ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–பாசுரங்கள் -31-40–

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

ஸர்வேஸ்வரனைக் கொண்டே விரோதியையும் போக்கி
அங்குத்தைக்குக் கைங்கர்யம் பண்ணும்படியும் ஆனோம் என்கிறார் –

(சென்றால் குடையாம் இத்யாதி -நிழலும் அடி தாறுமானாலே கைங்கர்யம் தானே )

அழகும் அறிவோமாய் வல் வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடி தாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடங்கடலை மேயார் தமக்கு–31-(வல் வினையும் தீர்ப்பான் -பாட பேதம் )

பதவுரை

நல் வினையை தீர்ப்பான்–வலிய பாவங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக
அழகும் அறிவோம் ஆய்–அழகிய உபாயத்தை அறிந்தோமாக,
குடங்கள்–குடங்களை
தலை மீது எடுத்துக் கொண்டு–தலையின் மேலே எடுத்து வைத்துக் கொண்டு
சுழல ஆடி–ஆகாசத்திலே சுழன்று வரும்படி கூத்தாடி
அன்று–முற்காலத்திலே (அக் குடக் கூத்தாடின விடாய் தீர்வதற்காக)
அத் தட கடலை மேயார் தமக்கு–(முதலில் விட்டு வந்த) அப் பெரிய திருப்பாற் கடலிலேயே போய்ச் சேர்ந்த பெருமானுக்கு
நிழலும் அடி தாறும் ஆனோம்–பாத நிழலாகவும் பாத ரேகையாகவும் உடன்பட்டோமானோம்.
(வல் வினையைத் தீர்ப்பதற்கு அறிந்த உபாயம் இதுவே.)

அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான் நிழலும் அடிதாறும் ஆனோம்
வல் வினையும் -பாட பேதம்
புதுப்புடைவை அழுக்குக் கழற்றுமா போலே
எலி எலும்பான -அல்ப சக்திகரான -நாம் கர்மத்தாலே நம்முடைய பாபத்தைப் போக்குகை அன்றிக்கே
ஸர்வேஸ்வரனைக் கொண்டு நம் பாபத்தைப் போக்கும் அழகை யுடையோமாய்
ஸர்வேஸ்வரனுக்கு சாயை போலவும் -பாதுகை -பாத ரேகை போலவும் ஆனோம்
(அடி தாறு -பாதுகை யாதல் -பாத ரேகை யாதல்
பாதுகை யானது எப்படி என்ன அருளிச் செய்கிறார்
இரண்டுமே திருவடிக்கு அளவாகவே தானே இருக்கும் )
அடி தாறு -அடிக்கு அளவாய் இருக்குமது

சுழலக் குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத் தடங்கடலை மேயார் தமக்கு
ஆகாசத்திலே சுழலும் படிக்கு ஈடாகக் குடங்களை எடுத்தாடி
தன்னை -மன்றிலே -நாற்சந்தியிலே –
ஸர்வ ஸ்வ தாநம் பண்ணிக் குடமாடின வேர்ப்புப் போகத்
திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற இவனுக்குச்
சாயை போலவும் ஆனோம்

(குடங்கடலை -குடங்கள் தலை
ஆடினவன் என்கையாலே வேர்ப்புப் போக –என்கிறது )

இளைய பெருமாள் படை வீட்டிலும்
காட்டிலும் ஓக்க அடிமை செய்தால் போலே
கிருஷ்ண அவதாரத்திலும்
திருப்பாற் கடலில் கண் வளர்ந்து அருளுகிற இடத்திலும்
ஓக்க அடிமை செய்யும் படி யானோம் –

அவனைக் கொண்டே பாபத்தைப் போக்கிக் கொள்ள வேணும்
என்கிற ஞானத்தை யுடையோம் என்றபடி –

————–

தாம் அடிமை செய்ய நிச்சயிக்க
நெஞ்சு ப்ரக்ருதி சம்பந்தத்தை உணர்ந்து பிற்காலியா நின்றது என்கிறார் –

(முந்துற்ற நெஞ்சே ஆரம்பம்
இங்கு விலகுவதால் குத்தலாக
நெஞ்சு மனம் போன படி -நெஞ்சுக்கும் மனமா
ஆழ்வார் நெஞ்சு இப்பேர் பட்டவனுக்கு நெருங்கவோ
ஆகவே பகவத் கைங்கர்யத்தில் இழிய மாட்டேன்
ஆழ்வாருக்கு இது தானே தீ வினை
அவனோ தாமோதனார் -மேல் விழுந்து -உயர்ந்த அபிப்ராயத்தால் -ஆர் -சப்த பிரயோகம்
நெஞ்சினார் -விலகுவதால் வெறுப்பில் ஆர் இங்கு )

தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கென்று
தாம் செய்யும் தீ வினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
யாம் செய்வது இவ் விடத்து இங்கி யாது–32-

பதவுரை

தமக்கு அடிமை வேண்டுவார்–தாம் அடிமையாயிருப்பதற்கு ஆசைப்படுமவரான
ஆசா லேசம் உள்ளாருக்கும் அடிமை செய்ய வேண்டுவானே
தாமோதரனார் தமக்கு–தாம்பாலாப்புண்ட பெருமானுக்கு
அடிமை செய் என்றால்–(நெஞ்சே! நீ) அடிமை செய் என்று சொன்னால்
நெஞ்சினார்–எனது நெஞ்சானது
செய்யாது–அப்படியே அடிமை செய்யாமல்
எமக்கென்று–என் வார்த்தை கேளாத ஸ்வாகத் திரியம் பாராட்டி
தாம் செய்யும தீ வினைக்கே–(வெகு காலமாகத்) தான் செய்து வருகிற தப்புக் காரியத்திலேயே
தாழ்வுறுவர்–ஊன்றியிருக்கின்றது;
நைச்யம் பாவித்து விலக்குவதே ஸ்வ பாவம்
அவன் ஒட்டி வர தம் மனம் போல் வெட்டிக் கொண்டு போவதே –
பெரிய நெஞ்சினார் குத்தலாக ஆர்
இங்கு–இப்படிப்பட்ட நிலைமையில்
யாம் செய்வது யாது–நான் செய்யத்தக்கது என்னோ?

தமக்கு அடிமை வேண்டுவார்
(தாம் ஆஸ்ரிதற்கு அடிமை செய்கையை வேண்டி இருப்பார் என்றபடி )
கைத்தது உகப்பார் புளித்தது உகப்பார் என்னுமா போலே
தமக்கு அடிமையை உகக்குமவர்
அது எங்கே கண்டோம் என்றால்

தாமோதரனார்
அநு கூலையான தாயார்க்கு
அடி யுண்பது
கட்டு யுண்பது ஆன இடத்திலே கண்டோம்

(தமக்கு ஆஸ்ரிதரை அடிமை கொள்ள வேண்டி இருப்பவர் என்று அர்த்தமாக்கி )
தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கென்று
எம்மை விட்டுத் தமக்கு என்னவே ஒரு நினைவுடையராய்

தாம் செய்யும் தீ வினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
முதலியார்

(நெஞ்சு கருவி நான் கர்த்தா –
இங்கு நெஞ்சுக்கு நெஞ்சு –
தமக்கு என்று ஒரு நினைவு கொண்ட முதலியார் பெரியவர் )

யாம் செய்வது இவ்விடத்து இங்கி யாது
நம்முடைமையான நெஞ்சுக்கு ஆவோமோ
நம்மை யுடையவர்க்கு ஆவோமோ

—————

அறிவுடைத்தாகில் அவனைப் பற்ற வேண்டாவோ என்கிறது –

யாதானும் நேர்ந்து யாதானும் ஓன்று அறியில் தன் உகக்கில் என் கொலோ
யாதானும் நேர்ந்து அணுகா வாறு தான் -யாதானும்
தேறுமா செய்யா வசுரர்களை நேமியால்
பாறு பாறாக்கினான் பால்–33-

பதவுரை

யாதானும் தேறும் ஆ செய்யா அசுரர்களை–கொஞ்சமும் விச்வஹிக்கும்படியான செயலைச் செய்யாதவர்களான அஸுரர்களை
(எப்போதும் தீங்கையே செய்பவர்களை)
நேமியால்–திருவாழியினாலே
பாறு பாறு ஆக்கினான் பால்–துண்டம் துண்டமாகத் துணித்தொழித்த எம்பெருமான் பக்கலில்
யாதானும் நேர்ந்து–எதையாவது ஸமர்ப்பித்து-தன்னுடையது அல்லாத ஏதேனும் சமர்ப்பித்து -நேர்ந்து -பெரிய கார்யம் -ஆத்ம சமர்ப்பணம்
அணுகா ஆறுதான் என் கொல்–கிட்டாமலிருப்பது என்னோ?
(சிறந்த பெருமானை அயோக்யமான நாம் கிட்டவாமோ என்னில்)
யாதானும் ஒன்று அறியில்–எதையாவது ஒரு வஸ்துவை அறியக் கூடிய சைதந்யத்தை யுடைத்தாயிருந்து வைத்தும்
தான் உகக்கில்–தான் ஆநந்தப் படுவதைத் தன்மையாக உடைத்தாயிருந்து வைத்தும்
அணுகாவாறு தான் என் கொல்?

(நமக்கு நல்லது நம்மால் செய்ய முடியாதே
அவனது அன்புக்குப் பாத்திரமாகவே வேணும்
அவனுக்கு விருப்பமானவற்றைச் செய்வதே நமக்கு நன்மை
நன்மையையும் தீமையும் பிறர் தர வாரா -பிறர் சொல்லுக்குள் நாமும் உண்டே அவன் தானே அருள வேணும் )

யாதானும் நேர்ந்து யாதானும் ஓன்று அறியில்
ஏதேனும் ஒரு பதார்த்தத்தை அறியில்
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு என்னும்படியே
ஏதேனும் ஒன்றினுடைய ஞானத்துக்கும் அவனை முன்னிட்டு அறிய வேண்டுகையாலே
அவனை அறிந்ததாய் விடும் –

இதம் என்று புரோ நிட்ட -(நிஷ்ட முன் நிற்கும் )பதார்த்தங்களில் ஒன்றை அறியும் போதும்
ஸர்வ ஸப்த வாஸ்யனானவன் ஆகையால்
இத்தை அறியும் ஞானம் அவன் அளவிலும் போம் என்றபடி

தன் உகக்கில்
ஒன்றை அறியா விட்டாலும் தன்னை யுகக்க வேணுமே
தன்னை யுகக்கை யாவது -அவனை யுகந்ததாய் விடும்
அவன் உகப்பு ஒழியத் தனக்கு ஒரு நன்மை இல்லாமையாலே

என் கொலோ யாதானும் நேர்ந்து அணுகா வாறு தான் –
யாதானும்
அவனதை அவனுக்குக் கொடுத்தே யாகிலும் அவனைக் கிட்ட வேண்டாவோ

நேர்ந்து என்பான் என் என்னில்
பிராந்தி தசையிலே கண்டது எல்லாம் எனக்கு என்னும் அத்தனை
ஸ்வ தந்த்ரனாகவும் இறே நினைத்து இருப்பதும்
இத்தை எல்லாம் அழிக்கிறான் ஆகையால்
நேர்ந்து என்னலாம் இறே

(நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னை
அஹங்காரம் மமகாராம் தொலைத்து அன்றோ ஆத்ம சமர்ப்பணம்
நம்முடையது அல்லாதவற்றை சமர்ப்பித்தால் அலாப்ய லாபம் பெற்றதால்
இவன் மகிழ -பித்து இவனும் அவளும் பித்து -மயல் முற்றிய சம்ப்ரதாயம் )

தோள்களை ஆர –திருவாய் -8-1-10-என்று தொடங்கி
கண்கள் ஆயிரத்தாய் என்று உபகார ஸ்ம்ருதியாலே
இவர் அவன் உடைமையைத் தம்மது என்று கொடுக்க
அவனும் தன்னது அல்லாதது பெற்றால் போலே விஸ்திருதனானான் இறே
ஆகையால் அத் தலைக்கு அவத்யத்தை விளைத்தே யாகிலும் கிட்ட வேண்டாவோ

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10-

யாதானும் இத்யாதி
தன் விரோதியைப் தான் போக்கிக் கொள்ளத்
தானும் கையிலே திருவாழியைப் பிடித்தானோ

யாதானும் இத்யாதி
அஸூர வர்க்கத்திலே ஒருத்தன் அனுகூலிக்குமாகிலும் அவ் வர்க்கமாக நோக்கும்
(ப்ரஹ்லாதனுக்காக மகாபலி வாணன் போல் வர்க்கம் ரஷித்தான் அன்றோ )
இவனுக்கு ஒரு படியும் விஸ்வசிக்கப் போகாதபடி செய்த அஸூரர்களைத் திருவாழியாலே துணித்தால் போலே
தன் விரோதியைப் போக்கின என் பக்கலில் எல்லாம் நேர்ந்தாலும் கிட்ட வேண்டாவோ
அசக்தனுக்கு சர்வ சக்தியைப் பற்ற வேணும்
ஆகையாலே அவனையே பற்ற வேணும் –

ஒன்றை அறியவே தன்னை அறியப்படுமவனாய்
ஒன்றை யுகக்கவே தன்னை யுகக்கப் படுமவனாய்
விரோதி நிரஸனத்தைப் பண்ணுமவனாய்
இருக்கிறவன் பக்கலிலே
யாதானும் நேர்ந்து அணுகா வாறு என் கொலோ -என்று அந்வயம் –

———-

ஏதேனும் நேர்ந்தாகிலும் அவனையே பற்ற வேணும் என்றார்
ஆகில் அவனைக் கிட்ட ஒண்ணாது என்கிறார் –

(முதலில் விஷயாந்தர ப்ராவண்யம் அடியாக விலகி
அடுத்து நைச்யம் பாவித்து விலகி
அடுத்து உள்ளம் சிதிலமாகி -தளர்ந்து -அனுபவிக்க முடியாமல் தளும்புகிறார்
நீலாழிச் சோதியாய் -நின் சார்ந்து நின்று -ஸுந்தர்யம்
ஆதியாய் நின் சார்ந்து நின்று -பிராப்தி
தொல் வினை எம் பால் கடியும் நீதியாய் நின் சார்ந்து நின்று -விரோதி நிரஸனம்
கால் கர்ம இந்திரியம் ஐந்தும்
கண் ஞான இந்திரியம் ஐந்தும்
நெஞ்சு -மனஸ் )

பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -நீலாழிச்
சோதியாய் ஆதியாய் தொல் வினை எம் பால் கடியும்
நீதியாய் நின் சார்ந்து நின்று —34-

பதவுரை

நீலாழி சோதியாய்–நீலக் கடல் போன்ற நிறத்தை யுடையவனே!
ஆதியாய்–முழு முதற் கடவுளே!
எம் பால் தொல் வினை கடியும் நீதியாய்–எம்மிடத்திலே யுள்ள பழைய பாவங்களைத் தொலைக்கு மியல்வுடையவனே!
யாம்–அடியோம்
நின்-உன்னை
சார்ந்து நின்று-அணுகி,
நீ பால் ஆழி கிடக்கும் பண்பை–நீ திருப்பாற் கடலில் சயனிக்கு மழகை
கேட்டேயும்–காதாற்கேட்ட மாத்திரத்திலும்
கால் ஆழும்–கால்கள் தடுமாறுகின்றன;
நெஞ்சு அழியும்–நெஞ்சு சிதிலமாகா நின்றது;
கண் சுழலும்–கண்கள் சுழல விடா நின்றன.

நீலாழிச் சோதியாய் பாலாழி நீ கிடக்கும்
ஒரு வெள்ளைக் கடலிலே
ஒரு கருங்கடல் சாய்ந்தால் போலே இருக்கிறபடி

நீ கிடக்கும்
கிடந்ததோர் கிடக்கை (திருமாலை )-என்னும்படியே

பண்பை யாம் கேட்டேயும்
அழகைக் கேட்டும்
ஸ்ரவண மாத்ரத்திலே இப்படி அழிகிறவர்
ஸாஷாத் கரித்தால் என் படுகிறாரோ

காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல்
மேலும் எழா மயிர்க் கூச்சமறா வென தோள்களும் வீழ் ஒழியா
மாலுகளா நிற்கும் என் மனமே உன்னை வாழத் தலைப் பெய்திட்டேன்
சேலுகளா நிற்கும் நீள் சுனை சூழ் திரு மால் இரும் சோலை எந்தாய் –-ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி 5-3- 5-

காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் ஆதியாய்
வடிவு அழகேயாய் பிராப்தி இன்றிக்கே இருக்கிறதோ
இதுக்குக் காரணமானவனே

தொல்வினை எம்பால் கடியும்
உபகாரகனுமானவனே
என்னுடைய விரோதியை என் பக்கலில் நின்றும் போக்குகையே
ஸ்வ பாவமாக யுடையவனே

நீதியாய் நின் சார்ந்து நின்று
உன்னைப் பற்றி நின்று
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்-

————–

இவன் செவி தாழ்த்தால் அவன் படும்படி சொல்லுகிறது–

(கேட்டேயும் -இசைந்து வந்த ஒன்றுக்கே அவன் செய்யும் அதி ப்ரவ்ருத்திகளை
இங்கு அருளிச் செய்கிறார் )

நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும்
ஒன்றுமோ வாற்றான் என் நெஞ்சு அகலான் -அன்று அம் கை
வன் புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான்
அன்புடையன் அன்றே அவன்–35-

பதவுரை

அன்று–முற் காலத்தில்
அம் கை வன் புடையால்–அழகிய திருக் கைகளாலே ஓங்கி அறைந்ததனால்
பொன் பெயரோன் வாய் தகர்ந்து–இரணியாசுரனுடைய (ப்ரஹ்லாதனை அதட்டின) வாயைப் புடைத்து
நின்றும்–(என்னெஞ்சிலே) நின்று கொண்டிருந்தும்
இருந்தும்–வீற்றிருந்தும்
கிடந்தும்–சயனித்திருந்தும்
திரி தந்தும்–எழுந்து உலாவியும்
ஒன்றும்–கொஞ்சமும்
மார்பு இடந்தான் அவன்–(அவ்விரணியனுடைய) மார்பைக் கிழித்தெறிந்த பெருமான்.
அன்பு உடையான் அன்றே–(ஆச்ரிதர் திறத்தில்) மிக் அன்புடையவனன்றோ;
(ஆனது பற்றியே)
ஓவாற்றான்–திருப்தி யடைகிறானில்லை;
என் நெஞ்சு அகலான்–என்னுடைய நெஞ்சை விட்டு நீங்குகிறானில்லை.

நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும்
உகந்து அருளினை தேசங்களிலே
நிற்கிறதும்
இருக்கிறதும்
கண் வளர்ந்து அருளுகிறதும்
உலாவுகிறதும்
எல்லாம் என்னைப் பெருகைக்காகவே

ஒன்றுமோ வாற்றான்
எல்லாம் செய்தும்
ஒன்றுமே செய்யாதானாய் இருக்கும்

ஓ -என்று
ஆச்சர்யத்திலே
அசைச் சொல்லாய்க் கிடக்கவுமாம்

என் நெஞ்சு அகலான் –
என் நெஞ்சுக்குப் புறம்பு காட்டுத் தீயோடே ஒக்கும்

அன்று அம் கை வன் புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான்
பிராட்டி பக்கல் பரிமாறும் போது கூசிப் பரிமாற வேண்டும்படியான
திருக் கையைக் கொண்டு
முரட்டு ஹிரண்யனுடைய பண்ணின ப்ரதிஜ்ஜையை இல்லை என்ற வாயை நெரித்து
அவன் மார்பைக் கீண்டவன் அன்புடையவன் அன்றோ

பிதா பகையாக அவனில் அண்ணிய உறவாய் வந்து உதவினவன் அவனோ அன்புடையோன்
அயோக்யன் என்று அகலுகிற நாமோ அன்புடையோன்
அன்புடையன் அன்றே அவன்

(அவனே மிக்க அன்புடையவன் என்றவாறு
யாதானும் பற்றி நீங்கும் நாம் அன்புடையோன் அல்லோம் )

புடை என்று வழியாய்
வலிய ஸ்தானமான அழகிய திருக் கையாலே என்றபடி –

————

அவன் இப்படி இருக்க (35 பாசுர சுருக்கம் )
அவன் பக்கலிலே ஸம்சயத்தைப் ப்ரவேசிப்பித்துக்
கை வாங்குகை கார்யம் அன்று என்கிறது

அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
அவனாம் அவன் என்று இராதே -அவனாம்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலுமாம் —36-

பதவுரை

அவன் ஸர்வேச்வரனானவன்
அவன் ஆம்–துர்பலனாயிருப்பனோ?
இவன் ஆம்–ஸுலபனாயிருப்பனோ?
உவன் ஆம்–மத்யஸ்தனாயிருப்பனோ?
மற்று உம்பரவன் ஆம்–அல்லது, மிகவும் உயர்ந்தவனாய் எட்டாதேயிருப்பனோ?
என்று இராதோ–என்றிப்படி பலவகையான ஸந்தேஹங்கள் கொண்டிராமல்
அவன் அவனே ஆம் என தெளிந்து–எம்பெருமானுடைய ஸ்வரூபமே லௌலப்யம் என்று தெளிவாகத் தெரிந்து கொண்டு
கண்ணனுக்கே தீர்ந்தால்–அந்த ஸௌவப்யத்தை க்ருஷ்ணாவதார முகத்தாலே விளங்கக் காட்டிய அவனுக்கே ஆட்பட்டால்
அவனே–அப்பெருமானே
எவனேலும் ஆம்–எல்லா வுறவு முறையுமாவன்.
எல்லாவித ரக்ஷகன் ஆவான்
பாலன சாமர்த்தியம் இவன் ஒருவனுக்கே

அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
திருப்பாற்கடல் நாயகன் -துர்லபனாய் இருக்கும்
அர்ச்சாவதாரம் ஸூல பனாய் இருக்கும்
அப்படியே இருக்கும் -உம்பர் மேலாய் -பரமபத நாதன்
இப்படியே இருக்கும்
அதுக்கு மேலாய் இருக்கும் என்று சம்சயித்துக் கை விடப் பாராதே

(அப்படியும் இருப்பார் இப்படியும் இருப்பார் எப்படியும் இருப்பார்
பரத்வமும் ஸுலபயமும் சேர்ந்து
உவனாம் -ரிஷிகளுக்கு அந்தர்யாமி இவனாம் -அல்லாருக்கு அவனால்
வைக்கிற வாதம் இல்லை கிட்டாது என்று இல்லாமல்
கிட்டும் என்றே இருக்க வேண்டும் )

அவனாம் அவன் என்று இராதே -அவனாம்
அவனே அவனால் என்றாய்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
ஆத்மாநம் ந அதி வரத்தேதா (பரதன் சொல் படி ராகவா நட -உன்னை நீ மீறி நடக்காதே )என்னும்படியே
ஆஸ்ரித பாரதந்தர்யமே அவனுக்கு ஸ்வரூபம் என்று தெளிந்து
ஸூலபனான கிருஷ்ணனுக்கே அற்றால்

அவனே எவனேலுமாம்
யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூஹ்ருச்சைவ ஜனார்தன -என்னும்படியே
இவனுக்கு எல்லாப்படியும் ரக்ஷகனாம்

———-

இப்படி இருக்கை புறம்பு உள்ளார்க்கு அரிது
நமக்கு உண்டாயிற்றே -என்கிறார்

(தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனாய் –அநந்யார்ஹ சேஷ புதராக அற்றுத்தீர்ந்து இருப்பது துர்லபம்
பகவத் அனுக்ரஹத்தாலே பெறப்பெற்றோமே என்று ஹ்ருஷ்டராகிறார்
பூ மேய மதுகரம் -தேன் -மேய்ந்து கொண்டு இருக்கும் துளசி மாலை -அணிந்த
அவரை வாழ்த்துவதே கரம் -கடைமை-கரம் -உறுதியாக த்ருடமாக என்றவாறு –
வாழ்த்தாம் அது-பல்லாண்டு பாடுகை –
நெஞ்சு அசேதனம் -ஞானம் இல்லா விட்டாலும் சேதன சமாதியால் சொல்கிறார் -முந்துற்ற நெஞ்சு அன்றோ )

ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
நாமே யது வுடையோம் நன்னெஞ்சே –பூ மேய
மது கரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம்
அது கரமே அன்பால் அமை —37-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
ஆம் ஆறு அறிவு உடையார் ஆவது–யுக்தமான அறிவை உடையவராக ஆவது
அரிது அன்றே–(உலகில் யார்க்கும்) அருமை யன்றோ;
அது–அப்படிப்பட்ட அறிவை
நாமே உடையோம்–(பகவத் கிருபையால்) பெற்றிருக்கின்றோம்;
(ஆகையால் நீ செய்யத் தக்கது என்ன வென்றால்)
பூ மேய் மதுகரம் மே தண் துழாய்–பூக்களிலே மேய்கின்ற வண்டுகள் படிந்துள்ள குளிர்ந்த திருத்துழாயை யுடையனாய்
மாலாரை–(ஆஸ்ரிதர் திறத்தில்) வ்யாமோஹமுடையான பெருமாளை
வாழ்த்து ஆம் அது–வாழ்த்துவதாகிற அக்காரியமொன்றிலேயே
அன்பால்–பக்தியுடன்
கரமே–திண்ணமாக
அமை–ஊன்றியிரு.

ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே
வழியான அறிவுடையார் யாவது அரிது அன்றே
யுக்தமான அறிவுடையாராகை கிடையாது
ஆமாறு -ஆறு -வழி

நாமே யதுவுடையோம்
நாம் நல்ல அறிவுடையோம்
(ஆறு எனக்கு நின் பாதமே சரணாகதி தந்து ஒழிந்தாய் )

நன்னெஞ்சே –
எல்லாத்துக்கும் ஒரு மிடறாகை இறே இது ஸித்தித்தது
மிடறு -சாடு (கழுத்து கருத்து )
மந ஏவ மனுஷ்யாணாம் -இத்யாதியாலே
பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் அடி இது இறே

பூ மேய மதுகரமே தண் துழாய் மாலாரை வாழ்த்தாம் அது கரமே அன்பால் அமை
பூவிலே பொருந்தும் வண்டு மேவின திருத்துழாய் மாலையை யுடைய ஸர்வேஸ்வரனை
அன்பாலே வாழ்த்துதலாகிற இத்தை த்ருடமாக அமை

மேய -மேவி
அமை -சமைவாய் -பொருந்து -என்றபடி –

———–

தாம் வாழ்த்தச் சொல்ல
நெஞ்சு இறாய்க்க
அத்தை தப்பச் செய்தோம்-என்கிறார்

(பேசாமல் இருந்தால் பிழை -தப்பு
பிழை கர்மங்கள் பேசவே போகுமே
ஏசியாவது பேசுங்கோள் -இடைச்சிகள் போல் -அன்பால் ஏசினார்கள் அன்றோ
சிசுபாலனைப் போல் ஏசக்கூடாதே )

அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே
இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத் திறங்கள்
ஏசியே யாயினும் ஈன் துழாய் மாயனையே
பேசியே போக்காய் பிழை –38-

பதவுரை

நெஞ்சே–ஓ மனமே!
ஆராயில்–ஆராய்ந்து பார்த்தால்
இமைக்கும் பொழுதும்–ஒரு க்ஷண காலமாகிலும்
அமைக்கும் பொழுது உண்டே–வீண் போது போக்க முடியுமோ?
இடைச்சி குமை திறங்கள்–யசோதையின் கையிலே அகப்பட்டு இவன் நலிவு பட்ட பாடுகளை
குமை -தண்டித்தல்
ஏசியே ஆயினும்–பரிஹா ஸோக்தியாகச் சொல்லியாவது
ஈன் துழாய் மாயனையே–போக்யமான திருத்துழாய் மாலையை அணிந்துள்ள அப்பெருமானைப் பற்றியே
மாயன் -ஆச்சர்ய பூதன்
பேசியே–(எதையாவது) பேசிக் கொண்டே
பிழை–உனது பாவங்களை
போக்காய்–போக்கிக் கொள்ளப் பார்.

அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே
நெஞ்சே ஒரு ஆபாத ப்ரதீதி இன்றிக்கே உள்ளே ஆராயப் புக்கால்

இமைக்கும் பொழுதும்
ஒரு க்ஷண மாத்ரமும் ஆறி இருக்கப் போது உண்டோ

இடைச்சி குமைத் திறங்கள்
பரம பதத்திலே சென்று சாஷாத் கரித்தார்க்கு அன்றோ விச்சேதம் இன்றிக்கே அனுபவிக்கலாவது என்னில்
அது வேண்டா
தன்னை இதர ஸஜாதீயனாக்கி
ஸூலபனாக்க
என் மகன் -என்று
எடுத்ததே குடியாக தாயார் குமைக்கும் திறங்களை

ஏசியே யாயினும்
ஏசியே யாயினும் பேசிப் போக்குகிறிலை

ஈன் துழாய் மாயனையே பேசியே போக்காய் பிழை
பிழை -தப்பு
ஈன் துழாய் மாயனையே பேசிப் பிழையைப் போக்காய் -என்னவுமாம்

ஸ்நேஹித்துச் செய்தவற்றை ஸ்நேஹம் இல்லாத நாம் பேசினால் அவனுக்கு ஏச்சாகாதோ என்னில்
ஏச்சாகிலும் அவனைப் பேசாதே இருக்கும் இடமே தப்பு

நெஞ்சமே ஆறாயில் இமைக்கும் பொழுதும் அமைக்கும் பொழுது உண்டே
ஏசுகை -ஸ்நேஹம் இன்றிக்கே சொல்லுகை –

(தேனே இன்னமுதே –கூத்துக்களை சொல்ல
பொய்யே கைம்மை சொல்லி –மெய்யே பெற்று ஒழிந்தேன் )

———–

பேச என்று புக்கவாறே
போக்யமாய் நெஞ்சுக்குப் பொருந்தினவாறே
நாம் பார்த்த இடம் தப்பச் செய்தோமோ -நெஞ்சே -என்கிறார் –
தப்பச் செய்யவில்லையே
நன்றாகவே செய்தோம் என்கிறார் –

(நெஞ்சு வியாஜ்யமாக
நாம் விலக்கப் பார்க்க கழுத்தைப் பிடித்து அவன் இடம் சேர்த்த ஆழ்வார்
சேர்ந்த பின்பு உள்ள போக்யத்தையில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
இங்கே இருந்து குணம் பாடுவதே புருஷார்த்தம்
வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ வைகுந்தம் என்று கொடுப்பது பிரானே )

பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை -அழைத்து ஒரு கால்
போய் யுபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே
வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு –39—

பதவுரை

நெஞ்சமே–ஓ மனமே!
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை–தழைத்தோங்குகின்ற திருத்துழாய் மாலையைத்
திருமார்விலே யுடையனான எம்பெருமானைக் குறித்து
அழைத்து–கூப்பிட்டு
ஒரு கால்–அவனுக்குத் திருவுள்ளமானவொரு காலத்திலே
போய்–பரமபதத்திலே சென்று
பொலிய–நன்றாக
உபகாரம்–கைங்கரியங்கள் செய்கையாகிற உபகாரத்தை
கொள்ளாது–கொள்ள முயலாமல்
அவன் புகழே–அப்பெருமானது திருக்குணங்களையே
வாய் உபகாரம் கொண்ட–வாயாலே சொல்லிக் கொண்டருக்கையாகிற
வாய்ப்பு–இந்த நேர் பாடு
பிழைக்க முயன்றோமோ–தப்பு செய்ததாமோ?
பேசாய்–நீ சொல்வாய்.

பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய் தழைக்கும் துழாய் மார்வன் தன்னை -அழைத்து ஒரு கால்
போய் யுபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு
ஒரு வாடல் மாலையை இட்டாலும் தழைக்கும் துழாய் மார்வை யுடையவனை அழைத்து
அவன் கிட்டக் கொண்டு
பரமபதத்தில் வந்து-(போய் என்றபடி ) அசங்குசிதமான போகத்தைப் புஜிப்பிக்கிறேன் என்னாதே
வாய்க்கு உபகாரகமாய்க் கொண்ட இந்த வாய்ப்புத் தப்ப முயன்றோமோ
சொல்லாய் என்கிறார்

(பரமபதத்துக் கைங்கர்யம் இங்கே கூடுமோ என்ன அருளிச் செய்கிறார் )

ஞானம் உண்டாய் இருக்க
சரீர சமனந்தரத்திலே கைங்கர்யம் பண்ணுகை யாவது –
பகவத் விஷயத்தில் ருசி இல்லாமை இறே

—————

வாய்ப்போ இது ஒப்ப மற்றில்லை வா நெஞ்சே
போய்ப் போய் வெந்நரகில் பூவியேல்-தீப்பால
பேய்த்தாய் உயிர் கலாய் பாலுண்டு அவள் உயிரை
மாய்த்தானை வாழ்த்தே வலி –40-

பதவுரை

வா நெஞ்சே–வாராய் மனமே!
இது ஒப்ப வாய்ப்பு மற்று இல்லை–இப்போது நமக்கு வாய்திருக்கிற மாதிரி மற்று எப்போதும் வாய்க்க மாட்டாது காண;
வெம் நரகில்–(நைச்சியம் பேசிப் பின் வாங்குவதாகிற) கொடிய நரகத்திலே
பூவியேல்–கொண்டு தள்ளி விடாதே;
தீ பால–தீயதான தன்மையை யுடையளான
பேய் தாய்–தாய் வடிவு கொண்டு வந்த பூதனையினுடைய
உயிர்–பிராணனை
பால்–அவளது முலைப் பாலோடே
கலாய்–கலந்து
உண்டு–அமுது செய்து
அவன் உயிரை மாய்த்தானை–அப் பூதனை யினது உயிரை முடித்த பெருமானை
வாழ்த்தே–வாழ்த்துதலே
வலி–நமக்கு மிடுக்காம்.

வாய்ப்போ இது ஒப்ப மற்றில்லை வா நெஞ்சே
இத்தோடு ஒக்கும் நேர் பாடு மற்று இலை நெஞ்சே

போய்ப் போய் வெந்நரகில் பூவியேல்-
அயோக்யன் என்று அகலுகை யாகிற கொடிய நரகத்தில் புகுவியாதே கொள்
நிரயோ யஸ் த்வயா ஸீதா

(சம்சாரமே வெந்நரகம் -வெந்நரகம் நகு நெஞ்சே
நைச்யம் பாவித்து அகலுகையும் கொடிய நரகம்
கச்ச ராம மயா ஸஹ என்று முன்னே சென்றாள் அன்றோ ஸ்ரீ சீதா பிராட்டி )

தீப்பால பேய்த் தாய் உயிர் கலாய் பாலுண்டு அவள் உயிரை மாய்த்தானை வாழ்த்தே வலி
தீப்பால பேய்த்தாய்-பொல்லாத ஸ்வ பாவத்தை யுடைய பேய்ச்சி
கலாய்-கலசி-
பெற்ற தாய் வேஷத்தைக் கொண்டு வந்த பேயினுடைய
உயிரைப் பாலோடே கலசி யுண்டு அவள் உயிரை முடித்தவனை
வாழ்த்துகை நமக்கு மிடுக்கு
வாழ்த்துகையிலே துணி என்றுமாம்

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: