பகவத் கீதையும் பகவத் சாஸ்திரமான பாஞ்ச ராத்ரம்
1-அடியவர்கள் உகந்த உருவமும் பேரும்
2- அவதார பூர்ணத்வம்
3-அர்ச்சாவதார ஸுலப்யம் -எளிமை நீர்மை
4-ஸரணாகதி
5-திருமேனி த்யானம் உபாஸ்யம்
6-பாஞ்சராத்ர உபாஸ்யமே ஸ்ரேஷ்டம்
1-அடியவர்கள் உகந்த உருவமும் பேரும்
ஜிதந்தே ஸ்தோத்ரம் -பாஞ்ச ராத்ரம் உள்ளே அடங்கியது
ந தே ரூபம் —பக்தாநாம் ப்ரகாசதே
உனக்கு -என்ற பின்பு அனைத்தும் உண்டே –
உனக்கு என்று கொள்ளாமல் ரூபம் கல்யாண குணங்கள் எல்லாம் அடியவர்களுக்கு
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:–4-11
பார்த யே மாம் யதா ப்ரபத்யந்தே-பார்த்தா! யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ
தாந் அஹம், ததா ஏவ பஜாமி-அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்,
மநுஷ்யா: ஸர்வஸ:-மனிதர் யாங்கணும்,
மம வர்த்ம அநுவர்தந்தே-என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்.
பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
ஸர்வஸ:-பிரியதம -பித்ரு -சாரதி -அர்ச்சாவதார -அனுபவிப்பான்
2- அவதார பூர்ணத்வம்
விஷ்வக்ஸேன ஸம்ஹிதை
நம் பெருமாள் அபிமானம்
பிராட்டி உடனே வந்து ஸந்நிஹிதன் ஆகிறேன்
ஸ்ரீ ப்ரஸ்ன சம்ஹிதை -இத்தையே சொல்லும்
அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோऽபி ஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா–4-6-
அஜ: அவ்யய ஆத்மா ஸந் அபி-பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும்,
பூதாநாம் ஈஸ்வர: அபி ஸந்-உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும்,
ஸ்வாம் ப்ரக்ருதிம் அதிஷ்டாய-யான் எனது பிரகிருதியில் நிலை பெற்று,
ஆத்ம மாயயா ஸம்பவாமி-என்னுடைய மாயையால் பிறப்பெய்துகிறேன்.
ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும்,
யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன்.
வனவாஸ ராமர் சேவிக்கிறோம் திருச்சேறை
மாயா சங்கல்பம் -divine will
3-அர்ச்சாவதார ஸுலப்யம் -எளிமை நீர்மை
புரிவதுவும் புகைப்பூவே –
துளஸீ -பல்லவம்–ஸப்த மாத்திரமே போதும் -பாஞ்ச ராத்ரம் சொல்வதையே
தாராயினும் வேராயினும் மண்ணாயினும்
பாலனாய் பதிகம் சொன்னாலே போதுமே
பாட்டு தோறும் திருத்துழாய் இருக்குமே
ஒவ்வொரு இலைக்கும் நூறு அஸ்வமேத யாக பலன் அளிக்கிறானாம்
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந:–9-26-
ய: பக்த்யா-எவர் அன்புடனே,
பத்ரம் புஷ்பம் பலம் தோயம்-இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும்
மே ப்ரயச்சதி-எனக்கு அளிப்பவன் ஆயின்,
ப்ரயதாத்மந:-முயற்சியுடைய அவர்,
பக்த்யுபஹ்ருதம்-அன்புடன் அளித்த,
தத் அஹம் அஸ்நாமி-அவற்றை நான் அருந்துகிறேன்.
இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய
அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.
சர்வ ஸூ லபம்
ஸர்வேஸ்வரேஸ்வரன்
அவாப்த ஸமஸ்த காமன்
மநோ ரதம் அலாப்ய லாபம் பெற்றதாக கொள்கிறானே
4-ஸரணாகதி
ந்யாஸ வித்யை
அஹிர்புத்யை ஸம்ஹிதை லக்ஷணம் சொல்லி
அங்கங்களும் காட்டும்
லஷ்மி தந்திரமும் சொல்லும்
ந்யாஸம் அதிரிக்தம்
சரம ஸ்லோகம் காட்டுமே –
ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:
ஸர்வதர்மாந் பரித்யஜ்ய-எல்லா அறங்களையும் விட்டு விட்டு,
மாம் ஏகம் ஸரணம் வ்ரஜ – என்னையே சரண் புகு,
ஸர்வபாபேப்ய:-எல்லாப் பாவங்களினின்றும்,
அஹம் த்வாம் மோக்ஷயிஷ்யாமி-நான் உன்னை விடுவிக்கிறேன்,
மா ஸுச:-துயரப்படாதே.
எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும்
நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.
அங்க பிரபத்தி கீதா பாஷ்யம்
ஸ்வ தந்த்ர பிரபத்தி கத்யம்
குறிப்புடன் மேவும் தர்மங்கள் -கோவலன் -கழலே அரண் என்று அடைந்து வினைத்திரள் போக்குவோம் -தேசிகன் –
5-திருமேனி த்யானம் உபாஸ்யம்
ச குண ச ஆகார
ஸ்ரீ ப்ரஸ்ன சம்ஹிதை
சதுர்புஜம் வாஸூ தேவம் –ஆனந்த ஜலாதி -பித்த வாஸஸம் -ப்ரஹ்மாதி காரணம் -கிஞ்சித் மந்தஸ்மிதம் -தேவம் புண்டரீகாக்ஷம்
குரு முகே -த்யானம்
யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா
ஸ்ரத்தாவாந்பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத:6-47
ய: ஸ்ரத்தாவாந்-எவனொருவன் சிரத்தையுடைய யோகியோ,
மத்கதேந அந்ராத்மநா -என்னிடம் ஈடுபாடு கொண்ட உள்ளத்தால்,
மாம் பஜதே-என்னை போற்றுகிறானோ,
ஸ: மே யுக்ததம மத:-அந்த யோகியே மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.
மற்றெந்த யோகிகளெல்லாரிலும், எவனொருவன் அந்தராத்மாவில் என்னைப் புகுத்தி என்னை
நம்பிக்கையுடன் போற்றுகிறானோ அவன், மிக மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.
கத்யத்தில் ஸ்வாமி விலக்கிக் காட்டி அருளுகிறார் திவ்ய ரூபம்
மய்யாவேஸ்ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே
ஸ்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா:–12-2-
ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
மயி மந: ஆவேஸ்ய-என்னிடத்தே மனத்தைச் செலுத்தி,
நித்யயுக்தா:-நித்திய யோகிகளாய்,
யே-எந்த பக்தர்கள்,
பரயா ஸ்ரத்தயா உபேதா:-சிறந்த சிரத்தையுடன் கூடியவர்களாக,
மாம் உபாஸதே-என்னை வழிபடுகிறார்களோ,
தே யுக்ததமா-அவர்கள் யோகிகளிலேயே மேலானவர் என்று,
மே மதா:-என்னால் மதிக்கப் படுபவர்.
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: என்னிடத்தே மனத்தைச் செலுத்தி நித்திய யோகிகளாய் உயர்ந்த நம்பிக்கையுடன்
என்னை வழிபடுவோர் யாவர், அவர்களே சிறந்தோரென நான் கருதுகிறேன்.
நித்யர்களையும் திவ்ய ரூபத்துடன் உபாஸிக்க சொல்லும் பாஞ்சராத்ரம்
ஆக்கமும் இப்படியே சொல்லும்
6-பாஞ்சராத்ர உபாஸ்யமே ஸ்ரேஷ்டம்
அநந்யாஸ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோக÷க்ஷமம் வஹாம்யஹம்–9-22-
அநந்யா: யே ஜநா-வேறு எதிலும் நாட்டமில்லாத எந்த பக்தர்கள்,
மாம் சிந்தயந்த:-என்னை தியானித்துக் கொண்டு,
பர்யுபாஸதே-எந்த பயனும் எதிர்பார்க்காது உபாசிக்கின்றாரோ,
நித்யாபியுக்தாநாம் தேஷாம்-இடைவிடாது என்னையே நினைத்துக் கொண்டிருக்கிற அவர்களுடைய,
யோக÷க்ஷமம் அஹம் வஹாமி-நன்மை தீமைகளுக்கு நானே பொறுப்பாவேன்.
வேறு நினைப்பின்றி என்னை வழிபடுவோர் யாவரோ, அந்த நித்திய யோகிகளின் நன்மை தீமையை நான் பொறுப்பேன்.
பர்யுபாஸதே
சர்வ கல்யாண குணாத்மகம் –சர்வ விபூதி யுக்தம் –
முழுமையாக உபாஸ்யம்
அகண்டித குணம்
வைகானஸம் பாஞ்சராத்ரம் இரண்டுமே சொல்லுமே
அர்ச்சாவதாரமே பூர்ணம் என்று உபாஸிக்க வேண்டுமே
ஸ்ரீ பாஷ்யம் இதை விளக்கிக் காட்டும்
அபார காருண்ய -ஸ்வ ஸ்வரூப –ஸ்வ விபூதி –பாஞ்சராத்ர சாஸ்திரம் ஸ்வயம் ஏவ அருளி –
இந்த வழியில் உபாஸனமே பூர்ணம்
யோகமும் க்ஷேமமும் இவர்களுக்குத் தான்
அடுத்த ஸ்லோகம் இத்தை விளக்கும்
யேऽப்யந்யதேவதாபக்தா யஜந்தே ஸ்ரத்தயாந்விதா:
தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம்–9-23-
கௌந்தேய-குந்தியின் மகனே,
யே பக்தா-எந்த பக்தர்கள்,
ஸ்ரத்தயா அந்விதா: அபி-நம்பிக்கையுடன் கூடியவர்களாக இருந்த போதிலும்,
அந்ய தேவதா: யஜந்தே-மற்ற தேவதைகளை வழிபடுகிறார்களோ,
தே அபி அவிதி பூர்வகம்- அவர்களும் விதிமுறைப்படி அல்லாமல் (அஞ்ஞானத்துடன்),
மாம் ஏவ யஜந்தி-என்னையே தொழுகின்றனர்.
அந்நிய தேவதைகளை நம்பிக்கையுடன் தொழும் அன்பரும், குந்தியின் மகனே, விதி வழுவி என்னையே தொழுகின்றனர்.
சிரத்தையோடு கூடியிருத்தல் என்பது ஆஸ்திக்ய புத்தியுடைத்திருத்தல் அல்லது தெய்வம் துணைபுரியும் என்ற
நம்பிக்கையுடனிருத்தலாம். அக்ஞானத்தால் விதிவழுவிச் செய்யும் செயல் அவிதிபூர்வகம் எனப்படுகிறது.
விதிப்படி உபாஸனமே பாஞ்சராத்மா விதிப்படி -ஸ்ரேஷ்டம்
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்– 2-2-
பாஞ்ச ராத்ரமே வேத வழி
இதுவே பரம பிரமாணம்
பக்த அபீஷ்ட
அவதரண சமய நிர்விகார ஸ்வ பாவம்
ஸுலப்யம்
ந்யாஸ வித்யாம்
ஸூபக ஸூதா தநு
யோகானாம் பாஞ்ச ராத்ரம் விதி மத மோக்ஷம் தர கீதாச்சார்ய வசனம் –
கதி அளிக்கும் நல்ல விதி இதுவே –
———-
பகவான் ஸ்ரீ வாசுதேவன் ஐந்து ராத்திரிகளில் ஐந்து நித்ய ஸூரிகளுக்கு
உபதேசம் செய்ததால் இதற்கு பாஞ்சராத்ர ஆகமம் என்று பெயர்
பாஞ்ச ராத்ர ஆகமம் மொத்தம் 5 ,00 ,000 சுலோகம் கொண்டது ஆகும் .
அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய ஸ்ரீ பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி என அழைக்கப்படும்
இந்த நாள் ஆவணி மாதத்தில் சிம்மம் ராசியில் சூரியன் இருக்கும் சமயம்.
இந்த தினம் ஸ்ரீ கிருஷ்ணபகவான் அவதரித்த தினமாகக் வைஷ்ணவர்களால் கொண்டாடப்_படுகிறது.
வைணவ ஆகமங்களில் பாஞ்சராத்ரம் வைகானசம் என்னும் இரண்டு விதமான ஆகமங்கள் உண்டு.
ஆகமங்கள் என்பது ஆராதனை முறைகளாகும்.
பாஞ்சராத்ரம் ஆகமம் என்பது பத்ரிகாஸ்ரமத்தில் பகவான் விஷ்ணு தானே
நரனும் நாராயணனுமாகி உபதேசித்த பூஜை முறைகளாகும்,
இந்த பூஜை முறை ஐந்து ராத்திரிகளில் சொல்லப்பட்டதால் பாஞ்சராத்ரம் என்று பெயர் பெற்றது.
வைகானச ஆகமம் என்பது பகவான் விஷ்ணு தானே வைகானச முனிவராகி சௌனகாதி முனிவர்களுக்கு
உபதேசம் செய்ததாக கூறப்படுவதால் இந்த ஆகமம் வைகானச ஆகமம் என்று கூறப்படுகிறது.
பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி என்பது ஆவணி மாதம் சிம்மத்தில் சூரியன் இருக்கும் சமயம்
கிருஷ்ணபட்சம் அஷ்டமியன்று கொண்டாடப்படும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும்.
இன்று சூரிய உதயத்தில் சப்தமி அல்லது கிருத்திகை நட்சத்திரம் ஒரு வினாடி இருந்தாலும்
அது தோஷமுள்ள நாளாக கருதப்படுவதால் மறுநாள் தான் ஸ்ரீஜெயந்தியாக கொண்டாடப் படவேண்டும்.
ஸ்ரீ வைகானச ஸ்ரீஜெயந்தி ஆவணி மாதம் சிம்மத்தில் சூரியன் இருக்கும் சமயம் நடு இரவில்
ரோகிணி இருக்கும் சமயம் கொண்டாடப்படும் ஸ்ரீஜெயந்தியாகும்.
அன்று தேய்பிறை அஷ்டமி அர்த்தராத்திரிக்கு முன்பு சிறிதளவு இருந்தாலும் போதுமானது.
இவ்வாறு பலவகையிலும் பலவித ஆச்சாரியார்களின் வழிகாட்டுதலின்படி
பலவிதமான நாட்களில் பலவித பெயர்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க,
குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும்.
இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.
———————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ. வே ,வெங்கடேஷ் ஸ்வாமிகள் – திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply