1-தமிழ்ப்பற்று –
2-ஆழ்ந்த பொருள் விளக்கம் –
3-ஸ்ரீ வைஷ்ணவ அடிப்படை கொள்கைகள்
4-உவமை உருவகம்
5-அணிகள்
6-முரண்பட்டு சமன்வயம்
————
1-தமிழ்ப்பற்று –
தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளரே – 3-8 10-
தூய தமிழ் பத்தும் வல்லார்
சம்ஸ்க்ருதம் சப்தம் போல் அன்றிக்கே -இருண்டு பொருள் தெரியாமை -அன்றிக்கே
பெண்ணுக்கும் பேதைக்கும் அறியலாம்படி ஸ்வார்த்த பிரகசகமாய் தூய்மையை உடைத்தான
திராவிட பாஷையாய் -ஓர் ஒன்றே ஓர் ஆத்மாவுக்கு உஜ்ஜீவனமாய் போரும் என்னும்படி
இருக்கிற பத்துப் பாட்டையும் சாபிப்ராயமாக அனுசந்திக்க வல்லவர்கள்
சீர்மலி செம்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே -2-4 10- –
சீர்மலி செம்தமிழ் வல்லார் -சீர் மலிகையாவது -சப்த லஷணங்களில் குறைவற்று இருக்கையாலே – அழகு மிக்கு இருக்கை
அன்றிக்கே –
பகவத் குணங்களால் நிறைந்து இருக்கிற என்னுதல்
செம் தமிழ் ஆர்ஜவ யுக்தமான தமிழ் -அதாவது -சப்தத்தின் உடைய பிரசன்னதையாலே
உள்ளில் கிடக்கிற அர்த்தம் தானே பிரகாசிக்கும் படியாக இருக்கை –
செந்தமிழ் -வார்த்தைகள் பொருள் தானே விழுங்கும் செம்மை -ஸ்வயம் பிரகாசம்
நடை விளங்கு தமிழ்
செவ்வித் தமிழ்
ஸ்வார்த்த பிரகாசம்
கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு –4-8-4-
ஞாசி தாசி -கூனி பணிப்பெண் -கூன் தொழுத்தை -அடியாட்டி -அடிமைப்பெண் –
சக்களத்தி -மாற்றாட்டி மகன் -தூய தமிழ் வார்த்தை –
கூனியாகிற அடியாட்டி ஆனவள் -திரு அபிஷேக மகோத்சவத்துக்கு அழிவான துருக்திகளை சொல்ல –
அதாவது –
ஜ்ஞாதி தாசீ யதோ ஜாத கைகேயாச்து சஹோஷிதா –
பிரசாதம் சந்த்ர சங்காஸ் மாருரோஹா யதார்ச்சயா -என்கிறபடியே
ஜ்ஞாதி தாசியான இவள் யதார்ச்சிகமாக மாளிகை தளத்தின் மேலே ஏறிப் பார்த்தவாறே –
பெருமாளுடைய திரு அபிஷேகத்துக்கு திருப் படை வீடு எல்லாம் கோடித்து கிடக்கிற படியையும் –
ப்ர்யந்தம் ப்ரந்த மயோத்யாயாம் -என்கிறபடியே
திரள் திரளாக வந்து கிடக்கிற ஜன சம்மர்தத்தையும் -மங்கள வாத்திய கோஷங்களையும்
கண்டு சஹிக்க மாட்டாதே தளத்தின் நின்றும் இறங்கி வந்து
கைகேயியை பர்த்சித்து -உன் மாற்றாட்டி மகன் அபிஷேகம் செய்ய தேடுகிறான்
உன் மகன் அவனுக்கு இனி இழி தொழில் செய்து இருக்கும் அத்தனை இறே
இத்தைப் பார்த்து கொண்டு நீ இருக்கிறது ஏது
அவனுடைய அபிஷேகத்தை குலைத்து உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கும்படி
ராஜாவோடே சொல்லு – அதுக்கு உபாயம் -முன்பே உனக்கு தந்து இருப்பது இரண்டு வரம் உண்டே
அவை இரண்டையும் உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்
ராமனை காடேற போக விடுகையும் -என்று வேண்டிக் கொள்
சத்ய தர்ம பரரான ராஜாவால் செய்யாது ஒழிய போகாது காண் -என்று
திரு அபிஷேகத்துக்கு விக்நமான துருக்திகளை சொன்னாள் இறே
கருளுடைய பொழில் மருதம்–4-9-3-
கருள் -என்று கறுப்பாய்-அத்தாலே சீற்றத்தை சொல்லுகிறது
கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்-என்னக் கடவது இறே–தொல் காப்பியம் மேற்கோள் –
திருக்குறள் -செவிக்கு உணவு இல்லாத போது -மேற்கோள்
—————————————————————–
2-ஆழ்ந்த பொருள் விளக்கம்
கை இளங்குந் நெல்லிக்கனி போல் காட்டி அருளுவார்
சொல்லிலரசிப் படுதி நங்காய் சூழல் உடையன் உன் பிள்ளை தானே
இல்லம் புகுந்து என் மகளைக் கூவி கையில் வளையை கழற்றிக் கொண்டு
கொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிகின்றானே -2 9-10 – –
நான் அல்லன் என்று சிரிக்கின்றானே –
நான் அல்லேன் காண் -என் கையில் வளை கண்டாயோ -நான் உன் இல்லம் புகுகிறது கண்டாயோ –
உன் பெண்ணைப் பேர் சொல்லி அழைக்கிறதைக் கேட்டாயோ -வந்து கையில் வளை கழற்றினது கண்டாயோ
கண்டாயாகில் உன் வளையை அங்கே பறித்து கொள்ளா விட்டது என் -என்றாப் போலே
எனக்கு மறு நாக்கு எடுக்க இடம் இல்லாதபடி சில வார்த்தைகளைச் சொல்லி நின்று சிரியா நின்றான்
இதில் காட்டில் உண்டோ துஸ்ஸகமான தீம்பு -என்கை –
நான் அல்லேன் பல அர்த்தங்கள்
பார்த்தேன் என்றால் அனுமதி பெற்றேன்
பார்க்கவில்லை என்றால் ஆதாரம் இல்லா பழி
கண்ணன் பாவத்தில் இருந்து விளக்கி மா முனிகள்
3-9-4-மாற்றுத்தாய் -இரண்டு விளக்கம்
மாற்றுத்தாய் -மற்ற தாய் சுமத்தரை -நாடே வேண்டாம் -காட்டிலே ஆவது நிம்மதியாக இரு என்று வாழ்த்தி ஆசீர்வாதம்
கூற்று -யமன் போன்ற கைகேயி ஏவ
மாற்றான் தாய் மனப்பான்மை கொண்ட கைகேயி -போக சொல்ல
கூற்றுத்தாய் – -கூறு போட்ட பாயாசம் உண்டவள் -சுமத்தரை -ஆசீர்வாதம் செய்து வழி அனுப்பினாள்
3-10- அடையாளப்பத்து -திருவடி பாவத்தில் பெரியாழ்வார்
3-10-9-முத்ரை கணை ஆழி -உச்சி மேல் வைத்துக் கொண்டு உகந்தாள்
மா முனிகள் சீதா பிராட்டி பாவனையில் மாறி வியாக்யானம்
சிவ தனுஸ் -கை பிடித்து -உள்ளம் உறுத்தி -உகந்தனள் -ஆல்-வியப்பு மகிழ்ச்சி உணர்வை விளக்கி –
————-
3-ஸ்ரீ வைஷ்ணவ அடிப்படை கொள்கைகள்
ராமாநுஜ–94- தவம் தரும் – -தகவும் -அருளும் -ஐந்தும் –
தவம் செல்வம் -வைஷ்ணவ அடிப்படையில்
சத்யம் -தபஸ் -புலன் அடக்கம் -மன அடக்கம் -தானம் -அனுஷ்டானம் -மக்கள் பேறு -அதிகம் பெற்றுக்கொள்ளாமல் –
மூன்று தீ அக்னி ஹோத்ரம் -அதிகமனம் -திரு ஆராதனம் –
மாதவன் தெய்வம் மனசில் நாட்டி -மனக்கோயில் மானஸ ஆதாரணம் -அதுக்கும் மேல் சரணாகதி –
தஸ்மாத் நியாசம் அதிரிக்தம் -ஏஷாம் தபஸாம் –
————-
4-உவமை உருவகம்
கற்பகமாக உருவகம் மேல்
கற்பகம் காட்டிலும் உத்க்ருஷ்டம்
என்னை ஆள வந்த கற்பகம் -ஸ்வாமியாக -தானே தேடி வந்து
இந்த மநோ பாவம் தருவார்
செல்வம் -பக்தி கைங்கர்ய ஸ்ரீ
————–
5-அணிகள்
மைத் தடம் கண்ணி யசோதை தன் மகனுக்கு-1-4-10-
மைத் தடம் கண்ணி யசோதை-கருத்து பெருத்து இருந்துள்ள கண்ணை உடையளான யசோதை –
அஞ்சனத்தாலே அலங்க்ர்தமாய் பரந்துள்ள கண்ணை உடையவள் என்னுதல்-
அஞ்சன வண்ணனான இவனை அநவரதம் பார்த்து கொண்டு இருக்கையாலே
இவனுடைய திருமேனி நிறம் ஊறி -அத்தாலே மைத்து -இவன் பக்கல் ஸ்நேகத்தாலே
விகசிதமான கண்ணை உடையவள் என்னுதல் –
தற் குறிப்பு ஏற்று அணி கொண்டு வியாக்யானம்
அஞ்சன வண்ணனை அநவரதம் பார்த்துக் கொண்டு இருப்பதால் -கண்களில் நிறம்
வியந்து பார்த்து -அகன்று
————
6-முரண்பட்டு சமன்வயம்
தண் புதுவை பட்டன் சொன்ன
குளிர்ந்த ஸ்ரீ வில்லி புத்தூர் -முரண்பாடு போக்க
உடலுக்கு இல்லை இது
பிறவிப்பிணி வெப்பம் போக்கி குளிர்ச்சி உண்டாக்கும்
தாப த்ரயங்களைப் போக்கி அருளும் திவ்ய தேசம்
என் கண்ணா கண்ணா என்ன உதவப் புள்ளூர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த அதகன் -2-1-9-
நாராயணா ஒ மணி வண்ணா நாகணையாய் வாராய் -என்று கூப்பிட்டவனாக அருளிச் செய்தார் திருமங்கை ஆழ்வார் –
இவர் -என் கண்ணா கண்ணா என்று கூப்பிடவனாக அருளிச் செய்தார் –
மூலேதி முக்த பத மாலபதி த்வி எந்தரே-என்று கொண்டு -ஆதி மூலமே -என்று கூப்பிட்டானாக பௌராணிகர் சொன்னார்கள் இறே –
இவை தன்னில் சேரும்படி என் என்னில் -மூலம்-என்கிற இடத்தில்
அசாதாரண விக்ரக விசிஷ்டனான ஆகாரத்தை நினைத்து கூப்பிட்டான் ஆகையாலே
அதுக்கு பர்யாய சப்தங்களை இட்டு ஆழ்வார்கள் அருளி செய்தார்கள் ஆகையால் எல்லாம் சேரக் குறை இல்லை –
ஆதி மூலமே அன்றோ என்னில் -இறைவனை சொல்வதால் முரண்பாடு இல்லையே
——————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply