திருமாலையே பாடிய ஆழ்வார்கள் பதினொருவரில் தொண்டரடிப் பொடியாழ்வார் தவிர பத்து ஆழ்வார்கள் பாடிய
திவ்யதேசம் திருவேங்கடம் எனப்பெறும் திருப்பதி திருமலைக் கோயிலாகும்.
திவ்ய பிரபந்த பாசுரங்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தைத் திருவரங்கமும் ( 274 பாசுரங்கள்)
இரண்டாம் இடத்தை (203) பெற்ற திவ்ய தேசம் திருவேங்கடமலையும் ஆகும்.
பெரியாழ்வார் ஏழும், ஆண்டாள் பதினாறும், குலசேகர ஆழ்வார் பதினொன்றும், திருமழிசையாழ்வார் பதினைந்தும்,
திருப்பாணாழ்வார் இரண்டும், திருமங்கை ஆழ்வார் அறுபத்து இரண்டும்,
பொய்கை ஆழ்வார் பத்தும், பூதத்தாழ்வார் ஒன்பதும், பேயாழ்வார் பத்தொன்பதும், நம்மாழ்வார் ஐம்பத்து இரண்டும் என
இருநூற்று மூன்று பாசுரப்பதிகங்கள் திருவேங்கட மாமலை உறை வேங்கடநாதனைப் புகழ்ந்துரைக்கின்றன.
பாம்பணையின் மேல் பள்ளி கொண்ட கோலத்தில் திருமால் திகழும் திருக்கோயிலாக திருவெஃகா எனப்பெறும்
காஞ்சிபுர நகரத்துக் கோயிலை பெரும் பாணாற்றுப் படையும், பரிபாடல் மதுரைக்கு அருகில் உள்ள
திருமாலிருஞ் சோலையில் நின்ற வண்ணம் திகழும் நெடியோனின் கோலத்தை விவரிக்கின்றன.
சிலப்பதிகாரம் எனும் அருந்தமிழ் நூலில் இளங்கோவடிகள் காடுகாண் காதையில் பாம்புப்படுக்கையில் பள்ளி கொண்டவாறு
திருமால் திகழும் இடமாகக் காவிரி நடுவண் உள்ள திருவரங்கத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அதே நூலில் கடலாடுகாதையில் வேங்கடமலை பற்றி கூறும் அடிகளார் வேன்றி காதையில் தமிழ் நாட்டு எல்லைகளைக்
குறிக்குமிடத்து வேங்கடமலையையும் குமரிக்கடலையும் பின்வருமாறு சுட்டியுள்ளார்.
‘‘நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்’’ என்பது அவர் வாக்கு.
இங்கு நெடியோன் என்பது திருவேங்கடவனையும், தொடியோள் என்பது கன்னியாகுமரி பகவதியையும் சுட்டுவதாகும்.
எனவே நெடியோனாகிய திருமாலுக்கு வேங்கடமலையில் கோயில் திகழ்ந்து என்பது சிலப்பதிகாரத்தின் கூற்றாகும்.
கடந்த 150 ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் பல சமயச் சார்புடையவர்களால் இருவேறு கருத்துக்கள் தொடர்ந்து கூறப்பெற்று வந்துள்ளன.
திருமலைத்திருப்பதி கோயில் கருவறையில் நின்ற கோலத்தில் திகழும் மூலஸ்தானத்து திருமேனி கொற்றவையாகிய
தேவியின் திருவடிவம் என்று ஒரு சாரரும், இல்லை அத்திருமேனி குறிஞ்சிக் கடவுளாகிய முருகப் பெருமானின் திருவடிவமே
என்று தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகின்றனர்.
இவர்களின் மாறுபட்ட கருத்துக்களுக்கெல்லாம் உரிய பதிலாக கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டிலேயே இளங்கோ அடிகள்
தம் சிலப்பதிகாரக் காப்பியத்தின் காடுகாண் காதையில் பாடலடிகள் வாயிலாகக் கூறியுள்ளார்.
‘‘வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய இடை நிலைத்தானத்து மின்னுக்கொடி உடுத்து விளங்குவில் பூண்டு நல்நிறமேகம் நின்றது போலப்
பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும் தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி நளங்கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ வாடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்’’என்பதே
அவர் விவரிக்கும் திருவேங்கடவனின் திருக்கோலமாகும்.
பண்டு இளங்கோ அடிகள் காலத்தில் திருப்பதி திருமலைமேல் இருந்த திருக்கோயிலின் மூலஸ்தானத்தில்
திருமால் வில்லினைத் தரித்தவாறு மேகம் போன்ற கறுப்பு வண்ணத்தில் பகைவரை அழிக்கக் கூடிய சக்கரத்தையும்,
பால் போன்ற அவருடைய திருக்கைகளில் இடமும் வலமும் ஏந்தியவாறு அழகுடைய மணி ஆரத்தை மார்பிலே தரித்தும்
பொன்னாலாகிய பூ ஆடையைப் பூண்டும் சிவந்த தாமரை போன்ற திருக்கண்களுடன் நின்ற கோலத்தில் காட்சி நல்குகிறார் என்று கூறியுள்ளார்.
சிலப்பதிகாரமே திருப்பதி திருமலைத்தெய்வம் நின்ற கோலத்திருமால் தான் என்று சான்று பகரும்போது,
தேவியின் வடிவம் என்றும், முருகன் வடிவம் என்றும் கூறுவது தேவையற்ற சர்ச்சைகளாகும்.
தமிழ் நாட்டுப் பண்பாட்டுக் கூறுகளை தெளிவுற விளக்கமாக எடுத்துரைக்கும் நூலான அகநானூற்றின் 213 ஆம் பாடல்,
‘‘வினை நவில் யானை விறற் போர்த்தொண்டையர் இனமழை தவிழும் ஏற்றரு நெடுங்கோட்டு ஓங்கு வெள் அருவி வேங்கடம்’’எனக்கூறி
திருவேங்கடமலை தொண்டைமான் மன்னர்களுக்கு உரிய மலை என்பதைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.
குறுந்தொகையின் 260 ஆம் பாடலும் தொண்டைமான் மன்னர்களின் மலையே வேங்கடம் என உரைக்கின்றது.
வேங்கட கோட்டத்து மன்னன் புல்லி என்பானின் வேங்கடமலையின் சிறப்புக்களை அகநானூற்றின் எட்டுப் பாடல்கள், தெளிவுற உரைக்கின்றன.
அப்பெருமகன் களவர் குலத்தோன்றல் என்பதையும், தொண்டைமான் எனப்பட்டம் புனைந்த அவன் மரபினரே பிற்காலத்தில்
காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தனர் என்பதையும் சங்கத்தமிழ் நூல்கள் எடுத்துரைக்கின்றன.
10ஆம் நூற்றாண்டில் கி.பி, 952ல் பராந்தகச் சோழனின் ஆட்சியில் தொண்டை மண்டலம் வியத்தகு முறையில் வளர்ந்ததால்,
நிறைய பொன்னாபரணங்களை அளித்தான். சைவர்களும், வைஷ்ணவர்களும் திருமாலின் திருவடியைப் போற்றினர்.
பெரும்பான்மையான தஞ்சைச் சோழர்கள் சைவர்களாக இருந்தாலும் திருமலைக்குச் சொத்துக்களை அளித்தபடி இருந்தனர்.
11 ஆம் நூற்றாண்டில், தென்பகுதியில் சோழர்களின் ஆட்சிக் காலம் பொற்காலமாகத் திகழ்ந்தமையால் பெற்ற
ராஜராஜ சோழனின் காணிக்கைகளோடு சோழ அரசி ‘அம்மார்’ என்ற மாதரசி 57 கழஞ்சுப் பொன்னை திருமலை ஆலயத்திற்கு அளித்தாள்.
கி.பி. 1016ல் சோழப் பேரரசில் வாழ்ந்தத பிராமணர் ஒருவர் 26 கழஞ்சு பொன் அளித்தார் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது.
13 ஆம் நூற்றாண்டில் யாதவ, சாளுவ, காகதீய, ஹொய்சாள மன்னர்கள் இத்திருக்கோயிலைப் போற்றி நிலங்களும் பொருட்களும் கொடுத்தனர்.
கி.பி. 1130ல் ஸ்ரீ ராமனுஜர் திருப்பதி ஆலயத்தின் நிர்வாகம், வழிபாடு முதலியவற்றைச் சீர்படுத்தி ‘ஜீயர் களை’ நியமித்து
ஆலயத்தின் நிர்வாகத்தை அவர்களிடம் ஒப்படைத்தார்.
1356ல் விஜய நகர மன்னரான சாளுவமங்கதேவர் ஆட்சிக் காலத்தில் திரும்பவும் திருக்கோயிலுக்குப் பொன் வேய்தல் திருப்பணி நிகழ்ந்தது.
விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு திருமலைத் தெய்வம் குலதெய்வமானபடியால் பொருள் வளம் பெருகத் தொடங்கிற்று.
இரண்டாம் ‘ஹரிஹரர்’ 1404ல் ஸ்ரீ வேங்கடேஸ்வராய நமஹ என்ற மந்திரத்தினைப் பதிக்கச் செய்த நாணயத்தினை வெளியிட்டார்.
—————-
அஞ்சனாத்ரி த்ரேதா யுகத்தில் –
வால்மீகி ராமாயணம் திருவேங்கடம் குறிப்பு உண்டே
————
செக்கர் மா -திருவாசிரியம் போல்
———-
கம்பர் -கம்பத்தில் இருந்து வந்த நரஸிம்ஹர் பெயர்
ஆச்சார்யர்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்
தொங்கல் பாசுரம் -கம்பர் -மூன்று
திருவெழு கூற்று இருக்கை -சிறிய திருமடல் -பெரிய திருமடல்
சடகோபர் அந்தாதி சாதித்து
திரு மறையோர் வாழும் திருவேங்கடம் -கம்பர்
அநந்தாழ்வான் இருந்தமையைக் காட்டி
ஆக இவர் பராசர பட்டர் சிஷ்யர்
புலியும் யானையும் சேர்ந்து வாழும் திருமலை
புகு மதத்தால் -தேன் விண்ட மலரால் வாழ்த்தும் திருவேங்கடம்
வேங்கை -முயல் என்று சந்திரன் மேல் -மதியின் ஒண் முயலைப் பாய்ந்து -ஆழ்வார் பாசுரம் போல் கம்பர்
மோக்ஷம் அடைவார் திருமலையில் தேடாதீர் -சுக்ரீவன்
கிட்டே கூடப் போகாதீர் –
திருமலை -சர்வாதிகாரம்
திருவேங்கமுடையான் -அதிகிருதா அதிகாரம்
அவனை விட பெருமை என்பதால் -திரு மலையையே பாடினார் கம்பர்
மலையே திரு உடம்பு -ஆழ்வார்
மலை ஒன்றுமே தொழ வினைகள் போமே
ஆச்சார்யர் கோஷ்ட்டியில் கேட்ட அர்த்தங்கள் கம்பர் அருளிச் செய்கிறார்
—————-
ஆராத்தி ஏழை செல்வம்
காணே -உள் கண் கட் கண் -ஞானம்
விகடே-தாப த்ரயம் போக்க திரு மலைக்கு வா
தடங்கல் -திருமலைக்கு வந்தால் திருப்பம் உண்டாகும்
க்ரீம் கச்ச
ஸ்ரீ பீடஸ்ய
ஸ்ரீ நிவாஸன் -மஹா லஷ்மிக்கு பீடம் இவன்
அகலகில்லேன் இறையும்
சத்வம் நிறைந்த அடியார்களுடன் நாடி வா
உரியவனாய் ஆவாய்
பரன் சென்று சேர் மலை ஒன்றையுமே தொழ வினைகள் அனைத்துமே போகுமே
வேதத்தால் மங்களா ஸாஸனம்
பஞ்சாயுதம்
ஐந்து மொன்றும் அஷ்ட குண சாம்யம்
ஐம்பூதங்கள் சரீரம் பிறப்பு அடைய மாட்டான்
————–
சமயம் கடந்த, தமிழ்ச் செல்வரான இளங்கோவடிகள்! (3rd CE)
வேங்கடம் என்னும் மலையையும் பாடுகிறார்
= சமயம் கடந்து, தமிழைத் தமிழாய் அணுகி!
= துதிப் பாட்டாய் இல்லாது, இயற்கையும் தமிழுமாய்!
= வேங்கட மலை மேல் நிற்பது யார்? அதையும் சொல்லிடறாரு இளங்கோவடிகள்!
சிலப்பதிகாரம் காட்டும் – வேங்கட மலையில் இருப்பது யார்?
வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!
நூல்: சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் – காடு காண் காதை (lines 41-51)
கவிஞர்: இளங்கோ அடிகள்
வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை
நீர் பெருகி அருவிகள் பாயும் வேங்கட மலை!
அந்த ஓங்கிய மலை உச்சியிலே மலைப் பாதையில் நடந்து செல்லும் போது,
ஆங்காங்கே சில்லென்று சிற்றருவிகள்!
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து
கதிரவனும் திங்களும் மாறி மாறிக் காயும் மலை உச்சி!
ஆங்கே, இரண்டு பக்கத்து மலைக்கும் இடையே…
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல
கோடி = புதுத் துணி
பூவுக்கே வழியில்லாமல் இருந்த இறைவனுக்கு, வைரக் கிரீடம்-தங்கத் தட்டு போன்ற Capitalistic வித்தைகள்;
ஆனா, ஆழ்வார்களின் வேங்கடவன் Business வேங்கடவன் அல்லன்; குறையொன்றுமில்லாக் குன்றத்து விளக்கன்;
கோடி = திருமணக் கூறைப் பட்டு; அதை உடுத்தி,
தோளிலே வில்லேந்தி…
நல்ல கருப்பான மேகம்..
மழை பொழியத் தயாராய் நிற்பது போல், மலை மேல்
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி
* பகை அஞ்சும் ஆழி = (சக்கரம்)
* பால் வண்ணச் = (சங்கு)
தன் தாமரைக் கையிலே ஏந்தி = யாரு சங்கு-சக்கரம் ஏந்தி இருப்பா?
அவனே அவன்! = வேங்கட மலை மேல் நிற்பவன்!
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
அழகான ஆரம் – அதை மார்பிலே பூண்டு..
பொற்பூ ஆடையில், பொலியத் தோன்றும்
(இன்னிக்கும் பூ-ஆடை = பூலங்கி சேவை உண்டு; ஒவ்வொரு வியாழக் கிழமையும் “பூலங்கி தரிசனமுலு“;
பூவால் நெய்த ஆடை = பொலம் பூ ஆடையில் பொலியத் தோன்றிய -ன்னு அன்றே காட்டும் இளங்கோ)
செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!
செங் கண், நெடியோன்! = சங்கத் தமிழ்க் கடவுள்! முல்லை நிலத் தொன்மம்;
திருமால் என்னும் அவன் = அவனே, வேங்கட மலையில் நின்ற வண்ணமே!
ஒரு பக்கம் கதிரவன் – மறு பக்கம் நிலவு! நடுவால கருமேகமாம்
அதே போல்…
ஒரு பக்கம் ஆழி(சக்கரம்) – மறு பக்கம் வெண் சங்கு! நடுவால கருத்த மாயோன்
உவமை காட்டும் இளங்கோ அடிகளின் தமிழ்ச் சுவை, சொல் அடர்த்திச் சுவை!
——–
இளங்கோ மட்டுமல்லாது, முற்பட்ட எட்டுத் தொகையிலும்.. “வேங்கட மலை மேல் திருமால்”!
பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த,
இருவேறு மண்டிலத்து இலக்கம் போல,
நேமியும் வளையும் ஏந்திய கையாற்,
கருவி மின்ன விரி இலங்கும் பொலம்பூண்,
அருவி உருவின் ஆரமொடு அணிந்த, நின் திருவரை அகலம்!
வேங்கடத்தின் மேல் நிற்பது = நேமியும் வளையும்-சக்கரமும் சங்கும்..
ஏந்திய கையான் என்றே காட்டும் தமிழ்த் தகைமை!
மாயோன் என்ற முல்லை நில நடுகல்…
பிற் சங்க காலத்தில் “பெருந்தெய்வம்” ஆகி விட்டாலும்…,
அந்த ஆயர்க் குடி வழக்கங்களே இன்னிக்கும் கைக்கொள்ளும் தொன்மம்!
அந்தணர்களுக்கு முதல் தரிசனம் இல்லை;
இன்றளவும்… ஆயர்-கோனாரே, கதவம் திறப்பித்து, முதல் காட்சி காணும் முன்னுரிமை!
வேங்கடேஸ்வரன், பாலாஜி போன்ற வடமொழிப் பெயர்களால், இன்று சூழ்ந்து நின்று Capital Clout ஆக்கி விட்டாலும்…
திருவேங்கடமுடையான், திருமலை-அப்பன், முல்லையின் மாயோன்,
மலை குனிய நின்றான், மாயோன் மேயக் காடுறைக் கடவுள்… என்பதே சங்கத் தமிழும்,
ஆழ்வார்களும், “ஆசையால் பராவி” அழைத்த தமிழ்த் திருப்பெயர்கள்!
* சமயம் சாராச் செந்தமிழ்ச் செல்வர் இளங்கோ காட்டும்… வேங்கடவன் – இவனே!
* எட்டுத் தொகைச் சங்கத் தமிழும் காட்டும்… வேங்கடவன் – இவனே!
* இவனே – அவன் எவனே
———–
திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என்பதால், இதற்கு ‘திருப்பதி’ என்ற பெயர் வந்தது.
கிருஷ்ண அவதாரத்தில், பகவான் தன்னுடைய திருக்கரங்களால் கோவர்த்தன மலையைத் தாங்கினார்.
தன்னை ஏந்திய கிருஷ்ணனை, தான் தாங்க வேண்டும் என விரும்பியதாம் கோவர்த்தன மலை.
அதன்படி இந்த கலியுகத்தில் திருப்பதி ஏழுமலையானை திருவேங்கட மலையாய் இருந்து தாங்கி நிற்பதாக புராணங்கள் சொல்கின்றன.
வேங்கடாத்ரி,
சேஷாத்ரி,
வேதாத்ரி,
கருடாத்ரி,
விருஷபாத்ரி,
அஞ்சனாத்ரி,
ஆனந்தாத்ரி எனும் ஏழு சிகரங்களுடன் வேங்கடமுடையானைத் தாங்கி நிற்கிறது, வேங்கட மலை.
வேங்கட மலை:
வேம் என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’.
பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர்.
இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.
சேஷ மலை:
பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார்.
இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.
வேதமலை
வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.
கருட மலை:
இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார்.
அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.
விருஷப மலை:
விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான்.
அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.
அஞ்சன மலை:
ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள்.
அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.
ஆனந்த மலை:
ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார்.
இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர்.
இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.
ஒருமுறை பூமாதேவியைப் பாயாகச் சுருட்டி பாதாளத்தில் அடைத்து வைத்தான் இரண்யாட்சன் என்னும் அசுரன்.
திருமால் பூமாதேவியைக் காக்கும் பொருட்டு வராகமாக அவதரித்தார்.
பின்பு இரண்யாட்சனுடன் போரிட்டு அவனைக் கொன்று பூமாதேவியை மீட்டார்.
பூமித்தாயை தன் மடியில் தாங்கி வராக மூர்த்தியாய் தேவர்களுக்கு காட்சிக்கொடுத்தார்.
அப்போது பிரம்மதேவன் திருமாலை வேண்டி, ‘வராக மூர்த்தியாகியத் தாங்கள், கலியுக மக்களைக் காக்கும் பொருட்டு
திருவேங்கடத்தின் சேஷாத்ரி சிகரத்தில் எழுந்தருளவேண்டும்’ என்றார்.
அதன்படி வராகமூர்த்தி திருமலை எனும் திருவேங்கடத்தில் எழுந்தருளினார்.
திருவேங்கடம் என்பதற்கு இருவகை பொருளுண்டு.
ஒன்று தன்னை அண்டியவர்களுடைய பாவங்களை எரித்துவிடுதல்
மற்றொன்று தன்னை அண்டியவர்களுக்கு அழிவில்லாத ஐஸ்வரியங்களைத் தருதல் .
சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இத்தலத்தை திருவேங்கடம் என்றே குறிக்கின்றன.
திருமலையை மேல்திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.
திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என்பதால், இதற்கு ‘திருப்பதி’ என்ற பெயர் வந்தது.
————–
இளங்கோ -சேர மன்னனின் தம்பி இளவல் என்பர்
கோவலன் -கோபாலன் என்பதின் மருவு
இளங்கோ வுடன் எவ்வாறு நடந்தனையோ
ஜைனர் வைஷ்ணவர் சம்பந்தம் உண்டே
புத்தர் சைவர் சம்பந்தமும் உண்டே
ஜைனர் வழிபாட்டில் ஆச்சார்ய சம்பாவனை ராமானுஜருக்கு உண்டாம்
ஜைனர்கள் வழிபாட்டு ஸ்தலங்களில் கீழ் உள்ள ஸ்லோகம் கல்வெட்டுக்களில் உண்டே
பாஷண்ட ஸாகர மஹா படபா முகாக்நி
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ—-ஐந்தாம் ஸ்லோகம்–
படபா என்பது ஒரு பெண் குதிரையின் பெயராகும்.
அது கடலுக்கு அடியில் தனது முகத்தில் எப்போதும் நெருப்புடன் உள்ளதாகும்.
ப்ரளய காலத்தின் போது கடலிலிருந்து வெளி வந்து உலகை அழிக்கும் என்பது புராணங்கள் கூறுவதாகும்.
பாஷண்டர்கள் என்ற கடலுக்கு இப்படிப்பட்ட படபா அக்னி போன்று எம்பெருமானார் உள்ளார்.
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தனது தலையில் வைத்தபடி நின்று நீச மதங்களை அழித்தார்.
ஸ்ரீமந் நாராயணன் அமர்ந்துள்ள பரமபதம் செல்லும் வழியைக் காட்டினார்.
இப்படிப்பட்ட எம்பெருமானாருக்குப் பல்லாண்டு, யதிகளின் தலைவருக்குப் பல்லாண்டு.
1-பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி –
பாஷண்டர்களாகிற கடலின்
கொந்தளிப்பை யடக்கும்
விஷயத்தில்
2-பாடபாக்நி போன்றவரும் –
அவர்களுடைய பொங்குதலை அடக்கி ஒழித்தவர்
படபா –என்று பெண் குதிரைக்கு பெயர்
கடலின் இடையிலே ஒரு பெண் குதிரை இருப்பதையும்
அதன் முகத்திலே நெருப்பு ஒரு காலும் அவியாது இருப்பதையும்
மழை நீர் முதலியவற்றால் கடல் பொங்காத படி
அதிகமாய் வரும் நீரை அது உறிஞ்சி நிற்பதாகவும்
அதுவே பிரளய காலத்துக் கடலில் நின்றும் வெளிப்பட்டு
உலகங்களை எரித்து அளிப்பதாகவும்
புராணங்கள் கூறும் –
3-ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ –
ஸ்ரீ ரங்க நாதனுடைய
திருவடித் தாமரைகளிலே
பரம பக்தி யுக்தரும் –
4-ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள
திரு மா மணி மண்டபத்தைச் சேரும்
வழியைத் தந்து அருள்பவரும் –
5-ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ –
யதிகளுள் மிகச் சிறந்தவருமான
எம்பெருமானார்
சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்கா நின்றார்
தென்னரங்கன் கழல் சென்னி வைத்து
நீசச் சமயங்களை நீக்கி
அடியார்க்கு உஜ்ஜீவன உபாயம் காட்டி
அருளா நின்ற எம்பெருமானார்
சகல வைபவங்களும் பொலிய வாழ்ந்து அருளா நின்றார் என்றது ஆயிற்று –
—————
கோவில் வரலாறு : தொண்டைமான் எனும் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன்
முதன் முதலாக கோவில், பிரகாரம் கட்டி தினசரி வழிபாட்டிற்கு வழிசெய்தான் எனக் கூறப்படுகிறது.
அவனைத் தொடர்ந்து பல சோழ மன்னர்கள் பல சேவைகளை செய்துள்ளனர்.
ஆனால் இன்றுள்ள வளங்களில் பெரும்பாலானவை விஜயநகர பேரரசுக் காலத்தில் வந்தவை.
கிருஷ்ணதேவராயர் இக்கோவிலுக்கு பலவசதிகளை செய்து கொடுத்து எக்கச்சக்கமான தங்க வைர ஆபரணங்களையும் பரிசளித்தார்.
1843லிருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம்
ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது.
1932-ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது.
1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது.
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அலர் மேல் மங்கா சமேத ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply