ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –
———-
(கீழே வலிய மனம் கொண்டவன் என்று வெறுத்து அருளிச் செய்தார் அன்றோ
அநேக காலம் ஆபி முக்யம் காட்டி விலகி நின்ற நாம் அவன் முயற்சியால் அத்வேஷம் லேசம் பிறந்து
பசித்த குழந்தைக்கு சோறு இடும் தாய் போல்
ருசி வந்த உடனே அனுக்ரஹித்து மேலே மேலே வளர்த்து உபகரிப்பவன் அன்றோ
ஸ்ரீ வித்துவக்கோடு அம்மானையே பார்த்து இருக்க அருளிச் செய்த ஸ்ரீ குலசேகரப் பெருமாள் போல் இந்த பாசுரம் )
சேஷ பூதன் சேஷி செய்த படி கண்டு இருக்கும் அத்தனை அல்லது
வெறுத்துத் தப்பச் செய்தோம்–என்கிறார்
மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை
சினமாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து -புனமேய
தண் துழாயான் அடியைத் தான் காணும் அஃது அன்றே
வண் துழாம் சீரார்கு மாண்பு –51-
பதவுரை
மனம் ஆளும்–மனத்தையும் தங்கள் வசத்திலே அடக்கி ஆளுமவையான
ஓர் ஐயர்–ஒப்பற்ற பஞ்சேந்திரியங்கனென்கிற
வன் குறும்பர் தம்மை–பிரபலர்களான துஷ்டர்களை
சினம் மாள்வித்து–கோவமடங்கச் செய்து
ஓர் இடத்தே சேர்த்து–(பகவத் விஷயமாகிற) ஒரு நல்ல இடத்திலே கொண்டு மூட்டி,
புனம் மேய தண் துழாயான் அடியை–தன்னிலத்திலே பொருந்திய குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள அப்பெருமானது திருவடிகளை
தாம் காணும் அஃது அன்றே–ஸேவித்துக் கொண்டிருப்பதன்றோ
வண் துழாம் சீரார்க்கு மாண்பு–அழகிய விசாலமான நற் குணங்களை யுடையவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அழகு.
மனமாளும் ஓர் ஐவர்
பள்ளிகள் கலஹம் போலே –
ஈஸ்வரனுக்கு ஆத்மா சேஷமாய் –
ஆத்மாவுக்கு மனஸ்ஸூ சேஷமாய்
மனஸ்ஸூ போன வழியே போகக் கடவதான இந்திரியங்கள் இருக்கும் முறை அன்றிக்கே
மனஸ்ஸை இந்திரியங்கள் ஆளும்படி இருக்கை
வன் குறும்பர்
மனஸ்ஸைத் தங்கள் போன வழியே கொடு போக வல்லராய் இருக்கை
இன்னதனை த்ரவ்யத்துக்கு அரசு செய்வாரைக் கிடைக்கும் என்னும் வன்னியரைப் போலே
ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை சினமாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து –
கர்ம பலமான க்ரோதத்தை முடித்து
காமாத் க்ரோதோபி ஜாயதே (2-62 )
(காமம் க்ரோதம் இரண்டும் ரஜோ குண பிள்ளைகள் –
நிறைவேறாத காமம் க்ரோதத்தில் கொண்டு போய் விடுமே )
பகவத் வ்யதிரிக்த விஷயங்கள் எல்லாம் இந்திரியங்களுக்கு இரை போராது இறே
எல்லா இந்திரியங்களும் அனுபவிக்கப் புக்கால் அனுபாவ்ய அம்சம் பெருத்து இருப்பது பகவத் விஷயம் இறே
இன்னம் கெடுப்பாயோ –திருவாய் -6-9-8-என்றும்
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ -திருவாய் –6-9-9- என்றும்
சிற்று இன்பம்–திருவாய் –6-9-9-என்றும் இறே இதர விஷயங்கள்
எல்லா இந்திரியங்களும் புஜித்தாலும் போக்யதை அளவிறந்து இருக்கும் என்னும் இடத்தைச் சொல்கிறது
சினம் ஆள்வித்து -சினத்தை முடித்து –
அத்தால் வந்த க்ரோதத்தைப் போக்க என்றபடி
புனமேய தண் துழாயான் அடி -என்று
வண்டுழாஞ்சீரார்கு மாண்பு–
மனமாளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மை சினமாள்வித்து
ஓர் இடத்தே சேர்த்துப்
புனமேய தண் துழாயான் அடியைத் தான் காணும் அஃது அன்றே
வண்டுழாஞ்சீரார்கு மாண்பு–
என்று அந்வயம்
ஆத்ம குண உபேதர்க்கு –வண்மை -துழாவின -சீரை யுடையவர்களுக்கு அழகாவது
இந்திரியங்களை ஜெயித்து (சினமாள்வித்து )
அவ்விந்திரியங்கள் எல்லாவற்றையும் பகவத் விஷயத்திலே சேர்த்து (ஓர் இடத்தே சேர்த்து)
செவ்வித் திருத்துழாய் மாலையை யுடையனாய் இருந்துள்ள ஸர்வேஸ்வரன்
திரு வடிகளைக் காண்கை அன்றோ முறை
அந்தோ வலிதே கொல் (50)-என்று வெறுக்கக் கடவதோ
வண் துழாம் சீர் என்கையாலே
சேஷி செய்தபடி கண்டிருக்கை ஒழிய வெறுக்கக் கூடாது என்கிறது
மாண்பு -அழகு -முறை என்றாய் பிராப்தம் என்றபடி –
————
(ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மாண்பு எது என்று பொதுவாக கீழே சொல்லி
இதில் தமக்கு திரிவிக்ரமன் கண்ணன் ஒருவரையே சேர்ந்து
பெற்ற அனுபவத்தை வெளியிட்டு அருளுகிறார்
உலகமாகத் தொட்ட அவதாரத்தையும் ஊராகத் தொட்ட அவதாரத்தையும் தாழ நின்ற ஸ்பர்சித்தவன் அன்றோ
எண்ணக் கண்ட விரல்களால் உண்ணக் கண்ட தனது ஊத்தை வாய்க்கு கவளம் போடுகிறார்களே -பெரியாழ்வார்
வாய் அவனைத்தவிர வாழ்த்தாது போல் இங்கும் )
பொதுவிலே சொன்னேன்
அது தான் எனக்கு உண்டாயிற்று -என்கிறார் –
மாண் பாவித்து அந் நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான் நம்
கண் அவா மற்று ஓன்று காணுறா சீர் பரவாது
உண்ண வாய் தானும் உறுமோ ஓன்று –52–
பதவுரை
அஞ்ஞான்று–முன்னொரு காலத்தில்
மாண்–வாமந வேஷத்தை
பாவித்து–பாவனை செய்து கொண்டு-ஏறிட்டுக் கொண்டு என்றபடி
மண் இரந்தான்–(மாவலியிடத்துச் சென்று) பூமியை யாசித்தவனும்
மாயவள்–பூதனையென்னும் பேய்ச்சியினுடைய
நஞ்சு–(முலையிலே தடவியிருந்த) விஷத்தை
ஊண் பாவித்து உண்டானது–உண்பதாகப் பாவனை செய்து அமுது செய்தவனுமான பெருமானுடைய
ஓர் உருவம்–விலக்ஷணமான திருமேனியை
காண்பான்–ஸேவிக்கும் விஷயத்திலே
நம் கண் அவா–நமது கண்களுக்கு ஆசை;
மற்று ஒன்று காண உறா–வேறொன்றையும் காண விரும்புகின்றனவில்லை!
வாய் தான்–வாக்கானது
சீர் பரவாது–(அவனது) திருக் குணங்களைப் புகழ்வது தவிர்த்து
ஒன்று–வேறொன்றை (சோற்றை)
உண்ண-உண்பதற்கு
உறுமோ–விரும்புமோ?
மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான்
மஹா பலி நான் தருவேனானால் இன்னும் அகல இரக்க மாட்டாயோ என்ன
இரந்ததுக்கு மேலே வேண்டா -என்று இருக்கிற
பால்யம் பாவித்து
அத்தைப் பொய் -என்கிறது அன்று –
அத்தையும் மெய்யாக்குகை
மாயவள் நஞ்சு ஊண் பாவித்துண்டானதோ ருருவம்
தாய் வேஷத்தைக் கொண்டு இவனுக்கு முலை கொடா விடில் தரியேன் -என்று
அவள் முலை கொடுத்தால் போலே
இவனும் உண்ணா விடில் தரியேன் என்று தாரமாகவே யுண்டான்
பேய் முலை நஞ்சு ஊணாக யுண்டான் -முதல் திரு -11-என்னும்படியே
காண்பான் நம் கண் அவா
கண்ணுக்கு அவா ஊண் பாவித்து உண்டானதோர் உருவம் காண்பான்
மற்று ஓன்று காணுறா
அது ஒன்றும் காண்கை செய் -என்று காண்கை
நாணி வேறே ஓன்று காணாமையே முடியும்
நயன இந்த்ரியத்துக்குகே யன்று
இந்த அர்த்தம் வாக் இந்த்ரியத்துக்கும் ஒக்கும்
சீர் பரவாது உண்ண வாய் தானும் உறுமோ ஓன்று
அவனுடைய கல்யாண குணங்களைச் சொல்லாதே வாக்கு
வேறே ஒன்றை உண்ண உறாது –
——————
(செங்கண் மாலே -கலங்கிய உனக்கு தெளிந்த அடியேன் சொல்ல வேண்டுமே –
இப்படிப்பட்ட உன்னை நினைந்து பரம ஆனந்தம் கொண்ட நாம் வேறே ஒன்றைப் பார்ப்பேனோ -நினைப்பேனோ )
என்னுடைய இந்திரியங்களும் உன்னை அனுபவிக்கும் படி யாயிற்று -என்ன
அவ்வளவேயோ –
இன்னும் சில யுண்டு காணும் உமக்குச் செய்யக் கடவது என்ன
எனக்குச் செய்யாதது உண்டோ -என்கிறார் –
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–53-
பதவுரை
செம்கண் மால்–(அடியார்கள் மீது வாத்ஸ்ல்யத்தாலே) சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலே;
யான் உரைப்பது–அடியேன் விண்ணப்பஞ் செய்வது
ஒன்று உண்டு–ஒரு விஷயமுண்டு;
அவர்க்கு–இப்படி பார்க்கின்ற நீ அடியவர்களுக்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–ஸ்ரீவைகுண்டமென்று சிறப்பித்துச் சொல்லி உதவுகின்ற பரம பதமானது.
நீ–நீயோ வென்றால்
உன் அடியார்க்கு–உனது அடியார்களுக்கு
(எத்தனை நன்மை செய்தும் த்ருப்தி பெறாமல்)
என் செய்வன் என்றே இருத்தி–இன்னமும் என்ன நன்மை செய்வோமென்றே பாரித்திரா நின்றாய்;
நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் இனிதோ–உனது திருக் குணங்களிலேயே ஊன்றி யிருக்கப் பெற்ற
தமது சிந்தையிற் காட்டிலும் சிறந்ததோ?
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது
ஆரேனுமாகத் தெளிந்தார் கலங்கினார்க்குச் சொல்லக் கடவது இறே
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
நிரபேஷர்க்கு–என் செய்வன் -என்று இருக்கிற தர்மம் தான் எப்போதும் ஒருபடிப் பட்டு இருக்கும்
தூர வாஸிநம் ருணம் ப்ரவ்ருத்த மிவமே ஹ்ருதயான் நாபசர்பதே –
பாண்டவர்கள் முடி சூடின அன்றும்
திரௌபதி குழல் முடித்த பின்பும்
பார்த்தாக்கள் சந்நிஹிதராய் இருக்க அவர்களை ரக்ஷகர் என்று நினையாதே
தன் பேர் சொன்னவளுக்குத் திரு உள்ளத்திலே தனிசு -ருணம் – பட்டு இருக்குமா போலே
அந்த ஆனு கூல்யமுடையார்க்கு என்றும் என் செய்வேன் என்று இருத்தி –
நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு வைகுந்தம் என்று அருளும் வான்
உன் புகழிலே தங்குகிற சிந்தையில் காட்டில் இனிதோ
நீ போரப் பொலியச் சொல்லிக் கொடுக்கிற பரமபதம்
ஸித்தத்துக்கு இடை நிற்குமோ ஸாத்யம்
இதுக்கு அது யுக்தி ஸாரமே காரணம்
(குண அனுபவ யோக்கியமான இந்த ஜென்மத்தில் காட்டில் பரம பதம் ஸ்லாக்யம் என்கைக்குக் காரணம்
பரமபதம் யுக்தி சாரமாய் இருப்பதே என்று யதா ஸ்ருத பங்க்தி தாத்பர்யம் )
—————-
உம்முடைய பிரதிபந்தகம் செய்தது என் -என்ன
நானும் அறிகிறிலேன் -என்கிறார் –
வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54-
பதவுரை
ஆன் ஈன்ற கன்று–பசுவினால் பெறப்பட்ட வத்ஸாஸுரனை
உயர எறிந்து–(விளா மரத்தின்) மேலே வீசி யெறிந்து
காய் உதிர்த்தார்–(அவ்விளா மரத்தின்) காய்களை உதிர்த்த கண்ண பிரானுடைய
தாள்–திருவடிகளை
பணிந்தோம்–ஆஸ்ரயித்தோம் (அதன் பிறகு)
(கன்று குணிலா எறிந்த கழல் போற்றி )
வன் துயரை–வலிய (நமது) பாவங்களை
மருங்கு கண்டிலம்–ஸமீபத்தில் காணோம்;
ஒருங்கிற்று–(அப் பாவங்கள்) மறைந்து போனவிடம்
வானோ–ஆகாசமோ?
மறி கடலோ–மடிந்து மடிந்து அலை யெறிகிற கடலோ?
மாருதமோ–காற்றோ?
தீயகமோ–நெருப்போ?
கானோ–காடோ?
(இன்ன விடத்தில் மறைந்து போயின வென்று தெரிய வில்லை;)
ஆ ஆ ஆல்–ஐயோ பாவம்.
வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ கானோ
ஆகாஸ கமனம் பண்ணிற்றோ
மஹா ப்ரஸ்த்தானம் -மஹா விந்த்யம் -பண்ணிற்றோ
ஒருங்கிற்றும்
இவற்றில் எங்கே சேர்ந்தது
மருங்கும் கண்டிலமால் –
(கீழ் உள்ள உம்மைத் தொகை இங்கும் சேர்த்து )
சமீபத்திலே காணாது ஒழிகையால்
ஒருங்கிற்றுக் கண்டிலமால் -என்றதிலே
மருங்கு என்றது பொருள் இன்றிக்கே நிற்கும்
என் அருகில் காணோம் என்றபடி –
ஆ ஈன்ற கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம் வன் துயரை ஆ ஆ மருங்கு
பிரபல பிரதிபந்தகங்களைப் போக்குமவர் திருவடிகளிலே பணிந்தோம்
நம்மோடே நெடு நாள் பழகிப் போந்த வலிய துயரை அருகும் கண்டிலோம்
இவர் எங்கே புக்கு முடித்தார்
ஐயோ ஐயோ என்கிறார் –
—————-
(பிரதிபந்தகங்கள் போன பின்பு பலம் அனுபவிப்பதே கர்தவ்யம்
அவனே வந்து காட்டக் கண்டு விலக்காமல் அனுபவிக்கலாம் )
மருங்கோத மோதும் மணி நாகணையார்
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே
எமக்கு அவரைக் காணலாம் எப் பொழுதும் உள்ளால்
மனக் கவலை தீர்ப்பார் வரவு –55-
பதவுரை
வரவு–(தம்முடைய) வருகையினாலே
மனம் கவலை தீர்ப்பார்–(நமது) மனத்திலுள்ள துன்பங்களைத் தொலைப்பவரும்
மருங்கு ஓதம் மோதும்–ஸமீபத்திலே கடலலை மோதும் படியாக. (திருப்பாற்கடலிலே)
மணி நாக அணையார்–மாணிக்கத்தை யுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையவருமான பெருமான்.
மருங்கே வர அரியர் எலும்–(ஒருவர்க்கும் ஸ்வ ப்ரயத்தாலே அணுகி வந்து) கிட்ட முடியாதவராயினும்
எமக்கு–நமக்கு
அவரை–அப் பெருமானை
உள்ளால்–மனத்தினால்
ஒருங்கே–ஒரே தன்மையாக
எப்பொழுதும் காணலாம்–எப்போதும் கண்டு அநுபவிக்கட்டும்.
வரவு மனக் கவலை தீர்ப்பார்
அருகே கடலில் திரைத் திவலை துடை குத்தத் திருவனந்த ஆழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளுகிறவர்
அருகே செல்ல அரியரேலும் நமக்கு ஒருபடிப்பட ஹ்ருதயத்திலே எப்போதும் உளர்
வரவு
மனக் கவலை தீர்ப்பார்
மருங்கோத மோதும் மணி நாகணையார் மருங்கே வர அரியரேலும்
நமக்கு
ஒருங்கே
உள்ளால்
அவரை எப்பொழுதும் காணலாம்
என்று அந்வயம்
மனஸ்ஸிலே ஒருபடிப்பட எப்போதும் காணலாம் என்றபடி
(பிரஜாபதி தும் வேத –இத்யாதி –நாம் அறிந்து பற்ற அடைந்தாலும் அடையலாம் அடையாமலும் போகலாம்
யார் ஒருவனை அவன் வரிக்கிறானோ அவன் நிச்சயமாக அடைகிறான் )
————–
(உபாயம் அனுஷ்டிப்பவன் அவன் தானே நம்மை பெற்று
மகிழ்ந்து நம்மையும் மகிழ்விக்க
அனுபவமே நமது கர்தவ்யம்
தானும் அறியாதே ஸாஸ்திரமும் சம்மதியாதே
தானே அறிந்த ஸூஹ்ருத விசேஷம் வியாஜ்யமாக அருளுபவர் அன்றோ )
எல்லாருக்கும் அருகும் செல்ல அரியவன்
உமக்கு எளியனான படி என் -என்ன
நானும் அறியேன் -என்கிறார் –
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–56—
பதவுரை
ஒருவன்–எந்த சேதனனும்
ஒரு ஆறு–எந்த உபாயாந்தரத்திலும்
புகா ஆறு–பிரவேசிக்க வேண்டாதபடி
(அவர்களுடைய காரியத்தைத் தானே ஏற்றுக் கொண்டு நடத்துவதற்காக)
உரு மாறும்–தனது ஸ்வரூப ஸ்வபாவங்களை மாற்றிக் கொள்ளுகிற
(தூதன் சாரதி மாணிக்குறள் போல் உரு மாறினவன் அவன் தானே )
ஆயவர் தாம்–ஸ்ரீகிருஷ்ணனானவனும்
சேயவர் தாம்–ஆஸுர ப்ரக்ருதிகளுக்கு) எட்ட முடியாதவனும்
அன்று உலகம் தாயவர் தாம்–முன்பொருநாள் உலகங்களைத் தாவி யளந்தவனும்
மாயவர் தாம்–ஆச்சர்யமான சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான்
காட்டும் வழி–காட்டுகிற உபாயம்
வரவு ஆறு ஒன்று–இன்ன வழியாக வந்ததென்று தெரியாது;
வாழ்வு இனிது–பலன் போக்யமாயிரா நின்றது;
ஆல் எல்லே–ஆச்சரியம்
வரவால் என் மனக் கவலை தீர்ப்பார் -வரவாறு ஓன்று இல்லையால்
அடி இல்லை யாகில் பலம் சுருங்கி இருக்குமோ என்னில்
வாழ்வு இனிதால்
பலம் அதிகமாய் இருக்கும்
எல்லே ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும் ஆயவர் தாம்
நமக்கு அடி யில்லை -என்று ஆராய வேண்டாதபடி
ஒரு வழியில் ஒருவனைப் புகாதபடி
தன்னுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களை அழியமாறும்
எல்லா உபாயங்களையும் விட்டு என்னையே பற்று என்கை
போக்தாவினுடைய உபாய அனுஷ்டானங்களை அவர்க்காகத் தான் அனுஷ்ட்டிக்கும் என்று கருத்து
எல்லாம் விட்டு என்னைப் பற்று என்னும் இவர்
சேயவர் தாம்
அர்ஜுனனுக்குக் கையாளாய் இருக்கச் செய்தேயும்
துர்யோத நாதிகளை அம்புக்கு இரையாக்கி அவர்களுக்குத் தூரியராய் இருக்குமவர்
அன்று உலகம் தாயவர் தாம் மாயவர் தாம் காட்டும் வழி
நினைத்த போது தாமே வந்து கிட்டுமவர்
இப்படி ஆச்சர்ய பூதரானவர் காட்டும் உபாயம்
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால்
—————–
வழித் தங்கு வல் வினையை மாற்றானோ நெஞ்சே
தழீ இக் கொண்டு பேராவுணன் தன்னை சுழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றி புலால் வெள்ளம் தானுகள
வாழ்வடங்க மார்விடந்த மால் –57-
பதவுரை
நெஞ்சே–நெஞ்சமே!
போர்–யுத்த பூமியிலே
அவுணன் தன்னை–இரணியாசுரனை
தழீஇக் கொண்டு–அழுந்தக் கட்டிக் கொண்டு,
புலால் வெள்ளம்–ரத்த ப்ரவாஹமானது
தாழ்வு இடங்கள் பற்றி–பள்ள நிலங்கள் பக்கமாக
எங்கும் சுழித்து உகள–கண்டவிடமெங்கும் சுழித்துக் கொண்டு அலையெறிந்து கிளரும் படியாக
வாழ்வு அடங்கா–(அவ்விரணியனுடைய செல்வச் செருக்கு ) வாழ்ச்சி முடியும்படி
மார்வு இடந்தமால்–அவனது மார்பைப் பிளந்த பெருமான்,
வழி தங்கு வல் வினையை–இடை வழியிலே நம்மைத் தங்கப் பண்ணுகிற (பிரதிபந்தகமான) வலிய பாவங்களை
மாற்றோனோ–(போக்கி யருள மாட்டானோ? (போக்கியே விடுவன்.)
வழித்தங்கு வல்வினையை மாற்றானோ
வந்தேறிகளான அவித்யாதிகளையும்
ப்ராப்ய ஆபாசங்களையும் போக்கானோ
ஹிரண்யனைப் போக்கினவனுக்கு இது ஒரு பொருளோ
நெஞ்சே தழீ இக் கொண்டு பேராவுணன் தன்னை சுழித்து
முரட்டு ஹிரண்யனை ஸ்பர்சித்துப் பள்ளம் எல்லாம் ருதிர வெள்ளம் சுழிக்கும் படி
எங்கும் தாழ்விடங்கள் பற்றி புலால் வெள்ளம் தானுகள வாழ்வடங்க மார்விடந்த மால்
பெரு நீரில் மும்மை பெரிது (பெரிய திருமொழி -11-4-4) -என்னும்படி
ருதிரம் வெள்ளம் இட அவன் ஐஸ்வர்யம் ஒடுங்க மார்விடந்த ஸர்வேஸ்வரன்
வழித் தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே
போர் அவுணன் -யுத்த உன் முகன்
தாழ்விடம் -தாழ்ந்த இடமாய் பள்ளம் என்றபடி
புலால் வெள்ளம் -ரக்த வெள்ளம் –
தளையவிழ் கோதை மாலை யிருபால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண்
அள வெழ வெம்மை மிக்க வரியாகி யன்று பரியோன் சினங்கள் அவிழ
வளை யுகிர் ஒளி மொய்ம்பின் மறவோனதாகம் மதியாது சென்று ஒரு உகிரால்
விள வெழ விட்ட குட்டமது வையமூடு பெரு நீரின் மும்மை பெரிதே –11-4-4-
———–
இனி உன்னுடைய அனுபவத்துக்கு அவிச்சேதமே வேண்டுவது -என்கிறார்
(திவி வா புவி வா மமஸ்து வாஸோ நரகே வா நரகாந்தக பிரகாமம்
அவதீரிதா சாரதார விந்தவ் சரணவ் தே மரணே அபி சிந்தயாமி –முகுந்த மாலை ஸ்லோகமும் இதே போல் உண்டே
இங்கேயே பரமபதத்தில் உள்ளார் போல் மறப்பின்னை ஆகிற பெரும் செல்வம் வேண்டும் என்கிறார் சமத்காரமாக )
மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் -மேலால்
பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று
மறப்பின்மை யான் வேண்டும் மாடு –58-
பதவுரை
மாலே–திருமாலே!
உனது–உன்னுடைய
பால் போல் சீரில் பழுந்தொழிந்தேன்-பால் போலப் பரம போக்யாமன திருக் கல்யாண குணங்களில் ஆழ்ந்து விட்டேன்;
கல்யாண குணங்கள் -இது தானே ஆழ்ந்து அனுபவிக்க முடியும் -பால் போல் ருசிக்கும்
தேஜஸ் சேவிக்க திருமேனி
இனி–இனிமேல்
பிறப்பு இன்மை பெற்று–வீடு பெற்று
அடிக் கீழ்–(உனது) திருவடி வாரத்திலே
குற்றவேல்–கைங்கரியம் பண்ணுவது
யான் வேண்டும் மாடு அன்று–அடியேன் அபேஷிக்கிற செல்வமன்று;
படிச் சோதி–(உன்னுடைய) திவ்ய மங்கள விக்ரஹ தேஜஸ்வை
சோதியை யுடைய படி -திவ்ய மங்கள விக்ரஹம்
மாற்றேல்–எனக்கு ஒரு காலும் மாற்றாமல் நித்யாநுபவ விஷயமாக்க வேணும் ;
மேலால்–மேலுள்ள காலத்திலே
(உன் திருவடிகளில் கைங்கரியம் பண்ண வேணுமென்று அடியேன் ஆசைப்பட வில்லை.)
மறப்பு இன்மை–உன்னை மறவாதிருந்தால் போதுமென்பதே
யான் வேண்டும் மாடு–அடியேன் ஆசைப்படும் செல்வம்.
மாலே படிச் சோதி
ஸர்வேஸ்வரத்வத்தையும்
ஸ்வா பாவிகமான விக்ரஹத்தையும் சொல்லுகிறது
ஆசா லேசமுடையார் பக்கல் வ்யாமோஹத்தையும்
த்வேஷம் பண்ணினாலும்
விடப் போகாத படியையும் சொல்லுகிறது என்றுமாம்
(யதிவா ராவண ஸ்வயம் என்றவர் தானே )
ஆத்ம குணங்களையும் தேஹ குணங்களையும் சொன்னதாகவும்
ஸ்வரூபம் ரூபம் இரண்டையும் சொன்னவாறு
படிச் சோதி –
ஸ்வா பாவிகமான விக்ரஹம் -என்னுதல்
விக்ரஹத்தினுடைய காந்தி என்னுதல்
மாற்றேல் இனி
வைத்த இறையிலியை -அநந்ய போக்யத்வத்தை -மாற்றாதே கொள்
(இறையிலி- வரி இல்லா நிலம் போல் நிர்ஹேதுகமாக )
இறையிலி ஏது என்னில்
உனது பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் –
இவ்விறையிலியை மாற்றாதே கொள்
மேலால் பிறப்பின்மை பெற்று அடிக்கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு
ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வகமாகப் பரம பதத்திலே உன் திருவடிகளிலே அடிமை செய்கை யன்று எனக்கு தனம்
பரமபதத்தில் நீ இருக்கும் இருப்பை மறவாமை
பரமபதத்திலே போனால் அல்லது மறவாமை இல்லாமையாலே பரம பதமும் வேண்டினாராய்ப் பலித்தது
(பாவியேன் என்று சொல் பாவியேன் காண வந்தே -சமத்காரமாக அருளியது போல்
சேவித்த மாத்திரத்திலே தொலையுமே
நித்தியமான அனுபவம் கொடு என்றாலே நித்ய விபூதியில் தானே நடக்கும் )
ஸாவித்ரியினுடைய பார்த்தாவை மிருத்யு கொடு போக என் பர்த்தாவைத் தர வேணும் -என்று அவனை அபேக்ஷிக்க
இது ஒன்றும் ஒழிய வேறே சில வேண்டிக் கொள் என்ன
இவன் வயிற்றிலே எனக்கு ஒரு பிரஜை யுண்டாக வேணும் -என்று வேண்டிக் கொண்டால் போலே –
இவருக்கு மறப்புத் தான் உண்டோ என்னில்
ப்ரக்ருதி ஸம்பந்தம் உடையார்க்கு வருமது நமக்கும் வாராதோ என்று பயப்படுகிறார்
ஊரடைய வெந்து கொண்டு வாரா நின்றால்
நம் அகம் ஒன்றும் பிழைக்கும் -என்று பயம் கெட்டு இருப்பார் உண்டோ –
——————-
(நித்யம் மறவாமை -என்று பிரார்த்தித்த மாத்திரத்தாலே -தத் அபிஷந்தி விராத மாத்ராத் –
பரமபத பிராப்தியும் -அதுக்கடியான கர்ம நிவ்ருத்திகளும் உண்டே
அத்தை இங்கே அருளிச் செய்கிறார்
அனுகூல்ய சங்கல்பம் மாத்திரத்தாலே பேறு அன்றோ
நமனும் உதகலனும் பேச கேட்கவே நரகமே ஸ்வர்க்கமாகுமே )
மாடே வரப் பெறுவாராம் என்றே வல் வினையார்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார் -ஊடே போய்
பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து –59-
பதவுரை
பேர் ஓதம்–விசாலமான கடலிலே
சிந்து திரை ஊடே போய்–சிதறி விழுகின்ற அலைகளினுள்ளே சென்று
கண் வளரும்–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
மா கடல் நீருள்ளான் -என்றும் ஷீராப்தி நாதன் என்றும்
பேராளன்–எம்பெருமானுடைய-ஆஸ்ரித பக்ஷபாதத்துக்கு எல்லை இல்லாதவன் –
பேர்–திரு நாமங்களை
ஓத–அநுஸந்திக்க வேணுமென்று
சிந்திக்க–நினைத்த மாத்திரத்திலே,
வல் வினையார்–கொடிய பாவங்கள்
பேர்ந்து–நம்மை விட்டுக் கிளம்பி
காடானும் ஆதானும் கைக் கொள்ளார்–காடுகளிலோ மற்றேதேனு மோரிடத்திலோ போய்ச் சேராமலிருக்கின்றனவே, (இது)
மாடு வரப் பெறுவராம் என்றே?–இன்னமும் நம்மிடத்திலே வாழப் பெறலாமென்கிற எண்ணத்தினாலோ?
கடலில் திரைகள் முறிந்து வந்து சிறு திவலை யாய்த் துடை குத்தக் கண் வளரா நின்று
ஆஸ்ரித விஷயத்தில் ஓரத்துக்கு எல்லை இன்றிக்கே இருக்கிறவருடைய
திரு நாமம் சொல்ல நினைத்தது அறிந்தால்
வல் வினையார் இங்கு நின்றும் போந்து தமக்குப் புகலாக
மலையாகிலும் கடலாகிலும் ஏதேனும் ஓன்று கைக் கொள்ளுகிறிலர்
கைக்கொள்ளாது ஒழிகிறது என்னருகே வரலாம் என்றே
ஊடே போய் –
உள்ளே போய் -திருமேனி அண்டையிலே போய் என்றபடி
ஊடே போய் பேரோதம் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து
வல்வினையார்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார்
மாடே வரப் பெறுவாராம் என்றே
என்று அந்வயம் –
—————
(ஈஸ்வரனை ஒளிந்தவர் ரக்ஷகர் அல்ல என்று ப்ரபன்ன பரித்ராணத்தில் சொன்னோம்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்
கண்ணில்லை மற்ற ஓர் கண்ணே )
பேர்ந்து ஓன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன் துழாய் மாயனையே என்னெஞ்சே-பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெந் நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லை காண் மற்றோர் இறை–60–
பதவுரை
என் நெஞ்சே–எனது மனமே!
பேர்ந்து ஒன்று நோக்காது–வேறொன்றையும் கணிசியாமல்
ஈன் துழாய் மாயனையே பின் நிற்பாய்–போக்யமான திருத் துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானையே பற்றி நின்றும் நில்லு;
நில்லாப்பாய்–அப்படி அவனைப் பற்றாதொழியினும் ஒழி;
தொல்லை–அநாதியாய்
மா–பெரிதாய்
வெம்–கடினமான
நரகில்–நரகத்திலே
சேராமல்–போய்ப் புகாமல்
காப்பதற்கு–நம்மை ரக்ஷிப்பதற்கு
பேர்ந்து மற்று ஓர் இறை–வேறொரு ஸ்வாமி
எங்கும் இல்லை காண்–ஓரிடத்திலுமில்லை கிடாய்.
பேர்ந்து ஓன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
வேறே ஒரு பதார்த்தத்தை நோக்காதே
அவனை அநு வர்த்திக்கிலும் அநு வர்த்தி
உனக்கு உரியையாய் அநர்த்தப் படிலும் படு
ஸ்வா தந்தர்ய அபிமானத்துடன்-விஷயாந்தர படு குழியில் விழுந்தாலும் விழு
ஈன் துழாய் மாயனையே என்னெஞ்சே-பேர்ந்து எங்கும் தொல்லை மா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு இல்லை காண் மற்றோர் இறை
ஸம்ஸார ஸம்பந்தம் அறுமைக்கு எங்குப் புக்காலும் அவனை ஒழிய ஆஸ்ரயணீய தத்வம் இல்லை
அவனை அநு வர்த்தி
ஸ்வ தந்த்ரமாய்க் கெடிலும் கெடு –
என்னெஞ்சே
தொல்லை மா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
எங்கும்
பேர்ந்து
மற்றோர் இறை
இல்லை காண்
ஆன பின்பு
பேர்ந்து ஓன்று நோக்காது
ஈன் துழாய் மாயனையே
பின்னிற்பாய்
நில்லாப்பாய்
என்று அந்வயம்
—————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply