பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு பாங்கி இரங்குதல்
பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே. 91–
பருகின்றது இருள் -இருட்டோ வந்து நிறைகின்றது
போகின்றது வண்ணம் பூவை -இவளது நல்ல நிறமோ நீங்குகின்றதே
கண்ணீர் உருகின்றது -கண்ண நீரும் பெருகுகின்றதே
தென்று உயிர் ஓய்கின்றதால்-இக் காரணங்களால் எனது உயிர் சோர்வடைகின்றது
மேன் மேலும் காதல் தருமவரே–அபிநிவேசத்தை வளர்த்து அருளும் அவரே
உலகு ஏழுமுய்யத் தொகுகின்ற ஆயிரம் சொன்னோன்–தொண்டர்க்கு அமுதால அருளிச் செய்த ஆழ்வார்
குருகைச் சொல்லால் விளங்கத் தகுகின்றனர் அல்லர் -கீர்த்தியால் விளங்கத் தக்கவர் அல்லர்
இன்னமும் பூர்ண கடாக்ஷம் பெறாத குறையால் அலற்றுகிறார்
———
தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே. 92–
தருமமும் காமமும் தாவில் அரும் பொருளும் -தர்மம் அர்த்தம் காமம்
தணவாக் கருமமும் ஆகிய -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமும்
காரணம் கண்ட அக் காரணத்தின்–அந்த பர ப்ரஹ்மம் போலவே
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்து–அனைத்திலும் பெரிய மஹா மாயை என்னும்
பிரகிருதி சம்பந்தமும் அதனால் வரும் மாறுபாடும் இல்லாமல்
உறு பேதம் செய்யம் இருமையும் தீர்ந்த –இருவித கர்மங்களையும் தொடரப் பெறாத
பிரான் சட கோபன் தன் இன்னருளே.–ஆழ்வாரது பரம காருண்யமே காரணம் –
இவை பத்தும் வல்லார் உலகில் எனது பெரும் செல்வராய்த் திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்களே
———–
இருளுக்கு ஆற்றாத தலைவியைக் குறித்துத் தோழி இரங்குதல் –
அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. 93–
இயலோடு இசையின் பொருளில் சிறந்த -இயல் தமிழ் பொருள் அமைதியிலும் இசைத்தமிழ் பொருள் அமைதியிலும் சிறப்புற்ற
குருகையர் கோன் யாழினிசை வேதத்து இயல் –
அலங்கார வல்லியின் -அலங்காரங்கள் அமைந்த பூங்கொடி போலும் படி
கடவல்லி ப்ரஹ்ம வல்லி ஆனந்த வல்லி போல் அலங்கார வல்லி
போக்கில் உள்ளம் தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. –நம்மாழ்வார்
ஆயிழைக்கு —ஆழ்வார் திரு உள்ளம் மகிழும்படி ஆத்ம குணம் நிறைந்த தலை மகளுக்கு –
அருளில் சில மகிழா ஈவர் கொல் -கருணையால் மகிழம் பூவைத் தந்து அருளுவாரோ –
அந்தி வந்த இருளில் பிறிது துயரும் உண்டோ -மாலைப் பொழுதில் இருள் போல் வேறே ஓன்று உண்டோ -இல்லை என்றபடி –
———-
அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே. 94–
அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்-ப்ரஹ்மாதிகளுக்கும் மற்ற தேவர்களுக்கும்
பவரே கை யுற்று என் -பிறப்பு வகை நேர்ந்து என்ன பயன்
படர் நீரின் இட்ட நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் -நீரில் மேல் எடுத்திய புது எழுத்துக்கள் போல்
நிலை இல்லாத பிரபஞ்ச விஷயங்களை மனம் கொள்ளும்படி செய்தது அல்லால்
பணி கொள்ளுமோ -நித்ய கைங்கர்யம் செய்தலைப் பெறுமோ
அவர் எவரே -அவர்களில் எவர் தாம்
நம்பி மாறனைப் போல் திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே-நம்மாழ்வார் போல்
மோக்ஷ ஸாஸ்த்ரம் அருளிச் செய்தவர் யாரும் இல்லையே –
———-
தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. 95–
தம்மை ஒறுத்து-தங்களை வருத்தி
தவம் செய்வதும்
தழல் வேள்வி முடிப்பதும்
எவன் செய்யும் -இது நல்ல பயனைக் கொடுக்கும்
அவம் செய்கை மாற்றச்–கொடிய கர்மங்களை ஒழிக்க
மெய்யன் குருகைப் பிரான் -உண்மைப் பொருளை உண்மையாக அறிந்த ஆழ்வார்
எம்மை இன்னம் ஒரு பவம் செய்கை மாற்றிய பண்டிதன் -இனி சம்சாரத்தில் இருக்க ஒட்டாமல் இருக்க
வண் தமிழ்ப் பாவம் உண்டே-திவ்ய ப்ரபந்தகளும் இருக்கின்றனவே
செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. –காதுகளும் நாக்கும் அர்த்த பஞ்சகம் அறிய அறிவும் உண்டே –
நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உறையுண்டு
மூவாத மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என் ஒருவன்
தீக்கதிக் கண் செல்லும் திறம் –பொய்கையார்
———-
தலைவன் தலைவியின் நோக்கினாலாய வருத்தம் கூறுதல் –
உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே. 96–
உண்டாட் டியலும் திருமால் –திரு விளையாடல்களை யுடைய ஸ்ரீ யபதி யுடைய –
அலகிலா விளையாட்டுடைய தலைவருடைய
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே
உருவை -திவ்ய மங்கள விக்ரஹங்களை
உயர்த்து-மோக்ஷ சாதனம் என்று வெளியிட்டு அருளி
உலகைத் தொண்டாட்டிய -கைங்கர்யங்களிலே உலகோரை மூட்ட
வந்து தோன்றிய தோன்றல் -திரு அவதரித்த ஆழ்வார்
துறைக் குருகூர்-திருச்சங்கு அணித் துறையிலே
நண்டாட்டிய நங்கை -திருக்கை வளையல்களை ஓசை எழுப்பி வரும் இவளது
நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம் திண்டாட்டிய கண்கள் போல் -திருக்கண்கள் போல் –
ஞான விசேஷங்களையே திருக்கண்கள் என்பரே
செய்யுமோ கயல் தீங்குகளே.-கயல் மீன்கள் வருந்தச் செய்ய வல்லவே –
———-
பிரிவு ஆற்றாது வருந்தும் தலைவி இரங்கல் –
தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே. 97–
இந்த நுண் பிறவி-இந்த எளிய பிறப்பாகிய
மாயைக் கிழியைக்-மாயா ரூபமான ஆடை எமது உயிரைப் போர்த்து உள்ளதை
கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே–திருவடிகளில் சேர்த்துக் கொள்ள வல்ல ஆழ்வார்
தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்-நெருப்பைப் பிளந்து ஒரு பிறைச்சந்திரனாக செய்தது அல்லாமல்
அன்றில் பனை-அன்றில் பறவைக்கு இடம் கொடுக்கும் பனை மரத்தை
பேயைக் கிழித்தென பிளவார்-பேயைக் கிழிப்பது போல் பிளந்தார் இல்லையே
உளவாம் நோயைக் கிழிக்கும் வகுளம் நல்கார் -பிரேம நோயைப் போக்கும் மகிழம் பூ மாலையையும் தர மாட்டார்
——–
இதுவும் அது –
வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு கட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே. 98–
அம் புலி முக -நீரில் பொருந்திய தாமரை திரு முகத்தில் உள்ள
வாயில் கரும்பின் -திருவாய் மொழியாகிய அம்ருதம் கொண்டு
வல் மறு பிறப்பைக்-விரைவிலே மறு பிறப்பை ஒழித்திட்ட
அம்புலி -அழகிய ஸிம்ஹம் போன்ற ஆழ்வார்
யோர் வகுளம் கொடார்- அத்விதீயமான மகிழம் பூ கொடுக்க மாட்டார்
கொடுங்கோகு உகட்டிச்-கொடுமையான முறை கேடு தலைக்கு ஏறி -அக்கிரமம் விஞ்சி
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது –முள்ளம் பன்றி போல் எதிர்த்துப் பாய்வதாகிய
தாயென்றிங்கோர் இல்லம் புலியும்-வீட்டுப்புலியும்
இங்கு உண்டு -இவ்விடத்தில் என்னை வருத்திக் கொண்டு உள்ளது
இதற்கும் மேல்
கொல்லம் புலி மீள எழுகின்றதே–வானத்திலும் ஓர் அம்புலி என்னை வறுத்த மீள தோன்றுகிறது
சந்த்ர உதயம் அலாப தசையில் விவேகமும் பாதகமான படி –
———
எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே. 99–
புகழ் மெய்ப் புலவோர்-தத்வ ஞானிகள்
தொழுதியல் –வணங்கி அடியார்களாகி
நாயகன் -தலைவன் -ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை வழுதி நன்னாடன் –அக்னி கார்யம் விடாத நீர் வளம் மிக்க
திருக்குருகூரிலே திரு அவதரித்த ஆழ்வார் அருளிச் செய்த
திருவாய் மொழி எம் மனத்தனவே.–திருவாய் மொழியை மனத்திலே நிலை கொண்டு
ஆதலால்
எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் -பிரமன் எழுதிய ஆயுஸ்ஸூ காலமும்
அநாதி கால கர்மங்களும் அடியேனை பிறவிச் சூழலில் சிக்க வைக்க மாட்டாவே
ஏதமிழ் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாறே
இப்பத்து அரு வினை நீறு செய்யுமே
———
மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள் விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள். 100–
மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை-ஆகிய இவை எல்லாம்
நினையும் பதம் என -ஆழ்வாரை நினைக்கும் அது ஒன்றே ஆகும்
நின்ற பிரான் குருகூர் நிமலன்-ப்ரபந்ந ஜன கூடஸ்தராக நிற்கும் ஆழ்வார்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் -அஞ்ஞான அந்தகாரங்களைப் போக்கும் படியாகவும்
பொருள் விளங்கி-யதார்த்த தத்வ அர்த்தங்கள் விளங்கும் படியாகவும்
வினையும் திரி வுற்றன -கர்ம சமூகங்களும் அழியும் படியாகவும்
குற்றம் நீங்கின வேதங்கள்.-தெளியாத மறை நிலங்கையும் தெளியும் படியாகவும் அமைந்தனவே –
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மீலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேன மத அந்வயாநாம்
ஆத்யஸ்யன குல பதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –
உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இன் நீண் நிலத்தோர்
அறி தர நின்ற இராமானுசன்
———
மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே –
இது திரு நாமப்பாட்டு –
மார்க்க தர்ஸீ மஹ ரிஷி –
இப்பாடலைப் பாடினவர்களும் ஓதினவர்களும் ஆழ்வாரது
பொன்னடி பேற்றைப் பெறுவார் என்று பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –
—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply