ஸ்ரீ கோயில் பெரிய திருமொழி –
1-வாடினேன் வாடி
2-தாயே தந்தை
3-விற் பெரு விழவும்
4-அன்றாயர்
5-திவளும்
6-தூ விரிய
7-நும்மைத் தொழுதோம்
8-ஏழை ஏதலன்
9-பெடை அடர்த்த
10-கண் சோர
11-தெள்ளியீர்
12-மூவரில்
13-காதில் கடிப்பு
14-மாற்றமுள
———–
ஸ்ரீ பரகாலன் பனுவல்கள் —
மஞ்சுலாம் சோலை வண்டறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை யிவை–1-1-10-
மங்கையர் கலியனது ஒலி மாலை அரிய வின்னிசை –1-2-10-
மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை–1-3-10-
கலியன் வாயொலி செய்த பனுவல் வரம் செய்த வைந்தும் ஐந்தும்–1-4-10-
மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை–1-5-10-
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை–1-6-10-
இரும் தமிழ் நூல் புலவன் மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன் செங்கை யாளன் செஞ்சொல் மாலை-1-7-10-
மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்-1-8-10-
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன் பண்ணார் பாடல் பத்து-1-9-10-
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை–1-10-10-
———-
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம் மன்னு பாடல்-2-1-10-
மங்கையர் கோன் கலியன் கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும்-2-2-10-
கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி சொன்ன சொல் மாலை பத்து-2-3-10-
மங்கையர் கோன் அமரில் கட மா களியானை வல்லான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை-2-4-10-
கடமாரும் கருங்களிறு வல்லான் வெல் போர்க் கலி கன்றி யொலி செய்த வின்பப் பாடல் திடமாக விவை யைந்தும் ஐந்தும் வல்லார்–2-5-10-
வடி கொள் நெடு வேல் வலவன்கலிகன்றி யொலி -2-6-10-
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் பன்னிய பனுவல்–2-7-10-
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை–2-8-10-
மங்கையர் தம் தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த சீர் மன்னு செந்தமிழ் மாலை -2-9-10-
மங்கை வேந்தன் வாள் கலியன் ஒலி யைந்தும் யைந்தும்-2-10-10-
————–
வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த பாவு தண் தமிழ் பத்திவை-3-1-10-
உலகுக்கு அருளே புரியும் காரார் புயல் கைக் கலி கன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும்-3-2-10-
மங்கையர் கோன் மருவார் ஊனமர் வேல் கலி கன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்-3-3-10-
அங்கமலத் தடம் வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி யரட்டமுக்கி யடையார் சீயம் கொங்குமலர் குழலியர் கோன்
மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன சங்க முத்தமிழ் மாலை பத்து–3-4-10-
கல்லின் மன்னு திண தோள் கலியன் ஒலி செய்த நல்ல இன்னிசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும்–3-5-10-
கையிலங்கு வேல் கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை ஐயிரண்டும் இவை-3-6-10-
காய்சின வேல் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை பத்து-3-7-10-
நெடுமாலுக்கு என்றும் தொண்டாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய் தமிழ் மாலை -3-8-10-
மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்க மலி தமிழ் மாலை பத்து இவை–3-9-10-
————-
கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்து–4-1-10-
ஆலிமன் அருள் மாரி பண்ணுளார் தரப் பாடிய பாடல் இப் பத்து-4-2-10-
மங்கையார் வாள் கலிகன்றி ஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும்–4-3-10-
கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் –4-4-10-
மங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள்–4-5-10-
கலியன் சொன்ன பாவளம் பத்தும் –4-6-10-
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை–4-7-10-
வார்கொள் நல்ல முலை மடவாள் பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்து–4-8-10-
காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த சீரார் இன் சொல் மாலை-4-9-10-
வண்டறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்-4-10-10-
————
கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலி கன்றி சொல் தான் ஈரைந்து இவை -5-1-10-
கோவைத் தமிழால் கலியன் சொன்ன பா–5-2-10-
நஞ்சுலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐ இரண்டும்–5-3-10-
கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல் நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் –5-4-10-
நீல மலர்க் கண் மடவாள் நிறைவழிவைத் தாய் மொழிந்த வதனை நேரார் கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி மாலை–5-5-10-
காமரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர் நாமருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும்–5-6-10-
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள் பன்னிய பனுவல்–5-7-10-
மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும் ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ்
திரு வரங்கத் தம்மானை நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த பாடல் –5-8-10-
மாட மங்கை திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை–5-9-10-
ஒளி சேர் கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்–5-10-10-
————-
காமரு சீர்க் கலிகன்றி சொன்ன பாமரு தமிழ் இவை–6-1-10-
வானாரும் மதிள் சூழ் வயல் மங்கையர் கோன் மருவார் ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை –6-2-10-
காரார் புயல் தடக்கைக் கலியன் ஒலி மாலை-6-3-10-
கறையார் நெடுவேல் மங்கையர் கோன் கலி கன்றி சொல்–6-4-10-
காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை–6-5-10-
பொய்ம் மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன் புலங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த
அம் மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல்–6-6-10-
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை–6-7-10-
வம்பவிழ் தார்க் கன்னவிலும் தோளான் கலியன் ஒலி–6-8-10-
வண் களக நில வெறிக்கும் வயல் மங்கை நகராளன் பண் களகம் பயின்ற சீர் பாடல் இவை பத்து–6-9-10-
காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை–6-10-10-
————-
நறையூர் நம்பிக்கு என்றும் தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை–7-1-10-
கன்னீர் மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர் கோன் சொன்னீர் சொல் மாலை –7-2-10-
தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி நாடன்
நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச் சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்
தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை பாடல் பத்திவை–7-3-10-
தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை–7-4-10-
மங்கை வேந்தன் பரகாலன் சொல்லில் பொதிந்த தமிழ் மாலை -7-5-10-
யணி யாலியர் கோன் மருவார் கறை நெடுவேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்–7-6-10-
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன்
சொன்ன இந் தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்து–7-7-10-
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல்
ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும்–7-8-10-
காரார் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை–7-9-10-
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை–7-10-10-
———–
மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று காவளரும் கடி பொழில் சூழ்
கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும்–8-1-10-
கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை பார்மலி மங்கையர் கோன் பரகாலன் சொல்–8-2-10-
கடல் சூழ் வயலாலி வள நாடன் காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை–8-3-10-
வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன் கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை–8-4-10-
வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து ஆர்வத்தால் அவர் புலம்பிய
புலம்பலை யறிந்து முன்னுரை செய்தn கார் கொள் பூம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி–8-5-10-
கருமா முகில் தோய் நெடுமாடக் கண்ண புரத் தெம்மடிகளைத் திரு மா மகளால் அருள் மாரிச் செழு நீராலி வள நாடன்
மருவார் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி –8-6-10-
மலி புகழ் கண புர முடைய வெம்மடிகளை வலி கெழு மதிளயல் வயலணி மங்கையர்
கலியன தமிழிவை விழுமிய விசையினொடு ஒலி –8-7-10-
கண்ண புரத் தடியன் கலியன் ஒலி -8-8-10-
செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன் கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள்–8-9-10-
கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை–8-10-10-
————–
பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக் கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த சொல் –10-1-10-
அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப்
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம்–10-2-10-
வென்ற தொல் சீர் தென்னிலங்கை வெஞ்சமத்து அன்று அரக்கர்
குன்ற மன்னார் ஆடி யுய்ந்த குழ மணி தூரத்தை–10-3-10-
எழில் தோள் கலிகன்றி செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்–10-4-10-
காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10-
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல்
நன்றாய தொல் சீர் வயல் மங்கையர் கோன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை –10-6-10-
கடல் சூழ் கன்னி நன் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி
இன்னிசை மாலைகள் ஈரேழும்-10-7-14-
அல்லிக் கமலக் கண்ணனை யங்கோர் ஆய்ச்சி எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை-10-8-10-
வாள் திறல் தானை மங்கையர் தலைவன் மான வேற் கலியன் வாய் ஒலிகள்
தோட்டலர் பைந்தார்ச் சுடர் முடியானைப் பழ மொழியால் பணிந்து உரைத்த பாட்டிவை–10-9-10-
சுரும்பார் பொழில் மங்கையர் கோன் ஒண்டார் வேல் கலியன் ஒலி மாலைகள்–10-10-10-
—————
அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச் சென்ற மாயனைச் செங்கண் மாலினை
மன்றிலார் புகழ் மங்கை வாள் கலி கன்றி சொல்–11-1-10-
வென்று விடை யுடன் ஏழு அடர்த்த வடிகளை மன்றின் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல் ஓன்று நின்ற ஒன்பதும்–10-2-10-
பெற்றார் ஆயிரம் பேரானைப் பேர் பாடப் பெற்றான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை-11-3-10-
வேலை புடை சூழ கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலி கன்றி சொன்ன பனுவல் ஒழி கெழு பாடல்–11-4-10-
கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே—11-5-10-
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
காவளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை–11-6-10-
மெய்நின்ற பாவம் அகலத் திருமாலைக்
கைநின்ற ஆழியான் சூழும் கழல் சூடி
கைந்நின்ற வேற்க் கை கலியன் ஒலி மாலை
ஐ ஒன்றும் ஐந்தும் இவை பாடி ஆடுமினே –11-7-10-
குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே —11-8-10-
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply