய எருமைச்சாதி, தண்ணீரிடத்துத் தாமரையுக்க மிக்கதேனையுண் டதனாலறிவுதிரிந்து
துய்யவாற்றி னடுவேபுகுந்து கலக்கத் தூயநீரின்கரையருகே கயலுகண்டுசேரும் நல்லவாவியை யுடையவா மிரண்டாற்றினடுவே
வாழ்வுபெற்ற அரங்கநாத னென்னைத் தழுவுகின்றிலன், அதனையறிந்து காமன் றனது மலர்ப்பாணங்களைத் தொடுத்தன னென்றவாறு.
எனவே, இதற் கினிச் செயல் யாதென்பது குறிப்பு. திணையுந் துறையு மிதுவுமது.
நாதனாதனூர்விளங்கிறையெண்ணிலாவெண்ணிலாநகுபோத
வேதன்வேதனைபுரிந்திடமறைதருமறைதரும்விறன்மாயன்
பாதபாதபந்தனையுணர்ஞானமாம்பலன்பலன்றருமாபோ
லோதியோதியினுறுநர்பாற்றருவதுதருவதுமுளதாமே. (684)
இது நான்கடியும் முதலொடிடைமடக்கு.
(இ-ள்) நாத னாதனூர்விளங்கிறை யென்பது சகலதேவன் மார்க்குஞ் சுவாமியாவான், திருவாதனூரின்கண் டோற்றமெய்தின சோதி யென்பதாம்.
எண்ணிலா வெண்ணிலா நகு போத வேதன் வேதனைபுரிந்திட மறைதருமறை தரும் விறன்மாய னென்பது
அலகிறந்த வெண்ணிலாவைப்போலமிளிரும் ஞானத்தையுடைய பிரமன் றுன்புற மது கைடவரான்மறைந்த
வேதத்தை மீளவும் அன்னமாகி ஓதி அவனுக்குபதேசிக்கும் ஞானவென்றியையுடைய மாதவனாமலையிடத்தென்பதாம்.
பாதபாதபந் தனையுணர் ஞானமாம்பலன் பலன்றருமாபோ லென்பது திருவடிகளாகிய கற்பகதரு, தன்னைப்
பிரமமென்றுணரும் ஞானமாகியகனியை யுலகத்துயிர்கட்குதவு மிலாபம்போ லென்பதாம்.
ஓதி யோதியினுறுநர்பாற் றருவது தருவது முள்தாமே யென்பது எல்லாநூல்களையுங் கற்று மலைகளினிடத்திருக்கும் பெரியோரிடத்து அம்மலைகளென்பவற்றினுளுண்டாகியமரங்கள் தரு மான்மலாபங்கள் இல்லை யென்றவாறு.
மாதவனாமலை யென்பது மாட்டேறில்லா வுருவகம். திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து. ஆகமுதலொடிடைமடக்கு-15.
இனி முதலொடுகடைமடக்கு வருமாறு :-
அருங்காயமருங்காயமருந்தனங்கள்வடமேரு
வன்னவன்ன
விருங்காவித்துணைநெடுங்கட்கிணையெனலாந்துணைமென்றோட்
கிணையென்சொல்வேன்
சுருங்காவண்புகழ்த்திருமால்வடமலைமானெழில்புணர்ந்து
துறந்தாராவி
யுருங்காமெய்ந்நிறைதளர்வித்திடுமுணராதிகழ்ந்தனனென்
னுயிரைமன்னோ. (685)
இது முதலடி முதலொடுகடைமடக்கு.
(இ-ள்) அளவிடற்கரிய ஆகாயம் இடையாகவமராநிற்கும் ; அதன் மேன் முலையிரண்டு மிரண்டுமேருவையொத்தன ;
நிறத்தையுடைய பெருமைபொருந்தின நீலோற்பலமிரண்டும் நெடியகண்ணிணையென்று சொல்லப்படுவதாம் ;
இவையன்றி இணையாகிய மெல்லியதோள்கட் குவமை யாதென்று கூறுவேன்?
ஆகையால் இம்மானின தவயவி யவயவங்களின்காந்தி, இவளைப்புணர்ந்து நீங்கினாரான்மாவை யுருக்கி,
நிறையைத் தளர்வித்திடுமென்பதனையறியாதே மிகவு மென்னுயிரனை யானை யிகழ்ந்தன னென்றவாறு.
எனவே, இகழ்ந்தது தகாதென்பது பயன். இதனுள், உருக்கா வென்னும் வினையெச்ச எதிர்மறைவாய்பாடு,
உருங்காவென மெலிக்கும் வழிமெலிந்துநின்று, தளர்வித்திடுமென்னுந் தன்வினைகொண்டது.
மன் ஆக்கம். ஓகாரம் ஈற்றசை. பகுதி – பாங்கற்கூட்டம். துறை-பாங்கன் றலைவனையிகழ்ந்ததற் கிரங்கல்.
வயல்வாய்மென்முறுக்கவிழ்ந்ததாமரைவாய
வதனராசிக்
கயல்வாவிக்கயல்வாவித்துணையுடனேயமைவரக்கண்
டப்பாலப்பால்
வியல்வாய்தண்செறுவுழுநர்மகளிர்துணைவிழிமுகமும்
வெய்யபோதுந்
துயவாலங்கறிவரிதாங்* குறுங்கேசனெனும்பிறவித்
துயர்போமன்றே. (686)
இஃ திரண்டாமடி முதலொடுகடைமடக்கு.
(இ-ள்) வயலினிடத்து மெல்லியமுகையாய்ப் பிணியவிழ்ந்த தாமரைக்கண், அந்த வயல்வாய்க் களைகடியு மகளிர்முகசமூகத்துக்கயல்,
வாவியினிடத்துக் கயல்கள் பாய்ந்து இரண்டாகத்தங்க, அந்த வயற்கடுத்த அவ்விடத்து, தண்ணீர்துளும்பும்பரப்புடைய
குளிர்ந்த வயலின் கண் ணுழு மள்ளர், வயலிற் களைகடியும் முற்கூறிய மகளிர்துணைவிழியோடுகூடிய முகத்தினையும்,
கண்டார்விரும்புங் கயல்தங்கு தாமரைப் போதினையும் மயக்கத்தாற் பகுத்தறிவரியதன்மையராய் வாழுஞ் செய்கையையுடைய
குறுங்காபுரிக்கீசனேயென் றுலகத்துள்ளீர்சொல்லுமின் ; நுமது பிறப்பாயதுயர் நும்மைவிட்டு நீங்கு மென்றவாறு.
திணை – பாடாண். துறை – ஓம்படை. செவியறிவுறூஉ, வாயுறைவாழ்த்தினுஞ்சாரும்.
* குறுங்கை – திருக்குறுங்குடி.
மாந்தரிலொன்றெனலாயமனுராமனேவலிற்போய்
வாரிதாவி
யேந்தெழிற்பொன்னாழியினைச்சானகிகைக்கொடுத்தருள்பெற்
றிலங்கைமூதூர்
வேந்தனையும்வேந்தனையும்விண்ணிடைவைத்தேமீட்டும்
வேலைவேலை
பாய்ந்தெளிதிற்கண்டனன்றேவியையென்றாற்கிணையெவரே
பகருங்காலே. (687)
இது மூன்றாமடி முதலொடுகடைமடக்கு.
இதனுள், அருள்பெற் றிலங்கைமூதூர் வேந்தனையும் வேந்தனையும் விண்ணிடைவைத் தென்பது பிராட்டியருள்பெற்ற
பின்ன ரிலங்கையாகிய பெரியவூரை யெரிகொளுத்தி யது வெந்துகூடுமளவும் அந்நகர்க் கரசனாகிய இராவணனையும்
அவன்சேனாபதித்தலைவரையும் ஏழுநாள் விசும்பிலிருத்தி யென்பதாம்.
வேலைவேலைபாய்ந் தென்பது பரந்தகடலைக் கடந்தென்பதாம். கண்டனன் றேவியை யென்றாற் கிணை யெவரே
பகருங்கா லென்பது சீதையைத் தரிசித்தன னென்ற திருவடிக்கு விசாரித்துச்சொல்லுங்கா லுலகத் தொப்பா ரொருவருமில்லை யென்பதாம்.
ஒழிந்தனவு முரையிற்கொள்க. திணை-வாகையைச் சார்ந்த பொதுவியல். துறை – தூதுவென்றி.
ஓவாதகருங்கடன்மொண்டெழுபருவப்புயல்பெயலோடுபயகண்ணீர்
தூவாநின்றுறுபுணரிக்கிடைவலவாகொடிநெடுந்தேர்தூண்டுமாற்றாற்
றேவாதிதேவனெனுந்திருநெடுமால்புவிமகள்கோன்சிறந்தசெல்வ
நாவாயினாவாயினடைவதல்லாலடைவதிடனாமேநாமே. (688)
இது நாலாமடி முதலொடுகடைமடக்கு.
இதனுள், நாவாயி னாவாயினடைவதல்லா லென்பது திருநாவா யென்னுந் திருப்பதியினிடத்துக் கப்பலிற்சென்றடைவதல்லாதே யென்பதாம்.
அடைவதிடனாமேநாமேயென்பது நாமடைவ துண்மை யாமோ வென்பதாம். விரைவிற்சென்றடைவ துண்மையாகா தென்றவாறு.
ஏகார மிரண்டனுள், முதலது எதிர்மறை. ஏனைய தீற்றசை பகுதி பொருள்வயிற்பிரிதல். துறை – பாகனைவெறுத்தல்.
இவை நாலு மோரடி முதலொடுகடைமடக்கு. இனி யீரடி முதலொடுகடைமடக்கு வருமாறு :-
விண்டுவிண்டுவீழ்தரும்படிமுருகவேள்விடவேல்வேல்
வண்டுவண்டுவீழ்காவிமாவடுவுமைபூமான்மான்
அண்டராரமிர்தமர்விழிமலைமுலையவளாடக்
கண்டகாவரங்கேசர்தங்கனவரைக்கடிகாவே. (689)
இது முதலடியிரண்டும் முதலொடுகடைமடக்கு.
(இ-ள்) விண்டுவிண்டு…. விடவேல்வே லென்பது மலைபிளந்து வீழும்படி குமரனெறிதற்குப்பொருந்தின வேலு மென்பதாம்.
வண்டு வண்டுவீழ்….. பூமான்மா னென்பது அம்பும், வண்டுகள் தேனையுண்ணவிரும்பு நீலோற்பலமும், மாவடுவின்பிளவும்,
உமாபதிகரத்தின்யாகிய பெரியவூரை யெரிகொளுத்தி யது வெந்துகூடுமளவும் அந்நகர்க் கரசனாகிய
இராவணனையும் அவன்சேனாபதித்தலைவரையும் ஏழுநாள் விசும்பிலிருத்தி யென்பதாம்.
வேலைவேலைபாய்ந் தென்பது பரந்தகடலைக் கடந்தென்பதாம். கண்டனன் றேவியை யென்றாற் கிணை யெவரே
பகருங்கா லென்பது சீதையைத் தரிசித்தன னென்ற திருவடிக்கு விசாரித்துச்சொல்லுங்கா லுலகத்
தொப்பா ரொருவருமில்லை யென்பதாம். ஒழிந்தனவு முரையிற்கொள்க.
திணை-வாகையைச் சார்ந்த பொதுவியல். துறை – தூதுவென்றி.மானு மென்பதாம்.
அண்டராரமிர் தமர்விழி…….. கடிகாவே யென்பது அமிர்தும் போன்ற அமர்செய்யும்விழியையும்,
மலைபோன்ற முலையையுமுடையா ளவள் விளையாடக்கண்டகா, நண்பனே !
அரங்கேசரது மேகந்தவழும்வரையினிடத்துக் காவலையுடையசோலையென்ற றிவாயாக வென்பதாம்.
எண்ணும்மைகள் தொக்குவிரிந்தன. ஏல்வேல் – வினைத்தொகை. நண்பனே யென்னும் முன்னிலை தோன்றாதுநின்றது.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.
அண்டமண்டமுண்டகிலமுநிலையழிந்ததனாலால்
பண்டுகண்டுயிலணையுளானவன்மகன்படைபௌவ
முண்டமுண்டமாமுனிநிகர்காதிகான்முறைமுன்முன்
கண்டவில்லினைக்கண்டவில்லாக்கினனெமர்கண்ணே. (690)
இது முதலடியும் மூன்றாமடியும் முதலொடுகடைமடக்கு.
(இ-ள்) அண்டமண்டமுண்டகிலமுநிலையழிந்ததனா லென்பது அண்டத்தை மேலேயோங்கி யோடாநின்ற பிரளயம்,
எல்லாவுலகத்தையு முண்டதனாலே யென்பதாம். ஆல் பண்டு கண்டுயி லணையுளா னவன் மகன் படை பௌவ மென்பது
ஆலாகிய அமளியுள்ளான்மகனாகிய பிரமன்படைத்த உப்புக்கடலை யென்பதாம்.
உண்ட முண்டமாமுனி நிகர் காதிகான்முளைமுன் மு னென்பது உண்ட குறுமுனியையொத்த காதிசேயாம்
விச்சுவாமித்திரன் முன்னே முன்னா ளென்பதாம்.
கண்ட வில்லினைக் கண்டவில்லாக்கின னெமர்கண்ணே யென்பது அவன்கண்ட வில்லினைக் கையினாற் றுண்டப்பட்ட
வில்லாக்கின னெவ னவ னெம் போல்வார்கண்போல்வா னென்பதாம். ஒழிந்தனவு முரையிற்கொள்க.
திணை- பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.
கற்றவர்கற்றவர்வியப்பான்வளைத்தவன்மூவெயின்முருக்கக்
கணையானானா
னற்றவர்தம்மகந்துறப்பதற்றவன்வெள்ளியங்கிரியை
யடியோடேந்தப்
பெற்றவளங்கெழுமதுகையிருபதுகையுடைவயிரப்
பிறங்கல்போன்ற
கொற்றவன்கொற்றவன்சிரத்தைக்குறைத்தவனூர்தமிழ்மறைசங்
கோவில்கோவில். (691)
இது முதலடியும் நான்காமடியும் முதலொடு கடைமடக்கு.
இதனுள், கற்றவர் கற்றவர்வியப்பான் வளைத்தவன் மூவெயின் முருக்கக் கணையானான் நானற்றவர்தம்மகந் துறப்பதற்றவன்
என்பது கல்லை வில்லாகத்தனுசாத்திரங்கற்றவ ராச்சரியமுற வளைத்தவன் பொன்னும் வெள்ளியும் இரும்புமான
மூன்றுகோட்டையையுமழிக்க அவனுக்குக் கணையானவன், நானென்னு மாங்காரமில்லாதாரிதயத்தை விட்டுநீங்காதவன் என்பதாம்.
கொற்றவன்கொற்ற வன்சிரத்தைக் குறைத்தவனூர் தமிழ்மறை சங் கோவில் கோவி லென்பது இலங்கைக்கரசன் வெற்றி
பொருந்தின வலியசிரத்தைக் கணையாற்குறைத்தவ னுறையும்பதி, திருவாய்மொழியாகிய தமிழினொலியுஞ் சுருதியாகிய
வடமொழியொலியுந் திருச்சங்கொலியும் ஒழிவில்லாத திருவரங்கம் பெரியகோவி லென்பதாம்.
ஒழிந்தனவு முரையிற்கொள்க. திணை – பாடாண். துறை – நகரவாழ்த்து.
குன்றலைக்குமிருபதுகைக்குன்றினைக்கொன்றுலகளித்த
குறுங்கைக்கோமான்
கன்றலைக்குங்குணிலெனச்செங்கனியுதிர்த்தோனணைகிலன்மேற்
களைகண்யாதோ
தென்றலைத்தென்றலைத்தேராய்வருமதன்விற்கரும்பாய்நாண்
டேனாய்தேனாய்
மன்றலைமன்றலைக்காவின்மலரம்பாய்வருமதிகொல்
வானில்வானில். (692)
இது கடையீரடியும் முதலொடுகடைமடக்கு.
(இ-ள்) கயிலையாகியகுன்றினை யெடுத் தசைக்கு மிருபதுகையை யுடையனாங் குன்றுபோன்ற இராவணனைப்
பாணத்தாற்கொன் றுலகத் துயிர்களைக் காத்த குறுங்கைக்கரசனாகிய கன்றைக் குறுந்தடியாகக் கொண்டு
கனியுதிர்த்த மாயோன், தன்னை விரும்பப்பட்ட என்னைத் தழுவுகின்றிலன்,
ஆதலால், தென்றிக்கிற் றென்றலானதைத் தேராகவும், கரும்பை வில்லாகவும், பூவிற்றேனையாராயப்பட்ட வண்டை நாணாகவும்,
மணத்தைப் பொருந்தின தலைப்பட்ட காவின்மலர்களை அம்பாகவுங் கொண்டு மதனன் வாராநின்றனன் ;
வானில் மதி யமனைப்போல் மேல் வரும் ; இனி இதற்கு மேற் களைகண் யாதோ அறிகிலே னென்றவாறு.
கொல்வான் – நமன். திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – மெலிவொடுவைகல்.
கோட்டுநித்திலக்குவையொடுங்குங்குமத்தொளிமீதே
பூட்டுபூட்டுவெம்முலைமலையிடைபொறாதேவீவீ
நாட்டுநாட்டுதலின்றுறீஇநாங்கைமால்வரையார்யார்
மீட்டுநீள்குழற்காட்டின்மேற்பன்மலர்வேய்ந்தாரே. (693)
இஃ திடையீரடியும் முதலொடுகடைமடக்கு.
இதனுள், கோட்டுநித்திலக்குவை யென்பது சங்கீன்ற முத்தின் றிர ளென்பதாம்.
பூட்டுபூட்டு வெம்முலைமலை யென்பது பூட்டப்பட்ட பூணையுடைத்து, விருப்பத்தைத்தரும் முலையாகியமலை யென்பதாம்.
இடைபொறாதே வீவீ யென்பது முலையாகியமலைகள், தம்மைத்தாங்கு மிடையானதற்குத் தம்மைப்பொறாதே இறுதியைக்கொடுக்கு மென்பதாம்.
நாட்டுநாட்டுதலின்றுறீஇ நாங்கைமால்வரையார்யா ரென்பது நாளையுடைத்தென்று கண்டார்குறித்தலை இக்காலத்தறிந்தும்,
திருநாங்கைமாயோன்வரையார் யார்தா மென்பதாம்.
மீட்டு நீள்குழற் காட்டின்மேற் பன்மலர்வேய்ந்தா ரென்பது அதன்மேலே மீளவும் நீண்ட குழலாகியகாட்டின்மேற்
பலமலரையும் அணிந்தவ ரென்பதாம். பூட்டு பூணையுடைத்து. வீவீ-இறுதலைக்கொடுக்கும்.
நாட்டு – நாளையுடைத்து. நாட்டுதல் – குறித்தல். பகுதி – பாங்கற்கூட்டம். துறை – மருங்கணைதல்.
படுகொலைவாளாக்கனைக்கொன்றுலகளித்தான்வடமலைபோற்
பணைத்தகொங்கை
யிடுகிடையொன்றிடுகிடையொன்றேனுமதுபொறுக்கலா
தென்றாலென்றால்
விடுகதிர்வெவ்வழல்கதுவியடிநிலந்தோயாதெழின்மெல்
லியலையானே
கொடுகொடுவன்சுரங்குறுகினன்னுதாஅலென்னிருதோட்
குன்றுங்குன்றும். (694)
இது முதலயலடியும் நாலாமடியும் முதலொடுகடைமடக்கு.
இதனுள், நன்னுதால் – நல்லநுதலையுடையவளே !
வடமலைபோற் பணைத்தகொங்கை யென்பது முலைகளிரண்டும் வடமலைவாணன்மலை போலப் பணைத்தன வென்பதாம்.
இடுகிடையொன் றிடுகிடையொன்றேனு மதுபொறுக்கலாதென்றா லென்றா லென்பது சிறுகிய இடையுமொன்றே ; சேம இடையில்லை ;
இதன்மே லினி இடப்பட்ட கிடைச்சர மெனினு மதுவும் பொறாதென்றறிந்தா லதன்மேலும் ஆதித்தனாலென்பதாம்.
விடுகதிர்வெவ்வழல்கதுவி யடி நிலந்தோயா தென்பது நீட்டப்பட்ட கிரணங்களாலுண்டான வெம்மையையுடைய
அழல் பற்றுதலால் நடப்போர்பாதங்க ணிலத்திற் றோயா தென்பதாம்.
எழின் மெல்லியலை யானேகொடு கொடுவன்சுரங் குறுகி னென்னிருதோட் குன்றுங்குன்று மென்பது
அழகிய மெல்லிய சாயலையுடையாளை யான் கொண்டுபோய்க் கொடிய வன்சுரத்தை யணுகில்
அவளது மலர் போன்ற தாள்களை என்சொல்லவேணும், எனது இருதோள்களாகிய மலைகளும் மெலிவெய்து மென்பதாம்.
ஆதலா லுடன்கொண்டுபோகக் கூடாதென்பது பயன். பகுதி – உடன்போக்கு. துறை – அருமை கூறல்.
இவை யாறு மீரடி முதலொடுகடைமடக்கு.
இனி மூன்றடி முதலொடுகடைமடக்கு வருமாறு :-
பொய்யாமைபொய்யாமையானுடனைம்புலனவித்த
பொற்பார்பொற்பார்
மொய்யாமொய்யாடரக்கர்முரணழிப்பாயெனவிரங்கி
முன்பின்முன்பின்
கையாற்கையாற்றினொடும்பொருசரந்தொட்டழித்ததனாற்
காமர்காமர்
மெய்யானதெரித்தவற்கும்பரனயோத்தியிலுதித்த
வேந்தர்வேந்தன். (695)
இது முதலடிமுதலிய மூன்றடியும் முதலொடுகடைமடக்கு.
(இ-ள்) பொய்யாமைபொய்யாமையுரனுட னைம்புலனவித்த பொற்பார் பொற்பா ரென்பது சத்திய
வசன மிடைவிடாத ஞானத்துடன் புலனைந்தையும் வென்ற பொலிவினையுடையோரா முனிவரும்,
பொன்னுலகின்கண்ணுள்ள விண்ணோரு மென்பதாம். பொற்பார் – இடத்தானான ஆகுபெயர்.
மொய்யா மொய்யாடரக்கர் முரணழிப்பாயென விரங்கி யென்பது திருப்பாற்கடலிற் றிரண்டுசென்று அமர்விளைக்கும்
அரக்கராகியபகையை யழிப்பாயாகவென்று முறையிட்டதற் கிரங்கி யென்பதாம்.
முன்பின் முன்பி னென்பது முன்னாளில் மிடுக்கினையுடைய வென்பதாம்.
கையாற் கையாற்றினொடு மென்பது கைகளாற் காவலா மொழுக்கத்தோடுமென்பதாம்.
பொருசரந்தொட்டழித்ததனா லென்பது போரையுடைய பாணத்தை யேவி யந்தப் பகையை யொழித் தவர்
துன்பத்தைக் களைந்ததனா லென்பதாம்.
காமர்காமர் மெய்யானதெரித்த வற்கும் பா னயோத்தியிலுதித்த வேந்தர்வேந்த னென்பது காமனார் அழகிய வுடலை
யெரித்த சிவனுக்கும் அயன்முதலோர்க்கும் பரனாவான்.
திருவயோத்தியில் திருவவதாரஞ்செய்த அரசர்க்கெல்லாமரசனா மிராம னென்றவாறு. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.
அன்றினரன்றினராகிக்கடைதுறந்தார்களிலிலங்கை
யாளியாளி
மென்றினைமென்றினைதலைத்தீர்கிளிமொழியைப்பிரித்தவன்றன்
மெய்யின்மெய்யி
னின்றறியாமனமதனிற்குடக்கன்னன்மருமத்தி
னிரலம்பேவிக்
கொன்றையன்கொன்றையன்முதலோரிடர்களைந்தானகர்தமிழோர்
கூடல்கூடல். (696)
இஃ தீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடுகடைமடக்கு.
(இ-ள்) அன்றின ரன்றினராகிக் கடைதுறந்தார்களி லென்பது முற்காலத்து அடிமைத்தமராயினார் சாபத்தாற் சத்துருக்களாகி
வாயில்காக்குந்தொழிலைவிட்டுநீங்கினா ரிருவரு ளென்பதாம்.
இலங்கை யாளி யாளி யென்பது இலங்காபுரியையாண்டவனாஞ் சிங்கவேறு போன்றவனாகிய வென்பதாம்.
மென்றினைமென் றினைதலைத்தீர் கிளி மொழியைப் பிரித்தவன்றன்மெய்யின் மெய்யினின்றறியா மனமதனி லென்பது
மெல்லிய தினையைத்தின்று பசியால்வரும் வருத்தத்தைப் போக்கும் புனக்கிளியினது மொழிபோலு மொழியையுடைய
பிராட்டியைத் தன்னைவிட்டுநீக்கினவன் மேனியிலும், உண்மையி னிலை பெற்றறியா மனத்திலு மென்பதாம்.
குடக்கன்னன்மருமத்திலென்பது கும்பகருணன்மருமத்திலு மென்பதாம்.
நிரலம்பேவி யென்பது ஒரு தொடையிற் பல அம்பைத் தொடுத்தேவி யென்பதாம்.
கொன் றயன் கொன்றையன்முதலோ ரிடர்களைந்தானகர் தமிழோர் கூடல்கூட லென்பது அவ்விருவரையுங்கொன் றயனுஞ் சிவனும்
முதலியோபோரையுடைய பாணத்தை யேவி யந்தப் பகையை யொழித் தவர் துன்பத்தைக் களைந்ததனா லென்பதாம்.
காமர்காமர் மெய்யானதெரித்த வற்கும் பா னயோத்தியிலுதித்த வேந்தர்வேந்த னென்பது காமனார் அழகியவுடலையெரித்த
சிவனுக்கும் அயன்முதலோர்க்கும் பரனாவான். திருவயோத்தியில் திருவவதாரஞ்செய்த அரசர்க்கெல்லாமரசனா மிராம னென்றவாறு.
திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.
அன்றினரன்றினராகிக்கடைதுறந்தார்களிலிலங்கை
யாளியாளி
மென்றினைமென்றினைதலைத்தீர்கிளிமொழியைப்பிரித்தவன்றன்
மெய்யின்மெய்யி
னின்றறியாமனமதனிற்குடக்கன்னன்மருமத்தி
னிரலம்பேவிக்
கொன்றையன்கொன்றையன்முதலோரிடர்களைந்தானகர்தமிழோர்
கூடல்கூடல். (696)
இஃ தீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடுகடைமடக்கு.
(இ-ள்) அன்றின ரன்றினராகிக் கடைதுறந்தார்களி லென்பது முற்காலத்து அடிமைத்தமராயினார் சாபத்தாற் சத்துருக்களாகி
வாயில்காக்குந்தொழிலைவிட்டுநீங்கினா ரிருவரு ளென்பதாம். இலங்கை யாளி யாளி யென்பது இலங்காபுரியை
யாண்டவனாஞ் சிங்கவேறு போன்றவனாகிய வென்பதாம். மென்றினைமென் றினைதலைத்தீர் கிளி மொழியைப்
பிரித்தவன்றன்மெய்யின் மெய்யினின்றறியா மனமதனி லென்பது மெல்லிய தினையைத்தின்று பசியால்வரும்
வருத்தத்தைப் போக்கும் புனக்கிளியினது மொழிபோலு மொழியையுடைய பிராட்டியைத் தன்னைவிட்டுநீக்கினவன் மேனியிலும்,
உண்மையி னிலை பெற்றறியா மனத்திலு மென்பதாம். குடக்கன்னன்மருமத்திலென்பது கும்பகருணன்மருமத்திலு மென்பதாம்.
நிரலம்பேவி யென்பது ஒரு தொடையிற் பல அம்பைத் தொடுத்தேவி யென்பதாம்.
கொன் றயன் கொன்றையன்முதலோ ரிடர்களைந்தானகர் தமிழோர் கூடல்கூட லென்பது அவ்விருவரையுங்கொன் றயனுஞ் சிவனும்
முதலியோரிடும்பையைப்போக்கினா னிருக்கு நகர் தமிழ்ச்சங்கத்தார் கூடியிருத்தலை யுடைய மதுராபுரியா மென்றவாறு.
திணை – பாடாண். துறை – நகரவாழ்த்து.
வானைநீவியவரைகளுயர்மரங்களனைத்தையும்வா
னரங்களாய
தானைதானையவாக்கொண்டமர்விளைநாள்வீடணனார்
தம்முன்றம்முன்
னானையானையினுதிவன்கோடுழுமார்பனையுயிருண்
டம்பாலம்பா
லேனையேனையர்வியப்பான்மீட்டவனல்லாற்பொருள்வே
றென்னாவென்னா (697)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடுகடைமடக்கு.
(இ-ள்) வானைநீவியவரைக ளுயர்மரங்களனைத்தையு மென்பது மேகபடலத்தைத் தைவரு மலைகளு மரங்களுமாகிய
அனைத்தையு மென்பதாம். வானரங்களாயதானை தானையவாக்கொண் டமர்விளைநாள் வீடணனார்தம்முன் றம்முன்னானை
யானையினநுதிவன்கோடுழுமார்பனை யென்பது மர்க்கடங்களாகிய படைக ளாயுதமாகக் கைக்கொண்டு
செருச் செய்யாநின்றகாலத்து வீடணனார்தம்முன்பாக அவர்தமையனானானை, அட்டகசங்களின் கூரிய வலிய
கோடுகளழுத்து மார்பானை யென்பதாம். உயிருண்டு அம்பால், அம்பாலேன் ஐ ஏனையர் வியப்பான் மீட்டவனல்லாற்
பொருள் வேறென்னா வென்னா வென்பது அம்பினா லுயிரை யுண்டபின் அழகிய நல்வினையுடையேன்சுவாமினியாகிய
சீதையைத் தன்னையொழிந்த கடவுள் ராச்சரியப்படுவான் சிறையை மீட்டுக்கொண்டு வந்தவனையல்லாதே
வேறேசிலபொருளுண்டென்று என்னுடையநா வோதா தென்றவாறு. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.
மூன்றினுமூன்றினுந்தொழிலோடொன்றாமீளாநரகத்
தூடுமூடு
மான்றதுயரிழைநன்றிகொல்வினைபோன்றிடரிழைவல்
லரக்கர்தங்கோ
மான்றலைமான்றலையடைந்தவேனையர்வன்றலையுருட்டு
மாலைமாலைத்
தேன்றழைதேன்றழைதுளபத்தொடையானைத்தொழுஞ்சனனந்
தீரத்தீர. (698)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் முதலொடுகடைமடக்கு.
(இ-ள்) மூன்றினு மூன்றினுந்தொழிலோடொன்றா மென்பதனை ஊன்றினுந்தொழிலோ டொன்றாம் மூன்றினு மெனப் பாடமாற்றி,
ஒன்றனைக்கொன் றதனூனைத்தின்னுந் தீயதொழிலோ டொத்தகொடுமையை யுடைய பார்ப்பார் பெண்டிர்
பசுவென்னு மிவரைச்செய்யுஞ் சொல்லொண்ணாத தொழின்மூன்றையும்பார்க்க வென்றுரைக்க.
மீளா நரகத்தூடு மூடு மான்றதுயரிழை நன்றிகொல்வினைபோன் றிடரிழை வல்லரக்கர்தங்கோமான்றலை யென்பது
ஒருகாலங்களினும் மீட்சியறநரகங் களினடுவேயிட்டு மூடுதலைச்செய்யு மிக்கதுயரையுண்டாக்குஞ் செய்ந்நன்றி கொன்ற
தீவினைபோல மூவுலகிற்குந் துன்பத்தைமிகுத்த இராக்கதர்க்கரசனா மிராவணன்றலையையு மென்பதாம்.
மான்றலையடைந்த வேனையர்வன்றலை யுருட்டும் மாலைமாலை யென்பது மயக்கத்தையடைந்த ஒழிந்த அரக்கர்
வலியதலையையுஞ் சரந்தொடுத்துருட்டும் வெற்றி யினதியல்பையுடைய திருமாலை யென்பதாம்.
தேன் றழை தேன்றழை துளபததொடையானைத் தொழுஞ் சனனந் தீரத்தீர வென்பது தேனுமிலையும் வண்டுமிகுதலு முடைய வனமாலையானை,
உலகத்துள்ளீர் நுமதுசெனனஞ் சந்தயமறத்தவிரும்படிக்கு வணங்குவீ ரென்றவாறு.
இதனுள்ளும், பலவிடங்களினும் எச்சங்களைக் கூட்டியுரைக்க. திணை – பாடாண். துறை – ஓம்படை.
இருந்தாதிருந்தாதரித்துண்ணவரிவண்
டினமேவமலர்முண்டகந்தாயதாய
மருந்தாமருந்தாமமெய்த்தாயுமெய்து
மங்கைக்குமணிமார்பளித்தாயளித்தாய்
சுரும்பாய்சுரும்பாய்மதங்கக்குகரடத்
துடனன்றுமுதலைத்தொடுப்பானையானை
வருந்தாவருந்தாவில்சக்ராயுதத்தாய்
வரமங்கையாயென்மனத்தாய்மனத்தாய். (699)
இது முதற்கண்ணுங் கடைக்கண்ணும் அடிதோறும் முற்றுமடக்கு.
(இ-ள்) பெருமையையுடைய தாதுக்களைப் பூவின்கண்ணிருந்து அன்புடனுண்ணவேண்டிப் பாட்டினையுடைய
வண்டின்கிளை பொருந்த மலர்ந்த தாமரையுந் தாயென்பதாய் இருக்கச்செய்தே, அழகிய அமிர்தமாம் பெறுதற்கரிய
வொளியையுடைய மேனித்தாயையுந் தாயாகவுடைய பெரியபிராட்டியென்னு மங்கைக்குக் கவுத்துவமணியணிந்த
திருமார்பைக் கிருபையுடைத்தாயளிக்கும் பூமானே ! சுரும்புகளாராயப்பட்ட மலையையொப்பதாய் மதத்தினைச்சொரியுங்
கரடத்துடன்கூடி முதலையினது பிடிப்பினால் மேனிநையப்பட்ட கெசேந்திரன் வருந்த அந்நா ளதனிடர் தீர்க்கச்செல்லும்
அழிவில்லாத சக்கரத்தையுடையாய் ! சீவர மங்கையென்னுந் திருப்பதியினுள்ளாய் !
என்மனத்தினுள்ளே குடிபுகுந்து நிலைபெறுவாய், பாஞ்சசன்னியத்தையுடையா யென்றவாறு.
திணை – இதுவுமது. துறை – கடவுள்வாழ்த்து.
ஆக முதலொடுகடைமடக்கு-15.
ஆக வகை யைந்தான்வந்த மடக்கு-75.
இனி இடையொடுகடைமடக்கு வருமாறு :-
தளிநறவப்பொலமலர்கூராவிரையாவிரைவரைதேத்
தாயர்தாயர்
அளியமடத்தகையசோதையிற்புவனத்தறஞ்செய்தார்
யாரேயென்ன
வொளியமைந்தமரகதக்குன்றவண்வளர்நாள்வெண்ணெயிற்கட்
டுண்டுநின்ற
வெளிமையைக்கண்கலுழ்வதைக்கேட்டிரங்குமனங்காண்பவர்க்கன்
றென்னாமன்னோ. (700)
இது முதலடி யிடையொடுகடைமடக்கு.
(இ-ள்) துளிக்குந்தேனையுடைய பொன்போன்றபூவினைத் தன்னிடத்து மிகுத்த ஆவிரையை ஆவானது அருந்தாது
நீக்கும் முல்லை நிலத்தையுடைய ஆயர்க்குத்தாயராயினார், கிருபையுடையமடத்தகையாம் அசோதையைப் போலப்
புண்ணியஞ்செய்தா ருலகத் தியாவருளரென்று சொல்லும்படிக்குப் பச்சைநிற மிகுந்த மரகதக்குன்றம்போன்ற
கண்ணபிரான் றிருவாய்ப்பாடியி லவண்மனையில்வளர்கின்றகாலத்து வெண்ணெய்கட்டுக் கட்டுண்டுநின்ற
வெளிமையையுந் திருக்கண்மலர் கண்ணீர் பனிப்பதனையுங் கேட்டவர்க் குள்ள மின்றிரங்காநின்றதென்றா லன்று
காண்பவர்க் குள்ளமென்னாம் மிகவு மென்றவாறு.
ஓ – அசை. இதனுள், தேம் – இடம் ; அது முல்லைநிலமென்பது ஆவிரைவரைதேத் தென்னுங் குறிப்பினாற்கொள்ளநின்றது.
துறை-கடவுள்வாழ்த்து.
வெங்களபமூர்தரவீதியிற்பனித்தமதத்திடைமென்
பிடியிற்செல்வார்
செங்களபந்திமிர்ந்தளறாய்ச்சேந்தனவாஞ்சேந்தனவாஞ்
சிறுவர்தேர்தே
ரங்குறமண்மகளகலத்தளங்குறுகாதுருளுருளா
வரங்கத்தாய்நீ
யெங்குளனென்றவன்முனமற்றங்குளனானதைப்புகழ்வா
ரெமையாள்வாரே. (701)
இஃ திரண்டாமடி யிடையொடுகடைமடக்கு.
(இ-ள்) கோபத்தையுடைய களியானைகளைப் பாகர் வீதியிற்கடாவ அவை கவுளினாற்சொரிந்த கரிய மதப்பெருக்கிற்
களிற்றொடுதொடுத்த பிடியிற்செல்லுமவர் மடந்தைமார் தமது முலைச்சுவட்டிற் குங்குமத்தைத் திமிர்ந்திட்டதா லக் கரிய
மதநீர் சேறுபட்டுச் சிவந்தனவாக, அச் சிவந்த சேற்றிற் செவ்வேளும்விரும்புஞ் சிறார் தமக்கேற்றமாமென விசாரித்தூருஞ்
சிறுதேரழுந்தி அவற்றின்வண்டிகள் பூமிதேவிமார்பாகிய இடத்தணுகா தச்சேற்றிற்புதைந் தோடாது நிற்குந் திருவரங்கத்தானே !
நீ நின்னை எங்குளானென்றுவினவிய இரணியனோடு மெங்குமுளானென்று புதல்வன்கூற அவ னிங்குளனோவென்றடித்ததூணத்
தங்குளனாகித் தோன்றியதைப் புகழ்வா ரெம்மையாட்கொண்ட தம்பிரான்மா ரென்றவாறு.
திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பணிதல்.
புத்தமிர்தந்தனிற்பிறந்தபொன்கொடியையகலாத
புனிதனாகி
யத்திகிரிதனிலுதித்தகைத்திகிரிப்பரன்பரனென்
பதனைநாடி
யுத்தமநான்மறைகண்மதித்தொன்றுரைதொன்றுரையணங்கே
யோதியோதி
மொய்த்துயர்வன்பரற்கடஞ்சென்றழுந்தவுணர்வதற்கிறைவர்
முயல்கின்றாரே. (702)
இது மூன்றாமடி யிடையொடுகடைமடக்கு
(இ-ள்) அணங்கே ! நமதிறைவர், புதிய அமிர்திற்பிறந்த பொன்னங்கொடிபோன்ற பெரியபிராட்டியைக் கணப்பொழுதும்
விட்டு நீங்காத பவித்திரவானாகி யத்திகிரியினிடத்துதித்த திருக்கைத் திருவாழியுடையபரனே பரப்பிரம மென்பதனைச்
சுருதிகணாலு முத்தம ஞானத்தாலறிந் துயர்த்தி யொன்றுபோலவுரைத்த பழையவுரையைப் பொற்றைகணெருங்கின
வலியபரலையுடைய சுரத்தைக்கடந்து நாட்டின் கட்சென் றாரியருடன் நாவழுந்தவோதி உண்மைதெளிவதற் கேகமுயலா நின்றா ரென்றவாறு.
இது கொண்டுகூட்டுப்பொருள்கோள். தொன்று- பழமை. ஓதி – பொற்றை. பகுதி – ஓதற்பிரிதல். துறை – நினைவுரைத்தல்.
என்புருகவுயிருருகவவற்றினொடுமீறிலா
வின்பம்பெற்ற
வன்புருகப்புணர்ந்தொருநாளகலேமென்றகல்வதுமக்
கறமேயென்னாய்
புன்பொருளைப்புறம்போக்கிநன்பொருளென்னரங்கனெனப்
புகன்றமாற
னன்பொருநைத்துறையுளிருந்திரையுளிருந்திரையுளவார்
நாராய்நாராய். (703)
இது நாலாமடி யிடையொடுகடைமடக்கு.
(இ-ள்) உடலும் உயிரும் உருக அவற்றினோடும் ஒழிவில்லாத பேரின்பத்தைப்பெற்ற வுணர்வுருகக் கலந்து,
இனி யொரு கணத்தும் நின்னிற்பிரியே னென் றுரைத்த நீர் இவளை வைத் தகல்வ துமக் கறமன் றென்று கூறிற்றிலை ;
இதரபுருடார்த்தங்களைவிடுத்து எம்பெருமானே பரமபுருடார்த்தமென்றறுதியிட்ட மாறனது நல்ல பொருநைத் துறையிற்
பெரிய திரைநடுவிருந்து இரையாயுள்ள ஆரன் முதலாயுள்ளவற்றை யுண்ணப்பட்ட நாரையே ! என்னிடத் தன்புடையையா யென்றவாறு.
என்னிடத்தென்பது சொல்லெச்சம். என்பும் அன்பும் ஆகுபெயர். இருந்திரை – பெரியதிரை.
இருந்திரை – தங்கி, இரையை. நார் – அன்பு. பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – பறவையொடு பரிவுற்றுரைத்தல்.
இவை நாலும் ஓரடி யீரிடத்துமடக்கு. இனி யீரடி யீரிடத்துமடக்கு வருமாறு :-
புக்கிலதாயமைந்ததயனகரமயனகரமெழிற்
பொன்னேபொன்னே
தக்கிலராமலைக்குறவர்குறவர்மனையெனத்தெளிந்த
தாமந்தாமந்
தொக்கமரர்தொழப்புரந்தவரங்கேசர்திருமுகம்போற்
சோதிமேய
வக்கமலந்திறந்தெவனோவரையிருளிற்றமியிவணின்
றடைந்தவாழ்வே. (704)
இது முதலீரடியும் இடையொடுகடைமடக்கு.
(இ-ள்) அழகிய பொன்னையொத்த திருமகளே ! உனக் கெஞ்ஞான்று மிருப்பதோ ருசிதமான இல்லாயமைந்தது
பிரமன் அகரமாயுறைந்த தாமரையே ; அயலா யொதுக்கிருந்த நகரம், பொருந்துந் தகுதி யிலராம் மலைகளுக் குறவுடையராய
குறவர்மனையென வென்னுள்ளந் தெளிந்ததாம் ; ஆகையாற் பரமபதத்தினிடத்து நித்தர் கூண்டுதொழ அதனையாண்ட
அரங்கேசர்திருமுகம்போற் சோதிமேய பிரமன் அகரமாகிய அக்கமலத்தைத் திறந் தியாதோ நடுச்சாமத்திருளிற் றமி யொருவர்
துணையின்றி யவ்விடத் தடைந்த வாழ் வென்றவாறு.
அகரம் – அந்தணரிருக்கை. அயல் நகரம் – அயலாய மனை. புக்கில் – பின் புறப்படாது புக்கிருக்கும் இல்.
உனக்கென்பது முதலாகியசொற்களைக் கூட்டி விரித்துரைக்க. பகுதி – இரவிற்குறி.
துறை நலம் பாராட்டல் ; தளர்வகன் றுரைத்த லென்பது மிது.
இட்டமணிப்பரற்சிலம்புசிலம்புதளிரேய்ந்தவிரு
தாளந்தாளம்
வட்டமுலைத்துவரிதழ்க்கோமளக்கொடியுமணமகனும்
வாணுதாஅல்போய்ச்
சிட்டர்தொழுமரங்கேசர்காவிரிகாவிரியிதன்முன்
செல்வர்செல்வர்
நட்டதிறந்திருமாதுந்திருமாலுமெனும்படித்தா
நவிலுங்காலே. (705)
இது முதலடியும் மூன்றாமடியும் இடையொடுகடைமடக்கு.
(இ-ள்) உள்ளிடுமணியாகிய பரலையுடைய சிலம்பு ஆரவாரிப்பனவாய், மாந்தளிர்போன்ற தாள்களையும்,
அழகியவாந் தாளம்போன்ற வட்டமுலையையும், பவளம்போன்ற இதழினையுமுடைய இளைய பொன்னங்கொடியும்,
மணக்கோலத்தையுடையகாளையும் ஒளிபொருந்தின நுதலினையுடையாய் !
தொண்டராயுள்ளார்தொழும் அரங்கநாதரது, சோலைகள் மலரை மலர்த்தப்பட்ட காவிரித்துறையின்கண் ணிதற்கு முன் செல்வர் ;
அச்செல்வத்தையுடையார் தம்முட்கொண்ட நட்பின் கூறுபாடும்,
பிராட்டியும் மாதவனு மென்று கூறப்படு முவமையுடைத்து, சொல்லுமிடத் தென்றவாறு.
எனவே, நீ போவதாற் பயனில்லை யென்ப தாயிற்று. பகுதி – உடன்போக்கு. துறை – மீளவுரைத்தல்.
குலத்தருவாழ்வாசவனம்பதிவாசவனம்பதிமென்
கோதைக்கோதைக்
கிலக்கணமாம்பதியெனிற்பொன்னலக்காவுமுலகுமா
விந்தமென்னிற்
சொலத்தகுகைத்தலநான்கினிதியமுமாதுளங்கனியுந்
துணைமென்போது
நலத்தகைக்கண்களிதரக்காண்கிலமீதோவிலமீதோ
நாட்டினாட்டின். (706)
இது முதலடியும் நாலாமடியும் இடையொடுகடைமடக்கு.
(இ-ள்) மனனே ! மெல்லிய மாலைசூட்டப்பட்டகுழலையுடைத்தா யிங்ஙனநின்ற இவட்கு நல்லபதி,
ஐந்தருவு மாக்கம்பெற்ற பரிமளக்காக் குடிகொண்ட இந்திரனது நல்லபதியென்று விசாரிப்பேமாகில்
அக்காவும் இவ்வுலகமும் பொன்மயமல்ல ; அஃதன்றிப் பதி தாமரையென்று விசாரிப்பேமாகில்,
இவட்கு, நூல்கள் கூறத்தகுவதாங் கரங்கள் நான்காய், அவற்றின்கண் ஐச்சுரியமும், மாதுளங்கனியும், தாமரைப்பூக்களும்
இன்பத்தைப்பெற்ற நமது அழகிய கண்கள் களிதரக் காண்கின்றிலம் ;
இவட்குச் சொன்னவையன்றி இல்ல மிவ்வுலகமோ? விசும்போ? (பரமபதமோ?) இவ்விரண்டிடத்திற் குறிக்கில் யாதோ அறிவரி தென்றவாறு.
யாதோ அறிவரிதென்பதனைப் பயனிலையெச்சமாக்கி விரித்துரைக்க.
மனனே யென்பது தோன்றா எழுவாய். இல்லமென்பதனை மத்திம தீபமாக்கிக் கூட்டுக.
ஒழிந்த அரும்பதங்களுங் குறித் துட்கொள்க. பகுதி – இயற்கை. துறை – ஐயுறல்.
மின்னியனுண்ணிடைகளபப்புளகபடாமுலைகளிணைமேருவாகுந்
தன்னிகர்மற்றில்லாதவிழிக்குவமையரங்கர்துணைத்தாமமான
பொன்னியிடத்தின்பானலின்பானல்வாயிலவம்பூவேபூவே
கன்னிதுவரிதழ்க்குவமையுவமைகுழலுரைக்கவடங்காதேகாதே. (707)
இது கடையீரடியும் இடையொடுகடைமடக்கு.
(இ-ள்) பூமியைப்போலப் பொறையுடையாய் ! அழியாத கற்புடையாட்கு, மின்போன்ற இயல்பையுடையது சிறிய இடை ;
மான்மதக் குழம்போடும் புளகிக்கப்பட்ட முலைகள் உபயமேருவொப்பன ; தனக்கு வேறுநிகரில்லாத கண்களொப்பன
அரங்கனுக் கிணைமாலையான காவிரியிற்றோன்றிய நீலோற்பலமே ; நல்ல மொழியானது இனிய பாலே ;
சிவந்த இதழ் இலவம்பூவே ; குழலானது உவக்குந்தன்மையையுடைய மேகமே ; காதானது உவமைகூறுதற் கடங்குவதல்ல என்றவாறு.
உவமை – கண்டார்விரும்பப்பட்ட மேகம். ஒழிந்த அரும்பதமுங் குறித்துட்கொள்க. இறுதியேகார மீற்றசை.
பகுதி – சேட்படை. துறை – தலைவன் பாங்கிக் கவயவங்கூறல்.
கிளர்பைப்பணிமேற்றுயிலரங்கர்கெழுதண்கடற்கானலிற்பான
லுளர்பொற்சுரும்பேபொருநர்முனையுள்ளாருள்ளாரென்கேள்கேள்
வளர்பைச்சடம்பேசடம்பேயின்வடிவாயதுவேவாயதுவே
தளர்வுற்றதுமன்னுயிரெவனோதான்மேலுறுமென்றறியேனே. (708)
இஃதிடையீரடியும் இடையொடுகடைமடக்கு
இதனை, கிளர்பைப்பணிமேற்றுயிலரங்கர் கெழுதண்கடற்கானலிற் பானலுளர் பொற்சுரும்பே ! வளர் பைச்சடம்பே ! கேள்,
என்கேளாகிய பொருநர் முனையுள்ளார் உள்ளார், என்சடம் பேயின்வடிவாயது, வாயதுவே தளர்வுற்றது,
மன்னுயிர் எவனோதான் மேலுறுமென்றறியேனென இங்ஙனம் பாடமாற்றி மாட்டுறுப்பென்னும் பொருள்கோள் கொள்க.
இதனுள், முனையுள்ளா ருள்ளாரென்பது பாசறையுள்ளா ரென்னை நினையா ரென்பதாம்.
பைச்சடம்பே – பசுத்த அடம்புகாள். கேள் – கொழுநரான. கேள் – கேளும். கேளுமென்பது கேளென உம்மைதொக்கது.
உள்ளா ரென்கேளென்பது “என்னீரறியாதீர்போலவிவைகூற, னின்னீர் வல்லநெடுந்தகாய்” என்பதுபோல
ஒருவரைக்கூறும் உபசாரப்பன்மைப் பாலோடு ஒருமைப்பான் மயங்கியது.
சடம் பேயின்வடிவாயது – மெய் பேயின்வடிவாயிற்று. வாயதுவே தளர்வுற்றது – வசனம் குழறியது.
ஒழிந்தனவும் உரையிற்கொள்க பகுதி – வினைவயிற்பிரிதல். துறை-….
மருள்பயில்வல்லவுணரைக்கொன்றரக்கரைக்கொன்றளித்ததல்லால்
வாழ்நாளெண்ணித்
திருவரங்கத்திடைதுயின்றவமுதமேயமுதமே.
தேத்ததேத்த
வுருவளர்வான்புனற்குதரத்துயிர்களைவைத்தளித்தநின்னை
யுவந்திடாதே
யிருணரகத்திடைவீழ்வார்வீழ்வார்மற்றொருதெய்வ
மென்னேயென்னே. (709)
இஃதிரண்டாமடியும் நாலாமடியும் இடையொடுகடைமடக்கு.
(இ-ள்) சிறப்புடையுயிர்கள் பெற்றயாக்கையோ டிருக்குநாள்கழிந்து, இன்னும் ஓ ரீனயாக்கையுட்புகுதுநா ளெய்தாதே
சோதிச்சொரூபமான யாக்கையுட்புக்குப் பரமபதப்பேரின்பத்தை அனுபவித்து வாழுநாள் பெறவேண்டுமென்று திருவுளத்துற்று,
அர்ச்சாவதாரமாகி, அரங்கத்தினடுவே கண்வளர்ந்த அமுதே !
முன்னாள் நீ அறியாமை யிடைவிடாத அவுணரைக் கொன்று காத்ததோடும், அரக்கரையுங்கொன் றுலகுயிர்களைக் காத்ததல்லாமலும்,
ஏகோதகப் பிரளயமிகுந்ததேயத்துட் கரசரணாதிகளிழந்த வுயிர்களை அக் கழிபெரும்புனலுள் அழியாது திருவுதரத்துள்வைத்துக்
காத்த நினது செய்ந்நன்றியறிந்து, நின்னை விரும்பாதே, இருண்டநரகத்துள்மேல் விழுவார், பிறிதொருதெய்வத்தை விரும்பாநின்றனர் ;
இஃதென்ன செய்ந்நன்றியறிதல் ! அந்தோ? என்றவாறு.
பின்னர்வந்த அமுதம் ஏகோதகம். தேத்த – மிகுந்த. தேத்து – இடத்து. அவ் – சுட்டு. வீழ்வார் – விழுவார். வீழ்வார் – விரும்புவார்.
என்னே – என்ன. என்னே – அந்தோ. திணை – பாடாண். துறை – பரவார்ப்பழித்தல். இவை யாறும் ஈரடி ஈரிடத்துமடக்கு.
மன்னுயிரைக்குறித்துளநைந்துளவத்தாதுளவத்தா
மாயாமாயா
பொன்னிநடுத்துயில்பரமாபரமாகாயத்தும்விருப்
புள்ளாய்புள்ளாய்
பன்னருமூன்றுடனமையஞ்சக்கரத்தாய்சக்கரத்தாய்
பாராய்பாராய்
நன்னிலைபெற்றெழுபூதமீற்றனவாயைவரெனை
நலியாவாறே (710)
இஃ தீற்றடியொழித் தேனைமூன்றடியும் இடையொடுகடைமடக்கு.
(இ-ள்) நிலைபெற்றவுயிர்களைக் காப்பதுகருதித் திருவுள்ளங் குழைவதுள்ள அத்தனே ! துளவமாலையுடையவனே !
ஒருகாலமும் அழியாத மாயவனே ! பொன்னிநடுவே துயில் பரமனே ! பரமபதத்தினும் லீலாவிபூதியினும் அன்புள்ளவனே !
கருடவாகனத்தையுடையவனே ! சொல்லிப்புகழ்தற்கரிய ஐந்தும் மூன்றுமாகிய திருவட்டாக் கரத்தையுடையவனே !
சக்கரத்தையுடையவனே ! பூமியென்பதாய் நல்ல நிலைபெற்றுத்தோன்றும் பூதமீறாகவுடையனவாம்
ஐந்து பூதவாயில்களில் ஐந்து புலன்களும் என்னை வருத்தாவண்ணம் உனது திருக்கடைக்கண்ணாற் பார்ப்பாயாக என்றவாறு.
திணை – இதுவுமது. துறை – கடவுள்வாழ்த்து.
உரங்காயுமன்னரவைமன்னரவையுவப்பவுதைத்
தாடலாட
லரங்காய்முன்னடியரங்காவடியரங்காதரித்திடவோ
ரம்பாலம்பா
லிரங்காழிவளைத்தவெயிலிலங்கையர்கோனையும்வதைசெய்
யெந்தாய்நின்னைப்
பரங்காணென்றிருந்தவிருந்தவர்தமைச்சுற்றாதியம
பாசம்பாசம். (711)
இஃ தீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் இடையொடுகடைமடக்கு.
(இ-ள்) சத்துருக்கள் மிடுக்கைக்கொடுக்கும் நிலைபேறுடைய பாம்பைத் தெய்வ அரசர் விருப்பமுறத் தாளினா லுதைத்து
வெற்றியுடனாடும் அரங்காக முற்காலத் தாடும் அரங்கனே ! அடியராகிய தேவர் தேவருலகத்தினிலிருந் தன்புற்றிட
ஓரம்பினாலே, புனலலைதலுடனே ஆரவாரிக்குஞ் சமுத்திரம் வளைக்கப்பட்ட மதிலையுடைய
இலங்கையிலுள்ளார்க்கரசனாகிய இராவணனையும் வதைத்த எம்முடைய தாயே ! நின்னை, நெஞ்சமே !
இவன்காண் பரத்துவ மென்று காண்பாயாகவென்று யோகித்திருந்த பெரியதவத்தையுடையோரை இயமபாசமும்,
மண் பண் பொன் னென்ற பாசத்தளையும் வளையா தென்றவாறு. நெஞ்சேயென்பது முதலியன சொல்லெச்சம். துறை – இதுவுமது.
கெடலருமெய்த்தரணிதரணிகளழுங்கமறைந்ததுபோய்க்
கேளீர்கேளீ
ரடலருமாளியினிரைத்தாறலைப்பவருண்டிரவிவண்வை
கலுந்தேனார்ந்தே
மடலவிழ்தண்டுளபத்தானாங்கையினாங்கையினளிப்ப
வதுவையாயாய்
தொடலைநறுங்குழற்குழற்றேமொழியொடும்வைகுறுமறுகிற்
றோன்றறோன்றல். (712)
இது முதலயலடியொழித்தேனைமூன்றடியும்இடையொடுகடைமடக்கு.
(இ-ள்) கேடில்லாத மெய்ம்மையையுடைய ஆதித்தன் குடகடற் புகக் கிரணம், பூமியிலுள்ளா ரிரங்க மறைந்தது ;
எமக்குக் கேளாகுவீர் ! யாங்கூறுவதனைக் கேட்பீராக ; ஒருவராலும் அடுத்தற்கரிய சிங்கம்போன் றாரவாரித்து, வழிபறிப்பவரு முண்டு ;
ஆகையால் இரவின்கண் ணெம் மிடத்து வைகுதலோடும், தேனும் விருந்தாக அருந்தி, நாங்கள் கைப்பிடித்துத்தரக் கலியாணமு மெய்தி,
ஆராயப்பட்ட மாலையைச்சூட்டும் நறுவிதாங் குழலையும், குழலிசைபோலும் தேன்போலும் மொழியையு முடையாளோடும்
வைகறையிற் றுயிலொழிந்தெழுந்து துளபத்தானது திருநாங்கைமறுகிடத்திற் பெரியோனே ! தோன்றுவாயாக வென்றவாறு.
கேளீரென்பது இருவரையும். தோன்றலென்பது அண்மைவிளி. பொருள்கோள் – கொண்டுகூட்டு.
பகுதி – உடன்போக்கு. துறை – நெறி விலக்கிக்கூறல்.
அலம்வருசெங்கதிராழிகணிச்சியினுங்கொடிதுணராதணுகாதேநீ
நிலனிடைமன்னுயிர்பிரிக்குநடுக்கற்றாய்நடுக்கற்றாய்நின்னினின்னி
னலனுடைவானவர்துதிக்கைத்துதிக்கைமலையழைத்தவனென்னாதனாமா*
மலர்மகள்சேர்மணிமார்பன்வைகலும்வைகலுமறுகில்வண்டூர்வண்டூர். (713)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் இடையொடுகடைமடக்கு.
*இக் கடைமடக்கு. அயலடிமுதலெழுத்துள்ளும் மெய்யெழுத்து, பொருளொழியப் பிரிந்து சேர்ந்து ஆம் ஆம் என வந்ததுபோலும்.
இதனுள், நடுக்கற்றாய் நடுக்கற்றாயென்பது நடுவுநிலைமைகற்றவனே ! நடுக்கமற்றவனே ! என்பதாம்.
நடுவுநிலைகற்றவன் – சமன். நில் நில் – நிற்பாயாக, நிற்பாயாக நின்னில் – நின்னிலும்.
வானவர்து திக்கைத் துதிக்கைமலை – தேவர்களேத்துந் துதிக்கையையுடைய யானை. நாதனாம் – சுவாமியாம்.
மா மலர்மகள்சேர் மணிமார்பன் – பெரிய தாமரையாளைத் தழுவும் மார்பினையுடையான்.
வைகலும்வைகலும் – எல்லாநாளுந் தங்குதலும்.
மறுகில் வண்டூர் வண்டூ ரென்பது வீதிதோறுஞ் சங்குதவழும் திருவண்வண்டூ ரென்றவாறு.
துதிக்கைமலையழைத்தவன் என் நாதனாம் ; அவன்கையிற் சுற்றுதலையுடைய கதிராழி உன்கணிச்சியினுங் கொடிது ;
இதனை யறியாதே என்னிடத்தணுகாதே ; நமனே ! நிற்பாயாகவெனக் கூட்டுக.
எனவே, உனக் கென்னிடத்துவருதல் கூடாதென்பது கருத்து. திணை- வஞ்சி. துறை – நெடுமொழிவஞ்சி.
மாறர்குருகூர்குருகூர்வடிவேலவேல
நாறுமளகத்தளகத்துணைவீகையீகை
யாறினகலாதகலாததாமாகமாக
நீறனிலவானிலவாநினைத்தேகலேகல். (714)
இது நான்கடியும் இடையொடுகடை முற்றுமடக்கு.
(இ-ள்) காரிதரும் மாறருடைய சங்குகள் தவழப்பட்ட குருகூரினிடத்துக் கடைந்தவேலையுடையவனே !
ஏலம் பரிமளிக்கும் அளகத்தையுடையா ளுள்ளத்துட் டுன்பம், நீ பொன்னைக்கொண்டுவந்து தரும்வழியால் நீங்காது ; தக்கதல்லவாம் ;
இவள்மேனியும், ஆகாச நீறும்படிக் கிரவிலெழும் நிலவினாலே அழகழியும் ;
ஆகையால் இவற்றை நினைத் தேகலையுடைய கடங்கடந்து பொருள்செய்யப்போவதை ஒழிவாயாக வென்றவாறு.
பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – ஆற்றாமைகூறிச் செலவழுங்குவித்தல்.
இவை பதினைந்தும் இடையொடுகடைமடக்கு. இவை நாற்பத்தைந்தும் ஓரடியும் ஈரடியும் மூவடியும் நாலடியுமாக
அடிதொறும் ஈரிடத்தைமடக்கியது. ஆக மடக்கு-90.
இனி அடிதோறுமிடைவிடாது மூன்றிடத்துமடக்கு வருமாறு :-
முன்னினைமுன்னினைமிடல்வல்லிடங்கரிடங்கரிநொந்த
மூலமூல
மென்னுரைசென்றடங்காமுன்னவ்வுழியவ்விடங்கருயி
ரினையேயுண்பா
னின்னிலையிவ்வுழியுளதோவெனக்கனகனுருத்தடித்த
நெடியதூணின்
மன்னிலைபெற்றவனுயிருண்டனையரங்காநினக்கிணையார்
மதிக்குங்காலே. (715)
இது முதலடி மூன்றிடத்துமடக்கு.
இதனை மிடல்வல்லிடங்கரிடம் நொந்தமூலம், முன் நினை கரி மூல மென்னுரை சென்றடங்காமுன்ன ரவ்வுழி
அவ்விடங்கருயிரினை யுண்பான் முன்னினையெனச் சேர்க்க.
(இ-ள்) மிடுக்கையுடைய வலிய முதலையின்கையி லகப்பட்டு நொந்ததேதுவாக, முன்னொளி லுன்னைநினைத்த
யானை சொல்லிய மூலமே யென்னு முரையினொலி நினதுதிருச்செவியுட்புக் கடங்காதமுன்னம்
அக்கயத்தினிடத் தந்த முதலையினுயிரை யுண்ணவேண்டிச் சென்றனை ;
அஃதன்றியும், அரங்கனே ! நீ அந்தரியாமியாகநின்ற திங்குமுளதோ வென் றிரணியன் கோபித்தடித்த நெடிய
தூணினிடத்து மிகவுநின்று அவ்விரணியனு யிரையு முண்டனை ; ஆகையால் விசாரிக்குமிடத்து
நின்னோ டிணையான கடவுள ரில்லை யென்றவாறு. இதன்கண் அகப்பட்டென்பது சொல்லெச்சம். உரை ஆகுபெயர்.
திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.
வெளியதாயமைந்ததிடைமேருவதாமுலையுயிரோவியத்தைப்பெற்ற
வளியதாயளியதாய்மலர்மாதேமாதேவராருமாரு
மொளியதாமமுதமொழிகருங்குவளைவிழியெனலாமுறையுணண்பா
வெளியதாயிருபது கைக்குன்றினைவென்றானிடபகிரியாமன்றே. (716)
இஃ திரண்டாமடி மூன்றிடத்துமடக்கு.
(இ-ள்) நண்பனே ! உயிரோடுங்கூடிய ஓவியம்போல்வாளைப்பெற்ற கிருபையையுடைய தாய்,
வண்டு மதுவுண்ண வாராயப்பட்ட தாமரை மலரே; மாது அம்மலரிற் செய்யவளே! சந்தயமில்லை.
முலை மேரு; இடை ஆகாயம்; வானோர்யாவருமுண்ணும் அமிர்தம் மொழி ;
விழி கருங்குவளை யென்பனவாம். உறையுமிடம், இராவணனாகிய இருபது கைக்குன்றை யெளிதாகப்
போர்க்களத்துவென்ற சுந்தரத்தோளழகர் சோலைமலையா மென்றவாறு.
பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல் பிடங்கூறல்.
ஏதுகொண்டுமானிடர்தமைப்பாடுதலிழிபென்றெப்
போதுமாறனைப்போற்றுதற்கென்னொடின்புறுநெஞ்சே
யாதுமாதுமென்முல்லைமுல்லையினிறையாவான்வா
னீதியாய்ந்தனமாகையான்முத்திநிச்சயமன்றே. (717)
இது மூன்றாமடி மூன்றிடத்துமடக்கு.
(இ-ள்) ஏது…….. நெஞ்சே-யாதாயினு மொரு மிகுந்த பொருளை முந்த வாங்கிக்கொண்டாயினும்,
அதன்முன்னராயினும் மனிதரைப்பாடி வாய்மையிழத்தல் இழிந்ததொழிலென்றறிந்து,
அவர்களைப் பாடா தெப்போதும் காரிமாறப்பிரானைப்போற்றுதற்கு என்னோ டொன்றாய்ப் பேரின்பமெய்தாநின்ற நெஞ்சமே !
ஆது மாது மென் முல்லை முல்லையினிறையாவான்: நாம் மேலு மாகக்கடவோம் ;
பசுக்கள் பொசிப்பாகமெல்லும் முல்லைக்கொடியையுடைய முல்லைநிலத்திற் கிறைவனாகிய கண்ணபிரானது.
வான்நீதி யாய்ந்தனமாகையால் – பரமபதத்தினதொழுக்கத்தை மாறனூல்கூற ஆராய்ந்தனமாகையால்.
முத்தி நிச்சயமன்றே – இருவழியாலும் நாம் முத்தியைப்பெறுதற்குச் சந்தயமில்லை யென்றவாறு.
ஆது மென்பது மே லாகக்கடவோமென்னும் உளப்பாட்டுத் தன்மையின்வந்த எதிர்காலமுற்றுவினைச்சொல் ;
என்னை? “ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை, ஆஅது மென்னு மவர்” என்பதனாலறிக.
திணை – வாகை. துறை – அறிவன்வாகை.
வீடாளிவீட்டினுக்குவீடாயதனைநிலையாய்விழுமிதாக்குங்
கேடாளர்கேண்மையினைப்பிரித்தெனையுந்தனதடியார்கேண்மையாக்கும்
வாடாதமகிழ்மாலைப்பெருமானைத்துணைநெஞ்சேமதித்துவிண்மே
னாடாளநாடாளரியையுநினைநினையினித்தென்னாட்டானாட்டான். (718)
இது நாலாமடி மூன்றிடத்துமடக்கு.
(இ-ள்) பரமபதத்தினையாளுமவன் குடிகொண்டிருக்கும் ஆன்மாவாம் வீட்டினுக்கு வீடாகிய யாக்கையையும்
நிலையிற்றாகும் முக்கியமென வுட்கொள்ளும் ஞானதெரித்திரருறவினை யென்னைவிட்டுநீக்கி,
அறிவிலியாகிய வென்னையுந் தன்னடியார்க்குச் சுற்றமாக்கும் வாடாத வகுளமாலிகையையுடைய சுவாமியை,
எனக்குத் துணையாகிய நன்னெஞ்சமே! இவனே பரமாசாரியனென வுட்கொண்டு, விண்ணுக்குமேலாய பரமபதத்தினை ஆளநினை ;
அவனோடு நரனுஞ் சிங்கமுமானவனையும் நினை ; நினைத்தால் நின்பேரைத் தெற்கின்கண்ணுண்டாகிய
நாட்டினையுடைய நமன் றன்கணக்கின்கண் ணெழுதா னென்றவாறு.
நம் பேரை மனத்துட்குறியா னென்று மாம். எனவே இயமதண்டமு மில்லை, செனனமு மில்லை,
முத்தியையு மெய்தலா மென்பது பயனாம். திணை – காஞ்சி.
துறை – பொதுவியற்பாலுட் காஞ்சியைச் சார்ந்த பொருண் மொழிக்காஞ்சி.
இவைநாலு மோரடி மூவிடத்துமடக்கு.
இனியீரடி மூவிடத்துமடக்கு வருமாறு :-
தாம்பரியதாம்பரியதிரைதிரைத்தபொனங்கொடியிற்
சங்கஞ்சங்கந்
தேம்பணைத்தேம்பணைத்தெறியும்விண்ணகராய்விண்ணகராய்
செல்வாசெல்வா
யாம்புகழ்செண்பகமா றன்கொழித்ததமிழ்மறையினைக்கற்
றிறைவனீநீ
யாம்பரிசுற்றவரிதயத்தினிற்குடிகொண்டிருப்பதற்கென்
னாகத்துள்ளே. (719)
இது முதலடியும் இரண்டாமடியும் மூன்றிடத்துமடக்கு.
(இ-ள்) பாயும் பரியையொப்பனவாம் பெரியதிரைகள், சுருட்டி யெடுத்த பொலிவினையுடைய அழகிய
கொடியினோடுஞ் சங்கமென்னு மிலக்கத்தையுடைய சங்குகளையும் பூவிற்றேன் பாயும் வயலினிடத் துகளித்தெறியுந்
திருவிண்ணகரின்கண் ணுறைபவனே ! பரதத்துவ மென்று தேவர்களாராய்ந்த வுபயவிபூதியையுமுடைய செல்வனே !
எம்மனோர் புகழ்பவனாஞ் செண்பகமாறன் வேதசாரத்தைக் கோதறத்தெள்ளி யுரைத்த திருவாய்மொழியினைக் கற்று,
நீயே பரப்பிரமமென்பதாஞ் சுபாவமுணர்ந்தவ ரிதயதாமரையிற் குடிகொண்டிருக்கச் சென்ற நீ
என்னிதயத்துள்ளுங் குடிகொண்டிருப்பதற்கு வருவாயாக வென்றவாறு.
இதனுள், பின்னர்வந்த செல்லென்பதனை வினைத்தொகையாக்கிப் பின்னர்நின்ற நீ யென்பதனோடுஞ் சென்ற நீ யெனக் கூட்டுக.
பொருள்கோள் – கொண்டுகூட்டு. திணை-பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.
முன்னைமுன்னைநாட்டுறந்தவனவனியைமுதலானான்
றன்னைவந்தடைக்கலம்புகக்கொடுத்தமெய்த்தண்காவா
னென்னையென்னையெண்ணுவதினியினியவரென்கேள்கேள்
உன்னையந்தகாமதிக்கிலன்பிறருளருனக்கன்றே. (720)
இது முதலடியும் மூன்றாமடியும் மூன்றிடத்துமடக்கு.
(இ-ள்) முன்னைமுன்னைநாட்டுறந்தவன் – தமையனை முற்காலத்து விட்டுநீங்கின வீடணன். தன்னைவந் தடைக்கலம்புக
முதலானா னவனியைக் கொடுத்த மெய்த்தண்காவான் – தன்னிடத்துவந்து சரணாகதியென்ன
அந்த மூத்தவனான இராவணனிலங்கையை அந்த வீடணற்குச் சொன்னபடியே கொடுத்த சத்தியவசனத்தையுடைய
திருத்தண்கா வென்னுந் திருப்பதியுள்ளான். என்னை – என்னுடையசுவாமி.
இனியவரென்கேள் – அவனுக்கினிய அடியவரு மென்சுற்றம். ஆகையால், கேள் அந்தகா – அந்தகனே ! கேட்பாயாக என்னை ?
எண்ணுவதினி – என்னைக்குறித்து நீ மே லெண்ணத்தகுங் கொடுவினைகள் யாது மில்லை. உன்னை மதிக்கிலன்,
பிற ருள ருனக்கு – உன்னை நான் மனத் தச்சப்பட்டு மதிப்பது மில்லை ;
உன்கொடுவினைக்குத் திருத்தண்காவானடிய ரல்லாத பிறருண் டென்றவாறு.
அன்று – அசை. முன்னை – தமையனை. என்னை – என்சுவாமி. என்னை – யாதுமில்லை. இனி – மேல்.
முதலானான் – மூத்த இராவணன். வீடணனாகிய அவனுக்கெனக் கூட்டுக. துறந்தவன் – வினைப்பெயர்.
திணை – வஞ்சி. துறை – நெடுமொழிவஞ்சி.
முண்டகமுண்டகநெகுகோடுறுமேதிமேதிகளே
முற்றுமுற்றும்
வண்டிமிர்காவியுமேயுமரங்கத்தானருட்கிலக்கா
மகிழ்நர்வாய்மைத்
தொண்டமைபாணரைக்கன்னுவாயிலின்கட்கரிக்கலம்போற்
றோன்றநம்மிற்
கண்டனங்கண்டனம்புரைமென்மொழிநடையெங்கையாயர்தற்
காதகாத. (721)
இது முதலடியும் நாலாமடியும் மூன்றிடத்துமடக்கு.
(இ-ள்) தாமரையைமேய்ந் துள்ளமகிழப்பட்ட கொம்பினை மிக்க வாயுதமாகவுடைய எருமைகள்,
அதன்மேலு மின்புற்று, எல்லாநாளும் வண்டுக ளாரவாரிக்கு நீலோற்பலத்தினையும் மேயுந்
திருவரங்கத்தா னருட்கிலக்காம் நம்முடைய தலைவர்க் குண்மையாகத் தொண்டுபா டமைந்த பாணரை,
இன்று கன்னவாசலிற் கரிப்பானைபோல நம் மில்லத்துவாயிலின்கட் டோன்றவுங் கண்டனம் ;
இங்ஙனங் கண்டது நமக்குத்தக்கதாயினும், தோழீ ! பாகினையும், அன்னத்தினையும்போன்ற மெல்லிய மொழியினையும்
நடையினையு முடைய எங்கையர்காணில் அந்தோ ! வருந்துதற் கேதுவரதலா லிது தகாததா மென்றவாறு.
இன்று என்பதனோடு பிறவுஞ் சொல்லெச்சங்கள் வருவித்துரைக்க. பகுதி – பரத்தையிற்பிரிதல். துறை – பாணனைப்பழித்தல்.
பத்தர்தீவினைப்பற்றறுத்தருள்பரம்பரன்மாயோ
னித்தனின்றவூர்வரைமயிற்களிநிரைத்தெழுகாந்த
ளத்தமத்தம்வமபடர்முலைமுலைமொழிநகைவேய்வேய்
முத்தமுத்தமவிலவிதழிதழ்குழன்முருகார்கார். (722)
இது கடையிரண்டடியும் மூன்றிடத்து மடக்கு.
(இ-ள்) பத்தரிடத்துப் பழையதீவினையாலடைந்த ஆசைகளைத் தீர்த்துக் கருணைசெய்யும் மேலாகிய பரமனாகிய
மாயோன் அழிவில்லா தான் அவனது நின்றவூரென்னுந்திருப்பதியைச் சார்ந்த வரையிடத்து மயில்போலுஞ் சாயலையுடையாட்கு,
தோழீஇ! வண்டுகள் கூண்டெழு தலையுடைய காந்தள்போலும் கை ; பொன்மலைபோலும் கச்சையறுக்கப் படாநின்ற முலை.
முல்லையென்னும் பண்போலும் மொழி ; வடத்தி னிரைத் தணியப்பட்ட வேய்முத்தம்போலும் நகை;
நல்ல இலவம்பூப் போலும் அதரம்; பரிமளிக்கப்பட்ட முகில்போலும் குழ லென்றவாறு.
இதனுள் அத்தமென்றது பொன்மலை ; “அத்தம்மனையகளிற்றந் நகர்” என்றார் முனிவரும். முலையென்பது இடைக்குறை ;
“முலையணிந்த முறுவலாள்” என்பதுபோலக் கொள்க. முருகார்கார் அற்புத வுவமை.
தோழீயென்னும் முன்னிலை எச்சம். பகுதி- சேட்படை. துறை – தலைவன் பாங்கிக் கவயவங்கூறல்.
கண்டனனொண்பொருளேமெய்ப்பொருளெனலுமுயிருளதாக்
கழிந்தயாக்கை
மண்டலமண்டலம்புரந்தமாவலிமாவலிமுழுது
மாற்றமாற்றங்
கொண்டறல்கொண்டறலிமையோருறவுறவேசிறைவைத்த
கொண்டல்கொண்டல்
வெண்டிரைமுத்தெறிமயிலைமடமயிற்கெப்படிபிரிவை
விளம்புவேனே. (723)
இஃ திடையிரண்டடியும் மூன்றிடத்துமடக்கு.
(இ-ள்) பொன்னாகியநல்லபொருளே பொய்யில்லாப் பரப்பிரமமாகிய பொருளென்று வியந்துகூறலும்,
உடனே உயிருண்டாயிருக்கவும் உயிர்நீங்கப் பொலிவுநீங்கியிருக்கும் யாக்கையாக அவள்யாக்கையைக் கண்டனனென்றால்,
வட்டத்தையுடைத்தாய் அணுச்செறிந்த பூமியை யாண்ட மாவலியுடைய பெரியவலிமுழுதும் மாற்றும்படிக் கவனோடு மாற்றங்கொண்டு,
அவன்பெய்யு முதகத்தையேற்றுத் தேவர் கலியாண மெய்த மிகவும் அவனைப் பாதாளத்திற் சிறைவைத்த
காளமேகம்போலு நிறத்தையுடையானது, கீழ்காற்றானது கடலிற் றிரையெடுத்த சங்கு மிப்பியு மீன்ற முத்துக்களைத்
திரையோடுங்கூடிக் கானலிலெறியுந் திரு மயிலாபுரியில் மடப்பத்தோடுங் கூடிய மயில்போலுஞ்
சாயலையுடையாட் கென்பிரிவை, தோழீஇ! யா னெவ்வாறுரைப்ப லென்றவாறு.
இதனுள், மாவலி – அவுணன். மாவலி – பெரிய பெலம். மாற்ற- நீக்க. மாற்றங்கொண்டு – மாறுபாடுகொண்டு.
அறல்கொண்டு – உதகத்தைக் கையிலேற்று. அற லிமையோருற – தேவர்கள் கலியாண மெய்த. உற – மிகவும்.
கொண்டல் – மேகம். கொண்டல் – கீழ்காற்று. தோழீ யென்னு முன்னிலை எச்சம். பகுதி – பொருள்வயிற்பிரிதல்.
துறை – வாட்டங்கூறல்.
கவளக்கரிக்கன்றுதவியமால்கடிகைச்சிலம்பிற்கடிபொழில்வாய்த்
தவளத்தவளத்தளவமுகையாம்பலாம்பல்சமன்வாய்வாய்
துவளத்தனிநுண்ணிடையமிர்தந்துடியேய்மடந்தாய்நின்கருங்கட்
குவளைக்குவளைக்குலஞ்செறிகைக்கைக்காந்தளிற்கூட்டமதென்னென். (724)
இஃ திரண்டாமடியும் நாலாமடியும் மூன்றிடத்துமடக்கு.
(இ-ள்) கெசேந்திரனுக் குதவிய மாயோன் றிருக்கடிகைச்சிலம்பில் விளங்கிய சோலைவாய் வெண்மை
நிறத்தோடுங்கூடிய அழகாகிய வளத்தை யுடைய முல்லைமுகைபோலப் பல்லையும், சேதாம்பல்போல வாயையும்,
அமிர்தத்தையுந் துடியையும்போல மொழியையு மிடையையு முடைய மடந்தையே !
நினது கண்ணாகிய குவளைக்கு, வளையினது கூட்டஞ் செறியுஞ் செய்கையையுடைய கையாகிய காந்தளோடுங்
கூட்ட முண்டானகிரியைக் கேது யாதென்று கூறுவாயாக வென்றவாறு.
யாதென்பது ஐயவினாவாகலால், காமனது அறுதிப்பாணமாகிய கண்ணென்னும் நீலம் என்னுயிரைக் கொல்லாமைக்
கெண்ணியோ பிறிதொன்று கருதியோ வென்றவாறு. பகுதி – பாங்கற்கூட்டம். துறை – நாணிக் கண்புதைக்க வருந்தல்.
இவையாறு மீரடி மூன்றிடத்துமடக்கு. இனிமூன்றடிமூவிடத்துமடக்கு வருமாறு :-
குன்றாவின்குன்றாவின்றுயர்க்குயர்நன்குடைக்குடைக்கொள்
கோமான்கோமா
னன்றாமன்னன்றாமன்னுலகமுழுதுழுதுயர்தீர்
நாதன்வார்வார்
நின்றானைநின்றானையுடன்வருகவருகவெனா
நேமிநேமி
யொன்றால்வல்லிடங்கரைக்கொன்றருள்புரிகாரரங்கனென
துள்ளத்தானே. (725)
இஃ தீற்றடியொழித் தேனைமூன்றடியும் மூன்றிடத்துமடக்கு.
(இ-ள்) குறைதலில்லாத இனிமைகளைத்தரும் மலையைப் பசுக்களின்றுன்பத்திற் குயர்த்திய நன்மையுடைய
குடையாகக் கைக்கொள்ளுந் தலைமையையுடையோன், பூமிதேவியிடத்து நட்புடைத்தாங் கொழுநன்,
பிரமகற்பங்கூடும் அந்தியகாலத்து ஏகோதகப்பிரளயம், நிலைபெற்ற உலகமனைத்தையும் கிளைத்தெழ அதனு ளழுந்துந்
துயரத்தைத் தீர்த்துத் திருவுதரத்துள் வைத்த சுவாமி, நீண்டொழுகிய நீரின்கண்ணின்று ஆனைநின்கைச்சக்கரத்தோடும்
வருக என்னையுடையவனே யென்றழைப்பச் சென்று, வட்டத்திகிரியொன்றினான் மிடுக்கையுடைய முதலையைக் கொன்று
யானையினுயிரைக் காத் தருள்செய்த காளமேகம் போலத் திருமேனியையுடைய அரங்கன் என்னிதயத் திருப்ப னென்றவாறு.
எனவே, எனக் கியாதுகுறை? ஒருதுன்பமு மில்லை யென்பது பயனாம்.
இனிமை – காட்சிக்கினிமையும், பலமூலாதிகளைத் தருதலும்.
கோமான் – தலைமையையுடையோன். கோமான் – பூமிதேவி. நன்றாம் -நட்பாம். வார்வார் – ஒழுகும்நீர்.
நின்றானை – நினது சக்கரப்படை. அருக – உடையவனே. நேமி – வட்டம். திணை – பாடாண். துறை – கடவுள் வாழ்த்து.
வாக்கினால்வாக்கினாலாரணனாரணன்மலராண்மன்னன்மன்ன
னாக்கம்யாவையும்புகழ்செந்தமிழ்மாறன்றுடரியிலென்னன்பாநண்பா
தாக்கர்தாக்கரந்தையுறத்தாக்கணங்குமணங்குநுதித்தாரைதாரை
நோக்கினாணோக்கினாணெனையகன்றதகன்றதுளனோயுநோயும். (726)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் மூன்றிடத்துமடக்கு.
(இ-ள்) என்னிடத் தன்பாம் நண்பனே ! தனது திருப்பவளத்தினி லுண்டான நாலுகவிகளாலும்,
வேதாந்தத்துட்பொருளாம் நாராயணனாகிய தாமரையாள்தழுவும் நல்லமன்னன்செல்வமுழுவதும் வாழ்த்துஞ் செம்மையையுடைய
திருவாய்மொழியாகிய தமிழையுடைய காரி மாறப்பிரான் றுடரிமலையினிடத்துப் பொருவார்போர் துன்பமுறும்படி பொரும்
வீரமாகாளியுங் கண்டால் வருத்தத்தையெய்தும் வாளின் வாய்க்கூறுபோலக் கொலைபுரியுங்கண்ணோடுங்கூடிய
அழகினையுடையா ணோக்கத்தா லெனதுநிறையினது தலைமை யென்னைவிட்டுநீங்கியது ;
எனதுள்ளம் தளராநின்றது ; காமநோயும் மிகுந்த தென்றவாறு.
வாக்கு – திருப்பவளம். நாலுவாக்கு – ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரமாகிய நாற்கவி. மன் நன் – தழுவும் நல்ல.
மன்னன் – தலைவன். ஆக்கம். சொரூப ரூப குண விபூதிகள். தாக்கு – படை. அரந்தை – துன்பம். தாரை – கண்.
நோக்கு – அழகு. ஆண் – தலைமை. நுதி – ஆகுபெயர். தாக்கரந்தையுற எனப் பொருந்தாரெய்துந் துன்பம் போரின்மே லேற்றப் பட்டது.
என்னை? “வேண்டும்பனுவற்றுணிவு” என்பதுபோலக் கருத்தாமயக்கம் பகுதி – பாங்கற்கூட்டம். துறை – உற்றதுரைத்தல்.
மருணயனமருணயனம்பாலளித்தவளித்ததல்லான்மழலைவாய்வாய்
தருநகையீதருநகையீதருஞ்சோலைமலைமலைநத்தான்றனான்றன்
முருகவிழ்பூமகளுலகிற்கருணோக்குநகையுமெனுமுறைபோலென்றா
லொருதலையன்றொருதலையன்றிங்காமிக்காமிக்கையுள்ளேயுள்ளே. (727)
இஃதீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் மூன்றிடத்துமடக்கு.
(இ-ள்) நெஞ்சமே ! இம்மழலைமொழியையுடையாளது மருட் பார்வையோடுங்கூடிய கண்கள் அருட்பார்வையோடும்
ஆனந்தத்தை நம்மிடத்திலே தந்த கருணையையுடைத்து ;
அதுவுமன்றியே இவள் வாயிலுண்டாகிய இக் குறுநகையும் பெறுதற்கரிய மகிழ்ச்சியைத் தரா நிற்கும் ;
இவையிரண்டும், திருமாலிருஞ்சோலைமலையில்வாழ்பவனாம் போரையுடைய பாஞ்சசன்னியத்தையேந்துவான்றன்
பாரியாகிய மிகுந்த மதுவைச் சொரியுந் தாமரையாள் உலகத்துயிர்கட் குதவும் அருணோக்கும்,
திருநகையும் கொடுக்கும் பேரின்ப மெப்படியோ அப்படி யென்னும் முறையேபோ லென்றா லும்மைதொடுத் திவ்வுலகின்
கண் ணாமிவளைவிரும்பும் இவ்விருப்பம், ஒருதலையிலுள்ளதல்ல, இருதலையிலு முள்ளதென்பது நிச்சயமென்று விசாரிப்பாயாக என்றவாறு.
உள்ளே – நெஞ்சமே. உள் – விசாரிப்பாயாக. அருணயன் – அருட் பார்வையோடுங்கூடிய ஆனந்தம்.
அளித்த அளித்து – தந்த கருணையை யுடைத்து. ஈது – இதுவும். தருநகை – உண்டாய புன்முறுவல்.
அருநகை – பெறுதற்கரியமகிழ்ச்சி. அன்று – கழிபிறப்பில். இருதலையுமுள்ளதென்பது எதிர்மறைச்சொல்லெச்சம். ஏகார மீற்றசை.
பகுதி – இயற்கை. துறை – குறிப்பறிதல்.
மானனையாளிணைமென்றோளணியிழாயரங்கேசன்
மலரோன்றன்பாற்
பானலம்பானலம்புரிவோருயிருயிர்ப்பானிகல்விளையாப்
பாலன்பாலன்
பானிரையானிரைக்கடுக்கல்கவிகவிகைப்புயலரவி
னாடியாடி
தேனிறைதேனிறைத்தெழுபொன்னியுட்போதுபோதுமுகஞ்
சிவணாவேய்வேய். (728)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் மூன்றிடத்துமடக்கு.
(இ-ள்) அழகியபூணினையுடையாய் ! என்னால் விரும்பப்பட்ட மான்போலுநோக்கினையுடையா ளுபய மெல்லிய தோள்களானவை,
துளை பொருந்தா மூங்கில்போலும் ; முகம், திருவரங்கத்தீசன், பிரமனாகிய மூத்தபிள்ளையிடத்தும்,
பூலோகத்தின்பத்தைவிரும்பினோரிடத்துத் தாமரை முதலிய பூப்பாண நான்கினையுந் தொடுத்தபின்னர் நீலோற்பலமாகிய
அறுதிப்பாணத்திற் கைவைப்பதல்லால் அப்பாணத்தை விரும்பியவின்பம்பெறாது வருந்துவாருயி ருடலைவிட்டு
நீங்கும்படிக்குத் தொடுத்துப் போர்செய்தறியா மன்மதனாகிய இளையபிள்ளையிடத்தும் அன்புசெய்வான்,
கன்மாரியாற்கதறப்பட்ட பசுக்களினிடரைத்தீர்த்தற்கு மலையைக் குடையாகக்கவிக்கப்பட்ட காளமேகம்,
பாம்பினை யரங்காக நாடி யாடப்பட்டவனது (பொன்னியுட்போது தேனிறை தேனிறைத்தெழுபோது)
காவிரியுளுண்டான வண்டுகள் தங்கு மதுவை யொழுக்கியோங்குந் தாமரைப்பூப்போலு மென்றவாறு.
இது, வேய்சிவணாவேய் எனவும், பொன்னியுட்போது, தேனிறை தேனிறைத்தெழுபோது எனவும் பாடமாற்றினவாற்றாற்
கொண்டு கூட்டுப்பொருள்கோளாயிற்று. ஒழிந்த அரும்பதங்களு முரையிற் கொள்க.
என்னால்விரும்பப்பட்டவென்பது சொல்லெச்சம். பகுதி – சேட்படை. துறை – அவயவங்கூறல்.
மதுமதுகையினுணவளிமகிழ்மகிழ்முனிவரைமயில்குழல்வான்வான்
விதுவிதுவெனவொளிதருமுகமயிலயில்விழிமொழிகுயில்வாய்வா
யதுவதுவையமரைமுகைமுலைமுலைநகையறனுரைதெளிவாயாய்
முதுமுதுவருமிலவிதழிதழெனலொடுமொழிவதுவயிறாலால். (729)
இது நாலடியும் மூன்றிடத்தும் முற்றுமடக்கு.
(இ-ள்) தேனை யுரனுடனுண்ண வண்டுகள்விரும்பும் வகுள மாலிகைமுனிவன் றுடரிமலையினிடத்து
மயில்போலுஞ்சாயலையுடைய யாட்கு நண்பனே ! குழலானது விசும்பின்கண்ணுறையுங் காளமேக மென்பதாம் ;
முகமானது உதயமதியை இதுவென்று கண்டார் கூறும்படிக் கொளியைத் தருவதாம் ; விழியானது கூரிய வேலையொக்கும் ;
மொழியானது குயிலின்வாயில் மொழியதனை யொக்கும் ; முலையானது மணத்தையுடைய தாமரைமுகுளத்தையொக்கும் ;
நகையானது முல்லையரும்பையொக்கும் ; அதரமானது, அறத்தைக்கூறு நூல்களினுரையைச் சந்தயமற ஆராயுந் தலைமையை
யுடைய அறிவினான்மூத்தோர் இலவம்பூப்போலு மென்பதனோடும், வயிற்றிற் குவமைசொல்வது கொம்பரினின்றசையு மாலிலையேயா மென்றவாறு.
மதுகை – உக்ரம். வான் – மேகம். இது – சுட்டு. அயில் – கூர்மை. வாய் – வசனம். அது – சுட்டு. வதுவை – மணம். மரை – தாமரை.
முலை – முல்லை. ஆய் – ஆராய். முதுவரும், உம்மைசிறப்பு. இதழ் – பூவின்றோடு.
ஆல் – அசையப்பட்ட. முல்லை, ஆல் முதலிய ஆகுபெயர். பகுதி – பாங்கற்கூட்டம். துறை – இயல்பிடங்கூறல்.
முன்னிலை தோன்றா எழுவாய்.
ஆக வகை யேழினால் இடைவிடாமடக்கு நூற்றைந்தும் அடைவே வந்தவாறு கண்டுகொள்க.
வகையேழாவன :- அடிமுதன்மடக்கு-15. அடியிடைமடக்கு-15. அடியிறுதிமடக்கு-15.
ஆக அடிதொறும் ஓரிடத்துமடக்கு-45. முதலொடிடைமடக்கு-15. முதலொடுகடைமடக்கு-15. இடையொடுகடைமடக்கு-15.
ஆக அடிதொறு மீரிடத்துமடக்கு-45. அடிதொறு முதலிடைகடை மூன்றிடத்துமடக்கு-15.
ஆக வகையேழினால் மடக்கு நூற்றைந்தும் இடைவிடாமடக்கு.
262.ஏனையதாமுமிதனதென்பெறுமே.
(எ-ன்) ஒழிந்த இருவகைமடக்கிற்கும் தொகையுணர்-ற்று.
(இ-ள்) ஒழிந்தனவாம் இடைவிட்டுவருமடக்கும், இடைவிட்டும் விடாதும்வரு மடக்கும் ஆகிய இரண்டுங்கூறிய
இவ் விடைவிடாமடக்கே போல எழுவகையாய் ஒரோவொன்று நூற்றைந்து நூற்றைந்தாந் தொகைபெறு மென்றவாறு.
ஆக மூவகைத்தா யெழுதொடையான் மூன்றிடத்தான் மடக்கு முந்நூற்றொருபத்தைந்தா மென்பது பெற்றன.
அவையு மிம்முறையே கூறுகிற் பெருகும். அவற்றுள்ளுள்சில வருமாறு :-
வாமனன்மழவிடையினான்பாற்கடல்வழங்கு
வாமனன்புகழ்கள்வன்வைகுந்தைமாதவனாம்
வாமனன்றனையிடைவிடாதுணர்வினுள்வைப்பான்
வாமனன்னமக்கெளியதாமும்பர்வைகுந்தம். (730)
இஃ திடைவிட்டுவந்த அடிமுதன் முற்றுமடக்கு.
(இ-ள்) பறந்துபாயும் அன்னத்தையுடைய பிரமனும், இளைய இடபத்தையுடைய சிவனும்,
திருப்பாற்கடல்பெற்றுத்தரப்பட்ட அயிராவதத்தை யுடைய இந்திரனும் என்னும் மூவரும் வழுத்துங் கள்வனென்னுந்
திருநாமத்தோடும் வைகுந்தைமாதவனாகிக் குறளுருவான வன்றன்னை விட்டுநீங்காது ஞானத்தினா னினைக்கும்
படிக்குப் புலாதி களிற்போகாது என்னோடுங்கூடி வருவாயாக மனனே !
அங்ஙனம் நினைத்தாற் பெறுதற்கரியவா மெல்லாப்பதத்திற்கும் மேலாய பரமபதம் நா மெய்துதற் கெளியதா மென்றவாறு.
திணை- பாடாண். துறை – கடவுள் வணக்கம். ஓம்படையுமாம்.
வாசநாண்மலர்வண்டுகள்வாய்விடாவகையுண்டு
மூசியேழிசைவண்டுகள்களிமுகிற்குழலாளைப்
பூசன்மாமதன்வண்டுகள்பொரத்துழாய்புல்லாணி
யீசனல்கிலன்வண்டுகளிறைதுறந்தெழுமன்னோ. (731)
இஃ திடைவிட்டுவந்த இடைமுற்றுமடக்கு.
இதனுள், நாண்மலர்வண்டுகள் என்றது, பருவத்தின்மலர்ந்த பூவின் வளவிய தாதுக்கள் என்பதாம்.
பூசன்மாமதன்வண்டுகள் எ-து பஞ்சபாணங்கள் என்பதாம்.
வண்டுகளிறைதுறந்தெழும் எ-து சங்குகள் முன்கையைவிட்டு நீங்கும் என்பதாம். ஒழிந்தனவு முரையிற் கொள்க.
திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – கண்டு கைசோர்தல்.
மறைபயின்றவண்டமிழ்முனிகுருகையின்மன்காவெ
யிறைவர்பின்னர்நெஞ்சகன்றதுகன்றிடத்திரங்காவே
யறையிலிங்கிணையாமெனவுயிருணவங்காவே
யுறைபுரந்தகண்மலர்களுமொல்லையுமுறங்காவே. (732)
இஃ திடைவிட்டுவந்த கடைமுற்றுமடக்கு.
(இ-ள்) சுருதிகூறியவுரையொடும்பொருந்திய திருவாய்மொழியைப் பாடித்தந்த சீபராங்குசமுனிவன்
குருகாபுரியினிடத்து நிலைபெற்ற சோலைகளே ! நின்னிற்பிரியேனெனப் பிரிந்த தலைவர்பின்னே யென்னெஞ்சமானது,
ஈன்றணிமைப்போதில்விட்டுநீங்கின கன்றின்பின் செல்லு மீற்றாவே சொல்லுமிடத் தொப்பென்பதாக அகன்றது ;
அதனாற் றனியிருந்தவுயிரையுண்பான் றனது துளையாகிய வாயை அங்காக்கப்பட்ட ஆயர்வேய்ங்குழல் தருவதாந்
துளிகளையுடைய கண்ணாகிய குவளைகளு மெனதுவசமாகச் சிறுவரையுந் துயில்கில வென்றவாறு.
ஆதலான் மேல் யாதுசெய்வே னென்பது பயன். பகுதி – இரவிற்குறி. துறை – காமமிக்க கழிபடர்கிளவி.
தாமாலமாலமருமென்றமாலமால
நாமாலமாலநளிநீர்கடமாலமால
தேமாலமாலகரிசேர்மலர்மாலமால
மாமாலமாலமலதாளுளமாலமால. (733)
இஃ திடைவிட்டும் இடைவிடாதும்வந் திடையு மிறுதியும் நாலடியும் முற்றும் மடக்கியது.
(இ-ள்) தாமாலம் – அண்டத்தையெல்லாந் தட்டழித்துண்டு கடக்கும் மிக்க பிரளயத்தில்.
ஆல் அமரும் – ஆலமரத்தினிடத் துற்பவித்துத் தங்கும். மென்றமாலமால – மெல்லிய இலையிற் றுயிலுதலுடைய.
நாமாலமால – அச்சத்தைத் தரப்பட்ட நஞ்சம்போலுங் கருமையையுடைய.
நளிநீர்கடமால மால – செறிந்த நீராங் கடலைக் கடக்கப்பட்ட பெருமையொடுங் கூடிய மற்கடமாருதத்தையுடைய.
தேமால – தேன்றுளும்ப. மா – வண்டுகள். லகரிசேர் – அதனையுண்டு களிப்பைப்பொருந்தும்.
மலர்மால – தாமரைப்பூவிருப்பமாக. மால – பெரிய இல்லமாகவுடைய. மாமால் – திருமகள் மயங்கும்.
அமால் – அழகையுடைய மாயோன். அமலதாள் – அழுக்கற்ற திருவடிகளை. உளமால் – உள்ளத்திலேயுடையேமாகையால்.
அமால – அந்தப் புதனுக்கு, நெஞ்சமே ! யாஞ் சரி யென்றவாறு.
ஆலம் – மீமிசை. நளிநீர்கடமாலமால் – திருவடி. லகரி – ஆரியம். மால் – துயில் ; இஃதாகுபெயர்.
ஒடுக்கத்தில் அகரம் அசை. புதனுக்குச் சரியெனவே, ஞானமுடையேம் என்பதாயிற்று. திணை….. துறை…..
பொருநற்புனற்சங்கணித்துறையான்
புல்லர்களச்சங்கணித்துறையான்
வருநற்றுடரியுரிஞ்சென்றூழ்
வைகுந்தலைக்காவினுஞ்சென்றூழ்
நெருனற்றருமவ்வணங்குளவே
னெஞ்சேநினைத்துவணங்குளவே
தருநட்புளதுவருந்தேனே
தானேமறித்துவருந்தேனே. (734)
இஃ தோரடியை யிரண்டாகப்பகுத் தடிதொறும் நான்கடியும் ஈரிடத் திறுதி முற்றுமடக்கு.
(இ-ள்) பொருநையிடத்துப் புனல்வளமறாத சங்கணித் துறையை யுடையவன், அறிவில்லாதார் பொல்லாச்
சடத்து ளணித்தாகக் குடிகொண்டறியாதவன், அவனதங்கமாகிய துடரிமலைக்கொடுமுடி சென்று பரிசிக்கப்பட்ட
ஆதித்தன் றங்கியேகு முச்சியையுடைய சோலையினிடத் தின்ன முஞ் சிறிது முயற்சியொடுஞ்செல்ல
நேற் றூழொடுங்கூடி யவளைத் தந்த தெய்வ மின்று மிறவாதிருப்ப துண்டென்றா லதனை நெஞ்சமே !
நினைத் ததனுள்ளத்துறும்படி வணங்குவாயாக ; நேற்றைப்போலே என்னிடத்துக் கூட்டித்தரு நட்புடையதாம் ;
அத்தேன்போலு மொழியை யுடையாளு மாயத்தைவிட்டுநீங்கிக் கூடுவள் ; மீள வருந்துவேனல்ல வென்றவாறு.
இதனுள், சென்று என்பது செல என ஒருவினையெச்சம் மற்றொரு வினையெச்சமாயிற்று.
இதன்வேறுபாடும் அறிந்துகொள்க. பகுதி – இடந்தலை. துறை – பொழிலிடைச்சேறல்.
எட்டுமாதிரமாதிரமாதிரம்
வட்டமாறினுமாறினுமாறினும்
விட்டுவாமனன்வாமனன்வாமன
னிட்டர்மால்கடிமால்கடிமால்கடி. (735)
இது முதற்சீரொழித் தேனைமூன்றுசீரும் நான்கடியும் முற்றுமடக்கு.
(இ-ள்) அட்டகுலபருவதத்தையும், அட்டகயத்தையும், அட்டதிக்கையும், அவற்றையுடைய பூமியையும்,
இதன்கீழாயவுலகங்களையும், மேலாயவுலகங்களையும் ஏகோதகம் விழுங்குமாற்றா லின்னு மழியினும்
(அழியாதகாலத்திற்கும்) விண்டுவாகிய வாமனன், வாவும் அன்னத்தை யுடையவன், அழகிய மனத்தினுள்ளான்,
தன்னைவிரும்புவார் சித்தப் பிராந்தியைநீக்கும் மேகம்போன்ற திருமேனியன் ; விளக்கத்தையுடைய மாயோன்,
அவனே யுலகிற்குக் காவலாவா னென்றவாறு.
ஆல் – வெள்ளம். தின்னுமாறு – விழுங்குமாறு. இன்னும் – இன்னமும். மாறினும் – அழியினும்.
வாமனன் – வாவும் அன்னத்தையுடையவன். வாமனன் – அழகியமனன் (விகாரம்). இட்டர் – தன்னை விரும்புவார்.
மால் – பிராந்தி. கடி – நீக்கும். மால் – மேகம். கடி – விளக்கம். மால் – மாயோன். கடி – காவல்.
அழியினும் என்னுமும்மையால் அழியாக் காலத்திற்கும் அவனே காவலென்பது தானே போதரும்.
எட்டென்பதனை முதல் விளக்காக்கி மூன்றிடத்து மேற்றுக.
எண்ணும்மை செய்யுள்விகாரத்தாற் றொக்குநின்று விரிந்தன. இதன் வேறுபாடும் அறிந்துகொள்க.
திணை – பாடாண். துறை – கடவுள் வாழ்த்து.
263.பாதமனைத்துமடக்குதல்பழிதீர்த்
தோதியவனைத்தினுமுறுமழகுடைத்தே.
(எ-ன்) இன்னும் மடக்கலங்காரத்தையே யொருவழி வேறுபடுத்துக் கூறுகின்றது.
(இ-ள்) அடிக்கண்ணுள்ள சீர்முழுதும் மடக்கிவருதன் முன்னர்க் குற்றமறுத்துக்கூறிய
மடக்கனைத்தினும் மிக்கஅழகுடைத்தென்றவாறு.
அவை இரண்டடிமடக்கு, மூன்றடிமடக்கு, நான்கடிமடக்குமெனப்படும். அவற்றுட் சில வருமாறு :-
மறைகடந்தசொன்மாமகிழ்மாலைமான்
மறைகடந்தசொன்மாமகிழ்மாலைமா
னிறைசிலம்பினிலொண்ணுதனேத்திரத்
தறையுமங்கைக்கறைவலென்காதலே. (736)
இது முதலடியும் இரண்டாமடியும் முற்றுமடக்கு.
(இ-ள்) வேதத்தினந்தத்தைக்கடந்த (சொல்) கீர்த்தியையுடைய (மாமகிழ்மாலைமால்) பெரியபிராட்டி
விரும்பும் சொரூப ரூப குணங்களினியல்பையுடைய மாயோன்,
அவனது ரகசியங்களைச் சொல்லித்தந்த (சொல்) திருவாய்மொழியையும்,
(மாமகிழ்மாலைமால்) வண்டுசெறியும் வகுளமாலிகையையுமுடைய பெருமையையுடையான்
(நிறைசிலம்பினில்) சகலவளங்களு மல்கின துடரிமலையின்கண் ஒள்ளிய நுதலினையுடையாள்
தன்கண்களாற்சொல்லித்தந்த மங்கைக்குக் கூறுவ லெனதுவிருப்பத்தை யென்றவாறு.
பகுதி – மதியுடன்படுத்தல். துறை – குறையுறத் துணிதல்.
அஞ்சுவாளிவளைத்தழுவான்மதன்
மஞ்சுதோய்குழலீரெய்யமல்லைமால்
அஞ்சுவாளிவளைத்தழுவான்மத
னஞ்சமோமதியென்றுடனையவே. (737)
இது முதலடியும் மூன்றாமடியும் முற்றுமடக்கு.
(இ-ள்) மேகத்தினது கருமையைப்பொருந்தின குழலையுடையீர் !
வலியநஞ்சமோ சந்திரகிரணங்களென் றுடனையாநிற்ப வுள்ளம் அச்ச முறுவாளாகிய இவளை
அதன்மேலுந் துன்பக்கண்ணீரொழுகும்படிக்குக் காமன் பஞ்சபாணங்களையும் வில்லைவளைத் தெய்யவுந்
திருக்கடன் மல்லையின்மாயோன் றழுவுகில னென்றவாறு.
ஆகையா லிவனைக் கருணாகரனென் றுலகங்கூறுவ தியாது தரனென்பது பயன். பொருள்கோள் – கொண்டுகூட்டு.
மதி – ஆகுபெயர். மதன் நஞ்சம் – கொல்லும்வலியையுடைய நஞ்சம். ஓகாரம் வினா. இறுதிப்பயனிலை சொல்லெச்சம்.
திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை – கண்டுகைசோர்தல்.
ஐயம்புகுமதனாலங்கஞ்சலித்துயர்வா
னுய்யும்படிக்கருள்கூருத்தமனாமாதவன்சீர்
வையம்புகழச்சிலர்வழுத்தாவாறென்னோ
ஐயம்புகுமதனாலங்கஞ்சலித்துயர்வான். (738)
இது முதலடியும் நாலாமடியும் முற்றுமடக்கு.
(இ-ள்) (நாலாமடி) பஞ்சபாணங்களைச்சொரியுங் காமனால் மேனிமெலிந் துள்ளத்தில் வருத்தமுற்ற சிவன் ;
இது வினைப்பெயர்.
(முதலடி) பிச்சைக்கு மனைதொறுஞ்செல்லு மஃதேதுவாகக் காசிக் கங்கைவடகரை யாகிய அவ்விடத்துத் தன்னை
யஞ்சலித்தபெருமையா லவனதுசாபந்தீரக் கருணையை மிகுத்த வுத்தமகுணத்தையுடைய மாதவனது கீர்த்தியை
யுயர்ந்தோர்புகழச் சிலமானிடர் வழுத்தாத தியாதுதா னென்றவாறு.
இதனுள், உள்ளமென்பன முதலாயின சொல்லெச்சம். அஞ்சலித்த வுயர்வா னென்னுமிடத்துச் செய்தவென்னும்
பெயரெச்சவாய்பாட்டீற்றின் அகரம் செய்யுள்விகாரத்தாற் றொக்கது ; என்னை?
“புகழ்புரிந்தில்லி லோர்க்கு” என்பதுபோலக் கொள்க. பின்னர்வந்த வுயர்வு – வருத்தம் ;
“உயர்வறவுயர்நலம்” என்பதனா லறிக. திணை – பாடாண். துறை – பரவார்ப்பழித்தல்.
தளைவிட்டார்மகிழ்மாறன்றன்வெற்பில்வான்
முனைவிற்போனுதலீருங்கண்முன்றில்வாய்
வளைவிற்கோமன்மதனம்படுக்கவோ
வளைவிற்கோமன்மதனம்படுக்கவோ. (739)
இது கடையீரடியும் முற்றுமடக்கு.
(இ-ள்) தளை…… விற்கோ-பாசமாகியவிலங்கைவிட்டு நீங்கினார்விரும்பும் மாறனென்னுந் திருநாமத்தையுடையவன்
வெற்பினிடத்து வானிற்றோன்று மிந்திரதனுப்போன்ற நுதலையுடையீர் !
உங்கள் முன்றிலின்கண், சங்குவளைவிற்கவோ? மன்மதனம்படுக்க – என்னிடத்து நிலைபெற்ற
விருப்ப மெனதறிவை யகப்படுத்தாநிற்ப. வளைவிற்கோ-வளைக்குங் கருப்புவில்லையுடைய பகையாகிய.
மன்மதனம் படுக்கவோ – காமன்றொடுக்கும் பூப்பாணங்களை நுமதுகுழற்கணியும் மாலையாகத் தொடுக்கவோ வென்றவாறு.
ஓகாரம் முதலு மீறும் வினா. இரண்டாவது அசை. கோ – பகை. பகுதி – குறையுறவுணர்தல்.
துறை – குறையுற்றுநிற்றல் ; பணிவிடை கிளத்தலு மாம்.
கார்வானமால்வரையாய்கட்டுரைகூறானொருவன்
சூர்வாரணத்தான்பொற்சூழியினாற்றோற்றஞ்சார்
சூர்வாரணத்தான்பொற்சூழியினாற்றோற்றஞ்சார்
போர்வாங்குசேயகலான்பூம்புனமென்செய்வதே. (740)
இஃ திடையீரடியும் முற்றுமடக்கு.
(இ-ள்) கார்வான……. னொருவன் – திருக்கார்வானத்துத் திருமால்வரையினுள்ளாய் ! ஒருவன் கட்டுரையுங்கூறுகின்றலன்.
சூர்வாரணத்தான் – பகைவர்க்குநோயைச்செய்யுங் கோழிக்கொடியனுமாய்.
பொற்சூழியினாற்றோற்றஞ்சார் – பொன்னினாற்செய்த முகபடாத்தோடும் பெருமைபெற்ற.
சூர்வாரணத்தான் – அஞ்சாத யானையையுடையனுமாய்.
பொற்சூழியினாற்றோற்று – பொலிவுபெற்ற சரவணப்பொய்கையினிடத்துப் பிறக்கப்பட்டவனுமாய்.
அஞ்சார்போர்வாங்குசேய் – சத்துருக்கள்போரை நீக்கும் முருகனையான்.
பூம்புனமகலான் – பூவையுடைய புனத்தைவிட் டகல்வதுஞ்செய்கின்றிலன்.
என்செய்வதே – இதற்கியான் யான் செயத்தகுவ தியா தென்றவாறு.
கட்டுரை – அழகியவுரை. வாங்கும் – நீக்கும், ஆல் அசை. பகுதி – குறைநயப்பு. துறை – குறிப்பறிதல்.
ஒருத்தல்வெற்புடையானும்பர்துற்றுணா
வருத்தமன்கடன்மாவனமேபுக
லருத்திநாண்மலர்கொயதறலாடியோ
வருத்தமன்கடன்மாவனமேபுகல். (741)
இஃ திரண்டாமடியும் ஈற்றடியும் முற்றுமடக்கு.
(இ-ள்) ஒருத்தல்வெற்புடையான் – அத்திகிரியினையுடையான்.
உம்பர்துற்றுணாவருத்த – தேவர்கள்பொசிக்கு மமிர்தத்தை யுண்டாக்கும் படிக்கு.
மன்கடல் – நிலைபெற்றகடலிற் கடைந்துபிறந்த. மா – திருமகளே ! வனமேபுகல் – புனலே புகலிடமாகிய.
அருத்திநாண்மலர் – கொய்தறலாடியோ – கண்டார்விரும்பும் பருவமலர்களைக்கொய்தோ? புனலாடியோ? அன்றி யாதானோ?
வருத்தமன்கடன் – உனது திருமேனிக்குத் தளர்ச்சியெய்தியமுறை.
மாவனமேபுகல் – பெருமைபெற்ற அன்னம் போலு நடையினையுடையாய் ! கூறுவாயாக வென்றவாறு.
துற்றுணா வினைத்தொகை. வருத்த – உண்டாக்க. மா அண்மை விளி. வனம் – தண்ணீர் ; நந்தவனமுமாம்.
புகல் – புகலிடம். அருத்தி – விருப்பம். நாண்மலர் – பருவமலர். ஓகார மிரண்டிடத்துங் கூட்டுக.
கடைந்தென்பதும், திருமேனியென்பதும் முதலாயின சொல்லெச்சம். பகுதி – முன்னுறவுணர்தல்.
துறை – வாட்டம்வினாதல். இவையாறும் ஈரடி முழுதுமடக்கு.
இனி மூன்றடி முழுதுமடக்கு வருமாறு :-
காவியங்கணல்லார்படிகாவிரி
காவியங்கணல்லார்படிகாவிரி
காவியங்கணல்லார்படிகாவிரி
வாவியும்புடைசூழரங்கேசனென்மனத்தான். (742)
இஃ தீற்றடியொழித் தேனைமூன்றடியும் முற்றுமடக்கு.
(இ-ள்) வாவியும் – வாவிகளும். விரிகாவியங்கணல்லார்படி காவிரி -மலர்ந்த நீலோற்பலம்போலும் அழகிய கண்ணையுடைய
மகளிர் புனல் குடையுங் காவிரியும். விரிகாவியங்க ணல்லார் படி கா – அறமுதலிய நாற்பொருளுங் குறைபாடின்றிப்
பரந்த காப்பியங்களை நல்லோ ரிருந்து கற்பனசெய்யுங் காவும். படிகா – ஊரைக்காக்கப்பட்ட.
காவியம் – வாரினாற்கட்டித் தோளிற் காவிய வாச்சியங்கள். அல் ஆர் கண் – இரவின் கண் ணாரவாரிக்குமிடங்களும்.
புடை…… மனத்தான் – பக்கமெல்லாஞ் சூழப்படாநின்ற திருவரங்கேச னென்மனத்துளா னென்றவாறு.
இதனுள், சூழ், படி, படி, விரி, விரி என்பன இறந்தகாலமு நிகழ்காலமுங் கரந்துநின்ற பெயரெச்சவினைத்
தொகைவாய்பாடு. “எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயிற், பிற்படக் கிளவா முற்படக் கிளத்தல்” என்பதனாற்
காவிரியும் காவும் அல்லார்கண்ணும் என்பனவற்றிற் கும்மைகொடாராயினார்.
திணை – பாடாண். துறை – கடவுள்வணக்கம். பா – கலித்தாழிசை ; என்னை?
“அந்தடி நீண்டிசைப்பிற், கடிதலில் லாக்கலித் தாழிசை யாகும்” என்பவாகலான்.
(செய்யுள்)
“வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியெங்,
கேள்வரும் போதி னெழால்வாழி வெண்டிங்காள்,
கேள்வரும் போதி னெழாலாய்க் குறாலியரோ,
நீள்வரிநாகத் தெயிறே வாழி வெண்டிங்காள்” என்பதிற் காண்க.
இது விதலை யாப்புப்பொருள்கோள்.
“அணியுமமிழ்தும்” என்னும் பாட்டில்
மின்னும், பணியும் புரை மருங்குற் பெருந்தோளி படைக்கண்கள், பிணியுமதற்கு மருந்தும் பிறழப்பிறழ என்பதனாலறிக.
ஆமோதமுந்துவரிவண்டுகணீர்
தாமோதரன்றஞ்சையர்க்கோதில்வண்டேன்
ஆமோதமுந்துவரிவண்டுகணீர்
ஆமோதமுந்துவரிவண்டுகணீர். (743)
இது முதலயலடியொழித் தேனைமூன்றடியும் முற்றுமடக்கு.
(இ-ள்) ஆம் ஓதம்உந்து உவரிவண்டு உகள் நீர் – (இது முதலடி முற்றும்) ஆக்கஞ்செய்வதாந் திரை கரையிலெறியும்
சமுத்திரத்திற் சங்குதவழும் புனலையுடைய வாவியில். வண்தேன் ஆமோதமும் து – வளவியதேனையும், பரிமளத்தையு முண்ணும்.
வரிவண்டுகணீர் – பாட்டையுடைய வண்டுகளே ! நீர்.
மோதமுந்து உவர் இவ்வண்டுகள் – என்னைப் பொர என்முன்னெதிர்ந்த (உவராகிய) காமனாரும்,
இப் பஞ்ச பாணங்களும் என்னை வருத்து மிதனை. தாமோதரன் றஞ்சையர்க் கோதில் – தாமோதரனது திருத்தஞ்சை
யிலுள்ளாராய தலைவர்க்குரைப்பீராகில். நீராம் – (நாலாமடியீறும் முதலும்) உமக்கு நல்லதா மென்றவாறு.
ஆம் – ஆக்கஞ்செய்யும். ஓதம் – திரை. உந்து – எறியும். உவரி – சமுத்திரம். வண்டு உகள் – சங்குதவழ்.
நீர் ஆகுபெயர். ஆமோதம் – பரிமளம். து – உண். “எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயிற்,
பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்” என்பதனால் வண்டேனென்பது
உம்மையில்சொல்லாய் முன்னின்றது. வரி – பாட்டு. வண்டுகள் ! அண்மைவிளி. உவர் முன்னிலைச்சுட்டுப்பெயர்.
வருத்துமிதனை யென்பது சொல்லெச்சம். பொருள்கோள் – மாட்டுறுப்பு. பகுதி – இரவுக்குறி. துறை – காமமிக்ககழிபடர்கிளவி.
நாகவரையானளியமலருள்ளா
னாகவரையானளியமலருள்ளான்
பாகவதர்தம்பிரான்பாமாறன்றம்பிரா
னாகவரையானளியமலருள்ளான். (744)
இஃ தீற்றயலடியொழித் தேனைமூன்றடியும் முற்றுமடக்கு.
(இ-ள்) புலவீர்காள் ! பாம்பையணியும் அரையையுடையசிவன், வண்டுறுதலையுடைய தாமரையையிடமாகவுடைய
பிரமன், பொன்னுலகின தெல்லையையுடைய இந்திரன், கருணையையுடைய அழுக்கற்றோ ரென்னு மிவர்களுள்ளத்திற்
குடிகொண்டிருப்பான் ; (நளியமலருள்ளான். நாலாமடியீறு) செறிந்த அழுக்குடையோரைத் திருவுளத்தானினையான் ;
அவன் யாரெனில்? பாகவதர்தம்பிரானாகிய பாமாறனுக்குத் தம்பிரானாகிய அத்தகிரிநாத னென்றவாறு.
புலவீர்கா ளென்னு மெழுவாய்முன்னிலை யெச்சம். அவனை மனமொழிமெய்களி னினைந்து
வாழ்த்தி வணங்க அறமுதலிய நாற்பொருளும் பயக்கு மென்பது கருத்து.
சிலைநுதாலொழிதேடுதல்பார்சுலா
மலையுமாரமணியாவரிவளை
மலையுமாரமணியாவரிவளை
மலையுமாரமணியாவரிவளை. (745)
இது முதலடியொழித் தேனைமூன்றடியும் முற்றுமடக்கு.
(இ-ள்) (நாலாமடியீறும் முதலடிமுதலும்) வரிவளைசிலைநுதால் – நாரினால்வரிவனவாய் வளையப்பட்ட
விற்போலு நுதலினையுடையாய் !
(முதலடியீறு மிரண்டாமடிமுதலும்) பார்சுலாம் அலையும் – பூமியை வளைக்குங் கடலும்.
(இரண்டாமடியீறும் மூன்றாமடிமுதலும்) அரி வளைமலையும் – குரங்குகள் சூழப்பட்ட பருப்பதமும்.
(இரண்டாமடி மூன்றாஞ்சீரிறுதி) ஆ – தம்மிடத்துண்டாக்கப்பட்ட.
இரண்டாமடியில் ஆரமணி, மூன்றாமடியீற்று வரிவளை, நாலாமடியில் ஆரம் – முத்தையும் மாணிக்கத்தையும்
சங்குகளையும் சந்தனத்தையும். அணியா அணியா – அழகுபெற அணிவனவல்ல.
ஆகையால், நீபெற்ற இவளு முனக் கந்நீர்மையளென்பதறியாதே தேடிப் பின்றொடர்ந்து வருதல்,
(மலையுமார என்பவற்றை ஆரமலையுமெனப் பாடமாற்ற) உலகியற்கு மிக மாறுபடுமென்றால்.
(முதலடி) தேடுதலொழி – தேடுதலை யொழிவாயாக வென்றவாறு.
இதுவும் மாட்டுறுப்பு. இதனுள்ளுஞ் சொல்லெச்சங்கள்வந்தனவுங் காண்க. பகுதி – உடன்போக்கு. துறை – உலகியலுரைத்தல்.
ஆனகமலனயனத்தானத்தா
வானகமலனயனத்தானத்தா
வானகமலனயனத்தானத்தா
வானகமலனயனத்தானத்தா (746)
இது நான்கடியும் ஏகபாதமாக முற்றுமடக்கு.
(இ-ள்) ஆல் நகம் மலல் நயனத்தானத்தா – ஆலந்தளிராகிய பாம்பினை வளப்பத்தையுடைய திருக்கண்டுயிலிடமாகவுடையவனே !
ஆல் நகு அமல நத்து ஆன அத்தா – வெள்ளத்தினிடத்துமிளிரும் அழுக்கற்ற சங் கிருப்பான திருக்கையையுடையவனே !
ஆனகமலன் அயன் ந தானத்தா – உனதுந்தியிற்றோன்றின தாமரையானாகிய ஆதிப்பிரம னில்லையாக
மீளவும் பெற்றளித்த கொடையினையுடையவனே !
*வான கமல னயன் – ஆகாயத்தாகிய கங்கையைத்தரித்தவனாஞ் சிவன் மூதாதையே !
நத்தானத்தா – சிறப்புடைய முக்கியத்தானமாகிய பரம பதத்தையுடையவனே !
இடைச்சொல் ந-சிறப்புப்பொருட்டு. (இரண்டாமடியில்) நய – என்னை ஆட்கொள்ள விரும்புவாயாக வென்றவாறு.
ஆல் ஆகுபெயர். நகம் – பாம்பு (விகாரம்). மலல் இடைக்குறை. நயனத்தானம் – துயிலணை.
ஆல் – வெள்ளம். நகு – மிளிர். அமலம் – அழுக்கற்ற. ஆன – இருப்பான.
(மூன்றாமடியில்) ந-இல்லை. ஒழிந்தனவு முரையிற்கொள்க. திணை – பாடாண். துறை – கடவுள்வாழ்த்து.
* இவ்வடிக்கு, ஆனகமலனயன் நத்து ஆன் அத்தா – பிரமன்விரும்பிக் கவர்ந்த ஆன்வடிவெடுத்த அத்தனே ! எனினு மமையும்
264.ஒருசொலின்மடக்கலுமுளவெனமொழிப.
(எ-ன்) இதுவும் அம்மடக்கினதுபேதமுணர்-ற்று.
(இ-ள்) ஒருபாவினது நான்கடியு மொருசொல்லானே முற்றும் மடக்குவது முண்டென்று
கூறுவர் பெரியோ ரென்றவாறு. யமயமக மென்பது மிது.
அரியாரரியார்
அரியாரரியார்
அரியாரரியார்
அரியாரரியார். (747)
இஃ தொருசொல்லினான்மடக்கல்.
(இ-ள்) அரியார் – யாவராலும் அளவிடற்கரியார். அரி ஆர் – சத்துருக்களுயிரைப் பருகும்.
அரியார் – சக்கராயுதத்தையுடையார். அரியார் – பாம்பை மிக்க. அரியார் – சயனமாகவுடையார்.
அரியார் – ஏனமாக அவதரித்தவர். அரியார் – அனுமானையுடையவர்.
அரியார் – அவர்யாரெனில்? அரியென்னுந்திருநாமத்தையுடையா ரென்றவாறு.
எனவே அவரே பரப்பிரமமாவா ரென்பதுஉ மவரே முத்திக்கு வித்தாவா ரென்பதூஉ மாயிற்று.
துறை – கடவுள்வாழ்த்து. பா-குறளடி வஞ்சித்துறை.
265.பதத்தொடுபதமடக்குதல்பதமடக்கே.
(எ-ன்) இன்னும் அம்மடக்கினையே வேறுபடுத்திக்கூறுகின்றது.
(இ-ள்) ஒருசெய்யுணான்கடியாய்வருவதனுள் இரண்டடி யொரு நோக்கமாக மடக்குதல் பாதமடக்கெனப் பெயர்பெறு மென்றவாறு.
சக்கரநாகணைத்தகைத்தலத்தின
சக்கரநாகணைத்தகைத்தலத்தின
விக்கரைத்தென்குருகூர்மன்னேமவா
விக்கரைத்தென்குருகூர்மன்னேமவா. (748)
இது முதலிரண்டடியும் கடையிரண்டடியும் முற்றுமடக்கு.
(இ-ள்) கடலிற்றுயிலும் பாம்பணையாகிய அழகிய இடத்தை யுடையவனே !
சக்கரத்தையுஞ் சங்கையுந் தரித்த கையையுடையவனே !
கரும்பினடியிலே அழகிய சங்குதவழு மாக்கத்தோடு மின்பந்தரும் வாவிக்கரையையுடைய பொருநைத்
தென்கரைக் குருகூர்க்கு மன்னவனே ! என்னைக் காக்கவருவாயாக வென்றவாறு. துறை – இதுவுமது.
தரணிகுடையாவெழுமைவராக
முரணரரிவாமனனத்தன்முன்பான்
றரணிகுடையாவெழுமைவராக
முரணரரிவாமனனத்தன்முன்பான். (749)
இது முதலடியும் மூன்றாமடியும் இரண்டாமடியும் நாலாமடியும் முற்றுமடக்கு.
(இ-ள்) பூமியானது பிரளயத்து ளாழ (அதனையெடுத்தற்குத்) தோன்றும் அழகிய ஏனம் ; பெருமையையுடைய நரசிங்கம் ;
வாமன ரூபமானவன் ; பாஞ்சசன்னியத்தையுடையான் ; கோவர்த்தன கிரியைக் குடையாகவெடுத்து நிமிரும் மிடுக்கினையுடையான் ;
(இதன் கண் முன்பான் என்னு மிரண்டடியி னிறுதியைச் சேர்க்க). பஞ்ச பாண்டவர்களுள்ளத்துக்கு மாறுபாடான நூற்றுவர்க்குக் கூற்றுவன் ;
தாவும் அன்னத்தையுடைய பிரமனுக்குப் பிதா ; எல்லாக்கடவுளர்க்கு முன்னானவ னென்றவாறு.
முரண் – பெருமை. நரரி – நரசிங்கம். முன்பு – மிடுக்கு. அரி – யமன். ஒழிந்த அரும்பதமு முரையிற்கொள்க.
துறை – இதுவுமது.
இலங்கொண்மூவெயில்குன்றவில்லேற்றுவா
னலங்கல்வாரியமைந்திறப்பெய்தவே
ரலங்கல்வாரியமைந்திறப்பெய்தவே
ரிலங்கொண்மூவெயில்குன்றவில்லேற்றுவான். (750)
இது முதலடியும் நாலாமடியும் தம்மிலும், இடையி லிரண்டடியும் தம்மிலும் முற்றுமடக்கு.
(இ-ள்) முதலே நின்ற இலங்கொண்மூவெயில் என்பவற்றுள் இல்லை யீறாக்கி அங்கொண்மூவெயிலில் எனச் சேர்த்து,
செலத்தைத் தரித்த மேகம் வெயிலினு மிகுந்து என்க.
நாலாமடியில் இல் நிற்ப அம் கொள் மூவெயில்குன்ற – அழகுகுடிகொண்ட மூன்றுமதிளும் அழியும்படிக்கு.
(முதலடியிறுதியிருசீரும் நாலாமடிமுதல் இல்லும்) குன்றவில்லேற்றுவானில் – இமவானாகிய குன்றவில்லிற்
பாம்பாகிய நாணையேற்றுஞ் சிவனைப்போல. (நாலாமடியீறு) வில்லேற்று வான் – மின்னுதலைப் பொருந்தி வானினின்றும்.
(இரண்டாம் அடியில்) அலம் கல் அமைந்து – நிறைவையுடைய மலையினுச்சியிற்பதிந்து.
(இரண்டாமடியி லிரண்டாஞ்சீர்) வாரி – மழைத்தாரையை.
(அதன் கண்ணீற்றுவேர் மூன்றாமடிமுதல் அல் அதன்கணீற்று வேர் இவற்றை அடைவே கூட்ட. )
வேரல்வேர் – மூங்கில்வேரையும்.
(மூன்றாமடியில்) அம் கல் வாரிய மைந்து – அழகிய மாணிக்கத்தையுங் கிளைத்து முகந்தெடுத்த மிடுக்கினோடும்.
(இரண்டாமடி) இறப்பு எய்த – வெள்ளமாயோடுதலைப் பொருந்தும்படி.
(மூன்றாமடியில்) இறப் பெய்த – தண்ணீர் தன்னிடத் தில்லையாம்படி முழுதும் பெய்த வென்றவாறு.
பொருள்கோள், முதலும் நாலும் தம்மிலும், இடையிலிரண்டுந் தம்மிலும் மாட்டுறுப்பாகக் கொண்டது ;
(குருகாமான்மியம்). திணை – பாடாண். துறை – மலைவருணனை.
266.அந்தாதிப்பதந்தாதிமடக்கே.
(எ-ன்) இன்னும் அம்மடக்கினை வேறுபடுத்துக்கூறுகின்றது.
(இ-ள்) அடிதொறு மிறுதிச்சொல்லை யதன்மேல்வருமடிக் காதி யாகத்தொடுப்ப தந்தாதிமடக்கென்பதா மென்றவாறு.
நாகமுற்றவுங்களிதரநிருதர்கோனாக
நாகமையிரண்டொருங்கறப்பொருதமைந்நாக
நாகமூலமென்றழைத்தகார்துயிலிடநாக
நாகமொய்த்தபூம்பொழிற்றிருநாகையென்னாகம். (751)
இஃ தந்தாதிமடக்கு. இதனைச்சந்தொட்டியமகமென்றுஞ் சொல்லுப.
அல்ல திடைவிட்டு முதலுமிறுதியுமடக்கிய முற்று மடக்கெனவுங் கொள்க.
இதனுள், நாகம் – துறக்கத்துள்ளார். முற்ற – அனைவரும். ஐயிரண்டுநா கம் – பத்துநாக்கும் பத்துத்தலையும்.
ஒருங்கற – ஒருதொடை யொருவாளியி லொக்கவற. மைந்நாகம் – நீலமலை.
நாகம் – யானை. நாகம் – திருவனந்தாழ்வான். நாகம் – சுரபுன்னை. என்னாகம் – என்னுள்ளம்.
நா கம் என்பது “ஆ பயன்” என்பதுபோல ஒற்றுத்தோன்றுஞ் சந்தி ஒற்றின்றி இயல்புசந்தியாய்நின்றது.
துறை – கடவுள்வணக்கம்.
தேனேகமழ்நறுந்திருமகிழ்மாறன்
மாறன்சேவடிவணங்கிறைவரைவாய்
வரைவாயன்றெனில்வல்லைநீயிறைவா
விறைவால்வளையைநீப்பினும்வருந்தேனே. (752)
இது முதலு மீறு மொருசொல்லா யிடையிடை பலசொல்லாய் நிகழ்ந்த அந்தாதிமடக்கு.
இதனுள், மால்தன்சேவடி – மாயன்றனது சிவந்ததிருவடித் தாமரை. வரைவாயன்றெனில் – வரைந்துகொள்வாயாக,
அஃதல்ல வெனில். வல்லைநீயிறைவா – விரைந்து தலைவனே.
இறைவால் வளையைநீப்பினும் வருந்தேன் – முன்கையிலணியுஞ் சங்கினையுடையாளொடுநீங்கினும் வருந்தேன்.
வளையினையுடையாளொடு நீங்கல் உடன் கொண்டுசேறல். ஏகார மீற்றசை.
நீப்பினுமென்றவும்மையாற் சிறிதுநாளிவளையணைதற்கு வாராதுநீங்கினும் வருந்தே னென்பதாம்.
பகுதி – ஒருவழித்தணத்தல். துறை – அகன்றணைவுகூறல்.
267.அம்மனைகைக்கொண்டாடுநர்தம்மையு
மம்மனையாய்மதித்தாங்கொர்கர்த்தாவினை
நிந்தாத்துதிதுதிபெறநிகழ்த்துதலு
மந்தாதித்திடையடிமடக்காகவு
மீற்றடியிரட்டுறவிசைத்ததைத்தாபித்
தாற்றலினமைக்குமம்மனைமடக்கொன்றுள.
(எ-ன்) இஃ திலக்கியங்கண்டதற் கிலக்கணங்கூறலென்பதனால் அம்மனைமடக்குணர்-ற்று.
(இ-ள்) அம்மனைகைப்பற்றியாடு மிருமகளிர் தம்மைத்தாமே யம்மனையாகப் பெயர்குறித்ததாக வதற்குப்புணர்த்த
கலித்தாழிசையிடத் தோர்கருத்தாவினை நிந்தாத்துதியானாதல் துதியானாதல் முதலே
யொருவரொருபொருள்பெறக்கூறலு மதற்கு முன்னிருந்த மகளிர் செய்யுளினிடைப்பட்ட அடியை யடிமடக்கா யந்தாதித்து
வினாயதற்கு முன்னர்க் கூறியமகளிர்தாமே பின்னுந் தாங்கூறியது தப்பாதுதாபித்த தாம் பெருமையொடுங்கூறு
மீற்றடி சிலேடைவாய்பாட்டாற்புணர்க்கும் அம்மனைமடக்கு மொன்றுள தென்றவாறு.
ஆற்றலினமைக்குமென்றதனால் முதலடி யிரட்டுறவருதலு மாமென்றறிக.
இது பொருளணியுஞ் சொல்லணியுங்கூடியதென வுணர்க.
தெண்டிரைப்பார்போற்றுந்திருவெள்ளறைமாயன்
கண்டளவினீடுகஞ்சக்கண்ணாளனம்மானை
கண்டளவினீடுகஞ்சக்கண்ணாளனேலமுதுட்
கொண்டபரிகலமுன்கொட்டினனோவம்மானை
கொட்டினதுமுண்டுகுழிதாலமம்மானை. (753)
இது நிந்தாத்துதி. கஞ்சக்கண்ணாளன் என்பது தாமரைபோலுங் கண்களையுடையா னென்றும்,
வெண்கலங்கொட்டுங் கன்னுவனென்றும் சிலேடைநிந்தாத்துதியாயிற்று. கண்டஅளவி லென்பது கண்டளவிலென விகாரத்தாற்றொக்கது.
கொட்டினது என்பது உண்டதுமிழ்தலும் தட்டுதலும்.
குழிதாலம் – உண்டுகுழிக்கப்பட்டபூமியும், குழிதாலமான உண்கலனுமாம். ஒழிந்தனவு முரையிற்கொள்க. துறை – கடவுள்வாழ்த்து.
வண்டமிழோர்கொண்டாடுமன்குருகூர்வாசமகிழ்க்
கொண்டலெழின்மேவுதமிழ்க்குன்றங்காணம்மானை
கொண்டலெழின்மேவுதமிழ்க்குன்றமதானாலதன்கண்
ணெண்டிசையுஞ்சந்தனக்காவில்லையோவம்மானை
யில்லாமற்சாந்தமணமெய்துமோவம்மானை. (754)
இது துதி. சாந்தமணம் – சந்தனப்பரிமளமும் சாந்தரசம் பொருந்துதலுமாம்.
தமிழ்க்குன்றம் – பொதியமும், தமிழுக்கு மலைபோலும் பெருமையுடையோன் என்பது மாம்.
திணை – பாடாண். துறை – பழிச்சினர்ப்பரவல்.
268.தொடர்ச்சொற்பலபொருட்சிலேடைமுந்துறவே
யிடர்ப்பாடின்றியீற்றுறுமிணைமடக்குள
(எ-ன்) இதுவும் இலக்கியங்கண்டதற்கிலக்கணங்கூறலாக இன்னும்
அம்மடக்கினுட் சிலேடைமுன்னிட்டனவாய் வருவதோர்மடக்குணர்-ற்று.
(இ-ள்) ஒருசெய்யுளின்முதற்கட் டொடர்ச்சொல்வாய்பாட்டாற் பலபொருளைக்காட்டுஞ் சிலேடைவந்து
அதன்பின்ன ரிடைவிடாதனவா யீரிடத்துவரு மொருசார்மடக்குகளு முளவென்றவாறு.
இடர்ப்பாடு- இடைவிடுதல். இன்றி – அஃதில்லாமை. பலபொருளாவன ; ஒருதொடர்ச்சொ லிருபொருண்முதலாக
அஞ்சீறாயபொருளைக் காட்டுதல் எனக்கொள்க. எனவே இதுவும் பொருளணியுஞ் சொல்லணியுங் கூடியதெனவுணர்க.
மூவுலகெண்முத்தரைப்போன்முந்நீர்முகிற்பெயல்போற்
காவலர்கள்வீழ்வேங்கடவெற்பே–தேவர்
பெருமான்பெருமான்கட்பெய்வளைக்கையார்மூ
வருமால்வருமாலின்வைப்பு. (755)
இஃ திருபொருட்சிலேடை யிணைமடக்கு.
(இ-ள்) தேவர்பெருமான் – கடவுளர்க்கெல்லாஞ் சுவாமி.
பெருமான் கட்பெய்வளைக்கையார் – பெரியவாய மானினதுகண்ணோக்கம்போலு நோக்கமைந்த கண்ணினையும்,
இடப்பட்ட வளையோடுங்கூடிய கையினையுமுடைய.
மூவரு மால்வருமாலின்வைப்பு – திருமகள். மண்மகள், நீளை யென்னு மூவருள்ளத்தும் வேட்கையுண்டாம் மாயோன்வாழுமிடம்.
மூவுலகெண்….. காவலர்கள்வீழ் வேங்கடவெற்பு – பூமி யந்தர சுவர்க்க மென்னு மூவுலகின்கண்ணுள்ளாரு மதிக்கப்பெறும்
பரமபதத்து முத்தரைப்போல நெருங்கிப் பூலோகமன்னர் சேவிக்கவிரும்புந்தன்மையவாய்,
அதனொடுங் கடலிற்படிந்த மேகத்தினிழியுமழைபோலக் காவினிடத்து மலர்களிற் றேன் றுளித்துவீழும் வேங்கடவெற்பா மென்றவாறு.
கள் – தேன். வீழ் – வினைத்தொகை. இதனைச் செய்யுமென்னும் பெயரெச்சமாகவிரித்துக் காலமூன்றினு மேற்றுக.
திணை – பாடாண். துறை – மலைவருணனை.
மாயன்சேய்வில்லுமலர்ப்பொழிலுங்கஞ்சனையுங்
காயம்புதைதிறங்கூர்கச்சியே–நேய
மகத்தாரகத்தாரருவினையாட்செய்யு
மகத்தார்மகத்தார்தம்வாழ்வு. (756)
இது மூன்றுபொருட்சிலேடையிணைமடக்கு.
(இ-ள்) நேயம் அகத்தாரகத்தார் – கருணையைத் திவ்யாத்மாவுக்குத் தாரகமாகவுடையார்.
அருவினையாட்செய்யுமகத்தார் – நீக்குதற்கரிய வினைக ளடிமைத்தொழில்செய்யு மகத்துவத்தையுடையார்.
மகத்தார் தம்வாழ்வு யாகத்தின்கட்டோன்றின பேரருளாளர் வாழுமிடம்.
மாயன்…….. கஞ்சனையும் – திருமால்புதல்வனாகிய காமனது கருப்புவில்லும், பூவோடுகூடிய சோலைகளும், கண்ணாடிகளும்,
காயம்புதைதிறங்கூர் கச்சி என்பதற்கு, கூடிப்பிரிந்தபுமான்கள் மகளிரறிவை நிலைதிரிக்கும் பூவாளியைச்
செலவிடுந் தொழில்புரியும், ஆகாயத்தைமூடுங் கூறுபாடுமிகும்,
கண்டோர்மெய்யை யுட்கொள்ளுந்திறமிகும் – கச்சிஎன அடைவேகொள்க. வாழ்வு – ஆகுபெயர்.
திணை – இதுவுமது. துறை – நகர வாழ்த்து.
கொம்பரஞ்சொன்மின்னார்குயம்பொன்னியன்பருள
மம்பரந்தோயுந்தென்னரங்கமே–தும்பி
யுரைத்தானுரைத்தானுயர்திரைநீர்தட்டீ
னரைத்தானரைத்தானகம். (757)
இது நாலுபொருட்சிலேடை யிணைமடக்கு.
(இ-ள்) கொம்பர் – பூங்கொம்புகள். அம்பரந்தோயும் – ஆகாயத்தைத் தோயும். குயம் – முலை.
அம்பரந்தோயும் – கூறைவிட்டு நீங்காதிருக்கும். பொன்னி – காவிரி. அம்பரந்தோயும் – கடலைப் பொருந்தியிருக்கும்.
அன்பருளம், அம்பரந்தோயும் – அழகியபரப்பிரமத்தை அநுபூதிசெய்து கொண்டிருக்கும்;
தென்னரங்கம், நுரைத்தானுயர்திரைநீர்- நுரையையுயர்த்துந் திரையையுடைய கடலை.
(உயர்திரை வினைத்தொகை. நுரைதான், நுரைத்தான் என ஒற்றுத் தோன்றாதுந் தோன்றியுநிற்கும். )
தட்டு – அடைத்து. ஈனரைத்தானரைத்தானகம் – அறிவில்லாதவீனராகிய இராவணாதிகளை ஆயுதத்தாற்
கண்டஞ்செய்து பூமியின்கட்போட் டரைத்தான்பதி யெனக் கூட்டுக. துறை – இதுவுமது.
சூழிமறுகாடவர்தோள்விரல்பொழிற்றே
னாழிபயிலுமரங்கமே–யூழி
திரிநாட்டிரிநாட்டினவுயிருய்க்கொண்ட
வரிநாட்டரிநாட்டகம். (758)
இஃ தைந்துபொருட்சிலேடை யிணைமடக்கு.
(இ-ள்) சூழி – வாவி, ஆழிபயிலும் – வட்டம்பொருந்தும் ; மறுகு – வீதி, தேர்வண்டி முதலாயின பொருந்தும் ;
ஆடவர்வலது தோள் திருச்சக்கரப்பொறிபொருந்தும் ; மகளிர் புமான்கள் கைவிரல்கள் நவமணியாழிபொருந்தும் ;
பொழிலிற் பூந்தேனும் வைத்ததேனும் முகைவிண்டொழுகியும் உடைந்தும் நதிவாய்ச் சமுத்திரத்தைப் பொருந்துமென்க.
ஊழிதிரிநாட்டிரிநாட்டினவுயிருய்க்கொண்ட – கற்ப வந்தியத்தில் உகங்கள் மீளவருநாள் மூன்றுலகின்கண்ணுமுள்ள
வுயிர்க்கணத்தைத் திருவுதரத்துள்வைத்துப்பிழைக்கக்கொண்ட.
அரிநாட்டரி நாட்டகம் – பாற்கடலென்னுமிடத்தையுடைய அரியென்னுந் திருநாமத்தையுடையா னிலைபெறுத்தின பதி என்றவாறு.
ஒழிந்த அகல முரையிற்கொள்க. துறை – இதுவுமது.
இவற்றிற் கெல்லாம் “எழுத்தோ ரன்ன பொருடெரி புணர்ச்சி – யிசையிற் றிரித னிலைஇய பண்பே” என்பதனால்
ஒலியெழுத்துக்கள் எடுத்தல் படுத்த லென்னுமோசைவேற்றுமையாற் புணர்ச்சியிடத்துப் பொருள்வேறு படுதல்
நிலைபெற்றபண்பாக அறிந்துகொள்க ; செம்பொன்பதின்றொடி, குன்றேறாமா என்பனபோல. பிறவுமன்ன.
269.மதித்தோரெழுத்தினைமடக்கலுமடக்கே.
(எ-ன்) இன்னும் மடக்கிற்கோர்வேறுபாடுணர்-ற்று.
(இ-ள்) ஓரெழுத்தினைச் செய்யுளின்கண் ணடிதொறு முதலேவந்த பொருளினையுட்கொண்டு
வேறுமொருபொருடருவதாகமடக்கலு மடக்கின்பாற்படு மென்றவாறு.
எனவே மேலே முதற்சூத்திரத்தின் மடக்கலுமென்றவும்மையாற் றொடரெழுத்துமொழியேயன்றி
யோரெழுத்தானாமொழிகளைப்பெயர்த்து மோர்பொருடா மடக்குவது மப்பெயராமென்றாராதலாற் றொடரெழுத்து
மொழிகளானா மடக்குகளுணர்த்தி யதன்பின்னர் ஓரெழுத்தா னாமடக்குணர்த்து வான்றொடங்கினாரெனக் கொள்க.
மாமாமாதின்புறுதிருமார்பான்மகிழ்வெய்திக்
காகாகாமர்மல்லையின்மோதுங்கடலேமுன்
னானானாமெய்தாமுயிரென்றார்நகர்மீள
வாவாவாய்மைதந்ததுமுளதோபகர்வாயே. (759)
இஃ தோரெழுத் தடிமுதன்முற்றுமடக்கு.
(இ-ள்) மாமாமாதின்புறுதிருமார்பான்மகிழ்வெய்தி என்பது பெரிய திருமகளாகியமாது விரும்புந் திருமார்பையுடையான்
மகிழ்ச்சி பொருந்தி என்றவாறு. காகாகாமர்மல்லையின்மோதுங்கடலே என்பது காவல்பூண்ட காவினோடுங்கூடிய
அழகிய திருக்கடன்மல்லையென் னுந்திருப்பதியிற் கரைதொறுமெற்றுங் கடலே யென்றவாறு.
முன்னானானாமெய்….. மீள் – பிரியுமுன்னர் நான் நீங்காதமெய்யாக வுந் தா மதன்கண்வைகு முயிராகவு மெனக்
குட்கொளக்கூறினா ரிந்நகர்க்குமீளும்.
அவாவாவாய்மை….. வாயே – என்பது அன்புண்டாம்வசனம் நின்னுடன்கூறியதுளவாகி லென்னுடன் கூறுவாயாக வென்றவாறு.
இதனுள், இடைநின்ற மா – திருமகள். கா-சோலை. ஆனா – நீங்காத. மீள் (மீளும்) என்பது வினைத்தொகை.
அவாவா – அன்புண்டாம். வாய்மை – வசனம். இது நெடிலெதுகை. பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – கடலொடுவரவுகேட்டல்.
“ஓரெழுத்தினைமடக்கலு” மென்ற வும்மையா லீரெழுத்துமுதலாக நாலெழுத்தீறாக வுயிரும் உயிர்மெய்யுமாகியவை
யொரோசெய்யுண் முழுதுங்கோடலு மொரோஅடிமுழுதுங் கோடலு முரியவெனக் கொள்க. அவற்றுள் ஓருயிர்மடக்குவருமாறு :-
அரவமகரசலசயனபடவரவ
கரசரணநயனவதனகமலதர
வரதசரதமகவரதசரதமக
பரமபரமமலவனகபரமபத. (760)
இஃது அகரக்குற்றுயிர்மடக்கு.
(இ-ள்) ஆரவாரத்தையுடைய மகராலயமாஞ்சமுத்திரத்திற் றுயிலுஞ்சயனமாகிய படத்தோடுங்கூடிய பாம்பையுடையவனே !
கரமுங் காலுங் கண்ணும் முகமுங் கமலமொத்தவனே ! வரதனே ! சரதனே ! மகத்துவமான வரத்தைப்பெற்ற தசரதன்மகனே !
பரமனே ! அமலனே ! அனகனே ! பரமபதத்தையுடையவனே ! உனக்கேபரம் என்றவாறு. துறை – கடவுள்வணக்கம்.
ஆயாபாலாகாராபாராராலாலா
மாயாமாயாமாமாதாகாவானாளா
காயாகாயாவாளாவாளாநாகாளா
தாயாநாதாநாதாகாகாதாளாளா. (761)
இஃது ஆகார நெட்டுயிர்முற்றுமடக்கு.
(இ-ள்) ஆயா – கோபாலனே! பாலாகாரா – பாலைப்பருகப்பட்டவனே ! பாராராலாலா – பூமியையுண்ட பிரளயத்தின்
மேலான ஆலிலையிற் றுயின்றவனே! மாயாமாயா – அழிவிலாத மாயோனே ! மாமாதாகா – திருமகள்தங்குமார்பனே !
வானாளா – பரமபதத்தையாள்வானே ! காயாகாயா – காயாமலர்போலுந் திருமேனியையுடையவனே!
வாளா – வாளினையுடையவனே! வாளாநாகாளா – வெளுப்பான சங்கினையுடையவனே !
தாயாநாதா – எமக்குத் தாயா நாதனே ! காதாளாளா – சர்வலோகத்தை யுங்காக்கு முயற்சியுடையவனே !
நாதா – நின்னைப் புகழும்படிக்கு நாவைத் தருவாயாக ; கா- பிறரைப் புகழாவண்ணம் என்னைக் காப்பாயாக வென்றவாறு.
முன்னின்ற நா தா கா என்பவற்றைப் பாடமாற்றித் தாளாளா வென்ற தன்முன்னர்ச்சேர்க்க. துறை – இதுவுமது.
கூக்குக்கிக்காக்காகா
கூக்கக்குகைக்கொக்கோ
கூக்கொக்காகைக்காகா
கூக்காக்கைக்கேகாகா. (762)
இது ககரமெய்வருக்கம்.
(இ-ள்) கூ – பூமியை குக்கிக்கு – திருவுதரத்துக்கு. ஆக்காகா – இரையாக்குந் திருமேனியையுடையவனே !
கூக்கக்குகைக்கொக்கோ – பூமியை மீளப் புறத்தேயுமிழ்தற்கொத்த கோவே !
கூக்கொக்காகைக்காகா – கூவினிடத்து மேற் குதிரையாகைக்கிருக்குந் திருமேனியையுடையவனே !
கூக்காக்கைக்கேகாகா – பூமியைக்காப்பதற்குப் பரமபதத்தினின்றும் லீலாவிபூதியில் வரப்பட்டவனே !* என்றவாறு.
எனவே என்னைக் காப்பாயாக வென்பது பயன். இது குருகாமான்மியம். பா – வஞ்சித்துறை. துறை – இதுவுமது.
* கூக்காக்கைக்கேகாகா என்பதற்கு, ஜகத்ரக்ஷணத்துக்கு அத்விதீயனானவனே என்னை நீ காப்பாயாக எனினு மமையும்.
தத்தோதத்தத்திதாதத்தைதுதிதிதா
தத்தோதத்தத்தத்திதாதிதித்தே–துத்தூத்
ததிதித்தித்தேதுத்துத்துத்துத்தத்தாதி
துதிதாதைதாதைதுதித்து. (763)
இது தகரமெய்வருக்கம்.
(இ-ள்) தத்தோதத்தத்தி – கரைமீதுபாயுந்திரையையுடைய திருப்பாற்கடல்.
தாதத்தை – பெற்றுத்தரப்பட்ட கிளியைப்போலு மொழியையுடைய திருமகள்.
துதி திதா- துதிக்கப்பட்ட வுண்மைப் பொருளே ! தத்தோது – தனக்கு முதலையாலுண்டானதத்தினிடத்து மூலமேயென்றுகூறும்.
அத்தத்தத்தி – துதிக்கையையுடையயானையை. தாதிதித்தே – (காத் ததனுடையவுயிரைத்) தரப்பட்ட காவற்கடவுளே !
துத்தூ – உண்ணும் தூய. ததிதித்தித்தே – 1தயிரை வாயாலினிமை யாகக்கொண்டு. துத்துத்துத்து – உணவாகவுண்டு.
தத்தாதி – கூத்தாடுங் கண்ணனாகியகாரணனே ! துதிதாதை – சருவலோகமுந்து திக்கும் பிதாமகனுக்கு.
தாதை – பிதாவே ! துதித்து – உன்னைத் துதிக்கிறே னென்றவாறு.
1 தித்தித்து என்பது சுவைத்து என்பதன் பரியாய வினையெச்சம்.
இதில் இறந்தகாலம் நிகழ்காலமாயிற்று. என்னைக்காப்பாயாக வென்பது பயன். துறை – இதுவுமது.
மாலைமலைமுலைமேலம்மாலைமாலை
மாலைமலைமாலைமாலுமோ–மூலமா
மெல்லைமாலாலாலிலைமேலாமாலில்ல
மல்லைமாலாமாமைமால். (764)
இஃ திரண்டெழுத்தான்வந்தது.
(இ-ள்) முத்தமாலையணியு மலைபோன்ற முலைகளின்மீதே யுனது துளபமாலைவேட்டதனாலே பசலையாகிய
பொன்னுப்பூணுமியல்பினையுடைய பூமாலைபோல்வாள் போரைச்செய்யும் மாலைக்காலத்தான் மயங்குவாளோ?
சகலதேவன்மார்க்கு முதலாகிய காலவளவையுடைய பெரியவனே !
பிரளயத்தின்மேலாய ஆலிலைமேற் கண்வளர்வதான விருப்பத்தையுடை யவனே !
இல்லந் திருக்கடன்மல்லையாங் காளமேகம்போலு நிறத்தையுடைய திருமாலே ! என்றவாறு.
மால் – அண்மைவிளி. திணை – பெண்பாற் கைக்கிளை. துறை – கண்டுகைசோர்தல்.
சூலமலைமைம்மாமைமாலிசுமாலிசலச்
சீலமலைசூலிசெலச்செல்லச்–சாலமலை
சோலைமலைமாலைச்சொல்லச்சொல்சொல்லானம்
மாலைமலைசீலமாம். (765)
இது மூன்றெழுத்தான்வந்தது.
(இ-ள்) சலச்சீலமலைசூலி – தீயவினைகளைச்செய்யுஞ் சீலத்தை யுடையளாய்ப் போர்புரிசூலத்தையுடைய தாடகையும்.
சூலமலை மைம்மாமைமாலிசுமாலி – சூலினோடுங்கூடி யாரவாரிக்குங் காளமேகம்போலு நிறத்தையுடைய மாலியுஞ் சுமாலியும்.
செல – போர்க் கெதிர்செல்ல. செல்ல – அவர்களுயிர் கூட்டைவிட்டுநீங்க. சால – மிகவும். மலை – பொருத.
சோலைமலைமாலை – சோலைமலையிலுள்ள திருமாலானவனை. சொல்லச் சொல் – நெஞ்சமே !
சொல்லினாற் றோத்திரஞ்செய்யென்று நாவிற்குச் சொல்லுவாயாக.
சொல்லால் நம்மாலைமலை சீலமாம். அத்தோத்திரமேதுவாக நம்மிடத் தறிவின்மையைப் பொருதுபோக்கப்பட்ட நல்ல ஞான நமக்குண்டா மென்றவாறு.
சூல் – கற்பம். அமலை – ஆரவாரம். மை – மேகம். மாமை – நிறம். சலம் – தீயவினை. சீலம் – புத்தி.
சூலி – சூலத்தையுடைய தாடகை ; காளியனையாள் எனினுமாம். செல – எதிர்செல்ல. செல்ல – நீங்க.
சொல்லச்சொல் – தோத்திரஞ்செய்யச்சொல்லுவாயாக. மலைதல் – மாறுபடுதல். சீலம் – நல்லுணர்வு. ஆம் – உண்டாம்.
நெஞ்சேயென்பது தோன்றாஎழுவாய். இது தன்னுணர்வைப் பிறிதொன்றாக்கிக் கூறாதவற்றைக் கூறென
அகத்திற் கூறுவனபோலக் கூறும் மயக்கம். என்னை?
“ஆம்புடைதெரிந்துவேந்தற் கறிவெனுமமைச்சன்சொன்னான்”
“ஓதிய பொறியற்றாயோரரும்பொறிபுனைவியென்றான்” என்பதனா லறிக. திணை – பாடாண். துறை -…..
கோகிலமாலைக்கேகொலைமல்கக்கோலமுலைக்
காகுலமாமோகமிகலாகுமோ–சோகமிகு
மேமாசலமாமிகலமைமாச்சொல்லுமிசை
மாமாமலிகச்சிமால். (766)
இது நாலெழுத்தான்வந்தது.
(இ-ள்) முதலையாற்றுன்பமிகாநின்ற பொன்மலைபோலப் பெருத்ததாய்ப் போருக்கமைந்த யானை மூலமே
யென்னும்பொருளுரையையுந் திருமகளையும் மாமரமிகுந்த திருக்கச்சியையு முடைய மாயோனே !
குயில்களானவை மாலைக்காலத்திலே (காமா கூகூவென்று காமனை யழைத்துக்) கொலைத்தொழிலை மிகுப்ப,
அழகியமுலையினையுடையாட்கு வருத்தத்தைச்செய்யும் மிக்க காதன் மேன்மேலு மிகுதலுன்கருணைக்கு முறையாகுமோ வென்றவாறு.
எனவே யிவளைத் தழுவுவதே நீ பேரருளாளனான திருநாமத்திற்கு முறையென்பதாயிற்று. சோகம் – துன்பம். இசை – பொருளுரை ;
அஃதாவது மூலமந்திரம். மா – பெரியபிராட்டி. மா – மாமரம். மலிதல் – மிகுதல். மால் – அண்மைவிளி.
கோகிலம் – சாதியொருமை. ஆகுலம் – வருத்தம். மாமோகம் – மிக்ககாதல். மிகல் – பெருத்தல். ஓகாரம் ஒழியிசை.
திணை – பெண்பாற் கைக்கிளை. துறை – கண்டுகை சோர்தல்.
மடக்கு முற்றும்.
———————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்