ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –
———-
அயோக்யன் என்று அகன்ற நம்மை வென்று சேர விட்டுக் கொள்ள
என்னை வென்று சேர விட்ட உனக்கு
ராவணனை வென்றதுவும் ஒரு பணியோ -என்கிறார் –
நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை
வாழா வகை வலிதல் நின் வலியே -ஆழாத
பாரு நீ வானு நீ காலு நீ தீயு நீ
நீரும் நீயாய் நின்ற நீ—11-
பதவுரை
ஆழாத பாரும் நீ–(நீரில்; அழுந்தாமலிருக்கிற பூமியும் நீயிட்ட வழக்கு;
நீரும் நீ–ஜல தத்வமும்*;
தீயும் நீ–தேஜஸ் தத்வமும் நீ;
காலும் நீ–வாயு தத்வமும் நீ;
வானும் நீ–ஆகாசமும் நீ;
ஆய் நின்ற நீ–இப்படி பஞ்ச பூதங்களையும் வடிவாக வுடைய நீ,
சர்வம் கல் இதம் ப்ரஹ்மம் -பாராய் நீராய் தீயாய் காலாய் வானாய் நின்ற நீ அன்றோ
நாழால் அமர் முயன்ற–அஹங்காரத்தினால் யுத்தம் செய்வதில் கை வைத்த
வல் அரக்கன்–கொடிய இராவணனுடைய
இன் உயிரை–இனிமையான பிராணனை
வாழா வகை–வாழ்ந்திருக்க ஒட்டாமல்
வலிதல்–கவர்ந்து கொண்டது
நின் வலியே–உனக்கு ஒரு சூரத் தனமோ? –அல்ல.
நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை வாழா வகை வலிதல் நின் வலியே –
ராக்ஷஸ ராஜன் என்கிற அபிமானத்தாலே –
பெருமாளோடே எதிரிடுவோம் அல்லோம் -என்னாதே –
யுத்தத்தில் யத்னம் பண்ணி மிடுக்கனான ராவணன் பேணின உயிரை
வாழா வகை உனக்கு ஒரு மிடுக்கோ
அயோக்யன் என்று அகலுமவர்கள்
பிராட்டியைப் பிரித்த ராவணனோடு ஒப்பார்கள்
(பிராட்டியைப் போலவே ஒவ்வொரு ஜீவனையும் விரும்பும் அவன் அன்றோ
கிம் கார்யம் சீதையா மம என்னுமவன்
கடிமா மலர்ப்பாவையோடே சாம்ய ஷட்கம் உண்டே )
ஆழாத பாரு நீ வானு நீ காலு நீ தீயு நீ நீரும் நீயாய் நின்ற
விருத்தமான விபூதிகளைச் சேர விட்டு அனுபவிக்கிற
உனக்கு என்னைச் சேர விடுகை ஒரு பணியோ
அக்னிக்கும் ஜலத்துக்கும் சேராதால் போலே
பரஸ்பர வ்ருத்தமான பஞ்ச பூதங்களையும் கொண்டு
கார்யம் கொள்ளும் உனக்கு -என்றபடி –
விபூதி சாமான்யங்களுக்கு நிர்வாஹகனாய்
அவற்றைச் சொல்லுகிற சப்தம் உன்னளவும் வரும்படி நிற்கிற உனக்கு
உனக்கே அசாதாரணமாய்
உன்னால் அல்லது செல்லாதவர்களைச் சேர விடுகை பணியோ என்றுமாம்
————-
கிட்டினவாறே போன நாளைக்குக் கரைகிறார்
(கீழ் எல்லாம் நெஞ்சைக் கொண்டாடி
இதில் அத்தையே நிந்திக்கிறார்
இரண்டுக்கும் அவனது வை லக்ஷண்யமே ஹேது
பேற்றுக்கும் இழவுக்கும் நெஞ்சே காரணம் அன்றோ
வாசனை -மனப் பதிவுகள் தானே காரணம்
விருத்த விபூதிகளைச் சேர்த்தால் போல் அடியேனையும் சேர்த்துக் கொண்டாரே
பெற்ற பேற்றுக்கு மகிழாமல் இழந்த பழுதாய் போன பண்டை நாளுக்கும்
அயோக்கியன் என்று அகன்ற கிலேசமும் )
நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
போ என்று சொல்லி என் போ நெஞ்சே -நீ என்றும்
காழ்ந்து உபதேசம் தரினும் கைக் கொள்ளாய் கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12-
பதவுரை
நெஞ்சே–ஓ மனமே!
ஆழ் துயரில்–அநாதமான துக்க ஸாகரத்தில்
வீழ்விப்பான்–என்னைக் கொண்டு போய்த் தள்ளுவதாக
நின்று உழன்றாய் நீ அன்றே-இடைவிடாதே நின்று யத்னம் பண்ணினது நீ யன்றோ;
(என்னை வருத்தத்திற்கு ஆளாக்கப் பார்த்தது நீயே யன்றோ.)
போ–அது கிடக்கட்டும்.
உபதேசம் தரினும்-(எம்பெருமானுக்கு நம் பக்கல் உள்ளூற வாத்ஸல்ய முண்டு’ என்று உனக்கு நான்) உபதேசித்தாலும்
நீ காழ்ந்து என்றும் கைக்கொள்ளாய்–நீ என்மேற் கோபங்கொண்டு என்றைக்கும் (அவ்வுபதேசத்தைக்) குறிக்கொள்கிறாயில்லை;
(உம்மை ஆழ் துயரில் வீழ்வித்தது நானன்று; நீரே நும்மை வீழ்த்துக் கொள்ளுகிறீர்’ என்று நெஞ்சு பதில் சொல்ல)
போய் ஒன்று சொல்லி என்-மேன்மேலும் நீ யொன்று நானொன்றாக வாத ப்ரதிவாதங்கள் சொல்லுவதில் என்ன பயன்?
போ–அது கிடக்கட்டும்.
(இப்போது முடிவாகச் சொல்கிறேன் கேள்;)-
கண்ணன் தான்–எம்பெருமானது திருவடிகளை
வாழ்த்துவதே–வாழ்த்துவது தான்-மங்களா சாசனம் பண்ணுவதே
வழக்கு–நியாயம்
(கண்டாய் – முன்னிலையசை)
நீ யன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
ஆழ் துயர் என்றது –
1-அயோக்யர் என்று அகன்ற கிலேசமாகவுமாம்
2-விஷய ப்ராவண்யம் ஆகவுமாம்
போ என்று சொல்லி என் போ நெஞ்சே
நெஞ்சு நீர் அன்றோ ஆழ் துயரிலே விழும் படி பண்ணினீர் என்று சொல்ல
நீ ஒன்றைச் சொல்ல நான் ஒன்றைச் சொல்லுகிறது என் –
அத்தைப் பொகடு -என்கிறார்
நீ என்றும் காழ்ந்து உபதேசம் தரினும் கைக் கொள்ளாய்
நீ உபதேசம் தரினும் என்றும் காழ்ந்து கைக் கொள்ளாய்
ஸர்வேஸ்வரனுக்கு ஐஸ்வர்யமே அன்று காண் விஞ்சி இருப்பது –
நீர்மையும் விஞ்சி இருக்கும் காண் என்று நான் சொன்னாலும்
அழன்று-சீறி – அத்தைக் கொள்ளாய்
கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு
ஆகில் இனிச் செய்வது என் என்று நெஞ்சு கேட்க
அவன் ஆபி முக்யம் பண்ணி நிற்க
நாம் வைமுக்யம் பண்ணலாகாது காண்
அவன் திருவடிகளுக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகை நியாயம்
(அவனுடைய ஸுலப்யம் பரத்வம் அனைத்துக்கும் பல்லாண்டு பாடுவதே கர்தவ்யம் )
——————
அகல ஒட்டாயாகில்
கிட்டி அனுபவிக்கும் படி பண்ணு என்கிறார் –
(உன் மேனி சாயை காட்டு -என்கிறார் -)
வழக்கொடு மாறு கொள் அன்று அடியார் வேண்ட
இழக்கவும் காண்டும் இறைவ -இழப்புண்டே
எம்மாட் கொண்டாகிலும் யான் வேண்ட என் கண்கள்
தம்மாற் காட்டுன் மேனிச்சாய்–13-
பதவுரை
வழக்கொடு மாறுகொள் அன்று–(இப்போது அடியேன் விஜ்ஞாபிக்கப் போகிற ஒரு விஷயம்) நியாத்தோடு மாறுபட்டதன்று;
(அஃது என்னவெனில்)
ஓடு- ஓட்டுவதும் சேர்வதும்- வழக்கு அன்று
மாறுகொள் அன்று-கைம்மாறு கொள்வதும் வழக்கு அன்று
அடியார் வேண்ட–(மேன் மக்களை நோக்கிக்) கீழ் மக்கள் ஒன்று பிரார்த்தித்தார்களாகில்
இழக்கவும் காண்டும்–(மேன் மக்கள் நஷ்டப்பட்டாகிலும் காரியம் செய்வதை உலகில்) காண்கிறோம்;
இறைவ–ஸ்வாமீ!
இழப்பு உண்டே–(அநந்ய ப்ரயோஜனான -என் வேண்டு கோளை நிறைவேற்றுதற்காக)
கஷ்டப்பட வேண்டியது ஏதேனுமுண்டோ? (ஒன்றுமில்லை)
யான் வேண்ட–என்னுடைய வேண்டுகோளுக்காக
யுக்தி மாத்திரத்தாலே பிரார்த்தனை ஒன்றாலே
சரண வரணம் வா -இதுவும் உன்னாலேயே –
அதுவும் அவனது இன்னருள்
எம் ஆள் கொண்டு ஆகிலும்–என்னை அடிமைப் படுத்திக் கொண்டாவது
என் கண்கள் தம்மால்–எனது கண்களுக்கு
உன் மேனி சாய்–உனது திருமேனியின் ஒளியை
காட்டு–காட்டி யருள வேணும்
வழக்கொடு மாறு கொள் அன்று அடியார் வேண்ட இழக்கவும் கண்டு –
(ஓடு வழக்கு அன்று மாறு கொள் வழக்கு அன்று என்று கூட்டி அருளிச் செய்கிறார்
ஓடு என்று ஸம்பந்தமாய் -ஸம்ஸாரிகள் என்று அத்யா ஹரித்துக் கொண்டு
ஸம்ஸாரிகள் முன் நிற்கை என்பது பலித்த தாத்பர்யம் )
1-ஸம்ஸாரியினுடைய முன்னே நிற்கையும் வழக்கு அன்று
2-சாதன அனுஷ்டானம் பண்ணினாரைப் போலே உபகாரத்துக்குப் பிரதியுபகாரம் கொள்ளுகையும் வழக்கு அன்று
(ஒன்றும் அறியாத சம்சாரிகள் முன்னே அவதரித்து நிற்கையும்
நீ ஒன்றைச் செய் நான் ஒன்றைத் தருகிறேன் என்கையும்
உனக்கு வழக்கு அன்று பிரயோஜனம் இல்லை என்றபடி )
(வழக்கு ஏது என்று சங்காபிப்ராயம்
அடியார்க்கு அபேஷா மாத்திரத்தாலே கார்யம் செய்கை வழக்கு என்று உத்தரம்
அது காணோம் )
ஆகில் -நீர் சொல்லுகிறது என் என்னில்
அடியாரானவர்கள் வேண்ட ஸ்வாமி இழக்கக் கண்டோம்
(நீ உன்னையே அழிய மாறி கார்யங்கள் செய்தவற்றைக் கண்டோமே )
இறைவ –
நீர் அடியாராக வேணுமே என்ன
என் பக்கலில் உள்ளது அழிந்ததாகிலும்
உன் பக்கலில் உள்ளது அழியாது இறே
உன் ஸ்வாமித்வம் உண்டாக என் சேஷத்வம் தன்னடையே கிடவாதோ
(நான் சொத்து அல்ல என்று வழக்கு பேசினாலும் உன் ஸ்வாமித்வம் இல்லாமல் போகாதே
ஸ்வா பாவிக ஸ்வாமித்வம் உன்னது அன்றோ
ஆகவே வேறே வழியே இல்லை -அடியேன் சொத்தாகவே ஆக வேண்டும் )
இழப்புண்டே
நாட்டு அடியாருக்கு இழப்பு யுண்டாகிலும் உன் அடியார்க்கு இழப்பு உண்டோ
நாட்டு அடியார் -இதர சேஷ பூதர்
எம்மாட் கொண்டாகிலும் யான் வேண்ட
இழப்பு இன்றிக்கே ஒழியும் போது
உமக்கு அடிமையிலே சிறிது அந்வயம் வேணுமே என்ன
என்னுடைய யுக்தி மாத்ரத்தையே பரிபூர்ண கைங்கர்யமாகக் கொண்டு செய்ய வேணும்
என் கண்கள் தம்மாற் காட்டுன் மேனிச்சாய்
செய்ய வேண்டுவது என் என்ன
ஒருத்தன் பட்டினி விட ஒருத்தன் உண்டால் பசி கெடாது இறே –
காத்ரைஸ் சோகாபி கர்சிதை (ஸூந்தர )-என்னும்படியே
தேஹாந்த்ரே தேசாந்தரே (காலாந்தரத்தில் )காண ஒண்ணாது
(காத்ரைஸ் சோகாபி கர்சிதை-துன்பப்பட்ட இந்த அவயங்களோடே
புருஷ வியாக்ரமான பெருமாளைக் காணும் படி வார்த்தை சொல்ல பிராட்டி திருவடி இடம் வார்த்தை
ஞானிகளை விக்ரஹத்தோடே ஆதரிக்கும் -மண் பற்றோடு வேர் சூடுமா போலே )
விடாய்த்த கண்களாலே காண வேணும்
உன் மேனிச் சாயை -நிறத்தை
யான் வேண்ட என் கண்கள் தம்மால் காட்டு -கண்கள் தனக்கு காட்டு -என்றபடி
————–
காட்ட வேணும் என்றார் கீழ்
ஆரை என் கண்களாலே காண்கிறது என்று அகன்றும்
திரியட்டும் தம்முடைய அயோக்யதையைச் சொல்லுகிறார்
பூதனை கிட்டினவோ பாதி யிறே நான் கிட்டுகை -என்கிறார் –
(திவ்யம் ததாமி தே சஷுஸ்ஸூ பஸ்யதே -அவன் தந்த கண்ணைக் கொண்டு அன்றோ
அர்ஜுனன் விஸ்வரூபம் தரிசித்தான்
இந்திரியங்கள் பாம்பு -ஜீவன் அறிவுடையவன் இவற்றில் கை நீட்டுவது போலும்
பூதனையும் தன்னை முடிக்கவே கண்ணன் பெருமை அறியாமல் முயன்றது போல்
அவளோ கண்ணன் இடம் ஈடுபட்டு அழிய
நாமோ விஷயாந்தரங்களில் ஈடுபட்டு ஸ்வரூப நாசம் அடைகிறோம் )
சாயல் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
தேம் பூண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்
பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி–14-
பதவுரை
நெஞ்சே–ஓ மனமே!
பேயார்–பூதனையானவள்,
சாயல் கரியானை–நிறத்தால் கரியனான கண்ண பிரானை
உள் அறியார் ஆய்–உள்ளே புகுந்து அநுபவிக்க அறியாதவளாய்
(அப் பெருமானைக் கொன்று விட நினைத்து)
பேயார் ஆய்–அறிவு கெட்டவளாய்
முலை கொடுத்தார்–(விஷம் தடவின) முலையை (உண்ணக்) கொடுத்தாள்;
பேயரான பூதனை பேயான படியால் பால் கொடுத்தாள்
ராக்ஷசனான விபீஷணன் நல்லவனாக திருவடி அடைந்தான் அன்றோ –
ஆகவே இரண்டாலும் பிறப்பையும் அனுஷ்டானத்தையும் சொன்னபடி
நீ ஆர்–அவளுக்கு நீ உறவு முறையில் என்ன ஆக வேண்டும்?
(இப்படிக் கேட்பது எதுக்காக? என்கிறாயோ? சொல்லுகிறேன், கேள்;)
தேம்பு ஊண் சுவைத்து–ஆத்மா கெட்டுப் போம்படியான சப்தாதி விஷய போகங்களை நீ அநுபவித்து
ஊன் அறிந்து அறிந்தும்–(அதனால்) ஊனமடைந்திருக்கிறா யென்பதை நன்றாக நீ அறிந்திருந்தும்
விளையும் அநர்த்தம் அறிந்தும் அன்றோ செய்கிறோம்
போய்–நம்முடைய தாழ்வுக்குத் தகாததான (சிறந்த பகவத் விஷயத்தை அநுபவிப்பதாகப்) போய்-பலகாலும் சென்று ஆழ்ந்து
கீழே விஷயாந்தர ப்ரவணராய் பலகாலும் சென்று ஆழ்ந்து அநர்த்தப் பட்டு என்றுமாம்
தீ வினை ஆம் பாம்பார் வாய் கை நீட்டல் பார்த்தி–அநர்த்தத்தை விளைக்க வல்ல பாம்பின் வாயிலே கை நீட்டுவாரைப் போலலே
பகவதநுபவம் பண்ணி மூடியப் பார்க்கிறாயே.-அவளை விட தாழ்ந்தவன் என்றவாறு
பேயாக அவள் வஞ்சிக்க மநுஷ்யராய் அன்றோ நாம் அநர்த்தப்படுகிறோம்
சாயல் கரியானை
நிறத்தால் கரியனாய் யுள்ளவனை
உள்ளறியாராய்
ஆழ வநுபவிக்க அறியாராய்
(பிள்ளைத் தனத்தை கண்டு ஈடுபடாமல் வஞ்சித்தாள் என்னுதல் )
ஸர்வேஸ்வரன் என்று உள்ளபடி அறியாராய் என்றுமாம்
நெஞ்சே பேயார் முலை கொடுத்தார் பேயராய் -நீ யார் போய்த்
பூதனை மணிச்சியாய் வஞ்சித்தாள் அன்றே
பேயாகையாலே வஞ்சித்தாள் அத்தனை இறே
உன்னைப் பார்த்தால் பூதனை நித்ய ஸூரிகளோடே ஒக்கும் இறே
தேம் பூண் சுவைத்த ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம் பாம்பார் வாய்க் கை நீட்டல் பார்த்தி
ஆத்மா தேயும் படிக்கு ஈடாக சப்தாதிகளை புஜித்து
(வெட்டவும் நினைக்கவும் முடியாது -அநர்த்தத்தை-ஸ்வரூப நாசம் அடையுமே )
அதனுடைய விபாகத்தை அறிந்து அறிந்து
அநர்த்தத்தைப் பலிக்கக் -(பலிப்பிக்க) கடவதாய் இருக்கிற பாம்பில் வாயிலே
கை நீட்டுவாரைப் போலே இருக்கிற நீ பூதனைக்கு யார்
உனக்கு அண்ணியளோ பூதனை
(முன்புற்ற நெஞ்சை நீ என்று விளிக்கிறார்
எடுப்பும் சாய்ப்புமாகவே போகும்
தன்னைப் பார்க்க விலகுவார்
அவனைப் பார்க்க அணுகுவார் )
அயோக்யன் என்று அகலுகிற பக்ஷத்தில் –
ஈஸ்வரனுக்கு அவத்யம் பிறைக்கைக்கு ஈடாக வளைந்து (அணைந்து)
உன் அணைவு பொல்லாது என்னும் இடத்தை
அறிந்து அறிந்தும் கிட்டுகிறாய் அன்றோ என்றுமாம் —
நெஞ்சே போய் –என்று தொடங்கி —
நீட்டல் பார்த்து அவளுக்கு நீ யார் -என்று அன்வயம்
(போய் பதம்
மீண்டும் மீண்டும் சுவைத்து என்றும்
மீண்டும் மீண்டும் பாபர் வாயில் கை நீட்டி என்றும் அந்வயம் )
ஸாஸ்த்ர வஸ்யமான உன்னைப் பார்த்தால்-அறிவு கெட்டு ஈஸ்வரனை அழித்தாள் அவள் –
நீ சாஸ்த்ர வஸ்யமாய் இருக்கச் செய்தேயும் விஷயங்களிலே ஆத்மாவை மூட்டி
நசிப்பிக்கையாலே உனக்கு சமள் அன்று என்றபடி
அன்றியே
தேம் பூண் -ஈஸ்வரனுக்கு அவத்யம் வரும்படி
சுவைத்து -அவனை அணைந்து என்று ஈஸ்வர பரமாகவுமாம்
அப்போது தீ வினையாம் என்று அறிந்து அறிந்து -பொல்லாது என்று அறிந்து இருக்கச் செய்தேயும்
பாம்பின் வாயிலே கை நீட்டுமா போலே நாம் அவனைக் கிட்டுகை அவத்யம் என்று அறிந்து இருக்கச் செய்தேயும்
கிட்டுகிற உனக்கு பூதனை சமளோ -என்றபடி –
————–
(நெஞ்சே )
உன்னுடைய பூர்வ வ்ருத்தத்தை நினைத்தால் அகல வேணும்
அவனுடைய பூர்வ வ்ருத்தத்தை ஸ்மரித்தால் கிட்டலாம் என்கிறது –
(நம்மை நினைக்க ஆபத்து -அவனை நினைக்க சம்பத்து அன்றோ )
பார்த்தோர் எதிரிதா நெஞ்சே படு துயரம்
பேர்த்து ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை –ஆர்த்தோதம்
தம் மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய
செம் மேனிக் கண் வளர்வார் சீர்–15-
பதவுரை
நெஞ்சே–ஓ மனமே!-அயோக்கியன் என்று அகல நினைக்கும் நெஞ்சே
ஓதம்–கடலானது
ஆர்த்து–கோஷித்துக் கொண்டு
தம் மேனி தாள்–தம்முடைய திருமேனியையும் திருவடியையும் (சிவந்த திருவடிகள் என்றுமாம் )
தடவ–(அலையாகிற கையினாலே) தடவும் படியாக
தாம் கிடந்து–(அக் கடலில்) பள்ளி கொண்டருளி
தம்முடைய செம்மேனி கண் வளர்வார்–தம்முடைய செந்நிறமான திருக்கண்கள் வளரப் பெறுகின்றவரான பெருமாளுடைய
சீர்–திருக் குணங்களை,
படு துயரம் பேர்த்து ஓத–கொடிய துக்கங்கள் தீரும்படி நாம் பேசுவதனால்
துன்பங்களை நினையாமல் சீர் ஓத
பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை–அவனுடைய பெருமைக்கு அழிவு உண்டாய் விடுமென்பதில்லை;
எதிரிதா பார்த்து ஓர்–(இவ் விஷயத்தை) கண்ணெதிரே நிற்பதாகக் கண்டு தெரிந்து கொள்.
(செருப்பு வைத்து திருவடி தொழாமல் நம்முடைய துயர்களை நினைத்துக் கொண்டே
அவனது சீரான குணங்களை அனுபவிக்கப் பாராதே )
பார்த்தோர் -எதிரிதா நெஞ்சே-
அணுகி எதிரிதாப் பார்த்து ஓர்
முன்னிட்டுப் பார்த்து விசாரி
ஆர்த்தோதம் தம் மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய செம்மேனிக் கண் வளர்வார் சீர்
கடலானது ஆர்த்துக் கொண்டு தம்முடைய சிவந்த திருவடிகளை வருட
அவசர பிரதீஷனாய்க் கண் வளருகிறவருடைய குணங்களை
(ஆஸ்ரிதர் கிடைப்பாரா என்று எதிர் பார்த்து கண் வளர்கிறான் அன்றோ
சிவந்த கண் -எதிர்பார்த்துக் கொண்டே இருப்பதால் அநாதி காலம்
ஐஸ்வர்யம் வாத்சல்யம் ப்ரேமம் -கண் பூத்துப் போம் படி கிடக்கிறான் )
படு துயரம் பேர்த்து ஓதப் பீடு அழிவாம் பேச்சில்லை –
தான் படுகிற துயரத்தைப் பொகட்டு அக் குணங்களை ஓத
அவனுடைய பெருமைக்கு அழிவு என்னும் பேச்சில்லை
இத்தை முன்னிட்டு அறிந்து விசாரி –
ஓதம் ஆர்த்துத் தம் மேனியையும் தம்முடைய செம்மேனித் தாளையும் தடவத்
தாம் கிடந்தது கண் வளருகின்ற வருடைய சீரை
படு துயரம் பேர்த்து ஓதப்
பீடு அழிவாம் பேச்சு இல்லை
நெஞ்சே எதிரிதாப் பார்த்து ஓர் –
என்று அந்வயம்
———–
அவஸர ப்ரதீஷனாய் இருக்கிற அளவேயோ
இத்தைப் பெறுகைக்கு அர்த்தியாய் அன்றோ நிற்கிறது என்கிறார் –
(நீல நிறத்தோடு நெடும் தகை வந்து அங்கு ஓர் ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான் -கம்பர்
அதிதி கஸ்யபர் –இந்திரனுக்காகவே பெற்றார்கள் -விஜய முஹூர்த்தம் திருவோண நக்ஷத்ரம்
இந்திரனுக்காக -ராஜ்யம் மீட்டுக் கொடுக்கவே பயோ விரதம் பண்ணி பெற்றாள் )
சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா -மார்பாரப்
புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –16-
பதவுரை
பேராளா–‘மஹாநுபாவனான பெருமானே!
சீரால் பிறந்து சிறப்பால் வளராது–சிறப்புடன் பிறப்பதையும் சிறப்புடன் வளர்வதையும் செய்யாமல்
பேர் வாமன் ஆகாக்கால்–திருநாமம் வமானென்று வைத்துக் கொள்ளாமலிருந்தால்
மார்பு ஆர புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி-உன்னாலே மார்பால் அணையப்பட்டும்
வயிற்றில் வைக்கப்பட்டும் பின்பு வெளிப் படுத்தப்பட்டும் இப்படி ஸ்வாதீநமாயிருந்த இப் பூமியானது.
நீர் ஏற்பு அரிதே–தாரை வார்த்து தத்தம் பண்ணிக் கொடுக்கப் பெற முடியாதோ?’
யாம் அறிய–இவ் விஷயத்தை அடியோம் தெரிந்து கொள்ளும்படி
நீ சூழ்ந்து சொல்லு–நீ ஆராய்ந்து அருளிச் செய்ய வேணும்.
சீரால் பிறந்து
மஹதா தபஸா ராம மஹதா ஸாபி கர்மணா -(ஆரண்ய -66)
சக்கரவர்த்தி தான் தேடின அர்த்தமும் பண்ணின தபஸ்ஸூம் அழிய மாறிப் பெற்றால் போலே யாதல்
ஸ்ரீ வஸூ தேவர் அநந்த வ்ரதம் அனுஷ்ட்டித்துப் பெற்றால் போலே யாதல் பிறந்தாலாகாதோ
(அநந்த வ்ரதம் -சாடு-பல விரதங்கள் என்றும் அநந்த விரதம் என்று ஒன்றின் பெயர்
ராம ரத்னம் கோபால ரத்னம் வாமன ரத்னம் )
சிறப்பால் வளராது
ஸ்ரீ ஸூ மித்ரையாரும் வசிஷ்டாதிகளும் பேணி வளர்க்க வளர்ந்தால் போலே யாதல்
அனுகூலர் தேடின வெண்ணெயும் பிரதிகூலருடைய உயிரும் மாள வளர்ந்தால் போலே யாதல் வளர்ந்தால் ஆகாதோ
பேர் வாமன் ஆக்காக்கால்
நாட்டில் வாமனர்கள் எல்லாம் வளர்ந்து அருளினவோ பாதியாக வாமனனாக வேணுமோ
ஸ்ரீ யபதி என்ற ஒரு பேர் ஆனால் ஆகாதோ
ஒரு ருஷி பத்னி பக்கலிலே பிறந்து (அதிதி ஆஸ்ரமம் தானே )
பேணுவார் இன்றிக்கே வளர்ந்து
பேரும் வாமனனாகா விட்டால் உன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்டு
அணைவது உண்பது உமிழ்வதான இந்த பூமி நீர் ஏற்பதாய் பட்டாயோ
பேராளா –
கார்யம் செய்வதற்கு முன்னே எத் திறம் என்கிறார்
உன்னுடைமையில் உனக்கு கிடக்கிற ஓரத்துக்கு -பக்ஷ பாதத்துக்கு -எல்லை காண்கிறீலோமீ
(உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் சொல்லாமல்
முன்னமே எத்திறம் சொல்லி ஏங்கி இருந்து எளிவே என்றாரே
அதே போல் இங்கும் பேராளா என்று முன்னம் அருளிச் செய்கிறார் )
மார்பாரப் புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து
நீ இப்படி எளியையாய்
அது இருக்கைக்கு அடி சூழ்ந்து சொல்லு -புத்தி பண்ணி அருளிச் செய்ய வேணும்
ஸர்வேஸ்வரனும் தன்னுடைய அவதாரத்தைப் போய் புக்கால்
ஜென்ம கர்ம ச மே திவ்யம் –என்னும் அத்தனை
வேதமும் பேசப் புக்கால்
தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -என்னும் –
சூழ்ந்து -விசாரித்து
(த்வந் நிர்மிதா ஜடரகா சா தவ த்ரி லோகீ கிம் பிஷனாத் இயம் ருதே பவதோ துராபா
மத்யே கதா து ந விசக்ரமிஷே ஜகச்சேத் த்வத் விக்ரமை கதம் இவ ஸ்ருதிர் அஞ்சிதா ஸ்யாத்—ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம் 16-)
(ஹே தேவ
த்வந் நிர்மிதா –தேவரீரால் படைக்கப் பட்டதும்
ஜடரகா சா தவ –ஒரு கால் தேவரீருடைய திரு வயிற்றிலே கிடந்து ரக்ஷை பெற்றதுமான
இயம் த்ரி லோகீ –இந்த மூ உலகும்
பிஷனாத் ருதே –மகா பலி இடத்தில் யாசிப்பது தவிர மற்ற உபாயத்தினால்
பவதோ துராபா கிம் –தேவரீருக்கு கிடைக்க அரிதோ
யாசித்துப் பெறாமல் ஸ்வா தந்த்ரியத்தினாலேயே பெற முடியாததோ
மத்யே கதா து -இடையில் ஒரு காலத்தில்
ந விசக்ரமிஷே ஜகச்சேத் த்வத் –இந்த உலகத்தை பிஷா வ்யாஜத்தினால் மூவடி கொண்டு அளந்து அருளா விடில்
விக்ரமை கதம் இவ ஸ்ருதிர் அஞ்சிதா ஸ்யாத்—வேதமானது தேவரீருடைய விக்ரமங்களினால்
எங்கனம் மேன்மை பெற்றதாகும் )
————-
அவன் கிட்டப் புக்கால் இவர்கள் பண்ணும் வை முக்யம்
அவன் நெஞ்சில் படாது என்கிறது
(அநந்ய ப்ரயோஜனர் -அவன் முகம் காட்டாவிடிலும் வாய் திறவார்
நித்ய முக்தர்கள் எத்தனை பேர் கிட்டினார்கள் என்று கேட்க வாய் திறவாமல்
அவன் அழகையே பார்த்து சதா பஸ்யந்தி பார்த்து இருப்பர்
அடியார்களை வேண்டும் என்று அவதரித்து கிடைக்கா விட்டாலும் உகந்தே இருப்பார்
இப்படி மூன்று நிர்வாகங்கள் )
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தாம் வாய் திறவாதார் -சூழ்ந்து எங்கும்
வாள் வரைகள் போலரக்கன் வன் தலைகள் தாமிடிய
தாள் வரை வில்லேந்தினார் தாம்–17-
பதவுரை
எங்கும் சூழ்ந்து–நாற்புறங்களிலும் சுற்றிக் கொண்டு
அரக்கன்–இராவணனுடைய
வாள் வரைகள் போல் வன் தலைகள் தாம் இடிய–ஒளி பொருந்திய, மலைகள் போல் வலிதான தலைகளானவை இற்று விழும்படி
தாள் வரை வில் ஏந்தினார் தாம்–காலுரத்தை யுடைத்தாய் மலை போன்றதான வில்லைத் தாங்கி நின்றவரான இராமபிரான்
சூழ்ந்து–(இந்த லீலா விபூதியிலே வந்து) வளைத்துக் கொண்டு
அடியார் வேண்டினக்கால்–‘ஓ ஜனங்களே! நீங்கள் எனக்கு அடிமைப் பட வேணும்’ என விரும்பினால்
தோன்றாது விட்டாலும்–ஒரு அடியவனும் அகப்படாதபடி உபேக்ஷிக்கப் பெற்றாலும்
வாழ்ந்திடுவர்–திரு வுள்ளத்தில் வெறுப்பு இல்லாமல்) உகந்தே யிருப்பர்;
பின்னும்–எக் காலத்திலும்
தம் வாய் திறவார்–(பிராட்டிமாரிடத்திலும் இந்த மனக் குறையை) வாய் திறந்து சொல்லிக் கொள்ள மாட்டார்.
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும் வாழ்ந்திடுவர் பின்னும் தாம் வாய் திறவாதார் –
எதிர் சூழல் புக்கு (2-7) என்னும்படியே
இவர்களை சூழ்ந்து
அடியார் வேணும் என்று அபேக்ஷித்தால் இவர்கள் தோன்றா விட்டாலும்
இவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோம் இறே என்று வாழ்ந்து இருப்பதும் செய்வர் –
வை முக்யம் பண்ணினார் என்று தனி இருப்பிலே பிராட்டிக்கு வாய் திறவார்
பிரஜைகள் குற்றம் செய்யத் தாய்க்கு இறே சொல்லுவது
அவளுக்குச் சொல்லார்
தோன்றா விடுகை -ஆபி முக்யம் பண்ணா விடுகை
சூழ்ந்து எங்கும் வாள் வரைகள் போலரக்கன் வன் தலைகள் தாமிடிய தாள்வரை வில்லேந்தினார் தாம்
பார்த்த இடம் எல்லாம் ராம சரம் என்னும்படி சூழ்ந்து
ஒளியை யுடைய மலை போலே இருந்துள்ள ராக்ஷஸனுடைய தலைகள்
இடியும்படி திண்ணிய வில்லை ஏந்திய சர்வ ரக்ஷகர்
சக்தராய் இருக்கச் செய்தே அஸக்தரைப் போலே இருப்பர்
இவர்கள் உபேக்ஷித்தார் என்று பிராட்டிக்கு வாய் திறவார்
ஈஸ்வரன் வெறான் என்றது கீழ்
அடியார் பரமாக்கி அருளிச் செய்கிறார் மேல்
அடியார் சூழ்ந்து வேண்டினக்கால் –
அடியாரானவர்கள் புத்தி பண்ணி உபாஸித்தாலும் தோன்றிற்று இலராகில்
சேஷ பூதன் சேஷி செய்தபடி கண்டு இருக்கும் அத்தனை அன்றோ -என்று வெறார்கள்
பின்னும் வாய் திறவார்
பகவத் குண ஹானி சொல்லுமவர்களுக்கும் வாய் திறவார்
சூழ்ந்து எங்கும் இத்யாதி
ராமாவதாரமாய்த் தோன்றுமவர் நமக்குத் தோன்றிற்று இலர் என்று வெறார்கள் –
———–
உகந்தும் உகவாதும் ஸம்ஸாரிகள் பண்ணும் பரிபவத்தைக் கண்டு
தன் ரக்ஷணத்திலே நெகிழ நில்லான் என்கிறது
(அன்போடு கட்டினாலும் வெறுப்புடன்-த்வேஷத்தால் கட்டினாலும்
என்னையே தானே கட்டினார்கள் என்று உகக்குமவன்
சிசுபாலன் என்னையே தானே வைதான் என்று உகந்தால் போல்
உடையவன் உடைமையை விட மாட்டானே )
தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளக
பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் -சோம்பாது இப்
பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
தொல்லுருவை யார் அறிவார் சொல்லு–18–
பதவுரை
தாம்பால் ஆப்புண்டாலும்–(அசோதையினால்) தாம்பு கொண்டு கட்டி யடிக்கப் பெற்றாலும்
அத் தழும்பு தான் இளக–அந்தத் தாம்பினால் கட்டினத்தாலுண்டான காய்ப்பு அற்பதம் என்னும்படி
பாம்பால்–காளியனாகிய பாம்பினால்
ஆப் புண்டு–கட்டப்பட்டு
பாடு உற்றாலும்–கஷ்டங்களை யடைந்தாலும் (சிறிது திருவுள்ளம் வருந்தாமல்)
சோம்பாது–(ஜகத் ஸ்ருஷ்டியில்) சோம்பல் படாமல்
இ பல் உருவை எல்லாம்–இவ் வுலகில் காணப்படுகிற பல பல பிராணிகளை யெல்லாம்.
படர்வித்த–விஸ்தாரமாக வுண்டாக்கின
வித்தா–ஆதி மூலமே!
உன் தொல் உருவை ஆர் அறிவார்–உன்னுடைய திவ்ய ஸ்வரூபத்தை அறிவாருண்டோ?
சொல்லு–நீயே சொல்லு.
தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளக பாம்பால் ஆப்புண்டு பாடுற்றாலும் –
என் மகன் இறே -நான் இவனுக்கு நல்லள்-என்று
யசோதைப் பிராட்டி தாம்பாலே கட்டினாலும்
அவர்கள் கட்டின கட்டு அபிமத விஷயத்தில் ஸம்ஸ்லேஷ சிஹ்னம் போலே இறே
அத் தழும்பு ஏதும் இல்லாதபடி காளியனாலே படாதது பட்டாலும்
தழும்பு தானிளக-
தழும்பு தான் இல்லாத படி
சோம்பாது இப் பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா உன் தொல்லுருவை யார் அறிவார் சொல்லு
இப்படி ஸம்ஸாரிகள் வை முக்யம் பண்ணினார்கள் என்று சோம்பாதே
நம் கார்யம் செய்கை நமக்கு எளிவரவோ என்று
காளியனில் காட்டில் தோலாதாராய் இருக்கிற பிரஜைகளை எல்லாம் விஸ்திருதம் ஆக்கின
(காளியன் இடம் தோற்காமல் அவனிலும் நீசர்கள் அன்றோ நாம் )
காரணத்வ ப்ரயுக்தமான குடல் துடைக்கை யுடையவனே
பழையதான உன்னுடைய வடிவை வேறு சிலர் அறியப் போமோ
நீயே சொல்லு
வடிவை -ஸ்வரூபத்தை
பரிபவம் பண்ணின போதோடு
பண்ணாத போதோடு
வாசியற ஏக ரூபமான
உன்னுடைய ஸ்வரூபத்தை வேறு சிலர் அறியப் போமோ –
நீயே சொல்லு
———-
கீழ் பருவம் நிறம்புவதற்கு முன்பு செய்தபடி சொல்லிற்று
வளர்ந்த பின்பு செய்த படி சொல்லுகிறது
(60 நக்ஷத்ரம் மேல் தான் கீதோபதேசம் )
சொல்லில் குறை யில்லை சூதறியா நெஞ்சமே
எல்லிப் பகல் என்னாது எப்போதும் –தொல்லைக் கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
காத்தானைக் காண்டு நீ காண் –19-
பதவுரை
சூது அறியா நெஞ்சமே–செய்ய வேண்டியது இன்னதென்றறியாமல் தளும்புகிற மனமே!
நன்மை தீமை அறியாத மனமே
சொல்லில் குறை இல்லை–பகவத் விஷயத்தைப் பேசினால் பேச்சில் குறையில்லை;
அஸங்க்யேயமான அளவில்லா கல்யாண குணாத்மகன் அன்றோ
(அல்லது) நமக்கொரு குறையில்லை;
தொல்லை கண்–அநாதியான இப் பூமியில்
மா தானைக்கு எல்லாம்–(துரியோதநாதிகளுடைய) பெரிய சேனைகளுக்கெல்லாம்.
ஓர் ஐவரையே மாறு ஆக–பஞ்ச பாண்டவர்களே எதிரிகளாம் படி
ஓர் நிகர் அற்ற என்று சொல்ல விலை துணை அற்றவர்கள் என்றவாறு
எல்லி பகல் என்னாது எப்போதும் காத்தானை–இரவு பகலென்னாமல் எக் காலத்திலும் ரக்ஷித்துக் கொண்டிருந்த பெருமானை
அஹோ ராத்ர விபாகம் இல்லாத போர் ராவண வதம்
இங்கு இரவில் இல்லை -இரவிலும் தூங்காமல் ரக்ஷத்தவன் இவனே
(மெய்யே காண விரும்பினால்)
காண்டும்–காண்போம்!
நீ காண்–நீ காணலாம்.
சொல்லில் குறையில்லை
பகவத் விஷயத்தைப் பேசப் புக்கால் பேச்சில் குறையில்லை
பேசி முடியாது
எத்தனை பேசினாலும் விஷயத்தைப் பரிச் சேதிக்கப் போதாது என்றபடி
(பேசினார் பிறவி நீத்தார் பேருளார் பெருமை பேசி
யதோ வாசோ நிவர்த்தந்தே )
சூதறியா நெஞ்சமே
பகவத் விஷயம் நன்று என்றும்
விஷய ப்ராவண்யம் அநர்த்தம் என்றும்
விடவும் பற்றவும் அறியாத நெஞ்சமே
சூது -விரகு
(விடுவித்துப் பற்றுவிக்கும் அவனே உபாயம்
எவற்றை விட்டோம் எவற்றைப் பற்றினோம் என்று அறியாத நெஞ்சமே )
எல்லிப் பகல் என்னாது எப்போதும் –தொல்லைக் கண் மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாக
(11 அக்ஷவ்ணி அங்கும் 7 அக்ஷவ்ணி இங்கும் )
பழையதாக பூமி நெளியும்படியான மஹா சேனைக்கு எல்லாம் தானே காத்தான் என்னில்
தங்களுக்குத் தோல்வி என்று அவர்கள் இசையார் என்று
பாண்டவர்கள் ஐந்து பேரும் எதிராக
கண் -என்று இடமாய் பூமி
தானை -சேனை
காத்தானைக் காண்டு நீ காண்
காண்போம் என்று காணப் புக்கால்
அவர்கள் பகல் யுத்தம் பண்ணி இரவு உறங்கினாலும்
இரவும் பகலும் உறங்காதே அர்ஜுனன் தோள் பிடிப்பதும் வெல்லும்படி மநோ ரதிப்பதும்
செய்து கொடு நின்று காத்தவனை
காண்டு நீ காண்
காண்போம் என்று காணப் புக்கது உள்ள படியே காணலாம் காண் –
———-
நான் -காண் -என்று சொன்னால் தன்னை அறிந்து நாண வேண்டாவோ என்கிறார்
சர்வ விஷயமாக அவன் தீண்டுகையாலே இதுவும் லஜ்ஜியாமல் தீண்டிற்று என்றபடி
(வள வேழ் உலகு படி விலக வேண்டாமோ நெஞ்சுக்கு லஜ்ஜை இல்லையே -என்றும்
அவனே மேல் விழுந்து நம்மைப் பற்றி திருவடிகளை நம் தலையில் வைக்க வந்த போது
நீயோ சென்று தீண்டுவது என்று ஸ்வகத ஸ்வீகாரம் உண்டோ என்றுமாம்
தன்னை -என்று
தாழ்ந்து இருக்கும் தன்னை என்றும்
பர கத ஸ்வீ காரம் பண்ணும் அவனை என்றுமாம் )
காணப் புகில் அறிவு கைக் கொண்ட நன்னெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில் -மாணி
யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
திருவாகம் தீண்டிற்றுச் சென்று–20-
பதவுரை
அறிவு கைக் கொண்ட நல் நெஞ்சம்–அறிவுடைய நல்ல நெஞ்சே
மாணி உரு ஆகிக் கொண்டு–வாமந ரூபியாய்
உல்கம் நீர் ஏற்ற சீரான்–(மாவலியிடத்திற் சென்று) உலகங்களை நீரேற்றப் பெற்ற சீர்மை பொருந்திய திருமால்.
சென்று–தானே எங்கும் பரவி
திரு ஆகம்–தனது திருமேனியினாலே-அழகிய திவ்ய மங்கள விக்ரஹத்தாலே –
தீண்டிற்று–உலகங்களை யெல்லாம் தீண்டினானென்பதை
காணப் புகில்–ஆராய்ந்தோமாகில்
நாம் பேசில்–நாம் பேசும் வார்த்தைகளுக்கு
நாணப் படும் அன்றே–வெட்கப்பட வேண்டுமன்றோ-
காணப் புகில் அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம் நாணப்படும் அன்றே நாம் பேசில் –
நாம் அறியாதே காணப் புகுதல்
அர்த்த தத்வம் இருந்த படியே பேசப் புகுதல் செய்தால்
அறிவுக்கு வாய்த் தலையான நெஞ்சுக்கு நாண வேண்டாவோ
மாணி யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
இத்தைத் தீண்டுகைக்கு அவன் ப்ரவர்த்தித்த படி
அவன் செய்த வியாபாரம் ஆகையால்
இதுவும் கூசாமல் தீண்டிற்று என்னவுமாம்
(சர்வ விஷயமாக அவன் ப்ரவர்த்தித்த படி-
ஒருவரைப் பிடிக்க ஊரையே வளைத்த படி )
திருவாகம் தீண்டிற்றுச் சென்று
தன்னை அறிந்தால்
விலக்ஷணமான வடிவைச் சென்று தீண்டக் கடவதோ –
(தன்னை -என்று
தாழ்ந்து இருக்கும் தன்னை என்றும்
பர கத ஸ்வீ காரம் பண்ணும் அவனை என்றுமாம்)
காணப் புகில்
நாம் பேசில்
அறிவு கைக் கொண்ட நன்னெஞ்சம்
மாணி யுருவாகி
நீரேற்று
உலகம்
கொண்ட
சீரான்
திருவாகம்
சென்று
தீண்டிற்று
நாணப் படும் அன்றே
என்று அந்வயம் –
—————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply