ஸ்ரீ அருளிச் செயல்களில் ஸ்ரீ கிருஷ்ணன் திரு நாமங்கள்–

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி

தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்

வசுதேவர் தம் மகனாய் வந்து திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்

திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஒளி மணி வண்ணன்

உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே

நந்தகோபன் குமரன் யசோதை இளம் சிங்கம் –

மன்னு வடமதுரை மைந்தனே –

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை –

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –

மாலாய்ப் பிறந்த நம்பி

மன்னு மதுரை வசுதேவர் வாழ் முதலை

நந்தன் பெறப் பெற்ற நம்பீ நான் உகந்து உண்ணும் அமுதே எந்தை பெருமானே

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதி யஞ்சோதி வுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன்

வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே

அல்லிக் கமலக் கண்ணனை –

அமரர் முழு முதல் ஆகிய வாதியை அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை –

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை

அமரர் தலைமகனை கண்ணனை நெடுமாலை

மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை

அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன்

வல்வினை தீர்க்கும் கண்ணனை

என்னுடைய கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே -என் திரு மார்பன் தன்னை –

எடுத்த பேராளன் நந்த கோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே

அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்கு களிறே

மாயக் கூத்தா வாமனா கொண்டால் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா

மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –

பேய்ப்பால்முலையுண்ட பித்தனே -கேசவ நம்பீ

வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல்

பேய்முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன்

தேவக் கோலப் பிரான்

பேயின் முலையுண்ட பிள்ளை இவன் முன்னம் மாயச் சகடும் மருதும் இறுத்தவன் காயா மலர்க்கண்ணன் கண்ணன்

கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய வுதை செய்த பிள்ளை யரசே

மாயச் சகடம் உதைத்த மணாளற்கு

சகட வசுரருடல் வேறா பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே

கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலை-

கருளக் கொடி யொன்றுடையீர் தனிப்பாகீர்

பிள்ளை யரசே

மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து –வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏறு –

மருதம் முறிய நடை கற்றவன் –மதுரைப்பதி கொற்றவன்

போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே -தேனே -இன்னமுதே

புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ -மருதிடை போய் –கண்ண பிரானுக்கு

கானக மா மடுவில் காளியின் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர வென் சிறுவா

பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணன்

காளியன் தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி–வித்தகனாய் நின்ற ஆயன்

கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்த மணி வண்ணன்

காளியன் மேல் நடமாடிய கூத்தனார்

பொய்கை வாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே

சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய் ஆடரவின் வன்பிடர் நடம் பயின்ற நாதனே –

கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டு எறியும் கரு நிற வென் கன்றே –

விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து –யுலகுண்ட காளை

விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர்

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினை பற்றி எறிந்த பரமன்

கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன்

ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் –

வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் –

கார்க்கோடல் பூச் சூடி வருகின்ற தாமோதரா

யசோதை நல் ஆய்ச்சி தன புத்திரன் கோவிந்தனை

இந்த்ரன் போல் வரும் ஆய்ப்பிள்ளை

கோ நிரை மேய்த்தவனே எம்மானே

பட்டி மேய்ந்ததோர் காரேறு பல தேவற்கோர் கீழ்க் கன்றாய்

ஆவினை யன்று உய்யக் கொண்ட வாயர் ஏற்றை அமரரர்கள் தம் தலைவனை

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கொண் அணி அரங்கன்

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் –

ஆ மருவி நிரை மேய்த்த வமரர் கோமான் –

மனைசேர் ஆயர் குலமுதலே மா மாயனே மாதவா

பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் போர் சக்கரத்து தரியினை அச்சுதனை

இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்

என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே

திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் –

குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய்

கோவலர் இந்திரற்கு காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் –வாட்டமிலாப் புகழ் வாசுதேவா –

குன்று எடுத்து ஆநிரை காத்த வாயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே –

வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே -மது சூதா -கண்ணனே –

வெற்பு எடுத்து மாரி காத்த மேக வண்ணன்-

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் –பரன்

வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன்-

கோலச் செந்தாமரைக் கண் மிளிரக் குழலூதியிசை பாடிக் குனித்து ஆயரோடு ஆலித்து வருகின்ற வாயப்பிள்ளை

கரும் சிறுக்கன் குழலூதின போது

நாகத்தணையான் குழலூத அமர லோகத்தளவும் சென்று இசைப்ப-

குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக் கோவிந்தனுடைய கோமள வாயில் குழல்-

அணி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏற்றினை-

குடமாடு கூத்தா வேதப் பொருளே என் வேங்கடவா வித்தகனே-

கோத்து அங்கு ஆயர்தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன்-

குரவை முன்னே கோத்தானை குடமாடு கூத்தன் தன்னை –எம்மானை-

குடமாடுவார் –தேவ தேவ பிரான்

குடமாடி உலகளந்த மாட்டார் பூங்குழல் மாதவனை

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன்

குரவை கோத்த குழகனை மணி வண்ணனைக் குடக் கூத்தனை –

கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா என் அண்ட வாணா

சாளக்ராமமுடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்-

ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனை-

ஆய்ச்சி பாலையுண்டு மண்ணையுண்டு வெண்ணெய் யுண்டு பேய்ச்சி பாலையுண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா —

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினை

ஆய்த்தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை

தயிர் வெண்ணெய் உளம் குளிர அமுது செய்து இவ்வுலகாண்ட காளை

ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன்

கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கும்

வள வேழ் உலகின் முதலாய வானோர் இறையை கழ வேழ் வெண்ணெய் தொடு வுண்ட கள்வா

மாயோனே ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை

ஆய்ச்சி யாகிய வன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் உண்டு அழு கூத்தவப்பன்

மல்லரை சாவைத் தகர்த்த சாந்தணி தோள் சதுரன்

கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்ற நெடுமாலே

கால நேமி காலனே

மா பிளந்த கைத்தலத்த கண்ணன்

கடம் கலந்தவன் கரி மருப்பொசித்து–நடம் பயின்ற நாதனே

கொம்பு ஒசித்து உகந்த வுத்தமா துரங்கம் வாய் பிளந்து மண்ணளந்த பாத —

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ செற்றவன்

புள் வாய் பிளந்து எருதடர்த்த எந்தை –

கஞ்சனைக் கொன்று அன்று உலகமுண்டு உமிழ்ந்த கற்பகத்தை-

மல்லடர்ந்த்த மல்லா –

புள் வாய் பிளந்த புனிதா-

மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி வண்ணன்

கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டமாளும் மதியினை மாலை –

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து –அஞ்சன வண்ணனே-

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என் சிற்றாயர் சிங்கமே

ஓர் தூது ஆதி மன்னர்க்காகி பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றான்

கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான்

தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான்

நீர்மையில் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள் செய்ய நின்று பார் மல்கு சேனை யவித்த பரஞ்சுடரை

அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி

நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பி

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா

அன்று பாரதப்போர் முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை

சரணம் அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை மரணம் அடைவித்த மாயவன்

நப்பின்னை தன் திறமா நல்விடை யேழவிய நல்ல திறலுடைய நாதனுமானவனே

பின்னை மணாளனை

ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை

பின்னை தன காதலன்

விடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா

எருத்து இறுத்த நல்லாயர் ஏறு

எருது ஏழ் அடர்த்த என் கள்ள மாயவனே கரு மாணிக்கச் சுடரே

அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட ஆய மகள் அன்பனே

பின்னை தோள் மணந்த பேராயா

அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான்

தண் பூ மரத்தினை வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என்னாதன்

பல்லாயிரம் பெரும் தேவிமாரொடு பௌவம் எறிது வரை எல்லாரும் சூழச் சின்காசனத்தே இருந்தானை

பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும் அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர்

————–

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் பற்றிய விசேஷ விஷயங்கள்
1-ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் -5235-வருஷங்களுக்கு முன்
2-பிறந்த நாள் -18th ஜுலை -3228-கி .மு –
3-பிறந்த மாதம் -ஆவணி -( ஸ்ரவணம் )
4-பிறந்த திதி -அஷ்டமி
5- பிறந்த நக்ஷத்ரம் -ரோஹிணி

6-பிறந்த கிழமை -புதன் கிழமை
7- பிறந்த நேரம் -இரவு 00-00 A M –
8- இங்கு இருந்து அருளியது –125 வருஷங்கள் -8 மாதங்கள் -7 நாள்கள்
9- தன்னுடை ஜோதிக்கு எழுந்து அருளிய நாள் -18th February 3102 கி மு
10-குருஷேத்ரா யுத்தம் -இவரது 89 -திரு நக்ஷத்திரத்தில்

11-மஹாபாரத யுத்தம் முடிந்து மேல் 36 திருநக்ஷத்ரங்கள் இங்கே இருந்து அருளி உள்ளார்
12-குருஷேத்ர யுத்தம் தொடக்கம் மிருகசீர்ஷ ஏகாதசி -3139 கி மு –8th Dec -முடிவு -25 th Dec
13-சூர்ய கிரஹணம் –21 st Dec -ஜெயத்ரன் முடிவு
14- பீஷ்மர் உயிர் நீத்தது -முதல் உத்தராயண ஏகாதசி -2nd -Feb –3138 கி மு

15-ஸ்ரீ வடமதுரை தேவகி வஸூதேவ புத்ரன்
16-ஸ்ரீ ஜெகன்நாத் -ஒரிசா
17-ஸ்ரீ நாதன் ராஜஸ்தான்
18-ஸ்ரீ துவாரகா தீசன் -குஜராத்
19-ஸ்ரீ உடுப்பி கிருஷ்ணன் கர்நாடக
20-ஸ்ரீ குருவாயூரப்பன் -கேரளா

21-ஸ்ரீ நந்தன் மதலை யசோதை இளஞ்சிங்கம் கோபீ வல்லபன் -திருவாய்ப்பாடி
22-நம்பி மூத்த பிரானின் தம்பி சுபத்ரா -தங்கை
23–ஸ்ரீ ருக்மிணி பிராட்டி -ஸ்ரீ சத்யபாமா பிராட்டி -ஸ்ரீ ஜாம்பவதி பிராட்டி -ஸ்ரீ காளிநிதி பிராட்டி –
ஸ்ரீ மித்ரவிந்தா பிராட்டி -ஸ்ரீ நக்நஜிதி பிராட்டி -ஸ்ரீ பத்ரா பிராட்டி -ஸ்ரீ லஷ்மணா பிராட்டி அஷ்ட திவ்ய மஹிஷிகள்

24) சாணூர -கம்ச -சிசுபால -தந்த்ரவத்ரன் -நால்வர் மட்டுமே கொல்லப்பட்டார்கள்

25- ஸ்ரீ ப்ருந்தாவனத்துக்கு ஒன்பதாவது திரு நக்ஷத்திரத்தில் –சென்று 20 மாதங்கள் அங்கேயே எழுந்து அருளி இருந்தான்
26-பின்பு வடமதுரை சென்று கம்சவதம் முடித்து தாய் தந்தை கால் விலங்கு விடுவித்து அருளினான்
27-ஸ்ரீ துவாரகா நிர்மாணம்
28-ஸ்ரீ சாந்தீபினி இடம் ஆய கலைகள் 60 தனது -16-18-திருநக்ஷத்ரத்தில் கற்றான்

——–

சர்வம் கிருஷ்ணார்ப்பணம் -ஸ்ரீ கீதா சாரமே இதுவே –

யத் கரோஷி யதஸ்நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத்
யத் தபஸ்யஸி கௌந்தேய தத் குருஷ்வ மதர்பணம்–9-27-

கௌந்தேய-குந்தி மகனே!
யத்கரோஷி-எந்த கர்மத்தை செய்கிறாயோ,
யதஸ்நாஸி-எதை உண்கிறாயோ,
யத் ஜுஹோஷி-எதை ஹோமம் செய்கிறாயோ,
யத் ததாஸி-எதை தானம் அளிக்கிறாயோ,
யத் தபஸ்யஸி-எந்த தவம் செய்கிறாயோ,
தத் மதர்பணம் குருஷ்வ-அதை எனக்கு அர்ப்பணம் செய்து விடு.

நீ எது செய்யினும், எதனை நீ உண்பினும், எதை நீ ஓமம் பண்ணினும், எதனைக் கொடுத்தாலும்,
எத்தவத்தைச் செய்தாலும், குந்தி மகனே, கடவுளுக்கு அர்ப்பணமென்று செய்.

ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத்வ்யபாஸ்ரய:
மத்ப்ரஸாதாதவாப்நோதி ஸாஸ்வதம் பதமவ்யயம்–18-56-

மத்வ்யபாஸ்ரய:-என்னையே சார்பாகக் கொண்டோன்,
ஸர்வ கர்மாணி-எல்லாத் தொழில்களையும்,
ஸதா குர்வாண: அபி-எப்போதும் செய்து கொண்டிருந்தாலும்,
மத்ப்ரஸாதாத்-எனதருளால்,
ஸாஸ்வதம் அவ்யயம் பதம்-அழிவற்ற நித்தியப் பதவியை,
அவாப்நோதி-எய்துகிறான்.

எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன்
எனதருளால் அழிவற்ற நித்தியப் பதவியை எய்துகிறான்.

சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர:
புத்தியோகமுபாஸ்ரித்ய மச்சித்த: ஸததம் பவ–18-57-

ஸர்வகர்மாணி-செயல்களை யெல்லாம்,
சேதஸா-அறிவினால்,
மயி ஸந்ந்யஸ்ய-எனக்கெனத் துறந்துவிட்டு,
புத்தியோகம் உபாஸ்ரித்ய-புத்தி யோகத்தில் சார்புற்று,
மத்பர:-என்னிடத்தே ஈடுபட்டு,
ஸததம் மத் சித்த: பவ-எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று,
எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

64. ஸர்வகுஹ்யதமம் பூய: ஸ்ருணு மே பரமம் வச:
இஷ்டோऽஸி மே த்ருடமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம்

ஸர்வகுஹ்யதமம்-எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய,
மே பரமம் வச:-என்னுடைய பரம வசனத்தை,
பூய: ஸ்ருணு-மீட்டுமொருமுறை கேள்,
மே த்ருடம் இஷ்ட: அஸி-நீ திடமான நண்பன்,
தத: ஹிதம் இதி தே வக்ஷ்யாமி-ஆதலால் நல்லது என்று உனக்கு சொல்லுகிறேன்.

மீட்டுமொருமுறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள்.
நீ திடமான நண்பன். ஆதலால் உனக்கு ஹிதத்தைச் சொல்லுகிறேன்.

நீருக்குள் மிக ஆழமான இடத்தில் எல்லாரும் மூழ்கிப் பார்க்கமுடியாது. அதில் வல்லமை பெற்றவர்க்கே அது இயலும்.
இப்பொழுது பகவான் புகட்டுகிற கோட்பாடு மிகவும் ஆழ்ந்தது. ஏனென்றால் அது ஜீவனுக்குச் சிறப்பை அளிக்கவல்லது.
சிரேயஸைப் பெறவேண்டும் என்று அர்ஜுனன் ஆரம்பத்தில் விண்ணப்பித்தான்.
அதைப் பெறுதற்கு உற்ற வழி இப்பொழுது புகட்டப்படுகிறது. அதைக் குறித்து அவர் பகரும் சொல்லானது-
பரமம் வசனம்- மேலாம் மொழியாகிறது. மகாவாக்கியம் என்று அதை இயம்பலாம்.
வேதங்களில் உள்ள மகா வாக்கியங்கள் ஞானிகளால் நவிலப்பட்டவை. இது பரமாத்மாவானவர் தாமே பகர்கின்ற சொல்லாகிறது.
ஏற்கனவே இயம்பிய கோட்பாட்டை முடிவுரையில் அவர் சித்தாந்தப்படுத்துகிறார்.

புறவுலகின் அமைப்புப் பலர்க்கு மறைபொருளாயிருப்பது போன்று மனத்தகத்து உள்ள தெய்வீக மாண்பும் மறைபொருளாயிருக்கிறது.
எல்லார் உள்ளத்திலும் உறைந்திருக்கும் நல்ல உறவு ஆகின்றான் இறைவன்.
உயிர்களை உய்விப்பதற்கென்றே அவனுடைய அருள் இயங்குகிறது. இயற்கையில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகள்
அனைத்தும் முடிவில் அந்த ஒரு காரியத்தை நிறைவேற்றி வைக்கின்றன. ஒன்றுக்கும் உதவாத ஜீவனைத்
தனக்கு உகந்தவனாக்கிப் பிறகு அவனைத் தெய்வம் தன்மயமாக்குகிறது. இயற்கையென்னும் பெரிய
தொழிற்சாலையில் இந்த அரும்பணியானது ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
மக்கள் காலில் மிதியுண்டு ஒன்றுக்கும் உதவாத செத்தையாகப் போகக்கூடிய நாணல் ஒன்றைக் கண்ணன்
கையில் எடுத்துப் புல்லாங்குழலாக மாற்றுகிறான். பிறகு அவன் அதில் உண்டு பண்ணும் கானமோ
மண்ணுலகத்தவரை விண்ணுலகுக்குக் கொண்டுபோக வல்லது. ஜடப்பொருளில் அவன் செய்யும் ஜாலம் அத்தகையது.
பிறகு சேதன வஸ்துவாகிய ஜீவனைத் தனக்குரியவன் என்றே அவன் ஆட்கொள்கிறான்.
இனி, இதிலும் ஆழ்ந்ததொரு கருத்து இயற்கையின்கண் உளது. அது அடுத்த சுலோகத்தில் வருகிறது.

உண்மையான பக்தன் ஒருவன் ஈசுவரனை எவ்விதம் காண்கிறான்? பிருந்தாவனத்திலுள்ள கோபஸ்திரீகள்
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை ஜகந்நாதனாகக் காணாமல் அவர்களுடைய பிரிய கோபிநாதனாகவே கண்டதைப்போல,
பக்தனும் ஈசுவரனைத் தனது நெருங்கிய பிரிய பந்துவாகவே காண்கிறான்.

பகவான் புகட்டும் நலம்தான் யாது? விடை வருகிறது :

65. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே

மந்மநா பவ-உன் மனதை எனக்காக்குக,
மத்பக்த:-என் தொண்டனாகுக,
மத்யாஜீ-எனக்கென வேள்விசெய்க,
மாம் நமஸ்குரு-என்னையே வணங்குக,
மாமேவ ஏஷ்யஸி-என்னையெய்துவாய்,
ஸத்யம் தே ப்ரதிஜாநே-உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன்,
மே ப்ரிய: அஸி-எனக்கு இனியவனாக இருக்கிறாய்.

உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக.
என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:–18-66

ஸர்வதர்மாந் பரித்யஜ்ய-எல்லா அறங்களையும் விட்டு விட்டு,
மாம் ஏகம் ஸரணம் வ்ரஜ – என்னையே சரண் புகு,
ஸர்வபாபேப்ய:-எல்லாப் பாவங்களினின்றும்,
அஹம் த்வாம் மோக்ஷயிஷ்யாமி-நான் உன்னை விடுவிக்கிறேன்,
மா ஸுச:-துயரப்படாதே.

எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும்
நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.

ய இமம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபிதாஸ்யதி
பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஸய:–18-68-

ய: மயி பராம் பக்திம் க்ருத்வா-எவன் என்னிடம் உயர்ந்த பக்தி செலுத்தி,
இமம் பரமம் குஹ்யம்-இந்தப் பரம ரகசியத்தை (கீதையை),
மத்பக்தேஷு ய: அபிதாஸ்யதி-என் பக்தர்களிடையே சொல்லுவோனோ,
மாம் ஏவ ஏஷ்யதி-என்னையே எய்துவான்,
அஸம்ஸய:-ஐயமில்லை.

இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி
என்னையே எய்துவான். ஐயமில்லை.

————

காயேன வாசா மனஸேந்த்ரியைா் – வா புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் l
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமா்ப்பயாமி ll

சரீரத்தாலோ,வாக்காலோ,மனத்தாலோ,கருமேந்திரியங்களாலோ, ஞானேந்திரியங்களாலோ,
இயற்கையின் இயக்கத்தாலோ எது எதைச் செய்கின்றேனோ
அது எல்லாவற்றையும் பரம புருஷனாகிிய நாராயணனுக்கே என்று ஸமா்ப்பிக்கிறேன்

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: