ஸ்ரீ ப்ரஹ்ம வித்யை யுடைய சீர்மை ஆராயும் சீர்மைத்தே —

உடல் ஆராய்ச்சி -பொய் நின்ற ஞானம் -நமன்தமர் உடல் ஆராய்வார்
உயிர் ஆராய்ச்சி -இதுவே மெய் நின்ற ஞானம் –
சிங்கப்பிரானின் பெருமை ஆராயும் சீர்மை -தெள்ளிய சிங்கத் திருவடிக் காவலர் நம்மாழ்வார் ஒருவரே
நாதஸ்ய தூந முசிதா நரஸிம்ஹ மூர்த்தே -என்றே ஆழ்வாரை தேசிகர் கண்டு களிக்கிறார் –
கற்றதால் ஆய பயன் என் கொல் வால் அறிவன் நல் தாள் தொழார் எனின் —
இக் கல்வியே ஆகம அறிவு என்பர் பரிமேல் அழகர் –
இதுவே மெய் நின்ற ஞானம்

மறை கொண்டு ஆராயும் ஓர் அறிவே ஆர் உயிர் நின்ற அப்பன் பொன்னடிப்பால் நம் சென்னியைத் தாழ்த்துவைத்து வாழ்விக்கும்
அனைத்து உலகுக்கும் ஓர் உயிராய்க் கரந்து எங்கும் பரந்து விளங்கும் பரம்பொருளின் பொன்னடி ஆராய்ச்சியே ப்ரஹ்ம வித்யை –
பகவத் விஷயத்தை ஒழியக் கற்றவை எல்லாம் செருப்புக் குத்தக் கற்றவோ பாதி என்பர் நம்பிள்ளை

பாரதத்தைப் பணித்தானும் நின்ற வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம்மறைப் பொருளே என்பர் கம்பநாட்டாழ்வார்
இரு கண்களும் காண்பது கண்ணனாம் அறம் என்னும் மறைப்பொருளையே

தருமவரும் பயனாய திருமகளார் தனிக்கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
இவ்வுணர்வு உற்றாரையே முழுதுணர் நீர்மையினார்

தத் ஸர்வம் தர்ம வீர்யேண யதாவத் ஸம் ப்ரபஸ்யதி -என்பர் வால்மீகி பகவான்

கண்ணன் கழலிணையே ஆய்ந்து உருகி ஒருப்படும் சீரியரே பொன்னுலகு ஏகும் புண்ணியர்

ஆழ்வார் ஆராய்ந்து புலப் படப் புகுந்தது கண்ணன் பெருமையை
புலப்பட்டது ஆழ்வார் பெருமையே
புலப்படுத்தினவன் கண்ணனே

கண்ணனையே ஆழ்வார் ஆராய்வார் -ஆழ்வாரையே கண்ணன் ஆராய்வான் –
இருவரும் நன்கு ஆராய்ந்தே ஒருவர் ஒருவர் பெற்றது –
ஆழ்வார் பெற்ற பேறே கண்ணன் –கண்ணன் பெற்ற பேறே ஆழ்வார் –

அர்ஜுனனை வியாஜ்யமாக்கி ஊழி முதல்வன் தானே மன்னருள் சுரந்து மெய்ம்மை காக்கும் அறத்தையே ஓர் மறையாய் விரித்து
தன் அருங்கலை ஒருங்கிய மறை அனைத்துக்கும் ஒரே இலக்கு பொற்கழலே என்று உலகு அனைத்தும் கண் கொண்டு காணுமாறு
கை கொண்டு காட்டி முழு முதல் குருவாயத் திகழ்ந்த அன்று தன் செம்பவளத் திரள் வாய் கொண்டே மறை முடி அமிழ்தம் உமிழ்ந்து
தன் திருவடி நிலையைத் தானே நீராட்டுவித்து அருளினான் –
அப்பன் திருப்பவளம் உமிழ்ந்து நீராட்டு வித்த அத்திருவடி நிலை கான் நம் சடகோப பெருஞ்செல்வர் –
கண்ணன் தானே தன் கழலிணையை ஆழ்வார் திருமுடிக்கண் புனைவித்து
ஆழ்வாரையே தன் கழலிணைக் காவலராக முடி சூட்டி அருளிய சரிதையின் பெருமை ஆராயும் சீர்மைத்தே
என்பதே பெரிதும் பொருந்தும் –

உபநிஷதம் உதாராம் உத்வ மந்ந்வ அபி லஷ்யே சரணம் உப கதாந்ந த்ராயதே சார்ங்க தந்வா –
தந்தை என நின்ற தனித் திருமால் தாளில் தலை வைத்தோம் சடகோபன் அருளினாலே —
ஸ்ரீ பகவத் கீதையையே -சடாரே சரீரம் மஹத் -என்பார்களே
யமே வைஷ வ்ருணுதே –
பஹு நாம் ஜென்ம நாம் அந்தே –

திருமாலே தானே திரு மாறனும்
அப்பனை ஆராயும் அற நெறி வகுத்தவர் ஆழ்வார்
ஆழ்வாரை ஆராயும் அற நெறி வகுத்தவன் அப்பன்
ஆர் என்னை ஆராய்வார் –நம் கண்ணனும் வாரானால் –என்று இவர் செந்நாப் போது
அவிழ்ந்த வாறே மறை முடி செழித்து மணம் கமழ்ந்தது –

இம் மெய்ப் போது அவிழ்த்து மகிழ்ந்தவன் கண்ணனே
இப் பெரு நல் உதவிக் கைம்மாறு தெரிக்கவே ஏனையர் தம்மை ஆராய வல்லர் அல்லர் அன்று என்று
அருளிச் செய்யும் தெய்வ மாக் கவிக் குறிப்பு ஆராயும் சீர்மைத்தே
கண்ணன் திருவருளால் அகக் கண் விழித்து அவன் பொன்னடி ஆராய்ந்தார் இழைக்கும்
மண மொழியை ஒழியப் பேசுமவை எல்லாம் துஞ்சுமவர் கண்ட கனவே யாம் –என்று
அன்றோ ஆழ்வாரது கவிக்குறிப்பு

அகக்கண் செழித்தோர் சில தறுவாய் துஞ்சினாலும் கனவிலும்
அவர்கள் மணமே உணர்வர் —
மண மொழியே பகர்வர் –
மங்கல வீதி வலம் செய்து மண நீர் அங்கு அவனோடே உடன் சென்று அங்கு ஆனை மேல்
மஞ்சனமாட்டவே கனாக் கண்டேன் என்பர் –
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோ நித்தம் –
ஆழ்வாரும் கண்ணனும் ஒருவரை ஒருவர் அளப்பரிய அவா வுற்றுப் பெற்றே விடாய் தீர்த்தனர் –
இவர் விடாயும் தீர்ந்து இவருக்கும் அவ்வருகான தன் விடாயும் தீரும் படி
ஸம்ஸ்லேஷித்து அருளினான் -நம்பிள்ளை

அப்பன் திருவடியும் ஆழ்வார் திருமுடியும் கலந்தே நீர்மை பெற்றன
உபநிஷத்தும் திருவாய் மொழியும் கலந்த நீர்மை
உண்மையும் அறமும் ஒருங்கிய பான்மை
இவை ஒன்றிய சீர்மை விளக்கியவர் மதுரகவியார்
தொல் வழி நின்று இவர் ஏற்றியதே சான்றோருக்கு நல் வழி விளக்காம்

ஒண் தமிழாம் அருள் கொண்டு தமிழ் ஆரணக்
கொண்டல் எனும் சடகோபன் அவன் தான்
அண்டம் அளந்த பிரான் அடி என்றே
பண்டு ஒளி நண்ணிய பண்டிதர் கண்டார்

அருளிச் செயல்களின் த்ருஷ்ட அத்ருஷ்ட சக்தியினால் ப்ரத்யக்கான அவனைப்
ப்ராக் போலே ப்ரத்யக்ஷமாகக் காட்டி அருளி
அத்ருஸ்யத்தை த்ருஸ்யமாக்கி
விஷயீ என்னும் ஞான ஸ்வரூபனான ஈஸ்வரன் என்னும் உள் பொருளை விஷயம் போலவே
சாஷாத்காரிக்கச் செய்து அருளுவதாலேயே
பகவத் விஷயம் –
தீர்க்க சரணாகதி ஸாஸ்த்ரம் -திருவாய் மொழி என்னும் இன்ப வெள்ளம் –

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ –
‘இவ் விஷயத்தை ஒழியப் புறம்பு கற்குமது கல்விக்கு உடல் அன்று,’என்று இருக்கிறார்.
‘அந்த ஞானந்தான் ஞானம் என்று சொல்லத் தக்கது; ஆகையால், மேற்கூறிய ஞானத்திற்கு வேறானது
அஞ்ஞானம் என்று சொல்லப்பட்டது’ என்றன் அன்றோ?

‘ஸம் ஜ்ஞாயதே யேந தத் அஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம்
ஸம் த்ருஷ்யதே வாப் யதிகம்யதே வா தத் ஜ்ஞாநம் அஜ்ஞாநம் அத: அந்யத் உக்தம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 : 84

தது அந்த ப்ரஹ்மம் -அறிய படுகிறதோ பார்க்க படுகிறதோ அடைய படுகிறதோ ததேவ ஞானம் –
ஸ்ரவண நினைக்க கேட்க -சந்த்ருஷ்யதே கண்ணால் பார்ப்பது -ஸம் ஞாயதே -ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள்

பகவானை அடைவதற்கு உடலான ஞானம் ஞானமாகிறது; அல்லாதது அஞ்ஞானம் என்னக் கடவது அன்றோ?

—————–

அகார வாஸ்யனே அரவணை அமலன்
ஆகார நியமம் ஆரியருக்கு அழகு
இல்லறத்து இருந்து இருடீகேசன் அடி சேர்
ஈசற்கு ஈசன் இலக்குமி நாதன்
உயர் நலம் உடையவன் உம்பருக்கு அதிபன்
ஊரார் உகப்ப உத்தமர் பேணு
எடுப்புமிலி ஈசன் எந்தை தந்தை
ஏரகத்தோனே ஏற்றம் உடையான்
ஐவை அர்த்தம் ஐயங்கார் கொள்கை
ஒப்பற்றவன் கான் ஒரு தனி முதல்வன்
ஓதல் தன்னுடன் ஒழுக்கத்தோடு இரு
ஒவ்வியம் அவித்தான் ஓவ்தார்ய புருஷன்

—————-

ஏவல் செய் அடியேன் நானே
இவருக்குத் தம்பி தொண்டன் அஹம் அஸ்மி ப்ராதா குணர் க்ருத தாஸ்யன்
அஹம் ப்ரஹ்மாஸ்மி -சொம்பு தண்ணீர்
தண்ணீர் கொண்டு வந்தாயா சொம்பு கொண்டு வந்தாயா -போல்
தேகமும் உள்ளில் உறையும் ஆத்மாவும்
யானே நீ என்னுள் உறைவதால்

————-

அருளிச் செயல்களில் ஆழ்ந்த சிறுவர் கேள்வியும் பதிலும் –

கண்ணா -உன்னை நான் இன்று பன்னிரு பாட்டுக் கேட்க நீ ஓன்று கூட சொல்ல வில்லை யன்றா

1-கண்ணா நான்முகனைப் படைத்தானே -பெரியாழ்வார்
2- உன்னை -உன்னையும் ஓக்கலையில் கொண்டு –பெரியாழ்வார்
3-நான் -நான் கூறும் கூற்றாவது இத்தனையே –பெரிய திருவந்தாதி
4-இன்று -இன்று வந்து இத்தனையும் -நாச்சியார்
5-பன்னிரு –பன்னிரு திங்கள் -பெரியாழ்வார்
6-பாட்டு -பாட்டு முறையும் -நான்முகன்
7-கேட்க -கேட்க நான் உற்றது உண்டு -திருக்குறும் தன்னடக்கம்
8-நீ -நீயும் திரு மக்களும் நின்றாயால் –முதல் திருவந்தாதி
9-ஓன்று -ஓன்று உண்டு செங்கண் மால் -பெரிய திருவந்தாதி
10-கூட -கூடச் சென்றேன் இனி என் –திருவாய் மொழி
11-சொல்ல -சொல்ல மாட்டேன் அடியேன் -திருவாய் மொழி
12-இல்லை -இல்லை அல்லல் எனக்கேல் இனி -திருவாய் மொழி
13-அன்றா -அன்றாயர் குலக்கொடி யோடு -பெரிய திருமொழி

அமரம் காவியம் மாகம் சம்பு நாடகம் அலங்காரம் தற்கம் வேதம் வேதாந்தம் புராணம் பாரதம் ராமாயணம்
திருவாய் மொழி எல்லாம் சொல்லுவாயோ

1-அமரம் -அமர வோர் அங்கம் ஆறும் -திருமாலை
2-காவியம் -காவியங் கண்ணி எண்ணில் -பெரிய திருமொழி
3-மாகம் -மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் -பெரிய திருமொழி
4-சம்பு -செறி தவச் சம்பு -பெருமாள் திருமொழி
5-நாடகம் -நாடகம் செய்கின்றனவே -திருவாய் மொழி
6-அலங்காரம் -அலங்காரத்தால் வரும் மாயப்பிள்ளை -பெரியாழ்வார்
7-தற்கம் -தற்கச் சமணரும் -இராமானுச நூற்றந்தாதி
8-வேதம் -வேதம் வல்லார்களைக் கொண்டு -திருவாய் மொழி
9-வேதாந்தம் -வேதாந்த விழுப்பொருள் –பெரியாழ்வார்
10-புராணம் -இலிங்கத்திட்ட புராணத்தீரும் -திருவாய் மொழி
11-பாரதம் –பன்னி உரைக்கும் கால் பாரதமாம் -பெரிய திருமடல்
12-ராமாயணம் -படி கொண்ட கீர்த்தி இராமாயணம் எனும் பக்தி வெள்ளம் (ராமானுச )
13-திருவாய் மொழி -திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை (ராமாநுச )
14-எல்லாம் -மற்றை யமரர் எல்லாம் (திருவாய் )
15-சொல்லு-சொல்லுவான் சொற் பொருள் (பெரிய திருமொழி )
16-வாயோ -வாயோர் ஈர் ஐஞ்சூறு நுதங்கள் (பெருமாள் திருமொழி )

——–

ஏழு எருதுகளை அடக்கி நப்பின்னை திருமணம்
காமம் க்ரோதம் லோபம் மோஹம் மதம் மாத்சர்யம் அஸூயை -போக்கி நம்மைக் கைக் கொள்ளுகிறான்

இரண்டு மல்லர்களை மாட்டியது -நீர் நுமது -என்ற இவை வேர் முதல் மாய்த்து

குவலயாபீட நிரசனம் -இந்திரியங்கள் மத களிற்றை அடக்கி

மாலாகாரர் உகந்து அளித்த பூ பெற்று மகிழ்ந்தது போல்
அஹிம்ஸா பிரமம் புஷ்பம் புஷ்பம் இந்திரிய நிக்ரஹ -ஸர்வ பூத தயா புஷ்பம் -புஷ்பம் ஷமா -புஷ்பம் விசேஷத –
ஞாதம் புஷ்பம் -தபஸ் புஷ்பம் -த்யானம் புஷ்பம் -ததைவ ச ஸத்யம் அஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ ப்ரீதிகரம் பவேத் —
எண் வகைப் பூவையும் சிஷ்யர் பக்கலில் செழித்து வளரக் கண்டு ஹ்ருஷ்டராவார்

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: