ஸ்ரீ ராமானுஜர் நியமித்து அருளிய -74-சிம்ஹாசனாதிபதிகள்–/ஸ்ரீ மணவாள மா முனிகளுடைய அஷ்ட திக் கஜங்கள் —

ஸ்ரீ ராமானுஜர் நியமித்து அருளிய -74-சிம்ஹாசனாதிபதிகள்–

1–ஸ்ரீ சொட்டை நம்பி -ஸ்ரீ ஆளவந்தார் உடைய திருக்குமாரர் –இவரது திருக்குமாரர் ஸ்ரீ என்னாச்சான்-அவரது திருக்குமாரர் ஸ்ரீ பிள்ளை அப்பன்
2–ஸ்ரீ புண்டரீகர் -ஸ்ரீ பெரிய நம்பி திருக்குமாரர்
3–ஸ்ரீ தெற்கு ஆழ்வான் -ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி திருக்குமாரர்
4–ஸ்ரீ ஸூந்தரத் தோளுடையான்-ஸ்ரீ திருமாலை ஆண்டான் திருக்குமாரர்
5–ஸ்ரீ ராமானுஜன் -ஸ்ரீ பெரிய திருமலை நம்பி யுடைய திருக்குமாரர்- ஸ்ரீ திருமலை நம்பி என்ற இவரது திருக்குமாரரும்

6–ஸ்ரீ கூரத்தாழ்வான்-அவரது திருக்குமாரர் -ஸ்ரீ பராசர பட்டர் -ஸ்ரீ ஸ்ரீ ராம பட்டர்
7–ஸ்ரீ முதலியாண்டான் -அவரது திருக்குமாரர் -ஸ்ரீ கந்தாடை ஆண்டான்
8–ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
9–ஸ்ரீ கோ மடத்து ஆழ்வான்
10–ஸ்ரீ திருக் கோவலூர் ஆழ்வான்

11–ஸ்ரீ திரு மோகூர் ஆழ்வான்
12–ஸ்ரீ பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்
13–ஸ்ரீ நடாதூர் ஆழ்வான்
14–ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
15–ஸ்ரீ அனந்தாழ்வான்

16–ஸ்ரீ மிளகு ஆழ்வான்
17–ஸ்ரீ நெய்யுண்டாழ்வான்
18–ஸ்ரீ சேட்டலூர் சிறிய ஆழ்வான்
19–ஸ்ரீ வேதாந்தி ஆழ்வான்
20–ஸ்ரீ கோயில் ஆழ்வான்

21–ஸ்ரீ உங்கள் ஆழ்வான்
22–ஸ்ரீ ஆரண புரத்து ஆழ்வான்
23 –ஸ்ரீ எம்பார்
24–ஸ்ரீ கிடாம்பி ஆச்சான்
25–ஸ்ரீ கணியனூர் சிறிய ஆச்சான்

26–ஸ்ரீ ஈச்ச்சம்படி ஆச்சான்
27–ஸ்ரீ கொங்கில் ஆச்சான்
28–ஸ்ரீ ஈச்சம்படி ஜீயர்
29–ஸ்ரீ திருமலை நல்லான்
30–ஸ்ரீ சட்டாம்பள்ளி ஜீயர்

31–ஸ்ரீ திரு வெள்ளறை ஜீயர்
32–ஸ்ரீ ஆட் கொண்ட வல்லி ஜீயர்
33–ஸ்ரீ திரு நகரி பிள்ளான்
34–ஸ்ரீ காராஞ்சி சோமாஜியார்
35–ஸ்ரீ அலங்கார வேங்கடவர்

36–ஸ்ரீ நம்பி கருந்தேவர்
37-ஸ்ரீ சிறு புள்ளி தேவராஜா பட்டர்
38–ஸ்ரீ பிள்ளி உறாந்தை உடையார்
39–ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்
40–ஸ்ரீ பெரிய கோவில் வள்ளலார்

41–ஸ்ரீ திருக் கண்ணபுரத்து அரையர்
42–ஸ்ரீ ஆசூரிப் பெருமாள்
43–ஸ்ரீ முனிப் பெருமாள்
44–ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள்
45–ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான்

46–ஸ்ரீ மாற்று ஓன்று இல்லா மாருதி சிறியாண்டான்
47–ஸ்ரீ சோமாசியாண்டான்
48–ஸ்ரீ ஜீயர் ஆண்டான்
49–ஸ்ரீ ஈஸ்வர் ஆண்டான்
50–ஸ்ரீ ஈயுண்ணிப் பிள்ளை ஆண்டான்

51–ஸ்ரீ பெரியாண்டான்
52–ஸ்ரீ சிறியாண்டான்
53–ஸ்ரீ குறிஞ்சியூர் சிறியாண்டான்
54–ஸ்ரீ அம்மங்கி ஆண்டான்
55–ஸ்ரீ ஆளவந்தார் ஆண்டான்

56–ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
57–ஸ்ரீ தொண்டனூர் நம்பி
58–ஸ்ரீ மருதூர் நம்பி
59–ஸ்ரீ மழுவூர் நம்பி
60–ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பி

61–ஸ்ரீ குருவை நம்பி
62–ஸ்ரீ முடும்பை நம்பி
63–ஸ்ரீ வடுக நம்பி
64–ஸ்ரீ வங்கீபுரத்து நம்பி
65–ஸ்ரீ பராங்குச நம்பி

66–ஸ்ரீ அம்மங்கி அம்மாள்
67–ஸ்ரீ பருத்திக் கொல்லை அம்மாள்
68–ஸ்ரீ உக்கலம் அம்மாள்
69–ஸ்ரீ சொட்டை அம்மாள்
70–ஸ்ரீ முடும்பை அம்மாள்

71–ஸ்ரீ கொமாண்டூர்ப் பிள்ளை
72–ஸ்ரீ கொமாண்டூர் இளையவல்லி
73–ஸ்ரீ கிடாம்பி பெருமாள்
74–ஸ்ரீ காட்டுப் பிள்ளான் –

———————

1-ஸ்ரீ சொட்டை நம்பி தனியன்
மகரே சைகபாத்யேச யாமுநாச்சார்ய நந்தநம்
கூர நாதோ குரோ ஸிஷ்யம் ஸேவே ஸூப குணார்ணவம் –

தாய் பூரட்டாதி திரு அவதாரம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் சிஷ்யர்
ஸ்ரீ ஆளவந்தார் திருக்குமாரார்
இவற்றால் தனக்கு ஸ்ரீ பரமபதம் நிச்சயம் -அங்கு சென்றாலும் ஸ்ரீ வைகுண்ட நாதன் திரு முகம்
ஸ்ரீ நம்பெருமாள் திரு முகம் போல் குளிர்ந்து இரா விடில் அண்டச் சுவரை முறித்துக் கொண்டு இங்கே திரும்புவேன் என்றாராம்
ஸ்ரீ பராசர பட்டர் போல் இவரும் இவ்வாறு அருளிச் செய்தார் என்பர் –
இவருடைய திருக்குமாரர் -ஸ்ரீ என்னாச்சன் -இவர் திருக்குமாரர் ஸ்ரீ பிள்ளை அப்பன்

——-

2-ஸ்ரீ புண்டரீகர்
இவரை ஸ்ரீ பெரியநம்பி திருக்குமாரர் -ஸ்ரீ அத்துழாயின் திரு சகோதரர் –
ஆடி உத்தராடம் திரு அவதாரம் -ஸ்ரீ ராமானுஜர் சிஷ்யர்

இவர் தனியன் –
ஸூசவ் மாஸ் யுத்தரா ஷாட ஜாதம் பூர்ண குரோஸ் ஸூதாம்
யதி ராஜாங்க்ரி ஸத் பக்தம் புண்டரீகாக்ஷம் ஆஸ்ரயே –

இவர் ஸஹவாஸ தோஷத்தால் போகக்கூடாது இடம் போக
ஸ்ரீ உடையவர் நீர் நம்மை விட்டாலும் நான் விட்டேன் என்று தாமே அங்கு சென்று திருத்திப் பணி கொண்டார்

————–

3-ஸ்ரீ தெற்கு ஆழ்வான்
ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி உடைய திருக்குமாரர் –காஸ்யப கோத்ரம் -ஆடி திருவோணம் திரு அவதாரம்
ஸ்ரீ தேவகிப் பிராட்டியின் திரு சகோதரர்

கர்கடே ஸ்ரவணே ஜாதம் ராமானுஜ பத ஆஸ்ரிதம்
காஸ்ய பாந்வய ஸம் பூதம் நாராயண குரும் பஜே

இவருக்கு அவ்வளவு ஆசாரம் கிடையாது -இவருக்கு ஸ்ரீ கோளரி ஆழ்வான் நண்பர் இருந்தார்
நாம் குளிப்பதால் பாபங்கள் போகாது -ஸ்ரீ சிங்கப்பிரானின் ஸ்ரீ சக்ராயுதத்தால் மட்டுமே
பிரதிபந்தங்கள் போகும் என்ற வார்த்தை கேட்டு ஸ்ரீ பட்டர் மகிழ்ந்தார்

———————

4-ஸ்ரீ ஸூந்தரத் தோளுடையான்

ஸ்ரீ திருமாலை ஆண்டான் உடைய திருக்குமாரர்
இவருக்கு ஸ்ரீ பெரியாண்டான் என்ற திரு நாமமும் உண்டாம்
காஸ்யப கோத்ரம்
சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்ரம் திரு அவதாரம்
திருமாலிருஞ்சோலை ஸ்ரீ அழகர் திருக்கோயில் புரோகிதர்

இவர் தனியன்
மாலா தார குரோ புத்ரம் ஸுந்தர்ய புஜ தேசிகம்
ராமாநுஜார்ய ஸத் ஸிஷ்யம் வந்தே வர கருணா நிதிம்

இவருடைய மூதாதையர்களில் ஒருவர் -கண்ணுக்கு இனியான் -திருமாலிருஞ்சோலை அழகரை
ரக்ஷணம் பண்ணியதால் இந்த வம்சத்துக்கு ஆண்டான் பட்டப்பெயர் வந்தது
இவர் திரு சகோதரர் சிறியாண்டான்
இவர் வம்சத்தில் வந்த ஸ்ரீ யமுனாச்சார்யர் -ஸ்ரீ ப்ரமேய ரத்னம் கிரந்தம் சாதித்து அருளி உள்ளார்
இவர் ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரின் சிஷ்யர்
யோக சாஸ்திரத்தில் மேதாவி –

————-

5-ஸ்ரீ பிள்ளைத் திருமலை நம்பி
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி உடைய திருக்குமாரர்
வைகாசி விசாகம் திரு அவதாரம்
இவருக்கு ஸ்ரீ ராமானுஜன் என்ற திரு சகோதரரும் உண்டு

தனியன்
வ்ருஷே விசாக ஸம் பூதம் ராமானுஜ பத ஆஸ்ரிதம்
ஸ்ரீ சைல பூர்ண ஸத் புத்ரம் ஸ்ரீ சைலார்யம் அஹம் பஜே

இவருடைய சகோதரியின் கணவர் -ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானாரின் திருக்குமாரர் ஸ்ரீ அலங்கார வேங்கடவர்
இவரும் -74- சிம்ஹாசனாதிபதிகளில் ஒருவர் -வரிசை -35-
இவருடைய மருமகன் புகழ் பெற்ற -ஸ்ரீ விஞ்சிமூர் தாத்தாசாரியார் –

———-

6-ஸ்ரீ நடுவில் ஆழ்வான்

தனியன்
யேந ப்ரோல்ல சதே நித்யம் கார்க்ய வம்ஸ மஹாம் புதி
மந் மஹே தம் ஸதா ஸித்தே மத்யமார்யம் கலா நிதிம்

ஸ்ரீ கண்ணபிரான் யது குல புரோகிதர் கர்க்கர் வம்சம்
ஸ்ரீ திருநாராயண புரத்தில் ஸ்ரீ உடையவர் உடன் இருந்தவர்
அங்கே ஸ்ரீ வங்கி புரத்து ஆச்சிக்கு ஸ்ரீ சொட்டை அம்மாளுக்கு ஸ்ரீ பாஷ்யம் சாதித்தவர்
அவர்களுக்கு ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருக்க உபதேசித்தவர்

எம்பெருமானார் உடைய சரம தசையில் இவர் திருவரங்கம் எழுந்து அருளினார்
தம்மை ஆஸ்ரயித்த
மாறு ஒன்றில்லா மாருதிச் சிறியாண்டான்
அரண புரத்து ஆழ்வான்
ஆஸூரிப் பெருமாள்
முனிப் பெருமாள்
அம்மங்கிப் பெருமாள்
முதலானோரை இவரை ஆஸ்ரயிக்கச் செய்தவர்
இவர்கள் யாவருமே 74 ஸிம்ஹாஸனாதி பத்திகளில் ஒருவராக நியமிக்கப் பட்டனர்

ஸ்ரீ மா முனிகளின் அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான ஸ்ரீ பரவஸ்து பட்டர் ஜீயர் இவர் வம்சமே
இவருடைய வம்ஸ பரம்பரை
நடுவில் ஆழ்வான்
ஆழ்வான்
வைத்த மா நிதி
அழகிய மணவாளர்
வரதாச்சார்யர்
வேங்கடத்து உறைவார்
சடகோபாச்சார்யர்
போரேற்று நாயனார்
கோவிந்தாச்சார்யார்
கிருஷ்ணமாச்சார்யார்
ராமானுஜாச்சார்யார்
கோவிந்த தாஸர் அப்பர் என்ற பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் –

பரவஸ்து பட்டர் பிரான் ஜீயருக்கு பூர்வாஸ்ரம வம்சம்
அண்ணன் பரவஸ்து அழகிய மணவாளர்
பரவஸ்து நாயனார்
சடகோபாச்சார்யர்
வரதாச்சார்யர் -இவரே பிள்ளை லோகம் ஜீயரானார் –

———–

ஸ்ரீ நடுவில் ஆழ்வான்

யேந ப்ரோல்ல சதே நித்யம் கார்க்ய வம்ச மஹாம் புதி
மன் மஹே தம் ஸதா ஸித்தே மத்யமார்யம் கலா நிதிம் –தனியன் –

இவர் கண்ணன் -யது வம்ச புரோஹிதரான கர்கர் வம்சத்தவர்
மேல்கோட்டையில் ஸ்ரீ உடையவர் எழுந்து அருளின காலத்தில் உடனே இருந்த ஸ்வாமி
இவர் ஸ்ரீ பாஷ்யம் சாதித்த காலத்தில் ஸ்ரீ வங்கி புரத்து ஆச்சியும் ஸ்ரீ சொட்டை அம்மாளும் கேட்டு
அற்புதமாக இருந்தது என்றார்களாம்
இவர்கள் இடம் எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள் என்று அருளிச் செய்தார்
ஸ்ரீ மா முனிகளின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவரான பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் இவர் வம்சத்தவர்
எம்பெருமானார் உடைய சரம தசையில் இவர் ஸ்ரீ திருவரங்கம் எழுந்து அருளினார்

எம்பெருமானார் தன்னை ஆஸ்ரயித்த
ஸ்ரீ மாருதி ஆண்டான்
ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான்
ஸ்ரீ அரண புரத்து ஆழ்வான்
ஸ்ரீ ஆ ஸூரிப் பெருமாள்
ஸ்ரீ முனிப் பெருமாள்
ஸ்ரீ அம்மங்கிப் பெருமாள் -முதலானவரை இவரை ஆஸ்ரயிக்கச் செய்தார்
இவர்கள் அனைவரும் -74- ஸிம்ஹாஸனாபதிகள்

இவர் வம்ச பரம்பரை
ஸ்ரீ நடுவில் ஆழ்வான்
ஸ்ரீ ஆழ்வான்
ஸ்ரீ வைத்த மா நிதி
ஸ்ரீ அழகிய மணவாளர் –
ஸ்ரீ வரதாச்சார்யர்
ஸ்ரீ வேங்கடத்து உறைவார்
ஸ்ரீ சடகோபாச்சார்யார்
ஸ்ரீ போர் ஏற்று நாயனார்
ஸ்ரீ கோவிந்தாச்சார்யார்
ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யார்
ஸ்ரீ ராமானுஜாச்சார்யார்
ஸ்ரீ கோவிந்த தாஸப்பர் என்னும் ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்

பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் திருப் பேரானார் பிள்ளை லோகம் ஜீயர் –

————————————————-

7-ஸ்ரீ கோமடத்து ஆழ்வான்
இவர் ஸ்ரீ கோமடத்து பிள்ளான் என்றும் அழைக்கப் படுவார்
இவருடைய சிஷ்யர் காக்கைப்பாடி ஆச்சான் பிள்ளை
இவருடைய வம்சத்தில் தான் ஸ்ரீ மணவாள மா முனிகள் அவதாரம்
ஸ்ரீ மா முனிகளின் திருத்தகப்பனார் -திரு நாவீறுடைய தாஸர் அண்ணர்
ஸ்ரீ மா முனிகளின் பூர்வாஸ்ரம திருப்பேரானார் -ஸ்ரீ ஜீயர் நாயனார் –
ஸ்ரீ கோயில் அண்ணனுடைய அஷ்டதிக் கஜங்களில் ஒருவர் –

—————

8-ஸ்ரீ பிள்ளைப் பிள்ளான் ஆழ்வான்
இவர் ஸ்ரீ கூரத்தாழ்வானுடைய சிஷ்யர்
பாகவதர்களைக் கடுமையாகப் பேசி அபசாரப்பட்டு –
ஸ்ரீ கூரத்தாழ்வான் தானே தானம் கேட்டு திருத்திப் பணி கொள்ளப் பட்டவர்
வீரசுந்தர ப்ரஹ்மராயர் இவர் திருமாளிகையை பிடிக்கவே தான் ஸ்ரீ பட்டர் திருக்கோஷ்டியூர் எழுந்து அருளி
நமக்கு திருப்பாவை தனியன் கிடைக்கப் பெற்றோம் –
புள்ளும் சிலம்பின் -காலை வேளையில் பறவைகளின் ஒலி நமக்கு மிகவும் உத்தேச்யம் என்பார்
குழந்தை தாய்ப்பால் பருகி அவள் முகம் நோக்குவது போல்
திருவடிகளை முன்னிட்டு திரு மேனி கல்யாண குணங்களில் ஈடுபடுவோம் என்பார்

————–

9-ஸ்ரீ நடாதூர் ஆழ்வான்

தனியன்
யஸ்மின் பதம் யதி வரஸ்ய முகாத் ப்ரேணதுர் நிஷ் க்ராம
தேவ நிததே நிகமாந்த பாஷ்யம்
தஸ்யைவ தம் பகவத் ப்ரிய பாகி நேயம் வந்தே
குரும் வரத விஷ்ணு பதாபிதானம்

ஐவரும் ஸ்ரீ ராமானுஜரின் திரு மருமகன்
ஸ்ரீ வத்ஸ கோத்ரம் -திருக்காஞ்சியில் திருவவதாரம் -வரத விஷ்ணு என்றும் திரு நாமம்
ஸ்ரீ பாஷ்ய ஸிம்ஹாஸனபதி-என்று ஸ்ரீ பாஷ்யகாரரால் பட்டம் சூட்டி அருளப்பட்டராவர்
திரு வெள்ளறை எங்கள் ஆழ்வான் இவருடைய சிஷ்யர்
நடாதூர் அம்மாள் எனப்படும் வாத்ஸ்ய வரதாச்சார்யர் இவருடைய திருப்பேரானார்
இவர் மாந யாதாத்ம்ய நிர்ணயம் -என்னும் கிரந்தம் அருளி உள்ளார்
திரு வெள்ளறையில் இவரது அர்ச்சா திருமேனி உள்ளது –

———-

10-ஸ்ரீ எங்கள் ஆழ்வான்
ஸ்ரீ விஷ்ணு சித்த பத பங்கஜ சங்க மாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத பரேண
நோ சேத் மமாபி யதி சேகர பாரதீ நாம் பாவா கதம் பவிது மர்ஹதி வாக் விதேயா

சீராரும் வெள்ளறையில் சிறந்து உதித்தோன் வாழியே
சித்திரை ரோஹிணி நாள் சிறக்க வந்தோன் வாழியே
பார் புகழும் எதிராஜர் பதம் பணிந்தோன் வாழியே
பங்கயச் செல்வியின் பதங்கள் பணியுமவன் வாழியே
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திரு அருளோன் வாழியே
தீதிலா பாடியத்தைத் தேர்ந்து உரைப்போன் வாழியே
தரணியில் விஷ்ணு மதம் தழைக்க வந்தோன் வாழியே
தண்ணளியோன் எங்கள் ஆழ்வான் தாளிணைகள் வாழியே

ஸ்ரீ விஷ்ணு புராணத்துக்கு ஸ்ரீ விஷ்ணு சித்தீயம் வியாக்யானம் அருளியவர் –
ஸ்ரீ நஞ்சீயர் ஆயர் தீவு இவர் கனவில் நாவல் பழம் கேட்ட ஐதிக்யம்
திரு நாராயண புரத்தில் இருந்தும் திரு வரங்கம் வந்த ஸ்ரீ பாஷ்ய காரருக்கு ஸ்ரீ பாஷ்யம்
எழுத உஸாத் துணையாக இருந்தவர் –
அதனாலேயே எங்கள் ஆழ்வான் என்று பெயர் இடப் பெற்றவர்
ஸ்ரீ பாஷ்யகாரரை விட 80 வயசு சிறியவர்
ப்ரமேய ஸங்க்ரஹம்
சங்கதி மாலா
கத்ய வியாக்யானம் எழுதியவர்
இவர் திருக்குமாரத்தி செங்கமல நாச்சியார்
இவர் மாப்பிள்ளை வரதாச்சார்யர் –

———–

11-ஸ்ரீ மிளகு ஆழ்வான்
வித்வத் பரிக்ஷைக்கு இவரை நீர் வைஷ்ணவர் ஆதாலால் நுழைய முடியாது என்ன-
ஸ்ரீ வைஷ்ணவர் என்று சொன்னதாலேயே கொண்டாடினவர்
வித்வான் ஆகையால் ஸ்ரீ முதலியாண்டானை வாதத்துக்கு அழைத்து தோற்று அவரை தோளில் சுமந்தவர்
ஸ்ரீ முதலியாண்டான் இவரை ஸ்ரீ உடையவர் இடம் கூட்டிச் சென்று ஆஸ்ரயிக்க வைத்தார்
திருவானைக்கா சென்று பகவத் வைபவம் பேசி திருத்திப் பணி கொள்வேன் என்று சொல்ல
அப்படி திருந்தினவர்கள் உண்டோ என்ன
நான் அனைவரையும் ஸ்ரீ மன் நாராயண சம்பந்திகளாகவே நினைக்கிறேன்
ப்ரக்ருதி சம்பந்திகள் அல்ல -அப்ருதக் ப்ரஹ்ம வஸ்துக்கள் இல்லையே என்பாராம் –

————————-

12-உக்கல் ஆழ்வான்
இவர் ஸ்ரீ ராமானுஜர் மடத்தில் பிரசாத கலம் எடுக்கும் கைங்கர்யம் பெற்றவர்

————-

13-ஸ்ரீ கணியனூர் சிறியாச்சான்
இவர் ஸ்ரீ வங்கி புரத்து நம்பி சிஷ்யர் -போசள நாட்டில் இருந்து வந்தவர்
பசும் புல்லைக் கூட மிதிக்காத சாது
இட்டீரிட்டு விளையாடும் -வார்த்தையை ரசிப்பவர் –
கன்றுகள் உடன் விளையாடும் கண்ணன் மேல் மிகவும் பரவசப் பட்டவர்
சிறந்த அனுஷ்டானம் கொண்டவர் -உடம்பில் தழும்பு வரும் படி தொழுபவர்
மேனி சிறுத்து பெரிய ஞானம் கொண்ட சிறு மா மனுஷர் என்று ஸ்ரீ கூரத்தாழ்வானால் புகழப் பெற்றவர்
சத்யம் சத்யம் புனர் சத்யம் யதிராஜோ ஜகத் குரோ
ச ஏவ சர்வ லோகா நாம் உத்தர்த்தா ந சம்சய -இவர் சொன்னதாகவும் சொல்வர்
ராமபிரான் தூது போக வில்லையே எதனால் என்று பட்டர் இடம் கேட்டவர் –
அனுப்புவார் இல்லையே -க்ஷத்ரியர் ஆகையால்
மன்மதனையும் சுப்ரமண்யனையயும் ராமனுக்கு அழகுக்கு ஒப்பாக சொல்லி ருஷி கரி பூசுகிறார்
என்று பட்டர் வாயால் கேட்கப் பெற்றவர்

—————

14-ஆட் கொண்ட வில்லி ஜீயர்

ஞான வைராக்ய சம்பந்தம் ராமானுஜ பாதாஸ்ரிதம்
சதுர்த்த ஆஸ்ரம சம்பந்தம் சம்ய மீந்த்ரம் நமாம் யஹம் –

சித்திரை திருவாதிரை இவர் திரு அவதாரம்
ஸ்ரீ எம்பெருமானார் நியமனத்தால் ஸ்ரீ முதலி ஆண்டான் திருக்குமாரர் ஸ்ரீ கந்தாடை ஆண்டான்
இவரை ஆஸ்ரயித்தார்
இவர் நஞ்சீயரை வணங்கி தனக்கு பகவத் விஷயத்தில் உண்மையான ருசி இல்லை என்றும்
பாகவதர்களைக் கண்டால் என்று மகிழ்ச்சி ஏற்படுகிறதோ அன்று தான் பகவத் ருசி ஏற்படுகிறது
என்று அர்த்தம் என்றும் தெரிவித்தார் –

———————-

15- ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்

ஸிம்ஹே ம்ருக ஸ்ரோத் பூதம் ராமானுஜ பாதாஸ்ரிதம்
த்ராவிடாம் நாய தத்வஞ்ஞம் குருகாதிபம் ஆஸ்ரயே –

த்ராவிட ஸாரஞ்ஞம் ராமானுஜ பாதாஸ்ரிதம்
ஸூ தியம் குருகேசார்யம் நமாமி சிரஸான் வஹம்

ஆவணி மிருக சீர்ஷம் திரு அவதாரம்
இவர் ஸ்ரீ பெரிய திருமலையின் திருக்குமாரர்
ஸ்ரீ ராமானுஜரின் அபிமான புத்திரர்
பிள்ளான் என்ற இவருக்கு திருக் குருகைப் பிரான் பிள்ளான் என்று ஸ்ரீ உடையவரே
திரு நாமம் சாத்தி அருளினார்

திருக்கோட்டியூர் நம்பிக்கும் திருக்குருகைப் பிரான் என்ற திரு நாமமும் உண்டே
இவர் சிறு புத்தூரில் எழுந்து அருளி சோமாசி ஆண்டான் இவர் இடம் மூன்று முறை
ஸ்ரீ பாஷ்யம் சாதித்து அருளினார்

அவர் இவர் இடம் தனக்குத் தஞ்சமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் என்று
கேட்ட பொழுது இவர் நீர் பாட்டம் பிரபாகரம் மீமாம்ஸை இவை அனைத்துக்கும் கர்த்தா
பாஷ்யம் வாசித்தோம் என்று மேன்மை அடித்து இராதே எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்
என்று அருளிச் செய்தார்

ராமானுஜர் ஆணைப்படியே ஆறாயிரப்படி சாதித்து அருளி உள்ளார்
இவர் இடம் ஸ்ரீ எங்கள் ஆழ்வான் அருளிச் செயல்கள் அர்த்தம் கேட்டு அருளினார்
இவரே ஸ்ரீ ராமானுஜருக்கு சரம கைங்கர்யம் செய்து அருளினார்
இவர் கொங்கில் நாட்டுக்கு எழுந்து அருளும் பொழுது ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசார்யன் திரு நாமத்தைச்
சொல்லாமல் எம்பெருமான் திரு நாமத்தைச் சொல்ல அங்கு இருந்து வெளி ஏறினார்
வளர்த்ததனால் பயன் பெற்றேன் என்று ஸ்ரீ உடையவர் கொண்டாடும் படி இருந்தவர்
இவருடைய இறுதிக் காலத்தில் -கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்று
சொல்லக் கேட்ட நஞ்சீயர் அழத் தொடங்க
அப்போது இவர் சீயரே நீர் கிடந்து அழுகிறது என் -அங்கு போய் பெறுகிற பேறு
இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ என்று அருளிச் செய்தாராம்

———————————-

16- ஸ்ரீ திருக் கண்ண புரத்து எச்சான்
செறு வரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்து -பாசுரம் அருளிச் செய்ய
உடனே ஒரு நொடியிலே விரோதிகளை அழித்து விடுவேன் என்று எம்பெருமானும் சொன்னாராம்

——–

17- ஸ்ரீ அம்மங்கிப் பெருமான்
இவர் ஸ்ரீ ராமானுஜருக்கு பால் அமுது காய்ச்சித் தரும் கைங்கர்யம் –

———————-

18- ஸ்ரீ மாருதிப் பெரியாண்டான்
இவர் ஸ்ரீ ராமானுஜருக்கு திருக்கை சொம்பு பிடிக்கும் கைங்கர்யம்

—————-

19- ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதிச் சிறியாண்டான்

ஞாதும் கூர குலாதிபம் க்ருமி களாத் ப்ராப்தா பதம் ப்ரேஷிதே
ஸ்ரீ ராமா வர ஜேந கோஸல பாதாத் த்ருஷ்ட்வா ததீ யாம் ஸ்திதம்
ஸம் ப்ரதாஸ் த்வரயா புராந்தக புராத் கல்யாண வாபீ தடே
யோ அசவ் மாருதி ரித்ய ஸம் சத வயம் தஸ்மை நமஸ் குர்மஹே

இவர் மடத்துக்கு அமுது படி -கனி அமுது -பால் -நெய் முதலியவை வாங்க ஏற்பாடு செய்யும்
கைங்கர்யம் செய்து வந்தார்
இவரையும் சிறிய ஆண்டானையும் அம்மங்கி அம்மாளையும் ஸ்ரீ ரெங்கத்துக்கு அனுப்ப
இவர் அங்கே சென்று ஸ்ரீ பெரிய நம்பி திரு நாட்டுக்கு எழுந்து அருளியதையும்
ஸ்ரீ கூரத்தாழ்வான் கண் இழந்ததையும் ஸ்ரீ உடையவருக்குத் தெரிவித்தார்

———————-

20-ஸ்ரீ சோமாசி ஆண்டான்

நவ்மி லஷ்மண யோகீந்த்ர பாத சேனவக தாரகம்
ஸ்ரீ ராம க்ரது நாதார்யம் ஸ்ரீ பாஷ்ய அம்ருத சாகரம் –

சித்திரை திருவாதிரை திரு அவதாரம்
இயல் பெயர் -ராம மிஸ்ரர்
அவதார ஸ்தலம்: காராஞ்சி
ஸோம யாகம் செய்து சோமாசி ஆண்டான் பெயர்

எம்பெருமானாரே சரணம் -இவர் சொல்வது போல் யாராலும் இனிமையாக சொல்ல முடியாதே
கண்ண புரம் -திருமங்கை ஆழ்வார் –அழகிய மணவாளன் -பட்டர் –
திருத் தொலை வில்லி மங்கலம் -நம்மாழ்வார் -சொல்லுவது போலே அன்று இதுவும்
திரு நாராயண செல்வப்பிள்ளைக்கு அந்தரங்கர் -பாட்டுப்பாடி மகிழ்விப்பவர்

பாடினத்துக்கு ஆடினேன் -மோக்ஷம் ராமானுஜரை விஸ்வசித்துப் பற்றினால் உண்டாகும் என்று
அருளிச் செய்ய பற்றினார்
இவர் வம்சத்தவர்களே ஸ்ரீ ரெங்க வாக்ய பஞ்சாங்கம் மிராசு பெற்றவர்கள் –
ஸ்ரீ பாஷ்ய விவரணம்
ஸ்ரீ குரு குணா வளி-(எம்பெருமானார் பெருமை பேசுவது),
ஸ்ரீ ஷடர்த்த ஸம்க்ஷேபம் ஆகிய கிரந்தங்களை அருளிச் செய்துள்ளார் –

க்ருபாமாத்ர ப்ரசன்னாசார்யர்களின் பெருமையை விளக்கும் ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை இவரது
குரு குணாவளி ச்லோகம் ஒன்றை உதாஹரிக்கிறார்.

யஸ்ஸாபராதாந் ஸ்வபதப்ரபந்நாந் ஸ்வகீயகாருண்ய குணேந பாதி |
ஸ ஏவ முக்யோ குருரப்ரமேயஸ் ததைவ ஸத்பி: பரிகீர்த்யதேஹி ||

ஆசார்யன் தன்னுடைய பெருங்கருணையால், தன்னிடய் சரணடைந்த சிஷ்யனை ரக்ஷித்து உஜ்ஜீவிக்கிறான் –
அந்த ஆசார்யனே முக்யமானவன். இவ்விஷயம் ஆப்த தமர்களால் காட்டப்பட்டுள்ளது.

சரமோபாய நிர்ணயத்தில் ஸ்ரீ எம்பெருமானார் இவர்க்குச் செய்த பெருங்கருணை விளக்கப் படுகிறது.

எம்பெருமானாரிடம் காலக்ஷேபம் கேட்டு அவரோடிருந்த ஸ்ரீ சோமாசியாண்டான், சிறிது காலம் தம் ஊரான காராஞ்சி வந்து,
திருமணம் ஆகி, பின் மனைவி வற்புறுத்தலால் மீண்டும் ஸ்ரீ எம்பெருமானாரிடம் சென்று சேர இயலாது கிராமத்திலேயே இருக்க,
தம் வழிபாட்டுக்கு ஒரு ஸ்ரீ எம்பெருமானார் விக்ரஹம் செய்விக்க, அவ்விக்ரஹம் சிற்பி முயன்றும் சரிவராமல் போக,
சிற்பியிடம் அந்த விக்ரஹத்தை அழித்து வேறு விக்ரஹம் செய்யுமாறு கூறுகிறார்.

அன்று இரவு அவர் கனவில் ஸ்வாமி வந்து,
”ஆண்டான், நீர் எங்கிருப்பினும் நம் நினைவுண்டதாகில் கவலை வேண்டாவே.
நீர் ஏன் நம்மை இப்படித் துன்புறுத்துகிறீர்? நம்மிடம் விச்வாஸம் இல்லையெனில்
இவ்விக்ரஹத்தால் மட்டும் என்ன பயன்”என வினவ,

விழித்தெழுந்த ஆண்டான் விக்ரஹத்தைப் பாதுகாப்பாய் வைத்துவிட்டு, மனைவியைத் துறந்து, ஸ்ரீரங்கம் வந்து
ஸ்ரீ எம்பெருமானார் திருவடியில் வந்து அழுதபடி விழுந்தார்.
ஸ்ரீ எம்பெருமானார் என்ன நடந்தது என்று வினவ, ஆண்டான் நடந்ததை விவரித்தார்.
ஸ்ரீ உடையவரும் சிரித்து, “உம்முடைய மனைவியிடத்தில் உமக்கு இருந்த பற்றை விலக்கவே இதைச் செய்தோம்.
நீர் நம்மை விட்டாலும், நாம் உம்மை விடமாட்டோம். நீர் எங்கிருந்தாலும், நம்முடைய அபிமானம் உள்ளதால்
உம்முடைய பேற்றுக்கு ஒரு குறையும் இல்லை. நம்மிடம் எல்லாக் கவலைகளையும் விட்டு
இனி நீர் சுகமாய் இருக்கலாம்” என்று அருளினார் –
இவ்வாறு நம் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்வர்.

ஸ்ரீ வார்த்தா மாலையிலும் ஸ்ரீ சோமாசியாண்டான் விஷயமான சில ஐதிஹ்யங்களுண்டு:

126 – ஸ்ரீ சோமாசியாண்டான் ப்ரபன்னருக்கு எம்பெருமானே உபாயம், பக்தியோ ப்ரபத்தியோ அன்று என்று நிலை நாட்டுகிறார்.
பகவான் நம்மைக் கைகொள்ள, நம்மைக் காத்துக்கொள்வதில் நம்முடைய முயற்சியை நாம் கைவிட வேண்டும்.
பக்தியோ ப்ரபத்தியோ உண்மையான உபாயம் அன்று. நாம் சரணடையும் எம்பெருமானே உயர்ந்த பலத்தை அளிப்பதால்,
அவனே உண்மையான உபாயம்.
279 – ஸ்ரீ சோமாசி யாண்டானை விட வயதில் குறைந்த ஆனால் ஞானம் அனுஷ்டான மிக்க அப்பிள்ளை என்ற ஸ்ரீவைஷ்ணவர்,
ஆண்டானிடம்,”ஸ்வாமி! தேவரீர் வயதிலும், ஆசாரத்திலும் சிறந்தவர்; ஸ்ரீபாஷ்யம் பகவத் விஷயாதி அதிகாரி;
இருந்தாலும், பாகவத அபசாரம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்கு உம் வேஷ்டியில் ஒரு முடிச்சு முடித்துக்கொள்ளும்!” என்று கூறினாராம்,
பாகவதாபசாரம் மிகக் கொடிது என்பதே விஷயம் – எத்தனை பெரியவராக இருந்தாலும், அபசாரங்களை விலக்க வேண்டியதின்
முக்கியத்துவத்தை அப்பிள்ளை இங்கு எடுத்துரைத்தார்.
304 – ஸ்ரீ வைஷ்ணவன் விஷய சுகத்தில் ஆசை கொள்ளக் கூடாது என்கிறார் ஆண்டான். ஏனெனில்:
ஜீவாத்மா முற்றிலும் பெருமாளை நம்பியுள்ளது என்பதாலும்
நம் லக்ஷ்யம் பெருமாளை அடைவதொன்றே, வேறல்ல என்பதாலும்
எம்பெருமானுக்கு நமக்குமுள்ள சம்பந்தமே உண்மை, வேறல்ல என்பதாலும்
எம்பெருமான், அவன் சம்பந்தம் மட்டுமே சாஸ்வதம், மற்றவை நிலையற்றவை என்பதாலும் விஷய சுகம் தள்ளுபடி.
375 – ஓர் இடையன் பால் திருடியதற்காகத் தண்டிக்கப் பட்டான் என்று கேட்ட ஆண்டான் மூர்ச்சை ஆனாராம்!
கண்ணன் எம்பெருமான் யசோதையால் தண்டிக்கப்பட்டதை நினைவு படுத்தியதால் அவ்வளவு உணர்ச்சி வசப்பட்டாராம்.

———————————————

21- ஸ்ரீ சிறியாண்டான்
இவர் ஸ்ரீ மாறு ஓன்று இல்லா மாருதி சிறியாண்டான் உடன் ஸ்ரீ ரெங்கம் வந்து
செய்தி திரு நாராயண புரத்தில் அருளிச் செய்தவர்

————–

22-ஸ்ரீ தொண்டனூர் நம்பி –
ஸ்ரீ தொண்டனூரில் பாகவத கைங்கர்யமே நிரூபகமாகக் கொண்டவர் –
ஸ்ரீ திருக் கோட்டியூரில் செல்வ நம்பியைப் போலவே
சைவப்பண்டாரம் ஒருவன் ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -சொல்லி -இவர் பிச்சை அளிக்க –
மற்றவர் குறை சொல்ல -இவர் திரு நாம வைபவம் எடுத்து விளக்க
பின்பு அவன் ஸ்ரீ வைஷ்ணவன் ஆனானாம்

இவர் ஸ்ரீ அனந்தாழ்வான் உடன் ஸ்ரீ ரெங்கம் செல்ல இவர்களை ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானார் இடம் ஆஸ்ரயிக்கப் பண்ணி அருளினார்
இவர் ஸ்ரீ ராமானுஜர் இடம் விண்ணப்பித்து விட்டல தேச ராஜன் மக்களது பிசாச பீடையைப்
போக்குவித்து அருளினார் –

—————-

23- ஸ்ரீ மருதூர் நம்பி
இவர் ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ அனந்தாழ்வான் உடன் ஸ்ரீ ரெங்கம் செல்ல இவர்களை ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானார் இடம் ஆஸ்ரயிக்கப் பண்ணி அருளினார்

————-

24- ஸ்ரீ மழுவூர் நம்பி

இவர் ஸ்ரீ மருதூர் நம்பி ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ அனந்தாழ்வான் உடன்
ஸ்ரீ ரெங்கம் செல்ல இவர்களை ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ அருளாளப் பெருமான் எம்பெருமானார் இடம் ஆஸ்ரயிக்கப் பண்ணி அருளினார்

—————–

25- ஸ்ரீ முடும்பை நம்பி

ஸ்ரீ ராமானுஜ சம்ய தீந்த்ர சரணம் ஸ்ரீ வத்ஸ சிஹ்ன ப்ரியம்
சேவ அஹம் வரதார்ய நாம கமமும் ஸூ க்த்யா ப்ரிஸித்தம் முதா
பால்யாத் பரி பூர்ண போத சடஜித் காதா ராகோஜ்ஜ்வலம்
வாத்ஸ்யம் பூர்ண முதாரம் ஆஸ்ரித நிதிம் வாத்சல்ய ரத்நாகரம் –

ஸ்ரீ ராமானுஜ யோகீந்த்ர பத பங்கஜ ஷட் பதம்
முடும்பை பூர்ண மநகம் வந்தே வரதஸம் கஞகம்

ஸ்ரீ வத்ஸ கோத்ரம்
ஸ்ரீ காஞ்சீ புரம் அருகில் ஸ்ரீ முடும்பையில் திரு அவதாரம்
இயல் பெயர் -ஸ்ரீ வரதாச்சார்யர்
ஸ்ரீ ராமானுஜர் உடைய சகோதரி கணவர்
இவர் திருக் குமாரர் -ஸ்ரீ ராமானுஜ நம்பி
அவர் திருக்குமாரர் -ஸ்ரீ முடும்பை ஆண்டான் -என்னும் ஸ்ரீ தாசாரதி
இவர் முடும்பையில் இருந்து ஸ்ரீ ரெங்கம் குடி பெயர்ந்தார்
இவர் வம்சம்
ஸ்ரீ தாசரதி
ஸ்ரீ தேவப் பெருமாள் என்னும் ஸ்ரீ வரதார்யர்
ஸ்ரீ இளையாழ்வார் என்னும் ஸ்ரீ லஷ்மண ஆச்சார்யர்

இவருக்கு இரண்டு திருக்குமாரர்கள்
ஒருவர் ஸ்ரீ கிருஷ்ண பாத குரு என்னும் ஸ்ரீ வடக்குத் திரு வீதிப்பிள்ளை –
அவருக்கு ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரும் ஸ்ரீ நாயனாரும் திருக்குமாரர்கள்
மற்ற ஒருவர் ஸ்ரீ வரதாச்சார்யர்
இவருக்கு திருக்குமாரர் ஸ்ரீ ராமானுஜ குரு
அவருக்குத் திரு குமாரர் ஸ்ரீ அழகப்பயங்கார்
அவருக்கு திருக்குமாரர் தேவராஜ குரு என்னும் பேர் அருளாலே ஸ்வாமி
அவர் திருக்குமாரர் ஸ்ரீ ராமானுஜம் பிள்ளை -இவர் மாமுனிகள் சிஷ்யர் -வான மா மலை ஜீயரின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவர்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ ஆழ்வார் திரு நகரி ஸ்ரீ ஆதி நாதன் ஸ்வாமி
ஆழ்வார் திரு நகரியில் கீழத் திரு மாளிகை மேலத் திரு மாளிகை வடக்குத் திருமாளிகை என்று இவர் வம்சம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணாவும் ஸ்ரீ முடும்பை வம்சமே

————-

26-ஸ்ரீ வடுக நம்பி

ஸைத் ரேத் வஸ்வநி ஸஞ்ஜாதம் ஸம்ஸார ஆர்ணவ தாரகம்
ராமாநுஜார்ய ஸத் ஸிஷ்யம் ஆந்த்ர பூர்ணம் அஹம் பஜே

ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம்
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே

திருநக்ஷத்ரம்: சித்திரை அஸ்வினி-1047-
அவதார ஸ்தலம்: சாளக்ராமம், கர்நாடகா
ஆசார்யன்: ஸ்ரீ எம்பெருமானார்-பால் அமுது கைங்கர்யம்
இவருடைய திரு மடியிலே திரு முடியை வைத்து ஸ்ரீ எம்பெருமானார் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்
ஸ்ரீ பரமபத ப்ராப்தி ஸ்தலம்: சாளக்ராமம்

கிரந்தங்கள்: ஸ்ரீ யதிராஜ வைபவம்,
ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்,
ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தர சத நாமாவளி

ஸ்ரீ எம்பெருமானார் திருநாராயணபுரம் எழுந்தருளிய போது அங்குள்ள மிதிலாபுரி சாளக்கிராமம் சென்று,
ஸ்ரீ முதலியாண்டானை அங்கிருந்த தீர்த்தத்தில் திருவடி நனைக்கச் சொல்லவும், பின்னர் அதில்
நீராடிய உள்ளூரார் அனைவரும் ஸ்வாமியின் சிஷ்யர்களாக மாறினர். அவர்களில் ஒருவர் ஸ்ரீ ஆந்த்ர பூர்ணர் எனும் வடுக நம்பி.
இவர் ஸ்ரீ எம்பெருமானாரிடம் பூண்ட ஆசார்ய பக்தி அளப்பரியது, ஈடற்றது.
ஸ்ரீ எம்பெருமானார் இவர்க்கு சகல சாரார்த்தங்களும் போதித்தருளினார்.
அதனாலும் இவர் ஆசார்ய ப்ரதிபத்தி பள்ளமடை ஆயிற்றது.

ஸ்ரீ வடுக நம்பி ஆசார்ய நிஷ்டையில் ஊறியிருந்தார்.
தினமும் இவர் ஸ்ரீ எம்பெருமானார் திருவடி நிலைகளுக்கே திருவாராதனம் செய்வர்.
ஒரு நாள் ஸ்வாமி யாத்திரை கிளம்புகையில் அவரது திருவாராதன எம்பெருமான்களோடு, தாம் பூசித்து வந்த
ஆசார்யன் திருவடி நிலைகளையும் மூட்டை கட்ட, அது கண்டு துணுக்குற்ற ஸ்ரீ எம்பெருமானார், “நம்பீ! என் செய்தீர்!” என்று
கடிந்த போது, இவர், “ஸ்வாமி! உம் திருவாராதனப் பெருமாளைவிட நம் திருவாராதனப் பெருமாள் குறைவிலரே” என்றாராம்.

ஸ்ரீ எம்பெருமானார் பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்யப் போகும்போதெல்லாம் நம்பியும் உடன் எழுந்தருளி,
அவர் பெருமாளின் அழகை அனுபவிக்கும்போது இவர் ஸ்வாமியையே நோக்கியிருக்க, அவர் இவரைப் பெருமாளின்
திருக்கண் அழகைப் பாரீர் என்ன, நம்பி, ஆசார்யன் திருவுள்ளம் குளிர,
“என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!”
(அதாவது, என்னுடைய ஸ்வாமியான தேவரீரைக் (எம்பெருமானாரை) கண்ட கண்கள் எம்பெருமானையே கூட காணாது)
என்று ஸ்ரீ திருப்பாணாழ்வார் திருவாக்கைக் கூறினாராம்.

ஸ்ரீ வடுக நம்பி எப்போதும் எம்பெருமானார் அமுது செய்த மிச்சில் ப்ரஸாதத்தையே ஸ்வீகரித்து அமுது செய்தபின்,
கைகளை அலம்பாமல் தம் தலையில் துடைத்துக் கொள்வார், பிரசாதம் உட்கொண்டபின் கையை அலம்பிச் சுத்தம்
செய்யக் கூடாதென்பதால். ஒரு நாள், இது கண்டு துணுக்குற்ற ஸ்ரீ எம்பெருமானார் கேள்வி எழுப்பவே,
ஸ்ரீ நம்பி தம் கைகளை அலம்பினார். பிற்றைநாள் பெருமாள் பிரசாதம் தாம் உட்கொண்ட மிகுதியை
ஸ்வாமி தர வாங்கி உண்ட நம்பி கைகளை அலம்ப எம்பெருமானார் வியப்புற்று வினவ,
“தேவரீர் நேற்று உபதேசித்தபடியே அடியேன் செய்தேன்” என்றாராம்.
அதைக் கேட்ட ஸ்ரீஎம்பெருமானார், ”உம்மிடம் நாம் தோற்றோம்!” என்றார்.

ஒரு முறை ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ எம்பெருமானாருக்கு, திருமடைப்பள்ளியில் பால் அமுது காய்ச்சிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது ஸ்ரீ நம்பெருமாள் திருவீதியில் புறப்பாடாக மடத்து வாசலில் எழுந்தருள,
ஸ்ரீ எம்பெருமானார் வெளியே சென்று சேவித்து, ஸ்ரீ வடுக நம்பியை வெளியே வருமாறு கூப்பிட்டார்.
அப்பொழுது, நம்பியோ, வெளியே வராமல், உள்ளிருந்தபடியே “அடியேன் உம் பெருமாளைக் காண வெளியே வந்தேன் என்றால்,
என் பெருமாளின் பால் பொங்கிவிடும், ஆதலால் அடியேன் வெளியே வர முடியாது” என்று கூறும்படியான ஆசார்ய நிஷ்டையுடன் திகழ்ந்தார்.

நம்பிகளின் அவைஷ்ணவ உறவினர் சிலர் வந்து, தங்கிச் சென்றதும், நம்பிகள் எல்லாப் பாத்திரங்களையும் எடுத்து வீசிவிட்டு,
ஸ்ரீ முதலியாண்டான் திருமாளிகையின் பின்புறத்தில் வைத்திருந்த பழைய உபயோகித்த பாத்திரங்களைப் பயன்படுத்த எடுத்துக் கொண்டார்.
ஆசார்யர்கள் சம்பந்தம் நம்மை எல்லா வகையிலும் சுத்தி செய்யும் என இப்படி அனுஷ்டித்து விளக்கினார்.

ஸ்ரீ எம்பெருமானார் திருவனந்தபுரம் சேவிக்கச் சென்றபோது அங்கு ஆகம முறையைச் சீர்திருத்தத் திருவுள்ளம் பற்றினார்.
ஆனால் எம்பெருமான் திருவுள்ளம் வேறுமாதிரி இருந்ததால், அவன் அவரை இரவோடிரவாக உறங்குகையில்
ஸ்ரீ திருக்குறுங்குடி சேர்ப்பித்து விட்டான். விடிவோரை திருக்கண் மலர்ந்த ஸ்வாமி நீராடித் திருமண் காப்புத் தரிக்க
இன்னும் ஸ்ரீ திருவனந்தபுரத்திலேயே இருந்த நம்பியை “வடுகா!” என்றழைக்க,
ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பியே வடுக நம்பி போல் வந்து திருமண் காப்பு தந்தருளினார்.
பின்னர் ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பியையும் தம் சிஷ்யனாய் ஏற்றார்.

ஸ்ரீ எம்பெருமானார் திருநாடலங்கரித்தபின் வடுக நம்பி மீண்டும் சாளக்கிராமம் வந்து ஸ்ரீ எம்பெருமானார் க்ரந்தங்களைக்
காலக்ஷேபம் செய்தும், தன் சிஷ்யர்களுக்கு ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்ற உபதேசம் செய்து கொண்டும்,
எப்பொழுதும் ஸ்ரீ எம்பெருமானாருக்குத் திருவாராதனம் செய்தும், வேறு ஒரு ஸ்ரீ பாத தீர்த்தமும் ஏற்காமல்
ஆசார்ய நிஷ்டையோடே ஸ்ரீ எம்பெருமானார் திருவடியைச் சென்று அடைந்தார்.

ஸ்ரீ வடுக நம்பியின் வைபவம் வ்யாக்யானங்களிலும் ஐதிஹ்யங்களிலும் காணக் கிடைக்கிறது. அவற்றில் சில:

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி 4.3.1 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம்.
இப்பதிகம் “நாவகாரியம்” – சொல்லக்கூடாத சொற்களைச் சொல்லுதல்.
வடுக நம்பி அருகே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திருமந்திரம் ஓதவும், நம்பி, ”இது நாவகாரியம்” என்று வெறுத்து அகன்றாராம்.
ஏனெனில் திருமந்திரம் ஓதுமுன் குருபரம்பரையை ஒத வேண்டும், பிறகே திருமந்திரம் ஒத வேண்டும் என்பது முறை,
பிள்ளை லோகாசார்யரும் ஸ்ரீ வசன பூஷணம் 274வது ஸூத்ரத்தில், “ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும்” என்று அருளினார்.

பெரியாழ்வார் திருமொழி 4.4.7 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம், வடுக நம்பி திருநாடு எய்தினார் என்று
ஒரு ஸ்ரீவைஷ்ணவர் தகவல் கூறவும், அவர் ஆசார்ய நிஷ்டர் ஆகையால் அவர் ஆசார்யர் திருவடி அடைந்தார் என்று
கூற வேண்டும் என்று அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருத்தி யருளினாராம்.

ஸ்ரீ வடுக நம்பி யதிராஜ வைபவம் என்றோர் அழகிய நூல் சாதித்துள்ளார்.
அதில் எம்பெருமானாரோடு 700 சன்யாசிகளும், 12000 ஸ்ரீ வைஷ்ணவர்களும், கணக்கற்ற ஸ்ரீ வைஷ்ணவிகளும் இருந்தனர் என்கிறார்.
தம் மாணிக்க மாலையில், பெரியவாச்சான் பிள்ளை, ஆசார்ய பதவி தனிச் சிறப்புள்ளது,
அது ஸ்ரீ எம்பெருமானார் ஒருவருக்கே பொருந்தும் என வடுக நம்பி கூற்று என்கிறார்.

பிள்ளை லோகாசார்யர், ஸ்ரீ வசன பூஷணம் 411வது ஸூத்ரத்தில்
“வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர்” என்று சாதிக்கிறார். இதை மாமுனிகள் விளக்குகையில்,
மதுரகவிகள் முற்றிலும் ஆழ்வாரையே பற்றினாப் போலே நம்பி எம்பெருமானாரையே பற்றினார்,
ஆண்டானும் ஆழ்வானும் எம்பெருமான் எம்பெருமானார் இருவரையும் பற்றி இருந்தார்கள் என்கிறார்.

இறுதியாக, ஆர்த்தி ப்ரபந்தம் 11ஆம் பாசுரத்தில் மாமுனிகள் எம்பெருமானாரிடம் தம்மையும் அவரையே பற்றியிருந்த
ஸ்ரீ வடுக நம்பிகளைப் போலே ரக்ஷித்தருள வேணும் என்று இறைஞ்சுகிறார்.
ஸ்ரீ வடுக நம்பி எம்பெருமானாரிடம் கொண்டிருந்த அளவற்ற ஈடுபாட்டினால், ஸ்ரீ எம்பெருமானைத் தனியாக வணங்கவில்லை.
ஆசார்யனை நாம் வழிபடும்போது, இயற்கையாகவே அவ்வாசார்யன் அண்டி இருக்கும் எம்பெருமானையும் வழிபட்டதாக ஆகி விடும்.
ஆனால், எம்பெருமானை மட்டும் வழிபட்டால், ஆசார்யனை வணங்கியதாக ஆகாது என நம் பூர்வர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர்.
ஆகையால் ஆசார்யனையே எல்லாமாகக் கொண்டு இருப்பதே நம் ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான கொள்கை.
இந்த அம்சம் வடுக நம்பியிடம் அழகாகப் பொருந்தியுள்ளது என்கிறார் மாமுனிகள்.

இவ்வாறாக பாகவத நிஷ்டையை ஆசார்ய பக்தியால் அனுஷ்டித்த வடுக நம்பி திருவடிகளே நமக்குப் புகல்.

——————-

27- ஸ்ரீ வங்கி புரத்து நம்பி

பாரத்வாஜ குல உத்பூதம் லஷ்மணார்ய பத ஆஸ்ரிதம்
வந்தே வங்கீ புராதீஸம் ஸம்பூர்ணார்யம் கிருபா நிதிம்

இவர் ஸ்ரீ திருவாய் மொழியின் சாரம் அர்த்த பஞ்சகம் என்று அருளிச் செய்வர்
பிராட்டியின் பதியாய் இருப்பதே எம்பெருமானுக்குப் பெருமை –
ஸ்ரீ வைஷ்ணவ மதத்தின் பெருமையும் அதுவே என்று அடித்து அருளிச் செய்வர்
ஸ்ரீ எம்பெருமானே ஸ்ரீ நம்மாழ்வாராக அவதரித்தார் என்பாராம் –

ஸ்ரீ மணக்கால் நம்பி சிஷ்யரான ஸ்ரீ வங்கி புரத்து ஆய்ச்சியின் திருக்குமாரர் –
ஸ்ரீ சிறியாத்தான் இவரது சிஷ்யர் –

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேத –நாக பர்யங்க உத்ஸ்ருஜ்ய —
ஆகதோ மதுராம் புரீம்
சர்வ நியாந்தா
ஸ்ரீ கிருஷ்ணனாய் பிறந்து
நியாம்யனாய் இருந்த வ்ருத்தாந்தம் – பெரிய திருமொழி -6-7-4-
ஸ்ரீ வங்கி புரத்து நம்பி பல காலம்
திரு வாராதன க்ரமம் அருளிச் செய்ய வேணும் என்று போருமாய்
அவசர ஹானியாலே அருளிச் செய்யாமலே போந்தாராய்
திருமலையிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
ஸ்ரீ ஆழ்வானுக்கும் நம்பி ஸ்ரீ ஹனுமந்தத் தாசருக்கும் அது தன்னை அருளிச் செய்தாராய்
சமைக்கிற அளவிலே நம்பி தோற்ற
திரு உள்ளம் துணுக் என்று அஞ்சி அப்போது அருளிச் செய்த வார்த்தை –
என்றும் உள்ள இஸ் சம்சயம் தீரப் பெற்றோம் ஆகிறது
நியாமகன் நியாம்யங்களிலே சிலர்க்கு அஞ்சிக் கட்டுண்டு அடி உண்டு
அழுது நின்றான் என்றால் இது கூடுமோ என்று இருந்தோம் –
இரண்டு இழவுக்கும் நம்முடைய ஹிருதயம் அஞ்சி
நொந்தபடியால் அதுவும் கூடும் -என்று –

ஸ்ரீ நம் பெருமாள் வீதி உலாக்கில் பால் உண்பீர் பழம் உண்பீர் என்று இடையர்கள் –
விஜயீ பவ -இவர் சொல்ல ஸ்ரீ முதலியாண்டான்
முரட்டு சம்ஸ்க்ருத குறை சொல்லி அவர்கள் அவர்களே நாம் நாம் தான் என்று
ஆய்ச்சிகளின் பக்தியை மெச்சி அருளிச் செய்தாராம்

நமக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது –உன்னை அருள் புரிய வேண்டும் என்ற
க்ஷத்ர பந்துவின் வார்த்தை -என்று எம்பெருமானார் சொல்ல
உன்னை வணங்கத் தெரியாத எனக்கு கிருபை செய்து எனக்கு அருள் புரிய வேண்டும் என்ற
காளியன் வார்த்தை என்றாராம்
இவர் நிர்ஹேதுக கிருபையின் பெருமையை விளக்க இந்த சம்வாதம்

———————–

28-ஸ்ரீ பராங்குச நம்பி

கோவிந்த ராஜான் வயஜோ மநீஷீ பரங்குசோ யாமுனவை மநஸ்யம்
அபாசகார பிரசபம் த்ருதீயம் விராஜதே வ்ருத்த மணி ப்ரதீப –

இவர் ஸ்ரீ எம்பாருடைய தம்பியான சிறிய கோவிந்த பட்டரின் திருக்குமாரர்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ கூர நாராயண ஜீயர் ஸ்ரீ புத்தருடைய சிஷ்யர்
ஸ்ரீ உடையவர் ஸ்ரீ எம்பாரிடம் ஸ்ரீ நம்மாழ்வார் திரு நாமத்தைச் சாத்தகி சொல்ல இந்த திரு நாமம் –
தமிழில் வல்லவர்
ஸ்ரீ கூரத்தாழ்வான் இவரை பாலேய் தமிழர் என்பாராம் –

————

29- ஸ்ரீ அம்மங்கி அம்மாள்
இவர் ஒரு சமயம் ஸ்ரீ நம்பிள்ளையின் நோய் தீர ஒரு மந்திரிக்கப்பட்ட யந்திரத்தை அவர்
கையில் வைக்க முற்பட அவர் அத்தை ஏற்க மறுத்தார்
இவர் ஸ்ரீ மழுவூர் நம்பி ஸ்ரீ மருதூர் நம்பி ஸ்ரீ தொண்டனூர் நம்பி ஸ்ரீ அனந்தாழ்வான் உடன்
ஸ்ரீ ரெங்கம் சென்று வந்தார் –

இவர் நீதிப்பாடல்கள் பாடி மகிழ்விப்பாராம் –
இவரது சரம தசையில் ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ நம்பிள்ளை அறிய வந்து அவர் படுகிற கிலேசங்களைக் கண்டு
இங்குத்தை ஆச்சார்ய சேவைகளும்
பகவத் குணங்களைக் கொண்டு போது போக்கின படிகள் எல்லாம் கிடக்க
அல்லாதாரைப் போலே இப்படி பட வேண்டுவதே -என்ன –
நீயாள வளை யாள மாட்டோமே -ஸ்ரீ பெரிய திரு மொழி -3-6-9–என்றவாறே
பகவத் பரிக்ரஹம் ஆனால் கிலேசப் பட்டே போம் இத்தனை காணும் -என்றார்
புறப்பட்ட பின்பு ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பிள்ளையை பார்த்து முடிகிற இவ்வளவிலேயும் இவ்வார்த்தை சொல்லுகிறது
விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே என்று அருளிச் செய்தார்-

——————–

30- ஸ்ரீ பருத்திக் கொல்லை அம்மாள்

ஸ்ரீ உடையவர் திருமலைக்கு எழுந்து அருளும் போது ஸ்ரீ திருக்கோவலூர் சென்று அங்கு இருந்து
ஸ்ரீ காஞ்சி புரம் நோக்கி நடக்க அதில் இரண்டு வழிகள் பிரிய -அங்குள்ள இடையர்கள்
ஓன்று ராஜஸரான எச்சான் இடத்துக்குப் போகும் வழி என்றும் –
மற்ற ஓன்று சாத்விகரான இவர் இடத்துக்குப் போகும் வழி என்று சொல்ல
அதன் வழி இவர் இடத்துக்கு வந்தவர் -அங்கு அவர் இல்லாமல் அவர் தேவிமார் சரியான புடவை இல்லாமல்
வெளியே வர முடியாமல் இருக்க அறிந்த ஸ்ரீ உடையவர் தனது உத்தரீயத்தை எடுத்து எறிய –
அத்தைக் கட்டிக் கொண்டு வந்து வணங்க அவரைத் தளிகை பண்ணும்படி சொல்ல
பண்ணி முடித்ததும் அவள் கணவர் வந்து தண்டம் சமர்ப்பித்து ஸ்ரீ பாத தீர்த்தம் ஸ்வீ கரித்து
அனைவரும் அமுது செய்தார்கள்
இவர் தேவிக்கு தீங்கு நினைத்த வைசியன் ஒருவனை ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாத தீர்த்தம் சாதித்து
இவர் திருத்திப் பணி கொண்டார் –

—————————

31- ஸ்ரீ உக்கல் அம்மாள் ஸ்வாமி
ஸ்ரீ உடையவருக்கு திரு ஆல வட்ட கைங்கர்யம் செய்தவர்

———–

32- ஸ்ரீ சொட்டை அம்மார் ஸ்வாமி
இவர் ஸ்ரீ திரு நாராயண புரத்தில் ஸ்ரீ உடையவர் ஸந்நிதியில்
ஸ்ரீ நடுவில் ஆழ்வான் இடம் ஸ்ரீ வங்கி புரத்து ஆச்சி உடன் ஸ்ரீ பாஷ்யம் கேட்டவர்
அவர் இவர்களை ஆசீர்வதித்து ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று
இருங்கோள் -என்று அருளிச் செய்தார் –

————-

33-ஸ்ரீ கிடாம்பிப் பெருமாள் ஸ்வாமி
இவர் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் உடன் சேர்ந்து திரு மடப்பள்ளி கைங்கர்யம் செய்தவர்
ஸ்ரீ பாஷ்யம் முடித்த பின்பு ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாஷ்ய கோசத்துடன் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் உடன்
காஷ்மீர் சென்று சாரதா பீடத்தில் வைத்து அங்கீ காரம் பெறச் செய்தார்

————————–

34-ஸ்ரீ ஈச்சம் பாடி ஆச்சான் ஸ்வாமி

ஸ்ரீ ஈச்சம்பாடி ஸ்ரீ திரு மலைக்கு அருகில் உள்ளது
இவர் திருத் தகப்பனார் -ஸ்ரீ சுந்தர தேசிகர் என்ற ஸ்ரீ அழகப் பிரான் –
திருத்தாயார் -ஸ்ரீ திருமலை நம்பியின் திருக்குமாரத்தில்
இருவரும் ஸ்ரீ ஆளவந்தார் நியமனப்படி திருமலையில் கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தார்கள்
ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளிய போது அவருக்கு ஸ்ரீ சுந்தர தேசிகர்
ஸ்ரீ தாப நீய உபநிஷத்தையும் ஸ்ரீ நரஸிம்ஹ நிமந்த்ரத்தையும் உபதேசித்தார்
அவருக்கு 1026 தை மாசம் ஹஸ்தம் இவர் பிறக்க
ஆச்சான் ஸ்ரீ நிவாஸாசார்யார்-என்ற பெயர் சாற்றி அருளினார்
இவர் ஸ்ரீ ராமானுஜரை ஆஸ்ரயித்து தர்சன ப்ரவர்த்தனம் செய்து அருளினார் –

ஏராரும் தை யத்தம் இங்கு உதித்தான் வாழியே
சுந்தரேசன் திரு மகனாய் துலங்குமவன் வாழியே
பார் புகழும் யதி ராஜன் பதம் பணிவோன் வாழியே
சீராரும் வேங்கடத்தில் திகழுமவன் வாழியே
பார் மகிழும் பாடியத்தை பகருமவன் வாழியே
உத்தமமாம் குலமதனில் தொல் புகழோன் வாழியே
தொண்டர் குழாம் கண்டு உகக்கும் தொல் புகழோன் வாழியே
நல் ஈச்சம்பாடி வாழ் நம் ஆச்சான் வாழியே

——————

35- ஸ்ரீ ஈச்சம் பாடி ஜீயர் ஸ்வாமி

இவர் ஸ்ரீ ஈச்சம் பாடி ஆச்சானின் இளைய சகோதரர்
இவர் 1030 ஆனி திருவோணம் திரு அவதாரம்
ஸ்ரீ வேங்கடேசன் திரு நாமம் இயல் பெயர்
ஐவரும் ஸ்ரீ ராமானுஜரை ஆஸ்ரயித்து தரிசன பிரவர்தனம் செய்து கொண்டு இருந்தார்
அவர் இடமே சந்யாச ஆஸ்ரமம் ஸ்வீ காரம் பெற்று ஸ்ரீ ஈச்சம் பாடி ஜீயர் ஆனார்

ஆனி தனில் ஓணத்தில் அவதரித்தான் வாழியே
வேங்கடத்தைப் பாதியாக விரும்புமவன் வாழியே
பூவார்ந்த கழல்களையே போற்றுமவன் வாழியே
பதின்மர் கலை உட் பொருளை பகருமவன் வாழியே
அநவரதம் அரி யுருவன் அடி தொழுவோன் வாழியே
எப்பொழுதும் யதி பதியை ஏத்துமவன் வாழியே
முக்தி தரும் முந்நூலும் முக்கோலும் வாழியே
எழில் ஈச்சம் பாடி உறை ஜீயர் தாள் வாழியே –

————

36–ஸ்ரீ காராஞ்சி சோமயாஜியார் ஸ்வாமி

இவர் ஸ்ரீ உடையவரை ஆஸ்ரயித்தவர்
ஸ்ரீ உடையவர் இருக்கும் இடம் சென்று கைங்கர்யம் செய்ய இவர் மனைவி இடம் தராததால்
ஸ்ரீ உடையவர் விக்ரஹம் பண்ணி பூஜை செய்ய விரும்பினார்
விக்ரகம் சரிவர அமையாததால் அதை அழித்து வேறே ஒரு விக்ரஹம் பண்ணினார்
ஒரு நாள் இரவில் ஸ்ரீ உடையவர் ஸ்வப்னத்தில் தோன்றி ஏன் இப்படி செய்கிறீர் -என்று கேட்டார்
கண் விழித்து நேரே ஸ்ரீ ரெங்கம் புறப்பட்டுச் சென்று ஸ்ரீ உடையவராய் தண்டம் சமர்ப்பித்து நடந்தத்தைச் சொன்னார்
ஸ்ரீ உடையவர் முறுவல் செய்து அபயம் அளித்து இவருடைய கவலைகளைத் தீர்த்தார்

——————-

37-ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள் ஸ்வாமி

இவருக்கு ஆஸூரித் தேவர் -ஆஸூரி புண்டரீகாக்ஷர் -என்ற திரு நாமங்கள் உண்டு
ஹாரித கோத்ரம்
ஸ்ரீ நடுவில் ஆழ்வானுடைய சிஷ்யர்
ஸ்ரீ திரு நாராயண புரம் இருந்து தர்சன நிர்வாஹம் செய்து வந்தார்
இவரது திருவம்சத்தில் திரு அவதரித்தவர் ஸ்ரீ ஆய் ஜெகந்நாதாச்சார்யார் -என்ற பிரசித்தி பெற்ற வர் –

—————-

38- ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் ஸ்வாமி

ராமானுஜ பதாம் போஜ யுகளீ யஸ்ய தீமத
ப்ராப்யம் ச ப்ராபகம் வந்தே ப்ரணதார்த்தி ஹரம் குரும்

ஆஸ்திகா அக்ரேசரம் வந்தே பரிவ்ராட் குரு பாஸகம்
யாசிதம் குரு கேசேந ப்ரணதார்த்தி ஹரம் குரும்

சித்திரை ஹஸ்தம்
ஆத்ரேய கோத்ரம்
தளிகைக் கைங்கர்யம் -திருக் கோட்டியூர் நம்பி நியமனம் பிரசித்தம்
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் உடைய அத்தை கணவர்
ஸ்ரீ திரு விருத்தத்துக்கு தனியன் சாதித்து உள்ளார்

அபராத ஸஹஸ்ர பாஜநம் –அகதிம் -சொல்ல அழகர் நீ ராமானுஜன் அடியவராக இருக்க
அகதி சொல்லக் கூடாதே என்று அருளிச் செய்த விருத்தாந்தம் –
தீர்த்தம் சாதிக்க -பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -பாசுரம் சொல்லி
கிருதஜ்ஜை தெரிவித்துக் கொண்டாரே
பட்டர் இடம் தாழ்ந்து பரிமாற்ற -வயசில் மூத்த ராமானுஜர் அடியாராய் இருக்க இவ்வாறு செய்வது என் என்று கேட்க
நம்முடைய அடங்கலும் நம்மை நினைத்து இருக்குமா போல் பட்டரை நினைத்து இருக்க –
எம்பெருமானார் அருளிச் செய்தது உண்டே என்றாராம்
ஸ்ரீ பாஷ்ய கோசம் இவரையே காஷ்மீருக்கு சென்று சரஸ்வதி தேவி பாஷ்யகாரர் பட்டம் சாதித்த விருத்தாந்தம்
இவருக்கு வேதாந்த உதயனன் என்ற விருதை ஸ்ரீ உடையவர் வழங்கினார்
நியாய சாஸ்திரத்தில் உதயனன் பிரபல வித்வானாய் இருந்தார்

இவர் திருக்குமாரர் ஸ்ரீ கிடாம்பி ராமானுஜாச்சார்யார்
அவர் திருக்குமாரர் ஸ்ரீ கிடாம்பி ரங்க ராஜாச்சார்யார்
அவர் திருக்குமாரர் ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளார்
அவர் திரு சகோதரி ஸ்ரீ தோத்தாத்ரி அம்மையார்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ வேதாந்த தேசிகன்
இவர் வம்சமே ஸ்ரீ சிங்கப் பெருமாள் ஸ்வாமியும்
அவருடைய ஸ்வீ கார புத்ரருமான காரப்பங்காடு வேங்கடாச்சார்யார் ஸ்வாமிகள் –1906-1971-

———-

39-ஸ்ரீ அலங்கார வேங்கடவர் ஸ்வாமி

ஸ்ரீ மத் தயாபால முநேஸ் த நூஜம் தத் பாத ஸேவாதி கத ப்ரபோதம்
ஸ்ரீ மத் யதீந்த்ர அங்க்ரி நிவிஷ்ட சித்தம் ஸ்ரீ கௌசிகம் வேங்கட ஸூரி மீடே

ஸ்ரீ ராமானுஜ பாத பத்ம யுகளம் ஸம்ஸ்ருத்ய ஸத் கோஷ்டிஷு
ப்ரேம்ண அலங்க்ருத வேங்கடேச குரு இத்யாக்யாம் பராம் ப்ராப்தவான்

யோ அசவ் கௌசிக தேசிகோ குண நிதி ஸ்ரீ விஞ்ச புர்யாம் ஸ்தி தஸ்
தத் பாதாப்ஜ யுகம் நமாமி ஸததம் ஸம்ஸார சந்தாரகம்

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானா உடைய திருக்குமாரர்
கௌசிக கோத்ரம்
மார்கழி திருவாதிரை
இவர் ஸ்ரீ பெரிய திருமலை நம்பி திருப்புதல்வியை மணந்தார்
இவர் திருக்குமாரர் ஸ்ரீ விஞ்சிமூர் தாத்தாச்சாரியார்

திரு மருவும் விஞ்சை நகர் செழிக்க வந்தோன் வாழியே
ஸ்ரீ பாஷ்யகார் அடி சேர்ந்து உய்ந்தோன் வாழியே
அருளாள மா முனிவன் அருள் மைந்தன் வாழியே
அரு மறை நூல் மாறன் உரை ஆய்ந்து உரைப்போன் வாழியே
மருளில் திருமலை நம்பி மணவாளன் வாழியே
மார்கழியில் ஆதிரை நாள் மகிழ்ந்து உதித்தோன் வாழியே
திருவரங்கர் தாளிணை யின் தம் பகர்வோன் வாழியே
திரு வேங்கட ஆசிரியன் திருவடிகள் வாழியே

————-

40-ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமி-

கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ர ஆஸ்ரிதம் ஆஸ்ரயே
ஞானப் பரமேய சார அபி வக்தாரம் வரதம் முனிம்

ஞான பக்த்யாத்த வைராக்யம் ராமானுஜ பத ஆஸ்ரிதம்
பஞ்சம உபாய ஸம்பந்தம் சம்ய மீந்த்ரம் நமாம் யஹம்

தயா பாலந தேவாய ஞான சாரா ப்ரதாயி நே
ப்ரமேய சாரம் தததே நமோஸ்து ப்ரேம ஸாலி நே

யஜ்ஞ மூர்த்தியாய் இருந்து -18 நாள் வாதம் -செய்து –
திரு ஆராதனை கைங்கர்யம்
ஞான சாரம் ப்ரேம சாரம்
தம் மடத்தை இடித்த விருத்தாந்தம்
ஸ்ரீ உடையவர் தம்மை ஆஸ்ரயிக்க வந்த
ஸ்ரீ அனந்தாழ்வான்
ஸ்ரீ எச்சான்
ஸ்ரீ தொண்டனூர் நம்பி
ஸ்ரீ மருதூர் நம்பி
ஸ்ரீ மழுவூர் நம்பி –ஆகியவர்களை இவர் இடம் ஆஸ்ரயிக்கச் செய்தார்

ஸ்ரீ வடுக நம்பி திரு நாட்டுக்கு எழுந்து அருளியதாக சொல்ல -அப்படிச் சொல்லக் கூடாது
ஸ்ரீ உடையவர் திருவடி சேர்ந்தார் என்று சொல்ல வேண்டும் என்றார் –
இவர் சரம காலத்தில் ஸ்ரீ கூரத்தாழ்வானும் ஸ்ரீ உறங்கா வில்லி தாஸரும் எழுந்து அருள
ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு விரும்பியவருக்கு ஸ்ரீ பரமபதம் சாதிக்க சக்தி இருந்தும் தான் இப்படி
கஷ்டப்பட வைக்கிறார் என்று எண்ணி தான் சீக்கிரம் ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகள் சேர வேணும் என்று பிரார்த்தித்தார் –
சிறு மா மானிடராய் -8-10-3-மேனி சிறுத்து கீர்த்தி பெருத்து இருந்த
ஸ்ரீஅருளாளப் பெருமாள் எம்பெருமானாரைப் போல் என்று காட்டியது –

திரு வாழும் தென்னரங்கம் சிறக்க வந்தோன் வாழியே
தென் அருளாளன் அன்பால் திருந்தினான் வாழியே
தரு வாழும் எதிராசன் தாள் அடைந்தோன் வாழியே
தமிழ் ஞான ப்ரமேய சாரம் தமர்க்கு உரைப்போன் வாழியே
தெருளாரு மதுரகவி நிலை தெளிந்தோன் வாழியே
தேசு பொலி மடம் தன்னை சிதைத்திட்டோன் வாழியே
அருளாள மா முனியாம் ஆரியன் தாள் வாழியே
அருள் கார்த்திகைப் பரணியோன் அனைத்தூழி வாழியே –

————–

41-ஸ்ரீ குமாண்டூர் இளைய வல்லி ஸ்வாமி

ஸ்ரீ கௌசிக அந்வய மஹாம் பூதி பூர்ண சந்த்ரம்
ஸ்ரீ பாஷ்ய கார ஜநநீ ஸஹஜா தூ நூ ஜம்
ஸ்ரீ சைல பூர்ண பத பங்கஜ சக்த சித்தம்
ஸ்ரீ பால தன்வி குரு வர்யம் அஹம் பஜாமி

ஸ்ரீ யதீந்த்ர மாத்ஷ்வ ஸ்ரீய ப்ரதி தார்ய பதே ஸ்திதஸ்
மூல பத கௌசிகா நாம் தம் வந்தே பால தந்விதம்

சித்திரை ரேவதி நஷத்ரம் திரு அவதாரம்
கௌசிக கோத்ரம்
ஸ்ரீ ராமானுஜர் உடைய சிறிய திருத் தாயாருடைய திருக் குமாரர்
ஸ்ரீ பெரிய திருமலை நம்பியின் மருமகன்
ஸ்ரீ பால தந்வி -வட மொழி திரு நாமம்
இவர் வம்சம்
ஸ்ரீ பால தந்வி –சித்திரை ரேவதி
ஸ்ரீ திரு விக்ரம குரு
ஸ்ரீ ராமானுஜ குரு
ஸ்ரீ வரத்தார்ய குரு –கும்ப மூலம்
ஸ்ரீ வரம் தரும் பெருமாள் அப்பை -ஆவணி அவிட்டம் -இவர் ஸ்ரீ மா முனி சிஷ்யர்

————————————

ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை வைபவம்

ஸ்ரீ திருவரங்கத்தில் இருந்து ஸ்ரீ அழகிய மணவாளனும்
ஸ்ரீ ஆழ்வார் திரு நகரியில் இருந்து ஸ்ரீ நம்மாழ்வாரும் -கலாபத்துக்கு பிறகு -1323- தம் தம்
ஸ்தானங்களை விட்டு கோழிக்கோடு முந்திரிப்பூ காடு வழியாக கர்நாடக -திருக் கணாம்பி -என்னும் ஊரில் எழுந்து அருளினார்கள்
கலாபத்துக்கு பின்பு ஸ்ரீ திருக் குருகூர் புனர் நிர்மாணம் பண்ணி அருளினார்
ஸ்ரீ திருமலை ஆழ்வார் என்னும் ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை

நம ஸ்ரீ சைல நாதாய குந்தீ நகர ஜன்மனே ப்ரஸாத லப்த
பரம ப்ராப்ய கைங்கர்ய சாலி நே

சீர் உற்ற செஞ்சொல் திருவாய் மொழிப்பிள்ளை செம்முகமும் தார் உற்ற மார்பும் தளிரேய் பதங்களும் தன் மனத்து
பூரித்து வாழும் மணவாள மா முனிகள் பொன்னடிகள் பாரில் தரித்து அடியேன் பற்றினனே –ஸ்ரீ கந்தாடை அண்ணன்

ஸ்ரீ பகவத் விஷய உபதேச மார்க்கம் தமக்கு திருவாய் மொழிப்பிள்ளை பேர் அருளாலே வந்த படியை
தமக்கு உள்ள பேர் அன்பாலே பாசுரம் இட்டு அருளுகிறார் மா முனிகளும்

திரு அருள் மால் சேனை முதலி சடகோபன் நாத முனி சீர் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி சென்றான் ஆளவந்தார்
குரு மாலாதரர் குருகைப் பிராற்கு அன்பாம் எதிராசர் கோவிந்தர் கூரேசர் பட்டர் வேதாந்த முனி
இரு கண்ணற்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடு அளித்ததற்கு ஏய்ந்த மாதவர் பத்ம நாதர் இவர் அருளாளர்
திருவடி ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே – –

1301-1406-இவர் விபவ வருஷம் வைகாசி விசாகத்தில் பூர்வ சிகை ஸ்ரீ வைஷ்ணவ குலத்தில் திரு அவதாரம் –
மதுரைக்கு அருகில் குந்தீ -இப்பொழுது மருவி கொந்தகை என்று அழைக்கப் படுகிறது –

திரு நாமங்கள்
ஸ்ரீ சைலேசர்
திருமலை ஆழ்வார்
திருவாய் மொழிப்பிள்ளை
காடு வெட்டி ஐயன்
சடகோப தாசர்
ஸ்ரீ நாத முனிகள் சிஷ்யர் உய்யக் கொண்டார் வம்சத்தவர் என்பர்

திருத்தாயார் சாத்விகை அம்மையார்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் இடம் பஞ்ச சம்ஸ்காரம்
பாண்டிய ராஜ புரோகிதர் -பின்பு ராஜாவாகவும் ஆனவர்
பிள்ளை லோகாச்சார்யார் ஜோதிஷ் குடியில் அழகிய மணவாளரை பாது காத்து
அருளும் பொழுது இவருக்கு 40 திரு நக்ஷத்ரம்

பிள்ளை லோகாச்சார்யார் திருமலை ஆழ்வாரை அனுவர்த்தித்து
ஸ்ரீ கூர குலோத்தமை தாசரை ரஹஸ்யார்த்தங்களை ப்ரசாதிக்கும் படியாகவும்
திருக் கண்ணங்குடி பிள்ளைக்கும் திருப் புட் குழி ஜீயருக்கும் திருவுவாய் மொழிப் பொருளை உபதேசிக்கும் படியாகவும்
மற்றும் உள்ள மூவாயிரம் வியாக்கியானங்களை உபதேசிக்கும் படி நாலூர்ப்பிள்ளைக்கும்
ஸ்ரீ வசன பூஷண சாரார்த்தமான ஸப்த காதை முதலான அர்த்த விசேஷங்களை
விளாஞ்சோலைப் பிள்ளைக்கும் நியமித்து அருளினார் –

கூர குலோத்தமை தாசர் திருவடிகளே சரணம் என்று அநவரதம் சொல்லக் கேட்டு
ராஜ மஹிஷி இவருக்கு அரசுப் இருந்து ஒய்வு வழங்கி விட்டார்

கூர குலோத்தம தாசர் திரு வரசு சிக்கில் கிடாரத்தில் உள்ளது
இங்கு திருவாய் மொழிப்பிள்ளை தங்கி இருந்த திரு மாளிகை சேஷமும் இன்றும் உள்ளது
குந்தீ -கொந்தகையில் வீற்று இருந்த திருக்கோலத்துடனும் செங்கோலுடனும் சேவை சாதித்து அருளுகிறார்

நம்மாழ்வாரை முந்திரிப்பூ பள்ளத்தாக்கில் இருந்து எழுந்து அருளப்பண்ணி –
அங்கேயே பரமபதம் அடைந்த தோழப்பர் திருக்குமாரர் -அப்பன் பிள்ளைக்கு -ஆறுதல் கூறி
ஆழ்வார் உம்மை புத்ரராக கொண்டார் -இன்றும் ஆழ்வார் தோழப்பர் -அருளப்பாடு -உண்டே

நம்மாழ்வாரை திருக்கணாம்பி எழுந்து அருளப்பண்ணி -இருந்த கோயிலிலே மேலே கருட பக்ஷி கூடு கட்டி இருந்தது
ஆழ்வாரை சேவிக்க திருவனந்த புரம் திருவட்டாறு திருவண் பரிசாரம் திருவல்லவாழ் திவ்ய தேச நம்பூதிரிகள் போத்திமார்கள் வந்து
உதய காலத்தில் திரு மஞ்சனம் செய்து அருளி
தத்யோந்நம் நெய் தோசைப்படி பாகு கூட்டின கட்டிப்பொரி -பால் கஞ்சிக் கடாரம் அமுது செய்து அருளி
மத்தியானம் நாயக அலங்காரம் -சம்பா அவசரம் திருப்பணியாரங்கள் –
சாயங்காலம் திருவாராதனம் கண்டு அருளி
அஸ்தமன சமயத்தில் உப்புச் சாத்தமுது -சம்பா -தோசைப்படி -பொரி அமுது செய்து அருளி
பிற்பாடு அத்தாளமுது செய்து அருளி
இராக்காலமாய் ஸ்ரீ பலிதுடி -திரு உற்ற சாதம் -அரவணை -சுக்கு கஷாயம் அமுது செய்து அருளி
போத்திமார் திட்டம் பண்ணி நடத்திப் போந்தார் –

பேர் அருளாளர் நியமனம் அடியாக கச்சி மா நகரில் ஆச்சான் பிள்ளை திரு மலை ஆழ்வாருக்கு
ஈடும் நாலாயிர பொருள்களையும் சாதித்து அருளினார்

காடு வெட்டி நாடாக்கி -நல்லார் பலர் வாழ் குருகூர் என்னும்படி குடியேறி திருக் கணாம்பியில் இருந்து
திருநகரிக்கு எழுந்து அருளப்பண்ணி -குருகூர் சடகோபன் என்னும்படி
உறங்கா புளி நிழலிலே ஏறி அருளப் பண்ணி சேவித்து நின்றார்

நம்மாழ்வார் சடகோப தாசர் -திருநாமம் யதார்த்தமாம் படி பிரசாதித்து அருளினார்
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே -என்னும் படியும்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் -என்னும் படியும்
புகழ் வண் குருகையும் பொற் கோபுரமும் புரிசை சூழ் கழனி
தண் பொருனை மன் ஆழ்வார் மறைத் தமிழ் ஆயிரமும் திகழும் படி செய்த
ஸ்ரீ சைலேசர் என்னும் படி கைங்கர்யமே நிரூபகமாக இருந்தார்

1371-விஜய நகர மன்னர் வீர கம்பண்ணர் -செஞ்சி மன்னன் கோபணார்யன் –
விஜய நகர் படைத்தலைவன் சாளுவ மங்கி ஆகியோரின் பெரு முயற்சியால்
நம்பெருமாள் பரிதாபி ஆண்டு வைகாசி -17- நாள் திருவரங்கத்துக்கு எழுந்து அருள
அருணோதயம் போல் 1370 சாதாரண வருஷம் ஐப்பசி திரு மூலம் -மா முனிகள் திரு அவதாரம்

திருவாய் மொழிப்பிள்ளை உடைய திரு ஆராதனப் பெருமாள் -இன வாயர் கொழுந்து –

இவர் சிஷ்யர்கள்
பெரிய ஜீயர்
நம்மாழ்வார் கோயில் எம்பெருமானார் ஜீயர்
எம்பெருமானார் கோயில் சடகோபர் ஜீயர்
தத்வேச ஜீயர்
இவர் 105 திரு நக்ஷத்ரம் எழுந்து அருளி இருந்தார்
திரு அத்யயனம் வைகாசி கிருஷ்ண அஷ்டமி

————

ஸ்ரீ மா முனிகளின் வைபவம்

ஸ்ரீ கோ மடத்து ஆழ்வான் -7 th ஸிம்ஹாஸனாதி பதி
ஸ்ரீ கோ மடத்துப் பிள்ளான் என்றும் அழைக்கப் படுவார்
இவர் சிஷ்யர் காக்கைப் பாடி ஆச்சான் பிள்ளை -மூன்று தட்வை ஸ்ரீ பாஷ்யம் கேட்டாராம்
இவரது வம்சமே ஸ்ரீ திகழக் கிடந்தான் திரு நா வீறுடைய தாஸர் அண்ணர் –
ஸ்ரீ மா முனிகளின் திருத் தகப்பனார் –
ஸ்ரீ மா முனிகளின் திருப் பேரனார் ஸ்ரீ ஜீயர் நாயனார் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் உடைய அஷ்ட திக் கஜங்களில் ஒருவர் –

ஜகத் ரஷா பரோ அநந்தோ ஜனிஷ்யத்த பரோ முனி ததஸ்ரஸ் யாஸ் ஸதாச்சாரா சாத்விகாஸ் தத்வ தர்சன —
தேவப் பெருமாள் கந்தாடை தொழப்பர் ஸ்வப்னத்தில் மா முனிகள் அவதாரம் பற்றிய ஸ்ரீ ஸூக்தி

கிடாம்பி ஆச்சான் சிஷ்யர் கிடாம்பி நாயனார் இடம் ஸ்ரீ பாஷ்யம் கற்றார் -திருவாய் மொழிப் பிள்ளை ஆணைப் படி –
ஒரு தடவை கால ஷேபம் செய்து அருளிச் செயல்களில் மட்டுமே பொழுது போக்காகக் கொண்டார் –
செல்வ நாயனார் -ஐகள் அப்பா -இருவரும் கிடாம்பி நாயனார் உடன் கால ஷேபம்
ஆதி சேஷன் உருவம் கண்டார்கள்

யதோத்தகாரி சந்நிதியில் வியாக்யான முத்திரை உடன் இன்றும் சேவை உண்டே

பிரணவம்
ஆழ்வார் -அகாரம்
எம்பெருமானார் -உடையவர் –
ஜீயர் -மணவாள மா முனிகள் -மகாரம்

மன்னிய சீர் மாறன் கலையை உணவாகப் பெற்றோம் -திருவாய் மொழி ஜீயர் எண்ணலாமே
கிடாம்பி ஆச்சான் -ஸ்ரீ பாஷ்யம் சாதித்தவர் -ஈடு அனுசந்தானம் செய்து கொண்டே இருக்கும் ஜீயர் -என்று உண்டே

இயல் பெயர் -அழகிய மணவாள பெருமாள் நாயனார்-
திருத் தகப்பனார் -திரு நா வீறுடைய பிரான் தாதர் அண்ணர் –
அவதார வருஷம் -சாதாரண வருஷம் -துலா மாதம் –26- நாள் – in AD 1370.–திரு மூலம் -கௌண்டிந்ய கோத்ரம் –
சிக்கில் கடாரம் திரு அவதாரம் இருந்தாலும் ஆழ்வார் திரு நகரியிலே வளர்ந்து கற்றார் –
திருக்கல்யாணம் –15 திரு நக்ஷத்திரத்தில் –1386 AD (February)-க்ரோதன ஸம்வத்சரம் –மகர மாசம் –
சந்யாச ஆஸ்ரமம் –விஜய நாம சம்வத்சரம் –1415-AD -(APRIL ) -பெரிய திரு மண்டபத்தில் -ஸ்ரீ சடகோப முனி ஜீயரால் –

திருக்குமாரர் -எம் ஐயன் ராமானுஜன்
அவர் உடைய திருக் குமாரரர்கள் -ஜீயர் நாயனார் -வேதப்பிரான் பட்டர் ஸ்ரீ ஜீயர் நாயனார்-
24 th வம்சத்தவர் -ஸ்ரீ கோமடம் எதிராஜ சம்பத் குமாராச்சார்யர் –
இப்பொழுது ஸ்ரீ ரெங்கம் மா முனி சந்நிதி கைங்கர்யம்
இவர் திருத் தகப்பனார் -ஸ்ரீ கோமடம் சடகோபாச்சார்யர்

1443-ஆனி மூலம்
ஸ்ரீமான் வகுள தர ஸாஸ்த்ர பாவம் ஸ்ரீ சைலே பத்ர் -எறும்பி அப்பா
அப்புள்ளார் -சம்பிரதாய சந்திரிகை -ஆனந்த வருஷம் முன் நாள் திங்கள் பவுர்ணமி மூலம் -ப்ரமாதித வருஷம்
12-JUNE -1433-மாலை
அரங்கர் தாமே வந்து தனியன் செய்து தலைக் காட்டினார்
பானு வாரம் –
கூட இருந்த ஸ்வாமிகள் பட்டோலை
மாப்பிள்ளை -மணவாளப்பிள்ளை ஜா மாதா
ரம்ய -அழகிய
சந்யாச ஆஸ்ரமம் பின்பு அழகிய மணவாள மா முனி ஜீயர்
ஸ்ரீ சைலேச -திருமலை ஆழ்வார் -திருவாய் மொழிப் பிள்ளை
முனிம் -ஐந்தாவது பெருமை தனியனில்
தனியன் -மற்ற ஸ்தோத்ரங்களில் இருந்து எடுத்தவை
சுக்ரீவன் சைலேச தயா பாத்திரம் -நாதம் இச்சதி -சரணம் கத
மதங்க முனிவர்

தவம் புரிந்து உயர்ந்த மா முனி -வால்மீகி
வான் தமிழ் மா முனி -அகஸ்தியர்
சாந்தீபன் அடி பணிந்து அடி பட்டு மனம் வருந்தி
ஆர்ணவம் -லவ ஆர்ணவம்
தன்னை உற்றாரை அன்றி தன்மை உற்றாரை -யதீந்த்ரர் திருவடி விட யதீந்த்ர பிரவணர் திருவடி

அஸ்மத் ஆச்சார்யர் -கூரத்தாழ்வான் -லஷ்மீ நாத சமாரம்பாம் -நாத யமுனா மத்யமாம்
அஸ்மத் குரு சமாரம்பாம் யதி சேகர மத்யமாம் -லஷ்மீ வல்லன பர்யந்தாம் -குரு பரம்பரை -சொல்லி ஆழ்வார்
இதுக்கு முன்பு சொல்லி
இது வந்த பின்பு இத்தை சொல்வது -க்ரமம் பெரிய பெருமாளே ஏற்பாடு
ஒருவரைச் சொல்லி பின்பு குரு பரம்பரை -எல்லா ஆச்சார்யர்களையும் காட்டும் தனியன்

அனைவருக்கும் அன்வயித்து அர்த்தம் சொல்லலாம் படி பொதுவான
ஸ்ரீ சைலேசர் தயா பாத்திரம்
திருமலை -ஸ்ரீ சைலம் -ஈசன் -தயைக்கு பாத்திரம் நம்மாழ்வார் –
ஸ்ரீ நம் பெருமாள் இங்கே தங்கி -ஸ்ரீ ரெங்க மண்டபம் -22-வருஷங்கள்
1371 திரும்பி -பரிதாபி வருஷம்
1370 மா முனிகள் அவதாரம் -பின்பே வர தைர்யம்

ஸ்ரீ சைலத்தை தனக்கு பாத்திர பூதமாகி –
தீ ஞானம்
பக்தி -அவனுக்கு உண்டோ -ஸ்நேஹ பூர்வ அநு த்யானம்
பகவத் பக்தி -நமக்கு -பக்தர்கள் இடத்தில் -பக்த வத்சலன் அன்றோ
யதீந்த்ரர் இடம் ப்ராவண்யம் -அறிவோம் -அரையர் மூலம் கூட்டி வந்து –
யதீந்த்ர ப்ராவண்யம் தன்னிடம் கொண்டவர்
ரம்யா ஜாமாதரம் -இவனுக்கும் பொருந்தும்
சந்யாச ஆஸ்ரமம் பின்பு அழகிய மணவாளன் இயல் பெயரை மாற்ற வேண்டாம் —
சடகோப ஜீயர் ஆசைப் பட்டார் என்று -முன்புள்ள திரு நாமமே வைத்து நடத்தும்
மா முனி -மட்டும் சேர்த்து
ஆச்சார்யர் திரு நாமம் பின்பு சிஷ்யன் வகுக்க வேண்டும் -மாற்ற வேண்டாமே என்பதால் இப்படி
மனன சீலன் -முனியே இவனே
பிராட்டிக்கும்
அகலகில்லேன் -பாத்ர பூதை
எம்பெருமானார் இடம் ஈடுபாடு -வித்யாசல வேடன் வேடுவிச்சி
அவருக்கும் இவள் இடம் ப்ராவண்யம்
ரம்யா ஜா மாதாவை எப்பொழுதும் த்யானம்

சேனை முதலியார்
வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும்
எம்பெருமானார் இவரே தேசிகன் -சப்ததி
பிரம்பு -த்ரி தண்டம்

நம்மாழ்வாருக்கும் பொருந்தும்
மாரி மாறாத –
த்வய சாரம் -பூர்வ உத்தர திரு வேங்கடம் விஷயம்
இருவருக்கும் ஈடுபாடு வாசா மகோசரம்
மதி நலம் -தீ பக்தி
பவிஷ்யதாச்சார்யர்
அவர் ப்ராவண்யம் இவர் இடமே
மாறன் அடி பணிந்து
பராங்குச பாத பத்மம்
இப்படி அனைவருக்கும் பொருந்தும்

திரு முடி சம்பந்தம் திருவடி சம்பந்தம் -அனைவருக்கும் யதீந்த்ர ப்ராவண்யம்
எம்பெருமானாருக்கு ஆளவந்தார் மீதும் அவருக்கு இவர் மீதும் ப்ராவண்யம் உண்டே
அனைத்து ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகள் அறிந்தவர் இவர் ஒருவரே –
ஆளவந்தாருக்கு ஸ்ரீ பாஷ்யம் தெரியாதே
சகல பூர்வாச்சார்ய ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிற சாகர சந்த்ரன் அன்றோ இவர் –
தனி ஒருவர் இல்லை
முன்னவர் தாம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம் —
embodiment of all

தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு –தான் -நண்ணார் அவர்கள்
அன்பு தன் பால் -என்று தன் -அவரைச் சொல்லி
தன் குரு -மா முனிகள் தானே
ஐந்து கார்யம் சிஷ்யன் ஆச்சார்யருக்கு செய்ய வேண்டும்
தனியன் சமர்ப்பித்து
திரு நாமம் வகித்து
சொத்தை சமர்ப்பித்து -ஆதி சேஷனையே கொடுத்து அருளி -ஆச்சார்ய சம்பாவனை -சேஷ பீடம்
திரு நக்ஷத்ரம் -தீர்த்தம் கொண்டாடி
நேர் சிஷ்யர்கள் தானே திரு அத்யயனம் –
வேறே எவருக்கும் இல்லாமல் -மாசி சுக்ல பக்ஷம் துவாதசி இன்றும்
எம்பெருமானாருக்கு எம்பார் பண்ணி பின்பு அவர்க்கு பின்பு பண்ணுவார் இல்லை
என்றும் இறவாத எந்தை அன்றோ இவர் சிஷ்யர்
உச்சிக்கால பூஜை அப்புறம்
சுருள் அமுது கண்டு அருள மாட்டான் இன்றும் –
குரு பிரகாசம் -எங்கும் ஓலை அனுப்பி ஏற்பாடு –

இந்த ஒன்றை அனுசந்தித்தால் அனைவரையும் அனுசந்திப்பதாக இருப்பதால்
வைதிகம் விதி பிரேரிதம் இல்லாமல் எங்கும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்
தாமரை உடன் இருக்கும் தவளை அறியாத ஏற்றம் வண்டு உணரும்
தெய்வ வண்டு காட்டக் கண்டு அனுபவிப்போம்

———————

மூலம் –19 நக்ஷத்ரம் -ஆச்சார்யர் வரிசைகளில் –19–
எம்பெருமானார் -திருப்பாவை ஜீயர் -ஆச்சார்யர் வரிசைகளில் -9-
திருவாய் மொழிப் பிள்ளை -ஆச்சார்யர் வரிசைகளில்-18-

தென் திசை இலங்கை நோக்கி -இலக்காக நோக்கி -ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்
எழுந்து அருளிய ஆழ்வார் திரு நகரியையே நோக்கி -ரக்ஷண அர்த்தமாக –
இவர் அவர்களுக்கு ரக்ஷணம் -அவர்கள் இவனுக்கு ரக்ஷணம்

நான்கு யானைகள் வட பாலானாய் -அவனுக்கு -ஆச்சார்யருக்கு இரட்டை சம்பாவனை -அஷ்ட திக் கஜங்கள்

11 பட்டம் -12 பட்டம் மா முனிகள் அலங்கரித்த 1428-சீலக வருஷம் -ஸுவ்மய வருஷம் சாதாரண –
மூன்று வருஷம் -58–61-திரு -சாதாரண -நடுவில் -ஷஷ்ட்டி அப்த பூர்த்தி அங்கு
திருவேங்கட ராமானுஜ ஜீயர் சின்ன ஜீயர் –
இவரே பெரிய ஜீயராகி அவர் சிஷ்யர் சின்ன ஜீயர்
பெரிய சின்ன சேஷ வாகனங்கள் எம்பெருமானார் பெரிய ஜீயர் அடிமை ஸ்மாரகம்
திருவாய் மொழி நூற்று அந்தாதி ஸ்பஷ்டமாக திருவேங்கடம் பிராட்டி பெருமாள் நினைவாக –மா முனிகளின் ஈடுபாடு –

பத்து ஒற்றுமைகள் -ஸ்ரீ பராங்குச முனிக்கும் நம் மா முனிகளுக்கும் –

1-ஸ்ரீ சைலேசர் தயா பாத்திரம் -திருமலையான் கருணையில் மூழ்கி
த்வயம் பூர்வ உத்தர வாக்யார்த்தம் இங்கேயே
எங்கும் திருவேங்கடத்தான் சந்நிதி ஆழ்வார் திருநகரியை சூழ்ந்து
கண்ணாவான் -வேங்கட வெற்பனே முதலில் திவ்ய தேசம்
மலை மேல் தான் நின்று என் மனத்துள் நின்றானை
பக்கம் நோக்கு அறியாமல் பராங்குசன் மேல் ஒருங்கே கடாக்ஷம்
2-மயர்வற மதி நலம் அருள பெற்றவர்கள் இருவரும்
என் மனனே அப்புறம் -இங்கு யாருக்கு அருளினான் -அருளி சத்தை பெற்றதால்
மா முனிகள் -தீ பக்த்யாதி குண அர்ணவம் -ஆதி -சரம பர்வம் -நிஷ்டையில் முழுவதும் –
திவ்ய தேசம் திரு அவதரித்த நாள்களையும் காட்டி அருளி உபதேச ரத்ன மாலையில் –
3-திருக் குருகூரில் அவன் அருளால் தோன்றி -தானே யான் என்னும் படி –
வரகுண பாண்டியன் -இசை -ஹேம நாத பாகவதர் -பாடி -சம்பாவனை -பாண்டிய நாட்டையே கொடுக்கும் படி -வாய் வார்த்தை –
குடி மகன் பேச்சு வேறே -சிம்காசன பேச்சு வேறே -எனக்கு நிகராக உன் நாட்டு பாடகர் பாடினால் கொடுக்க
பாண பத்ரர் -மீனாட்சி பக்தி -இசைத்தமிழே -சாதாரி பண்ணில் -பந்து வராளி –
விறகு வெட்டுபவராக -பாண பத்ரர் சிஷ்யராக கொள்ளாத நான் –
அகஸ்திய முனிவர் -வண் தமிழ் மா முனி -குறுங்குடி நம்பி இடம் -போக –
விஷ்வக்ஸேனராக நம் ஆழ்வார் தென் பாண்டி சீமையிலே -திரு விளையாடல் புராணம் –
பண் தரு மாறன் பசும் தமிழ் -சாம வேதம் -இன்னிசை பாடித் திரிவேனே
ஆதியிலே அரவசரை –மா முனிகளும் இவரால்
புக்ககம் இருந்து பிறந்தகம் போவதாக மா முனிகளே சொல்லிக் கொள்கிறார்
4-ஸ்ரேஷ்ட முனி இருவரும்
நாத யமுன ராமானுஜ முனிகள் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் அதுவே பொழுது போக்காகப் பெற்றோம் என்று
தானே சொல்லும் படி -மா முனி -முன்னோர் ஸ்ரீ ஸூ க்திகள் அனைத்தும் இவர் இடமே
5-யதீந்த்ர ப்ரவணர்கள் -பொலிக பொலிக -உடையவருக்கு நண்பராகி
அகில புவன -ஜென்ம -ஸ்தேம பங்காதி லீலைகளில் பொழுது போக்கு -இதுவே உலகம் என்று-இருந்த ஆழ்வார்
இது கொண்டு சூத்திரங்களை ஒருங்க விடுவார்
செயல் நன்றாக திருத்திப் பணி கொள்ள -ரக்ஷ ஏக தீக்ஷை
அவனோ தீர்ந்த அடியாரை
உயர்ந்த ஸ்ரீ நிவாஸன் -கைங்கர்ய ஸ்ரீ யைப் பெற்றவர்
பக்தி ரூபா பன்ன ஞானம் இவர் இடம் பெறவே ஸ்ரீ பாஷ்யம் மங்களா சாசனம்
வண்ணான் பிள்ளைகளை கூப்பிட்ட ஐ திக்யம் –
கஷ்டப்பட்டால் அவன் மோக்ஷம் இஷ்டப்பட்டால் மோக்ஷம் -ராமானுஜர் –
அதிகாரம் இருந்தால் அரங்கர் இரங்குவார்-நம் ஐயன் ராமானுஜன் இவர் திருக்குமாரர்
6-வாக்கு வன்மை -வேதம் தமிழ் செய்த மாறன் -விசத வாக் சிரோமணி
உளன் எனில் உளன் -இலன் எனில் அவ்வருவம் அவன் உருவம்
god is no where- god is now here
7-வேதம் விளக்கிய சாம்யம் – பஞ்சகம் -தமிழ் வேத நான்முகன் நம்மாழ்வார் -தானான -தலைவி தோழி தாய் –
உடல் மீசை உயிர் எங்கும் பரந்துளன் -யஸ்ய ஆத்ம சரீரம் -உடல் -நியாந்தா -ஆனால் அறியாமல் –
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –
அந்த தமிழ் வேதத்தை மூ உள்ள காளியே -காளி க்கு மங்களா சாசனம் தப்பாக –
முப்பத்தாயிர பெருக்கர் -ஈடு சதா அனுசந்தானம் -நூற்று அந்தாதி –
2000 நாக்குகள் -1000 வாய்கள் -ஆற்றில் கரைத்த புளி ஆகாமல்
8-ரஹஸ்யார்த்த விளக்கம் -த்வயார்த்தம் தீர்க்க சரணாகதி
நாலாம் பத்து -முழுவதும் ஸ்ரீ மன் நாராயண சரணவ் ஐந்தாம் பத்து சரணம் -ஆறாம் பத்து பிரபத்யே –
ஸ்ரீ மதே -செல்வ நாராயணன் -முதல் பத்து -நாராயணாயா -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே –
நம -மூன்றாம் பத்து வழு இலா அடிமை -ததீய சேஷத்வம் பயிலும் சுடர் ஒளி
9-பெரியவர் -பூமா -பஹு -மா -வார்த்தை பேச்சு மனஸ் உறுதி புத்தி த்யானம் விஞ்ஞானம் உடல் வலிமை
உணவு தண்ணீர் ஒளி ஆகாசம் நினைவு ஆற்றல் ஆர்வம் ஆத்மா -இப்படி ஒன்றுக்கு மேல் ஓன்று பூம வித்யை
நம்பெருமாளுக்கும் ஆச்சார்ய -பெருமை -ஆதி சேஷன் ஆசனம்
10-ஸச் சிஷ்யர் கூடவே
மதுர கவி நாதமுனிகள் உடன் ஆழ்வார்
இவரோ அஷ்ட திக் கஜங்கள்

—- —————

அகஸ்தியர் விசுவாமித்திரர் மந்த்ர உபதேசம் -அவர்களுக்கும் மா முனி சப்தம் அருளிச் செயல்களில் உண்டே
அதே போல் இவரும் உபதேசித்ததால் மா முனி
நாயனார் -நாயனார் ஆச்சான் பிள்ளை -இவ்வாறு வேறு படுத்தி
வடக்கு திரு வீதிப்பிள்ளை திருக்குமாரரும் பெரியவாச்சான் பிள்ளை திருக்குமாரரும்
இவருக்கு மட்டுமே அதே திரு நாமம்
ஆகவே சந்யாச ஆஸ்ரமம் ஏற்றுக் கொண்ட பொழுது திரு நாமம் மாற்ற வேண்டாம் என்று அரங்கன் நியமனம்
ஆச்சார்யர் திரு நாமம் சிஷ்யர் கொள்ள வேண்டுமே
இவரை ஆச்சார்யராக கொள்ள நினைப்பதால் -அந்த திருநாமம் வஹிக்க வேண்டுமே
மணவாள மா முனி தானே வர வர மா முனி
வரன் -மாப்பிள்ளை மணவாள பிள்ளை சுருக்கி
மணவாள பெண் மாட்டுப்பெண்
வர ஸ்ரேஷ்டம்

——————

ஸ்ரீ மா முனிகள் அஷ்ட திக் கஜங்கள் –

1-ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயர்
2-ஸ்ரீ திரு வேங்கடம் ஜீயர்
3-ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் –இவர் ஸ்ரீ நடுவில் ஆழ்வான் வம்சம்
4-ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் -இவர் ஸ்ரீ முதலி ஆண்டான் வாசம்
5-ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா -இவர் ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம்
6-ஸ்ரீ எறும்பி அப்பா -இவரும் ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம்
7-ஸ்ரீ அப்பிள்ளார்
8-ஸ்ரீ அப்பிள்ளை

——————

ஸ்ரீ ஒன்றான வானமாமலை ஜீயர் வைபவம்

1. ‘பொன்னடிக்கால் ஜீயர்’ என்று பெயர் பெற்ற ஒன்றான வானமாமலை ஜீயர்
அவதார திருநக்ஷத்ரம் புரட்டாசி மாதம் புனர்பூச நக்ஷத்ர
2. ஸ்ரீமணவாளமாமுனிகள் நியமித்தருளிய அஷ்டதிக்கஜங்களில் முதன்மையானவர்.
3. பிரம்மசாரியாய் இருந்தபோதே ஸந்யாச ஆச்ரமத்தை ஏற்றார்.
4. அழகிய வரதர் என்பது இவருடைய பூர்வாச்ரம திருநாமமாகும்.
5. ஸ்ரீமணவாளமாமுனிகளின் நியமனத்தின் பேரில் வடநாட்டு யாத்திரை செய்து,
தோதாத்திரி ராமானுஜ ஸிம்மாஸனத்தை நிறுவி, மஹந்துக்களை நியமித்து
விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்தை வளர்த்தவர்.
6. வடநாட்டில் ஆச்ரயித்த மஹான்களில் ஸ்ரீஸ்வாமி ராமானந்தர் முக்கியமானவர்.
7. திருப்பதியிலிருந்து ஸ்ரீவரமங்கை நாச்சியாரை எழுந்தருளப் பண்ணி ஸ்ரீ தெய்வநாயகப் பெருமானுக்கு
விவாஹம் செய்வித்து ஜனகரைப் போலவும், பெரியாழ்வாரைப் போலவும்
எம்பெருமானுக்கு மாமனாராக இருக்கும் பெருமை பெற்றவர்.
8. திருப்பாவைக்கு ஸ்வாபதேச வ்யாக்யானம்.
நாச்சியார் திருமொழிக்கு அமைந்துள்ள கோலச் சுரிசங்கை தனியன் ஆகியவை இவர் இயற்றியவையாகும்.
9. ஸ்ரீமணவாளமாமுனிகளின் ப்ரதான சிஷ்யர்கள்.
1) ஸ்ரீவானமாமலை ராமானுஜ ஜீயர்.
2) திருவேங்கட ஜீயர்.
3) பட்டர்பிரான் ஜீயர்.
4) கந்தாடை அண்ணன்
5) எறும்பியப்பா
6) பிரதிவாதி பயங்கரம் அண்ணன்.
7) அப்புள்ளார்
8) அப்பிள்ளை ஆகியோர் ஆவர்.
10. இதை எளிதாக நினைவாற் கொள்வதற்காக,
“பாராரு மங்கை திருவேங்கடமுனி பட்டர்பிரான்
ஆராமம் சூழ் கோயில் கந்தாடையண்ணன் எறும்பியப்பா
ஏராருமப்பிள்ளை அப்பிள்ளார் வாதிபயங்கரரென்
பேரார்ந்த திக்கயஞ்சூழ் வரயோகியைச் சிந்தியுமே”.
என்ற பாடலை அனுஸந்திப்பதன் மூலம் அஷ்டதிக் கஜங்களின் திருநாமங்களை நினைவில் கொள்ளலாம்.
11. வானமாமலையிலே உயர்குடியிலே தோன்றி மிகுந்த வைராக்ய சீலராக நின்று உலக வாழ்வு என்றால்
திருமணம் செய்து கொண்டு வாழ்வதுதானா? அனைவருக்கும் உதவுமாறு உலக வாழ்வைத் துறந்து வாழமுடியாதா?
என்ற எண்ணத்துடன் வானமாமலைப் பெருமாளை ஆச்ரயித்து துறவறத்தை மேற்கொண்டவர் இவர்.
12. ஸ்ரீ மணவாளமாமுனிகளின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு அவருடைய நிழல் போல் வாழ்ந்து
மாமுனியின் அனைத்து கைங்கர்யத்திலும் பங்கு கொண்டார்.
13. இவர் சிஷ்யரான பின்பு தான் ஸ்ரீமணவாளமாமுனிக்கு சிஷ்யர்கள் பெருகினராம்.
ஏன் அரங்கநாதனே சிஷ்யனாகி விட்டானே!! அதனால் இவர் திருவடி பொன்னடி எனப்பட்டது.
14. பெருமாள் திருவடி-ஸ்ரீசடகோபம் (சடாரி)
நம்மாழ்வார் திருவடி-உடையவர்,
உடையவர் திருவடி-முதலியாண்டான்,
மணவாளமாமுனி திருவடி- பொன்னடியாம் செங்கமலம் என்று அழைக்கப்படுகின்றன.
15. ஒன்றான வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் அஷ்டதிக்கஜங்கள்.
1. அப்பாச்சியாரண்ணா.
2. போரேற்று நயினார்
3. சுத்த ஸத்வம் அண்ணா
4. ராமாநுஜம் பிள்ளை
5. சண்டமாருதம் மஹாசாரியர்
6. திருக்கோட்டியூரையன்
7. பள்ளக்கால் சித்தர்
8. ஞானக்கண் ஆத்தான் ஆகியோர்.
16.வானமாமலை மடத்து ஜீயர்கள் , வானமாமலைப் பெருமாளுக்கு பல திவ்யதேசங்களிலும் கைங்கர்யங்கள் செய்து வருகின்றனர்.
17. ஸ்ரீவானமாமலை மடத்தின் கிளைகள் (வட நாட்டில் தோத்தாத்திரி மடம் என்றழைக்கப்படும்) இந்தியாவெங்கும்
அமைந்துள்ளன. லட்சணக்கணக்கான சிஷ்யர்களைக் கொண்டது இந்த மடம்.
18. ஸ்ரீசைலேச தயாபாத்ரம் என்று தொடங்கும் தனியனை நம்பெருமாள் அருளிச் செய்திட அதுகண்டு மகிழ்ந்த
ஒன்றான வானமாமலை ஜீயர்
“இரண்டு முலைக் காம்பிலும் மாறாதே பெருகுகிற பாலை ஆராவமுதமாகக் பருகுவார் நாமே யன்றோ?” என்று அருளிச் செய்தார்.
19. பொன்னடிக்கால் ஜீயரை ஸ்ரீவானமாமலைக்கு காரிய நிமித்தமாய் அனுப்பி வைப்பதற்காகத் திருவுள்ளம் கொண்டு
நம்பெருமாள் கோயில் கொண்டிருக்கும், பூபாலராயனிலே எழுந்தருளியிருந்த அரங்க நகரப்பனை
ஸ்ரீவானமாமலை ஜீயர் திருக் கரங்களில் எழுந்தருளப் பண்ணிக் கொடுத்தார் ஸ்ரீமணவாளமாமுனிகள்.
20. ஒன்றான வானமாமலை ஜீயரும் மங்கள வாத்தியங்களுடனே அரங்க நகரப்பனை கோயிலாழ்வாரிலே எழுந்தருளப்பண்ணி ஆராதித்து வந்தார்.
21. இன்றும் ஸ்ரீவானமாமலை மடத்தில் ஆராத்யப்பெருமாளாய் அரங்கநகரப்பன் எழுந்தருளியிருப்பதை அனைவரும் ஸேவித்து மகிழலாம்.
22. ஸ்ரீமணவாளமாமுனிகள் பரமபதித்தபோது வடநாட்டு யாத்திரை நிமித்தமாக எழுந்தருளியிருந்த
ஸ்ரீவானமாமலை ஜீயர் உடனிருக்கவில்லை. இதனால் பல நாட்கள் துயருற்றிருந்தார் வானமாமலை ஜீயர்.
23. திருவரங்கத்தில் கீழைச் சித்திரை வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீவானமாமலை மடம். ***

——————————

ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயரின் அஷ்ட திக் கஜங்கள்

1-ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா -இவர் ஸ்ரீ முதலி யாண்டான் வம்சம்
2-ஸ்ரீ போர் ஏற்று நாயனார் -இவரும் ஸ்ரீ முதலி யாண்டான் வம்சம்
3-ஸ்ரீ சுத்த சத்வம் அண்ணா -இவர் ஸ்ரீ இளைய வல்லி வம்சம்
4-ஸ்ரீ ராமானுஜம் பிள்ளை -இவர் ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம்
5-ஸ்ரீ சண்ட மாருதம் மஹாச்சார்யார் -இவர் ஸ்ரீ இளைய வள்ளி வம்சம்
6-ஸ்ரீ ஞானக் கண் ஆத்தான் -இவர் முடும்பை நம்பி வம்சம்
7-ஸ்ரீ திருக் கோட்டியூர் அரையர்
8-ஸ்ரீ பள்ளக் கால் சித்தர்

———-

2-ஸ்ரீ திருவேங்கட ராமானுஜ ஜீயர்

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பத பங்கே ருஹாஸ்ரிதம்
ஸ்ரீ வேங்கட ரகூத்தம்ஸ ஸோதரம் மநைவை முனிம்

ஸ்ரீ ராமானுஜர் ஸ்தாபித்த மட முதல் பட்ட ஜீயர் ஸ்ரீ அப்பன் சடகோப ராமானுஜ ஜீயர் –1119-1173-
ஸ்ரீ மா முனிகள் –12 th பட்டம் -1428-1431-
அதன் பின்பே ஸ்ரீ பெரிய கேள்வி ஜீயர் -ஸ்ரீ சின்ன ஜீயர் கள் எழுந்து அருளி உள்ளார்கள்

————–

3-ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத சேவ ஏக தாரகம்
பட்ட நாத முனிம் வந்தே வாத்ஸல்யாதி குண ஆர்ணவம்

வ்ருஸ்சிகே ஸ்திதி பே ஜாதம் பர வஸ் த்வம்ஸ பூஷணம்
வர யோகி பதாதாரம் பட்ட நாதம் முனிம் பஜே

வர யோகி பதாதாரம் பர வஸ் த்வம்ஸ பூஷணம்
பட்ட நாதம் முனிம் வந்தே தீ பக்த்யாதி குண ஆர்ணவம்

வ்ருஸ்சிகே ஸ்திதி பே ஜாதம் வர யோகி பதாஸ்ரிதம்
கார்க்ய வம்ஸ ஸமுத் பூதம் பட்ட நாத முனிம் பஜே

ஸ்ரீ நடுவில் ஆழ்வான் வம்சம்
கார்த்திகை புனர்பூசம் திரு அவதாரம்
திருத் தகப்பனார் -ஸ்ரீ ராமானுஜாச்சார்யார்
இயல் பெயர் -ஸ்ரீ கோவிந்த தாஸர் அப்பன்
இவருக்கு ஸ்ரீ மா முனிகள் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாளைத் திரு ஆராதனத்துக்குக் கொடுத்து அருளிச் செய்தார்
இவர் ஒரு திருவாடிப் பூரத்தில் சூடிக் கொடுத்து அருளிய நாச்சியார் பிரசாதம் கொண்டு வந்து சமர்ப்பிக்க
ஸ்ரீ மா முனிகள் இவருக்கு ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் தாசர் -என்ற திரு நாமம் இட்டு அருளினார்
இவர் பின்பு ஸ்ரீ மா முனிகள் இடமே சந்யாச ஆஸ்ரமம் பெற்று
ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்-என்று திரு நாமம் இடப் பெற்றவர்

இவர் அந்திம உபாய நிஷ்டை -பிரபந்தம் அருளிச் செய்துள்ளார்

இவர் வம்ச பரம்பரை
ஸ்ரீ கோவிந்த தாசர் அப்பன் -ஸ்ரீ பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்
ஸ்ரீ பரவஸ்து நாயனார்
ஸ்ரீ சட கோபாச்சார்யார்
ஸ்ரீ வரதாச்சார்யார் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் -1525- சித்திரை திருவோணம்
ஸ்ரீ ஸ்தல சயனத் துறைவார் வம்சத்தார் இன்றும் ஸ்ரீ திருவல்லிக் கேணியில் அத்யாபகராக உள்ளார்

இன்னுலகில் கச்சி தனில் வந்து உதித்தோன் வாழியே
எழில் கார்த்திப் புனர் பூசித்து இங்கு உற்றான் வாழியே
மன்னு மறைத் தண் தமிழை மகிழ்ந்து உரைத்தான் வாழியே
மணவாள யோகி மலர்த்தாள் பணிவோன் வாழியே
பன்னு சிச்சன் அனுஷ்டானம் அறிவித்தோன் வாழியே
பாரில் அட்ட திக் கயத்தில் பேர் பெற்றான் வாழியே
சொன்ன நெறி மதுர கவி போலுமவன் வாழியே
தூய்மை மிகு பட்டர் பிரான் துணை அடிகள் வாழியே

—————–

4-ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன்

சகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ர உத்பவா நாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பதாஸ்ரயம்
வரத நாராயண மத் குரும் ஸம்ஸ்ரயே

1389-புரட்டாசி பூரட்டாதி -திரு அவதாரம்
திருத் தகப்பனார் ஸ்ரீ தேவராஜ தோழப்பர்
இவருக்கு 7 சகோதரர்கள்
இயல் பெயர் ஸ்ரீ வரத நாராயண குரு
இவருடைய பால்யத்திலே திருத் தகப்பனார் ஸ்ரீ பரமபதம் ஆச்சார்யர் திருவடி அடைய
ஸ்ரீ கோயில் மரியாதை கிடைக்காமல் போனது
ஸ்ரீ ராமானுஜர் ஸ்வப்னத்தில் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்க த் தெரிவித்து அருளினார்
1371-ஸ்ரீ நம் பெருமாள் ஸ்ரீ கோயிலுக்குத் திரும்பினாலும் 1415 வரை ஸ்ரீ கோயில் மரியாதைகள்
இவர் வம்சத்துக்கு கிடைக்க வில்லை
ஸ்ரீ மா முனிகளே பின்பு ஏற்பாடு செய்து அருளினார்
ஸ்ரீ அழகிய ஸிம்ஹர் திரு ஆராதனப் பெருமாளையும் தந்து அருளினார்
கீழ் உத்தர வீதி 16 கால் மண்டபத்தையும் இவருக்கு மடமாகக் கொடுத்து அருளினார்

ஸ்ரீ மா முனிகளின் நியமனப்படி இவருடைய சிற்றண்ணர் குமாரர் அப்பாச்சியார் அண்ணா –
தமையனார் போர் ஏற்று நாயனாரையும் ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயர் இடம் ஆஸ்ரயிக்கச் செய்தார்
ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா – ஸ்ரீ காஞ்சி புர கோயில் நிர்வாகம் செய்து வந்தார்

இவரே ஸ்ரீ உத்தம நம்பியையும்
ஸ்ரீ அப்பிள்ளார்
ஸ்ரீ அப்பிள்ளை
ஸ்ரீ எறும்பி அப்பா -ஆகியோரையும் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்கச் செய்தார்

இவர் ஸ்ரீ மா முனிகள் விஷயமான கண்ணி நுண் சிறுத்தாம்பு
ஸ்ரீ வர வர முனி அஷ்டகம்
ஸ்ரீ ராமாநுஜார்யா திவ்யாஜ்ஞா –நூல்களையும்
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை தனியனையும் அருளிச் செய்துள்ளார்
இவருக்கு ஸ்ரீ பகவத் சம்பந்தாச்சார்யார் -என்னும் விருது ஸ்ரீ மா முனிகள் தந்து அருளினார்
ஸ்ரீ நம் பெருமாள் இவருக்கு ஜீயர் அண்ணன் -என்று அருளப்பாடிட்டார் –
ஸ்ரீ காஞ்சி பேர் அருளாளர் இவருக்கு ஸ்வாமி அண்ணன் -என்று அருளப்பாடிட்டார்
ஸ்ரீ மா முனிகள் சரம தசையில் இவர் கையாலேயே தளிகை சமைக்கச் செய்து விரும்பி அமுது செய்து மகிழ்ந்தாராம்

இவர் வம்சத்தின் பெருமையால் ஸ்ரீ மா முனிகள் இவர் வம்சத்தாரை கீழ் உள்ள 7 கோத்ர த்துக்குள்ளேயே
சம்பந்தம் செய்து கொள்ள அறிவுறுத்தி அருளினாராம்
1-ஸ்ரீ முதலியாண்டாம் வம்சம் -வாதூல கோத்ரம்
2-ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம் -ஸ்ரீ வத்ச கோத்ரம்
3-ஸ்ரீ முடும்பை அம்மாள் வம்சம் -கௌண்டின்ய கோத்ரம்
4-ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள் வம்சம் -ஹரிதா கோத்ரம்
5-ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் வம்சம் -ஆத்ரேய கோத்ரம்
6-ஸ்ரீ குமாண்டூர் இளைய வல்லி வம்சம் -கௌசிக கோத்ரம்
7-ஸ்ரீ வங்கி புரத்து நம்பி வம்சம் -பரத்வாஜ கோத்ரம்

ஸ்ரீ கோயில் அண்ணனின் அஷ்ட திக் கஜங்கள்

1-ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் –இவர் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருத் தம்பியார்
2-ஸ்ரீ திருக் கோபுரத்து நாயனார் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -ஸ்ரீ அழகிய சிங்கர் திருத்தம்பியார்
3-ஸ்ரீ கந்தாடை நாயன் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருக் குமாரர் –1408-மார்கழி உத்திரட்டாதி
4-ஸ்ரீ சுத்த சத்வம் அண்ணன் -இவர் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் -இவரது திரு மருமகன்
5-ஸ்ரீ திருவாழி ஆழ்வார் பிள்ளை -இவரும் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் –
6-ஸ்ரீ ஜீயர் நாயனார் -ஸ்ரீ கோமடத்தாழ்வான் வம்சம் -ஸ்ரீ மா முனிகள் திருப்பேரானார்
7-ஸ்ரீ ஆண்ட பெருமாள் நாயனார் -ஸ்ரீ குமாண்டூர் ஆச்சான் பிள்ளை திருப்பேரானார்
8-ஸ்ரீ ஐயன் அப்பா –

ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் வம்ச ஸ்ரீ குன்னத்து ஐயன் இவர் இடத்திலும்
இவர் குமாரர் பேரர்கள் இடத்திலும் அன்பு பூண்டு பல கைங்கர்யங்களைச் செய்தாராம்

இவர் விபவ வருஷம் -1448- சித்திரை மாதம் கிருஷ்ண பக்ஷ த்ருதீயை அன்று
ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகளை அடைந்தார் –

தேன் அமரு மலர் முளரித் திருத் தாள்கள் வாழியே
திருச் சேலை இடை வாழி திரு நாபி வாழியே
தானமரு மலர்க்கண்கள் தனி யுதரம் மார்பம்
தங்கு தொங்கும் உப வீதம் தடந்தோள்கள் வாழியே
மானபரன் மணவாள மா முனி சீர் பேசும்
மலர்ப் பவளம் வாய் வாழி மணி முறுவல் வாழியே
ஆனனமுந் திரு நாம மணி நுதலும் வாழியே
அருள் வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

————–

5-ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமி

கர்கடே புஷ்ய சஞ்சாத் வாதி பீகரம் ஆஸ்ரயே
வேதாந்தா சார்யா ஸத் சிஷ்யம் வர யோகி பதாஸ்ரிதம்

வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்த போதம்
காந்தோ பயந்த்ருய மிந கருண ஏக பாத்ரம்
வத்ஸ அந்வயம் அநவத்யா குணை ருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம்

முடும்பை வம்சம்
1361-ஆடி -பூசம் -ஸ்ரீ காஞ்சியில் திரு அவதாரம்
ஸ்ரீ வத்ஸ கோத்ரம்
இயல் பெயர் ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதர் அண்ணா
திருத்தகப்பனார் -ஸ்ரீ அனந்தாச்சார்யார்
திருத்தாயார் -ஸ்ரீ ஆண்டாள்
ஸ்ரீ தேசிகன் திருக்குமாரர் ஸ்ரீ நயன வரதாச்சார்யர் இடம் ஸ்ரீ பாஷ்யம் கற்றார்
க்ருஹஸ்தாஸ்ரமம் ஸ்வீ கரித்து –திருமஞ்சனத்துக்கு சாலைக் கிணறு தீர்த்த கைங்கர்யம்
கைங்கர்யம் செய்து வந்தார்
நரஸிம்ஹ மிஸ்ரன் மாயாவதி இவற்குருவான ஸ்ரீ நாயந வரதாச்சார்யரை வாதத்துக்கு அழைக்க
அவர் இவரை அனுப்ப வென்றதால் பிரதிவாதி பயங்கரர் விருது பெற்றார்

இவருக்கு
ஸ்ரீ ஸ்ரீ நிவாசார்யார்
ஸ்ரீ அநந்தாச்சார்யார்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் -மூன்று திருக்குமாரர்கள்
ஆந்திர ராஜா வீர நரஸிம்ஹ ராயன் -இவரது சிஷ்யன்
ஸ்ரீ திருமலையில் ஸ்ரீ ஆகாச கங்கையில் இருந்து திரு மஞ்சன தீர்த்த கைங்கர்யம் செய்து வர
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஸ்ரீ மா முனிகள் பிரபாவம் பேச அத்தைக் கேட்டு ஏலக்காய் இத்யாதிகள் சேர்க்க மறக்க
ஸ்ரீ திருவேங்கடமுடையானோ அர்ச்சக முகேந இன்று தீர்த்தம் மிக்க மணத்துடன் இருந்தது என்று அருளிச் செய்ய
ஸ்ரீ மா முனிகளின் பிரபாவம் கேட்டதாலே நடந்த விசேஷம் என்று தெரிந்து மகிழ்ந்து
ஸ்ரீ ரெங்கம் சென்று ஆஸ்ரயிக்க ஆசை கொண்டார் –

ஸ்ரீ ராமானுஜருக்கு ஸ்ரீ கூரத்தாழ்வானைப் போலவே ஸ்ரீ மா முனிகளுக்கு இவர் உஸாத் துணையாக இருந்தார் –
ஸ்ரீ மா முனிகள் உடன் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளி ஸூ ப்ரபாதம் -ஸ்தோத்ரம் -பிரபத்தி -மங்களா சாசனம்
அருளிச் செய்யும் படி செய்து நித்ய அநுஸந்தான ஏற்பாடு செய்ய வைத்து அருளினார் –
ஸ்ரீ ரெங்கம் திரும்பி சிஷ்யர்களுக்கு ஸ்ரீ பாஷ்ய கால ஷேபம் சாதிக்கும் படி செய்து அருளி ஸ்ரீ அண்ணாவை
ஸ்ரீ பாஷ்ய சிம்ஹாசனத்தில் அபிஷேகம் செய்து ஸ்ரீ பாஷ்யாச்சார்யர் என்ற பட்டமும் வழங்கி அருளினார் –
ஸ்ரீ மா முனிகள் திரு நாட்டுக்கு எழுந்து அருளின பின்னர் ஸ்ரீ திருமலைக்கு எழுந்து அருளி
கைங்கர்யம் செய்து கொண்டு ஸ்ரீ பரவஸ்து ஸ்ரீ நிவாஸாச்சார்யார் போல்வாருக்கு
ஸாஸ்த்ர அதி வர்த்தனங்கள் செய்து அருளினார் –

இவர் அருளிச் செய்த நூல்கள்
ஸ்ரீ பாஷ்யம் -ஸ்ரீ பாகவதம் -ஸ்ரீ ஸூ பால உபநிஷத் -ஸ்ரீ அஷ்ட ஸ்லோஹீ –
ஸ்ரீ யதிராஜ விம்சதி -இவற்றுக்கு வியாக்யானங்களும்
ஸ்ரீ வர வர முனி சதகம்
ஸ்ரீ வர வர முனி ஸூ ப்ரபாதம்
ஸ்ரீ 108 திவ்ய தேச ஸூ ப்ரபாதம் -ஸ்தோத்ரம் -பிரபத்தி -மங்களம்
ஸ்ரீ ராமானுஜ ஸூ ப்ரபாதம்
ஸ்ரீ ரெங்க ராஜ ஸூ ப்ரபாதம்
ஸ்ரீ கிருஷ்ண மங்களம்
ஸ்ரீ பிரபத்தி யோக காரிகை
ஸ்ரீ ப்ரசார்ய சப்ததி ரத்ன மாலை
ஸ்ரீ நித்ய ஆராதனை விதி
ஸ்ரீ விஜய த்வஜம்
ஸ்ரீ ஜீயர் வாழித் திரு நாமம்
ஸ்ரீ இருபது வார்த்தை
ஸ்ரீ பெரிய ஜீயர் பாதாதி கேசாந்த மாலை
ஸ்ரீ வ்ருத்தி ஸ்தவம் –ஆகியவை –

92 வருஷங்கள் வாழ்ந்து -1453-பங்குனி சுக்ல பக்ஷ நவமி புஷ்ய நக்ஷத்திரத்தில்
ஸ்ரீ திருநாடு எழுந்து அருளினார் –

————

6-ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள்

துலா ரேவதி ஸம்பூதம் வர யோகி பதாஸ்ரிதம்
ஸர்வ வேதாந்த ஸம் பூர்ணம் அப்பாசார்யம் அஹம் பஜே

ஸ்ரீ வத்ஸ கோத்ரம் -ஸ்ரீ முடும்பை வம்சம் -ஐப்பசி ரேவதி –
ஸ்ரீ சோளிங்கர் அருகில் சித்தூர் சாலையில் எறும்பியில் திரு அவதாரம்
திருத்தகப்பனார் -ஸ்ரீ பெரிய சரண்யாச்சார்யர் -ஐயை -என்றும் ஸ்ரீ ரெங்கராஜர் என்றும் திரு நாமங்கள்
இயல் பெயர்-ஸ்ரீ தேவ ராஜர்
திரு ஆராதனப் பெருமாள் -ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் -இவர் சங்கல்பித்த படியே
ஸ்ரீ கோயில் அண்ணன் மூலம் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயித்தார்

அருளிச் செய்த நூல்கள்
ஸ்ரீ பூர்வ தினசரி
ஸ்ரீ உத்தர தினசரி
ஸ்ரீ சைலேச அஷ்டகம்
ஸ்ரீ வர வர முனி சதகம்
மேலும் 10 கிரந்தங்கள்
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை -மன்னுயிர் காள் இங்கே -பாசுரமும் இவர் அருளிச் செய்ததே

———————-

7- ஸ்ரீ அப்பிள்ளார்
இயல் பெயர் -ஸ்ரீ ராமானுஜன்
ஸ்ரீ ஸம்ப்ராய சந்திரிகை -11-பாடல்கள் உள்ள கிரந்தம் அருளிச் செய்துள்ளார்
இவர் வம்சத்தார் இன்றும் ஸ்ரீ காட்டு மன்னார் கோயிலில் தீர்த்தகாரர்கள் –
ஸ்ரீ நாதமுனி சந்நிதி கைங்கர்யம் செய்து கொண்டு உள்ளார்கள்
ஸ்ரீ மா முனிகள் திருக்கைச் செம்பை உருக்கி இவரால் செய்யப்பட ஸ்ரீ மா முனிகள் அர்ச்சா விக்ரஹம்
இன்றும் ஸ்ரீ ரெங்கம் பல்லவ ராயன் மடத்தில் உள்ள ஸ்ரீ மா முனிகளின் சந்நிதியில்
திரு ஆராதனம் செய்யப் பட்டு வருகிறது –

————————-

8- ஸ்ரீ அப்பிள்ளை
இயல் பெயர் -ஸ்ரீ ப்ரணதார்த்தி ஹரர்
இவர் ஐந்து ஸ்ரீ திருவந்தாதிகளுக்கும்
ஸ்ரீ எதிராஜ விம்சதிக்கும் உரை சாதித்து உள்ளார்
பத்து ஸ்ரீ ஆழ்வார்களும் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் மேலும்
மூன்று பாடல்களுடன் 15 பாடல்களுடன் வாழித் திரு நாமங்கள் அருளிச் செய்துள்ளார்
ஸ்ரீ மா முனிகளைப் பற்றிய செய்ய தாமரைத் தாளிணை வாழியே -என்ற
பாசுரமும் இவர் அருளிச் செய்ததே –

—————-———————————————

என் மூலம் அஸ்வயுஜம் அஸ்யாவதார மூலம் காந்தோ பயந்த்ருயமினா கருணைக ஸிந்தோ
அசிதஸத்சு கணிதஸ்ய மாம் அபி சதாம் மூலம் ததேவ ஜகத் உபயதயைக மூலம்
யதாவதாரண மூலம் முக்தி மூலம் ப்ரஜாநாம் சடாரிபு முனி த்ருஷ்டா ஆம்னாய சாம்ராஜ்ய மூலம்
கலி கலுஷா சமூலோன் மூலாநே மூலமிந்தே ச பவது வரயோகி ந சமஸ்தர்தா மூலம்

மாற்று அற்ற செம்பொன் மணவாள மா முனிவன் வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம்

ஸ்ரீ சடாரி குரோர் திவ்ய ஸ்ரீ பாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீ மத் யதீந்திர பிரவணம் ஸ்ரீ லோகாச்சார்ய முனிம் பஜே

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம்

ஸ்ரீ மத் ரெங்கம் ஜெயது பரமார்த்த தர்ம தேஜோ நிதானம்
பூமா தஸ்மின் பவதி குசலி ஹோ பிபோ மா ஸஹாய
திவ்யார்த் தஸ்மை திசத்து விபவத் தேசிகோ தேசிகானாம்
காலே காலே வர வர முனி கல்பயன் மங்களானி

மாசற்ற செம்பொன் மணவாள மா முனிவன் வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே

திரு மூலமே நமக்கு மூலம்
பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ ?
பூம் கமழும் தாதர் மகிழ் மார்பன் தான் இவனோ ?
தூத்தூர வந்த நெடுமாலோ
மணவாள மா முனி எந்தை இம் மூவரிலும் யார் ?–ஸ்வாமி ஆய் அருளியது

திரு மண் பெட்டி சொம்பு – இரண்டு திரு மேனி -வீற்று இருந்த திரு மேனிதிரு அரங்கம்
நின்று இருந்த திரு மேனி ஆழ்வார் திரு நகரி

பல்லவராய மண்டபம்-ஸ்வாமி மண வாளமா முனிகள் சந்நிதி ஸ்ரீ ரெங்கம்
திரு பரியட்டம் திரு மாலை சாத்துபடி
பொன் அடியாம் செம் கமலம்-மா முனிகள் திரு அடி பிரசாதம்
ரகஸ்யம் விளைந்த மண் இன்றும் சேவிக்கலாம் கால ஷேப கூடத்தில்
தொட்டி பிரசாதம்-தயிர் சாதம் உப்பு இன்றி

சேற்றுக்கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்ப
போற்றித் தொலும் நல்ல அந்தணர் வாழ்வு இப் பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே

கிருபயா பரயாச ரங்கராட் மஹிமானம் மஹதாம் பிரகாசயன்
லுலுபே ஸ்வயம் ஏவ சேதஸா வரயோகி ப்ரவரச்ய சிஷ்யதாம் -ஸ்ரீ சைல அஷ்டகம்

முப்பத்தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர் பக்க நாலா நாளில் செல்வ மிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்று
வல்லி யுறை மணவாளர் அரங்கர் நங்கண் மணவாள மா முனிக்கு வழங்கினாரே –அப்பிள்ளார் -சம்பிரதாய சந்த்ரிகை

தெருளுடைய வ்யாக்கியை ஐந்தி னோடும் கூடி -சம்ப்ரதாய சந்திரிகை -9-

ஸ்ருதி பிரக்ரியை
ஸ்ரீ பாஞ்சராத்ர பிரக்ரியை
ஸ்ரீ இராமாயண பிரக்ரியை
ஸ்ரீ மகா பாரத பிரக்ரியை
ஸ்ரீ விஷ்ணு புராண பிரக்ரியை
ஸ்ரீ மகா பாகவத பிரக்ரியை
ஸ்ரீ பாஷ்ய பிரக்ரியை
ஸ்ரீ கீதா பாஷ்ய பிரக்ரியை
ஸ்ரீ ஸ்ருத பிரகாசா பிரக்ரியை
பதார்த்தம் -வாக்யார்த்தம் -மகா வாக்யார்த்தம் -சமபிவ்யாஹார்த்தம் -த்வயனர்த்தம் –
அர்த்த ரசம் பாவ ரசம் ஒண்பொருள் உட்பொருள்

போத மணவாள மா முனி ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள் -அரையர் கொண்டாட்டம்

ஆனி மாசம் திரு மூல நஷத்ரம் பௌர்ணமி திதி ஞாயிற்றுக் கிழமை
ஆனந்த வருடத்திலே கீழ்மை யாண்டில் அழகான வருடத்தில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய பௌர்ணமியின் நாளிட்டுப் பொருந்தி
ஆனந்தமயமான மண்டபத்தில் அழகாக மணவாளர் ஈடு சாத்த —
வைத்தே வானவரும் நீரிட்ட வழக்கே என்ன மணவாள மா முனிகள் களித்திட்டாரே –

தேசம் திகழும் திருவாய் மொழிப் பிள்ளை
மாசில் திருமலை ஆழ்வார் என்னை -நேசத்தால்
எப்படியே எண்ணி நின்பால் சேர்த்தார் எதிராசர்
அப்படியே நீ செய்து அருள் —ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் —12-

ஆசிலாத மணவாள மா முனி யண்ணல் பூமியுறு வைப்பசியில் திரு மூலம்
தேச நாளது வந்தருள் செய்த நம் திருவாய் மொழிப்பிள்ளை தான்
ஈசனாகி எழுபத்து மூவாண்டு எவ் வுயிர்களையும் வுய்வித்து வாழ்ந்தனன்
மாசி மால் பக்கத் துவாதசி மா மணி மண்டபத்து எய்தினான் வாழியே-

குருநாதன் எங்கள் மணவாள யோகி குணக் கடலைப்
பல நாளும் மண்டிப் பருகிக் கழித்து இந்தப் பாரின் உள்ளே
உலகாரியன் முனி மேகம் இந்நாள் என்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே –

” செய்ய தாமரைத் தாளினை வாழியே ,சேலை வாழி திருநாபி வாழியே
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே சுந்தரத் திரு தோளினைவாழியே
கையுமேந்திய முக்கோலும் வாழியே கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யில்லாத மணவாள மாமுனி புந்தி வாழி புகழ் வாழி வாழியே”

ஸ்ரீ மத் ரெங்கம் ஜெயது
பரமம் தாமம் தேஜோ நிதானம்
பூமா தஸ்மிந் பூ மா சஹாயா குஸலீ பவது
திவ்யம் தஸ்மை ஜகது விபவம் வர வர முனி தேசிகோ தேசிகா நாம் மங்களானி கல்பயன்
ரெங்க தேசிகன் பெரிய பெருமாள் லஷ்மீ நாதன் -மா முனிகளோ தேசிகோ தேசிகா நாம்-

திருமாலவன் கவி நம்மாழ்வார்
நம்மாழ்வார் கவி மதுரகவி
அமுதனார் ராமானுஜர் கவி
எறும்பி அப்பா வர வர முனி கவி -ஷட் பதமாக -தேவராஜம் –
காட்டில் இருந்தாலும் -வண்டு போல் அல்லவே மண்டூகம் தாமரை அருகில் இருந்தாலும்
வண்டே கமல மது உண்ணும்
அண்டே பழகி இருந்தாலும் தவளை இதன் ஏற்றம் அறியாதே –
திவ்ய ஞானம் -ம முனிகள் திருவடிகளைப் பற்றுவதையே காட்டி அருளினார்

மூலம் சடரிபி முக ஸூ க்தி விவேசனாயா
கூலம் காவேரி கரையில் –
மம ஆலம்பநஸ்ய -பற்றுக்கோடு
ஜன்மஸ்ய மூலம்
சதுலம்-அளவோடு கூடியது -அர்த்தம் இல்லை -துலா மாச மூலம் அர்த்தம்
அதுலஸ்ய சித்தம் -அளவில்லாதது
சதுலம்
துங்கம் ரெங்கம் ஜெயது
பூமா ரமா மணி பூஷணம் ஜெயது
வரத குரு (கோயில் அண்ணன் ) சஹா சுப அநுவர்த்த ஸ்ரீ மன் ராமானுஜ ஏவ ஜெயது

“ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாது மில் குரவர் தாம் வாழி” .
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தன் தமிழ் நூல் வாழ
கடல் சூழ்ந்த மண் உலகம் வாழ
மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஆழ்வார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அருளிச் செயல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அடியார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அரங்க நகர் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஆழ்வார்கள் வாழ அருளிச் செயல் வாழ வேண்டும்
அருளிச் செயல் வாழ தாழ்வாது மில் குரவர் தாம் வாழ வேண்டும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ அடியார்கள் வாழ வேண்டும்
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ வேண்டும்
அரங்க நகர் வாழ சடகோபன் தண் தமிழ் நூல் வாழ வேண்டும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ வேண்டும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இருக்க வேண்டுமே

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய சீர் நித்ய மங்களம் –

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: