Archive for December, 2021

ஸ்ரீ நீளா ஸூக்தம் (ஸ்ரீ தைத்ரீய ஸம்ஹிதை, 4-வது காண்டம், 4-வது ப்ரபாடகம், 12-வது அனுவாகம்)

December 31, 2021

ஸ்ரீ நீளா ஸூக்தம்

(ஸ்ரீ தைத்ரீய ஸம்ஹிதை, 4-வது காண்டம், 4-வது ப்ரபாடகம், 12-வது அனுவாகம்)

ஓம் நீளா தேவீம் ஸரணம் அஹம் ப்ரபத்யே
க்ருணாஹி

க்ருதவதீ ஸவிதராதி பத்யை: பயஸ்வதீர் அந்திராஸானோ அஸ்து
த்ருவா திஸாம் விஷ்ணு பத்ன்ய-கோரா ஸ்யேஸானா ஸஹஸோயா

மனோதா ப்ருஹஸ்பதிர்-மாதரிஸ் வோத வாயுஸ்-ஸந்துவானா வாதா அபி
நோ க்ருணந்து விஷ்டம்போ திவோதருண: ப்ருதிவ்யா

அஸ்யேஸானா ஜகதோ விஷ்ணு பத்னீ

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

—————————

க்ருதவதீ –புருஷகாரம்
ஸவிதராதி பத்யை -நெருக்கம் போகும் தலைமை இவளுக்கே
பயஸ்வதீ -நெய் பால் அனைத்தும் அளிப்பவள்
அந்திராசா நோ அஸ்து -ஸர்வ அபீஷ்டங்களையும் அளிப்பவள்
த்ருவா திசாம் -வழி -நிலை பெற்ற திசை காட்டி அருளுபவள்
விஷ்ணு பத்ந்யகோரா -கோரா பார்வை இல்லை -ஸ்ரீ விஷ்ணு பத்னீ
ப்ருஹஸ் பதிர் மாதரிஸ் வோதா வாயுஸ் –ப்ருஹஸ்பதியும் வாயுவும் -அடங்கி வழிபடுபவர் –

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஸூக்தம்-(ஸ்ரீ ருக்வேத ஸம்ஹிதை, 4-வது அஷ்டகம், 11-வது ஸூக்தம்)

December 31, 2021

ஸ்ரீ ஸூக்தம்

ஓம் ||
ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜத ஸ்ர’ஜாம் |
சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |–1-

ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண-ரஜ-தஸ்ரஜாம் சந்த்ராம்
ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ

ஜாத வேத -எல்லாவற்றையும் அறியும் அக்னி தேவனே ,
ஹிரண்ய வர்ணாம் -பொன் நிறத்தவளும்.
ஹரிணீம் -பாவங்களைப் போக்குபவளும் ,
ஸ்வர்ண ரத ஸ்ரஜாம்-தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும் ,
சந்த்ராம்- நிலவு போன்றவளும் ,
ஹிரண்மயீம் -பொன்னே உருவானவளும்,
லக்ஷ்மீம்…
மே ஆவஹ -என்னிடம் எழுந்து அருளச் செய்வாயாக

——-

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |
யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||–2-

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ-மநப-காமிநீம் யஸ்யாம்
ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம் புருஷானஹம்

ஜாத’வேதோ -அக்னி தேவதையே
ஹிர’ண்யம் -பொன்னையும்
காம் -பசுக்களையும்
அஶ்வம்-குதிரைகளையும்
புரு’ஷான் -உறவினரையும்
அஹம் விந்தேயம் -நான் பெறுவேனோ
தாம் -அந்த ஸ்ரீ லஷ்மியை
ம ஆவ’ஹ -என்னிடம் எழுந்து அருள்ச செய்வாயாக
லக்ஷ்மீமன’பகாமினீ”ம் யஸ்யாம் -அந்த மஹா லஷ்மியை-என்னிடம் இருந்து விலகாமல் இருக்கும் படி செய்வாயாக –

————-

அஶ்வ பூர்வாம் ர’தமத்யாம் ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் |
ஶ்ரியம்’ தேவீமுப’ஹ்வயே ஶ்ரீர்மா தேவீர்ஜு’ஷதாம் ||–3-

அஸ்வபூர்வாம் ரத-மத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதிநீம்
ஸ்ரியம் தேவீ- முபஹ்வயே ஸ்ரீர்மா தேவீர் ஜுஷதாம்

அஶ்வ பூர்வாம் -முன்னால் குதிரைகளும்
ர’த மத்யாம் -நடுவில் ரதங்களும்
ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் -களிறுகளின் பிளிறல் களை தனக்கு அறிகுறியாகக்கொண்ட வளுமான
ஶ்ரியம்’ தேவீம் -மனதுக்கு உகந்தவளுமான ஸ்ரீ தேவியை
உப’ஹ்வயே -அழைக்கின்றேன்
ஶ்ரீர்மா தேவீர் ஜு’ஷதாம் –ஸ்ரீ தேவியே அடியேனை விட்டுப் பிரியாமல் நித்ய வாஸம் செய்து அருளுவாயாக –

————-

காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்ருப்தாம் தர்பயம்’தீம் |
பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||–4-

காம் ஸோ ஸ்மிதாம் ஹிரண்ய ப்ராகாரா மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம்
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோப ஹ்வயே ஸ்ரியம்

ஸ்மிதாம் -மந்தஹாஸம் தவழ்பவள்
ஹிர’ண்ய ப்ராகாராம் -பொன் மயமான கோட்டையில் திகழ்பவளும்
ஆர்த்ராம்-கருணை நிறைந்தவளும்
ஜ்வலம்’தீம் -தேஜஸ் மிக்கவளும்
த்ருப்தாம் -மனம் நிறைந்து இருப்பவளும்
தர்பயம்’தீம் -தன்னை ஸ்துதிப்போர்க்கு ஆனந்தம் ஊட்டுபவளும்
பத்மே ஸ்திதாம் -தாமரையில் நிலை பெற்றவளும்
பத்ம வ’ர்ணாம் -தாமரை நிறத்தவளும்
காம் -யாரோ
தாம் ஶ்ரியம் -அந்த மனத்துக்கு உகந்த ஸ்ரீ லஷ்மியை
இஹ-இங்கே
உ ப’ஹ்வயே -வேண்டுகிறேன் –

——

சந்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |
தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌ அலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்ரு’ணே ||–4-

சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேஜுஷ்டா-முதாராம்
தாம் பத்மினீமீம் ஸரண-மஹாம் ப்ரபத்யே அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே

லோகே -உலகோர்க்கு
சந்த்ராம் -குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும்
ப்ர’பாஸாம் -பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும்
யஶஸா ஜ்வலம்’தீம் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும்
ஶ்ரியம்’ தேவஜு’ஷ்டாம் -தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும்
உதாராம்–வண்மை மிக்கவளும்
தாம் பத்மினீ’ம் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும்
ஈம் -ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்
தாம் ஸ்ரீ யம் -அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை
ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன்
த்வாம் வ்ரு’ணே –உன்னை வேண்டுகிறேன்
அலக்ஷ்மீர் மே நஶ்யதாம் -என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும் –

————

ஆதித்யவ’ர்ணே தபஸோ‌உதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |
தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ ||–5-

ஆதித்ய-வர்ணே தபஸோ திஜாதோ வனஸ்பதிஸ்தவ வ்ரு÷க்ஷõத பில்வ:
தஸ்ய பலானி தபஸா நுதந்து மாயாந்தராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ:

ஆதித்ய-வர்ணே -ஸூர்யனின் நிறத்தவளே
தவ தபஸோ-உன்னுடைய அருளாலே
வனஸ்பதி பில்வ: வ்ருக்ஷ அ திஜாதோ – கான தலைவனான வில்வ மரம் உண்டாயிற்று
தஸ்ய பலானி -அதே போல் உனது அருளின் பலத்தாலேயே
மாயா அந்தராயாஸ்-அறியாமையாகிய உள் இருட்டையும்
பாஹ்யா அலக்ஷ்மீ:–வெளியில் உள்ள அமங்களங்களையும் அழிக்கட்டும் –

———–

உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |
ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்ரு’த்திம் ததாது’ மே ||–6-

உபைது மாம் தேவஸக: கீர்த்திஸ்ச மணினா ஸஹ
ப்ராதுர் பூதோ ஸ்மி ராஷ்ட்ரே-ஸ்மின் கீர்த்திம்ருத்திம் ததாது மே

தேவஸக: -செல்வத்துக்குத் தலைவனான குபேரனும்
கீர்த்திஸ்ச –புகழின் தேவனும்
மணினா ஸஹ –என்னை நாடி வர வேண்டும்
அஸ்மின் ராஷ்ட்ரே-இந்த நாட்டிலே
ப்ராதுர் பூத அஸ்மின் -அடியேன் பிறந்திருக்கிறேன்
கீர்த்திம் ருதிம் ததாது மே-அடியேனுக்கு பெருமையையும் செல்வமும் வழங்கி அருள்வாய்

———-

க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |
அபூ’திமஸ’ம்ருத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்ருஹாத் ||-7-

க்ஷúத்-பிபாஸா மலாம் ஜ்யோஷ்டா-மலக்ஷ்மீம் நாஸயாம்யஹம்
அபூதி-மஸம்ருத்திம் ச ஸர்வான் நிர்ணுத மே க்ருஹாத்–7-

க்ஷúத்-பிபாஸா மலாம் -பசியினாலும் தாகத்தினாலலும் இளைத்து
ஜ்யோஷ்டா-மலக்ஷ்மீம் யஹம்-செல்வத்தினில் இருந்து விலகிய மூதேவியை நான்
மே க்ருஹாத்-நாஸயாம்-எனது இல்லத்தில் இருந்து விலக்குகிறேன்
அபூதி-மஸம்ருத்திம் ச ஸர்வான் நிர்ணுத -அனைத்து ஏழ்மையையும் வறுமையையும் அகற்றி அருளுக –

———

கம்தத்வாராம் து’ராதர்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |
ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||–8-

கந்த-த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம்
ஈஸ்வரீ ஸர்வ-பூதானாம் தாமி-ஹோபஹ்வயே ஸ்ரியம்

கந்த-த்வாராம் -பரிமளமே வடிவானவளும்
துராதர்ஷாம் -வெல்ல முடியாதவளும்
நித்ய புஷ்டாம் -நித்ய வலிமை தருபவளும்
கரீஷிணீம் -அனைத்தும் நிறைந்தவளும்
ஈஸ்வரீ ஸர்வ-பூதானாம் -அனைவருக்கும் ஸர்வேஸ்வரியுமான
தாம் -அந்த மஹா லஷ்மியை
இஹ உபஹ்வயே -இங்கே எழுந்து அருளப் பிரார்த்திக்கிறேன் –

———-

மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |
பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||–9-

மனஸ: காம-மாகூதிம் வாச: ஸத்யமஸீமஹி
பஸூனாம் ரூப மன்னஸ்ய மயி ஸ்ரீ: ஸ்ரயதாம் யஸ:

ஸ்ரீ:
மனஸ: காமம் -மனதில் எழும் ஆசைகளையும்
ஆகூதிம் -தர்மத்துக்கு முரண் ஆகாத மகிழிச்சிகளையும்
வாச: ஸத்யம் -வாக்கில் உண்மையையும்
பஸூனாம் ரூப மன்னஸ்ய -பசுக்களாலும் அழகாலும் அன்னத்தாலும் வரும் மகிழ்ச்சிகளை
அஸீமஹி -அனுபவிக்க வேண்டும் படி அருள வேண்டும்
மயி ஸ்ரயதாம் யஸ:-எனக்கு பெருமை உண்டாகும் படி அருள வேண்டும்

——–

கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |
ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||–10-

கர்தமேன ப்ரஜா பூதா மயி ஸம்பவ கர்தம
ஸ்ரியம் வாஸய மே குலே மாதரம் பத்ம-மாலிநீம்

கர்தமேன ப்ரஜா பூதா கர்தம -கர்தம முனிவரே உமக்கு மகளாகத் தோன்றிய மஹா லஷ்மீ தேவி
மயி ஸம்பவ-என்னிடம் தோன்ற வேண்டும்
பத்ம-மாலிநீம்-தாமரை மாலை அணிந்தவளும்
ஸ்ரியம் மாதரம் -அன்னையான ஸ்ரீ தேவி
மே குலே வாஸய-என்னுடைய குலத்திலே தங்கச் செய்து அருள வேண்டும் –

———-

ஆபஃ’ ஸ்றுஜம்து’ ஸ்னிக்தானி சிக்லீத வ’ஸ மே க்றுஹே |
னி ச’ தேவீம் மாதரம் ஶ்ரியம்’ வாஸய’ மே குலே ||–11-

ஆப: ஸ்ருஜந்து ஸ்நிக்தானி சிக்லீத வஸ மே க்ருஹே
நி-சதேவீம் மாதர ஸ்ரியம் வாஸய மே-குலே

சிக்லீத -மஹா லஷ்மியின் திருமகனான சிக்லீதர முனிவரே
ஆப: -தண்ணீர்
ஸ்ருஜந்து ஸ்நிக்தானி -சிறந்த உணவுப் பொருள்களை விளைக்கட்டும்
வஸ மே க்ருஹே-எனது இல்லத்தில் வசிக்க வேண்டும்
ச-மேலும்
தேவீம் மாதர ஸ்ரியம் -உலகுக்கும் உனக்கும் அன்னையான ஸ்ரீ தேவி
நிவாஸய மே-குலே-என்னுடைய குலத்திலே எப்பொழுதும் நித்ய வாஸம் செய்து அருள வேண்டும் –

———

ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |
ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||–12-

ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹேமமாலினீம்
ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ

ஜாதவேதோ -அக்னி தேவனே –
ஆர்த்ராம் -கருணை மிக்கவளும்
புஷ்கரிணீம் -தாமரைத் தடாகத்தில் வசிப்பவளும்
புஷ்டிம் -உணவூட்டி அனைவரையும் வளர்க்கும் தாயானவளும்
ஸுவர்ணாம் -பசும் பொன் நிறம் உடையவளும்
ஹேமமாலினீம்-பொன் மாலை அணிந்தவளும்
ஸூர்யாம் -பகலவன் போல் தேஜஸ்ஸூ மிக்கவளும்
ஹிரண்மயீம் -பொன் மயமானவளும்
லக்ஷ்மீம் ம ஆவஹ-ஸ்ரீ மஹா லஷ்மியை என்னிடம் எழுந்து அருளச் செய்து அருள வேண்டும்

————

ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |
சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||–13-

ஆர்த்ராம் ய: கரிணீம் யஷ்டிம் பிங்கலாம் பத்மமாலினீம் சந்த்ராம்
ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ

ஜாதவேதோ -அக்னி தேவனே
ய:
ஆர்த்ராம் -கருணை மிக்கவளும்
கரிணீம் -செயல் திறத்தில் கம்பீரம் உள்ளவளும்
யஷ்டிம் -தர்மம் நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும்
பிங்கலாம் -குங்குமத்தின் நிறத்தை உடையவளும்
பத்மமாலினீம் –தாமரை மாலை அணிந்தவளும்
சந்த்ராம்-நிலவைப் போன்றவளும்
ஹிரண்மயீம் -பொன் மயமானவளுமான
லக்ஷ்மீம் -ஸ்ரீ தேவியை
ம ஆவஹ-என்னிடம் எழுந்து அருளச் செய்து அருள வேண்டும் –

————

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |
யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||–14-

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ-மனபகாமினீம்
யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோ-ஸ்வாம் விந்தேயம் புருஷானஹம்

ஜாதவேதோ-அக்னி தேவனே
யஸ்யாம் -யாரால்
ப்ரபூதம்-அளவிட முடியாத
ஹிரண்யம் -பொன்னும்
காவோ -பசுக்களும்
தாஸ்ய-பணிப்பெண்டிரும்
அஸ்வான் -குதிரைகளும்
புருஷான-பணியாட்களும்
அஹம்-நான்
விந்தேயம் -பெறுவேனோ
தாம் ம லக்ஷ்மீ- -அந்த ஸ்ரீ தேவியை
அனபகாமினீம் ம ஆவஹ-என்னிடம் இருந்து விலகாது இருக்குமாறு செய்து அருள வேண்டும் –

————

ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி |
தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||–15-

ஸ்ரீ மஹா லஷ்மியை அறிந்து கொள்வோம்
திருமாலின் கேள்வியைத் தியானிப்போம்
அந்த திருமகள் நம்மைத் தூண்டி அருளுவாளாக –

————

பல ஸ்ருதிகள் –

ய: ஸுசி: ப்ரயதோ பூத்வா ஜுஹுயா-தாஜ்ய-மன்வஹம்
ஸூக்தம் பஞ்சதஸர்சம் ச ஸ்ரீ காம: ஸததம் ஜபேத்

பத்மாநனே பத்ம ஊரூ பத்மாக்ஷீ பத்ம – ஸம்பவே தன்மே
பஜஸி பத்மாக்ஷீ யேந ஸெளக்யம் லபாம்யஹம்

அஸ்வதாயீ கோதாயீ தனதாயீ மஹாதனே தனம்-மே
ஜுஷதாம்-தேவி ஸர்வ காமாம்ஸ்ச தேஹி மே

பத்மாநனே பத்ம-விபத்ம-பத்ரே பத்ம-ப்ரியே பத்ம-தலாயதாக்ஷி
விஸ்வ-ப்ரியே விஸ்வ மனோ-நுகூலே த்வத்பாத – பத்மம் மயி ஸந்நிதத்ஸ்வ

புத்ர-பௌத்ர-தனம் தான்யம் ஹஸ்த்-யஸ்வாதிகவே-ரதம்
ப்ரஜானாம் பவஸீ மாதா ஆயுஷ்மந்தம் கரோது மே

தன-மக்நிர்-தனம் வாயும்-தனம் ஸூர்யோ-தனம் வஸு: தனம்
இந்த்ரோ ப்ருஹஸ்பதிர்-வருணம் தனமஸ்து தே

வைநதேய ஸோமம் பிப ஸோமம் பிபது வ்ருத்ரஹா ஸோமம்
தனஸ்ய ஸோமினோ மஹ்யம் ததாது ஸோமிந:

ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம் ந லோபோ நாஸுபா மதி:
பவந்தி க்ருத-புண்யானாம் பக்தானாம் ஸ்ரீஸுக்தம் ஜபேத்:

ஸரஸிஜ-நிலயே ஸரோஜ-ஹஸ்தே தவலதராம்ஸுக-கந்தமால்ய-
ஸோபே பகவதி-ஹரிவல்லபே மனோஜ்ஞே த்ரிபுவன-பூதிகரி ப்ரஸீத மஹ்யம்

விஷ்ணு-பத்நீம் க்ஷமாம் தேவீம் மாதவீம் மாதவ-ப்ரியாம்
லக்ஷ்மீம் ப்ரிய-ஸகீம் தேவீம் நமாம்யச்யுத-வல்லபாம்

மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு-பத்ன்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மீ: ப்ரசோதயாம்

மஹாதேவ்யை ச வித்மஹே ருத்ர-பத்ன்யை ச தீமஹி
தந்நோ கௌரீ ப்ரசோதயாத்

ஸ்ரீர்-வர்சஸ்வ-மாயுஷ்ய-மாரோக்ய-மாவிதாச்-சே
õபமாநாம்- மஹீயதே தான்யம் தனம் பஸும்
பஹுபுத்ர-லாபம் ஸத-ஸம்வத்ஸரம் தீர்கமாயு:

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

ஶ்ரீ-ர்வர்ச’ஸ்வ-மாயு’ஷ்ய-மாரோ”க்யமாவீ’தாத் பவ’மானம் மஹீயதே” |
தான்யம் தனம் பஶும் பஹுபு’த்ரலாபம் ஶதஸம்”வத்ஸரம் தீர்கமாயுஃ’ ||

ஓம் ஷாந்தி ஃ ஷாந்தி ஃஷாந்தி ஃ’ ||

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூ ஸூக்தம் (ஸ்ரீ தைத்ரீய ஸம்ஹிதை, முதல் காண்டம், 5-வது ப்ரபாடகம், 3-வது அனுவாகம்)

December 31, 2021

ஸ்ரீ பூ ஸூக்தம்

(ஸ்ரீ தைத்ரீய ஸம்ஹிதை, முதல் காண்டம், 5-வது ப்ரபாடகம், 3-வது அனுவாகம்)

பூமிர்பூம்னா-த்யௌர்-வரிணா-ந்தரிக்ஷம்
மஹித்வா உபஸ்தே தே தேவ்யதிதே-க்னி-மன்னாத

மன்னாத்யாயாததே ஆயங்கௌ: ப்ருஸ்னிரக்ரமீ தஸனன்
மாதரம் புன: பிதரம் ச ப்ரயந்த்ஸுவ: த்ரி ஸத்தாம விராஜதி வாக்

பதங்காய ஸிஸ்ரியே ப்ரத்யஸ்ய வஹ த்யுபி: அஸ்ய
ப்ராணாதபானத்-யந்தஸ்சரதி ரோசனா வ்யக்யன் மஹிஷ: ஸுவ:

யத்த்வா க்ருத்த: பரோவபமன்யுனா யதவர்த்யா ஸுகல்ப-மக்னே
தத்தவ புனஸ்-த்வோத்தீபயாமஸி யத்தே மன்யு பரோப்தஸ்ய ப்ருதிவீ-

மனுதத்வஸே ஆதித்யா விஸ்வே தத்தேவோ வஸவஸ்ச ஸமாபரன்
மனோஜ்யோதிர்-ஜுஷதா-மாஜ்யம் விஸ்சின்னம் யஜ்ஞ ஸமிமம் ததாது
ப்ருஹஸ்பதிஸ்-தனுதாமிமம் நோ விஸ்வே தேவா இஹ மாதயந்தாம்

மேதினீ தேவீ வஸுந்தரா ஸ்யாத்-வஸுதா தேவீ வாஸவீ
ப்ரஹ்மவர்ச்சஸ: பித்ருணா ஸ்ரோத்ரம் சக்ஷúர்மன: தேவீ ஹிரண்ய-
கர்பிணீ தேவீ ப்ரஸோதரீ ரஸனே ஸத்யாயனே ஸீத

ஸமுத்ரவதீ ஸாவித்ரீஹ நோ தேவீ மஹ்யகீ மஹாதரணீ
மஹோர்யதிஸ்த ஸ்ருங்கே ஸ்ருங்கே யஜ்ஞே யஜ்ஞே விபீஷணீ
இந்த்ரபத்னீ வ்யாஜனீ ஸுரஸித இஹ

வாயுபரீ ஜலஸயனீ ஸ்வயந்தாரா ஸத்யந்தோபரி மேதினீ
ஸோபரிதத்தங்காய

விஷ்ணு-பத்னீம் மஹீம் தேவீம் மாதவீம் மாதவ-ப்ரியாம்
லக்ஷ்மீம் ப்ரிய-ஸகீம் தேவீம் நமாம் யச்யுத வல்லபாம்

தனுர்தராயை ச வித்மஹே ஸர்வ ஸித்த்யை ச தீமஹி
தந்நோ தரா ப்ரசோதயாத்

இஷு-ஸாலி-யவ-ஸஸ்ய-பலாட்யாம் பாரிஜாத ரு-ஸோபித-மூலே
ஸ்வர்ண ரத்ன மணி மண்டப மத்யே சிந்தயேத் ஸகல-லோக-தரித்ரீம்

ஸ்யாமாம் விசித்ராம் நவரத் பூஷிதாம் சதுர்புஜாம்
துங்கபயோதரான்விதாம் இந்தீவராக்ஷீம் நவஸாலிமஞ்ஜரீம் ஸுகம்
ததானாம் வஸுதாம் பஜாமஹே

ஸக்துமிவ தித உனா புனந்தோ யத்ர தீரா மனஸா
வாசமக்ரத அத்ரா ஸகாய: ஸக்யானி ஜானதே
பைத்ரஷாம் லக்ஷ்மீர்-நிஹிதா திவாசி

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

இதி பூ ஸூக்தம்

———–

பூமி -மிக பெரியவள் –அனைத்தையும் அடக்கி -விஸ்வம் பர -அவனையும் தரிக்கும் ஸ்ரீ பாதுகை -அத்தையும் தரிக்கும் –
பூம் நா பரந்து விரிந்து சப்த த்வீபங்கள் -ஜம்பூத் த்வீபம் நாம் –
மேருவின் தக்ஷிண திக்கில் நாம் உள்ளோம்
லக்ஷம் யோஜனை நடுவில் உள்ள ஜம்பூத் த்வீபம்
கடல் அதே அளவு -அடுத்த த்வீபம் -இரண்டு லக்ஷம் -இப்படியே -பூ லோகம்
மேலே ஆறு லோகங்கள் -கீழே ஏழு லோகங்கள் –
அண்டகடாகங்கள் -ஒவ் ஒரு அண்டத்துக்கும் ஒரு நான்முகன் –
யவ்ர்வரிணா– மேன்மை -ஆகாசம்
கர்ப்பத்துக்குள் உதைக்கும் குழந்தை -தாய் மகிழ்வது போலே நாம் பண்ணும் அபசாரங்களை கொள்கிறாள் –
தாங்கும் ஆதாரம் –
தேசோயம் ஸர்வ காம புக் –ஷேத்ரங்களே அபேக்ஷிதங்களைக் கொடுக்கும் –
ஸ்ரீ தேவி சாஸ்த்ர காம்யம் -இவளை ஸ்பர்சிக்கலாமே -தாய் நாடு தாய் மொழி –கர்ம பூமி -சாதனம் செய்து அவனை அடைய –

யவ்ர்வரிணா–ஆகாசமாகவே -ஸ்வர்க்கமும் சேர்த்து
அந்தரிக்ஷம் மஹீத்வா -அந்தரிக்ஷமும் பூமி பிராட்டியே
உபஸ்தே தே தே – வ்யதிதே அக்நி மந் நாத மந் நாத் யாயததே -ஜீவாத்மா சோறு -அருகில் சேர்ப்பது -அவனை தருவாள்
ஆயங்கவ் பிரதிஸ் நிரக்மீத -ஸூர்ய மண்டல மத்திய வர்த்தீ -நாராயணன் –
செய்யாதோர் ஞாயிற்றை காட்டி ஸ்ரீ தரன் மூர்த்தி ஈது என்னும் -அந்தர்யாமியாக வரிக்க
சநத் மாதரம் புந பித்தராஞ்ச ப்ரயன் ஸூவ -இவளைப் பற்ற வேண்டும் -பிராட்டி பரிகரம் என்றே உகப்பான் அன்றோ –

மேதி நீ தேவீ வஸூந்தரா ஸ்யாத் வஸூதா தேவீ வாஸவீ
திரு நாமங்கள் வரிசையாக -அருளிச் செய்கிறார் –
மேதிநீ -நம் மேல் ஆசை -மேதஸ்-மதம் மது கைடபர் இருந்ததால் -குழந்தை அழுக்கை தான் தாங்கி
பாசி தூர்த்துக் கிடந்த பார் மகள் –
தேவீ –காந்தி -பிரகாசம் -அழுக்கு கீழே சொல்லி -அதனாலே ஓளி –விடுபவன்
ஹிரண்ய வர்ணாம் -பெருமையால்
ராமன் குணங்களால் பும்ஸாம் சித்த அபஹாரி –கண்ணன் தீமையால் தோஷங்களால் ஜெயித்தவன் -கண்டவர் மனம் வழங்கும் –
வஸூந்தரா -தங்கள் வெள்ளி ரத்னம் அனைத்தும் கொடுப்பவள் -வஸூ செல்வம்
வஸூ தா -வாஸவீ–போஷித்து வளர்க்கிறாள் –அன்னம் இத்யாதி
தரணீ -தரிக்கிற படியால்
பிருத்வி –பிருத் மஹா ராஜா -காலம் -பஞ்சம் வர -தநுஸ் கொண்டு துரத்த —
என்னை வைத்துக் கொண்டே வாழ -பசு மாட்டு ஸ்தானம் -இடைப்பிள்ளையாக பிறந்து கரந்து கொள்
கடைந்து அனைத்தும் வாங்க பட்டதால் பிருத்வீ
அவனி –சர்வம் சகேத் சகித்து கொள்வதால்

ஸ்ரீ விஷ்ணு சித்த கல்ப வல்லி–சாஷாத் ஷமா -கருணையில் ஸ்ரீ தேவியை ஒத்தவள் -இரண்டையும்
ஸ்ரீ வராஹ பெருமை -பட்டர் –
மீன் சமுத்திரத்தில் அவரே
கூர்மம் மந்த்ரம் அழுத்த
நரசிம்மம் கழுத்துக்கு மேல்
வாமநன் வஞ்சனை
கண்ணன் ஏலாப் பொய்கள் உரைப்பான்
சம்சார பிரளயம் எடுக்க ஸ்ரீ வராஹம் –
சத ரூபை என்பவள் -ஸ்வயம்பு மனு கல்யாணம் -ஸ்ரீ வராஹ அவதாரம் -சப்புடா பத்ர லோசனன் -அப்பொழுதும் தாமரைக் கண்ணன்
ஆமையான கேசனே -கேசமும் உண்டே -ப்ரஹ்ம வர்ச்சஸ பித்ரூணாம் ஸ்ரோத்ரம்
ஈனச் சொல் ஆயினுமாக -பிரியம் ஹிதம் அருளும் மாதா பிதா -ஆழ்வார் -நைச்ய பாவம்–கிடந்த பிரான் –
இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும் -தன்னையே கொடுக்காதே -அதுவும் –
ஞானப் பிரானை அல்லால் இல்லது இல்லை – -நான் கண்ட நல்லதுவே –
அந்த ஞானப் பிரான் -பூமி பிராட்டியை இடம் வைத்து நமக்கு இவள் திருவடிகளைக் காட்டி அருளுகிறார் –
தானே ஆசன பீடமாக இருந்து காட்டிக் கொடுத்து அருளுகிறார் –
அவன் இடம் உபதேசம் பெற்று நம்மிடம் கொடுத்து அருளினாள் ஆண்டாள் –
கீர்த்தனம் -பிரபதனம் -ஸ்வஸ்மை அர்ப்பணம் -முக்கரணங்கள் -வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்துக் கை தொழுது
ஸூ கரம் சொன்ன ஸூ கர உபாயம் –
அப்பொழுது தானே இவள் நடுக்கம் போனது –
அப்பொழுதைக்கு இப்பொழுதே சொல்லி வைத்தேன் -அஹம் ஸ்மராமி –நயாமி மத் பக்தம்-
திரு மோகூர் ஆத்தன் இவன் வார்த்தையை நடத்தி காட்டி அருளுகிறார் -ஆப்தன் -காள மேகப் பெருமாள் –
சரண்ய முகுந்தத்வம் ஸுரி பெருமாள் –
கிடந்து இருந்து நின்று அளந்து இடந்து உண்டு உமிழ்ந்து பார் என்னும் மடந்தையை -மால் செய்யும் –
ஜீவனாம்சம் போலே மார்பில் ஏக தேசம் கொடுத்து –இவள் இடம் -மால் –
திரு மால் – திருவின் இடம் மால் -திரு இடம் மால் -வேறே இடத்தில் மால் -என்றுமாம்
விராடன் -அரவாகி சுமத்தியால் –எயிற்றில் ஏந்திதியால்–ஒரு வாயில் ஒளித்தியால்-ஓர் அடியால் அளத்தியால்-
மணி மார்பில் வைகுவாள் இது அறிந்தால் சீறாளோ-சா பத்னி –நிழல் போலே –
லஷ்மீர் -ராஜ ஹம்சம் -பஷி-ஆனந்த நடனம் -சாயா இவ -இவர்கள் –
நிழல் தானே நிழல் கொடுக்க முடியும் -இவள் மூலமே நமக்கு –சேர்ந்து கைங்கர்யம் –
திரு மகளும் மண் மகளும் ஆய் மகளும் சேர்ந்தால் திரு மகளுக்கே–வருந்தி அழ வில்லை –
கடல் அசையும் நானே ஸ்திரம் -கால மயக்கம் துறை -பட்டர் நிர்வாகம்
மழை காலம் வருவேன் சொன்னவன் வர வில்லை -தோழி சமாதானம் -மழை இல்லை -ஸ்ரீ தேவி -கூட போனதால் பூமி பிராட்டி அழுகை –
வருத்தம் -இல்லை -பொய்யான விஷயம் சொல்லி சமாதானம் –
சஜாதீயை பூமி தேவதை –ஸ்ரீ தேவி விஜாதீயை -விஷ்ணு -வைஷ்ணவி -ஸ்ரீ வைஷ்ணவி ஆக முடியாதே அவள் –
குணம் அவள் -மணம் இவள் -செல்வம் அவள் -செல்வம் விளையும் ஸ்தானம் இவள்
அழகு கொண்டவள் -புகழ் கொண்டவள் -ஆதரவு -ஆதாரம் –
அஹந்தை-கோஷிப்பாள் -போஷிப்பவள் இவள் –

சமுத்ராவதீ ஸாவித்ரீ -ஆடை சமுத்திரம் நெற்றி திலகம் ஸூரியன்- சுடர் சுட்டி சீரார் –
மலைகள் திரு முலைத் தடங்கள் -புற்று -காது -வால்மீகி -24000-ஸ்லோகங்கள் -பூமி பிராட்டியே சாஷாத் திருப்பாவை –
கோதாவுக்காகவே தக்ஷிணா -ஸ்ரீ அரங்கன் -தேசிகன் -தந்தை சொல்ல மாட்டார்களே -அதனால் விபீஷணனுக்காக
கூந்தல் -மழை –த்ரி வேணி சங்கம் –
படி எடுத்து காட்டும் படி அன்று அவன் படிவம் –தோற்றிற்று குரங்கை கேட்க -ஆண்டாள் -சங்கரய்யா உன் செல்வம் சால அழகியதே –
த்ரிஜடை கனவால் அவள் -ஆயனுக்காக தான் கண்டா கனவு
சங்கொலியும் சாரங்க வில் நாண் ஒலியும் சேர்த்து வேண்டும் இவளுக்கு –
தெளிந்த சிந்தைக்கு போக்ய பாக துவரை–பூமியில் நின்றும் இருந்தும் கிடந்தும் -என் நெஞ்சுள்ளே –
அரங்கன் இடமும்-ஸேவ்யமான அம்ருதம் நம் பெருமாள் –
தொட்டிலுலும் -ராமன் கிருஷ்ணன் -கிடந்தவாறும் -நின்றவாறும் -இருந்தவாறும் –

ஓம் தநுர்த் தராயை வித்மஹே ஸர்வ சித்தயைச தீ மஹீ
தந்நோ தரா ப்ரசோதயாத் –தனுர் திருக்கையில் வைத்து நம் -ஞானம் -தூண்டி விடுகிறாள்
குற்றம் இல்லையே –அவள் பொறுக்க சொல்ல -இவள் யாருமே குற்றம் செய்ய வில்லை -இருவர் இருக்க நமக்கு என் குறை –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் – ஸ்ரீ ரிக்வேதம்

December 31, 2021

ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் – ஸ்ரீ ரிக்வேதம்

ஸ்ரீ ரிக்வேதம் முழுவதிலும் ஸ்ரீ மஹாவிஷ்ணு பல இடங்களில் துதிக்கப் பட்டாலும்,
அவருக்கென்று முழுமையாக சில துதிகள் மட்டுமே உள்ளன.அவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது இந்த ஸுக்தம்.

ஓம்

விஷ்ணோர் நுகம் வீர்யாணி ப்ரவோசம்
ய: பார்த்தி வானி விமமே ரஜாக்ம்ஸி
யோ அஸ்க பாயதுத் தரகம் ஸதஸ்தம்
விசக்ர மாணஸ் த்ரேதோருகாய: –1-

யார் பூமியையும் அதிலுள்ள அனைத்தயும் உருவாக்கி உள்ளாரோ,
மேலே உள்ள விண்ணுலதைத் தாங்கியுள்ளாரோ, மூன்றடியால் மூன்று உலகங்களையும் அளந்தாரோ,
சான்றோரால் போற்றப் படுகிறாரோ அந்த மஹாவிஷ்ணுவின் மகிமை மிக்க செயல்களைப் போற்றுவோம்.

———

விஷ்ணோரராடமஸி விஷ்ணோ: ப்ருஷ்ட்டமஸி
விஷ்ணோ: ச்ஞப்த்ரேஸ்தோ விஷ்ணோஸ் ஸ்யூரஸி
விஷ்ணோர் த்ருவமஸி வைஷ்ணவ மஸி
விஷ்ணவே த்வா –2-

யாக மண்டபத்தின் வாசல்படி விட்டமே, நீ விஷ்ணுவின் நெற்றியாக விளங்குகிறாய். பின்புறமாக இருக்கிறாய்.
வாசற்கால்களே, நீங்கள் அவரது இரண்டு கால்களாக உள்ளீர்கள்.
கயிறே, நீ அவரது நாடிகளாக இருக்கிறாய்.
முடிச்சுகளே, நீங்கள் விஷ்ணுவின் முடிச்சுகளாக இருக்கிறீர்கள்.
யாக மண்டபமே, நீ விஷ்ணுமயமாகவே இருக்கிறாய்.
விஷ்ணுவின் அருளைப் பெறுவதற்காக உன்னை வணங்குகிறேன்.

——–

ததஸ்ய ப்ரியமபிபாதோ அச்யாம்
நரோ யத்ர தேவயவோ மதந்தி
உருக்ரமஸ்ய ஸ ஹி பந்துரித்தா
விஷ்ணோ: பதே பரமே மத்வ உத்ஸ: –3-

எங்கே தேவர்கள் மகிழ்கிறார்களோ, எங்கே மனிதர்கள் போக விரும்பு கிறார்களோ,
எது விஷ்ணுவின் மனத்திற்கு உகந்த இருப்பிடமோ, எங்கே அமுதத் தேனூற்று பெருகுகின்றதோ,
விஷ்ணுவின் மேலான அந்தத் திருவடிகளை நான் அடைவேனாக.

———–

ப்ரதத்விஷ்ணு: ஸ்தவதே வீர்யாய
ம்ருகோ ந பீம: குசரோ கிரிஷ்ட்டா:
யஸ்யோருஷு த்ரிஷுவிக்ரமணேஷு
அதிக்ஷியந்தி புவனானி விச்வா
பரோ மாத்ரயா தனுவா வ்ருதான
ந தே மஹித்வமன்வச்னுவந்தி –4-

மலைமீது திரிகின்ற பெரிய யானை போல் சுதந்திரமானவரும்,
மூன்று பெரிய அடிகளில் எல்லா உலகங்களையும் அடக்கியவருமான அந்த விஷ்ணுவை
அவரது மகிமைகளுக்காகப் போற்றுவோம்.

———–

உ பே தே வித்வ ரஜஸீ ப்ருதிவ்யா விஷ்ணோ
தேவத்வம் பரமஸ்ய வித்ஸே
விசக்ரமே ப்ருதிவீமேஷ ஏஷாம்
க்ஷேத்ராய விஷ்ணுர் மனுஷே தசஸ்யன் –5-

உமது மணம் நிறைந்ததான பூமி மற்றும் விண்ணுலகம் இரண்டையே நாங்கள் அறிவோம்.
ஒளி பொருந்திய திருமாலே, நீர் மட்டுமே மேலான உலகை அறிவீர்.
இந்த பூமியில் நீர் நடந்து, அதனை இருப்பிடமாகக் கொள்வதற்கு மனிதர்களுக்குக் கொடுத்துள்ளீர்.

—————

த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜனாஸ:
ஊருக்ஷிதிக்ம் ஸுஜனிமாசகார த்ரிர் தேவ:
ப்ருதிவீமேஷ ஏதாம் விசக்ரமே சதர்ச்சஸம் மஹித்வா
ப்ரவிஷ்ணுரஸ்து தவஸஸதவீயான்
த்வேஷக்ம் ஹ்யஸ்ய ஸ்தவிரஸ்ய நாம –6-

பணிவு மிக்க ஜனங்கள் அவரில் பாதுகாப்பான உறைவிடத்தைத் தேடுகிறார்கள்.
அவர் இந்த பூமியை அவர்களுக்காக பரந்த வாழ்விடமாகச் செய்துள்ளார்.
எண்ணற்ற அழகுகள் பொருந்திய இந்த பூமியை விஷ்ணு தமது மகிமையினால் மூன்று முறை அளந்துள்ளார்.
மஹா விஷ்ணுவே! உமது மேலான பெருமை காரணமாக நீர் விஷ்ணு என்று பெயர் பெறுகிறீர்.
மேலும், இது உமது மகிமைக்குப் பொருத்தமாகவே உள்ளது.

———-

அதோ தேவா அவந்து நோ யதா விஷ்ணுர் விசக்ரமே
ப்ருதிவ்யாஸ் ஸப்த தாமபி: இதம் விஷ்ணுர் விசக்ரமே
த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாக்ம் ஸுரே –7-

எந்த பூமியின் ஏழு பகுதிகளிலும் விஷ்ணு நடந்தாரோ அந்த பூமியின் பாவங்களிலிருந்து தேவர்கள் நம்மைக் காக்கட்டும்.
விஷ்ணு நடந்த போது தமது திருவடிகளை மூன்று முறை வைத்தார். அவரது திருப்பாத தூசியால் பூமி மூடப்பட்டது.

——————

த்ரீணி பதா விசக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்ய:
ததோ தர்மாணி தாரயன் விஷ்ணோ கர்மாணி பச்யதோ
யதோ வ்ரதானி பஸ்பசே இந்த்ரஸ்ய யுஜ்யஸ்ஸகா — 8-

விஷ்ணு அனைத்தையும் காப்பவரும் யாராலும் ஏமாற்றப்பட முடியாதவரும் ஆவார்.
அவர் தமது மூன்று அடிகளால் உலகை அளந்து இங்கே தர்மங்களை நிறுவியுள்ளார்.
இந்திரனின் நெருங்கிய நண்பரான விஷ்ணுவின் செயல்களைப் பாருங்கள்.
அவற்றின் மூலம் வாழ்க்கை நியதிகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

———-

தத் விஷ்ணோ பரமம் பதக்ம் ஸதா பச்யந்தி ஸூரய:
திவீவ சக்ஷுராததம் தத் விப்ராஸோ விபன்யவோ
ஜாக்ருவாக்ம் ஸஸ்ஸமிந்ததே விஷ்ணோர்யத் பரமம் பதம் -9-

பரந்த வானம் போல் கண்களை உடையவர்களான ரிஷிகள் விஷ்ணுவின் மேலான உறைவிடத்தை
எப்போதும் காண்கிறார்கள். கவிதையை விரும்புபவர்களும், முனிவர்களும்,
விழிப்புற்றவர்களுமான இவர்களே விஷ்ணுவின் மேலான அந்த உறைவிடத்தை ஒளிபெறச் செய்கிறார்கள்.

——————–

பர்யாப்த்யா அனந்தராயாய ஸர்பஸ்தோமோ(அ)திராத்ர
உத்தம மஹர் பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வஸ்ய
ஜித்யை ஸர்வமேவ தேனாப்னோதி ஸர்வம் ஜயதி –10-

அளவற்ற வற்றாத செல்வம் பெறுவதற்கும், மங்கா புகழ் பெறுவதற்கும் அதிராத்ரம் எனப்படும் யாகமே
மிக மேலான யாகம் ஆகிறது. அந்த யாகத்தால் எல்லாம் கிடைக்கிறது,
எல்லா வெற்றியும் கிடைக்கிறது, எல்லாமே அடையப் படுகிறது. எல்லாமே வளம் பெறுகிறது.

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

————-

ஸ்ரீ நாராயண ஸூக்தம் – ஸ்ரீ தைத்திரீய ஆரண்யகம் 4.10.13

December 31, 2021

ஸ்ரீ நாராயண ஸூக்தம் – ஸ்ரீ தைத்திரீய ஆரண்யகம் 4.10.13

ஸ்ரீ புருஷஸுக்தத்துடன் பாராயணம் செய்யப்படும் இந்த ஸுக்தம் தியானத்தின் செயல் முறையை விளக்குகிறது.
இந்த ஸூக்தத்தை ஓதி பொருளைச் சிந்தித்து பின்னர் தியானம் செய்வது மிக்க பலனைத் தரும்.

தியானம் என்பது இறைவனின் திரு சன்னிதியில் இருப்பது. ஒரு படத்தையோ உருவத்தையோ கற்பனை செய்து
கொண்டிருப்பதோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதோ அல்ல.
அவரது திரு சன்னிதியில் நாம் இருப்பதை உணர வேண்டும். அவர் பேரொளியுடன் திகழ்வதை மனத்தளவில் காண வேண்டும்.

———-

ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து ஸஹ வீர்யம் கரவாவஹை
தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

ஓம்

——–

ஸஹஸ்ர சீர்ஷம் தேவம் விச்வாக்ஷம் விச்வ சம்புவம்
விச்வம் நாராயணம் தேவமக்ஷரம் பரமம் பதம் -1-

ஆயிரக் கணக்கான தலைகள் உடையவரும், ஒளிமிக்கவரும், எல்லாவற்றையும் பார்ப்பவரும்,
உலகிற்கெல்லாம் மங்கலத்தைச் செய்பவரும், உலகமாக இருப்பவரும், அழிவற்றவரும்,
மேலான நிலை ஆனவரும் ஆகிய நாராயணன் என்னும் தெய்வத்தை தியானம் செய்கிறேன்.

——————-

விச்வத: பரமான் நித்யம் விச்வம் நாராயணக்ம் ஹரிம்
விச்வமே வேதம் புருஷஸ் தத் விச்வ முபஜீவதி -2-

இந்த உலகைவிட மேலானவரும், என்றும் உள்ளவரும், உலகமாக விளங்குபவரும்,
பக்தர்களின் துன்பங்களைப் போக்குபவருமாகிய நாராயணனை தியானம் செய்கிறேன்.

————–

பதிம் விச்வஸ் யாத்மேச்வரக்ம் சாச்வதகம் சிவமச்யுதம்
நாராயணம் மஹாஜ்ஞேயம் விச்வாத்மானம் பராயணம் -3-

உலகிற்கு நாயகரும், உயிர்களின் தலைவரும், என்றும் உள்ளவரும், மங்கல வடிவினரும், அழிவற்றவரும்,
சிறப்பாக அறியத் தக்கவரும், எல்லாவற்றிற்கும் ஆன்மாவாக இருப்பவரும்,
சிறந்த புகலிடமாக இருப்பவருமான நாராயணனை தியானம் செய்கிறேன்.

—————–

நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண பர:
நாராயணம் பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர:
நாராயண பரோ த்யாதா த்யானம் நாராயண பர: -4-

நாராயணனே சிறந்த ஒளி. நாராயணனே பரமாத்மா. நாராயணனே பரப் பிரம்மம். நாராயணனே மேலான உண்மை.
நாராயணனே தியானம் செய்பவர்களுள் சிறந்தவர். நாராயணனே சிறந்த தியானம்.

—————

இவ்வளவு மகிமைகளுடன் திகழ்கின்ற இறைவன் நம்முள்ளேயே இருக்கிறார் என்பதை அடுத்த மந்திரம் கூறுகிறது.

இது தியானத்தின் அடுத்தபடி. முதலில் மனம் எல்லையற்று பரந்த தெய்வத்தை நினைப்பதில் ஈடுபட்டது.
இப்போது எல்லை சுருக்கப்பட்டு பரந்திருந்த மனம் நம்மில் ஒன்று சேர்க்கப்படுகிறது.

யச்ச கிஞ்சிஜ் ஜகத் ஸர்வம் த்ருச்யதே ச்ரூயதே(அ)பி வா
அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித: –5-

உலகம் முழுவதிலும் காணப்படுவது எதுவாயினும் கேட்கப்படுவது எதுவாயினும் அவை அனைத்தையும்
உள்ளும் புறமும் வியாபித்தபடி நாராயணன் இருக்கிறார்.

————-

தியானத்தின் இறுதிப் படியாக மனம் இதயத்தில் குவிக்கப் படுவதுபற்றி இந்த மந்திரம் கூறுகிறது

அனந்த மவ்யயம் கவிகம் ஸமுத்ரே(அ)ந்தம் விச்வ சம்புவம்
பத்ம கோச ப்ரதீகாசகம் ஹ்ருதயம் சாப்யதோமுகம் –6-

முடிவற்றவரும், அழிவற்றவரும், அனைத்தும் அறிந்தவரும், சம்சாரப் பெருங்கடலின் இறுதியில்
(அதாவது, ஆசைகள் உணர்ச்சி வேகங்கள் போன்ற அலைகள் கொந்தளிக்கின்ற சம்சாரப் பெருங்கடலின்
இறுதியில் என்பது ஆசைகள் அடங்கி மனம் அமைதியுற்றபின்) இருப்பவரும்,
உலகிற்கெல்லாம் மங்கலத்தைச் செய்பவரும் ஆகிய நாராயணனை
கீழ் நோக்கிய மொட்டுப் போல் இருக்கின்ற இதயத்தில் தியானம் செய்கிறேன்.

———-

அதோ நிஷ்ட்ட்யா விதஸ்த் யாந்தே நாப்யா முபரிதிஷ்ட்டதி
ஜ்வால மாலாகுலம் பாதீ விச்வஸ் யாயதனம் மஹத் –7-

குரல் வளைக்குக் கீழே தொப்புளுக்கு மேலே ஒரு சாண் தூரத்தில் இதயம் இருக்கிறது.
உலகிற்கெல்லாம் சிறந்த அந்த உறைவிடம் சுடர்வரிசையால் சூழப்பட்டாற் போல் பிரகாசிக்கிறது.
( நமது உடலில் இடது புறத்தில் இருக்கும் பௌதீக இதயம் அல்ல.
இந்த நாடிகளால் சூழப்பட்டு ஒளிரும் இந்த ஆன்மீக இதயத்தில்தான் நாராயணனை தியானம் செய்ய வேண்டும்)

————–

ஸந்ததக்ம் சிலாபிஸ்து லம்பத் யாகோச ஸன்னிபம் தஸ்யாந்தே
ஸுஷிரக்ம் ஸூக்ஷ்மம் தஸ்மின் ஸர்வம் ப்ரதிஷ்ட்டிதம் –8-

தாமரை மொட்டுப் போன்ற இதயம் நாற்புறங்களிலும் நாடிகளால் சூழப்பட்டு தொங்குகிறது.
அதனுள்ளே நுண்ணிய ஆகாசம் உள்ளது. அனைத்தும் அதில் நிலை பெற்றுள்ளன.
(இந்த உலகில் என்னென்ன உண்டோ என்னென்ன இல்லையோ அவையெல்லாம்
இதனுள் உள்ளன – சாந்தோக்கிய உபநிஷதம்.)

—————-

ஆகாசத்தினுள் பிராணன் அல்லது உயிர் உறைகிறது.

தஸ்ய மத்யே மாஹானக்னிர் விச்வார்ச்சிர் விச்வதோமுக:
ஸோக்ரபுக் விபஜன் திஷ்ட்டன்னா ஹாரமஜர: கவி: –9-

எங்கும் ஒளி வீசுவதாகவும், எல்லாத் திக்கிலும் செல்வதாகவும் உள்ள சிறந்த அக்கினி
அந்த ஆகாசத்தின் நடுவில் உள்ளது. பிராணனாகிய அந்த அக்கினி முதலில் உண்பதாகவும்,
உணவைப் பிரித்துக் கொடுப்பதாகவும், நிலைத்து நிற்பதாகவும், தான் பழுது படாததாகவும்,
அனைத்தையும் காண்பதாகவும் உள்ளது.

————–

பிராணனின் சுடராக ஜீவான்மா உள்ளது.

திர்ய கூர்த்வமத: சாயீரச் மயஸ் தஸ்ய ஸந்ததா
ஸந்தாபயதி ஸ்வம் தேஹமாபாத தலமஸ்தக:
தஸ்ய மத்யே வஹ்னிசிகா அணீயோர்த்வா வ்யவஸ்தித: -10-

அந்தப் பிராணனின் கிரணங்கள் குறுக்கிலும் மேலும் கீழும் பரவி எங்கும் வியாபித்திருக்கின்றன.
உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை இது சூடுள்ளதாகச் செய்கிறது.
இதன் நடுவில் மெல்லியதான அக்கினிச் சுடர் மேல் நோக்கி அமைந்திருக்கிறது.
(மேல் நோக்கிப் பிரகாசிக்கும் இச்சுடரே ஜீவான்மா)

———–

நீல தோயத மத்யஸ்தாத்வித்யுல்லேகேவ பாஸ்வரா
நீவார சூகவத் தன்வீ பீதா பாஸ்வத்யணூபமா -11-

கருமேகத்தின் நடுவிலிருந்து ஒளி வீசுகின்ற மின்னல் கொடி போலவும்,
நெல்லின் முளைபோல் மெல்லியதாகவும், பொன்னிறமாகவும், அணுவைப் போல் நுண்ணியதாகவும்
அந்த ஆன்மா பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

——————

அந்த இறைவனைப் போற்றுதல்.

தஸ்யா: சிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித: ஸ ப்ரஹ்ம
ஸ சிவ: ஸ ஹரி: ஸேந்த்ர: ஸோ(அ)க்ஷர: பரம: ஸ்வராட் -12-

அந்தச் சுடரின் நடுவில் இறைவன் வீற்றிருக்கிறார். அவரே பிரம்மா, அவரே சிவன், அவரே விஷ்ணு,
அவரே இந்திரன், அவர் அழிவற்றவர், சுய ஒளியுடன் பிரகாசிப்பவர். தனக்குமேல் யாரும் இல்லாதவர்.

———–

ரிதக்ம் ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் க்ருஷ்ணபிங்கலம்
ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விச்வரூபாய வை நமோ நம: -13-

காணும் பொருட்களின் அழகாகவும், காட்சிக்கு ஆதாரமாகவும் உள்ள பரம் பொருளை,
உடல் தோறும் உறைபவனை, கருமேனித் திருமாலும் செம்மேனிச் சிவனும் ஒன்றாக இணைந்த வடிவை,
முற்றிலும் தூயவனை, முக்கண்ணனை, எல்லாம் தன் வடிவாய்க் கொண்டவனை பலமுறை வணங்குகிறேன்.

இவ்வாறு நம்மை அகமுகமாக்கி இறைவனின் சன்னிதியில் விடுகிறது இந்த ஸூக்தம்.
இனி தொடர்ந்து அவர் சன்னிதியில் இருப்பதே உண்மையான தியானம்.

——–

விஷ்ணு காயத்ரி

ஓம் நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு; ப்ரசோதயாத்

நாராயணனை அறிந்து கொள்வோம். அதற்காக அந்த வாசுதேவனை தியானிப்போம்.
அந்த விஷ்ணு நம்மை இந்த தியான முயற்சியில் தூண்டட்டும்.

ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து
ஸஹவீர்யம் கரவாவஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து
மா வித்விஷாவஹை

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ புருஷ ஸூக்தம் – ஸ்ரீ ரிக்வேதம் 10.8.90–

December 30, 2021

ஸ்ரீ புருஷ ஸூக்தம் – ஸ்ரீ ரிக்வேதம் 10.8.90

ஓம் தச் சம்யோரா வ்ருணீமஹே காதும் யஜ்ஞாய காதும் யஜ்ஞ பதயே தைவீ ஸ்வஸ்தி ரஸ்து ந:
ஸ்வஸ்திர் மானுஷேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம் சன்னோ அஸ்து த்விபதே | சம் சதுஷ்பதே

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

———-

முன் செல்பவன் புருஷன் (புரதி அக்ரே கச்சதி ய:)
அனைத்தையும் தன் சக்தியால் நிரப்புபவன் புருஷன் (பிப்ரதி பூரயதி பலம் ய:)
அனைத்தையும் நிறைத்தும், மறைந்திருப்பவன் புருஷன் (புரி சே’தே ய:)
ஒளிமயமானவன் புருஷன் (புர்+உஷ: )
அழியாத இன்பத்தால் நிறைந்தவன் புருஷன் (புரு+ஷ:)

————

ஓம் ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்
ஸ பூமிம் விச்வதோ வ்ருத்வா அத்ய திஷ்ட்டத் தசாங்குலம் -1-

முதலில் இறைவனின் மகிமை போற்றப்படுகிறது.
இறைவன் ஆயிரக்கணக்கான தலைகள் உடையவர். ஆயிரக் கணக்கான கண்களை உடையவர்.
ஆயிரக் கணக்கான பாதங்களை உடையவர். அவர் பூமியை எங்கும் வியாபித்து, பத்து அங்குலம் ஓங்கி நிற்கிறார்.
(தியான வேளையில் இதய வெளியில்).

“ஆயிரம் சிரங்கள், விழிகள், பாதங்கள்” என்ற வாசகம் ஆயிரம் என்ற எண்ணிக்கையை அல்ல,
அளவிட முடியாமையை, அனந்தத்தைக் குறிக்கிறது. புருஷன் ஒவ்வொரு உயிரின் விழிகளாலும் பார்க்கிறான்,
ஒவ்வொரு உயிரின் பாதங்களாலும் நடக்கிறான் என்பது கருத்து.
உபநிஷதமும், புருஷனே எல்லா உயிர்களின் முகமும் (விஸ்வதோமுக:) என்று கூறுகிறது.

தோள்களாயிரத்தாய்! முடிகளாயிரத்தாய்!
துணைமலர்க் கண்களாயிரத்தாய்!
தாள்களாயிரத்தாய்! பேர்களாயிரத்தாய்
தமியேன் பெரிய அப்பனே

————

புருஷ ஏவேதக்ம் ஸர்வம். யத் பூதம் யச்ச பவ்யம்
உதாம் ருதத் வஸ்யேசான: யதன்னேனாதி ரோஹதி -2-

முன்பு எது இருந்ததோ, எது இனி வரப் போகிறதோ, இப்பொழுது எது காணப் படுகிறதோ எல்லாம் இறைவனே.
மரணமிலா பெரு நிலைக்குத் தலைவராக இருப்பவரும் அவரே. ஏனெனில் அவர் இந்த ஜட வுலகைக் கடந்தவர்,

———-

ஏதாவானஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாக்ம்ச்ச பூருஷ:
பாதோ(அ)ஸ்ய விச்வா பூதானி த்ரிபாதஸ்யாம்ருதம் திவி -3-

இங்கு காணப்படுவதெல்லாம் இறைவனின் மகிமையே. ஆனால் அந்த இறைவன் இவற்றை விடச் சிறப்பு மிக்கவர்.
தோன்றியவை எல்ல்லம் அவருடைய கால் பங்கு மட்டுமே. அவரது முக்கால் பங்கு அழிவற்ற தான விண்ணில் இருக்கிறது.

————-

த்ரிபாதூர்த்வ உதைத் புருஷ: பாதோ(அ)ஸ்யேஹா(அ)(அ)பவாத் புன:
ததோ விஷ்வங் வ்யக்ராமத் ஸாசனானசனே அபி –4-

முதலாவது படைப்பு:–பரம்பொருளின் முக்கால் பங்கு மேலே விளங்கிகிறது,
எஞ்சிய கால்பங்கு மீண்டும் இந்தப் பிரபஞ்சமாகத் தோன்றியது.
பிறகு அவர் உயிர்கள் மற்றும் ஜடப்பொருள்களில் எல்லாம் ஊடுருவிப் பரந்தார்.

———-

தஸ்மாத் விராடஜாயத விராஜோ அதி பூருஷ: ஸ ஜாதோ
அத்யரிச்யத பச்சாத் பூமி மதோ புர: –5-

முதலாவது படைப்பு:-அந்த ஆதி புருஷனிடமிருந்து பிரம்மாண்டம் உண்டாயிற்று.
பிரம்மாண்டத்தைத் தொடர்ந்து பிரம்மா உண்டாகி எங்கும் வியாபித்தார். பிறகு அவர் பூமியைப் படைத்தார்.
அதன்பிறகு உயிர்களுக்கு உடலைப் படைத்தார்.

————

பிரபஞ்ச சக்திகளான தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான கூட்டுச் செயல்பாடு யக்ஞம்.
இந்தக் கருத்தையே கீதையிலும் (3.10-11) நாம் காண்கிறோம் –

”முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்:
“இதனால் பல்குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும்.
இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர்.
(இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.”

தொடக்கத்தில் புருஷன் ஒருவரே இருக்கிறார். இந்த ஒன்று பலவாக ஆவதே சிருஷ்டி. அதை நிகழ்த்துவது காலம்.
எனவே, காலத்தின் மூன்று பரிமாணங்களான வசந்தம், கோடை, சரத்ருது ஆகியவை முறையே
நெய், விறகு, அவி என்று ஆகி இந்த வேள்வி நிகழ்வதாக மந்திரம் கூறுகிறது.
வேத அழகியலின் படி இந்த மூன்று பருவகாலங்களும் முறையே
இந்திரன், அக்னி, வாயு ஆகிய மூன்று தேவதைகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

—-

யத் புருஷேண ஹவிஷா தேவா யஜ்ஞ மதன்வத வஸந்தோ
அஸ்யா ஸீதாஜ்யம் க்ரீஷ்ம இத்ம: சரத்தவி: –6-

இரண்டாம் படைப்பு:-இறைவனை ஆஹுதிப் பொருளாகக் கொண்டு தேவர்கள் செய்த வேள்விக்கு
வசந்த காலம் நெய்யாகவும், கோடைக்காலம் விறகு ஆகவும், சரத்காலம் நைவேத்தியமாகவும் ஆயிற்று.

————

ஸப்தஸ்யாஸன் பரிதய: த்ரி: ஸப்த ஸமித: க்ருதா:
தேவா யத்யஜ்ஞம் தன்வானா: அபத்னன் புருஷம் பசும் -7-

இரண்டாம் படைப்பு:-இந்த வேள்விக்கு பஞ்ச பூதங்கள், இரவு, பகல், ஆகிய ஏழும் பரிதிகள் ஆயின.
இருபத்தொரு தத்துவங்கள் விறகுகள் ஆயின. தேவர்கள் யாகத்தை ஆரம்பித்து,
பிரம்மாவை ஹோமப் பசுவாகக் கட்டினார்கள்,

இதில் மிருகங்களைக் குறிக்க வரும் “பசூ’ன்” என்ற சொல்லுக்கு ஞானம் என்றும் பொருள் கொள்வர்.
பரிகள் (அச்’வா:), பசுக்கள் (காவ:) ஆடுகள் (அஜாவய:) ஆகிய சொற்களுக்கு
குறியீட்டு ரீதியாக பொருள் கூறும் விளக்கங்களும் உண்டு.

———-

தம் யஜ்ஞம் பர்ஹிஷி ப்ரௌக்ஷன் புருஷம் ஜாதமக்ரத:
தேன தேவா அயஜந்த ஸாத்யா ரிஷயச்ச யே –8-

வேள்வி தொடங்குகிறது:-முதலில் உண்டான அந்த யஜ்ஞ புருஷனான பிரம்மாவின்மீது தண்ணீர் தெளித்தார்கள்.
அதன் பிறகு சாத்தியர்களும் தேவர்களும் ரிஷிகளும் இன்னும் யார் யார் உண்டோ அவர்களும் யாகத்தை நடத்தினார்கள்.

————-

தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ஸம்ப்ருதம் ப்ருஷதாஜ்யம்
பசூக்ம்ஸ்தாக்ம்ச் சக்ரே வாயவ்யான் ஆரண்யான் க்ராம்யாச்ச யே -9-

பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்திலிருந்து தயிர் கலந்த நெய் உண்டாயிற்று.
பறவைகளையும், மான், புலி போன்ற காட்டு விலங்குகளையும், பசு போன்ற வீட்டு மிருகங்களையும் பிரம்மா படைத்தார்.

———–

தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ரிச: ஸாமானி ஜஜ்ஞிரே
சந்தாக்ம்ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத் யஜுஸ் தஸ்மாத ஜாயத –10-

பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்திலிருந்து ரிக் வேத மந்திரங்களும், சாம வேத மந்திரங்களும்,
காயத்ரீ முதலான சந்தஸ்களும் உண்டாயின. அதிலிருந்தே யஜுர் வேதம் உண்டாயிற்று.

—————

தஸ்மாத்ச்வா அஜாயந்த யே கே சோபயாதத: காவோ ஹ
ஜஜ்ஞிரே தஸ்மாத் த்ஸ்மாஜ்ஜாதா அஜாவய: –11-

அதிலிருந்தே குதிரைகளும், இருவரிசைப் பற்கள் உடைய மிருகங்களும், பசுக்களும், வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும் தோன்றின.

————–

யத் புருஷம் வ்யதது: கதிதா வ்யகல்பயன் முகம் கிமஸ்ய
கௌ பாஹூ காவூரு பாதா வுச்யேதே –12–

ப்ரம்மாவை தேவர்கள் பலியிட்ட போது அவரை எந்தெந்த வடிவாக ஆக்கினார்கள்? அவரது முகம் எதுவாக ஆயிற்று ?
கைகளாக எது சொல்லப்படுகிறது ? தொடைகளாகவும் பாதங்களாகவும் எது கூறப் படுகிறது ?

————-

ப்ராஹ்மணோ(அ)ஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன்ய: க்ருத:
ஊரூ ததஸ்ய யத்வைச்ய: பத்ப்யாக்ம் சூத்ரோ அஜாயத –13-

அவரது முகம் ப்ராமணனாக ஆயிற்று. கைகள் க்ஷத்ரியனாக ஆயின. தொடைகள் வைசியனாக ஆயின.
அவரது பாதங்களிலிருந்து சூத்திரன் தோன்றினான்.

———–

சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோ: ஸூர்யோ அஜாயத
முகாதிந்த்ரச் சாக்னிச்ச ப்ராணாத் வாயுரஜாயத –14-

மனத்திலிருந்து சந்திரன் தோன்றினான். கண்ணிலிருந்து சூரியன் தோன்றினான்.
முகத்திலிருந்து இந்திரனும் அக்கினியும் தோன்றினர். பிராணனிலிருந்து வாயு உண்டாயிற்று.

————-

நாப்யா ஆஸீதந்தரிக்ஷம் சீர்ஷ்ணோ த்யௌ: ஸமவர்த்தத
பத்ப்யாம் பூமி திச: ச்ரோத்ராத் ததா லோகாக்ம் அகல்பயன் –15-

தொப்புளிலிருந்து வானவெளி தோன்றியது. தலையிலிருந்து சொர்க்கம் தோன்றியது.
பாதங்களிலிருந்து பூமியும் காதிலிருந்து திசைகளும் தோன்றின. அவ்வாறே எல்லா உலகங்களும் உருவாக்கப் பட்டன.

————

வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம்
ஆதித்ய வர்ணம் வர்ணம் தமஸஸ்து பாரே
ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர: நாமானி
க்ருத்வா(அ)பிவதன் யதாஸ்தே –16-

எல்லா உருவங்களையும் தோற்றுவித்து, பெயர்களையும் அமைத்து, எந்த இறைவன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரோ,
மகிமை பொருந்தியவரும் சூரியனைப் போல் ஒளிர்பவரும் இருளுக்கு அப்பாற்பட்டவருமான அந்த இறைவனை நாம் அறிவேன்.

—————

தாதா புரஸ்தாத்யமுதா ஜஹார சக்ர: ப்ரவித்வான்
ப்ரதிசச் சதஸ்ர: தமேவம் வித்வானம்ருத இஹ பவதி
நான்ய: பந்தா அயனாய வித்யதே –17-

அப்படி அந்த இறைவனை அறிவதால், அடைவதால் என்ன கிடைக்கும் ?
எந்த இறைவனை பிரம்மா ஆதியில் பரமாத்மா என்று கண்டு கூறினாரோ, இந்திரன் நான்கு திசைகளிலும் எங்கும்
நன்றாகக் கண்டானோ அவரை இவ்வாறு அறிபவன் இங்கேயே அதாவது இந்தப் பிறவியிலேயே முக்தனாக ஆகிறான்.
மோட்சத்திற்கு வேறு வழியே இல்லை.

———-

யஜ்ஞேன யஜ்ஞ மயஜந்த தேவா: தானி தர்மாணி ப்ரதமான்யாஸன்
தே ஹ நாகம் மஹிமா: ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா: 18

தேவர்கள் இந்த வேள்வியால் இறைவனை வழிபட்டார்கள். அவை முதன்மையான தர்மங்கள் ஆயின.
எங்கே ஆரம்பத்தில் வேள்வியால் இறைவனை வழிபட்ட சாத்தியர்களும் தேவர்களும் இருக்கிறார்களோ,
தர்மங்களைக் கடைப்பிடிக்கின்ற மகான்கள் அந்த மேலான உலகை அடிவார்கள்.

————-

இதுவரை கண்ட 18 மந்திரங்களுடன் புருஷஸூக்தம் நிறைவு பெறுகின்றது.
ஆனால் தென்னாட்டில் பொதுவாக இத்துடன் உத்தர நாராயணம், நாராயண ஸூக்தம்,
விஷ்ணு ஸூக்தத்தின் முதல் மந்திரம் இவற்றுடன் சேர்த்தே பாராயணம் செய்கிறார்கள்.
அவை பின்வருமாறு:

அத்ப்ய: ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விச்வ கர்மண: ஸமவர்த்ததாதி
தஸ்ய த்வஷ்ட்டா விததத் ரூபமேதி தத் புருஷஸ்ய விச்வமாஜானமக்ரே — 19

தண்ணீரிலிருந்தும் சாரமான அம்சத்திலிருந்தும் பிரபஞ்சம் உண்டாயிற்று. பிரபஞ்சத்தை உருவாக்கிய இறைவனிடமிருந்து
சிறந்தவரான பிரம்மா தோன்றினார். இறைவன் அந்த பிரம்மாவின் (பதினான்கு உலகங்களும் நிறைந்ததான)
உருவை உருவாக்கி அதில் வியாபித்திருக்கிறார். பிரம்மாவின் இந்தப் பிரபஞ்ச வடிவம் படைப்பின் தொடக்கத்தில் உண்டாயிற்று.

———

வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத்
த்மேவம் வித்வானம்ருத இஹ பவதி நான்ய: பந்தா வித்யதே(அ)யனாய — 20

மகிமை பொருந்தியவரும், சூரியனைப் போல் ஒளிர்பவரும், இருளுக்கு அப்பாலும் இருப்பவருமாகிய
இந்த இறைவனை நான் அறிவேன். அவரை இவ்வாறு அறிபவன் இங்கே இந்தப் பிறவியிலேயே முக்தனாக ஆகிறான்,
முக்திக்கு வேறு வழி இல்லை.

———-

ப்ரஜாபதிச்சரதி கர்பே அந்த: அஜாயமானோ பஹுதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜானந்தி யோனிம் மரீசீனாம் பதமிச்சந்தி வேதஸ: –21-

ஒருவன் ஏன் இறையனுபூதியை நாட வேண்டும் ?
இறைவன் பிரபஞ்சத்தில் செயல்படுகிறார். பிறக்காதவராக இருந்தும் அவர் பல்வேறு வடிவங்களில் தோன்றுகிறார்.
அவரது உண்மையான வடிவத்தை மகான்கள் நன்றாக அறிகிறார்கள்.
பிரம்மா போன்றவர்கள் கூட மரீசி முதலிய மகான்களின் பதவியை விரும்புகிறார்கள்.

———-

யோ தேவேப்ய ஆதபதி யோ தேவானாம் புரோஹித: பூர்வோ
யோ தேவேப்யோ ஜாத: நமோ ருசாய ப்ராஹ்மயே –22-

யார் தேவர்களிடம் தேஜஸாக விளங்குகிறாரோ, தேவர்களின் குருவாக இருக்கிறாரோ,
தேவர்களுக்கு முன்பே தோன்றியவரோ அந்த ஒளிமயமான பரம்பொருளுக்கு நமஸ்காரம்.

——–

ருசம் ப்ராஹ்மம் ஜனயந்த: தேவா அக்ரே ததப்ருவன்
யஸ்த்வைவம் ப்ராஹ்மணோ வித்யாத் தஸ்ய தேவா அஸன் வசே –23-

பரம் பொருளைப் பற்றிய உண்மைகளை அளிக்கும் போது தேவர்கள் ஆதியில் அதைப் பற்றி
“ யாராக இருந்தாலும் பரம்பொருளை நாடுபவன் இவ்வாறு அறிவானானால் அவனுக்கு தேவர்கள் வசமாக இருப்பார்கள்“
என்று கூறினார்கள்.

———

ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ன்யௌ அஹோராத்ரே பார்ச்வே
நக்ஷத்ராணி ரூபம் அச்வினௌ வ்யாத்தம் –24-

நாணத்தின் தலைவியாகிய ஹ்ரீ தேவியும், செல்வத்தின் தலைவி யாகிய லட்சுமி தேவியும் உமது மனைவியர்.
பகலும் இரவும் உமது பக்கங்கள். நட்சத்திரங்கள் உமது திருவுருவம். அசுவினி தேவர்கள் உமது மலர்ந்த திருவாய்.

———–

இஷ்ட்டம் மனிஷாண அமும் மனிஷாண ஸர்வம் மனிஷாண –25-

எம்பெருமானே நாங்கள் விரும்புவதைக் கொடுத்தருள்வாய். இவ்வுலக இன்பத்தைக் கொடுத்தருள்வாய்.
இகத்திலும் பரத்திலும் அனைத்தையும் தந்தருள்வாய்.

——–

ஓம் தச்சம்யோரா வ்ருணீமஹே காதும் யஜ்ஞாய காதும் யஜ்ஞ பதயே தைவீ ஸ்வஸ்தி ரஸ்து ந:
ஸ்வஸ்திர் மானுஷேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம் சன்னோ அஸ்து த்விபதே | சம் சதுஷ்பதே

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

——–————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீரங்கநாதர் கோயில் ஸ்ரீ மதுரகவி ஸ்வாமிகள்– ஸ்ரீ மதுரகவி திருநந்தவன வைபவம்

December 30, 2021

ஸ்ரீ பூலோக வைகுந்தமான ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயில் வித்தியாசமான ஒரு நடைமுறை சுமார் 150 ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது.
ஸ்ரீரங்கநாதர் கருவறையில் பிரமாண்டமாகக் காட்சி தரும் ஸ்ரீரங்கநாதருக்கும் தனிச் சன்னிதித் தாயாரான ஸ்ரீரங்க நாச்சியருக்கும்
புஷ்பங்கள் எதையும் சார்த்த மாட்டார்கள். அதே சமயம் ஸ்ரீரங்கநாதரின் திருமேனிக்குக் கீழே தாயார்களுடன்
உத்ஸவர்களாகத் தரிசனம் தரும் நம்பெருமாள் (அழகிய மணவாளன்) மற்றும் தாயார் சன்னிதியில் தரிசனம் தரும்
ஸ்ரீரங்க நாச்சியார் ஆகியோருக்குக் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் புத்தம் புது மாலைகளை அணிவிப்பார்கள்.

ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபத்துக்கு அருகே பிரமாண்டமாக அமைந்துள்ள மதுரகவி திருநந்தவனத்தில் இருந்து தொடுத்து வரும்
பூமாலைகள் மட்டுமே இந்த உத்ஸவர் விக்கிரகங்களுக்குத் தினமும் சார்த்தப்படும்.
இங்கிருந்து செல்லும் மாலைகள்தான் பெருமாளையும் பிராட்டியையும். பஞ்ச ஆயுத புருஷர்களுள் ஒருவரான ஸ்ரீசுதர்சன ஆழ்வாரையும் அலங்கரிக்கின்றன.
(வருடா வருடம் கோடை காலத்தின் போது நடக்கும் பூச்சாற்று உத்ஸவத்தின்போது மட்டும்
பக்தர்கள் தரும் மலர்மாலைகள் பெருமாளையும் தாயாரையும் அலங்கரிக்கும்).
மற்ற பக்தர்களோ, அதிகாரிகளோ, முக்கிய பிரமுகர்களோ மாலைகளைக் கொண்டு கோயில் அர்ச்சகர்களிடம் சேர்ப்பித்தால்.
அவை இந்த உத்ஸவ விக்கிரகங்களின் திருமேனிக்குப் போகாது. திருவடியில்தான் சார்த்தப்படும். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

ஆம்! இந்த நந்தவனத்தில் மலருகின்ற பூக்கள் அனைத்தும் ஸ்ரீரங்கம் அரங்கனுக்கே உரியவை.
இந்த பூக்களை வெளியே விலைக்கு விற்கக் கூடாது. ஸ்ரீரங்கம் விழாக் காலங்களில் பயன்படுத்துவதற்கு,
இந்தப் பூக்கள் போதவில்லை என்றால் வெளியில் இருந்து வாங்கிக்கொள்ளலாம்.
மலர்மாலைகள் கட்டுவதற்குப் பயன்படுத்தியது போக, எஞ்சி இருக்கும் பூக்களை காவிரி ஆற்றில் கொட்டி விடவேண்டும்
என்று மதுரகவி நந்தவனத்து ஆவணம் சொல்கிறது.
ஆழ்வார்களின் சேவைக்கு இணையாக இந்தத் தொண்டு இன்று வரை மதிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கம் பெருமாளுக்குப் பூக்கட்டும் இந்தப் பணிக்கு பிரம்மச்சாரிகள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவர் இது ஒரு சேவை.
அதனால், இவர்களுக்கு சம்பளம் கிடையாது. தினமும் இரண்டு வேளை சாப்பாடு இவர்களுக்கு உண்டு.
தவிர டிபன், காபி, டீ போன்ற எதையும் சாப்பிடக்கூடாது. இன்றைய தினம் வரை இறைவனின் சேவையாக
சில பிரம்மச்சாரிகள் இதைத் தொடர்ந்து செய்து வருவது பாராட்ட வேண்டிய விஷயம்.

ஸ்ரீரங்கம் கோயில் இருக்கும் அதிகாரிகளும் பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர்களும் இந்த சேவையின்
மதிப்பையும் அந்தஸ்தையும் உணர்ந்து மதுரகவி நந்தவன அன்பர்களைப் போற்றி வருகிறார்கள்.
இப்படி உயர்ந்த ஒரு சேவை ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயில் இன்றைக்கும் நடந்து வருகிறதென்றால்,
அதற்குக் காரணமாக இருப்பவர் மதுரகவி சுவாமிகள் என்பவர்.
வாழ்நாள் முழுதும் பிரம்மச்சாரியாகவே இருந்து ஸ்ரீரங்கநாதருக்கு மாலைகளைத் தயார்செய்தல், ஸ்ரீரங்கம் தங்க விமானத்தைப் புதுப்பித்தல்
என்று ஸ்ரீரங்கம் சம்பந்தப்பட்ட பணிகளையும், இன்ன பிற ஆன்மிகப் பணிகளையும் ஆற்றித் தன் வாழ்நாளைச் செலவழித்தார்.
இந்த மகானின் திருவரக (திருச்சமாதி) நந்தவனத்துக்கு எதிரிலேயே அமைந்துள்ளது.
மலர்மாலைகளைத் தயார் செய்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அனுப்பும் இந்தக் கைங்கர்யப் பணி எப்படி மதுரகவி சுவாமிகளுக்கு வந்தது?

சுவாமிகளின் அவதாரத்தில் இருந்தே வருவோம். 1846-ஆம் வருடம் தைப்பூரத்தன்று ஸ்ரீரங்கம் வீரேஸ்வரத்தில்
அரங்கப் பிள்ளை- ரங்கநாயகி அம்மாள் தம்பதிக்குப் புதல்வனாக அவதரித்தார் சுவாமிகள்.
வைணவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட குடும்பம் என்பதாலும். ஸ்ரீரங்கம் அருகே அவதரித்தாலும்,
திருவரங்கத்தில் உறையும் ஸ்ரீரங்கநாதர் மீது அளவில்லா பிரியம் கொண்டிருந்தார்.
மதுரகவி சுவாமிகள். சுமார் ஒன்பது வயதான காலத்திலேயே, இந்த பக்தி அவருக்குள் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.
தெருவில் ஸ்ரீரங்கநாதர் உலா வந்தால் போதும்–அதில் இரண்டறக் கலந்து விடுவார் மதுரகவி.
ஊர்வலத்தின் பின்னாலேயே பெருமாளுக்குத் துணையாக உடன் செல்வார்.
அவ்வப்போது பெருமாளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பார்.
ஸ்ரீரங்கனின் கம்பீரமான அழகும் கண்களைக் கூசச் செய்யும் நவரத்தின ஆபரணங்களும், திருமேனியில் நறுமணம் வீசும்
மலர் மாலைகளும் சிறுவனான மதுரகவியை ரொம்பவும் பரவசப்படுத்தின.
கிட்டத்தட்ட பெருமாளுடன் பேசவும் கூடிய ஒரு பாக்கியத்தைப் பெற்றார் மதுரகவி. தலையில் துலங்கும் கம்பீரமான மகுடத்திலும்
முன் நெற்றியில் பளிச்சிடும் கறுமையான கஸ்தூரிப் பொட்டும். அபயம் அருளும் வலது திருக்கரமும் கதையைத் தாங்கிப் பிடித்திருக்கும்
இடது திருக்கரமும் கொண்டு அந்த மாலவன் ஸ்ரீரங்க வீதிகளில் வலம் வரும்போது பித்துப் பிடித்தாற்போல் அவனைப் பின்தொடர்ந்தே செல்வார் மதுரகவி.

அது ஒரு வைகுண்ட ஏகாதசி காலம், கோயிலில் இருந்து புறப்பட்ட உத்ஸவர், வீதி உலா வரும்போது தன் தாயார் ரங்கநாயகியின் கைப்பிடித்து,
ஸ்ரீரங்கத்தின் மன்னரான அந்தப் பெருமாளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் மதுரகவி.
பெருமாளிடம் இருந்து நகர மனம் இல்லாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார்.
டேய்ய்…. வாடா…. கோயிலுக்குப் போய் முத்தங்கி சேவையில் பெருமாளை சேவிக்க வேண்டும். கூட்டம் நெக்கித் தள்ளிவிடும்.
வரிசையில் இடம் பிடிக்க வேண்டும். சீக்கிரம் வா என்று மகனின் கையைப் பற்றி இழுத்தார் ரங்கநாயகி.
மதுரகவியின் கையைப் பற்றிக்கொண்டு கிட்டத்தட்டட சாலைகளில் பெருமாளின் உலாவுக்குப் பின்னே ஓட ஆரம்பித்தார் ரங்கநாயகி.
முத்தங்கி சேவை முக்கியம் ஆயிற்றே! அது என்னவோ, தெரியிவில்லை…
பெருமாள் கடந்து வந்த வெற்றுத் திருவீதிகளையே ஏக்கத்துடன் திரும்பித் திரும்பிப் பார்த்தார் மதுரகவி. என்ன தேடுகிறார் மதுரகவி?
வெற்றுச் சாலைகளில் என்ன பொக்கிஷம் இருக்கும்? திடீரென மதுரகவியின் முகத்தில் கோடி சூரிய பிரகாசம்.
வெடுக்கென்று அன்னையின் கைப்பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். நடந்து வந்த பாதையில் திரும்பி ஓடினார்.
சாலையில் கிடக்கும் அந்த ஒற்றை இருவாட்சிப் பூங்கொத்தைச் சட்டென்று குனிந்து எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டார்.
தலைமேல் வைத்துக்கொண்டார். ஆனந்தக் கூத்தாடினார். இது நடந்த வருடம் 1855.

பெருமாளுக்கு அணிவிக்கப்படும் மாலைகளின் மேல் மதுரகவிக்கு ஈடுபாடு வந்த இன்னொரு கதை…
அன்றைய தினம் உத்ஸவர் புறப்பாட்டுக்காகப் பெருமாள் வெளியே மணல்வெளியில் அமர்ந்து அலங்காரம் தரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஸ்ரீரங்கன் உறையும் கருவறைக்குச் சென்றார் மதுரகவி. கருவறையில் அன்று கூட்டமே இல்லை.
ஒரே ஒரு அர்ச்சகர் மட்டும் சன்னிதியில் இருந்து வருகின்ற பக்தர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தார்.
ஓட்டமாக ஓடி வந்த மதுரகவி, அங்கே மூலவர் திருமேனியின் முன் நின்றார். அர்ச்சகர் பார்த்தார்.
அடேய் பையா…. நம்பெருமாளின் ஆபரண அழகையும் அவனுடைய புன்னகை சொரூபத்தையும். மணம் வீசும் திருமாலைகளின்
திவ்ய திருக்கோலத்தையும் காண பக்தர்கள் மணல்வெளியில் திரளாகக் குவிந்திருக்கும்போது, நீ மட்டும் இங்கே ஏன் வந்தாய்? என்றார் அர்ச்சகர்.
ஸ்வாமி….. எனக்குப் பிரசாதம் வேண்டும்…… மதுரகவி.
கல்கண்டு முந்திரியும்தானே… தாராளமாகத் தருகிறேன் கண்ணா என்று வெள்ளிக் கிண்ணத்தில் இருந்து அவற்றை எடுத்து
மதுரகவிக்கு அர்ச்சகர் தர முற்படும்போது. அவன் முகத்தில் மலர்ச்சி இல்லை.
அர்ச்சகர் வியந்தார். ஏனடா…. கல்கண்டும் முந்திரியும் உனக்குத் திருப்தி இல்லையோ? என்று கேட்டார்.
ஆம் என்பது போல் தலையை மேலும் கீழும் ஆட்டினார் மதுரகவி.

வேறென்ன வேண்டும்?- குழம்பிய நிலையில் கேட்டார் அர்ச்சகர். அதோ…. அதுதான் எனக்கு வேண்டும் –
மதுரகவியின் விரல்கள் நீண்ட பக்கம், ஒரு மூலையில் நம்பெருமாளின் நிர்மால்யம் கிடந்தது.
இவன் ஸ்ரீரங்கத்தானின் தீவிர பக்தன் போலும் என்பதைப் புரிந்துகொண்ட அர்ச்சகர்.
ஓ…. உனக்குப் பெருமாளின் பழைய மாலை வேண்டுமா? தந்தேன் என்றபடி வண்ண மலர்கள் கோத்துக் கட்டி இருந்த
அந்த வாடிய மாலையை மதுரகவியிடம் எடுத்துத் தந்தார் அர்ச்சகர்.
தன் இரு கரங்களால், அதைப் பெறும்போது மதுரகவியின் முகத்தில் தென்பட்ட பரவசம் இருக்கிறதே…
கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்தாலும், அந்த சந்தோஷம் இருக்காது. அப்படி ஒரு சிலிர்ப்பு, பரவசம்,
அந்த மாலையைத் தன் கைகளில் வைத்து அழகு பார்த்தார். கழுத்தில் போட்டுக்கொண்டு கர்வப்பட்டார்.

பிறகு, ஸ்வாமி… ஒரு கேள்வி கேட்கலாமா? என்றார் மதுரகவி.
கேள் மகனே…. கேள். இந்தச் சிறு வயதிலேயே இறையருள் பெற வேண்டும் என்று விரும்புகிறாயே…. உனக்கு இறை இன்பம் வழங்குவதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. பெருமாள் அணியும் இந்த மாலைகளை எல்லாம் தொடுத்துத் தருவது யார்?- மதுரகவி.
இதோ…. இங்கிருந்து ஓரிரு காத தூரம் நடந்தாயானால். காவிரி வரும்.
அதன் கரையை ஒட்டி. வேங்கடாசல ராமானுஜதாஸர் திருநந்தவனம் இருக்கும். அங்கு வசித்து வரும் திருநந்தவனக் குடிகள்
என்று அழைக்கப்படுகிற ஏகாங்கிகள்தான் இத்தகைய மாலைகளைத் தினமும் தொடுத்து, பெரும் சேவையாகப் பெருமாளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏகாங்கி என்பவர் யார்? – மதுரகவி தன் சந்தேகத்தைக் கேட்டார்.

உன் அப்பனைப் போலும். என்னைப் போலும் அல்லாதவரே ஏகாங்கி அதாவது, கட்டை பிரம்மச்சாரி. திருமணம் கூடாது.
சிந்தையை ஸ்ரீரங்கத்தானிடம் மட்டுமே வைக்கவேண்டும். தினமும் நந்தவனத்தில் பூப்பறிப்பது. பின் அதை மாலையாகத் தொடுப்பது.
அவற்றைச் சேகரித்துக் கொண்டு இந்த கோயிலில் சேர்ப்பது – இவையே ஏகாங்கிகளின் வேலை. இறைவனின் அடியவர்கள் அவர்கள். –
அர்ச்சகர் அவனுக்குப் புரிய வைத்தார்.

ஸ்வாமி….. நானும் ஏகாங்கி ஆக முடியுமா? – ஏக்கத்தோடு கேட்ட மதுரகவியை.
இனம் புரியாமல் பார்த்து, நீயெல்லாம் இல்லறத்தில் வாழப் பிறந்தவன். உன் அப்பா-அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால்.
ஏதோ நான்தான் உன் மனதைக் கெடுத்துவிட்டதாகச் சொல்லிவிடுவார்கள். உடனே இங்கிருந்து புறப்படப்பா என்று
மதுரகவியை விரட்டாத குறையாக அனுப்பி வைத்தார்.

பெருமாளுக்குப் பூக்கட்டும் பாக்கியமும் மதுரகவி சுவாமிகளுக்கு ஒரு தினம் வந்தது.

ஸ்ரீரங்கம் கோயிலில் பந்தம் பிடிப்போர். கட்டியம் கூறுவோர் போன்றோர் இருந்தனர். இவர்களை சாத்தாத வைணவர்கள் என்று அழைப்பர்.
அதாவது, உடலில் பூணூல் சாத்தி இருக்க மாட்டார்கள். இவர்கள் வசித்து வந்த வீதி சாத்தாத (சாத்தார) வீதி என்றே அழைக்கப்பட்டு வந்தது.
பெருமாளுக்குப் பூமாலைகள் அனுப்பும் உரிமம். துவக்கத்தில் இவர்களிடம்தான் இருந்து வந்தது.
பூச்சந்தை வைத்து இந்தத் தர்மப் பணிகளைச் செய்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் நொடித்துப் போக….
இந்தக் கைங்கர்யம் நின்று போய்விடுவதாக இருந்தது. அந்த வேளையில்தான், மதுரகவி சுவாமிகள் ஐயாயிரம் ரூபாயைக் கொடுத்து,
அவர்களிடம் இருந்து இந்த உரிமையை எழுதி வாங்கிக் கொண்டார்.

அதன் பின், மதுரகவி சுவாமிகளின் முழு உழைப்பால் உருவானதே இந்த நந்தவனம்.
மதுரகவி சுவாமிகளுக்குப் பதினேழு வயது இருக்கும்போது அவரது பெற்றோர். சுவாமிகளுக்குப் பெண் பார்க்கத் தொடங்கினர்.
தனக்குத் திருமணம் வேண்டாம் என்றும், பெருமாள் சேவையில் என்றென்றும் தான் திளைத்திருக்கப் போவதாகவும் சொல்லி,
தன் திருமணத்துக்கு என்று பெற்றோர் சேர்த்து வைத்திருக்கும் தொகையான இருநூறு ரூபாயைப் பெற்றுக்கொண்டார்.
இந்தத் தொகைக்கு பத்து பவுனில் கடலைக்காய் மணி வாங்கித் தாயாருக்கு சார்த்தி அழகு பார்த்தார் மதுரகவி.
பெற்றோரிடம் இருந்து தனக்கு வரவேண்டிய சொத்து கைக்கு வந்ததும். இந்த நந்தவனத்தில் விதம் விதமான பூச்செடிகளை வளர்த்தார்.
ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு உண்டான கைங்கர்யம் தடை இல்லாமல் நடைபெறத் துவங்கியது.

ஸ்ரீவானமாமலை ஜீயரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டார். ஸ்ரீபிள்ளை லோகாச்சார்யா சன்னிதி சாமி ஐயங்காரிடம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம் போன்ற வைணவ நூல்களைக் கற்றறிந்தார். நந்தவனத்தை மேலும் விஸ்தரிக்கும்பொருட்டு
சீனிவாச ராமானுஜதாசர். வேங்கடாஜல ராமானுஜதாசர் போன்ற அன்பர்களின் உதவியுடன் திருச்சி, சென்னை போன்ற
நகரங்களுக்குச் சென்று பஷ்ப கைங்கர்யத்துக்கு மாத சந்தாவாக ஒரு தொகை வசூலித்தார்.
பெருமாள் அபிமானிகள் மற்றும் சில அன்பர்களின் உதவியோடு சோழமாதேவி கிராமத்தில் சில நிலங்களை வாங்கினார்.
நந்தவனத்தை அடுத்து சில தோட்டங்களையும் வாங்கி, புஷ்ப கைங்கர்யத்தை விரிவுபடுத்தினார்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்துக்கு அருகில் காணப்படும் இந்தத் திருநந்தவனமும் சுவாமிகளின் திருவரசும் தரிசிக்க வேண்டியவை.

மலர்த் தோட்டங்களுக்குள் செருப்பணிந்து செல்லக் கூடாது. மலர்களுக்கு விடுவதற்கென்றே இருக்கும்.
நீரில் வாய் கொப்பளிக்கக் கூடாது- இப்படிச் சில நிபந்தனைகளை இன்றளவும் காத்து வருகிறார்கள்.
மஞ்சள். சிவப்பு, வெள்ளை, பச்சை என அனைத்து நிறங்களிலும் இங்கே மலர்கள் மலர்கின்றன.
துளசி, விருட்சி, சம்பங்கி, மாசிப்பச்சை, நந்தியாவட்டை, துளசி, பட்டு ரோஜா, மனோரஞ்சிதம், மகிழம்பூ குருக்கத்தி, பாதிரி
என்று எண்ணற்ற பூ வகைகள். பட்டு ரோஜாவின் முள் அதிகம் இருக்காது. பெருமாளுக்கு சிரமம் இருக்கக் கூடாது.
என்பதற்காக இந்தப் பட்டு ரோஜாவைப் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள்.

தினமும் அதிகாலை வேளையில் சுமார் பத்து பிரம்மச்சாரிகள் மாலை கட்டும் இந்த மண்டபத்துக்கு வந்துவிடுகிறார்கள்.
அவர்களில் சிலர் பூக்குடலை எடுத்துச் சென்று பூப்பறித்து வருகிறார்கள்.
மளமளவெனப் பணிகள் முடிந்த பின் அரங்கனின சன்னிதிக்கு அவை செல்கின்றன.
தினமும் சுமார் பதினாறு மாலைகள். இரு வேளைகளில் – அதாவது மொத்தம் முப்பத்திரண்டு மாலைகள் ஸ்ரீரங்கம் செல்கின்றன.
இதெல்லாம் சாதாரண நாட்களில். விசேஷ நாட்களில். மதுரகவி நந்தவனத்தின் பங்கு ரொம்ப அதிகம்.
சித்திரை, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களில் நடக்கும் திருவிழாக் காலங்களில் (மொத்தம் 44 நட்கள்) அலங்காரமான மாலைகள் செல்லும்.
தெப்ப உத்ஸவத்தின்போது திருநந்தவனக் குடிகள் தயாரிக்கும் தெப்ப மாலைகள், பிரமாண்டமானவை; பெருமளவில் பேசப்படுவை.
தவிர ஆழ்வாராதிகளின் திருநட்சத்திரத்தன்றும் விசேஷ மாலைகள் செல்லும்.

மதுரகவி சுவாமிகளால் மேற்கொள்ளப்பட்ட ஊறுகாய் சேவையும் ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்து வருகிறது.
பெருமாளுக்கு மதிய பிரசாதமாக (பெரிய வசரம் என்பர்) வெள்ளைச் சாதம், ரசம், கீரை, ஊறுகாய் போன்றவை நிவேதனம் செய்யப்படும்.
இதில் ஊறுகாய்க்காக பெருமாளுக்குத் தினமும் பத்து எலுமிச்சம்பழங்களும் தாயாருக்கு ஐந்து எலுமிச்சம் பழங்களும்
நந்தவனத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சேவைகள் மட்டுமல்ல…. ஜீரணமாகிப் போயிருந்த தன் தங்கக் கூரையையும் புதுப்பிக்க ஸ்ரீரங்கம் பெருமாள்,
மதுரகவியைத்தான் தேர்ந்தெடுத்தார். 1891-ல் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்த அர்ச்சகர்கள், சுவாமி…… ஸ்ரீரங்கநாதனுடைய
விமானங்களிலும் பத்மத்திலும் போட்டிருந்த பொன் தகடுகள் மிகவும் ஜீரணம் ஆகிவிட்டன. தாங்கள்தான் முயற்சி எடுத்து,
இதைப் புதுப்பித்துத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். முதலில் பயந்து போன சுவாமிகள். அதற்கெல்லாம் நான் ஆளில்லை.
எனக்கு புஷ்ப கைங்கர்யம் மட்டும்தான் தெரியும். இதற்கெல்லாம் பணம் வசூல் பண்ண வேண்டும்.
அவ்வளவு பெரிய தொகை எல்லாம் என்னை நம்பி யார் கொடுப்பார்கள்? என்னால் ஆகாது என்று மறுத்துவிட்டார் மதுரகவி.

விடுவாரா அரங்கன்? அன்றிரவே மதுரகவியின் கனவில் தோன்றி ஏன் உன்னால் முடியாதா?
கையில் காசு இல்லை என்றால், திருப்பணி செய்ய மறுத்துவிடுவாயோ? நீதான் ஆரம்பிக்க வேண்டும் இது என் பணி.
என் பெயரால் பணியைத் துவங்கு தானாக முடியும் என்று சொல்லி, தன் திருக்கரத்தை மதுரகவியின் சிரசில் வைத்து ஆசி வழங்கி மறைந்தார்.
மறுநாள் தன் குருநாதரான குவளைக்குடி சிங்கம் ஐயங்காரைச் சந்தித்து விமானத் திருப்பணியையும்,
அரங்கன் கனவில் வந்த விஷயம் பற்றியும் சொன்னார். பெருமாளின் திருவுளப்படியே திருப்பணியைத் துவங்கு இதோ,
முதல் உபயம் நான்தான் என்று சொல்லி, ஒரு பித்தளைக் குடத்தில் பத்து ரூபாயைப் போட்டுக் கொடுத்தார்.
ஐந்தே வருடங்களில் தேசம் முழுக்க அலைந்து எண்பதாயிரம் ரூபாய் திரட்டி,
விமானத் திருப்பணிகள் நடந்து. 1903-ல் மிகப் பெரிய குடமுழுக்கும் நடந்தேறியது.
அந்தக் காலத்தில் எண்பதாயிரம் ரூபாய் என்பது சாதாரணம் அல்ல என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

இதற்கு அடுத்த ஆண்டு (1904) குரோதி வருடம் ஐப்பசி மாதம் நம்பெருமாள் ஊஞ்சல் உத்ஸவத்தின் ஏழாம் நாள்….
நந்தவன கோஷ்டிகளுக்குப் பிரசாதம் விநியோகிக்கப்பட்டன. மதுரகவி சுவாமிகளும் அதை ஏற்றுக்கொண்டார்.
அன்றைய தினம் இரவு சுமார் பதினொரு மணிக்கு ஆச்சார்யனின் திருவடியை அடைந்தார்.

மதுரகவி சுவாமிகளின் திருச்சன்னிதிக்கு மதுரை சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம் உட்பட எண்ணற்ற ஆன்மிக அன்பர்களும்
பின்னர் வந்த காலத்தில் திருப்பணிகள் செய்துள்ளார்கள்.
காவிரிக் கரையை ஒட்டிக் காணப்படும். இந்த நந்தவனமும் திருவரசும் பக்தர்கள் அனைவரும் சென்று வணங்க வேண்டிய ஒன்று.
ஸ்ரீரங்கம் கோயில் ஆண்டாள் சன்னதிக்கு அருகில் மதுரகவி சுவாமிகளைப் பற்றிய வரலாறு.
ஒரு கல்வெட்டாக – அவரது சேவையின் சாட்சியாக இன்றைக்கும் இருக்கிறது.

மதுரகவி நந்தவன டிரஸ்ட் அன்பர்கள் நம்மிடம் சொன்னார்கள். மதுரகவி சுவாமிகள் சொல்லி இருந்தபடி அவரின் திருநந்தவனத்தையும்
புஷ்ப கைங்கர்யப் பணிகளையும் இன்று வரை திறம்படச் செய்து வருகிறோம்.
பெருமாளின் திருவருளாலும், சுவாமிகளின் குருவருளாலும் நந்தவனப்பணிகள் இன்றைக்கும் நன்றாகவே நடந்து கொண்டிருக்கின்றன.
இதைவிட வேறு என்ன பெருமை எங்களுக்கு?
உயர்ந்த சேவையை நடத்தி வரும் இந்த அன்பர்களை வாழ்த்துவதில் பெருமை கொள்வோம்!

மதுரகவி சுவாமிகள் திருவரசு. திருநந்தவனம் எங்கே இருக்கிறது?: திருச்சி மாம்பழச் சாலையில் இருந்து
அம்மா மண்டபம் செல்லும் சாலையில் இருக்கிறது. மதுரகவி சுவாமி திருவரசு மற்றும் திருநந்தவனம். தி
ருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ.! சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு.

எப்படிப் போவது?: திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து
ஸ்ரீரங்கம் மார்க்கமாகச் செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளும் மாம்பழச் சாலை வழியாகச் செல்லும்.
இங்கே இறங்கிக்கொண்டால், அரை கி.மீ. தொலைவு நடை, ஆட்டோ வசதி உண்டு.
ஸ்ரீரங்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் இந்த நந்தவனம் வழியாகச் செல்லும்.

தொடர்புக்கு: ஸ்ரீமான் மதுரகவி சுவாமிகள் நந்தவன டிரஸ்டி,
ஸ்ரீமான் மதுரகவி சுவாமிகள்,
நந்தவன பிரஸிடென்ட்,
போன்: 0431-2432328,

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ப்ரணார்த்தி ஹரா சாரியார் ஸ்வாமிகள் தனியன்- வாழி பாசுரங்கள் –/ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திரு முடி வர்க்கம்–

December 30, 2021

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமியின் தனியன்:

வரதகுரு சரணம் சரணம் வரவரமுநிவர்ய கணக்ருபா பாத்ரம் |
ப்ரவகுண ரத்ண ஜலதிம் ப்ரநமாமி ஸ்ரீநிவாஸ குருவர்யம் ||
தேசிகம் ஸ்ரீநிவாஸாக்யம் தேவராஜகுரோஸ்ஸுதம் |
பூஷிதம் ஸத்குணைர்வந்தே ஜீவிதம் மம ஸர்வதா||

திருநக்ஷத்திரம்: புரட்டாசி (கன்னி) மகம்

தீர்த்தம்: கார்த்திகை சுக்ல பஞ்சமி

அவதார திருத்தலம்: ஸ்ரீ ரங்கம்

ஆசாரியன்: மணவாளமாமுநிகள்

பிரபந்தம் : வரவரமுநி வைபவ விஜயம்

யதிராஜ பாதுகை (எம்பெருமானாரின் திருவடிகள்) என்று போற்றப்பட்ட முதலியாண்டானின் திருவம்சத்தில்
தேவராஜ தோழப்பரின் திருக்குமாரராகவும் , கோயில் கந்தாடை அண்ணனின் திருத்தம்பியாராகவும் ,
கோயில் கந்தாடை அப்பன் அவதரித்தார். பெற்றோர்களால் ஸ்ரீநிவாசன் என்று பெயரிடப்பட்ட இவரே
பிற்காலத்தில் மணவாளமாமுநிகளின் ப்ரிய சிஷ்யரானார்

எறும்பியப்பா மணவாளமாமுநிகளின் அன்றாட வழக்கங்களைக் கொண்டாடும்
தனது பூர்வ தினசர்யையில் கீழ்க்கண்டவாறு மிகவும் அழகாக சாதிக்கிறார் ,

பார்ச்வத: பாணிபத்மாப்யாம் பரிக்ருஹ்ய பவத்ப்ரியௌ
விந்யஸ்யந்தம் சநைர் அங்க்ரீ ம்ருதுலௌ மேதிநீதலே (பூர்வ தினசர்யை 4 )

இந்த சுலோகத்தில் எறும்பியப்பா மணவாளமாமுநிகளை பார்த்து இவ்வாறாகக் கூறுகிறார் ,
“தேவரீரின் அபிமான சிஷ்யர்களை (கோயில் அண்ணன் மற்றும் கோயில் அப்பன் )
இருபுறங்களிலும் தேவரீரின் திருக்கரங்களான தாமரைகளாலே பிடித்து,
தேவரீரின் திருவடித்தாமரைகளை மேதினியில் மெல்ல மெல்ல ஊன்றி எழுந்தருளுகிறீர் “.

தினசர்யைக்கான தனது வியாக்யானத்தில், திருமழிசை அண்ணாவப்பங்கார்,
“இந்த சுலோகத்தில் இரண்டு அபிமான சிஷ்யர்கள் என்று எறும்பியப்பா

கோயில் அண்ணனின் பெருமைகள் எல்லாம் அறிந்த பலர் , அவரிடத்திலே தஞ்சம் அடைய விரும்பினர்.
“காவேரி தாண்டா அண்ணனாய் ” ,கோயில் அண்ணன் எழுந்தருளி இருந்ததால் ,
அவர் தனது திருத்தம்பியாரான கோயில் அப்பனை , பல இடங்களுக்கு சென்று அனைவரையும் திருத்தி பணிகொள்ள நியமித்தார்.
இதனை சிரமேற்கொண்டு கோயில் அப்பன் தானும் திருவரங்கத்திலிருந்து பல இடங்களுக்கு சென்று பலரை பணி கொண்டார்.

————-

திரு முடி வர்க்கம்

1-எம்பெருமானார் -திரு நக்ஷத்ரம் – சித்திரை திருவாதிரை
2-முதலியாண்டான் -திரு நக்ஷத்ரம் – சித்திரை -புனர்வசு –
3-கந்தாடையாண்டான் -திரு நக்ஷத்ரம் -மாசி புனர்வசு –
4-துன்னு புகழ் கந்தாடைத் தோழப்பர்–திரு நக்ஷத்ரம் -ஆடி பூரட்டாதி
5-ஈயான் ராமானுஜாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -புரட்டாசி -திருவோணம்
6-திருக்கோபுரத்து நாயனார் -திரு நக்ஷத்ரம் -மாசி -கேட்டை
7-தெய்வங்கள் பெருமாள் -திரு நக்ஷத்ரம் -ஆவணி -திருவோணம்
8-தேவராஜ தோழப்பர் -திரு நக்ஷத்ரம் –சித்திரை- ஹஸ்தம்
9-பெரிய கோயில் கந்தாடை அண்ணன்-திரு நக்ஷத்ரம் -புரட்டாசி -பூரட்டாதி

10-பெரிய கோயில் கந்தாடை அப்பன் -திரு நக்ஷத்ரம் -புரட்டாசி மகம்
தீர்த்தம் -கார்த்திகை சுக்ல பஞ்சமி

11-அப்பு வய்ங்கார் -திரு நக்ஷத்ரம் -வைகாசி -திருவோணம்
தீர்த்தம் -மார்கழி கிருஷ்ணாஷ்டமி
12-அப்பூவின் அண்ணன் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -சித்திரை – மூலம்
தீர்த்தம் –மாசி -கிருஷ்ண பக்ஷ த்ருதீயை
13-அப்பூவின் அண்ணன் வேங்கடாச்சார்யார்-திரு நக்ஷத்ரம் -சித்திரை -விசாகம் –
14-சாரீரிக தர்ப்பணம் அண்ணன் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆனி -ஸ்வாதி –
15-பிரணதார்த்தி ஹராச்சார்யர் –
16-வேங்கடாச்சார்யார் –
17-அப்பூர்ண அப்பங்கார் வேங்கடாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -ஆனி -அனுஷம்
18-அப்பூர்ண அப்பங்கார் வரதாச்சார்யர் –
19-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஸ்வாதி –
20-வரதாச்சார்யர்

22-வேங்கடாச்சார்யார்
23-வரதாச்சார்யர்
24-பிரணதார்த்தி ஹராச்சார்யர்
25-பெரிய அப்பன் வேங்கடாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -சித்திரை -கார்த்திகை –
26-பெரிய அப் பூர்ண அப்பயங்கார் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆடி -விசாகம்
27-வேங்கடாச்சார்யார் –
28-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -பங்குனி மகம்
29-பெரிய ஸ்வாமி வேங்கடாச்சார்யார் -ஆனி ரோஹிணி
30-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆவணி -உத்திரட்டாதி
தீர்த்தம் -மார்கழி சுக்ல பக்ஷ பிரதமை

31-வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -மாசி -மூலம்
தீர்த்தம் -புரட்டாசி -சிக்கலை பக்ஷ தசமி

32-அப்பன் ராமானுஜாசார்யார்–திரு நக்ஷத்ரம்-மார்கழி மூலம்

அவதார ஸ்லோகம்
ஸ்ரீ மத் கைரவணீ சரோ வரதடே ஸ்ரீ பார்த்த ஸூத உஜ்ஜ்வல
ஸ்ரீ லஷ்ம்யாம் யுவவத்சரே சுப தனுர் மூலே வதீர்ணம் புவி
ஸ்ரீ வாதூல ரமா நிவாஸ ஸூகுரோ ராமாநுஜாக்யம் குணை
ப்ராஜிஷ்ணும் வரதார்ய சத் தனய தாம் பிராப்தம் பஜே சத் குரும்

ஸ்வாமி தனியன் –
வாதூல அந்வய வார்தீந்தும் ராமானுஜ குரோ ஸூதம்
தத் ப்ராப்த உபாய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

ஸ்ரீ மத் வாதூல வரதார்ய குரோஸ் தனூஜம்
ஸ்ரீ வாஸ ஸூரி பத பங்கஜ ராஜ ஹம்ஸம்
ஸ்ரீ மந் நதார்த்தி ஹாரா தேசிக பவுத்ர ரத்னம்
ராமானுஜம் குரு வரம் சரணம் ப்ரபத்யே

ஸ்வாமி வாழித் திரு நாமம்
சீர் புகழும் பாஷியத்தின் சிறப்புரைப்போன் வாழியே
செய்ய பகவத் கீதை திறன் உரைப்பான் வாழியே
பேர் திகழும் ஈடு நலம் பேசிடுவோன் வாழியே
பெற்ற அணி பூதூருள் பிறங்கிடுவோன் வாழியே
பார் புகழும் எட்டு எழுத்தின் பண்பு உரைத்தோன் வாழியே
பண்பு மிகு மூலச் சீர் பரவ வந்தோன் வாழியே
ஆர்வமுடன் சீடர்க்கே அருள் புரிவோன் வாழியே
அன்பு மிகு ராமானுஜர் அடியிணைகள் வாழியே

ஸ்வாமி நாள் பாட்டு –

பூ மகளின் நாதன் அருள் பொங்கி மிக வளர்ந்திடும் நாள்
பூதூர் எதிராசா முனி போத மொழி பொலிந்திடு நாள்
நேம மிகு சிட்டர் இனம் நேர்த்தியாய்த் திகழ்ந்திடு நாள்
நீள் நிலத்துள் வேத நெறி நீடூழி தழைத்திடு நாள்
பா மனம் சூழ் மாறன் எழில் பாடல் இங்கு முழங்கிடு நாள்
பார் புகழும் வயிணவத்தின் பண்பு நிதம் கொழித்திடு நாள்
சேம மிகு ராமானுஜர் தேசிகர் இவண் உதித்த
செய்ய தனுர் மதி மூலம் சேர்ந்த திரு நன்னாளே —

ஸ்ரீ ஸ்வாமி திருக்குமாரர்கள் மூவர்

———-

33-ஜ்யேஷ்ட திருக்குமாரர் -ஸ்ரீ பிரணதார்த்தி ஹராச்சார்யர் –திரு நக்ஷத்ரம் -மார்கழி -விசாகம் –

ஸ்ரீ ப்ரணார்த்தி ஹரா சாரியார் –நம் வர்த்தமான ஸ்வாமி திரு நக்ஷத்ரம் -மார்கழி விசாகம்

தனியன்
வாதூலான்வய வார் தீந்தும் ராமானுஜ குரோஸ் ஸூதம்
தத் ப்ராப்த உபய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

மார்கழி விசாகத்தில் வந்து உதித்தான் வாழியே
மா வளரும் பூதூரான் வண் கழல் பணிந்தோன் வாழியே
பேர் திகழும் பேர் அருளாளன் பதம் பணிவோன் வாழியே
மறையோர் தொழும் தக்கானை மனனம் செய்வோன் வாழியே
ஆராமம் சூழ் அரங்க நகர் அப்பன் போற்றுமவன் வாழியே
ஈங்கு வாதூல குலத்து வந்து உதித்தோன் வாழியே
ஆர்வமுடன் அருளிச் செயலை ஆதரிப்போன் வாழியே
ஆர்த்த புகழ் ப்ரணதார்த்தி ஹரர் அடியிணைகள் வாழியே

வண் புதுவை நகர்க்கோதை சீர் அருளைச் சேர்ந்து இருப்பான் வாழியே
பூவார் மனம் கமழும் புல்லாணி தொழுது எழுவோன் வாழியே
கண்ணனூர் கண்ணபுரம் தொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
தனுர் விசாகத்தில் வந்து உதித்த வள்ளல் வாழியே
தெண்டிரை சூழ் திருவல்லிக்கேணியில் அவதரித்தோன் வாழியே
தான் உகந்த எதிராசன் கழல் தொழுவோன் வாழியே
அண்ணல் அருளாளன் அடி அடைந்தோன் வாழியே
அப்பன் ப்ரணதார்த்தி ஹரர் திருவடிகள் அவனியில் வாழியே

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ விஷ்ணு ஷோடச நாம ஸ்தோத்திரம் /ஸ்ரீராமபிரான் ஸ்ரீ திருவடிக்கு உபநிஷத் பற்றி ஸ்ரீ ஸூக்திகள் —

December 30, 2021

ஸ்ரீ விஷ்ணு ஷோடச நாம ஸ்தோத்திரம்.

ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும் போஜநே ச ஜனார்தனம்
சயனே பத்மநாபஞ்ச விவாஹே ச பிரஜாபதிம்.

யுத்தே சக்தரம்தேவம் ப்ரவாஹே ச த்ரிவிக்ரமம்
நாராயணம் தனுத்யாகே ஸ்ரீதரம ப்ரியசங்கமே.

துஸ்வப்னே ஸ்மரகோவிந்தம் ஸங்கடே மதுஸூதனம்
காநரே நாரசிம்ஹஞ்ச பாவகே ஜலசாயினம் .

ஜலமத்யே வராஹஞ்ச பர்வதே ரகுநந்தனம்
கமனே வாமனஞ்சைவ ஸர்வகாலேஷு மாதவம்.

ஷோடசை தானி நாமானி ப்ராத ருத்தாய யஹ் படேத்
ஸர்வாபாப விநிர்முக்தோ விஷ்ணுலோகே மஹீயதே.

———————–

நம்மைப்போல சிரித்தவர் நம்மைப்போலே அழுதவர்
நம்மைப்போலே காதலித்து காதலோடு வாழ்ந்தவர்
இழப்புகளைக் கண்டவர் மீண்டெழுந்து வந்தவர்
உறவுகளைப் பிரிந்திருக்கும் சோகங்களை அறிந்தவர்
செல்வத்தையும் கண்டவர் ஏழ்மையையும் கண்டவர்
செல்வத்திலும் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தவர்

விதியென்னும் புயலிலே ஆடாத மரமல்லர்
அத்தனை புயலிலும் வீழாத மரமவர்
தன்னுயிராம் சீதையை தியாகம்செய்த மேன்மையர்
இதயத்தில் சீதையை இழக்காத ஆண்மையர்
புரிதலில்லா மக்களை பொறுத்துக்காத்த பூமியர்
புரிந்தபின் இதயத்தில் உயிரான சாமியர்

என்னுயிரும் ராமரே என்மூச்சும் ராமரே
என்னிதயம் ராமரே என்வாழ்க்கை ராமரே
என்கண்கள் ராமரே கண்மணியும் ராமரே
என் மனத்திரையில் எப்பவும் மலருமவர் ரூபமே
என் மூளை எப்பவும் துதிப்பதவர் பாதமே!

ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்

கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
துறு துறு சிறுவன் தசரத ராமர்
கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்

இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
ராஜ குருவாம் பரத ராமர்
தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
அன்புள்ள கணவன் சீதா ராமர்

உற்ற தோழன் குகனின் ராமர்
உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
தெய்வ உருவாம் அனுமத் ராமர்
ஞான சூரியன் ஜாம்பவ ராமர்

மூத்த மகனாம் சுமித்ர ராமர்
மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
மன்னித்தருளும் கைகேயே ராமர்
மகனே போன்றவர் ஜனக ராமர்

எளிய விருந்தினர் சபரியின் ராமர்
அபயம் அளிப்பவர் விபீஷண ராமர்
கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்
பாப வினாசனர் கோதண்ட ராமர்

ஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்
பெண்கள் போற்றும் கற்புடை ராமர்
மக்கள் மகிழும் அரசுடை ராமர்
பக்தர் நெகிழும் பண்புடை ராமர்

வேள்விகள் காக்கும் காவலன் ராமர்
சாபங்கள் போக்கும் அகல்ய ராமர்
இரு மனம் இணைக்கும் கௌதம ராமர்
திருமண நாயகன் ஜானகி ராமர்

சிவ வில் முறித்த பராக்ரம ராமர்
ஹரி வில் தரித்த சத்ரிய ராமர்
கடலை வென்ற வருண ராமர்
பாலம் கண்ட சேது ராமர்

மரம் ஏழு துளைத்த தீர ராமர்
மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்
குறையற்ற குணமகன் வீர்ய ராமர்
குலப் புகழ் காத்த சூர்ய ராமர்

சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
காதலை மறவா சீதையின் ராமர்
தாயுமானவர் லவகுச ராமர்
தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்

கீதை தந்த கண்ணன் ராமர்
கண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்
சிவனை வணங்கும் பக்த ராமர்
சிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்

முனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்
தவசிகள் நினைக்கும் நித்திய ராமர்
காந்தியின் கடவுள் சத்திய ராமர்
அறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்

ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்
ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்
ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்
ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்

ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்
ராம் ராம் என்றால் உவகை பெருகும்
ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்
ராம் ராம் என்றால் தர்மம் புரியும்

ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்
ராம் ராம் என்றால் வெற்றி விழையும்
ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்
ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்

ராம் ராம் என்றால் மனது அடங்கும்
ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்
ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்
ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்

ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்
ஒரு வைரம் போல மனதில் பதித்தால்
துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்
இன்பம் எல்லாம் விரைவில் கூடும்
ஸ்ரீராமபுண்யஜெயம்

—–

ஓம் நமோ ப்ரஹ்மாதிப்யோ ,ப்ரஹ்மவித்யா ஸம்ப்ரதாய–கர்த்ருப்யோ வம்ச –ரிஷிப்யோ ,மஹத்ப்யோ நமோ குருப்ய :

ப்ரஹ்மா போன்றவர்கள் ப்ரஹ்மவித்யா ஸம்பிரதாயத்தை அருளினார்கள் கோத்ர ப்ரவர்த்தகர்களான மஹரிஷிகள் ,
மஹான்கள் —-இவர்கள், இந்த ஸம்ப்ரதாயத்தை வளர்த்தார்கள். அப்படிப்பட்ட ஆசார்யர்களுக்கு நமஸ்காரம்

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதா (கும்) சப்ரஹிணோதி தஸ்மை |
த (கும்)ஹ தேவ–மாத்ம –புத்தி–ப்ரகாஸம் முமூக்ஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே ||

முதன் முதலில் ப்ரஹ்மாவைப் படைத்து, அவருக்கு வேதங்களைக் கொடுத்து, அருளியவர் எவரோ,
நமது உள்ளத்திலே இருந்துகொண்டு நமது புத்தியைப் ப்ரகாசிக்கச் செய்பவர் எவரோ,
அந்தத் தேவனை மோக்ஷத்தில் விருப்பமாக இருக்கிற முமுக்ஷூவான அடியேன்
சரணமடைகிறேன்

ஸ்ரீராமபிரான், அநுமனுக்குச் சொல்கிறார்;–

1.ருக்வேதாதி –விபாகேன வேதாச்–சத்வார ஈரிதா : |
தேஷாம் சாகா –ஹ்யனேகா : ஸ்யுஸ்தாஸூபநிஷதஸ்–ததா ||
2. ருக்வேதஸ்ய து சாகா : ஸ்யு –ரேக விம்சதி சங்க்யகா : |
நவா திகசதம் சாகா யஜூஷோ மாருதாத்மஜ ||
3. சஹஸ்ர–சங்க்யயா ஜாதா :சாகா :ஸாம்ந : பரந்தப |
அதர்வணஸ்ய சாகா :ஸ்யு :பஞ்சாசத்பேத தோஹரே ||
4. ஏகைகஸ்யாஸ்து சாகாயா ஏகைகோபநிஷன் மதா |
மாண்டூக்ய –மேக –மேவாலம் முமுக்ஷுணாம் விமுக்தயே ||
ததாப்–யஸித்தஞ்சேஜ்—ஜ்ஞானம் தசோபநிஷதம் பட
5. ஈச–கேன–கட–ப்ரச்ன -முண்ட மாண்டோக்ய தித்திரி : |
ஐதரேயஞ்ச சாந்தோக்யம் ப்ருஹதாரண்யகம் ததா ||
6. ஸர்வோப நிஷதாம் மத்யே ஸார மஷ்டோத்தரம் சதம் |
ஸக்ருச் –ச்ரவண– மாத்ரேண ஸர்வா கௌக நிக்ருந்தனம் ||
7. மயோபதிஷ்டம் சிஷ்யாய துப்யம் பவன நந்தன |
இத –மஷ்டோத்தர சதம் நதேயம் யஸ்ய கஸ்யசித் ||

இவைகளின் சுருக்கமான பொருளாவது:–

1.ருக் வேதம் முதலிய வேதங்கள், வ்யாஸ பகவானால் நான்காகப் பிரிக்கப்பட்டது.
அவற்றில் பல சாகைகள் (கிளைகள்) உள்ளன ; உபநிஷத்துக்கள் உள்ளன
2. மாருதி புத்ர ! —-அநுமனே !ருக் வேத சாகைகள் 21; யஜுர் வேத சாகைகள் 109
3. எதிரிகளைத் தகிப்பவனே !சாம வேதத்தில் சாகைகள் ஆயிரக்கணக்காக இருக்கின்றன. அதர்வண வேதத்தில் 50 சாகைகள் உள்ளன.
4. ஸ்லோகம் 4ம் 5ம் சொல்வதாவது—ஒவ்வொரு சாகையிலும் உபநிஷத் உள்ளது.
மோக்ஷத்தை அபேக்ஷிக்கும் முமுக்ஷுக்களுக்கு மாண்டூக்ய உபநிஷத்தே போதுமானது.
அப்படியும் ஜ்ஞானம் வரவில்லையெனில்,
1-ஈசாவாஸ்ய ,
2-கேன,
3-கட ,
4-ப்ரச்ன ,
5-முண்டக,
6-மாண்டூக்ய ,
7-தைத்திரீய ,
8-ஐதரேய,
9-சாந்தோக்ய ,
10-ப்ருஹதாரண்ய உபநிஷத்துக்களான இந்தப் பத்து உபநிஷத்துக்களையும்,
ஆசார்ய முகேன தெரிந்துகொள்ள வேண்டும்.

இவை தசோபநிஷத்என்று ப்ரஸித்தி பெற்றவை.

மேலும் -8 உபநிஷத்துக்கள்
11. ச்வேதாச்வதரோபநிஷத்
12.அதர்வசிர உபநிஷத்
13.அதர்வசிகோபநிஷத்
14.கௌஷீ தகி உபநிஷத்
15. மந்த்ரிகோபநிஷத்
16. ஸுபாலோபநிஷத்
17.அக்நி ரஹஸ்யம்
18. மஹோபநிஷத்

உபநிஷத் என்றால்
ஆசார்யனின் அருகில் சென்று உபதேசமாகக் கேட்பது. இதனால் துன்பங்கள் தொலைந்து பேரின்பம் நிலைக்கும்.
ஆதலால், உபநிஷத் எனப்பட்டது. இது லௌகிக வார்த்தை என்று சொல்வர்.
உபநிஷத்துக்கு வேதாந்தம் என்றும் பெயர். பரப்ரஹ்மத்திடம் நெருங்கி இருப்பதாலே உபநிஷத் எனப்பட்டது
6. உபநிஷத்துக்கள் நிறைய உள்ளன. அவற்றுள் முக்ய ஸாரமாக இருப்பது—-108.

இவற்றை ஒருமுறை ச்ரவணம் (கேட்பது) செய்த உடனேயே எல்லாப் பாவங்களும் நசித்துவிடும்.
7. பவன நந்தன ! இந்த 108ம் , என்னுடைய சிஷ்யனான உனக்கு, உபதேசிக்கப்பட்டது.
இதை ஆராயாமல் எவருக்கேனும் உபதேசிக்கக் கூடாது.

ஸ்ரீ ராமபிரான் மேலும் சொல்கிறார் —–

ஸேவாபராய சிஷ்யாய ஹித–புஷ்டாய மாருதே |
மத்பக்தாய ஸுசீலாய குலீநாய ஸுமேத ஸே ||

ஸம்யக் பரீக்ஷ்ய தாதவ்ய –மேவ –மஷ்டோத்த்ரம் சதம் |
ய: படேச் –ச்ருணுயாத் வாபி ஸ மாமேதி ந ஸம்சய : ||

இவற்றின் அர்த்தமாவது—-
ஹே—-மாருதி ! கைங்கர்யத்தைச் செய்பவனும், பிறருக்கு உதவுவதில் விருப்பம் உள்ளவனும் என்னிடம் பக்தி உள்ளவனும்
நல்ல குலத்தில் உதித்தவனும் நல்ல புத்தியும் உடைய சிஷ்யனுக்கு அவனை நன்கு பரீக்ஷை செய்தபிறகே
இந்த 108 உபநிஷத்துக்களையும் உபதேசிக்கவேண்டும்.
இவற்றைப் படிப்பவன், கேட்பவன், அவன் என்னையே அடைகிறான். இதில் சந்தேகமில்லை.

வேதத்தில், நமகம், சமகம் என்று இரண்டு இருக்கிறது.
நமகம் என்பது,பகவானை ஸ்தோத்தரிக்கும்படியான மந்த்ரம்.
சமகம் என்பது நம்முடைய வேண்டுதல்களை பகவானிடம் சமர்ப்பிக்கும்படியான மந்த்ரம்.
நமக்கு வேண்டியவை எவை எவை என்று சமகம் சொல்லிக் கொடுக்கிறது. இவைகளில் எண்கள் வருகின்றன

ஏகாச மே திஸ்ரச்ச மே பஞ்ச ச மே ஸப்த ச மே நவ ச ம
ஏகாதச ச மே த்ரயோதச ச மே பஞ்சதச ச மே ஸப்ததச ச மே
நவதச ச ம ஏக விகும்சதிச் ச மே த்ரயவிகும் சதிச் ச மே பஞ்சவிகும் சதிச் ச மே ஸப்தவிகும் சதிச்ச மே நவவிகும் சதிச்ச மே ஏகத்ரிகும் சச்ச மே த்ரயஸ்த்ரிகும் சச்ச மே சதஸ்ரச்ச மே –ஷ்டௌ ச மே த்வாதச மே ஷோடச ச மே விகும் சதிச் ச மே சதுர்விகும் சதிச் ச மே –ஷ்டாவிகும் சதிச் ச மே த்வாத்ரிகும் சச்ச மே ஷட்த்ரிகும் சாச்ச மே சத்வாரிகும் சச்ச மே சதுச்சத்வாரிகும் சச்ச மே –ஷ்டாசத் வாரிகும் சச்ச மே வாஜச்ச ப்ரஸவச்சா –விஜச்ச க்ரதுச்ச ஸுவச்ச மூர்த்தாச வ்யச்நியச்சா-ந்த்யாயநச்சா–ந்த்யச்ச பௌவநச்ச புவநச்சா –திபதிச்ச

வேதங்களில் , எண்கள் எவ்வளவு விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன என்பது வியக்க வைக்கும்

————————————————–

புராணம் என்றால் பழைய கதைகள் என்று பொருள்.
அதாவது ‘’புரா அபி நவம்’’ என்று வடமொழியில் விளக்கம் தருவர். பழையது ஆனால் என்றும் புதியது.

அஸ்ய மஹதோ பூதஸ்ய நிச்வசித்
மேதத் ருக்வேதோ யஜூர்வேதஸ்ஸாம
வேத சுதர்வாங்கிரச இதிஹாச
புராணம் வித்யா உபநிஷத் —என்று பிருஹதாரண்யம் கூறுகிறது.

இருக்கு, யஜூர், சாமம், அதர்வணம், இதிஹாசம், புராணம், வித்தை, உபநிடதம் முதலியவை பரம்பொருளின் சுவாசம்.

18 புராணங்களில் உள்ள ஸ்லோக எண்ணிக்கையைப் பார்க்கலாம்:-
பிரம்ம புராணம் சுமார் 13000 ஸ்லோகங்கள்
பத்மம் சுமார் 55000 ஸ்லோகங்கள்
விஷ்ணு -சுமார் 23000 ஸ்லோகங்கள்
சிவ -சுமார் 24000 ஸ்லோகங்கள்
பாகவதம்- சுமார் 18000 ஸ்லோகங்கள்
பவிஷ்யம் -சுமார் 14500 ஸ்லோகங்கள்
மார்க்கண்டேயம் சுமார் 9000 ஸ்லோகங்கள்
ஆக்னேயம்- சுமார் 15000 ஸ்லோகங்கள்
நாரதீயம் – சுமார் 25000 ஸ்லோகங்கள்
பிரம்ம வைவர்த்தம் சுமார் 18000 ஸ்லோகங்கள்
லிங்கம் சுமார் 11000 ஸ்லோகங்கள்
வராஹம் சுமார் 24000 ஸ்லோகங்கள்
ஸ்காந்தம் சுமார் 81000 ஸ்லோகங்கள்
வாமனம் சுமார் 2400 ஸ்லோகங்கள்
கூர்ம சுமார் 5246 ஸ்லோகங்கள்
மத்ஸ்யம் சுமார் 1402 ஸ்லோகங்கள்
காருடம் சுமார் 19000 ஸ்லோகங்கள்
பிரம்மாண்டம் சுமார் 12000 ஸ்லோகங்கள்

ஆக சுமார் 370541 ஸ்லோகங்களுடன் தேவி பாகவதத்தில் உள்ள 18000 ஸ்லோகங்களையும்
கணக்கிட்டால் 388548 ஸ்லோகங்கள் ஆகின்றன!
இது தவிர மஹாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களாலும்
வால்மீகி ராமாயணம் சுமார் 24000 ஸ்லோகங்களாலும் ஆகி இருப்பதை சேர்த்துக் கொண்டால் 512548 ஸ்லோகங்கள் ஆகின்றன.

——————-

ஸ்ரீராம காயத்ரி

ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்

ஸ்ரீ சீதா காயத்ரி

ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்

ஸ்ரீ ராம பாத காயத்ரி

ஓம் ராமபாதாய வித்மஹே ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்

ஸ்ரீராமராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே! -ஸ்ரீ சிவபெருமான்

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்-ஸ்ரீ கம்பர்

நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே-ஸ்ரீ கம்பர்

மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்-ஸ்ரீ கம்பர்

நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கியர்

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்

ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்

காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்

நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்

ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்

ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராம ராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-சிவவாக்கியர்

திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி

———-

அரக்கனே ஆக; வேறு ஓர் அமரனே ஆக; அன்றிக்
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக;‘ கொடுமை ஆக;
இரக்கமே ஆக; வந்து, இங்கு, எம்பிரான் நாமம் சொல்லி,
உருக்கினன் உணர்வை; தந்தான் உயிர்; இதின் உதவிஉண்டோ

——–

அகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
‘அ’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால்
வடிவமைக்கப் பட்டுள்ளது.
” இதுவே தமிழின் சிறப்பு..”
அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கேநோபநிஷத்

December 30, 2021

ஸ்ரீ கேநோபநிஷத்
॥ அத² கேநோபநிஷத் ॥
ௐ ஆப்யாயந்து மமாங்கா³நி வாக்ப்ராணஶ்சக்ஷு:
ஶ்ரோத்ரமதோ² ப³லமிந்த்³ரியாணி ச ஸர்வாணி ।
ஸர்வம் ப்³ரஹ்மௌபநிஷத³ம்
மாऽஹம் ப்³ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்³ரஹ்ம
நிராகரோத³நிராகரணமஸ்த்வநிராகரணம் மேऽஸ்து ।
ததா³த்மநி நிரதே ய
உபநிஷத்ஸு த⁴ர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து ।
ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥
ௐ கேநேஷிதம் பததி ப்ரேஷிதம் மந:
கேந ப்ராண: ப்ரத²ம: ப்ரைதி யுக்த: ।
கேநேஷிதாம் வாசமிமாம் வத³ந்தி
சக்ஷு: ஶ்ரோத்ரம் க உ தே³வோ யுநக்தி ॥ 1॥
ஶ்ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரம் மநஸோ மநோ யத்³
வாசோ ஹ வாசம் ஸ உ ப்ராணஸ்ய ப்ராண: ।
சக்ஷுஷஶ்சக்ஷுரதிமுச்ய தீ⁴ரா:
ப்ரேத்யாஸ்மால்லோகாத³ம்ரு’தா ப⁴வந்தி ॥ 2॥
ந தத்ர சக்ஷுர்க³ச்ச²தி ந வாக்³க³ச்ச²தி நோ மந: ।
ந வித்³மோ ந விஜாநீமோ யதை²தத³நுஶிஷ்யாத் ॥ 3॥
அந்யதே³வ தத்³விதி³தாத³தோ² அவிதி³தாத³தி⁴ ।
இதி ஶுஶ்ரும பூர்வேஷாம் யே நஸ்தத்³வ்யாசசக்ஷிரே ॥ 4॥
யத்³வாசாऽநப்⁴யுதி³தம் யேந வாக³ப்⁴யுத்³யதே ।
ததே³வ ப்³ரஹ்ம த்வம் வித்³தி⁴ நேத³ம் யதி³த³முபாஸதே ॥ 5॥

யந்மநஸா ந மநுதே யேநாஹுர்மநோ மதம் ।
ததே³வ ப்³ரஹ்ம த்வம் வித்³தி⁴ நேத³ம் யதி³த³முபாஸதே ॥ 6॥
யச்சக்ஷுஷா ந பஶ்யதி யேந சக்ஷூँஷி பஶ்யதி ।
ததே³வ ப்³ரஹ்ம த்வம் வித்³தி⁴ நேத³ம் யதி³த³முபாஸதே ॥ 7॥
யச்ச்²ரோத்ரேண ந ஶ்ரு’ணோதி யேந ஶ்ரோத்ரமித³ம் ஶ்ருதம் ।
ததே³வ ப்³ரஹ்ம த்வம் வித்³தி⁴ நேத³ம் யதி³த³முபாஸதே ॥ 8॥
யத்ப்ராணேந ந ப்ராணிதி யேந ப்ராண: ப்ரணீயதே ।
ததே³வ ப்³ரஹ்ம த்வம் வித்³தி⁴ நேத³ம் யதி³த³முபாஸதே ॥ 9॥
॥ இதி கேநோபநிஷதி³ ப்ரத²ம: க²ண்ட:³ ॥
யதி³ மந்யஸே ஸுவேதே³தி த³ஹரமேவாபி var த³ப்⁴ரமேவாபி
நூநம் த்வம் வேத்த² ப்³ரஹ்மணோ ரூபம் ।
யத³ஸ்ய த்வம் யத³ஸ்ய தே³வேஷ்வத² நு
மீமாँஸ்யமேவ தே மந்யே விதி³தம் ॥ 1॥
நாஹம் மந்யே ஸுவேதே³தி நோ ந வேதே³தி வேத³ ச ।
யோ நஸ்தத்³வேத³ தத்³வேத³ நோ ந வேதே³தி வேத³ ச ॥ 2॥
யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத³ ஸ: ।
அவிஜ்ஞாதம் விஜாநதாம் விஜ்ஞாதமவிஜாநதாம் ॥ 3॥
ப்ரதிபோ³த⁴விதி³தம் மதமம்ரு’தத்வம் ஹி விந்த³தே ।
ஆத்மநா விந்த³தே வீர்யம் வித்³யயா விந்த³தேऽம்ரு’தம் ॥ 4॥
இஹ சேத³வேதீ³த³த² ஸத்யமஸ்தி
ந சேதி³ஹாவேதீ³ந்மஹதீ விநஷ்டி: ।
பூ⁴தேஷு பூ⁴தேஷு விசித்ய தீ⁴ரா:
ப்ரேத்யாஸ்மால்லோகாத³ம்ரு’தா ப⁴வந்தி ॥ 5॥
॥ இதி கேநோபநிஷதி³ த்³விதீய: க²ண்ட:³ ॥
ப்³ரஹ்ம ஹ தே³வேப்⁴யோ விஜிக்³யே தஸ்ய ஹ ப்³ரஹ்மணோ
விஜயே தே³வா அமஹீயந்த ॥ 1॥

த ஐக்ஷந்தாஸ்மாகமேவாயம் விஜயோऽஸ்மாகமேவாயம் மஹிமேதி ।
தத்³தை⁴ஷாம் விஜஜ்ஞௌ தேப்⁴யோ ஹ ப்ராது³ர்ப³பூ⁴வ தந்ந வ்யஜாநத
கிமித³ம் யக்ஷமிதி ॥ 2॥
தேऽக்³நிமப்³ருவஞ்ஜாதவேத³ ஏதத்³விஜாநீஹி
கிமித³ம் யக்ஷமிதி ததே²தி ॥ 3॥
தத³ப்⁴யத்³ரவத்தமப்⁴யவத³த்கோऽஸீத்யக்³நிர்வா
அஹமஸ்மீத்யப்³ரவீஜ்ஜாதவேதா³ வா அஹமஸ்மீதி ॥ 4॥
தஸ்மிꣳஸ்த்வயி கிம் வீர்யமித்யபீத³ꣳ ஸர்வம்
த³ஹேயம் யதி³த³ம் ப்ரு’தி²வ்யாமிதி ॥ 5॥
தஸ்மை த்ரு’ணம் நித³தா⁴வேதத்³த³ஹேதி ।
தது³பப்ரேயாய ஸர்வஜவேந தந்ந ஶஶாக த³க்³து⁴ம் ஸ தத ஏவ
நிவவ்ரு’தே நைதத³ஶகம் விஜ்ஞாதும் யதே³தத்³யக்ஷமிதி ॥ 6॥
அத² வாயுமப்³ருவந்வாயவேதத்³விஜாநீஹி
கிமேதத்³யக்ஷமிதி ததே²தி ॥ 7॥
தத³ப்⁴யத்³ரவத்தமப்⁴யவத³த்கோऽஸீதி வாயுர்வா
அஹமஸ்மீத்யப்³ரவீந்மாதரிஶ்வா வா அஹமஸ்மீதி ॥ 8॥
தஸ்மிँஸ்த்வயி கிம் வீர்யமித்யபீத³ँ
ஸர்வமாத³தீ³ய யதி³த³ம் ப்ரு’தி²வ்யாமிதி ॥ 9॥
தஸ்மை த்ரு’ணம் நித³தா⁴வேததா³த³த்ஸ்வேதி
தது³பப்ரேயாய ஸர்வஜவேந தந்ந ஶஶாகாதா³தும் ஸ தத ஏவ
நிவவ்ரு’தே நைதத³ஶகம் விஜ்ஞாதும் யதே³தத்³யக்ஷமிதி ॥ 10॥
அதே²ந்த்³ரமப்³ருவந்மக⁴வந்நேதத்³விஜாநீஹி கிமேதத்³யக்ஷமிதி ததே²தி
தத³ப்⁴யத்³ரவத்தஸ்மாத்திரோத³தே⁴ ॥ 11॥
ஸ தஸ்மிந்நேவாகாஶே ஸ்த்ரியமாஜகா³ம ப³ஹுஶோப⁴மாநாமுமாँ
ஹைமவதீம் தாँஹோவாச கிமேதத்³யக்ஷமிதி ॥ 12॥
॥ இதி கேநோபநிஷதி³ த்ரு’தீய: க²ண்ட:³ ॥
ஸா ப்³ரஹ்மேதி ஹோவாச ப்³ரஹ்மணோ வா ஏதத்³விஜயே மஹீயத்⁴வமிதி

ததோ ஹைவ விதா³ஞ்சகார ப்³ரஹ்மேதி ॥ 1॥
தஸ்மாத்³வா ஏதே தே³வா அதிதராமிவாந்யாந்தே³வாந்யத³க்³நிர்வாயுரிந்த்³ரஸ்தே
ஹ்யேநந்நேதி³ஷ்ட²ம் பஸ்பர்ஶுஸ்தே ஹ்யேநத்ப்ரத²மோ விதா³ஞ்சகார
ப்³ரஹ்மேதி ॥ 2॥
தஸ்மாத்³வா இந்த்³ரோऽதிதராமிவாந்யாந்தே³வாந்ஸ
ஹ்யேநந்நேதி³ஷ்ட²ம் பஸ்பர்ஶ ஸ ஹ்யேநத்ப்ரத²மோ விதா³ஞ்சகார
ப்³ரஹ்மேதி ॥ 3॥
தஸ்யைஷ ஆதே³ஶோ யதே³தத்³வித்³யுதோ வ்யத்³யுததா³3

இதீந் ந்யமீமிஷதா³3 இத்யதி⁴தை³வதம் ॥ 4॥
அதா²த்⁴யாத்மம் யத்³தே³தத்³க³ச்ச²தீவ ச மநோऽநேந
சைதது³பஸ்மரத்யபீ⁴க்ஷ்ணँஸங்கல்ப: ॥ 5॥
தத்³த⁴ தத்³வநம் நாம தத்³வநமித்யுபாஸிதவ்யம் ஸ ய ஏததே³வம் வேதா³பி⁴
ஹைநꣳ ஸர்வாணி பூ⁴தாநி ஸம்வாஞ்ச²ந்தி ॥ 6॥
உபநிஷத³ம் போ⁴ ப்³ரூஹீத்யுக்தா த உபநிஷத்³ப்³ராஹ்மீம் வாவ த
உபநிஷத³மப்³ரூமேதி ॥ 7॥
தஸை தபோ த³ம: கர்மேதி ப்ரதிஷ்டா² வேதா:³ ஸர்வாங்கா³நி
ஸத்யமாயதநம் ॥ 8॥
யோ வா ஏதாமேவம் வேதா³பஹத்ய பாப்மாநமநந்தே ஸ்வர்கே³
லோகே ஜ்யேயே ப்ரதிதிஷ்ட²தி ப்ரதிதிஷ்ட²தி ॥ 9॥
॥ இதி கேநோபநிஷதி³ சதுர்த:² க²ண்ட:³ ॥
ௐ ஆப்யாயந்து மமாங்கா³நி வாக்ப்ராணஶ்சக்ஷு:
ஶ்ரோத்ரமதோ² ப³லமிந்த்³ரியாணி ச ஸர்வாணி ।
ஸர்வம் ப்³ரஹ்மௌபநிஷத³ம்
மாऽஹம் ப்³ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்³ரஹ்ம
நிராகரோத³நிராகரணமஸ்த்வநிராகரணம் மேऽஸ்து ।
ததா³த்மநி நிரதே ய
உபநிஷத்ஸு த⁴ர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து ।

ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥
॥ இதி கேநோபநிஷத் ॥

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.