பகவந் –
“மைத்ரேய! பகவச் சப்தஸ் ஸர்வகாரண காரணே! ஸம்பார்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த்வயாந்வித:
நேதாகமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததாமுநே. ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யசஸச்ஸ்ரீய:
ஜ்ஞாநவைராக்ய யோச்சைவ, ஷண்ணாம் பக இதீரணா. வஸந்தி தத்ர பூதாநி பூதாத்மந்யகிலாத்மநி,
ஸச பூதேஷ்வசேஷேஷு வகாரார்த்தஸ் ததோவ்யய:ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்ய சேஷத:
பகவத்சப்தவாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி: ஏவமேஷ மஹாசப்தோ மைத்ரேய! பகவாநிதி,
பரப்ரஹ்ம பூதஸ்ய வாஸுதேவஸ்ய நாந்யக: தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித:
சப்தோயம் நோபசாரேண த்வந்யத்ர ஹ்யுபசாரத:” (விஷ்ணுபுராணம் 6-5-72)
[ மைத்ரேயரே! ‘பகவான்’ என்னும் சப்தம் ஸர்வ காரணங்களுக்கும் காரண பூதனான ஸர்வேச்வரன்
விஷயத்தில் சொல்லப் பெறுகிறது. ‘(ப்ரக்ருதியை) கார்யதசை அடையச்செய்பவன்,
‘ஸ்வாமி’ என்னும் இரண்டு அர்த்தங்களுடன் கூடியது பகாரம்; முனிவரே!
அவ்வாறே ‘ரக்ஷிப்பவன், ஸம்ஹரிப்பவன், ஸ்ருஷ்டிப்பவன்’ என்பது ககாரத்தின் அர்த்தம்.
ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும்
‘பக’ என்னும் பதம் வாசகமாயிருக்கிறது.
பூதங்களை சரீரமாகக்கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன.
அவனும் அகில பூதங்களிலும் வஸிக்கின்றான். ஆகையால் அழிவற்றவனான பகவான் வகராத்துக்கு அர்த்தமாகிறான்.
கீழானவையான முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத
‘ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் எல்லா குணங்களும்
‘பகவாந்’ என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன. மைத்ரேயரே! இம்மாதிரியாக பகவான் என்னும்
இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான வாஸுதேவனுக்கே உரித்தானது. வேறொருவரையும் குறிக்காது.
‘பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது’ என்னும் பரிபாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில்
ஔபசாரிகமாகச் சொல்லப் பெறுவதில்லை. மற்ற விஷயங்களில் ஔபசாரிகமாக அமுக்யமாகச் சொல்லப் பெறுகிறது.]
“பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளியுரைத்த, கணக்கறு நலத்தனன்
அந்தமிலாதி யம்பகவன்” (திருவாய்மொழி 1-3-5)
{(அந்தமிலாதி) ஆப்ததமன். எல்லார்க்கும் உத்பத்தி விநாசங்களாலே யிறே ஜ்ஞாந ஸங்கோசம் பிறப்பது;
இவனுக்கு அவையில்லாமையாலே அகர்மவச்யன் என்கிறது.
(அம்பகவன்) — ஜ்ஞாநாதிகளால் அல்பம் உத்கர்ஷம் உடையவன் பக்கலிலே பகவச்சப்தம் வர்த்தியாநின்றதிறே ;
“அந்யத்ரஹ்யுபசாரத:” பகவச்சப்தம் முக்யமாக வசிப்பது இவன் பக்கலிலே, அல்லாதார் பக்கல் ஔபசாரிகம்.
(அம்பகவன் வணக்குடைத்தவ நெறிவழி நின்று) — “நமஸ்யந்தச்சமாம் பக்த்யா” என்று பக்தி சரீரத்திலே நின்று
அருளிச் செய்தானிறே. அங்கநா பரிஷ்வங்கம் போலே போகரூப மாயிறே இதுதான் இருப்பது— ஈடு”}
“இப்படி ஸ்வாதீந ஸர்வ ஸத்தாதிகளை உடையவனாய் இருக்கிற ஈச்வரனுடைய ஸ்வரூபம்
ஸத்யத்வாதிகளாகிற ஸ்வரூப நிரூபக தர்மங்களாலே ஸத்யமாய் ஜ்ஞாநமாய் அநந்தமாய் ஆநந்தமாய் அமலமாய் இருக்கும்.
இவ்வர்த்தத்தை ‘நந்தாவிளக்கே யளத்தற்கரியாய்'(பெரிய திருமொழி 3-8-1) என்றும்
‘உணர் முழு நலம்'(திருவாய்மொழி 1-1-2) என்றும்,
‘சூழ்ந்ததனிற் பெரிய சுடர் ஞானவின்பம்’ (திருவாய்மொழி 10-10-10) என்றும்,
‘அமலன்’ ( அமலனாதிப் பிரான். 1) என்றும்இத்யாதிகளாலே ஆழ்வார்கள் அநுஸந்தித்தார்கள்.
மற்றுள்ள குணங்களும் திவ்ய மங்கள விக்ரஹாதிகளும் எல்லாம் ஈச்வரனுக்கு நிரூபித ஸ்வரூப விசேஷணங்களாயிருக்கும்.
இக்குணங்களில் ஜ்ஞாநபல ஐச்வர்ய வீர்யசக்தி தேஜஸ்ஸுக்கள் என்று ஆறு குணங்கள் பரத்வோபயுக்தங்களாயிருக்கும்.
ஸௌசீல்ய வாத்ஸல்யாதிகள் ஸௌலப்யோப யுக்தங்களா யிருக்கும்.
இக்குணங்கள் எல்லாம் ஸர்வ காலத்திலும் ஸ்வரூபாச்ரிதங்களாயிருக்கும்.
பரவ்யூஹாதி விபாகங்களில் குணநியமம் சொல்லுகிறதெல்லாம் அவ்வோரூபங்களை அநுஸந் திப்பார்க்கு
ஸர்வேச்வரன் ஆவிஷ்கரிக்கும் குணவிசேஷங்கள் சொல்லுகைக்காக அத்தனை, ஔபநிஷத வித்யா விசேஷங்கள் தோறும்
அநுஸந்தேய குணவிசேஷங்கள் நியதமானாற்போல பகவச் சாஸ்த்ரோக்தமான ரூப விசேஷாநு ஸந்தாநத்துக்கும்
குண விசேஷங்கள் நியதங்கள்.
அவ்விடத்தில் பரரூபத்தில் ஜ்ஞாநாதிகுணங்கள் ஆறும் வேத்யங்கள்” [ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம். தத்வத்ரயசிந்த நாதிகாரம்]
“வ்யூஹங்கள் நாலென்றும் மூன்றென்றும் சாஸ்த்ரங்கள் சொல்லும். நாலு வ்யூஹம் உண்டாயிருக்க
வ்யூஹ வாஸுதேவ ரூபத்திற்கு பர ரூபத்திற்காட்டில் அநுஸந்தாய குணபேதம் இல்லாமையாலே த்ரிவ்யூஹம் என்கிறது.
இப்பக்ஷத்தை ‘குணைஷ்ஷட்பிஸ்த்வேதை: ப்ரதம தரமூர்த்தி ஸ்தவ பபௌ,
ததஸ் திஸ்ரஸ்தேஷாம் த்ரியுக யுகளைர்ஹி த்ரிப்ரபு:’ (வரதராஜஸ்தவம் -16) என்கிற ச்லோகத்திலே ஸங்க்ரஹித்தார்கள்.
இப்பரவ்யூஹங்களில் குணக்ரியாவிபாகங்கள்
‘ஷாட்குண்யாத் வாஸுதேவ; பர இதி ஸபவாந் முக்தபோக்யோ பலாட்யாத் போதாத் ஸங்கர் ஷணஸ்த்வம் ஹரஸி
விதநுஷே சாஸ்த்ர மைச்வர்யவீர்யாத் ப்ரத்யும்நஸ் ஸர்க்கதர்மௌ நயஸிச பகவந்! சக்தி தேஜோ நிருத்த:
பிப்ராண: பாஸி தத்வம் கமயஸி ச ததா வ்யூஹ்ய ரங்காதிராஜ.’ (ஸ்ரீரங்கராஜஸ்தவம். உத்தரசதகம்.39)
என்கிற ச்லோகத்திலே ஸங்க்ரஹிக்கப் பட்டன. ஜாக்ரதாதிபத பேதங்களில் உள்ள விசேஷங்கள் எல்லாம்
‘ஜாக்ரத் ஸ்வப்நாத் யல ஸதூரிய ப்ராயத் யாத்ரு க்ரமவதுபாஸ்ய: ஸ்வாமிந்! தத்தத் ஸஹ பரிபர்ஹ;
சாதுர் வ்யூஹம் வஹஸி சதுர்த்தா’ (ஸ்ரீரங்கராஜஸ்தவம் 2-40) என்று ஸங்க்ரு ஹீதங்களாயிற்று.
[ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம், தத்வத்ரய சிந்த நாதிகாரம்.]
ஈண்டு ஆளப்பெற்ற மேற்கோள்களின் பொருள் வருமாறு:–
மூவிரண்டு குணங்களை உடைய வரதராஜனே! தேவரீருடைய அகில மூர்த்திகட்கும் முதன்மையான
பர வாஸு தேவமூர்த்தி கீழ்ச்சொன்ன இந்த ஆறு குணங்களால் விளங்கிற்று. அதற்கு மேல் மும்மூர்த்திகள்
அந்த குணங்களுடைய மூவிரண்டுகளாலே பிரகாசித்தன. இப்படிப்பட்ட வ்யவஸ்தை யாதொன்று உண்டு
அந்த வ்யவஸ்தை குணங்களை வெளியிடுதல் பற்றியாம். தேவரீரோவெனில் அகில மூர்த்திகளிலுமே
எண்ணிறந்த சிறந்த கல்யாண குணங்களையுடையீரா யிராநின்றீர். (வரதராஜஸ்தவம் 16)
பகவானாகிய திருவரங்க நகராதிபனே! பூஜ்யரான தேவரீர் வாஸுதேவாதி வ்யூஹரூபேண அவதரித்து
ஞானம் முதலிய ஆறு குணங்களோடுகூடி பரவாஸுதேவர் என வழங்கப்பெற்றவராகி முக்தர்கட்கு அநுபாவ்யராக ஆகின்றீர் ;
பலத்தோடு கூடின ஞானத்தோடு கூடி ஞானமும் பலமுமாகிற இரண்டு குணங்களை உடையவராய்க் கொண்டு
ஸங்கர்ஷண மூர்த்தியாகி ஸம்ஹாரத் தொழிலை நடத்துகின்றீர் சாஸ்த்ரத்தை அளிக்கின்றீர்;
ஐச்வர்ய வீர்யங்களோடு கூடி ப்ரத்யும்ந மூர்த்தியாகி ஸ்ருஷ்டியையும் பண்ணி தர்மத்தையும் ப்ரவர்த்திப்பிக்கிறீர்
சக்தி தேஜஸ்ஸுக்களாகிற இரண்டு குணங்களை உடையவராகி அநிருத்த மூர்த்தியாய் ரக்ஷணத் தொழிலை நடத்துகின்றீர்;
தத்வஜ்ஞாந ப்ரதாநமும் பண்ணுகின்றீர் (ஸ்ரீரங்கராஜஸ்தவம், 2-39.)
திருவரங்கநாதரே! விழித்துக் கொண்டிருப்பாரும், உறங்கிக் கொண்டிருப்பாரும், ஸுஷுப்தியில் இருப்பாரும்,
மூர்ச்சா தசையில் இருப்பாருமான த்யாநம் செய்பவர்களின் ரீதிகளையுடைய அதிகாரிகளாலே
உபாஸிக்கத் தகுந்தவராய் தகுதியான பரிச்சதங்களை உடையவராய் நான்கு வகையாக
வ்யூஹ சதுஷ்டயத்தை வஹிக்கின்றீர் (ஸ்ரீரங்கராஜஸ்தவம், 2-40)
ஜ்ஞாநசக்தி பலைச்வர்ய வீர்ய தேஜஸ்ஸுக்கள் என்கிற சிறந்த ஆறு குணங்களும்
பரவாஸு தேவமூர்த்தியிலே புஷ்கலங்கள் என்றும், எம்பெருமானுக்கு மற்றும் உள்ள அநந்த கல்யாண குணங்களுள்
இந்த ஆறு குணங்களே சிறந்தவை என்றும், இக்குணங்கள் அடியாகத்தான் இவற்றின் சாகோபசாகைகளாக
இதர குணங்கள் பெருகுகின்றன வென்றும்,
“ப்ரக்ருஷ்டம் விஜ்ஞாநம் பலமதுல மைச்வர்ய மகிலம் விமர்யாதம் வீர்யம் வரத பரமா சக்திரபிச,
பரம் தேஜச்சேதி ப்ரவரகுண ஷட்கம் ப்ரதமஜம் குணாநாம் நிஸ்ஸீம்நாம் கணநவிகுணாநாம் ப்ரஸவபூ;” என்ற
சுலோகத்தில் (வரதராஜஸ்தவம், 15) கூரத்தாழ்வான் பணித்துள்ளான்.
(i) ஜ்ஞாநமாவது — எப்போதும் ஸ்வத: ஏக காலத்தில் பஞ்சேந்த்ரியங்களினாலும் அறியக் கூடியவற்றை யெல்லாம் ஸாக்ஷாத்கரிக்கை.
(ii) சக்தியாவது — ஸ்வ ஸங்கல்ப மாத்திரத்தால் அஸங்க்யேயமான புவநங்கட்கும் உபாதாந காரணமாகை.
(iii) பலமாவது– ஸமஸ்தசித் அசித் ஸமூகங்களையும் சிறிதும் இளைப்பின்றித் தாங்கும் வல்லமை
(iv) ஐச்வர்யமாவது — ஸ்வாதந்தர்யத்தோடு எங்குந் தடையின்றிச் செல்லும் ஸங்கல்பத்தையுடைமை.
(v) வீர்யமாவது — தான் உபாதாந காரணமாகிச் சேதநா சேதநங்களை உண்டாக்கியும் தனக்கு ஒரு விகாரமின்றிக்கேயிருக்கை.
(vi) தேஜஸ்ஸாவது — வேறொருதவியின்றி அடைந்தாரது தாபங்களைப் போக்கியும் எதிரிகட்குத் தாபத்தைத் தந்தும் போருந்தன்மை.
(1) அஜடம் ஸ்வாத்ம ஸம்போதி நித்யம் ஸர்வாவகாஹநம்,
ஜ்ஞாநம் நாமகுணம் ப்ராஹு: ப்ரதமம் குணசிந்தகா:
[குணத்தைச் சிந்திக்குமவர்கள் முதலில் ஜ்ஞாநம் என்று பிரஸித்தமான குணம் அஜடமாயும்,
தன்னைத்தானே அறிகிறதாயும், நித்யமாயும், எல்லா விஷயங்களையும் பிரகாசிப்பதாயும் இருக்கும் என்று சொல்லுகிறார்கள்.
ஜ்ஞாநமாவது — எப்பொழுதும் எல்லாவற்றையும் தெளிவாக விளக்கக்கூடியதாயும், தனக்குத்தானே பிரகாசமாயும் உள்ள குண விசேஷம்.]
(2) ஜகத் ப்ரக்ருதிபாவோ யஸ்ஸக்தி ப்ரகீர்த்தித:
[ஜகத்திற்குக் காரணமா யிருப்பது யாதொன்று உண்டோ அது சக்தி என்ற சொல்லப் படும்.
சக்தியாவது — ஜகத்காரணமா யிருக்கின்ற குண விசேஷமாதல், அகடித கடனா ஸாமர்த்யமாதல் — சேராதவற்றைச் சேர்ப்பது]
(3) பலம் தாரண ஸாமர்த்யம்
[பலமாவது — எல்லா வஸ்துக்களையும் தாங்கும் ஸாமர்த்யம்]
(4) கர்த்ருத்வம் நாமயித்தஸ்ய ஸ்வாதந்தர்ய பரிப்ரும்ஹிதம்
ஐச்வர்யம் நாமதத்ப்ரோக்தம் குணதத்வார்த்த சிந்தகை:
[அந்த பரமாத்மாவுக்கு ஸ்வாதந்தர்யத்தோடு கூடின யாதொரு கர்த்தாவா யிருக்குந் தன்மை பிரஸித்தமா யிருக்கிறதோ அது,
குணங்களின் உண்மை யறிந்தவர்களாலே ஐசுவர்யம் என்ற பிரஸித்தமான குணமாகச் சொல்லப் பெற்றது.
ஐச்வர்யமாவது — எல்லாவற்றிற்கும் கர்த்தாவா யிருத்தலின் லக்ஷணமான ஸ்வாதந்தர்யம் அல்லது
எல்லா வஸ்துக்களையும் நியமிக்கும் ஸாமர்த்யம்.]
(5) தஸ்யோபாதாந பாவேபி விகாரவிரஹோஹிய:
வீர்யம் நாமகுணஸ்ஸோயம் அச்யுதத்வாபராஹ்வய
[ஸர்வேசுவரனுக்கு ஜகத்துக்கு பாதான காரணமாயிருக்கும் நிலைமையிலேயும் விகாரமின்மை யிருக்கின்றது.
இங்ஙனம் இருக்கின்ற அந்த அவிகாரத்வமானது வீர்யம் என்ற பிரஸித்தமான குணம் என்று சொல்லப்படும்.
அதுவே அச்யுதம் என்ற வேறு பெயராலும் அழைக்கப் பெறும்.
வீர்யமாவது — ஜகத்திற்கு பாதான காரணமாயிருந்தும் ஸ்வரூப விகாரமில்லா திருக்கும் அவிகாரதை — விகாரமில்லாதிருத்தல்.]
(6) தேஜஸ்ஸாவது — ஸஹாயத்தை யபேக்ஷியாதிருத்தல்
“செழுங்குணங்க ளிருமூன்று முடையார்” என்பது இவ்வாசிரியர் அருளிச் செய்த திருச்சின்னமாலை (5)ப்பாசுரவடி.
பகவச்சப்தத்தின் உண்மைப்பொருள் உணர்ந்த தென்சொற்கடந்து வட சொற்கலைக்கெல்லை தேர்ந்த
ஸ்ரீவல்லபர் (தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்) தாம் இயற்றிய தமிழ் வேதமாகிய
திருக்குறள் பாயிரம். முதல் அதிகாரம். கடவுள் வாழ்த்து முதற்குறளை.
அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.
என அமைத்துப் பாடியுள்ளார். பரிமேலழகரும் “இப்பாட்டான் முதற் கடவுளதுண்மை கூறப்பட்டது” என்று
நுண்ணிய உரை வகுத்துள்ளதும் நன்கு நோக்கற்பாலது.
யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் பதிப்பில் இக்குறளின் கீழ்
ஐசுவரியம், வீர்யம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னுமாறுக்கும்
பகமென்னும் பெயருண்மையால் பகவனென்பதற்கு இவ்வாறு குணங்களையுமுடையோனென்பது பொருள்
எனக் குறிப்பு எழுதியுள்ளார்கள்.
ஆதிபகவன் என்னு மிருபெயரொட்டுப் பண்புத்தொகை வடநூன் முடிபு என உரையிட்டனர் பரிமேலழகியார்.
“அமலனாதிபிரான்” (திருப்பாணாழ்வார் அருளிச்செய்த பத்துப்பாட்டு) வியாக்கியானமான
“முநிவாஹந போகம்” ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன் அருளிச் செய்த இருபத்தெட்டாவது ரஹஸ்யம்.
இதில் “(ஆதி) ‘ஏஷ கர்த்தாந க்ரியதே’ இத்யாதிகளிற்படியே ஸர்வஜகதேக காரணபூதன்
இத்தால் காரணமே சரண்யம் என்கிறபடியே முமுஷுவுக்கு சரணமாகப் பற்றப்படுபவன் என்று பலிதம்:
இக்காரணத்வமும் மோஷப்ரதத்வமும் சத்ரசாமரங்கள் போலே ஸர்வலோக சரண்யனுக்கு விசேஷசிஹ்நங்கள்” என்றுள்ளன காண்க.
முழுதுணர் நீர்மையினோராகிய ஸ்ரீவல்லபர் பகவச் சப்தத்தால் பெறக் கூடிய நாராயணன் எனுந் திருநாமத்தை
“வாலறிவன்” (2.ஸர்வஜ்ஞன்) “பொறிவாயில் ஐந்தவித்தான்”. (6.ஹ்ருஷீகேசன்) “தனக்குவமையில்லாதான்”
(7.அதுல:) “எண்குணத்தான்” (9) என்ற அகாரவாச்யனின் பெயர்களை எடுத்தோதி
“அடியளந்தான்” (பொருட்பால் 610) என்று உலகளந்த திரிவிக்ரமன் பெயரைக்காட்டி இறுதிப் பாலில்
“தாமரைக்கண்ணான்” (புணர்ச்சி மகிழதல் 1103) என்று செங்கண்மாலை ஸ்பஷ்டமாகப் பேசித்
தலைக் கட்டியுள்ளது நன்கு நோக்கி இன்புறற்குரியது.
“முதற்கடவுள்” யார் என்பது ஆழ்வார்களுள் ஆதியாகிய பொய்கையார்
“உலகளந்த மூர்த்தி யுருவே முதல்” (முதல் திருவந்தாதி. 14) என்றும்
“முதலாவார் மூவரே அம்மூவருள்ளும் முதலாவான் மூரிநீர்வண்ணன் – முதலாய நல்லான்” (முதல் திருவந்தாதி.15)
என்றும் கண்டோக்தமாகக் காட்டியிருப்பதால் தெற்றென அறியலாம்.
திருவள்ளுவருக்கு வழிபடு கடவுளும் குறளுக்கு ஏற்புடைக்கடவுளும் திருமால் என்பது பேரறிஞர் கண்ட பேருண்மை.
தேவீ — பிராட்டிமார்கள்.
இப்படி அதி மநோஹரமான அநந்த போக பர்யங்கத்திலே ரஜதகிரியின் மேலே மரதககிரி இருந்தாற்போலே
‘ஏழுலகும் தனிக்கோல் செல்ல’ வீற்றிருந்து ‘விண்ணோர்தலைவ’னாய் குமாரயுவாவாய்
‘சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு’ என்னும் படி ஆதித்ய சதஸஹஸ்ர ஸமுதாயம் போலே
அநவதிக தேஜஸ்ஸை யுடையனாய் ‘விச்வமாப்யாயந் காந்த்யா பூர்ணேந்து யுத துல்யயா’ என்னும் படி
அநவதிக லாவண்யத்தையுடையனாய் ஸர்வசேஷியான தன்னுடைய க்ருபையும் க்ஷமையும் வண்மையும்
வடிவு கொண்டாற்போலே இருக்கிற நாச்சிமார்களில் ஸ்வாபிமத, நித்ய, நிரவத்ய, அநுரூப ஸ்வரூபாதிகளை
உடையனாய் ஸ்வவைச்வரூப்யத்தாலே ஸதாநுபவம் பண்ணாநின்றாலும் இன்று அநுபவிக்கத் தொடங்கினாற்போலே
ஆச்சர்யரஸாவஹையாய், ‘சாந்தாநந்த’ இத்யாதிகளின்படியே ஸர்வப்ரகாரஸம்ச் லேஷத்தை உடையனாய்
‘திருமார்வத்து மாலை நங்கை’யாய் அமுதில் வரும் பெண்ணமு’தாய்
‘வேரிமாறாத பூமேலிருந்து வினைதீர்க்கு’ மவளாய் தன் கடாக்ஷலேசத்தாலே கமலாஸநாதி வைபவத்தையும் கொடுக்குமவளாய்
‘தேவதேவ திவ்யமஹிஷீ’ என்னும் படியான மேன்மையும்
‘கருணாஸ்ராநதமுகீ’ என்னும் படியான நீர்மையும் உடையளான பெரிய பிராட்டியார்
‘தாக்ஷிண்யஸீமா’ என்று தோற்றும்படி தக்ஷிணபார்ச்வத்திலே நீலமேகத்தை அணைந்த நிலை மின்போலே
ஸேவித்திருந்து தன்னுடைய சேஷித்வ போக்யத்வ கைங்கர்யப்ரதி ஸம்பந்தித்வங்களைப் பூரித்துக் கொண்டு
அகில பரிஜநங்களை அவஸரோசிதா சேஷவ்ருத்திகளிலும் ஆஜ்ஞாபிக்க ‘ஏவம் பூதபூமி நீளாநாயக’ என்கிறபடியே
பெரிய பிராட்டியாருடைய ரூபாந்தரம் என்னலாம் படி அநவரத பஹுமாந விஷயையாய்
‘பச்சைமாமலை போல் மேனி’க்கும் படிமாவான நிறத்தை உடையளான ‘பார் என்னும் மடந்தை’யும்
‘அல்லி மலர்மகள் போகமயக்குகள் அத்யல்பம் என்னும்படி நித்யப்ரபோதம் நின்றவிடம் தெரியாதே
நீளாதுங்க ஸ்தநகிரிதடீஸுப்தம் என்னப் பண்ணுமவளாய் நீலோத்பவச்யாமளையான ஸ்ரீநீளைப் பிராட்டியும்;
அடியார் இடத்திலே ஸேவித்திருக்கும்படி தாங்களும் இடத்திலே ஸேவித்திருக்க;
‘ஸேவ்ய: ஸ்ரீபூமி நீளாபி:’ உடனமர் காதல்மகளிர் திருமகள் மண்மகள் ஆயர்மடமகள் என்றிவர் மூவர்’ இத்யாதிகளில்
சொன்ன சேர்த்தியிலே அடிமை செய்யுமவர்களுக்கு ‘ரஸம்’ என்றும் ‘ஆநந்தம்’ என்றும் சொல்லும்படியான
நிரதிசய யோக்யதையுடையனான நிருபாதிகசேஷியை நிருபாதிகஜ்ஞாத விகாஸத்தாலே
‘அவாவறச் சூழ்ந்தாய்’ என்னும்படி அனுபவித்து (ஸ்ரீபரமபத ஸோபாநம். பராப்திபர்வம்)
தேமா மலர்க்கயஞ்சூழ் கோயின் மேவுந் திருவரங்கர்
தாமாத ரித்ததிருத் தேவிமாரிற் றரங்கவுடைப்
பூமாது நாளும் புரத்தே சுமந்து புரக்குமலர்
மாமாது செல்வங் கொடுத்தே யுயிர்களை வாழ்விக்குமே. (திருவரங்கத்துமாலை.80)
(தேனையுடைய பெரிய பூக்கள் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்த திருவரங்கம் பெரிய கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற
திருஅரங்கர் தாம் அன்புவைத்த திருமகள் நிலமகள் என்னும் உபயதேவியர்களுள் கடலை உடுக்கும் ஆடையாக
உடைய நிலமகள் எந்நாளும் உயிர்களைத் தனது உடம்பின் மேலே தாங்கிக் காப்பாற்றுவாள்.
தாமரையில் தோன்றிய திருமகள் அவ்வுயிர்ட்கட்குச் செல்வத்தைக் கொடுத்துக் காப்பாற்றுவாள்.
எம்பெருமானது வலப்பக்கத்திலே ஸ்ரீதேவியும் இடப்பக்கத்தில் பூதேவியும் எப்பொழுதும் விட்டுப் பிரியாமல் உடன் உறைவர்.)
த்வச் சேஷத்வே ஸ்த்திரதியம் த்வத் ப்ராப்த்யேக ப்ரயோஜநம்
நிஷித்த காம்ய ரஹிதம் குரு மாம் நித்ய கிங்கரம். –ஸ்ரீ நியாஸ சதகம் -(5)
[(பகவானே !) மாம் — அடைக்கலமான அடியேனை; த்வத் சேஷத்வே — தேவரீருக்குச் சேஷ பூதமாயிருப்பதிலே ;
ஸ்த்திரதியம் — உறுதியான புத்தியை உடையவனாக ; குரு – செய்தருள வேண்டும்;
த்வத் ப்ராப்தி ஏக ப்ரயோஜநம் — தேவரீரை அடைதலே முக்கிய பலம் என்ற எண்ணம் உடையவனாகவும்
குரு — செய்தருளவேண்டும் ;
நிஷித்த காம்ய ரஹிதம் — சாஸ்த்ரங்களில் விலக்கப் பட்டவைகளான காம்ய கர்மங்களில் ஸம்பந்தம் அற்றவனாகவும்,
சாஸ்திரங்களில் நிஷித்தங்களான அற்ப பலத் தாசையினாலே சூந்யனாகவும் ;
குரு — செய்தருளுக; நித்ய கிங்கரம் — எப்போதும் தாஸ வ்ருத்தி செய்பவனாகவும் ,
இவ்வாறு நிலை நின்ற அடிமைக்காரனாகவும் ; குரு — செய்தருள வேண்டும்.]
———
எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:
உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸங்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குண கண
யவனவன்=புருஷோத்தமன்
————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply