Archive for July, 2021

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-6–காசும் கரை வுடை கூறைக்கும்–

July 31, 2021

நாவ காரியத்திலே (4-4 )
ப்ராப்ய அநு ரூபமான பக்தியோடே திரு நாம விசேஷங்களை ஓர் ஆச்சார்ய முகத்தால் அறிகை அன்றிக்கே
தம் தாமுடைய தர்ம வீர்ய ஞானத்தாலே பிறந்த வெளிச் சிறப்பு கொண்டு
திரு நாமங்களை ஒரு போகியாகச் சொல்லி நிர்ணயித்துப் பரிகணித்து ஊர்த்வ கதியிலே பர்வ க்ரமமாய்ப் போய்
ஒரு நிபுண ஆச்சார்யர் முகத்தாலே அடிமைத் தொழிலிலே திரு நாமங்களைச் சொல்லி மூளாத அளவே அன்றிக்கே
நின்ற நிலை தெரியாமல் நிற்க நிலை இன்றி ஏறின வழியே மீளுவாரைப் போல் அன்றிக்கே
ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் தன்னாலே ஏறி நிபுண ஆச்சார்யரைக் கிட்டி அடிமைத் தொழிலிலே மூண்டு மூண்டு
திரு நாம வாசி அறிதல்
உபதேச கம்ய ஞானத்தாலே இவர்களுடைய சரமத்தைப் பிரதமம் ஆக்கி
அடிமையாய்த் திரு நாமம் சொல்லுவாரையும் அடைவிலே அருளிச் செய்தார் –

இவ் வடைவிலே திரு நாமம் சொல்ல வல்லார்
செத்துப் போவதோர் போதை இப்போது இப்போது என்று நினைத்து
பக்தி பாரவஸ்யத்தாலும்
கைங்கர்யம் தேச கால அவஸ்தா ரூபமாகச் செய்யும் அடைவு அறிந்து செய்து போருமவர்கள்
சரீர அவசானத்திலே பெரும் பேற்றை ஆசை வாயிலே (4-5 ) அருளிச் செய்தார் –

இப்படி திரு நாமம் சொல்லும் அடைவு அறியாதவர்களும்
ஒரு வழியே அறிவிப்பதாகவும்
தம் அபிமானத்திலே சேர்ப்பதாகவும்
திரு உள்ளம் பற்றி அருளி

நெஞ்சு இளகி இருப்பாரும்
பாரதந்தர்யத்திலே ஒருபடிப்பட்டு இருப்பாரும் ஸ்த்ரீகள் ஆகையாலே
ந ஸ்த்ரீ ஸ்வாதந்தர்யம் அர்ஹதி -ஸ்திரீகளுக்கு ஒரு காலும் ஸ்வாதந்தர்யம் இல்லை

கன்யகையான போது மாதா பிதாக்கள் கீழ் நின்றும்
பின்பு பர்தாவின் கீழ் நின்றும்
பர்தா பாணி கிரஹண சமயத்தில் ப்ரதிஜ்ஜை குலைந்தாலும் தான் படி கடவாமல் நடந்தும்
அவன் தர்மத்தில் ஓருப்பட்ட போது தான் ஸஹ தர்ம ஸாரியுமாய்
அவனுடைய நியதி அநியதங்களைப் பாராமல் பாதி வ்ரத்தையாலே அத்யந்த பரதந்த்யையுமாய்
இவனுடைய வியோகத்தில் புத்ராதிகள் கீழ் ஒதுங்கியும்
அது இல்லையாகில் பின்னையும் மாதா பிதாக்கள் ஞாநி வர்க்க சம்பந்திகள்
இல்லையாகில் லோக அபவாதத்தின் கீழ் ஒதுங்கியும் போருகையாலே

பித்ராதிகளையும் காட்டில் மாத்ரு வர்க்கத்துக்கு புத்ராதிகளைத் திரு நாமம் சாத்தினால்
நிரய நிஸ்தாரகமான அநிஷ்ட நிவ்ருத்தி
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்-என்று
முற்பட இவர்களுக்குக் கண் அழிவு அற சித்திக்கும் என்று திரு நாம ப்ரபாவத்தை
இதர சம்பந்த ரஹிதமாக்கி வைதமாக அருளிச் செய்கிறார் –

—————–

ஆபாசமான பேர்களை நச்சி நீங்கள் பெற்ற பிள்ளைகளை இதரர் பேரிட்டு
நரகாத்மாவாய்ப் போகாதே
எல்லாரையும் பெற்றவர்களை பெற்றவன் பேர் இட்டால்
யம அவஸ்யதை தவிரும்
பின்னையும் ஊர்த்வ கதியைப் பிராபிக்கவுமாம்
என்று உபதேசிக்கிறார்

காசும் கரை வுடை கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்
ஆசையினால் அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள்
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமின்
நாயகன் நாரணன் தம் மன்னை நரகம் புகாள் – 4-6 -1-

பதவுரை

காசுக்கு–ஒரு காசுக்காகவும்
கறை உடை–(தலைப்புகளில் நல்ல) கறைகளை யுடைய
கூறைக்கும்–வஸ்திரத்துக்காகவும்
ஓர் கற்றைக்கும்–ஒரு கட்டுக் கற்றைக்காகவும் (உண்டான)
ஆசையினால்–ஆசையாலே
பேர்–(ஷூத்ர பேர் பிள்ளைகளுக்கு) இடுகிற
ஆதர்காள்–அறிவு கெட்டவர்களே!
நீங்கள்
கேசவன்–கேசவனென்னுந் திருநாமத்தை யுடையவனும்
நாயகன்–ஸர்வ சேஷியுமான
நாரணன்–நாராணனுடைய
பேர்–திரு நாமங்களை
இட்டு–(உங்கள் பிள்ளைகளுக்கு) இட்டு
தேனித்து இருமின்–மகிழ்ச்சி கொண்டிருங்கள்
(அப்படி நாமகரணஞ் செய்தால்)
தம் மன்னை–அப் பிள்ளைகளுடைய) தாய்மார்
நரகம் புகார்–துர்க் கதியை அடைய மாட்டார்கள்–
மாதாவைச் சொன்னது பிதாவுக்கு உப லக்ஷணம்

காசும் கரை வுடை கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்
ஆசையினால்
நாலு இரண்டு காசு கிடைக்கும் என்றும்
ஒரு தலைக்கு அறைச்சீரை கிடைக்கும் என்றும்
அங்கே பின்னையும்
ஒரு கோட்டை நெல் -ஒரு கட்டுக் கற்றை -ஒரு பொய்த்தரவும் கிடைக்கும் என்றும் ஸ்ரத்தையாலே

அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள்
அங்கு அவத்தப் பேர்-என்று ஸமஸ்த பதமான போது
மிகவும் பொல்லாப் பேர் அளவில் நிற்கும்

அங்கு என்றும்
அவத்தம் என்றும் பதமான போது
அங்கு என்று வஸ்துக்கள் விலகிப் போம் இடங்களிலே வசிக்குமவர்களைக் காட்டும்
அவத்தம் என்று அங்கு உள்ளவர்களும் பேர் சொல்லக் கூசும் படியான துர் நாமங்களைக் காட்டும்

ஆதர்காள்
அறிவு கேடர்காள்

கேசவன் பேரிட்டு
சர்வ காரண பூதனாய்
கிலேச நாசகனாய் இருக்கிறவனுடைய
பேரிட்டு -கேசவா -என்று அழைத்து

(ஸ்வரூப -ப்ரஹ்மாதிகளுக்கும் இடம் கொடுத்து
கேச பாசம் ரூபம்
குணம் -கிலேச நாசனம்
சேஷ்டிதம் விபவம் கேசி ஹந்த
நான்கையும் கேசவா காட்டுமே )

நீங்கள் தேனித்து இருமின்
நீங்கள் அப் பிள்ளை அளவிலே ஸ்நேஹித்து
ஸந்தோஷத்தோடே இருங்கோள்
தேனித்து -ஸ்நேஹித்து

நாயகன்
நாயகன் -சர்வ சேஷீ

நாரணன்
ஸமஸ்த கல்யாண குணாத்மகன்

தம் மன்னை
தம் மன்னை-தன் அன்னை

நரகம் புகாள்
பிள்ளைக்கு நாராயணன் என்று பேரானால் அவனைப் பெற்றவளுக்கு எங்கனே யம வஸ்யதை கூடுவது
பிள்ளை பெற்று நாராயணன் என்று பேர் இட்டது வஸ்யதை கூடுகைக்கோ

அன்றிக்கே
தம்மன்னை என்று
நாராயணனுடைய மனையில் உள்ளார் நாராயணன் என்று அழைக்கையாலே
இப்படி அழைத்தவர்கள் எல்லாருக்கும் யம வஸ்யதை இல்லை
ஆகையால் நரகம் புகார்கள் என்று சொல்லி விரித்ததாகவுமாம் -(புகார்கள் )

கேசவன் என்றது
நாராயணன் அளவில் பர்யவசிக்கும் பேர் இடும் மாதர்கள் என்னவுமாம்
நங்கைகாள் -என்னுமா போலே –

———–

அங்கு ஒரு கூறை யரைக்கு உடுப்பதனாசையால்
மங்கிய மானிட சாதிப் பேரிடும் ஆதர்காள்
செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்தக்கால்
நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6 -2-

பதவுரை

அங்கு–அந்த நீசரிடத்தில்
ஒரு கூறை–ஒரு வஸ்த்ரத்தைப் (பெற்று)
அரைக்கு உடுப்பதன் ஆசையால்–அரையில் உடுக்க வேணுமென்னு மாசையினால்
மங்கிய–கெட்டுக் கிடக்கிற
மானிட சாதி பேர் இடும்–மநுஷ்ய ஜாதியிற் பிறந்தவர்களுடைய பெயரை இடுகிற
ஆதர்காள்–குருடர்களே!
நங்கைகாள்–சொல்லிற்றை அறிய வல்ல மதியினால் நிறைந்தவர்களே!
(நீங்கள் உங்கள் பிள்ளையை)
செம் கண் நெடு மால்–புண்டரீகரக்ஷனான ஸர்வேச்வரனே!
சிரீதரா–ஸ்ரீதரனே!
அழைத்தக்கால்–அழைத்தீர்களாகில்
நாரணன்–நாராயண நாமத்தைப் பூண்ட அப் பிள்ளையினுடைய
தம்மன்னை–தாயானவள்
நரகம் புகார்–

அங்கு ஒரு கூறை யரைக்கு உடுப்பதனாசையால்
அங்கு என்று
ஸூ தூரஸ்தர் வர்த்திக்கிற தேசத்தைக் காட்டுகிறது

ஒரு கூறை என்று
ஹேயமாய்
கொள் கொடைக்கு ஆற்றிப் போராது-மாற்றப் போகாது – என்கிறது
ஓன்று என்று
மேல் புடைவையும் தலைச் சீரையும் புறம்பே தேட வேணும் என்கிறது

ஆசையால்
இவனுக்கு ஆசையும்
அவனுக்கு நிராசையுமாய் இறே இருப்பது

மங்கிய மானிட சாதிப் பேரிடும் ஆதர்காள்
ஹேயராய்ச் செத்துப் போனவர்களுடைய
உங்களை ஆண்டார்
அப்பாண்டார்
ஜளி பிளி -ஐளி பிளி-என்றால் போலே சில பேர்களை இட்டுச் சென்றால் ஆகிலும் சில தருமோ என்று பேர் இடும் அல்பர்கள் –

செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்தக்கால்
இப்படி பேர் இட்டு அழைத்தக்கால்

நங்கைகாள்
ஸ்த்ரீ பிராயம் இதரஞ் ஜகத்
நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர் -என்று எல்லாரையும் ஸ்த்ரீகளாகச் சொல்லுகையாலே
நங்கைகாள் என்கிறார்
(அவன் ஒருவனே புருஷோத்தமன் -மணி வல்லி பேச்சு வந்தேறி இல்லையே )

நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
நாராயணன் தாயார் நரகம் புகாள்-

————

உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து
எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேர் இட்டீர்
பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே
நச்சுமின் நாரணன் நம் அன்னை நரகம் புகாள் – 4-6- 3-

பதவுரை

எச்சம் பொலிந்தீர்காள்–ஸந்தாநத்தினால் விளக்குமவர்களே!
உச்சியில்–உச்சியில் (தடவத் தக்க)
எண்ணெயும்–
சுட்டியும்–(நெற்றியில் தொங்கும்படி கட்டத்தக்க) சுட்டியையும்
வளையும்–(கையில் அணியத் தக்க) வளையையும்
உகந்து–விரும்பி
என் செய்வான் ஏதுக்காக
பிறர்–(எம்பெருமானை யொழிந்த) மற்றவர்களுடைய
பேர்–பெயர்களை
இட்டீர்–(உங்கள் பிள்ளைகளுக்கு) இட்டீர்கள்?
பிச்சை புக்க ஆகிலும்–பிச்சை யெடுத்து ஜீவித்தாலும்
எம்பிரான் திரு நாமமே–எம்பெருமானுடைய திரு நாமத்தையே
நச்சுமின்–விரும்பி இடுங்கள்; (அப்படி இட்டால்)
நாரணன் –இத்யாதி பூர்வவத்–

உச்சியில் எண்ணெயும்
பேர் இட்டாலும் பிள்ளை தலைக்குத் துளி எண்ணெய் கிடைக்கும் அத்தனை அல்லது
(பேர் )இட்டவர்கள் தலைக்குக் கிடையாது இறே

சுட்டியும் வளையும் உகந்து
உங்கள் உகப்பு இறே

எச்சம் பொலிந்தீர்காள்
எச்சம் பிள்ளை
பிள்ளை பெற்று இருவர் பலராய் பொலிந்தீர்காள்
நாஸி -ஆத்மாவை புத்ர நாமாஸி –

என் செய்வான் பிறர் பேர் இட்டீர்
1-இந்தப் பிள்ளையை முழுக்க ரஷித்துத் தலைக்கட்ட வல்லர் என்றோ
2-உங்கள் மிடி -வறுமை -தீர்க்க வல்லர் என்றோ
3-அவர்கள் தங்கள் மிடி-வறுமை – தீர்ந்து நின்றது கண்டோ
4-லோக அபவாதம் தீரும் என்றோ
5-நிரய நிஸ்தாரகர் என்றோ

பிறர் என்று
உறவு அறுத்து வைத்தார் இறே

பிச்சை புக்காகிலும்
ஒரு ப்ராஹ்மணன் தன் பிள்ளையைப் பேர் இடுகின்ற ஸமயத்தில்
ஐஸ்வர்யம் தர வல்லான் ஒருவன் பேர் இட வேணும் என்ன
வைஸ்ரவணன் பேரை இடு என்ற அளவிலே
ஜளி பிளி -என்று இட்டு அழைத்து உஜ்ஜீவிப்பதில்
நாராயணன் என்கிற திரு நாமத்தைச் சாத்தி பிக்ஷை புக்கு ஜீவிக்கிறேன் என்றான் என்று
( நாலூர் ) பிள்ளை அருளிச் செய்வர் என்று ( நாலூர் )ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்

எம்பிரான் திரு நாமமே நச்சுமின்
இதரர் பேர் இடுவதில் எனக்கு ஸ்வாமியானவன் திரு நாமத்தை பக்தியோடே சாத்தி அழையுங்கோள்
வர்ணாஸ்ரம தர்மம் வைதமானவோ பாதி
இதுவும் வைதமாக இடுங்கோள்

ஆகிலும் என்பான் என் என்னில்
வர்ணாஸ்ரம தர்மிகளுக்கு
ஜன்மாந்தர ஸித்தமான புண்ய பாப பலங்களை புஜிக்க விதித்தவோ பாதி
உங்களுக்கும் அந் நேர் வரும்

அது போராதாகில் பிச்சை எடுத்தாவது எம்பிரான் திரு நாமமே நச்சுமின்
(பிராணன் பரித்யஜ்ய அரியை காக்க வேண்டும்
பிராணனை விட்டாவது இல்லாமல் விட்டே காக்க வேண்டும்
அதே போல் பிச்சை எடுத்து அவன் பெயரை வைக்க விதியாகவே கொள்ள வேண்டும் )

————–

மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை
மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
வானுடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நானுடை நாரணன் நம் அன்னை நரகம் புகாள் – 4-6- 4-

பதவுரை

மானிட சாதியில்–மநுஷ்ய ஜாதியில்
தோன்றிற்று–உண்டான
ஓர் மானிட சாதியை–ஒரு மநுஷ்ய ஜந்துவை
மானிட சாதியின் பேர் இட்டால்–(கர்ம பலன்களை அநுபவிக்கப் பிறந்த) மநுஷ்ய சாதியர்க்கு உரிய பெயரை இட்டழைத்தால்
மறுமைக்கு இல்லை–அத்ருஷ்ட பலம் (மோஷம்) பெறுகைக்கு யாதொரு வழியுமில்லையாம்,
வான் உடை–பரம பதத்தை (விபூதியாக) உடைய
மாதவா–ஸ்ரீயபதியே
கோவிந்தா–கோவிந்தனே!
என்று அழைத்தக்கால்–என்று (எம்பெருமான் திருநாமத்தை யிட்டு) அழைத்தால்,
நானுடை நாராணன்–எனக்கு நாதனான நாராயணனுடைய திருநாமத்தைப் பூண்ட அப் பிள்ளையினுடைய
தம்மன்னை நரகம் புகார்–

மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை
மனுஷ்ய ஜென்மத்தில் பிறந்த
மனுஷ்ய ஜென்மத்தை

மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
மனுஷ்ய ஜென்மத்தின் பேர் இட்டால்
மறுமைக்கு என்ன பிரயோஜனம் உண்டு
வருகிற ஜன்மத்துக்கு என்ன பிரயோஜனம் உண்டாம் –

வானுடை மாதவா
நித்ய விபூதியை யுடைய ஸ்ரீ மானே

கோவிந்தா என்று அழைத்தக்கால்
லீலா விபூதியை விரும்பி ரக்ஷிக்கிற
கோவிந்தா என்று அழைத்தக்கால்

நானுடை நாரணன் நம் அன்னை நரகம் புகாள்
அஹம் அர்த்தோ நசே தாத்மா -என்கிறபடியே
அஹம் அர்த்தத்தை யுடையனான நாராயணன் என்று
பரம சேதனன் பேர் இட்ட சேதனனைக் காட்டுகிறது

(ஸ்ரீ பாஷ்யம்
அஹம் அர்த்தம் -ஆத்மா
அந்தக்கரணம் அத்வைதி பக்ஷம்
அப்படி இருந்தால் ப்ரத்யக்த்வம் வராதே
தனக்குத் தானே ஒளி விடும் தன்மையே வராதே
பராக் ப்ருத்யக் வேறு படுத்த வேண்டுமே
ஞானமும் ஆத்மா ஞானம் உடையவனும் ஆத்மா
என்னை யுடையவன் ஆத்மா )

நம் அன்னை நரகம் புகாள்
தம் அன்னை நரகம் புகாள்-

————

மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை
மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4 -6-5 –

பதவுரை

மலம் உடை–மலத்தை யுடையதும்
ஊத்தையில்–ஹேயமுமான சரீரத்தில் நின்றும்
தோன்றிற்று ஓர்–தோன்றினதொரு
மலம் ஊத்தையை–(தானும் அப்படியே) மலமுடையதும் ஹேயமுமான சரீரத்தோடே கூடி யிருக்கிற ஐந்துவை
அதனால் இம்மையிலே சில அல்ப பலன் கிடைத்தாலும்,
மறுமைக்கு–அத்ருஷ்ட பலத்துக்கு
இல்லை–ஒருவழியு மில்லையாம்:
குலம் உடை–நற்குலத்திற் பிறந்த
கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக் கால்–கோவிந்தனே! கோவிந்தனே! என்று (பகவந் நாமத்தை யிட்டு) அழைத்தால்.
மலம் உடை–(கீழ்ச் சொன்ன படியே) மலத்தை யுடையதும்
ஸத்தையின் ஹேயமுமான சரீரத்தையுடைய மற்றொரு ஐந்துவினுடைய
பேர்–பெயரை
இட்டால்–இட்டு அழைத்தால்,
நலம் உடை–(தன் திருநாமத்தைச் சொன்னவர்களை வாழ்விக்கையாகிற) நன்மையையுடைய
நாரணன்–எம்பெருமானுடைய திருநாமம் பூண்ட அப்பிள்ளயினுடைய
தம்மன்னை நரகம் புகார்–

மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை
மலத்தை யுடைத்தான மலத்திலே தோன்றின மல ஊத்தையை

மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
மலமுடை மலத்தின் பேர் இட்டால்
வருகிற ஜன்மத்துக்கு என்ன பிரயோஜனம் உண்டு

குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
கோப குலத்திலே பிறந்து
கோவிந்த அபிஷேகம் செய்த
கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்

ராஜ குலத்தில் அவதரிக்கிலும் கோப குலம் இறே பிரதானம் ஆவது
கறையினார் -என்னக் கடவது இறே

நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
கோவிந்தன் பேர் இட்ட
கோவிந்தன் பக்கலிலே ஸ்நேஹத்தை யுடையளான
அந்த
நாரணன் தம் அன்னை நரகம் புகாள்-

————-

நாடும் நகரும் அறிய நாடு மானிடப் பேர் இட்டு
கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்காதே
சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று
நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4- 6-6 –

பதவுரை

நாடும்–குக்ராமங்களிலுள்ள ஸாமாந்ய ஜ்ஞானிகளும்
அறிய–(இவன் உயர்ந்தவன்’ என்று) அறியும்படி,
நாடு மானிடர் பேர் இட்டு–(ஷுத்ர) மனுஷ்யர்கள் பெயரை விட்டு
கூடி–அவர்களோடு கூடி
அழுங்கி–ஒளி மழுங்கி
குழியில் வீழ்ந்து–(அவர்கள் விழுந்த) குழியிலே விழுந்து
வழுக்காதே–தவறிப் போகாமல்,
சாடு–‘சகடாஸுரன்
இற–முறியும்படி
பாய்ந்த–உதைத்தருளின
தலைவா–பெரியோனே!’ (என்றும்)
தாமோதரா என்று–‘தாமோதரனே! என்றும்
நாடுமின்–வாழ்த்திக் கொண்டு திரியுங்கள்;
(இங்ஙனேயாகில்,)
நாரணன் தம்மன்னை நரகம் புகாள்-

நாடும் நகரும் அறிய நாடு மானிடப் பேர் இட்டு
நாடு என்று அஞ்ஞரை
நகர் என்று நாகரீகராய் ஞாதாக்களைக் காட்டும்
இவர்கள் எல்லாரும் அசாரம் என்று அறிந்து நெகிழச் செய்தேயும்
அத்தை மதியாமை ஹேய மனுஷ்யர் பேர் இட்டு

கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்காதே
அவர்களோடே கூடி
அவர்கள் பக்கலிலே கால் தாழ்ந்து
அவர்கள் விழுந்த குழியில் விழுந்து
அவர்கள் அறிவு கற்பிக்கும் படி தவற வர்த்தியாதே

சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று
பிள்ளையைப் பேர் இட்டு
இதுவே நமக்கு ஊற்றம் என்று

நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

————

மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேர் இட்டு அங்கு
எண்ணம் ஓன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள்
கண்ணுக்கு இனிய கரு முகில் வண்ணன் நாமமே
நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6-7-

பதவுரை

மண்ணில் பிறந்து–மண்ணில் நின்று முண்டாய்
மண் ஆகும்–பின்பு மண்ணாய் விடுகிற
மானிடர்–அல்ப மநுஷர்களுடைய
பேர் இட்டு–பெயரை (த் தங்கள் பிள்ளைகளுக்கு) இட்டு
அங்கு–ஆமுஷ்மிக பலத்தில்
எண்ணம் ஒன்று இன்றி இருக்கும்–ஒரு விசாரமற்றிருக்கிற
ஏழை மனிசர்காள்–அறிவற்ற மனுஷ்யர்களை!
கண்ணுக்கு–கண்ணால் காண்கைக்கு
இனிய –போக்யனாயும்
கரு முகில்–காள மேகம் போன்ற
கண்ணன்–நிறத்தை யுடைவனாயுமுள்ள எம்பெருமானுடைய
நாமமே–திரு நாமத்தையே
நண்ணுமின் நாரணன்–விரும்பி யிடுங்கள்
நாரணன் தம்மன்னை நரகம் புகாள்–

மண்ணில் பிறந்து
தேஹ உபாதானமான பஞ்ச பூதங்களிலும்
பிராஸுர்யமாகத் தோற்றுவது பூமி அம்சம் ஆகையால்
சாரீரத்தை மண் என்கிறது –
அதிலே
பார்த்திவமான ரேதஸ்ஸூ மூலமாகப் பிறக்கையாலே மண்ணில் பிறந்தேன் என்கிறது

மண்ணாகும்
சரீர அவசானத்திலே பின்னையும் மண்ணாகவே போகிற

மானிடப் பேர் இட்டு
அம் மானிடப் பேர் இட்டு

அங்கு எண்ணம் ஓன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள்
அவர்கள் இடத்திலே கூடி
த்ருஷ்ட அத்ருஷ்டங்களில் விளைவது ஒன்றும் அறியாமல்
நிர்பரராய் இருக்கும் சபல பாவத்தையும் உடைய மநுஷ்யர்காள்

கண்ணுக்கு இனிய கரு முகில் வண்ணன் நாமமே நண்ணுமின்
காண்கை தானே ப்ரயோஜனமாய் இருக்கிறவனுடைய திரு நாமத்தை உங்கள் பிள்ளைகளுக்கு இட்டு
உங்கள் பிள்ளையைச் சேர்ந்து போருங்கோள் –

நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

————-

நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால்
நம்பும் பிம்பும் எல்லா நாலு நாளில் அழுங்கிப் போம்
செம் பெரும் தாமரைக் கண்ணன் பேரிட்டு அழைத்தக்கால்
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – 4-6- 8-

பதவுரை

நம்பி பிம்பி என்று–நம்பி என்றும் பிம்பி என்றும்
நாட்டு மானிடப் பேரிட்டால்–க்ஷுத்ர மனுஷ்யர்களுடைய பெயரை
(உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்) இட்டால்
நம்பும் பின்பும் எல்லாம்–‘நம்பி’ ‘பிம்பி’ என்னும் பெயர்களுக்கு அடியான முதன்மை யெல்லாம்
நாலு நாளில்–நாலு நாளைக்குள்
அழுங்கிப்போம் அழிந்துபோம்;
செம் பெருந் தாமரை–சிவந்தும் பெருத்துமிருக்கிற தாமரைப் பூப் போன்ற
கண்ணன்–திருக் கண்களை யுடைய எம்பெருமானுடைய
பேர் இட்டு–திரு நாமத்தை இட்டு
அழைத்தக்கால்–அழைத்தால்
நம்பிகாள்–(அறிவினால்) குறைவற்றவர்களே!
நாரணன் தம்மன்னை நரகம் புகாள்–

நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால்
ஐஸ்வர்யத்தால் பூரணமாய் இருக்கிறவர்கள் பேரை எங்கள் பிள்ளைக்கு இட்டு
நாங்கள் அவர்கள் பக்கலிலே ஜீவனத்தை வாங்கி ஜீவித்தால் என்ன பொல்லாங்கு உண்டு
நரக ஹேதுக்களான கார்யம் செய்யில் அன்றோ நரகம் வருவது என்று சம்சாரிகள் அபிப்ராயமாக

நான் நிஷேதித்த பின்பு செய்வி கோளாகில் அநர்த்த பரம்பரைகள் ஆகும் என்ன

நீர் நிஷேதிப்பதற்கு முன்னே நாங்கள் அறியாத தனத்தால் இட்ட பேரை
என் செய்வான் பிறர் பேர் இட்டீர் -என்று நிஷேதித்தால்
நாங்கள் ஜீவிக்கும் படி என்
இனிமேல் தவிர்க்கும் அத்தனை அன்றோ -என்ன

அது ஒண்ணாது –
பிக்ஷை புக்காகிலும் ஜீவியுங்கோள்
இட்ட பேரை மாற்றி எம்பெருமான் திரு நாமத்தை இடுவதாக ஸ்ரத்தை பண்ணுங்கோள் -என்ன

இது தன்னையும் மாற்ற வேணும் என்றால் செய்வது என் என்ன

நிஷேத அபாவ ஸ்திதியில் அவதாரணையை பிரயோகித்து
தேவ தத்த நாமம் -ஆஸ்ரம பேதங்களாலும்
தீஷா பேதங்களாலும்
ஐஸ்வர்ய பேதங்களாலும்
ஜாதி வியக்தி நாமங்கள் பேதித்தமையைக் காட்டி
அவதாரணையைத் தெளிவித்தவர் ஆகையால்
நம்பி பிம்பி என்று நிஷேதிக்கிறார் –

(சர்வம் வாக்கியம் ஸாவதாரண்யம்
எம் அன்னை தளிகை பண்ணும் உள்ளில் இருக்கிறாள் என்றால் அங்கேயே இருக்கிறாள் சொல் இல்லா விட்டாலும்
தளிகை பண்ணும் உள்ளில் இருப்பது அவள் வரவேற்பு அறையில் இருக்கிறாள் என்ற மாற்ற கருத்து வரும் வரை
அதே போல் இங்கும் செந்தாமரைக் கண்ணன் பேரையே இட்டு என்றே இங்கும் கொள்ள வேண்டும்
சுருதி தேவ தத்தன் என்றே பல இடங்களிலும் உண்டே
ஆஸ்ரமம் மாற பேர் மாறும்
நாமும் இராமானுஜ தாசன் பேர் மாற்றிக் கொள்கிறோம்
தீஷா எஜமானனுக்கு பெயர் மாறுமே
பெரிய பண்ணையார் சின்ன பண்ணையார் ஐஸ்வர்ய பேதத்தாலும் மாறும்
ஆகவே இங்கும் பெயரை மாற்றியே ஆக வேண்டும் )

நம்பும் பிம்பும் எல்லா நாலு நாளில் அழுங்கிப் போம்
பிம்புக்கு ஒரு பொருள் உண்டாய்த்தாகில் ஆய்த்து நம்பிக்கு ஒரு பொருள் உண்டாவது
உங்கள் அபிப்ராயத்தால் பிம்புக்கு ஒரு பொருள் உண்டாகிலும்
யோக ரூடிப் பேரும் நீங்கள் நினைத்த நம்பில் செல்லாது
(பங்க ஜ-சேற்றில் பிறந்த -தாமரை ரூடி யவ்வ்கிகம் நாய்க்குடையும் சேற்றிலே பிறந்ததே )
பிரபஞ்ச அவலம்ப நியாயத்தாலே சென்றாலும் அந் நியாயம் தன்னாலே நாலு நாளிலே அது நழுவிப் போகும்
நாட்டு மானிடம் -என்னும் அளவே நிலை நிற்பது
நாட்டு மானிடத்தை நம்பி பிம்பி என்னுமிவை நிலை நில்லாது இடாதே கொள்ளுங்கோள் –

செம் பெரும் தாமரைக் கண்ணன்
தாமரை போராமையாலே
செம் பெரும் -கண்ணன் என்கிறார்

பேரிட்டு அழைத்தக்கால்
இப்படிக்கு ஒத்த வனுடைய திரு நாமத்தைச் சாத்தி அழையுங்கோள்

அழைத்தக்கால்
இத்தை நிஷேதிக்க வல்லார் ஒருவரும் இல்லை என்ற அளவிலே

இங்கன் எல்லாத்தையும் நிஷேதிக்கிறது என்
மாதா பிதாக்கள் இட்ட பேரை வைத்தால் யம வஸ்யத்தை வருமோ -என்ன
வைதிக மார்க்கத்தில் கர்ம ஸ்ரேஷ்டரானவர்கள் வந்து ப்ரத்ய வஸ்திதராய்
மாத்ரு தேவோ பவ -பித்ரு தேவோ பவ -என்னா நின்றதீ என்ன

நம்பிகாள்
என்று நீங்கள் பூர்ணர் என்கிறார்
அதுக்கடி விஹித கர்மம் ஜென்மத்தில் மூட்டும்
ஜன்மத்துக்கு உஜ்ஜீவனம் பூர்வ பூர்வ ஜென்மங்களில் ஆர்ஜனத்திலேயாய் இருக்கும்
அத்தைப் பற்றி வரும் வாசனையாலே ஆர்ஜனம் கூடுதல்
பிரரோசக வாக்யங்களாலே ஆர்ஜனம் கூடுதல் செய்தால்
யம வஸ்யதை வரவும் கூடும் இறே

அவ்வளவே அன்றிக்கே
நான்ய தஸ்தீதி வாதிந (கீதை -2)-என்று இறே நீங்கள் தான் இருப்பது
மேலில் நிஷேதம் பாராமே —

நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

————

ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள்
மூத்திரப் பிள்ளையை என் முகில் வண்ணன் பேரிட்டு
கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ
நாத்தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4- 6-9 –

பதவுரை

ஊத்தை குழியில் அமுதம் பாய்வது போல்–அசுத்தமானதொரு குழியிலே அம்ருதம் பாய்ந்தாற்போலே
உங்கள் மூத்திரப் பிள்ளையை–உங்களுடைய அசுத்தனான பிள்ளைக்கு
என் முகில் வண்ணன் பேர் இட்டு–எனக்குத் தலைவனும் காளமேகம் போன்ற திரு நிறத்தையுடையனுமான
எம்பெருமானுடைய திருநாமத்தை நாமகரணம் பண்ணி
(அதனால் அப்போதே நீங்கள் எம்பெருமானுடைய பரிக்ரஹமாகப் பெற்று)
கோத்து குழைத்து–(அவ் வெம்பெருமானோடு) கூடி கலந்து
(அதனாலுண்டாகும் ஆநந்த்த்துக்குப் போக்கு வீடாக)
குணாலம் ஆடி–குணாலைக் கூத்தாடிக் கொண்டு
திரிமின்–திரியுங்கள்
(இப்படியாகில்)
நாத்தகு நாரணன்–நாவினால் துதிக்கத் தக்க நாரா யணனுடைய பெயரைப் பூண்ட அப்பிள்ளையினுடைய
தம்மன்னை நரகம் புகாள்–

ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல்
துர் கந்த நிஷித்தச் சேறாய் இருபத்தொரு அங்கணக் குழியிலே
ஸூ கந்தமாய்
ஸூத்தமாய்
போக்யமாய்
தாவள்யமாய்
நிரய நிஸ்தாரகமாய்
மண ரஹிதமாய்ப்
ப்ராப்தமாய்
ஸகல லோக ஸங்க்ரஹமாய்
இருப்பதொரு அம்ருதம்
அதிலே பாய்ந்தால் போலே இருப்பது ஓன்று இறே

உங்கள் மூத்திரப் பிள்ளையை
உங்கள் ஸூக்ல ஸோணித பரிணாமமாய்
அஸூத்தாஸ் பதமான கர்ப்ப கோளகையில் நின்றும்
ஜல நிர் கமந யோநி ஜாதமான பிள்ளையை

என் முகில் வண்ணன் பேரிட்டு
என்னுடையவன் என்னும்படி தன்னை எனக்கு அமைத்து வைத்து
என்னாலே தனக்கு ரக்ஷையாம் படி இருக்கிற
ஸ்ரீ மன் நாராயணன் ஆகிற முகில் வண்ணன் திரு நாமத்தைச் சாத்தி

கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ –
எங்கள் குழுவினால் புகுதல் ஒட்டோம் -என்றது
எங்கள் அபிமானத்தில் புகுராமையால் அன்றோ

எங்களை அபிமானித்தவன் திரு நாமத்தைச் சாத்தின நீங்கள்
எங்களோடு பகவன் திரு நாமம் சொல்லும்படி இயல் கோத்துக்
குழைத்து
உங்கள் நெஞ்சை எங்களோடு கூட்டிக்
கோர்வை விடாமல் குணலைக் கூத்தாடி
எங்களை யுடையவர்களோடே திரியுங்கோள்

நாத் தகும்
உங்கள் நா உங்களுக்குத் தகுதியாம்

அந்ய சேஷத்வமும் துர் போஜனமும் தவிர்ந்தால்
பகவச் சேஷத்வமும் தீர்த்த ப்ரஸாதங்கள் ஜீவனம் ஆகையும் கூடும்

நாப் படைத்த பிரயோஜனமும் பெற்றி கோளாவுதி கோள்

நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

———-

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

சீரணி மால் திரு நாமமே இடத் தேற்றிய
வீரணி தொல் புகழ் விட்டு சித்தன் விரித்த
ஓரணி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் வல்லவர்
பேரணி வைகுந்தத்து என்றும் பேணி இருப்பரே – 4-6- 10-

பதவுரை

சீர்–கல்யாண குணங்களை
அணி–ஆபரணமாக வுடையவனும்
மால்–(அடியார் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான எம்பெருமானுடைய
திரு நாமமே–திருநாமத்தையே
இட–(தம் பிள்ளைகளுக்கு இடும்படி)
தேற்றிய–உபதேசித்தருளினவரும்
வீரம் அணி–(இந்திரியங்களை வெல்லுகை யாகிற) வீரப் பாட்டை ஆபரணமாக வுடையவரும்
தொல் புகழ்–சாச்வதமான கீர்த்தியை யுடையவருமான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
விரித்த–விரிவாக அருளிச் செய்தமையும்
ஓர் அணி–(கற்பார்க்கு) ஒப்பற்ற ஆபரணம் போன்றவையும்
ஒண் தமிழ்–அழகிய தமிழ்ப் பாஷை யுமாயிருந்துள்ள
ஒன்பதோடு ஒன்றும்–இப் பத்துப் பாட்டுக்களையும்
ஒன்பதில் விரோதி நிரஸனம் -ஒன்றில் இஷ்ட பிராப்தி
வல்லவர்–ஓத வல்லவர்
பேர் அணி–பெரியதும் அழகியதுமான
வைகுந்தத்து–ஸ்ரீவைகுண்டத்தில்
என்றும்–எந்நாளும்
பேரணி இருப்பர்–(எம்பெருமானுக்கு) மங்களாசாசனம் பண்ணிக் கொண்டு வாழப் பெறுவர்–

சீரணி மால் திரு நாமமே இடத் தேற்றிய
சீரணி
குணங்களை ஆபரணமாக யுடையவன் என்னுதல்
குணங்கள் புறம்பு ஓர் வியக்தியில் கிடவாமையாலே
கல்யாண குணங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமானவன் என்னுதல்

மால்
ஆஸ்ரித ரக்ஷணத்தில் வந்தால்
வ்யாமோஹத்தை யுடையவன்

திரு நாமமே இடத் தேற்றிய
இதர நாமங்களை மாற்றி
நாரணன் தன் நாமங்களையே தாம் தாம் பெற்ற பிள்ளைகளுக்குச் சாத்தும் படியாகப்
பல ஹேதுக்களாலும் தெரிவித்த

வீரணி தொல் புகழ் விட்டு சித்தன்
வீரப்பாட்டை ஆபரணமாக யுடையருமாய்
ஸூரிகளைப் போலே அநாதி ஸித்த மங்களா ஸாஸனப் புகழையும்
விஷ்ணு சித்தர் என்கிற திரு நாமத்தையும் யுடைய ஆழ்வார்

விரித்த
பகவத் அனுபவ பிரகாரத்தைத் திருப்பல்லாண்டு தொடங்கி
இவ்வளவும்
அந்யாபதேசத்தாலும்
ஸ்வா பதேசத்தாலும்
ஜகத்தில் உள்ளார்க்கு எல்லாம்
அத்விதீய ஆபரணமாக

ஓரணி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் வல்லவர்
ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றாக விரித்து உரைத்த இப் பத்துப் பாட்டையும்
ஸ அபிப்ராயமாக வல்லார்

அதாவது
மலை எடுக்கவும் –
கடலைச் சிறாங்கிக்கவும் வல்லார் என்கிற அளவேயும் அன்று இறே
இவர் திரு உள்ளத்தில் கருத்து அறிகை

அதாவது
இப் பிள்ளைகளுக்கு இட்ட திரு நாமம் விசேஷண பர்யந்தமோ விசேஷ பர்யந்தமோ என்று விகல்ப்பித்தால்
அசாதாரண நாமம் விசேஷணத்தில் நில்லாதாப் போலே
அசித் விசிஷ்ட ஜீவாந்தர்யாமி அளவிலும் நில்லாது

இது அறியும் போது
ஆச்சார்ய சேவையாலே வந்த வ்யுத்பத்தி அனுஷ்டான அபிமானங்களும் வேணும்

இவற்றில்
உத்தேஸ்யமுமாய்
ஸூலபமுமாயும் இறே இருப்பது இவர் அபி மானம்
இத்தை இறே வல்லார் என்கிறது

இப் பிரதிபத்தி யுடையவன் இட்டது இறே திரு நாமம் ஆவதும்
இத் திரு நாமமே யாகிலும் புத்ராதிகள் இடை ஈடனானால் அத் திரு நாமம் ஆகாது இறே

பேரணி வைகுந்தத்து என்றும் பேணி இருப்பரே
அவனுக்கு அசாதாரணமான திரு நாமங்களைத் தங்களுக்கு ஆபரணமாகக் கொண்டு
ஸூரிகள் வர்த்திக்கிற தேசத்திலே என்றும் விரும்பி மங்களா ஸாஸன பரராய் வர்த்திக்கப் பெறுவர்

வீரணி -என்றது ஜிதேந்த்ரியத்வம்
அதாவது
பிராகிருத விஷயம் போலே அப்ராக்ருத விஷய ஸுந்தர்யத்தையும் ஜெயிக்க வல்லராய் இருக்கை

தம் தாம் பிள்ளைகளை ஆழ்வார்கள் அருளிச் செய்யப் பெற்றோம் என்கிற
அபிமானத்தோடே திரு நாமம் சாத்தினவர்கள் –
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா -என்றதை
விஸ்வஸித்து
நரக பீதி தவிர்ந்த அளவன்றிக்கே
இவர் அபிமானத்தாலே பரமபதமும் பெறுவர்கள் என்கிறது –

இது அன்றோ மேல் படி –
ஆச்சார்ய கைங்கர்யத்தில் ஈடுபட இதுவும் வேண்டுமே
அவனையும் தாண்டி ஆச்சார்ய கைங்கர்யத்தில் ஈடுபட வேண்டுமே
(பெரியாழ்வார் அருளிச் செய்த படியே நின்று அவர் அபிமானத்தில் ஒதுங்கி பேறு நிச்சயமாகப் பெறலாமே )

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-5–ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி —

July 30, 2021

கீழில் திரு மொழியில்
ஆதியான் அடியாரையும் -அடிமை இன்றித் திரிவாரையும் -என்று
சம்சாரிகள் பொல்லாங்கும்-ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஏற்றமும் -இறே சொல்லிற்று

சம்சாரிகளுக்கும் பகவத் சம்பந்தம் ஒத்து இருக்க -அவர்களை கழிக்கைக்கு அடி –
சம்பந்த ஞானம் இல்லாமை -இறே

வணக்கொடு மாள்வது வலமே -என்று
சரம சமயத்திலே (ஆகிலும் )பகவத் சமாஸ்ரயணம் பண்ணுகை ஸ்ரேஷ்டம்
ஆகையால் -சம்சாரிகளை பார்த்து ஹிதோ உபதேசம் பண்ணி அருளுகிறார்-
இத் திரு மொழியில்-

————

திரு நாமங்களை சொல்லுமவர்கள் பெரும் பேறு என்னால் சொல்லப் போகாது -என்கிறார்-

ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாசவார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லைக் கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-

பதவுரை

ஆசை வாய்–(தனக்கு) ஆசையுள்ள விதத்திலே
சென்ற–போர்ப் பாரத்த
சிந்தையார் ஆகி–நெஞ்சை யுடையாராய் கொண்டு
என் அன்னை–என்னுடைய தாய்
என் அத்தன்–என்னுடைய தகப்பன்
என் புத்திரர் என்னுடைய பிள்ளைகள்
என் பூமி–என்னுடைய நிலம்
வாச வார்–பரிமளம் வீசுகின்ற
என் குழளான–கூந்தலை யுடையவளான என் மனைவியான
என்று–என்று சொல்லிக் கொண்டு
மயங்கி–(அவர்கள் பக்கத்தில்) மோஹமடைந்து
(பழூதே பல பகலும் போக்கினாலும்)
மாளும் எல்லைக் கண்–சரம ஸமயத்தில்
வாய் திறவாதே–வாய் திறந்து(அவர்கள் பேச்சை) சொல்லி யழையாமல்
கேசவா என்றும்
கேசவனே என்றும்
புருடோத்தமா என்றும்–புருடோத்தமனே என்றும்
கேழல் ஆகிய கேடு இலீ என்றும்–‘வராஹ ரூபியாய் அவதரித்தவனும் அழிவில்லாதவனுமான எம்பெருமானே! என்றும்
பேசுவார் அவர்–சொல்லுவார்கள்
எய்திய–அடையக் கூடிய
பெருமை–பெருமைகளே
பேசுவான் புகில்–பேசப் புக்கால்
நம் பரம் அன்று–நம்மால் பேசித் தலை கட்டப் போவது-

ஆசை -இத்யாதி
சிநேகம் இருந்த இடத்திலே கை கழிந்த மனசை உடையராய்
அன்னை-என்று தொடங்கி -வாசவார் குழலாள் அளவும் ஆசை இருக்கும் இடம் மயங்கி
இவர்கள் பேரும் சொல்ல மாட்டாதே மயங்கி

மாளும் எல்லைக் கண்-
வைத்த நாள் வரை எல்லை குறுகி -என்கிற படியே சரம காலத்தில்

வாய் திறவாதே
அவ்வளவிலே கீழ் சொன்னவர்கள் பேரை சொல்லி அழையாதே-
அவர்கள் பேர் சொல்ல ஒண்ணாதாகில் பின்னை யார் பேரை சொல்லுவது என்னில்

கேசவா
உங்கள் மரண வேதனை போக வேணும் ஆகில் –
கேசவா க்லேச நாசன -என்னப் பாரும் கோள்
கெடும் இடர் ஆயவெல்லாம் கேசவா என்ன -என்று சொல்லக் கடவது இறே

புருடோத்தமா-
ஒவ்தார்யம்
அதாவது-
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் பண்ணுகை

என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
இவர்கள் கேடு போனால் தன் கேடு போச்சுதாக நினைத்து இருக்கை

பேசுவார் அவர் எய்தும் பெருமை-
அவர்கள் ஏற்றத்துக்கு பாசுரம் இடப் போகாது
அவர் -என்னும் இத்தனை இறே
அவர்கள் பேரும் பேற்றை நம்மால் பேசப் போகாது

பேசுவான் புகில்-
பேசப் புக்கோம் ஆகில்

நம் பரம் அன்றே-
நம்மால் பேசித் தலைக் கட்டப் போகாது- கொடுக்கிறவன் தான் அறியும் இத்தனை
அதாவது
இதர சங்கம் குலைய பெறுவதாம்
சரம காலத்தில் அவர்களை அழையாது ஒழிய பெறுவதாம்
நம்முடைய பேச்சுக்களை சொல்லப் பெறுவதாம்
இது என்ன ஏற்றம் இது என்ன ஏற்றம் -என்று இதன் ஏற்றம் அறிந்து ஈடுபடுவான் அவன் இறே

—————–

சீயினால் சிறந்து ஏறிய புண் மேல் செற்றல் ஏறி குழம்பிருந்து எங்கும்
ஈயினால் அரிப்புண்டு மயங்கி எல்லை வாய்ச் சென்று சேர்வதன் முன்னம்
வாயினால் நமோ நாரணா என்று மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி
போயினால் பின்னை இத் திசைக்கு என்றும் பிணைக் கொடுக்கிலும் போக ஒட்டாரே -4= 5-2 –

பதவுரை

சீயினால்–சீயாலே
செறிந்து எறிய–மிகவும் நிறைந்த
புண் மேல்–புண்ணின் மேல்
செற்றல் ஏறி–ஈ இருந்து முட்டை யிட்டு
குழம்பிருந்து–அலை புழுத்து சீயாய்ப் பாயுமளவில்
எங்கும்–உடல் முழுதும்
ஈயினால்–ஈயாலே
அரிப்புண்டு–அரிக்கப்பட்டு
மயங்கி–(வேதனை பொறுக்க முடியாமல்) மூர்ச்சை யடைத்து
எல்லை வாய்ச் சென்று சேர்வதன் முன்னம்–சரம காலத்தைக் கிட்டுவதற்கு முன்னே
வாயினால்–வாயாலே
நமோ நாராணா என்று–‘நமோ நாராயணாய்’ என்று சொல்லிக் கொண்டு
மத்தகத்திடை–உச்சியிலே
கைகளைக் கூப்பி–அஞ்ஜலி பண்ணி
(சரீர வியோகமான பின்பு)
போயினால்–(பரம பதம்) போய்ச் சேர்ந்தால்
பின்னை–பிறகு
பிணைக் கொடுக்கிலும்–(நித்ய முக்தர்கள்) ‘நாங்கள் உத்தர வாதம் பண்ணுகிறோம்’ என்றாலும்.
என்றும்–ஒருகாலும்
போக ஒட்டார்–(இந்த முக்தர்களைப்) போக வொட்டார்கள்–

சீயினால் சிறந்து ஏறிய புண் மேல்-
சீயானது விஞ்சி புடைபட்ட புண் மேல்

செற்றல் ஏறி-
ஈயிலில் இருந்து முட்டை இட்டு

குழம்பிருந்து-
அவை புழுத்து நீராய் பாயும் அளவிலே

ஈயினால் அரிப்புண்டு மயங்கி –
அது பொறுக்க மாட்டாமல் மூர்ச்சித்து

எல்லைவாய்ச் சென்று சேர்வதன் முன்னம் –
சரம காலத்தை சென்று கிட்டுவதற்கு முன்னே

வாயினால் நமோ நாரணா என்று-
வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி -எனக்கு நான் உரியேன் அல்லேன் –
உனக்கு உரியேன் -என்று சொல்லுகை இறே வாய் படைத்ததுக்கு பிரயோஜனம்-

மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி –
தலை படைத்த பிரயோஜனம் பெற்று-

போயினால் –
இப்படி செய்து போனால்-
போயினால் என்றது வழிப் போக்கு தானே பிரயோஜனம் -என்கை-
இவன் ஒருகால் தொழுதால் இதுக்குப் பலம் வழிப் போக்கில்-
மற்று எல்லாம் கை தொழப் போய் -என்றும்
தொழுதனர் உலகர்கள்-என்றும்-
சொல்லுகிறபடியே இவன் பார்த்த பார்த்த இடம் எல்லாம் அஞ்சலிக் காடாய் இறே இருப்பது –

அங்கு புக்காலும்-
பத்தாஞ்சலி புடா ஹ்ர்ஷ்டா -என்றது இறே பலம்-
இவன் ஒருக்கால் ஆத்ம சமர்ப்பணம் பண்ண-
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் -என்று த்ரிபாத் விபூதியாக சமர்பிப்பர்கள்-
ஒருக்கால் நம என்ன- கால தத்வம் உள்ளதனையும் நமோ நாராயணா என்று-சூழ்ந்திருந்து ஏத்துகை இறே பலம் –

பின்னை இத்திசைக்கு என்றும் பிணைக் கொடுக்கிலும் போக ஒட்டாரே –
நித்ய முக்தரை பிணை இடிலும் போக ஒட்டார்கள்-அதுக்கடி-
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் தேசம் ஆகையாலே-
அவன் தானும் -ஏற்றி வைத்து ஏணி வாங்கும் அவனிரே-
இத்தால் கர்மம் அடியாக மீட்சி இல்லை என்றபடி –

———–

ஆத்மா சமர்ப்பணம் பண்ணினார்க்கு யம வச்யதை இல்லை என்கிறார்-

சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன்
மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே – 4-5 -3-

பதவுரை

சோர்வினால்–களவு வழியாலே-புத்தி மறதியால்
பொருள் வைத்தது–(எங்கேனும் ஏதாவதொரு) பொருள் வைக்கப் பட்டிருக்குமாகில்
சொல்லு சொல் என்று–(அதைச்) செல்லு, சொல்லு என்று
சுற்றும் இருந்து–சூழ்ந்து கொண்டு
ஆர் வினவிலும்–எப்படிப்பட்ட அன்பர்கள் (வேட்ட இளையாள் ) கேட்டாலும்
வாய் திறவாதே–(அவர்களுக்கு மறு மாற்றம் சொல்லுகைக்கும்) வாயைத் திறக்க மாட்டாதபடி.
அந்தக் காலம்–மரண காலமானது
அடைவதன் மூலம்–வந்து கிட்டுவதற்கு முன்னே;
மார்வம் என்பது–‘ஹ்ருதயம்’ என்கிற
ஓர் கோயில்–ஒரு-அத்விதீயமான – ஸந்நிதியை
அமைத்து–ஏற்படுத்தி (அந்த ஸந்நிதியில்)
மாதவன் என்னும்–‘திருமால்’ என்கிற
தெய்வத்தை–தேவதையை
நாட்டி–எழுந்தருளப் பண்ணி (அத் தெய்வத்தைக் குறித்து)
ஆர்வம் மென்பது–பக்தி என்கிற
ஓர் பூ–ஒரு புஷ்பத்தை
இட வல்லார்க்கு–ஸமர்பிக்க வல்லவர்களுக்கு
அரவ தண்டத்தின்–யம படர்களால் வரும் துன்பத்தில் நின்றும்
உய்யலும் ஆம்–தப்பிப் பிழைக்கலாகும்–

சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்-
முன்பு இவன் கையில் கண்டவை அடைய -அட்டைகள் போல் சுவைப்பர் -என்கிறபடியே
இவன் கையில் உள்ளவை நிச் சேஷமாக வாங்கி கொள்ளுவார்கள் -இவர்களைக் காணாமல் வைத்தது உண்டாகில்

சொல்லு சொல்லு என்று –
ஒரு கால் சொன்னால் போல் ஒன்பதின் கால் சொல்லி –

சுற்றும் இருந்து –
இவன் ஒருத்தரை ஒருத்தர் அறியாமல் -கொடுக்கில் செய்வது என்-
என்று விடாதே சுற்றும் இருப்பர்கள்-

ஆத்ம பந்துக்கள் ஆகில் இறே-
திரு மாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் -என்பது –
துஞ்சும் போது அழைமின் -இத்யாதி

ஆர் வினவிலும் வாய் திறவாதே –
பகவத் பாகவத விஷயங்களையும் -ஆசார்யனையும் -பிரகிருதி பந்துக்களையும் –
மறைத்து வைத்த அர்த்தம் கொடுத்த வேட்ட இளையாள் வினவிலும் வாய் திறவாதே –

இவர்களுக்கும் இவளுக்கும் -இவனை இழக்க புகுகிறோம் என்ற பயம் அன்று –
இவன் வைத்த அர்த்தம் ஒருவரும் அறியாமல் மண் தின்று போகில் செய்வது என் -என்கிற பயம் –
இவ் அர்த்தத்தை நச்சி வரும் போதும் –
அக் காலத்திலே அவன் முகத்திலே விழிக்க வருகிறோமே -என்று இறே வருவது

அந்த காலம் அடைவதன் முன் –
சரம காலம் வருவதற்கு முன்னே

மார்வம் என்பதோர் கோவில் அமைத்து-
ஹ்ருதயம் என்று பிரசித்தமாய் -அத்விதீயமான ஸ்த்தானத்தை உண்டாக்கி –

மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி –
ஸ்ரீ யபதி -என்று பிரசித்தமாய் -அத்விதீயமான வஸ்துவை பிரதிஷ்டிப்பித்து –

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திரு மால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான் -என்று
இவர் அஹ்ருதயமாக சொன்னதை சஹ்ருதயமாக கொண்டு வந்து புகுந்தான் –
இவர் இப்போதே -அஹ்ருதயமாக சொன்னேன் -என்னவும் வல்லர்-
அதுக்கு முன்பு இவர் நெஞ்சில் இடம் அற புகுந்து கொள்ளும் கிடீர் என்று பிராட்டியும் கூடக் கொண்டு புகுந்தான் –

இவர் நெஞ்சு திருந்துவதற்கு முன்பு இறே -அல்லாத இடங்களில் நிற்பது –
நின்றது எந்தை ஊரகத்து -இத்யாதி-
உகந்து அருளின நிலங்களில் கண்டு அனுபவிக்குமா போலே
இவர் திரு உள்ளத்தில் இருப்பதும் கண்டு அனுபவிக்கலாம் படி இருக்கும் இவர்க்கு –
சல சயனத்து உள்ளும் எனது உள்ளத்து உள்ளும் உறைவாரை உள்ளீரே -என்னக் கடவது இறே –

வந்தாய் என் மனம் புகுந்தாய் -என்று இறே புகுந்தது –
வந்து வந்து என் மனத்து இருந்து -என்கிறபடியே இவர் இசையாமல் -தட்டின நாளைக்கு ஓர் அவதி இல்லை இறே
அடியார் மனத்தாயோ-
வெள்ளத்தான் வேம்கடத்தான் ஏலும் கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் -என்று
உகந்து அருளின நிலங்களோடு ஒக்கும் -இறே இவர் திரு உள்ளமும் –

ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு –
(பக்தி என்னும் பூ
பக்தியையும் பூவையும் -இரண்டு நிர்வாகங்கள் )
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் -என்று
தேக பந்துக்களையும் -ஆத்ம பந்துக்களையும் மறைத்து வைத்த பொருளை இட்டு
கோவில் சமைத்து
திரு நந்தவனத்தையும் உண்டாக்கி
திருப் பள்ளித் தாமத்தையும்
தேடு என்று -இவனை அரிய தேவைகளை இடான் இறே –

நாடாத மலர் நாடி நாள் தோறும் நாரணன் தன் வாடாத மலர் அடிக் கீழ் வைக்க -இறே
இவனை அடியிலே-திருவடியிலே என்றும் -ஆதியிலே -என்றும் – சிருஷ்டித்தது –
இப்படி பூவோடு பூவை சேர்க்க வல்லார்க்கு –

அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே-
யம படரால் வரும் கிலேசம் –
அதாவது –
வெம் சொல் ஆளர்கள் நமன் தமர் அடியர் கொடிய செய்யன உள-என்னக் கடவது இறே –
நெடும் சொல்லால் மறுத்ததற்கு பலம் கடும் சொல் கேட்கை இறே-

உய்யலும் ஆமே-
ப்ராப்யத்திலும் இது (யம படரால் வரும் கிலேசம்) போகை இறே பிரதானம் -என்கிறார் –

———-

பிரணவ அர்த்தம் நெஞ்சில் பட்டவர்கள்-அடியார்கள் குழாங்கள் உடன் கூடுவர் -என்கிறார் –

மேல் எழுந்தது ஒரு வாயு கிளர்ந்து மேல் மிடற்றினை உள் எழ வாங்கி
காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறி கண் உறக்கம் அது ஆவது முன்
மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள் எழ வாங்கி
வேலை வண்ணனை மேவுதிர் ஆகில் விண்ணகத்தினில் மேவலும் ஆம் – 4-5-4-

பதவுரை

மேல் எழுந்தது ஓர் வாயு–ஊர்த்துவ ஸ்வாஸமானது
கிளர்ந்து–மேலெழுந்ததனால்
மேல் மிடறு–நெஞ்சானது
உள் எழ வாங்கி–கீழே இடிந்து விழப் பெற்று
காலும் கையும்–கால்களும் கைகளும்
விதிர் விதிர்த்து ஏறி–பதைபதைக்கப் பெற்று
கண் உறக்கம் அது ஆவதன் முன்னம்–தீர்க்க நித்திரையாகிய மரணம் ஸம்பவிப்பதற்கு முன்னே,
மூலமாகிய ஒற்றை எழுத்தை–(ஸகல வேதங்களுக்கும்) காரணமாகிய ‘ஓம்’ என்ற பிரணவத்தை
மூன்று மாத்திரைகள் உள் எழ வாங்கி–உச்சரிக்க வேண்டிய முறைப்படி உச்சரித்து
வேலை வண்ணனை–கடல் போன்ற நிறத்தை யுடையவனான எம்பெருமானை
மேவுதிர் ஆகில்–ஆஸ்ரயித்தீர்களாகில்
விண் அகத்தினில்–ஸ்ரீவைகுண்டத்தில்
மேவலும் ஆம்–அடியார்கள் குழாங்களை) உடன் கூடவும் பெறலாம்–

மேல் எழுந்தது ஒரு வாயு கிளர்ந்து –
மேல் மூச்சு எறிந்து –

மேல் மிடற்றினை உள் எழ வாங்கி –
நெஞ்சு கீழே இடிந்து விழுந்து

காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறி –
பிராண வாயு மேல் நோக்கின வாறே -காலும் கையும் பதை பதிக்க தொடங்கிற்று

கண் உறக்கம் அது ஆவது முன் –
தீர்க்க யாத்ரை கொள்வதற்கு முன்னே

மூலமாகிய ஒற்றை எழுத்தை -மூன்று மாத்திரை உள்ளே வாங்கி –
சகல வேதங்களுக்கும் காரணமான -திரு மந்த்ரத்தில் பிரதம பதத்தை -உச்சாரண க்ரமம் தப்பாமல் உச்சரித்து –

வேலை வண்ணனை மேவுதிர் ஆகில்-
ஸ்ரீ வைகுண்ட நாதனை கிட்ட வல்லி கோள் ஆகில்

விண்ணகத்தினில் மேவலும் ஆம் –
அடியார்கள் குழாங்கள் உடன் கூடலாம் -என்கிறார் –

————-

விரோதி நிரசன சீலனை ஏத்து வார்க்கு முன்பு கிலேசப் பட்டது போலே –
இனி போக வேண்டாம் என்கிறார் ( இந்த்ரியங்களே விரோதி )

மடி வழி வந்து நீர் புனல் சோர வாயில் அட்டிய கஞ்சியு மீண்டே
கடை வழி வாரக் கண்ட மடைப்ப கண்ணுறக்கம் ஆவது முன்
துடை வழி நும்மை நாய்கள் கவரா – சூலத்தால் உம்மை பாய்வதும் செய்யார்
இடை வழி யினீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே – 4-5- 5-

பதவுரை

மடி புலன் வழி வந்து–லிங்கத்தின் வழியாக வந்து
நீர் சோர–மூத்திர நீர் பெருகவும்
வாயில்–வாயிலே
அட்டிய–பெய்த
கஞ்சியும்–பொரிக் கஞ்சியும்
கண்டம் அடைப்ப–கழுத்தை அடைக்கவும்
மீண்டும்–மறுபடியும்
கடை வழி–கடை வாய் வழியாலே
வார–(அந்தப் பொறிக் கஞ்சி வழியா நிற்கவும்
கண் உறக்கம் அது ஆவதன் முன்னம்
இருடீகேசன் என்று–(ஹ்ருஷீகேசன்’ என்ற (எம்பெருமான் திருநாமத்தைச் சொல்லி)
ஏத்த வல்லீர்–ஸ்தோத்திரம் பண்ண வல்லவர்களே!
நாய்கள்–(யம லோகத்திலுள்ள) செந்நாய்களானவை
உம்பை–உங்களை
கவரா–கவர மாட்டா;
(யம கிங்கரர்களும் )
உம்மை–உங்களை
சூலத்தால்–சூலாயுதத்தால்
பாய்வதும் செய்யார்–கத்தவும் மாட்டார்கள்;
நீர்–நீங்கள்
இடை வழியில்–நடு வழியில்
கூறையும்–வஸ்திரத்தையும்
இழவீர்–இழக்க மாட்டீர்கள்

மடி வழி வந்து நீர் புனல் சோர-
யம படரை கண்ட பயத்தால் -ஓர் இந்திரிய விசேஷத்தாலே ஜலம் பிரவஹிக்க

வாயில் அட்டிய கஞ்சியு மீண்டே கடை வழி வாரக் கண்ட மடைப்ப-
பொரிக் கஞ்சியை கொடுத்தால் -கண்டம் அடைக்கையாலே -உள்ளுப் புகாதே
மீண்டும் கடைவழியே வழியா நிற்கும்

கண்ணுறக்கம் ஆவது முன்
தீர்க்க நித்திரை கொள்ளுவதர்க்கு முன்

துடை வழி நும்மை நாய்கள் கவரா –
நாயினத்தொடும் திளைத்திட்டு ஓடியும் உழன்றும் -என்றதற்கு பலம்

சூலத்தால் உம்மை பாய்வதும் செய்யார்
உயிர்களைக் கொன்றேன் -என்று ஆயுதத்தாலே நலிந்ததுக்கு பலம்

இடை வழி யினீர் கூறையும் இழவீர் –
வழியில் நின்று சீரை உரிந்ததுக்கு பலம்

என்று என்று சொல்லி இறே அவர்கள் நலிவது –
இது தப்ப வேண்டி இருந்தீர்களோ ஆகில்

இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே –
இந்திரியங்களை நியமிக்க வல்லவன் என்று -ப்ரீதியோடே கூட
ஸ்தோத்ரம் பண்ணினால் இவை வாரா

யம வச்யதைக்கு அடி இந்திரிய வச்யதை இறே
இதுக்கு சாதனமாக இறே பர ஹிம்சாதிகள் பண்ணுவது
அத்தைக் குலைக்கும் அவன் -என்கிறார்

————

இப்பாட்டில் ஒருக்கால் உபாய வரணம் பண்ணினார்க்கு
சதா பச்யந்தி பண்ணலாம் -என்கிறார் –(ஓர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே)
(ரக்ஷகத்வம் போக்யத்வம் -திரு நாம வைபவம் அருளிச் செய்யும் பிரகாரணம் )

அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை
சங்கம் விட்டவர் கையை மறித்து பையவே தலை சாய்ப்பதன் முன்
வங்கம் விட்டு வுலவும் கடல் பள்ளி மாயனை மது சூதனை மார்பில் தங்க விட்டு வைத்து
ஆவதோர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே -4 -5-6 –

பதவுரை

அவை ஐந்தும்–பஞ்ச பிராணன்களும்
அங்கம் விட்டு–உடலை விட்டு
அகற்றி–அகன்று போக
மூக்கினில்–மூக்கில் (கையை வைத்து)
ஆவி சோதித்த பின்னை–‘பிராணன் இருக்கிறதா இல்லையா’ என்று சோதித்துப் பார்த்து, இல்லை யென்றிந்த பின்பு
சங்கம் விட்டு–(அவருடைய உயிரில்) ஆசையை விட்டு,
(அங்குள்ளாரை நோக்கி, இப்போதை நிலைமை என்? என்று வந்தவர்கள் கேட்க; (அவர்களுக்குப் பதிலாக)
கையை மறித்து–கையை விரித்துக் காட்டி
பைய–மெள்ள மெள்ள
தலை சாய்ப்பதன் முன்னம்–(தங்கள்) தலையைத் தொங்க விட்டுக் கொள்வதற்கு முன்னே,
வங்கம்–கப்பல்களானவை
விட்டு உலவும்–இடை விடாமல் திரியப் பெற்ற
கடல்–கடலில்
பள்ளி–பள்ளி கொள்பவனும்
மாயனை–ஆச்சரிய சக்தி யுத்தனும்
மது சூதனை–மதுவைக் கொன்றவனுமான எம்பெருமானை
மார்பில்–ஹ்ருதயத்தில்
தங்க விட்டு வைத்து–அமைத்து,
ஆவது ஓர் கருமம்–ஸ்வரூபத்துக்குச் சேர்ந்ததொரு (உபாய வரணமாகிற காரியத்தை)
சாதிப்பார்க்கு–ஸாதிக்குமவர்களுக்கு
என்றும்–எந்நாளும்
சாதிக்கலாம்–பலாநுபவம் பண்ணப் பெறலாம்.

அகன்று -என்னுமது அகற்றி என்று கிடக்கிறது
அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி-
பஞ்ச வ்ர்த்தி பிராணன் சரீரத்தை விட்டு அகன்று

ஆவி மூக்கினில் சோதித்த பின்னை –
இவனுக்கு பிராணன் இல்லை என்று அறிந்த பின்பு

சங்கம் விட்டு –
1-இனி இவன் பிழைக்கும் என்னும் ஆசையை விட்டு –
சங்கம் விட்டு -என்று
அன்றிக்கே –
2-சொல்லு சொல்லு என்று சுற்றும் இருக்கிற திரள் குலைந்தது -என்னுதல்
அன்றிக்கே –
3-இவன் பக்கல் சில கிடைக்கும் என்கிற ஆசையை விட்டு -என்னுதல்

அவர் கையை மறித்து-
அங்கு இருந்தவர்களை -அவன் செய்தது என் -என்று வந்தவர்கள் கேட்க –
கையை மறித்து

பையவே தலை சாய்ப்பதன் முன் –
மெள்ள இவன் அருகும் நின்று எழுந்து இருந்து விடப் போய் –
இவனை இழந்த இழவு தோற்ற -கவிழ்தலை இட்டு கிடப்பார்கள் ஆய்த்து

வங்கம் விட்டு வுலவும் கடல் பள்ளி மாயனை-
மரக்கலம் உலவா நின்றுள்ள -கடலில் கண் வளர்ந்து அருளுகிற -ஆச்சர்ய பூதனை –
அன்றிக்கே –
மாயனை -என்றது -ஞானமாய் –
தன் இச்சையால் கண் வளர்ந்து அருளுகிறவன்-என்றபடி
குரை கடல் மேல் அரவணை மேல் குலவரை போல் பள்ளி கொண்டு -என்னக் கடவது இறே

மது சூதனை-
மதுவை நிரசித்தால் போலே ஆஸ்ரித விரோதியைப் போக்குமவனே
வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவணை மேல் துள்ளு நீர் மெள்ள துயின்ற பெருமானே
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் (8-10 )-என்னக் கடவது இறே

மார்பில் தங்க விட்டு வைத்து –
தங்க விடுகை யாவது ஓர் இடத்திலே இருத்துகை

ஆவதோர் கருமம் –
ஸூகரமுமாய்
ப்ராப்தமுமான
ஆத்ம சமர்ப்பணம் –
நம வென்னலாம் கடமை (3-3 )-என்னக் கடவது இறே

சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே-
உபாயம் ஸக்ருத் கர்தவ்யம்
உபேயம் சதா ப்ராப்தவ்யம்
ஆவத்தனம் -என்று ஸக்ருத் சேவித்து இருக்கும் -என்று சதா

(ஸக்ருத்தும் சதாவும்
சாதிப்பாருக்கு ஆத்ம சமர்பணம் செய்பவர்
என்றும் சாதிக்கலாம் -நித்ய கைங்கர்யம்
கீழே 4-2-6 பாசுரம் பார்த்தோம் ஆபத்துக்கு நிதானம் -சேவித்து இருக்கும் வர்த்தமானம் பலம் கிட்டும் )

————

இப்பாட்டில் -விரோதி நிரசன சீலனை அனுசந்திப்ப நித்ய ஸூரிகள் கார்யத்துக்கும்
ஸ்ரீ வைகுண்ட நாதனோடு மன்றாடுவர்கள் என்கிறார் –

தென்னவன் தமர் செப்பமில்லாதார் சேவதக்குவார் போலப் புகுந்து
பின்னும் வன் கயிற்றில் பிணித் தெற்றிப் பின் முன்னாக விழுவதன் முன்
இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி உள்ளத்து இருளற நோக்கி
மன்னவன் மதுசூதனன் என்பார் வானகத்து மன்றாடிகள் தாமே – 4-5 -7-

பதவுரை

செப்பம் இலாதார்–ருஜுவான செய்கை இல்லாதவர்களான
தென்னவன்–தமர் யம கிங்கரர்கள்
சே அதக்குவார் போல–எருதுகளை அடக்கி ஓட்டுபவர்கள் போல
புகுந்து–வந்து,
பின்னும்–அதற்கு மேல்
வல் கயிற்றால்–வலிவுள்ள பாசங்களினால்
பிணித்து–கட்டி
எற்றி–அடித்து
பின் முன் ஆக–தலை கீழாக
இழுப்பதன் முன்னம்–(யம லோகத்துக்கு) இழுத்துக் கொண்டு போவதற்கு முன்னே
மன்னவன் (அந்தத் தென்னவனுக்கும்) மன்னவனான எம்பெருமான்
இன்னவன் இனையான் என்று சொல்லி–இப்படிப்பட்ட ஸ்வரூபத்தையுடையவன், இப்படிப் பட்ட ஸ்பாவத்தையுடையவன் என்று
(அவனுடைய ஸ்ரூப ஸ்வபாவங்களைச் சொல்லி-ஏகாந்த கல்யாண குணங்களை அனுசந்தித்து )
எண்ணி–(அவற்றை) நெஞ்சாலும் மநநம் பண்ணி
உள்ளத்து இருள் அற–ஹ்ருதயத்திலுள்ள (அஜ்ஞாநமாகிற) அந்தாரம் நீங்கும்படி
நோக்கி–(எம் பெருமானை) ஸாஷாத்கரித்து,
மதுசூதனன் என்பார்–(தேஹமுள்ளதனையும்) ‘மதுஸூதநனே’ என்று அவன் திரு நாமங்களையே சொல்லிக் கொண்டிருக்குமவர்கள்
வான் அகத்து–ஸ்ரீவைகுண்டத்திலே
மன்றாடிகள் தாம்–(எம்பெருமானோடே நித்ய ஸூரிகளின் கைங்கரியத்துக்காக) மன்றாடப் பெறுவர்கள்–

தென்னவன் தமர் –
தெற்கு திக்குக்கு கடவனான யமனுடைய சேஷ பூதர்

செப்பமில்லாதார் –
செவ்வை இல்லாதார்
கரண த்ரயமும் அடைவு கெட்டு இருக்கும் அவர்கள்

சேவதக்குவார் போலப் புகுந்து –
எருதுகள் தங்கள் வசப் படுக்கைக்கு -இவற்றின் செருக்கை குலைக்கும்
நீச ஜாதிகளைப் போலே புகுந்து துக்க அனுபவம் பண்ணுவிக்கை

பின்னும் வன் கயிற்றில் பிணித்து
சேவதக்குவார் அடக்கும் பிரகாரம் –
துக்க அனுபவத்துக்கு தங்கள் தர்சன மாத்ரமே அமைந்து இருக்க
பின்னையும் எம படர் -பாசங்களாலே -ஸூரியிலே வரிவாரைப் போலே வரிந்து

எற்றி –
நமன் தமர் செய்யும் வேதனை -என்கிறபடியே
எற்றி

பின் முன்னாக விழுவதன் முன் –
மூக்கும் முகமும் உதடும் பல்லும் தகரும்படி -முகம் கீழ்பட யமபுரத்தளவும் இழுப்பதற்கு முன்னே

இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி-
அவன் இன்னான் என்னும் அதுக்கு ஏகாந்தமான குணங்களை அனுசந்தித்து

உள்ளத்து இருளற நோக்கி
நெஞ்சில் அஞ்ஞான அந்தகாரம் போக பார்த்து

மன்னவன்
தென்னவனுக்கும் மன்னவன் ஆனவன்

மதுசூதனன் என்பார்-
ஆஸ்ரித விரோதிகளை போக்கும் அவன் என்று சொல்லுவார்கள்

வானகத்து மன்றாடிகள்
பரம பதத்தில் நித்ய ஸூரிகள் கார்யத்துக்கும் ஸ்ரீ வைகுண்ட நாதனோடே
மன்றாடுவார்கள் இவர்கள் இறே –

தாமே-
வேறு சஹகாரிகள் இல்லை –

———

மூன்று எழுத்தை உச்சரிப்பார் ஸ்ரீ கௌஸ்துபத்தோபாதி
அவனுக்கு ஆதரணீயர் என்கிறார்

கூடிக் கூடி உற்றார்கள் இருந்து குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து
பாடிப் பாடி யோர் பாடையில் இட்டு நரிப்படைக்கு ஒரு பாகுடம் போலே
கோடி மூடி எடுப்பதன் முன்னம் கௌதத்துவம் உடைக் கோவிந்தனோடு
கூடி யாடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலுமாமே-4 -5-8 —

பதவுரை

(மரணமான பின்பு)
உற்றார்கள்–பந்துக்களானவர்கள்
கூடி கூடி இருந்து–திரள் திரளாகக் கூடியிருந்து கொண்டு
குற்றம் நிற்க–(செத்தவன் செய்த) குற்றங்கள் (பல) கிடக்க (அவற்றை யெல்லாம் விட்டு விட்டு)
நற்றங்கள்–(சிறிது) நன்மையாகத் தோன்றும் படியான கூற்றை
பறைந்து–சொல்லி,
பாடிப் பாடி–(அழுகைப் பாட்டுக்களைப்) பலகால் பாடி
ஓர் பாடையில் இட்டு–ஒரு பாடையிலே படுக்க வைத்து
கோடி மூடி–வஸ்திரத்தை யிட்டு மூடி
நரிப் படைக்கு ஒரு பாகுடம் போல–நரிக் கூட்டத்துக்கு ஒரு பாகுக் குடத்தைப் பச்சையாகக் கொடுப்பதுபோல (இப் பிணத்தைப் கொடுக்கைக்காக,)
எடுப்பதன் முன்னம்–(சுடுகாட்டுக்குக் கொண்டு போவதாக) எடுப்பதற்கு முன்னே,
கௌத்துவம்–கௌஸ்துபத்தை
உடை–(திரு மார்பிலே) உடைய
கோவிந்தனோடு–சர்வ ஸூ லபனான எம்பெருமமான் பக்கலில்
கூடி ஆடிய–சேர்ந்து அவகாஹித்த
உள்ளத்தர் ஆனால்–நெஞ்சை யுடையவர்களாக ஆனால்,
குறிப்பு இடம்–அனுபவித்தே விநாசமாக்கும் யம லோகத்தை
கடந்து–(அதிக்ரமித்து,(பரம பதம் போய்ச் சேர்ந்து)
உய்யலும் ஆம்–உஜ்ஜீவிக்கப் பெறலாம்–

கூடிக் கூடி உற்றார்கள் இருந்து –
இவனுக்கு சரம காலம் வந்தவாறே -பந்துக்கள் எல்லாரும் திரண்டு திரள் திரளாக இருந்து

குற்ற நிற்க நற்றங்கள் பறைந்து-
இவன் பண்ணின பிரதி கூலங்கள் கிடக்க –
அல்ப அனுகூல்யங்கள் ஆனவற்றை சொல்லா நிற்பர்கள் –

மகா ராஜர் வாலி பட்ட அளவிலே அவன் முன்பு பண்ணின பிரதி கூல்யங்களை மறந்து
நான் முற்பட அகப்பட்ட போதே என்னைக் கொல்லலாய் இருக்க கொல்லாதே விட்டவனை இறே
நான் கொல்லுவித்தேன் -என்று அழுதான் இறே –
அத்தைக் கண்டு பெருமாளும் சோகித்தார் இறே

பெருமாள் ராவணன் -பூசல் தலையில் -யுத்த அரங்கத்தில் -நிராயுதனாய் நின்ற படியைக் கண்டு
கொல்லாதே -இன்று போய் நாளை வா -என்றார் இறே

ஸ்ரீ கிருஷ்ணன் கம்சனை நிரசித்த அநந்தரம்-அவன் ஸ்திரீகள் படும் க்லேசத்தை கண்டு –
நான் என்ன கார்யம் செய்தேன் -என்று வெறுத்தான் -இறே

இப்படி எல்லாருக்கும் கிருபை ஜனிக்கும் படி இறே
அத் தசை இருப்பது

பாடி பாடி –
இவர்கள் பிரலாபிக்கும் போது -ஒரு பிரபந்தம் பாடினால் போலே ஆய்த்து இருப்பது

யோர் பாடையில் இட்டு-
ஓர் ஆசந்தியிலே இவனை இட்டு

நரிப்படைக்கு ஒரு பாகுடம் போலே –
நரிப்படை -நரிக் கூட்டம்
பாகுடம் -பாகு குடம்

கோடி மூடி எடுப்பதன் முன்னம்-
கோடிப் புடைவை இட்டு மூடி எடுத்து என்னுதல்
அன்றிக்கே
ஆசந்தியை கோடித்து என்னுதல்
இப்படி செய்வதற்கு முன்னே

கௌத்துவம் உடைக் கோவிந்தனோடு –
இவ் ஆத்ம வர்க்கத்தை தரித்தது -நிரூபகமாய் உடையவன் -சர்வ ஸூலபன்-ஸ்ரீ கிருஷ்ணன் உடன்

கூடி யாடிய உள்ளத்தர் ஆனால்-
ஈஸ்வரனும் சேதனனும் ஓர் நினைவாய் -(சேஷ பூதன் என்று ஒத்துக் கொண்டு -தாஸோஹம் )
அவன் குணங்களில் அவஹாகித்த நெஞ்சை உடையரானால்

குறிப்பிடம் கடந்து-
அவஸ்ய மநுபோக்தவ்யம்-என்கிறபடியே அனுபவ விநாச்யமான தேசத்தைக் கடந்து

உய்யலுமாமே–
உயிரும் தருமனையே நோக்கும் (முதல் திருவந்தாதி)-என்கிற தேசத்து ஏறப் போக பெறுவார்கள் -என்கிறார்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் (4-9-11 )-என்னக் கடவது இறே

———–

இப்பாட்டில்
சர்வ வித பந்துவாக அவனைப் பற்றினால்
பின்னை யம வச்யதை இல்லை என்கிறார்

வாயோரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர் குழிக் கண்கள் மிழற்ற
தாயொரு பக்கம் தந்தை யொரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலத்த
தீ ஒரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண் மாலோடும் சிக்கென சுற்ற
மாயொருபக்க நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே -4- 5-9 –

பதவுரை

வாய்–வாயானது
ஒரு பக்கம் வாங்கி வலிப்ப–(வாயுவினாலே) ஒருக்கடுத்து வலிக்கவும்
வார்ந்த நீர்–பெருகா நின்ற நீரை யுடையதும்
குழி–உள்ளே இடிய இழிந்ததுமான
கண்கள்–கண்ணானது
மிழற்ற–அலமந்து நிற்கவும்,
ஒரு பக்கம்–ஒரு பக்கத்தில்
தந்தை–தகப்பானரும்
தாரமும்–மனைவியும் (இருந்து கொண்டு)
அலற்ற–கதறி அழவும்
ஒரு பக்கம்–மற்றொரு பக்கத்திலே
தீ–நெருப்பானது
சேர்வதன் முன்னம்–(மார்லில வந்து) சேர்வதற்கு முன்னே
செம் கண் மாலொடும்–புண்டரீகரக்ஷனான எம்பெருமானை
சிக்கன சுற்றம் ஆய்–நிருபாதிக பந்துவாகக் கொண்டு
ஒரு பக்கம்–சம்சார பந்து கலசாமல் -அவனொருவனிடத்திலேயே பக்ஷ பாதமாய்
நிற்க வல்லாருக்கு–நிலைத்து நிற்ப வல்லவர் களுக்கு
அரவ தண்டத்தில்–யம தண்டனையில் நின்றும்
உய்யலும் ஆம்–தப்பிப் பிழைக்கப் பெறலாம்–

வாயோருபக்கம் வாங்கி வலிப்ப-
வாத விகாரத்தாலே -வாயானது ஒருக்கடுத்து வலிக்க

வார்ந்த நீர் குழிக் கண்கள் மிழற்ற –
பந்துக்களை விட்டுப் போகிறேன் -என்று இவர்கள் பக்கல் சங்கத்தாலே சிநேகத்தால் அழுகிற அளவிலே –
யம படரைக் கண்டவாறே பயத்தின் கனத்தாலே -கண் உள்ளே இடிய இழிந்து அலமரா (அலமாவா ) நிற்கும்

தாயொரு பக்கம் -இத்யாதி –
தன்னை உண்டாக்கினவர்களும்-தான் உண்டாக்கினவர்களும் -ஓர் ஓர் அருகாக இருந்து கதற –
அநந்தரம் –

தீ ஒரு பக்கம் சேர்வதன் முன்னம் –
ஸம்ஸ்கரிப்பதற்கு முன்னே

செங்கண் மாலோடும் –
வாத்சல்யத்தையும் வ்யாமோகத்தையும் உடைய சர்வேஸ்வரனை

சிக்கென சுற்றமாய்-
நிருபாதிக -சர்வ வித பந்துவாக பற்ற வல்லாருமாய்

ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு –
சம்சாரிகளோடு உறவை கலசாதே அவனே யாக பற்றி நிற்க வல்லார்க்கு

அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே –
யம படரையும் -அவர்கள் குரூரமான தண்டங்களையும் தப்பி –
உஜ்ஜீவிக்கப் போகலாம்

மாதாவினை பிதுவை திருமாலை வணங்குவன் (திரு விருத்தம் )-என்றும்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் மேலாத் தாய் தந்தையரும் அவரே –என்றும்
பற்றுவாருக்கு உஜ்ஜீவித்து போகலாம் என்கிறார்

————-

நிகமத்தில் இத் திருமொழி அப்யசித்தவர்கள் ஸ்ரீ யபதி பக்கலிலே
ஸ்ரீ பெரியாழ்வார் பெற்ற வரிசைகளை பெறுவர்-என்கிறார் –

செத்துப் போவதோர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவ பிரான் மேல்
பத்தராய் இறந்தார் பெரும் பேற்றை பாழித் தோள் விட்டு சித்தன் புத்தூர் கோன்
சித்தம் நன்கு ஒருங்கி திருமாலை செய்த மாலை இவை பத்தும் வல்லார்
சித்தம் நன்கு ஒருங்கி திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே -4- 5-10 –

பதவுரை

செத்துப் போவது ஓர் போது–இறந்து போகுங் காலத்திலே
செய்கைகள்–(கடுஞ்) செயல்களை
நினைத்து–நினைத்து
தேவ பிரான் மேல்–தேவ பிரான் பக்கலில்
பத்தர் ஆய்–அன்பு பூண்டவர்களாய் இருந்து
இறந்தார்–(பின்பு) இறந்தவர்கள்
பெறும் பேற்றை–அடையக் கூடிய பலன்களைக் குறித்து,
பாழி தோள்–(ஸம்ஸாரத்தை வென்ற) மிடுக்கை யுடைய தோள்களை யுடையவரும்
புத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
கோன்–தலைவருமான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
செய்யும்–(யம படர்களால்) செய்யப் படுகிற
சித்தம்–(தம்முடைய) நெஞ்சை
திருமாலை–திருமால் திறத்தில்
நன்கு–நன்றாக
ஒருங்கி–ஒருபடுத்தி
செய்த–அருளிச் செய்த
மாலை–சொல் மாலையாகிய
இவை பத்தும்–இப் பத்துப் பாட்டுகளையும்
வல்லவர்–ஓத வல்லவர்கள்,
சித்தம் நன்கு ஒருங்கி–(ஆழ்வார்க்குப் போல்) நெஞ்சு ஒருபடிப் படப் பெற்று
திருமால் மேல்–திருமால் பக்கலிலே
சென்ற–குடி கொண்ட
சிந்தை–மநஸ்ஸை
பெறுவர்–உடையராவர்–

செத்துப் போவதோர் போது- செய்யும் செய்கைகள்-நினைந்து-
சரீர அவசான சமயத்தில் -யம படர் செய்கைகளை நினைத்து

தேவ பிரான் மேல் -பத்தராய்
அயர்வறும் அமரர்கள் அதிபதி பக்கலிலே பிரேமத்தைப் பண்ணி

இறந்தார் பெரும் பேற்றை-
பின்பு இறந்தார் பெரும் பேற்றை

பாழித் தோள் விட்டு சித்தன் –
சம்சாரத்தை வென்ற மிடுக்கை உடைய -தோள்களை உடைய ஸ்ரீ ஆழ்வார்

புத்தூர் கோன்-
சரம காலத்தில் இவர்களைப் போலே பக்தி உண்டாகை அன்றிக்கே –
சதா மநோரதம் பண்ணும் நித்ய ஸூரிகளைப் போலே இருக்கிற ஸ்ரீ ஆழ்வாரை
ஸ்வாமியாக பற்றி இருக்கும் -ஸ்ரீ வில்லிபுத்தூரையும் உடையர் ஆனவர்

சித்தம் நன்கு ஒருங்கி திருமாலை செய்த மாலை இவை பத்தும் வல்லார் –
ஆசைவாய் சென்ற சிந்தையராகி -என்கிறபடியே
கரண த்ரயமும் –
புறம்பு போதல் -கலந்து இருத்தல் செய்யாதே
ஸ்ரீ யபதி விஷயமாக செய்த இப் பத்துப் பாட்டையும் அப்யசித்தவர்கள்

சித்த நன்கு ஒருங்கி திருமால் சென்ற சிந்தை பெறுவர் தாமே –
ஸ்ரீ ஆழ்வாரைப் போலே –
கரண த்ரயமும் ஒரு படிப்பட உடையராய்
ஸ்ரீ யபதி பக்கல் சென்ற மனசை உடையர் ஆவார்கள்

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-4–நா அகார்யம் சொல்லிலாதவர் நாள் தோறும்-

July 30, 2021

கீழே
கதிர் ஆயிரம் இரவிலே (4-1 )
சம தம தாதிகளை யுடையராய்
அவனைக் காண வேணும் என்னும் ஸ்நேஹம் யுடையீர்கள் ஆகில்
அவனைக் கண்டார் உளர் என்று காட்டின முமுஷுக்களை உத்தேச்யமாக அநு சந்தித்தார்

மேல் இரண்டு திருமொழியால்
அந்த முமுஷுக்களுக்கு உத்தேஸ்யராய்
சென்றால் குடையாம் -என்கிறபடியே
அழகரைத் தம் மடியில் வைத்து ரக்ஷிப்பாராய்
ஸூரிகளில் தலைவரான திரு அநந்தாழ்வானை அனுசந்தித்து

திரிதந்தாகிலும் -என்கிறபடியே
மாலிருஞ்சோலை என்னும் மலையை யுடைய மலை -என்று
அந்த திருமலையில் ஒரு கொடி முடியாய் நிற்கிற அழகரை அனுசந்தித்தாராய் நின்றார் கீழ்

இதில்
நாவகாரியம் (நா -அ காரியம் நாவுக்கு செய்யத் தகதாதது ) சொல்லாமல்
ஆச்சார்ய கிஞ்சித்க்கார பார தந்தர்யத்தோடே வர்த்திக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய திரிவித ப்ரவ்ருத்தியும்
அவர்களுடைய திரு உள்ளத்துக்கு ஈடாக லோக உபகார ப்ரவ்ருத்தியும்
சிஷ்ய புத்ராதிகளுடைய உஜ்ஜீவனத்துக்கும் ஈடாக கரிய கோலத் திரு உருவைக் காண்பாரையும்
இந் நேர் காணாதாரையும்
உத்தேஸ்ய பிரதிபத்தியும்
நிஷேத பிரதிபத்தியும்
சொல்லுகிறது –

(அன்பிலா மூடர்களை -சேவிக்காதவர்களை நிந்தித்தும்
சேவித்தவர்களை ஸ்லாக்கித்தும் பேசியும் )

————-

நா அகார்யம் சொல்லிலாதவர் நாள் தோறும் விருந்து ஒம்புவார்
தேவ கார்யம் செய்து வேதம் பயின்று வாழ் திருக் கோட்டியூர்
மூவர் காரியமும் திருத்தும் முதல்வனை சிந்தியாத அப்
பாவ காரிகளைப் படைத்தவன் எங்கனம் படைத்தான் கொலோ -4- 4-1 –

பதவுரை

நாவ காரியம்–நாவினாற் சொல்ல வொண்ணாத வற்றை
சொல்லில்லாதவர்–(ஒருநாளும்) சொல்லி யறியாத ஸ்ரீவைஷ்ணவர்கள்
நாள் தோறும்–நாடோறும்
விருந்து ஓம்புவார்–(ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு விருந்தளித்துக் கொண்டும்
தேவர் காரியம் செய்து–பகவதாராதநம் பண்ணிக் கொண்டும்
வேதம்–வேதங்களை
பயின்று–ஓதிக் கொண்டும்-வேதங்களால் சொல்லப்பட்ட பெருமாளை அனுசந்தித்திக் கொண்டும்
வாழ்–வாழுமிடாமன-வாழுமிடமான-நித்ய வாசம் செய்து கண்டு அனுபவிப்பதே வாழ்ச்சி
திருக்கோட்டியூர்–திருக் கோட்டியூரில் எழுந்தருளி யிருப்பவனும்,)
மூவர்–பிரமன், ருத்ரன், இந்திரன் என்ற மூவருடைய
காரியமும்–காரியங்களையும்-வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதிகளையும்
திருத்தும்–செய்து தலைக் கட்டுமவனும்.
முதல்வனை–(எல்லார்க்கும்) தலைவனுமான எம்பெருமானை
சிந்தியாத–நெஞ்சாலும் நினையாத
அ பாவ காரிகளை-அப்படிப்பட்ட (மிகவுங்கொடிய) பாவஞ்செய்த பிராணிகளை
படைத்தவன்–ஸ்ருஷ்டித்தவன்
எங்ஙனம்–எதுக்காக
படைத்தான் கொல் ஓ–ஸ்ருஷ்டித்தானோ! (அறியோம்)-மனம் தளர்ந்து பேசுகிறார்

நா அகார்யம்
நாவுக்கு அகார்யமாவது
1-சப்தங்கள் நாரத்து அளவு பர்யவசிக்கையும்
2-பொய் சொல்லுகையும்
3-பிறருக்கு கிலேச அவஹமான ஹேதுக்களைச் சொல்லுகையும்

நா வாயில் உண்டே –இத்யாதி
அல்லாத திரு நாமங்கள் இடையிலே இளைப்பாற வேண்டும்
கொங்கிலே திருக் குருகைப் பிரான் பிள்ளான் எழுந்து அருளி ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு மாளிகையிலே
விட்ட அளவிலே பிறந்த வார்த்தைகளை ஸ்மரிப்பது

அநந்தாழ்வான் சரம சமயத்திலே -பட்டர் உகக்கும் திரு நாமம் ஏது -என்று கேட்க
அழகிய மணவாளப் பெருமாள் -என்கிற திரு நாமம் என்று சொல்ல
இது பர்த்ரு நாம கிரஹணம் பண்ணுமா போலே இரா நின்றது
ஆகிலும் பட்டர் உகந்த திரு நாமம் அன்றோ என்று
இத் திரு நாமத்தைச் சொன்ன அநந்தரத்திலே திரு நாட்டுக்குப் போந்தான்

உடையவர் எழுந்து இருந்த காலத்திலே வடுக நம்பி அருகே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருளி
ஓம் நமோ நாராயணா என்று இத்தைச் சொல்ல
இத்தைக் கேட்ட வடுக நம்பி நாவை காரியம் என்று எழுந்து இருந்து கடக்கப் போனார்

ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் (உடைய )சரம சமயத்திலே உடையவர் எழுந்து அருளி –
இப்போது திரு உள்ளத்தில் அனுசந்தானம் ஏது -என்று கேட்க
பகவன் நாமங்களாய் இருப்பன அநேகம் திரு நாமங்கள் உண்டு -ஆயிருக்க திருவரங்கம் என்கிற
நாலைந்து திரு அக்ஷரமும் கோப்புண்ட படி என் -என்று நினைந்து இருந்தேன் காணும் என்று அருளிச் செய்ய
அத்தை ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் விரும்பிய திரு நாமம் என்று உடையவர் விரும்பி இருப்பர்

ஏதத் விரதம் மம -என்று ஈஸ்வர ஸங்கல்பம்
யாதானும் பற்றி நீங்கும் விரதம் -சம்சாரிகள் விரதம்
விரதம் கொண்டு ஏத்தும் என்று முமுஷுக்கள் விரதம்
முமுஷுக்களுக்குக் கூறாய் இறே அர்ச்சாவதாரம் இருப்பது –
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே -என்னக் கடவது இறே

எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே –என்று கழித்து
ஆர் எண்ணும் நெஞ்சு யுடையார் அவர் எம்மை ஆள்வார் –என்று அருளிச் செய்தார் இறே (கலியன் )

ஒழிவில் காலம் எல்லாம் அடிமையும் அபேக்ஷித்து (3-3 )
புகழு நல் ஒருவனிலே வாஸிகமான அடிமை செய்து (3-4 )
மொய்ம் மாம் பூம் பொழிலிலே -அடிமையை இழியாதாரை நிஷேதித்து (3-5 )
செய்ய தாமரைக் கண்ணனிலே -பகவத் ஞானத்தை உபதேசித்து (3-6)
பயிலும் சுடர் ஒளியிலே (3-7 )-பண்டே திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டு உகக்கிறார்

நாவ காரியம்
வாழ்த்துவர் பலராக -திருவாய் -3-7-1-
ஸ்ருஷ்டிக்குப் பிரயோஜனம் திரு நாமம் சொல்லுகை இறே

நாவ காரியம்
நாவுக்கு அகார்யமாவது
அஸத்யம் சொல்லுகிற நாக்காலே பகவத் விஷயத்தைச் சொல்லுகை

ஆவியை அரங்கமாலை எச்சில் வாயால் தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்த வாறே என்று
அயோக்கியன் திரு நாமம் சொல்லுகையும் பாப பலம் என்றார் இறே

திருவாகம் தீண்டிற்றுச் சென்று -என்று அவனைப் பார்க்கும் எத்தனையோ –
தன்னைப் பார்க்க வேண்டாவோ என்று திரு உள்ளத்தைக் கர்ஹிக்கிறார் இறே

கொடு மா வினையேன் -என்று
பொய்ந் நின்ற ஞானம் தொடங்கி -நெடுமாற்கு அடிமை அளவும் கர்ம பலம் என்று அனுசந்தித்தார் இறே

சொல்லிலாதவர்
இவை புகுந்து கழியாதவர்

நாள் தோறும் விருந்து ஒம்புவார்
நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ வைஷ்ணவர்களை அப்போது அமுது செய்ய எழுந்து அருளின
ஸ்ரீ வைஷ்ணவர்களைப் போலே ஆதரிப்பார்கள் –

தேவ கார்யம் செய்து
இவர்களுக்கு உகப்பாக பகவத் ஸமாராதனம் பண்ணிப் போருமவர்கள்
திரி தந்தாகிலும் -என்னக் கடவது இறே

வேதம் பயின்று வாழ்
பகவத் பாகவத கைங்கர்யத்துக்கு ஏகாந்தமான பிரதேசங்களை நெருங்க அனுசந்தித்து
வேத ப்ரதிபாத்ய வஸ்துவைக் கண்ணாலே கண்டு அனுபவிப்பவர்கள் –

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர் ஏத்தும் திறன் அறிமின் -என்னக் கடவது இறே

திருக் கோட்டியூர்
இவற்றை நினைத்து இறே இவர் தாம்
அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமான துங்கன் செல்வனைப் போலே
திரு மாலே நானும் உனக்குப் பழ அடியேன் -என்றது
இவரைப் போலே தம்மையும் அங்கீ கரிக்க வேணும் என்னும்படி இறே இவர்கள் ஏற்றம் –

மூவர் காரியமும் திருத்தும்
அவர்களுக்கு வந்த ஆபத்துக்களைப் பரிஹரிக்கும்
வேத அபஹார குரு பாதக–இத்யாதி
மஹாபலி போல்வார் கையிலே ராஜ்யத்தைப் பறி கொடுக்க -அத்தை மீட்டுக் கொடுக்குக்கையும்
இவை இறே மூவர் காரியமும் திருத்துகை யாவது

முதல்வனை
திருத்துகைக்கு அடி சம்பந்தம்

சிந்தியாத பாவ காரிகளைப்
துர்மானிகளாய் எதிரிட்டுப் போருகிற இவர்கள் தண்மை பாராதே இவர்கள் கார்யம் செய்த
உபகாரத்துக்குத் தோற்று அநுஸந்தியாத பாப கர்மாக்களை

படைத்தவன் எங்கனம் படைத்தான் கொலோ
என்ன ப்ரயோஜனத்துக்குப் படைத்தான் என்று அறிகிறி லோம் இறே

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -என்று
ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்குமவன் இறே
சோம்பாது இப்பல் உருவை எல்லாம் படர்வித்த –என்னக் கடவது இறே

இப் பாட்டில்
பூர்வ வாக்யம் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் தொழில்
உத்தர வாக்யம் -ஈஸ்வரன் தொழில்
நாவ காரியம் சொல் இல்லாதவர் -என்று நிஷித்த நிவ்ருத்தி
நாடொறும் விருந்து ஓம்புவார் -என்று மாநஸம்
தேவ கார்யம் செய்து -என்று காயிகம்
வேதம் பயின்று வாழ் -என்று வாசிகம்

————

கீழில் பாட்டில் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய அநுகூல விருத்தியை அனுசந்திக்கிறார்

குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய்
செற்றம் ஓன்றும் இலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
துற்றி ஏழ் உலகு உண்ட தூ மணி வண்ணன் தன்னைத் தொழாதார்
பெற்ற தாயர் வயிற்றினை பெரு நோய் செய்வான் பிறந்தார்களே – 4-4- 2-

பதவுரை

குற்றம் இன்றி–ஒரு வகையான குற்றமுமில்லாமல்
குணம்–(சமம், தமம் முதலிய குணங்களை)
பெருக்கி–வளரச் செய்து கொண்டு
குருக்களுக்கு–(தம் தம்) ஆசாரியர்களுக்கு
அனுகூலர் ஆய்–(கைங்கரியம் பண்ணுவதற்குப்) பாங்காயிருப்பவர்களும்
செற்றம் ஒன்றும் இலாத–பொறாமை யென்பது சிறிதுமில்லாதவர்களும்
வண் கையினார்கள்–உதார கையை யுடையவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ்–வாழுமிடமான
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்)
ஏழ் உலகு–ஸப்த லோகங்களையும்
துற்றி–ஒரு கபளமாகத் திரட்டி
உண்ட–அமுது செய்தருளினவனும்
தூ–பழிப்பற்ற
மணி–நீல மணி போன்ற
வண்ணன் தன்னை–நிறத்தை யுடையவனுமான எம்பெருமானை
தொழாதவர்–வணங்காதவர்
பெற்ற (தங்களைப்) பெற்ற–
தாயர்–தாய்மாருமடய
வயிற்றினை–வயிற்றை
பெரு நோய் செய்வான்–மிகவும் கொடுமைப் படுத்தமைக்காக
பிறந்தார்கள்–பிறந்தார்–

குற்றம் இன்றி
குற்றமாவது
தோஷ
குண ஹாநிகள்
அதாவது
கீழில் பாட்டில் சொன்ன நாவ காரியம்

தோஷ குண ஹாநிகள் தான்
அதிகார அனுகுணமாக வேறு பட்டு இறே இருப்பது –

குண ஹாநி யாவது –
அதிகார அனுகுணமாக ஸாஸ்த்ர ஸித்தமான அர்த்தங்களிலே
ஸதாசார்ய நியமனம் உண்டானால் அது செய்யாது ஒழிகை

தோஷம் ஆவது –
இவ் வடைவிலே அவ் வாச்சார்யன் வேண்டா என்றதைச் செய்கை –

அவன் வேண்டா என்றவை தான்
த்யாஜ்யம் என்றும்
நிஷேதம் என்றும்
நிஷித்தம் -என்றும்
நிந்திதம் -என்றும் நாலு வகையாய் இருக்கும்

அதில்
த்யாஜ்யம் ஆவது
ஆச்சார்யன் ஓர் அவஸ்தையிலே செய் என்றத்தை ஓர் அவஸ்தையிலே தவிரச் செல்லுகை

நிஷேதம் ஆவது
வைதம் அல்லாதவற்றிலே அல்பஞ்ஞர் செய்யுமவற்றைக் கண்டு அவன் நிஷேதிக்கச் செய்தே செய்கை

நிஷித்தமாவது
தத் கத தோஷ மாத்ரமாய்
ஸ்நாந மாத்ரத்தாலே ஸூத்தமாகை

நிந்திதமாவது
சரீர அவசான ப்ராயச் சித்தமாய்
புத்தி பூர்வமான பர தார பரிக்ரஹாதிகள்

இப்படிக் குற்றம் தீர்ந்து இருப்பாரைக் கிடைக்குமோ என்னில்
ஆச்சார்யர் பர தந்த்ராவதற்கு முன்புள்ளவை ஆச்சார்யன் ஷமித்த போதே கழியும்
பின்பு அந்த அபிசந்தி விராமம் தன்னாலே செய்யான்
பூர்வமே யுண்டான அபிசந்தி வாஸனை பின்பு நலிந்தாலும் வாசிக கிரியா பர்யந்தமாகச் செய்யான்
(கூரத்தாழ்வான் பிள்ளை பிள்ளான் – மானஸ குற்றம் மட்டும் —
எம்பெருமானார் திருவடிகளே சரணம் சொல்லி விடச்சொல்லிய ஐதிக்யம் )
ச மர்யாதாதி வர்த்தனம் உண்டாய்த்தாகில் தன் அதிகாரத்தை நோக்க அவனுடைய க்ஷமையாலே கழியும் –
யத் ப்ரஹ்ம கல்பேத் யாதி
நாளும் நின்று அடும் நம் பழ வினை உடனே மாளும் -(1-3-8 )-இத்யாதி

இனி நிருபாதிக நிஷேதமாவது
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்க்கை (1-2-) யாகிற
தியாக பிரகார நிர்ணயம் இறே

தோஷ
குண ஹாநிகள் அற்று –

குணம் பெருக்கி
ஸ்வார்த்த நிரபேஷமாக
அவன் சொன்னத்தைச் செய்து
குணத்தை அபி விருத்தமாக்கி

குருக்களுக்கு அனுகூலராய்
குருக்கள் என்கிற பஹு வசனத்தாலே
ஸம்ஸார வர்த்தகரான குருக்கள் அளவிலும் பிரதி கூலியாமல்
லோக அபவாத பீதி பரிஹார அர்த்தமாகவும்
லோக ஸங்க்ரஹதயா கர்த்தவ்யமாகவும்
சிஷ்ய புத்ராதிகளுடைய உஜ்ஜீவன அர்த்தமாகவும்
பேணிக் கொண்டு போரவும் வேணும் இறே

பஹு வசனம் நிவர்த்திக ஆச்சார்யர்கள் அளவிலேயான போது
ஸ்வரூப அனுரூபமாகவும்
மங்கள அனுரூபமாகவும்
ஆரோஹ ரூபமாகவும்
அவரோஹ ரூபமாகவும்
வருகிற குரு பரம்பரா அநு வர்த்தநமாகக் கடவது

குருக்கள் என்ன ஆச்சார்யர்களைக் காட்டுமோ என்னில்
ஆச்சாரோ வேத சம்பன்ன -என்று எடுத்து
குருரித் யபி தீயதே -என்று பர்யாயம் ஆக்கிற்று

இது ஆத்மநி குருஷு பஹு வசனமாய்
மந்த்ர ப்ரதிபாத்யமான ஏக -வகுத்த -விஷயத்தில் ஆன போது
உஜ்ஜீவனமும்
பிரதிபத்தியும்
கிஞ்சித்காரமும்
நித்ய அர்ச்சனையும் சேரக் கிடைக்கும் இறே

அத்ர பரத்ர ச அபி (ஸ்தோத்ர ரத்னம் )
அம்புதத்தைப் பார்த்து இருப்பான் அற்று ( ஞான சாரம் )
அப் பொருள் தேடித் திரிவான் அற்று –
(ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே )

செற்றம் ஓன்று இலாத
செற்றமாவது -பொறாமை -அதாவது
பர ஸம்ருத்ய அஸஹத்வம்

ஒன்றும் இல்லாமையாவது
பர ஸம்ருத்தி தானே ஸ்வ ஸம்ருத்தியாய் இருக்கை

வண் கையினார்கள் வாழ்
வண்மை -ஒவ்தார்யம் –
அதாவது
செய்த அம்சத்தை நினைக்கை அன்றிக்கே
செய்யும் அம்சத்தில் பிரதிபத்தியாய்
பிரிய ஹிதங்கள் செய்யா நிற்கச் செய்தே ஒன்றுமே செய்திலோமே என்று கை மறித்து நிற்கை –

வாழ் –
இது தானே ஸாத்யமாய் இருக்கை

திருக் கோட்டியூர்
ஏவம் பிரகாரரானவர்கள் நித்ய வாஸம் செய்கிற திருக்கோட்டியூரிலே சந்நிஹிதனாய் இருக்கை –

துற்றி ஏழு உலகு உண்ட
துற்றாக முன் துற்றிய தொல் புகழோன் (பெரிய திருமொழி -7-1 )என்னுமா போலே
ஏழு லோகத்தையும் துற்றாக அமுது செய்த

தூ மணி வண்ணன் தன்னைத் தொழாதார்
உண்டார் மேனி கண்டால் தெரியும் இறே
தூயதான நீல ரத்னம் போலே இருக்கிற திருமேனியை யுடையவனை
கரிய கோலத் திரு வுருக் காண்பன் நான் -என்றால் போலே
ஆச்சார்ய ப்ரீதி நிபந்தனமாக இவ் வடைவிலே தொழாதவர் –

பெற்ற தாயர் வயிற்றினை பெரு நோய் செய்வான் பிறந்தார்களே
இவனைப் பெறுவதற்கு முன்பு பட்ட வியசனம் அல்பம் என்னும்படி காணும்
இவன் பிறந்து தொழுகைக்கு யோக்யனாய் இருக்கச் செய்தேயும் தொழாமையாலே இவளுக்கு வந்த வியசனம்

இவனைக் காணும் தோறும் காணும் தோறும் வயிற்று எரி மண்ட அடித்துக் கொள்ளும் படி
இவர்கள் அடியாக வரும் வியசனம் ஆகையாலே
பெரு நோய் செய்வான் பிறந்தார்களே -என்கிறார்

மா அஜ நிஷ்டே–இத்யாதி (பிறக்காதவனுக்கு சமம் )
பெரு நோய் -மீளாத வியாதி

தொழுவார்க்கு இத்தனை அடைவு வேணும் போலே காணும் –

—————–

தொழுவார்களுக்கும் தொழாதவர்களுக்கும் உள்ள நன்மை தீமைகளை அனுசந்தித்தார் கீழ்ப் பாட்டில்
இதில் திரு நாமங்களை எண்ண யோக்யராய் இருக்கச் செய்தே
எண்ணாதவர்களுடைய அநர்த்தம் கண்டு வெறுக்கிறார் –

வண்ண நன் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும்
திண்ணை சூழ் திருக் கோட்டியூர் திருமாலவன் திரு நாமங்கள்
எண்ணக் கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ண கிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக் கவளம் உந்துகின்றார்களே -4-4-3 –

பதவுரை

நல் வண்ணம்–நல்ல நிறத்தை யுடைய
மணியும்–ரத்நங்களையும்
மரகதமும்–மரகதகங்களையும்
அழுத்தி–(ஒழுங்கு பட) இழைத்ததனால்
நிழல் எழும்–ஒளி விடா நின்றுள்ள
திண்ணை–திண்ணைகளாலே
சூழ்–சூழப் பெற்ற
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் எழுந்தருளி யிருக்கிற)
திருமால் அவன்–திரு மா மகள் கொழுநனுடைய
திரு நாமங்கள்–திரு நாமங்களை
எண்ண–(ஒன்று, இரண்டு என்று எண்ணுகைக்கா
கண்ட–படைக்கப் பட்ட
விரல்களால்–விரல்களாலே (அந்தத் திருநாமங்களை)
இறை பொழுதும்–க்ஷண காலமும்
எண்ண இலாது–எண்ண மாட்டாமல்
போய்–புறம்பே சென்று
உண்ணக் கண்ட–(சரீர போஷணார்த்தமாக) உண்ணா நின்ற
தம்–தங்களுடைய
நம் ஊத்தை வாய்க்கு–அசுத்தமான வாயிலே
கவளம்–சோற்றுத் திரள்களை
உந்துகின்றார்களே–(அவ் விரல்களினால்) தள்ளா நின்றார்களே!
(இதென்ன கொடுமை.!)-

வண்ண நன் மணியும் மரகதமும் மழுத்தி நிழல் எழும்
திண்ணை சூழ் திருக் கோட்டியூர் திருமாலவன் திரு நாமங்கள்
நன்றாக வர்ணத்தை யுடைத்தான ரத்னங்களும் அப்படிப்பட்ட மர கதமும்
அழுத்தி நிழல் எழும் படி கைப் பணி இட்டுத் திருத்தின சுவரிலே ரத்னங்கள் ப்ரதி பிம்பிக்கும் படி
மாடங்களுக்கு அலங்காரமான திண்ணைகளாலே சூழப்பட்ட திருக்கோட்டியூரிலே

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் -என்னுமா போலேயும்
திரு விழவில் மணி அணிந்த திண்ணை( 7-8 ) -என்னுமா போலேயும்
சொக்க நாராயணர் திரு நாள் தோறும் அலங்கரிப்பர்கள் இறே –
அங்கே நித்ய வாஸம் செய்கிற ஸ்ரீ மானான சொக்க நாராயணருடைய திரு நாமங்களை –

எண்ணக் கண்ட விரல்களால்
அசாதாரணமான திரு நாமங்களை அர்த்த ஸஹிதமாக
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு
ஒள்ளியான் உணர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் (9-10 )-என்று
ஆழ்வார் அனுசந்தித்த திரு நாம வி சேஷங்களை
வாஸ்யத்துக்கு வாசகமாகவும் –

மன்னு நாரணன் நம்பி -என்று
வாசகத்துக்கு வாஸ்யமாகவும்

தேனும் பாலும் என்னும் படி நிரதிசய போக்யமான திரு நாமங்களை எண்ணி ஜபித்து
ப்ரதிஜ்ஜை தலைக்கட்டி விடுகை அன்றிக்கே
பேரும் ஓர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான் -என்கையாலே
கால தத்வம் உள்ளதனையும் விரல் மடக்கி எண்ணா நின்றால்
எண்ணின இடமும் எண்ணும் இடமும் அஸங்க்யாதமாய் இருக்கை —

அவனுடைய ஆநந்தத்தை அப்ராப்ய மனஸா ஸஹ -என்னாமல் ஒரு நியாயத்தாலே அளவிட்டாலும்
ஆனந்தாவஹமான திரு நாமங்களை எங்கனே அளவிடலாவது –

நீராய் நிலனாய் என்கிற சாதாரண நாமங்களை உபேக்ஷித்து மீளலாம்
எப்பொழுதான அப் பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதான திரு நாமங்களை எண்ணி எண்ணி
துல்ய விகல்பம் செய்து அவன் தன்னை
முடிச் சோதிப் படியே அனுபவிக்குமா போலே அவன் ஸ்வரூப ரூப குணங்களுக்கு வாசகமான
திரு நாமங்களையும் அனுபவிக்கும் அத்தனை இறே

தலையும் கையும் வணங்கவும் அஞ்சலி பண்ணவும் கண்டது -என்னுமா போலே
விரல் கண்டதும் திரு நாமம் எண்ணுகைக்கு என்று இருக்கிறார்
கரண ஸ்வ பாவங்களைச் செய்யலாவது இல்லை இறே

இறைப் பொழுதும் எண்ண கிலாது போய்
அத்யல்ப காலமும் என்னாது ஒண்ண இருக்க ஒண்ணாத திரு நாமங்களை
அத்யல்ப காலமும் எண்ணவும் எண்ணாமல் போவதே

உண்ணக் கண்ட தம் மூத்தை வாய்க்கு கவளம் உந்துகின்றார்களே
போஜன நியதி பண்ணி அதிகார அனுகுணமாக உண்ணக் கண்ட வாயால் க்ரமத்தில் உண்ணாமல் –

ஷூத் அதிசய ஸுஷ்டவங்களாலே
கடமுண்டார் கல்லாதவர் -என்கிறபடி
ஊத்தைமாசேறும் படி ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின் எண்ணாத விரல்களால் கவளம் உந்துகிறது
பகவத் பாகவத ஆச்சார்ய விசேஷங்களுக்கு என் செய்வாராகத் தான்
உத்தமர்கட்க்கு என் செய்வார் -என்னக் கடவது இறே

பரமன் பவித்ரன் சீர் வாய் மடுத்துப் பருகிக் களித்தவர் தொண்டர்க்குச்
சொன்ன மாலை அமுது உண்ணக் கண்ட வாயால்
அது உண்ணாமல் ஊத்தைக் கவளம் உந்துவதே
தொண்டு பட்டுச் சொன்ன மாலை அமுது உண்கைக்குக் ஹேதுவாகத் தீர்த்த ப்ரஸாதங்களாலே
தேஹ தாரணம் செய்கை தானும் அரிதாவதே -என்று மிகவும் வெறுத்து அருளுகிறார் –

இத்தால்
பக்தி ரூபா பன்ன ஞான ப்ரகாச ரத்னமான
செல்வ நம்பி
திருக்கோட்டியூர் நம்பி போல்வார்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நிழல் கொடுத்துக் கொண்டு வர்த்திக்கும் தேசம் என்றதாய்த்து
செழு மா மணிகள் சேரும் -என்னுமா போலே –

———

இஷ்டப் பிராப்தி அறியாதாப் போலே
அநிஷ்ட நிவ்ருத்தியும் அறியாது ஒழிவதே என்கிறார் இப் பாட்டில் –

உரக மெல் அணையான் கையில் உறை சங்கம் போல் மட வன்னங்கள்
நிரை கணம் பரந்து ஏறும் செம்கமல வயல் திருக் கோட்டியூர்
நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிட சாதியர்
பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தன தான் கொலோ -4 4-4 –

பதவுரை

உரகம் மெல்–திருவனந்தாழ்வானை ஸுகுமாரமான
அணையான்–படுக்கையாக வுடைய எம்பெருமானது
கையில் உறை–திருக் கையில் உள்ள
சங்கம் போல்–ஸ்ரீ பாஞ்ச ஜந்யம் போல் (வெளுத்த)
மட அன்னங்கள்–மடப்பம் பொருந்திய ஹம்ஸங்களானவை
ஏறும்–ஏறி யிருக்கப் பெற்ற
செம் கமலம்–செந்தாமரை மலர்களை யுடைய
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்)
நரகம் நாசனை–(தன்னடியார்க்கு) நரக ப்ரவேசத்தை ஒழித்தருளுமவனமான எம்பெருமானை
நாவில் கொண்டு–நாவினால்
மானிட சாதியர்–மநுஷ்ய ஜாதியிற் பிறந்தவர்கள்
பருகும்–குடிக்கின்ற
நீரும்–தண்ணீரும்
உடுக்கும்–உடுத்துக் கொள்ளுகிற
கூறையும்–வஸ்திரமும்
பாவம் செய்தன தான் கொல் ஓ–பாவஞ்செய்தனவோ தான்!:-

உரக மெல் அணையான்
திருவனந்த ஆழ்வானை மிருதுவான படுக்கையாக யுடையவன்
சைத்திய மார்த்வ ஸுரப்யங்கள் ப்ரக்ருதியாய் இருக்கும் இறே -ஸர்ப்ப ஜாதிக்கு
ஆகையால் இறே திருவனந்த ஆழ்வான் தான் சேஷியான ஸர்வேஸ்வரனுடைய திருமேனியின்
மார்த்வ அனுகுணமாக இந்த வடிவைக் கொண்டு திருப்படுக்கையாய் இருக்கிறது
அங்குப் பள்ளி கொண்டு அருளுகிறவனுடைய திரு நாமம் உரக மெல்லணையான் என்று இறே
பரமபதம் திருப்பாற் கடல் விட அத்யந்த அபிமதம் இங்கே தானே

கையில் உறை சங்கம் போல்
கை வண்ணம் தாமரை -என்ற
திருக்கையிலே நித்ய வாஸம் செய்கிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே

மட வன்னங்கள் நிரை கணம் பரந்து ஏறும் செம்கமல வயல் திருக் கோட்டியூர்
நெல்லை மிகித்துக் கிளம்பின செந்தாமரை வயல்களிலே ஒன்றுக்கு ஓன்று பவ்யமான அன்னங்கள்
திரண்டு ஒழுங்கு பட நிறைந்து ஆமிஷார்த்தமாக நாநாவான வலைகளுக்குத் தப்பின ஜல சரங்களும் தப்பாத படி
பரந்தேறி ஜீவிக்கும் வயல்களை யுடைத்தான திருக் கோட்டியூரிலே பள்ளி கொண்டு அருளா நிற்கிற

நரக நாசனை
நரக நாசனை நாவில் கொண்டு அழைப்பாருக்கு
பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும்படி (திருமாலை ) பண்ணுகிற நரக நாசனை

நாவில் கொண்டு அழையாத மானிட சாதியர்
அஹ் ருதயமாகச் சொல்லுகிற கட படாதி ஸப்தம் போலாகிலும் நாவால் சொல்லி
அநிஷ்ட நிவ்ருத்தி பண்ணிக் கொண்டு வர்த்திக்க மாட்டாமல்
பெறுதற்கு அரிதான மனுஜ்ய ஜாதியில் பிறந்தவர்கள் –

பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தன தான் கொலோ
குடிக்கிற தண்ணீரும்
உடுக்கிற புடைவையும்
உடுக்கிறவன் தானும்
என்ன என்ன பாபங்களை செய்தானோ என்று வெறுத்து அருளுகிறார் –

குடிக்கிற தண்ணீருக்கும் உடுக்கும் கூறைக்கும் ஸாஸ்த்ர வஸ்யதை உண்டாகில் அன்றோ பாபம் வருவது
ஆயிருக்க ஸாஸ்த்ர வஸ்ய யோக்யனாய் இருக்கச் செய்தேயும்
அயோக்யனான பாபியோட்டை ஸ்பர்சம் சேதனம் அசேதனம் என்று பாராதே இறே

ஜலே ஜீவாஸ் ஸ்த்தலே ஜீவா -என்றும்
அனோர் அணீயான் -என்றும்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் -என்றும் சொல்லுகையாலே
அத்யந்தம் ஸூஷ்மமான விஸிஷ்ட ஜந்துக்கள் உண்டாக
வேதாந்தங்களை ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அருளிச் செய்கையாலே
பாப விமோசன அர்த்தமாக ஜாதமான அல்ப ஜந்துக்களை
பாப வர்த்தகன் ஸ்பர்சிக்கையாலே

இதுக்கு அடி
இவற்றுக்குப் பூர்வமேவ உண்டான பாபம் அத்தனை இறே

ஏத்த வல்லார் திரிதலால் தவமுடைத்துத் தரணி தானே (பெருமாள் திரு மொழி -10-5 ) என்று
நல்லவர்களால் அசேதனமான பூமிக்கு நன்மையைக் கற்பியா நின்றால்
இதுக்குச் சொல்ல வேண்டா இறே

குந்தோவா
ஊனேறு -இத்யாதிகளில்
பகவத் பாகவத ஸ்பர்சம் உள்ளவை ஞானாதிகருக்கும் பகவத் விவசர்க்கும்
உத்தேச்யமாகா நின்றால்
இதர ஸ்பர்சம் உள்ளவை சத்துக்களுக்கு
நிஷேத நிஷித்த நிந்திதங்கள் என்று மிகவும் தோன்றும் என்று கருத்து –

இத்தால்
ஸூரிகள் ஒரு புடைக்கு ஒப்பாம் படி (உரக மெல் அணையான் கையில் உறை சங்கம் போல்)
சார க்ராஹிகளாய் (மட வன்னங்கள்)-
ஸூத்த ஸ்வாபவரான முமுஷுக்கள்
சிஷ்ய ஆச்சார்ய முறைமை குன்றாமல் அஹம் அன்ன யோக்யராய் இருக்கச் செய்தேயும்
ஸுமநஸ்யம் விஞ்சினவர்கள் வசிக்கிற தேசத்தில் உண்டான குண விசேஷங்களைக் கண்டு
(அதிலே மக்நராய் விரும்பார்கள் என்றும் )
அதிலே மக்நரான ஸம்ஸாரிகளையும் போக்யமாக விரும்புவார்கள் என்று காட்டுகிறது
(அவன் இவர்கள் இடம் உகந்து இங்கு வாழ்வதாலேயே மாறுவார்கள் என்று விரும்புவார்கள் )
(நாமம் செல்லாதவார்களை -விரும்பார் -பாட பேதம் )

———–

ஊண் மாறி அடைக்கிறார்

ஆமையின் முதுகத்திடை குதி கொண்டு தூ மலர் சாடிப் போய்
தீமை செய்து இள வாளைகள் விளையாடு நீர்த் திருக் கோட்டியூர்
நேமி சேர் தடம் கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடை
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கி புல்லை திணிமினே -4 -4 -5-

பதவுரை

இள–இளமை பொருந்திய
வாளைகள்–‘வாளை’ என்னும் மீன்கள்
ஆமையின்–ஆமைகளினுடைய
முதுகத்திடை–முதுகின் மேல்
குதி கொண்டு–குதித்துக் கொண்டும்
தூ மலர்–நல்ல புஷ்பங்களை
சாடிப் போய்–உழக்கிக் கொண்டும்
தீமை செய்து–(க்ஷுத்ர ஜந்துக்களைக் கலக்கி ஒட்டுகையாகிற தீம்புகளைச் செய்து கொண்டும்
விளையாடு–விளையாடுமிடமான
நீர்–நீரை யுடைய
திருக் கோட்டியூர்– திருக்கோட்டியூரில் (எழுந்தருளி யிருப்பவனும்)
நேமி–திருவாழி யாழ்வானோடு
சேர்–சேர்ந்திருக்கிற
தட–பெரிய
கையினானை–திருக் கையை யுடையனுமான எம்பெருமானை
(கீழ் பாஞ்ச ஜன்யம் இங்கு திரு ஆழி ஆழ்வான் )
நினைப்பு இலா–(ஒரு காலும்) நினையாத
வலி நெஞ்சு உடை–கடினமான நெஞ்சை உடையவர்களும்
பூமி பாரங்கள்–பூமிக்குச் சுமையாயிருப்பவர்களுமான பாவிகள்
உண்ணும்–உண்கிற
சோற்றினை–சோற்றை
வாங்கி–பிடுங்கி விட்டு, (எறிந்து)
புல்லை–(அறிவற்ற பசுக்களுக்கு உண்வான) புல்லைக் கொண்டு
திணிமின்–(அவர்கள் வயிற்றைத்) துற்று விடுங்கள்-
(ஞான ஹீனர் பசு பிராயர் -புல்லைத் தானே கொடுக்க வேண்டும் )

இள வாளைகள்
நாளால் இளைய வாளை என்கிற மத்ஸ்யங்கள்

ஆமையின் முதுகத் திடை குதி கொண்டு
ஆமையினுடைய நடு முதுகில் குதித்து அதில் நில்லாமல்

தூ மலர் சாடிப் போய்
போது அலர்ந்த செவ்வி தாமரையிலே இதழ் மடியும்படி
பின்னையும் குதித்துப் போய்

தீமை செய்து விளையாடு
தஜ்ஜாதியோடே தீமை செய்து விளையாடும்படியான

நீர்த் திருக் கோட்டியூர்
நீரை யுடைத்தான திருக்கோட்டியூரிலே நித்ய வாஸம் செய்வானாய்

நேமி சேர் தடம் கையினானை
திருவாழி பொருந்தப் பிடித்த பெரிய திருக்கையை யுடையவனை
அலம் புரிந்த நெடும் தடக்கையை யுடையவனை

நினைப்பிலா வலி நெஞ்சுடை பூமி பாரங்கள்
நினைப்பில்லாத அளவே அன்றிக்கே
நிபுண ஆச்சார்யர்கள் ஸதா த்யேய வஸ்து காண் -என்று அறிவித்தால்
ஓம் காண் எனக்கு நினைவுக்கு வேறே விஷயம் இல்லையோ -என்னும்படி
வலிதான நெஞ்சை யுடைய க்ருதக்நராய் பூமிக்குப் பாரமானவர்கள்
பூமி தான் ந பாரம் ஸப்த ஸாகரா -இவர்களே எனக்குப் பாரம் என்னும் இறே

இவர்கள்
உண்ணும் சோற்றினை வாங்கி புல்லை திணிமினே
உண்ணும் சோறு -மிக்க பசியோடு வாயில் இட்ட சோறு
அத்தை வாங்கி
மிருகங்கள் தின்கிற புல்லைத் திணியுங்கோள்-என்றது
இவன் தின்னேன் என்றாலும் திணியுங்கோள்-என்ற படி –

திணித்தாலும் இவன் மென்று இரக்க வேண்டாவோ என்னில்
உங்கள் பூர்வர்கள் இப்படி காண் போந்த படி என்று இவர்களை இசைவித்து
வாங்கின சோற்றை அந்த மிருகங்களுக்கு இடுங்கோள்
மிருகங்கள் இட்டவனை அறிந்து வச வர்த்தியாய் வருமே
இவர்கள் இட்டவனையும் அறியார்கள்
இடுகிற ஜீவன வாசியும் அறியார்கள்
வாசி அறிந்தவர்களைப் பார்த்து இறே திணியுங்கோள் என்கிறது

இத்தால்
தம் தாமுடைய கடாக்ஷ விசேஷங்களாலே தம் தாமுக்கு ஆஸன்ன வர்த்திகளான
சிஷ்ய புத்ராதிகளை உஜ்ஜீவிப்பிக்க வல்ல ஆச்சார்யர்கள்
தம் தாமுடைய நினைவாலே தூரஸ்தரான சிஷ்ய புத்ரர்களை உஜ்ஜீவிக்கும் படி வல்லரானவர்களையும்
ஸூமானாக்களையும் கூடி பிரிந்து இருக்கச் செய்தேயும் அவர்களுடைய நீர்மையை விஸ்வஸித்து
ஸன்மர்யாத அதிவர்த்தந நிஷ் ப்ரயோஜன வியாபார போகிகளான பிரகாரத்தைக் காட்டுகிறது –

(ஆச்சார்யர்கள் -(பெரிய வாளை )-கடாக்ஷத்தாலே அருகில் உள்ள -சிஷ்யர் புத்திரர் -(ஆமை )
தூரஸ்தர் -சிஷ்யர் புத்திரர் -மனசால் வாழ்த்தி -மலர்ந்து மணம் பரப்பும் தாமரை ஆச்சார்யர்கள் -ஸூ மநாக்கள்
ஷூத்ர ஐந்து -ஸன்மர்யாத அதிவர்த்தந வியாபாரம் நிஷ் ப்ரயோஜன வியாபாரம் -உள்ளவர்
இவர்களை ஓட்டுவதே போகம் ஆகிய விளையாட்டு )

———–

கீழ்ப்பாட்டில்
நினைப்பிலா வலி நெஞ்சுடை பூமி பாரங்கள்-என்று
அவைஷ்ணவர்கள் ஹேயதையைச் சொல்லிற்று
இதில்
ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஏற்றம் சொல்லுகிறது –

பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று எத்துவாரகள் உழக்கிய
பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே – 4-4-6-

பதவுரை

பூதம் ஐந்தொடு–பஞ்ச பூதமாகிய சரீரத்தினாலும்
ஐந்து வேள்வி–பஞ்ச மஹா யஜ்ஞங்களினாலும்
ஐந்து புலன்கள்–(சப்தம் முதலிய) ஐந்து விஷயங்களினாலும்
(ஐந்து) பொறிகளால்
பஞ்சேந்திரியங்களினாலும் (ஸம்பவிக்கக்கூடிய)
ஏதம் ஒன்றும் இலாத–குற்றமொன்றுமில்லாதவர்களும்
வண் கையினார்கள்–உதாரணமான கைகளை யுடையவர்கள்
வாழ்–வாழ்விடமான
திருக்கோட்டியூர்–திருக்கோட்டியூரில் எழுந்தருளி யிருப்பவனும்)
நாதனை–(எமக்கு) ஸ்வாமியும்
நரசிங்கனை–நரஸிம்ஹ ஸ்வரூபியுமான எம்பெருமானை
நவின்று–அநுஸந்தித்து
ஏத்துவார்கள்–துதிக்குமவரான பாகவதர்கள்
உழக்கிய பாதத் துளி–திருவடிகளினால் மிதித்தருளின தூளினுடைய
படுதலால்–ஸம்பந்தத்தினால்
இ உலகம்–இந்த லோகமானது
பாக்கியம் செய்தது–பாக்யம் பண்ணினதாகக் கொள்ளப்படும்–

பூதம் ஐந்தோடு
மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம் புண்ணார் ஆக்கை
தத்வம் -இருபத்து நாலு
இதில் ஏழு பிரதானம்
இந்த ஏழிலும் ஐந்து பிரதானம்
இது எல்லா மதங்களுக்கும் ஒக்கும்

வேள்வி ஐந்து
பஞ்ச மஹா யஜ்ஞங்கள்

புலன்கள் ஐந்து
இந்திரியங்கள் ஐந்து

பொறிகள் ஐந்து
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி

ஏதம் ஒன்றும் இலாத
இவற்றோடு கூடி இருக்கச் செய்தே
தோஷம் இன்றிக்கே இருக்கை

பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால் ஏதம் ஒன்றும் இலாத
ஸத்வ ரஜஸ் தமஸூக்களோடே கலசி இறே ப்ரக்ருதி இருப்பது
ஸத்வத்துக்கு நிவ்ருத்தி குணம்
தமஸ்ஸூக்கு ப்ரவ்ருத்தி குணம்

முன்பு விஹிதத்தில் நிவ்ருத்தியும் நிஷித்ததில் ப்ரவ்ருத்தியுமாய்ப் போருமாகை இறே
அக்ருத்ய கரணத்திலும் க்ருத்ய அகரணம் க்ரூரம் ஆகிறது –
அக்ருத்ய கரணத்துக்கு
தேச தோஷத்தாலும் தேஹ தோஷத்தாலும் கூடும் என்று அனுக்ரஹத்துக்கு விஷயம் உண்டு
கீழ் தனக்கு அடைத்தது செய்யாத போது நிக்ரஹம் கனத்து இருக்கும்

நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்று
அநாத்ம குண பூர்த்தியையும்
ஆத்ம குண கந்தம் இல்லாமையையும் அருளிச் செய்தார் இறே

சத்வம் விஞ்சின போது மற்றை இரண்டும் சத்வத்தின் வழியே வரும்
அப்போது நிவ்ருத்தி நிஷித்ததிலும் பிரவ்ருத்தி விஹிதத்திலும் கிடக்கும்
அதாவது
தனக்கும் பிறர்க்குமாய்ப் போந்தவன் இரண்டுக்கும் பிராயச்சித்தம்
பகவத் பாகவத விஷயங்களிலே அந்வயிக்கும்

தனக்கு என்று இருக்கை -ஏதம்
ஈஸ்வரனுக்கு என்கை ஏதம் இன்றிக்கே இருக்கை
ஏதம் ஒன்றுமே இருக்கையாவது -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு என்று இருக்கை

வேதம் ஐந்து ஏதம் ஒன்றும் இல்லாத
ஸ்வர்க்காதி சாதனமாக அனுஷ்டிக்கை -ஏதம்
மோக்ஷ சாதனமாக அனுஷ்டிக்கை -ஏதம் இன்றிக்கே இருக்கை
பகவத் பாகவத ப்ரீதி என்று அனுஷ்டிக்கை -ஏதம் ஒன்றும் இன்றிக்கே இருக்கை யாவது –

புலன்கள் ஐந்து ஏதம் ஒன்றும் இலாத
இந்திரியங்களை இதர விஷயங்களில் மூட்டுகை ஏதம்
பகவத் விஷயத்தில் மூட்டுகை ஏதம் இன்றிக்கே இருக்கை
பாகவத விஷயத்தில் மூட்டுகை -ஏதம் ஒன்றும் இன்றிக்கே இருக்கை யாவது

பொறிகள் ஐந்தும் ஏதம் ஒன்றும் இலாத
ஸப்த ஸ்பர்ச ரூப ரஸங்களைத் தனக்கு என்று இருக்கை ஏதம்
இவற்றை பகவத் விஷயத்துக்கு என்று இருக்கை -ஏதம் இன்றிக்கே இருக்கை
பாகவத விஷயத்துக்கு என்று இருக்கை -ஏதம் ஒன்றும் இன்றிக்கே இருக்கை —

வண் கையினார்கள் வாழ்
வண்மை -ஒவ்தார்யம் –
அதாவது
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றை வாங்கி
அப்பதார்த்தங்கள் நசியாத படி வாங்குகையும்
இவற்றை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குக் கொடுக்கையும்

ஈஸ்வரனையும் உள்படப் பறித்து இறே பாகவத கைங்கர்யம் பண்ணிற்று திரு மங்கை ஆழ்வார்
அதற்கு உபாயமாக இறே ஈஸ்வரன் திரு மந்த்ரத்தை உபதேசித்தது

துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றைத் தான் துற்றியது எற்றனவும் -என்று
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இடாதே தான் உண்டான் என்று இறே ஆழ்வார் கர்ஹித்தது

பொதுவாக யுண்பதனைப் புக்கு நீ உண்டக்கால் சிதையாரோ உன்னோடு என்று
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானையும் உட்பட கர்ஹித்தார்கள் இறே பெண்கள்

அவ்வளவு அன்றிக்கே
சாதி கோட்டியுள் கொள்ளப் படுவார் என்கிறபடியே
தங்கள் திரளில் கூட்டாதே பாஞ்ச ஜன்யத்தை பத்ம நாபனோடே இறே கூட்டி விட்டது

அவதாரத்தில் உண்ட இழவு தீர இறே
அர்ச்சாவதாரத்தில் அமுது செய்தால் போலே குறையாமல் கொடுக்கிறது

வாழ்
கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் –

திருக் கோட்டியூர் நாதனை நரசிங்கனை நவின்று எத்துவாரகள் உழக்கிய
ஸ்ரீ வைகுண்ட நாதன்
ஸ்ரீ திருப்பாற் கடல் நாதன் -என்பதிலும்
திருக் கோட்டியூர் நாதன் -என்கை இறே ஏற்றம்

நாதனை -என்றது
சொக்க நாராயணரை

நரசிங்கனை-என்றது
தெற்கு ஆழ்வாரை

மார்வு இரண்டு கூறாகக் கீறிய கோளரியை வேறாக ஏத்தி இருப்பவர்கள் இறே இவர்கள்

ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானைத் திரு நாமம் சொல்ல ஓட்டேன் என்ற வாய் தகர்த்து இறே மார்பு இடந்தது –

பாத தூளி படுதலால்
அனுபவ ஜெனித ப்ரீதிக்குப் போக்கு விட்டு ஸஞ்சரிக்கிற
தூளி படுதலால்

இவ்வுலகம்
நினைப்பிலா வலி நெஞ்சுடைப் பூமிப் பாரங்கள் வர்த்திக்கிற லோகம்

பாக்கியம் செய்ததே
திரு உலகு அளந்த திருவடிகளில் தூளி பட்டது அன்று பாக்யம்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ பாத தூளி பட்டதே பாக்யம்
கல்லைப் பெண்ணாக்கி
சரீரத்தைப் பூண் கட்டிற்று அத்தனை இறே அவன் திருவடிகள்
கடல் வண்ணன் பூதங்கள் ஸ்ரீ பாத தூளி பட்டதால்
போயிற்று வல்லுயிர்ச் சாபம் -என்று ஸ்வரூபத்தைப் பற்றி வரும் விரோதிகளும் போம் இறே
பேர்த்த கர நான்குடையான் திருவடி படுவதிலும்
பேரோதும் தீர்த்த கரர் ஸ்ரீ பாதம் படுகை இறே பாக்யம் –

———–

குருந்தம் ஓன்று ஒசித்தானோடும் சென்று கூடி யாடி விழா செய்து
திருந்து நான் மறையோர் இராப் பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்
கரும் தட முகில் வண்ணனை கடைக் கொண்டு கை தொழும் பத்தர்கள்
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ – 4-4-7-

பதவுரை

திருந்து–(எம்பெருமான் ஸ்வரூபங்களைப் பிழையறக் கூறுகையாகிற) திருத்தத்தை யுடைய
நால் மறையோர்–நான்கு வேதங்களையுமோதின ஸ்ரீவைஷ்ணவர்கள்
ஒன்று குருத்தம்–ஒரு குருத்த மரத்தை
ஒசித்தானோடும்–முறித்தருளின கண்ண பிரானை
சென்று கூடி–சென்று சேர்ந்து
ஆடி–(அவனுடைய குணங்களிலே) அவகாஹித்து
விழாச் செய்து–(விக்ரஹ ஸேவையாகிற) உத்ஸவத்தை அநுபவித்துக் கொண்டு
இரா பகல்–இரவும் பகலும்
ஏந்தி–மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு
வாழ்–வாழுமிடமான
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளியிருப்பவனும்,)
கருந்தட–கறுத்துப் பெருத்த
முகில்–மேகம் போன்ற
வண்ணனை–நிறத்தை யுடையனுமான எம்பெருமானைக் குறித்து
கடைக் கொண்டு–நைச்சியாநுஸந்தானத்துடன்
கை தொழும்–அஞ்ஜலி பண்ணா நின்றுள்ள
பக்தர்கள்–பக்தியை யுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள்
இருந்த–எழுந்தருளி யிருக்குமிடமான
ஊரில்–ஊரிலே
இருக்கும்–நித்ய வாஸம் பண்ணுகிற
மானிடர்–மநுஷ்யர்கள்
ஏதலங்கள்–எப்படிப்பட்ட பாவங்களை
செய்தார் கொல் ஓ-அனுஷ்டித்தார்களோ! (அறியேன்.)–

குருந்தம் ஓன்று
அத்விதீயமான குருந்தம் பூ முட்டாக்கு இட்டால் போலே இருக்கையாலே கிருஷ்ணன் விரும்பி இருக்கும்
பூம் குருந்து ஏறி இராதே -என்னக் கடவது இறே
இதிலே கிருஷ்ணன் வந்து ஏறக் கூடும் -பின்னை நலிகிறோம் -என்று இறே அஸூரன் பிரவேசித்தது

ஒசித்தானோடும் சென்று கூடி யாடி விழா செய்து
ஓசித்தான் -விரோதி நிரஸனம்
விரோதி நிரசன சீலனை சென்று கிட்டி –
இருவர் நினைவும் ஒன்றாய்
அவன் குணங்களில் அவகாஹித்து
அநந்தரம்
அவர்களுக்கு விக்ரஹ அனுபவத்தைக் கொடுக்கும்
அங்கும் ஸதா பஸ்யந்தி இறே

திருந்து நான் மறையோர்
வேதத்துக்குத் திருத்தமாவது
குண விக்ரஹ அனுபவத்துக்கு ஏகாந்தமான பிரதேசங்களில் சொல்லுகிறபடியே அனுஷ்டிக்கை

இராப் பகல் ஏத்தி
வேறே அந்ய பரதை இல்லாமையாலே இது மாறாதே நடக்கும்

வாழ்
அநந்ய ப்ரயோஜனர் ஆகையாலே
இது தானே பலமாய் இருக்கும்

திருக் கோட்டியூர்
அவர்கள் வர்த்திக்கிற தேசம்

கரும் தட முகில் வண்ணனை
கருத்துக் பெருத்து இருக்கிற
நீல முகில் போலே இருக்கிற திருமேனியை யுடையவனை

கடைக் கொண்டு கை தொழும்
1-தங்கள் நைச்யத்தையே முன்னிட்டுத் தொழுமவர்கள்
அன்றிக்கே
2-உத்க்ருஷ்டன் பக்கல் அபக்ருஷ்டன் செய்யும் தொழில் என்னவுமாம்
அன்றிக்கே
3-கடை என்று முடிவாய்
மேல் -விற்கவும் பெறுவார்கள் -என்கையாலும்
ததீய சேஷத்வமே தங்களுக்கு ஸ்வரூபம் என்று கண்டவர்களுக்கு உகப்பாக
பகவத் விஷயத்தைத் தொழுமவர் -என்னவுமாம்

பத்தர்கள்
வைதமாக அன்றியிலே
ராகமாகத் தொழுமவர்கள்

இருந்த ஊரில் இருக்கும் மானிடர்
மானிடர் என்கையாலே
மனுஷ்ய ஜன்மத்துக்குப் பிரயோஜனம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருந்த ஊரிலே இருக்கை
என்னும் இடத்தைக் காட்டுகிறது –
அங்குப் போகிறதும் -வானவர் நாடு -என்று இறே

சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் என்கையாலே
அவர்களில் இவர்களுக்கு வாசி உண்டானால் போலே
தேசத்துக்கும் அவதாரத்துக்கும் வாசி உண்டு

இருந்த ஊரில் இருக்கும் மானிடர் -என்கையாலே
அவர்கள் அல்லர் உத்தேஸ்யர்
அவர்கள் இருந்த தேசம்
வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் –
(சாண்டிலியை -கருடன் -சிறகு இழந்த வ்ருத்தாந்தம் -பாகவதர்கள் இருக்கும் இடமே ஸ்ரீ வைகுண்டம் )

ஆழ்வானுக்கு ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திருவடிச் சார்ந்தார் என்று விண்ணப்பம் செய்ய
பாகவத் கைங்கர்யமே யாத்ரையாகப் போந்தவரை அப்படிச் சொல்லலாகாது
திரு நாட்டுக்குப் போனார் என்று சொல்ல வேணும் காணும் என்று அருளிச் செய்தார்

ஸ்ரீ வைஷ்ணவர்களை நீராட -என்றும்
ஆச்சார்யனை -திரு மஞ்சனம் பண்ண -என்றும் சொல்லுகிறது
உத்தேஸ்ய தார தம்யத்தை இட்டு இறே

வடுக நம்பி திரு நாட்டுக்குப் போனார் என்று
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் அருளாள பெருமான் எம்பெருமானாருக்கு விண்ணப்பம் செய்ய
சிறிது போது மோஹித்துக் கிடந்தது
உணர்ந்து அருளி
அவரைப் பார்த்து -திரு நாட்டுக்குப் போந்தார் என்னலாகாது காணும்
உடையவர் ஸ்ரீ பாத்துக்குப் போந்தார் என்ன வேணும் காணும் என்று அருளிச் செய்தார்

(பகவத் திருவடி சேர்வது பிரதம நிஷ்டருக்கு –
திரு நாட்டுக்குப் போவது பாகவத நிஷ்டருக்கு –
உடையவர் திருவடி சார்ந்தார் இதுக்கும் மேற்படி
மூன்று நிலைகள் உண்டே )

ஸ்ரீ சபரியும் பெருமாள் திருவடிகளில் பிரார்த்தித்ததும் இதுவே இறே
(தமது பர்த்தா -மதங்கர் -ஆச்சார்யர்- திருவடி சேருவதைத் தானே பிரார்த்தித்தாள் )

ஆழ்வான் ஸம்ஸாரத்தில் ஆர்த்தியின் கனத்தாலே கலங்கிப் பெருமாள் திருவடிகளிலே
அடியேனைத் திரு நாடு ஏறப் போம்படி திரு உள்ளமாக வேணும் -என்று விண்ணப்பம் செய்ய
பெருமாளும் திரு உள்ளமாய்
பின்பு ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் திரு மாளிகையிலே புற வீடு விட்டு இருக்கிற அளவிலே

இத்தை உடையவர் கேட்டு அருளி
பஞ்சுக் கொட்டன் திரு வாசல் அளவாக எழுந்து அருளி -பெருமாளுக்கு விண்ணப்பம் செய்தால் செய்து அருளுவர்
நாம் அடியாகப் பெருமாள் இரண்டு வார்த்தை அருளிச் செய்தவராக ஒண்ணாது என்று
மீண்டும் ஆழ்வான் இருக்கும் இடத்தே எழுந்து அருளி
ஏன் ஆழ்வான் என்ன
அடியேன் மறந்தேன் -என்று விண்ணப்பம் செய்தான்
மறைக்கைக்கு அடி ஸம்ஸாரத்தில் ஆர்த்தியின் கனம்

எத் தவங்கள் செய்தார் கொலோ
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நாடாவுதீர் -இங்கோர்
பெண் பால் பொருளோ வெனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ -என்கிறபடியே
அவன் காவலுக்கு உள்ளே கிடக்கிறது தானே இறே தவமாவது –

நீர் நிலை நின்ற தவம் இது கொல் -என்று
பகவத் விஷயத்தைக் கிட்டுகைக்கு தவம் ஓன்று
பாகவத விஷயத்தை கிட்டுகைக்கு அநேகம் தபஸ்ஸூ வேணும் இறே

கொலோ
பகவத் விஷயத்தை கிட்டுகைக்குத் தபஸ் அறிவர்
பாகவத விஷயத்தைக் கிட்டும் தபஸ்ஸூக்கள் இறே இவர்க்கு அறியப் போகாது இருப்பது –

———–

ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருந்த ஊரில் பிரதிகூலர் மேலிடார்கள் என்கிறது இப் பாட்டில்

நளிர்ந்த சீலன் நயாசீலன் அபிமான துங்கனை நாள் தோறும்
தெளிந்த செல்வனை சேவகம் கொண்ட செம்கண் மால் திருக் கோட்டியூர்
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினில்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே -4- 4-8 –

பதவுரை

நளிர்ந்த சீலன்–குளிர்ந்த ஸ்வபாவத்தை யுடையவரும்
நயாசலன்–நீதிநெறி தவறாதவரும்-நய -நீதி /அசலன் -தவறாமல் மலை போல் நிலை நின்று –
அபிமான துங்கனை–இடைவிடாது எம்பெருமானை அநுபவிக்கையாலுண்டான) அஹங்காரத்தால் உயர்ந்தவரும்
நாள் தொறும் தெளிந்த செல்வனை–நாடோறும் தெளிந்து வரா நின்றுள்ள கைங்கர்ய ஸம்பத்தை யுடையவருமான செல்வ நம்பியை
சேவகம் கொண்ட–அடிமை கொண்டவனாய்
சேவகம் செய்த இல்லாமல் சேவகம் கொண்ட -கைங்கர்யம் கொள்ள வேண்டுமே அவன்
செம் கண் மால்–செந் தாமரைபோன்ற கண்களையுடையவனாய் (அடியார் பக்கல்) மோஹமுடையனாய்
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில்
குளிர்ந்து உறைகின்ற–திருவுள்ளமுகந்து எழும் தருளி யிருப்பவனான எம்பெருமானுடைய
கோவிந்தன் குணம் படுவார்–கல்யாண குணங்களைப் பாடுமவரான ஸ்ரீவைஷ்ணவர்கள்
உள்ள நாட்டினுள் விளைந்த தானியமும்–எழுந்தருளி யிருக்கிற நாட்டிலே விளைந்த தாந்யத்தையும்
இராக்கதர்–ராக்ஷஸர்கள்
மீது கொள்ள கிலார்கள்–அபஹரிக்க மாட்டார்கள்–

நளிர்ந்த சீலன் நயாசீலன் அபிமான துங்கனை நாள் தோறும் தெளிந்த செல்வனை சேவகம் கொண்ட செம்கண் மால் திருக் கோட்டியூர்
குளிர்ந்த சீலத்தை யுடைய செல்வ நம்பி
ஈஸ்வரன் சீலம் கொதித்து இருக்கும்

வாள் கொள் நீள் மழு வாளி யுன்னாகத்தான் -என்றும்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள் -என்றும்
துர்மானியான ருத்ரனும்
சாவாமைக்கு மருந்து தின்றும்
தேவ ஜாதியும் இறே இவனுக்கு அடிமை செய்வது

அக்கும் புலியினதளும் யுடையார் அவர் ஒருவர் பக்கம் நின்ற பண்பர் –என்றும்
தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும் சூழ் அரவும் பொன் நாணும் தோன்று மால் -என்றும்
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து தோற்றுகையாலே

ஏறாளும் இறையோனும் திசை மகனும் திரு மகளும் கூறாளும் தனி உடம்பன் -என்று
இவன் உடம்பு தேவதாந்தரமும் திருவிடையாட்டமுமாய் இறே இருப்பது
(தேவ -தானம் தேவதாந்த்ர சொத்து )
இப்படி இன்றியே
காணிலும் உருப்பொலார் செவிக்கு இனாத கீர்தியார் -என்று இறே இவன் இருப்பது

நய வென்றது
நீதியை
அங்கும் நீதி வானவர் -என்னக் கடவது இறே

அசலன் –
நீதிக்கு குலைதலிலாதவன்
சேஷ சேஷி பாவ சம்பந்தம்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயும் -என்கிற படி அடைவு பட்டு இறே அங்கு இருப்பது

இங்கும் அவை அடைவே -யானே என் தனதே -என்று அடைவு கெட்டு இருக்கும்
உக்ரசேனனை முடியை சூட்டி -ஆசனத்தில் உயர வைத்து –
தான் திருக் கையாலே வெண் சாமரம் இடும் இடம் இறே இவ்விடம்
விண்ணுளார் பெருமானை அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் -என்று
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவரும் அதிசங்கை பண்ண வேண்டும் இடம் இறே இது
இந்நிலத்திலே குறையாது இருக்கை
பாபம் மாண்டால் பண்ணும் கிருபை இறே பாபம் வந்தவாறே குலைவது
பாபம் கிடக்க பண்ணும் கிருபை ஆகையாலே குலையாது –

அபிமான துங்கன் –
என்னில் மிகு புகழார் யாவரே –
மாறுளதோ இம் மண்ணின் மிசையே –
யாவர் நிகர் அகல் வானத்தே –
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் -என்று
பகவத் அனுபவத்தால் வந்த செருக்கும் கர்வமும் இறே அபிமாநிக்கிறது

புவியும் இரு விசும்பும் நின் அகத்த -இது அன்றோ உன் படி –
நீயும்
சேதன அசேதனங்களை உன் வயிற்றில் வைத்த நீயும்
என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய் -என்று
தத்வ த்ரயத்தையும் -அணு பரிமாணனான என்னுடைய நெஞ்சுக்குள்ளே அடக்கின
நானோ நீயோ பெரியார் என்னும் இடத்தை –
உனக்கு பஷபாதியுமாய் -கை யாளுமாய் -கைப்பட்டவனோடே விசாரி
சிறியேனுடை சிந்தையுள் மூவுலகும் தன் நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தார் -என்னக் கடவது இறே

நளிர்ந்த சீலம் -என்று குணம்
நயா சலன் -என்று அனுஷ்டானம்
அபிமான துங்கன் -என்று இவற்றால்  வந்த செருக்குக்கு அடி ஞான கார்யம் என்கிறது
(அந்நிய சேஷம் கலசாமல் -ஞான பிரேம கார்யம் உடையவர் )

நாள் தோறும் தெளிந்த -என்று
இச் செருக்கோடே விபரீத செருக்கு ஒரு நாளும் கலசாது என்கிறது
கலக்கமிலா நல் தவ முனிவர் -என்று கலங்காது இருக்கை தான் அரிதாய் இருப்பது
தெளிவுற்று வீவின்றி நின்றவர் -என்கிற படியே இத் தெளிவு தான் குலையாது இருக்கை தன் ஏற்றமாய் இருப்பது –
அன்றிக்கே
நாள் தோறும் தெளிந்து வாரா நிற்கும் அவர்க்கு

செல்வனை –
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்றும்
அந்தரிஷா கதஸ் ஸ்ரீ மான் -என்றும்
சது நாகவரஸ் ஸ்ரீ மான் -என்றும் சொல்லுகிற மூன்று ஸ்ரீ யும் இவர்க்கும் உண்டே
(செல்வச் சிறுமீர்காள் -இதே வியாக்யானம் பெரிய வாச்சான் பிள்ளை )

லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்று பெருமாள் ராஜ்யத்தை இழந்தார்- இவர் கைங்கர்ய சாம்ராஜ்யத்தை பெற்றார் –
சுற்றம் எல்லாம் பின் தொடர -எல்லா அடிமையும் பெற்றார் –
சம்பன்ன -என்கையாலே பாகவத கைங்கர்ய பர்யந்தம் ஆகை இறே பூர்த்தி –

(காட்டில் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்தவர் பாகவத கைங்கர்யம் செய்தது எங்கே என்னில்
சுற்றம் எல்லாம் பின் தொடர -அனைவரும் செய்த கைங்கர்யம் செய்ததால்
அயோத்யா ஜனங்கள் -பாகவதர் திரு முகம் மலர்ந்தனவே
ஆகவே பெருமாள் விட்டுப்போன பாகவத கைங்கர்யமும் ஸித்தித்து )

பகவத் கைங்கர்யம் செய்தது தம்முடைய சத்தை பெருகைகாக –
அந்த சத்தையை அழிய மாறி இறே பாகவத கைங்கர்யம் பண்ணிற்று

(சக்ரவர்த்தி திரு மகன் முக உல்லாசம் அன்றோ இவருக்கு உத்தேச்யம் என்னில்
கங்கா அவதாரணாத் பூர்வம் செய்தது
அப்புறம் அஹம் ஏகோ -கௌசல்யா ரக்ஷணம் செய்ய போகச் சொல்லியும் –
ஜனங்கள் முக மலர்த்தி உத்தேச்யமாக பின்னாலேயே போனான்
சத்ருக்னனை அன்றோ பாகவத நிஷ்டை என்பர் என்னில்
இவர் பெருமாள் முக மலர்த்தி த்வாரா பாகவத கைங்கர்யம்
அவரோ நேராக பாகவத கைங்கர்யம் )

அந்தரிஷா கதஸ் ஸ்ரீ மான் -என்று –
பிராட்டியையும் பெருமாளையும் கண்ட அன்று (காணாமலேயே ) இறே இவர் படை வீடு விட்டு புறப்பட்டது
ஆகாசம் இறே இவருக்கு உள்ளது
இளைய பெருமாளும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும் படை வீட்டை விட்ட பின்பு அன்றே
ஸ்ரீ மான்களாய் ஆய்த்து –
பிராட்டி இலங்கைக்குள் எழுந்து அருளி இருக்கச் செய்தேயும்
சஹ வாச தோஷத்தாலே பிராட்டி கடாஷம் பெற்றது இல்லை –
இலங்கையை விட்டு கிளம்பின பின்பு இறே ஸ்ரீமான் -என்றது
(மானஸ கடாக்ஷம் மாத்திரம் -ஸ்ரீ வசன பூஷணத்தில் கடாக்ஷம் பெற்றான் என்றது கொள்ள வேண்டும் )

சது நாகவரஸ் ஸ்ரீ மான் -என்று ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஸுவ ரஷணத்தில்
ஸ்வ வியாபாரத்தை பொகட்ட பின்பு இறே ஸ்ரீ மான் ஆய்த்து
முதலை அல்ல விரோதி -அஹங்காரம்

இவற்றால் பலித்தது –
ப்ராப்யத்தை லபித்த படியும்
ப்ராப்தி விரோதி நிவர்த்தமான படியும் –
பிராபக விரோதி நிவர்தனமான படியும் -சொல்லிற்று

சேவகம் கொண்ட
இவன் செய்தான் என்றால் இவனுக்கு உகப்பாம்
கொண்ட -என்கையால்-ஈஸ்வரன் உகப்பன்-என்கிறது
சேவகம் கொண்ட ஸ்வரூபத்தை காட்டியோ என்னில் -அன்று –
கண் அழகை காட்டி -என்கிறது

செங்கண் மால் –
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண் மாலே -என்னக் கடவது இறே

திருக் கோட்டியூர் குளிர்ந்து உறைகின்ற
பரம பதத்திலே சம்சாரிகள் இழவிலே திரு உள்ளம் குடி போய் உள்ளுக் கொதித்து இருக்கும் –
அவ்விருப்பு நித்யமானாலும் -இருந்தாலும் முள் மேல் இருப்பு -என்னக் கடவது இறே
ப்ரீதியோடே பொருந்தி வர்த்திப்பது இங்கே இறே
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு –என்று காட்டுத் தீயில் அகப்பட்டவன்
தடாகத்தில் வந்து விழுமா போலே இறே வந்து விழுந்தது –
வெள்ளத்தின் உள்ளானும் வேம்கடத்து மேயானும் உள்ளத்தில் உள்ளான் -என்னக் கடவது இறே
பள்ளி கொள்ளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -என்னக் கடவது இறே

கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் –
செங்கண் மால் -என்று வாத்சல்யம்
சேவகம் கொண்ட -என்று சௌசீல்யம்
கோவிந்தன் -என்று சௌலப்யம்
அவதாரம் பரத்வம் -என்னும் படி இறே அர்ச்சாவதார சௌலப்யம்

இதுக்கு ஏகாந்தமான குணங்களை சிநேகத்தோடு சொல்லுவார் உள்ள நாட்டினுள்
அவர்கள் அளவல்ல
அவர்கள் சம்பந்தம் உடையவர் அளவல்ல
அவர்கள் இருந்த ஊர் அளவல்ல –
அவ் வூரோடே சேர்ந்த நாட்டினுள் விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே –
தனக்கும் தம் பந்துக்களுக்கும் என்னல் இறே அவர்கள் கொள்ளுவது
பகவத் பாகவத விஷயங்களுக்கு என்றால் அவர்களுக்கு கொள்ள சக்தி இல்லை
புனத்தினைக் கிள்ளி புதுவவி காட்டி வுன்பொன் அடி வாழ்க -என்று இறே இவர்கள் இருப்பது –

அபிமான துங்கன் -என்று இவற்றால் வந்த செருக்குக்கு அடி ஞான கார்யம் என்கிறது

———-

இப் பாட்டில்
ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கண்டு பகவத் அனுபவம் பண்ணப் பெறாத இழவு தீரும் என்கிறார்

கொம்பினார் பொழில் வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4- 9-

பதவுரை

கொம்பின் ஆர்–கிளைகளாலே நெருங்கின
பொழில் வாய்–சோலைகளிலே
குயில் இனம்–குயில்களின் திரள்
கோவிந்தன்–கண்ண பிரானுடைய,
குணம்–சீர்மைகளை
பாடு–பாடா நிற்கப் பெற்றதும்,
சீர்–சிறந்த
செம் பொன் ஆர்–செம் பொன்னாலே சமைந்த
மதிள்–மதிள்களாலே
சூழ்–சூழப் பட்டதும்
செழு–செழுமை தங்கிய
கழனி உடை–கழனிகளை யுடையதுமான
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளியிருப்பவனும்).
நம்பனை–(ரக்ஷகன் என்று) விச்வஸிக்கக் கூடியவனும்
நரசிங்கனை–நரஹிம்ஹ ரூபியுமான ஸர்வேச்வரனை
நவின்று–அநுஸந்தித்து
ஏத்துவரர்களை–துதிக்கும் பாகவதர்களை
கண்டக்கால்–(யான்) ஸேவிக்கப் பெறுவேனாகில்
இவர் இவர்-“இந்த இந்த ஸ்ரீவைஷ்ணவர்கள்
எம்பிரான் தன்–எம்பெருமானுடைய
சின்னங்கள்–அடையாளமாயிருப்பவர்கள்”
என்று–என்று அநுஸந்தித்து
ஆசைகள்–நெடுநாளாய் பிறந்துள்ள ஆசைகளை
தீர்வன்–தலைக் கட்டிக் கொள்வேன்–

கொம்பினார் -இத்யாதி –
பனைகளால் நெருங்கின சோலை இடத்து குயில்கள்
குயில் ஆலும் வளர் பொழில் சூழ்

கோவிந்தன் குணம் பாடு-
குயில் இனங்கள் ஆனவை –
தாழ்ந்த குலத்திலே அவதரித்து தாழ்ந்த கார்யம் செய்வதே -என்று அவனுடைய
சௌலப்யத்தை அனுசந்தித்து -ப்ரீதிக்கு போக்கு விட்டு பாடா நிற்கும்
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லுவது –
சிலர் பயிற்று வித்தால் இறே –
அங்கன் இன்றிகே இவை தானே பாடா நிற்கும் –

நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்து நின்றும் துரப்பன் -என்னும்படி
இவை ஒழிந்த நாமாந்தரங்கள் சொல்லுவதில் இங்கு நின்று போக அமையும் என்னும் படி இறே இவற்றின் படி —

இன் அடிசிலொடு பாலமுது ஊட்டி எடுத்த என் கோலக் கிளியை
உன்னோடு தோழைமை கொள்ளுவன் குயிலே – என்று கைக்கூலி
பெற்றால் இறே கூவுவது –
இவை அப்படி அன்று –

சீர் செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர் —
ஸ்லாக்கியமாய் சிவந்த பொன்னால் அமைந்த மதிள்களால் சூழப் பட்டு -அழகிய
கழனிகளை உடைத்தான திருக் கோட்டியூர்

உள்ளு புக்கு அனுபவிக்க வேண்டாதபடி
கொம்புகளாலே ஆர்ந்த சோலையும்
குயில்கள் பாடுகையும்
சிவந்த பொன்னால் சமைந்த திரு மதிள்களும்
அழகிய கழனி கட்டளையும்
கண்டு அனுபவிக்க வேண்டும்படி நிரதிசய போக்யமாய் இருந்துள்ள தேசம்

நம்பனை
விச்வச நீயனை
நரசிங்கனை
விச்வாசத்துக்கு அடி இந்த அபதானம்
அடுத்ததோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவர் உமர் -என்னக் கடவது இறே
ஸ்ரீ பிரகலாதனுக்கு உதவினது சம்சாரிகள் விச்வசிக்கைக்கு உடல்
ஆழ்வாருக்கு உதவின இது இறே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு விச்வச நீயம்
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் -என்று
ஸ்ரீ பிரகலாத் ஆழ்வானுக்கு (இருந்த விசுவாசமும் )ஹிரண்யனையும் விச்வசிக்கைக்கு இறே தோன்றிற்று

எம்பார் அருளி செய்யும் வார்த்தை –
ஈஸ்வரனுக்கு மூன்று ஆபத்து வந்து கழிந்தது -என்று அருளி செய்வர் –
அதாவது
திரௌபதிக்கும்-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கும் -ஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்கும்
உதவிற்றிலன் ஆகில் -சம்சாரிகள் ஈச்வரத்வம் இல்லை என்று எழுத்து இடுவர்கள் இறே

ஆழ்வாரும் -எங்கனம் தேறுவர் தமர் -என்று தம்முடைய இழவிலும்
ஸ்ரீ வைஷ்ணவர்களின் அத்யாவசாயம் குலைகிறதோ -என்று இறே அஞ்சுகிறது –
பிழைக்கின்றது அருள் -என்று இறே அஞ்சுகிறது
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவன்-என்று தம்முடைய இழவுக்கு நோகை அன்றியிலே
ஈஸ்வரன் அருளுக்கு இறே இவர் நோவுவது

நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால் –
ப்ரீதிக்கு போக்கு விட்டு சொல்லுவார்களைக் கண்டக்கால் -கண் படைத்த பிரயோஜனம் பெறலாம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே -என்னக் கடவது இறே

எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று –
சின்னம் என்று -அவனுடைய அடையாளம் –
இவர்களைக் கண்டக்கால் -அவன் -சாத்விக சேவ்யன்-என்று தோன்றும் –
அவநீத ப்ர்த்யவர்க்கன் என்று இறே அவனை கழித்தது –
கூராழி வெண் சங்கு ஏந்தி வாராய் -என்று அவற்றோடு வாராத போது -போகாய் -என்று இறே இவர் இருப்பது
என் ஆவி சேர் அம்மானுக்கு அந்தாம வாண் முடி சங்காழி நூலாரமுள-என்னக் கடவது -இறே

ஆசைகள் தீர்வேனே-
ஆசைகள் -என்று
காண -என்றும்-கிட்ட -என்றும் –கூட இருக்க என்றும் இறே இவர்களுடைய ஆசைகள்
அவனைக் காண வேணும் -என்கிற ஆசைகள் தீரும் உகந்து அருளின நிலங்களை அனுபவித்தால்
அடியார்கள் குழாங்ளை உடன் கூடுவது என்று கொலோ -என்கிற இழவுகள் தீரும் இங்கே
ஸ்ரீ வைஷ்ணவ திரள்களைக் கண்டால்
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் -என்கிறபடியே கண்டவாறே ஆசைகள் தீரும் இறே –
ஈஸ்வரனைக் கண்டால் ஆசைகள் தீராது
இவர்களைக் கண்டால் ஆசை தீரும்

கடிவார் தண் அம் துளி கண்ணன் -இத்யாதி
அடியேன் வாய் மடுத்து பருகி களித்தேனே -என்று பூர்ண அனுபவம் பண்ணின பின்பு இறே
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -என்று பிரார்த்தித்து
தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே -என்று ஆசைகள் தீர்ந்தது
பயிலும் சுடர் ஒளி யிலே இறே
திரு நாவாய் அவையுள் புகலாவதோர் நாள் -என்று அத் திரள் இறே உத்தேச்யம்
ஒண விழவில் ஒலி அதிர பேணிவரு வேம்கடவா என்னுள்ளம் புகுந்தாய் -என்று
அவன் வரும் இடத்தில் அவர்களும் மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு கூட வந்து புகுவார்கள் –

—————

திருநாமம் சொல்லுவார்க்கு உண்டான பெருமை என்னால் அளவிடப் போகாது என்கிறார்

காசின் வாய்க்கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு
தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியர்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே – 4-4 -10-

பதவுரை

காசின் வாய்–ஒருகாசுக்கு
கரம்–ஒரு பிடி நெல்
விற்கிலும்–விற்கும்படியான துர்ப்பிக் ஷகாலத்திலும்
சோறு இட்டு–(அதிதிகளுக்கு) அன்னமளித்து
தேச வார்த்தை–புகழ்ச்சியான வார்த்தைகளை
படைக்கும்–ஸம்பாதித்துக் கொள்ளுமவரும்
வண் கையினார்கள்–உதாரமான கையை யுடையவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ்–வாழுமிடமான
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருக்கிற)
கேசவா–கேசவனே!
புருடோத்தமா–புருஷோத்தமனே!
கரவாது–(தமக்குள்ள பொருள்களை ) மறைத்திடாது
மாறு இலி–பதில் உபகாரத்தை எதிர் பாராமல்
கிளர் சோதியாய்–மிகுந்த தேஜஸ்ஸை யுடையவனே!
குறளா–வாமந வேஷம் பூண்ட எம்பெருமானே!
என்று–என்றிப்படி
பேசுவார்–(எம்பெருமான் திரு நாமங்களைப்) பேசுமவரான
அடியார்கள்–பாகவதர்கள்
எந்தம்மை–அடியோங்களை
விற்கவும் பெறுவார்கள்–(தம் இஷ்டப்படி) விற்றுக் கொள்ளவும் அதிகாரம் பெறுவார்கள்–

காசின் வாய்க்கரம் விற்கிலும் கரவாது
கழஞ்சு பொன்னுக்கு ஒரு பிடி நெல் விற்கும்படியான காலத்திலும்
தம் தாமுக்கு உள்ள பண்டங்களை ஒளியாமல்
மிடியர் தெளிய வெளியாக்கி

மாற்றிலி சோறிட்டு
ப்ரத்யுபகாரம் நச்சாமல்
லுப்தருக்கும்
மிடியர்க்கும்
பசியர்க்கும்
சோறிட்டு
துர்மானிகளுக்கு இரா மடம் கற்பித்து

தேச வார்த்தை படைக்கும் வண் கையினார்கள் வாழ் திருக் கோட்டியூர்
ஓவ்தார்ய தேஜஸ்ஸூம் கிருபையும் முதலான குணங்களும் எல்லாம் இவர்களுக்கேயோ யுள்ளது -என்னும்
வார்த்தை மிக யுண்டாம்படி யானாலும்
தங்கள் முன்பு செய்த ஒவ்தார்யங்களை நினையாமல்
செய்ய வேண்டுமவையே நினைக்கும் உதார குண பாவமே தங்களுக்கு வாழ்வாக நினைத்து இருக்கும்
அவர்கள் வர்த்திக்கிற திருக்கோட்டியூர்

கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று பேசுவார் அடியர்கள் –
கேசவா என்கிற அநேக திரு நாமங்களை
பக்தி பாரவஸ்யத்தாலேயும்
ப்ராப்தியாலேயும்
பேசுவார் யாவர் சிலருடைய அடியார்கள்

(புருடோத்தமா
புரு பஹு ஸூ நோதி -ததாதீதி -புருஷ தேஷு உத்தம வ்யுத்பத்தி )

எம் தம்மை விற்கவும் பெறுவார்களே-
அவர்களுக்கு கிரய விக்ரய அர்ஹர் நாங்கள் என்னப் பெறுவார்கள்
இது இறே பரம புருஷார்த்தப் பிராப்தி –

இத்தால்
ஷாம ஷோப வியாதி மிடிகளிலும் பகவத் பாகவத ஆச்சார்ய கைங்கர்யங்களே புருஷார்த்தமாக
லோபம் அறச் செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
நித்ய விபூதியில் உள்ளார் எல்லாரும் கொண்டாடும்படியான தேஜஸ்ஸை
இங்கே வர்த்திக்கச் செய்தே பெறுவர் என்கிறது –

—————

நிகமத்தில் இத் திரு மொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார்-

சீத நீர் புடை சூழ் செழும் கனி வுடைத் திருக் கோட்டியூர்
ஆதியான் அடியாரையும் அடிமை இன்றித் திரிவாரையும்
கோதில் பட்டர் பிரான் குளிர் புதுவை மன் விட்டு சித்தன் சொல்
ஏதமின்றி உரைப்பவர் இருடீகேசனுக்கு ஆளரே – 4-4 -11-

பதவுரை

சீதம் நீர்–குளிர்ந்த நீராலே
படை சூழ்–சுற்றும் சூழப் பெற்ற
செழு–செழுமை தங்கிய
கழனி உடை–கழனிகளை யுடைய
திருக் கோட்டியூர்–திருக் கோட்டியூரில் (எழுந்தருளி யிருக்கிற)
ஆதியான்–எம்பெருமானுக்கு-ஜகத் காரண பூதனுக்கு –
அடியாரையும்–அடிமை செய்யும் பாகவதர்களையும்
அடிமை இன்றி–அடிமை செய்யாமல்
திரிவாரையும்–திரிகின்ற பாவிகளையும் குறித்து,
கோதில்–குற்றமற்றவரும்
பட்டர் பிரான்–அந்தணர்கட்குத் தலைவரும்
குளிர்–குளிர்ந்த
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
மண்–நிர்வாஹருமான
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சொல்–அருளிச் செய்த இப் பாசுரங்களை
ஏதும் இன்றி–பழுதில்லாதபடி
உரைப்பவர்–ஓதுமவர்கள்
இருடீகேசனுக்கு–எம்பெருமானுக்கு
ஆளர்–ஆட் செய்யப் பெறுவர்-

சீத நீர் புடை சூழ் செழும் கனி வுடைத் திருக் கோட்டியூர்
அகாதமாய்
வாத ஆதப ப்ரவேசத்தால் வரும் உஷ்ணம் இன்றியிலே
சைத்யமேயாய் இருக்கிற ஆற்று நீராலே சூழப்பட்ட ஜல ஸம்ருத்தி மாறாத வயல்களை யுடைத்தான
திருக்கோட்டியூரிலே நித்ய சந்நிஹிதனாய்

ஆதியான் அடியாரையும் அடிமை இன்றித் திரிவாரையும்
ஜகத் காரண வஸ்துவான சொக்க நாராயணர்க்கு
அடிமை செய்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பெருமையையும்
அடிமை இன்றியிலே நிலை திரிந்து அநர்த்தப் படுவாருடைய அநர்த்த பரம்பரைகளையும் அறிவிப்பதாக

கோதில் பட்டர் பிரான் குளிர் புதுவை மன் விட்டு சித்தன் சொல்
மங்களா ஸாஸனம் ஒழிந்த பிரதிபத்திகள் எல்லாம் கோதாய்
அவை இல்லாத மங்களா ஸாஸனம் ஒன்றுமே ஸாரமாக பிரதிபத்தி பண்ணி இருப்பாராய்
ப்ராஹ்மண உத்தமர்க்கு உபகாரகராய்
ஸோஹம் -ஸ அஹம்பாவத்தால் (ஸஹ அஹம் -தத் த்வம் அஸி )வந்த உஷ்ணம் தட்டாமல்
தாஸோஹத்தால் வந்த குளிர்ச்சி மாறாத திரு மாளிகைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
அருளிச் செய்த இப் பத்துப் பாட்டையும்

ஏதமின்றி உரைப்பவர்
இவருடைய அபிப்ராயம் ஒழிந்தவை எல்லாம் பொல்லாங்காக நினைத்து
உரைக்க வல்லவர்கள்

இருடீகேசனுக்கு ஆளரே
இந்திரியங்களை
சங்கல்பத்தாலும்
கிருபாதி குணங்களாலும்
ஸுந்தர்யத்தாலும்
ஸ்வ கரண நியமன சக்தியாலும்
ஆகந்துக ப்ரேராதிகளாலும்
நியமிக்க வல்ல சொக்க நாராயணர்க்கு
ஞான பக்தி வைராக்யங்களோடே
மங்களா ஸாஸன பர்யந்தமாக
அடிமை செய்யும் ஆளாகப் பெறுவர் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-3–உருப்பிணி நங்கை தன்னை மீட்பான்–

July 29, 2021

பிரவேசம்
இதுவும் கீழ்ப் போந்த ப்ரீதி பின்னாட்டிச்
சில உபமான விசேஷங்களோடே
அவதாரங்களில் உண்டான வியாபாரங்களை கூட்டி
அனுசந்திக்கிறார் –

——————

உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் துடர்ந்து ஓடிச் சென்ற
உருப்பனை ஒட்டிக் கொண்டு இட்டு இறைத்திட்ட வுறைப்பன் மலை
பொருப்பிடைக் கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு
விருப்போடு பொன் வழங்கும் வியன் மால் இரும் சோலை யதே -4 -3-1 –

பதவுரை

உருப்பிணி நங்கை தன்னை–ருக்மிணிப் பிராட்டியை
மீட்பான்–கண்ணனுடைய தேரில் நின்றும்) திருப்பிக் கொண்டு போவதற்காக
தொடர்ந்து–(அத் தேரைப்) பின் தொடர்ந்து கொண்டு
ஓடிச் சென்ற–ஓடி வந்த
உருப்பனை–உருப்பன் என்றவனை
ஓட்டிக் கொண்டு இட்டு–ஓட்டிப் பிடித்துக் கொண்டு (தேர்த் தட்டிலே) இருத்தி
உறைத்திட்ட–(அவனைப்) பரிபவப் படுத்தின
உறைப்பன் மலை–மிடுக்கை உடைய கண்ண பிரான் (எழுந்தருளு யிருக்கிற)மலையாவது
கொன்றை–கொன்றை மரங்களானவை
பொருப்பு இடை நின்று–மலையிலே நின்று
முறி–முறிந்து
பொன்–பொன் மயமான
ஆழியும்–மோதிரங்கள் போன்ற பூ நரம்புகளையும்
காசும்–(பொற்காசு)போன்ற பூ விதழ்களையும்
கொண்டு–வாரிக் கொண்டு
விருப்பொடு வழங்கும்–ஆதரத்துடனே (பிறர்க்குக்)கொடுப்பவை போன்றிருக்கப் பெற்ற
வியன்–ஆச்சரியமான
மாலிருஞ்சோலை அதே–அந்தத் திருமாலிருஞ்சோலையே யாம்–

(கொன்றைப் பூ சிவனுக்கு -இங்கு இருப்பதால் சைவர்கள் உபயோகப்படுத்தாமல்
வைஷ்ணவர்களும் உபயோகப்படுத்தாமல் வீணாக இருக்குமே
அவர்கள் திரு மலை இல்லை
இவர்கள் மலர் இல்லை -)

உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் துடர்ந்து ஓடிச் சென்ற உருப்பனை ஒட்டிக் கொண்டு இட்டு இறைத்திட்ட
ருக்மிணி நாய்ச்சியாரை கிருஷ்ணனாம் கொண்டு போவான்
சிஸூ பாலன் முதலிய ராஜாக்கள் அஸக்யம் என்று விட
ருக்மன் தானும் மீட்ப்பான் துடர்ந்து ஓடிச் செல்வான்
அவனை ஓட்டிப் பிடித்துக் கொண்டு தேர்த தட்டிலே இட்டுச் சிக்கென பரிபவித்திட்ட

வுறைப்பன் மலை
நாய்ச்சியாரை விடாமல் வ்யவசித்துக் கைக்கொண்டவன் மலை

பொருப்பிடைக் கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு விருப்போடு பொன் வழங்கும்
கொன்றைகள் பொருப்பிடை நின்று
பொன் முறி ஆழியும் காசும் கொண்டு
விருப்போடு வழங்கா நிற்கும்

வியன் மால் இரும் சோலை யதே
வியன் -வேறுபாடு

இங்கு வழங்கினாலும்
கைக் கொள்ளுவார் இல்லை
கைக் கொள்ளத் தகுதியானவரை இங்கு வர ஒட்டார்கள்

இத்தால்
தம் தாமுக்கு அடைத்த இடங்களிலே நில்லா விட்டால்
ஸுவ் மநஸ்யம் ஸ்ப்ருஹ அவஹமானாலும் நிஷ் ப்ரயோஜனம் என்று தோற்றுகிறது
இவ்வளவே அன்றிக்கே
நின்ற இடத்துக்கு அவத்யா வஹம் என்றும் தோற்றுகிறது
இது தான் எல்லாம் வேண்டுகிறது அங்கே தான் தோன்ற நிற்கில் இறே

இது தன்னை யிறே நிஷ் ப்ரயோஜனத்துக்கு நிதர்சனமாக
ஆழ்வார் திரு மகளார் பெரியாழ்வார் வயிற்றில் பிறக்கையாலும்
பிறந்தேன் நான் ஆகையாலும்
அநந்யார்ஹை யானாலும்
இரண்டு தலையும் உபேக்ஷிக்கும் படி நின்று தூங்கா நின்றேன் என்றதும்

(கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ –9-9-

தாமச புருஷர்கள் புகுரும் தேசம் அன்று –
சாத்விகர் இது கொண்டு கார்யம் கொள்ளார்கள்-
பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து பகவத் அர்ஹமான வஸ்து -இங்கனே இழந்து இருந்து கிலேசப் படுவதே –
கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -12-4- என்றும்
மானிடர்வர்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -1-5-
அவனால் ஏற்றுக் கொள்ளப் படாமல் சம்சாரிகளுக்கும் பயன்படாமல் வீணாக போவதே –)

இரண்டு தலையும் என்றது
அழகரையும் ஆழ்வாரையும் இறே
ஜனித்வாஹம்-(ஸ்தோத்ர ரத்னம் -61)-இத்யாதி

(ஜநித்வா அஹம் வம்ஸே மஹதி ஜகதி க்யாதய ஸ ஸாம்
ஸூசீ நாம் யுக்தா நாம் குண புருஷ தத்வ ஸ்திதி விதாம்
நிஸர்க்காத் ஏவ த்வச் சரண கமல ஏகாந்த மநஸாம்
அதோ அத பாபாத்மா ஸரணத! நிமஜ்ஜாமி தமஸி–61-

ஜநித்வா வம்ஸே மஹதி –சிறந்த குலத்திலே பிறந்து வைத்து
அதோ அத பாபாத்மா தமஸி–பாபிஷ்டனாய்க் கொண்டு இருள்மயமான மூதாவியிலே
அடி காண ஒண்ணாத கீழ் எல்லையில்
நிமஜ்ஜாமி–அழுந்திக் கொண்டே கிடக்கிறேன்)

அதே
உறைப்பன் மலை அதே -அதுவே –
திருமலை அதுவே (திருவாய் -2-10 )-என்பாரைப் போலே –

————–

கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன் மலை
நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியை
செஞ்சுடர் நா அளைக்கும் திரு மால் இரும் சோலை யதே -4 -3-2 –

பதவுரை

கஞ்சனும்–கம்ஸனும்
காளியனும்–காளிய நாகமும்
களிறும்–(குவலயாபீடமென்ற) யானையும்
மருதும்–இரட்டை மருத மரங்களும்
எருதும்–(அரிஷ்டாஸுரனாகிற) ரிஷபமும்
வஞ்சனையின்–(தந்தாமுடைய) வஞ்சனைகளாலே
மடிய–(தாம் தாம்) முடியும்படி
வளர்ந்த–(திருவாய்ப்பாடியில்) வளர்ந்தருளினவனும்
மணி வண்ணன் மலை–நீல மணி போன்ற நிறமுடையவனுமான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கும்) மலையாவது:
நஞ்சு–விஷத்தை
உமிழ்–உமிழா நின்றுள்ள
காகம்–(மலைப்) பாம்பானவை
நளிர்–குளிர்ந்த
மா மதியை–(மலைச் சிகரத்தின் மேல் தவழுகின்ற) பூர்ணச் சந்திரனை–(தமக்கு உணவாக நினைத்து)
எழுந்து–(படமெடுத்துக்) கிளர்ந்து
அணலி–கிட்டி
செம் சுடர்–சிவந்த தேஜஸ்ஸை யுடைய
நா–(தனது) நாக்கினால்
அளைக்கும்–(சந்திரனை) அளையா நிற்குமிடமான
திருமாலிருஞ்சோலை அதே–

கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன் மலை
விபரீத வர்க்கம் எல்லாம் தம் தாம் வஞ்சனைகளாலே
தாம் தாம் முடியும்படியாகத் திரு வாய்ப்பாடியிலே வளர்ந்தவன்
நீல ரத்னம் போன்ற திருமேனியோடே நித்ய வாஸம் செய்கிற திருமலை

நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியை செஞ்சுடர் நா அளைக்கும் திரு மால் இரும் சோலை யதே
மதி தவழ் குடுமியிலே நஞ்சு நக்கிப் பசித்துக் கிடக்கிற மாசுணப் பாம்புகள்
அம் மலையில் தவழுகிற குளிர்ந்த பூர்ண சந்த்ரனை அபிபவ ரூபேண
ஜாதி யுசித ஜீவனம் அன்றோ இது -என்று அதன் மேலே மிகவும் கிளம்பிச் சிவந்து பெரிதான நாக்காலே
வளைப்பதாகத் தேடா நின்றுள்ள திருமாலிருஞ்சோலை மணி வண்ணன் மலை
(ராகு கேது சந்திரனை பீடிக்கும் ஆகவே ஜாதி உசிதம் என்கிறார் )

இத்தால்
பர அநர்த்த வாக்மிகள் (நஞ்சு உமிழ் நாகம்)
பாகவத சேஷத்வ பர்யந்தமான அந்த திவ்ய தேஸம் வாஸம் தன்னாலே
அத்தை விட்டு அந்த தேஸத்திலே வர்த்திக்கிறவர்களுடைய
குளிர்ந்து தெளிந்த ஞானத்தைக் (நளிர் மா மதியை) கண்டு
இழந்த நாளைக்கு அநு தபித்து
மிகவும் ஊர்த்த கதியை பிராபித்து (எழுந்து அணவி)
பக்தி பாரவஸ்ய ப்ரார்தனையாலே கிரஹிக்கத் தேடுவார்கள் (செஞ்சுடர் நா அளைக்கும் )என்னும்
அர்த்த விசேஷங்கள் தோற்றுகிறது

பொய்யே யாகிலும் திவ்ய தேசங்களிலே வர்த்தித்தால்
ஒரு நாள் அல்லா ஒரு நாள் ஆகிலும்
உயர்ந்தவர்கள் அறிவைத்
தாழ்ந்தவர்கள் ஆசைப்படுவார்கள் என்னும் இடம் தோற்றுகிறது

உகந்து அருளின நிலங்களிலே பொய்யே யாகிலும் புக்குப் புறப்பட்டிரீர்
அந்திம தசையிலே கார்யகரமாம் -என்று
பூர்வாச்சார்யசர்கள் அருளிச் செய்வார்கள் என்று ஆச்சாம் பிள்ளை அருளிச் செய்வர்
அதாவது
துஞ்சும் போதும் (திருவாய் -1-10-4 )
இவ் விடத்திலே கணியனூர் சிறிய ஆச்சான் வார்த்தையை நினைப்பது
(நானே விட்டு விலகினாலும் நெஞ்சே நீ ஈடுபாட்டை விடாதே
திவ்ய தேச வாசம் விடாமல் இருக்க வேண்டும் என்னும் வார்த்தை )

விஷ வாக்காவது
த்ரிவித ப்ராவண்ய நிபந்தமான வார்த்தைகள் இறே –
(த்ரிவித ப்ராவண்ய-பிராதி கூல்யர் தேவதாந்த்ர பரர் விஷயாந்தர பரர் )

—————

மன்னு  நரகன் தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர் தம்மை கவர்ந்த கடல் வண்ணன் மலை
புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று
பொன்னரி மாலைகள் சூழ் போகி மால் இரும் சோலை அதுவே – 4-3- 3-

பதவுரை

மன்னு–(தன்னை அழிவற்றவனாக நினைத்துப்) பொருந்திக் கிடந்த
நரகன் தன்னை நரகாஸுரனை
சூழ் போகி–கொல்லும் வகைகளை ஆராய்ந்து
வளைத்து–(அவனைத் தப்பிப்போக முடியாதபடி)வளைத்துக் கொண்டு
எறிந்து–(திரு வாழியாலே) நிரஸித்து
(அவனால் சிறையிலடைத்து வைக்கப்பட்டிருந்த)
கன்னி மகளிர் தம்மை–(பதினாறாயிரத் தொரு நூறு) கன்னிகளையும்
கவர்ந்த–தான் கொள்ளை கொண்ட
கடல் வண்ணன்–கடல் போன்ற நிறமுடையவனான கண்ண பிரான் (எழுந்தருளியிருக்கிற)
மலை–மலையாவது:
புன்னை–புன்னை மரங்களும்
செந்தியொடு–சுர புன்னை மரங்களும்
புனம் வேங்கையும்–புனத்திலுண்டாகிற வேங்கை மரங்களும்
கோங்கும்–கோங்கு மரங்களும்
நின்று–(புஷ்பங்களால் நிறைந்த ஒழுங்கு பட) நின்று
பொன்னரி மலைகள் சூழ்-(திருமலைக்குப்) பொன்னரி மாலைகள் சுற்றினாற் போலே யிருக்கப் பெற்ற
பொழில்–சோலைகளை யுடைய
மாலிருஞ்சோலை அதே

மன்னு  நரகன் தன்னை சூழ் போகி வளைத்து
விபரீதத்திலே நிலை நின்ற நரகாஸூரனை வளைத்து இளைப்பித்து

எறிந்து-கொன்று

சூழ் போகி-விசாரித்து

கன்னி மகளிர் தம்மை கவர்ந்த
பதினாறாயிரம் கன்யைகளையும் -அவர்கள் இஷ்டத்துக்கு ஈடாக நம்மை அமைத்து
பரிமாறக் கடவோம் -என்று
விசாரித்துக் கைக் கொண்ட

சூழ் போகி -என்று திரு நாமம் ஆகவுமாம்
(சூழ்ச்சி செய்து என்றும் சூழ்ச்சி செய்தவன் என்றும் )

கடல் வண்ணன் மலை
இவர்களை அங்கீ கரித்த பின்பு தன் நிறம் பெற்ற படி

புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று பொன்னரி மாலைகள் சூழ் போலி மால் இரும் சோலை அதுவே
ஸூ வர்ண ஸத்ருசமான புஷ்பங்களை ஒழுகும் படி
பொன்னரி மலை போலே தோற்றுவித்து நின்ற
பொழிலாலே சூழப்பட்ட
மாலிருஞ்சோலை -கடல் வண்ணன் மலை

இத்தால்
ஸூ மநாக்கள் பலரும் சேரும் தேஸம் என்கிறது –

————-

மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த
காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை
கோவலர் கோவிந்தனை குற மாதர்கள் பண் குறிஞ்சி
பா வொலி பாடி நடம் பயில் மால் இரும் சோலை அதுவே – 4-3- 4-

பதவுரை

மா வலி தன்னுடைய–மஹாபலியினுடைய
மகன் வாணன்–புத்திரனாகிய பாணாஸுரனுடைய
மகள் இருந்த–மகளான உஷை இருந்து
காவலை–சிறைக் கூடத்தை
கட்டு அழித்த–அரனோடே அழித்தருளினவனும்
தனி காளை–ஒப்பற்ற யுவாவுமான கண்ணபிரான்
கருதும் மலை–விரும்புகிற மலையாவது;
கோவலர்–இடையர்களுக்கும்
கோவிந்தனை–கோவிந்தாபிஷேகம் பண்ணப் பெற்ற கண்ணபிரான் விஷயமாக
குற மாதர்கள்–குறத்திகளானவர்கள்
குறிஞ்சி மலர்–குறிஞ்சி ராகத்தோடு கூடின
பா–பாட்டுக்களை
ஒலி பாடி–இசை பெறப் பாடிக் கொண்டு (அப் பாட்டுக்குத் தகுதியான)
நடம் பயில்–கூத்தாடுமிடமான மாலிருஞ்சோலை அதே–

மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த காவலைக் கட்டழித்த
மஹா பலி மகனான பாணனுடைய மகளான
உஷா இருந்த கந்யா க்ருஹத்திலே
காவலை
தன் பேரனை வ்யாஜீ கரித்து அழித்த

தனிக் காளை கருதும் மலை
அத்விதீயமான காளை
அதாவது
காமனைப் பெற்ற பின்பும் பரமபதத்தில் படியே பஞ்ச விம்சதி வார்ஷிகனாய் இருக்கை

கருதும் மலை
பரம பதத்திலும் காட்டில் மிகவும் அபி மானித்து நித்ய வாஸம் செய்கிற மலை –

கோவலர் கோவிந்தனை
கோ ரக்ஷணம் விதேயமாம் போது
ஜாதியிலே பிறக்க வேணுமே

குற மாதர்கள் பண்
இனக்குறவர் வாழி பாடா நின்றால்
இனமான குற மாதர்களும் அது தன்னையே பாடும் அத்தனை இறே
பல்லாண்டு ஒலி இறே அத் திருமலை தன்னில் உள்ளது

குறிஞ்சி பா வொலி பாடி நடம் பயில் மால் இரும் சோலை அதுவே
நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று என்னுமா போலே –

————–

பல பல நாழம் சொல்லி பழித்த சிசுபாலன் தன்னை
அலை வலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை
குலமலை கோலமலை குளிர் மா மலை கொற்ற மலை
நிலமலை நீண்டமலை திரு மால் இரும் சோலை யதே – 4-3 -5-

பதவுரை

பலபல நாழம்–பலபல குற்றங்களை
சொல்லி–சொல்லி
பழித்த–தூஷித்த
சிசு பாலன் தன்னை–சிசுபாலனுடைய
அலவலைமை–அற்பத் தனத்தை
தவிர்த்த–(சாம தசையில்) போக்கி யருளின
அழகன்–அழகை யுடையவனும்
சரம தசையில் அழகைக் காட்டி தன்னளவில் த்வேஷம் மாற்றி –
தான் என்றாலே நிந்திக்கும் அலவலைமை தவிர்தமை
அலங்காரன்–அலங்காரத்தை யுடையவனுமான கண்ண பிரான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை–மலையானது:
குலம் மலை–தொண்டர் குலத்துக்குத் தலையான மலையும்
கோலம் மலை–அழகை யுடைய மலையும்
குளிர் மா மலை–குளிர்ந்த பெரிய மலைகள்
கொற்றம் மலை–ஜயத்தை யுடைய மலையும்
நிலம் மலை–(நல்ல மரங்கள் முளைக்கும் பாங்கான) நிலத்தை யுடைய மலையும்
நீண்ட மலை–நீட்சியை யுடைய மலையுமான
திருமாலிருஞ்சோலை அதே–

பல பல நாழம் சொல்லி பழித்த
ஷீராப்தியிலே நினைத்த வாஸனை
ஹிரண்ய ராவண ஜென்மங்களில் நினைத்தவை கூசாமல் சொன்ன பாப ஆசார வாசனைகள்
இவன் தான் அவற்றோடு ஆக்கிக் கொள்ளும் அளவே அன்றிக்கே
அவ் வாசனை தானும் இவன் இஜ் ஜென்மத்தில் ஆர்ஜித்த பாப விசேஷங்களோடே
அவை தான் அல்பம் என்னும் படி இவை வந்து கூடின படி
இவை எல்லாத்தையும் நினைத்து இறே
பல பல நாழம் சொல்லி பழித்தது -என்றது

நாழ் -குற்றம்
பழித்தல் -ஸ்துதி நிந்தையானால் போலும் அன்று
நிந்தா ஸ்துதியும் அன்று
நிந்தையே

சிசு பாலன் தன்னை
அஸூர ஜென்மத்தில் பிறந்து செய்த பாபங்களை போல் அன்றியே
ராஜ ஜன்மத்திலே பிறந்து
த்ரிவித கரணங்களாலும் செய்த பாப விசேஷங்கள்

அலை வலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை
நாட்டை நலிகிற அலை வலை தனத்தை
விக்ரஹ ஸுந்தர்யத்தைக் காட்டித் தவிர்த்தான் அத்தனை அல்லது –

ஸாயுஜ்யம் கொடுத்தான் என்னும் போது
ஸங்கல்ப நிபந்தன நித்ய நைமித்திக வைகல்ய ப்ராயச்சித்தாதிகளும்
புரஸ் சரணாதிகளும்
காம்ய தர்மமான கர்ம ஞான பக்திகளும்
தியாக விஸிஷ்ட ஸ்வீ காரமான ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ப்ராதான்யங்களும்
மற்றும் ஸாஸ்த்ரங்களில் சொல்லுகிற சாதன ஸாத்யங்களும்
ஸிஷ்ய ஆச்சார்ய க்ரமங்களும்
குலைய வேண்டி வரும்

இப்படி துராசார பரனான இவனுக்கும் கூடக் கொடுத்தவன் ஸமாசார பரருக்குக்
கொடுக்கச் சொல்ல வேணுமோ என்னில்
அப்போது ஸமாசாரம் தான் உண்டாகாது
(கைமுதிக நியாயம் பார்க்காமல் உபமான நியாயம் பார்த்து இவனைப் போலவே ஆவார்கள் அன்றோ )
இவன் தனக்கு ஸாயுஜ்ய பிரார்த்தனையும் இல்லை –
(பிரார்த்தனை தானே புருஷார்த்தம் புருஷன் அர்த்திக்க வேண்டுமே )

ஆனால் தாட் பால் அடைந்தான் -என்கிறபடி என் என்னில்
இத் தன்மை அறிவாரை அறிந்தவர்கள் பக்கலிலே இந்த ரஹஸ்யம் கேட்ப்பார்கள்
கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ என்ற போதே இப் பேணுதல் தெரியும் இறே

வத கிமபத மாகஸ் தஸ்ய தி அஸ்தி ஷமாயா -என்றும்
தாட் பால் அடைந்த தன்மை அறிந்தவர் தாமே இறே இத்தை நிஷேதித்தார்

(ரகுவர யத பூ ஸ்தவம் தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய
ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
பிரதிப வமபராத்துர் முக்த சாயுஜ்யதோ அபூ
வத கிமபத மாகஸ் தஸ்ய தி அஸ்தி ஷமாயா-63-

ஹே ரகுவர –ராகு வம்சத்தில் ஸ்ரீ ராமனாக திரு அவதரித்தவனே
த்வம் -நீ
தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய-அப்படிப்பட்ட மஹா அபராதியான காகாஸூரனது விஷயத்திலே
ப்ரணத இதி-இக் காகம் நம்மை வணங்கிற்று என்பதையே கொண்டு
தயாளூர் யத் அபூ –தயை பண்ணினாய் இறே
ஷிபாமி -என்றும் ந ஷமாமி -என்றும் பண்ணி வைத்த பிரதிஜ்ஞை பழியாதே
தேவர் க்ருபா கார்யமே பலித்து விட்டது – பிராட்டி சந்நிதி யாகையால் இறே-

முக்த கிருஷ்ண-குற்றம் அறியாத கண்ண பிரானே
கிருஷ்ணனாகி என்றும் கிருஷ்ண என்று சம்போதானமாகவும் –
பிரதிபவம் அபராத்துர்–பிறவி தோறும் அபராதம் பண்ணின
சைதயஸ்ய–சிசுபாலனுக்கு – யது வம்ஸ பூதரில் காட்டில்
சேதி குலோத்பவன் என்று தன்னை உத்க்ருஷ்டனாக அபிமானித்து இருக்குமவன் –
சாயுஜ்யதோ அபூச சயத-சாயுஜ்யம் அளித்தவனாயும் ஆனாய் இறே
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை –திருவாய் -7-5-3-
தஸ்ய தே ஷமாயா-அப்படி எல்லாம் செய்தவனான உன்னுடைய பொறுமைக்கு
அபதம ஆகஸ் கிம் அஸ்தி -இலக்காகாத குற்றம் என்ன இருக்கிறது
வத –அருளிச் செய்ய வேணும்
உனக்குப் பொறுக்க முடியாதது உண்டோ
சர்வஜ்ஞரான தேவருக்கும் மறு மாற்றம் இல்லை
க்ஷமித்து அருளி விஷயீ கரிக்கும் இத்தனை -என்கை –)

ஆனால் இங்கனம் பேண வேண்டுவான் என் என்னில்
பிரதிகூல அனுகூலங்கள்
தத் சாதனங்கள்
பல ஸாதனம் அன்று என்று தோற்றுகைக்காக இறே

இவன் பெற்றான் என்றதும்
த்ரிவித கரண ப்ரவ்ருத்தி நிவ்ருத்தியால் வந்த ஸூக துக்கங்கள்
அந வரத கால ரஹிதமாகக் கொடுக்கை அவனுக்கு நினைவாகையாலே குறையில்லை
இத்தைப் பற்ற இறே அலவலைமை தவிர்த்த என்று அருளிச் செய்ததும்

இது நினைவாகில் அழகைக் காட்டுவான் என் என்னில்
வாராமல் போகிறவனை புஜிப்பித்து விட வேணுமே என்று
(திரி தந்தாகிலும் -கரிய திரு உருக் கோலம் காண்பித்தார் அங்கும்
அவ்வளவு உயர்ந்த மதுர கவி ஆழ்வாருக்கும் )

இவ் விடத்தே ஆண்டாள் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது –
(வீர ஸூந்த்ர ராயன் விஷயம் )
ஒருவனைக் குறித்து நிரன்வய விநாசம் பர வேத்யமாகச் சொல்லுகை அரிது போலே காணும்

அலங்காரன் மலை
முடிச்சோதிப் படியே

குலமலை
தொண்டக் குலத்துக்குத் தலை நின்ற மலை

கோலமலை
தொண்டக் குலத்தில் உள்ளாருக்குத் தர்ச நீயமான மலை

குளிர் மா மலை
அவனுக்கும் அவனுடையாருக்கும்
சென்றால் குடையாம் -என்கிறபடியே
ஸ்ரமஹர போக்யதையை மிகவும் விளைக்கும் மலை

கொற்ற மலை
அந்த போக்யதையாலே சம்சாரத்தில் எப் பேர்ப்பட்ட ருசிகளாலும் வருகிற
அபிமான போக்யதைகளை ஜெயிக்கலான மலை

நில மலை
மணிப்பாறையாய் இருக்கும் அளவு அன்றிக்கே
ஸூ ரிகளுக்கும் முமுஷுக்களுக்கும் புஷ்ப பல த்ருமாதிகளாய் முளைக்கவும்
முளைக்க வேணும் என்று பிரார்த்திக்கவும் யோக்யமான மலை

நீண்ட மலை
பரம பதத்துக்கும் சம்சாரத்துக்கும் இடை வெளி அற்று ஒரு கோவையாம் படியான மலை
இப்படி இருக்கிற திரு மாலிருஞ்சோலை

அலங்காரன் மலை
இம் மலை யுண்டாய் இருக்க
இவ் வழகு யுண்டாய் இருக்க

ஞான விகாசத்துக்கும்
இவ் வாத்மாவுக்கு ஞான அநு தய சங்கோச மாத்ரமே அன்றிக்கே –
லீலா ரஸ ஹேதுவான அநுகூல வியாபாரம் போலே பிரதிகூல வியாபாரங்களும்
அசக்தரானால் தத் விஷய ஸுந்தர்யமும் ததீய பாரதந்தர்யமும் கழற்றிக் கோக்க ஒண்ணாதாப் போலே
மங்களா ஸாஸனம் என்கிற அர்த்த விசேஷத்தையும் ஆச்சார்ய முகத்தாலே அறியலாய் இருக்க
நிரன்வய விநாசத்திலே அந்வயிப்பதே என்று வெறுக்கவும் இறே

வெறுக்கிறது என்
திருவடிகளில் கூட்டிப் பழைய ஷீராப்தியிலே விட்டான் என்னிலோ என்னில்
அங்குப் புகுந்தான் என்ற ஒரு பிரமாணம் உண்டாக நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்யவும் கேட்டிலோம்
அங்கு சாயுஜ்யமும் கூடாது
எஞ்சாப் பிறவி இடர் கெடுவான் தொடர நின்ற துஞ்சா முனிவர் இறே (திரு விருத்தம் -98 )

இவன் தான் முன்பு அங்கு இசைந்து போந்த ஸாத்ரவ தர்மம் இங்கு நடத்த மாட்டாதாப் போலே
அங்கும் உள்ளோரோடும் பழம் பகை நெஞ்சு பொருந்தி நடத்த மாட்டாமையாலே அங்கும் கூடாது
அவர்களும் இவன் தான் முன்பு பொருந்தி வர்த்தித்தான் ஒருவன் அல்லாமை அறிந்து இருக்கையாலே
அவர்களையும் இவனோடு கூட்டுகையும் அரிதாய் இருக்கும்

தேச விசேஷத்திலே (ஸாந்தானிக லோகம் ) கொண்டு போனான் என்றும் கேட்டிலோம்
அன்று சராசரங்களை வைகுந்தத்தகு ஏற்றினான் -என்று ஓன்று உண்டே
அந் நேரிலே கிருபையால் செய்தான் என்னில்
அவை ராம குண ஏக தாரகங்களாய் இருக்கையாலே கிருபையால் செய்யவும் கூடும்
வைகுண்ட நாம ஸ்தான விசேஷம் இக் கரையில் உண்டு என்னவுமாம் –

கிருபை தனக்கு விஷயமாம் போது
அவை தன்னைப் போலே ராம விரஹ வாட்டம் உண்டாக வேணும்
அவை தான் உண்டானாலும்
ஞானான் மோக்ஷம் என்கிற நேரும்
அபிமானமும்
மோக்ஷ பிரார்த்தனா ருசியும் வேணும்

அது தன்னையும் அவற்றுக்குத் தத் காலத்திலே யுண்டாக்கிக் செய்தாலோ என்னில்
அப்போது அவை ஆஸ்ரயத்தோடே சேராது
சேரும் காலத்து அனுக்ரஹத்தால் வந்த ஆகந்துக ப்ரேராதிகளும் பரஸ்பர விரோதம் தோற்றும்

சாஸ்திரங்களும் உண்டாகில் அவையும் ஒருங்க விட்டுக் கொடுக்க வல்ல ஞான அனுஷ்டானங்களை யுடைய
ஆச்சார்ய அபிமானமும் சேதன ருசியும் வேணும்
அது என்
பகவத் அபிமானமும் சேதன ருசியும் ஆனாலோ என்னில்
அப்போதும் இவ் வடைவு யுண்டாக்கினால் அல்லது ஆத்ம குணம் ஒருவராலும் பிறப்பிக்கப் போகாது

ஸ்வ தந்த்ரனுக்கு அரியது உண்டோ என்னில் ஸ்வ தந்த்ர்யம் இரண்டு ஆஸ்ரயத்தில் கிடவாது
பர தந்த்ரனாக்கி இவ் வடைவிலே கொண்டு போக வேணும்
ஸ்வா தந்தர்யம் தான் தோற்றித்துச் செய்வது இல்லை
கார்யப்பாடானவை செய்யும் போது பிறரை கேள்வி கேளாமல் செய்யும் அளவு இறே உள்ளது

கார்யப்பாடாக ஸ்வா தந்தர்யத்தாலே த்வீ பாந்தர வாஹிஸிகளை அங்கு நின்றும் கொண்டு போந்து
த்வீ பாந்த்ர நியாயம் பயிற்று விக்கிறவோபாதி
கொண்டு போய் நித்ய விபூதி நியாயத்தைப் பயிற்று விக்கிலோ என்னில்
அங்கு கொண்டு போன வைதிக புத்ரர்களுக்கு தேஹ பரிணாமமும் ஞான விகாஸமும் அற்று
பூர்வ பரிணாமத்தோடே மீளுகையால் அதுவும் கூடாது

பிராகிருத அப்ராக்ருதங்கள் சேராதாப் போலே பிராகிருத ஞான வாசனை அப்ராக்ருதத்தில் சேராது –
அர்ச்சிராதி மார்க்க சம்பாவனையும் கூடாது
ஆழ்வார் விசேஷித்து அருளிச் செய்த சூழ் விசும்பு அணி முகிலில் மார்க்க ஸம்பாவநா ஆதரத்வமும் கூடாது
அங்குள்ளார் எதிரே வந்து ஸம்பாவித்துக் கொடு போக அடியாரோடு இருக்கையும்
சூழ்ந்து இருந்து ஏத்துகையும் கூடாது –

அவன் தானும் இவனைத் தாட் பால் அடைவித்த விக்ரஹத்தை அங்குக் கொண்டு போய்த்திலன் இறே
அகடிதமான வட தள ஸாயித்வமும்
அனோர் அணீ யான் -கரந்து எங்கும் பரந்துளன் -என்கிற வியாப்தி ஸுகர்யமும்
ஸங்கல்ப ஸஹஸ்ர ஏக தேசமான ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகளும்
அவன் தன்னுடைய ஸ்வ ஸங்கல்ப பாரதந்த்ரயாதிகளும்
எல்லாம்
ஓரொரு நியாயங்களாலே கடிதமாக்கினாலும்
ஆத்ம குணங்களை விளைப்பிக்கை அவனாலும் அரிதாய் இறே இருப்பது

இங்குள்ளாரையும் அங்குள்ளாரையும்
பிராமயன் யந்த்ரா ரூட-
வானிலும் பெரியன வல்லன் -(1-10-3)–என்னும் அவையும்
பிராகிருத அப்ராக்ருத விஷய நிபந்தனமாக்கி பிரமிப்பிக்கவும் மயக்குவிக்கவும் வல்ல யோக்யதா ஸக்தி மாத்திரம் அல்லது
நிலை நிற்க பிரமிப்பிக்கையும் மயக்குவிக்கையும் அரிது
எளிதானாலும் ஸ்வரூப விரோதியும் ப்ராப்ய விரோதியுமாய் நிஷ் ப்ரயோஜனத்தோடே தலைக் கட்டும்
ஸ்வ தந்த்ரர் என்னா தம் தாம் அவயவங்களைத் தம் தாமே
ஞப்தி சக்திகளால் ஹிம்ஸித்திக் கொள்வாரும் உண்டோ

ஆகையால்
ஸ்ரீ யபதியாய்
ஸர்வஞ்ஞனாய்
ஸர்வ ஸக்தியாய்
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய்
அவாப்த ஸமஸ்த காமனாய்
ஹேய குண ரஹிதனாய்
ஸர்வ பிரகார நிரபேஷனாய்
ததீய ஸா பேஷனாய்
இருக்கிற ஸர்வேஸ்வரனுடைய

நிரங்குச ஸ்வா தந்தர்யமும்
நிருபாதிக கிருபையும்
முதலான குணங்கள் எல்லாம்
சேதனருடைய ஸா பராத ஸ்வா தந்தர்யத்தையும் ஒவ்பாதிக ப்ராவண்யத்தையும் மாற்றி
அத்யந்த பாரதந்தர்யத்தையும் நிருபாதிக சேஷத்வத்தையும் விளைப்பித்து
மங்களா ஸாஸனத்திலே மூட்டுகைக்காக
விரோதி நிரஸனம் செய்ய வேண்டுகையாலே

அயோக்கியரை நிரஸித்த மாத்திரமே அன்றிக்கே
சங்கோச ரூபமான தேஹ விமோசன மோக்ஷ ஸித்தியாய்
மீளாத படியான பிரதேசத்தில் இட்டு வைத்த பிரகாரத்தை இறே
அல வலைமை தவிர்த்த என்று அருளிச் செய்தது –

————–

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்
ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை
பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருகத்
தோண்டல் உடைய   மலை தொல்லை மால் இரும் சோலை அதுவே -4- 3-6 –

பதவுரை

பாண்டவர் தம்முடைய–பஞ்சபாண்டவர்களுடைய (மனைவியாகிய)
பாஞ்சாலி–த்ரௌபதியினுடைய
மறுக்கமெல்லாம்–மனக் குழப்பத்தை யெல்லாம்
ஆண்டு–(தன்) திருவுள்ளத்திற்கொண்டு,
அங்கு–(அவள் பரிபவப்பட்ட) அப்போது (அத் துன்பங்களை யெல்லாம்)
நூற்றுவர் தம்–(துரியோதநாதிகள்) தூற்றுவருடைய
பெண்டிர் மேல்–மனைவியர்களின் மேல்
வைத்த–சுமத்தின
அப்பன்–ஸ்வாமியான கண்ண பிரான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை–மலையானது :
பாண் தரு–பாட்டுக்குத் தகுதியான (ஜன்மத்தை யுடைய)
வண்டு இனங்கள்–வண்டு திரளானவை
பண்கள்–ராகங்களை
பாடி–பாடிக் கொண்டு
மது–தேனை
பருக–குடிப்பதற்குப் பாங்காக (ச் சோலைகள் வாடாமல் வளர)
தோண்டல்–ஊற்றுக்களை யுடைய மலையாகிய
தொல்லை மாலிருஞ் சோலை அதே–அநாதியான அந்த மாலிருஞ் சோலையேயாம்.

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்
இவர்களைப் பாண்டவர்கள் என்கையாலே
அவளையும் பாஞ்சாலி என்று
ஆபி ஜாத்யம் சொல்லுகிறது –

தம்முடைய -என்கையாலே
இவர்களுடைய அபிமானத்திலே அவள் ஒதுங்கி
புருஷணாம் அபாவேந ஸர்வா நார்யா பதி வ்ரதா -என்கிற
பட்டாங்கில் பார தந்தர்யமும் ஸஹ தர்ம சாரித்வமும் தோற்றுகிறது

மறுக்கம் எல்லாம்
துரியோத நாதிகள் ஸபா மத்யத்திலே கொடு போய் துஸ் ஸாதனன் பரிபவிக்க
அத்தாலே ஈடுபட்டு க்ருத்யக்ருத்ய விவேக ஸூன்யையாய்
நெஞ்சு மறுகி அந்த சபையில் இருந்தவர்கள் எல்லாரையும் தனித்தனி முறைமை சொல்லி
சரணம் புக்க அளவிலும்

இவன் சோற்றை யுண்டோமே -என்று வயிற்றைப் பார்ப்பார்
துரியோதனுடைய மாத்சர்யத்தைப் பார்ப்பார்
தர்ம புத்ரனுடைய தர்ம ஆபாச ப்ரதிஜ்ஜையைப் பார்ப்பார்
மற்றும் தம் தாம் கார்யம் போலே தோற்றுகிற அஞ்ஞான பிரகாசத்தை ஞானமாக நினைத்து நிலம் பார்ப்பாராய்

இவளை அபிஜாதை யானாள் ஒரு ஸ்த்ரீ என்றும்
பதி வ்ரதை -என்றும்
ஸஹ தர்ம ஸாரி -என்றும் பாராமல்
துஸ்ஸாதனன் நலிவதைப் பார்த்து இருக்க

இவளும் தன்னுடைய அகதித்வத்தை அனுசந்தித்து
சங்க சக்ர கதா பாணே –நீயும் என்னைப் போலவோ –
துவாரகா நிலயா -பெண் பிறந்தார் வருத்தம் அறிந்து ரஷித்த பிரகாரங்களை மிகையோ
அச்யுத -ஆஸ்ரிதர் தங்கள் நழுவிலும் கை விடான் என்கிறது -வடயஷ ப்ரசித்தியோ
கோவிந்த -ஸர்வஞ்ஞராய் ஸர்வ ஸக்தர்களையோ ரஷித்தது
புண்டரீகாக்ஷ –அக வாயில் கிருபை காணலாம் படியாய் யன்றோ திருக் கண்களில் விகாஸம் இருப்பது –
உனக்கும் ஏதேனும் ஸ்வப்னம் முதலான சங்கோசங்களும் உண்டோ என்றால் போலே சொல்லி
ரக்ஷமாம் சரணாம் கத -ரஷக அபேக்ஷை பண்ணின அளவிலும்

ருணம் ப்ரவ்ருத்தம் இவ -என்றால் போலே
சில கண் அழிவுகளோடே ஸ்ரீ கஜேந்த்ரனுடைய ரக்ஷக அபேக்ஷையை நினைத்து வந்தால் போலே
வந்து முகம் காட்ட ஒரு வழியும் காணாமல்

அவன் பட்ட மறுக்கம் அறியாதே
அவனும் இவர்களைப் போலே கை விட்டான் ஆகாதே என்று
இவள் நினைத்து முன்பு கேட்டு வைத்த சுருசுருப்பையும் காற்கடைக் கொண்டு
லஜ்ஜா நிபந்தனமான சக்தியால் வந்த அசக்தியையும்
அந்த லஜ்ஜையையும் மிடுக்கலோடே கை விட்ட அளவிலே
(இரு கையும் விட்டேனோ திரௌபதியைப் போலே )

எல்லா அவஸ்தையிலும் தியாக விசிஷ்ட ஸ்வீகாரம் ஆகையால்
கழித்து உடுத்தமை தோன்றாமல் உடுத்துக் கழித்தால் போலே நிற்கும்படி
திரு நாம பிரபாவம் உதவும்படியான
சங்கல்ப மாத்ரத்தாலே வஸ்திரம் மாளாமல்
மறுக்கம் எல்லாம் மாண்டு –(துச்சானாதிகளும் )மாண்டு இவளை மயிர் முடிப்பித்து
வதார் ஹரையும் கரிக் கட்டையையும் மன்னரும் பிள்ளையும் ஆக்கும் அளவாக நினைத்து இறே
எல்லா மாண்டு -என்கிறது

ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த
இவ்வளவிலும் பர்யவசியாமல் நூற்றுவர் தம் பெண்டிர் மேலே இம்மறுக்கம் எல்லாம்
வாங்கி வைத்தால் இறே இவள் மறுக்கம் மாண்டது என்னாலாவது

அன்றியே
இவள் மறுக்கம் எல்லாம் தான் ஏறிட்டுக் கொண்டு ருணம் ப்ரவ்ருத்தம் என்று தான் மறுகையாலே
வ்யாதி யுடையவனை வியாதியாளன் என்னுமா போல் இன்றிக்கே
தானே பூண்டு கொள்கையாலே ஆண்டு என்கிறது
அந்த ஆட்சி முடிவது அவர்கள் மேல் வைத்தால் இறே என்னவுமாம்

(நோய் உடையவன் நோயாளி போல் மறுக்கம் ஆளி ஆண்டு என்கிறது )

அன்றிக்கே
மாண்டு அங்கு என்றது
மாண் தங்கு என்று என்று பதமாய்
மாட்சிமை தகுகிற ஸ்த்ரீகள் என்னுதல் –

ஆண் தங்கு -என்று பதமாய்
ஆண்மை அமர்ந்த நூற்றுவர் என்னவுமாம்
யுத்த உன்முகராய் படுகையாலே ஆண்மை அமருகையும் குறை இல்லை இறே
அங்கு அங்கு வைத்த என்னவுமாம்

அப்பன் மலை
ஸ்வ ஸங்கல்பத்தாலே அந்யோன்ய தர்சனம் இன்றிக்கே இருக்கச் செய்து இறே இது எல்லாம் செய்தது
இது எல்லாம் திரு நாமம் தானே இறே செய்தது
இவ் வுபகாரம் எல்லாம் தோற்ற அப்பன் என்கிறார் –
திரு நாம பிரபாவம் தானே அவனையும் ஸ்வ ஸங்கல்ப பரதந்த்ரன் ஆக்கும் போலே காணும்
தூத்ய ஸாரத்யங்கள் பண்ணிற்றும் இவள் சொன்ன திரு நாமத்துக்காகவே என்னுதல்
திரு நாமம் சொன்ன இவள் தனக்காக என்னுதல் –

பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருகத்
பண்ணைப் பாண் என்று பண்ணிலே பாடத் தகுதியான வண்டினங்கள் என்னுதல்
திருப் பாண் ஆழ்வார் போல் பண்ணிலே பாடுபவர் போல் என்னுதல்

பருக என்றது
வர்த்தமானமாய்
பருகப் பருக ஊற்று மாறாதே செல்லும் நீர் நிலமாய்
பூக்களை யுடைத்தான சோலையே நிரூபகமான மலை

தோண்டல் உடைய   மலை தொல்லை மால் இரும் சோலை அதுவே
தோண்டல் உடைய-ஊற்று மாறாதே
இம் மலைக்குப் பழைமை யாவது
அநாதியான திருமலை ஆழ்வார் தாமே திருவனந்த ஆழ்வான் என்னும் இடம் தோற்றுகிறது –

———-

கீழ்
நந்தன் மதலை என்றத்தை அனுசந்தித்தார்
இதில்
காகுத்தனை என்றதை அனுசந்திக்கிறார் –

கனம் குழையாள் பொருட்டாகக் கணை பாரித்து அரக்கர் தங்கள்
இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம் இராமன் மலை
கனம் கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம்
இனம் குழு ஆடும் மலை எழில் மால் இரும் சோலை யதே – 4-3- 7-

பதவுரை

கனம்–ஸ்வர்ண மயமான
குழையாள் பொருட்டா–காதணியை யுடையாளான
கணை–அம்புகளை
பாரித்து–பிரயோகித்து
அரக்கர்கள் இனம்–ராஷஸ குலத்தை
கழு ஏற்றுவித்து–சூலத்தின் மேல் ஏற்றின வனும்
எழில் தோள்?–அழகிய தோள்களை யுடையவனுமான
இராமன்–இராமபிரான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை–மலையான
கனம்–பொன்களை
கொழி–கொழித்துக் கொண்டு வருகின்ற
தெள் அருவி–தெளிந்த அருவிகளிலே
இனக்குழு–அறிஞர்கள் எல்லாம்–
அகல் ஞாலமெல்லாம்–விசாலமான பூமியிலுள்ளா ரெல்லாரும்
வந்து சூழ்ந்த–வந்து சூழ்ந்து கொண்டு
ஆடும்–நீராடப் பெற்ற
எழில்–அழகிய
மாலிருஞ் சோலையிலே அதே–

கனம் குழையாள் பொருட்டாகக்
கனம் குழை-காதுப் பணி
நாய்ச்சிமார் பெருமாள் திருக் கையில் அறு காழி திரு உள்ளம் பற்றி இருக்குமா போலே
பெருமாளும் நாய்ச்சியாருடைய கர்ண விபூஷணத்திலே மிகவும் திரு உள்ளம் பற்றி இருக்கும் போலே காணும்
அத்தை அவருக்கு நிரூபகமாக அருளிச் செய்கிறார்
இவள் பொருட்டாக

கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம்
நாள் தோறும் அம்புகள் எல்லாம் கோணி நிமிர்த்துப் பாரித்துப் பார்ப்பார் என்னுதல்
ராக்ஷசர் உடம்புகளிலே மந்த கதியாகப் பாரித்துப் பார்ப்பார் –
இனியாகிலும் அநு தபித்து மீளுவார்களோ என்னும் நசையாலே -என்னுதல்
கிள்ளிக் களைந்தானை -என்னக் கடவது இறே

கழு ஏற்றுவித்த
இதில் மீளாதார் உடம்புகளிலே கூர் வாய் அம்புகளைக் கழுக் கோலினம் இனமாக ஊடுறவ ஏற்றுவித்த
ஒரு கோல் அரக்கர் இனம் எல்லாம் நேர் நின்றவர்களை பட்டு உருவுகையாலே அம்புகளைக் கழு என்கிறது

அன்றியே
லங்கா த்வாரத்திலே நேர் நில்லாமல் பட்டவர்களை ஸ்ரீ வானர வீரர்கள் பெருமாள் கேள்வி கொள்ளாமல்
கழுவிலே வைத்து விநோதிக்கவும் கூடும் இறே கோபத்தாலே –
வாலியைப் பார்த்து இவ்வார்த்தை சொல்லுவிதியாகில் கண்ட இடம் எங்கும்
கழு மலை ஆக்குவேன் என்றார் இறே பெருமாள் –
அது இங்கு கூடாமல் இராது இறே

கழுகு என்று பாடமாய்த்தாகில் போரச் சேரும் இறே
அன்றிக்கே
தலைக் குறைத்தலாய் கழுகைக் காட்டும் இறே

எழில் தோள் எம் இராமன் மலை
ஸுர்யம் விளங்குகிற தோள்
நற் குலையை உபகரிக்கையாலே தேஜஸ்ஸூ விளங்குகிற தோள்
பாப கரணங்களைக் குலைக்கக் குலைக்கப் பூரித்த தோள்

எம் இராமன் மலை
அம்புக்கு விஷயமானவர்களை யுத்தத்திலே ரமிப்பிக்கையாலும்
கிருபாதி குணங்களுக்கு விஷயமானவர்களை அவ்வோர் அளவுக்கு ஈடாக ரமிப்பிக்கையாலும்
ராமன் -என்கிறது
இத் தோள் அழகைக் கண்டிருக்கச் செய்தேயும் புமான்கள் ஈடுபடாமல் இருப்பதே
பும்ஸாம் த்ருஷ்ட்டி ஸித்த அபஹாரிணாம்
(ஆடவர் பெண்மையை அளாவும் தோளிணாய் )

கனம் கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்து
பொன் கொழித்து வருகிற திருச் சிலம்பாறு என்னுதல்
அன்றியே
திருச் சோலைகள் அதி வ்ருஷ்டி அநா வ்ருஷ்டிகளாலே ஈடுபடாமல் கர்ஷகரைப் போலே
அம் மலை மேலே மேகங்கள் குடி இருந்து
அளவு பார்த்து மழை பொழிகையாலே
அருவி குதிக்கும் என்னுதல்

கனம்
பொன்னுக்கும் மேகத்துக்கும் பெயர்
இப்படி இருக்கிற திரு அருவியிலே

அகல் ஞாலம் எல்லாம் இனம் குழு ஆடும் மலை எழில் மால் இரும் சோலை யதே
ப்ரஹ்ம லோகம் பர்யந்தமாக யுள்ளார் எல்லாம் தம் தம்முடைய புத்ர பவுத்ராதிகளோடே வந்து
திரை சூழ்ந்து
பெருக்காறு ஆகையாலே தனி இழிய ஒண்ணாமையாலே
ஒருவரை ஒருவர் கை கோத்துக் கொண்டு திரள் திரளாகத்
தீர்த்தமாடுகிற அழகிய திருமாலிருஞ்சோலை மலை இராமன் மலை
இனம் குழும் ஆடும் எழில் திருமாலிருஞ்சோலை மலை இராமன் மலை –

————-

எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய
வரி சிலை வாயில் பெய்து வாய்கோட்டம் தவிர்த்து உகந்த
அரையன் அமரும் மலை யமரரோடு கோனும் சென்று
திரி சுடர் சூழு மலை திருமால் இரும் சோலை யதே – 4-3- 8-

பதவுரை

எரி–நெருப்பை
சிதறும்–சொரியா நின்றுள்ள
சரத்தால்–அம்புகளினால்
இலங்கையினை–இலங்கைக் காரனான ராவணனை
தன்னுடைய–தன்னுடைய
வரி சிலை வாயில் பெய்து–நீண்ட வில்லின் வாயிலே (அம்பிலே )புகுரச் செய்து
வாய் கோட்டம்–(அவனுடைய) வாக்கின் அநீதியை
தவிர்த்து–குலைத்து
உகந்த–(தான் வெற்றி பெற்றமையாலே) மகிழ்ந்தருளின
அரையன்–ஸ்வாமியான இராமபிரான்
அமரும்–எழுந்தருளி யிருக்கிற
மலை–மலையாவது:
அமரரொடு–தேவர்களோடு கூட
கோனும்–(அவர்களுக்கு) தலைவனான இந்திரனும்
திரி–(இரவும் பகலும்) திரியா நின்ற
சுடர்–சந்த்ர ஸூர்யர்களும்
சென்று–வந்து
சூழூம்–பிரதக்ஷிணம் பண்ணப் பெற்ற
திருமாலிருஞ்சோலை மலை அதே–

எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய வரி சிலை வாயில் பெய்து
தன்னுடைய வரி சிலை வாயில் பெய்து -சிதறும்-எரி சரத்தால் இலங்கையினை
தனக்கு அசாதாரணமாய்
அலங்கார வரியை யுடைத்தான சார்ங்க வில்
நாணிலே தொடுத்து
தொடுக்கும் போது ஒன்றாய்
விடும் போது பலவாய்
படும் போது நெருப்பாய் இறே பெருமாள் யுடைய திருச் சரங்கள் தான் இருப்பது

இலங்கையினை
இலங்கையில் உள்ள ராவண பக்ஷபாதிகளை
மஞ்சா க்ரோஸந்தி போலே

வாய் கோட்டம் தவிர்த்து உகந்த
செவ்வைக் கேடாகச் சொல்லுகிற வார்த்தைகளைத்
தவிர்த்து உகந்த
அதாவது
ந நமேயம் -என்றவை முதலானவை இறே

உகந்த அரையன் அமரும் மலை
இவர்களுடைய விபரீத கரணம் குலையப் பெற்றோம் -என்று
பிரியப்பட்ட ராஜா நித்ய வாஸம் செய்கிற திரு மலை

யமரரோடு கோனும் சென்று திரி சுடர் சூழு மலை திருமால் இரும் சோலை யதே
தேவர்களோடு இந்திரனும்
லோக உபகாரகமாக சஞ்சரிக்கிற சந்த்ராதித்யர்களும் தம் தாம் ப்ரயோஜனத்துக்காகச் சென்று
ப்ரதக்ஷிணமாக வருகிற திருமாலிருஞ்சோலை மலை
அது அரையன் அமரும் மலை

அன்றிக்கே
இலங்கையினை வரி சிலை சிதறும் எரி சர வாயில் வாய் கோட்டம் தவிர்த்து
உகந்த அரையன் அமரும் மலை -என்று அன்வயித்து
வில்லுக்கு வாய் அம்பு இறே
இலங்கையை பாம்பு நாக்காலே கிரசித்தது என்னுமா போலே
வில் அம்பாகிற வாயாலே க்ரஸித்து விட்ட பின்பு இறே வாய் கோட்டம் தவிர்த்தது
வாலியைக் கொன்ற அம்பு இலங்கையை விழுங்கிற்று என்னவுமாம்
ராவணன் பட்ட பின்பும் ஈரரசு தவிர்ந்து இல்லை இறே

இந்த்ரனோடு அமரர் என்னாதே -அமரரோடு கோன் என்றது
கர்ம நிபந்தமான ஸ்வ ஸ்வாதந்தர்யத்திலும்
நின்ற நின்ற அளவுகளிலே அந்ய சேஷத்வம் பிரபலம் என்கைக்காக இறே
கர்ம பலம் ஸித்தித்தாலும் அது புஜிக்கும் போதும் தேவ ப்ரஸாத அநு மதிகள் வேணும் இறே
அது இல்லாமையால் இறே ராவணன் எரி சரத்துக்கு இலக்காக வேண்டிற்றும்

வரம் கருதித் தன்னை வணங்காதவன் வன்மை யுரம் கருதி மூர்க்கத்தவனை (இரண்டாம் ) -என்றும்
பெரு வரங்கள் அவை பற்றிப் பிழக்குடைய விராவணன் -என்றும்
கல்லாதவர் இலங்கை -என்றும்
கட்டு அழித்து
கற்றவர் இலங்கை ஆக்கினான் இறே

ஒருவன் பக்கலிலே ஒன்றைப் பெற்றால் அது புஜிக்கும் தனையும் அது பெறும் போதும் போலே
அவனுடைய பிரசாத அனுமதிகள் வேண்டாவோ
தவசியைப் புகட்டி வாள் வாங்கி வந்தேன் என்னலாமோ
தேவா நாம் தானவாஞ்ச சாமான்யம் அதி தைவதம் என்கிறபடியே
இவ்வநு வர்த்தனத்தால் வருகிற ப்ரஸாத அனுமதிகளால் இறே தேவாஸூர ராக்ஷஸாதிகளுக்கும்
ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்யங்களும் அல்ப ஜீவிகையாய்ப் போரு வதும்
ஆர்க்கும் அத்யுத்கட பல ஸித்தி உண்டு இறே
இவை தான் எல்லாம் போராது இறே
அநந்யார்ஹ சேஷத்வம் பிறந்தால் இரே ஈரரசு தவிர்ந்து ஆவது
ஆகை இறே அரையன் அமரும் மலை என்கிறது –

——-

நாநாவான அவதாரங்களிலும்
நாநாவான அபதானங்களிலும்
உண்டான குண விசேஷங்களை அனுசந்திக்கிறார்

கோட்டு மண் கொண்டு இடந்து குடம் கையில் மண் கொண்டு அளந்து
மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடும் விமலன் மலை
ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடி இறை என்று
ஒட்டரும் தண் சிலம்பாறுடை திரு மால் இரும் சோலை யதே -4 -3-9 –

பதவுரை

மண்–ஹிரண்யாக்ஷனாலே பாயாகச் சுருட்டிக் கொண்டு போகப்பட்ட) பூமியை
(வராஹமாய் அவதரித்து)
இடந்து–(அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித்தெடுத்து
கோடு–(தனது) திரு எயிற்றிலே
கொண்டு–என்று கொண்டும்,
மண்–(மஹாபலியினால் தன் வசமாக்கிக் கொள்ளப்பட்ட) பூமியை
(வாமந ரூபியாய் அவதரித்து)
குடங் கையில்–அகங்கையில்
கொண்டு–(நீரேற்று) வாங்கிக் கொண்டு
அளந்து–அளந்தருளியும்
மீட்டும்–மறுபடியும் (அவாந்தர ப்ரளயத்திலே அந்தப் பூமி அழியப் புக.)
அது–அப் பூமியை
உண்டு–திரு வயிற்றில் வைத்து நோக்கி
(பின்பு பிரளயங் கழிந்தவாறே)
உமிழ்ந்து–(அதனை) வெளிப் படுத்தியும்
(இப்படிப்பட்ட ஆச்சரியச் செயல்களாலே)
விளையாடும்–விளையாடா நின்றுள்ள
விமலன்–நிர்மல ஸ்வரூபியான எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற)
மலை–மலையாவது;
ஈட்டிய–(பெருகி வரும் போது) வாரிக் கொண்டு வரப் பெற்ற
பல் பொருள்கள்–பல தரப் பட்ட பொன், முத்து, அகில் முதலிய பொருள்கள்
எம் பிரானுக்கு–எம் பெருமானுக்கு
அடி இறை என்று–ஸ்ரீபாத காணிக்கை யென்று
ஒட்டரும்–(பெருகி) ஒடி வாரா நின்றுள்ள
தண்–குளிர்ந்த
சிலம்பாறு உடை–நூபுர கங்கையை யுடைய
திரு மாலிருஞ் சோலை அதே–

கோட்டு மண் கொண்டு இடந்து
பாதாள கதையான மஹா பிருத்வியை மஹா வராஹமாய் ஒட்டு விடுவித்து எடுத்து
ஸ்தானத்தே வைத்து
அதுக்கு மேலே

குடம் கையில் மண் கொண்டு அளந்து
கொடுத்து வளர்ந்த கையாலே வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து
உதக பூர்வமாக ஏற்றுக் கொண்டு
நமுசி பிரக்ருதிகளை நியாயத்தாலே சுற்றி எறிந்து த்ரிவிக்ரம வேஷத்தைப் பரிக்ரஹித்து
அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்தர்யம் போம் படி திருவடிகளைப் பரப்பி அளந்து கொண்டு

அந்ய சேஷத்வத நிவ்ருத்தியை முற்படச் சொல்லிற்று
கரை அருகே அழுந்துவாரைக் கைக் கொடுத்து ஏற விடுமா போலே
பிரதம அக்ஷரத்தில் சதுர்த்தி ஸ்தானத்திலே அணுக வந்தான் இவன் ஆகையாலே

(அந்நிய சேஷத்வம் நிவ்ருத்தி -லுப்த சதுர்த்தி உகார-அர்த்தம் -அவனுக்கே அடிமை
ஸ்வ ஸ்வாதந்தர்யம் நிவ்ருத்தி -நம -அர்த்தம் -நான் எனக்கு அல்லன் )

மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடும் விமலன் மலை
பின்னையும் அபதான ஸங்கல்பங்களாலே உண்டு உமிழ்ந்து லீலை கொண்டாட நிற்கச் செய்தேயும்
தத் கத தோஷம் தட்டாதவன்
இன்புறும் இவ் விளையாட்டு உடையான் ( திருவாய் )-என்னுமா போலே

ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடி இறை என்று ஒட்டரும் தண் சிலம்பாறுடை மால் இரும் சோலை யதே
பொன் முத்தும் அரி யுகிரும் புகழைக் கை மா கரிக்கோடும் -என்கிறவை
நாநா வர்ண ரத்னங்கள் -அகில் -சந்தனம் -என்றால் போலே சொல்லுகிற இவை எல்லாம்
பர்த்திரு க்ருஹத்துக்குப் போம் பெண் பிள்ளைகள் மாத்ரு க்ருஹத்திலே பர்தாவுக்கு என்று
தேடி வைத்தவை எல்லாம் கொண்டு
கடுக நடை இட்டுச் செல்லுமா போலே
மலையில் உள்ள பதார்த்தங்களை எல்லாம் பல காலும் கொண்டு வந்து திருச் சிலம்பாற்று தன்னிலே சேர்க்க
இவை எல்லாவற்றையும் மஹா உபகாரகராய் இருக்கிற அழகர் திருவடிகளில்
ஸ்வரூப அனுரூபமாகச் சேர்க்க வேணும் என்று
பெரிய குளிர்த்தியோடே தூங்கு ( கொட்டும் )அருவியாய் வாரா நின்றதீ என்று
தோற்றும்படியான திருச் சிலம்பாற்றை யுடைய
திருமாலிருஞ்சோலை யது விமலன் மலை

இத்தால்
அசல ப்ரதிஷ்டிதரான ஆழ்வார் பக்கலிலே உண்டான ஞான பக்தி வைராக்யங்கள் எல்லாவற்றையும்
அழகருக்கு அழகருக்கு என்று திரு உள்ளத்திலே சேர்த்து வைத்து
இவற்றை அங்கீ கரிக்க வேணும் என்று பிரார்த்தித்து
தூங்கு (தொங்கும் ) பொன் மாலைகளோடு விகல்பிக்கலாம் படி இருப்பவர் தோன்றா நின்றது என்னுதல்

இன்று வந்து இத்தனையும் அமுது செய்யப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்து
பின்னும் ஆள் செய்வன் (நாச்சியார் )-என்கிற அபி நிவேசம் தோன்ற நிற்பாருக்குப்
போலியாய் இரா நின்றதீ என்னுதல் –

————

ஷீராப்தி நாதனுக்கு அந்தத் திரு அணைப் படுக்கை வாய்ப்பிலும் காட்டிலும்
(புல்கும் அணையும் அங்கு )
நின்றால் மர வடியாம் என்கிறபடியே
இத் திருமலை மேல் நிலை அத்யந்த அபிமதம் என்று தோற்றுகிறது –

ஆயிரம் தோள் பரப்பி   முடி ஆயிரம் மின்னிலக
ஆயிரம் பைம் தலைய அநந்த சயனன் ஆளும் மலை
ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும்
ஆயிரம் பூம் பொழிலும் உடை மால் இரும் சோலை யதுவே -4-3 -10-

பதவுரை

ஆயிரம்–பலவாயிருந்துள்ள
தோள்–திருத் தோள்களை
பரப்பு–பரப்பிக் கொண்டும்.
முடி ஆயிரம்–ஆயிரந் திருமுடிகளும்
மின் இலக–(திருவபிஷேகத்திலுள்ள சத்தங்களினால்) மிகவும் விளங்கும்படியாகவும்
பை–பரந்த
ஆயிரம் தலைய–ஆயிரந்தலைகளை யுடைய
அனந்தன்–திருவந்தாழ்வான் மீது
சயனன்–பள்ளி கொண்டருளுமவனான எம்பெருமான்
ஆளும்–ஆளுகின்ற
மலை–மலையாவது,
ஆயிரம் ஆறுகளும்–பல நதிகளையும்
பல ஆயிரம் சுனைகளும்–அனேகமாயிரந் தடாகங்களையும்
ஆயிரம் பூம் பொழிலும் உடை– பல பூஞ்சோலைகளை யுமுடைய-

ஆயிரம் தோள் பரப்பி   முடி ஆயிரம் மின்னிலக
தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி (திருவாய்)-என்னுமா போலே
அநேகம் ஆயிரம் திருத் தோள்களையும் பரப்பி
அநேகம் ஆயிரம் திரு முடிகளை மின்னிலகப் பரப்பி
திரு அபிஷேகங்களில் உண்டான ரத்நாதி ப்ரபைகளாலே திரு அபிஷேகம் மிகவும் மின்னித் தோற்றும் இறே

ஆயிரம் பைம் தலைய அநந்த சயனன் ஆளும் மலை
அநேகம் ஆயிரம் ரத்னங்களால் விளங்கா நின்ற அநேகம் ஆயிரம் திரு முடிகளை யுடைய
திரு அநந்தாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிறவன்
ப்ராப்த அனுரூபமாக அத்யந்த அபிமானத்தோடே
நங்கள் குன்றம் கை விடான் (திருவாய்-10-7 )-என்கிறபடியே ஆளும் மலை

ஆயிரம் ஆறுகளும்
திருச் சிலம்பாறு என்னும் ப்ரஸித்தியை யுடைத்தான ஆறு
திரு நாராயணப் பொய்கையை நோக்குகைக்கு ஹேதுவாக திருச் சிலம்பில் தெறித்த திவலைகள்
அந்ய ஸ்பர்சம் அற்று மற்றும் உண்டான ஆயிரம் ஆறுகளும்

சுனைகள் பல ஆயிரமும்
மணம் கமழ் சாரல்
வந்து இழி சாரல்
நலம் திகழ் நாராயணன்
ஆராவமுது
என்றால் போலே திரு நாமங்களை யுடைத்தான அநேகம் ஆயிரம் திருச் சுனைகளும்

ஆயிரம் பூம் பொழிலும் உடை மால் இரும் சோலை யதுவே
இவ் வாறுகளில் தீர்த்தங்களினாலும்
இச் சுனைகளில் தீர்த்தங்களாலும் வளருகிற அநேகம் ஆயிரம் திருச் சோலை களையும்
யுடைத்தான திருமாலிருஞ்சோலை மலை

இத்தால்
அங்கே நித்ய வாஸம் செய்கிற திருமாலை ஆண்டான் போல்வாருடைய
நிர்வாஹ ப்ரவாஹங்களைக் காட்டுகிறது
ஆயிரம் ஆறுகளால்

அவை எல்லாம் ஓர் அர்த்தத்தில் சேர்ந்தமை தோற்றுகிறது
திருச் சிலம்பாறு என்று திரு நாமத்தை உடைத்தான ஆறு திரு நாராயண பொய்கையை நோக்குகையாலே

ஆறுகள் போலே திருச் சுனைகளும் ஸ்தாவர ஜாதியில் அவதரித்த ஸூரிகளுக்கு
தாரகாதிகளாய் நோக்கினமையும் காட்டுகிறது

———–

நிகமத்தில் இத் திருமொழி யாலே 
அழகருடைய வைபவத்தை தாம் பிரகாசிப்பித்தமையை அருளிச் செய்து –
இதற்க்கு வேறு ஒரு பலம் சொல்லாதே- இத்தை அறிகை தானே பலமாக தலைக் கட்டுகிறார்-

மால் இரும் சோலை என்னும் மலையை உடைய மலையை
நாலிரு மூர்த்தி தன்னை நால் வேத கடல் அமுதை
மேலிரும் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளின்
மேலிருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனவே -4 -3-11 –

பதவுரை

மாலிருஞ்சோலை என்னும்–திருமாலிருஞ்சோலை என்கிற
மலையை–திருமலையை
உடைய–(தனக்கு இருப்பிடமாக) உடையவனும்
மலையை–ஒரு மலை சாய்ந்தாற்போன்றுள்ளவனும்
நால் இரு மூர்த்தி தன்னை–திருவஷ்டாக்ஷர ஸ்வரூபி யானவனும்
நால் வேதம் கடல் அமுதை–நான்கு வேதங்களாகிய கடலில் ஸாரமான அம்ருதம் போன்றவனும்
மேல் இருங் கற்பகத்தை–(ஸ்வர்க்க லோகத்திலுள்ள கல்ப வ்ருக்ஷத் தினம்) மேற்பட்டதும் பெரிதுமான கல்ப வ்ருஷமாயிருப்பவனும்
வேதாந்தம்–வேதாந்தங்களிற் கூறப்படுகின்ற
விழுப் பொருளில்–சிறந்த அர்த்தங்களுள்
மேல் இருந்த–மேற்பட்ட அர்த்தமாயிருப்பவனும்
விளக்கை–தனக்குத் தானே விளங்குபவனுமான எம்பெருமானைக் குறித்து
நந்தா விளக்கே -அளத்ததற்கு அரியான்
ஸத்யம் ஞானம் அநந்தம்
திரு மூழிக் காலத்து விளக்கே
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
விரித்தன–அருளிச் செய்தவை இப் பாசுரங்கள்.–
அவனை அறிவதே பலன் –வேறே தேடிப் போக வேண்டாமே

மால் இரும் சோலை என்னும் மலையை உடைய மலையை
அழகருக்கு ஏற்றம் திருமலையை யுடையவர் என்று
ஈஸ்வரனை மலை என்கைக்கு அடி
போக்யதா வெள்ளமும்
நிலை குலையாமையும் —

நாலிரு மூர்த்தி தன்னை
அஷ்ட வஸூக்களுக்கு அந்தர்யாமி யானவனை

அன்றிக்கே
வாஸூ தேவ சங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்தரில்
இரு மூர்த்தி
பெரியவன் வாஸூ தேவன்

அன்றிக்கே
நாலிரு மூர்த்தி என்றது
திரு மந்திரத்தில் எட்டுத் திரு அஷரத்துக்கும் சரீரி என்றபடி

நால் வேத கடல் அமுதை
வேதத்தில் பிரயோஜன அம்சம் திரு மந்த்ரம்
மாதவன் பேர் சொல்வதே வேதத்தின் சுருக்கு (இரண்டாம் திருவந்தாதி )

மேலிரும் கற்பகத்தை
ஸ்வர்க்கத்தில் கற்பகத்திலும் வியாவ்ருத்தி சொல்கிறது
அந்தக் கல்பகம் தன்னை ஒழிந்தவற்றைக் கொடுக்கும் அத்தனை இறே
இந்தக் கல்பகம் அதிகாரியையும் உண்டாக்கி
தன்னையே கொடுக்கும்
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் ( இரண்டாம் திருவந்தாதி ) -என்னக் கடவது இறே

வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கை
அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் -( திரு நெடும் தாண்டகம் )
இத்தால் பிரணவத்தைச் சொல்லுகிறது

மேலிருந்த விளக்கை
வேதாந்தத்தில் ஸர்வ ஸ்மாத் பரன் என்று ப்ரகாசகன் ஆனவனை
அதாவது
அகாரார்த்தம் ஆனவனை

விட்டு சித்தன் விரித்தனவே
பகவத் ஸ்வரூப குணங்களிலே வியாபித்த திரு உள்ளத்தை யுடைய
ஆழ்வார் இப் பிரபந்தத்திலே வெளியிட்டு அருளினார்

இதுக்குப் பல ஸ்ருதி சொல்லாமைக்கு அடி இது தானே பலமாகை –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-2–அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை-

July 27, 2021

பிரவேசம்
கீழில் திருமொழியில்
அலையார் கடல் கரை வீற்று இருந்தானை அங்குத்தை கண்டார் உளர் -என்று

(கொலை யானை கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருது அழியச் 
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் 
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப 
அலையார் கடல் கரை வீற்று இருந்தானை அங்குத்தை கண்டார் உளர் -4- 1-3 )

கொலை யானை கொம்பு பறித்த கிருஷ்ணனோடு கூட்டி அனுசந்திக்கையாலே

அவ் விரண்டு அவதாரத்தையும்
அவ்வோ காலத்தில் கண்டவர்கள் காட்டும் போது
அவை தேசாந்திர கதமாகையாலும்
காலாந்தர கதமாகையாலும்
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும் ஸர்வருக்கும் உசிதமாக
பின்னானார் வணங்கும் இடத்திலே இறே
விபவத்திலே காண வேணும் என்றவர்களுக்கும் காட்டலாவது

விபவம் நிலை நிற்கும் இடத்திலே காட்ட வேணும் இறே
இது தான் அவ்வவ காலங்களிலும் உண்டு இறே
ஆனாலும் அது தானே இறே
பின்னானாருக்கும் வணங்கலாவதும் –

அது தன்னை அவனுக்கு அத்யந்த அபிமதையான
ஸ்ரீ பூமி நாய்ச்சியார் திரு முலைத் தடம் போலே விரும்புமதாய்
நங்கள் குன்றம் கை விடான் (10-7-4 -திருமாலிருஞ்சோலை திருவாய் மொழி )-என்கிறபடியே
நித்ய வாஸம் செய்யப்படுமதாய்
மாலிருஞ்சோலை என்னும் மலையை யுடைய மலை என்னும்படி
அவ் விருப்பு மாறாமல் அழகர்
ஸ்வரூப ரூப குண விபூதிகளோடே
மாலிருஞ்சோலை நம்பி (நாச்சியார் )-என்னும்படி
பிரகாசித்த இடத்திலே

அவரிலும் அத் திருமலை தன்னையே உத்தேச்யமாகக் காட்டி
மங்களா ஸாஸன பரரான தத் காலத்தில் உள்ளாருக்கு அநு பாவ்யமாய்
பிற்காலத்தில் உள்ளாருக்கு கிடையாததாய் இருக்கிற படியையும்
பின்னானார் வணங்கும் சோதி -என்கிறபடியே
அவதாரத்தில் பிற்பாடரானவர்களுக்கும் இழக்க வேண்டாதபடி
ஸர்வேஸ்வரன் அர்ச்சாவதாரமாய்க் கொண்டு உகந்து அருளினை நிலங்களிலே
அவனை அனுபவிக்கக் கோலி மங்களா ஸாஸன பர்யந்தமாக அனுசந்திக்கிறார்

உத்தேச்ய விஷயத்தைக் காண வேணும் என்று ஆச்சார்ய பரதந்த்ரனைக் கேட்டவர்களுக்கு
நீங்கள் கேட்கிறி கோளாகில்
நீங்கள் அபேக்ஷிக்கிற விஷயத்தை கண்டார் உளர் என்று
கண்டவர்களைக் காட்டினால்
அந்தக் கண்டவர்களை நீங்கள் கண்டால் போலே காட்ட வேணும் என்று அபேக்ஷித்தால்
அவர்கள் காட்டுவது
அர்ச்சாவதாரத்தை அநவரத காலமும் சிரஸா வகிக்கும் அவர்களை (திருமலையை ) இறே

இதில்
1-நாடுகிறவர்கள் யார்
2-நாடுதிரேல் என்கிறவர்கள் யார்
3-நாடும் விஷயம் தான் எது
4-அந்த விஷயத்தை நாடாமல் கண்டு பிரிந்து காண வேணும் என்று நாடுகிறவர்கள் யார் –என்னில்

1-நாடுமவர்கள் -சென்று பொருள் படைப்பான் கற்ற திண்மையை யுடையவர்கள்
(பாகவதர்களை விட்டு பகவானைத் தேடிப் போருகிறவர்கள் )
2-நாடுதிரேல் என்கிறவர்கள் – பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -கண்ணி நுண் சிறுத்தாம்பு –
முதலானவற்றில் நிலை நின்ற அத்ய அவசாய ஸ்ரீ யை யுடையவர்கள் –
3-நாடும் விஷயம் -ராம கிருஷ்ணாதி அவதாரங்கள்
4-இவ் விஷயத்தை நிலை நிற்கக் கண்டு உளராம்படி உளரானவர்கள் ஆழ்வார்கள்
(விபவம் ரிஷிகள் அர்ச்சை ஆழ்வார்கள் என்றவாறு )

மெய்மையே கண்டார் உளர் என்றும்
மருவுமிடம் நாடுதிரேல் என்றும் உண்டாகையாலே
நங்கள் குன்றத்தையும்
அத்தைக் கை விடாமல் இவனவன் -என்று
தேச கால நியமம் இன்றி நித்ய வாஸம் செய்கிற
முடிச் சோதியில்( திருமலையில் )அழகரையும் உத்தேச்யமாகப் பேசுகிறார் –

(அவன் இவன் என்று கூழேன்மின் குழம்பாதீர்
இவனா அவன் –
நெஞ்சினால் நினைப்போனான் அவன் நீள் கடல் வண்ணன்
சிறப்பான அர்ச்சாவதாரத்துக்கு அவன் ஒப்பாகுமா என்றவாறு)

———-

அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை
குலம் பாழ் படுத்து குல விளக்காய் நின்ற கோன் மலை
சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர் ஆடும் சீர்
சிலம்பாறு பாயும் தென் திரு மால் இரும் சோலையே -4 2-1 –

பதவுரை

தெய்வம் மகளிர்கள்–தேவ ஸ்திரீகள்
சிலம்பு ஆர்க்க (நமது) பாதச் சிலம்புகள் ஒலிக்கும் படி
வந்து (பூலோகத்தில்) வந்து
ஆடும் சீர்–நீராடும்படியான பெருமையை யுடைய
சிலம்பு ஆறு–நூபுர கங்கையானது
பாயும்–(இடைவிடாமல்) பெருகப் பெற்றுள்ள
தென் திருமாலிருஞ் சோலை–அழகிய திருமாலிருஞ் சோலையானது,
அலம்பா–பிராணிகளை அலையச் செய்தும்
வெருட்டா–பயப்படுத்தியும்
கொன்று–உயிர்க் கொலை செய்தும்
திரியும்–திரிந்து கொண்டிருந்த
அரக்கரை–ராக்ஷஸர்களை
குலம் பாழ் படுத்து–ஸ குடும்பமாகப் பாழாக்கி
குலம் விளக்கு ஆய் நின்றகோன்–(இக்ஷ்வாகு வம்சத்துக்கு விளக்காய் நின்ற பெருமான்
எழுந்தருளி யிருக்குமிடமான)
மலை–திருமலையாம்–

அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை
ஆரவாரித்து சீட்கை -விளைத்து -பிடித்து -அஞ்சப் பண்ணி
அஞ்சினாரைக் கொன்று
அதுவே யாத்ரையாய்த் திரியும் அரக்கரை
அதுக்கடி-ஜன்ம தோஷம்

குலம் பாழ் படுத்து
பாழாளாகப் படை பொருதானுக்கு
விபீஷணன் அவர்களுக்கு கூட்டு அன்று என்று -என்னும் இடம்
அதுக்கு ஸூசகம் -பெருமாள் இஷ்வாகு வம்சஜனாக நினைத்து வார்த்தை அருளிச் செய்தது –

குல விளக்காய் நின்ற கோன் மலை
ராவணன் திக் விஜயம் பண்ணின அன்று தொடங்கி இஷ் வாகு வம்சம் ஒளி மழுங்கிக் கிடந்தது
பெருமாள் திரு அவதரித்த பின்பு இறே குன்றத்து இட்ட விளக்காய்த்து

கோன் மலை
ஸர்வ ஸ்வாமி நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்
ஸர்வ ஸ்வாமித்வம் வீறு பெற்றது இங்கே இறே
(மூலவர் பரம ஸ்வாமி திரு நாமம் )

சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர் ஆடும்
முன்பு ராவணாதிகளுக்கு அஞ்சிச் சிலம்பு ஒழிந்தும்
பஞ்சடை -(பஞ்சை )இட்டும் வருகை தவிர்ந்து
குலம் பாழ் படுக்கையாலே ஸ்வர்க்கத்தில் அப்சரஸ்ஸூக்கள் சிலம்பார்க்க வருவர்கள்-

ஆடும்
ஸ்வர்க்கத்தில் இருப்புக்கு சாதனமாக
சாலில் நீர் மாண்டால் போலே
புண்யம் மாண்டால் தேடிக் கொள்ளும் தேசம்

சீர்
இது தானே இறே இதுக்கு ஏற்றம்
நிரூபகமும் இது தானே இறே இதுக்கு

சிலம்பாறு பாயும் தென் திரு மால் இரும் சோலையே
தென் என்று அழகாய்
மால் என்று பெருமை
இருமை என்றும் பெருமை
மிக்க பெருமை என்றபடி –

————–

ப்ரதிஜ்ஜையிலே
பல்லாண்டு பல்லாண்டு -என்றும்
பண் பல பாடி பல்லாண்டு இசைப்ப-(1-10 )-என்றும்
பல்லாண்டு கூறி வைத்தேன் (3-3 )-என்றும்
பல்லாண்டு ஒலி செல்லா நிற்கும்-(4-2-2 ) -என்றும்
அருளிச் செய்கையாலே இவர் திரு உள்ளத்துக்குப் பொருந்துவது
மங்களா சாஸனமே என்று தோன்றுகிறது இப் பாட்டால் –

வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை
பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை
எல்லாவிடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி
செல்லா நிற்கும் சீர் தென் திரு மால் இரும் சோலை மலையே -4 -2-2 –

பதவுரை

பல்லாண்டு ஒலி–மங்களசான கோஷமானது
எல்லா இடத்திலும்–எல்லா யிடங்களிலும்
எங்கும்–திருமலையின் பரப்பெங்கும்
பரந்து செல்லா நிற்கும் சீர்–பரவிச் செல்லும் படியான பெருமையை யுடைய
தென் திருமாலிருஞ்சோலை
வல் ஆளன்–வலிய ஆண்மையை யுடையவனும்
வாள்–(சிவனிடத்துப் பெற்ற) வாளை யுடையவனுமான
அரக்கன்–ராவணனுடைய
தோளும் முடியும்–தோள்களும், தலைகளும்
தங்கை–(அவனது) தங்கையாகிய சூர்ப்பணகையினது
பொல்லாத மூக்கும்–கொடிய மூக்கும்
போக்குவித்தான்–அறுப்புண்டு போம்படி பண்ணின எம்பெருமான்
பொருந்தும்–பொருந்தி எழுந்தருளி யிருக்குமிடமான
மலை–திருமலையாம்–

வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும்
ப்ரஹ்மா கொடுத்த வரத்தால் வந்த மிக்க ஆண்மையும்
ருத்ரன் கொடுத்த வாளையும் உடைய
(ப்ரஹ்மா நாள் கொடுக்க ருத்ரன் வாள் கொடுக்க )
அரக்கன் தோளும் முடியும்

தங்கை பொல்லாத மூக்கும்
அவன் தன்னைப் போலவே யதேஷ்ட சாரித்வத்தால் வந்த
பொல்லாங்கை யுடைய தங்கை யுடைய மூக்கும்

போக்குவித்தான்  பொருந்து மலை
இவளை அங்க ஹீனை யாக்கி
இவர்களால் லோகத்துக்கு வந்த விரோதத்தை நீக்கினவன்
நித்ய வாஸம் செய்கிற திருமலை

எல்லாவிடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி
செல்லா நிற்கும்
விஷய அனுரூபம் ஸ்வரூபம் என்பார் இடங்களிலும்
ஸ்வரூப அனுரூபமே புருஷார்த்தம் என்பார் இடங்களிலும்
(ஆட்க்கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் —
என்னை முற்றும் பருகினான் காட்கரை அப்பனே )
உபாசன ஆத்மக ஞானம் யுடையார் இடங்களிலும்
ரஷ்ய ரக்ஷக பாவம் மாறாடி
பல்லாண்டு ஒலி செல்லா நிற்கும்

பல்லாண்டு என்கிற மங்களா ஸாஸன ப்ரகாசிதருக்குப் பரதந்த்ரர் ஆனதும்
நித்ய விபூதியிலும் மிக வேண்டியது இங்கேயே யாகையாலே செல்லா நிற்கும்

சீர்
அம் மலை மேல் வர்த்திக்கிறவர்களும் -அம் மலை மேல் உண்டான பதார்த்தங்களைப் பக்வமாக்கி
அங்கே இருக்கிற திரு மலை ஆழ்வாரை
உன் பொன்னடி வாழ்க ( 5-3 )என்று அமுது செய்யப் பண்ணுவதும்
ஆஸ்ரிதர் ஸந்நிதி பண்ண வேணும் என்கிற இடத்திலே ஸந்நிதி பண்ணுமவர் இறே திருமலை ஆழ்வாரும்

அன்றிக்கே
உன் பொன்னடி வாழ்க -என்கிறது அழகர் ஆகவுமாம்
இருவருக்கும் உண்டு இறே மங்களா ஸாஸன பரரான ஆஸ்ரிதற்குப் பரதந்த்ராகை
இரண்டு இடத்திலும் உண்டு இறே பின்னும் ஆளும் செய்கை ( நாச்சியார் )
ஏவம் பிரகாரமான குணங்களையும்
திருமாலிருஞ்சோலை மலை என்கிற திரு நாமத்தையும் யுடையராய் இறே திருமலை ஆழ்வார் தாம் இருப்பது –

இனக் குறவர் பொன்னடி வாழ்க என்கிறது
எந்தாய் என்கிறதிலே ப்ரதான்யம்
இங்கே திருமாலிருஞ்சோலை என்கையாலே திருமலை ஆழ்வார் மேலே இறே ப்ராதான்யம்
அதுக்கு அடி –
அழகருக்கு சென்றால் குடையாம் என்கிறபடி
இஷ்ட விநியோக அர்ஹமாம் இருக்கை இறே

தென் என்று
திக் ஆதல்
அழகு ஆதல்
தென்ன என்கிற ஆளப்பம் ஆதல்

மாலும் இருமையும் பெருமையாய் -மிக்க பெருமை என்னுதல்
மாலினுடைய பெரிய சோலை என்னுதல்
மயல் மிகு பொழிலாய் (2-10) மாலுக்கு மாலை விளக்கும் என்னுதல் –

—————-

தக்கார் மிக்கார்களை சஞ்சலம் செய்யும் சலவரை
தெக்கா நெறியே  போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
எக்காலமும் சென்று சேவித்து இருக்கும் அடியரை
அக் கான் நெறியை மாற்றும் தண் மால் இரும் சோலையே – 4-2- 3-

பதவுரை

எக் காலமும்–எப்போதும்
சென்று–போய்
சேவித்திருக்கும்–திருவடி தொழா நின்றுள்ள
அடியரை–பாகவதர்களை
அக் கான் நெறியை மாற்றும்–அப்படிப்பட்ட (கொடுமையான) (பாவக்)காட்டு வழியில் நின்றும் விலக்கக் கடவதும்
தண்–தாப ஹரமுமான
மாலிருஞ்சோலை
தக்கார் –(க்ருபா விஷயத்தில்) எம்பெருமான் ஒத்தவர்களும்
மிக்கார்களை (க்ருபா விஷயத்தில்-அவனிலும்) மேற்பட்டவர்களுமாயுள்ள மஹாத்மாக்களை
சஞ்சலம் செய்யும்–அலைத்து வருந்தா நின்றுள்ள
சலவரை–க்ருத்ரிமப் பயல்களை
தெக்கு ஆம் நெறியே–தென் திசையிலுள்ள நரக மார்க்கத்திலே
போக்கு விக்கும்–போகும் படி பண்ணா நின்ற
செல்வன்–ச்ரிய பதியான எம்பெருமான் (எழுந்தருளி யிருக்குமிடமான)
பொன் மலை–அழகிய திருமலையாம்–

தக்கார்
ஈஸ்வரனோடு ஓக்க கிருபை ஒத்து இருக்குமவர்கள்
ஈஸ்வரனுக்குத் தகுதியானவர்கள்
அதாவது
நினைவு ஒன்றாய் இருக்கை
சர்வாத்மாக்களும் உஜ்ஜீவிக்க வேணும் என்கிற கிருபை ஒத்து இருக்கை

மிக்கார்களை
ஈஸ்வரனிலும் பிராட்டியிலும் கிருபை மிக்கு இருப்பவர்கள்
அதாவது
புருஷகாரமாவார் -கை விட்டவர்களைக் கொள்ளுமவர்கள் இறே
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான சடகோபன் என் நம்பியே -என்று
ஈஸ்வரனும் பிராட்டியும் செய்யும் காரியமும் செய்து
தாம் செய்யும் காரியமும் செய்கையாலே மிக்கார் என்கிறது
வருமையும் இம்மையும் நன்மை அளிக்கும் பிராக்கள் -என்று
இம்மைக்கும் மறுமைக்கும் ரஷிப்பவர்கள் இறே
ஈஸ்வரன் அருளிலும் இவர்கள் அருள் இறே நன்றாய் இருப்பது
நல்லருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்ல வாழ் -என்னக் கடவது இறே

சஞ்சலம் செய்யும் சலவரை
பகவத் விஷயத்திலே வைத்த நெஞ்சைக் கலங்கப் பண்ணும் க்ருத்ரிமரர்களை
ஸ்ரீ தண்டகாரண்ய வாசிகளான ரிஷிகள் பகவத் த்யானம் குலைந்து
ஏஹி பஸ்ய சரீராணி -என்று உடம்புக்கு மன்றாடும்படி ஆய்த்து இறே

சலவர்
அனுகூலரைப் போலே ப்ராதிகூல்யம் பண்ணுமவர்கள்

தெக்கா நெறியே  
நரகத்துக்குப் போம் வழியே

போக்குவிக்கும்
மீட்சியில்லை

செல்வன் பொன் மலை
இப்படிப் போம் படி பண்ணுகைக்கு ஹேது ஸ்ரீ யபதியாகையாலே
அசுரர்க்குத் தீங்கு இழைக்கும் திருமால் -என்னக் கடவது இறே
ராவணாதிகளைக் கொல்லுகைக்கு தபஸ்ஸூ பண்ணுபவன் இறே

பொன் மலை
ஸ்ரீ யபதி வர்த்திக்கிற ஸ்லாக்யமனான திரு மலை

எக்காலமும் சென்று சேவித்து இருக்கும் அடியரை
அநந்ய ப்ரயோஜனராய்
புறம்பு அந்நிய பரதை இல்லாமல் சேவித்து இருப்பவர்கள்
ப்ரயோஜனாந்தர பரர்க்கு இறே கால நியதி உள்ளது
இவர்களுக்கு கால நியதி இல்லை
அதுக்கடி
அடியார் ஆகையால்
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து
வைகல் தொழுவார் -என்னக் கடவது இறே

அக் கான் நெறியை மாற்றும்
அக் காட்டு வழியை மாற்றும்
பாவக் காடு இறே

தண் மால் இரும் சோலையே
அழகர் பிரதிகூலரைத் தெக்கா நெறியே போக்குவிப்பர்
திருமலை ஆழ்வார் அனுகூலரை அக் கான் நெறியை மாற்றுவிப்பர்
பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயன்
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் –என்னக் கடவது இறே

அழகரைப் பற்றுகையிலும்
அயன் மலை அடைவது -இறே கருமம் –

———–

ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர் தம்
கோனார்க்கு ஒழிய கோவர்த்தனத்துச்  செய்தான் மலை
வான் நாட்டில் நின்று மா மலர் கற்பகத்து ஒத்து இழி
தேனாறு பாயம் தென் திரு மால் இரும் சோலையே – 4 -2-4 –

பதவுரை

வான் நாட்டில்–ஸ்வர்க்க லோகத்திலுள்ள
மா மலர்–பெரிய பூக்களை யுடைய
கற்பகம்–கல்ப வ்ருக்ஷத்தினுடைய
தொத்தில் நின்று–பூங்கொத்தில் நின்றும்
இழி–பெருகா நின்ற
தேன்–தேனானது
ஆறு பாயும்–ஆறாய்க் கொண்டு ஓடா நிற்கிற
தென்–அழகை யுடைய திருமாலிருஞ்சோலை
ஆன் ஆயர்–பசுக்களுக்குத் தலைவரான இடையர்கள்
கூடி–ஒன்று சேர்ந்து
அமைத்து–(இந்திரனுக்காக) ஏற்படுத்தின
விழவை–ஸமாராதனையை
அமரர் தம் கோனார்க்கு ஒழிய–(அந்த) தேவேந்திரனுக்குச் சேர வொட்டாமல் தடுத்து
கோவர்த்தனத்து–கோவர்த்தன மலைக்குச் (சேரும் படி)
செய்தான் மலை–செய்தருளின கண்ண பிரானுடைய திருமலையாம்–

ஆனாயர் கூடி
பசு மேய்க்கும் இடையர் திரண்டு
ஆனான் ஆனாயன் (1-8-8 )-என்னக் கடவது இறே இவன் தன்னையும் –

அமைத்த விழவை
இடையர் கூடிச் செய்த உத்ஸவத்தை

இதில் உடன்படாதான் கிருஷ்ணன் ஒருவனும் இறே
அதுக்கடி
தான் பிறந்து இவர்கள் கொடாத போது உங்கள் அளவிலே அதிகரித்து
அசாதாரண விக்ரஹங்களிலே கைக் கொள்ளும் பதார்த்தங்களை
தேவத அந்த்ர்யாமி த்வாரா கைக் கொள்ளுகை திரு உள்ளத்துக்கு அஸஹ்யம் ஆகையால்

அமரர் தம் கோனார்க்கு ஒழிய
அமரர் என்று தேவ ஜாதி
கோனார் என்று இவர்களைக் கும்பீடு கொள்ளுகிறவர்
(கோனார் பூஜ்ய பஹு வசனம் )

ஒழிய
கிருஷ்ணர் நந்த கோபரை அழைத்து
பசுக்களுக்கு இந்த மலையிலே அன்றோ புல்லும் தண்ணீரும்
இது கோ வர்த்தகம் என்று பேராசைக்கு அடி கோவை வார்த்திப்பிக்கும் என்று அன்றோ
ஆன பின்பு அவனுக்கு இடத் தவிர்ந்து
இந்த மலைக்கு இடப் பாருங்கோள் என்று அருளிச் செய்ய

அவரும் அத்தைக் கேட்டு
இடையரை அழைத்து
இந்தச் சிறு பிள்ளைக்கு உள்ள அறிவும் நமக்கு இன்றிக்கே இருந்தது
இவன் சொன்னால் போலவே செய்யுங்கோள் -என்ன

அப்படியே செய்கிறோம் என்று
மலையின் முன்னே கொண்டு போய் குவித்தார்கள்

கோவர்த்தனத்துச்  செய்தான் மலை
அங்கு ஒரு பூத வடிவு கொண்டு (பெரிய திருமடல் )அமுது செய்து
இடையர்களுடன் கூடி நின்று
வேண்டும் வரங்களும் வேண்டிக் கொண்டவன் வர்த்திக்கிற தேசம்
(திருமாலிருஞ்சோலை திவ்ய தேச நித்ய வாஸம் வேண்டிக் கொண்டானோ )

வான் நாட்டில் நின்று மா மலர் கற்பகத்து ஒத்து இழி தேனாறு பாயம் தென் திரு மால் இரும் சோலையே
இந்திரன் கல் வர்ஷம் பொழிவித்த அபராததுக்கும்
என் நாதன் தேவிக்கு அன்று இன்பப் பூ ஈயாத அபராததுக்கும்
தோற்றுப் பணிப் பூ இடுகிறபடி

வானாடு -என்று ஸ்வர்க்கத்தில் பெரிய பூக்களை யுடைத்தான கற்பகத்தில்
பூங் கொத்துக்களின் தேன் ஆறாய்ப் பாயும் அழகிய பரப்பை யுடைத்தான திருமலை

தன சிஷ்யன் புறம்பு ஒருவரால் (பகவானால் கூட )திருந்தி வர்த்திக்கப் புக்கால்
ஆச்சார்யன் நினைக்கும் படி
யானே நீ என்னுடையும் நீயே என்று இருக்கிறவன் ஆகையாலே
தன் சமர்ப்பணத்தின் படிக் கைக் கொண்டான் என்று இருக்கக் கடவன்

அன்றிக்கே
நாம் தத் (பகவத்)விஷயத்தில் சேர்ந்ததுக்குப் பலம்
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்ற ஈஸ்வரன் நிலையை அறிந்து
சிஷ்யன் தானும் –
அடியார்க்கு என்னை ஆட்படுத்தாய் என்று பிரார்த்திக்குமவன் ஆகையால்
மூவர் நினைவாலும் வெறுப்பு இல்லை

தன் அசந்நிதியிலே புறம்பே திருந்தினானாகில்
திரு மதிள் திரு நந்தவனம் தான் குறையாக்கி விட்டு வைத்துப் போனால்
அத்தை வேறே ஒரு தார்மிகன் தலைக் கட்டினால் தான் வந்து அவனை உகக்குமா போலே
உகக்கக் கடவன்

திருத்த மாட்டாதவர்கள் பக்கலிலே போனால்
இவ் வாத்மாவை எம்பெருமான் நம்மோடே சேர்த்து எடுக்க நினைத்தான் என்று இருந்தோம்
இது இப்படித் தட்டுப் படுவதே -என்று
அவன் நாசத்துக்கு நோகக் கடவன் —

———-

ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன் தன்
ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை
கரு வாரணம் தன் பிடி துறந்து ஓடக் கடல் வண்ணன்
திரு ஆணை கூறத் திரியும் தண் மால் இரும் சோலையே – 4-2- 5-

பதவுரை

ஒரு வாரணம்–(ஸ்ரீகஜேந்திராழ்வானாகிற ஒரு யானையினிடத்து
பணி–கைங்கர்யத்தை
கொண்டவன்–ஸ்வீகரித்தருளினவனும்
கஞ்சன் தன்–கம்ஸனுடைய
ஒரு வாரணம்–(குவலயாபீடமென்ற) ஒரு யானையினுடைய
உயிர்–உயிரை
உண்டவன்–முடித்தவனுமான கண்ணபிரான்
சென்று–எழுந்தருளி
உறையும்–நித்ய வாஸம் பண்ணப் பெற்ற
மலை–மலையாவது:
கரு வாரணம்–கறுத்ததொரு யானை,
தன் பிடி–தன்னுடைய பேடை யானது
துறந்து ஓட–(பிரணய ரோஷத்தினால்) தன்னை விட்டிட்டு ஓடப்புக,
(அதுகண்ட அவ்வானையானது)
கடல் வண்ணன் திரு ஆணை கூற–“கடல் போன்ற நிறமுடைய அழகர் மேலாணை” என்று சொல்ல
திரியும்–(அப்பேடை யானது அவ்வாணைக்குக் கட்டுப்பட்டு அப்புறம் போக மாட்டாமல்) மீளா நின்றுள்ள
தண்–குளிர்ந்த
மாலிருஞ்சோலை–திருமாலிருஞ் சோலை மலையாம்–

ஒரு வாரணம்
ஞானமும் பக்தியும் விரக்தியும் பூர்ணமாக யுடைத்தாகையாலே
அத்விதீயமான ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை

பணி கொண்டவன்
பூவில் செவ்வி குலைவதற்கு முன்னே வந்து கைக் கொண்டவன்

பொய்கையில்
பணி கொண்டது தான் பரம பதத்திலேயோ என்னில்
அங்கு அன்று -பொய்கையிலே
இத்தால் தேஹ தோஷமும் பாரான் என்கிறது

உம்பரால் அறியலாகா ஒளி உளார் யானைக்காகி வந்தார்
நம் பரமாயதுண்டே நாய்களோம் சிறுமை ஓரா (திருமாலை -28)-என்றும்
ஒப்பிலேன் யாகிலும் நின்னடைந்தேன் நீ அருள் செய்தமையால் -(4-10-)-என்னக் கடவது இறே

திருக்கச்சி நம்பி அருளாள பெருமாள் எம்பெருமானார் திருவடிகளில் சென்று
தேவரீர் திரு உள்ளத்துக்கு உகந்ததொரு திரு நாமம் தந்து அருள வேணும் என்று
விண்ணப்பம் செய்த வனந்தரத்திலே
ஸ்ரீ கஜேந்திர தாஸன் என்று அழைக்கக் கடவோம் -என்று அருளிச் செய்தார்

கஞ்சன் தன் ஒரு வாரணம் உயிர் உண்டவன்
இங்கு ஒரு வாரணம் என்றது பாதகத்தில் உறைப்புத் தோற்ற
கஞ்சன் தன் ஒரு வாரணம்-என்கையாலே
ஆனைக்கு பாதகத்வம் ப்ரக்ருதியாய் இருக்கச் செய்தேயும்
ஒளஷதங்களை இட்டு மதம் உதிதமாம் படி பண்ணுவிக்கை

ஒன்றுக்குப் பிராண பிரதானம் பண்ணி
ஒன்றின் பிராணனை அபஹரித்தவன்

சென்று உறையும் மலை
ஆனுகூல்யமுடைய ஆனையை ரக்ஷித்து
ப்ராதிகூல்யம் பண்ணின ஆனையை நிரசித்தவன்
வர்த்திக்கிற தேசமாகையாலே
அனுகூலமான யானைகள் எல்லாம் சேர்ந்த தேசம்

கரு வாரணம் தன் பிடி துறந்து ஓடக்
கறுத்த யானையின் நிறத்தைக் கண்ட பிடி
நம்மை ஒழிய வேறே கலந்து பெற்ற நிறமாய் இருந்தது -என்று ப்ரணய ரோஷத்தாலே ஓட
தன்னை சன்னியசித்துப் போக
அநந்தரம் இது மீளுகைக்கு ஈடான உபாயங்களிலே இழிந்தது

அதாவது
பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன் நின்று இரு கண் இள மூங்கில் வாங்கி
அருகு இருந்த தேன் கலந்து நீட்டத் தொடங்கிற்று
அத்தை யுனக்கு வேண்டுவாருக்குக் கொடு என்று போகத் தொடங்கிற்று
இனி உபாயாந்தரம் பலித்தது இல்லை
இனி சரம உபாயத்தை அனுஷ்ட்டிப்போம் என்று பார்த்து

கடல் வண்ணன் திரு ஆணை கூறத் திரியும்
அழகர் ஸ்ரீ பாதமே போவாய் என்ன
அநந்தரத்திலே மீண்டது திரியும்

அன்றிக்கே
கடல் வண்ணன் என்று அழகர் திரு நாமமாய்
திரு ஆணை என்று பெரிய பிராட்டியார் ஆணை ஆகையாலே
நாய்ச்சியார் ஆணை போவாய் என்றது ஆகவுமாம்

இத்தால்
சிஷ்யன் ஆச்சார்யனை அநாதரித்துப் போக
புருஷகாரத்தின் ஆணையும் இட்டு
மீட்கக்
கூடுகிறான்

இத்தால்
சிஷ்யனைப் புகல் அறுக்க
அவன் தானே வந்து கூடின படி தோற்றுகிறது

தண் மால் இரும் சோலையே
அதிகாரிகள் நின்ற நின்ற அளவுக்கு ஈடாக விடாய்களை ஆற்றும் திருமலை
இதுக்குப் பிடி துறந்து ஓடுகை இறே ஆபத்து –

———-

ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரைச்
சாவத் தகர்த்த சாந்து அணி தோள் சதுரன் மலை
ஆவத்து தனம் என்று அமரர்களும் நன் முனிவரும்
சேவித்து இருக்கும் தென் திரு மால் இரும் சோலையே -4 -2-6 –

பதவுரை

ஏலிற்று–(கம்ஸன்) ஏவின காரியங்களை
செய்வான்–செய்து முடிப்பதற்காக
ஏன்று எதிர்த்து வந்த–துணிந்து எதிரிட்டுவந்த
மல்லரை–(சாணுரன் முதலிய) மல்லர்களை
சாவ தகர்த்து–முடியும்படியாக நோக்கினவனும்
சாந்து–(கூனி யிட்ட) சாந்தை
அணி–அணிந்து கொண்டுள்ள
தோள்–தோள்களை யுடையவனும்
சதுரன்–ஸமர்த்தனுமான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கிற)
மலை–மலையாவது:
அமரர்களும்–(பிரமன் முதலிய) தேவர்களும்
நல் முனிவரும்–ப்ரஹ்ம பாவனை மட்டும் உள்ள நல்ல (ஸனகர் முதலிய மஹர்ஷிகளும்)
ஆவத்து தனம் என்று–ஆபத்துக் காலத்துக்குத் துணையாயிருக்குமிடமென்று (நினைத்து)
சேவித்து இருக்கும்–ஸேவித்துக் கொண்டு இருக்குமிடமான தென் திருமாலிருஞ்சோலை–

ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரைச்
தோற்றால் தங்கள் பிராணனைக் தப்ப விரகு இல்லை
மீளில் இவன் கழி கத்தியாலே கழிக்குமதில் அவன் கையில் பட்டுப் போனால்
வீர ஸ்வர்க்கம் கிடைக்கும் என்று
படக் கடவதாக துணிந்து வந்த மல்லரை

சாவத் தகர்த்த
பசும் கலம் உடைத்தால் போலே கொன்றான் ஆய்த்து
விரோதி நிரஸனம் காய் வந்தபடி

சாந்து அணி தோள் சதுரன் மலை
தாம் காலும் கையும் உடலும் சேர்ந்து பொரா நிற்கச் செய்தே
சாந்து அழியாத சதிர்
அதுக்கடி
மஞ்சத்தில் பெண்கள் கூனி சாந்து சாத்தின போதே தங்கள் கண்களால் குறியிட்டு விட்டார்கள்
இக் குறி அழியாமல் பொருத சதுரன் மலை

அமரர்களும் நன் முனிவரும்
முனியவர்களும் யோகிகளும் –இத்யாதி

சேவித்து இருக்கும்
அடியரோடு இருந்தமை -என்னக் கடவது இறே

ஆவத்து தனம் என்று
உபாயத்துக்கு ஒரு கால் நினைக்க அமையும் இறே

சேவித்து இருக்கும்
பின்பு பலத்திலே இறே அந்வயம் –

——–

மலயத்வஜ சக்ரவர்தியாலும் ஸ்லாகிக்கப் பட்ட திருமலை என்கிறார் –

மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல்
முன்னங்கு நின்று  மோழை எழுவித்தவன் மலை
கொல் நவில் கூர் வேல் கோன் நெடு மாறன் தென் கூடல் கோன்
தென்னன் கொண்டாடும் தென் திரு மால் இரும் சோலையே -4 -2-7 –

பதவுரை

மன்னர்–(குரு தேசத்து) அரசர்கள்
மறுக–குடல் குழம்பும்படி
மைத்துணன் மார்க்கு–மைத்துனன்மாரான பாண்டவர்களுக்கு (த் துணையாகி)
ஒரு தேரின் மேல்–ஒரு தேரிலே
முன் அங்கு நின்று–முற் புறத்திலே நின்று கொண்டு
மோழை யெழுவித்தவன் மலை–(நீர் நரம்பில் விட்ட வாருணாஸ்த்ரத்தின் வழியே) கீழுண்டான நீரானது
குமிழி யெறிந்து கிளரும்படி பண்ணின கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கிற) மலையாவது
கொன்னவில்-கொலையையே தொழிலாக வுடைய
கூர்–கூர்மை பொருந்திய
வேல்–வேலை யுடையவனும்
கோன்–ராஜ நீதியை வழுவற நடத்துமவனும்
நெடு–பெருமை பொருந்தியவனும்
மாறன்–‘மாறன்‘ என்னும் பெயருடையவனும்
தென்–அழகிய
கூடல்–‘நான் மாடக் கூடல்‘ என்ற பெயரை யுடைய மதுரைக்கு
தென்னன்–பாண்டி நாட்டுத் தலைவனுமான மலயத்வஜ ராஜனாலே
கொண்டாடும்–கொண்டாடப் பெற்ற
தென் திருமாலிருஞ்சோலை–

மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று  மோழை எழுவித்தவன் மலை
ஒரு நாள் யுத்தத்தில் மைத்துனமாரான ராஜாக்கள் தண்ணீர் விடாயாலே
தாங்களும் தங்கள் பரிகரமுமாகத் தங்கள் படை நிலத்தில் தண்ணீர் இல்லாமையாலே
மிகவும் ஈடுபட்டு எதிர் தலை வாங்காமையாலே என் செய்வோம் என்கிற அளவிலே
அத்விதீயமான தேரின் மேலே ஸாரதியாய்
தாழ்ந்த தட்டிலே நின்று

நின்று
பாண்டவ பக்ஷ பாதம் தோன்ற நின்று

கிருஷ்ணா தேரை மீள விடு
பிராணன் உண்டாகில் நாளையும் யுத்தம் செய்து கொள்ளலாம்
என்னவும்
நின்று

அவனோடே வார்த்தை யாக்கி
வருணாஸ்திரத்தை இங்கனே தொடுத்து விடு –
தண்ணீரும் உண்டாம் காண்
அஞ்சாதே கொள் என்ன

அவனும் தொடுத்து எங்கே விட என்ன

பூமியில் நீர் நரம்பு அறிந்தவன் ஆகையாலே
இந்த நீர் நரம்பிலே என்ன

இவனும் அங்கே விட
அம்பு போன வழியே மோழை பட்டு மேலே மண்ணைக் கரைத்துக் கொண்டு
கிளம்பிப் படை நிலம் எல்லாம் வேண்டும் அளவிலே பரக்கும் படி
குமிழி எழப் பண்ணினவன் நித்ய வாஸம் செய்கிற மலை

மோழை-குமிழி -மேட்டு நீர்

கொல் நவில் கூர் வேல் கோன் நெடு மாறன் தென் கூடல் கோன்
கொலைக்குப் பரிகரம் என்னும் படியான கூரிய வேலை யுடையனாய்
தர்ம யுத்தமே செய்பவனாய்
தபஸ் பலத்தால் நித்ய கங்கா ஸ்நானம் செய்து வர வல்லவனாய்
பாண்டிய மண்டலத்துக்கு ராஜாவாய்
தெற்கு திக்கில் பிரதானனுமாய்
மதுரை என்கிற பேரை யுடைத்தான படை வீட்டுக்கு நிர்வாஹகனுமாய்

தென்னன்
தென் நாட்டை யுடையவன்
மேகத்தை விலங்கு இட்டான்
பூதத்தைப் பணி கொண்டான்
இந்திரன் தலையிலே வளை எறிந்தான்
வடிம்பு அலம்ப நின்றான் கடலிலே
மடியிலே கயல் இட்டான்
என்றால் போலே சொல்லக் கடவது பாண்டிய மண்டலத்தில் தர்ம ராஜாக்களை –
அவ்வளவும் அன்றிக்கே
மலயத்வஜன் என்கிற பேரை யுடையவனாய்
(இவர் மதுரை தேச அரசராக இருந்தார் என்றதால் இவற்றை அறிவார் அன்றோ )

அதாவது
அகஸ்தியன் வர்த்திக்கிற மலய பர்வதத்திலே சென்று
அகஸ்த்ய மகரிஷிக்கு முன்னே தர்மமே நடத்தக் கடவன் -என்று
மலய பர்வதத்தை எழுதிக் கொடி எடுத்தவன்

கங்கையிலே ஸ்நானம் செய்ய போகா நிற்க செய்தே -மதி தவழ் குடுமி அளவிலே சென்றவாறே –
தேர் வடக்கு ஓடாமல் நின்றதாய்-அவ்விடத்திலே தேரை நிறுத்தி –
இங்கே தீர்த்த விசேஷமும் -தேவதா சந்நிதியும் உண்டாக்க அடுக்கும் -என்று இறங்கி ஆராய்ந்து பார்த்த அளவில் –

அவ்விடத்தில் அழகர் சந்நிதி பண்ணி -இவ்வாற்றில் ஸ்நானம் செய்-என்ன

நாமம் கேட்டு ஸ்நானம் பண்ண வேண்டுகையாலே -இதுக்கு பேர் என்ன -என்று கேட்க –

முன்பே நம்மை பிரம்மா காலைக் கழுவுகிற காலத்திலே நம் சிலம்பிலே நீர் இதிலே தெறித்து –
சிலம்பாறு -என்று இதுக்கு பேர் ஆய்த்து -என்ன

அங்கே ஸ்நானம் செய்து –
கங்கா ஸ்நானம் தவிர்ந்து –
இங்கே ப்ரவணனாய் இருந்து
அழகருக்கு வேண்டும் அடிமைகளும் செய்தான் என்று ஒரு பிரசித்தி உண்டு இறே

அத்தை அருளிச் செய்தார் ஆய்த்து
அத்தைப் பற்ற தென்னன் கொண்டாடும் தென் திரு மால் இரும் சோலையே -என்கிறார்

பஞ்சவன் பவுழியன் சோழன் பார் மன்னர் தாம் பணிந்து ஏத்தும் வரன் (7-7)-என்பது
பல வேந்தர் வணங்கு கழல் பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம் (2-10 )-என்பது
இவர்கள் உடன் கூட அநந்ய ப்ரயோஜனராய் -அநந்ய சாதனராய் இருக்கிற
தொண்டைமான் சக்கரவர்திகளையும் கொண்டாட நின்றார் இறே

இது இறே ஆழ்வார்கள் திரு உள்ளம் இருக்கிற படி
இதுக்கடி பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களில் ப்ரீதி அதிசயம் இறே

இது இறே நம் ஆச்சார்யர்களுக்கும் திரு உள்ளம்
மலயத்வஜ திக்யா தொ மாந வேந்த்ரோ மஹீ பதே —

————

குறுகாத மன்னரை கூடு கலக்கி வெம் கானிடை
சிறு கால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
சிறுகாலை பாடும் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 -8-

பதவுரை

குறுகாத–திருமலையைக் கிட்டி அநுகூலாய் வாழலாமாயிருக்க, அது செய்யாமல் விலகுகின்ற
மன்னரை–அரசர்களுடைய
கூடு–இருப்பிடத்தை
கலக்கி–குலைத்து (அழித்து)
வெம்–தீஷணமான
கானிடை–காட்டிலே
சிறு கால் நெறியே சிறந்த வழியில்
போக்குவிக்கும்–(அவ் வரசர்களை) ஓட்டுகின்ற
செல்வன்–திருமால் (எழுந்தருளியிருக்கிற)
பொன் மலை–சிறந்த மலையை யுடையவன்
அறுகால்–ஆறு கால்களை யுடைய
வரி வண்டுகள்–அழகிய வண்டுகளானவை
ஆயிரம் நாமம் சொல்லி–(எம்பெருமானுடைய) ஸஹஸ்ர நாமங்களை ஆளாத்தி வைத்து
பாடும்? பாடுமிடமான
தென் திருமாலிருஞ்சோலை–

குறுகாத மன்னரை
திருமலையைக் கிட்டாத ராஜாக்களை

கூடு கலக்கி
இருப்பிடத்தைக் குலைத்து
இருப்பிடம் என்ற போதே
ராஜ அர்ஹமாய் இருந்தது என்று இறே நல்ல இடங்களை சொல்லுவது

வெம் கானிடை
நிலவனுக்கும் சஞ்சரிக்க ஒண்ணாத வழி

சிறு கால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
கெட்டப் போகும் போது பின் தொடர்கிறார்கள் என்னும் அச்சத்தால் போக்குவிக்கும்
உய்மின் திறை கொணர்ந்து என்று உலகு ஆண்டவர் (திருவாய் -4-1-2 )-இத்யாதி –

செல்வன் பொன் மலை
அதுக்கு அடி ஸ்ரீ யபதி யாகையாலே
அசுரர்க்கு தீங்கு இழைக்கும் திருமால்

பொன் மலை
ஸ்ரீ யபதி வர்த்திக்கிற ஸ்லாக்கியமான திரு மலை

அறு கால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி
குறுகாத ராஜாக்கள் த்யாஜ்யர் என்னும் இடமும்
திருமலை யோட்டை பந்தத்தாலே திர்யக்கு உபாதேயம் என்னும் இடத்தையும்
சேரச் சொல்லிற்று

அறு கால் வரி வண்டுகள்
அவற்றிலும் தேஹ குணம் இறே இவருக்கு உத்தேச்யம்

ஆயிர நாமம் சொல்லி சிறு காலை பாடும்
ஸத்வ உத்தர காலத்திலேயே எழுந்து இருந்து திருப்பள்ளி எழுச்சி பாடா நிற்கும்
காலை எழுந்து இருந்து கரிய குருவிக் கணங்கள் –சோலை மலைப்பெருமான் (நாச்சியார் )-என்னக் கடவது இறே

தென் திரு மால் இரும் சோலையே
அழகை யுடைத்தான திருமலை –

———–

குறுகாத மன்னர் அளவில் அழகர் தம்மால் வரும் நிக்ரஹம்
ஏறு திருவுடையான் -என்றும்
திரு விளையாடு திண் தோள் –என்னச் செய்தேயும்
அவுணர் இடைப் புக்கு
என்றானும் இரக்கம் இலாதவன்(பெரிய திருமொழி 2-4 )- என்கிறபடியே
வரும் என்று சொல்லிற்று கீழ்

இதில் அம் மலையில் வர்த்திக்கிற ஸ்ரீ வைஷ்ணவ பூதங்கள்
சென்று சென்று தேவர் (திருச்சந்த )
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு -என்கிறபடியே
குறுகாத அளவு அன்றிக்கே
அம் மலையில் வர்த்திக்கச் செய்தே
தாழ்ச்சியை மதித்துத் தீ வினை பெருக்கி
ஆய மாயவன் கோயில் வலம் செய்யாதே
வலம் செய்து வழக்கு என நினையாமல்
சூதும் களவும் செய்து
அவன் தந்த கரணங்களைக் கொண்டு வழி கெட நடந்து
அந்வய விநாஸ ரஹிதர் ஆனவர்களை
அந்வய விநாஸம் உண்டாக்குவதாக பாப கரணங்களைக் குலைத்து
அழகரை யுகப்பிக்கும் என்னும் பிரகார விசேஷங்களை சொல்லுகிறது இப் பாட்டால் –

சிந்தப் புடைத்து செங் குருதி கொண்டு பூதங்கள்
அந்திப் பலி கொடுத்து ஆவத் தனம் செய் அப்பன் மலை
இந்திர கோபங்கள் எம்பெருமான் கனி வாய் ஒப்பான்
சிந்தும் புறவின் தென் திரு மால் இரும் சோலையே – 4-2- 9-

பதவுரை

பூதங்கள்–ஸ்ரீ வைஷ்ணவ பூதங்களானவை
(தேக அபாஷணமே பண்ணிக் கொண்டு திரியும் நாஸ்திரிகர்களைக் கண்டால், அவர்களை)
சிந்தப் புடைத்து–(அவயங்கள்) சிதறும்படி அடித்துக் கொன்று
செம் குருதி கொண்டு–(அதனால் அவர்களுடலினின்று புறப்படுகிற) சிவந்த ரத்தத்தைக் கொண்டு
அந்தி–அந்திப் பொழுதிலே
பலி கொடுத்து–(எம்பெருமானுக்கு) ஆராதந ரூபமாக ஸமர்ப்பித்து
ஆபத்து தனம் செய்–ஆபத் காலத்துக்குத் துணையாமிடமென்று ஸேவிக்குமிடமும்
அப்பன்–ஸ்வாமி (எழுந்தருளியிருக்க மிடமுமான)
மலை–மலையாவது,
இந்திர கோபங்கள்–பட்டுப் பூச்சிகளானவை
எம் பெருமான்–அனைவர்க்கும் ஸ்வாமியான அழகருடைய
மூலவருக்கு பரம ஸ்வாமி என்றே திரு நாமம்
கனி வாய்–(கொவ்வைக்) கனி போன்ற திரு வதரத்திற்கு
ஒப்பான்–போலியாக
சிந்தும்–(கண்ட விடமெங்கும்) சிதறிப் பறக்கப் பெற்ற
புறவில்–தாழ்வரையை யுடைய
தென் திருமாலிருஞ்சோலை.–

சிந்தப் புடைத்து செங்குருதி கொண்டு பூதங்கள் அந்திப் பலி கொடுத்து ஆவத் தனம் செய் அப்பன் மலை
அவர்கள் தங்களுக்கு அடைத்த காலங்களிலே சஞ்சரிக்கும் போது
இவர்கள் எதிர் பட்டால் மூக்கும் வாயும் ரத்தம் கக்கும் படி சாக அடித்து
அந்தச் செங் குருதியோடே சவத்தைக் கொண்டு
கண்டா கரணனைப் போலே
இத்தைக் கொண்டு அருள வேணும் என்று பிரார்த்தித்துக் கொடுத்து

அந்த மலையில் வர்த்திக்கிற ஸ்ரீ வைஷ்ணவ பூதங்கள் ஆகையாலே
தம் தனக்கு அடைத்த சந்த்யா காலத்திலேயே கொடுத்து
பின்னையும் ஆளும் செய்வேன் -என்பாரைப் போலே
பின்னையும் செய்யும் என்கிறார் –

அன்றிக்கே
தம் தாமுடைய ஆபத்துக்கு அழியாத தனமாக
அழகர் தம்மையே நினைத்துக் கொடுக்கும் என்னவுமாம்
அப்போது இந்தக் கொடை
சாதனத்தில் அந்வயிக்கும் என்று தோற்றும் –

இவற்றுக்கு இப்படி அயோக்யரைத் தேடிக் கொல்லக் கிடைக்குமோ என்னில்
தங்களுக்கு அடைத்த காலத்தில் யோக்யரையும் பாராது யோக்ய காலம் பார்த்து புறப்படார்கள்
புறப்பட்டார்கள் ஆகில் அவன் தானே அகலும்
அந்தியம் போது அங்கு நில் என்றால் சங்கல்ப பாரதந்தர்யம் வரப் பண்ணுமே
படை வீடு காவலில் ஒடுக்கம் உறச் செறிந்தால் காவலாளர் எதிர்பட்டாரைக் கொல்லுகையும்
ராஜாக்களுக்குப் பிரியம் இறே
பகவத் கார்ய நிமித்தமாக பக்தி பாரவஸ்யத்தாலே காலம் பாராமல் புறப்பட்டார்கள் ஆகில்
இவர்களுக்குத் தோற்றாதே நிற்றல்
தோற்றம் பொறுப்பர்கள் ஆகில் பரீக்ஷித்து அநு வர்த்தித்தல் செய்யும் அத்தனை இறே

அப்பன் மலை
அவயவ பிரதானம் செய்தவன் நித்ய வாஸம் செய்கிற மலை

இந்திர கோபங்கள் எம்பெருமான் கனி வாய் ஒப்பான் சிந்தும் புறவின் தென் திரு மால் இரும் சோலையே
அம்மலை மேல் உண்டான சோலைகள் பூத்து உதிர்ந்தால் போல்
அழகர் திருப் பவளத்துக்கு ஒரு புடை ஒப்பான இந்த்ர கோபங்கள் சிந்தா நிற்குமாய்த்து
இப்படிப்பட்ட சோலைகளாலே சூழப்பட்ட தென் திரு மால் இரும் சோலையே

காலத்தை மதியாமல் புறப்பட்டாருக்கும் பாப கரணங்கள் குலைந்து பிழைக்கலாம் ஆகையால் அதுவே தேசம்
பாப கரணம் பகவத் கார்யமாகத் தம் தாம் காலங்களிலே குலைப்பார்க்கும் ( பூத கணங்களும் ) அதுவே தேசம்
காலம் அறிந்து புறப்படாமல் புறப்பட்டு வர்த்திப்பார்க்கும் ( கைங்கர்ய பரருக்கும் ) அதுவே தேசம்
சிந்தும் புறவிலே விளங்கா நின்ற தென் திரு மால் இரும் சோலையே

———-

எட்டுத் திசையும் எண் நிறந்த பெரும் தேவிமார்
விட்டு விளங்க வீற்று இருந்த விமலன் மலை
பட்டிப் பிடிகள் பகடு உறிஞ்சி சென்று மாலை வாய்த்
தெட்டித் திளைக்கும் தென் திரு மால்  இரும் சோலையே – 4-2 -10-

பதவுரை

எண்ணிறந்த-எண் இறந்த கணக்கிட முடியாதவர்களும்
பெரு–பெருமை பொருந்தியவர்களுமான
தேவிமார்–தேவியானவர்கள்
எட்டு திசையும்–எட்டுத் திக்குகளிலும்
விட்டு விளங்க–மிகவும் பிரகாசிக்க (அவர்கள் நடுவே)
வீற்றிருந்த–பெருமை தோற்ற எழுந்தருளி யிருந்த
விமலன் மலை–நிர்மலான கண்ணபிரான் (எழுந்தருளி யிருக்கிற) மலையானது;
பட்டி–வேண்டினபடி திரியும் மலையான
பிடிகள்–யானைப் பேடைகளானவை
மாலைவாய்–இரவிலே
பகடு–ஆண் யானை மேல்
உரிஞ்சி சென்று–ஸம்லேஷித்துப்போய்
தெட்டித் திளைக்கும்–அந்த ஸம்லேஷித்துப் போய் முற்றிக் களியா நிற்கும்–

எட்டுத் திசையும் எண் நிறந்த பெரும் தேவிமார் விட்டு விளங்க
ஸ்ரீ மத் துவாரகையில் ஒவ்வொரு திக்கில் தேவிமார்களைப் பரி கணிக்க
ஒண்ணாமையாய் இறே இருப்பது

இவர்கள் எல்லாரும் இன்னார் இன்னார் என்னும் ப்ரசித்தியோடே
ஒருவரால் ஒருவருக்கு தேஜஸ்ஸூ என்கிறதை விட்டு
கிருஷ்ணனோடு விளங்க என்னுதல்

இவர்கள் தான் எல்லாரையும் விட்டு என் ஒருத்தியோடும் விளங்கா நின்றான் என்னும் படியாதல்
ஸுபரியுடைய ஸ்திரீகளை பிதா (மாந்தாதா ) அழைத்து தனித்தனியே பர்தா உன்னளவில் எப்படி என்ன
எனக்குப் பிரியமாக வர்த்தித்திப் போரா நின்றான் -என்று எல்லாரும் இப்படி சொன்னார்கள் இறே

கல்லும் கனை கடலும் (பெரிய திருவந்தாதி) என்றும்
ஏ பாவம் – என்றும்
பக்கம் நோக்கு அறியான் -என்றும்

அன்றியே
எண்ணிறந்த எட்டுத் திசையும் -என்கையாலே
பஞ்சஸாத் கோடியில் திக்கு முடியாதே

அன்றியிலே
பதினாறாயிரமாவர் -என்ற பரிகணநை
அளவின்றிக்கே இருக்கை என்னுதல்

அவன் தன்னையும் நாலு இரண்டி பட்டினி கொள்ளும் காலத்தில்
மற்றும் சில ஸ்த்ரீகள் உண்டு என்று
பரிகணிக்க ஒண்ணாதபடி அவனை உகப்பிக்க வல்லவர்கள் என்னுதல்
(ஓன்று என்று விரல் எடுக்க ஒண்ணாது என்னுதல் )

வீற்று இருந்த விமலன் மலை
வேறுபாடு தோன்ற இருந்த விமலன்
ஒருவனுக்கு பகவத் ஸம்ருத்தி உண்டானால் அத்தால் வந்த ஸம்ருத்தி
ஆஸ்ரிதர் எல்லாருக்கும் வேணும் என்று இருந்த போது இறே
தனக்கு ஸ்ரீ வைஷ்ணத்வம் உண்டு என்று அறியலாவது

விமலன்
ஸ்வார்த்த பிரதிபத்தி இல்லாமையால்
விமலத்வமான வேறுபாடு தோன்ற இருந்தவன் என்கிறது
இப்படி இருக்கிறவன் நித்ய வாஸம் செய்கிற திருமலை

பட்டிப் பிடிகள் பகடு உறிஞ்சி
தனக்கு வஸ்தவ்யமான பூமியிலே மேய்ந்து வந்து கிடக்கிற பெண் யானை யானவைகள்
அருகு கிடக்கிற களிற்று யானைகளை உரோசி எழுப்பி
ஸ்பர்சித்து எழுப்பி என்றபடி

சென்று
அதன் இஷ்டத்துக்கு ஈடாக நெஞ்சு பொருந்தி சேர்ந்து

மாலை வாய்த் தெட்டித் திளைக்கும் தென் திரு மால்  இரும் சோலையே
இராக் காலத்திலே பிரணய ரோஷம் தலை எடுத்து
ஊடலும் கூடலுமாய் ஒன்றுக்கு ஓன்று இறாயத்து விளையாடுதல்
தீர்க்க ஸம்ஸ்லேஷம் தான் ஆதல்

தெட்டல் –
வாத்ஸாயயன முதிர்ச்சி போலே இருக்கை –

இத்தால்
ஆச்சார்யரானவன் சிஷ்யன் பக்கலிலே
சம தமாதிகளை யுண்டாக்கி
ஆத்ம குணத்தை விளைத்து
அவனுடைய பிரார்த்தனா அனுரூபமாக அவகாச பிரதானம் பண்ணி
ஸாஸ்த்ரங்களையும் ஒருங்க விட்டு
கைங்கர்யங்களையும் மிகவும் அங்கீ கரிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது –

——–

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலை கட்டுகிறார்-

மருதப் பொழில் அணி மால் இரும் சோலை மலை தன்னை
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 -11-

பதவுரை

மருதம் பொழில்–மருதஞ் சோலைகளை
அணி–அலங்காரமாக வுடைய
மாலிருஞ்சோலை மலை தன்னை–திருமாலிருஞ்சோலை மலையை
கருதி–விரும்பி
உறைகின்ற–(அதில்) எழுந்தருளி யிருக்கின்ற
கார் கடல் வண்ணன்–கருங்கடல் போன்ற நிறத்தை யுடைய
அம்மான் தன்னை–அழகப் பிரானாரை
விரதம் கொண்டு–மங்கள-மங்களா ஸாஸன – விரதமாகக் கொண்டு
ஏத்தும்–துதிக்குமாறும்
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவருமான
விட்டுசித்தன்–பெரியாழ்வார்.
சொல்–அருளிச் செய்த இவற்றை
கருதி–விரும்பி
உரைப்பவர்–ஓதுமவர்கள்
கண்ணன்–கண்ண பிரானுடைய
கழல் இணை–திருவடிகளை
காண்பர்கள்–ஸேவிக்கப் பெறுவார்கள்.–

மருதப் பொழில் அணி மால் இரும் சோலை மலை
கவிழ்ந்து முறிக்க வேண்டாத மரங்கள் ஆகையாலே
தழைத்து நிழல் கொடுக்கும் மருத மரப் பொழிலாலும்
மற்றும் நாநாவான புஷ்ப பல த்ருமங்களாலும்
அலங்க்ருதமான திருமலையை

தன்னை
தன்னுடைய போக்யதையாலே
நங்கள் குன்றம் கை விடான் -என்கிறபடி
அழகர் தம்மை வைத்த கண் வாங்கி நீங்க ஒட்டாது என்னும் இடம் தோற்றுகிறது

கருதி உறைகின்ற
நித்ய விபூதி இருப்பில் விருப்பத்திலும் காட்டில் மிகவும் விரும்பிக் கருதினது ஆகையாலே
நித்ய வாஸம் டேயும் என்று தோற்றுகிறது

கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை
கரும் கடல் வண்ணன் என்னுதல்
மேகம் போலேயும் ஸமுத்ரம் போலேயும் இருக்கிற திரு நிறத்தை யுடையவன் என்னுதல்

அம்மான் தன்னை
எனக்கு நிருபாதிக சேஷி யானவனை

விரதம் கொண்டு ஏத்தும்
ஸ்வரூப அனுரூபமான மங்களா ஸாஸனம் இறே இவருக்கு விரதம் ஆவது
எல்லாரும் யாதானும் பற்றி நீங்கும் விரதமும்
அவனைப் பற்றி அந்த விரதத்தை விடுத்திக் கொள்ளுகையும் இன்றிக்கே
தேய்த்துக் கிடக்க நான் ஓட்டேன் என்று
அவனுடைய ப்ரதிஜ்ஜா அனுரூப விரதத்தைக் குலைக்கும் படி இறே
இவருடைய மங்களா ஸாஸன ரூபமான விரதம் தான் இருப்பது –

வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே
திரு மாளிகைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்தத்தை சா அபிப்ராயமாக
புத்தி பண்ணி அநுஸந்திக்குமவர்கள்
அத்யந்தம் ஸூலபனான கிருஷ்ணன் திருவடிகளை
சேவடி செவ்வி திருக்காப்பு -என்று காணப் பெறுவர்கள்
இது இறே வேதப் பயன் கொள்ள வல்ல பத்தி யாவது –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —4-1–கதிர் ஆயிரம் இரவி–

July 26, 2021

பிரவேசம்
ஆச்சார்யனானவன்
பகவத் வாக்யங்களாலும் (சரம ஸ்லோகம் )
மந்த்ர உபதேசத்தாலும் (ரஹஸ்ய த்ரயங்கள் )
ஸ்வரூப ஞான பர்யந்தமாக ருசி உத் பாதநம் செய்து
சேதனனை உகப்பித்து
(திருவடியும் இரண்டையும் செய்தார் அன்றோ –
பெருமாள் சொன்ன அடையாளங்களைச் சொல்லியும் கணை ஆழியும் கொடுத்து )

தத் த்வாரா ஈஸ்வரனையும் உகப்பித்த பிரகாரத்தை
திருவடி வ்யாஜத்தாலே
இரண்டு தலையையும் தனித்தனியே
பஸ்ய தேவி யங்குளீ யகம் -என்றும்
த்ருஷ்டா ஸீதா –என்றும்
உகப்பித்த பிரகாரத்தை அருளிச் செய்தாராய் நின்றார் கீழில் திரு மொழியில் (3-10 )

(திருமந்த்ரார்த்தம் மனசில் பட பட
த்வரை மிக்கு த்வயார்த்தம் அறிய அபி நிவேசம் ஏற்படுமே
இது தான் -தனித் தனியாக 3-10-
இதில் சேர்ந்த -4-1
பதிகம் ஆரம்பமே பட்டாபிஷேகம் இதில் )

இதில்
அங்கன் தனித் தனியே காணாமல்
இருவரையும் சேரக் காண வேணும் என்று தாம் விரும்பின பிரகாரத்தைத்
தமக்கு ஸ்நேஹிகளாய்
பகவத் வாக்யங்களாலும்
ஆச்சார்ய முகத்தாலும்
உபாய உபேயங்கள் அவனே என்று அறுதியிட்ட சேதனர்

(நாடுதிரேல் என்பாரும் கண்டார் உளர் என்பாரும் ஸ்நேஹிகள் தானே
தேடுதலும் ஸ்ரேஷ்டம்
கண்டவர் காட்டுவதும் அதே போல் தான் ஸ்ரேஷிடம் )

பிரதம பதத்தில் அர்த்த பலத்தாலே காண்கிற அளவே யன்றி
ஏகாயந அநீச தர்சனம் போல் அன்றிக்கே
ஸாப்தமாக மிதுன விஷயத்தைக் காணலாமோ என்று அபேக்ஷிக்க
(த்வயத்தில் )உத்தர பூர்வ வாக்யங்களை தர்சிப்பிக்க
தர்சித்துத் தெளிந்து இருக்கச் செய்தேயும்
அவ்வளவிலும் பர்யவசியாமல் அபி நிவேசம் மிக்கு

(பிரணவம் சம்பந்தம் நமஸ் உபாயம் நாராயணாயா உபேயம்
பிரதமம்- ஓம் -மிதுனம் காண ஆசை இருப்பவருக்கு அர்த்த பலத்தால் தான் தெரியும்
திரு மார்பில் விட்டு பிரிந்தால் தானே அக்ஷரம் விட்டு பிரிவது
சேனாபதி மிஸ்ரர் வாக்கியம்
ரஷிக்கும் பொழுது பிராட்டி வேணும் -எனவே சேர்த்தே என்று அர்த்தம் கொண்டே தர்சிக்கலாம் –
சப்தம் இல்லையே )

(பூர்வ உத்தர என்னாமல் உத்தர பூர்வ என்றது
உபேயம் தானே பிரதானம்
கருமுகை மாலையை சும்மாடு ஆக்குவது போல் உபேயமான அவனை உபாயமாக்கி
அவனை அடசிந்து நித்தியமாக அனுபவித்து
அனுபவ ஜனித்த ப்ரீதி கார்ய பகைங்கர்யம் செய்வோமே
ஆகவே முதலும் உத்தர வாக்கியம் காட்டி அருளுகிறார் )

மணக்கால் நம்பிகளை பெரிய முதலியார் இவ் விஷயத்தை ப்ரா மாணிகருக்கும்
ஸாஷாத் கரிக்கலாமோ -என்று கேட்டால் போலே
தர்சிப்பித்த ஆச்சார்யனைக் கேட்க

அவனும்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்பக் கண்ட சதிர் –பரத்வத்திலேயும் கண்டேன் -என்றும்

மலையால் அணை செய்து இலங்கை மலங்க ஓர் வாளி தொட்டானை நாங்கை நன்னடுவுள் செம் பொன் கோயிலினுள்ளே
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே -என்றும்

சந்தணி மென் முலை மலராள் தரணி மங்கை தாம் இருவர் அடி வருடும் தன்மையானை–
திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே –2-10-2- என்றும்

நீயும் திரு மகளும் நின்றாயால் (பொய்கையார் )-என்றும்

பரத்வ விபவங்களிலும் கட்கண்ணால் காண்கிற அளவு அன்றிக்கே
உட் கண் உணரும் அர்ச்சாவதாரங்களிலும்
மங்களா ஸாஸனமாக கண்டார் உளர் –
என்றதால் தாமும் அத்யந்த ப்ரீதராய் –

திருவாய்ப்பாடியிலே பெண்கள் நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று உந்தி பறந்து
குண அனுபவம் பண்ணினவர்கள் (நாடுதிரேல் கோஷ்டி இவர்கள் )
மற்றும் ஜன்மாந்தர ஸம்ஸ்கார உபாசன சித்தரானவர்கள்
ஒருவருக்கு ஒருவர் அபேக்ஷை உண்டாகில் கண்டார் உளர் என்னும் அந்யாப தேசத்தாலே
மநோ ரதித்து அருளிச் செய்து இனியராகிறார் –

———–

இவருடைய மநோ ரதம் தான் இருவரையும் சேர்த்து திரு அபிஷேகம்
திவ்ய ஆயுத ஆழ்வார்களோடே கிருஷ்ண அவதாரத்தையும் காண வேணும் என்றும்
மகர ஸிம்ஹ வராஹ அவதாரங்களிலும் இப்படிக் காண வேணும் என்றும்
தாம் விரும்பின பிரகாரம் தமக்கு ஸ்நேஹிகளாய் இருப்பார் அளவிலும் சென்றது கண்டு
ப்ரீதராய்

கீழ்ச் சொன்ன அந்யாபதேசத்தாலே
அவன் திரு மார்விலும்
பார்ஸ்வத்திலும்
கண்டார்கள் ஒரு தஸா விசேஷங்களிலே (விசேஷங்களே) –
என்று அனுசந்தித்து இனியராகிறார்

இப் பாட்டால்
பெருமாள் தாமும் பிராட்டியும் சேர எழுந்து அருளித் திரு அபிஷேகம் செய்து அருளி
திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வுக்கு மங்களா ஸாஸனம் செய்கிறார் –

கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த  நீள் முடியன் 
எதிரில் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் 
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்   
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டார் உளர் – 4-1- 1-

பதவுரை

கதிர் ஆயிரம் இரவி-ஆயிரம் கதிர் -ஆயிரம் இரவி
கதிர்–(எண்ணிறந்த) கிரணங்களை யுடைய
ஆயிரம் இரவி–ஆயிரம் ஆதித்யர்கள்
எறித்தால் ஒத்த–ஜ்வலித்தாற் போல் (மிகவும் பளபளவா நின்றுள்ள)
நீள் முடியன்–நீண்ட திருவபிஷேகத்தை உடையவனுமான
இராமனை இருக்கும் இடம்-இராமன் இருக்கும் இடத்தை
இராமன்–இராமபிரான்
இருக்கும் இடம்–எழுந்தருளியிருக்குமிடத்தை
நாடுதிரேல்–தேடுகிறீர்களாகில்
(அவ் விடத்தை விட்டுச் செல்லுகிறேன்;)
அதிரும்–(கல கல் என்று) ஒலி செய்யா நின்றுள்ள
கழல்–வீரக் கழலையும்
பொரு தோள்–போர் செய்யப் பதைக்கிற தோள்களை யுமுடைய
இரணியன்–ஹிரண்யாஸுரனுடைய
ஆகம்–மார்பை
அரி ஆய்–நரஸிம்ஹ ருபியாய்க் கொண்டு
பிளந்து–கீண்டு
உதிரம் அளைந்து–(அதனாலுண்டான) ரத்தத்தை அளைந்த
கையோடு–கைகளோடு கூடி
இருந்தானை–(சீற்றந்தோற்ற) எழுந்தருளி யிருந்த நிலைமையில் (அவனை)
உள்ள ஆ உண்டார் உளர்–உள்ள அவனை ஸேவித்தவர்கள் இருக்கின்றனர்.

(உள்ள ஆ-உள்ள படி பிரகாரம் – யதார்த்த தத்வார்த்தம் –
யோ வேத்தி -தத்வ தகா கீதை -இங்கு உள்ள வா
இங்கு ராமன் நரசிம்ஹன் ஏக தர்மி அறிந்ததே உள்ள ஆ )

கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த  நீள் முடியன் 
ஸஹஸ்ர கிரணராய் இருக்கும் அநேகம் பால ஆதித்யர்களை உருக்கி வார்த்த ப்ரகாசமோ
என்று அனுசந்தித்து
அதுவும் போராமையாலே
நீள் முடி-என்கிறார் –

எதிரில் பெருமை இராமனை  
(எதிரில்- எதிரி இல்லாத– எதிர் இல்லாத ஒப்பு இல்லாத )
சத்ருக்கள் இல்லாத அளவே அன்றிக்கே
சா தர்ம்ய த்ருஷ்டாந்தமும்
ஏக தேச த்ருஷ்டாந்தமும்
வை தர்ம்ய த்ருஷ்டாந்தமும் –இல்லாதவனாய்
(இதன் படி –இதில் ஒரு அம்ச படி –இதன் படி இல்லாதவன் மூன்றுமே சொல்ல முடியாதே )

ஸமஸ்த கல்யாண குணங்களுக்கும் ஆஸ்ரய பூதனாய் இருக்கையாலே
சத்ரு மித்ர உதாசீநாத்மகமாய்
உட் காச்சலும் -புறம் பொசிவும் -எதிரூன்றலும்
ப்ரஹ்ம லோக பர்யந்தமாகக் காணலாய் இறே இருப்பது
அப்படி இருக்கிறவர்கள் எல்லாரும் ஒருவர் இருவர் ஒழிய நெஞ்சாலும் ரமிக்கும் படியாய் இறே
இராமன் என்கிற திரு நாமம் இருப்பது
ஒருவர் இருவரைப் பொறுத்த வூரிலே இருந்த தோஷமே இறே திரு அயோத்யைக்கு உள்ளது
அது தானும் ஸ்ரீ பரதாழ்வான் வந்து போய் வரும் அளவும் இறே உள்ளது

பின்னை ராவணாதிகளும் இல்லையோ என்னில்
தனுஷ்யாதி சாஸ்த்ரவான் -கையில் பிடித்த வில்லால் ரமிப்பித்தார் –
சத்யேந லோகாந் -அயோத்யா -12-27-எல்லாரையும் ஜெயத்தோடே ரமிப்பிக்க வேணும்
எல்லாத்துக்கும் அடி ஜிதேந்த்ரியத்வமும் ஒவ் தார்யமும் இறே
தீநாந்த நேந –ஸ்வ ஆஸ்ரயமான இந்த்ரியங்களும் ஒவ்வொரு தசைகளிலே
ஒவ்தார்ய அந்வேஷிகளாய் (வள்ளன்மையை எதிர்பார்த்து )இறே இருப்பது

பெருமாள் ஸுர்யத்துக்கு ராவணன் எதிர் போரான் என்கிற குறை தீர
ஹிரண்யனை ஓர் எதிருமாக்கி
அவனை ஜெயித்ததை ஸுர்யமாக்கி
தர்மி ஐக்யத்தாலே ஓர் எதிரியையும் பெற்று ஜெயித்தத்தையும் தம் பேறாக அனுசந்திக்கிறார்
(இந்த ராமன் குறை தீர்ந்ததும் இங்கு- கண்டார் உளர் என்று இப்படி முடிச்சு போடுகிறார் )

இருக்கும் இடம் நாடுதிரேல்
ஆஸ்ரித விரோதிகள் இருக்கும் இடம் சென்று அழியச் செய்தாலும்
மறுவலிடாமல் பரிஹாரம் செய்யும் அளவும்
அதுக்குத் தகுதியாகக் கொண்ட வேஷத்தோடே அங்கே இறே இருப்பது
அவ்விடம் விரும்பித் தேடு கிறி கோளாகில்

அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய் உதிரம் அளைந்த கையோடு இருந்தானை
ஷீராப்தியில் பர ஸம்ருத்ய அஸஹத்வம் குறு மிழிக் கொள்ளும்படியான
ப்ரஸன்ன வேஷம் குலைந்து வெளிப்பட்டு
லோகங்கள் எல்லாம் நடுங்கும்படி
திண் கழல் கால் -என்னும்படி
வீரக் கழல் இட்ட அதிர்த்தியும்
யுத்த கண்டூதியும் சமியாத தோள்களுமாய்
ஆஸ்ரித வர்க்கங்களை
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் அளவாகவும் நலிகையாலே இறே
அதுக்குத் தகுதியான நரஸிம்ஹமுமாய்
ஹிரண்யனுடைய வர பல புஜ பலங்களாலே ஊட்டியாக வளர்த்த சரீரத்தை

ஒரு ஸ்வர்ண கிரியை ஒரு ரஜத கிரி அநாயாசேந பிளந்தால் போலே பிளந்து
குட்லைப் பிடுங்கிக் குட்டமிட்டுக் கிளம்புகிற ருதிரத்தை அளைந்த கையோடே
மறுவலிட்டு ஆஸ்ரிதரை இன்னம் நலியுமோ என்று
ஒரு அநு கூலனை ஸ்தாபிக்கும் தனையும் இருந்தானை -என்னுதல்

சீற்றத்துக்கு எதிர் நிற்க மாட்டாமல் ப்ரஹ்ம ஈஸா நாதிகள் முதலான வானோர்
நெஞ்சு கலங்கிச் சிதறியோடி மீண்டு
நாத்தழும்ப ஏத்தும் படி அல்லி மாதர் புல்க லஷ்மீ நரஸிம்ஹம் என்னும் படி
சீற்றம் தணிந்து இருந்தவனை என்னுதல்

(நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்
நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர் வாய்ச்
சில்லி சில் லென்ற சொல் அறாத சிங்க வேள் குன்றமே—1-7-9-)

சீற்றம் தணிந்தாலும் உதிரம் அளைந்த கையோடே இறே இருப்பது –
இவளும் வீர மஹிஷி யாகையாலே
பர்தாரம்ப ரிஷஸ் வஜே –ஆரண்ய-30-37 -என்றால் போலே
வெருவின பூங்கோதை யாள் விரோதி போன பின்பு
துணுக்குத் தவிர்ந்து
ரத்த வெடியோடே புல்கும் இறே

உள்ளவா கண்டார் உளர்
ராமனை உள்ளவா கண்டார் உளர்
ராஜ குலத்திலே பிறந்த வாஸனையாலே ஆஸ்ரித விரோதி நிரசன அர்த்தமாக
அடுத்த வேஷம் என்று நிரசித்தான் என்று
உள்ளவர் கண்டார் உளர்
இவளோடே கூடினால் இறே வஸ்துவை உள்ளபடி காணலாவது
இது தானே இறே தர்மி ஐக்யமும் –

————

அவனை ஈஸ்வரன் என்று அறுதி இட்டால்
ஸ்ரீ பஞ்சாயுதங்களோடே காண வேணும் என்கிறார் –

நாந்தகம் சங்கு தண்டு நாண்  ஒலி சார்ங்கம்  திருச் சக்கரம் 
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் 
காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் ஜனக ராஜன் தன் வேள்வியில் கண்டார் உளர் -4- 1-2 –

பதவுரை

நாந்தகம்–ஸ்ரீ நந்தகம் என்னும் வாளையும்
சங்கு–ஸ்ரீபாஞ்ச ஐன்யத்தையும்
தண்டு–ஸ்ரீ கௌமோதகி என்னும் கதையையும்
நாண் ஒலி–நாண் கோஷத்தை யுடைய
சார்ங்கம்–ஸ்ரீசார்ங்க தநுஸ்ஸையும்
திரு சக்கரம்–ஸ்ரீ திருவாழி யாழ்வானையும்
ஏந்து பெருமை இராமன்–(திருக்கைகளில்) ஏந்தும் படியான பெருமையை யுடைய ஸ்ரீ இராம பிரான்
இருக்கும் இடம் நாடுதிரேல்–
காந்தன் முகிழ் விரல் சீதைக்கு ஆகி-செங்காந்தளம் பூ போன்ற விரல்களை யுடைய ஸ்ரீ பிராட்டிக்காக
வேந்தர் தலைவன்–ராஜாதி ராஜனான
சனகராசன் தன்–ஸ்ரீ ஜனக சக்கரவர்த்தியினுடைய
வேள்வியில்–யஜ்ஞ வாடத்திலே
சென்று–எழுந்தருளி
கடு சிலை–வலிய வில்லை
இறுக்க கண்டார் உளர்–முறிக்கக் கண்டவர்கள் இருக்கின்றனர்.-

நாந்தகம் சங்கு தண்டு நாண்  ஒலி சார்ங்கம்  திருச் சக்கரம் 
ஸ்ரீ பஞ்சாயுதங்களையும் சொல்லும் போது
இன்னது முதலாக எண்ண வேணும் என்கிற நிர்பந்தம் இல்லையே
எல்லாரும் ஏக மநாக்களாய் இருக்கையாலே ஒன்றைச் சொல்லும் போதே
எல்லாவற்றையும் சொல்லிற்றாம் இறே

சாரங்கம் என்னும் வில்லாண்டான் (பெரியாழ்வார் )-என்கையாலும்
சார்ங்கம் வளைய –நானும் அவனும் அறிதும் (நாச்சியார் )-என்கையாலும்
ஆழியொடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -கலியன் -என்பது
சேரச் சொல்லுவது ஆகையாலே
சார்ங்க பாணி -என்ற போதே எல்லாம் சொல்லலாம் இறே –

(ராமன் என்றாலே சார்ங்க பாணி தானே
இவை உண்டா என்ற
சங்கா நிவ்ருத்திக்கு இந்த வியாக்யானம்
இதே போல் -கதா தரன் -கயா ஸ்ரார்த்தம் கதா தர பூத்வா சொன்னாலும் பஞ்சாயுத தரன் தான்
கலப்பை மழு சொன்னாலும் இப்படியே )

ஏந்து பெருமை இராமனை
ஐந்தாலும் கொள்ளும் கார்யம் ஒன்றைக் கொண்டே கொள்ளுமாகையாலே
மற்றவை எல்லாம் அழகுக்கு ஏந்தினவையாய் இறே உள்ளது

அழகு தனக்கும் இவை மிகையாய்
ஆபரணஸ்ய யாபரணம் -அயோத்யா -3-27-
(ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் அன்றோ)
பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணாம் –
என்னும் படி இறே அவன் பெருமை தான் இருப்பது

இராமனை
எல்லாரையும்
எல்லா பிரகாரத்தாலும் ரமிப்பிக்க வல்லவனை

இருக்கும் இடம் நாடுதிரேல் 
இந்த சவுந்தர்யாதிகளும்
ஸுர்யாதிகளும்
அவன் இருக்கும் இடத்திலே காண வேணும் என்று தேடுகிறி கோளாகில்

காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க
செங்காந்தள் முகிழ் போல் திரு விரல் -என்கையாலே
இவளுடைய திவ்ய அவயவங்களுக்கு எல்லாம் உப லக்ஷணமாய்
பருவத்தைக் காட்டுகையாலே அவனை அழைத்தமை காட்டுகிறது
(துல்ய சீல வயோ வ்ருத்தாம் –இத்யாதி )

சீதை -என்கையாலே
குடிப் பிறப்பு காட்டுகிறது
(கர்ப்ப வாஸம் இல்லாத ஏற்றம் )

ஆகிச் சென்று கடும் சிலை இறுத்து -என்கையாலே
கொடு வந்த விசுவாமித்ரனை வியாஜ்யம் என்னலாம் இறே

வேந்தர் தலைவன் ஜனக ராஜன் தன் வேள்வியில் கண்டார் உளர்
ராஜ தர்ம ஸ்ரேஷ்டன் ஆகையாலே
ராஜாக்களுக்கு எல்லாம் கர்த்தாவுமாய்
வம்ஸ வானுமாயுமாய் இருக்கிற
ஜனக ராஜனுடைய யஜ்ஞ சமீபத்திலே சென்று இருக்கக் கண்டார் உளர் என்னுதல்

(சீரத்வஜன் இவர் இயல் பெயர் நிமி வம்சம் -ஆறு ஜனகர்கள் உண்டே
தேகம் அற்ற விதேஹம் வைதேகி )

அன்றியே
இவர் ஆசைப்பட்டால் போலே
ஸூல்கமான சிலையை முறித்து
திருத் தமப்பனாரையும் திருத் தாயாரையும் அழைத்து
மற்றும் வேண்டுவாரையும் கூட்டிக் கொண்டு
அந்த ஸமீபத்திலே

இயம் ஸீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ-என்று
வடிவு அழகு இது -குடிப் பிறப்பு இது -ஸஹ தர்ம சரியாக அங்கீ கரியும் என்று காட்டிக் கொடுத்து
சடங்குகளையும் தலைக் கட்டின பின்பு

பெருமாளையும் நாய்ச்சியாரையும் சேர வைத்து
தம்முடைய ஆசையால் ஒப்புப் பார்த்து
கண் அழகு விஞ்சல் (அஸி தேக்ஷிணா அன்றோ ) என்று இருக்கையாலே இறே
வேள்வியில் கண்டார் உளர் என்கிறது

இதில் இராமனை நாடுதிரேல் –வேள்வியில் கண்டார் உளர்- என்கிறதில் வேறுபாடு தோன்றாதாப் போலே இறே
முதல் பாசுரத்தில் –
இராமனை நாடுதிரேல் –உதிரம் அளைந்த கையோடு இருந்தானைக் கண்டார் உளர் என்றதும் –

————–

கிருஷ்ண அவதாரத்தோடு ராம அவதாரத்தைச் சேர்த்து அனுபவிக்கிறார் –

கொலை யானை கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருது அழியச் 
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் 
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப 
அலையார் கடல் கரை வீற்று இருந்தானை அங்குத்தை கண்டார் உளர் -4- 1-3 –

பதவுரை

கொலை யானை–கொலை செய்வதையே இயல்பாக வுடைய (குவலய பீடமென்னும் யானையினுடைய
கொம்பு–தந்தங்களை
பறித்து–பறித்துக் கொண்டவனும்,
கூடலர்–(ஜந ஸ்தாதத்திலுள்ள ராக்ஷஸர்களாகிய) சத்துருக்களுடைய
சேனை–சேனையானது
அழிய–அழியும்படி
பொருது–போர் செய்தவனும்,
சிலையால்–வில்லாலே
மராமரம்–ஸப்த ஸால வ்ருக்ஷங்களை
மெய்த–எய்தவனுமான
தேவனை–எம்பிரானை
சிக்கன நாடுதிரேல்–த்ருடாத்யவஸாயத்தோடு தேடுகிறீர்களாகில்,
(அவனிருக்குமிடஞ் சொல்லுகிறேன்;)
குரங்கு இனம்–வாநர ஸேனையானது
தடவரை–பெரிய மலைகளை
தலையால்–(தமது) தலைகளினால்
தாங்கிக் கொண்டு சென்று–சுமந்து கொண்டு போய்
அடைப்ப–கடலின் நடுவே அணையாக) அடைக்க
அலை ஆர் கடல் கரை–அலை யெறிகிற கடற்கரையிலே
வீற்றிருந்தானை–எழுந்தருளி யிருந்த இராம பிரானை
அங்குத்தை–அந்த ஸந்நிவேசத்தில் கண்டார் உளர்-

கொலை யானை கொம்பு பறித்துக்
கொலையில் கடிதான குவலயாபீடத்தின் கொம்பை அநாயாசேந பிடுங்கி

கூடலர் சேனை பொருது அழியச்  சிலையால் மரா மரம் எய்த
ராவண முதலான ராக்ஷஸ சேனை எல்லாம் யுத்தத்தில் முடியும் படியாக திரு உள்ளத்திலே கோலி இறே
மஹா ராஜருடைய சங்கா நிவ்ருத்தி அர்த்தமாகச் சிலையால் மரா மரம் எய்தது –

தேவனைச்
இப்படிப் பட்ட த்யோதமாநாதி குண விசேஷங்களை யுடையவனை
(ஒளி கொண்ட குண விசேஷங்கள் )

சிக்கென நாடுதிரேல் 
அது ஒரு வ்யக்தி இது ஒரு வ்யக்தி என்று பிரித்துப் பிரதிபத்தி பண்ணாதே
தர்மி ஒன்றே என்று அத்யவசித்துக் காணும் அளவும்
சாபம் ஆநய -என்னாதே
அவன் இருந்த இடம் தேடு கிறி கோளாகில்

(திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமின் சீக்கிரமாக –
காலம் கழித்த இடம் உண்டோ என்ன
சமுத்திர ராஜன்
வில்லைக் கொண்டு வா அம்பு கொண்டு வா சொல்ல வைத்தான் )

தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப 
ஸ்ரீ வானர வீரர்கள் இடமுடைத்தான பர்வதங்களை பெருமாள் எழுந்து அருளும் போது
இந்த மலையின் மேலே திருவடிகள் படும் படி மேல் எழ வைத்து அடைப்பதாகத்
தம் தம்முடைய உத்தம அங்கங்களாலே தரித்துக் கொண்டு வந்து அடைப்ப

அலையார் கடல் கரை வீற்று இருந்தானை அங்குத்தை கண்டார் உளர்
இத்தை நாம் காலாலே மிதிப்போமாகில் இவை சாப உப ஹராமான கற்களாய்
ஸ்த்ரீ ரூபமாய் அடை படாதபடி எழுந்து இருக்குமாகில்
சுமந்து வந்து அடைத்தவர்களுக்கு அஸஹ்யமாம் என்று கரையிலே இருந்தான் என்னுதல்

அடைக்கிற முதலிகளுக்குப் பிரியமாக மலை பொகடக் கிளம்பின அலை நீர் தெறிக்கும் படி
ஆஸன்னமாக (ஸமீபமாக ) அரி குலம் பணி கொண்டு இருந்தான் என்னுதல்

இப்படி குரங்குகள் மலையை நூக்கா நிற்க அவற்றைப் பார்த்து
என் தான் முதலி களுக்கு இத்தனை மெத்தன
என் தான் பெருமாளுக்குப் பகல் அமுது அக் கரையிலேயாய் இருக்கும்
நீங்கள் இத்தைக் கல்லும் கறடுமாக்கி அத்யந்தம் மிருதுவான
ஸ்ரீ பாதங்கள் உறுத்தும் படி பண்ணாதே வாங்கி நில்லுங்கோள்
நாங்கள் குளித்துப் புரண்டு உடம்பில் தொங்கின நொய் மணல் கொண்டு
உங்களுக்கும் பெருமாளுக்கும் வழி யாக்கி தருகிறோம் என்ற
(பகவத் பாகவத கைங்கர்யம் செய்யப் பெற்றனவே )
அணில்கள் அத்யாவசாயத்தில் சலியாமையைக் கண்டு
அத்யந்தம் ப்ரீதராய் இவ் வாச்சர்யத்தைக் கண்டு
வேறுபாடு தோன்ற இருந்தவனை என்னுதல்

அங்குத்தை கண்டார் உளர்
வ்யாமோகத்தோடே ஆசையுடன் கண்டார் உளர்

சிலையால் மரா மரம் எய்த இடத்தில் கண்டார் உளர் என்று விபக்தியை மாறாடிச் சொல்லுதல்
கூடலர் சேனை பொருதழிய சங்கா நிவ்ருத்தி பிறப்பித்து அங்குத்தை மரா மரம் சிலையால் எய்த
தேவனைச் சிக்கென நாடுதிரேல் -என்றும்
அங்குத்தைக் கொலை யானை
அங்குத்தைக் கூடலர் சேனை என்றுமாம் –

———-

நப்பின்னை பிராட்டி விஷயமாகச் செய்த வியாபாரங்களை அனுசந்திக்கிறார் –

தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட 
மாயக் குழவி யதனை நாட உறில் வம்மின் சுவடு உரைக்கேன் 
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும் 
வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்மையே கண்டார் உளர் – 4-1- 4-

பதவுரை

பரந்த–எங்கும் பரவின
தோயம் நடுவு–ஜலத்தின் நடுவே
சூழலின்-உபாயத்தினால்
தொல்லை வடிவு கொண்ட–பழமையான (பெரிய) வடிவைச் சுருக்கிக் கொண்ட
மாயம் குழலி அதனை–அந்த ஆச்சர்யக் குட்டியை
நாடுதிறில்–தேட முயன்றீர்களாகில்
வம்மின்–(இங்கே) வாருங்கள்;
சுவடு உரைக்கேன்–(உங்களுக்கு) ஓரடையாளம் சொல்லுகின்றேன்;
ஆயர் மகள்–(ஸ்ரீகும்பர் என்னும்) ஆயருடைய பெண் பிள்ளையும்
மடம்–மடப்பம் என்ற குணத்தை உடையவளுமான
பின்னைக்கு ஆகி–நப்பின்னைப் பிராட்டிக்காக
அடல் விடை யேழினையும்–வலிய ரிஷபங்களேழும்
வீய–முடியும்படியாக
பொருது–(அவற்றோடு) போர் செய்து (அந்த ஆயாஸத்தாலே)
வியர்த்து நின்றானை–குறு வெயர்ப்பரும்பின வடிவுந்தானுமாய் நின்றவனை
மெய்யம்மையே–உண்மையாகவே கண்டார் உளர்-

தோயம் பரந்த நடுவு சூழலில்
பரந்த சமுத்திர மத்யே ஓர் இடத்திலே –
பரந்த தோய நடுவு சூழலில்

தொல்லை வடிவு கொண்ட 
பழைய வடிவைக் கொண்ட

தொல்லை வடிவு கொண்ட  மாயக் குழவி யதனை நாட உறில்
தொல்லை -பெருமை யாகவுமாம்
புதுமையில் பெருமை உண்டானாலும் சிறுமையாய் இறே தோற்றுவது –

பழைமை என்ற போதே
ஆத்ய நாதி என்றாமல் அநாதியைக் காட்டுகையாலே
ஆதி யம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வட தள ஸாயி -என்னுதல்
கிருஷ்ணன் என்னுதல்

பரந்த தோய நடுவு சூழலாவது
ஏழு த்வீபங்களில் நடுவு ஜம்பூத்வீபம்
சூழல் ஒன்பதாகக் கூறுதல்
இதில் வடமதுரை யாதல்
இதில் சிறைக்கூடமாதல்
இதிலே இறே கையும் திரு ஆழியும் தோன்ற அங்கு போலே
ஒப்பனை குன்றாமல் வந்து அவதரித்தது

மாயம்
கிருத்ரிம ஆச்சர்யம்
அந்த மாயம் தான் சிறைக் கூடத்தின் நின்று போந்த மாயமும்
திருவாய்ப்பாடியில் பிறந்து வளர்ந்த மாயமும்
எல்லாம் தோன்றுகையாலே மாயக் குழவி என்கிறது

தொல்லை -பெருமையாய்
வட தள சாயியைக் காட்டின போது
சிறுமை அளவிட ஒண்ணாத பெருமையாய் மாறித் தோற்றுகிறது என்னவுமாம்

அதனை
குழவி என்கையாலே அதனை என்கிறது

நாடுதிரேல்
தேடுகையில் அத்யவசிக்கல்

வம்மின்
வாருங்கோள்

சுவடு உரைக்கேன் 
அடியும் சுவடும் எளிதாகச் சொல்லுகிறேன்
திருவாய்ப்பாடியில் பெண்கள் திருக் குழலூத்தில் யமுனைக் கரையில் இவர்களை
மலக்கம் காண அவன் ஒளித்த போது
ஒருவரை ஒருவர் வினவுவது
ஒருவருக்கு ஒருவர் அவன் அடியும் சுவடும் காட்டுவது
வார் மணல் குன்றிலே அவன் வரவு பார்த்து நிற்பது ஆனார்கள் இறே

ருஷிகளும் -தாஸாம் ஆவீரபூத் -என்று
பெண்களை போலே காணும் அளவும் –
கல்யாண குணங்களுக்கு ஆஸ்ரயம் ஏதோ என்று தேடுவாரும்
தாம் தாம் அறிந்த அளவுகளைச் சொல்லுவாருமாய் இறே இருப்பது –
ஆனாலும் தாம் தாம் அனுகரித்தார்கள் இல்லை இறே

ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும் 
வீயப் பொருது வியர்த்து நின்றானை
ஸ்ரீ கும்பர் திரு மகளாய்
மடப்பத்தை யுடையளான
நப்பின்னைப் பிராட்டிக்காகக் கொலை புரிந்து அஸூர மயமான ருஷபங்கள் ஏழையும் முடியும் படி
பொருத ஆயாஸத்தாலே ஸ்வேத ஜலம் தோன்ற நின்றவனை
அது இறே அவதாரத்தில் மெய்ப்பாடு

மெய்மையே கண்டார் உளர்
அவளோடே கூடின பின்பு இறே
வஸ்துவுக்கு சத்யத்வம் உள்ளது
ஸ்ரீ யபதித்தவம் நிரூபகம் ஆனால் போலே இறே இவளையும் நிரூபகமாகச் சொல்லுகிறதும்
பின்னை மணாளனை —

————–

ஸ்ரீ ருக்மிணிப் பிராட்டி விஷயீ காரத்தை அனுசந்திக்கிறார் –

நீர் ஏறு செஞ்சடை நீல கண்டனும் நான் முகனும் முறையால் 
சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற திரு மாலை நாடுதிரேல் 
வாரேறு கொங்கை உருப்பிணையை வலியப் பிடித்துக் கொண்டு 
தேர் ஏற்றிச் சேனை நடுவே போர் செய்ய சிக்கனக் கண்டார் உளர் – 4-1 -5-

பதவுரை

நீர்–(எம்பெருமானது ஸ்ரீபாத) தீர்த்தமானது
ஏறு–ஏறப் பெற்ற
செம் சடை–சிவந்த ஜடையையுடைய
நீல கண்டனும்–(விஷமுடையதனால்) கறுத்த மிடற்றை யுடையவனான சிவ பெருமானும்.
நான்முகனும்–சதுர் முக ப்ரஹ்மாவும்
முறையால்–(சேஷ சேஷி பாவமாகிற) முறையின்படி
சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற–சிறந்த சொற்களைக் கொண்டு துதிக்கும்படி அமைந்து நின்ற
திருமாலை–ச்ரிய : பதியாகிய எம்பெருமானை
நாடுதிரேல்–தேடுகிறீர்களாகில், (இதைக் கேளுங்கள்;)
வார் ஏறு–கச்சை அணிந்த
கொங்கை–முலைகளை யுடைய
உருப்பிணியை–ருக்மிணிப் பிராட்டியை
வலிய–பலாத்காரமாக பிடித்துக் கொண்டு
தேர் ஏற்றி–(தனது) திருத் தேரின் மேல் ஏற விட்டு
(அவ்வளவிலே சிசுபாலதிகளான பல அரசர்கள் எதிர்த்து வர)
சேனை நடுவு–(அவ்வரசர்களுடைய ஸேநா மத்யத்திலே)
போர் செய்ய-(அவ்வரசர்களோடு )யுத்தம் செய்ய
சிக்கென–திண்மையான (த்ருடமாக)
கண்டார் உளர்-

நீர் ஏறு செஞ்சடை நீல கண்டனும்
கங்கா தரன் -நீல கண்டன் -என்னும் ப்ரஸித்தியை யுடையவன்
சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன்–( திருச்சந்த ) என்னக் கடவது இறே

ப்ரஹ்ம பாவனை தலை எடுத்து ப்ரஹ்மா தீர்த்தம் கொண்டு ப்ரசாதிக்கிற போது
கர்ம பாவனை கழியாமையாலே
அநாதரம் தோன்றத் தலையிலே தெளிக்கையாலே
நீரேறு செஞ்சடை -என்கிறது
(ஸ்ரீ பாத தீர்த்தம் ஏறு செஞ்சடை சொல்ல வில்லை இதனாலே
ஒரு கால் நிற்ப -கலியன் -திருவடி மதிக்காமல் இருந்த லோகத்தார் அபிப்ராயத்தால் )

சென்னி மேல் ஏறக் கழுவினான் -(நான்முகன் )-என்னக் கடவது இறே
ஹ்ருதயத்தில் கருட தியானமும்
தலையிலே அம்ருத கலையுமாகையாலே விஷம் போக்கற்றுக் கட்டியாயிற்றே இறே
(திரு விருத்தம்)
நான் முகனும் முறையால்  சீர் ஏறு வாசகம் செய்ய
அயன் நான்கு நாவினாலும் தழும்பு எழ
கல்யாண குணங்கள் முறைமை தோன்ற மிகும்படி ஸ்தோத்ரம் செய்ய

நின்ற திரு மாலை
முறைமை ப்ரஹ்ம பாவனையாலே தீர்த்தம் ப்ரஸாதப்படுகையாலும்
சிரஸ்ஸாலே வஹித்த தீர்த்த பலத்தாலும்
இவர்கள் நெஞ்சிலே தாஸோஹத்வமும்
க்ருஹீதாம்சமான கல்யாண குணங்களும் மிக்குத் தோற்றும் இறே

நின்ற
நின்று கேட்டு அருளாய் (திரு விருத்தம்)-என்னப் போகிறார்கள் அன்றே
தம் தாம் பிரயோஜனத்துக்காக இறே ஸ்தோத்ரம் செய்வதும்

திருமாலை
பூர்வ வாக்யத்தில் பிரதம பதத்தில் நித்ய யோகத்தால் வந்த ஸ்ரீ பதித்வத்தை
ப்ரதீதி மாத்ரமாக எல்லாருக்கும் சொல்லலாம் இறே

நாடுதிரேல் 
உம் தாம் பரயோஜனத்துக்காக தேடு கிறி கோளாகில்

வாரேறு கொங்கை உருப்பிணையை வலியப் பிடித்துக் கொண்டு  –
கச்சுக்கு உள்ளே வளருகின்ற முலைகளை யுடையளாய் இருக்கிற ருக்ம ராஜன் மகளை
சிசுபாலனுக்கு என்று வாக் தத்த மநோ தத்தங்களாலே அறுதியிட்டு
கிரியா பர்யந்தம் ஆக்குவதற்கு முன்னே

இவள் பிரார்த்தனைக்கு ஈடாக
சங்க த்வனியும் காட்டி
பிராண பிரதிஷ்டையும் செய்து
கண்ணாலம் கோடித்து இருந்த ராஜாக்கள் நடுவே கன்னி தன்னைப் பொருந்தாமையோடே கைப் பிடிப்பான்
திண்ணார்ந்து இருந்தவன் அண்ணாந்து இருந்த இவளுடைய
மனப் பொருத்தமே பற்றாசாக வலிமையால் பிடித்துத்

தேர் ஏற்றிச் சேனை நடுவே போர் செய்ய சிக்கனக் கண்டார் உளர் –
தேரிலே ஏற்றுக் கொண்டு போய்
ஸிஸூ பால விஸிஷ்டாய -என்று
ஒரு ப்ராமாணிகராலும் சலிப்பிக்க ஒண்ணாத படி பாணி க்ரஹணம் செய்யவும் கண்டார் உளர் –

—————

இவ்வளவேயோ
இவன் ப்ரீதிக்கு விஷயமானார் அனைவரும் சூழ இருந்த பிரகாரத்தை அனுசந்திக்காரர்
(கீழே ஒரு ருக்மிணி பிராட்டி
இங்கு அஷ்ட மஹிஷிகளும் பதினாறாயிரம் தேவிமார்களும் )

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல் 
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை  
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 -1-6 – 

பதவுரை

பொல்லா வடிவு உடைபேய்ச்சி–மஹா கோரமான வடிவை யுடைய பூதனை யானவள்
அஞ்ச–மாளும்படியாக
புணர்முலை–தன்னில் தான் சேர்ந்திருள்ள (அவளது) முலையிலே
வாய் மடுக்க வல்லான்–(தனது) வாயை வைத்து உண்ண வல்லவனும்
மா மணிவண்ணன்–நீலமணி போன்ற நிறத்தை யுடையவனுமான எம்பெருமான்
மருவும் இடம்–பொருந்தி எழுந்தருளி யிருக்குமிடத்தை
நாடுதிரேல்–தேடுகிறீர்களாகில்
(இதைக் கேளுங்கள்:)
பௌவம் ஏறி துவரை–கடலலைகள் வீசப் பெற்றுள்ள ஸ்ரீத்வாரகையிலே
எல்லாரும் சூழ–தேவிமார் எல்லாரும் சுற்றுஞ் சூழ்ந்து கொண்டிருக்க,
பல் ஆயிரம் பெரு தேவிமாரொடு–(அந்தப்) பதினாறாயிரம் தேவிமாரோடு கூட
சிங்காசனத்து–ஸிம்ஹாஸநத்தில்
இருந்தானை–எழுந்தருளி யிருக்கும் போது கண்டார் உளர்-

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க வல்லானை
பேய் என்ற போதே பொல்லா வடிவும் அறியாமையும் தோற்றும் இறே
ஆயிருக்க பொல்லா வடிவு என்றது
தஜ் ஜாதிகளில் பொல்லா வடிவை யுடைய பேய்களும் அவற்றில் அறியாதவையும் –
(நியமிக்கும்- நீங்கும் )-நீக்கும் -படி இறே இவளுடைய வடிவும் அறியாமையும் இருப்பது

வரண்டு நார் நரம்பு எழக் கரிந்த வடிவும்
வஞ்ச மேவிய நெஞ்சில் அறியாமையும் இறே
இவளுக்கு ஸ்வா பாவிகம்
அக் காலம் எல்லாம் ஸூகமே பிராணனோடு திரிந்தாள் இறே

நல்ல வடிவு எடுத்து பிரசன்னையாய்ப் பெற்ற தாய் போல் வந்து தன் விசாரத்தாலே
நஞ்சு ஏற்றிக் கொடுத்த முலையில் வாசி அறிந்து வாய் மடுக்க வல்லானை

புணர் -விசாரம்
(புணர் -தன்னில் தான் சேர்ந்துள்ள முலை-மா முனிகள் )
பெரிய அபி நிவேசத்தோடே வாசி அறிந்து வாய் மடுக்க வல்லானை
தன் பிள்ளைத் தனத்தில் தூய்மை அறிந்து அறியாமை தோன்ற வாய் மறுக்க வல்லானை

மா மணி வண்ணனை
ப்ரசன்ன விரோதி போகப்பெற்ற வாறே
மஹார்க்கமான நீல ரத்னம் போலே திரு மேனி புகர்த்துத் தோன்றின படி
உண்ணா நஞ்சுண்டு உகந்தாயை (திருவாய் )-என்று
அந்ய சேஷத்வம் அறப் பெறில் நஞ்சாகில் என் செய்ய வேணும் என்று
பேய் முலை நஞ்சூணாக உண்டான் (பேயாழ்வார் )-என்கையாலே
உண்டார் மேனி கண்டார்க்குப் புகர்த்துத் தோன்றும் இறே

மருவும் இடம் நாடுதிரேல் 
பேய்ச்சியைப் போல் அன்றிக்கே
நீங்களும் அவனும் உஜ்ஜீவித்து உகக்கும்படி கூடும் இடம் தேடுதிரேல்

பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு
நரகாஸூர வத வ்யாஜத்தாலே வந்த பல்லாயிரம் பெரும் தேவிமார் என்கிறது

பவளம் எறி துவரை   எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர்
ஸ்ரம ஹரமாம் படி சமுத்ரமானது திரைக்கையாலே சேவிக்கிற ஸ்ரீ மத் த்வாரகையிலே
தேவிமார் எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தவனை
ஏகாசன பரிச்சேத்யனாய் இருந்து
எல்லாரையும் ஏகாசனத்தே இருந்தாரைப் போலே உகப்பித்த ஆச்சர்யத்தோடே கண்டார் உளர் –
(அபரிச்சேதயனாய் இருந்து வைத்து சாம்யாபத்தி அருளுபவர் என்றவாறு )

————

பார்த்த சாரதி யான பிரகாரத்தை அனுசந்திக்கிறார்

வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன் 
உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன் 
வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று 
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் – 4-1-7- –  

பதவுரை

வெள்ளை–வெண்மை நிறமுடையதும்
விளி–(அநுபவ கைங்கரியங்களில் ருசியுடையீர்! வாருங்கள் என்று, தன் த்வநியால்) அழைப்பது போன்றுள்ளதுமான
சங்கு–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
வெம் சுடர்–தீக்ஷ்ணமான ஜ்யோதிஸ்ஸை யுடைய
திருச் சக்கரம்–திருவாழி யாழ்வாளையும்
ஏந்து கையன்–தரியா நின்றுள்ள திருக்கைகளையுடைய எம்பெருமான்
உள்ள இடம்–எழுத்தருளி யிருக்குமிடத்தை
வினவில்–கேட்கிறீர்களாகில்
உமக்கு–(கேட்கிற) உங்களுக்கு
இறை சுவடு உரைக்கேன்–சிறிது அடையாளம் சொல்லுகிறேன்,
(இறைச் சுவடு-பகவத் அடையாளம் )
வம்மின்–வாருங்கள்;
வெள்ளைப் புரவி–வெள்ளைக் குதிரகைள் பூண்டிருப்பதும்
குரங்குகொடி–குரங்காகிற வெற்றிக் கொடியை உடையதுமான
தேர்மிசை–(அர்ஜுனனுடைய) தேரின் மேலே
முன்பு நின்று (ஸாரதியாய்) முன்னே நின்று
படை–ஸைந்யத்துக்கு
கள்ளம் துணை ஆகி-க்ருத்ரிமத் துணையாயிருந்து
பாரதம்–பாரத யுத்தத்தை
கை செய்ய–அணி வகுத்து நடத்தும் போது
கண்டார் உளர்-

வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்தும் கையன் 
வெளுத்த நிறத்தையும் ஓசையும் யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் ஆஸ்ரித விரோதிகளின் மேலே
நெருப்பு உமிழ்ந்து செல்லும்படியான திரு ஆழியை ஏந்துகிற திருக் கையும் யுடையவன்

உள்ள விடம் வினவில்
பார தந்தர்யம் தோற்ற
ஸ்வ தந்த்ரனாய் நிற்கிற இடம்
எங்கே காணலாம் என்று கேட்கிறி கோளாகில்

உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன் 
வம்மின்
வாருங்கோள்

உமக்கு சுவடு இறை உரைக்கேன் 
உங்களுக்கு காணலாவதொரு மாற்றம் சுருங்கச் சொல்லுகிறேன்

வெள்ளைப் புரவி குரக்கு வெல் கொடிதேர் மிசை முன்பு நின்று 
ஸ்வேத அஸ்வ (பூட்டப்பட்ட )வாஹனனாய்
வானரத்தை வெற்றிக் கொடியாக யுடையவனுமான
விஜயன் தேரின் மேலே
அவனுக்கு சாரதியாய் முன்னே நின்று

கள்ளப் படை துணையாகி
(படைக்கு கள்ள துணை – மா முனிகள்
இங்கு படையே கள்ளம்)
கிருத்ரிதமான துரியோதன பரிகரத்துக்குப் பாப கரண விமோசன ஸஹ காரியாய் நின்று
த்ருதராஷ்ட்ராதிகள் ராஜ தர்மத்தை அறிந்து இருக்கச் செய்தேயும்
மமதையால் ஸோ ஹம்பாவம்( ஸ அஹம்பாவம் )நடத்துகையாலும்
ஆத்ம தர்மத்தில் அந்வயம் இல்லாமையாலும்
ஆத்மாத்மீயத்தை அபஹரிக்கையில் மேற்பட்ட களவு இல்லை இறே

இது தான் ப்ராயேண அர்ஜூனாதிகளுக்கும் உற்றுப் பார்த்தால் உண்டாயிற்றே இறே இருப்பது
அவன் ஜாநாமி தர்மம் என்றதில் காட்டில்
(தர்மம் தெரியும் ஆனால் பண்ண மாட்டேன் என்ற துரியோதனன் போல் தான் இவர்களும்
ஒரே வாசி கிருஷ்ண ஆஸ்ரயராக இருந்ததே )என்றதில் காட்டில்
இவனும் கீழ்ச் சொல்லிற்றுச் செய்யாது இருக்கச் செய்தே
நிஸ் சிதம் ப்ரூஹி -என்றதும் ஒரு வாசி இல்லை என்னும் இடம்
கிருஷ்ணன் தானே
அஸோச்யாந் அந்வ ஸோசஸ் த்வம்
சோகத்துக்கு விஷயம் அல்லாதவை -இதைப் பற்றி சோகியா நின்றாய்
ப்ரஜ்ஞா வாதம்ஸ் ச பாஷஸே –
முன்னே ராஜ தர்மத்தை அறிந்தால் போலே சில வார்த்தையும் சொல்லா நின்றாய்
கதாஸூந் அகதா ஸூம்ஸ் ச
கதாஸூவான (உயிரற்ற )சரீரம் எல்லாரும் நோக்கிலும் நில்லாது
அகதா ஸூவான வாத்மா எல்லாரும் அழிக்க நினைத்தாலும் அழிக்க ஒண்ணாது என்று
பிரித்து அறிந்த ஞாதாக்கள் சோகியார்கள் காண் என்று அருளிச் செய்தான் இறே

பாரதம் கை செய்யக் கண்டார் உளர்
பாரத சமரத்திலே பெரிய த்வரையோடே கையும் அணியும் வகுத்து
எல்லாச் சேனையும் இரு நிலத்தில் அவியச் செய்து நின்ற நிலை கண்டார் உளர்

ஆத்ம ஆத்மீய அபஹார க்ருத்ரிமம் இரண்டு தலைக்கும் உண்டாய் இருக்கச் செய்தேயும்
தர்ம அதர்ம தார தம்யத்தாலே இறே இங்கனம் செய்ய வேண்டிற்று
யுத்தத்துக்கு இசைந்த பின்பு இறே இரண்டு தரத்தாருக்கும் தான் துணை யாயிற்று
அவன் துணையாம் இடத்து ஸஹ காரி நிரபேஷமுமாய் இருக்கும் இறே –

———–

கீழ் கள்ளப் படை என்றத்தை வ்யக்தீ கரிக்கிறார் இப்பாட்டால் –

நாழிகை கூறிட்டு காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே 
நாழிகை போக படை பொருதவன் தேவகி தன் சிறுவனை நாடுதிரேல்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயந்திரன் தலையை 
பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் உளர் – 4-1- 8-

பதவுரை

நாழிகை (பகல் முப்பது) நாழிகைகளை
கூறி விட்டு–பங்கிட்டுக் கொண்டு
காத்து நின்ற–(ஜயத்ரதனைக்) காத்துக் கொண்டிருந்த
அரசர்கள் நம் முகப்பே–ராஜாக்கள் முன்னிலையில்
நாழிகை போக–(பகல் முப்பது) நாழிகையும் போயிற்றென்று தோற்றும் படியாக
படை–(தன்) ஆயுதமாகிய திருவாழி யாழ்வானைக் கொண்டு
பொருதவன்–(ஸூர்யனை) மறைத்தவனும்
தேவதி தன் சிறுவன்–தேவகிப் பிராட்டியின் பிள்ளையுமான கண்ண பிரான்
(உள்ள இடம்)–எழுந்தருளி யிருக்குமிடத்தை
வினவில்–கேட்கிறீர்களாகிய
(உரைக்கேன்) சொலலுகின்றேன்;
அன்று–(அப்படி அவ்வரசர்கள் காத்துக் கொண்டு நின்ற அன்றைக்கு)
ஆழி கொண்டு– திருவாழியினால்
இரவி–ஸூர்யனை
மறைப்ப–(தான்) மறைக்க,
(அதனால் பகல் கழிந்த்தாகத் தோற்றி வெளிப்பட)
சயத்திரதன்–ஜயத்ரனுடைய
தலை–தலையானது.
பாழில் உருள–பாழியிலே கிடந்துருளும்படி
படை பொறாதவன் பக்கமே–அம்பைச் செலுத்தின அர்ஜுநனருகில்
கண்டார் உளர்–(அவ் வெம்பெருமானைக்) கண்டாருண்டு–

நாழிகை கூறிட்டு காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே 
ஜயத்ரதனை ராஜாக்கள் எல்லாரும் தனித்தனியே நாழிகை கூறிட்டு காத்து நிற்க
அவர்கள் முன்னே

நாழிகை போக படை பொருதவன்  
பகல் நாழிகை சென்றது -என்று தோன்றும் படியாக

தேவகி தன் சிறுவன்
தேவகீ புத்ரன்

அன்று
அவனைக் குழிக்குள்ளே நிறுத்தின அன்று
அதுக்கடி அர்ஜுனன் ப்ரதிஜ்ஜை பண்ணுகையால் இறே

ஆழி கொண்டு இரவி மறைப்ப சயந்திரன் தலையை 
கருதும் இடம் அறிந்து பொரும் திருவாழி யைக் கொண்டு மறைத்த அளவிலே
அஸ்தமித்தது என்று குழியில் நின்றும் கரையிலே புருஷத்வயாக்ருதி தோன்ற நின்ற அளவிலே
இருள் பரப்பின திருவாழியை வாங்க
அந்த ஜயத்ரதன் தலையைத் தலை படைத்த பிரயோஜனம் பெறாமல்

பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் உளர்
பாழிலே கிடந்தது உருளும்படி படை பொருதவன் -என்னும்படி
படை பொறாத அர்ஜுனன் அருகே கண்டார் உளர் –

இனி ஆதித்யாதி தேஜஸ்ஸூக்கும் அவ் வருகான தேஜஸ்ஸை யுடைய திருவாழி ஆழ்வானாலே
ஆதித்ய தேஜஸ்ஸை மறைக்கும் படி என் என்னில்
திருவாழி ஆழ்வானுக்கு தேஜஸ்ஸாவது
அவன் திரு உள்ளத்துக்கு ஈடான வடிவு எடுக்கையும்
அந்த வடிவுக்குத் தகுதியான நிறத்தை சம்பாதிக்கையும் இறே

அவன் தனக்கும்
இருள் அன்ன மா மேனி அசாதாரணமாய் இருக்கச் செய்தேயும்
யுக வர்ண க்ரம அவதாரங்களிலே
(தத்தாத்ரேயர் ராமர் கிருஷ்ணர் -ப்ராஹ்மண க்ஷத்ரியர் வைஸ்யர் )
பாலின் நீர்மை செம் பொன் நீர்மை -என்பது
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் -என்பது
வெறும் புறத்தில்
நிறம் வெளிது செய்து பசிது கரிது -என்பது
தமர் உகந்தது எவ்வுருவம் -என்பதான

அவனோடே நித்ய ஸாரூப்ய சித்தனான அவனுக்கு
அவன் திரு உள்ளத்துக்கு ஈடாக வேண்டின நிறம் பரப்புகை அரிதோ
பிராகிருத தேஜஸ்ஸூ அப்ராக்ருத லோகத்தில் செல்லிலும்
அப்ராக்ருத தேஜஸ்ஸூ பிராகிருத லோகத்தில் வருகை அரிது இறே
அங்குள்ளாரும் இங்கு வந்தால் இங்குள்ள நிறம் மூன்றிலே (வெளிது செய்து கரிது )
அவன் திரு உள்ளத்துக்கு ஈடாக ஒன்றை எடுக்கும் அத்தனை இறே உள்ளது
இத்தால் ஞான சக்தியாதிகளுக்கு குறை வாராது இறே

அன்றியே
திருவாழி ஆழ்வானுடைய தேஜஸ்ஸூ மிகுதியால் இருண்டு தோன்றிற்று என்பாரும் உண்டு
சந்த்ர துல்யமான ஜல ராசியும் (கடலும் )இருண்டு தோன்றா நின்றது இறே
திமிர ஹரத்வமே இறே சந்திரனுக்கு உள்ளது

தேவகி தன் சிறுவனை நாடுதிரேல்
நாழிகை கூறிட்டு காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே 
நாழிகை போக
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயந்திரன் தலையை
பாழில் உருளப் படை பொருதவன்–என்னும்படி
படை பொருதவன் பக்கமே கண்டார் உளர்
என்று அன்வயம்

———

கீழில் பாட்டிலே
பாண்டவ பக்ஷ பாதியாய்
அவர்களுடைய ஆபத் விமோசகனான பிரகாரத்தை அனுசந்தித்தார்
இதில்
ஜகத்துக்கு எல்லாம் வந்த ஆபத்தை
அபேஷா நிரபேஷமாக ரஷித்த படியை அனுசந்திக்கிறார் –

மண்ணும் மலையும் மறி கடல்களும்  மற்றும் யாவும் எல்லாம் 
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல்
எண்ணற்கு அரியதோர் ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் -4 -1-9 –

பதவுரை

மண்ணும்–பூமியையும்
மலையும்–மலைகளையும்
மறி–அலை யெறியா நின்றுள்ள
கடல்களும்–கடல்களையும்
மற்றும் யாவும் எல்லாம்–மற்றுமுண்டான எல்லாப் பொருள்களையும்
திண்ணம்–நிச்சயமாக
விழுங்கி–(ப்ரளயங் கொள்ளாதபடி) திரு வயிற்றிலே வைத்து நோக்கி
(பின்பு ப்ரளயங்கழிந்தவாறே)
உமிழ்ந்த–(அவற்றை வெளி…..காண) உமிழ்ந்து
தேவனை–எம்பெருமானை
சிக்கென–ஊற்றத்துடனே
நாடுதிரேல்–தேடுகிறீர்களாகில், (இதனைக் கேளுங்கள்.)
எண்ணற்கு அரியது–நினைக்க முடியாத (பெருமையையுடைய)
ஓர்–ஒப்பற்ற
ரேனமாகி அவதரித்து
புக்கு–ப்ரளய வெள்ளத்தில் புகுந்தது
இரு நிலம்–பெரிய பூமியை
இடந்து–அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்தெடுத்து
(அவ் வளவிலே பூமிப் பிராட்டி தன்னை வந்து அணைக்க,)
வண்ணம்–அழகியதும்
கரு–கறுத்ததுமான
குழல்–கூந்தலையுடைய
மாதரோடு (அந்த) பூமிப் பிராட்டியோடு
மணந்தானை–ஸமச்லேஷித் தருளினவனை கண்டார் உளர்–

மண்ணும் மலையும் மறி கடல்களும்  
எல்லாருக்கும் ஆதாரமான பூமியையும்
அந்த பூமிக்கு ஆணி அடித்தால் போல் இருக்கிற பர்வதங்களும்
இந்த பூமிக்கு ரக்ஷகமாய் சூழ்ந்து திரை மறியும் படியான சமுத்ரங்களும்

மற்றும் யாவும் எல்லாம் 
மற்றும் அநுக்தமான யஸ் ஸப்த வாஸ்யங்கள் எல்லாம்

திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை
தன் ஸங்கல்பத்தாலே இவற்றை எல்லாம் தன்னுள்ளே ஆக்கி
திண்ணம் -சங்கல்பம்
உமிழ்ந்த தேவனை
இவை வெளி நாடு காணும்படி உமிழ்ந்து ரஷித்த ரக்ஷகனை

சிக்கென நாடுதிரேல்
மேல் எழத் தேடி கண்டிலோம்
அவனுக்கு வேண்டாவாகில் எனக்கோ வேண்டுவது என்றால் போல் அநா தரியாதே
அவனைக் காணும் அளவும் மஹா விஸ்வாஸத்தோடே தேடு கோளாகில்

எண்ணற்கு அரியதோர் ஏனமாகி
ஈத்ருக்தயா இயத்தயா அளவிட ஒண்ணாத
அத்விதீயமான மஹா வராஹமாகி
மானமிலாப் பன்றி -என்னக் கடவது இறே
(அபிமானமும் உபமானமும் இல்லா )

இரு நிலம் புக்கு இடந்து
பாதாள கதையான மஹா பிருத்வியை உள்ளே புக்கு
அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்து எடுத்து
மண்ணும் தானத்தவே –என்கிறபடியே யதா ஸ்தானத்தில் வைத்து

வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர்
இதுக்கு அபிமானியாய்
நாட்டில் கருமை வெண்மையாம் படி கரு வண்ணக் குழலை யுடைய மாதரோடு
மணந்தானைக் கண்டார் உளர் –

——–

நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலை கட்டுகிறார் –

கரிய முகல் புரை மேனி மாயனை கண்ட சுவடு உரைத்து 
புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை 
திருவில் பொலி மறை வாணன் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும் 
பரவு மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வார்களே -4- 1-10 –

பதவுரை

கரியமுகிற் புரை மேனி–கரு மலர் போன்ற திருமேனி யுடையனும்
மாயனை–ஆச்சரிய செய்கைகளை யுடையனுமான கண்ண பிரானை
கண்ட சுவடு–ஸேவித்த அடையாளங்களை
உரைத்த–அருளிச் செய்த;
செந்நெல்–செந்நெற் பயிர்களானவை
ஓங்கி–(ஆகாசமளவும்) உயர்ந்து
புரவி முகம் செய்து–குதிரை முகம் போலத் தலை வணங்கி
விளை–விளையா நிற்கப் பெற்ற
கழனி–வயல்களை யுடைய
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தார்க்குத் தலைவரும்
திருவின்–(விஷ்ணு பக்தியாகிற) செல்வத்தினால்
பொலி–விளங்கா நின்றுள்ளவரும்
மறை வாணன்–வேதத்துக்கு நிர்வாஹகருமான
பட்டர் பிரான்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
மாலை பத்தும்–சொல் மாலையாகிற இப் பத்துப் பாட்டையும்
பரவும் மனம் உடை–அநுஸத்திக்கைக் கீடான மநஸ்ஸை யுடையவரும்
பக்தர் உள்ளார்–பக்தியை யுடையவருமா யிருப்பவர்கள்
பரமன்–பரம புருஷனுடைய
அடி–திருவடிகளை
சேர்வர்கள்–கிட்டப் பெறுவார்கள்–

கரிய முகல் புரை மேனி மாயனை
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே
ஸ்ரமஹரமான திருமேனியை யுடைய ஆச்சர்ய சக்தி யுக்தனை

கண்ட சுவடு உரைத்து 
சிக்கென நாடுவார்க்குக்
கண்ட அடையாளங்களை யுரைத்து
கண்டார் உளர் என்று கண்டவர்களைக் காட்டி
(பிடித்தார் பிடித்தாரைப் பிடித்து இருந்து பெரிய வானில் திகழ்வார்கள் )

அவன் தன்னைக் காண்கையிலும்
அவனைக் கண்டவர்களைக் காண்கை தானே உத்தேச்யம் என்று

புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை 
செந்நெலானவை மிகவும் வளர்ந்து கதிர்ச் செறிவாலே
குதிரை முகம் செய்து விளைகிற வயலையுடைய

திருவில் பொலி மறை வாணன் பட்டர் பிரான்
திரு மாளிகைக்கு நிர்வாஹகராய்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யிலே மிகுந்த மறையே வாழ்வாக யுடையராய்
ப்ராஹ்மண உத்தமருக்கும் வேதப் பயன் கொண்டு உபகாரகரான ஆழ்வார்

(திருவில் விசேஷணம் மறைக்கு இங்கு இவள் –
ஆழ்வாருக்கு அங்கு மா முனிகள் )

சொன்ன மாலை பத்தும்  பரவு மனம் உடை பத்தர் உள்ளார்
அருளிச் செய்த இம் மாலை பத்தும்
இவர் அபிமானத்திலே ஒதுங்குகை தானே புருஷார்த்தமாக
ஸ்தோத்ரம் செய்யும் நல்ல மனஸ்ஸோடு
ஸ்நேஹிகளாய் உள்ளவர்கள்

பரமன் அடி சேர்வார்களே
சர்வ ஸ்மாத் பரனானவனுடைய  திருவடிகளிலே சேரப் பெறுவர்
இங்கே இருந்து நாடுதிரேல் –கண்டார் உளர் -என்ன வேண்டாத தேசத்திலே போய்ச் சேரப் பெறுவர்

அன்றிக்கே
தேடின இந்த தேசம் தன்னிலே
விடாய்த்த இடத்திலே சில பரம தார்மிகராலே தண்ணீர் பெற்றால் போலே
கண்டார் காட்டக் காணப் பெறுவர் என்னவுமாம்

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-61-70- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 24, 2021

தலைவனைப் பிரிந்த தலைவி தென்றலுக்கு வருந்தி இரங்குதல் –

கூறப் படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்
மாறப் படா வினை மாற்றிய மாறன் மகிழலங்கல்
நாறப் படா நின்ற போதமுது ஆகும் அதன்றி நஞ்சம்
தேறப் படாது கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே. 61–

கூறப் படா மறையின் பொருள் கூறிக் -தெளியா மறை நிலங்களை தெளியும்படி அருளிச் செய்து
குவலயத்தோர் மாறப் படா வினை மாற்றிய -பண்டை வல் வினை பாற்றி அருளிச் செய்து
மாறன் மகிழலங்கல் நாறப் படா நின்ற போது –மகிழம்பூ மணம் வீசப்பெறும் காலத்தில்
அமுது ஆகும் -தென்றல் காற்று அமுதம் போல் இருக்கும்
அதன்றி நஞ்சம் தேறப் படாது –அம்மணம் பெறாத போது விஷம் போலே கொடுமையாக இருக்குமே
கெட்டேன் மன்றல் நாறும் தண் தென்றலையே–ஆகவே தென்றல் காற்றை நம்பப் போகாதே

கெட்டேன் -மிக்க இரக்கத்தால் கூறும் வார்த்தை
கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வில்லை -பெரியாழ்வார்
தென்றலும் தீயினும் கொடி தாம் -கலியன்

லௌகிக பதார்த்தங்கள் ஆழ்வார் சம்பந்தத்தால் உபாதேயமாகவும்
இல்லையாகில் த்யாஜ்யமாகவும் இருப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –

———–

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீ வினையை
நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை நிறை குருகூர்
மன்றலைத் தோன்றும் மதுரகவியை மனத்துள் வைப்பார்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் என் நாவுக் குரியவரே. 62–

தென் தலைத் தோன்றும் உபநிடதத்தை -தெண் திசை உண்டாக்கிய உபநிஷத்தும்
என் தீ வினையை நின்று அலைத்து ஓன்றும் நியாயம் நெறியை –எனது கர்மங்களைப் பாற்றி அருளி
பொருந்திய நீதி மார்க்கம் யுடையதுமாய்
நிறை குருகூர் மன்றலைத் தோன்றும் மதுரகவியை –எல்லா வளங்களும் நிறைந்த திருக்குருகூரில் அவதரித்த
ஆழ்வார் பக்கல் உண்டான சொல்லிலும் பொருளிலும் இனிய பாசுரங்களை
அலைத்து நின்று என்றுமாம் –
மனத்துள் வைப்பார்-ஓதி உணர்ந்து தம் மனதில் வைத்துக் கொள்பவர்கள்
என் தலைத் தோன்றும் எம்பிரான்கள் -என் சென்னியில் வைத்து விளங்கும் என் தலைவராவார்
என் நாவுக் குரியவரே.-என்னால் ஸ்துதிக்கப் படுமவரும் அவரே

அப்பனைப் பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர் மறுமையும் இம்மையும்
நம்மை அளிக்கும் பிராக்களே –
ஆழ்வார் அடியார் அடியார் அடியோங்களே என்கிறார்

————-

உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என ஒன்றுமின்றி
விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் பிறர் புன் கவி மெய்
தெரிக்கின்ற கோச் சடகோபன் தன் தெய்வக் கவி புவியில்
சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் தோண்டச் சுரத்தலினே. 63–

பிறர் புன் கவி -மற்றவரின் புல்லிய பாடல்கள்
உரிக்கின்ற கோடலின் உந்து கந்தம் என –உரிக்கப்படுகின்ற வெண் காந்தளின் பெரிய கிழங்கு போல்
காந்தம் -கிழங்கு
ஒன்றுமின்றி விரிக்குந் தோறும் வெறும் பாழாய் விடும் –வகுத்து நோக்க நோக்க சாரம் ஒன்றும் இல்லாமல்
மிகவும் பயன் அற்றவையாய் போய் விடும்
மெய் தெரிக்கின்ற கோச் சடகோபன் –உண்மைப் பொருளையே உணர்த்தும் ஆழ்வார்
தன் தெய்வக் கவி -யுடைய திவ்ய ப்ரபந்தங்களோ
தோண்டச் சுரத்தலினே–ஆழ்ந்து நோக்க நோக்க மென்மேலும் நற்பொருள் இடையறாது வெளிப்படுதலால்
புவியில் சுரக்கின்ற நுண் மணல் ஊற்று ஓக்கும் -நுண்ணிய மணல் பாங்கில் நீரூற்றைப் போன்று இருக்கும் –

தொட்டனைத்து உறும் மணல் கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊரும் அறிவு

————–

சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்
கரக்கும் இருவினை மேன்மையும் காணும் கயல் குதிப்பத்
திரக்கும் கழை நெடுந் தாளில் தொடுத்த செந் தேனுடைந்து
பரக்கும் பழன வயல் குருகூர் வளம் படுமினே. 64–

திரக்கும் -உறுதி பெற்ற -நன்கு வளர்ந்து முதிர்ந்த –ஸ்திரம் -வடமொழி
கழை நெடுந் தாளில் -நீண்ட கருப்பந்தண்டிலே
கழை-மூங்கில் என்றுமாம் -மருத நிலா வருணனைக்குச் சேராது
தொடுத்த செந் தேன் -கட்டிய சிவந்த தேனையுடைய கூடுகள்
கயல் குதிப்ப உடைந்து-கயல் மீன்கள் துள்ளி விழும் போது அவை படுதலால் உடைபட்ட
பரக்கும் –தேன் பரவிப் பாயப் பெற்ற
பழன வயல் குருகூர் –கழனி களை யுடைய மருத நிலம் சூழ்ந்த ஆழ்வார் திரு நகரி யுடைய
வளம் படுமினே-மஹிமையை கவி பாடி ஸ்துதியுங்கோள் –
அங்கனம் பாடினீராகில் உங்களுக்கு
சுரக்கும் திருவும் -கைங்கர்ய ஸ்ரீ வளரும்
வறுமையும் தீரும் –தரித்திரம் நீங்கும் -சம்சாரம் தொலையும்
தொடக்கு விட்டுக் கரக்கும் இருவினை –புண்ய பாப இரு வினைகளும் தொடர்ச்சி நீங்கி
இருந்த இடம் தெரியாதபடி அழிந்து விடும் –
தொடக்கு –கட்டு -பந்தம்
மேன்மையும் காணும்–எல்லா மேன்மைகளை உண்டாகும் –

———–

பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் பைந் தாள் குவளை
யோடும் கறங்கும் குருகைப் பிரான் இச் சுழல் பிறவி
ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை நீக்கி யுணர்வுதவி
வீடும் திறந்து தந்தானை எந்நான்றும் விடகிலமே. 65–

இச் சுழல் பிறவி ஓடும் கறங்கன்ன வாழ்க்கையை –காற்றாடி போன்று கர்மங்களால் உண்டாகும் பிறவிச் சூழலை
நீக்கி யுணர்வுதவி-அடியார்களுக்கு போக்கி அருளி நல் ஞானத்தையும் அருளி
வீடும் திறந்து தந்தானை –ஸ்ரீ வைகுண்டமும் கொடுத்து அருளி
பாடும் கறங்கும் சிறை வண்டு பாடும் -வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டு
பாடும் -பக்கம் முழுவதும் என்றுமாம் –
பைந் தாள் குவளை யோடும் கறங்கும் -பசுமையான நாளத்தை யுடைய குவளைகளின் இதழ்களும் சுழலப் பெற்ற
குருகைப் பிரான் எந்நான்றும் விடகிலமே.–திருக் குருகையில் திரு அவதாரம் செய்து அருளிய ஆழ்வாரை விட்டுப் பிரிய மாட்டோம்

——-

விஸ்லேஷத்தில் மாலைப் பொழுதுக்கும் இருளுக்கும் தலைவியின் ஆற்றாத துயர் கண்டு தோழி இரங்கல்

விட வந்தகார வெம் பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு
இடர் வந்ததால் என்றி ரங்கிப் புணர்ந்திலர் இன்னுயிரை
அட வந்த காலன் கொலோ அறியேன் இன்று இவ் வந்தி வந்து
பட அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே. 66–

விட வந்தகார –கருமையாலும் கொடுமையாலும் விஷம் போன்ற இருளை யுடைய
வெம் பாலிற் -கொடிய இரவாகிய காலப்பகுதியில்
பராங்குசர் மெல்லியலுக்கு இடர் வந்ததால் என்று இரங்கிப் புணர்ந்திலர் –மனம் இரங்கி வந்து கூடினார் அல்லர்
இன்று இவ் வந்தி வந்து பட –மாலைப்பொழுதாகிய பெரும் தீயும் வந்து சேர
அந்த காரப் பெரும் புகை யோடிப் பரக்கின்றதே.–இருளாகிய பெரும் புகை எங்கும் பரவி
இன்னுயிரை அட வந்த காலன் கொலோ அறியேன்

——————

உடன் போக்கில் தலைவன் தலைவிக்குத் தன் நகர் அணிமை கூறல்

பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்
சுரவா தவற்றைச் சுரப்பித்து அவை சொரியும் பொருள் பால்
கரவாது உதவிய மாறன் கவி அனையாய் இனி ஓர்
சர வாதம் இப்புறம் அப்புறம் காணத் தடம் பணையே. 67–

சுருதிப் பசுக்கள் சுரவா தவற்றைச் சுரப்பித்து-வேதப்பொருளாகிய பாலை எளிதில் சுரக்கும்படி செய்து
அவை சொரியும் பொருள் பால் –தத்வப் பொருளாகிய பாலை
கரவாது உதவிய மாறன் –லோபம் செய்யாதே திவ்ய பிரபந்தங்கள் மூலம் அனைவருக்கும் கொடுத்து அருளிய ஆழ்வாருடைய
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபன் அன்றோ
கவி அனையாய் – ஆழ்வாருடைய திவ்ய பாசுரங்களை ஒத்த சிறப்பையும் இனிமையும் யுடைய மங்கையே
இனி இப்புறம் ஓர் சர வாதம் -இனி எனது ஊருக்கு இப்பால் செல்ல வேண்டிய இடம் ஓர் அம்பு வீழ்ச்சி அளவு தான்
சர பாதம் -சர வாதம் என்று விகாரப்பட்டுள்ளது-சர பாத ஸ்தானம் -எய்த அம்பு விழும் தூரம்
அப்புறம் அ தட பணையே காண் –அதற்கு அப்பால் முன்பு நான் சொல்லி இருக்கிற எனது ஊரின் எல்லை யாகிய மருத நிலமே காண்
ஆகவே
இனி பரவாது கேட்டு பைய நட -விரைவு கொள்ளாமல் நான் சொல்லும் வார்த்தையை கேட்டுக் கொண்டு மெல்ல நடப்பாய்
புணர்ந்து உடன் போந்த தலைமகன் நடந்து இளைத்த தலைவியைக் குறித்து இடந்தலைப் பெய்தமை சொன்ன பாசுரம் –
சம்சார மார்கத்தைக் கடந்து ஸ்ரீ வைகுண்டம் அழைத்துச் செல்லும் ஆழ்வார் அந்த ஸ்தானம் அணித்தமையைச் சொன்னவாறு –

——————-

பிரிவாற்றாது வருந்தும் தலைவி கார் கண்டு கலங்குதல் –

தடம் பணைத் தண் பொருநைக் குருகூரர் தகை வகுள
வடம் பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் மற்றை மாலை யெல்லாம்
உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த
விடம் பணைக் கொண்டனவே பனி தோய்ந்திடு மேகங்களே. 68–

தடம் பணைத் –அகன்ற வயல்களை யுடையதும்
தண் -நீர் வளத்தால் குளிர்ச்சியானதும்
பொருநைக் குருகூரர் –ஆழ்வாருடைய
தகை வகுள வடம் –அழகிய மகிழம் பூ மாலையை
எவ்வகைத் தாபத்தையும் தணிக்க வல்ல வகுள மாலை அன்றோ
பணைக் கொங்கையில் வைக்கின்றிலர் –பாங்கிமார் கொணர்ந்து பருத்த எனது கொங்கைகளிலே வைக்கின்றார் இல்லை
மற்றை மாலை யெல்லாம் உடம்பு அணைக்குந் தொறும் வெந்து உகும் –மற்ற மாலைகள் அனைத்தும்
விரஹ தாபத்தால் வெந்து பொடியாய் உதிர்ந்து விடும்
இந்நிலையில்
பனி தோய்ந்திடு மேகங்களே–நீர்த்துளி நிறைந்த மேகங்களோ
ஐந்து வெம் பாம்பு உமிழ்ந்த விடம் பணைக் கொண்டனவே -கொடிய ஐந்து பாம்புகள் ஒருங்கே உமிழ்ந்த விஷங்கள் போலெ திரண்டனவே
கொடிய ஐந்தலை நாகம் என்றுமாம் –
பொருள் ஈட்டி பின்பு கார் காலத்தில் மீண்டு வருவதாக சொல்லிப் போந்த தலைமகன் வாராமையாலே
ஆழ்வாருக்கு போலியான மேகங்கள் இந்நிலையில் வருத்தத்தை மிகுவிக்கும் -போலி கண்டு அழிதல் –

————-

பொருள் வயில் பிரிந்து சென்று மீளும் தலைமகன் முகிலொடு கூறல் –

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது மெய்யன் குருகூர்ப்
பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் கண்ணீரின் துளி பரந்த
மோகத்தை ஆற்றிக் கொண்டே கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச்
சோகத்தை ஆற்றிக் கொண்டே துளித் தூவத் தொடங்குகவே. 69–

மேகத்தை ஆற்றில் கண்டேன் என்று எண்ணாது –மேகங்கள் ஆகிய உங்களை இடை வழியிலே கண்டு
செய்தி கூறினேன் என்று இதனை ஒரு இழிவாக நீங்கள் நினையாமல்
மெய்யன் குருகூர்ப் பாகத்தை ஆற்றும் சொல்லாளைக் –உண்மைப் பொருளையே உணர்த்தும் ஆழ்வாரது
மிக இனிய சொற்களை யுடைய என் காதலியை
கண்ணீரின் துளி பரந்த மோகத்தை ஆற்றிக் கொண்டே –விஞ்சியுள்ள மோஹத்தை தணிவித்துக் கொண்டே
நீங்கள் சமீபிப்பவர்களாய்
கண்ட மாற்ற மொழிந்து சிந்தைச் சோகத்தை ஆற்றிக் கொண்டே –நீங்கள் வருகிற வழியில் நான்
மீண்டு வருவதைக் கண்ட செய்தியைச் சொல்லி அவளது விரஹ வேதனையை சாந்தப்படுத்திக் கொண்டே
துளித் தூவத் தொடங்குகவே.-மழைத் துளி பெய்யத் தொடங்குவீர்களாக
மேகங்களை பாகவதர்களாக சொல்லாத தட்டில்லையே
ஆழ்வார் வரை அறிவித்து ஆஸ்வாசப்படுத்த சொன்னபடி

——————

மதங்கு -மதங்கம் — மதங்கியார் -மண்டலம் சுற்றுதல் –

தொடங்கு கின்றாள் நடம் சொல்லு கின்றேன் குருகூரர் தொழா
மடங்கு கின்றாள் மண்டலம் சுற்றி யாடுகின்றாள் மதங்கி
விடங்கு கண்டார் பிழைப்பார் சவையீர் விரைந்து ஏகுமிந்த
படங்கு விண்டால் பின்னைப் போக ஒண்ணாது உம் பதிகளுக்கே. 70–

சவையீர்–சபையில் உள்ளவர்களே
சொல்லு கின்றேன்-நான் உங்களுக்கு ஒரு உறுதி சொல்கின்றேன் -கேளுங்கள்
மதங்கி–ஆடல் பாடல் வல்ல ஓர் இள மங்கை
நடம் தொடங்கு கின்றாள்–கூத்தாடத் தொடங்குகின்றாள்
குருகூரர் தொழா மடங்கு கின்றாள் –ஆழ்வாரை தொடக்கத்திலே தொழுது திரைக்குள்ளே திரும்பிச் செல்லுகின்றாள்
மண்டலம் சுற்றி யாடுகின்றாள் -மண்டலமாக அங்கேயே இருந்து சுழன்று கூத்தாடுகின்றாள்
விடங்கு கண்டார் பிழைப்பார் -இந்த மதங்கியின் அழகைக் கண்டு காதல் நோயால் மரண வேதனைப்படாது
பிழைப்பவர் எவர் -எவரும் இல்லை என்றபடி
இந்த படங்கு விண்டால் உம் பதிகளுக்கே பின்னைப் போக ஒண்ணாது –இந்தத் திரையை வாங்கி விட்டால் –
அவளது அழகைக் கண்டு மோஹித்து விழாமல் உங்கள் ஊருக்குப் போக முடியாதே
ஆதலால்
விரைந்து ஏகும் -யாத்திரை வாங்குவதற்கு முன்னே அப்பால் போய் விடுங்கோள் –

பக்தி அதிசயத்தைக் கண்டவர் இவர் பக்கல் ஈடுபடுவதை விட்டு
பிரபஞ்ச விஷயங்களில் செல்ல இயலாமையைச் சொன்னவாறு

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-51-60- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 23, 2021

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே பிறர் பால்
வெறும்பாக் கிளத்தி மெலிகின்ற என்னை வினை கொடுப் போய்
எறும்பாக்கிய தமியேனை அமரர்க்கும் ஏற விட்டான்
குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து ஆண்ட குருகை மன்னே. 51–

பெறும் பாக்கியமுள்ள போதும் பிழைப்பு முண்டே -அதிர்ஷ்டம் இருக்கும் போதும் அந் நன்மை மிகுதி நேராமல் தவறுதல் உண்டோ -இல்லை என்றபடி
பிறர் பால் வெறும்பாக் கிளத்தி -மற்றவர் மேல் பயன் இல்லாத பாடல்களைப் பாடிக் கொண்டு
மாரி அனைய கை–மால் வரை ஒக்கும் திண் தோள் என்று பாரிலோர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே -திருவாய் மொழி

மெலிகின்ற -திரிந்து இளைக்கின்றவனும்
என்னை வினை கொடுப் போய் எறும்பாக்கிய தமியேனை -தீ வினைகளால்
வலிய இழுத்துக் கொண்டு சென்று எறும்பு போல் எளியவனாக்கி -வேறு கதி அற்றவனான என்னை
இரும் பாடு எரி கொள்ளியினுள் எறும்பு போல் உருகா நிற்கும் என்னுள்ளம் -கலியன்

குறும்பாக்கிய முப் பகை தவிர்த்து-தீமைகள் செய்யும் படியான மூன்றுவகை பகைகளையும்-
காமம் கோபம் மயக்கம் -போன்றவை -வித்யா மதம் குல மதம் சீல மதம் -உயர் பிறப்பு மதம் -போல்வனவும் – போக்கி
ஆண்ட குருகை மன்னே-கைங்கர்ய ஸ்ரீ யும் அளித்து அருளி
அமரர்க்கும் ஏற விட்டான்-தேவர்களிலும் மேலாக்கி அருளி விட்டான் –

விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -என்றுமாம் –

அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –

———-

குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே எம்மை யுள்ளும் சுற்றும்
இருகூர் வினையும் அறுத்து இறப் பார்க்கும் இயற்கை யவ்வூர்
அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே. 52–

எம்மை யுள்ளும் சுற்றும்–ஜீவாத்மாக்களான நம்மை -புறத்தே அன்றே அகத்தும் சூழ்ந்து உள்ள
இருகூர் வினையும் அறுத்து-மிகுதியாக புண்ய பாப இருவகை கர்மங்களையும் துணித்து
சஞ்சிதம் ப்ராரப்தம் ஆகாம்யம் அனைத்தையும் என்றுமாம்

இறப் பார்க்கும்-அவ்வினை மரத்தை வேரோடு அழியும் படி செய்வதான
பார்த்தல் -செய்தல் என்ற பொருளில் வந்தது இங்கு
இயற்கை-தன்மை கொண்ட
குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி -ஆழ்வார் அடியார் குழாங்களுடன் கூடி
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -ஸ்ரீ மன் நாதமுனிகள் -ஸ்ரீ பராங்குச தாஸர் போல்வார்
அன்புற்று-அவர்கள் பக்கல் அன்பு பூண்டு அவரகள் அன்புக்கும் அபிமானத்துக்கும் இலக்காகியும் என்றுமாம்

இன்புற்று -பாட பேதம் –
ஒரு கூரையில் உறைவார்க்கும் உண்டே -அவர்களுடன் நித்ய வாஸம் செய்பவர்களுக்கும் உள்ளதேயாம்
தொண்டக்குடியாக இருந்தால் என்றபடி
மற்றும்
யவ்வூர் அருகு ஊர் அருகில் அயல் அயலார்க்கும் அரியதன்றே–சமீபத்தில் உள்ளாருக்கும்
அடுத்து அடுத்து வேறு ஊரில் உள்ளாருக்கும் உண்டே

அருகு ஊர் -நவ திருப்பதிகள்
அசலூர் -திரு வழுதி வள நாட்டில் உள்ளவை
அதன் அயலார் -ஆழ்வார் சம்பந்தம் உடையார் அனைவரும்
இரண்டு ஏவகாரங்களும் தேற்ற ஏவகாரம்

———-

தலைவன் பிரிந்த நிலையில் ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல் –

அன்றாத அன்றிலையும் அன்று வித்து என்னை அன்னையுடன்
பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் பிழைக் கொழுந்தை
ஒன்றாத வண்ணம் உபாயம் இயற்றியது ஊழ் வினையை
வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே. 53–

அன்றாத அன்றிலையும் அன்று வித்து -எவருடன் பகை கொள்ளாத அன்றில் பறைவையுடனும் இப்பொழுது
என்னுடன் பகை கொள்ளும் படி செய்து அருளி
குருகு -கிரௌஞ்சம் -எப்பொழுதும் இணையுடனே இருக்குமே
அன்றுதல் – பகைத்தல்
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டனை -கலியன்
என்னை அன்னையுடன் பின்றாத வண்ணம் எல்லாம் பின்று வித்துப் -என்னுடைய செவிலித் தாயுடன் மாறுபடத்
தகாத வகைகளில் எல்லாம் மாறுபாடச் செய்வித்து அருளி
பிழைக் கொழுந்தை ஒன்றாத வண்ணம் -இளஞ்சந்த்ரனை என்னுடன் வேறுபாடு கொள்ளும்படி
உபாயம் இயற்றியது –சூழ்ச்சி செய்து அருளியது
யாதோ என்னில்
ஊழ் வினையை வென்றான் குருகைப் பிரான் மகிழே யன்றி வேறில்லையே–விதியை வென்ற ஆழ்வாருடைய
மகிழம்பூ மாலையே தவிர வேறே ஒன்றும் இல்லையே

ஆழ்வார் மனக் கண்ணில் தோன்றி பாஹ்ய ஸம்ச்லேஷம் பெறாமல் வருந்தி அருளிச் செய்யும் பாசுரம் இது –

———–

வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனலது தேறத் தகும் செந் தமிழ்ப் புலவர்க்கு
ஏறே எதிகளுக்கு இன்னமுதே எறி நீர்ப் பொருநை
ஆறே தொடர் குருகூர் மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே. 54–

செந் தமிழ்ப் புலவர்க்கு ஏறே -கவி ஸிம்ஹமே
எதிகளுக்கு இன்னமுதே–ராமானுஜர் போல்வாருக்கு ஆராவமுதமே
எறி நீர்ப் பொருநை ஆறே தொடர் குருகூர் -அலை வீசுகின்ற நீர்ப்பெருக்கை யுடைய தாமிரபரணி
இடையறாது பாயப்பெற்ற திருக்குருகூரில் திரு அவதரித்த
மறையோர் பெற்ற ஆணிப் பொன்னே–வைதிகர்கள் பெறாப் பேறாகப் பெற்ற மாற்று உயர்ந்த அரும் பொன் போன்றவரே
வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்
தேறேன் எனல் -இவன் சிறப்பாக அன்பு உள்ள அடியவன் என்று என்னைக் குறித்து மனப் பூர்வகமாக நம்ப மாட்டேன் என்று கொள்ளாதே
அது தேறத் தகும் -அங்கனம் மெய்யடியவனாக என்னை நீ நம்பத்தகும்

———–

பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே புலமைக் கொருவர்
உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ உயற் நாற் கவியும்
பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் பெருந் தண் குருகூர்
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. 55–

பெருந் தண் குருகூர்-மகிமையுடைய -நீர் வளம் மிக்கு குளிர்ந்த திருக்குருகூரில் திரு அவதரித்த
தென்னை யுரைக்கும் இயற்கும் இசைக்கும் சிகாமணியே. -இயல் தமிழுக்கும் இசைத் தமிழுக்கும்
தலையில் அணியும் ரத்ன ஆபரணம் போல் அனைவராலும் கொண்டாடப்படுபவரே
பொன்னை உரைப்பது அப் பொன்னொடன்றே –மாற்று அறிய பொன்னோடே அன்றோ பொன்னை உரைத்துப் பார்ப்பது
அங்கனம் நோக்கப் புகும் இடத்து
உயற் நாற் கவியும் பின்னை உரைக்கப் பெறுவ தல்லால் — –எல்லை நிலமாகச் சொல்லத் தக்கது அல்லால்
புலமைக் கொருவர் உன்னை உரைத்துரைத் தற்கு உளரோ –உமக்கு ஈடாக மாற்று சொல்ல ஒருவரும் இல்லையே

தமிழுக்கு தென் மொழி -தென் சொல் -தென் காலை போல் தென்னுரை என்றும் உண்டே
ஆடவர் மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு -பெரிய திருமடல்
குருகையர் கோன் யாழின் இசை வேதத்து இயல் -என்பதால் சிகாமணி

———–

மகட் பாற் காஞ்சி -நின் மகளை எனக்குத் தருக என்ற அரசனிடம் மாறுபடுவது

மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய் வழியே
திணித்தா சழியச் சிதைமின் தலையை எம் தீ வினையைத்
துணித்தான் குருகைப் பிரான் தமிழால் சுருதிப் பொருளைப்
பணித்தான் பணி யன்றெனில் கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே. 56–

எம் தீ வினையைத் துணித்தான்–கர்மங்களைப் போக்கி அருளியவரும் –
பண்டை பல்வினை பாற்றி அருளியவர் அன்றோ
தமிழால் சுருதிப் பொருளைப் பணித்தான்-வேதம் தமிழ் செய்து அருளியவரும் –
அவ்வருமறையின் பொருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அன்றோ
குருகைப் பிரான் பணி யன்றெனில் –அவர் கட்டளை அன்றாயின்
மணித் தார் அரசன் தன் ஓலையைத் –இரத்தின மாலை அணிந்த அரசனது திரு முகத்தை
தூதுவன் வாய் வழியே திணித்து -தூதன் வாயினுள்ளே புகுத்தி அவன் வாயை அடைத்து
ஆசழியச் சிதைமின் தலையை -பெண்ணைக் கொடு என்று
கேட்ட குற்றம் தீருமாறு -அத் தூதன் தலையைத் துணுத்திடுங்கோள்
கொள்ளும் கொள்ளு மெம் பாவையையே-எம் குருகைப் பிரான் அன்றி மற்ற ஓர் அரசன் எமது பெண்ணைக் கொள்வான் போலும்
பாவை -சித்திரப் பிரதிமை -கண் மணிப் பாவை –கொல்லிப் பாவை போல் –

———–

பாவைத் திருவாய் மொழிப் பழத்தைப் பசும் கற்பகத்தின்
பூவைப் பொரு கடல் போதா அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பணித்த எம் கோவை யல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ மற்றை நாவலரே. 57–

பழத்தைப் -கனிந்த பலம் போன்ற இனிமை யுடையதும்
பசும் கற்பகத்தின் பூவைப் -வேண்டுவார் வேண்டுவற்றைக் கொடுப்பதாலும் அனைவரும்
தலை மேல் கொள்ளும் சிறப்பினாலும் கற்பக வ்ருக்ஷத்தின் மலர் போன்றதும்
பொரு கடல் போதா அமுதைப் -அலை மோதும் பாற் கடலில் நின்றும் தோன்றாத ஆரா அமுதமாயும் –
இல் பொருள் உவமை இது
பொருள் சுரக்கும் கோவைப் -நல்ல பொருளை சுரக்கும் காம தேனு வாகவும்
திருவாய் மொழிப் பாவைப் பணித்த எம் கோவை -திருவாய் மலர்ந்து அருளிச் செய்த எமது ஸ்வாமியான ஆழ்வாரை
யல்லா -அல்லாமல் பிறரை முன்பு கவி பாடிய
என்னைக்
குற்றம் கண்டென்-இவரை முன்னமே பாடாத குற்றம் யுடையவனாக உணர்ந்து
மற்றை நாவலரே என் நாவைப் பறிப்பினும் நல்லவரன்றோ -மற்றைப் புலவர்கள் எனது நாக்கைத் பிடுங்கினாலும் நல்லவர் அல்லரோ
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அது குறித்து அனுதாபம் கொண்டு அக்கழிவு இரக்கத்தால் கூறியது இது –
நாவலர் -கவனம் பிரசங்கம் போதனை முதலிய நாவின் வன்மை யுடையவர் என்றவாறு –

———-

நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள் கழியப்
பூவலந் தீவது போல்வ அல்லால் குருகூர்ப் புலவன்
கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் எங்கும் போய்க் கெழுமிக்
கூவலந் தீம் புனலும் கொள்ளுமே வெள்ளம் கோளிழைத்தே. 58–

நாவலந் தீவில் –அம் நாவல் தீவில் -அழகிய ஐம்பூத் வீபத்தில்
கவிகள் எல்லாம் சில நாள் கழியப்–பிறர் பாடிய பாடல்கள் சில நாள்கள் கழிகிற அளவிலே
பூவலந் தீவது போல்வ அல்லால் -மலரின் மணம் மென்மை முதலிய சிறப்புக்கள் கெட்டு அழிவது போலேத் தாம் கெட்டிடுமே யல்லாமல்
குருகூர்ப் புலவன் கேவலந் தீங்கு அறுப்பான் கவி போல் -பண்டை வல் வினை பற்றி அருளும் ஆழ்வார் பாசுரங்கள் போல்
எங்கும் போய்க் கெழுமிக்-எல்லா இடங்களிலும் பரவி
வெள்ளம் கோளிழைத்தே–வெள்ளத்தைப் போவதாய்
ஆழ் பொருளான பரமாத்மாவைத் தெளிவாகக் காட்டி அருளும்
பிரளய வெள்ளத்திலும் அழியாமல் நிலை நின்று
அதுக்கும் மேலே
கூவலந் தீம் புனலும் கொள்ளும்மே –கிணற்றில் உள்ள அழகிய இனிய நீரையும் கொள்ள மட்டுமோ -மாட்டாது என்றபடி
கிணற்று நீர் -போல் அந்தர்யாமித்வத்தையும் விளக்கிக் காட்ட வல்லது -என்றபடி

————–

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன் தமிழால்
குழைந்தார் குருகையிற் கூட்டம் கொண்டார்க்கும ரித் துறைவர்
மழைத்தார் தடக் கைகளால் என்னை வானின் வரம்பிடை நின்று
அழைத்தார் அறிவும் தந்தார் அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே. 59–

இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை -அபவ்ருஷேயமான நித்யமான வேதங்களை
இன் தமிழால் குழைந்தார் -தமிழால் தளைக்கச் செய்து அருளியவரும் –
குருகையிற் கூட்டம் கொண்டார்-திருக் குருகையில் சேர்ந்த -திரு அவதரித்தவரும் —
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாருடனும் இங்கேயே சேர்ந்து அவருக்கும் அருள் புரிந்தார்
குமரித் துறைவர்-கன்னியாகுமரி என்னும் தீர்த்தத்துக்கு உரியவருமாகிய ஆழ்வார்
பாண்டிய மன்னனை -குமரித் துறைவன் என்றும் கன்னித் துறைவன் என்றும் சொல்வது உண்டே
வானின் வரம்பிடை நின்று–பரமபதத்தை எல்லையில் நின்று கொண்டு
மழைத்தார் தடக் கைகளால் என்னை அழைத்தார் -மேகம் போன்ற வண்மையான திருக்கைகளால்
என்னை அவ்விடத்துக்கு வா என்று அழைத்தார்
அறிவும் தந்தார் -அது மாத்ரமும் இல்லாமல் அங்கு செல்லுவதற்கு உரிய தத்வ ஞானத்தையும் தந்து அருளினார்
அங்கும் போயவர்க்கு ஆட் செய்வனே–ஆதலால் இங்கு அர்ச்சா ரூபியான ஆழ்வாருக்கு
கைங்கர்யம் செய்வதோடு நிற்காமல் அங்கும் சென்று அவருக்கே அடிமை செய்வேன் என்கிறார் –

———–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தே னதன்றித்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் தண் குருகூர்
நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் இனி நாட் குறித்துக்
கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே. 60–

ஆட் செய்யலாவ தெல்லாம் செய் தடி யடைந்தேன் –அடிமைத் தொழில்கள் அனைத்தையும் செய்து
ஆழ்வார் திருவடி இணைகளை அடைந்தேன்
அதன்றித்-அது மட்டும் அல்லாமல்
தாட் செய்ய தாமரை என் தலை ஏற்றனன் –திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொருத்தப் பெற்றேன்
தண் குருகூர் நாட் செய்ய பூந்தொடை மாற னென்றேன் –ஆழ்வார் திரு நாமத்தையும் வைபவத்தையும்
திரு அவதார ஸ்தல மஹாத்ம்யத்தையும் பாராட்டிக் கூறினேன்
இனி-இப்படி ஆழ்வாரை சரண் அடைந்து ஏற்றிய பின்பு
நாட் குறித்துக் கோட் செய்ய லாவதுண்டே யென்றனாருயிர் கூற்றினுக்கே–யம பயம் தான் உண்டோ
உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறு கப் பெறா

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-41-50- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 23, 2021

மூர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற
தீர்த்தத்தினைச் செய்ய வேதத்தினைத் திருமால் பெருமை
பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் பணித்தானும் நின்ற
வார்த்தைக் குருகைப் பிரானும் கண்டான் அம் மறைப் பொருளே. 41–

மூர்த்தத்தினை–ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும்
இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற தீர்த்தத்தினைச் –ஸமஸ்த உலகங்களும் அடங்கும் இடமான
ஸ்வயம் பரிசுத்தமான பர ப்ரஹ்மத்தின் தன்மையையும்
செய்ய வேதத்தினைத் -செவ்வியை யுடைய வேதங்களையும்
திருமால் பெருமை பார்த்தற்கு அருளிய பாரதத்தைப் –ஸ்ரீ கீதாச்சார்யன்
அர்ஜுனனுக்கு உபதேசித்து அருளிய ஸ்ரீ பகவத் கீதையை யுள் அடக்கிய மஹா பாரதத்தை
பணித்தானும் -அருளிச் செய்த வேத வியாச பகவானும்
நின்ற வார்த்தைக் குருகைப் பிரானும் -நிலை நிற்கும் திவ்ய ஸூ க்திகள் அருளிச் செய்து அருளிய ஆழ்வாரும்
நின்ற வார்த்தை -நிலை பெற்ற புகழ் என்றுமாம் –
ஆகிய இருவருமே
கண்டான் அம் மறைப் பொருளே-ரஹஸ்ய வேத ஸாரார்த்தங்களை அறிந்தவர்கள்
பணித்தானும் கண்டான் -குருகைப் பிரானும் கண்டான் என்றவாறு –

———

பொருள் வயிற் பிரியும் தலைவனுக்குத் தோழி தலைவியின் ஆற்றாமை கூறுதல் –

பொருளைச் சுவை யென்று போவ தெங்கே குரு கூர்ப் புனிதன்
அருளைச் சுமந்தவள் கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே. 42–

குரு கூர்ப் புனிதன் அருளைச் சுமந்தவள் -ஆழ்வாரது கருணையை மிகுதியாகப் பெற்றவளான தலை மகளினது
கண்ணின் கடை -கண்களின் நுனி இடத்தை
திறந்து -திறந்து -அவ்வழியாக வெளிப்பட்டு
ஆறுபட்டுக்–ஒரு ஆறாகி
குருளைச் சுமந்து வெளி பரந்து ஓட்டரும்–பலவகை விலங்கின் குட்டிகளை இழுத்து மேற் கொண்டு
வெளியான நிலம் எங்கும் பரவி ஓடுவதான
கொள்ளை வெள்ளம்-மிகுதியான கண்ணீர்ப் பெருக்கானது
உருளைச் சுடர் மணித் தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே.–சக்கரங்கள் பூண்ட -ரத்தினங்கள் பதித்த
தலைமகன் தேரை வந்து மோதுகின்றதே
பிரயாணத்துக்குத் தடை செய்கின்றது என்றவாறு

இங்கனமாக
பொருளைச் சுவை யென்று போவ தெங்கே –தலைமகன் செல்வதை இனியது என்று எண்ணி –
அதன் பொருட்டு இவளைப் பிரிந்து செல்வது எவ்வாறு என்றவாறு –

கண்ணின் கடை திறந்து ஆறுபட்டுக்
குருளைச் சுமந்து வெளி பரந்தோட் டரும் கொள்ளை வெள்ளம்-என்றதும்
தேரை அந்தோ வந்து உதைக்கின்றதே-என்றதும்
அதிசய யுக்தி வகையால் கண்ணீர்ப் பெருக்கை காட்டியவாறு –

உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற -பெரியாழ்வார் –
ஓட்டம் தந்து என்பதையே ஓட்டந்து என்று விகாரப்பட்டது

ஆழ்வார் கம்ப நாட்டாரை விஷயீ கரித்து திவ்ய தேச யாத்திரை செர்ல்ல யத்தனிக்க
அப்பிரிவை ஆற்றாது நின்ற நிலையை அன்பர்கள் ஆழ்வார் பக்கலிலே
விண்ணப்பம் செய்தல் இதுக்கு ஸ்வா பதேசம் –

————

மருங்கு அணைதல் –

வந்து அடிக் கொண்டன கொங்கைகள் மாறன் குருகை வஞ்சி
கொந்து அடிக் கொண்ட குழலும் கலையும் குலைந்தலைய
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே. 43–

மாறன் குருகை வஞ்சி-ஆழ்வார் திரு நகரியிலே வஞ்சிக்கொடி போல் உள்ள இந்த இளைய மாதினிடத்தே
கொங்கைகள் -வந்து அடிக் கொண்டன -கொங்கைகள் -மங்கைப் பருவம் தோன்ற
வளர்ந்து மார்பின் இடம் எல்லாம் தம்மிடமாகக் கொண்டன
இங்கனம் தனது பாரம் மிக்கதானால்
கொந்து அடிக் கொண்ட சூழலும் கலையும் குலைந்தலைய–பூங்கொத்துக்கள் நிறைய சூட்டப் பட்ட கூந்தல் பாரமும்
உடுத்த ஆடையும் நிலை குலைந்து சோருமாறு -இம் மெல்லியலாள்
பந்து அடிக்குந் தொறும் நெஞ்சம் பறை யடிக்கின்றது –இவள் இடைக்கு என்னாகுமோ என்று
நெஞ்சம் பட பட என்று துடிக்கின்றது என்றால்
செந்தடித் தன்ன மருங்கிற்குண்டோ நிற்கும் சிக்கனவே.–செவ்விய மின்னல் போன்ற இவள் இடைக்கு
இப்பாரங்களை -துவளாது நின்று -சுமக்கும் வல்லமை இருக்குமோ

வாடிடை நோக்கி வருந்தினன் போல் ஆடமை தோழியை ஆர்வமோடு அணைதல்

இவரது பக்தி வளர்ச்சியும் ப்ராணாமம் முதலிய முயற்சிகள் நிலை குலையும்படி நேர்கிற
பிரபஞ்ச போக லீலைக்கு அவர் உரியர் அல்லாமையும்
அவரது வைராக்யத்தின் முதிர்ச்சியையும் பாராட்டிக் கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்

இடை அழகு -ஒன்றும் பொறாத வைராக்யத்தையே காட்டும்
வேறு ஒன்றின் தொடர்பு உண்டானால் இடையே இல்லாதபடி இடையறாத அன்பின் மிகுதியைக் காட்டும்
கொங்கை பக்தி -பகவத் பாகவத அனுபவ உபகரணம்
வந்து அடிக் கொள்ளுதல் –அதன் முதிர்ச்சி -பரம பக்தியாக பரிணமித்தல்
கொந்து அடிக் கொண்ட குழல் -விதி முறைப்படி செய்யும் பிரணாமம்

—————

கன வாயினவும் துரியமும் ஆயவையும் கடந்து
மன வாசகங்களை வீசிய மாறனை மா மறையை
வினவா துணர்ந்த விரகனை வெவ் வினையைத் தொலைத்த
சின வாரணத்தைக் குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே. 44–

கன வாயினவும் -ஸ்வப்ன அவஸ்தையின் வகைகளும்
துரியமும் –துரிய அவஸ்தையும்
ஆயவையும் கடந்து-மற்ற அவற்றின் இனமான ஜாக்ரத ஸூஷ்ப்தி அவஸ்தைகளையும் கடந்து
மன வாசகங்களை வீசிய -மநோ வாக்குகளைக் கடந்த
மாறனை –ஆழ்வாரை
மா மறையை வினவா துணர்ந்த விரகனை -எம்பெருமானாலேயே மயர்வற மதி நலம் அருளப்பட்ட ஆழ்வாரை
வெவ் வினையைத் தொலைத்த சின வாரணத்தைக் –யானை போன்றவரும் -சடகோபர் அன்றோ
குருகைக்கு அரசனைச் சேர்ந்தனமே–ஆழ்வாரை சரணம் அடைந்தோமே
ஆழ்வார் திருவடிகளே சரணம் -என்றபடி

———

சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு வேதம் செப்பும்
பேராயிரம் திண் பெரும் புயம் ஆயிரம் பெய் துளவத்
தாரார் முடியாயிரம் குரு கூர்ச் சட கோபன் சொன்ன
ஆரா அமுதம் கவி ஆயிரம் அவ் வரியினுக்கே. 45–

அவ் வரியினுக்கே–அந்த ஸ்ரீ ஹரி -ஸ்ரீ மன் நாராயணனுக்கு
வேதம் செப்பும் பேராயிரம் -நாமோ ஸஹஸ்ரவான் -பேர் ஆயிரம் உடையான் அன்றோ
திண் பெரும் புயம் ஆயிரம் –தோள்கள் ஆயிரத்தாய்
பெய் துளவத் தாரார் முடியாயிரம்– திருத்துழாய் மாலை பொருந்திய முடிகள் ஆயிரத்தாய்
இப்படி அனைத்துமே ஆயிரமாக -எண்ணிறந்தவையாக -அமையப் பெற்ற எம்பெருமானுக்கு
குரு கூர்ச் சட கோபன் சொன்ன ஆரா அமுதம் கவி ஆயிரம் –வான் திகழும் சோலை மதிள் அரங்கன்
வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் –
மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் –
சேராதன உளவோ பெருஞ் செல்வரக்கு -மற்றும் இவருக்கு சேராத பொருள் உண்டோ –

————

தோழி இரங்கல் –

அரிவளை பொன் மகிழ் ஆயிழைக்கு ஈயும் கொல் அந்தி வந்து
முரிவளை முத்தும் சினையும் மயங்க முறை செறுத்து
வரி வளையும் அன்னமும் தம்மிலே வழக்காட வலம்
புரிவளை யூடறுக்கும் குருகூர் எம் புரவலனே. 46–

முரிவளை முத்தும் -பெரிய சங்கினால் பெறப்பட்ட முத்தும்
சினையும்-அன்னப்பறவை ஈன்ற முட்டையும்
மயங்க-நீர்த்துறையிலே கலந்து மாறாடினவாக
அவற்றைக் குறித்து
வரி வளையும் அன்னமும் -உள் சுழியை யுடைய சங்கும் அன்னப் பறவையும்
முறை செறுத்து தம்மிலே வழக்காட–ஒன்றன் பொருளை மற்றது தன்னது என்று மயங்குவதால்
நீதி முறை கடந்து தமக்குள்ளே -ஒன்றோடு ஓன்று வழக்காட
வலம் புரிவளை யூடறுக்கும்–வலம்புரி சங்கு சென்று நாடு நின்று அவற்றின் போரை விலக்குவதற்கு இடமான
குருகூர் எம் புரவலனே.-ஆழ்வாரான நம் தலைவர்
அந்தி வந்து-இன்று மாலைப் பொழுதில் மீண்டு வந்து
அரிவளை பொன் மகிழ் -வண்டுகள் சூழ்ந்து மொய்க்கப் பெற்ற அழகிய தனது மகிழம்பூ மாலையை
அரி வளை -தான் கவர்ந்த அபஹரித்த வளை என்றுமாம்
ஆயிழைக்கு ஈயும் கொல் -தேர்ந்து எடுத்து அணிந்த ஆபரணங்களை யுடைய இம்மட மங்கைக்குக் கொடுத்து அருள் வானோ

கம்ப நாட்டாழ்வாருக்கு மனக்கண்ணில் சேவை சாதித்து மறைந்த ஆழ்வார் இடம் பிரிவாற்றாமையாலே
அவர் ஸதா ஸாந்நித்யத்தை அபேக்ஷித்து ஆதாரத்தோடு கூறும் வார்த்தை இதுக்கு ஸ்வா பதேசம்
அரிவளை பொன் மகிழ்–சார க்ராஹிகள் மிக விரும்பி விடாத தம் காட்சி இன்பம்
ஆயிழை -ஆத்ம பூஷணம் -ஸத்குணவாதி
அந்தி வருதல் -உரிய சமயத்தில் உபேக்ஷியாது வருதல் –

——–

தலைவி கடலை நோக்கித் தேர் வழி தூரல் என்றல்

புரை துடைத்துப் பெரும் பொய்யும் துடைத்துப் பிறர் புகலும்
உரை துடைத் தங்குள்ள வூச றுடைத் தெம் முறு பிறவித்
துரை துடைத் தாட் கொண்ட தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை
கடை துடைக்குங் கடலே துடையேல் அன்பர் கால் சுவடே. 47–

புரை துடைத்துப் –ஐம் புலன்களால் உண்டாகும் குற்றங்களை போக்கி
பெரும் பொய்யும் துடைத்துப் -அவற்றுக்கு மூல காரணமான மகா மாயையும் போக்கி
பிறர் புகலும் உரை துடைத்து -புற சமயத்தார் வாதங்களை பொருந்தாமை காட்டிக் கழித்து
அங்குள்ள வூசல் துடைத்து -பரதத்வ நிர்ணயத்தில் தடுமாற்றத்தையும் தீர்த்து
எம் முறு பிறவித் துரை துடைத்து ஆட் கொண்ட -பிறவித்துயர் தீர்த்து கைங்கர்யமும் கொண்டு அருளிய
தொண்டர் பிரான் துறை நீர்ப் பொருநை-ஆழ்வார் திருமஞ்சன துறையுடைய தாமிரபரணி
கடை துடைக்குங் கடலே -பெரு வெள்ளமாக வந்து கரையை உடைக்கப் பெற்ற கடலே
துடையேல் அன்பர் கால் சுவடே.-கருணையால் நிர்ஹேதுகமாக சம்ச்லேஷித்து சென்ற தலைவனது
திருவடிச் சுவட்டை அழித்திடாதே

ஸம்ஸார ஆரணவத்தை நோக்கி கம்ப நாட்டாழ்வார் தமது மநோ ரதம் அழியாமல் இருக்க
பிரார்த்திப்பது இதுக்கு ஸ்வா பதேசம் –
கடலில் நதி கலப்பது -ஆழ்வார் சம்பந்தத்தை இந்த லீலா விபூதிக்குக் காட்டி உறவு கொண்டாடின படி

———————

செவிலித்தாய் நல் தாய்க்கு இருவர் காதலும் உரைத்தல் —

சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து சங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க் கொலை யானை நங்காய்
இவடிறத்து ஒன்றும் படர்ந்தி வானம் இருள்கின்றதே. 48–

நங்காய்-செவிலித்தாய் நல் தாயை விளித்து
இரண்டு கவடிறக் -தனக்கு முன்னும் பின்னும் உள்ளனவாய்த்த தன்னைக் காட்டுதற்கு ஆதாரமான மரத்தறிகள் இரண்டும் ஓடிய
உள் பகை புறப்பகை -வஞ்ச வர்க்கம் இரண்டும் அழிய என்றவாறு தலை மகன் பக்ஷத்தில்
கட்டிய பாசத் தளைக் கண் பரிந்து -தன்னைக் கட்டிய கால் விலங்காகிய சங்கிலியின் பொறுத்து வாயைத் துணித்திட்டு
சுவடிறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்து -மத ஜலம் பெருகுகிற அடையாளம் மிகுதியாகத் தொடர்ந்து
இருக்கப் பெற்ற திக்கஜத்தை நாடிச் சென்று -அதனோடு போர் தொடர்ந்து
சங்கம் குவடிறக் குத்திய -அழகிய மலைச் சிகரங்களை ஓடியுமாறு -தந்தங்களினால் குத்திய
மாறப் பெயர்க் கொலை யானை -மாறன் என்னும் பெயரை யுடைய கொல்லுதல் வல்ல யானையானது
படர்ந்தி வானம் இருள்கின்றதே–பிரிந்தாருக்குத் துன்பத்தைச் செய்கின்ற சாயம் காலத்திலேயே இருள் அடைகிற அளவிலே
இவள் திறத்து ஒன்றும் -இவள் பக்கல் தவறாது வந்து சேர்ந்து விடும்

ஆழ்வார் உரிய காலத்தில் வந்து கைக்கொள்ளுவார் என்பதே ஸ்வா பதேசம் –
கொலையானை -ராமானுஜ முனி வேழம் போல் -வி பக்ஷிகளை சித்ரவதை பண்ணவும்
தாம் பரிக்ரஹித்தவர்களை பட்டாபிஷேக யோக்யராம் படி பண்ணவும் வல்லவர் –
இந்த யானைக்கு மதம் -ப்ரஹ்மானந்தம்
சங்கக் குவடிறக் குத்திய மாறன் -சங்கப்பலகையில் கண்ணன் கழலிணை -ஏத்தி புகழ்ந்த ஐதிக்யம் அனுசந்தேயம்

———–

இருளாய்ப் பரந்த உலகங்களை விளக்கும் இரவி
பொருளாய்ப் பரந்தது தான் பொது நிற்றலின் மற்றது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே. 49–

இருளாய்ப் பரந்த -இருள் மிக்குப் பரவப் பெற்ற
உலகங்களை -நில உலகத்தின் பகுதிகளை எல்லாம்
விளக்கும் -இருள் ஒழித்து விளங்கச் செய்கின்ற
இரவி-ஸூர்ய மண்டலம்
பொது நிற்றலின்-எல்லா வுயிர்கட்க்கும் பொதுப்பட உதவி செய்து நிற்றலால்
பொருளாய்ப் பரந்தது –உலகம் முழுவதும் காணப்படும் பொருளாய் விளங்கிற்று
அது போல்
மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாற னெங்கோன்
அருளால் –பலரும் மருளும்படி பரவுகிற மாயையினால் ஆகும் சோர்வு இல்லாத மாறன் கருணையினால்
சமய மெல்லாம் பரன் உண்டென்று அறிவுற்றதே.–ஸ்ரீ மன் நாராயணன் உளன் என்று அறிந்து கொண்டனவே
வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ

——–

அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்
செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது செய்தாரை யில்லா
நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப்
பிறிவேன் எனவும் எண்ணா தென்னை வீடு பெறுத்தினையே. 50–

அறிவே -எனது உணர்வே
மற்றை ஆகம வாதியரைச் செறிவேன் என ஒன்று சிந்தை செய்யாது–வேதம் இருக்க அதனை விட்டு
அதற்கு மாறான ஆகமங்களை ப்ரமாணமாகக் கொண்டு துர்வாதம் செய்பவராகிய புறச் சமயத்தாரை சேர்வேன்
என்ற தீய சிந்தனை ஒன்றையும் கொள்ளாமல்
செய்தாரை யில்லா நெறிவே நின்றா நிலை யுணர்ந்தோன் குருகூர் நிலத்தைப் பிறிவேன் எனவும் எண்ணாது -தன்னைச் செய்தவர்
எவரையும் உடையது அல்லாததும் சன்மார்க்கத்தையே போதிப்பதுமாகிய வேதத்தில் ஊன்றி
பரதத்வத்தை அறிந்தவராகிய ஆக்வாறது திரு அவதார ஸ்தலமான திருக்குருகூரை விட்டுப் பிரிய எண்ணவும் செய்யாமல்
தென்னை வீடு பெறுத்தினையே-நீ முக்தி பெறவும் செய்து அருளினாயே -அந்த மஹா உபகாரகத்துக்கு
உனைத் தொழுதேன் –
உன்னை நான் நமஸ்கரித்தேன்

நெஞ்சமே நல்ல நல்ல உன்னைப் பெற்றால் என் செய்யோம் இனி என்ன குறைவினம் போல்
இங்கு தமது உணர்வைக் கொண்டாடுகிறார்

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-31-40- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

July 22, 2021

மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறு படுத்து
உய்யும் மெய்யாய உபாயம் வந்துற்றது உறு வினையைக்
கொய்யும் மெய் வாள் வலவன் குருகைக் கரசன் புலமை
செய் மெய்யன் தனக்கே தனித் தாளன்பு செய்த பின்னே. 31-

உறு வினையைக்-மிக்க கருமங்களை
கொய்யும் -அறுத்து ஒழிக்கின்ற
மெய் வாள் வலவன் –ஸத்ய வாக்காகிய வாள் படையின் தொழிலில் வல்லவரும்
குருகைக் கரசன் -திருக்குருகூருக்குத் தலைவரும்
புலமை செய் மெய்யன் தனக்கே -ஸ்வரூப ஞானம் உபதேசித்து அருளும் பிரதம ஆச்சார்யரான ஆழ்வாருக்கே
தனித் தாளன்பு செய்த பின்னே.–ஒப்பற்ற திருவடிகளில் நான் பக்தி செய்த பின்பே
எனக்கு
மெய்யும் மெய்யாது -உண்மைப்பொருளும் உண்மையாக விளங்கிற்று –
மெய் -ஜீவ பரமாத்ம ஸ்வரூபங்கள்
பொய்யும் பொய்யாது -பொய்மைப் பொருள்களும் பொய்யாகப் புலப்பட்டன
பொய் -தேகம் பிரகிருதி -பொய் நின்ற ஞானம் போல்வன
வேறு படுத்து-இங்கனம் பகுத்து அறிந்த பின்பே
உய்யும் -ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு உரிய
மெய்யாய உபாயம் வந்துற்றது -உண்மையான உபாயமும் எனக்கு வந்து ஸித்தித்தது

————-

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர
வய்யம் கரி யல்ல மாட்டா மறை மதுரக் குருகூர்
அய்யன் கவி யல்லவேல் பிறவிக் கடலாழ்வது அல்லால்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் இவ் வுயிர்களுக்கே. 32–

செய்யன் கரியன் எனத் திரு மாலைத் தெரிந்துணர-ஸ்ரீ யபதியை -செய்யன் கரியன் என்று ஆராய்ந்து அறிய
செய்ய வாய் செய்ய கண் செய்ய கால் செய்ய கை -செய்ய அவயவங்களையும்
நீல மேனி கருமையும் ஆராய்ந்து அறியார்கள் அன்றோ
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-7-என்றால் போலே
அடையாளங்களைத் திருந்தக் கண்டு
வய்யம் கரி யல்ல -வையகத்து உயிர்கள் சாக்ஷி யாக மாட்டாதே
மாட்டா மறை -வேதங்களும் அப்படியே
அவன் ஸ்வரூபத்தை இன்னது இப்படிப்பட்டது என்று உரைக்க சக்தி கொண்டவை அல்லவே
யாதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்டதே
ஆகவே
மதுரக் குருகூர் அய்யன் கவி யல்லவேல் –ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்கள் இல்லாமல் போயிருந்தால்
இவ் வுயிர்களுக்கே. பிறவிக் கடலாழ்வது அல்லால்-உயிர்கள் எல்லாம் பிறவிக் கடலில் ஆழ்ந்து போவது அல்லாமல்
உய்யும் வகை யொன்றும் யான் கண்டிலேன் -உஜ்ஜீவன உபாயம் ஒன்றுமே யான் கண்டேன் அல்லேன்

—————

உயிர்த் தாரையில் புக்கு உறு குறும்பாம் ஒரு மூன்றனையும்
செயிர்த்தார் குருகை வந்தார் திரு வாய்மொழி செப்பலுற்றால்
மயிர் தாரைகள் பொடிக்கும் கண்ணீர் மல்கும் மா மறையுள்
அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் எங்கள் அந்தணர்க்கே. 33–

உயிர்த் தாரையில் புக்கு உறு –உயிர் செல்லுகிற வழியிலே உடன் சென்று கூடுகிற
குறும்பாம் ஒரு மூன்றனையும்–முக்குறும்புகளையும்
செயிர்த்தார் -வெறுத்து ஒழித்தவராகிய
குருகை வந்தார் திரு வாய்மொழி -திவ்ய பிரபந்தங்களை
செப்பலுற்றால்-ஓதி உணரத் தொடங்கினால்
எங்கள் அந்தணர்க்கே–எங்களை ஆள உரியவர்களாக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஸ்ரீ மன் நாதமுனிகள் போல்வார்
மயிர் தாரைகள் பொடிக்கும் –உடம்பில் உள்ள மயிர் ஒழுங்குகள் சிலிர்ப்பு கொள்ளும்
கண்ணீர் மல்கும் –ஆனந்தக் கண்ணீர் நிறைந்து பெருகப் பெறும்
மா மறையுள் அயிர்த்தார் அயிர்த்த பொருள் வெளியாம் –பொருள் உணர்த்துவதற்கு அரிய பெருமையை யுடைய
வேதங்களின் கருத்துக்களில் புற சமயத்தார் சந்தேகித்த அர்த்தங்கள் எல்லாம் விளங்கும்

—————-

அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்
வந்தவர்க்கோ மறம் வாதியர்க்கோ மதுரக் குழை சேர்
சுந்தரத் தோளனுக்கோ அவன் தெண்டர்கட்கோ சுடர் தோய்
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே. 34–

அந்தணர்க்கோ -வேதியர்கட்காகவோ
நல் அருந்தவர்க்கோ -சிறந்த தபஸ்ஸூக்கள் செய்பவர்கட்காககோ
அன்றி யோகியராய் வந்தவர்க்கோ -அல்லது யோக அப்யாஸம் செய்பவர்கட்காகவோ
மறம் வாதியர்க்கோ -பிணக்கர்களாய் புற சமயத்தார்கட்காகவோ
மதுரக் குழை சேர் சுந்தரத் தோளனுக்கோ –ஸ்ரீ மன் நாராயணனுக்கட் காகவோ
அவன் தெண்டர்கட்கோ -அவன் அடியார்களுக்காகவோ
சுடர் தோய்-சந்தன ஸூர்யர்கள் விண் ஒளி கள் தன் மேல் படும்படி
தொடர்பு உயர்வு நவிற்சி அணி -சோலைகளின் மிக்க உயர்ச்சியைக் காட்டும் –
சந்தனச் சோலைக் குருகைப் பிரான் வந்து சந்தித்ததே.–ஆழ்வாரது திரு அவதாரம் –
இவர்களுக்கு எல்லாம் தனித்தனியே ப்ரயோஜன கரமாம் படி அன்றோ இவரது ஆவிர்பாவம்
எனவே இவ்வாறு விகல்பித்து அருளிச் செய்கிறார் –

————-

சந்ததியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலுகிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே. 35–

சந்ததியும் -எழுத்து புணர்ச்சி இலக்கணத்திலும்
சந்திப் பதமும் -அங்கணம் புணர்வதற்கு உரிய பாதங்களின் இலக்கணத்திலும்
அவை தம்மிலே தழைக்கும் பந்தியும் -அச் சொற்களில் மிக்கு விளங்குகிற பொருள் இலக்கண வகைகளிலும்
பல் அலங்காரப் பொருளும் -பலவகை அலங்கார அணி இலக்கண விஷயங்களிலும்
பயிலுகிற்பீர்-பழகுகிற இலக்கண புலவீர்காள்
தென் குருகூர் தொழுதார் செய்யும் தேவரையே. –திருக்குருகூரை சேவித்து
வந்தியும் -நமஸ்கரியுங்கோள்
வந்திப்பவரை வணங்கும் வகை யறிவீர்-அந்த ஆழ்வார் அடியார்களை வணங்குகிற ஸ்ரீ வைஷ்ணவர்களை
வணங்கும் விதத்தை அறிவீர்கள்
சிந்தியும் -அவர்களை தியானமும் செய்யுங்கோள் –

———-

பாங்கி வெறி விலக்கிச் செவிலியருக்கு அறத்தொடு நிற்றல்

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்
பூவரை ஏறிய கோதை யுள்ளம் புகுந்தார் எவர் என்று
அவரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று இறைவர்
மூவரையோ குரு கூரரையோ சொல்லும் முந்துறவே. 36–

தேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்–தெய்வ ஆவேசம் கொண்ட கட்டு விச்சியை சீர் கெடுத்து விட்டீர்கள்
பூவரை ஏறிய கோதை –மலர்களை அளவாகச் சூட்டப் பெற்றுள்ள கூந்தலுடைய இவ்விள மங்கையுடைய
யுள்ளம் புகுந்தார் எவர் என்று -மனத்தில் புகுந்து வறுத்துபவர் யார் என்று நீங்கள் வினவியத்தைக் குறித்து
அக்கட்டுவிச்சி
அவரை ஏறி மொழிகின்ற போது இயம்பிற்று -நமது உறை யுள்ளின் எல்லையில் ஏறி-
கட்டுவிச்சி கட்டேறி போல் – வந்து விடை கூறுகிற போது சொன்னது
இறைவர் மூவரையோ -த்ரிமூர்த்திகளையோ
குரு கூரரையோ -ஆழ்வாரையோ
சொல்லும் முந்துறவே. –என் முன்னே சொல்லுங்கோள்

தேவு மற்று அறியேன் –மதுரகவி நிலையைப் பெற்ற கம்ப நாட்டாழ்வார்

—————-

துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்
அறவா அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி
கறவாக் கிடப்பர் அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே. 37–

துறவாதவர்க்கும் -இல்லத்தாருக்கும்
துறந்தவர்க்கும் -துறவறத்தாருக்கும்
சொல்லவே சுரக்கும்-ஓதும் அளவிலேயே சகல புருஷார்த்தங்களையும் அளிக்கும்
அறம் ஆ அவை இங்கு ஓர் ஆயிரம் நிற்க -பரம தர்ம ரூபமான ஆழ்வாரது திவ்ய பிரபந்தங்கள் சிறப்புற்று இங்கே இருக்க
அந்தோ சிலர் போல்
மற வாதியர் சொன்ன வாசக மாம் மலட்டாவைப் பற்றி–மலட்டுப் பசுவை பலன் தருவதாகக் கொண்டு
கறவாக் கிடப்பர் -கறந்து கொள்ள முயல்வர்
அங்கு என் பெறவோ தங்கள் கை வலிப்பே.-அங்கு கை நோவப் பெறுவது பலன் ஒன்றுமே இல்லையே –
இது என்ன பேதைமை
குரு பரம்பரை உள்ள ஸம்ப்ரதாயத்து பால் அன்றோ இது –

————-

மடலூரத் துணிந்த தலை மகளின் வழி ஒழுகித் தோழி இரங்குதல் –

கை தலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை
உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ சென்று அவ்வூர் அறிய
வைதலைத்து ஏசுதுமோ குருகூர் என்னும் ஆறு அறியாப்
பைதலைக் கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே. 38–

குருகூர் என்னும் ஆறு அறியாப்–தலை மகன் இருக்கும் திவ்ய தேசப் பெயரையும்
வாயினால் சொல்லும் விதத்தையும் அறியாது இருந்த
பைதலைக் -இளைமை யுடைய இம்மகளை -சிறு கிளிப் பைதலே -திருவாய் மொழியிலும் உண்டே
கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய –முறை கேடு தலைக்கு ஏறி பனை மடல் குதிரையின் மேல் ஏறுமாறு செய்த
கோகு உகட்டுதல் –கும்பிடு நட்டமிட்டு ஆடி கோகு கட்டுண்டு உழலாதார் –திருவாய் மொழியிலும் உண்டே
கோகு -அடைவு கேடு
உகட்டுதல் -தலை மண்டியிடுதல் -மேலிடுதல்
பண்பனையே–குணத்தை யுடைய தலை மகனை -எதிர்மறை லக்ஷணம்
சென்று–அவனது ஊருக்கு யாம் சென்று
கை தலைப் பெய்து –கைகளைத் தலை மேல் வைத்துக் கொண்டு
அரும் பூசலிட்டுக் -பொறுத்தற்கு அரிய பேர் ஆரவாரத்தைச் செய்து
கவியால் உலகை உய்தலைச் செய்ததும் பொய் என்றுமோ -ஆழ்வார் பாசுரங்களால் உலகத்தின் துன்பம் தீர்ந்து
வாழுமாறு செய்தனன் என்பதையும் பொய் என்று சொல்லி முறையிடுவோமோ
அவ்வூர் அறிய வைதலைத்து ஏசுதுமோ -அங்குள்ளார் அனைவரும் அறியும்படி நிந்தித்து கலக்கம் விளைத்துப் பழிப்போமோ

கோகு உகட்டிட்டு ஏட்டில் ஏற்றிய பண்பனையே
கம்ப நாட்டாழ்வாருக்கு ஆழ்வார் முதலிலே பக்தியை உண்டாக்கி -அதனை அபிவிருத்தியாம்படி செய்து –
அவரை பிரபந்தம் பாடும்படி செய்வித்தது ஆழ்வாரது திரு அருளே –
ஸாந்நித்யம் கால விளம்பம் பொறாமல் -இவ்வாறு கூறும் வகையால் அவரை ஆற்றுதல்

—————

பண்ணும் தமிழும் தவம் செய்தன பழ நான்மறையும்
மண்ணும் விசும்பும் தவம் செய்தன மகிழ் மாறன் செய்யுள்
எண்ணும் தகைமைக்கு உரிய மெய் யோகியர் ஞானம் என்னும்
கண்ணும் மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே. 39–

மகிழ் மாறன் செய்யுள் எண்ணும் தகைமைக்கு -திவ்ய பிரபந்தங்களை சிந்தனை செய்வதாகிய பெருமைக்கு
உரிய மெய் யோகியர்-ஏற்ற ஞான பக்தி யோகங்களை யுடையவர்களுடைய
பாவின் இன்னிசை பாடித்திரிவனே -மதுர கவி ஆழ்வார் -அருள் பெற்ற நாதமுனிகள் போல்வாருடைய
ஞானம் என்னும் கண்ணும் மனமும் செவியும் – –அறிவாகிய அகக் கண்ணும் -மனமும் -காதுகளும்
தவம் செய்த காலத்திலே
பண்ணும் தமிழும் -குறிஞ்சி முதலிய பண்களும் தமிழ் மொழியும் தவம் செய்தன
பழ நான்மறையும் மண்ணும் விசும்பும் தவம் செய்தன –

———-

காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடை நாள்
ஆலத்திலே துயின்றோர் கொண்டவை யிரண்டா யமைந்த
கோலத்திலே முளைத்துக் கொழுந் தோடிக் குணங்கடந்த
மூலத்திலே செல்ல மூட்டிய ஞானத்து எம் மூர்த்தியையே. 40–

கடை நாள்–கல்பாந்த காலத்திலே
ஆலத்திலே துயின்றோர்–ஆலிலையில் யோக நித்ரை செய்து அருள்பவரான எம்பெருமான்
கொண்ட–கரும வசத்தால் அன்றியே இச்சையாலே எடுத்துக் கொண்ட
ஐ யிரண்டா யமைந்த கோலத்திலே –தசாவதாரங்களிலே
முளைத்து–அடிக் கொண்டு
கொழுந் தோடி-கொழுந்து விட்டு வளர்ந்து
குணங்கடந்த மூலத்திலே செல்ல மூட்டிய -இழி குணங்களைக் கடந்த ஆதி மூலப் பெருமாளாகிய
அந்த ஸ்ரீ மன் நாராயணன் பக்கலிலே -பலரும் செல்லுமாறு —
தமது திவ்ய பிரபந்தம் மூலமாக பலருக்கும் ஆதரத்தை உண்டாக்கி அருளிய
ஞானத்து எம் மூர்த்தியையே–தத்வ ஞான பரி பூர்னரான ஆழ்வாரையையே
குருகூர் புக்குக் கைக் கொண்மினோ -கால விளம்பம் இன்றி -பழுதே பல பகலும் போக்காது –
திருக்குருகூர் சென்று சரண் புக்கு உஜ்ஜீவியுங்கோள்
ஞானத்தை மூட்டிய ஆழ்வார் என்றுமாம் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்