ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் அருளிச் செய்த தனியன் –
(ஸ்ரீ ராம பிள்ளை அருளிச் செய்தார் என்றும் –
ஸ்ரீ ஆள வந்தார் அருளிச் செய்தார் என்றும் சொல்வர் )
கரு விருத்தக் குழி நீத்த பின் காமக் கடும் குழி வீழ்ந்து
ஒரு விருத்தம் புக்கு உழலுருவீர் உயிரின் பொருள்கட்கு
ஒரு விருத்தம் புகுதாமல் குருகையர் கோன் உரைத்த
திரு விருத்தத்து ஓர் அடி கற்றிரீர் திரு நாட்டகத்தே –
கர்ப்ப அரங்கம் -காமக்கடும் குழி -உழன்று -உயிர் பொருள் -அனர்த்தம் படாமல் –
ஓர் அடி கற்று இரீர் என்று உபதேசம்
———-
பிரவேசம் –
ஆழ்வாரை முக்தர் என்பார்கள் சிலர் –
(அடியார் நிலாகின்ற வைகுந்தமோ என்கையாலே நித்யரும் முக்தரும் என்பர்
முக்தர் என்றது முதல் திருவாய் மொழியில் உபய விபூதியையும் ததீயத்வ ஆகாரரேண அனுபவித்த படியால்)
அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தார் ஒருவர் முத்த ப்ராயர் என்பர்
(முமுஷு -ஸ்வேத தீப வாசிகள்–நம சொல்லிக் கொண்டே இருப்பார்களே -என்றுமாம்
ஸ்வேத தீப வாசி –சீதனையே தொழுவார் -தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்கள்
முக்த பிராயர் என்றது வீடுமின் முற்றவும் -பிறருக்கு உபதேசித்த ஞான வைபவத்தைப் பற்ற
அங்குத்தை இருந்து வந்தவர் இங்கு திருத்தினதைப் பார்க்க வந்தார்கள் )-
அங்கு உள்ளார் ஒருவரை நீர் போய் பிறவும் என்னப் பிறந்தார் -என்பார்கள் சிலர் –
(பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள் இத்யாதியைப் பற்ற )
வங்கி புரத்து நம்பி -எம்பெருமான் தான் இப்படி வந்து அவதரித்தான் -என்பர்
(யானாய்த் தன்னைத் தான் பாடி -இதுக்கு மூலம் யான் நீ இத்யாதி ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்தி
திருக்குறுங்குடி நம்பியே திருக்குருகூர் நம்பி என்பார்களே
சேமம் குருகையோ –நாராணனோ இத்யாதி
பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ –இத்யாதி )
இப்படிச் சொல்லுகைக்கு அடி ஆழ்வார் உடைய பிரபாவத்தாலே –
முக்தரிலே ஒருவரை இங்கே போர விட்டதாகில்
நாம் போந்த கார்யம் முடிந்த வாறே போகிறோம் என்று ஆறி இருக்கக் கூடும்
அங்கன் இன்றியிலே
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை-என்றும்
பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ (6-9-9 )என்றும்
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து (2-6-8 )என்றும்
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியோ (7-1-10 )என்றும்
எல்லாம் கூப்பிடுகையாலே இவர் சம்சாரத்தில் ஒருவராம் இத்தனை –
அராஜகமான தேசத்திலே பட்டத்துக்கு உரிய ஆனையைக் கண்ணைக் கட்டி விட்டால்
ஆனை எடுத்தவன் ராஜாவாமா போலே
எம்பெருமான் கடாஷித்தார் ஒருவராம் இத்தனை –
சிர காலம் சாத்யமான-அநாதி காலம் ஸஞ்சிதமான – கர்மத்தை உடையார் ஒருத்தருக்கு
கடாஷித்த அநந்தரம்
இங்கனே ஆகக் கூடுமோ என்னில்
பிருந்தாவனம் பகவதா கிருஷ்ணேந அக்லிஷ்ட கர்மணா
சுபேக மனசா த்யாதம் கவாம் வ்ருத்திம் அபீப்சதா (ஸ்ரீ விஷ்ணு புராணம் 5-6-28)-என்கிறபடியே
நெருஞ்சிக் காடாய் கிடந்த ஸ்ரீ பிருந்தாவனம் கிருஷ்ணன் உடைய வீஷணத்தாலே
(வீஷணத்தாலே-என்றது பொதுவாக அனைத்தையும் –
கடாக்ஷம் ஒருவரை நினைத்து அருளுவது
தியானிக்க தியானிக்க கடாக்ஷம் பெறலாம்
வீக்ஷணம் -ஸ்வா தந்தர்யம் அடியாக )
உத்பன்ன நவ சஷ்பாட்யம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் 5-6-37 )-என்கிறபடியே
சாணரைப் புல்லாய் பசுக்கு பசுகு என்று அறுக்க அறுக்க தொலையாதே கிடந்தால் போலே
இவர்க்கும் இது கூடும் –
ஷோடச பதார்த்த ஞானத்தாலே நிஸ் ரேயசம் என்பாரும்
ஷட் பதார்த்த ஞானத்தாலே மோக்ஷம் என்பாருமாய்
இங்கனே சில அர்த்தங்களைச் சொல்லா நிற்பார்கள் இதர வாதிகள்
(நை யாயிக –16 பதார்த்தங்கள் –பிரமாண ப்ரமேய சம்சய ப்ரயோஜன த்ருஷ்டாந்தம் சித்தாந்தம்
அவயவம் தர்க்கம் வாதம் ஜல்பம் நிர்ணயம் விதண்ட பலம் ஜாதி விக்ரஹம்
வை சேஷிகர் பக்ஷங்கள்–6 பதார்த்தங்கள் – -த்ரவ்ய -குண கர்ம சாமான்ய விசேஷம் சமவாயம்
ஈட்டில் முதல் ஸ்ரீயப்படியில் ஸாதித்த அர்த்தங்கள் இவை )
நம் பக்ஷத்தில்
சித் அசித் ஈஸ்வரர் என்று தத்வம் மூன்றாய்
அவற்றில் இரண்டு பரதந்த்ரமாய்
ஓன்று ஸ்வதந்திரமாய்
பரதந்த்ரமாகிறன -சித்தும் அசித்தும் -சேதன அசேதனங்கள்
ஸ்வ தந்த்ரன் -ஈஸ்வரன்
சேதனன் ஆகிறான்
ஈஸ்வரன் கை பார்த்து இருந்து தன் கார்யம் தலைக்கட்டிக் கொள்ளக் கடவனாய்
அவனும்
இவர் கார்யம் செய்து தலைக்கட்டிக் கொடுக்கக் கடவனாய்
பின்னை அசித் அம்சம் த்யாஜ்யமாய் கடவதாய்
(அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர் -வீடுமின் முற்றவும் -வீடு செய்து –
ஞானம் வர வர அவற்றை எல்லாம் தள்ளி இவனையே கொள்வோமே )
இங்கனே யாயிற்று நம் தரிசனத்தில் நிர்ணயம்
அவதாரிகை –
ஈஸ்வரனைக் குறித்து சாதனம் அனுஷ்ட்டித்து அபிமதங்களைப் பெறுவாரும்
ஸ்வரூப ஞானத்தால் அவன் தன்னையே பற்றி பெறுவாரும்
(ஸ்வரூபம் அநந்யார்ஹத்வம் அறிந்து வேறு யாருக்கும் ஆட்படாமல் )
இப்படி எல்லாருக்கும் ஒக்குமாயிற்று அவனாலேயே பேறு
பல பிரதன் அவன் ஒருவனே
இப்படி இருக்கையாலே
சர்வேஸ்வரன் நிருஹேதுகமாக தன்னுடைய
ஸ்வரூப ரூப குண விபவங்களையும்
நித்ய விபூதி யோகத்தையும்
லீலா விபூதி யோகத்தையும்
விரோதி ஸ்வரூபத்தையும்
உள்ளபடி அறிய வல்லராம் படி ஞான விசேஷம் அருளி
இவரும் அப்படி ஹேய உபாதேய பிரித்து அறிந்து
உத்தேஸ்யமான உமது திருவடிகளுக்கு அடிமைக்கு விரோதியான த்யாஜ்ய அம்சத்தைப்
போக்கித் தர வேணும் என்று திரு முன்பே விண்ணப்பம் செய்கிறார் –
சம்சார ஸ்வ பாவத்தையும் -(பொல்லா )
பரமபத வ்ருத்தாந்ததையும் -(இமையோர் )
அங்குள்ளார் தம்மை அனுபவித்துக்கொண்டு இருக்கும் படியும்
இவரும் நாங்களும் அவர்களோபாதி -அடியேன் -ஸ்வரூப ஞானம் வந்த பின்பு -பிராப்தி உடையராம் படி-
அவர்களோடு ஓக்க அனுபவிக்க பிராப்தி உண்டே ஸ்வரூப ஞானம் வந்த பின் –
அங்குள்ளார் ஞானத்தையும் வ்ருத்தத்தையும்
அங்கு இருக்கும் இருப்பையும் கண்டு
அதுக்கு எதிர் தட்டான சம்சாரத்த்லே
அவ்வனுபவத்துக்கு விரோதியான பிரகிருதி சம்பந்தத்தோடு
தாம் இருக்கும் இருப்பையும் அனுசந்தித்து
இவ்வனுபவ விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று அபேஷிக்கிறார் –
அங்கு சம்யக் ஞானம்
தத் அனுரூப விருத்தங்கள் -கைங்கர்யம் ஏகதா பவதி
அதுக்குப் பாங்கான சரீரத்தையும் -சாரூப்பியம் -பெற்று -உடையராய்க் கொண்டு இருக்க
(நமக்கு எதிர்த்தட்டாக மூன்றும் உண்டே அங்கே )
இங்கே விபரீத ஞானத்தையும்
விபரீத விருத்தத்தையும்
உள்ளபடியே அனுசந்தித்து
விரோதி நிவ்ருத்தம் பண்ணி அருள விண்ணப்பம் செய்கிறார் –
இமையோர் தலைவா -அங்கு உள்ள பரிமாற்றம் காட்டிக் கொடுக்கையாலே
(ஆழ்வாருக்கு இம் மூன்றுமே இல்லை -ஆழ்வாரை இந்த உடம்புடன் கூட்டிச் செல்லப் பாரித்தானே
நமக்காக மன்றாடுகிறார் )
இங்கு உள்ளது எல்லாம் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கமும் அழுக்கு உடம்புமாய் தோற்ற
விரோதி நிவ்ருத்தம் பண்ணி அருள விண்ணப்பம் செய்கிறார் –
ஜரா மரண மோஷாயா மமாஸ்ரித்ய யதந்தியே -ஸ்ரீ கீதை -என்று கேவலரைப் போலே
விரோதியைப் போக்கித் தர வேணும் என்பான் என் என்னில்
காந்தன் சந்நிதியில் காமினி அழுக்கு கழற்றுமா போலேயும்
ராஜ குமாரன் அபிஷேகம் ப்ராப்தமானால் முன்புள்ளார் புஜிப்பது அறிந்து தானும்
அத்தைப் புஜிக்க யோக்யமாக அதுக்கு பிரதிபந்தகங்களான ஷய வியாதிகளைப் போக்க கேட்க்குமா போலேயும்
தத் அனுபவ விரோதி என்று கழிக்க நினைக்கிறார்
சர்வேஸ்வரனுக்கு கௌஸ்துபம் போல் ஸ்ப்ருஹணீயமாய்
பகவத் அனுபவத்துக்கு யோக்கியமான உள்ள ஆத்ம வஸ்து
அநர்த்தப்படுவதை அறிந்து
தண்ணீர் துரும்பாக இருக்கும் தேக சம்பந்தத்தை
அறுத்து தர வேணும் என்று கால் காட்டுகிறார்
இது தான் ப்ரீதியோ அப்ரீதியோ என்னில் -இரண்டும்
மகாராஜருக்கு பெருமாளைக் கண்ட பிரியமும்
வாலிக்கு அஞ்சிப் போந்து இருந்த அப்ரியமும் போலே
இவருக்கும்
பிரக்ருதியோடே இருக்கிற அப்ரியமும்
எம்பெருமானைக் கண்ட பிரியமும் –இரண்டும் உண்டே
(இதே தானே திருவாய் மொழி முழுவதும்
சீதா பிராட்டி ராக்ஷஸர்கள் உடன் இருப்பு போல் நம்மைப் பார்த்து அப்ரியமும்
அவனைப் பார்த்து பிரியமும் மாறி மாறிச் செல்லுமே )
இனி இப்பிரபந்தத்தில்
வைஷ்ணவர்களையும் தலை மகனாகப் பேசுவான் என் என்னில்
பகவத் விஷயத்தில் சேரும் பொழுது
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் பாதம் பணிந்து
சுள்ளிக்கோல் -பாகவதர் கொள் கொம்பு ஆச்சார்யர்
கடகர் –
பின்பு பிராப்யர் -இவர்களும் ஸாத்யர்
இமையோர் தலைவா -என்றும்
அடியார் அடியார் தம் அடியார் -என்றும்
அடியார் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ (2-3-10 )-என்றும்
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை-(10-9) -என்றும் சொல்லுகையாலே
(எல்லா பாசுரங்களில் பாகவதர் பிரஸ்தாபம் உண்டே )
பகவத் விஷயத்தில் அவஹாகிக்கும் போது கடகர் வேண்டுகையாலும்-
அனுபவ தசையில் வ்ருத்த கீர்த்தனம் பண்ணுகைக்கு இவர்கள் வேண்டுகையாலே –
நடுவில் இங்கு இருக்கும் நாள் போதயந்த பரஸ்பரம் பண்ணவும் வேண்டுமே
உத்தர கிருத்ய அதிகாரம் -ரஹஸ்ய த்ரயம்
பிரிவாற்றாமை ஆற்றவும் இவர்கள் வேணும்
மகிழ்ந்தால் அத்தை வர்த்திக்கவும்
துஷ்யந்த ச ரமந்தி ச -உசாத் துணை
ஆகையால் அவர்களை உத்தேசியர் என்று சொல்லிற்று
(ஆக
1-அடியார்கள் அவனைப் போலவே ப்ராப்யம் என்றும்
2-இவர்களே கடகர் என்றும்
3-போதயந்த பரஸ்பரத்துக்கு என்றும்
மூன்று காரணங்கள் )
பிரபந்தம் முழுவதும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்றும்
பொல்லா அருவினை –அழுந்தார் பிறப்பாம் -என்றும்
உபக்ரமமும் உபசம்ஹாரமும் ஏகார்த்தம் ஆகையாலே
விரோதியைப் போக்கித் தர வேணும் என்கிறது இப் பிரபந்தத்தால் –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–
பாசுரம் -1-பொய் நின்ற ஞானமும் -தாமான நிலையில் அருளியது -ஒழிவில் காலம் -3-3-
பதவுரை
உயிர் அளிப்பவன்–எல்லாப் பிராணிகளையும் ரக்ஷித்தருள்வதற்காக
நின்ற யோனியும் ஆய்–பலவகைப்பட்ட பிறப்புகளையுடையனால்
பிறந்தாய்–திருவவதரித்தவனே!
இமையோர் தலைவா–தேவர்களுக்குத் தலைவனே!
பொய் நின்ற ஞானமும்–பொய்ம்மை நிலைபெற்ற அறிவும்
பொல்லா ஒழுக்கமும்–தீய நடத்தையும்
அழுக்கு உடம்பும்–அசுத்தங்களோடு கூடின சரீரமும்
(ஆகிய இவற்றோடு கூடி)
இ நின்ற நீர்மை–இவ்வண்ணமான இயல்வை (பிறப்புத் துன்பத்தை)
இனி யாம் உறாமை இனிமேல் நாங்கள் அடையாதபடி
அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம்–(உனது) அடியனாகிய யான் சொல்லும் உண்மையான விஜ்ஞாபகத்தை
நின்று கேட்டருளாய்–நின்று நீ கேட்டருள வேணும்.
எம்பெருமானை சாஷாத்கரித்த ஆழ்வார்-
த்வத் பகவத் விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து அருள வேணும் என்று-
தம்முடைய அபி லஷிதத்தை விஞ்ஞாபிக்கிறார் –
வியாக்யானம் –
வேத வ்யாஸ பகவான்
125000 கிரந்தம்
மகா பாரதம் எல்லாம் கூளமும் பலாப்பிசினும் போலே
பிரகிருதி புருஷ விவேகம் பண்ண மாட்டிற்று இல்லை
இவ்வர்த்தம் எங்கோ மறைந்து இருக்கும் அங்கு –
பூசல் பட்டோலை முழுவதும் தேடி அறிய வேண்டும் –
இங்கனே இருக்கச் செய்தே
இவர் எல்லாம் நெஞ்சில் படும்படி
இவர் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே
மூன்று பதத்தாலே பிரகிருதி புருஷ விவேகம் பண்ணி அருளினார்-
பொய் என்றும்
மெய் என்றும்
அசித்தையும் சித்தையும் சொல்கிறார்
பிரகிருதி நித்யம் பிரளயத்தில்
பொய் என்று
சூன்யம் என்றும் துச்சம் என்று சொல்ல வில்லை
சர்வம் சூன்யம் என்றும் இல்லை
அவன் ஒருவனே சத்யம் ஜகத் மித்யா என்றும் இல்லை
பரிணாமாதிகளைப் பற்றிச் சொல்கிறது
மெய் என்று ஏக ரூபம் என்பதால் சொல்கிறது
இரண்டும் நித்யம் தானே
தைத்ரியம் சொல்லும் -அவன் இடம் இருந்து
ஸத்யம் அஸத்யஞ்ச அந்ருத்தம் -இரண்டும் பிறந்தது -தைத்ரியம்
சத்யம் ஆத்மா
அந்ருத்தம் சரீரம்
அஸ்தி நாஸ்தி -என்றும் பராசரர் மைத்ரேயர் இடம்
பரிணாமங்கள் சொல்லுமே
வஸ்து சப்தம் -அஸ்தி -சத்யம் பர்யாயம்
அசித்துக்கு ஸ்வரூபமே மாறும் -பூ சருகாகும் -ஸ்வரூப அந்யதா பாவம்
சித்துக்கு ஸ்வ பாவம் மட்டுமே மாறும் -ஞான சங்கோசம் மாத்திரம்
அங்கு ஸ்வேண ரூபேண -ஆவிர்பாவம் பெறுகிறோம்
ஸ்வ பாவ அந்யதா பாவம் இங்கு அசித் சம்சர்க்கத்தால்
இது ஒழிய
துச்சமோ மித்யா என்றோ கானல் நீர் போல் பொய் என்றோ சூன்யம் என்றோ சொல்ல வில்லை
அழியாத மாறாத நிலை
பொய்யான ஞானம்
அர்த்தத்தில் உள்ள பொய் தனம் ஞானத்தில் தட்டுமே
பொய்யான அர்த்தம் விஷயீகரிப்பத்தால்
ஸ்வ தந்திரமாக ஞானத்துக்கு அஸத்யதை -பொய்மை இல்லையே
ஸ்வப்னத்திலும் ஞானம் உண்மை -தங்கக்குடம் ஸ்வப்னம் காண கையில் இல்லையே
ரொட்டி கதை அறிவோம் -எட்டி உதைத்து இழந்தானே –
விஷயத்துக்கு அசத்தியம்
ஞானத்துக்கும் இட்டுச் சொல்லலாமே
முத்துச் சிப்பி -வெள்ளித் தன்மை -இல்லா விட்டாலும் -பிரமம் ஏற்படும் -அது உண்மை
பொய்யான அசித்தை கிரகிக்கும் ஞானம்
அசித்தை அசித்தாக தானே கிரஹிக்கிறோம் –ஆத்மாவாக இல்லையே -ஏன் பொய் என்ன வேண்டும்
அன்று
தேவோஹம் மனுஷ்யோகம் -என்னும் பொழுது
தேவ சரீரம் மனுஷ்யம் சரீரம்
அஹம் -சேர்த்து சொல்கிறோம்
நான் கடிகாரம் சொல்ல வில்லையே
ஊர்த்வ ஆகாரம் -மேல் நோக்கி பயணம் செய்து -உள்ளே சென்று ஆத்மா -அதுக்கும் உள்ளே பரமாத்மா
அபர்யவசனத்தாலே ஈஸ்வரன் அளவும் சென்று -பின்னை அதுவே மோக்ஷ ஹேது வாகக் கடவது
அச்யுத னுக்கு தாஸ்யன் என்று அறிந்தால் தான் மோக்ஷம்
அவ்வளவு செல்லாமல் தன் அளவும் வராமல் சரீரம் அளவிலே நின்றால் ஸம்ஸார ஹேது
தஞ்ஞானம் ஞானம் -அஞ்ஞானம் மற்றவை
அவனைத் தவிர அனைத்தும் அஞ்ஞானம் கல்பமாகவே கொள்ள வேண்டுமே
அர்த்த ஸ்வ பாவத்தால் பொய் என்கிறது –
நின்ற
இது தான் என்றும் ஒக்க நிலை நின்ற படி -அழுந்தின படி –
பொல்லா ஒழுக்கம்
ஞான அனுரூபமாய் அனுஷ்டானம்
கீழே சம்யக் ஞானமாய் அதுக்குத்தக்க அனுஷ்டானம் இல்லையே
ஞானத்துக்குத் தக்க அனுஷ்டானம்
நான் எனக்கு என்று பிரதிபத்தி பிறந்தால் அதுக்குத் தாக்கவே அனுஷ்டானம்
பெருமாள் உடன் ஓக்க முடி சூடப் பிறந்த இளைய பெருமாள்
தம்பி என்று இருந்தால் பொய் நின்ற ஞானம்
பரவானஸ்மி காகுஸ்த -அடியேன் தேவருக்கு உரியவன்
அஹம் சர்வம் கரிஷ்யாமி
குருஷ்வமாம் அநு சரம்
குணைர் தாஸ்யம் -அடிமை
சேஷத்வம் ஞானத்துக்குத் தக்க அனுஷ்டானம்
கையில் துரட்டி இவர் -பர்ணசாலை கட்ட
பெருமாள் வில் -அவருக்குத் தக்க
இரண்டும் இயற்க்கை இருவருக்கும்
கனியும் கிழங்கும் வெட்ட துரட்டி கையில்
கனியும் கிழங்கும் எடுத்துக் கொள்ள பாத்திரமும் தலையில் வைத்துக் கொண்டு போனார் அன்றோ
அழுக்கு உடம்பும் –
இதுக்கு எல்லாம் அடியான ஹேயமான சரீரமும்
மகா பாரதம் எல்லாம் கூளமும் பலாப்பிசினும் போலே
பிரகிருதி புருஷ விவேகம் பண்ண மாட்டிற்று இல்லை
இவர் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே
மூன்று பதத்தாலே பிரகிருதி புருஷ விவேகம் பண்ணி அருளினார்
அழுக்கு உடம்பும்
நன்றான ஞானமும்
நன்றான ஒழுக்கமும் -அனுஷ்டானமும் -உடையவனாய்
ஸ்வேன ரூபேண -ஸ்வரூபம் -ஆவிர்பாவம் பெற்று
நித்தியமாய் ஞான ஆனந்த லக்ஷணமாய் ஏக ரூபமாய் ஈஸ்வர சேஷமாய்
விபரீத ஞானம் விபரீத அனுஷ்டானம் வருகைக்கு அடி தேக சம்பந்தத்தாலேயே
அசித் அயன சம்பந்தம் -அனந்த கிலேச பாஜனம் -நிரதிசய ஆனந்தம் ஆச்சார்ய ஹ்ருதயம்
சுக துக்கம் அனுபவிக்கும் போக்தா -உபாதை கர்மாதீனம்
ப்ராப்ய அப்ராப்ய விவேகம் பண்ணினால்
சுக துக்கம் -ப்ரக்ருதி யுடைய தர்மம் தானே
அங்கு நிரதிசய அனுபவம் -மிஸ்ரமானது அல்ல -அது தான் ஆத்மாவுக்கு -அப்ராக்ருதம் அங்கு
இங்கே சுக துக்கம் அனுபவிக்கும் பொழுது வாராது என் என்னில்
அசித் சம்சர்க்கத்தாலே தானே வரும்
இன்னும் அரை மணி -சொன்னால் -முட்டி -வலிக்கும் ஒவ்வொரு சொல்லும் அசித் சம்பந்தம்
நிஷ் க்ருஷ்ட ஆத்ம ஸ்வரூபத்துக்கு இவை இல்லையே
ஆத்ம தர்மம் என்றால் முக்தனுக்கும் உண்டாக வேணுமோ
முக்தாத்மாவுக்கு இல்லையே
அங்கு துக்கமே கலக்காத சுகம்
தேக யோகாத் வா –ப்ரஹ்ம ஸூதரம் மூன்றாம் அத்யாயம்
ஸ்ருஷ்ட்டி காலத்தில் தேக சம்பந்தம் வருவதால்
ஸ்வரூப திரோதானம் -ஸ்வரூபம் மறைவு
பிரளய காலத்திலும் ஸூஷ்ம ப்ரக்ருதி
ஸ்ருஷ்டி காலத்தில் ஸ்தூல நாம ரூப விகாரம் உள்ள சரீரம் –
இவற்றைக் காட்டவே வா சப்தம்
தேக சம்பந்தத்தாலோ -பிரகிருதி சம்பந்தத்தாலோ -என்று விகற்பம் சொல்லும்
நாம ரூப விபாகம் இங்கு -பிரக்ருதியில் இவை இல்லை
த்ரி குணாத் மிகையான பிரகிருதி -விட்டு தாண்டி -ஸூத்த சத்வ மயம்
ஸ்வயம் பிரகாசமான அசித் அங்கு -அப்ராக்ருத விக்ரஹம் அங்கு
அது தானே
நன்றான ஞானத்துக்கும்
நன்றான ஒழுக்கத்துக்கு உடல் அங்கு –
நான்காம் அத்யாயம்
பாவம் -ஜைமினி விகற்பம் ஆமனாத்
சரீரம் இந்திரியங்கள் உண்டு அங்கும் -ஜைமினி இவ்வாறு கருதுகிறார்
ஏகதா பவதி –நாநா –கைங்கர்யத்துக்கு அனுரூபமாக
அங்கும் திரு மேனி உண்டு
நித்யம் ஸ்வரூப ஆவிர்பாவம் குறை இல்லை
மெய் நின்ற ஞானம் – நல்லா ஒழுக்கம்
முக்தனுக்கு நாநா பாவம் உண்டு –
விசேஷ விருத்திக்கு அனுரூபம் அங்கு –
இந் நின்ற நீர்மை –
இந்த விலகாமல் நிற்கும் ஸ்வ பாவம்
விபரீத ஞானமும் விபரீத அனுஷ்டானமும் இவற்றுக்கு அடியான தேக சம்பந்தமும் –
த்யாஜ்ய அம்சத்தை
கையிலே இட்டுக் காட்டுவாரைப் போலே –
இ -சுட்டு எழுத்து –
ஈஸ்வரன் திரு உள்ளத்தில் படும்படி உபபாதித்துக் காட்டுகிறார்
இந்நின்ற நீர்மை
உனக்கு அத்யந்த சேஷமுமாய் -கௌஸ்துப மணி போல் – ஆதரணீயமுதுமாய்
அநாதி காலம் உன்னைப் பிரிந்து தேடி சம்பாதித்த இவற்றைப் பார்
திரை கடல் ஓடி திரவியம் சேர்த்த பிள்ளை தந்தையிடம் காட்டுவது போல்
இவை தான் நான் சேர்த்த சொத்துக்கள்
உதிரக் கூறையைப் பிரித்துக் காட்டுகிறார்
ஏஹீ பஸ்ய சரீராணி -ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ருஷிகள் பெருமாளுக்கு
ராஷசர் தின்ற உடம்பை காட்டினால் போலே-
ஸுக்ரீவாய ச தத்ஸர்வஂ ஷஂஸத்ராமோ மஹாபல: ৷৷1.1.59৷৷
ஆதிதஸ்தத்யதாவரித்தஂ ஸீதாயாஷ்ச விஷேஷத: .
ஸுக்ரீவஷ்சாபி தத்ஸர்வஂ ஷ்ருத்வா ராமஸ்ய வாநர: ৷৷1.1.60৷৷
சகார ஸக்யஂ ராமேண ப்ரீதஷ்சைவாக்நிஸாக்ஷிகம் .
மஹா ராஜர்-அண்ணியனான வாலியால் பட்ட துக்கம் ஸூஹ்ருத்தைத் தேடிக் காட்டுமா போல்
தாம் பட்ட பாட்டை ஆழ்வார்
நான் என்னும் படி அண்ணிய சரீரத்தால் இவர் பட்ட பாடு
தேஹாத்ம அபிமானம்
சரீரியாய் உடன் கேடனான ஈஸ்வரனுக்கு அறிவிக்கிறார் –
இந் நின்ற நீர்மை –
இப்படி நிலை நின்ற ஸ்வபாவம் -உதிரக் கூறை காட்டுகிறார் -என்று அம்மாள்
ஏஹீ பஸ்ய சரீராணி -ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ருஷிகள் பெருமாளுக்கு ராஷசர் தின்ற உடம்பை காட்டினால் போலே-
பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டுகிறார் -ஆளவந்தார்
ஆழ்வார் பிறர் படியை காட்டுகிறார்-அம்மாள் நிர்வாஹம்
தம் படியைக் காட்டுகிறார் -ஆளவந்தார் நிர்வாஹம்
இது ஒரு வெட்டு -பொய் நின்ற ஞானம்
இது ஒரு வெட்டு – பொல்லா ஒழுக்கம்
இது ஒரு வெட்டு -அழுக்கு உடம்பு-
நின்ற
இது தான் ப்ரவாஹ ரூபமாய் நித்தியமாய்
ஆத்மா சத்தையாய் உள்ள அன்று தொடங்கி செல்லுமே
அநாதி -ஆதியே இல்லையே
அறிவுடையார் சிலர் தேஹாத்ம விவேகம் அறிந்து உபதேசித்தாலும் –
பிரமாணங்கள் காட்டி உணர்த்தினாலும்
அவர்களையும் தம் வழியிலே இழுத்துப் போகும்படி அன்றோ இது
நிலை நின்ற ஸ்வ பாவம் -பேதிக்க ஒண்ணாத படி இருக்குமே –
நீர்மை
இது தண்ணியது என்று அறியா நிற்கச் செய்தே –
புரிந்து உணராமல் -இத்தை அல்லது செல்லாதபடி இருக்குமே
ஆச்சார்யன் உபதேசத்துக்கும் கேளாதே
பிரமாணங்களாலும் பேதிக்க ஒண்ணாதே
இதுவே ஸ்வரூபம் என்னலாம் படி இருக்கை
தேவரீர் திருவடிகளுக்கு இட்டுப் பிறந்த இஜ் ஜன்மம் தப்பாமே பட்டேன் இது என்று கருத்து –
நீரே பிரிக்க ஒண்ணாத படி இருக்கும் என்று சொன்னால்
நம்மால் செய்யலாவது உண்டோ என்று ஈஸ்வரன் அபிப்ராயமாக
மேல் உத்தரம் சொல்கிறார்
இது பொல்லாது பிறவாது ஒழியாமல்
நீ போக்குவான் ஒருவன் நீ உளாய் என்ற புத்தி பிறவாமல்
இருந்தால் அன்றோ எனக்குப் பட வேண்டும்
இதுக்கும் அவன் இடம் விகாரம் இல்லாமல்
மூன்றாவதாக
உனக்கு அறிவித்த பின்பும் எனக்கு பட வேண்டுமோ
கஜேந்திரன் ஆயிரம் தேவ வருஷம் பட்ட பின்பு நாராயணா மணி வண்ணா என்றதும்
ஓடி வந்து ரக்ஷித்தாயே
அநாதி காலம் பட்டது போதாதோ
உனது கண் பட்டதும் நான் பட வேண்டுமோ
ஒருவன் கையிலே சோறும் உண்டாய்
அவன் தான் இடுவானுமாய்
பிராப்தியும் உண்டாய் இருக்க
நமக்கு பசியும் இருந்து
உண்பானும் ஆனால்
பசித்து இருக்க வேணுமோ
லௌகிக த்ருஷ்டாந்தம் காட்டி அழகாக விளக்குகிறார்
இனி –
ஈஸ்வரனும் ஒரு முழம் கை தண்ணீரும் என்று இருந்த காலம் அன்றியே
உன்னால் அல்லது செல்லாது என்று இருந்த பின்பு
குறைவாளனாய் தேவரீர் திருவடிகளிலே வந்த பின்பு
யாம்
தம்மைச் சொல்லுகிறார் ஆதல்-ஆத்மநி -பஹு வசனம்
யாம் உறாமை –
பர அநர்த்தம் நெஞ்சிலே படுகையாலே
நாட்டுக்காக தாம் மன்றாடுகிறார்
நாங்கள் ஸ்பர்சியாத படி –
சம்சாரிகள் உடைய வ்யசனம் தம்மது ஆகையாலே -யாம் -என்கிறார்
ஆத்மனி பஹூ வசனம் வா –
அளிப்பான்-
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா –
சிலர் அபேஷித்தது உண்டோ -உன் கிருபை இறே
தான் சொல்லும் போதும் பஹூநிம் என்றான் இறே
உறாமை
இது துக்கம் கலந்த சுகம்
நான் கிட்டாதபடி இருக்க வேண்டும்
நம்மைக் கண்டதும் இதுவும் ஒரு வார்த்தை சொல்லி
இத்துடன் பல வருஷங்கள் போகட்டும்
மேல் பெறுகிறோம் என்று அவன் நினைவாக
அது இல்லை என்று மறுத்து பேசுகிறார்
அவனோ ஆழ்வாரைப் பார்த்து மயங்கி இருக்கிறான்
சர்வ பிரகாரத்தாலும் தனது உறுதியை வெளியிடுகிறார்
உறாமை
சாஸ்திர பலம் பிரயோகத்ரி -என்கிற படியே பலம் பெறுவார் அன்றோ அதுக்கு கிருஷி பண்ணுவார்-
நம்மைக் கிட்டுகைக்கு வழிகள் கண்டு வைத்தோம் ஆகில்
அவற்றின் படியே வந்து கிட்டுகிறீர்-என்ன
சர்வஞ்ஞனுமாய் சர்வ சக்தியாய் இருக்கிற நான் இவற்றைச் செய்து வருகிறேன்
உன்னுடைய அவதாரத்துக்கு பிரயோஜனம் சொல் என்கிறார் –
நீயோ நானோ உபாய அனுஷ்டாம் பண்ணுவது சொல்லு-
அவர் பிறக்கிற பிறவி நம்முடைய பிறவி அறுக்கவே என்று இருப்பவருக்கு அன்றோ பிரயோஜனம் ஆகும்
நண்ணுவார்கள் சிந்தையில் உளன்
உள்ளூவார் சிந்தையில் உளன் கண்டாய்
தாம் அறிந்தமை தோற்ற பிறந்தாய் என்கிறார்
நம் பிறப்புடன் தொடர்பு -வெட்டி விடவே -நீயும் பிறந்தாய் என்கிறார் –
ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந–4-9-
அர்ஜுந!-அர்ஜுனா!
மே ஜந்ம கர்ம ச திவ்யம்-எனது பிறப்பும் செய்கையும் தெய்வத்தன்மை கொண்டது,
ஏவம் ய: தத்த்வத: வேத்தி-இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்,
ஸ: தேஹம் த்யக்த்வா-உடலைத் துறந்த பின்னர்,
புநர்ஜந்ம ந ஏதி-மறுபிறப்பு எய்துவதில்லை,
மாம் ஏதி-என்னை எய்துகிறான்.
அவதார பிரயோஜனம் இது என்று அறிந்தால் அதே பிறவியில் சரீரம் தொலைத்து என்னை அடைகிறான்
நானும் பிறந்து அவன் மீண்டும் பிறக்க வேணுமோ
ஈர் அரசு உண்டோ
அவனே ஸர்வேஸ்வரன் தெரியாமல் நாமே ஸ்வ தந்த்ரன் என்று இருந்தால் தானே பிறக்க வேண்டும்
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அன்றி பேரேன் என்று அன்றோ கிடக்கிறான் –
அகர்ம வச்யனாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து
உன் கேவல கிருபையாலே
கர்ம வச்யர் பிறக்கும் பிறவிகளிலே
ஆத்மானம் மானுஷம் மன்யே -என்றபடி அதுக்கு அவ்வருகு அறியாதானாய்க் கொண்டு
எல்லா யோநிகளிலும் வந்து பிறந்து அருளினவனே-
உயிர் அளிப்பான் –
உயிர்
பிராட்டிமார் திருவடி திரு வநந்த ஆழ்வான் -என்று வ்யாவர்த்தித்ததோ
யோக்யதை அயோக்யதை பாராதே-
சகல ஆத்மாக்களையும் சம் ரஷணம் பண்ணும் அதே பிரயோஜனமாகை –
அளிப்பான்
ரஷிக்கையே பிரயோஜனம்
அளித்து ஒரு கார்யம்
தர்மத்தை ரக்ஷிக்க -தாய் பாலூட்டுவதே பேறு
என்நின்ற
தாழ்ந்த பிறவி என்று ஒதுக்க வில்லையே
இவனுடைய-ஜீவாத்மாவுடைய ஜன்மத்துக்கு ஒரு அடைவு இருக்கும் -கர்மாதீனம் நம்மது
அவனுக்கு அவ்வாறு இல்லையே
இச்சா க்ருஹீத அவதாரங்கள்
தனது அனுக்ரஹத்தாலே எல்லாருக்குமாக அவதாரம்
பஹு தா விஜாயதே
பஹு நீ அவனும் சொல்லிக் கொள்கிறான்
பிறப்பில் பல் பிறவி பெருமான் -மர்மம் அறிந்த வார்த்தை
என் ஜென்மம் போக்கித் தர வேண்டும் என்று கால் கட்டிக் கொள்ளுவது போலேயோ
என்னை எடுக்க பிறந்த உனது பிறவி என்கிறார்
அளிப்பான்
ரஷிக்கையே பிரயோஜனம்
அளித்து ஒரு கார்யம்
தர்மத்தை ரக்ஷிக்க -தாய் பாலூட்டுவதே பேறு
ஆய்
அவதாரத்தில் மெய்ப்பாடு
பெருமையில் ஒன்றும் குறையாமல் ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து
மாசுடம்பில் நீர் வாரா பன்றியாய்
தோய்வின்றி வந்து பிறந்தாயோ
பவான் நாராயனோ தேவ -அடி அறிந்த நான்முகன் சொல்ல
ஆத்மாநாம் மானுஷ்யம் மன்ய -ப்ரதிஜ்ஜை பண்ணி சொன்னாயே
பிறந்தாய் –
தூணிலே தோன்றினால் போலே ஆதல்
ஆனைக்கு உதவினால் போலே ஆதல் -அன்றிக்கே
பன்னிரண்டு மாசம் கர்ப்ப வாசம் இருந்து –
பன்னிரு திங்கள் மணி வயிறு வாய்த்தவனே
ஜஹ்னே -பிறந்தாய்
கீழ் குண சாம்யம் சொல்லிற்று ராம குணங்கள் பலவும்
சீல குணம் -ஸுசீல்யமே ராமாவதார குண அசாதாரணம்
ஆஸ்ரித பாரதந்தர்யம் கண்ணனுக்கு அசாதாரணம்
பிறந்தவர் தம் தம்முடைய ஜென்மம் அறுக்க நமக்காகா பிறந்த
அவன் ஜென்மம் அறிய வேண்டுமே –
இது தான் இப்போது உபதேசிக்க வேண்டும் படி
அப்ரஸித்தமாய் இல்லாமல் இருந்ததோ
இமையோர் தலைவா –
இப்படி பிறந்தவன் குறைவாளனாய் இன்றிக்கே
அமரர்கள் அதிபதி
சூட்டு நன் மாலைப்படி ஒரு நாடாக தனக்கு என்று இருப்பவன் கிடீர்
அசங்குசித ஜ்ஞானரையும் துடிப்பித்துக் கொண்டு நிர்வாஹகனாய் இருக்கிறபடி –
பிறந்தாய்
யுகாவாதாரும் நிகர்ஷம் சொல்லும் பொழுதும் பிறந்தவன் என்று அன்றோ சொல்லுவார்கள்
ப்ரஹ்மம் பிறவாதவன் -குணம் விக்ரஹம் ஒன்றும் இல்லாதவன் என்பார்களே
வேண்டித் தேவர் இரக்க
இப்படி அவதரித்ததும் அனன்ய ப்ரயோஜனருக்காகவோ
கார்யம் கொண்ட அநந்தரம் நீயும் தேவன் நாங்களும் தேவன்
பாரிஜாத வ்ருத்தாந்தம் -நரகாசுர வதம் செய்த பின்பு அன்றோ
அபிமானிகளுக்கா அன்றோ செய்தாய்
சிவன் வில் ஹுங்காரம் செய்ய முறிய அதிகம் என்று புகழ்வார்கள்
பின்பு ஈஸ்வரோஹம் என்று இருப்பார்கள்
கையில் வில்லைக் கொடுத்து -இராவணனை வதம் செய் என்பர்
கழுத்திலே கயிறு வைத்து இழுத்தால் -கர வதம் ஆனபின்பு கேசவா என்று புகழ்வார்கள்
நான் இன்னது என்று அறிந்தேன் என்பர் பின்பு
சஹி தேவை ருதீர்ணஸ்ய ராவணஸ்ய வாதார்த்திபி -அர்த்தீதோ மானுஷே லோகே ஐஜ்ஜே விஷ்ணுஸ் சனாதன
ஸ்லோக வியாக்யானம் செய்கிறார் மேல்
ராவணஸ்ய
நாடு முழுவதும் இருந்ததே குடியாக அவனுக்கே இருக்கும் படி ஆக்கி இருந்தானே –
தான் கைலாசாதிகளை எடுத்து கூப்பிடும்படி ஆனவன்
வாதார்த்திபி
ஈஸ்வர அபிமானிகள் இதுக்கு ஒருவனைக் கால் கட்டி கார்யம் செய்ய-
அபிமானம் தொலைந்து வந்தார்கள் என்று உகந்து அவதரிக்கிறாயே
அபிமான பங்கமாய் என்று இவன் திரு உள்ளம் கொண்டான் -அவர்கள் அவ்வாறு இல்லாமல் இருந்தாலும் –
மானுஷ்யே லோகே
இந்த லோகத்தில் -அவர்களும் கால் வைக்கக் கூசும் தேசம்
ப்ரஹ்மாதிகள் -இங்கேயே இருந்தும் –
ஜஹ்னே
தேவகி பூர்வ ஸந்த்யாம் ஆவிர்பூதம் -ரிஷிகள்
அவதாரத்தில் ஆசை கொண்டு
கர்ப்ப வாசம் பண்ணினான்
தாய் தந்தைகளைத் தேர்ந்து எடுத்துக் கொண்டு
கிழக்கு ஸூர்யன் தொடர்பு போல் இல்லாமல் முழுசி கலக்க அன்றோ இவனுக்கு பாரிப்பு
இக்குணம் இழக்க ஒண்ணாதே
விஷ்ணு
வியாபகம் -ஒரு ஏக தேச -த்ரிவித பரிச்சேதம் உள்ளவன் அன்றோ
ச நாதன்
என்றும் இருப்பவன் ஒரு நாளில் பிறக்கிறான் அன்றோ –
நீர் மோர் பானகம் பண்ணி
ஸ்ரீ ஜெயந்தி கொண்டாடுகிறோம்
என் நின்ற யோனியுமாய் பிறந்தாய்
இதுக்கு முன்பு பிறந்த பிறவிகள் கார்ய கரம் ஆகாதே
உடுத்த உரியலோடே -போந்தது அன்றோ
அது இன்று தலைக் கட்ட அன்றோ பிறக்கிறது
என்று பட்டர் அருளிச் செய்வார் என்று ஸ்ரீ வத்சாங்க தாசர் என்று அருளிச் செய்வார்
மாயப் பிறவி பிறந்த தனியன்-அன்றோ
மனிசரும் மற்றும் முற்றும் ஆய் மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக் கட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6-
இதுக்குக் கருத்து
உம்முடைய கார்யம் நீரே நிர்வஹித்துக் கொள்ளும் -என்ன
அங்கனே யாகில்
தேவரீர் உடைய அவதாரங்களுக்கு வேறு பிரயோஜனம் என்ன -என்று
இமையோர் தலைவா பிறந்தாய்
பிறவாதார் துக்க நிவ்ருத்தியைப் போக்கவோ பிறந்தாய்
பிறக்கும் எங்கள் பிறப்பை அறுக்க அன்றோ பிறந்தாய்
இத்தால்
ப்ராப்யமான அங்குத்தை வாசம் உத்தேச்யம் என்று அருளிச் செய்கிறார்
நித்ய ஸூரிகள் கைங்கர்யம் உத்தேச்யம் என்று அருளிச் செய்கிறார்
நீ குறைவாளனாய் தானோ பிறந்தாய்
ஒரு நாடாக அங்கு நித்ய விபூதி ஐஸ்வர்யம் இருக்க அன்றோ அத்தை உபேக்ஷித்து
ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -என்று இங்கே வந்து பிறந்தாய்
சூட்டு நன் மாலைகள் இத்யாதி
அசங்குசிதமான ஞானம் உள்ளோர் விண்ணப்பம் என்றால் அன்றோ ஸத்யம் மெய் என்று இருப்பது
நீரோ இங்கே உழன்று உள்ளீர்-உமது வார்த்தை விஸ்வசிக்கப் போகாது – என்ன
மெய் என்கிறார் –
மெய்-
இது எத்தனை குளிக்கு நிற்கும் -கிட்டினவாறே மடி எற்ப்பர்கள் என்ன -மெய் -என்கிறார்
விஞ்ஞாபனம் இதம் சத்யம்
மங்க வொட்டு உன் மா மாயை -என்னும் அளவும் செல்ல
உபக்ரமத்திலே இங்கனே காணும் எல்லாரும் சொல்லுவது
நீரும் அவ்வோபாதி இறே-என்று
எம்பெருமான் அருளிச் செய்ய
அங்கன் அன்று
என்னுடைய விஞ்ஞாபனம் சத்யம் -என்கிறார்-
சரணம் என்றதும் போக்குவேன் என்ற உம்முடைய வார்த்தை ஆப்த வசனம் என்று நம்புகிறோம்
அதில் சங்கை இல்லை
நின்று கேட்டு அருளாய்
இது மெய்யே
மங்க ஒட்டு உன் மா மாயை
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
இதுவே எனது வார்த்தை -முதலிலும் முடிவிலும் -இருந்தாலும்
அப்படி இறுதியில் சொல்லா விட்டாலும் இதுவே மெய்
ஐயார் கண்டம் அடக்குமே
அப்பொழுதைக்கு இப்பொழுதே சொல்லி வைத்தேன்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் உனது வார்த்தை
எனக்கு இனி எல்லா வார்த்தையும் இதுவே
அன்றிக்கே
இது வரை மானஸ
மெய் நின்று -அனுபவ யோக்யதாம் படி -சாஷாதாக உன்னைக் காட்ட வேண்டும்
கேட்டு அருளாய்
கேட்டபின் வேறே கார்யம் செய்ய வேண்டாம்
செவிப்பட்டால் பேறு தப்பாது
அறிவிப்பே அமையும்
சம்சாரிகளில் ஒருவர் இப்படி சொல்வது அலப்ய லாபம் அன்றோ அவனுக்கு
நின்று கேட்டருளாய் –
கேட்கை தான் உத்தேச்யமாய் இருக்கிறது –
அறிவித்தால் இத்தலைக்கு செய்ய வேண்டுவது இல்லாமை
எம்பெருமான் பேரா நிற்கப் புக
இத்தை நின்று கேட்டு அருள வேணும்
என்னுடைய சர்வ துக்கமும் போம் -என்று கருத்து –
வாக்ய பேதம் பிறக்கிறது என்ன
அடியேன் என்கிறார் –
அடியேன் செய்யும் விண்ணப்பமே –
வாக்ய பேதம் பிறக்கிறதோ -என்று -நீர் ஆர் -என்றான் அடியேன் -என்கிறார்
இவருடைய நான் -இருக்கிறபடி –
நான் என்றாகில் இறே -சொன்ன வார்த்தை -என்பது
அடியேன் -என்கையாலே -செய்யும் விண்ணப்பம் -என்கிறார்
அடியேன் உடைய விஞ்ஞாபனம்
இவருடைய உக்தியிலே
இவருடைய மெய்ப்பாடு அறியலாம் என்று எம்பெருமான் கேட்டருள
அடியேன் -என்று
கீழ் சொன்ன வார்த்தை மெய் என்பதற்காக
தம்முடைய ஸ்வரூபத்தை விண்ணப்பம் செய்கிறார்
தேவோஹம் என்றால் பொய் ஆகும்
செய்யும் –
இவ் வபேஷைக்கு மேல் இல்லை –
பொய் நின்ற ஞானம் இந்நின்ற நீர்மை -என்கையாலே -விரோதி சொல்லிற்று
என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்கையாலே -உபாயம் சொல்லிற்று
இமையோர் தலைவா -என்கையாலே பிராப்யம் சொல்லிற்று
அடியேன் -என்கையாலே பிராப்தாவைச் சொல்லிற்று
செய்யும் விண்ணப்பம் -என்கையாலே பிராப்தி பலம் கைங்கர்யம் என்று சொல்லிற்று –
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களை பொய் என்பதால் ஆத்மா மெய் என்றும்
ஞானம் என்பதால் ஞாத்ரு ஜேயத்வமும்
ஒழுக்கு என்பதால் கர்த்ருத்வமும்
உடம்பு என்பதால் சரீரத்வமும் தோன்றுமே
——————————————————————-
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
பிரவேசம்
ஸ்ரீயபதி இந்த உலகில்
ஸ்வ கிருபா விஷய விசேஷங்களில் இந்த ஆழ்வாருக்கு
திவ்ய பிரபந்தம் அருளிச் செய்ய ஞான அனுஷ்டான பலன்களில்
கிரமேன உண்டாக்கத் திரு உள்ளம் பற்றி
ஸேனாபதி ஆழ்வானை நியமிக்க (அவரே ஆழ்வார் என்பாரும் உண்டே )
இவர் பிரபந்தம் அருளிச் செய்கிறார்
இதில் இந்த பிரதம பிரபந்த பலன்
முமுஷுக்களுக்கு சம்சாரம் த்யாஜ்யம் என்று அறிவிக்கையும்
திருமால் இடம் அன்பையும் ஆர்வத்தையும் உண்டாக்கி வளர்க்கவும்
அன்பு ஆவது திருமந்தர்ரார்த்தால் ஏற்படும் ஞானம் முதிர்ந்த நிரதிசய பக்தி
ஆர்வம் -பிராட்டி போல் கலந்து அடிமை செய்யாமல் தரியாமை ஆவது
த்யாஜ்யம் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் –
வியாக்யானம்
பொய் நின்ற ஞானமும்
அநாத்மநி ஆத்ம -ஆத்மா அல்லா ஒன்றில் ஆத்ம புத்தியும்-அஹங்காரம்
அஸ்வேஸ்ய புத்தி -தன்னது அல்லாத ஒன்றைத் தன்னது என்றும் -மமகாரம்
பொல்லா ஒழுக்கும்
அவை அடியாகப் பிறக்கும் ஸ்வரூப அநநு குண
துஷ் கர்ம பிரவாகம்
அழுக்கு உடம்பும்
அவை அடியாக உண்டாகும்
சரீரம்
இம்மூன்றும் முமுஷுக்கு அதி துஷ்டமாகும் என்று அருளிச் செய்தார்
த்ரவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -16-
ஆத்யே திவ்ய பிரபந்தே -ஸம்ஸார -ஸம்ஸ்ருதே-
சடஜித் ஸம்ஸ்ருதி வெறுப்பு அஸஹத்வம் தங்க முடியாமல் வெளியிட்டார் -என்றார் தேசிகன்
இந் நின்ற நீர்மை
இது அன்றோ பிரகிருதியின் நிலை நின்ற ஸ்வ பாவம்
இத்தை போக்கவே சடாரிபு ஆக்கி அருளினாய்
இனி
மயர்வற மதி நலம் அருளின பின்பு
யாம்
ப்ரஹ்ம வித்யையால் தம்மை அனுசந்தித்தவர்களை
அறிந்த நாம்
உறாமை
நம்மவரை உஜ்ஜீவிக்க அன்றோ உனது அவதாரம்
உயிர்
ஸ்வரூப ஞானம் பெற்ற – ஆத்மா
அளிப்பான் –
ரக்ஷிக்க வர தடுக்காமல் இருக்க ஸ்வரூப ஞானம் வேண்டுமே
அனைவரையும் முக்தனாக்கவே
மீனாய் (5-1 )இத்யாதி பிறந்தாய்
இமையோர் தலைவா
ஸூரிகளை-திருவைப் போலவே அடிமை கொள்ளவே அங்கு அனுபவிப்பிக்கிறாய்
ஸ்வ பிரபந்தத்துக்கும்
அவன் பிறப்புக்கும் இதுவே பலம்
ஜகத் நிர்வாஹம் ப்ரவ்ருத்தி தான் எனது அவதார பலம் என்று சொல்லி ஓடப் புக
மெய் நின்று கேட்டு அருளாய் என்கிறார்
இதுவே அடியேன் செய்யும் விண்ணப்பம்
இத்தை கேட்டு நம்மவருக்கு சம்மருதி ஏற்படாமல் அருளாய்
சிஷ்யன் ஆச்சார்யர் இடம் பிரார்த்திக்க விஷ்ணு புராணம்
பொய்யில் பாடல் இது
இன் நின்ற நீர்மை
பாஹ்ய குத்ருஷ்டிகள் ஞான பிரவிருத்தி
சதுர்முகாதிகள் உடைய தேகங்களையும் நிந்தித்து வெறுத்தார் ஆயிற்று
—————–
விருத்தம் -நடந்த செய்திகள் -செய்திகளைக் கூறும் பிரபந்தம் என்றவாறு -ஆகு பெயர்
கார்ய ஆகு பெயர்
கருவி ஆகு பெயர்
அடை அடுத்த ஆகு பெயர் -திரு அடைமொழி
அன்மொழித்தொகை
தாழிசை -துறை -விருத்தம்– மூன்றில் ஒன்றான
விருத்தம் பொதுவான சொல் ஆகவுமாம்
கட்டளைக் கலித்துறை சார்ந்தது இது
ஒரு வரிக்கு ஐந்து சீர் இருக்கும் –
முதல் நான்கு சீர் ஈர் அசை சீராகவும் ஐந்தாவது சீர் விளங்காய் சீர் -அழுக்கு உடம்பு
நிரை நிரை நேர் சீர்கள் சேர்ந்து -விளங்காய் சீர்
அடி தோறும் நேர் அசையில் தொடங்கி -ஒற்று எழுத்து விட்டு 16 -எழுத்துக்கள் -ஒற்று விட்டு எண்ண வேண்டும் –
குறில் நெடில் தனித்து வந்தால் நேர் அசை
குறில் நெடில் சேர்ந்து வந்தால் நிரை அசை
நிரை அசையில் தொடங்கினால் -17 எழுத்துக்கள்
நேர் அசையில் தொடங்கி முதல் பாட்டு
நிரை அசையில் இரண்டாம் பாட்டு
செப்பல் ஓசையில் இருக்கும் -வினாவுக்கு விடை சொல்லுவது போல் இருக்கும்
நீர் சொல்வது உண்மையா மெய் -கேள்விக்கு பதில் இதில் உண்டே
பல வெண்டளை இருக்கும்
திருச்சந்த விருத்தம் துள்ளல் ஓசை
ஏகார ஈற்று இருக்கும் -விண்ணப்பமே –
பிரிநிலை ஏகாரம் -தேற்ற ஏகாரம் -பிரதானம் தோற்ற இருக்கும் –
சில பாசுரங்கள் கட்டளைக் கலி துறையிலும் வேறு பட்டும் இருக்கும்
இது வெண்பா ஆசிரியப்பா கலிப்பா,வஞ்சிப்பா நான்கு வகை
கலிப்பா,
1-கலித்தாழிசை
2-கலித்துறை
3-கலிவிருத்தம்
என்று மூன்று இனங்களைக் கொண்டது.
1-கலித்தாழிசை
(1) இரண்டு அடிகளோ, இரண்டிற்கு மேற்பட்ட பல அடிகளோ வரும்.
(2) ஈற்றடி மிகுந்து, ஏனைய அடிகள் தம்முள் அளவொத்து வரும்.
(3) ஒரு பொருள் மேல் மூன்று அடுக்கி வரும். தனியே வருவதும் உண்டு.
2-கலித்துறை
நெடிலடி (ஐஞ்சீர்அடி). நான்காய் அமைவது கலித்துறை ஆகும்.
கலித்துறையுள் கட்டளைக் கலித்துறை என்ற இன வகையும் உண்டு. இதன் இலக்கணம்:
(1) நெடிலடி நான்காய் வரும்.
(2) முதல் நான்கு சீர்களிடையில் வெண்டளை அமையும்.
(3) ஐந்தாம் சீர் விளங்காய்ச் சீராகவே முடியும்.
(4) அடியின் முதல்சீர் நேரசையில் தொடங்கினால் ஒற்று நீங்க 16 எழுத்தும்,
நிரையசையில் தொடங்கினால் ஒற்று நீங்க 17 எழுத்தும் வரும்.
(5) ஈற்றடியின் இறுதிச் சீர் ஏகாரத்தில் முடியும்.
3-கலி விருத்தம் அளவடி நான்காய் வரும்.
———
இப் பாட்டில்
சுத்த அசுத்த ஸ்வரூபங்களான அசித்துக்களுடைய பேதமும்
சித் அசித் பேதமும்
பத்த முக்த நித்ய விபாகத்தை யுடையவரான ஜீவர்களுடைய அந்யோன்ய பேதமும்
ஜீவ ஈஸ்வர பேதமும்
ஈஸ்வர ஐக்யமும்
ஞான ஞாத்ரு பேதமும்
ஸத் அஸத் ஞான பேதமும்
ஸத் அஸத் அநுஷ்டான பேதமும்
ஸித்த ஸாத்ய உபாய பேதமும்
பராபர புருஷார்த்த பேதமும்
கிடக்கிறபடி யதா ஸ்தானம் ஸாப்தமாகவும் ஆர்த்தமாகவும் அனுசந்திப்பது –
இங்கு
இமையோர் தலைவா -என்கிற இதிலே சேஷியாய் ப்ராப்யமான ப்ரஹ்ம ஸ்வரூபமும்
யாம் -என்கிற இதிலே சேஷ பூதனாய் ப்ராப்தாவான ப்ரத்யகாத்ம ஸ்வரூபமும்
உயிர் அளிப்பான் -என்கிற இதிலே -நிருபாதிக சேஷ வ்ருத்தி விசேஷமான பல ஸ்வரூபமும்
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்-என்கிற இடத்திலே சேஷ வ்ருத்தி விரோதி ஸ்வரூபமும்
கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே -என்கிற இடத்திலே
விரோதி நிவர்தன வ்யாஜமாய் சோபாதிகமான ஸாஸ்த்ரீய சேஷ வ்ருத்தி விசேஷமும்
இமையோர் தலைவா–அடியேன் -என்கிற இதிலே ப்ராப்யமான ப்ரஹ்ம ஸ்வரூபம்
முதலான அர்த்த பஞ்சகத்தினுடைய உபாய அனுசந்தானத்துக்கு அஞ்சுரு வாணியான சம்பந்த விசேஷமும் சுருங்க அனுசந்தேயம்
ஆகையாலே மேல் அருளிச் செய்தவை எல்லாம் இதன் விஸ்தாரமாகிறது –
புருஷோத்தம வித்யையில் சொன்ன சர்வாதிக்யத்தை உடையனான ஸ்ரீ யபதி
ஜகத் உபக்ருதி மர்த்ய -( ஸ்ரீ கீதா பாஷ்ய அவதாரிகை )
ஜகதாம் உபகாராய -(ஸ்ரீ விஷ்ணு புராணம்-6-7-71 )இத்யாதிகளில் சொன்ன
தன்னுடைய திவ்ய அவதார பிரகாரத்தை
பஹுநி மே வ்யதீதாநி (ஸ்ரீ கீதை -4-5 )என்று தொடங்கித் தான் அறிவித்த படியே அறிந்தார்க்கு எல்லாம்
அதிகார அனுகுண உபாய பூர்த்தியைப் பண்ணிக் கொடுத்து
இத்தேஹம் விட்டால் இனி ஒரு பிறவி வேண்டாதபடி ஸ்வ ப்ராப்தியைக் கொடுக்கும் என்கிற
இவ்வுபகாரம் இப்பாட்டுக்கு பிரதான தாத்பர்ய விஷயம் ஆகிறது –
———–
அவதாரிகை
கீழ் இவர் பிரகிருதி ஸம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று த்வரித்த இது
ஈஸ்வரனுக்கு க்ரமத்திலே செய்யலாம்படி இன்றியே அப்போதே செய்ய வேண்டும் படி யாயிற்று
ஆனைக்கு உதவுகைக்கு த்வரித்து வந்து தோன்றினால் போல்
அரை குலையத் தலை குலைய வந்து தோன்றி இவர் அபேக்ஷிதம் செய்ய வேண்டும் படி இறே
அநந்தரம் வந்து உதவக் கண்டிலர்
இவருக்கு அவனையிட்டு இவ்விரோதியைக் கழித்துக் கொள்ள வேணும் என்கிற த்வரையிலே கண் அழிவு இல்லை
அவனுக்கு சக்தியில் வைகல்யம் இல்லை
இனி இவர் கார்யம் செய்து தலைக்கட்டிக் கொடுக்கைக்கு ஈடான சம்பந்தத்தில் குறையில்லை
இங்கனே இருக்கச் செய்தே இவர் அபேக்ஷித்த போதே வந்து கார்யம் செய்யக் கண்டது இல்லை
இப்படி அவன் தான் இவர் கார்யம் செய்யாது ஒழிவான் என் என்னில்
ஸர்வேஸ்வரனுக்கு இங்கனே இருபத்தொரு ஸ்வ பாவம் உண்டு
அதாவது
ஸ்வ க்ருஹத்தைப் பட்டினி இட்டு வைத்து வந்த விருந்தினரைப் பேணுமா போலே
அசாதாரணர் காரியத்துக்கு முன்பே மத்யஸ்தர் கார்யம் செய்து தலைக்கட்டக் கடவனாயிற்று இருப்பது –
பெருமாள் தம்மை மீட்க்கைக்கு சரணம் புகுந்து வளைப்புக் கிடந்த ஸ்ரீ பரதாழ்வானுக்குப் பதினாலு
ஆண்டும் கழித்துக் கார்யம் செய்வதாக அறுதியிட்டு
அதுக்கு முன்பே கைகேயி கார்யம் இறே தலைக்கட்டிற்று
மஹா ராஜர் கார்யம் செய்து பின்னை இறே பிராட்டி கார்யம் செய்தது
இவர்களுக்கு முற்படச் செய்கிறது என் என்னில்
கார்யத்து அளவே இறே இவர்களுக்கு உள்ளது
ஆனால் அசாதாரணர்க்குக் கார்யம் செய்யானோ என்னில்
ஸ்ரீ பரதாழ்வானுக்கு அபிஷேகத்தைத் தவிர்த்துக் கொடுக்கையாலே இவர்கள் அபேக்ஷிதமும் செய்யத் தட்டில்லை
அப்படியே இவர் காரியமும் தலைக்கட்டுவதாக நினைத்து ஏறிட்டுக் கொண்டோமாகில்
நாம் நினைத்த போதே செய்கைக்கு ஈடான சக்தியில் குறையில்லை யாகில்
இவருக்கு இத்தோடு பொருந்தாமை இனி நம்மைக் கொண்டே தவிர்த்துக் கொள்வாராம் படியான
ஞான லாபத்தைப் பிறப்பித்தோமாகில் இனி பிராப்தி என்று குவாலுண்டோ
செய்ய வேண்டுவது அது தானும் க்ரமத்திலே செய்து கொடுக்கிறோம்
இவர் இருந்த நாலு நாளை லாபம் சம்சாரிகள் பெற்றிடுவர்கள் என்று இருந்தான் அவன்
அங்கன் ஒரு ஞான லாபத்துக்காக த்வரித்தவர் அல்லரே இவர்
அவன் தனக்கே பரம் என்று அறிவித்தோமாகில் இனி அவன் செய்தபடி செய்கிறான் என்று
பாரதந்தர்ய ஞானத்தாலே ஆறி இருக்கவுமாம் இறே
அது அல்ல இறே இவருடைய தசை
முதலிலே இமையோர் தலைவா என்று கொண்டு என்று
அவனுடைய பரம பும்ஸ்த்வத்தை அனுசந்திக்கையாலே
அப்போதே கிட்ட வேண்டும் படியான அபேஷை பிறந்து
அதுக்கு ஈடாக அப்போதே வந்து அதுக்கு ஈடாக உதவிக் கார்யம் செய்ய
பிராப்தி பண்ணித் தர வேண்டும் என்று த்வரிக்கிறார்
செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2-
பாசுரம் -2- செழு நீர்த் தடத்துக் கயல் -தலைவியின் வேறுபாடு கண்ட தோழி வியந்து உரைத்தல் -கோவை வாயாள் -4-3-
பதவுரை
முழு நீர் முகில் வண்ணன் கண்ணன்–நிறைந்த நீரை யுடைய காளமேகம் போன்ற நிறத்தை யுடைவனான எம்பெருமானுடைய
மூதுவர் ஆம் விண்நாட்டவர் தொழுநீர் இணை அடிக்கே–யாவர்க்கும் முற்பட்டவரான பரமபதத்து
நித்யஸூரிகள் வணங்குந் தன்மையையுடைய திருவடியிணைகளில்
அன்பு சூட்டிய–தனது அன்பைச் செலுத்தின
சூழ் குழற்கு–அடர்ந்த கூந்தலையுடைய பெண்மகளுக்கு.
செழுநீர் தடத்து–மிக்க நீரையுடைய ஒரு தடாகத்தில்
கயல்–கயல் மீன்
மிளிர்ந்தால் ஒப்ப–பிறழ்ந்தாற் போல
சே அரி கண்–சிவந்த ரேகைளையுடைய கண்கள்
அழுநீர் துளும்ப–(நாயகனுடைய பிரிவை ஆற்றாமையால்) புலம்பின நீர் ததும்ப
அலமருகின்றன–தடுமாறுகின்றன;
வாழி–இந்த அன்பு நிலை என்றைக்கும் நிலைத்து நிற்கவேறும், (அரோ அசை.)
செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப -சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன
அவளோடு வாழ்ச்சியைப் பெறக் கடவி கோள்
முழுநீர் முகில் வண்ணன்
கழுத்து அளவாக பெருகின தெளி நீருள்ள முகில் போன்ற வர்ணனாய்
கண்ணன்-
கிருபா மயனானவனுடைய
மூதுவராம் விண்ணாட்டவர் -தொழுநீர் –இணையடிக்கே –
யத்ர பூர்வே என்று விண்ணாட்டில் பழையவரால் தொழப்படும்
சரண த்வந் வத்துக்கே
தத் விஷயமாகவே என்றபடி
அன்பு சூட்டிய
அன்புடையவர் ஆவீர்கள்
அதுக்கும் மேலே
சூழ் குழற்கே
கொள்கின்ற கொள் இருளை (திருவாய் -7-7-9 )என்னும்படி
உகந்து சூழ்ந்து கொண்டு அனுபவிக்கலான திருக்குறளை பேணி அடிமை செய்யவே
அன்பு பெற்றி கோளே -நீங்கள் வாழியரோ -என்று அன்வயம்
இதில் ஏவம்வித ஸ்வாவர பாகவதர்களுக்கு மங்களா ஸாஸனம் பண்ணுவதே
பெரியோர்க்குக் கர்த்தவ்யம் என்றதாயிற்று –
——
அவதாரிகை
கீழில் பாட்டில்
பிரிவினுடைய பிரதம அவதி ஆகையாலே போன நெஞ்சு மீளுமோ மீளாதோ -என்கிறாள்
இத்தாளனெஞ்சு அவன் பக்கலிலே அபஹ்ருதமாயிற்று -என்கிறாள்
என் நெஞ்சு ஸந்நிஹிதமாயிற்றாகில் நான் —
குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—3
பாசுரம் -3-குழல் கோவலர் மடப்பாவையும் -பிரிவாற்றாத தலைவி நெஞ்சு அழிந்து உரைத்தல் -வெள்ளைச் சுரி சங்கு -7-3-
பதவுரை
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத் துழாயை யுடையவனும்
அழல் போல் அடும் சக்ரத்து–(அஸுர ராக்ஷஸர்களை) நெருப்புப் போல் அழிக்கின்ற திருவாழியை யுடையனுமான
அண்ணல்–எம்பெருமான்
விண்ணோர் தொழ கடவும்–மேலுலகத்தவர் வணங்கும்படி ஏறி நடத்துகிற
தழல்போல் சினத்த–பள்ளின் பின்போன
(பகைவர் நிறத்தில்) நெருப்புப் போன்ற கடுங்கோபத்தையுடைய அக்கருடாழ்வானது பின்னே சென்ன
தனி நெஞ்சம்–(எனது) தனிப்பட்ட மனமானது
குழல்கோவலர்–புல்லாங்குழலை யுடையரான இடையரது
மடம் பாவையும்–குணவதியான மகளாகிய நப்பின்னைப் பிராட்டியும்
மண் மகளும்–பூமிப்பிராட்டியும்
திருவும்–பெரிய பிராட்டியும்
நிழல் போல்வனர்–(எம்பெருமானுக்கு) நிழல் போலேயிருக்க அவர்களை
கண்டு நிற்கொல்-பார்த்துக் கொண்டு (அவ்விடத்தை விடாதே) நிற்குமோ?
மீளும் கொல்–திரும்பி வருமோ?
அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே
ஸ்வ தந்திரமான நெஞ்சம்
பின் போகலான புள்ளின் ஸ்வ பாவம் எது என்னச் சொல்லுகிறாள்
தண்ணம் துழாய்-இத்யாதியால்
தண்ணம் துழாய்- அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
குளிர்ந்த அழகிய பரிமளமுள்ள திருத்துழாயையும்
அக்னி போல் மேல் விழா நின்றுள்ள திருவாழியையும்
உடைய ஸர்வேஸ்வரன்
விண்ணோர் அடிமை செய்து கொண்டு இருக்கவே கடவுமவனான –
தழற் போல் சினத்த அப்புள்
சினம் கோபம்
கோவலரோடு கலந்து பரிமாற்ற நினைக்கவும்
அதுக்குத் தடையாக நீங்கள் தொழுமதே என்றதாயிற்று இப்புள்
நற்புள் எனக்கு -என்று அதன் பின் போயிற்று என் நெஞ்சம்
ஏவ காரம்
என் அனுமதி திரஸ்காரத்தைக் காட்டும்
இது அங்கு நிற்கும் கொல் மீளும் கொல் -என்று அந்வயம்
இதில்
இப்புள் வேதமயனாகையாலே
மந்த்ரார்த்த ஞானமுடையவன் வேத மார்க்கத்தையே அநுசரிக்கக் கடவன் என்றதாயிற்று –
—————
தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்
கினி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே —-4-
பாசுரம் -4-தனி நெஞ்சம் முன் அவர் -தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு ஆற்றாது வருந்தி கூறல் –ஓடும் புள்ளேறி -1-8-
பதவுரை
தனி நெஞ்சம்–(என்னோடு) உறவற்று நீங்கிய (என்) மனம் முழுவதையும்
முன்–முன்னமே
அவர் புள்ளே–அப்பெருமானுடைய கருடப் பறவையே
கவர்ந்தது–(பிறர்க்கு மிச்சமில்லாதபடி) கவர்ந்து கொண்டு போயிற்று.
(ஆதலால்,)
தண் அம் துழாய்க்கு–(அப்பெருமானுடைய) குளிர்ந்த அழகிய திருக் குழாய்க்கு
கவர்வது–கவர்ந்து கொண்டு போவதற்கு உரியதான
நெஞ்சம்–வேறொரு நெஞ்சை
இனி இங்கு யாம் இலம்–இனி இவ்விடத்தில் யாம் உடையோ மல்லோர்,
(அப்படியிருக்க.)
முனி–கோவிக்குத் தன்மையுள்ள
வஞ்சம் பேய்ச்சி–வஞ்சனையையுடைய பேய் மகளான பூதனையினுடைய
முலை–(விஷந்தடவின) முலையை
சுவைத்தான்–(பசையற) உருசி பார்த்து உண்ட கண்ணபிரானுடைய
முடிசூடும் துழாய்–திருமுடியில் சூடப்பட்ட திருத்துழாயினது
பனி நஞ்சம் மருதமே–குளிச்சியை யுடைய விஷம் போன்ற காற்றே!
நீ நடுவே–நீ இடையிலே (புகுந்து)
எம்மது ஆவி பனிப்பு–(ஏற்கனவே நோவு பட்டிருக்கிற) எம்முடைய உயிரை மேலும் நடுங்கச் செய்வது
இயல்பே–(உனக்குத் தக்க) இயற்கையோ? (தகாது.)
அவர் புள்ளே
அவர் அபிப்ராயம் அறிந்த புள்ளே
முன் கவர்ந்தது
என் நெஞ்சை முன்னே கபளீ கரித்தது
துழாய் தான் விழுங்க வருகிறதே
பாரீர் என்ன
தண்ணம் துழாய்க்கு இனி நெஞ்சம் இங்குக் கவர்வது
இனி அந்த அழகிய துழாய் தான் விழுங்குவது எந்தப்பிரதேசத்தை
இந் நெஞ்சத்தில் புள் அயர விழுங்கினதாய் அயர மிக்கதோ
நிர்வசேஷமாக அப்புள்ளே விழுங்கிற்றே
இது வேத மார்க்க அநு சாரிகளை -தத் விரோதிகள் பாதிக்க வர உலகு உண்டவனைப் போலே
இத்தை -நம்மை நம்பி வந்ததே -என்று உகந்து அபிமானித்துத் தன் திரு வயிற்றிலே வைத்துக் கொள்ளுகை
யாமிலம்
இப்படி நெஞ்சு பறி யுண்ட யாம் இங்கே இருக்கிறோம் என்று இருக்கிறாயோ
யாம் இலோம்
நீ நடுவே
நீ நடுவே வந்து பாதிக்கவோ
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான்
குபிதையாய் வஞ்சகையான பூதனையினுடைய முலையைச் சுவைத்தவன்
இத்தால் ஸ்வ ஆஸ்ரித விரோதி நிரசன சீலன் என்றதாயிற்று –
முடி சூடு துழாய்
இத்தால் ஸத் குண சீலரை சிரஸா வஹிக்குமவன் என்றதாயிற்று
பனி நஞ்ச மாருதமே
அந்தத் துழாயில் தங்கின பனி யாகிற நஞ்சுமயமான மாருதமே
அவளோடும் அத்துழாயோடும் சீலித்த நீ என்னைப் பாதிக்கத் தகுவையோ என்றபடி
எம்மதாவி பனிப்பியல்வே
என் பிராணனை நடுங்கப் பண்ணலாமோ உன் ஸ்வ பாவத்தாலே –
———-
அவதாரிகை
நாயகனும் தானும் கலந்து இருந்த சமயத்தில் அனுகூலமான வாடையானது
அவனைப் பிரிந்து தனியிருக்கும் சமயத்திலே வெற்றிலை இடுவாரே கொல்லுமா போலே நலிய
அத்தாலே நலிவு பட்டுத் தன் தசையைத் தான் அறியாதே
தன் தசையைத் தான் அறிவிக்க க்ஷமையும் இன்றிக்கே
நோவு பட்டுக் கிடக்க
அத்தைக் கண்ட
பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே —-5-
பாசுரம் -5-பனிப்பு இயல்வாக உடைய -வாடைக்கு வருந்தி மாமை இழந்த தலை மகளைக் கண்டு தோழி இரங்குதல் –மாயா வாமனனே -7-8-
பதவுரை
பனிப்பு இயல்பு ஆக உடைய–குளிரச் செய்வதையே இயற்கை தொழிலாக வுடைய
தண் வாடை–குளிர்ந்த காற்றானது
இ காலம்–இப்போது மாத்திரம்
இ ஊர்–இவ்விடத்தில் மாத்திரம்
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்த்து–குளிரச் செய்வதாகிய (தன்னுடைய) இயற்கையை முழுதும் விட்டு
அம் தண்ணம் நுழாய்–அழகிய குளிர்ந்த (அவனது, திருத்துழாயின் விஷயமாக
(ஆசைப்பட்டு)
பனி புயல் சோரும்–மழை துளித்தலை யுடைய மேகம் போல நீர் சொரிகிற
எரி வீசும்–வெப்பத்தை வீசுகின்றது;
(இவ்விதமாக)
பனி புயல் வண்ணன்–குளிர்ந்த காளமேகம் போன்ற தன்மையையுடைய எம்பெருமானது
செங்கோல்–(என்றும் மாறாத) கட்டளை
ஒரு நான்று தடாவியது–இவ்வொரு காலத்தில் கோணலாய்ப் போனது,
தட கண்ணி–பெரிய கண்களையுடைய இவளது
மாமை திறத்து கொல்லும்–மேனி நிறத்தை யழிப்பதற்கோ போலும்
அவகாஹித்தபடி
அங்கன் அன்றிக்கே
கர்ம நிபந்தன தேகமும் அனுவர்த்தித்து
ஸம்ஸார ஸ்ம்ருதியும் செல்லா நிற்கச் செய்தே
காதாசித்கமாகப் பிறந்த ஞான லாப மாத்ரத்தைக் கொண்டு
அவ்விபூதியோடு ஓக்க இவ்வுபூதியும் உத்தேச்யம் என்று சொல்லுவார் சொல்லுமது வார்த்தை அன்று
அஞ்ஞாராகவே சொல்லுகிறார்கள்
அதாவது
பழைய ஸம்ஸாரத்தை வர்த்திப்பிக்கைக்காகச் சொல்லுகிற வார்த்தை
அப்போது பந்த மோக்ஷ வ்யவஸ்தையும் குலைந்து மோக்ஷ ஸாஸ்த்ரமும் ஜீவியாது –
————-
பெரிய பரகால ஸ்வாமி வியாக்யானம்
அவதாரிகை
இப்படி தன தாள் பட்ட தண் துழாய்த் தாரையை ஆசைப்பட்டுச் சொரியும் துக்காஸ்ரு யுள்ள
என் பெண் நிறத்தை அழிக்க
ஈஸ்வரன்
குளிர்ந்த தன் வஸ்துக்களை எல்லாம் என் மகள் மேல் எரி வீச நியமித்தான்
அழகிய தண் துழாயே
இப்படி அவன் செங்கோல் விளங்குகிறது
இனி என் மகள் பிழையாள்
நான் என் செய்கேன் -என்கிறாள் -இப்பாட்டில்
பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
குளிர்ந்த வாடையும்
இதே ஸ்வ பாவமான இக்காலமும் இவ்வூரும்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து
குளிரப் பண்ணுமதான ஸ்வ பாவத்தை எல்லாம் விட்டு
எரி வீசும்
அக்னி ஜ்வாலையை வீசா நின்றது
அம்தண் அம் துழாய்
இப்படி துழாயைச் சம்போதித்துச் சொல்லுமது
இவள் நம்மை ஆசைப்படா நின்றாள் என்று அதுக்கு மாத்திரம் ஸ்வ பாவ பேதம் பிறவாமையாலா யிற்று
அன்றிக்கே
துழாய்
அத்துழாய் விஷயமாகவே
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி
துளிக்கிற புயல் போலே நீர் சொரிகிற பெரிய கண்ணை உடையவள் என்று ஆகக்கடவது
மாமைத் திறத்துக் கொலாம்
இவள் நிறத்தைக் கெடுக்கவே இவைகளை இங்கனம் நியமித்தானேயோ
ஆம்
ஆயிருக்கும்
பனிப்புயல் வண்ணன் -செங்கோல் ஒருநான்று தடாவியதே
எல்லாருக்கும் குளிர்ந்த வர்ஷக வலாஹகம் போலே இருக்கிற வடிவை யுடையவன்
என் மக்களுக்கு அத்தை ஒழித்தானாய்த் தன் செங்கோலே இங்கனே நடத்தா நின்றான்
செங்கோல் ஒருநான்று தடாவியதே —
இந்நாள் இப்படி அவன் செங்கோல் விளங்குகிறது
இப்படியும் ஒரு நாள் எனக்கு உண்டாக வேணுமோ என்று இன்னாதாகிறாள்
விரஹிணியில் சேஷ்யந்தந்திரங்கள் எல்லாம்
அவனைப் போலவே பின்ன ஸ்வ பாவராவர்
என்று இங்கு ஸ்வா பதேசம் –
————–
கிளவித் துறையில் இப்பாட்டு
நலம் பாராட்டு என்னுதல்
மருங்கு அணைதல் என்னுதல்
காட்சி என்னுதல்
ப்ராயேண காட்சியாய் இருக்கிறது
இம் மூன்றும் தான் நாயகன் வார்த்தை
இதில் காட்சி யாகிறது
நாயகனுக்கும் நாயகிக்கும் பிரதமத்திலே பிறக்கும் த்ருஷ்டி பந்தம்
இது தான் பின்னை பிரதமத்திலே ஆக வேண்டாவோ
முதல் பாட்டுத் தான் தானான தன்மையில் நின்றாராகில்
இரண்டாம் பாட்டிலே தான் உண்டாக வேண்டாவோ என்னில்
இப்பிரபந்தம் தன்னில்
இப்படி இருபத்தொரு கிளவி அடைவு இல்லாமையாலே
ஓர் இடத்தைச் சொல்லுமித்தனை வேண்டுவது –
அதில் இவ்விடத்தே சொல்லிற்றாகிறது
அன்றிக்கே
கண்ட போது எல்லாம் நித்ய அபூபர்வமாய் இருக்கும் இறே
அத்தாலே சொல்லிற்று ஆகவுமாம்
அன்றிக்கே
இனி பாகவதர்களைத் தலை மக்களாகச் சொல்லுகிற இடத்திலே
முதல் பாட்டு இதுவாகையாலே இத்தை முதல் பாட்டாகச் சொல்லிற்று ஆகவுமாம் –
தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–6-
பாசுரம் -6-தடாவிய அம்பும் முறிந்த சிலைகளும் -தலைவியின் அழகை
தலைவன் வியந்து பேசுதல் –உண்ணும் சோறு -6-7-
பதவுரை
இது–இவ்வடிவானது
தடாவிய–வளைந்த
அம்பும்–பாணங்களையும்
முரிந்த–ஒடிந்த
சிலைகளும்–விற்களையும்
போக விட்டு–கொள்ளாமல் ஒழித்து
கடாயின கொண்டு–உபயோகிக்கத் தக்க அம்புகளையும் விற்களையும் ஏந்தி துவண்டு நடக்கிற
வல்லி எனும்–ஒரு பூங்கொடி போன்ற பெண் வடிவமாயிருந்தாயினும்
அசுரர் மங்க–அஸுரர்கள் அழியும்படி
கடாவிய–ஏறி நடத்தப்படுகின்ற
வேகம்–விரைவையுடைய
பறவை–பக்ஷிராஜனாகிய வாஹனத்துக்கு
இன் பாகன்–இனிய பாகனாகிய எம்பெருமானது (ஸம்பந்தம் பெற்ற)
மதனன்–மன்மதனுடைய
செங்கோல்–ஆளுகையை
நடாவிய–நடத்துகிற
கூற்றம்–யமனாயிருக்கும்;
ஞாலத் துள்ளே–இந்நில வுலகத்திலே
கண்டீர்–(இவ்வழகிய வடிவத்தைப்) பார்த்தவர்களே!
உயிர் காமின்கள்–(உங்களது) உயிரைக் காத்துக் கொள்ளுங்கள்
தடாவிய வம்பும்
நேரே படுக்கை தவிர்ந்து பரம்பிக் கொடு போய்ப் படுகிற அம்பும்
இத்தால் வரும் என்று இறாய்க்க ஒண்ணாத படி காணாக் கோலாய் இருக்கை
வில்லோடே கூட அடுத்துப் பிடித்த அம்பும்
வரந்த வாய் அம்பு
முரிந்த சிலைகளும்
அகர்மகமாய்
அகர்த்ருகமாய் இருக்காய்
அம்பும் சிலைகளும் என்பான் என் என்னில்
அம்பும் -என்றது ஜாதி ஏக வசனமாய் இருக்கிறது
சிலைகள் -என்றது இரண்டு உண்டாகையாலே
இத்தால்
கண்களையும் புருவங்களையும் சொன்னபடி இறே
அம்பும் சிலைகளும் என்று
உபமானமாகச் சொல்லாதே
தானேயாகச் சொல்லுவான் என் என்னில்
ஸர்வ ஸாம்யம் உண்டாகையாலே
போக விட்டு
பொகட்டு என்றபடி
விஷய அநுரூபமாக வேண்டுவது அமையாதோ என்று இவற்றை யிட்டு வைத்து –
கடாயின கொண்டொல்கும்
மற்றும் நடத்திப் போருகிறவற்றைக் கொண்டு
வல்லி ஈதேனும் அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன்
அஸூரர்கள் நசிக்கும்படி துரத்தத் தக்க வேகமுள்ள பக்ஷி ராஜனை நடத்துமவனே என்று அறிவியுங்கோள்
ஆகில் என் செய்யக் கடவோம் என்ன
மதன செங்கோல் நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–
இப்புண்ய பூமியிலே பிறந்த நீங்கள்
உங்களை ரஷித்துக் கொள்ளுங்கோள்
அதாவது
அவர்கள் சத்ருக்கள் இவர்கள் என்று அத்யவசித்தும் ஹேயப்பட்டும்
அவனில் கோப்த்ருத்வ வரண யுக்த பராதி நிக்ஷேபத்தை நைர் பர்ய சிரஸ் கமாக
உபாயத்வ ப்ரார்தனையோடு அபாய நிவ்ருத்தி பெற்றவர்களாய்ச் செய்கை –
ஸ்வா பதேசம்
இதில் தலை மக்கள் ஸ்ரீ வைஷ்ணவர்
இப்படி தலை மக்கள் பேதித்தால்
தலைவி ஒருத்தியே ஆழ்வார் தம்மதே
திருப்புளி கீழே ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ பொலிய
வெற்றிச் செல்வம் கண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தை
லோகத்தில் அஹங்காரம் மமகாராம் கொண்டு உலாவுவார் இங்கே வராதே கொள்ளுவீர்
ஐஸ்வர்யம் புருஷார்த்தம் அல்பம் அஸ்திரம் கண்டு அவ்வருகே போகலாம்
ஸ்திரமான ஆத்ம அனுபவம் பற்றினாருக்கு அவனையே அனுபவிக்க அவ்வருகே போகலாம்
பகவத் விஷயத்தில் நிற்கிறவன் பிரதம நிலை தாண்டி சரம நிலையான பாகவத விஷயம் போகலாம்
அதுக்கு மேல் போக முடியாதே
குறை சொல்லி மேலே போக முடியாதே
பகவத் சேஷத்து அளவில் நின்றால் குறை உண்டே
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
அநந்யார்ஹ சேஷ ஞான அனுரூபமான விருத்தம் இவர்கள் அளவும் வர வேண்டுமே
ஆகவே கிளவுத் துறையில் பாடுகிறார் –
———
அவதாரிகை
உபய விபூதி யுக்தனாய்
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய்
ஸர்வ ஸ்மாத் பரனான
ஸர்வேஸ்வரன்
நிர்ஹேதுகமாகத் தன்னைக் கொடு வந்து இவருக்குக் காட்டிக் கொடுக்க
அவன் கொடுத்த வெளிச்சிறப்பாலே -அவனை உள்ளபடி கண்டு
விரோதி த்யாக பூர்வகமாக அல்லது உத்தேச்ய ஸித்தி அனுபவிக்கப் பெறாமையாலே
தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியான ப்ரக்ருதி ப்ராக்ருதங்களோட்டை ஸம்பந்தத்தை
அறுத்துத் தந்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்தார் முதல் பாட்டில் –
பிரதம தர்சனத்திலே சிரகாலம் வாஸனை பண்ணிப் போந்த விஷயங்களை விடுவிக்க வேணும்
என்று கால் கட்டப் பண்ணின விஷயத்தை
அப்போதே இவ் விரோதி போய் அனுபவிக்கப் பெறாமையாலே
தாமான தன்மை அழிந்து
ஒரு பிராட்டி தசையை ப்ராப்தராய்
நாயகனோடே உயிர்த் தோழியும் போய் நிற்கிற சமயத்திலே
யாதிருச்சிகமாக ஸம்ஸ்லேஷம் வ்ருத்தமாய்
அநந்தரத்திலே
பிரிவு உண்டாக
வ்ரீளை யாலே தனக்கு ஓடுகிற தசையைத் தோழிக்கு அறிவியாதே இருக்க
இவளும் அவளது அனுமதி பூர்வகமாகத் தனக்குப் பரிஹாரம் பண்ண வேண்டுகையாலே
தாம் பகவத் விஷயத்திலே கண்ணும் கண்ண நீருமாய் இருக்கிற இருப்புக் கண்ட பாகவதர்க்கு
தர்ச நீயமாய் இருக்கிற அம்முகத்தாலே
ஸ்வ தசையைத் தம்மைத் தாமே அனுபவித்தார்
இரண்டாம் பாட்டில்
இமையோர் தலைவா என்று முதல் காட்டிக் கொடுத்தது நித்ய –
ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7-
பாசுரம் -7ஞாலம் பனிப்பச் செறித்து -கால மயக்கு –இன்னுயிர்ச் சேவல் -9-5–
பதவுரை
ஞாலம் பனிப்ப–உலகம் நடுங்கும்படி
செறித்து-தம்மில் தாம் நெருங்கி
நல் நீர் இட்டு–(தம் உடம்பின்) நீரை நன்றாக வெளிச் சிந்தி
கால் சிதைந்து–கால்களால் தரையைக் கீறிக் கொண்டு
நீலம் வல் ஏறு–கரிய வலிய எருதுகள்
பொரா நின்ற–போர் செய்யப் பெற்ற
வானம் இது–ஆகாசமாகும் இது;
திருமால்–எம்பெருமானுடைய
கோலம் சுமந்து–வடிவத்தை யுடையதாய்
பிரிந்தார் கொடுமை குழறு–பிரிந்து போன நாயகனது கொடுந்தன்மையைக் கூறுகிற
தண் பூ காலம் கொல் ஓ–குளிர்ந்த அழகிய கார் காலத்தானோ?
வினையாட்டியேன்–தீவினையுடைய நான்
காண்கின்ற–காண்கின்றவற்றை
அறியேன்–இன்னதென்று அறிகிற வில்லை.
வியாக்யானம் –
பூமியில் பனி விழுகிறதே –
என் கணவன் வரக் காணேனே -என்று தோழியோடு ஏங்கிச் சொன்னாள்
அன்று காண் –
ஞாலம் பனிப்பச் செறித்து
பயத்தால் இந்த பூமிக்கு வேர்ப்பு உண்டாம்படி தன்னில் தானே சேர்ந்து
நன்னீரிட்டுக்
பொல்லாத ஸ்வக ஜலத்தை விட்டுக் கொண்டு
கால் சிதைந்து
காலால் பூமியைக் கீறவும் வாராவுமாய்க் கொண்டு
நீல வல்லேறு
நீல நிறத்தை யுடைத்தான
வலிய ருஷபங்கள்
பொரா நின்ற வானமிது
இந்த ஆகாசத்தில் பொருகிறன அத்தனை -என்றாள்
மேல் தான் அநாப்தை யாகாமைக்குச் சொல்கிறாள்
திருமால் கோலம் சுமந்து
மின்னலாலும்
கறுத்த நிறத்தாலும்
திருமாலுடைய அழகிய ஆகாரத்தைத் தரித்து
பிரிந்தார் கொடுமை குழறு
பிரிந்து போய் வாராதாருடைய கொடுமையைத் தன்
அநஷரமான முழக்கத்தாலே சொல்லுவதான
தண் பூம் காலம் கொலோ
குளிர்ந்த அழகிய காலம் தானோ
வறியேன்
இன்னது என்று அறிய மாட்டேன்
வினையாட்டியேன் காண்கின்றவே
பாபியான நான் உன் வேதனையைக் காணும்படி யாயிற்று –
——
அவதாரிகை
காலமும் இதுவேயாய்
நாயகனும் வந்து ஸம்ஸ்லேஷமும் வ்ருத்தமாய்ச் செல்லா நிற்கச் செய்தே
இன்னபடி அப்ரியமும் விளையும் என்று தெரியாது இறே
தலைமகன் பொருள் வயிற் பிரிவை நினைத்து
அத்தாலே தன் தடுமாற்றம் தோற்றப் பரிமாற
அவள் அத்தை அறிந்து
நினைத்தபடி இது வன்றோ
தன்னுடனே இருக்கச் செய்தே பிரிவதாக நினைத்தாய் -என்று அத்தலைமைகள் வார்த்தையாய் இருக்கிறது –
காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —8–
பாசுரம் -8-காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் -தலைவன் பொருள் வயிற் பிரிதல்
குறிப்பால் அறிந்த தலைவி தோழிக்கு கூறல் –கையார் சக்கரம் -5-1-
பதவுரை
குன்றம் நாடர்–மலைகளை யுடைத்தான நாட்டுக்குத் தலைவரான நாயகர்
இ நாள்–இன்றை தினத்தில்
பயில்கின்றன–பலவாறாக நடத்துகின்றவையான
காண்கின்றனகளும்–காணப்படுகிற செய்கைகளும்
கேட்கின்றனகளும்–கேட்கப்படுகின்ற சொற்களும்
காணில்–ஆராய்ந்து பார்க்குமிடத்து
பாண்–வெளியுபசார மாத்திரமாம்;
இது எல்லாம்–இந்த மிக்க உபசாரமெல்லாம்
மாண் குன்றம் ஏந்தி–மாட்சிமை தங்கிய கோவர்த்ததன கிரியை நினைப்பின்றி யெடுத்த கண்ணபிரானது
தண் மாமலை வேங்கடத்து–குளிர்ந்த சிறந்த திருவேங்கடமலையின்
உம்பர் நம்பும்–மேலுலகத்தாரால் விரும்பப்படுகிற உயர்ந்த சிகரத்தை
சென்று–போய் அடைந்து
பொருள் படைப்பான்–(அங்கும்) பொருளீட்டும் பொருட்டு
கற்ற–(புதிதாக) அப்யஸித்த
திண்ணளவு–வலிமையின் செயல் (என்று)
அறிந்தோம்–தெரிந்து கொண்டோம்.
காண்கின்றனகளும்
ஹர்ஷ ஹேதுக்கள் எல்லாம் நிற்க நெஞ்சு தடுமாறுவது
அஞ்சலி பண்ணுவது
பாத உப ஸங்க்ரஹணம் பண்ணுவதாகத் தொடங்கினான்
அதைக்கண்டு -நீர் தாம் இப்போது எங்கு இருந்து தான் இவை எல்லாம் செய்கிறது தான் -என்னுமே இவள்
பிறருக்கு சேஷபூதராய் இருப்பாருக்குப் போக்கு உண்டோ
பிரியேன் பிரியில் தரியேன் -என்றால் போலே சொல்லத் தொடங்குமே இவன்
கேட்கின்றகளும்
தாத்ருசமான சேஷ்டிதங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே
காணில்
அவை தான் –
நம் பிள்ளை ஈட்டில்
ஸ்ரீ ராமாயணத்தில்
பெருமாள் பிராட்டியைப் பிரிந்து கழுத்து தோள் மாலை சாத்தி
சக்ரவர்தியைக் காண செல்ல
தாற்காலிகமாக பிரிவு
இங்கும் பிரிவு பக்தி வளர்க்க -ஆர்த்தி உண்டாக்க
பதி ஸம்மானம் சீதா
மைய கண்ணாள் பார்க்க
திவ்ய அந்தப்புரம் கனக புரம்
சக்ரவர்த்தி அருளப்பாடு கேட்டு சுமந்திரன் வர
பிராட்டி இரண்டு மூன்று திருவாசல் அளவும் மங்களா ஸாஸனம் பண்ணிக் கொண்டு புறப்பட
புரிந்து பார்த்து அருளி
அத்தைக் கண்ட பெருமாள்
அங்கும் இங்கும் –பரிவர் இல்லை -என்று நினைத்து பண்ணுவதைக் கண்ட பெருமாள்
பின்னவும் தவிர மாட்டாதே
வரும் அளவும் தாரகமாக தனது தோள் மாலையை இவள் தோளிலே இட்டு
முறை மாறாடி தாழ்வுகளை செய்து போனாள்
அஸீ தேக்ஷிணா -இந்தீவர மாலை இட்டாள்
அப்போது பிரிவு போல்- இங்கும் பிரிவு
இப்போது பிரியும் வருத்தம் அவனுக்கு உண்டோ என்னில்
உண்டு
விஷயம் நித்ய அபூர்வம் இருவருக்கும் உண்டே
இவனைப் பற்றி சொல்ல ஆள் இல்லையே -ஆழ்வாரே தானே சொல்ல வேண்டும்
பிரிவில் செய்வது என்ன அதிசங்கை இருவருக்கும் உண்டு
இவள் தனக்கும் தன்னுடைய ஸ்வரூபம் அறிந்தாலும்
அப்ருதக் சித்த விசேஷணம் அறிந்து கவலைப் படக் கூடாதே
பெருமாளுக்கும் ஸ்வரூப ஞானம் -இல்லை
இவளையே எங்கும் பக்க நோக்கு அறியான் என்று இவளையே பார்த்துக்கொண்டு இருக்கிறான்
விஷயம் விலக்ஷணமானால் இத்தனையும் பட வேண்டாவோ என்று இருக்கிறான் ஆயிற்று
விஷயம் ஏதேனுமாக தம்மதானால் நான் பட வேண்டுமோ ஆழ்வார் நினைவு
தம் தமதமானால் நல்லதானால் ஆறி இருக்கலாமோ
எல்லாம் செய்தாலும் முன்பு போல் செய்யாமல் இருப்பதால் நெஞ்சிலே இருப்பதை அறிவார்
வண்டமரும் வன மாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ —பெரிய திருமொழி- 8-1-9-
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்-
முதல் நாள் கண்டால்
ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தாலும்
முகத்தில் தண்ணளி யாலும் ஆக
முன்பே கண்டறியும் முகமாய் இருந்ததீ –
எவ் ஊரில் தான் கண்டது -என்னும்படி இருக்கும் –
சிர பரிசயம் பிறந்தால் பின்பு -முன்பு ஓர் இடத்திலும் இவனைக் கண்டு அறியோம் –
என்னும்படியாய் இருக்கும் –
நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி
சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது காட்டுமோ –
பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -( வர்த்தமான பிரயோகம் )
எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ –
இப்படியாக வேண்டாவோ -என்று ஜீயர் -(நஞ்சீயர்)
(பிரதமத்தில் முன் கண்டால் போலேயும் –
காணாமல் இருந்தது போலேயும் அன்றோ இந்த சப்த பிரயோகம் –
சுரம் கொண்டே இரண்டு அர்த்தங்களும் காட்டுமே
பரி சீலிக்க பரி சீலிக்க பார்த்தது போலே இருக்குமே
இல்லையாகில் லௌகிக விஷய வியாவ்ருத்தம் இருக்காதே )
ஸ்வரம் வைத்து அர்த்தம்
அனுபவம் நித்யம்
விஷயமும் நித்யம்
ஆனால் நித்யம் அபூர்வ விஷயம்
இத்தால் சொல்லிற்று ஆயிற்று
நித்ய அனுபவம் ஆனாலும் பிரிவுக்கு சம்பாவனை இல்லை என்றாலும்
பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் என்பார்
இது எல்லாம் பகவத் விஷயத்தில்
இங்கு பாகவத விஷயத்தில்
இவர் அவகாஹம்
திருக்கச்சி நம்பி எவ்வாறு என்று எம்பெருமானார் சொல்ல
கடுக நான் என்று எழுந்து செல்வார் இல்லை
யாரும் பதில் சொல்லாமல் பெரிய நம்பி பெருமாள் கோயில் எழுந்து அருள
நிஷேதிக்க முடியாத விஷயம்
எழுந்து அருள ஆகாலாதோ
திரு நாள் அணித்தாய் இருந்தது
நான் வந்த கார்யம் தலைக் கட்டிற்று
இப்படி போய் வர அமையும் -பிரிந்து இருக்க முடியாதே பெரிய நம்பிக்கு உடையவர் -இருவருக்கும் பிரிவு அஸஹ்யம்
———–
அவதாரிகை
உன் நிலை இருந்தபடி இது அன்றோ -என்று
என்னோடே கூடி இருக்கச் செய்தே
திருமலைக்குப் போவதாக நினைத்தாய் -என்று பழி இட்டாள்
நானோ போக நினைத்தேன் -நீ அன்றோ திருமலைக்குப் போக நினைத்தாய் -என்றான் அவன்
பாகவத ஸம்ஸ்லேஷம் செல்லா நிற்க பகவத் பரிக்ரஹம் உள்ள தேசத்தில் போக நினைக்கும்படி அன்றோ
நீ பகவத் விஷயத்தில் வர நின்ற நிலை –
அப்படி நினைத்தேனாகில் நீ சொல்லிற்று எல்லாம் பொறுக்கிறேன் -என்கிறான் –
திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ
கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே–9-
பாசுரம் -9-திண் பூஞ் சுடர் நுதி நேமி -தலைவன் தலைவியின் நீங்கல் அருமை கூறுதல் -பொலிக பொலிக –5-2-
பதவுரை
திண்–வலிய
பூ–அழகிய
சுடர்–ஒளியுள்ள
நுதி–கூர்மையை யுடைத்தான
நேமி–திருவாழியை யுடைய
அம் செல்வர்–அழகிய எல்லா ஐசுவரியங்களையுமுடைய எம்பெருமானது
விண் நாடு அனைய–பரமபதத்தை யொத்த
வண் மணி பூ–அழகிய சிறந்த பூங்கொடி போன்றவளை
யாரே பிரிபவர் தாம் எவர்தாம் பிரிய வல்லவர்? (எவரும் பிரிய வல்லரல்லர்;)
(ஏனெனில்;)
இவையோ கண்–இவளது கண்கள் கண்களாக மாத்திரமிருக்கின்றனவோ?
பூ கமலம்–தாமரை மலர்களாய்
வண் பூ குவளை–அழகிய செங்கழு நீர் மலர்களுமாய்
மா இதழ்–பெரிய இதழ்களை யுடையவையாய்
கரு சுடர் ஆடி–கரிய (அஞ்சனத்தின்) ஒளியை அணிந்து
வெண் முத்து அரும்பி–(நம்மைப் பிரிதலாற்றுமையாலுண்டான கண்ணீராகிற) வெளுத்த முத்துக்கள் தோன்றப் பெற்று
மடமான் விழிக்கின்ற–மடத்தை யுடைய மான் போல நோக்குகின்றன.
ஸ்வரூப ஞானம் இல்லாதார் சொல்லும் வார்த்தை பிரமாணமாகக் கொள்ளலாமோ –
தம் தாமை அறியாதே இங்கனே அதி சங்கை பண்ணலாமோ –
இவள் அதி சங்கை தீர்க்கை யாகிறது
இவள் ஸ்வரூபத்தை அறிவிக்கை போலே காணும்
திண் -என்றது
திருவாழி தான் திண்ணிதாய் இருக்கை
ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் இடத்தில் பிற்காலியாது இருக்கை
நித்ய விபூதியில் உள்ளார் அனுபவிக்கும் இடத்தில் அதி சங்கை பண்ணினால் –
அவ்வதி சங்கை பரிக்ரஹிக்கையில் போக்யமாய் இருக்கை
அஸ்தானே பய சங்கையோடே ஸ்தானே பய சங்கையோடே இவ்வாசி இல்லை இறே
பரிஹரிக்க வேண்டும் இடத்தில் சங்கா விஷயம் மரண ஹேதுவானாலும் பரிஹரிக்க வேணும் இறே
இனி ஸம்ஸாரிகளுக்குள்ளே பயமில்லை என்னும் அத்தனை அல்லது விஷயா தீனமாகவும் வருமது உண்டு இறே
பூ -போக்யமாய் -தர்ச நீயமுமாய் இருக்கை
திண் பூ என்றது –
தன்னைத் தரிக்குமவன் படி தனக்கும் உண்டாய் இருக்கும் இறே
ஸூ குமாரவ் -மஹா பலவ்(ஆரண்ய -1-14 )என்னுமா போலே
திருவாழி தனக்கு ஆயுத கோடியிலும் ஆபரண கோடியிலும் -இரண்டிலும் உண்டே அந்வயம்
சுடர்
திருமேனியில் இருட்சிக்குக் கை விளக்கு பிடித்தால் போலே இருக்கை
நுதி -என்று கூர்மை
புகரையும் கூர்மையும் யுடைய நேமி -திருவாழி
அம் செல்வர்
திருக் கையும் திருவாழியும் சேர்ந்த சேர்த்தியால் வந்த ஐஸ்வர்யம் என்னலாம்
காந்தியைச் சொல்லவுமாம்
சேர்ந்த சேர்த்தி அழகாலே
கூராராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய் (திருவாய் -6-9-1 ) என்னலாம் படி இறே இருப்பது
அஞ்செல்வர் விண்ணாடு அனைய -என்கிற இது
திருக்கையும் திருவாழியுமான இவ்வழகைக் காட்டிக் காணும் அவ்விபூதியை நிர்வஹிப்பது
லீலா விபூதியில் பிரதிகூலரை
தர்ச நீயமான புஷ்போத் கமத்தை உடைத்தாய்
இவ்விபூதிக்கு ஓர் ஆபரணமான கொடி போன்றவள்
இத்தம் பூதையை
ஆரே பிரிபவர் தாம்
தம்மைத் தாம் அறிவாரில் பிரிவார் உண்டோ
அது நிற்க
இவையே கண்
இவை லோகத்திலுள்ள கண்ணோ
பூங்கமலம்
அழகிய கமலங்களே அன்றோ
அதுக்கு மேலே
கருஞ்சுடராடி
கரு விழியாலும்
அஞ்ஜனத்தில் ஒளியாலும்
அழகிய நீல ஜ்யோதிஸ் சலனம் உள்ளது
வெண் முத்தரும்பி
ஆற்றாமையால் உண்டான அஸ்ரு பிந்துக்களாகிற முத்தை அரும்பிற்று
முத்தைச் சொரியுமதாயிற்று –
வண் பூங்குவளை
தர்ச நீயமாயும் ஸ்லாக்யமுமான கரு நெய்தலாயும்
செங்கழு நீர்ப்பூவாயும்
இரா நின்றது என்றபடி –
அதுக்கும் மேலே
மடமான் விழிக்கின்ற
இள மான் போலே காத்ராஷியாய் வாரா நின்றாய்
மாயிதழே
உன்ன தரம் மஹா ரஸமுடையதும் சிவப்பு யுடையது மான கனியே காண்
இன்னவகையான உன்னை நான் பிரிவேனே –
——
அவதாரிகை
இப்பாட்டு கிளவித் துறையில்
மதியுடன் படுத்தலாய் இருக்கிறது
அதாகிறது
தான் முன நாள் பிரிந்து
பிரிந்த தலைவன் பிற்றை நாள் தலைமைகளும் பாங்கி மாருமாகப் புனம் நோக்கி இருக்கும் இடத்திலே
வந்து தன் ஆசையை ஆவிஷ் கரிக்கை –
அது போலே இங்கு ஓடுகிறது
தன் ஆற்றாமையைத் தானே அறிவிக்கையுமாம்
இதிலே தானே அறிவிக்கை முக்யம்
தோழி அறிவிக்கை கௌணம்
மதியுடன் படுத்தல் தோழிக்கும் உரித்து என்றது அத்தனை
அன்றிக்கே
தோழிமார் இல்லையாகில் பந்து வர்க்கத்தை இட்டு அறிவிக்கையுமாம் –
மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ ஆடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—10-
பாசுரம் -10-மாயோன் வட திருவேம்கட நாட -தலைவன் தோழியிடம் குறை கூறல் -மதி உடன்படுதல் –நெடுமாற்கு அடிமை -8-10-–
பதவுரை
மாயோன்–ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையனான எம்பெருமானது
வடதிருவேங்கடம் நாட–வடதிருவேங்கட மலையை இடமாகவுடைய
வல்லி கொடிகாள்–பூங்கொடி போன்ற இளம் பெண்களே!
அது அன்றி–அதுவல்லாமல்
வல்லினையேனும் கிளியும் எள்கும்–கொடிய தீவினையையுடைய நானும் கிளியும் தளரும்படியான
ஆயோ–(உங்களது) ‘ஆயோ’ என்கிற சொல்லோ?
தொண்டையோ–கோவைக் கனி போற் சிவந்த உங்களது அதரமோ?
நோய் ஓ உரைக்கிலும் கேட்கின்றிலீர்–(என்னுடைய) காதல் நோயையோ (நீங்கள் தாமாக அறியா விட்டாலும்)
நான் சொன்னாலும் கேட்கிறீரில்லை;
உங்களுடைய வாயின் அழகோ?
அடும்–(என்னை) உயிர்க் கொலை செய்யா நிற்கும்;
இது அறிவு அரிது–இவற்றில் இன்னது என்னை வருத்து மென்பது அறிய அரிதா யிருக்கின்றது;
உரையீர்–நீங்கள் சொல்லுங்கள்;
(அறையோ–இது முறையிட்டுக் கூறும் வார்த்தை.)
மாயோன்
பரமபதத்தில் வாங் மானசங்களுக்கு அபூமியாம் படி இருக்கிற இருப்பை
மாயோன் -என்னுதல்
அன்றிக்கே
பரமபதத்தை விட்டு
கணமும் வானரமும் வேடுவர்களுமான (நான்முகன் -47 )
திருமலையில் நிற்கிற நிலையில் அனுசந்தித்து அந்த ஆச்சர்யத்தைச் சொல்லிற்று ஆகவுமாம்
ஒருவன் விபூதியில் இல்லாத ஆச்சர்யம் இல்லை யாகாதே
வட திருவேங்கட நாட
தனக்குக் கலவிருக்கையான பரமபதத்தை விட்டு சம்சாரிகளுடைய –
————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .