ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த ஸ்ரீ திருப்பதிக் கோவை –

ஓங்கும் திருவரங்கர் தாம் உகந்த ஒண் பதிகள்
மூங்கில் குடி யமுதன் முத்தமிழால் -நீங்காத
அன்பர் தமர் வாழ அருள் செய்த அந்தணர் கோன்
தன் பதுமத் தாளே சரண் –தனியன்

——

பங்கயத்தோன் இக்குவாகுக்குப் பண்டு அளிப்பப்
பொங்கும் அயோத்திப் புரிசை நகர் –தங்கிச் –1-
சில நாள் இனிது அமர்ந்து தென்னிலங்கைக் கோமான்
குலம் வாழக் கொண்டு ஏகும் வேலை -நவ மார்ந்த –2-
சென்னி வளவன் வள நாட்டுத் தெய்வ நதிப்
பொன்னி நடுவு புளினத்துப் -பன்னரிய –3-
இந்து மடுக்கரைக்கே இன்பமுற வைத்து அருளிச்
சாந்தி செய்யக் கருதிச் சாருங்கால் –முந்து(முந்தி) –4-
மருவார் பொழில் குருகை மாறன் முதலானோர்
திருவாய் மொழிச் (மலர்ச் )சுருதிச் செய்யுட்க்கு உருகா –5–
யிரங்கா என விரங்கா யான் இவனோ வைகல்
வரம் தா என விசைய மாற்றிப் –பரந்தாமன் –6–

(செய்யுள் குருகா அரங்கர் அவன் பாங்காய் இனி அவணே வைக
வரந்தா என இசைய மற்றப் பரந்தாமன் – பாட பேதம் )

கோழி மயிலுடனே கோள் அரவின் மீது ஏறி
யூழி பயிலும் உயோகு துயில் – வாழி –7-
திருவரங்கம் கோயில் திரு வாழ் உறந்தை
தரு வலரும் பூஞ்சோலைத் தஞ்சை –அருள் கலந்த –8-
அன்பில் கரம்பனூர் அம் பொன் மதிள் வெள்ளறை
தென் புள்ளம் பூதங்குடி திருப்பேர் அன்பால் –9–
அரும் தவம் சேர் ஆதனூர் ஆதி அழுந்தூர்
திருந்து சிறு புலியூர் சேறை பொருந்து –10-

தலைச்சங்க நாண் மதியம் தண்டடங்கள் எங்கும்
குலைத்தெங்கு சூழ் தென் (தண்) குடந்தை நலத்த புகழ்க் -11-
கண்டியூர் விண்ணகரம் கண்ணபுரம் கோயில்
எண்டிசையும் ஏத்தும் எழில் ஆலி தெள் திரை சூழ் -12–
நாகை திரு நறையூர் நந்திபுர விண்ணகரம்
ஈகை மறவாத இந்தளூர் யோக மணிச் (மலிச் )–13–
சித்ர கூடம் காழிச் சீ ராம விண்ணகரம்
கொத்தலரும் பூஞ்சோலைக் கூடலூர் முத்தி தரும் –14–
கண்ணங்குடி கண்ண மங்கை கவித்தலம் (மே )
திண்ணம் திரு வெள்ளியங்குடி (யே ) எண்ணரிய -15–

நாங்கூர் மணி மாடக்கோயில் நவையறு சீர்ப்
பூங் காவளம்பாடி வண் புருடை தேங்கு புனல்ச் (புகழ்ச்)–16-
செம் பொன் செய் கோயில் திருத்தெற்றி யம்பலம் மே
வம்புந்தும் வைகுந்த விண்ணகரம் உம்பர் –17-
அரிமேய விண்ணகரம் அம் பொன் மணிக்கூடம்
பரன் மேவிய பார்த்தன் பள்ளி தரு மாய்கை (திரு முட்டம் )–18–
(விள்ளும் )வெல்லும் திருத்தேவைனார் தொகை வெள்ளக் குளம் (மே )
வள்ளல் வழுதி வள நாட்டில் (நாட்டுத் )தெய்வத் (செல்வத் )–19–
திருமாலிருஞ்சோலை தென் கோட்டி மெய்யம்
தருவாரும் புல்லாணி தண் கால் திரு மோகூர் –20-

கூடல் அணி வில்லி புத்தூர் (கோதில் )கோலத் திருக் குருகூர்
தோடார் தொலை வில்லி மங்கலம் (மே ) மாடலருஞ் –21–
சீ வர மங்கைப்பதி தென் திருப்பேர் (சீ ) வைகுந்தம்
பூவில் அயன் ஏத்தும் புளிங்குடி (யே) நாவில் –22-
வளர்ந்த புகழ் சேர் வர குண மங்கை
குளந்தை குறுங்குடி தென் கோளூர் -விளங்கு –23-
மலை நாட்டு அநந்த புரம் வண் பரிசாரம் சொற்
கலை நாட்டு(க்)ங் காட்கரை தென் மூழி சிலை நாட்டும் – 24–
தென் குட்ட (நாட்டில் ) நாட்டுத் திருப்புலியூர் செங்குன்றூர்
பொன் குட்ட வாவிப் புகழ் நாவாய் அன்புற்ற –25-

வல்ல வாழ் மன்னு திரு வண் வண்டூர் வாட்டாறு
வில்லி வாழும் புரிசை வித்துவக்கோடு அல்லல் –26-
அறுக்கும் கடித்தானம் ஆறன் விளை சீர்
பொறுக்கும் புகழ்த் தொண்டை நாட்டில் எறிக்கும் –27-

அயிந்திர புரம் கோவலூர் அம் பொன் மதிள் கச்சி
வியன் திரு அத்தியூர் வெக்கா குயின்ற –28-
பரமேச விண்ணகரம் பாடகம் மாடத்
திரண் மேய சீர்த் திருத் தண்கா உரன் மேய –29-

(அயிந்திர புரம் கோவல் அத்தியூர் வெக்கா
துயின்ற பரமே சுர வூர் இயஞ்சேரும் -28
பாடாக மாடகத்தின் பாவை மகிழ்ந்து உறையும்
ஏடலரும் தாமரைகள் எந்நாளும் மாடலரும்-29 )

நீரகம் வேளுக்கை நிலாத் திங்கள் தண்டம் (மே ) சொற்
காரகம் கார்வானம் கள்வனூர் ஊரகமே –30-
மட்டவிழும் சோலை சூழ் எவ்வுள் மறை பயிலும் (பரவும் )
அட்டபுய கர மா மாதி நகர் சிட்டர் தொழ –31-
நின்றவூர் புட் குழி நீடு திரு நீர் மலை
என்றும் அழகார் திருவிட வெந்தை துன்று –32–

கடன்மல்லை யம் பொற் கடிகைச் சிலம்பு (கதிர் இனம் சேரும் )
(தடமார் )திடமாம் திருவல்லிக் கேணி வட வெல்லை–33–
வேங்கடம் சாளக்கிராமம் வியன் புரசை (வியன் சேர் )
நாங்காணி சேர் நயிமி (நாங்கை நமி ) சாரணியம் தெங்கு (புனல் )புகழ்க் –34-
கங்கைக் கரை கண்டம் சீர் பத்ரியாச்சிரமம்
சிங்க வேள் குன்றம் திருப்பிரிதி பொங்கு புகழ் –35-

வைகுந்தம் பாற் கடல் மா நீர் அயோத்தி நகர்
பொய் குன்றச் செய் (குன்று சீர் ) மதுரைப் பொன்னகரம் மொய் (மெய் )குன்றா –36-
அண்டர் திருவாய்ப்பாடி ஆழ் கடல் சூழ் வண்டுவரை
தொண்டர் குழாம் சூழும் இந்தத் தொல் பதிகள் கண்டும் –37-

தொழுதும் வலம் செய்தும் சொல்லித் துதித்தும்
முழுதும் உணர்ந்தும் முறையே எழுது கலை –38-
ஓதியும் வேதம் உரைத்தும் உலகு அறியத்
தாதின் அடிமை தலை நின்றும் வேத –39-
நிழலே சரணம் என நினைந்து வாழ்வார்
கழலே நமக்கு கதி –40–

(தொழுது வலம் செய்து சொல்லித் துதித்து
முழுது உணர்ந்தோர் கூறு முறையே எழுது-38-
கலை ஓதி வேதம் உரைத்துக் கனிந்தும்
உலகு அறிய நாம் அடியோம் என்று தலை நின்று –39-
வாழ நினைவீர்கள் வம்மினோ வம்மின் நம்
மாழ்வார் சரண் இணை நினைவீராம்–40- )

மின்னு திகிரி வலவன் விசும்பு எங்கும்
பன்னு திருப்பதிகள் வா வெல்லாம் துன்னு கலை
கற்றார்கள் தொண்டர் கழல் கமலம் கால் பணியப்
பெற்றார் பெறாதார் பிறப்பு

———-

ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய- திரு நூற்று எட்டு திருப்பதி அந்தாதி

ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
யோர் பதின் மூன்றா மலை நாடு ஓரிரண்டாம் சீர் நடு நா
டாறோடீ ரெட்டுத் தொண்டை யவ்வட நாடாறிரண்டு
கூறு திரு நாடு ஒன்றாகக் கொள்–6-

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்
பொற் பாதம் என் தலை மேல் பூ –109-

பதின்மர் உரைத்த பதி ஒரு நூற்று எட்டும்
துதி செய்ய அந்தாதி சொன்னான் அதிக
குணவாள பட்டர் இரு கோகனத் தாள் சேர்
மணவாள தாசன் வகுத்து

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: