ஸ்ரீ பெரிய திருவந்தாதி –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்–அவதாரிகை /பாசுரங்கள்- 1-10–

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

குணங்களால் பெருமை என்பது போலே
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே -திருவாய் மொழி 8-10-3-
அது போலே சொல்லின்பம் பொருளின்பம் இவற்றால் சீரியதாக இருப்பதால் ஸ்ரீ பெரிய திருவந்தாதி

புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய்
அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு –75
மஹதோ மஹீயான் -இப்படி ஆழ்வார் தம்முடைய பெருமையைப் பேசிக் கொண்ட பிரபந்தம் என்பதால்
ஸ்ரீ பெரிய திருவந்தாதி -என்னவுமாம் –

அவதாரிகை

ஸமஸ்த கல்யாண குணாத்மகனான ஸர்வேஸ்வரன் நிர்ஹேதுகமாக
இமையோர் தலைவா என்று பேசலாம் படி
தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களையும் விபூதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்டு
தன்னை அனுபவிக்கைக்கு அநு கூலமான தேசத்தையும் –
அநுகூலமான ஞான வ்ருத்த தேஹங்களையும் யுடையராய்
ஸதா அனுபவம் பண்ணுகிற நித்ய ஸூரிகளையும் கண்டு
தமக்கு அவர்களோ பாதி பிராப்தியும் உணர்ந்து
இவ் வனுபவத்துக்கு பிரதிகூலமான ஞான வ்ருத்த தேஹங்களைத் தாம் யுடையராய் இருக்கிறபடியையும்
பிரதிகூலமான சம்சாரத்தில் தாம் இருக்கிறபடியையும் உணர்ந்து
த்வத் அனுபவ விரோதியான ப்ரக்ருதி ஸம்பந்தத்தை அறுத்துத் தர வேணும்
என்றார் திரு விருத்தத்தில்

(இனி யாம் உறாமை -என்று
பகவத் ஸ்வரூப ரூபாதிகளை அவனால் காட்டக்கண்டு
இமையோர் தலைவா என்று சொல்லத் தெரிந்தாலும்
அனுபவிக்க யோக்யதை இல்லாமல்
கொண்டாட்டமும் குத்தலுமாக
எனக்குத் தலைவனாக வேண்டாமா-என்றார் திரு விருத்தத்தில்)

நூறு பாட்டுக்குமே இதுவே அர்த்தமாக வேணும் –
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை (1)-என்று உபக்ரமித்து
இது கற்றவர்களுக்குப் பலமாக
அழுந்தார் பிறப்பாம் பொல்லா வரு வினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே (100)-என்று
உப ஸம்ஹரிக்கையாலும்

அடியேன் செய்யும் விண்ணப்பம் (1)-என்று உபக்ரமித்து
மாறன் விண்ணப்பம் செய்த (100)-என்று தலைக் கட்டுகையாலும்
அபேக்ஷித்த போதே செய்யப் பெறாமையால் பிறந்த ஆற்றாமையாலே சொல்லிற்றன
நடுவில் பாட்டுக்கள் –

(உறாமை யோடே உற்றேன் என்று சொல்ல மாட்டாமல்
கர்மங்களைத் தொலைத்தாலும் கிருபையால் இங்கே வைத்தார்)

பிரபந்தங்கள் தலைக்கட்டவும் –
நாடு நச்சுப் பொய்கை யாகாமைக்கும் –
ஆர்த்தி விளைவிக்கவும் –ஆர்த்தி பூர்த்தி ஆக்கவும்
தம் பிள்ளையைப் பட்டினி இட விட்டு அதிதிகளுக்கு உணவிடுவது போலேவும்-
அப்பொழுதே இவர் விண்ணப்பம் செய்தபடி அருள வில்லை

தான் நினைத்த கார்யங்கள் தலைக் கட்டவே ஸ்ரீ பீஷ்மர் சர கல்பத்தில் கிடக்க
அவரைக் கொண்டு நாட்டுக்கு தர்மங்களை உபதேசம் சொல்லுவித்தால் போல
(தர்ம புத்ரனை வியாஜ்ய மாத்ரம்
ஆழ்வாரை சம்சாரத்தில் இருக்க வைத்ததும் இத்துடன் ஒக்குமே)
ஆழ்வாரை திருவாய் மொழி பர்யந்தமாகப் பாடுவித்து நாட்டை வாழ்விக்க வேண்டும் என்றே வைத்ததும்

இவருக்கு தான் சேஷியாய் இவர் சேஷ பூதராய்
விரோதி நிவ்ருத்தி பண்ணுவாரும் தானேயாய் இருக்க
ஸ்ரீ வைஷ்ணவர்களை சேஷியாக தலை மக்களாக சொல்லுவான் என்

1-ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவனைப் பெருகைக்கு உபகாரகர்கள் என்பதாலும்
(த்வார சேஷிகள் -நாயகனாய் நின்ற-புருஷகாரம் பண்ணுபவர்கள் )
2- -பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு நாளும் பிரிகிலேன் –ஸ்ரீ பெரிய திரு மொழி -7-4-4- – –
பர தசையில் ப்ராப்யர் ஆகையாலும்
(இங்கே உபகாரகர் -புருஷகார பூதர் -அங்கு ப்ராப்யர்)
3- போதயந்த பரஸ்பரம் இதற்கு ஸ்ரீ வைஷ்ணவர்களை என்றபடி
விருத்தமான சம்ச்லேஷத்துக்கு உசாத் துணை ஆவார்கள் என்பதால்
அவர்களையே தம் திரு விருத்தத்தில் முக்கியமாக அருளுகிறார் –
மச் சித்தா மத் கதா பிராணா போதயந்த பரஸ்பரம் -கதயந்த ச மாம் பக்த்யா நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச –ஸ்ரீ கீதை -10-9-
அவர்களைத் தலைமகனாக அருளிச் செய்கிறார்

திருவாசிரியத்தில்
தான் நினைத்த கார்யம் தலைக் கட்டவும்
ப்ரக்ருதி சம்பந்தம் அறுத்திலன் ஆகிலும்
நின்ற நிலையில் காட்டில் சிறிது விசேஷம் பண்ணிக் கொடா விடில் இவர் தரிக்க மாட்டாரே
(எல்லாமும் பண்ணக் கூடாது ஒன்றுமே பண்ணாமல் இருக்க முடியாது )
ப்ரக்ருதி சம்பந்தம் அற்றார் அனுபவிக்கும் தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை
பிரக்ருதியிலே இருக்கும் போதே அனுபவிக்கும் படி ஞான வைஷ்யத்தை அருளிச் செய்தார்
(ஞானம் விளங்க விளங்க தானே அனுபவம் -ஹர்ஷம் -கைங்கர்யம் அனைத்தும் கிட்டும்
இது ஸாஸ்த்ர புறம்பானாலும் ஸத்ய ஸங்கல்பன் எதுவும் செய்யலாமே )
ஆழ்வார் ஸ்வரூப ரூப குண விபூதிகளை அனுபவித்து
திருவாசிரியம் அருளிச் செய்தார்

மேலும் பல பிரபந்தங்களை இவர் மூலம் உலகோர் பெற்று உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-
குணாநுபவம் இங்கேயே பண்ணுவிக்க-
அதனாலே களிப்புற்று
அந்த ஹர்ஷம் உள் அடங்காமல் புற வெள்ளமிட்டு-
ஸ்ரீ திருவாசிரிய பிரபந்தம் வெளி இட்டு அருளினார்-

அந்த அனுபவம்-அந்த பகவத் விஷயத்துக்கு தகுதியாக ஆசை கரை புரண்டு-
பெருகிச் செல்லுகிறபடியை-பேசி அருளுகிறார் இந்த பிரபந்தத்தில் –

இதில் -பெரிய திருவந்தாதியில் –
இதர விஷயங்கள் அனுபவிக்கும் பொழுது ஓன்று அன்றிக்கே
அனுபவித்தாலும் இன்னது அனுபவித்தோம் என்று சொல்வதற்கும் ஓன்று இன்றிக்கே இருக்கும் –

ஆனால்
பகவத் விஷயத்தில் -இப்படி இன்றிக்கே –
அனுபவித்த விஷயம் சொல்லி முடிக்க முடியாமல்
அநுபூத விஷயம் தோற்றாமல்
அனுபாவ்ய அம்சம் பெருத்து இருக்குமே -அனுபவிக்க வேண்டிய விஷயம் விஞ்சி இருக்குமே

ஆகையால்
முயற்றி சுமந்து (1)என்று தொடங்கி உத்ஸாகத்துடன் –
நின்ற நிலையிலே மொய் கழலே ஏத்த முயல்–(87) என்று தலைக் கட்டுகையாலே
விஷய அனுரூபமாக அபி நிவேசம் பெருகுகிற படி சொல்கிறது
(ஆனால் அபி நிவேசம் வளர்ந்து முடிந்தது என்று சொல்ல முடியாதே-)

(அதர்வண வேதம் –5977-மந்த்ரங்கள் கொண்டது
உச்சிஷ்டே நாம ரூபம் ஸோஷிட்டே லோக அஹித –சர்வ சேஷி -அனைத்துக்கும் ஆதாரம்
ஸ்ருஷ்டித்தவைகளுக்கு நாமம் ரூபம் அருளி உள் புகுந்து தரிக்கிறான்
கஸ்மை தேவயா ஹவிஷா விதேம–601-மந்த்ரம் -என்று கேட்டு
அவனே உபய விபூதி நாதன் -தேஜோ மயன் –
ஆனந்த மயன் -பரம புருஷார்த்தமும் அவனே

ஸர்வான் காமான் பூரேத்யாபவன் பிரபவான் பவான் ஆஹுதி ப்ரோ விதார்ததஸ்திதி பாணோ பபதஸ்யதி -566-
அபீஷ்டங்கள் அனைத்தும் அருளுபவன் -சர்வருக்கும் சமாஸ்ரயணீயன் -சர்வாத்மா -பரஞ்சோதி -சர்வசக்தன் -சனாதனன் –
தோஷோ காய ப்ருஹத் காய த்யுமத்தேஹி அதர்வண ஸ்துதி தேவம் ஸவிதாரம் 1291-
இரவும் பகலும் அவன் கீர்த்தி உயர்ந்த குரலில் பாடி அவனது பரஞ்சோதி ரூபத்தையும் சர்வ காரணத்தையுமே சிந்தித்து இருப்போம்
ஸோ அக்னி சே உ ஸூர்ய ச உ ஏவ மஹாயமே –ரஸ்மி பிர் நாப ஆப்ருதம் மஹேந்திர யேத்யாவ்ருத சர்வ அந்தர்யாமித்வம் -3695-
அவனே அக்னி -ஸூர்யன் -சர்வ நியாமகன் -சர்வ ஸ்வாமி -அனைத்து உள்ளும் புகுந்து நிர்வகிக்கிறான் –

தம் இதம் நிகதம் ஸஹ ச ஏஷ ஏக ஏகாவ்ருத்யேக ஏவ ய ஏதம் தேவம் ஏகாவ்ருதம் வேத – (3710)
பரமாத்மா -புருஷோத்தமன் -சர்வ சக்தன் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்-
தானே தன்னை ஆழ்வாராதிகளுக்குக் காட்டிக் கொடுக்கிறான் –அவர்கள் திரு உள்ளத்தில் ஆதித்ய மண்டல வர்த்தி போல்
பரஞ்சோதி ரூபத்துடன் அவர்களுக்கு காட்சி கொடுத்து அருளுகிறான் – 5035
அவனே பரமாத்மா பரஞ்சோதி என்று காட்டி அருளி மயர்வற மதி நலம் அருளுகிறான் –5185
பூரித இந்த்ர வீர்யம் -5048-நீயே உபய விபூதி நாதன் -அடியோமை பரம புருஷார்த்தம் அருளி உன் தாள் இணைக் கீழ் இருத்தி அருள்வாய்

ய ஏக இத்தவ் யஸ் சர்ஷ நீநா மீந்த்ரம் — 5208–சகல அபீஷ்ட வரதன் -ஸத்ய ஸங்கல்பன் -சர்வ சக்தன் -சர்வஞ்ஞன்-
இது கொண்டு தேவாதி தேவன் பேர் அருளாளன் ஸத்ய ஸங்கல்பன் -ஸநாதனன் –
ஸத்யம் ஞானம் – அநந்தம் -ப்ரஹ்மம் -ஜகதாரகன் -ஜகத் காரண பூதன் –
ஸமஸ்த த்ரிவித காரணன் -இத்யாதிகளை சொல்லும் மந்த்ரம் –
அவனை ஆஸ்ரயிப்போம் )

(முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப்புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-என்று தொடங்கி

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-என்று நிகமிக்கிறார் –

இங்கே இந்திரியங்களுக்கு விஷயம் இல்லாத அவனது பெருமையை முழுவதும் பேச முடியாதே –
முயற்சியே வேண்டுவதே
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரும் -குருகூர் நம்பி முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –என்றாரே )

————————————

நெஞ்சுக்கு ஒரு நல் வார்த்தை சொன்னால் போலே
அது இவரையும் கூடாதே முற்பட
என்னையும் கூட்டிக் கொண்டு போக வேணும் காண் -என்கிறார் –

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப் புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-

பதவுரை

முயற்சி சுமந்து–எம்பெருமானைப் பற்றிப் பேசுகையிலே-அடிமை செய்வதிலே – உத்ஸாஹம் பூண்டு
எழுந்து–கிளம்பி
முந்துற்ற நெஞ்சே–(அவ் விஷயத்தில் என்னை விட) முற்பட்டிருக்கிற மனமே!
ஸ்ரீ சீதாபிராட்டி முன்னே சென்று பெருமாளை பின்னே வரச் சொன்னாளே -அதே போல் இங்கும்
நீ எம் எம்மொடு கூடி–நீ (தனிப் பட்டுப் போகாமல்) என்னோடு சேர்ந்து
இயற்றுவாய்–காரியத்தை நடத்த வேணும்;
(நாம் இருவருஞ் சேர்ந்து நடத்த வேண்டிய காரியம் என்ன வென்றால்)
நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன்–(அழகிய காயாம் பூவிலுண்டான நிறம் போன்ற நிறத்தை யுடையனான எம்பெருமானுடைய
நல் -வை லக்ஷண்யம் சொல்லியே உவமானம் சொல்ல முயல வேண்டும்
புகழ்–திருக் கல்யாண குணங்களை
நயப்பு உடைய–நயம் உடைய -அன்பு பொதுந்திய
நா ஈன்–நாவினாலே கவனஞ் செய்யப்படுகிற-உண்டாக்கப் பட்டதாய் –
(மனஸ்ஸூ சஹகாரி இல்லாமலே நாக்கே பாடுமே ஆழ்வாருக்கு -நெஞ்சுக்கு முன்பே நாக்கு பாடுமே
யானாய்த் தன்னைத் தான் பாடுவான்
என் நாவில் இந்த கவி மற்ற யாருக்கும் கொடுக்ககிலேன்
பாட்டினால் என் நெஞ்சுள் இருந்தமை காட்டினாய் )
தொடை கிளவியுள்–சேர்க்கைப் பொருத்தமுடைய சொற்களிலே-அழகிய ஸப்த சந்தர்ப்பங்கள் –
பொதிவோம்–அடக்குவோமாக.
(இதுவே நீயும் நானும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியம்.
யதோ வாசோ நிவர்த்தக்கே வேதம் மீண்ட ஒன்றை அடக்க உத்ஸாகத்துடன் முயல்கிறார் )

முயற்றி சுமந்து
அடிமை செய்கையில் ஒருப்பட்டு

ப்ராதேவ து மஹா பாக ஸுமித்ரி மித்ர நந்தன
பூர்வ ஐஸ்ய அநு யாத்ரார்த்தே த்ரும சீரைர் அலங்க்ருத -ஸ்ரீ ஸூந்தர காண்ட ஸ்லோகம்

ப்ராதேவ து மஹா பாக
பெருமாளுக்கு மரவுரி கொடுத்து அன்றோ இளைய பெருமாளுக்குக் கொடுத்தது
இவரை –ப்ராதேவ -என்பான் என் என்னில்
தீப்தம் அக்நிம் அர்ண்யம் வா யதி ராம பிரவேஷ்யதி -ப்ரவிஷ்டம் தத்ர மாம் தேவி தும் பூர்வ அவதாரய என்று
இளைய பெருமாள் இருக்கும் படியாலே சொல்லிற்று
பெருமாள் பித்ரு வசன பரிபாலனம் பண்ண வேணும் என்று மரவுரி சாத்தினார்
அவர் உடுக்கப் புகுகிறான் என்று உடுத்தவர் படி -அது வேறே ஓன்று அன்றோ என்கிறது –

(திரிபுரா தேவியார் -உடையவர் கைக் காட்டிய படி இருந்தால் போல்
து -பிரசித்த அர்த்தம் -லஷ்மணன் என்றாலே முன்னே -ப்ராதேவ அன்றோ
அதே போல் இங்கும் ஆழ்வார் திரு உள்ளமும்
து -வியாவ்ருத்த அர்த்தம் என்றுமாம் -இவர் மரவுரி உடுக்க வேறே காரணம் )

மஹா பாக
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -என்று
ப்ரதிஜ்ஜை பண்ணின படியே
(சுற்றம் எல்லாம் பின் தொடர என்னலாம் படி )எல்லா அடிமையும் செய்யலாம் படி
திரு அபிஷேக விக்நம் பிறக்க பாக்யம் பண்ணினவர்

ஸுமித்ரி
ஸ்ருஷ்டஸ்த்வம் வன வாஸாய -என்று சொன்னவள்
வயிற்றிலே பிறந்தவர்

மித்ர நந்தன
பெருமாளைப் பிரியாதே அடிமை செய்ய வேணும் -என்ற
அனுகூல வர்க்கம் எல்லாம் நாம் செய்யப் பெற்றிலோமே யாகிலும்
இளைய பெருமாள் எல்லா அடிமையும் செய்யப் பெற்றார் இறே என்னும்படி
அனுகூல வர்க்கத்தை யுகப்பிக்குமவர்

பூர்வ ஐஸ்ய அநு யாத்ரார்த்தே த்ரும சீரைர் அலங்க்ருத
பெருமாள் பின்னே சேவித்துப் போகைக்காக மரவுரி சாத்தி அத்தாலே
அலங்க்ருதமானவர்
பெருமாள் அபிஷேகம் தவிருகைக்கு மரவுரி சாத்தினார்
இவர் கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு முடி சூடுகைக்காக மரவுரி சாத்தினார்
(தாபஸ வேஷமே அலங்காரம் )

எழுந்து
விஸ்திருகமாய் (கிளர்ந்து எழுந்து )

முந்துற்ற நெஞ்சே
அக்ர தஸ்தே கமிஷ்யாமி -என்னும்படியே முற்பட்ட நெஞ்சே

இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –
க்ருதஜ்ஜமாக வேணும் காண்
பார்த்தபடி அழகிது
பிற்பட்ட என்னையும் கூட்டிக் கொண்டு போ

நயப்புடைய
நீரும் நானும் கூடிச் செய்யப் புகுகிறது என் என்ன
அங்குத்தைக்கு அடிமை செய்வோம் என்கிறார் –

நயப்புடைய
என்னால் தன்னைப் பதவிய வின்கவி பாடிய(7-9-10)-என்னுமா போலே
கவிக்கு நயப்புடைமை யாவது
நாயகனுக்கு முன்பு இல்லாத நீர்மை இக் கவியாலே யுண்டாகை

நாவீன்
நீயும் வேண்டா என்கிறார்
உத்பத்திக்கு நீயும் வேண்டா நானும் வேண்டா
நெஞ்சிலே யூன்றி அனுபவிக்கைக்கு நீ யுண்டாக அமையும்

(பாட்டுப் பாட நீ வேண்டாம்
அவன் நாவில் இருந்து
பாட்டினால் உன்னை என் நெஞ்சில் இருந்தமை காட்டினான்
அனுபவிக்கவே நீ வேண்டும்
மநோ பூர்வ வாக் உத்தரம் அல்லவோ என்னில்
பக்தனுக்கு ந ஸாஸ்த்ரம் நைவ க்ரம )

(மநோ பூர்வ வாக் உத்தர அன்றோ )
நெஞ்சு இன்றிக்கே கவி பாடப் போமோ என்னில்
நெஞ்சுடைய ஸ்தானத்தில் சர்வேஸ்வரன் நின்று கவி பாடுவிக்கும் என்று கருத்து –
(கவி பாடும் சொல்லாமல் பாடுவிக்கும்
அவர் பங்கு முக்கியம் பிரதானம் -நம்மதும் உண்டு அமுக்கியம் )

தொடை கிளவி
அழகிய சந்தர்ப்பத்தை யுடைய சொல்லு
நெஞ்சு கன்றிச் சொல்லாமையாலே சொல்லில் வெட்டிமை இன்றிக்கே இருக்கை

யுள் பொதிவோம்
யதோ வாஸோ நிவர்த்தந்தே -என்று வேதங்கள் வாஸ்யத்தை அடைந்து
நிலை நில்லாமையாலே மீளவும்
இங்கு வாஸ்யம் வாசகத்தை விட்டுப் போக மாட்டாது –
(சொல் பொதிகை -சொல்லுக்கு உள்ளே அடக்குகை
யத் கோ சஹஸ்ரம் இத்யாதி -வாக்கிலே உறைகிறான் அன்றோ )

நற் பூவைப்
வாசகத்துக்கு எட்டுமது அன்று என்கிறது
(திருமேனி அழகு ஸ்வரூபத்தின் அளவு அல்லவே )
உபமானம் உபமேயத்துக்குப் போராமையாலே
உபமானத்தையும் சிக்ஷிக்கிறது

பூ வீன்ற வண்ணன்
பூவைப் பூ
காட்டுகிற நிறத்தை யுடையவன்
பூவைப் பூவைக் காட்டுகிற நிறத்தை யுடையவன் என்றுமாம் –
கோ சத்ருஸோ கவய
கவய சத்ரூஸோ கவ் -என்னுமா போலே

(ஈன்ற -பூ வாதல் -வண்ணமாதல்
பூ வண்ணத்தைக் காட்டுதல்
வண்ணம் -பூவைக் காட்டுதல் )

புகழ்
திவ்ய தேஹ குணங்களையும்
திவ்ய ஆத்ம குணங்களையும் –

நற் பூவைப் பூ வீன்ற வண்ணன் புகழ்
நயப்புடைய நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம்-

———

(தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதா மஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிம ஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிர பத்ரபாய ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —7

எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவு கூட ருத்ரன், ப்ரஹ்மா
போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்படிப்பட்ட
எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து)
என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.)

நாவீன் துடை கிளவி யுள் பொதிவோம் -என்று
வாஸ்யத்தை விளாக்கொலை கொள்ளக் கடவோம் என்ற இவர்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று
வேதங்கள் நின்ற நிலைக்கும் அவ் வருகே யானார்
மஹ்யம் நமோஸ்து கவயே -என்கிறார்

கவி சொல்லுகையாவது
விஷயத்துக்கு உள்ளதும் சொல்லி
விஷயத்துக்கு இல்லாததும் இட்டுச் சொல்லுகை இறே
உள்ளது ஒன்றும் சொல்லப் போகாத விஷயத்திலே கவி பாடப் புக்க நமக்கு நமஸ் காரம் என்னுமா போலே
முற்பட இவர் புகழ இழிவது என்
இப்பொழுது பழி என்று மீளுகிறது என் என்னில்
இரண்டும் வஸ்து வை லக்ஷண்யத்தாலே
நல்லது கண்டால் எனக்கு என்னக் கடவது
வை லக்ஷண்யத்தை அநுஸந்தியா -அவனுக்கு அதிசயத்தைப் பண்ண என்று இழிந்த தாம்
தம் சொல்லாலே நிறம் கெடும்படிப் பண்ணுகிறோம் என்று மீளுகிறார் –

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் -இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீ வினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை —2-

பதவுரை

எங்கள் மால் எம் கண்–எங்களிடத்தில்-வேற்றுமை உருபு
மால்–வ்யாமோஹகத்தை யுடைய
செம் கண் மால்–புண்டரீகாக்ஷனான பெருமானே,
இரண்டாலும் ஸுலப்யம் பரத்வம் இரண்டிலும் அப்ரமேயன் என்றதாயிற்று
புகழ்வோம்–(ஒருவராலும் புகழ்ந்து முடிக்க வொண்ணாத உன்னை அற்ப ஞானிகளான நாங்கள்) புகழ்தோமாகில்
பழிப்போம்–(அயோக்யர் புகழ்வது புகழ்ச்சி யன்றாதலால் உன்னை நாங்கள் பழித்தவர்களாகவே ஆய் விடுவோம்;
புகழோம்–(இவ் வுண்மையைத் தெரிந்து கொண்டு) புகழாதிருந்தோமாகில்
பழியோம்–உன்னைப் பழித்தவர்களாக ஆக மாட்டோம்;
தாழ்ந்த வாக்கு ஸ்பர்சம் இல்லாததால் -ஈனச் சொல்லாலுமாக –நான் கண்ட நல்லது என்றார் அன்றோ
இது வாசிகம் -மேலே மானஸ வியாபாரம்
மதிப்போம்–உன்னைச் சிறந்தவனாக நெஞ்சால் நினைத்தோமாகிலும்
இகழ்வோம்–உன்னை அகௌரவப் படுத்தினவர்களாக ஆய் விடுவோம்;
மதியோம்–அப்படி நெஞ்சால் நினையாதிருந்தோமாகில்
இகழோம்–அகௌரவப் படுத்தாதவர்களாக ஆவோம்;
(ஆக இப்படிப்பட்ட உண்மையை நாங்கள் நன்கு அறிந்திருந்தும் உன்னைப் புகழாமலாவது மதியாமலாவது
இருக்கப் போகிறதில்லை; புகழ்வதும், மதிப்பதும் செய்யத் தான் போகிறோம்.)
நீ சீறல்–நீ கோபங்கொள்ளலாகாது;
பாடுவதால் சீறாதே மேலான அர்த்தம் -பாடாமல் விலகுவதால் சீறாதே ஆழ்ந்த அர்த்தம்
அளியல் நம் பையல் அம்மவோ கொடியவாறே
இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே
இவை–புகழ நினைப்பதும் (பிறகு) புகழலாகாதென்று பின் வாங்குவதுமாகிற இவை
தீ வினையோம் எங்கள் மால் கண்டாய்–மஹாபாவிகளான எங்களுடைய ப்ரமமேயாம்.

புகழ்வோம் பழிப்போம்
அவ் விஷயத்தைப் புகழப் பார்த்தோம் ஆகில் பழித்தோம் ஆவோம்

புகழோம் பழியோம்
புகழ்வோம் என்றதினாலே இவ் வர்த்தம் ஸித்தியாதோ என்னில்
அந்வயத்தில் காட்டில் வ்யதிரேகத்தாலே சொன்னால்
அர்த்தத்துக்கு ஒரு ஸ்தைர்யம் உண்டு என்று சொன்னார்

(நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்–ஸ்ரீ பகவத்கீதை — இரண்டாம் அத்தியாயம் –12-
ஜாது அஹம் ந ஆஸம் ந ஏவ-எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன்,
ந த்வம் இமே ஜநாதிபா: ச ந ஏவ-நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே,
அத: பரம்-இனி மேலும்,
வயம் ஸர்வே ந பவிஷ்யாம:-நாம் அனைவரும் இல்லாமற் போகவும் மாட்டோம்
இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே.
இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம்.)

இகழ்வோம் மதிப்போம்
நெஞ்சால் நினைத்தோமாகில் அவ் வஸ்துவை இகழ்ந்தோம் ஆவோம்
மன பூர்வோ வாக் உத்தர என்று
மனஸ்ஸாலே நினைத்தை அன்றோ வாக்கு சொல்லுவது என்கிற நியாயத்தாலே
புகழ்வோம் பழிப்போம் -என்கிறத்தாலே ஸித்தியாதோ என்னில்

நெஞ்சாலே நினைத்த பாபங்களுக்கே பிராயச்சித்தம் பண்ண வேண்டும்படியாலே
நினைத்தோம் ஆகிலும் வஸ்துவை அழித்தோம் என்கிறார் –

மதியோம் -இகழோம்
நினைத்திலோம் ஆகில் இகழ்ந்திலோம் ஆவோம்

மற்று
மற்று -என்கிறது
புகழோம் என்கிறதில் காட்டில்
இகழ்வோம் என்றதினுடைய பிரிவைக் காட்டுகிறது
மற்று இகழ்வோம் என்ற படி
(வாக் வியாபாரத்தில் மாறி மானஸ வியாபாரம் என்கிறது )

எங்கள் மால்
இகழப் போகாத படி தம்முடைய பக்கலிலே வ்யாமுக்தனாய்

செங்கண் மால் -எங்கள் மால்
யதா கப்யாஸம் -என்று ஸ்ருதி ஸித்தமாய்
ஐஸ்வர்ய ஸூசகமான கண்ணை யுடையவனாய்
அபரிச்சேத்யனானவன்
என் பக்கலிலே வ்யாமுக்தனானான்

நீ சீறல்
நம் வை லக்ஷண்யத்தை அறியாதே இவர் இழிவதே -என்று
தம் பக்கலிலே சீறினானாகக் கொண்டு
சீறாதே கொள் என்கிறார்

அன்றியே
தாம் புகழப் புக்கவாறே புசியர் உண்ண என்று இலை யகலப் படுக்குமா போலே
தன் குணங்களைக் கேட்கப் பாரிக்கப் புக
தாம் மாறினவாறே சீறினதுக்கு
சீறாதே கொள் -என்றுமாம் –

தீ வினையோம்
நீ யுகந்தபடி பரிமாறப் போகாத பாபியோம்
விஷய வை லக்ஷண்யம் அறியாதே புகழ இழிந்த பாவியோம் என்றுமாம்

எங்கள் மால் கண்டாய் இவை
வை லக்ஷண்யத்தைக் கண்டு இழிவது
அயோக்யன் என்று அகல்வது
இவை எங்களுடைய பிராந்திகள் இறே

————-

இவை பிராந்தியால் அன்றிக்கே புகழ இழிந்து ஞானத்தாலே இறே
ஆனால் அடியிலே நமக்கு நிலம் அன்று -என்று மீள வேண்டாவோ என்ன
அசித் வ்யாவ்ருத்தியாலும்
அர்த்த அனுசந்தானம் பண்ண ஷமன் ஆக்கி வைக்கையாலும்
நன்று தீது என்று அறிவன்
அசித் சம்சர்க்கத்தாலும் பாரதந்தர்யத்தாலும் சாபலத்தாலும்
அனுஷ்டான ஷமன் அன்று

(அனுஷ்டான ஷமன் அன்று ஸ்துதியாமல் இருப்பத்தைச் செய்ய இயலாதவன் ஆனேன்
ஸ்வ தந்த்ரன் நீ பரதந்த்ரன் நான் அன்றோ
தேக யாத்திரை கர்மாதீனம் ஆத்ம யாத்திரை கிருபாதீனம்
நல்லதோ கெட்டதோ எல்லாமே நீ செய்விக்கச் செய்கிறேன் என்கிறார் )

இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் -இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்க ஒண்ணாது இறையவனே
என்னால் செயற்பாலது என் —3-

பதவுரை

இறையவனே–எம்பெருமானே!
இவை அன்றே நல்ல–உன்னைப் புகழாமையும் சிந்தியாமையுமாகிற இவை யன்றோ நல்லது;
இவை அன்றே தீய–உன்னைப் புகழ்வதும் சிந்திப்பதுமாகிற இவை யன்றோ கெட்டது;
இவை இவை என்று அறிவனேலும்–(ஆகவே) ‘இன்னது இப்படிப்பட்டது’ என்று நான் உண்மையில் தெரிந்து கொண்டிருக்கிறேனாகிலும்
இவை எல்லாம்–புகழாமையும் மதியாமையும், புகழ்தலும் மதித்தலுமாகிய இவை யெல்லாம்
என்னால்–என்னாலே
அடைப்பு நீக்கு ஒண்ணாது–பற்றவும் முடியாது, விடவும் முடியாது;
என்னால் செயற்பாவது என்–(சபலனான) என்னாலே செய்யக் கூடியது என்ன இருக்கிறது?

இவை அன்றே நல்ல
புகழோம் மதியோம் –
மதியோம் இகழோம் –
என்கிற இவை நல்ல

இவை அன்றே தீய
புகழ்வோம் பழிப்போம்
என்கிற இவை பொல்லாது

இவை என்று இவை அறிவனேலும் –
இவை இப்படி என்று பரிச்சேதித்து அறிந்தேன் ஆகிலும்

இவை எல்லாம்
த்யாக பரிக்ரஹாதிகள் எல்லாம்

என்னால் அடைப்பு நீக்க ஒண்ணா
என்னால் பரிக்ரஹவும் போகாது
த்யஜிக்கவும் போகாது

இறையவனே
பரிக்ரஹவும் த்யஜிக்கவும் இது தன்னரசு நாடோ

என்னால் செயற்பாலது என்
கர்மண்யே வாதி காரஸ்தே மா பலே ஷு கதாசந
மாம் நமஸ்குரு -என்று
நீ அருளிச் செய்ய என்னால் செய்யப்படுவது உண்டோ
நீயே பற்றுவித்து விடுவிக்கிறவனாய் இருக்க
நம்மால் செய்யத் தக்கவை ஒன்றுமே இல்லையே –

(கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோऽஸ்த்வகர்மணி–ஸ்ரீ பகவத்கீதை–2-47

தே கர்மணி ஏவ அதிகார-தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு,
கதாசந மா பலேஷு-எப்போதுமே பலன்களில் இல்லை,
கர்மபலஹேது மா பூ-செய்கையின் பயனைக் கோருபவனாக ஆகாதே,
தே அகர்மணி-உனக்கு கர்மங்களை ஆற்றாமல்,
ஸங்க: மா அஸ்து-இருப்பதிலும் பற்று கூடாது.

தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை.
செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே.)

(மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண:–9-34

மந்மநா: பவ-மனத்தை எனக்காக்கி விடு,
மத்பக்த:-பக்தியை எனக்காக்கு,
மத்யாஜீ-என்னைத் தொழு,
மாம் நமஸ்குரு-என்னை வணங்கு,
ஏவம் ஆத்மாநம் யுக்த்வா-இவ்வாறு மனம், புலன்களுடன் கூடிய உடலை (என்னிடம்) ஈடுபடுத்தி,
மாம் ஏவ ஏஷ்யஸி-என்னையே அடைவாயாக.

மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள்.
இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.)

(மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே–18-65

மந்மநா பவ-உன் மனதை எனக்காக்குக,
மத்பக்த:-என் தொண்டனாகுக,
மத்யாஜீ-எனக்கென வேள்விசெய்க,
மாம் நமஸ்குரு-என்னையே வணங்குக,
மாமேவ ஏஷ்யஸி-என்னையெய்துவாய்,
ஸத்யம் தே ப்ரதிஜாநே-உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன்,
மே ப்ரிய: அஸி-எனக்கு இனியவனாக இருக்கிறாய்.

உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக.
என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.)

————

நான் அணையில் (அணைந்து உன்னைப் பாடினால் )அங்குத்தைக்கு அவத் யாவஹம் –
அகலில் அங்குத்தைக்கு நிறம் உண்டாம் என்று
நீர் சொன்னதுக்கு ஸ்தானம் அறிந்திலர்
(ஸ்தானம் -நிலையாய் தியாக ஸ்வீ காரத்தினுடைய மர்மம் அறிந்திலீர் என்றபடி )
பிரயோஜகத்தில் அழகு இது –
(ப்ரயோஜகம் -மேல் எழுப் பார்த்தால் -அகலுகை நல்லது போல் தோற்றும் அத்தனை )
நீர் சொன்னபடியே மாறி நிற்க வேணும்
நீர் அகன்றீ ராகில்-
அதி க்ருத்தாதிகாரம் அவ்விஷயம் என்று நம்மை நம்புவார் இல்லை –
நீர் பற்றினீராகில்-
இவர் பற்றின விஷயம் எல்லார்க்கும் பற்றலாம் என்று நம்மைப் பற்றுகையாலே நமக்கு நிறமுண்டாம் -என்று
அருளிச் செய்ய ஹ்ருஷ்டராகிறார் –

என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் –என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று -4-

பதவுரை

என்ன–என்னுடையவனான
கரும் சோதி கண்ணன்–கறுத்த நிறத்தை யுடைய ஸ்ரீக்ருஷ்ணனும்
கடல் புரையும் சீலன்–கடல் போன்ற (கம்பீர) ஸ்வபாவ முடையவனும்
பெரும் சோதிக்கு–மிகப் பெரிய சோதி வடிவமானவனுமான எம்பெருமானுக்கு
என் நெஞ்சு ஆள் பெற்று–என்னுடைய நெஞ்சானது அடிமைப் பட்டதனால்
என்னில்–என்னை விட-விசிஷ்ட- நிஷ்க்ருஷ்ட -இரண்டிலும்
மிகு புகழார் யாவரே–மிக்க புகழுடையவர் யார் கொல்?
மற்று பின்னையும் எண்ணில்–இன்னமும் ஆராய்ந்து பார்க்குமளவில்
மிரு புகழோன் யான் அல்லால்–மிக்க புகழுடையவன்-மேலான கீர்த்தி யுடையவன் – தவிர வேறு யாருமில்லை.
(மத்தத் பரம் நாஸ்தி கண்ணன் கீதையில்
இதுவும் பெரிய திருவந்தாதிக்குப் பெயர் காரணமாகும் )

என்னின் மிகு புகழார் யாவரே
என்னில் காட்டில் மிக்க புகழை யுடையார் எவர் என்றுமாம்
(ஆத்மா அணு -கீர்த்தியோ விபூவாகி எட்டுத்திக்கிலும் பரவி உள்ளது
என் தன் அளவு என்றால் யானுடைய அன்பு பூதத்தாழ்வார் போல் இங்கும் )

ஆஸ்ரயத்தில் (ஆத்மாவிடத்தில் ) மிஞ்சின புகழை யுடையார் எவர் என்னவுமாம்

என்னில் –
விசிஷ்டத்தில் என்னில் காட்டில் இல்லை என்றும்
நிஸ்க்ருஷ்டத்தில் அணுவான ஆத்மாவிலும் விஞ்சின புகழை யுடையார் யார் என்னுதல் என்றுமாம்

அலாபத்தில் -சீலம் இல்லாச் சிறியனேலும் செய் வினையோ பெரிதால் என்று
சொல்லுமா போலே இறே
பேற்றிலும் சொல்லுவது
(ப்ராப்த அவன் விஷயத்தில்
உண்ணும் போது ஒரு வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தை சொல்பவர் தானே )

பின்னையும் மற்று எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால்
ஆஸ்ரயத்தில் (ஆத்மாவில் ) அடங்காத புகழை யுடையேன் யானே யன்றோ

என்ன கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப் பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று
தன் வடிவை எனக்கு சர்வ ஸ்வ தானம் பண்ணி
ஸூலபனாய்
அளவிறந்த சீலத்தை யுடைய ஸர்வேஸ்வரனுக்கு அதிசயத்தைப் பண்ணப் பெற்று இருக்கிற
என்னில் காட்டில் மிக்க புகழை யுடையார் யார் –

(ஈசன் வானவருக்கு –நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே
இங்கு சீலம் காட்டிய பரஞ்சோதி )

————–

அயோக்யன் என்று அகன்று
அசந்நேவ ஸ பவதி -என்று முடியப் புக்க என்னை
சத்தை யுண்டாக்கினாய் -என்கிறார் –

(இல்லை என்று அறிந்தவன் இல்லையாகிறான்
உளன் என்று அறிந்தவன் உளன் ஆகிறான்
விலகி இருந்தால் ஸ்வரூப நாசம் ஆகி இருக்கும்
சத்தையைக் கொடுத்து நிறுத்தி வைத்தாய் )

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையர் ஆவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ யம்மா காட்டும் நெறி —-5–

பதவுரை

மாய–மாயவனே!-ஆச்சர்ய சக்தி உக்தனே
அம்மா–ஸ்வாமியே!
இரண்டு விழிச் சொற்கள் பரத்வமும் ஸுலப் யமும்
பேசில்–உன்னால் நான் பெற்ற உபகாரங்களைப் பேசப் புகுந்தால்
பெற்ற தாய் நீயே–பெற்ற தாய் போலே ப்ரியமானதையே செய்பவனும் நீயே;
பிறப்பித்த தந்தை நீ–உண்டாக்கின பிதாவைப் போல ஹிதமானதையே செய்பவனும் நீயே;
மற்றையர் ஆவாரும் நீ–மற்றும் ஆசாரியரும் நீயே;
மா மாயவளை மாய–மஹத்தான வஞ்சனையை யுடைனான பூதனையை முடிப்பதற்காக
முலை–(அவளது விஷந்தடவின) முலையை
வாய் வைத்த நீ–அமுது செய்த நீ
காட்டும் நெறி–எனக்குக் காட்டின வழிகள்-
விரோதங்களைப் போக்கி கிட்டும்படி -ஞான காரியமாக விலக்க மாட்டாமல் சேர்த்துக் கொண்டாயே
போதரே –புந்தியில் புகுந்து ஆதரம் பெருக வைத்த அழகன் -முதல் படி
அஞ்ஞானத்தால் விலகியது முதல் படி
ஞானத்தால் விலகியது அடுத்த படி
தாவி அன்று -உலகம் -மழைக்கன்று வலையுள் பட்டு -என்றதும் –சிக்கென செங்கண் மாலே போல் -இரண்டாம் படி
இதுவே பெரும் மாயம்
எற்றே ஓ–என்ன ஆச்சர்யமானவை ( என்று உருகுகிறார்.)

பெற்ற தாய் நீயே
பிரஜை யுண்டாக்குகைக்கு நோன்பு நோற்று வயிற்றிலே தரித்தால்
ப்ரஜைக்குப் பாங்காக போஜன சய நாதிகளை நியமித்து
பிறந்தால் அ ஸூசி பிரஸ்ர வாதிகளைத் தொட்டு அளைந்து வளர்த்து
இதினுடைய ஹிதங்களையே சிந்திக்கும் தாயாவாயும் நீயே
(புருஷோத்தம ப்ரவசம் -நம் சம்ப்ரதாயம் )

பிறப்பித்த தந்தை நீ
ஒரு பாத்ரத்திலே இட்டு வைக்குமவை போலே தரிக்கும் அளவே இறே இவளது
உத்பாதகன் பிதாவே இறே
ஹிதமே சிந்தித்து இருக்கும் பிதாவும் எனக்கு நீயே

மற்றையர் யாவாரும் நீ –
ஸரீரம் ஏவ மாதா பிதரவ் ஜனயத (ஆபஸ்தம்ப ஸூத்ரம் )-என்று
இருவரும் கூட சரீரத்துக்கு உத்பாதகர் அத்தனை இறே
ஆத்மாவுக்கு நன்மை பார்க்கும் ஆசார்யனாயும் நீயே

(மாதா நாராயண பிதா நாராயண
மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ அதிதி தேவோ பாவ
கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாயும் தந்தையும் நீயே
அன்னையாய் அத்தனாய் -ஆச்சார்ய பரம்
உத்க்ருஷ்ட ஜென்மம் ஞானப்பிறவி
அன்னை குடி நீர் அருந்தி -ஆர்த்தி பிரபந்த பாசுரம் -நமக்காக தாமே சரணாகதி ஸ்வாமி )

பேசில் –
நீ செய்யும் இவை பேசப் போகாது இறே

எற்றேயோ
என்னே

மாய
ஆச்சர்ய சக்தி யுக்தனே
செய்யப் போகாதவையும் செய்யுமவனே
செய்யப் போகாதாவை -என்றது
அயோக்கியன் என்ற என்னை அகலாதபடி பண்ணுகை

மா மாயவளை மாய முலை வாய் வைத்த
மஹானான மாயத்தை யுடைய பூதனை முடிய முலையை வாயிலே வைத்த

நீ யம்மா காட்டும் நெறி எற்றேயோ
அயோக்கியன் என்று அகன்ற என்னுடைய விரோதத்தைத் தவிர்த்த படி
பூதனையால் வந்த இடரை நீக்கினால் போலே இறே –

மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
யம்மா
நீ காட்டும் நெறி
எற்றேயோ–என்று அந்வயம்

———–

நம் பக்கலிலே ருசியைப் பிறப்பித்து
அயோக்யன் என்று அகன்ற தம்மைச் சேர விட்டோமாகில்
மேலுள்ள கார்யம் தாமே ப்ரவர்த்திக்கிறார் என்று
ஈஸ்வரன் இருந்தானாகக் கொண்டு
வெறுத்துச் சொல்கிறார்

(கீதா ஸங்க்ரஹ பாசுரம் இது
எங்கள் கையிலிலேயே எங்களைக் காட்டிக் கொடுத்தால் அதோ கதி
தன்னால் வரும் நன்மை விலைப்பால் போல் தீமையோபாதி விலக்காய் இருக்கும்
அவனால் வரும் நன்மையே முலைப்பால் ஆகும்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் –களை கண் மற்று இலேன் )

நெறி காட்டி நீக்குதியோ நின் பால் கருமா
முறி மேனி காட்டுதியோ மேனாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
என் செய்தால் என் படோம் யாம் —6-

பதவுரை

கண்ணனே–எம்பெருமானே!-கிருஷ்ணனாய் அவதரித்த ஸ்வாமியே
இவன் தானே உபாயாந்தரங்களைப் பரக்க அருளிச் செய்து
மேலே சரம ஸ்லோகமும் அருளிச் செய்தான்
நெறி காட்டி நின் பால் நீக்குதியோ–கருமம் ஞானம் முதலிய உபாயாந்தரங்களைக் காட்டி
(இவற்றை அநுஷ்டித்துப் பலன் பெறுவாய் என்று சொல்லி என்னை) கை விட்டு விடப் பார்க்கிறாயோ?
(அல்லது)
நின் பால்-கரு மா முறி மேனி காட்டுதியோ–கறுத்த மாமரத்தின் தளிர் போன்ற
(உனது மாந்தளிர் பச்சை பசுமை ) திருமேனியை ஸேவை ஸாதிப்பித்து அநுக்ரஹிக்க நினைக்கிறாயோ?
மேல் நாள்–அநாதி காலமாக
அறியோமை–அறியாதவர்களான எங்களை
என் செய்வான் எண்ணினாய்–என்ன செய்வதாக திரு வுள்ளம் பற்றியிருக்கிறது?
ஈது உரையாய்–தேவரீருடைய திருவுள்ள மின்ன தென்பதை அருளிச் செய்ய வேணும்;
மாஸூ ச என்ற வார்த்தை அருளிச் செய்து அருள வேணும்
என் செய்தால்–நீ எமக்கு என்ன நன்மையைச் செய்தாலும்
யாம் என் படோம்–யாம் என்ன அநர்த்தத்தைத்தான் அநுபவிக்க மாட்டோம்.

நெறி காட்டி நீக்குதியோ நின் பால்
நெறி காட்டுகை என்றும்
நீக்குகை என்றும்
பர்யாயம்
(தொழுதால் எழலாம் -தொழுகையும் எழுகையும் பர்யாயம் )

மத்யாஜீ மாம் நமஸ்குரு என்ன
அர்ஜுனனுக்கு சோக விஷயமாயிற்றே

(மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண:–9-34

மந்மநா: பவ-மனத்தை எனக்காக்கி விடு,
மத்பக்த:-பக்தியை எனக்காக்கு,
மத்யாஜீ-என்னைத் தொழு,
மாம் நமஸ்குரு-என்னை வணங்கு,
ஏவம் ஆத்மாநம் யுக்த்வா-இவ்வாறு மனம், புலன்களுடன் கூடிய உடலை (என்னிடம்) ஈடுபடுத்தி,
மாம் ஏவ ஏஷ்யஸி-என்னையே அடைவாயாக.

மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள்.
இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.)

(மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே–18-65-

மந்மநா பவ-உன் மனதை எனக்காக்குக,
மத்பக்த:-என் தொண்டனாகுக,
மத்யாஜீ-எனக்கென வேள்விசெய்க,
மாம் நமஸ்குரு-என்னையே வணங்குக,
மாமேவ ஏஷ்யஸி-என்னையெய்துவாய்,
ஸத்யம் தே ப்ரதிஜாநே-உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன்,
மே ப்ரிய: அஸி-எனக்கு இனியவனாக இருக்கிறாய்.

உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக.
என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.)

நீ உன் கார்யத்தைச் செய் என்பது விட நினைத்தாரை இறே
ஏஷ பந்தா விதர்ப்பாணா மேஷ யாதி ஹி கோஸலவான் (பாரதம் )-என்று
தன்னுடனே கிடந்த தமயந்தியை உடுத்த புடவையில் ஒரு தலையை அறுத்து
வழி இது -இங்கனே போ -என்று விட்டால் போலே இறே
தன் பக்கலிலே ந்யஸ்த பரனானவனை
உன் ஹிதத்துக்கு நீயே கடவை -என்கை

நின் பால் கருமா முறி மேனி காட்டுதியோ
என்றுமாம் –
விவ்ருணுதே –என்னுமா போலே

(நின் பால்–ஹார மத்ய மணி நியாயம் தேகளி தீபம் நியாயம்
ந அயம் ஆத்மா ப்ரவசனே அப்ய -விவ்ருணுதே-தேன லப்ய -அவன் காட்டவே லாபம் )

கரு மா முறி மேனி
அஞ்சனத்தில் புழுதி படைத்த புறவாயை நீக்கி முறித்த முறி போலே
திருமேனி நெய்த்து இருக்கிறபடி –

மா முறி
மாந்தளிர் என்று ஸுகுமார்யத்தைச் சொல்லி

கரு
அதிலே கறுப்பையும் கூட்டி
ஸ்யாமமாய் ஸூ குமாரமான திருமேனியை
(இல் பொருள் உவமை )

காட்டுதியோ
நீயே காட்டி அனுபவிப்புத்தியோ

மேனாள் கரு மா முறி மேனி காட்டுதியோ -என்றுமாம்
பழையதான அசாதாரண மான திவ்ய மங்கள விக்ரஹம்
(மேல் நாள்-ஹார மத்ய மணி நியாயம் தேகளி தீபம் நியாயம் )

மேல் நாள் அறியோமை –
பழையதாக அறியாதே போருகிற என்னை

மேல் நாள் அறியோமை நெறி காட்டி நீக்கிதியோ –
ஒருத்தனுக்கு திங் மோஹம் பிறந்தால்
வழி அறியுமாவன்
நீயேயோ என்னக் கடவதோ
வழி காட்டி விடக் கடவனோ
பதஸ் ஸ்கலிதம் (நல்ல மார்க்கத்தில் இருந்து நழுவும்படி ) என்னும்படி இறே
என்னுடைய அவஸ்தை

(அவிவேக கநாந்த திங்முகே
பஹுதா ஸந்தத து:க்கவர்ஷிணி |
பகவந்! பவதுர்திநே பத:
ஸ்கலிதம் மாம் அவலோகயாச்யுத ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —49

ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே!
திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும்
இந்த ஸம்ஸாரத்தில், நல்வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.)

என் செய்வான் எண்ணினாய்
மந் மநா பவ -(9-34/-18-65 )என்னப் பார்த்தாயோ
மாம் ஏகம் சரணம் வ்ரஜ (18-68)–என்னப் பார்த்தாயோ

கண்ணனே ஈதுரையாய்
மயர்வற மதி நலம் முதலிய நன்மைகளைப் பண்ணினோமே என்ன –
மாஸூச -என்று சொல்லுகையாம் இறே
(ஸூலபனான உன்னைத் தானே நிர்பந்திக்க முடியும் )

என் செய்தால் என் படோம் யாம் —
எல்லா உயர்த்தியையும் செய்து
பரம பதத்திலே கொடு போய் வைத்தால்
நீ தவிர்த்த பிராதி கூல்யத்திலே போய் நில்லேனோ -என்னை என் கையிலே காட்டித் தந்தால் –
(பிராதி கூல்யத்திலே போய்-ஸம்ஸாரத்திலேயே -அத்வேஷம் தவிர்த்தாய் முதலில்- த்வேஷிக்கப் போவேன் )

————

அயோக்யன் என்று அகன்ற தம்மைச் சேர விட்டான் என்று நின்றது கீழ்
சேர விட்டாலும் பர்வத பரம அணுக்களுடைய சேர்த்தி போலே இறே –
(இதுக்கு பெற்ற தாய் (5)என்ற பாட்டோடே சங்கதி
மானஸ அனுபவ மாத்ரமாயே இருந்தது -பரம அணு போல்
நானோ உன்னை அணைத்து பாஹ்ய சம்ச்லேஷம் -பர்வதம் போல் இது -அங்கு தானே கிட்டும் )

யாமே அரு வினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -பூ மேய
செம் மாதை நின் மார்வில் சேர்வித்து -பாரிடந்த
அம்மா நின் பாதத் தருகு –7-

பதவுரை

பூ மேய–தாமரைப் பூவில் பொருந்தி யிருக்கிற
செம் மாதை–*ஹிரண்ய வர்ணையான பிராட்டியை
நின் மார்வில் சேர்வித்து–உனது திரு மார்விலே சேர்த்துக் கொண்டானாயும்
அம்ருத மதன காலத்தில் பெண் அமுதம் கொண்ட -லஷ்மீ கல்யாணம் ஆதி அன்றோ
சீதா ருக்மிணி ஆண்டாள் ஸ்ரீனிவாச கல்யாணம் எல்லாம் பின்பே
பார் இடந்த–(பிரளயத்திலழுந்திக் கிடந்த) பூமியைக் குத்தி யெடுத்தவனாயுமிருக்கிற
அம்மா–ஸ்வாமீ!
ஸ்ரீயபபதியாயும் -ஸ்ரீ பூமா தேவி இடந்து -அம்மா ஸ்வாமி -பரத்வம் ஸுலப்யம் –
விலகவும் மேல் விழவும் இவையே காரணம்
கரு மா மேனி காட்டி -மானஸ அனுபவம் மாத்திரம் -அணைக்க முடியவில்லையே
நின் பாதத்து அருகு–தேவரீருடைய திருவடிகளின் சமீபத்திலே
என் நெஞ்சினார் தாமே–என்னுடைய நெஞ்ச தானே
அணுக்கர் ஆய் சார்ந்தொழிந்தார்–அந்தரங்கமாகச் சென்று சேர்ந்து விட்டது;
அரு வினையோம்–போக்க முடியாத பாவத்தைப் பண்ணி யுள்ள
யாமே–நாங்கள் மாத்திரம்
சேயோம்–தூரத்திலிருக்கிறோம்.
நெஞ்சினார் -கொண்டாடி -தான் அணைக்க முடியாமல் கொடிய வினையேன்

யாமே அருவினையோம் சேயோம் –
மஹா பாபியாய் இருந்த நாம் துரியோம்
ஸம்ஸாரிக்கு பகவல் லாபம் என்கிறது ஓர் அர்த்தமோ

என் நெஞ்சினார்-தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் –
என்னுடைய நெஞ்சினார் பண்ணின உபகாரம் இறே
தன் ஸ்வரூபம் அறியாதே மேல் விழுந்து செய்வது ஓன்று இறே

பூ மேய செம் மாதை நின் மார்வில் சேர்வித்து –
அயோக்யர் என்று பிற்காலிக்கைக்கும் மேல் விழுகைக்கும்
ஹேது சொல்கிறது

1-பூ மேய செம் மாதை நின் மார்வில் சேர்வித்து
என்ற ஸ்ரீ லஷ்மீ பதித்வமும்

2-பாரிடந்த
அதி மானுஷ சேஷ்டித்வமும்

3-அம்மா
என்ற சர்வேஸ்வரத்வமும்

பிற்காலிக்கைக்கும் ஹேது

1-பெரிய பிராட்டியார் திரு மார்பிலே இருக்க நமக்கு இழக்க வேணுமோ என்றும்
2-பார் இடந்த-என்றத்தால் தளர்ந்தார் தாவளம்
(புகல் அற்ற நமக்கு ஒரே புகல் இடம் –
ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே )என்றும்
3-அம்மா என்று வகுத்தவன் என்றும்
மேல் விழுகைக்கும் இவை தான் ஹேதுக்கள்

அம்மா நின் பாதத்தருகு
என் நெஞ்சினார் தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார்

———

நீர் கைக்கு எட்டாதே இருக்கச் செய்தே கை புகுந்தால் போலே இரா நின்றன –
இதுக்கு அடி சொல்லீர் என்கிறார்

அருகும் சுவடும் தெரி யுணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் -பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு –8-

பதவுரை

பருகலாம் பண்பு உடையீர்–வாய் மடுத்துப் பானம் பண்ணுதற்கு உரிய திருக் குணங்களை யுடையவரே!
பார் அளந்தீர்–(த்ரிவிந்தரமாவதாரத்தால்) பூமியெல்லாமளந்தவரே!
பாவியேம் கண் காண்பு அரிய நுண்பு உடையீர்–பாவிகளான எங்களுடைய கண்களாலே
காண முடியாத வைவக்ஷண்யத்தை யுடையவரே!-நுண்பு-ஸூஷ்மத்தன்மை
நும்மை–உம்மை
அருகும்–கிட்டுவதையும்
சுவடும்–கிட்டுவதற்கான உபாயத்தையும்
தெரிவு உணரோம்–(நாங்கள்) பகுத்தறிந்தோமில்லை;
(அப்படியிருக்கச் செய்தேயும்)
நுமக்கே–உம் விஷயத்திலேயே
அன்பு மிக பெருகும்–(எமக்கு) ஆசையானது மிகவும் பெருகா நின்றது;
இது என்–இதற்கு என்ன காரணம்?
பேசீர்–நீர் தாம் சொல்ல வேணும்.

அருகும் சுவடும் தெரி யுணரோம்
பன்னீராண்டு கலந்த பிராட்டியைப் போலே
உம்மோடே கலந்து உம்முடைய சுவடு அறிகிறிலோம் –
நீர் வருகைக்குச் சுவடு அறிகிறிலோம் -என்றுமாம்

(அருகும் சுவடும்-
1–நெருக்கமும் அதனால் பெற்ற இனிமையும்
2-அடைவதும் அதுக்கு உபாயமும் என்றுமாம் )

அன்பே பெருகும் மிக இது என் பேசீர் –
ஆகிலும் உமக்கு (உம் விஷயத்தில் ) அன்பு மிகா நின்றது
இதுக்கு அடி சொல்லீர்
(ஆழ்வார் கேள்வி இது பெருமாள் கேள்வி அல்ல -நஞ்சீயர் தெளிவிக்கிறார் )

பருகலாம் பண்புடையீர்
பருகலாம் என்று ஒரு த்ரவ்ய த்ரவ்யத்தைச் சொல்லுமா போலே சொன்னபடி என்
பருகலாம் நீர்மையை யுடையீர் (ஸுலப்யம் நீர் தன்மை உருகும் தன்மை )

பாரளந்தீர்
சொன்ன நீர்மைக்கு உதாஹரணம்

பாவியேம் கண் காண்பரிய நுண்புடையீர்
பாவியோமாய் இருந்த எங்கள் கண்ணால் காணப் போகாத
வை லக்ஷண்யத்தை யுடையீர்

நும்மை நுமக்கு
நும்மை -அருகும் சுவடும் தெரிவுணரோம்
நுமக்கு அன்பே பெருகும் மிக
இது என் பேசீர்
இது ஜீயர் பிள்ளை திரு நறையூர் அரையர் பக்கல் கேட்டதாகப்
பிள்ளை அருளிச் செய்தார் –

(நஞ்சீயர் அருளிச் செய்ததை நம்பிள்ளை அருளிச் செய்ய
பெரியவாச்சான் பிள்ளை ஏடு படுத்தி அருளிச் செய்கிறார் )

(நெறி காட்டி அருகும் சுவடும் போலே இதுவும்
நிருத்தரம் என்று கவிழ்ந்து நிற்க–ஆச்சார்ய ஹிருதயம்-228

நெறிகாட்டி நீக்குதியோ -பெரிய திருவந்தாதி-6 -என்கிற பாட்டிலும் –
அருகும் சுவடும் தெரி உணரோம்–பெரிய திருவந்தாதி-8- –என்கிற பாட்டிலும்
உபாயாந்தரத்தை காட்டி அகற்றப் பார்க்கிறாயோ –
பழையதாக அஜ்ஞனாய்ப் போருகிற என்னை என் செய்வதாக நினைத்தாய் –
இத்தை அருளிச் செய்ய வேணும் என்றும் –
உம்முடைய அருகு வருதல்-
உம்முடைய சுவடு அறிதல்-செய்யாது இருக்க –
உம்மளவிலே ஸ்நேஹம் ஆனது அறமிக்கு வாரா நின்றது -இதுக்கடி அருளச் செய்ய வேணும் என்றும்-
முன்பு இவர் கேட்டவை நிருத்தரம் ஆனால் போலே –
இப்பொழுது கேட்டதும் நிருத்தரம் என்று –
நிலத்தை கீறாக் கவிழ்ந்து நிற்க )

————-

பல் பன்னிரண்டும் காட்டினாலும் பிரயோஜனம் இல்லை என்கிறது –
(என்று என்று -என்கிற மீமிசையால் பல் பன்னிரண்டு -என்கிறது )

நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென் மாலார்
தமக்கு அவர் தாம் சார்வரியரானால் -எமக்கினி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே
யாதானும் சிந்தித்து இரு –9

பதவுரை

நெஞ்சே–ஓ மனமே!
(மாலார்) அவர் தாம்–எம்பெருமானாகிற அப் பெரியவர் தாம்
சார்வு அரியர் ஆனால்–நமக்குக் கிட்ட முடியாதவராயிருக்கும் போது
நொந்து உரைத்து என்–வாய் நோவச் சொல்வதில் என்ன பயன்?
இனி–இன்று முதலாக
எமக்கு ஆதானும் ஆகிடு காண்–நமக்கு எது வேணுமானாலும் நேரட்டும்;
மாலார் தமக்கு–அவ் வெம்பெருமானை நோக்கி
நுமக்கு அடியோம் என்று என்று–“நாங்கள் உமக்கு அடிமைப் பட்டவர்கள்” என்று பல தடவை
அவர் திறத்தே–அப் பெருமான் விஷயமாகவே
யாதானும் சிந்தித்து இரு–எதையாவது சிந்தித்துக் கொண்டு கிடப்பாயாக.
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே -அவனாகவே நின்றாலும் -போல்
இங்கு யாதானும் -பாவி நீ என்ற நிந்தையாகிலும் -அவன் விஷயமாக ஏதானும்

நுமக்கு அடியோம்
இதுவே போரும் அவன் இரங்குகைக்கு

என்று என்று
அதுக்கும் மேலே
அத்தைப் பலகால் சொல்லுகையும்
திரு உள்ளத்தைப் புண் படுத்துக்கைக்கு உடல்

நொந்து உரைத்தென்
ஆர்த்தோ வா யதி வா திருப்த ஹரி பரேஷாம் சரணாகத பிராணன் பரித்யஜ்ய
ரஷிதவ்ய க்ருதார்த்தமநா (யுத்த )-என்றதுவும்
பொய் போலே

மாலார் தமக்கு
பண்டு (ஸம்ஸ்லேஷித்த தசையில் )இவை எல்லாம் செய்து வர்த்தித்தவருக்கு

(நம்மிடத்திலே முன்பு அடியோம் என்பது
நொந்து உரைப்பது
பல் காட்டுவதாய்ச் செய்து வர்த்தித்தவர்க்கு -என்றபடி )

அவர் தாம் சார்வரியரானால் –
கையாளாய் வர்த்தித்தவர் கிட்ட அரியவரானால்
அவர் செய்வோம் என்று நினைத்த வன்று போலே காணும்
இங்குச் சொன்னவை (நுமக்கு அடியோம் போல் சொன்னவை )எல்லாம் பலிப்பது

எமக்கினி யாதானும் ஆகிடு காண் நெஞ்சே
இனி நமக்கு பேறு இழவு இரண்டும் ஒக்கும்
பசித்த போது கிடையாத சோறு என் செய்ய
விஸ்லேஷத்தில் உஜ்ஜீவிப்போமாகில் அன்றோ ஆறி இருக்கலாவது –

ஈர்ஷ்யாரோஷவ் (அயோத்யா -27 )–இத்யாதி
அதிலே துஷ்ட ஸத்வங்களும் ராக்ஷஸரும் உண்டு
ஸூ குமாரையாய் இருக்கிற உன்னைக் கொடு போக ஒண்ணாது என்று பெருமாள் அருளிச் செய்ய
ப்ரணய ரோஷத்தாலே பிராட்டி விண்ணப்பம் செய்கிறாள்

உம்முடைய பின்னே போந்தேன் என்று எனக்கு ஒரு உயர்த்தி யுண்டாம் காட்டிலும் உமக்கு
இத்தனை பொறாமையும் சீற்றமும் வேணுமோ
பிதாவினுடைய வசனத்தை அநு வர்த்தித்துக் காடு ஏறப் போனார் என்று உமக்கு ஒரு உயர்த்தி தேடுகிறவோ பாதி
உம்முடைய பின் போந்தேன் என்று எனக்கு ஒரு உயர்த்தி யுண்டானால் ஆகாதோ
அநு வர்த்த நீயரை அநு வர்த்திக்கலாவது உமக்கேயோ
அல்லாதாருக்கு ஆகாதோ

ஈர்ஷ்யாராஷவ் பஹிஷ் க்ருத்ய புக்த சேஷ மிவோதகம் (அயோத்யா -27 )
வசிஷ்ட சிஷ்யராய் ஞானவான்கள் ஆனால் த்யஜிக்கப் படுபவை த்யஜிக்க வேணும் காணும்
(தீர்த்தம் மிச்சம் இல்லாமல் குடிக்க வேண்டுமா போல் )

நய மாம்
அஸூயை யும் கோபமும் போனால் பர ஸம்ருத்தியே இறே உள்ளது –
ஆன பின்பு என்னக் கொடு போகீர்

வீர
பர ஸம்ருத்தி யுண்டானால் கொடு போகாது ஒழிகைக்கு வீர்யத்தில் கொத்தை இறே
அது இல்லை இறே உமக்கு

விஸ்ரப்த
உம்மை நீர் அறிவீர்
என்னை விஸ்வசித்துக் கொடு போம்

பாபம் மயி ந வித்யதே
உம்மைப் பிரிந்து ஜீவிக்கைக்கு அடியான பாபம் எனக்கு நிலை காணும்
பாபமாவது -கிலேச ஹேது இறே
உம்மைப் பிரிந்து கிலேசப் படுமது இல்லை காணும் எனக்கு

அவர் திறத்தே யாதானும் சிந்தித்து இரு
பேறும் இழவும் இரண்டும் ஒக்கும் என்று இருக்கலாமோ
நம்முடைய சத்தைக்கு அவன் வேணுமே என்ன

சத்தைக்கு இது எல்லாம் வேண்டாம் காண்
(இது எல்லாம் -நமஸ்காராதிகள் எல்லாம் )
அவர் நம்மை வேண்டா என்றத்தை நினைத்து இருக்க அமையும் –
நம்முடைய சத்தைக்கு அவர் சத்தை இறே காரணம் –

(அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே
பாவி என்று முன்னே வந்து சொன்னாலும்
“செம்மை யுடைய திருமார்பில் சேர்த்தானேலும் ஒரு நான்று, மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி
விடை தான் தருமேல் மிக நன்றே” (நாச்சியார் திருமொழி 13-9)

நெஞ்சே
அவர் தாம் சார்வரியரானால்-சார்வு அரியரானால்-
மாலார் தமக்கு
நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்தென்
எமக்கு இனி -இனி எமக்கு –
யாதானும் ஆகிடு காண்
அவர் திறத்தே யாதானும் சிந்தித்து இரு
என்று அந்வயம் –

இந்த ஸ்ரீஸூக்திகளின் ஆழ் பொருளை என் சொல்வோம்.
‘எம்பெருமானுடைய அநுக்ரஹத்தை நினைத்துக் கொண்டிருந்தால் தானே நமக்கு ஸத்தை;
அவன் நம்மை அநுக்ரஹியாது நிக்ரஹித்து விட்டாலும் அவனையே நினைத்துக் கொண்டிருக்க வேணுமென்று சொல்லலாமோ?
“எமக்கினி யாதானும் ஆகிடு காண் ” என்று எப்படி சொல்லலாம்? என்னில்;
அவனுடைய அநுக்ரஹம் போலே அவனுடைய நிக்ரஹமும் நமக்கு அநுஸந்தேயமே.
நம்மைப் பற்றி எம்பெருமான் திருவுள்ளத்தில் பட்டிருக்கு வேண்டுமெத்தனையே அபேக்ஷிதம்.
அது அநுக்ரஹ ரூபமாகவோ நிக்ரஹ ரூபமாகவோ எதுவாகிலுமாகலாம்.

திருவாய் மொழியிலும் (47-3.) “கூவிக்கூவி நெஞ்சுருகிக் கண் பனி சோர நின்றால், பாவி நீ யென்றென்று சொல்லாய்
பாவியேன் காண வந்தே” என்றருளிச் செய்ததன் கருத்து நோக்கத்தக்கது.
எம் பெருமான் விருப்பான வார்த்தையோ வெறுப்பான வார்த்தையோ எது சொன்னாலும் அதில் ஒரு நிர்பந்தமில்லை;
கண் முன்னே வந்து தோற்றிச் சொல்ல வேணுமென்பதொன்றே வேண்டுவது என்கிறாரன்றோ.

ஆண்டாளும் ·“செம்மை யுடைய திருமார்பில் சேர்த்தானேலும் ஒரு நான்று, மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி
விடை தான் தருமேல் மிக நன்றே” (நாச்சியார் திருமொழி 13-9) என்றாள்; –
கண்ணபிரான் தனது திரு மார்பிலே எனது கொங்கைகளை அணைத்துக் கொள்ள வேணுமென்று விரும்பியிருக்கிற
என் விருப்பத்திற்படி அவன் அணைத்துக் கொள்வனேல் நன்று;
அப்படி அணைத்துக் கொள்ளத் திருவுள்ளமில்லையாகில், என் முகத்தை நேராகப் பார்த்து
‘எனக்கு உன் மேல் அன்பு எள்ளளவுமில்லை, உன்னைக் கை விட்டேன், நீ போ’
என்று வாய் திறந்தொன்று சொல்லி விடட்டும்; அஃது எனக்கு மிகவும் ப்ரியம் என்றாளன்றோ.

உன்னைக் கைவிட்டேனென்று சொல்லுகிற வார்த்தையையாவது அவன், முகம் நோக்கிச் சொல்லுவனாகில்
அப்போதைய ஸேவையாவது கிடைக்குமே என்றும் கண்ணிலே தன் பட்டானாகில் பிறகு அவனை உபாயங்களால்
ஸ்வாதீனப்படுத்திக் கொள்ள வழியுண்டாகலா மென்றும் நினைத்துச் சொல்லுகிறபடியிறே இவை.

அதுபோல, இவ்விடத்திலும் ‘அவன் திருவுள்ளத்தில் அநுக்ரஹமில்லாமல் நிக்ரஹமே கொண்டிருந்தாலும்
அதை யாகிலும் சிந்தித்துக் கொண்டிரு’ என்றது-
நல்ல படியாகவோ தீய படியாகவோ ஏதேனுமொரு விதமாக நம்மைப் பற்றின எண்ணம் அவனது திருவுள்ளத்தே
பட்டிருக்குமாகில் அதுவே போதுமானது.
நல்ல அப்பிராயமோ கெட்ட அபிப்ராயமோ உண்டாகும் போது
நம்மை ஒரு வ்யக்தியாக நினைத்தன்றோ உண்டாக வேண்டும்;
அந்த நினைவு தானே நமக்கும் போதுமானது என்கை.

————-

இதுக்கு மூன்று படி அருளிச் செய்வர் (நம்பிள்ளை காலக்ஷேபத்தில் )
விலக்ஷண அதிகாரம் காண்
மதிப்பர்க்கே கிடைக்கும் அத்தனை அல்லது எளியர்க்குக் கிடையாது காண்
தன்னையே பிரயோஜனம் என்று இருப்பார்க்குக் கிடையாது காண்
உபாயாந்தர பரிக்ரஹணம் பண்ணினார்க்கும் அத்தனை காண்
தன்னையே உபாயமாகப் பற்றினார்க்குக் கிடையாது காண் என்றுமாம்

(இரண்டு அயோக்ய அனுசந்தானம் –
மூன்றாவது வெறுப்பு )

இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோ
டொரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திரு மாற்கு
யாமார் வணக்கமார் ஏ பாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்–10-

பதவுரை

இரு நால்வர்–அஷ்ட வஸுக்களென்ன
ஈரைந்தின் மேல் ஒருவர்–ஏகாதச ருத்ரர்களென்ன
எட்டோடு ஒரு நால்வர்–த்வாதச ஆதித்யர்களென்ன
ஓர் இருவர் அல்லால்–அச்ஸிநீ தேவர்களென்ன
ஆகிய முப்பத்து மூவரமரர்கள் தவிர (மற்றவர்களான)
யாம்–நாம்
திருமாற்கு–எம்பெருமானைப் பணிவதற்கு
ஆர். எவ்வளவு மனிசர்?–
வணக்கம் ஆர்–நம்முடைய பணிவு தான் எத்தன்மையது!
ஏ பாவம்–அந்தோ!;
நல் நெஞ்சே–நல்ல மனமே!
நாமா–நாமோ வென்றால்
மிக நாழ் உடையோம்–மிகவும் குற்றமுள்ளவர்களா யிருக்கிறோமிறே.
வீண் ஆசையை யுடையவர்களாய் இருக்கிறோம் அன்றோ

இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோ டொரு நால்வர் ஓர் இருவர்
அஷ்ட வஸூக்கள்
ஏகாதஸ ருத்ரர்கள்
த்வாதஸ ஆதித்யர்கள்
அஸ்வினிகள்

அல்லால்
இம் மதிப்பர்களை ஒழிய

திரு மாற்கு யாமார் வணக்கமார்
ஸ்ரீ யபதிக்கு நாமார்
அங்கு பரிமாறுவாரார்
நம்முடைய செயல் எது

ஏ பாவம்
அவன் அருகே இருக்க இழக்க வேண்டினது
நம்முடைய பாபம்

(1-அநாதி காலம் விஷயாந்தர ப்ராவண்யராய் இருந்த பாபம் என்றும்
2-அயோக்கியன் விலகிய பாவம் என்றும்
3-பாஹ்ய சம்ச்லேஷம் கிட்டாத பாவம் என்றுமாம் )

நன்னெஞ்சே
லாபம் அலாபம் இரண்டுக்கும் கூட்டான நெஞ்சே

நாமா மிகவுடையோம் நாழ்–
நாம் நறு வட்டாணித் தனத்தை மிக யுடையோம்
ஸ்ரீ யபதி என்றால் நம் ஸ்வரூபத்தைப் பார்த்து அகல இறே அடுப்பது
ஸ்வரூபத்தைப் பாராதே கிட்டிற்று நம் அளவில் இல்லாமை இறே

நாழ்-
நறு வட்டாணித் தனமாய் (நிரர்த்தமான வாக் ஸாமர்த்யம் )

நாமாகில் நாழ் மிக யுடையோம் –
ஆகையாலே
யாமார் வணக்கமார் -என்று அந்வயம்

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: